<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-10T07:27:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பண்டாரவளை மாநகரசபையின் முன்னாள் மேயர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/former-bandarawela-mayor-janaka-nishantha-arrested-1789022832"></link>
            <id>https://ibctamil.com/article/former-bandarawela-mayor-janaka-nishantha-arrested-1789022832</id>
            <summary type="text">பண்டாரவளை மாநகரசபையின் முன்னாள் மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நேற்று (09) இரவு பண்டாரவளை விசேட குற்ற விசார...</summary>
            <content type="html"><![CDATA[<p>பண்டாரவளை மாநகரசபையின் முன்னாள் மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>நேற்று (09) இரவு பண்டாரவளை விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p> </p><p>

மாநகரசபையில் இடம்பெற்ற நிதி மோசடி மற்றும் போலியான ஆவணங்களைத் தயாரித்தமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இணங்கவே முன்னாள் மேயர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>நீதிமன்றில் முன்னிலை</h2><p> </p><p>குறித்த விவகாரம் தொடர்பாகச் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாநகர சபையின் இரண்டு வருமான பரிசோதகர்கள் உள்ளிட்ட சிலரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e01c14a-a95b-49ff-97c5-cf9648a79bec/26-6aa25b44d47de.webp' /></p><p> </p><p>இந்தநிலையில் தற்போது பண்டாரவளை விசேட குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் அவரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;</p><p>இதனையடுத்து சந்தேகநபர் இன்றைய தினம் (10) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T07:23:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்கவில் சட்டவிரோத போதைப்பொருளுடன் மூன்று பெண்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-women-arrested-at-the-airport-1789023050"></link>
            <id>https://ibctamil.com/article/three-women-arrested-at-the-airport-1789023050</id>
            <summary type="text">சட்டவிரோத பெறுமதியான மரிஜுவானா போதைப்பொருள் தொகையை நாட்டிற்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகைப் பகுதியில் உள்ள வணிகர்களுக்கான “Red...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோத பெறுமதியான மரிஜுவானா போதைப்பொருள் தொகையை நாட்டிற்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகைப் பகுதியில் உள்ள வணிகர்களுக்கான “Red Channel” வழியாக வெளியே எடுத்துச் செல்ல முயன்ற மூன்று இலங்கைப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

குறித்த மூவரும் கொழும்பு - 13 பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவரும், புத்தளம் - கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவரும், கொழும்பு - 02 பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவருமான வர்த்தகப் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்தபெறுமதி&nbsp;80 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>இலட்சக்கணக்கான பெறுமதி போதைப்பொருள்</h2><p>
</p><p>
அவர்கள் நேற்று (09) இரவு 10.50 மணியளவில் தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து Thai AirAsia விமான சேவையின் FD-140 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d549205-2d1e-49ce-966d-8e4792280774/26-6aa259f4cee42.webp' /></p><p>

இதனையடுத்து, விமான நிலைய சுங்க அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மரிஜுவானா போதைப்பொருள் தொகையும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய காவல் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T07:19:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெடுக்குநாறிமலையில் விசேட பௌத்த வழிபாடு : ஆலய நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்றை நாடிய பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-buddhist-worship-at-vedukkunaari-malai-1789022227"></link>
            <id>https://tamilwin.com/article/special-buddhist-worship-at-vedukkunaari-malai-1789022227</id>
            <summary type="text">வவுனியா வடக்கு வெடுக்குநாறிமலையில் விசேட பௌத்த வழிபாடுகள் நடைபெறவுள்ள
நிலையில் ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக நெடுங்கேணி பொலிஸார்
நீதிம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா வடக்கு வெடுக்குநாறிமலையில் விசேட பௌத்த வழிபாடுகள் நடைபெறவுள்ள
நிலையில் ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக நெடுங்கேணி பொலிஸார்
நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

​</p><p>1979 ஆண்டு இலக்கம் 15ஆம் குற்றவியல் நடவடிக்கை சட்ட கோவை சட்டத்தின் 106 (1)இன் பிரகாரம் வவுனியா நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஒரேநேரத்தில் வழிபாடுகள் மேற்கொள்ள இருப்பதால்</h2><p>
</p><p>உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,&nbsp;2026/09/12ஆம், திகதி நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் நைனாமடு காட்டு பகுதியில்
அமைந்துள்ள புராதன பெறுமதி வாய்ந்த எச்சங்கள் கொண்ட பூமி பிரதேசத்தினுள் இந்து
சமய வழிபாட்டாளர்கள் மூலமாகவும் பௌத்த மத வழிபாட்டாளர்கள் மூலமாகவும்
சமய வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மற்றும் பூஜை நடவடிக்கைகள் மேற்கொள்ள தயார்
செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2eb767c9-7446-4051-a78b-240fd641c5fe/26-6aa25854a0af9.webp' /></p><p>இவ் இந்து மத வழிபாட்டாளர்கள் மற்றும் பௌத்த மத
வழிபாட்டாளர்கள் ஒரே திகதியில் ஒரேநேரத்தில் ஒரே பூமியில் இத்தொல் பொருள்
அமைந்துள்ள இடத்தில் சமய வழிபாடுகள் மேற்கொள்ள இருப்பதாகவும் அக்காரணத்தினை
அடிப்படையாக கொண்டு இரு தரப்பினர்களுக்கும் பொது மக்களுக்கும் வன்முறைகள்
மற்றும் முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.</p><h2>விசேட பௌத்த வழிபாடுகள்&nbsp;</h2><p>இருவர்களின் சமய
வழிபாடுகளுக்கும் இடையூறு ஏற்படவும் பிரதேசத்தில் சமாதான சீர்குலைவு ஏற்படவும்
இவ்வாறாக இடப்பிரச்சனைகள் தொடர்ந்தும் ஏற்படுவதாலும் இத் தளத்தினை பிரதான
மையமாக கொண்டு நாட்டிற்குள் இன மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளமையினால் நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால்
நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80d46691-0176-4235-a961-1d2a16a2a6cb/26-6aa258555b8fb.webp' /></p><p>அதன் பிரகாரம் மேலதிக காரணங்கள் தொடர்பான விசாரணைக்கு10.09.2026அன்று மாலை 03.00 மணிக்கு இந் நீதிமன்றத்தில் பிரசன்னமாகுமாறு உத்தரவு
பிறப்பிக்கப்படுகின்றது.
</p><p>
இதேவேளை, எதிர்வரும் சனிக்கிழமை வடக்கு மாகாண தலைமை பௌத்த சங்கத்தின்
ஏற்பாட்டில் வெடுக்குநாறிமலையில் விசேட பௌத்த வழிபாடுகள் இடம்பெறவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-09-10T07:19:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சத்துருக்கொண்டான் - வந்தாறுமூலை படுகொலை சம்பவங்களில் காயங்களுடன் தப்பிய முக்கிய சாட்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sathurukonda-vandarumola-massacre-eyewitnesses-1789024089"></link>
            <id>https://ibctamil.com/article/sathurukonda-vandarumola-massacre-eyewitnesses-1789024089</id>
            <summary type="text">மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மற்றும் வந்தாறுமூலை பகுதிகளில் இடம்பெற்ற படுகொலைகளைகளுக்கான சாட்சியங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மற்றும் வந்தாறுமூலை பகுதிகளில் இடம்பெற்ற படுகொலைகளைகளுக்கான சாட்சியங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
</p><p>
நாடாளுன்றில் இது குறித்து நேற்று(09.09.2026) கருத்து வெளியிட்ட அவர், இந்த கொலைகளுக்கான சுயாதீன விசாரணை அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், ''36 ஆண்டுகளுக்கு முன்னர் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மற்றும் வந்தாறுமூலை பகுதிகளில் இந்த படுகொலைகள் இடம்பெற்றன.</p><p></p><h2>அயல்நாட்டில் வாழும் சாட்சி&nbsp;</h2><p>

இந்த விடயத்தில் சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நீதியானது நிலைநாட்டப்படவேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aca74fe1-7dc0-455b-81c9-15c2ee3cbede/26-6aa25a9cb1d2d.webp' /></p><p>
</p><p>
செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி என்பது மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொருத்தவரை மறக்க முடியாத ஒரு கறை படிந்த நாளாகும். </p><p>

90 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் இருந்த இராணுவ முகாமிற்கு கொக்குவில், பிள்ளையாரடி உள்ளிட்ட அப்பகுதியில் நான்கு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குடும்பம் குடும்பமாக அழைக்கப்பட்டுள்ளனர். </p><p>

அதில் ஒரு வயதிற்குட்பட்ட ஐந்து குழந்தைகளும் உள்ளடங்குவர். பத்து வயதுக்கு உட்பட்டவர்கள் 40 பேர் பெண்கள் 85 பேர் வயது முதிர்ந்தவர்கள் என மொத்தமாக 186 பேர் போய்ஸ் டவுன் என்று சொல்லப்படுகின்ற அந்த முகாமில் வைத்து அன்றைய தினம் அத்தனை பேரும் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
</p><p>
அவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்களில் ஒரே ஒருவர் மாத்திரம் கடுமையான காயங்களுடன் தப்பியுள்ளார். அவர்தான் கிருஷ்ணகுமார். அவர் இப்போதும் அயல்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.</p><p></p><h2>பற்றை மறைவிலிருந்து பார்த்தவர்&nbsp;</h2><p> </p><p>

அதேபோன்று இன்னும் ஒருவர் அந்த சம்பவத்தை பற்றை மறைவிலிருந்து பார்த்தவர் என்று அறியப்படுகிறது. அவர் வைரமுத்து குழந்தை வடிவேல் என்பவர். அவரோடு மேலும் சிலரும் பற்றைகளுக்குள் மறைந்திருந்து இந்த சம்பவத்தை பார்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98e49f11-7284-4535-9241-715464a31409/26-6aa25a9d6c5e8.webp' /></p><p>
</p><p>
சம்பவத்தில் அந்த முகாமில் இருந்த படையினரும் ஊர்காவல் படையினரும் இணைந்து மேற்படி 185 பேரையும் படுகொலை செய்துள்ளார்கள். 

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிக்கு வந்தபோது ஓய்வு பெற்ற நீதியரசர் பாலகிட்ணர் தலைமையில் ஜனாதிபதி ஆணைக் குழுவொன்றை நியமித்திருந்தார்.</p><p> 

அந்த ஆணைக்குழு மூலம் சில உண்மைகள் வெளிக்கொணரப்பட்டிருந்தன. கொல்லப்பட்டவர்களின் புள்ளி விபரம் கூட அதன் போது அறிவிக்கப்பட்டிருந்தது.</p><p>அந்த இராணுவ முகாமிற்கு காமினி வர்ணகுல சூரிய என்பவரே பொறுப்பாக இருந்துள்ளார்.

36 ஆண்டுகள் கடந்தும் இந்த படுகொலைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. </p><p>சம்பந்தப்பட்ட மக்கள் நீதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள். 

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஒரு ஆணைக்குழுவை அமைத்திருந்தாலும் அந்த விசாரணை முடிவடைவதற்கு முன்பாக செம்மணியில் மேலும் 600க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அங்கு தற்போது 584 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T07:18:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நேற்றிரவு கொடூர கொலை சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/brutal-murder-in-jaffna-1789017645"></link>
            <id>https://jvpnews.com/article/brutal-murder-in-jaffna-1789017645</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணம் பருத்தித்துறை – துன்னாலையில் நேற்றிரவு கொடூர கொலை சம்பவம் ஊரவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.&amp;nbsp; சம்பவத்தில்&amp;n...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணம் பருத்தித்துறை – துன்னாலையில் நேற்றிரவு கொடூர கொலை சம்பவம் ஊரவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.&nbsp; சம்பவத்தில்&nbsp; மூன்று பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொ ல்லப்பட்டுள்ளார்.
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்

ஒரு ஊரைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே தொடர்ச்சியான பகை இருந்து வந்துள்ளதன் பின்னனியில் இக்கொலை இடம்பெற்றதாக&nbsp; கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4342da14-a953-43b9-9170-2d5560af249d/26-6aa23e2f39995.webp' /></p><h2>பின்தொடர்ந்த நால்வர் கொண்ட குழுவினர்</h2><p>

இந்நிலையில் கொல்லப்பட்ட நபரை நேற்றிரவு பின்தொடர்ந்த நால்வர் கொண்ட குழுவினர் ஓராங்கட்டை பகுதியில் வைத்து அவர்மீது கொடூர தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டனர்.</p><p></p><p> </p><p>இதன்போது குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலையை மேற்கொண்ட நால்வரும் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.</p><p> இது குறித்து பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலமானது தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்&nbsp; மேலதிக விசாரணைகாளை பொலிஸார்&nbsp; மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T07:12:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளம் நடிகை அனஸ்வரா ராஜனின் அழகிய புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-anaswara-rajan-latest-photos-1789008558"></link>
            <id>https://cineulagam.com/article/actress-anaswara-rajan-latest-photos-1789008558</id>
            <summary type="text">நடிகை அனஸ்வரா ராஜன் மலையாளத்தில் அறிமுகமாகி, இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்துள்ளார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு தமிழில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை அனஸ்வரா ராஜன் மலையாளத்தில் அறிமுகமாகி, இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்துள்ளார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு தமிழில் வெளிவந்த வித் லவ் திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். </p><p>இந்த நிலையில், இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வரும் அனஸ்வரா ராஜனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதோ நீங்களே பாருங்க:&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T07:10:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அரச ஜோதிடர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-government-astrologer-ciaboc-investigation-1789023747"></link>
            <id>https://tamilwin.com/article/former-government-astrologer-ciaboc-investigation-1789023747</id>
            <summary type="text">முன்னாள் அரச ஜோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன இன்று (10) இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். 

சிரிலிய சவிய தொடர்பாக இலஞ்சம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அரச ஜோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன இன்று (10) இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p> 

சிரிலிய சவிய தொடர்பாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்து வரும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.</p><p>மேலும், தொடர்புடைய விசாரணை சம்பந்தமான சுமனதாஸ அபேகுணவர்தனவிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T07:09:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[துமிந்த திஸாநாயக்க எதிரான வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bail-for-thumintha-dissanayake-1789023035"></link>
            <id>https://tamilwin.com/article/bail-for-thumintha-dissanayake-1789023035</id>
            <summary type="text">
தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் மற்றொரு பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் மற்றொரு பெண் ஆகியோரை பிணையில் செல்ல அனுமதித்து, கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p> 

இந்த சம்பவத்தில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் மற்றொரு பெண்ணுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகள் இன்று(10.09.2026) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.</p><p> 

இது தொடர்பான வழக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்கவின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
</p><h2>

குற்றப்பத்திரிகைகள் தாக்கல்</h2><p>
 தற்போது, பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் அய்குல் ஷெர்கசினா என்ற கசாக் நாட்டவர், நீதிமன்றத்தால் முன்னதாக விடுக்கப்பட்ட அறிவிப்பின்படி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe9dfe0b-25fd-4870-81b6-86fac99b4e4c/26-6aa256a76d936.webp' /></p><p> </p><p>

அப்போதைய தினம், பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் பகிரங்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. </p><p>

அதன்பின்னர், குற்றம் சாட்டப்பட்ட துமிந்த திசாநாயக்கவுக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், தனது கட்சிக்காரருக்கு கொழும்பு உயர் நீதிமன்றத்தால் முன்னரே பிணை வழங்கப்பட்டிருந்தது என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p> 

இருப்பினும், குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், உயர் நீதிமன்ற நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 50,000 ரொக்கப் பிணை மற்றும் தலா ரூ. 2 மில்லியன் மதிப்புள்ள இரண்டு ஜாமீன் பத்திரங்கள் மூலம் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.</p><h2> 


தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி மீட்பு</h2><p>
குற்றம் சாட்டப்பட்டவர்களின் கைரேகைகளைப் பெறுவதற்கும், அறிக்கை கோருவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி மற்றொரு உத்தரவையும் பிறப்பித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/385ddbb0-1f2f-4365-be0e-37e974a3a2a6/26-6aa256a81f136.webp' /></p><p>

பின்னர், அக்டோபர் 2 ஆம் திகதி விசாரணைக்கு முந்தைய கலந்தாய்விற்காக இந்த வழக்கை அழைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.</p><p> 

2025 ஆம் ஆண்டு மே 20ஆம் திகதி வெல்லவத்தையில் உள்ள ஹேவ்லாக் சிட்டி வீட்டுவசதி வளாகத்தில் உரிமம் இல்லாமல் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியை வைத்திருப்பதற்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டி, இந்த பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T07:05:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் மாநகர மேயர் ஜனக நிஷாந்த கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-city-mayor-janaka-nishantha-arrested-1789023977"></link>
            <id>https://jvpnews.com/article/former-city-mayor-janaka-nishantha-arrested-1789023977</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; பண்டாரவளை மாநகரசபையின் முன்னாள் மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க, பண்டாரவளை விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; பண்டாரவளை மாநகரசபையின் முன்னாள் மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க, பண்டாரவளை விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

மாநகரசபையில் இடம்பெற்ற நிதி மோசடி மற்றும் போலியான ஆவணங்களைத் தயாரித்தமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இணங்கவே ஜனக நிஷாந்த கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9275df8-09fd-4bc1-b024-ff7a63646249/26-6aa256eaefe10.webp' /></p><p> 

இது தொடர்பாகச் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த சபையின் இரண்டு வருமான பரிசோதகர்கள் உள்ளிட்ட சிலரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

முன்னாள் மேயர் நேற்று (09) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தற்போது பண்டாரவளை விசேட குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் அவரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

சந்தேகநபர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T07:03:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாற்காலியில் கட்டிவைக்கப்பட்டு காவலாளி படுகொலை ; அதிகாலையில் பரபரப்பை கிளப்பிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-tied-to-chair-and-murdered-1789022872"></link>
            <id>https://jvpnews.com/article/man-tied-to-chair-and-murdered-1789022872</id>
            <summary type="text">இரத்தினபுரி, கெடலியன்பள்ள பகுதியில் வீடொன்றிற்குள் நாற்காலியில் கட்டிவைக்கப்பட்டு, அலவாங்கினால் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நபர் ஒருவரின் சட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரி, கெடலியன்பள்ள பகுதியில் வீடொன்றிற்குள் நாற்காலியில் கட்டிவைக்கப்பட்டு, அலவாங்கினால் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நபர் ஒருவரின் சடலத்தை இரத்தினபுரி பொலிஸார் மீட்டுள்ளனர்.
</p><p>

இச் சம்பவம் நேற்று புதன்கிழமை (09) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/752f8faf-b0d9-435d-9c8e-bbfe7c8a6f3f/26-6aa254d7aab97.webp' /></p><h2>தீவிரமாகும் விசாரணை</h2><p>

இரத்தினபுரி, கஹங்கம, கெடலியன்பள்ள பகுதியைச் சேர்ந்த&nbsp; 61 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த நபர் கொலை இடம்பெற்ற வீட்டைப் பராமரித்து வந்த காவலாளி என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>குறித்த காவலாளி நாற்காலியொன்றில் கட்டிவைக்கப்பட்டு, அலவாங்கினால் தலையில் பலமாகத் தாக்கப்பட்டதுடன், கழுத்து நெரிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>

கொலை இடம்பெற்ற வீட்டின் உரிமையாளரின் சகோதரரான 47 வயதுடைய நபர் ஒருவர் இக் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

</p><p>தனிப்பட்ட தகராறு காரணமாகவே இக் கொலை இடம்பெற்றுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகின்றது.

இரத்தினபுரி பதில் நீதவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார்.
</p><p>மேலும், இந்த சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T07:02:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[காஸா போரின் பின்னணி... ஹாரெட்ஸ் நாளேடு மீது வழக்குத் தொடர உள்ள நெதன்யாகு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/netanyahu-to-sue-haaretz-over-1789023632"></link>
            <id>https://news.lankasri.com/article/netanyahu-to-sue-haaretz-over-1789023632</id>
            <summary type="text">Netanyahu to sue Haaretz over claims UAE warned him: ஐக்கிய அரபு அமீரகம் தன்னை எச்சரித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நெதன்யாகு ஹாரெட்ஸ் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Netanyahu to sue Haaretz over claims UAE warned him: ஐக்கிய அரபு அமீரகம் தன்னை எச்சரித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நெதன்யாகு ஹாரெட்ஸ் மீது வழக்குத் தொடர உள்ளார்.
</p><p>இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் நடத்திய தாக்குதல் தொடர்பில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக ஹாரெட்ஸ் நாளேடு வெளியிட்டுள்ள தரவுகள் தொடர்பாக, அந்த நாளேடு மீது வழக்கு தொடரப்போவதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.</p><h2>10 நாட்களுக்கு முன்பே</h2><p> </p><p>
இந்த விவகாரம் தொடர்பில் அறிக்கை ஒன்றை பதிவு செய்துள்ள நெதன்யாகு, குறித்த செய்திகள் அனைத்தும் புனையப்பட்டது
 மற்றும் பொய்யானது என்றும், ஹாரெட்ஸ் மற்றும் அதன் ஆசிரியர்களான ஷ்லோமி எல்டார், ரூத் யாவல் மீதும் வழக்குத் தொடருமாறு தனது சட்டத்தரணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d370d39-3101-467a-82df-7fefd677b438/26-6aa255921c7d0.webp' /></p><p> </p><p>வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், அக்டோபர் 7, 2023 அன்று நிகழ்ந்த சம்பவங்களுக்கு 10 நாட்களுக்கு முன்பே, ஹமாஸ் அமைப்பின் சாத்தியமான தாக்குதல் குறித்து ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி முகமது பின் சயீத், நெதன்யாகுவை எச்சரித்திருந்தார். </p><p>அன்று இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் ஹமாஸ் படைகள் குறைந்தது 1,195 பேரைக் கொன்றதுடன், சுமார் 251 பேரைச் சிறைபிடித்துச் சென்றது. கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கையும் பின்னர் இஸ்ரேல் அரசாங்கத்தால் திருத்தப்பட்டது.</p><p></p><p> </p><p>அந்தத் தாக்குதல்கள் காஸா மீது இஸ்ரேல் இனப்படுகொலைக்கான போரைத் தூண்டின; இதில் குறைந்தது 73,669 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.</p><p> நெதன்யாகு மற்றும் அவரது மனைவிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளில் விசாரணை இறுதிகட்டத்தை நெருங்கியிருந்த நிலையிலும், நெதன்யாகுவின் பதவி பறிக்கப்பட்டு அவர் சிறை செல்வார் என்ற கட்டத்திலேயே இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. </p><p>ஹாரெட்ஸ் வெளியிட்டிருந்த தகவலில், அமீரக ஜனாதிபதி நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்புகொண்டு, அப்போதைய ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரிடமிருந்து வந்த அச்சுறுத்தல் குறித்து அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. </p><p>ஹாரெட்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், கைதிகள் பரிமாற்றப் பேச்சுவார்த்தைகள் முடங்கியதாலும், காஸா மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான முற்றுகையாலும் கோபமடைந்த சின்வார், ஒரு இடைத்தரகர் மூலம் அந்த எச்சரிக்கைகளை ஐக்கிய அரபு அமீரகத்திற்குத் தெரிவித்திருந்தார்.</p><h2>நேதன்யாகு&nbsp;பின்தங்கியுள்ளார்</h2><p> </p><p>மேலும், ஒரு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஆயத்தம் செய்து வருவதாகவும், ஒரு நிலநடுக்கத்தை எதிர்பார்க்குமாறு இஸ்ரேலிடம் தெரிவிக்குமாறு தமக்குத் தொடர்பில் உள்ளவர்களிடம்&nbsp;சின்வார் கூறியதாகவும் ஹாரெட்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. </p><p>சின்வாரின் அந்த எச்சரிக்கை மிகப் பெரிய தாக்குதல் ஒன்றின் அறிகுறியாகவே அமீரக ஜனாதிபதியும் அவரது அதிகாரிகள் தரப்பும் புரிந்துகொண்டுள்ளனர்.</p><p> இதனையடுத்து அந்த உளவுத் தகவலை இஸ்ரேலின் 'ஷின் பெட்' (Shin Bet) அமைப்பிடம் அமீரகம் அளித்தது. ஆனால், ஷின் பெட் அமைப்பு அந்த அச்சுறுத்தலை நிராகரித்தது. இதன் பின்னரே, நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்புகொண்டு அமீரகம் எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2deaa686-1560-487e-a2a2-628eb0cd4096/26-6aa25592c44be.webp' /></p><p> </p><p>ஆனால் நெதன்யாகும் அதை புறந்தள்ளியுள்ளார். அக்டோபரில் நடைபெறவுள்ள நெசெட் (Knesset) தேர்தலில் பிரதமர் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள நெதன்யாகு கடுமையாகப் போராடி வரும் வேளையில், ஹாரெட்ஸ் இதழின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. </p><p>முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசென்கோட்டிடமிருந்து கடுமையான சவாலை எதிர்கொண்டுள்ள நேதன்யாகு, கருத்துக்கணிப்புகளில் மிக மோசமாக பின்தங்கியுள்ளார். </p><p>இந்த நிலையில், ஹாரெட்ஸ் இதழின் அறிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், அது இடதுசாரிகளின் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதி என்றும் புதன்கிழமை அன்று நெதன்யாகு கூறினார். </p><p>மட்டுமின்றி, அமீரக ஜனாதிபதியுடன் இந்த விவகாரத்தில் தாம் தொலைபேசியில் உரையாடியதில்லை என்றும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T06:57:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இடைத்தேர்தலை முன்னிட்டு 5,000 டொலர் ; ட்ரம்பின் வாக்குறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-s-5-000-promise-ahead-of-the-by-election-1789023481"></link>
            <id>https://canadamirror.com/article/trump-s-5-000-promise-ahead-of-the-by-election-1789023481</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பரில் நடைபெறும் இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சியினர் காங்கிரஸின் கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக் கொண்டால் ஒவ்வொரு அமெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பரில் நடைபெறும் இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சியினர் காங்கிரஸின் கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக் கொண்டால் ஒவ்வொரு அமெரிக்க வயது வந்தவருக்கும் 5,000 டொலர் உதவித் தொகை வழங்குவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (09) கூறியுள்ளார். </p><p>

இது, வாக்காளர்களைத் தனது கட்சிக்கு ஆதரவளிக்கச் சம்மதிக்க வைப்பதற்கான ஒரு அசாதாரண முயற்சியாகும்.

 தனது குடியரசுக் கட்சியின் முதலாவது இடைக்கால மாநாட்டில் ட்ரம்ப் இக்கோரிக்கையை முன்வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4aca8c9c-44f0-4372-ab8c-82d36dfed7e2/26-6aa254fb313f9.webp' /></p><p>
</p><p>
ஆனால், இந்தத் தொகையை வழங்குவது எவ்வாறு செயல்படுத்தப்படும் என்றோ அல்லது அது சட்டப்பூர்வமானதாக இருக்குமா என்றோ உடனடியாகத் தெரியவரவில்லை.</p><p> 

அமெரிக்காவில் சுமார் 270 மில்லியன் வயது வந்தோர் உள்ள நிலையில், இத்திட்டத்தைச் செயல்படுத்த ஏறக்குறைய 1.35 டிரில்லியன் டொலர் செலவாகும்.

 ஈரான் போர் விடயத்தில் மக்கள் மத்தியில் ட்ரம்பின் செல்வாக்கு சரிந்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T06:54:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[Gold Price Today : தங்கம் விலை கிடுகிடு உயர்வு - இன்றைய விலை நிலவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sept-10th-2026-gold-and-silver-price-in-chennai-1789021974"></link>
            <id>https://manithan.com/article/sept-10th-2026-gold-and-silver-price-in-chennai-1789021974</id>
            <summary type="text">தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய (செப்டெம்பர் 10) விலை நிலவரம் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய (செப்டெம்பர் 10) விலை நிலவரம் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
</p><p>
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில், அண்மைக்காலமாக அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது சாமானிய மக்கள் மத்தியில் பெரும் கவலையையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd4d768c-bff0-46aa-82c7-3d135f256d50/26-6aa252e216c7f.webp' /></p><p> </p><p>குறிப்பாக திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளுக்காக தங்கம் வாங்கத் திட்டமிடுபவர்கள், விலை உயர்வால் கூடுதல் செலவை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>
அந்த வகையில், நேற்றைய நிலவரப்படி 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.125 குறைந்து ரூ.14,145 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1,13,160 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0b28eeb-4027-4ddd-a429-e606a5c8257f/26-6aa252e2c0433.webp' /></p><p></p><h2>இன்றைய நிலவரம்&nbsp;</h2><p>
</p><p>
இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.110 அதிகரித்து ரூ.14,255 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,14,040 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p></p><p>இதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையிலும் இன்று உயர்வு பதிவாகியுள்ளது. 18 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.110 அதிகரித்து ரூ.12,025 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.96,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/787b9689-9f86-433e-bf2b-61a8861cd93e/26-6aa252e3731b6.webp' /></p><p>

மறுபுறம், வெள்ளியின் விலையில் இன்று எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u>FOLLOW NOW</u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T06:49:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ugc-completes-second-round-university-selections-1789021656"></link>
            <id>https://ibctamil.com/article/ugc-completes-second-round-university-selections-1789021656</id>
            <summary type="text">கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று வெளியாகி உள்ளது2025ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று வெளியாகி உள்ளது</p><p>2025ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான வெற்றிடங்களை நிரப்பும் இரண்டாம் கட்ட மாணவர் தெரிவு தற்போது நிறைவடைந்துள்ளது.
</p><p>குறித்த விடயம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>திகதிக்குள் நிறைவு செய்ய வேண்டும்</h2><p>
தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தங்களுக்கான பதிவுகளை 2026 செப்டெம்பர் 17ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17601cf9-c1a4-45a8-b2d1-0c848090007b/26-6aa2509e9490e.webp' /></p><p>மேலதிக தகவல்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.ugc.ac.lk-ஐ பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T06:39:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவை துரத்தும் கர்மவினை! கைது செய்வதில் ஏன் தாமதம் - செல்வம் அடைக்கலநாதன் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/delay-in-arresting-gotabaya-selvam-adaikalanathan-1789020673"></link>
            <id>https://tamilwin.com/article/delay-in-arresting-gotabaya-selvam-adaikalanathan-1789020673</id>
            <summary type="text">&quot;முள்ளிவாய்க்காலில் தமிழ் இனத்தை அழித்தவர்களை, செம்மணி மனிதப் புதைகுழிகளை
உருவாக்கியவர்களை, தாய், தந்தையரை நிர்க்கதியாக்கியவர்களை கர்மவினை தற்போது
த...</summary>
            <content type="html"><![CDATA[<p>"முள்ளிவாய்க்காலில் தமிழ் இனத்தை அழித்தவர்களை, செம்மணி மனிதப் புதைகுழிகளை
உருவாக்கியவர்களை, தாய், தந்தையரை நிர்க்கதியாக்கியவர்களை கர்மவினை தற்போது
துரத்த தொடங்கியுள்ளது என்றும், கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதில் ஏன் தாமதம் நிலவுகின்றது? என்றும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்&nbsp;கேள்வி எழுப்பியுள்ளார். </p><p>நாடாளுமன்றத்தில் நேற்றுப் நடைபெற்ற பாதுகாப்புப்பணியாள்
தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் மீதான விவாதத்தில்
உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,</p><h2>இனத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள்</h2><p>"ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் காணாமல்போனோர்,
எமது இனத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் மற்றும் செம்மணி மனிதப்
புதைகுழி போன்ற விடயங்களில் விசாரணை நடத்தப்பட்டு நியாயம் கிடைக்க வேண்டும்
எனத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e286e09b-fa85-4aff-8b3d-a6bc523fd028/26-6aa24f95db586.webp' /></p><p>ஐ.நா. சபை வெறும் அறிக்கைகளை மட்டும் விடாமல், அதனை
நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எமது மக்கள் உள்ளக
விசாரணையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.</p><p>நீதியான சர்வதேச விசாரணையையே
கோருகின்றோம்.

தமிழ் அரசியல் கைதிகள் சுமார் 25 ஆண்டுகளாகச் சிறைகளில் வாடுகின்றனர்.</p><p>
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஊடாகப் போராளிகளின் படங்களை வைத்திருந்ததாகக்
கூறி கைது செய்யப்பட்ட இளைஞர்களும் இன்றும் சிறையில் தான் உள்ளனர்.</p><h2>கோட்டாபயவை கைது செய்வதில் ஏன் தாமதம்</h2><p> எங்களுடைய
தாய், தந்தை உறவுகளின் மனநிலை எப்படி இருக்கும் என்பது இன்று ராஜபக்ச குடும்பத்தினருக்கு இப்போது உணர்த்தப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை ராஜபக்சர்கள் இல்லாது ஒழித்துள்ளனர் என்று
உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f0cb32c-4f43-484e-8491-83a52a9bbd36/26-6aa24f95343f5.webp' />&nbsp; &nbsp;</p><p> மனித உரிமை மீறல்கள் மற்றும் பல்வேறு
குற்றச்சாட்டுகளுக்குள்ளான சந்தேகநபரான கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதில்
ஏன் இந்த தாமதம் நிலவுகின்றது என்று தெரியவில்லை? </p><p>ஊழல் மற்றும் மனித உரிமை
மீறல்களில் ஈடுபட்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

கர்மா என்பதனை நான் நம்புவதில்லை. ஆனால், கர்மா என்பது இருக்கின்றது என்பதனை
தற்போது உணர முடிகின்றது.</p><h2>சர்வதேச விசாரணை&nbsp;</h2><p> எமது இனத்தை அழித்தொழிக்க நினைத்தவர்கள்,
செம்மணியில் மக்களைப் புதைத்தபோது அவர்கள் பட்ட வேதனைகள் மற்றும்
முள்ளிவாய்க்காலில் தாய், தந்தையின் கண் முன்னே பிள்ளைகள் வீழ்ந்தபோது
எழுப்பட்ட அழுகுரல்கள் இன்று கர்மா என்ற ரீதியில் செயற்பட தொடங்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a395703-b80b-42ed-95e6-8191393214b6/26-6aa24f9690c5b.webp' /></p><p>ஐக்கிய நாடுகள் சபை தனது கருத்துக்களை அழுத்தமாகக் கூறினாலும், அதனை
நடைமுறைப்படுத்துவதற்கான இறுக்கமான வாய்ப்புகளை அது கையாள்வதில்லை.</p><p> இதனால்
ஐ.நா. சபை மீது எமது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை படிப்படியாக சிதைவடைந்து
செல்கின்றது.</p><p>
இலங்கை அரசு உள்ளக விசாரணையை நிறுத்திவிட்டு, சர்வதேச விசாரணையை மேற்கொள்ளும்
அடிப்படையை உருவாக்க வேண்டும். </p><p>இந்த அரசு இத்தகைய சரியான செயற்பாடுகளில்
ஈடுபடும்போது எமது முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T06:38:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிஸ் மின் நிலையத்தில் வெடிவிபத்து: இருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-dies-in-swiss-power-plant-explosion-1789022199"></link>
            <id>https://news.lankasri.com/article/2-dies-in-swiss-power-plant-explosion-1789022199</id>
            <summary type="text">Two workers killed in an explosion at a hydroelectric power plant in Switzerland: சுவிஸ் நீர் மின் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பணியாளர்கள் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Two workers killed in an explosion at a hydroelectric power plant in Switzerland: சுவிஸ் நீர் மின் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பணியாளர்கள் இருவர்கள் பலியாகியுள்ளார்கள்.
</p><p>

சுவிட்சர்லாந்தின் Ticino மாகாணத்திலுள்ள Piotta என்னும் கிராமத்தில், நீர் மின் நிலையம் ஒன்று அமைந்துள்ளது.
</p><h3>
மின் நிலையத்தில் வெடிவிபத்து</h3><p>

நேற்று காலை 9.30 மணியளவில் திடீரென அந்த மின் நிலையத்தில் தீப்பற்றியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03841e7c-5beb-4217-b3a4-0863c3fab7fd/26-6aa24ff8db24a.webp' /></p><p>
இரண்டு பணியாளர்கள் கட்டிடத்துக்குள் சிக்கிக்கொண்ட நிலையில், தீ வேகமாகப் பரவ, சிறிது நேரத்தில் ஏதோ வெடித்துச் சிதற, முழு கட்டிடமும் குலுங்கியுள்ளது.</p><p>

கட்டிடம் பலத்த சேதமடைய, கட்டிடத்துக்குள் சிக்கியிருந்த இருவரும் படுகாயமடைந்து சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>

உயிரிழந்தவர்களில் ஒருவர் 55 வயதுடைய சுவிஸ் குடிமகன். மற்றவரை அடையாளம் காணும் பணி தொடர்கிறது.
</p><p>
இந்நிலையில், எதனால் இந்த விபத்து ஏற்பட்டது என்பது தொடர்பில் அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T06:37:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூடு விவகாரம்: விசாரணையில் சிக்கிய சந்தேக நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/broad-daylight-shooting-in-kotahena-1789021055"></link>
            <id>https://ibctamil.com/article/broad-daylight-shooting-in-kotahena-1789021055</id>
            <summary type="text">கொழும்பு - கொட்டாஞ்சேனை சங்கராஜ மாவத்தையில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி&amp;nbsp; இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - கொட்டாஞ்சேனை சங்கராஜ மாவத்தையில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி&nbsp; இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கடையின் முன்பாக நின்றுகொண்டிருந்த நபர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்திருந்தனர்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (10.09.2026) இரவு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>ஐஸ் போதைப்பொருள்&nbsp;</h2><p>
</p><p>
கொலைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை ஓட்டியதுடன், கொலைக்கு உதவி மற்றும் ஒத்துழைப்பு வழங்கியதாக சந்தேகிக்கப்படும் குறித்த நபரிடமிருந்து 12 கிராம் 470 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fdb7ead-01e0-4c22-9c4f-783e5c8f2cc9/26-6aa24ec3c1116.webp' /></p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 23 வயதுடைய மட்டக்குளிய பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சந்தேகநபர் கொட்டாஞ்சேனை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை காவல்துறை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T06:34:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[72 வயதில் 20 வயது யுவதியை மணந்த கால்பந்து ஜாம்பவான்! வைரலாகும் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/72-year-old-football-legend-marries-20-year-old-1789019271"></link>
            <id>https://manithan.com/article/72-year-old-football-legend-marries-20-year-old-1789019271</id>
            <summary type="text">மலேசியாவின் முன்னாள் உதைபந்தாட்ட நட்சத்திர வீரரான 72 வயதுடைய டத்தோ அப்தா அலிப், 20 வயதுடைய யுவதியை கடந்த ஓகஸ்ட் 27ஆம் திகதி திருமணம் செய்துகொண்டுள்ளதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலேசியாவின் முன்னாள் உதைபந்தாட்ட நட்சத்திர வீரரான 72 வயதுடைய டத்தோ அப்தா அலிப், 20 வயதுடைய யுவதியை கடந்த ஓகஸ்ட் 27ஆம் திகதி திருமணம் செய்துகொண்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
திருமணம் இரு குடும்பத்தினரின் முழுமையான சம்மதம் மற்றும் ஆசீர்வாதத்துடன் நடைபெற்றதாக, முன்னாள் தேசிய அணி வீரரும் பயிற்றுவிப்பாளருமான அவரது சகோதரர் டத்தோ யூனுஸ் அலிப் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ee80716-c545-468d-8d15-6d5a383330ae/26-6aa246d5734ce.webp' /></p><p></p><h2>வைரலாகும் புகைப்படங்கள்&nbsp;</h2><p> </p><p>திருமணத்திற்குப் பின்னர் தம்பதியினர் மகிழ்ச்சியாக இல்லற வாழ்க்கையை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அப்தா அலிப் தனது இளம் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியதைத் தொடர்ந்து, இந்தத் திருமணம் மலேசிய உதைபந்தாட்ட இரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cae8ff71-ff42-46b3-8012-97ad5df590f7/26-6aa246d62978f.webp' /></p><p></p><p>

1970களின் பிற்பகுதியிலும் 1980களின் முற்பகுதியிலும் மலேசிய உதைபந்தாட்டத்தின் பொற்காலத்தில் முக்கிய வீரராகத் திகழ்ந்த அப்தா அலிப், 1980 மாஸ்கோ ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் தென் கொரியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய வரலாற்று வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.
</p><p>
எனினும், ஆப்கானிஸ்தான் மீதான சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து மலேசியா ஒலிம்பிக் போட்டிகளைப் புறக்கணித்ததால், அந்தப் போட்டியில் அவரால் பங்கேற்க முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T06:33:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[துறைமுகங்களில் சிக்கியுள்ள சுமார் 1000 வாகனங்கள் - பறந்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/1000-vehicles-being-released-in-2026-from-port-1789015658"></link>
            <id>https://ibctamil.com/article/1000-vehicles-being-released-in-2026-from-port-1789015658</id>
            <summary type="text">துறைமுகங்களில் சிக்கியுள்ள சுமார் 1,000 வாகனங்களை விரைவாக விடுவிக்குமாறு சம்பந்தப்பட்ட இறக்குமதியாளர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இலங்கைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>துறைமுகங்களில் சிக்கியுள்ள சுமார் 1,000 வாகனங்களை விரைவாக விடுவிக்குமாறு சம்பந்தப்பட்ட இறக்குமதியாளர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பான எல்லை தாண்டிய கடன் கடிதங்கள் (Cross-border Letters of Credit - LCs) தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக,&nbsp;இந்தநிலை ஏற்ப்பட்டுள்ளது.</p><h2>விரைவாக விடுவிக்க நடவடிக்கை</h2><p>
இந்தப் பிரச்சினை காரணமாக நீண்ட காலமாக வாகனங்களை விடுவிக்க முடியாமல், தாம் பல்வேறு சிரமங்களையும் நிதி இழப்புகளையும் எதிர்கொண்டு வருவதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32ec3a7d-bf1a-41e4-92ef-a6fe3dfa43e2/26-6aa238804c460.webp' /></p><p>இந்த நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு, தற்போது காணப்படும் சட்டரீதியான மற்றும் தொழில்நுட்ப தடைகளை நிவர்த்தி செய்து, துறைமுகங்களில் சிக்கியுள்ள வாகனங்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.
</p><p>
இந்த விடயத்தில் அதிகாரிகளின் துரிதமான தலையீட்டை எதிர்பார்த்துள்ளதாகவும் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T06:30:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ. 1000 கோடி மொத்த வசூல், சாதனை படைப்பாரா சூர்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/will-suriya-hit-1000-crore-in-box-office-this-year-1789007129"></link>
            <id>https://cineulagam.com/article/will-suriya-hit-1000-crore-in-box-office-this-year-1789007129</id>
            <summary type="text">சூர்யா

நடிகர் சூர்யா இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகிவிட்டார். பல வருடங்களாக ஹிட் கொடுக்காமல் இருந்த சூர்யா, ஆனால், இந்த வருடம் சும்மா அடி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சூர்யா
</h2><p>
நடிகர் சூர்யா இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகிவிட்டார். பல வருடங்களாக ஹிட் கொடுக்காமல் இருந்த சூர்யா, ஆனால், இந்த வருடம் சும்மா அடித்து நொறுக்கி வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e2b1385-422f-459e-b635-6a4af8258f36/26-6aa2151db240d.webp' /></p><p> 

ஏற்கனவே கருப்பு புயல் வந்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிற்கும் வசூல் விருந்து வைத்தது. அதை தொடர்ந்து வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் க்ளாஸாக இருந்தாலும் வசூலில் எந்த குறையும் இல்லை ரூ. 220 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b616d74-1da4-40da-ac90-b43867540030/26-6aa2151d0b48c.webp' /></p><p>கருப்பு + விஸ்வநாத் அண்ட் சன்ஸ் சேர்த்து ரூ. 560 கோடிகள் வசூலை தாண்ட, சூர்யா நடிப்பில் சீன் படம் இந்த தீபாவளிக்கு வரவுள்ளது, இந்த படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளிவந்து மிகப்பெரிய ரீச் ஆகியுள்ளது.</p><h2>ரூ. 1000 கோடி
</h2><p>
இந்நிலையில் சீன் படம் ஆவேசம் என்ற மெகா ஹிட் கொடுத்த ஜீது மாதவன் படம் என்பதால் கேரளாவிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. இப்படம் ரூ. 460 கோடி வசூல் செய்தால் ஒரே ஆண்டில் ரூ 1000 கோடி வசூல் செய்த ஹீரோ என்ற பெருமையை சூர்யா பெறுவார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a927929-7609-4b15-807d-72da40b3836b/26-6aa2151c57c07.webp' /></p><p>இதுவரை எந்த ஒரு தமிழ் ஹீரோவும் ஒரே வருடத்தில் ரூ. 1000 கோடி வசூலை எட்டியது இல்லை, ரஜினிகாந்த் 2.0+ காலா சேர்ந்து ரூ. 860 கோடி, விஜய் லியோ+வாரிசு சேர்த்து ரூ. 900 கோடி வசூலை கொடுத்தனர், இந்த ரூ. 1000 கோடி சாதனையை சூர்யா இந்த 3 படங்கள் மூலம் கொடுப்பாரா? பார்ப்போம்.</p>]]></content>
            <updated>2026-09-10T06:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலரையும் சிந்திக்கவைத்த யாழ்ப்பாண இளம் தலைமுறையினரின் பேச்சு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-thought-provoking-speech-young-generation-jaffna-1789020686"></link>
            <id>https://jvpnews.com/article/a-thought-provoking-speech-young-generation-jaffna-1789020686</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மாறிவரும் சமூகத்தின் முகம் எனும் கருப்பொருளில் யாழ்ப்பாண இளம் தலைமுறையினரின் பேச்சு பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.

நல்லூர் ஆதீனத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மாறிவரும் சமூகத்தின் முகம் எனும் கருப்பொருளில் யாழ்ப்பாண இளம் தலைமுறையினரின் பேச்சு பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.

நல்லூர் ஆதீனத்தில் இடம்பெற்ற இந்த பேச்சு தற்பொதைய சமூகத்தையும் , புலம் பெயர் தமிழ் மக்களையும் சிந்தை கொள்ள செய்துள்ளது.
</p><p>
சமூகம் சார்ந்த பிரச்சனைகள் , மற்றும் தமிழ் அரசியல்வாதிகளின் போலி முகங்களை தோலுரித்து காட்டுவதாக அவர்களின் பேச்சுக்கள் அமைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bea979b-56fa-4a8b-b5e3-3c213e1d2250/26-6aa24a0fcff9b.webp' /></p><h2>சிந்திக்கவைத்த&nbsp;&nbsp;பேச்சு</h2><p>
</p><p>
சில புலம் பெயர் தமிழர்கள் தாயகம் வந்து செய்யும் அலப்பறைகள் தொடர்பிலும், தாயகத்தில் வாழும் எம் உறவுகள் புலம் பெயர் தமிழர்களை சார்ந்து வாழும் நிலை குறித்தும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.&nbsp; &nbsp; </p><p>&nbsp; <iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F2335888403614312%2F&show_text=false&width=380&t=0" width="380" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>போர் இடம்பெற்ற காலத்தில் புலம்பெயர் தேசங்களுக்கு தப்பியோடிய எம் இளம் தலைமுறையினர் பலர் , தாயகம் மீண்டெழுவதற்கு உதவி இருந்தமையினையும் சுட்டிகாட்டியுள்ளனர்.</p><p>அதேசமயம் தாயகத்தில் பொருளாதார , கல்வி வளர்ச்சிக்கு புலம் பெயர் தமிழர்களின் பெரும் பங்களிப்பு இருப்பதையும் அவர்கள் மறுக்கவில்லை.</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T06:29:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசாரணை வளையத்தில் முன்னாள் அரச ஜோதிடர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-royal-astrologer-under-investigation-1789021800"></link>
            <id>https://jvpnews.com/article/former-royal-astrologer-under-investigation-1789021800</id>
            <summary type="text">&amp;nbsp; முன்னாள் அரச சோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன இன்று (10) இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். 

சிரிலிய சவிய தொடர்பாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முன்னாள் அரச சோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன இன்று (10) இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p> 

சிரிலிய சவிய தொடர்பாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்து வரும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே முன்னாள் அரச சோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன அங்கு முன்னிலையாகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1dc01dd7-f8ea-4d37-87bf-3721a160cee3/26-6aa24e6a4ae11.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T06:26:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம்...! முன்னாள் அமைச்சருக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/duminda-dissanayake-indicted-over-gold-plated-gun-1789016288"></link>
            <id>https://ibctamil.com/article/duminda-dissanayake-indicted-over-gold-plated-gun-1789016288</id>
            <summary type="text">புதிய இணைப்புஉரிய அனுமதிப்பத்திரம் இன்றி தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததாகக் கூறப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>உரிய அனுமதிப்பத்திரம் இன்றி தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததாகக் கூறப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (10) பிணை வழங்கியுள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் மற்றொரு பெண் ஆகியோருக்கு எதிராக&nbsp;குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்த குற்றப்பத்திரிகையானது இன்று (10.09.2026) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி&nbsp;</h2><p>
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​இரு குற்றவாளிகளுக்கும் முறைப்படி குற்றப்பத்திரிகைகள் வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfd9c355-5b72-47c5-a1da-c6506c3e1b65/26-6aa23be55b403.webp' /></p><p>குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். </p><p>

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக வழக்கு நடவடிக்கைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T06:26:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் - வேட்பாளர்களை அறிவித்த தவெக]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tvk-announced-candidates-for-by-election-1789021253"></link>
            <id>https://news.lankasri.com/article/tvk-announced-candidates-for-by-election-1789021253</id>
            <summary type="text">tvk announced candidates for dharapuram and madurantakam by election: தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை தவெக அறிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>tvk announced candidates for dharapuram and madurantakam by election: தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை தவெக அறிவித்துள்ளது.
</p><h3>
இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்த தவெக </h3><p>

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் அக்டோபர் 6 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.</p><p>

இதில் போட்டியிடுபவர்களுக்கான வேட்பாளர் பட்டியலை தமிழக வெற்றிக்கழகம் அறிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a96479a6-548f-4245-bfc9-82cf40d622d1/26-6aa24c464ed05.webp' /></p><p>

மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில், மதுராந்தகத்தில் K.மரகதம் குமரவேல் போட்டியிடுவார்கள் எனவும், தாராபுரத்தில் சத்தியபாமா போட்டியிடுவார்கள் எனவும் அறிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p>

இருவரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். அவர்களுக்கே தவெக மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="zxx" dir="ltr"><a href="https://t.co/nEH9s9t231">pic.twitter.com/nEH9s9t231</a></p>&mdash; TVK Vijay (@TVKVijayHQ) <a href="https://x.com/TVKVijayHQ/status/2097920532931031366?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
திமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் ஐ.பரந்தாமன் மற்றும் தாராபுரம் தொகுதியில் சுகன்யா போட்டியிடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T06:25:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு : உயர்நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sc-gnanasara-thero-s-presidential-pardon-invalid-1789019099"></link>
            <id>https://ibctamil.com/article/sc-gnanasara-thero-s-presidential-pardon-invalid-1789019099</id>
            <summary type="text">பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு குறித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பொன்றை வழங்கியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு குறித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.
</p><p>
அதன்படி, ஞானசார தேரருக்கு, வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டத்திற்கு முரணானதாகும் என உயர்நீதிமன்றம் இன்று (10) தீர்ப்பளித்துள்ளது.</p><p>

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியான சந்தியா எக்னலிகொட உள்ளிட்ட தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையின் பின்னர் உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.</p><p></p><h2>ஜனாதிபதி பொதுமன்னிப்பு</h2><p> </p><p>



நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 2018 ஆம் ஆண்டு குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஞானசார தேரருக்கு ​மேன்முறையீட்டு நீதிமன்றம் 6 வருட சிறைத் தண்டனையை விதித்து தீர்ப்பளித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6e4488b-0d6c-4eb1-8212-ff6831edfb3c/26-6aa24d134f2ae.webp' /></p><p> </p><p>


இந்த நிலையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது.
</p><p>
இதனையடுத்து அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை ஆராய்ந்த உயர் நீதிமன்றம், அவ்வாறு அவருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு சட்டத்திற்கு முரணானது என்பதால் அதனை செல்லுபடியற்றதாக கருதுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-09-10T06:22:47+00:00</updated>
        </entry>
    </feed>
