<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-28T19:22:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அடுத்தமாதம் இலங்கை வருகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imf-representatives-to-visit-sri-lanka-next-month-1787943985"></link>
            <id>https://tamilwin.com/article/imf-representatives-to-visit-sri-lanka-next-month-1787943985</id>
            <summary type="text">சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிதியுதவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிதியுதவித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தைச் சரிபார்க்கும் நோக்கில், சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஆகு) பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த மாதம் இறுதியில் நாட்டிற்கு வருகைதரவுள்ளது.
</p><p>
இலங்கை தொடர்பில் வகையில் மேற்கொள்ளவுள்ள ஏழாவது மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காகவே சர்வதேச நாணயத்தின் பிரதிநிதிகள் குழு வருகை தரவுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.</p><h2>பொருளாதார நெருக்கடி</h2><p>

குறித்த மதிப்பீட்டு செயற்பாடுகள் நிறைவடைந்த பின்னர், அடுத்த தவணைக் கடன் வசதியாக மேலும் சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர் தொகை இலங்கைக்குக் கிடைக்கவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fa17f37-82fd-452a-b992-4e6d0cbd5649/26-6a91dc3369399.webp' /></p><p>
சர்வதேச நாணய நிதியம் இதுவரை இலங்கைக்கு வழங்கியுள்ள நிதியுதவித் திட்டத்தின் கீழ், இலங்கை ஆறு மதிப்பீடுகளை நிறைவு செய்துள்ளதுடன், அதனடிப்படையில் நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ள மொத்த நிதி சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.</p><p>

நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நான்கு வருட காலப்பகுதிக்கு தவணை முறையில் கிடைக்கும் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியை இலங்கைக்கு வழங்க சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம் வழங்கியிருந்தது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T19:15:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் பயங்கரத் தீ விபத்து! 5 வாகனங்கள் முற்றிலும் சேதம் – தீவிர விசாரணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/the-car-exploded-5-vehicles-damaged-in-northeast-1787935049"></link>
            <id>https://canadamirror.com/article/the-car-exploded-5-vehicles-damaged-in-northeast-1787935049</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் கால்கரி நகரிலுள்ள &#039;சிட்டிஸ்கேப்&#039; பகுதியில் அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் ஐந்து வாகனங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
அதிகாலை 2 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் கால்கரி நகரிலுள்ள 'சிட்டிஸ்கேப்' பகுதியில் அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் ஐந்து வாகனங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
</p><p>அதிகாலை 2 மணியளவில் 'சிட்டிலைன் காமன் பகுதியில் தீப்பற்றி எரிவதாகக் கிடைத்த தகவலை அடுத்து, கால்கரி காவல்துறையும் தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தீயணைப்புக் குழுவினர் தீயைக் கட்டுப்படுத்தி, விசாரணையைத் தொடங்குவதற்காக அப்பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக மூடப்பட்டது.</p><p> 
சேதமடைந்த நான்கு வாகனங்கள் கபேன் மூலமாக அகற்றப்பட்ட நிலையில், கடுமையாக எரிந்த வெள்ளை நிற வேன் ஒன்று சம்பவ இடத்திலேயே நிறுத்தப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ca21d11-0f71-455a-9cfa-b5d7285ba74a/26-6a91b94ad96d6.webp' /></p><p>
</p><p>சம்பவ இடத்திற்கு அருகில் வசிக்கும் லக் சாது என்பவர் கூறுகையில், நள்ளிரவில் கேட்ட பலத்த சத்தம் ஏதோ வாகன விபத்தினால் ஏற்பட்டது என்று முதலில் நினைத்ததாகத் தெரிவித்தார்.
</p><p>இந்தப் பகுதி முழுவதும் தீப்பற்றி எரிந்தது. கார் வெடித்துச் சிதறியது போல் இருந்தது என குறிப்பிட்டார்.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>இது திட்டமிட்டு வைக்கப்பட்ட தீயா என்பதை ஆராயக் கால்கரி காவல்துறையின் 'தீவைப்புப் பிரிவு' விசாரணைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.</p><p> 
எனினும், தீ விபத்துக்கான சரியான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T19:00:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதல் செயலாளர் மற்றும் கிழக்கு ஆளுநர் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eastern-governor-meets-indian-official-1787943441"></link>
            <id>https://tamilwin.com/article/eastern-governor-meets-indian-official-1787943441</id>
            <summary type="text">இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் முதல் செயலாளர் (கல்வி)&amp;nbsp; சந்தீப் சௌத்ரிக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவுக்கும் இடையில் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் முதல் செயலாளர் (கல்வி)&nbsp; சந்தீப் சௌத்ரிக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.</p><p>குறித்த சந்திப்பானது நேற்று(28) திருகோணமலையில் உள்ள கிழக்கு
மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.</p><h2>உதவித்தொகை</h2><p>

கிழக்கு மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு இந்திய
அரசு தொடர்ந்து வழங்கிவரும் கல்வி உதவித்தொகைக்கு ஆளுநர் தனது நன்றியைத்
தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae111d78-cacd-45c7-bb12-f1a434d278d1/26-6a91da141478f.webp' /></p><p>

கிழக்கு மாகாணத்தின் அரச ஊழியர்களுக்குத் தேவையான கல்விப் பயிற்சியை
வழங்குவதில் இந்திய அரசு ஆதரவளிக்க முடியும் என்று திரு. சந்தீப் சௌத்ரி இதன்
போது குறிப்பிட்டார்.</p>]]></content>
            <updated>2026-08-28T18:57:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[469 ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை.. நேபாளத்தில் திடீரென இடைநிறுத்தப்பட்ட மீட்பு பணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dam-tibet-broken-threatening-another-major-flood-1787942588"></link>
            <id>https://tamilwin.com/article/dam-tibet-broken-threatening-another-major-flood-1787942588</id>
            <summary type="text">நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கும் பணிகள் திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளன.&amp;nbsp;&amp;nbsp;சீனா - நேபாள எல்லையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீர் வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கும் பணிகள் திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p>சீனா - நேபாள எல்லையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 469 ஆக அதிகரித்துள்ளது. 1,468 பேர் மாயமாகியுள்ளனர்.
</p><p>
உள்நாட்டு மக்கள் மற்றும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் மாயமாகியுள்ள நிலையில், நேபாள மற்றும் பொலிஸார், இராணுவம் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தன.&nbsp;</p><h2>தற்காலிக&nbsp;நிறுத்தம்&nbsp;</h2><p>
</p><p>இதற்கிடையில், திபெத் பக்கத்தில் உள்ள கியிராங் எல்லைத் துறைமுகத்திற்கு மேலே உள்ள ஒரு நீர்த்தேக்க அணை ஒன்று உடைந்துள்ளதாக நேபாள பொலிஸார் அறிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5e27d08-669f-4f81-9839-4d661275704c/26-6a91d7d789c33.webp' /></p><p> </p><p>

மேலும், "மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அனைத்துப் பாதுகாப்புப் பணியாளர்கள், மீட்புப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும், உடனடியாகப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
இதே போல், சீனாவும் மீண்டும் பாரிய வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் மீட்பு பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. 

வெள்ள அச்சம் காரணமாக உள்ளூர் மக்கள் மலை மீது விரைந்து ஏறி வருவதாக செ்யதிகள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T18:52:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவ்வந்தியிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்ய கொழும்பு குற்றப்பரிவுக்கு அனுமதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-permission-to-statement-from-sevvanthi-1787941817"></link>
            <id>https://ibctamil.com/article/court-permission-to-statement-from-sevvanthi-1787941817</id>
            <summary type="text">பாதாள உலக குற்றவாளி கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பாக, தற்போது அங்குனுகொல பெலஸ்ஸ சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலக குற்றவாளி கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பாக, தற்போது அங்குனுகொல பெலஸ்ஸ சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்கு, கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றிடம் அனுமதி கோரியுள்ளது.
</p><p>
</p><p>இந்த சம்பவம் தொடர்பாக ஒரு மனுவைத் தாக்கல் செய்வதன் மூலம் இன்றையதினம் கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். பொதரகமவிடம் கொழும்பு குற்றப்பிரிவு தெரியப்படுத்தியுள்ளது.</p><p>
இந்த சம்பவத்தை நீதிமன்றத்திற்கு மேலும் விளக்கிய விசாரணை அதிகாரிகள், கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பாக சந்தேக நபரிடமிருந்து வாக்குமூலம் பெற வேண்டியுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p><h2>நீதிமன்றின் உத்தரவு</h2><p>
</p><p>
அதன்படி, அடுத்த இரண்டு நாட்களுக்கு அங்குனுகொல பெலஸ்ஸ சிறைக்குச் சென்று வாக்குமூலம் பெறுவதற்கு அனுமதி வழங்குமாறு கொழும்பு குற்றப்பிரிவு மேலும் நீதிமன்றத்தைக் கோரியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71d4475d-f677-488f-ac16-4d3fac96463a/26-6a91d5c437926.webp' /></p><p>
</p><p>
அத்தோடு, இது தொடர்பில் சிறை கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்குமாறும் கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்தை கோரியுள்ளது.
</p><p>
அதன்படி, நீதிபதி, முன்வைக்கப்பட்ட உண்மைகளைப் பரிசீலித்த பின்னர், அந்தக் கோரிக்கைக்கு இணங்க ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.</p><p></p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table></h5>]]></content>
            <updated>2026-08-28T18:39:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிரடிப்படையினரிடம் சிக்கிய கடத்தல்காரர் ; கட்டுக்கட்டாக மீட்கப்பட்ட பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/smuggler-arrested-by-special-task-force-1787941725"></link>
            <id>https://jvpnews.com/article/smuggler-arrested-by-special-task-force-1787941725</id>
            <summary type="text">பெருமளவிலான கேரள கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுவந்த முக்கிய சந்தேக நபர் ஒருவர், 16 கிலோகிராம் கேரள கஞ்சா மற்றும் 9 இலட்சத்துக்கும் அதிகமான பணத்தொகையுடன் பொல...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பெருமளவிலான கேரள கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுவந்த முக்கிய சந்தேக நபர் ஒருவர், 16 கிலோகிராம் கேரள கஞ்சா மற்றும் 9 இலட்சத்துக்கும் அதிகமான பணத்தொகையுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேட நடவடிக்கை பிரிவு Iஇன் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று வியாழக்கிழமை (27) கொஸ்வத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹடவில - பொத்துவட்டன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே இச்சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3eced449-65c8-4252-9e15-3a390fa858e1/26-6a91d35f37fb4.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்டவர் கஹடவில, பொத்துவட்டன பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய நபர் ஆவார்.
</p><p style="text-align: justify; ">
16 கிலோகிராம் கேரள கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் உழைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 9 இலட்சத்துக்கும் அதிகமான ரொக்கப் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; ">
இது தொடர்பில் கொஸ்வத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-28T18:29:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய் - மனைவி - சகோதரியின் புகைப்படங்களுக்கே பாதுகாப்பில்லை! இலங்கையில் வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி உண்மை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/women-security-in-sri-lanka-facebook-group-1787936451"></link>
            <id>https://tamilwin.com/article/women-security-in-sri-lanka-facebook-group-1787936451</id>
            <summary type="text">பெண்கள் மற்றும் குழந்தைகளின் அந்தரங்க புகைப்படங்களை கொண்டு வியாபாரம் செய்யும் வகையில் நடத்தப்பட்ட முகப்புத்தக குழு தொடர்பில் பல தகவல்கள் அம்பலமாகியுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண்கள் மற்றும் குழந்தைகளின் அந்தரங்க புகைப்படங்களை கொண்டு வியாபாரம் செய்யும் வகையில் நடத்தப்பட்ட முகப்புத்தக குழு தொடர்பில் பல தகவல்கள் அம்பலமாகியுள்ளன.&nbsp;</p><p>குறித்த முகப்புத்தக குழுவில் ஆயிரக்கணக்கான நபர்கள் இணைந்திருப்பமை தெரிய வந்துள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில், அக்குழுவில் உள்ள நபர்கள், தனது தாய், மனைவி, சகோதரி, குழந்தை என பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை விற்பனை செய்துள்ளனர்.&nbsp;</p><p>மிக மிலேச்சத்தனமான இந்த செயற்பாடுகள் தொடர்பில் அம்பலப்படுத்தப்பட்டு பின்னர், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இதன்படி, இவ்வாறு புகைப்படங்களை கொண்டு முகப்புத்தக குழு ஒன்றை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>முகம் சுளிக்க வைக்கும் இச்செயல் தொடர்பில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/qWA9SgtNsTs" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T18:11:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.பருத்தித்துறையில் இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி போராட்டம்: விடுக்கப்பட்டுள்ள அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/removal-of-army-camps-protest-point-pedro-1787937718"></link>
            <id>https://tamilwin.com/article/removal-of-army-camps-protest-point-pedro-1787937718</id>
            <summary type="text">பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற
வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில்
நடாத்தப்பட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற
வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில்
நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் சகலரும் பங்கேற்குமாறு பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல்
பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
</p><p>இன்று (28) ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும்
தெரிவிக்கையில், பருத்தித்துறை நகரத்தின் அபிவிருத்திக்கு தடையாகவும், எமது
நகரத்தின் புராதன சின்னங்கள் / இடங்களை ஆக்கிரமித்தும் உள்ள இராணுவ முகாம்களை
அகற்ற கோரி எமது சபையினால் இரண்டாவது கவனயீர்ப்பு போராட்டம் வரும் செப்டெம்பர்
11 ஆம் திகதி பருத்தித்துறையில் பாரிய போராட்டப் பேரணி
நடாத்தப்பட உள்ளது.</p><p></p><h2>கண்டனப் பேரணி</h2><p>

பருத்தித்துறை துறைமுக சந்தியில் இருந்து அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு
கண்டனப் பேரணி ஆரம்பித்து பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை இடம்பெறும்
இப்போராட்டத்தில் அரசியல், கட்சி வேறுபாடுகள் கடந்து சகல அரசியல் தரப்பினரும்,
வர்த்தகர்கள், மரக்கறி, மீன் வியாபாரிகள், கடற்றொழில் சங்கத்தினர் உள்ளிட்ட
பொது அமைப்புகள், சமூகமட்ட அமைப்புகளும் பங்கேற்று ஆதரவு வழங்குமாறு கேட்டுக்
கொள்கின்றேன் எனக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb3f0f91-18ca-43ca-9c73-5ab0adaae875/26-6a91cba4133c1.webp' /></p><p>இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தும் இந்தப் போராட்டத்திற்கு பருத்தித்துறை
நகரசபையில் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவாகியுள்ள
உறுப்பினர்கள் தவிர்த்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழரசு கட்சி,
ஜனநாயக தேசிய கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாய கட்சி மற்றும் சுயேட்சை(ஊசி) குழு
ஆகியன முழுமையான ஆதரவினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T18:09:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடகங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு! தமிழ்நாடு இளைஞனை கைது செய்த NIA]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ltt-support-nia-arrests-tamil-nadu-youth-1787927150"></link>
            <id>https://ibctamil.com/article/ltt-support-nia-arrests-tamil-nadu-youth-1787927150</id>
            <summary type="text">தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) மற்றும் தமிழ்நாடு விடுதலை இராணுவம் (TNLA) ஆகியவற்றின் சித்தாந்தங்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பியதாகக் கூறப்படும் குற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) மற்றும் தமிழ்நாடு விடுதலை இராணுவம் (TNLA) ஆகியவற்றின் சித்தாந்தங்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இந்தியாவில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இது குறித்து தமிழ்நாடு திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த ஒருவர் மீது இந்திய தேசிய புலனாய்வு முகமை (NIA) வழக்குப் பதிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
குற்றம் சாட்டப்பட்டவர், தமிழ்நாடு மற்றும் வடக்கு இலங்கையை உள்ளடக்கிய ஒரு இறையாண்மை கொண்ட தமிழ் தேசத்தை உருவாக்க அழைப்பு விடுத்திருந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
</p><p></p><h2>பயங்கரவாத எதிர்ப்பு&nbsp;</h2><p>
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தீவிரமயமாக்கல் எதிர்ப்புப் பிரிவு (CTCR) சட்டங்களின் மூலம் அவர் கைதுசெய்யப்பட்ட நிலையில், இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) வழங்கிய வழிகாட்டுதல்களின் பேரில் தேசிய புலனாய்வு முகமை (NIA) இந்த விசாரணையை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cb36b58-a018-4b58-9c07-06f73fa1174f/26-6a919a707ceb1.webp' /></p><p>

குற்றம் சாட்டப்பட்டவர், விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ்நாடு விடுதலை இராணுவத்திற்கு ஆதரவான உள்ளடக்கங்களை இன்ஸ்டாகிராம் கணக்குகள் மற்றும் ஒரு முகநூல் பக்கத்தில் பரப்பி வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.</p><p> 

மேலும், தடைசெய்யப்பட்ட தமிழ்நாடு விடுதலை இராணுவத்திற்குப் புத்துயிர் அளிக்கும் நோக்கில் பிரிவினைவாத சித்தாந்தத்தை அந்தக் கணக்குகள் பரப்பியதாகவும், அந்தப் பதிவுகள் மூலம் 'தமிழ்நாடு இளைஞர் அமைப்பு' என்ற புதிய அமைப்பை நிறுவ முயன்றதாகவும் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.</p><p>

தமிழக காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்ற முடிவு செய்தது. </p><p>

இந்த வழக்கு, இளைஞர்களைத் தவறாக வழிநடத்தி, அவர்களைப் பிரிவினைவாதத்தின் பக்கம் மூளைச்சலவை செய்வதுடன், தேசியப் பாதுகாப்பிற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பரந்த சதித்திட்டம் தொடர்பானது என்று மத்திய அரசு குறிப்பிட்ட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T18:08:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல்: கனடாவில் முக்கிய சூத்திரதாரி கைது !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadian-charged-in-drug-trafficking-1787934429"></link>
            <id>https://canadamirror.com/article/canadian-charged-in-drug-trafficking-1787934429</id>
            <summary type="text">சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் தொடர்புடைய 24 வயது கனடிய இளைஞர் ஒருவரை வாட்டர்லூ பிராந்திய காவல்துறை கைது செய்துள்ளது.
ஒன்டாரியோவின் கேம்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் தொடர்புடைய 24 வயது கனடிய இளைஞர் ஒருவரை வாட்டர்லூ பிராந்திய காவல்துறை கைது செய்துள்ளது.
</p><p>ஒன்டாரியோவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஒரு வீட்டில் வைத்து ஆகஸ்ட் 26 அன்று இவர் கைது செய்யப்பட்டார்.</p><p>
இவர் மீது கொக்கைன் போதைப்பொருளை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்தல் மற்றும் சதித்திட்டம் தீட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c70de98-8af7-4afc-aa2b-d291c3fb01b1/26-6a91b6df8befa.webp' /></p><p>
</p><p>கைது செய்யப்பட்ட நபரின் பெயரைப் போலீசார் வெளியிடவில்லை என்றாலும், போதைப்பொருள் கடத்தல் கும்பலில் அவர் முக்கியப் பங்காற்றியதாகத் தெரிவித்துள்ளனர்.</p><p>
கடந்த செப்டம்பர் 2025-இல், கேம்பிரிட்ஜைச் சேர்ந்த 19 வயதான ஜேட் என்ற பெண் ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் 25 கிலோ கொக்கைனுடன் பிடிபட்டார்.
கனடாவின் பியர்சன் விமான நிலையத்தின் சோதனைகளில் சிக்காமல் கொண்டு செல்லப்பட்ட இந்தப் போதைப்பொருள், ஹாங்காங் சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
</p><p>நான்கு மாத காலத்தில் ஹாங்காங்கில் பிடிபட்ட 4 கனடியர்களில் ஜேடும் ஒருவர். இவர்களிடம் இருந்து மொத்தம் சுமார் 100 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது.
</p><p>சர்வதேச பொதிகள் அனுப்புபவர் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
ஒரு பயணத்திற்கு 5,000 டொலர் சம்பளம் மற்றும் இலவச விமானக் கட்டணம், தங்குமிடம் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>தங்களுக்குத் தெரியாமலேயே நகை அல்லது பிற பொருட்கள் என நம்ப வைக்கப்பட்டு போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகப் பிடிபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T18:03:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மது மற்றும் போதைப்பொருள் பாவிப்போரின் கவனத்திற்கு ; மிரளவைக்கும் தரவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/attention-to-alcohol-and-drug-users-1787939651"></link>
            <id>https://jvpnews.com/article/attention-to-alcohol-and-drug-users-1787939651</id>
            <summary type="text">போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனை காரணமாக இலங்கையில் நாளொன்றுக்கு 80 முதல் 100 பேர் வரை உயிரிழப்பதாக ராஜரட்ட பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு அறிவியல் பீட...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனை காரணமாக இலங்கையில் நாளொன்றுக்கு 80 முதல் 100 பேர் வரை உயிரிழப்பதாக ராஜரட்ட பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு அறிவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி மனோஜ் பெர்னாண்டோ தெரிவித்தார். </p><p>

முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டின் கீழ், நச்சுப் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் அது தொடர்பான கல்வி குறித்த விழிப்புணர்வு ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (28) நடைபெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/460e4cf8-c59f-4e09-949f-3a2afab6c88d/26-6a91cb4547c61.webp' /></p><h2>சட்டவிரோத போதைப்பொருள்</h2><p> 

இத்தகைய எண்ணிக்கையிலான மரணங்கள் நாளாந்தம் ஏற்படுவதற்கு வேறு தனிப்பட்ட காரணங்கள் எதுவும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். </p><p>

அத்துடன், நாட்டில் அதிகளவான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் காரணியாக புகைப்பிடித்தல் விளங்குவதாகக் குறிப்பிட்ட அவர், மதுபானப் பாவனையினால் மாத்திரம் நாளொன்றுக்கு 10 முதல் 15 மரணங்கள் வரை பதிவாவதாகவும் தெரிவித்தார்.</p><p></p><p> 

சட்டவிரோத போதைப்பொருள் பாவனையும் தற்போது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதற்கு பிரதான ஆரம்பப் புள்ளியாக சட்டப்பூர்வமான போதைப்பொருட்களே அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். </p><p>இதற்கமைய, ஹெரோயின் பாவிக்கும் நபர் ஒருவர் அதற்கு முன்னர் புகைப்பிடிப்பதற்கு அடிமையாகியிருந்ததாகவும், கஞ்சா பாவிப்பவரும் அதற்கு முன்னர் புகைப்பிடித்தலுக்கு அடிமையாகியிருந்தவரே எனவும் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இதற்கான சான்றுகளும் தரவுகளும் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T17:54:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுக்கங்காட்டிற்கு தீ வைத்த விஷமிகள்! கட்டுப்படுத்த களமிறக்கப்பட்ட இராணுவத்தினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/forest-fire-in-jaffna-1787938616"></link>
            <id>https://ibctamil.com/article/forest-fire-in-jaffna-1787938616</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணக்காட்டில் உள்ள சமூக காடான சவுக்கங்காட்டிற்கு விஷமிகளால் வைக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 10 ஏக்கருக்கு மேற்பட்ட பகுதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணக்காட்டில் உள்ள சமூக காடான சவுக்கங்காட்டிற்கு விஷமிகளால் வைக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 10 ஏக்கருக்கு மேற்பட்ட பகுதி தீயில் ஏரிந்து நாசமாகியுள்ளது.</p><p>

குறித்த பகுதிக்கு இன்று மதியம் 12 மணியளவில் விசமிகளால் தீவைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
</p><p>
அதன்போது, சம்பவ இடத்துக்குச் சென்ற வட்டார பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் குறித்த விடயம் தொடர்பில் பிரதேச சபை, பிரதேச செயலகங்கள், காவல்துறை, இராணுவம் உட்பட பலருக்கும் அறிவித்திருந்திருந்தார்.</p><p></p><h2>இராணுவத்தினரின் வருகை&nbsp;</h2><p>
</p><p>
அதனை தொடர்ந்து, பிற்பகல் 5:15 மணிக்கு பின்னரே மருதங்கணியிலிருந்து இராணுவத்தினர் சுமார் 30 பேர் வரை வருகை தந்து தீயை கட்டுப்படுத்துவதற்கு மனிதவலு மூலம் நடவடிக்கைகளை எடுத்திருந்தாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d6e3d40-005e-4008-95dc-cdde0184e6d8/26-6a91c739ec9e7.webp' /></p><p>

சம்பவத்தின் போது, குறித்த இடத்திற்கு மருதங்கேணி காவல் நிலைய பொறுப்பதிகாரியும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T17:43:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு மாணவர் இன்டர்ன்ஷிப் மீது டிரம்ப் நிர்வாகம் கடும் கட்டுப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-restricts-foreign-student-internships-1787938747"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-restricts-foreign-student-internships-1787938747</id>
            <summary type="text">Trump restricts foreign student internships: வெளிநாட்டு மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப்பில் கடுமையானா கட்டுப்பாடுகளை டிரம்ப் கொண்டுவருகிறார்.

டிரம்ப் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump restricts foreign student internships: வெளிநாட்டு மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப்பில் கடுமையானா கட்டுப்பாடுகளை டிரம்ப் கொண்டுவருகிறார்.</p><p>

டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் வெளிநாட்டு மாணவர்களின் Curricular Practical Training (CPT) அனுமதிகளை கடுமையாக கட்டுப்படுத்தும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dc53d9c-55be-4959-bad3-a3d21b0cf7c1/26-6a91c7bd2e265.webp' /></p><p>

CPT என்பது வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் பாடத்திட்டத்துடன் தொடர்புடைய இன்டர்ன்ஷிப் அல்லது பயிற்சிகளை மேற்கொள்ள அனுமதிக்கும் திட்டமாகும்.</p><h2>புதிய வழிகாட்டுதல்</h2><p> ஆனால், சமீபத்தில் பல CPT அனுமதிகள் விதிகளை மீறுவதாக கண்டறியப்பட்டதால், US Immigration and Customs Enforcement (ICE) உட்பட்ட Student and Exchange Visitor Program (SEVP) ஆகஸ்ட் 24-ஆம் திகதி புதிய வழிகாட்டுதலை வெளியிட்டது.
</p><p>
அதில், CPT அனுமதி பெறும் பயிற்சிகள் பாடத்திட்டத்துடன் நேரடியாக இணைந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. விதிகளை பின்பற்றாத பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கும் சான்றிதழை இழக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. </p><p></p><p>இதனால், UCLA மற்றும் UC Berkeley போன்ற பல்கலைக்கழகங்கள் சில CPT விண்ணப்பங்களை தற்காலிகமாக நிறுத்தி ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளன.</p><p> UC Berkeley, புதிய அறிவிப்பு முந்தையதை விடக் கடுமையானதாக இருப்பதாகவும், சில இன்டர்ன்ஷிப் அனுமதிகளை இனி வழங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
</p><p>
அமெரிக்க உள்துறை அமைச்சகம், “விதிகளில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், டிரம்ப் நிர்வாகத்தில் இந்த திட்டத்தின் தவறான பயன்பாடு இனி சகித்துக்கொள்ளப்படாது” என்று தெரிவித்துள்ளது.
</p><p>
இது கல்வி துறையை மட்டுமல்லாமல், பல்கலைக்கழகங்களின் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள், பல்வகைமை திட்டங்கள், காலநிலை முயற்சிகள், பாலினக் கொள்கைகள் போன்றவற்றிலும் விசாரணைகள் நடத்தும் பரந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.</p><p></p><p>சில மாணவர்களின் விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், Justice Department பல்கலைக்கழகங்களின் சேர்க்கை முறைகளையும் ஆய்வு செய்து, சில இடங்களில் கருப்பர் மற்றும் ஹிஸ்பானிக் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என குற்றம் சாட்டியுள்ளது. பல்கலைக்கழகங்கள் இதனை மறுத்துள்ளன.</p><p>
இந்த நடவடிக்கைகள், அமெரிக்காவில் கல்வி பெறும் வெளிநாட்டு மாணவர்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.</p><p> இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் குறையக்கூடும் என்பதால், மாணவர்கள் தங்கள் கல்வி மற்றும் தொழில் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T17:36:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகளுக்கு ஈரான் கடும் கண்டனம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-urges-other-nations-not-to-join-us-sanctions-1787938271"></link>
            <id>https://tamilwin.com/article/iran-urges-other-nations-not-to-join-us-sanctions-1787938271</id>
            <summary type="text">அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதாரத் தடைகளை அரச பயங்கரவாதம் என ஈரான் கண்டித்துள்ளது.
சர்வதேச சட்டப்படி பிற நாடுகள் இந்தத் தடைகளை அமல்படுத்தக் கூடா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதாரத் தடைகளை அரச பயங்கரவாதம் என ஈரான் கண்டித்துள்ளது.</p><p>
சர்வதேச சட்டப்படி பிற நாடுகள் இந்தத் தடைகளை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தியுள்ளது.</p><p> 
அதேவேளையில், ஈரானைக் குறிவைத்து மேலும் பல பொருளாதாரக் கட்டுப்பாடுகளை அமெரிக்க திறைசேரி அறிவித்துள்ளது.</p><h2>வர்த்தக உறவு</h2><p> </p><p>
ஆறு மாதங்களுக்கு முன்பு போர் தொடங்குவதற்கு முன், உலகின் 20% கச்சா எண்ணெய் விநியோகத்தைக் கையாண்ட ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க மத்தியஸ்தர்கள் தீவிர முயற்சி எடுத்து வரும் சூழலில் ஈரானின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.</p><p> 
ஈரானுடன் வர்த்தக உறவுகளைத் துண்டிக்குமாறு பிற நாடுகளுக்குக் கெடு விதித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், தவறினால் கடுமையான தடைகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2324782-5ad4-4d56-80df-779a54136678/26-6a91d202ca9a4.webp' /></p><p> </p><p>
இது குறித்து ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் சட்டவிரோதக் கட்டுப்பாடுகளை மற்ற நாடுகள் ஏற்று நடப்பது, ஒரு நாட்டின் சட்டவிரோத விருப்பத்திற்குத் துணை போவதற்குச் சமம் என தெரிவித்துள்ளது.</p><p>
இந்த நடவடிக்கை லட்சக்கணக்கான பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் "மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்" ஆகும் என தெரிவித்துள்ளது.</p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>
</p><p>சர்வதேச சட்டத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் நிலைநிறுத்த பிற நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் முன்வர வேண்டும் என ஈரான் கோரியுள்ளது.
ஈரானுக்கு எதிரான அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இயங்கும் எகிப்தின் 'பேங்க் மிஸ்ர்' வங்கி, ஈரானுடன் வர்த்தகத் தொடர்பில் இருந்ததால் அதன் அமெரிக்க நிதி அணுகலை ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
</p><p>கூடுதலாக, ஹாங்க்காங்கைச் சேர்ந்த ஒரு நிறுவனம் மற்றும் ஈரானின் 'பேங்க் மெல்லி' வங்கியுடன் தொடர்புடைய ஒரு நபர் மீதும் அமெரிக்க திறைசேரி புதிய தடைகளை விதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7e04393-9292-49b9-9171-dc56eef85bd7/26-6a91c5e177a1d.webp' /></p><p> 
போரை முடிவுக்குக் கொண்டு வரக் கத்தார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தூதரக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
</p><p>கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி வியாழக்கிழமை டெஹ்ரானில் ஈரானிய தலைவர்களைச் சந்தித்து, ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T17:33:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 204 காட்டுயானைகளுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/204-wild-elephants-die-in-sri-lanka-eight-months-1787938063"></link>
            <id>https://jvpnews.com/article/204-wild-elephants-die-in-sri-lanka-eight-months-1787938063</id>
            <summary type="text">இலங்கையில் இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 204 காட்டுயானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 1ஆம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கையில் இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 204 காட்டுயானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
ஜனவரி 1ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 14ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9c24a88-69b3-465e-ac9e-4606d5680583/26-6a91c511066fa.webp' /></p><h2 style="text-align: justify; ">உயிரிழப்புகள்</h2><p style="text-align: justify; ">

இதில், 33 யானைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன், 26 யானைகள் சட்டவிரோத மின்சார வேலிகள் அல்லது மின்கம்பிகளில் சிக்கி உயிரிழந்துள்ளன.
</p><p style="text-align: justify; ">
வெடிபொருள் கலந்த உணவை உட்கொண்டதால் 26 யானைகளும், விஷம் காரணமாக 4 யானைகளும் உயிரிழந்துள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">


இதேவேளை, ரயில் விபத்துகளில் 2 யானைகளும், வீதி விபத்துகளில் 4 யானைகளும் உயிரிழந்துள்ளன.</p><p style="text-align: justify; ">

விவசாயக் கிணறுகளில் தவறி விழுந்ததில் 7 யானைகளும், நீரில் மூழ்கியதில் மேலும் 7 யானைகளும் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-28T17:27:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தினால் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/live-news-nepal-china-flood-1787937594"></link>
            <id>https://tamilwin.com/article/live-news-nepal-china-flood-1787937594</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் வன்முறை, சுரண்டல் மற்றும் தீவிர வறுமைக்கு ஆளாகும் அதிக ஆபத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் வன்முறை, சுரண்டல் மற்றும் தீவிர வறுமைக்கு ஆளாகும் அதிக ஆபத்தில் உள்ளதாக ஐ.நா பெண்கள் அமைப்பு எச்சரித்துள்ளது.</p><p>
இத்தகைய பேரிடர்கள் ஏற்கனவே சமூகத்தில் நிலவும் பாலினச் சமத்துவமின்மையை மேலும் மோசமாக்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>ஐ.நா அமைப்பின் தரவுகளின்படி, நேபாளத்தின் ரசுவா மற்றும் நுவாகோட் ஆகிய மாவட்டங்களில் மட்டும் சுமார் 1,60,000 பெண்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்த வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>பாதிப்புகள்&nbsp;</h2><p>
</p><p>பேரிடரின் முழுமையான பாதிப்புகள் இன்னும் கணக்கிடப்பட்டு வரும் நிலையில், சூழ்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக நேபாளத்திற்கான ஐ.நா பெண்கள் அமைப்பின் பிரதிநிதி பட்ரீஷியா பெர்னாண்டஸ்-பச்சேகோ தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/772d6988-07bf-4904-8718-38a4c2b0574e/26-6a91c33c7235c.webp' /></p><p>
</p><p>இயற்கைப் பேரழிவுகள் நிகழும்போது, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பெருமளவில் அதிகரிக்கின்றன. பலர் சுரண்டலுக்கும் துஷ்பிரயோகத்திற்கும் ஆளாகின்றனர். </p><p>வளங்கள் பற்றாக்குறையாக இருக்கும்போது, பெண்களும் சிறுமிகளுமே உணவும் மருந்தும் இன்றி அதிகம் தவிக்கின்றனர். முந்தைய பேரிடர் அனுபவங்களின்படி, ஆண்களை விட பெண்களே அதிகளவில் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது என தெரிவித்துள்ளார்.</p><h2>பொருளாதாரச் சீரழிவு</h2><p>
</p><p>பேரிடருக்குப் பிறகு, பெண்கள் வன்முறை மற்றும் பொருளாதாரச் சீரழிவை எதிர்கொள்வதுடன், வீட்டுப் பராமரிப்புப் பணிகள் மற்றும் குடிநீர் சேகரித்தல் போன்ற கூடுதல் சுமைகளையும் சுமக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e2f21e2-2d98-40c9-87e4-5991238555dc/26-6a91d044efcb7.webp' /></p><p>
</p><p>மேலும், வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களில் பெண்களிடையே குறைந்த எழுத்தறிவு விகிதமே நிலவுவது, இந்நெருக்கடியான சூழலைச் சமாளிப்பதில் கூடுதல் சவாலாக அமைந்துள்ளது என ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T17:27:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பருத்தித்துறையில் இராணுவ முகாம்களுக்கு எதிராக வெடிக்கவுள்ள பாரிய பேராட்டம்! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pedro-mayor-calls-for-participation-in-protest-1787937429"></link>
            <id>https://ibctamil.com/article/pedro-mayor-calls-for-participation-in-protest-1787937429</id>
            <summary type="text">பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில்
நடாத்தப்பட உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில்
நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல், கட்சி வேறுபாடுகளை கடந்து சகலரும் பங்கேற்குமாறு பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
</p><p>
பருத்தித்துறை நகரசபையின் 15 ஆவது அமர்வு இன்று (28) வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு நகரபிதா வின்சன் டி போல் டக்ளஸ் போல் தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்றது.
</p><p>
 நகரசபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இவ் அமர்வில் நகரசபை செயலாளர் சந்திரசேகரம் பிரசாத் மற்றும் உப நகரபிதா தே.தேவராஜேந்திரன் உள்ளிட்ட சபைக்கு தெரிவு செய்யப்பட்ட 15 உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.</p><p></p><h2>முழுமையான ஆதரவு</h2><p> </p><p>

இதன் பின்னராக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பில் நகரபிதா பகிரங்க அழைப்பினை விடுத்திருந்தார். இதன்போது NPP கட்சி தவிர்ந்த சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகள் முழுமையான ஆதரவினை தெரிவித்திருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f981175-1a38-40ca-aeab-1ac16675a333/26-6a91c46492db0.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பில் பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் மேலும் தெரிவிக்கையில், “பருத்தித்துறை நகரத்தின் அபிவிருத்திக்கு தடையாகவும், எமது
நகரத்தின் புராதன சின்னங்கள்/இடங்களை ஆக்கிரமித்தும் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற கோரி எமது சபையினால் இரண்டாவது கவனயீர்ப்பு போராட்டம் வரும் செப்டெம்பர்
11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ளது.
</p><p>
பருத்தித்துறை துறைமுக சந்தியில் இருந்து அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு ஆரம்பித்து பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை இடம்பெறும் இப்போராட்டத்தில் அரசியல், கட்சி வேறுபாடுகள் கடந்து சகல அரசியல் தரப்பினரும், வர்த்தகர்கள், மரக்கறி, மீன் வியாபாரிகள், கடற்றொழில் சங்கத்தினர் உள்ளிட்ட பொது அமைப்புகள், சமூகமட்ட அமைப்புகளும் பங்கேற்று ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றென்.” என்றார்.
</p><p>
இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தும் இப்போராட்டத்திற்கு பருத்தித்துறை நகரசபையில் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் தவிர்த்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழரசு கட்சி, ஜனநாயக தேசிய கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாய கட்சி மற்றும் சுயேற்சை(ஊசி) குழு ஆகியன முழுமையான ஆதரவினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T17:25:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொங்கோவில் பரவி வரும் எபோலா வைரஸ்: தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ebola-virus-spreading-in-congo-vaccine-1787937410"></link>
            <id>https://tamilwin.com/article/ebola-virus-spreading-in-congo-vaccine-1787937410</id>
            <summary type="text">கொங்கோ ஜனநாயகக் குடியரசில் தீவிரமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றினைக்
கட்டுப்படுத்தும் நோக்கில், முதன்மைச் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும்
களப்பணியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொங்கோ ஜனநாயகக் குடியரசில் தீவிரமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றினைக்
கட்டுப்படுத்தும் நோக்கில், முதன்மைச் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும்
களப்பணியாளர்களுக்குத் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>
தற்போது பரவி வரும் 'புண்டிபுக்யோ' ரக எபோலா வைரஸுக்கு எதிராக இந்தத்
தடுப்பூசியின் செயல்திறன் இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படாத
நிலையிலும், அவசர நடவடிக்கையாகக் கிசாங்கானி நகரில் இந்த தடுப்பூசி அளிப்புத்
திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த புதிய ரக வைரஸுக்கு எதிராக அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் எதுவும்
இதுவரை இல்லாததால், தடுப்பூசிகளின் செயல்திறனைக் கண்டறியும் மருத்துவப்
பரிசோதனைகளும் இவற்றுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><h2>வேலைநிறுத்தம்&nbsp;</h2><p>
</p><p>
உகாண்டா எல்லையை ஒட்டியுள்ள இத்துரி மாகாணத்திலேயே இந்த நோய் பரவல் அதிகளவில்
பதிவாகியுள்ளது. </p><p>இதுவரை 5,713 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன்,
2,744 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2eb499ae-da31-43af-8e2e-e6d293400f09/26-6a91c284cbdac.webp' /></p><p>
</p><p>
நாட்டின் பாதுகாப்பற்ற சூழல், மக்கள் இடம்பெயர்வு மற்றும் சுகாதாரப்
பணியாளர்களின் வேலைநிறுத்தம் என்பன நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பெரும்
சவாலாக அமைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T17:17:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் நாளொன்றுக்கு 80 முதல் 100 பேர் உயிரிழப்பதற்கு ஏதுவாகும் பழக்கம் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/80-100-people-die-daily-in-sri-lanka-1787936875"></link>
            <id>https://tamilwin.com/article/80-100-people-die-daily-in-sri-lanka-1787936875</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கையில் மதுபானம், புகையிலை மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டினால் நாளொன்றுக்கு 80 முதல் 100 பேர் வரை உயிரிழப்பதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பிரயோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கையில் மதுபானம், புகையிலை மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டினால் நாளொன்றுக்கு 80 முதல் 100 பேர் வரை உயிரிழப்பதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி மனோஜ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
</p><p>தேசிய அளவில் முன்னெடுக்கப்பட்டு வரும் 'ரடம எகடட' போதைப்பொருள் தடுப்பு மற்றும் கல்விப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.
</p><p>நாட்டில் தினமும் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளுக்குக் காரணமான வேறு எந்தவொரு ஒற்றைக் காரணியும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><h2>இறப்பு</h2><p>
</p><p>போதைப்பொருள் சார்ந்த இறப்புகளில் புகைபிடிக்கும் பழக்கமே (புகையிலை) முதன்மையான காரணியாக உள்ளது எனவும் மதுபான நுகர்வினால் மட்டும் நாளொன்றுக்கு 10 முதல் 15 பேர் வரை உயிரிழப்பதாகக் கணிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96468196-9ade-47c7-bf85-d0631f677420/26-6a91ce066decc.webp' /></p><p>
</p><p>சட்டவிரோத போதைப்பொருட்களால் நேரடியாக ஏற்படும் இறப்புகள் குறித்து விரிவான ஆய்வுகள் இன்னும் பூர்த்தியடையவில்லை என்றாலும், பிற சட்டவிரோத போதைப்பொருட்களால் தினமும் 10 முதல் 15 பேர் வரை உயிரிழக்க வாய்ப்புள்ளதாகத் தரவுகள் உணர்த்துவதாக தெரிவித்துள்ளார்.</p><p>
புகையிலை, மதுபானம் மற்றும் சட்டவிரோத போதைப்பொருட்கள் ஆகிய அனைத்தையும் சேர்த்துப் பார்க்கும்போது, தினமும் 80 முதல் 100 உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.</p><h2>தடுப்பு நடவடிக்கைகள்</h2><p>
சட்டவிரோத போதைப்பொருட்களின் பயன்பாடு நாட்டில் கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த கலாநிதி மனோஜ் பெர்னாண்டோ, புகையிலை மற்றும் மதுபானம் போன்ற சட்டப்பூர்வமான பொருட்களே ஒருவர் கடுமையான போதைப்பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கான முதன்மை நுழைவு வாயிலாக அமைவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9ca740b-f56e-40ba-8a6a-058336204ab6/26-6a91ce0723c28.webp' /></p><p>ஹெராயின் போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர், அதற்கு முன்பாகத் தீவிரமாகப் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருந்துள்ளனர்.
கஞ்சா பயன்படுத்துபவர்களில் பலர், ஆரம்பத்தில் மதுபானம் அல்லது சிகரெட் பயன்படுத்தியவர்களாவர்.
</p><p>போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தனிநபர் ஆரோக்கியம், சமூகம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பாதிப்புகள் மிகக் கடுமையானவை என்பதால், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுப் பிரசாரங்களுக்கு அரசு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T17:09:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை வைத்தியசாலையில் பெண்ணிற்கு நடந்தது சூழ்ச்சியா! வைத்தியர் சுகுணனை விடாது துரத்தும் ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kalmunai-drsugunan-kalmunai-hospital-1787930890"></link>
            <id>https://tamilwin.com/article/kalmunai-drsugunan-kalmunai-hospital-1787930890</id>
            <summary type="text">கல்முனை வைத்தியசாலையில் பர்தா அணிந்து சென்ற பெண் என்பதற்காக அவரது மகனுக்கு சிகிச்சை வழங்க மறுக்கப்பட்டது என சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி போலியான...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை வைத்தியசாலையில் பர்தா அணிந்து சென்ற பெண் என்பதற்காக அவரது மகனுக்கு சிகிச்சை வழங்க மறுக்கப்பட்டது என சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி போலியானது என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p>அத்தோடு, கல்முனை&nbsp;வைத்தியசாலை விவகாரத்தை வைத்து பல உள்ளக ரீதியான சூழ்ச்சிகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.</p><p>மொட்டுக்கட்சியின் முக்கியஸ்தர்களுடன் தொடர்பில் இருக்கும் நபர் ஒருவரே இந்த வைத்தியசாலையில் குழப்பத்தை ஏற்படுத்தும் முக்கிய நபராக காணப்படுவதாக தெரியவந்துள்ளது.</p><p>மேலும் ,கல்முனை வைத்தியசாலை விவகாரத்திலே அரசாங்கம் தலையிட்டு ஒரு சுமுகமான முடிவை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகின்றது.</p><p>கல்முனையில் வைத்தியர் Dr. சுகுணன் தொடர்ச்சியாக இலக்கு வைக்கப்படுகின்றமையும் ,வைத்தியசாலை ஊழியர்கள் குறித்து வெளியாகும் போலிச் செய்திகளும் வைத்தியசாலை சமூகத்தை பாதிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்த சம்பவம் உண்மையில் சதியா, சூழ்ச்சியா அல்லது எதிர்பாராத விதமாக இடம்பெற்ற சம்பவமா, Dr. சுகுணனை விடாது துரத்தும் இந்த விவகாரத்தின் பின்னணி என்ன என்பது தொடர்பான விரிவாக தகவல்களை செய்திகளை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oLNjIm3XdQA" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T17:05:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை மோதல்; 20 பேருக்கு நீதிமன்றத்தின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-issues-to-20-over-negombo-prison-clash-1787936557"></link>
            <id>https://jvpnews.com/article/court-issues-to-20-over-negombo-prison-clash-1787936557</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சந்தேகநபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜராகுமாறு 20 பேருக்கு அற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சந்தேகநபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜராகுமாறு 20 பேருக்கு அறிவிப்புகளை அனுப்ப நீர்கொழும்பு பிரதம நீதிபதி ஷிலானி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.
</p><p style="text-align: justify;">


குறித்த சிறைச்சாலை மோதல் தொடர்பான வழக்கு இன்று (28) நீர்கொழும்பு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13733759-edb2-45d2-b4ef-48f6ebff17c9/26-6a91bf2e80abb.webp' /></p><h2 style="text-align: justify; ">சந்தேகநபர்கள் அடையாளம்</h2><p style="text-align: justify; ">



இதன்படி, நீர்கொழும்பு பிரதம சிறை அதிகாரி உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகள் 20 பேரை எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;">



முந்தைய விசாரணையின்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்தச் சம்பவம் தொடர்பாக 70 சந்தேகநபர்களின் பெயர்களை நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்தது.</p><p style="text-align: justify;">



அவர்களில் சந்தேகநபர்கள் 1 முதல் 6 வரையிலானோர் இன்று அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்தப்படவிருந்தனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">எனினும், உடல்நலக் காரணங்கள் மற்றும் ஏனைய சட்டரீதியான காரணங்களால் இருவர் இன்று ஆஜர்படுத்தப்படவில்லை. அதேவேளை, சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்காக நான்கு சந்தேகநபர்களையும் நான்கு சாட்சிகளையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.</p><p style="text-align: justify;">


இதன்போது, நான்கு சாட்சிகளும் அடையாள அணிவகுப்பில் ஆஜராகி சந்தேகநபர்களை அடையாளம் காட்டியுள்ளனர்.
</p><p style="text-align: justify;">


இன்று ஆஜர்படுத்தப்படாத இரு சந்தேகநபர்கள் தொடர்பான ஆவணங்களையும் சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">


மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 2,100க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"> விசாரணையின் ஒரு பகுதியாக மேலும் பலரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify;"><br></p>]]></content>
            <updated>2026-08-28T17:02:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் கனடிய தம்பதி மாயம்: நல்ல செய்திக்காகக் காத்திருக்கும் குடும்பத்தினர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/missing-in-nepal-after-deadly-flash-floods-1787928115"></link>
            <id>https://canadamirror.com/article/missing-in-nepal-after-deadly-flash-floods-1787928115</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த கனடிய தம்பதியினர், நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ளனர். 
இமய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த கனடிய தம்பதியினர், நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ளனர்.</p><p> 
இமயமலை பனிப்பாறை உடைப்பால் ஏற்பட்ட இந்த பேரிடரில் 30-க்கும் மேற்பட்ட கனடியர்கள் காணாமல் போயுள்ள நிலையில், இந்த தம்பதியின் நிலை என்னவென்று தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் பெரும் தவிப்பில் உள்ளனர்.
</p><p>பிரிட்டிஷ் கொலம்பியாவின் 'போர்ட் மூடி' பகுதியைச் சேர்ந்த தவால் ஷா மற்றும் அவரது மனைவி மேகா ஷா ஆகியோர் நேபாளத்திற்குச் சுற்றுலா சென்றிருந்த நிலையில் இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1a090e0-cabc-4b01-acc0-4299c4eb9757/26-6a919e3575bc5.webp' /></p><p>
</p><p>கடந்த ஞாயிற்றுக்கிழமைக்குப் பின்னர் அவர்களிடம் இருந்து எந்தத் தொடர்பும் இல்லை என்று தவாலின் சகோதரர் கேவல் ஷா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
</p><p>அவர்கள் எப்படியாவது வெள்ளத்திலிருந்து தப்பித்து, உயிருடன் மீட்டெடுக்கப்பட்டார்கள் என்ற ஒரு நல்ல செய்தி வரக் கூடாதா என்று தான் நாங்கள் வழிமேல் விழிவைத்து காத்துக் கொண்டிருக்கிறோம்.</p><p> ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை என காணாமல் போன கனடியரின் சகோதரர் கேவல் ஷா தெரிவித்துள்ளார்.
</p><p>திபெத்-நேபாள எல்லையில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளத்தில் 1,000-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.
</p><p>இதில் தவால்-மேகா தம்பதி உட்பட குறைந்தபட்சம் 30 கனடியர்களும், நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்களும் அடங்குவர் என கனடா உலகளாவிய விவகாரங்கள் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>மலைப் பகுதியில் பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் பல அடி உயரத்திற்குச் சேறும் சகதியும் அடர்த்தியாகக் குவிந்துள்ளது.
</p><p>பாதிக்கப்பட்ட பகுதிகள் மிகவும் தொலைதூரத்தில் அமைந்திருப்பதாலும், சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாலும் மீட்புக் குழுவினர் அங்குச் செல்வதில் பெரும் சிரமம் நிலவுகிறது. 
அடர்ந்த சேற்றுக்குள் சிக்கியவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான காரியமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T16:41:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வனப்பகுதிக்கு மனைவியை அழைத்துசென்று கணவன் அரங்கேற்றிய சம்பவம்; பொலிஸார் ஷாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wife-taken-to-forest-area-and-murdered-husband-1787921138"></link>
            <id>https://jvpnews.com/article/wife-taken-to-forest-area-and-murdered-husband-1787921138</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அனுராதபுரத்தின் கொரகெஹேவ பகுதியில் உள்ள ஒரு வனப்பகுதியில், கணவன், தனது மனைவியைக் கூர்மையான ஆயுதத்தால் கொலை செய்துவிட்டு, அதே கத்தியால் தன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அனுராதபுரத்தின் கொரகெஹேவ பகுதியில் உள்ள ஒரு வனப்பகுதியில், கணவன், தனது மனைவியைக் கூர்மையான ஆயுதத்தால் கொலை செய்துவிட்டு, அதே கத்தியால் தன்னையும் குத்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இடபெற்றுள்ளது.
</p><p>
இன்று காலை (28), சந்தேக நபர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் அந்த வனப்பகுதிக்குச் சென்றதாகவும், அங்கு அவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d0f2ced-3d64-4cb2-b000-c9c1cd9098d4/26-6a9182f3bb1f9.webp' /></p><h2>&nbsp;பொலிஸார்&nbsp; சந்தேகம்</h2><p>

கூர்மையான ஆயுதத் தாக்குதலால் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கணவர் அனுராதபுர போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p>

உயிரிழந்தவர், உலுக்குளம பகுதியைச் சேர்ந்த, மூன்று பிள்ளைகளின் தாயான 59 வயதுப் பெண் ஆவார்.
</p><p>
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள அனுராதபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T16:40:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவுக்கு எதிராக மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/case-filed-against-ex-minister-sm-chandrasena-1787934046"></link>
            <id>https://tamilwin.com/article/case-filed-against-ex-minister-sm-chandrasena-1787934046</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்து, மேல் நீதிமன்றத்தில...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்து, மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும், விசேஷ செயற்திட்டங்கள் அமைச்சருமான எஸ்.எம். சந்திரசேன மீது ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.&nbsp;</p><p>இந்நிலையில், அவர் மீது உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று (28) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.</p><p>

இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அது தொடர்பான அறிக்கையை கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் முன்வைத்துள்ளது.</p><h2>அரசாங்கத்திற்கு இழப்பு&nbsp;</h2><p>
</p><p>
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஆதாயம் பெறும் நோக்கில், மாவட்டச் செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளைத் தன் செல்வாக்கிற்கு உட்படுத்தி அரசாங்கத்தால் 25 மில்லியன் ரூபா செலவில் இறக்குமதி செய்யப்பட்ட மக்காச்சோள விதைகளை 2014ஆம் ஆண்டில் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏழை விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகித்து அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தியதாக எஸ்.எம். சந்திரசேன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01db6743-7c00-4432-83f7-04b0438c354b/26-6a91b80b1d9f2.webp' /></p><p>
</p><p>
குறித்த குற்றச்சாட்டின் கீழ் அவர் கடந்த ஜூலை 4 ஆம் திகதி இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டின் விசாரணைகள் நிறைவடைந்து மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதற்கான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த சந்தேக நபர் மீது உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், நீதவான் நீதிமன்றத்தில் நடவடிக்கைகள் நிறைவுபெறும் என்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
</p><p>
முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்திற் கொண்ட நீதவான், சந்தேக நபரை நிர்ணயிக்கப்பட்ட தேதியில் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

சந்தேக நபர் இன்று (28) திறந்த நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T16:33:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆப்பிரிக்க நாடுகளுக்கான பயணத் தடையை மேலும் 30 நாட்களுக்கு நீட்டித்தது கனடா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-extends-ebola-travel-restrictions-30-days-1787927479"></link>
            <id>https://canadamirror.com/article/canada-extends-ebola-travel-restrictions-30-days-1787927479</id>
            <summary type="text">எபோலா நோய்த்தொற்று பரவல் காரணமாகக் காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளிலிருந்து பயணிகள் கனடாவிற்குள் நுழைய விதிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>எபோலா நோய்த்தொற்று பரவல் காரணமாகக் காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளிலிருந்து பயணிகள் கனடாவிற்குள் நுழைய விதிக்கப்பட்ட தடையை மேலும் 30 நாட்களுக்கு நீட்டிப்பதாகக் கனடா அரசு அறிவித்துள்ளது.</p><p>
கடந்த மே மாதம் முதல் அமலில் உள்ள இந்தத் தடையால் 67,000-க்கும் அதிகமான மக்களின் விசா விண்ணப்பங்கள் மற்றும் குடியிருப்பு உரிமைகள் முடங்கியுள்ளன.
</p><p>வெளிநாடுகளிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட 31,693 நிரந்தரக் குடியிருப்பு விண்ணப்பங்களும், 10,465 தற்காலிகக் குடியிருப்பு விண்ணப்பங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b44f7b2-4c20-499b-8ed6-33d6c9b415cd/26-6a919bb9089bb.webp' /></p><p>
</p><p>கனடாவிற்கு வெளியே உள்ள 1,534 நிரந்தரக் குடியிருப்பாளர்கள் மற்றும் 23,415 தற்காலிக விசா வைத்திருப்பவர்களும் நாட்டிற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>இந்நாடுகளிலிருந்து திரும்பும் கனடியர்களுக்கு 21 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது நிவாரண அமைப்புகளின் மனிதாபிமானப் பணிகளைப் பாதிப்பதாகக் கூறப்படுகிறது.
</p><p>கெங்கோவில் 5,794 பேர் பாதிக்கப்பட்டு, 2,786 பேர் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசியோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சையோ இல்லாத 'புண்டிபுக்யோ' என்ற அரிய வகை வைரஸால் இங்குப் பாதிப்பு மிகவேகமாகப் பரவி வருகிறது.
</p><p>உகாண்டாவில் எபோலா பரவல் முடிவுக்கு வந்துவிட்டதாகப் உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளன. தெற்கு சூடானில் எந்தப் பாதிப்பும் பதிவாகவில்லை.</p><p>
கனடாவில் எபோலா பரவும் அபாயம் குறைவாக இருந்தாலும், நோயின் வீரியம் மற்றும் சிகிச்சை முறைகள் இல்லாத நிலையைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாகவே இந்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் கனடா பொது சுகாதார முகமை தெரிவிக்கிறது.
</p><p>முழுமையான பயணத் தடை விதிப்பது அறிவியல் பூர்வமானதல்ல என்றும், பயத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் உலக சுகாதார நிறுவனம் கண்டித்துள்ளது.
</p><p>கனடிய குடிமக்களுக்குத் தனிமைப்படுத்தல் அனுமதியும், வெளிநாட்டினருக்கு முழுத் தடையும் விதிப்பது நியாயமற்றது என சர்வதேச சுகாதார சட்ட ஆய்வாளர் ரூஜின் ஹபீபி கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p>இந்தத் தடை உண்மையான சுகாதாரப் பாதுகாப்பைக் காட்டிலும், மக்களுக்கு நம்பிக்கை தருவதற்காகச் செய்யப்பட்ட ஒரு வெளிப்புற நடவடிக்கை மட்டுமே என்று மெக்கில் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஜோன் லியூ விமர்சித்துள்ளார்.</p><p>
ஃபிஃபா உலகக்கப் நிகழ்வுகளில் பங்கேற்கவிருந்த கலைக்குழுவினர் மற்றும் குடும்பங்களைப் பிரிந்து வாழும் கனடியர்கள் பலரும் இந்த முடிவால் பெரும் கவலையும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T16:30:55+00:00</updated>
        </entry>
    </feed>
