<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-12T07:46:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையைச் சேர்ந்த முதிய தம்பதி சென்னையில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sri-lankan-old-couple-arrested-in-chennai-1783840374"></link>
            <id>https://news.lankasri.com/article/sri-lankan-old-couple-arrested-in-chennai-1783840374</id>
            <summary type="text">தமிழக சட்டசபை தேர்தலில் போலி ஆவணங்கள் மூலம் வாக்களித்ததாக, இலங்கை தம்பதி சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.&amp;nbsp;ஆவண சரிபார்ப்பு&amp;nbsp;

இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக சட்டசபை தேர்தலில் போலி ஆவணங்கள் மூலம் வாக்களித்ததாக, இலங்கை தம்பதி சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.&nbsp;</p><h2>ஆவண சரிபார்ப்பு&nbsp;</h2><p>

இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த தம்பதி குணேஸ்வரன் (69), நகுலாம்பிகை (60). 

சென்னை விமான நிலையத்திற்கு வந்த இவர்களிடம் குடியேற்றத்துறை அதிகாரிகள் ஆவண சரிபார்ப்பு செய்தனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c87828e-7738-472b-ba10-2385965cf162/26-6a534021e21a0.webp' /></p><p></p><p>
அப்போது இந்திய ஆதார் அட்டை, இந்திய வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை இருந்ததாக கூறப்படுகிறது. </p><h2>

இலங்கை தம்பதி&nbsp;கைது </h2><p>இதுதொடர்பாக அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் இருவரும் வாக்களித்தது தெரிய வந்தது.
</p><p>
அதனைத் தொடர்ந்து மாம்பலம் பொலிஸாரிடம் இலங்கை தம்பதியர் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f9828dc-c4b9-45f2-9f0c-2af357c16c67/26-6a5340229b661.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T07:40:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[விம்பிள்டன் கோப்பையை வென்ற செக்குடியரசு வீராங்கனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wimbledon2026-linda-noskova-beats-karolina-muchova-1783840754"></link>
            <id>https://tamilwin.com/article/wimbledon2026-linda-noskova-beats-karolina-muchova-1783840754</id>
            <summary type="text">லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில், செக் குடியரசை சேர்ந்த லிண்டா நோஸ்கோவா வெற்றி பெற்று தனது முதலாவது கிரேண்ட்ஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில், செக் குடியரசை சேர்ந்த லிண்டா நோஸ்கோவா வெற்றி பெற்று தனது முதலாவது கிரேண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.
</p><p>
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வருகிறது.</p><p></p><h2>விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு</h2><p>
</p><p>
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று(11) நடந்த சாம்பியனுக்கான இறுதி ஆட்டத்தில் தர வரிசையில் 9ஆவது இடத்தில் இருக்கும் செக்குடியரசு வீராங்கனை கரோலினா முச்சோவா (21), சக நாட்டவரும் 12ஆம் நிலை வீராங்கனையுமான லிண்டா நோஸ் கோவாவுடன் (21) மோதினார்.
</p><p>
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், சக நாட்டு வீராங்கனையான கரோலினா முச்சோவாவை 6-2, 5-7, 6-3 என்ற நேர் செட் கணக்கில் நோஸ்கோவா வீழ்த்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88f80216-9981-4ba5-ac1c-bd59e9c23ad0/26-6a534424a2ae6.webp' /></p><p>
</p><p>
போட்டியின் தொடக்கத்தில் அபாரமாக செயற்பட்ட நோஸ்கோவா, இரண்டாவது செட்டில் 5-2 என முன்னிலை பெற்றிருந்தபோது பல வெற்றி வாய்ப்புகளைத் தவறவிட்டார்.
</p><p>
இதனைப் பயன்படுத்திக் கொண்ட முச்சோவா, இரண்டாவது செட்டைக் கைப்பற்றிப் போட்டியை விறுவிறுப்பாக்கினார்.</p><p>இருப்பினும், மூன்றாம் செட்டில் தனது பதற்றத்தைக் கட்டுப்படுத்திய 21 வயதான நோஸ்கோவா, மீண்டும் ஆதிக்கத்தைச் செலுத்தி வெற்றியைத் தனதாக்கிக்கொண்டார்.</p><p></p><h2>செக் வீராங்கனை</h2><p>
இதன்படி விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வெல்லும் மூன்றாவது செக் வீராங்கனை என்ற பெருமையை நோஸ்கோவா பெற்றுள்ளார்.

சாம்பியன் பட்டம் வென்ற லிண்டா நோஸ்கோவாவுக்கு ரூ.46 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. </p><p>2ஆவது இடம் பெற்ற கரோலினா முச்சோவாவுக்கு ரூ.23 கோடி கிடைத்தது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1667966444434140%2F&show_text=true&width=267&t=0" width="267" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>
</p><p>

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான ஜானிக் சினெர் (இத்தாலி), பிரெஞ்சு ஓபன் சாம்பியனும், தரவரிசையில் 3-வது இடம் வகிப்பவருமான அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் (ஜெர்மனி) பலப்பரீட்சை நடத்துகிறார்.
</p><p>
இருவரும் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றனர்.இதில் 10 ஆட்டங்களில் ஜானிக் சின்னெரும், 4 ஆட்டங்களில் அலெக்சாண்டர் ஸ்வெரேவும் வென்றுள்ளனர்.</p><p> கடைசி 9 ஆட்டங்களில் சினெர் தொடர்ச்சியாக வெற்றிப்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T07:37:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடிய போர்க்கப்பலில் நவீன ஏவுகணை சோதனை வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadian-warship-fires-torpedoes-in-first-test-1783839238"></link>
            <id>https://canadamirror.com/article/canadian-warship-fires-torpedoes-in-first-test-1783839238</id>
            <summary type="text">உலகின் மிகப்பெரிய கடற்படைப் பயிற்சியான &#039;ரிம்பக்&#039; கூட்டுப் பயிற்சியில் கலந்துகொண்டுள்ள கனடிய கடற்படையின் &#039;எச்.எம்.சி.எஸ் ஒட்டாவா&#039; போர்க்கப்பல், இந்த வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் மிகப்பெரிய கடற்படைப் பயிற்சியான 'ரிம்பக்' கூட்டுப் பயிற்சியில் கலந்துகொண்டுள்ள கனடிய கடற்படையின் 'எச்.எம்.சி.எஸ் ஒட்டாவா' போர்க்கப்பல், இந்த வாரம் இரண்டு 'மார்க் 46' ரக டொர்பிடோ ஏவுகணைகளை வெற்றிகரமாகச் சோதித்துள்ளது. </p><p>
கனடாவின் நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் முறைமையில் மேற்கொள்ளப்பட்ட அதிநவீன மேம்படுத்தலை மதிப்பிடுவதற்கான முதலாவது வாய்ப்பாக இச்சோதனை அமைந்துள்ளது.</p><p>
ஹவாய் கடற்பரப்பில் நடைபெறும் இப்பயிற்சியில் அமெரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட 31 நட்பு நாடுகளைச் சேர்ந்த சுமார் 25,000 படைவீரர்கள் பங்கேற்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a44a4b6-2f5d-4e6d-afc0-e7cb8829536e/26-6a533a07b8f0b.webp' /></p><p>
"நான் கடற்படையில் 20 வருடங்களாகப் பணியாற்றுகிறேன், ஆனால் டொர்பிடோ ஏவுகணை ஒன்றை நான் ஏவுவது இதுவே முதல் முறை" என 'எச்.எம்.சி.எஸ் ஒட்டாவா' கப்பலின் கட்டளை அதிகாரி ஜஸ்டின் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார். </p><p>
ஜூலை 7 ஆம் திகதி நடத்தப்பட்ட இச்சோதனை, கடற்படை வீரர்களுக்கு ஒரு அரிய போர்முறைப் பயிற்சியாக அமைந்தது என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இக்கப்பலில் புதிதாகப் பொருத்தப்பட்டுள்ள 'அண்டர்வாட்டர் வார்ஃபேர் சூட் அப்கிரேட்' என்ற அடுத்த தலைமுறை சென்சார் தொழில்நுட்பத்தை சோதிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.</p><p> நவீன நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் டொர்பிடோக்களை மிக நீண்ட தூரத்திலேயே கண்டறிந்து அழிக்கும் திறன் கொண்டது இந்த புதிய அமைப்பு.
இந்த புதிய மாற்றத்தை 'ஐபோன்' அறிமுகத்துடன் ஒப்பிட்டுக் கூறிய அதிகாரி சிம்மன்ஸ், இது கனடிய கடற்படைக்கு முற்றிலும் ஒரு புதிய திருப்புமுனை என்று விவரித்துள்ளார்.</p><p> 
இந்த தொழில்நுட்பம் 2034 ஆம் ஆண்டிற்குள் கனடாவின் 'ஹாலிஃபாக்ஸ்' ரகப் போர்க்கப்பல் கடற்படைப் பிரிவு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
</p><p>கனடிய கடற்படையின் மற்றொரு போர்க்கப்பலான 'எச்.எம்.சி.எஸ் ரெஜினா' , அடுத்த வாரம் நடைபெறும் ரிம்பக் பயிற்சியில் 'எவொல்வ்ட் சீ ஸ்பேரோ பிளொக் II' ரக ஏவுகணையை நேரடிச் சோதனைக்கு உட்படுத்தவுள்ளது.</p><p> இந்த ஏவுகணை போர்க்கப்பலின் ரேடாரை நம்பியிருக்காமல், தனது சொந்த ரேடார் மூலம் வான்வழித் தாக்குதல்களைக் கண்டறிந்து அழிக்கும் திறன் கொண்டதாகும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-12T07:30:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக் பாஸ் 'வாட்டர்மெலன் ஸ்டார்' திவாகர் கைது..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/watermelon-star-diwakar-arrested-by-police-1783839882"></link>
            <id>https://cineulagam.com/article/watermelon-star-diwakar-arrested-by-police-1783839882</id>
            <summary type="text">வாட்டர்மெலன் ஸ்டார்&amp;nbsp;திவாகர்இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் திவாகர். கஜினி படத்தில் வாட்டர்மெலன் வைத்து கொண்டு நடிகர் சூர்யா செய்த ஒரு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>வாட்டர்மெலன் ஸ்டார்&nbsp;திவாகர்</h2><p>இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் திவாகர். கஜினி படத்தில் வாட்டர்மெலன் வைத்து கொண்டு நடிகர் சூர்யா செய்த ஒரு செய்கையை இவர் செய்தது வைரலானது. இதனால், இவர் தனக்கு தானே 'வாட்டர்மெலன் ஸ்டார்' என பெயர் வைத்து கொண்டார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d14d63d6-4247-4232-ba87-569fb0e1f9d9/26-6a533c8e49a23.webp' /></p><p>இதன்பின், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக திவாகர் பங்கேற்றார். 43 நாட்களில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><h2>கைது&nbsp;</h2><p>
</p><p>
இந்த நிலையில், திவாகர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7f218dd-862d-4a53-845b-8f4558d89073/26-6a533c8d93aa6.webp' /></p><p>

YouTube சேனல் ஊழியரை மிரட்டி ரூ. 1 லட்சம் கேட்டதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், திவாகர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது இவரிடம் கீழ்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p>]]></content>
            <updated>2026-07-12T07:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வியாபாரம் செய்ய கிளம்பிய முதியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/robbery-in-jaffna-1783841288"></link>
            <id>https://tamilwin.com/article/robbery-in-jaffna-1783841288</id>
            <summary type="text">காலையில் வியாபாரத்துக்கு சென்ற முதியவர் ஒருவரிடம் இருந்த பணத்தை இருவர் பறித்துச் சென்றதாக வட்டுக்கோட்டை பொலிஸார் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலையில் வியாபாரத்துக்கு சென்ற முதியவர் ஒருவரிடம் இருந்த பணத்தை இருவர் பறித்துச் சென்றதாக வட்டுக்கோட்டை பொலிஸார் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. </p><p>

இந்த சம்பவம் நேற்று(11.07.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

முதியவர் ஒருவர் காலையில் ஒரு தொகை பணத்துடன் வியாபாரத்திற்காக சென்றுள்ளார்.</p><p></p><p> </p><h2>

முதியவர் மீது தாக்குதல்</h2><p>
இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள், முதியவரிடம் பாசாங்கு செய்து, அவரிடம் இருந்த பணத்தையும் பறித்துச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1758468e-8954-4f20-801c-b5bc90a848af/26-6a534269ca226.webp' /></p><p> </p><p>

அத்துடன், முதியவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கக்கூடும் என முதியவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில், தாக்குதல் மேற்கொண்ட இளைஞர்கள் மீதான விசாரணைகளை மேற்கொள்வதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T07:29:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[20 மொழிகளில் மொத்தம் 48,000 பாடல்கள்.., பாடகி எஸ். ஜானகி படைத்த சாதனைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/what-singer-s-janaki-achieve-in-tamil-1783840952"></link>
            <id>https://news.lankasri.com/article/what-singer-s-janaki-achieve-in-tamil-1783840952</id>
            <summary type="text">புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி (88) வயது மூப்பு காரணமாக நேற்று (ஜூலை 11) காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி (88) வயது மூப்பு காரணமாக நேற்று (ஜூலை 11) காலமானார்.
</p><p>
உடல்நலக்குறைவு காரணமாக மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><p>தற்போது, மைசூரு மகாராஜா கல்லூரி திடலில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fab1c19-088c-4b24-8899-e21189c7c1cf/26-6a5340bc95ffa.webp' /></p><p>

பொதுமக்கள் அஞ்சலி முடிந்த பிறகு, மைசூரு எச்.டி.கோட்டை சாலையில் உள்ள அவரது பண்ணை இல்லத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
</p><p>
மேலும், எஸ். ஜானகிக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்த கர்நாடக அரசு ஏற்பாடு செய்துள்ளது</p><p>தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் எஸ்.ஜானகி 1938 ஏப்ரல் 23ஆம் தேதி, தற்போதைய ஆந்திரப் பிரதேசம், குண்டூர் மாவட்டம் பள்ளபட்லா கிராமத்தில் பிறந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/285867ee-b12d-4910-80ef-c06ac218a85a/26-6a5340ba8f204.webp' /></p><p>

3 வயதில் இசை கற்கத் தொடங்கி, 9 வயதில் மேடையில் பாட ஆரம்பித்த&nbsp;இவர் தமிழில் 1957ஆம் ஆண்டு வெளியான மகதலநாட்டு மேரி திரைப்படம் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார்.&nbsp;&nbsp;</p><p>20 மொழிகளில் சுமார் 48 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். 4 தேசிய விருதுகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட மாநில விருதுகளை வென்றுள்ளார். </p><p>

16 வயதினிலே படத்தின் செந்தூரப் பூவே, தேவர் மகன் படத்தின் இஞ்சி இடுப்பழகி பாடல்களுக்காக தேசிய விருது பெற்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de4a36c1-3608-409e-8fe8-143957cb5549/26-6a5340bbe4a8b.webp' /></p><p>எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், அனிருத் உள்ளிட்ட நான்கு தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணியாற்றினார்.</p><p> 

குறிப்பாக இளையராஜா இசையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து பாடிய பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf48853e-3b00-4516-b52c-b5d2ed36ebcb/26-6a5340bb3f760.webp' /></p><p>கே.ஜே. யேசுதாஸ், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் உள்ளிட்ட முன்னணி பாடகர்களுடன் ஏராளமான மறக்க முடியாத பாடல்களைப் பாடியுள்ளார்.</p><p>இந்நிலையில், அவரது மறைவு திரையுலகத்தையும், இசை ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-12T07:28:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவின் உரிமைகோரலை நிராகரித்த 14 நாடுகளின் கூட்டமைப்பு: சர்வதேச தீர்ப்பை பின்பற்ற அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-s-south-sea-claims-14-nations-reasserts-1783841275"></link>
            <id>https://news.lankasri.com/article/china-s-south-sea-claims-14-nations-reasserts-1783841275</id>
            <summary type="text">தென் சீனக் கடல் தொடர்பான சீனாவின் உரிமைகோரல்களை 14 நாடுகளின் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.சீனாவின் உரிமைகோரலை நிராகரித்த 14 நாடுகள்
தென் சீனக் கடல் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் சீனக் கடல் தொடர்பான சீனாவின் உரிமைகோரல்களை 14 நாடுகளின் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.</p><h2>சீனாவின் உரிமைகோரலை நிராகரித்த 14 நாடுகள்</h2><p>
தென் சீனக் கடல் தொடர்பான சர்வதேச தீர்ப்பின் ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீனாவின் உரிமைகோரல்கள் தொடர்பாக அமெரிக்கா, பிரித்தானியா 14 நாடுகளின் கூட்டமைப்பு முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><p> அதில், தென் சீன கடல் பகுதியில் சீனாவின் விரிவான உரிமைகோரல்களுக்கு எந்தவொரு சட்டப்பூர்வமான முகாந்திரமும் இல்லை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7d2a8a3-cf9b-43bd-9aee-826c63131ca9/26-6a5341fd3e08e.webp' /></p><p> ஐக்கிய நாடுகள் சபையின் கடல்சார் சட்ட ஒப்பந்தத்தின் படி தென் சீன கடல் பிராந்தியத்தின் பெரும்பகுதி சீனாவின் வரலாற்று உரிமை என்பது சர்வதேச சட்டத்திற்கு எதிரானது என்று ஹேக் நகரில் உள்ள நிரந்தர நடுவர் நீதிமன்றம் கடந்த 2016ம் ஆண்டு முக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கியது.</p><p> நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மீண்டும் வலியுறுத்தும் விதமாகவே 14 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பின் இந்த அறிக்கை அமைந்துள்ளது.</p><p> 14 நாடுகள் கூட்டமைப்பில் உள்ள அமெரிக்கா, பிரித்தானியா, பிலிப்பைன்ஸ், இத்தாலி, எஸ்தோனியா, ஜப்பான், ஆவுஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, லாட்வியா, லிதுவேனியா, ஜேர்மனி, ருமேனியா மற்றும் ஸ்லோவேனியா ஆகியவை 1982ம் ஆண்டின் ஐ.நா சர்வதேச கடல்சார் சட்ட ஒப்பந்தத்தை அனைத்து நாடுகளும் மதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f35b0d82-f27d-4135-990f-635daaeae7c9/26-6a5341fde1788.webp' /></p><p></p><p> மேலும் சட்ட ரீதியான மோதல் தவிர, தென் சீன கடல் பகுதியில் கடலோரக் காவல்படை, ராணுவம் மற்றும் கடல்சார் போராளிகளை பயன்படுத்துதல் ஆகியவை மூலம் பிராந்தியத்தில் ஏற்படும் பதற்றமான சூழ்நிலை குறித்தும் கூட்டமைப்பு நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.</p><p> நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான கடந்த 2016ம் ஆண்டு முதலே இந்த தீர்ப்பு சட்டவிரோதமானது மற்றும் செல்லாது என்று நிராகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-12T07:28:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாயுடன் தனித்திருந்த தந்தைக்கு இளைய மகன் நடத்திய கொடூரம் ; சந்தேக நபரின் அதிர்ச்சி பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/son-s-shocking-act-against-lonely-father-1783841015"></link>
            <id>https://jvpnews.com/article/son-s-shocking-act-against-lonely-father-1783841015</id>
            <summary type="text">தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சியம்பலாகொட பகுதியில் உள்ள வீடொன்றின் முன்னால், படுகொலை செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் முதியவர் ஒருவரின் சடலம் நேற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சியம்பலாகொட பகுதியில் உள்ள வீடொன்றின் முன்னால், படுகொலை செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் முதியவர் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை (11) மீட்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பெலியத்த, சியம்பலாகொட, திகங்வல பகுதியைச் சேர்ந்த&nbsp; 88 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை ஆவார்.</p><p style="text-align: justify; margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a773a5ca-deb3-458c-8a2b-79877cc97b53/26-6a5340f8b5c99.webp' /></p><h2 style="text-align: justify; margin-left: 25px;">&nbsp;மேலதிக விசாரணை</h2><p>
</p><p style="text-align: justify; ">
இவ்வதிகாரி தனது மனைவியுடன் மாத்திரம் குறித்த வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையிலேயே, நேற்று இரவு 8.00 மணியளவில் வீட்டின் முன்னாலுள்ள தண்ணீர் குழாய்க்கு அருகில் அவர் இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடப்பதை உறவினர்கள் அவதானித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

மீட்கப்பட்ட முதியவரின் சடலத்தில் பல வெட்டுக்காயங்கள் காணப்பட்டுள்ளதுடன், அவர் விழுந்து கிடந்த இடத்திலும் முகத்திலும் பலத்த இரத்தக் கறைகள் காணப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "> இதனால் இவர் யாரோ ஒருவரால் கூர்மையான ஆயுதத்தால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் பலத்த சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் உயிரிழந்த முதியவரின் இளைய மகனான 48 வயதுடைய நபர் ஒருவர் தங்காலை தலைமையகப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்டவர் ஓய்வுபெற்ற கடற்படைச் சிப்பாய் என்பதுடன், அவர் நேற்று (11) காலை 11.00 மணியளவில் தந்தையின் வீட்டிற்கு வந்திருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify; ">அத்துடன் அவர் கைது செய்யப்படும் போது கடுமையான மதுபோதையில் இருந்ததாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
தங்காலை கோட்ட தடயவியல் குற்றப் புலனாய்வுப் பிரிவின் (SOCO) அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து முதற்கட்ட விசாரணைகளையும் சோதனைகளையும் நடத்தியுள்ளனர். </p><p style="text-align: justify; ">இக்கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தங்காலை தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-12T07:23:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவு கொடூரமாக தாக்கப்பட்டு வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம் - பொலிஸார் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/person-found-dead-under-mysterious-circumstances-1783834340"></link>
            <id>https://tamilwin.com/article/person-found-dead-under-mysterious-circumstances-1783834340</id>
            <summary type="text">அம்பாந்தோட்டை - தங்கல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சியம்பலாகொடவில், ஒரு வீட்டின் முன்பாக கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபரொருவரின் சடலம் மீட்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாந்தோட்டை - தங்கல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சியம்பலாகொடவில், ஒரு வீட்டின் முன்பாக கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.</p><p>

நேற்று இரவு (11) இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பெலியத்த, சியம்பலகொட, திகங்வல பகுதியில் வசஜத்துவந்த கங்கணம் அரச்சிங்கே தனபால என்ற 88 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>ஓய்வுபெற்ற கடற்படை வீரர்&nbsp;கைது</h2><p>
</p><p>
இவர் தனது மனைவியுடன் குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97aced95-2cd9-4bde-96d5-c1e5ce1e2f85/26-6a532fa8b19c0.webp' /></p><p>
</p><p>
வீட்டின் முன்பாக உள்ள தண்ணீர்க்குழாய் அருகே அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், சடலத்தில் பல வெட்டுக்காயங்கள் காணப்பட்டுள்ளன.</p><p>

இந்நிலையில், இவரை யாரோ கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p>
</p><p>
இந்த சம்பவம் தொடர்பாக, உயிரிழந்தவரின் இளைய மகனான 48 வயது நபரை தங்கல்லை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><h2>&nbsp;குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை</h2><p> </p><p>

இந்த நபர் ஓய்வுபெற்ற கடற்படை வீரர் என்றும், அவர் நேற்று (11) காலை சுமார் 11 மணியளவில் தனது தந்தை வீட்டிற்கு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.</p><p>

சந்தேகநபர் கைது செய்யப்பட்டபோது கடுமையாக போதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
இந்நிலையில், தங்கல்லை தலைமையக பொலிஸாரின் குற்றப்பிரிவு அதிகாரிகள் இந்த மரணம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T07:23:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவத்தினர் வசமுள்ள காணி விடுவிப்பு கோரி பலாலியில் வெடித்த போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protests-continue-in-palali-demanding-land-release-1783838953"></link>
            <id>https://ibctamil.com/article/protests-continue-in-palali-demanding-land-release-1783838953</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - பலாலியில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.யுத்தத்தினால் இடம்பெயர்ந்து கடந்த 36 வருடங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - பலாலியில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.</p><p>யுத்தத்தினால் இடம்பெயர்ந்து கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் பலாலி சந்தியில் இன்று (12) நான்காவது
தடவையாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>தமது காணிகளை இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை
அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தாங்கள் நீண்ட காலமாக
நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வருவதாக போராட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.</p><p></p><h2>காவல்துறையினர் தடுத்தனர்</h2><p>
</p><p>இந்தநிலையில் கொட்டகை அமைத்து போராட்டத்தை முன்னெடுக்க மக்கள் முயற்சித்த போது காவல்துறையினர் அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e712552-70e8-474d-918f-87653151d70a/26-6a533babdc532.webp' /></p><p>இதனையடுத்து மக்கள் கொளுத்தும் வெயிலில் தொடர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்து
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T07:17:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[போகிமொன் கார்டு கடையில் துப்பாக்கிமுனையில் துணிகரக் கொள்ளை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/gun-toting-robber-steals-30k-worth-of-pokemon-1783839057"></link>
            <id>https://canadamirror.com/article/gun-toting-robber-steals-30k-worth-of-pokemon-1783839057</id>
            <summary type="text">கனடாவின் கியூபெக் மாகாணத்தின் லானோடியர் பிராந்தியத்தில் அமைந்துள்ள போகிமொன் கார்டு விற்பனைக் கடையொன்றில் கடந்த ஜூன் மாதம் துப்பாக்கிமுனையில் இடம்பெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் கியூபெக் மாகாணத்தின் லானோடியர் பிராந்தியத்தில் அமைந்துள்ள போகிமொன் கார்டு விற்பனைக் கடையொன்றில் கடந்த ஜூன் மாதம் துப்பாக்கிமுனையில் இடம்பெற்ற துணிகரக் கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
மொண்ட்ரியல் நகரின் வடகிழக்கே உள்ள செயின்ட்-அலெக்சிஸ் பகுதியில் இயங்கும் 'மிஸிங்நோ' என்ற சேகரிப்புப் பொருட்கள் விற்பனைக் கடையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.</p><p>
கடந்த ஜூன் 18ஆம் திகதி காலை, கையில் துப்பாக்கியுடன் கடைக்குள் நுழைந்த மர்மநபர், அங்கிருந்த பணத்தைப் எடுக்காமல், நேரடியாக மதிப்புமிக்க போகிமொன் சேகரிப்பு கார்டுகளையே குறிவைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9975f59a-4a1a-48d4-9bd6-71a65f3361a6/26-6a533952ef1e0.webp' /></p><p>
அப்போது கடையில் இருந்த 10 வயது சிறுவன் உள்ளிட்ட வாடிக்கையாளர்களை துப்பாக்கிமுனையில் மிரட்டி, சுமார் 30,000 கனேடிய டொலர் மதிப்புள்ள போகிமொன் கார்டுகளை ஹொக்கி பை ஒன்றில் நிரப்பிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
</p><p>மேலும், கடையை விட்டு வெளியேறும்போது துப்பாக்கியை கையில் வைத்தபடியே, "நன்றி... இனிய இரவு பொழுது அமையட்டும்" என்று கூறிச் சென்றதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>ஆனால், கொள்ளையனை எளிதில் தப்பவிட விரும்பாத கடையின் இணை உரிமையாளர்களான ஜீன்-பிரான்சுவா ஹெட்டு மற்றும் சார்லஸ் ப்ரூல்ட்-பாரிசோ, பேஸ்பால் மட்டைகளை எடுத்துக்கொண்டு கடையிலிருந்து வெளியே விரைந்தனர். </p><p>
கொள்ளையர் தப்பிச் சென்ற வாகனத்தை பொலிஸார் எளிதில் அடையாளம் காணும் வகையில், அந்தக் காரின் பின்விளக்குகள் மற்றும் பக்கவாட்டு கண்ணாடியை அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
</p><p>அவர்களின் இந்தத் துணிச்சலான நடவடிக்கையால், சம்பவம் நடைபெற்ற இரண்டு மணித்தியாலங்களுக்குள் டானி எல்-அவர் என்ற சந்தேகநபரை பொலிஸார் கைது செய்தனர்.
</p><p>அவர் மீது இக்கொள்ளைச் சம்பவம் மட்டுமின்றி, கடந்த ஏப்ரல் மாதம் முதல் இடம்பெற்றதாகக் கூறப்படும் தொடர் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p> 
எனினும், கொள்ளையடிக்கப்பட்ட போகிமொன் கார்டுகள் மற்றொருவரிடம் ஒப்படைக்கப்பட்டதாக நம்பப்படுவதால், அவை இதுவரை மீட்கப்படவில்லை.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-12T07:15:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மலையக மக்கள்! தீர்வுக்காக முன்வந்தது அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/people-evicted-from-homes-govt-seeks-solution-1783838779"></link>
            <id>https://ibctamil.com/article/people-evicted-from-homes-govt-seeks-solution-1783838779</id>
            <summary type="text">

அண்மையில் இராகலை சென்லேனாட்ஸ் தோட்டத்தில் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் குடியிருப்புகளிலிருந்து வெளியெற்றப்பட்ட 6 குடும்பங்களுக்கும் உடனடி தீர்வொன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

அண்மையில் இராகலை சென்லேனாட்ஸ் தோட்டத்தில் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் குடியிருப்புகளிலிருந்து வெளியெற்றப்பட்ட 6 குடும்பங்களுக்கும் உடனடி தீர்வொன்றை அரசாங்கம் வழங்கும் என பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் உறுதியளித்துள்ளார்.</p><p>

சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக சம்பந்தப்பட்ட பிரதேசத்திற்கு இன்றையதினம்(12) விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
</p><p>
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள பிரதியமைச்சர் பிரதீப், கடந்தகாலங்களில் மேற்கொள்ளப்பட்ட வழக்கிற்கான தீர்ப்பாகவே இது அமைந்திருந்ததாகவும் எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வந்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விடயம் என பலர் விமர்சனங்களை முன்வைத்து வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p></p><h2>நிரந்தரமான தீர்வு</h2><p>
</p><p>
எவ்வாறாயினும், இச்சம்பவத்தை பொறுத்தமட்டில் LRC நிறுவனத்தோடு கலந்துரையாடி இதற்கான உண்மையான பின்னணி என்னவென்பதை ஆராய்ந்து நியாயமான தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சிப்பதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக தீர்வு வழங்கப்பட்டிருந்தாலும் நிரந்தரமான தீர்வை உரிய நகர்வுகளின் பின்னர் விரைவாக பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் முன்வரும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/886c1606-ae49-4fb9-97e1-3235fef896ad/26-6a533eb87e46c.webp' /></p><p>
</p><p>
மேலும், அமைச்சர் லால்காந்த குறித்த பகுதிக்கு இன்னும் சில நாட்களில் விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்த பிரதியமைச்சர், அவருடன் கலந்துரையாடி சரியான தீர்வை பெற்றுக்கொடுப்பதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடியிருப்புகளை வழங்குவதற்கு நிச்சயமாக தமது அரசாங்கம் முன்நின்று செயற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-07-12T07:14:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இதயம் முரளி திரைப்படத்தின் 2 நாட்கள் வசூல் விவரம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/idhayam-murali-2-days-collection-1783840383"></link>
            <id>https://viduppu.com/article/idhayam-murali-2-days-collection-1783840383</id>
            <summary type="text">தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருக்கும் அதர்வா நடிப்பில் உருவாகி கடந்த 10-ஆம் தேதி வெளியான திரைப்படம்தான் இதயம் முரளி.

இப்படத்தை அற...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருக்கும் அதர்வா நடிப்பில் உருவாகி கடந்த 10-ஆம் தேதி வெளியான திரைப்படம்தான் இதயம் முரளி.
</p><p>
இப்படத்தை அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி, தயாரித்துள்ளார். இப்படத்தில் அதர்வாவுடன் இணைந்து ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், பகத் பாசில், சுதாகர், டிராவிட், ரக்ஷன் என பலரும் நடித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33c5bad3-5985-450c-9571-23d4b603bf1c/26-6a533e8313d93.webp' /></p><p>காதல் கதைக்களத்தில் உருவாகி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
</p><p>
இந்த நிலையில், 2 நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 2 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் ரூ. 8 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-12T07:13:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த காற்று மற்றும் கடல் ​கொந்தளிப்பு ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/strong-winds-rough-seas-weather-alert-issued-1783840236"></link>
            <id>https://jvpnews.com/article/strong-winds-rough-seas-weather-alert-issued-1783840236</id>
            <summary type="text">&amp;nbsp;நாட்டின் பல பகுதிகளில் நிலவும் தீவிரமான தென்மேற்கு பருவநிலை காரணமாக, மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை, ஹம்பாந்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;நாட்டின் பல பகுதிகளில் நிலவும் தீவிரமான தென்மேற்கு பருவநிலை காரணமாக, மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">


இதேவேளை, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்கும், சிலாபத்திலிருந்து புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரையிலான கடற்பரப்புகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cbbfbf5-3776-46fb-97a5-88bc282c237b/26-6a533dee3dbd3.webp' /></p><p>
</p><p style="text-align: justify; ">


குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும், கடல் பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இதனால் மீனவர்கள் மற்றும் கடற்சார் சமூகத்தினர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்கால அறிவித்தல்களை தொடர்ந்து கண்காணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-12T07:10:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாலியில் காணி விடுவிப்பை வலியுறுத்தி போராட்டம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-protest-was-held-today-at-palaly-junction-1783839697"></link>
            <id>https://tamilwin.com/article/a-protest-was-held-today-at-palaly-junction-1783839697</id>
            <summary type="text">பலாலி மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியின் இன்று(12) நான்காவது
தடவையாகவும் முன்னெடுக்கப்பட்டது.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்து கடந்த 3...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலாலி மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியின் இன்று(12) நான்காவது
தடவையாகவும் முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
யுத்தத்தினால் இடம்பெயர்ந்து கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள்
இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை
முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><h2>போராட்டம்</h2><p>

தமது காணிகளை இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை
அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தான் நீண்ட காலமாக
நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aaa99671-fee9-4008-bc15-aa70cb729956/26-6a533d8f4b629.webp' /></p><p>
</p><p>
இதன்போது கொட்டகை அமைத்து போராட்டத்தை முன்னெடுக்க மக்கள் முயற்சித்த போதும்
பொலலசார் தடுத்தனர்.</p><p>

மக்கள் கொளுத்தும் வெயிலில் தொடர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T07:09:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும் - நீர் பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-issued-to-water-users-1783838389"></link>
            <id>https://tamilwin.com/article/warning-issued-to-water-users-1783838389</id>
            <summary type="text">எல்நினோ வானிலை முன்னறிவிப்பு காரணமாக, விவசாயிகள் மற்றும் அனைத்து நீர் பாவனையாளர்களும் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என நீர்ப்பாசனத் திணைக்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல்நினோ வானிலை முன்னறிவிப்பு காரணமாக, விவசாயிகள் மற்றும் அனைத்து நீர் பாவனையாளர்களும் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என நீர்ப்பாசனத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
</p><p>
நாட்டின் 80 முக்கிய நீர்த்தேக்கங்கள் தற்போது அவற்றின் மொத்த கொள்ளளவில் சுமார் 48% அளவில் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹெரத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>

இதற்கிடையில், முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வெப்பக் குறியீடு எச்சரிக்கை அளவை எட்டியுள்ளதாக திணைக்களம் எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b8a1263-71b4-452d-b104-4b2ef4a68e79/26-6a533c67bc76b.webp' /></p><p>
</p><p>வானிலை ஆய்வுத்திணைக்களம் வெளியிட்டுள்ள வெப்ப எச்சரிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>இதேவேளை பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், வெப்பமான வானிலைக்கு எதிராக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T07:04:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[மைசூரில் பாடகி எஸ். ஜானகி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/public-pays-tribute-to-s-janaki-s-mortal-remains-1783835402"></link>
            <id>https://ibctamilnadu.com/article/public-pays-tribute-to-s-janaki-s-mortal-remains-1783835402</id>
            <summary type="text">புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி (88) வயது மூப்பு காரணமாக நேற்று (ஜூலை 11) காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி (88) வயது மூப்பு காரணமாக நேற்று (ஜூலை 11) காலமானார்.</p><p>

உடல்நலக்குறைவு காரணமாக மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
</p><p>
அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31e0664a-55a7-4a29-82dd-d5d8a88652f1/26-6a532b0c37d92.webp' /></p><p>

தற்போது, மைசூரு மகாராஜா கல்லூரி திடலில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.</p><p>

பொதுமக்கள் அஞ்சலி முடிந்த பிறகு, மைசூரு எச்.டி.கோட்டை சாலையில் உள்ள அவரது பண்ணை இல்லத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
</p><p>
மேலும், எஸ். ஜானகிக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்த கர்நாடக அரசு ஏற்பாடு செய்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-12T07:01:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு - கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதி மக்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heat-warning-for-6-districts-today-1783838743"></link>
            <id>https://tamilwin.com/article/heat-warning-for-6-districts-today-1783838743</id>
            <summary type="text">வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் ஆறு மாவட்டங்களின் சில பகுதிகளில், இன்று மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, எச்சரிக்கை மட்டத்தை எட்டக்கூடும் என வளிமண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் ஆறு மாவட்டங்களின் சில பகுதிகளில், இன்று மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, எச்சரிக்கை மட்டத்தை எட்டக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 
</p><p>
அதன்படி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்த நிலையில், குறித்த பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் இன்றையதினம் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>வழங்கப்பட்டுள்ள&nbsp;ஆலோசனை</h2><p>
</p><p>
அதற்கமைய, திறந்த வெளிகளில் பணிபுரிபவர்கள் அடிக்கடி போதுமான அளவு நீரைப் பருகுமாறும், நிழலான இடங்களில் ஓய்வெடுக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1751fdde-58fd-4792-88ef-ca2f0334e6e2/26-6a533ae4f1a31.webp' /></p><p>
</p><p>
அத்துடன், வீட்டில் உள்ள முதியவர்கள் மற்றும் நோயாளிகளின் உடல்நிலை குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
அதேநேரம், சிறுவர்களை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் என்றும், வெயிலில் அதிக சிரமத்தைக் கொடுக்கும் வேலைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T06:59:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்னும் சில மாதங்களில் மாகாண சபை தேர்தல்..! அரச தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/provincial-council-election-update-1783837591"></link>
            <id>https://tamilwin.com/article/provincial-council-election-update-1783837591</id>
            <summary type="text">மாகாண சபைத் தேர்தலை விரைவாகவும் முறையாகவும் நடத்துவதற்கே அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அதற்கான முயற்சிகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபைத் தேர்தலை விரைவாகவும் முறையாகவும் நடத்துவதற்கே அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அதற்கான முயற்சிகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.</p><p> 

மாகாண சபை தேர்தல் தொடர்பாக, திருகோணமலையில் நேற்று(11.07.2026) இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><h2>


குழு நியமனம்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>


தேர்தல் தொடர்பான விசேட குழு
மாகாண சபை தேர்தல் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவில்
நானும் ஒரு அங்கத்தவராக இணைந்துள்ளேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35e85f8d-bc61-499e-945b-98d9cc8edf7b/26-6a533aa64a38d.webp' /></p><p>
</p><p>
இந்த குழுவின் தலைவரான வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்
அமைச்சரின் தலைமையில் நாடாளுமன்றத்தில் மிகக் காத்திரமான பங்களிப்பினை நாங்கள்
வழங்கி வருகின்றோம்.

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பெண் உறுப்பினர்களுடன் இது
தொடர்பாக ஏற்கனவே இரு தடவைகள் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளோம்.
</p><p>
இதன் தொடர்ச்சியாக, கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில் பெண்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள்
ஆகியோரை வரவழைத்து, அவர்களின் முன்மொழிவுகள், ஆலோசனைகள் மற்றும் யோசனைகளை நாங்கள் பெற்றுக்கொண்டுள்ளோம்.</p><p>

தற்போதைய நிலையில் இந்த விடயம் இன்னும் கலந்துரையாடல் மட்டத்திலேயே இருந்து
வருகின்றது.
தேர்தல் முறையில் உள்ள சட்டச் சிக்கல்கள் கடந்த 2015 தொடக்கம் 2019 வரையான
காலப்பகுதியில் இருந்த அரசாங்கத்தினால் புதிய தேர்தல் முறை ஒன்று
முன்மொழியப்பட்டிருந்தது.</p><p> எனினும், அது தொடர்பாக சட்டச் சிக்கல்கள்
நீடித்ததோடு, எல்லை நிர்ணயம் தொடர்பான பிரச்சினைகளும் காணப்படுகின்றன.</p><h2>

புதிய சட்ட விதிமுறைகளுடன் மாகாண சபை தேர்தல்</h2><p>

இதன் காரணமாக, தற்போதைய சூழலில் விகிதாசார தேர்தல் முறையில் மாத்திரம்
இந்த தேர்தலை நடத்த நாம் முயற்சி செய்தாலும், அங்கேயும் பெண் பிரதிநிதித்துவம்
மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பாக சில சிக்கல்கள் காணப்படுகின்றன.
</p><p>
விரைவில் புதிய தேர்தல் முறை
இவ்வாறான நிலைக்கு மத்தியில், அனைத்து தரப்பினருடனும் நாம் தொடர்ந்தும்
கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c95d084-409d-4474-987f-f52af8fde8d0/26-6a533aa705c04.webp' /></p><p>
</p><p>
அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான புதிய தேர்தல் முறை ஒன்றின் ஊடாக
மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான எல்லாவிதமான முன்னெடுப்புக்களையும் நாங்கள்
மேற்கொண்டு வருகின்றோம்.</p><p>

எனவே, அரசாங்கம் இந்த மாகாண சபை தேர்தலை மிக விரைவாக நடத்துவதற்கே முயற்சித்து
வருகின்றது என்பதுடன், அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் தற்பொழுது தீவிரமாக
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.</p><p></p><p></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-07-12T06:57:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானால் இலக்கு வைக்கப்பட்ட அமெரிக்க இராணுவத் தளங்கள் ; மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரிக்கும் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-military-bases-targeted-by-iran-attacks-1783839358"></link>
            <id>https://canadamirror.com/article/us-military-bases-targeted-by-iran-attacks-1783839358</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. 

...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. </p><p style="text-align: justify; ">

இருப்பினும், அந்த ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஐக்கிய அரபு இராஜ்ஜியம் இடைமறித்துச் சுட்டு வீழ்த்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc09cceb-d133-490a-ae96-a01143ac7ea6/26-6a533a80ae82f.webp' /></p><p> </p><p style="text-align: justify; ">

இதற்கிடையில், நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக கட்டார் மற்றும் பஹ்ரைன் நாடுகள் தங்களின் பாதுகாப்பு எச்சரிக்கைகளை உயர்த்தி உள்ளதுடன், பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தியுள்ளன. </p><p style="text-align: justify; ">

இந்தத் தாக்குதல்கள் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களை இலக்காகக் கொண்டே நடத்தப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify; ">

இதன்படி, ஜோர்டானில் உள்ள பிரின்ஸ் ஹசன் விமானப்படைத் தளத்தை இலக்காகக் கொண்டு ஈரான் பல பெலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது. </p><p style="text-align: justify; ">

மேலும், குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள சில அமெரிக்க இராணுவத் தளங்களையும் இலக்காகக் கொண்டு ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-12T06:56:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் துயரை ஏற்படுத்திய ஆசிரியரின் மரணம் ; பாம்பு தீண்டியதில் நேர்ந்த அசம்பாவிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/teacher-s-death-saddens-tamil-community-1783831381"></link>
            <id>https://jvpnews.com/article/teacher-s-death-saddens-tamil-community-1783831381</id>
            <summary type="text">மட்டக்களப்பு, கொக்கட்டிசோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரியாவெளியில் ஆசிரியர் ஒருவர் நேற்று (11)&amp;nbsp; பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார். 

பண்டா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பு, கொக்கட்டிசோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரியாவெளியில் ஆசிரியர் ஒருவர் நேற்று (11)&nbsp; பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "> 

பண்டாரியாவெளியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 54 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f067d083-8359-44e2-9d57-cc03c0b3f8a9/26-6a531b5695fe7.webp' /></p><p style="text-align: justify; "> 

பண்டாரியா வெளியில் உள்ள தனது வீட்டில் இருந்து வயல் அறுவடை வேலைகளுக்காக சென்ற போது வயலில் இருந்த பாம்பு தீண்டியது. </p><p style="text-align: justify; ">

பின்னர் அவரை மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்டு சென்ற போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். </p><p style="text-align: justify; ">

இவரது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று (12) ஞாயிற்றுக்கிழமை பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப் படவுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-12T06:50:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூப்பர் சிங்கர் பூஜாவின் சமீபத்திய புகைப்படங்கள்.. இதோ பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/super-singer-pooja-venkat-recent-photos-1783836339"></link>
            <id>https://cineulagam.com/article/super-singer-pooja-venkat-recent-photos-1783836339</id>
            <summary type="text">விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர்கள் பலர் உள்ளனர். அதில் ஒருவர் தான் பூஜா. இவர் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர்கள் பலர் உள்ளனர். அதில் ஒருவர் தான் பூஜா. இவர் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமாகி, இன்று முன்னணி இசையமைப்பாளர்களின் கச்சேரிகளில் தொடர்ந்து பாடல்கள் பாடி வருகிறார். </p><p>இந்த நிலையில், பூஜாவின் சமீபத்திய புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. இதோ பாருங்க:</p>]]></content>
            <updated>2026-07-12T06:50:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளைகுடா நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்., பதற்றம் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-strikes-gulf-states-after-us-attacks-1783839025"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-strikes-gulf-states-after-us-attacks-1783839025</id>
            <summary type="text">ஈரான், அமெரிக்காவின் விமானத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, வளைகுடா நாடுகளான கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), பஹ்ரைன் மற்றும் குவைத் மீது ஞாயிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான், அமெரிக்காவின் விமானத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, வளைகுடா நாடுகளான கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), பஹ்ரைன் மற்றும் குவைத் மீது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெரிய அளவிலான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியது.
</p><p>
கத்தாரின் தலைநகர் தோஹாவில் இரண்டு கட்டமாக தாக்குதல் நடந்தது. பலத்த வெடிப்புகள் நகரம் முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தின.
</p><p>
கத்தார் பாதுகாப்புத் துறை, “பல ஏவுகணைகளை வெற்றிகரமாக தடுத்தோம்” என்று அறிவித்தது. மக்கள் அனைவரும் வீட்டுக்குள் தங்குமாறு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/def8c68a-2e4c-4f45-ae1b-84a771a25f65/26-6a5339332987a.webp' /></p><p>அதே நேரத்தில், அமீரகம், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளும் தங்கள் வான்வழி பாதுகாப்பு அமைப்புகளை இயக்கி, ஈரான் ஏவுகணைகளை தடுத்ததாக அறிவித்துள்ளன.
</p><p>
ஈரான் புரட்சிகர காவல் படை (IRGC), கத்தாரில் உள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய Al-Udeid விமானத் தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகக் கூறியது. ஆனால் கத்தார், அந்த ஏவுகணைகள் தடுக்கப்பட்டதாக உறுதிப்படுத்தியது.
</p><p>
மேலும், ஜோர்டான் மற்றும் ஓமன் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.</p><p></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">BREAKING: Iran has started launching a heavy wave of ballistic missile and drone attacks against U.S. and allied military sites across the Gulf in retaliation for today&#39;s U.S. strikes on Iranian territory.<br><br>Jordan: Iran reportedly fired 12 ballistic missiles toward Muwaffaq Salti… <a href="https://t.co/6gqA2KNaDk">pic.twitter.com/6gqA2KNaDk</a></p>&mdash; The Hormuz Report (@HormuzReport) <a href="https://x.com/HormuzReport/status/2076136808098967716?ref_src=twsrc%5Etfw">July 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இந்த தாக்குதலுக்கு முன்னதாக, அமெரிக்கா, ஹார்முஸ் நீரிணையில் சரக்கு கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, ஈரானில் 140 இடங்களில் விமானத் தாக்குதல் நடத்தியது. </p><p>இதனால் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
</p><p>
இந்த சம்பவங்கள், அமெரிக்கா-ஈரான் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளதையும், வளைகுடா நாடுகள் கடுமையான பாதுகாப்பு நிலைக்கு சென்றுள்ளதையும் காட்டுகின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T06:49:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெற்ற மகளை பல முறை வன்புணர்ந்த பொலிஸ் அதிகாரி ; காதல் தொடர்பிற்காக வழங்கிய தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-officer-accused-of-abusing-own-daughter-1783836340"></link>
            <id>https://jvpnews.com/article/police-officer-accused-of-abusing-own-daughter-1783836340</id>
            <summary type="text">தனது மூத்த மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் சேவையை, கடந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தனது மூத்த மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் சேவையை, கடந்த (11) ஆம் திகதி முதல் இடைநிறுத்துவதற்கு மொனராகலை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்&nbsp; நடவடிக்கை எடுத்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டவர், தம்பகல்ல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய, தம்பகல்ல மாரியராவ, எட்டுக் கால் பகுதிக்கு அருகில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான பொலிஸ் சார்ஜன்ட் ஆவார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fec07ca-78b0-4543-af14-8bd46c372f9e/26-6a532eb5d90a1.webp' /></p><h2 style="text-align: justify; ">பாலியல் துஷ்பிரயோகம்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இவர் 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் தனது மூத்த மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். </p><p style="text-align: justify; ">சிறுமியின் தாய் எலி காய்ச்சல் காரணமாகக் காலமானார். தாயின் மறைவுக்குப் பிறகு, தந்தையான சந்தேகநபர் இச்சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கியுள்ளார்.</p><p style="text-align: justify; ">

இச்சிறுமி மற்றொரு இளைஞருடன் காதல் தொடர்பைப் பேணி வந்ததால், ஆத்திரமடைந்த தந்தை அவரைத் தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, தனது தந்தை தன்னைத் துஷ்பிரயோகம் செய்த விபரத்தை வைத்தியரிடம் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
இதனையடுத்து, உடனடியாகச் செயற்பட்ட வைத்தியசாலைப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து தம்பகல்ல பொலிஸாருக்கு அறிவித்தனர். </p><p style="text-align: justify; ">அதனைத் தொடர்ந்து சந்தேகநபரைக் கைது செய்த பொலிஸார், அவரை சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, சந்தேகநபர் இந்த மாதம் 15-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
தம்பகல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி&nbsp; தலைமையிலான பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-12T06:45:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இப்படியும் ஒரு சம்பவம் ; மிகுந்த அவதானம் மக்களே ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shocking-incident-in-jaffna-public-alert-issued-1783837299"></link>
            <id>https://jvpnews.com/article/shocking-incident-in-jaffna-public-alert-issued-1783837299</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் வியாபாரத்துக்குச் சென்ற முதியவர் ஒருவரிடம் தாக்குதல் நடத்தி பணம் பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசார...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் வியாபாரத்துக்குச் சென்ற முதியவர் ஒருவரிடம் தாக்குதல் நடத்தி பணம் பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


சக்கரத்தை பகுதியில் இருந்து நவாலி நோக்கி வியாபாரத்துக்காக பயணித்துக் கொண்டிருந்த முதியவரை, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வழிமறித்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c95cf1e-9d08-4440-bb2b-5eebe7462422/26-6a533274a1e68.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இடம் கேட்பது போல் நடித்து முதியவரை ஏமாற்றிய அவர்கள், பின்னர் அவரைத் தாக்கி, வியாபாரத்திற்காக வைத்திருந்த பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; ">



சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கமெராக்களில் பதிவாகியிருக்கலாம் என பாதிக்கப்பட்ட முதியவர் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களை அடையாளம் காணும் நோக்கில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-12T06:44:34+00:00</updated>
        </entry>
    </feed>
