<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-21T23:27:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனப்படுகொலை ; நெதன்யாகு உள்ளிட்டோருக்கு எதிராக துருக்கி பிடியாணை நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/turkey-issues-arrest-warrant-against-netanyahu-1787354560"></link>
            <id>https://canadamirror.com/article/turkey-issues-arrest-warrant-against-netanyahu-1787354560</id>
            <summary type="text">இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச கைது நடவடிக்கையை முன்னெடுக்கும் வகையில், இன்டர்போல் ரெட் நோட்டீஸ் கோரும் நடவடிக்கையை துருக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச கைது நடவடிக்கையை முன்னெடுக்கும் வகையில், இன்டர்போல் ரெட் நோட்டீஸ் கோரும் நடவடிக்கையை துருக்கி ஆரம்பித்துள்ளது.
</p><p>
காஸா நோக்கிப் பயணித்த மனிதாபிமான உதவி கப்பல் தொடரணி மீது இஸ்ரேல் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பான வழக்கின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.</p><p>

துருக்கி நீதித்துறை அமைச்சர் அகின் குர்லெக் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நெதன்யாகு மற்றும் இஸ்ரேலிய அதிகாரி அஃபெக் மோஸ்கோவிச் ஆகியோருக்கு எதிராக கைது உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc60e97a-b3df-459f-854a-9b5d82371bcd/26-6a88ddc39d4a8.webp' /></p><p> </p><p>இதனைத் தொடர்ந்து, இருவரையும் சர்வதேச ரீதியில் தேடும் வகையில் இன்டர்போல் ரெட் நோட்டீஸ் கோரப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு, காஸாவுக்கு மனிதாபிமான உதவிகளை எடுத்துச் சென்ற Global Sumud Flotilla எனப்படும் கப்பல் தொடரணி சர்வதேச கடற்பரப்பில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த வழக்கில் மொத்தம் 35 பேர் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் துருக்கி தெரிவித்துள்ளது.</p><p> நெதன்யாகு மற்றும் மோஸ்கோவிச் மீது இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், சித்திரவதை மற்றும் சட்டவிரோதமாக சுதந்திரத்தைப் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
காஸாவுக்கு மனிதாபிமான உதவிகளை கொண்டு செல்வதற்காக புறப்பட்ட கப்பல் தொடரணியை இஸ்ரேல் படைகள் தடுத்து நிறுத்திய சம்பவம் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான செயற்பாட்டாளர்கள் தடுத்து வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.</p><p>

இந்த விவகாரம் தொடர்பில் பிரான்ஸ், இத்தாலி மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இதேவேளை, துருக்கியின் இந்த நடவடிக்கையை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் கடுமையாக விமர்சித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40965143-ee77-41e5-96c4-01ac51663d11/26-6a88ddc2e5436.webp' /></p><p>துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனை விமர்சித்துள்ள நெதன்யாகுவின் அலுவலகம், இந்த நடவடிக்கை இஸ்ரேலிய தலைமையை அச்சுறுத்தும் முயற்சி எனக் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
இன்டர்போல் ரெட் நோட்டீஸ் என்பது ஒருவரை உலகளாவிய ரீதியில் கைது செய்வதற்கான தன்னிச்சையான சர்வதேச பிடியாணை அல்ல. </p><p>மாறாக, குறித்த நபரை கண்டறிந்து, தற்காலிகமாக கைது செய்யுமாறு உறுப்பு நாடுகளின் சட்ட அமுலாக்க அதிகாரிகளிடம் கோரும் அறிவிப்பாகும். ரெட் நோட்டீஸ் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதா என்பது தொடர்பில் இன்டர்போல் தனித்தனியாக பரிசீலனை செய்யும்.
</p><p>
காஸா போர் தொடர்பில் இஸ்ரேலுக்கு எதிராக துருக்கி தொடர்ந்து கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வரும் நிலையில், நெதன்யாகுவுக்கு எதிரான இந்த புதிய சட்ட நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-21T23:23:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீர்கள்! அரிசி இறக்குமதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/do-not-hit-farmers-where-it-hurts-rice-sajith-1787351795"></link>
            <id>https://tamilwin.com/article/do-not-hit-farmers-where-it-hurts-rice-sajith-1787351795</id>
            <summary type="text">விவசாயிகளை ராஜாவாக்குவோம் எனக் கூறிவிட்டு, வெளிநாட்டிலிருந்து அரிசியை
இறக்குமதி செய்வது சரியா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
நாடாளுமன்றத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>விவசாயிகளை ராஜாவாக்குவோம் எனக் கூறிவிட்டு, வெளிநாட்டிலிருந்து அரிசியை
இறக்குமதி செய்வது சரியா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.</p><p>

2026ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசுக்குத் தேவையான
7 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காகச்
சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீடு தொடர்பான விவாதத்தில் நேற்று(21) பங்கேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.</p><p>

76 ஆண்டு கால விவசாயிகளின் சோகத்தைச் சுபீட்சமான நிலைக்கு மாற்றித் தருவோம்
எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று விவசாயிகளின் வாழ்க்கை மற்றும்
ஜீவனோபாயத்தைப் பொருளாதாரப் படுகொலையாக மாற்றியுள்ளனர் என்று அவர் குற்றம்
சாட்டினார்.</p><h2>அரிசி இறக்குமதி</h2><p>
</p><p>
அரசின் அமைச்சர்களால் முன்வைக்கப்பட்ட தரவுகளின்படி, சிவப்பு நாடு மற்றும்
வெள்ளை நாடு போன்றவற்றுக்கான உற்பத்திச் செலவைக் கணக்கிடும் போது,
விவசாயிகளுக்குக் கிடைக்கும் குறைந்த இலாபத்தைக் கொண்டு எவ்வாறு வாழ முடியும்
என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07371cad-ebd8-4e07-8358-73611577f5f6/26-6a88d9281333f.webp' /></p><p>

கீரி சம்பா உள்ளிட்ட அரிசி வகைகளுக்கு உரிய கட்டுப்பாட்டு விலைகள்
பிறப்பிக்கப்படாததற்குக் காரணம், அத்துறையுடன் தனவந்தர்கள்
சம்பந்தப்பட்டிருப்பதே ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.</p><p>நாட்டின் உண்மையான அரிசித் தேவை 2.5 மில்லியன் மெற்றிக் தொன்னாக இருக்க, 3.2
மில்லியன் மெற்றிக் தொன் உற்பத்தி செய்யப்படுகின்றது.</p><p>5 இலட்சம்
மெற்றிக் தொன் மேலதிக கையிருப்பு உள்ள நிலையிலும் 3 இலட்சத்து 40 ஆயிரம்
மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை விவசாயிகளின் வயிற்றில்
அடிப்பது போன்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-21T23:15:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை உயர்வால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/low-income-families-affected-by-fuel-price-hike-1787353712"></link>
            <id>https://jvpnews.com/article/low-income-families-affected-by-fuel-price-hike-1787353712</id>
            <summary type="text">எரிபொருள் விலை மாற்றங்கள் மற்றும் அதன் தாக்கங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>எரிபொருள் விலை மாற்றங்கள் மற்றும் அதன் தாக்கங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய பதிலளித்துள்ளார்.
</p><p>
எரிபொருள் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொள்வதாகவும், இதற்கு நீண்டகாலத் தீர்வொன்றை அரசாங்கம் முன்னெடுக்குமா என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa2374b7-f1de-4e44-9b26-4707d3128b6c/26-6a88da719a6d7.webp' /></p><p>இதற்கு பதிலளித்த பிரதமர், குறைந்த வருமானம் கொண்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இந்த ஆண்டும் அரசாங்கத்தினால் நிவாரணத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
அதன் கீழ், தேவைக்கேற்ப குறிப்பிட்ட சில துறைகளுக்கு எரிபொருள் நிவாரணம் மற்றும் மின்சாரக் கட்டணச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலும், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், அத்தியாவசியப் பொருட்களின் தடையற்ற விநியோகத்தைப் பேணுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தைப் பாதிக்கும் சூழ்நிலைகளை சமாளிப்பதற்காக சில நடைமுறைகள் மற்றும் சலுகைக் காலங்கள் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T23:08:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர் நெருக்கடி... அதிக விலைக்கு LNG-ஐ கொள்முதல் செய்யும் இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-buys-most-expensive-lng-1787353559"></link>
            <id>https://news.lankasri.com/article/india-buys-most-expensive-lng-1787353559</id>
            <summary type="text">India buys its most expensive LNG: இந்தியா பல ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிக விலைக்கு LNG-ஐ வாங்கியுள்ளது.
ஈரான் போர் காரணமாக எரிபொருள் விநியோகம் தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>India buys its most expensive LNG: இந்தியா பல ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிக விலைக்கு LNG-ஐ வாங்கியுள்ளது.
</p><p>ஈரான் போர் காரணமாக எரிபொருள் விநியோகம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால், இந்தியாவில் உள்ள எரிசக்தி நிறுவனங்கள் 'ஸ்பாட்' சந்தையில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (LNG) கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த விலையில் வாங்கி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0eaca66-46fa-49e7-9f29-821e784581c1/26-6a88d9d949064.webp' /></p><p>
</p><p>அரசுக்குச் சொந்தமான எரிவாயு நிறுவனமான கெயில் இந்தியா லிமிடெட், சமீபத்தில் செப்டம்பர் மாதம் விநியோகிக்கப்படவுள்ள ஒரு சரக்குக்காக, ஒரு மில்லியன் பிரிட்டிஷ் வெப்ப அலகுகளுக்கு 23 டொலருக்கும் அதிகமாக செலுத்தியுள்ளது. </p><p>செப்டம்பர் மாத விநியோகத்திற்கான சரக்குக்கு, இந்தியாவின் குஜராத் மாநில பெட்ரோலியக் கழகம் (GSPC) ஒரு mmbtu-க்கு 23 டொலருக்கும் சற்று அதிகமான விலையைச் செலுத்தியதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. </p><p>2022-ஆம் ஆண்டு முதல் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டவற்றிலேயே மிகவும் அதிக விலை கொண்ட எல்.என்.ஜி. (LNG) சரக்குகள் இவை என்றே கூறுகின்றனர்.</p><p></p><p> </p><p>இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தும் உர உற்பத்தியாளர்களுக்கு அரசு உதவ முற்படுவதால், இந்தியாவில் உள்ள அரசு ஆதரவு எரிசக்தி நிறுவனங்கள் திரவ இயற்கை எரிவாயு (LNG) உடனடி சந்தையை நாடி, விலைகளை உயர்த்தி ஏலம் கேட்கின்றன. </p><p>உலகின் இரண்டாவது மிகப்பெரிய LNG விநியோகஸ்தரான கத்தாரிடமிருந்து, நீண்ட கால ஒப்பந்தங்கள் மூலம் இந்தியா வழக்கமாக எல்என்ஜியை கொள்முதல் செய்து வருகிறது. </p><p>ஆனால், மார்ச் மாதத்தில் ஈரான் நடத்திய தாக்குதல்களால் கத்தாரின் பிரம்மாண்டமான ஏற்றுமதி முனையம் சேதமடைந்தது; மேலும், ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் செல்வது இப்போதும் பெருமளவுக்கு முடக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da06e09b-e6d8-4796-9737-b1c9ba012329/26-6a88d9d9ef747.webp' /></p><p> </p><p>ஐரோப்பாவில் எரிவாயு விலைகள் கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், அங்குள்ள LNG வாங்குபவர்களுடனும் இந்தியா போட்டியிட வேண்டியுள்ளது. </p><p>இதனிடையே, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனும், இந்த வாரம் ஸ்பாட் சந்தையில் இருந்து ஒரு LNG சரக்கை வாங்க ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் விலை தொடர்பான தகவல் ஏதும் வெளியாகவில்லை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T23:03:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வங்கி அதிகாரி எனக் கூறி விடுதியில் மோசடி ; பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-seek-public-help-finding-mysterious-person-1787353106"></link>
            <id>https://jvpnews.com/article/police-seek-public-help-finding-mysterious-person-1787353106</id>
            <summary type="text">விடுதிகள் மற்றும் வணிக நிலையங்களைக் குறிவைத்து தொடர்ச்சியான மோசடி மற்றும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுவருவதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை அடையாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>விடுதிகள் மற்றும் வணிக நிலையங்களைக் குறிவைத்து தொடர்ச்சியான மோசடி மற்றும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுவருவதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை அடையாளம் கண்டு கைது செய்வதற்கு பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
</p><p>
கடந்த ஆகஸ்ட் 3ஆம் திகதி கொழும்பு, ஸ்லேவ் ஐலண்ட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விடுதி ஒன்றுக்கு சென்ற குறித்த சந்தேகநபர், தன்னை தனியார் வங்கியொன்றின் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf1570da-a444-4696-8b9a-b1254845d889/26-6a88d814291fd.webp' /></p><p>இதன்போது, இரவு விருந்து உபசரிப்புக்காக பின்னர் ஒரு குழுவினர் வருகை தரவுள்ளதாகக் கூறிய அவர், விடுதியில் பெருமளவு உணவுப் பொருட்களை ஆர்டர் செய்துள்ளார்.</p><p>

விடுதியில் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அதிகளவில் காணப்பட்ட சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட சந்தேகநபர், அங்கிருந்த பல பொருட்களை திருடிக்கொண்டு பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் விடுதி நிர்வாகத்தினரால் ஸ்லேவ் ஐலண்ட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில், இதே நபர் சினமன் கார்டன்ஸ், பேலியகொட மற்றும் நுண்கொடை உள்ளிட்ட பல்வேறு பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளிலும் இதேபோன்ற திருட்டு மற்றும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p>

சந்தேகநபரை அடையாளம் காணும் வகையில் அவரது புகைப்படங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
</p><p>
குறித்த நபரின் அடையாளம் அல்லது அவர் தங்கியிருக்கும் இடம் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
</p><p>
இது தொடர்பான தகவல்களை ஸ்லேவ் ஐலண்ட் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை 071-8591561 என்ற தொலைபேசி இலக்கத்திலும் அல்லது ஸ்லேவ் ஐலண்ட் பொலிஸ் நிலையத்தின் பிரதான தொலைபேசி இலக்கமான 011-2433829 ஊடாகவும் வழங்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதேவேளை, விடுதி உரிமையாளர்கள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது வளாகங்களுக்கு வருகை தரும் பரிச்சயமற்ற நபர்கள் தொடர்பில் அதிக அவதானத்துடன் செயற்படுமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
</p><p>
குறிப்பாக, தங்களை வங்கி அதிகாரிகள் அல்லது ஏனைய நிறுவனங்களின் பிரதிநிதிகள் என அறிமுகப்படுத்திக் கொள்ளும் நபர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே முக்கியமான நடவடிக்கைகளுக்கு அனுமதிக்குமாறும், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் தென்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
சந்தேகநபரை விரைவில் கைது செய்து, இதுபோன்ற சம்பவங்களுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T22:58:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி வரலக்ஷ்மி பூஜை செய்த புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/rachitha-mahalakshmi-varamahalakshmi-vratam-stills-1787352716"></link>
            <id>https://cineulagam.com/article/rachitha-mahalakshmi-varamahalakshmi-vratam-stills-1787352716</id>
            <summary type="text">ரச்சிதா மஹாலக்ஷ்மி பிக் பாஸ் சென்று வந்த பிறகு பெங்களூரில் புது வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டார். சீரியல்களில் நடிப்பதை நிறுத்திவிட்ட அவர் தற்போது படங...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரச்சிதா மஹாலக்ஷ்மி பிக் பாஸ் சென்று வந்த பிறகு பெங்களூரில் புது வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டார். சீரியல்களில் நடிப்பதை நிறுத்திவிட்ட அவர் தற்போது படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
</p><p>
தற்போது தனது வீட்டில் வரலக்ஷ்மி பூஜை செய்த புகைப்படங்களை ரச்சிதா மஹாலக்ஷ்மி வெளியிட்டுள்ளார். அதற்கு அவரது ரசிகர்களிடம் லைக்குகள் குவிந்து வருகிறது. இதோ பாருங்க.
</p>]]></content>
            <updated>2026-08-21T22:52:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதை நானே நினைக்கவில்லை.. விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த கவின்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/i-didn-t-expected-it-either-kavin-on-nayanthara-1787352456"></link>
            <id>https://cineulagam.com/article/i-didn-t-expected-it-either-kavin-on-nayanthara-1787352456</id>
            <summary type="text">நடிகர் கவின் சின்னத்திரை நடிகராக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கி வருபவர். அவர் தற்போது நயன்தாரா உடன் ஜோடியாக நடித்து இருக்கும் Hi படம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் கவின் சின்னத்திரை நடிகராக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கி வருபவர். அவர் தற்போது நயன்தாரா உடன் ஜோடியாக நடித்து இருக்கும் Hi படம் வரும் ஆகஸ்ட் 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது.</p><p>கவின் நயன்தாரா உடன் நடித்து இருப்பதை பற்றி பலரும் சொன்ன கமெண்ட் என்னவென்றால் 'அவர் நயன்தாரா உடன் நடிப்பார் என ஒருநாளும் நினைத்திருக்க மாட்டார்' என்பதுதான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ff9751d-22b6-4602-a8f0-b40486e8ea21/26-6a88d939cb2e8.webp' /></p><h2>பதில்</h2><p>

அதற்கு பதில் அளித்த கவின் "கண்டிப்பாக நானே நினைக்கவில்லை. அது என் பக்கெட் லிஸ்டிலேயே இல்லை" என கூறி இருக்கிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33bf5a09-f75c-4383-af15-546059789b3d/26-6a88d93ae28e4.webp' /></p>]]></content>
            <updated>2026-08-21T22:47:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ வறட்சி அச்சுறுத்தல் ; நீர் விநியோகத்தில் புதிய நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/el-nino-threatens-drought-measures-in-water-supply-1787352069"></link>
            <id>https://jvpnews.com/article/el-nino-threatens-drought-measures-in-water-supply-1787352069</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 25,563 குடும்பங்களைச் சேர்ந்த 81,605 நபர்கள் கடுமையான நீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 25,563 குடும்பங்களைச் சேர்ந்த 81,605 நபர்கள் கடுமையான நீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதாக தேசிய பேரிடர் நிவாரண சேவை மையம் தெரிவித்துள்ளது.
</p><p>
அம்பாறை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, பதுளை, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களை இந்த வறட்சியான வானிலை கடுமையாகப் பாதித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1144ff9-5bee-4a9a-bb5d-2909c495a0de/26-6a88d406d15fa.webp' /></p><p>எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல் நினோ நிகழ்வுகளால் எழக்கூடிய வறட்சி நிலைமைகளை எதிர்கொள்வதற்காக, தடங்கலின்றி நீரை வழங்குவதையும் விரைவான நடவடிக்கைகளை எடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு பாதுகாப்பு அமைச்சினால் ஆகஸ்ட் 6 ஆம் திகதி சிறப்புச் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாகச் சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தெரிவித்துள்ளார்.
</p><p>
இதன் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீர் வசதிகளை வழங்குவதற்காக நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளில் தேவையான திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
போத்தல் செய்யப்பட்ட குடிநீர் மற்றும் சுகாதாரத் தேவைகளுக்காக நபர் ஒருவருக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் நீரின் அளவு 6 லீட்டரிலிருந்து 15 லீட்டர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீரை விநியோகிப்பதற்காக தற்போது 324 நீர் பௌசர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
</p><p>
தேவைக்கு ஏற்ப பிரதேச செயலாளர்கள் அல்லது பாதுகாப்புப் படையினரின் நீர் பௌசர்களையும் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p>

இந்த வறட்சியினால் ஏற்படும் பேரிடர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், இனிவரும் காலத்தில் ஏற்படக்கூடிய மழைக்கால நிலைமைகளை எதிர்கொள்வதற்கும் தேசிய வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 4.8 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என தேசிய பேரிடர் நிவாரண சேவை மையம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T22:41:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[அட்டைப்படத்திற்கு செம ஹாட் போட்டோஷூட் நடத்திய மாளவிகா மோகனன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/malavika-mohanan-sizzling-photoshoot-for-magazine-1787351781"></link>
            <id>https://cineulagam.com/article/malavika-mohanan-sizzling-photoshoot-for-magazine-1787351781</id>
            <summary type="text">நடிகை மாளவிகா மோகனன் தொடர்ந்து கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இன்ஸ்டாக்ராமில் அவருக்கு 4.5 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை மாளவிகா மோகனன் தொடர்ந்து கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இன்ஸ்டாக்ராமில் அவருக்கு 4.5 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
</p><p>
தற்போது அவர் பிரபல இதழின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்து இருக்கிறார். அவர் கிளாமர் லுக்கில் இருக்கும் ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ பாருங்க.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcTOglkNxW8/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcTOglkNxW8/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcTOglkNxW8/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by ELLE India (@elleindia)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-21T22:36:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/human-rights-commission-hospital-uniform-issue-1787351468"></link>
            <id>https://jvpnews.com/article/human-rights-commission-hospital-uniform-issue-1787351468</id>
            <summary type="text">அம்பாறை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட இஸ்லாமியப் பெண் சுகாதாரப் பணியாளர்களின் சீருடை விவகாரம் தொடர்பில் இலங்கை மனித உரிமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட இஸ்லாமியப் பெண் சுகாதாரப் பணியாளர்களின் சீருடை விவகாரம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய அலுவலகத்தில் விசாரணை இடம்பெற்றுள்ளது.
</p><p>
பாதிக்கப்பட்ட பணியாளர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸம், "குறித்த ஆடை அனுமதிக்கப்படாத ஒன்றாக இருந்தால், அதே ஆடையுடன் அவர்கள் வேறு அரச வைத்தியசாலையில் எவ்வாறு பணியாற்ற முடியும்?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6b71099-5fb5-4711-8c91-2899eaf8872d/26-6a88d1ae32174.webp' /></p><p> அவ்வாறாயின் அரசியலமைப்பை நடைமுறைப்படுத்த முடியாத தனி மண்டலமாகவா கல்முனை ஆதார வைத்தியசாலை தொழிற்படுகிறது?" எனக் கேள்வி எழுப்பினார்.</p><p>

மேலும், அரச தாபன விதிக்கோவை மற்றும் சுற்றறிக்கைகளை மட்டும் மேற்கோள் காட்டி அதிகாரிகள் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து விலகிவிட முடியாது என்றும், தாதியர் உள்ளிட்ட ஏனைய பணியாளர்களுக்கும் இப் பிரச்சினை விரிவடையும் முன் சுகாதார அமைச்சு தேசிய மட்டத்திலான நிரந்தரக் கொள்கைத் தீர்வை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
</p><p>
அத்துடன், இச் சம்பவத்தைச் சாதகமாகப் பயன்படுத்திச் சமூக வலைத்தளங்களில் இனவாதக் கருத்துக்களையும் போலிப் பிரசாரங்களையும் பரப்புவதைத் தவிர்த்துப் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T22:31:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பளையில் தமிழீழ விடுதலைப்புலிகள் பயிற்சி முகாம் வதந்தியை பரப்பிய நபர் மகிந்த வீட்டின் செல்லப் பிள்ளையா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rumor-of-an-ltte-training-camp-in-palai-1787348906"></link>
            <id>https://tamilwin.com/article/rumor-of-an-ltte-training-camp-in-palai-1787348906</id>
            <summary type="text">வடக்கு, கிழக்கிலே தமிழீழ விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கம் என்பது மிக மிக அவசியமான ஒன்றாக இருக்கின்றது. இந்தநிலையிலே, பளையில் மீண்டும் தமிழீழ விடுலைப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு, கிழக்கிலே தமிழீழ விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கம் என்பது மிக மிக அவசியமான ஒன்றாக இருக்கின்றது. இந்தநிலையிலே, பளையில் மீண்டும் தமிழீழ விடுலைப் புலிகள் பயிற்சி முகாம் இயங்கி வருவதாகவும் ,ஆறுமாடி கட்டடம் இருப்பதாகவும் பரவலாகப் பேசப்பட்டது.</p><p>ஒருவேளை, விடுதலைப்பிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் அவ்வாறான கட்டடங்கள் இருக்கின்றதோ தெரியாது என்று கூறப்பட்டது.</p><p>இந்த தகவலை வெளியிட்டவர் தென்னிலங்கையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப்பணிப்பாளர் சங்கீத் ஜயசேகர என்பவராவர்.</p><p>தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் இனவாதிகள் அத்தியாவசியத் தேவையாக இருப்பது உடனடியாக வடக்கு, கிழக்கில் ஏதாவது ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதாகும்.</p><p>மேலும், பளைப்பகுதியிலே தமிழீழ விடுதலைப்புலிகளின் முகாமாக மாற்றப்போகின்றார்களா, அல்லது, வெடிகுண்டுகள் தயாரிக்கப்போகின்றார்களா என அங்கிருக்கும் அதிகாரிகள் தமக்கு தெரிவிப்பதாக சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப்பணிப்பாளர் குறிப்பிட்டிருந்தார்.</p><p>இந்த வதந்தியை பரப்பிய பின்னணியில் இருப்பது யார், அவர் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் வீட்டோடு தொடர்புடையவரா என்பது தொடர்பான விரிவான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் விரிவாகப் பார்க்கலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mhuzVa404WY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T22:30:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கிண்ணம் இறுதிப் போட்டியில் ஏற்பட்ட மோதலுக்காக தண்டிக்கப்பட்ட அர்ஜென்டினா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/argentina-punished-for-brawl-1787351281"></link>
            <id>https://news.lankasri.com/article/argentina-punished-for-brawl-1787351281</id>
            <summary type="text">Three Argentina players have been banned: உலகக் கிண்ணம் இறுதிப் போட்டியின் முடிவில் மோதலில் ஈடுபட்டதற்காக, அர்ஜென்டினாவின் மூன்று வீரர்களுக்குத் தடை வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Three Argentina players have been banned: உலகக் கிண்ணம் இறுதிப் போட்டியின் முடிவில் மோதலில் ஈடுபட்டதற்காக, அர்ஜென்டினாவின் மூன்று வீரர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>ஸ்பெயினுக்கு எதிரான கடந்த மாத உலகக் கிண்ணம் இறுதிப் போட்டியின் முடிவில் ஏற்பட்ட மோதலில் ஈடுபட்டதற்காக, அர்ஜென்டினாவின் மூன்று வீரர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70153a9d-063f-4005-a2cd-32b5dde13c51/26-6a88d0f449f48.webp' /></p><p>
</p><p>ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி வெற்றியைத் தொடர்ந்து ஃபாக்லாண்ட் தீவுகள் தொடர்பான பதாகையை வெளிப்படுத்தியதற்காக மட்டுமே அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. </p><p>ஃபிஃபாவின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு லியாண்ட்ரோ பரேடெஸுக்கு 10 போட்டிகளில் விளையாடத் தடையும், 90,000 டொலர் அபராதமும் விதித்துள்ளது.</p><p> அதேவேளையில், நஹுவேல் மோலினாவுக்கு ஏழு போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டதோடு, அதே அளவு அபராதமும் விதிக்கப்பட்டது. </p><p>தியகோ அல்மாடாவுக்கு ஒரு போட்டித் தடையும் 30,000 டொலர் அபராதமும் விதிக்கப்பட்டன; அதேவேளை, பயிற்சியாளர் குழுவைச் சேர்ந்த ராபர்ட்டோ அயலாவுக்கு மூன்று போட்டிகள் தடை விதிக்கப்பட்டு, அதே அளவு அபராதமும் விதிக்கப்பட்டது.</p><p></p><p> </p><p>ஸ்பெயினின் காவிக்கும் ஒரு போட்டிக்குத் தடை மற்றும் 30,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின் முடிவில் பதாகை ஒன்றை காட்சிப்படுத்தியதற்காக, அர்ஜென்டினா கால்பந்து சங்கத்திற்கு 3,21,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p> மற்ற உலகக் கிண்ணம் போட்டிகளின்போது ஃபிஃபாவின் பாகுபாட்டுக்கு எதிரான விதிமுறைகளை அர்ஜென்டினா ரசிகர்கள் மீறிய செயல்களும் இந்த அபராத நடவடிக்கையில் அடங்கும். </p><p>பாகுபாடு தொடர்பான குற்றங்களுக்காக, நாட்டின் அடுத்த உள்ளூர் போட்டியை 50 சதவீத பார்வையாளர் கொள்ளளவுடன் நடத்துமாறு AFA-விற்கு உத்தரவிடப்பட்டுள்ளது; மேலும், மற்றொரு போட்டிக்கான 50 சதவீத கொள்ளளவு கட்டுப்பாட்டு உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T22:25:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் சாதனை படைத்த ருமேஷ் தரங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rumesh-sets-record-diamond-league-javelin-throw-1787350946"></link>
            <id>https://jvpnews.com/article/rumesh-sets-record-diamond-league-javelin-throw-1787350946</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தின் லொசேன் நகரில் நடைபெற்ற 2026 டைமண்ட் லீக் (Diamond League) ஈட்டி எறிதல் போட்டியில், 88.14 மீட்டர் தூரம் எறிந்து இலங்கையின் ருமேஷ் தரங...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தின் லொசேன் நகரில் நடைபெற்ற 2026 டைமண்ட் லீக் (Diamond League) ஈட்டி எறிதல் போட்டியில், 88.14 மீட்டர் தூரம் எறிந்து இலங்கையின் ருமேஷ் தரங்க முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். </p><p>

இந்தப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் ஜோப்ரா 88.05 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06ea843c-6c48-42f6-af26-e1048b1948ec/26-6a88cfa42002c.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T22:22:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகனின் உணவகத்திற்குத் தீ வைத்த தாய்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sentencing-for-mother-who-burned-down-1787322975"></link>
            <id>https://canadamirror.com/article/sentencing-for-mother-who-burned-down-1787322975</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் பேஃபீல்ட் பகுதியில் அமைந்துள்ள தனது மகனின் உணவகத்திற்குத் தீ வைத்த குற்றத்திற்காக சோனியா லார்சன் என்பவருக்கு 12 மாதங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் பேஃபீல்ட் பகுதியில் அமைந்துள்ள தனது மகனின் உணவகத்திற்குத் தீ வைத்த குற்றத்திற்காக சோனியா லார்சன் என்பவருக்கு 12 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>
சிறைத் தண்டனையுடன் இரண்டு ஆண்டுகள் கண்காணிப்புப் பிணை மற்றும் 60 மணி நேரச் சமூக சேவையும் அவருக்கு தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.</p><p>
அக்டோபர் 17, 2023 அன்று 'தி ஹப் ஆன் தி டாக்ஸ்'உணவகத்தில் ஏற்பட்ட பெருந்தீயில் கட்டிடம் கடுமையாகச் சேதமடைந்தது. இதனால் சுமார் 1.7 மில்லியன் டாலர் அளவிற்கு இழப்பு ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/663d78f2-013a-4d46-98e2-022590330be3/26-6a886261210ba.webp' /></p><p>
</p><p>அக்டோபர் 13 மற்றும் 16 ஆகிய திகதிகளிலும் சோனியா உணவகத்திற்குள் புகுந்து தீ வைக்க முயன்றது கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தெரியவந்தது. </p><p>
அக்டோபர் 17 ம் திகதி பாதுகாப்பு அலாரம் அமைப்பை முடக்கிவிட்டு திட்டமிட்டுத் தீ வைத்துள்ளார்.
திட்டமிட்டு இந்தத் தீவைப்பு சம்பவம் நடத்தப்பட்டுள்ளது, இது சமூகத்திற்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று நீதிபதி டி.ஜி. மெக்டொனால்ட் சுட்டிக்காட்டினார்.
</p><p>சோனியா இதற்கான தெளிவான காரணத்தைக் கூறவில்லை என்றாலும், அந்தச் சமயத்தில் தான் மனதளவில் கடுமையான பின்னடைவைச் சந்தித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>பாதிக்கப்பட்ட உணவகத்தின் உரிமையாளரும் சோனியாவின் மகனுமான கெவின் லார்சன், காப்பீட்டுத் தொகை போகத் தான் 1 மில்லியன் டாலருக்கும் அதிகமாக இழந்துவிட்டதாகவும், வணிகத்தை மீண்டும் தொடங்க முடியாமல் போய்விட்டது என்றும் தெரிவித்தார்.
</p><p>எனினும், தனது தாயை மன்னித்து அவருடனான உறவை மீண்டும் புதுப்பிக்க விரும்புவதாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T22:14:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த தாத்தா ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/grandfather-who-abused-granddaughter-in-tamil-area-1787343813"></link>
            <id>https://jvpnews.com/article/grandfather-who-abused-granddaughter-in-tamil-area-1787343813</id>
            <summary type="text">12 வயதுடைய பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய முதியவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>12 வயதுடைய பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய முதியவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா அவர்கள் தீர்ப்பளித்துள்ளார்.</p><p>



கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், போகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஹரதென்ன பகுதியில் இக்குற்றச்செயல் இடம்பெற்றுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec335d3c-7f5c-4687-9768-e567cf08c43c/26-6a88b3c77f1c0.webp' /></p><p>சம்பவம் நடந்த போது எதிரிக்கு 76 வயதாகும். இது தொடர்பான வழக்கின் குற்றச்சாட்டுப் பத்திரம் 2024 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.</p><p>



இவ்வழக்கு விசாரணையின் போது, எதிரி தரப்பில் அவரது 81 வயது முதுமையைக் கருத்தில் கொண்டு கருணை காட்டுமாறு விண்ணப்பிக்கப்பட்டது.
</p><p>


எனினும், பாதிக்கப்பட்ட சிறுமியின் இயற்கை பாதுகாவலர்களில் ஒருவரான பாட்டனாலேயே இக்குற்றச்செயல் புரியப்பட்டுள்ளமை, சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான உளவியல் பாதிப்புகள் மற்றும் கல்வி தடைப்பட்டிருந்தமை ஆகியவற்றை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. </p><p>



எதிரி மீதான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதால், எதிரியின் வயதைப் புறக்கணித்து 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் 50,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டதுடன்,

அதனை செலுத்தத் தவறின் மேலதிக 1 வருடம் சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 1,000,000/- (ஒரு மில்லியன் ரூபாய்) நஷ்டஈடும் செலுத்த வேண்டும் எனவும் அதனை செலுத்தத் தவறின் மேலதிக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>


அரச சட்டவாதியினால் முன்வைக்கப்பட்ட சாட்சிகள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதை அடுத்து இத்தீர்ப்பு வழங்கப்பட்டதுடன்,

இவ்வழக்கினை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் அரச சட்டவாதி ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ நெறிப்படுத்தியிருந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T22:13:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவி பணம் அனுப்பாததால் பிள்ளைகளை தாக்கிய தந்தை ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/father-beats-children-because-wife-does-send-money-1787350400"></link>
            <id>https://jvpnews.com/article/father-beats-children-because-wife-does-send-money-1787350400</id>
            <summary type="text">பலாங்கொடை – பின்னவல பகுதியில், தனது இரண்டு பிள்ளைகளைத் தாக்கிய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மத்திய கிழக்கு நாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலாங்கொடை – பின்னவல பகுதியில், தனது இரண்டு பிள்ளைகளைத் தாக்கிய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
மத்திய கிழக்கு நாட்டில் தொழில் நிமித்தம் சென்றுள்ள தனது மனைவி பணம் அனுப்பவில்லை என்றும், தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிப்பதில்லை என்றும் கூறி, குறித்த நபர் தனது இரண்டு பிள்ளைகளையும் தாக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0dd2014-f6f9-41ea-b93f-63e0a61e999a/26-6a88cd81e34e3.webp' /></p><p>

பின்னர், அந்தத் தாக்குதலை காணொளியாகப் பதிவு செய்து தனது மனைவிக்கு அனுப்பியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய தந்தை ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கைது செய்யப்பட்ட தந்தையை எதிர்வரும் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
தாக்குதலுக்கு உள்ளான இரண்டு சிறார்களும் உடனடியாக மீட்கப்பட்டு, மேலதிக சிகிச்சை மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுக்காக பலாங்கொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பான முழுமையான பின்னணியைக் கண்டறிவதற்காக காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T22:13:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளை நிற சேலையில் அழகாக நிகழ்ச்சிக்கு வந்த நயன்தாரா.. அழகிய புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/nayanthara-cute-in-white-saree-1787350046"></link>
            <id>https://cineulagam.com/article/nayanthara-cute-in-white-saree-1787350046</id>
            <summary type="text">நடிகை நயன்தாராவுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என சொல்லி தெரியவேண்டியது இல்லை.நயன்தாரா தற்போது நிகழ்ச்சி ஒன்றுக்கு வெள்ளை நிற சேலையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை நயன்தாராவுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என சொல்லி தெரியவேண்டியது இல்லை.</p><p>நயன்தாரா தற்போது நிகழ்ச்சி ஒன்றுக்கு வெள்ளை நிற சேலையில் மிகவும் அழகாக வந்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இதோ பாருங்க.</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T22:08:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்ரான் கான் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்படவில்லை: நீதிமன்ற உத்தரவை அரசாங்கம் மீறியதாகக் குடும்பத்தினர் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imran-khan-not-shifted-to-private-hospital-1787344002"></link>
            <id>https://tamilwin.com/article/imran-khan-not-shifted-to-private-hospital-1787344002</id>
            <summary type="text">சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை
தனியார் மருத்துவமனைக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை
பாகிஸ்தான...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை
தனியார் மருத்துவமனைக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை
பாகிஸ்தான் அரசு பின்பற்றத் தவறிவிட்டதாக அவரது குடும்பத்தினரும் தனிப்பட்ட
மருத்துவரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
</p><p>
கடந்த மூன்று வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 73 வயதான இம்ரான்
கானுக்கு, அவரது வலது கண்ணில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக சிறப்பு மருத்துவ
சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என மருத்துவக் குழு பரிந்துரைத்திருந்தது.</p><h2>&nbsp;மீண்டும் சிறைக்கு</h2><p>

இதன் அடிப்படையில், அவரை 'அடியாலா' சிறையிலிருந்து 'ஷிஃபா சர்வதேச
மருத்துவமனைக்கு' உடனடியாக மாற்றுமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்
செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டிருந்தது.
</p><p>
எனினும், இம்ரான் கான் ஷிஃபா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படாமல்,
அரசினால் நிர்வகிக்கப்படும் 'பிம்ஸ்' மருத்துவமனைக்கு நள்ளிரவில் அழைத்துச்
செல்லப்பட்டு சில மணிநேர பரிசோதனைகளின் பின்னர் மீண்டும் அடியாலா சிறைக்கே
கொண்டு செல்லப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d483971-2cf0-4d68-90d6-fd2411a9f1d8/26-6a88b4840fa4a.webp' /></p><p>
</p><p>
வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட
இம்ரான் கானின் சகோதரி உஸ்மா கான் மற்றும் அவரது தனிப்பட்ட மருத்துவர் பைசல்
சுல்தான் ஆகியோர், அரசாங்கம் நீதிமன்ற உத்தரவை முழுமையாக மீறியுள்ளதாகக்
குறிப்பிட்டனர்.
</p><p>
ஷிஃபா மருத்துவமனைக்கு அருகில் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் ஒன்று திரண்டதால்
ஏற்பட்ட பாதுகாப்புச் சூழல் காரணமாகவே அவர் பிம்ஸ் மருத்துவமனைக்கு
மாற்றப்பட்டதாக பாகிஸ்தான் செய்தித்துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார்
விளக்கமளித்துள்ளார்.
</p><p>
அத்துடன், அவர் தகுதிவாய்ந்த மருத்துவக் குழுவினால் பரிசோதிக்கப்பட்டு
ஆரோக்கியமாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட பின்னரே மீண்டும் சிறைக்கு
அனுப்பப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
</p><p>
இருப்பினும், அரசின் இந்த நடவடிக்கையானது நீதிமன்ற அவமதிப்பு எனத்
தெரிவித்துள்ள இம்ரான் கானின் 'பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப்' கட்சி, இதற்கு
எதிராக உச்ச நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T21:41:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெதன்யாகுவுக்கு எதிராக இனப்படுகொலைக்கான பிடியாணையைப் பிறப்பித்த துருக்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/turkey-issues-genocide-warrant-1787346713"></link>
            <id>https://news.lankasri.com/article/turkey-issues-genocide-warrant-1787346713</id>
            <summary type="text">Genocide Warrant For Netanyahu: நெதன்யாகு மீது இனப்படுகொலை தொடர்பான பிடியாணையை துருக்கி வெளியிட்டது.
காஸாவிற்குச் சென்றுகொண்டிருந்த உதவிப் படகுக் குழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Genocide Warrant For Netanyahu: நெதன்யாகு மீது இனப்படுகொலை தொடர்பான பிடியாணையை துருக்கி வெளியிட்டது.
</p><p>காஸாவிற்குச் சென்றுகொண்டிருந்த உதவிப் படகுக் குழுவை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியது தொடர்பான இனப்படுகொலைக் குற்றச்சாட்டின் பேரில், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைக் கைது செய்வதற்கான சர்வதேச பிடியாணையை துருக்கி கோரியுள்ளது.</p><h2>சிவப்பு அறிவிப்பு</h2><p>
</p><p>அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் படைகள் நடத்திய தாக்குதல்களை அடுத்து அமெரிக்கா ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட காஸா போரில், இஸ்ரேலைக் கடுமையாக விமர்சிக்கும் நாடாக துருக்கி மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ea1b791-81db-4679-b964-3cb81d797a5f/26-6a88bf1cc2ae5.webp' /></p><p> </p><p>மட்டுமின்றி, ஜனாதிபதி தயிப் எர்டோகன், நெதன்யாகு மீது இனப்படுகொலைக் குற்றச்சாட்டை அடிக்கடி சுமத்தி வருகிறார். கடந்த மே மாதம் சுமார் 430 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்த சம்பவம் சர்வதேச அளவில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது. </p><p>பிரான்ஸ், இத்தாலி மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளும் நீதித்துறை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், துருக்கியின் நீதித்துறை அமைச்சர் அகின் குர்லெக், சமூக ஊடகத்தில் பதிவிடுகையில், </p><p>நெதன்யாகு மற்றும் அஃபெக் மாஸ்கோவிச் எனப் பெயரிடப்பட்ட மற்றொரு இஸ்ரேலியருக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவிப்பை வெளியிடுமாறு தனது அமைச்சகம் உள்விவகார அமைச்சகத்திடம் கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார்.</p><p></p><p>
</p><p>சர்வதேசக் கடற்பரப்பில் சமூக ஆர்வலர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான சட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவும், இனப்படுகொலை குற்றச்சாட்டின் பேரில் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அஃபெக் மோஸ்கோவிட்ச் ஆகியோருக்கு எதிராக 2026 ஜூலை 14 அன்று பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டுகளுக்கு இணங்கவும், </p><p>அவர்களை சர்வதேச அளவில் கைது செய்வதற்கான 'ரெட் நோட்டீஸ்' (red notices) அறிவிப்புகளை வெளியிடுமாறு உள்விவகார அமைச்சகத்திடம் நீதி அமைச்சகம் கோரியுள்ளதாக அந்த அமைச்சர் தெரிவித்தார்.</p><h2>மோசமான நடவடிக்கை</h2><p> </p><p>மேலும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை, கடுமையான முறையில் சுதந்திரத்தைப் பறித்தல், வேண்டுமென்றே தாக்குதல் நடத்துதல், சித்திரவதை, சொத்துக்களை அழித்தல், தீவிரமான கொள்ளை மற்றும் போக்குவரத்து வாகனங்களைக் கடத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நெதன்யாகு மற்றும் மோஸ்கோவிச் ஆகியோர் மீது வழக்குத் தொடரப்படுவதாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. </p><p>மோஸ்கோவிச் ஒரு இஸ்ரேலிய ராணுவ வீரர்; காஸாவில் நடந்த மிக மோசமான நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p> காஸாவின் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவமனை மற்றும் மருத்துவப் பீடம் உள்ளிட்ட கட்டிடங்களை டாங்கிகளும் புல்டோசரும் இடித்துத் தள்ளும் காட்சிகளை மோஸ்கோவிச் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bfdf1ac-1bd0-417a-87a4-99fcbf0f4c6f/26-6a88bf1c1dab9.webp' /></p><p> </p><p>மே மாதத்தில் துருக்கியிலிருந்து புறப்பட்டு, முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனப் பகுதியை நோக்கிச் சென்ற 'குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா'வில் (Global Sumud Flotilla) சுமார் 50 படகுகள் இடம்பெற்றிருந்தன. </p><p>மத்திய தரைக்கடலில் இஸ்ரேலிய ராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்ட அந்தச் செயற்பாட்டாளர்கள், பின்னர் இஸ்ரேலிய சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். </p><p>இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சரான இடமார் பென்-க்விர், கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டு முழங்காலிட்ட நிலையில் இருந்த சமூக ஆர்வலர்களை ஏளனம் செய்யும் வகையிலான காணொளி ஒன்றை வெளியிட்டதன் மூலம் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தினார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T21:09:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனா எம்.பியின் இறுதி நாடாளுமன்ற உரை..! பகிரங்க மன்னிப்பும் கோரினார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/archuna-mp-s-final-parliamentary-speech-1787343796"></link>
            <id>https://tamilwin.com/article/archuna-mp-s-final-parliamentary-speech-1787343796</id>
            <summary type="text">நாடாளுமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த மற்றும் நாட்டின் முக்கியப்
பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
அவைக்கு வராம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த மற்றும் நாட்டின் முக்கியப்
பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
அவைக்கு வராமல் தட்டிக் கழிக்கின்றனர் என்று யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றம் சாட்டினார்.
</p><p>
மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்வாகி வந்தவர்கள் தங்கள் கடமையைச் சரியாகச் செய்யத்
தவறுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>

நேற்று நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய இறுதி உரையின் போதே மேற்கண்டவாறு
தெரிவித்தார்.</p><h2>பகிரங்க மன்னிப்பு&nbsp;</h2><p>
</p><p>
அவர் மேலும் உரையாற்றுகையில்,
</p><p>
"நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த விவாதங்களின்
போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக்குச் சமூகமளிக்காமல் தட்டிக்
கழிக்கின்றனர்.
</p><p>
கடந்த 2021ஆம் ஆண்டில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில்
தீப்பற்றி எரிந்ததால் நாட்டின் கடல் சூழலியலுக்குப் பெரும் பாதிப்பு
ஏற்பட்டுள்ளது.

இந்த நாட்டுக்குச் சட்டபூர்வமாகக் கிடைக்க வேண்டிய பில்லியன் கணக்கிலான
அமெரிக்க டொலர் இழப்பீட்டுத் தொகை, அதிகாரத் தரப்பினரின் முறையற்ற தலையீடுகள்
காரணமாக மிகக் குறைந்த தொகையாகக் குறைக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d112ead-d9f8-47d1-a037-02bd311965e7/26-6a88b3b60250b.webp' /></p><p>
இதுவே நாடாளுமன்றத்தில் தான் ஆற்றும் கடைசி உரையாக இருக்கலாம் எனக்
குறிப்பிட்ட அவர், சபை நடவடிக்கைகளின் போது அல்லது தனது பேச்சினால் யாருடைய
மனமாவது புண்பட்டிருந்தால் அல்லது அவையின் கண்ணியத்துக்கு ஏதேனும் பங்கம்
ஏற்பட்டிருந்தால், அதற்குச் சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களிடமும்
மனப்பூர்வமாக மன்னிப்புக் கோருவதாகத் தெரிவித்தார்.</p><p>

கடந்த காலப் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உண்மையான
குரலாகத் தான் நாடாளுமன்றத்தில் இயங்குவதாகக் குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட
மக்களுக்குத் தகுந்த நீதியும் நிவாரணமும் வழங்கப்பட வேண்டும் என்பதை
வலியுறுத்தினார்.
</p><p>
நாட்டின் பொருளாதாரச் சீரழிவு மற்றும் சட்டவிரோதச் செயல்களுக்குப்
பொறுப்பானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்
கேட்டுக்கொண்டார்.</p>]]></content>
            <updated>2026-08-21T20:23:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் 18 வரை அஸ்தமன நிலையில் புதன்! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mercury-combustion-zodiac-signs-in-dangerous-1787343311"></link>
            <id>https://ibctamil.com/article/mercury-combustion-zodiac-signs-in-dangerous-1787343311</id>
            <summary type="text">ஜோதிடத்தில் புத்திசாலித்தனம், பேச்சு மற்றும் வியாபாரத்தின் காரணியான புதன், தற்போது அஸ்தமன நிலையில் பயணித்து வருகிறார்.

பலவீனமான நிலையில் இருக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>ஜோதிடத்தில் புத்திசாலித்தனம், பேச்சு மற்றும் வியாபாரத்தின் காரணியான புதன், தற்போது அஸ்தமன நிலையில் பயணித்து வருகிறார்.
</p><p>
பலவீனமான நிலையில் இருக்கும் புதனின் இந்த அமைப்பு செப்டம்பர் 18 வரை நீடிக்கும். </p><p>இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில குறிப்பிட்ட ராசிக்காரர்கள் இக்காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
</p><p>
அவ்வாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் எவை என்று இந்த பதிவில் காண்போம்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>மேஷம்</td><td><ol><li>புதன் அஸ்தமன நிலையில் இருப்பதால் மேஷ ராசிக்காரர்கள் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். </li><li>அலுவகலத்தில் உங்களின் வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்படலாம். </li><li>நிறைய வாக்குவாதங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. </li><li>வேலையில் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும்.</li><li> இது தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும்.</li><li> இக்காலத்தில் தொழிலில் எந்த ஒரு முக்கியமான முடிவுகளையும் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. </li><li>குறிப்பாக எந்த ஒரு விஷயத்தை மேற்கொள்ளும் போதும் கவனமாக இருக்க வேண்டும்.&nbsp;&nbsp;&nbsp;</li></ol></td></tr><tr><td>கன்னி </td><td><ol><li>புதன் அஸ்தமன நிலையில் இருப்பதால் கன்னி ராசிக்காரர்கள் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். </li><li>எந்த நிதி பரிவர்த்தனைகளையும் இக்காலத்தில் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். </li><li>பெரிய முதலீடுகள் எதையும் அவசரப்பட்டு செய்வதைத் தவிர்க்க வேண்டும். </li><li>வணிகர்கள் ஒப்பந்தங்களில் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். </li><li>ஆவணங்களை படிக்காமல் கையெழுத்திடுவதைத் தவிர்க்க வேண்டும். </li><li>மொத்தத்தில் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.&nbsp;&nbsp;</li></ol></td></tr><tr><td>சிம்மம்</td><td><ol><li>புதன் அஸ்தமன நிலையில் இருப்பதால் சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் தொழில் மற்றும் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.</li><li> பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் அல்லது உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. </li><li>இக்காலத்தில் உங்களுக்கு எதிராக மற்றவர்கள் செயல்படலாம்.</li><li> எனவே அப்போது உடனடியாக அவசரப்பட்டு எதையும் செய்யாமல் அமைதியாக இருக்க வேண்டும். </li><li>அலுவலகத்தில் தகராறுகளை பெரிதாக்கவோ அல்லது கவனக்குறைவாகவோ முடிவெடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.&nbsp;&nbsp;</li></ol></td></tr></tbody></table><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-21T20:15:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்லேகம ஹேமரத்தின தேரருக்கு VIP நுழைவாயில்! நீதிமன்றத்தில் சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pallegama-hemaratne-thero-vip-law-and-order-1787334180"></link>
            <id>https://tamilwin.com/article/pallegama-hemaratne-thero-vip-law-and-order-1787334180</id>
            <summary type="text">முன்னாள் அத்தமஸ்தானதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர், குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பான ஒரு வழக்கில் இன்றையதினம்(21) நீதிமன்றத்திற்கு சென்ற போது அவர் எந்தவிதமான...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அத்தமஸ்தானதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர், குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பான ஒரு வழக்கில் இன்றையதினம்(21) நீதிமன்றத்திற்கு சென்ற போது அவர் எந்தவிதமான பரிசோதனைக்கும் உட்படுத்தப்படாமல் சென்ற விடயம் பேசுபொருளாக மாறியுள்ளது.</p><p>பல்லேகம ஹேமரத்தன தேரர் தனது சட்டத்தரணியின் காரில் நீதிமன்ற வளாகத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்தநிலையிலே,&nbsp;பல்லேகம ஹேமரத்ன தேரர் மாத்திரம் எப்படி பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் நேரடியாக நீதிமன்றத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.</p><p>அத்தோடு, நீதிபதியின் நுழைவாயில் ஊடாக செல்வதற்கு சந்தேகநபரான&nbsp;பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு யார் சிறப்புரிமை வழங்கியது என்பது தொடர்பில் விசாரிக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/DbqlkAYMDWI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T20:05:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றத்தில் அர்ச்சுனாவின் இறுதி உரை ; அரசியல் விமர்சனத்துடன் பகிரங்க மன்னிப்பு கோரினார் அர்ச்சுனா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/archuna-apologizes-publicly-political-criticism-1787341600"></link>
            <id>https://jvpnews.com/article/archuna-apologizes-publicly-political-criticism-1787341600</id>
            <summary type="text">நாடாளுமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த மற்றும் நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக்கு வராமல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த மற்றும் நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக்கு வராமல் தட்டிகழிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
</p><p>
மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்வாகி வந்தவர்கள் தங்கள் கடமையைச் சரியாகச் செய்யத் தவறுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இன்று நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய இறுதி உரையின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c8d697c-67e0-400a-9312-f1781c1cd78b/26-6a88ab2252955.webp' /></p><p>அத்துடன், 2021 ஆம் ஆண்டில் X-Press Pearl கப்பல் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றி எரிந்ததால் நாட்டின் கடல் சூழலியலுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
மேலும், இந்த நாட்டிற்குச் சட்டப்பூர்வமாகக் கிடைக்க வேண்டிய பில்லியன் கணக்கிலான அமெரிக்க டொலர் இழப்பீட்டுத் தொகை, அதிகாரத் தரப்பினரின் முறையற்ற தலையீடுகள் காரணமாக மிகக் குறைந்த தொகையாகக் குறைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதுவே நாடாளுமன்றத்தில் ஆற்றும் கடைசி உரையாக இருக்கலாம் எனக் குறிப்பிட்ட அவர், சபை நடவடிக்கைகளின் போது அல்லது தமது பேச்சினால் யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் அல்லது அவையின் கண்ணியத்திற்கு ஏதேனும் பங்கம் ஏற்பட்டிருந்தால், அதற்குச் சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களிடமும் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்தார்.</p><p>

தமிழ் மக்களின் பிரதிநிதித்துவமும் சட்ட நடவடிக்கைக்கான கோரிக்கையும்
கடந்த காலப் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உண்மையான குரலாகத் தாம் நாடாளுமன்றத்தில் இயங்குவதாகக் குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தகுந்த நீதியும் நிவாரணமும் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
</p><p>
அத்துடன், நாட்டின் பொருளாதார சீரழிவு மற்றும் சட்ட விரோதச் செயல்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T19:46:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றில் முதன்முறையாக பாகிஸ்தானுக்கு செல்லும் இலங்கை அன்னாசிப்பழங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-pineapples-exported-pakistan-first-time-1787340984"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-pineapples-exported-pakistan-first-time-1787340984</id>
            <summary type="text">இலங்கையின் அன்னாசிப்பழங்களை முதன்முறையாக பாகிஸ்தான் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கான பொதியிடும் பணிகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கை ஏற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் அன்னாசிப்பழங்களை முதன்முறையாக பாகிஸ்தான் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கான பொதியிடும் பணிகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p>

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, பாகிஸ்தானிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் உள்ளிட்ட பல பிரிவுகளின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25d32500-a0a4-480b-b54d-bfdd64c9aeac/26-6a88a8ba6cb07.webp' /></p><p>பாகிஸ்தானில் அன்னாசிப்பழங்களுக்கு மிகப்பெரிய சந்தை வாய்ப்பு நிலவுவதுடன், அவர்கள் ஆண்டிற்கு சுமார் 10 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அன்னாசிப்பழங்களை இறக்குமதி செய்கின்றனர்.</p><p>

தற்போது தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் மட்டுமே பாகிஸ்தானுக்கு அன்னாசிப்பழங்களை ஏற்றுமதி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T19:40:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மன் வனப்பகுதி ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள்: ரஷ்யா மீது சந்தேகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/gun-stash-in-german-forest-1787341123"></link>
            <id>https://news.lankasri.com/article/gun-stash-in-german-forest-1787341123</id>
            <summary type="text">Gun stash in German forest: ஜேர்மன் வனப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களுக்கும் ரஷ்யாவுக்கும் தொடர்பு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
பெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Gun stash in German forest: ஜேர்மன் வனப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களுக்கும் ரஷ்யாவுக்கும் தொடர்பு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
</p><p>பெர்லினுக்கு அருகிலுள்ள வனப்பகுதி ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதக் குவியல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக, ருமேனியாவைச் சேர்ந்த ஒரு சந்தேக நபரை விசாரிக்க ஜேர்மன் அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.</p><h2>வன்முறைச் செயலுக்கு</h2><p> </p><p>
இந்த ஆயுதக் குவியல் ரஷ்ய உளவுத்துறையுடன் தொடர்புடையது என ஜேர்மானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லைப்சிக் விமான நிலையத்தில் வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற ட்ரோன் ஒன்றை ஜேர்மானிய அதிகாரிகள் கண்டுபிடித்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு, </p><p>தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் ஒரு கடுமையான வன்முறைச் செயலுக்குத் தயாராவதாகச் சந்தேகிக்கப்படும் ரகசியத் துப்பாக்கிக் குவியல் தொடர்பாக ஃபெடரல் சட்டத்தரணிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளதை உள்விவகார அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரின்ட் உறுதிப்படுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/756a0c6b-c9ad-4c93-9d79-17653ba923c5/26-6a88a9461f915.webp' /></p><p> </p><p>மேலும், லைப்சிக் சம்பவத்தைப் போலவே, இதில் வெளிநாட்டு சக்திகளின் ஈடுபாடு இருப்பதை நிராகரிக்க முடியாது என்றும் டோப்ரின்ட் கூறியுள்ளார்.</p><p>
முன்னதாக, உள்நாட்டு உளவு அமைப்பின் முகவர்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஜேர்மன் தலைநகருக்கு வெளியே உள்ள ஒரு வனப்பகுதியில் அதிகாரிகள் சுமார் ஓராண்டுக்கு முன்பு இரண்டு கைத்துப்பாக்கிகளையும் வெடிமருந்துப் பொருட்களையும் கண்டெடுத்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
</p><p>டெர் ஸ்பீகல் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்திகளின் அடிப்படையில், ரஷ்ய உளவுத்துறை ஜேர்மன் மண்ணில் படுகொலைகளைத் திட்டமிட்டு வருவதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், இந்தக் கண்டுபிடிப்பு நாட்டின் பாதுகாப்பு மற்றும் இரகசிய விசாரணைகளின் மையமாக இருந்து வருகிறது.</p><p></p><p> </p><p>மேலும், பல மாதங்களாக நீடித்த மின்னணு கண்காணிப்பு நடவடிக்கையின் போது தடயங்கள் கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், ஜேர்மானிய அதிகாரிகள் அந்த ஆயுதங்களை அகற்றுவதற்குப் பதிலாக, அவற்றைச் செயலிழக்கச் செய்து அதே இடத்தில் விட்டுவிட்டனர்.</p><h2>சாத்தியமான தொடர்புகள்</h2><p> </p><p>இதனிடையே, ஆயுதங்களைச் சேகரிக்க யாரும் முயற்சி செய்வதாகத் தெரியாததால், அந்த உளவாளி அல்லது உளவாளிகள் ஆயுதக் குவியல் கண்டுபிடிக்கப்பட்டதை அறிந்து கொண்டதாகவும், அந்த திட்டம் தற்போது செயலிழந்துவிட்டதாகவும் விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனர். </p><p>இந்த விவகாரத்தில் தற்போது ருமேனியாவைச் சேர்ந்த ஒருவரை விசாரிக்க முடிவு செய்துள்ளதாகவும் டோப்ரின்ட் கூறியுள்ளார். இந்த நிலையில், ஆயுதக் குவியலுக்கும் உக்ரைனின் தளவாடப் போக்குவரத்துப் பாதைகளுக்கு எதிரான நாசவேலை நடவடிக்கைக்கு ரஷ்யா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதற்கும் உள்ள சாத்தியமான தொடர்புகள் குறித்து ஜேர்மானிய அதிகாரிகள் விசாரித்து வருவதாக ஸ்பீகல் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. </p><p>பிப்ரவரி 2022-ல் ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதிலிருந்து, உக்ரைன் இராணுவப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கான மாற்று இடமாக லைப்சிக் விமான நிலையத்தைப் பயன்படுத்தி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52a657c0-e8e2-44e6-927e-8953bfb217d0/26-6a88a9456966e.webp' /></p><p> </p><p>இந்த மாதம், ஜேர்மானிய ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான டோனாஸ்டாலின் தலைவர் ஸ்டெஃபான் துமானுக்கு எதிராக ரஷ்ய உளவுத்துறை தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி வருவதாக ஜேர்மானிய செய்தித்தாளான டை ஸைட் செய்தி வெளியிட்டது. </p><p>கடந்த ஆண்டு இறுதியில் ஒரு வெளிநாட்டு உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில், ஜேர்மானிய அதிகாரிகள் இந்த வசந்த காலத்தில் ஒரு உக்ரேனிய ஆணையும் ஒரு ருமேனியப் பெண்ணையும் கைது செய்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T19:36:14+00:00</updated>
        </entry>
    </feed>
