<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-16T15:35:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராகு-கேதுவுக்கு இடையில் 7 கிரகங்கள் : அரிதான கிரகச் சேர்க்கையால் சிக்கலில் சிக்கப்போகும் 3 ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/rahu-ketu-forms-rare-planetary-who-get-bad-luck-1784206463"></link>
            <id>https://manithan.com/article/rahu-ketu-forms-rare-planetary-who-get-bad-luck-1784206463</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின்படி அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றுகின்றன. அதன் தாக்கம் 12 ராசிகளிலும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின்படி அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றுகின்றன. அதன் தாக்கம் 12 ராசிகளிலும் பிரதிபலிக்கும் என நம்ப்படுகின்றது.</p><p> அந்த வகையில், ஜூலை மாதத்தில் பல முக்கியமான கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக ஜூலை மாத மத்தியில் ஒரு அரிதான கிரக அமைப்பு உருவாகிறது.

இந்த அமைப்பில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு முக்கிய கிரகங்களும் ராகு மற்றும் கேதுவுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89aff865-9ea6-4b9a-94aa-42700ba0d755/26-6a58e4724a28e.webp' /></p><p> </p><p>ராகு மற்றும் கேது எப்போதும் 180 டிகிரி இடைவெளியில் இருப்பதுடன், தற்போது ராகு கும்ப ராசியிலும் கேது சிம்ம ராசியிலும் உள்ளனர். இந்த இரண்டிற்கும் இடையில் அனைத்து முக்கிய கிரகங்களும் அமைந்திருப்பதால், இது அரிதான கிரக வலையாக பார்க்கப்படுகின்றது.</p><p>
இந்த நிலை ஜூலை 19 வரை நீடிக்கும். இந்த கிரக அமைப்பு சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான பலன்களை அளிக்கக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அப்படி இதனால் சிக்கலை அனுபவிக்கப்போகும் ராசிகள் குறித்து பார்க்கலாம்.</p><p></p><h2>மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24d1f36c-d715-4e1b-8c0c-0d0d04469279/26-6a58e473011ad.webp' /></p><p>
மிதுன ராசிக்காரர்களுக்கு ஜூலை 19 வரை தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் சில சவால்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. </p><p>தகவல் தொடர்பில் இடைவெளி, முடிவெடுப்பதில் குழப்பம் மற்றும் பிறருடன் தவறான புரிதல்கள் உருவாகலாம். இந்த கிரக நிலை காரணமாக சில எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். </p><p>திருமண வாழ்க்கையிலும் சிறிய கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், வாழ்க்கைத் துணையுடன் பொறுமையாகவும் திறந்த மனதுடனும் பேசுவது நல்லது.</p><h2>

கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e8adf6e-8a6a-45a5-bb33-c50fc9c61cc3/26-6a58e473a98c4.webp' /></p><h2>
</h2><p>கடக ராசிக்காரர்களுக்கு இந்த அரிய கிரகச் சேர்க்கை சில சவால்களை ஏற்படுத்தக்கூடும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.</p><p>ஏனெனில் அவை உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.பயணங்களின் போது, குறிப்பாக வாகனம் ஓட்டும்போது கூடுதல் கவனம் தேவை.</p><p> திருமண வாழ்க்கையில் அமைதியை நிலைநிறுத்த, துணையின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அன்பும் ஆதரவும் காட்டுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் இந்த காலகட்டத்தில் மிகவும் முக்கியம்.
</p><h2>
சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49d157ba-3c4a-4bfe-8780-339b67233344/26-6a58e4745a100.webp' /></p><p></p><h2>
</h2><p>கேது சிம்ம ராசியில் இருப்பதால், சிம்ம ராசிக்காரர்கள் நிதி, உறவுகள் மற்றும் முக்கிய முடிவுகளில் சில குழப்பங்களை எதிர்கொள்ள நேரிடும்.</p><p>பணியிடத்தில் கவனக்குறைவு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள், இல்லையெனில் எதிர்பாராத சிக்கல்கள் உருவாகி தொழிலில் பிரச்சினை உருவாகும்.சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படுவது நல்ல பலனைத் தரும்.</p><p> பொறுமையுடன் செயல்பட்டு, ஒவ்வொரு பணியையும் கவனமாக முடிப்பது இந்த காலகட்டத்தில் உங்களுக்கு சாதகமாக இருக்கும். யாருடனுடம் வாக்குவாத்தில் ஈடுப்படுவதை தவிர்பது நல்லது.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T15:30:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[Super Singer Junior: மா.கா.பா வேலையை தட்டிப்பறித்த பார்வையற்ற சிறுவன்! அரங்கத்தை விட்டு வெளியேறிய சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/super-singer-survesh-performance-ma-ka-pa-walk-out-1784215082"></link>
            <id>https://manithan.com/article/super-singer-survesh-performance-ma-ka-pa-walk-out-1784215082</id>
            <summary type="text">பிரபல ரிவியில் சூப்பர் சிங்கர் ஜுனியர் 11வது சீசன் நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.சூப்பர் சிங்கர் 11
பிரபல ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல ரிவியில் சூப்பர் சிங்கர் ஜுனியர் 11வது சீசன் நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.</p><h2>சூப்பர் சிங்கர் 11
</h2><p>பிரபல ரிவியில் நடைபெறும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு சூப்பர் சிங்கர் சீசன் 11 முடிவடைந்த நிலையில், தற்போது ஜுனியர் சீசன் 11 ஆரம்பமாகி உள்ளது.</p><p>
சிறு குழந்தைகள் தங்களது திறமைகளை வெளிக்காட்டி அசத்தி வரும் நிலையில், பார்வை குறைபாடு உள்ள சிறுவன் சர்வேஷ் பாடும் பாடல்கள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7140d3f1-1f2c-435c-a42c-3e591a9c02dd/26-6a58f78e091c9.webp' /></p><p>
</p><p>கடந்த சில தினங்களுக்கு முன்பு பாடகி ஜானகி காலமான நிலையில், அவர் பாடிய பாடல்களை பாடி சிறுவர்கள் அரங்கத்தை மெய்சிலிர்க்க வைத்துள்ளனர்.</p><p>சின்னஞ்சிறு கிளியே பாடலை பாடி நடுவர்களை பிரமிக்க வைத்துள்ளார் சர்வேஷ். அதுமட்டுமின்றி மா.கா.பா போன்று தொகுப்பாளர் வேலையை செய்து அவரையும் அரங்கத்தை விட்டு வெளியேற வைத்துள்ளார்.</p><p></p><p>சர்வேஷின் இந்த திறமையினை அவதானித்த நடுவர்கள், பார்வையாளர்கள் அனைவரும் தங்களது மகிழ்ச்சியினை வெளிக்காட்டியுள்ளனர்..<br></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/wemLio1Onvo" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;<br></i></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T15:30:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மறுவரையறை மசோதா கூட்டாட்சித் தத்துவத்திற்கு அச்சுறுத்தல் - ஜவாஹிருல்லா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/tamil-nadu-parties-to-unite-against-delimitation-1784215143"></link>
            <id>https://ibctamilnadu.com/article/tamil-nadu-parties-to-unite-against-delimitation-1784215143</id>
            <summary type="text">மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தொகுதி மறுவரையறை சட்ட முன்வடிவை தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என்று மனிதந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தொகுதி மறுவரையறை சட்ட முன்வடிவை தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்யும் இந்த சட்ட முன்வடிவு, இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கும் மாநிலங்களுக்கிடையேயான அரசியல் சமநிலைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5276fda0-048e-4c6b-81e8-ab59e4baba13/26-6a58f8860f571.webp' /></p><h2>&nbsp;ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்</h2><p>
</p><p>
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் முன்னோடியாக விளங்கிய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் இதனால் பலவீனமடையும் அபாயம் இருப்பதாகவும், குடும்பக் கட்டுப்பாடு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்குப் பரிசளிக்க வேண்டிய நிலையில், அவற்றையே தண்டிக்கும் வகையில் இந்த முன்வடிவு அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மக்களவை இடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது முக்கியப் பிரச்சினையல்ல; மாறாக, இந்திய அரசியல் அதிகாரப் பகிர்வில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் செல்வாக்கு குறைகிறதா என்பதே கவலைக்குரிய விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தமிழ்நாட்டின் உரிமைகள், கூட்டாட்சி அமைப்பு மற்றும் மாநிலங்களின் சமமான அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ளதாகக் கூறிய ஜவாஹிருல்லா, அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து திமுக உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலில் இந்த மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றத்திலும், மக்களிடையிலும் வலுவான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.</p><p>"தமிழ்நாட்டின் உரிமை என்பது எந்த ஒரு கட்சியினதும் அல்ல; அது தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த உரிமையாகும். அந்த உரிமையைப் பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய வரலாற்றுப் பொறுப்பு இன்று உருவாகியுள்ளது" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-16T15:28:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் காட்டுத்தீ: கால்பந்து உலகக் கிண்ண இறுதிப் போட்டியை பாதிக்கலாம் என அச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wildfires-burn-canada-football-world-cup-final-1784215116"></link>
            <id>https://tamilwin.com/article/wildfires-burn-canada-football-world-cup-final-1784215116</id>
            <summary type="text">கனடாவில் தற்போது 800-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ தீவிரமாக எரிந்து
வருவதால், அதிலிருந்து வெளிவரும் அடர்ந்த புகை அமெரிக்காவின் வடக்கு
மாநிலங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் தற்போது 800-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ தீவிரமாக எரிந்து
வருவதால், அதிலிருந்து வெளிவரும் அடர்ந்த புகை அமெரிக்காவின் வடக்கு
மாநிலங்கள் வரை பரவி கடுமையான காற்று மாசை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

அமெரிக்காவின் டெட்ராய்ட், மினியாபோலிஸ் போன்ற நகரங்களில் காற்றின் தரம்
மிகவும் மோசமடைந்து 'ஆபத்தான' நிலையை எட்டியுள்ளது.</p><p>

இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>உலகக் கிண்ண இறுதிப் போட்டி</h2><p>

காற்றின் திசை மாறாவிட்டால் வரும் ஞாயிற்றுக்கிழமை நியூ ஜெர்சியில்
நடைபெறவுள்ள உலகக் கிண்ண இறுதிப் போட்டியிலும் இந்தப் புகை பாதிப்பை
ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43460d21-e97e-485f-afb8-f4cf806b6ec7/26-6a58f64ec30e5.webp' /></p><p>கனடாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீயிலிருந்து வரும் புகை தெற்கு நோக்கி நகர்வதால், கனெக்டிகட், இல்லினாய்ஸ், இந்தியானா, மிச்சிகன், நியூ ஜெர்சி, நியூயார்க் மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் காற்றின் தர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T15:18:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் அமைச்சர் வலியுறுத்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/action-against-archchuna-mp-chandrasekar-1784213528"></link>
            <id>https://tamilwin.com/article/action-against-archchuna-mp-chandrasekar-1784213528</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தகாத நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தகாத நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.</p><p>கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் இன்று(16.7.2026) ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p> இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:

"கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் மிகவும் அமைதியான முறையிலேயே நடைபெற்று வந்தது.</p><p></p><h2>குழப்பம்&nbsp;</h2><p>

இந்நிலையில், சிவபூசையில் கரடி புகுந்தது போல, ஒரு கரடி புகுந்து பைத்தியக்காரத்தனமாக விளையாடி, குழப்பத்தை விளைவித்துக் கூட்டத்தை இடைநிறுத்தியது.
</p><p>
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தொடர்ச்சியாக எல்லாக் கூட்டங்களுக்கும் சென்று குழப்பம் விளைவித்து வருகின்றார்; அதிகாரிகள் மீது அபாண்டமாகப் பழி சுமத்தி வருகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31d1a42c-b640-42e3-8679-866f92d301e3/26-6a58f40577d4c.webp' /></p><p>
</p><p>
அபிவிருத்திக் குழுக்கூட்டத்தைப் பயன்படுத்தி அதிகாரிகள் மீது அபாண்டமாகப் பழி சுமத்தக் கூடாது. அவ்வாறு செய்தால், அந்த அதிகாரிகளால் சமூகத்தின் முன் செல்ல முடியாத நிலை ஏற்படும்.</p><p></p><h2>நடவடிக்கை</h2><p>
</p><p>
அர்ச்சுனாவின் இத்தகைய நடவடிக்கைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கு இன்றைய கூட்டமே சாட்சியாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/634add9d-0386-4700-9f27-41ad3783c648/26-6a58f4062755b.webp' /></p><p>
</p><p>
கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னேற்றம் மற்றும் இருப்புத் தொடர்பில் நாம் அவதானம் செலுத்துவோம். அடுத்து வரும் நாட்களில் மீண்டும் அபிவிருத்திக் குழு கூடும்; அப்போது உறுதியான முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T15:09:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடடா நடிகை சினேகாவா இது... பாவாடை தாவணியில் வெளியிட்ட கலக்கல் போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sneha-latest-photoshoot-in-half-saree-1784192668"></link>
            <id>https://cineulagam.com/article/sneha-latest-photoshoot-in-half-saree-1784192668</id>
            <summary type="text">நடிகை சினேகாதமிழ் சினிமாவின் புன்னகை அரசியாக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை சினேகா.பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்தவர் இரண்டு குழந்தைகளை பெற்றுவி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகை சினேகா</h2><p>தமிழ் சினிமாவின் புன்னகை அரசியாக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை சினேகா.</p><p>பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்தவர் இரண்டு குழந்தைகளை பெற்றுவிட்டார், இருவரும் கொஞ்சம் வளர்ந்துவிட மீண்டும் சினிமாவில் களமிறங்கி படங்கள், ரியாலிட்டி ஷோக்கள் என கலந்துகொண்டு வருகிறார்.</p><p>ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். அந்த ஷோவிற்காக சினேகா பாவாடை தாவணியில் அணிய அதில் விதவிதமான போஸ் கொடுத்து போட்டோ ஷுட்டும் நடத்தியுள்ளார்.</p><p>இதோ அந்த போட்டோஸ்,</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T15:00:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் மீட்கப்பட்ட என்புக்கூடுகள் 400 ஐ கடந்தன]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1784213468"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1784213468</id>
            <summary type="text">&amp;nbsp;செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினம் 34 வது நாளாக
யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினம் 34 வது நாளாக
யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில்
நடைபெற்றது.
</p><p>
இன்றுடன் 420 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன அவற்றுள் 416
எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளம் இடப்பட்டு
அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில்
ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.</p><h2>குழந்தையினுடைய என்புத் தொகுதியும் அடையாளம்</h2><p>இவற்றுள் 03 என்புத்தொகுதியானது சிறுவர்களினுடைய என்புத் தொகுகளாக அடையாளம்
காணப்பட்டுள்ளன. அத்துடன் 01 குழந்தையினுடைய என்புத் தொகுதியும் அடையாளம்
காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/876b9d13-46a2-4136-9992-7c56a64dbc4d/26-6a58f1ebb9ef2.webp' /></p><p>
</p><p>
130 பிறசான்றுப் பொருட்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.

அகழ்வின்போது தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட
வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள்,
சட்டத்தரணிகள், துறை சார் நிபுணர்கள் பங்கேற்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T15:00:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரோவில் 120க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இராஜினாமா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/over-120-scientists-resign-from-isro-1784203700"></link>
            <id>https://jvpnews.com/article/over-120-scientists-resign-from-isro-1784203700</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திலிருந்து (இஸ்ரோ) குறுகிய காலத்திற்குள் 120க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இராஜினாமா அல்லது விருப்ப ஓய்வு பெற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திலிருந்து (இஸ்ரோ) குறுகிய காலத்திற்குள் 120க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இராஜினாமா அல்லது விருப்ப ஓய்வு பெற்று வெளியேறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p>



இதில் எல்.வி.எம் 3 மற்றும் ஸ்பேடெக்ஸ் திட்ட இயக்குநர்கள், சந்திரயான்-3 திட்ட உருவகப்படுத்துதல் பிரிவு மேலாளர் போன்ற முக்கியப் பொறுப்பில் இருந்தவர்களும் அடங்குவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22db1603-dd58-4423-8cdf-fc0297652c1e/26-6a58c9b599436.webp' /></p><p></p><h2>&nbsp;பல விஞ்ஞானிகள் தனியார் நிறுவனங்களில்</h2><p>
</p><p>


மத்திய அரசு விண்வெளித் திட்டங்களில் தனியார் பங்களிப்பை ஊக்குவித்து வருவதால், வளர்ந்து வரும் தனியார் விண்வெளி நிறுவனங்கள் அனுபவம் வாய்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகளைத் தங்கள் தலைமைப் பொறுப்புகளுக்குத் தேடி ஈர்க்கின்றன.</p><p> அதிக வாய்ப்புகள் காரணமாகப் பல விஞ்ஞானிகள் தனியார் நிறுவனங்களில் இணைந்து வருகின்றனர்.</p><p></p><p>



மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, மத்திய விண்வெளித் துறை தனது விதிமுறைகளைக் கடுமையாக்கியுள்ளது.
</p><p>


மத்திய விண்வெளித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையின்படி, முக்கிய விண்வெளித் திட்டங்களில் பணியாற்றும் 'குழு ஏ' பிரிவு ஊழியர்களின் விருப்ப ஓய்வு மற்றும் இராஜினாமா கோரிக்கைகள் இனி வழக்கம் போல எளிதாக ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>



 அத்துடன் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் எஸ்.ஜி மற்றும் அதற்கு கீழ் உள்ளவர்களின் கோரிக்கைகள் இறுதி முடிவுக்காக உரிய பரிந்துரைகளுடன் மத்திய விண்வெளித் துறைக்கே நேரடியாக அனுப்பப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-16T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடகி ஜானகி இறப்பிலும் மோசமான ட்ரோல்!! பேத்தி அப்சரா பதிலடி...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/singer-janaki-granddaughter-apsara-bad-criticism-1784205544"></link>
            <id>https://viduppu.com/article/singer-janaki-granddaughter-apsara-bad-criticism-1784205544</id>
            <summary type="text">பாடகி ஜானகிபாரதிராஜா, பாக்யராஜ் இறந்த சில வாரங்களில் பிரபல பாடகி ஜானகி அம்மாவும் காலமானது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. வயது மூப்பால் இறந்த ஜானகிய...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பாடகி ஜானகி</h2><p>பாரதிராஜா, பாக்யராஜ் இறந்த சில வாரங்களில் பிரபல பாடகி ஜானகி அம்மாவும் காலமானது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. வயது மூப்பால் இறந்த ஜானகியின் இறுதிச்சடங்கு மைசூரில் நடந்த நிலையில், பேத்தி அப்சரா இறுதி சடங்குகளை முன்னின்று செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் தன் பாட்டி பற்றி பேசியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6472844-cf14-45e3-9583-f3421991bf29/26-6a58d0ea6dc26.webp' /></p><p> </p><p>ஆனால் அந்த வீடியோக்களை பார்த்த சிலர் பாட்டி இறந்திருக்கிறார், பேத்தியின் கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் கூட இல்லை என்று சோசியல் மீடியாக்களில் கேள்வி எழுப்பினர்.</p><h2>பேத்தி அப்சரா</h2><p> இதை கேள்விப்பட்ட அப்சரா, நீங்கள் பார்த்த, பார்க்காத கண்ணீரை வைத்து என் பாட்டி மீது நான் வைத்திருக்கும் அன்பை அளவிடாதீர்கள் என்று கூறியிருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf184cf6-ebf6-45e6-955c-cd7bc941413d/26-6a58d0eb1c428.webp' /></p><p> </p><p>தன் வாழ்க்கையில் நடந்த சோகமான கதைகளையும் சொல்லி இருக்கிறார். என் அக்கா 2023 ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தார். அக்கா மீது ஜானகி பாட்டி அளவு கடந்த பாசம் வைத்தார்.</p><p> இருவரும் ஒரே மாதிரியானவர்கள், அவர்களுக்கிடையே தனியான புரிதல் இருந்தது என்று கூறியிருக்கிறார் அப்சரா.</p>]]></content>
            <updated>2026-07-16T14:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[யுக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம்: ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ukraine-s-defence-minister-removed-from-office-1784211652"></link>
            <id>https://tamilwin.com/article/ukraine-s-defence-minister-removed-from-office-1784211652</id>
            <summary type="text">யுக்ரைனின் பிரபல பாதுகாப்பு அமைச்சரான மைக்கைலோ ஃபெடோரோவை ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி திடீரென பதவியிலிருந்து நீக்கியதை
எதிர்த்து யுக்ரைனின் பல்வேறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>யுக்ரைனின் பிரபல பாதுகாப்பு அமைச்சரான மைக்கைலோ ஃபெடோரோவை ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி திடீரென பதவியிலிருந்து நீக்கியதை
எதிர்த்து யுக்ரைனின் பல்வேறு நகரங்களில் மக்கள் வீதியில் இறங்கிப்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் திரண்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள்
மற்றும் பொதுமக்கள், *"ஃபெடோரோவ் மீது கை வைக்காதே, வெற்றியைத் தடுப்பதை
நிறுத்து போன்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஏந்தி ஜனாதிபதிக்கு எதிராக
கோஷமிட்டனர்.
</p><p>
கடந்த ஜனவரி மாதம் பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பேற்ற 35 வயதான ஃபெடோரோவ்,
யுக்ரைன் ராணுவத்தில் இருந்த ஊழலை ஒழித்ததோடு, போர்க்களத்தில் நவீன
தொழில்நுட்பங்கள் மற்றும் ட்ரோன்களை (Drones) அறிமுகப்படுத்தி பெரும்
வெற்றிகளைப் பெற்றுத் தந்தார்.</p><p></p><h2>பதவி நீக்கம்</h2><p>
</p><p>
எனினும், அவருக்கும் யுக்ரைன் ராணுவ தலைமைத் தளபதி ஒலெக்சாண்டர்
சிர்ஸ்கிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடே இந்த
நீக்கத்திற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
</p><p>
செய்தியாளர்களிடம் பேசிய ஃபெடோரோவ், "இராணுவத் தளபதி சிர்ஸ்கி ரஷ்யாவை
வீழ்த்துவதற்கான புதிய உத்திகளைக் கண்டறிவதற்குப் பதிலாக, நமது நாட்டைப்
பிளவுபடுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்" என்று குற்றம் சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ecd90a7-2aca-4550-9650-6be168aee554/26-6a58eddaeb173.webp' /></p><p>

ஃபெடோரோவின் இந்த திடீர் நீக்கம் உக்ரைன் ராணுவ வீரர்கள் மத்தியிலும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> "யுக்ரைன் வரலாற்றிலேயே மிகச்சிறந்த
பாதுகாப்பு அமைச்சரை ஜனாதிபதி நீக்கியுள்ளார்.

இது ஜனாதிபதி தனது பதவிக் காலத்தில் செய்த மிகப்பெரிய தவறு" என்று களத்தில்
இருக்கும் யுக்ரைன் இராணுவ வீரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.</p><p>

யுக்ரைனின் புதிய பாதுகாப்பு அமைச்சராக தற்போதைய உள்துறை அமைச்சர் இஹோர்
க்ளிமென்கோ நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T14:42:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[லிதுவேனியாவில் வேலை வாய்ப்பு; வரவேண்டாம் என எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/job-opportunities-in-lithuania-agents-fraud-alert-1784205345"></link>
            <id>https://jvpnews.com/article/job-opportunities-in-lithuania-agents-fraud-alert-1784205345</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சுற்றுலா விசாக்கள் மூலம் லிதுவேனியாவிற்குச் சென்று வேலை பெறலாம் எனக் கூறி, சில நபர்கள் மற்றும் முகவர்கள் இலங்கை மக்களிடம் பெருந்தொகை பணம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;சுற்றுலா விசாக்கள் மூலம் லிதுவேனியாவிற்குச் சென்று வேலை பெறலாம் எனக் கூறி, சில நபர்கள் மற்றும் முகவர்கள் இலங்கை மக்களிடம் பெருந்தொகை பணம் வசூலிப்பதாகப் புகார்கள் கிடைத்துள்ளதாக இலங்கையிலுள்ள லிதுவேனியா குடியரசின் கௌரவ கொன்சலேட் அலுவலகம் எச்சரித்துள்ளது.
</p><p>
சுற்றுலா விசா மூலம் லிதுவேனியாவிற்குச் சென்று அங்கு சட்டப்பூர்வமாக வேலை வாய்ப்பைப் பெற முடியாது எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ள கொன்சலேட் அலுவலகம், இவ்வாறான போலிப் வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் எனப் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aea87d43-147e-4c15-8797-5d1a35770e7a/26-6a58d02290a49.webp' /></p><h2>சட்டப்பூர்வமாக வேலை வாய்ப்பைப் பெற முடியாது</h2><p>
</p><p>
 வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை எதிர்பார்க்கும் இலங்கையர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் (SLBFE) பதிவுசெய்யப்பட்ட முகவராண்மைகள் ஊடாக மட்டுமே சட்டப்பூர்வ வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள கொன்சலேட் பணிப்பாளர் காஞ்சன கொடிதுவக்கு, புதுடில்லியிலுள்ள லிதுவேனியா தூதரகத்தின் உத்தியோகபூர்வ வழிகாட்டல்களின்படி கொன்சலேட் அலுவலகம் செயற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். </p><p>

மேலும், லிதுவேனியாவில் உயர்கல்வி, சட்டப்பூர்வ வேலைவாய்ப்பு அல்லது பிற சட்டபூர்வ திட்டங்களைத் தேடும் இலங்கையர்களுக்குச் சரியான வழியைக் காட்டத் தயாராக இருப்பதாகவும், பொதுமக்கள் எந்தவொரு பணத்தையும் செலுத்துவதற்கு முன்னர் அதிகாரப்பூர்வ இணையத்தளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்கள் ஊடாகத் தகவல்களை உறுதிப்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய அரசியல் ஆபத்தில் சிக்கிய அர்ஜென்டினா - FIFA அமைப்பு எடுக்கப்போகும் முடிவு என்ன..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/argentina-players-banner-after-fifa-world-cup-win-1784211960"></link>
            <id>https://tamilwin.com/article/argentina-players-banner-after-fifa-world-cup-win-1784211960</id>
            <summary type="text">உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான வெற்றிக்குப்
பின்னர், சர்ச்சைக்குரிய பதாகை ஒன்றை ஏந்தி ஆர்ஜென்டினா வீரர்கள் கொண்டாடியர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான வெற்றிக்குப்
பின்னர், சர்ச்சைக்குரிய பதாகை ஒன்றை ஏந்தி ஆர்ஜென்டினா வீரர்கள் கொண்டாடியர் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. </p><p>


இதனால், ஆர்ஜென்டினா கால்பந்து அணி மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்க சர்வதேச
கால்பந்து கூட்டமைப்பு (FIFA) ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

அட்லாண்டாவில் இடம்பெற்ற விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில், தாமஸ்
டுச்சலின் தலைமையிலான இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி
ஆர்ஜென்டினா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.</p><h2> 

மைதானத்தை அலங்கரித்த பதாகை</h2><p>

இந்த போட்டி முடிந்ததும், அர்ஜென்டினா வீரர்கள் "லாஸ் மால்வினாஸ் சன்
ஆர்ஜென்டினாஸ்" (மால்வினாஸ் தீவுகள் அர்ஜென்டினாவுக்குச் சொந்தமானவை) என்ற
வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தி மைதானத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ed88293-840b-42d3-8944-cc9250fb41cd/26-6a58ea51ad020.webp' /></p><p>

பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஃபோக்லாந்து தீவுகளை ஆர்ஜென்டினா
தங்களுக்குச் சொந்தமானது எனக் கோரி வரும் நிலையில், இந்த தீவுகளை ஆர்ஜென்டினாவில் "மால்வினாஸ்" என்று அழைக்கின்றனர்.
</p><p>
இந்த விவகாரத்தில் FIFA உடனடியாக தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று
பிரித்தானிய பிரதமர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
</p><p>
FIFA -க்கு அழுத்தம் கொடுக்கும் பிரித்தானிய

இது குறித்துப் பேசிய பிரித்தானிய பிரதமரின் பேச்சாளர், 

“ உலகக் கிண்ணம்
நமக்குக் கிடைக்காமல் போயிருக்கலாம், ஆனால் ஃபோக்லாந்து தீவுகள் எப்போதும்
நமக்குத்தான் சொந்தம். இதில் எங்கள் அர்ப்பணிப்பு ஒருபோதும் குறையாது" என உறுதியளித்துள்ளார்.
</p><p>
கடந்த 2014ஆம் ஆண்டும் இதே போன்றதொரு பதாகையை ஏந்தியதற்காக ஆர்ஜென்டினா
கால்பந்து சங்கத்துக்கு FIFA அபராதம் விதித்திருந்தது.

உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இருந்து ஆர்ஜென்டினா நீக்கப்படாது என்றாலும்,
இந்த அரசியல் ரீதியான செயல்பாட்டிற்காக வீரர்கள் அல்லது கால்பந்து
சங்கத்துக்கு FIFA அபராதம் அல்லது தடை விதிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T14:27:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணி விடுவிப்பு தொடர்பில் டக்ளஸ் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/douglas-regarding-land-release-1784210212"></link>
            <id>https://ibctamil.com/article/douglas-regarding-land-release-1784210212</id>
            <summary type="text">நாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர்
காணிகளை விடுவித்தோம், தொடர்ந்தும் காணிகளை விடுவிக்க இருந்த சூழலில் தேர்தல்
அறிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர்
காணிகளை விடுவித்தோம், தொடர்ந்தும் காணிகளை விடுவிக்க இருந்த சூழலில் தேர்தல்
அறிவிக்கப்பட்டமையால் , மேலதிகமாக எம்மால் காணிகளை விடுவிக்க முடியாமல் போய்
விட்டது என முன்னாள் கடற்தொழில் அமைச்சரும் ,ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்
செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
</p><p>
யாழ்ப்பாணத்தில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை
நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில்,</p><h2>ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை&nbsp;விடுவித்திருந்தோம்</h2><p>
</p><p>
யுத்தம் நிறைவுக்கு வந்ததை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு
வலயமாக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை நாம் அரசாங்கத்துடன் பேசி
விடுவித்திருந்தோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6471e7a9-3bf0-4660-a47b-0507b16431bd/26-6a58e96135c9a.webp' /></p><p>
</p><p>
கடந்த ரணில் விக்ரமசிங்க ஆட்சிக் காலத்திலும் பெருமளவான காணிகளை
விடுவித்திருந்தோம். மேலும் காணிகளை விடுவிப்பதற்கான முயற்சிகளை
முன்னெடுத்த வேளை தேர்தல் அறிவிக்கப்பட்டமையால் , அவற்றை விடுவிக்க முடியாமல்
போய்விட்டது.</p><p>

ரணிலின் ஆட்சிக் காலத்தில் இராணுவத்தினர் விடுவிக்க இணக்கம் தெரிவித்திருந்த
காணிகளை கூட இந்த அரசாங்கம் மக்களிடம் மீள கையளிக்க வில்லை.</p><p></p><h2>காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான பிரச்சனை</h2><p>
</p><p>
அதுபோன்று காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான பிரச்சனைகளை நாமே முதலில்
தீர்க்க முயற்சித்தோம்.

எனது தம்பி காணாமல் ஆக்கப்பட்டார். காணாமல் ஆக்கப்பட்டோரின் வலிகள் எனக்கும்
தெரியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b95b559e-2e0f-4fa8-9b41-4b35aa9c3278/26-6a58e961e5f89.webp' /></p><p>
</p><p>
யாழ்ப்பாணம் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் 1997ஆம் ஆண்டு காலப்
பகுதியில் நாமும் யாழ்ப்பாணம் வந்தோம். அவ்வேளை காணாமல் போனோர்
விடயங்கள் தொடர்பில் விபரங்களை சேர்த்தோம்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை இணைத்து சங்கம் ஒன்றினை உருவாக்கி
போராட்டங்களை முன்னெடுத்தோம்.</p><p> அக்கால பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோர் சுமார்
600 பேரின் பெயர் விபரங்களை அப்போதைய சந்திரிக்கா அரசாங்கத்திடம் கையளித்தோம்.

மிருசுவில் படுகொலை , கிருஷாந்தி படுகொலை சாரதாம்பாள் படுகொலை
தொடர்பிலான உண்மைகளை வெளிப்படுத்தினோம்.சாட்சியங்களை பாதுகாப்பாக கொழும்பு
அழைத்து சென்று சாட்சியம் அளிக்க வைத்தோம்.</p><p></p><p>
</p><p>
</p><h2>விடுதலைப்புலிகள் மீது குற்றச்சாட்டு</h2><p>இவ்வாறான செயற்பாடுகளை கண்டு பொறுத்துக்கொள்ள முடியாத விடுதலைப்புலிகள்
பின்னாட்களில் காணாமல் ஆக்கப்படுவதற்கு ஈ.பி.டி.பி யே காரணம் என மக்கள்
மத்தியில் பொய்களை பரப்ப தொடங்கினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e89fd4e4-f658-49d7-ac41-887aba67fd46/26-6a58e962a6702.webp' /></p><p>
</p><p>
காணாமல் ஆக்கப்பட்டமைக்கு காரணமாக ஈ.பி.டி.பி இருந்தால் , அதற்கான சான்றுகள்
ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றங்களை நாடி நீதியினை பெற்றுக்கொள்ள முடியும்.
</p><p>
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக ஈ.பி.டி.பி முயற்சித்த
காலத்தில் கறையான் புற்றெடுக்க கருநாகம் குடிகொண்டது போன்று சில தரப்புக்கள்
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனைகளை தமது அரசியல் நோக்கத்திற்காக கையாண்டு
அதனை இன்னமும் தீர்க்க முடியாத பிரச்சனையாக வைத்துள்ளனர் என தெரிவித்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T14:24:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடேங்கப்பா விஜய்யின் ஜனநாயகன் எத்தனை ஆயிரம் திரையில் வெளியாகிறது தெரியுமா?... தளபதி மாஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actor-vijay-jananayagan-movie-theatres-count-1784206931"></link>
            <id>https://cineulagam.com/article/actor-vijay-jananayagan-movie-theatres-count-1784206931</id>
            <summary type="text">ஜனநாயகன்அடுத்த வாரம் இந்த நேரம் தமிழகமே கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருக்கப்போகிறது, 2026 பொங்கலுக்கு இந்த கொண்டாட்டம் இருந்திருக்க வேண்டும் ஆனால் ஜஸ்ட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜனநாயகன்</h2><p>அடுத்த வாரம் இந்த நேரம் தமிழகமே கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருக்கப்போகிறது, 2026 பொங்கலுக்கு இந்த கொண்டாட்டம் இருந்திருக்க வேண்டும் ஆனால் ஜஸ்ட் மிஸ் ஆனது. </p><p>ஆனால் பரவாயில்லை தளபதி விஜய் படம் எப்போது ரிலீஸானும் திருவிழா தான். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e3921ab-9cf0-48db-b54d-10b59088da43/26-6a58e1f17801f.webp' /></p><p>பொங்கலுக்கு வந்திருந்தால் தளபதி விஜய், ஆனால் இப்போது முதலமைச்சர் விஜய்யின் படமாக நீண்ட நாட்களாக எப்போது ரிலீஸ் எப்போது ரிலீஸ் என ரசிகர்களால் கேட்கப்பட்ட ஜனநாயகன் ரிலீஸ் ஆகப்போகிறது. </p><p>வரும் ஜுலை 23ம் தேதி உலகம் முழுவதும் மாஸாக வெளியாக இருக்கிறது. </p><p>படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எந்த ஒரு தமிழ் படத்திற்கும் நடக்காத அளவிற்கு மலேசியாவில் பிரம்மாண்டத்தின் உச்சமாக நடைபெற்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed0f3156-9ef2-4b02-a08a-10f180422daf/26-6a58e1f240cc0.webp' /></p><h2>ரிலீஸ் பிளான்
</h2><p>முதலமைச்சர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் ஜுலை 23ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டதில் இருந்து சூப்பர் சூப்பர் தகவல்கள் வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53b5ef87-fd99-48d9-8484-f2eee9be6a43/26-6a58e1f055934.webp' /></p><p> </p><p>இந்தியாவைத் தவிர்த்து உலகளவில் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜனநாயகன் திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளதாம். உலகம் முழுவதும் சுமார் 7,000 முதல் 8,000 திரைகளில் இந்தப் படம் வெளியாக இருப்பதாக ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட் கே.நாராயணா தெரிவித்திருக்கிறார்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/eP6szHVfRok" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-16T14:20:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு - என்னென்ன கேள்விகள் கேட்கப்படும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/tamilnadu-census-what-are-the-33-question-to-asked-1784211375"></link>
            <id>https://ibctamilnadu.com/article/tamilnadu-census-what-are-the-33-question-to-asked-1784211375</id>
            <summary type="text">&amp;nbsp;தமிழ்நாட்டில் ஜூலை 17 முதல் சுய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்க உள்ளது.&amp;nbsp;தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 

இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தமிழ்நாட்டில் ஜூலை 17 முதல் சுய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்க உள்ளது.&nbsp;</p><h3>தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு</h3><p> 

இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். 

2021 ஆம் ஆண்டில் நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடத்தப்படுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce2fcfb0-7d5e-4b8e-b6b3-2ec7c915c607/26-6a58e7b16836d.webp' /></p><p>

மக்கள் தொகையின் அடிப்படையிலே, மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் நிதி உதவி, நலத்திட்டங்கள் உள்ளிட்டவை செயல்படுத்தப்படுவதால் இது முக்கியமான ஒன்றாகும்.</p><p> 

தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53809e7b-2eee-4c3c-b4ea-9eaa5819f02c/26-6a58e7b21d8e1.webp' /></p><p>

மக்கள் தவறான தகவலை அளித்தால் ரூ, 1,000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
இதில், குடும்ப தலைவர் எந்த ஜாதி, வீட்டில் எத்தனை அறைகள் உள்ளது? வீட்டில் எத்தனை நபர்கள் உள்ளனர்? ஸ்மார்ட் போன், மடிக்கணினி உள்ளதா?, கார், பைக் உள்ளதா? இணைய இணைப்பு உள்ளதா? கழிவறை எந்த வகை?குடிநீர் ஆதாரம், உள்ளிட்ட 33 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான விடைகள் பதிவு செய்யப்பட உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58f87658-4a04-4796-b83f-c47cc2723af3/26-6a58e7b2c3477.webp' /></p><h3> 

சுய கணக்கெடுப்பு </h3><p>

சுயகணக்கெடுப்பு ஜூலை 17 ஆம் திகதி தொடங்கி ஜூலை 31 வரை நடைபெற உள்ளது.</p><p>இந்த முறை, விருப்பமுள்ளவர்கள் இணைய வழியில் <a href="https://se.census.gov.in/" target="_blank">se.census.gov.in</a> என்ற இணையதளத்தில் சுய கணக்கெடுப்பில் கலந்து கொள்ளலாம்.</p><p>இந்த சுயகணக்கெடுப்பில் பங்குபெற்று வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு ஒரு சுய பதிவேட்டு அடையாள எண் (SE ID) திரையில் தோன்றும். அதனை சேமித்து வைத்து, வீட்டிற்கு வரும் கனெக்கெடுப்பாளர்களிடம் காண்பித்தால் மீண்டும் அவர்களிடம் 33 கேள்விகளுக்கும் பதிலளிக்க தேவையில்லை.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-16T14:16:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மணற்சேனை படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/40th-of-the-muthur-massacre-commemorated-1784210146"></link>
            <id>https://ibctamil.com/article/40th-of-the-muthur-massacre-commemorated-1784210146</id>
            <summary type="text">
மூதூர் -மணற்சேனை படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று
வியாழக்கிழமை (16) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

மூதூர் -மணற்சேனை இந்து ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>
மூதூர் -மணற்சேனை படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று
வியாழக்கிழமை (16) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
</p><p>
மூதூர் -மணற்சேனை இந்து மயான முன்றலில் இடம்பெற்ற இவ் நினைவேந்தலை குறித்த
சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.</p><p>

இதன்போது உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி ஒருநிமிட மௌன பிரார்த்தனை
இடம்பெற்றது.</p><p></p><h2>மலர்தூவி அஞ்சலி</h2><p>இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கு தீபம் ஏற்றி, மலர்தூவி
அஞ்சலியும் செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d395206-da5b-4ead-b94e-994b3d20a134/26-6a58e66ba1fc3.webp' /></p><p>
</p><p>
1986.07.16 அன்று கிராமத்திற்குள் புகுந்து மேற்கொள்ளப்பட்ட இவ் தாக்குதல்
சம்பவத்தில் 44 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T14:11:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலாவெளியில் யானைத் தந்தங்களுடன் ஒருவர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/person-arrested-with-elephant-tusks-in-nilaveli-1784210167"></link>
            <id>https://tamilwin.com/article/person-arrested-with-elephant-tusks-in-nilaveli-1784210167</id>
            <summary type="text">திருகோணமலை- நிலாவெளி பகுதியில் சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை
வீட்டில் வைத்திருந்த நபரொருவர் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் கைது
செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை- நிலாவெளி பகுதியில் சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை
வீட்டில் வைத்திருந்த நபரொருவர் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் கைது
செய்யப்பட்டுள்ளார்.
</p><p>குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (15) நிலாவெளி, வள்ளுவர் வீதியில் அமைந்துள்ள
வீடு ஒன்றில் முன்னெடுக்கப்பட்டது.</p><p>

திருகோணமலை சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவல்
ஒன்றின் பேரில் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.</p><p></p><h2>விசாரணை</h2><p> </p><p>இதன்போது சந்தேக
நபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த யானைத் தந்தங்கள்
அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டன.</p><p>

விசேட பொலிஸ் அதிரடிப்படை முகாமின் பொறுப்பதிகாரி எம்.எம்.என்.டி. திலகரத்ன
மற்றும் அதிகாரி எச்.எம்.டி. மாலித் ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்தச் சோதனையை
வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24d5b4e4-b325-4f38-a235-49a7f52ce719/26-6a58e5bbdf828.webp' /></p><p>

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கைப்பற்றப்பட்ட யானைத் தந்தங்களுடன் மேலதிக
சட்ட நடவடிக்கைகளுக்காக நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இது தொடர்பான முதற்கட்ட விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன்,
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த
நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T14:08:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 வருடங்களுக்கு பின் மகளுக்கு வந்த தீர்ப்பு - 47 வயது தந்தைக்கு நீதிமன்றம் 45 வருட சிறைத்தண்டனை உத்தரவு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/verdict-for-the-daughter-after-12-years-1784210624"></link>
            <id>https://tamilwin.com/article/verdict-for-the-daughter-after-12-years-1784210624</id>
            <summary type="text">கடந்த 2013 மற்றும் 2014 ஆண்டு காலப் பகுதிகளில் தனது சொந்த மகளை தொடர்ச்சியாக
பல தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய தந்தைக்கு எதிராக நீதிமன்றம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 2013 மற்றும் 2014 ஆண்டு காலப் பகுதிகளில் தனது சொந்த மகளை தொடர்ச்சியாக
பல தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய தந்தைக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. </p><p>

குறித்த வழக்கானது இன்று(16.07.2026) வவுனியா மேல் நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>

இதற்கமைய, குறித்த தந்தைக்கு 45 வருட கடூழிய
சிறைத் தண்டணை மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 12 இலட்சம் ரூபாய் நஸ்ட ஈடு
மற்றும் ஒரூ இலட்சம் ரூபாய் நீதிமன்ற அபராத தொகையும் வழங்குமாறு வவுனியா மேல்
நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா தீர்ப்பளித்துள்ளார்.</p><p></p><h2>

மகளுக்கு நேர்ந்த கதி</h2><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

14 வயது நிரம்பிய சிறுமியை அவருடைய தன்னை தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி வந்துள்ளார். </p><p> இந்த சம்பவம் வவுனியா - கனகராயன் குளம்
பகுதியில் 2013, 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியிகளில் இடம்பெற்ற நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை பொலிஸாரால் செய்து செய்யப்பட்டு, பி அறிக்கையின் மூலம் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில்
முற்படுத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab56da96-b12f-4a02-821c-2c98a1d2fbd5/26-6a58e52060916.webp' /></p><p> </p><p>

இதனை தொடர்ந்து குறித்த எதிரிக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் கடந்த
2022 ஆம் ஆண்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பகர்வு பத்திரம் தாக்கம்
செய்யப்பட்டுள்ளது. </p><p>

இந்த தொடர்பான வழக்கு தொடர்ச்சியாக விளக்கத்திற்கு எடுத்து
கொள்ளப்பட்டு, குறித்த வழக்கானது வவுனியா மேல் நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக
இன்று(16.07) திகதியிடப்பட்டுள்ளது.
</p><p>
இதன்போது, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.
ஆனந்தராஜா குறித்த தந்தைக்கு 45 வருட கடூழிய
சிறைத் தண்டணை மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 12 இலட்சம் ரூபாய் நஸ்ட ஈடு
மற்றும் ஒரூ இலட்சம் ரூபாய் நீதிமன்ற அபராத தொகையும் வழங்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
</p><h2>


45 வருட கடூழிய சிறைத் தண்டனை</h2><p>

இதன்போது, குறித்த 47 வயது நிரம்பிய எதிரிக்கு எதிராக 4 பாலியல் வன்புணர்வு
குற்றச்சாட்டுக்கள் அரச சட்டவாதியால் சந்தேகத்திற்கு அப்பால்
நிரூபிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய மன்று, இரண்டு வெவ்வேறு வழக்குகளில் 4
குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்ட நிலையில், 45 வருட கடூழிய சிறைத் தண்டனை
வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c3963eb-9872-4ca3-90de-2d4856da98e9/26-6a58e5212b2a1.webp' /></p><p> 

இதேவேளை, நிரூபிக்கப்பட்ட ஒவ்வொரு
குற்றச்சாட்டுக்கும் ரூபாய் 3 இலட்சம் வீதம் 12 இலட்சம் ரூபாய் சிறுமிக்கு
நஸ்ட ஈட்டுத் தொகையாக செலுத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும்
25 ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு இலட்சம் ரூபாய் நீதிமன்றத்திற்கு அபாரம் செலுத்த
வேண்டும் என்றும் தீர்ப்பில் உள்ளடங்கப்பட்டுள்ளத.</p><p>


இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியை பாதுகாக்க வேண்டிய அவரின் இயற்கை
பாதுகாவலராகிய தந்தையே இவ்வாறு குற்றச்சாட்டினை புரிந்துள்ளமை காரணமாக, குறித்த எதிரிக்கு எதிராக எந்தவித 
கருணையும் காட்டாது அதிகபட்ச தண்டனை விதித்துள்ளதாக
நீதிபதி மன்றில் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T14:05:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களின் உயிரோடு விளையாடும் தனியார் மருத்துவமனைகள் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/expired-items-in-private-hospitals-1784206110"></link>
            <id>https://jvpnews.com/article/expired-items-in-private-hospitals-1784206110</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாடளாவிய ரீதியில் உள்ள தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ ஆய்வகங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, காலா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாடளாவிய ரீதியில் உள்ள தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ ஆய்வகங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, காலாவதியான மற்றும் மனித பயன்பாட்டிற்கு தகுதியற்ற மருத்துவ ஆய்வகப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) தெரிவித்துள்ளது.</p><p>

நுகர்வோரின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் தேசிய மட்டத்தில் 52 விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0a0de05-d533-4a12-b49a-930e66cfb7d0/26-6a58d3202fc2c.webp' /></p><h2>பல மருத்துவ நிறுவனங்கள் கடுமையான விதிமுறை மீறல்</h2><p>

இந்த ஆய்வுகளின் போது, பல மருத்துவ நிறுவனங்கள் கடுமையான விதிமுறை மீறல்களில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, தற்போது பயன்பாட்டில் உள்ள பொருட்களுடன் சேர்த்து காலாவதியான ஆய்வகப் பொருட்களையும் அவை சேமித்து வைத்துள்ளமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
 கைப்பற்றப்பட்ட தகுதியற்ற பொருட்களில், குருதி குளுக்கோஸ் பரிசோதனை கருவிகள் (Blood Glucose Testing Kits), ஆய்வக இரசாயனங்கள்,</p><p></p><p> டெங்கு கண்டறிதல் சோதனை கருவிகள் (Dengue Diagnostic Test Kits), இதய நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஜெல் (Gels), சாயக் கரைசல்கள் (Dye Solutions) மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பயன்படுத்தப்படும் இதர ஆய்வகப் பொருட்கள் அடங்குகின்றன.
</p><p>
கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் விசாரணை அதிகாரிகளின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p></p><p>

தவறிழைத்த நிறுவனங்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இத்தகைய திடீர் சோதனைகள் நாடளாவிய ரீதியில் தொடரும் எனவும் அதிகார சபை மேலும் அறிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-16T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் குற்றச்சாட்டில் 2 லட்சம் பேர் கைது - விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-lakh-people-arrested-on-drug-charges-1784209289"></link>
            <id>https://tamilwin.com/article/2-lakh-people-arrested-on-drug-charges-1784209289</id>
            <summary type="text">நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் “ஒன்றிணைந்த தேசிய
போதைப்பொருள் ஒழிப்பு” நடவடிக்கையின் கீழ், கடந்த எட்டு மாத காலப்பகுதியில்
போதைப்பொருள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் “ஒன்றிணைந்த தேசிய
போதைப்பொருள் ஒழிப்பு” நடவடிக்கையின் கீழ், கடந்த எட்டு மாத காலப்பகுதியில்
போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் 2 இலட்சத்து 30 ஆயிரத்து 248 பேர்
கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம்
தெரிவித்துள்ளது.
</p><p>
கொழும்பிலுள்ள திட்டத்தின் பிரதான காரியாலயத்தில் இன்று(16.07.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, பொலிஸ் போதைப்பொருள்
ஒழிப்புப் பணியகத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அசோக தர்மசேன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><h2>



விசேட நடவடிக்கை</h2><p>

முப்படையினர், பொலிஸார் மற்றும் இலங்கை சுங்கத் திணைக்களம் ஆகிய தரப்பினர்
ஒன்றிணைந்து முன்னெடுக்கும் இந்த விசேட நடவடிக்கைகள் மிகவும் திறம்பட
முன்னெடுக்கப்படுகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7071fd3-e0a5-4155-a8a6-f8f00078745d/26-6a58e02168ac5.webp' /></p><p> </p><p>

மேலும், கைது நடவடிக்கைகளின் போது எவ்விதமான நிரபராதிகளும் பாதிக்கப்படக்
கூடாது என்பதில் பொலிஸ் திணைக்களம் மிகுந்த அவதானத்துடன் செயற்படுகின்றது
என்றும், இது குறித்த தெளிவான அறிவுறுத்தல்கள் அனைத்து அதிகாரிகளுக்கும்
வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><h2> 

விமான நிலையத்தில் சிக்கிய கடத்தல்க்காரர்கள்</h2><p>

இதே ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஊடகப்
பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா கருத்துத் தெரிவிக்கையில்,</p><p> 

கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் தபால் நிலையங்கள் ஊடாக
நாட்டுக்குள் கடத்தப்படவிருந்த 13 போதைப்பொருள் கடத்தல் முயற்சிகளைச் சுங்க
அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/121505a0-1564-4766-af14-ddd6df2823ad/26-6a58e02235661.webp' /></p><p>
</p><p>
சிறிய அளவிலான போதைப்பொருள்கள் தபால் மூலம் கொண்டு வரப்பட்டாலும், அவை
சமூகத்தில் பாரிய சீரழிவை ஏற்படுத்தக்கூடும். </p><p>

எனவே, இவ்வாறான கடத்தல்களை
முறியடிக்கச் சுங்கத் திணைக்களத்தின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு
நடவடிக்கைகள் தற்போது மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T13:44:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் ஏமாற்றப்பட்ட நபர்கள்! கனடா அனுப்புவதாக 8 மில்லியனை சுருட்டிய நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/8-million-fraud-claiming-to-send-to-canada-1784197030"></link>
            <id>https://ibctamil.com/article/8-million-fraud-claiming-to-send-to-canada-1784197030</id>
            <summary type="text">


கனடா மற்றும் லக்சம்பர்க்கில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, ஐந்து நபர்களிடம் இருந்து சுமார் 8 மில்லியன் ரூபாயை மோசடி செய்ததாகக் கூறப்படும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>


கனடா மற்றும் லக்சம்பர்க்கில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, ஐந்து நபர்களிடம் இருந்து சுமார் 8 மில்லியன் ரூபாயை மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புலனாய்வு அதிகாரிகளால் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
நேற்றுமுன்தினம்(14), வெல்லம்பிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்ட அந்த சந்தேக நபர், கொலன்னாவாவைச் சேர்ந்த 38 வயதான ஃபைஸ் முகமது நஃப்திகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p></p><h2>ஏமாற்றப்பட்ட யாழ்ப்பாண நபர்கள்</h2><p>

விசாரணைகளின்படி, யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியைச் சேர்ந்த ஐந்து நபர்களுக்கு கனடா மற்றும் லக்சம்பர்க்கில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, சந்தேக நபர் சுமார் 8 மில்லியன் ரூபாயை மோசடியாக பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c56c1c4b-3b14-4233-b3e0-9d5795af5e2a/26-6a58b64550796.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (15) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதையடுத்து, தலா 5 மில்லியன் ரூபா மதிப்புள்ள இரண்டு பிணைப்பத்திரங்களில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன், முறைப்பாட்டாளர்களுக்கு 100,000 ரூபாய் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>

மேலும், மல்லாகம் காவல்நிலையத்திலும் சந்தேக நபருக்கு எதிராகப் முறைப்பாடுகள் வந்துள்ளதாக புலனாய்வுப் பிரிவுகள் தெரிவித்துள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T13:41:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[படங்களுக்கு பிரேக் எடுத்த நடிகை சமந்தா, ஆனால் இனி... ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ் ரெடியா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-samantha-next-step-in-cinema-1784188334"></link>
            <id>https://cineulagam.com/article/actress-samantha-next-step-in-cinema-1784188334</id>
            <summary type="text">நடிகை சமந்தாமுன்னணி நடிகையாக, நம்பர் 1 நாயகியாக சில வருடங்களுக்கு முன்பு கலக்கிக் கொண்டு வந்தவர் நடிகை சமந்தா. எப்போது மயோசிடிஸ் நோய் தாக்கம் அதிகமானத...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகை சமந்தா</h2><p>முன்னணி நடிகையாக, நம்பர் 1 நாயகியாக சில வருடங்களுக்கு முன்பு கலக்கிக் கொண்டு வந்தவர் நடிகை சமந்தா. </p><p>எப்போது மயோசிடிஸ் நோய் தாக்கம் அதிகமானதோ அப்போதே படங்கள் நடிப்பதில் கொஞ்சம் பிரேக் எடுத்த வண்ணம் இருந்தார். கடந்த வருடம் இயக்குனர் ராஜ் நிடிமோரு என்பவரை திருமணம் செய்துகொண்ட சமந்தா தற்போது கர்ப்பமாக உள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ee507a3-16e3-4924-9bab-4db49d942203/26-6a589013bab0b.webp' /></p><p> </p><p>கடைசியாக தெலுங்கில் தயாரான மா இன்டி பங்காரம் என்ற படத்தில் நடித்தார், தமிழில் எங்கள் தங்கம் என்ற பெயரில் வெளியானது.
படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கி ரூ. 100 கோடிக்கு மேலான வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c1b7642-1a77-47fc-b32f-ce4dbf3e411c/26-6a58901483ade.webp' /></p><h2>குட் நியூஸ்&nbsp;</h2><p>கர்ப்பமாக இருப்பதால் படங்களில் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்துள்ள நடிகை சமந்தா வேறொரு விஷயம் செய்ய உள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e570abba-bdc6-4b4a-a152-80fe4cc47334/26-6a589012dc010.webp' /></p><p> </p><p>அதாவது விரைவில் தமிழில் சோனி விழா என்ற தொலைக்காட்சி அறிமுகமாக உள்ளது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளாராம் நடிகை சமந்தா.
</p><p>இந்த தகவல் அறிந்த சமந்தா ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-16T13:40:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனவுகளுடன் கனடாவுக்குச் செல்லும் மக்கள்: இணையம் காட்டும் காட்சிகள் உண்மையா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-return-indians-says-earned-10l-paid-tax-5l-1784209172"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-return-indians-says-earned-10l-paid-tax-5l-1784209172</id>
            <summary type="text">பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்காக செல்ல தேர்ந்தெடுக்கும் நாடுகளில் கனடாவும் ஒன்றாக உள்ளது.

ஆனால், இணையம் காட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்காக செல்ல தேர்ந்தெடுக்கும் நாடுகளில் கனடாவும் ஒன்றாக உள்ளது.</p><p>

ஆனால், இணையம் காட்டும், சுத்தமான காற்று, அமைதியான வாழ்க்கை என்னும் காட்சிகள் உண்மையா?
</p><h3>
இந்தியர் ஒருவரின் அனுபவம்</h3><p>

கனடாவில் நிரந்தரமாக வாழ்வதற்காக கனடா சென்ற இந்தியரான ஹர்ஷ் குப்தா, கனடா வாழ்க்கை இணையத்தில் காட்டப்படுவது போல் இல்லை என்கிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cf1da3d-7a52-4c5e-ba32-4f2ea3dec4be/26-6a58df15de777.webp' /></p><p>

நீங்கள் கனடாவுக்குச் செல்ல விரும்பும் ஒரு இந்தியர் என்றால், ஒரு அனுபவஸ்தன் என்னும் முறையில் நான் உங்களுக்கு சில ஆலோசனைகளைக் கூற விரும்புகிறேன் என்கிறார் குப்தா.&nbsp;</p><p></p><p>
கனடாவுக்குச் செல்ல விரும்புவோரின் முதல் தேவை, ஒரு நல்ல வேலை. ஆனால், பலரும் எதிர்பார்ப்பதுபோல, நல்ல சம்பளத்தில் ஒரு வேலை கிடைப்பது கனடாவில் கடினம் என்கிறார் அவர்.
</p><p>
அடுத்த அதிர்ச்சி, வரிகள் என்று கூறும் குப்தா, தான் தன் தொழில் மூலமாக மாதம் ஒன்றிற்கு 10 லட்ச ரூபாய் சம்பாதித்ததாகவும், ஆனால், 5 லட்ச ரூபாய் வரி செலுத்தியதாகவும் தெரிவிக்கிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99186cd2-e11e-449a-b890-0383ca5eae6d/26-6a58df1691937.webp' /></p><p>
கனடாவின் மருத்துவ அமைப்பு குறித்து பேசும் குப்தா, தான் மருத்துவரை சந்திப்பதற்காக 6 மாதங்கள் காத்திருந்ததாகவும், மருந்துகளும் விலையும் அதிகம் என்றும் கூறுகிறார்.
</p><p>
வானிலை மற்றொரு சவாலான விடயம் என்று கூறும் குப்தா, கனடாவின் நீண்ட கோடை காலம், அன்றாட வாழ்வை பாதித்ததாகவும், வெறும் குளிராக மட்டுமல்ல, அது மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்ததாகவும் தெரிவிக்கிறார்.
</p><p>
விலைவாசியும் மிக அதிகம் என்று கூறும் குப்தா, அது மக்களுடைய வாழ்க்கைத்தரத்தையும், கனடா குறித்த பார்வையையும் மாற்றிவிடுவதாகவும் தெரிவிக்கிறார்.
</p><p>
அத்துடன், தன்னைப் பொருத்தவரை, நிரந்தரக் குடியுரிமை பெறுவது கடினமாக இருந்ததாக தெரிவிக்கும் குப்தா, கனடா வாழ்க்கை என்பது எல்லோருக்குமானது அல்ல, உணவு விநியோகம், ட்ரக் சாரதி வேலை, விவசாயம் என ஏதாவது வேலை செய்யத் தயார் என்றால், சமாளித்துக்கொள்ளலாம். </p><p>மற்றபடி கஷ்டம் என்கிறார்.

ஆக, இணையத்தில் காட்டப்படும் இயற்கைக் காட்சிகளையும், சுத்தமான காற்று, அமைதியான வாழ்க்கை என்னும் விடயங்களையும் நம்பி நீங்கள் கனடாவுக்குச் செல்வீர்களானால், முதல் 4 முதல் 5 மாதங்கள் நன்றாக இருக்கும், அப்புறம் கஷ்டம்தான் என்கிறார் குப்தா!</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T13:39:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் இரவு விடுதிக்குள் சிக்கிய பெண் - ஐந்து கோடி ரூபா சிக்கிய மர்மம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-was-arrested-for-defrauding-money-1784175448"></link>
            <id>https://tamilwin.com/article/woman-was-arrested-for-defrauding-money-1784175448</id>
            <summary type="text">கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்திலுள்ள பிரபல இரவு விடுதியொன்றில், சூதாட்டத்தின் போது 5 கோடி ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில், அங்கு பணிபுரிந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்திலுள்ள பிரபல இரவு விடுதியொன்றில், சூதாட்டத்தின் போது 5 கோடி ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில், அங்கு பணிபுரிந்த பெண் ஒருவர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

சீட்டுக்கட்டுகளைக் கையாள்வதன் மூலம் இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>
அந்த விடுதிக்கு கிடைத்த அநாமதேய தொலைபேசி அழைப்பொன்றை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலேயே இந்த மாபெரும் மோசடி தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.</p><h2><b>மாபெரும் மோசடி</b></h2><p> 

கைது செய்யப்பட்ட 21 வயதுடைய பெண் அத்திடிய பிரதேசத்தைச் சேர்ந்தவராவார் என தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12374fa6-963f-40e4-bac2-15f76c47965e/26-6a58de5974cd7.webp' /></p><p>சூதாட்டத்தில் சீட்டுக்கட்டுகளைக் கலைக்கும்போது, அந்த பெண் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு தெரியும்படி அதைக் கையாண்டு, அந்தத் தரவுகளைக் காணொளி எடுப்பதற்கும் வசதி செய்து கொடுத்துள்ளார். </p><p>

இவ்வாறு பெறப்பட்ட காணொளி காட்சிகளை பயன்படுத்தி, சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் பெரும் தொகையை வென்றுள்ளார்.</p><p> 

அத்துடன், அதில் 5 கோடி ரூபாவை சந்தேகநபரான அந்தப் பெண்ணுக்கு பகிர்ந்தளித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். </p><h3>

மேலதிக விசாரணை</h3><p>கடந்த இரண்டரை மாதங்களாக திட்டமிட்டு இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddd1d2ee-ac0e-4916-b471-11b476662b25/26-6a58de5a5cc39.webp' /></p><p>அந்த மேசையில் பணிபுரிந்த மேலும் ஐந்து ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.</p>]]></content>
            <updated>2026-07-16T13:36:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மக்களின் நிலை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/one-in-five-sri-lankans-still-suffer-from-poverty-1784207965"></link>
            <id>https://ibctamil.com/article/one-in-five-sri-lankans-still-suffer-from-poverty-1784207965</id>
            <summary type="text">ஐந்தில் ஒரு இலங்கையர் இன்னும் வறுமையால் வாடுகிறார்கள் என்றும், நாட்டில் உள்ள மூன்றில் ஒரு குடும்பத்திற்கு சத்தான மற்றும் போதுமான உணவு கிடைப்பதில்லை என...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐந்தில் ஒரு இலங்கையர் இன்னும் வறுமையால் வாடுகிறார்கள் என்றும், நாட்டில் உள்ள மூன்றில் ஒரு குடும்பத்திற்கு சத்தான மற்றும் போதுமான உணவு கிடைப்பதில்லை என்றும் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான உலக வங்கியின் முகாமையாளர் கெவொர்க் சர்க்சியன் அண்மையில் தெரிவித்தார்.</p><p>

பொருளாதார நிலைத்தன்மையும் பொருளாதார மீட்சியும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள் என்றும், பல இலங்கையர்கள் ஒவ்வொரு நாளும் அந்த வேறுபாட்டை உணர்ந்து வருகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><h2>இன்னமும் நெருக்கடியில் சம்பளம்</h2><p>&nbsp; ஊதியங்கள் மீண்டு வந்தாலும், பலரின் சம்பளம் இன்னும் நெருக்கடிக்கு முந்தைய நிலைக்குத் திரும்பவில்லை என்று உலக வங்கியின் முகாமையாளர் கூறினார். வேலைவாய்ப்புச் சந்தை இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்றும், குறிப்பாகப் பெண்கள் பெரும் சிரமத்தை உணர்கிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9e227eb-24ed-46a5-84af-5a42aa1a11b1/26-6a58dde21f0f5.webp' /></p><p>இலங்கை நெருக்கடியின் ஆழத்திலிருந்து மீண்டுவிட்டது, ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான பயணம் இன்னும் முடிவடையவில்லை என்று அவர் கூறினார்.</p><p></p><h2>பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கிய இரண்டு காரணங்கள்</h2><p> டித்வா புயலும் மத்திய கிழக்கு நெருக்கடியும் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பயணத்தைக் கடினமாக்கியுள்ளன என்று அவர் தெரிவித்தார். அதனால்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பயணத்தின் அடுத்த கட்டம் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d16f939-eccf-428e-bd3c-b9c377d42899/26-6a58dde1707bf.webp' /></p><p>நாட்டில் அடையப்பட்ட பொருளாதார முன்னேற்றம் மக்களின் அன்றாட வாழ்வில் உணரப்படுவதை உறுதி செய்துகொண்டு, இலங்கை தனது சீர்திருத்த செயல்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். </p><p>இதற்காக, தனியார் துறையால் முன்னுரிமை அளிக்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பு உருவாக்கம் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T13:34:35+00:00</updated>
        </entry>
    </feed>
