<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-15T18:41:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேர்வின் சில்வா உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chargesheet-filed-6-people-including-mervyn-silva-1784140462"></link>
            <id>https://jvpnews.com/article/chargesheet-filed-6-people-including-mervyn-silva-1784140462</id>
            <summary type="text">போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/175ecc8d-9f5e-4b07-8369-b1498677ee1b/26-6a57d2b015c29.webp' /></p>]]></content>
            <updated>2026-07-15T18:34:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த ஜனாதிபதி யார்! இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய புதிய கூட்டணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/next-president-new-sri-lankan-politics-npp-anura-1784137351"></link>
            <id>https://tamilwin.com/article/next-president-new-sri-lankan-politics-npp-anura-1784137351</id>
            <summary type="text">இலங்கையின் அரசியல் நடவடிக்கை நாளுக்கு நாள் மாறிக்கொண்டு செல்வதுடன் பல புதிய அணிகளும், கூட்டணிகளும் உருவாகி வருகின்றன.இந்தநிலையிலே, அடுத்த ஜனாதிபதித்தே...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் அரசியல் நடவடிக்கை நாளுக்கு நாள் மாறிக்கொண்டு செல்வதுடன் பல புதிய அணிகளும், கூட்டணிகளும் உருவாகி வருகின்றன.</p><p>இந்தநிலையிலே, அடுத்த ஜனாதிபதித்தேர்தல் 2029 இல் நடைபெறவுள்ளது.இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளுக்காக தயார்படுத்தலை முன்னெடுத்து வருகின்றன.</p><p>பல்வேறு தரப்புக்கள் தங்களது ஆதரவாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.உதாரணமாக நாமல் ராஜபக்ச மற்றும் திலித் ஜயவீர போன்றோர் மக்கள் சந்திப்பை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>எதிர்வரும்&nbsp;ஜனாதிபதித்தேர்தலிலே பொது வேட்பாளர்களாக ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ, நாமல் ராஜபக்ச, சம்பிக்க ரணவக்க, தயாசிறி ஜயசேகர போன்றோர் போட்டியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><p>அடுத்த ஜனாதிபதித்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை திர்மானிப்பதில் தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக கட்சிகளின் ஆதரவு முக்கிய பங்காற்றும் எனக் கூறப்படுகின்றது.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/b746TCSqv10" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T18:34:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிற்கு தொடர் பதிலடி வழங்கப்படும்...! ஈரான் பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-rejects-talks-vows-retaliation-to-us-1784135779"></link>
            <id>https://ibctamil.com/article/iran-rejects-talks-vows-retaliation-to-us-1784135779</id>
            <summary type="text">அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு ஈரான் தொடர்ந்து உறுதியான முறையில் பதிலடி கொடுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு ஈரான் தொடர்ந்து உறுதியான முறையில் பதிலடி கொடுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்தோடு பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் எதுவும் இல்லை எனவும் ஈரான் தெரிவித்துள்ளது.
</p><p>
ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் எஸ்மாயில் பகாய் (Esmaeil Baghaei) இதனை தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>நாட்டின் பாதுகாப்பு</h2><p>சர்வதேச ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தற்போது எங்களிடம் பேச்சுவார்த்தைக்கான எந்த திட்டமும் இல்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d278991e-ee41-4e8c-9f7b-c7fa8b83bb3b/26-6a57ce9b0b501.webp' /></p><p>நாட்டின் பாதுகாப்பில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.
</p><p>
அமெரிக்கா தனது கடமைகளை மீறினால் ஈரான் எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் கட்டுப்படாது.
</p><p>
இது ஒரு கொள்கை, இதனை நாங்கள் தொடர்ந்து பின்பற்றுவோம் ஆரம்பத்திலிருந்தே போர்நிறுத்தத்தை அமெரிக்கா உதாசீனப்படுத்தி வருவதாக ஈரான் நம்புகின்றது” என தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T18:30:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[லித்துவேனியா மீதான தாக்குதல் திட்டம் வெறும் கதை: குற்றச்சாட்டுகளை மறுத்தது ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/russia-denies-lithuania-attack-plan-just-story-1784138996"></link>
            <id>https://tamilwin.com/article/russia-denies-lithuania-attack-plan-just-story-1784138996</id>
            <summary type="text">தங்கள் நாட்டின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா
திட்டமிட்டுள்ளதாக லித்துவேனியா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை ரஷ்ய ஜனாதிபதி
மாளிகையான கிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தங்கள் நாட்டின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா
திட்டமிட்டுள்ளதாக லித்துவேனியா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை ரஷ்ய ஜனாதிபதி
மாளிகையான கிரெம்ளின் முற்றிலுமாக மறுத்துள்ளது.
</p><p>
ரஷ்யாவிற்கு எதிராக தங்களை இராணுவமயமாக்கிக் கொள்வதற்காகவே லித்துவேனியா
இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதாக ரஷ்யா சாடியுள்ளது.</p><p></p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>
</p><p>
முன்னதாகப் பேட்டியளித்த லித்துவேனியா ஜனாதிபதி கிட்டானஸ் நௌசேடா, தங்கள்
நாட்டின் உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத்
தங்களுக்கு உளவுத்துறைத் தகவல் கிடைத்துள்ளதாகவும், இதன் காரணமாக
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டின் ஆற்றல் மற்றும் போக்குவரத்து
மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33976a57-9197-4e84-92ed-6ebde8a6f212/26-6a57d0bad9229.webp' /></p><p>
</p><p>
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய கிரெம்ளின்
செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், "மக்களை மூளைச்சலவை செய்து, நாட்டை
மேலும் இராணுவமயமாக்குவதற்காகப் பரப்பப்படும் அச்சுறுத்தல் கதைகளின் சமீபத்திய
வடிவமே இதுவாகும்.</p><p>

இந்த நோக்கத்தை அடைவதற்காக, அவர்கள் மற்றொரு நாட்டை - இந்தச் சூழலில் எங்களது
நாட்டை - எதிரியாகக் காட்ட வேண்டியுள்ளது.
</p><p>
இந்த சாக்கைப் பயன்படுத்தி பால்டிக் நாடுகளில் நேட்டோ (NATO) அமைப்பின் இராணுவ
உள்கட்டமைப்புகளை அவர்கள் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகின்றனர்” என்று
குற்றம் சாட்டினார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T18:26:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த மூன்று நாட்களுக்கு கதி கலங்கப்போகிறது ஈரான் : ட்ரம்ப் உயர்மட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-warns-severe-military-action-on-iran-1784139912"></link>
            <id>https://ibctamil.com/article/trump-warns-severe-military-action-on-iran-1784139912</id>
            <summary type="text">அமெரிக்க இராணுவம் அடுத்த மூன்று நாட்களுக்கு ஈரானை கடுமையாக தாக்கப்போவதாக ஜனாதிபதி ட்ரம்ப் இன்று (15)மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அமெரிக்க ஊடகங்கள் செய்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க இராணுவம் அடுத்த மூன்று நாட்களுக்கு ஈரானை கடுமையாக தாக்கப்போவதாக ஜனாதிபதி ட்ரம்ப் இன்று (15)மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தையை நடத்தினார். ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் ஈரானை பலவீனப்படுத்துவதே இதன் நோக்கம் என அவர் தெரிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2>இராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்</h2><p>இந்த சந்திப்புக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், ஈரான் பேச்சுவார்த்தைக்கு மறுத்தால் வரும் நாட்களில் இராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்றும், தொடர்ந்து பரந்த அளவிலான தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bab2c2ed-4aa3-4066-8c60-2e2112612dfc/26-6a57d089c3605.webp' /></p><p>
</p><p>


இதுகுறித்து மேலும் கூறிய அவர், “அடுத்த மூன்று நாட்களுக்கு அமெரிக்க இராணுவம் ஈரானைக் கடுமையாகத் தாக்கப் போகிறது.

அடுத்த வாரம் அவர்களின் நிலைமை மிகவும் மோசமாகப் போகிறது.</p><p></p><h2>மின் உற்பத்தி நிலையங்கள் பாலங்கள் மீது தாக்குதல்&nbsp;</h2><p> </p><p>ஏனென்றால், அதற்கு அடுத்த வாரம் மின் உற்பத்தி நிலையங்கள் மீதும், அதற்கு அடுத்த வாரம் பாலங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27249836-58d5-4706-b932-f91b5b5165a1/26-6a57d08a75ff6.webp' /></p><p>
</p><p>
அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால், நாங்கள் அவர்களுடைய அனைத்து மின் உற்பத்தி நிலையங்களையும், பாலங்களையும் தகர்த்துவிடுவோம்” என்று அவர் கூறினார்.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T18:25:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரியன் - சந்திரன் ஒரே நாளில் நிகழும் அரிய ராசி மாற்றம்... இந்த ராசிகளுக்கு இனி பொற்காலம் தான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sun-and-moon-change-their-zodiacs-who-get-luck-1784118927"></link>
            <id>https://manithan.com/article/sun-and-moon-change-their-zodiacs-who-get-luck-1784118927</id>
            <summary type="text">ஜூலை மாதத்தில் பல முக்கியமான மற்றும் சக்திவாய்ந்த கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. அவற்றில் மிகவும் சிறப்பான ஜோதிட நிகழ்வாக, நாளைய தினம் ஜூலை 16, 202...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜூலை மாதத்தில் பல முக்கியமான மற்றும் சக்திவாய்ந்த கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. அவற்றில் மிகவும் சிறப்பான ஜோதிட நிகழ்வாக, நாளைய தினம் ஜூலை 16, 2026 சூரியனும் சந்திரனும் ஒரே நாளில் தங்களது ராசிகளை மாற்றுகின்றன. </p><p>சூரியன் மிதுன ராசியிலிருந்து சந்திரனால் ஆளப்படும் கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறது. அதே நேரத்தில், சந்திரன் கடக ராசியிலிருந்து சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறது.அதாவது, சூரியன் சந்திரனின் ராசிக்கும், சந்திரன் சூரியனின் ராசிக்கும் ஒரே நாளில் மாறுவதால், இது மிகவும் அரிதான மற்றும் தனிச்சிறப்புமிக்க கிரக அமைப்பாகக் பார்க்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb786367-eb28-47de-aff3-97ad1aaf05e2/26-6a5793025e7d6.webp' /></p><p></p><p>இந்த கிரக நகர்வு அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், தொழில், தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் நிதி நிலையில் உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகும் ராசிகள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06ced644-3700-441e-9a04-0fd418388ead/26-6a579303131eb.webp' /></p><p>
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த அரிய கிரகச் சேர்க்கை கல்வி, தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்திக்கொடுக்கப்போகின்றது.</p><p>போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும், புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமான சூழல் தானாகவே அமையும். புதிய வழிகளில் பணம் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.</p><p>வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கலாம், பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். பழைய முதலீடுகள் மூலம் பலன் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.மொத்தத்தில் இது மேஷ ராசிக்காரர்களுக்கு முன்னேற்றமும் வெற்றியும் தரும் பொற்காலமாக இருக்கும்.</p><h2>

கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0edb3b89-5cce-40ff-81cb-4ab382450d44/26-6a579303b99af.webp' /></p><p></p><h2>
</h2><p>கடக ராசிக்காரர்களுக்கு இந்த கிரகப் பெயர்ச்சி சாதகமான பலன்களை ஏற்படுத்திக்கொடுக்கும். தன்னம்பிக்கையும் ஆற்றலும் அதிகரித்து, நிதி நிலை மேம்படும்.</p><p> கடந்த கால முயற்சிகளுக்கான பலன்கள் கிடைக்கத் தொடங்கலாம். மூத்தவர்களின் ஆலோசனைகள் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். </p><p>குடும்பம் மற்றும் பணியிடத்தில் ஆதரவு கிடைக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக அமையவும், புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் உருவாகலாம். குறிப்பாக இந்த கிரக அமைப்பு தொழில் விடயத்தில் உச்சகட்ட சாதக பலன்களை ஏற்படுத்திக்கொடுக்கும்.</p><h2>

துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e688f528-1372-49e8-971d-d5c72bc49e11/26-6a57930468c87.webp' /></p><h2>
</h2><p>துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த கிரகச் சேர்க்கை தொழில் வளர்ச்சி மற்றும் அங்கீகாரத்தைத் தரக்கூடும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள், பதவி உயர்வு அல்லது நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.</p><p> நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கலாம், குடும்பத்தில் அமைதி நிலவும். புதிய சொத்து வாங்கும் வாய்ப்பும், எதிர்பாராத வெற்றிகளும் கிடைக்கக்கூடிய காலமாக இது அமையலாம்.</p><p>நீண்ட கால கடன் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும். திருமண வாழ்க்கையில் இருந்துவந்த பிரச்சினைகள் நிவர்த்தியாகும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T18:25:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய அடையாள அட்டை இல்லையா? சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதில் தடையில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/don-t-have-national-identity-card-restriction-o-l-1784139808"></link>
            <id>https://jvpnews.com/article/don-t-have-national-identity-card-restriction-o-l-1784139808</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) பரீட்சைக்கு, தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் விண்ணப்பிக்க முடியும் என இலங்கை பரீட்சைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) பரீட்சைக்கு, தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் விண்ணப்பிக்க முடியும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p></p><p> 

குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல் 03.07.2026 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், எதிர்வரும் 23.07.2026 ஆம் திகதி வரை நிகழ்நிலை ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த காலப்பகுதியில் தேசிய அடையாள அட்டை இல்லாத பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கு விண்ணப்ப ஒழுங்குமுறைக்கான அறிவுறுத்தல்கள் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுள்ளது</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be1145ad-8278-4fff-b072-52f92849b186/26-6a57d02345751.webp' /></p><p>அதேநேரம் தேசிய அடையாள அட்டை இல்லாத தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் தமது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

அதற்கமைய தேசிய அடையாள அட்டை இல்லாத தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் உரிய இறுதித் திகதிக்கு முன்னர் தேசிய அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ளாமையானது பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பம் செய்வதில் எவ்வித தடையுமில்லை என்பதை பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. </p><p>

எனவே சகல விண்ணப்பதாரிகளும் ஊடக வெளியீட்டுக்கமைய 23.07.2026 ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சைக்கான விண்ணப்பத்தினை விண்ணப்பிக்க முடியும். </p><p>

இதேவேளை எவ்வித காரணங்களுக்காகவும் விண்ணப்பத்திற்கான இறுதித்திகதி நீடிக்கப்பட மாட்டாது எனவும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c010187-0c0a-47c2-bdd4-592ba0aef80d/26-6a57d02290435.webp' /></p>]]></content>
            <updated>2026-07-15T18:23:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூடான் உள்நாட்டுப் போர்: கம் அரபிக் பசை வர்த்தகம் மூலம் நிதியுதவி - ஐ.நா. பகிரங்க எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sudanese-civil-war-funde-gum-arabic-trade-1784137897"></link>
            <id>https://tamilwin.com/article/sudanese-civil-war-funde-gum-arabic-trade-1784137897</id>
            <summary type="text">சூடானில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நீடித்து வரும் உள்நாட்டுப் போருக்கு,
அங்கு உலகளவில் நடைபெறும் &#039;கம் அரபிக்&#039; எனப்படும் இயற்கைப் பசை வர்த்தகம் ஒரு
மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூடானில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நீடித்து வரும் உள்நாட்டுப் போருக்கு,
அங்கு உலகளவில் நடைபெறும் 'கம் அரபிக்' எனப்படும் இயற்கைப் பசை வர்த்தகம் ஒரு
முக்கிய நிதியாதாரமாக விளங்கி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
</p><p>
உலகளாவிய சந்தையில் குளிர்பானங்கள், மருந்துப் பொருட்கள், சொக்லேட்டுகள்
மற்றும் அழகுசாதனப் பொருட்களில் நிலைநிறுத்தியாக மற்றும் அடர்த்தியாக்கியாக
இம்மூலப்பொருள் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
</p><p>
உலகளவில் தேவைப்படும் இந்த கம் அரபிக் பசையின் ஒட்டுமொத்த உற்பத்தியில்
சுமார் 80 விழுக்காட்டை சூடான் நாடே பூர்த்தி செய்து வருகிறது.
</p><p>
சூடான் இராணுவத்திற்கும், துணை இராணுவப் பிரிவான விரைவு ஆதரவுப் படைக்கும்
(RSF) இடையே தொடரும் இந்த மோதலில், இரு தரப்புமே இந்த வர்த்தகத்தைக்
கட்டுப்படுத்தி தங்களின் இராணுவச் செயல்பாடுகளுக்கான நிதியைப் பெற்று
வருகின்றன.</p><p></p><h2>சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி</h2><p>
</p><p>
குறிப்பாக, RSF அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து
பெருமளவிலான கம் அரபிக் அண்டை நாடுகளுக்குக் கடத்தப்பட்டு, பின்னர்
அங்கிருந்து அந்த நாடுகளின் உள்ளூர் தயாரிப்புகள் போல போலியாக சர்வதேச
சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5039149c-5a9a-4c03-9574-ee4db188a64b/26-6a57cbf25cc4f.webp' /></p><p>
</p><p>
இதனால் இந்த மூலப்பொருட்களின் அசல் உற்பத்தி நாட்டைத் துல்லியமாகக் கண்டறிவது
உலகளாவிய நிறுவனங்களுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.</p><p>

இந்தப் போர்ச் சூழலால், கம் அரபிக் உற்பத்தி மற்றும் சேகரிப்பில் ஈடுபடும்
உள்ளூர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கடுமையான பாதுகாப்பு
அச்சுறுத்தல்களையும், கொள்ளைச் சம்பவங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
</p><p>
இது குறித்துக் கவலை தெரிவித்துள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையத் தலைவர் வோல்கர்
துர்க், சர்வதேச நிறுவனங்கள் மோதலால் பாதிக்கப்பட்ட விநியோகச்
சங்கிலிகளிலிருந்து தங்களது மூலப்பொருட்களைப் பெறும்போது கூடுதல் பொறுப்புடன்
செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.</p><p>

நிறுவனங்கள் தங்களின் வர்த்தக நடைமுறைகள் மூலம் மறைமுகமாக இந்த வன்முறைக்கும்
மனித உரிமை மீறல்களுக்கும் நிதியுதவி அளிக்கவில்லை என்பதை உறுதி செய்ய முறையான
சரிபார்ப்புப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்
கேட்டுக்கொண்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T18:05:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெர்லின் நபர் மீது 22 பிரிவுகளில் வழக்குகள் பதிவு: சிக்கிய காணொளிகளால் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/berlin-man-charged-with-1784138525"></link>
            <id>https://news.lankasri.com/article/berlin-man-charged-with-1784138525</id>
            <summary type="text">பெர்லினைச் சேர்ந்த ஒருவர், சுயநினைவற்ற பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து, அச்செயல்களை காணொளிப் பதிவு செய்ததாகக் கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெர்லினைச் சேர்ந்த ஒருவர், சுயநினைவற்ற பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து, அச்செயல்களை காணொளிப் பதிவு செய்ததாகக் கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.</p><h2>மொத்தம் 58 பெண்கள்</h2><p>
</p><p>சிக்கியுள்ள காணொளி ஆதாரங்களின் அடிப்படையில், அந்த நபர் 60 பேர்களை வரை தாக்கியிருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f487b7d9-08a4-4917-a552-c9717d3119e5/26-6a57cc95298c6.webp' /></p><p> சுயநினைவற்ற நிலையில் உள்ள பெண்களைக் குறிவைத்துத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்புணர்வு செய்து அதை ஒளிப்பதிவு செய்துகொண்டது தொடர்பான பல முக்கிய வழக்குகளில் சமீபத்திய ஒன்றாக, </p><p>14 பெண்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக 68 வயதுடைய ஜேர்மானியர் ஒருவர் மீது 22 குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளதாக பெர்லின் அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். </p><p>மின்பணியாளரான அந்த நபர் மார்ச் மாதம் முதல் பொலிஸ் காவலில் உள்ளார்.
நிகழ்ந்த ஒவ்வொரு பாலியல் வன்புணர்வுச் சம்பவத்தையும் பதிவு செய்துள்ளதாகக் கருதப்படுவதால், பாதிக்கப்பட்டவர்களின் உருவத்தைப் பயன்படுத்தும் உரிமை மீறலுடனும் இந்த அனைத்துக் குற்றங்களும் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பெர்லின் அரசு சட்டத்தரணிகள் அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையில், மொத்தம் 58 பெண்களுக்கு எதிராகப் பல குற்றங்கள் இழைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக சட்டத்தரணிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது, மேலும், அவர்களில் 10 பெண்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p>மேலும், குற்றம் சாட்டப்பட்டவர், இணையவழி டேட்டிங் தளங்கள் மூலம் பெண்களை வரவழைத்து, மதுவுடன் பல்வேறு தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்து அவர்களை மயக்கமடையச் செய்து, பின்னர் பாலியல் வன்புணர்வு செய்ததாக அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்தனர். </p><p>இதனிடையே, தாக்குதலுக்கு உள்ளானதாகக் கருதப்படுபவர்களில், விசாரணை அதிகாரிகளிடம் ஏற்கனவே பேசியவர்கள், அந்தத் தாக்குதல்கள் குறித்துத் தங்களுக்கு எதுவும் நினைவில் இல்லை என்றும், அக்குற்றச் செயல்கள் தொடர்பான காணொளிகள் கண்டறியப்பட்ட பின்னரே அவை குறித்துத் தாங்கள் அறிந்துகொண்டதாகவும் கூறியுள்ளனர்.</p><h2>டிஜிட்டல் கோப்புகள்</h2><p> </p><p>தன் மீதான குற்றச்சாட்டுகளுக்குச் சந்தேகநபர் இன்னும் பதிலளிக்கவில்லை என்று அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
லோயர் சாக்சனியைச் (Lower Saxony) சேர்ந்த காவல்துறை அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தன. </p><p>2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இறந்துபோன ஒரு நபர் மீதான இதே போன்ற குற்றச்சாட்டுகள் குறித்து லோயர் சாக்சனி காவல்துறை விசாரணை நடத்தி வந்தனர். அந்த நபர், பெர்லினைச் சேர்ந்த சந்தேக நபருடன் இணையவழி உரையாடல்கள் மூலம் தொடர்பில் இருந்ததாகக் கருதப்படுகிறது. </p><p>அந்தத் தகவலின் அடிப்படையில், ஜேர்மன் தலைநகரின் ஃபிரெட்ரிக்ஸ்ஃபெல்டே புறநகர்ப் பகுதியில் உள்ள அந்த நபரின் குடியிருப்பில் பொலிசார் சோதனை நடத்தினர்; அப்போது, ​​ஏராளமான டிஜிட்டல் கோப்புகளைக் கண்டெடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fca9854-3a84-4ac6-ba73-fb3ad36d27c3/26-6a57cc945e716.webp' /></p><p>
</p><p>2026-ஆம் ஆண்டில், ஒரு விசாரணை அதிகாரி பல பாலியல் வன்கொடுமைக் காணொளிகளைக் கண்டெடுத்தார், அவற்றில் பெர்லின் நபரே தாக்குதல் நடத்தியவர் என்று நம்பப்படுகிறது. </p><p>இந்த ஆண்டு மார்ச் மாதம் காவல்துறை மீண்டும் அவரது வீட்டில் சோதனை நடத்தி அவரைக் கைது செய்தது. போதை மருந்து கொடுக்கப்பட்ட பெண்கள் மீது கமெராவில் பதிவான தொடர் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான, இந்த ஆண்டு பெர்லின் மற்றும் மியூனிக்கில் நடந்த இதே போன்ற வழக்குகளை இந்தக் குற்றச்சாட்டுகள் நினைவூட்டுகின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-15T18:00:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் அதிகாரியைச் சுட்டுவிட்டு தப்பிய சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/suspect-who-shot-and-escaped-after-shooting-police-1784138354"></link>
            <id>https://jvpnews.com/article/suspect-who-shot-and-escaped-after-shooting-police-1784138354</id>
            <summary type="text">கட்டுநாயக்க, தேவமொட்டாவ பகுதியில் இன்று (15) பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க, தேவமொட்டாவ பகுதியில் இன்று (15) பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><p></p><p>கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோத்தர் மீது அவரது கடமை நேர துப்பாக்கியால் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தி விட்டு சந்தேகநபர் தப்பிச் சென்றிருந்தார். </p><p>

அவரை கைது செய்வதற்காக பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று மாலை வேளையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07d350b8-cba9-4889-bd35-c401a05a1738/26-6a57ca73c3341.webp' /></p><p>அதேநேரம் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்ந்தும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். </p><p>

கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர், அந்த பொலிஸ் உத்தியோகத்தரின் கடமைநேர துப்பாக்கியைப் பறித்து இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பியோடியிருந்தார்.</p><p> 

கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் செயற்பட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள், மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.</p><p> 

இதன்போது தேவமொட்டாவ பகுதியில் வைத்து சந்தேகநபரை நிறுத்தி விசாரணை செய்த பின்னர், அவரைப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். </p><p>

சந்தேகநபரைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்த போது, ஒரு பொலிஸ் அதிகாரி சந்தேகநபர் வந்த மோட்டார் சைக்கிளை எடுத்து வருவதற்காகச் சென்றுள்ளார். </p><p>

அவ்வேளையில், மற்றைய அதிகாரியுடன் இருந்த சந்தேகநபர், உடனடியாகச் செயற்பட்டு அந்த உத்தியோகத்தரிடம் இருந்த கடமைநேர துப்பாக்கியைப் பறித்து, அவர் மீது துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு வேறொரு மோட்டார் சைக்கிளில் தப்பியோடியமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T17:59:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானில் வீட்டிற்குள் நுழைந்து உணவு தேடிய கரடி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/japan-family-finds-bear-in-kitchen-calls-police-1784133555"></link>
            <id>https://canadamirror.com/article/japan-family-finds-bear-in-kitchen-calls-police-1784133555</id>
            <summary type="text">&amp;nbsp;ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றின் சமையலறைக்குள் கரடி ஒன்று நுழைந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல் துறையினருக்குத் தகவல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றின் சமையலறைக்குள் கரடி ஒன்று நுழைந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். </p><p>
ஜப்பானில் அண்மைக்காலமாக கரடிகளின் தாக்குதலால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p>
ஜப்பானின் இவதே மாகாணத்திலுள்ள ஷிசுகுய்ஷி நகரில் கடந்த திங்கட்கிழமை இரவு இந்த அசாதாரண சம்பவம் நடந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d75970f5-64bf-4d47-adea-fb2af4e66155/26-6a57b7b50ffec.webp' /></p><p> 
வீட்டிற்குள் நுழைந்த கரடி ஒன்று, அங்கிருந்த குளிர்சாதனப் பெட்டியை எளிதாகத் திறந்து, அதிலிருந்த உணவுப் பொருட்களைத் தரையில் சிதறடித்துள்ளது.
</p><p> பின்னர், சமையலறைக்கு அருகில் இருந்த கதவு வழியாக வெளியேறிய அந்தக் கரடி, அங்கிருந்த குப்பைத் தொட்டியிலும் உணவைத் தேடிவிட்டுச் சென்றிருப்பதை அதன் கால்தடங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. </p><p>
ஷிசுகுய்ஷி நகரில் கடந்த ஜூலை 5 ஆம் திகதிக்குப் பின்னர், வீடுகளுக்குள் கரடிகள் புகுந்ததாகப் பதிவாகும் 5-வது சம்பவம் இதுவாகும். 
குளிர்கால உறக்கத்திலிருந்து வெளிவந்த பிறகு, கரடிகள் நகரங்களுக்குள் ஊடுருவுவது கணிசமாக அதிகரித்துள்ளது.</p><p>
ஜப்பானில் அண்மைக்காலமாக கரடித் தாக்குதல்கள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
ஜப்பானிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தரவுகளின்படி, கடந்த ஏப்ரல் 1 ஆம் திகதியிலிருந்து இதுவரை டோஹோகு பிராந்தியத்தில் மட்டும் கரடித் தாக்குதலால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T17:31:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் மின்னணு சாதன மோசடியில் ஈடுபட்டவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/police-make-arrest-in-milton-fake-agent-scam-1784132699"></link>
            <id>https://canadamirror.com/article/police-make-arrest-in-milton-fake-agent-scam-1784132699</id>
            <summary type="text">சாதனங்கள் மீட்பு
கனடாவில் மோசடியில் ஈடுபட்டு தொலைதொடர்பு நிறுவனங்களின் முகவர்கள் போல நடித்து, வாடிக்கையாளர்களை ஏமாற்றி போன்கள் மற்றும் மின்னணு சாதனங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாதனங்கள் மீட்பு
கனடாவில் மோசடியில் ஈடுபட்டு தொலைதொடர்பு நிறுவனங்களின் முகவர்கள் போல நடித்து, வாடிக்கையாளர்களை ஏமாற்றி போன்கள் மற்றும் மின்னணு சாதனங்களைப் பறித்து வந்த மோசடி கும்பலைச் சேர்ந்த ஒருவரை ஹால்டன் பிராந்திய காவல் துறையினர் கைது செய்துள்ளனர். </p><p>
அவரிடமிருந்து சுமார் 36,000 டாலருக்கும் அதிக மதிப்புள்ள 22 மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. </p><p>
மில்டன் பகுதியைத் தளமாகக் கொண்டு செயல்பட்ட இந்த மோசடி கும்பல், கனடாவின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களான Rogers, Bell, அல்லது Telus ஆகியவற்றின் பிரதிநிதிகள் போல வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ec67bc3-62ec-4217-94ce-994f35aec614/26-6a57b45dc1966.webp' /></p><p> </p><p>
வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ளும் மோசடி கும்பல், அவர்களுக்குப் புதிய ஐபோன் அல்லது மின்னணு சாதனங்கள் முற்றிலும் இலவசமாகக் கிடைக்கப் போவதாகக் கூறி நம்ப வைத்துள்ளனர்.
</p><p>வாடிக்கையாளர்களின் தற்போதைய கணக்கைப் (account) பயன்படுத்தி, புதிய போன் அல்லது சாதனங்களை வாங்குமாறு அவர்களை மூளைச்சலவை செய்து ஆர்டர் செய்ய வைக்கின்றனர்.</p><p>
வாடிக்கையாளர்களுக்கு அந்தப் புதிய சாதனம் டெலிவரி செய்யப்பட்டவுடன், மீண்டும் அவர்களைத் தொடர்பு கொள்ளும் மோசடி கும்பல், "ஆர்டரில் தவறு நடந்துவிட்டது, எனவே அந்தப் பெட்டியைப் பிரிக்காமல் எங்களது அஞ்சல் பெட்டிக்கு (PO Box) திருப்பி அனுப்புங்கள்" என்று கூறுகின்றனர்.
</p><p>அஞ்சல் பெட்டிக்கு வரும் அந்தப் புதிய சாதனங்களைச் சேகரிக்கும் மோசடி கும்பல், அவற்றை வெளிநாடுகளுக்கு அனுப்பி சட்டவிரோதமாக விற்றுப் பெரும் லாபம் சம்பாதிக்கிறது.
எனவே இந்த விடயம் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T17:31:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலி சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பார்சல்! தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/drugs-thrown-into-galle-prison-hunt-for-duo-1784130715"></link>
            <id>https://ibctamil.com/article/drugs-thrown-into-galle-prison-hunt-for-duo-1784130715</id>
            <summary type="text">காலி சிறைச்சாலை வளாகத்திற்குள் சந்தேகத்திற்கிடமான பார்சல் ஒன்று வீசப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் காலி சிறைச்சாலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி சிறைச்சாலை வளாகத்திற்குள் சந்தேகத்திற்கிடமான பார்சல் ஒன்று வீசப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்தநிலையில் காலி சிறைச்சாலையின் பின்புறம் அமைந்துள்ள காலி தொடருந்து நிலைய வளாகத்திற்கு (Galle Railway Yard) அருகில் இருந்து சிறைச்சாலை வளாகத்திற்குள் சந்தேகத்திற்கிடமான பார்சல் ஒன்றை வீசிவிட்டு தப்பியோடியதாக தெரிவிக்கப்படும் இருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.</p><p>

காவல்துறை விசேட பணியகத்திற்கு (Police Special Bureau) கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் காலி காவல்துறை தலைமையகத்துடன் இணைந்த அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.</p><p>
</p><p></p><h2>தடைசெய்யப்பட்ட பொருட்கள்</h2><p>அந்த இரு நபர்களால் வீசப்பட்ட சந்தேகத்திற்கிடமான பார்சலை மீட்ட காவல்துறையினர் அதனைப் பரிசோதித்த போது அதில் ஐஸ் (Ice) என அழைக்கப்படும் 2,180 மில்லிகிராம் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் போதைப்பொருள், புகையிலை மற்றும் மொத்தம் 49 சிகரெட் லைட்டர்கள் (Cigarette lighters) இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1af5e590-bca7-4ec7-babd-8688f325f67f/26-6a57bf478851d.webp' /></p><p>சிறைச்சாலை கைதிகளை சென்றடையும் நோக்கில் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்ட இந்த பார்சல் சிறைச்சாலை சுவருக்கு மேல் வீசுவதற்காகத் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
</p><p>
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை காலி காவல்துறை தலைமையகத்தினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T17:30:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடிய நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து: இருவர் பலி, மூவர் காயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/crash-closes-eb-express-lanes-of-hwy-401-1784132157"></link>
            <id>https://canadamirror.com/article/crash-closes-eb-express-lanes-of-hwy-401-1784132157</id>
            <summary type="text">கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், மிசிசாகா பகுதியில் உள்ள நெடுஞ்சாலை 401 இல் இடம்பெற்ற கொடூர வாகன விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக ஒன்டாரியோ மாகாண க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், மிசிசாகா பகுதியில் உள்ள நெடுஞ்சாலை 401 இல் இடம்பெற்ற கொடூர வாகன விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக ஒன்டாரியோ மாகாண காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>இன்று காலை 9 மணிக்குப் பிறகு, டிக்ஸி வீதிக்கு அருகிலுள்ள கிழக்கு நோக்கிய விரைவுப் பாதைகளில்இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><p>
பின்னாலிருந்து வந்த வாகனம் ஒன்று மோதியதில், முன்னால் சென்ற வாகனத்தில் பயணித்த கேம்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த 80 வயது முதியவர் மற்றும் 53 வயது பெண் ஆகிய இருவருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86eec105-cfc3-42f1-96e8-7d55ba3ba2b3/26-6a57b23f45462.webp' /></p><p>
</p><p>மேலும், இந்த விபத்தில் காயமடைந்த மற்ற மூவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.</p><p>
விபத்தைத் தொடர்ந்து மிசிசாகா பகுதியில் உள்ள விரைவுப் பாதைகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டுள்ளன. </p><p>இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மிசிசாகா வீதிக்கும் டிக்ஸி வீதிக்கும் இடைப்பட்ட விரைவுப் பாதைகளுக்குள் எந்தவொரு வாகனமும் அனுமதிக்கப்படவில்லை.
</p><p>ஒரேயொரு கலெக்டர் பாதை மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளதால், வாகனங்கள் மிக மிக மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.</p><p>
மாலை 3 மணி வரை இந்த விரைவுப் பாதைகள் மூடப்பட்டிருக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>இந்த விபத்து நடந்த பகுதியைத் தவிர்த்து, மாற்றுப் பாதைகளாக டெர்ரி வீதி, எக்லிண்டன் அவென்யூ அல்லது நெடுஞ்சாலை 407 ஆகியவற்றைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T17:29:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் மிக மோசமான காற்றுத் தரத்தைக் கொண்ட நகரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/torontos-air-quality-ranked-worst-in-the-world-1784131635"></link>
            <id>https://canadamirror.com/article/torontos-air-quality-ranked-worst-in-the-world-1784131635</id>
            <summary type="text">கனடாவின் வடமேற்கு ஒன்டாரியோ பகுதியில் பரவி வரும் காட்டுத்தீயின் அடர்ந்த புகை மூட்டம் நகருக்குள் பரவியதை அடுத்து, டொரண்டோ நகரின் வானம் ஆரஞ்சு நிறமாக மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் வடமேற்கு ஒன்டாரியோ பகுதியில் பரவி வரும் காட்டுத்தீயின் அடர்ந்த புகை மூட்டம் நகருக்குள் பரவியதை அடுத்து, டொரண்டோ நகரின் வானம் ஆரஞ்சு நிறமாக மாறியுள்ளது. </p><p>
இதனால், புதன்கிழமை உலகிலேயே மிக மோசமான காற்றுத் தரத்தைக் கொண்ட நகரங்களின் பட்டியலில் டொரண்டோ முதலிடத்தைப் பிடித்துள்ளது. </p><p>
வடமேற்கு ஒன்டாரியோவின் காட்டுத்தீ புகை தெற்கு நோக்கி நகர்வதால், டொரண்டோ நகருக்கு "ஆரஞ்சு எச்சரிக்கை" விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85e9d657-1f7d-4b03-bd07-cf534d76aa2a/26-6a57b03549063.webp' /></p><p> </p><p>
கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் ஒன்டாரியோ மாகாணம் முழுமைக்கும் புதிய வண்ணக் குறியீட்டு முறையிலான வானிலை எச்சரிக்கை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>
பாதிப்பு அல்லது உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான வானிலை. 
கடுமையான சேதங்கள் அல்லது கடுமையான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய மிக மோசமான வானிலை. </p><p>
சில பகுதிகளில் இந்த மோசமான காற்றின் தரம் வியாழக்கிழமை வரையிலும் நீடிக்கலாம். புகை மூட்டம் அதிகரிக்கும் போது உடல்நல அபாயங்களும் அதிகரிக்கும் என்பதால், மக்கள் வெளியில் செல்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். வெளிப்புற விளையாட்டுப் போட்டிகள் மற்றும் நிகழ்வுகளைத் தவிர்க்கவோ அல்லது ஒத்திவைக்கவோ பரிசீலிக்கவும் என சுற்றுச்சூழல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p> 
உலகளாவிய காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் IQAir அமைப்பின் தரவுகளின்படி, புதன்கிழமை காலை 8 மணியளவில் டொரண்டோவின் காற்றின் தரம் உலகிலேயே மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.
</p><p>புகை மூட்டம் காரணமாகக் கண், மூக்கு மற்றும் தொண்டை எரிச்சல், தலைவலி அல்லது லேசான இருமல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p> 
வெப்ப அலை மற்றும் காற்று மாசடைவு ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் சேர்ந்து கொண்டு டொரண்டோ மக்களைப் பெரும் அவதிக்குள்ளாக்கியுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T17:29:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலரவிடப்பட்ட பெண்களின் உள்ளாடைகள் மாயம்; கேமராவில் பதிவான காட்சியால் ஷாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/women-inner-wear-left-out-to-dry-go-missing-1784113632"></link>
            <id>https://jvpnews.com/article/women-inner-wear-left-out-to-dry-go-missing-1784113632</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியாவின் பெங்களூர், ஒய்சாலா நகரில் கடந்த ஆறு மாதங்களாகப் பெண்கள் உலர விடும் உள்ளாடைகள் மட்டும் மர்மமான முறையில் அடிக்கடி காணாமல் போயின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியாவின் பெங்களூர், ஒய்சாலா நகரில் கடந்த ஆறு மாதங்களாகப் பெண்கள் உலர விடும் உள்ளாடைகள் மட்டும் மர்மமான முறையில் அடிக்கடி காணாமல் போயின.

 எனினும் திருடுபோன உள்ளாடைகள் சில நாட்களில் மீண்டும் அதே இடத்தில் வந்து கிடக்கும் ஆனால், அதற்குப் பதிலாக வேறு உள்ளாடைகள் மாயமாகியிருக்கும்.
</p><p>
இந்த விசித்திரமான சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்தனர். பொறுமை இழந்த குடியிருப்பாளர்கள், குற்றவாளியைக் கையும் களவுமாகப் பிடிக்க முடிவெடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb951870-075e-43be-8e52-fc406f9de037/26-6a5769e1c2f7d.webp' /></p><p></p><h2>&nbsp;என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை</h2><p> அதன்படி, ஆடைகள் உலர்த்தப்படும் இடங்களை நோக்கியவாறு, கடந்த 1-ஆம் திகதி இரகசியக் கண்காணிப்பு கமராக்களை (CCTV) பொருத்தினர்.

அவர்கள் எதிர்பார்த்தது போலவே, அந்த மர்மநபர், கடந்த 2-ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் ஒரு வீட்டிற்குள் புகுந்தார். </p><p>மிக இயல்பாக பால்கனிக்குச் சென்ற அவர், அங்கு உலர வைக்கப்பட்டிருந்த பெண்களின் உள்ளாடையைத் திருடி, அங்கேயே அணிந்து கொண்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p>

அந்த நபரின் இந்த அருவருக்கத்தக்க செயல் கமராவில் துல்லியமாகப் பதிவானது.

 உடனடியாக இது குறித்து இந்திரா நகர் பொலிஸில் புகார் அளித்து, ஆதாரமான வீடியோவையும் ஒப்படைத்தனர். வீடியோவில் பதிவான உருவத்தை வைத்து பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
</p><p>
விசாரணையில், அவருக்குப் பெண்களின் உள்ளாடைகளைத் திருடி அணிந்து கொள்ளும் வினோதப் பழக்கம் (Fetish) இருப்பது தெரியவந்தது.</p><p></p><p>

 "இந்த விபரீத பழக்கத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை; அதனால்தான் அடிக்கடி அதிகாலை வேளைகளில் வீடுகளுக்குச் சென்று உள்ளாடைகளைத் திருடினேன்" என அவர் வாக்குமூலம் அளித்துள்ளமை அப்பகுதி பெண்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T17:27:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவல் தோசை செய்வது எப்படி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/how-to-prepare-aval-dosai-recipe-for-dinner-1784132016"></link>
            <id>https://manithan.com/article/how-to-prepare-aval-dosai-recipe-for-dinner-1784132016</id>
            <summary type="text">தேவையான பொருள்கள்அரிசி-2கிண்ணம்
உளுந்தம் பருப்பு-1 கிண்ணம்
அரிசி-2கிண்ணம்
அவல்- கால் கிண்ணம்
சீரகம், உப்பு மற்றும் எண்ணெய்
அவல்- கால் கிண்ணம்&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<h2>தேவையான பொருள்கள்</h2><p>அரிசி-2கிண்ணம்
</p><p>உளுந்தம் பருப்பு-1 கிண்ணம்
</p><p>அரிசி-2கிண்ணம்
</p><p>அவல்- கால் கிண்ணம்
</p><p>சீரகம், உப்பு மற்றும் எண்ணெய்
</p><p>அவல்- கால் கிண்ணம்&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f27ccfa6-9592-42bf-b4a2-46497c853453/26-6a57be73126ec.webp' /></p><h2>செய்முறை</h2><p>முதலில் அரிசி, உளுந்தம் பருப்பை 5 மணி நேரம் ஊற வைக்கவும். அதேபோல் அவலை 45 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
</p><p>அனைத்தையும் தோசை ஊற்றும் பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4aaa2d54-8bf7-42fb-bda1-bd1746aa60ba/26-6a57be73b7e77.webp' /></p><p>இதையடுத்து மாவை 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். பின்னர் உப்பு சேர்த்து தோசையாக ஊற்றவும்.
</p><p>அவ்வுளவுதான் அவல் தோசை தயார். காரச்சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe2f4b75-e788-4758-8a0c-fb3ce202e1de/26-6a57be746aa34.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;<br></i></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-15T17:14:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் பேசும் கட்சிகளின் புதிய கூட்டணி ஒரு தரகு கூட்டு! இளங்குமரன் எம்.பி. விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-alliance-tamil-parties-ilangumaran-mp-1784132821"></link>
            <id>https://tamilwin.com/article/new-alliance-tamil-parties-ilangumaran-mp-1784132821</id>
            <summary type="text">தமிழ் பேசும் கட்சிகள் கொழும்பில் ஒன்றிணைந்து மேற்கொண்ட
முன்னெடுப்புகள், மக்கள் நலன் சார்ந்தவை அல்ல, அவை வெறும் தரகு வேலைகளே என்று தேசிய மக்கள் சக்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் பேசும் கட்சிகள் கொழும்பில் ஒன்றிணைந்து மேற்கொண்ட
முன்னெடுப்புகள், மக்கள் நலன் சார்ந்தவை அல்ல, அவை வெறும் தரகு வேலைகளே என்று தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் க.இளங்குமரன் குறிப்பிட்டார்.&nbsp;</p><p>
இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில், "தமிழ் பேசும் கட்சிகள் என்று கூறிக்கொண்டு சிலர் கொழும்பில்
ஒன்றுகூடியுள்ளனர்.</p><p></p><h2>&nbsp;மக்களின் தெளிவான சிந்தனை</h2><p> </p><p>இவர்கள் ஏன் தங்களின் சொந்தத்தாயகமான தமிழ்ப்
பிரதேசங்களில் கூட்டத்தை நடத்தவில்லை? இதற்கு முக்கிய காரணம், இவர்கள்
கொழும்பை மையமாகக் கொண்டு அரசியல் செய்பவர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/253ba125-4c9c-4e51-bbd4-d45f33e56a77/26-6a57bec809508.webp' /></p><p> </p><p>இவர்களின் பிள்ளைகள்
தென்பகுதியில் திருமணம் முடித்தவர்கள், கொழும்பிலேயே தங்கியிருப்பவர்கள்.

தென்பகுதியில் தோல்வியடைந்த ஆட்சியாளர்கள் மீண்டும் இனவாதத்தைத் தூண்டி, அதன்மூலம் ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கின்றார்கள். </p><p>அதற்கு, தமிழ் மக்களின்
பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் தரகு வேலைகளைப் பார்க்கின்றார்கள்.
மக்கள் இன்று தெளிவான சிந்தனையுடன் இருக்கின்றார்கள்.</p><p> எனவே, இது மக்களுக்கான
கூட்டம் அல்ல. தனிப்பட்ட நலன்களுக்காகக் கூடியவர்களின் கூட்டம்.
</p><p>
தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு, வடக்கு மாகாணத்தில் ஒரு
கூட்டத்தைக் கூட நடத்தத் துணிவற்ற இவர்கள், கொழும்பில் உள்ள ஹோட்டல்களில்
சென்று கூடியிருப்பது வெட்கக்கேடான விடயமாகும்" என்று அவர் சாடினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T17:09:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது பகல் நேரத்திலும் அமெரிக்கா குண்டுமழை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-bombs-attack-on-iran-even-during-the-day-1784134030"></link>
            <id>https://tamilwin.com/article/us-bombs-attack-on-iran-even-during-the-day-1784134030</id>
            <summary type="text">தென் ஈரானில் உள்ள கடற்கரை இராணுவ நிலைகளை இலக்காகக் கொண்டு,
அமெரிக்கப் படைகள் பகல் நேரத்திலும் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் ஈரானில் உள்ள கடற்கரை இராணுவ நிலைகளை இலக்காகக் கொண்டு,
அமெரிக்கப் படைகள் பகல் நேரத்திலும் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை அலுவலகம் அறிவித்துள்ளது.</p><p>90 நிமிடங்கள் நீடித்த இந்தத் தாக்குதலில், ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில்
அமைந்துள்ள மிக முக்கியமான கிரேட்டர் துன்ப் தீவில் உள்ள ஈரானின் ஏவுகணைத்
தளங்கள் மற்றும் இராணுவக் கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா
தெரிவித்துள்ளது.</p><p>

பொதுவாக இரவு நேரங்களில் மட்டுமே தாக்குதல் நடத்தி வந்த அமெரிக்கா, தற்போது
தனது தாக்குதல் வேகத்தை அதிகரித்து பகல் நேரத்திலும் குண்டுமழையைப் பொழிந்து
வருகிறது.</p><p></p><h2>எச்சரிக்கை</h2><p>
</p><p>
மறுபுறம், தென் ஈரானில் கடந்த சில நாட்களாக அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில்
30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 260-க்கும்
அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதற்கிடையே, ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், பாலங்கள் மற்றும் முக்கியக்
குடிமைசார் உள்கட்டமைப்புகளை அடுத்த வாரத்தில் குறிவைக்கத் திட்டமிட்டுள்ளதாக
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a69497a-f362-49c1-8068-2c73869ebc78/26-6a57bd1863fd8.webp' /></p><p>
</p><p>
இது உலக அளவில் போர்க்குற்றக் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்கும் என்ற பெரும்
கவலையை உலக நாடுகளிடையே எழுப்பியுள்ளது.
</p><p>
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய சட்டம் ஒன்றிற்கு
இஸ்ரேல் உச்ச நீதிமன்றம் தற்போது இடைக்காலத் தடை விதித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T17:09:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல்வர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ எப்போது ரிலீஸ் தேதி அறிவிப்பு - குஷியில் ரசிகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/jana-nayagan-movie-release-date-announced-1784125426"></link>
            <id>https://manithan.com/article/jana-nayagan-movie-release-date-announced-1784125426</id>
            <summary type="text">தற்போதைய தழழக முதல்வரும் முன்னாள் நடிகருமான&amp;nbsp; விஜய் நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டு த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய தழழக முதல்வரும் முன்னாள் நடிகருமான&nbsp; விஜய் நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. </p><p>பல்வேறு காரணங்களால் தள்ளிப்போன இந்தப் படம், தற்போது ரசிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளதுடன் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0b41859-2a4b-4932-b649-d1145b3e131c/26-6a579c5371c56.webp' /></p><p></p><h2>ஜனநாயகன்</h2><p>
ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். </p><p>அதேபோல் பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.அனிருத் இசையமைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcd98851-cc0d-49cc-8b60-ad5aafdd89ea/26-6a579c5423051.webp' /></p><p>கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம், விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாகவும் இறுதி படமாகவும் பார்க்கப்படுகின்றது.&nbsp;</p><p>

முதலில் இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சென்சார் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக திட்டமிட்ட தேதியில் படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1cfe606-4092-4032-b97a-11e2262acfaa/26-6a579c54c849a.webp' /></p><p> </p><p>சென்சார் சான்றிதழ் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததுடன், சான்றிதழ் வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது.

இதற்கிடையில், நடிகர் விஜய் அரசியல் களத்தில் கால் பதித்து, சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக முதல்வராகவும் பொறுப்பேற்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56b4812c-c6d1-4fa9-8aba-066f99de4980/26-6a579c557daef.webp' /></p><p></p><h2>எப்போது ரிலீஸ்?</h2><p>இந்நிலையில், கடந்த வாரம் இப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டது. ‘ஜன நாயகன்’ திரைப்படம் ‘A’ சான்றிதழை பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து, விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ‘ஜன நாயகன்’ திரைப்படம் வரும் ஜூலை 23-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. </p><p>நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் விஜய்யின் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b> &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T17:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[CM விஜய்யை நேரில் சந்தித்த சிவகார்திகேயன்! என்ன சொன்னார் பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sivakarthikeyan-met-cm-vijay-insta-post-goes-viral-1784134641"></link>
            <id>https://cineulagam.com/article/sivakarthikeyan-met-cm-vijay-insta-post-goes-viral-1784134641</id>
            <summary type="text">நடிகர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு பல முன்னணி சினிமா நட்சத்திரங்கள் மற்றும் சினிமா துறையினர் என பலரும் நேரில் சென்று அவரை சந்தித்து வருகின்றனர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு பல முன்னணி சினிமா நட்சத்திரங்கள் மற்றும் சினிமா துறையினர் என பலரும் நேரில் சென்று அவரை சந்தித்து வருகின்றனர்.</p><p>அந்த புகைப்படங்களும் தினமும் இணையத்தில் வந்து வைரல் ஆகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d90f7f8-31a4-4c8d-a17d-bac9f9bdfc68/26-6a57bbf5803de.webp' /></p><p>
</p><h2>சிவகார்த்திகேயன்</h2><p>இந்நிலையில் இன்று நடிகர் சிவகார்த்திகேயன் முதல்வர் விஜய்யை சந்தித்து இருக்கிறார். அது பற்றி இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கும் சிவகார்த்திகேயன் கூறி இருப்பதாவது..</p><p>"நடிகராக இருந்து நாட்டை ஆள்பவராக.. சில பயணங்கள் உண்மையிலேயே அசாதாரணமானவை."
</p><p>"முதலைச்சர் திரு சி.ஜோசப் விஜய் சாரை சந்தித்தது எனது கௌரவம். ரசிகன் எக்ஸ்பிரஸ் முதல், விஜய் விருதுகள் மேடை, GOAT படத்தில் ஒன்றாக நடித்தது வரை.. இப்போது இந்த தருணம். எப்போதும் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்."
</p><p>"சகோதரத்துவம், இந்த பிணைப்பு.. அது தொடரும்" என சிவகார்த்திகேயன் கூறி இருக்கிறார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T16:57:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் இல்லை: ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-plans-for-talks-with-us-right-now-iran-1784134025"></link>
            <id>https://tamilwin.com/article/no-plans-for-talks-with-us-right-now-iran-1784134025</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவுடன் தற்போதைக்கு எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடும் எண்ணம் ஈரானுக்கு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்களது நாட்டைப் பாதுகாப்பதில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவுடன் தற்போதைக்கு எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடும் எண்ணம் ஈரானுக்கு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>தங்களது நாட்டைப் பாதுகாப்பதில் மட்டுமே தற்போதைய கவனம் முழுமையாக உள்ளது என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் இஸ்மாயில் பகாஹி தெரிவித்துள்ளார். </p><p>
அமெரிக்கா தனது சர்வதேச உறுதிமொழிகளை முறையாக நிறைவேற்றினால் மட்டுமே, ஈரானும் தனது சர்வதேச கடமைகளை மதித்து நடக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c2fee55-52ce-4834-b994-f70c63eda951/26-6a57b98e2fd8d.webp' /></p><p>வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாஹி இது குறித்து மேலும் கூறியதாவது:
அமெரிக்கா தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை மட்டுமே எங்களது கடமைகளும் அமுலில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.</p><p> தற்காலிக புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தங்களுக்குரிய பகுதியை நிறைவேற்ற அமெரிக்கா தவறியதை அடுத்து, அந்த ஒப்பந்தத்தின் கீழான கடமைகளை ஈரானும் கைவிட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அவர்கள் தங்களது கடமைகளை மீறிய பின்னர், அதற்கு ஈடாக நாங்கள் எந்தெந்தப் பகுதிகளில் எங்களது கடமைகளைத் தவிர்க்க வேண்டுமோ, அங்கெல்லாம் அவற்றைச் செயல்படுத்துவதை நிறுத்திக்கொண்டோம் என தெரிவித்துள்ளார்.
</p><p>இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கையை அமெரிக்கா தொடர்ந்து மீறி வருவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. </p><p>
தங்களது எண்ணெய் ஏற்றுமதி உரிமங்களை ரத்து செய்தது மற்றும் புதிய தடைகளை விதித்தது போன்ற அமெரிக்காவின் நடவடிக்கைகள் மூலம் இந்த ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதாக ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T16:57:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் அரசியல் கைதிகளுக்கான மரணதண்டனை நிறைவேற்றத்தில் உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/massive-increase-in-executions-prisoners-in-iran-1784134631"></link>
            <id>https://tamilwin.com/article/massive-increase-in-executions-prisoners-in-iran-1784134631</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல் மற்றும் பதற்றமான சூழ்நிலையைப் பயன்படுத்தி, ஈரானிய அரசாங்கம் அரசியல் கைதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றுவதை கணிசமாக அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல் மற்றும் பதற்றமான சூழ்நிலையைப் பயன்படுத்தி, ஈரானிய அரசாங்கம் அரசியல் கைதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றுவதை கணிசமாக அதிகரித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>நோர்வேயின் ஒஸ்லோவைத் தளமாகக் கொண்டு இயங்கும் 'ஈரான் மனித உரிமைகள்' என்ற தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது.</p><p>
ஈரானுக்கு உள்ளேயும் வெளியேயும் உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்த அமைப்பின் தரவுகளின்படி, ஈரான் அரசு இந்த ஆண்டில் மட்டும் இதுவரை குறைந்தது 47 அரசியல் கைதிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f4a93c1-35d2-472e-8e72-b834d5d0c8d8/26-6a57bbe958215.webp' /></p><p> </p><p>
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை 16 ஆக மட்டுமே இருந்த நிலையில், தற்போது இது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>கடந்த ஆண்டின் இறுதியில் ஈரான் முழுவதும் வெடித்த பரவலான போராட்டங்களின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போராட்டக்காரர்கள் மீது வன்முறையான அடக்குமுறைகளைக் கையாள வேண்டாம் என ஈரானியத் தலைமைக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். </p><p>
அத்துடன், போராட்டக்காரர்களின் மீட்புக்கு அமெரிக்கா உறுதுணையாக நிற்கும் என்றும் அவர் உறுதியளித்திருந்தார்.</p><p>எனினும், அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் போக்கு நீடித்ததாலும், அதன் விளைவாக உலகளாவிய பொருளாதார பாதிப்புகள் மோசமடைந்ததாலும், வெள்ளை மாளிகையின் கடுமையான தொனி காலப்போக்கில் மென்மையடைந்தது. </p><p>
இதன் காரணமாக, ஈரான் அதிருப்தியாளர்களுக்கான அமெரிக்காவின் ஆதரவு குறையத் தொடங்கியது. இத்தகைய உலகளாவிய புவிசார் அரசியல் மாற்றங்களுக்கு மத்தியிலேயே, ஈரானில் மரணதண்டனைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T16:57:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச காணி மோசடி :முன்னாள் அமைச்சர்கள் இருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mervyn-prasanna-ranatunga-indicted-over-alleged-1784132595"></link>
            <id>https://ibctamil.com/article/mervyn-prasanna-ranatunga-indicted-over-alleged-1784132595</id>
            <summary type="text">போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கிரிபத்கொடவில் உள்ள அரசிற்குச் சொந்தமான நிலத்தை விற்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் அமைச்சர் மேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கிரிபத்கொடவில் உள்ள அரசிற்குச் சொந்தமான நிலத்தை விற்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் மேலும் நான்கு பேர் மீது சட்டமா அதிபரால் புதன்கிழமை (15) அன்று குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.</p><p>கம்பகா உயர் நீதிமன்ற நீதிபதி நயன செனவிரத்னவின் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்தக் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.</p><h2>வழங்கப்பட்ட குற்றப்பத்திரிகை&nbsp;</h2><p>
</p><p>
சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்ட ஆலோசகர் சமதாரி பியசேன, குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் குற்றப்பத்திரிகைகளை வழங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a38ceb9-8040-4225-8dcc-78fa02bc0bd4/26-6a57b97d3f8bf.webp' /></p><p>

குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேர்: முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நவீன் வீரகோன், மில் ராய் பெரேரா, ஜயந்த கப்ரால் மற்றும் சரத் எதிரிசிங்க.
</p><p>
கிரிபத்கொடவில் உள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான சொத்தை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க குற்றம் சாட்டப்பட்டவர் முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு இதுவாகும்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T16:47:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர சிறைக்குச் சென்றாலும் பெரும் ஆபத்து - யாரும் அறியாத திகில் நிமிடங்கள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-riot-new-updates-1784128010"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-riot-new-updates-1784128010</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் தற்போதைய அரசாங்கத்தின் வேகமான நடவடிக்கைகளுக்கு ஒரு &#039;தடைக்கல்லாக&#039; (Speed break) ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் தற்போதைய அரசாங்கத்தின் வேகமான நடவடிக்கைகளுக்கு ஒரு 'தடைக்கல்லாக' (Speed break) ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளதாக பிரித்தானியாவைச் சேர்ந்த ராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார். </p><p>

 பாதாள உலகக் கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் மாபியாக்களின் பின்னணியில் வெளிநாடுகளில் இருந்து இவை இயக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.</p><p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இராணுவம் மற்றும் பொருளாதார ரீதியாக தன்னை பலப்படுத்திக் கொள்வது பழைய அரசியல் சக்திகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது என அவர் கூறினார்.</p><p> 

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்திற்கு முதன்மையான காரணமாக, சிறைக்குள் தமது 'குட்டி ராஜ்ஜியத்தை' நடத்தி வந்த கும்பலுக்கும், அவர்களை கண்காணித்த உளவுப் பிரிவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலே காரணம் என்று குறிப்பிட்டார். </p><p>

சிறை வன்முறையைத் தொடர்ந்து நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவின் பிரான்ஸ் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. </p><p>


அரசியல் ரீதியாக பலவீனமடைந்துள்ள எதிர்க்கட்சிகள், சட்ட ஒழுங்கை சீர்குலைப்பதன் மூலம் அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைக்க முயற்சிக்கின்றனர்.
</p><p>
ஜூலை மாதத்தில் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் மீதான வழக்குகள் வரவுள்ள நிலையில், சிறைக் கலவரம் இச்செய்திகளை மழுங்கடிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
</p><p>
இந்த வன்முறையானது நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து, முதலீடுகளைத் தடுத்து, தற்போதைய அரசாங்கத்தை ஸ்திரமற்ற நிலைக்குத் தள்ளும் நோக்கம் கொண்டதாகப் பார்க்கப்படுகிறது என குறிப்பிட்டார். </p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/to1YQFyZKn8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T16:30:01+00:00</updated>
        </entry>
    </feed>
