<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-26T10:42:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் இயங்கிய விபச்சார விடுதி ; பெண்ணுடன் பிடிபட்ட முகாமையாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/brothel-busted-in-tamil-area-residence-1785040603"></link>
            <id>https://jvpnews.com/article/brothel-busted-in-tamil-area-residence-1785040603</id>
            <summary type="text">அம்பாறை நகரில் விடுதி ஒன்றின் மறைவில் ரகசியமாக இயங்கிவந்த விபச்சார விடுதியொன்றைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அம்பாறை நகரில் விடுதி ஒன்றின் மறைவில் ரகசியமாக இயங்கிவந்த விபச்சார விடுதியொன்றைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைத்துள்ளனர். </p><p style="text-align: justify;">இதன்போது, அங்கு முகாமையாளராகப் பணியாற்றிய நபர் உட்பட பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5a2eb7e-724a-4799-ae82-c86ba2021711/26-6a658edcde6d2.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p style="text-align: justify;">
 

அம்பாறை தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, உளவாளி ஒருவரைப் பயன்படுத்திப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify;">
 

கைது செய்யப்பட்ட விடுதி முகாமையாளர் அக்கரைப்பற்றுப் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவருடன் கைது செய்யப்பட்ட பெண் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify;">

 

சந்தேகநபர்கள் இருவரையும் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான முதற்கட்ட சட்ட நடவடிக்கைகளை அம்பாறை தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T10:41:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இரவில் பிடிபட்ட மூவர் ; சோதனையில் அம்பலமான விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-held-in-jaffna-night-raid-1785062310"></link>
            <id>https://jvpnews.com/article/three-held-in-jaffna-night-raid-1785062310</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்.நீர்வேலிப் பகுதியில் போதைபொருள்கள் தொகையுடன் 3 சந்தேகநபர்களை யாழ்.மாவட்டக் குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸார் நேற்றுமுன்தினம் இரவு கைதுசெய்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழ்.நீர்வேலிப் பகுதியில் போதைபொருள்கள் தொகையுடன் 3 சந்தேகநபர்களை யாழ்.மாவட்டக் குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸார் நேற்றுமுன்தினம் இரவு கைதுசெய்துள்ளனர்.</p><p>



சந்தேகநபர்களிடமிருந்து 600 போதைமாத்திரைகள், 5.650 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a898c5a7-0df0-4825-a607-69e5b2f22970/26-6a65e3a7bb8d0.webp' /></p><p>
</p><p>


கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களுடன் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>


சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-26T10:38:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசில் ராஜபக்சவிற்கு கடுமையாகும் பிடியாணை உத்தரவு! அதிரடியாக களமிறங்கவுள்ள இன்டர்போல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/basil-rajapaksa-arrest-warrant-issue-ali-sabri-1785061065"></link>
            <id>https://tamilwin.com/article/basil-rajapaksa-arrest-warrant-issue-ali-sabri-1785061065</id>
            <summary type="text">அமெரிக்காவில் உள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை அமெரிக்க நீதிமன்ற உத்தரவின்படி நாட்டிற்கு திரும்பிக்கொண்டுவர முடியும் என்று முன்னாள் நீதி அமைச்சர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் உள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை அமெரிக்க நீதிமன்ற உத்தரவின்படி நாட்டிற்கு திரும்பிக்கொண்டுவர முடியும் என்று முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
</p><p>
மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை ஏக்கர் காணி கொள்வனவு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச இரண்டாவது முறையாக நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதையடுத்து அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>சர்வதேச அளவில் பேச்சுவார்த்தை</h2><p>

தற்போது பசில் ராஜபக்ச அமெரிக்காவில் உள்ள நிலையில், அவரை நாட்டிற்கு திரும்ப கொண்டுவருவதற்காக அரசாங்கம் சர்வதேச அளவில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64ce3a1a-f61a-4927-81f4-585fb816b7f0/26-6a65e36555afd.webp' />&nbsp;</p><p>

மேலும், பசில் ராஜபக்சவை இங்கு கொண்டுவருவது சாத்தியமே என்றும், ஆனால் அது எளிதான காரியம் அல்ல என்றும் கூறியுள்ளார். </p><p>

இதேவேளை, அமெரிக்க நீதிமன்றத்திற்கு பரிந்துரைத்து, இன்டர்போலின் முழு ஆதரவுடன் பசில் ராஜபக்சவை இங்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், அவரை இங்கு கொண்டுவருவதற்காக இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T10:37:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் அரசியல் கைதிகளை விடுவியுங்கள்! அநுரவிடம் கரம் கூப்பி கோரிக்கை விடுத்த ரவிகரன் எம்பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mp-raviharan-urges-release-of-tamil-prisoners-1785057791"></link>
            <id>https://ibctamil.com/article/mp-raviharan-urges-release-of-tamil-prisoners-1785057791</id>
            <summary type="text">சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார
திசாநாயக்காவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டோம் இனி எவ்வாறு
கேட்பது எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார
திசாநாயக்காவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டோம் இனி எவ்வாறு
கேட்பது என தெரியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் சிறைக் கைதிள்
படுகொலை பொது நாள் நினைவேந்தல் நேற்று (25-07-2026) இடம்பெற்றது.
</p><p>
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>தமிழ் தேசியம்</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “கடந்த வருடம் மார்கழி மாதம் ஜனாதிபதி அநுரகுமார
திசாநாயக்க இலங்கையர் தினம் கொண்டாடுவதற்காக தமிழரசு கட்சியை சேர்ந்த நான்கு
பேரை கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி செயலகம் அழைத்திருந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97e5ee61-90bd-414f-8c2b-3b58b7c6952b/26-6a65e25a7f7aa.webp' /></p><p>குறித்த கலந்துரையாடல் வேறாக இருந்தாலும் ஜனாதிபதியை சந்தித்தபோது இரு கரம்
கூப்பி கேட்டோம் தமிழரசியல் கைதிகளை விடுவியுங்கள் அதிலும் இலங்கையர்
தினத்தில் விடுதலை செய்தால் சந்தோசமடைவோம் எனவும் கூறினோம் ஆனால் நடக்கவில்லை.
</p><p>
வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் தேசியம் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தமிழ் அரசியல்
கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பேசி இருக்கிறோம்.</p><p>
</p><p></p><h2>தமிழ் அரசியல் கைதி</h2><p>அது மட்டுமல்லாது ஜனாதிபதியை சந்திக்கும் சந்தர்ப்பங்களில் தவறாது தமிழ்
அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் என பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி
இருக்கிறோம் ஆனால் நிறைவேறாத ஆசையாக இருந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edede7bf-1645-48d9-9a9a-4ffb8e1e80f8/26-6a65e25b2d4f5.webp' /></p><p>
தற்போது சிறையில் 10 தமிழரசிகள் கைதிகள் இருக்கிறார்கள் அவர்களின் விபரம்
அடங்கிய கோவையை குரலற்றவர்களின் குரல் அமைப்பு என்னிடமும் தந்துள்ளார்கள்
என்னால் முயன்றவரை கிடைக்கும் சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியுடன் பேசி
இருக்கிறேன்.
</p><p>
அகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியிடம் இரு கரம்
கூப்பி விடுவியுங்கள் என கேட்டு விட்டேன் வேறு எவ்வாறு கேட்பது என எனக்கு
தெரியவில்லை” என தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T10:36:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடிமக்கள் மற்றும் இந்தியர்கள் 25,000 ரூபாய் வரை எடுத்துச் செல்ல அனுமதிக்கும் நேபாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-allows-citizens-indians-carry-1785062253"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-allows-citizens-indians-carry-1785062253</id>
            <summary type="text">இந்தியப் பணத்தை எல்லைக்கு அப்பால் கொண்டு செல்வது தொடர்பான விதிமுறைகளை அண்டை நாடான நேபாளம் தளர்த்தியுள்ளது.தொடர்ந்து தடை புதிய விதிமுறைகளின் அடிப்படையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியப் பணத்தை எல்லைக்கு அப்பால் கொண்டு செல்வது தொடர்பான விதிமுறைகளை அண்டை நாடான நேபாளம் தளர்த்தியுள்ளது.</p><h2>தொடர்ந்து தடை</h2><p> புதிய விதிமுறைகளின் அடிப்படையில், இந்திய மற்றும் நேபாள குடிமக்கள் நபர் ஒருவருக்கு மொத்தம் 25,000 ரூபாய் வரையிலான மதிப்பிற்கு, நவம்பர் 9, 2016-க்குப் பிறகு வெளியிடப்பட்ட 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0bf14ec-4550-4d13-9e9e-a5dfe652442c/26-6a65e480b261f.webp' /></p><p> </p><p>நேபாளத்திற்குள் கொண்டுவரப்படும் அல்லது அங்கிருந்து வெளியே கொண்டு செல்லப்படும் இந்திய நாணயத் தாள்களுக்கு, நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்தப் பிரிவு பொருந்தும் என்று நேபாள ராஷ்டிர வங்கி (NRB) தெரிவித்துள்ளது. </p><p>மட்டுமின்றி, நவம்பர் 9, 2016-க்கு முன்பு வெளியிடப்பட்ட பழைய இந்திய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் நேபாளத்தில் தொடர்ந்து தடை செய்யப்பட்டவையாகவே இருக்கும் என்றும் ராஷ்டிர வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. </p><p>நேபாளத்திற்குப் பயணம் செய்யும் இந்தியப் பயணிகளுக்கு இந்த விதிகள் எளிதாக இருக்கும் என்றும், இந்தியாவுடன் வணிகம் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நேபாளக் குடிமக்களுக்கு இது உதவியாக இருக்கும் என்றும் NRB செய்தித் தொடர்பாளர் குரு பிரசாத் பௌடல் கூறியுள்ளார்.</p><p></p><p> விதிகளின்படி, நேபாளக் குடிமக்கள் இந்திய நாணயத்தை இந்தியாவிலிருந்து மட்டுமே நேபாளத்திற்குக் கொண்டுவர முடியும்; நேபாளத்திலிருந்து அதை வேறொரு நாட்டிற்குக் கொண்டு செல்ல முடியாது. </p><p>நேபாளக் குடிமக்கள் இந்த நாணயத்தைக் கையாள்வது இந்தியாவுடனான பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. நேபாள ராஷ்டிர வங்கி பிப்ரவரி 11 அன்று நேபாள அரசிதழில் (Nepal Gazette) வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம் இந்த விதிமுறைகளை ஏற்கனவே தெரிவித்திருந்தது. </p><p>அதன் சமீபத்திய தகவல் தொடர்பு, அந்த விதிகளை மீண்டும் வலியுறுத்தியதுடன், அவை எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்த விளக்கத்தையும் அளித்துள்ளது.
</p><p>திறந்த எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய பொருளாதார மற்றும் சமூக உறவுகளின் பின்னணியில் இந்தத் தளர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>5,000 டொலர் வரை</h2><p> </p><p>இந்தியா, நேபாளத்தின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகவும், சுற்றுலாப் பயணிகளின் முக்கிய ஆதாரமாகவும் நீடிக்கிறது. அதே நேரத்தில், கணிசமான எண்ணிக்கையிலான நேபாளக் குடிமக்கள் வேலைவாய்ப்பு, கல்வி, வர்த்தகம் மற்றும் வணிகத்திற்காக இந்தியாவிற்குப் பயணம் செய்கின்றனர். </p><p>மேலும், நேபாளம் வெளிநாட்டு நாணயங்களுக்கான தனி விதிகளையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. நேபாளக் குடிமக்களும் வெளிநாட்டுப் பயணிகளும் 5,000 டொலர் வரையிலான தொகையையோ அல்லது அதற்கு இணையான மற்றொரு வெளிநாட்டு நாணயத்தையோ சுங்க அறிவிப்புப் படிவம் தாக்கல் செய்யாமல் நாட்டிற்குள் கொண்டு வரலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4a4d4fd-5ca6-44fe-b202-ce1a639a773f/26-6a65e48189458.webp' /></p><p> </p><p>அந்த வரம்பிற்கு மேலான எந்தவொரு தொகையும் வந்தவுடன் சுங்கத்துறையிடம் அறிவிக்கப்பட வேண்டும். நேபாளத்தில் இந்திய நாணயம் மீதான கட்டுப்பாடுகள், 2016 நவம்பரில் இந்தியா மேற்கொண்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையுடன் தொடர்புடையவை; அப்போது பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாததாக்கிய அரசு, புதிய வடிவிலான நாணயங்களை அறிமுகப்படுத்தியது. </p><p>அதனைத் தொடர்ந்து, பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட அந்த இந்திய ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டையும் புழக்கத்தையும் நேபாளம் கட்டுப்படுத்தியது.</p><p> சமீபத்திய விதிமுறைகள், செல்லாததாக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளுக்கும், 2016 நவம்பர் 9-க்குப் பிறகு வெளியிடப்பட்ட புதிய 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளுக்கும் இடையே வேறுபாட்டைக் காட்டுகின்றன; அதேவேளையில், நேபாள-இந்திய எல்லை வழியாக இவற்றை எடுத்துச் செல்வதற்கு நபர் ஒருவருக்கு வரம்பையும் நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T10:35:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேட்டோ பயிற்சி பணியில் உளவு பார்த்த இளைஞர்: கனேடிய நபரை கைது செய்த அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nato-arrested-intern-man-in-belgium-1785061937"></link>
            <id>https://news.lankasri.com/article/nato-arrested-intern-man-in-belgium-1785061937</id>
            <summary type="text">உளவு பார்த்த குற்றச்சாட்டில் கனடா நாட்டைச் சேர்ந்த நபர் பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். உளவு பார்த்த நபர் கைது
கனடா நாட்டைச் சேர்ந்த சீன வம்சா...</summary>
            <content type="html"><![CDATA[<p>உளவு பார்த்த குற்றச்சாட்டில் கனடா நாட்டைச் சேர்ந்த நபர் பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2> உளவு பார்த்த நபர் கைது</h2><p>
கனடா நாட்டைச் சேர்ந்த சீன வம்சாவளி இளைஞர் ஒருவர், பெல்ஜியத்தில் நேட்டோ அமைப்பின் இன்டர்ன்ஷிப்(Internship) பயிற்சி பணியின் போது உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> கைது செய்யப்பட்ட நபர் மான்ஸ் நகரில் உள்ள நேட்டோவின் உச்ச தலைமையகத்தின் Allied Powers Europe-ல் பயிற்சி பெற்று வந்தார்.</p><p> இந்நிலையில் உளவு பார்த்தது தொடர்பான சந்தேகங்கள் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து சம்பந்தப்பட்ட இளைஞர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக பெடரல் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11eb1ba9-f9fb-4301-b832-2e1093c01776/26-6a65e233617ab.webp' /></p><p></p><h2> சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள்</h2><p>கைது செய்யப்பட்ட நபர் மீது மூன்றாம் நாடுகளின் ஒன்றுக்கு உளவு பார்த்தல், குற்றவியல் அமைப்பில் உறுப்பினராக இருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p> SHAPE அமைப்பின் பாதுகாப்பு அதிகாரிகளே சந்தேக நபரின் மீதான குற்றச்சாட்டுகளை கண்டறிந்ததாகவும், பின்னர் பெல்ஜியத்தின் பொதுப் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இதையடுத்து வெள்ளிக்கிழமை சந்தேக நபரின் வீடு மற்றும் பணிபுரியும் இடங்களில் சோதனை நடைபெற்றது.</p><p> சோதனைக்கு பிறகு சந்தேக நபரை கைது செய்வதற்கான பிடிவாரண்டை நீதிபதிகள் வழங்கியுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-26T10:32:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஸ்வநாத் &amp; சன்ஸ் படத்தில் நடிக்க மமிதா பைஜூ வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/mamitha-baiju-salary-for-vishwanath-and-sons-movie-1785058850"></link>
            <id>https://cineulagam.com/article/mamitha-baiju-salary-for-vishwanath-and-sons-movie-1785058850</id>
            <summary type="text">மமிதா பைஜூதென்னிந்திய திரையுலகில் மிகவும் பிஸியான நடிகையாக வலம் வருபவர் மமிதா பைஜூ. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஜனநாயகன் திரைப்படம் வசூலை வாரிக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மமிதா பைஜூ</h2><p>தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிஸியான நடிகையாக வலம் வருபவர் மமிதா பைஜூ. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஜனநாயகன் திரைப்படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2b89867-19a0-4bb8-a8ac-d2058634b33e/26-6a65d625e05a7.webp' /></p><p>இதை தொடர்ந்து சூர்யாவுடன் இணைந்து இவர் நடித்துள்ள விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fe21df7-10ce-4a2a-90ce-0a3cdc1f9ef0/26-6a65d6269497d.webp' /></p><p></p><p>ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதுவரை இப்படத்திலிருந்து வெளிவந்த பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.</p><h2>சம்பளம்&nbsp;</h2><p> 

இந்த நிலையில், விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நடிகை மமிதா பைஜூ வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிப்பதற்காக அவர் ரூ. 2 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04b29d60-968d-4971-ada3-94bf6b0b719c/26-6a65d62748bd9.webp' /></p><p>பிரேமலு திரைப்படத்தில் நடித்ததற்காக ரூ. 8 லட்சம் சம்பளம் வாங்கிய <a href="https://www.youtube.com/watch?v=BZ6nD0I5Avo" target="_blank">மமிதா பைஜூ</a>, தற்போது விஸ்வநாத் &amp; சன்ஸ் படத்திற்காக ரூ. 2 கோடி சம்பளம் பெற்றுள்ளார். இது அவருடைய திரையுலக வளர்ச்சியை காட்டுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T10:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடைக்குள் புகுந்த சொகுசு பேருந்து ; அதிகாலையில் மட்டக்களப்பில் நடந்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/luxury-bus-crashes-into-shop-in-batticaloa-1785061168"></link>
            <id>https://jvpnews.com/article/luxury-bus-crashes-into-shop-in-batticaloa-1785061168</id>
            <summary type="text">கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த சூப்பர் லைன் பயணிகள் பஸ் ஒன்று மட்டக்களப்பு–கொழும்பு பிரதான வீதியில் தன்னாமுனை பகுதியில் இன்று (26) அதிகாலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த சூப்பர் லைன் பயணிகள் பஸ் ஒன்று மட்டக்களப்பு–கொழும்பு பிரதான வீதியில் தன்னாமுனை பகுதியில் இன்று (26) அதிகாலை பாரிய விபத்தில் சிக்கியுள்ளது.</p><p>



அதிகாலை சுமார் 04.45 மணியளவில் பஸ், திடீரென பாதையை விட்டு விலகி வீதியோரத்தில் அமைந்திருந்த கடைகளுடன் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdfdecbc-ee11-432c-88bb-80fcf75bfa7d/26-6a65df31afaee.webp' /></p><h2>பாரிய சேதம்</h2><p>



இந்த விபத்தில் பஸ் வண்டிக்கும் கடைகளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
</p><p>


சாரதி தூக்கக் கலக்கத்தில் இருந்தமையே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>


எனினும், அதிர்ஷ்டவசமாக விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.</p><p></p><p> </p><p>சாரதி மற்றும் பஸ்ஸில் பயணித்த சிலர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>


விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T10:19:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது அரசாங்கம் : நாமல் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/government-had-lost-the-people-s-trust-namal-1785060186"></link>
            <id>https://ibctamil.com/article/government-had-lost-the-people-s-trust-namal-1785060186</id>
            <summary type="text">&amp;nbsp;உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பான எந்தவொரு முன்மொழிவும் பொது வாக்கெடுப்பின் மூலம் மக்களால் தீர்மானிக்கப்பட வேண்டும் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பான எந்தவொரு முன்மொழிவும் பொது வாக்கெடுப்பின் மூலம் மக்களால் தீர்மானிக்கப்பட வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
</p><p>
ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில், தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாலும், நியாயமற்ற வரிச்சுமையை விதித்ததாலும் அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.</p><h2>வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு</h2><p>உரத் தட்டுப்பாடு, அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் விலை, உயர் வரிகள் மற்றும் அதிகரித்து வரும் பயன்பாட்டுக் கட்டணங்கள் ஆகியவற்றால் விவசாயிகள், கடற்றொழிலாளர்கள், மாணவர்கள், வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் சிரமப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f883de2e-7d5d-4bd5-a183-11854173cb34/26-6a65deb03604a.webp' /></p><p>அதிகாரிகளிடமிருந்து பலமுறை உறுதிமொழிகள் அளிக்கப்பட்ட போதிலும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்வதாகக் கூறி, குற்றங்களைக் கையாளும் அரசாங்கத்தின் விதத்தையும் ராஜபக்ச விமர்சித்தார். தடயவியல் அறிக்கைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதங்களால் சிறைச்சாலைகள் நெரிசலாகி வருவதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டினார்.</p><p></p><h2>&nbsp;உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது நீடிப்பு</h2><p>&nbsp;உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதற்கான முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்தம் குறித்துக் குறிப்பிடுகையில், சட்ட மற்றும் நீதித்துறை வட்டாரங்களின் எதிர்ப்பு இருந்தபோதிலும், அரசாங்கம் இப்பிரச்சினைக்கு முன்னுரிமை அளித்து வருவதாக நாமல் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/861e9e2e-73f2-45d3-bc08-4bc405b776a5/26-6a65deb0de658.webp' /></p><p>உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பதை அரசாங்கம் ஒரு தேசிய முன்னுரிமையாகக் கருதினால், அது பொது வாக்கெடுப்பு மூலம் மக்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
நாட்டின் இளைய தலைமுறையினரின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு நவீன அரசியல் இயக்கத்தை உருவாக்குவதே கட்சியின் நோக்கம் என்று கூறிய ராஜபக்ச, அடிமட்ட அளவில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவை (SLPP) வலுப்படுத்துமாறு ஆதரவாளர்களை வலியுறுத்தினார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T10:17:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸ் அரோரா சின்கிளேரின் ரீசெண்ட் க்யூட் போட்டோஸ்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/biggbosstamil-aurora-sinclair-photos-1785057938"></link>
            <id>https://viduppu.com/article/biggbosstamil-aurora-sinclair-photos-1785057938</id>
            <summary type="text">புதுச்சேரியை பூர்வீகமாக கொண்டு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து பிரபலமானவர் தான் அரோரா சின்கிளேர்.

பலூன் அக்கா என்று பலராலும் புகழப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதுச்சேரியை பூர்வீகமாக கொண்டு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து பிரபலமானவர் தான் அரோரா சின்கிளேர்.

பலூன் அக்கா என்று பலராலும் புகழப்பட்டு வந்த அரோரா, பிக்பாஸ் சீசன் 9ல் போட்டியாளராக பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77a4677b-d13c-44c2-a7fc-a1144697df21/26-6a65d29862a29.webp' /></p><p>

தற்போது ஒருசில பாடல் ஆல்பங்களில் நடித்துள்ள அரோரா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.
</p><p>
தற்போது ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறி, க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அரோராவை பார்த்து பலரும் ஹார்ட்டின் விட்டு வருகிறார்கள்.</p>]]></content>
            <updated>2026-07-26T10:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கான பணிகள் ஆரம்பம் ; நீதி அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/move-begins-to-extend-judges-retirement-age-1785060439"></link>
            <id>https://jvpnews.com/article/move-begins-to-extend-judges-retirement-age-1785060439</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக அமைச்சரவைப் பத்திரமொன்றைத் தயாரிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக அமைச்சரவைப் பத்திரமொன்றைத் தயாரிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அண்மைக்காலமாக பேசப்பட்டு வந்த நிலையில், இது குறித்து தெளிவுபடுத்தியபோதே நீதி அமைச்சர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/370558ee-64af-4d43-ab12-723aa6acbfc1/26-6a65dc58454c3.webp' /></p><p style="text-align: justify; ">

அதற்கமைய, இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தைத் தயாரிக்குமாறு தனக்கு அறிவுறுத்தல் கிடைத்துள்ளதாகவும், அதற்குத் தேவையான தொடர் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify;">
இதேவேளை, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான யோசனையொன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படும் பட்சத்தில், அது குறித்து விரிவாகக் கலந்துரையாடுவதற்கு அரசாங்கம் ஆயத்தமாக இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-26T10:07:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெல்லன்வில துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான பின்னணி! சிக்கிய இரகசிய குரல் பதிவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-shooting-in-the-bellanwila-1785032477"></link>
            <id>https://tamilwin.com/article/gun-shooting-in-the-bellanwila-1785032477</id>
            <summary type="text">புதிய இணைப்புகொழும்பு - பெல்லன்வில பகுதியில் நேற்று (25) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் இராணுவத்திலிருந்து தப்பிச்சென்ற ஒருவர் என அடையாள...</summary>
            <content type="html"><![CDATA[<h2><span style="color: inherit; font-size: 1.75rem;">புதிய இணைப்பு</span></h2><p>கொழும்பு - பெல்லன்வில பகுதியில் நேற்று (25) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் இராணுவத்திலிருந்து தப்பிச்சென்ற ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களும் நவகமுவ பொது மயானத்திற்கு அருகில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>கொலை தொடர்பான குரல் பதிவுகளும் கண்டுபிடிப்பு</h2><p>

இதனையடுத்து அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர்களிடமிருந்து 'ஐஸ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், கைபேசிகளை பரிசோதித்தபோது பெல்லன்வில கொலை தொடர்பான குரல் பதிவுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c70d15d4-6795-412e-9f1f-d991f47d49c2/26-6a65dc30730c3.webp' />&nbsp;</p><p>
</p><p>
இந்த துப்பாக்கிச்சூட்டில் உணவகத்தின் உரிமையாளரான மல்லவ ஆரச்சிகே நெல்சன் சுதத் அமரசிங்க எனப்படும் 55 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.</p><p>

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், உயிரிழந்த உணவக உரிமையாளர் 'கொஸ் மல்லி' எனப்படும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரின் உறவினர் என தெரியவந்துள்ளது.</p><p>

அதற்கமைய, கொஸ் மல்லியின் எதிரியான'சண்டோ' அல்லது 'அசங்க' என்பவர்களே இத்துப்பாக்கிச்சூட்டை வழிநடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
</p><p>
துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் சந்தேகநபர்கள் தப்பிச்சென்ற நிலையில், ஏனைய பகுதி பொலிஸ் சோதனை சாவடிகளில் கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கமைய, சந்தேகநபர்களை பின்தொடர்ந்த பொலிஸார் நவகமுவ, நிஸ்சரண சித்பிம பொது மயானத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, முகமூடிகள் மற்றும் கையுறைகளைக் கழற்றிவிட்டு அவ்விடத்திலிருந்து புறப்பட தயாரான போது கைது செய்துள்ளனர்.
</p><p>
இதனையடுத்து அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர்களிடமிருந்து 'ஐஸ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், கைபேசிகளை பரிசோதித்தபோது பெல்லன்வில கொலை தொடர்பான குரல் பதிவுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.&nbsp; &nbsp;</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></h2><p><span style="font-size: 14px;">கொழும்பு - பெல்லன்வில பகுதியில் நேற்று (25) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.</span></p><p>மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பெல்லன்வில நடைபாதை நுழைவாயிலுக்கு அருகில் உள்ள உணவகமொன்றின் முன்னால் நின்றிருந்த உணவக உரிமையாளரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">திட்டமிட்ட கும்பல் மோதல்&nbsp;</span></p><p>துப்பாக்கிச் சூட்டின் பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் அப்பகுதியிலிருந்து தப்பிச்சென்றிருந்த நிலையில், துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 55 வயதுடைய நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f427b786-8cb4-46bd-9732-357602b8eaca/26-6a6573a616a49.webp' />&nbsp;&nbsp;</p><p>இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இந்த துப்பாக்கிச்சூடு திட்டமிட்ட கும்பல் மோதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு உயிரிழந்தவர் 'கொஸ் மல்லி' எனப்படும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரின் உறவினர் எனவும் அவரது எதிர்த்தரப்பினரால் இத்துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><h2>இரண்டு சந்தேகநபர்களும் கைது&nbsp;</h2><p>கடந்த சில காலமாக கொஸ் மல்லி எனப்படும் பிரிவினருடன் மோதலில் ஈடுபட்டுள்ள படோவிட்ட அசங்க மற்றும் சண்டோ பிரிவினரால் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a576dabb-424f-46d0-a58c-304d03f60d6e/26-6a6573a6bae40.webp' /></p><p>இதற்கிடையில், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர், நவகமுவவில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் இராணுவத்திலிருந்து தப்பிச்சென்ற ஒருவர் எனவும், மின்னேரியா இராணுவ முகாமிலிருந்து துப்பாக்கிகளை கடத்திய சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர் எனவும் தெரியவந்துள்ளது.</p><p>சம்பவத்தையடுத்து பொரலஸ்கமுவ பொலிஸார், கல்கிஸ்ஸ கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட பல விசாரணைப் பிரிவுகள் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில்,இரண்டு சந்தேகநபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T10:03:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட மூவர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-arrested-in-jaffna-with-drugs-1785058399"></link>
            <id>https://ibctamil.com/article/three-arrested-in-jaffna-with-drugs-1785058399</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - நீர்வேலிப் பகுதியில் போதைபொருட்களுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்.மாவட்டக் குற்றத்தடுப்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - நீர்வேலிப் பகுதியில் போதைபொருட்களுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>
யாழ்.மாவட்டக் குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் நேற்றுமுன்தினம் (24) இரவு குறித்த சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளனர்.</p><p>
சந்தேகநபர்களிடமிருந்து 600 போதைமாத்திரைகள், 5.650 மில்லிகிராம் ஹெரோயின்
போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><h2>நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை&nbsp;</h2><p>
</p><p>கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட
நடவடிக்கைகளுக்காக கோப்பாய் காவல் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e959f7ab-53f4-4033-b639-b5b7018be15d/26-6a65d98493148.webp' /></p><p>
</p><p>இந்தநிலையில், சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p>இதேவேளை யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மெலிஞ்சிமுனை மயானத்துக்கு அருகில் சுமார் 600 கிலோகிராம் எடையுடைய கேரளக் கஞ்சா அண்மையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் எரித்தழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T10:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை - அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டேன்..! ரவிகரன் எம்பி ஆதங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/release-tamil-political-prisoners-in-prison-1785057846"></link>
            <id>https://tamilwin.com/article/release-tamil-political-prisoners-in-prison-1785057846</id>
            <summary type="text">சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார
திசாநாயக்காவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டோம் இனி எவ்வாறு
கேட்பது எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார
திசாநாயக்காவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டோம் இனி எவ்வாறு
கேட்பது என தெரியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.</p><p>
நேற்று சனிக்கிழமை(25) தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் இடம்பெற்ற சிறைக் கைதிகள்
படுகொலை பொது நாள் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>&nbsp;தமிழ் அரசியல் கைதிகள்&nbsp;</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடம் மார்கழி மாதம் ஜனாதிபதி அநுரகுமார
திசாநாயக்க இலங்கையர் தினம் கொண்டாடுவதற்காக தமிழரசு கட்சியை சேர்ந்த நான்கு
பேரை கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி செயலகம் அழைத்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04313062-270a-4814-90b5-2f4ea76818d3/26-6a65d42800d33.webp' /></p><p>
</p><p>
குறித்த கலந்துரையாடல் வேறாக இருந்தாலும் ஜனாதிபதியை சந்தித்தபோது இரு கரம்
கூப்பி கேட்டோம் தமிழ் அரசியல் கைதிகளை விடுவியுங்கள் அதிலும் இலங்கையர்
தினத்தில் விடுதலை செய்தால் சந்தோசமடைவோம் எனவும் கூறினோம் ஆனால் நடக்கவில்லை.
</p><p>
வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் தேசியம் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தமிழ் அரசியல்
கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பேசி இருக்கிறோம்.</p><p></p><p>
</p><h2>ஜனாதிபதியிடம் கோரிக்கை</h2><p>
அது மட்டுமல்லாது ஜனாதிபதியை சந்திக்கும் சந்தர்ப்பங்களில் தவறாது தமிழ்
அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் என பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி
இருக்கிறோம் ஆனால் நிறைவேறாத ஆசையாக இருந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e4e7bd8-6afe-464a-8e67-875f783804d3/26-6a65d428c4b90.webp' /></p><p>

தற்போது சிறையில் 10தமிழ் அரசியல் கைதிகள் இருக்கிறார்கள் அவர்களின் விபரம்
அடங்கிய கோவையை குரலற்றவர்களின் குரல் அமைப்பு என்னிடமும் தந்துள்ளார்கள்
என்னால் முயன்றவரை கிடைக்கும் சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியுடன் பேசி
இருக்கிறேன்.
</p><p>
அகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியிடம் இரு கரம்
கூப்பி விடுவியுங்கள் என கேட்டு விட்டேன் வேறு எவ்வாறு கேட்பது என எனக்கு
தெரியவில்லை என அவர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T09:56:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் கொடூரச் செயலை செய்து விட்டு சிறிய படகில் பிரித்தானியாவுக்குத் தப்பிய குழு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hunt-for-migrant-killers-1785059819"></link>
            <id>https://news.lankasri.com/article/hunt-for-migrant-killers-1785059819</id>
            <summary type="text">பிரான்ஸ் கடற்கரை ஒன்றில் ஒருவரைக் கத்தியால் குத்திக் கொன்ற பிறகு, புலம்பெயர்ந்தோர் குழு ஒன்று பிரித்தானியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்று அஞ்சப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் கடற்கரை ஒன்றில் ஒருவரைக் கத்தியால் குத்திக் கொன்ற பிறகு, புலம்பெயர்ந்தோர் குழு ஒன்று பிரித்தானியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.</p><h2>டெர்மினஸ் கடற்கரையில்</h2><p>
</p><p>கொடிய தாக்குதல் நடந்த சில மணிநேரங்களிலேயே, சந்தேக நபர்கள் ஒரு சிறிய படகில் பிரித்தானியாவுக்கு வந்திருக்கக்கூடும் என்பது அதிர்ச்சியளிப்பதாக அரசியல்வாதிகள் நேற்று இரவு தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/677d4a27-489a-4071-9fb2-ec3ae1a4ed00/26-6a65db5114727.webp' /></p><p> </p><p>பிரான்சின் பிரபலமான கடற்கரை நகரமான பெர்க்-சுர்-மெரில் உள்ள டெர்மினஸ் கடற்கரையில் வியாழக்கிழமையன்று ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, காவல்துறை விசாரணையைத் தொடங்கியது. </p><p>பாதிக்கப்பட்ட அந்த நபர் 20 வயது கடந்தவராக இருக்கலாம் எனக் கருதப்படும் நிலையில், மணல் மேடுகள் நிறைந்த பகுதியில் மற்ற புலம்பெயர்ந்தோரால் தாக்கப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். </p><p> இந்த நிலையில், 


எந்தவித ஆவணங்களும் இல்லாத அந்த ஆணின் அடையாளத்தையும், அவர் பூர்வீகமாக எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதையும் கண்டறிய பிரெஞ்சு அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.</p><p></p><p> </p><p>சம்பவம் நடந்த அதே கடற்கரையிலிருந்து சாதனை அளவாக 165 புலம்பெயர்ந்தோருடன் ஒரு படகு புறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. </p><p>இதனிடையே, அந்தப் படகில் இருந்தவர்களுக்கான நடைமுறைகளை மேற்கொள்வதற்காக, பின்னர் டோவருக்கு (Dover) அழைத்துச் செல்லப்பட்டுள்ளது&nbsp;என்ற தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>பொலிசாருக்கு எச்சரிக்கை</h2><p> பிரெஞ்சு விசாரணை வட்டாரங்கள் தெரிவிக்கையில், அங்கு கடுமையான வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்டதாகவும், குறைந்தது ஒருவர் இளைஞர் ஒருவரைக் கத்தியால் தாக்கியிருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். </p><p>சம்பவம் நடந்த பல மணிநேரங்களுக்குப் பிறகு, பிற்பகலில், அந்த இளைஞரின் சடலத்திற்கு அருகில் ஒரு கத்தியும் மீட்கப்பட்டுள்ளது. இதற்குள், இதற்குப் பொறுப்பானவர்கள் படகில் ஏறி பிரித்தானியாவுக்குத் தப்பிச் சென்றதாக பிரான்ஸ் அதிகாரிகள் தரப்பில் நம்பப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/207a10c5-0048-4ffd-8cfc-0e431115b620/26-6a65db5046168.webp' /></p><p> </p><p>பிரித்தானியாவில் உள்ள பொலிசாருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய குற்றவியல் முகமை பிரெஞ்சு காவல்துறையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் அறியப்படுகிறது. </p><p>இந்த ஆண்டில் இதுவரை, பிரித்தானியாவில் தஞ்சம் கோருவதற்காகச் சிறிய படகுகள் மூலம் 13,000-க்கும் சற்று அதிகமானோர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T09:55:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்சம் வாங்கும் சமாதான நீதவான்கள் - பொதுமக்கள் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/public-alleges-jps-have-become-money-hungry-1785051358"></link>
            <id>https://tamilwin.com/article/public-alleges-jps-have-become-money-hungry-1785051358</id>
            <summary type="text">நுவரெலியா பிரதான நகரில் உள்ள சமாதான நீதவான்கள் சிலர் சத்தியக் கடதாசி மற்றும்
ஆவணங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக வரும் பொதுமக்களிடம் இலஞ்சம் வாங்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா பிரதான நகரில் உள்ள சமாதான நீதவான்கள் சிலர் சத்தியக் கடதாசி மற்றும்
ஆவணங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக வரும் பொதுமக்களிடம் இலஞ்சம் வாங்குவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
</p><p>

மக்களுக்கு சேவையாற்றும் நோக்குடன் சமூகத்திலுள்ள கௌரவமான பிரஜைகளுக்கு
வழங்கப்பட வேண்டிய சமாதான நீதவான் பதவிகள் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டு
வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><h2>நுவரெலியா சமாதான நீதவான்கள்</h2><p>
</p><p>
அவர்கள் மேலும் குறிப்பிடுகையில், </p><p>

பொதுமக்களால் சமர்ப்பிக்கப்படும் பிரமாணப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள்
உட்பட பிற சான்றிதழ்களை சான்றளித்தல் மற்றும் அங்கீகரித்தல் ஊடாக
பொது மக்களுக்கு இலவசமான சேவைகளையும் பணிகளையும் வழங்கும் நோக்குடன் நீதி
அமைச்சரால் சமாதான நீதவான்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
</p><p>
தேசிய நலனுக்காகவும், சமூக மேம்பாட்டிற்கும் பங்காற்ற வேண்டியவர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட வேண்டிய இந்த உயர் பதவி இன்று
பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் கட்சி அமைப்பாளர்கள் கையில் இருக்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d386fde3-fb9c-4219-bbc9-cd738c39c43e/26-6a65d11e2f50f.webp' /></p><p>ஆவணங்கள் அத்தாட்சிப்படுத்துவது மாத்திரமின்றி கிராமிய மக்கள் மத்தியில்
சமாதானம் மற்றும் சகவாழ்வு உட்பட அனைத்து பொது நலப்பணிகளிலும் சேவை மனப்பான்மையுடன் பங்கேற்க வேண்டும் என அனைத்து சமாதான நீதவான்களிடமும் அரசு
எதிர்பார்க்கின்றது.&nbsp;</p><p>இந்த விடயம் நுவரெலியாவில் தலைகீழாக மாறும் நிலை உருவாகியுள்ளது. இந்தப் பதவியானது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் அமைப்பிற்கு முரணின்றியும்,
முற்றிலும் இலவசமாகவும் வழங்கப்பட வேண்டும்.</p><p></p><h2>பண மோசடி</h2><p>

இது தொடர்பில், நீதி அமைச்சின் ஊடாக அனைத்து சமாதான நீதவான்களுக்கும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>அத்துடன் இவர்கள் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இடம்பெறும் சத்தியப்
பிரமாணத்தின் போதும் உறுதி அளிக்கின்றனர். எனினும், மேற்படி அனைத்து சட்டதிட்டங்கள் மற்றும் உறுதிமொழிகள் அனைத்தையும்
மீறும் வகையில் சமாதான நீதவான்கள் செயற்பட்டு வருகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab9b0ada-3ce9-48e5-8447-ef8db9ffe0ef/26-6a65d040e33b6.webp' /></p><p>குறிப்பாக, தோட்டபுறங்களில் அல்லது தூர இடங்களிலிருந்து வரும் மக்களின்
பிரச்சினைகளையும் மன நிலைகளையும் நன்கு அறிந்து வைத்துள்ள சமாதான நீதவான்கள்
விண்ணப்பப் படிவங்களை நிரப்பிக் கொடுத்தும், ஆவணங்களை அத்தாட்சிப்படுத்தியும்,
கையொப்பங்களை இட்டும் ஆயிரக்கணக்கான ரூபாக்களை மக்களிடம் சுரண்டும் மோசடியில்
ஈடுபட்டு வருகின்றனர்.
</p><p>
எனவே இவ்வாறு நுவரெலியா பிரதான நகரில்
செயற்படும் சமாதான நீதவான்களுக்கு நீதி அமைச்சு சட்ட நடவடிக்கைகள் எடுக்க
வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T09:52:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[The Hundred போட்டியில் இந்தியாவின் ஜெமிமா ஆட்டநாயகி: த்ரில் வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jemimah-rodrigues-player-of-match-in-the-hundred-1785059144"></link>
            <id>https://news.lankasri.com/article/jemimah-rodrigues-player-of-match-in-the-hundred-1785059144</id>
            <summary type="text">இங்கிலாந்தின் The Hundred மகளிர் போட்டியில், சௌதர்ன் பிரேவ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியை வீழ்த்தியது.&amp;nbsp;சன்ரைசர்ஸ் ஆல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்தின் The Hundred மகளிர் போட்டியில், சௌதர்ன் பிரேவ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியை வீழ்த்தியது.&nbsp;</p><h2>சன்ரைசர்ஸ் ஆல்அவுட்&nbsp;</h2><p>
லீட்ஸில் நடந்த The Hundred போட்டியில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் மற்றும் சௌதர்ன் பிரேவ் அணிகள் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0502b58e-9a8e-4780-b596-eea17be5706c/26-6a65d8df17944.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் அணி 116 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. பிரையோனி ஸ்மித் 48 ஓட்டங்களும், தீப்தி ஷர்மா 23 ஓட்டங்களும் விளாசினர்.&nbsp;</p><h2>ஜெமிமா ரோட்ரிகஸ்</h2><p>
பின்னர் ஆடிய சௌதர்ன் அணி 96 பந்துகளில் இலக்கினை எட்டியது. ஜெமிமா ரோட்ரிகஸ் (Jemimah Rodrigues) 4 பவுண்டரிகளுடன் 42 ஓட்டங்கள் எடுத்தார். </p><p>

ரன்அவுட் மற்றும் 42 ஓட்டங்கள் விளாசி வெற்றிக்கு காரணமாக அமைந்த ஜெமிமா ஆட்டநாயகி விருது பெற்றார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c95b8f7-e96f-4fd8-a5c5-8a8cc1ea61f8/26-6a65d8dfc83a9.webp' />&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A great day out for Issy Wong! 🌟<a href="https://x.com/hashtag/TheHundred?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TheHundred</a> <a href="https://t.co/v6Ko8pYu11">pic.twitter.com/v6Ko8pYu11</a></p>&mdash; The Hundred (@thehundred) <a href="https://x.com/thehundred/status/2080995853368525178?ref_src=twsrc%5Etfw">July 25, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T09:50:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டின் மீது சிறிய ரக விமானம் மோதி விபத்து ; விமானி பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/pilot-dies-after-small-plane-crashes-into-house-1785058952"></link>
            <id>https://canadamirror.com/article/pilot-dies-after-small-plane-crashes-into-house-1785058952</id>
            <summary type="text">ஜெர்மனியின் ஓல்டன்பர்க் நகரில் இருந்து இன்று சிறிய ரக விமானம் புறப்பட்டது. விமானத்தில் 2 பேர் பயணம் செய்தனர்.

விமான விபத்து
விமானம் நடுவானில் கிரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜெர்மனியின் ஓல்டன்பர்க் நகரில் இருந்து இன்று சிறிய ரக விமானம் புறப்பட்டது. விமானத்தில் 2 பேர் பயணம் செய்தனர்.
</p><p>
விமான விபத்து
விமானம் நடுவானில் கிராண்டர்கிசெ நகரின் லோயர் சக்சொனி பகுதியில் பறந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென அப்பகுதியில் உள்ள வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4afd9430-2e1a-4425-be42-db8632d88caa/26-6a65d689b9f04.webp' /></p><p>
</p><p>
இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார். விமானத்தில் பயணித்த மற்றொருவரின் நிலை தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை&nbsp;</p><p> அவரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த விமான விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-26T09:42:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே'.. சென்சேஷனல் வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/spider-man-brand-new-day-movie-pre-booking-1785054934"></link>
            <id>https://cineulagam.com/article/spider-man-brand-new-day-movie-pre-booking-1785054934</id>
            <summary type="text">&#039;பிராண்ட் நியூ டே&#039;உலக புகழ்பெற்ற ஸ்பைடர் மேன் திரைப்படத்தின் அடுத்த பாகமான &#039;பிராண்ட் நியூ டே&#039; என்கிற தலைப்பில் வரும் 30-ஆம் தேதி வெளியாகிறது. மார்வெல்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>'பிராண்ட் நியூ டே'</h2><p>உலக புகழ்பெற்ற ஸ்பைடர் மேன் திரைப்படத்தின் அடுத்த பாகமான 'பிராண்ட் நியூ டே' என்கிற தலைப்பில் வரும் 30-ஆம் தேதி வெளியாகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/865a1e1a-7f8c-4ac3-8b4d-a8f48e843edd/26-6a65c6d945b27.webp' /></p><p>மார்வெல் யூனிவெர்ஸில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் டெஸ்டின் டானியல் கிரேட்டன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் மார்வெல் தயாரிப்பில் வெளியான சாங்சி திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a85c4e38-3a03-436d-a5d9-a6c3d3422298/26-6a65c6d9eb78b.webp' /></p><p></p><p>இப்படத்தில் டாம் ஹாலண்ட், சென்டயா, சாடி சிங்க், மார்க் ரஃபல் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதி டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.</p><h2>டிக்கெட்&nbsp;முன்பதிவு </h2><p> </p><p>இப்படி மாபெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள இப்படம், டிக்கெட் முன்பதிவிலேயே வசூல் வேட்டையை தொடங்கிவிட்டது.

இந்தியாவில் இதுவரை நடைபெற்றுள்ள முன்பதிவில் 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படம் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதுவே இப்படத்திற்கு இந்திய பாக்ஸ் ஆபிஸில் கிடைத்துள்ள சென்சேஷனல் முன்பதிவு வசூலாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3dee742-8a89-4811-b0c4-6b7c50f81fab/26-6a65c6da9e691.webp' /></p><p>

இதன் மூலம், முதல் நாளிலேயே இந்தியாவில் மட்டுமே மாபெரும் வசூல் சாதனையை 'பிராண்ட் நியூ டே' படைக்கும் என்றும், இதற்கு முந்தைய திரைப்படமான ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம் திரைப்படத்தின் வசூல் சாதனையும் முறியடிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T09:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[சனி வக்ர பெயர்ச்சி.., ஏழரையில் சிக்கப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-problem-due-to-sani-vakra-peyarchi-1785058466"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-problem-due-to-sani-vakra-peyarchi-1785058466</id>
            <summary type="text">நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.

இவர் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
</p><p>
இவர் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
</p><p>
இந்நிலையில், சனி பகவான் 2026ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் திகதி அன்று மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்குவார்.
</p><p>
அந்தவகையில், சனி வக்ர பெயர்ச்சி குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு ஏழரை சனி நடக்கும் என்று சொல்லப்படுகிறது.&nbsp;</p><p></p><h2>மேஷம்</h2><ul><li> 

தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும்.</li><li> 
மனநிலையும் மோசமாக பாதிக்கப்படும். </li><li>
முடிவை எடுக்க முடியாமல் குழப்பமடையக்கூடும். </li><li>
அவசரப்பட்டு எதையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். </li><li>
வேலைகளில் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். </li><li>
நிதி முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.</li><li> 
புதிய முதலீடுகளையும் தவிர்க்க வேண்டும்.</li><li> 
ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9ab6260-8292-461b-8042-6e1378409809/26-6a65d4a4da7a6.webp' /></p><p>
</p><h2>
கும்பம் </h2><ul><li>

நிதி நிலைமை சற்று ஏற்றஇறக்கத்துடன் இருக்கும். </li><li>
நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
</li><li>பண பரிவர்த்தனைகளை செய்யும்போது எச்சரிக்கை தேவை.
</li><li>கடன் கொடுப்பதை, வாங்குவதை தவிர்க்க வேண்டும். </li><li>
எதையும் சரியாகவும் ஒழுக்கமாகவும் செய்ய வேண்டும்.</li><li> 
ஆரோக்கிய விஷயத்தை புறக்கணிப்பதை தவிர்க்க வேண்டும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6939e0e-b29e-4569-8ceb-61d200bae24a/26-6a65d4a58ff61.webp' /></p><p>
</p><h2>
மீனம் </h2><ul><li>

பொறுப்புக்களும், மன அழுத்தமும் அதிகரிக்கும்.</li><li> 
வேலைகளை முடிக்க கடினமாக இருக்கலாம்.
</li><li>பழைய பிரச்சனைகள் மீண்டும் தலைத்தூக்கும். </li><li>
பணிகளை பாதியாக செய்வதைத் தவிர்க்க வேண்டும். </li><li>
எந்த வேலையையும் முழுமையாக செய்து முடிக்க வேண்டும்.</li><li> 
பேச்சையும், கோபத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். </li><li>
வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.&nbsp;&nbsp;</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06528e19-a991-40d4-92a0-5dc96e7f82b5/26-6a65d4a67910e.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T09:37:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரு பெண்களை மோதித்தள்ளிவிட்டு தப்பிச் சென்ற OIC அதிரடி கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/oic-arrested-hitting-2-women-with-car-and-fleeing-1785056055"></link>
            <id>https://ibctamil.com/article/oic-arrested-hitting-2-women-with-car-and-fleeing-1785056055</id>
            <summary type="text">இரண்டு வெவ்வேறு இடங்களில் இரு பெண்களை விபத்துக்குள்ளாக்கி, காரில் தப்பிச் செல்ல முயன்ற பிரதான காவல்துறை பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹோமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரண்டு வெவ்வேறு இடங்களில் இரு பெண்களை விபத்துக்குள்ளாக்கி, காரில் தப்பிச் செல்ல முயன்ற பிரதான காவல்துறை பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>ஹோமாகம சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியான (OIC) பிரதான காவல்துறை பரிசோதகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக மீகொட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 

ஹைலெவல் வீதி, மீகொட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலும் மற்றும் வட்டரக்க 20 ஆம் கட்டை பகுதியிலும் நேற்று (25) இரவு 11:30 மணிக்கும் 11:57 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த இரண்டு விபத்துகளும் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>&nbsp;</p><h2>நீதிமன்றில் முன்னிலை</h2><p>இந்தநிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மதுபோதைச் சோதனையில், சந்தேகநபர் மதுபோதையில் காரைச் செலுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06b34062-f36a-4289-a915-ba72c2bef94e/26-6a65d217e10b2.webp' /></p><p>
</p><p>
 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T09:29:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆந்திரா பாணியில் காரசாரமான பச்சை மிளகாய் சிக்கன்... இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/andhra-style-spicy-chilly-chicken-recipe-1785054944"></link>
            <id>https://manithan.com/article/andhra-style-spicy-chilly-chicken-recipe-1785054944</id>
            <summary type="text">பொதுவாகவே சிக்கன் எந்த விதமான முறையில் சமைத்தாலும், அதன் தனித்துவமான சுவை காரணமாக அசைவ உணவு பிரியர்களின் மனதில் எப்போதும் தனி இடத்தைப் பெற்றுள்ளது. வற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாகவே சிக்கன் எந்த விதமான முறையில் சமைத்தாலும், அதன் தனித்துவமான சுவை காரணமாக அசைவ உணவு பிரியர்களின் மனதில் எப்போதும் தனி இடத்தைப் பெற்றுள்ளது. </p><p>வறுவல், குழம்பு, கிரேவி என பல்வேறு வகைகளில் சமைக்கப்படும் சிக்கன், ஒவ்வொரு முறையிலும் ஒரு புதிய சுவை அனுபவத்தை தரக்கூடியது. அதனால் தான் பெரும்பாலானோரின் விருப்பமான உணவுப் பட்டியலில் சிக்கன் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bc9d077-5f8e-4468-90d3-d3dd7ec3bd74/26-6a65c9d76f0c3.webp' /></p><p>

குறிப்பாக சிக்கனை காரசாரமான மசாலாக்களுடன் சமைக்கும்போது அதன் சுவையும் மணமும் மேலும் அதிகரித்து, உணவை இன்னும் சுவையாக மாற்றுகிறது. காரம் மற்றும் மசாலா கலந்த உணவுகளுக்கு புகழ்பெற்ற இடம் என்றால் அது ஆந்திரா தான்.</p><p>அந்தவகையில்,&nbsp; ஆந்திரா ஸ்டைல் க்ரீன் சில்லி சிக்கனை வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் எப்படி செய்வதென் இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8059cd45-07a9-4e9f-976d-091e95f488f2/26-6a65c9d82282e.webp' /></p><p></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">தேவையானப் பொருட்கள்</span></h2><p>சிக்கன் - அரை கிலோ </p><p>பச்சை மிளகாய் - 20 (அரைத்தது) </p><p>நெய் - 2 தே.கரண்டி&nbsp;</p><p> எண்ணெய் - 1 தே.கரண்டி </p><p>இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2&nbsp;</p><p>மஞ்சள் தூள் - அரை தே.கரண்டி </p><p> தண்ணீர் - அரை கப்&nbsp;</p><p> சோயா சாஸ் - அரை தே.கரண்டி </p><p> வினிகர் - 1 தே.கரண்டி </p><p> சோள மாவு - 1 தே.கரண்டி</p><p> உப்பு - தேவையான அளவு</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1352eb4d-a4a7-4d50-831c-04bd2274dd10/26-6a65c9d8cace7.webp' /></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">செய்முறை</span></h2><p>முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானதும்,&nbsp; பச்சை மிளகாய் விழுது சேர்த்து சுமார் 3 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.&nbsp;</p><p>அதனையடுத்து நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் சிக்கனைச் சேர்த்து அடிக்கடி கிளறிவிட்டு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.&nbsp;</p><p>பின்னர் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு இரண்டு நிமிடங்கள் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e430ee8-bd4e-4e64-8f35-0350aad91f67/26-6a65c9d979e5f.webp' /></p><p></p><p>அதன் பின்பு தேவையான அளவு&nbsp; தண்ணீர் சேர்த்து, பாத்திரத்தை மூடி வைத்து 10 நிமிடங்கள் வரையில் நன்றான வேகவிட வேண்டும்.&nbsp;</p><p>பின்னர் சோயா சாஸ், வினிகர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.</p><p> </p><p>அதனையடுத்து சோளமாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கி அதை சிக்கனில் ஊற்றிக்கொள்ள வேண்டும்.&nbsp;</p><p>மிதமான தீயில் வைத்து தண்ணீர் வற்றி கெட்டியாகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.</p><p>பின்னர் நன்றாக வேக வைத்து சிக்கனை இறக்கினால் அவ்வளவு தான் ஆந்திரா பாணியில் சில்லி சிக்கன் தயார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T09:28:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கால்வாய்க்குள் கழுத்தறுக்கப்பட்டு கிடந்த சடலம் ; தந்தையும் மகனும் அரங்கேற்றிய செயல் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/body-found-with-throat-cut-in-canal-1785058119"></link>
            <id>https://jvpnews.com/article/body-found-with-throat-cut-in-canal-1785058119</id>
            <summary type="text">நாடு முழுவதும் பல பகுதிகளில் ஆயுதங்களைக் காட்டி மக்களைப் பயமுறுத்தி கொள்ளையடித்து வந்த சந்தேகநபர் ஒருவரை, நீண்ட விசாரணைகளின் பின்னர் ஹோமகம பொலிஸார் அண...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாடு முழுவதும் பல பகுதிகளில் ஆயுதங்களைக் காட்டி மக்களைப் பயமுறுத்தி கொள்ளையடித்து வந்த சந்தேகநபர் ஒருவரை, நீண்ட விசாரணைகளின் பின்னர் ஹோமகம பொலிஸார் அண்மையில் கைது செய்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


சந்தேகநபர் பனாகொட இராணுவ முகாமின் விளையாட்டுப் பிரிவுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரியாகப் பணியாற்றியவர் என்றும், அண்மையில் ஹோமகம, கலகாஹேன பகுதியில் வாடகை மோட்டார் சைக்கிள் சாரதியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவத்துடனும் இவருக்குத் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea653a98-ca35-49ec-9344-0f224a3fd931/26-6a65d3493c8b6.webp' /></p><h2 style="text-align: justify; ">விசாரணை</h2><p style="text-align: justify; ">

 

ஹோமகம, கலகாஹேன பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்து ஜூலை 16 ஆம் திகதி அதிகாலையில் வாடகை மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமான கொல்லப்பட்ட சடலம் கண்டெடுக்கப்பட்டது.
</p><p style="text-align: justify; "> 

கொலையாளிகள் உயிரிழந்தவரின் மோட்டார் சைக்கிள், தங்கச் சங்கிலி, கைப்பேசி மற்றும் பணப்பையை கொள்ளையடித்துத் தப்பிச் சென்றிருந்தனர்.
</p><p style="text-align: justify; ">
 

அந்த CCTV காட்சிகளை பரிசோதித்தபோது, கொலையுண்ட 'PickMe' மோட்டார் சைக்கிள் சாரதி மற்றொரு நபரை ஏற்றிக்கொண்டு சம்பவம் நடந்த இடத்திற்கு வருவது தெரியவந்தது.

 

அதன்படி நடத்திய விசாரணையில், அந்த நபரே மோட்டார் சைக்கிள் சாரதியுடன் அங்கு வந்து இக்கொலைக்கு உடந்தையாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> பின்னர், இந்த இரண்டு சந்தேகநபர்களும் தந்தையும் மகனும் என்பது உறுதி செய்யப்பட்டது.

 

இக்கொலை நடந்த மறுநாளில், சந்தேகநபர்கள் இந்த மோட்டார் சைக்கிளிலேயே மொரகஹஹேன பகுதிக்குச் சென்று, பெண் ஒருவரை கூர்மையான ஆயுதத்தைக் காட்டிப் பயமுறுத்தி அவரது தங்கச் சங்கிலியைக் கொள்ளையடித்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

மேலும், அவர்கள் மீண்டும் ஹோமகம பகுதியிலேயே இதுபோன்ற மற்றொரு கொள்ளைச் சம்பவத்திற்கும் இந்த மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதை விசாரணை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

இந்த சந்தேகநபர்களில் ஒருவர் ஹோமகம, பிட்டிபன பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் செயற்பட்ட விசாரணை அதிகாரிகள், அங்கு சென்று சந்தேகநபரைக் கைது செய்தனர்.

 

சந்தேகநபரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நேரடி கைக்குண்டு ஒன்றும் 500 மில்லிகிராம் ஹெரோயினும் விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 

சந்தேகநபரின் வீட்டில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் குற்றங்களைச் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட பல்சர் ரக மோட்டார் சைக்கிள் ஒன்றும், இரத்தக்கறை படிந்த தலைக்கவசம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; ">

 

சந்தேகநபர் பனாகொட இராணுவ முகாமின் விளையாட்டுப் பிரிவுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரியாகப் பணியாற்றியவர் என்றும், குற்றங்களைச் செய்வதற்காக ஆயுதங்களுடன் தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது, தனது இராணுவ அடையாள அட்டையைக் காட்டி பொலிஸ் சோதனைச் சாவடிகளில் எந்தவித தடையுமின்றி பயணித்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p style="text-align: justify; ">
 
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (25) ஹோமகம பதில் நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகநபரை 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க ஹோமகம பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

இக்குற்றங்களுக்குக் காரணமான முதன்மைச் சந்தேகநபரான தந்தையைத் தேடி, ஹோமகம தலைமையக பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரி சமன் கமகே அவர்களின் மேற்பார்வையில் பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-07-26T09:28:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேகதாது அணை விவகாரம்: திமுக மீது அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/adhav-arjuna-says-mekedatu-issue-dmk-is-the-reason-1785056628"></link>
            <id>https://ibctamilnadu.com/article/adhav-arjuna-says-mekedatu-issue-dmk-is-the-reason-1785056628</id>
            <summary type="text">மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அரசியல் குற்றச்சாட்டுகள் மீண்டும் எழுந்துள்ளன. கடந்த திமுக ஆட்சியின் சட்ட நடவடிக்கைகளில் ஏற்பட்ட குளறுபடிகளே தற்போதைய சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அரசியல் குற்றச்சாட்டுகள் மீண்டும் எழுந்துள்ளன. கடந்த திமுக ஆட்சியின் சட்ட நடவடிக்கைகளில் ஏற்பட்ட குளறுபடிகளே தற்போதைய சிக்கலுக்கு காரணம் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குற்றம்சாட்டியுள்ளார்.
</p><p>
காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b04c94b7-129f-4299-96d0-6f994fe5cfc4/26-6a65d30712044.webp' /></p><h2>ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு</h2><p> </p><p>தமிழகத்தின் சட்டப்பூர்வமான நீர் உரிமைகளை பாதுகாக்க முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.</p><p>

மேலும், கடந்த திமுக ஆட்சியில் மேகதாது அணைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் போதுமான அளவில் வாதங்கள் முன்வைக்கப்படவில்லை என்றும், அதன் காரணமாக அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.</p><p> இருப்பினும், கடந்த கால குறைகளை முன்வைத்து தமிழகத்தின் நீர் உரிமை தொடர்பான போராட்டத்தை திசை திருப்ப விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/885acce3-1af3-41ce-8501-6a284eda9b59/26-6a65d307b5398.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், மேகதாது அணை விவகாரத்தை சுமுகமான அணுகுமுறையுடன் கையாள வேண்டும் என கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.</p><p> மேகதாது அணை திட்டத்தால் தமிழகத்திற்கே அதிக பலன் கிடைக்கும் என்றும் அவர் கூறினார். துங்கபத்ரா நீர் விவகாரத்தில் தீர்வு காணப்பட்டதைப் போல, மேகதாது பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் சிவக்குமார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T09:27:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு! மூவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-pudukudiyirupu-youth-killed-three-injured-1785048078"></link>
            <id>https://tamilwin.com/article/accident-pudukudiyirupu-youth-killed-three-injured-1785048078</id>
            <summary type="text">முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.&amp;nbsp;இந்த சம்பவம் நேற்றைய தினம...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p>இந்த சம்பவம் நேற்றைய தினம்(25.07.2026) இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>மோட்டார் சைக்கிள் விபத்து</h2><p>அதிவேகமாக பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>விபத்தில் காயமடைந்த நால்வரும் உடனடியாக புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7ad9adb-1d04-4e11-b31f-ccb9b63b46bb/26-6a65b08768f99.webp' /></p><p>எனினும், அவர்களில் பிரவீன் எனும் இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
</p><p>மற்ற மூவர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>
இந்த விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T09:26:34+00:00</updated>
        </entry>
    </feed>
