<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-02T17:06:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[துருக்கி அருகே இரு சரக்குக் கப்பல்கள் மோதி விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-cargo-ships-collide-near-turkey-1788351899"></link>
            <id>https://canadamirror.com/article/two-cargo-ships-collide-near-turkey-1788351899</id>
            <summary type="text">&amp;nbsp; துருக்கியின் இஸ்தான்புல் நகரின் சிலிவ்ரி மாவட்டக் கடற்பகுதியில் இன்று அதிகாலை இரு சரக்குக் கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானதில், 10 மாலுமிகள் கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; துருக்கியின் இஸ்தான்புல் நகரின் சிலிவ்ரி மாவட்டக் கடற்பகுதியில் இன்று அதிகாலை இரு சரக்குக் கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானதில், 10 மாலுமிகள் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
</p><p>


கோகோவெலியில் இருந்து அலியாகா நோக்கிச் சென்ற ‘அல்சு’ என்ற கப்பலும், இஸ்கெண்டருன் துறைமுகத்திலிருந்து கராடெனிஸ் எரேக்லி நோக்கிச் சென்ற ‘துக்பெர்க் இமாமோக்ளு’ என்ற கப்பலும் அதிகாலை 3 மணியளவில் மோதியதாக இஸ்தான்புல் ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/740158ce-ddf7-4def-b0f2-d06a692f809b/26-6a98159db3a90.webp' /></p><p>



மோதலில் ‘அல்சு’ கப்பலுக்கு சிறியளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ‘துக்பெர்க் இமாமோக்ளு’ கப்பல் குறிப்பிடத்தக்க அளவில் சேதமடைந்துள்ளது. அதில் இருந்த 10 மாலுமிகளே தற்போது காணாமல் போயுள்ளனர்.</p><p>



கடலோர பாதுகாப்புப் படையினரின் கப்பல்கள் மற்றும் கடற்படை ஹெலிகாப்டர் உதவியுடன் காணாமல் போன மாலுமிகளைத் தேடும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-02T17:02:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் மனித உரிமை மீறல் வழக்குகள்: அரசின் நடவடிக்கையில் தாமதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hrw-alleges-delay-in-prosecuting-anura-right-cases-1788364243"></link>
            <id>https://tamilwin.com/article/hrw-alleges-delay-in-prosecuting-anura-right-cases-1788364243</id>
            <summary type="text">இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள்
தொடர்பான வழக்குகளைத் தொடர்வதில் தற்போதைய அரசு தாமதித்து வருகின்றது என மனித
உரிமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள்
தொடர்பான வழக்குகளைத் தொடர்வதில் தற்போதைய அரசு தாமதித்து வருகின்றது என மனித
உரிமைகள் கண்காணிப்பகம் தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p>அத்துடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், சித்திரவதை செய்யப்பட்டவர்கள் மற்றும் கொலை
செய்யப்பட்டவர்கள் தொடர்பான பல வழக்குகள் இன்னும் எந்தவித முன்னேற்றமுமின்றி
உள்ளன என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><h2>நீதியை நிலைநாட்டல்</h2><p>
</p><p>
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் மனித உரிமைப் பாதுகாவலர்களும்
தொடர்ந்து அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
</p><p>
2024ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு,
லசந்த விக்கிரமதுங்க படுகொலை, பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை, 11
இளைஞர்கள் கடத்தப்பட்டமை மற்றும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விசாரணைகள்
போன்றவற்றில் சில வரம்புக்குட்பட்ட முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்.</p><p>என்றபோதிலும்,
மூத்த அதிகாரிகள் தொடர்புபட்ட மற்றைய முக்கிய வழக்குகளில் (உதாரணமாக, 17
உதவிப் பணியாளர்கள் படுகொலை மற்றும் 5 தமிழ் மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம்)
எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28c8418c-d1ce-48d3-9a3d-04d852e2f00d/26-6a984cf79d288.webp' /></p><p>
</p><p>
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் நிறுவப்பட்ட Sri Lanka Accountability
Project திட்டத்தை தற்போதைய அரசு ஏற்றுக்கொள்ளாததுடன், சுயாதீனமாக வழக்குத்
தொடரும் அமைப்பையும் இதுவரையில் நிறுவவில்லை.
</p><p>
பல தசாப்தங்களாக நிலவி வரும் தண்டனையின்மைக்கு முற்றுப்புள்ளி வைத்து,
உண்மையான பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு
விரைவுபடுத்த வேண்டும்.
</p><p>
நீதியை நிலைநாட்டுவதற்கான தனது உறுதிப்பாட்டைச் செயற்பாடுகள் மூலம்
வெளிப்படுத்துமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் உயர் ஆணையாளரும் ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசை வலியுறுத்த வேண்டும்&nbsp; என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T17:01:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூட்டான் பிரதமரை சந்தித்த கலாநிதி ஹரிணி அமரசூரிய]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/harini-amarasuriya-meets-bhutan-s-pm-1788367861"></link>
            <id>https://jvpnews.com/article/harini-amarasuriya-meets-bhutan-s-pm-1788367861</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டின் விழிப்புணர்வு மிக்க உணவு முறைமைகள் பற்றிய உலக உச்சிமாநாட்டில் (Global Conscious Food Systems Summit - GCFSS) முதன்மை உரையாற்றுநராகக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2026ஆம் ஆண்டின் விழிப்புணர்வு மிக்க உணவு முறைமைகள் பற்றிய உலக உச்சிமாநாட்டில் (Global Conscious Food Systems Summit - GCFSS) முதன்மை உரையாற்றுநராகக் கலந்துகொள்வதற்காகப் பூட்டானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பூட்டான் பிரதமர் தாஷோ செரிங் தோப்கேவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். </p><p style="text-align: justify; ">

இந்த சந்திப்பானது திம்பு நகரில் இடம்பெற்றுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96926090-d87e-4b4a-830d-3d5885e9c06c/26-6a9853f68e18b.webp' /></p><h2 style="text-align: justify; ">இருதரப்பு உறவுகள்</h2><p style="text-align: justify; ">இலங்கைக்கும் பூட்டானுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பது குறித்து இச்சந்திப்பின்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

கல்வி, சுகாதாரம், வர்த்தகம், சுற்றுலாத் துறை, வான்வழித் தொடர்பு மற்றும் இரு நாட்டு மக்களுக்கிடையிலான தொடர்புகள் உள்ளிட்ட, இரு தரப்பினருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல பரந்த துறைகள் தொடர்பிலும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

இதன்போது, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளுதல், காடழிப்பைத் தடுத்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் நிலையான அபிவிருத்தியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது தொடர்பிலும் இரு தரப்பினரும் கலந்துரையாடினர். </p><p style="text-align: justify; ">

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவும் நட்புறவை மேலும் பலப்படுத்துவதற்கும், பரஸ்பர ஆர்வமிக்க பல்வேறு துறைகள் ஊடாக இரு நாடுகளுக்கும் நன்மையளிக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்குமான இரு நாடுகளினதும் அர்ப்பணிப்பை இச்சந்திப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-02T17:00:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தள்ளிவிட்ட வாடிக்கையாளரை ரோபோ தாக்க முயன்றதால் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/robot-trying-to-attack-human-in-russian-shop-1788356578"></link>
            <id>https://news.lankasri.com/article/robot-trying-to-attack-human-in-russian-shop-1788356578</id>
            <summary type="text">robot trying to attack customer in russia shop: தள்ளிவிட்ட வாடிக்கையாளரை ரோபோ தாக்க முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

வாடிக்கையாளரை தாக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>robot trying to attack customer in russia shop: தள்ளிவிட்ட வாடிக்கையாளரை ரோபோ தாக்க முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><h3> 

வாடிக்கையாளரை தாக்க முயன்ற ரோபோ </h3><p>

உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மனித வடிவிலான ரோபோட்கள் கடந்த சில ஆண்டுகளாகவே பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளது. </p><p>எதிர்காலத்தில் ரோபோக்கள் மனிதர்களின் கட்டுப்பாடு இல்லாமல் செயல்பட வாய்ப்புள்ளது என்ற அச்சமும் மனிதர்களிடையே நிலவி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2ca321c-ef87-4883-accf-7d142226e81e/26-6a9827e4dd5ed.webp' /></p><p> 

அதற்கு வலுசேர்க்கும் வகையில் கடையில் வாடிக்கையாளரை தாக்க முயற்சித்த ரோபோவின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

ரஷ்யாவில் உள்ள மின்னணு சாதன கடை ஒன்றில் வாடிக்கையாளர் அங்கிருந்த ரோபோவிடம் கை குலுக்க கையை நீட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p>

ஆனால் ரோபோ கையை நீட்டாததால் கோபத்தில் ரோபோவை லேசாக தள்ளியுள்ளார். 

உடனே ரோபோ அவரை தாக்க முயற்சித்துள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">A robot got VERY aggressive after being pushed<br><br>It’s so over<br><br>Writer: Sol<a href="https://t.co/gVWd9rFpqI">pic.twitter.com/gVWd9rFpqI</a></p>&mdash; Mario Nawfal (@MarioNawfal) <a href="https://x.com/MarioNawfal/status/2094987427933049235?ref_src=twsrc%5Etfw">September 2, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>அங்கிருந்த ஊழியர்கள் அதனை கட்டுப்படுத்த முயற்சித்த போது அவர்களையும் தாக்க முயற்சித்தது. 

அதன் பிறகு அந்த ரோபோவின் இயக்கத்தை நிறுத்தினர்.</p><p> இந்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் பலரும் இதனை டெர்மினேட்டர், இயந்திரன் என கருத்து தெரிவித்துள்ளனர். </p><p>

ஆனால் இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பிய சிலர், இந்த ரோபோ ரிமோட் மூலம் இயக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T16:52:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை எம்வசமே : மீண்டும் மார் தட்டும் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/strait-of-hormuz-under-us-control-reiterates-trump-1788366606"></link>
            <id>https://ibctamil.com/article/strait-of-hormuz-under-us-control-reiterates-trump-1788366606</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


அமெரிக்கா, ஈரான் ஆகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
</p><p>

அமெரிக்கா, ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். </p><p>இது குறித்து அவர் ட்ரூத் சோஷியல் பக்கத்தில் கூறி உள்ளதாவது;&nbsp;</p><h2>ஈரானைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து கட்டாயப்படுத்தவில்லை</h2><p>ஏபிசி போலிச் செய்தி நிறுவனம் தெரிவித்ததைப் போல, நான் ஈரானைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து கட்டாயப்படுத்த முயற்சிக்கவில்லை. அவர்களுக்குப் பயனற்றதாகத் தோன்றும் ஒரு ஒப்பந்தத்தில், அவர்கள் கையெழுத்திட்டாலும் எனக்குக் கவலையில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb9c3c53-eee8-4f06-b62f-c41467473230/26-6a9853106dd32.webp' /></p><p>
</p><p>

அவர்களை வலுக்கட்டாயமாக ஒரு ஒப்பந்தம் செய்ய நான் விரும்பவில்லை. ஹோர்முஸ் நீரிணையின் மீது முழுமையான கட்டுப்பாடு அமெரிக்காவிடம் இருக்கிறது. </p><p>ஈரானின் பொருளாதாரம் முற்றிலுமாக சரிந்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையையே நான் விரும்புகிறேன். இவ்வாறு ட்ரம்ப் கூறியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T16:47:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் M.K.சிவாஜிலிங்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/m-k-sivajilingam-in-intensive-care-unit-hospital-1788351460"></link>
            <id>https://jvpnews.com/article/m-k-sivajilingam-in-intensive-care-unit-hospital-1788351460</id>
            <summary type="text">&amp;nbsp;முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், தற்போதைய வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமாகிய கௌரவ M.K.சிவாஜிலிங்கம் இன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், தற்போதைய வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமாகிய கௌரவ M.K.சிவாஜிலிங்கம் இன்று அதிதீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
கடந்தவாரம் முதல் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிதீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa3aa8a1-f383-4f88-9ad9-401a7a4fa734/26-6a9813e59fc57.webp' /></p><h2>சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை</h2><p>

M.K.சிவாஜிலிங்கம் கடந்த 11.06.2026 வியாழக்கிழமை அன்று கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை நடைபெற்று அவருக்கான சிகிச்சைகளைத் தொடர்ந்து கொழும்பில் தங்கியிருந்து சிகிச்சை மேற்கொண்டிருந்தார்.</p><p>

இந்த நிலையில் அவர் அதிதீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T16:40:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணைக்கு ட்ரம்பின் பெயர்: ட்ரம்பின் அதிரடி பதிவு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-suggests-renaming-strait-of-hormuz-himself-1788366565"></link>
            <id>https://tamilwin.com/article/trump-suggests-renaming-strait-of-hormuz-himself-1788366565</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணையின் பெயரை “ட்ரம்ப் நீரிணை” (Trump Strait) என மாற்றலாமா என தனது Truth Social தளத்தில் பதிவிட்டுள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணையின் பெயரை “ட்ரம்ப் நீரிணை” (Trump Strait) என மாற்றலாமா என தனது Truth Social தளத்தில் பதிவிட்டுள்ளார்.
</p><p>
“இப்போது அது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதால், ஹோர்முஸ் நீரிணையின் பெயரை ‘ட்ரம்ப் நீரிணை’ என மாற்றலாமா? அமெரிக்காவைப் போலவே இதுவும் முன்னெப்போதையும் விட சூடாக இருக்கும்!” என ட்ரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>ட்ரம்ப் நீரிணை</h2><p>
</p><p>
ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், ட்ரம்பின் இந்தப் பதிவு வெளியாகியுள்ளது.</p><p><iframe src="https://truthsocial.com/@realDonaldTrump/117202132375758936/embed" class="truthsocial-embed" style="max-width: 100%; border: 0" width="600" allowfullscreen="allowfullscreen"></iframe><script src="https://truthsocial.com/embed.js" async="async"></script></p><p> 

முன்னதாகவும் இந்த நீரிணை மீது அமெரிக்கா கட்டுப்பாட்டை கொண்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T16:36:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027 ஐசிசி மகளிர் சேம்பியன்ஸ் தொடர், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2027-icc-women-s-champions-trophy-moves-to-india-1788366264"></link>
            <id>https://jvpnews.com/article/2027-icc-women-s-champions-trophy-moves-to-india-1788366264</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் தொடர்ச்சியான சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு மத்தியில், இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு மாற்றப்பட்ட முதலாவது ஐசிசி மகளிர் சேம...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் தொடர்ச்சியான சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு மத்தியில், இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு மாற்றப்பட்ட முதலாவது ஐசிசி மகளிர் சேம்பியன்ஸ் தொடருக்கான கால எல்லை அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

இதற்கமைய குறித்த தொடரானது அடுத்த ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையில் இந்தியாவில் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6c440d8-3cdf-4f21-95e2-6ba9d909015a/26-6a984db9cc071.webp' /></p><h2 style="text-align: justify; ">சீர்திருத்தங்கள்</h2><p> </p><p style="text-align: justify; ">

ஆறு அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் அனைத்துப் போட்டிகளும் மும்பையில் நடைபெறவுள்ளன. </p><p style="text-align: justify; ">

இத்தொடர் இருபதுக்கு 20 போட்டிகளாக விளையாடப்படவுள்ளது. </p><p style="text-align: justify; ">

இத்தொடர் ஆரம்பத்தில் இலங்கையில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">எனினும், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஐசிசி வருடாந்தக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்ட தேவையான சீர்திருத்தங்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்ந்து மேற்கொண்டு வருவதால், இத்தொடர் தற்போது இந்தியாவிற்கு மாற்றப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

இத்தொடரை நடத்துவதற்கு பங்களாதேஷ், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று நாடுகளை ஐசிசி தனது நிர்ணயிக்கப்பட்ட மதிப்பீட்டு அளவுகோல்களின் கீழ் பரிசீலித்த பின்னரே, மாற்றீடாக இந்தியாவைப் பரிந்துரைத்தது. </p><p style="text-align: justify; ">

இந்த முடிவை செப்டம்பர் 1ஆம் திகதி ஐசிசி நிர்வாகக் குழு உறுதி செய்தது என ஐசிசி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-02T16:24:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[‘ரதிமா’ பாடலை 100 முறைக்கும் மேல் கேட்ட அட்லீ... சாய் அபயங்கருக்கு புகழாரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/atlee-praises-sai-abhyankars-radhimaa-song-1788364305"></link>
            <id>https://manithan.com/article/atlee-praises-sai-abhyankars-radhimaa-song-1788364305</id>
            <summary type="text">தமிழ் இசை உலகில் தனது தனித்துவமான இசை மற்றும் பாடல்களால் குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இளம் இசைக்கலைஞர் சாய் அபயங்கரின் 6-வது Mus...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் இசை உலகில் தனது தனித்துவமான இசை மற்றும் பாடல்களால் குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இளம் இசைக்கலைஞர் சாய் அபயங்கரின் 6-வது Music Video-வான ‘ரதிமா’ தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
</p><p>
பாடல் வெளியானது முதல் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிரப்பட்டு வரும் ‘ரதிமா’, அதன் இசை, காட்சியமைப்பு மற்றும் நடனத்தால் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a06b6d7-1598-4c29-8dbc-cedd4de785f7/26-6a984c24e7b0f.webp' /></p><p></p><h2>இயக்குநர் அட்லீ பாராட்டு&nbsp;</h2><p> </p><p>இந்த நிலையில், இயக்குநர் அட்லீ பாடலைப் பாராட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பது கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.</p><p>

‘ரதிமா’ பாடல் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகக் கூறியுள்ள அட்லீ, பாடல் வெளியான நாள் முதல் இதுவரை 100 முறைக்கும் மேல் அதைக் கேட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25b8183b-8786-44f9-90e1-19e53267bc7a/26-6a984c2598949.webp' /></p><p> </p><p>அதுமட்டுமின்றி, ஒவ்வொரு முறை கேட்கும்போதும் பாடல் தனக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தருவதாகவும், மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வகையில் அது தன்னை கவர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
சாய் அபயங்கரை நினைத்து பெருமைப்படுவதாகத் தெரிவித்துள்ள அட்லீ, ஒவ்வொரு புதிய படைப்பிலும் சாய் அபயங்கர் தன்னையே மிஞ்சும் வகையில் செயல்பட்டு வருகிறார் எனப் பாராட்டியுள்ளார். அவரது இசைத் திறமையையும், தனது பாடல்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் விதத்தையும் வெகுவாக ரசிப்பதாகவும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be8b0f14-0caa-4d6f-b037-3a3c4b9c721f/26-6a984c264a25b.webp' /></p><p></p><p>
</p><p>
மேலும், தான் சாய் அபயங்கரின் தீவிர ரசிகர் என்று தெரிவித்த அட்லீ, அவரது அடுத்த பாடலுக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும், இசைப் பயணத்தில் தொடர்ந்து பல உயரங்களை அவர் அடைய வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார். குறித்த பதிவு தற்போது ரசிகர்களிடைய கவனம் ஈர்த்து வருகின்றது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="qme" dir="ltr"><a href="https://x.com/SaiAbhyankkar?ref_src=twsrc%5Etfw">@SaiAbhyankkar</a> <a href="https://x.com/Lyricist_Vivek?ref_src=twsrc%5Etfw">@Lyricist_Vivek</a> <a href="https://x.com/thinkmusicindia?ref_src=twsrc%5Etfw">@thinkmusicindia</a> <a href="https://x.com/BhagyashriBose?ref_src=twsrc%5Etfw">@BhagyashriBose</a> <a href="https://t.co/i6Hsz7mOt0">pic.twitter.com/i6Hsz7mOt0</a></p>&mdash; atlee (@Atlee_dir) <a href="https://x.com/Atlee_dir/status/2094368169196691873?ref_src=twsrc%5Etfw">August 31, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T16:19:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - கனடா வர்த்தகப் போர்: அமெரிக்கப் பொருட்களை புறக்கணிக்கும் கனடிய மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-canada-trade-war-canadians-boycott-us-goods-1788364855"></link>
            <id>https://tamilwin.com/article/us-canada-trade-war-canadians-boycott-us-goods-1788364855</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அதிரடி வர்த்தகக் கொள்கைகள் மற்றும்
கனடாவுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அதிரடி வர்த்தகக் கொள்கைகள் மற்றும்
கனடாவுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான
பல தசாப்த கால உறவில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது.</p><p>

அண்மையில் கனடியப் பொருட்களுக்கு மேலதிக வரிகளை விதித்த ட்ரம்ப், லேக்
ஒன்டாரியோ (Lake Ontario) ஏரியின் பெயரை "லேக் அமெரிக்கா" (Lake America) என
மாற்றி நிர்வாக உத்தரவிலும் கையெழுத்திட்டார்.</p><h2>வர்த்தகப் போர்</h2><p>

இந்த சம்பவங்கள் கனடிய மக்களிடையே கடும் அதிருப்தியையும் தேசப்பற்றையும்
தூண்டியுள்ளது.

இதன் எதிரொலியாக, ஒட்டாவாவில் உள்ள 'ட்ரம்ப் அவென்யூ' (Trump Avenue) வீதியின்
பெயரை மாற்றுவதற்கு மாநகரசபை நடவடிக்கை எடுத்து வருகிறது.
</p><p>
அத்துடன், கனடிய மக்கள் அமெரிக்க சுற்றுலாப் பயணங்கள், அமெரிக்கப் பொருட்கள்
மற்றும் சேவை சந்தாக்களை (Subscriptions) பெருமளவில் புறக்கணிக்கத்
தொடங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9100c77f-ca65-4b69-bec9-3e54512f937f/26-6a984a7129a74.webp' /></p><p>

அத்துடன், அமெரிக்க உதிரிப்பாகங்கள் மற்றும் உணவுப் பொருட்களுக்கான தேவையை 70
சதவீதத்தால் குறைத்து, அவுஸ்திரேலியா மற்றும் சிலி போன்ற நாடுகளிலிருந்து
பொருட்களை இறக்குமதி செய்ய முன்னணி கனடிய நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.</p><p>

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்துவதற்கு
கனடியப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) எடுத்த தீர்மானத்திற்கு 70
சதவீதத்திற்கும் அதிகமான கனடிய மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-02T16:10:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளையதினம் வங்கி கணக்குகளுக்கு வருகிறது பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/aswesuma-welfare-benefit-payment-august-1788364358"></link>
            <id>https://ibctamil.com/article/aswesuma-welfare-benefit-payment-august-1788364358</id>
            <summary type="text">&amp;nbsp;70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான &#039;அஸ்வெசும&#039; முதியோருக்கான 2026 ஒகஸ்ட் மாதத்திற்குரிய கொடுப்பனவு நாளை (03) உரிய பயனாளிகளின் வங்கிக் கணக்குகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான 'அஸ்வெசும' முதியோருக்கான 2026 ஒகஸ்ட் மாதத்திற்குரிய கொடுப்பனவு நாளை (03) உரிய பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது. </p><p>

இதற்கமைய, அஸ்வெசும நலன்புரிப் நன்மைகள் செலுத்தும் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 618,352 முதியோர்களுக்காக 3,091,760,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>வைப்பிலிடப்படவுள்ள தொகை</h2><p>மேலும், இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 78,260 முதியோர்களுக்காக 391,300,000 ரூபா நிதி வைப்பிலிடப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/793fa3c0-3d7b-43d0-9e0c-11939eb382b4/26-6a9847cb6b76d.webp' /></p><p> </p><p>

உரிய பயனாளிகள் நாளை (3) முதல் தங்களுக்கான முதியோர் கொடுப்பனவை அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T16:07:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளைய தினம் வங்கிகணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ள பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/money-to-be-credited-to-bank-accounts-1788364854"></link>
            <id>https://jvpnews.com/article/money-to-be-credited-to-bank-accounts-1788364854</id>
            <summary type="text">2026 ஒகஸ்ட் மாதத்திற்குரிய 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான &#039;அஸ்வெசும&#039; முதியோர் கொடுப்பனவு நாளை (03) உரிய பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஒகஸ்ட் மாதத்திற்குரிய 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான 'அஸ்வெசும' முதியோர் கொடுப்பனவு நாளை (03) உரிய பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது. </p><p>

இதற்கமைய, அஸ்வெசும நலன்புரிப் நன்மைகள் செலுத்தும் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 618,352 முதியோர்களுக்காக 3,091,760,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32cb40b2-a939-477e-be16-2ee7f5656f07/26-6a98483794e6a.webp' /></p><h2>நலன்புரி நன்மைகள் சபை&nbsp;</h2><p> </p><p>

மேலும், இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 78,260 முதியோர்களுக்காக 391,300,000 ரூபா நிதி வைப்பிலிடப்படவுள்ளது.</p><p></p><p> 

உரிய பயனாளிகள் நாளை (3) முதல் தங்களுக்கான முதியோர் கொடுப்பனவை அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T16:01:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த ராசியினர் இருக்கும் இடத்தில் சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது! ஏன்னு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/zodiac-signs-who-make-everyone-laugh-1788361518"></link>
            <id>https://manithan.com/article/zodiac-signs-who-make-everyone-laugh-1788361518</id>
            <summary type="text">வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும். ஆனால் அது எத்தனை பேருக்கு நிஜமாகிறது என்றால், வெகு சிலருக்கே. சிரிப்பு மனித வாழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும். ஆனால் அது எத்தனை பேருக்கு நிஜமாகிறது என்றால், வெகு சிலருக்கே. சிரிப்பு மனித வாழ்க்கையின் முக்கிய அம்சங்களில் ஒன்று. சிலர் எப்போதும் மற்றவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் அசாத்திய திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.</p><p>

ஒருவரின் பிறந்த ராசி, அவர்களின் ஆளுமை மற்றும் குணாதிசயங்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதில் நகைச்சுவை உணர்வும் முக்கிய இடம் வகிக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f860bbb-041d-45bb-b538-731049fae25c/26-6a98432d38e52.webp' /></p><p></p><p> ஜோதிடத்தின் படி, சில ராசிகளில் பிறந்தவர்கள் இயற்கையாகவே அதிக நகைச்சுவை உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். அவர்களைச் சுற்றியிருப்பவர்களின் முகத்திலும் புன்னகை நிறைந்திருக்கும் படி பார்த்துக்கொள்வார்கள்.&nbsp;</p><p>அப்படி இருக்கும் இடத்தில் அனைவரையுமே சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5698a06b-0979-4496-acd1-bcc3a5152622/26-6a98432de36de.webp' /></p><h2>
</h2><p>மிதுன ராசிக்காரர்கள் புத்திக்கூர்மை மற்றும் தகவல் தொடர்பின் அதிபதியான புதனால் ஆளப்படுகிறார்கள். அவர்களின் புத்திசாலித்தனம் நகைச்சுவை உணர்விலும் வெளிப்படும்.</p><p> விரைவாகச் சிந்திக்கும் இவர்கள், வார்த்தை விளையாட்டுகள் மற்றும் சுவாரஸ்யமான கதைகள் மூலம் எந்தச் சூழலையும் வேடிக்கையாக மாற்றி அனைவரையும் சிரிக்க வைப்பார்கள். </p><p>அவர்களின் நகைச்சுவை புத்திசாலித்தனமாகவும் இலகுவாகவும் இருப்பதால், மற்ற ராசிகளை விட வேடிக்கையானவர்களாகத் திகழ்கிறார்கள்.</p><h2>

சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/355fd10f-9a42-4c4c-ada7-9daaeb834472/26-6a98432e9bfcd.webp' /></p><h2>
</h2><p>சிம்ம ராசிக்காரர்கள் கிரகங்களின் ராஜாவான சூரியனால் ஆளப்படுவதால், பிரகாசமான மற்றும் கவர்ச்சியான ஆளுமை கொண்டவர்கள். </p><p>மக்களைச் சிரிக்க வைத்து கவனத்தை ஈர்ப்பதையும், மற்றவர்களை மகிழ்விப்பதையும் விரும்புவார்கள். இவர்களுக்கு மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் எந்த செயலும் மிகவும் பிடித்தாகவே இருக்கும்.&nbsp;</p><p> குறும்பு கலந்த நகைச்சுவை உணர்வு கொண்ட இவர்கள், உடல் மொழி மற்றும் கதை சொல்லும் திறன் மூலம் அனைவரையும் சிரிக்க வைப்பார்கள்.</p><h2>

தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e31ee235-e01c-478d-b1ce-fcfd8144b7dc/26-6a98432f4baec.webp' /></p><p></p><h2>
</h2><p>தனுசு ராசிக்காரர்கள் வேடிக்கையாகவும் சாகசமாகவும் இருக்க விரும்புவார்கள். நகைச்சுவையாகப் பேசத் தயங்காத இவர்களின் நகைச்சுவை வெளிப்படையானதாகவும், மற்றவர்களைப் புண்படுத்தாத வகையிலும் இருக்கும். </p><p>மற்றவர்கள் சொல்லத் தயங்கும் விஷயங்களைக்கூட சிரிக்க வைக்கும் விதத்தில் வெளிப்படையாகச் சொல்வதில் இவர்கள் கில்லாடிகளாக இருப்பார்கள்.</p><p>அவர்களின் பரந்த மனப்பான்மையும் விளையாட்டுத்தனமான குணமும் நகைச்சுவையை இயல்பாகவும் உற்சாகமாகவும் மாற்றுகின்றது.&nbsp;</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T15:39:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளியான பெறுபேறுகள் ; பெற்றோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ; சட்ட நடவடிக்கை நிச்சயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/exam-results-released-parents-beware-1788362871"></link>
            <id>https://jvpnews.com/article/exam-results-released-parents-beware-1788362871</id>
            <summary type="text">தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பிள்ளைகளைத் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என பெண்கள் மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பிள்ளைகளைத் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பிள்ளைகளைத் தண்டிப்பது அல்லது மனரீதியாகத் துன்புறுத்துவதைத் தவிர்க்குமாறு அந்த அறிக்கை ஊடாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4c72dbe-8b94-445c-b60d-498d22578936/26-6a984078e6284.webp' /></p><h2 style="text-align: justify; ">தண்டனைக்குரிய குற்றம்</h2><p style="text-align: justify; "> 

அத்துடன், பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பிள்ளைகள் அசௌகரியத்திற்குள்ளாகும் வகையில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரப்புரைகளை மேற்கொள்வதையும் தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

மேற்கூறியவாறு செயற்படுவது சிறுவர் துன்புறுத்தலின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதால், அவ்வாறு செய்பவர்களுக்கு எதிராக அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-02T15:27:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய டி20 போட்டியில் 2 ஓட்டங்களில் சதத்தை தவறவிட்ட வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jj-smuts-98-runs-in-60-balls-vs-belfast-wolves-1788362947"></link>
            <id>https://news.lankasri.com/article/jj-smuts-98-runs-in-60-balls-vs-belfast-wolves-1788362947</id>
            <summary type="text">பெல்ஃபாஸ்ட் வோல்வ்ஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஜேஜே ஸ்முட்ஸ் 98 ஓட்டங்கள் விளாசினார்.

பெல்ஃபாஸ்ட் வோல்வ்ஸ் அணிக்கு எதிரான ஐரோப்பிய டி20 போட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெல்ஃபாஸ்ட் வோல்வ்ஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஜேஜே ஸ்முட்ஸ் 98 ஓட்டங்கள் விளாசினார்.
</p><p>
பெல்ஃபாஸ்ட் வோல்வ்ஸ் அணிக்கு எதிரான ஐரோப்பிய டி20 போட்டியில் எடின்பர்க் வீரர் ஜேஜே ஸ்முட்ஸ் 60 பந்துகளில் 98 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;</p><h2>ஜேஜே ஸ்முட்ஸ்</h2><p>
எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் மற்றும் பெல்ஃபாஸ்ட் வோல்வ்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐரோப்பிய டி20 போட்டி வூர்பர்க்கில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19f0f008-f20e-47c0-b2ae-e35670223220/26-6a98412b40437.webp' />&nbsp;</p><p></p><p>
நாணய சுழற்சியில் வென்ற பெல்ஃபாஸ்ட் வோல்வ்ஸ் அணி பந்துவீச்சை தெரிவு செய்ய, எடின்பர்க் கேஸல் துடுப்பாட்டத்தைத் தொடங்கியது.
</p><p>
ரோஸ் அடைர் 9 ஓட்டங்களிலும், கோஸ் 14 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க, ஜேஜே ஸ்முட்ஸ் (JJ Smuts) அதிரடி ஆட்டத்தில் மிரட்ட அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.</p><p>

மறுமுனையில் பிரண்டன் மெக்முல்லன் 16 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 30 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.</p><h2> 

189 ஓட்டங்கள் குவிப்பு </h2><p>அணியின் ஸ்கோர் 171 ஓட்டங்களாக உயர்ந்தபோது ஜேஜே ஸ்முட்ஸ் 98 (60) ஓட்டங்களில் (3 சிக்ஸர், 11 பவுண்டரிகள்) ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். </p><p>

அணித்தலைவர் மிட்செல் சான்ட்னர் 13 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 25 ஓட்டங்கள் விளாச, எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் அணி 189 ஓட்டங்கள் குவித்தது. </p><p>

மார்க் அடைர், ஃப்ரெட் கிளாசென் தலா 2 விக்கெட்டுகளும், சௌரப் நெத்ரவால்கர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbf99c15-f766-4bc9-b86d-bf919fbc993c/26-6a98412c132ba.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T15:27:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் நீண்டகால கால்நடை திருடன் சிக்கினான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/long-time-cattle-thief-caught-in-batticaloa-1788361372"></link>
            <id>https://ibctamil.com/article/long-time-cattle-thief-caught-in-batticaloa-1788361372</id>
            <summary type="text">&amp;nbsp;மட்டக்களப்பில் நீண்டகாலமாக கால் நடைகளை திருடி வந்த திருடன் ஒருவரை நேற்று
செவ்வாய்க்கிழமை (01) கைது செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மட்டக்களப்பில் நீண்டகாலமாக கால் நடைகளை திருடி வந்த திருடன் ஒருவரை நேற்று
செவ்வாய்க்கிழமை (01) கைது செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் மீட்டுள்ளதாக மட்டு தலைமையக
காவல்துறையினர் தெரிவித்தனர்.
</p><p>
மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியைச் சேர்ந்தவரே கைது செய்யப்பட்டவராவார்.&nbsp;</p><p>&nbsp;கடந்த மாதம் 18 ம் திகதி இருதயபுரம் பகுதியில் உள்ள வீதி ஒன்றின் ஓரமாக
மேய்ச்சலில் 5 ஆடுகள் ஈடுபட்ட நிலையில் சிறிய ரக வான் ஒன்றில் சென்ற
திருடன் மேய்ச்சலில் ஈடுபட்ட ஆடு ஒன்றை பிடித்து வானில் ஏற்றி கடத்திச்
சென்றுள்ளார்.
</p><p>
</p><h2>ஆட்டின் உரிமையாளர் காவல் நிலையத்தில் முறைப்பாடு</h2><p>இதனையடுத்து ஆட்டின் உரிமையாளர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து
காவல் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர்
வை. விஜயராஜ் தலைமையிலான காவல்துறை குழுவினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில்
சிசிடிவி கமரா மூலம் ஆட்டை கடத்திய வாகனத்தினை அடையாளம் கண்டு கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d192bd95-a59d-4ce9-b35f-3022f3b3e299/26-6a984000385e6.webp' /></p><p>
</p><p>&nbsp;நேற்று ஆட்டை கடத்திச் சென்ற திருடனை
காத்தான்குடியில் வைத்து கைது செய்ததுடன் ஆட்டை கடத்திய சிறிய ரக வானையும்
மீட்டதுடன் கைது செய்யப்பட்ட திருடன் நீண்ட காலமாக வாகனங்களில் ஆடு, மாடுகளை
திருடி கடத்தி சென்று வருவதாக காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணையில்
தெரியவந்துள்ளது</p><p></p><h2>நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை</h2><p>
</p><p>கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு
பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c2c49d9-39d3-44e9-91ca-72fafa1cba6b/26-6a98400106763.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T15:26:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[2 வாரத்தில் இருமுடி செய்த அதிகாரபூர்வ வசூல்.. ரவி தேஜா கெரியரில் இது முதல் முறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ravi-teja-irumudi-crosses-200-crs-in-box-office-1788360993"></link>
            <id>https://cineulagam.com/article/ravi-teja-irumudi-crosses-200-crs-in-box-office-1788360993</id>
            <summary type="text">ரவி தேஜா நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி இருமுடி படம் ரிலீஸ் ஆகி இருந்தது. சிவ நிர்வாணா இயக்கத்தில் இந்த படத்தை மைத்ரி நிறுவனம் தயாரித்து இருந்தது.மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரவி தேஜா நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி இருமுடி படம் ரிலீஸ் ஆகி இருந்தது. சிவ நிர்வாணா இயக்கத்தில் இந்த படத்தை மைத்ரி நிறுவனம் தயாரித்து இருந்தது.</p><p>முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் வந்துகொண்டிருந்த நிலையில் தற்போது புது சாதனையை படம் படைத்து இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f055c04-933b-407c-b568-a0976aefb9b5/26-6a9839250aee3.webp' /></p><p>
</p><h2>200 கோடி
</h2><p>இரண்டு வாரங்களில் இருமுடி படம் 200 கோடி ரூபாய் என்ற வசூல் சாதனையை தொட்டு இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
</p><p>
ரவி தேஜா கெரியரில் இது முதல் 200 கோடி வசூல் படம் என்பதால் ரசிகர்களும் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T15:02:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த தரப்பை பழிவாங்கிய அநுர அரசு - ஏமாற்றத்தில் நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-party-s-meeting-in-struggle-1788313085"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-party-s-meeting-in-struggle-1788313085</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணிக்கு மிகப்பெரிய இரண்டு விளையாட்டு மைதானங்களையும் வழங்க அந்த பகுதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணிக்கு மிகப்பெரிய இரண்டு விளையாட்டு மைதானங்களையும் வழங்க அந்த பகுதி மாநகர சபை மறுத்துள்ளது. </p><p>

குறித்த நாட்களில் வேறு தரப்பினரால் வாலிசிங்க ஹரிஸ்சந்திர விளையாட்டு மைதானமும் சல்காது விளையாட்டு மைதானமும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக அன்றைய தினம் அவற்றை வழங்க முடியாது என அனுராதபுரம் மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளார். </p><p>

அத்துடன், இதற்கு பொருத்தமான வேறொரு தினத்தை ஒதுக்கிக்கொள்வது தொடர்பில் பரிசீலிக்குமாறும் அறிவித்துள்ளார்.</p><h2><b> 

கோரிக்கை நிராகரிப்பு</b></h2><p>எனினும், சல்காது மைதானத்தை பெறுவதற்காக தங்களால் முன்னரே விண்ணப்பிக்கப்பட்டிருந்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. </p><p>இருந்த போதிலும், விண்ணப்பித்த வேறு ஒரு தரப்பினருக்கு குறித்த மைதானத்தை வழங்குவதற்கு மாநகர சபை செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/SIg-Zv7vr2I" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p><p>

அத்துடன் வாலிசிங்க ஹரிஸ்சந்திர விளையாட்டு மைதானமும் மூன்றாவது தரப்பினரால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி தங்களுக்கு வழங்குவது மறுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் குற்றம் சுமத்துகின்றனர். </p><p>

இது தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் மேயரின் அறிவுறுத்தலுக்கமையவே மேற்கொள்ளப்பட்டதாகவும் மொட்டுக்கட்சியின் பிரதிநிதிகள் குற்றம் சுமத்துகின்றனர்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T15:01:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[இயக்குநர் சுந்தர்ராஜன் மன்னிப்பு கேட்கவேண்டும்!! வானதி சீனிவாசன் கண்டனம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/vanathi-srinivasan-condemn-director-sundarrajan-1788355326"></link>
            <id>https://viduppu.com/article/vanathi-srinivasan-condemn-director-sundarrajan-1788355326</id>
            <summary type="text">இயக்குநரும் நடிகருமான சுந்தர்ராஜன், ராஜாதி ராஜா, வைதேகி காத்திருந்தாள், மெல்லத்திறந்தது கதவு, திருமதி பழனிசாமி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். சமீபத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இயக்குநரும் நடிகருமான சுந்தர்ராஜன், ராஜாதி ராஜா, வைதேகி காத்திருந்தாள், மெல்லத்திறந்தது கதவு, திருமதி பழனிசாமி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.</p><p> சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சுந்தர்ராஜன், கோவை குண்டிவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளது பலரது கண்டனங்களை பெற்று வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a381c68-d2b8-4aad-ab32-c65102dcfd94/26-6a98230061bf4.webp' /></p><p> </p><h2>சுந்தர்ராஜன்</h2><p>அவர் பேசுகையில், கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் அப்பாவி செத்துப் போயிட்டார்கள் என்பார்கள். அப்பாவியாக இருப்பதை காட்டிலும் செத்துப் போயிடு என்று சொல்கிறேன்.</p><p> யாருங்க அப்பாவி, நீங்க பஸ்ல உக்காரப்போங்க, ப்ரதர் இது என் சீட்டுனு சொல்லி தினத்தந்தி பேப்பரையோ, தினகரன் பேப்பரையோ போட்டு வச்சுட்டு என் சீட்டுனு சொல்லுவான். செருப்பை வச்சுட்டு போவாங்க, கைக்குட்டை வச்சுட்டுப் போவாங்க, இது என் சீட்டுனு சொல்வாங்க, அவன் ஏமாளியா? என்று பேசியிருக்கிறார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/826fedbc-cf48-4dc8-b3e2-3961c0e35766/26-6a98230113f72.webp' /></p><p>இதுகுஈர்த்து பலரும் கண்டனம் செலுத்தி வந்த நிலையில், பாஜகவின் முன்னாள் எம் எல் ஏ வும் முக்கிய தலைவர்களில் ஒருவருமான வாந்தி சீனிவாசன் தன்னுடைய கண்டனத்தை கூறியிருக்கிறார். கொச்சைப்படுத்தி பேசிய அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">திரைப்பட நடிகர், இயக்குனர் சுந்தர்ராஜன் திரைப்பட இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களை கொச்சைப்படுத்தி பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.<br><br>1998ல் இந்தியாவே அதிர்ந்த கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 58 பேர் உரிழந்த சம்பவம் இன்னும் மனதை… <a href="https://t.co/3eG7rXAQFA">pic.twitter.com/3eG7rXAQFA</a></p>&mdash; Vanathi Srinivasan (@VanathiBJP) <a href="https://x.com/VanathiBJP/status/2094297432863777006?ref_src=twsrc%5Etfw">August 31, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-09-02T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு ஏழு தாழ்வான தள பேருந்துகள் நன்கொடை வழங்க்கிய ஜப்பான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/japan-donated-seven-low-floor-buses-to-sri-lanka-1788354634"></link>
            <id>https://jvpnews.com/article/japan-donated-seven-low-floor-buses-to-sri-lanka-1788354634</id>
            <summary type="text">&amp;nbsp; ஜப்பானிய அரசாங்கம் இலங்கைக்கு ஏழு தாழ்வான தள அமைப்பு கொண்ட (low-floor) பேருந்துகள் நன்கொடையாக வழங்கியுள்ளது.


இரு நாடுகளுக்கும் இடையிலான தற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜப்பானிய அரசாங்கம் இலங்கைக்கு ஏழு தாழ்வான தள அமைப்பு கொண்ட (low-floor) பேருந்துகள் நன்கொடையாக வழங்கியுள்ளது.
</p><p>

இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய அபிவிருத்தி ஒத்துழைப்பின் கீழ், நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்காக ஏழு தாழ்வான தள அமைப்பு கொண்ட (low-floor) பேருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45809b8a-df37-48ea-ba0b-7e194068c36b/26-6a98204c565ae.webp' /></p><p>

ஜப்பானிய அரசாங்கம் மற்றும் ஜப்பானின் யோகோஹாமா நகர மக்களால் கூட்டாக அன்பளிப்பாக வழங்கப்பட்ட இந்த ஏழு புதிய பேருந்துகளையும் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு, இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் மேன்மைதங்கிய அகியோ இசொமாட்டாவின் (Akio Isomata) பங்குபற்றலுடன் இடம்பெற்றது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - ஈரான் இடையே தீவிரமடையும் போர் தாக்குதல்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் உச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/escalating-hostilities-between-the-us-and-iran-1788358526"></link>
            <id>https://tamilwin.com/article/escalating-hostilities-between-the-us-and-iran-1788358526</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே கடந்த ஜூலை மாதத்திற்குப் பின்னர்
மிகப்பாரிய அளவிலான நேரடி வான் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள்
இடம்பெற்றுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே கடந்த ஜூலை மாதத்திற்குப் பின்னர்
மிகப்பாரிய அளவிலான நேரடி வான் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள்
இடம்பெற்றுள்ளதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் போர்
தீவிரமடைந்துள்ளது.
</p><p>
ஈரானிய புரட்சிகரக் காவல் படையின்(IRGC) வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார்
நிலையங்கள், தொடர்பாடல் மையங்கள் மற்றும் கடல்சார் கடற்படை இலக்குகளை இலக்கு வைத்து அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.
</p><p>
இந்த தாக்குதலில் தெற்கு ஈரானின் சீரிக் பகுதியில் திருமண நிகழ்வொன்று
இடம்பெற்ற வீடு தாக்கப்பட்டதில் சிறுவன் ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்ததுடன்,
68 பேர் காயமடைந்துள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
</p><h2>
ஈரான் ஏவுகணை தாக்குதல்..</h2><p>
இதற்குப் பதிலடியாக பஹ்ரைன், ஜோர்தான், குவைத் மற்றும் ஈராக்கில் உள்ள
அமெரிக்க இராணுவ முகாம்கள் மற்றும் இலக்குகள் மீது ஈரான் ஏவுகணை மற்றும்
ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7c39277-2ebb-4594-a963-5a7708f392c1/26-6a98397f405ae.webp' /></p><p>
</p><p>
 அமெரிக்கப் படைகளை பிராந்தியத்தில்
இருந்து முற்றாக வெளியேற்றுவதே தமது முதன்மை நோக்கம் என ஈரானிய இராணுவத் தலைமை அறிவித்துள்ளது.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை ஈரான் முடக்கியுள்ள நிலையில்,
அமெரிக்காவால் வழிநடத்தப்பட்ட இரு எண்ணெய்க் கப்பல்கள் கடலில் வீசப்பட்ட
கண்ணிவெடிகளில் சிக்கி சேதமடைந்துள்ளன.</p><p>

இந்த தீவிரப் போர்ச் சூழல் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள்
மீண்டும் உச்சமடைந்துள்ளதுடன், ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும்
கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p>YOU MAY LIKE THID VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/HWFRn2b_AbA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-02T14:58:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் விசாரணை நிறைவு - உயர் நீதியரசர்கள் குழாம் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-constitutional-amendment-concluded-1788360704"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-constitutional-amendment-concluded-1788360704</id>
            <summary type="text">அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான பர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான பரிசீலனை நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இது தொடர்பான அறிவிப்பு இன்று(02.09.2026) உயர் நீதிமன்றத்தால் வெளியிடப்பட்டுள்ளது. </p><p>

இதனையடுத்து, சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை தொடர்பான வியாக்கியானத்தை நாடாளுமன்ற சபாநாயகருக்கு, அனுப்பி வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான ஐந்து நீதியரசர்களைக் கொண்ட ஆயம் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
</p><h2>
உயர் நீதிமன்றத்தின் முடிவு</h2><p>

சட்டமூலத்திற்கு எதிராகவும், அதற்கு ஆதரவாகவும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களையும், சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் சமர்ப்பணங்களையும் பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2e52ff3-aa9b-4d59-bb12-cb05cfce5c5c/26-6a98386e12d81.webp' /></p><p>
</p><p>
மேலும், மனுக்கள் தொடர்பில் ஏதேனும் எழுத்துமூல சமர்ப்பணங்கள் இருந்தால், அவற்றை நாளை பிற்பகல் 3 மணிக்கு முன்னர் நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
</p><p>
இதேவேளை, நாட்டின் நீதித்துறை நடவடிக்கைகளை விரிவுபடுத்தி, நீதிமன்ற செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதுடன், நிலுவையில் உள்ள வழக்குகளை துரிதமாக விசாரித்து முடிக்கும் நோக்கிலேயே 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலமும், நீதித்துறை அமைப்பு தொடர்பான திருத்தச் சட்டமூலமும் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளதாக சட்ட மாஅதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><h2>

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம்</h2><p>
சட்ட மாஅதிபர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான மன்றாடியார் நாயகம் விராஜ் தயரத்ன இந்த விடயங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d3326fe-3318-48b3-aee3-4572bb05d56a/26-6a98386edca35.webp' /></p><p>
</p><p>
குறித்த சட்டமூலங்கள் தொடர்பான மனுக்கள் மீதான பரிசீலனை உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற நிலையில், இன்று(02) விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.
</p><p>
இந்த நிலையில், உயர் நீதிமன்றம் சபாநாயகருக்கு அனுப்பவுள்ள இரகசிய வியாக்கியானம், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் அடுத்தகட்ட நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு முக்கியமானதாக அமையவுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T14:53:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்ச ஆணைக்குழு நாமல் ராஜபக்சவிற்கு அழைப்பாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-rajapaksa-summoned-to-bribery-on-4th-1788359476"></link>
            <id>https://ibctamil.com/article/namal-rajapaksa-summoned-to-bribery-on-4th-1788359476</id>
            <summary type="text">சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) முன் வெள்ளிக்கிழமை (4) முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>

ராஜபக்சவின் வழக்கறிஞர், முதித ஆர். லொகுமுதலி, தனது கட்சிக்காரருக்கு காலை 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு CIABOC எழுத்துபூர்வமாக முறைப்படி அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார்.&nbsp;</p><h2>ஆணைக்குழு முன் முன்னிலையாவார்</h2><p>வழக்கறிஞரின் தகவலின்படி, ராஜபக்ச அழைப்பாணைக்கு இணங்க ஒப்புக்கொண்டுள்ளார், மேலும் கோரப்பட்டபடி ஆணைக்குழுவின் முன் முன்னிலையாவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17c0d651-d60f-4dad-923f-bc5b0d522691/26-6a9836921ca5e.webp' /></p><p>

செப்டம்பர் 4 ஆம் திகதி CIABOC முன் முன்னிலையாக வேண்டும் என்று நாமல் ராஜபக்சவுக்கு திங்கட்கிழமை முதலில் தெரிவிக்கப்பட்டது.

அழைப்பாணைக்கான காரணம் வெளியிடப்படவில்லை.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T14:45:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரில் பில் செலுத்தவில்லை; இளம்பெண்ணுக்கு ''மொட்டை அடித்த' நிர்வாகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/thailand-bar-shaves-the-head-woman-failed-pay-bill-1788353902"></link>
            <id>https://jvpnews.com/article/thailand-bar-shaves-the-head-woman-failed-pay-bill-1788353902</id>
            <summary type="text">&amp;nbsp; தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், மது அருந்திவிட்டு பணம் செலுத்தாத காரணத்திற்காக வாடிக்கையாளரின் தலையை மதுபான விடுதி ஊழியர் ஒருவர் பெண்ணின் தலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், மது அருந்திவிட்டு பணம் செலுத்தாத காரணத்திற்காக வாடிக்கையாளரின் தலையை மதுபான விடுதி ஊழியர் ஒருவர் பெண்ணின் தலையை மொட்டொ போட்ட சம்பவம் சமூக ஊடங்களில் வெளியான நிலையில் பெரும் விவாத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

 ஆகஸ்ட் 25 ஆம் திகதி 18 வயதுப் பெண் ஒருவர் போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி பிங்க்லாவ் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான மதுபான விடுதிக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0ad2ed2-e2e5-44bb-966a-63b48c5d0b45/26-6a981d6fb9f63.webp' /></p><h2>பெரிய தொகை பில்</h2><p> </p><p>

 பாரில் பெண் உணவருத்தியதுடன் , குடித்த செலவு சுமார் 60,000 தாய் பாட் ($1,800 அமெரிக்க டொலர்) என்ற பெரிய தொகை பில் வந்துள்ளது. </p><p>

 அந்தப் பெண் பணம் செலுத்தாமல் வெளியேற முயல்வதை ஊழியர்கள் உணர்ந்த காரணத்தினால் பொலிஸார் ஈடுபடுத்துவதற்குப் பதிலாக, பெண்ணிற்கு மொட்டையடித்துள்ளனர்.</p><p></p><p> </p><p>
 
செலுத்தப்படாத கணக்கின் ஒரு பகுதியைத் தீர்ப்பதற்காக, முறைசாரா முடி வாங்கும் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளுமாறு பார் ஊழியர்கள் பெண்ணை வற்புறுத்தி இருக்கின்றனர்.</p><p> 

 இதனையடுத்து கட்டணத்திற்காக தன்னுடைய முடியை மழிக்க அந்த பெண் ஒப்புக்கொண்டதாகவும் அதன்பிறகே மொட்டை அடித்தாகவும் பார் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>

எலக்ட்ரிக் ‘ரேசர்’ மூலம் மொட்டையடிக்கப்பட்டதாகவும், அப்போது வீடியோ எடுத்த நபர், ‘நாங்கள் உன்னை ஏமாற்றவில்லை, தலைமுடிக்கு உரிய சந்தை விலையை பில் தொகையில் ஈடுகட்ட கழிக்கிறோம்’ என்று பேசியுள்ளார். </p><p>

பெண்ணிற்கு மொட்டை அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதையடுத்து, தாய்லாந்து சமூக மேம்பாடு மற்றும் மனித பாதுகாப்பு அமைச்சகம் இதுகுறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.&nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[9 வயது சிறுமியை கடத்திய சொந்த மாமா: ரூ.60 லட்சம் கேட்டு மிரட்டல்: பொலிஸார் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/9-years-old-kidnapped-in-assam-2-arrested-1788359326"></link>
            <id>https://news.lankasri.com/article/9-years-old-kidnapped-in-assam-2-arrested-1788359326</id>
            <summary type="text">அசாம் மாநிலத்தில் குடும்ப உறுப்பினர்களால் 9 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடத்தப்பட்ட 9 வயது சிறுமி
அசாம் மாநிலத்தின...</summary>
            <content type="html"><![CDATA[<p>அசாம் மாநிலத்தில் குடும்ப உறுப்பினர்களால் 9 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> கடத்தப்பட்ட 9 வயது சிறுமி</h2><p>
அசாம் மாநிலத்தின் ஜோர்காட் மாவட்டத்தில் 9 வயது சிறுமி உறவினர்களால் கடத்தப்பட்ட நிலையில், சிறுமியை காவல்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.</p><p> மாரியானி பகுதியில் கடத்தப்பட்ட 9 வயது சிறுமி காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையால் தேர்கான் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளார்.</p><h2> என்ன நடந்தது?</h2><p>
பொலிஸார் வெளியிட்ட தகவலின் படி, சிறுமியின் தாய் மாமா சாகர் கோஷ் மற்றும் அவரது மனைவி மனிஷா கோஷ் தம்பதி மாரியானி உள்ள லோக்நாத் பவனில் அறையை வாடகை எடுத்து மூன்று நாட்கள் தங்கியுள்ளனர்.</p><p> அங்கிருந்து உறவினர் வீட்டிற்கு சென்ற அந்த தம்பதி, பொய்யான காரணங்களை கூறி சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்றுள்ளனர்.</p><p> சிறுமி பல மணி நேரங்கள் ஆகியும் வீடு திரும்பாததை அடுத்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மாலை 5 மணியளவில் குடும்பத்தை தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள் ரூ.60 லட்சம் பிணைத் தொகையாக கேட்டு மிரட்டியுள்ளனர்.</p><p> இதனை காவல் துறையினருக்கு தெரிவித்தால் சிறுமியை கொன்று விடுவதாகவும், பணத்தை இரவு 8 மணிக்குள் கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/394f5caf-7269-4a46-b51e-95c5e47663e9/26-6a98329fb7636.webp' /></p><p></p><h2> காவல்துறையினர் அதிரடி</h2><p>
கடத்தல்காரரின் மிரட்டல்களுக்கு பயப்படாமல் தந்தை உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.</p><p> உடனே விரைந்து செயல்பட்ட காவல் துறையினர், தேர்கான் பகுதியில் உள்ள இஸ்லாம்கர் பகுதியில் இருந்து இரவு 2 மணியளவில் சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p> மேலும் சிறுமியின் மாமா சாகர் கோஷ் கொய்லகடாவிலும், அவரது கூட்டாளி வாசிம் ரஹ்மான் இஸ்லாம்கரிலும் வைத்து&nbsp; பொலிஸார் கைது செய்தனர்.</p><p> அத்துடன் தலைமறைவாக உள்ள குற்றவாளியை கைது செய்ய பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-02T14:29:14+00:00</updated>
        </entry>
    </feed>
