<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-18T09:31:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் குறித்து வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/interest-free-student-loan-scheme-by-moe-1787043377"></link>
            <id>https://ibctamil.com/article/interest-free-student-loan-scheme-by-moe-1787043377</id>
            <summary type="text">வட்டி இல்லா மாணவர் கடன் திட்டத்தின் 11 ஆம் (2026/2027) கட்டத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

அதற்கமைய, உரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட்டி இல்லா மாணவர் கடன் திட்டத்தின் 11 ஆம் (2026/2027) கட்டத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>
 

அதற்கமைய, உரிய விண்ணப்பங்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p>கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் இந்த கடன் திட்டத்திற்கு சில அடிப்படைத் தகுதிகளை கெண்டிருக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருத்தல்</h2><p>அதன்படி, 2023, 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, குறைந்தபட்சம் மூன்று பாடங்களிலும் சாதாரண சித்தி (S) பெற்றிருக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2400ec50-84ca-40d5-854c-af5133438fc3/26-6a84246adb664.webp' /></p><p>

 

க.பொ.த உயர்தர அல்லது க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் குறைந்தபட்சம் சாதாரண சித்தி (S) பெற்றிருப்பதுடன் பொதுச் சாதாரண பரீட்சையில் குறைந்தபட்சம் 30 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும்.</p><p>
 

விண்ணப்பங்கள் கோரப்படும் இறுதித் திகதியன்று (2026.09.27) 25 வயதிற்கு கூடாமல் இருக்க வேண்டும்.
</p><p>
 

இத்திட்டத்தின் மூலம் பொறியியல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், அறிவியல், வணிகம் மற்றும் மனிதநேயம் - கலை ஆகிய பாடப் பிரிவுகளின் கீழ், பட்டங்களை வழங்கும் 16 நிறுவனங்கள் ஊடாக 129க்கும் மேற்பட்ட பட்டப்படிப்பு பாடநெறிகளை பயில்வதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T09:28:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பெண்ணொருவரை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற இளைஞன்; சம்பவத்தால் அ திர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-attempts-assault-a-woman-in-jaffna-1787042545"></link>
            <id>https://jvpnews.com/article/youth-attempts-assault-a-woman-in-jaffna-1787042545</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணத்தில் இரவு வேளை வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து கத்தி முனையில் பெண்ணொருவரை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் , இளைஞன் ஒருவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணத்தில் இரவு வேளை வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து கத்தி முனையில் பெண்ணொருவரை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் , இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>

பிறவுண் வீதியில் உள்ள தனது வீட்டினுள் 14ஆம் திகதி இரவு அத்துமீறி நுழைந்து இ கத்தி முனையில் தன்னை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய இளைஞன் ஒருவர் முயன்றதாக பெண்ணொருவர் கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ccc33e3-ee1a-43f1-b678-dc7fabd1bc32/26-6a841af26ce67.webp' /></p><h2>&nbsp;பொலிஸார்&nbsp;விசாரணை</h2><p>
</p><p>
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கமெராக்களின் உதவியுடன் முன்னெடுத்த விசாரணையில் இளைஞன் ஒருவரை அடையாளம் கண்டு அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.</p><p></p><p>

 குறித்த பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடமாடிய இளைஞனை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை 14ஆம் திகதி பெண்ணொருவரின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்தது தான் தான் பொலிசாரிடம் கூறியுள்ளார்.</p><p>

குறித்த இளைஞன் வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T09:27:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் இரண்டு படகுகள் மோதி விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-missing-in-yacht-boat-crash-in-france-1787044748"></link>
            <id>https://news.lankasri.com/article/man-missing-in-yacht-boat-crash-in-france-1787044748</id>
            <summary type="text">One missing after boat crash in south of France: பிரான்சில் இரண்டு படகுகள் மோதி விபத்துக்குள்ளானதில் தண்ணீரில் விழுந்த ஒருவரைக் காணவில்லை.


ஞாயிற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>One missing after boat crash in south of France: பிரான்சில் இரண்டு படகுகள் மோதி விபத்துக்குள்ளானதில் தண்ணீரில் விழுந்த ஒருவரைக் காணவில்லை.</p><p>


ஞாயிற்றுக்கிழமை இரவு, பிரான்சுக்கு தெற்கே அமைந்துள்ள கேன்ஸ் வளைகுடாவில் ஒரு ஆடம்பர படகும், ரப்பர் படகொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
</p><h3>
நான்கு பேர் கவலைக்கிடம்</h3><p>

அந்த ரப்பர் படகில் 10 பேர் பயணித்த நிலையில், அவர்கள் தண்ணீரில் தூக்கியெறியப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67dc1200-dee6-4333-8105-a5784912542b/26-6a84238dce6e5.webp' /></p><p> அவர்களில் பெரும்பாலானோர் பதின்மவயதினர் என கூறப்படுகிறது.

தகவலறிந்து மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்த நிலையில், தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்தவர்களை மீட்டுள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
அவர்களில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில், ஒரு 24 வயது இளைஞரைக் காணவில்லை.</p><p>

மற்றவர்கள் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன அந்த இளைஞரைத் தேடும் பணி தொடர்கிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T09:23:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட்டியில்லா கடன் திட்டம் - வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/interest-free-student-loan-scheme-1787043583"></link>
            <id>https://tamilwin.com/article/interest-free-student-loan-scheme-1787043583</id>
            <summary type="text">வட்டி இல்லா மாணவர் கடன் திட்டத்தின் 11 ஆம் (2026/2027) கட்டத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.

 

அதற்கமைய, உரிய விண்ணப்பங்களை வரும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட்டி இல்லா மாணவர் கடன் திட்டத்தின் 11 ஆம் (2026/2027) கட்டத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.</p><p>

 

அதற்கமைய, உரிய விண்ணப்பங்களை வரும் செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><h2>விண்ணப்பங்கள் கோரப்படும் இறுதித் திகதி</h2><p>இதற்கான அடிப்படைத் தகுதிகளாக 2023, 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, குறைந்தபட்சம் மூன்று பாடங்களிலும் சாதாரண சித்தி (S) பெற்றிருக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73cf96e3-7bfc-4d49-92ae-54973ec7658c/26-6a8422e91685c.webp' /></p><p>மேலும் க.பொ.த உயர்தர அல்லது க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் குறைந்தபட்சம் சாதாரண சித்தி (S) பெற்றிருக்க வேண்டும்.
</p><p>
 

பொதுச் சாதாரண பரீட்சையில் (Common General Test) குறைந்தபட்சம் 30 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும்.
</p><p>
 

விண்ணப்பங்கள் கோரப்படும் இறுதித் திகதியன்று (2026.09.27) வயது 25இற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
</p><p>
 

இத்திட்டத்தின் மூலம் பொறியியல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், அறிவியல், வணிகம் மற்றும் மனிதநேயம் - கலை ஆகிய பாடப் பிரிவுகளின் கீழ், பட்டங்களை வழங்கும் 16 நிறுவனங்கள் ஊடாக 129இற்கும் மேற்பட்ட பட்டப்படிப்பு பாடநெறிகளை பயில்வதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T09:16:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிரீஸ் ஹெலிகாப்டர் விபத்து: தேனிலவு சென்ற பிரித்தானிய தம்பதிக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/greek-helicopter-crash-british-couple-killed-1787044563"></link>
            <id>https://news.lankasri.com/article/greek-helicopter-crash-british-couple-killed-1787044563</id>
            <summary type="text">Greek Helicopter Crash Newlywed British Couple killed: கிரீஸில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் தேனிலவு சென்ற பிரித்தானிய தம்பதி உயிரிழந்த சம்பவம் பெரும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Greek Helicopter Crash Newlywed British Couple killed: கிரீஸில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் தேனிலவு சென்ற பிரித்தானிய தம்பதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> ஹெலிகாப்டர் விபத்து</h2><p>கிரீஸின் புகழ்பெற்ற சிஃப்னோஸ்(Sifnos) சுற்றுலாத் தீவில் நிகழ்ந்த கோரமான ஹெலிகாப்டர் விபத்தில் தேனிலவுக்காக சென்ற பிரித்தானிய தம்பதி உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.</p><p> இந்த விபத்தில் புதிதாக திருமணம் ஆன பிரித்தானிய தம்பதிகளான அலெக்சாண்டர் குரோமி மற்றும் மேரி எபெர்ட் ஆகியோர் உயிரிழந்து இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">🚨 Private helicopter crashes in Sifnos<br><br>A private helicopter has crashed in the Tholos area of Sifnos, near the island’s helipad, triggering a major emergency response.<br><br>🔥 A fire broke out following the crash, while initial reports say three people were on board. Emergency… <a href="https://t.co/j8kv5CshrJ">pic.twitter.com/j8kv5CshrJ</a></p>&mdash; Greek City Times (@greekcitytimes) <a href="https://x.com/greekcitytimes/status/2089399683651174423?ref_src=twsrc%5Etfw">August 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> இவர்கள் ஹெலிகாப்டர் மூலம் வான் வழி சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் உயிரிழந்த மூன்றாவது நபர் முன்னாள் இராணுவ வீரரும், 3 குழந்தைகளின் தந்தையுமான ஜோர்ஜோஸ் ராய்கோஸ் என்ற விமானி ஆவார்.</p><p> Bellavia Aviation Services என்ற நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் சிக்னோஸ் பகுதியில் தரையிறங்குவதற்கு சற்று முன்னதாக உள்ளூர் நேரப்படி மாலை 6.00 மணிக்கு விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9687da99-4700-48d6-8634-6c82cd819914/26-6a8422d56e468.webp' /></p><p> விபத்தை தொடர்ந்து அவசர கால மீட்பு குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டு மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.</p><p> தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி இடிபாடுகளில் சிக்கியிருந்த 3 பேரின் உடல்களையும் பத்திரமாக மீட்டெடுத்தனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-18T09:16:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[16 வயதில் CA படம் பெற்று கின்னஸ் சாதனை படைத்த தமிழ் வம்சாவளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/lakshmanan-meyyappan-record-youngest-ca-at-age16-1787044059"></link>
            <id>https://news.lankasri.com/article/lakshmanan-meyyappan-record-youngest-ca-at-age16-1787044059</id>
            <summary type="text">lakshmanan meyyappan as youngest ca: தமிழ் வம்சாவளியான லக்ஷ்மணன் மெய்யப்பன் 16 வயதில் CA படம் பெற்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 

16 வயதில் CA படம...</summary>
            <content type="html"><![CDATA[<p>lakshmanan meyyappan as youngest ca: தமிழ் வம்சாவளியான லக்ஷ்மணன் மெய்யப்பன் 16 வயதில் CA படம் பெற்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். </p><h3>

16 வயதில் CA படம் பெற்ற தமிழ் வம்சாவளி</h3><p>

இந்தியாவை சேர்ந்த தமிழ் வம்சாவளியான லக்ஷ்மணன்மெய்யப்பன்(lakshmanan meyyappan) என்பவர் தனது குடும்பத்துடன் துபாயில் வசித்து வருகிறார். </p><p>

தனது 10 ஆம் வகுப்பு பள்ளி விடுமுறையின் போது, ஏசிசிஏ பட்டம் பெற்ற அவரது தாயார், அடிப்படை கணக்கியல் கருத்துக்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4e6e294-462a-4e72-9ca3-eb07748453fa/26-6a8420dc9012f.webp' /></p><p> 

இதன் மூலம், கணக்கியல் மீது ஆர்வம் கொண்ட உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட கணக்கியல் சான்றிதழான ACCA தகுதியைப் பெற முடிவு செய்து, ஒரு ஆண்டிலே அதற்கான தேர்வில் தேர்ச்சி பெற்று, தகுதி பெற்றார். </p><p>

அத்துடன் நில்லாமல், முதலீட்டு மேலாண்மையில் மிகவும் மதிக்கப்படும் தகுதிகளில் ஒன்றான CFA பட்டயத்தையும் அவர் பெற்றார்.&nbsp;உலகளவில் 2 லட்சத்திற்கும் குறைவானவர்களே இந்த பட்டத்தை பெற்றுள்ளனர்.</p><p>
இதன் மூலம், 16 வயது 141 நாட்களில் பட்டய கணக்காளர் பட்டம் பெற்ற உலகின் இளம் வயது ஆண் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார் லக்ஷ்மணன் மெய்யப்பன்.&nbsp;</p><p></p><p> 

oxford brookes பல்கலைக்கழகத்தில் Applied science பிரிவில் Bachelor of Science பட்டம் பெற்றுள்ள அவர், தற்போது american university of sharjah ல் நிதி பிரிவில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார்.</p><p> 

தற்போது செஞ்சுரி ஃபைனான்சியல் நிறுவனத்தில் மூத்த ஆராய்ச்சி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.
</p><p>
இது குறித்து பேசிய அவர், "இந்த மைல்கல் எனக்கு மிகவும் முக்கியமானது, ஆனால் நான் தகுதிகளை ஒருபோதும் ஒரு பந்தயமாக அணுகியதில்லை. 

நிஜ உலகில் நிதி எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதும், காலப்போக்கில் பொருத்தமானதாக இருக்கும் திறன்களை வளர்த்துக்கொள்வதுமே முக்கியமாக இருந்தது. </p><p>

வேகத்தை விட ஆர்வத்தால் கற்றல் உந்தப்படும்போது, ​​அதன் விளைவு மிகவும் அர்த்தமுள்ளதாக அமைகிறது. உலக சாதனை படைப்பது ஒருபோதும் தனது இலக்காக இருந்ததில்லை" என தெரிவித்துள்ளார்.</p><p> 

தனது தொழில்முறை தவிர்த்து ஓய்வு நேரங்களில் கைக்கடிகாரங்களை உருவாக்கி வருகிறார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T09:07:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சினிமாவில் நாயகியாக நடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை ஷாலினி... ஹீரோ இவர்தானாம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/pandian-stores-2-serial-shalini-entry-in-cinema-1787030508"></link>
            <id>https://cineulagam.com/article/pandian-stores-2-serial-shalini-entry-in-cinema-1787030508</id>
            <summary type="text">பாண்டியன் ஸ்டோர்ஸ் 2பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இப்போது சொத்து பிரச்சனை சென்று கொண்டிருக்கிறது. முத்துவேல் தங்களது சொத்தை பிரிக்க முடிவு செய்து அந்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பாண்டியன் ஸ்டோர்ஸ் 2</h2><p>பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இப்போது சொத்து பிரச்சனை சென்று கொண்டிருக்கிறது. </p><p>முத்துவேல் தங்களது சொத்தை பிரிக்க முடிவு செய்து அந்த விஷயத்தை வீட்டில் இருப்பவர்களிடம் கூறினார். தனக்கு பாதியும், சக்திவேலுக்கும், பழனிக்கும் என மூன்றாக பிரிக்கிறேன் என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/519e60b7-b074-4d53-bbb0-02f9cda83471/26-6a84181b3b695.webp' /></p><p> </p><p>மேலும் இந்த வீடு அம்மா இருக்கும் வரை அவருக்கு, அவருக்கு பிறகு இந்த வீடு பழனிக்கு என கூற அது சக்திவேலுக்கு பிடிக்கவில்லை. தங்களது சொத்தை இரண்டாக மட்டுமே பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். </p><p>இதனால் நேற்றைய எபிசோடில், பழனியை மிகவும் மோசமாக பேசி அவர் வீட்டைவிட்டு வெளியேறும் படி செய்துவிட்டார். இதனால் பழனி முன்பை போல தனது அக்கா வீட்டிற்கே சென்றுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1da4ece-d1f6-40fd-b836-ad195aa4b440/26-6a84181a68b7c.webp' /></p><h2>புதிய படம்</h2><p>
இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ராஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ஷாலினி. நடனமும் அட்டகாசமாக ஆடக்கூடிய இவர் புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளாராம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38e0ec11-06d9-4740-9bcf-5c7254bac214/26-6a84181987ff8.webp' /></p><p> </p><p>இந்த சீரியல் மூலம் பிரபலமான ஷாலினி நடிகர் கவின் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம். மற்றபடி படம் குறித்து வேறு எந்த தகவலும் தெரியவில்லை.</p>]]></content>
            <updated>2026-08-18T09:00:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[திரிஷா பெண் சிங்கம் தான்.. துணை முதலமைச்சர் ஆனா என்ன தப்பு!! ரசிகை கொடுத்த ஆதரவு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/trisha-for-deputy-cm-senior-woman-fan-openup-1787044398"></link>
            <id>https://viduppu.com/article/trisha-for-deputy-cm-senior-woman-fan-openup-1787044398</id>
            <summary type="text">திரிஷாஇந்தியாவின் 80வது சுதந்திர நாள் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தேசிய கொடியை ஏற்றி தன்ன...</summary>
            <content type="html"><![CDATA[<h2>திரிஷா</h2><p>இந்தியாவின் 80வது சுதந்திர நாள் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தேசிய கொடியை ஏற்றி தன்னுடைய உரையை பேசியிருந்தார். </p><p>இந்நிகழ்ச்சியில் நடிகை திரிஷாவும் அவரது அம்மாவும் கலந்து கொண்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது. முதலமைச்சர் விஜய்யின் பதவி ஏற்பு விழா முதல் சுதந்திர தின நிகழ்ச்சி வரை திரிஷா கலந்து கொண்டது பெரியளவில் பேசப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b81a2109-9b15-4ce6-8e3c-79b5872f51ee/26-6a842231066a0.webp' /></p><p>இந்நிலையில், திரிஷா துணை முதலமைச்சரானால் உங்களுக்கு ஓகேவா என்ற கேள்விக்கு ரசிகை ஒருவர் பதிலளித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>அதில் அந்த ரசிகை, செல்வி ஜெயலலிதா அம்மா எவ்வளவோ போராட்டங்களுக்கு மத்தியில் முதலமைச்சர் ஆனார். அவர் நடிகையாகவும் இருந்தார், மிகச்சிறந்த அறிவாளி. அவரை முந்துவதற்கு எந்த ஆணாலும் முடியவில்லை.</p><p> எங்கிருந்து கேள்வி வந்தாலும் சரி, அவர் அனைத்துக்கும் பதில் சொல்வார். அவர் இருந்தவரை பெண் சிங்கம் மாதிரி இருந்தார். அவர் மாதிரி திரிஷாவால் மாற முடியாதா?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/829585e8-7795-4761-b4ef-0587bfc012df/26-6a84223056ef0.webp' /></p><p> </p><h2>என்ன தப்பு</h2><p>இந்த சினிமாத்துறையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இருக்கிறார், எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்திருந்தால் அத்தனை பிரச்சனைகளையும் சமாளித்து இருப்பார். ஏன் அவர் வரக்கூடாது, கண்டிப்பாக வருவார். அவரை ஏன் தேர்தலில் நிற்க வைக்கக்கூடாது. </p><p>துணை முதலமைச்சராக மட்டுமல்ல, அதற்கும் மேல் ஒரு பதவி இருந்தாலும் அவர் பொருந்துவார். அறிவாளி, தைரியமான பெண், கிட்டத்தட்ட பெண் சிங்கம் தான். அவர் கண்டிப்பாக வெல்வார். பெண்கள் அனைவருமே அவருக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று கூறியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-18T09:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் தவறான தகவல்கள் மற்றும் வெளிநாட்டு தலையீடு குறித்து ஆய்வாளர்கள் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bc-wildfires-being-exploited-by-bad-actors-1787042740"></link>
            <id>https://canadamirror.com/article/bc-wildfires-being-exploited-by-bad-actors-1787042740</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வீசிய கொடூரமான காட்டுத்தீயின் தாக்கம் தணிந்து, பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி வரும் நிலையில், இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வீசிய கொடூரமான காட்டுத்தீயின் தாக்கம் தணிந்து, பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி வரும் நிலையில், இந்த நெருக்கடியை சுயநலவாதிகளும் வெளிநாட்டுச் சக்திகளும் தவறாகப் பயன்படுத்துவதாகத் தகவல் தொடர்பு ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
</p><p>செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலியான வீடியோக்கள் மற்றும் சமூக வலைதள மீம்கள் மூலம் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. </p><p>இதன் பின்னணியில் நிதி லாபமும் அரசியல் தலையீடும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e9d7272-17e0-40e7-b16a-d3f60b195a72/26-6a841bb6697a5.webp' /></p><p>
கல்கரி பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறை இணைப் பேராசிரியர் ஜீன்-கிறிஸ்டோஃப் பூஷெர் இது குறித்துக் கூறுகையில்:
காட்டுத்தீ அல்லது நிலநடுக்கம் போன்ற அவசரகாலச் சூழல்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த பல தரப்பினர் முயல்கின்றனர்.</p><p> 
குறிப்பாக, கனடா அரசாங்கத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைக் குலைப்பதற்காக வெளிநாடுகள் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றன.</p><p>
அரசாங்கம் உக்ரைனுக்கு வழங்கும் நிதி உதவிக்கு பதிலாக உள்நாட்டு காட்டுத்தீயை அணைக்க 'வாட்டர் பாம்பர்' விமானங்களை வாங்கலாம் என பரப்பப்படும் பதிவுகள், ரஷ்யாவின் தூண்டுதலாக இருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.</p><p>
சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் தளங்களில் போலித் தகவல்களைப் பரப்பி வருமானம் ஈட்டுவதே பலரது முக்கிய நோக்கமாகும்.
</p><p>அழிவை வைத்துப் பணம் பண்ணுவதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியான வீடியோக்களை உருவாக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என பிரிட்டிஷ் கொலம்பியாவின் வனத்துறை அமைச்சர் ரவி பார்மர் தெரிவித்தார்.
</p><p>செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலியான வீடியோக்களை நம்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ அரசு அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுமாறும் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>
அறியப்படாத இணையதள கணக்குகள் மற்றும் போலி பதிவுகள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-18T08:58:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக் பாஸ் சீசன் 10 காமன் மேன்; TRPக்காக அசிங்கபடுத்துவீங்களா? கொந்தளித்த பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bigg-boss-season-10-common-man-nighty-women-issues-1787043593"></link>
            <id>https://jvpnews.com/article/bigg-boss-season-10-common-man-nighty-women-issues-1787043593</id>
            <summary type="text">&amp;nbsp; பிக் பாஸ் சீசன் 10 காமன் மேன் தேர்வு நிகழ்ச்சியின் தொடக்கமே அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், தற்போது நைட்டி அணிந்து வந்து நடுவரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிக் பாஸ் சீசன் 10 காமன் மேன் தேர்வு நிகழ்ச்சியின் தொடக்கமே அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், தற்போது நைட்டி அணிந்து வந்து நடுவரால் 'ரெட் கார்டு' கொடுத்து வெளியேற்றப்பட்ட பெண் போட்டியாளர் பிரிய வர்ஷினி விஜய் டிவி மற்றும் நடுவர் ஆரி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.</p><p>&nbsp; காமன் மேன் நிகழ்ச்சிக்காக விண்ணப்பித்த ஏராளமானோரை எமினேட் செய்துவிட்டு 50 பேரை மட்டும் தேர்வு செய்தார்கள் அதிலும் 30 பேரை எலிமினேட் செய்துவிட்டார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f97289f-9e23-46d5-94b1-f21aa0aa4759/26-6a841f0b3d771.webp' /></p><h2>TRPக்காக அசிங்கபடுத்துவீங்களா?</h2><p> </p><p>

இவர்களுக்கு 'காமன்மேன்' என்ற பெயர் மட்டும் தான் வேண்டும், ஆனால், ஷோக்கு காமன் மேன் தேவையில்லை. 

நான் இன்ஸ்டாகிராமில் நைட்டியை நார்மல் செய்யுங்க என வீடியோ போடுபவள். </p><p>பிக் பாஸ் ஆடிஷனுக்கு செல்லும் முன், வீட்டின் சாதாரண பெண்ணாக நைட்டியில் வரலாமா என அவர்களிடம் கேட்டு, அவர்கள் சரி என சொல்லியதால் தான் தான் நைட்டியில் சென்றேன்.</p><p></p><p>

 இவர்களே என்னை நைட்டியில் வரச் சொல்லிவிட்டு, நிகழ்ச்சியில் அத்தனை பேருக்கும் முன்னால் பிரச்சனை பண்ணவே நைட்டியில் வந்தீங்களா? என கேட்டு என்னை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கினார்கள்.
</p><p>
 டிஆர்பி ரேட்டிங்கிற்காக எது வேண்டுமானாலும் செய்வார்களா? நடுவராக இருந்த ஆரி என்னை பார்த்து, குழந்தையா பிறக்கும் போது ஆடை இல்லாமல் தான் இருப்போம், அதற்காக வளர்ந்த பிறகும் அப்படியே இருக்க முடியுமா? எனக் கேட்கிறார்.</p><p></p><p> </p><p> 

ஆரி, ஓவியா, மாயாவுக்கும் இடையே நடந்த விஷயங்களை அரை மணி நேரமானாலும் அப்படியே டெலிகாஸ்ட் செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு உங்களுக்கு தேவையானதை மட்டும் கட் பண்ணி என்னை ஒரு கெட்டவள் போலச் சித்தரிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஆவேசமாக பேசி உள்ளார்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-18T08:57:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய்க்கு அண்ணாமலை கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/annamalai-statement-to-cm-vijay-1787042997"></link>
            <id>https://ibctamilnadu.com/article/annamalai-statement-to-cm-vijay-1787042997</id>
            <summary type="text">We The Leaders அமைப்பின் தலைவரான அண்ணாமலை, தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் கவனத்திற்கு,... 

 

தி.மு.க. ஆட்சி வீழ்ச்சியடைந்ததற்கான முக...</summary>
            <content type="html"><![CDATA[<p>We The Leaders அமைப்பின் தலைவரான அண்ணாமலை, </p><p>தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் கவனத்திற்கு,... </p><p>

 

தி.மு.க. ஆட்சி வீழ்ச்சியடைந்ததற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, ஆளுங்கட்சியினர் என்ற அதிகார போதையில், மக்களின் விமர்சனங்களையும் எதிர்க்கருத்துகளையும் அலட்சியப்படுத்தியதுதான். </p><p>அதே பாதையில் உங்கள் அரசும் பயணிக்கிறதோ என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும், சமூக வலைத்தளங்களில் உங்கள் கட்சியினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் விமர்சனங்களுக்காக மாற்றுக் கருத்து கொண்ட 25-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e13ee5e-bae4-4dbe-8f4e-799cd7e2be7d/26-6a841d1762646.webp' /><br></p><p>குறிப்பாக, தனது குடும்பத்தை தகாத வார்த்தைகளால் விமர்சித்த த.வெ.க. தொண்டருக்கு பதிலளித்த We The Leaders தன்னார்வலர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்திருப்பது கவலைக்குரியது.
</p><p>
சமூக வலைத்தளங்களில் தனிநபர் அவதூறு மற்றும் வரம்பு மீறிய பேச்சுகளை கண்காணிப்பது அவசியம்தான். </p><p>ஆனால், ஆட்சியையும் ஆளும் கட்சியையும் விமர்சிக்கும் ஒவ்வொரு குரலையும் வழக்கு, கைது என்ற அதிகாரத்தின் மூலம் அடக்க முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல.</p><p> முதல்-அமைச்சரை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் தன்னிச்சையாக செயல்படுவதை நீங்கள் அனுமதிக்கக் கூடாது.
</p><p>



நீங்கள் இன்று ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல; தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும் பொதுவான முதல்-அமைச்சர். எதிர்க்கருத்துகளும் விமர்சனங்களும் ஜனநாயகத்தின் இயல்பான அங்கங்கள். </p><p>சிறிய விமர்சனங்களுக்குக்கூட வழக்கு, கைது என்ற 

 போக்கு தொடர்வது துரதிருஷ்டவசமானது.</p><p> எனவே, இந்தப் போக்கை உடனடியாகத் தடுத்து, ஜனநாயக குரல்களுக்கும் விமர்சனங்களுக்கும் உரிய இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.<br></p>]]></content>
            <updated>2026-08-18T08:51:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஜித் கொண்டு வந்த திட்டத்தில் நிதி மோசடி - போராட்டத்தில் குதித்த வடக்கு மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/housing-scheme-funding-fraud-allegations-1787042196"></link>
            <id>https://tamilwin.com/article/housing-scheme-funding-fraud-allegations-1787042196</id>
            <summary type="text">வீட்டுத்திட்ட மிகுதி நிதியை வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டமானது, இன்று(18.08.2026) அராலி மத்தி ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வீட்டுத்திட்ட மிகுதி நிதியை வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த போராட்டமானது, இன்று(18.08.2026) அராலி மத்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின் போது 2018 மற்றும் 2019ஆம் ஆண்டு
காலப்பகுதியில் சஜித் பிரேமதாசவினால் இந்த வீட்டுத்திட்டமானது வழங்கப்பட்டது.
</p><h2>
சஜித்தால் கொண்டு வரப்பட்ட திட்டம்</h2><p>
குறித்த வீட்டுத்திட்டத்தின் மொத்த நிதியானது ஐந்து இலட்சம் என்று
கூறப்பட்டாலும் முழுமையான நிதி பயனாளிகளை சென்றடையாத காரணத்தினால் இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1db70d7d-62db-44b6-b388-a58c01115955/26-6a841b1f5d0c4.webp' /></p><p>

போராட்டமானது சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு முன்பாக ஆரம்பமாகி, சங்கானை பிரதான பேருந்து நிலையம் வரை பேரணியாக
நகர்ந்தது. </p><p>

இதனைத் தொடர்ந்து, பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும் போராட்டம்
முன்னெடுக்கப்பட்டது.</p><h2>

ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட மனு</h2><p>
இதன்போது மக்கள் தமது கோரிக்கைகளை பதாகைகளாக தாங்கி, கோஷமிட்டவாறு
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
சங்கானை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் மற்றும் உதவித்
திட்டப் பணிப்பாளர் ஆகியோரிடம் மக்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றையும் போராட்டக்காரர்கள் கையளித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcb0c0e5-031d-4d4d-9c28-8f741156c4ae/26-6a841b204df33.webp' /></p><p> </p><p>

அந்த மனுக்கள் பிரதேச செயலாளர் ஊடாக ஜனாதிபதி அநுர குமார
திசாநாயக்க, வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்
ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
</p><p>
இந்த போராட்டத்தில் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளர் கந்தையா
இங்கேஸ்வரன், பிரதேச சபையின் உறுப்பினர்கள், சமூக மட்ட அமைப்புக்களின்
பிரதிநிதிகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05f6e678-129f-41b1-b061-a5f319fffba7/26-6a841b2124f7f.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc470480-646f-4b0c-b218-4c2df4f7870d/26-6a841b21efe15.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T08:46:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மக்களுக்கு டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை! வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/digital-identity-card-in-the-next-few-months-1787041310"></link>
            <id>https://tamilwin.com/article/digital-identity-card-in-the-next-few-months-1787041310</id>
            <summary type="text">தற்போது வழங்கப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டைகளுக்கு பதிலாக அடுத்த ஆண்டுகளில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது வழங்கப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டைகளுக்கு பதிலாக அடுத்த ஆண்டுகளில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
டிஜிட்டல்மயமாக்கல் செயல்முறையின் கீழ், இந்த ஆண்டின் அடுத்த சில மாதங்களில் முதல் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><h2>டிஜிட்டல் அடையாள அட்டை</h2><p>
இந்த ஆண்டிற்குள் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa37a049-3e94-4bd3-9ecc-bc05aca1abd8/26-6a841b33f2c76.webp' /></p><p>
</p><p>
இதற்கமைய, அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முழுமையான டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் கூறியுள்ளார்.</p><p> 

அதிலிருந்து, சுமார் 2 ஆண்டு காலத்திற்குள், நாட்டில் உள்ள 17 மில்லியன் மக்கனையும் பழைய அடையாள அட்டைக்கு பதிலாக டிஜிட்டல் முறைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p>&nbsp;</p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Gu0zIuxhlA0" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-18T08:46:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் மோசமான உடல்நிலை - உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pakistan-supreme-court-order-imran-khan-transferre-1787041540"></link>
            <id>https://tamilwin.com/article/pakistan-supreme-court-order-imran-khan-transferre-1787041540</id>
            <summary type="text">பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் மோசமான உடல்நிலை காரணமாக, அவரை அடியாலா சிறையிலிருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா சர்வதேச வைத்தியசாலைக்கு மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் மோசமான உடல்நிலை காரணமாக, அவரை அடியாலா சிறையிலிருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா சர்வதேச வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.</p><p>

பலத்த பாதுகாப்புடன் இம்ரான்கானை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று, அடுத்த விசாரணை முடியும் வரை அங்கேயே வைத்திருக்க வேண்டும் என்று சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.</p><h2>&nbsp;இம்ரான்கானின்&nbsp;உடல்நிலை</h2><p>

இம்ரான்கானின் முழுமையான மருத்துவப் பதிவுகளைச் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, வைத்தியசாலைக்கு வெளியே பாதுகாப்பை உறுதிசெய்து சட்டம் ஒழுங்கைப் பராமரிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.</p><p>

73 வயதான இம்ரான் கானின் உடல்நிலை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளை தொடர்ந்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e91621e0-251c-47e1-84af-dfa8041da821/26-6a841a4701927.webp' /></p><p>

அடியாலா சிறை அதிகாரிகள் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், சிகிச்சைக்குப் பிறகு இம்ரான்கானின் கண் நிலைமை கணிசமாக மேம்பட்டுள்ளதாகவும், அவரது பார்வை "ஏறக்குறைய இயல்பாக" இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.</p><p>

இருப்பினும், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியானது, அவரது உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பியும், அவரது தனிப்பட்ட வைத்தியர்களை அணுக அனுமதி கோரியும், அவரை வைத்தியசாலைக்கு மாற்றுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.</p><p>

2018 முதல் 2022-ல் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் மூலம் பதவி நீக்கம் செய்யப்படும் வரை பாகிஸ்தானின் பிரதமராகப் பணியாற்றிய இம்ரான்கான், 2023 முதல் சிறையில் அடைக்கப்பட்டு, தொடர்ச்சியான சட்ட வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-18T08:39:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[FIFA தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பணிநீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/fifa-chief-executive-officer-dismissed-1787042182"></link>
            <id>https://canadamirror.com/article/fifa-chief-executive-officer-dismissed-1787042182</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நிர்வாக அமைப்பின் வணிக உரிமைகள் சார்ந்த பிரிவில் ஒரு பங்கை விற்பனை செய்வதற்கான தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவின் சர்ச்சைக்குரிய திட்டத்தை வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நிர்வாக அமைப்பின் வணிக உரிமைகள் சார்ந்த பிரிவில் ஒரு பங்கை விற்பனை செய்வதற்கான தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவின் சர்ச்சைக்குரிய திட்டத்தை விமர்சித்த , ஃபிஃபாவின் (FIFA) தலைமைச் செயல்பாட்டு அதிகாரி (Kevin Lamour) பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
ஃபிஃபாவின் தலைமைத்துவக் குழுவில் இணைவதற்கு முன்பு இன்ஃபான்டினோவின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவராகத் திகழ்ந்த மூத்த நிர்வாகி கெவின் லாமூர் (Kevin Lamour) அந்த அமைப்பிலிருந்து விலகிவிட்டதை, கால்பந்து விளையாட்டின் உலகளாவிய நிர்வாக அமைப்பு திங்களன்று (17) உறுதிப்படுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc15263c-462f-4f75-99e4-46b9d2e86ea3/26-6a8419882c8b3.webp' /></p><p>
</p><p>
இதன் மூலம் அவரது பதவிக்காலம் திடீரென முடிவுக்கு வந்தது.கெவின் ஆற்றிய இரண்டு ஆண்டுகாலப் பணிக்காக ஃபிஃபா அவருக்கு நன்றி கூறியதுதடன், அவரது எதிர்கால முயற்சிகள் சிறக்க வாழ்த்துகளையும் தெரிவித்தது.
</p><p>
லாமூர், நவம்பர் 2024-ல் ஃபிஃபாவின் உயர்மட்டத் தலைமைத்துவக் குழுவில் இணைந்தார்.

உலகக் கிண்ணம் மற்றும் பிற முக்கியப் போட்டிகள் தொடர்பான உரிமைகள் உள்ளிட்ட, ஃபிஃபாவின் மிகவும் அதிக வருவாய் ஈட்டித் தரும் சொத்துகளை உள்ளடக்கிய ஒரு புதிய வணிக அமைப்பை உருவாக்குவதற்கான இன்ஃபான்டினோவின் திட்டங்களுக்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் சூழலில், அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-18T08:33:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்று ஒரு சவரன் எவ்வளவு?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/august-18th-2026-gold-and-silver-price-in-chennai-1787040820"></link>
            <id>https://manithan.com/article/august-18th-2026-gold-and-silver-price-in-chennai-1787040820</id>
            <summary type="text">today Gold and silver price :ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>today Gold and silver price :ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் தொடர்ச்சியாக மாற்றங்கள் பதிவாகி வரும் நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது.</p><p>

நேற்று (ஆகஸ்ட் 17) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.14,270-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.1,14,160-க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9e1b5f9-a611-498f-8d73-5915b224988b/26-6a84182a43306.webp' /></p><p></p><h2>இன்றைய நிலவரம்&nbsp;</h2><p>

இந்நிலையில், இன்று 22 காரட் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.20 உயர்ந்து ரூ.14,290-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.160 அதிகரித்து ரூ.1,14,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48ac148a-7d15-4e46-8251-b3eacd918295/26-6a84182aebd82.webp' /></p><p> </p><p>18 காரட் தங்கத்தின் விலை
18 காரட் தங்கத்தின் விலையிலும் இன்று உயர்வு காணப்படுகிறது. ஒரு கிராம் 18 காரட் தங்கம் ரூ.20 அதிகரித்து ரூ.12,070-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் 18 காரட் தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்து ரூ.96,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e34fb40b-b017-42d5-bbae-ca1f65f66b84/26-6a84182b9ec95.webp' /></p><p></p><p>
வெள்ளி விலையில் மாற்றமில்லை
தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையில் இன்று எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T08:33:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அகிலவிராஜ் கரியவசத்துக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/akila-viraj-kariyawasam-granted-bail-1787041803"></link>
            <id>https://ibctamil.com/article/akila-viraj-kariyawasam-granted-bail-1787041803</id>
            <summary type="text">ஊழல் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் கரியவசம் மற்றும் அவரது எரிபொருள் நிலைய ஊழியர் ஆகியோருக்கு பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் கரியவசம் மற்றும் அவரது எரிபொருள் நிலைய ஊழியர் ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.</p><p>கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று(18.08.2026)&nbsp; முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைய அதிகாரிகள் மற்றும் சந்தேக நபர்களின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.</p><p></p><h2>வெளிநாடு செல்ல தடை&nbsp;</h2><p>
</p><p>
அதன்படி, ஒவ்வொரு சந்தேக நபரையும் தலா ரூ. 5 மில்லியன் மதிப்புள்ள இரண்டு பிணைப்பத்திரங்களில் செல்ல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a2de228-aa4f-4444-8472-d26df8b35759/26-6a84180dd097c.webp' /></p><p>மேலும், குறித்த இருவரும் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யத் தடை விதிக்கவும் நீதிபதி உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p><b>தொடர்புடைய செய்திகள்...</b></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-18T08:30:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகையுடன் நெருக்கமான காட்சிகள்.. எந்த மனைவியும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்!! நடிகர் யாஷ் ஓபன் டாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/yash-talk-about-intimate-scene-with-actress-1787032435"></link>
            <id>https://cineulagam.com/article/yash-talk-about-intimate-scene-with-actress-1787032435</id>
            <summary type="text">நடிகையுடன் நெருக்கமான காட்சிகளில் நான் நடித்துள்ளதை பார்க்கும்போது, அதை என் மனைவி முழுமையாக ஏற்றுக்கொள்ள மாட்டார் என நடிகர் யாஷ் கூறியுள்ளார்.யாஷ்

...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகையுடன் நெருக்கமான காட்சிகளில் நான் நடித்துள்ளதை பார்க்கும்போது, அதை என் மனைவி முழுமையாக ஏற்றுக்கொள்ள மாட்டார் என நடிகர் யாஷ் கூறியுள்ளார்.</p><p></p><h2>யாஷ்
</h2><p>
கே.ஜி.எப் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர் யாஷ். இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இவர் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 26-ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம்தான் <a href="https://www.youtube.com/watch?v=JsD-LmCkUpY" target="_blank">டாக்சிக்</a>.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dc59b20-240d-4314-9710-219d3a3c3774/26-6a83f376d2543.webp' /></p><p>இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த், நயன்தாரா மற்றும் ஹுமா குரேஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af74065e-9265-4a5c-8c42-256ea0328c55/26-6a83f3778f606.webp' /></p><p>இப்படத்தின் அறிவிப்பு வெளிவந்ததில் இருந்து டிரைலர் வரை பல சர்ச்சைகளை டாக்சிக் சந்தித்து வருகிறது. நடிகர் - நடிகைக்கு இடையிலான நெருக்கமான காட்சிகள் சர்ச்சைக்குள்ளானது. கன்னட திரையுலகை சேர்ந்த நடிகை ரிஷிகா சிங் என்பவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருந்தார்.</p><h2>நெருக்கமான காட்சிகள்</h2><p>

இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய நடிகர் யாஷ், நடிகையுடன் தான் நெருக்கமாக நடிக்கும்போது தனது மனைவி ராதிகா எப்படி எடுத்துக்கொள்வார் என்று மனம் திறந்து பேசியுள்ளார். அதில், "கணவர் அப்படி நடிப்பதை எந்த மனைவியும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நான் நினைக்கிறேன். நான் பொய் சொல்ல விரும்பவில்லை. எல்லா வாழ்க்கை துணைக்கும் அந்த உணர்வு இருக்கும். ஆனால், இறுதியில் இவை எல்லாம் உருவாக்கப்பட்ட காட்சிகள். இது ஒரு கலை. இதன் மூலம் நாங்கள் எதை அடைய விரும்புகிறோம் என்பதுதான் முக்கியமானது" என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16419edb-1291-4156-bc8f-efcd2139eeb6/26-6a83f3786dd0b.webp' /></p><h3>என் மனைவிக்கு சங்கடமாகத்தான்
</h3><p>
மேலும் பேசிய அவர், "மக்கள் சிலவற்றை தங்களின் நம்பிக்கையின் அடிப்படையிலும், சில விஷயங்களை தங்களது அறிவின் அடிப்படையிலும் செய்கிறார்கள். நெருக்கமான காட்சிகளில் நடிக்கும்போது அவை எனக்கும் அசௌகரியமாகவே இருக்கும். அந்த காட்சிகளில் நடிப்பது எனக்கு எளிதல்ல. கதைக்கு அந்த காட்சிகள் தேவையாக இருக்கும்போது அப்படி நடிக்க வேண்டியது அவசியமாகிறது".</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15609990-a4e7-400e-920f-e96bf8a23f0a/26-6a83f379299df.webp' /></p><p>"அப்படியான காட்சிகளில் என்னை பார்க்கும்போது, என் மனைவிக்கு நிச்சயமாக சங்கடமாகத்தான் இருக்கும். அதற்கு அர்த்தம் அவர் அதை தவறாக எடுத்துக்கொள்வார் என்பது இல்லை. அவர் என்னை நம்புகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக அவரும் ஒரு நடிகை என்பதால், இந்த வேலைகளை அவர் புரிந்துகொள்வார். அங்கே தன வேலையை செய்வது ஒரு நடிகன், அவரது கணவன் இல்லை என்பது அவருக்கு புரியும்" என கூறினார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-18T08:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[லலித் - குகன் விவகாரத்தில் புதிய சாட்சியம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-testimony-in-the-lalith-kugan-case-1787040722"></link>
            <id>https://ibctamil.com/article/new-testimony-in-the-lalith-kugan-case-1787040722</id>
            <summary type="text">இலங்கையில் இடம்பெற்ற கடத்தல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கமும் அரசு இயந்திரமும் பொறுப்புக்கூற வேண்டும் என வலிக்கிழக்கு பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இடம்பெற்ற கடத்தல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கமும் அரசு இயந்திரமும் பொறுப்புக்கூற வேண்டும் என வலிக்கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் வலியுறுத்தியுள்ளார்.</p><p>கடந்த கால ஆட்சிக்காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் லலித் - குகன் கடத்தல் வழக்கு தொடர்பில் தற்போதைய அரசாங்கம் தீவிர விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரியள்ளார்.</p><p>
 "இவை கடந்த காலத்தில் நடந்தவை, இதற்கும் எனக்கும் தொடர்பில்லை" என தற்போதைய ஆட்சியாளர்கள் தப்பித்துக்கொள்ள முடியாது எனவும், குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயாரா என்றும் அவர் கேள்வியெழுப்பினார். </p><p>

அத்துடன், போரினால் பாதிக்கப்பட்டு கண்பார்வையை இழந்த முன்னாள் போராளிகள் இன்றும் சந்தித்து வரும் சமூக, பொருளாதார நெருக்கடிகள் குறித்துக் கவலை வெளியிட்டதுடன், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மார்களின் நீதிக்கான காத்திருப்புக்கு அரசாங்கம் உடனடியாகப் பதில் அளிக்க வேண்டும் என்றும், தமிழ் மக்கள் தமது வாக்களிப்பு முறையில் தீர்க்கமான அரசியல் சித்தாந்தத்துடன் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.</p><p>இந்நிலையில் ஐ.பி.சி தொலைக்காட்சியின் சக கரவியூகம் அரசியல் கலந்துரையாடலில் கலந்துகொண்டு மேலும் கருத்து தெரிவித்த அவர்,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/prYpfBion5U" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T08:28:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் காஞ்சன நிலக்கரி தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ex-minister-kanchana-presence-commission-inquiry-1787040762"></link>
            <id>https://tamilwin.com/article/ex-minister-kanchana-presence-commission-inquiry-1787040762</id>
            <summary type="text">முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நிலக்கரி கொள்வனவு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (18) மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நிலக்கரி கொள்வனவு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (18) முன்னிலையாகியுள்ளார்.
</p><p>
நிலக்கரி கொள்வனவு மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் ஒரு பகுதியாகவே அவர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஆணைக்குழுவில் முன்னிலை</h2><p>
</p><p>
அவர் அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் நிலக்கரி கொள்வனவு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள், நடைமுறைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து ஆணைக்குழுவினால் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இலங்கையின் மின்சார உற்பத்திக்கான பிரதான எரிபொருட்களில் ஒன்றாக நிலக்கரி காணப்படுவதுடன், அதன் கொள்வனவு தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49e95eef-757f-4d6d-88d1-816d6102bea7/26-6a8415edeed9b.webp' /></p><p>

இந்நிலையில், நிலக்கரி கொள்வனவு நடவடிக்கைகளில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் மற்றும் நிர்வாகத் தீர்மானங்கள் தொடர்பில் உண்மைகளை கண்டறியும் நோக்கில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் இன்றைய தினம் இடம்பெறும் விசாரணைகளில் நிலக்கரி கொள்வனவு தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T08:21:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை மருத்துவமனை சீருடைப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/solution-to-the-kalmunai-hospital-uniform-issue-1787041170"></link>
            <id>https://jvpnews.com/article/solution-to-the-kalmunai-hospital-uniform-issue-1787041170</id>
            <summary type="text">&amp;nbsp; கல்முனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் பணியாற்றும் முஸ்லிம் இளநிலை ஊழியர்கள் மற்றும் செவிலியர் அதிகாரிகளின் சீருடைப் பிரச்சினைக்கு உடனடி, குறுகிய கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கல்முனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் பணியாற்றும் முஸ்லிம் இளநிலை<a href="https://jvpnews.com/article/uniforms-at-kalmunai-hospital-staff-protest-1786953944" target="_blank"> ஊழியர்கள் மற்றும் செவிலியர் அதிகாரிகளின் சீருடைப் பிரச்சினை</a>க்கு உடனடி, குறுகிய கால மற்றும் நீண்ட கால நிரந்தரத் தீர்வு வழங்குவதில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

</p><p>அமைச்சரின் தலைமையில் இன்று (18) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற சிறப்புக் கலந்துரையாடலில் இந்த உடன்பாடு எட்டப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd5d5cb6-8c9b-4aac-b721-2ff8c9a20510/26-6a84159381a34.webp' /></p><p>

கடந்த சில நாட்களாகக் கவனத்தை ஈர்த்து வரும் இந்த உணர்வுப்பூர்வமான பிரச்சினை குறித்து அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களும் விரிவாகக் கேட்கப்பட்டன.</p><p></p><p>

மருத்துவமனை அமைப்பின் சீரான செயல்பாட்டையும், அனைத்து சேவைப் பயனாளிகளின் ஒற்றுமையையும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் உரிமைகளையும் உறுதிசெய்யும் அமைதியான மற்றும் நடைமுறைக்கு உகந்த தீர்வை எட்டுவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.</p><p></p><p>

அதன்படி, சம்பந்தப்பட்ட பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான உடனடி குறுகிய கால நடவடிக்கைகளும், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்கான நீண்ட கால நிரந்தரத் தீர்வும் கண்டறியப்பட்டு, அவற்றை உடனடியாகச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் உறுதியளித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-18T08:17:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியலமைப்பின் 22வது திருத்தச்சட்டமூல வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-22nd-amendment-submitted-to-parliament-1787040214"></link>
            <id>https://tamilwin.com/article/the-22nd-amendment-submitted-to-parliament-1787040214</id>
            <summary type="text">22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நீதித்துறை அமைப்பு திருத்தச்சட்டமூலம் ஆகியவற்றை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நீதித்துறை அமைப்பு திருத்தச்சட்டமூலம் ஆகியவற்றை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.</p><p>உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்காக அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.</p><h2>புதிய சபாநாயகரை நியமிக்குமாறு கோரிக்கை</h2><p>
</p><p>அத்துடன், ஏனைய நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்காக நீதித்துறை திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p>
</p><p>இந்த சட்டமூல வரைவுகள் தொடர்பான மேலதிக விவாதங்கள் எதிர்வரும் அமர்வுகளின் போது முன்னெடுக்கப்படவுள்ளது.
&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/886c7130-cdc4-4bec-90e0-60085f8991bf/26-6a84146958f97.webp' /></p><p>நாடாளுமன்றத்தில் 22 ஆவது திருத்தம்&nbsp;சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதற்கு எதிராக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் முன்னெடுத்துள்ளனர்.
</p><p>இதேவேளை, நாடாளுமன்ற அமர்வுகளில் உறுப்பினர்கள் முன்வைக்கும் கருத்துக்களுக்கு சபாநாயகர் செவி சாய்ப்பதில்லை என்றும், தற்போதைய சபாநாயகரை மாற்றி ஜனநாயக ரீதியில் செயற்படும் ஒருவரை அந்த பதவிக்கு நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T08:14:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ.1943 கோடிக்கு வாடகை ட்ரோன்களை வாங்கும் இந்தியா: MQ-9B Sea Guardian சிறப்பம்சங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-leased-mq-9b-seaguardian-valued-at-rs-1943-c-1787040800"></link>
            <id>https://news.lankasri.com/article/india-leased-mq-9b-seaguardian-valued-at-rs-1943-c-1787040800</id>
            <summary type="text">India leased MQ-9B Sea Guardian valued at Rs 1,943 crore: கடல்சார் கண்காணிப்பை பலப்படுத்தும் விதமாக MQ-9B Sea Guardian ட்ரோன்களை வாடகைக்கு எடுக்க இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>India leased MQ-9B Sea Guardian valued at Rs 1,943 crore: கடல்சார் கண்காணிப்பை பலப்படுத்தும் விதமாக MQ-9B Sea Guardian ட்ரோன்களை வாடகைக்கு எடுக்க இந்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.</p><h2>இந்திய அரசின் வாடகை ட்ரோன் ஒப்பந்தம்</h2><p>இந்தியாவின் நீண்ட தூர உளவு மற்றும் வான் பாதுகாப்பு திறனை வலுப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவின் பாதுகாப்பு தளவாட நிறுவனமான ஜெனரல் அட்டாமிக்ஸிடம் (General Atomics) இருந்து இரண்டு MQ-9B SeaGuardian ட்ரோன்களை வாடகைக்கு எடுக்கும் புதிய ஒப்பந்தத்தை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது.</p><p> 30 மாத வாடகை என்ற திட்டத்தின் கீழ் டெல்லியில் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.1943 கோடியாகும்.</p><p> இந்த தற்காலிக ஏற்பாடானது இந்திய பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகளுக்கான உடனடி தயார் நிலையை உறுதிப்படுத்துகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa40befc-2bbd-462e-b6b9-e52a172fe908/26-6a84142183d62.webp' /></p><h2> MQ-9B Sea Guardian ட்ரோன்களின் சிறப்பம்சங்கள்</h2><p>MQ-9B Sea Guardian ட்ரோன்கள் நீண்ட தூரம் பறந்து உளவு பணிகள் மேற்கொள்வதிலும், மிக துல்லியமான தாக்குதல்களையும் முன்னெடுக்க இது அதி நவீன தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டதாகும்.</p><p> கிட்டத்தட்ட 40,000 அடிக்கு மேல் திறம்பட இயங்கக்கூடிய MQ-9B Sea Guardian ட்ரோன்கள் இடைவிடாமல் 30 மணி நேரத்திற்கும் மேலாக பறக்க கூடியது.</p><p> நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிந்து அழிக்கும் திறன் கொண்டு இருப்பதால் கடல் ரோந்து பணிகளில் இது சிறப்புடையதாக விளங்குகிறது.</p><p> வாடகை ஒப்பந்தம் தவிர, இந்திய ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளுக்கும் 31 MQ-9B ட்ரோன்களை வாங்க சுமார் $3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T08:13:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் - இன்றைய நாணய மாற்று விகிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dollar-rate-in-sri-lanka-today-1787040204"></link>
            <id>https://tamilwin.com/article/dollar-rate-in-sri-lanka-today-1787040204</id>
            <summary type="text">இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (18.08.2026) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.இதன்படி,&amp;nbsp; &amp;nbsp;அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336.48 ரூபா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (18.08.2026) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.</p><p>இதன்படி,&nbsp; &nbsp;அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336.48 ரூபாவாகவும் கொள்வனவு விலை 327.40 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.</p><p>அதேபோன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 442.04 ரூபா மற்றும் கொள்வனவு விலை 456. 86 ரூபாவாகும்

யூரோ ஒன்றின் விற்பனை விலை 377.57 ரூபா எனவும் கொள்வனவு விலை 390.95 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>இன்றைய பெறுமதி</h2><p>இதேவேளை,&nbsp; ஏனைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பாக இன்று (18.08.2026) மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T08:11:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள் - முச்சக்கரவண்டி மோதல்: இருவர் வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-individuals-traveling-motorcycle-were-injured-1787039910"></link>
            <id>https://tamilwin.com/article/two-individuals-traveling-motorcycle-were-injured-1787039910</id>
            <summary type="text">நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார்
சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார்
சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

இன்று(18) நண்பகல் 12 மணியளவில், ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின்
குடாகம பகுதியில், மயானத்திற்கு முன்னால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக
ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>&nbsp;மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
ஹட்டன் பகுதியிலிருந்து குடாகம பகுதியை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று,
குடாகம பகுதிக்குள் திரும்புவதற்காக பிரதான வீதியின் குறுக்கே சென்றபோது,
எதிர்திசையில் ஹட்டன் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன்
மோதியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/188b9817-a1c4-4bdd-a83c-7d159344c166/26-6a84124e1ede3.webp' /></p><p>
</p><p>
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும்
காயமடைந்துள்ளனர். </p><p>காயமடைந்த இருவரும் உடனடியாக வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது.</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T08:05:43+00:00</updated>
        </entry>
    </feed>
