<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-31T15:05:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் போதனா வைத்தியசாலையில் தப்பியோடிய கைதி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/prisoner-escaped-jaffna-teaching-hospital-arrest-1788183049"></link>
            <id>https://jvpnews.com/article/prisoner-escaped-jaffna-teaching-hospital-arrest-1788183049</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிய நிலையில், இளவா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிய நிலையில், இளவாலை பகுதியில் வைத்து இன்று (31) மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>


2021ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றத்திற்காக குறித்த நபருக்கு 24 வருட சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்டவருக்கு 5 இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bd42ab4-7f8e-4fff-b4c4-ec9c2d78c736/26-6a95820b2e1da.webp' /></p><h2>காவலர்களின் பாதுகாப்புடன்&nbsp; வைத்தியசாலையில் அனுமதி</h2><p>
</p><p>


இந்நிலையில், மறுநாள் திடீர் சுகவீனம் ஏற்பட்டதாகக் கூறி சிறைக்காவலர்களின் பாதுகாப்புடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட கைதி, ஞாயிற்றுக்கிழமை மதியம் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.</p><p></p><p>
</p><p>


இதனையடுத்து சிறைக்காவலர்கள் மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் விசேட குழுவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், இளவாலை பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் மறைந்திருந்த நிலையில் கைதி கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>


சிறைக்காவலர்களின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்றமை தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராக மேலதிக வழக்குத் தாக்கல் செய்து நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-31T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[முத்தரப்பு டி20: நமீபியாவின் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஜிம்பாப்வே வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ryan-burl-smash-57-runs-helps-zim-195-vs-namibia-1788186985"></link>
            <id>https://news.lankasri.com/article/ryan-burl-smash-57-runs-helps-zim-195-vs-namibia-1788186985</id>
            <summary type="text">Zimbabwe 195 vs namibia in tri-series t20: நமீபிய அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 போட்டியில், ரியான் பர்ல் 32 பந்துகளில் 57 ஓட்டங்கள் விளாசினார்.

Wi...</summary>
            <content type="html"><![CDATA[<p>Zimbabwe 195 vs namibia in tri-series t20: நமீபிய அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 போட்டியில், ரியான் பர்ல் 32 பந்துகளில் 57 ஓட்டங்கள் விளாசினார்.
</p><p>
Windhoek-யில் நடந்து வரும் நமீபிய அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 போட்டியில், ரியான் பர்ல் அரைசதம் விளாச ஜிம்பாப்வே 195 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><h2>கர்ரன்,&nbsp;பென்னெட் </h2><p>
முத்தரப்பு டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் நமீபியா, ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0c1bee6-c3f0-4943-b208-dee6718f5b1d/26-6a95916c96f23.webp' /></p><p></p><p>

முதலில் துடுப்பாடிய ஜிம்பாப்வே அணியில் பென் கர்ரன் 38 (22) ஓட்டங்களும், பிரையன் பென்னெட் 32 (21) ஓட்டங்களும் விளாசினர். </p><p>

பின்னர் வந்த மயேர்ஸ் (2), ரஸா (0), மதேவேரே (2) ஆகியோர் சொதப்பினர். அப்போது கைகோர்த்த ரியான் பர்ல், பிராட் எவன்ஸ் நமீபியா பந்துவீச்சை சிதறடித்தனர்.&nbsp;</p><h2>பர்ல்&nbsp;சரவெடி </h2><p> 

இந்தக் கூட்டணியின் மிரட்டலான ஆட்டத்தின் மூலம் சரிவில் இருந்து மீண்ட ஜிம்பாப்வே, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ஓட்டங்கள் குவித்தது.</p><p>

ரியான் பர்ல் 32 பந்துகளில் 57 ஓட்டங்களும் (1 சிக்ஸர், 7 பவுண்டரிகள்), பிராட் எவன்ஸ் 25 பந்துகளில் 37 ஓட்டங்களும் (2 சிக்ஸர், 2 பவுண்டரிகள்) விளாசினர்.

எராஸ்மஸ் 3 விக்கெட்டுகளும், பெர்னார்ட், ஜேஜே ஸ்மித் மற்றும் மேக்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5d98a80-ebad-417c-a2f3-724738c10127/26-6a959202001f0.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T14:36:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026இல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சூட்டப்பட்ட மகுடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/crown-bestowed-upon-maithripala-sirisena-in-2026-1788186566"></link>
            <id>https://tamilwin.com/article/crown-bestowed-upon-maithripala-sirisena-in-2026-1788186566</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு “மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி” என்ற கௌரவப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள அலரி மாளிகையில் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு “மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி” என்ற கௌரவப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
கொழும்பிலுள்ள அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு குறித்த கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.
</p><h2>
முன்னாள் ஜனாதிபதிக்கு கிடைத்த பட்டம்</h2><p>

மேலும்,'KGF' திரைப்படத் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமான இந்திய நடிகர் கருடா ராம் உள்ளிட்ட சர்வதேச விருந்தினர்களும், இலங்கை மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வர்த்தகத் தலைவர்கள், தொழில்முனைவோர், பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்சார் நிபுணர்கள் மற்றும் பிரமுகர்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/234c8c3c-26a5-4a1a-a220-3e24ec839320/26-6a9590332cbe0.webp' /></p><p> 

இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு “மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி” என்ற கௌரவப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T14:32:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடகங்களில் பிரபலமான இளம் பெண் ; மரத்தில் கட்டி வைத்து தீ வைத்த கொடூரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/punjab-social-media-influencer-manjit-kaur-assault-1788181311"></link>
            <id>https://jvpnews.com/article/punjab-social-media-influencer-manjit-kaur-assault-1788181311</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியா சண்டிகரில் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்த 28 வயது இளம் பெண் மஞ்சீத் கவுரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியா சண்டிகரில் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்த 28 வயது இளம் பெண் மஞ்சீத் கவுரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, </p><p>
 
கடந்த ஜூன் மாதம் அவர் கடத்தப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், சுமார் இரண்டு மாதங்கள் மருத்துவமனையில் உயிருக்கு போராடிய அவர் ஆகஸ்ட் 26-ம் தேதி சண்டிகரில் உள்ள PGIMER மருத்துவமனையில் உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b61f601e-dc63-4173-b524-2b1c33cc967d/26-6a957b40ea12f.webp' /></p><h2>&nbsp;இரண்டு மாதங்கள் உயிருக்கு போராடிய&nbsp;&nbsp;இளம் பெண்</h2><p>
</p><p> 
மஞ்சீத்தின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவில், அவரது தோழி, “அவர் விரைவில் நடந்ததை அவருடைய வார்த்தைகளிலேயே உங்களிடம் சொல்வார்” என்று கூறியிருந்தார். ஆனால் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.
</p><p> 
அவரது தாயார் அளித்த புகாரின்படி, ஜூலை 3-ம் தேதி சண்டிகரின் செக்டர் 34 பகுதியில் இருவரை சந்திக்க சென்ற மஞ்சீத்தை, ஷுபி மற்றும் பிண்டா ஆகியோர் காரில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.</p><p></p><p> </p><p>பின்னர் பஞ்சாபின் ரூப்நகர் மாவட்டம் மொரிந்தாவுக்கு அழைத்து சென்று தாக்கி, மரத்தில் கட்டி தீ வைத்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> அங்கு வந்த நண்பர் ஒருவர் போர்வையை பயன்படுத்தி தீயை அணைத்ததாக கூறப்படுகிறது.

பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற மஞ்சீத், ஆகஸ்ட் 5-ம் தேதி சிறிது நேரம் சுயநினைவு பெற்று குடும்பத்தினரிடம் சம்பவத்தை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><p> </p><p>பின்னர் உடல்நிலை மோசமடைந்து அவர் உயிரிழந்தார்.
 
இந்த வழக்கில் கடத்தல், கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.</p><p> CCTV காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் சிக்கி அவுஸ்திரேலியாவில் வசித்த யாழ்ப்பாண குடும்பம் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-family-in-austra-disappears-in-nepal-floods-1788184460"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-family-in-austra-disappears-in-nepal-floods-1788184460</id>
            <summary type="text">நேபாள–திபெத் எல்லைப் பகுதியில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளத்துக்குப் பின்னர்,ஆயிரக்கணக்கானோர் காணாமற்போயுள்ளனர்.


 அந்த வகையில் சிட்னியில் வச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாள–திபெத் எல்லைப் பகுதியில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளத்துக்குப் பின்னர்,ஆயிரக்கணக்கானோர் காணாமற்போயுள்ளனர்.
</p><p>

 அந்த வகையில் சிட்னியில் வசிக்கும் இலங்கைத் தமிழரான சந்திரசேகரன் முரளிதரன் (47), அவரது மனைவி ஷைலஜா முரளிதரன் (42) மற்றும் அவர்களது மகன்கள் அஷ்வின் (14), ஆருஷ் (11) ஆகிய நால்வரும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>நம்பிக்கையுடன் காத்திருக்கும் உறவுகள்</h2><p>அவுஸ்திரேலிய ஊடகங்கள் இந்தக் குடும்பம் காணாமல் போனதை உறுதிப்படுத்தியுள்ளன. 



எனினும், குடும்பத்தினர் உயிரிழந்ததாக இதுவரை அதிகாரபூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/961fbdbe-6a40-4a49-9f71-fce8285d5ebb/26-6a9589733447e.webp' /></p><p> </p><p>அவர்கள் காணாமல் போயுள்ள நிலையில், உறவினர்கள் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் தகவலுக்காக காத்திருக்கின்றனர்.</p><p>


இதேவேளை நோபாள வெள்ள பேரழிவில் சிக்கி அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 39 பேர் காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T14:28:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜீ தமிழில் முடிவுக்கு வரும் முக்கிய சீரியல்! கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/zee-tamil-veera-serial-ending-soon-1788185451"></link>
            <id>https://cineulagam.com/article/zee-tamil-veera-serial-ending-soon-1788185451</id>
            <summary type="text">டிவி சேனல்களுக்கு நடுவே தொடர்ந்து போட்டி இருந்து வருவது எல்லாருக்கும் தெரிந்தது தான். டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணிக்கு வருவதற்காக தொடர்ந்து சேனல்கள் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>டிவி சேனல்களுக்கு நடுவே தொடர்ந்து போட்டி இருந்து வருவது எல்லாருக்கும் தெரிந்தது தான். டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணிக்கு வருவதற்காக தொடர்ந்து சேனல்கள் அனைத்தும் போட்டி போட்டுக் கொண்டு புதுப்புது நிகழ்ச்சிகளாக அறிமுகப்படுத்தி வருகின்றன.</p><p>மேலும் பழைய சீரியல்களை முடித்துவிட்டு புது சீரியல்களை அறிமுகம் செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0d48ade-e084-4b93-8fb8-bdc41ae863d6/26-6a958b6cb44b1.webp' /></p><p>
</p><h2>வீரா
</h2><p>
அந்த வரிசையில் தற்போது ஜீ தமிழில் ஒரு முக்கிய சீரியல் முடிக்கப்பட இருக்கிறது.
</p><p>
வீரா சீரியல்தான் விரைவில் முடிவுக்கு வரப் போகிறதாம். இந்த தகவல் ரசிகர்களை கடும் அதிர்ச்சி ஆக்கி இருக்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/023da4f9-ce5b-400e-8390-3e6318e96eff/26-6a958b6d902b6.webp' /></p>]]></content>
            <updated>2026-08-31T14:10:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாஸ்கரன் கந்தையா பங்கேற்பில் கோலாகலமாக நிறைவடைந்த கால்பந்தாட்ட போட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/football-matchparticipation-of-bhaskaran-kandiah-1788184718"></link>
            <id>https://tamilwin.com/article/football-matchparticipation-of-bhaskaran-kandiah-1788184718</id>
            <summary type="text">1999ஆம் ஆண்டு மடுக்கோவிலில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூறும் வகையில், “ 1999ஆம் ஆண்டு மடு உறவுகள் கால்பந்தாட்ட போட்டி”&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>1999ஆம் ஆண்டு மடுக்கோவிலில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூறும் வகையில், “ 1999ஆம் ஆண்டு மடு உறவுகள் கால்பந்தாட்ட போட்டி”&nbsp; கோலாகலமாக இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>இந்த போட்டிகள்&nbsp; நேற்று(31.08.2026) தட்சனாமருதமடு ஐக்கிய விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இளம் தலைமுறையினரிடையே விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், கடந்த கால வடுக்களை நினைவுகூறும் வகையிலும், இந்த கால்பந்தாட்டத் தொடர் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
</p><h2>
மன்னாரில் இடம்பெற்ற கால்பந்தாட்டம்</h2><p>
இதற்கமைய, இந்த வருடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போட்டியில் பல்வேறு அணிகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6956d17e-195d-4732-b6fd-16500dceddf3/26-6a958947eb51b.webp' /></p><p>
</p><p>
இந்த போட்டியின் பிரதான விருந்தினர்களாக ஐ.பி.சி தமிழ் ஊடக நிறுவனத்தின் தலைவர் பாஸ்கரன் கந்தையா கலந்துக்கொண்ட நிலையில், கௌரவ விருந்தினர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தியிருந்தனர்.</p><p>

இந்த கால்பந்தாட்டப் போட்டி நேற்று(31.08.2026) பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
</p><p>
போட்டியில் வெற்றிப்பெற்ற அணிக்கு கேடையங்களும் சிறப்பு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92917c66-9f5d-43f8-89c2-c357ba52a960/26-6a958948e3788.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14a09e55-353e-4b07-9c29-45a1a855d5d7/26-6a958949c21fe.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T14:05:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளம் பெண் ஓட்டிய காரினால் 9 மாத குழந்தை பரிதாப மரணம்: விசாரணையில் தெரிய வந்த விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/women-arrested-in-usa-child-death-of-car-hitting-1788178781"></link>
            <id>https://news.lankasri.com/article/women-arrested-in-usa-child-death-of-car-hitting-1788178781</id>
            <summary type="text">Two women arrested in new jersey for child death of car hitting: அமெரிக்காவில் பெண்ணொருவர் காரினால் மோதியதில் ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற...</summary>
            <content type="html"><![CDATA[<p>Two women arrested in new jersey for child death of car hitting: அமெரிக்காவில் பெண்ணொருவர் காரினால் மோதியதில் ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.</p><p>


அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் பார்க்கிங் பகுதியில் பெண்ணொருவர், கார் மூலம் மோதியதில் ஆண் குழந்தை உயிரிழந்தது.</p><p>


</p><h2>நியூ ஜெர்சி</h2><p>நியூ ஜெர்சியின் ஜாக்சன் டவுன்ஷிப்பில் உள்ள 'NPGS' என்ற Kosher மாளிகைக்கடை உள்ளது. 

இதன் வாகன நிறுத்துமிடத்தில் ஒரு பெண் தனது 9 மாத ஆண் குழந்தையையும், 5 வயது மகளையும் தள்ளுவண்டியில் வைத்து அழைத்துச் சென்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e359451-0f3a-43f4-a405-ef2d11abffc8/26-6a95716166910.webp' />&nbsp;</p><p></p><p>
அப்போது கார் ஒன்று அவர்கள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் குறித்த ஆண் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. </p><p>

மேலும் குழந்தையும் தாயும், அவரது ஐந்து வயது மகளும் காயமடைந்தனர். இதனையடுத்து மரியா கோபோன்-குஸ்மான் (20) என்ற பெண்ணும், லசாரோ ஃப்ளோரஸ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். </p><h2>

குற்றச்சாட்டுகள் </h2><p>மரியாவிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. </p><p>

பின்னர் ஓட்டுநர் உரிமம் இல்லாமலேயே வாகனத்தை இயக்கியது, மனித உயிரிழப்பிற்கு காரணமான செயல் மற்றும் வாகனத்தைக் கொண்டு தாக்குதல் நடத்தியது ஆகிய குற்றச்சாட்டுகள் ஃப்ளோரஸ் மீதும் சுமத்தப்பட்டுள்ளன. </p><p>

 தற்போது அவர்கள் ஓஷன் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் மற்றும் சிறைக்காவல் தொடர்பான விசாரணைக்காகக் காத்திருக்கின்றனர். 

இதற்கிடையில், இந்த விபத்து குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06579ce1-9c0b-41ef-a283-b3113246b448/26-6a9571609f0d3.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T14:05:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிர்கிஸ்தான் வந்தடைந்த புடின்: தலைவர்கள் ஜி ஜின்பிங், நரேந்திர மோடியுடன் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/vladimir-putin-arrives-in-kyrgyzstan-sco-summit-1788184598"></link>
            <id>https://news.lankasri.com/article/vladimir-putin-arrives-in-kyrgyzstan-sco-summit-1788184598</id>
            <summary type="text">Vladimir Putin arrives in kyrgyzstan for sco summit: ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் SCO உச்சிமாநாட்டிற்காக கிர்கிஸ்தான் வந்தடைந்தார். 

SCO உச்சி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Vladimir Putin arrives in kyrgyzstan for sco summit: ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் SCO உச்சிமாநாட்டிற்காக கிர்கிஸ்தான் வந்தடைந்தார். </p><p>

SCO உச்சி மாநாடு மற்றும் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை ஆகியவற்றில் கலந்துகொள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கிர்கிஸ்தான் வந்தடைந்தார்.&nbsp;</p><h2>கிர்கிஸ்தான்&nbsp;வருகை </h2><p> 

ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் SCO எனும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார். 

இதற்காக அவர் கிர்கிஸ்தான் நாட்டிற்கு திங்களன்று வந்தடைந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f4c3ed2-edda-4489-a061-02c4ecf00e91/26-6a9589ac45ad8.webp' />&nbsp;</p><p></p><p>உச்சி மாநாடு மட்டுமின்றி சீனா, இந்தியா மற்றும் பிற நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்பிலும் புடின் கலந்துகொள்கிறார்.
</p><p>
தலைவர்களிடையே நீண்ட காலமாக தாமதமாகி வரும் Power of Siberia 2 இயற்கை எரிவாயு குழாய் திட்டம் குறித்த விவாதம் நடைபெற உள்ளது.
</p><p>
முதலில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்திக்கும் புடின், அதனைத் தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச உள்ளார். </p><p>

SCO உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பிப்ரவரி 2026-யில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய போர் தொடங்கியதில் இருந்து, முதன்முறையாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானை ரஷ்ய ஜனாதிபதி புடின் சந்திக்கவுள்ளார். </p><p>

அத்துடன் கருங்கடல் பாதுகாப்பு மற்றும் உக்ரைன் போர் குறித்தும் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனுடன் புடின் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T14:00:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்களின் திருமண வயதை உயர்த்த வேண்டும் - சட்டமன்றத்தில் தவெக எம்எல்ஏ கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/mla-request-to-increase-women-marriage-age-to-21-1788184734"></link>
            <id>https://ibctamilnadu.com/article/mla-request-to-increase-women-marriage-age-to-21-1788184734</id>
            <summary type="text">tvk mla request to increase women marriage age to 21: பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என தவெக எம்எல்ஏ சத்யா கோரிக்கை.விடுத்துள்ளார்.  
...</summary>
            <content type="html"><![CDATA[<p>tvk mla request to increase women marriage age to 21: பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என தவெக எம்எல்ஏ சத்யா கோரிக்கை.விடுத்துள்ளார். </p><h3> 

பெண்களின் திருமண வயதை உயர்த்த கோரிக்கை</h3><p> 

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாற்றுத் திறனாளிகள், மதுவிலக்கு, சமூகநலன் வேளாண்மைத்துறை மானிய கோரிக்கை இன்று நடைபெற்றது. </p><p>

இதில் பேசிய தவெகவை சேர்ந்த கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சத்யா, இன்று இளமை திருமணம் என்பது பரவலாக காணப்படுகிறது. மன பக்குவமின்மை, குடும்ப வறுமை, சொந்தம் விட்டு போகக்கூடாது, சொத்துகள் வெளியே சென்று விடக்கூடாது போன்ற காரணங்களால் இந்த இளமைத் திருமணம் ஆங்காங்கே பரவலாக நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b59a94f7-c624-4b03-a797-c44ce2c514f3/26-6a95889fa783c.webp' /></p><p>

18 வயது உடையவர்களில் கிட்டத்தட்ட 25% பேர்கள் இந்த இளமைத் திருமணத்தை மேற்கொள்கின்றனர்.

இந்த இளமைத் திருமணங்களில் பெண்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். உடலாலும், மனதாலும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். </p><p>

கணவன் மனைவிகளுக்கு இடையே பல்வேறு விதமான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீதிமன்றம் வரை வந்து பிரிந்து வாழும் நிலை இன்று அதிகம் ஏற்படுகின்றது.
</p><p>
இன்னும் கொடியது ஆங்காங்கே குழந்தை திருமணம் நடைபெறுகிறது. அது இன்னும் பல்வேறு பிரச்சனைகளை பெண் குழந்தைகளுக்கு ஏற்படுத்துகிறது.</p><p> 

16 வயதில் திருமணம், 17 வயதில் குழந்தை, 18 வயதில் ஒரு வயது குழந்தை, அந்த 18 வயது குழந்தை ஒரு வயது குழந்தையோடு விளையாடுகிறது.</p><p>

ஒரு வயது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் உடல் உபாதைகளால் அழுகிறது என்று கூடத் தெரியாத அளவுக்கு பல்வேறு பிரச்சனைகள் உள்ளது.</p><p>

ஆகவே, இது போன்ற பிரச்சனைகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பெண்ணின் திருமண வயது 18 என்கிற இந்த சட்டத்தை 20 அல்லது 21 வயதிற்கு கண்டிப்பாக உயர்த்தி தர வேண்டும்" என கூறியுள்ளார்.&nbsp;</p><p>இந்தியாவில் தற்போது பெண்களின் திருமண வயது 18 ஆகவும், ஆண்களின் திருமண வயது 21 ஆகவும் உள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T14:00:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[70 பவுண் நகை.... ஆடம்பர கார்; வரதட்சணை கொடுமையால் வாழ்வை முடித்த ஆசிரியை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chennai-teacher-ends-her-life-due-dowry-harassment-1788182288"></link>
            <id>https://jvpnews.com/article/chennai-teacher-ends-her-life-due-dowry-harassment-1788182288</id>
            <summary type="text">70 பவுண் நகை மற்றும் ஆடம்பர கார் என்பன வரதட்சணையாக கொடுத்தும், வரதட்சணை கீட்டு மாப்பிள்ளை வீட்டில் தொல்லை செய்ததால் ஆசிரியை தற்கொலை செய்த சம்பவம் அதிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>70 பவுண் நகை மற்றும் ஆடம்பர கார் என்பன வரதட்சணையாக கொடுத்தும், வரதட்சணை கீட்டு மாப்பிள்ளை வீட்டில் தொல்லை செய்ததால் ஆசிரியை தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p> 

சென்னை கோவிலம்பாக்கத்தில் 27 வயதான தனியார் பள்ளி ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 
 
 திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில், ஒரு வயது ஆண் குழந்தை ஒன்றும் உள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் ,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5df4364-6d86-450f-8a11-7315993b6ae0/26-6a957f11dc514.webp' /></p><h2>தொடர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமை</h2><p>கணவர் மற்றும் மாமியார் வீட்டார் தொடர்ந்து வரதட்சணை கேட்டு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்தியதாக புவனேஸ்வரியின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
</p><p> 
எம்.எஸ்சி., பி.எட். படித்திருந்த புவனேஸ்வரி தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த 2024 செப்டம்பரில் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.</p><p></p><p> </p><p>திருமணத்தின்போது அவரது குடும்பத்தினர் சுமார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள கார், 50 சவரன் தங்க நகைகள் வழங்கியதாகவும், மணமகனுக்கு 20 சவரன் நகைகள் கொடுத்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>
 
இருப்பினும், திருமணத்திற்குப் பிறகும் கூடுதல் வரதட்சணை கேட்டு தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டதாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.</p><p></p><p> </p><p>குழந்தையின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு பிறகு தம்பதியிடையே தகராறு ஏற்பட்டதாகவும், குழந்தைக்கு புவனேஸ்வரியின் பெற்றோர் தங்கச்சங்கிலி வழங்கியதை தொடர்ந்து பிரச்சினை தீவிரமானதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
புவனேஸ்வரியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஏழு ஆண்டுகளுக்குள் இயற்கைக்கு மாறான மரணம் ஏற்பட்டுள்ளதால், வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது</p>]]></content>
            <updated>2026-08-31T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தப்பியோடிய கைதி பற்றைக்காட்டிற்குள் மறைந்திருந்த நிலையில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/escaped-prisoner-in-jaffna-arrested-1788182901"></link>
            <id>https://ibctamil.com/article/escaped-prisoner-in-jaffna-arrested-1788182901</id>
            <summary type="text">யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி
தப்பியோடிய நிலையில், இளவாலை பகுதியில் வைத்து மீள கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி
தப்பியோடிய நிலையில், இளவாலை பகுதியில் வைத்து மீள கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
யாழ்ப்பாணம் இளவாலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது
சிறுமியை கடந்த 2021ஆம் ஆண்டு பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்திய
குற்றத்திற்காக 24 வருட சிறைத்தண்டனையும் , பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 இலட்ச
ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், நஷ்ட ஈட்டை வழங்க தவறின் மேலும் 3
ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என யாழ்ப்பாண மேல் நீதிமன்ற
நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்து இருந்தது.
</p><p>
</p><h2>யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதி</h2><p>அந்நிலையில் மறுநாள் சனிக்கிழமை திடீர் சுகவீனம் என கூறி
கைதி, சிறைக்காவலர்களின் பாதுகாப்புடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட நிலையில் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் குறித்த கைதி
வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b5e4c63-114d-4b41-b5fd-394b70cf96da/26-6a9584cdce75d.webp' /></p><p>
</p><p>
கைதி தப்பிச் சென்ற நிலையில் ,சிறைக்காவலர்கள் தேடுதல் நடவடிக்கையில்
ஈடுபட்டதுடன் , யாழ்ப்பாண காவல்துறை விசேட குழுவினரும் தேடுதல் நடவடிக்கையில்
ஈடுபட்டிருந்த நிலையில், இளவாலை பகுதியில் உள்ள பற்றைக்காட்டிற்குள்
மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>
</p><h2>பிறிதொரு வழக்கு தாக்கல்</h2><p>கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர், சிறைக்
காவலர்களின் பாதுகாப்பில் இருந்து தப்பிச்சென்ற குற்றச்சாட்டில் பிறிதொரு
வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
எடுத்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fe290ef-5b54-4b8d-ae66-1905f960f19c/26-6a9584ce8120a.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T13:42:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் போக்குவரத்து வசதியின்றி தவிக்கும் 693 குடும்பங்கள் - அதிகாரிகளிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lack-of-transportation-facilities-in-kilinochchi-1788183602"></link>
            <id>https://tamilwin.com/article/lack-of-transportation-facilities-in-kilinochchi-1788183602</id>
            <summary type="text">கிளிநொச்சி - முட்கொம்பன் கிராமத்திற்கு மேலதிக பேருந்து சேவையை வழங்குமாறு
கோரிக்கை மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது. 

இந்த மனு இன்று(31.08.2026) கிளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - முட்கொம்பன் கிராமத்திற்கு மேலதிக பேருந்து சேவையை வழங்குமாறு
கோரிக்கை மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த மனு இன்று(31.08.2026) கிளிநொச்சி அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

கிளிநொச்சி - பூனகரி, நல்லூர் KN-59 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட மக்களின்
நலன் கருதி, மேலதிக பேருந்து சேவையை வழங்குமாறு புதிய பாதை கொத்தனி
அமைப்பினால் இலங்கை போக்குவரத்துச் சபையிடம் (SLTB) உத்தியோகபூர்வ கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1c9e4d8-ad1c-4011-ae81-fce5af3bd435/26-6a95846d3dc0a.webp' /></p><p>
</p><p>
குறித்த கிராம அலுவலர் பிரிவில் வசதி குறைந்த 693 குடும்பங்கள் வசித்து வரும்
நிலையில், அங்குள்ள பாடசாலை மாணவர்கள், அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள்
தங்களது தினசரி பயணங்களுக்கு பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாகவும், அவர்கள் பேருந்து சேவையை நம்பியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T13:41:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்டத்தில் குதித்த மூதூர் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/muttur-divisional-secretariat-officers-protest-1788181706"></link>
            <id>https://tamilwin.com/article/muttur-divisional-secretariat-officers-protest-1788181706</id>
            <summary type="text">திருகோணமலை- மூதூர் பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை- மூதூர் பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>குறித்த போராட்டமானது இன்று(31.8.2026) பிரதேச செயலகத்துக்கு முன்னால் இடம்பெற்றது.</p><h2>போராட்டம் </h2><p>
</p><p>
அரச மற்றும் மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற் சங்கம் இதனை நாடு
பூராகவும் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அதற்கு வலுசேர்க்கும் முகமாக
தம்பலாகாமம் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் குறித்த கவனயீர்ப்பு
போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d242737-318e-437c-8e1b-4475590b8176/26-6a9580dfa3a29.webp' /></p><p>
இதில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சேவை பிரமாணக் குறிப்பு, MN5 சம்பள
அளவுத் திட்டம் மற்றும் விசேட தரத்துடன் கூடிய பதவி உயர்வு முறை உள்ளிட்ட
அபிவிருத்தி உத்தியோகத்தர் களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்கு,
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை யாப்பை சீர்திருத்தும் செயற்பாட்டை விரைவாக்கு,
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை நிறுவு போன்ற பல விடயங்களை முன்வைத்து
கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T13:38:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக் தொடரில் யாழ் - கண்டி அணிகள் சிறப்பு ஆட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-tennis-premier-league-series-1788183101"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-tennis-premier-league-series-1788183101</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கை டென்னிஸ் சங்கம் (SLTA) ஏற்பாடு செய்த முதலாவது இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக் (SLTPL), 2026 ஆகஸ்ட் 27 முதல் 30 வரை கொழும்பிலுள்ள SLTA டென்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கை டென்னிஸ் சங்கம் (SLTA) ஏற்பாடு செய்த முதலாவது இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக் (SLTPL), 2026 ஆகஸ்ட் 27 முதல் 30 வரை கொழும்பிலுள்ள SLTA டென்னிஸ் வளாகத்தில் நான்கு நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளுடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது.</p><p>

இந்த நகரங்களை அடிப்படையாகக் கொண்ட தொழில்முறை பிராஞ்சைஸ் டென்னிஸ் தொடரில் கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, வெலிகம, மட்டக்களப்பு, நுவரெலியா மற்றும் குருநாகல் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்றன. </p><p>இலங்கையின் முன்னணி உள்ளூர் வீரர்களுடன் சர்வதேச வீரர்களும் இந்த தொடரில் கலந்துகொண்டனர்.</p><p></p><h2>நிலையான வர்த்தக தளம்</h2><p>

இலங்கையில் போட்டித் தரமிக்க டென்னிஸின் தரத்தை உயர்த்துவதோடு, விளையாட்டின் நீண்டகால வளர்ச்சிக்காக அடிமட்ட மற்றும் உயர்திறன் பயிற்சி திட்டங்களில் மீள்முதலீடு செய்யக்கூடிய நிலையான வர்த்தக தளத்தை உருவாக்கும் நோக்கத்திலேயே SLTPL அறிமுகப்படுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d091bbe4-cfd9-4034-b29d-58d16156966f/26-6a9582aa48237.webp' /></p><p>
</p><p>
வீரர்கள் போட்டித்தன்மை வாய்ந்த ஏலத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் தத்தமது பிராஞ்சைஸ் அணிகளில் இணைக்கப்பட்டனர். எட்டு அணிகளும் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, குழுநிலைப் போட்டிகளில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் தரவரிசை நிர்ணயிக்கப்பட்டது. </p><p>அதன் பின்னர் முதல் இடம் முதல் எட்டாவது இடம் வரை வகைப்படுத்தும் போட்டிகள் நடத்தப்பட்டன. </p><p>குழு A-யில் கண்டி கிங்ஸ் 122 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றது. குழு B-யில் யாழ்ப்பாணம் ஃபிளமிங்கோஸ் 120 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. </p><p>இவ்விரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தொடக்க SLTPL தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.
</p><p>
வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதிப் போட்டியில், கண்டி கிங்ஸ், யாழ்ப்பாணம் ஃபிளமிங்கோஸை வீழ்த்தி, இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக்கின் முதல் சாம்பியன் அணியாக மகுடம் சூடியது.</p><p></p><h2>யாழ்ப்பாணம் ஃபிளமிங்கோஸ்</h2><p> யாழ்ப்பாணம் ஃபிளமிங்கோஸ் இரண்டாம் இடத்தைப் பெற்றது.

யாழ்ப்பாணம் ஃபிளமிங்கோஸ் அணி, போட்டியின் ஐந்து தனிநபர் விருதுகளில் மூன்றை வென்று சிறப்பான சாதனையைப் பதிவு செய்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc63eda4-eebe-4352-88d0-35ff4fd5e1d9/26-6a95823ed48f7.webp' /></p><p> </p><p>வில்சன் நியாயமான விளையாட்டு (Fair Play) விருது, ஆண்கள் பிரிவு – மிகவும் மதிப்புமிக்க வீரர்&nbsp; விருது, சிறுவர்கள் பிரிவு – மிகவும் மதிப்புமிக்க வீரர்&nbsp; விருது&nbsp;என்பவற்றை பெற்றுக்கொண்டது.</p><p> இந்த தொடரின் மொத்த பரிசுத்தொகை 6.5 மில்லியன் இலங்கை ரூபாய் ஆகும். </p><p>சாம்பியன் பட்டம் வென்ற கண்டி கிங்ஸ் அணிக்கு 2.5 மில்லியன் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. </p><p>இரண்டாம் இடத்தைப் பெற்ற யாழ்ப்பாணம் ஃபிளமிங்கோஸ் அணிக்கு 1.5 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது.
</p><p>
முதன்முறையாக நடைபெற்ற SLTPL தொடரின் வெற்றிகரமான நிறைவு, இலங்கை டென்னிஸ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.</p><p> இந்த தொடர் நாட்டின் வளர்ந்து வரும் திறமையான வீரர்களை வெளிக்கொணர்ந்ததுடன், சர்வதேச பங்கேற்பையும் ஈர்த்து, இலங்கையில் டென்னிஸ் விளையாட்டின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கான நிலையான பிராஞ்சைஸ் அடிப்படையிலான போட்டி அமைப்பிற்கும் உறுதியான அடித்தளத்தை அமைத்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T13:33:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டெய்னருக்குள் சிக்கிய 420 கிலோ 'ஐஸ்; மாட்டினார் பிரபல தொழிலதிபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/420-kg-ice-drug-seized-container-businessman-1788180486"></link>
            <id>https://jvpnews.com/article/420-kg-ice-drug-seized-container-businessman-1788180486</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றிலிருந்து போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர்...</summary>
            <content type="html"><![CDATA[<p><a href="https://jvpnews.com/article/narcotics-at-colombo-port-from-pakistan-1788172052" target="_blank">&nbsp; கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன்</a> ஒன்றிலிருந்து போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 

அங்கிருந்து கைப்பற்றப்பட்ட ‘ஐஸ்’ (ICE) வகை போதைப்பொருளின் அளவு 420 கிலோகிராம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eedf3a17-9f88-400d-88d6-a36e1f5b2bd0/26-6a957808487ba.webp' /></p><p>
</p><p>
 

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நீதிமன்ற உத்தரவைப் பெற்று மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><p>

 

இதன்போது, குறித்த கொள்கலனில் மறைத்து வைத்து பாகிஸ்தானில் இருந்து இந்தப் போதைப்பொருள் தொகை இலங்கை கொண்டுவரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-31T13:32:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதாகி எட்டு மாதங்களின் பின் வெளியான வெனிசுலா முன்னாள் அதிபர் புகைப்படம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/photo-of-former-venezuelan-president-released-1788159702"></link>
            <id>https://canadamirror.com/article/photo-of-former-venezuelan-president-released-1788159702</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;அமெரிக்க காவலில் உள்ள வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, தன்னை பற்றிய புகைப்படங்களை முதன்முறையாக சமூக வலைதளங்களில் வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;அமெரிக்க காவலில் உள்ள வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, தன்னை பற்றிய புகைப்படங்களை முதன்முறையாக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். </p><p>

கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட பின்னர், சுமார் எட்டு மாதங்களுக்கு பிறகு அவர் காவலில் இருக்கும் தோற்றத்தை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3437b06b-3db8-46e5-9f55-f1c16e93b889/26-6a9526d86761a.webp' /></p><h2>நியூயார்க்கில்&nbsp; &nbsp;புரூக்ளின் மெட்ரோபாலிட்டன் தடுப்பு மையத்தில் ...</h2><p>
 
 
ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியிடப்பட்ட அந்த இரண்டு புகைப்படங்களிலும் மதுரோ சாம்பல் நிற டிராக்சூட் மற்றும் வெள்ளை நிற காலணிகள் அணிந்தபடி புன்னகையுடன் காணப்படுகிறார்.
</p><p>
 இரு கைகளாலும் வெற்றி சின்னம் காட்டும் வகையிலும் அவர் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் மெட்ரோபாலிட்டன் தடுப்பு மையத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. </p><p>

எனினும், அவை சமீபத்தில் எடுக்கப்பட்டவை அல்ல என்றும், ஜூன் 25, 2026 என்ற தேதி புகைப்படங்களில் இடம்பெற்றுள்ளது.
</p><p> 
தனது பேரக்குழந்தைகள், குழந்தைகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு அன்பையும் நம்பிக்கையையும் தெரிவிக்கும் வகையில் மதுரோ இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 தானும் தனது மனைவி சிலியா புளோரஸும் உறுதியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். </p><p>மேலும், தங்களது ஆதரவாளர்களின் பிரார்த்தனைகள் மற்றும் ஒற்றுமைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
 
மதுரோ மற்றும் அவரது மனைவி ஜனவரியில் வெனிசுலாவில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.</p><p> 

போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதம் தொடர்பான குற்றச்சாட்டுகளை அவர்கள் எதிர்கொள்கின்றனர் . எனினும் இந்த குற்றச்சாட்டுகளை மதுரோ மறுத்துள்ள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-31T13:31:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் ஏதோ கோவத்துல போட்டேன், ஆனா இப்படி மாறனும்னு நினைக்கல - நாஞ்சில் விஜயன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/nanjil-vijayan-talk-about-recent-controversy-1788169800"></link>
            <id>https://viduppu.com/article/nanjil-vijayan-talk-about-recent-controversy-1788169800</id>
            <summary type="text">நாஞ்சில் விஜயன் விஜய் டிவியில் பல வருடங்களாக காமெடி ஷோக்களில் கலக்கி வருபவர். 

இவர் சமீபத்தில் போட்ட பதிவு தான் ஒட்டுமொத்த இணையத்தையுமே அதிர்ச்சியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாஞ்சில் விஜயன் விஜய் டிவியில் பல வருடங்களாக காமெடி ஷோக்களில் கலக்கி வருபவர். 

இவர் சமீபத்தில் போட்ட பதிவு தான் ஒட்டுமொத்த இணையத்தையுமே அதிர்ச்சியாக்கியது. </p><p>இவர் தன் மனைவியை பிரிவதாக ஒரு போஸ்ட் போட, அதோடு திருநங்கை வைஷ்ணவி சாபம் பழித்து விட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/980da209-7e2e-4a01-800b-1784b8789d5b/26-6a954e4b7f069.webp' /></p><p>
</p><p>
அதனால் தான் என் மனைவியை நான் பிரிந்தேன் என அவர் கூறினார், இந்த போஸ்ட்டை போட்ட சில நிமிடங்களில் அதை டெலிட் செய்துள்ளார்.
</p><p>
ஏனெனில் நாஞ்சில் விஜயனின் நண்பர்கள் பலரும், 'இதெல்லாம் உங்களுக்குள் பேசி முடிக்கும் விஷயம், எல்லோர் வாழ்க்கையிலும் நடப்பது, ஆனால் அதை நீ போஸ்ட் போட போக தற்போது ஏதோ பெரிதாக பேசுபொருள் ஆகிவிட்டது' என சொல்ல, நாஞ்சில் விஜயன் இனி இதுபோன்ற விஷயங்களுக்கு உடனே இணையத்தில் ரியாக்ட் செய்யகூடாது என முடிவு செய்துள்ளாராம்.</p>]]></content>
            <updated>2026-08-31T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ள நிவாரணம்: சாட்ஜிபிடியை பயன்படுத்தி மோசடி செய்த நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-uses-chatgpt-for-nepal-flood-relief-scam-1788182900"></link>
            <id>https://news.lankasri.com/article/man-uses-chatgpt-for-nepal-flood-relief-scam-1788182900</id>
            <summary type="text">nepal man uses chatgpt to fake nepal flood donation: நேபாள வெள்ள நிவாரணத்தில் சாட்ஜிபிடியை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட நபரை நேபாள காவல்துறை கைது செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>nepal man uses chatgpt to fake nepal flood donation: நேபாள வெள்ள நிவாரணத்தில் சாட்ஜிபிடியை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட நபரை நேபாள காவல்துறை கைது செய்துள்ளது.
</p><h3>
நேபாள வெள்ள நிவாரணம்
</h3><p>
சீன மற்றும் நேபாள எல்லையில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 900 ஐ கடந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72e108c3-8757-49ce-b185-90292988248c/26-6a95817668498.webp' /></p><p>
இதற்கான மீட்பு பணிகளை நேபாள ராணுவம் மேற்கொண்டு வருகிறது. இந்தியா மற்றும் சீனாவிலிருந்து சுரங்க மீட்பு குழு நேபாளம் சென்று மீட்பு பணிகளில் உதவி வருகிறது. </p><p>

மேலும், புனரமைப்புப் பணிகளுக்கு 5 பில்லியன் டொலர் வரை செலவாகும் என அரசு ஆரம்பகட்ட மதிப்பீடு செய்துள்ளதாக நேபாள நிதியமைச்சர் Swarnim Wagle தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p> 

இந்நிலையில், நேபாள வெள்ள நிவாரணத்திற்கு நிதியளிப்பவர்களை குறிவைத்து நடக்கும் இணைய மோசடி குறித்து நேபாள காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது. </p><h3> 

சாட்ஜிபிடி மூலம் மோசடி </h3><p>

நேபாளத்தின் ராமேச்சாப் மாவட்டத்தில் உள்ள கோகுல்கங்கா ஊரக நகராட்சியைச் சேர்ந்த 32 வயதான பகவான் கர்கி என்பவர், பிரதமரின் பேரிடர் நிவாரண நிதிக்கு, 1,20,000 நேபாள ரூபாய் பணம் நன்கொடை வழங்கியதாக சாட்ஜிபிடி மூலம் போலியான பரிவர்த்தனை அறிக்கையை உருவாக்கியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12963b82-9eaa-45b9-af28-dbf1a787bef5/26-6a9581757f87c.webp' /></p><p>

அந்த அறிக்கையை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்த அவர், நிவாரண நிதி திரட்டுவதாகக் கூறி தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட ஒரு க்யூஆர் குறியீட்டையும் இணைத்திருந்தார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ne" dir="ltr">प्रधानमन्त्री दैवी प्रकोप उद्धार कोषको नाममा नक्कली स्टेटमेन्ट बनाएर ठगी गर्ने एक जना पक्राउ<a href="https://x.com/hashtag/NepalPolice?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#NepalPolice</a> <a href="https://x.com/hashtag/BelieveinBlue?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BelieveinBlue</a> <a href="https://x.com/hashtag/ToServeandProtect?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ToServeandProtect</a> <a href="https://x.com/hashtag/%E0%A4%A8%E0%A5%87%E0%A4%AA%E0%A4%BE%E0%A4%B2%E0%A4%AA%E0%A5%8D%E0%A4%B0%E0%A4%B9%E0%A4%B0%E0%A5%80?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#नेपालप्रहरी</a> <a href="https://t.co/CAOx4EExco">pic.twitter.com/CAOx4EExco</a></p>&mdash; Nepal Police (@NepalPoliceHQ) <a href="https://x.com/NepalPoliceHQ/status/2093921566786813957?ref_src=twsrc%5Etfw">August 30, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
இது குறித்து தகவலறிந்த நேபாள காவல்துறை, மோசடி மற்றும் டிஜிட்டல் தவறான சித்தரிப்பு சட்டங்களின் கீழ் அவரை கைது செய்துள்ளது. </p><p>

இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள நேபாள காவல்துறை, இணையத்தில் பகிரப்படும் இணைப்புகளுக்குப் பதிலாக பிரதம மந்திரி பேரிடர் நிவாரண நிதி என்ற பெயரில் உள்ள அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் மட்டும் நன்கொடை வழங்குமாறு தெரிவித்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T13:29:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[46 வயதான இலங்கையின் பிரபலம் காலமானார்; சோகத்தில் பலர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-model-chula-padmendra-has-passed-away-1788178473"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-model-chula-padmendra-has-passed-away-1788178473</id>
            <summary type="text">இலங்கையின் பிரபல மொடலிங் துறை சார்ந்த கலைஞரும், சர்வதேச ஆடைவடிவமைப்பு மற்றும் அழகிப்போட்டிப் பயிற்றுவிப்பாளருமான சுலா பத்மேந்திரா குமாரபத்திரன தனது 46...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பிரபல மொடலிங் துறை சார்ந்த கலைஞரும், சர்வதேச ஆடைவடிவமைப்பு மற்றும் அழகிப்போட்டிப் பயிற்றுவிப்பாளருமான சுலா பத்மேந்திரா குமாரபத்திரன தனது 46 ஆவது வயதில் காலமானார்.</p><p> 

 

அவரது இந்தத் திடீர் மறைவு இலங்கையின் மொடலிங் மற்றும் ஆடைவடிவமைப்புத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7174d70b-e7c2-4d3c-ad22-a74c427e3fe5/26-6a95702adac92.webp' /></p><h2>நாட்டின் முன்னணி மொடலிங் பயிற்றுவிப்பாளர்</h2><p>

 

நாட்டின் முன்னணி மொடலிங் பயிற்றுவிப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த இவர், பல புதிய கலைஞர்களை சர்வதேச அளவிற்கு உருவாக்கிய பெருமைக்குரியவர்.</p><p></p><p> </p><p>

 

ஆடைவடிவமைப்புத் துறையிலும் அழகிப்போட்டிகளுக்கான பயிற்சிகளை வழங்குவதிலும் சிறந்த வல்லுநராக அவர் அடையாளப்படுத்தப்பட்டிருந்தார்.</p><p>

 

அண்மைக்காலத்திலும் கூட பல முன்னணி மொடலிங் நிகழ்வுகள், ஆடைவடிவமைப்பு விழாக்கள் மற்றும் அழகிப்போட்டிகளில் அவர் தீவிரமாகவும் சுறுசுறுப்பாகவும் பங்கேற்று வந்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T13:29:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமர் ஹரிணி பூட்டான் பயணம் - உலக உணவு உச்சி மாநாட்டில் சிறப்புரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pm-harini-visits-bhutan-address-world-food-summit-1788181212"></link>
            <id>https://tamilwin.com/article/pm-harini-visits-bhutan-address-world-food-summit-1788181212</id>
            <summary type="text">பூட்டானுக்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று(31.08.2026) காலை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>பூட்டானுக்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று(31.08.2026) காலை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
</p><p>
இந்த விஜயத்தின் போது, பூட்டானில் நடைபெறவுள்ள 'உலக விழிப்புணர்வு உணவு
முறைமைகள்' உச்சிமாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ளும் பிரதமர், அதில்
சிறப்புரை ஆற்றவுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a792cbee-34cf-48aa-8f73-e2d32753b854/26-6a957ebc9fae1.webp' /></p><p>
அத்துடன், சர்வதேசத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளைச் சந்தித்து நிலையான உணவு
முறைமைகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது
தொடர்பான பல உத்தியோகபூர்வ சந்திப்புகளிலும் பிரதமர் ஹரிணி அமரசூரிய
கலந்து கொள்ளவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61fd6548-0d4a-4c69-b153-c44ad4c1e9f5/26-6a957ebda6ba6.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T13:25:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/increase-in-colombo-consumer-price-index-1788182620"></link>
            <id>https://jvpnews.com/article/increase-in-colombo-consumer-price-index-1788182620</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் ஓகஸ்ட் மாதத்தில் 8 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் ஓகஸ்ட் மாதத்தில் 8 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>



அந்த திணைக்களத்தால், இன்று (31) வெளியிட்டப்பட்ட கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணிற்கு அமைய, ஜூலை மாதத்தில் 7.3 சதவீதமாக பதிவான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் ஓகஸ்ட் மாதத்தில் 8 சதவீதமாக அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8665cf96-66ff-402d-912a-fd5e76084d03/26-6a95805ddce85.webp' /></p><p>
</p><p>


இதேவேளை, ஜூலை மாதத்தில் 6.3 சதவீதமாகப் பதிவாகியிருந்த உணவுப் பிரிவின் ஆண்டுக் குறியீட்டு பணவீக்க விகிதம், ஓகஸ்ட் மாதத்தில் 8.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.</p><p></p><p>
</p><p>


எனினும், உணவு அல்லாத பிரிவின் ஆண்டுக் குறியீட்டு பணவீக்க விகிதம் ஓகஸ்ட் மாதத்தில் 7.7 சதவீதம் வரை குறைவடைந்துள்ளது. இவ்விகிதம் ஜூலை மாதத்தில் 7.8 சதவீதமாகப் பதிவாகியிருந்தது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T13:20:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானிலிருந்து வந்த போதைப்பொருள் : சிக்கிய தொழிலதிபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/businessman-caught-with-drugs-from-pakistan-1788180779"></link>
            <id>https://ibctamil.com/article/businessman-caught-with-drugs-from-pakistan-1788180779</id>
            <summary type="text">கொள்கலனில் மறைத்து வைத்து பாகிஸ்தானில் இருந்து பாரியளவு போதைப்பொருளை கொண்டுவந்த பிரபல தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


தெமட்டகொட பிரதேசத்தைச் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொள்கலனில் மறைத்து வைத்து பாகிஸ்தானில் இருந்து பாரியளவு போதைப்பொருளை கொண்டுவந்த பிரபல தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>

தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரே கைது செய்யப்பட்டவராவார்.</p><p>&nbsp;கைப்பற்றப்பட்ட ‘ஐஸ்’ (ICE) வகை போதைப்பொருளின் அளவு 420 கிலோகிராம் எனப் காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><h2>&nbsp;குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் சோதனை</h2><p>கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நீதிமன்ற உத்தரவைப் பெற்று மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edd6eebb-5267-4c3a-8b2d-c4d53b8639fa/26-6a957d43bbad2.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T13:17:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டபயவின் உறக்கத்தை கூட திட்டமிட்ட ஞானாக்கா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gnana-akka-hotel-encroaches-nuwarawewa-lake-1788172144"></link>
            <id>https://ibctamil.com/article/gnana-akka-hotel-encroaches-nuwarawewa-lake-1788172144</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதியின் கோட்டபய ராஜபக்சவின் உறக்கத்தை கூட, அவரது ஆட்சிக்காலத்தில் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டு வந்த ஞானாக்கா என்பவரே தீர்மானித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதியின் கோட்டபய ராஜபக்சவின் உறக்கத்தை கூட, அவரது ஆட்சிக்காலத்தில் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டு வந்த ஞானாக்கா என்பவரே தீர்மானித்ததாக விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த விடயத்தை றுவுணு பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை விரிவுரையாளரும் ரிவிர பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் - இலங்கை புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் முன்னாள் ஊடக பணிப்பாளரான சந்தன காரியவசம் தெரிவித்துள்ளார். </p><p>


இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியில் இருந்த காலத்தில் அவருக்கு ஆலோசனை வழங்கிய அம்மையார் ஒருவர் இருந்தார்.</p><p> </p><p></p><h2>உரிமைச் சொத்து&nbsp;</h2><p>அவரை உங்களுக்கு நினைவிருக்கலாம் கோட்டாபயவின் அனைத்து செயல்பாடுகளும் அவரின் ஆலோசனைபடியே அமைந்திருந்தது.</p><p>

அமைச்சரவை நியமினம் - சிலரை பதவியில் நீக்கியமை அவர் சொற்படியே செய்தார். 

எப்படி உறங்குவது கூட அந்த அம்மையார் சொன்னபடியேதான்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e191e992-6025-434d-bf78-008d3e493596/26-6a955ef62f825.webp' /></p><p>நாம் மேலே குறிப்பிட்ட அம்மையார் தான் அநுராதபுரத்தில் சோதிடம் பார்த்து பிரபலமான ஞானக்கா.

அந்த அம்மையார் ஹோட்டல் கட்டினால் உனக்கென்ன எங்களுக்கு என்ன என்று கேள்வி எழலாம் அல்லவா ? </p><p>ஆனால் 2300 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட நுவரவௌ குளத்தை அழித்துள்ளார்கள். இது எங்களுடைய உரிமைச் சொத்து அதைத்தான் இவர்கள் நாசப்படுத்தியுள்ளனர்.</p><p></p><h2>பெரும்பாலான கட்டிடங்கள்&nbsp;</h2><p>நுவரவெவ எல்லைப் பகுதியில்தான் இந்த ஹோட்டலின் பெரும்பாலான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.</p><p>இது முற்றிலும் சட்டவிரோதமான செயல் அப்படிச் செய்ய முடியாது குளத்தின் எல்லைப் பகுதிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e22ed006-4b38-4e19-b085-d289d14f3532/26-6a955ef6e0159.webp' /></p><p>

ஒரு சாதாரண மனிதரால் இதைச் செய்ய முடியாது. நாட்டுத் தலைவரின் அரசியல் செல்வாக்கைக் கொண்டுதான் இவற்றை நிரப்பி இந்த நிலைக்குக் கட்டியிருக்கிறார்கள்.</p><p>மேலும் கோட்டாபய ராஜபக்ச பணம் வழங்கியதாகவும் ஒரு கதையும் உள்ளது.</p><p> இந்த அம்மையார் ஹோட்டல் கட்டினாரா அல்லது கோட்டாபயவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தாரா என்பது நமக்கு முக்கியமல்ல ஆனால் இந்த விடயங்கள் இப்படி நடக்க முடியாது.</p><p></p><h2>கோடிக்கணக்கான சொத்து</h2><p>கடந்த காலத்தில் குளத்தின் கரையோரங்களில் அல்லது குளத்திற்குள் கட்டப்பட்ட ஹோட்டல்களை அகற்றும் திட்டம் ஒன்று நடந்தது.</p><p> அதற்கும் நிறைய பிரச்சினைகள் வந்தன ஆனால் அநுராதபுரத்திலுள்ள இந்த ஹோட்டலுக்கு ஒன்றும் நடக்கவில்லை.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/608f8d6c-c38a-4bf6-b11e-e444cc71bf64/26-6a955ef792aec.webp' /></p><p>அதனால் அதிகாரிகள் மற்றும் அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
</p><p>
இந்த ஹோட்டல் புதிதாக அமைக்கப்பட்ட கண்டி - அனுராதபுர வீதியில் இராணுவ மருத்துவப் படைப்பிரிவை கடந்து சில மீட்டர்கள் செல்லும் போது உள்ளது.</p><p> அநுராதபுரத்தில் சோதிடம் பார்த்த சாதாரண ஒரு பெண் இப்போது கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு சொந்தக்காரராக இருப்பது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/IT-v1W9Laic" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T13:13:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க விமானப்படைதளங்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதல் : மீண்டும் அதிகரிக்கும் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-missile-attack-two-us-air-bases-jordan-1788178227"></link>
            <id>https://ibctamil.com/article/iran-missile-attack-two-us-air-bases-jordan-1788178227</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் உள்ள லராக் தீவில் அமைந்துள்ள ஈரானிய ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, ஜோர்தானில் உள்ள இரண்டு அமெரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் உள்ள லராக் தீவில் அமைந்துள்ள ஈரானிய ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, ஜோர்தானில் உள்ள இரண்டு அமெரிக்க விமானப்படை தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.</p><p>

அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு, தகுந்த பதிலடி தரப்படும் என்று இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது.</p><h2>லராக்தீவு மீது அமெரிக்கா தாக்குதல்</h2><p>ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து சுமார் 1,100 கிலோ மீட்டர் தொலைவில் லராக் தீவு அமைந்துள்ளது. இந்த தீவு ஹோர்முஸ் நீரிணையின் தெற்கிலும், கெஷம் தீவின் கிழக்கிலும் அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/867aaf0b-2f99-4b9c-b06d-cc5c43dc0048/26-6a95724c48b91.webp' /></p><p>


கெஷ்ம் ஆளுநரை மேற்கோள் காட்டி ஈரானிய அரசு ஊடகமான IRNA, லராக் தீவில் இரவு நேரத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>இரண்டு அமெரிக்க விமானப்படை தளங்களை குறிவைத்த ஈரான்</h2><p>



இந்த நிலையில், ஜோர்தானில் அமைந்துள்ள இரண்டு அமெரிக்க விமானப்படை தளங்களான கிங் ஹுசைன் மற்றும் அல்-அஸ்ரக் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b641b03d-66fc-45fd-bda5-660f623fc437/26-6a95724b95cc3.webp' /></p><p>
</p><p>
இந்த தாக்குதல் குறித்து இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை கூறுகையில், தொழில்நுட்ப மற்றும் பராமரிப்பு வசதிகள் மற்றும் போர் விமான நிலைகளை இந்த ஏவுகணைகள் குறிவைத்ததாக தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T13:06:29+00:00</updated>
        </entry>
    </feed>
