<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-20T15:29:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கவின்-நயன்தாரா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள ஹாய் பட டிரைலர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/hi-movie-official-trailer-tamil-1787239585"></link>
            <id>https://cineulagam.com/article/hi-movie-official-trailer-tamil-1787239585</id>
            <summary type="text">ஹாய் படம்அறிமுக இயக்குனர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் மற்றும் நயன்தாரா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் ஹாய். இந்த படத்தின் முக்கிய...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஹாய் படம்</h2><p>அறிமுக இயக்குனர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் மற்றும் நயன்தாரா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் ஹாய். </p><p>இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் மறைந்த நடிகர் பாக்யராஜ், நடிகர்கள் பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ் போன்றோர் நடித்துள்ளார்கள்.
</p><p>ஆகஸ்ட் 14ம் தேதியே படம் வெளியாக இருந்த நிலையில் சில காரணங்களால் தள்ளிப்போய் இப்போது ஆகஸ்ட் 28ம் தேதி வெளியாக இருக்கிறது.</p><p>தற்போது இப்படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளியாகியுள்ளது, இதோ,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/WKq3S2vvVEM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-20T15:26:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீரிமலையில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட கழிவுகள்: அகற்ற காலக்கெடு - விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/illegally-dumped-waste-in-keerimalai-1787238971"></link>
            <id>https://tamilwin.com/article/illegally-dumped-waste-in-keerimalai-1787238971</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான
முறையில் கழிவுகளை கொட்டிய , வலி.தெற்கு பிரதேச சபை எதிர்வரும் 13ஆம்
திகதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான
முறையில் கழிவுகளை கொட்டிய , வலி.தெற்கு பிரதேச சபை எதிர்வரும் 13ஆம்
திகதிக்கு முன்னர் அவற்றை மீள அள்ள வேண்டும் என காலக்கெடு விதித்து வலி.
வடக்கு பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.</p><p>

வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம்(20.08.2026) தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
</p><h2>
கழிவுகளை அகற்ற நடவடிக்கை</h2><p>

இதன்போது, சபை ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் சுண்ணக்கல் அகழப்பட்ட
பாரிய பள்ளங்களுக்குள், வலி. தெற்கு பிரதேச சபையினர், சட்டவிரோதமான முறையில்
இலத்திரனியல் கழிவுகள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகளை
கொட்டியமை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc65aee8-98e6-4812-8738-9880dfa9101f/26-6a871acd4a1fa.webp' /></p><p>
</p><p>
இதனை தொடர்ந்து, கொட்டப்பட்ட கழிவுகளை வலி. தெற்கு பிரதேச சபையினர் எதிர்வரும்
13ஆம் திகதிக்கு முன்னர் மீள அள்ள வேண்டும் என்றும், அது
தொடர்பிலான அறிவித்தலை வலி. தெற்கு பிரதேச சபைக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என்றுமு் சபையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
</p><p>
அத்துடன் எதிர்வரும் 14ஆம் திகதி சிறப்பு கூட்டத்தினை நடத்துவது என்றும்,
13ஆம் திகதிக்கு முன்னர், வலி. தெற்கு பிரதேச சபையினர் கழிவுகளை மீள அள்ளாது
விடின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அன்றைய கூட்டத்தில்
தீர்மானிப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T15:18:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுவர்கள் மீதான தாக்குதல் : காணொளி வைரலானதை அடுத்து ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrested-after-video-of-child-assault-1787236159"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrested-after-video-of-child-assault-1787236159</id>
            <summary type="text">நான்கு வயது சிறுமியையும், ஏழு வயது சிறுவனையும் ஒருவர் தாக்கி, அந்தச் சம்பவத்தைப் பதிவுசெய்த அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி பெரும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நான்கு வயது சிறுமியையும், ஏழு வயது சிறுவனையும் ஒருவர் தாக்கி, அந்தச் சம்பவத்தைப் பதிவுசெய்த அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, காவல்துறை சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளது.
</p><p>
ஓகஸ்ட் 19 ஆம் திகதி இரவு நடந்ததாகக் கூறப்படும் இந்தத் தாக்குதல் தொடர்பாக, பின்னவல காவல்துறையினர் 26 வயது நபர் ஒருவரைக் கைது செய்தனர்.</p><h2>காணொளி பரவியதை அடுத்து கைது</h2><p>பலாங்கொடவில் உள்ள பின்னவல காவல் பிரிவைச் சேர்ந்த சந்தேக நபர், இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவியதை அடுத்து கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06c59b11-1efd-44a7-8b4b-73e68ec72705/26-6a871338847d8.webp' /></p><h2>சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி</h2><p>
</p><p>
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, இரண்டு சிறுவர்களும் மருத்துவப் பரிசோதனைக்காக பலாங்கொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8c62c07-c107-45c9-b036-9b554ccc29f9/26-6a87158410f28.webp' /></p><p>

தாக்குதலின் பின்னணி உட்பட, இந்தச் சம்பவத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர், மேலும் சந்தேக நபருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கையைத் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.&nbsp; </p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T15:16:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[Mood-ஆ பாடுங்க, பைட் பண்ணி பாடுங்கன்னு சொன்ன இயக்குநர்!! பிரபல பாடகி சுனிதா காட்டம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/studio-directors-misconduct-singer-sunitha-sarathy-1787234741"></link>
            <id>https://viduppu.com/article/studio-directors-misconduct-singer-sunitha-sarathy-1787234741</id>
            <summary type="text">சுனிதா சாரதிதமிழில் பல இசையமைப்பாளர்கள் இசையில் பாடி பிரபலமானவர் தான் பாடகி சுனிதா சாரதி. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், ரெக்கார்டிங் ஸ்டூடியோ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சுனிதா சாரதி</h2><p>தமிழில் பல இசையமைப்பாளர்கள் இசையில் பாடி பிரபலமானவர் தான் பாடகி சுனிதா சாரதி. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் பெண் பாடகர்கள் சந்திக்கும் சங்கடங்கள் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3c0301f-6092-4838-9512-57bc66af0213/26-6a8709b874c2b.webp' /></p><p>அதில், அதுவொரு மிகவும் செக்ஸியான பாடல், நான் பாட சென்றபோது அந்த ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் முழுக்க முழுக்க ஆண்கள் மட்டும் இருந்தார்கள். ஒரு பெண்கள்கூட இல்லை. அப்போது அப்படத்தின் இயக்குநர் என்னிடம், கொஞ்சம் மூட்-ஆ(MOOD) பாடுங்கன்னு சொன்னார். </p><p>இசையமைப்பாளர் அதை சொல்லவில்லை. இயக்குநர் தான் அப்படி பாடச்சொன்னார். உடனே நான் என் முகத்தை மிகவும் கோபமாக வைத்துக்கொண்டு, அவரது முகத்திற்கு நேராகவே, எனக்கெல்லாம் மூடா பாட வராது என முகத்தில் அடித்தது போல் சொல்லிவிட்டேன். </p><p>உடனே அவர் அதிர்ச்சியாகி, என்ன மேடம் இப்படி சொல்லிட்டீங்க என்று கேட்டார். அப்பாடல் எதுவென்று வெளிப்படையாக சொல்ல விரும்பாத சுனிதா சாரதி, சினிமாத்துறையில் பயன்படுத்தப்படும் சில சொற்கள் அருவருப்பானதாக இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25951b52-575d-46ac-b42e-805ca9843e0d/26-6a8709b7be7a1.webp' /></p><p> </p><p>ஸ்டூடியோவில் மூடா பாடுங்க, கொஞ்சம் பைட் பண்ணி பாடுங்க என்ற வார்த்தைகளை பயன்படுத்தும்போது, பாடகர்களுக்கு எந்த மூடும் வராது, மாறாக அருவருப்பாகவும், மிகுந்த சங்கடமாகவும் தான் இருக்கும்.</p><p> அவர்கள் அப்படி பேசும்போது டென்ஷனாகிவிடும் பாடல் பாடுவதைவிட, எப்போது இந்த இடத்தைவிட்டு வெளியே போவோம் என்ற எண்ணம் தான் வரும். பாடகர்களிடம் இதுபோன்ற மலிவான வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு பதில், Sensuality, Sexuality என்ற வார்த்தைகளை தெளிவாக, மரியாதையாக பயன்படுத்தலாம். மூடா பாடுங்க, என்று சொல்வதெல்லாம் ஒரு பாடலை பாடுவதற்கான சரியான இசை வழிகாட்டலே கிடையாது என்று கூறியிருக்கிறார் சுனிதா சாரதி.</p>]]></content>
            <updated>2026-08-20T15:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 ராஜயோகங்கள் உருவாகும் செப்டம்பர்: அதிர்ஷ்டசாலி ராசிகள் இவர்கள் தான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/september-2026-horoscope-3-zodiacsget-big-success-1787236776"></link>
            <id>https://manithan.com/article/september-2026-horoscope-3-zodiacsget-big-success-1787236776</id>
            <summary type="text">September 2026 Horoscope: ஜோதிட சாஸ்திரத்தின்படி, செப்டம்பர் மாதம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இந்த மாதத்தில் பல முக்கியமான கிரகப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>September 2026 Horoscope: ஜோதிட சாஸ்திரத்தின்படி, செப்டம்பர் மாதம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இந்த மாதத்தில் பல முக்கியமான கிரகப் பெயர்ச்சிகள் மற்றும் சேர்க்கைகள் நடைபெற உள்ளன.

சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாமில் நுழைந்து ‘மாளவ்ய ராஜயோகத்தை’ உருவாக்குகிறார். </p><p>மேலும், மாதத்தின் பிற்பகுதியில் சுக்கிரனும் புதனும் துலாமில் இணைந்து ‘லட்சுமி நாராயண யோகத்தை’ உருவாக்க உள்ளனர். அதேபோல், புதன் கன்னி ராசியில் நுழைந்து ‘பத்ர ராஜயோகத்தை’ உருவாக்குகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a46d2be5-3f1c-4dcc-9f6c-5c3cea0087a5/26-6a871714a4e75.webp' /></p><p>
இதற்கிடையில், கடகத்தில் செவ்வாயின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு சவால்களை ஏற்படுத்தக்கூடும். சூரியன் கன்னியில் புதனுடன் இணைவதால் ‘புதாதித்ய ராஜயோகமும்’ உருவாகிறது.
</p><p>
இந்த முக்கியமான கிரக மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமான பலன்கள் கிடைக்க உள்ளன. அந்த அதிர்ஷ்டசாலி ராசிகள் யார் யார் என இந்தப் பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d71c88af-438d-472a-b62d-00e3d04e8cfc/26-6a87171563652.webp' /></p><h2> </h2><p>
ரிஷப ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் மிகவும் சாதகமான காலகட்டமாக இருக்கும். ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரன் தனது சொந்த ராசியிலேயே வலுவாக இருப்பதால், இது அவர்களுக்கு எதிரிகளை வீழ்த்தும் வாய்ப்புகள் நிறைந்த மற்றும் வெற்றிகளை குவிக்கக்கூடிய மாதங்கள் நிறைந்த மாதமாக இருக்கும். </p><p>இந்தக் காலகட்டத்தில் அவர்களின் ஆரோக்கியமும் சீராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நேரத்தில் அவர்களின் புதிய முயற்சிகள் அனைத்தும் அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்கும்.</p><p> புதிய சொத்துக்கள் அல்லது வாகனங்கள் வாங்க இது சரியான காலமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான மாற்றங்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன.</p><h2>

துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/038ba564-5ce4-4b08-b82a-44ea79c7cfa4/26-6a87171616985.webp' /></p><h2>
</h2><p>துலாம் ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் 2026-ன் மிகவும் சாதகமான மாதங்களில் ஒன்றாக அமையக்கூடும். துலாம் ராசியின் அதிபதியான சுக்கிரன் அவர்களின் முதல் வீட்டில் சஞ்சரித்து, தனது ஆதிக்கத்தை வலுப்படுத்துவார்.</p><p> செப்டம்பர் மாத இறுதியில், துலாம் ராசியில் சுக்கிரனும் புதனும் இணைந்து 'லட்சுமி நாராயண யோகத்தை' உருவாக்குவார்கள். இந்த யோகம் செழிப்பு மற்றும் சாதகமான முன்னேற்றங்களை வழங்கக்கூடியதாகும்.</p><p> பொருளாதார நிலை மேம்படும் அதே நேரத்தில், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகலாம்.

இந்த மாதத்தில் அவர்கள் கடந்த கால முதலீடுகளிலிருந்து லாபம் ஈட்டுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. </p><p>மேலும் பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் பெரிய அளவில் வருமானம் ஈட்ட முடியும். உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் தங்கள் பிரச்சனைகளில் இருந்து எளிதாக நிவாரணம் பெறலாம். </p><p>அலுவலகத்தில் பெரிய வெற்றிகள் சாத்தியமாகும், மேலும் இந்த காலகட்டத்தில் எதிர்பார்த்ததை விட அதிக சம்பள உயர்வைப் பெறலாம். திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும். </p><h2>

மீனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0501ef8-84d7-4492-bbe0-51e13d1c4b6c/26-6a871716ba1da.webp' /></p><p></p><h2> </h2><p>செப்டம்பர் மாதம் மீன ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்தையும் புதிய வாய்ப்புகளையும் கொண்டு வரக்கூடும். வளர்ச்சி, கல்வி மற்றும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்குச் சாதகமாகக் கருதப்படும் ஐந்தாம் வீட்டில் குரு பகவான் வலுவான நிலையில் சஞ்சரிக்க உள்ளார்.</p><p> இந்த மாதத்தில் வேலையில் தங்கள் வேலையில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம். அதேவேளையில், மாணவர்களுக்கு இக்காலம் படிப்பில் சாதகமான விளைவுகளைக் கொடுக்கும்.</p><p> இருப்பினும், செப்டம்பர் 18 அன்று செவ்வாய் மற்றும் குரு ஆகிய கிரகங்களின் சேர்க்கை நிகழ்வதால், கோபம், அவசர முடிவுகள் மற்றும் தேவையற்ற மோதல்களைத் தவிர்ப்பது அவசியம்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; </b>&nbsp; &nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T15:03:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வினாடிக்கு 25,000 கி.மீ அதிவேக நட்சத்திரம் கண்டுபிடிப்பு - ஐன்ஸ்டீன் கோட்பாட்டை சோதிக்க வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/fastest-star-found-near-black-hole-1787238259"></link>
            <id>https://news.lankasri.com/article/fastest-star-found-near-black-hole-1787238259</id>
            <summary type="text">Scientists found the world’s fastest star: வானியலாளர்கள் மிக வேகமான நட்சத்திரத்தை கண்டுபிடித்துள்ளனர்.

Star S301வானியலாளர்கள், Milkyway விண்மீன் மண...</summary>
            <content type="html"><![CDATA[<p>Scientists found the world’s fastest star: வானியலாளர்கள் மிக வேகமான நட்சத்திரத்தை கண்டுபிடித்துள்ளனர்.
</p><h2>
Star S301</h2><p>வானியலாளர்கள், Milkyway விண்மீன் மண்டலத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே அதிவேக நட்சத்திரத்தை (Star S301) கண்டறிந்துள்ளனர்.
</p><p>
இந்த நட்சத்திரம், நமது மில்கிவே விண்மீன் மண்டலத்தின் மையத்தில் உள்ள Sagittarius A* எனப்படும் மிகப்பெரிய கருந்துளையைச் சுற்றி, வினாடிக்கு 15,500 மைல்கள் (சுமார் 25,000 கி.மீ) வேகத்தில் பயணிக்கிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3c6c098-9662-48c2-b727-1088e98950ab/26-6a8717755b6e3.webp' /></p><h2>ஒளியின் வேகத்தை விட...</h2><p>இது ஒளியின் வேகத்தை விட 8 சதவீதம் அதிக வேகம் ஆகும்.
</p><p>S301 நட்சத்திரம், வெறும் 8.7 ஆண்டுகளில் கருந்துளையைச் சுற்றி ஒரு முழு சுற்றை முடிக்கிறது. அதன் பாதை மிகவும் நீளமான elliptical orbit ஆகும். மிக அருகில் வரும் போது, அது கருந்துளைக்கு சுமார் 1.8 பில்லியன் கி.மீ நெருக்கமாக வருகிறது.
</p><p></p><h2>ஐன்ஸ்டீன் கோட்பாட்டை சோதிக்க வாய்ப்பு</h2><p>இந்த கண்டுபிடிப்பு, ஐன்ஸ்டீனின் பொதுச் சார்பு கோட்பாட்டை (General Relativity) சோதிக்க ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது. குறிப்பாக, “Frame Dragging” எனப்படும் நிகழ்வை, கால-விண்வெளி அமைப்பை இழுத்துச் செல்லும் விளைவுகளை ஆராய்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.
</p><h2>
கண்டுபிடிப்பு விவரங்கள்:
</h2><ul><li>
S301 நட்சத்திரம் சூரியனை விட 1.5 மடங்கு நிறை (mass) கொண்டது.
</li><li>
சூரியனை விட 5 மடங்கு பிரகாசமானது.
</li><li>
2017 முதல் 2023 வரை சேகரிக்கப்பட்ட தரவுகள் மூலம், ESO-வின் GRAVITY கருவி பயன்படுத்தி கண்டறியப்பட்டது.</li></ul><p></p><p>ஆராய்ச்சியாளர்கள், இது முன்பு இரட்டை நட்சத்திர அமைப்பில் இருந்திருக்கலாம் என்றும், கருந்துளை அதை பிரித்து, S301-ஐ பிடித்துக்கொண்டிருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.
</p><p>
அடுத்த முக்கியமான வாய்ப்பு 2031-ல் கிடைக்கும். அப்போது S301 மீண்டும் கருந்துளைக்கு மிக அருகில் வரும். ESO-வின் Extremely Large Telescope மூலம் அதன் இயக்கத்தை மிகத் துல்லியமாக கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>

இந்த கண்டுபிடிப்பு, கருந்துளையின் சுழற்சி வேகத்தை நேரடியாக அளவிடும் வாய்ப்பை வழங்குவதால், வானியலின் வரலாற்றில் மிகப் பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T15:01:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் அதிடி சுற்றிவளைப்பில் தமிழர்கள் உட்பட பெருந்தொகையானவர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/raid-in-london-tamil-people-arrested-1787232646"></link>
            <id>https://tamilwin.com/article/raid-in-london-tamil-people-arrested-1787232646</id>
            <summary type="text">பிரித்தானியாவில் லண்டனில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புக்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் லண்டனில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புக்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><p>
சட்டவிரோதமாக தங்கியிருந்த தமிழர்கள் உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

2026 ஆம் ஆண்டின் கடந்த மாதம் வரையான காலப்பகுதியில் லண்டன் முழுவதும் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> </p><h2><b>

பெருந்தொகையானவர்கள் கைது</b></h2><p>உள்துறை அமைச்சின் புள்ளிவிபரங்களு்ககு அமைய 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் பிரித்தானியாவில் சட்டவிரோத வேலைவாய்ப்பு தொடர்பான சோதனைகளின் எண்ணிக்கை 7,270 ஆக உயர்ந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0d6e08b-9667-4b0b-9dbb-677d35188e6b/26-6a87168605130.webp' /></p><p>இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 31 சதவீத அதிகரிப்பாகும். இச்சோதனைகள் மூலம் 4,756 கைதுகள் இடம்பெற்றுள்ளதுடன், 2024 ஜூலைக்குப் பின்னரான மொத்தக் கைதுகளின் எண்ணிக்கை 17,000 ஆக உயர்ந்துள்ளது.
</p><p>
கடந்த ஜூன் மாதம் பிரித்தானியா முழுவதும் குடிவரவு குற்றங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கூட்டுச் சோதனைகளைத் தொடர்ந்தே இந்த புதிய புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-20T15:00:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விண்வெளியில் கீரை; நாசாவின் சாதனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-origin-greens-in-space-1787224124"></link>
            <id>https://jvpnews.com/article/indian-origin-greens-in-space-1787224124</id>
            <summary type="text">&amp;nbsp; எதிர்காலத்தில், விண்வெளியில் விவசாயம் செய்வது குறித்த ஆராய்ச்சியில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். 

அதன் ஒரு பகுதியாக, சர்வதேச விண்வெளி நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; எதிர்காலத்தில், விண்வெளியில் விவசாயம் செய்வது குறித்த ஆராய்ச்சியில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.</p><p> 

அதன் ஒரு பகுதியாக, சர்வதேச விண்வெளி நிலையத்தில் முட்டைக்கோஸ் மற்றும் வசாபி கடுகு கீரைகளை வெற்றிகரமாக விளைவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf1c93d9-6e1b-46ff-bb84-ae0150792b4c/26-6a86e03dad1ce.webp' /></p><p>

இந்நிலையில், அந்த கீரைகளை இந்திய வம்சாவளி விண்வெளி வீரர் அனில் மேனன் சாப்பிடும் காணொளி தற்போது வெளியாகி, சமூக ஊடகங்களில் வைரலாகிறது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-20T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையை வைத்து மிரட்டும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கட்டார் வெளியுறவு அமைச்சர் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/threatening-actions-involving-the-strait-of-hormuz-1787237090"></link>
            <id>https://tamilwin.com/article/threatening-actions-involving-the-strait-of-hormuz-1787237090</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட போருக்கு முன்னர்
இருந்த நிலைக்கு ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்து மீண்டும்
கொண...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட போருக்கு முன்னர்
இருந்த நிலைக்கு ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்து மீண்டும்
கொண்டுவரப்பட வேண்டும் என்று கட்டார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி தெரிவித்துள்ளார். </p><p>அத்தோடு, மோதலில் ஈடுபட்டுள்ள எந்தவொரு தரப்பும்
மற்றுமொரு தரப்பை மிரட்டக்கூடாது என்றும் கட்டார் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>எகிப்தின் எல் அலமைன் நகரில் நடைபெற்ற உயர் மட்டப் பேச்சுவார்த்தையின் பின்னர்
ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்.</p><h2>கடுமையான பாதிப்பு</h2><p>
</p><p>
இந்த போரின் விளைவுகள் வளைகுடா பிராந்தியத்திற்கு மட்டுமல்லாது உலகளாவிய
ரீதியில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f99b2328-a57e-4279-b867-ddb409231811/26-6a87156ee753e.webp' /></p><p>நிலைமை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டியது அவசியமானது என்றும், இதில்
ஏற்படுத்தப்படும் எந்தவொரு அச்சுறுத்தல்களையும் தடைகளையும் தமது நாடு
கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T14:55:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்டத்தின் இலக்கை அடையும் வரை பின்வாங்கப் போவதில்லை – வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/development-officers-union-vows-continue-protest-1787236371"></link>
            <id>https://tamilwin.com/article/development-officers-union-vows-continue-protest-1787236371</id>
            <summary type="text">கடந்த திங்கட்கிழமை (17.08.2026) தமது சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம், தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கான தீர்வு கிடைக்கும் வரை எவ்வித விட்டுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த திங்கட்கிழமை (17.08.2026) தமது சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம், தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கான தீர்வு கிடைக்கும் வரை எவ்வித விட்டுக்கொடுப்புகளுமின்றி தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>

ஊடகங்கள் வாயிலாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு இதனைத் தெரியப்படுத்துவதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.</p><h2>பல்வேறு நெருக்கடி</h2><p>

நேற்றைய தினம் (19.08.2026) ஆளுநருடன் இடம்பெற்ற சந்திப்புக்கும், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தமது சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>

தமது போராட்டத்தின் பிரதான கோரிக்கையான, குறித்த அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு, அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a81ffc1-2b97-4fc9-90ef-a5eba540706e/26-6a87122da7579.webp' /></p><p>

இதனை தமது சக உத்தியோகத்தர்கள், போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய ஏனைய தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட அனைவருக்கும் தெரியப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது.</p><p>தொழிற்திணைக்களத்தில் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, வடக்கு மாகாணம் முழுவதும் மாகாண மற்றும் மத்திய சேவைகளில் கடமையாற்றும் 3,000-க்கும் மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களை உள்ளடக்கி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமது சங்கம் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நலன்களை மாத்திரமே முன்னிறுத்தி தமது செயற்பாடுகள் தொடரும் எனவும், போராட்டத்தின் இலக்கை அடைவதற்காக ஏற்கனவே திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் சங்கம் அறிவித்துள்ளது.</p><h2>முறையான அழைப்பு</h2><p>

இதேவேளை, நேற்றைய தினம் (19.08.2026) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றதாக ஊடகங்கள் மூலம் அறியப்பட்ட கலந்துரையாடலுக்கு வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்திற்கு முறையான அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
தமது சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தி, அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தமது போராட்டத்தையும் மலினப்படுத்தும் நோக்கில் பிரதான தொழிற்சங்கமான தங்களை தவிர்த்து பிறிதொரு தரப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியமைக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbc2b11a-e1ea-4297-8c0f-53c4184bdf1a/26-6a87122e5af31.webp' /></p><p>

இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளை இனிவரும் காலங்களில் ஆளுநர் முன்னெடுக்க மாட்டார் என தாம் நம்புவதாகவும், ஜனாதிபதியினால் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட அவர்,</p><p> தமக்கு வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் நேர்மையான செயற்பாடுகளை முன்னெடுப்பார் என ஆணித்தரமாக நம்புவதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
“வாய்மையே வெல்லும்” என்ற நோக்குடன் தமது செயற்பாடுகள் தொடரும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T14:41:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெல் கொள்வனவு மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/paddy-held-by-farmers-will-be-procured-1787236852"></link>
            <id>https://tamilwin.com/article/paddy-held-by-farmers-will-be-procured-1787236852</id>
            <summary type="text">கிளிநொச்சி மாவட்டத்தில் நெல்
கொள்வனவு மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்கதிபர்
சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாவட்டத்தில் நெல்
கொள்வனவு மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்கதிபர்
சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.</p><p> குறித்த கலந்துரையாடலில் கமநல அபிவிருத்தி உதவி
ஆணையாளர், வடமாகாண நெல் சந்தைப்படுத்தல் சபை முகாமையாளர், அரிசி ஆலை
உரிமையாளர்கள்,,பலநோக்கு கூட்டுறவுச்சங்க முகாமையாளர்கள் ,கமக்காரர்
அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.</p><p>கலந்துரையாடலின் போது

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்ட பின்னர், மாவட்ட
நெல் சந்தைப்படுத்தும் திணைக்களத்தின் ஊடாக இதுவரை ஏறத்தாழ 2,600 மெட்ரிக்
தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.</p><h2>நெல் கொள்வனவு</h2><p>

இருப்பினும், மாவட்டத்தில் சுமார் 30,000 ஏக்கரில் விவசாயம்
மேற்கொள்ளப்பட்டுள்ளதால், விவசாயிகள் தங்களின் உற்பத்தியை நியாயமான விலையில்
விற்பனை செய்ய அரசாங்கத்தால் மீண்டும் ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>இதன்படி, மாவட்டத்தில் உள்ள தனியார் சிறு நெல் ஆலை உரிமையாளர்கள் ஊடாக நெல்
கொள்வனவு செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/695326bf-9a27-4776-9f07-2987ce57be92/26-6a8711f654c94.webp' /></p><p>
</p><p>கலந்துரையாடலில், பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் சார்பில் 3 நெல்
ஆலை உரிமையாளர்களும், தனியார் தரப்பில் 8 நெல் ஆலை உரிமையாளர்களும்
பங்கேற்றிருந்தனர். </p><p>இவர்கள் ஊடாக விரைவாக நெல் கொள்வனவு செய்வதற்கான
ஒழுங்குகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில், ஒவ்வொரு நெல் ஆலை உரிமையாளருக்கும் 25 மில்லியன் ரூபாய் கடன்
நிதியாக வழங்கப்பட்டு, விவசாயிகள் வசமுள்ள நெல் கொள்வனவு செய்யப்படும்.</p><p>இதன்
மூலம் மேலும் சுமார் 10,000 மெட்ரிக் தொன் நெல்லை விவசாயிகள் சந்தைப்படுத்த
முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-20T14:41:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசு திட்டங்களை பரப்பும் வீடியோவிற்கு ரூ.1 லட்சம் - வாரி வழங்கும் பீகார் அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bihar-to-pay-creators-lakh-for-govt-scheme-video-1787236482"></link>
            <id>https://news.lankasri.com/article/bihar-to-pay-creators-lakh-for-govt-scheme-video-1787236482</id>
            <summary type="text">bihar to pay creators for government scheme video: அரசு திட்டங்களை பரப்பும் வீடியோவிற்கு ரூ.1 லட்சம் வரை வழங்க பீகார் அரசு முன்வந்துள்ளது.

அரசு திட...</summary>
            <content type="html"><![CDATA[<p>bihar to pay creators for government scheme video: அரசு திட்டங்களை பரப்பும் வீடியோவிற்கு ரூ.1 லட்சம் வரை வழங்க பீகார் அரசு முன்வந்துள்ளது.
</p><h3>
அரசு திட்டங்களை பரப்பும் வீடியோவிற்கு பணம் </h3><p>

முன்னதாக அரசு தங்களது திட்டங்கள் மற்றும் சாதனைகளை நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடங்கங்களில் மட்டுமே விளம்பரப்படுத்தி வந்தது.</p><p> 

இளைய தலைமுறையினர் சமூக ஊடகங்களை அதிகளவில் பயன்படுத்தி வருவதால், தற்போது சமூக ஊடகங்களிலும் விளம்பரப்படுத்தி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aeaf4c69-31e3-4280-ae10-e660251d5f02/26-6a8710843c67f.webp' /></p><p> 

இதே போல் அரசின் நலத்திட்டங்கள் குறித்து வீடியோ வெளியிடும் சமூகஊடக படைப்பாளிகளுக்கு பீகார் மாநில அரசு பணம் வழங்க உள்ளது. </p><p>

இதில் அரசின் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பான வீடியோக்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு 1 லட்சம் பார்வைகளுக்கும், சமூக ஊடகப் படைப்பாளிகளுக்கு ரூ.10,000 வழங்கும். ஒரு வீடியோவிற்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும்.&nbsp;</p><p></p><p>

மாநில அரசின் கீழ் பதிவு செய்யப்பட்ட சமூகஊடக பக்கங்கள் மற்றும் சேனல்கள் மட்டுமே இதில் பங்குபெற முடியும்.
</p><p>
வீடியோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட நாளிலிருந்து 30 நாட்கள் நிறைவடைந்த பின்னரே அதற்கான பார்வைகளை சரிபார்த்து அரசு பணத்தை வழங்கும்.
</p><p>
பிரிவுகள், தகுதி நிபந்தனைகள், கட்டண விதிகளை விவரிக்கும் ஒரு விரிவான அறிவிப்பை, தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை வெளியிடும் என்று அமைச்சரவை தெரிவித்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T14:36:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுவர்கள் இருவரைத் தாக்கி காணொளி ; பொலிசார் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/video-of-2-children-being-assaulted-police-action-1787229727"></link>
            <id>https://jvpnews.com/article/video-of-2-children-being-assaulted-police-action-1787229727</id>
            <summary type="text">&amp;nbsp; ஆண் குழந்தை ஒன்றையும் பெண் குழந்தை ஒன்றையும் கொடூரமாகத் தாக்கி, அதனைத் தனது கைத்தொலைபேசியில் காணொளியாகப் பதிவு செய்த நபர் ஒருவர் பின்னவலை பொலிஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஆண் குழந்தை ஒன்றையும் பெண் குழந்தை ஒன்றையும் கொடூரமாகத் தாக்கி, அதனைத் தனது கைத்தொலைபேசியில் காணொளியாகப் பதிவு செய்த நபர் ஒருவர் பின்னவலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த தாக்குதல் சம்பவம் அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், நேற்று (19) சந்தேகநபர் பின்னவலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10bfea72-258f-4485-81ea-1a06628f9647/26-6a86f620deda4.webp' /></p><h2>பொலிஸாரால் கைது</h2><p>
</p><p>
கைது செய்யப்பட்டவர் பலாங்கொடை - பின்னவலை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 26 வயதுடைய நபராவார்.
</p><p>
தாக்குதலுக்கு இலக்கான 04 வயதுடைய பெண் குழந்தையும் 07 வயதுடைய ஆண் குழந்தையும் வைத்திய பரிசோதனைகளுக்காகவும் சிகிச்சைக்காகவும் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p>

இந்த தாக்குதலுக்கான பின்னணி மற்றும் காரணத்தைக் கண்டறிவதற்கும், சந்தேகநபருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பின்னவலை பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-20T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஞானசார தேரர் இருந்த விகாரையில் நடந்த துயரச் சம்பவம் - தீவிரப்படுத்தப்படும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-officer-commits-suicide-1787235749"></link>
            <id>https://tamilwin.com/article/police-officer-commits-suicide-1787235749</id>
            <summary type="text">நாவல சத்தர்ம ராஜமகா விகாரையைப் பாதுகாக்கும் பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர், தனது பணித் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தவறான முடிவெடுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாவல சத்தர்ம ராஜமகா விகாரையைப் பாதுகாக்கும் பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர், தனது பணித் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.</p><p> 

இந்த சம்பவம், இன்று(20.08.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு</h2><p>அத்துடன், நாவல சத்தர்ம ராஜமகா விகாரையில், கலகொடாத்தா ஞானசார தேரர் இருக்கிறார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c75a2141-97ca-4388-bba9-fc6bcdee0e9c/26-6a870e3e41d32.webp' /></p><p>
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பாக இன்று பிற்பகல் வேளையில், இராஜகிரிய பொலிஸாருக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T14:25:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்கல்வி வாய்ப்புகளை தவறவிட்ட மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்! அரசாங்கத்தின் புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/interest-free-loan-from-the-govt-for-education-1787233804"></link>
            <id>https://ibctamil.com/article/interest-free-loan-from-the-govt-for-education-1787233804</id>
            <summary type="text">

2023, 24, 25 ஆகிய ஆண்டுகளில் தனியார் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறாத மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்களை வழங்கும் திட்டம் அரசாங்கத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

2023, 24, 25 ஆகிய ஆண்டுகளில் தனியார் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறாத மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்களை வழங்கும் திட்டம் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டுள்ளது.
</p><p>
அதிகபட்சமாக 1.5 மில்லியன் ரூபாய் வரையிலான கடனை 7 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இதன் மூலம், பல்கலைக்கழக ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட 16 தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் அல்லது தேசிய அளவிலான பட்டயப் படிப்புக்காக 130 பாடப்பிரிவுகளைப் படிக்கும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>திட்டத்தின் முதற்கட்டம்</h2><p>

இலங்கை முழுவதும் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்த திட்டத்தின் முதற்கட்டம், செப்டம்பர் 3ஆம் திகதி களுத்துறை மாவட்டச் செயலகத்திலிருந்து தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87456f24-eb13-45f6-a522-3bc27cc0a287/26-6a870c8b39a68.webp' /></p><p>

இதற்கிடையில், கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சு, மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேசச் செயலகங்கள் இணைந்து இத்திட்டத்தை ஏற்பாடு செய்யும் என களுத்துறை மாவட்டச் செயலாளர் சுனந்த ஹெரத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T14:17:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இதுவே எனது இறுதி நாடாளுமன்ற உரையாக இருக்கலாம் - அர்ச்சுனா எம்.பியின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/this-my-last-parliamentary-speech-archuna-mp-1787231680"></link>
            <id>https://tamilwin.com/article/this-my-last-parliamentary-speech-archuna-mp-1787231680</id>
            <summary type="text">“இதுவே எனது இறுதி நாடாளுமன்ற உரையாக இருக்கலாம்” என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எம்.பி தெரிவித்துள்ளார்.

இன்றையதினம்(20) நாடாளுமன்றத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>“இதுவே எனது இறுதி நாடாளுமன்ற உரையாக இருக்கலாம்” என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எம்.பி தெரிவித்துள்ளார்.</p><p>

இன்றையதினம்(20) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p><h2>இறுதி நாடாளுமன்ற உரை</h2><p>

தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த இனவாத அரசாங்கங்கள் அடக்குமுறையையும் இன அழிப்பையும் முன்னெடுத்து வருவதாக அவர் குற்றம் சுமத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc3d0c89-465b-4f0d-8833-6133733babba/26-6a870c489f51a.webp' /></p><p>நாடாளுமன்ற ஒத்திவைப்பு பிரேரணையை கோரிய இராமநாதன் அர்ச்சுனா எம்.பி, இந்த உரை தனது இறுதி நாடாளுமன்ற உரையாக இருக்கக்கூடும் எனவும் குறிப்பிட்டார்.
</p><p>
அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் இன்று வரை, சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க முடியாத இரண்டு இனங்கள் நாட்டில் வாழ்ந்து வருகின்றன.</p><h2>தமிழ் மக்கள்</h2><p>

இன ரீதியாக வேறுபட்டிருந்தாலும், மொழி ரீதியாக இரு இனங்களும் ஒன்றிணைந்துள்ளன. எனினும், இந்த இரண்டு இனங்களையும் வேறுபடுத்தி ஆட்சி செய்வதே பெரும்பான்மை இனத்தின் பலமாக இருந்து வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39a27e3e-06e1-4538-bcbf-310e15f39cf7/26-6a870c47ec211.webp' /></p><p>
</p><p>காலம் காலமாக ஆட்சிக்கு வந்த இனவாத அரசாங்கங்கள் அடக்குமுறையையும் இன அழிப்பையும் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றன.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை வேறுபடுத்தி ஆட்சி செய்வது பெரும்பான்மை இன அரசியல்வாதிகளின் அரசியல் தந்திரமாக இருந்து வருகின்றது.</p><p>

இதன் அடிப்படையில், தமிழ் பேசும் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்படும் திட்டமிடப்பட்ட அரசியல் செயற்பாடுகளை அடையாளம் காண்பதும், முஸ்லிம் மக்களை பாதுகாப்பதும் காலத்தின் கட்டாயமாகும் என இராமநாதன் அர்ச்சுனா எம்.பி தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T14:17:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்யாணத்துக்கு முன் பாலியல் உறவு..மீண்டும் குஷ்பூவின் விவாதமான பேச்சு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/khushbu-talk-again-before-marriage-intimates-1787234540"></link>
            <id>https://viduppu.com/article/khushbu-talk-again-before-marriage-intimates-1787234540</id>
            <summary type="text">குஷ்பூநடிகையும் அரசியல் பிரபலமுமான நடிகை குஷ்பூ, தற்போது பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் பேட்டியளித்தும் பல விஷயங்களை பகிர்ந்து வருகிறது. சமீபத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>குஷ்பூ</h2><p>நடிகையும் அரசியல் பிரபலமுமான நடிகை குஷ்பூ, தற்போது பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் பேட்டியளித்தும் பல விஷயங்களை பகிர்ந்து வருகிறது. சமீபத்தில் கல்யாணத்திற்கு முன் ஏற்பட்ட உறவு குறித்து பேட்டியுள்ளார். </p><p>அதில், திருமணத்திற்கு முன் உறவு நடக்குதுன்னு அப்பவே நான் சொன்னேன், இன்னைக்கு குப்பைத் தொட்டியில் குழந்தை இருப்பதை நாம் பார்க்கிறோம். பெங்களூரில் 7 ஆயிரம் மாணவர்களுக்கு பால்வினை நோய், இருக்கு என்று சொன்னார்கள்.</p><p></p><p> </p><p>திருமணத்திற்கு முன் உறவு வைத்துக்கொள்ளும் நிலையில் எப்படி உங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை நாம் சொல்லித்தர வேண்டும். அந்தவொரு இக்கட்டான நிலையில் தான் இருக்கிறோம் என்று பேசியிருக்கிறார். </p><p>இதற்குமுன் 2005ல் திருமணத்திற்கு முன் பெண்கள் பாதுகாப்பான முறையில் உறவு வைத்துக் கொள்வதில் தவறு இல்லை, மனைவியாக வருபவள் கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று இளைஞர்கள் எதிர்பார்ப்பது நியாயம் இல்லை என்று பெசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-20T14:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கம்பஹாவில் கோர விபத்து! மூவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/horrific-accident-in-gampaha-three-dead-1787235085"></link>
            <id>https://tamilwin.com/article/horrific-accident-in-gampaha-three-dead-1787235085</id>
            <summary type="text">கம்பஹா- மீகஹவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்கொட பகுதியில் முச்சக்கரவண்டியும் காரும்&amp;nbsp;நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளன...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா- மீகஹவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்கொட பகுதியில் முச்சக்கரவண்டியும் காரும்&nbsp;நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.</p><p>குறித்த சம்பவமானது நேற்று(19.8.2026) இடம்பெற்றுள்ளது.</p><p>புதிய கண்டி வீதியில் பியகமையிலிருந்து தெல்கொட நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி வலது
புறமாகத் திரும்ப முற்பட்டபோது, எதிரே வந்த காருடன் மோதி இந்தக் கோர விபத்து
இடம்பெற்றுள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி, இரு பெண்கள் மற்றும் இரு
சிறுவர்கள் உடனடியாக உடுப்பில பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
</p><p>
இவர்களில் முச்சக்கரவண்டியின் சாரதி, 7 வயது சிறுமி மற்றும் அந்தச் சிறுமியின் தாயார்
ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3aefa760-09f2-4698-8f48-7c9718d515ea/26-6a870b0f23b1e.webp' /></p><p>

உயிரிழந்த முச்சக்கரவண்டியின் சாரதி 69 வயதுடைய தெல்கொட பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
மேலும், உயிரிழந்த 39 வயது பெண் மற்றும் அவரது 7 வயது மகள் ஆகியோர்
சியம்பலாப்ப பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>

காரில் பயணித்த சிறுமி ஒருவரும் காயமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
</p><p>
இந்தச் சம்பவம் குறித்து மீகஹவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T14:11:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடுகடத்தப்பட்ட ரஷ்யர்களுக்காக..ஜேர்மன் உளவு நிறுவனம் செய்துள்ள விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-spy-agency-hotline-for-exiled-persons-1787234958"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-spy-agency-hotline-for-exiled-persons-1787234958</id>
            <summary type="text">ஜேர்மனியின் உள்நாட்டு உளவு நிறுவனமானது நாடு கடத்தப்பட்ட குழுக்களுக்காக பிரத்யேக உதவி எண்ணை நிறுவியுள்ளது. 

நாட்டிற்குள் வெளிநாட்டு உளவாளிகளால் அச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியின் உள்நாட்டு உளவு நிறுவனமானது நாடு கடத்தப்பட்ட குழுக்களுக்காக பிரத்யேக உதவி எண்ணை நிறுவியுள்ளது.</p><p> 

நாட்டிற்குள் வெளிநாட்டு உளவாளிகளால் அச்சுறுத்தல், கண்காணிப்பு அல்லது உடல்ரீதியான வன்முறையை எதிர்கொள்ளும் நாடு கடத்தப்பட்ட குழுக்களுக்காக, ஜேர்மனி உள்நாட்டு உளவு நிறுவனம் பிரத்யேக எண்ணை நிறுவியுள்ளது.&nbsp;</p><h2>உளவுத்துறைகளுக்கு&nbsp;புதிய அதிகாரங்கள் </h2><p>

இணையவழி மற்றும் கலப்புத் தாக்குதல்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நோக்கில், தகவல் தொடர்புகளை ஊடுருவிப் பார்ப்பதற்கும் வெளிநாட்டு எதிரிகளின் நடவடிக்கைகளை முடக்குவதற்கும், உளவுத்துறைகளுக்கு புதிய அதிகாரங்களை வழங்க ஜேர்மனி முயன்று வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e41e2be-0725-428a-b023-a9de27223a35/26-6a870b89572c3.webp' /></p><p></p><p>



இந்த சூழலில், ஜேர்மனியில் தஞ்சம் புகுந்த தனிநபர்களுக்கான உதவி எண்ணை உள்நாட்டு உளவு நிறுவனம் நிறுவியுள்ளது.</p><p> 

இதில் ஈரான் மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் ரஷ்யாவில் இருந்தும் வரும் அச்சுறுத்தல்களுக்கு முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது. </p><p>



இதனை விளம்பரப்படுத்தும் ஒரு சிற்றேட்டை, அரசியலமைப்புப் பாதுகாப்பிற்கான கூட்டாட்சி அலுவலகம் வெளியிட்டது.&nbsp;</p><h2>புகாரளிக்க ஊக்குவிப்பு </h2><p>

நாட்டிற்குள் வெளிநாட்டு உளவாளிகளால் அச்சுறுத்தல், கண்காணிப்பு அல்லது உடல்ரீதியான வன்முறையை எதிர்கொள்ளும் நாடு கடத்தப்பட்ட குழுக்கள் மற்றும் அரசியல் அதிருப்தியாளர்களுக்காக இது செயல்முறைப்படுத்தப்பட உள்ளது. </p><p>

இத்திட்டத்தின் கீழ், அரசால் ஆதரிக்கப்படும் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டவர்கள், ஐரோப்பாவில் செயல்படும் வெளிநாட்டு உளவாளிகளின் வலையமைப்புகளை உளவுத்துறை ஆய்வாளர்கள் அடையாளம் காணவும், வரைபடமாக்கவும் மற்றும் முறியடிக்கவும் உதவும் வகையில், சம்பவங்களை புகாரளிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். </p><p>


மேலும் இதுகுறித்த BfV-யின் சிற்றேட்டில், 'பாதிக்கப்பட்ட தனிநபர்கள் வழங்கும் தகவல்கள், நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு நேரடியாக உதவக்கூடும். தீவிர அச்சுறுத்தல்களை முறியடிக்கவும் உதவக்கூடும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03a59f82-0caf-46f2-9067-57f50f33eb40/26-6a870b888efa9.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p> &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T14:10:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பார்வையற்றோருக்கான AI கண்ணாடி - நைஜீரிய இளைஞர் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nigerian-youth-builds-ai-glasses-for-blind-1787234298"></link>
            <id>https://news.lankasri.com/article/nigerian-youth-builds-ai-glasses-for-blind-1787234298</id>
            <summary type="text">Nigerian youth builds AI Glasses for blind: பார்வையற்றோருக்கான AI கண்ணாடியை இளைஞர் கண்டுபிடித்துள்ளார்.AI கண்ணாடிநைஜீரியாவின் கானோ நகரத்தைச் சேர்ந்த 2...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nigerian youth builds AI Glasses for blind: பார்வையற்றோருக்கான AI கண்ணாடியை இளைஞர் கண்டுபிடித்துள்ளார்.</p><h2>AI கண்ணாடி</h2><p>நைஜீரியாவின் கானோ நகரத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் கலீஃபா அமினு (Khalifa Aminu), பார்வையற்றோர் மற்றும் குறைந்த பார்வையுடையோருக்காக புதிய AI கண்ணாடி ஒன்றை உருவாக்கியுள்ளார்.
</p><p>
இந்த கண்ணாடி, தடைகளை கண்டறிந்து, பயனாளியின் இருப்பிடத்தை (location) கண்காணித்து, அவர்களுடன் பேசும் திறனையும் கொண்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e053b1c-1af9-466b-bad4-f624eb1a425c/26-6a8707fbcd784.webp' /></p><p>அமினு தனது கண்டுபிடிப்பை சமூக வலைதளமான X-ல் வெளியிட்டார். “இந்த AI கண்ணாடி, சென்சார்கள் மற்றும் GPS தொழில்நுட்பத்தை இணைத்து, பார்வையற்றோர் சுயமாகச் செல்ல உதவும்,” என்று அவர் குறிப்பிட்டார்.</p><p></p><p>
</p><h2>
முக்கிய அம்சங்கள்:
</h2><p>
முன் உள்ள தடைகளை கண்டறிந்து எச்சரிக்கை வழங்கும்.
</p><p>
GPS மூலம் பயனாளியின் இருப்பிடத்தை அறிய உதவும்.</p><p>

பயனாளர் தவறி வழி தவறினால், அவர்களின் இருப்பிடத்தை WhatsApp அல்லது Email மூலம் குடும்பத்தினருக்கு அனுப்பும்.
</p><p>
AI மற்றும் voice interaction மூலம், சுற்றுப்புறத்தை விளக்கிக் கூறும் திறன்.
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I created an AI Smart Glass to help blind people walk without a cane or a guide 👓 <br>But this is not like the smart glasses people are used to seeing<br><br>Because this Glass combines AI, sensors, and GPS to help the user detect things in front of them, avoid obstacles, and know their… <a href="https://t.co/1O2hvfcz3S">pic.twitter.com/1O2hvfcz3S</a></p>&mdash; khalifa aminu (@inventorkhalifa) <a href="https://x.com/inventorkhalifa/status/2090001916977668257?ref_src=twsrc%5Etfw">August 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>அமினு தனது சமூகத்தில் பார்வையற்றோர் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பார்த்து இந்த யோசனையை உருவாக்கினார். ஆரம்பத்தில், குறைந்த செலவில் கிடைக்கும் எலக்ட்ரானிக் பொருட்களைப் பயன்படுத்தி prototype உருவாக்கினார்.</p><p> பார்வையற்ற ஒருவர் இதைப் பயன்படுத்தி கருத்துக்களை வழங்கியதால், கண்ணாடி வடிவமைப்பில் பல மேம்பாடுகள் செய்யப்பட்டன.
</p><p>
முதலில், எச்சரிக்கை ஒலி (beep) மட்டுமே வழங்கிய prototype, தற்போது AI, GPS, voice interaction ஆகியவற்றை இணைத்துள்ளது. இதனால், பயனாளி தடைகளைத் தவிர்ப்பதோடு மட்டுமல்லாமல், சுற்றுப்புறத்தைப் புரிந்து கொள்ளவும் உதவுகிறது.</p><p>

நைஜீரியாவின் National Commission for Persons with Disabilities மற்றும் Kano Patriotic Front ஆகியவை அமினுவின் கண்டுபிடிப்புக்கு ஆதரவு அளித்துள்ளன. இந்த கண்டுபிடிப்பு, பார்வையற்றோரின் வாழ்க்கையை எளிதாக்கும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T14:09:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமல் வீரவன்சவின் மனைவிக்கு கிடைத்தது பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shashi-weerawansa-released-on-anticipatory-bail-1787233481"></link>
            <id>https://ibctamil.com/article/shashi-weerawansa-released-on-anticipatory-bail-1787233481</id>
            <summary type="text">சட்டவிரோத இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருந்த ரணசிங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோத இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருந்த ரணசிங்க முதியன்செலகே ஷிர்ஜா உதயந்தி என்ற சசி வீரவன்சவை முன்பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டார்.</p><p>

கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதிப்படுத்தும் தீர்ப்பை வாசிப்பதற்காக, இந்த வழக்கு கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><h2>வாசித்து காட்டப்பட்ட தண்டனை தீர்ப்பு</h2><p>பிரதிவாதி நீதிமன்றத்தில் முன்னிலையான பிறகு, நீதிபதி, கொழும்பு உயர் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட தொடர்புடைய தண்டனைத் தீர்ப்பை பிரதிவாதிக்கு வாசித்துக் காட்டியதுடன், உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக பிரதிவாதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்ததால், அவரைப் பிணையில் விடுவிக்கவும் உத்தரவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4103a3ce-4517-454c-8bdd-3649cdc6453e/26-6a87099f6beb4.webp' /></p><p>
</p><p>
தொடர்புடைய வழக்கை செப்டம்பர் 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T14:05:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேகதாது அணை தமிழ்நாட்டிற்காவே கட்டப்படுகிறது - கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/karnataka-cm-says-mekedatu-dam-for-tamilnadu-1787234378"></link>
            <id>https://ibctamilnadu.com/article/karnataka-cm-says-mekedatu-dam-for-tamilnadu-1787234378</id>
            <summary type="text">மேகதாது அணை தமிழ்நாட்டிற்காவே கட்டப்படுகிறது, கர்நாடகாவிற்காக இல்லை என கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பேசியுள்ளார்.

டி.கே.சிவகுமார் பேச்சு

சென...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேகதாது அணை தமிழ்நாட்டிற்காவே கட்டப்படுகிறது, கர்நாடகாவிற்காக இல்லை என கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பேசியுள்ளார்.</p><h3>

டி.கே.சிவகுமார் பேச்சு</h3><p>

சென்னை கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfc1d82a-9893-43da-b1d4-b6af3a1d9bef/26-6a87084bad468.webp' /></p><p>

இதில், கலந்து கொண்டு பேசிய கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், "மேகதாதுவில் அணை கட்டி நீரை சேமிப்பதால் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் பயனடையும். மேகதாது அணை கட்டப்படாததால் உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது. </p><p>

மேகதாது அணையால் கர்நாடகாவை விட தமிழ்நாடுக்குத்தான் அதிக பலன். நீரை சேமித்து வைப்பதால் வறட்சி உள்ளிட்ட நெருக்கடியான காலங்களில் பயன்படுத்த முடியும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b694f9e-3e7c-4445-bde3-4b2d34d85d02/26-6a87084c6158b.webp' /></p><p>

ஆந்திராவின் எதிர்ப்பால் கிருஷ்ணா நீரை கர்நாடகா முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலை. கிருஷ்ணா நதி நீர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தண்ணீர் நம்மை ஒன்றுசேர்க்க வேண்டும், பிரித்து விடக்கூடாது" என தெரிவித்துள்ளார். </p><h3>

மேகதாது அணை தமிழ்நாட்டிற்காவே
</h3><p>
இந்த மாநாடு முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "எங்களின் பல்வேறு நீர் தொடர்பான பிரச்சனைகள் குறித்து, தனியாக ஒரு கூட்டத்தைக் கூட்டி சுமூகமாகத் தீர்வு காண அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b694f9e-3e7c-4445-bde3-4b2d34d85d02/26-6a87084c6158b.webp' /></p><p>

மேகதாது அணை தமிழகத்துக்காக கட்டப்படுகிறது. கர்நாடகாவிற்காக அல்ல, மேகதாது அணை மூலம் கர்நாடகாவுக்கு 5 டிம்சி தண்ணீரையே பயன்படுத்த உள்ளோம். </p><p>பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்காகவே மேகதாது அணை கட்டப்படுகிறது. 

மேகதாது அணை கட்டப்பட்டால் குடிநீருக்காக 5 டிஎம்.சி நீரை எடுத்துக்கொண்டு எஞ்சியதை தமிழ்நாடு, புதுச்சேரிக்கு வழங்குவோம்" என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T13:59:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய உயர்ஸ்தானிகர் -சிறீதரன் எம்.பி சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/meeting-indian-high-commissioner-and-mp-sridharan-1787233065"></link>
            <id>https://tamilwin.com/article/meeting-indian-high-commissioner-and-mp-sridharan-1787233065</id>
            <summary type="text">இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.</p><p>குறித்த கலந்துரையாடலானது நேற்று(19.8.2026) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில்&nbsp; இடம்பெற்றது.
</p><p>
 இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.</p><h2>கலந்துரையாடல் </h2><p>கலந்துரையாடலின் போது தற்போதைய சமகால அரசியல் நிலவரங்கள் மற்றும் தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b03f02a-e572-44c2-b4f4-10996f39fa1b/26-6a87072278295.webp' /></p><p>
</p><p>
நீண்ட காலமாக இழுபறி நிலையில் உள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல்களை விரைவில் நடத்துவதன் அவசியம் மற்றும் அதன் மூலம் அதிகாரப் பரவலாக்கலை உறுதிப்படுத்துவது தொடர்பாகவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் உள்கட்டமைப்பு திட்டங்களை முன்னெடுப்பது மற்றும் பிராந்திய அபிவிருத்தி சார்ந்த பிற முக்கிய விடயங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன.</p><p>

வட பிராந்தியத்தின் வர்த்தக மற்றும் போக்குவரத்து மையமாகத் திகழும் காங்கேசந்துறை&nbsp; துறைமுக திட்டங்களின் தற்போதைய நிலைமை மற்றும் அதனை மேலும் விரிவுபடுத்தி பிராந்திய தொடர்பாடலை வலுப்படுத்துவது தொடர்பாகவும் மேலும் பல விடயங்கள் சார்ந்தும் ஆரோக்கியமான கலந்துரையாடல் நடைபெற்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T13:54:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியலில் என்னுடைய முழு ஆதரவு அவருக்கு உண்டு... ஜி.வி.பிரகாஷ் பேட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/i-support-when-he-enters-politics-gv-prakash-1787225825"></link>
            <id>https://cineulagam.com/article/i-support-when-he-enters-politics-gv-prakash-1787225825</id>
            <summary type="text">நடிகர் விஜய்அரசியல் என்றால் என்னவென்றே தெரியாத இளைஞர்கள், குழந்தைகள் கூட இப்போது அதைப்பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதற்கு ஒரே ஒரு க...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகர் விஜய்</h2><p>அரசியல் என்றால் என்னவென்றே தெரியாத இளைஞர்கள், குழந்தைகள் கூட இப்போது அதைப்பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள்.</p><p> அதற்கு ஒரே ஒரு காரணம், நடிகர் விஜய் தான். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி இரண்டரை ஆண்டுகளில் தேர்தலை சந்தித்து இப்போது தமிழக முதலமைச்சராக கலக்கி வருகிறார். விஜய் அரசியலில் களமிறங்கியபோது பிரபலங்கள் பலரும் நேரடியாகவே ஆதரவு தெரிவித்து வந்தனர். </p><p>100 நாட்கள் விஜய் ஆட்சியில் நிறைய நல்ல விஷயங்கள் நடந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28540535-774e-4873-b14c-0bf3e384b021/26-6a8705c707a04.webp' /></p><h2>ஜி.வி.பிரகாஷ்
</h2><p>தனுஷ் இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் ஓம் படத்தில் நடித்து வருகிறார். </p><p>இந்தப் படத்துக்கு பிறகு லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார். இதற்கு இடையில் கடந்த மாதம் தனது பிறந்தநாள் விழாவில் நடிகர் தனுஷ் பேசியது அவருடைய அரசியல் என்ட்ரிக்கான தொடக்கம் என கூறப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17907ccf-7590-4ed1-b1bc-3e9d15ec3ec5/26-6a8705c63bad3.webp' /></p><p> </p><p> 
நடிகர் விஜய்யை தொடர்ந்து இப்போது தனுஷும் அரசியலில் களமிறங்க உள்ளார் என பேச்சுகள் நிறைய வந்தன.
</p><p>இந்த நிலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெற்றி விழாவை முடித்து கிளம்பிய இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷிடம், தனுஷ் அரசியலுக்கு வந்தால் அவருக்கு உங்கள் ஆதரவு இருக்குமா? என கேட்க அதற்கு அவர் தனுஷ் என்னுடைய நண்பர், என்றைக்குமே அவருக்கு என்னுடைய ஆதரவு உண்டு என பதிலளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d16287c-a5e7-4154-be26-97b28a3ef84f/26-6a8705c547c51.webp' /></p>]]></content>
            <updated>2026-08-20T13:49:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசடி வழக்கில் சிக்கிய அரச திணைக்கள அதிகாரி - நீதிமன்றம் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-department-engineer-fraud-case-1787233495"></link>
            <id>https://tamilwin.com/article/government-department-engineer-fraud-case-1787233495</id>
            <summary type="text">வவுனியாவைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் சுமார் 3.5 கோடி (35 மில்லியன்) ரூபாய்
பணத்தைப் பெற்று நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் அரச
திணைக்களம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் சுமார் 3.5 கோடி (35 மில்லியன்) ரூபாய்
பணத்தைப் பெற்று நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் அரச
திணைக்களம் ஒன்றில் கடமையாற்றும் பொறியியலாளர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று(20.08.2026) வவுனியா நீதவான் நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்பட்டார்.
</p><h2>
14 நாட்கள் விளக்கமறியல்</h2><p>

வழக்கினை விசாரணை செய்த நீதிபதி, சந்தேகநபரை எதிர்வரும் 14 நாட்களுக்கு
விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a421ee31-31a7-4dd0-82b8-fc85c052bcac/26-6a8705a0f03a3.webp' /></p><p>
</p><p>
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p>&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T13:48:36+00:00</updated>
        </entry>
    </feed>
