<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-11T07:34:27+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிகப்புநிற ஆடையில் மயக்கும் நடிகை ப்ரீத்தி முகுந்தன்!! புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/preity-mukhundhan-red-dress-photoshoot-1789111988"></link>
            <id>https://viduppu.com/article/preity-mukhundhan-red-dress-photoshoot-1789111988</id>
            <summary type="text">ப்ரீத்தி முகுந்தன்தெலுங்கு சினிமாவில் Om Bheem Bush	 என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் ப்ரீத்தி முகுந்தன். தமிழில் கவின் நடிப்பில் வ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ப்ரீத்தி முகுந்தன்</h2><p>தெலுங்கு சினிமாவில் Om Bheem Bush	 என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் ப்ரீத்தி முகுந்தன். தமிழில் கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் படத்தில் நடித்து பிரபலமான ப்ரீத்தி, கண்ணப்பா, சர்வம் மாயா, பிளாஸ்ட், இதயம் முரளி உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/199d83e6-09bf-4aec-a3f9-b0e01ee57509/26-6aa3aebacfba0.webp' /></p><p>தற்போது, தெலுங்கு, தமிழ், இந்தி போன்ற மொழிப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் சாய் அபியங்கர் இசையில் ஆச கூட என்ற ஆல்பம் பாடலில் நடித்தும் இந்தியில் பேட்ஷா இசையில் Morni என்ற ஆல்பம் பாடலுக்கும் ஆட்டம் போட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார். </p><p>இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ப்ரீத்தி முகுந்தன், சிகப்புநிற கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-11T07:33:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனுக்கு 350 மில்லியன் டொலர் வான் பாதுகாப்பு உதவி - கனடா அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-350-mn-dollar-air-defense-to-ukraine-1789112009"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-350-mn-dollar-air-defense-to-ukraine-1789112009</id>
            <summary type="text">Canada pledges air defense to Ukraine: உக்ரைனுக்கு 350 மில்லியன் டொலர் மதிப்பிலான வான் பாதுகாப்பு உதவியை கனடா அறிவித்துள்ளது.

வான் பாதுகாப்பு உபகரண...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada pledges air defense to Ukraine: உக்ரைனுக்கு 350 மில்லியன் டொலர் மதிப்பிலான வான் பாதுகாப்பு உதவியை கனடா அறிவித்துள்ளது.</p><h2>

வான் பாதுகாப்பு உபகரண உதவி</h2><p>கனடா பிரதமர் மார்க் கார்னி, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடனான சந்திப்பிற்கு பிறகு, உக்ரைனுக்கு 350 மில்லியன் கனேடிய டொலர் மதிப்பிலான வான் பாதுகாப்பு உபகரண உதவி தொகுப்பு வழங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்தார்.
</p><p>
உக்ரைன் தற்போது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட Patriot Interceptors குறைவாக உள்ள நிலையில், ரஷ்யா தனது தாக்குதல்களை அதிகரித்து வரும் சூழலில் இந்த உதவி மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9eab48d-5513-4ee9-a589-563db865f869/26-6aa3aecb3d9cf.webp' /></p><p>ரஷ்யா பொதுமக்களை குறிவைத்து நடத்தும் வான்வழி தாக்குதல்களை எதிர்கொள்ள உக்ரைனின் வான் பாதுகாப்பு அவசியம் என கார்னி கூறியுள்ளார்.

இந்த உதவி தொகுப்பின் மூலம் உக்ரைனின் மக்கள், கட்டமைப்புகள் மற்றும் வான்வழி பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார். ஆனால் எந்த வகை Interceptors வழங்கப்படும், எப்போது வழங்கப்படும் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.</p><p>இந்த ஆயுதங்கள், அமெரிக்காவின் மூன்றாம் தரப்பு நாடுகள் மூலம் விரைவாக வாங்கி உக்ரைனுக்கு வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளன. </p><p></p><p>ரஷ்யா உக்ரைனில் படையெடுத்த 2022 பிப்ரவரி மாதத்திலிருந்து, கனடா மொத்தம் 25.5 பில்லியன் கனேடிய டொலர் உதவி வழங்கியுள்ளது. இதில் 8.5 பில்லியன் டொலர் இராணுவ உதவி அடங்கும்.
</p><p>
மேலும், கனடா அடுத்த இரண்டு ஆண்டுகளில் மில்லியன் கணக்கான ட்ரோன்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அதில் மூன்றில் ஒரு பங்கு உக்ரைனுக்கு வழங்கப்படும் என கார்னி தெரிவித்தார்.
</p><p>
கனடாவில் சுமார் 1.3 முதல் 1.4 மில்லியன் உக்ரைன் வம்சாவளியினர் வாழ்ந்து வருகின்றனர். இது உலகின் மிகப்பெரிய உக்ரைன் குடியேற்றக் குழுக்களில் ஒன்றாகும்.
</p><p>
இந்த புதிய உதவி, உக்ரைனின் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, கனடாவின் உறுதியான ஆதரவை மீண்டும் வெளிப்படுத்துகிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T07:30:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்ட் பீட் வெப் தொடரில் நடித்து வரும் நடிகை சுபிக்ஷாவின் அழகிய புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/heart-beat-actress-subiksha-kayarohanam-photos-1789107614"></link>
            <id>https://cineulagam.com/article/heart-beat-actress-subiksha-kayarohanam-photos-1789107614</id>
            <summary type="text">ஜியோ ஹாட்ஸ்டாரில் &#039;ஹார்ட் பீட்&#039; வெப் தொடரின் 3-வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வெப் தொடரில் அமலா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜியோ ஹாட்ஸ்டாரில் 'ஹார்ட் பீட்' வெப் தொடரின் 3-வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வெப் தொடரில் அமலா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சின்னத்திரை நடிகை சுபிக்ஷா. இவர் இதற்கு முன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'வீரா' சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>
இந்த நிலையில், நடிகை சுபிக்ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய சமீபத்திய அழகிய புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:</p>]]></content>
            <updated>2026-09-11T07:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்; அடுத்தடுத்து சகோதரிகள் மரணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/batticaloa-tiktok-young-woman-suicide-1789104702"></link>
            <id>https://jvpnews.com/article/batticaloa-tiktok-young-woman-suicide-1789104702</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டக்களப்பில் TikTok இல் வலம்வந்த 18 வயது யுவதி விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த யுவதி தாய் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மட்டக்களப்பில் TikTok இல் வலம்வந்த 18 வயது யுவதி விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
உயிரிழந்த யுவதி தாய் அற்ற நிலையில் தந்தையுடன் வாழ்ந்து வந்த மட்டக்களப்பு ஒந்தாட்சிபடத்தைச் சேர்ந்த குறித்த யுவதி ஏன் இந்த முடிவு எடுத்தார் எனத் தெரியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08a4d0c4-0d3e-4397-9ca3-995ca5d14042/26-6aa3923f9c008.webp' /></p><p></p><p>
</p><p> 
அதேவேளை உயிரிழந்த யுவதியின் சகோதரியும் ஏற்கனவே இவ்வாறே தற்கொலை செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.&nbsp; &nbsp;யுவதியின் மரணத்திற்கான&nbsp; காரணம் வெளியாகாத&nbsp; நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக&nbsp; கூறப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T07:26:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரு சிறுவர்களின் பலியெடுத்த குண்டு வீச்சு ; இலக்கு தவறியதால் வந்த வினை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bomb-attack-claims-children-s-lives-1789111319"></link>
            <id>https://jvpnews.com/article/bomb-attack-claims-children-s-lives-1789111319</id>
            <summary type="text">தெஹிவளையில் கையெறி குண்டு வீச்சுத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டி, மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தெஹிவளையில் கையெறி குண்டு வீச்சுத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டி, மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify;">
பாதுக்க - பஹல போபே பகுதியில் இந்த முச்சக்கர வண்டி மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/617c4286-d649-4470-879c-f98399d1200d/26-6aa3acf14368e.webp' /></p><h2 style="text-align: justify; ">கைக்குண்டுத் தாக்குதல்</h2><p>
</p><p style="text-align: justify; ">இன்று அதிகாலை நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல், தவறான இலக்கில் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

இந்தத் தாக்குதலில் இரு சிறார்கள் உயிரிழந்ததுடன், அவர்களின் தந்தை காயமடைந்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;">

விசாரணைகளில், காயமடைந்த நபரின் சகோதரர், திட்டமிடப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான படோவிட்ட அஸங்கவின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;">

மேலும், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘கொஸ்மல்லி’ என்பவரின் நெறிப்படுத்தலின் கீழ் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-11T07:26:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மற்றுமொரு ஆடம்பர வீடு....! ஷிரான் பாசிக்கின் தந்தையிடம் CCIB விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ccib-questions-shiran-basik-s-father-1789103827"></link>
            <id>https://ibctamil.com/article/ccib-questions-shiran-basik-s-father-1789103827</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் தற்போது விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் தற்போது விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>



டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஷிரான் பாசிக், கம்பஹா பகுதியில் அமைந்துள்ள ஆடம்பரக் குடியிருப்புத் தொகுதியொன்றில், சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான வீடு ஒன்றை கொள்முதல் செய்துள்ளதாகவும், அது அவரது தந்தையின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.</p><p>இதற்கமைய, இது தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக, ஷிரான் பாசிக்கின் தந்தையை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><h2>முடக்க அதிகாரிகள் நடவடிக்கை</h2><p> 



இதற்கமைய, இது தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக, ஷிரான் பாசிக்கின் தந்தையை இன்றைய தினம் (11) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d7718b5-0d31-469c-944c-8e30830bc171/26-6aa3a0d2e5ad1.webp' /></p><p>இதேவேளை, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தல்கார் என அறியப்ஸபடும் மொஹமட் ஷிரான் பாசிக்கின் நெருங்கிய சகாவான ரணதுங்க ஆரச்சிஸே நலின் அர்ஜுன என்பவரால் சட்டவிரோதமான முறையில் ஈட்ப்பட்ட பணத்தைக் கொண்டு கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் உடமைககளை முடக்குவதற்குச் குற்றவரும்படி விசாரணை பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. </p><p>இதற்கமைய, வியாழக்கிழமை (10) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 14 நாட்களுக்குக் குறித்த சொத்துக்கள் மற்றும் உடமைகள் முடக்கப்பட்டுள்ளன.</p><p>விசாரணை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த சந்தேகநபரால் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்தைக்கொண்டு கொள்முதல் செய்யப்பட்ட சொத்துக்களை வேறு எவருக்கும் விற்பனை செய்வதோ, உரிம மாற்றம் செய்வதோ அல்லது அதில் மாற்றங்களை ஏற்படுத்துவதை தடுத்து, அவற்றை முடக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T07:26:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய சிம் அட்டைகளை வாங்குவோருக்கு கட்டாயமாக்கப்படும் நடைமுறை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sim-cards-must-provide-their-own-direct-photo-1789106244"></link>
            <id>https://ibctamil.com/article/sim-cards-must-provide-their-own-direct-photo-1789106244</id>
            <summary type="text">முறையற்ற வழிகளில் பெறப்பட்ட சிம் அட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோதச் செயல்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முறையற்ற வழிகளில் பெறப்பட்ட சிம் அட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோதச் செயல்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) தெரிவித்துள்ளது.</p><p>

இதன் காரணமாகச் சிம் அட்டைகள் தொடர்பாக ஒழுங்குமுறை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார். </p><p>அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>&nbsp;சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள்</h2><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சிம் அட்டைகளை விநியோகிப்பதற்கான விதிமுறைகளை நாங்கள் புதுப்பித்துள்ளோம். ஏனெனில், காவல்துறை போன்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களிடமிருந்து எங்களுக்கு ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d0982c5-56ac-4927-80a4-019ee632e8c4/26-6aa3a164ed87e.webp' /></p><p> 

கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் சிம் அட்டைகளைப் பயன்படுத்திச் செய்யப்படும் சட்டவிரோதச் செயல்பாடுகள் மிகவும் அதிகரித்துள்ளதாகவும், அதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது.</p><p> 

அந்த நிறுவனங்களுடன் இணைந்து சிம் விதிமுறைகளைப் புதுப்பித்து, குறிப்பாக இது நடைமுறைக்கு வரும் நாளிலிருந்து (பெரும்பாலும் இந்த ஆண்டின் இறுதிக்குள்) புதிதாகச் சிம் அட்டைகளைப் பெறுபவர்கள் தங்களது நேரடிப் புகைப்படத்துடன் மட்டுமே அந்தச் சிம் அட்டையைப் பெற முடியும்.</p><p></p><h2>3 கோடி சிம் அட்டைகள்</h2><p> </p><p>

இது தொடங்கப்பட்ட பின்னர், 2027 ஆம் ஆண்டில் தொலைபேசி மற்றும் சிம் அட்டைகளைப் பயன்படுத்தும் அனைத்துப் பயனாளர்களுக்கும், அதாவது வாடிக்கையாளரை அடையாளம் காண்பதை 100 சதவீதம் உறுதிப்படுத்தும் வகையிலான வேலைத்திட்டத்தைச் செயற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e33adc9-0bfc-4cc7-bc19-397246083924/26-6aa3a165aa2a6.webp' /></p><p> 

இதில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சாதாரண பொதுமக்களுக்கோ அல்லது வெளிநாட்டவர்களுக்கோ எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில் இது நடைமுறைப்படுத்தப்படும். </p><p>நாட்டிலுள்ள சட்டவிரோதச் செயற்பாடுகளுக்குச் சிம் அட்டைகள் பயன்படுத்தப்படுவதைக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். நாட்டில் சுமார் 3 கோடி சிம் அட்டைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p> சேவைத் தரம் குறைவாக இருப்பதாக அந்த மக்களிடமிருந்து வரும் ஒரு முறைப்பாடாகும். 

தற்போது சேவை வழங்குநர்களின் தரவுகளின் அடிப்படையிலேயே நாங்கள் இயங்கி வருகிறோம். அதனை மேலும் துல்லியமாகக் கண்டறிவதற்கான கட்டமைப்பு எம்மிடம் இல்லை“ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T07:24:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலரின் மதிப்பு அதிகரிப்பு: இன்று முக்கிய வங்கிகளால் மாற்றப்பட்ட சமீபத்திய வட்டி விகிதங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/decline-value-dollar-interest-rates-banks-today-1789108012"></link>
            <id>https://ibctamil.com/article/decline-value-dollar-interest-rates-banks-today-1789108012</id>
            <summary type="text">நேற்றைய தினத்தை ஒப்பிடுகையில், இன்று இலங்கையின் சில வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி சிறிதளவு உயர்ந்துள்ளது.

என...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேற்றைய தினத்தை ஒப்பிடுகையில், இன்று இலங்கையின் சில வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி சிறிதளவு உயர்ந்துள்ளது.
</p><p>
எனினும், சில வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விகிதம் 332 ரூபாயை அண்மித்த மட்டத்தில் பெரிய மாற்றமின்றி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
செலான் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விகிதம் 324.35 ரூபாயாகவும், விற்பனை விகிதம் 333.60 ரூபாயாகவும் மாற்றமின்றி காணப்படுகிறது.</p><p></p><h2>டொலரின் மதிப்பு அதிகரிப்பு</h2><p>

NDB வங்கியில் டொலரின் கொள்வனவு விகிதம் 324.00 ரூபாயாகவும், விற்பனை விகிதம் 333.00 ரூபாயாகவும் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b645c22-85f1-4448-b5c4-4037c7cafe16/26-6aa3a326eb505.webp' /></p><p>
</p><p>
மக்கள் வங்கியில் டொலரின் கொள்வனவு விகிதம் 324.55 ரூபாயிலிருந்து 324.45 ரூபாயாகவும், விற்பனை விகிதம் 332.60 ரூபாயிலிருந்து 332.50 ரூபாயாகவும் சிறிதளவு குறைந்துள்ளது.</p><p>

கொமர்ஷல் வங்கியில் டொலரின் கொள்வனவு விகிதம் 322.85 ரூபாயிலிருந்து 322.60 ரூபாயாகவும், விற்பனை விகிதம் 332.75 ரூபாயிலிருந்து 332.50 ரூபாயாகவும் குறைந்துள்ளது.
</p><p>
இதனிடையே, சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விகிதம் 324.50 ரூபாயாகவும், விற்பனை விகிதம் 332.50 ரூபாயாகவும் மாற்றமின்றி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T07:22:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சபாநாயகர் பதவியில் தொடர்வதற்கு ஜகத் விக்ரமரத்னவுக்கு எந்த அருகதையும் இல்லை! முஜிபுர் ரஹ்மான் விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/controversial-remarks-regarding-the-speaker-1789111233"></link>
            <id>https://tamilwin.com/article/controversial-remarks-regarding-the-speaker-1789111233</id>
            <summary type="text">சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை
ஆணைக்குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவர்
தொடர்ந்து சபாநாயகர் ஆச...</summary>
            <content type="html"><![CDATA[<p>சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை
ஆணைக்குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவர்
தொடர்ந்து சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்திருப்பதில் எந்த நியாயமும் இல்லை என்று
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பெண்களின் வலுவூட்டல்
சட்டத்தின் கீழான தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே
அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,</p><p>

"நாடாளுமன்ற சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டதிலிருந்து கடந்த
இரண்டு வருட காலப்பகுதியில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்கள் மற்றும்
சம்பவங்கள் தொடர்பிலேயே இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் விசாரணைகள்
இடம்பெற்று வருகின்றன.</p><h2>சட்டம் பொதுவானது&nbsp;</h2><p>
</p><p>
ஊழல் தொடர்பான விசாரணை ஒன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, சம்பந்தப்பட்ட
உயர் அதிகாரி விசாரணைகளுக்கு வழிவிட்டுத் தற்காலிகமாகப் பதவியிலிருந்து விலக
வேண்டும் என்பதே நியதியாகும். ஆனால், சபாநாயகர் இந்த ஆசனத்தில் தொடர்ந்தும்
இருப்பது பிரச்சினைக்குரியதுடன் சட்டப்படியும் கேள்விகளை எழுப்புகின்றது.
</p><p>
நீங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தேர்தல் மேடைகளில் கூறியது இதனைத்தானே?
சட்டம் அனைத்துக்கும் பொதுவானது என்று கூறிவிட்டு, தற்போது அதற்கு முரணாக
நடப்பது ஏற்புடையதல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c82131e-c1be-4564-afd9-62973124e8ca/26-6aa3abc30f7aa.webp' /></p><p>
</p><p>
இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதற்குச் சபாநாயகர் இடமளிக்க மறுத்தால்,
அது நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகள் மற்றும் நிலையியல் கட்டளைகள்
தொடர்பான பாரிய பிரச்சினையாகும்.</p><p>

எதிர்க்கட்சியில் இருக்கும் போது நீங்கள் இவ்வாறான உரிமை விடயங்கள் தொடர்பில்
கதைத்தவர்கள். உங்களால் சபாநாயகர் ஆசனத்தில் அமர்த்தப்பட்ட ஜகத் விக்ரமரத்ன
இப்போது சர்வாதிகாரி போன்று நடக்கின்றார். எந்தவொரு சபாநாயகரும் இவ்வாறு
சர்வாதிகாரி போன்று நடந்துகொண்டதில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30623b2f-9ffa-4224-b97a-24625e824e61/26-6aa3abc3b78bc.webp' /></p><p>
</p><p>
இதற்கு முன்னர் இந்தச் சபாநாயகர் ஆசனத்தில் இருந்தவரைச் சான்றிதழ் இல்லை எனக்
கூறி நீக்கியது அநியாயமானது என்றே இப்போது தோன்றுகின்றது.

சான்றிதழ் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அசோக ரன்வலையையே தொடர்ந்து அந்தப்
பதவியில் வைத்திருந்திருக்கலாம்.</p><p> அல்லது, நடுநிலையாகவும் தகுதியுடனும் சபையைத்
தற்போது நடத்திச் செல்லும் பிரதி சபாநாயகரைச் சபாநாயகராக நியமிக்குமாறு
கேட்டுக்கொள்கின்றேன்" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T07:20:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் முதலமைச்சர் விஜய்க்கு பெரும் வரவேற்பு! மக்கள் ஆரவாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/arrived-cm-vijay-in-london-tamils-cheering-crowds-1789110390"></link>
            <id>https://jvpnews.com/article/arrived-cm-vijay-in-london-tamils-cheering-crowds-1789110390</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அரசுமுறைப் பயணமாக லண்டனுக்குச் சென்ற நிலையில் அங்க்கு அவருக்கு லண்டன் வாழ் தமிழர்கள் உற்சாகமாக வரவேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அரசுமுறைப் பயணமாக லண்டனுக்குச் சென்ற நிலையில் அங்க்கு அவருக்கு லண்டன் வாழ் தமிழர்கள் உற்சாகமாக வரவேற்பளித்துள்ளதாக கூறப்படுகின்றது.
</p><p>
தமிழகத்துக்கு புதிய முதலீடுகளை ஈா்ப்பதற்காக, முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வியாழக்கிழமை (செப்.10) இரவு 10 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றாா்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b8e7476-6fd5-4531-9dd4-e954fb5fea7b/26-6aa3a8780f406.webp' /></p><h2>&nbsp; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு</h2><p>

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்துக்கு இந்திய நேரப்படி இன்று காலை 11.30 மணியளவில் முதல்வர் விஜய் சென்றடைந்தார்.</p><p>

ஹீத்ரோ விமான நிலையத்தில் கூடியிருந்த பிரிட்டன் வாழ் தமிழர்கள் முதல்வர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து ஆரவாரத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p><p></p><p>முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு அவா் மேற்கொள்ளும் முதல் அரசு முறைப்பயணம் இதுவாகும். 6 நாள்கள் தங்கியிருக்கும் அவா் தமிழகத்துக்கு முதலீடுகளை ஈா்ப்பது தொடா்பாக தொழிலதிபா்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.</p><p>

புகழ்பெற்ற காா் பந்தய மைதானமான ‘சில்வா்ஸ்டோன் மோட்டாா் ரேசிங் சா்க்யூட்’-ஐயும் பாா்வையிட்டு, நடிகர் அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை தொடங்கிவைக்கவுள்ளார்.</p><p></p><p>

 
முதல்வர் விஜய்யுடன் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் மூத்த அரசு அதிகாரிகளும் லண்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-11T07:20:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலை பரபரப்பை ஏற்படுத்திய தெஹிவளை கைக்குண்டு தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dehiwala-bomb-attack-information-released-police-1789093479"></link>
            <id>https://tamilwin.com/article/dehiwala-bomb-attack-information-released-police-1789093479</id>
            <summary type="text">புதிய இணைப்புதெஹிவளை, சிரிசங்கபோ வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முச்சக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>தெஹிவளை, சிரிசங்கபோ வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த முச்சக்கரவண்டி பாதுக்க - பஹல போபே பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இன்று (11) அதிகாலை 3 மணியளவில், தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தையில் உள்ள ஒரு வீட்டின் மீது அடையாளம் தெரியாதநபர் ஒருவர் கைக்குண்டை வீசியுள்ளார்.</p><h2>சிசிடிவி கமராவில் பதிவு</h2><p>சந்தேகநபர் முச்சக்கரவண்டியில் வந்து இறங்கி வீட்டின் கதவை தட்டி, வீட்டிற்குள் குண்டை வீசியமை சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது. .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bad045ab-70dc-442f-8126-b5d7b7435cb9/26-6aa3aac9c74ce.webp' /></p><p>இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த 55 வயதுடைய நபர் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 11 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர்.</p><p>இருப்பினும், காயமடைந்த நபர் மீது எந்த குற்றவியல் வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>&nbsp;இதன்படி, சந்தேகநபர்களை கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் செயல்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><h2>இரண்டாம் இணைப்பு</h2><p>தெஹிவளை, சிரிசங்கபோ வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இன்று (11) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத்தாக்குதல் திட்டமிடப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையிலான மோதலே காரணமென&nbsp;பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p> </p><p>தவறான இலக்கு காரணமாகவே குறித்த இரு சிறுவர்களும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>அவர்களின் தந்தை (55) களுபோவில போதனா வைத்தியசாலையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><h2>போதைப்பொருள் வலையமைப்பு</h2><p>காயமடைந்த நபரின் சகோதரர், திட்டமிடப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான படோவிட்ட அஸங்கவின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5069f853-508f-4fdd-b139-207331bf889b/26-6aa3980e2132a.webp' /></p><p>மேலும், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘கொஸ்மல்லி’ என்பவரின் நெறிப்படுத்தலின் கீழ் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p>&nbsp;குண்டுத் தாக்குதலை நடத்திய சந்தேகநபர்களை கைது செய்ய இரண்டு பொலிஸ் குழுக்கள் செயல்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93ecd2e0-b149-4e89-b955-65a99900e3bc/26-6aa3980d6037d.webp' />&nbsp;&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>தெஹிவளை - சிரிசங்கபோ மாவத்தை பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.</p><p>இன்று (11) அதிகாலை 3.15 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் கைக்கூண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><h2>தாக்குதலுக்கான காரணம் அல்லது சந்தேகநபர்கள்</h2><p>இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த 55 வயதுடைய நபர் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 11 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed2e9d97-0e0b-4c8c-8a8f-6766da0c7b9e/26-6aa36a66f0f2b.webp' /></p><p>உயிரிழந்தவர்கள் 11 மற்றும் 17 வயதுடைய இரண்டு ஆண் பிள்ளைகள் என பொலிஸ் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இச்சம்பவத்துடன் தொடர்புடைய தாக்குதலுக்கான காரணம் அல்லது சந்தேகநபர்கள் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்நிலையில், சந்தேகநபர்களை கைது செய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p> 
</p>]]></content>
            <updated>2026-09-11T07:17:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளை கைக்குண்டு தாக்குதல்! காவல்துறை வெளிப்படுத்திய பரபரப்புத் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/wrong-house-targeted-in-dehiwala-grenade-attack-1789108788"></link>
            <id>https://ibctamil.com/article/wrong-house-targeted-in-dehiwala-grenade-attack-1789108788</id>
            <summary type="text">தெஹிவளையில் உண்மையாக இலக்கு வைக்கப்பட்டிருந்த வீட்டுக்கு பதிலாக தவறுதலாக மற்றொரு வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் வெளிப்படுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளையில் உண்மையாக இலக்கு வைக்கப்பட்டிருந்த வீட்டுக்கு பதிலாக தவறுதலாக மற்றொரு வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் வெளிப்படுத்தியுள்ளனர்.</p><p>

இன்று அதிகாலை தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் 11 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்ததுடன், அவர்களது 55 வயதுடைய தந்தை பலத்த காயமடைந்தார்.
</p><p>
காயமடைந்த தந்தை தற்போது கலுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.</p><p></p><h2>இலக்கு வைக்கப்பட்டிருந்த வீடு</h2><p>
</p><p>
இந்நிலையில், காவல்துறைப் பேச்சாளரும் உதவி காவல்துறை அத்தியட்சகருமான எஃப்.யு. வூட்லர் வெளியிட்ட தகவலின்படி, ஆரம்பகட்ட விசாரணைகளில் இத்தாக்குதல் தவறுதலாக வேறொரு வீட்டின் மீது நடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3630760a-1467-4aa2-bbce-39b655292686/26-6aa3a928da8f9.webp' /></p><p>
</p><p>
போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள “படோவிட்ட அசங்க” என்ற பாதாள உலகக் குழுத் தலைவருடன் தொடர்புடைய ஒருவரின் வீடே உண்மையான இலக்காக இருந்திருக்க வேண்டும் என்றும், தாக்குதலாளிகள் தவறுதலாக அதன் அருகிலிருந்த வீட்டின் மீது கைக்குண்டை வீசியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.</p><h2>தாக்குதலுக்கான காரணம்&nbsp;</h2><p>

படோவிட்ட அசங்க தரப்பினருக்கும் அவருக்குப் போட்டியான கொஸ் மல்லி என்ற பாதாள உலகக் குழுவினருக்கும் இடையே நிலவும் மோதலின் தொடர்ச்சியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75f1bf35-0b31-49c0-9ed0-ba3b70f96d4f/26-6aa3a72e27854.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பாக, மூன்று காவல் குழுக்கள் களமிறக்கப்பட்டு விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T07:13:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னிற்கு மகன் இருக்கிறாரா? உடைந்த ரகசியம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/south-korea-trying-to-learn-kim-jong-un-has-a-son-1789108803"></link>
            <id>https://canadamirror.com/article/south-korea-trying-to-learn-kim-jong-un-has-a-son-1789108803</id>
            <summary type="text">வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அவர்களுக்குப் பிறந்த மூத்த மகன் குறித்த ரகசியத் தகவல்களைச் சேகரிக்கத் தென்கொரிய தேசிய உளவுத்துறை (NIS) தீவிர முயற்சிகளை ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அவர்களுக்குப் பிறந்த மூத்த மகன் குறித்த ரகசியத் தகவல்களைச் சேகரிக்கத் தென்கொரிய தேசிய உளவுத்துறை (NIS) தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
</p><p>
 எனினும் , நாட்டின் அடுத்த அதிபராக கிம்மின் மகள் ‘கிம் ஜூ ஏ’ (Kim Ju Ae) நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகளே மிகவும் உறுதியாக உள்ளதாகப் புதிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65a02aba-885a-4f57-a7e6-3a7b7029e0eb/26-6aa3a2453d145.webp' /></p><h2>ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் அதிகாரப் படிநிலை</h2><p>
</p><p>
வடகொரியாவில் தந்தை வழி சமூக அமைப்பும், ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் அதிகாரப் படிநிலையும் ஆழமாக வேரூன்றியுள்ளது.</p><p> 

இருப்பினும், இதுவரை கிம்மின் மூத்த மகன் அல்லது மூன்றாவது குழந்தை குறித்து எவ்வித உறுதியான வரலாற்றுச் சான்றுகளோ அல்லது பொதுவெளி நகர்வுகளோ வெளியாகவில்லை.</p><p>

மாறாக, கிம் ஜோங் உன்னின் சுமார் 13 வயது நிரம்பிய மகள் ‘கிம் ஜூ ஏ’, சமீபகாலமாக நாட்டின் முக்கிய இராணுவக் கூட்டுப் பயிற்சிகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனைகள் மற்றும் அரசாங்க நிகழ்வுகளில் அதிபருக்கு நிகராகத் தொடர்ந்து முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார்.
</p><p>
 வடகொரிய அரசு ஊடகங்களும் அவரை “மிகவும் மதிப்பிற்குரிய வழிகாட்டி” (Respected Guide) என வாரிசுக்கான சொற்களைப் பயன்படுத்திக் குறிப்பிடத் தொடங்கியுள்ளன.
</p><p>
தென்கொரிய நாடாளுமன்றத்தில் உளவுத்துறை அதிகாரிகள் அளித்த விளக்கத்தின்படி, கிம் ஜூ ஏ வாரிசுப் பயிற்சிகளை முழுமையாக நிறைவு செய்துவிட்டார் என்றும், வடகொரியாவின் நான்காம் தலைமுறை அதிகாரத்தை அவரே கைப்பற்றுவார் என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.</p><p> 

வடகொரியாவில் மூத்த ஆண் வாரிசு உள்ளாரா என்ற கேள்விகள் நிலவியபோதிலும், இராணுவப் படைகளின் ஆதரவு மற்றும் அதிகாரப்பூர்வ நகர்வுகள் அனைத்தும் கிம் ஜூ ஏ-வை நோக்கியே நகர்வதாகச் சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-11T07:08:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சாவில் 3 நாள் பிரமாண்ட உணவுத் திருவிழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reecha-food-festival-2026-1789109497"></link>
            <id>https://tamilwin.com/article/reecha-food-festival-2026-1789109497</id>
            <summary type="text">றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையின் ஏற்பாட்டில், வடக்கு கிழக்கின் முக்கிய
பொழுதுபோக்கு தளங்களில் ஒன்றான றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை, இம்முறை “றீச்சா
உணவுத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையின் ஏற்பாட்டில், வடக்கு கிழக்கின் முக்கிய
பொழுதுபோக்கு தளங்களில் ஒன்றான றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை, இம்முறை “றீச்சா
உணவுத் திருவிழா 2026” எனும் பிரமாண்டமான 3 நாள் உணவு திருவிழாவை நடத்துவதற்கு
தயாராகியுள்ளது.
</p><p>
யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இன்று(11.09.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் றீச்சா ஒருங்கிணைந்த
பண்ணை முகாமைத்துவ குழுவினர் இதனை தெரிவித்துள்ளனர்.
</p><h2>செல்லுபடியாகும் டிக்கெட்டை பெற்றவர்கள்</h2><p>
மேலும் தெரிவிக்கையில்,
2026 ஒக்டோபர் 16, 17 மற்றும் 18ஆம் திகதிகளில் றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை
வளாகத்தில் நடைபெறவுள்ள இவ்விழா, பாரம்பரிய உணவுகளின் சுவையையும் நவீன உணவு
அனுபவங்களையும் ஒரே இடத்தில் கொண்டுவரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a1ec0d8-9306-4572-adda-7bb19d100115/26-6aa3a6a048947.webp' /></p><p>
றீச்சா உணவுத் திருவிழா 2026 இல் பங்கேற்கும் பார்வையாளர்களுக்கு பல்வேறு
பாரம்பரிய மற்றும் சிறப்பு உணவு வகைகளை வரையறையற்ற முறையில் சுவைத்து மகிழ
வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.&nbsp;</p><p>உணவு திருவிழாவின் பிரதான வரையறையற்ற உணவு சேவை மாலை 6.00 மணி முதல் இரவு
10.00 மணி வரை நடைபெறும். ஒரே டிக்கெட்டினால் பார்வையாளர்கள் இச்சிறப்பான உணவு
அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
</p><p>
உணவு திருவிழாவிற்கான செல்லுபடியாகும் டிக்கெட்டை பெற்றவர்கள் காலை 8.00
மணிமுதல் றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை வளாகத்திற்குள் வருகை தர முடியும்.
</p><p>
பகல் நேரத்தில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு பொழுதுபோக்கு
நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டுக்களை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும்
அனுபவிக்க முடியும். </p><p>விளையாட்டுகளில் பங்கேற்க விரும்புவோர் அதற்கான
விளையாட்டு டிக்கெட்டுகளை தனியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதன்மூலம், உணவு திருவிழா டிக்கெட் பெற்றவர்கள் காலைமுதல் இரவு வரை றீச்சா
வளாகத்தில் முழுமையான குடும்ப மற்றும் பொழுதுபோக்கு அனுபவத்தைப் பெறுவதற்கான
வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>டிக்கெட் தொகை திருப்பிச் செலுத்தப்படமாட்டாது</h2><p>ஒக்டோபர் 16, 17 மற்றும் 18ஆம் திகதிகளில் றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை
வளாகத்திற்குள் உணவு திருவிழாவிற்கான செல்லுபடியாகும் டிக்கெட் பெற்றவர்கள்
மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
</p><p>எனவே, ஏற்பாட்டாளர்கள், உணவு திருவிழா டிக்கெட் இல்லாத ஏனைய பார்வையாளர்கள்
மேற்குறிப்பிட்ட 3 நாட்களிலும் றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையை பார்வையிடுவதைத்
தவிர்த்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4ec1bba-8889-46cb-8a94-c5d1d9c9e2e7/26-6aa3a8d155af4.webp' /></p><p>

பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தையும் ஒழுங்கான நிகழ்வு நிர்வாகத்தையும்
உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக 1,500 பார்வையாளர்கள்
மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர்.
</p><p>இதன்படி, 3 நாட்களிலும் மொத்தமாக 4,500 பார்வையாளர்கள் மட்டுமே உணவு
திருவிழாவில் பங்கேற்க முடியும்.
குறிப்பிட்ட எண்ணிக்கை பூர்த்தியடைந்த பின்னர் மேலதிக டிக்கெட்டுகள்
வழங்கப்படமாட்டாது.
</p><p>
'றீச்சா உணவுத் திருவிழா 2026'இற்கான அனைத்து டிக்கெட்டுகளும் இணைய வழி மூலம்
மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.
ஆர்வமுள்ள பார்வையாளர்கள் தங்களது டிக்கெட்டுகளை முன்கூட்டியே பதிவு செய்து
பெற்றுக்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.&nbsp;</p><p>டிக்கெட் வாங்கிய பின்னர் நிகழ்வில் கலந்துகொள்ளாதது அல்லது தனிப்பட்ட
காரணங்களுக்காக வருகை தரமுடியாதது போன்ற சந்தர்ப்பங்களில் டிக்கெட் தொகை
திருப்பிச் செலுத்தப்படமாட்டாது.
</p><p>எனவே, டிக்கெட் வாங்குவதற்கு முன் நிகழ்வின் அனைத்து விதிமுறைகள் மற்றும்
நிபந்தனைகளையும் கவனமாக வாசித்து, அவற்றை புரிந்துகொண்டு டிக்கெட் கொள்வனவு
செய்யுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.
</p><p>
விழாவில் கலந்துகொள்ளும் அனைத்து பார்வையாளர்களும் றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை
வளாகத்தின் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் ஏனைய பார்வையாளர்களின் வசதியை
கருத்தில் கொண்டு பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T07:08:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[9/11 தாக்குதல்கள்: ஜேர்மன் பாதுகாப்பு அமைப்பையே மாற்றி அமைத்த விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/9-11-25th-anniversary-germany-hamburg-1789110315"></link>
            <id>https://news.lankasri.com/article/9-11-25th-anniversary-germany-hamburg-1789110315</id>
            <summary type="text">September 11 attacks: Three of the four suspected hijackers had lived in Hamburg: அமெரிக்காவில் செப்டம்பர் 11ஆம் திகதி தாக்குதல் நிகழ்த்தியவர்களில் மூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>September 11 attacks: Three of the four suspected hijackers had lived in Hamburg: அமெரிக்காவில் செப்டம்பர் 11ஆம் திகதி தாக்குதல் நிகழ்த்தியவர்களில் மூன்று பேர் ஜேர்மனியில் வாழ்ந்தவர்கள் என்பது பின்னர் தெரியவந்தது.</p><p>


அமெரிக்காவில் செப்டம்பர் 11ஆம் திகதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி 25 ஆண்டுகள் ஆகின்றன.</p><p>

இந்நிலையில், அமெரிக்காவில் நிகழ்ந்த அந்த தாக்குதல்களுக்கும், ஜேர்மனிக்கும் உள்ள தொடர்பு குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
</p><h2>
 9/11 தாக்குதல்கள்
</h2><p>
அமெரிக்காவில் செப்டம்பர் 11ஆம் திகதி பயங்கரவாதிகள் நிகழ்த்திய இரட்டைக் கோபுரத் தாக்குதல் உள்ளிட்ட தாக்குதல்களைக் கண்டு உலகமே மிரண்டு நின்றபோது, ஜேர்மனியும் அந்த நிலையில்தான் இருந்தது.
</p><p>
ஆனால், அடுத்து வெளியான செய்தி ஜேர்மனியை அதிரவைத்தது. ஆம். விமானங்களைக் கடத்தி கட்டிடங்கள் மீது மோதியவர்களில் முக்கியமான மூன்று பேர் ஜேர்மனியில் வாழ்ந்தவர்கள் என்னும் செய்திதான் அது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/626c92d8-c2d8-4550-add9-4f2003400c2e/26-6aa3a87a8fa87.webp' /><br></p><p>

Mohamed Atta, Marwan al-Shehhi மற்றும் Ziad Jarrah என்னும் அந்த மூவரும், பல ஆண்டுகளாக திட்டமிட்டு, ஜேர்மனியின் ஹாம்பர்க் நகரில் முறைப்படி கல்வி கற்று, பின் அமெரிக்கா சென்று விமான பயிற்சி பெற்று, அந்த தாக்குதலை நிகழ்த்தியது உறுதியானது.
</p><p>
அதைத் தொடர்ந்து, ஜேர்மனியின் பாதுகாப்பு அமைப்பில் பல அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. </p><p>தாக்குதல் நிகழ்ந்து சில வாரங்களில், ஜேர்மனியில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள் பல கொண்டுவரப்பட்டன.
</p><p>
பொலிசாருக்கும் உளவுத்துறையினருக்கும் கூடுதல் அதிகாரங்கள் கையளிக்கப்பட்டன. பல்வேறு மத அமைப்புகளுக்கு தடை விதிக்கப்படும் நிலை உருவானது. ஆக மொத்தத்தில் ஜேர்மன் பாதுகபபு அமைப்பே மாறிவிட்டது!
</p><p>
2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி, அமெரிக்காவில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்தபோது, ஜேர்மன் ஜனாதிபதியான ஜோஹன்னஸ் ராவ் உரைத்த வார்த்தைகள் இன்றும் எதிரொலிக்கின்றன: ‘இந்த நாள் உலகையே மாற்றிவிட்டது’ என்று கூறியிருந்தார் அவர். அவர் கூறியது ஜேர்மனிக்கும் பொருந்தும்!<br></p>]]></content>
            <updated>2026-09-11T07:07:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்க விலையில் திடீர் மாற்றம்...! வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gold-prices-surged-sharply-again-today-1789108689"></link>
            <id>https://ibctamil.com/article/gold-prices-surged-sharply-again-today-1789108689</id>
            <summary type="text">இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

கொழும்பு செட்டியார் தெரு தகவல்களின் படி இன...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
</p><p>
கொழும்பு செட்டியார் தெரு தகவல்களின் படி இன்றைய தினம் (11.09.2026) தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

</p><p>சந்தை நிலவரங்களின்படி, நேற்றுடன் (10) ஒப்பிடுகையில் நாட்டில் தங்கத்தின் விலை 4,000 ரூபா குறைந்துள்ளது.</p><p></p><h2>தங்க விலை</h2><p>
</p><p>
</p><p>இதன்படி, இன்று (11) காலை 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 343,200 ரூபாவாகக் குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29979f7c-c49d-4f0c-9f1a-6c6dbd55e981/26-6aa3a31f7edb3.webp' /></p><p>
இதேவேளை நேற்றைய தினம் இதன் விலை 347,000 ரூபாவாக இருந்துள்ளது.</p><p>அதேவேளை, 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை நேற்று 377,000 ரூபாவாக இருந்த நிலையில், இன்று 373,000 ரூபாவாக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T07:07:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ, லா நினா தாக்கங்கள் தொடர்பில் சபையில் விசேட கேள்விகளை எழுப்பிய சஜித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-in-sri-lanka-1789107821"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-in-sri-lanka-1789107821</id>
            <summary type="text">எல் நினோ மற்றும் லா நினா நிலைமைகளால் இலங்கையில் ஏற்படக்கூடிய தாக்கங்கள்
தொடர்பில் அரசு எடுத்துள்ள முன்னாயத்த நடவடிக்கைகள் மற்றும்
முன்னறிவுறுத்தல்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ மற்றும் லா நினா நிலைமைகளால் இலங்கையில் ஏற்படக்கூடிய தாக்கங்கள்
தொடர்பில் அரசு எடுத்துள்ள முன்னாயத்த நடவடிக்கைகள் மற்றும்
முன்னறிவுறுத்தல்கள் என்ன என்பது குறித்து நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்றைய தினம் (10.09.2026) நாடாளுமன்றத்தில் விசேட கேள்விகளை
எழுப்பினார்.
</p><p>
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், எல் நினோ காலநிலை நிகழ்வினால் ஏற்படக்கூடிய நீர், மின்சாரம் மற்றும் உணவு
நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்ய கடந்த 2026 ஜூன் 22ஆம் திகதியன்று சுற்றாடல்
அமைச்சர் தலைமையில் விசேட அமைச்சரவை உப குழுவும் அதிகாரிகள் குழுவும்
நியமிக்கப்பட்டன. </p><p>எனினும், இந்தக் குழு நியமிக்கப்படுவதற்கு 6 மாதங்களுக்கு
முன்பிருந்தே ஐக்கிய மக்கள் சக்தி இதுகுறித்த எச்சரிக்கைகளை விடுத்திருந்தது.</p><h2>பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகரிக்குமா?</h2><p>
</p><p>
அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம்
ஆகியவற்றின் தரவுகளின்படி, வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் தொகை மாவட்ட
வாரியாக எவ்வளவு? இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதா?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2571e27c-ce6a-4de8-8ee0-93a04728b1ef/26-6aa3a833d0c9d.webp' /></p><p>
</p><p>
எல் நினோ தாக்கம் குறித்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் மிக அண்மைய
உத்தியோகபூர்வ முன்னறிவிப்பு என்ன? இது அதன் உச்சபட்ச தீவிரத்தை அடைய
எதிர்பார்க்கப்படும் காலம் யாது?</p><p>

வறட்சியைத் தொடர்ந்து அக்டோபர் - நவம்பர் இடைப்பருவ காலத்தில் திடீர் வெள்ளம்
மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ளதால், மொனராகலை, பதுளை, அம்பாறை மற்றும்
மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கான முன்எச்சரிக்கை மற்றும் வெளியேற்றும்
திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதா?</p><h2>நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர்மட்டம் என்ன?</h2><p>

2026 ஜூன் 30ஆம் திகதி நடைபெற்ற முதலாவது உப குழு கூட்டத்தில் அரச
நிறுவனங்களிடம் கோரப்பட்ட செயற்றிட்டங்கள் குறித்த கால எல்லைக்குள்
பெறப்பட்டதா? அங்கீகரிக்கப்பட்ட பரிந்துரைகளின் கால அட்டவணை என்ன?

ரந்தெனிகல, விக்டோரியா, கொத்மலை உள்ளிட்ட மகாவலி நீர்த்தேக்கங்களின் தற்போதைய
நீர்மட்டம் என்ன?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69856fe7-1e6d-4d14-945d-5da6e3343348/26-6aa3a83490931.webp' /></p><p> </p><p>அனல் மின் நிலையங்களைச் சார்ந்திருப்பதால் ஏற்படும் மேலதிக
செலவுகள் எதிர்வரும் மாதங்களில் நுகர்வோரின் மின்சாரக் கட்டணத்தில் தாக்கத்தை
ஏற்படுத்துமா?

சிறுபோகப் பருவத்தில் பாசன நீர் பற்றாக்குறையால் சேதமடைந்த நெல் மற்றும்
பயிர்ச் செய்கைகளின் பரப்பளவு எவ்வளவு? </p><p>பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை
இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா? பெரும்போகத்துக்கான விதை, உர மானியம் மற்றும்
பாசன நீர் வழங்கும் திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதா? என பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T07:06:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹிஸ்புல்லா சுரங்கங்களை இடித்து அழித்ததாக அறிவித்த இஸ்ரேல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/israel-says-hezbollah-tunnels-have-been-destroyed-1789110202"></link>
            <id>https://canadamirror.com/article/israel-says-hezbollah-tunnels-have-been-destroyed-1789110202</id>
            <summary type="text">தெற்கு லெபனானில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த அலி அல்-தாஹெர் மலைத்தொடருக்கு கீழே, ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா குழுவால் கட்டப்பட்ட முக்கிய சுரங்கங்களை இடித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு லெபனானில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த அலி அல்-தாஹெர் மலைத்தொடருக்கு கீழே, ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா குழுவால் கட்டப்பட்ட முக்கிய சுரங்கங்களை இடித்துத் தள்ளியதாக இஸ்ரேல் தெரிவித்தது.</p><p>

"இது ஈரானின் நிதியுதவி மற்றும் திட்டமிடலுடன் இரண்டு தசாப்தங்களாக கட்டப்பட்ட ஒரு பயங்கரவாத உள்கட்டமைப்பு ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46115294-1f5a-43bc-b0ed-8043f9e810d7/26-6aa3a7ec56dea.webp' /></p><p> </p><p>இதை அழிப்பது "அலி அல்-தாஹிர் முகட்டின் மீது - தரைக்கு மேலேயும் கீழேயும் - செயல்பாட்டுக் கட்டுப்பாட்டை முழுமையாக்குகிறது," என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


</p><p>
லெபனானின் அரசுக்குச் சொந்தமான தேசிய செய்தி நிறுவனம், நபாத்தியே பிராந்தியத்தில் உள்ள அலி அல்-தாஹெர் முகட்டில் இஸ்ரேல் ஒரு "மாபெரும் வெடிப்பை" நடத்தியதாகவும், அது "நிலநடுக்கங்களையும் சக்திவாய்ந்த அதிர்வையும் ஏற்படுத்தியதாகவும்" செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
தெற்கு லெபனானில் உள்ள ஏ.எஃப்.பி. பத்திரிகையாளர்களும் வியாழக்கிழமை மாலை பெரும் வெடி சத்தங்களை கேட்டதாக தெரிவித்தனர். </p><p>இரண்டு கிலோமீட்டருக்கும் (1.2 மைல்கள்) அதிகமான நீளத்திற்கு விரிந்திருந்த அந்தக் கட்டமைப்பில், "ஈரானில் தயாரிக்கப்பட்ட டஜன் கணக்கான ராக்கெட்டுகள், ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள், அத்துடன் இயந்திர துப்பாக்கிகள், டஜன் கணக்கான டாங்கெதிர்ப்பு ஏவுகணைகள், மற்றும் நூற்றுக்கணக்கான கண்ணிவெடிகள் மற்றும் வெடிபொருட்கள்" இருந்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது.
</p><p>
அந்த நிலத்தடி வளாகத்தில் ஹிஸ்புல்லாவின் 'பத்ர்' பிரிவின் கட்டளை மையமும் அடங்கியிருந்தது என்று ராணுவம் மேலும் தெரிவித்தது.</p>]]></content>
            <updated>2026-09-11T07:05:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனித்து விடப்பட்டுள்ள குட்டி இளவரசி: வாழ்வை மாற்றும் மரபுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/princess-charlotte-forced-establish-identity-1789105054"></link>
            <id>https://news.lankasri.com/article/princess-charlotte-forced-establish-identity-1789105054</id>
            <summary type="text">Princess Charlotte is facing a new educational path separate from her older brother: இளவரசி சார்லட், கல்வியில், தன் அண்ணனைப் பிரிந்து தனி வழியை தேர்ந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Princess Charlotte is facing a new educational path separate from her older brother: இளவரசி சார்லட், கல்வியில், தன் அண்ணனைப் பிரிந்து தனி வழியை தேர்ந்தெடுக்கும் நிலையை அடைந்துள்ளார்.
</p><p>

ராஜ குடும்ப வாழ்க்கை வெளியிலிருந்து பார்ப்பதற்கு ஆடம்பரமாகத்தான் இருக்கிறது. என்றாலும், உள்ளே பல மரபுகள், விதிகள்...
</p><h2>
வாழ்வை மாற்றும் மரபுகள்
</h2><p>
இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் சிறு பிள்ளைகளாக இருக்கும்போது, வில்லியம் தன் தாயிடம், அம்மா, எனக்கு மன்னராக ஆசையில்லை என்று கூறுவாராம், உடனே ஹரி, உனக்கு பிடிக்கவில்லையென்றால் விட்டுவிடு, நான் மன்னராகிறேன் என்பாராம்.
</p><p>
அதனால், இளவரசர்களின் தாயான டயானா, ஹரியை, கிரேட் கிங் ஹரி என்றுதான் அழைப்பாராம்.
</p><p>
ஆனால், இன்றைய நிலை? வில்லியம் அடுத்து மன்னராக உள்ளார், ஹரி, நான் மட்டும் ஸ்பேரா? என கோபத்தில் குடும்பத்தையே பிரிந்துவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15b42f18-7ab5-4580-95b8-fb5ab9e1145e/26-6aa3953c6b60b.webp' /><br></p><p>
</p><p>
ஹரியை திருமணம் செய்த மேகனும் அப்படித்தான். ராஜ வாழ்வு சொகுசாக இருக்கும் என்று எண்ணி, திட்டமிட்டு ஹரியை திருமணம் செய்துகொண்டு, ஆனால், மூத்த ராஜ குடும்ப உறுப்பினர்களுக்கு பொறுப்புகள் அதிகம் என்றதும், சமாளிக்க முடியாமல் நாட்டைவிட்டே ஓட்டம் பிடித்தார்.</p><p>

ஆக, ராஜ குடும்பத்தைப் பொருத்தவரை, அது தங்கக்கூண்டில் அடைக்கப்பட்ட கிளியின் வாழ்க்கை போன்றதுதான் எனலாம்.
</p><h2>
தனித்து விடப்பட்டுள்ள குட்டி இளவரசி
</h2><p>
குறிப்பாக, பெண் பிள்ளைகளின் நிலைமை இன்னமும் மோசம். மகாராணியார் எலிசபெத்தின் மூத்த மகன் சார்லஸ். அவரது தங்கை இளவரசி ஆன்.</p><p>

சிறுவயதில் எல்லோரும் இளவரசர்களாகத்தான் வளர்ந்தார்கள். ஆனால், மகாராணியார் மறைந்ததும், அரியணை சார்லசுக்கு, ஆன் ஒதுங்கித்தான் ஆகவேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9514975-f66d-4a59-97c5-7a6ca37f9ed5/26-6aa3953d3cb22.webp' /><br></p><p>
</p><p>
ஆனாலும், அவர் தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை நேர்த்தியாக, முகம் சுளிக்காமல், எந்த வெறுப்போ பொறாமையோ இன்றி நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்.</p><p>

அதேபோலத்தான் இப்போது வில்லியம், கேட் தம்பதியர் குடும்பத்திலும் ஒரு விடயம் நடந்துகொண்டிருக்கிறது.
</p><p>
ஆம், நேற்று வரை ஒரே குடும்பமாக, அப்பாவின் தோளில் ஒருவரும், அம்மாவின் தோளில் ஒருவருமாக கைபோட்டுக்கொண்டு ஆனந்தமாக உலாவிவந்தார்கள் வில்லியம், கேட் தம்பதியரின் பிள்ளைகளான ஜார்ஜ், சார்லட் மற்றும் லூயிஸ்.
</p><p>
மூன்று பேரும் ஒரே பள்ளியில் படிக்க, அப்பா அல்லது அம்மா, தினமும் பிள்ளைகளை பள்ளியில் கொண்டு விட்டு, அழைத்துவந்தார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96e04b90-f80d-4b23-93b9-d46dd2d19361/26-6aa3953e1028a.webp' /><br></p><p>
</p><p>
ஆனால் இன்று, ஜார்ஜ் தனியாக Eton கல்லூரிக்கு படிக்கச் சென்றுவிட்டார். நேற்று அவரை அவருடன் இருந்த தங்கை சார்லட், இனி அவருடன் படிக்கமுடியாது. காரணம், Eton கல்லூரி ஆண்களுக்கான கல்லூரி.</p><p>

ஆக, இனி சார்லட், தன் பாட்டி இளவரசி ஆனைப்போல, தனியாக தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டாகவேண்டும். ஆம், வாழ்வு மாறிவிட்டது!</p><p>

ஆக, இன்று ஹரி ஆத்திரத்திலும் இயலாமையும் புழுங்கிக்கொண்டிருப்பதுபோல, நாளை தங்கள் பிள்ளைகளும் ஆகிவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ள வில்லியம், கேட் தம்பதியர், மூத்த மகனான ஜார்ஜை வருங்கால மன்னராக்கும் வழியிலும், மற்ற பிள்ளைகளை தத்தம் வழியிலும் வழிநடத்திக்கொண்டிருக்கிறார்கள்.</p><p>

அவ்வகையில், சார்லட், தன் தாய் தான் படித்த Marlborough பள்ளியில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
 Marlborough பள்ளியில் தன் பள்ளிப்படிப்பை முடித்த இளவரசி கேட், பின்னர் செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலையில் இணைந்தார். அங்குதான் அவர் வில்லியமை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.<br></p>]]></content>
            <updated>2026-09-11T07:05:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் சுற்றுலா பேருந்து விபத்து; பலர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tourist-bus-accident-in-switzerland-many-dead-1789103854"></link>
            <id>https://canadamirror.com/article/tourist-bus-accident-in-switzerland-many-dead-1789103854</id>
            <summary type="text">&amp;nbsp; சுவிட்சர்லாந்தின் கிராபுண்டன் மாகாணத்தில் உள்ள சுஷ் மலைக்கிராமத்திற்கு அருகே சுற்றுலாப் பயணிகள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சுவிட்சர்லாந்தின் கிராபுண்டன் மாகாணத்தில் உள்ள சுஷ் மலைக்கிராமத்திற்கு அருகே சுற்றுலாப் பயணிகள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>

இந்தப் பேருந்தில் நெதர்லாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்ததாக டச்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டச்சு சுற்றுலா நிறுவனமான OAD ஏற்பாடு செய்த பயணத்தில் அவர்கள் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2578c44-41dc-4718-a23e-13e1441df77e/26-6aa38eefe5070.webp' /></p><h2>&nbsp;நெதர்லாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள்</h2><p>

பேருந்தில் மொத்தம் 48 பேர் இருந்ததாக ‘De Telegraaf’ செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இந்த எண்ணிக்கையை சுவிஸ் காவல்துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
</p><p>
சுஷ் மற்றும் அருகிலுள்ள ஜெர்னெஸ் கிராமத்திற்கு இடையேயான சாலையில், உள்ளூர் நேரப்படி மாலை 4.45 மணியளவில் பேருந்து தடுப்பு வேலியில் மோதியதாக சுவிஸ் ஒளிபரப்பு நிறுவனமான SRF தெரிவித்துள்ளது.

விபத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளில் பல ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் SRF தெரிவித்துள்ளது.</p><p>
 
இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சுவிட்சர்லாந்து அதிபர் கை பார்மெலின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

கிராபுண்டனில் இன்று ஒரு டச்சுப் பேருந்துக்கு ஏற்பட்ட துயரமான விபத்தால் நான் மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளேன்.</p><p> 

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

விபத்துக்கான காரணம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து சூழ்நிலைகளையும் கண்டறிய சுவிஸ் அதிகாரிகள் விரிவான விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T07:03:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[Today Gold Price : தங்கம் விலையில் அதிரடி சரிவு: சவரனுக்கு ரூ.1,920 குறைவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/september-11th-gold-and-silver-price-in-chennai-1789109312"></link>
            <id>https://manithan.com/article/september-11th-gold-and-silver-price-in-chennai-1789109312</id>
            <summary type="text">இன்றைய (செப்டம்பர் 11) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. செப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய (செப்டம்பர் 11) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. </p><p>செப்டம்பர் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று தங்கம் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fd0fdc2-b058-44d3-96b8-4e0ef8fb823f/26-6aa3a6f8d126c.webp' /></p><p></p><p>
</p><p>
நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.14,255 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.880 அதிகரித்து ரூ.1,14,040 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.</p><h2>இன்றைய நிலவரம்&nbsp;</h2><p>
</p><p>
இந்நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.240 குறைந்து ரூ.14,015 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.1,920 குறைந்து ரூ.1,12,120 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8222d80e-14a8-4831-ae63-993f1cc2a85c/26-6aa3a6f98a551.webp' /></p><p></p><p> </p><p>இதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையிலும் இன்று சரிவு பதிவாகியுள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.240 குறைந்து ரூ.11,785 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.1,920 குறைந்து ரூ.94,280 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,920 அளவுக்கு விலை குறைந்திருப்பது நகை வாங்குவோர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fad0f71-fcbc-4089-b7f1-68e6e7fa8fa8/26-6aa3a6fa41233.webp' /></p><p>தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையிலும் இன்று சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.245 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T07:03:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆமை மோதிரம் பணத்தை ஈர்க்குமா? தெரிந்துகொள்ள வேண்டிய ஆன்மிக ரகசியங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/how-to-wear-a-tortoise-ring-benefits-who-avoid-1789104268"></link>
            <id>https://manithan.com/article/how-to-wear-a-tortoise-ring-benefits-who-avoid-1789104268</id>
            <summary type="text">Tortoise Ring Benefits: பொதுவாகவே மனிதர்கள் அனைவருக்கும் செல்வ செழிப்புடக் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். ஆனால் சிலர் சிலரால் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>Tortoise Ring Benefits: பொதுவாகவே மனிதர்கள் அனைவருக்கும் செல்வ செழிப்புடக் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். ஆனால் சிலர் சிலரால் எவ்வளவு கடினமாக உழைத்ததாலும் ஆசைப்பட்ட வாழ்க்கையை அடைய முடியாத நிலை இருக்கும்.</p><p>சிலரோ மிக குறைந்த முயற்ச்சியிலேயே வாழ்க்கையில் குறுகிய காலத்தில் முன்னேற்றம் அடைவார்கள் இதற்கு அவர்களின் முயற்ச்சி மிக முக்கிய காரணமாக இருந்தாலும் சில ஆன்மீக வி்டயங்களின் தாக்கமும் இருப்பதாக நம்பப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6833055a-0294-41cc-b107-736c1c10a359/26-6aa3980434134.webp' /></p><p></p><p>அந்தவகையில், சிலர் தங்களது கைகளில் ஆமை வடிவிலான மோதிரத்தை அணிந்திருப்பதை நாம் பார்த்திருக்கலாம். ஆனால், அவர்கள் ஏன் ஆமை மோதிரத்தை அணிந்திருக்கிறார்கள் என்ற கேள்வி பலருக்கும் எழுவது இயல்புதான்.</p><p> இந்த மோதிரத்தை அணிவதற்குப் பின்னால் என்ன காரணம் இருக்கிறது? ஆமைக்கும் செல்வச் செழிப்புக்கும் என்ன தொடர்பு? இதுபற்றி ஆன்மிக மற்றும் ஜோதிட நம்பிக்கைகள் என்ன சொல்கின்றன என்பதைப்&nbsp; இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>ஆமைக்கும் செல்வச் செழிப்புக்கும் என்ன தொடர்பு?</h2><p>
</p><p>
இந்து சமயப் புராணங்களில் ஆமைக்கு முக்கியமான இடம் உள்ளது. திருமாலின் தசாவதாரங்களில் ஒன்றாக கூர்ம அவதாரம் கருதப்படுகிறது. பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தைப் பெறும் நிகழ்வில், மந்தர மலையைத் தாங்குவதற்காக திருமால் ஆமை வடிவம் எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3defe82d-a65d-427e-868b-557f3b968042/26-6aa39804da74f.webp' /></p><p> </p><p>அதாவது, உலகையே தாங்கும் வலிமை, பொறுமை மற்றும் நிலைத்தன்மையின் அடையாளமாக கூர்ம அவதாரம் பார்க்கப்படுகிறது.

மேலும், ஆமை வடிவம் மகாலட்சுமியின் அருள், செல்வம் மற்றும் வளத்துடன் தொடர்புடையதாக சில பாரம்பரிய ஆன்மிக நம்பிக்கைகளில் கருதப்படுகிறது. </p><p>இதன் காரணமாகவே ஆமை வடிவிலான பொருட்களை வீட்டில் வைத்திருப்பதும், ஆமை மோதிரத்தை அணிவதும் செல்வ வளத்தை ஈர்க்கும் என்ற நம்பிக்கை தொன்று தொட்டு காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a037191-19dd-444b-9ebf-1827b968d12c/26-6aa398058ecb3.webp' /></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">ஆமை மோதிரத்தை எப்படி அணிய வேண்டும்?&nbsp;</span></p><p>
ஆமை மோதிரத்தை அணிய விரும்புபவர்கள் அதன் வடிவமைப்பிலும் சில விஷயங்களை கவனிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, ஆமையின் தலைக்குப் பின்புறத்தில் “ஸ்ரீ” என்ற எழுத்து இடம்பெற்றிருப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
</p><p>
“ஸ்ரீ” என்பது செல்வம், வளம் மற்றும் மங்களத்தைக் குறிக்கும் சொல்லாகப் பார்க்கப்படுகிறது. எனவே, ஆமை வடிவத்துடன் “ஸ்ரீ” என்ற எழுத்தும் இடம்பெற்றிருக்கும் மோதிரத்தை அணிவது சிறப்பான பலனைத் தரும் என்பது பாரம்பரிய நம்பிக்கையாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f69930cf-648e-48f2-82cf-f2e669b09abc/26-6aa398064aeb1.webp' /></p><p><b>
எந்த விரலில் அணிய வேண்டும்?</b></p><p>
ஆமை மோதிரத்தை பொதுவாக வலது கையின் நடுவிரல் அல்லது மோதிர விரலில் அணியலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், மோதிரத்தை அணியும் முறையிலும் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது.

அதாவது, மோதிரத்தில் இருக்கும் ஆமையின் தலை நம்மை நோக்கியவாறு இருக்க வேண்டும். </p><p>ஆமையின் தலை வெளிப்புறத்தை நோக்கி இல்லாமல், நம்மை நோக்கியபடி இருப்பது முக்கியம் என்று இந்த நம்பிக்கையைப் பின்பற்றுபவர்கள் கூறுகின்றனர்.

இதற்குக் காரணம், ஆமையின் தலை தன்னை நோக்கி இருப்பது செல்வம், வளம் மற்றும் நேர்மறை ஆற்றல் தன்னை நோக்கி வருவதைக் குறிக்கும் என்ற நம்பிக்கையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b18800b-d006-47d5-b64e-b6417227840c/26-6aa39806f2a91.webp' /></p><p>மேலும் ஆமை மோதிரத்தை வாங்கியவுடன் உடனடியாக அணிவதைவிட, முதலில் அதனை முறையாகச் சுத்தப்படுத்தி, வழிபாட்டுடன் அணிவது சிறந்தது.&nbsp; அதன்படி, முதலில் மோதிரத்தை காய்ச்சாத பால் மற்றும் கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளலாம். பின்னர் மகாலட்சுமியை மனதில் நினைத்து, அவருக்குரிய ஸ்தோத்திரங்களை உச்சரித்து வழிபாடு செய்ய வேண்டும்.
</p><p>
அதன் பிறகு, ஆமையின் தலை நம்மை நோக்கிய நிலையில் இருப்பதை உறுதி செய்து மோதிரத்தை அணிந்து கொள்ளலாம். இவ்வாறு முறையாக வழிபாடு செய்து அணிவதால், மகாலட்சுமியின் அருள் கிடைத்து வாழ்க்கையில் செல்வ வளமும் நன்மைகளும் பெருகும் என்பது நம்பிக்கை.
</p><h2>
ஆமை மோதிரம் அணிந்தால் அதிர்ஷ்டம் வருமா?
</h2><p>ஆமை மோதிரத்தை அணிந்தால் அதிர்ஷ்டம் வரத் தொடங்கும், பணவரவு அதிகரிக்கும், செல்வச் செழிப்பு பெருகும் என்று பலர் நம்புகின்றனர். குறிப்பாக, பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு, பணம் சேரத் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

“பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும்” என்று சொல்லும் அளவுக்கு இந்த மோதிரத்திற்கு சக்தி இருப்பதாகவும் சில ஆன்மிக நம்பிக்கைகளில் குறிப்பிடப்படுகின்றது.</p><p>அதாவது, திடீர் அதிர்ஷ்டம், எதிர்பாராத பணவரவு, தொழிலில் முன்னேற்றம், செல்வ வளம் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பை இது உருவாக்கும் என்று நம்பப்படுகிறது.
</p><p>
மேலும், ஆமை என்பது பொறுமை, அமைதி மற்றும் நிலைத்தன்மையின் அடையாளமாக கருதப்படுவதால், இதனை அணிவதால் மனம் தெளிவடைந்து அமைதியாக இருக்கும் என்றும் சிலர் நம்புகின்றனர்.மனதில் இருக்கும் குழப்பங்கள் குறைந்து, தெளிவாகச் சிந்திக்கும் தன்மை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b38f64dd-3d11-441d-a35a-31c23e1659f5/26-6aa39807a7af8.webp' /></p><p></p><p><b>
எந்த ராசிக்காரர்கள் ஆமை மோதிரத்தை அணியக்கூடாது?</b></p><p>
ஆமை தண்ணீரில் வாழும் உயிரினம் என்பதால், சில ஜோதிட நம்பிக்கைகளில் இதனை நீர் ராசிகளுடன் தொடர்புபடுத்திப் பார்க்கின்றனர்.

அதன்படி, கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் ஆகியவை நீர் ராசிகளாகக் கருதப்படுகின்றன.</p><p> எனவே, இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் ஆமை மோதிரம் சாதகமாக இல்லாமல் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று சில ஜோதிட நம்பிக்கைகள் கூறுகின்றன.இதனால், கடகம், விருச்சிகம் மற்றும் மீன ராசிக்காரர்கள் ஆமை மோதிரத்தை அணிவதைத் தவிர்ப்பது நல்லது.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T07:00:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மண்டாடி திரைப்படத்தின் முதல் நாள் வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/mandaadi-movie-first-day-box-office-1789104810"></link>
            <id>https://cineulagam.com/article/mandaadi-movie-first-day-box-office-1789104810</id>
            <summary type="text">அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரியின் மிரட்டலான நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்குகளில் வெளியான மண்டாடி திரைப்படத்தின் முதல் நாள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரியின் மிரட்டலான நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்குகளில் வெளியான மண்டாடி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><p>
</p><h2>
சூரி
</h2><p>
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த <a href="https://tamil.news18.com/entertainment/mandadi-victory-soori-dedicates-it-to-fishermen-nw-kls-ws-l-2206410.html" target="_blank">சூரி</a>, இன்று முன்னணி ஆக்ஷன் ஹீரோ என்கிற இடத்தை பிடித்துள்ளார். விடுதலை 1 &amp; 2, மாமன், கருடன் என தொடர்ந்து ஹீரோவாக வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புடன் நேற்று வெளிவந்த திரைப்படம்தான் மண்டாடி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26643c9a-dd24-4213-9985-0b5b47c583fe/26-6aa392add3cf5.webp' /></p><p>
</p><h2>
மண்டாடி
</h2><p>
அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவான இப்படத்தை RS Infotainment நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சூரியுடன் இணைந்து தெலுங்கு நடிகர் சுஹாஸ், நடிகை மஹிமா நம்பியார் மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e1099a5-2f8b-4918-a37b-3593020f08ac/26-6aa392ae9d3de.webp' /></p><p>படகு போட்டியை மையமாக கொண்டு உருவான இப்படத்திற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் முதல் நாளே இப்படத்திற்கு உலகளவில் சிறப்பான வசூல் கிடைத்துள்ளது.
</p><h3>
பாக்ஸ் ஆபிஸ்
</h3><p>
ஒவ்வொரு திரைப்படத்தின் வசூலும் மிகவும் முக்கியமான ஒன்று. அதிலும் முதல் நாள் உலகளவில் எவ்வளவு வசூல் வந்துள்ளது என்பது அனைத்தையும் விட முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ce45236-d50c-4686-8818-e7fa1e08b254/26-6aa392ad25b11.webp' /></p><p></p><p>இந்நிலையில், சூரியின் மண்டாடி திரைப்படம் முதல் நாள் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாள் ரூ. 8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கான சிறந்த ஓப்பனிங் ஆகும். வரும் நாட்களில் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-11T07:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் புதிதாக சிம் அட்டை வாங்குவோர் கவனத்திற்கு..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/illegal-activities-using-fake-sim-cards-trc-1789104547"></link>
            <id>https://tamilwin.com/article/illegal-activities-using-fake-sim-cards-trc-1789104547</id>
            <summary type="text">புதிதாக சிம் அட்டைகளை விநியோகிப்பது தொடர்பில் புதிய ஒழுங்குமுறை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு த...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிதாக சிம் அட்டைகளை விநியோகிப்பது தொடர்பில் புதிய ஒழுங்குமுறை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>முறையற்ற வழிகளில் பெறப்பட்ட சிம் அட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோதச் செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) தெரிவித்துள்ளது.</p><h2>சிம் அட்டைகள் தொடர்பான ஒழுங்குமுறை</h2><p>இதன் காரணமாக, சிம் அட்டைகள் தொடர்பான ஒழுங்குமுறை நடைமுறைபடுத்தப்பட்டு வருவதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைமை பணிப்பாளர் நாயகம் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார்.</p><p> </p><p>நேற்று (10) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f0f0957-d85a-42a0-9ced-bff25addcd25/26-6aa3a62ca80c6.webp' />&nbsp;</p><p>சிம் அட்டைகளை விநியோகிப்பதற்கான விதிமுறைகளை நாங்கள் புதுப்பித்துள்ளோம். ஏனெனில், பொலிஸ் போன்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களிடமிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு எதிராக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதனால் சிம் விதிமுறைகளைப் புதுப்பித்துள்ளோம்.</p><p>கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் சிம் அட்டைகளைப் பயன்படுத்திச் செய்யப்படும் சட்டவிரோதச் செயல்பாடுகள் மிகவும் அதிகரித்துள்ளதாகவும், கூறப்பட்டது. </p><p>குறிப்பாக இது நடைமுறைக்கு வரும் நாளிலிருந்து பெரும்பாலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் புதிதாகச் சிம் அட்டைகளைப் பெறுபவர்கள் தங்களது நேரடிப் புகைப்படத்துடன் மட்டுமே அந்தச் சிம் அட்டையைப் பெற முடியும்.</p><h2>தொலைபேசி மற்றும் சிம் பயனர்களுக்கான அறிவிப்பு</h2><p>அதற்குப் பிறகு, 2027-ல் அனைத்து தொலைபேசி மற்றும் சிம் பயனர்களுக்கும் 100 சதவீத வாடிக்கையாளர் அடையாளத்தை உறுதிசெய்யும் ஒரு திட்டத்தை நாங்கள் செயல்படுத்த விரும்புகிறோம்.</p><p>
இது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சாதாரண பொதுமக்களுக்கோ அல்லது வெளிநாட்டவர்களுக்கோ எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில் இது நடைமுறைப்படுத்தப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/147a0d60-a37c-44bc-b645-573b7772c112/26-6aa3a62d7f55a.webp' /></p><p> நாட்டில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு சிம்களைப் பயன்படுத்துவதைக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கம்.</p><p>
நாட்டில் கிட்டத்தட்ட 3 கோடி மக்கள் இந்த சிம்களைப் பயன்படுத்துகின்றனர். சேவை தரம் குறைவாக இருப்பதாக மக்களிடமிருந்து முறைப்பாது வருகின்றன.</p><p>தற்போது சேவை வழங்குநர்களின் தரவுகளின் அடிப்படையிலேயே இயங்கி வருவதனால் அதனை மேலும் துல்லியமாகக் கண்டறிவதற்கான கட்டமைப்பு எம்மிடம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 </p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T06:58:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[AI இற்கு எதிராக ரோபோக்கள் போராட்டம்! வரலாகும் காணொளி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/robots-protest-against-ai-poland-viral-video-1789109656"></link>
            <id>https://jvpnews.com/article/robots-protest-against-ai-poland-viral-video-1789109656</id>
            <summary type="text">&amp;nbsp; போலந்து நாட்டின் டிஜிட்டல் விவகாரத் துறை அலுவலக வாயிலில், மனிதர்களின் வேலைகளைக் காப்பாற்றும் வகையில் செய்யறிவுப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; போலந்து நாட்டின் டிஜிட்டல் விவகாரத் துறை அலுவலக வாயிலில், மனிதர்களின் வேலைகளைக் காப்பாற்றும் வகையில் செய்யறிவுப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோஷமெழுப்பியவாறு ரோபோக்கள் கையில் கொடிகளைப் பிடித்துக் கொண்டு போராட்டத்தில் இறங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
ரோபோக்களின் போராட்டத்தின் விடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.&nbsp; &nbsp;கிட்டத்தட்ட 30 ரோபோக்கள் போலந்து நாட்டின் வர்சா மாவட்டத்தில் உள்ள மத்திய அரசு அலுவலக வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82313caa-74d4-4faa-936f-e02ed4013ecc/26-6aa3a599e2f5b.webp' /></p><h2> மனித வளம் வெளிச்சம் போட்டுக் காட்டவே&nbsp; போராட்டம்</h2><p>

ரோபோக்கள் மூலம், மனிதர்களின் வேலையை தானியங்கி முறையில் செய்து, மனிதர்களின் வேலையைப் பறிக்கும் நிலை அசுர வேகத்தில் நடந்தேறி வரும் நிலையில், அதனை எதிர்த்து, உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.</p><p>இதில் ரோபோக்கள் கைகளில் கொடிகளை வைத்துக் கொண்டு, வட்டமாக சுற்றி சுற்றி நடந்து, ஒலிபெருக்கிகள் மூலம் முழக்கங்களை எழுப்பின.

பொதுவாக மனிதர்கள் இந்தப் போராட்டத்தை மேற்கொள்ளலாம்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Robots in Poland protest against AI replacing human beings   iPhone Republicans #Sardar2 https://t.co/uIEZEUG0ep</p>&mdash; Tanishka Bakshi (@Soldiers_View) <a href="https://x.com/Soldiers_View/status/2097929071095394806?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>ஆனால் யார் கேட்பது, யார் பார்ப்பது, அதுவே, செயற்கை நுண்ணறிவால் இயங்கும் ரோபோக்கள் போராடினால் என்று மாற்றி யோசித்ததே இந்த போராட்டத்துக்கான காரணம் என ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.
</p><p>
செயற்கை நுண்ணறிவும் ரோபோக்களும், தொழிற்சாலைகளில் கோலோச்சுவதால் மனித வளம் எவ்வாறு பாதிக்கிறது&nbsp; &nbsp;என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டவே இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள்&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T06:51:11+00:00</updated>
        </entry>
    </feed>
