<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-10T16:22:32+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய நாடொன்றில் கொடூரமாக தாக்கப்பட்ட இலங்கை பெண் - கணவன் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-women-attacked-by-husband-in-italy-1783692668"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-women-attacked-by-husband-in-italy-1783692668</id>
            <summary type="text">இத்தாலியில் அடுக்குமாடி குடியிருப்பொன்றில், கணவன் தனது மனைவியை கண்ணாடிப் போத்தலால் தலையில் பலமுறை தாக்கி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இத்தாலியில் அடுக்குமாடி குடியிருப்பொன்றில், கணவன் தனது மனைவியை கண்ணாடிப் போத்தலால் தலையில் பலமுறை தாக்கி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

ரோம் நகரில் பிடேன் பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது. </p><p>

இந்த சம்பவம் அவர்களின் 12 வயது மகனின் கண் முன்னே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> </p><h2><b>பெண் மீது தாக்குதல்</b></h2><p>இத்தாக்குதலில் படுகாயமடைந்த 38 வயதுடைய இலங்கை பெண், உடனடியாகமருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb31b951-5250-4644-844c-6793aaf2d84d/26-6a5104f8a081f.webp' /></p><p>மருத்துவர்களின் பரிசோதனையில் அவருக்கு மண்டையோட்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. </p><p>அவர் தற்போது ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாதாரண விடயம் தம்பதிக்கு இடையில் பெரும் வன்முறையாக மாறியுள்ளது.
</p><p>
இதன்போது, 41 வயதுடைய இத்தாலிய நாட்டவரான கணவன், கண்ணாடிப் போத்தலை எடுத்து மனைவியின் தலையில் கொடூரமாகத் தாக்கியுள்ளார். </p><h3><b>கணவன் கைது</b></h3><p>இந்த சம்பவத்தினால் அதிர்ச்சியடைந்த சிறுவன், தற்காலிகமாக அவனது பாட்டியின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5135c3d8-6279-43bb-9660-d3d72035253e/26-6a5104f951c71.webp' /></p><p>தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரோம் நகர பொலிஸார், அடுக்குமாடி வீட்டிற்குள்ளேயே வைத்து தாக்குதல் நடத்திய கணவனைக் கைது செய்தனர். </p><p>கொலை முயற்சி மற்றும் வன்முறை குற்றச்சாட்டின் கீழ் குறித்த நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-10T16:13:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பறக்கும் விமானத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட விமானி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/flight-school-pilot-jumps-to-his-death-1783699178"></link>
            <id>https://canadamirror.com/article/flight-school-pilot-jumps-to-his-death-1783699178</id>
            <summary type="text">அர்ஜென்டினாவில் விமானப் பயிற்சிப் பயிற்றுவிப்பாளர் ஒருவர், பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அர்ஜென்டினாவில் விமானப் பயிற்சிப் பயிற்றுவிப்பாளர் ஒருவர், பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. </p><p>
குறித்த குதித்த பிறகு, விமானத்தில் இருந்த 22 வயது மாணவி தனியாக அந்த விமானத்தைப் பத்திரமாகத் தரையிறக்கியுள்ளார்.</p><p>
மத்திய அர்ஜென்டினாவின் டோலிடோ பகுதியில் கடந்த சனிக்கிழமை செஸ்னா 150 ரக சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b16b47d-624a-400b-90e4-f015ec7d00c8/26-6a5116ebdb854.webp' /></p><p> </p><p>
இதில் 42 வயதான அனுபவம் வாய்ந்த விமானப் பயிற்றுவிப்பாளர் லியான்ட்ரோ ஆண்ட்ரேஸ் பெர்டாஸோ மற்றும் ரொசாரியோ என்ற 22 வயது மாணவியும் இருந்துள்ளனர்.</p><p>
விமானம் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென அந்த மாணவியிடம், "உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும், தொடர்ந்து செய்" எனக் கூறிவிட்டு, பெர்டாஸோ தனது ஹெட்செட் மற்றும் சீட் பெல்ட்டைக் கழற்றியுள்ளார்.</p><p> பின்னர், விமானத்தின் கதவைத் திறந்து திடீரென கீழே குதித்துள்ளார். இதனால் மாணவி கடும் அதிர்ச்சியடைந்தார்.
</p><p>இருப்பினும், அந்த மாணவி மிகுந்த தைரியத்துடன் செயல்பட்டு, கட்டுப்பாட்டை இழக்காமல் விமானத்தை எவ்வித சேதமுமின்றி பத்திரமாகத் தரையிறக்கினார்.
</p><p>இது குறித்து அந்தப் பறக்கும் பள்ளியின் இயக்குனர் எடுவார்டோ ஆல்வாரெஸ் கூறுகையில், பெர்டாஸோ மிகவும் நல்ல மனிதர் என்றும், அவர் இப்படி ஒரு முடிவை எடுப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார். </p><p>
மேலும், வேகமாகப் பறக்கும் விமானத்தின் கதவைத் திறப்பது மிகவும் கடினமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அனுபவம் வாய்ந்த இந்த விமானியின் திடீர் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து அந்நாட்டு அரசு வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-10T16:06:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/officers-killed-in-negombo-prison-clash-promoted-1783699538"></link>
            <id>https://jvpnews.com/article/officers-killed-in-negombo-prison-clash-promoted-1783699538</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் பதவி உயர்வு வழங்கியுள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் பதவி உயர்வு வழங்கியுள்ளது.</p><p> </p><p></p><p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற துயரச் சம்பவத்தில் 8 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகள் உயிரிழந்தனர். </p><p>

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3df0e7f2-cbeb-42ae-b0f5-40eb62fe6f5d/26-6a51185476f3a.webp' /></p><p>அதற்கமைய, நீர்கொழும்பு மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளிடம் வாக்குமூலங்களைப் பெறும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p>

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் அதிகாரிகள் மற்றும் கைதிகள் என 29 பேரிடம் இதுவரை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. </p><p>

அவர்களில் உள்ள அனைத்துக் கைதிகளும் கட்டுவெல்லேகம சுரேஷின் தரப்பினரால் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். </p><p>

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிறைச்சாலை அதிகாரிகளிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. </p><p>

இருப்பினும் அந்தப் பணியை முழுமையாக நிறைவு செய்ய முடியவில்லை. 

சில அதிகாரிகள் வாக்குமூலம் அளிப்பதற்குப் போதுமான ஆரோக்கியமான நிலையில் இல்லாததே இதற்குக் காரணமாகும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb56dcaf-a773-4a0d-9d44-aec3d0ebd8bd/26-6a511853bee29.webp' /></p><p>இதனிடையே, மோதலில் உயிரிழந்த 8 சிறைச்சாலை அதிகாரிகளுக்குப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. 

கொல்லப்பட்ட இரண்டாம் நிலை சிறைச்சாலை அதிகாரி எஸ்.எச்.எஸ். சந்திரவன்ச முதல் நிலை சிறைச்சாலை அதிகாரியாகவும், ஏனைய காவலர்கள் சார்ஜன்ட் பதவிகளுக்கும் உயர்த்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் இருந்த அனைத்துக் கைதிகளும் இன்று வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர். </p><p>

சிறைச்சாலை மோதலில் பலத்த காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சார்ஜன்ட் கமகே உபாலியின் உடல், இன்று கம்புறுபிட்டியவில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.</p><p> 

இந்த மோதலில் உயிரிழந்த சார்ஜன்ட் ருவன் திலகசிறியின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் அம்பகஹவெவ பொது மயானத்தில் நடைபெற்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T16:05:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக யாழில் விசேட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/special-measures-in-jaffna-for-the-safety-tourists-1783699149"></link>
            <id>https://jvpnews.com/article/special-measures-in-jaffna-for-the-safety-tourists-1783699149</id>
            <summary type="text">யாழ்ப்பாண நகரின் பல்வேறு பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையூறாக இருந்த 30-க்கும் மேற்பட்ட யாசகர்கள் அப்பகுதிகளில் இருந்து அக...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண நகரின் பல்வேறு பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையூறாக இருந்த 30-க்கும் மேற்பட்ட யாசகர்கள் அப்பகுதிகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர்.
</p><p></p><p>யாழ்ப்பாணம் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக வடமாகாண சுற்றுலாத்துறை தலைவர் வைத்தியர் விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0c14ceb-eed7-4768-bb0b-c7489424132e/26-6a5116cf44cb3.webp' /></p><p>தூய்மையான சுற்றுச்சூழலை பேணுவதோடு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
</p><p>
பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து, யாழ் கோட்டை சுற்றுவட்டம், யாழ்ப்பாணம் பேருந்து நிலையம், கஸ்தூரியார் வீதி, மின்சார நிலைய வீதி மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை உள்ளிட்ட பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
</p><p>
இதன்போது, வெளிமாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து யாசகத்தில் ஈடுபட்டவர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. </p><p>மேலும், சிறுவர்களை யாசகத்தில் ஈடுபடுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T15:59:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டமாஸ்கஸில் தொடர் குண்டுவெடிப்புகள்: சவால்களை எதிர்கொள்ளும் புதிய சிரிய அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bombings-damascus-syrian-government-challenges-1783698333"></link>
            <id>https://tamilwin.com/article/bombings-damascus-syrian-government-challenges-1783698333</id>
            <summary type="text">சிரியாவில் ஆசாத் ஆட்சி வீழ்ந்து ஒன்றரை ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில்,
நாட்டின் தலைநகரான டமாஸ்கஸில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்று
சக்திவாய்ந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிரியாவில் ஆசாத் ஆட்சி வீழ்ந்து ஒன்றரை ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில்,
நாட்டின் தலைநகரான டமாஸ்கஸில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்று
சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.
</p><p>
ஜூலை 2ஆம் திகதி நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் உள்ள ஒரு உணவகத்தில் நடந்த
வெடிவிபத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
</p><p>
அதனைத் தொடர்ந்து, ஜூலை 7 ஆம் திகதி பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்
தங்கியிருந்த ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலுக்கு அருகே நிகழ்ந்த இரட்டைத் தாக்குதலில்
ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 36 பேர் காயமடைந்தனர்.</p><p></p><h2>புதிய அரசு</h2><p>
</p><p>
இந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பான ஐஎஸ்ஐஎல் பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த
ஒரு கும்பலைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக சிரியாவின்
உள்துறை அமைச்சர் அனாஸ் கத்தாப் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c575502-b52c-4ce6-bb56-33dbb17b2f92/26-6a51159ec6f2f.webp' /></p><p>
</p><p>
நீண்டகாலப் போருக்குப் பிறகு சிரியாவின் பொருளாதாரம், மின்சாரம் மற்றும்
உள்கட்டமைப்புகள் முற்றிலும் சிதைந்துள்ள சூழலில், புதிய அரசுக்கு இந்தத்
தொடர் குண்டுவெடிப்புகள் பெரும் பாதுகாப்புச் சவாலாக உருவெடுத்துள்ளன.
</p><p>
முன்னாள் ஆசாத் ஆட்சியின் முக்கியப் புள்ளிகள் மீதான உயர்மட்ட விசாரணைகள்
டமாஸ்கஸ் நீதிமன்றத்தில் நடந்துவரும் வேளையில், இந்தத் தாக்குதல்கள்
திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளன.</p><p>

இருப்பினும், இது சிரியாவின் ஒட்டுமொத்த பாதுகாப்புச் சீர்குலைவு அல்ல
என்றும், நாட்டின் ஸ்திரத்தன்மையை உலகிற்குத் தவறாகக் காட்டுவதற்காகவே
பயங்கரவாதிகள் இத்தகைய தாக்குதல்களை நடத்துவதாகவும் பாதுகாப்பு ஆய்வாளர்கள்
கருதுகின்றனர்.
</p><p>
பல வருடங்களாகப் போர்க் குண்டுகளுக்கு இடையே பழகிப்போன டமாஸ்கஸ் மக்கள், இந்த
அச்சத்திற்கு மத்தியிலும் தங்களின் வாழ்வாதாரத்திற்காகத் தினசரி வாழ்க்கையைத்
தொடர்ந்து நகர்த்தி வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T15:54:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[&quot;கரூர் நிகழ்ச்சி குறித்து அமீர் கேள்வி: '41 பேரை இழந்த குடும்பத்தினர் கைதட்டி மகிழ்ந்தார்களா?' – பதிவு வைரல்&quot;]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/director-ameer-questions-the-karur-event-viral-1783696403"></link>
            <id>https://ibctamilnadu.com/article/director-ameer-questions-the-karur-event-viral-1783696403</id>
            <summary type="text">கரூரில் கடந்த ஆண்டு தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று முதலமைச்சர் விஜய் நேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கரூரில் கடந்த ஆண்டு தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். </p><p>மேலும், 32 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய விஜய், கரூர் கூட்டத்திற்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் அந்த துயரச் சம்பவத்தை தவிர்த்திருக்க முடியும் என்றும் குற்றம்சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b883a3ac-22a7-48e7-bc0b-8a76ada70ecc/26-6a510ed5ca2dc.webp' /></p><p> </p><p>மேலும், கரூர் சம்பவத்தில் தாம் குடும்ப உறவுகளை இழந்ததாகவும், அதற்குப் பிறகும் தன் மீதே பழி சுமத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.</p><p>இந்த நிலையில், இயக்குநர் அமீர் தனது கருத்தில், "41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இன்று கைதட்டி மகிழ்ந்தார்களா? உங்கள் கைகளில் காவல்துறை இருந்தும் இன்னும் குற்றவாளிகளை யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லையா?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3399dbda-7b2c-4070-bdde-c35cfd8445fa/26-6a510ed67951a.webp' />&nbsp; &nbsp;</p><p>மக்களை ஏமாற்றும் கோயபல்ஸ் தத்துவம் இன்னும் எத்தனை ஆண்டுகள் தொடரும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T15:38:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டாவது திருமணம் பற்றி அதிரடி பதில் அளித்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/rachitha-mahalakshmi-opens-up-about-marriage-1783682744"></link>
            <id>https://viduppu.com/article/rachitha-mahalakshmi-opens-up-about-marriage-1783682744</id>
            <summary type="text">ரச்சிதா மகாலட்சுமிசீரியல் நடிகைகளில் டாப் நாயகியாக இருந்தவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.&amp;nbsp;விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன்-மீனாட்சி என்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரச்சிதா மகாலட்சுமி</h2><p>சீரியல் நடிகைகளில் டாப் நாயகியாக இருந்தவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.&nbsp;</p><p>விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன்-மீனாட்சி என்ற தொடர் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதை வென்றவர். அந்த சீரியல் தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வந்தார்.</p><p>பின் ஜீ தமிழ், கலர்ஸ் மற்ற தொலைக்காட்சியிலும் சீரியல்கள் நடித்து வந்தார். அண்மையில் ஒரு பேட்டியில் ரச்சிதாவிடம் திருமணம் பற்றி கேட்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5c66d1e-1ed3-4ba4-8dac-676831b22f66/26-6a50d6b998c63.webp' /></p><p>அதற்கு அவர்,&nbsp;எனக்குப் பலருக்கு உதவி செய்வதற்கு மிகவும் பிடிக்கும். நிறையப் பரிசுகளை மற்றவர்களுக்குக் கொடுப்பது பிடிக்கும், எல்லாவற்றிற்கும் மேலாகக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க வேண்டும், அவர்களைப் படிக்க வைக்க வேண்டும் என்ற பெரிய ஆசை இருக்கிறது. </p><p>ஜாலியாக ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் இந்த ரச்சிதாவிற்குள் இப்படியொரு ஆசையும் இருக்கிறது. இதையெல்லாம் நான் சுதந்திரமாகச் செய்ய வேண்டும் என்றால் நான் தனியாகத்தான் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-10T15:30:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு நீடிக்கும் என எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-global-energy-shortage-will-persist-1783696971"></link>
            <id>https://tamilwin.com/article/warning-global-energy-shortage-will-persist-1783696971</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மீண்டும் தொடங்கியுள்ள நேரடி இராணுவ
மோதல்கள், உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை மேலும் நீட்டிக்கச் செய்யும் என்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மீண்டும் தொடங்கியுள்ள நேரடி இராணுவ
மோதல்கள், உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை மேலும் நீட்டிக்கச் செய்யும் என்று
சர்வதேச எரிசக்தி முகவரகம் எச்சரித்துள்ளது.
</p><p>
கடந்த ஜூன் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு
ஒப்பந்தத்தின் காரணமாக உலகளாவிய மசகு எண்ணெய் சந்தை மெல்ல மீண்டு வந்த
நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள பதற்றம் அந்த நம்பிக்கையைச் சிதைத்துள்ளது.</p><p>

உலகளாவிய மசகு எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG)
ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பங்கைத் தன்வசம் கொண்டுள்ள 'ஹோர்முஸ் நீரிணை' பகுதி,
இந்த வார மோதல்களால் மீண்டும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>வீழ்ச்சி</h2><p>

இந்த மூலோபாய நீர்வழியின் மூடல் காரணமாக, உலக சந்தைக்கு வர வேண்டிய ஒரு
நாளைக்கு 14 மில்லியன் பெரல் மசகு எண்ணெய் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
</p><p>
இதன் காரணமாக, 2020 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல்முறையாக இந்த ஆண்டு உலகளாவிய
மசகு எண்ணெய்க்கான தேவை மிகக் கடுமையான வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று
சர்வதேச எரிசக்தி முகவரகத்தின் மாதாந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6aec7aa7-4618-4c10-8bdb-728455aed834/26-6a510e4d77783.webp' /></p><p>

தற்போது சர்வதேச சந்தையில் பிரெண்ட் மசகு எண்ணெய் ஒரு பெரல் 76.37 டொலராக
நிலைபெற்றுள்ள போதிலும், வரும் வாரங்களில் விநியோகத் பற்றாக்குறை காரணமாக இதன்
விலை மேலும் உயரக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.</p><p></p><h2>ஈரான் தாக்குதல்</h2><p>
</p><p>
இதற்கிடையில், மோதலைத் தணித்து மீண்டும் தற்காலிகப் போர்நிறுத்தத்தைக்
கொண்டுவரப் பாகிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் தீவிரப்
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1079a26-615e-4721-a102-80542999ac0d/26-6a510e4e28b37.webp' /></p><p>
</p><p>
பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான் போன்ற அண்டை நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல்
நடத்தியுள்ளதால், பிராந்திய அமைதியைக் காக்க எகிப்து மற்றும் வளைகுடா நாடுகள்
(GCC) இருதரப்பையும் போரைக் கைவிடுமாறு வலியுறுத்தி வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T15:29:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய பிரீமியம் பைக்குகள், மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யும் ஹோண்டா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/honda-india-to-launch-premium-bikes-evs-1783697011"></link>
            <id>https://news.lankasri.com/article/honda-india-to-launch-premium-bikes-evs-1783697011</id>
            <summary type="text">Honda நிறுவனம், இந்த ஆண்டு இந்தியாவில் 2 முதல் 3 புதிய பிரீமியம் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Honda நிறுவனம், இந்த ஆண்டு இந்தியாவில் 2 முதல் 3 புதிய பிரீமியம் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.</p><p>இந்தியாவில் தற்போது ஹோண்டாவின் விற்பனை பெரும்பாலும் 110cc-125cc கம்யூட்டர் பைக்குகளிலேயே உள்ளது. </p><p>ஆனால், அதிக சக்தி கொண்ட 200cc மேற்பட்ட பிரீமியம் பைக்குகள் சந்தையில் அதிகரித்து வரும் நிலையில், ஹோண்டா தனது பங்கு வலுப்படுத்த முயற்சி செய்கிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87e2134b-fda5-4562-8f41-8eec940569f1/26-6a510e750e71f.webp' /></p><p>FY26-இல் ஹோண்டா 3.16 மில்லியன் ஸ்கூட்டர்கள் மற்றும் 2.59 மில்லியன் மோட்டார் சைக்கிள்களை விற்றுள்ளது. அதில் 81 சதவீத விற்பனை கம்யூட்டர் பைக்குகளிலிருந்து வந்துள்ளது.</p><p>

“இந்தியாவில் GDP உயர்வு, வருமானம் அதிகரிப்பு மற்றும் உலகளாவிய தயாரிப்புகளின் தாக்கம் காரணமாக வாடிக்கையாளர்களின் விருப்பங்கள் மாறுகின்றன. அதற்கேற்ப நாங்கள் உள்ளூர் உற்பத்தி மற்றும் Make in India திட்டத்தின் கீழ் புதிய மாடல்களை அறிமுகப்படுத்துகிறோம்.” என HMSI தலைவர் Tsutsumu Otani கூறியுள்ளார்.
</p><p></p><p>ஹோண்டா, ராஜஸ்தானின் Tapukara மற்றும் குஜராத்தின் Vithalapur தொழிற்சாலைகளில் வருடத்திற்கு 6.5 லட்சம் யூனிட்கள் கூடுதல் உற்பத்தி திறனை உருவாக்குகிறது. FY28-க்குள் மொத்த உற்பத்தி திறன் 8 மில்லியன் யூனிட்களாக அதிகரிக்கும்.
</p><p>
மின்சார வாகன துறையில், ஹோண்டா புதிய மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்துகிறது. ஆனால், சார்ஜிங் வசதிகள் விரிவடையும் வரை, மின்சார வாகனங்களை படிப்படியாக அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T15:22:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு போஸ்ட்டுக்கு இவ்வளவா? நடிகை ஸ்ரீலீலா இன்ஸ்டாவில் சம்பாதிக்கும் தொகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/is-sreeleela-charging-this-much-for-instagram-post-1783696543"></link>
            <id>https://cineulagam.com/article/is-sreeleela-charging-this-much-for-instagram-post-1783696543</id>
            <summary type="text">நடிகை ஸ்ரீலீலா தற்போது இளசுகளை பெரிதும் கவர்ந்த நடிகையாக இருந்து வருகிறார். அவரது டான்ஸ் பெரிய அளவில் ஹிட் ஆகிறது. மேலும் ஹிந்தியிலும் அவர் அறிமுகம் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை ஸ்ரீலீலா தற்போது இளசுகளை பெரிதும் கவர்ந்த நடிகையாக இருந்து வருகிறார். அவரது டான்ஸ் பெரிய அளவில் ஹிட் ஆகிறது. மேலும் ஹிந்தியிலும் அவர் அறிமுகம் ஆவதால் அவரது கெரியர் இன்னும் உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இன்ஸ்டாவில் மட்டும் ஸ்ரீலீலாவுக்கு 16.6 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8683b396-c167-4d63-b397-c0b9b263f501/26-6a510ca061ec8.webp' /></p><p>
</p><h2>ஒரு போஸ்ட்டுக்கு இவ்வளவா?
</h2><p>ஸ்ரீலீலா இன்ஸ்டாவில் பதிவிடும் ஸ்பான்சர்டு போஸ்டுகளுக்கு வாங்கும் தொகை எவ்வளவு தெரியுமா? ஒரு பதிவுக்கு அவர் 8 - 10 லட்சம் ரூபாய் பெறுவதாக கூறப்படுகிறது.
</p><p>படங்களில் நடிப்பதற்கு வாங்கும் சம்பளம் ஒரு பக்கம் இருக்க, இதன் மூலமாகவும் அவர் மிகப்பெரிய தொகையை வருடம்தோறும் சம்பாதிக்கிறாராம்.
&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e64a77c9-badc-4c1e-97da-86b96b03bc40/26-6a510ca14595a.webp' /></p>]]></content>
            <updated>2026-07-10T15:15:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவை நிலைகுலைய செய்த பாவி புயல்! அடுத்து தாய்வானை நோக்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/typhoon-bavi-taiwan-about-to-hit-japan-1783692046"></link>
            <id>https://ibctamil.com/article/typhoon-bavi-taiwan-about-to-hit-japan-1783692046</id>
            <summary type="text">சீனாவின் கிழக்குக் கடற்கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சக்திவாய்ந்த பாவி(BAVI) சூறாவளியின் தாக்கத்தால் இதுவரை 50 உயிரிழப்புக்கள் பதிவாகியள்ளதாக அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவின் கிழக்குக் கடற்கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சக்திவாய்ந்த பாவி(BAVI) சூறாவளியின் தாக்கத்தால் இதுவரை 50 உயிரிழப்புக்கள் பதிவாகியள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>மணிக்கு 155 கி.மீ (96 மைல்) வேகத்தில் அதிகபட்ச தொடர் காற்றுடன் கூடிய இந்த புயல், தற்போது&nbsp;தாய்வானின் வடக்கு நோக்கி நகர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்படி இன்று இரவு முதல் சனிக்கிழமை வரை தாய்வானில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.</p><p></p><h2>முடப்பட்ட&nbsp;பாடசாலைகள்</h2><p>இதன்படி அந்நாட்டின் தலைநகரான தாய்பேயில் அனைத்து பாடசாலைகளும் முடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/612731f0-a830-487c-9755-80f699356ff4/26-6a50fb10a5eae.webp' /></p><p>மேலும், ஜப்பான், ஹாங்காங் மற்றும் பிற இடங்களுக்கான பல விமானங்கள் சனிக்கிழமை வரை இரத்து செய்யப்பட்டுள்ளன. </p><p>புயலின் தற்போதைய வடமேற்குப் பாதையானது, சனிக்கிழமையன்று தாய்வானின் வடக்கே கடந்து செல்வதற்கு முன்பு, சில தொலைதூர ஜப்பானியத் தீவுகளைக் கடந்து செல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது.</p><p>பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக சீனாவின் ஃபுஜியான் சில படகு வழித்தடங்களை நிறுத்தி வைத்துள்ளதுடன், படகுகளைத் துறைமுகத்திற்குத் திரும்புமாறும் அழைப்பு விடுத்துள்ளது.</p><p></p><h2>இடிந்து விழுந்த&nbsp;அணை</h2><p>மழையால் நீர்த்தேக்கங்கள் உடைந்த நிலையில், ஹெங்சோவில் உள்ள ஒரு அணையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், வேகமாகப் பாய்ந்த சேற்று நீர் ஒரு பரந்த பகுதியை மூழ்கடித்ததாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/915dafd1-5f39-486d-86fb-5628668b89f8/26-6a50fb0fee5fa.webp' /></p><p>இந்த வெள்ளத்தால், கட்டிடங்களின் இரண்டாவது மற்றும் அதற்கு மேற்பட்ட மாடிகளில் இருந்த மக்கள், மீட்புக் குழுவினர் வந்து சேரும் வரை பல நாட்களாக மின்சாரமின்றி சிக்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T15:15:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிதி குறைப்பால் உலகளவில் 10 இலட்சம் பெண்களுக்கான உதவிகள் முடக்கம்! ஐ.நா. கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/aid-for-1-million-women-worldwide-halted-funding-1783695034"></link>
            <id>https://tamilwin.com/article/aid-for-1-million-women-worldwide-halted-funding-1783695034</id>
            <summary type="text">உலகளவில் சர்வதேச நாடுகளின் நிதி ஒதுக்கீடு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதால்,
கடந்த 18 மாதங்களில் மட்டும் சுமார் ஒரு மில்லியன் பெண்கள்
மற்றும் சிறுமிகளு...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளவில் சர்வதேச நாடுகளின் நிதி ஒதுக்கீடு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதால்,
கடந்த 18 மாதங்களில் மட்டும் சுமார் ஒரு மில்லியன் பெண்கள்
மற்றும் சிறுமிகளுக்கான உயிர் காக்கும் அடிப்படை உதவிகள் முடங்கியுள்ளதாக
ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
</p><p>
பெண்களுக்கான அமைப்புகளிடம் உதவி கேட்டு வருவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டில்
அதிகரித்துள்ள போதிலும், போதிய நிதியின்மையால் 90 சதவீத அமைப்புகளால்
அவர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியவில்லை என ஐ.நா.வின்
மகளிர் அமைப்பான 'யு.என். வுமன்' வெளியிட்ட அறிக்கையில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
சர்வதேச அளவில் மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் அமெரிக்கா முன்னணியில் இருந்த
நிலையில், கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு
பதவியேற்ற பிறகு பல பில்லியன் டொலர் மதிப்பிலான வெளிநாட்டு நிதியுதவிகளை
அதிரடியாகக் குறைத்தது.</p><p></p><h2>அடிப்படைச் சேவை</h2><p>

மேலும், வெளிநாட்டு உதவிகளுக்கான 'யுஎஸ்ஏஐடி' அமைப்பு கலைக்கப்பட்டதால்,
அமெரிக்காவின் உலகளாவிய உதவிகள் 50 சதவீதத்திற்கும் மேலாகச் சரிந்தன.

அமெரிக்காவைத் தொடர்ந்து ஜெர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற பிற முக்கிய
நன்கொடை நாடுகளும் தங்களின் உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடி மற்றும்
பாதுகாப்புச் செலவின அதிகரிப்பு காரணமாக நிதியுதவிகளைக் குறைத்துள்ளன.
</p><p>
கொங்கோ, ஹைட்டி, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 52 நாடுகளில் செயல்படும் 855 பெண்கள்
அமைப்புகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், போதிய நிதியின்றி 40 சதவீத அமைப்புகள்
அடுத்த ஓராண்டுக்குள் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ மூடப்படும்
அபாயத்தில் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55b28d88-ee35-47fd-849e-db05fd165778/26-6a510a47e3e95.webp' /></p><p>
</p><p>
இந்த நிதி நெருக்கடியால் போர் சார்ந்த பாலியல் வன்கொடுமைகளால்
பாதிக்கப்பட்டவர்கள், இடம்பெயர்ந்த தாய்மார்கள் மற்றும் பாடசாலைப் படிப்பை
பாதியில் நிறுத்திய சிறுமிகள் ஆகியோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
உலகளவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் கடந்த ஓராண்டில்
இருமடங்காக அதிகரித்துள்ள போதிலும், 62 சதவீத அமைப்புகளால் பெண்களுக்குப்
பாதுகாப்பான இடங்களையோ அடிப்படைச் சேவைகளையோ வழங்க முடியாத அவலநிலை
உருவாகியுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T15:10:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[Zoo-க்கு போய் அழு; இனவெறியை சந்தித்த பிரபலம் Speed]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fifa-racism-allegations-involving-ishowspeed-1783686429"></link>
            <id>https://jvpnews.com/article/fifa-racism-allegations-involving-ishowspeed-1783686429</id>
            <summary type="text">&amp;nbsp; உலகமெங்கும் மக்களிடம் பிரபலமான யூடியூபர் Speed. ishowspeed என்கிற பெயரில் யுடியூப் மற்றும் இன்ஸ்டாராமில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமனவர் யூடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; உலகமெங்கும் மக்களிடம் பிரபலமான யூடியூபர் Speed. ishowspeed என்கிற பெயரில் யுடியூப் மற்றும் இன்ஸ்டாராமில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமனவர் யூடியூபர் Speed .

 இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு 51.3 மில்லியன் ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள். </p><p>இந்நிலையில்தான் இவர் அர்ஜென்டினா நாட்டு கால்பந்து ரசிகர் ஒருவரால் இனவெறி தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்.

மியாமியில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியை பார்ப்பதற்காக Speed சென்றிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b84298bc-bf11-413a-b5df-48f940b2da4d/26-6a50e51f23d49.webp' /></p><p> அப்போது அர்ஜென்டினா ஜெர்ஸி அணிந்திருந்த ஒருவர் கருப்பினத்தனவரான ஸ்பீடை பார்த்து மோசமாக சைகை செய்தார்.</p><p>

 மேலும், ஸ்பீடை பார்த்து ‘குரங்குகள் இருக்கும் Zoo-க்கு போய் அழு’ என ஸ்பானிஷ் மொழியில் நக்கலடித்தார். 

இந்த சம்பவம் வீடியோவாக வெளியாக சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் FIFA இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் சர்ச்சைக்குரிய சுகாதாரச் சட்டம் நிறைவேற்றம்- மக்கள் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-passes-healthcare-reform-amid-protests-1783695417"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-passes-healthcare-reform-amid-protests-1783695417</id>
            <summary type="text">ஜேர்மனியின் நாடாளுமன்ற கீழ்சபை (Bundestag) சுகாதாரச் செலவுகளை குறைக்கும் புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டம் 2027 முதல் அமலுக்கு வரும்.

ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியின் நாடாளுமன்ற கீழ்சபை (Bundestag) சுகாதாரச் செலவுகளை குறைக்கும் புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. </p><p>இந்த சட்டம் 2027 முதல் அமலுக்கு வரும்.

புதிய சட்டத்தின் படி, மருந்துகளுக்கான co-payment அதிகரிக்கப்படும். இதுவரை 5 முதல் 10 யூரோவாக இருந்த கட்டணம், இனி 7.50 முதல் 15 யூரோவாக உயர்த்தப்படும்.</p><p></p><p>மேலும், காப்பீடு பெற்றவர்களின் துணைவர் இனி இலவசமாக காப்பீடு பெற முடியாது, அவர்களும் தனியாக காப்பீடு செய்ய வேண்டும்.
</p><p>
சில சிகிச்சைகள், குறிப்பாக ஹோமியோபதி மற்றும் பல் மாற்று சிகிச்சைகளுக்கான காப்பீடு குறைக்கப்படும். சில அறுவை சிகிச்சைகளுக்கு முன், இரண்டாவது மருத்துவரின் கருத்து பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/022d73c0-fbb6-4059-b8f5-5d0d2877cb7f/26-6a51083baa84f.webp' /></p><p>இந்தச் சட்டம் மூலம் ஜேர்மன் அரசு 16.3 பில்லியன் யூரோ செலவுகளை குறைக்க திட்டமிட்டுள்ளது.

ஆனால், மருத்துவர்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் நோயாளிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
</p><p>
Green Party மற்றும் Left Party உறுப்பினர்கள், இந்தச் சட்டம் மருத்துவமனைகள் மூடப்படுவதற்கும், மருத்துவர்கள் மற்றும் மனநல நிபுணர்கள் அதிக சுமையைச் சந்திக்க வேண்டிய நிலைக்கும் வழிவகுக்கும் என எச்சரித்துள்ளனர்.
</p><p>
இச்சட்டம் தற்போது நாடாளுமன்ற மேலவை (Bundesrat) அனுமதி பெற வேண்டும். அங்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், mediation committee-க்கு அனுப்பப்படும்.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T14:56:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சுற்றுலாவிகளுக்கு இடையூறாக யாசகம் செய்தோருக்கு எதிராக நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/action-against-beggars-in-jaffna-1783690695"></link>
            <id>https://ibctamil.com/article/action-against-beggars-in-jaffna-1783690695</id>
            <summary type="text">யாழ். நகர்ப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும்
விதமாகவும் சுற்றுலாவிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலும் நடமாடிய 30
இற்கும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். நகர்ப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும்
விதமாகவும் சுற்றுலாவிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலும் நடமாடிய 30
இற்கும் அதிகமான யாசகர்கள் இன்று யாழ். காவல்துறையின் பங்களிப்புடன்
வெளியேற்றபட்டுள்ளதாக வடக்கு மாகாண சுற்றுலாத்துறை தலைவர்
வைத்தியர் விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார்.</p><p>
இது தொடர்பில் அவர் கூறுகையில்,&nbsp; &nbsp;“சுற்றுச் சூழலை சீர்செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறிப்பாக யாழ் நகரப்பகுதி அதாவது யாழ் கோட்டைச் சுற்றுவட்டம், பேருந்து
நிலையம், கஸ்தூரியார் வீதி, மின்சார நிலைய வீதி, போதனா வைத்தியசாலை சூழல் ஆகிய
பகுதிகளில் வியாபார நிலையங்களுக்கும் வெளிநாட்டு சுற்றுலாவிகள் மற்றும்
உள்ளூர் மக்கள் ஆகியோருக்கு நாளாந்தம் பல்வேறு வகையிலும் யாசகம் என்ற
போர்வையில் அசௌகரியங்களை ஏற்படுத்தும் நபர்களை கட்டுப்படுத்துமாறு எம்மிடம்
கோரிக்கை பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வந்தது.</p><p></p><h2>30 யாசகர்கள்</h2><p>
</p><p>
இந்நிலையில் இன்று குறித்த நடவடிக்கையை யாழ். காவல் நிலைய பொறுப்பதிகாரி பாலித
செனவிரத்னவின் கவனத்துக்கு எம்மால் கொண்டுசெல்லப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cb2442d-92a5-4a81-b30a-0206dded6699/26-6a50f5c8c0428.webp' /></p><p>
</p><p>
அத்துடன் யாழ் மா நகரின் ஒத்துழைப்பையும் நாம் கோரியிருந்தோம். இந்த நடவடிக்கையின் போது வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 30 யாசகர்கள் மற்றும்
வியாபார செயற்பாடுகளை முன்னெடுத்துவந்தோர் கைதுசெய்யப்படு,&nbsp; தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டபின் அவர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T14:50:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் பரவும் அரிதான ஸ்கேபிஸ் நோய்- மருத்துவர்கள் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-crusted-scabies-outbreak-rare-skin-disease-1783687761"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-crusted-scabies-outbreak-rare-skin-disease-1783687761</id>
            <summary type="text">பிரித்தானியாவில் அரிதான மற்றும் மிகவும் தொற்றக்கூடிய நோயான Crusted Scabies (Norwegian Scabies) பரவிவருகிறது.
இதனால் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள Glangwili...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் அரிதான மற்றும் மிகவும் தொற்றக்கூடிய நோயான Crusted Scabies (Norwegian Scabies) பரவிவருகிறது.</p><p>
இதனால் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள Glangwili வைத்தியசாலையின் Steffan Ward தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
</p><p>
சாதாரண Scabies நோயில் கடுமையான அரிப்பு மற்றும் சிரங்கு ஏற்படும். ஆனால் Crusted Scabies நோயாளிகளில் இவை தெளிவாக தெரியாது.

இருப்பினும், இவர்களின் உடலில் இரண்டு மில்லியன் வரை mites மற்றும் முட்டைகள் இருக்கக்கூடும். இதனால் நோய் மிக வேகமாக பரவக்கூடியதாக இருக்கும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c368f598-ce46-48c5-ac2a-5a4cb7e28bc9/26-6a50ea52e6675.webp' /></p><p>மருத்துவ அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த நோயாளிகள் மற்றும் பணியாளர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்துள்ளனர். அறிகுறிகள் தெரியாதவர்களுக்கும் முன்னெச்சரிக்கை சிகிச்சை வழங்கப்படுகிறது.</p><p>
இந்த நோய் முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், HIV/AIDS நோயாளிகள், நரம்பியல் பிரச்சினைகள் உள்ளவர்கள் ஆகியோருக்கு அதிக ஆபத்தானது.</p><p></p><p>Crusted Scabies சரியான நேரத்தில் கண்டறியப்படாவிட்டால், secondary bacterial infections மற்றும் sepsis போன்ற உயிருக்கு ஆபத்தான சிக்கல்கள் ஏற்படலாம்.
</p><p>
தடுப்பு நடவடிக்கைகளாக, பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல், உடைகள் மற்றும் படுக்கைச் சீலைகளை சுத்தம் செய்தல், மருத்துவமனைகளில் கடுமையான சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
</p><p>
மருத்துவ நிபுணர்கள், இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிதல் மிக முக்கியம் என எச்சரித்துள்ளனர். சரியான சிகிச்சை அளிக்கப்பட்டால் பரவலை கட்டுப்படுத்த முடியும்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T14:48:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்லைன் விசா வழங்க தனியார் நிறுவனங்களுக்கு முந்தைய அரசு அனுமதி..! நீதிமன்றத்தில் சூடுபிடிக்கும் வாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-decision-regarding-online-visa-1783671258"></link>
            <id>https://tamilwin.com/article/government-decision-regarding-online-visa-1783671258</id>
            <summary type="text">ஒன்லைன் விசா வழங்கும் செயல்முறையைத் தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவதற்காக கடந்த அரசாங்கம் மேற்கொண்ட ஒப்பந்தங்களை சட்டப்பூர்வமாக மறுபரிசீலனை செய்ய தற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒன்லைன் விசா வழங்கும் செயல்முறையைத் தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவதற்காக கடந்த அரசாங்கம் மேற்கொண்ட ஒப்பந்தங்களை சட்டப்பூர்வமாக மறுபரிசீலனை செய்ய தற்போதைய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். </p><p>

இது தொடர்பான வழக்கு இன்று(10.07.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>கடந்த அரசாங்கத்தின் போது ஒன்லைன் விசா வழங்கும் செயல்முறையைத் தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவதற்காக அப்போதைய அமைச்சரவை எடுத்த முடிவை எதிர்த்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்ட ஆலோசகர் எம்.ஏ. சுமந்திரன், பத்தாலி சம்பிகா ரணவக்க மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுக்கள் இன்று(10) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. </p><h2>

ஒன்லைன் விசா&nbsp;</h2><p>
இதன்போது, ​​சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விவேக சிறிவர்தன இந்த தகவலை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50bc18fa-a748-40d1-951d-562bea567531/26-6a5104862abb8.webp' /></p><p> 

இந்த மனுவை பிரதம நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேன விசாரணை செய்துள்ள நிலையில், நீதிபதிகள் அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் இந்த மனு விசாரணை செய்யப்பட்டுள்ளது. </p><p>

மனுக்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, ​​தலைமை சட்டத்தரணிக்காக முன்னிலையான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ஒன்லைன் விசா வழங்கும் செயல்முறை தொடர்பாக தனியார் நிறுவனங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களின் சட்டப்பூர்வத்தன்மையை ஆராய தற்போதைய அமைச்சரவை ஒரு துணைக் குழுவை நியமித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். </p><h2>


ஒப்பந்தங்களை தொடர அரசத்தரப்பு முடிவு</h2><p>
அந்தக் குழு சம்பந்தப்பட்ட விடயங்களை ஆராய்ந்து வருவதாகக் கூறி, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் தெரியப்படுத்துவதற்காக திகதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea29428b-e318-4f12-bc02-9ee6dc86f014/26-6a510486dc174.webp' /></p><p> </p><p>

இதனைத் தொடர்ந்து மனுதாரர்களில் ஒருவரான ஜனாதிபதி சட்ட ஆலோசகர் எம்.ஏ. சுமந்திரன்,</p><p> </p><p>

தற்போதைய அரசு அந்தப் பரிவர்த்தனையை ரத்து செய்ய முடிவு செய்திருந்தாலும், இந்த மனுவைத் தொடர எதிர்பார்ப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p>

 இந்த மனுவில் தற்போதைய அமைச்சரவை உறுப்பினர்கள் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சட்ட ஆலோசகர் தெரிவித்துள்ளார்.</p><p> 

அதன்படி, தற்போதைய அமைச்சரவை உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரருக்கு அமர்வு உத்தரவிட்டதுடன், இந்த மனுவை செப்டம்பர் 29 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் திகதியிட்டு ஒத்திவைத்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T14:41:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனி விமானம் பிடித்து ஓடியது யார் என மக்களுக்கு தெரியும் - முதல்வர் விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/senthil-balaji-react-to-cm-vijay-karur-speech-1783694429"></link>
            <id>https://ibctamilnadu.com/article/senthil-balaji-react-to-cm-vijay-karur-speech-1783694429</id>
            <summary type="text">தனி விமானம் பிடித்து ஓடியது யார் என மக்களுக்கு தெரியும் என்று முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். 

 முதல்வர் விஜய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனி விமானம் பிடித்து ஓடியது யார் என மக்களுக்கு தெரியும் என்று முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். </p><h3>

 முதல்வர் விஜய் பேச்சு </h3><p>

இன்று கரூருக்கு வருகை தந்த தமிழக முதல்வர் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்வில், திமுகவை குறித்து கடுமையாக விமர்சித்து பேசினார். </p><p>

குறிப்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் குறித்து பேசிய போது, "கரூர் போலீசே எங்களை கூட்டிட்டு வந்த அந்த நாடகத்தை முழுசா நம்பிட்டேன். இதுக்கெல்லாம் யார் காரணம்? இதெல்லாம் யார் சொல்லி செஞ்சது?&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c22017f-a89a-4b2f-975c-f31411bb27bc/26-6a51045f42889.webp' /></p><p>
குடும்ப உறவுகள இழந்து அந்த வலியோடு இருக்க என்ன ஏளனமா பேசுவீங்களா.. என் மேல பழிய தூக்கி போடுவீங்களா.. இப்படி நடந்திருச்சேனு அந்த வேதனையோடு, வீட்டில இருந்த என்ன, ஓடி ஒளிஞ்சிட்டானு சொல்றீங்களா" என பேசினார். </p><p>

முதல்வரின் இந்த பேச்சுக்கு திமுக தரப்பில் எதிர்வினை எழுந்துள்ளது.</p><h3>

தனி விமானம் பிடித்து ஓடியது யார்?</h3><p>

இது குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cde4d383-5849-4e14-8202-9f68dfa8dcd1/26-6a51045fe5015.webp' /></p><p>

மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள். </p><p>அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.

அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
</p><p>
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-10T14:40:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[9,18,27ஆம் திகதியில் பிறந்தவர்களுக்கான எண்கணித பலன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/birth-date-numerology-in-tamil-1783688190"></link>
            <id>https://news.lankasri.com/article/birth-date-numerology-in-tamil-1783688190</id>
            <summary type="text">எண் கணிதம் என்பது ஒவ்வொருவரின் பிறந்த தேதி மற்றும் பெயரில் உள்ள எழுத்துக்களின் அடிப்படையில், எண்களின் ஆற்றலையும் அதன் தாக்கத்தையும் ஆராயும் ஒரு பழங்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>எண் கணிதம் என்பது ஒவ்வொருவரின் பிறந்த தேதி மற்றும் பெயரில் உள்ள எழுத்துக்களின் அடிப்படையில், எண்களின் ஆற்றலையும் அதன் தாக்கத்தையும் ஆராயும் ஒரு பழங்கால முறையாகும்.
</p><p>
இது உங்கள் குணநலன்கள், பலம், பலவீனங்கள் மற்றும் எதிர்கால வாய்ப்புகளைப் புரிந்து கொள்ள உதவுகிறது.
</p><p>
எண்கணிதம் உங்கள்அன்றாட வாழ்வில் துல்லியமான முடிவுகளை எடுக்கவும், சிக்கல்களைத் தீர்க்கும் திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.
</p><p>
நிதி நிர்வாகத்தை எளிதாக்குவதோடு, தர்க்கரீதியான சிந்தனையை வளர்த்து, சிறப்பான தொழில் வாய்ப்புகளுக்கும் இது அடித்தளமாக அமைகிறது.
</p><p>
எண் கணிதத்தில் 1 முதல் 9 வரையிலான எண்கள் மிக முக்கியமானவை. ஒவ்வொரு எண்ணும் ஒரு குறிப்பிட்ட கிரகத்தால் ஆளப்படுகிறது.</p><p>
அந்தவகையில் 9,18,27ஆம் திகதியில் பிறந்தவர்களுக்கான எண்கணித பலன்களை இராம்ஜி சுவாமிகள் இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/i9GuPE9kwjg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T14:40:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அத்திக்காய் ஊறுகாய்... ஒருமுறை செய்து பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/cluster-fig-pickle-recipe-in-tamil-1783682813"></link>
            <id>https://manithan.com/article/cluster-fig-pickle-recipe-in-tamil-1783682813</id>
            <summary type="text">அத்திப்பழம் சாப்பிட்டிருப்பவர்கள் அத்திக்காயில் ஊறுகாய் செய்து பலரும் சாப்பிட்டிருக்க மாட்டார்கள். தற்போது அத்திக்காய் ஊறுகாய் எவ்வாறு செய்யலாம் என்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அத்திப்பழம் சாப்பிட்டிருப்பவர்கள் அத்திக்காயில் ஊறுகாய் செய்து பலரும் சாப்பிட்டிருக்க மாட்டார்கள். தற்போது அத்திக்காய் ஊறுகாய் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.</p><h2>தேவையான பொருட்கள்</h2><p>அத்திக்காய்- 1/4 கிலோ
<br>காய்ந்த மிளகாய்-50 கிராம்
<br>மிளகு, தனியா, மஞ்சள்- தலா 5 கிராம்
<br>ஓமம், பெருங்காயம்- தலா 5 கிராம்&nbsp;<br>உப்பு - 20 கிராம்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d503140-41de-4d9c-aa4f-032be6d392b6/26-6a50e8896a7fa.webp' /></p><h2>செய்முறை</h2><p>அத்திக்காய் தவிர அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக லேசாக வறுத்து அரைத்துக் கொள்ளவும். பின்னர் அத்திக்காயை காம்பு&nbsp;நீக்கி இரண்டாக அரிந்து ஒரு பாத்திரத்தில் போட்டு, அரைத்து வைத்துள்ள விழுதையும் அதோடு சேர்த்து நன்றாக கலக்கவும்.</p><p>அதை ஓர் உலர்ந்த பாத்திரத்தில் இட்டு, அதன் வாயில் துணியைக் கட்டி ஒரு வாரம் வரை வெயிலில் வைத்திருந்து பின்னர் உபயோகிக்கவும்</p><p>இந்த ஊறுகாயை உண்டு வர, நன்கு செரிமானம் ஏற்படும். பித்தம் தணியும். இதய நோயாளிகளுக்கு ஏற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a6ccd49-febb-45a7-8539-9c3d07e886a3/26-6a50e888a75a3.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW&nbsp; </b></a>&nbsp; &nbsp; &nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T14:37:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யூடியூப் காணொளிகளை 'லைக்' செய்தால் 500 ரூபாய் பணம் வருமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-warning-youtube-video-likes-earn-money-1783688732"></link>
            <id>https://jvpnews.com/article/police-warning-youtube-video-likes-earn-money-1783688732</id>
            <summary type="text">&amp;nbsp; யூடியூப் காணொளிகளுக்கு &#039;லைக்&#039; செய்வதன் மூலம் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என வரும் குறுஞ்செய்திகள், நிதி மோசடிக்காகப் பின்னப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யூடியூப் காணொளிகளுக்கு 'லைக்' செய்வதன் மூலம் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என வரும் குறுஞ்செய்திகள், நிதி மோசடிக்காகப் பின்னப்பட்ட வலையாகும் என இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
அத்துடன், டெலிகிராம் போன்ற சமூக ஊடகத் தளங்களில் பதுங்கியிருக்கும் இத்தகைய மோசடிக்காரர்களிடம் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bc2a9e2-6fed-4602-b2c2-25264aad2ab3/26-6a50ee1dd33a7.webp' /></p><p></p><h2>500 ரூபாய் வழங்கப்படுவதாகக் கூறப்படுவது ஒரு பொறி&nbsp;</h2><p>
</p><p>
எந்தவொரு முதலீட்டை மேற்கொள்வதற்கு முன்பும், மக்கள் தமது பொது அறிவைப் பயன்படுத்திச் சிந்தித்துச் செயற்படுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
குறிப்பாக, ஒரு யூடியூப் காணொளிக்கு 'லைக்' இடுவதற்கு 500 ரூபாய் வழங்கப்படுவதாகக் கூறப்படுவது ஒரு பொறி என்பதைப் புரிந்துகொள்ளுமாறும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[13 மில்லியன் பீப்பாய் தேசிய எண்ணெய் காப்பகம் அமைக்க இந்திய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indias-ongc-plans-13m-bbl-oil-reserve-1783693729"></link>
            <id>https://news.lankasri.com/article/indias-ongc-plans-13m-bbl-oil-reserve-1783693729</id>
            <summary type="text">இந்தியாவின் Oil and Natural Gas Corporation (ONGC) நிறுவனம், மங்களூரில் 1.75 மில்லியன் மெட்ரிக் டன் (சுமார் 13 மில்லியன் பீப்பாய்) கொள்ளளவு கொண்ட தேசி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் Oil and Natural Gas Corporation (ONGC) நிறுவனம், மங்களூரில் 1.75 மில்லியன் மெட்ரிக் டன் (சுமார் 13 மில்லியன் பீப்பாய்) கொள்ளளவு கொண்ட தேசிய எண்ணெய் காப்பகம் (Strategic Petroleum Reserve-SPR) ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது.
</p><p>
இந்தியா உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதி நாடாகும். ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதியில் ஏற்பட்ட தடைகள் காரணமாக, இந்தியா தனது எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14957904-16bb-4b51-bc29-8b8a47f9acfb/26-6a5101a37e894.webp' /></p><p>தற்போது இந்தியாவிடம் மங்களூர், படூர், விசாக் ஆகிய இடங்களில் 5.33 மில்லியன் டன் கொள்ளளவு கொண்ட எண்ணெய் சேமிப்பு கிடங்கு உள்ளது.
</p><p>
புதிய காப்பகம் தேசிய நலனுக்காக உருவாக்கப்படுவதோடு, வணிக பயன்பாட்டிற்கும் அனுமதி பெற திட்டமிடப்பட்டுள்ளது.
</p><p></p><p>ONGC-யின் துணை நிறுவனம் Mangalore Refinery and Petrochemicals Ltd ஏற்கனவே மங்களூர் SPR-இன் ஒரு பகுதியை பயன்படுத்தி வருகிறது. மீதமுள்ள பகுதி Abu Dhabi National Oil Company (ADNOC)-க்கு வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளது.</p><p>இந்திய அரசு, ஓடிசா மாநிலத்தில் 4 மில்லியன் டன் கொள்ளளவு கொண்ட SPR மற்றும் படூரில் 2.5 மில்லியன் டன் கொள்ளளவு கொண்ட புதிய காப்பகத்தை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. </p><p>ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுடன் இந்தியா எரிசக்தி ஒத்துழைப்பை அதிகரித்து வருகிறது.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு வலுவடையும்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T14:27:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[29 பேரை பலியெடுத்த நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - அதிகாரிகளுக்கு பதவி உயர்வு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/8-officers-killed-in-negombo-clash-promoted-1783692785"></link>
            <id>https://tamilwin.com/article/8-officers-killed-in-negombo-clash-promoted-1783692785</id>
            <summary type="text">&amp;nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு சிறைத்துறை பதவி உயர்வு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய கடந்த 5 மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு சிறைத்துறை பதவி உயர்வு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதற்கமைய கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் சிறைக் கைதிகளுக்குள் கிளம்பிய மோதலில் 8 அதிகாரிகள் உட்பட 29 பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். </p><p>

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.</p><p></p><p>

இதன் அடிப்படையில், நீர்கொழும்பு மருத்துவமனை மற்றும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><h2>

கட்டுவெல்லகம சுரேஷால் தாக்கப்பட்ட கைதிகள்</h2><p>
அத்துடன், கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 29 அதிகாரிகள் மற்றும் கைதிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/111933e8-297a-4336-8dbc-ffba4edbc9a9/26-6a51011db2169.webp' /></p><p>
</p><p>
அவர்களில் உள்ள அனைத்து கைதிகளும் கட்டுவெல்லகம சுரேஷால் தாக்கப்பட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p> 

இந்நிலையில், கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறை அதிகாரிகளிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, ஆனால் அவற்றை இன்னும் முழுமையாகப் பதிவு செய்ய முடியாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

ஏனெனில், சில அதிகாரிகள் வாக்குமூலம் அளிப்பதற்கு உகந்த உடல்நிலையில் இல்லை.</p><p>

இதற்கிடையில், மோதலில் உயிரிழந்த எட்டு சிறை அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
</p><h2>

அதிகாரிகளுக்கு பதவி உயர்வு</h2><p>

கொலை செய்யப்பட்ட இரண்டாம் வகுப்பு சிறைக்காவலர் எஸ்.எச்.எஸ். சந்திரவன்ச முதலாம் வகுப்பு சிறைக்காவலர் பதவிக்கும், மற்ற சிறைக்காவலர்கள் சார்ஜென்ட் (Sergeant) பதவிக்கும் பதவி உயர்வு பெற்றுள்ளனர் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b73edd57-3283-452d-9abb-74380e1cb02c/26-6a51011e5fe0c.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், நீர்கொழும்பு சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் இருந்த அனைத்து கைதிகளும் இன்று மற்ற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். </p><p>

சிறைச்சாலையில் நடந்த மோதலின் போது படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சார்ஜென்ட் கமகே உபாலியின் உடல், இன்று(10.07.2026) கம்புருபிட்டியாவில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p> 

இதற்கிடையில், மோதலில் உயிரிழந்த சார்ஜென்ட் ருவன் திலகசிறியின் இறுதிச் சடங்குகள் இன்று(10) பிற்பகல் அம்பகஹாவெவ பொது மயானத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-07-10T14:26:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலையும் விட்டுவைக்காத பதிலடி! தாக்குதலில் இருந்து அமெரிக்கா தப்பாது என்கிறது ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-going-launch-attack-that-israel-cannot-avoid-1783693286"></link>
            <id>https://ibctamil.com/article/iran-going-launch-attack-that-israel-cannot-avoid-1783693286</id>
            <summary type="text">தனது உள்கட்டமைப்பு மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் ஈரான் பதிலடி கொடுக்கும் என்றும், அந்தப் பதிலடியிலிருந்து இஸ்ரேலும் தப்பாது என்றும் ஈரானின் உயர்மட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது உள்கட்டமைப்பு மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் ஈரான் பதிலடி கொடுக்கும் என்றும், அந்தப் பதிலடியிலிருந்து இஸ்ரேலும் தப்பாது என்றும் ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு செயலாளர் எச்சரித்துள்ளதாக மத்திய கிழக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>முன்னரே எச்சரித்தபடி, ஈரானிய உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்ட றிலையில்&nbsp;ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு மன்றத்தின் செயலாளர் முகமது பாகர் சுல்காத்ரினால் மேற்படி எச்சரிக்கை வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> மேலும் ஈரானிய ஆயுதப் படைகளின் எதிர்வினையிலிருந்து இஸ்ரேல் பாதுகாப்பாக இருக்காது என்று அவர் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஈரானின் எதிரொலி</h2><p>ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்லும் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய சமீபத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறி, அமெரிக்கா புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் தெற்கு ஈரானில் உள்ள பல நகரங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b4e7911-3580-4201-8b25-a13fc1603c79/26-6a51005e3b4d4.webp' /></p><p>மேலும், வடகிழக்கு ஈரானில் உள்ள இரண்டு தொடருந்து பாலங்களையும் இந்த தாக்குதல் குறிவைத்தது.</p><p>இதற்கு பதிலடியாக, குவைத், பஹ்ரைன், கட்டார் மற்றும் ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் வசதிகள் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையும் இராணுவமும் தெரிவித்துள்ளன.
</p><p>
சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட அமைதிப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, ஈரானும் அமெரிக்காவும் இறுதி உடன்பாட்டை எட்டுவதற்காக 60 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில் இந்த மோதல்கள் நிகழ்ந்தமை அமைதியடைந்த மத்தியகிழக்கின் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T14:21:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சென்னையில் பிபிஎல் தொடக்க போட்டி நடத்துவது ஏன்? BBL தலைவர் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chennai-to-host-bbl-opener-in-12-december-1783692512"></link>
            <id>https://news.lankasri.com/article/chennai-to-host-bbl-opener-in-12-december-1783692512</id>
            <summary type="text">சென்னையில் பிபிஎல் தொடக்க போட்டி நடத்துவது ஏன் என BBL தலைவர் தெரிவித்துள்ளார். 

சென்னையில் பிபிஎல் தொடக்க போட்டி

2011 ஆம் ஆண்டு முதல் பிக் பாஸ் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னையில் பிபிஎல் தொடக்க போட்டி நடத்துவது ஏன் என BBL தலைவர் தெரிவித்துள்ளார். </p><h3>

சென்னையில் பிபிஎல் தொடக்க போட்டி
</h3><p>
2011 ஆம் ஆண்டு முதல் பிக் பாஸ் லீக் (Big Bash League - BBL) T20 தொடரை அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், நடத்தி வருகிறது. இதில் 8 அணிகள் பங்கு பெற்று வருகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86dadab3-bd3c-472e-84f2-6710225f7883/26-6a50fce3ccaf8.webp' /></p><p> 

முதல்முறையாக BBL போட்டி அவுஸ்திரேலியாவிற்கு வெளியே நடத்தப்பட உள்ளது. இதே போல் ஒரு வெளிநாட்டு பிரான்சைஸ் தொடரின் போட்டி முதல்முறையாக இந்தியாவில் நடத்தப்பட்ட உள்ளது.</p><p> 

2026 BBL தொடரின் தொடக்கப்போட்டி, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது.&nbsp;</p><p></p><p> 

சில மாதங்களுக்கு முன்னரே, அவுஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகிகள் சேப்பாக்கம் மைதானத்திற்கு வருகை தந்து ஆய்வு செய்ததோடு, பிசிசிஐ மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
</p><p>
இந்திய பிரதமர் மோடி அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ள நிலையில், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) நடைபெற்ற ஒரு நிகழ்வில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.</p><h3>
போட்டி நடைபெற உள்ள திகதி, நேரம்</h3><p> சென்னையில் டிசம்பர் 12 ஆம் திகதி நடைபெற உள்ள போட்டியில், நடப்பு சாம்பியனான பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனேகேட்ஸ் விளையாட உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f3c8f4f-5bb9-4e81-99e4-ff519c687e2a/26-6a50fce32abdb.webp' /></p><p>

இந்திய நேரப்படி பிற்பகல் 2.40 மணிக்கு இந்த போட்டி தொடங்கும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5d3d3ac-1f24-4cf7-ad93-168852ad4b65/26-6a50fce47b505.webp' /></p><p> 

ஸ்கார்ச்சர்ஸ் அணியில் மிட்செல் மார்ஷ், கூப்பர் கொன்னோலி ஆகியோர் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜோஷ் இங்லிஸ், ஜை ரிச்சர்ட்சன் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றால், அவர்களையும் அணியில் சேர்க்க வாய்ப்புள்ளது. </p><h3>

சென்னையில் நடத்த காரணம்</h3><p>

இது குறித்து பேசிய BBL நிர்வாகப் பொது மேலாளர் அலிஸ்டர் டாப்சன், "இந்தியா முழுவதும், குறிப்பாக சென்னையில், கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/294fca50-9880-432a-9eac-4db1b26a8946/26-6a50fce27a8ff.webp' /></p><p>
நாங்கள் பேசிய அனைவரும், நல்ல கூட்டம் வரும் என எதிர்பார்க்கலாம் என மிகவும் நம்பிக்கையுடன் இருந்தனர். இந்த நிகழ்வை நாங்கள் கட்டமைத்தபோது, ​​இந்தியாவில் பிபிஎல் ஏற்கனவே எவ்வளவு பிரபலமாக உள்ளது என்பது எங்களுக்குத் தெளிவாகியுள்ளது.</p><p> 

ஐபிஎல்க்கு ஈடாகாது என்றாலும், பிபிஎல் மிகவும் விரும்பப்படும் ஒரு தொடராகும். கூட்டத்தில் கணிசமான அளவு மஞ்சள் நிற உடைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அவுஸ்திரேலியாவில் தொலைக்காட்சியில் பார்க்கும் மக்கள், இது ஒரு பிபிஎல் போட்டி போலவே தோற்றமளிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். </p><p>

ஒரு ஐபிஎல் போட்டியை இங்கு நடத்துவதற்கான ஆர்வம் அரசு மற்றும் கிளப்களிடையே உள்ளது. நேரம் வரும்போது அந்தக் கலந்துரையாடல்களை நடத்துவதற்கான வாய்ப்பை, நாங்கள் நிச்சயமாக வரவேற்போம். ஏனெனில், அவுஸ்திரேலியாவில் ஐபிஎல்க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது" என பேசியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T14:15:00+00:00</updated>
        </entry>
    </feed>
