<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-12T13:51:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென வந்த அவசர எச்சரிக்கை ; அடுத்தடுத்து தாக்குதல்களால் அதிர வைத்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-shocks-world-with-series-of-attacks-1783862343"></link>
            <id>https://canadamirror.com/article/iran-shocks-world-with-series-of-attacks-1783862343</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் உள்ள பஹ்ரைன், கத்தார், குவைத் போன்ற நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த ஜூன் 17 ஆம் திகத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் உள்ள பஹ்ரைன், கத்தார், குவைத் போன்ற நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த ஜூன் 17 ஆம் திகதி ஸ்விட்சர்லாந்தில் இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. </p><p>இந்த ஒப்பந்தத்தால் ஏற்கெனவே மூடப்பட்டிருந்த ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17fcb600-f9c2-49b1-81d1-88d9bb3b88fc/26-6a53944845c97.webp' /></p><p>

</p><p>
இதைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை அருகே மூன்று வணிகக் கப்பல்களின் மீது ஈரானிய படைகள் திடீர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டிய அமெரிக்கா செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) 80-க்கும் அதிகமான ஈரானின் கட்டமைப்புகள் மீது தாக்குதல்களை நடத்தியது.
</p><p>
இதனால் தாக்குதல்கள் இருபுறமும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மத்திய கிழக்கில் உள்ள பஹ்ரைன், கத்தார், குவைத் போன்ற பகுதிகளில் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
</p><p>
இதையடுத்து, கத்தாரில் வசித்து வரும் மக்களை வீட்டிலேயே இருக்குமாறும் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அந்த நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p>மேலும் கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவங்களையடுத்து, அங்கு வசிக்கும் மக்களின் செல்போன்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>ஈரான் மூலம் மத்திய கிழக்கை நோக்கி ஏவப்படும் ஏவுகணைகள், டிரோன் விமானங்கள் போன்றவற்றை தடுத்தி நிறுத்தி வருவதாகவும் ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.</p><p>

முன்னதாக ஈரானின் 140 கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஹோர்முஸ் நீரிணையை முழுவதுமாக மூடுவதாக ஈரான் புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-12T13:45:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாணவி துஸ்பிரயோகம், மனைவி-குழந்தைகளுடன் 6 பேரை வெட்டிக் கொன்ற இளைஞன் ; இறுதியில் தந்தைக்கு கூறிய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-man-kills-wife-children-and-four-others-1783861575"></link>
            <id>https://jvpnews.com/article/young-man-kills-wife-children-and-four-others-1783861575</id>
            <summary type="text">தெலுங்கானா மாநிலத்தில் போக்சோ வழக்கில் கைதாகி சிறை சென்று திரும்பிய வாலிபர் தனது மனைவி, குழந்தைகள் உள்பட 6 பேரை கொடூரமாக வெட்டி கொலை செய்ததுடன் தன் மீ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தெலுங்கானா மாநிலத்தில் போக்சோ வழக்கில் கைதாகி சிறை சென்று திரும்பிய வாலிபர் தனது மனைவி, குழந்தைகள் உள்பட 6 பேரை கொடூரமாக வெட்டி கொலை செய்ததுடன் தன் மீது புகார் அளித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
</p><p style="text-align: justify; ">
தெலுங்கானா மாநிலம் விவசாயி ஒருவர் ஏற்கனவே திருமனமான நிலையில் 17 வயது கல்லூரி மாணவியை காதல் திருமணம் என்ற பெயரால் துன்புறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது,

அந்த சிறுமியை தன்னுடன் பேச வேண்டும் தனிமையில் சந்திக்க வேண்டும் என்று ராஜ்குமார் துன்புறுத்தியதாக தெரிகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/461ce6d1-602b-482b-ba6f-1010d5466a7c/26-6a5391487be31.webp' /></p><h2 style="text-align: justify; ">கொடூரக்கொலை&nbsp;</h2><p style="text-align: justify; ">இத்துடன் அவர் மீது 'போக்சோ' வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

ஆனால் 7 ஆண்டுகளுக்கும் குறைவான சிறைத்தண்டனை விதிக்கப்படும் பிரிவுகளுடன் பொலிஸார் வழக்கு பதிவு செய்ததால் தனிநபர் ஜாமீனில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.</p><p style="text-align: justify; "> தன்மீது 'போக்சோ' வழக்கு பதிவு செய்ய காரணமான சிறுமி குடும்பத்தை பழிதீர்க்க&nbsp; திட்டமிட்டு நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில்&nbsp; சிறுமி வீட்டுக்கு சென்றார். அந்த சமயத்தில் சிறுமியை தன்னோடு அழைத்துச் செல்ல முயற்சி செய்தார். தடுக்க முயன்ற சிறுமியின் தாய், பாட்டியை வெட்டிச் சாய்த்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">அதன் பிறகு அந்த சிறுமியை பலவந்தமாக காரில் ஏற்றிக்கொண்டு 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சாகர் ஏரி அருகே இழுத்துச் சென்றார். அங்கே சிறுமி மீது பாலியல் வன்கொடுமை செய்து அதன்பிறகு கழுத்தை அறுத்து மிகக் கொடூரமாக கொலை செய்தார்.
</p><p style="text-align: justify; ">
 மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பிள்ளைகளை பார்க்க ஆசையாக இருக்கிறது என வீட்டிற்கு வந்து மனைவி குழந்தைகளை கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார்.
</p><p style="text-align: justify; ">
அதன் பிறகு தனது தந்தை அருண்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு "நான் இந்த 6 பேரையும் கொலை செய்துவிட்டேன். நான் கூட இறந்து விடுகிறேன்" என்று கூறியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-12T13:45:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்தடுத்து தாக்குதல்களால் அதிரும் மத்திய கிழக்கு ; அவசர எச்சரிக்கைகளால் அச்சத்தில் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/iran-shocks-world-with-series-of-attacks-1783863868"></link>
            <id>https://jvpnews.com/article/iran-shocks-world-with-series-of-attacks-1783863868</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் உள்ள பஹ்ரைன், கத்தார், குவைத் போன்ற நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த ஜூன் 17 ஆம் திகத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் உள்ள பஹ்ரைன், கத்தார், குவைத் போன்ற நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த ஜூன் 17 ஆம் திகதி ஸ்விட்சர்லாந்தில் இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. </p><p>இந்த ஒப்பந்தத்தால் ஏற்கெனவே மூடப்பட்டிருந்த ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b53c56dc-2987-4b55-bb9c-512d0cd6fec9/26-6a539a3d52de0.webp' /></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>

</p><p>
இதைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை அருகே மூன்று வணிகக் கப்பல்களின் மீது ஈரானிய படைகள் திடீர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டிய அமெரிக்கா 80-க்கும் அதிகமான ஈரானின் கட்டமைப்புகள் மீது தாக்குதல்களை நடத்தியது.
</p><p>
இதனால் தாக்குதல்கள் இருபுறமும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மத்திய கிழக்கில் உள்ள பஹ்ரைன், கத்தார், குவைத் போன்ற பகுதிகளில் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
</p><p>
இதையடுத்து, கத்தாரில் வசித்து வரும் மக்களை வீட்டிலேயே இருக்குமாறும் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அந்த நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p></p><p>மேலும் கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவங்களையடுத்து, அங்கு வசிக்கும் மக்களின் செல்போன்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>ஈரான் மூலம் மத்திய கிழக்கை நோக்கி ஏவப்படும் ஏவுகணைகள், டிரோன் விமானங்கள் போன்றவற்றை தடுத்தி நிறுத்தி வருவதாகவும் ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.</p><p>

முன்னதாக ஈரானின் 140 கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஹோர்முஸ் நீரிணையை முழுவதுமாக மூடுவதாக ஈரான் புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T13:44:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகர் ஆர்யா மீது வழக்கு பதிவு! அனந்தன் காடு பட விவகாரம் தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/case-filed-against-arya-in-hyderabad-1783863781"></link>
            <id>https://cineulagam.com/article/case-filed-against-arya-in-hyderabad-1783863781</id>
            <summary type="text">நடிகர் ஆர்யாவின் லேட்டஸ்ட் படம் அனந்தன் காடு கடந்த மாதம் ரிலீஸ் ஆகி இருந்தது. விமர்சனமும் சுமாரான லெவலில் தான் வந்திருந்தது.இந்நிலையில் தற்போது ஆர்யா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் ஆர்யாவின் லேட்டஸ்ட் படம் அனந்தன் காடு கடந்த மாதம் ரிலீஸ் ஆகி இருந்தது. விமர்சனமும் சுமாரான லெவலில் தான் வந்திருந்தது.</p><p>இந்நிலையில் தற்போது ஆர்யா மீது ஹைதராபாத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதற்கும் இந்த படம் தான் காரணம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9521788-bb0e-49f8-914c-06d02c4a2565/26-6a5399e779f81.webp' /></p><p>
</p><h2>பணம் கொடுக்கவில்லை
</h2><p>கடந்த வருடம் சினி டெக்னீக் என்ற நிறுவனத்திடம் இருந்து அனந்தன் காடு படப்பிடிப்புக்காக 2.12 கோடி ரூபாய்க்கு உபகரணங்கள் வாடகைக்கு எடுத்த நிலையில், தற்போது அதில் 1.8 கோடி ரூபாய் தராமல் ஏமாற்றியதாக புகார் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
</p><p>பணத்தை கேட்டவரை மிரட்டியதாக அனந்தன் காடு தயாரிப்பாளர், ஆர்யா உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa6a9b76-9fa0-43cb-a54d-d708799ba9da/26-6a5399e8669f8.webp' /></p>]]></content>
            <updated>2026-07-12T13:43:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலையக மக்களை ஏமாற்றுகின்றதா அநுர அரசாங்கம்..! மனோ அழுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-government-deceiving-the-up-country-people-1783862727"></link>
            <id>https://tamilwin.com/article/anura-government-deceiving-the-up-country-people-1783862727</id>
            <summary type="text">பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் காணி
உரிமை தொடர்பில் தற்போதைய அரசு தனது உண்மையான கொள்கையை உடனடியாக அறிவிக்க
வேண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் காணி
உரிமை தொடர்பில் தற்போதைய அரசு தனது உண்மையான கொள்கையை உடனடியாக அறிவிக்க
வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி.
வலியுறுத்தினார்.
</p><p>
இது குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், மேலும் கூறுகையில்,</p><p>
"எங்கள் மக்கள் 'தேவதூதர்கள் வந்துவிட்டார்கள்' என நம்பி இந்த அரசுக்கு
வாக்களித்தனர்.</p><p></p><h2>மலையக மக்கள்</h2><p> ஹட்டன் பிரகடனத்தில் காணி உரிமை குறித்துக் கூறி வாக்குகளைப்
பெற்ற அரசு, தற்போது அது குறித்து வாய் திறக்காமல் இருப்பது ஏன்? இது
தொடர்பில் தமக்கான கொள்கையை வெளிப்படையாகவும், வார்த்தை ஜாலங்கள் இல்லாமலும்
அரசு அறிவிக்க வேண்டும்." - என்று அவர் கேட்டுக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b692a955-7f94-40ec-8da0-5113cbab8333/26-6a5399e79dc29.webp' /></p><p>

பெருந்தோட்டக் காணிகள் அரசுக்குச் சொந்தமானவை என்றும், நிறுவனங்கள் வெறும்
குத்தகைதாரர்கள் மட்டுமே என்றும் சுட்டிக்காட்டிய அவர்,</p><p> தோட்டங்களில் மக்கள்
மேற்கொள்ளும் கட்டுமானங்களை 'அத்துமீறியவை' எனக் கூறித் தடுப்பதற்கும்,
உடைப்பதற்கும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அரசு நிறுவனங்களே அனுமதி
வழங்குகின்றன எனவும் குற்றம் சாட்டினார்.
</p><p>
குறிப்பாக, பெருந்தோட்ட அமைச்சின் கீழ் உள்ள கண்காணிப்புப் பிரிவு மற்றும்
காணி சீர்திருத்த ஆணைக்குழு ஆகியவற்றின் செயற்பாடுகள் குறித்தும் அவர்
விமர்சித்தார்.</p><p></p><h3>மனோ கணேசன் எம்.பி.</h3><p>
</p><p>
மலையக மக்களின் காணி உரிமை தொடர்பான அரசின் நிலைப்பாட்டை உடனடியாகப்
பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும், அரசின் காணி உரிமை கொள்கை வரையறுக்கப்படும்
வரை, வீடில்லா மக்கள் மேற்கொள்ளும் கட்டுமானங்களை 'அத்துமீறியவை' எனக் கூறி
வழக்குத் தொடர்வதையோ அல்லது அவற்றை உடைத்து அகற்றுவதையோ உடனடியாக இடைநிறுத்த
வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்&nbsp; வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a0dc5e5-d950-471e-8e95-3e818259d335/26-6a5399e6ecb0f.webp' /></p><p>
</p><p>
நல்லாட்சி அரசின் போது, தமிழ் முற்போக்குக் கூட்டணி அமைச்சரவை மற்றும்
நாடாளுமன்ற ஒப்புதலுடன் 'ஏழு பேர்ச் காணி, தனி வீடு' என்ற உரிமையைச்
சட்டபூர்வமாக ஆரம்பித்ததையும் அவர் நினைவுகூர்ந்தார். </p><p>200 ஆண்டுகாலப்
பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை நோக்கிய அந்தப் பயணத்தை, இந்த அரசு
முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என்றும் அவர் மேலும்
தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T13:43:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பாடசாலை மாணவர்கள் 44 பேர் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/44-kidnapped-nigerian-students-rescued-safely-1783863509"></link>
            <id>https://canadamirror.com/article/44-kidnapped-nigerian-students-rescued-safely-1783863509</id>
            <summary type="text">மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும், கொள்ளை கும்பல்களும் செயல்பட்டு வருகின்றன.
</p><p>
இதனிடையே, அந்நாட்டின் ஒயோ மாகாணம் ஒசிரி மாவட்டத்தில் உள்ள 3 பள்ளிகளுக்குள் கடந்த மே 15ம் தேதி புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள் என மொத்தம் 44 பேரை கடத்தி சென்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d913c09-0f4a-4221-add4-20a7fd0bbedd/26-6a5398d757a61.webp' /></p><p> </p><p>இதையடுத்து, கடத்தப்பட்ட பள்ளி குழந்தைகள், ஆசிரியர்களை தேடும் பணியில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டிருந்தனர்.
</p><p>
மீட்பு
இந்நிலையில், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள் 44 பேரையும் பாதுகாப்புப்படையினர் நேற்று அதிரடியாக மீட்டுள்ளனர்.</p><p> மேலும், இந்த சமப்வம் தொடர்பாக சிலரை பாதுகாப்புப்படையினர் கைது செய்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-12T13:38:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொல்லப்பட வேண்டிய தலைவர்கள் : ஈரான் பத்திரிகை வெளியிட்ட பட்டியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iranian-newspaper-publishes-list-of-13-people-1783859134"></link>
            <id>https://ibctamil.com/article/iranian-newspaper-publishes-list-of-13-people-1783859134</id>
            <summary type="text">&amp;nbsp;இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொல்லப்பட வேண்டிய தலைவர்கள் என்ற பெயரில் ஒரு பட்டியலை ஈரான் பத்திரிகை ஒன்று வெளியிட்டு உள்ளமை பரபரப்பை ஏற்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொல்லப்பட வேண்டிய தலைவர்கள் என்ற பெயரில் ஒரு பட்டியலை ஈரான் பத்திரிகை ஒன்று வெளியிட்டு உள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>

அந்த செய்தித்தாளின் பெயர் ஹம்ஷஹ்ரி என்பதாகும். ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா அறிக்கை ஒன்றுடன், 13 உலக நாடுகளின் தலைவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு கொல்லப்பட வேண்டியவர்கள் என்று குறிப்பிட்டு உள்ளது.</p><h2>பட்டியலில் இடம்பிடித்த தலைவர்கள்</h2><p>&nbsp;பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்று உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bc93c2a-252b-4f5b-bb38-c4a213633d19/26-6a539417ee521.webp' /></p><p>


இவர்கள் தவிர, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ, பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட்டர் ஹெக்சேத், பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரான், இத்தாலி பிரதமர் மெலோனி, ஜெர்மன் சான்சிலர் பிரெட்ரிக் மெர்ஸ் ஆகியோரின் பெயர்களும் பட்டியலில் இடம்பெற்று உள்ளன.</p><p>&nbsp; இதேவேளை தனது தந்தையின் கொலைக்கு பழி வாங்கப்படும் என ஈரான் உச்சதலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T13:38:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை சுரண்டி சொத்து சேர்த்த 500 அரசியல் தலைவர்கள் - விசாரணையில் அம்பலமாகும் விவரங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ciabor-starts-investigations-against-politicans-1783825494"></link>
            <id>https://tamilwin.com/article/ciabor-starts-investigations-against-politicans-1783825494</id>
            <summary type="text">அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட நபர்களி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட நபர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக, இலஞ்ச, ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.</p><p>&nbsp;</p><h2>குவியும் முறைப்பாடுகள்</h2><p>
</p><p>இந்த 500க்கும் மேற்பட்ட நபர்களில் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 60 அரசியல்வாதிகளும், கிட்டத்தட்ட 100 உயர் அரச அதிகாரிகளும் உள்ளடங்குவதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebb54b70-dbc8-4414-9695-3a40c03e0473/26-6a530457e255b.webp' /></p><p>
</p><p>ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாகவே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p> 
இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான நபர்களுக்கு எதிராக ஒரே நேரத்தில் சொத்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>சம்பந்தப்பட்ட நபர்களால் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்களின் உண்மைத்தன்மை குறித்து இந்த விசாரணையின் போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.</p><h2>சொத்து விபரங்களை சமர்ப்பிக்க&nbsp;காலக்கெடு </h2><p>
சொத்து விபரங்களை சமர்ப்பிக்க வேண்டிய உத்தியோகத்தர் பிரிவில் அண்மையில் ஊடகவியலாளர்களும் கப்பல்துறை ஆவணப்பணியாளர்களும் உள்வாங்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efc07406-c362-4d18-a864-4784a93862cc/26-6a530e6b92991.webp' /></p><p>
இதற்கான காலக்கெடு கடந்த ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்திருந்த போதிலும், இணையத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக அது ஜூலை 07ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது.
</p><p>2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 80(1) பிரிவின்படி, சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்களை சமர்ப்பிக்கத் தவறும் நபர்களுக்கு அபராதம் விதிக்க அல்லது ஓராண்டிற்கு மேற்படாத சிறைத்தண்டனை வழங்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T13:34:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[Viral Video: மீனை வேட்டையாடி அசால்டாக விழுங்கிய நீர்பறவை... பிரமிக்க வைக்கும் காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/cormorants-catch-swallow-big-fish-1783859200"></link>
            <id>https://manithan.com/article/cormorants-catch-swallow-big-fish-1783859200</id>
            <summary type="text">கருப்பு நிற நீர்பறவை ஒன்று மிகப்பெரிய மீன் ஒன்றினை வேட்டையாடி அதனை அசால்டாக விழுங்கிய காட்சி பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.பறவையின் மீன் வேட்டை&amp;nbsp;&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>கருப்பு நிற நீர்பறவை ஒன்று மிகப்பெரிய மீன் ஒன்றினை வேட்டையாடி அதனை அசால்டாக விழுங்கிய காட்சி பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.</p><h2>பறவையின் மீன் வேட்டை&nbsp;&nbsp;</h2><p>பொதுவாக விலங்குகளின் உணவு வேட்டை என்பது மிக மிக சுவாரசியமானதாகவே இருக்கின்றது. நாளுக்கு நாள் புதிய புதிய காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.</p><p>கழுகு, நாரை இவைகள் மீனை வேட்டையாடும் காட்சியினை பல அவதானித்திருக்கும் நாம், தற்போது சிறிய நீர்ப்பறவை ஒன்று மிகப்பெரிய மீனை வேட்டையாடுவதை காணலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97e49a28-3b6d-4f32-ad77-79fce5101473/26-6a538d26ca7a9.webp' /></p><p>நீர் பறவை தான் பிடித்த மீனை மிகவும் லாவகமாக விழுங்குவதையும் இக்காட்சியில் காணமுடிகின்றது. இந்த பறவையின் அசால்டாக வேட்டையும், செயலும் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.</p><p></p><p>
</p><p>
மீனை வேட்டையாடியதையும், அது விழுங்கியதையும் பார்க்கும் சில நொடிகளைக் கூட குறித்த நீர்பறவை விரயம் செய்யாமல் இருந்துள்ளது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Dap6eaBRkSW/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Dap6eaBRkSW/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Dap6eaBRkSW/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Sam Rino (@samrinophotography)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="http://சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="http://சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T13:30:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றுக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2027-budget-to-be-tabled-in-parliament-1783860110"></link>
            <id>https://jvpnews.com/article/2027-budget-to-be-tabled-in-parliament-1783860110</id>
            <summary type="text">2027 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரை நவம்பர் 12 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி அமைச...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரை நவம்பர் 12 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. </p><p>

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் செப்டம்பர் 18 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதுடன், அதன் முதலாம் வாசிப்பு ஒக்டோபர் 07 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/224e183e-0065-493b-a433-99168343eb16/26-6a538b901dd9a.webp' /></p><p> 

அமைச்சு வாரியான செலவு மதிப்பீடுகளை உள்ளடக்கிய 2027 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம், அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக செப்டம்பர் 14 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.</p><p></p><p> </p><p>

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 13 முதல் 20 ஆம் திகதி வரையிலும், குழுநிலை விவாதம் நவம்பர் 21 முதல் டிசம்பர் 14 ஆம் திகதி வரையிலும் இடம்பெறவுள்ளதாக நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T13:30:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் மைதானத்திற்கு பெண்ணுடன் வரும் விநாயகமூரத்தி முரளிதரன்: முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி விவரிக்கும் சம்பவம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/karuna-amman-and-pillayan-priyantha-jayakody-1783862479"></link>
            <id>https://tamilwin.com/article/karuna-amman-and-pillayan-priyantha-jayakody-1783862479</id>
            <summary type="text">விநாயகமூரத்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா அம்மான் அமைச்சராக இருந்த போது பொலிஸ் திணைக்களத்திற்கு சொந்தமான விளையாட்டு மைதானத்திற்கு வந்தபோது நடந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விநாயகமூரத்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா அம்மான் அமைச்சராக இருந்த போது பொலிஸ் திணைக்களத்திற்கு சொந்தமான விளையாட்டு மைதானத்திற்கு வந்தபோது நடந்த சம்பம் தொடர்பில் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (Senior DIG) பிரியந்த ஜயகொடி இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்த கருத்துக்கள்:</p><p>
எனக்கு நினைவிருக்கும் வகையில் 2013 அல்லது 2014 ஆம் ஆண்டில், நான் பொலிஸ் விளையாட்டுப் பிரிவின் பணிப்பாளராக இருந்தபோது, விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கருணா அம்மான் அப்போது அமைச்சராக இருந்தார். </p><h2>


</h2><p></p><h2>பொலிஸ் மைதானத்தில் நடந்த சம்பவம்</h2><p>அவருக்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது. அவர் மாலை வேளையில் ஒரு பெண்ணுடன் பொலிஸ் விளையாட்டு மைதானத்திற்கு உடற்பயிற்சிக்காக நடப்பதற்கு வருவார். </p><p>அவர் இருபுறமும் பாதுகாப்புப் பிரிவினரை வைத்துக்கொண்டு நடக்கும்போது, அந்த மைதானத்தில் விசேட திறமைகளை வெளிப்படுத்திய ஒரு பொலிஸ் தடகள வீரரான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) போதேஜு 1990 ஆம் ஆண்டு&nbsp; தமிழீழ விடுதலைப் புலிகள் கிழக்கில் கைப்பற்றிக் கொண்ட பொலிஸ் நிலையங்களில் உள்ள பொலிஸாரை சரணடையுமாறு கூறினர்.
</p><p>ஆனால் போதேஜு சரணடைய முடியாது என்று கூறியவர். அவர் சார்பாக நாம் இன்னும் பொலிஸ் விளையாட்டு விழாக்களில் சவால் கிண்ணம் ஒன்று வழங்கப்படுகிறது. </p><p>அவர் கண்டி புனித அந்தோனியார் கல்லூரி உருவாக்கிய ஒரு திறமையான தடகள வீரர்.விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கருணா அம்மான் பொலிஸ் மைதானத்தில் குறித்த பெண்ணுடன் நடைபயிற்சி செய்யும் போது அங்கு இருந்த மற்றொரு அதிகாரி என் அருகில் வந்து இவ்வாறு கூறினார்:</p><p>கிழக்கில் நிராயுதபாணியாக இருந்து 674 பொலிஸாரை கொலை செய்வதற்கு தலைமைத்துவம் வழங்கி போதேஜு போன்ற திறமையான ஒரு வீரரைக் கொன்ற கொலையாளி, கருணா அம்மான் இன்று பொலிஸ் பாதுகாப்புடன் பொலிஸ் விளையாட்டு மைதானத்திலேயே நடந்து திரியும்போது, எனக்குள் பாரியதொரு ஆக்ரோஷம் ஏற்படுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce727709-c3d3-4db5-ad4e-03761416d0a1/26-6a5394d1bf566.webp' /></p><p>இதனை நான் எவ்வாறு பார்த்துக் கொண்டிருப்பது?" என்று அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு என்னிடம் கூறினார்.
எனக்குத் தெரிந்தவரை, இது தொடர்பாக எந்தவொரு விசாரணையும் நடக்கவில்லை. </p><p>அந்தப் படுகொலைகளுக்கு முழுமையான தலைமைத்துவத்தை வழங்கிய கருணா அம்மான் இந்நாட்டின் அமைச்சரானார். அத்தோடு பழமையான அரசியல் கட்சியொன்றின் உபதலைவர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது. </p><p>அதேபோல், இதில் இரண்டாவது இடத்தில் இருந்த சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பிரதிமைச்சரானார். அவர் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராகவும் இருந்தார். </p><p>எனவே, இவ்வாறானதொரு துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையைத் தவிர, இன்றுவரை இந்த மனிதப் பேரவலக் கொலைகள் குறித்து விசாரணை எதுவும் நடந்ததாக எனக்குத் தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>&nbsp; </p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-12T13:26:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலிடத்தில் இலங்கை: எதில் தெரியுமா..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-ranks-3rd-countries-heaviest-traffic-1783861278"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-ranks-3rd-countries-heaviest-traffic-1783861278</id>
            <summary type="text">உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாக &#039;நம்பியோ&#039; (Numbeo) இணையதளம் வெளியிட்டுள்ளது.

அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாக 'நம்பியோ' (Numbeo) இணையதளம் வெளியிட்டுள்ளது.</p><p>

அதேநேரம் ஆசியாவில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளது.</p><p></p><h2>இலங்கை முதலிடம்&nbsp;</h2><p>

உலகின் வாழ்க்கைச் செலவு மற்றும் வாழ்க்கைத்தரம் குறித்த மிகப்பெரிய தரவுத்தளத்தைக் கொண்ட 'நம்பியோ' (Numbeo) இணையதளம் வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்கான போக்குவரத்து குறியீட்டின் (Traffic Index) மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
இந்த புள்ளிவிபரத்தின்படி, உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடாக நைஜீரியா முதலிடத்திலும், கோஸ்டாரிகா இரண்டாவது இடத்திலும் உள்ளன. 

எஸ்தோனியா மிகக் குறைந்த போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடாகக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49e0576b-6e1c-4226-a0e3-6e28a3692f9c/26-6a53932be58c1.webp' /></p><p> </p><p>ஒஸ்ட்ரியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளும் குறைந்த நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் உள்ளன. </p><p>

பயணத்திற்காகச் செலவிடப்படும் நேரம், அதற்காகச் செலவாகும் எரிபொருள் அளவு, போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் மன உளைச்சல், கார்பன்-டை-ஒக்சைடு (CO2) வெளியேற்றம் மற்றும் போக்குவரத்து அமைப்பில் உள்ள திறமையின்மை போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு இந்தத் தரவுகள் தயாரிக்கப்படுகின்றன.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-07-12T13:14:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கியுடன் சிக்கிய ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sjb-member-amitha-chathuranga-remanded-1783861120"></link>
            <id>https://ibctamil.com/article/sjb-member-amitha-chathuranga-remanded-1783861120</id>
            <summary type="text">
சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட அம்பலங்கொட பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) உறுப்பினர் அமித சதுரங்க விளக...</summary>
            <content type="html"><![CDATA[<p>
சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட அம்பலங்கொட பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) உறுப்பினர் அமித சதுரங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
பலபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் இன்று(12) முற்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர் நாளை (13) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>கைது நடவடிக்கை&nbsp;</h2><p>
</p><p>சந்தேகநபரிடம் இருந்து உரிமம் இல்லாத ரிப்பீட்டர் வகை துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர் நேற்று(11) மாலை கைது செய்யப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0212d366-ad6e-4d85-84d9-408dbba90084/26-6a5392ba33481.webp' /></p><p>
</p><p>
காலி மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T13:12:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[7 வருடங்களாக கோமாவில் கணவர் ; காலை கடித்து சரி பண்ணிய மனைவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wife-bites-husband-s-leg-ends-7-year-coma-1783854182"></link>
            <id>https://jvpnews.com/article/wife-bites-husband-s-leg-ends-7-year-coma-1783854182</id>
            <summary type="text">கணவனோ, மனைவியோ அல்லது வேறு உறவோ!.. உறவுகளில் ஒருவர் பல வருடங்கள் நோய்வாய் பட்டுவிட்டால் அவர்களை பராமரிப்பது என்பது கடினமான ஒன்று.  இந்நிலையில்தான் 7 வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணவனோ, மனைவியோ அல்லது வேறு உறவோ!.. உறவுகளில் ஒருவர் பல வருடங்கள் நோய்வாய் பட்டுவிட்டால் அவர்களை பராமரிப்பது என்பது கடினமான ஒன்று. </p><p> இந்நிலையில்தான் 7 வருடங்களாக கோமாவில் இருந்த தனது கணவரை அவரின் மனைவி தனது அன்பால் இயல்பு நிலைக்கு கொண்டு வந்த சம்பவம் தெரிய வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebeb51fb-bfc6-4a41-b610-c996e312f7eb/26-6a53746793d92.webp' /></p><h2>நெகிழ்ச்சி சம்பவம்&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
அந்தப் பெண்ணின் பெயர் சாங் மெய். ஒரு குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்தபோது அவரின் கணவர் கீழே விழுந்ததில் அவரின் தலையில் அடிபட்டு கோமா நிலைக்கு சென்று விட்டார்.</p><p>கடந்த 7 வருடங்களாக தனது கணவரை வீட்டிலேயே வைத்து அவருக்கான பணிவிடைகளை சாங் மெய் செய்து வந்தார்.</p><p>


தினமும் கணவருடன் பேசுவது, கை கால்களை அசைத்து விடுவது, அவரின் கால் நரம்புகளை தூண்ட காலை பல்லால் மெதுவாக கடிப்பது என பல முயற்சிகளை செய்து வந்திருக்கிறார்.</p><p></p><p> </p><p>அவரின் 7 வருட முயற்சியின் வீண்போகவில்லை. தற்போது அவரின் கணவர் கோமாவில் இருந்து மீண்டு சுயநினைவை பெற்றிருக்கிறார். </p><p>சுயநினைவு வந்ததும் மனைவியை பார்த்து அவர் சொன்ன முதல் வார்த்தை ‘ஐ லவ் யூ’, இந்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T13:08:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிலிகான் வேலிக்கு இணையான தலைமையகம்., மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ஜேர்மன் தொழிலதிபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germanys-richest-man-challenges-big-tech-giants-1783861766"></link>
            <id>https://news.lankasri.com/article/germanys-richest-man-challenges-big-tech-giants-1783861766</id>
            <summary type="text">ஜேர்மனியின் மிகப்பெரிய பணக்காரரான டீட்டர் ஷ்வார்ஸ் (Dieter Schwarz) 86 வயதில் தனது லிட்ல் மற்றும் காஃப்லாண்ட் சூப்பர் மார்க்கெட் சங்கிலிகள் மூலம் உலகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியின் மிகப்பெரிய பணக்காரரான டீட்டர் ஷ்வார்ஸ் (Dieter Schwarz) 86 வயதில் தனது லிட்ல் மற்றும் காஃப்லாண்ட் சூப்பர் மார்க்கெட் சங்கிலிகள் மூலம் உலகளவில் மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார்.
</p><p>
தற்போது, அவர் Google, Microsoft, Amazon போன்ற மிகப் பெரிய டெக் நிறுவனங்களுக்கு நேரடியாக சவால் விடுக்கிறார்.
</p><p></p><p>ஷ்வார்ஸ் குழுமம் (Schwarz Group) தனது புதிய “Schwarz Digits Campus” தலைமையகத்தை Bad Friedrichshall நகரில் திறந்துள்ளது.
</p><p>
3,500 பணியாளர்களுக்கான வசதிகளுடன், குழந்தைகள் பராமரிப்பு மையம், உணவகம், உடற்பயிற்சி கூடம் போன்ற வசதிகளும் கொண்ட இந்த வளாகம், சிலிகான் வாலி நிறுவனங்களின் தலைமையகங்களை ஒத்ததாக உள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bbdd266-5be0-44c9-a4d8-443db79ad765/26-6a5392093037c.webp' /></p><p>ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவை அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளின் தொழில்நுட்ப சார்பிலிருந்து விடுவிப்பதே இந்த புதிய முயற்சியின் நோக்கம் ஆகும்.
</p><p>
Schwarz Digits தற்போது கிளவுட் சேவைகள், பாதுகாப்பு தீர்வுகள் போன்றவற்றை அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்குகிறது.

முக்கியமாக, 11 பில்லியன் யூரோ மதிப்பிலான டேட்டா சென்டர் பெர்லின் அருகே கட்டப்பட்டு வருகிறது. இது இந்நிறுவனத்தின் வரலாற்றிலேயே மிகப்பெரிய முதலீடாகும்.</p><p>
டீட்டர் ஷ்வார்ஸ் தனது Schwarz Foundation மூலம் கல்வி, ஆராய்ச்சி, தொழில்முனைவோர் வளர்ச்சியில் பெரும் பங்களிப்பு செய்து வருகிறார். Heilbronn நகரம் தற்போது AI Innovation Park (IPAI) மூலம் ஐரோப்பாவின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு மையமாக மாறுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88939b2f-83f5-4913-88c9-bb023dc9dbea/26-6a539209ed2ad.webp' /></p><p>அமெரிக்காவின் மாபெரும் டெக் நிறுவனங்கள் பல பில்லியன்களில் வருமானம் ஈட்டினாலும், Schwarz Digits தற்போது 2.2 பில்லியன் யூரோ மட்டுமே ஈட்டுகிறது.
</p><p>
இருந்தாலும், “We are here to stay” என்கிற Schwarz Digits நிர்வாகிகள், ஐரோப்பாவின் டிஜிட்டல் சுயாட்சியை மீண்டும் பெறும் முயற்சியில் உறுதியாக உள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T13:08:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனி ஜாம்பவானின் சாதனையை முறியடித்த மெஸ்ஸி: உலகக்கோப்பையில் அர்ஜென்டினாவும் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/argentina-breaks-uruguay-s-72-years-old-record-1783861505"></link>
            <id>https://news.lankasri.com/article/argentina-breaks-uruguay-s-72-years-old-record-1783861505</id>
            <summary type="text">12 FIFA உலகக்கிண்ணப் போட்டிகளில் 2 கோல்கள் அல்லது அதற்கு மேற்பட்ட கோல்கள் அடித்து அர்ஜென்டினா சாதனை படைத்தது.&amp;nbsp;அர்ஜென்டினா&amp;nbsp;சாதனை
FIFA உலகக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>12 FIFA உலகக்கிண்ணப் போட்டிகளில் 2 கோல்கள் அல்லது அதற்கு மேற்பட்ட கோல்கள் அடித்து அர்ஜென்டினா சாதனை படைத்தது.&nbsp;</p><h2>அர்ஜென்டினா&nbsp;சாதனை</h2><p>
FIFA உலகக்கிண்ணத் தொடரின் காலியிறுதிப் போட்டியில், அர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b6c0096-22c7-443c-9185-d683ca109a71/26-6a5391dcc94e4.webp' /></p><p></p><p>

இந்தப் போட்டியில் 3 கோல்கள் அடித்ததன் மூலம் உருகுவே அணியின் 72 ஆண்டுகால சாதனையை அர்ஜென்டினா முறியடித்தது.</p><p>

அதாவது, 11 ஃபிபா உலகக்கிண்ணப் போட்டிகளில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட கோல்கள் அடித்த அணி என்ற சாதனையை இதுவரை உருகுவே வைத்திருந்தது.&nbsp;</p><h2>மெஸ்ஸி&nbsp;முதல் வீரர்</h2><p>
1930ஆம் ஆண்டு முதல் 1954ஆம் ஆண்டு வரையில் உருகுவே இந்த சாதனையை செய்திருந்தது; அதனை அர்ஜென்டினா அணி முறியடித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35bd6d9a-c220-4a77-982f-6137af302df6/26-6a53910497d87.webp' />&nbsp;</p><p>

 மேலும், நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) FIFA உலகக்கிண்ணப் போட்டியில் 15 நாக்-அவுட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். </p><p>

இதற்கு முன்பு, ஜேர்மனி அணியின் மிரோஸ்லாவ் க்ளோஸ் (Miroslav Klose) 14 போட்டிகளில் விளையாடியது சாதனையாக இருந்தது.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7810e2bd-b1c1-4ad1-9ca8-5223278bdf4d/26-6a539103e9e8c.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T13:07:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கதிர்காம பாதயாத்திரையில் பயணித்த இரண்டாவது யாத்திரிகரும் உயிரிழப்பு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/second-pilgrim-kathirgamam-pilgrimage-passes-away-1783859905"></link>
            <id>https://tamilwin.com/article/second-pilgrim-kathirgamam-pilgrimage-passes-away-1783859905</id>
            <summary type="text">கதிர்காம பாதயாத்திரையில் பயணித்த மற்றுமொரு யாத்திரிகர்&amp;nbsp; திடீரென உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று(12) ஞாயிற்றுக்கிழமை காலை பாணமையில் இடம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கதிர்காம பாதயாத்திரையில் பயணித்த மற்றுமொரு யாத்திரிகர்&nbsp; திடீரென உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் இன்று(12) ஞாயிற்றுக்கிழமை காலை பாணமையில் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>இரண்டாவது யாத்திரிகர்</h2><p>
</p><p>
நற்பிட்டிமுனையைச் சேர்ந்த நடராஜா அருள்குமார் என்பவரே இவ்வாறு மரணமான
யாத்திரிகர் ஆவார்.

இவரது சடலம் பாணமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2b3e38f-7777-4de2-a404-ac381caadc31/26-6a538c8fd4dcd.webp' /></p><p>
</p><p>
சடலத்தை லாகுகலை பிரதேச பிரதம பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.புனிதராஜன்
பார்வையிட்டார்.</p><p>

இதேவேளை பாதயாத்திரை முதல் யாத்திரிகர் கடந்த 8 ஆம் திகதி பொத்துவில் -
குண்டுமடு பகுதியில் உயிரிழந்தார். அவர் வவுனியாவைச் சேர்ந்தவர் என்பது
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T12:45:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரா. சம்பந்தனுக்கு கிழக்கில் சிலை வைக்க வேண்டாம்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/don-t-put-a-statue-of-ira-sampanthan-in-the-east-1783859650"></link>
            <id>https://tamilwin.com/article/don-t-put-a-statue-of-ira-sampanthan-in-the-east-1783859650</id>
            <summary type="text">இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு
கொள்கை கொண்டு செயற்பட்ட ஒரு மனிதர். அவருக்கு நினைவு தூபி அமைப்பதாக இருந்தால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு
கொள்கை கொண்டு செயற்பட்ட ஒரு மனிதர். அவருக்கு நினைவு தூபி அமைப்பதாக இருந்தால்
அவர்களது சொந்த இடத்தில் அமைக்க வேண்டும், பொது இடத்தில் அமைப்பதற்கான அங்கீகாரம் கிடைக்காது என ஈழத் தமிழர் முன்னணி
கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் தெரிவித்துள்ளார்.</p><p> 

இந்த விடயம் தொடர்பில், ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் இன்று(12.07.2026) ஊடக அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><h2>

சிறைச்சாலை மோதலுக்கு கண்டனம்</h2><p>
மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது, </p><p> 

மட்டக்களப்பு கிரானில் கடந்த 6 மாதத்திற்கு முன்னர் கட்சி காரியாலயம் திறந்து வைக்கப்பட்ட நிலையில், உடல்நலம் குறைவு ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக சுமாராக 6 மாதங்களாக கட்சி வேலைகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியாதவொரு நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59761588-f780-4324-bcaa-ed987154f397/26-6a538a2a84c5e.webp' /></p><p> </p><p>

இருந்த போதிலும் கட்சி தொடர்பான வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

தற்போதுள்ள எங்களுடைய நிகழ்ச்சி நிரலில், இலங்கை தமிழரசுக்கட்சியை கிழக்கு மண்ணில் இருந்து விரட்டியடிப்பதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது. </p><p> சிலருக்கு இந்த விடயத்தை கேட்கும் பொழுது ஏளனமாக இருக்கும், ஆனால் இப்படியொரு சம்பவம் விரைவில் நடக்கும். 



கடந்த சில வாரங்களாக சிறைச்சாலைகளில் இடம்பெற்று வரும் பல சட்டவிரோத
செயற்பாடுகளுக்கான காரணங்களை விரைவில் அநுர அரசாங்கம் கண்டறிய வேண்டும்.</p><p> 

அத்துடன், இதுபோன்ற குற்றங்களை செய்யும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம். </p><h2> 

 

சிலை உடைக்கப்படும்..</h2><p>
இதேவேளை, இப்படியான குற்றச் செயல்கள் இனிவரும் காலங்களில் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் இதன்போது வலியுறுத்திக் கொள்கின்றேன். </p><p>


மறைந்த இலங்கை தமிழரசுக் கட்சி தலைவரான இரா. சம்மந்தனுக்கு உருவ
சிலை அமைப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக அறிகின்றேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f116607-db89-4e19-994e-e4f3753d5013/26-6a538a2b42685.webp' /></p><p> </p><p> அப்படியாயின், அந்த நினைவு தூபி அமைப்பது அவர்களது சொந்த இடங்களில் அமைக்க வேண்டும், ஆனால் பொது இடங்களில் நினைவு தூபி அமைக்கக் கூடாது.


இரண்டு கொள்கை கொண்டு செயற்பட்ட ஒரு மனிதருக்கு கிழக்கில் சிலை வைப்பதற்கான அங்கீகாரத்தை வழங்க முடியாது. </p><p>அவ்வாறு பொது இடங்களில் சிலை அமைக்கும் பட்சத்தில், எமது அமைப்பு சார்பாக கடும் கண்டம் தெரிவிப்பதுடன், அதனை அகற்றுவதற்கான முழு முயற்சிகளும் எடுக்கப்படும். </p><p>


இந்த விடயத்தை வன்முறை, மிரட்டல், அச்சுறுத்தல் என கூறுவதற்கு முதலே இதனை அறிவித்துக் கொள்கின்றோம். இருந்தபோதும் அவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி அந்த
சிலையை அமைக்க முயன்றால் அதனையும் அகற்றப்படும் என உறுதியாக கூறிக்
கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T12:36:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[புரதச்சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப்பயிறு தோசை.., எப்படி செய்வது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/healthy-dosa-recipe-in-tamil-1783859581"></link>
            <id>https://news.lankasri.com/article/healthy-dosa-recipe-in-tamil-1783859581</id>
            <summary type="text">பச்சை பயிறு உடலிற்கு ஒரு ஆரோக்கியமான தானியம் ஆகும். 

இது உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. 

முளைகட்டிய ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பச்சை பயிறு உடலிற்கு ஒரு ஆரோக்கியமான தானியம் ஆகும். 

இது உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. </p><p>

முளைகட்டிய பச்சைப்பயறு அதிக புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் வைட்டமின்களைக் கொண்ட ஒரு சிறந்த ஆரோக்கிய உணவாகும்.</p><p> 

இது உடல் எடையைக் குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுக்கவும், இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.
</p><p>
அந்தவகையில், சத்தான முளைகட்டிய பச்சைப்பயிறு தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.</p><p></p><h2>தேவையான பொருட்கள்</h2><ul><li> 

பச்சைப்பயிறு- 1 கப்</li><li>
பச்சரிசி- 50g</li><li> 
பச்சை மிளகாய்- 4</li><li> 
இஞ்சி- 1 துண்டு </li><li>
கல் உப்பு- 1 ஸ்பூன்</li><li> 
சீரகம்- 1 ஸ்பூன்</li><li> 
மஞ்சள் தூள்- ½ ஸ்பூன் </li><li>
பெருங்காயத்தூள்- ½ ஸ்பூன்</li><li> 
நெய்- சிறிதளவு</li></ul><h2> 

செய்முறை</h2><p>

முதலில் பச்சைப்பயிரில் தண்ணீர் ஊற்றி இரவு முழுக்க ஊறவிட்டு பின்பு தண்ணீரை வடிகட்டி
பயிரை துணியில் கட்டி இரவு முழுக்க வைக்கவும்.
</p><p>
அடுத்து பச்சரிசியை நினைக்க கழுவி ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5958fa95-b928-43f1-b3ea-5709c8442a4d/26-6a53897f1efc1.webp' /></p><p>பின் ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த அரிசி, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கல் உப்பு, சீரகம், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மற்றும் ஊறவைத்த பச்சை பயறு சேர்த்து நன்கு அரைக்கவும்.
</p><p>
பின்பு மாவை பாத்திரத்திற்கு மாற்றி அதில் உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.</p><p>

இதற்கடுத்து தோசைக்கல்லில் கலந்த மாவை ஊற்றி நெய் சேர்த்து தோசை வெந்ததும் எடுத்தால் சத்தான முளைகட்டிய பச்சைப்பயிறு தோசை தயார்.

&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T12:33:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/temperatures-rise-across-many-parts-of-country-1783858685"></link>
            <id>https://jvpnews.com/article/temperatures-rise-across-many-parts-of-country-1783858685</id>
            <summary type="text">முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு, இன்றைய தினத்திற்கான (12) வெப்பமான காலநிலை தொடர்பான &#039;அம...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு, இன்றைய தினத்திற்கான (12) வெப்பமான காலநிலை தொடர்பான 'அம்பர்' எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
</p><p style="text-align: justify;">


இயற்கை அனர்த்தங்கள் குறித்த முன்னெச்சரிக்கை நிலையத்தின் தகவல்படி, பகல் வேளையில் குறித்த மாவட்டங்களின் சில பகுதிகளில் வெப்பச் சுட்டெண் அதாவது மனித உடல் உணரும் வெப்பநிலை - 'எச்சரிக்கை'&nbsp; நிலையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d165534-efe1-450d-9fc1-c23fea19b6c9/26-6a5385feee112.webp' /></p><h2 style="text-align: justify;">வெப்பச் சுட்டெண்</h2><p style="text-align: justify;">



வெப்பச் சுட்டெண் என்பது ஈரப்பதன் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையைக் கொண்டு கணக்கிடப்படுவதாகவும், இது மனித உடல் உணரும் வெப்பத்தை பிரதிபலிக்கிறதே தவிர, அது முன்னறிவிக்கப்பட்ட அதிகபட்ச வெப்பநிலை அல்ல என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">


வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



வேலைத்தளங்களில் உள்ளவர்கள் போதியளவு நீர் அருந்துவதுடன், நிழலில் அடிக்கடி ஓய்வு எடுக்க வேண்டும்.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify;">
முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.குழந்தைகளை ஒருபோதும் வாகனங்களில் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம்.
</p><p style="text-align: justify;">


கடினமான வேலைகளைக் குறைத்துக்கொள்வதுடன், நிழலில் இருக்கவும், அதிகளவு நீர் அருந்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அத்துடன், இலகுவான, வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும் பொதுமக்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-12T12:30:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[உங்கள் குரல் என்றென்றும் நிலைத்திருக்கும் ஜானகி அம்மா... த்ரிஷாவின் உருக்கமான பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/actress-trisha-pay-heartfelt-tribute-to-s-janaki-1783858154"></link>
            <id>https://manithan.com/article/actress-trisha-pay-heartfelt-tribute-to-s-janaki-1783858154</id>
            <summary type="text">பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி, வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி, வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி, ஜூலை 11 அன்று மாலை 7.30 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
</p><p>
அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/384e01b0-5017-414d-9c17-04e05429f3f4/26-6a5388745d2c2.webp' /></p><p>
இந்த நிலையில், நடிகை த்ரிஷா தனது சமூக ஊடக பக்கத்தில் பாடகி எஸ். ஜானகி மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். </p><h2>த்ரிஷாவின் உருக்கமான பதிவு</h2><p>

த்ரிஷா தனது பதிவில், </p><p>
எனது மிகச் சிறப்பான திரைப்படங்களில் ஒன்றில் உங்கள் பெயரைத் தாங்கியிருப்பது, என் வாழ்நாளின் ஆகச்சிறந்த கௌரவங்களில் ஒன்றாக என்றென்றும் திகழும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ae96342-19b3-4111-8e60-e81e303cf8c1/26-6a5388750d5cb.webp' /></p><p></p><p>ஆனால், உங்களை அறிந்திருப்பதும், உங்கள் அன்பைப் பெற்றிருப்பதும் நான் என்றென்றும் போற்றிப் பாதுகாக்கும் ஒரு விஷயமாக இருக்கும். 

உங்கள் அரவணைப்பு, கனிவு, சிரிப்பு மற்றும் 'சிறந்த கலைஞர்களே மிகவும் எளிமையானவர்கள்' என்பதை எனக்கு எப்போதும் நினைவூட்டியமைக்கு நன்றி.</p><p>

உங்கள் குரல் என்றென்றும் நிலைத்திருக்கும்.
அமைதியாகத் துயில்கொள்ளுங்கள் ஜானகி அம்மா ... என உருக்கமான பதிவுடன் ஜாகியுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களையும் த்ரிஷா பகிர்ந்துள்ளார்.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DaqnMMeEyCY/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DaqnMMeEyCY/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DaqnMMeEyCY/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Trish (@trishakrishnan)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<a> </a><b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b><a>&nbsp; &nbsp; </a>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T12:29:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது அமெரிக்கா 3ஆவது கட்டமாக தாக்குதல்: 140 இராணுவ நிலைகள் தரைமட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/usa-iran-war-attack-starts-1783859198"></link>
            <id>https://tamilwin.com/article/usa-iran-war-attack-starts-1783859198</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை பகுதியில் சைப்ரஸ் நாட்டு கொடியுடன் பயணித்த &#039;எம்.வி
ஜி.எஃப்.எஸ் கேலக்ஸி&#039; என்ற சரக்குக் கப்பல் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர
காவல்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை பகுதியில் சைப்ரஸ் நாட்டு கொடியுடன் பயணித்த 'எம்.வி
ஜி.எஃப்.எஸ் கேலக்ஸி' என்ற சரக்குக் கப்பல் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர
காவல்படை அண்மையில் தீவிர தாக்குதல் நடத்தியது.
</p><p>
இந்தத் தாக்குதலால் கப்பலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு அதன் என்ஜின் பகுதி
கடுமையாக சேதமடைந்ததுடன், கப்பல் ஊழியர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
</p><p>
ஈரானின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்க மத்திய
கட்டளைத் தலைமையகம் இந்த வாரத்தில் மூன்றாவது முறையாக ஈரான் மீது வான்வழி
மற்றும் கடல்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.</p><p></p><h2>தாக்கி அழிக்கப்பட்ட இலக்குகள்</h2><p>

அமெரிக்க ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட இந்த தீவிரத்
தாக்குதலில், ஈரானில் உள்ள சுமார் 140 இராணுவ இலக்குகள் துல்லியமாகத் தாக்கி
அழிக்கப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.</p><p>இதில் ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் (ஆளில்லா விமானம்) தளங்கள், கடற்படை
உள்கட்டமைப்புகள், ஆயுதக் கிடங்குகள் மற்றும் கடலோர கண்காணிப்பு மையங்கள்
ஆகியவை முக்கியமாக குறிவைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b2fcac2-4a0b-43a6-8b68-7a125e5b1769/26-6a5388012e4a3.webp' /></p><p>
இந்த வாரத்தில் மட்டும் மொத்தம் மூன்று கட்டங்களாக நடத்தப்பட்ட தாக்குதல்களில்
ஈரானின் 300க்கும் மேற்பட்ட இராணுவ நிலைகள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாக
அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
</p><p>
சர்வதேச கடல் வழித்தடங்களில் பயணிக்கும் வணிகக் கப்பல்கள் மற்றும்
மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஈரான் தவறிவிட்டதாகவும், அதற்கான தகுந்த
விலையை ஈரான் தற்போது செலுத்தி வருவதாகவும் அமெரிக்க பாதுகாப்புத்துறை
வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T12:28:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலக்கரி கொள்முதல் முறைகேடுகள்! மூன்றாவது நாளாக பதிவு செய்யப்படும் சாட்சியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/coal-procurement-investigations-1783857963"></link>
            <id>https://ibctamil.com/article/coal-procurement-investigations-1783857963</id>
            <summary type="text">நிலக்கரி கொள்முதல் பரிவர்த்தனைகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழு, நாளை (13) தொடர்ந்து மூன்றாவது நாளாக சாட்சியங்களைப் பதிவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலக்கரி கொள்முதல் பரிவர்த்தனைகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழு, நாளை (13) தொடர்ந்து மூன்றாவது நாளாக சாட்சியங்களைப் பதிவு செய்யவுள்ளது.</p><p>

இதன்படி, நொரோச்சோலையில் உள்ள லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் பிரதி மேலாளர் ஏ.பி.எம். துஷன் அபேய்கூன் மற்றும் மேலும் இரண்டு அதிகாரிகள் நாளை சாட்சியம் அளிக்க அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

பிரதி மேலாளர் ஏ.பி.எம். துஷன் அபேய்கூன், இதற்கு முன்னர் கடந்த புதன்கிழமை, ஜூலை 8 அன்று, சாட்சியம் அளிப்பதற்காக ஆணைக்குழுவின் முன் அழைக்கப்பட்டிருந்தார்.</p><p></p><h2>முறைகேடுகள் குறித்த விசாரணை</h2><p>இதுவரை, நான்கு அதிகாரிகளிடமிருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.சாட்சியம் அளித்த மற்ற அதிகாரிகள், எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அபோன்சோ, அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மற்றும் நிறுவனங்களின் பதிவாளர் ஷ்யாமா ஹர்ஷனி ஆகியோர் என தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa498356-f3c7-420d-96d7-0233c876dee4/26-6a538855c2c61.webp' /></p><p>

2009-ஆம் ஆண்டு முதல் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலக்கரி பரிவர்த்தனைகள் மற்றும் அது தொடர்பான நடைமுறைகளில் கூறப்படும் மோசடி, ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்காக, நிலக்கரி கொள்முதல் பரிவர்த்தனைகளை விசாரிக்கும் சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழுவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T12:28:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒவ்வொரு நடிகருக்கும் தனிப்பட்ட எல்லைகள் உள்ளன.. நடிகை கயாடு லோஹரின் வெளிப்படை பேச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/kayadu-lohar-latest-speech-gone-viral-1783853572"></link>
            <id>https://viduppu.com/article/kayadu-lohar-latest-speech-gone-viral-1783853572</id>
            <summary type="text">வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவரான கயாடு லோஹரின் சமீபத்திய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அவர் பேசியது, &quot;படப்பிடிப்பில் எனக்கு உடன்பாடில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவரான கயாடு லோஹரின் சமீபத்திய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78f5d715-c25b-47ee-ad72-9ef7c76b4988/26-6a53720734f3a.webp' /></p><p> </p><p>

அவர் பேசியது, "படப்பிடிப்பில் எனக்கு உடன்பாடில்லாத ஆடை அல்லது காட்சிகள் இருந்தால் இயக்குநர், படக்குழுவினரிடம் வெளிப்படையாக பேசிவிடுவேன். ஒவ்வொரு நடிகருக்கும் தனிப்பட்ட எல்லைகள் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df428203-ffb8-4bae-8fcc-9b77d30f2183/26-6a537207da47d.webp' /></p><p> அவை மதிக்கப்பட வேண்டும். 

திறந்த உரையாடலே பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான பணி சூழலை உருவாக்கும். எனவே நம்முடைய எல்லைகளில் உறுதியாக இருப்பதும், நம் கவலைகளை தெரிவிப்பதும் மிகவும் முக்கியம்" என கூறியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-12T12:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கத்தாரை நவீனமயமாக்கி மாற்றங்களுக்கு வித்திட்ட அரசர் காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/qatar-former-amir-sheikh-hamad-passed-away-at-74-1783858756"></link>
            <id>https://news.lankasri.com/article/qatar-former-amir-sheikh-hamad-passed-away-at-74-1783858756</id>
            <summary type="text">கத்தார் நாட்டின் முன்னாள் ஆட்சியாளர் ஷேக் ஹமத் தனது 74வது வயதில் காலமானார்.&amp;nbsp;நவீனமயமாக்கியவர் 

1995ஆம் ஆண்டில் கத்தாரில் அதிகாரத்தைக் கைப்பற்றி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கத்தார் நாட்டின் முன்னாள் ஆட்சியாளர் ஷேக் ஹமத் தனது 74வது வயதில் காலமானார்.&nbsp;</p><h2>நவீனமயமாக்கியவர் </h2><p>

1995ஆம் ஆண்டில் கத்தாரில் அதிகாரத்தைக் கைப்பற்றி, நாட்டை பெருமளவில் நவீனமயமாக்கியவர் ஷேக் ஹமத் பின் கலீஃப்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02ad4f32-ece8-4c1a-b3a2-07818430aa2c/26-6a5387a31acf8.webp' />&nbsp;</p><p></p><p> 



கத்தாரின் வரலாற்றிலேயே மிக முக்கியமான காலகட்டங்களில் ஒன்றில் ஷேக் ஹமத் தலைமை வகித்தார். இதன்மூலம் கத்தாரின் தந்தை என்று அழைக்கப்பட்டார்.</p><p>

மன்னர் என்று பொருள்படும் "அமீர்" ஆக உச்சபட்ச அதிகாரம் கொண்டவராக 1993 முதல் 2013 வரை இவர் இருந்தார். </p><p>



சிறிய நாடான கத்தாரின் பொருளாதாரம், உலகளாவிய நற்பெயர் மற்றும் அரசியல் லட்சியங்கள் ஆகியவற்றை மறுசீரமைக்கும் வகையிலான விரைவான மாற்றங்களுக்கு வித்திட்ட இவர், 18 ஆண்டுகளுக்கு பிறகு மரபுகளை மீறி தனது மகனிடம் அதிகாரத்தை ஒப்படைத்தார். </p><h2>

74 வயதில்</h2><p>இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை ஷேக் ஹமத் (Sheikh Hamad) 74 வயதில் காலமானதாக கத்தாரின் உயர்மட்ட அரசு அமைப்பான Amiri Diwan அறிவித்தது. அவரது இறப்பிற்கான காரணம் குறித்த விவரங்கள் அதில் குறிப்பிடப்படவில்லை.</p><p>

கத்தாரில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) தொடர்பான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஷேக் ஹமத் முக்கிய காரணகர்த்தாவாக திகழ்ந்தார்.</p><p> 

அவரது இந்த முயற்சி, நாட்டின் பிரம்மாண்டமான எரிவாயு இருப்பை உலக சந்தைகளுக்குக் கொண்டு செல்ல உதவியது.</p><p>&nbsp;அத்துடன் கத்தாரை உலகத்தின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களில் ஒரு நாடாக மாற்றியது மட்டுமின்றி, அதன் அபரிமிதமான செல்வ வளத்திற்கான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தது.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f9d14de-6e21-4baf-991a-2fb6b3edc6c3/26-6a5387a3da7f8.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T12:17:56+00:00</updated>
        </entry>
    </feed>
