<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-17T03:37:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவப்பெட்டிக்குள் டொனால்ட் ட்ரம்ப் ; உலகை அதிர வைத்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-shocks-world-with-trump-coffin-display-1784259394"></link>
            <id>https://canadamirror.com/article/iran-shocks-world-with-trump-coffin-display-1784259394</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்ற பதாகை ஈரானில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்ற பதாகை ஈரானில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.</p><p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான ஒப்பந்தத்தை ஜனாதிபதி ட்ரம்ப் ரத்து செய்ததுடன் மீண்டும் ஈரானின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0134cb20-414a-4291-9222-a63c893214bb/26-6a59a343ea1d3.webp' /></p><p>
ஏற்கெனவே, கமேனியின் கொலைக்கு நிச்சயம் பழித்தீர்ப்போம் என ஈரானின் புதிய தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி அறிவித்திருந்தார்.</p><p> மேலும், கமேனியின் இறுதிச்சடங்கில் அமெரிக்கா மற்றும் ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
</p><p>
இந்த நிலையில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இஸ்லாமியப் புரட்சி சதுக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் உடல் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்று சித்தரிக்கப்பட்ட மிகப்பெரிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


</p><p>
இந்தப் பதாகையின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருவதால், சர்வதேச அமைப்புகள் மற்றும் பல்வேறு நாடுகளின் கண்டனங்களை இந்தப் பதாகை பெற்றுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-17T03:36:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடந்த ஆறு மாதங்களில் இலக்கை விட அதிக வருமானத்தை ஈட்டியுள்ள சுங்கத்துறை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tax-revenue-received-by-the-customs-department-1784258163"></link>
            <id>https://tamilwin.com/article/tax-revenue-received-by-the-customs-department-1784258163</id>
            <summary type="text">இலங்கை சுங்கத்திணைக்களம், 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1,373 பில்லியன் ரூபாயை வரி வருமானமாக ஈட்டியுள்ளது.
முதல் ஆறு மாதங்களுக்கான வரி இலக்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சுங்கத்திணைக்களம், 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1,373 பில்லியன் ரூபாயை வரி வருமானமாக ஈட்டியுள்ளது.</p><p>
முதல் ஆறு மாதங்களுக்கான வரி இலக்கை விட இது 22 சதவீதம் அதிகம் என்று அதன் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்தார்.</p><p></p><h2>அதிகரித்த வருவாய்&nbsp;</h2><p>

இலங்கை சுங்கத் திணைக்களம் முன்னதாக நிர்ணயித்துள்ள இந்த ஆண்டுக்கான வரி இலக்கு 2,206.9 பில்லியன் ரூபாயாகும்.</p><p>

அதன்படி, முதல் ஆறு மாதங்களுக்குள் 1,060 பில்லியன் ரூபாய் வரியாக வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90506653-9054-4458-9c29-5a5fcec4febe/26-6a59a2ae0aa89.webp' /></p><p>

எனினும் அந்தக் காலகட்டத்தில் 1,373 பில்லியன் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இது எதிர்பார்க்கப்பட்ட வருவாயை விட 22 சதவீதம் அதிகமாகும்.
</p><p>
இந்த ஆண்டு மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அவ்வாறு நிகழவில்லை என்றும், வரி வருமானம் அதிகரித்துள்ளது என்றும் சுங்கத்திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T03:36:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் கொல்லப்பட்டவர்கள் கைதிகள் அல்ல! வெளிவந்திருக்கும் திடுக்கிடும் தகவல்கள்....]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-violence-1784258790"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-violence-1784258790</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் உயிரிழந்த 21 கைதிகளும் &#039;தண்டனை பெற்ற கைதிகள்&#039; என்றே ஊடகங்களாலும் அரசாங்கத் தரப்பாலும் தொடர்ந்து அடையாளப்படுத்தப்பட்டனர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் உயிரிழந்த 21 கைதிகளும் 'தண்டனை பெற்ற கைதிகள்' என்றே ஊடகங்களாலும் அரசாங்கத் தரப்பாலும் தொடர்ந்து அடையாளப்படுத்தப்பட்டனர். </p><p>
ஆனால், உயிரிழந்த 21 பேரும் சந்தேக நபர்கள் ஆவர்.
அதாவது, உயிரிழந்த அதிகாரிகளைத் தவிர ஏனைய 21 பேரும் சந்தேக நபர்கள் என தென்னிலங்கை ஆங்கில பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் சமிந்தர பேர்டினென்டோ (Shamindra Ferdinando) கண்டுபிடித்துள்ளார்.
</p><h2>
</h2><p></p><h2>சிறைச்சாலைத் திணைக்களம் வழங்கிய&nbsp; தகவல்</h2><p>இவ்விடயம் தொடர்பில் அவர் இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் குறிப்பிட்ட விடயங்கள்.
</p><p>கைதிகளுக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையில் தெளிவான வேறுபாடு இருக்க வேண்டும். ஆனாலும் கைதிகள் என்ற வரையறைக்குள் தடுத்து வைத்திருப்பவர்களும் அடங்குகின்றனர்.</p><p>ஆனால் அரசாங்கம் இவர்களை சந்தேக நபர்கள் என்று ஏன் சொல்லவில்லை. இவர்கள் சந்தேக நபர்களா அல்லது தண்டனை கைதிகளா என்பது தொடர்பில் சிறைச்சாலை ஆவணங்களில் குறிப்பெடுக்கப்படும்.ஆனால் எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5521889e-affb-43ae-890a-0dc68d3e51a3/26-6a59a0e8859c9.webp' /></p><p>சிறைச்சாலைத் திணைக்களத்திலிருந்து கிடைத்த விசேட தகவல்கள் மூலம் நாம் இதை உறுதிப்படுத்திக் கொண்டோம்.
'சந்தேக நபர்' என்பவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவர் அல்ல. </p><p>நீதிமன்ற விசாரணை செயல்முறையின் மூலம் அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை, அவர் குற்றம் செய்யாத ஒரு நிரபராதியாகவே கருதப்படுவார். அதேபோல காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் சந்தேக நபர்கள் தான்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T03:31:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[7 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/idhayam-murali-7-days-box-office-1784255797"></link>
            <id>https://cineulagam.com/article/idhayam-murali-7-days-box-office-1784255797</id>
            <summary type="text">இதயம் முரளிஅறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் இதயம் முரளி. இப்படத்தில் அதர்வா கதாநாயகனாக நடித்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<h2>இதயம் முரளி</h2><p>அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் இதயம் முரளி. இப்படத்தில் அதர்வா கதாநாயகனாக நடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9836a7c-07c4-4b27-b0dc-cfeabc0c1239/26-6a5995394e506.webp' /></p><p></p><p> 

இவருடன் இணைந்து கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன், சுதாகர், பகத் பாசில், தமன், நிஹாரிகா, டிராவிட் என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். நடிப்பை தாண்டி இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>வசூல்&nbsp;</h2><p> </p><p>

காதல் கதைக்களத்தில் உருவான இப்படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியானது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் கலவையான விமர்சனங்களை பெற்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffadd6c2-3e87-422e-a279-704749603a02/26-6a5995389451a.webp' /></p><p>இந்த நிலையில், 7 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் செய்துள்ள <a href="https://www.youtube.com/watch?v=klMIspNiWSA" target="_blank">வசூல் </a>குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 7 நாட்களில் இப்படம் ரூ. 18.5 கோடி வசூலித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-17T03:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழிவாங்க போடப்பட்ட பிளான்!! மேடையிலேயே சந்தானம் கொடுத்த பதிலடி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/santhanams-throwback-school-story-1784208659"></link>
            <id>https://viduppu.com/article/santhanams-throwback-school-story-1784208659</id>
            <summary type="text">நடிகர் சந்தானம்காமெடி நடிகராக நடித்து பின் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தவர் தான் நடிகர் சந்தானம். ஒருசில படங்கள் மட்டுமே வெற்றியை பெற்று வரும் நிலையில், டி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகர் சந்தானம்</h2><p>காமெடி நடிகராக நடித்து பின் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தவர் தான் நடிகர் சந்தானம். ஒருசில படங்கள் மட்டுமே வெற்றியை பெற்று வரும் நிலையில், டிடி நெக்ஸ்ட் லெவல் படம் சுமார் ஹிட் கொடுத்தது. அவர் நடிப்பில் அடுத்தடுத்து 3 படங்கள் ரிலீஸாகவுள்ளது. சமீபத்தில் சந்தானம் அளித்த பேட்டியொன்றில் சில சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f6870cc-2562-420f-bd60-1873cff8d1d3/26-6a58dd161e77d.webp' /></p><p> </p><p>அதில், பள்ளியில் படிக்கும்போது நான் ரொம்பவும் அமர்க்களம் செய்வேன், கடைசி இருக்கை மாணவன் நான். ஒழுங்காக படிக்கமாட்டேன், எனவே என்னை பழிவாங்க, ஆண்டு விழாவில் பாடல் போட்டியில் என் பெயரையும் ஆசிரியர்கள் கொடுத்துவிட்டார்கள்.</p><p> நானோ முடியாது என்று சொன்னாலும் அவர்கள் கேட்கவில்லை. என்னுடைய குரல் நன்றாக இருக்காதுன்னு தெரிந்தும் அப்படி செய்தார்கள். விழாவுக்கு பெரிய பெரிய அதிகாரிகள் வந்தார்கள். நான் மேடைக்கு சென்று தேசிய கீதம் பாடினேன், எல்லோரும் எழுந்து நின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a58bd657-7557-45e3-bccd-5c3705623094/26-6a58dd156cb07.webp' /></p><p> </p><p>பாடல் முடிந்தவுடன் உட்கார சென்றார்கள். மீண்டும் பாடினேன், அவர்கள் எழுந்து நின்றார்கள். இப்படி மொத்தம் 3 முறை நடந்தது. வந்தவர்கள் எல்லோரும் டென்ஷனாகிவிட்டார்கள். ஆசிரியர்கள் என்னை நைஸாக மேடையில் இருந்து அழைத்து சென்றுவிட்டார்கள் என்று பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-17T03:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் பெற்ற மகளை பல முறை வன்புணர்ந்த தந்தைக்கு நேர்ந்த கதி ; இறுதியில் நீதிபதி கூறிய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/father-faces-charges-over-daughter-abuse-case-1784258306"></link>
            <id>https://jvpnews.com/article/father-faces-charges-over-daughter-abuse-case-1784258306</id>
            <summary type="text">வவுனியா கனகராயன்குளம் பகுதியில் தனது 14 வயது மகளை 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வவுனியா கனகராயன்குளம் பகுதியில் தனது 14 வயது மகளை 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், 47 வயதுடைய தந்தைக்கு வவுனியா மேல் நீதிமன்றம் 45 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">


இந்த வழக்கில் நேற்று (16) தீர்ப்பளித்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மொத்தமாக 12 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், நீதிமன்றத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/637ff3cf-0f8e-45ba-b8c1-41fc62759e23/26-6a599f0460d62.webp' /></p><h2 style="text-align: justify; ">பாலியல் வன்புணர்வு</h2><p>
</p><p style="text-align: justify; ">


குறித்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தையை பொலிஸார் கைது செய்து, வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து, சட்டமா அதிபர் திணைக்களம் 2022 ஆம் ஆண்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
</p><p style="text-align: justify; ">


வழக்கு விசாரணைகளின் போது, எதிரிக்கு எதிராக சுமத்தப்பட்ட நான்கு பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வகையில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது.
</p><p style="text-align: justify; ">


இதையடுத்து, இரண்டு தனித்தனி வழக்குகளில் நிரூபிக்கப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளுக்காக மொத்தம் 45 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது</p><p style="text-align: justify; margin-left: 25px;"></p><p style="text-align: justify; "> 



மேலும், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 3 இலட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 12 இலட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக வழங்கவும், 

ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 25 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் ஒரு இலட்சம் ரூபாயை நீதிமன்ற அபராதமாக செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.</p><p style="text-align: justify; ">&nbsp;தீர்ப்பளிக்கும் போது கருத்து தெரிவித்த நீதிபதி, பாதுகாக்க வேண்டிய இயற்கை பாதுகாவலரான தந்தையே இவ்வாறான கடுமையான குற்றத்தை புரிந்துள்ளதால், எந்தவித கருணையும் காட்டாமல் அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-17T03:18:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான நிலையங்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரவின் பணிப்புரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-anura-kumara-s-statement-1784258057"></link>
            <id>https://tamilwin.com/article/president-anura-kumara-s-statement-1784258057</id>
            <summary type="text">துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சின் கீழ் உள்ள
நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த
மீளாய்வு கூட்டம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சின் கீழ் உள்ள
நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த
மீளாய்வு கூட்டம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று ஜனாதிபதி
அலுவலகத்தில் நடைபெற்றது.</p><p>

இதன்போது துறைமுக மற்றும் விமான போக்குவரத்துத் துறைகளை நவீனமயமாக்கல் மற்றும்
நிதி முகாமைத்துவம் குறித்து ஜனாதிபதி முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.</p><p></p><h2>&nbsp;நவீனமயமாக்கல் பணிகள்&nbsp;</h2><p>
</p><p>
உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன்
முன்னெடுக்கப்படும் இலங்கை துறைமுக அபிவிருத்தித் திட்டங்கள், காங்கேசன்துறை
துறைமுக மறுசீரமைப்பு, கொழும்பு துறைமுக லொஜிஸ்டிக் பார்க் மற்றும் மேற்கு
முனையத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் குறித்து ஆராயப்பட்டது. </p><p>துறைமுக சேவைகளை
டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் செயல்திறனை அதிகரிக்க வலியுறுத்தப்பட்டது.

2055ஆம் ஆண்டளவில் வருடாந்த பயணிகள் கொள்ளளவை 24.2 மில்லியனாக உயர்த்தும்
நோக்கில், கட்டுநாயக்க விமான நிலையத்தின் செயல்திறனை மேம்படுத்தும் இரண்டாம்
கட்டப் பணிகள் 2027ஆம் ஆண்டிற்குள் நிறைவு செய்யப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18ae47c9-c023-4b14-bdf6-a198b437a9a7/26-6a599e10792cf.webp' /></p><p> </p><p>புதிய முனையங்களை
அமைத்தல் மற்றும் போக்குவரத்துச் சேவைகளை முறைப்படுத்துதல் குறித்து கவனம்
செலுத்தப்பட்டது.

ஹிகுராக்கொட உள்ளிட்ட உள்நாட்டு விமான நிலையங்களைச் சீரமைக்க, விமானப்படையுடன்
இணைந்து கூட்டு ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி
பணிப்புரை வழங்கினார்.</p><p>

மத்தல விமான நிலையம் ஆண்டுக்கு சுமார் 4 பில்லியன் ரூபா நட்டத்தை
எதிர்கொள்வதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. </p><p>இந்த நட்டத்தைத் தவிர்க்க, புதிய
முதலீட்டு முன்மொழிவுகளைக் கோரியுள்ளதாகவும், 2027ஆம் ஆண்டளவில் அதனை
நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9746e2a2-f968-4345-a795-0cc407900c2e/26-6a599e114e03c.webp' /></p><p>
யாழ்ப்பாண விமான நிலைய முனைய நவீனமயமாக்கல் பணிகள் தற்போது
ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.</p><p>

நிறுவனங்கள் தங்களின் சொந்த நிதி வலிமையைப் பயன்படுத்தி அபிவிருத்தித்
திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி, மக்களின்
வரிப்பணத்திற்குச் சுமையாக அமையாத வகையில், திறைசேரிக்கு அதிகபட்ச பங்களிப்பை
வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்குத் தெளிவாக
அறிவுறுத்தினார்.</p><p>

இந்தக் கலந்துரையாடலில் இலங்கை துறைமுக அதிகார சபை, ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ்
உள்ளிட்ட அமைச்சின் கீழ் உள்ள அனைத்து முக்கிய நிறுவனங்களின் பிரதானிகளும்
கலந்துகொண்டனர்.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T03:14:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலக்கரி ஊழலினால் 8,400 மில்லியன் ரூபாய்க்கும் அதிக நட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/8000-million-froud-in-coal-import-1784258049"></link>
            <id>https://tamilwin.com/article/8000-million-froud-in-coal-import-1784258049</id>
            <summary type="text">நிலக்கரி ஊழல்களினால் நாட்டுக்கு 8400 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2009 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலக்கரி ஊழல்களினால் நாட்டுக்கு 8400 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

2009 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளில், நாட்டின் பொருளாதாரத்தைப் பாதித்த பாரிய ஊழல் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
11 போலி அறிக்கைகள் மற்றும் தர மோசடி நிலக்கரி ஏற்றப்பட்ட வெளிநாட்டுத் துறைமுகங்களிலிருந்து வழங்கப்பட்ட தரப்பரிசோதனை அறிக்கைகளில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07610d2a-8f54-482a-8441-db1adf2937cc/26-6a599e031bd0c.webp' /></p><p> </p><p>

நிலக்கரி தரம் வாய்ந்தது எனத் தெரிவித்துச் சமர்ப்பிக்கப்பட்ட 15 அறிக்கைகளில் 11 அறிக்கைகளைச் சம்பந்தப்பட்ட துறைமுக அதிகாரிகள் தங்களுடையவை அல்ல என நிராகரித்துள்ளனர்.
</p><p>
இதன் மூலம், தரம் குறைந்த நிலக்கரியைத் தரம் கூடியதாகக் காட்டி இலங்கைக்கு அனுப்புவதற்காக யாரோ ஒரு தரப்பினர் இந்த போலி அறிக்கைகளை தயாரித்துள்ளமை குறித்துப் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
</p><p>
தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்ததன் காரணமாக, முதல் 9 கப்பல்களில் மட்டும் இலங்கைக்குச் சுமார் 8,497 மில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p> 

3-வது கப்பலின் மூலம் 1,318 மில்லியன் ரூபாய் நட்டம், 6-வது கப்பலின் மூலம் 1,182 மில்லியன் ரூபாய் நட்டம் மற்றும் 9-வது கப்பலின் மூலம் 1,493 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பொறியியலாளர் சமீர அதிகாரிகே வழங்கிய அறிக்கையின் ஊடாக இந்த நிதியிழப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
மின்நிலையத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து தரம் குறைந்த நிலக்கரியைப் பயன்படுத்தியமையால் லக்விஜய மின்நிலையத்தின் இயந்திரத் தொகுதிகளில் அளவுக்கு அதிகமான வெப்பம் உருவாகியுள்ளதாக நிபுணர்கள் சாட்சியமளித்துள்ளனர். </p><p>

இது மின்நிலையத்தின் நீண்டகாலப் பயன்பாட்டிற்கும் அதன் ஆயுட்காலத்திற்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

மேலும், 2 மில்லிமீட்டருக்கும் குறைவான நிலக்கரித் துகள்கள் மின் உற்பத்திக்குப் பயன்படாமல் வெறும் சாம்பலாகவே மாறி விடுவதாகவும், இது தேவையற்ற செலவுகளை உருவாக்குவதாகவும் லங்கா நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார் என இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
விசாரணைக் குழு உயர்நீதிமன்ற நீதியரசர் கிஹான் குலதுங்க, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஆதித்ய படபெந்திகே மற்றும் மேல்நீதிமன்ற நீதிதிபதி சஞ்சீவ சோமரத்ன ஆகியோர் அடங்கிய குழுவினரே இந்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p> 

நிலக்கரி கொள்வனவு தொடர்பான ஒட்டுமொத்தப் பிரசம்பாத நடைமுறைகளிலும் உள்ள குறைபாடுகள் மற்றும் இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-17T03:14:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழகத்தில் சுய கணக்கெடுப்பு தொடங்கியது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/self-enumeration-in-tamilnadu-begins-today-1784257808"></link>
            <id>https://ibctamilnadu.com/article/self-enumeration-in-tamilnadu-begins-today-1784257808</id>
            <summary type="text">இந்தியாவில் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒருபகுதியாக தமிழகத்தில் சுய கணக்கெடுப்பு இன்று தொடங்கியது.

இதுகுறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு தமிழக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒருபகுதியாக தமிழகத்தில் சுய கணக்கெடுப்பு இன்று தொடங்கியது.</p><p>

இதுகுறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு தமிழக இயக்குனர் சுந்தரேஷ் பாபு கூறுகையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு வீட்டு பட்டியல் மற்றும் வீடு வசதி கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்பு என இரண்டு கட்டங்களாக நடைபெறும்.</p><p>

இன்று சுயகணக்கெடுப்பு தொடங்குகிறது, https://se.census.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் சுய விபரங்களை பதிவேற்றம் செய்யலாம், இம்மாத இறுதி வரை 31ம் தேதி வரை நடைபெறும்.
</p><p>
சுயகணக்கெடுப்பு பதிவேற்றத்துக்கு பின்னர் ஒரு அடையாள எண் உருவாக்கப்படும், அதனை பொதுமக்கள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.
</p><p>
மேலும் 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் ஒரே கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும் என்றும் இதனுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.<br></p>]]></content>
            <updated>2026-07-17T03:12:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து ; 20 பேர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/early-morning-crash-injures-20-people-1784257379"></link>
            <id>https://jvpnews.com/article/early-morning-crash-injures-20-people-1784257379</id>
            <summary type="text">கொடகம - பொரளை பிரதான வீதியில் அத்துருகிரிய, கோவின்ன மாவத்தை அருகே வெள்ளிக்கிழமை (17) அதிகாலை இடம்பெற்ற பஸ் மற்றும் டிப்பர் ரக வாகன விபத்தில் சுமார் 20...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">கொடகம - பொரளை பிரதான வீதியில் அத்துருகிரிய, கோவின்ன மாவத்தை அருகே வெள்ளிக்கிழமை (17) அதிகாலை இடம்பெற்ற பஸ் மற்றும் டிப்பர் ரக வாகன விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
</p><p style="text-align: justify;">

அதிகாலை 4.15 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தினால் குறித்த வீதியூடான போக்குவரத்து இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78a65f0d-70b3-4c28-a0e7-7ff4ab97671a/26-6a599b6537857.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p>
</p><p style="text-align: justify; ">
விபத்தில் காயமடைந்தவர்கள் ஒருவல மற்றும் ஹோமாகம ஆதார வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
இதேவேளை, விபத்துக்குள்ளான பஸ்ஸின் சாரதி வாகனத்திற்குள் சிக்கிய நிலையில், ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின் பின்னர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify; ">
மோதலில் பஸ் மற்றும் டிப்பர் வாகனம் இரண்டும் பலத்த சேதமடைந்துள்ளன.
</p><p style="text-align: justify; ">
சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-17T03:03:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/jananayagan-movie-pre-booking-collection-report-1784254341"></link>
            <id>https://cineulagam.com/article/jananayagan-movie-pre-booking-collection-report-1784254341</id>
            <summary type="text">ஜனநாயகன்&amp;nbsp;தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் கடந்த ஜனவரி மாதம் வெளிவரவிருந்த நிலையில், சென்சார் பிரச்சனை காரணமாக வெளியாகவில்ல...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜனநாயகன்&nbsp;</h2><p>தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் கடந்த ஜனவரி மாதம் வெளிவரவிருந்த நிலையில், சென்சார் பிரச்சனை காரணமாக வெளியாகவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da308741-c635-4907-b8ed-84b8f6a1bb3c/26-6a598f88426b5.webp' /></p><p></p><p>

கிட்டதட்ட 6 மாதங்களுக்கு பின் சென்சார் கிடைத்து ஜூலை 23-ஆம் தேதி வெளியாகிறது. விஜய்யின் கடைசி படம் என்பதால் இப்படத்தை கொண்டாட ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். மேலும், டிக்கெட் டிமாண்ட் அதிகரித்து வருகிறது.</p><h2>முன்பதிவு&nbsp;வசூல் விவரம்&nbsp;</h2><p> </p><p>

இந்த நிலையில், வெளிநாடுகளில் <a href="https://www.youtube.com/watch?v=2mGyC8JXC3I" target="_blank">ஜனநாயகன் </a>திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ளது. இதுவரை நடைபெற்ற முன்பதிவில் ரூ. 4.8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36d91313-8df7-49e8-8064-fd145f4450ec/26-6a598f88e9d0c.webp' /></p><p>கண்டிப்பாக முன்பதிவிலேயே மாபெரும் வசூல் சாதனையை ஜனநாயகன் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-17T03:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் அதிரவைத்த துப்பாக்கிச்சூடு ; 26 வயது இளைஞன் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/midnight-shooting-shocks-the-area-1784256919"></link>
            <id>https://jvpnews.com/article/midnight-shooting-shocks-the-area-1784256919</id>
            <summary type="text">நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்துரம்முல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த 26 வயதுடைய இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்துரம்முல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த 26 வயதுடைய இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
வியாழக்கிழமை (16) இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குறித்த நபர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cb56cb7-6a86-4646-aad2-a7330ead48bb/26-6a59999e3ccca.webp' /></p><p style="text-align: justify; ">

கைத்துப்பாக்கி ஒன்றைப் பயன்படுத்தியே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; ">

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், அவர்களை கைது செய்வதற்காக நவகமுவ பொலிஸார் விசேட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-17T02:55:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027 முதல் இங்கிலாந்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் இது கட்டாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/england-to-screen-all-newborns-for-sma-2027-1784220726"></link>
            <id>https://news.lankasri.com/article/england-to-screen-all-newborns-for-sma-2027-1784220726</id>
            <summary type="text">இங்கிலாந்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் 2027 அக்டோபர் மாதம் முதல் Spinal Muscular Atrophy (SMA) எனப்படும் அரிதான தசை சிதைவுநோய்க்கான பரிசோதனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் 2027 அக்டோபர் மாதம் முதல் Spinal Muscular Atrophy (SMA) எனப்படும் அரிதான தசை சிதைவுநோய்க்கான பரிசோதனை கட்டாயமாக நடைபெற உள்ளது.
</p><p>
சுகாதார மற்றும் சமூக பராமரிப்புத் துறை இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
</p><p></p><p>SMA நோய் குழந்தைகளின் தசைகளை பலவீனப்படுத்தி, உட்கார, தவழ, நடக்க முடியாமல், சுவாசிப்பதாலும், விழுங்குவதிலும் சிரமம் ஏற்படுத்துகிறது.</p><p>

சிகிச்சை இல்லாமல் விட்டால், இரண்டு ஆண்டுக்குள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இங்கிலாந்தில் வருடத்திற்கு சுமார் 48 குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0527ccdd-74e4-44d5-9d30-0344c74f3240/26-6a590c38175cb.webp' /></p><p>புதிய திட்டத்தின் மூலம், குழந்தைகள் பிறந்த 5-ஆம் நாளில் எடுக்கப்படும் heel-prick test மூலம் SMA பரிசோதனை செய்யப்படும். இதுவரை 10 நோய்களுக்கு பயன்படுத்தப்பட்ட இந்த பரிசோதனை, இனி SMA-க்கும் பயன்படுத்தப்படும்.
</p><p>
முன்பு அறிவிக்கப்பட்ட பைலட் திட்டம் 72 சதவீத குழந்தைகளுக்கே பரிசோதனை செய்யும் வகையில் இருந்ததால், “postcode lottery” எனப்படும் சமத்துவமின்மைக்கு விமர்சனங்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து, அரசு அனைத்து குழந்தைகளுக்கும் பரிசோதனை செய்யும் வகையில் திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது.
</p><p></p><p>SMA UK அமைப்பின் தலைவர் Giles Lomax, “இது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் மிகப்பெரிய முன்னேற்றம்” எனக் கூறியுள்ளார். </p><p>Muscular Dystrophy UK அமைப்பும் இதை “வரலாற்று சிறப்புமிக்க தருணம்” என வரவேற்றுள்ளது.
</p><p>
இந்த முடிவு SMA நோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நம்பிக்கையையும், எதிர்காலத்தில் ஆரோக்கியமான வாழ்க்கையையும் வழங்கும் என்று நம்பப்படுகிறது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T02:50:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் உயிரை மாய்த்த மற்றுமொரு உயரதிகாரி ; துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் மீட்கப்பட்ட உடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-igp-c-d-wickramaratne-passes-away-1784256487"></link>
            <id>https://jvpnews.com/article/former-igp-c-d-wickramaratne-passes-away-1784256487</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அத்துருகிரியாவில் உள்ள அவரது இல்லத்தில், துப்பாக்கிச் சூட்டு காயத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p style="text-align: justify; ">அத்துருகிரியாவில் உள்ள அவரது இல்லத்தில், துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acf518e7-00f9-443e-adfc-7971b90066ee/26-6a5997e8d6495.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify;">துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் அவர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p style="text-align: justify;"> 

அவர் தமக்கு தாமே துப்பாக்கிச் சூட்டை ஏற்படுத்தி தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.&nbsp; &nbsp; &nbsp;</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">&nbsp;பொலிஸ் திணைக்களத்தில் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றிய சி. டி. விக்ரமரத்ன, இலங்கையின் 35ஆவது பொலிஸ் மாஅதிபராவார்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-17T02:48:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/former-ig-of-police-c-d-wickramaratne-passed-away-1784255654"></link>
            <id>https://ibctamil.com/article/former-ig-of-police-c-d-wickramaratne-passed-away-1784255654</id>
            <summary type="text">முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி விக்ரமரத்ன&amp;nbsp;மர்மான முறையில் உயிரிழந்துள்ளார். 

அத்துருகிரியவில் உள்ள அவரது வீட்டில் அவரது சடலம் மீட்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி விக்ரமரத்ன&nbsp;மர்மான முறையில் உயிரிழந்துள்ளார். </p><p>

அத்துருகிரியவில் உள்ள அவரது வீட்டில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> </p><p>

துப்பாக்கி சூட்டு காயங்களுடன் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">மேலதிக விசாரணை</span></p><h6>அவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கப்படுகின்றது.&nbsp; &nbsp; &nbsp;</h6><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcf3b05a-fa1b-4d59-be99-97d03df0690e/26-6a5998cf23760.webp' /></p><p>மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>30 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை காவல்துறையில் பணியாற்றிய விக்ரமரத்ன, இலங்கையின் 35-வது காவல்துறை மா அதிபராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T02:41:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் மகளை வன்புணர்வு செய்த தந்தை - கருணை காட்டாமல் அதிகபட்ச தண்டனை கொடுத்த நீதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/45-years-of-rigorous-imprisonment-for-men-1784252981"></link>
            <id>https://ibctamil.com/article/45-years-of-rigorous-imprisonment-for-men-1784252981</id>
            <summary type="text">14&amp;nbsp; வயது சிறுமியான தனது மகளை தவறான முறைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தந்தை குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 45 வருட கடூழிய சிறைத் தண்டனை வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>14&nbsp; வயது சிறுமியான தனது மகளை தவறான முறைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தந்தை குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 45 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, நேற்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்</p><p>பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மொத்தமாக 12 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், நீதிமன்றத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டார்.</p><p></p><h2>47 வயது தந்தை</h2><p>வவுனியா கனகராயன்குளம் பகுதியில் தனது 14 வயது மகளை 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக பலமுறை தவறான முறைக்கு உட்படுத்தியதாக 47 வயது தந்தை மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/754cfa8b-2765-4a3c-b7fa-64c4119ecdc1/26-6a59926608ab5.webp' /></p><p>குறித்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தையை காவல்துறையினர் கைது செய்து, வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து, சட்டமா அதிபர் திணைக்களம் 2022 ஆம் ஆண்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
</p><p>


வழக்கு விசாரணைகளின் போது, எதிரிக்கு எதிராக சுமத்தப்பட்ட நான்கு வன்புணர்வு குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வகையில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது.</p><p>



இதையடுத்து, இரண்டு தனித்தனி வழக்குகளில் நிரூபிக்கப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளுக்காக மொத்தம் 45 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.</p><p></p><p> </p><h2>அதிகபட்ச தண்டனை</h2><p>



மேலும், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 3 இலட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 12 இலட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக வழங்கவும், 

ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 25 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் ஒரு இலட்சம் ரூபாயை நீதிமன்ற அபராதமாக செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ec850c2-87c2-428a-baaf-c3bb489d325c/26-6a5992655735d.webp' /></p><p>இந்த வழக்கில் அரசுத் தரப்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் அரச சட்டத்தரணி ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ ஆஜராகினார்.</p><p>



தீர்ப்பளிக்கும் போது கருத்து தெரிவித்த நீதிபதி, பாதுகாக்க வேண்டிய இயற்கை பாதுகாவலரான தந்தையே இவ்வாறான கடுமையான குற்றத்தை புரிந்துள்ளதால், எந்தவித கருணையும் காட்டாமல் அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T02:30:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சர்களுடன் மிகவும் நெருக்கமான முன்னாள் பொலிஸ் மா அதிபர் மர்மமான முறையில் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-igp-wickramaratne-commits-suicide-1784254971"></link>
            <id>https://tamilwin.com/article/former-igp-wickramaratne-commits-suicide-1784254971</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

அத்துருகிரியவில் உள்ள அவரது இல்லத்தில் துப்பாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p> 

அத்துருகிரியவில் உள்ள அவரது இல்லத்தில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

உயிரை மாய்த்துக் கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.</p><p></p><h2>மர்மமான முறையில் மரணம்&nbsp;</h2><p> 

30 ஆண்டுகளுக்கும் மேலாக பொலிஸ் சேவையில் பணியாற்றிய சி.டி. விக்ரமரத்ன, இலங்கையின் 35 வது பொலிஸ் மா அதிபர் ஆவார்.</p><p> </p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அவர்களுடன் நெருக்கமாக செயற்பட்டவர்களில் சி.டி. விக்ரமரத்னவும் ஒருவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97b56345-f2ef-4171-b59b-4566fb6e7b61/26-6a59938ec3546.webp' /></p><p>சமகால அரசாங்கத்தின் கீழ் ஊழல் மற்றும் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. </p><p>

இந்நிலையில் சி.டி. விக்ரமரத்ன திடீரென உயிரை மாய்த்துக் கொண்டமை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-07-17T02:30:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடி மாதத்தில் தேடி வரும் செல்வம்... கோடீஸ்வர யோகம் எந்தெந்த ராசியினருக்கு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/aadi-month-astrology-4-zodiac-signs-attract-wealth-1784196877"></link>
            <id>https://manithan.com/article/aadi-month-astrology-4-zodiac-signs-attract-wealth-1784196877</id>
            <summary type="text">ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தினை பெறும் ராசியினர் யார் யார் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக கருத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தினை பெறும் ராசியினர் யார் யார் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.</p><p>தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக கருதப்படும் ஆடி மாதம். ஆன்மீக ரீதியாக மட்டுமல்லாமல், பலரது வாழ்க்கையில் புதிய மாற்றங்களையும் கொண்டு வரும் காலமாகவும் பார்க்கப்படுகிறது. </p><p>இக்காலக்கட்த்தில் கிரகங்களின் சஞ்சாரம், அவற்றின் பார்வை மாற்றத்தினால் சில ராசியினருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம், பண வரவு, தொழில் வளர்ச்சியும் கிடைக்குமாம்.</p><p>அந்த வகையில் ஆடி மாதத்தில் 4 ராசியினருக்கு செல்வ யோகம் அதிகரிக்குமாம். நீண்ட நாட்களுக்காக காத்திருந்த வாய்ப்புகள் கைகூடுமாம். அவை எந்தெந்த ராசியினர் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">ரிஷபம்</span></h2><p>ரிஷப ராசியினருக்கு இந்த ஆடி மாதம் அதிக நன்மையினை தரக்கூடுமாம். தடைபட்ட தொழில், வியாபார முயற்சிகள் வெற்றியாக முடிவதுடன், புதிய முதலீடுகள் நல்ல லாபத்தினை கொடுக்கும்.</p><p>வெளிநாட்டு தொடர்பு மூலமாக வருமானம் அதிகரிப்பதுடன், நிலம், வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் வாங்கும் யோகமும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கின்றது.&nbsp;</p><p>எதிர்பாராத இடத்திலிருந்து பணவரவு கிடைப்பதால் பொருளாதார நிலையும் மேம்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d19e2caf-cdb5-4f67-b78b-0437a7663334/26-6a5991ba45184.webp' /><br></p><p>
</p><h2>
சிம்மம்
</h2><p>சிம்ம ராசியினருக்கு இந்த ஆடி மாதத்தில் அதிர்ஷ்ட கதவு திறக்கும் காலமாக இருக்கும். பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதுடன், தொழிலில் புதிய ஒப்பந்தம் கிடைத்து வருமானமும் அதிகரிக்கும்.</p><p>முயற்சி செய்த காரியம் அனைத்தும் வெற்றியாகவே முடியும். முதலீடு செய்பவர்கள் நல்ல லாபத்தினையும் காணலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதுடன், புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு மிகவும் சாதகமான இருக்குமாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e128a3fb-561f-4c8d-b47b-012cad476521/26-6a5991bb9cefc.webp' /></p><p>
</p><h2>
விருச்சிகம்
</h2><p>விருச்சிக ராசியினருக்கு ஆடி மாதம் பண யோகத்தினை அதிகரிக்கும் காலமாக அமைகின்றது. பெரிய வகையில் பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளதுடன், வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து லாபம் அதிகமாகும்.</p><p>நிலுவையில் உள்ள பணிகள் சாதகமாக முடிவதுடன், கடன் சுமை குறைந்து, நண்பர்கள் உறவினர்களின் ஆதரவில் புதிய வாய்ப்பு கிடைக்கும், சேமிப்பு அதிகரித்து எதிர்கால நிதி பாதுகாப்பு வலுப்பெறும் காலமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fb1b2b8-4c30-4ec8-9258-ac9dd396cdcb/26-6a5991baebb25.webp' /><br></p><p>
</p><h2>
மகரம்</h2><p>மகர ராசியினருக்கு இந்த ஆடி மாதம் வாழ்க்கையில் திருப்புமுனையாக இருக்கும் காலமாகும். தொழில் பெரிய வளர்ச்சியை சந்திப்பதுடன், நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி மற்றும் புதிய வேலை கிடைக்கும்.</p><p>வியாபாரத்தில் முதலீடு செய்த பணம் பல மடங்கு திரும்பும் வாய்ப்புள்ளது. குடும்பத்தில் அமைதி கிடைப்பதுடன் சொத்து தொடர்பான பிரச்சனையும் முடிவிற்கு வரும். புதிய வருமான வாய்ப்பு உருவாகி பொருளாதா நிலையும் மேம்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09eb632b-b765-44a3-9456-ee8826ac15fd/26-6a5991bc4efe6.webp' /></p><p>
</p><p>இந்த ராசியினருக்கு கிரக நிலை சாதகமாக இருந்தாலும், எந்த முடிவை அவசரப்பட்டு எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஆன்மீக வழிபாடு, பெற்றோர் ஆசீர்வாதம் மற்றும் தான தர்மங்கள் செய்வது நல்ல பலனை தருமாம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td><i>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-17T02:30:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டைவிட்டு நடுரோட்டுக்கு துரத்திவிட்ட குடும்பம்!! அறந்தாங்கி நிஷா பட்ட கஷ்டங்கள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/ranthangi-nisha-was-chased-out-of-the-house-family-1784208399"></link>
            <id>https://viduppu.com/article/ranthangi-nisha-was-chased-out-of-the-house-family-1784208399</id>
            <summary type="text">அறந்தாங்கி நிஷாவிஜய் டிவியில் பிரபலமானவர்களில் ஒருவர்தான் அறந்தாங்கி நிஷா. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கேபிஒய் பழகி அறந்தாங்கி நிஷாவின் வாழ்க்க...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அறந்தாங்கி நிஷா</h2><p>விஜய் டிவியில் பிரபலமானவர்களில் ஒருவர்தான் அறந்தாங்கி நிஷா. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கேபிஒய் பழகி அறந்தாங்கி நிஷாவின் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் பற்றி பகிர்ந்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88081d87-927a-4457-a67a-4413ff6e71db/26-6a58dc116e4e5.webp' /></p><p>அதில், அறந்தாங்கி நிஷாவின் கணவர் வெளிநாட்டில் இருந்தபோது அவருடைய குடும்பத்தினருடன் பிரச்சனை ஏற்பட்டது. அபோது குடும்பத்தினர் அறந்தாங்கி நிஷாவை நடுராத்திரியில் வீட்டைவிட்டு துரத்திவிட்டனர். கையில் குழந்தையுடன் அவர் நடுத்தெருவில் வந்து நின்றார். </p><p>இப்போது இருப்பதுபோல் போன் வசதி இல்லை. அந்நேரத்திலும் அவருடைய அப்பா சொந்த ஊரிலிருந்து கிளம்பி வந்து அறந்தாங்கி நிஷாவை கூட்டிக்கொண்டு போனார். ஆனால் போகும்போது இனி நான் உன் வீட்டுக்கு என் பொண்ணை அனுப்பி வைக்கவே மாட்டேன் என்று சண்டை போட்டுட்டு போனார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2334fab2-0018-4a1a-915a-12e27fd44f3a/26-6a58dc121e6ce.webp' /></p><p> </p><p>இப்படி வெளியே தெரியாத பல விஷயங்கள் அறந்தாங்கி நிஷா வாழ்க்கையில் நடந்திருக்கிறது. எல்லா வீட்டிலும், குடும்பத்திலும் சண்டை, பிரச்சனை இருக்கலாம், ஆனால் பிரபலங்களின் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்கள் வெளியில் தெரிவதில்லை என்று கேபிஒய் பழனி பகிர்ந்து கொண்டிருக்கிறார்.</p>]]></content>
            <updated>2026-07-17T02:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்கு கிடைக்க உள்ள நல்ல செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/usa-may-cut-donw-more-traiffs-for-lanka-1784251303"></link>
            <id>https://tamilwin.com/article/usa-may-cut-donw-more-traiffs-for-lanka-1784251303</id>
            <summary type="text">இலங்கையின் ஏற்றுமதிகளுக்கான அமெரிக்காவின் வரிச்சலுகைகள் தொடர்பாக எதிர்காலத்தில் அமெரிக்காவிடமிருந்து நல்லதொரு செய்தி கிடைக்கவுள்ளதாக அமெரிக்காவிற்கான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் ஏற்றுமதிகளுக்கான அமெரிக்காவின் வரிச்சலுகைகள் தொடர்பாக எதிர்காலத்தில் அமெரிக்காவிடமிருந்து நல்லதொரு செய்தி கிடைக்கவுள்ளதாக அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>
அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p>இந்த வரிச்சலுகைகளை மேலும் குறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் அமெரிக்க ஜனாதிபதி சில நாட்களுக்கு முன்னர் கையெழுத்திட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>பெரும் நிவாரணம் கிடைக்கும்&nbsp;</h2><p>இதன் மூலம் இலங்கை மக்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் பெரும் நிவாரணம் கிடைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.</p><p>
தான் தூதுவர் பதவியிலிருந்து விலகி மீண்டும் இலங்கைக்கு வரவுள்ளதாகத் தெரிவித்த அவர், அவ்வாறு நாட்டிற்குத் திரும்பினாலும் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை என மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c83b094-9626-48b2-8595-f9f70d9284a4/26-6a598d174a661.webp' />&nbsp; &nbsp;</p><p>
தாம் தாய்நாடு திரும்பிய பின்னரும் தாய்நாட்டிற்காகவே பணியாற்றுவதாகவும் அந்தச் சேவை ஒருபோதும் நிறுத்தப்படாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தாம் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணைந்துகொள்ள எதிர்பார்க்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
தற்போதைய அரசாங்கத்துடன் தான் மிகவும் சுமுகமாகப் பணியாற்றியதாகக் குறிப்பிட்ட மகிந்த சமரசிங்க, தூதுவர் பதவியில் மேலும் நீடிக்குமாறு அரசாங்கம் தனக்கு அழைப்பு விடுத்த போதிலும், தனது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்ததாகக் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>
அத்துடன், தான் தூதுவர் பதவியை வகித்த காலப்பகுதியில் எந்தவொரு அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல், நாட்டுக்காக அதிகபட்ச சேவையை ஆற்ற முயற்சித்ததாகவும் மகிந்த&nbsp; சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T02:02:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் கோர விபத்து - 20 பேர் காயம் - நீண்ட போராட்டத்தின் பின்னர் காப்பாற்றப்பட்ட சாரதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/colombo-accident-10-injured-1784251829"></link>
            <id>https://tamilwin.com/article/colombo-accident-10-injured-1784251829</id>
            <summary type="text">கொழும்பு, அத்துருகிரிய, ஜயந்தி மாவத்தைக்கு அருகில் பேருந்தும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, அத்துருகிரிய, ஜயந்தி மாவத்தைக்கு அருகில் பேருந்தும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
</p><p>
இந்த விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
கொடகம - பொரளை பிரதான வீதியில், அத்துருகிரிய கோவிந்தன மாவத்தைக்கு அருகில், இன்று அதிகாலை 4.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><h2><b>கோர விபத்து</b></h2><p>

தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் டிப்பர் வாகனமும் மோதியமையே&nbsp; விபத்திற்கு காரணமாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fc854fa-9ce3-4e27-96d7-7aac5b4ca5b6/26-6a5988136b63c.webp' /></p><p>பேருந்தின் சாரதி, சுமார் ஒரு மணி நேரம் 45 நிமிட நீண்ட போராட்டத்திற்கு பின்னரே மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த விபத்தினால் டிப்பர் வாகனமும் பேருந்தும் பலத்த சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>விபத்தைத் தொடர்ந்து, அந்த வீதியுடனான போக்குவரத்து சுமார் இரண்டு மணித்தியாலங்கள் முடங்கியிருந்தது.
</p><p>
இந்த விபத்து குறித்து அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-17T01:41:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் முக்கிய உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் ; அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-warns-us-of-attack-key-iranian-infrastructure-1784244215"></link>
            <id>https://canadamirror.com/article/iran-warns-us-of-attack-key-iranian-infrastructure-1784244215</id>
            <summary type="text">ஈரானின் தெற்குப் பகுதி நகரங்களான பண்டார் அப்பாஸ், கெஷ்ம் தீவு மற்றும் சாபஹார் ஆகிய இடங்களைக் குறிவைத்து அமெரிக்க இராணுவம் தொடர் வான்வழித் தாக்குதல்களை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் தெற்குப் பகுதி நகரங்களான பண்டார் அப்பாஸ், கெஷ்ம் தீவு மற்றும் சாபஹார் ஆகிய இடங்களைக் குறிவைத்து அமெரிக்க இராணுவம் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
</p><p>
அத்துடன், ஈரானிய துறைமுகத்தை நோக்கிச் செல்ல முயன்ற எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது, அமெரிக்க ராணுவம் ஹெல்ஃபயர் ஏவுகணைகளை வீசி அதைச் செயலிழக்கச் செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3252e2ff-b8b1-4734-b1d9-5e7e03b48009/26-6a5967f963b2b.webp' /></p><p>

அதேநேரம், ஈரானின் பொதுமக்களுக்கான சிவில் உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதிலடியாக ,பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் உட்கட்டமைப்புகள் முற்றிலும் அழியும் வகையில் மிகக் கடுமையான தாக்குதல் தொடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
</p><p>
ஈரானின் "முக்கிய உட்கட்டமைப்புகள்" மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள், அமெரிக்க ஆட்சியாளர்களின் குற்ற நோக்கத்தைக்" காட்டுகின்றன என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
</p><p>
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபையின் விதிகள் மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளை அப்பட்டமாக மீறுவதாகும் என்றும் ஈரான் குறிப்பிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-17T01:40:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடி மாதத்தில் வாழ்க்கையில் அதிசயம் நடக்கும் ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/zodiac-signs-that-will-make-miracles-happen-life-1784248835"></link>
            <id>https://jvpnews.com/article/zodiac-signs-that-will-make-miracles-happen-life-1784248835</id>
            <summary type="text">&amp;nbsp;தமிழ் மாதங்களில் ஆடி மாதம் மிகவும் முக்கியமான மற்றும் மங்களகரமான மாதமாக கருதப்படுகிறது.&amp;nbsp;ஆடி மாதம் ஆன்மீகரீதியாக மட்டுமின்றி ஜோதிடரீதியாகவும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தமிழ் மாதங்களில் ஆடி மாதம் மிகவும் முக்கியமான மற்றும் மங்களகரமான மாதமாக கருதப்படுகிறது.&nbsp;ஆடி மாதம் ஆன்மீகரீதியாக மட்டுமின்றி ஜோதிடரீதியாகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் புதன், சனிபகவான், சுக்கிரன் மற்றும் குருபகவான் என அனைத்து முக்கிய கிரகங்களும் தங்களின் நிலையை மாற்றப்போகின்றன.</p><p>சில ராசிக்காரர்கள் அபரிமிதமான வளர்ச்சியையும், நேர்மறையான பலன்களையும் அனுபவிக்கப் போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69898cb7-918e-4477-80b3-32f0550cd996/26-6a597a0480a91.webp' /></p><h4>மேஷம்
</h4><p>ஆடி மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான மாதமாக இருக்கப்போகிறது. சூரியன் மற்றும் குருபகவான் ஆசியால் அவர்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறப்போகிறது. இந்த மாதத்தில் அவர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். வாழ்க்கையில் பல சாதனைகள் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் பணியிடத்தில் சாதகமான சூழ்நிலைகள் நிலவும். குடும்ப உறவுகளில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்</p><h4>கடகம்
</h4><p>கடக ராசியில் சூரியன் நிலை பெற்றிருப்பதால் ஆடி மாதம் அவர்களுக்கு அற்புதமான மாதமாக இருக்கப்போகிறது. சூரியனின் ஆசியால் இந்த மாதத்தில், அவர்கள் தங்கள் வார்த்தைகளை மிகவும் புத்திசாலித்தனமாக பயன்படுத்துவார்கள், மேலும் இது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை உறவுகளை வலுப்படுத்தும். இந்த காலகட்டத்தில் நிதி நிலைமை மேம்படும், மேலும் நல்ல லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.</p><h4>கன்னி
</h4><p>கன்னி ராசிக்காரர்களுக்கு ஆடி மாதம் சூரியன் மற்றும் குருபகவான் ஆசியால் முன்னேற்றங்கள் நிறைந்த மாதமாக இருக்கும். தொழில் வாழ்க்கையில் நிலவி வந்த பல பிரச்சனைகள் இப்போது முடிவுக்கு வரும். அவர்களின் நிதிநிலை இப்போது நிலையாக இருக்கும். அவர்களுக்கு பல துறைகளில் இருந்து லாபம் கிடைக்கும். செலவுகள் குறைவதுடன் சேமிப்பும் அதிகரிக்கும்.</p><h4>மீனம்
</h4><p>மீன ராசிக்காரர்களுக்கு ஆடி மாதம் நேர்மறையான மாற்றங்கள் நிறைந்த மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் அவர்கள் பல்வேறு முதலீடுகளிலிருந்து பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளைப் பெறலாம், மேலும் இந்த காலகட்டத்தில் நிதி நிலைமை பெரிதும் மேம்படும். வேலை தொடர்பாக வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் உள்ளன. குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவும் முழுமையாக கிடைக்கும், மேலும் குடும்ப விவகாரங்களில் முழு உற்சாகத்துடன் பங்கேற்கலாம்.</p>]]></content>
            <updated>2026-07-17T01:40:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதலை ஏற்க மறுத்த 16 வயது மாணவிக்கு நேர்ந்த கதி ; இளைஞனின் விபரீத செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/the-fate-of-student-who-refused-to-accept-love-1784246209"></link>
            <id>https://jvpnews.com/article/the-fate-of-student-who-refused-to-accept-love-1784246209</id>
            <summary type="text">இந்தியாவில் மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவில் காதலை ஏற்க மறுத்ததாகக் கூறி 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவில் காதலை ஏற்க மறுத்ததாகக் கூறி 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>கொல்கத்தா அருகிலுள்ள சாந்தினிபாகன் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><h3>ஆரம்பகட்ட விசாரணை</h3><p>

உயிரிழந்த மாணவி 10ஆம் வகுப்பில் கல்வி கற்று வந்தவர். பாடசாலை முடிந்து சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, 24 வயதான சமீர் தாஸ் என்ற இளைஞர் அவரை வழிமறித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6829db17-674c-478c-a9f4-f55bc3a31efa/26-6a596fc29141d.webp' /></p><p>அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து சமீர் தாஸ் தன்னிடம் வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்து, வயிறு மற்றும் கைகளில் பலமுறை குத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
பலத்த காயமடைந்த மாணவி வீதியில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். </p><p>அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
</p><p>
இதனிடையே, தாக்குதலுக்குப் பின்னர் தப்பிச் செல்ல முயன்ற சமீர் தாஸை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
</p><p>
முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சமீர் தாஸ், தோம்ஜூர் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஆரம்பகட்ட விசாரணையில், தனது காதலை மாணவி ஏற்க மறுத்ததால் ஆத்திரத்தில் இந்தக் கொலையைச் செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சந்தேகநபருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T01:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அருச்சுனா எம்.பி க்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ள கடற்தொழில் அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fisheries-minister-take-action-against-aruchuna-mp-1784252382"></link>
            <id>https://jvpnews.com/article/fisheries-minister-take-action-against-aruchuna-mp-1784252382</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இன்று (16) ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>

மேலும், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மீண்டும் விரைவில் நடைபெறும் என தெரிவித்த அமைச்சர், மாவட்டத்தின் முன்னேற்றம் மற்றும் இருப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் கூறினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a97ad0e-eda4-4446-a7cc-1d525050859b/26-6a5987dfe5ce7.webp' /></p><p>கூட்டம் ஆரம்பத்தில் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று வந்ததாக குறிப்பிட்ட அமைச்சர், பின்னர் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக கூட்டம் இடைநிறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
</p><p>
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தொடர்ச்சியாக பல கூட்டங்களில் குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாகவும், அதிகாரிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.
</p><p>
அபிவிருத்திக் குழுக் கூட்டங்களைப் பயன்படுத்தி அரச அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது தவறான நடைமுறை என தெரிவித்த அவர், இதனால் அதிகாரிகளின் சமூக மதிப்பு பாதிக்கப்படக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.
</p><p>
இத்தகைய நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு இன்றைய சம்பவம் மற்றுமொரு சான்றாக அமைந்துள்ளதாகவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.</p><p>

"கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னேற்றம் மற்றும் இருப்புத் தொடர்பில் நாம் தொடர்ந்து கவனம் செலுத்துவோம். அடுத்த நாட்களில் மீண்டும் அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெறும். அப்போது உறுதியான முடிவுகள் எடுக்கப்படும்" என அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T01:39:49+00:00</updated>
        </entry>
    </feed>
