<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-18T03:11:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[8 நாட்களில் உலகளவில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/mandaadi-movie-8-days-worldwide-box-office-1789700037"></link>
            <id>https://cineulagam.com/article/mandaadi-movie-8-days-worldwide-box-office-1789700037</id>
            <summary type="text">Mandaadi movie 8 days worldwide box office collection: சூரி நடிப்பில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த மண்டாடி தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Mandaadi movie 8 days worldwide box office collection: சூரி நடிப்பில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த மண்டாடி திரைப்படத்தின் 8 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.</p><p></p><p>
</p><h2>
மண்டாடி
</h2><p>
விடுதலை படத்தில் தொடங்கி இன்று மண்டாடி படத்தில் மாபெரும் கதாநாயகனாக உருவெடுத்து நிற்கிறார் <a href="https://cinema.vikatan.com/kollywood/vetrimaaran-about-soori-in-mandaadi-successmeet" target="_blank">சூரி</a>. வெற்றிமாறனிடம் துணை இயக்குநராக இருந்த மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூரியுடன் இணைந்து சுஹாஸ், மஹிமா நம்பியார் மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95bb1e5b-9a41-4007-a116-bdf613fb4ffb/26-6aaca7c8a8632.webp' /></p><p></p><p> 

படம் சூப்பர், வேற லெவல் ஆக்ஷன், படகு போட்டி மிரட்டிட்டாங்க என இப்படத்திற்கு ரசிகர்கள் சிறப்பான விமர்சனங்களை கொடுத்தனர். இதனால் முதல் நாளிலிருந்தே பாக்ஸ் ஆபிஸில் மண்டாடி திரைப்படம் வசூலை குவித்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb389635-473b-473b-ae7d-b0a7724e16ca/26-6aaca7c963350.webp' /></p><p></p><h3> 

வசூல் விவரம்</h3><p>

இந்நிலையில், பாக்ஸ் ஆபிஸில் 8 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் மண்டாடி திரைப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 8 நாட்களில் இப்படம் ரூ. 77 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வாரத்தின் இறுதிக்குள் ரூ. 100 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89b7924b-0120-4fcd-b0a3-e270bd7d57a5/26-6aaca7ca24e5a.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T03:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்குளியில் மூன்று பேர் பலியான கோர விபத்து! கடும் கோபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் - சாரதியின் பரபரப்பு வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/matakuli-road-accident-car-driver-confession-1789695255"></link>
            <id>https://tamilwin.com/article/matakuli-road-accident-car-driver-confession-1789695255</id>
            <summary type="text">கொழும்பு- மட்டக்குளியில் பல வாகனங்கள் நேற்று முன்தினம் மோதிய சம்பவம் மற்றும் உயிரிழப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட சாரதி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.&amp;nb...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு- மட்டக்குளியில் பல வாகனங்கள் நேற்று முன்தினம் மோதிய சம்பவம் மற்றும் உயிரிழப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட சாரதி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.&nbsp;</p><p>இந்த விபத்தினை ஏற்படுத்திய 52 வயதான சாரதி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அவர் மீது கொலை உட்பட 5 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>செப்டம்பர் 16 ஆம் திகதி இரவு பெர்குசன் சந்திப்பு பகுதியில் வத்தளையிலிருந்து அதிவேகமாக வந்த கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.&nbsp;&nbsp;</p><p>இந்த விபத்தில் மொத்தம் 13 பேர் காயமடைந்து கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மூவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பின்னர் உயிரிழந்தனர்.</p><h2>சாரதியில் பரபரப்பு வாக்குமூலம்</h2><p>தனது மகளை மேலதிக வகுப்பிற்கு பின்னர்&nbsp;வீட்டிற்கு அழைத்து வரச்சென்றுகொண்டிருந்தபோது தான் செலுத்திச்சென்ற மின்சார வாகனத்தின் வேகம் தானாகவே அதிகரித்ததாக அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb94e8bc-b8a8-4513-bd72-ee3927e6da12/26-6aaca08a5e102.webp' />&nbsp;</p><p>மேலும், தான்&nbsp; செலுத்திச்சென்ற கார் திடீரென அதிவேகமாக சென்று, வீதியின் இருபுறமும் இருந்த மக்கள் மற்றும் வாகனங்கள் மீது ஏறிச் சென்றதாகவும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
</p><p>குறித்த விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் சந்தேகநபரின் வீடு அமைந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர்.</p><p> விபத்துக்கு காரணமான காரில் ஏதோ தொழில்நுட்பக் கோளாறு இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் மேலும் தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த கார் தொடர்பாக மொரட்டுவ பல்கலைக்கழகத்திடம் இருந்து அறிக்கை கோருமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்வதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2dd37c9-7d85-44d7-8a80-cb9e45c9b8e3/26-6aaca08b12a1c.webp' /></p><p>

கொலை, விபத்தைத் தடுக்கத்தவறுதல், அபாயகரமான முறையில் வாகனம் செலுத்தல், நபர்களுக்கு மரணம் மற்றும் காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் பொலிஸ் தெரிவித்துள்ளது.</p><p>

அதிவேகமாக சென்ற கார், நெடுஞ்சாலை அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 முச்சக்கர வண்டிகள் மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் உட்பட 7 வாகனங்கள் மீது மோதியதில், அவை பலத்த சேதமடைந்தன.</p><p>

விபத்தை ஏற்படுத்திய சந்தேகநபரான தொழிலதிபர், தனது காரை அதிவேகமாக செலுத்திச்சென்ற, ​​சாலையின் இருபுறமும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ளது.</p><h2>சாரதியின் இரத்த மாதிரிகள் மருத்துவப்பரிசோதனை</h2><p>இது குறித்து ​​கொழும்பு வடக்குப் பொறுப்பு சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் எரிக் பெரேரா தெரிவிக்கையில், மட்டக்குளிய பெர்குசன் சந்திப்பு மிகவும் குறுகலான சாலையாகவும், அடிக்கடி நெரிசலாகவும் இருக்கும் என்று கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f56a345-9060-4518-bc62-a290a780e4f2/26-6aaca089a8d9f.webp' />&nbsp;</p><p>
மேலும், அத்தகைய குறுகலான சாலையில் மின்னல் வேகத்தில் வாகனம் செலுத்தியதாலேயே இந்த கோரமான விபத்து நிகழ்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இந்த விபத்து நடந்த நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விபத்து நடந்த இடத்தில் கூடியிருந்ததாகவும், நிலைமையைக் கட்டுப்படுத்தவும் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் சேர்க்கவும் பொலிஸ் நடவடிக்கை எடுத்ததாகவும் மட்டக்குளிய பொலிஸ் பொறுப்பதிகாரி அஜந்த புஷ்பகுமாரா தெரிவித்தார்.</p><p>மேலும், நீதிமன்ற உத்தரவுகளின்படி, விபத்தை ஏற்படுத்திய சாரதியின் இரத்த மாதிரிகள் மருத்துவப்பரிசோதனைக்கு அனுப்பப்படும் என்றும், விபத்தை ஏற்படுத்திய கார் குறித்து மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் அலுவலகத்திலிருந்து அறிக்கை கோரப்படும் என்றும், காரைப் பெறுவதற்காக மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு ஒரு நிபுணர் அறிக்கை மற்றும் ஒரு பொறியியல் அறிக்கை அனுப்பப்படும் என்றும் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.</p><p>

கோர விபத்து நடந்த உடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் குழுக்கள், பதற்ற நிலை ஏற்படுவதற்கு முன்பே சந்தேகத்திற்குரிய சாரதியை கைது செய்து்ளளனர். இல்லையெனில், கோபமடைந்த அப்பகுதி மக்கள் காரைத் தீயிட்டுக் கொளுத்தி, சாரதியை தாக்கியிருக்கக்கூடும் என்று பொலிஸ் கூறுகின்றது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T02:57:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் நாளை முதல் கடுமையாகும் நடைமுறைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/seat-belt-regulations-on-highways-to-be-tightened-1789698511"></link>
            <id>https://tamilwin.com/article/seat-belt-regulations-on-highways-to-be-tightened-1789698511</id>
            <summary type="text">இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் உள்ள சாரதிகள் மற்றும் பயணிகள் அனைவரும் சீட் பெல்ட் (Seat Belt) அணிவது கட்டாயமாக்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் உள்ள சாரதிகள் மற்றும் பயணிகள் அனைவரும் சீட் பெல்ட் (Seat Belt) அணிவது கட்டாயமாக்கும் சட்டம் செப்டம்பர் 19 முதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>

இதற்கான ஓராண்டு கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதால், நாளை முதல் அதிவேக நெடுஞ்சாலையில் சீட் பெல்ட் அணியாமல் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.</p><h2>&nbsp;அதிவேக நெடுஞ்சாலையில் நுழைய அனுமதிக்கப்படாது</h2><p>

அதன்படி, நாளை முதல் சீட் பெல்ட் இல்லாத வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் நுழைய அனுமதிக்கப்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6aadaaa-9084-45ba-89bf-48e7f0a87807/26-6aaca86bb7426.webp' /></p><p>

அதிவேக நெடுஞ்சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களின் முன் மற்றும் பின் இருக்கைகளில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று பொலிஸ் வலியுறுத்துகின்றது.
</p><p>
சீட் பெல்ட் அணியாமையினால் விபத்துகள் மற்றும் சம்பவங்களின் அபாயம் அதிகரிப்பதால், இந்த சட்டம் கடுமையாக நடைமுறைபடுத்தப்படும் என்று சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் மனோஜ் ரணகல சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
இந்த சட்டம் அபராதம் விதிப்பது அல்லது சட்ட நடவடிக்கை எடுப்பது என்ற ஒரே நோக்கத்திற்காக செயல்படுத்தப்படவில்லை என்றும், மாறாக சாரதிகள் மற்றும் பயணிகளின் உயிரைப் பாதுகாப்பதற்காகவே செயல்படுத்தப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><h2>சட்ட நடவடிக்கை</h2><p> </p><p>

வாகனத்தின் பின் இருக்கைகளில் பயணிக்கும் பயணிகளும் இருக்கைப் பட்டைகளை அணிய வேண்டும் என்றும், இருக்கைப் பட்டைகள் இல்லாத வாகனங்களில் அதிவேக நெடுஞ்சாலையில் நுழைய முயற்சிக்கக் கூடாது என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/797835a0-9118-4aab-a4bf-11836cf9b5db/26-6aaca86c702b7.webp' /></p><p>

இதற்கிடையில், இருக்கைப் பட்டைகளை அணிவதைக் கட்டாயமாக்கும் சட்டம் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், சில பழைய வாகனங்களின் உற்பத்தியாளர்கள் இருக்கைப் பட்டைகளைப் பொருத்தாத காரணத்தால், அதை முழுமையாக செயல்படுத்த சிறிது காலம் தேவைப்பட்டது என்று தேசிய சாலைப் பாதுகாப்பு சபையின் தலைவர் மஞ்சுலா குலரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த வாகனங்களில் இருக்கைப் பட்டைகளைப் பொருத்துவதற்காகப் பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும், கடைசி கால அவகாசமும் இன்றுடன் முடிவடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

அதன்படி, நாளை முதல், அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களின் சாரதிகள் மற்றும் அனைத்து பயணிகளும் இருக்கைப் பட்டைகளை அணிவது கட்டாயமாக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T02:56:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முச்சக்கரவண்டியில் சென்ற இளம் தம்பதியர் அதிரடி கைது ; வாடகை வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-couple-travelling-in-a-tuk-tuk-arrested-1789699879"></link>
            <id>https://jvpnews.com/article/young-couple-travelling-in-a-tuk-tuk-arrested-1789699879</id>
            <summary type="text">பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான சலிந்து மல்ஷித குணரத்ன அல்லது &#039;பாணந்துறை குடு சலிந்து&#039; என்பவரின் பணப் பொறுப்பாளராகச் செயற்பட்ட நபர் நேற்று (1...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான சலிந்து மல்ஷித குணரத்ன அல்லது 'பாணந்துறை குடு சலிந்து' என்பவரின் பணப் பொறுப்பாளராகச் செயற்பட்ட நபர் நேற்று (17) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "> 

கல்கிசை தலைமையக பொலிஸார் நடத்திய சோதனையின் போது, சந்தேகநபர் தனது மனைவியுடன் சேர்ந்து ஹெரோயின் போதைப்பொருளை விநியோகித்து பணம் சேகரித்துக் கொண்டிருந்த போது, இரத்மலானை விமான நிலைய சந்திக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/749d2866-b783-4bed-8b99-c60a87cf5ee5/26-6aaca8df0c556.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

சந்தேகநபர்களான தம்பதியரிடமிருந்து 63 இலட்சம் ரூபாய் பணம், 15,055 மில்லிகிராம் ஹெரோயின், நவீன ரக பணம் எண்ணும் இயந்திரம், மின்னணு தராசு மற்றும் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify; ">

முச்சக்கரவண்டி ஒன்றில் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் வருவதாக கல்கிசை தலைமையக தலைமை பொலிஸ் பரிசோதகர்&nbsp; தகவல் கிடைத்துள்ளது. </p><p style="text-align: justify; ">

இதற்கமைய, விமான நிலைய சந்தியிலிருந்து காலி வீதியை நோக்கி வந்த முச்சக்கரவண்டியை மறித்து பரிசோதித்த போது, அதன் பின் இருக்கையில் பெண் ஒருவரும் இருந்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

முச்சக்கரவண்டி ஓட்டுநரின் சாரதி அனுமதிப் பத்திரத்தை பரிசோதித்த போது, அவர் பாணந்துறை, அலுபோமுல்ல பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

சந்தேகநபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது அவருடைய சந்தேகத்திற்கிடமான நடத்தையின் காரணமாக அவரைச் சோதனையிட்ட போது, அவரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p style="text-align: justify; ">

அதனைத் தொடர்ந்து, பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் வைத்திருந்த பையை பரிசோதித்த போது, அதற்குள் இருந்து பெருந்தொகை பணம் கண்டெடுக்கப்பட்டது. </p><p style="text-align: justify; ">

இருவரிடமும் நடத்திய விசாரணையில் அவர்கள் கணவன்-மனைவி எனத் தெரியவந்ததுடன், பாணந்துறை குடு சலிந்துவின் போதைப்பொருளை விநியோகித்து பணம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "> 

இதற்காக மாதாந்தச் சம்பளமாக சலிந்து என்பவர் 1,50,000 ரூபாயை வழங்கி வந்ததாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர். </p><p style="text-align: justify; ">

சந்தேகநபர்களான தம்பதியர் சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்னர் பிலியந்தலை - ஹெடகம பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளதுடன், அந்த வீட்டைப் பரிசோதித்த போது பணத்தை எண்ணப் பயன்படுத்தப்படும் நவீன ரக இயந்திரம் மற்றும் மின்னணு தராசு என்பனவும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "> 

26 மற்றும் 34 வயதுடைய இத் தம்பதியரைத் தடுப்புக் காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-18T02:51:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அடுத்தடுத்து பறிபோன உயிர்கள் ; ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lives-lost-one-after-another-in-jaffna-1789698844"></link>
            <id>https://jvpnews.com/article/lives-lost-one-after-another-in-jaffna-1789698844</id>
            <summary type="text">கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர். 

கெற்பேலி பகுதியி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.</p><p style="text-align: justify; "> 

கெற்பேலி பகுதியில் கெப் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56327309-2d5d-491b-8c49-614927e844b6/26-6aaca31e41d99.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக சிகிச்சை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

குறித்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். </p><p style="text-align: justify; ">

உயிரிழந்தவர் 69 வயதுடைய ஓய்வு பெற்ற ஆசிரியர் என தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

இதேவேளை பருத்தித்துறை - கொடிகாமம் பிரதான வீதியின் வரணி பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.</p><p style="text-align: justify; "> 

கார் ஒன்றும் அதன் முன்னால் பயணித்த துவிச்சக்கர வண்டி ஒன்றும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.</p><p style="text-align: justify; "> 

குறித்த விபத்தில் துவிச்சக்கர வண்டியை செலுத்திய நபரும், அதில் அமர்ந்து பயணித்த ஒருவரும் பலத்த காயமடைந்தனர். </p><p style="text-align: justify; ">

காயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். </p><p style="text-align: justify; ">

அவர்களில் துவிச்சக்கரவண்டியில் அமர்ந்து பயணித்த 59 வயதுடைய நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.</p><p style="text-align: justify; "> 

குறித்த இரு விபத்து சம்பவங்கள் தொடர்பிலும் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "> 

அத்துடன் கெப் மற்றும் காரின் சாரதிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-09-18T02:34:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பெருந்தொகை பணத்துடன் சிக்கிய தம்பதி - பொலிஸ் விசாரணையில் அம்பலமான ரகசியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/couple-arrested-with-huge-money-1789696339"></link>
            <id>https://tamilwin.com/article/couple-arrested-with-huge-money-1789696339</id>
            <summary type="text">கொழும்பின் புறநகர் பகுதியாக கஸ்கிஸ்ஸ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது பெருந்தொகை பணத்துடன் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளது. 

பாண...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் புறநகர் பகுதியாக கஸ்கிஸ்ஸ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது பெருந்தொகை பணத்துடன் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளது.</p><p> 

பாணந்துறை குடு சலிந்து என அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர் சலிந்து மல்ஷித குணரத்னவின் பணத்திற்கு பொறுப்பாளராக செயல்பட்ட தம்பதியே நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.</p><p>

கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்ட சோதனையின்போது, ​​இரத்மலானை விமான நிலையச் சந்திப்புக்கு அருகில் ஹெராயின் விநியோகம் மற்றும் பண வசூலில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.</p><h2><b>பணத்துடன் சிக்கிய தம்பதி&nbsp;</b></h2><p>

இவர்களிடமிருந்து 6.3 மில்லியன் ரூபாய் பணம், 15,055 மில்லிகிராம் ஹெராயின், நவீன பண எண்ணும் இயந்திரம், மின்னணு தராசு மற்றும் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றினர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/738fb2a3-39d0-4015-b311-27f7c226a584/26-6aac9fd1cd8f3.webp' /></p><p>போதைப்பொருட்களை முச்சக்கர வண்டியில் கொண்டு செல்வதற்காக ஒருவர் வருவதாக கல்கிஸ்ஸ தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகர் சுமேத விமல குணரத்னவுக்கு இரகசியத் தகவல் கிடைத்திருந்தது.
</p><p>
இந்த தகவலின் அடிப்படையில், விமான நிலைய சந்திப்பிலிருந்து காலி வீதியை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்றை பொலிஸார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். </p><p>இதன்போது வாகனத்தின் பின்பகுதியில் பெண் அமர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.
</p><p>
முச்சக்கர வண்டி ஓட்டுநரின் சாரதி அனுமதிப் பத்திரத்தைச் சோதித்ததில், அவர் பாணந்துறை அலுபோமுல்ல பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. </p><p>

மேலதிக விசாரணையின் போது சந்தேகநபர் சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்து கொண்டதால் அவரை சோதனையிட்டதில், அவரிடமிருந்து ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><h3><b>

பெருந்தொகையான பணம் </b></h3><p>அதனைத் தொடர்ந்து, வாகனத்தின் பின்பகுதியில் அமர்ந்திருந்த பெண்ணிடம் இருந்த சுப்பர் மார்க்கெட் பைக்குள் பெருந்தொகையான பணம் இருப்பதை பொலிஸார் கண்டறிந்தனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3dd10512-377b-4dd5-813f-d4604f4fa5d2/26-6aac9fd283e82.webp' /></p><p>விசாரணையில், இவர்கள் இருவரும் கணவன்-மனைவி என்பதும், பாணந்துறை குடு சலிந்து என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்காக போதைப்பொருள் விநியோகம் மற்றும் பண வசூல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.</p><p>

இந்த பணிகளுக்காக சலிந்து தங்களுக்கு மாதந்தோறும் 150,000 ரூபாய் சம்பளம் வழங்கியதாக சந்தேகநபர்கள் தெரிவித்தனர்.
</p><p>
இந்த தம்பதியினர் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிலியந்தலையின் பகுதியில் உள்ள வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்திருந்தனர்.
</p><p>
அந்த வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, ​​பணத்தைக் கையாள்வதற்குப் பயன்படுத்தப்பட்ட நவீன பண எண்ணும் இயந்திரம் மற்றும் மின்னணு தராசு ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
தடுப்புக் காவல் உத்தரவின் கீழ், 26 மற்றும் 34 வயதுடைய தம்பதியினரிடம் மேலதிக விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-18T02:27:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிட்வாவைப் போன்றே 22ம் திருத்தச் சட்டமும் பேரழிவாகும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-must-not-misuse-the-power-says-sajith-1789697445"></link>
            <id>https://tamilwin.com/article/govt-must-not-misuse-the-power-says-sajith-1789697445</id>
            <summary type="text">&#039;டிட்வா&#039; சூறாவளியைப் போலவே ஜனநாயகத்தை முடக்குவதும் ஒரு கொடூரமான பேரழிவாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
22ஆவது திருத்தச...</summary>
            <content type="html"><![CDATA[<p>'டிட்வா' சூறாவளியைப் போலவே ஜனநாயகத்தை முடக்குவதும் ஒரு கொடூரமான பேரழிவாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
</p><p>22ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் அரசாங்கம் ஜனநாயகத்திற்கு மரண அடியைக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>'டிட்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு வீடுகளை வழங்கும் நோக்கில் வத்தளையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3507bdef-f9f2-4dc4-8166-384cdb2d8bcc/26-6aac9da6c09b2.webp' /></p><p>நாட்டில் சர்வாதிகார ஆட்சியை நிறுவுவதற்கு மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியைத் தோற்கடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
</p><p>அரசாங்கத்தின் இந்த முயற்சி முறியடிக்கப்படாவிட்டால், சுதந்திரமாக அரசியல் செய்யவோ அல்லது கருத்து சுதந்திரத்தைப் பயன்படுத்தவோ முடியாது போய்விடும் என எச்சரித்துள்ளார்.
</p><p>தனிநபர் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்; இதன் மூலமே நாட்டின் 220 இலட்சம் மக்களின் அரசியல் மற்றும் சமூக சுதந்திரம் உறுதி செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரச் சமநிலை அவசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.</p><p>
இதேவேளை, எல் நினோ மற்றும் லானினா நிலவரங்கள் காரணமாக இலங்கைக்குப் பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என காலநிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>வறட்சி, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு உள்ளிட்ட வானிலைப் பேரழிவுகள் தொடர்பில் கடுமையான கவனம் செலுத்தப்பட வேண்டும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T02:10:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுமக்கள் பாதுகாப்பினை பொலிஸாரினால் பாதுகாப்புப் மட்டும் உறுதி செய்ய முடியாது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-alone-cannot-affirmed-public-security-1789696656"></link>
            <id>https://tamilwin.com/article/police-alone-cannot-affirmed-public-security-1789696656</id>
            <summary type="text">ஒரு நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பு என்பது வெறும் பொலிஸாரோ அல்லது முப்படையினரோ மட்டுமே முன்னெடுக்கக்கூடிய ஒன்று அல்ல என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரு நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பு என்பது வெறும் பொலிஸாரோ அல்லது முப்படையினரோ மட்டுமே முன்னெடுக்கக்கூடிய ஒன்று அல்ல என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டாச்சி தெரிவித்துள்ளார்.
</p><p>அதற்கு அரச அதிகாரிகள், அரசியல் அதிகாரம் மற்றும் பொதுமக்கள் ஆகிய அனைவரதும் தீவிர பங்களிப்பு அவசியம் என என வலியுறுத்தியுள்ளார்.
</p><p>மக்கள் மையப்படுத்தப்பட்ட, சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கும் ஒரு அரசை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95b55de1-cf70-4e33-873e-65ec6fa26665/26-6aac9a924c8dc.webp' /></p><p>
</p><p>தற்போதைய சமூகத்தில் காணப்படும் முக்கிய சவால்களை எதிர்கொள்ள அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகிய மூன்று தரப்பினரின் ஒருங்கிணைந்த தலையீடு அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>போதைப்பொருள் அச்சுறுத்தல், திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள், பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள் மற்றும் பாடசாலைச் சூழலில் எழும் சவால்கள் என பல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.</p><p>
தற்போதைய ஆட்சியின் கீழ் சட்டம் அனைவருக்கும் ஒரே மாதிரியாகவே நடைமுறைப்படுத்தப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>
அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி அல்லது உயர் அதிகாரிகளாக இருந்தாலும் சரி, சட்டத்தின் முன் எவருக்கும் எவ்வித சிறப்புச் சலுகையும் கிடையாது எனக் கூறியுள்ளார்.
</p><p>மேலும், குற்றமிழைத்துச் சட்டத்திலிருந்து தப்பித்து வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள நபர்களுக்கு எதிராகவும் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துவதற்குப் பாதுகாப்புப் படையினரும் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் அமைப்புகளும் தீவிரக் கவனத்துடன் செயற்பட்டு வருவதாகவும் நிலாந்தி கொட்டாச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T01:58:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தானாகவே வேகமெடுத்த கார்: மட்டக்குளிய வாகன விபத்து தொடர்பில் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mattakuliya-accident-resond-1789694586"></link>
            <id>https://ibctamil.com/article/mattakuliya-accident-resond-1789694586</id>
            <summary type="text">மட்டக்குளிய பகுதியில்&amp;nbsp; பல வாகனங்கள் மோதிக்கொண்ட கோரமான விபத்து தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஓட்டுநர், தான் ஓட்டிவந்த மின்சாரக் கார் திடீரெனத் தானா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்குளிய பகுதியில்&nbsp; பல வாகனங்கள் மோதிக்கொண்ட கோரமான விபத்து தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஓட்டுநர், தான் ஓட்டிவந்த மின்சாரக் கார் திடீரெனத் தானாகவே வேகமெடுத்ததாக விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.</p><p>இதன்போது வாகனத்தின் கட்டுப்பாட்டை தான் இழந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>காவல்துறையின் கூற்றுப்படி, தனது தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், வாகனம் எதிர்பாராத விதமாக வேகமெடுத்ததாகவும், அதனால் தன்னால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் ஓட்டுநர் கூறியுள்ளார்.</p><p>
</p><p></p><h2>நிபுணர் குழுவால்&nbsp; தொழில்நுட்பப் பரிசோதனை</h2><p>விபத்துக்கு இயந்திரக் குறைபாடா அல்லது தொழில்நுட்பக் குறைபாடா காரணம் என்பதைத் தீர்மானிப்பதற்காக, மோட்டார் போக்குவரத்து ஆணையர் நாயகம் தலைமையிலான நிபுணர் குழுவால் வாகனத்தின் தொழில்நுட்பப் பரிசோதனை நடத்தப்படும் என்று காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e340df7-d9d9-489c-b2e0-a1c453bf3c90/26-6aac970562517.webp' /></p><p>
காவல்துறையினர் ஒரு மருத்துவக் குழுவின் மூலம் மனநல மதிப்பீட்டைப் பெறவும் உத்தேசித்துள்ளனர்.</p><p>

இதற்கிடையில், ஓட்டுநர் கஞ்சா உட்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அவரது சட்டத்தரணி மறுத்துள்ளனர்.</p><p>

தங்கள் கட்சிக்காரர் மதுவையோ அல்லது சட்டவிரோத போதைப்பொருட்களையோ ஒருபோதும் உட்கொண்டதில்லை என்றும், ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோய்க்காக ஆயுர்வேத மருந்துகளை எடுத்து வருவதாகவும் அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.</p><p>மருத்துவப் பரிசோதனையின் போது கண்டறியப்பட்ட பொருளுக்கு அந்த மருந்துகளும் காரணமாக இருந்திருக்கலாம் என்று சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளனர்.
</p><p>இந்நிலையில் சந்தேக நபரை விடுவிப்பது பொதுமக்களிடையே அமைதியின்மைக்கு வழிவகுக்கும் என்று வாதிட்டு, பிணை&nbsp; வழங்குவதை காவல்துறை எதிர்த்துள்ளது.</p><p>

சமர்ப்பிப்புகளைப் பரிசீலித்த பின்னர், ஓட்டுநரைக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-18T01:38:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சக்களின் அரசியல் வரலாற்றை நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிட முடியாது : எழுந்துள்ள விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rajapaksas-cannot-be-compared-nelson-mandela-1789694354"></link>
            <id>https://tamilwin.com/article/rajapaksas-cannot-be-compared-nelson-mandela-1789694354</id>
            <summary type="text">ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வரலாற்றைப் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்
இம்ரான் கான் மற்றும் தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன்
மண்டேலாவின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வரலாற்றைப் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்
இம்ரான் கான் மற்றும் தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன்
மண்டேலாவின் அரசியல் போராட்டங்களுடன் ஒப்பிட முடியாது என்று இலங்கை தொழிலாளர்
மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

"நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்க மக்களின் உரிமைகளுக்காகவும் இனவெறிக்கு
எதிராகவும் போராடியவர். </p><h2>நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு</h2><p>நாட்டைக் கொள்ளையடித்துப் பொருளாதாரத்தைச்
சீரழித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் சிறைக்குச்
செல்லவில்லை என்பதால், அவரது வரலாற்றை ராஜபக்ச குடும்பத்துடன் ஒப்பிடுவது
பொருத்தமற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5acc3ba4-e974-49c1-a802-a30cd4b5737f/26-6aac9473a469e.webp' /></p><p>இம்ரான் கான் பாகிஸ்தானின் அரசியல் சூழலில் ஊழலுக்கு எதிராகவும் அரசியல்
மாற்றத்துக்காகவும் போராடியவர் என அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர். அவருக்கு
எதிரான சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளை ராஜபக்ச குடும்பத்துடன் ஒப்பிட
முடியாது.
</p><p>
ராஜபக்ச குடும்பத்தினர் நாட்டை ஆட்சி செய்த காலப்பகுதியில் இடம்பெற்றதாகக்
கூறப்படும் ஊழல், மோசடி மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பில் பல்வேறு
குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கும் அவர்கள் பொறுப்பாளிகள் எனப் பல்வேறு
தரப்பினரால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறையான சட்ட ரீதியான விசாரணைகள்
முன்னெடுக்கப்பட வேண்டும்.</p><p> யார் குற்றவாளி, யார் குற்றமற்றவர் என்பதை
நீதிமன்றங்களே தீர்மானிக்க வேண்டும்.

எனவே, தமது அரசியல் நிலைமையை நியாயப்படுத்துவதற்காக நெல்சன் மண்டேலா மற்றும்
இம்ரான் கான் ஆகியோரை முன்னுதாரணங்களாகக் கொண்டு ராஜபக்ச குடும்பத்துடன்
ஒப்பிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T01:31:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரெண்டி லுக்கில் மீனாக்ஷி சவுத்ரி.. லேட்டஸ்ட் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/meenaakshi-chaudhary-trendy-photoshoot-1789694323"></link>
            <id>https://cineulagam.com/article/meenaakshi-chaudhary-trendy-photoshoot-1789694323</id>
            <summary type="text">நடிகை மீனாட்சி சவுத்ரி தமிழ், தெலுங்கு என பல மொழில்களில் பாப்புலர் நடிகையாக இருந்து வருகிறார். இளசுகளை அதிகம் கவர்ந்த நடிகைகளில் ஒருவராகவும் வலம் வருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை மீனாட்சி சவுத்ரி தமிழ், தெலுங்கு என பல மொழில்களில் பாப்புலர் நடிகையாக இருந்து வருகிறார். இளசுகளை அதிகம் கவர்ந்த நடிகைகளில் ஒருவராகவும் வலம் வருகிறார் அவர்.</p><p>இன்ஸ்டாவில் 3.1 மில்லியன் ரசிகர்கள் வைத்திருக்கும் மீனாட்சி சவுத்ரி தொடர்ந்து வெளியிட்டு வரும் கிளாமர் புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் லைக்குகள் குவிந்து வருகிறது.
</p><p>தற்போது ட்ரெண்டி உடையில் மீனாட்சி சவுத்ரி போஸ் கொடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்களை ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ பாருங்க.
&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T01:18:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்ற ஊழியர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-employee-arrested-charges-a-bribe-1789692890"></link>
            <id>https://tamilwin.com/article/court-employee-arrested-charges-a-bribe-1789692890</id>
            <summary type="text">கொழும்பு கோட்டை நீதிமன்ற ஊழியரொருவர் ஐநூறு ரூபா இலஞ்சம் பெற்ற லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு கோட்டை நீதிமன்ற ஊழியரொருவர் ஐநூறு ரூபா இலஞ்சம் பெற்ற லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட ஒரு வழக்கின் தீர்ப்பு நகலை வழங்குவதற்காக 500 ரூபா இலஞ்சம் பெற முயன்றபோது, அந்நீதிமன்றத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் ஒருவர், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடு</h2><p>

கொழும்பு மோசடி புலனாய்வுப் பணியகம், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஒரு நிதித் தகராறு தொடர்பாகத் தாக்கல் செய்த வழக்கை சமரசம் செய்ததைத் தொடர்ந்து, தீர்ப்பு நகலை வழங்குவதற்கு ஈடாக, சந்தேக நபர் ஜூன் 30 ஆம் தேதி இலஞ்சமாக 500 ரூபா தொகையைக் கேட்டுப் பெற்றதாக விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11e989ad-c01b-4a8c-877a-92ac110ee1d3/26-6aac8ec3c669b.webp' /></p><p>இது தொடர்பாக இலஞ்ச ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, விசாரணை அதிகாரிகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p>

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T01:08:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் மாயமான மனைவி - கண்ணீருடன் தேடி அலையும் கணவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/missing-in-katunayake-airport-women-1789693476"></link>
            <id>https://ibctamil.com/article/missing-in-katunayake-airport-women-1789693476</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனது மனைவி காணாமல் போயுள்ளதாக, பிங்கிரிய பொலிஸில் நிலையத்தில் கணவன் முறைப்பாடு செய்துள்ளார். பிங்கிரிய பகுதியின் வீரபோகு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனது மனைவி காணாமல் போயுள்ளதாக, பிங்கிரிய பொலிஸில் நிலையத்தில் கணவன் முறைப்பாடு செய்துள்ளார். </p><p>பிங்கிரிய பகுதியின் வீரபோகுனாவைச் சேர்ந்த, ஐந்து பிள்ளைகளின் தாயான 39 வயதுடைய பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளார். </p><p>காணாமல் போன அப்பெண் தமரி செவ்வந்திகா விஜேசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p> முறைப்பாட்டிற்கமைய, கடந்த 13ஆம் திகதி அதிகாலை 5.12 மணியளவில் அவர் தனது கணவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார்.</p><p></p><p> </p><h2><b>பெண்ணின் உடைமைகள்</b></h2><p>வீடு திரும்பும்போது தங்கள் ஐந்து பிள்ளைகளுக்கும் சொக்லட் வாங்கி வருவதாக கூறியிருந்தார். அதன்பிறகு அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்த எந்தத் தகவலும் இல்லை என்று குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1384cd3-9629-4fb2-9c58-184213859dfb/26-6aac8fa630698.webp' /></p><p>குறித்த பெண்ணின் உடைமைகள் காணாமல் போனமை குறித்தும் விமான நிலையப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. </p><p>இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் அவர் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு குவைத் நாட்டிற்கு வேலைக்காக சென்றிருந்தார். </p><p>ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக நாடு திரும்பியிருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>தனது மனைவியை கண்டுபிடிப்பதில் பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அவசர நடவடிக்கை எடுத்து உதவுமாறு அவரது கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh7" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>


</p>]]></content>
            <updated>2026-09-18T01:05:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[சேலையிலும் கவர்ச்சி.. நந்திதா ஹாட் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/nandita-swetha-sizzling-look-in-saree-1789693102"></link>
            <id>https://cineulagam.com/article/nandita-swetha-sizzling-look-in-saree-1789693102</id>
            <summary type="text">நடிகை நந்திதா ஸ்வேதா ஹோம்லியாக படங்களில் நடித்து வந்தவர். அதற்காகவே அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் நந்திதா தற்போது தாராள கிளாமர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை நந்திதா ஸ்வேதா ஹோம்லியாக படங்களில் நடித்து வந்தவர். அதற்காகவே அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
</p><p>
ஆனால் நந்திதா தற்போது தாராள கிளாமர் காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
</p><p>
அவர் சேலையிலும் கிளாமராக போஸ் கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.&nbsp;ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் புகைப்படங்கள்.</p>]]></content>
            <updated>2026-09-18T00:58:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலே அடுத்த ஜனாதிபதி - மொட்டுக் கட்சி திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/we-ourselves-will-field-the-next-president-1789692029"></link>
            <id>https://tamilwin.com/article/we-ourselves-will-field-the-next-president-1789692029</id>
            <summary type="text">வரும் 2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சிறீலங்கா பொதுஜன
பெரமுன கட்சியின் சார்பில் நாமல் ராஜபக்ச போட்டியிடுவார் என்றும், அவரே
நாட்டின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரும் 2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சிறீலங்கா பொதுஜன
பெரமுன கட்சியின் சார்பில் நாமல் ராஜபக்ச போட்டியிடுவார் என்றும், அவரே
நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகப் பதவியேற்பார் என்றும் கட்சியின் பொதுச்செயலாளர்
சாகர காரியவசம் தெரிவித்தார்.
</p><p>
கட்சித் தலைமையகத்தில் நேற்று(17.09.2026) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர்
ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
</p><h2>அரசின் தொலைநோக்கற்ற கொள்கைகள்</h2><p>மேலும் தெரிவிக்கையில்,

"கட்சியின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டாலும் அல்லது சிறையில்
அடைக்கப்பட்டாலும், தாய்நாட்டைப் பாதுகாக்கும் கட்சியின் வேலைத்திட்டங்கள்
தடையின்றித் தொடரும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/043d6101-6193-495b-b287-e2f38371024c/26-6aac8aef47843.webp' /></p><p>தற்போதைய அரசு நாட்டின் திறைசேரியை நிரப்புவதற்கு புதிய முதலீடுகளையோ அல்லது
அபிவிருத்தித் திட்டங்களையோ முன்னெடுக்காமல், பொதுமக்கள் மீது தொடர்ச்சியாக
அதிக வரிகளைச் சுமத்துகின்றது.
</p><p>
இந்த அரசு வரிகளை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு வேடிக்கையான ஆட்சியாக
மாறியுள்ளது.

பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி அரசின் விவசாயிகள் மாநாட்டில்
விவசாய அமைச்சரும், அவரது பிரதி அமைச்சரும் கலந்துகொள்ளவில்லை. </p><p>அரசின்
தொலைநோக்கற்ற கொள்கைகள் காரணமாக சொந்த அமைச்சர்களே ஜனாதிபதியின் திட்டங்களைப்
புறக்கணிக்கும் நிலை உருவாகியுள்ளது.&nbsp;</p><p>எமது கட்சியின் அனுராதபுரக் கூட்டத்தில் உரையாற்றிய அர்ஜுனா இராமநாதன்
எம்.பி., இனவாதத்தையோ அல்லது பிரிவினைவாதத்தையோ ஆதரித்துப் பேசவில்லை. இனிமேல்
பிரிவினைவாதத்துக்கு இடம் கொடுக்கப்போவதில்லை" என்றும குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T00:51:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டன் - யாழ்ப்பாணம் இடையே நேரடி விமானசேவை : இங்கிலாந்து எம்.பி கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/uk-mp-direct-flights-between-london-jaffna-1789682989"></link>
            <id>https://ibctamil.com/article/uk-mp-direct-flights-between-london-jaffna-1789682989</id>
            <summary type="text">வடக்கு இலங்கையுடன் குடும்ப மற்றும் கலாச்சாரத் தொடர்புகளைக் கொண்ட பிரிட்டிஷ் தமிழர்களின் பயண இணைப்புகளை மேம்படுத்தும் சிறப்பு திட்டம் ஒன்றுக்கான கோரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு இலங்கையுடன் குடும்ப மற்றும் கலாச்சாரத் தொடர்புகளைக் கொண்ட பிரிட்டிஷ் தமிழர்களின் பயண இணைப்புகளை மேம்படுத்தும் சிறப்பு திட்டம் ஒன்றுக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்படி லண்டன் மற்றும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு இடையே நேரடி விமான சேவைகளைக் கோரி பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் காரெத் தோமஸ் ஒரு மனுவை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>&nbsp;"யாழ்ப்பாணத்திற்கு நேரடி விமான சேவைகளைக் கொண்டு வாருங்கள்" என்ற தலைப்பிலான இந்த மனு, திருமணங்கள், இறுதிச் சடங்குகள், சமய விழாக்கள் மற்றும் குடும்ப சந்திப்புகளுக்காக யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்யும் பிரிட்டிஷ் தமிழ் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை எடுத்துக்காட்டுகிறது.</p><h2>400 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயம்</h2><p>
</p><p>
ஹாரோ மேற்கு தொகுதியின் பிரதிநிதியான தோமஸ், தற்போது லண்டனுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே நேரடி விமான சேவைகள் எதுவும் இல்லை என்றும், இதனால் பயணிகள் கொழும்பு வழியாகப் பயணித்து, கூடுதலாக சுமார் 400 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df4cb5bb-4d97-47bd-9b28-ce601f68a772/26-6aac6ef49116a.webp' /></p><p>மனுவின்படி, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்குச் சாலை அல்லது&nbsp;தொடருந்து வழியாகச் செல்வதற்கு சுமார் ஆறு முதல் ஏழு மணி நேரம் ஆகிறது. இது வயதான பயணிகள், சிறு குழந்தைகளுடன் வரும் குடும்பங்கள் மற்றும் முக்கிய குடும்ப நிகழ்வுகளுக்காகப் பயணம் செய்பவர்களுக்குக் குறிப்பிட்ட சிரமங்களை ஏற்படுத்துகிறது.
</p><p>
முன்மொழியப்பட்ட இந்த நேரடிச் சேவையானது, பயண நேரத்தைக் குறைக்கவும், அணுகலை மேம்படுத்தவும், இங்கிலாந்துக்கும் வடக்கு இலங்கைக்கும் இடையே குடும்ப, கலாச்சார மற்றும் சமூகத் தொடர்புகளை வலுப்படுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
</p><h2>வணிக ரீதியாக சாத்தியமான நேரடி விமான சேவை</h2><p>இந்த மனு, வட மாகாணத்தில் சுற்றுலா, முதலீடு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான சாத்தியமான நன்மைகளையும் எடுத்துக்காட்டுகிறது.

லண்டனுக்கும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையில் வணிக ரீதியாக சாத்தியமான நேரடி விமான சேவையை ஆராய்ந்து ஆதரிப்பதற்காக, ஐக்கிய ராச்சிய அரசாங்கம், இலங்கை அதிகாரிகள், விமான நிறுவனங்கள் மற்றும் லண்டன் விமான நிலையங்கள் ஒன்றிணைந்து செயல்படுமாறு தோமஸ் அழைப்பு விடுக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4f73ef6-1913-4a17-a979-9db00c279028/26-6aac6ef547557.webp' /></p><p>
</p><p>
முன்மொழியப்பட்ட விமான இணைப்பை நிறுவுவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவாக, இந்த மனுவில் கையொப்பமிடுமாறு இந்தப் பிரசாரம் பொதுமக்களை அழைக்கிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T00:44:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் நேரடி விமான சேவை கோரி கையெழுத்து வேட்டை ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/petition-direct-flights-between-london-jaffna-1789692056"></link>
            <id>https://tamilwin.com/article/petition-direct-flights-between-london-jaffna-1789692056</id>
            <summary type="text">&amp;nbsp;லண்டனுக்கும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையே நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்குமாறு கோரி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை பிரித்தானியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;லண்டனுக்கும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையே நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்குமாறு கோரி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>பிரத்தானிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கரேத் தோமஸ் பொதுமக்களிடம் கையெழுத்து திரட்டும் புதிய மனு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். </p><p>
பிரித்தானிய வாழ் தமிழர்கள், வட இலங்கையில் உள்ள தங்கள் குடும்பத்தினர் மற்றும் கலாச்சார உறவுகளுடன் இலகுவாகத் தொடர்பைப் பேண இந்த சேவை உதவும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73c6f0a9-64b1-4619-9dcb-1894dee3548b/26-6aac88998a050.webp' /></p><p>
யாழ்ப்பாணத்திற்கு நேரடி விமான சேவைகளைக் கொண்டு வாருங்கள் என்ற தலைப்பில் இந்த பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
</p><p> திருமணம், இறுதிச் சடங்குகள், ஆன்மீகத் திருவிழாக்கள் மற்றும் குடும்பச் சந்திப்புகளுக்காக யாழ்ப்பாணம் செல்லும் பிரித்தானியத் தமிழ் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பயணச் சிரமங்களை இந்த மனு விரிவாக விளக்குகிறது.</p><p> 
ஹாரோ வெஸ்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான கரேத் தோமஸ், தற்சமயம் லண்டனிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நேரடி விமானங்கள் இல்லாத சூழலைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>லண்டனில் இருந்து வரும் பயணிகள் கொழும்பில் தரையிறங்கி, அங்கிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தூரம் மேலதிகமாகப் பயணிக்க வேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்குச் செல்ல சாலை அல்லது ரயில் வழியில் சுமார் 6 முதல் 7 மணி நேரம் வரை பயணிக்க நேரிடுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இந்த கூடுதல் பயணம் முதியவர்கள், சிறு குழந்தைகளுடன் பயணிக்கும் குடும்பங்கள் மற்றும் அவசரக் குடும்பச் சடங்குகளுக்காகச் செல்வோர் மத்தியில் கடும் அசௌகரியங்களை ஏற்படுத்துகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த நேரடி விமான சேவை மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 
லண்டன் - யாழ்ப்பாணம் இடையேயான நீண்ட நேரப் பயணம் வெகுவாகக் குறையும் எனவும், பிரித்தானியா மற்றும் வட இலங்கை இடையேயான குடும்ப, சமூக மற்றும் கலாச்சார பிணைப்புகள் வலுவடையும் எனவும் வட மாகாணத்தின் சுற்றுலாத் துறை, தொழில் முதலீடுகள் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார மேம்பாட்டிற்கு இது பெரும் ஊக்கமளிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>
லண்டன் மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையே வணிக ரீதியாகச் சாத்தியமான நேரடி விமான சேவையை ஆராய்ந்து செயல்படுத்த பிரத்தானிய அரசாங்கம், இலங்கை அதிகார அமைப்புகள், விமான நிறுவனங்கள் மற்றும் லண்டன் விமான நிலையங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கரேத் தோமஸ் வலியுறுத்தியுள்ளார்.</p><p> 
இந்த முயற்சியை வெற்றிபெறச் செய்ய பொதுமக்களும், புலம்பெயர் தமிழ் சமூகத்தினரும் இந்த மனுவில் திரளாகக் கையெழுத்திடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T00:41:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னாள் போராளி ஒருவரை கொலை செய்ய முயற்சித்த சுரேஷ் சலே! ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வெளிவரும் பயங்கர தகவல்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-in-sri-lankaeaster-suresh-sallay-1789691643"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-in-sri-lankaeaster-suresh-sallay-1789691643</id>
            <summary type="text">&amp;nbsp;உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் துள்ளியமாக தகவல் வழங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் இந்தியாவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் துள்ளியமாக தகவல் வழங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்று சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் இலங்கைக்கு வந்தவர்.</p><p>இவரை கொலை செய்ய கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் சுரேஷ் சலே முயற்சித்துள்ளதாக மயிர்க் கூச்செறியும் தகவல்கள் வெளிவந்துள்ளன.</p><p>இவர் தொடர்பில் முழுமையான செய்தியொன்று எமது தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இவர் இந்திய 'Q' பொலிஸ் பிரிவு பிரதானி ஈஸ்வரமூர்த்தியுடன் இருந்த நெருங்கிய தொடர்பில் பல புலனாய்வுத் தகவல்களை இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு வழங்கியவர்.</p><p>குறிப்பாக உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் இவர் வழங்கிய தகவல்களை நடைமுறைப்படுத்தியிருந்தால் நிச்சியமாக தாக்குதலை நிறுத்தியிருக்கலாம்.
</p><h2>
</h2><p></p><h2>தகவல் வழங்கிய முன்னாள் போராளி</h2><p>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் வழக்கு விசாரணையில் இவர் தொடர்பில் இராணுவ புலனாய்வு அதிகாரிகள் பல தகவல்களை தெரிவித்திருந்தனர்.</p><p>அவ்வாறான நிலையில் கடற் புலிகளின் முன்னாள் போராளியான தம்பியன் என்ற பெயரை உடைய இவரும் வழக்கு விசாரணைகளில் சாட்சியமளித்துள்ளார்.
</p><p>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் கடந்த காலத்தில் முறைப்பாடு செய்தவர்களை தாக்கவும், அவர்களுக்கு சேறு பூசவும் முயன்றார்கள் என்பதை நாம் அறிவோம்.</p><p>உண்மைகளை வெளிப்படுத்திய ஊடகவியலாளர்கள்- புலனாய்வாளர்களுக்கு சேறு பூச முயன்றார்கள். நீதிமன்றத்திற்கு வந்து முறைப்பாட்டை செய்தவர்களை பல்வேறு வழிகளில் நிறுத்த முயன்றார்கள். </p><p>
இதன் அடுத்த கட்டமாக கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றபோது சுரேஷ் சலே துள்ளியமாக தகவல்களை வழங்கிய தம்பியனை (முன்னாள் கடற்படை போராளி) பேச்சுவார்த்தை செய்ய வருமாறு அழைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da11eb50-30cf-4888-b808-ce2fd7f621f7/26-6aac86fce7c4d.webp' /></p><p>ஆனால் அவர் போகவில்லை. அன்று தம்பியன் போயிருந்தால் இன்று இந்த விசாரணைகள் நடந்திருக்க வாய்ப்பில்லை.
எனவே, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை தற்போது நடத்தி வரும் விசாரணைகள் மிகவும் முக்கியமானவை. </p><p>ஏனெனில் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்ட பல குற்றங்கள் இதற்குப் பின்னால் உள்ளன. ஒரே கும்பலின் சதித்திட்டம் இதற்குப் பின்னால் உள்ளது. </p><p>
எனவே, ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்ட இந்தக் குற்றங்கள் இந்த நேரத்தில் வெளிவரவில்லை என்றால், இந்த நேரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், இனி ஒருபோதும் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் போய்விடும். </p><p> இந்த விசாரணைகளை மேலும் விரைவுபடுத்த தேவையான வசதிகளை அரசாங்கம் வழங்க வேண்டும். புலனாய்வாளர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்.</p><p>&nbsp;</p><p>&nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T00:40:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக் பாஸ் 10ல் இந்த வார எலிமினேஷன்! உறுதியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/bigg-biss-10-tamil-javeed-elimination-this-week-1789691716"></link>
            <id>https://cineulagam.com/article/bigg-biss-10-tamil-javeed-elimination-this-week-1789691716</id>
            <summary type="text">பிக் பாஸ் 10ம் சீசன் தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகிறது. அதற்குள் பல சர்ச்சைகளில் நிகழ்ச்சி சிக்கி வருகிறது.மேலும் போட்டியாளர்களுக்கு டாஸ்குகளும் கடுமையாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக் பாஸ் 10ம் சீசன் தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகிறது. அதற்குள் பல சர்ச்சைகளில் நிகழ்ச்சி சிக்கி வருகிறது.</p><p>மேலும் போட்டியாளர்களுக்கு டாஸ்குகளும் கடுமையாகவே இருந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b48e6eae-d0a4-4a45-bfe8-aa8eed2a14a9/26-6aac87462b71a.webp' /></p><h2>எலிமினேஷன்
</h2><p>
லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் இந்த வாரம் ஜாவித் தான் ஷோவில் இருந்து எலிமினேட் ஆகிறார்.
</p><p>
ஜாவித் எலிமினேஷன் ஞாயிறு எபிசோடில் வர இருக்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3065de3-a1c8-4f4f-b8c6-d337df0e2bdc/26-6aac87477efde.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T00:35:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[போருக்கு மத்தியிலும் ஐநா கூட்டத்தில் பங்கேற்க ஈரான் தலைவர்களுக்கு விசா அளித்தது அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-granted-visas-to-iranian-leaders-un-meeting-1789691116"></link>
            <id>https://ibctamil.com/article/us-granted-visas-to-iranian-leaders-un-meeting-1789691116</id>
            <summary type="text">அமெரிக்கா-ஈரான் போர் பதற்றத்திற்கு மத்தியிலும், நியூயோர்க்கில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐ.நா. பொது சபையின் உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்க ஈரான் ஜனாதிபத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா-ஈரான் போர் பதற்றத்திற்கு மத்தியிலும், நியூயோர்க்கில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐ.நா. பொது சபையின் உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்க ஈரான் ஜனாதிபதி மற்றும் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு ட்ரம்ப் நிர்வாகம் விசா அனுமதி அளித்துள்ளது.
</p><p>
ஐ.நா. கூட்டங்களில் பங்கேற்க ஈரானின் "முக்கிய குழுவினர்" மற்றும் அவசியமான பணியாளர்களுக்கு விசா அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு துறை தெரிவித்தது.</p><h2>போர் நிறுத்தப்படாத நிலையிலும் விசா அனுமதி</h2><p>விசா தொடர்பான தனியுரிமை சட்டங்கள் காரணமாக பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகளின் தகவலின்படி, இந்த குழுவில் ஜனாதிபதி மசூத் பெசஸ்கியான் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66b1ef28-94ea-481b-ab50-c9c86182bcac/26-6aac86f07fce6.webp' /></p><p>
</p><p>
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஆறு மாதங்களுக்கும் மேலாக மோதல் நீடித்து வரும் சூழலிலும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது அல்லது ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது தொடர்பான ஒப்பந்தங்கள் எட்டப்படுவதற்கான அறிகுறிகள் ஏதுமில்லாத நிலையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; </p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T00:33:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவானில் இருந்து விழுந்த F-16 ரக போர் விமானம்: உயிர் தப்பினாரா விமானி?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/f-16-fighter-jet-crashes-in-northern-michigan-1789686033"></link>
            <id>https://news.lankasri.com/article/f-16-fighter-jet-crashes-in-northern-michigan-1789686033</id>
            <summary type="text">F-16 Fighter jet Crashes in Northern michigan: வடக்கு மிச்சிகனில் F-16 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்குள்ளான...</summary>
            <content type="html"><![CDATA[<p>F-16 Fighter jet Crashes in Northern michigan: வடக்கு மிச்சிகனில் F-16 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> விபத்துக்குள்ளான F-16 ரக போர் விமானம்</h2><p>அமெரிக்காவின் வடக்கு மிச்சிகன் மாகாணத்தில் ராணுவத்திற்கு சொந்தமான F-16 ரக போர் விமானம் ஒன்று ட்ராவர்ஸ் சிட்டி(Traverse City) அருகே வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது.</p><p>விமானம் தரையில் விழுந்து நெருங்குவதற்கு முன்னதாக&nbsp; F-16 ரக போர் விமானத்தின் பைலட் பத்திரமாக அதிலிருந்து வெளியேறியதாக ராணுவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b115839f-7139-4f93-a674-91d38be8cb1e/26-6aac711327965.webp' /></p><p> மேலும் அவர் தற்போது பாதுகாப்பான உடல் நிலையுடன் இருப்பதாகவும் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> விபத்துக்குள்ளான&nbsp; F-16 ரக போர் விமானம். டெக்சாஸ் தேசிய பாதுகாப்பு படையின் 149 வது பிரிவை சேர்ந்தது என்று அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">F-16 crashes near Green Lake Township, Michigan. Pilot has reportedly safely ejected. <a href="https://t.co/5uVx7pHgIu">pic.twitter.com/5uVx7pHgIu</a></p>&mdash; Breaking Aviation News &amp; Videos (@aviationbrk) <a href="https://x.com/aviationbrk/status/2100663154409709984?ref_src=twsrc%5Etfw">September 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> விபத்தை தொடர்ந்து ஜெபர்சன் பிளேஸ் முதல் பிளேர் டவுன்ஷிப் சாலை வரை கவுண்டி சாலை 633-ல்&nbsp; வசிக்கும் மக்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.</p><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-18T00:33:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[டோகோ கொடி தாங்கிய கப்பல் மீது ஈரான் தாக்குதல்: IRGC விடுத்த எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-attacks-togo-flagged-tanker-in-hormuz-strait-1789691539"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-attacks-togo-flagged-tanker-in-hormuz-strait-1789691539</id>
            <summary type="text">Iran attacks Togo-Flagged Tanker in Hormuz Strait: ஹார்முஸ் ஜலசந்தியில் டோகோ கொடி தாங்கிய கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் ராணுவம் அறிவித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran attacks Togo-Flagged Tanker in Hormuz Strait: ஹார்முஸ் ஜலசந்தியில் டோகோ கொடி தாங்கிய கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது.</p><h2> எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்</h2><p>
ஹார்முஸ் ஜலசந்தியில் சென்று கொண்டிருந்த டோகோ கொடி தாங்கிய எண்ணெய் கப்பல் ஒன்றை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினர்(IRGC) வெற்றிகரமாக தாக்கி தீயிட்டு கொளுத்தியதாக தெரிவித்துள்ளது.</p><p> டோகோ கப்பல் அனுமதியின்றி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணம் செய்ததாக அரசுடன் தொடர்பில் உள்ள பார்ஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.</p><p>ஹார்முஸ் ஜலசந்தியில் அனுமதியின்றி பயணம் செய்யும் எந்தவொரு கப்பலுக்கும் அழிவை தவிர வேறு ஒன்றும் இல்லை என்று IRGC வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7813b3bb-c69e-4890-8d5e-08f511bf2346/26-6aac86956f75e.webp' /></p><p></p><p> அமெரிக்காவின் தூண்டுதல் மற்றும் ஏமாற்று வேலை காரணமாகவே இந்த கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியில் பயணம் செய்ய முயன்றதாக IRGC குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p> மேலும் இப்பகுதியில் ஏற்பட கூடிய&nbsp; எந்தவொரு அத்துமீறலையும் ஈரானிய வீரர்கள் முறியடிக்க தயார் நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T00:32:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜே.ஆர். ஜயவர்தனவின் 17 வருட காலப் புரட்சியை தொடர வேண்டும்..! ரணில் அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/j-r-17-year-revolution-escaped-poverty-back-1789690496"></link>
            <id>https://tamilwin.com/article/j-r-17-year-revolution-escaped-poverty-back-1789690496</id>
            <summary type="text">ஜே.ஆர். ஜயவர்தனவின் 17 வருட காலப் புரட்சியே எமது நாடு அன்று வறுமையில்
இருந்து விடுபடக் காரணமாக இருந்தது எனவும், அந்தப் புரட்சியைத் தொடர்ந்து
முன்னெட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜே.ஆர். ஜயவர்தனவின் 17 வருட காலப் புரட்சியே எமது நாடு அன்று வறுமையில்
இருந்து விடுபடக் காரணமாக இருந்தது எனவும், அந்தப் புரட்சியைத் தொடர்ந்து
முன்னெடுத்துச் செல்வதே எமது அர்ப்பணிப்பாக இருக்க வேண்டும் எனவும் ஐக்கிய
தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க
தெரிவித்தார்.
</p><p>
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் 120ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு தேசிய
நூலக மற்றும் ஆவண சேவைகள் சபைக் கேட்போர் கூடத்தில் நேற்று(17.9.2026) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இதனைக்
குறிப்பிட்டார்.</p><h2>17 ஆண்டுகாலப் புரட்சி</h2><p>மேலும் தெரிவிக்கையில், "ஐக்கிய தேசியக் கட்சியின் 80ஆவது வருட நிறைவு விழா செயற்பாடுகளில்
கலந்துகொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு
விடுக்கின்றேன்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35d6b0c3-a09e-4924-94b6-858ed7fbbde2/26-6aac860d40b28.webp' /></p><p>
ஐக்கிய தேசியக் கட்சி என்பது ஒரு ஜனநாயகக் சோசலிசக் கட்சியாகும். சொத்துரிமை
இலட்சக்கணக்கான மக்களிடையே பரவலாக்கப்படும்போது, அந்தச் சொத்துரிமை மூலமாக
உருவெடுக்கும் அதிகாரமும் மக்களிடையே பகிர்ந்தளிக்கப்படுகின்றது. </p><p>ஒவ்வொரு
நபருக்கும் ஒரு சுதந்திர மனிதனாக வாழ்வதற்கும், தனது குடும்பத்தைப்
பேணுவதற்கும், சட்டபூர்வமான உரிமைகளை உருவாக்கிக் கொள்வதற்கும் அவசியமான
சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதே கட்சியின் நோக்கமாகும்.</p><p>இதனை அடிப்படையாகக் கொண்டு ஜே.ஆர். ஜயவர்தன 17 ஆண்டுகாலப் புரட்சியொன்றை
ஆரம்பித்து, அவருக்குப் பின்னர் வந்த ரணசிங்க பிரேமதாசவுடன் இணைந்து நாட்டின்
பொருளாதாரத்தைத் தலைகீழாக மாற்றியமைத்தார்.</p><h2>நீதிமன்ற அதிகாரத்தைச் செயற்படுத்தும்&nbsp;உரிமைகள் </h2><p>

1977 இல் ஆட்சியைக் கைப்பற்றும் போது 4 பில்லியனாக இருந்த மொத்த உள்நாட்டு
உற்பத்தி, வெளியேறும் போது 5 ஆயிரம் பில்லியனாக உயர்ந்தது." என்று குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36164b51-58e2-4d16-a20b-4fea1103394a/26-6aac860dee087.webp' /></p><p>

மேலும், மகாவலி திட்டத்தை உருவாக்கிய காமினி திஸாநாயக்க, மகாபொல புலமைப்பரிசிலை
அறிமுகப்படுத்திய லலித் அத்துலத்முதலி ஆகியோரின் முயற்சிகளையும் அவர்
நினைவுகூர்ந்தார்.
</p><p>
ஜே.ஆர். ஜயவர்தன கொண்டுவந்த 1978 ஆம் ஆண்டின் அரசமைப்புச் சட்டம் மூலமாகவே
இறைமை, அடிப்படை உரிமைகள் மற்றும் வாக்குரிமை என்பன மக்கள் இறைமைக்குள்
உள்ளடக்கப்பட்டன என்றும்,126 ஆவது உறுப்புரை மூலம் அடிப்படை உரிமைகளில்
நீதிமன்ற அதிகாரத்தைச் செயற்படுத்தும் புரட்சிகரமான உரிமைகள் வழங்கப்பட்டன
என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-09-18T00:30:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவீடன் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/opposition-wins-swedish-parliamentary-election-1789691010"></link>
            <id>https://canadamirror.com/article/opposition-wins-swedish-parliamentary-election-1789691010</id>
            <summary type="text">சுவீடனில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கூட்டணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவீடனில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கூட்டணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.</p><p>

சுவீடன் நாடாளுமன்றமான ரிக்ஸ்டாகில் உள்ள 349 இடங்களுக்கான தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.</p><p> வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், முன்னாள் பிரதமர் மக்டலினா ஆண்டர்சன் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி 176 இடங்களை கைப்பற்றியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6df895aa-59ea-4f5a-838f-454dfa367763/26-6aac848469c25.webp' /></p><p> </p><p>பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சனின் கூட்டணிக்கு 173 இடங்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் எதிர்க்கட்சி கூட்டணி மூன்று இடங்கள் வித்தியாசத்தில் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.
</p><p>
இரு தரப்பினருக்கும் இடையிலான போட்டி மிகவும் நெருக்கமாக இருந்த நிலையில், இறுதி எண்ணிக்கையில் சுமார் 50,359 வாக்குகள் மட்டுமே வித்தியாசமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து பிரதமர் கிறிஸ்டர்சன் தனது ராஜினாமாவை அறிவித்ததுடன், நாடாளுமன்ற சபாநாயகரிடம் தனது பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தையும் சமர்ப்பித்துள்ளார்.
</p><p>
புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை நாடாளுமன்ற சபாநாயகர் முன்னெடுக்க உள்ளார். அதன்படி, கட்சித் தலைவர்களுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு, புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது.</p><p>

எனினும், தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி பெரும்பான்மை பெற்றிருந்தாலும், அதில் இடம்பெறும் கட்சிகளுக்கு இடையிலான கொள்கை வேறுபாடுகள் காரணமாக புதிய அரசாங்கத்தை அமைப்பதில் பேச்சுவார்த்தைகள் சவாலாக அமையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

முன்னாள் பிரதமர் மக்டலினா ஆண்டர்சன் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி தனிப்பட்ட கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது. புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளை ஆண்டர்சன் முன்னெடுக்க உள்ளார்.
</p><p>
இதனிடையே, புதிய பிரதமர் தொடர்பான நாடாளுமன்ற வாக்கெடுப்பு செப்டெம்பர் 29ஆம் திகதிக்கு முன்னதாக நடைபெற வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p> அதுவரை தற்போதைய அமைச்சரவை புதிய அரசாங்கம் பதவியேற்கும் வரை தொடர்ந்தும் பணியாற்றும்.</p>]]></content>
            <updated>2026-09-18T00:25:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னாப்பிரிக்காவில் தொடரும் கொடூரம் ; நிர்வாண நிலையில் அடுத்தடுத்து 9 பெண்களின் சடலங்கள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bodies-of-9-women-recovered-in-a-naked-state-1789677130"></link>
            <id>https://canadamirror.com/article/bodies-of-9-women-recovered-in-a-naked-state-1789677130</id>
            <summary type="text">தென்னாப்பிரிக்காவின் வணிகத் தலைநகரான ஜோஹன்னஸ்பர்க் புறநகர்ப் பகுதியில், கடந்த இரண்டு மாதங்களில் எட்டு பெண்களின் உடலங்கள் மீட்கப்பட்டமையை தொடர்ந்து, கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னாப்பிரிக்காவின் வணிகத் தலைநகரான ஜோஹன்னஸ்பர்க் புறநகர்ப் பகுதியில், கடந்த இரண்டு மாதங்களில் எட்டு பெண்களின் உடலங்கள் மீட்கப்பட்டமையை தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட மேலும் ஒரு பெண்ணின் உடலத்தை காவல்துறை மீட்டுள்ளது.</p><p>

நேற்று (17) எகூர்ஹுலேனி (Ekurhuleni) நகராட்சிக்குட்பட்ட கெம்ப்டன் பார்க் (Kempton Park) பகுதியில் ஒன்பதாவது பெண்ணின் உடலம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையால் அந்தப்பகுதி முடக்கப்பட்டுள்ளது (lockdown).</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5b621b8-9541-44ca-b96c-0d7c1abdd0d1/26-6aac4e4c6d983.webp' /></p><p>குறித்தப் பகுதியில் இதுபோன்ற நிர்வாணக் கோலத்திலான மூன்று உடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்தத் தொடர் கொலைகள், இவை ஒரு தொடர் கொலையாளியால் (serial killer) நடத்தப்பட்டிருக்கலாமோ என்ற பொதுமக்களின் பீதியை அதிகரித்துள்ளன.
</p><p>
முதல் எட்டு படுகொலைகளில் சில ஒற்றுமைகள் "மிகவும் கவலை அளிக்கும் வகையில்" இருப்பதாக காவல்துறை முன்னதாக எச்சரித்திருந்தது.
</p><p>
இந்தநிலையில், "பல சந்தேக நபர்கள் அல்லது தனித்தனி குற்றவாளிகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட அனைத்து கோணங்களிலும் விசாரணையாளர்கள் விசாரித்து வருகின்றனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
இதுவரை கண்டெடுக்கப்பட்ட உடலங்கள் அனைத்தும் 20 மற்றும் 30 வயதுக்குட்பட்ட பெண்களுடையவை ஆகும்.

அனைத்து உடல்களும் நிர்வாணமாகவோ அல்லது அரைநிர்வாணமாகவோ கண்டெடுக்கப்பட்டுள்ளன. </p><p>சில உடல்களில் ஒரே மாதிரியான காயங்களும் காணப்படுகின்றன.

முதல் உடல் கடந்த ஜூலை 17 அன்று நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e88cc9cd-e29b-4c22-b088-6b720bdc861f/26-6aac4e4d2416a.webp' /></p><p>தென்னாப்பிரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உச்சத்தில் உள்ளதை இந்தக் கொலைகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.</p><p>

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, உலகில் அதிக பெண் படுகொலை (femicide) விகிதங்களைக் கொண்ட நாடுகளில் தென்னாப்பிரிக்காவும் ஒன்றாக கருதப்படுகிறது.

இதன்படி 2026, ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் தென்னாப்பிரிக்க காவல்துறை 9,782 வன்புணர்வு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
</p><p>
கடந்த ஆண்டு நவம்பரில், பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் பெண்படுகொலைகளை தென்னாப்பிரிக்காவின் தேசிய பேரிடர் முகாமைத்துவ மையம் தேசிய பேரிடராக அறிவித்தது.
</p><p>
இந்தநிலையில் தற்போதைய தொடர் கொலைக் குற்றவாளிகளைக் கைது செய்ய உதவும் தகவல்களுக்கு 400,000 தென்னாப்பிரிக்க ராண்ட் ($25,000) சன்மானம் வழங்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
</p><p>
அத்துடன் குறித்த பிரதேச பெண்கள் தனியாக வெளியே செல்ல வேண்டாம் என்றும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-18T00:13:30+00:00</updated>
        </entry>
    </feed>
