<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-20T20:49:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்வேறு போதைப்பொருட்களுடன் சிக்கிய இளைஞன் ; விசாரணைகள் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-man-caught-with-various-drugs-1784578683"></link>
            <id>https://jvpnews.com/article/young-man-caught-with-various-drugs-1784578683</id>
            <summary type="text">ஹபராதுவ யத்தெஹிமுல்ல பகுதியில் ஹெரோயின், ஐஸ் மற்றும் போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஹபராதுவ பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹபராதுவ யத்தெஹிமுல்ல பகுதியில் ஹெரோயின், ஐஸ் மற்றும் போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

ஹபராதுவ பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06e00588-6bb6-4a76-88a2-e4c62f8215b9/26-6a5e827d9a4b6.webp' /></p><p> 

அவர் வசம் இருந்து 112 கிராம் 260 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 29 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் அடையாளம் காணப்படாத 500 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p> </p><p>

32 வயதுடைய குறித்த சந்தேகநபர் உனவட்டுனை, ஹீனட்டியன பகுதியைச் சேர்ந்தவர்.</p><p>சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T20:45:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[2025ம் ஆண்டிற்குள் 10 லட்சம் தெரு நாய்கள் அகற்றம்: நாடொன்று எடுத்த அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/turkey-removed-1-million-stray-dogs-from-cities-1784579694"></link>
            <id>https://news.lankasri.com/article/turkey-removed-1-million-stray-dogs-from-cities-1784579694</id>
            <summary type="text">துருக்கிய நகரங்களில் இருந்து 2025ம் ஆண்டிற்குள் கிட்டத்தட்ட 10 லட்சம் தெரு நாய்கள் அகற்றப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தெரு நாய்களின் எண்ணிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>துருக்கிய நகரங்களில் இருந்து 2025ம் ஆண்டிற்குள் கிட்டத்தட்ட 10 லட்சம் தெரு நாய்கள் அகற்றப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்திய துருக்கி</h2><p>
துருக்கி அரசு தங்களது நகரங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.</p><p> துருக்கியின் உள்துறை அமைச்சர் முஸ்தபா சிஃபிலி தெரிவித்த தகவலில், 2025ம் ஆண்டிற்குள் துருக்கியின் பொது இடங்களில் சுற்றித் திரிந்த 10 லட்சம் தெரு நாய்களை அகற்றப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p> துருக்கியில் விலங்கு பாதுகாப்பு சட்டத்தில் கொண்டுவரப்பட்ட முக்கிய மாற்றமே இந்த தெரு நாய்களின் எண்ணிக்கை கட்டுக்குள் கொண்டு வர பட்டதற்கான முக்கிய காரணம் என்று பால்கன் இன்சைட் ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae4de92a-6f84-4a3e-8180-3d90f2207b43/26-6a5e87624260d.webp' /></p><h2> துருக்கிய அரசு எடுத்த முக்கிய நடவடிக்கைகள்</h2><p>தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து மீண்டும் தெருக்களில் விடும் நடைமுறை பயன் அளிக்காததை தொடர்ந்து, கடந்த 2024ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய விதிகளின் படி, ஒவ்வொரு நகராட்சி தெருக்களிலும் உள்ள நாய்களை நிரந்தரமாக நீக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.</p><p> நாய்களை தத்தெடுப்பதே முதன்மையான குறிக்கோளாக இருந்தாலும், தீவிரமான ஆக்ரோஷமான குணம் கொண்ட நாய்கள் மற்றும் தீர்க்க முடியாத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நாய்களை கருணை கொலை செய்ய சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p> மேலும் தெரு நாய்களை பராமரிக்க பிரம்மாண்டமான புதிய காப்பகங்கள் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T20:35:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு கடும் தண்டனை நிச்சயம் ; ஆனந்த விஜயபால]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drug-traffickers-face-harsh-punishment-1784577764"></link>
            <id>https://jvpnews.com/article/drug-traffickers-face-harsh-punishment-1784577764</id>
            <summary type="text">சட்டத்தின் முன் அனைவரும் சமம் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட அரசாங்கத்தின் இந்த உறுதியான நடவடிக்கைகளைக் கண்டு பயமடைந்துள்ள எதிர்த்தரப்பினர் பல்வேறு பொய்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சட்டத்தின் முன் அனைவரும் சமம் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட அரசாங்கத்தின் இந்த உறுதியான நடவடிக்கைகளைக் கண்டு பயமடைந்துள்ள எதிர்த்தரப்பினர் பல்வேறு பொய்ப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வந்த போதிலும், எந்தவொரு சவாலுக்கும் அஞ்சாமல் போதைப்பொருள் ஒழிப்புக்காக எடுக்கப்பட்ட 16 முக்கிய தீர்மானங்களிலிருந்து ஒருபோதும் பின்வாங்காமல் சட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">
கொழும்பில் திங்கட்கிழமை (20) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3b709f9-8b6f-4ead-99f3-2dd8213edf83/26-6a5e7ee6aeb10.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருள் வர்த்தகம்&nbsp;</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
</p><p style="text-align: justify; ">
கடந்த பல ஆண்டுகளாக நிலவி வந்த அரசியல் ஆதரவு, போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலகக் குற்றச்செயல்களுக்கு இடையிலான பிணைப்பு தற்போது முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன், போதைப்பொருளுக்கு எதிராக மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டங்களில் குழுக்கள் அமைக்கப்பட்டு 14,125 மக்கள் பாதுகாப்பு குழுக்கள் மூலம் தேசிய அளவிலான விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்படுகிறது.

</p><p style="text-align: justify; ">
மேலும், போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்களைக் வெறும் குற்றவாளிகளாகக் கருதி கைது செய்து சிறையில் அடைப்பதால் எவ்வித பலனும் இல்லை என்பதால், அவர்களை நோயாளர்களாகக் கருதி முறையான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

அதேவேளை, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மீது மட்டுமே சட்டத்தின் முழுமையான அதிகாரம் பயன்படுத்தப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
</p><p style="text-align: justify; ">
பிராந்திய பொலிஸ் நிலையங்கள் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் சரியான செயற்பாடு காணப்படாவிட்டால், வேறு பொலிஸ் பிரிவுகளையோ அல்லது பொலிஸ் விசேட அதிரடிப்படையையோ பயன்படுத்தி சோதனைகள் நடத்தப்படும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் பெறப்படும் தகவல்களை பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் ஒருபோதும் அலட்சியப்படுத்த முடியாது.</p><p style="text-align: justify; "> நாட்டின் எதிர்காலச் சந்ததியினரை பாதுகாக்கும் இந்தத் தேசியப் பணியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும், போதைப்பொருள் விவகாரத்தில் அதற்கு ஆதரவாகப் பேசுபவர்கள் அல்லது சாதகமாகச் செயற்படுபவர்கள் அனைவரும் போதைப்பொருள் கடத்தல்காரர்களாகவோ அல்லது அதற்குத் துணை செல்பவர்களாக மட்டுமே கருதப்படுவார்கள் என்றார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-20T20:15:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதுக்கு தயாராகும் நீண்ட பட்டியல் - அவுஸ்திரேலியாவுக்கு விரைந்த சிஐடி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-police-cid-investigation-to-autralia-1784575213"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-police-cid-investigation-to-autralia-1784575213</id>
            <summary type="text">இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களம், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச ஊழல் விசாரணையின் ஒரு பகுதியாக, கைது செய்வதற்கான விரிவான பட்டியலைத் தயாரித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களம், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச ஊழல் விசாரணையின் ஒரு பகுதியாக, கைது செய்வதற்கான விரிவான பட்டியலைத் தயாரித்து, குழுக்களை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 

இந்த விசாரணை பணச்சலவை, இணையவழி மோசடி மற்றும் சர்வதேச இலஞ்சம் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருக்கலாம்.</p><p> 

திருடப்பட்ட அரச நிதிகளைக் கண்டறியவும், சர்வதேச குற்றக் குழுக்களைக் குறிவைக்கவும் CID, அவுஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸாருடன் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 

இந்நிலையில், ஏர்பஸ் விமான ஒப்பந்தங்கள் தொடர்பான பெரும் வெளிநாட்டு நிதி முறைகேடுகள் மற்றும் இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இவ்வாறான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் புலனாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.</p><p>

இது உள்ளிட்ட நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/wDwDUkPZbmU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><p> 

</p>]]></content>
            <updated>2026-07-20T19:55:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமைச்சரின் பெயரில் சமூக ஊடகங்களில் பரவும் தகவல் ; வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fake-social-media-post-misuses-minister-s-name-1784576580"></link>
            <id>https://jvpnews.com/article/fake-social-media-post-misuses-minister-s-name-1784576580</id>
            <summary type="text">தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோவின் பெயரை பயன்படுத்தி பௌத்த மத யாத்திரைக்கான தம்பதிவ பயணம் மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோவின் பெயரை பயன்படுத்தி பௌத்த மத யாத்திரைக்கான தம்பதிவ பயணம் மற்றும் தாய்லாந்துக்கான ஆன்மீகச் சுற்றுப்பயணங்களை தடை செய்வதற்கு அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாக சமூக ஊடகங்களின் ஊடாக மிக மோசமான முறையில் அப்பட்டமான பொய்ப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. </p><p>இது முற்றிலும் போலியான செய்தியாகும் என தொழில் அமைச்சு மறுப்பு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c045c63c-5801-43f6-ac64-d1b60ccb3d2f/26-6a5e7a459f09e.webp' /></p><h2>போலிப் பிரசாரம்</h2><p>
</p><p>
தொழில் அமைச்சினால் திங்கட்கிழமை (20) விடுக்கப்பட் அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p><p>

கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோவின் பெயரைப் பயன்படுத்தி பௌத்த மத யாத்திரைக்கான தம்பதிவ பயணம் மற்றும் தாய்லாந்துக்கான ஆன்மீகச் சுற்றுப்பயணங்களை தடை செய்வதற்கு அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாக சமூக ஊடகங்களின் ஊடாக மிக மோசமான முறையில் அப்பட்டமான பொய்ப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p></p><p>

இந்த போலிப் பிரசாரமானது நாட்டின் பல்லின சமூகங்களுக்கு இடையிலான சகவாழ்வைச் சீர்குலைக்கும் ஒரு சதியாகும். </p><p>பொதுமக்களை திசைதிருப்பி தவறாக வழிநடத்தும் நோக்கில் பரப்பப்படும் இத்தகைய கீழ்த்தரமான போலிப் பிரசாரங்களை தொழில் அமைச்சு மிக வன்மையாகக் கண்டிப்பதுடன், இது குறித்து தனது ஆழ்ந்த கவலையையும் அருவருப்பையும் தெரிவித்துக் கொள்கிறது.</p><p></p><p>அமைச்சரினால் இவ்வாறானதொரு கருத்து வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் சோடிக்கப்பட்டவை. அமைச்சர் ஒருபோதும் அத்தகையதொரு கூற்றை வெளியிடவில்லை. </p><p>குறிப்பாக இலங்கையின் சமூக, அரசியல் மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டு, குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களைப் பின்தொடரும் சில குழுக்களினாலேயே இந்த வதந்திகள் திட்டமிட்ட முறையில் பரப்பப்பட்டு வருவதாக அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T19:43:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கொலை: 28 வயது இளைஞர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ann-widdecombe-death-case-joshua-kerry-arrested-1784575996"></link>
            <id>https://news.lankasri.com/article/ann-widdecombe-death-case-joshua-kerry-arrested-1784575996</id>
            <summary type="text">முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஆன் விட்கோம்ப் கொலை வழக்கில் 28 வயது நபர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட ஆன் விட்கோம்ப்
டெவோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஆன் விட்கோம்ப் கொலை வழக்கில் 28 வயது நபர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.</p><h2> கொல்லப்பட்ட ஆன் விட்கோம்ப்</h2><p>
டெவோனில் உள்ள ஹேடரில் வசித்து வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ரீஃபார்ம் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான ஆன் விட்கோம்ப்(Ann Widdecombe) கடந்த ஜூலை 9ம் திகதி அவரது வீட்டில் பலத்த காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டார்.</p><p> ஜூலை 8ம் திகதி மதியம் 12.30 மணியளவில் அவர் தாக்கப்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86fdf4ae-87bc-46ad-9f7c-0fbf2f7f2f4c/26-6a5e77fe3eb74.webp' /></p><p> இந்த சம்பவத்தில் முதலில் நியூட்டன் அபோட்டைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். ஆனால் விசாரணைக்கு பிறகு அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.</p><p></p><h2> ஜோசுவா கெர்ரி என்பவர் மீது வழக்குப்பதிவு</h2><p>
இந்நிலையில் ஆன் விட்கோம்ப் கொலை வழக்கில் ரோதர்ஹேமைச் சேர்ந்த 28 வயது ஜோசுவா கெர்ரி மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.</p><p> குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜோசுவா கெர்ரி செவ்வாய்க்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று இந்த வழக்கை விசாரித்த கிரவுன் பிராசிகியூசன் சர்வீஸ் அறிவித்துள்ளது.</p><p> மேலும் இந்த குற்ற சம்பவத்தில் வேறு ஏதேனும் அரசியல் பின்னணியோ, பயங்கரவாத தொடர்புகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T19:33:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவின் புதிய நிதி அமைச்சராக ஹான் ஹீலி நியமனம்: பதவி விலகும் முக்கிய அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-new-chancellor-of-the-exchequer-is-john-healey-1784572420"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-new-chancellor-of-the-exchequer-is-john-healey-1784572420</id>
            <summary type="text">பிரித்தானியாவின் புதிய நிதி அமைச்சராக ஹான் ஹீலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.பிரித்தானியாவுக்கு புதிய நிதி அமைச்சர்
பிரித்தானியாவின் புதிய பிரதமராக ஆண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் புதிய நிதி அமைச்சராக ஹான் ஹீலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p><h2>பிரித்தானியாவுக்கு புதிய நிதி அமைச்சர்</h2><p>
பிரித்தானியாவின் புதிய பிரதமராக ஆண்டி பர்னாம்(Andy Burnham) பொறுப்பேற்றுக் கொண்டதை அடுத்து அரசாங்கத்தில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.</p><p> இந்நிலையில் நாட்டின் புதிய நிதியமைச்சராக (Chancellor of the Exchequer) ஜான் ஹீலி(John healey) நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38f9ab9a-a3d9-40d6-b387-135317e12d91/26-6a5e6a061fbcb.webp' /><br></p><p>இதற்கு முன்னதாக பிரித்தானியாவின் நிதி அமைச்சராக ரேச்சல் ரீவ்ஸ்(Rachel Reeves) இந்த பொறுப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p> பிரித்தானியாவின் மூத்த அரசியல்வாதியும், கடந்த 1997ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் ஜான் ஹீலி கடந்த அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக பணியாற்றி வந்தார்.</p><p>இந்நிலையில் ஜான் ஹீலி தற்போது நாட்டின் கருவூல தலைமை பொறுப்புக்கு முன்னேறியுள்ளார்.</p><p>ஜான் ஹீலி நியமனம் தொடர்பான அறிவிப்பை டவுனிங் ஸ்ட்ரீட் தங்களது அதிகாரப்பூர்வ X தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcdb0ac1-697c-4dd1-91c0-6641ce265133/26-6a5e6a06c402a.webp' /></p><h2> பதவி விலகும் முக்கிய அதிகாரிகள்</h2><p>கடந்த ஆட்சியில் பல முக்கிய பொறுப்புகளில் இருந்து வந்த பல அதிகாரிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர்.</p><p>குறிப்பாக துணை பிரதமர் டேவிட் லாமி மற்றும் வீட்டுவசதி, சமூகங்கள் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டீவ் ரீட் ஆகியோர் இதில் அடங்குவர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-20T19:28:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனைத்திற்கும் தயார் ; அமெரிக்காவிற்கு ஈரானின் பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-warns-us-ready-for-any-situation-1784575498"></link>
            <id>https://canadamirror.com/article/iran-warns-us-ready-for-any-situation-1784575498</id>
            <summary type="text">ஈரானிய மண்ணில் அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு ஊடுருவல் முயற்சியையும் நொடிப் பொழுதில் முறியடிக்கத் தயார் நிலையில் இருப்பதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய மண்ணில் அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு ஊடுருவல் முயற்சியையும் நொடிப் பொழுதில் முறியடிக்கத் தயார் நிலையில் இருப்பதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>

தங்களது தரைப்படை நவீன உபகரணங்கள், தொடர்ச்சியான பயிற்சிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட செயல்பாட்டுத் திறன்களைக் கொண்டு இயங்கி வருவதாகத் தெரிவித்துள்ள காவல்படை, அமெரிக்காவின் ஊடுருவல்களுக்கு எதிராக உயர்மட்டத் தயார் நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99c5f253-f03a-41c6-8a17-3c29125503d7/26-6a5e760b8e1d1.webp' /></p><p>
</p><p>
இது குறித்து தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ஈரானிய ஆயுதப்படைகளின் தொடர்ச்சியான விழிப்புணர்வும் தயார் நிலையுமே நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும், இந்தத் தயார் நிலை அனைத்துக் களங்களிலும் தீவிரமாகப் பின்பற்றப்படுவதாகவும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.
</p><p>
ஈரானியப் படைகள் எதிரிகளின் எந்தவொரு ஆக்கிரமிப்பையும் உடனடியாக முறியடிக்கத் தயார் நிலையில் உள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தரைப்படையின் துணைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் ரூஹுல்லா நூரி சுட்டிக்காட்டியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-20T19:25:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து உயர்மட்டக் கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/measures-to-reduce-prison-overcrowding-anura-1784573675"></link>
            <id>https://tamilwin.com/article/measures-to-reduce-prison-overcrowding-anura-1784573675</id>
            <summary type="text">சிறைச்சாலை கட்டமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும்
அவற்றுக்கான நிரந்தர தீர்வுகள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலை கட்டமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும்
அவற்றுக்கான நிரந்தர தீர்வுகள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது</p><p>குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று(20)முற்பகல்
ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.</p><p>

சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் உயர் அதிகாரிகள்
கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், தற்போதுள்ள பிரச்சினைகள் குறித்து விரிவாக
ஆராயப்பட்டது.</p><p></p><h2>ஆலோசனை&nbsp;</h2><p> </p><p>குறிப்பாக, சிறைச்சாலை வசதிகளை நவீனமயப்படுத்துதல் மற்றும்
அவற்றை விரிவுபடுத்துவதற்கான மாற்றுத் திட்டங்கள் குறித்து அதிகாரிகளால்
முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் கருத்துகள் குறித்து ஜனாதிபதி விரிவாகக்
கேட்டறிந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bfcff50-cf24-4843-a473-4ef371b127d2/26-6a5e6ef43b538.webp' /></p><p>
</p><p>
இந்தச் சந்திப்பில், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன
நாணயக்கார, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர்
ஆனந்த விஜேபால, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல்
(ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தா, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின்
செயலாளர் அயேஷா ஜினசேன மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த
குமார ஆகியோர் கலந்துகொண்டனர்.
</p><p>
சிறைச்சாலைகளின் நெரிசலைக் குறைத்தல் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களை
முன்னெடுப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை விரைவாகச் செயற்படுத்துமாறு
ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T19:23:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெதன்யாகுவின் கைது குறித்து ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-says-netanyahu-won-t-be-arrested-in-us-1784569453"></link>
            <id>https://ibctamil.com/article/trump-says-netanyahu-won-t-be-arrested-in-us-1784569453</id>
            <summary type="text">இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவிற்கு வருகை தரும் போது அவர் எந்தவொரு சூழ்நிலையிலும் கைது செய்யப்பட மாட்டார் என அமெரிக்க ஜனாதிபதி டொனா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவிற்கு வருகை தரும் போது அவர் எந்தவொரு சூழ்நிலையிலும் கைது செய்யப்பட மாட்டார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.
</p><p>
இது குறித்து தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், இஸ்ரேலியப் பிரதமர் அமெரிக்காவில் இருக்கும் போது எந்த வகையிலும், எந்த வடிவத்திலும் கைது செய்யப்பட மாட்டார் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.</p><p>

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் (UNGA) கலந்துகொள்வதற்காக நெதன்யாகு வருகை தந்தால், அவரைக் கைது செய்வதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் சட்ட வழிமுறைகள் குறித்து நகர அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாக நியூயோர்க் நகர மேயர் ஜோஹ்ரன் மம்தானி (Zohran Mamdani) அறிவித்திருந்தார்.
</p><p>
நியூயோர்க் மேயரின் இந்த சர்ச்சைக்குரிய அறிவிப்பு வெளியான நிலையிலேயே, ட்ரம்ப் அதற்குப் பதிலளிக்கும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe src="https://truthsocial.com/@realDonaldTrump/116953334292806992/embed" class="truthsocial-embed" style="max-width: 100%; border: 0" width="600" allowfullscreen="allowfullscreen"></iframe><script src="https://truthsocial.com/embed.js" async="async"></script></p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T19:15:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாலில் தூக்க மாத்திரை, விஷப்பாம்பை வைத்து கணவரை கொன்ற பெண் ; தகாத உறவால் வந்த வினை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-kills-husband-using-venomous-snake-1784574582"></link>
            <id>https://jvpnews.com/article/woman-kills-husband-using-venomous-snake-1784574582</id>
            <summary type="text">கள்ளக்காதல் விவகாரத்தில் பாலில் தூக்க மாத்திரை கலந்து, விஷப்பாம்பை வைத்து கணவரை கொன்ற பெண் கைது செய்யப்பட்டார்.

உத்தர பிரதேசத்தில் கணவன் மனைவியுடன்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கள்ளக்காதல் விவகாரத்தில் பாலில் தூக்க மாத்திரை கலந்து, விஷப்பாம்பை வைத்து கணவரை கொன்ற பெண் கைது செய்யப்பட்டார்.
</p><p style="text-align: justify; ">
உத்தர பிரதேசத்தில் கணவன் மனைவியுடன் சேர்ந்து கிருஷ்ணா என்ற பெயரில் பிளே ஸ்கூல் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc6a16b6-8cfe-439c-b580-f339b8547a33/26-6a5e72779969f.webp' /></p><h2 style="text-align: justify; ">கள்ளக்காதல்</h2><p style="text-align: justify; ">

இந்த பள்ளியில் வாகன ஓட்டுநராக இருப்பவருடன் தாமினிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இதற்கு தடையாக இருந்த கணவனை தீர்த்து கட்டி விட முடிவு செய்தனர்.</p><p style="text-align: justify; "> இருவரும் சேர்ந்து சாலை விபத்தில் கொலை செய்ய முதலில் திட்டமிட்டனர்.

ஆனால் அந்த திட்டம் தோல்வியடைந்தது. இதனால், வேறு திட்டம் தீட்டி கணவரை கொல்ல&nbsp; முடிவு செய்துள்ளார். </p><p style="text-align: justify; ">இந்த முறை கணவருக்கு, பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார். இதில், அவர் மயக்கமடைந்ததும், படுக்கையறையில் விஷப்பாம்பை விட்டு அவரை கடிக்க வைத்து கொன்றுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

இந்த கொலைக்கு 2 காரணங்கள் இருந்துள்ளன. காப்பீடாக ரூ.20 லட்சம் தொகையை பெற்று விட்டு, கள்ளத்தொடர்பை தொடர இருவரும் திட்டம் தீட்டியுள்ளனர். சந்தேகம் வராமல் இருக்க பாம்பை விட்டு கடிக்க செய்து இயற்கையான முறையில் உயிரிழந்தது போல் காட்ட திட்டமிட்டு உள்ளனர்.</p><p style="text-align: justify; ">
இது இயற்கை மரணம் போன்று முதலில் விசாரிக்கப்பட்டாலும், பொலிசாரின் தீவிர விசாரணையின் முடிவில் இருவரும் கைது செய்யப்பட்டனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-20T19:09:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீதான கடற்படை முற்றுகை தீவிரம்: 7 கப்பல்களைத் திருப்பி அனுப்பி 1 கப்பலை முடக்கியது அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-navy-blockades-iranian-ports-stops-ships-1784567215"></link>
            <id>https://ibctamil.com/article/us-navy-blockades-iranian-ports-stops-ships-1784567215</id>
            <summary type="text">ஈரானிய துறைமுகங்கள் மீது மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான கடற்படை முற்றுகையின் (Blockade) போது ஒரு கப்பலை முடக்கியுள்ளதுடன் 7 கப்பல்களைத் திருப்பி அனுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய துறைமுகங்கள் மீது மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான கடற்படை முற்றுகையின் (Blockade) போது ஒரு கப்பலை முடக்கியுள்ளதுடன் 7 கப்பல்களைத் திருப்பி அனுப்பியுள்ளதாக அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அமெரிக்க இராணுவம் இதனை தெரிவித்துள்ளது. </p><p>

இது குறித்து அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளது.
</p><p>
குறித்த பதிவில் ஜூலை 20 நிலவரப்படி, ஈரானிய துறைமுகங்களுக்குள் கப்பல்கள் நுழைவதையோ அல்லது அங்கிருந்து வெளியேறுவதையோ தடுப்பதற்காக, அமெரிக்க இராணுவம் 7 வணிகக் கப்பல்களைத் திருப்பி அனுப்பியுள்ளதுடன் 1 கப்பலைச் செயலற்றதாக்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">U.S. service members aboard amphibious assault ship USS Boxer (LHD 4) support flight operations day and night from the Arabian Sea as CENTCOM enforces the naval blockade against Iran. As of July 20, the U.S. military has redirected 7 commercial vessels and disabled 1 to prevent… <a href="https://t.co/a1gtwipPUf">pic.twitter.com/a1gtwipPUf</a></p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2079235964124147741?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T19:04:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளியானது GIT பரீட்சையின் பெறுபேறுகள்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2025-git-examination-results-released-1784562425"></link>
            <id>https://ibctamil.com/article/2025-git-examination-results-released-1784562425</id>
            <summary type="text">இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இம்முறை ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
</p><p>
இம்முறை பரீட்சைக்காக மொத்தம் 200,235 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்திருந்ததோடு அவர்களுள் பாடசாலை விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 199,598 ஆகும். </p><p>

அத்தோடு 637 தனிப்பட்ட விண்ணப்பதாரர்களும் இதில் உள்ளடங்குவர்.</p><p>
</p><p></p><h2>ஆவணங்களைப் பதிவிறக்கம்&nbsp;</h2><p>நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 1,669 பரீட்சை மத்திய நிலையங்களில், 325 இணைப்பு மத்திய நிலையங்களின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்ட இப்பரீட்சைக்கு இம்முறை 147,407 மாணவர்கள் தோற்றியுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f0361e7-359a-4691-9ae3-70836c50322f/26-6a5e4e1f35ed6.webp' /></p><p>விண்ணப்பதாரர்கள் தங்களது பரீட்சை சுட்டிலக்கத்தை சரியாக உள்ளிடுவதன் மூலம் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான <a href="http://www.doenets.lk மற்றும் http://www.results.exams.gov.lk" target="_blank">http://www.doenets.lk மற்றும் http://www.results.exams.gov.lk </a>ஆகியவற்றிற்குள் பிரவேசித்து பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். </p><p>

எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி முதல் பின்வரும் வழிமுறைகளின் ஊடாக பெறுபேறு ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள்</h2><p>அனைத்து பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களும் https://onlineexams.gov.lk/eic இணையத்தளத்தின் Personal Account Login ஊடாக தங்களது பரீட்சை சுட்டிலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிட்டு பெறுபேறு ஆவணத்தை (Results Schedule) பதிவிறக்கம் செய்ய முடியும்.</p><p> 

அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (User Name) மற்றும் கடவுச்சொல் (Password) ஆகியவற்றைப் பயன்படுத்தி<a href="https://onlineexams.gov.lk/eic" target="_blank"> https://onlineexams.gov.lk/eic</a> இன் School Account Login பகுதிக்குள் பிரவேசித்து அந்தந்த பாடசாலையின் முழுமையான பெறுபேறு ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்து அச்சிடப்பட்ட பிரதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f449c28-e672-4123-ba62-a3edf79244c8/26-6a5e4e20267b4.webp' /></p><p>அனைத்து மாகாண மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் தத்தமது வலயத்திற்குரிய பெறுபேறு ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்வதற்காக பயனர் பெயர்களும் கடவுச்சொற்களும் வழங்கப்பட்டுள்ளன. </p><p>

இந்த பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் வினவல்களிருப்பின், பரீட்சைத் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளையின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><ul><li>&nbsp;உடனடி அழைப்பு இலக்கம்: 1911</li><li> 

தொலைபேசி இலக்கங்கள்: 011284208 / 0112784537 / 0112785922 </li><li>

தொலைநகல் (Fax) இலக்கம்: 0112784422</li></ul><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T19:04:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாலையில் கருணாவுடன் சென்ற பெண் யார்..! - நான்காவது கோடீஸ்வரரான மர்மம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-tamils-eelam-karuna-a-woman-1784569691"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-tamils-eelam-karuna-a-woman-1784569691</id>
            <summary type="text">முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி, தனது பதவி காலத்தில் விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா அமைச்சராக இருந்த போது அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி, தனது பதவி காலத்தில் விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா அமைச்சராக இருந்த போது அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.&nbsp;</p><p> பொலிஸ் திணைக்களத்திற்கு சொந்தமான விளையாட்டு மைதானத்திற்கு கருணா சென்ற போது நடந்த சம்பம் தொடர்பிலேயே அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.&nbsp;</p><p>பிரியந்த ஜயகொடி, "எனக்கு நினைவிருக்கும் வகையில் 2013 அல்லது 2014 ஆம் ஆண்டில், நான் பொலிஸ் விளையாட்டுப் பிரிவின் பணிப்பாளராக இருந்தபோது, விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கருணா அப்போது அமைச்சராக இருந்தார்.</p><p>அவருக்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது. அவர் மாலை வேளையில் ஒரு பெண்ணுடன் பொலிஸ் விளையாட்டு மைதானத்திற்கு உடற்பயிற்சிக்காக நடப்பதற்கு வருவார்” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>யார் அந்த பெண்? என தற்போது கேள்வி எழுப்பப்படுகின்றது.. இவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/yBaWqANNAjQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T18:55:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கப்பல் மீது தாக்குதல்: 4 இந்தியர்கள் பலி;]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/four-indians-killed-in-attack-on-ship-leaving-1784567360"></link>
            <id>https://canadamirror.com/article/four-indians-killed-in-attack-on-ship-leaving-1784567360</id>
            <summary type="text">உக்ரைனின் தெற்குப் பகுதியில் உள்ள ஒடேசா துறைமுகத்திலிருந்து புறப்பட்ட வணிகக் கப்பல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 4 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் தெற்குப் பகுதியில் உள்ள ஒடேசா துறைமுகத்திலிருந்து புறப்பட்ட வணிகக் கப்பல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 4 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், மற்றொரு இந்தியர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. </p><p>
கினியா-பிசாவு (Guinea-Bissau) நாட்டின் கொடியுடன் பயணித்த ‘கோல்டன் லியோ’) எனும் வணிகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இக்கப்பலில் இந்தியா மற்றும் சிரியா நாடுகளைச் சேர்ந்த மாலுமிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்.</p><p> 
ஞாயிற்றுக்கிழமையன்று இக்கப்பல் மீது ரஷ்யா 3 க்ரூஸ் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் கடற்படை தனது டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7f76178-3749-4ff5-8f2f-ffbf8a2fab5e/26-6a5e5642e2aa6.webp' /></p><p> </p><p>
வணிகக் கப்பல்களை இலக்கு வைப்பதும், அப்பாவி சிவில் பணியாளர்களின் உயிர ஆபத்தில் தள்ளுவதும், கடல்சார் கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தக சுதந்திரத்தைத் தடுப்பதும் மிகவும் கண்டிக்கத்தக்கது என இந்தியா தெரிவித்துள்ளது.
</p><p>இத்தகைய தாக்குதல்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது என வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் நிலைமையைக் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T18:46:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் திருமணப் பதிவுகளில் சரிவு ; 15 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-sees-drop-in-marriage-registrations-1784572942"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-sees-drop-in-marriage-registrations-1784572942</id>
            <summary type="text">இலங்கையில் கடந்த 15 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட திருமணங்களின் எண்ணிக்கை சுமார் 28 சதவீதம் குறைந்துள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. அதேவேள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் கடந்த 15 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட திருமணங்களின் எண்ணிக்கை சுமார் 28 சதவீதம் குறைந்துள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.</p><p> அதேவேளையில், பிறப்பு விகிதமும் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாகத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/552f7a77-c088-4006-a9a0-71f33f836dd9/26-6a5e6c0fb9c40.webp' /></p><h2>திருமணங்களின் எண்ணிக்கை</h2><p>

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் (Department of Census and Statistics) அறிக்கையின்படி, 2010-ஆம் ஆண்டில் 200,985 ஆக இருந்த பதிவு செய்யப்பட்ட திருமணங்களின் எண்ணிக்கை, 2025-ஆம் ஆண்டில் 144,182 ஆகக் குறைந்துள்ளது. இது சுமார் 28 வீழ்ச்சியாகும்.</p><p>

2020-ஆம் ஆண்டிற்கு முன்னதாக, பல ஆண்டுகளில் திருமணங்களின் எண்ணிக்கை 170,000-க்கு மேலாகப் பதிவாகியிருந்தது. </p><p>இருப்பினும், கோவிட்-19 (COVID-19) பெருந்தொற்று காலத்தில் இந்த எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்து, 2020-ஆம் ஆண்டில் 143,808 ஆகக் குறைந்தது.</p><p></p><p>

பெருந்தொற்றுக்குப்பின், 2021-ஆம் ஆண்டில் 162,628 ஆகவும், 2022-ஆம் ஆண்டில் 171,140 ஆகவும் திருமணப் பதிவுகள் மீண்டும் அதிகரித்திருந்தன. </p><p>இருப்பினும், 2023-ஆம் ஆண்டில் 151,356 ஆகவும், 2024-ஆம் ஆண்டில் 139,290 ஆகவும் மீண்டும் சரிந்தன. </p><p>இறுதியாக, 2025-ஆம் ஆண்டில் திருமணப் பதிவுகள் சிறிய அளவில் அதிகரித்து 144,182 ஆகப் பதிவாகியுள்ளன.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T18:42:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய கூட்டணியின் பின்னணியில் பரபரப்பு! கட்சியின் முக்கியஸ்தர்கள் பற்றிய இரகசிய பேச்சுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-alliance-ranil-sajith-namal-sjb-slpp-1784570042"></link>
            <id>https://tamilwin.com/article/new-alliance-ranil-sajith-namal-sjb-slpp-1784570042</id>
            <summary type="text">தற்போது இலங்கையில் புதிய அரசியல் கூட்டணிகளை அமைக்கும் முயற்சிகள் தீவிரமான நடைபெற்று வருவதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.இந்தநிலையிலே, ரணில் விக்ரம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது இலங்கையில் புதிய அரசியல் கூட்டணிகளை அமைக்கும் முயற்சிகள் தீவிரமான நடைபெற்று வருவதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.</p><p>இந்தநிலையிலே, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ, நாமல் ராஜபக்ச ஆகியோர் தங்களது அரசியல் பலத்தை அதிகரிக்கும் நோக்கில் பரந்த கூட்டணிகளை உருவாக்க முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>அத்தோடு, ஐக்கியதேசியக்கட்சி மற்றும் சமகி ஜன பலவேகய இணைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும் இரு தரப்பினரின் தலைமைத்துவத்திலும் அதற்கான ஆர்வம் மந்தமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>குழுஅமைப்பு, செயலாளர் பதவி, பொருளாளர் நியமனம் போன்ற விடயங்களில் இதுவரை இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>புதிய கூட்டணியின் பின்னணி தொடர்பான விடயங்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/m2EEUQnaLBg" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T18:35:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் நடுக்கடலில் கவிழ்ந்தது கப்பல் : பலர் பலியான துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dozens-feared-dead-in-guyana-1784572047"></link>
            <id>https://ibctamil.com/article/dozens-feared-dead-in-guyana-1784572047</id>
            <summary type="text">தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கயானா. அந்நாட்டின் தலைநகர் ஜோர்ஜ் டவுனில் இருந்து பரிமா வைனி நகருக்கு கடல் வழியாக நேற்று முன் தினம் சிறிய ரக கப்பல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கயானா. அந்நாட்டின் தலைநகர் ஜோர்ஜ் டவுனில் இருந்து பரிமா வைனி நகருக்கு கடல் வழியாக நேற்று முன் தினம் சிறிய ரக கப்பல் புறப்பட்டது. அந்த கப்பலில் 133 பேர் பயணித்தனர்.</p><p>


கப்பல் நடுக்கடலில் பயணித்த போது தீடீரென கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கப்பலில் பயணித்த அனைவரும் கடலில் மூழ்கினர்.</p><p> </p><h2>கடலில் மூழ்கியவர்களின் கதி..!</h2><p>இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் பெண்கள், குழந்தைகள் உள்பட 67 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால், கடலில் மூழ்கிய 66 பேரின் நிலை என்ன என்று தெரியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d85da92-5c14-4bc2-83c9-0bc8dbe4511c/26-6a5e689141d99.webp' /></p><p> </p><p>இதனால் கடலில் மூழ்கிய 66 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. கடலில் மூழ்கி மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T18:27:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டமன்றத்தில் முதல்வரின் சைகை... ஜனநாயகன் ப்ரொமோவிலும் வந்ததால் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/cm-vijay-jana-nayagan-movie-promo-released-1784567988"></link>
            <id>https://manithan.com/article/cm-vijay-jana-nayagan-movie-promo-released-1784567988</id>
            <summary type="text">முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ப்ரொமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.ஜனநாயகம்ஹெச், வினோத் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ப்ரொமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.</p><h2>ஜனநாயகம்</h2><p>ஹெச், வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் வரும் ஜுலை 23ம் தேதி உலகம் முழுவதும் சுமார் 3000 திரையரங்குகளில் வெளியாக உள்ளது.</p><p>தமிழகத்தில் மட்டும் 950 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முதலமைச்சர் விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ae79882-0bc6-4e34-b8ce-c123172156b8/26-6a5e5c25902f3.webp' /></p><p>கர்நாடகா, கேரளா மாநிலங்களில் முன்பதிவு நேற்று முன்தினமே தொடங்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் நேற்று தொடங்கியது. இந்நிலைபில் படத்தின் ப்ரொமோ வெளியாகியுள்ளது.</p><p>சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் செய்த சைகை, அவர் அணிந்து வந்த கோட் சூட் காட்சி என பயங்கர ஆக்ஷன் காட்சியாக அமைந்துள்ளது குறித்த ப்ரொமோ.</p><p></p><p>மேலும் தற்போது இப்படத்தின் டிக்கெட் முன்பதிவின் அதிகப்பட்ட விலை 2500 ரூபாய் என்றும் கூறப்பட்டு வருகின்றது.</p><p>சட்டமன்றத்தில் ஸ்டாலினுக்கு எதிராக முதல்வர் செய்த சைகைக்கு பல எதிர்ப்புகள் கிளம்பியிருந்த நிலையில், தற்போது படத்திலும் அப்படியொரு காட்சிகள் இடம்பெற்றுள்ளது பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.<br></p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Raavanamavan daa for a reason 🔥<a href="https://x.com/hashtag/JanaNayaganFromJuly23?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#JanaNayaganFromJuly23</a><br><br>The Hon&#39;ble Chief Minister <a href="https://x.com/actorvijay?ref_src=twsrc%5Etfw">@actorvijay</a> <a href="https://x.com/TheKVNofficial?ref_src=twsrc%5Etfw">@TheKVNofficial</a> <a href="https://x.com/KvnProductions?ref_src=twsrc%5Etfw">@KvnProductions</a> <a href="https://x.com/hashtag/HVinoth?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#HVinoth</a> <a href="https://x.com/hegdepooja?ref_src=twsrc%5Etfw">@hegdepooja</a> <a href="https://x.com/anirudhofficial?ref_src=twsrc%5Etfw">@anirudhofficial</a> <a href="https://x.com/thedeol?ref_src=twsrc%5Etfw">@thedeol</a> <a href="https://x.com/_mamithabaiju?ref_src=twsrc%5Etfw">@_mamithabaiju</a> <a href="https://x.com/Jagadishbliss?ref_src=twsrc%5Etfw">@Jagadishbliss</a> <a href="https://x.com/LohithNK01?ref_src=twsrc%5Etfw">@LohithNK01</a> <a href="https://x.com/RamVJ2412?ref_src=twsrc%5Etfw">@RamVJ2412</a> <a href="https://x.com/TSeries?ref_src=twsrc%5Etfw">@TSeries</a> <a href="https://t.co/zTC6EegRkj">pic.twitter.com/zTC6EegRkj</a></p>&mdash; KVN Productions (@KvnProductions) <a href="https://x.com/KvnProductions/status/2079170225212465266?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-07-20T18:27:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை 4 ராசிக்கு அதிர்ஷ்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/lucky-zodiac-signs-due-to-shani-vakra-peyarchi-1784560563"></link>
            <id>https://manithan.com/article/lucky-zodiac-signs-due-to-shani-vakra-peyarchi-1784560563</id>
            <summary type="text">ஜோதிடத்தில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். இந்த சனி பகவான் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அதோடு அவ்வப்போத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். இந்த சனி பகவான் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அதோடு அவ்வப்போது வக்ர நிலையிலும் பயணிப்பார். சனி பகவானின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

</p><p>அந்த வகையில் தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த சனி பகவான் மீன ராசியின் வருகிற ஜூலை 27 ஆம் தேதி முதலாக வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். இந்த வக்ர நிலையில் சனி பகவான் டிசம்பர் 11 ஆம் தேதி வரை இருந்து, பின் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிப்பார்.

</p><p>சனி பகவானின் இந்த வக்ர பயணத்தால் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒருவகையில் காணப்படும். அதில் சிலருக்கு மோசமாகவும், சிலருக்கு அதிர்ஷ்டமாகவும் இருக்கலாம். இப்போது சனி பகவான் வக்ரமடைவதால் டிசம்பர் வரை அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/709ebeee-4108-466a-816a-6b6af3fb68e4/26-6a5e3e23c00bb.webp' /></p><h2>மேஷம்</h2><p> மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் இதுவரை இருந்த தடைகள் நீங்கும். அலுவலக சூழல் சிறப்பாக இருக்கும். முக்கியமாக இக்காலத்தில் ஒரு புதையல் கிடைக்கலாம். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். மொத்தத்தில் சனி பகவானின் அருளால் தொழில் ரீதியாக பல நல்ல செய்திகளைப் பெறக்கூடும்&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/037469a8-f6a4-4329-8ffa-d09cb1cbfdbb/26-6a5e3e247100b.webp' /></p><h2>சிம்மம் </h2><p>சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பொருள் வசதிகளும், ஆடம்பரமும் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் கனவு இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நாள்பட்ட நோயால் அவதிப்பட்டு வந்தால், அதிலிருந்து விடுபடுவீர்கள். பணியிடத்தில் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சிலர் எதிர்பாராத மாற்றங்களை காணலாம். நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab96777d-12a2-43df-bdf3-372c603e0eec/26-6a5e3e252032e.webp' /></p><p></p><h2>விருச்சிகம்</h2><p> விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமடையவுள்ளார். இதனால் இக்காலமானது நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்க உகந்த காலமாக இருக்கும். வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியில் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் மற்றும் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f446cdbc-7b82-452c-8684-b851122fbc5a/26-6a5e3e25d1e30.webp' /></p><h2>தனுசு</h2><p> தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். பணியிடத்தில் ஒவ்வொரு விஷயமும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வீட்டு சூழல் இனிமையாக இருக்கும். சிலர் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்திகளைப் பெறலாம்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/686a6680-8ea9-4ac3-8521-4d09e4fe838f/26-6a5e3e26a604c.webp' /></p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</b>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;<br></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T18:25:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல் மாயோ கைது: ஆயுள் தண்டனை விதித்த அமெரிக்க நீதிமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cartel-founder-el-mayo-sentenced-to-life-in-prison-1784571330"></link>
            <id>https://news.lankasri.com/article/cartel-founder-el-mayo-sentenced-to-life-in-prison-1784571330</id>
            <summary type="text">மெக்சிகோ போதைப்பொருள் கடத்தல் வியாபாரி எல் மாயோ சாம்பாடாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவருக்கு ஆயுள் தண்டனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>மெக்சிகோ போதைப்பொருள் கடத்தல் வியாபாரி எல் மாயோ சாம்பாடாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2> போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவருக்கு ஆயுள் தண்டனை</h2><p>
மெக்சிகோவில் இருந்து அதிகளவிலான போதைப்பொருள்களை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இஸ்மாயேல் எல் மாயோ சாம்பாடாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p> கடந்த 2024ம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் மன்னனாக அறியப்பட்ட இஸ்மாயேல் எல் மாயோ சாம்பாடா கைது செய்யப்பட்டார்.</p><p> இவர், சினலோவா கார்டெல்லின் முக்கிய பொறுப்பில் இருந்த நிலையில், கோகைன், மெத்தம்பெட்டமைன் மற்றும் ஃபெண்டானில் போன்ற மிகவும் மோசமான போதைப்பொருள்களை அமெரிக்காவுக்கு கடத்தியதில் முக்கிய குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டார்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00ef437f-3d24-4341-b3c4-2da3aadec5fd/26-6a5e65c40c152.webp' /></p><p> எல் மாயோ கைது செய்யப்பட்ட போது, தான் மெக்ஸிகோவில் இருந்து கடத்தப்பட்டு அமெரிக்காவின் டெக்சாஸிற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவித்தார்.</p><p>ஆனால் இறுதியில் மரண தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக அரசு தரப்பு வழக்கறிஞரிடம் 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டார்.</p><p> இந்நிலையில் புருக்ளின் கூட்டாட்சி நீதிமன்றம் திங்கட்கிழமை வழங்கிய தீர்ப்பில் இஸ்மாயேல் எல் மாயோ சாம்பாடாவுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.</p><p> அத்துடன் அவருக்கு $15 பில்லியன் டொலர் அபராதமும் விதித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T18:15:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைக்குள் இலக்கு வைக்கப்படும் சுரேஷ் சலே! சி.டி.விக்ரமரத்னவின் சாட்சிகளை அழிக்கும் மர்ம நபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-sallay-targeted-prison-wickramaratne-eviden-1784561866"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-sallay-targeted-prison-wickramaratne-eviden-1784561866</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் பல்வேறு ஊழல் வழக்குகளுடன் தொடர்புடைய முக்கிய சாட்சிகள் திட்டமிட்டு தவறான முடிவெடுப்பதற்கு மாற்றப்படுவதாக பிரித்தானிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் பல்வேறு ஊழல் வழக்குகளுடன் தொடர்புடைய முக்கிய சாட்சிகள் திட்டமிட்டு தவறான முடிவெடுப்பதற்கு மாற்றப்படுவதாக பிரித்தானியாவிலுள்ள ராணுவ ஆய்வாளர் அரூஸ் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
</p><p>

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>
மேலும் தெரிவித்த அவர்,

இதில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் மிக முக்கியமானது.
</p><p>
சிறைக்குள் இருக்கும் சுரேஷ் சலேவுக்கும் இதே போன்ற ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

ஒரு சிறை கலவரத்தை உருவாக்கி அவரைத் தாக்குவதோ அல்லது படுகொலை செய்வதோ இலகுவாகச் செய்யப்படலாம்.
</p><p>
மரணமடைந்தவர்கள் எவரும் தவறான முடிவெடுக்கும் மனநிலையில் இல்லை என்றும், அவர்களது மரணங்களுக்கு முன் குடும்பப் பிரச்சனைகள் அல்லது தனிப்பட்ட காரணங்கள் ஊடகங்கள் மூலம் திட்டமிட்டு பரப்பப்படுகின்றது.
</p><p>

அரசியல்வாதிகள் தங்களுக்கு எதிரான சாட்சிகளை அழிப்பதன் மூலம் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முயல்வதாகவும், இவ்வாறான கொலைகள் ஒரு 'கொலை கலாச்சாரத்தை' மீண்டும் உருவாக்கி விடுமோ என்ற அச்சம் நிலவுகின்றது.
</p><p>
அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் இந்த விசாரணைகளை எவ்வளவு வேகமாக முன்னெடுக்கிறது என்பதில்தான் இந்த வழக்குகளின் வெற்றி தங்கியுள்ளது. </p><p>

சாட்சிகளுக்குப் பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால், விசாரணைகள் மர்மமாகவே முடிந்துவிடும் என குறிப்பிட்டார்.
</p><p>
மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/D49rkYHSU6A" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T17:43:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜி.ஐ.டி (GIT) பரீட்சை முடிவுகள் வெளியீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/git-exam-results-released-1784569201"></link>
            <id>https://tamilwin.com/article/git-exam-results-released-1784569201</id>
            <summary type="text">2025 ஆம் ஆண்டிற்கான பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சைக்கான முடிவுகளை இலங்கைத் பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இன்யை தினம் (20 ஜூலை)&amp;nbsp; இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025 ஆம் ஆண்டிற்கான பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சைக்கான முடிவுகளை இலங்கைத் பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
</p><p>இன்யை தினம் (20 ஜூலை)&nbsp; இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>
இப்பரீட்சைக்காக 199,598 பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 637 தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தம் 200,235 பேர் விண்ணப்பித்திருந்தனர். </p><p>
அவர்களில் 147,407 பரீட்சார்த்திகள் தோற்றிய இப்பரீட்சையானது, 325 ஒருங்கிணைப்பு மையங்களின் ஒத்துழைப்புடன் 1,669 பரீட்சை மையங்களில் நடாத்தப்பட்டது.
</p><p> பரீட்சார்த்திகள் தங்களது சுட்டெண்ணை (Index Number) உள்ளீடு செய்து, www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாகப் பரீட்சை முடிவுகளை அறிந்துகொள்ள முடியும்.
</p><p>பரீட்சார்த்திகள் ஜூலை 23, 2026 முதல் ஆன்லைன் பரீட்சை இணையதளம் வழியாகத் தங்களது சுட்டெண் அல்லது தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி அதிகாரப்பூர்வ முடிவுத் தாள்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.</p><p>
அதேபோல, பாடசாலைகளும் கல்வி அதிகாரிகளும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடவுச்சொற்களைப் பயன்படுத்தி பரீட்சை முடிவுத் தாள்களைப் பதிவிறக்கம் செய்ய ஆன்லைனில் வசதி செய்யப்பட்டுள்ளது.</p><p>
பரீட்சார்த்திகள் மேலும் தகவல்களைப் பெற பரீட்சைத் திணைக்களத்தின் 1911 என்ற உடனடி உதவி இலக்கம் (Hotline) அல்லது பாடசாலைப் பரீட்சைகள் அமைப்பு மற்றும் முடிவுகள் கிளையைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T17:40:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச பணிக்காக 50 முறை பரீட்சை ; பட்டதாரி இளைஞரின் விபரீத முடிவு ; கண் கலங்க வைக்கும் தந்தைக்கான இறுதி கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/raduate-dies-after-50-government-job-exams-1784568778"></link>
            <id>https://jvpnews.com/article/raduate-dies-after-50-government-job-exams-1784568778</id>
            <summary type="text">இந்தியாவில் அரசு பணிக்காக 50 முறை தேர்வு எழுதிய பட்டதாரி இளைஞர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது, பீகார் மாநிலம், பக்ஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">இந்தியாவில் அரசு பணிக்காக 50 முறை தேர்வு எழுதிய பட்டதாரி இளைஞர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது, </p><p style="text-align: justify;">பீகார் மாநிலம், பக்ஸாரைச் சேர்ந்தவர் ஆனந்த் குமார், 2024-ம் ஆண்டு கான்பூரில் உள்ள ஒரு முன்னணி பொறியியல் கல்லூரியில் மின் பொறியியலில் பட்டப்படிப்பை முடித்தார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07175ff9-860f-4873-9c78-d626a28c69fe/26-6a5e5bcc0cdd8.webp' /></p><h2 style="text-align: justify;">மன்னிப்பு கடிதம்</h2><p>

</p><p style="text-align: justify;">
ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே, அவர் தொடர்ந்து போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்தார். </p><p style="text-align: justify;">50-க்கும் மேற்பட்ட அரசுப் பணி நியமனத் தேர்வுகளில் எழுதியும், அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவர், குஜ்ரன்வாலாவில் உள்ள தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.</p><p style="text-align: justify;">பொலிசார் அவரது உடலை கைப்பற்றினர். அப்போது அவர் எழுதிய கடிதம் சிக்கியது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">அதில் தனது தந்தையிடம் பலமுறை மன்னிப்புக் கோரியுள்ள அந்தக் கடிதத்தில், “மன்னிக்கவும், அப்பா... நான் ஒரு அரசு வேலைக்காக 50 முறை முயற்சி செய்தேன். ஆனால் என்னால் வெற்றி பெற முடியவில்லை. தயவு செய்து என்னை மன்னியுங்கள்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.</p><p style="text-align: justify;">இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-20T17:39:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு பிரான்ஸ் கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/france-denounces-extremely-serious-1784568763"></link>
            <id>https://tamilwin.com/article/france-denounces-extremely-serious-1784568763</id>
            <summary type="text">&amp;nbsp;ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்களை ஈரானியப் பாதுகாப்புப் படையினர் பல மணி நேரம் சட்டவிரோதமாகச் சிறைபிடித...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்களை ஈரானியப் பாதுகாப்புப் படையினர் பல மணி நேரம் சட்டவிரோதமாகச் சிறைபிடித்து விசாரணை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>
இச்சம்பவத்திற்கு ஈரானுக்குக் கடுமையான "விளைவுகள்" ஏற்படும் என்று பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ழான்-நோயல் பரோ எச்சரித்துள்ளார். 
ஞாயிற்றுக்கிழமை மாலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. </p><p>தூதரக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ராஜதந்திரப் பாதுகாப்பை முற்றிலும் மீறி, ஈரானியப் பாதுகாப்புப் படையினர் "மிகக் கடுமையான அச்சுறுத்தல் நடவடிக்கையில்" ஈடுபட்டதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>எச்சரிக்கை</h2><p> 
எவ்விதக் காரணமும் இன்றி இரண்டு ஊழியர்களும் பல மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, அவர்களில் ஒருவர் மீது உடலளவிலான தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.</p><p>
பின்னர் விடுவிக்கப்பட்ட இருவரும் பாதுகாப்பாகத் தூதரகத்திற்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் அடுத்த சில மணிநேரங்களில் பிரான்ஸ் திரும்பவுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdb5ab7f-527f-4dde-9880-ebe07921989b/26-6a5e5bbf70a1f.webp' /></p><p> </p><p>
பாதிக்கப்பட்ட அந்த இரு ஊழியர்களும் ஈரானியக் கலைஞர்கள் மற்றும் விஞ்ஞானிகள் உள்ளிட்ட சிவில் சமூகத்தினருக்கு ஆதரவளிக்கும் பிரான்ஸின் திட்டங்களைப் பராமரித்து வந்தவர்கள் என்பதால், இந்தத் தாக்குதல் நடவடிக்கை மேலும் அதிர்ச்சியளிப்பதாக அமைச்சர் பரோ சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> 
இச்சம்பவம் குறித்து ஈரானிய அதிகாரிகள் இதுவரை எந்தவொரு பகிரங்கக் கருத்தையும் வெளியிடவில்லை.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T17:37:09+00:00</updated>
        </entry>
    </feed>
