<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-17T13:31:41+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவில் முதன்முறையாக பெண் அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-women-appointed-as-ntc-scheduler-officers-1786972432"></link>
            <id>https://tamilwin.com/article/two-women-appointed-as-ntc-scheduler-officers-1786972432</id>
            <summary type="text">வரலாற்றில் முதன்முறையாக தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவின் அட்டவணையிடும் அதிகாரிகளாக இரண்டு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பணியிடங்களுக்காகப் புதித...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றில் முதன்முறையாக தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவின் அட்டவணையிடும் அதிகாரிகளாக இரண்டு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். </p><p>இப்பணியிடங்களுக்காகப் புதிதாக நியமிக்கப்பட்ட 18 அதிகாரிகளில் இவர்களும் அடங்குவர்.
</p><h2>போக்குவரத்து சேவைகளின் நிர்வாகம்</h2><p>
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ், புதிதாகப் பணியமர்த்தப்பட்ட திட்டமிடல் அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்குவதற்காக ஒரு நியமன விழா நடைபெற்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69d5922d-229a-4028-a964-5e1445813d96/26-6a830cb330bb2.webp' /></p><p>
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபால, பணிப்பாளர் நாயகம், சபையின் உறுப்பினர்கள் மற்றும் பிற அதிகாரிகள் இவ்விழாவில் கலந்துகொண்டார்.
</p><p>
இந்த நியமனங்கள் திட்டமிடல் செயல்பாடுகளை வலுப்படுத்தி, பொதுப் போக்குவரத்து சேவைகளின் திறமையான நிர்வாகத்திற்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T13:30:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருப்பு நிற கிளாமர் உடையில் ரசிகர்களை மயக்கும் கீர்த்தி ஷெட்டி போட்டோ ஷுட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/krithi-shetty-latest-black-attire-photoshoot-1786972742"></link>
            <id>https://cineulagam.com/article/krithi-shetty-latest-black-attire-photoshoot-1786972742</id>
            <summary type="text">கீர்த்தி ஷெட்டிதெலுங்கு சினிமாவில் உப்பெனா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் கீர்த்தி ஷெட்டி. முதல் படமே அவருக்கு நல்ல வெற்றியை கொடுக்க அடுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கீர்த்தி ஷெட்டி</h2><p>தெலுங்கு சினிமாவில் உப்பெனா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் கீர்த்தி ஷெட்டி.</p><p> முதல் படமே அவருக்கு நல்ல வெற்றியை கொடுக்க அடுத்தடுத்து ஷ்யாம் சிங்கா ராய், பங்கார்ராஜு, தி வாரியர், கஸ்டடி எனப் பல படங்களில் நடித்தார்.</p><p>
தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ள இவர் கார்த்தியுடன் வா வாத்தியார் படத்தில் நடித்துள்ளார், பிரதீப் ரங்கநாதனுடன் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திலும் நடித்துள்ளார்.</p><p>அண்மையில் இவர் கருப்பு நிற கிளாமர் உடையில் வெளியிட்ட போட்டோஸ் இதோ,</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T13:30:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 பேரால் என் வாழ்க்கையே போச்சு..வயசானவங்ககூட உரசுவாங்க!! நடிகை சோனா..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/sona-reveals-secrets-3-people-who-ruined-my-life-1786970413"></link>
            <id>https://viduppu.com/article/sona-reveals-secrets-3-people-who-ruined-my-life-1786970413</id>
            <summary type="text">சோனா90ஸ் கிட்ஸ்களின் கிளாமர் குயினாக திகழ்ந்த நடிகை சோனா, தற்போது இயக்குநர் தயாரிப்பாளர் அவதாரத்தை எடுத்து வருகிறார். ஸ்மோக் என்ற தன் வாழ்க்கை வரலாறு ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சோனா</h2><p>90ஸ் கிட்ஸ்களின் கிளாமர் குயினாக திகழ்ந்த நடிகை சோனா, தற்போது இயக்குநர் தயாரிப்பாளர் அவதாரத்தை எடுத்து வருகிறார். ஸ்மோக் என்ற தன் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கியும் வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f73a06bc-4df4-418d-870a-c7c9b64fc95b/26-6a83013021c4c.webp' /></p><p> </p><p>தன்னுடைய வாழ்க்கை நடந்த பல கசப்பான அனுபவங்களை சமீபகாலமாக பகிர்ந்து வரும் சோனா, சமீபத்திய பேட்டியொன்றில் பல விஷயங்களை பகிர்ந்துளார். </p><p>அதில், ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னைவிட 20 வயது முதல் 30 வயது வரை மூத்தவர்கள் சிலர் உரசி செல்வார்கள். அந்நேரத்தில் எனக்கு எதிராக வெளிப்படையாக பேச முடியாத சூழல் இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0566c68e-2230-457d-9b40-98cfb88255a0/26-6a83012f6b202.webp' /></p><h2>3 பேர்&nbsp;</h2><p> </p><p>அப்படி எதிர்ப்பு தெரிவித்தால் தொடர்ந்து படங்களில் நடிக்கமுடியாமல் போய்விடுமோ என்ற பயத்தால் சில சம்பவங்களை கண்டும் காணாததுபோல் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. </p><p>அதேபோல், என் வாழ்க்கையில் ஏற்பட்ட பல கசப்பான சம்பவங்களுக்கு 3 பேர் தான் காரணம். அவங்க செய்த சதிதான் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது என்று கூறியிருக்கிறார்.</p>]]></content>
            <updated>2026-08-17T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2029ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்; சிறையில் இருந்தே போட்டியிட வேண்டும்; நாமல் ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2029-presidential-election-even-prison-namal-1786969920"></link>
            <id>https://jvpnews.com/article/2029-presidential-election-even-prison-namal-1786969920</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், தாம் சிறையில் இருந்தே போட்டியிட வேண்டும் என அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் தெரிவித்ததாக பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், தாம் சிறையில் இருந்தே போட்டியிட வேண்டும் என அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>


நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே நாமல் ராஜபக்ச இதனைத் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53d6a7d1-4333-4ea1-ba10-7118e17608cf/26-6a82ff421cc34.webp' /></p><h2>அமைச்சர்களே வழக்குகளுக்குத் தீர்ப்பு&nbsp; வழங்குவது </h2><p>



நாட்டில் தற்போது அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களே வழக்குகளுக்குத் தீர்ப்புகளை வழங்குவது போன்று செயற்படுவதாகவும், நீதிமன்ற நீதிபதிகள் அல்லாமல் அரசியல்வாதிகள் நீதித்துறை தொடர்பான விடயங்களில் தலையிடுவதாகவும் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p></p><p>
</p><p>


இதன் மூலம் நீதித்துறைக்கு அரசாங்கம் எவ்வளவு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கின்றது என்பது தெளிவாகத் தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>



நீதித்துறையின் சுயாதீனத்தன்மை தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கங்களும் சந்தேகம் எழுப்பியுள்ளதாகத் தெரிவித்த நாமல், இதன் காரணமாகவே சர்வதேச சட்டத்தரணிகள் அமைப்புகளும் நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருவதாகக் கூறியுள்ளார்.



“நாங்கள் நீதிமன்றத்தையே நம்புகிறோம்” எனவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>&nbsp; அதேவேளை நாமல் ராஜபக்ஷ சிறையில் அடைக்கப்பட்டாலும் கூட, அவரை நாட்டின் ஜனாதிபதியாக்குவதற்குத் தனது கட்சி பாடுபடும் என்று முன்னாள் அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p>முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரையும், ஏனைய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களையும் சிறையில் அடைக்க தற்போதைய அரசாங்கம் முயற்சித்து வருவதாகக் கூறிய அவர், நாட்டின் ஒரே நம்பிக்கைக்குரிய நிறுவனமான நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைக்கவும் ஆட்சியாளர்கள் முற்படுவதாகக் குற்றம் சாட்டினார்.</p>]]></content>
            <updated>2026-08-17T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேனிலவு சென்றபோது மாதவிடாய்.. மணமகன் செயலால் அதிர்ந்த மணமகள்; காப்பாற்றிய ஹோட்டல் ஊழியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/menstruation-honeymoon-groom-strangles-bride-1786950927"></link>
            <id>https://jvpnews.com/article/menstruation-honeymoon-groom-strangles-bride-1786950927</id>
            <summary type="text">இந்தியா உத்திர பிரதேசத்தை சேர்ந்த புதுமண தம்பதிகள்&amp;nbsp; தேனிலவின்போது மாதவிடாய் ஏற்பட்டதால் தனது கணவர் தன்னைத் தாக்கியதாகப், உத்தரப்பிரதேச மாநிலம் கோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா உத்திர பிரதேசத்தை சேர்ந்த புதுமண தம்பதிகள்&nbsp; தேனிலவின்போது மாதவிடாய் ஏற்பட்டதால் தனது கணவர் தன்னைத் தாக்கியதாகப், உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்த பெண் ஒருவர், பெண் ஒருவர் முறைப்பாடு செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
</p><p>
இதையடுத்து, அவரது கணவர், மாமியார் மற்றும் நாத்தனார் ஆகியோர் மீது போலீஸார் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdf20a8b-52fd-4b95-9f0a-030f61cf05cd/26-6a82b511a9314.webp' /></p><h2>கணவர் மற்றும்&nbsp; குடும்பத்தினர்&nbsp; துன்புறுத்தியதாக பெண் முறைப்பாடு</h2><p> </p><p>

 

கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் நிகில் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின்போது வரதட்சணையாக லட்சக்கணக்கில் பணமும், காரும் கொடுக்கப்பட்ட போதிலும், கூடுதல் வரதட்சனை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை துன்புறுத்தியதாக அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
டெல்லியைச் சேர்ந்த தனது கணவர் நிகில் மிஸ்ரா, தனக்கு மாதவிடாய் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்து தன்னை அறைந்தும், உதைத்தும், குத்தியும் தாக்கியதுடன், கழுத்தை நெரிக்கவும் முயன்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவரது அலறல் சத்தம் கேட்டு ஹோட்டல் ஊழியர்கள் தலையிட்டு தாக்குதலை நிறுத்தியதாக அவர் கூறினார்.

தொடர்ந்து டெல்லிக்கு திரும்பிய பின்னரும் கணவர் மற்றும் மாமியார், நாத்தனார் ஆகியோர் சேர்ந்து அவரை மனரீதியாக தொடர்ந்து சித்திரவதை செய்துள்ளனர்.</p><p></p><p> </p><p>மேலும், திருமணமான 45 நாட்களுக்குள் அதாவது ஜூலை 14 அன்று அவர் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். </p><p>
 
இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்க முயன்றும் பலனளிக்காத நிலையில், கோரக்பூர் மூத்த காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கௌஸ்துப் அவர்களின் தலையீட்டிற்கு பின் கணவர் நிகில் மிஸ்ரா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T13:25:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம்! நிர்வாகப் பிரச்சினையை இனவாத அரசியலாக்க வேண்டாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kalmunai-base-hospital-issue-1786973132"></link>
            <id>https://ibctamil.com/article/kalmunai-base-hospital-issue-1786973132</id>
            <summary type="text">கல்முனை ஆதார வைத்தியசாலையில் தற்போது ஏற்பட்டுள்ள சீருடை தொடர்பான விவகாரம் முழுமையாக அரசாங்க சுற்றறிக்கைகள், தாபன விதிக்கோவை, சுகாதார அமைச்சின் நடைமுறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை ஆதார வைத்தியசாலையில் தற்போது ஏற்பட்டுள்ள சீருடை தொடர்பான விவகாரம் முழுமையாக அரசாங்க சுற்றறிக்கைகள், தாபன விதிக்கோவை, சுகாதார அமைச்சின் நடைமுறைகள் மற்றும் சம்பந்தப்பட்ட சேவை விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு தீர்க்கப்பட வேண்டிய ஒரு நிர்வாக விடயமாகும்.
</p><p>
குறித்த சீருடை தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறை என்ன, அது எந்தப் பணியாளர்களுக்கு பொருந்துகின்றது, அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பவற்றை சுகாதார அமைச்சு மட்டத்தில் உரிய முறையில் ஆராய்ந்து, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தெளிவானதும் நியாயமானதுமான தீர்வு வழங்கப்பட வேண்டும்.
</p><p>

முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கைகள், கலாசார மரபுகள் மற்றும் அடையாளங்களை நாம் மதிக்கின்றோம். எந்தவொரு சமூகமும் தனது மத மற்றும் கலாசார அடையாளங்களைப் பாதுகாப்பதற்கும் மதிப்புடன் வாழ்வதற்கும் உரிமையுடையது என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை.</p><p></p><h2>சட்டபூர்வமான விதிமுறை</h2><p>
</p><p>
அதேவேளை, அரச சேவையில் குறிப்பிட்ட பதவிகளுக்கு சீருடை தொடர்பான சட்டபூர்வமான விதிமுறைகள் இருந்தால், அந்த விதிமுறைகள் மதம் அல்லது இனம் பாராமல் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.</p><p></p><p>
</p><p>
எனவே, இந்த விவகாரத்தை “தமிழர்களுக்கு எதிரானது” அல்லது “முஸ்லிம்களுக்கு எதிரானது” என்ற இன, மத மோதலாக மாற்றுவது முற்றிலும் தவறான அணுகுமுறையாகும்.
</p><p>
அத்தோடு கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் சுகுணனையும், அவரது குடும்பத்தினரையும் இலக்காகக் கொண்டு சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் தனிநபர் அவதூறுகள் மற்றும் சமூகத் தாக்குதல்களை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
</p><p>
நீண்டகால அனுபவமுள்ள ஒரு அரச வைத்திய அதிகாரியின் நிர்வாகச் செயற்பாடுகள் தொடர்பில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால், அதனை உரிய நிர்வாக மற்றும் சட்ட நடைமுறைகளின் ஊடாக முன்வைக்க வேண்டும். </p><p>அவரது குடும்பத்தினரை இதில் தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் தாக்குவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

குறிப்பாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஷ் குறித்த வைத்திய அதிகாரி ஒரு உளவு அமைப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக செயற்படுகிறார் என்ற சந்தேகத்தை வெளியிட்டிருப்பதாக கூறப்படும் கருத்து மிகவும் பாரதூரமானதும் கண்டிக்கத்தக்கதுமாகும்.</p><p> இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருந்தால் அவை உரிய சட்ட மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆதாரமின்றி ஒரு அரச வைத்திய அதிகாரியை இவ்வாறான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபடுத்துவது பொறுப்பான அரசியல் அணுகுமுறை அல்ல.</p><p>&nbsp;கல்முனையைப் பொறுத்தவரை, கடந்த காலங்களிலும் பல நிர்வாக மற்றும் அரசியல் விவகாரங்கள் தொடர்ந்து சர்ச்சைகளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><h2>கல்முனைத் தமிழ் மக்களின் உரிமைகள் </h2><p>
</p><p>
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம், கல்முனை உப கல்வி வலய விவகாரம், கல்முனை மாநகர சபை மற்றும் காரைதீவு பிரதேச சபை எல்லை தொடர்பான விவகாரம், நகர அபிவிருத்தி அதிகாரசபை தொடர்பான வர்த்தமானி உள்ளிட்ட பல விடயங்களில் கல்முனை தொடர்பான நிறுவனங்களும் நிர்வாக அமைப்புகளும் தொடர்ச்சியாக அரசியல் விவாதங்களுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.</p><p></p><p>

இந்தப் பின்னணியில், கல்முனையில் உள்ள அரச நிறுவனங்கள் தொடர்பான ஒவ்வொரு விவகாரமும் தொடர்ச்சியாக அரசியல் சர்ச்சையாக மாற்றப்படுவதன் பின்னால் ஏதேனும் திட்டமிட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல் உள்ளதா என்ற நியாயமான சந்தேகம் எழுகின்றது.
</p><p>
குறிப்பாக, இந்த தொடர்ச்சியான நடவடிக்கைகளின் மூலம் கல்முனைத் தமிழ் மக்களின் நிர்வாக, கல்வி, உள்ளூராட்சி மற்றும் நிறுவன ரீதியான உரிமைகள் படிப்படியாக பாதிக்கப்படும் வகையில் ஏதேனும் திட்டமிட்ட அணுகுமுறை முன்னெடுக்கப்படுகின்றதா? என்ற கேள்வியும் எழுகின்றது.</p><p>

இந்த சந்தேகங்கள் உண்மையா இல்லையா என்பதை ஆவணங்களும் அரச நிர்வாகத் தீர்மானங்களுமே நிரூபிக்க வேண்டும். எனவே, இதனை உணர்ச்சிப்பூர்வமான இனவாத விவாதமாக மாற்றாமல், ஒவ்வொரு விடயத்திலும் சட்டம், வர்த்தமானி, அரச சுற்றறிக்கை மற்றும் நிர்வாக நடைமுறைகள் என்ன கூறுகின்றன என்பதை வெளிப்படையாக ஆராய வேண்டும்.
</p><p>
கல்முனை ஆதார வைத்தியசாலை போன்ற அனைத்து சமூகங்களுக்கும் சேவை வழங்கும் முக்கியமான அரச சுகாதார நிறுவனத்தின் பெயரை தொடர்ச்சியாக தவறான கண்ணோட்டத்தில் சித்தரிப்பதும், அதன் அதிகாரிகளை தனிப்பட்ட முறையில் தாக்குவதும் மக்களின் நலனுக்கு எந்த வகையிலும் உதவாது.</p><p></p><p><b>எமது நிலைப்பாடு மிகவும் தெளிவானது</b></p><p>அரச சுற்றறிக்கை இருந்தால் – அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.</p><p></p><p>

விதிமுறையில் தெளிவின்மை இருந்தால் – அமைச்சு மட்டத்தில் தெளிவுபடுத்த வேண்டும்.
</p><p>
நிர்வாகத் தவறு இருந்தால் – உரிய விசாரணை நடத்த வேண்டும்.</p><p>

அநீதி இருந்தால் – தீர்வு வழங்க வேண்டும்.
</p><p>
முஸ்லிம் மக்களின் மத மற்றும் கலாசார உரிமைகளை நாம் மதிக்கின்றோம்.

தமிழ் மக்களின் நிர்வாக மற்றும் நிறுவன ரீதியான உரிமைகளையும் நாம் பாதுகாப்போம்.
</p><p>
ஒரு சமூகத்தின் உரிமையைப் பாதுகாப்பது மற்றொரு சமூகத்தின் உரிமைக்கு எதிரானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

எனவே, சீருடை விவகாரத்தை இனவாத மோதலாக மாற்றாமல், சம்பந்தப்பட்ட அனைவரும் பொறுப்புடன் செயற்பட்டு, அரச விதிமுறைகளுக்கும் சட்டத்திற்கும் அமைய நியாயமான தீர்வை காண வேண்டும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T13:25:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு பில்லியன் டொலர் மோசடி; நான்கு தனியார் வங்கிகளின் முகாமையாளர்களுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/billion-dollar-fraud-managers-4-private-banks-1786972479"></link>
            <id>https://jvpnews.com/article/billion-dollar-fraud-managers-4-private-banks-1786972479</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியைச் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குக் வௌியேற்றிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, நான்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியைச் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குக் வௌியேற்றிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, <a href="https://jvpnews.com/article/four-bank-managers-arrested-usd-1-billion-transfer-1786960058" target="_blank">நான்கு பிரதான தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் </a>நால்வரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p> 

 கைதான சந்தேக நபர்காள் நால்வரும் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/876469ad-348d-414f-aacb-21d724870fb7/26-6a8309415ec7d.webp' /></p><p> 

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் இந்த நான்கு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T13:24:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு மாகாணத்திற்கு புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-deputy-inspector-general-of-police-appointed-1786972061"></link>
            <id>https://tamilwin.com/article/new-deputy-inspector-general-of-police-appointed-1786972061</id>
            <summary type="text">கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட சம்பத்
குமார லியனகே இன்று (17) மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண பிரதி
பொலிஸ் மா அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட சம்பத்
குமார லியனகே இன்று (17) மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண பிரதி
பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் உத்தியோக பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக்
கொண்டார்.</p><p>

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இருந்த சட்டத்தரணி வருண
ஜெயசுந்தர கொழும்பிலுள்ள சிறுவர் மற்றும் மகளிர் தலைமையகத்துக்கு இடமாற்றம்
செய்யப்பட்டார்.</p><h2>நியமனம்</h2><p>
</p><p>
இதனையடுத்து உதவி பொலிஸ் மா அதிபரான சம்பத் குமார லியனகே விசேட புலனாய்வு
பிரிவு பணிப்பாளராக கடமையாற்றி வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7f3a4ef-3262-4d18-81db-a6366ef947b1/26-6a830b81b4c00.webp' /></p><p>இந்தநிலையில் இவர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா
அதிபராக பதவி உயர்வு பெற்றதையடுத்து இவரை கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப்
பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T13:24:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நயினாதீவு படகு விபத்து; விசாரணை ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nainativu-boat-accident-inquiry-begins-1786973203"></link>
            <id>https://jvpnews.com/article/nainativu-boat-accident-inquiry-begins-1786973203</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் நயினாதீவிலிருந்து நெடுந்தீவுக்குச் சென்ற சிறியரகப் படகொன்று, நயினாதீவை அண்மித்த கடற்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (16) மாலை கவிழ்ந்து வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் நயினாதீவிலிருந்து நெடுந்தீவுக்குச் சென்ற சிறியரகப் படகொன்று, நயினாதீவை அண்மித்த கடற்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (16) மாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p> எனினும், குறித்த விபத்தில் படகில் பயணித்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a47a7e68-e556-47b9-a260-e1b8813ade7d/26-6a830c14cd595.webp' /></p><p>
</p><p>
நெடுந்தீவுக்கான இறுதிப் பிரதான போக்குவரத்துப் படகு சேவை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, குறிகாட்டுவான் இறங்குதுறையில் நெடுந்தீவு செல்வதற்காகக் காத்திருந்த சில பிரயாணிகளை ஏற்றியவாறு குறித்த சிறியரகப் படகு மாலை 3:30 மணியளவில் நயினாதீவிலிருந்து புறப்பட்டுள்ளது.</p><p>

இவ்வாறு புறப்பட்ட படகு, மாலை 3:45 மணியளவில் நயினாதீவு கடற்பகுதியில் திடீரென விபத்துக்குள்ளாகி கவிழ்ந்துள்ளது. விபத்து நேர்ந்தவேளை குறித்த படகில் 10 பயணிகள் பயணித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
</p><p>
விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவராத நிலையில், கடற்படையினரின் மற்றும் மீனவர்களின் விரைவான நடவடிக்கையால் பயணிகள் அனைவரும் எவ்வித ஆபத்துமின்றி மீட்கப்பட்டுள்ளனர். </p><p>மீட்கப்பட்ட அனைவரும் நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-17T13:24:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவிற்கு தப்பி ஓடும் குற்றவாளிகள் : வடக்கு கடற்பரப்பில் உச்சக்கட்ட பாதுகாப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/security-northern-sea-border-is-being-tightened-1786971563"></link>
            <id>https://ibctamil.com/article/security-northern-sea-border-is-being-tightened-1786971563</id>
            <summary type="text">இலங்கையில் சட்டத்தின் பிடியிலிருந்து&amp;nbsp; தப்பி ஓடும் குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக, வடக்கு கடல் எல்லையில், குறிப்பாக பாகிஸ்தான் நீரிணை நெடுகிலும்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் சட்டத்தின் பிடியிலிருந்து&nbsp; தப்பி ஓடும் குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக, வடக்கு கடல் எல்லையில், குறிப்பாக பாகிஸ்தான் நீரிணை நெடுகிலும், பாதுகாப்பு வலையை பலப்படுத்த பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
</p><p>
பல குற்றவாளிகள் மன்னார் கடல் எல்லை வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் தப்பிச் சென்று, அங்கிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர் என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து இந்த சிறப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.</p><h2>படகில் தப்பிச் சென்ற வத்தளை கொலை சந்தேக நபர்கள்</h2><p>இதற்கிடையில், சமீபத்தில் வத்தளையில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 34 மற்றும் 35 வயதுடைய இரண்டு முக்கிய சந்தேக நபர்கள், மன்னாரிலிருந்து படகு மூலம் இந்தியாவிற்கு தப்பிச் சென்ற நிலையில் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce170711-1336-4010-80d0-2daab36d8c5a/26-6a830a515f249.webp' /></p><p>
</p><p>
நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளனர், மேலும் அவர்களை மேலதிக விசாரணைக்காக கொழும்பு வடக்கு குற்றப் பிரிவிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p>

</p><h2>&nbsp;தப்பித்தல்களை தடுக்க வடக்கு கடற்பரப்பில் பாதுகாப்பு</h2><p>சர்வதேச கடத்தல்காரர்களின் உதவியுடன் நடைபெறும் இதுபோன்ற தப்பித்தல்களைத் தடுப்பதற்காக, வடக்கு கடற்படை கட்டளையகமும் பாதுகாப்புப் படைகளும் தற்போது சிறப்புத் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9e3b901-8293-40db-9af5-d2672f409d6a/26-6a830a5212bbe.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T13:19:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தம்பியை கடித்த பாம்பு - கன்னத்தில் 150 முறை அறைந்து உயிரை காப்பாற்றிய அண்ணன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/up-man-slaps-brother-150-times-after-snake-bite-1786971194"></link>
            <id>https://news.lankasri.com/article/up-man-slaps-brother-150-times-after-snake-bite-1786971194</id>
            <summary type="text">up man slaps brother 150 times after snake bite : தம்பியை பாம்பு கடித்ததால் சிகிச்சைக்காக அவர் சுயநினைவுடன் இருக்க அவரது கன்னத்தில் 150 முறை அறைந்து அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>up man slaps brother 150 times after snake bite : தம்பியை பாம்பு கடித்ததால் சிகிச்சைக்காக அவர் சுயநினைவுடன் இருக்க அவரது கன்னத்தில் 150 முறை அறைந்து அவர் உயிரை காப்பாற்ற அவரது அண்ணன் முக்கிய காரணமாக இருந்துள்ளார்.
</p><h3>
பாம்பு கடித்த தம்பியை 150 முறை அறைந்த அண்ணன்
</h3><p>
உத்தரப் பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள கோட்வாலி பகுதியிலுள்ள ஜோதி நகரில் 21 வயதான அருண் என்பவர் தனது அண்ணனின் வயலில் பயிர்களுக்குத் தண்ணீர் ஊற்றச் சென்றிருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fec0820-d1fa-4660-97d0-629378aba45e/26-6a83043bdb804.webp' /></p><p>
மதியம் சுமார் 2 மணியளவில், அருண் வைக்கோல் மூட்டையை எடுத்துக்கொண்டிருந்தபோது, ​​அதற்குள் இருந்த பாம்பு ஒன்று அவரை கடித்துள்ளது.</p><p> 

அவரது உடல்நிலை மோசமடைய தொடங்கியதும் உடனடியாக அருணை அவரது சகோதரர் ஆகாஷ் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.&nbsp;</p><p></p><p> 

பாம்பு விஷம் அவரது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கத் தொடங்கியதால், அவர் மிகுந்த தூக்கக் கலக்கத்துடன் காணப்பட்டதுடன், அடிக்கடி கண்கள் மூடிக்கொண்டிருந்தார்.</p><p>

சிகிச்சைக்கு அவர் விழித்திருக்க வேண்டும் என மருத்துவர்கள் அவரது குடும்பத்தினருக்கு அருவுறுத்தியதன்படி, அவர் கண் மூடும் போதெல்லாம் அவரது சகோதரர் கன்னத்தில் மீண்டும் மீண்டும் அறைந்து அவரை விழித்திருக்க வைத்தார். </p><p>

ஆகாஷ் சுமார் ஒரு மணி நேரத்தில் அருணை சுயநினைவுடன் வைத்திருக்க 150 முறைக்கு மேல் அறைந்ததாகக் கூறப்படுகிறது.
</p><p>
அருணின் உடல் முழுவதும் விஷம் கணிசமாகப் பரவியிருந்ததாகவும், 15 விஷமுறிவு ஊசிகளைச் செலுத்தியதாகவும் மருத்துவமனை குழுவினர் தெரிவித்தனர்.</p><p>

தனது அண்ணன் கன்னத்தில் அறைந்து சுயநினைவுடன் வைத்திருந்ததாலும், மருத்துவர்களின் உடனடி சிகிச்சையாலும் அருண் ஆபத்தான கட்டத்திலிருந்து தாண்டி உயிர் பிழைத்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T13:15:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொது மன்னிப்புக் கோர இருக்கும் ஹரி: இளவரசர் வில்லியம் நிலைப்பாடு என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/prince-william-react-harry-public-apology-1786972040"></link>
            <id>https://news.lankasri.com/article/prince-william-react-harry-public-apology-1786972040</id>
            <summary type="text">இளவரசர் ஹரி பொது மன்னிப்புக் கோரினாலும், இளவரசர் வில்லியம் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>இளவரசர் ஹரி பொது மன்னிப்புக் கோரினாலும், இளவரசர் வில்லியம் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p>


பிரித்தானிய இளவரசரான ஹரி, மீண்டும் ராஜ குடும்பத்துடன் நல்லுறவை வளர்த்துக்கொள்ளும் நோக்கில் பொது மன்னிப்புக் கோர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><h3>
வரவேற்கும் தந்தை
</h3><p>
ஹரியின் தந்தையான மன்னர் சார்லசைப் பொருத்தவரை, தன் மகனை மீண்டும் வரவேற்பது அவருக்கு மகிழ்ச்சியே.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c631ab2f-62d0-4f1b-9a93-de48be5e45e9/26-6a83078a657fa.webp' /></p><p>
காரணம் என்னவென்றால், ஹரியின் பிள்ளைகளான தனது பேரப்பிள்ளைகளை சந்திக்க அவர் ஆவலாக உள்ளார்.&nbsp;</p><p></p><p>ஆகவே, மீண்டும் ஹரி ராஜ குடும்பத்துடன் ஒப்புரவானால், அது மன்னருக்கு மகிழ்ச்சியைத்தான் ஏற்படுத்தும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab090944-4538-4593-a538-56c525b9bab7/26-6a83078b197c9.webp' /></p><p>
ஆனால், இளவரசர் வில்லியமைப் பொருத்தவரை, ஹரி பொது மன்னிப்புக் கோருவதால் அவரிடம் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்கிறார் ராஜ குடும்ப நிபுணரான Grant Harrold என்பவர்.</p><p>

நான் கேள்விப்பட்டவரை, இளவரசர் வில்லியம் ஹரியுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளப்போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளார் என்கிறார் Grant Harrold.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T13:08:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய கடற்படை மூத்த தளபதி கொலையில் பாலியல் தொழிலாளி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sex-worker-arrested-russian-commander-bomb-kills-1786963747"></link>
            <id>https://canadamirror.com/article/sex-worker-arrested-russian-commander-bomb-kills-1786963747</id>
            <summary type="text">&amp;nbsp; ரஷ்ய கடற்படை மூத்த தளபதி கொலையில் பாலியல் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


கடந்த 13-ம் தேதி அங்​குள்ள கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ரஷ்ய கடற்படை மூத்த தளபதி கொலையில் பாலியல் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


கடந்த 13-ம் தேதி அங்​குள்ள கடைக்கு அவர் சென்​றார். </p><p>வெளியே வந்​த​போது வாசலில் இருந்த குப்​பைத் தொட்டி வெடித்​துச் சிதறியதில் ராபர்ட் ஷகீவ் சம்பவ இடத்திலேயே உயி​ரிழந்​தார்.

இதுதொடர்​பாக சிசிடிவி கேம​ராக்​களின் பதிவு​களை ரஷ்ய போலீஸார் ஆய்வு செய்​தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e383aee-78f0-46b3-82db-0594e37c2166/26-6a82e7248f114.webp' /></p><p> </p><p>அப்​போது ரஷ்​யா​வின் சோச்சி பகுதி​யைச் சேர்ந்த பாலியல் தொழிலாளி மார்​கரிட்டா ராய்ட் (32), ஒரு காரில் இருந்து ரிமோட் கன்ட்​ரோல் மூலம் வெடிகுண்டை வெடிக்​கச் செய்​திருப்​பது தெரிய​வந்​தது. </p><p>

 கைதான பாலியல் தொழிலாளி உக்​ரைன் ராணுவத்​தின் உளவாளி​யாக செயல்பட்​டிருப்​பது போலீஸ் வி​சா​ரணை​யில் உறு​தி செய்யப்பட்டு உள்​ளதாக கூறப்படுகின்றது.</p><p>

கடந்த 2014-ம் ஆண்​டில் உக்​ரைன் கடற்​படை நீர்​மூழ்கிக் கப்​பலின் கேப்​ட​னாக இருந்த ராபர்ட் ஷகீவ், ரஷ்ய ஆதரவாள​ராக மாறி​ய பின்னர் ரஷ்ய கடற்​படை​யின் மூத்த தளபதி​யாக நியமிக்​கப்​பட்​டமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-17T13:01:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை : அபாய வலயமாக இனங்காணப்பட்டுள்ள மாவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-cases-severe-threat-in-gampaha-1786970471"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-cases-severe-threat-in-gampaha-1786970471</id>
            <summary type="text">இந்த வருடத்தில் இதுவரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,254 ஆக உயர்வடைந்துள்ளதாக&amp;nbsp;தேசிய டெங்கு கட்டுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த வருடத்தில் இதுவரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,254 ஆக உயர்வடைந்துள்ளதாக&nbsp;தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. </p><p>கடந்த 16 நாட்களில் 6,914 டெங்கு நோயாளர்கள் பதிவானதை அடுத்தே இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.
</p><p>
ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களில் அதிகபட்சமாக 21.32 சதவீதமானோர் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.</p><h2>டெங்கு அபாயம்</h2><p> இதேவேளை, டெங்கு நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது.</p><p>தற்போது நாடு முழுவதிலும் உள்ள 96 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிஅபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f7b1dc8-6fb3-4f62-be06-e1e1cf7cce05/26-6a8305664685c.webp' /></p><p>
</p><p>
 

மொத்த டெங்கு நோயாளர்களில் 52.96% அதாவது 48,725 நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், நாட்டின் அதிக டெங்கு அபாயம் கொண்ட மாகாணமாக இது மாறியுள்ளது.&nbsp; &nbsp;</p><p>டெங்கு நுளம்புகள் உருவாகும் இடங்களை அழித்துத் தங்கள் சூழலைத் தூய்மையாக வைக்குமாறும், காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் தாமதிக்காமல் தகுதியுள்ள வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T13:01:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் வரிக் கொள்கை மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-needs-tax-reform-relieving-small-business-1786956630"></link>
            <id>https://canadamirror.com/article/canada-needs-tax-reform-relieving-small-business-1786956630</id>
            <summary type="text">கனடாவில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் வரிக் கொள்கை சீர்திருத்தங்களை ஒட்டாவா அரசு &quot;படிப்படியாக&quot; அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதில் சிறு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் வரிக் கொள்கை சீர்திருத்தங்களை ஒட்டாவா அரசு "படிப்படியாக" அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதில் சிறு வணிகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் பிரதமர் மார்க் கார்னியின் வரவுசெலவுத் திட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேய்ன் லாங் தெரிவித்துள்ளார். </p><p>
கனடாவின் சிக்கலான வரி அமைப்பை எளிமையாக்கி, மேம்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என பல வரி நிபுணர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
</p><p>தற்போதைய வரி முறையின் விதிமுறைகள் அடுக்கடுக்காக அதிகரித்து, வணிகங்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் சுமையாக மாறியுள்ளதை அரசு ஒப்புக்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c391352-f9e4-4f27-9727-ee44885b8810/26-6a82cb57ee108.webp' /></p><p> </p><p>
கனடாவின் சிக்கலான வரி விதிகளால் சில முக்கிய சர்வதேச முதலீட்டாளர்கள் முதலீடு செய்யத் தயங்குவதாகவும், இந்தத் தடைகளைக் குறைத்து முதலீடுகளை ஈர்ப்பதே அரசின் நோக்கம் என்றும் வேய்ன் லாங் குறிப்பிட்டார்.</p><p>
பிரதமர் மார்க் கார்னியின் தலைமையில் சமர்ப்பிக்கப்படவுள்ள இரண்டாவது இலையுதிர் கால வரவுசெலவுத் திட்டம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் "இரண்டாம் கட்ட நடவடிக்கையாக" இருக்கும். 
கனடாவில் பெரிய அளவிலான வரி சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு சுமார் 40 ஆண்டுகள் ஆகிவிட்டன.</p><p> தற்போதைய அரசு சிறு மாற்றங்களை மட்டுமே செய்து வருவதாகவும், பொருளாதாரத்தை முடக்கும் பழைய வரி முறையை முழுமையாக மாற்ற தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கன்சர்வேடிவ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.</p><p>
சிறு வணிகர்களுக்கான வரி விதிப்பு நடைமுறைகளை எளிமையாக்கி, அறிக்கை சமர்ப்பிக்கும் சுமையைக் குறைப்பதே அரசின் முதன்மை இலக்காக உள்ளது. </p><p>
அரசின் இந்த முடிவை கனடிய சுதந்திர வணிக கூட்டமைப்பு வரவேற்றுள்ள அதே வேளையில், நிஜமான மாற்றம் வரவுசெலவுத் திட்டத்தில் பிரதிபலித்தால் மட்டுமே சிறு வணிகர்கள் பலனடைவர் என்று சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T13:00:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த 35 வருடங்களுக்கு அனுரவை அசைக்கவே முடியாது : பாதுகாப்பு பிரதியமைச்சர் திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/there-will-be-no-rival-for-anura-another-35-years-1786968568"></link>
            <id>https://ibctamil.com/article/there-will-be-no-rival-for-anura-another-35-years-1786968568</id>
            <summary type="text">&amp;nbsp;ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு அடுத்த 35 ஆண்டுகளுக்கு அரசியல் ரீதியாக சவால் விடக்கூடிய தலைவர் இந்த நாட்டின் அரசியல் களத்தில் இல்லை என்று ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு அடுத்த 35 ஆண்டுகளுக்கு அரசியல் ரீதியாக சவால் விடக்கூடிய தலைவர் இந்த நாட்டின் அரசியல் களத்தில் இல்லை என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.</p><p>

ஜனாதிபதியின் அறிவையும், நாட்டின் மீதான அவரது எல்லையற்ற அர்ப்பணிப்பையும் பாராட்டிய அமைச்சர், மக்கள் அவரை ஒரு மாபெரும் ஜனாதிபதி என்று அழைப்பதற்குப் பழகிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.</p><h2>அரசியல் ரீதியாக போட்டியிடக்கூடிய தலைவர் எவருமில்லை</h2><p>&nbsp;அடுத்த 25, 30 அல்லது 35 ஆண்டுகளுக்கு ஜனாதிபதியுடன் அரசியல் ரீதியாகப் போட்டியிட்டு வெற்றிபெறக்கூடிய தலைவர் யாராவது இருக்கிறாரா என்பதைக் காட்டுமாறு எதிர்க்கட்சிக்கு அமைச்சர் சவால் விடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52f6f73b-05d0-47b1-a33c-fbb1ecb79399/26-6a83045315ea7.webp' /></p><p> </p><p>தற்போது அப்படிப்பட்ட தலைவர் யாரும் இல்லை என்றும், ஜனாதிபதியின் அரசியல் பயணம் மிகவும் வலிமையானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்ட வலிமையான மக்கள் தளத்தின் முன் எதிர்க்கட்சி முற்றிலும் பலவீனமடைந்துள்ளது என்று அருண ஜெயசேகர தெரிவித்தார்.</p><p></p><h2>நாடாளுமன்ற இருக்கைக்குள் முடங்கிய எதிர்க்கட்சியினர்</h2><p>

நாம் அமைத்துள்ள இந்த மாபெரும் மக்கள் அரசாங்கத்தின் பலத்தைக் கொண்டு எதிர்க்கட்சிகளுக்கு என்ன செய்துவிட்டோம்? அவர்கள் நாடாளுமன்றத்தில் தங்கள் இருக்கைகளுக்குள் முடக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நாட்டில் அவர்களுக்கு இனி அரசியல் என்பதே இல்லை,” என்று அவர் மேலும் கூறினார்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36ffd50f-7a78-480f-af5f-915677fdf691/26-6a830453bdedf.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T12:53:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளியான இசையமைப்பாளர் அனிருத்-காவ்யா மாறன் திருமண தேதி... இதோ முழு விவரம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/anirudh-kaavya-maaran-marriage-date-1786968893"></link>
            <id>https://cineulagam.com/article/anirudh-kaavya-maaran-marriage-date-1786968893</id>
            <summary type="text">அனிருத்தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சந்தானம் இல்லாத புதிய படங்களே இல்லை என்பது போல் இப்போதெல்லாம் அனிருத் இசை இல்லாமல் முன்னணி நடிகர்களின் பட ரிலீஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அனிருத்</h2><p>தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சந்தானம் இல்லாத புதிய படங்களே இல்லை என்பது போல் இப்போதெல்லாம் அனிருத் இசை இல்லாமல் முன்னணி நடிகர்களின் பட ரிலீஸ் இல்லை என்று ஆகிவிட்டது.</p><p> கடைசியாக அனிருத் இசையில் லோகேஷ் கனகராஜ்-வாமிகா கபி ஜோடியாக நடித்த டிசி திரைப்படம் வெளியாகி இருந்தது. </p><p>லோகேஷ் கனகராஜ் நடிப்பு, இயக்கம், கதையை தாண்டி அனிருத் இசையில் படத்தில் முக்கிய பங்கு வகித்திருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c082048-2f3a-41cb-82bc-fda62786fd9b/26-6a8303d959e3a.webp' /></p><h2>திருமணம்</h2><p>
படங்களில் இசையமைப்பதில் பிஸியாக இருக்கும் அனிருத் இன்னொரு பக்கம் இசைக் கச்சேரிகள் நடத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.</p><p> பட தகவல்களை தாண்டி அனிருத்தின் திருமணம் பற்றிய செய்திகளும் வலம் வருகின்றன.
அனிருத்திற்கும் காவ்யா மாதவனுக்கும் வருகிற நவம்பர் 10ம் தேதி Greece நாட்டில் திருமணம் நடக்க உள்ளதாம். </p><p>இந்த தகவலை ஒரு பத்திரிக்கையாளர் ஷேர் செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e1f29c8-1004-4502-9c60-53abcac6612b/26-6a8303da296ec.webp' /></p>]]></content>
            <updated>2026-08-17T12:51:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[108 நாட்கள் அகழ்வில் 500ஐ கடந்த எலும்புக்கூடுகள் - இன்றும் புதிதாக 9 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/over-500-skeletons-found-in-108-days-of-excavation-1786970573"></link>
            <id>https://tamilwin.com/article/over-500-skeletons-found-in-108-days-of-excavation-1786970573</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 54ஆவது நாளான இன்றைய தினம்
திங்கட்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 54ஆவது நாளான இன்றைய தினம்
திங்கட்கிழமை 10 என்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், அடையாளம் காணப்பட்ட 10 என்புக்கூடுகளில் 09 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>
அதன் அடிப்படையில், செம்மணியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 108 நாட்கள் அகழ்வு
பணிகளின் போது, 572 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p>

இதேவேளை, இதுவரையில் அடையாளம் காணப்பட்ட 565 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c2b2d75-708c-49fe-b203-fa60131eb97c/26-6a83038672995.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a590f796-c3bc-4c75-be37-5a9cb06b8aa1/26-6a8303877d7be.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9112486-e174-446a-8393-e5b33f6d057e/26-6a8303885294b.webp' /></p>]]></content>
            <updated>2026-08-17T12:50:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்புபவர்களுக்கு வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sending-money-to-sri-lanka-need-not-fear-taxes-1786968003"></link>
            <id>https://tamilwin.com/article/sending-money-to-sri-lanka-need-not-fear-taxes-1786968003</id>
            <summary type="text">வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தாங்கள் சட்டப்பூர்வமாக வெளிநாட்டில் ஈட்டிய வருமானத்தை வங்கி முறை மூலம் இலங்கைக்கு அனுப்பும்போது, ​​வரி குறித்து அஞ்சத் தேவைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தாங்கள் சட்டப்பூர்வமாக வெளிநாட்டில் ஈட்டிய வருமானத்தை வங்கி முறை மூலம் இலங்கைக்கு அனுப்பும்போது, ​​வரி குறித்து அஞ்சத் தேவையில்லை என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி ஆணையர் ஹிரான் மெனெரிபிட்டிய தெரிவித்துள்ளார்.
</p><h2>வெளிநாட்டில் ஈட்டும் வருமானம்</h2><p>
இலங்கையில் வரி நோக்கங்களுக்காக ஒருவர் வசிப்பவராகக் கருதப்பட்டால், வெளிநாட்டில் ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் இலங்கைக்குள் ஈட்டப்பட்ட வருமானம் ஆகிய இரண்டுமே வரிக்கு உட்பட்டவை என்று கூறியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45d8f18f-d0ee-4a43-b2e5-ee70c478d9c9/26-6a82fe4cb046a.webp' /></p><p>
இருப்பினும், சம்பந்தப்பட்ட மதிப்பீட்டு ஆண்டிற்கான வரி நோக்கங்களுக்காக ஒருவர் இலங்கையின் வசிப்பவராக இல்லாவிட்டால், அவர் இலங்கைக்கு வெளியே ஈட்டும் வருமானத்திற்கு இலங்கையில் வரி விதிக்கப்படாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>அதன்படி, வெளிநாட்டில் ஈட்டும் வருமானத்தை வங்கி முறையின் மூலம் இலங்கைக்கு அனுப்பும்போது, ​​வெளிநாட்டுப் பணியாளர் ஒருவர் வரிகள் குறித்து தேவையற்ற அச்சம் கொள்ளக்கூடாது என்று ஹிரான் மெனெரிபிட்டிய வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
மேலும், வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பப்படும்போது, ​​வங்கி அமைப்பு மூலம் அந்தத் தொகைக்குத் தனியாக வரி விதிக்கப்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தாங்கள் சட்டப்பூர்வமாக ஈட்டிய வருமானத்தை வங்கி அமைப்பு மூலம் நாட்டிற்குத் திருப்பி அனுப்பவும், அந்தப் பணத்தைச் சட்டப்பூர்வமாக முதலீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T12:48:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் சூத்திரதாரி பாசிக்கின் துபாய் தங்க வியாபாரம்! இலங்கையில் மட்டும் 100 பில்லியன் சொத்துக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/drug-lord-basik-s-dubai-gold-business-1786943516"></link>
            <id>https://ibctamil.com/article/drug-lord-basik-s-dubai-gold-business-1786943516</id>
            <summary type="text">துபாயிலிருந்து கொண்டுவரப்பட்ட ஐந்து முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராக அறியப்படும் ஷிரான் பாசிக் செய்த பெரும் குற்றங்கள் மற்றும் உள்நாட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாயிலிருந்து கொண்டுவரப்பட்ட ஐந்து முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராக அறியப்படும் ஷிரான் பாசிக் செய்த பெரும் குற்றங்கள் மற்றும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவும், சட்டவிரோத சொத்துக்கள் பிரிவும் விரிவான விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.
</p><p>
இந்த விசாரணைகள் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் ரன்மல் கொடிதுவக்கு அவர்களின் முழு மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p> 

இதற்காகப் பல விசாரணைக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

இலங்கையில் மட்டும் அவருடைய சொத்துக்களின் மதிப்பு 100 பில்லியன் ரூபாயைத் தாண்டியுள்ளது என்பது தற்போது தெரியவந்துள்ளது.</p><p></p><h2>20 ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள்</h2><p> 

மேலும், அவர் ஆடம்பர வீடுகள், வாகனங்கள், நிலங்கள், வங்கிக் கணக்குகள் மற்றும் பல உயர் மதிப்புள்ள சொத்துக்களையும் வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43732064-6c2c-4212-9281-88dee72e0234/26-6a82a2dcaf643.webp' /></p><p>
</p><p>
 தெஹிவளை மற்றும் கல்கிசை&nbsp; கடற்கரைப் பகுதிகளில் அமைந்துள்ள சுமார் 20 ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களின் உரிமையாளர் ஷிரான் பாசிக் என்பது தற்போது தெரியவந்துள்ளது.</p><p>கடற்கரையில் 20 ஹோட்டல்கள், இந்த நாட்டில் மட்டும் 100 பில்லியன் சொத்துக்கள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றச் செயல்களின் பின்னணி, துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தங்கக் கடைகள் என இவரது குற்றப்பட்டியல் நீண்டுள்ளது.</p><p> </p><p>

இருப்பினும், ஷிரான் பாசிக் இந்தச் சொத்துக்கள் அனைத்தையும் மற்றவர்களின் பெயர்களில் வாங்கி, அவர்களின் உதவியுடன் பராமரித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
</p><p>
 மேலும், இந்தக் கடத்தல்காரர் துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பல தங்கக் கடைகளையும், வேறு பல வணிகங்களையும் நடத்தி வருகிறார் என்ற தகவல் விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்துள்ளது.</p><p></p><h2>கொக்கைன் கடத்தல்</h2><p> </p><p>

தாய்லாந்தில் நடைபெறும் கொக்கைன் கடத்தல் தொழிலில் ஷிரான் பாசிக் ஒரு தலைவராகவும் செயல்பட்டு வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46c090c9-d13f-45c6-aa4f-95c24506315e/26-6a82a2dd627fd.webp' /></p><p> 

போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களைச் செய்யும்போது, ​​பெரும்பாலும் திரைக்குப் பின்னால் இருந்து செயல்படுவது அவனது குணம் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.
</p><p>
 ஷிரான் பாசிக், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற வணிகங்கள், குற்றச் செயல்கள் என அனைத்திலும், பரிவர்த்தனைகள் சரியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் ஒருவராக, போதைப்பொருள் கும்பலிலும் குற்றவாளிகள் மத்தியிலும் நன்கு அறியப்பட்டவர். </p><p>

ஷிரான் பாசிக்கின் மகன் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் பலர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் பெயரில் பெருமளவு சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
 ஷிரன் பாசிக்கிற்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்குவதற்கு, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு முன்னதாகவே நடவடிக்கை எடுத்திருந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன</p><p>.

தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் உள்ள ஷிரான் பாசிக்கிற்கு 72 மணி நேரக் தடுப்புகாவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.
</p><p>
தடுப்புக்காவல் உத்தரவு காலாவதியான பிறகு, அவர்கள் விசாரணைக்காக 90 நாட்கள் காவலில் வைக்கப்படுவார்கள் என்று விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர்.</p><p>

தெஹிவளையின் கலுபோவில பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஷிரான் பாசிக், தெஹிவளை கல்கிசை மாநகர சபையில் தொழிலாளியாக தனது முதல் வேலையைச் செய்தார்.
</p><p>
அவர் சமீப காலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு, பலமுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>துபாய் காவல்துறையினரால் இரண்டு முறை கைது</h2><p>
</p><p>
2018-ல் ஐக்கிய அரபு அமீரகத்திற்குத் தப்பிச் சென்ற ஷிரான் பாசிக், அதன் பின்னர் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.</p><p></p><p>
</p><p>
அவர் சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதும், துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அவர் பெரிய அளவிலான வணிகத்தை நடத்தி வருவதும் தெரியவந்துள்ளது.
</p><p>
இலங்கைக்கு மொத்தமாக போதைப்பொருட்களைக் கடத்தும் ஐந்து முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான இவர், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகிறார்.</p><p>

அவர் துபாய் காவல்துறையினரால் இரண்டு முறை கைது செய்யப்பட்டார். 

ஒருமுறை, அன்டியல் (Undial) சேவை மூலம் 100,000 திர்ஹாம்களை வெளிநாட்டிற்கு அனுப்பியதற்காகவும், மற்றொரு முறை, ஒரு ஹோட்டலில் நடந்த சண்டைக்காகவும் அவர் கைது செய்யப்பட்டார். </p><p>

இருப்பினும், இந்த இரண்டு முறையும், அவர் பெரும் தொகையைச் செலவழித்து கைது நடவடிக்கையிலிருந்து தப்பித்தார்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் மூண்டதை அடுத்து, துபாயில் இருந்த பல இலங்கைக் குற்றவாளிகள், ஈரானுக்கு உதவியதாகவும் உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
</p><p>
மே 21 அன்று, துபாய் மீதான ஈரானின் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் தொடர்பான காணொளிகளையும் புகைப்படங்களையும் சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் ஷிரான் பாசிக் துபாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
</p><p>
ஷிரான் பாசிக், கிட்டத்தட்ட 3 மாதங்கள் அந்நாட்டு காவல்துறையின் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், 14ஆம் திகதி இரவு நாடு கடத்தப்பட்டார்.
</p><p>
ஷிரான் பாசிக் அதே இரவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
</p><p>
 கட்டுநாயக்கவில் அவர் கைது செய்யப்படாமல் இருந்திருந்தால், இலங்கைக்கு வந்து ஒரு ஐரோப்பிய நாட்டிற்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்தார் என்பது விசாரணையின்போது தெரியவந்துள்ளது.
</p><p>
துபாய் நாட்டில் காவலில் இருந்தபோது, ​​அங்குள்ள காவல்துறையினருக்குப் பெரும் தொகையை லஞ்சமாகக் கொடுத்து, காவலில் இருந்து தப்பிக்க அவர் ஒரு தீவிர முயற்சி மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T12:47:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவிற்கு எதிரான டெஸ்டில் முதல் சதம் விளாசிய இலங்கை வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sonal-dinsha-maiden-test-ton-sl-avoid-follow-on-1786970540"></link>
            <id>https://news.lankasri.com/article/sonal-dinsha-maiden-test-ton-sl-avoid-follow-on-1786970540</id>
            <summary type="text">இலங்கையின் சோனல் தினுஷா இந்திய அணிக்கு எதிரான டெஸ்டில் முதல் சதத்தை பதிவு செய்தார்.

காலியில் நடந்து வரும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் சோனல் தினுஷா இந்திய அணிக்கு எதிரான டெஸ்டில் முதல் சதத்தை பதிவு செய்தார்.

காலியில் நடந்து வரும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இலங்கை வீரர் சோனல் தினுஷா சதம் அடித்தார்.</p><h2>இந்திய அணி 462 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்</h2><p>காலி டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 462 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. தேவ்தத் படிக்கல் 167 ஓட்டங்களும், கே.எல்.ராகுல் 82 ஓட்டங்களும், துருவ் ஜுரேல் 51 ஓட்டங்களும் எடுத்தனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/265a2214-bc21-412f-bc6b-2b93859cc89b/26-6a8302f2e8654.webp' />&nbsp;</p><p></p><p>பிரபத் ஜெயசூரியா 4 விக்கெட்டுகளும், கேஷாரா நுவந்தா 3 விக்கெட்டுகளும், அஸிதா பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
</p><p>
பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணியில் நிஷான் பெர்னாண்டோ டக்அவுட் ஆனார். </p><p>தினேஷ் சண்டிமல் 4 ஓட்டங்களில் வெளியேற, உதாரா 27 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கமிந்து மெண்டிஸ் (14), தனஞ்செய டி சில்வா (21) ஆகியோர் சொதப்பினர். எனினும் சோனால் தினுஷா, நிரோஷன் திக்வெல்ல வலுவான கூட்டணி அமைத்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65024ad4-6f1a-403a-9c85-35c156343b40/26-6a8301aedfaa7.webp' /></p><h2>சோனல் தினுஷா சதம்
</h2><p>அரைசதம் அடித்த நிரோஷன் திக்வெல்ல (Niroshan Dickwella) 80 ஓட்டங்களில் அவுட் ஆனார். இதற்கிடையில் சோனல் தினுஷா (Sonal Dinusha) தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். </p><p>அவரது சதத்தின் மூலம் 'ஃபாலோ-ஆன்' செய்வதை இலங்கை அணி தவிர்த்தது.

100 ஓட்டங்கள் எடுத்த நிலையில் தினுஷா ஆட்டமிழக்க, இலங்கை அணி 284 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி 178 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.&nbsp;&nbsp;</p><p>மானவ் சுதர் 4 விக்கெட்டுகளும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">FIRST OF MANY! 💯<a href="https://x.com/hashtag/SLvIND?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SLvIND</a> <a href="https://t.co/OlySxWBTCM">pic.twitter.com/OlySxWBTCM</a></p>&mdash; Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) <a href="https://x.com/OfficialSLC/status/2089315468209426447?ref_src=twsrc%5Etfw">August 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T12:39:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[30 வயதாகாமல் உயிரிழந்த இளம் நடிகைகள்!! இதோ அந்த லிஸ்ட்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/indian-actresses-who-passed-away-before-age-of-30-1786970243"></link>
            <id>https://viduppu.com/article/indian-actresses-who-passed-away-before-age-of-30-1786970243</id>
            <summary type="text">30-க்குள் உயிரிழந்த நடிகைகள்சினிமா நடிகைகளின் உயிரிழப்பு சமீபகாலமாக அதிகரித்து வரும் நிலையில், இளம் வயதிலேயே சில நடிகைகள் மரணிப்பது இந்திய சினிமாவையே ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>30-க்குள் உயிரிழந்த நடிகைகள்</h2><p>சினிமா நடிகைகளின் உயிரிழப்பு சமீபகாலமாக அதிகரித்து வரும் நிலையில், இளம் வயதிலேயே சில நடிகைகள் மரணிப்பது இந்திய சினிமாவையே அதிர வைத்து வருகிறது. சமீபத்தில் நடிகை அனன்யா ராஜ் உயிரிழந்தது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் 30 வயதைக் கூட எட்டாமல் இளம் வயதில் உயிரிழந்த நடிகைகள் யார் யார் என்று பார்ப்போம்..</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2026b2d6-354c-48c7-b594-9e8ec35c55c2/26-6a8300854dea7.webp' /></p><p>பாலிவுட்டில் முன்னணி இளம் நடிகையாக திகழ்ந்த நடிகை ஜியா கான், 2013ல் மும்பை வீட்டில் தற்கொலை செய்து மரணித்தார். அவருக்கு அப்போது 25 வயதுதான்.
</p><p>
பாலிவுட்டில் சிறியகாலத்தில் டாப் நடிகையாக உருவெடுத்த நடிகை திவ்யா பாரதி, தன்னுடைய வீட்டு பால்கனியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவருக்கு வயது 19.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/519f0f74-2848-4084-a6ad-b4a5a1992219/26-6a83008600817.webp' /></p><p>
நடிகையும் மாடலுமான நஃபிசா ஜோசப், தொழிலதிபருடன் திருமணத்தை முடிக்கும் நேரத்தில் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு அப்போது வயது 26.
</p><p>சின்னத்திரை, வெள்ளித்திரையில் நடித்து வந்த நடிகை பிரத்யூஷா பானர்ஜி, தன்னுடைய 24வது வயதில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c8c3711-4884-4b42-aa66-239b7c018087/26-6a830086a697a.webp' /></p><p> 

14 வயதான நடிகையும் ரஸ்னா விளம்பரத்தின் நடித்து பிரபலமான நடிகை தாருனி சச்தேவ், விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
</p><p>
மஹாராஷ்டிராவிலுள்ள தன்னுடைய வீட்டில் பாலிவுட் நடிகை துனிஷா சர்மா, தன்னுடைய 20 வயதில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a748f8ee-ede7-4818-80c8-e4f459efb803/26-6a83008760553.webp' /></p><p>
</p><p>
தற்போது நடிகை அனன்யா ராஜ், மனநலம் சார்ந்த பிரச்சனையால் அவதிப்பட்டு ஜூலை 15 ஆம் தேது தூக்கத்திலேயே தன்னுடைய 27 வயதில் மரணமடைந்திருக்கிறார்.</p>]]></content>
            <updated>2026-08-17T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[முப்படையின் ஆராய்ச்சி மையங்களை ஒன்றிணைக்க அநுர முன்வைத்துள்ள திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/plan-to-merge-research-centers-sl-armed-forces-1786969184"></link>
            <id>https://ibctamil.com/article/plan-to-merge-research-centers-sl-armed-forces-1786969184</id>
            <summary type="text">தற்போது இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகியவற்றின் கீழ் உள்ள அனைத்து ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையங்களையும் ஒன்றிணைப்பது குறித்து ஜனாதிபதி அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகியவற்றின் கீழ் உள்ள அனைத்து ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையங்களையும் ஒன்றிணைப்பது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.</p><p>

இதன் மூலம் ஒரு தேசிய மையத்தை நிறுவுவதன் மூலம், அந்தச் செயல்பாடுகளின் செயல்திறனையும் உற்பத்தித்திறனையும் அதிகரித்து, விரும்பிய இலக்குகளை அடைய முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை (17) பாதுகாப்பு அமைச்சகம் தொடர்பான 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்துக்கான முந்தைய கலந்துரையாடலில் பங்கேற்றபோது ஜனாதிபதி இந்த அறிக்கையை வெளியிட்டார்.</p><p></p><h2>நவீன தொழில்நுட்பம்</h2><p>

 தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தவும், தற்போதைய உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளவும், பாதுகாப்புப் படைகள் நவீன தொழில்நுட்பத்துடன் விரைவாக ஒருங்கிணைந்து, நவீன தொழில்நுட்ப உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாக இதன்போது விவாதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/caf4bdab-7878-4ccb-add7-a9dad8367450/26-6a82fe580afc6.webp' /></p><p>
</p><p>
பாதுகாப்புப் பணியாளர்களின் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்தவும், புதிய அறிவைப் பெறவும் வெளிநாட்டுப் பயிற்சி வாய்ப்புகளுக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்தும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. </p><p>

கொத்தலாவ பாதுகாப்புப் பல்கலைக்கழக மருத்துவமனையின் செயல்பாடுகள், நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையின் செயல்பாடுகளைத் தொடங்குதல், அதற்கான தேவையான நிதி ஒதுக்கீடு மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. </p><p>

மேலும் கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படை உறுப்பினர்களின் உழைப்புப் பங்களிப்பை ஊக்குவிக்கும் ஒரு திட்டத்திற்கும் மேலதிக கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T12:28:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் அடுத்த ஜனாதிபதி ஒரு சிறைக்கைதியாம்.. மகிந்தவும் கோட்டாபயவும் வரிசையில்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-who-will-become-president-from-prison-1786957538"></link>
            <id>https://tamilwin.com/article/namal-who-will-become-president-from-prison-1786957538</id>
            <summary type="text">இலங்கையின் அடுத்த ஜனாதிபதி சிறைக்குள் இருந்து தெரிவாகலாம் என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். 

பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் அடுத்த ஜனாதிபதி சிறைக்குள் இருந்து தெரிவாகலாம் என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். </p><p>

பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சிறைச்சாலையில் அடைக்கப்பட்டாலும் அவரே நாட்டின் அடுத்த ஜனாதிபதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>நாமலே&nbsp; ஜனாதிபதி&nbsp;</h2><p> </p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக நாமல் ராஜபக்சவை மக்கள் தெரிவு செய்வார்கள். அவரை ஜனாதிபதியாக்குவதற்கு பொதுஜன பெரமுன தீவிரமாக செயற்படும். </p><p>


அநுர அரசாங்கம், முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரையும், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சிறையில் அடைக்கும் நோக்கத்துடன் செயற்பட்டு வருகின்றது. எமக்கு அது பிரச்சினையில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bd1e957-3c5b-4d42-a413-d1e54da8d4fb/26-6a82d9c4e0cda.webp' /></p><p>நீதித்துறையின் மீது எங்களுக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. எம்மிடம் எஞ்சியிருப்பது நீதித்துறை மீதான நம்பிக்கை மாத்திரமே.
</p><p>
எனவே, நாமல் ராஜபக்சவையும் சிறையில் அடைத்தாலும் கூட சிறையில் இருந்தே அவரை ஜனாதிபதியாக்குவதற்கு நாங்கள் அயராது பாடுபடுவோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47446bba-8b68-4724-bd64-1e61a563da8a/26-6a82d9c593637.webp' /></p><p>
</p><p>
நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்கும் பிரசாரத்தின் முதல்படியாக, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் மாபெரும் மக்கள் பேரணி ஒன்றை நடத்துவதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம். </p><p> 

யாரும் எதிர்பாராத அளவில் பெருமளவிலான மக்கள் கூட்டத்தை அந்தப் பேரணியில் காண முடியும். இதனூடாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், நாமல் ராஜபக்சவுக்கு அவர்கள் தமது ஆதரவினை வெளிப்படுத்துவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T12:24:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாசிக்குடா கடற்கரையில் கரையொதுங்கிய சடலம் - பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-washed-up-on-pasikuda-beach-1786968973"></link>
            <id>https://tamilwin.com/article/body-washed-up-on-pasikuda-beach-1786968973</id>
            <summary type="text">மட்டக்களப்பு - பாசிக்குடா கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று (17.08.2026) இடம்பெற்றதாக தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - பாசிக்குடா கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சம்பவம் இன்று (17.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>

கரையொதுங்கிய சடலம்</h2><p>
</p><p>
குறித்த நபர் கடற்றொழிலுக்குச் சென்றிருந்த வேளையில் கடலில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>

சடலம் கரையொதுங்கியதை அவதானித்த அப்பகுதி மக்கள், இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d29bc3c0-a25c-4c1a-8cbd-858b4f04c408/26-6a82fd60c53af.webp' /></p><h2>

பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை</h2><p>
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பாசிக்குடா பொலிஸார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

எனினும், உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாசிக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T12:24:44+00:00</updated>
        </entry>
    </feed>
