<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-21T04:03:36+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகளிர் மற்றும் சிறுவர் நலன்புரித் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் முக்கிய கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/important-discussion-at-the-presidential-office-1784605308"></link>
            <id>https://tamilwin.com/article/important-discussion-at-the-presidential-office-1784605308</id>
            <summary type="text">மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுக்கு 2026ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட
வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும்
திட்டங்களி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுக்கு 2026ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட
வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும்
திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், 2027ஆம் ஆண்டுக்கான வரவு -
செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்தும் ஆராய்வதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.</p><p>ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று(20.07.2026) ஜனாதிபதி அலுவலகத்தில்
நடைபெற்றது.
</p><p></p><h2>மாதாந்தக் கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம்</h2><p>
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள இலங்கை மகளிர் பணியகம்,
பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு, முன் பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய
செயலகம், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் மற்றும்
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆகியவற்றினால் 2026 ஆம் ஆண்டில்
மேற்கொள்ளப்பட்ட மீண்டெழும் மற்றும் மூலதனச் செலவினங்களின் முன்னேற்றம்
குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab23fb1f-61e6-42bb-bc08-612d135bc3c5/26-6a5eed0e10d96.webp' /></p><p>மேலும், 2026 ஆம் ஆண்டில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் கீழ்
நடைமுறைப்படுத்தப்படும் முதன்மைத் திட்டங்களான நிறுவனப் பராமரிப்பு மற்றும்
பாதுகாவலர் உரிமை, தெருவோரச் சிறுவர்களுக்கான வாழ்வாதாரக் கொடுப்பனவு,
கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்கு உணவுப் பொதி வழங்கும் திட்டம்,
முன்பள்ளிச் சிறுவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டம், முன்பள்ளி
ஆசிரியர்களுக்கான ‘குரு அபிமானி’ கொடுப்பனவுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின்
முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி இதன்போது கேட்டறிந்தார்.</p><p>கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் போஷாக்கு உணவுக் கொடுப்பனவை வெறும்
மற்றொரு பண உதவித் திட்டமாக அன்றி, அதன் ஊடாக எதிர்பார்க்கப்பட்ட நோக்கமான
கர்ப்பிணித் தாய்மார்களின் போஷாக்கை உறுதிப்படுத்துவதை இலக்காகக் கொண்டு, உரிய
மேற்பார்வையின் கீழ் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை
ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.</p><p>மேலும், 'டித்வா' சூறாவளியால் பெற்றோரை இழந்த பிள்ளைகளைப் பராமரிப்பதற்காக
மாதாந்தக் கொடுப்பனவை வழங்கும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் இதன்போது
மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டதுடன், அந்தக் கொடுப்பனவை உரிய சிறுவர்களுக்கு
விரைவாக வழங்குவதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T03:59:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனில் ஜயந்த பெர்னாண்டோவின் பெயரில் பரவும் போலி தகவல் : அமைச்சு கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fake-information-spread-in-min-anil-jayantha-name-1784604195"></link>
            <id>https://ibctamil.com/article/fake-information-spread-in-min-anil-jayantha-name-1784604195</id>
            <summary type="text">தொழில் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோவின் பெயரைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களின் ஊடாக&amp;nbsp; பொய்ப் பிரசாரம் முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொழில் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோவின் பெயரைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களின் ஊடாக&nbsp; பொய்ப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது</p><p>அதன்படி, பௌத்த மத யாத்திரைக்கான தம்பதிவ பயணம் மற்றும் தாய்லாந்துக்கான ஆன்மீகச் சுற்றுப்பயணங்களை தடை செய்வதற்கு அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாக பரவும் தகவல் முற்றிலும் போலியான செய்தியாகும் என அந்த அமைச்சு மறுத்துள்ளது.</p><p>

தொழில் அமைச்சினால் நேற்று (20) விடுக்கப்பட் அறிக்கையிலே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>பௌத்த மத யாத்திரை</h2><p>மேலும் அந்த அறிக்கையில், அனில் ஜயந்த பெர்னாண்டோவின் பெயரைப் பயன்படுத்தி பௌத்த மத யாத்திரைக்கான தம்பதிவ பயணம் மற்றும் தாய்லாந்துக்கான ஆன்மீகச் சுற்றுப்பயணங்களை தடை செய்வதற்கு அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாக சமூக ஊடகங்களின் ஊடாக மிக மோசமான முறையில் அப்பட்டமான பொய்ப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcb7ba09-3c85-4df5-b700-5e20b38d3f1c/26-6a5ee9abb72cb.webp' />&nbsp;</p><p>


இந்த போலிப் பிரசாரமானது நாட்டின் பல்லின சமூகங்களுக்கு இடையிலான சகவாழ்வைச் சீர்குலைக்கும் ஒரு சதியாகும்.</p><p></p><h2>வன்மையான கண்டனம்&nbsp;</h2><p> </p><p>பொதுமக்களை திசைதிருப்பி தவறாக வழிநடத்தும் நோக்கில் பரப்பப்படும் இத்தகைய கீழ்த்தரமான போலிப் பிரசாரங்களை தொழில் அமைச்சு மிக வன்மையாகக் கண்டிப்பதுடன், இது குறித்து தனது ஆழ்ந்த கவலையையும் அருவருப்பையும் தெரிவித்துக் கொள்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0982edeb-a060-4a90-be53-ab43eee1085e/26-6a5eec4455d96.webp' /></p><p>அமைச்சரினால் இவ்வாறானதொரு கருத்து வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் சோடிக்கப்பட்டவை. அமைச்சர் ஒருபோதும் அத்தகையதொரு கூற்றை வெளியிடவில்லை. </p><p>குறிப்பாக இலங்கையின் சமூக, அரசியல் மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டு, குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களைப் பின்தொடரும் சில குழுக்களினாலேயே இந்த வதந்திகள் திட்டமிட்ட முறையில் பரப்பப்பட்டு வருகின்றது” என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T03:50:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் நீரிணையில் பற்றி எரியும் கப்பல்கள் - விலை கொடுக்க நேரிடும் - எச்சரிக்கும் டிரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-war-live-us-launches-10th-night-of-strikes-1784602378"></link>
            <id>https://ibctamil.com/article/iran-war-live-us-launches-10th-night-of-strikes-1784602378</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையேயான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பத்தாவது நாளாக ஈரானிய நகரங்களைக் குறிவைத்து அமெரிக்கப் படைகள் ஏவுகணை தாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையேயான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பத்தாவது நாளாக ஈரானிய நகரங்களைக் குறிவைத்து அமெரிக்கப் படைகள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளன.</p><p>சிரிக் அருகேயும், பந்தர் அப்பாஸ், கெஷ்ம் தீவு, சபாஹர் மற்றும் கொனாரக் ஆகிய பகுதிகளிலும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>அமெரிக்க வீரர்களின் மரணங்களுக்காக ஈரான் "பல மடங்கு" விலை கொடுக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.</p><p></p><h2>ஹார்முஸ் நீரிணை</h2><p>ஈரான் தனது பதிலடித் தாக்குதல்களைத் தொடர்வதுடன் கடந்த சில மணிநேரங்களில் பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க நிலைகளை தாக்கியதாக வைத்ததாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f176d233-7cb4-4d63-8b07-d43d5aad1e80/26-6a5eebc4d723c.webp' /></p><p>ஹார்முஸ் நீரிணை வழியாக சென்ற 2 எண்ணெய் கப்பல்கள் கண்ணி வெடிகளில் வெடித்து சிதறியுள்ளதாகவும் கப்பல்களில் "பாரிய தீ" ஏற்பட்டுள்ளதாகவும் ஐ.ஆர்.ஜி.சி குறிப்பிட்டுள்ளது.</p><p>அரச செய்தி நிறுவனமான ஐஆர்ஐபி வெளியிட்ட ஓர் அறிக்கையில், இரண்டு கப்பல்களின் மாலுமிகளை மீட்புக் குழுவினர் வெளியேற்றி வருவதாகதெரிவித்துள்ளது.</p><p>ஈரானின் ஆதரவு பெற்ற யேமனில் உள்ள ஹூதிகள், சவூதி அரேபியாவுக்கு எதிராக கடல்வழி முற்றுகையை அறிவித்துள்ளதால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் மேலும் சீர்குலைக்கப்படும் என அச்சம் எழுந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T03:47:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டன் பிரியரா நீங்கள்? வாரத்துக்கு எவ்வளவு மட்டன் சாப்பிடனும்னு கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mutton-eating-benefits-weekly-limits-1784546905"></link>
            <id>https://manithan.com/article/mutton-eating-benefits-weekly-limits-1784546905</id>
            <summary type="text">அசைவ பிரியர்களுக்கு அதிகம் பிடித்த உணவாக இருக்கும் மட்டனை வாரத்திற்கு எவ்வளவு எடுத்துக்கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.மட்டன்இந்திய அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அசைவ பிரியர்களுக்கு அதிகம் பிடித்த உணவாக இருக்கும் மட்டனை வாரத்திற்கு எவ்வளவு எடுத்துக்கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><h2>மட்டன்</h2><p>இந்திய அசைவ உணவில் மட்டனுக்கு எப்பொழுதும் தனி இடம் உண்டு. பண்டிகைகள், விசேஷங்கள் என்றால் மட்டன் சமையல் தான் அதிகமாக இருக்கும்.&nbsp;</p><p>இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஆந்திரா உட்பட பல மாநிலங்கள் மட்டன் பிரியாணிக்கு மிகவும் பேமஸ் ஆகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5c12b97-9e60-4aca-bc9f-db4a24c8cc8a/26-6a5ee26c00d1a.webp' /></p><p>சத்தான உணவாக இருக்கும் மட்டன் தசைவளர்ச்சிக்கு தேவையான புரோட்டீன் அதிகம் கொண்டுள்ளது. உடம்பில் ரதத்தினை உற்பத்தி செய்யும் இரும்புச்சத்து அளிப்பதுடன், ரத்த சோகையை தடுக்கின்றது.</p><p>நரம்பு மண்டலத்துக்கு அவசியமான வைட்டமின் B12, ஜிங்க் போன்ற சத்துக்கள் இதில் அதிகமாக உள்ளதால், மக்கள் அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர்.&nbsp;</p><p></p><h2>வாரத்திற்கு எவ்வளவு சாப்பிட வேண்டும்?</h2><p>மட்டன் ஆரோக்கியமானதாக இருந்தாலும் வாரத்திற்கு 70 கிராமிலிருந்து 100 கிராம் வரை இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.</p><p>பொதுவாக சிகப்பு இறைச்சி அளவை குறைத்து சாப்பிடுவதையும் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் உங்களது வயது, உடல்நிலையை பொறுத்து இந்த அளவு மாறலாம். ஆதலால் டயட்டீஷியனிடம் ஆலோசனை பெற்று சாப்பிடலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2d25349-aa5c-4ae3-b499-528644603cd6/26-6a5ee26ca991f.webp' /></p><p>மட்டனில் உள்ள கொழுப்பு, கொலஸ்ட்ரால் இதய நோய்களுக்கு வழிவகுக்கும். சமைப்பதற்கு முன்பு அதன் கொழுப்பை நீக்குவது சிறந்தது. மேலும் எண்ணெய்யில் பொரிக்காமல் கிரில், பேக் அல்லது வேக வைத்து சாப்பிடுவது சிறந்தது.&nbsp;</p><p>அதுமட்டுமின்றி மசாலா குறைத்து சமைத்தால் ஜீரணத்திற்கு நல்லது. ஆனால் இரவு தாமதமாக மட்டனை சாப்பிடுவதை தவிர்க்கவும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52afeb75-4ab0-467f-9e77-05ccea22baf7/26-6a5ee26d5c872.webp' /></p><p>முன்பு உடல் உழைப்பு மக்களிடம் அதிகமாக இருந்த நிலையில், தற்போது உடல் உழைப்பு குறைந்துள்ளது இதனால் செரிமானம் ஆவது கடினமாக இருக்கும். ஆகவே மட்டன் சாப்பிடும் போது காய்கறிகள், தானியங்களோடு சமநிலையாக சாப்பிடுவது சிறந்தது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T03:45:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் மீண்டும் தீவிரமடையும் பதற்றம்! குவைத்துக்கான விமான சேவைகள் நிறுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srilankan-airlines-temporarily-stop-flights-kuwait-1784604225"></link>
            <id>https://tamilwin.com/article/srilankan-airlines-temporarily-stop-flights-kuwait-1784604225</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் மீண்டும் தீவிரமடைந்து வரும் போர்ச்சூழல் காரணமாக, குவைத் நாட்டிற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் மீண்டும் தீவிரமடைந்து வரும் போர்ச்சூழல் காரணமாக, குவைத் நாட்டிற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.</p><p>இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை இதனை அறிவித்துள்ளது.</p><p></p><h2>மேலதிக தகவல்களுக்கு</h2><p> </p><p>

இதன்படி, நேற்று (20) முதல் ஜூலை 26 ஆம் திகதி வரை குவைத்திற்கான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98c31694-034c-40f5-a406-c4253c9ad34b/26-6a5eea61ca9c6.webp' /></p><p> 

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 1979 என்ற அவசர தொலைபேசி இலக்கம் மூலமாகவோ அல்லது +94 11 777 1979 அல்லது +94 74 444 1979 ஆகிய வாட்ஸ்அப் (WhatsApp) இலக்கங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியோ பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இதனை தவிர்த்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம் என பயணிகளுக்கு&nbsp;அறிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T03:41:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஜினியிடம் அது இல்லை.. நடிகை சிம்ரன் ஓபன் டாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-simran-about-rajinikanth-1784602904"></link>
            <id>https://cineulagam.com/article/actress-simran-about-rajinikanth-1784602904</id>
            <summary type="text">ரஜினி - சிம்ரன்90-ஸ் கிட்ஸின் மனதை கவர்ந்த நாயகிகளில் ஒருவர் சிம்ரன். இவர் முதல் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் பேட்ட திரைப்படத்தில் இணைந்து நடி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரஜினி - சிம்ரன்</h2><p>90-ஸ் கிட்ஸின் மனதை கவர்ந்த நாயகிகளில் ஒருவர் சிம்ரன். இவர் முதல் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் பேட்ட திரைப்படத்தில் இணைந்து நடித்தார். இப்படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74392b06-d91f-42c7-bb76-5c21b8dd5c6e/26-6a5ee11d2e857.webp' /></p><p>இருந்தும் ரஜினி - சிம்ரன் மீண்டும் எப்போது இணைந்து நடிப்பார்கள் என ரசிகர்கள் கேட்டு வந்தனர். அந்த கேள்விக்கு விடையளிக்கும் வகையில், தர்மன் திரைப்படத்தில் சிம்ரன் இணைந்துள்ளார் என்கிற அறிவிப்பு வெளியானது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b603447c-efc8-471d-89b3-0e129e2840b0/26-6a5ee11c7b385.webp' /></p><p>இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் தர்மன் திரைப்படத்தில் நடிகை சிம்ரன் கதாநாயகியாக நடித்து வருகிறார். இது இவர்கள் இருவரையும் மீண்டும் ஒன்றாக திரையில் பார்க்க வேண்டும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.</p><h2>ஓபன் டாக்</h2><p>
</p><p>
இந்த நிலையில், ரஜினிகாந்த் குறித்து நடிகை சிம்ரன் வெளிப்படையாக பேசிய விஷயம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59a2beb9-94b4-4b00-978e-f944fe13356c/26-6a5ee11bc6bda.webp' /></p><p>அவர் கூறியதாவது, "என்னுடைய Favourite நடிகர் ரஜினி தான்; நான் அவருடைய வெறித்தனமான ரசிகை. அவரை மாதிரி ஒருவரை பார்த்ததே இல்லை; ஈகோ எல்லாம் அவருக்கு இல்லை; கீழே வந்து பழகுவார். பேட்ட படம் ஒரு டீசர் தான். அந்த படத்தில் வேலை செய்ததைவிட அதிகம் வேலை செய்ய வேண்டும் என ரஜினியிடம் கூறியிருந்தேன். கமலின் தயாரிப்பு, ரஜினி ஹீரோ என்பது மிகப்பெரிய காம்பினேஷன். அதில் ஒரு பகுதியாக நான் இருப்பது எனக்கு மகிழ்ச்சி" என கூறியுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T03:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா பொருட்களுக்கு 50% வரி - டிரம்ப் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-to-impose-50-tariff-on-many-canadian-goods-1784600758"></link>
            <id>https://ibctamil.com/article/trump-to-impose-50-tariff-on-many-canadian-goods-1784600758</id>
            <summary type="text">கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார். 

இந்த வரி விதிப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார்.</p><p> 

இந்த வரி விதிப்பு 30 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>

அமெரிக்க வர்த்தகக் கொள்கைக்கு எதிராக கனடா செயல்படுவதன் காரணமாகவே இந்த புதிய வரி விதிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p> </p><h2>இறையாண்மைக்கு அச்சுறுத்தல்&nbsp;</h2><p>

அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள், பால் பொருட்கள் மற்றும் மதுபானங்களுக்கு கனடா வரி விதிக்க எடுத்த தீர்மானத்திற்குப் பதிலடியாகவே அமெரிக்க ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5eba481c-b3a5-415f-8175-4f031f9e57ae/26-6a5edc22f052f.webp' /></p><p>கனடாவினால் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் நுகர்வோர் பொருட்கள் உட்பட பலதரப்பட்ட பொருட்களுக்கு இந்த புதிய வரி விதிப்பு அமுல்படுத்தப்பட உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><p>இந்த கூடுதல் வரி விதிப்பு கனடாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல்கள் என்றும் பிரதமர் கார்னி தெரிவித்துள்ளார்.</p><p>கனடா காட்டுத்தீயின் புகை அமெரிக்க நகரங்களுக்குள் பரவுவது தொடர்பாக சுங்க வரிகளை விதிப்பதாக ஜனாதிபதி டிரம்ப் விடுத்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து இந்த வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T03:38:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென இரத்து செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/srilankan-airlines-suspends-flights-to-kuwait-1784602750"></link>
            <id>https://ibctamil.com/article/srilankan-airlines-suspends-flights-to-kuwait-1784602750</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக, குவைத்துக்கான தனது விமானச் சேவைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக, குவைத்துக்கான தனது விமானச் சேவைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. 
</p><p>இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை (CAASL) விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.</p><p>
 

அதன்படி, குவைத்துக்கான விமானச் சேவைகள் நேற்று (20) முதல் ஜூலை 26, 2026 வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.</p><p></p><h2>உதவி தேவைப்படும் பயணிகள்</h2><p>
</p><p>
 

மேலதிக தகவல் அல்லது உதவி தேவைப்படும் பயணிகள், 1979 (இலங்கைக்குள்), +94 11 777 1979 (சர்வதேசம்), வாட்ஸ்அப் +94 74 444 1979 (அரட்டை மட்டும்) வழியாக விமான நிறுவனத்தைத் தொடர்புகொள்ளுமாறு&nbsp;ஏர்லைன்ஸ் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70fdf69d-9aea-4585-9427-3e66110f37d3/26-6a5ee290605fd.webp' /></p><p>அல்லது பயணிகள் பயண முகவரைத் தொடர்புகொள்ளுமாறு அல்லது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T03:35:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[விளாத்திகுளம் எம்எல்ஏ பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/vilathikulam-mla-in-palayamkottai-central-prison-1784604120"></link>
            <id>https://ibctamilnadu.com/article/vilathikulam-mla-in-palayamkottai-central-prison-1784604120</id>
            <summary type="text">விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.

திமுக பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.
</p><p>
திமுக பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய்யை மிரட்டும் வகையில் பேசியதற்காக விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி.மார்க்கண்டேயன் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலிசார் வழக்குபதிவு செய்தனர்.</p><p>

இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை ஜீ.வி.மார்க்கண்டேயனை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்த நிலையில் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.</p><p>

இந்நிலையில் அவர் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
</p><p>
தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.&nbsp;&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-21T03:24:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெனிவாவில் இலங்கைக்கு பேராபத்து! அரசுக்கு ஜி.எல். பீரிஸ் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-in-danger-in-geneva-gl-peiris-warns-1784602385"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-in-danger-in-geneva-gl-peiris-warns-1784602385</id>
            <summary type="text">&quot;உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் உள்ள வெற்றிடங்களை
நிரப்பாமல், நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்க அவசரப்படும் அரசின்
போக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>"உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் உள்ள வெற்றிடங்களை
நிரப்பாமல், நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்க அவசரப்படும் அரசின்
போக்கு, இலங்கையின் நீதித்துறை மீதான சர்வதேச நம்பிக்கையை சீர்குலைத்து
ஜெனிவாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர்
பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.</p><p>

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் நேற்று
நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p></p><h2>பதவிக்கால நீட்டிப்பைக்கோரும் அரசு&nbsp;</h2><p>

"எந்தவொரு ஜனநாயக நாடும் இத்தகைய அரசமைப்புத் திருத்தங்களைச் செய்வதற்கு
முன்னர் பொதுமக்களின் கருத்தைக் கோரும். ஐக்கிய இராச்சியத்தில் இத்தகைய ஒரு
விடயத்துக்காக 18 மாத காலத்துக்குள் 1,200 கருத்துக்கள் பெறப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cc09e43-a1fa-4268-bda2-41024a72a4ba/26-6a5ee4d33cffb.webp' /></p><p> </p><p>ஆனால்,
எமது நாட்டில் அரசு எவ்வித வெளிப்படைத்தன்மையுமின்றி இதனைச் செய்கின்றது.

வழக்குகள் தேங்கிக் கிடப்பதாகக் கூறி பதவிக்கால நீட்டிப்பைக் கோரும் அரசு,
உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் உள்ள நான்கு வீதம்
வீதம் வெற்றிடங்களை ஏன் நிரப்பவில்லை?</p><p> இந்த வெற்றிடங்களை நிரப்பாமல்
வைத்திருப்பதன் மூலம் நீதித்துறை மீதான நம்பகத்தன்மையை அரசே
சீர்குலைக்கின்றது.</p><p>

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கை குறித்து விசேட விசாரணைப் பொறிமுறையை
உருவாக்கியுள்ள நிலையில், உள்நாட்டு நீதித்துறை வலுவாக இருப்பதே நாட்டுக்குப்
பலம். ஆனால், இன்று நீதித்துறை அப்பட்டமாக அரசியலாக்கப்படுவதால், அது சர்வதேச
மட்டத்தில் நாட்டின் நற்பெயருக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.</p><h2>சர்வதேச நெருக்கடி</h2><p>
</p><p>
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் அமர்வில்,
இந்த விவகாரங்கள் இலங்கைக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f6d8a56-c7c9-4a15-a536-c9c02f3ff553/26-6a5ee4d3e66ca.webp' /></p><p> </p><p>தனிநபர் நன்மைக்காக
அல்லது குறுகிய அரசியல் நோக்கத்துக்காக முழு நாட்டையும் சர்வதேச
நெருக்கடிக்குள் தள்ளுவது கண்டிக்கத்தக்கது.</p><p>

சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட சிவில் சமூக அமைப்புகள் இந்தப் பதவிக்கால
நீடிப்புக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ள போதிலும், அரசு அவற்றைக் காது
கொடுத்துக் கேட்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T03:17:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி செல்லும் ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர்! யாழ்.நீதிவான் நீதிமன்றம் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/european-union-delegation-to-visit-semmani-1784603157"></link>
            <id>https://tamilwin.com/article/european-union-delegation-to-visit-semmani-1784603157</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு,
செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை நேரடியாகப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம்
ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு,
செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை நேரடியாகப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம்
நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
</p><p>
அந்தப் பகுதியைப் பார்வையிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தினர் சார்பில்
நீதிமன்றத்திடம் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. </p><p></p><h2>நீதிமன்ற அனுமதியின் அடிப்படையில்</h2><p>இந்த விண்ணப்பத்தை நேற்று(20) திங்கட்கிழமை பரிசீலித்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், அதற்கான
அனுமதியை வழங்கியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ef493fe-dc9a-48fd-9e8c-8d2551fc6f73/26-6a5ee4062cc05.webp' /></p><p>
நீதிமன்ற அனுமதியின் அடிப்படையில், ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர்
நாளையதினம் புதன்கிழமை காலை 9 மணிக்குச் செம்மணி மனிதப் புதைகுழிப்
பகுதிக்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிடவுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T03:14:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு மாதங்களில் திருமணம்... உக்ரைன் அருகே ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்ட கேரள மாலுமி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kerala-sailor-killed-russian-atack-1784603717"></link>
            <id>https://news.lankasri.com/article/kerala-sailor-killed-russian-atack-1784603717</id>
            <summary type="text">துறைமுக நகரமான ஒடெசா கடற்பகுதியில் ரஷ்யா முன்னெடுத்த மின்னல் தாக்குதலில் கொல்லப்பட்ட நான்கு இந்தியர்களில், கேரளாவைச் சேர்ந்த மாலுமி அகில் ஜோயனும் ஒருவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>துறைமுக நகரமான ஒடெசா கடற்பகுதியில் ரஷ்யா முன்னெடுத்த மின்னல் தாக்குதலில் கொல்லப்பட்ட நான்கு இந்தியர்களில், கேரளாவைச் சேர்ந்த மாலுமி அகில் ஜோயனும் ஒருவர்.</p><h2>இரண்டு மாதங்களில்</h2><p> </p><p>
உக்ரைனின் ஒடெசா துறைமுகத்திற்கு அப்பால் 'எம்வி கோல்டன் லியோ' (MV Golden Leo) என்ற சரக்குக் கப்பல் மீது ரஷ்யா மின்னல்&nbsp;தாக்குதல் நடத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/868e4b88-ac39-4a13-aa12-a3e2663d40ac/26-6a5ee5a3dc671.webp' /></p><p> </p><p>இதில் கொல்லப்பட்ட அகில் ஜோயன்
காசர்கோடு மாவட்டத்தின் வெள்ளரிக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர். 26 வயதான இவர், அடுத்த இரண்டு மாதங்களில் திருமணம் செய்துகொள்ள இருந்தார். </p><p>ஜோயன் கடந்த ஆறு ஆண்டுகளாகக் கப்பலில் மாலுமியாகப் பணியாற்றி வருகிறார்; அவர் விரைவில் தனது வேலையை மாற்றிக்கொள்ளவும் திட்டமிட்டிருந்தார். அவரது குடும்பத்திற்கு நெருக்கமானவர்களின் தகவல்படி, அந்த இளம் மாலுமி, மின்சாதனக் கடையில் பணிபுரியும் ஜோயன் மற்றும் காப்பீட்டு முகவரான சாலி ஆகியோரின் ஒரே மகன் என்றே தெரிய வருகிறது. </p><p>மட்டுமின்றி, 

அவர்கள் ஒரு சாதாரணக் குடும்பம் எனவும், அவர்களின் எதிர்காலம் பெரும்பாலும் அகிலைச் சார்ந்தே இருந்தது எனவும், மிக சமீபத்தில்தான் சொந்தமாக ஒரு வீட்டை கட்டியிருந்ததாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.</p><p></p><p> </p><p>மேலும், அகில் ஜோயன் தனது நிச்சயதார்த்த விழாவிற்காக சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு நாடு திரும்பியிருந்ததாகவும், இன்னும் இரண்டு மாதத்தில் அகிலின் திருமணம் முடிவு செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. </p><p>அகில் பணிபுரிந்த கப்பல் நிறுவனத்திடமிருந்து திங்கட்கிழமை மாலையில் வந்த மின்னஞ்சல் மூலமாகவே அவரது குடும்பத்தினர் அவரது இறப்புச் செய்தியை அறிந்துகொண்டனர். </p><p>இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் கூடுதல் விவரங்களைச் சேகரித்து, தேவையான நடைமுறைகளை நிறைவு செய்ய முயற்சித்து வருவதாக கிராம நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளது.</p><h2>கேரள முதலமைச்சர்</h2><p> </p><p>அகில் தனது 19-வது வயதில் வணிகக் கப்பலில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இதனிடையே, கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து வெளியாகியுள்ள தகவலில், </p><p>ரஷ்யத் தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த மாலுமி கொல்லப்பட்ட விவகாரத்தில், கூடுதல் தகவல்களைத் திரட்டுவதற்காக ரஷ்யத் தூதரகம் மற்றும் வெளிவிவகார அமைச்சகத்துடன் வெளிநாடு வாழ் கேரளத்தவர் விவகாரத் துறை (NORKA) அமைப்பு ஒருங்கிணைந்து செயல்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ebe614f-ee23-4ac2-ae25-579bd2df94f7/26-6a5ee5a4a5662.webp' /></p><p> </p><p>இதனிடையே, சர்வதேச செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலில், 
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா-பிசாவின் கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் ஒன்று, ஒடெசா துறைமுகத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஞாயிற்றுக்கிழமையன்று ரஷ்யப் படைகளால் மின்னல் தாக்குதலுக்கு இலக்கானதாகவும், </p><p>இதில் சிரியாவைச் சேர்ந்த ஐந்து மாலுமிகள் உட்பட 10 பணியாளர்கள் கொல்லப்பட்டதாகவும் உக்ரைனின் கடல்சார் துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது. உக்ரேனில் இருந்து சோளம் ஏற்றிச் சென்ற அந்தக் கப்பலிலிருந்து காயங்களுடன் எட்டு பேர் மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T03:13:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் தவறான அறிக்கை வெளியிட்ட சுரேஷ் சலே: பொன்சேகா வெளியிட்ட முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-sallay-sarath-fonseka-gotabaya-rajapaksa-1784601471"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-sallay-sarath-fonseka-gotabaya-rajapaksa-1784601471</id>
            <summary type="text">நான் இராணுவத்தளபதியாக பொறுப்பேற்ற போது அரசாங்க புலனாய்வுத்துறையில் இருந்த கபில ஹெந்தவித்தாரனவும் சுரேஷ் சலேவும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 9,0...</summary>
            <content type="html"><![CDATA[<p>நான் இராணுவத்தளபதியாக பொறுப்பேற்ற போது அரசாங்க புலனாய்வுத்துறையில் இருந்த கபில ஹெந்தவித்தாரனவும் சுரேஷ் சலேவும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 9,000 உறுப்பினர்கள் மட்டுமே இருப்பதாக தனக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தனர் என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.</p><p>வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த செவ்வியில் அவர் தெரிவித்துள்ள மேலதிக கருத்துக்கள்,</p><p>சலேவின் அறிக்கைகள் மற்றும் அவர்களின் அதிகாரப்பூர்வ கணக்கு 9,000 மட்டும் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் செயல்பாடுகள் நடக்கும் முறையை வைத்து நான் ஒரு ஆய்வு செய்தேன்.</p><h2>

</h2><p></p><h2>தனியாக செய்த ஆய்வு</h2><p>கிழக்கில் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற ஊகிப்பு, தாக்குதல் வியூகம் , எந்தப் பக்கத்தைப் பாதுகாத்துத் தாக்குகிறார்கள், பங்கர்களை எப்பக்கத்தில் அமைத்துக் கைப்பற்றியிருக்கிறார்கள் என்பதை நன்கு ஆய்வு செய்தேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b3cd7dc-3b8b-43c3-8c3e-27c0b0593904/26-6a5edb8207668.webp' />&nbsp;&nbsp;</p><p>
</p><p>யாழ்ப்பாணம் முகமாலையில் சுமார் 2,000 பேர் இருக்கிறார்கள். இப்படி நான் கணக்கிட்டுப் பார்த்தபோது, இது நிச்சயமாக 30,000-க்கும் அதிகம் என்று எனக்குப் புரிந்தது. </p><p>இந்த 9,000 அல்லது 10,000 பேரைக் கொண்டு இவர்களுக்கு இவ்வாறு தாக்குதல் நடத்த முடியாது. குறைந்தபட்சம் 30,000 பேராவது இருக்க வேண்டும் என்பதுதான் எனது கணிப்பு. </p><p>சிறிது காலம் கழித்து இக்பால் அதாஸ் என்ற புலனாய்வு ஊடகவியலாளர் 
அக்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 35,000 பேர் இருப்பதாக ஒரு கட்டுரை எழுதினார். </p><p>அப்போது தான் நான் இதுதான் சரியான எண்ணிக்கை என்று தெரிந்து கொண்டேன். எனவே இவர்களால் எந்தப் பயனும் இல்லை, பொய் அறிக்கைகளை சமர்ப்பித்தனர்.</p><h2>கொழும்பில் உளவுத்தகவல் கூட்டம்</h2><p>தமிழீழ விடுதலைப்புலிகள் என்ன செய்கிறது என்று கூடத்தெரியாது. தமிழீழ விடுதலைப் புலிகளின் பலத்தைப் பற்றிய புரிதலும் இல்லை. அதனால் தான் நான் ஹெந்த விதாரன- சுரேஷ் சலேவை நீக்கினேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f5cf9dc-0a76-4ec9-9b3a-ec37fbfa054f/26-6a5ee1683c247.webp' /></p><p>இதன்பின்னர் கோட்டாபய ராஜபக்ச இவர்களைச் சேர்த்துக் கொண்டு, கொழும்பில் உளவுத் தகவல் கூட்டம் என்று நடத்தி, கொழும்பு உளவு வேலையை கோட்டாபய தான் ஹெந்தவிதாரன மற்றும் சலேவுடன் இணைந்து தனியாக ஒரு குழுவை அமைத்துச் செயற்பட்டார்.
</p><p>தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் நேரடியாகப் போரிட்டு உன்னதமான சேவை செய்த, சிறந்த உளவுத்துறைத் தலைவர் என்று தானே சொல்கிறார்கள்?
</p><p>இவர்கள் கோட்டாபய ராஜபக்சவுக்கு உன்னதமான சேவை செய்தவர்கள். ஈழம் போரின் நான்காம் கட்ட நடவடிக்கைக்கு அவர்கள் ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T03:03:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[11 நாட்களில் இதயம் முரளி செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/idhayam-murali-11-days-box-office-1784601548"></link>
            <id>https://cineulagam.com/article/idhayam-murali-11-days-box-office-1784601548</id>
            <summary type="text">காதல் கதைக்களத்தில் உருவாகும் திரைப்படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு கிடைக்கும்.

அதுவும் நம் மனதிற்கு நெருக்கமான நடிகர் முரளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>காதல் கதைக்களத்தில் உருவாகும் திரைப்படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு கிடைக்கும்.</p><p></p><p>

அதுவும் நம் மனதிற்கு நெருக்கமான நடிகர் முரளி நடித்த இதயம் திரைப்படத்தின் தலைப்பிலேயே, அதுவும் அவருடைய மகன் நடித்து ஒரு படம் வெளியாகிறது என்றால் அந்த படத்திற்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என்பதை சொல்லவே தேவையில்லை.</p><h2>இதயம் முரளி</h2><p> </p><p>

அப்படி ரசிகர்களின் அமோக வரவேற்பில் வெளியான திரைப்படம்தான் இதயம் முரளி. கடந்த ஜூலை 10-ஆம் தேதி திரைக்கு வந்த இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், ஓரளவு நல்ல வசூலை பாக்ஸ் ஆபிஸில் பெற்று வந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74e2578c-97d8-4a2d-8e7d-f755891d531b/26-6a5edbcf8f40e.webp' /></p><h2>வசூல்&nbsp;</h2><p> </p><p>

இந்த நிலையில், 11 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் இதயம் முரளி, இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 11 நாட்களில் உலகளவில் ரூ. 28 கோடி வசூல் செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2385fe7d-b609-43e0-98f0-004c17bc45da/26-6a5edbd046d37.webp' /></p>]]></content>
            <updated>2026-07-21T03:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோழியால் நேர்ந்த விபரீதம் - தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/son-attacked-father-for-chicken-1784600944"></link>
            <id>https://tamilwin.com/article/son-attacked-father-for-chicken-1784600944</id>
            <summary type="text">நுவரெலியா, லிந்துலை பகுதியில் மகன் ஒருவர், தனது தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் தந்தை படுகாயமைந்துள்ளார்.

கோழியைக் கொன்று இறைச்சிக்காக உட்கொண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா, லிந்துலை பகுதியில் மகன் ஒருவர், தனது தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் தந்தை படுகாயமைந்துள்ளார்.</p><p>

கோழியைக் கொன்று இறைச்சிக்காக உட்கொண்டதால் ஆத்திரமடைந்த மகன் தந்தையை தாக்கியுள்ளார். </p><p>

சம்பவத்தில் படுகாயமடைந்த தந்தை கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><h2><b>

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம்</b></h2><p>இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் லிந்துலை, மவுஸ்வெல்ல தோட்டத்தைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15f3d1d4-cf15-4847-aede-2e424dfe5215/26-6a5edb12890e9.webp' /></p><p>குறித்த நபரால் வீட்டில் வளர்க்கப்பட்ட கோழியொன்று கொல்லப்பட்டு இறைச்சிக்காக உட்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>இதனால் கோபமடைந்த மகன் தந்தையுடன் தகராற்றில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதன் காரணமாக, மகன் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதன்போது பலத்த வெட்டுக் காயங்களுக்குள்ளான தந்தை லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
</p><p>
தாக்குதலை நடத்திய மகன் பிரதேசத்திலிருந்து தப்பியோடியுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
</p>]]></content>
            <updated>2026-07-21T02:36:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[குரு பெயர்ச்சி: அடுத்த 30 நாட்கள் 4 ராசிகளுக்கு ராஜயோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/4-lucky-zodiac-sign-due-to-guru-peyarchi-1784564682"></link>
            <id>https://manithan.com/article/4-lucky-zodiac-sign-due-to-guru-peyarchi-1784564682</id>
            <summary type="text">குரு பெயர்ச்சி காரணமாக அடுத்த 30 நாட்களுக்கு ராஜயோகத்தினை பெறும் ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.குரு பெயர்ச்சிஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>குரு பெயர்ச்சி காரணமாக அடுத்த 30 நாட்களுக்கு ராஜயோகத்தினை பெறும் ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.</p><h2>குரு பெயர்ச்சி</h2><p>ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக குருபகவான் இருக்கின்றார். 12 மாதத்திற்கு ஒருமுறை தனது ராசியை மாற்றி வருகின்றார்.</p><p>மகிழ்ச்சி அறிவு, திருமணம் இவற்றிற்கு காரணமாக இருக்கும் குரு 9 கிரகங்களில் மங்களகரமான கிரகமாக இருக்கின்றார். குருவின் பெயர்ச்சி தருணத்தில் சில ராசியினருக்கு நேரடியான தாக்கம் ஏற்படும். இதனால் தொழில், வியாபாரம், கல்வி இவற்றில் சிறந்து விளங்குவார்கள்.</p><p>தற்போது குரு கடக ராசியில் உள்ள நிலையில், கடந்த 19ம் தேதி பூச நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியடைந்துள்ளார். ஆகஸ்ட் 19ம் தேதி வரை இதில் நிலைத்திருப்பதால் சில ராசியினருக்கு நேர்மறையான ஆற்றலை அளிக்கின்றார். அந்த ராசியை குறித்து தெரிந்து கொள்வோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd91c56e-5813-4d43-b4a7-b897fa462b30/26-6a5e4bcc2e9e5.webp' /><br></p><h2>
மேஷம்&nbsp;</h2><p>குரு நட்சத்திர பெயர்ச்சியினால் மேஷ ராசியினர் சிறப்பான பலனை எதிர்கொள்கின்றனர். சிறுசிறு பிரச்சனைகள் தீர்வதுடன், உடன் பிறந்தவர்களின் ஆதரவும் கிடைக்கும்.</p><p>நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த பணிகள் முடிவடையும். நினைத்த காரியம் கைகூடுவதுடன், புதிய வருமான வழிகளும் பிறக்குமாம்.</p><p>தொழிலில் முன்னேற்றத்தையும், பணியிடத்தில் புதிய பொறுப்பு, மதிப்பு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் பாராட்டுகளை பெறுவீர்கள். புதிய வருமான வழிகள் பிறப்பதுடன், புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e041ebe5-6bdf-4eda-90b0-5739b08c81db/26-6a5e4bccd71c7.webp' /></p><h2>
மிதுனம் </h2><p>மிதுன ராசியினருக்கு இந்த குருபெயர்ச்சியினால் செல்வம் அதிகரிப்பதுடன், வீட்டில் சுப காரியங்கள் நடைபெறுமாம். புதிய தொழில் தொடங்குவதற்கு இவை சரியான நேரம் ஆகும்.</p><p>தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிப்பதுடன், தாய்வழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது நல்லது. ஆபரணங்கள் மீதான முதலீடுகள் அதிகரிக்கும்.</p><p>எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மாற்றங்கள் ஏற்படுவதுடன், அரசு பணியில் இருப்ப்வர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டுமாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33aad1bb-88db-4b96-832d-e8582f71bf9f/26-6a5e4bcd935bd.webp' /></p><p></p><h2>
சிம்மம் </h2><p>சிம்ம ராசியினருக்கு இந்த குருபெயர்ச்சியினால் பிரச்சனைகள் தீர்வதுடன், முயற்சிக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். வீட்டில் மனதிற்கு பிடித்த சில மாற்றங்களை செய்வீர்கள்.</p><p>முயற்சிக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைப்பதுடன், மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள அதிக வாய்ப்புள்ளது.</p><p>உடன் பிறந்தவர்களின் உதவி கிடைப்பதுடன், நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியாக முடியும். சுப காரியங்கள் வீட்டில் உண்டாகும். நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த வேலை முடிவிற்கு வரும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/182b47da-b028-4bb3-8f83-943cec8351b6/26-6a5e4bce43837.webp' /><br></p><h2>

மீனம் </h2><p>மீன ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சியினால் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் புதிய பயணத்தை மேற்கொள்வீர்கள்.</p><p>புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன், சகோதர வழியில் ஒத்துழைப்பும் கிடைக்கும். பணவரவு அதிகரிப்பதுடன், வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.</p><p>மனதில் உள்ள வேதனை நீங்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சூட்சுமத்தை அறிந்து செயல்படுவீர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60572a2b-8b83-43fd-8fc8-428a57121214/26-6a5e4bcee9b10.webp' /><br></p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</b>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;<br></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T02:33:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த அறிகுறிகள் தென்படுமாயின் வீட்டிலேயே இருக்க வேண்டாம்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-issued-to-the-public-dengu-symptoms-1784599535"></link>
            <id>https://tamilwin.com/article/warning-issued-to-the-public-dengu-symptoms-1784599535</id>
            <summary type="text">டெங்கு அறிகுறிகள் தென்படுவோர் தாமதிக்காது உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பொதுமக்களிடம் வலியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>டெங்கு அறிகுறிகள் தென்படுவோர் தாமதிக்காது உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளது.</p><p>இதேவேளை, நடப்பாண்டின் இதுவரையான காலபகுதியில் பதிவான மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 76,00 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><h2>டெங்கு காய்ச்சலின் பொதுவான அறிகுறிகள்</h2><p>அத்துடன், டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரையில் 53 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f489772-afea-4b34-b2c4-cdee184fbd1d/26-6a5ed73d6375d.webp' /></p><p>இந்நிலையில், டெங்கு காய்ச்சலின் பொதுவான அறிகுறிகளாக திடீர் காய்ச்சல், கடுமையான தலைவலி, கண்கள் மற்றும் மூட்டுகளில் தீவிர வலி, குமட்டல், வாந்தி மற்றும் தோலில் தடிப்புகள் தென்படுமாயின்&nbsp;உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>இந்த டெங்கு அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வதே உயிரிழப்புகளைத் தவிர்க்கும் சிறந்த வழி என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர வலியுறுத்தியுள்ளார்.</p><p>
</p><p>
இதனிடையே, நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் டெங்கு கண்காணிப்பு, தடுப்பு மற்றும் மருத்துவ முகாமைத்துவ தரநிலை வழிகாட்டி இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T02:19:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர வைக்கும் வெளிநாட்டு பொறிக்குள் சிக்கப் போகும் ராஜபக்சர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cid-team-is-in-australia-to-arrest-nimal-perera-1784598913"></link>
            <id>https://tamilwin.com/article/cid-team-is-in-australia-to-arrest-nimal-perera-1784598913</id>
            <summary type="text">வெளிநாடு சென்று ராஜபக்சர்களுக்கு எதிரான ஆதாரங்களை பெற்று அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சமகால அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது. 

இலங்கை அரசுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடு சென்று ராஜபக்சர்களுக்கு எதிரான ஆதாரங்களை பெற்று அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சமகால அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது.</p><p> </p><p>

இலங்கை அரசுக்கு சொந்தமான பல மில்லியன் டொலர் பெறுமதியான பணம், வெளிநாடுகளில் பல்வேறு பினாமி பெயர்களில் ராஜபக்சர்கள் வைத்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே எழுந்துள்ளன. </p><p>

இது குறித்து தீவிர விசாரணைகளை சமகால அரசாங்கம் மேற்கொண்டு வருவதுடன், அதனை நாட்டுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.</p><p> </p><h2><b>

பெருந்தொகை டொலர்</b></h2><p>பிரித்தானியா, டுபாய் உட்பட பல நாடுகளில் ராஜபக்சர்களுக்கு சொந்தமான பெருமளவு சொத்துக்கள் உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5b98ece-3605-44a8-97e0-d6e41bb84301/26-6a5ee4af0abea.webp' /></p><p>இவ்வாறான நிலையில் உகண்டாவில் தாம் பெருந்தொகை டொலர்களை பதுக்கியுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை முடிந்தால் நிரூபித்துக் காட்டுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சவால் விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. </p><p>இதேவேளை, அதற்கமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளுக்கு தொடர்புடைய நபர்களின் தகவல்களை பெறுவதற்கு கூட்டு சிறப்புப் பொலிஸ் குழு ஒன்றை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
</p><h3><b>
2 மில்லியன் அமெரிக்க டொலர்</b></h3><p>2013 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் எயார்பஸ் நிறுவனத்திற்காக 10 விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டது.</p><p><span style="color: inherit;">இதன் போது, ஐரோப்பிய விமான நிறுவனம் ஒன்றிடமிருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாக பெற்றதாக தகவல்கள் வெளியானது.</span></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fccb61e-a3e5-47a8-83ef-f418a3ace2fe/26-6a5ed4d2cca5b.webp' /></p><p>இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மற்றும் சாட்சிகளை கண்டறிவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>

எயார்பஸ் இலஞ்சப் பரிவர்த்தனையின் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் கணக்கின் உரிமையாளரான அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சந்தேகநபர்கள் மற்றும் சாட்சிகளிடம் இருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கான சாட்சியங்களை வெளிப்படுத்துவதற்காக இந்த கூட்டு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த இலஞ்சப் பணம் அனுப்பப்பட்டதாக கூறப்படும் வங்கிக் கணக்கின் உரிமையாளர் எனக் கூறப்படும் டபிள்யூ. டி. நிமல் பெரேரா என்பவர் அவுஸ்திரேலியாவில் வசித்து வருவதாக தெரியவந்துள்ளது.</p><p>
</p><h3><b>
 நீதிமன்றங்களால் பிடியாணை</b></h3><p>இந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான உயிரிழந்த முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான கபில சந்திரசேனவின் மனைவியான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் புதல்வர் சமீந்திர ராஜபக்ச ஆகிய சந்தேகநபர்கள் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர்.
</p><p>
அத்துடன், அவர்களுக்கு தற்போது கொழும் மற்றும் கோட்டை நீதவான் நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.</p><p> 

புரூணை நாட்டில் போலி நிறுவனம் ஒன்றை நிறுவி, புகழ்பெற்ற ஐரோப்பிய விமான நிறுவனத்திடம் இருந்து 1,454,645.54 யூரோக்கள் இலஞ்சம் பெற்றமை தொடர்பில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p>]]></content>
            <updated>2026-07-21T02:16:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயகன் லீக் பற்றி விஜய் சொன்ன அந்த வார்த்தை.. ஹெச்.வினோத் பேட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/what-vijay-said-about-jananayagan-leak-h-vinoth-1784563572"></link>
            <id>https://cineulagam.com/article/what-vijay-said-about-jananayagan-leak-h-vinoth-1784563572</id>
            <summary type="text">விஜய்யின் ஜனநாயகன் படம் பல மாத தடங்கலுக்கு பிறகு இந்த வாரம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஜூலை 23ம் தேதி ரிலீஸ் என்பதால் ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஜய்யின் ஜனநாயகன் படம் பல மாத தடங்கலுக்கு பிறகு இந்த வாரம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஜூலை 23ம் தேதி ரிலீஸ் என்பதால் ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.</p><p>படம் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆகிவிட்ட நிலையில் தற்போது தியேட்டரில் ரிலீஸ் ஆகும்போது மேலும் பல காட்சிகள் இணைக்கப்பட இருப்பதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.</p><p>இந்நிலையில் தற்போது படம் லீக் ஆனது பற்றி நடிகர் விஜய் என்ன கூறினார் என இயக்குனர் ஹெச்.வினோத் பேசி இருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d76bd0e-c6be-42f0-8b2e-729346df5690/26-6a5e4775ad9a0.webp' /></p><p>
</p><h2>கவலை படாதீங்க
</h2><p>"சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் படம் ரிலீஸ் ஆகவில்லை. பின்னர் படம் லீக் ஆகிவிட்டது. விஜய் சாரும் அதனால் பாதிக்கப்பட்டார். </p><p>
ஆனால் உடனே எனக்கு கால் செய்து "கவலை படாதீங்க. இந்த மாதிரி தான் நடக்கும் இதெல்லாம். பாத்துக்கலாம்" என விஜய் கூறினாராம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3721a1aa-6c52-4114-a0fa-390f3cb927cf/26-6a5e477685813.webp' /></p>]]></content>
            <updated>2026-07-21T01:58:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளம் காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த பொலிஸ் கான்ஸ்டபிள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/boy-friend-shocks-girl-friend-1784559527"></link>
            <id>https://tamilwin.com/article/boy-friend-shocks-girl-friend-1784559527</id>
            <summary type="text">பாணந்துறை, அலுபோமுல்ல பகுதியில் பிரதேசத்தில் காதலியுடன் தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட வீடியோவை பேஸ்புக் மூலம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாகக் கூறப்படும...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாணந்துறை, அலுபோமுல்ல பகுதியில் பிரதேசத்தில் காதலியுடன் தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட வீடியோவை பேஸ்புக் மூலம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>காதலியான இளம் பெண் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

கோனாபினிவல பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ள 22 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><h2><b>

காதல் தொடர்பு</b></h2><p>அலுபோமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் குறித்த இளம் பெண், சந்தேக நபருடன் சுமார் மூன்று ஆண்டுகள் காதல் தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f591d4f-be07-49f7-8c79-b9112a5be852/26-6a5ed03a646a0.webp' /></p><p>அப்போது தமக்கிடையேயான தகாத காட்சிகள் அடங்கிய வீடியோவை, சந்தேக நபரான பொலிஸ் அதிகாரி தன்னுடைய பெயரில் இருந்த போலியான பேஸ்புக் கணக்கு மூலம் தனது தோழிக்கு அனுப்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
 பின்னர் அந்த முறைப்பாட்டை மீளப் பெறுமாறும், இல்லையெனில் சம்பந்தப்பட்ட வீடியோவை முழுமையாக சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் எனவும் கான்ஸ்டபிள் தமக்குத் தொடர்ச்சியாக தொலைபேசி மூலம் அச்சுறுத்தியதாகப் பெண் கூறியுள்ளார்.</p><p> 

இதனைத் தொடர்ந்து அவர் அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p> சந்தேக நபரான கான்ஸ்டபிள் பொலிஸ் நிலையத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, இரு தரப்பினரிடமிருந்தும் விசாரித்து தகவல்கள் பெறப்பட்டன.</p><p> </p><h3><b> தண்டனைச் சட்டக்கோவை</b></h3><p>இதன்போது இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் 345 மற்றும் 486 பிரிவுகளின் கீழ் பாலியல் செயற்பாடு மற்றும் மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ea331ad-539e-447b-be82-1f84dbb04320/26-6a5ed03b21c57.webp' /></p><p>எப்படியிருப்பினும், சம்பந்தப்பட்ட வீடியோ பெண்ணின் விருப்பத்தின் பேரில் அவரது சொந்த கையடக்க தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டுள்ளது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>இதன் காரணமாக, இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டமை தொடர்பில் முறைப்பாட்டாளரான பெண்ணுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-21T01:50:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நச்சு இரசாயனங்களை பயன்படுத்திப் பழுக்க வைக்கப்படும் பழங்கள் - கடுமையாகும் சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/stop-fruit-ripening-by-using-toxic-chemicals-1784597610"></link>
            <id>https://tamilwin.com/article/stop-fruit-ripening-by-using-toxic-chemicals-1784597610</id>
            <summary type="text">பழங்களை பழுக்க வைப்பதற்கு நச்சு இரசாயனங்களை பயன்படுத்துவதை தடுப்பதற்கான சட்ட விதிகளை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வர்த்தகம், வாணிபம...</summary>
            <content type="html"><![CDATA[<p>பழங்களை பழுக்க வைப்பதற்கு நச்சு இரசாயனங்களை பயன்படுத்துவதை தடுப்பதற்கான சட்ட விதிகளை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>

நச்சு இரசாயனங்களை பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு பல முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் பங்கேற்புடன் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலின் போது அமைச்சர் வசந்த சமரசிங்க இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.</p><p></p><h2>சமூகத்தில் ஏற்பட்டுள்ள பெரும் பிரச்சினை&nbsp;</h2><p>
</p><p>
வாழைப்பழங்கள், மாம்பழங்கள் மற்றும் பப்பாளி பழங்களில் இதுபோன்றவற்றிற்கு நச்சு இரசாயனங்களைப் பயன்படுத்துவது சமூகத்தில் ஒரு பெரும் பிரச்சினையாகிவிட்டது என்று அமைச்சர்&nbsp;கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9d04d4f-3666-444d-9dae-83cd779bcbfe/26-6a5ed03554900.webp' /></p><p> அத்தகைய நச்சு இரசாயனங்கள் பயன்படுத்தப்படும் இடங்களில் சோதனை நடத்துவதே அடுத்தகட்ட நடவடிக்கையாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இது தொடர்பிலான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட பின்னரும் வர்த்தகர்கள் இந்த முறையை தொடர்ந்து பயன்படுத்தினால், இது தொடர்பாக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T01:49:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறை மைதானத்திற்குப் பெண்ணுடன் வந்த கருணா...! வெடித்த சர்ச்சை - அம்பலமான உண்மைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-sdig-jayakody-reveals-karuna-incident-1784588779"></link>
            <id>https://ibctamil.com/article/ex-sdig-jayakody-reveals-karuna-incident-1784588779</id>
            <summary type="text">முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த ஜயகொடி, தனது பதவி காலத்தில் கருணா அமைச்சராக இருந்த போது அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் அண்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த ஜயகொடி, தனது பதவி காலத்தில் கருணா அமைச்சராக இருந்த போது அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் அண்மையில் கருத்து ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
</p><p>
காவல் திணைக்களத்திற்கு சொந்தமான விளையாட்டு மைதானத்திற்கு கருணா சென்ற போது நடந்த சம்பம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டு இருந்தார்.
</p><p>
இதில் மேலும் தெரிவித்திருந்த அவர், “எனக்கு நினைவிருக்கும் வகையில் 2013 அல்லது 2014 ஆம் ஆண்டில், நான் காவல்துறை விளையாட்டுப் பிரிவின் பணிப்பாளராக இருந்தபோது, விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கருணா அப்போது அமைச்சராக இருந்தார்.
</p><p>
அவருக்கு காவல்துறை பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது. </p><p>

அவர் மாலை வேளையில் ஒரு பெண்ணுடன் காவல்துறை விளையாட்டு மைதானத்திற்கு உடற்பயிற்சிக்காக நடப்பதற்கு வருவார்” என தெரிவித்திருந்தார்.
</p><p>
இதனடிப்படையில் யார் அந்த பெண் என தற்போது கேள்வி எழுப்பப்படுகின்ற நிலையில் இவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு ஐபிசி தமிழின் அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/yBaWqANNAjQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T01:37:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவத்தால் அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளர் மற்றும் அவரது குடும்பத்தினர்: ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/journalist-threatened-by-army-commanders-security-1784597255"></link>
            <id>https://tamilwin.com/article/journalist-threatened-by-army-commanders-security-1784597255</id>
            <summary type="text">ஊடகவியலாளர் லஹிரு தொலஸ்வல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல் மற்றும் சட்டவிரோதமான...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊடகவியலாளர் லஹிரு தொலஸ்வல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல் மற்றும் சட்டவிரோதமான துன்புறுத்தல்கள் தொடர்பாக உடனடியாக தலையிடுமாறு இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
</p><p>
அச்சங்கம் ஜனாதிபதிக்கு விடுத்திருக்கும் கோரிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தினசரி ஆங்கில பத்திரிகையின் இணையத்தள ஆசிரியரான லஹிரு தொலொஸ்வல ஜூலை 15 ஆம் திகதி தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் காரில் தனது இல்லம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது,</p><p> இராணுவத் தளபதியின் பாதுகாப்பு வாகனத் தொடரணியைச் சேர்ந்த லேண்ட் குரூஸர் வாகனம் ஒன்று அவர்களின் வாகனத்துடன் மோதியுள்ளது. </p><h2>


</h2><p></p><h2>அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல்</h2><p>அந்த சந்தர்ப்பத்தில் அவர் சம்பவத்தை காணொளி பதிவு செய்ய முயன்றபோது கொமாண்டோ அதிகாரி ஒருவர் அவரைப் அச்சுறுத்தி காணொளி பதிவை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். </p><p>இதன் காரணமாக அவரது குடும்பத்தினர் அச்சந்தர்ப்பத்தில் கடுமையான அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய முற்றபட்டபோது அங்கு சுமார் 30 இராணுவ அதிகாரிகள் வருகை தந்து அவர் முறைப்பாடு செய்வதைத் தடுத்துள்ளனர். வெலிக்கடை பொலிஸ் நிலையத்திலும் தொலொஸ்வல பயமுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளார்.</p><p>
இறுதியில் வாக்குமூலம் ஒன்று பதிவு செய்யப்பட்ட போதிலும் அழுத்தங்கள் காரணமாக அது மாற்றப்பட்டுள்ளதாகவும் அவரது தொலைபேசியில் இருந்த காணொளி சாட்சியங்கள் பலவந்தமாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d2b0b04-1285-4d48-84d6-ab5243edb063/26-6a5ecb092e023.webp' /></p><p>சுமார் நான்கு மணித்தியாலங்கள் வரை நடைபெற்ற இந்த பயங்கர அனுபவம் காரணமாக லஹிரு தொலஸ்வல மற்றும் அவரது குடும்பத்தினர் இன்னும் மன உளைச்சலில் இருப்பதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

முப்படைகளின் தளபதி என்ற வகையில் ஜனாதிபதியிடம் கோருவது யாதெனில் சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக முறையான விசாரணையை ஆரம்பித்து கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் மேலும் ஊடக சுதந்திரம் மற்றும் சிவில் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்திற்கு அறிவிக்குமாறும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T01:29:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவிரவாக தாக்குதல்களால் அதிரும் மத்திய கிழக்கு ; எச்சரிக்கும் அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/middle-east-shaken-by-overnight-attacks-1784596141"></link>
            <id>https://canadamirror.com/article/middle-east-shaken-by-overnight-attacks-1784596141</id>
            <summary type="text">ஈரான் மீது தொடர்ந்து 10-வது இரவாக தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கும் முயற்சியின் ஒர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது தொடர்ந்து 10-வது இரவாக தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.</p><p>

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஈரான் மீது தொடர்ந்து 10-ஆவது இரவாக தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க ராணுவம் நேற்று இரவு அறிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84cd0b58-3391-4b8a-b6b2-ff6b243e8134/26-6a5ec6ae5b30e.webp' /></p><p>

மற்றொரு அமெரிக்க ராணுவ வீரர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மேலும் அமெரிக்காவின் நட்பு நாடுகளான குவைத், ஜோர்டான் மற்றும் அமெரிக்க கடற்படையின் 5-ஆவது கடற்படைப் பிரிவு (5th Fleet) அமைந்துள்ள பஹ்ரைன் ஆகியவற்றின் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தியதை தொடர்ந்து இந்த தாக்குதல்கள் மீண்டும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p>


ஹார்முஸ் நீரிணையில் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படும் ஈரானின் ராணுவ திறன்களை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கிலேயே இந்த சமீபத்திய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்தியக் கட்டளை மையம் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளது.
</p><p>
அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் ஒரு முழு அளவிலான போரை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், ராஜதந்திர ரீதியில் நம்பிக்கைக்குரிய அறிகுறிகளும் தென்படுகின்றன; இமோதலில் முக்கிய மத்தியஸ்தராக செயல்படும் பாகிஸ்தானுக்கு ஈரானின் உள்துறை அமைச்சர் பேச்சுவார்த்தைக்காக சென்றுள்ளார்.
</p><p>
சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் கடந்த மாதம் கையெழுத்திடப்பட்ட இடைக்கால ஒப்பந்தம் முறிந்துவிட்டது. </p><p>உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு மிக முக்கியமான பாதையான ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து பெருமளவு முடங்கியுள்ளது. </p><p>மேலும், சண்டை தீவிரமடைந்துள்ள நிலையில், இரு தரப்பினரும் லட்சக்கணக்கான மக்கள் சார்ந்திருக்கும் பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகளை தங்கள் தாக்குதல்களுக்கு இலக்காக்கியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T01:29:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நொடிப்பொழுதில் பரபரப்பை கிளப்பிய யாழ் இளைஞன் ; மட்டக்களப்பு நீதிமன்றில் அரங்கேறிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-youth-sparks-drama-at-batticaloa-prison-1784594186"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-youth-sparks-drama-at-batticaloa-prison-1784594186</id>
            <summary type="text">மட்டக்களப்பில் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கைதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பில் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கைதியொருவர், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற சிறைக்கூட்டினுள் பிளேடால் தனது கழுத்து மற்றும் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நேற்று (20) பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. </p><p style="text-align: justify; ">

படுகாயமடைந்த அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e38d44ac-e568-4af6-b950-88fc3ffc2da0/26-6a5ebf0c4a3d3.webp' /></p><h2 style="text-align: justify; ">நீதிமன்ற உத்தரவு&nbsp;</h2><p> </p><p style="text-align: justify; ">

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான புகையிரத நிலையத்திற்கு முன்னாலுள்ள கடையொன்றில் 16,000 ரூபா பணம் திருடியமை மற்றும் மற்றுமொரு கடையை உடைத்து திருடியமை உள்ளிட்ட மூன்று திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக குறித்த நபர் கடந்த வருடம் கைது செய்யப்பட்டிருந்தார். </p><p style="text-align: justify; ">பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்திருந்தார். 

பிணையில் சென்ற அவர், வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் சமூகமளிக்காமல் தலைமறைவாகியிருந்தமையால் அவருக்கு எதிராக நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. </p><p style="text-align: justify; ">அதற்கமைய, கடந்த 13 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து யாழ் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

பின்னர் கடந்த 15 ஆம் திகதி மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை நேற்று (20) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதற்கிணங்க மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். </p><p style="text-align: justify; ">

வழக்கு விசாரணைக்காக இன்று காலையில் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர், நீதிமன்ற சிறைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்தார்.</p><p style="text-align: justify; "> அதனைத் தொடர்ந்து திறந்த நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட போது, வழக்கை விசாரித்த நீதவான் அவரை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை மேலும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இந்த உத்தரவைத் தொடர்ந்து அவர் மீண்டும் நீதிமன்ற சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> திறந்த நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், பிற்பகல் 3.00 மணியளவில் அங்கிருந்த மலசல கூடத்திற்குள் சென்ற குறித்த கைதி, சவரப் பிளேடால் தனது கழுத்தையும் கையையும் அறுத்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். 

இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். </p><p style="text-align: justify; ">தற்கொலைக்கு முயன்ற நபர் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை தையிட்டி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">

இவருக்கு எதிராக மட்டக்களப்பில் மூன்று திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸ் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-21T01:28:13+00:00</updated>
        </entry>
    </feed>
