<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-06T05:59:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 உயர்தர பரீட்சை பெறுபேறுகள் - பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2026-a-l-results-to-be-released-before-year-end-1788664680"></link>
            <id>https://ibctamil.com/article/2026-a-l-results-to-be-released-before-year-end-1788664680</id>
            <summary type="text">2026 ஆண்டின் இறுதிப் பகுதிக்குள் உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.அதற்கமைய, உயர...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆண்டின் இறுதிப் பகுதிக்குள் உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.</p><p>அதற்கமைய, உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த விடயத்தை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><h2>மதிப்பீட்டுப் பணிகள்</h2><p>இந்த மதிப்பீட்டுச் செயற்பாடுகள் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளதுடன், எதிர்வரும் அக்டோபர் மாதம் 25 ஆம் திகதிக்குள் மதிப்பீட்டுப் பணிகளை முழுமையாக நிறைவுசெய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e71bc350-7634-44bc-8002-5b919c758757/26-6a9cdd93aac50.webp' /></p><p>அத்துடன், உயர்தரப் பரீட்சைக்கான செய்முறைப் பரீட்சைகள் செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நேற்றைய தினத்துடன் (05) நிறைவடைந்தன.</p><p>

இந்தமுறை நடைபெற்ற பரீட்சையில் மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
</p><p>
பரீட்சை மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நடப்பு ஆண்டின் இறுதிப் பகுதிக்குள் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T05:50:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனரக லொறி மோதி சைக்கிள் ஓட்டுநர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cyclist-killed-in-collision-with-heavy-lorry-1788672672"></link>
            <id>https://tamilwin.com/article/cyclist-killed-in-collision-with-heavy-lorry-1788672672</id>
            <summary type="text">கனரக லொறி மோதியதில் சைக்கிளில் சென்ற ஆண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றைய தினம் (05.09.2026) காலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனரக லொறி மோதியதில் சைக்கிளில் சென்ற ஆண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த சம்பவம் நேற்றைய தினம் (05.09.2026) காலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.&nbsp;</p><p>
</p><p>கொழும்பு - குருநாகல் வீதியில் ஏகல மற்றும் ஜா-எல ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட
பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.&nbsp;</p><h2>விசாரணை முன்னெடுப்பு</h2><p>இதன்போது கனரக லொறி மோதியதில் சைக்கிளில் சென்ற நபர்
ஒருவர் லொறிக்கு அடியில் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81d660d7-401e-422e-a129-eb5892f9f519/26-6a9cfebe41e33.webp' /></p><p>
</p><p>மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா - எல பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T05:48:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த ராசி ஆண்களிடம் ஜாக்கிரதையா இருங்க! பெண்களை ஏமாற்றுவதில் கில்லாடிகளாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-zodiac-signs-men-are-cheat-girls-1788669220"></link>
            <id>https://manithan.com/article/which-zodiac-signs-men-are-cheat-girls-1788669220</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரம் அவர்களின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரம் அவர்களின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. </p><p>குறிப்பாக, அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, காதல் மற்றும் திருமண வாழ்க்கை மட்டுமின்றி, அவர்களின் நேர்மறை மற்றும் எதிர்மறையான குணநலன்களிலும் ராசி மற்றும் நட்சத்திரத்தின் தாக்கம் இருப்பதாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af077fd3-5068-485a-9a5a-ce412fe9801c/26-6a9cf2ab04c57.webp' /></p><p></p><p>

அந்த வகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே பெண்கள் மீதும் காதல் மீதும் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள் என்றும், இவர்கள்&nbsp; தங்களின் காதல் உறவுகளில் நேர்மையாக இல்லாமல், துணையை ஏமாற்றும் அல்லது ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட உறவுகளைத் தொடரும் மனப்பான்மை கொண்டிருக்ப்பார்கள் என்றும் கணிக்கபபட்டுள்ளது.</p><p>அப்படி காதல் என்ற பெயரில் பெண்களை அதிகம் ஏமாற்றும் குணம் கொண்டவர்களாக ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.&nbsp;</p><h2>மேஷம்
</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2830fc86-5615-403c-b72e-871807766ec1/26-6a9cf2abb4a77.webp' /></p><p>மேஷ ராசியின் அதிபதி செயல் மற்றும் போரின் கிரகமான செவ்வாய். இவர்கள் இயல்பிலேயே துணிச்சலும், ஆர்வமும், உத்வேகமும் கொண்டவர்கள். </p><p>உறவுகளில் தீவிரமாக ஈடுபட்டாலும், விரைவில் பொறுமையிழக்கவோ சலிப்படையவோ வாய்ப்புள்ளது. சவால்களையும் புதிய அனுபவங்களையும் விரும்புவதால், ஒரே பெண்ணிடம் நிலையான விசுவாசத்துடன் இருப்பது இவர்களுக்கு கடினம்.</p><p>ஆனால் இவர்கள் ஒருவரை&nbsp; உண்மையாக நேசிக்கும்போது, அவர்களின் காதலும் ஈடுபாடும் தீவிரமாக இருக்கும். இவர்களுக்கு எளிதில் சளிப்படையும் குணம் இருப்பதால் இவர்கள் பல பெண்களை விரும்ப அதிக வாய்ப்பு காணப்படும்.&nbsp;</p><h2>
மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54f4e612-bcc5-4df4-b210-b6e4434ba6db/26-6a9cf2ac6626b.webp' /></p><h2>
</h2><p>மிதுன ராசியின் அதிபதி கிரகங்களின் இளவரசரான புதன். இவர்கள் ஆர்வமுள்ளவர்களாகவும், துடிப்பானவர்களாகவும், மாற்றத்தை விரும்புபவர்களாகவும் இருப்பார்கள்.</p><p> புதிய இடங்கள் மற்றும் மனிதர்களைச் சந்திப்பதில் ஆர்வம் கொண்டதால், ஒரே பெண்ணுடன் நிலைத்து வாழ்வது சில நேரங்களில் கடினமாகலாம். </p><p>எப்போதும் புதுப்புது அனுபவங்களைத் தேடுவதால், எளிதில் சலிப்படையக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். இதனால் ஒரே துணைக்கு விசுவாசமாக இருப்பது கடினம்.&nbsp;</p><h2>

தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2364c31e-daf5-4d2d-9a83-23a9bfc97057/26-6a9cf2ad180ec.webp' /></p><p>
தனுசு ராசியின் அதிபதி முன்னேற்றம் மற்றும் சாகசத்தின் கிரகமான குருபகவான். இவர்கள் சுதந்திரத்தையும் புதிய அனுபவங்களையும் அதிகம் விரும்புவார்கள். </p><p>புதிய இடங்கள், யோசனைகள் மற்றும் மனிதர்களை ஆராய்வதில் ஆர்வம் கொண்டதால், ஒரே பெண்ணுடன் முழுமையாகத் திருப்தி அடைவது சில நேரங்களில் கடினமாகலாம். </p><p>தங்களின் சுதந்திரத்தைப் புரிந்துகொள்ளும் துணையை விரும்புவார்கள். உறவில் கட்டுப்பட்டதாக உணர்ந்தால், அதிலிருந்து விலகிவிடும் மனநிலை ஏற்படலாம்.</p><h2>

துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7527ca5-1ee0-4114-8ea6-3079d240d02a/26-6a9cf2adc12cd.webp' /></p><p></p><p>
துலாம் ராசிக்காரர்கள் வசீகரமானவர்கள், காதல் உணர்வு கொண்டவர்கள் மற்றும் சமூகத்தில் எளிதில் பழகக்கூடியவர்கள்.</p><p> புதிய நபர்களைச் சந்திப்பதையும், காதல் வாழ்க்கையை ரசிப்பதையும் விரும்புவார்கள். இதனால் சில நேரங்களில் பல உறவுகளுக்கு இடையில் ஊசலாடக்கூடும்.</p><p> உறவுகளில் நல்லிணக்கத்தை விரும்பினாலும், ஒரே ஒரு பெண்ணிடம் மட்டும் நிலைத்திருப்பது அவர்களுக்கு சவாலாக இருக்கலாம்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><b><u><br></u></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T05:47:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸ் 10 வாய்ப்பை நிராகரித்த ஜாய் கிரிஸில்டா… காரணம் இதுதான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/why-rejected-bigg-boss-10-joy-crizildaa-reveal-1788671960"></link>
            <id>https://manithan.com/article/why-rejected-bigg-boss-10-joy-crizildaa-reveal-1788671960</id>
            <summary type="text">பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் உடனான பிரச்சனை காரணமாக சமீப காலமாக அதிகம் பேசப்பட்டு வந்தார்.

தன்னை கர்ப்பமாக்கிவிட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் உடனான பிரச்சனை காரணமாக சமீப காலமாக அதிகம் பேசப்பட்டு வந்தார்.
</p><p>
தன்னை கர்ப்பமாக்கிவிட்டு மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டதாகக் கூறி, அவர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தார்.இதையடுத்து நடைபெற்ற டிஎன்ஏ பரிசோதனையில், ஜாய் கிரிஸில்டாவுக்கு பிறந்த குழந்தை மாதம்பட்டி ரங்கராஜின் குழந்தைதான் என்பது உறுதி செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e48d1ac6-c14c-4683-adfd-8e56c4821d57/26-6a9cfe009b0d8.webp' /></p><p></p><p>

இந்த விவகாரத்திற்குப் பிறகு தற்போது இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.&nbsp;</p><h2>பிக்பாஸ் 10 வாய்ப்பை நிராகரித்த ஜாய்&nbsp;</h2><p>இந்த நிலையில், ஜாய் கிரிஸில்டாவுக்கு பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ளும் வாய்ப்பு தேடி வந்ததாகவும் இவர் அதனை நிராகரித்தாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4d3e913-f071-41da-a7ef-503c3e0bf557/26-6a9cfe014eec9.webp' /></p><p>இவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைத்தும் அதை ஜாய் கிரிஸில்டா ஏன் நிராகரித்தார் என்ற கேள்வி எழுந்த நிலையில், அதற்கான காரணத்தையும் அவரே தற்போது தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da383647-718b-4289-8b52-dd1556b00942/26-6a9cfe0200cea.webp' /></p><p></p><p>
தனது மகன் ராகா இன்னும் சிறிய குழந்தையாக இருப்பதால், அவரை விட்டுவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வது தனக்கு சரியாகத் தோன்றவில்லை என்றும், அதனால் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டதாகவும் ஜாய் கிரிஸில்டா தெரிவித்துள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-06T05:46:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசியக் கொடியை எரித்தால் கடுமையான தண்டனை: அவுஸ்திரேலியா முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jail-time-for-burning-the-flag-1788673687"></link>
            <id>https://news.lankasri.com/article/jail-time-for-burning-the-flag-1788673687</id>
            <summary type="text">Jail time for burning the flag: தேசியக் கொடியை எரித்ததற்காக சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
அவுஸ்திரேலியாவில் தேசியக் கொடியை எரிக்கும் அல்லது போர் நினைவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Jail time for burning the flag: தேசியக் கொடியை எரித்ததற்காக சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
</p><p>அவுஸ்திரேலியாவில் தேசியக் கொடியை எரிக்கும் அல்லது போர் நினைவிடங்களைச் சேதப்படுத்துவோர் விரைவில் சிறைத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடலாம்.</p><h2>புதிய ஃபெடரல் குற்றம்</h2><p>
</p><p>நாட்டின் தேசிய சின்னங்கள் மற்றும் வரலாற்று நினைவிடங்களுக்கு வலுவான சட்டப் பாதுகாப்பு தேவை என்று வாதிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஆங்கஸ் டெய்லர், அவுஸ்திரேலிய தேசிய சின்னங்கள் மற்றும் பாரம்பரியப் பாதுகாப்பு மசோதாவிற்கான திட்டங்களை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdf3cfac-4002-43d4-9724-7519d9d23476/26-6a9cfe998c81f.webp' /></p><p> </p><p>ஒருவரின் செயல்கள் வெறுப்பையோ வன்முறையையோ தூண்டுமா, பொது அமைதிக்கு அச்சுறுத்தல் விளைவிக்குமா அல்லது பொதுக் குழப்பத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொருட்படுத்தாமல், அவுஸ்திரேலியக் கொடியை பொதுவெளியில் கடுமையாக அவமதிப்பதை இந்தத் திட்டம் ஒரு புதிய ஃபெடரல் குற்றமாகவே கருதும். </p><p>மேலும், அவுஸ்திரேலியா குறித்து அரசியல் கருத்துக்களைத் தெரிவிக்கவும், தாராளமாக விமர்சிக்கவும் மக்களுக்கு உரிமை உண்டு; ஆனால், தேசியக் கொடியை எரிப்பது எல்லையை மீறும் செயலாகும் என்றும் டெய்லர் கூறியுள்ளார்.</p><p></p><p> </p><p>தேசியக் கொடி என்பது ஒரு அடையாளம்; அது நம் தேசத்தின் மற்றும் நம் பாரம்பரியத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். அவுஸ்திரேலியர்கள் அது குறித்து மிகுந்த உணர்வுப்பூர்வமான பிணைப்பைக் கொண்டுள்ளனர் என்பதை நான் அறிவேன் என குறிப்பிட்டுள்ள அவர், கொடி எரிக்கப்படுவதைப் பார்ப்பது பெரும்பாலான அவுஸ்திரேலியர்களுக்கு ஏற்புடையதல்ல; நிச்சயமாக எனக்கும் அது ஏற்புடையதல்ல. </p><p>எனவே, ஓராண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கும் வகையிலான ஏற்பாடு கொண்டுவரப்படுவது பொருத்தமானது என்றே நான் கருதுகிறேன் என்றார்.</p><p> மேலும், அவுஸ்திரேலியாவின் வரலாற்றைப் போற்றும் போர் நினைவுச்சின்னங்கள், சிலைகள், நினைவுப் பலகைகள் மற்றும் பிற நினைவுச்சின்னங்களை வேண்டுமென்றே சேதப்படுத்துதல், சிதைத்தல் அல்லது அவமதித்தல் ஆகியவற்றுக்குச் சிறைத் தண்டனை விதிக்கக்கூடிய கடுமையான புதிய ஃபெடரல் குற்றங்களையும் இந்தக் கூட்டணி அறிமுகப்படுத்தும் என்றார்.
</p><p>அவுஸ்திரேலிய தினம் காமன்வெல்த் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டதாக அமையும்; அதாவது, அதன் திகதியில் ஏதேனும் மாற்றம் செய்ய முன்மொழியப்பட்டால், அது ஒரு தேசிய வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் டெய்லர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28e538f2-bad5-4ef3-9d70-2deead2d835e/26-6a9cfe9a3f18e.webp' /></p><p> </p><p>சமீபத்திய மாதங்களில் விக்டோரியா மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களில் நிகழ்ந்த தொடர்ச்சியான சம்பவங்களைத் தொடர்ந்து இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. </p><p>மேற்கு விக்டோரியாவின் டோபி (Dobie) பகுதியில் உள்ள போர் நினைவுச் சின்னம் ஒன்று சேதப்படுத்தப்பட்டது; இதில் உள்ளூர் முன்னாள் படைவீரர்களைக் கௌரவிக்கும் பலகை திருடப்பட்டதுடன், அப்பகுதி முழுவதும் அரசியல் வாசகங்கள் எழுதப்பட்டு, சுற்றியுள்ள தாவரங்களும் சேதப்படுத்தப்பட்டன. </p><p>இந்த ஆண்டின் தொடக்கத்தில், மெல்போர்னின் ஃபிளாக்ஸ்டாஃப் பூங்காவில் உள்ள 155 ஆண்டுகள் பழமையான நினைவுச்சின்னமும் சேதப்படுத்தப்பட்டு, அவுஸ்திரேலியாவிற்கு எதிரான சுவரெழுத்துக்களால் மூடப்பட்டது. </p><p>மட்டுமின்றி, அவுஸ்திரேலிய தினத்தன்று, பிரிஸ்பேனில் நடைபெற்ற 'ஆக்கிரமிப்பு நாள்' (Invasion Day) போராட்டத்தின் போது அவுஸ்திரேலியக் கொடி ஒன்று தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T05:46:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை ஆரம்பமாகும் ஜெனீவா கூட்டத்தொடர் : இறுதி நேரத்தில் விஜிதவின் பயணம் இரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/min-vijitha-visit-cancelled-geneva-63rd-session-1788671559"></link>
            <id>https://ibctamil.com/article/min-vijitha-visit-cancelled-geneva-63rd-session-1788671559</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது அமர்வில் பங்கேற்கவிருந்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரக் குழுவின் விஜய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது அமர்வில் பங்கேற்கவிருந்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரக் குழுவின் விஜயம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது.</p><p>இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் முக்கிய விவாதங்கள் இடம்பெறவுள்ள இந்த அமர்வு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நாளை (07) ஆரம்பமாகவுள்ளது.</p><p> </p><p>இந்த நிலையில் அமைச்சர் விஜித ஹேரத் ஐ.நா மனித உரிமைகள் அமர்வுகளில் இம்முறை பங்கேற்க மாட்டார் எனவும், ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தர இராஜதந்திரத் தூதுக்குழுவே இந்த அமர்வை முழுமையாகக் கையாளும் எனவும்&nbsp;வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் துஷார ரொட்ரிகோ உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p></p><h2>எழுத்துமூலமான அறிக்கை</h2><p>எனினும் குறித்த பயணம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டதற்கான காரணம் தொடர்பில் அவர் விரிவாக எதுவும் தெரிவிக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbbdad19-d796-469a-bc90-ba3774d78eab/26-6a9cfc4398d3c.webp' /></p><p>மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வில் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரகத்தின் எழுத்துமூலமான புதுப்பிக்கப்பட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.</p><p>


இந்த அறிக்கையை மையப்படுத்தி உறுப்பு நாடுகளின் பங்களிப்புடன் கூடிய பொது விவாதமும் நடைபெறவுள்ளது.</p><p>சர்வதேசத்தின் கடுமையான கவனத்தைப் பெற்றுள்ள யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உள்ளிட்ட உணர்வுபூர்வமான பொறுப்புக்கூறல் விடயங்களை முறையாகக் கையாள்வது குறித்து வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் விரிவான ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T05:41:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அசுரன் படத்தில் தனுஷுக்கு பதில் நான் தான் நடிக்க வேண்டியது, பிரபல நடிகர் உடைத்த உண்மை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/popular-actor-was-first-choice-for-asuran-movie-1788672464"></link>
            <id>https://cineulagam.com/article/popular-actor-was-first-choice-for-asuran-movie-1788672464</id>
            <summary type="text">&#039;அசுரன்&#039;&amp;nbsp;&#039;அசுரன்&#039; தனுஷ் நடிப்பிலும் வெற்றிமாறன் இயக்கத்திலும் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த படம். எல்லோரும் எதிர்பார்த்தது போலவே படமும் வச...</summary>
            <content type="html"><![CDATA[<h2>'அசுரன்'&nbsp;</h2><p>'அசுரன்' தனுஷ் நடிப்பிலும் வெற்றிமாறன் இயக்கத்திலும் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த படம். எல்லோரும் எதிர்பார்த்தது போலவே படமும் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbb25433-866a-4049-8362-747ee4b952aa/26-6a9cf9d2dea68.webp' /></p><p>அதோடு தனுஷ் மற்றும் வெற்றிமாறனுக்கு இந்த படத்தின் மூலம் தேசிய விருது கூட கிடைத்தது. இந்நிலையில் அசுரன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது கருணாஸ் தானாம்; அவரே ஒரு பேட்டியில் இதை கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/effee322-33b7-43a9-8037-942cccd38bc2/26-6a9cf9d3966e6.webp' /></p><p></p><h2>நடிகர் உடைத்த உண்மை</h2><p> </p><p>

வெற்றி முதலில் என்னிடம் தான் இந்த கதையை சொன்னார், நீங்களும் உங்க மகனும் நடிக்கலாம் என்றார்; ஆனால், முழு கதையையும் கேட்ட நான், "வெற்றி இது மாஸ் ஹீரோ பண்ண வேண்டிய படம், கண்டிப்பாக மெகா ஹிட் ஆகும்" என்று சொன்னேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c32125b-ce48-4a55-be34-67cbe9076811/26-6a9cf9d44bf94.webp' /></p><p> 

வெற்றி, "நீங்க வாங்க உங்கள வச்சு நான் எடுக்கிறேன் என்றால், நான் உறுதியாக இருந்தேன் மாஸ் ஹீரோதான் இந்த கதையில் நடிக்க வேண்டும் என்று". அதே போல் தனுஷ் நடித்து இந்த படம் மெகா ஹிட் ஆனது என கருணாஸ் கூறியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T05:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொந்த தந்தையை படுகொலை செய்த 16 வயது மகன் ; இலங்கையில் பரபரப்பு சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/16-year-old-son-kills-his-own-father-1788672738"></link>
            <id>https://jvpnews.com/article/16-year-old-son-kills-his-own-father-1788672738</id>
            <summary type="text">மாத்தளை, உக்குவளை பகுதியில் மகனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

இச்சம்பவத்தில் உக்குவளை, மாத்தளை பகுதியைச் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மாத்தளை, உக்குவளை பகுதியில் மகனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">

இச்சம்பவத்தில் உக்குவளை, மாத்தளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3546978e-362a-46e4-831b-1ed38db07a6a/26-6a9cfae440a65.webp' /></p><p style="text-align: justify; "> 

இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாகவே மகன் இந்தக்கொலையைச் செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "> 

சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-06T05:32:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கபொத உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/advanced-level-examination-results-released-date-1788671699"></link>
            <id>https://tamilwin.com/article/advanced-level-examination-results-released-date-1788671699</id>
            <summary type="text">கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
</p><p>
கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நேற்றுடன் (05) நிறைவடைந்துள்ளன.
</p><h2>விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள்</h2><p>
இதற்கமைய, கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த மதிப்பீட்டு செயற்பாடுகள் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea7b5b82-0b1d-415c-bb82-d2e5d0dadd3e/26-6a9cfa74674ed.webp' /></p><p>

அத்துடன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதிக்குள் மதிப்பீட்டுப் பணிகளை முழுமையாக நிறைவுசெய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். </p><p>

இம்முறை பரீட்சையில் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த நிலையில், செய்முறைப் பரீட்சைகள் செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T05:30:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை தொடர்ந்து அநுரவிடம் சிக்கவுள்ள சஜித்..! மொட்டுக் கட்சி தரப்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-complain-in-un-1788604168"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-complain-in-un-1788604168</id>
            <summary type="text">நாமல் ராஜபக்ச மட்டுமன்றி சஜித் பிரேமதாச மற்றும் திலித் ஜயவீர ஆகியோரும் அரசாங்கத்தின் நியாயமற்ற அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என&amp;nbsp;பொதுஜன பெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்ச மட்டுமன்றி சஜித் பிரேமதாச மற்றும் திலித் ஜயவீர ஆகியோரும் அரசாங்கத்தின் நியாயமற்ற அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என&nbsp;பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் மிலிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர்,</p><p> </p><p>இலங்கையில் ஜனநாயகத்தை அழித்து, சர்வாதிகார ஆட்சியை நோக்கியும் அரசியல் பழிவாங்கலை நோக்கியும் அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சி தொடர்பாக ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அடுத்த வாரம் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யவுள்ளோம்.&nbsp;</p><p>
இது தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சென்று மக்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, அடுத்த கட்டமாக சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கவுள்ளோம்.&nbsp;</p><h2>ஜெனிவாவில் முறைப்பாடு..&nbsp;&nbsp;</h2><p>

அடுத்த திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அடுத்த அமர்வுக்கு இணைவாக, செவ்வாய்க்கிழமை இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்த தகவல்களை முன்வைக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d772de7c-9f3a-41e5-99c5-41437d108f50/26-6a9cf843b5774.webp' /></p><p>ஜனநாயகத்தை அழித்து சர்வாதிகார அதிகாரத்தைக் கட்டியெழுப்ப மேற்கொள்ளப்படும் முயற்சி, நீதித்துறையின் சுயாதீனத்தின் மீதான தாக்கம், மக்கள் எதிர்ப்பு முறையில் அரசியலமைப்பை மாற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் மற்றும் எதிர்க்கட்சியைக் இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் அரசியல் பழிவாங்கல் என்பனவற்றுக்கே முக்கிய கவனம் செலுத்தப்படும்.&nbsp;</p><p>
</p><p>
எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை அரசியல் பழிவாங்கலின் விளைவே.&nbsp;</p><p>
எதிர்க்கட்சியின் அரசியல் தலைவர்களை அடக்குவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவதாகவும், நாமல் ராஜபக்ச மட்டுமன்றி சஜித் பிரேமதாச மற்றும் திலித் ஜயவீர ஆகியோரும் இதுபோன்ற நியாயமற்ற அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுவார்கள்” என எச்சரித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T05:27:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாக்குதல்களால் அதிரும் மத்திய கிழக்கு ; தகர்க்கப்பட்ட எண்ணெய் தாங்கிக் கப்பல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/middle-east-shaken-by-attacks-1788672405"></link>
            <id>https://canadamirror.com/article/middle-east-shaken-by-attacks-1788672405</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக மீண்டும் தீவிரமடைந்துள்ள மோதலில், சனிக்கிழமையன்று இரு நாடுகளும் பரஸ்பரம் கப்பல்கள் மீது ஏவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக மீண்டும் தீவிரமடைந்துள்ள மோதலில், சனிக்கிழமையன்று இரு நாடுகளும் பரஸ்பரம் கப்பல்கள் மீது ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
</p><p>
அமெரிக்க மத்திய கட்டளையகம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின்படி,

ஈரானின் 'கார்க் தீவு' அருகே ஒன்று, ஜாஸ்க் பகுதிக்கு அருகே ஒன்று மற்றும் ஓமன் வளைகுடாவில் ஒன்று என ஈரானுடன் தொடர்புடைய 03 மசகு எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் முற்றிலுமாக முடக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34c20753-4313-4dd6-a522-6b2689856309/26-6a9cf99a97389.webp' /></p><p>

முன்னதாக அமெரிக்கப் படைகளின் போர் விமானம் தாங்கி கப்பல் மற்றும் ஏவுகணை அழிப்புக் கப்பலைக் குறிவைத்து ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><p>ஈரானின் தாக்குதலில் அமெரிக்கப் படைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. </p><p> அழிக்கப்பட்ட கப்பல்கள் ஈரானிய புரட்சிகர காவல் படையின் நிதியுதவிக்காகப் பயன்படுத்தப்படும் நிழல் அமைப்பைச் சேர்ந்தவை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. </p><p> 

ஈரானின் அரசு ஊடகமான ஐஆர்ஐபி மற்றும் ஐஆர்ஜிசி வெளியிட்ட தகவலின்படி,

அமெரிக்கத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஓமர்ன் வளைகுடா மற்றும் ஹோர்மூஸ் நீரிணைப் பகுதிகளில் அமெரிக்க தொடர்புடைய 3 கப்பல்கள் மற்றும் "அனுமதிக்கப்படாத பாதையில்" பயணித்த 3 எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.</p><p>

கார்க் தீவு அருகே அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கப்பலில் இருந்த ஊழியர்கள் மீட்கப்பட்டதால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-06T05:26:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/update-on-a-l-exam-answer-paper-marking-1788671700"></link>
            <id>https://jvpnews.com/article/update-on-a-l-exam-answer-paper-marking-1788671700</id>
            <summary type="text">கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify;">

இந்த மதிப்பீட்டுச் செயற்பாடுகள் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளதுடன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதிக்குள் மதிப்பீட்டுப் பணிகளை முழுமையாக நிறைவுசெய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60516da4-1ca5-4820-91ea-79fb63d6d624/26-6a9cf6d62644a.webp' /></p><h2 style="text-align: justify;">செய்முறைப் பரீட்சைகள்</h2><p style="text-align: justify;">

அத்துடன், உயர்தரப் பரீட்சைக்கான செய்முறைப் பரீட்சைகள் செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
</p><p style="text-align: justify; ">
கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நேற்றைய தினத்துடன் (05) நிறைவடைந்தன.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify;">
இந்தமுறை நடைபெற்ற பரீட்சையில் மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify;">

பரீட்சை மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நடப்பு ஆண்டின் இறுதிப் பகுதிக்குள் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-06T05:15:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[என் குழந்தைக்கு மனோஜ் தான் அப்பா.. நீதிமன்றத்தில் ரோகிணி ஒப்படைத்த ஆவணங்கள்! சிறகடிக்க ஆசை சீரியல் Promo]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/siragadikka-aasai-serial-rohini-manoj-divorce-case-1788671123"></link>
            <id>https://cineulagam.com/article/siragadikka-aasai-serial-rohini-manoj-divorce-case-1788671123</id>
            <summary type="text">சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் வரும் வாரம் என்ன நடக்கப்போகிறது என்பதை பற்றிய Promo வீடியோ வெளியாகியுள்ளது.

ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் வரும் வாரம் என்ன நடக்கப்போகிறது என்பதை பற்றிய Promo வீடியோ வெளியாகியுள்ளது.</p><p></p><p>
</p><h2>
சிறகடிக்க ஆசை
</h2><p>
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது மனோஜ் - ரோகிணி விவாகரத்து வழக்கு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19da8038-5025-4c32-ac31-a0e0b6bf911e/26-6a9cf496194bf.webp' /></p><p>விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடும்போது, திடீரென <a href="https://www.youtube.com/watch?v=c7bmahrIT3c" target="_blank">ரோகிணி </a>மயங்கி விழ, அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்பது தெரிய வந்தது. மனோஜின் குழந்தை தன் வயிற்றில் வளர்கிறது, இதனால் விவாகரத்து தரமாட்டேன் என்கிற முடிவுக்கு வந்தார். 

ஆனால், மனோஜ் தனக்கும் இந்த குழந்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறினார். விவாகரத்து தரமுடியாது என உறுதியாக இருந்த ரோகிணி, ஒரு கட்டத்தில் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டுவிட்டார்.</p><h2>நீதிபதி எடுக்கப்போகும் முடிவு</h2><p>விவாகரத்து வழக்கு நீதிமன்றத்திற்கு வர, மனோஜின் வழக்கறிஞர் உடனடியாக இவர்களுக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என நீதிபதியிடம் கேட்க, அப்போது ரோகிணி தான் கர்ப்பமாக இருப்பதைப்பற்றியும், தன் குழந்தைக்கு மனோஜ் தான் தந்தை என்பதையும் மருத்துவ ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் தெரிவிக்கிறார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a84cc52-ca20-477d-bd43-16622e79f676/26-6a9cf496cd1bc.webp' /></p><p>இந்நிலையில், நீதிபதி எடுக்கப்போகும் முடிவு என்ன? விவாகரத்து கொடுப்பாரா இல்லையா என்பதை வரும் வாரம் பொறுத்திருந்து பார்ப்போம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/c7bmahrIT3c" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-06T05:05:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர தலைமையிலான மக்கள் பேரணித் தொடர் இன்று ஆரம்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/npp-to-hold-series-of-public-rallies-from-today-1788669791"></link>
            <id>https://ibctamil.com/article/npp-to-hold-series-of-public-rallies-from-today-1788669791</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் பூரத்தியாகும் நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பங்கேற்கும் மக்கள் பேரண...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் பூரத்தியாகும் நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பங்கேற்கும் மக்கள் பேரணித் தொடர் இன்றைய தினம் (06.09.2026) ஆரம்பமாகவுள்ளது. </p><p>

"எமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் - நாட்டிற்குச் சுபிட்சம்" எனும் கருப்பொருளின் கீழ் இந்தப் பேரணிகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த மக்கள் பேரணித் தொடரின் முதற்கட்டம் களுத்துறை மாவட்டத்தை மையமாகக் கொண்டு இன்று பிற்பகல் ஆரம்பமாகவுள்ளது.</p><p></p><h2>&nbsp;நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு&nbsp;&nbsp;</h2><p> </p><p>

பேருவளை மற்றும் புளத்சிங்கல ஆகிய நகரங்களில் இந்தப் பேரணிகள் நடைபெறவுள்ள நிலையில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு முதலாவது பேரணி புளத்சிங்கலயிலும், பிற்பகல் 3.30 மணிக்கு பேருவளையிலும் ஆரம்பமாகவுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2adf0262-2356-4878-80e4-d393393b5089/26-6a9cf40267893.webp' /></p><p>மேலும், பொலன்னறுவை, அனுராதபுரம், மாத்தறை மற்றும் கம்பஹா மாவட்டங்களை மையமாகக் கொண்டு தேசிய மக்கள் சக்தி எதிர்கால பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது.</p><p>இதேவேளை&nbsp;அரசாங்கத்தின் எதிர்கால அரசியல் செயற்பாடுகளையும் அமைப்புக் கட்டமைப்பையும் பலப்படுத்தும் நோக்கிலேயே நாடு முழுவதும் இந்த அரசியல் நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் தெரிவித்திருந்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T05:03:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீன் ஏற்றுவதற்காக அனுப்பப்பட்ட பேருந்து இப்போது பயணிகள் சேவையில்..! யாழில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bus-transport-fish-douglas-now-passenger-service-1788670101"></link>
            <id>https://tamilwin.com/article/bus-transport-fish-douglas-now-passenger-service-1788670101</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராகவிருந்த காலப்பகுதியில் மீன்
ஏற்றுவதற்காக அனுப்பப்பட்ட பேருந்துகளே இப்போதும் வடமராட்சி கிழக்கில்
சேவையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராகவிருந்த காலப்பகுதியில் மீன்
ஏற்றுவதற்காக அனுப்பப்பட்ட பேருந்துகளே இப்போதும் வடமராட்சி கிழக்கில்
சேவையில் ஈடுபடுவதாக பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர் பி.அலஸ்ரன்
தெரிவித்துள்ளார்.
</p><p>
அரச பேருந்துகள் தொடர்ச்சியாக பழுதடைவதால் பயணிகள் பாதிக்கப்படுவது தொடர்பாக
கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.</p><p> அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், "யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மக்கள் அரச பேருந்தை நாளாந்தம்
தள்ளித்திரிந்து இயக்கி பயணம் மேற்கொள்கின்றனர்.</p><p>காலை 06.00 கட்டைக்காட்டில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் அரச
பேருந்தை பழுது காரணமாக சில நாட்களாக மாணவர்கள், மக்கள் சேர்ந்து
தள்ளித்திரிந்து ஸ்ராட் பண்ணும் சம்பவம் இடம்பெறுகின்றது.</p><h2>தொடர் சிரமங்கள்..&nbsp;</h2><p> </p><p>மக்கள் தள்ளியும் பேருந்து இயங்காது போனால் சம நேரத்தில் பருத்தித்துறைக்கு
பயணிக்கும் அரச பேருந்தால் குறித்த பேருந்து கட்டி இழுக்கப்பட்டு ஸ்ராட்
செய்யப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3abe31b-1d72-4ecc-bf4f-0d2d39c6d06f/26-6a9cf3965659a.webp' /></p><p> கடந்த வெள்ளிக்கிழமை காலை 06.00 மணிக்கு வழமை போன்று பாடசாலை மாணவர்களோடு
பொதுமக்கள் குறித்த பேருந்தை தள்ளி இயக்க முயன்றபோது பேருந்து இயங்கவில்லை.</p><p>
பின்பு பருத்தித்துறை நோக்கி பயணிக்கவிருந்த அரச பேருந்து மூலம் கட்டி இழுத்து
இயக்க முயன்ற வேளையும் பேருந்து இயங்கவில்லை. </p><p>இதனால் காலை 06.00 மணிக்கு கட்டைக்காட்டில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி
பயணிக்கும் அரச பேருந்து பயணிக்காததால் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் என
பலரும் பாதிப்படைந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f12ea989-ff01-4bcf-b0cd-175f582b725f/26-6a9cf397cf706.webp' />&nbsp;</p><p>
</p><p>
வடமராட்சி கிழக்கில் சேவையிலீடுபடும் அரச பேருந்துகள் மிக பழமையானது, முன்னாள்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த காலத்தில் மீனை ஏற்றி செல்வதற்காக
விடப்பட்ட பேருந்துகள் இவை. </p><p>தரமற்ற பேருந்துகளால் வடமராட்சி கிழக்கு மக்கள்
தொடர்ந்தும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இவ்வாறான அடிப்படை தேவைகளை
பூர்த்தி செய்யுமாறுதான் நாம் கேட்கின்றோம்.</p><p> அதனைவிடுத்து மக்கள் விரும்பாத மசாஜ் நிலையங்களை கொண்டுவர துடிக்கிறார்கள்.
சமூகத்தை சீரழிக்கும் மசாஜ் நிலையம் போன்ற அபிவிருத்திகளை செய்வதற்கு ஆர்வம்
காட்டுவதை விடுத்து ரஜீவன் எம்பி போன்றவர்கள் மக்கள் கேட்கும் தரமான பேருந்து
சேவையை வளங்க வழி செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T05:02:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹொர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் அதிரடித் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-launches-surprise-attack-ships-strait-hormuz-1788655698"></link>
            <id>https://canadamirror.com/article/iran-launches-surprise-attack-ships-strait-hormuz-1788655698</id>
            <summary type="text">ஹொர்முஸ் நீரிணை வழியே விதிமுறைகளை மீறிச் சென்ற 2 முதல் 5 கப்பல்கள் வரை தினமும் இரவு நேரத்தில் &quot;தண்டிக்கப்பட்டதாக&quot; ஈரானிய புரட்சிகர காவல் படையின் கடற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹொர்முஸ் நீரிணை வழியே விதிமுறைகளை மீறிச் சென்ற 2 முதல் 5 கப்பல்கள் வரை தினமும் இரவு நேரத்தில் "தண்டிக்கப்பட்டதாக" ஈரானிய புரட்சிகர காவல் படையின் கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

2026 ஆகஸ்ட் 30-ஆம் திகதி வரையிலான 10 நாட்களில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
</p><p>
இந்த தாக்குதல்களின் பின்னரும் கூட விதிமுறைகளை மீறும் கப்பல்கள் மீது தேவையான நேரங்களில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஈரானிய புரட்சிக்கர காவல்படை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84aeccc2-db4f-43b4-8b4c-19e67b48c22f/26-6a9cb85407a41.webp' /></p><p>

இந்தநிலையில், ஈரானின் மூன்று எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலை ஈரான் வெளியுறவு அமைச்சகம் "போர்க்குற்றம்" என கடுமையாகக் கண்டித்துள்ளது.
</p><p>
அத்துடன், பிராந்திய கடற்பகுதியில் அமெரிக்காவின் முற்றுகை மற்றும் தாக்குதல்கள் தொடர்ந்தால் அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது பதிலடித் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும் என ஈரானிய ஆயுதப்படைகள் எச்சரித்துள்ளன.
</p><p>
எனினும், பிராந்திய கடற்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இரண்டு அமெரிக்க போர்க்கப்பல்களை இலக்கு வைத்து ஈரானிய புரட்சிகர காவல் படை பெலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்கியதைத் தொடர்ந்தே ஈரானிய எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்க மத்திய கட்டளையகம் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.
</p><p>
இதேவேளை, ஈரானின் நதான்ஸ் (Natanz) அணுசக்தி மையத்திற்கு அருகே அமைந்துள்ள 'பிக்அக்ஸ்' (Pickaxe Mountain) நிலத்தடி அணுசக்தி வளாகத்தின் மீது மிக விரைவில் (very soon) தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார்.
</p><p>
கடந்த ஜூலை மாதத்திற்குப் பிறகு இத்தகைய எச்சரிக்கையை அவர் மீண்டும் விடுத்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-06T05:01:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிங்க் நிற ஆடையில் நடிகை பிரியங்கா மோகன்!! புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/priyanka-mohan-pink-dress-cute-photoshoot-post-1788671511"></link>
            <id>https://viduppu.com/article/priyanka-mohan-pink-dress-cute-photoshoot-post-1788671511</id>
            <summary type="text">பிரியங்கா மோகன்கன்னட சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கில் இரு படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை பிரியங்கா மோகன்.தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர்,...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிரியங்கா மோகன்</h2><p>கன்னட சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கில் இரு படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை பிரியங்கா மோகன்.தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் போன்ற படங்களில் நடித்தவர் எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1652933f-1b02-43b7-a134-831f12ce09bb/26-6a9cf61f07603.webp' /></p><p>அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த பிரியங்கா, கதாநாயகிக்கு முக்கியத்துவன் கொடுத்த மேட் இன் கொரியா படத்தில் நடித்தார். </p><p>தற்போது, ஒருசில படங்களில் கமிட்டாகி நடித்து வரும் பிரியங்கா, வீக்எண்ட் ஆனால் இன்ஸ்டாகிராமில் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். </p><p>தற்போது பிங்க் நிற ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-06T05:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவுக்கு நடந்ததை சிந்தித்து பார்க்கவும்! அநுர தொடர்பில் கடும் குற்றச்சாட்டு முன்வைத்த சஜித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-taking-our-deathbed-opposition-leader-1788669549"></link>
            <id>https://tamilwin.com/article/government-taking-our-deathbed-opposition-leader-1788669549</id>
            <summary type="text">திசைகாட்டி அரசு மக்களின் உரிமைகளை மீறி, ஜனநாயகத்தைச் சீரழித்து வருகின்றது
என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>திசைகாட்டி அரசு மக்களின் உரிமைகளை மீறி, ஜனநாயகத்தைச் சீரழித்து வருகின்றது
என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
</p><p>
அம்பாந்தோட்டை மாவட்டம், தங்காலை தேர்தல் தொகுதி, லுனுகம்வெஹர புதிய நகரில்
விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராயும் மக்கள் சந்திப்பு நேற்று சனிக்கிழமை
நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,</p><h2>இளைஞர் மன்றத்தேர்தல்</h2><p>

"மாறுபட்ட அரசே இன்று நாட்டை ஆட்சி செய்து வருகின்றது. சர்வாதிகார,
எதேச்சதிகார அரசாகவே இந்த அரசு காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2681219-c899-40a7-8927-5288bb91cebb/26-6a9cf2d2a1413.webp' /></p><p> </p><p>அவ்வாறே ஜனநாயகத்தை மரணப்
படுக்கைக்குக் கொண்டு செல்லும் அரசாகவும் இது திகழ்கின்றது. தற்சமயம் இந்தப்
பிரஜைகளின் பங்களிப்பைக் குறைக்கும் தேசியத் வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்து,
ஜனநாயகத்துக்கான வெளியைச் சுருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
</p><p>
இதன் ஆரம்பம் இளைஞர் மன்றத் தேர்தல் ஊடாக நடந்து, பின்னர் சிவில் பாதுகாப்பு
குழுக்கள் வரை சென்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது 22 ஆவது அரசமைப்புத்
திருத்தம் ஊடாக ஜனநாயகத்தை அழித்து, ஜனநாயகப் பாரம்பரியங்கள் அனைத்தையும்
நாசமாக்கி, தனிவழியில் எல்லா விடயங்களையும் செய்துகொள்ள இந்த அரசு முற்பட்டு
வருகின்றது.
</p><p>
சர்வாதிகாரப் போக்கில், தனிவழியில் செயற்படும் இந்த அரசு எடுக்கும்
தீர்மானங்கள் காரணமாகவே நாடே வீழ்ச்சியடைந்துள்ளது. </p><p>தனிக்கட்சி நாட்டை ஆட்சி
செய்வதே ஜனாதிபதிக்கு தற்போதுள்ள ஒரே நோக்கமாகக் காணப்படுகின்றது. முழு அரசும்
அரச இயந்திரமும் ஒரு கட்சியினது உத்தரவுகளுக்கு இணங்கச் செயற்பட இந்த அரசு
நடவடிக்கை எடுத்து வருகின்றது. </p><p>இதற்காகவே 22 ஆவது அரசமைப்புத் திருத்தத்தைக்
கொண்டுவந்துள்ளனர்.</p><h2>எரிபொருள் மற்றும் எரிவாயு விலை</h2><p>
</p><p>
எதிர்க்கட்சியாக இருந்தவேளை மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதத்தால்
குறைப்பதாகவும், துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் அதே விலையில்
எரிபொருளைப் பெற்றுத் தருவதாகவும், இளைஞர் தலைமுறைக்கு 12 இலட்சத்துக்கு
விட்ஸ் ரக காரைப் பெற்றுக்கொள்வதற்கான வசதியை ஏற்படுத்தித் தருவதாகவும், நெல்
ஒரு கிலோவுக்கு 150 ரூபா நிலையான விலையைச் சட்ட ரீதியாக ஆக்கித் தருவதாகவும்
பிரஸ்தாபித்தனர். ஆனால், இன்று வரை இதில் எதையுமே செய்யவில்லை. நாட்டை
சர்வாதிகார ஆட்சி நோக்கியே அரசு நகர்த்திச் செல்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6607421-f4bc-4971-8a52-517ac3d297d3/26-6a9cf32970250.webp' /></p><p>
</p><p>
எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளைச் சொற்ப தொகையில் குறைத்துவிட்டு ஊடகக்
காண்பிப்புகளையே இவர்கள் செய்து வருகின்றனர்.</p><p> தமக்கு வாக்களித்த மக்கள்
துன்பப்பட வேண்டும் என்பதே இந்த மாறுபட்ட அரசின் ஆசையாகக் காணப்படுகின்றது.

விவசாயியின் மகன் என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்க, இன்று சுழற்சி முறை விவசாயத்தைக்கூட தடை செய்து வருகின்றார்.</p><p> இதன்
மூலம் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நெற்செய்கை, தோட்டப்
பயிர்கள், மரக்கறி மற்றும் பழங்கள், ஏற்றுமதிப் பயிர்ச்செய்கை உள்ளிட்ட
ஒட்டுமொத்த விவசாயமும் இன்று வீழ்ச்சியடைந்துள்ளது.
</p><h2>கோட்டாபய ராஜபக்சவுக்கு என்ன நடந்தது</h2><p>
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை, உள்ளூராட்சி மன்றங்களின்
அதிகாரம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி ஆகியவை இவர்களிடம் இருப்பதால் அரசு
தங்களை அதிகாரம் படைத்தோராக நினைத்துக்கொண்டிருக்கின்றது.</p><p>

69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு என்ன
நடந்தது என்பதை இந்த அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.</p><p>மக்கள் வீதியில்
இறங்கியமையாலேயே அவர் வீட்டுக்குச் செல்ல நேரிட்டது. 2019 இலும் 2024 இலும்
மக்கள் ஏமாந்தனர். ஆகவே, உங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்காக வீதியில்
இறங்கத் தயாராகுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்." - என்றார்.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T04:58:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோலகலமாக அரங்கேறிய போதை விருந்து ; 05 பெண்களுடன் கைதான 36 ஆண்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lavish-drug-party-36-men-arrested-with-5-women-1788670628"></link>
            <id>https://jvpnews.com/article/lavish-drug-party-36-men-arrested-with-5-women-1788670628</id>
            <summary type="text">தெல்தெனிய, விக்டோரியா பகுதியில் நடத்தப்பட்ட பேஸ்புக் விருந்துபசாரம் ஒன்று முற்றுகையிட்ட பொலிஸார் 36 ஆண் சந்தேகநபர்களையும் 5 பெண் சந்தேகநபர்களையும் கைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெல்தெனிய, விக்டோரியா பகுதியில் நடத்தப்பட்ட பேஸ்புக் விருந்துபசாரம் ஒன்று முற்றுகையிட்ட பொலிஸார் 36 ஆண் சந்தேகநபர்களையும் 5 பெண் சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர். </p><p>

தெல்தெனிய பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20944071-f913-4a5d-93fc-2699c9dadd4e/26-6a9cf2a56de4d.webp' /></p><h2>&nbsp;போதைப்பொருள்</h2><p> </p><p>

சந்தேகநபர்களிடமிருந்து 947 மில்லிகிராம் கஞ்சா, 3 கிராம் 657 மில்லிகிராம் ஹேஷ் போதைப்பொருள், 1 கிராம் 276 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 18 போதை மாத்திரைகள், 21 சட்டவிரோத சிகரெட்டுகள், 500 மில்லி லீட்டர் கொள்ளளவு கொண்ட 35 பியர் கேன்கள் மற்றும் 750 மில்லி லீட்டர் கொள்ளளவு கொண்ட 13 மதுபான போத்தல்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.</p><p></p><p> </p><p>

கைது செய்யப்பட்ட ஆண் சந்தேகநபர்கள் 21 முதல் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களென்பதுடன், அவர்கள் கெலியோய, அலுத்வத்தை, வரகாபொல, பேராதனை, அம்பிட்டிய, கண்டி மற்றும் ஹங்குரன்கெத்த ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.</p><p> 

அத்துடன், கைது செய்யப்பட்ட பெண் சந்தேகநபர்கள் 22 முதல் 43 வயதிற்கு இடைப்பட்டவர்களென்பதுடன், அவர்கள் பல்லேகல, பேராதனை, ஹங்குரன்கெத்த, தெஹிவளை மற்றும் கட்டுக்கஸ்தோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T04:57:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[Gov Pay பயன்படுத்தும் பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fraud-through-fake-gov-pay-website-police-warn-1788670106"></link>
            <id>https://tamilwin.com/article/fraud-through-fake-gov-pay-website-police-warn-1788670106</id>
            <summary type="text">&#039;Gov Pay&#039; அமைப்பைப் போன்ற போலி இணையதளத்தை உருவாக்கி பொதுமக்களின் பணம் மற்றும் முக்கியமான தகவல்களைத் திருடும் மோசடியொன்று இடம்பெற்று வருவதாக பொலிஸார் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>'Gov Pay' அமைப்பைப் போன்ற போலி இணையதளத்தை உருவாக்கி பொதுமக்களின் பணம் மற்றும் முக்கியமான தகவல்களைத் திருடும் மோசடியொன்று இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

'Gov Pay' மூலம் பணத்தைச் செலுத்துவதற்கு வேறு எந்த இணையதளமும் கிடையாது என்பதால், இத்தகைய நிதி மோசடிகளில் சிக்கி ஏமாற வேண்டாம் என்று பொலிஸார் அறிவுறுத்துகின்றனர்.</p><h2>புதிய நடைமுறை</h2><p> </p><p>பொதுமக்களின் சேவையை இலகுபடுத்தும் நோக்கிலும், நிதி மோசடிகளைக் குறைக்கும் நோக்கிலும் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை 'Gov Pay' முறைமையின் மூலம் செலுத்தும் நடைமுறை இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. </p><p>இருப்பினும், 'Gov Pay' அமைப்பைப் போன்ற போலி இணையதளத்தை உருவாக்கி, பொதுமக்களின் பணம் மற்றும் ரகசியத் தரவுகளை தந்திரமாகத் திருடும் மோசடி இடம்பெற்று வருவதாக பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e987570-62f6-469f-975f-c9fb50e133cd/26-6a9cf28c7db66.webp' /></p><h2>மோசடி</h2><p> </p><p>இந்த போலி இணையதளத்தின் இணைப்புகள் (Links), குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp) செய்திகள் மூலமாக கையடக்க தொலைபேசிகளுக்கு அனுப்பப்பட்டு, பொதுமக்களின் பணம் இவ்வாறு திருடும் மோசடி இடம்பெறுவதாக குறிப்பிடப்படுகிறது.</p><p> 'Gov Pay' மூலம் பணத்தைச் செலுத்துவதற்கு வேறு எந்த இணையதளமும் இல்லாததால், இவ்வாறான போலி நிதி மோசடிகளில் சிக்க வேண்டாம் என போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர, பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T04:56:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[2032ஆம் ஆண்டளவில் இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்! வட மாகாண ஆளுநர் கூறும் விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/north-governor-statement-regarding-srilanka-1788669218"></link>
            <id>https://tamilwin.com/article/north-governor-statement-regarding-srilanka-1788669218</id>
            <summary type="text">&#039;கண்ணிவெடிகளற்ற இலங்கை&#039; என்ற இலக்கை அடைவதற்கு அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கி
வருகின்றது, போருக்குப் பின்னரான வட மாகாணத்தின் மீள்குடியமர்வு மற்றும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>'கண்ணிவெடிகளற்ற இலங்கை' என்ற இலக்கை அடைவதற்கு அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கி
வருகின்றது, போருக்குப் பின்னரான வட மாகாணத்தின் மீள்குடியமர்வு மற்றும்
மக்கள் தமது வாழ்விடங்களுக்குத் திரும்புவதற்கான செயன்முறைகள் விரைவாக
இடம்பெறுவதற்கு கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களின் அர்ப்பணிப்பும் மனிதநேயப்
பணியும் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளன என வட மாகாண ஆளுநர்
நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.</p><p>2032ஆம் ஆண்டளவில் இலங்கையை கண்ணிவெடிகளற்ற நாடாக மாற்றும் இலக்கை எட்ட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>

வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய
கண்ணிவெடி நடவடிக்கை நிலையத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட ஊடகச் சந்திப்பு
நேற்றுமுன்தினம் (04.09.2026) மாலை கிளிநொச்சி மாவட்ட செயலகக் கேட்போர்
கூடத்தில் நடைபெற்றது. </p><p>இதில் வடக்கு மாகாணத்தின் கண்ணிவெடி அகற்றும்
செயற்பாடுகள், இதுவரையான முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில்
கருத்துக்கள் பகிரப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f302f55-1da4-4266-9d58-7ed597ac2fce/26-6a9ceef8ce7cd.webp' /></p><h2>கண்ணிவெடி அகற்றப்பட வேண்டிய இடம்</h2><p>
</p><p>
வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர், பொறியியலாளர்
குமுது லால் போகஹவத்த கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையில் தற்போது 21 சதுர
கிலோமீற்றர் பரப்பளவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளன என்று
தெரிவித்தார். </p><p>இதுவரையான கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளின்போது பல்வேறு
நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 20 பணியாளர்கள் தமது உயிர்களைத் தியாகம்
செய்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். </p><p>கண்ணிவெடி அகற்றும் பணியின்
அபாயத்தையும் அதில் பணியாற்றுவோரின் அர்ப்பணிப்பையும் இது
வெளிப்படுத்துகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e28ade0-01e8-4bc7-8ca0-9f593fb641d4/26-6a9ceef9b69e6.webp' /></p><p>
</p><p>
இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர், கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களின்
மனிதநேயத்தையும் அர்ப்பணிப்பையும் மனமுவந்து பாராட்டினார். போருக்குப்
பின்னரான காலப்பகுதியில் தாம் பல்வேறு மாவட்டங்களின் மாவட்ட செயலராகப்
பணியாற்றியபோது, மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்கான
மீள்குடியமர்வுச் செயற்பாடுகள் விரைவாக முன்னெடுக்கப்படுவதில் கண்ணிவெடி
அகற்றும் நிறுவனங்கள் வழங்கிய ஒத்துழைப்பை நேரடியாகக் கண்டறிந்ததாகவும் அவர்
தெரிவித்தார்.
</p><p>
மிகவும் கடினமான மற்றும் ஆபத்தான பகுதிகளிலும் தமது உயிரைப் பணயம் வைத்து
கண்ணிவெடிகளை அகற்றி, ஆயிரக்கணக்கான மக்களின் பாதுகாப்பான
மீள்குடியமர்வுக்கும் அவர்களின் வாழ்வாதாரங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கும்
கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் பங்களித்துள்ளனர் என்றும் ஆளுநர் மெச்சினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/864032cc-25cd-41a9-a2d8-3195db045e81/26-6a9ceefaa1f1b.webp' /></p><h2>கண்ணிவெடிகள் இருக்கக்கூடிய வாய்ப்பு குறித்து கவனம்</h2><p>
</p><p>
இதேவேளை, சில வாரங்களுக்கு முன்னர் தமது தலைமையில் ஆளுநர் செயலகத்தில்
நடைபெற்ற கலந்துரையாடலில், தற்போது வனவளத் திணைக்களத்தின் எல்லைக்குட்பட்டதாக
அடையாளப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகளில் காணப்படும் பங்கர்களுடன் தொடர்புடைய
கண்ணிவெடிகள் இருக்கக்கூடிய வாய்ப்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டது என்றும்
ஆளுநர் குறிப்பிட்டார். </p><p>அவ்வாறான பகுதிகளிலும் தேவையான ஆய்வுகளை மேற்கொண்டு
கண்ணிவெடிகளை அகற்ற வேண்டிய தேவை இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டம் விரைவில் கண்ணிவெடியற்ற மாவட்டமாக அறிவிக்கப்படும்
நிலைக்கு முன்னேறி வருகின்றது என்று குறிப்பிட்ட ஆளுநர், 2032ஆம் ஆண்டளவில்
இலங்கையை கண்ணிவெடிகளற்ற நாடாக மாற்றும் இலக்கை எட்ட முடியும் என
எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d766449-5bff-4604-8458-2ff5e94a46a1/26-6a9ceefb74cd3.webp' /></p><p> இதற்குத் தேவையான முழுமையான அரச ஆதரவு
தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
</p><p>
இதேவேளை, ஊடக சந்திப்பின்போது இலங்கை அரசின் சார்பில் தேசிய கண்ணிவெடி
நடவடிக்கை நிலையத்துக்கும் ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்துக்கும் இடையில்
புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

இந்த ஊடகச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ்ப்பாணம்,
கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட செயலர்கள், வவுனியா மாவட்ட
மேலதிக மாவட்ட செயலர், தூய்மை இலங்கை செயலணியின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர்
உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1615a6b8-d689-45d1-9311-ef34bb39b106/26-6a9ceefc485af.webp' /></p>]]></content>
            <updated>2026-09-06T04:43:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தோல்வியில் முடிந்த துப்பாக்கிச்சூடு ; அதிகாலையில் அரங்கேறிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/failed-shooting-attempt-1788669664"></link>
            <id>https://jvpnews.com/article/failed-shooting-attempt-1788669664</id>
            <summary type="text">கொஸ்கொட பகுதியில் இன்று (06) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த &#039;கொஸ்கொட தாரக்க&#039;...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொஸ்கொட பகுதியில் இன்று (06) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "> 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த 'கொஸ்கொட தாரக்க' என்பவரின் உறவினர் ஒருவரைக் இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்த முயற்சி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0bfad66-3a7a-452d-8317-e2777a6276ff/26-6a9ceee1f1959.webp' /></p><p style="text-align: justify; "> 

9 மில்லிமீட்டர் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இருமுறை சுடுவதற்கு முயற்சி செய்யப்பட்டுள்ள போதிலும், அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் துப்பாக்கி இயங்கவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது. </p><p style="text-align: justify; ">

இச்சம்பவம் தொடர்பில் கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-06T04:41:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமர் வேட்பாளர் விஜயா? தொல்.திருமாவளவன் பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/pm-candidate-tvk-ministers-thirumavalavan-1788669242"></link>
            <id>https://ibctamilnadu.com/article/pm-candidate-tvk-ministers-thirumavalavan-1788669242</id>
            <summary type="text">கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைப்பது தொடர்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் இரண்டாவது முறையாக நடைபெறுகிறது.</p><p>

கூட்டத்தில் யார் யார் பங்கேற்பார்கள், என்ன செய்ய போகிறார்கள் என்பது குறித்து நடைபெறும் போது தான் தெரியவரும் என தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8142985-8ac0-4445-8069-178a9dc4b5da/26-6a9cedeea6eda.webp' /><br></p><p>
</p><p>
மேலும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நீதிமன்ற உத்தரவின்படி ஆணவக்கொலை தடுப்பு மசோதா வரையறுக்கப்படும் என தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதன்போது தமிழக வெற்றி கழகத்தின் பிரதமர் வேட்பாளர் விஜய்-யா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது. தமிழக வெற்றிக்கழகத்தின் முன்னணி தலைவர்கள் பிரதமர் வேட்பாளர் விஜய் என இதுவரை பேசவில்லை, ஆனால் மற்றவர்கள் கூறிவருகின்றனர், அதை கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என கூற முடியாது என தெரிவித்தார்.
</p><p>
பிரதமர் வேட்பாளர் தொடர்பாக பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம், 2029 தேர்தல் வரட்டும், அப்போது கூறுகிறேன் என தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad9f9f83-733d-448f-9636-595cf60068a7/26-6a9cedef57215.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-06T04:37:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் தமிழ்தேசியக் கட்சிகள் பகிரங்க கோரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/un-must-apply-strong-pressure-on-the-sl-government-1788667470"></link>
            <id>https://ibctamil.com/article/un-must-apply-strong-pressure-on-the-sl-government-1788667470</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில்&amp;nbsp;தமிழ்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்&amp;nbsp; ஐக்கிய நாடுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில்&nbsp;தமிழ்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்&nbsp; ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளன.</p><p>அதன்படி, கடந்த கால கடத்தல்கள், காணாமல் போனோர் விவகாரம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படாத நிலையில் இலங்கை அரசின் மீது ஐ.நா மற்றும் சர்வதேச சமூகம் வலுவான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>அத்துடன் தமிழர்கள் மற்றும் ஏனைய சிறுபான்மை மக்கள் சார்ந்த விடயங்களில் அரசாங்கம் காட்டும் அலட்சியப் போக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரது அறிக்கை வெளிப்படுத்தியுள்ளதை தமிழ்தேசிய அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன.</p><p></p><h2>செம்மணி மனிதப் புதைகுழி</h2><p>இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், காணாமல் போனோர் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர்வதில் அரசு தொடர்ந்தும் தாமதம் காட்டுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9273b056-9d6b-4116-85fc-4180393edd52/26-6a9ceac28d367.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமையால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் நீதிக்காக காத்திருப்பதாகவும் தமிழ்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
</p><p>
ஆகவே இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரத்தை கண்காணிப்பதற்கும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T04:36:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வார ராசிபலன் - பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் 3 ராசியினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/top-3-zodiac-signs-weekly-rasi-palan-in-tamil-1788669116"></link>
            <id>https://ibctamil.com/article/top-3-zodiac-signs-weekly-rasi-palan-in-tamil-1788669116</id>
            <summary type="text">வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.</p><p>

கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும்.
</p><p>
இந்நிலையில், திங்கள் முதல் வெள்ளி வரை எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ளது என்பதை பார்க்கலாம்.</p><p></p><h2>மேஷ ராசி</h2><p>பணவரவுக்கு குறை இருக்காது. ஆனால், அவ்வப்போது சிறுசிறு குழப்பங்களின் காரணமாக சற்று சோர்வாகக் காணப்படுவீர்கள். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1663140d-0c24-4b69-9631-4775e39ed975/26-6a9ced0ca640c.webp' /></p><p>பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படுத்துவதாக இருக்கும். சிலருக்கு வெளிமாநிலங்களுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
</p><p>
அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். உங்களின் செயல்பாடுகளால் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளையும் அதனால் பதவிஉயர்வு ஊதிய உயர்வு போன்ற சலுகைகளை எதிர்பார்க்கலாம்.
</p><p>
வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.பணியாளர்கள் நல்ல முறையில் பணி செய்வார்கள்.</p><p></p><h2>கடக ராசி</h2><p>பொருளாதார வசதிக்கு குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ad8ea48-3ade-40d9-bd92-e980dc453eb9/26-6a9cecbe0e7ed.webp' /></p><p>அதனால், தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வந்தாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும்.</p><p> சிலருக்கு நண்பர்களுடன் வெளியூர்ச் சுற்றுலா செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருக்கும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு இப்போது முயற்சிக்கவேண்டாம். </p><p>அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.

வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும். சக வியாபாரிகளின் பேச்சைக் கேட்டு புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம்.
</p><p>
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தரும்.</p><h2>சிம்ம ராசி </h2><p>வார முற்பகுதியில் நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a151149f-8c7d-4793-9079-8e0bebe9e28b/26-6a9cecbebf1cc.webp' /></p><p>அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். செலவுகளைச் சமாளிப்பதற்கேற்ப பணவரவும் இருக்கும் என்பதால் உற்சாகமாக இருப் பீர்கள். பிள்ளை அல்லது பெண்ணின் திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். </p><p>பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்ப வர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக்கான அழைப்புக் கடிதம் வரும்.
</p><p>
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிதாக வியாபாரம் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூலமாக முடியும்</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் W<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>HATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T04:33:23+00:00</updated>
        </entry>
    </feed>
