<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-23T05:28:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிரக நிலைகள் சொல்லும் 7 நாள் பலன்கள்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/weekly-horoscope-for-23-august-2026-to-29-august-1787460374"></link>
            <id>https://manithan.com/article/weekly-horoscope-for-23-august-2026-to-29-august-1787460374</id>
            <summary type="text">நம் வாழ்வில் எதிர்பாராத விதமாக ஏற்படும் நல்லது, கெட்டது என பல்வேறு நிகழ்வுகளுக்கு நமது ஜாதகத்தில் அமைந்துள்ள கிரக நிலைகள் முக்கிய பங்கு வகிப்பதாக ஜோதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நம் வாழ்வில் எதிர்பாராத விதமாக ஏற்படும் நல்லது, கெட்டது என பல்வேறு நிகழ்வுகளுக்கு நமது ஜாதகத்தில் அமைந்துள்ள கிரக நிலைகள் முக்கிய பங்கு வகிப்பதாக ஜோதிடத்தில் தொன்று தொற்று நம்பப்பட்டு வருகின்றது.&nbsp;</p><p>குறிப்பாக, கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் அவற்றின் நிலைப்பாடுகள் ஒவ்வொரு ராசியினரின் வாழ்க்கையிலும் பல்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.

அந்த வகையில், அடுத்த 7 நாட்கள் உங்கள் ராசிக்கு எப்படி அமையப் போகிறது?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17e25de8-d06f-48fe-8b88-552c8e5783f7/26-6a8a817a8d0ef.webp' /></p><p> </p><p>இந்த வாரத்தில் தொழில், பணவரவு, குடும்பம், உறவுகள், ஆரோக்கியம் உள்ளிட்ட விஷயங்களில் சாதகமான மாற்றங்கள் ஏற்படுமா? அல்லது சில சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகுமா என்பதை தெரிந்து கொள்ள பெரும்பலானவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும்.</p><p>அந்தவகையில், 2026 ஆகஸ்ட் 23 முதல் ஆகஸ்ட் 29 வரை உள்ள காலகட்டத்திற்கான 12 ராசிக்காரர்களின் வார ராசிபலன்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><p>
இந்த ஒரு வார காலத்தில் உங்கள் ராசிக்கு சாதகமாக அமையக்கூடிய விஷயங்கள் என்ன, கவனமாக இருக்க வேண்டிய அம்சங்கள் என்ன, எந்த விஷயங்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e568229-9cea-4442-9248-4d3072bccbbd/26-6a8a817b3e2bb.webp' /></p><p></p><h2>12 ராசிகளுக்குமாக வார ராசி பலன்கள்</h2><p><b>மேஷம்
</b></p><p>வாரத்தின் தொடக்கத்தில் சில தடைகள் இருந்தாலும், இறுதியில் வெற்றியும் லாபமும் கிடைக்கும். குடும்பத்தினரின் ஆதரவு தைரியத்தை அதிகரிக்கும். </p><p>தொழிலில் முன்னேற்றமும் முதலீட்டு வாய்ப்புகளும் இருக்கும்; ஆனால் ஆபத்தான முதலீடுகளைத் தவிர்க்கவும். ஆரோக்கியமும் உறவுகளும் சாதகமாக இருக்கும்.
</p><p><b>
ரிஷபம்
</b></p><p>எந்த வேலையிலும் கவனக்குறைவைத் தவிர்க்க வேண்டும். சிறிய தவறும் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தலாம். வேலைப்பளு அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் விதிமுறைகளைப் பின்பற்றுங்கள். </p><p>வியாபாரத்தில் அவசர முடிவுகளைத் தவிர்க்க வேண்டும். தொழில் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.</p><p><b>
மிதுனம்</b></p><p>
இந்த வாரம் வேலை, தொழில் என அனைத்திலும் சாதகமான பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.</p><p> பதவி உயர்வு அல்லது இடமாற்றம் எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபமும், நிதி நிலையில் முன்னேற்றமும் ஏற்படும்.</p><p><b>

கடகம்
</b></p><p>முன்னேற்றமும் வெற்றியும் நிறைந்த வாரமாக இருக்கும். நிலுவைப் பணிகள் முடிவடையும், எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கலாம். </p><p>தொழிலில் பாராட்டும், மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புள்ளது. உடல்நிலையும் சாதகமாக இருக்கும்.
</p><p><b>
சிம்மம்</b></p><p>
இந்த வாரம் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியும். முக்கிய பணிகளை பிறரிடம் ஒப்படைப்பதைத் தவிர்க்கவும். </p><p>திடீர் செலவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. பேசும்போது கவனமாக இருக்கவும்; சொத்து விவகாரங்களில் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/717daaf4-cdd8-48b7-9848-88ff3503aef5/26-6a8a817be0a40.webp' /></p><p><b>

கன்னி</b></p><p>
சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும் வாரம். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கலாம் அல்லது வியாபாரத்தில் புதிய முயற்சிகள் லாபம் தரலாம்.</p><p> நீண்ட நாள் ஆசை நிறைவேறும் வாய்ப்புள்ளது. வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெற்று, குடும்பப் பிரச்சினைகள் தீரும். ஒட்டுமொத்தமாக வெற்றி மற்றும் செழிப்பு நிறைந்த வாரமாக இருக்கும்.</p><p><b>

துலாம்</b></p><p>
வேலையில் எதிர்பார்த்த வெற்றியும் லாபமும் கிடைக்கும். வருமானம் அதிகரிப்பதுடன், தொழிலில் இருந்த தடைகளும் நீங்கும். </p><p>பணியாளர்களுக்கு பதவி உயர்வு அல்லது வெகுமதி கிடைக்கலாம்.காதல் உறவில் இருந்த பிரச்சினைகள் தீரும்; திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.</p><p><b>

விருச்சிகம்</b></p><p>
பரபரப்பான வாரமாக இருக்கும். தொடக்கத்தில் செலவுகள் அதிகரிக்கலாம்; திடீர் பயணமும் ஏற்பட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் தேவையற்ற பேச்சு, விமர்சனங்களைத் தவிர்த்து இலக்கில் கவனம் செலுத்துங்கள்.குடும்பத்தினரிடமும், காதல் உறவிலும் பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/024c343a-df29-4cef-bd3d-a2aacd09b71f/26-6a8a817c91fcd.webp' /></p><p></p><p><b>
தனுசு
</b></p><p>சற்று குழப்பமான மனநிலை ஏற்படலாம். முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் நம்பகமானவர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்.</p><p> உடல்நலத்தில் கவனம் தேவை. வேலையில் தடைகள் மற்றும் எதிரிகளின் இடையூறுகள் ஏற்படலாம். வேலை தேடுபவர்கள் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். நிதி விஷயங்களிலும் கவனம் அவசியம்.
</p><p><b>
மகரம்</b></p><p>
கடந்த வாரத்தை விட இந்த வாரம் சிறப்பாக இருக்கும். திட்டமிட்ட பணிகளை சரியான நேரத்தில் முடிப்பதால் நம்பிக்கை அதிகரிக்கும். </p><p>உழைப்புக்கு பணியிடத்தில் அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிகளின் உதவியால் லாபம் கிடைக்கலாம். குடும்பத்திலும் காதல், திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சி நிலவும்.</p><p><b>

கும்பம்</b></p><p>
சாதகமான பலன்கள் நிறைந்த வாரம். தொடக்கத்தில் இருந்த தடைகள் நீங்கி நிம்மதி கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. </p><p>தொழிலில் லாபம், சிக்கிய பணம் கைக்கு வருதல் போன்ற நிதி முன்னேற்றங்கள் ஏற்படும். வேலைப்பளு அதிகரித்தாலும் குடும்ப ஆதரவும், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் இருக்கும்.
</p><p><b>
மீனம்
</b></p><p>வாரத்தின் முதல் பாதியில் சில வேலைத் தடைகள் இருந்தாலும், பிற்பகுதியில் அவற்றுக்கு தீர்வு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள்.</p><p>வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறலாம். வெளிநாடு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்டமும் நலம் விரும்பிகளின் ஆதரவும் சேர்ந்து கடினமான பணிகளையும் எளிதாக முடிக்க உதவும். உறவுகளும் சாதகமாக இருக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b> &nbsp; &nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T05:21:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்னை தேடாதீர்கள் என அம்மாவிடம் கூறிவிட்டு கேரளா சென்ற ஜேசன் சஞ்சய் - 100 மீட்டரில் சிறுத்தை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/vijay-son-jason-sanjay-has-spoken-about-mom-dad-1787405983"></link>
            <id>https://manithan.com/article/vijay-son-jason-sanjay-has-spoken-about-mom-dad-1787405983</id>
            <summary type="text">jason sanjay : முதலமைச்சர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் சமீபத்தில் அளித்த பேட்டியில்,&amp;nbsp; தான் மேற்கொண்ட ஒரு ஆபத்தான பயணம் குறித்த தகவலை மிகவும் சாதார...</summary>
            <content type="html"><![CDATA[<p>jason sanjay : முதலமைச்சர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் சமீபத்தில் அளித்த பேட்டியில்,&nbsp; தான் மேற்கொண்ட ஒரு ஆபத்தான பயணம் குறித்த தகவலை மிகவும் சாதாரணமாக பகிர்ந்துள்ளார். ஆனால், அவர் கூறிய அந்த அனுபவம் தற்போது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><h2>ஜேசன் சஞ்சய் பேட்டி</h2><p>விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/459743f3-c09d-4164-9f50-b67db0542cfe/26-6a89adc91ee3a.webp' /></p><p> </p><p>ஆக்ஷன் அட்வெஞ்சர் பாணியில் உருவாகியுள்ள இப்படம், வரும் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக பல்வேறு ஊடகங்களுக்கு ஜேசன் சஞ்சய் பேட்டி அளித்து வருகிறார். </p><p>அந்த வகையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட அனுபவங்கள் குறித்து சுவாரஸ்யமான பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.</p><p><b>

“என்னை தேடாதீர்கள்” என அம்மாவிடம் கூறிவிட்டு...</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33604b56-967d-4dd6-98da-a7f0d5ea1b24/26-6a89adca75bc4.webp' /><b></b></p><p>
தனது நண்பர்களுடன் இணைந்து மேற்கொண்ட ஒரு பயணம் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய், “வெளிநாட்டில் இருந்து நண்பன் ஒருவன் வந்திருந்தான். நாங்கள் நண்பர்கள் அனைவரும் அவனது வீட்டில் தங்கப்போகிறோம் என்று திட்டமிட்டிருந்தோம். சென்னையில்தான் இருப்பேன், ஆனால் என்னைத் தேடாதீர்கள் என்று எனது அம்மாவிடம் கூறிவிட்டு, கேரளா எல்லையில் உள்ள ஒரு ஊருக்கு சென்றுவிட்டோம்” என தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர்கள் தங்கியிருந்த தனியார் இடத்திற்கு மிக அருகிலேயே புலிகள் சரணாலயம் ஒன்று இருந்ததாகவும் சஞ்சய் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a167921a-fbcf-4c51-9aa2-f8b4510c657d/26-6a89adcb26e07.webp' /></p><p></p><p>
</p><p>
இந்த பயணத்தின் போதுதான் எதிர்பாராத விதமாக அவரது அம்மாவிடம் இருந்து செல்போன் அழைப்பு வந்துள்ளது.ஆனால், அந்த அழைப்பை சஞ்சய் எடுக்கவில்லை.</p><p>இதனால் அவருக்கு மலையாளத்தில் பிசி டோன் கேட்டுள்ளது.

அதன்பிறகுதான், தான் கேரளாவுக்குச் சென்றிருப்பது தனது அம்மாவுக்கு தெரிந்துவிட்டதாக சஞ்சய் கூறியுள்ளார்.

இதனால் பயந்துபோன அவர், சென்னை திரும்பும் வரை செல்போனை தொடவே இல்லை என தெரிவித்துள்ளார்.</p><h2><b>

100 மீட்டர் தூரத்தில் சிறுத்தை!
</b></h2><p>இந்த பயணத்தின்போது தங்களுக்கு ஏற்பட்ட மற்றொரு அதிர்ச்சியான சம்பவத்தையும் ஜேசன் சஞ்சய் பகிர்ந்துள்ளார்.

“அந்த பயணத்தின்போது ஒருநாள் நாங்கள் சிறுத்தையை பார்த்தோம். எங்களிடமிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் தான் அந்த சிறுத்தை இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2de0cb94-d987-4779-8c08-8187b06d65e6/26-6a89adcbcaf02.webp' /></p><p> </p><p>அதன்பிறகு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டோம்” என சஞ்சய் தெரிவித்துள்ளார்.

தான் இதுபோன்று ஆபத்தான பயணங்களை மேற்கொள்வது தனது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
இருப்பினும், “அப்படி யோசித்துக்கொண்டே இருந்தால் இயற்கையின் அழகை ரசிக்கவே முடியாது. எனவே, நான் செய்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை” என தனது நிலைப்பாட்டையும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இதனிடையே, ஜேசன் சஞ்சயிடம் அவரது முதல் சம்பளம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலும் தற்போது கவனம் பெற்றுள்ளது.

வெளிநாட்டில் படித்துக்கொண்டிருந்தபோது கால்டன் சினிமாஸ் என்ற திரையரங்கில் கேசியராக பணியாற்றியதாக சஞ்சய் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e70c9f92-1b63-4586-8b3b-efd6557f3950/26-6a89adcc7b5db.webp' /></p><p></p><p>
</p><p>
அந்த திரையரங்கில் மிகவும் பழைய திரைப்படங்கள் மட்டுமே திரையிடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். சில நேரங்களில் திரைப்படத்தை பார்ப்பதற்காக யாருமே திரையரங்கிற்கு வரமாட்டார்கள் என்றும், அப்போது தான் மட்டும் அங்கு அமர்ந்து அந்த திரைப்படத்தை பார்க்கத் தொடங்கிவிடுவேன் என்றும் சஞ்சய் தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும், அந்த திரையரங்கில் பணியாற்றியது தனது வாழ்க்கையில் கிடைத்த மிகச்சிறந்த அனுபவங்களில் ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>&nbsp;‘சிக்மா’ படத்தின் மூலம் இயக்குநராக தனது புதிய பயணத்தை தொடங்க உள்ள ஜேசன் சஞ்சயின் இந்த அனுபவங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T05:21:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுற்றுலா மூலம் கிடைத்த வருமானம் குறித்து மத்திய வங்கி வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/central-bank-releases-income-generated-tourism-1787462051"></link>
            <id>https://jvpnews.com/article/central-bank-releases-income-generated-tourism-1787462051</id>
            <summary type="text">இலங்கையின் சுற்றுலாத் துறையின் மூலம் ஈட்டப்பட்ட வருமானம் கடந்த ஆண்டின் முதல் 7 மாதங்களுடன் ஒப்பிடுகையில் சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் சுற்றுலாத் துறையின் மூலம் ஈட்டப்பட்ட வருமானம் கடந்த ஆண்டின் முதல் 7 மாதங்களுடன் ஒப்பிடுகையில் சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
</p><p>
 

மத்திய வங்கி அறிக்கையின்படி, இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான கடந்த 7 மாதங்களில் சுற்றுலா வருமானமாக 1,796.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fedcdb5-8627-421d-9d9d-e4822e01850f/26-6a8a81a44da12.webp' /></p><p>இருப்பினும், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் சுற்றுலா வருமானமாக 2,031.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டிருந்தது.</p><p>

 

அதன்படி, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் குறிப்பிட்ட காலத்தில் சுற்றுலா வருமானம் 11.5% வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
</p><p>
 

மேலும், கடந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் சுற்றுலா வருமானமாக 318.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டின் கடந்த ஜூன் மாதத்தில் சுற்றுலா வருமானமாக 285.5 மில்லியன் அமெரிக்க டொலர்களே ஈட்டப்பட்டுள்ளது.
</p><p>
 

அதேவேளை, இந்த ஆண்டின் கடந்த 7 மாத காலப்பகுதியில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் மூலம் இலங்கைக்கு 8,382.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளன.
</p><p>
 

இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் ஒரு வளர்ச்சியைக் காட்டுகிறது.</p><p> கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் 4,435.2 மில்லியன் அமெரிக்க டொலர்களே பதிவாகியிருந்தது.</p><p>

 

அத்துடன், கடந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றமாக 697.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் 777.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவாகியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T05:14:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/21-former-mps-have-not-paid-rent-on-houses-1787450229"></link>
            <id>https://tamilwin.com/article/21-former-mps-have-not-paid-rent-on-houses-1787450229</id>
            <summary type="text">21 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து (1,793,480) ரூபாய் வாடகை பணம் இதுவரை வசூலிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

மேலும...</summary>
            <content type="html"><![CDATA[<p>21 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து (1,793,480) ரூபாய் வாடகை பணம் இதுவரை வசூலிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
</p><p>
மேலும், இந்த நிலுவை வாடகைகள் 2015 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்திற்குரியவை என்பதும் தெரியவந்துள்ளது.</p><h2>வாடகை நிலுவைகள்&nbsp;</h2><p>
</p><p>
இதேபோல், 2009-2016 காலகட்டத்தில் ஜனாதிபதி பாதுகாப்புப்பிரிவு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட, கொழும்பு 05 உள்ள 08 வீடுகளிலிருந்து உரிய வாடகையை வசூலிக்க ஜனாதிபதி செயலகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e29e242c-d7d3-4fdd-a900-fb02b3d6b3c1/26-6a8a8161c40ac.webp' /></p><p>
</p><p>
2012 முதல் 2024 வரையிலான காலக்கட்டத்திற்கு, 22 வீடுகளிலிருந்து சேர வேண்டிய நிலுவை வாடகை 1,73,190 ரூபாய் ஆகும். </p><p>

ஜெயவர்த்தனபுரவில் உள்ள 15 வீடுகளுக்கு, 2012 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில் செலுத்தப்பட வேண்டிய வாடகை 84,49,265 ரூபாய் ஆகும்.</p><p>

பொது நிர்வாகம் தொடர்பான 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர செயல்திறன் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள தணிக்கை அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-23T05:13:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா விதித்துள்ள புதிய வரிகளுக்கு இணையான வரி... பிரதமர் கார்னி திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-to-impose-retaliatory-tariffs-1787430586"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-to-impose-retaliatory-tariffs-1787430586</id>
            <summary type="text">Canada to impose retaliatory tariffs: அமெரிக்காவின் எஃகு, மின்னணுப் பொருட்கள் மற்றும் பிற பொருட்கள் மீது கனடா பதிலடி நடவடிக்கையாகக் கூடுதல் வரிகளை வித...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada to impose retaliatory tariffs: அமெரிக்காவின் எஃகு, மின்னணுப் பொருட்கள் மற்றும் பிற பொருட்கள் மீது கனடா பதிலடி நடவடிக்கையாகக் கூடுதல் வரிகளை விதிக்கவுள்ளது.
</p><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நள்ளிரவில் அமுல்படுத்திய 50 சதவீத இறக்குமதி வரிக்கு பதிலடியாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு, மின்னணு சாதனங்கள் மற்றும் பிற பொருட்கள் மீது செப்டம்பர் 8 முதல் கனடா வரி விதிக்கவுள்ளதாக பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.</p><h2>இணையான வரி</h2><p>
</p><p>பல நாட்கள் நடந்த தீவிரப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் கனடாவும் அமெரிக்காவும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்ட முடியாமல் போனது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64b4578e-b4a5-486c-a973-7d347ccc6d09/26-6a8a06bd414d4.webp' /></p><p> </p><p>இது, நீண்டகால வர்த்தகப் பங்காளிகள் மற்றும் கூட்டாளிகளான இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான சிக்கலான உறவை மேலும் மோசமாக்கியதுடன், அமெரிக்கா-மெக்சிகோ-கனடா ஒப்பந்தம் என அறியப்படும் கண்ட அளவிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் எதிர்காலத்தையும் சிக்கலாக்கியுள்ளது.</p><p> ட்ரம்பின் புதிய சுங்கவரிகள் ஒயின், தளபாடங்கள், பால் பொருட்கள், சிமெண்ட், ஆடைகள், மீன்பிடித் தூண்டில்கள் மற்றும் ஹொக்கி உபகரணங்கள் உள்ளிட்ட துறைகளைப் பாதிக்கின்றன; மேலும் இவை கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களை உள்ளடக்கியுள்ளன. </p><p>கடந்த 18 மாதங்களாக அமெரிக்காவிற்கான பெரும்பாலான கனடிய ஏற்றுமதிகளுக்குப் பாதுகாப்பளித்து வந்துள்ள USMCA ஒப்பந்தத்தின் கீழ், இந்தக் கட்டணங்களிலிருந்து கனடியப் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை.</p><p></p><p> </p><p>இந்த நிலையில், கனடியத் தொழிலாளர்கள், விவசாயிகள், குடும்பங்கள் மற்றும் வணிகங்களைப் பாதுகாப்பதற்காக, அமெரிக்கா விதித்துள்ள புதிய வரிகளுக்கு இணையான வரிகளை கனடாவும் விதிக்கும் என்று கார்னி செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
</p><p>கனடா தனது ஏற்றுமதியில் ஏறக்குறைய 70 சதவீதத்திற்கு அமெரிக்காவையே சார்ந்திருந்த போதிலும், அமெரிக்காவின் வரிக் கொள்கைகளுக்கு எதிராகப் பதிலடி கொடுத்த வெகு சில உலகத் தலைவர்களில் கார்னியும் ஒருவர்; மேலும், அவர் புதிய வர்த்தக மற்றும் ராணுவக் கூட்டணிகளை உருவாக்கவும் உறுதியளித்துள்ளார். </p><p>அமெரிக்காவின் எஃகு, பால் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், விவசாய இயந்திரங்கள், கூழ் மற்றும் காகிதம், மின்னணு சாதனங்கள் ஆகியவற்றின் மீதும், அத்துடன் கனடாவில் அமெரிக்கா முன்பு குறிவைத்த சில பொருட்கள் மீதும் கனடா வரி விதிக்கும் என்று ஒட்டாவாவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்திலிருந்து கார்னி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdc5027c-ab89-4c49-af1c-20130294fc5d/26-6a8a06bc91a50.webp' /></p><p> </p><p>மேலும், இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தனது நடவடிக்கைகள் குறித்த விவரங்களை வரும் நாட்களில் வெளியிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p> மட்டுமின்றி, அமெரிக்காவின் புதிய வரிகளால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்துறைகளுக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கைகளை கனடா அடுத்த வாரம் அறிவிக்கும் என்றும், இந்த நடவடிக்கைகள் பல ஆண்டுகள் நீடிக்கக்கூடும் என்றும் கார்னி கூறியுள்ளார். </p><p>அமெரிக்கா விதித்துள்ள புதிய வரிகள், கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதியில் சுமார் 5 சதவீதத்தைப் பாதிக்கின்றன. </p><p>மென்மரக் கட்டை (softwood lumber) மற்றும் ஒயின் போன்ற பாதிப்புக்குள்ளாகக்கூடிய சில தொழில்துறைகள் இதனால் கடுமையான சேதத்தைச் சந்திக்க நேரிடலாம் என்றும், இது வேலை இழப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களின் மூடலுக்கு வழிவகுக்கக்கூடும் என்றும் வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T05:10:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[24 மாலுமிகளுடன் சென்ற கப்பல் வங்காள விரிகுடாவில் விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ship-carrying-24-sailors-capsizes-in-bay-of-bengal-1787461360"></link>
            <id>https://jvpnews.com/article/ship-carrying-24-sailors-capsizes-in-bay-of-bengal-1787461360</id>
            <summary type="text">பனாமா கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் ஒன்று வங்காள விரிகுடாவில் உள்ள ஒடிசா கடலோரப் பகுதியிலிருந்து சுமார் 240 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளாகியுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பனாமா கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் ஒன்று வங்காள விரிகுடாவில் உள்ள ஒடிசா கடலோரப் பகுதியிலிருந்து சுமார் 240 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
 

"MV Ocean-Winner" எனப்படும் இந்தக் கப்பல் கடந்த ஓகஸ்ட் 20 ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளதுடன், அதில் 1,700 தொன் இரும்புத் தாது கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36f44885-27bd-43ae-8f2a-6b4ce09712bd/26-6a8a7ef1c07ef.webp' /></p><p>

 

கப்பல் விபத்துக்குள்ளான போது அதில் 24 பணியாளர்கள் இருந்ததாகவும், அவர்களில் 20 பேர் சீனக் குடிமக்கள், மூவர் மியான்மர் குடிமக்கள் மற்றும் ஒருவர் பங்களாதேஷ் குடிமகன் என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
 

இந்தியாவின் ஸ்ரீ விஜய புரத்தில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு (MRCC) ஓகஸ்ட் 23 அன்று இரவு 11.48 மணியளவில் கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக செய்தி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

 

பின்னர், தேடல் மற்றும் மீட்பு உதவிக்கான கோரிக்கையுடன் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கப்பலை இயக்கும் நிறுவனம் அறிவித்துள்ளது.
</p><p>
 

கப்பல் விபத்துக்குள்ளான செய்தி அறிந்தவுடனேயே, இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கடற்படை இணைந்து கூட்டு மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளன.</p><p>

 

அதன்படி, தேடல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக மூன்று கடலோரக் காவல் படகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.</p><p>

 

இருப்பினும், கப்பலின் பணியாளர்களில் எத்தனை பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. </p><p>

 

விபத்துக்குள்ளான கப்பல் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் உள்ள ஏனைய கப்பல்களுக்கும் மீட்புப் பணிகளுக்கு உதவுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-23T05:03:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA['சினிமாவை சீரியஸாக எடுத்துக்கொள்ளாதீர்கள்' - டாக்சிக் பட விழாவில் நடிகர் யாஷ் ஓபன் டாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/yash-says-dont-take-cinema-seriously-1787460194"></link>
            <id>https://cineulagam.com/article/yash-says-dont-take-cinema-seriously-1787460194</id>
            <summary type="text">நடிகர் யாஷ் டாக்சிக் திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில் சினிமாவை சீரியஸாக எடுத்துக்கொள்ளாதீர்கள் என பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

டாக்சிக்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் யாஷ் டாக்சிக் திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில் சினிமாவை சீரியஸாக எடுத்துக்கொள்ளாதீர்கள் என பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><p></p><h2> 

டாக்சிக்</h2><p>

இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்சிக். இப்படத்தில் <a href="https://www.youtube.com/watch?v=tAImlt8VIm4" target="_blank">நயன்தாரா</a>, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி மற்றும் தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வருகிற 26-ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71fe0001-1b0a-4a7b-a617-248ca6478f0a/26-6a8a7a657010a.webp' /></p><p>
இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும், அதே போல் கடும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. பெண்களை திரைப்படத்தில் இப்படியா காட்டுவது என பலரும் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
</p><h2>
ப்ரோமோஷன்
</h2><p>
டாக்சிக் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா மற்றும் டிரைலர் வெளியிட்டு விழாவை தொடர்ந்து பல ப்ரோமோஷன் விழாக்களும் நடைபெற்று வருகின்றன. இதில் படத்தில் நடித்த நட்சத்திரங்கள் கலந்துகொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்கள்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83f9e2d0-0d64-4d7b-b141-cb8061aa0b97/26-6a8a7a6626139.webp' /></p><p>இந்நிலையில், நேற்று ஹைதராபாத்தில் இப்படத்திற்கான ப்ரோமோஷன் நடைபெற்ற நிலையில், அதில் பேசிய நடிகர் யாஷ், "சினிமாவை ஒருபோதும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நாங்கள் ஒன்றும் பெரிதாக சாதித்துவிடவில்லை. வாழ்க்கையில் என்ன செய்ய விரும்புகிறீர்களோ, அதை கனவாக கொண்டு உழையுங்கள். மரியாதையும் வெற்றியும் உங்களைத் தேடி வரும்" என கூறினார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-23T05:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேனிலவுக்கு சென்ற பிரித்தானிய புதுமணத் தம்பதி: ஹெலிகொப்டர் விபத்தில் மரணம்..தெரிய வந்த காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/blade-reason-of-british-couple-helicopter-crash-1787460959"></link>
            <id>https://news.lankasri.com/article/blade-reason-of-british-couple-helicopter-crash-1787460959</id>
            <summary type="text">British newly couple helicopter crash: பிரித்தானிய புதுமணத் தம்பதி கிரீஸில் பலியான சம்பவத்தில் காரணம் தெரிய வந்துள்ளது.கிரீஸிற்கு தேனிலவு சென்ற ஹெலிகொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>British newly couple helicopter crash: பிரித்தானிய புதுமணத் தம்பதி கிரீஸில் பலியான சம்பவத்தில் காரணம் தெரிய வந்துள்ளது.</p><p>கிரீஸிற்கு தேனிலவு சென்ற ஹெலிகொப்டரில் பிரித்தானிய தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், விபத்து குறித்த காரணம் தெரிய வந்துள்ளது.&nbsp;</p><h2>தேனிலவிற்காக கிரீஸ் நாட்டிற்கு</h2><p>
அலெக்சாண்டர் குரோமி மற்றும் மேரி எபர்ட் ஆகிய பிரித்தானிய புதுமணத் தம்பதி, கடந்த வாரம் தேனிலவிற்காக கிரீஸ் நாட்டிற்கு சென்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48842f35-a0fa-48b4-82b1-6990aa3398f9/26-6a8a7dffeae06.webp' />&nbsp;</p><p></p><p>
அவர் பயணித்த பெல் 206 ரக ஹெலிகொப்டர், சிஃப்னோஸ் தீவில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதில் தம்பதியினர் மற்றும் கிரேக்க விமானியும் பலியாகினர்.
</p><p>
இந்த நிலையில், ஹெலிகொப்டர் விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தெரிய வந்துள்ளது.&nbsp;</p><h2> மேலாண்மை ஆலோசனை நிறுவனம்</h2><p>விமானி கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. தற்போது அதற்கு காரணம் அதன் வால் ரோட்டார் செயலிழந்தது என கணிக்கப்பட்டுள்ளது. </p><p>இதனால் விபத்திற்கு காரணம் சேதமடைந்த ரோட்டார் பிளேடாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.</p><p>
இதற்கிடையில், எபர்ட் ஒரு மூத்த நிபுணராக பணியமர்த்தியிருந்த பெயின் அண்ட் கம்பெனி என்ற மேலாண்மை ஆலோசனை நிறுவனம், அவரைத் தனது லண்டன் குழுவில் 'மிகுந்த அன்புக்குரிய மற்றும் ஆழ்ந்த மரியாதைக்குரிய' உறுப்பினர் என்று விவரித்துள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ff45318-3af9-40d2-9df6-efe9730f3757/26-6a8a7f771a594.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T04:56:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் - கொழும்பு தொடருந்து சேவையில் சிக்கல் - அமைச்சரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/poor-engine-condition-caused-colombo-kks-train-1787453218"></link>
            <id>https://ibctamil.com/article/poor-engine-condition-caused-colombo-kks-train-1787453218</id>
            <summary type="text">கொழும்பு - காங்கேசன்துறை தொடருந்து கடந்த 20 ஆம் திகதி பழுதடைந்ததற்கு&amp;nbsp; தொடருந்தின் இயந்திரம் மோசமான நிலையில் இருந்ததே காரணம் என&amp;nbsp;நாடாளுமன்றத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - காங்கேசன்துறை தொடருந்து கடந்த 20 ஆம் திகதி பழுதடைந்ததற்கு&nbsp; தொடருந்தின் இயந்திரம் மோசமான நிலையில் இருந்ததே காரணம் என&nbsp;நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p>குறித்த விடயத்தை போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.</p><p>நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளித்தபோதே&nbsp;அவர் இதனைத் தெரிவித்தார்.</p><p></p><h2>மோசமான நிலையில்&nbsp;இயந்திரங்கள்</h2><p> தற்போது சேவையில் உள்ள பெரும்பாலான தொடருந்து இயந்திரங்கள் மோசமான நிலையில் இருப்பதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a32b9aac-0059-42c6-9d06-aa1d17c107a4/26-6a8a62b3518db.webp' /></p><p>“இயந்திரங்கள் மற்றும் தொடருந்து பெட்டிகள் இரண்டையும் பழுதுபார்ப்பதே எமது நோக்கம்” எனவும் அவர் தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T04:50:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மணக்கோலத்தில் மணப்பெண் செய்த நெகிழ்ச்சிச் செயல் - வைரலாகும் காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bride-steps-in-as-a-doctor-on-her-wedding-day-1787459710"></link>
            <id>https://ibctamil.com/article/bride-steps-in-as-a-doctor-on-her-wedding-day-1787459710</id>
            <summary type="text">தனது திருமணச் சடங்குகளுக்கு மத்தியிலும் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உடனடியாக முதலுதவி அளித்துக் காப்பாற்றிய மணமகளான இளம் பெண் மருத்துவருக்குப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது திருமணச் சடங்குகளுக்கு மத்தியிலும் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உடனடியாக முதலுதவி அளித்துக் காப்பாற்றிய மணமகளான இளம் பெண் மருத்துவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
</p><p>
கேரள மாநில திருமண மண்டபத்தில் உணவளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரு பெண் ஊழியர்களுக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. </p><p>அதில் ஒருவருக்கு மூக்கில் இரத்தக்கசிவும், மற்றொருவருக்கு மயக்கமும் ஏற்பட்டது.

மணமகள் ஒரு மருத்துவர் என்பதை அறிந்த உறவினர்கள் அவரை உதவிக்கு அழைத்தனர்.</p><p></p><h2>காணொளி&nbsp;</h2><p> </p><p>மணக்கோலத்தில் இருந்தபோதிலும், சடங்குகளைச் சற்று நேரம் நிறுத்தி வைத்துவிட்டு, பாதிக்கப்பட்ட இருவருக்கும் அவர் உடனடியாக முறையான முதலுதவி சிகிச்சையளித்தார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/kzXzOoL65Fc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
</p><p>
மருத்துவப் பராமரிப்பைத் தொடர்ந்து இரு ஊழியர்களும் இயல்பு நிலைக்குத் திரும்பினர்.
</p><p>
இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், "ஒரு மருத்துவராக என் கடமையை மட்டுமே செய்தேன்.</p><p> அனைவரும் முதலுதவி குறித்த அடிப்படை அறிவைப் பெற்றிருப்பது அவசியம்" என குறித்த மருத்துவர் எளிமையுடன் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T04:49:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஷேட திறனுடையவர்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதே அரசின் நோக்கம்! கடற்றொழில் அமைச்சர் தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-aims-equal-opportunity-for-disablities-1787454203"></link>
            <id>https://tamilwin.com/article/government-aims-equal-opportunity-for-disablities-1787454203</id>
            <summary type="text">மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பும் வளங்களும் வழங்குவதே ஜனாதிபதி அநுர
குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் நோக்கம் என கடற்றொழில் அமைச்சர் இராமல...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பும் வளங்களும் வழங்குவதே ஜனாதிபதி அநுர
குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் நோக்கம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
</p><p>

யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று(22) நடைபெற்ற,
பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும் உரையாற்றுகையில்,</p><h2>அரசின் நோக்கம்</h2><p>
</p><p>&nbsp;கடந்த காலங்களில் ஜனாதிபதி நிதியம் என்பது எம்மை பொறுத்தவரையில்
எட்டாக்கனியாகவே இருந்தது. குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜனாதிபதி
நிதியத்திற்கு விண்ணப்பிக்கும் மக்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே
காணப்பட்டது.</p><p> 

இதன் மூலம் கிடைக்கக்கூடிய உதவிகளை பெறுவதற்கான வாய்ப்புகள்
எமது மக்களுக்கு அரிதாகவே இருந்தன.</p><p>

இந்த நிலைமையை ஆழமாக ஆராய்ந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம், இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்
வகையில் ஜனாதிபதி நிதியத்தை கொழும்புக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு
நிறுவனமாக வைத்திருக்காமல், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களை
சென்றடையும் வகையில் மாற்றியமைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5891ccd3-30d4-474d-bd68-f51a4629c690/26-6a8a6a249adbf.webp' /></p><p>
</p><p>
அதன் வெளிப்பாடாகவே இன்று எமது ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளினூடாகவும்,
எமது பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு உதவித்
திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
அதன் ஒரு முக்கியமான வெளிப்பாடாகவே இன்று இங்கு கூடியிருக்கும் எமது மாணவச்
செல்வங்களான மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கான இந்த நிகழ்வையும்
நாம் பார்க்க வேண்டும்.
</p><p>
மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் பின்தங்கியவர்களாகவும் ஒதுக்கப்பட்டவர்களாகவும்
பார்க்கப்படும் நிலை மாற வேண்டும். உலகை வழிநடத்தும் ஆற்றலும் திறமையும்
அவர்களிடம் உள்ளது.</p><h2>சமூகத்தில் சம உரிமை</h2><p> </p><p>இதற்கு சிறந்த உதாரணமாக ஸ்டீபன் ஹாக்கிங்கை குறிப்பிடலாம்.

உடல் ரீதியான பல சவால்களை எதிர்கொண்ட போதிலும், தனது அறிவாற்றலால் உலக
விஞ்ஞானத்திற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கி, அழியாத தடம் பதித்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு இதுவரை போதிய ஆதரவு கிடைக்காமல் இருந்திருக்கலாம்.
</p><p>ஆனால்
சம வாய்ப்புகளையும் தேவையான வளங்களையும் வழங்கி, அவர்களும் சமூகத்தில் சம
உரிமையுடன் முன்னேறுவதற்கான சூழலை உருவாக்குவதே ஜனாதிபதி அநுர குமார
திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் நோக்கம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5d4b380-f20d-43b0-8987-6917202926f4/26-6a8a6a23cd344.webp' /></p><p>


‘மாற்றுத்திறனாளி’ என்ற அடையாளம் அவர்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கக்
கூடாது. அவர்களுக்குத் தேவையான அனைத்து வளங்களும் சம வாய்ப்புகளும் கிடைக்கச்
செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும். </p><p>

எதிர்காலத்திலும் இதற்கான
நடவடிக்கைகள் தொடரும் எனவும்,
கடந்த காலங்களை விட இன்று மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதித்துவமும் குரலும்
வலுப்பெற்று வருகின்றன.
</p><p>
இதற்கு எடுத்துக்காட்டாக, மாற்றுத்திறனாளியான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்
ஆற்றலுடன் இந்த நிகழ்வில் உரையாற்றி, பல்வேறு விடயங்களை ஆதாரபூர்வமாக
எடுத்துரைத்து வருவதை குறிப்பிடலாம்.</p><h2>வெற்றிப் பயணம்</h2><p>
</p><p>
இதுபோன்ற மாற்றுத்திறனாளி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம்,
சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும்.</p><p>

குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரையில் மாற்றுத்திறனாளிகள்
என்றால், இயற்கையாக மாற்றுத்திறனாளிகளாகப் பிறந்தவர்கள் மட்டுமல்லாது, கடந்த
காலங்களில் இடம்பெற்ற கொடிய யுத்தத்தின் காரணமாக உடல் ரீதியாக
பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளாகியவர்களும் அதிகளவில் உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b17f38cd-bca6-4220-964e-bb365b5acfff/26-6a8a6a23033f8.webp' /></p><p>
</p><p>
அவர்களையும் நாம் மறந்துவிட முடியாது. அவர்களுக்குத் தேவையான வளங்களையும்
வாய்ப்புகளையும் வழங்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. அந்த நோக்கத்தின்
அடிப்படையிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு செயற்பாடுகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
மேலும், யாரும் மனம் தளராமல் தமது பயணத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.
உங்களின் வெற்றிப் பயணத்திற்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்க அரசாங்கம்
அர்ப்பணிப்புடன் செயற்படும்.
</p><p>
மாற்றுத்திறனாளி என்ற காரணத்தினால் எவரும் பாகுபடுத்தப்படக் கூடாது. ஏழை,
பணக்காரர்,சாதி,மதம் என எந்த வேறுபாடுமின்றி அனைவரும் சமமான மனிதர்கள்
எனவும், மாற்றுத்திறன் ஒருபோதும் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T04:49:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் நேர்ந்த கொடூர தாக்குதல் ; விருந்தில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-dispute-at-a-party-ended-in-murder-1787460557"></link>
            <id>https://jvpnews.com/article/a-dispute-at-a-party-ended-in-murder-1787460557</id>
            <summary type="text">அனுராதபுரம் கெகிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் ஏற்பட்ட மோதலில் 56 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் கெகிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் ஏற்பட்ட மோதலில் 56 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.</p><h3>மேலதிக விசாரணை</h3><p>

இந்தச் சம்பவம் இன்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5b4e92e-03f2-46a7-ab00-2e889c07ae1d/26-6a8a7bceb3197.webp' /></p><p>கொட்டல்பத்த பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
</p><p>
உயிரிழந்தவரின் வீட்டில் இடம்பெற்ற விருந்தொன்றின்போது, அவருக்கும் அயல் வீட்டைச் சேர்ந்த நபர் ஒருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

தகராறு முற்றிய நிலையில், அயல் வீட்டைச் சேர்ந்த நபர் கூரிய ஆயுதமொன்றால் குறித்த நபரை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>தாக்குதலில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தையடுத்து சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
தப்பிச் சென்ற சந்தேகநபரை கைது செய்வதற்காக கெகிராவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். </p><p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-23T04:49:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் ஆபத்தான மின்குமிழ்களை வைத்திருந்த நபருக்கு விளக்கமறியல் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-arrested-for-possessing-dangerous-light-bulbs-1787458611"></link>
            <id>https://tamilwin.com/article/man-arrested-for-possessing-dangerous-light-bulbs-1787458611</id>
            <summary type="text">யாழ். பண்டத்தரிப்பு - பிரான்பற்று ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த
திருவிழாவின் போது பயன்படுத்தப்பட்ட அதி தீவிர ஒளி மின்குமிழ்களால் 400 இற்கும்
மேற்பட்ட பக...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். பண்டத்தரிப்பு - பிரான்பற்று ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த
திருவிழாவின் போது பயன்படுத்தப்பட்ட அதி தீவிர ஒளி மின்குமிழ்களால் 400 இற்கும்
மேற்பட்ட பக்தர்களின் கண்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.</p><p>இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மின்குமிழ்களை தம்வசம்
வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><h2>400 இற்கும் மேற்பட்டோரின் கண்களில் பாதிப்பு&nbsp;</h2><p>

பிரான்பற்று முருகன் ஆலய திருவிழாவின்போது, பொதுமக்களுக்குப் பாதகமான முறையில்
அதிக ஒளியை வெளியிடக்கூடிய மின்குமிழ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/803e4e3d-d554-4a8a-af41-4211b6ff63e8/26-6a8a79535af1b.webp' /></p><p> </p><p>இதனால்
திருவிழாவிக்கு வருகை தந்திருந்த 400 இற்கும் மேற்பட்டோரின் கண்களில் கடுமையான
பாதிப்பு ஏற்பட்டுள்ளது.</p><p>

பாதிக்கப்பட்ட அனைவரும் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த இளவாலைப் பொலிஸார், தீவிர விசாரணைகளை
முன்னெடுத்தனர். </p><p>இந்த விசாரணைகளின் அடிப்படையில், அதிக ஒளியை ஏற்படுத்திய
மின்குமிழ்களை விற்பனைக்காகவோ அல்லது பயன்பாட்டுக்காகவோ தம்வசம் வைத்திருந்த
குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை கைது செய்தனர்.</p><h2>விளக்கமறியல் உத்தரவு </h2><p>
</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பலத்த பாதுகாபுக்கு மத்தியில் நேற்று மல்லாகம்
நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டார்.</p><p>குறித்த வழக்கை விசாரித்த நீதிவான்,
சந்தேகநபரை எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு
உத்தரவு பிறப்பித்துள்ளார்.</p><p>

பொதுமக்களின் சுகாதாரத்துக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்கும்
இவ்வாறான முறையற்ற ஒளிப் பயன்பாடுகள் குறித்துப் பொலிஸார் தொடர்ந்தும்
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T04:38:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொரண்டோவில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/26-year-old-man-dead-after-being-shot-1787459309"></link>
            <id>https://canadamirror.com/article/26-year-old-man-dead-after-being-shot-1787459309</id>
            <summary type="text">கனடாவின் டொரண்டோ நகரில் உள்ள நார்த் யார்க் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் டொரண்டோ நகரில் உள்ள நார்த் யார்க் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>
கடந்த சனிக்கிழமை பிற்பகல் 1:24 மணியளவில், சேதமடைந்த வாகனம் ஒன்று அபாயகரமான முறையில் இயக்கப்படுவதாகக் கிடைத்தத் தகவலைத் தொடர்ந்து, பொலிஸார் அல்சன் வீதிக்கு கிழக்கே உள்ள வில்சன் மற்றும் கிங் ஹை ஏவென்யூ பகுதிக்குச் சென்றுள்ளனர்.</p><p>
விபத்துக்குள்ளான குறித்த வாகனத்தில் பயணித்தவர்கள், சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், கைத்துப்பாக்கியை வைத்திருந்த நபரை எதிர்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84434731-c82c-4615-b3b4-a4b960bca9c8/26-6a8a76ef3df54.webp' /></p><p> இதன்போது ஏற்பட்ட மோதல் நிலையைத் தொடர்ந்து, பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.</p><p>
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அந்த இளைஞர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
 சம்பவ இடத்தில் இருந்து டிராம் மேகசின் கொண்ட கையடக்கத் துப்பாக்கி உட்பட குறைந்தபட்சம் இரண்டு துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>
பொலிஸாரின் நடவடிக்கையினால் மரணம், தீவிர காயம் அல்லது துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் ஏற்படும் போது விசாரணை நடத்தும் சிறப்பு புலனாய்வுப் பிரிவு (SIU), இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.</p><p>
இதற்காக 4 முதன்மை விசாரணையாளர்களும், 3 தடயவியல் விசாரணையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T04:38:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரணத்தில் முடிந்த விருந்து : கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/one-person-dies-after-being-attacked-by-a-neighbor-1787457643"></link>
            <id>https://ibctamil.com/article/one-person-dies-after-being-attacked-by-a-neighbor-1787457643</id>
            <summary type="text">அநுராதபுரம் - கெகிராவை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

இந்த தாக்குதல் இன்று (23) அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரம் - கெகிராவை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
 

இந்த தாக்குதல் இன்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> இந்தச் சம்பவத்தில் கொட்டல்பத்த பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p>

 

உயிரிழந்தவரின் வீட்டில் இடம்பெற்ற விருந்தொன்றின் போது, அயல் வீட்டைச் சேர்ந்த நபருடன் ஏற்பட்ட தகராறு ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a261c675-5fb1-4ab3-a11e-3d31bd08205a/26-6a8a753021eff.webp' /></p><p>
</p><p>
 

இதன்போது, அயல் வீட்டைச் சேர்ந்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் இந்தக்கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

 

தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p>சந்தேகநபரை கைது செய்வதற்காக கெகிராவை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T04:37:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளாமர் லுக்கில் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் ஆர்த்தி ரவி!! புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/aarti-ravi-photoshoots-fans-reaction-1787409306"></link>
            <id>https://viduppu.com/article/aarti-ravi-photoshoots-fans-reaction-1787409306</id>
            <summary type="text">ஆர்த்தி ரவிநடிகர் ரவி மோகன் கடந்த ஆண்டு தான் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறி விவாகரத்து வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிமன்றம் அதிரடி உத்தரவை ச...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஆர்த்தி ரவி</h2><p>நடிகர் ரவி மோகன் கடந்த ஆண்டு தான் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறி விவாகரத்து வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிமன்றம் அதிரடி உத்தரவை சமீபத்தில் பிறப்பித்து இருந்தது.
</p><p>
அதாவது வழக்கு முடியும் வரை மாதம் 3 லட்சம் ஜீவனாம்சமாக ஆர்த்திக்கு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஆர்த்தி தனக்கு ரூ. 40 லட்சம் வேண்டும் என்று கேட்ட நிலையில் நீதிபதி இப்படியொரு உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/718f3760-cb1f-4593-a940-f94afab5ff80/26-6a89b3a358b1f.webp' /></p><p>
மேலும் மகன்களை ரவி மோகனை சந்திக்க அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஆர்த்தி, ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையிலான போட்டோஷூட் நடத்தி வருகிறார்.</p><p>
தற்போது, ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-23T04:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வார ராசிபலன் - பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் 3 ராசியினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/top-3-zodiac-signs-weekly-rasi-palan-in-tamil-1787458613"></link>
            <id>https://ibctamil.com/article/top-3-zodiac-signs-weekly-rasi-palan-in-tamil-1787458613</id>
            <summary type="text">வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.</p><p>

கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும்.
</p><p>
இந்நிலையில், திங்கள் முதல் வெள்ளி வரை எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ளது என்பதை பார்க்கலாம்.</p><p></p><h2>மிதுன ராசி</h2><p>இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் மூலம் நன்மை உண்டாகும். எதை விரும்பினாலும் அது கிடைக்க வழி தெரியும். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும்.</p><p> வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். பணியாளர்கள் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b6bb647-efdc-4bc5-9736-3f5f1fe804b1/26-6a8a77320f58d.webp' /></p><p>தொழில் விரிவாக்கம் செய்யும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பணவரத்து கிடைக்க பெறுவார்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும்.

முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். </p><p>கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் அடையும். சொல் வன்மை அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். விட்டுக் கொடுத்து நடப்பது நன்மை அளிக்கும். </p><p>பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். தொலை தூர தகவல்கள் நல்ல தகவலாக வரும். பயணம் செல்ல நேரலாம். அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள்.
</p><p>
உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.</p><p> அவற்றில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். பண வரவு அமோகமாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல்&nbsp;</p><p></p><h2>கடக ராசி</h2><p>இந்த வாரம் செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். சிலருக்கு உங்கள் செல்வாக்கை கண்டு பொறாமை உண்டாகலாம் கவனம் தேவை. எதிர்ப்புகள் விலகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8a71268-b451-439e-803b-f8543f78b19b/26-6a8a773156050.webp' /></p><p>காரிய தடைகள் நீங்கும். வீடு, மனை சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். தடைபட்டிருந்த வீடு கட்டும் பணிகள் நிறைவடையும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் வேகம் பிடிக்கும்.</p><p> வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும்.

உத்தியோகஸ்தர்கள் வேலைப் பளு இருந்தாலும் எல்லா பணிகளையும் திறம்பட செய்து முடிப்பார்கள்.</p><p>பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த அதிகாரமிக்க பதவிகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். </p><p>குழந்தைகளால் பெருமை சேரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கடன் பிரச்சனையில் நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். பெண்களுக்கு காரிய தடைகள் நீங்கி எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வாக்குவன்மையால் நன்மை உண்டாகும்.</p><h2>கன்னி&nbsp;ராசி&nbsp;</h2><p>இந்த வாரம் பணவரத்து வழக்கத்தை விட அதிகரிக்கும். ஆனால் செலவும் அதற்கு ஏற்றார்போல் இருக்கும். மற்றவர்களது உதவி கிடைக்கும். சாதூரியமாக பேசி எதிலும் வெற்றி காண்பீர்கள். அனுபவப் பூர்வமான அறிவுத் திறன் அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff0d0add-f5d3-40ef-a812-e210e093887a/26-6a8a7732c01d3.webp' /></p><p>தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பேச்சாற்றலால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பீர்கள். பங்கு சந்தை லாபம் ஓரளவு கூடும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல்திறன் அதிகரிக்கும். பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வந்து சேரும். உங்களின் ஆலோசனைகள் மேலிடத்தால் அங்கீகரிக்கப்படும்.
</p><p>
குடும்பத்தில் மனம் மகிழும்படியான நிகழ்ச்சி நடக்கும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். சிலர் அதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பெண்களுக்கு சாதூரியமாக பேசி எல்லா காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து கூடும். </p><p>பொறுப்புகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழுந்து, உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்.

அரசு அதிகாரிகளும் உங்கள் நேர்மையான ஆலோசனைகளை மதித்து நடப்பார்கள். அவர்களால் உங்களின் செல்வாக்கு தொண்டர்களிடம் உயர்ந்து காணப்படும்.</p><p> கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப்படுத்தும். சக கலைஞர்கள் நட்புடன் பழகுவார்கள். அவர்களால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர் மன்றங்களுக்குச் செலவு செய்து மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு கல்விக்கான செலவு கூடும். சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் W<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>HATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T04:29:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி செயலாளருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள்...! வெளிப்படையான விசாரணை கோரும் நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-demands-probe-into-presidential-secretary-1787457513"></link>
            <id>https://ibctamil.com/article/namal-demands-probe-into-presidential-secretary-1787457513</id>
            <summary type="text">ஜனாதிபதி செயலாளருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான விசாரணைகளை நடத்தி அரசாங்கம் தனது ஊழல் எதிர்ப்பு மற்றும் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி செயலாளருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான விசாரணைகளை நடத்தி அரசாங்கம் தனது ஊழல் எதிர்ப்பு மற்றும் பொறுப்புக்கூறல் உறுதிப்பாட்டை நிரூபிக்க வேண்டும் வலியுருத்தப்பட்டுள்ளது.</p><p>சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
</p><p>
குளியாப்பிட்டியவில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>முறையான விசாரணைகள்</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமானாயக்க, இலங்கை சுங்கத் திணைக்களத்தில் அதிகாரியாகப் பணியாற்றிய காலப்பகுதியை மையப்படுத்தி சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
ஊழலை ஒழிப்பதாகக் கூறும் ஜனாதிபதி, இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்து தனது நேர்மையை நிரூபிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad8b0862-7ae3-4a46-ad5e-78fac4979076/26-6a8a76a379950.webp' /></p><p>
விவசாயிகள், பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக அரசாங்கத்தைச் சாடிய அவர், நெல் கொள்முதல் விலை வீழ்ச்சி, அரிசி விலை உயர்வு, வரிச்சுமை, மின்சாரம் மற்றும் எரிபொருள் கட்டண உயர்வால் சிறு வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
அரச நிறுவனங்கள் சார்ந்த பாதுகாப்பு மற்றும் இணையக் குற்றங்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் துறைமுகக் கொள்கலன் சம்பவங்களுக்கும் எதிர்க்கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
</p><p>
அரசியல் மோதல்களைத் தவிர்த்து மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலேயே அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T04:27:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனை காலம் தொடர்பில் செய்யப்பட்டுள்ள பரிந்துரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/changes-in-penatly-period-for-life-sentence-1787458933"></link>
            <id>https://tamilwin.com/article/changes-in-penatly-period-for-life-sentence-1787458933</id>
            <summary type="text">மரண மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனை காலம் தொடர்பில் ஜனாதிபதியிடம் விசேட பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் சிறைக்கைதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மரண மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனை காலம் தொடர்பில் ஜனாதிபதியிடம் விசேட பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.</p><p>
ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் சிறைக்கைதிகளின் தண்டனைக் காலத்தை 20 ஆண்டுகளாகக் குறைப்பதற்கும், அவர்களுக்கு வீட்டு விடுமுறை வழங்குவதற்கும் பரிந்துரை செய்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் விசேட குழு அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது.</p><h2>மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பொது மன்னிப்பு</h2><p>
</p><p>மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கான முறையான வழிமுறையொன்றை தயாரிப்பதற்காக இந்த விசேட குழு நியமிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffcf6b69-b583-4253-9661-8d9221c9fe05/26-6a8a75767e34c.webp' /></p><p>
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவினால், 10 மாதகால தீவிர ஆய்வுக்குப் பின்னர் இந்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை கையளிக்கப் பட்டுள்ளது.</p><p>
மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளித்து விடுவிப்பதற்கான கிரமமான திட்டம் குறித்து இதில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><h2>விரைவில் அமைச்சரவையின் ஒப்புதல்</h2><p>
இந்த யோசனைகள் விரைவில் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbb8a8e2-f511-4d24-8448-18ed2c8a874a/26-6a8a7dbc0e2a4.webp' /></p><p>
</p><p>வழக்குத் தாமதங்களுக்கு முக்கிய காரணமாக அமையும் இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளை விரைவாகப் பெறுவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
</p><p>இதற்கமைய, மாதத்திற்கு 7,500 முதல் 9,000 வரையிலான அறிக்கைகளைப் பெறுவதற்கான புதிய நடைமுறை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நாணயக்கார மேலும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T04:22:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரண தண்டனை விதிக்கப்பட்ட பூஜித் ஜயசுந்தர! சிறைக்குள் செய்யும் வித்தியாசமான செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pujith-doing-meditation-in-the-prison-1787455298"></link>
            <id>https://tamilwin.com/article/pujith-doing-meditation-in-the-prison-1787455298</id>
            <summary type="text">மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சிறையில் தியானத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன...</summary>
            <content type="html"><![CDATA[<p>மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சிறையில் தியானத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
சிறைச்சாலை வளாகத்தில் அநேகமான நேரங்களில் 'சக்மன் பாவனா' தியான நடையில் ஈடுபடுவதனை காண முடிவதாக வெலிக்கடை சிறைச்சாலையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><h2>சிறையில் வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு</h2><p>
</p><p>காலை வேளையில் சிறைச்சாலை அதிகாரிகளை சந்திக்கும் போது, அவர் புன்னகையுடன் காலை வணக்கம் கூறி வாழ்த்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cda7d54a-8821-4957-b5cd-7f21116d1062/26-6a8a6743e916e.webp' /></p><p>
</p><p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை மற்றும் பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றத் தவறியமை குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு , முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>எனினும்&nbsp; இருவருக்கும் சிறையில் புத்தகங்கள் வாசிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T04:21:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாக்ஸ் ஆபிஸ்: மொத ராத்திரி - ராம் அண்ட் லீலா திரைப்படங்கள் 2 நாட்களில் செய்துள்ள வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/modha-rathiri-ram-and-leela-movies-box-office-1787458026"></link>
            <id>https://cineulagam.com/article/modha-rathiri-ram-and-leela-movies-box-office-1787458026</id>
            <summary type="text">இந்த வாரம் வெளிவந்த மொத ராத்திரி மற்றும் ராம் அண்ட் லீலா திரைப்படங்களின் 2 நாட்கள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
மொத ராத்திரி - ராம் அண்ட் லீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த வாரம் வெளிவந்த மொத ராத்திரி மற்றும் ராம் அண்ட் லீலா திரைப்படங்களின் 2 நாட்கள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.</p><p>
</p><p></p><h2>மொத ராத்திரி - ராம் அண்ட் லீலா</h2><p>

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று புதிய திரைப்படங்கள் வெளியாகும். அப்படி வெளிவரும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் எப்படிப்பட்ட வரவேற்பு கிடைப்பது என்பதை வைத்துதான், அதனுடைய வசூலும் அமையும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd8456ab-3e89-4d37-b8bd-b129cda6f63d/26-6a8a71ede9ee9.webp' /></p><p>அந்த வகையில், இந்த வாரம் திரையரங்குகளில் வெளிவந்திருக்கும் <a href="https://www.youtube.com/watch?v=aII4XMEdlM4" target="_blank">மொத ராத்திரி</a> மற்றும் ராம் அண்ட் லீலா திரைப்படங்களின் வசூல் விவரங்களை பார்க்கலாம்.
</p><h2>
வசூல் விவரம்</h2><p>

ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் நடிப்பில் வெளிவந்த மொத ராத்திரி திரைப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 1.2 கோடி வசூல் செய்துள்ளது. மேலும், ரியோ ராஜ் மற்றும் வர்த்திகா ஜெயின் நடிப்பில் வெளியான ராம் அண்ட் லீலா திரைப்படம் உலகளவில் இரண்டு நாட்கள் ரூ. 1.5 கோடி வசூலித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a51c04ee-1459-4477-aba1-4b2ec23e30a8/26-6a8a71eea9be4.webp' /></p><p>இனி வரும் நாட்களில் இந்த இரண்டு திரைப்படங்களும் எந்த அளவிற்கு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p>]]></content>
            <updated>2026-08-23T04:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[களுவாஞ்சிக்குடியில் விபத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு! 4 பேர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-boy-killed-when-his-motorcycle-hit-the-children-1787456240"></link>
            <id>https://tamilwin.com/article/a-boy-killed-when-his-motorcycle-hit-the-children-1787456240</id>
            <summary type="text">களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் பயணித்த மோட்டார்
சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து சிறுவர்கள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் பயணித்த மோட்டார்
சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து சிறுவர்கள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p>இந்த சம்பவம் நேற்று (22.08.2026) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>மோட்டார் சைக்கிள் விபத்து&nbsp;</h2><p>
</p><p>
கோட்டை கல்லாறைச் சேர்ந்த 17 வயதுடைய ஜெகநாதன் கிஷோர் என்ற சிறுவனே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார். </p><p>குறித்த பகுதியில் வீதியை கடப்பதற்காக சம்பவ தினமான நேற்று இரவு 9.30
மணியளவில் 3 சிறுவர்கள் பாதை ஓரத்தில் நின்று கொண்டிருந்த போது வீதியில் வேகமாக வந்த
மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியோரமாக நின்ற
சிறுவர்கள் மீது மோதியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50660089-3973-40b4-ac08-1d54713dbfac/26-6a8a6f78090ee.webp' /></p><p>
இதில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற சிறுவன் சம்பவ இடத்திலே
உயிரிழந்ததுடன் அதில் பயணம் செய்தவர் மற்றும் வீதியோரத்தில் நின்ற 3
சிறுவர்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி போக்குவரத்து பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T04:10:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் - பேராசிரியர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/thousands-of-professionals-leaving-sri-lanka-1787452773"></link>
            <id>https://ibctamil.com/article/thousands-of-professionals-leaving-sri-lanka-1787452773</id>
            <summary type="text">மருத்துவர்கள் மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் உட்பட 3000 இற்கும் மேற்பட்ட தொழில்வல்லுநர்கள் கடந்த காலங்களில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.இலங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>மருத்துவர்கள் மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் உட்பட 3000 இற்கும் மேற்பட்ட தொழில்வல்லுநர்கள் கடந்த காலங்களில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.</p><p>இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அதிக வரிச்சுமை மற்றும் தொழில்சார் சிக்கல்கள் காரணமாக இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>அத்தோடு 2000 மருத்துவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லத் தயாராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p></p><h2>மருத்துவ அதிகாரிகள்</h2><p>அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) வெளியிட்டுள்ள தரவுகளின் படி இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3487a4b5-74d5-422e-a49a-73ca75efa84a/26-6a8a6f584128c.webp' /></p><p>மேற்படி தரவுகளின் படி,&nbsp; 2022 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் மட்டும் 1489 நிபுணத்துவ மருத்துவர்கள் (Specialists) இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர்.</p><p>ஒட்டுமொத்தமாக சுமார் 2,500 மருத்துவர்கள் அரசுச் சேவையைக் கைவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள நிலையில் இதனால் அரசுக்கு ரூபாய் 1200 கோடிக்கும் அதிகமான (12 பில்லியன் ரூபாய்) நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>அவசர சிகிச்சை</h2><p>குறிப்பாக மயக்கவியல், அவசர சிகிச்சை, குழந்தைகள் மருத்துவம் மற்றும் இதய நோயியல் ஆகிய பிரிவுகளின் நிபுணத்துவ மருத்துவர்கள் பற்றாக்குறையால் கிராமப்புற மற்றும் பிராந்திய அரசு மருத்துவமனைகளின் இயக்கம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91402c13-4cbf-4e06-aad1-8e3e0935d0aa/26-6a8a6f56df09d.webp' /></p><p>இதனுடன் உயர் கல்வி மற்றும் ஆய்வுக் விடுப்பு பெற்று வெளிநாடுகளுக்குச் சென்று ஒப்பந்தப்படி மீண்டும் இலங்கை திரும்பாத பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் எண்ணிக்கை 514 ஆக உயர்ந்துள்ளதாகப் பொது நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.</p><p>ஒப்பந்தத்தை மீறி வெளிநாடுகளில் தங்கியுள்ள இந்த பேராசிரியர்களிடமிருந்து அரசுக்கும் பல்கலைக்கழக அமைப்பிற்கும் சேர வேண்டிய தொகை ரூபாய் 340 கோடி (3.4 பில்லியன் ரூபாய்) எனத் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>முக்கியக் காரணங்கள்</h2><p>இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) மற்றும் மத்திய வங்கியின் தரவுகளின்படி, கடந்த ஆண்டில் மட்டும் 3,10,915 பேர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff607ccf-9f11-44df-8a0a-4b951ef5f0fb/26-6a8a6f578f6c7.webp' /></p><p>இதில் 76 வீதத்திற்கும் அதிகமானோர் (2,36,900 க்கும் மேற்பட்டோர்) திறன்மிக்க தொழிலாளர்கள் மற்றும் தொழில்வல்லுநர்கள் (Skilled Professionals) என தெரிவிக்கப்படுகின்றது.</p><p>உயர் வாழ்வாதாரச் செலவு, அதிக வருமான வரி, எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை, பிள்ளைகளுக்கான உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் வெளிநாடுகளில் நிரந்தரக் குடியுரிமை (PR) பெறுவது ஆகியவை இந்த மூளைச் சலவைக்கு (Brain Drain) முக்கியக் காரணங்களாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><br></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_0SOSBmsNPY" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T03:56:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அதிகரிக்கும் வெப்பநிலை : முதலிடத்தில் பொலன்னறுவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/temperatures-are-rising-in-sl-polonnaruwa-is-top-1787455480"></link>
            <id>https://ibctamil.com/article/temperatures-are-rising-in-sl-polonnaruwa-is-top-1787455480</id>
            <summary type="text">இலங்கையில் பதிவாகியுள்ள வெப்பநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பொனறை வெளியிட்டுள்ளது.அதன்படி, நாட்டில் அதிகபட்சமாகப் பொலன்னறுவையில் 37.2 ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் பதிவாகியுள்ள வெப்பநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பொனறை வெளியிட்டுள்ளது.</p><p>அதன்படி, நாட்டில் அதிகபட்சமாகப் பொலன்னறுவையில் 37.2 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

அத்துடன், வவுனியாவில் 35.7 செல்சியஸ், அநுராதபுரத்தில் 33.7 செல்சியஸ், யாழ்ப்பாணத்தில் 33 செல்சியஸ், கொழும்பில் 31.4 செல்சியஸ் மற்றும் காலி 29.6 செல்சியஸ் என்ற அளவில் வெப்பநிலைகள் பதிவாகியுள்ளன.</p><p></p><h2>குறைந்தபட்ச வெப்பநிலை</h2><p>
</p><p>
நுவரெலியாவில் நாட்டின் மிகக் குறைந்தபட்ச அதிகபட்ச வெப்பநிலையாக 19.7 செல்சியஸ் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac6a06a4-419f-49db-814e-0494d2844571/26-6a8a6f3327d5d.webp' /></p><p>அத்துடன் பண்டாரவளையில் 28.8 செல்சியஸ் கட்டுக்கஸ்தோட்டையில் 29.0 செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியிருந்தது.</p><p>நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளிலேயே அதிகளவிலான வெப்பநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T03:54:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சமயமாகிய ஐக்கிய தேசியக்கட்சி! சர்ச்சைக்குரிய பல தகவல்களை அம்பலப்படுத்திய ஆசு மாரசிங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ashu-marasinghe-ranilmahinda-rajapaksa-1787445627"></link>
            <id>https://tamilwin.com/article/ashu-marasinghe-ranilmahinda-rajapaksa-1787445627</id>
            <summary type="text">ஐக்கிய தேசியக்கட்சி இன்று ராஜபக்ச மயமாகிவிட்டதோடு மொட்டுக்கட்சியின் கையாளாக மாறிக்கொண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உயர் பீட உறுப்பினரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய தேசியக்கட்சி இன்று ராஜபக்ச மயமாகிவிட்டதோடு மொட்டுக்கட்சியின் கையாளாக மாறிக்கொண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உயர் பீட உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகரான பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட பேட்டியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்த கருத்துகள்..,</p><p>ஐக்கிய தேசியக் கட்சியில் இன்று நான் இல்லை. ஆனால் கட்சியை இல்லாதொழிக்கும் செயற்பாட்டில் நான் ஈடுபடப்போவதில்லை.&nbsp;ஆனால் வெளியிலிருந்து பார்க்கும்போது, ஐக்கிய தேசியக் கட்சி இப்போது உடைந்து சிதறிப்போயிருப்பது போல் தெரிகிறது. </p><p></p><h2>கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பம்</h2><p>எனவே, எனக்கு ஆரம்பத்திலிருந்தே இதில் விருப்பம் இல்லாத நபர் என்பதால் தான் நாங்கள் அமைதியாக இருக்கிறோம்.</p><p>அதனால் தற்போதைய சூழ்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எங்களால் அரசியல் செய்ய முடியும் என்று நான் நம்பவில்லை. அந்த காரணத்தினால் தான் அமைதியாக இருக்கிறேன். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e6464a2-a421-48ed-856d-a18e36d32ba8/26-6a8a417d212f3.webp' /></p><p>வேறு அரசியல் கட்சிக்குச் செல்லவும் இல்லை. ஆனால் என்ன நடக்கிறது என்று பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
ராஜபக்சக்கள் அன்று ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்கு இரண்டு காரணங்கள் வலுவடைந்திருந்தன.
</p><p>அது தொடர்பில் அண்மையில் ரணில் விக்ரமசிங்க ஒரு நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.</p><h2>ஒன்றரை வருட காலத்தில் 104 சட்டமூலங்கள்</h2><p>
</p><p>அனைவரிடமும் பேசி முடியாது என்று கூறிய பிறகு, இறுதியில் ரணில் விக்ரமசிங்கவிடம் வந்தார்கள். அந்த காலத்தில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்த சூழ்நிலையில், ராஜபக்ச குழுவினருக்கு அல்லது கோட்டாபய ராஜபக்ச ஓடிப்போன பிறகு ரணிலைத் தவிர வேறு புகலிடம் இருக்கவில்லை
அவருக்கு அதை பொறுப்பேற்க வேண்டியதாயிற்று.</p><p>அவர் அதை பொறுப்பேற்றார். அவர் அந்த சவாலை எதிர்கொண்டார். அவர் இரண்டு வருடங்களுக்குள் நாட்டில் இருந்த சூழ்நிலையை முற்றிலும் மாற்றினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/900b9a18-2a01-482d-8610-1d9ab2714a6a/26-6a8a6cb16c847.webp' /></p><p> </p><p>வீழ்ச்சியை நோக்கி சென்ற பொருளாதாரத்தை 5.2 வீதமாக ஒரு வருடத்தில் மாற்றினார்.
அவருடன் தோளோடு தோள் நின்று நாங்கள் வேலை செய்தோம். </p><p>அதற்காக நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் நாடாளுமன்ற விவகார ஆலோசகராக அந்த ஒன்றரை வருட காலத்தில் 104 சட்டமூலங்களை உருவாக்க நாங்கள் செயற்பட்டோம் என குறிப்பிட்டிருந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T03:45:37+00:00</updated>
        </entry>
    </feed>
