<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-18T08:51:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதலை ஏற்க மறுத்த யுவதி; பட்டப்பகலில் வாலிபர் அரங்கேறிய கொடூரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/women-murder-bus-stand-rejecting-love-karnataka-1784364207"></link>
            <id>https://jvpnews.com/article/women-murder-bus-stand-rejecting-love-karnataka-1784364207</id>
            <summary type="text">&amp;nbsp; காதலை ஏற்க மறுத்த யுவதியை இளைஞன் பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் அரங்க்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; காதலை ஏற்க மறுத்த யுவதியை இளைஞன் பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் அரங்க்கேரிய ஈசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p><p> 

இந்தியா கர்நாடக மாநிலம் பண்ட்வால் தாலுகா காக்யபாடா அருகே கொடங்கே பகுதியை சேர்ந்தவர் பாலப்பா கவுடா. இவரது மகள் லாவண்யா (வயது 22). இவர் கல்லடுக்காவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abd1a0f2-7449-43f1-af65-7dd0ead84796/26-6a5b3cb0c0c4d.webp' /></p><h2>காதலை ஏற்க மறுத்த யுவதி....</h2><p> </p><p>

இவர் தினமும் வேலைக்கு பஸ்சில் சென்றுவிட்டு திரும்பி வந்தார். இந்த நிலையில் லாவண்யாவை தூரத்து உறவினரான சேத்தன் (25) என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். </p><p>அவரது காதலை லாவண்யா ஏற்கவில்லை என தெரிகிறது. ஆனாலும் சேத்தன் அவரை பின்தொடர்ந்து வந்து காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

இதனால், சேத்தனை, லாவண்யா திட்டியதுடன் தனது பின்னால் சுற்ற வேண்டாம் என கண்டித்ததாக தெரிகிறது.</p><p></p><p> </p><p>நேற்று (16) வழக்கம் போல வேலைக்கு சென்ற லாவண்யா, மாலையில் வேலை முடிந்ததும் வீட்டுக்கு திரும்புவதற்காக பஸ் நிலையத்துக்கு வந்தார். பின்னர் அவர் காக்யபாதவி செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்திருந்தார். அந்த சமயத்தில் சேத்தன் பஸ் நிலையத்துக்கு வந்தார். பின்னர் சேத்தன், லாவண்யா அமர்ந்திருந்த பஸ்சில் ஏறி,&nbsp; வாக்குவாதத்தில் ஈடுபட் டார். </p><p>ஆத்திரம் அடைந்த சேத்தன், தான் பையில் வைத்திருந்த அரிவாளை வெளியே எடுத்தார். அதிர்ச்சி அடைந்த லாவண்யா பஸ்சில் இருந்து கீழே இறங்கி ஓடினார். 

ஆனாலும் சேத்தன் அவரை விடாமல் அரிவாளை கையில் வைத்தப்படி பின் தொடர்ந்து விரட்டி சென்றார்.</p><p></p><p> </p><p>ஒரு கட்டத்தில் பஸ் நிலையத்துக்குள் தவறி விழுந்த லாவண்யாவை அவர் அரிவாளால் பலமுறை கொடூரமாக வெட்டியதில்&nbsp; &nbsp;பலத்த காயம் அடைந்த லாவண்யா, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். </p><p>அரிவாளை பஸ் நிலையத்திலேயே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பட்டப்பகலில் பஸ் நிலையத்தின் நடுவில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கிருந்த பயணிகள் பதற்றம் அடைந்தனர்.</p><p></p><p>சம்பவம் பற்றி அறிந்ததும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 

பின்னர் பொலிஸார் கொலையான லாவண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததுடன்&nbsp; தப்பி ஓடிய சேத்தனை வலைவீசி தேடி வருகிறார்கள்.</p>]]></content>
            <updated>2026-07-18T08:41:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-new-pm-andy-burnham-family-background-1784351696"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-new-pm-andy-burnham-family-background-1784351696</id>
            <summary type="text">லேபர் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆன்டி பர்னாம், திங்கட்கிழமை, அதாவது, ஜூலை மாதம் 20ஆம் திகதி முறைப்படி பிரித்தானியாவின் பிரதமராக பதவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>லேபர் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆன்டி பர்னாம், திங்கட்கிழமை, அதாவது, ஜூலை மாதம் 20ஆம் திகதி முறைப்படி பிரித்தானியாவின் பிரதமராக பதவியேற்க உள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c796693-e983-4c08-9e2d-939ff75ca472/26-6a5b0bd1e4fe4.webp' /></p><p>இந்நிலையில், அவரது குடும்பம் குறித்த சில தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.
</p><h3>
ஆன்டி பர்னாமின் குடும்பம்</h3><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d108444-feba-4a68-8eed-575e63f905ce/26-6a5b0bd294294.webp' /></p><p>ஆன்டி பர்னாமின் மனைவியின் பெயர், மேரி ஃப்ரான்ஸ் வான் ஹீல் (Marie-France van Heel, 56). அவர் ‘Frankie’ என அழைக்கப்படுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbfa6442-8a6e-4142-b587-d13a9b4ac1e7/26-6a5b0bd348ab6.webp' /></p><p>நெதர்லாந்தில் பிறந்தவரான ஃப்ராங்கி, கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் பயில்வதற்காக பிரித்தானியா வந்தார்.
</p><p>
1989ஆம் ஆண்டு, அதே பல்கலையில் இரண்டாம் ஆண்டில் படித்துக்கொண்டிருந்த ஆன்டி பர்னாமை சந்தித்தார் அவர்.&nbsp;</p><p></p><p>
காதலித்து இணைந்துவாழத் துவங்கிய ஆன்டி பர்னாம், ஃப்ராங்கி தம்பதியர் 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள்.
</p><p>
 ஃப்ராங்கி, Iduna என்னும் நிறுவனத்தில் chief marketing officer என்னும் பொறுப்பு வகித்துவருகிறார்.
</p><p>
ஆன்டி பர்னாம், ஃப்ராங்கி தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள். மூத்த மகன் ஜிம்மி பர்னாம், வரலாற்றில் பட்டம் பெற்றவர், Royal College of Nursingஇல் International Policy Officer என்னும் பொறுப்பு வகிக்கிறார்.</p><p>

இரண்டாவது மகளான ரோஸி பர்னாம், குற்றவியலில் பட்டம் பெற்றவர், Jägermeister UK என்னும் அமைப்பில் Customer Development Executive என்னும் பொறுப்பு வகிக்கிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2dbb447d-8068-4ac7-837e-fe3c8a9be939/26-6a5b0bd3efa79.webp' /></p><p>தம்பதியரின் மூன்றாவது மகளான ஆன் மேரி பர்னாம், ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f746e944-6a34-42ba-b920-79faf5529537/26-6a5b0bd4cd58a.webp' /></p><p>சில அரசியல் தலைவர்களின் மனைவிகளைப் போல, ஆன்டி பர்னாமின் மனைவியான ஃப்ராங்கி பொதுவாக பொது இடங்களில் அதிகம் தலைகாட்டுவதில்லை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T08:40:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோதமான மோட்டார் சைக்கிள்களுடன் பிடிபட்ட 16 சாரதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-nab-16-modified-motorcycle-riders-1784363790"></link>
            <id>https://jvpnews.com/article/police-nab-16-modified-motorcycle-riders-1784363790</id>
            <summary type="text">ஹோமாகம பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினரால் சட்டவிரோதமான முறையில் மாற்றியமைக்கப்பட்ட 16 மோட்டார் சைக்கிள்களுடன் 16 ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">ஹோமாகம பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினரால் சட்டவிரோதமான முறையில் மாற்றியமைக்கப்பட்ட 16 மோட்டார் சைக்கிள்களுடன் 16 ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;">


ஹோமாகம பகுதியில் அதிவேகமாகச் சென்று அதிக சத்தத்தை எழுப்பும் மோட்டார் சைக்கிள்களைக் குறிவைத்து ஹோமாகம பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகளால் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளன.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1f18927-ae7c-4ada-b981-243e218c6ae4/26-6a5b3b0fc61ad.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify;">

கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களில், சைலன்சர்களை மாற்றுதல், பக்கவாட்டுக் கண்ணாடிகள் மற்றும் மண் காப்பான்களை அகற்றுதல், இலக்கத் தகடுகள் இல்லாமை மற்றும் விளக்கு அமைப்புகளில் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு அங்கீகரிக்கப்படாத மாற்றங்கள் செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify;">
இந்த மோட்டார் சைக்கிள்கள் பரிசோதனைக்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகனப் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படுவதற்காக பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
கைது செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் ஜூலை 22ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.</p><p style="text-align: justify;">

இச்சம்பவம் தொடர்பில் ஹோமாகம தலைமையக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-18T08:37:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசாரணை முடிவை பொறுத்தே பொலிஸ் மரியாதை! சி.டி. விக்ரமரத்ன விவகாரத்தில் புதிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/igp-c-d-wickramaratne-dies-in-suspected-suicide-1784362002"></link>
            <id>https://tamilwin.com/article/igp-c-d-wickramaratne-dies-in-suspected-suicide-1784362002</id>
            <summary type="text">
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இலங்கையின் 35ஆவது பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உடற்கூறு பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் நேற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இலங்கையின் 35ஆவது பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உடற்கூறு பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் நேற்று(17) நடைபெற்றுள்ளன.
</p><p>
விசாரணையின் ஆரம்ப கட்டமாக, கொழும்பு கிழக்கு முல்லேரியாவைச் சேர்ந்த நீதிமருத்துவ அதிகாரி, முன்னாள் பொலிஸ் மா அதிபர் வசித்த வீட்டிற்கு சென்று சம்பவ இடத்தை ஆய்வு செய்து, தேவையான மருத்துவ குறிப்புகளைப் பதிவு செய்தார்.</p><p></p><h2>&nbsp;தவறான முடிவு&nbsp;</h2><p>
</p><p>
நீதிமருத்துவ மற்றும் நீதவான் விசாரணைகளின் மூலம் இது தவறான முடிவு என அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டால், நடைமுறையில் உள்ள சட்டங்களின்படி அவரது உடலுக்கு பொலிஸ் சீருடை அணிவிக்கவோ அல்லது பொலிஸ் மரியாதை செலுத்தவோ முடியாது என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இலங்கை பொலிஸ் வரலாற்றில், பொலிஸ் மா மா அதிபராக பதவி வகித்த ஒருவர் தவறான முடிவால் உயிரிழந்த முதல் சம்பவம் இதுவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92cefe73-f064-4f89-aa92-a81b9ab28735/26-6a5b39875b7a3.webp' /></p><p>
</p><p>

இதற்கு முன்பும் தவறான முடிவு செய்து கொண்ட எந்த பொலிஸ் அதிகாரிக்கும் அதிகாரப்பூர்வ பொலிஸ் மரியாதை வழங்கப்படவில்லை என்றும் உயர் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
நேற்று(17) காலை மாலபே – தலஹேன பகுதியில் உள்ள அவரது வீட்டில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றது.

பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் அளித்த வாக்குமூலத்தின்படி, "ஆய்வு செய்ய வேண்டும்" என்று கூறி முன்னாள் பொலிஸ் மா அதிபர் தனது சேவைத் துப்பாக்கியை கேட்டுள்ளார்.</p><p> </p><p>பின்னர், ஒரு தண்ணீர் கொண்டு வருமாறு காவலரை வெளியே அனுப்பியுள்ளார். அதன்பிறகே துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஆரம்ப விசாரணைகளில், அவரது மார்புப் பகுதியில் ஒரு தோட்டா பாய்ந்திருந்தது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திலிருந்தே அந்த ரிவால்வர் கைப்பற்றப்பட்டு மேலதிக விசாரணைக்காக பொலிஸாரால் எடுத்துச் செல்லப்பட்டது.
</p><p>
 பொலிஸாரின் தகவலின்படி, நேற்று காலை வழக்கம்போல தனது இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளுடன் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். காலை சுமார் 7.30 மணியளவில் வீட்டிற்கு திரும்பிய சிறிது நேரத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்டது.</p><p></p><h2>சி.டி. விக்ரமரத்ன உயிரிழப்பு&nbsp;</h2><p>
</p><p>
உடனடியாக குடும்பத்தினரும் அயலவர்களும் பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் அவரை இரத்தக் காயங்களுடன் முல்லேரியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.</p><p>

உயிரிழக்கும் போது அவர் அறுபது வயதை கடந்திருந்ததுடன், இரண்டு மகன்களின் தந்தையாக இருந்தார்.


சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் தலங்கம பொலிஸார் மற்றும் பல உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/298f7301-2682-449a-9641-82b914b173c1/26-6a5b398838157.webp' /></p><p>

நீதியியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் உள்ளிட்ட குழுக்கள் அறிவியல் ஆதாரங்களை சேகரித்தனர்.</p><p>தற்போதைய பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் உத்தரவின் பேரில் இரண்டு சிறப்பு பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவரது மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p>
 பொலிஸ் வட்டாரங்களின் தகவலின்படி, அண்மைக்காலமாக அவரது குடும்பத்தில் ஏற்பட்ட கடுமையான மன அழுத்தமும் குடும்பத் தகராறும் இந்த துயரமான முடிவிற்கு காரணமாக இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.</p><p>

அவரது மகனின் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததாகவும், அதோடு குடும்ப வன்முறை குற்றச்சாட்டின் அடிப்படையில் பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்புப் பிரிவிலும் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p></p><h2>வாழ்க்கையின் இறுதிக் கட்டம்</h2><p>
</p><p>
தான் பல ஆண்டுகள் கண்ணியமாக வழிநடத்திய பொலிஸ் அமைப்பே தனது குடும்ப விவகாரத்தில் நடந்துகொண்ட விதமும், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளும் அவரை மனரீதியாக மிகவும் பாதித்ததாக நெருங்கியவர்களிடம் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e150f28-09f6-4277-9b4a-c2a381373754/26-6a5b39892ca97.webp' /></p><p>
</p><p>
வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் எதிர்கொண்ட இந்த குடும்பப் பிரச்சினை மற்றும் அதனால் ஏற்பட்ட சமூக அவப்பெயரை தாங்க முடியாமல் அவர் கடுமையான மனவேதனையில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

சி.டி. விக்ரமரத்ன மத நம்பிக்கையுடன் வாழ்ந்தவர். அவர் இறைச்சி உணவுகளைத் தவிர்த்ததுடன், மது மற்றும் புகைப்பழக்கங்களிலிருந்தும் முற்றிலும் விலகி வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
</p><p>
அவருடன் பொலிஸ் பயிற்சியில் இணைந்து பயின்ற ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் பொன்சேகா, பொலிஸ் மா அதிபராக இருந்த காலத்திலும் அவர் தியான நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்றதாக தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-18T08:30:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகனை காவல் துறை அதிகாரியாக உயர்த்திய Single Mother - சர்வதேச அரங்கில் கௌரவிக்கப்பட்ட செல்வி அம்மா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/viral-selvi-amma-emotional-mothers-of-india-video-1784362554"></link>
            <id>https://manithan.com/article/viral-selvi-amma-emotional-mothers-of-india-video-1784362554</id>
            <summary type="text">சிங்கிள் மதராக எண்ணற்ற சவால்களையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் தைரியமாக எதிர்கொண்டு வெற்றி கண்ட பாண்டிச்சேரியைச் சேர்ந்த 54 வயதுடைய செல்வி அம்மா, இன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிங்கிள் மதராக எண்ணற்ற சவால்களையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் தைரியமாக எதிர்கொண்டு வெற்றி கண்ட பாண்டிச்சேரியைச் சேர்ந்த 54 வயதுடைய செல்வி அம்மா, இன்று தனது கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்றுள்ளார்.
</p><p>
கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் மனம் தளராமல், ஒற்றை ஆளாகப் போராடி தனது மகனை காவல் துறை அதிகாரியாக உயர்த்திய அவரது வாழ்க்கைப் பயணம் பலருக்கும் உத்வேகம் அளிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/900e1a3e-5126-4265-acc1-f175fa2d19b1/26-6a5b390a2e600.webp' /></p><p>

அவரது அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் மகத்தான சாதனையைப் பாராட்டும் விதமாக, சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற ‘Mothers of India Awards 2026’ விழாவில் செல்வி அம்மா சிறப்பாக கௌரவிக்கப்பட்டார்.
</p><p>
அந்த மேடையில் அவர் பகிர்ந்துகொண்ட மனதை நெகிழவைக்கும் வாழ்க்கை அனுபவங்களையும், வெற்றிப் பயணத்தின் உணர்வுபூர்வமான தருணங்களையும் முழுமையாக இந்தக் காணொளியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ygE8UifRr7I" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T08:30:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் “ஆபரேஷன் லைட்னிங்” தாக்குதல்: பஹ்ரைனை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/irans-operation-lightning-attack-on-bahrain-1784363395"></link>
            <id>https://news.lankasri.com/article/irans-operation-lightning-attack-on-bahrain-1784363395</id>
            <summary type="text">பஹ்ரைனில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்பஹ்ரைனில் அமெரிக்க படைகள் பயன...</summary>
            <content type="html"><![CDATA[<p>பஹ்ரைனில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.</p><h2>பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்</h2><p>பஹ்ரைனில் அமெரிக்க படைகள் பயன்படுத்தும் ஷேக் ஈசா விமான தளத்தை(Sheikh Isa Air Base) குறிவைத்து ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர படையினர் தாக்குதல் நடத்தி இருப்பதாக சனிக்கிழமை அறிவித்துள்ளனர்.</p><p> இது தொடர்பாக ஈரானிய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ஆபரேஷன் லைட்னிங்(Operation Lightning) என்ற நடவடிக்கையின் கீழ் நடத்தப்பட்ட பதினைந்தாவது தாக்குதல் இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bfbb87c-15d1-496a-9f30-a4ac38e6a972/26-6a5b3984bebb1.webp' /></p><p>இந்த தாக்குதலில் விமானம் நிறுத்தும் உள்கட்டமைப்பு, வாகனம் நிறுத்துமிடம், எரிபொருள் சேமிப்பு கிடங்கு ஆகியவை அழிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> அத்துடன் ஈரானிய படைகளின் இந்த தாக்குதலில், பஹ்ரைனில் உள்ள சில முக்கிய பாலங்கள் சேதமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> இதற்கு அழிவுத்திறன் கொண்ட ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1622a825-71a1-4fcd-8085-ea26a523bb8a/26-6a5b39856edb7.webp' /><br></p><p> கடந்த 7 நாட்களாக அமெரிக்க படைகள் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.</p><p> மேலும் உலகளாவிய அகங்காரத்தின் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை என்றும் ஈரான் குறிப்பிட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T08:30:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[41 வயதில் குறையாத கவர்ச்சி!! வாய் பிளக்க வைக்கும் அர்ச்சனா மாரியப்பன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/serial-actress-41-age-archana-mariyappan-photos-1784357805"></link>
            <id>https://viduppu.com/article/serial-actress-41-age-archana-mariyappan-photos-1784357805</id>
            <summary type="text">நாடோடிகள், வெள்ளைக்கார துரை, முத்தின கத்திரிக்காய் போன்ற படங்களில் நடித்தவர் தான் அர்ச்சனா மாரியப்பன்.

சின்னத்திரையில் சேலை அணிந்து பக்கா ஹோம்லி லு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடோடிகள், வெள்ளைக்கார துரை, முத்தின கத்திரிக்காய் போன்ற படங்களில் நடித்தவர் தான் அர்ச்சனா மாரியப்பன்.

சின்னத்திரையில் சேலை அணிந்து பக்கா ஹோம்லி லுக்குகளில் நடித்த அர்ச்சனா அவர் இன்ஸ்டாவில் வெளியிடும் புகைப்படங்களில் வேறு மாதிரி இருப்பார்.
</p><p>
தனது இன்ஸ்டாவில் சமீக காலமாக மிகவும் கவர்ச்சியான போட்டோ ஷுட்கள் நடத்தி ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ee9307f-007f-4528-ab55-cab60c5586ce/26-6a5b23af60b89.webp' /></p><p> </p><p>கடந்த சில நாட்களுக்கு முன் சிவப்பு நிற புடவையில் கிளாமர் போட்டோ ஷுட் நடத்திய அர்ச்சனா அதன் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.
</p><p>
இதோ,</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DYSK-oLnx69/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DYSK-oLnx69/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DYSK-oLnx69/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by M.RAM VIGNESH PHOTOGRAPHY (@mramvigneshphotography)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-07-18T08:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இன்று தங்கத்தின் விலை அதிகரிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gold-price-increases-in-sri-lanka-today-1784363242"></link>
            <id>https://jvpnews.com/article/gold-price-increases-in-sri-lanka-today-1784363242</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையில் இன்று (18) 24 கரட் தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையில் இன்று (18) 24 கரட் தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 376,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e24427f-1fd3-4dd5-812f-3925cd0b585b/26-6a5b38ebe8cf7.webp' /></p><p>

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 346,000 ரூபாயாகவிற்பனை செய்யப்படுகிறது.
</p><p>
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,000 ரூபாயாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,250 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-18T08:25:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாணவேடிக்கை காட்டிய அசலங்கா, ஷானகா: வெற்றியுடன் தொடங்கிய காலி மார்வெல்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/asalanka-and-shanaka-blast-bat-vs-jaffan-kings-1784362767"></link>
            <id>https://news.lankasri.com/article/asalanka-and-shanaka-blast-bat-vs-jaffan-kings-1784362767</id>
            <summary type="text">லங்கா பிரீமியர் லீக்கின் முதல் போட்டியில், காலி மார்வெல்ஸ் அணி 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜாஃப்னா கிங்ஸை வீழ்த்தியது.&amp;nbsp;அசலங்கா&amp;nbsp;வாணவேடிக்கை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>லங்கா பிரீமியர் லீக்கின் முதல் போட்டியில், காலி மார்வெல்ஸ் அணி 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜாஃப்னா கிங்ஸை வீழ்த்தியது.&nbsp;</p><h2>அசலங்கா&nbsp;வாணவேடிக்கை </h2><p>

LPL 2026 (லங்கா பிரீமியர் லீக்) தொடரின் முதல் போட்டி கொழும்பில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce207b5a-c68a-4dff-8212-94f154ae1078/26-6a5b3889e5738.webp' />&nbsp;</p><p></p><p>

இப்போட்டியில் தசுன் ஷானாவின் தலைமையிலான காலி மார்வெல்ஸ் மற்றும் ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் மோதின.</p><p>

முதலில் ஆடிய காலி மார்வெல்ஸ் (Galle Marvels) அணியில் சாம் ஹார்பர் 19 பந்துகளில் 40 ஓட்டங்கள் விளாசினார்.
</p><p>
சிக்ஸர்களை பறக்கவிட்ட சரித் அசலங்கா (Charith Asalanka) 38 பந்துகளில் 65 ஓட்டங்கள் (3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள்) விளாசினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0afd03a9-303f-462b-91d5-f0ce230bb2c6/26-6a5b388b77999.webp' />&nbsp;&nbsp;</p><h2>ஆட்டநாயகன்&nbsp;</h2><p>
கடைசி கட்டத்தில் ஷானகா (Shanka) 9 பந்துகளில் 31 ஓட்டங்களும், மொஹம்மது நவாஸ் 9 பந்துகளில் 21 ஓட்டங்களும் விளாச, காலி மார்வெல்ஸ் 213 ஓட்டங்கள் குவித்தது. </p><p>

பின்னர் ஆடிய ஜாஃப்னா கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் 177 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. 

துனித் வெல்லாலகே 40 (24) ஓட்டங்களும், அவிஷ்கா பெர்னாண்டோ 34 (21) ஓட்டங்களும், கமில் மிஷாரா 28 (14) ஓட்டங்களும் விளாசினர்.
</p><p>
மிரட்டலாக பந்துவீசிய இஷான் மலிங்கா 4 விக்கெட்டுகளும், அகிப் ஜாவேத் 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினர். 65 ஓட்டங்களுடன், ஒரு விக்கெட்டும் வீழ்த்திய அசலங்கா ஆட்டநாயகன் விருது பெற்றார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6735ab4-4080-4ab7-85c3-0e36aea1a12f/26-6a5b388ac0a9e.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T08:24:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 ஏக்கர் காணியை கையகப்படுத்திய இராணுவ அதிகாரி - அரசின் அசமந்தப் போக்கிற்கு எழும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/equal-rights-movement-media-conference-1784355157"></link>
            <id>https://tamilwin.com/article/equal-rights-movement-media-conference-1784355157</id>
            <summary type="text">ஒரு இராணுவ உயர் அதிகாரிக்காக பொதுமக்களுடைய 100 ஏக்கர் காணியை கையகப்படுத்தி வைத்திருப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திரானந்த டீ சில்வா தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரு இராணுவ உயர் அதிகாரிக்காக பொதுமக்களுடைய 100 ஏக்கர் காணியை கையகப்படுத்தி வைத்திருப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திரானந்த டீ சில்வா தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>நேற்று(17.07.2026) இடம்பெற்ற சம உரிமை இயக்கத்தின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>காணி விடுவிப்பு</h2><p> குறிப்பாக முல்லைதீவு
மாவட்டம் - கேப்பாப்புலவு, யாழ்ப்பாணம் மாவட்டம் - பலாலி, வயாவிளான், மயிலிட்டி
பகுதிகளில் உள்ள காணிகள் இதுவரையில் உரிய மக்களிடம் கையளிக்கப்படவில்லை.</p><p>இந்த விடயம் தொடர்பில் கடந்த அரசாங்கத்தில் எதிர்கட்சிகளாக இருந்த போது,&nbsp; சுட்டிக்காட்டியவர்கள் இன்று அரசாங்கமாக மாறிய பொழுது கூறிய விடயங்களை அவர்கள் நிறைவேற்றவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f126984-9bd6-42d5-8251-13a8f7281da2/26-6a5b1a65069a5.webp' /></p><p>இவர்களின் இடதுசாரி கொள்கை என்பது பொய்யான
கொள்கையாகவே உள்ளது. இவர்களின் இடதுசாரி கொள்கையை வைத்துக்கொண்டு பொய்யாக
அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தற்பொழுது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. </p><p>ஒரு
இராணுவ உயர் அதிகாரிக்காக 100 ஏக்கர் பொதுமக்களுடைய காணியை வலிகாமம் - வடக்கு
பகுதியில் கையகப்படுத்தி வைத்திருப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது, அதற்கான உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, உரிய காணி உரிமையாளருக்கு காணி வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T08:23:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரவு (மலையாளம்): திரை விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/varavu-malayalam-movie-review-1784362128"></link>
            <id>https://cineulagam.com/article/varavu-malayalam-movie-review-1784362128</id>
            <summary type="text">வரவு திரை விமர்சனம்ஜோஜு ஜார்ஜ், அர்ஜுன் அசோகன், சானியா ஐயப்பன் நடிப்பில் வெளியாகியுள்ள வரவு மலையாள திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க...</summary>
            <content type="html"><![CDATA[<h2>வரவு திரை விமர்சனம்</h2><p>ஜோஜு ஜார்ஜ், அர்ஜுன் அசோகன், சானியா ஐயப்பன் நடிப்பில் வெளியாகியுள்ள வரவு மலையாள திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a838298-ee50-44de-9291-35cda46ead7f/26-6a5b349184303.webp' /></p><h2>

கதைக்களம்</h2><p> 

பால்சன் (ஜோஜு ஜார்ஜ்) 10 நாட்கள் பரோலில் தனது சொந்த ஊருக்கு வருகிறார். வரும் வழியிலேயே ஒரு கும்பல் அவரை தாக்க அவர்களை பொளந்துகட்டுகிறார்.
</p><p>
பின்னர் அவரது நண்பரின் ஓட்டலுக்கு வரும் ஒரு சிலர் குறித்து தகவல் தெரிய வர, அங்கு வரும் பால்சன் அவர்களை அடித்து ஓடவிட்டு பல கோடி மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை கைப்பற்றுகிறார். </p><p>

இதற்கிடையில் சிதைந்து போன தனது குடும்பத்தை நினைத்து கவலைப்படும் பால்சன், 4 ஆண்டுகளுக்கு முன் காணாமல்போன தனது தம்பி வில்லியம்ஸ் குறித்து போலீசில் புகார் அளிக்கிறார். 

ஆனால், சிலரை கொலை செய்யும் பால்சன், தன் தம்பி வில்லியம்ஸ்தான் (அர்ஜுன் அசோகன்) கொன்றதாக சித்தரிக்கிறார். </p><p>

அவர் ஏன் இப்படி செய்கிறார்? காணாமல்போன வில்லியம்ஸ் என்ன ஆனார்? என்பதே மீதிக்கதை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc4d1f23-3223-49aa-a718-47ce0d68b250/26-6a5b3774153f5.webp' /></p><h2> 

படம் பற்றிய அலசல்</h2><p> 

மலையாளத்தில் மிகவும் பிரபலமான இயக்குநரும், தமிழில் வாஞ்சிநாதன், ஜனா, எல்லாம் அவன் செயல் உள்ளிட்ட படங்களை இயக்கியவருமான ஷாஜி கைலாஷ் இப்படத்தை கொடுத்துள்ளார். </p><p>

வழக்கமான பழிவாங்கல் கதையை ஆக்ஷன் பேக் ஆக கொடுக்க முயற்சித்துள்ளார். 

அதற்கு ஏற்ப 10 பேரை அடித்தாலும் நம்பக்கூடிய ஆளான ஜோஜு ஜார்ஜை நாயகனாக தேர்வு செய்துள்ளார். 

அவரும் ஒவ்வொரு சண்டைக்காட்சியிலும் பொறிபறக்க பட்டையைக் கிளப்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b217cd9-5736-4b94-a5bc-2ed828e4cee5/26-6a5b3774ea152.webp' /></p><p> </p><p>

ஆனால், 90களின் திரைக்கதையை கொண்டு வந்ததுதான் படத்தின் மிகப்பெரிய சொதப்பல். 

எங்குமே பெரிதாக சுவாரஸ்யம் இல்லாத காட்சிகள், எளிதில் யூகிக்கக்கூடிய ட்விஸ்ட்கள் என படம் நகர்வதுடன், லாஜிக் மீறல்கள் அப்பட்டமாக தெரிவதால் பெரும் சோதனைதான் பார்வையாளர்களுக்கு. 

சுகன்யாவுக்கு இருந்த அளவிற்கு கூட அர்ஜுன் அசோகன், சானியா ஐயப்பன் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை.
</p><p>
அதே சமயம் வில்லனாக முரளி கோபி மிரட்டியிருக்கிறார். வசன உச்சரிப்பு, கோபத்தை முகத்தில் காட்டுவது என அபார நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். 

கடவுள் முருகன் குறித்த விஷயங்கள் திரையுலகை ஆக்கிரமித்துள்ள சூழலில், முருகன் பாடலுடன் படம் தொடங்குகிறது. </p><p>ஆனால் அதற்கும் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

பாபுராஜுக்கு பதிலாக அவரது நிஜ மனைவியான வாணி விஸ்வநாத் போலீசாக வருவது நல்ல ஐடியாவாக இருந்தாலும், இன்றைய சூழலுக்கு ஏற்ப திரைக்கதை அமைப்பதிலும் ஏ.கே.சஜன் மற்றும் ஷாஜி கைலாஷ் மெனக்கெட்டிருக்கலாம்.
</p><p>
சாம் சி.எஸ்-யின் இசை, எஸ்.சரவணனின் ஒளிப்பதிவு, ஷமீர் முகமதுவின் படத்தொகுப்பு ஆகியவை சிறப்பாக உள்ளன. ஸ்டண்ட் சில்வா, அன்பறிவ் ஆகியோரின் சண்டைக்காட்சிகள் மிரட்டல்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30f83e1a-82bc-4208-a2c4-555605b69eb0/26-6a5b3775b64d8.webp' /></p><h2>
க்ளாப்ஸ்</h2><p> 

ஜோஜு ஜார்ஜ், முரளி கோபியின் நடிப்பு 

சண்டைக்காட்சிகள் 

ஒளிப்பதிவு </p><h2>

பல்ப்ஸ்</h2><p> 

பலவீனமான திரைக்கதை 

யூகிக்கக்கூடிய காட்சிகள் 

கனெக்ட் ஆகாத சென்டிமென்ட் </p><p><b>

மொத்தத்தில் இந்த 'வரவு' திரைக்கு 'வராமலேயே' இருந்திருக்கலாம் என்றுதான் தோன்ற வைத்துள்ளது. சண்டைக்காட்சிகள் மட்டுமே பார்த்தால் போதும் என்பவர்கள் பார்க்கலாம்.</b></p><h2>

ரேட்டிங்: 2/5&nbsp;</h2>]]></content>
            <updated>2026-07-18T08:21:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர்ந்து 20 நாட்கள் உண்ணாவிரதம்.., சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/sonam-wangchuk-admitted-to-hospital-1784362093"></link>
            <id>https://ibctamilnadu.com/article/sonam-wangchuk-admitted-to-hospital-1784362093</id>
            <summary type="text">டெல்லியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>டெல்லியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
</p><h2>
தொடர் உண்ணாவிரதம்
</h2><p>
நீட் வினாத்தாள் கசிவு, யுஜிசி தேர்வு முறைகேடு, சிபிஎஸ்இ வினாத்தாள் திருத்த குளறுபடி உள்ளிட்ட விவகாரங்கள் இளைஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.</p><p>

இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ab05301-3173-46a9-9858-4c3c40d0ed6c/26-6a5b346fb5a15.webp' /></p><p>இதில் பங்கேற்ற சோனம் வாங்சுக், கடந்த 20 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
</p><p>
தொடர் உண்ணாவிரதம் காரணமாக அவரது உடல் எடை 9 கிலோ குறைந்ததையடுத்து, போராட்டத்தை கைவிடுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
</p><h2>
மருத்துவமனையில் அனுமதி </h2><p>

இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், சோனம் வாங்சுக்கின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்க மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.
</p><p>
இந்நிலையில், சோனம் வாங்சுக்கின் உடல்நிலை இன்று காலை மோசமடைந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6be597ed-9b6f-4bb6-9441-976199d0b6f7/26-6a5b34b9c9994.webp' /></p><p>இதனைத்தொடர்ந்து, டெல்லி காவல்துறையினர் அவரை போராட்ட இடத்திலிருந்து அகற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர்.</p><p>

அவரை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் போராட்ட இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.</p>]]></content>
            <updated>2026-07-18T08:16:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் வீடொன்றுக்குள் 25 க்கும் மேற்பட்ட கும்பல் அராஜகம்; சம்பவத்தால் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/25-people-wreaks-havoc-inside-house-in-mullaitivu-1784354718"></link>
            <id>https://jvpnews.com/article/25-people-wreaks-havoc-inside-house-in-mullaitivu-1784354718</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில் வீடு ஒன்றின் கூரையை உடைத்து 25 க்கும் மேற்பட்ட கும்பல் உள்நுழைந்து தாக்குதல் மேற்கொண்டதில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில் வீடு ஒன்றின் கூரையை உடைத்து 25 க்கும் மேற்பட்ட கும்பல் உள்நுழைந்து தாக்குதல் மேற்கொண்டதில் இரு பெண்கள் உட்பட ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து, இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0261c99-4bf9-4faf-894e-99e1c167362c/26-6a5b18291e7ed.webp' /></p><h2>&nbsp;யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றம்</h2><p>
</p><p>
தாக்குதலில் காயமடைந்த இரு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் . அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>
தாக்குதலின் போது வீட்டின் கூரையை உடைத்து உள்நுழைந்த கும்பல், வீட்டின் கதவுகள், ஜன்னல்கள், தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் பெறுமதியான மரத் தளபாடங்கள் உள்ளிட்ட பல பொருட்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-18T08:14:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக விலைக்கு அரிசி விற்பனை; ஒரு மில்லியன் ரூபா அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rice-sold-at-an-inflated-price-one-million-fine-1784362502"></link>
            <id>https://jvpnews.com/article/rice-sold-at-an-inflated-price-one-million-fine-1784362502</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பேருவலை பகுதியில் கீரி சம்பா அரிசியை நிர்ணய விலையை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த பல்பொருள் அங்காடி விற்பனை நிலையமொன்றிற்கு எத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பேருவலை பகுதியில் கீரி சம்பா அரிசியை நிர்ணய விலையை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த பல்பொருள் அங்காடி விற்பனை நிலையமொன்றிற்கு எதிராக ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அரசின் மொத்த சில்லறை விலையை விடவும் ஐந்து கிலோ எடைகொண்ட கீரி சம்பா அரிசி பொதி 1775 ரூபா என்ற கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a43c670-d1b7-4789-b592-6763d0d8a2a5/26-6a5b360833285.webp' /></p><p></p><p>

இதனையடுத்து அரியை விற்பனை செய்த அங்காடிக்கு ,களுத்துறை நீதவான் நீதிமன்றம் இந்த அபராதத்தை விதித்துள்ளனது.
</p><p>
இதேவேளை பொருட்களை வாங்கும் போது அதில் உற்பத்தி தர விலை அச்சிடப்பட்டுள்ளதா என பரிசோதித்து கொள்வனவு செய்யுமாறு பொதுமக்களுக்கு நுகர்வோர் அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p>

மேலும் நிர்ணய விலையை விடவும் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தால் அது குறித்து 1977க்கு முறையிடுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-18T08:13:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொலைபேசி வாங்கித்தர மறுத்த தந்தை ; ஆத்திரத்தில் மாணவர்கள் செய்த தகாத செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/student-s-shocking-act-after-phone-refusal-1784361631"></link>
            <id>https://jvpnews.com/article/student-s-shocking-act-after-phone-refusal-1784361631</id>
            <summary type="text">கையடக்க தொலைபேசி விற்பனை நிலையமொன்றின் முன்பக்க கண்ணாடியை உடைத்து, 10 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் மற்றும் பணத்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கையடக்க தொலைபேசி விற்பனை நிலையமொன்றின் முன்பக்க கண்ணாடியை உடைத்து, 10 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் மற்றும் பணத்தைத் திருடிய சம்பவம் தொடர்பில் இரு பிரிவெனா மாணவர்கள் நேற்று (17)&nbsp; எப்பாவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">

இவர்கள் கடந்த 4ஆம் திகதி அதிகாலை எப்பாவெல நகரின் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கையடக்க தொலைபேசி விற்பனை நிலையமொன்றில் இந்தத் திருட்டை மேற்கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ff93cfe-0876-423e-907a-a065d513d2da/26-6a5b33d123c13.webp' /></p><h2 style="text-align: justify;">பிரிவெனா மாணவர்கள்&nbsp;</h2><p> </p><p style="text-align: justify;">

கைது செய்யப்பட்டவர்கள் எப்பாவெல, எந்தகல பகுதியிலுள்ள பிரிவெனா ஒன்றில் தங்கிப் படித்து வரும் 14 வயதுடைய மாணவர்கள் என்றும், அவர்கள் தலாவ - நபடவெவ மற்றும் எப்பாவெல - ரொட்டவெவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

இச்சம்பவம் குறித்து தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், திருடப்பட்ட தொலைபேசிகளின் IMEI எண்கள் மற்றும் தொலைபேசி சமிக்ஞைகளை (Signals) அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட நீண்ட விசாரணையின் பின்னரே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

</p><p style="text-align: justify;">

கைது செய்யப்படும் போது சந்தேகநபர்களிடமிருந்து திருடப்பட்ட 10 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய 06 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 5000 ரூபாய் பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;"></p><p> </p><p style="text-align: justify;">

கைது செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று, சில நவீன கையடக்க தொலைபேசிகளின் விலைகளைக் கேட்டுச் சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

பின்னர் தனக்கு ஒரு கையடக்க தொலைபேசியை வாங்கித் தருமாறு அவர் தனது தந்தையிடம் கேட்டுள்ளார். </p><p style="text-align: justify;">எனினும், தந்தை அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த குறித்த மாணவன், தனது நண்பன் ஒருவனுடன் சேர்ந்து வந்து இந்த கையடக்க தொலைபேசிகளை திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify;">

பின்னர், திருடப்பட்ட கையடக்க தொலைபேசிகளில் இரண்டு கையடக்க தொலைபேசிகளை தங்களது பாவனைக்காக வைத்துக்கொண்டு, ஏனைய நவீன கையடக்க தொலைபேசிகளை பிரிவெனாவின் தேரர் ஒருவருக்கும், தந்தைக்கும், மேலும் சில மாணவர்களுக்கும் கொடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> 

அதன்பின்னர், இந்த மாணவர்கள் திருடப்பட்ட கைபேசி ஒன்றில் தேரருக்கு சொந்தமான சிம் அட்டையைப் (SIM card) பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கமையவே, சந்தேகநபர்களைக் கைது செய்யப் பொலிஸாருக்கு வழிவகை கிடைத்துள்ளது. </p><p style="text-align: justify;">&nbsp;கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும், திருடப்பட்ட கையடக்க தொலைபேசிகளையும் இன்று (18) தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

எப்பாவெல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில், குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினர் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-18T08:05:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் டிக்டொக் செயலி தடை நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tiktok-app-allowed-government-offices-in-the-us-1784361456"></link>
            <id>https://canadamirror.com/article/tiktok-app-allowed-government-offices-in-the-us-1784361456</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவில் அரச அலுவலகங்களுக்குச் சொந்தமான சாதனங்களில் டிக்டொக் செயலியைப் தரவிறக்கம் செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்க நீதித் திணைக்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவில் அரச அலுவலகங்களுக்குச் சொந்தமான சாதனங்களில் டிக்டொக் செயலியைப் தரவிறக்கம் செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்க நீதித் திணைக்களம் நீக்கியுள்ளது.
</p><p>
2022 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு நலன் கருதி அரச சாதனங்களில் டிக்அடொக் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a19dcb7-d1e1-437b-bd6a-24c63d542de0/26-6a5b31f27c60b.webp' /></p><p>
</p><p>
தற்போது டிக்டாக்கின் சீன உரிமையாளரான பைட் டான்ஸ் (ByteDance), அதன் அமெரிக்க பயனர் தரவு மற்றும் செயல்பாடுகளை 'டிக்டொக் யுஎஸ்டிஎஸ்' (TikTok USDS) எனும் கூட்டு நிறுவனத்துக்கு மாற்றியுள்ளதால், இந்தத் தடை நீக்கப்படுவதாக நீதித் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>

டிக்டொக்கின் அல்கரிதம் மற்றும் தரவுகள் அமெரிக்காவின் ஒரக்கிள் (Oracle) கிளவுட் மூலம் பாதுகாக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தத் தடையை நீக்குவது தொடர்பான முடிவை அந்தந்த அமைப்புகளின் விருப்பத்துக்கேற்ப மேற்கொள்ளலாம் என்றும், தற்போதைய நிலையில் டிக்டொக் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இல்லை என்றும் நீதித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-18T07:56:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பரவும் சைக்ளோஸ்போரா தொற்று: சில தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/how-affect-cyclosporiasis-outbreak-in-canada-1784360633"></link>
            <id>https://canadamirror.com/article/how-affect-cyclosporiasis-outbreak-in-canada-1784360633</id>
            <summary type="text">கனடாவின் பல்வேறு பகுதிகளில், சைக்ளோஸ்போரியாசிஸ் என்னும் கிருமித் தொற்று பரவல் கண்டுபிடிக்கப்பட்டுவரும் நிலையில், அதற்கும் அமெரிக்காவில் பரவிவரும் தொற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பல்வேறு பகுதிகளில், சைக்ளோஸ்போரியாசிஸ் என்னும் கிருமித் தொற்று பரவல் கண்டுபிடிக்கப்பட்டுவரும் நிலையில், அதற்கும் அமெரிக்காவில் பரவிவரும் தொற்றுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
</p><p>
பொதுவாக, நோய்க்கிருமிகளில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற கிருமிகள் குறித்து அதிகம் பேசப்படுவதுண்டு.
</p><p>
ஆனால், பல நாடுகளில், குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றில் காணப்படும் ஒட்டுண்ணி (parasite) என்னும் கிருமி குறித்து அதிகம் பேசப்படுவதில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a8243a1-39a5-440f-b9d6-b38717edeb5c/26-6a5b2eba82839.webp' /></p><p>

குடற்புழுக்கள் முதல், மலேரியாவை உண்டு பண்ணும் கிருமிகள், குடல் முதல் மூளை வரை பாதிக்கும் அமீபா என்னும் கிருமிகள், இனப்பெருக்க உறுப்புகளை பாதிக்கும் ஜியார்டியா, ட்ரைக்கோமோனாஸ் என்னும் கிருமிகள், கால் பாதத்தை துளைத்துக்கொண்டு உடலுக்குள் நுழைந்து, இரத்தக்குழாய் வழியாக நுரையீரலுக்குள் நுழைந்து, வாய்க்கு வந்து, பின் வயிற்றுக்குள் செல்லும் கொக்கிப்புழுக்கள் என பலவகை ஒட்டுண்ணிகள் உலகில் காணப்படுகின்றன.</p><p>

அப்படிப்பட்ட ஒட்டுண்ணிகளில் ஒன்றுதான் இந்த சைக்ளோஸ்போரியாசிஸ் என்னும் கிருமித் தொற்றை ஏற்படுத்தக்கூடிய சைக்ளோஸ்போரா என்னும் கிருமி.
</p><p>
உணவு மற்றும் குடிநீர் வழியாக மட்டுமே பரவும் இந்த சைக்ளோஸ்போரா என்னும் கிருமி, வயிற்றுப்போக்கு, வயிறு வீக்கம், வாயுத்தொல்லை மற்றும் பசியின்மையை ஏற்படுத்தும்.</p><p>

தற்போது அமெரிக்காவில் இந்த கிருமி அதிக அளவில் பரவிவரும் நிலையில், தற்போது கனடாவின் பல பகுதிகளிலும் அது கண்டறியப்பட்டுள்ளது.</p><p>

என்றாலும், அமெரிக்கத் தொற்றுக்கும் கனேடிய தொற்றுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.</p>]]></content>
            <updated>2026-07-18T07:52:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் மலேசிய பிரஜை கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/malaysian-passenger-arrested-at-bia-with-cocaine-1784359647"></link>
            <id>https://ibctamil.com/article/malaysian-passenger-arrested-at-bia-with-cocaine-1784359647</id>
            <summary type="text">சுமார் 9 கோடியே 8 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய கொக்கேய்ன் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுமார் 9 கோடியே 8 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய கொக்கேய்ன் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

தனது பயணப்பொதியில் இந்த போதைப்பொருளை மறைத்து வைத்து, விமான நிலையத்தின் "பசுமை வழி" ஊடாக வெளியேற முயன்ற குறித்த பயணியை இன்று (18) காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 23 வயதான மலேசிய பிரஜை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்</h2><p>குறித்த நபர் இந்த போதைப்பொருள் தொகையை மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து பெற்றுக்கொண்டு டுபாய்க்குச் சென்றுள்ளார்.</p><p>

அங்கிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-650 என்ற விமானம் மூலம் இன்று காலை 09.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d626d026-c46a-442a-a2cf-a4f26c531fab/26-6a5b2f4c56d97.webp' /></p><p> 

இதன்போது, அவர் கொண்டு வந்த பயணப்பொதியில் 03 சொக்லேட் டொபி போத்தல்களில், 92 மாத்திரைகளாக மிகவும் நுணுக்கமான முறையில் பொதி செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 816 கிராம் எடையுடைய கொக்கேய்ன் போதைப்பொருள் சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p> 

கைது செய்யப்பட்ட பயணி மற்றும் அவரிடமிருந்து மீட்கப்பட்ட கொக்கேய்ன் போதைப்பொருள் தொகை என்பன மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T07:51:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருந்தொகை மதிப்பிலான தொலைபேசிகளை திருடிய சிறுவர்கள் இருவர் சிக்கினர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-boys-stole-mobile-phones-worth-million-rupees-1784359623"></link>
            <id>https://ibctamil.com/article/two-boys-stole-mobile-phones-worth-million-rupees-1784359623</id>
            <summary type="text">அநுராதபுரம் - எப்பாவல பகுதியில் உள்ள ஒரு தொலைபேசி விற்பனைநிலையத்தில் இருந்து ரூ. 10 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள தொலைபேசிகள், துணைக்கருவிகள் மற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரம் - எப்பாவல பகுதியில் உள்ள ஒரு தொலைபேசி விற்பனைநிலையத்தில் இருந்து ரூ. 10 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள தொலைபேசிகள், துணைக்கருவிகள் மற்றும் பணத்தைத் திருடிய 14 வயதுடைய இரண்டு சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p>

எப்பாவல நகரில் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தொலைபேசி விற்பனைநிலையத்தின் முன்பக்க ஜன்னலை உடைத்து, 4ஆம் திகதி அதிகாலை அந்த இரண்டு சிறுவர்களும் கடைக்குள் நுழைந்துள்ளதாக தெரியவருகிறது.</p><p></p><h2>பறிமுதல் செய்யப்பட்ட&nbsp;தொலைபேசிகள்</h2><p>
</p><p>
இந்தத் திருட்டு குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், நேற்று (17) அந்த இரண்டு சந்தேக நபர்களான சிறுவர்களை கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bd5ac8d-7b7f-4d76-812e-1ac01a47e47b/26-6a5b2f48ebdc5.webp' /></p><p>
</p><p>
எப்பாவல ஸ்ரீ சுதர்சனராம பிரிவெனாவில் தங்கிப் படிக்கும் அந்த இரண்டு சிறுவர்களும், தலாவ, நபடவெவ மற்றும் எப்பாவல, ரொடவெவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அவர்கள் கைது செய்யப்பட்டபோது, ​​ரூ. 10 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள ஆறு ஸ்மார்ட் தொலைபேசிகளையும் ரூ. 5,000 ரொக்கப் பணமும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.</p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>
சந்தேகத்திற்குரிய இந்த மாணவர், முந்தைய நாள் சம்பந்தப்பட்ட விற்பனை நிலையத்திற்கு சென்று அப்பிள் தொலைபேசியின் விலை குறித்து விசாரித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d134636-82a0-48ef-b19c-155f581b918d/26-6a5b2f49d17eb.webp' /></p><p>
</p><p>
அவன் தன் தந்தையிடம் தொலைபேசியை வாங்கித் தருமாறு கேட்டிருந்த நிலையில், தந்தை அந்தக் கோரிக்கையை மறுத்ததால் தொலைபேசிகள் திருடப்பட்டதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய இரண்டு சிறுவர்களும் இன்று (18) தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table><p> </p>]]></content>
            <updated>2026-07-18T07:50:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தொடரும் முக்கிய புள்ளிகளின் மர்ம மரணங்கள்; எழும் சந்தேகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mysterious-deaths-of-key-figures-in-sri-lanka-1784357518"></link>
            <id>https://jvpnews.com/article/mysterious-deaths-of-key-figures-in-sri-lanka-1784357518</id>
            <summary type="text">&amp;nbsp; ஜனாதிபது அனுர அரசாங்கம், முன்னெடுத்து வரும் விசாரணையின் முக்கிய புள்ளிகளின் மர்ம மரணங்கள் பலத்த சந்தேகங்க்களை எழுப்பியுள்ளதாக அரசியல் அவதானிகாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜனாதிபது அனுர அரசாங்கம், முன்னெடுத்து வரும் விசாரணையின் முக்கிய புள்ளிகளின் மர்ம மரணங்கள் பலத்த சந்தேகங்க்களை எழுப்பியுள்ளதாக அரசியல் அவதானிகாள் க்ருத்து வெளியிட்டுள்ளனர். </p><p> 


இலங்கை குற்றவியல் சரித்திரத்தில் அதிர்ச்சிகரமான கருப்பு அத்தியாயம் பதிவாகியிருக்கின்றது. 

 யாரும் எதிர்பாராத வகையில் இலங்கையின் 35 வது போலீஸ் மா அதிபராக (IGP) பணியாற்றிய சிடி. விக்ரமரத்ன நேற்றையதினம் (17) அவரது வீட்டில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89d452db-3a9d-45bb-afef-512e0e79ddee/26-6a5b22903190c.webp' /></p><h2>அடுத்தடுத்து&nbsp; ராஜபக்சர்களுக்கு&nbsp; நெருக்கமானவர்களின் மரணங்கள்</h2><p>

கபில சந்திரசேனவை தொடர்ந்து முன்னாள் IGP சிடி.விக்ரமரத்ன மரணங்க்கள் பெருத்த சந்தேகத்தினை எழுப்பியுள்ளது.
</p><p> 
நிழல் அரசு பற்றிய புரிதல் உள்ளவர்களுக்கும் இலங்கையில் தொடர்ந்து நடைபெறும் நீதிமன்ற மற்றும் போலீஸ் விசாரணைகளை உற்றுநோக்குபவர்களுக்கும் இந்த மரணம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது எளிதில் புரியும் என&nbsp; அவதானிகாள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p><p>

ராஜபக்ச குடும்பத்திற்கு குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் மிகவும் விசுவாசமான ஒரு அதிகாரியாகவே செயல்பட்டவர் உயிரிழந்த IGP சிடி.விக்ரமரத்ன.</p><p>கடந்த 2019 ஆம் ஆண்டு கோட்டாபய ஆட்சி அதிகாரத்தை பிடித்து ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் போலீஸ் மா அதிபர் பதவிக்கு இவரது பெயரை அவரே பரிந்துரை செய்து நியமித்தார். அதுமட்டுமன்றி இவரது பதவிக்காலத்தில் கோத்தாபாயவால் நான்கு முறைக்கும் மேலாக இவருக்குப் பதவி நீடிப்பு வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44478f42-e86c-4ddf-afea-4d6992238f2f/26-6a5b228f6c773.webp' /></p><p> 

அன்றைய காலகட்டத்தில் அரசுக்கு எதிராக எழுந்த மக்கள் போராட்டங்களை அடக்கவும் ராஜபக்சக்களின் அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடியவர்களை அடித்துத் துன்புறுத்தவுமே இந்த நீடிப்புகள் வழங்கப்பட்டதாக ஜே.வி.பி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் அப்போது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.</p><p>

ஈஸ்டர் தாக்குதல் குறித்து மிகத் தீவிரமாக விசாரித்த CID பணிப்பாளர் ஷானி அபயசேகர விக்ரமரத்னவின் பரிந்துரையின் பேரிலேயே பதவி இறக்கம் செய்யப்பட்டு பின்னாளில் கைதும் செய்யப்பட்டார். 

மேலும் ஈஸ்டர் பயங்கரம் குறித்து விசாரித்த 20 க்கும் மேற்பட்ட திறமையான CID அதிகாரிகள் விசாரணைப் பிரிவில் இருந்து நீக்கப்பட்டதுடன் 700 க்கும் அதிகமான போலீஸ் மற்றும் CID அதிகாரிகளுக்குப் பயணத்தடையும் விதிக்கப்பட்டது.</p><p></p><p>
</p><p>
அதேவேளை ஈசடர் தின பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய ஸாரா ஜெஸ்மினின் சர்ச்சைக்குரிய மூன்றாவது டீ என் ஏ பரிசோதனையின் ரிப்போர்ட்டை எடுக்க சுரேஷ் சலேயுடன் அரச பகுப்பாய்வுத் திணைக்களத்திற்குச் சென்றவர் முன்னாள் IGP சிடி.விக்ரமரத்ன.</p><p> 
 
கடந்த மே மாதமளவில் ராஜபக்சக்களின் ஊழல் சாம்ராஜ்யத்தின் முக்கிய புள்ளியாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழல் வழக்கில் பிரதான குற்றவாளியாகவும் பார்க்கப்பட்ட கபில சந்திரசேனவும் இதேபோன்று மர்மமான முறையில் அரவிந்த டி சில்வாவின் இல்லத்தில் மரணமடைந்திருந்தார். </p><p>

இந் நிலையில் கபில சந்திரசேனவை தொடர்ந்து சிடி. விக்ரமரத்ன மர்ம மரணங்கள் பலத்த சந்தேகங்களை விதைக்கிறது</p>]]></content>
            <updated>2026-07-18T07:49:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத் தருவதாக மோசடி - பொலிஸாரின் தந்திரத்தில் சிக்கிய நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/australia-job-man-arrested-for-defrauding-people-1784340216"></link>
            <id>https://tamilwin.com/article/australia-job-man-arrested-for-defrauding-people-1784340216</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத் தருவதாக கூறி ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இலங்கை வெளிநாட்டு வேலைவா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத் தருவதாக கூறி ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகளால் நேற்று முன்தினம் அவிசாவளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் நபர்களிடமிருந்து தலா 25 முதல் 35 லட்சம் ரூபாய் வரை குறித்த நபர் பணம் பெற்றுள்ளார்.</p><p>
</p><h2><b>
பண மோசடி</b></h2><p>அதற்கமைய, இவரால் மோசடி செய்யப்பட்ட மொத்தத் தொகை ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாகும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69f48b1b-7b8e-4b41-adee-d75edf4bb9d6/26-6a5b2e05d7e99.webp' /></p><p>குறித்த சந்தேக நபருக்கு எதிராக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவுக்கு 8 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
</p><p>
அவரை கைது செய்ய அதிகாரிகள் பலமுறை முயற்சி செய்தும், அவர் தொடர்ந்து அதிகாரிகளிடமிருந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளார். </p><p>இறுதியாக, தந்திரமாக செயல்பட்ட அதிகாரிகள், வெளிநாட்டு வேலை தேவை என்று கூறி அவரைத் தொடர்புகொண்டு, அவிசாவளை நகரில் வைத்து பெரும் முயற்சிக்குப் பிறகு கைது செய்தனர்.</p><h3><b> வெளிநாட்டு வேலை</b></h3><p>கைது செய்யப்பட்ட நபர், இலங்கையின் முன்னணி தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் விற்பனை முகாமையாளராக பணியாற்றுபவர் என தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1311285-1798-4e81-b22f-49229c3abf7d/26-6a5b2e0691122.webp' /></p><p>சந்தேகநபருக்கு எதிராக அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் எட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. </p><p>பணியகத்தின் செல்லுபடியாகும் உரிமமின்றி வெளிநாட்டு வேலைகளுக்காக ஆட்களைச் சேர்த்தல் மற்றும் பண மோசடி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>அவர், நேற்று அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். சந்தேக நபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-18T07:41:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல சீரியல் நடிகை ஸ்ரீநிதி மேனனின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/serial-actress-sreenidhi-menon-latest-photos-1784358595"></link>
            <id>https://cineulagam.com/article/serial-actress-sreenidhi-menon-latest-photos-1784358595</id>
            <summary type="text">ஸ்ரீநிதி மேனன்விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரீநிதி மேனன். அந்த சீரியல் அவருக்கு தமிழ் மக்களிடம் நல்ல ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஸ்ரீநிதி மேனன்</h2><p>விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரீநிதி மேனன். </p><p>அந்த சீரியல் அவருக்கு தமிழ் மக்களிடம் நல்ல ரீச் கொடுத்தது, அதன்பின் தொடர்ந்து சீரியல்கள் நடிப்பார் என்று பார்த்தால் தமிழ் பக்கம் அதிகம் காணப்படவில்லை.
</p><p>மற்ற மொழிகளில் அதிக வாய்ப்புகள் கிடைக்க படங்கள், சீரியல்கள் என பிஸியாக உள்ளார். சரி தற்போது நாம் நடிகை ஸ்ரீநிதி மேனன் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை காண்போம்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T07:40:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பரவும் ஒட்டுண்ணித் தொற்று: அதிகாரிகள் கூறும் விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cyclosporiasis-oubreak-in-canada-not-linked-to-us-1784360344"></link>
            <id>https://news.lankasri.com/article/cyclosporiasis-oubreak-in-canada-not-linked-to-us-1784360344</id>
            <summary type="text">கனடாவின் பல்வேறு பகுதிகளில், சைக்ளோஸ்போரியாசிஸ் என்னும் கிருமித் தொற்று பரவல் கண்டுபிடிக்கப்பட்டுவரும் நிலையில், அதற்கும் அமெரிக்காவில் பரவிவரும் தொற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பல்வேறு பகுதிகளில், சைக்ளோஸ்போரியாசிஸ் என்னும் கிருமித் தொற்று பரவல் கண்டுபிடிக்கப்பட்டுவரும் நிலையில், அதற்கும் அமெரிக்காவில் பரவிவரும் தொற்றுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
</p><h3>
கனடாவில் பரவும் ஒட்டுண்ணித் தொற்று
</h3><p>
பொதுவாக, நோய்க்கிருமிகளில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற கிருமிகள் குறித்து அதிகம் பேசப்படுவதுண்டு.&nbsp;</p><p>
ஆனால், பல நாடுகளில், குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றில் காணப்படும் ஒட்டுண்ணி (parasite) என்னும் கிருமி குறித்து அதிகம் பேசப்படுவதில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a560cca-38ef-4220-ac13-ae0b69e18e50/26-6a5b2d9a20b57.webp' /></p><p>

குடற்புழுக்கள் முதல், மலேரியாவை உண்டு பண்ணும் கிருமிகள், குடல் முதல் மூளை வரை பாதிக்கும் அமீபா என்னும் கிருமிகள், இனப்பெருக்க உறுப்புகளை பாதிக்கும் ஜியார்டியா, ட்ரைக்கோமோனாஸ் என்னும் கிருமிகள், கால் பாதத்தை துளைத்துக்கொண்டு உடலுக்குள் நுழைந்து, இரத்தக்குழாய் வழியாக நுரையீரலுக்குள் நுழைந்து, வாய்க்கு வந்து, பின் வயிற்றுக்குள் செல்லும் கொக்கிப்புழுக்கள் என பலவகை ஒட்டுண்ணிகள் உலகில் காணப்படுகின்றன.</p><p>

அப்படிப்பட்ட ஒட்டுண்ணிகளில் ஒன்றுதான் இந்த சைக்ளோஸ்போரியாசிஸ் என்னும் கிருமித் தொற்றை ஏற்படுத்தக்கூடிய சைக்ளோஸ்போரா என்னும் கிருமி.</p><p></p><p>

உணவு மற்றும் குடிநீர் வழியாக மட்டுமே பரவும் இந்த சைக்ளோஸ்போரா என்னும் கிருமி, வயிற்றுப்போக்கு, வயிறு வீக்கம், வாயுத்தொல்லை மற்றும் பசியின்மையை ஏற்படுத்தும்.</p><p>

தற்போது அமெரிக்காவில் இந்த கிருமி அதிக அளவில் பரவிவரும் நிலையில், தற்போது கனடாவின் பல பகுதிகளிலும் அது கண்டறியப்பட்டுள்ளது.</p><p>

என்றாலும், அமெரிக்கத் தொற்றுக்கும் கனேடிய தொற்றுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T07:39:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீன் விலை உயர்வு தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை பிரேரணை நிறைவேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mullaitivu-fish-price-hike-motion-passed-1784357485"></link>
            <id>https://tamilwin.com/article/mullaitivu-fish-price-hike-motion-passed-1784357485</id>
            <summary type="text">புதுக்குடியிருப்பு பிரதேச சபை அமர்வில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதுடன், பிரேரணைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதுக்குடியிருப்பு பிரதேச சபை அமர்வில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதுடன், பிரேரணைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்த கூட்டமானது, நேற்று முன்தினம்(16.07.2026) இடம்பெற்றுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><h2>மீன் விலை உயர்வை கட்டுப்படுத்தல்</h2><p>
</p><p>இதன்போது, பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பல்வேறு
பிரச்சினைகள் ஆராயப்பட்டு முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளதுடன், மக்களின்
நலனை கருத்தில் கொண்டு மீன் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முக்கிய
பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f49626f-e46c-4717-a176-dda1fb3047de/26-6a5b259396610.webp' /></p><p>கடல் வளம் நிறைந்த முல்லைத்தீவு மாவட்டத்தில் கூட சாதாரண மக்கள் வாங்கக்கூடிய
மீன்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், கடற்றொழிலாளர்கள் குறைந்த
விலையில் விற்பனை செய்யும் மீன்கள் இடைத்தரகர்கள் மூலம் பல மடங்கு விலை
உயர்த்தப்பட்டு நுகர்வோரிடம் சென்றடைகிறது. இது கண்டிக்கத்தக்க விடயமாகவே காணப்படுகிறது.
</p><p>
இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால், பிரதேச சபைக்குட்பட்ட
பகுதிகளில் மீன் விற்பனையில் ஈடுபடும் நடமாடும் வியாபாரிகள் மற்றும் மாலை
நேரங்களில் வீதியோரங்களில் மீன் விற்பனை செய்பவர்கள் கட்டாயமாக பிரதேச
சபையிடமிருந்து அனுமதிப்பத்திரத்தைப் பெற வேண்டும் என்ற பிரேரணை
அனைத்து உறுப்பினர்களாலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.</p><p></p><h2>நுகர்வோர் பாதிப்பை கட்டுப்படுத்தல்</h2><p>
மேலும் மீன் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறையை உருவாக்குமாறு
கடற்தொழில் அமைச்சர், நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை மற்றும் கடற்தொழில்
சமாசங்களுக்கு கடிதம் அனுப்புவதற்கும் சபை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db31ae6e-0d4c-45fb-849a-dcfd02071def/26-6a5b2592e6125.webp' /></p><p>
</p><p>மேலும் சாதாரண மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களும் நியாயமான விலையில்
கடலுணவுகளை பெற்றுக்கொள்ளும் சூழலை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்றும்,
இடைத்தரகர்களின் காரணமாக மீன்களின் விலை சடுதியாக உயர்வதால் நுகர்வோர்
பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>அத்துடன் முல்லைத்தீவு மட்டுமன்றி வடக்கு
மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இதே பிரச்சினை காணப்படுவதால், நாடளாவிய
ரீதியில் நிலையான விலை கட்டுப்பாட்டு பொறிமுறையை அரசாங்கம் விரைவில்
நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கு.அகிலன் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T07:38:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் கைது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspect-involved-drug-trade-has-been-arrested-1784359570"></link>
            <id>https://tamilwin.com/article/suspect-involved-drug-trade-has-been-arrested-1784359570</id>
            <summary type="text">நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபரொருவர் 3,820
மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சாய்ந்தமருது பொலிஸாரால் கைது
செய்யப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபரொருவர் 3,820
மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சாய்ந்தமருது பொலிஸாரால் கைது
செய்யப்பட்டுள்ளார்.</p><p>

ஜனாதிபதியின் போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்திற்கு அமைய, பொலிஸ் மா அதிபரின்
பணிப்புரைக்கு ஏற்ப நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட
சுற்றிவளைப்புகளின் ஒரு கட்டமாகவே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>திடீர் சோதனை</h2><p>
</p><p>
அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.ஏ.பி.வி. கஸ்தூரி ஆராய்ச்சி
வழிகாட்டலிலும் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ. இப்னு அஸார்
நெறிப்படுத்தலில் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
அம்பாறை மாவட்ட புலனாய்வு அதிகாரி ஏ.ஆர்.எம். பிர்தௌஸ் வழங்கிய இரகசியத்
தகவலொன்றின் அடிப்படையில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி
பொலிஸ் பரிசோதகர் பி.பிரகலாதன் தலைமையில் விசேட பொலிஸ் குழுவினர்
இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cca41463-b7e8-4322-b481-524f4b12bf71/26-6a5b2d3f2ba84.webp' /></p><p>
</p><p>
இதன்போது, சந்தேகநபரின் வீட்டை முற்றுகையிட்டு பொலிஸார் நடத்திய திடீர்
சோதனையின் போதே, மறைத்து வைக்கப்பட்டிருந்த ‘ஐஸ்’ போதைப்பொருள்
கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் காவலில்
வைக்கப்பட்டுள்ளதுடன், சாய்ந்தமருது பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T07:37:39+00:00</updated>
        </entry>
    </feed>
