<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-18T04:31:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடிவரவு,குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/assistant-controller-immigration-department-arrest-1789705037"></link>
            <id>https://tamilwin.com/article/assistant-controller-immigration-department-arrest-1789705037</id>
            <summary type="text">இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>சந்தேகநபர் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>சிறப்பு புலனாய்வுப்பிரிவு விசாரணை</h2><p> 



திட்டமிட்ட குற்றச்செயலுடன் தொடர்புடைய நபர் ஒருவருக்கு சட்டவிரோதமான முறையில் கடவுச்சீட்டு ஒன்றை தயாரித்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54cbc0b9-292d-4961-aae5-5a77d8cde093/26-6aacbe6e515be.webp' /></p><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கம்பஹாவைச் சேர்ந்த 42 வயதுடையவர் என்று பொலிஸ் தெரிவித்துள்ளது.</p><p>சம்பவம் குறித்து குற்றப்புலனாய்வுத் துறையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T04:30:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த வாரம் சண்டே சன் டிவியில் ஜெயம் ரவி, விஷால் பட ஸ்பெஷல்... என்னென்ன படங்கள் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/this-week-sunday-super-films-in-sun-tv-1789702975"></link>
            <id>https://cineulagam.com/article/this-week-sunday-super-films-in-sun-tv-1789702975</id>
            <summary type="text">சன் டிவிசன் தொலைக்காட்சி, தமிழ் சினிமா ரசிகர்களின் முதல் சாய்ஸாக இருக்கும் டிவி. அதிலும் கிராமங்களில் எடுத்துக்கொண்டால் வீட்டுப் பெண்கள் தங்களது வேலைக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சன் டிவி</h2><p>சன் தொலைக்காட்சி, தமிழ் சினிமா ரசிகர்களின் முதல் சாய்ஸாக இருக்கும் டிவி. </p><p>அதிலும் கிராமங்களில் எடுத்துக்கொண்டால் வீட்டுப் பெண்கள் தங்களது வேலைகளை முடித்துவிட்டு சன் டிவி ஆன் செய்தால் இரவு வரை தொடர்ந்து சீரியல்கள், இடையில் மட்டும் ஒரு படம் என தொடர்ந்து பார்ப்பார்கள்.
</p><p>சன் டிவியிலும் மக்கள் ஆர்வமுடன் பார்க்கும் அளவிற்கு விதவிதமான கதைக்களம் கொண்ட சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71a0514d-465a-4c65-92fa-3db3891862c2/26-6aacb5f76a8e4.webp' /></p><h2>
சண்டே ஸ்பெஷல்
</h2><p>வார நாட்கள் முழுவதும் ஒரே சீரியல்களாக ஒளிபரப்புவார்கள், ஆனால் சண்டே வந்தால் படங்களின் ஸ்பெஷல் தான். </p><p>காலை 10 மணிக்கு ஒரு படம், பிற்பகல் 2.30 மணி மற்றும் மாலை 6.30 மணிக்கு என 3 படங்கள் ஒளிபரப்புவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38756259-efb1-48e6-a722-f14bfd2a2eec/26-6aacb5f66bc75.webp' /></p><p>
</p><p>இந்த வாரம் காலை 10 மணிக்கு, ஜெயம் ரவி மற்றும் சதா நடிக்க மெகா ஹிட்டான ஜெயம் படமும், பிற்பகல் 2.30 மணிக்கு விஷால் நடித்த தாமிரபரணி படமும் ஒளிபரப்பாக உள்ளதாம்.</p>]]></content>
            <updated>2026-09-18T04:30:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்ச!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-rajapaksa-to-be-produced-in-court-today-1789701245"></link>
            <id>https://ibctamil.com/article/namal-rajapaksa-to-be-produced-in-court-today-1789701245</id>
            <summary type="text">புதிய இணைப்புநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ச சற்றுமுன்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். 

நாமல் ராஜபக்‌ச ச...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ச சற்றுமுன்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். </p><p>

நாமல் ராஜபக்‌ச சிறைச்சாலை அதிகாரிகளால் சிறைச்சாலைப் பேருந்தில் இன்று (18) காலை நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54276906-90ca-4b6f-9fbf-463369fbde74/26-6aacbd2f300d9.webp' /></p><h2>முதலாம் இணைப்பு</h2><h5>இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நாமல் ராஜபக்ச!</h5><p>இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று (18) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p><p>

சர்ச்சைக்குரிய எயார்பஸ் வானூர்தி கொள்வளவு தொடர்பான விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த 4 ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையானபோது நாமல் ராஜபக்சகைது செய்யப்பட்டார்.</p><p>

இந்த வழக்கில் இலஞ்சமாக 1.4 மில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான தொகை சிங்கப்பூர் வங்கிக் கணக்கொன்றில் வரவு வைக்கப்பட்டதாகவும், அதிலிருந்து 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் இலங்கை வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு&nbsp;</h2><p>

பின்னர், அந்த 8 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு நிகராக, சுமார் 10 கோடி ரூபாய் தொகையை நாமல் ராஜபக்ச பல தவணைகளில் பெற்றுக்கொண்டதாகவும் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/419789ed-9197-4378-9a7a-d0b38425c933/26-6aacb5612268f.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நிதித்தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணையில் நாமல் ராஜபக்ச சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.
</p><p>
அந்த வழக்கில், அவரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று முன்தினம் (16) உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T04:23:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/immigration-department-assistant-controller-arrest-1789705083"></link>
            <id>https://jvpnews.com/article/immigration-department-assistant-controller-arrest-1789705083</id>
            <summary type="text">இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b706cd45-5a76-4e56-b318-0c99860da12a/26-6aacbb7c680ee.webp' /></p><p> </p><p>

திட்டமிட்ட குற்றச் செயலுடன் தொடர்புடைய நபர் ஒருவருக்கு சட்டவிரோதமான முறையில் கடவுச்சீட்டு ஒன்றை தயாரித்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்த குற்றச்சாட்டின் பேரில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T04:23:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தைகளின் உயிரைப் பாதுகாப்பது அரசின் முக்கிய கடமை: ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-government-s-key-duty-president-1789703474"></link>
            <id>https://ibctamil.com/article/the-government-s-key-duty-president-1789703474</id>
            <summary type="text">குழந்தைகள் நாட்டின் சொத்துக்கள் என்பதால், அவர்களின் உயிரைப் பாதுகாப்பது பொறுப்பான அரசின் முக்கிய கடமை என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>குழந்தைகள் நாட்டின் சொத்துக்கள் என்பதால், அவர்களின் உயிரைப் பாதுகாப்பது பொறுப்பான அரசின் முக்கிய கடமை என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>
குழந்தைகள் மற்றும் பெண்கள் விவகார அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘திவியட்ட சவியக்’ வீட்டுத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் நேற்று (17.09.2026) ஜனாதிபதி செயலகத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
இத்திட்டத்தின் கீழ், சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் வளர்ந்து 18 வயதை பூர்த்தி செய்த பின்னர் சமூகமயமாகும் இளைஞர்கள் மற்றும் பாதுகாப்பற்ற, அதிக ஆபத்தான சூழ்நிலைகளில் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பான வீடுகளை அமைப்பதற்காக தலா 20 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க</h2><p>
</p><p>
இதன் முதற்கட்டமாக மேல் மாகாணத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு இந்த நிதியுதவி வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/688059d3-4b10-4aad-9509-c0eb11069a50/26-6aacbc04f159d.webp' /></p><p>
</p><p>
குழந்தைகள் எந்தச் சூழலில் வளர்ந்தாலும் அவர்கள் நாட்டின் குழந்தைகள் என்பதால், அவர்களின் பாதுகாப்பான மற்றும் சிறந்த எதிர்காலத்திற்காக அரசாங்கம், சமூகம் மற்றும் பெற்றோர் அனைவருக்கும் பொறுப்பு உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.</p><p>

எந்தவொரு குழந்தையும் பாதுகாப்பற்ற நிலையில் அல்லது அன்பும் அரவணைப்பும் இல்லாமல் வளரக்கூடாது எனத் தெரிவித்த அவர், ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாக வாழக்கூடிய சூழலை உருவாக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுள்ளதாகவும் கூறினார்.
</p><p>
சிறுவர் அபிவிருத்தி நிலையங்களிலிருந்து சமூகமயமாகும் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில், அவர்களுக்கான வங்கிக் கணக்குகளைத் திறந்து ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாய் சேமிப்பாக வைப்பதற்கான திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.</p><h2>20 இலட்சம் ரூபாயாக அதிகரிப்பு</h2><p>
</p><p>
அத்துடன், 18 வயதை பூர்த்தி செய்து சமூகமயமாகும் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக அவர்களுக்கு வீடுகளை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fff4c96-f00b-4460-b7c7-fb501581d93c/26-6aacba4d9bf59.webp' /></p><p>
</p><p>
பாதுகாப்பற்ற வீடுகளில் வசிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, கடந்த ஆண்டு பாதுகாப்பான வீடொன்றை அமைப்பதற்காக 10 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாகவும், அந்தத் தொகை போதுமானதாக இல்லை என முன்வைக்கப்பட்ட கருத்துக்களை கருத்திற்கொண்டு இந்த ஆண்டு அந்த உதவித் தொகை 20 இலட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.</p><p>

இந்தத் தொகையும் போதுமானதாக இல்லாவிட்டால், குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக மேலும் நிதி ஒதுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.</p><p>

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தால் மாத்திரம் மேற்கொள்ளக்கூடிய பணியல்ல எனக் குறிப்பிட்ட அவர், அதற்காக சமூகமும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
</p><p>
எந்தவொரு குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தேசிய ரீதியில் குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்காக அரசாங்கமும் பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T04:20:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை பெய்யும் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-weather-forecast-in-sri-lanka-in-tamil-1789704054"></link>
            <id>https://ibctamil.com/article/today-weather-forecast-in-sri-lanka-in-tamil-1789704054</id>
            <summary type="text">இலங்கையின் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் இன்று (18) 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் இன்று (18) 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. </p><p>

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (18) அதிகாலை விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்பதுடன் வடமேல் மாகாணத்தில் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.</p><p></p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p>

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94471a97-7b34-4c14-b7ed-c9b1c6508fb9/26-6aacbab0220d6.webp' />&nbsp;</p><p> </p><p>

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T04:14:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-returns-to-court-today-1789702379"></link>
            <id>https://tamilwin.com/article/namal-returns-to-court-today-1789702379</id>
            <summary type="text">புதிய இணைப்புநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ச சற்றுமுன்னர் (18) மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.முதலாம் இணைப்புதற்போது விளக்கமற...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ச சற்றுமுன்னர் (18) மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று (18) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p><p>

சர்ச்சைக்குரிய எயார்பஸ் வானூர்தி கொள்வளவு தொடர்பான விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த 4 ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையானபோது நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டார்.</p><h2>எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள்</h2><p>

இந்த வழக்கில், கையூட்டலாக 1.4 மில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான தொகை சிங்கப்பூர் வங்கிக் கணக்கொன்றில் வரவு வைக்கப்பட்டதாகவும், அதிலிருந்து 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் இலங்கை வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faf784c4-ff8d-40ea-ae91-9591867a8b4c/26-6aacb36a54723.webp' /></p><p>இந்த சம்பவம் தொடர்பாக நிதித்தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணையில் நாமல் ராஜபக்ச சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.</p><p>இச்த வழக்கில் நேற்று முன்தினம் (16) நீதிமன்றில் முன்னிலையான போது அவரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T04:13:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் நாளை முதல் கடுமையாக அமுலாக்கபடவுள்ள சட்டம் ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/law-to-be-strictly-enforced-from-tomorrow-1789704147"></link>
            <id>https://jvpnews.com/article/law-to-be-strictly-enforced-from-tomorrow-1789704147</id>
            <summary type="text">அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் சாரதி உட்பட அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி அணிவதை கட்டாயமாக்கும் சட்டம் நாளை சனிக்கிழமை (19) முத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் சாரதி உட்பட அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி அணிவதை கட்டாயமாக்கும் சட்டம் நாளை சனிக்கிழமை (19) முதல் கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
ஆசனப்பட்டி அணிவதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்று வெள்ளிக்கிழமையுடன் (18) நிறைவடைவதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a82796ce-7307-4a7d-8a27-7538b9b6eca1/26-6aacb7d513010.webp' /></p><h2 style="text-align: justify; ">ஆசனப்பட்டி</h2><p style="text-align: justify; ">

இதன்படி, நாளை முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணியாமல் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.</p><p style="text-align: justify; ">

மேலும், ஆசனப்பட்டி வசதி இல்லாத வாகனங்கள் நாளை முதல் அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டாது என அவர் எச்சரித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகனங்களின் முன் மற்றும் பின் ஆசனங்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

</p><p style="text-align: justify; ">இதேவேளை, சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்ட போதிலும், சில பழைய வாகனங்களில் உற்பத்தியாளர்களால் ஆசனப்பட்டி பொருத்தப்படாதிருந்ததால் வாகன உரிமையாளர்களுக்கு மேலதிக கால அவகாசம் வழங்கப்பட்டதாக தெரிவித்த தேசிய வீதி பாதுகாப்புச் சபையின் தலைவர் , அவ்வாறான வாகனங்களுக்கு ஆசனப்பட்டிகளை பொருத்துவதற்காக பல தடவைகள் கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும், இறுதியாக வழங்கப்பட்ட கால அவகாசமும் இன்றுடன் நிறைவடைவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-18T04:02:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வயதானாலும் குழந்தைத்தனமாக நடந்துக்கொள்ளும் 3 ராசியினர்! உங்க ராசியும் இதுவா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-zodiac-signs-people-are-most-childish-1789650531"></link>
            <id>https://manithan.com/article/which-zodiac-signs-people-are-most-childish-1789650531</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்ச்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, காதல் வாழ்க்கை, விசேட திறமைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்ச்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, காதல் வாழ்க்கை, விசேட திறமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடியாக தாக்கம் செலுத்தும் என தொன்று தொட்டு நம்ப்பட்டு வருகின்றது.</p><p>அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள்&nbsp; எவ்வளவு வயதானாலும் குழந்தை தனத்துடன் இருப்பார்களாம். இவர்கள் தொழில் மற்றும் சமூக வாழ்க்கையில் பொறுப்புள்ளவர்களாக இருந்தாலும், இவர்கள் மனதளவில் விளையாட்டு குணம் கொண்டவர்களா இருப்பார்களாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42ad72c8-f40d-45e2-a7b1-920859fb4c3e/26-6aabf0de9096e.webp' /></p><p></p><p>அடிப்படி இயல்பிலேயே விளையாட்டு தனமும் குறும்பு செய்யும் இயல்பும் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><h2>மிதுனம்&nbsp;</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b160478c-5b51-4b47-b2f7-9f316d73b1d2/26-6aabf0df46b95.webp' /></p><p> மிதுன ராசிக்காரர்கள் எப்போதும் ஏதாவது புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்கள். அவர்களுடைய மனதில் எப்போதும் கேள்விகளும், புதிய யோசனைகளும் ஓடிக்கொண்டே இருக்கும். </p><p>ஒரு குழந்தை உலகத்தை ஆச்சரியத்துடன் பார்ப்பது போல, இவர்களும் வாழ்க்கையை ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் அணுகுவார்கள்.
ஒரே விஷயத்தில் நீண்ட நேரம் கவனம் செலுத்துவது இவர்களுக்கு சற்று கடினம்.</p><p> சலிப்பு வந்துவிட்டால் உடனே வேறு விஷயத்திற்குத் தாவிவிடுவார்கள். ஆனால் இவர்களுடன் இருக்கும் இடத்தில் சிரிப்புக்கும், கலகலப்புக்கும் ஒருபோதும் பஞ்சம் இருக்காது.
</p><h2>மேஷம்&nbsp;</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d18c0fd-3756-4120-a8b7-b7715e8d669f/26-6aabf0dff2a6d.webp' /></p><p> மேஷ ராசிக்காரர்கள் மனதில் பட்டதைச் செய்யத் தயங்காதவர்கள். அதிகம் யோசிப்பதற்கு முன்பே செயல்படத் தொடங்கிவிடுவார்கள். தைரியம், வேகம், நேர்மை ஆகியவை இவர்களின் முக்கிய குணங்கள்.
</p><p>ஒரு குழந்தை கோபப்படுவது போல, இவர்களுக்கும் சில நேரங்களில் கோபம் சீக்கிரம் வந்துவிடும். ஆனால் அந்தக் கோபம் நீண்ட நேரம் நீடிக்காது. </p><p>விரும்பியதை அடைய வேண்டும் என்ற ஆர்வமும், வாழ்க்கையை முழு உற்சாகத்துடன் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமும் இவர்களை தனித்துவமாக்குகிறது.
</p><h2>மீனம்&nbsp;</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd4e799b-9a2d-4d4c-b0fe-44b472a8fded/26-6aabf0e0a771c.webp' /></p><p></p><p> மீன ராசிக்காரர்கள் உணர்ச்சிகளாலும் கற்பனைகளாலும் நிறைந்தவர்கள். நிஜ வாழ்க்கையின் சலிப்பிலிருந்து தப்பித்து, தங்களுக்கென ஒரு அழகான கனவு உலகத்தை உருவாக்கிக்கொள்வார்கள்.
</p><p>இசை, கலை, காதல், கற்பனை இவை அனைத்தும் இவர்களின் மனதிற்கு மிகவும் நெருக்கமானவை. குழந்தைகளைப் போலவே, சிறிய விஷயங்களிலும் மகிழ்ச்சியைக் காண்பார்கள். </p><p>அதே நேரத்தில், அவர்களின் மென்மையான மனம் காரணமாக எளிதில் காயப்படக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். வயதானாலும் இவர்களிடம் குறும்பு செய்யும் இயல்பில் மாற்றம் இருக்காது.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T04:02:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாக்ஸ் ஆபிஸில் கடும் சரிவை சந்தித்துள்ள சர்தார் 2.. 30 கோடி வசூல் வந்தாலே பெரிய விஷயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sardar-2-disaster-in-worldwide-box-office-1789702485"></link>
            <id>https://cineulagam.com/article/sardar-2-disaster-in-worldwide-box-office-1789702485</id>
            <summary type="text">Sardar 2 disaster in worldwide box office: இயக்குநர் பி.எஸ். மித்ரன் மற்றும் கார்த்தி கூட்டணியில் உருவாகி வெளிவந்த சர்தார் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Sardar 2 disaster in worldwide box office: இயக்குநர் பி.எஸ். மித்ரன் மற்றும் கார்த்தி கூட்டணியில் உருவாகி வெளிவந்த சர்தார் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில், 8 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><p> </p><h2>

சர்தார் 2
</h2><p>
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக உள்ள கார்த்தி நடிப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சர்தார். இப்படத்தை இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கியிருந்தார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து சர்தார் 2 பிரம்மாண்ட பொருட்செலவில் உருவானது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b124ecba-5bca-4f4d-8b45-cee8c7b50551/26-6aacb158526ce.webp' /></p><p></p><p>இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், யோகி பாபு, நிழல்கள் ரவி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74560d69-9ef4-4fa5-b475-317d42a2e380/26-6aacb1591073b.webp' /></p><p></p><p>ரசிகர்கள் இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை வைத்திருந்த நிலையில், அதனை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன; இதனால் பாக்ஸ் ஆபிஸில் சர்தார் 2 கடும் சரிவை சந்தித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67ea1d9d-292b-4e5a-bea5-bc7dbce6cda1/26-6aacb159c117a.webp' /></p><p></p><p>
</p><h3>
வசூல் விவரம்</h3><p>

இந்த நிலையில், 8 நாட்களில் <a href="https://cinema.dinamalar.com/news/kollywood/karthi-and-suriya-could-not-advance-to-the-first-row-why/140939" target="_blank">சர்தார் 2 </a>திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 8 நாட்களில் ரூ. 24 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. வரும் நாட்களில் இப்படம் ரூ. 30 கோடி வசூல் செய்வதே மிகப்பெரிய விஷயம் என கூறப்படுகிறது. இதன்மூலம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்துள்ளது சர்தார் 2.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dc9e88b-f716-401a-91bb-33d458b030bb/26-6aacb1c1a0047.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T04:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/tn-governor-has-granted-assent-to-the-12-bills-1789703324"></link>
            <id>https://ibctamilnadu.com/article/tn-governor-has-granted-assent-to-the-12-bills-1789703324</id>
            <summary type="text">தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் ஒப்புதல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.</p><p>

தமிழக சட்டப்பேரவை முழு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி தொடங்கி செப்டம்பர் 8ம் தேதி நிறைவடைந்தது.
</p><p>
இந்த கூட்டத்தொடரில் 2026- 27ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டும், வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bef9d3ca-2110-499d-bad3-48c6bcb068ed/26-6aacb52a8405c.webp' /><br></p><p>
</p><p>
பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில் 13 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

தனியார் பல்கலைகழக திருத்த மசோதா, விவசாய விளைபொருள் சந்தைப்படுத்துதல் (ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், அரசுப் பணியாளர் தேர்வாணையம் (கூடுதல் பணிகள்) திருத்தச் சட்டம், தமிழ்நாடு நிதி ஒதுக்கீட்டுச் சட்டம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் திருத்த மசோதா, ஊராட்சிகள் 2-ஆம் சட்ட திருத்த மசோதா, வணிக எளிதாக்கல் திருத்த மசோதா, மதிப்புக்கூட்டு வரி திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
</p><p>
இதில் தனியார் பல்கலைகழக திருத்த மசோதா தவிர்த்து மற்ற மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.</p><p>

கூட்டத்தொடர் நிறைவடைந்த 5 நாட்களுக்குள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, இதனால் இவை சட்டமான நிலையில் கடந்த 15ம் தேதி வெளியான தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.&nbsp; &nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-18T03:51:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் பரிதாப நிலை - அதிர்ச்சியில் தமிழ் அரசியல்வாதி உட்பட ராஜபக்ச கூட்டணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-s-worst-condition-1789698608"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-s-worst-condition-1789698608</id>
            <summary type="text">இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவாக வேண்டும் என்ற கனவில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தீவிரமாக செயற்பட்டு வருகிறார். 

அதற்கு சில தமிழ் நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவாக வேண்டும் என்ற கனவில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தீவிரமாக செயற்பட்டு வருகிறார். </p><p>

அதற்கு சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பொதுஜன பெரமுன 
கட்சியினர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றனர். </p><p>

இந்நிலையில் தற்போதைய கள நிலவரம் அந்த தரப்பினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p> </p><h2><b>

பாரிய கூட்டம்</b></h2><p>கடந்த 12ஆம் திகதி அனுராதபுரத்தில் அநுர அரசாங்கத்திக்கு எதிராகவும், நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவாகவும் பாரிய கூட்டம் ஒன்று நடைபெற்றது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b576f6f-d86d-4615-93ea-4658c145e233/26-6aaca8b8617cc.webp' /></p><p>இந்த கூட்டத்தின் பின்னர் நாமல் ராஜபக்ச முற்றிலும் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். </p><p>

அவரது நிலைமை நேற்று முன்தினம் கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. </p><p>

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச, கடந்த 04 ஆம் திகதி ஊழல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு சென்றிருந்தார்.</p><p> </p><h3><b>

ஏமாற்றத்தில் நாமல்</b></h3><p>அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது திரண்டிருந்த ஆதரவாளர்களும் நேற்று முன்தினம் அங்கு இருக்கவில்லை. </p><p>

ஆதரவாளர்களுக்கு பதிலாக, முன்னாள் அமைச்சர்களான அனுர பிரியதர்சன யாப்பா, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட பிணையில் வெளிவந்துள்ள ஒரு சிலர் மட்டுமே வருகை தந்திருந்தனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8743562-403c-40f5-a2f1-896ebe2f2455/26-6aaca8b919bdb.webp' /></p><p>பாரிய மக்கள் ஆதரவு உள்ளதாக காட்டிக்கொண்ட ராஜபக்ச தரப்பினருக்கு, இந்த செயற்பாடு பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. </p><p>

அதேவேளை, நாமலை அடுத்த ஜனாதியாக மாற்றப் போவதாக சூளுரைத்துள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும் பெரும் அதிருப்தியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. </p>]]></content>
            <updated>2026-09-18T03:49:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம் ; அதிர்ச்சி கொடுக்கும் பட்டியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/assets-worth-millions-frozen-1789703186"></link>
            <id>https://jvpnews.com/article/assets-worth-millions-frozen-1789703186</id>
            <summary type="text">சட்டவிரோதமான வழிகளில் உழைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும், இருவருக்குச் சொந்தமான சுமார் 14 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைச் சட்டவிரோத சொத்துக்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சட்டவிரோதமான வழிகளில் உழைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும், இருவருக்குச் சொந்தமான சுமார் 14 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு முடக்கியுள்ளது.</p><p style="text-align: justify; "> 

குறிப்பிட்ட சந்தேகநபர்களில் ஒருவர் வத்தளைப் பகுதியைச் சேர்ந்தவராவார். 

இவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் உழைத்த 900 இலட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abdee946-9f9d-4a56-b3fc-c5a9b5ed0efd/26-6aacb413a2b21.webp' /></p><h2 style="text-align: justify; ">சொத்துக்கள் விபரம்</h2><p> </p><p style="text-align: justify; ">

மற்றைய நபர் தணமல்வில பகுதியைச் சேர்ந்தவராவார். இவர் சட்டவிரோதமாக உழைத்த பணத்தில் கொள்முதல் செய்த 350 இலட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய ஜீப் வண்டியை முடக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "> 

வத்தளைப் பகுதியைச் சேர்ந்த நபர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக உழைத்த பணத்தில் கொள்முதல் செய்த சொத்துக்கள் தொடர்பாக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

முடக்கப்பட்ட சொத்துக்கள் விபரம் </p><p style="text-align: justify; ">

ஹுனுபிட்டிய பகுதியில் அமைந்துள்ள 7 பேர்ச்சர்ஸ் காணியும் இரண்டு மாடி வீடும் (சுமார்: ரூ. 400 இலட்சம்) </p><p style="text-align: justify; ">

ஹுனுபிட்டிய, வத்தளை முகவரியில் அமைந்துள்ள 17 பேர்ச்சர்ஸ் காணியும் இரண்டு வீடுகளும் (சுமார்: ரூ. 300 இலட்சம்) </p><p style="text-align: justify; ">

ஹுனுபிட்டிய, வத்தளை முகவரியில் அமைந்துள்ள 5 பேர்ச்சர்ஸ் காணியும் கட்டடமும் (சுமார்: ரூ. 50 இலட்சம்)</p><p style="text-align: justify; "> 

காந்தி மாவத்தை, ஹுனுபிட்டிய முகவரியில் அமைந்துள்ள 3 பேர்ச்சர்ஸ் காணியும் கட்டடமும் (சுமார்: ரூ. 70 இலட்சம்)</p><p style="text-align: justify; "> 

ஸ்பேசியா ரக கார் (சுமார்: ரூ. 80 இலட்சம்)</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

விசாரணையின் படி, இச்சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக உழைத்த இச்சொத்துக்களை இன்றிலிருந்து 14 நாட்களுக்கு முடக்குவதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

இதற்கிடையில், தணமல்வில பகுதியைச் சேர்ந்த நபரும் சட்டவிரோதமாகக் கொள்முதல் செய்த சொத்துக்கள் தொடர்பாக, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பணிப்பாளர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணையை ஆரம்பித்துள்ளது.</p><p style="text-align: justify; "> 

அவ்விசாரணையின் படி, குறித்த சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தலில் உழைத்த சட்டவிரோதப் பணத்தில் கொள்முதல் செய்த சொகுசு ஜீப் வண்டியை (சுமார்: ரூ. 350 இலட்சம்) விற்பனை செய்வதையோ, பரிமாற்றம் செய்வதையோ அல்லது வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதையோ தடுப்பதற்காக நேற்று (16) முதல் 14 நாட்களுக்கு முடக்குவதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-18T03:46:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க ராணுவத்தின் எஃப்-16 ரக போர் விமானத்திற்கு நேர்ந்த கதி ; பயிற்சியின் போது விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/what-happened-to-us-military-s-f-16-fighter-jet-1789702501"></link>
            <id>https://canadamirror.com/article/what-happened-to-us-military-s-f-16-fighter-jet-1789702501</id>
            <summary type="text">டெக்சாஸை தளமாக கொண்ட அமெரிக்க ராணுவத்தின் எஃப்-16 ரக போர் விமானம் ஒன்று, மிச்சிகனில் நடந்த பயிற்சி நடவடிக்கையின் போது விபத்துக்குள்ளானது. விபத்தைத் தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>டெக்சாஸை தளமாக கொண்ட அமெரிக்க ராணுவத்தின் எஃப்-16 ரக போர் விமானம் ஒன்று, மிச்சிகனில் நடந்த பயிற்சி நடவடிக்கையின் போது விபத்துக்குள்ளானது. </p><p>விபத்தைத் தொடர்ந்து போர் விமானத்தில் இருந்த விமானி வெளியேற முடிந்ததாக, அந்த விமானத்திற்கு சொந்தமான பிரிவு தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92766bc1-b9c0-4100-98b2-b6fde6121ee7/26-6aacb1672d139.webp' /></p><p>

"149-ஆவது ஃபைட்டர் விங்கிற்கு ஒதுக்கப்பட்ட டெக்சாஸ் ஏர் நேஷனல் கார்டின் எஃப்-16 ஃபைட்டிங் ஃபால்கன் விமானம், டிராவர்ஸ் சிட்டி அருகே வழக்கமான பயிற்சி பணியின் போது விபத்துக்குள்ளானது," என்று அந்தப் பிரிவு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p>
"விமானி விமானத்திலிருந்து வெற்றிகரமாக வெளியேறினார். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது," என்று அது மேலும் விவரங்கள் அளிக்காமல் தெரிவித்தது.
</p><p>
மேலும், அந்த வடக்கு மாகாணத்தின் இரண்டு அமெரிக்க செனட்டர்களில் ஒருவரான கேரி பீட்டர்ஸ், பேசும் போது, "டிராவர்ஸ் சிட்டிக்கு அருகே நடந்த விமான விபத்து குறித்து நான் அறிந்திருக்கிறேன். </p><p>இந்தச் சம்பவம் குறித்த கூடுதல் தகவல்களைப் பெற நாங்கள் பணியாற்றி வருவதால், நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்" என்றும் கூறினார்.</p>]]></content>
            <updated>2026-09-18T03:35:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிஞ்சு சிறார்கள்... ஈரானில் அமெரிக்கா போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக ஐ.நா. நிபுணர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-committed-war-crimes-1789702587"></link>
            <id>https://news.lankasri.com/article/us-committed-war-crimes-1789702587</id>
            <summary type="text">UN experts say US committed war crimes: அமெரிக்கா போர்க்குற்றங்களைச் செய்ததாக ஐ.நா. நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஈரானில் நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்களில...</summary>
            <content type="html"><![CDATA[<p>UN experts say US committed war crimes: அமெரிக்கா போர்க்குற்றங்களைச் செய்ததாக ஐ.நா. நிபுணர்கள் கூறுகின்றனர்.
</p><p>ஈரானில் நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்களில் குறைந்தது 177 பேர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களில், அமெரிக்கா போர்க்குற்றங்களை இழைத்திருப்பதாக ஐ.நா.வின் மனித உரிமைகள் நிபுணர்கள் கூறுகின்றனர்.</p><h2>அமெரிக்கா நம்பவில்லை</h2><p>
</p><p>ஈரான் மீதான சுதந்திரமான சர்வதேச உண்மை கண்டறியும் குழுவின் புதிய அறிக்கை ஒன்றின்படி, மினாபில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளி மற்றும் லமெர்டில் உள்ள ஒரு விளையாட்டு வளாகத்தின் மீது பிப்ரவரியில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்கள், பொதுமக்கள் உயிரிழப்புகளையும் பொது உள்கட்டமைப்புகளுக்கு சேதத்தையும் ஏற்படுத்திய பாகுபாடற்ற தாக்குதல்களாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1911fdcd-091d-40ce-9308-383ecec98815/26-6aacb1bd6ee7c.webp' /></p><p> </p><p>லாமெர்ட் (Lamerd) மீது தாக்குதல் நடத்தியதை அமெரிக்கா முன்னதாக மறுத்திருந்ததுடன், மினாபில் (Minab) என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் கூறியிருந்தது. </p><p>அந்த அறிக்கையில் உள்ள தரவுகளை அமெரிக்கா நம்பவில்லை என்று வெளிவிவகரா அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். ஜனவரி மாதம் அரசாங்கத்திற்கு எதிரான பெருந்திரள் போராட்டங்களை ஒடுக்கியபோது, ​​ஈரானிய அதிகாரிகள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்ததையும் நிபுணர்கள் கண்டறிந்தனர்.</p><p></p><p> </p><p>31 மாகாணங்கள் முழுவதிலும் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட கொலைகள், மலைக்க வைக்கும் மற்றும் முன்னெப்போதும் இல்லாத அளவிலானதாக இருந்தன என்று அவர்கள் கூறினர். </p><p>இந்தக் கண்டுபிடிப்புகள் குறித்து ஈரானும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை; இருப்பினும், மனித உரிமைகள் முறையாகவும் தொடர்ச்சியாகவும் மீறப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை அது முன்னரே நிராகரித்துள்ளது. </p><p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கான தங்கள் சமீபத்திய அறிக்கையைத் தயாரிப்பதற்காக, அந்தத் தூதுக்குழுவின் மூன்று சுயாதீன நிபுணர்கள், மோதலின் போது பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிகக் கொடிய தாக்குதல்கள் இரண்டை குறித்து விசாரணை நடத்தினர்.</p><h2>120 பிஞ்சு சிறார்கள்</h2><p> </p><p>பிப்ரவரி 28 அன்று, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகப் போரைத் தொடங்கியபோது, ​​மினாப் நகரின் தெற்குப் பகுதியில் உள்ள ஷஜரே தைய்யெபே (Shajareh Tayyebeh) தொடக்கப் பள்ளியின் மீது ஏவப்பட்ட டொமாஹாக் (Tomahawk) ஏவுகணைகள் தாக்கியதில், 120 பிஞ்சு சிறார்கள் உட்பட குறைந்தது 156 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p>அன்று தாக்குதலுக்குள்ளான 'இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை'யின் (IRGC) கடற்படை வளாகத்திற்கு அருகிலேயே அந்தப் பள்ளி அமைந்திருந்தாலும், அப்பள்ளியைத் தெளிவாக அடையாளம் காண முடிந்தது என்றும், அது ராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதைக் குறிக்கும் எந்தத் தகவலும் இல்லை என்றும் உண்மை கண்டறியும் குழுவின் நிபுணர்கள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90efc2d9-2217-4f50-854b-a325cb5ab7f0/26-6aacb1be2fd93.webp' /></p><p>
</p><p>அமெரிக்கப் படைகளே இதற்குப் பொறுப்பு என்று அமெரிக்க ராணுவத்தின் ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாகக் கூறும் ஊடகச் செய்திகள் மற்றும் மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினரில் 'டொமாஹாக்' (Tomahawk) ஏவுகணைகளைக் கொண்ட ஒரே தரப்பு அமெரிக்கா ஆகியவற்றை உள்ளடக்கிய திரட்டப்பட்ட சான்றுகளின் அடிப்படையில், அப்பள்ளி மீதான தாக்குதல் அமெரிக்காவாலேயே நடத்தப்பட்டது என்று நம்புவதற்குத் தகுந்த காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்தனர். </p><p>மட்டுமின்றி, தொடர்புடையப் பள்ளி இரண்டு முறை தாக்கப்பட்டதாக உயிர் பிழைத்தவர்கள் கூறியுள்ளனர். மினாப் தாக்குதல் குறித்த தங்களது விசாரணையின் முடிவுகளை அமெரிக்க ராணுவம் இன்னும் வெளியிடவில்லை; இருப்பினும், பொதுமக்களைக் குறிவைத்து ஒருபோதும் தாக்குதல் நடத்தப்படவில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் கூறியுள்ளார்.</p><p></p><p> </p><p>மேலும், பிப்ரவரி 28 அன்று துல்லியத் தாக்குதல் ஏவுகணைகள் (PrSM) லாமெர்ட் (Lamerd) நகரில் உள்ள ஒரு விளையாட்டு வளாகம் மற்றும் குடியிருப்புப் பகுதியின் மீது டங்ஸ்டன் குண்டுகளை (tungsten pellets) வீசின; இதில் ஏழு குழந்தைகள் உட்பட குறைந்தது 21 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
</p><p>மீண்டும், விளையாட்டு வளாகத்தை தெளிவாக அடையாளம் காண முடிவதாகவும், அது இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதைக் குறிக்கும் எந்தத் தகவலும் இல்லை என்றும் அந்த உண்மை கண்டறியும் குழுவின் நிபுணர்கள் கூறியுள்ளனர். </p><p>அந்தத் தாக்குதலை அமெரிக்காதான் நடத்தியது என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாக அவர்கள் தங்கள் முடிவாகத் தெரிவித்தனர்; இதற்குச் சான்றாக, மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினரில் 'PrSM' ஏவுகணைகளைக் கொண்ட ஒரே தரப்பு அமெரிக்கா மட்டுமே என்ற உண்மையையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-18T03:33:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வினோதினி சீரியல் முடிவடைந்த நிலையில் புதிய தொடரில் கமிட்டாகியுள்ள ஆர்த்திகா... சன் டிவி தொடர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vinothini-fame-arthika-new-serial-in-sun-tv-1789700796"></link>
            <id>https://cineulagam.com/article/vinothini-fame-arthika-new-serial-in-sun-tv-1789700796</id>
            <summary type="text">ஆர்த்திகாமாதவி என்ற குறும்படம் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கியவர் தான் நடிகை ஆர்த்திகா. அதன்பின் சில நிகழ்ச்சிகள் மூலம் மக்களின் கவனத்தை பெற்றவர் த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஆர்த்திகா</h2><p>மாதவி என்ற குறும்படம் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கியவர் தான் நடிகை ஆர்த்திகா. </p><p>அதன்பின் சில நிகழ்ச்சிகள் மூலம் மக்களின் கவனத்தை பெற்றவர் திடீரென காணாமல் போனார். பிறகு அவர் ரீ என்ட்ரி கொடுத்தது போல் ஜீ தமிழில் கார்த்திகை தீபம் சீரியல் அமைந்தது, பட்டிதொட்டி எங்கும் கலக்கிய இந்த சீரியல் மூலம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார் ஆர்த்திகா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/342634fd-f86f-4b12-8f47-6b3568c7388d/26-6aacaed53325c.webp' /></p><p>
</p><p>அந்த நேரத்தில் கார்த்திகை தீபம் சீரியல் நாயகன் கார்த்திக் ராஜ் உடன் இணைந்து பிளாக் அண்ட் ஒயிட் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
சீரியல், படங்கள் தாண்டி தனது இன்ஸ்டாவிலும் நிறைய வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.</p><h2>
புதிய சீரியல்</h2><p>
கார்த்திகை தீபம் சீரியலை தொடர்ந்து ஆர்த்திகா சன் டிவி பக்கம் வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d94e64c3-634e-44e4-a792-cf3d391e3f0b/26-6aacaed35b92f.webp' /></p><p> </p><p>அதில் வினோதினி என்ற சீரியலில் நாயகியாக நடித்து வந்தார், இந்த வருடத்தில் அந்த சீரியலும் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் ஆர்த்திகா புதிய சீரியலில் கமிட்டாகியுள்ளார், சன் டிவி சீரியல் தான் அது. </p><p>அதாவது வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் லட்சுமி சீரியலில் தான் ஆர்த்திகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c27989a-4a79-4848-a099-56d7d840b8f7/26-6aacaed465288.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T03:30:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் நேரடி விமான சேவை ; ஆரம்பமான கையெழுத்து வேட்டை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/direct-flight-service-between-london-and-jaffna-1789701153"></link>
            <id>https://jvpnews.com/article/direct-flight-service-between-london-and-jaffna-1789701153</id>
            <summary type="text">லண்டனுக்கும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையே நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்குமாறு கோரி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை பிரித்தானியாவில் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">லண்டனுக்கும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையே நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்குமாறு கோரி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

பிரத்தானிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கரேத் தோமஸ் பொதுமக்களிடம் கையெழுத்து திரட்டும் புதிய மனு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30b2c5fa-e76b-4236-b0d1-9b76e1b75157/26-6aacad3be057a.webp' /></p><h2 style="text-align: justify; ">நேரடி விமானங்கள்</h2><p>
</p><p style="text-align: justify; ">
பிரித்தானிய வாழ் தமிழர்கள், வட இலங்கையில் உள்ள தங்கள் குடும்பத்தினர் மற்றும் கலாச்சார உறவுகளுடன் இலகுவாகத் தொடர்பைப் பேண இந்த சேவை உதவும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">
யாழ்ப்பாணத்திற்கு நேரடி விமான சேவைகளைக் கொண்டு வாருங்கள் என்ற தலைப்பில் இந்த பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;">

திருமணம், இறுதிச் சடங்குகள், ஆன்மீகத் திருவிழாக்கள் மற்றும் குடும்பச் சந்திப்புகளுக்காக யாழ்ப்பாணம் செல்லும் பிரித்தானியத் தமிழ் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பயணச் சிரமங்களை இந்த மனு விரிவாக விளக்குகிறது.
</p><p style="text-align: justify;">
ஹாரோ வெஸ்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான கரேத் தோமஸ், தற்சமயம் லண்டனிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நேரடி விமானங்கள் இல்லாத சூழலைச் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
லண்டனில் இருந்து வரும் பயணிகள் கொழும்பில் தரையிறங்கி, அங்கிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தூரம் மேலதிகமாகப் பயணிக்க வேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். </p><p style="text-align: justify;">கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்குச் செல்ல சாலை அல்லது ரயில் வழியில் சுமார் 6 முதல் 7 மணி நேரம் வரை பயணிக்க நேரிடுகிறது என குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify;">

இந்த கூடுதல் பயணம் முதியவர்கள், சிறு குழந்தைகளுடன் பயணிக்கும் குடும்பங்கள் மற்றும் அவசரக் குடும்பச் சடங்குகளுக்காகச் செல்வோர் மத்தியில் கடும் அசௌகரியங்களை ஏற்படுத்துகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த நேரடி விமான சேவை மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;">

லண்டன் - யாழ்ப்பாணம் இடையேயான நீண்ட நேரப் பயணம் வெகுவாகக் குறையும் எனவும், பிரித்தானியா மற்றும் வட இலங்கை இடையேயான குடும்ப, சமூக மற்றும் கலாச்சார பிணைப்புகள் வலுவடையும் எனவும் வட மாகாணத்தின் சுற்றுலாத் துறை, தொழில் முதலீடுகள் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார மேம்பாட்டிற்கு இது பெரும் ஊக்கமளிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

லண்டன் மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையே வணிக ரீதியாகச் சாத்தியமான நேரடி விமான சேவையை ஆராய்ந்து செயல்படுத்த பிரத்தானிய அரசாங்கம், இலங்கை அதிகார அமைப்புகள், விமான நிறுவனங்கள் மற்றும் லண்டன் விமான நிலையங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கரேத் தோமஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந்த முயற்சியை வெற்றிபெறச் செய்ய பொதுமக்களும், புலம்பெயர் தமிழ் சமூகத்தினரும் இந்த மனுவில் திரளாகக் கையெழுத்திடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-18T03:12:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[8 நாட்களில் உலகளவில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/mandaadi-movie-8-days-worldwide-box-office-1789700037"></link>
            <id>https://cineulagam.com/article/mandaadi-movie-8-days-worldwide-box-office-1789700037</id>
            <summary type="text">Mandaadi movie 8 days worldwide box office collection: சூரி நடிப்பில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த மண்டாடி தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Mandaadi movie 8 days worldwide box office collection: சூரி நடிப்பில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த மண்டாடி திரைப்படத்தின் 8 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.</p><p></p><p>
</p><h2>
மண்டாடி
</h2><p>
விடுதலை படத்தில் தொடங்கி இன்று மண்டாடி படத்தில் மாபெரும் கதாநாயகனாக உருவெடுத்து நிற்கிறார் <a href="https://cinema.vikatan.com/kollywood/vetrimaaran-about-soori-in-mandaadi-successmeet" target="_blank">சூரி</a>. வெற்றிமாறனிடம் துணை இயக்குநராக இருந்த மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூரியுடன் இணைந்து சுஹாஸ், மஹிமா நம்பியார் மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95bb1e5b-9a41-4007-a116-bdf613fb4ffb/26-6aaca7c8a8632.webp' /></p><p></p><p> 

படம் சூப்பர், வேற லெவல் ஆக்ஷன், படகு போட்டி மிரட்டிட்டாங்க என இப்படத்திற்கு ரசிகர்கள் சிறப்பான விமர்சனங்களை கொடுத்தனர். இதனால் முதல் நாளிலிருந்தே பாக்ஸ் ஆபிஸில் மண்டாடி திரைப்படம் வசூலை குவித்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb389635-473b-473b-ae7d-b0a7724e16ca/26-6aaca7c963350.webp' /></p><p></p><h3> 

வசூல் விவரம்</h3><p>

இந்நிலையில், பாக்ஸ் ஆபிஸில் 8 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் மண்டாடி திரைப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 8 நாட்களில் இப்படம் ரூ. 77 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வாரத்தின் இறுதிக்குள் ரூ. 100 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89b7924b-0120-4fcd-b0a3-e270bd7d57a5/26-6aaca7ca24e5a.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T03:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்குளியில் மூன்று பேர் பலியான கோர விபத்து! கடும் கோபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் - சாரதியின் பரபரப்பு வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/matakuli-road-accident-car-driver-confession-1789695255"></link>
            <id>https://tamilwin.com/article/matakuli-road-accident-car-driver-confession-1789695255</id>
            <summary type="text">கொழும்பு- மட்டக்குளியில் பல வாகனங்கள் நேற்று முன்தினம் மோதிய சம்பவம் மற்றும் உயிரிழப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட சாரதி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.&amp;nb...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு- மட்டக்குளியில் பல வாகனங்கள் நேற்று முன்தினம் மோதிய சம்பவம் மற்றும் உயிரிழப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட சாரதி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.&nbsp;</p><p>இந்த விபத்தினை ஏற்படுத்திய 52 வயதான சாரதி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அவர் மீது கொலை உட்பட 5 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>செப்டம்பர் 16 ஆம் திகதி இரவு பெர்குசன் சந்திப்பு பகுதியில் வத்தளையிலிருந்து அதிவேகமாக வந்த கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.&nbsp;&nbsp;</p><p>இந்த விபத்தில் மொத்தம் 13 பேர் காயமடைந்து கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மூவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பின்னர் உயிரிழந்தனர்.</p><h2>சாரதியில் பரபரப்பு வாக்குமூலம்</h2><p>தனது மகளை மேலதிக வகுப்பிற்கு பின்னர்&nbsp;வீட்டிற்கு அழைத்து வரச்சென்றுகொண்டிருந்தபோது தான் செலுத்திச்சென்ற மின்சார வாகனத்தின் வேகம் தானாகவே அதிகரித்ததாக அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb94e8bc-b8a8-4513-bd72-ee3927e6da12/26-6aaca08a5e102.webp' />&nbsp;</p><p>மேலும், தான்&nbsp; செலுத்திச்சென்ற கார் திடீரென அதிவேகமாக சென்று, வீதியின் இருபுறமும் இருந்த மக்கள் மற்றும் வாகனங்கள் மீது ஏறிச் சென்றதாகவும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
</p><p>குறித்த விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் சந்தேகநபரின் வீடு அமைந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர்.</p><p> விபத்துக்கு காரணமான காரில் ஏதோ தொழில்நுட்பக் கோளாறு இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் மேலும் தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த கார் தொடர்பாக மொரட்டுவ பல்கலைக்கழகத்திடம் இருந்து அறிக்கை கோருமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்வதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2dd37c9-7d85-44d7-8a80-cb9e45c9b8e3/26-6aaca08b12a1c.webp' /></p><p>

கொலை, விபத்தைத் தடுக்கத்தவறுதல், அபாயகரமான முறையில் வாகனம் செலுத்தல், நபர்களுக்கு மரணம் மற்றும் காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் பொலிஸ் தெரிவித்துள்ளது.</p><p>

அதிவேகமாக சென்ற கார், நெடுஞ்சாலை அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 முச்சக்கர வண்டிகள் மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் உட்பட 7 வாகனங்கள் மீது மோதியதில், அவை பலத்த சேதமடைந்தன.</p><p>

விபத்தை ஏற்படுத்திய சந்தேகநபரான தொழிலதிபர், தனது காரை அதிவேகமாக செலுத்திச்சென்ற, ​​சாலையின் இருபுறமும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ளது.</p><h2>சாரதியின் இரத்த மாதிரிகள் மருத்துவப்பரிசோதனை</h2><p>இது குறித்து ​​கொழும்பு வடக்குப் பொறுப்பு சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் எரிக் பெரேரா தெரிவிக்கையில், மட்டக்குளிய பெர்குசன் சந்திப்பு மிகவும் குறுகலான சாலையாகவும், அடிக்கடி நெரிசலாகவும் இருக்கும் என்று கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f56a345-9060-4518-bc62-a290a780e4f2/26-6aaca089a8d9f.webp' />&nbsp;</p><p>
மேலும், அத்தகைய குறுகலான சாலையில் மின்னல் வேகத்தில் வாகனம் செலுத்தியதாலேயே இந்த கோரமான விபத்து நிகழ்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இந்த விபத்து நடந்த நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விபத்து நடந்த இடத்தில் கூடியிருந்ததாகவும், நிலைமையைக் கட்டுப்படுத்தவும் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் சேர்க்கவும் பொலிஸ் நடவடிக்கை எடுத்ததாகவும் மட்டக்குளிய பொலிஸ் பொறுப்பதிகாரி அஜந்த புஷ்பகுமாரா தெரிவித்தார்.</p><p>மேலும், நீதிமன்ற உத்தரவுகளின்படி, விபத்தை ஏற்படுத்திய சாரதியின் இரத்த மாதிரிகள் மருத்துவப்பரிசோதனைக்கு அனுப்பப்படும் என்றும், விபத்தை ஏற்படுத்திய கார் குறித்து மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் அலுவலகத்திலிருந்து அறிக்கை கோரப்படும் என்றும், காரைப் பெறுவதற்காக மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு ஒரு நிபுணர் அறிக்கை மற்றும் ஒரு பொறியியல் அறிக்கை அனுப்பப்படும் என்றும் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.</p><p>

கோர விபத்து நடந்த உடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் குழுக்கள், பதற்ற நிலை ஏற்படுவதற்கு முன்பே சந்தேகத்திற்குரிய சாரதியை கைது செய்து்ளளனர். இல்லையெனில், கோபமடைந்த அப்பகுதி மக்கள் காரைத் தீயிட்டுக் கொளுத்தி, சாரதியை தாக்கியிருக்கக்கூடும் என்று பொலிஸ் கூறுகின்றது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T02:57:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் நாளை முதல் கடுமையாகும் நடைமுறைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/seat-belt-regulations-on-highways-to-be-tightened-1789698511"></link>
            <id>https://tamilwin.com/article/seat-belt-regulations-on-highways-to-be-tightened-1789698511</id>
            <summary type="text">இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் உள்ள சாரதிகள் மற்றும் பயணிகள் அனைவரும் சீட் பெல்ட் (Seat Belt) அணிவது கட்டாயமாக்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் உள்ள சாரதிகள் மற்றும் பயணிகள் அனைவரும் சீட் பெல்ட் (Seat Belt) அணிவது கட்டாயமாக்கும் சட்டம் செப்டம்பர் 19 முதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>

இதற்கான ஓராண்டு கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதால், நாளை முதல் அதிவேக நெடுஞ்சாலையில் சீட் பெல்ட் அணியாமல் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.</p><h2>&nbsp;அதிவேக நெடுஞ்சாலையில் நுழைய அனுமதிக்கப்படாது</h2><p>

அதன்படி, நாளை முதல் சீட் பெல்ட் இல்லாத வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் நுழைய அனுமதிக்கப்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6aadaaa-9084-45ba-89bf-48e7f0a87807/26-6aaca86bb7426.webp' /></p><p>

அதிவேக நெடுஞ்சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களின் முன் மற்றும் பின் இருக்கைகளில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று பொலிஸ் வலியுறுத்துகின்றது.
</p><p>
சீட் பெல்ட் அணியாமையினால் விபத்துகள் மற்றும் சம்பவங்களின் அபாயம் அதிகரிப்பதால், இந்த சட்டம் கடுமையாக நடைமுறைபடுத்தப்படும் என்று சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் மனோஜ் ரணகல சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
இந்த சட்டம் அபராதம் விதிப்பது அல்லது சட்ட நடவடிக்கை எடுப்பது என்ற ஒரே நோக்கத்திற்காக செயல்படுத்தப்படவில்லை என்றும், மாறாக சாரதிகள் மற்றும் பயணிகளின் உயிரைப் பாதுகாப்பதற்காகவே செயல்படுத்தப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><h2>சட்ட நடவடிக்கை</h2><p> </p><p>

வாகனத்தின் பின் இருக்கைகளில் பயணிக்கும் பயணிகளும் இருக்கைப் பட்டைகளை அணிய வேண்டும் என்றும், இருக்கைப் பட்டைகள் இல்லாத வாகனங்களில் அதிவேக நெடுஞ்சாலையில் நுழைய முயற்சிக்கக் கூடாது என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/797835a0-9118-4aab-a4bf-11836cf9b5db/26-6aaca86c702b7.webp' /></p><p>

இதற்கிடையில், இருக்கைப் பட்டைகளை அணிவதைக் கட்டாயமாக்கும் சட்டம் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், சில பழைய வாகனங்களின் உற்பத்தியாளர்கள் இருக்கைப் பட்டைகளைப் பொருத்தாத காரணத்தால், அதை முழுமையாக செயல்படுத்த சிறிது காலம் தேவைப்பட்டது என்று தேசிய சாலைப் பாதுகாப்பு சபையின் தலைவர் மஞ்சுலா குலரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த வாகனங்களில் இருக்கைப் பட்டைகளைப் பொருத்துவதற்காகப் பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும், கடைசி கால அவகாசமும் இன்றுடன் முடிவடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

அதன்படி, நாளை முதல், அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களின் சாரதிகள் மற்றும் அனைத்து பயணிகளும் இருக்கைப் பட்டைகளை அணிவது கட்டாயமாக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T02:56:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முச்சக்கரவண்டியில் சென்ற இளம் தம்பதியரின் தவறான செயல் ; வாடகை வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-couple-travelling-in-a-tuk-tuk-arrested-1789699879"></link>
            <id>https://jvpnews.com/article/young-couple-travelling-in-a-tuk-tuk-arrested-1789699879</id>
            <summary type="text">பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான சலிந்து மல்ஷித குணரத்ன அல்லது &#039;பாணந்துறை குடு சலிந்து&#039; என்பவரின் பணப் பொறுப்பாளராகச் செயற்பட்ட நபர் நேற்று (1...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான சலிந்து மல்ஷித குணரத்ன அல்லது 'பாணந்துறை குடு சலிந்து' என்பவரின் பணப் பொறுப்பாளராகச் செயற்பட்ட நபர் நேற்று (17) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "> 

கல்கிசை தலைமையக பொலிஸார் நடத்திய சோதனையின் போது, சந்தேகநபர் தனது மனைவியுடன் சேர்ந்து ஹெரோயின் போதைப்பொருளை விநியோகித்து பணம் சேகரித்துக் கொண்டிருந்த போது, இரத்மலானை விமான நிலைய சந்திக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/749d2866-b783-4bed-8b99-c60a87cf5ee5/26-6aaca8df0c556.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

சந்தேகநபர்களான தம்பதியரிடமிருந்து 63 இலட்சம் ரூபாய் பணம், 15,055 மில்லிகிராம் ஹெரோயின், நவீன ரக பணம் எண்ணும் இயந்திரம், மின்னணு தராசு மற்றும் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify; ">

முச்சக்கரவண்டி ஒன்றில் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் வருவதாக கல்கிசை தலைமையக தலைமை பொலிஸ் பரிசோதகர்&nbsp; தகவல் கிடைத்துள்ளது. </p><p style="text-align: justify; ">

இதற்கமைய, விமான நிலைய சந்தியிலிருந்து காலி வீதியை நோக்கி வந்த முச்சக்கரவண்டியை மறித்து பரிசோதித்த போது, அதன் பின் இருக்கையில் பெண் ஒருவரும் இருந்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

முச்சக்கரவண்டி ஓட்டுநரின் சாரதி அனுமதிப் பத்திரத்தை பரிசோதித்த போது, அவர் பாணந்துறை, அலுபோமுல்ல பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

சந்தேகநபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது அவருடைய சந்தேகத்திற்கிடமான நடத்தையின் காரணமாக அவரைச் சோதனையிட்ட போது, அவரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p style="text-align: justify; ">

அதனைத் தொடர்ந்து, பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் வைத்திருந்த பையை பரிசோதித்த போது, அதற்குள் இருந்து பெருந்தொகை பணம் கண்டெடுக்கப்பட்டது. </p><p style="text-align: justify; ">

இருவரிடமும் நடத்திய விசாரணையில் அவர்கள் கணவன்-மனைவி எனத் தெரியவந்ததுடன், பாணந்துறை குடு சலிந்துவின் போதைப்பொருளை விநியோகித்து பணம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "> 

இதற்காக மாதாந்தச் சம்பளமாக சலிந்து என்பவர் 1,50,000 ரூபாயை வழங்கி வந்ததாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர். </p><p style="text-align: justify; ">

சந்தேகநபர்களான தம்பதியர் சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்னர் பிலியந்தலை - ஹெடகம பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளதுடன், அந்த வீட்டைப் பரிசோதித்த போது பணத்தை எண்ணப் பயன்படுத்தப்படும் நவீன ரக இயந்திரம் மற்றும் மின்னணு தராசு என்பனவும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "> 

26 மற்றும் 34 வயதுடைய இத் தம்பதியரைத் தடுப்புக் காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-18T02:51:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அடுத்தடுத்து பறிபோன உயிர்கள் ; ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lives-lost-one-after-another-in-jaffna-1789698844"></link>
            <id>https://jvpnews.com/article/lives-lost-one-after-another-in-jaffna-1789698844</id>
            <summary type="text">கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர். 

கெற்பேலி பகுதியி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.</p><p style="text-align: justify; "> 

கெற்பேலி பகுதியில் கெப் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56327309-2d5d-491b-8c49-614927e844b6/26-6aaca31e41d99.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக சிகிச்சை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

குறித்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். </p><p style="text-align: justify; ">

உயிரிழந்தவர் 69 வயதுடைய ஓய்வு பெற்ற ஆசிரியர் என தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

இதேவேளை பருத்தித்துறை - கொடிகாமம் பிரதான வீதியின் வரணி பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.</p><p style="text-align: justify; "> 

கார் ஒன்றும் அதன் முன்னால் பயணித்த துவிச்சக்கர வண்டி ஒன்றும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.</p><p style="text-align: justify; "> 

குறித்த விபத்தில் துவிச்சக்கர வண்டியை செலுத்திய நபரும், அதில் அமர்ந்து பயணித்த ஒருவரும் பலத்த காயமடைந்தனர். </p><p style="text-align: justify; ">

காயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். </p><p style="text-align: justify; ">

அவர்களில் துவிச்சக்கரவண்டியில் அமர்ந்து பயணித்த 59 வயதுடைய நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.</p><p style="text-align: justify; "> 

குறித்த இரு விபத்து சம்பவங்கள் தொடர்பிலும் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "> 

அத்துடன் கெப் மற்றும் காரின் சாரதிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-09-18T02:34:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பெருந்தொகை பணத்துடன் சிக்கிய தம்பதி - பொலிஸ் விசாரணையில் அம்பலமான ரகசியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/couple-arrested-with-huge-money-1789696339"></link>
            <id>https://tamilwin.com/article/couple-arrested-with-huge-money-1789696339</id>
            <summary type="text">கொழும்பின் புறநகர் பகுதியாக கஸ்கிஸ்ஸ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது பெருந்தொகை பணத்துடன் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளது. 

பாண...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் புறநகர் பகுதியாக கஸ்கிஸ்ஸ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது பெருந்தொகை பணத்துடன் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளது.</p><p> 

பாணந்துறை குடு சலிந்து என அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர் சலிந்து மல்ஷித குணரத்னவின் பணத்திற்கு பொறுப்பாளராக செயல்பட்ட தம்பதியே நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.</p><p>

கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்ட சோதனையின்போது, ​​இரத்மலானை விமான நிலையச் சந்திப்புக்கு அருகில் ஹெராயின் விநியோகம் மற்றும் பண வசூலில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.</p><h2><b>பணத்துடன் சிக்கிய தம்பதி&nbsp;</b></h2><p>

இவர்களிடமிருந்து 6.3 மில்லியன் ரூபாய் பணம், 15,055 மில்லிகிராம் ஹெராயின், நவீன பண எண்ணும் இயந்திரம், மின்னணு தராசு மற்றும் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றினர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/738fb2a3-39d0-4015-b311-27f7c226a584/26-6aac9fd1cd8f3.webp' /></p><p>போதைப்பொருட்களை முச்சக்கர வண்டியில் கொண்டு செல்வதற்காக ஒருவர் வருவதாக கல்கிஸ்ஸ தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகர் சுமேத விமல குணரத்னவுக்கு இரகசியத் தகவல் கிடைத்திருந்தது.
</p><p>
இந்த தகவலின் அடிப்படையில், விமான நிலைய சந்திப்பிலிருந்து காலி வீதியை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்றை பொலிஸார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். </p><p>இதன்போது வாகனத்தின் பின்பகுதியில் பெண் அமர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.
</p><p>
முச்சக்கர வண்டி ஓட்டுநரின் சாரதி அனுமதிப் பத்திரத்தைச் சோதித்ததில், அவர் பாணந்துறை அலுபோமுல்ல பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. </p><p>

மேலதிக விசாரணையின் போது சந்தேகநபர் சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்து கொண்டதால் அவரை சோதனையிட்டதில், அவரிடமிருந்து ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><h3><b>

பெருந்தொகையான பணம் </b></h3><p>அதனைத் தொடர்ந்து, வாகனத்தின் பின்பகுதியில் அமர்ந்திருந்த பெண்ணிடம் இருந்த சுப்பர் மார்க்கெட் பைக்குள் பெருந்தொகையான பணம் இருப்பதை பொலிஸார் கண்டறிந்தனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3dd10512-377b-4dd5-813f-d4604f4fa5d2/26-6aac9fd283e82.webp' /></p><p>விசாரணையில், இவர்கள் இருவரும் கணவன்-மனைவி என்பதும், பாணந்துறை குடு சலிந்து என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்காக போதைப்பொருள் விநியோகம் மற்றும் பண வசூல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.</p><p>

இந்த பணிகளுக்காக சலிந்து தங்களுக்கு மாதந்தோறும் 150,000 ரூபாய் சம்பளம் வழங்கியதாக சந்தேகநபர்கள் தெரிவித்தனர்.
</p><p>
இந்த தம்பதியினர் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிலியந்தலையின் பகுதியில் உள்ள வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்திருந்தனர்.
</p><p>
அந்த வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, ​​பணத்தைக் கையாள்வதற்குப் பயன்படுத்தப்பட்ட நவீன பண எண்ணும் இயந்திரம் மற்றும் மின்னணு தராசு ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
தடுப்புக் காவல் உத்தரவின் கீழ், 26 மற்றும் 34 வயதுடைய தம்பதியினரிடம் மேலதிக விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-18T02:27:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிட்வாவைப் போன்றே 22ம் திருத்தச் சட்டமும் பேரழிவாகும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-must-not-misuse-the-power-says-sajith-1789697445"></link>
            <id>https://tamilwin.com/article/govt-must-not-misuse-the-power-says-sajith-1789697445</id>
            <summary type="text">&#039;டிட்வா&#039; சூறாவளியைப் போலவே ஜனநாயகத்தை முடக்குவதும் ஒரு கொடூரமான பேரழிவாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
22ஆவது திருத்தச...</summary>
            <content type="html"><![CDATA[<p>'டிட்வா' சூறாவளியைப் போலவே ஜனநாயகத்தை முடக்குவதும் ஒரு கொடூரமான பேரழிவாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
</p><p>22ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் அரசாங்கம் ஜனநாயகத்திற்கு மரண அடியைக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>'டிட்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு வீடுகளை வழங்கும் நோக்கில் வத்தளையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3507bdef-f9f2-4dc4-8166-384cdb2d8bcc/26-6aac9da6c09b2.webp' /></p><p>நாட்டில் சர்வாதிகார ஆட்சியை நிறுவுவதற்கு மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியைத் தோற்கடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
</p><p>அரசாங்கத்தின் இந்த முயற்சி முறியடிக்கப்படாவிட்டால், சுதந்திரமாக அரசியல் செய்யவோ அல்லது கருத்து சுதந்திரத்தைப் பயன்படுத்தவோ முடியாது போய்விடும் என எச்சரித்துள்ளார்.
</p><p>தனிநபர் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்; இதன் மூலமே நாட்டின் 220 இலட்சம் மக்களின் அரசியல் மற்றும் சமூக சுதந்திரம் உறுதி செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரச் சமநிலை அவசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.</p><p>
இதேவேளை, எல் நினோ மற்றும் லானினா நிலவரங்கள் காரணமாக இலங்கைக்குப் பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என காலநிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>வறட்சி, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு உள்ளிட்ட வானிலைப் பேரழிவுகள் தொடர்பில் கடுமையான கவனம் செலுத்தப்பட வேண்டும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T02:10:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுமக்கள் பாதுகாப்பினை பொலிஸாரினால் பாதுகாப்புப் மட்டும் உறுதி செய்ய முடியாது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-alone-cannot-affirmed-public-security-1789696656"></link>
            <id>https://tamilwin.com/article/police-alone-cannot-affirmed-public-security-1789696656</id>
            <summary type="text">ஒரு நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பு என்பது வெறும் பொலிஸாரோ அல்லது முப்படையினரோ மட்டுமே முன்னெடுக்கக்கூடிய ஒன்று அல்ல என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரு நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பு என்பது வெறும் பொலிஸாரோ அல்லது முப்படையினரோ மட்டுமே முன்னெடுக்கக்கூடிய ஒன்று அல்ல என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டாச்சி தெரிவித்துள்ளார்.
</p><p>அதற்கு அரச அதிகாரிகள், அரசியல் அதிகாரம் மற்றும் பொதுமக்கள் ஆகிய அனைவரதும் தீவிர பங்களிப்பு அவசியம் என என வலியுறுத்தியுள்ளார்.
</p><p>மக்கள் மையப்படுத்தப்பட்ட, சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கும் ஒரு அரசை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95b55de1-cf70-4e33-873e-65ec6fa26665/26-6aac9a924c8dc.webp' /></p><p>
</p><p>தற்போதைய சமூகத்தில் காணப்படும் முக்கிய சவால்களை எதிர்கொள்ள அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகிய மூன்று தரப்பினரின் ஒருங்கிணைந்த தலையீடு அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>போதைப்பொருள் அச்சுறுத்தல், திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள், பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள் மற்றும் பாடசாலைச் சூழலில் எழும் சவால்கள் என பல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.</p><p>
தற்போதைய ஆட்சியின் கீழ் சட்டம் அனைவருக்கும் ஒரே மாதிரியாகவே நடைமுறைப்படுத்தப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>
அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி அல்லது உயர் அதிகாரிகளாக இருந்தாலும் சரி, சட்டத்தின் முன் எவருக்கும் எவ்வித சிறப்புச் சலுகையும் கிடையாது எனக் கூறியுள்ளார்.
</p><p>மேலும், குற்றமிழைத்துச் சட்டத்திலிருந்து தப்பித்து வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள நபர்களுக்கு எதிராகவும் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துவதற்குப் பாதுகாப்புப் படையினரும் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் அமைப்புகளும் தீவிரக் கவனத்துடன் செயற்பட்டு வருவதாகவும் நிலாந்தி கொட்டாச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T01:58:54+00:00</updated>
        </entry>
    </feed>
