<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-19T09:30:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி ; அதீத வேகத்தால் வந்த வினை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-wheeler-plunges-into-50-foot-ditch-1789807881"></link>
            <id>https://jvpnews.com/article/three-wheeler-plunges-into-50-foot-ditch-1789807881</id>
            <summary type="text">ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட், சென்ஜோன் டிலரி பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நோர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட், சென்ஜோன் டிலரி பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>

இன்று (19) சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49181735-947d-4510-98cb-5e36c0619daf/26-6aae4d0b02655.webp' /></p><h2>ஆரம்பகட்ட விசாரணை</h2><p>
</p><p>
பொகவந்தலாவ பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியே கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><p>
இவ் விபத்தில் அதிர்ஷ்டவசமாக எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனினும், முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளது.</p><p>

அதிக வேகம் காரணமாக வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமையினாலேயே இவ் விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
மேலும், இச் சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T09:30:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோவிலுக்கு சீல்? சாமுண்டீஸ்வரிக்கு உருவாகும் காயம் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/karthigai-deepam-sep-19-episode-details-1789809904"></link>
            <id>https://viduppu.com/article/karthigai-deepam-sep-19-episode-details-1789809904</id>
            <summary type="text">கார்த்திகை தீபம்தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வர இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கார்த்திகை தீபம்</h2><p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வர இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சிவவாண்டி ஏற்பாடு செய்த ஆட்கள் சாமுண்டீஸ்வரி ஊருக்குள் புகுந்து மக்களை தாக்க தொடங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7778f1dd-fd47-46e8-80ad-2c1b0bf985a3/26-6aae54f2aedd0.webp' /></p><p>அதாவது, சிவனாண்டி ஏற்பாடு செய்த ஆட்கள் சாமுண்டீஸ்வரி வீட்டு முன்பு நின்று கற்களை தூக்கி வீச சாமுண்டீஸ்வரி வெளியே வர அவரது தலையில் பட்டை ரத்தம் வடிகிறது. 

இதைத்தொடர்ந்து இரண்டு ஊருக்கும் இடையே மிகப்பெரிய பிரச்சனை உருவாக கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான். 

இந்த சண்டையில் பாதிக்கப்பட்டவர்களை ஹாஸ்பிடல் சென்று சந்திக்கும் கார்த்திக் பிறகு பரமேஸ்வரி பாட்டியிடம் நடந்ததை சொல்லி வருத்தப்படுகிறான்.</p><p> இது அனைத்தும் சந்திரா கலாவின் சதி வேலைதான் என தெரிந்தது கார்த்திக் செய்வதறியாது இருக்கிறான். 

இப்படி பிரச்சனை பெரிதாக இரண்டு ஊர்களிலும் ஊரடங்கு உத்தரவு போடப்படுகிறது. அதாவது நான்கு பேருக்கு மேல் கூறியிருக்கக்கூடாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f955900d-d0bc-479b-8ee2-b6e365689b19/26-6aae54f3622ae.webp' /></p><p> </p><p>

இன்னொரு பக்கம் சந்திர கலாகும் இதுக்கெல்லாம் காரணம் கார்த்தி தான் என சாமுண்டீஸ்வரியை ஏற்றி விடுகிறாள். பிரச்சனை நாளைக்கு நாள் பெரிதாக போலீஸ் கோவிலுக்கு சீல் வைக்க முடிவெடுக்கின்றனர். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.</p>]]></content>
            <updated>2026-09-19T09:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[AIயின் பிழையான அறிக்கையால் சீனா, அமெரிக்கா இடையே ஏற்பட இருந்த மோதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/false-ai-report-lead-almost-war-between-china-us-1789810166"></link>
            <id>https://news.lankasri.com/article/false-ai-report-lead-almost-war-between-china-us-1789810166</id>
            <summary type="text">false ai report leads almost war between china and us: AIயின் பிழையான அறிக்கையால், சீனா மற்றும் அமெரிக்கா இடையே மோதல் ஏற்பட இருந்த சம்பவம் தற்போது தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>false ai report leads almost war between china and us: AIயின் பிழையான அறிக்கையால், சீனா மற்றும் அமெரிக்கா இடையே மோதல் ஏற்பட இருந்த சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது. </p><h3>

AIயின் பிழையான அறிக்கை</h3><p>

செயற்கை நுண்ணறிவின் தாக்கம், நாளுக்கு நாள் அனைத்து துறைகளிலும் அதிகரித்து வருகிறது. 

ஆனால், செயற்கை நுண்ணறிவு முழுமையாக நம்பகத்தன்மை உடையது இல்லை என நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். </p><p>

நிபுணர்களின் கூற்றுப்படியே, செயற்கை நுண்ணறிவு அவ்வப்போது பிழையான தகவல்களை வழங்கி வருகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/239f4664-343a-48a2-9088-1dafbe31b4de/26-6aae55f89359a.webp' /></p><p>

அவ்வாறாக AI வழங்கிய பிழையான அறிக்கை ஒன்று, அமெரிக்கா மற்றும் சீனா இடையே மோதல் ஏற்படும் வாய்ப்பை உருவாக்கியிருந்தது. </p><p>

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் நடைபெற்று வந்த சூழலில், மத்திய கிழக்கு கடல் பகுதியிலிருந்து சீன கப்பல் ஒன்று அணு ஆயுதத் திட்டதிற்கான பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்வதாக அமெரிக்கா ராணுவத்திற்கு உளவு தகவல் அறிக்கை கிடைத்துள்ளது.&nbsp;</p><p></p><h3>

சீனா, அமெரிக்கா இடையே ஏற்பட இருந்த மோதல்</h3><p> 

இதனையடுத்து, ஆயுதங்களுடன் இருந்த அமெரிக்க ராணுவ வீரர்கள் கப்பலில் ஏற தயாராக இருந்தனர். அதே போல், அமெரிக்கா ராணுவ விமானங்களும் வானில் வட்டமிட தொடங்கியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8a23866-b43a-452c-9215-5fba67274f92/26-6aae55f7de600.webp' /></p><p>

இதனிடையே ராணுவ அதிகாரிகள் அந்த அறிக்கையை ஆய்வு செய்ததில், அது AI மூலம் தயாரிக்கப்பட்டது தெரிய வந்தது. </p><p>

ஹவாயில் அமைந்துள்ள அமெரிக்க பசிபிக் சிறப்பு நடவடிக்கைக் கட்டளை மையத்திலிருந்து பெறப்பட்ட, கப்பலின் பயணிகளின் பட்டியல் குறித்த உளவுத் தகவல்களை ஆய்வாளர் ஆய்வு செய்தபோது இந்தச் சம்பவம் தொடங்கியது. </p><p>

அந்த ஆய்வாளர் பயன்படுத்திய AI மென்பொருள், கப்பல் கொண்டு சென்ற பொருளைத் தவறாக அடையாளம் கண்டதை அதிகாரிகள் உறுதிசெய்ததை அடுத்து, அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.</p><p>

இந்த சம்பவம் குறித்து விவரித்த அமெரிக்கா ராணுவ அதிகாரிகள், "அந்த உளவுத்துறை அறிக்கை முற்றிலும் பொய்யானது ஆனால் கிட்டத்தட்ட ஒரு போரைத் தொடங்கிவிட்டது" என தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p>

அந்தக் கப்பல் உண்மையில் எதை ஏற்றிச் சென்றது, எங்கு சென்றுகொண்டிருந்தது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.</p><p>

AI தொழில்நுட்பம் மனித கட்டுப்பாட்டிலிருந்து தப்பிக்கக்கூடும், AI இன்னும் சில ஆண்டுகளில் மனித குலத்தையே அழித்து விட வாய்ப்புள்ளதாக Open AI மற்றும் Anthropic ஆகிய முன்னணி AI நிறுவனங்களில் பணியாற்றிய ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்த பின்னர் தங்களது பணியை ராஜினாமா செய்த நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது. </p><p>

ஆனால், செயற்கை நுண்ணறிவு துறையின் வளர்ச்சியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அனைத்தும் இந்த துறைக்கு எதிரான ஒரு அபத்தமான சதி என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-19T09:29:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஹ்ரானுடன் தொடர்பா..! உண்மையை அம்பலப்படுத்திய ரிசாட் பதியுதீன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-1789807660"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-1789807660</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான்
ஹாசிமுடன் தனக்கு எந்தவிதமான தொடர்பும் கிடையாது எனவும், அவரை தான் நேரில் கண்டது...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான்
ஹாசிமுடன் தனக்கு எந்தவிதமான தொடர்பும் கிடையாது எனவும், அவரை தான் நேரில் கண்டதுமில்லை, பேசியதுமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
அம்பாறை, நிந்தவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்
கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.</p><h2>உயிர்த்த பயங்கரவாதத் தாக்குதல்</h2><p>
</p><p>
மேலும் தெரிவித்த ஒருவர், 

"உயிர்த்த பயங்கரவாதத் தாக்குதலுக்கும் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கும் எந்தவொரு
சம்பந்தமும் கிடையாது. </p><p>சஹ்ரானின் பயங்கரவாதச் செயற்பாடுகளை முஸ்லிம் சமூகமோ
அல்லது முஸ்லிம் அரசியல் தலைமைகளோ ஒருபோதும் ஆதரித்தது கிடையாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/637a978c-f5dd-48c8-bfda-76ea992233e5/26-6aae528cabc7d.webp' /></p><p> 

இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தகுந்த நீதி கிடைக்க வேண்டும்
என்பதில் முஸ்லிம் சமூகம் உறுதியாக உள்ளது. 

இந்த பயங்கரவாதச் செயற்பாட்டினால்
பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்ட நிலையில், ஓர் அரசியல்வாதியாக நானும்
கடுமையாகப் பாதிக்கப்பட்டேன்.</p><p>

நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஒரு தேசியக் கட்சியின் தலைவராகவும் இருந்த
என்னைக் சபாநாயகருக்குக் கூட அறிவிக்காமல் இரவோடு இரவாகக் கைது செய்து
சிறையில் அடைத்தனர்.</p><h2>சூத்திரதாரி சஹ்ரான்</h2><p> 

சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்கேன் அரசியல்
உள்நோக்கத்தோடு முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் என்
மீது முன்வைத்துள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு, சில
தமிழ் ஊடகங்கள் தமக்கு வேண்டியவாறு செய்திகளை வெளியிட்டு வருகின்றன.</p><p>
சஹ்ரானுடன் எனக்கு எவ்விதப் தொடர்பும் இல்லை என்பதால், இவ்வாறான பொய்யான
குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களுக்கு எதிராகத் தயங்காமல் சட்ட நடவடிக்கை
எடுப்பேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e5f6824-41f0-421d-8b94-f16a69366d1b/26-6aae528da23a8.webp' /></p><p>

உயிர்த்த தாக்குதல் குறித்து நேர்மையான மற்றும் சுயாதீனமான விசாரணைகள்
நடத்தப்பட்டு உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். </p><p>


பாதிக்கப்பட்ட மக்களுக்கு
நீதி கிடைக்க முன்னெடுக்கப்படும் எந்தவொரு முறையான விசாரணைக்கும் முழுமையான
ஒத்துழைப்பை வழங்க நாங்கள் எந்நேரமும் தயாராக இருக்கின்றோம்" என அவர் மேலும்
குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T09:20:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கடலாமையை வைத்திருந்தவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/one-person-arrested-in-jaffna-with-sea-turtles-1789799452"></link>
            <id>https://ibctamil.com/article/one-person-arrested-in-jaffna-with-sea-turtles-1789799452</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு
கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேத்தான்குளம் பகுதியில் கடலமையுடன...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு
கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

சேத்தான்குளம் பகுதியில் கடலமையுடன் படகில் ஒருவர் கரை சேர்ந்துள்ளதாக
காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை குழுவினர், ஆமைகளுடன் கரை சேர்ந்த நபரை கைது செய்தனர்.</p><p></p><h2>பறிமுதல்</h2><p>
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 50 கிலோவிற்கும் அதிக எடையுள்ள இரண்டு
ஆமைகளையும், ஆமைகளை கரைக்கு கொண்டு வர பயன்படுத்திய படகினையும் பறிமுதல்
செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42e315e3-5615-43ca-9ec6-c9e4951e7c57/26-6aae5216d6642.webp' /></p><p>
கைது செய்யப்பட்ட நபரையும், பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் ஆமைகள்
இரண்டையும் இளவாலை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ள காவல்துறையினர் மேலதிக
விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p>அத்துடன், கைது செய்யப்பட்ட நபரை மல்லாகம் நீதவான்
நீதிமன்றில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T09:13:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[H-1B விசாவுக்கான கட்டணம் ; ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-extends-h-1b-visa-fee-for-one-year-1789803117"></link>
            <id>https://canadamirror.com/article/trump-extends-h-1b-visa-fee-for-one-year-1789803117</id>
            <summary type="text">H-1B குடியேறாதோர் விசா திட்டத்தின் கீழ் அமெரிக்காவுக்கு வரும் குறிப்பிட்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கான 1 இலட்சம் அமெரிக்க டொலர் கட்டணத்தை மேலும் 12 மாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>H-1B குடியேறாதோர் விசா திட்டத்தின் கீழ் அமெரிக்காவுக்கு வரும் குறிப்பிட்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கான 1 இலட்சம் அமெரிக்க டொலர் கட்டணத்தை மேலும் 12 மாதங்களுக்கு நீடிக்கும் உத்தரவை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். </p><p>



புதிய உத்தரவு 2026 செப்டம்பர் 21 முதல் அமுலுக்கு வந்து, 2027 செப்டம்பர் 21 வரை நீடிக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/203fff20-97ed-4d9a-8b9e-91c8f26e0c75/26-6aae3a6f5456c.webp' /></p><p>



2025ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் கட்டண விதி, அமெரிக்காவுக்கு வெளியே இருக்கும் H-1B பணியாளர்களை உள்ளடக்கிய குறிப்பிட்ட புதிய மனுக்களுக்கு பொருந்துகின்றது. </p><p>



தேசிய நலன் கருதி விதிவிலக்குகளை வழங்கும் அதிகாரமும் உள்நாட்டு பாதுகாப்புத் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
</p><p>


H-1B திட்டத்தில் முறைகேடுகளைத் தடுப்பதும், அமெரிக்க தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாப்பதும் கட்டணத்தை நீட்டிப்பதற்கான காரணங்களாக ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. </p><p>



அதேவேளை, புதிய நிர்வாக உத்தரவின் கீழ் H-1B விண்ணப்பங்களை பரிசீலிக்கும்போது, தொடர்புடைய அமெரிக்க ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதா அல்லது எதிர்காலத்தில் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதா என்பதையும் அதிகாரிகள் கருத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>



வெள்ளை மாளிகையின் தகவலின்படி, 2025ஆம் ஆண்டு கட்டண விதி அமுலுக்கு வந்ததிலிருந்து 700க்கும் மேற்பட்ட H-1B மனுக்களுக்கு 1 இலட்சம் டொலர் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p>



H-1B விசா திட்டம் தொழில்நுட்பம் உள்ளிட்ட சிறப்புத் திறன் தேவைப்படும் துறைகளில் வெளிநாட்டு பணியாளர்களை தற்காலிகமாக அமெரிக்காவில் பணியாற்ற அனுமதிக்கும் திட்டமாகும்.</p><p> 



இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு இந்தத் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-19T09:11:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[OpenAI 2030-க்குள் 278 பில்லியன் டொலர் இழப்பை சந்திக்கலாம் - FT அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/openai-may-burn-278-bn-dollars-by-2030-ft-report-1789809001"></link>
            <id>https://news.lankasri.com/article/openai-may-burn-278-bn-dollars-by-2030-ft-report-1789809001</id>
            <summary type="text">OpenAI may burn 278 Bn Dollars by 2030: OpenAI நிறுவனம் 2030-க்குள் மிகப்பெரிய நிதி இழப்பை சந்திக்கக்கூடும் என Financial Times வெளியிட்ட தகவல் அதிர்ச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>OpenAI may burn 278 Bn Dollars by 2030: OpenAI நிறுவனம் 2030-க்குள் மிகப்பெரிய நிதி இழப்பை சந்திக்கக்கூடும் என Financial Times வெளியிட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

அந்த அறிக்கையின் படி, 2026 முதல் 2030 வரை OpenAI-யின் negative free cash flow (செலவுகள் வருமானத்தை விட அதிகம்) 278 பில்லியன் டொலர் வரை செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/915df1be-94ec-462d-a7b6-15cd2003b123/26-6aae516b00dbf.webp' /></p><p>இது ஜூலை மாதம் நடந்த தனியார் நிறுவனக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட தகவல். அப்போது, OpenAI மிகப்பெரிய கணினி சக்தி (computing power) ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
</p><p>
OpenAI-யின் வருமானம் 2026-இல் 36 பில்லியன் டொலரில் இருந்து 2030-இல் 350 பில்லியன் டொலர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கணினி சக்தி மற்றும் தொழில்நுட்ப முதலீடுகளில் மிகப்பெரிய செலவுகள் காரணமாக, அந்த வருமானம் போதாது என FT தெரிவித்துள்ளது.
</p><p></p><p>மேலும், Bloomberg தகவலின்படி, OpenAI புதிய முதலீட்டாளர்களுடன் 1.2 டிரில்லியன் டொலர் மதிப்பீட்டில் நிதி திரட்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. IPO (Initial Public Offering) இன்னும் திட்டமிடப்பட்டுவருவதால், இந்த ஆண்டு நடைபெறாது என CEO சாம் ஆல்ட்மன் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த கூடுதல் நிதி, IPO-வை தள்ளிப்போடுவதற்கும், mergers &amp; acquisitions (இணைப்பு மற்றும் கையகப்படுத்தல்) நடவடிக்கைகளுக்கும் உதவக்கூடும்.</p><p>

OpenAI-யின் இந்த மிகப்பெரிய செலவுகள், AI துறையில் உலகளாவிய போட்டியை அதிகரிக்கும் நிலையில், நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியைப் பற்றி பல கேள்விகளை எழுப்புகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T09:06:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் உயர் கல்வி முடிந்த இளைஞர்: பணத்துக்காக செய்த பயங்கர செயல்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-returned-graduate-held-in-1-cr-ransom-plot-1789808739"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-returned-graduate-held-in-1-cr-ransom-plot-1789808739</id>
            <summary type="text">UK returned graduate held in1 crore Rupees ransom plot: பிரித்தானியாவில் பட்டப்படிப்பு முடித்த இளைஞர் ஒருவர், ஒரு கோடி ரூபாய் கேட்டு சிறுவன் ஒருவனை கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK returned graduate held in1 crore Rupees ransom plot: பிரித்தானியாவில் பட்டப்படிப்பு முடித்த இளைஞர் ஒருவர், ஒரு கோடி ரூபாய் கேட்டு சிறுவன் ஒருவனை கடத்திய விடயம் கொலையில் முடிந்துள்ளது.</p><p>


பிரித்தானியாவில் உயர் கல்வி முடிந்த இளைஞர் ஒருவர், கொலை வழக்கொன்றில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><h3>
சிறுவனை கடத்திய இளைஞர்</h3><p>

பெங்களூருவைச் சேர்ந்த வாலா பாஸ்கர் ரெட்டி (28) என்னும் இளைஞர், சமீபத்தில்தான் பிரித்தானியாவில் உயர் கல்வி முடித்து இந்தியா திரும்பியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca90d601-d43c-402e-a03c-7671ce8d4426/26-6aae506516b59.webp' /></p><p>

இந்நிலையில், ரெட்டியும், பள்ளி ஒன்றில் பேருந்து கிளீனராக வேலை செய்யும் ஏடுகொண்டலு என்னும் நபரும் சேர்ந்து, சிறுவன் ஒருவனை கடத்த திட்டமிட்டுள்ளனர்.
</p><p>
அதன்படி, முன்பு ரெட்டி வீட்டுக்கு அருகில் வாழ்ந்துவந்த ப்ரஜ்வால் என்னும் எட்டாம் வகுப்பு சிறுவனை, பட்டாசு வாங்கித் தருவதாகவும், தனது காரை ஓட்ட அனுமதிப்பதாகவும் கூறி, ஆசை காட்டி அழைத்துச் சென்றுள்ளனர் இருவரும்.
</p><p>
வழியில் ஓரிடத்தில் அந்த சிறுவனை ஒரு கட்டிடத்தில் அடைத்துவைத்து, அவனை பேசவைத்து, வீடியோ ஒன்றை எடுத்து, அவனது பெற்றோரை மிரட்டி பணம் பறிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் இருவரும்.&nbsp;</p><p></p><p>
அப்போது, அந்தச் சிறுவனை இரண்டு முறை அவர்கள் தாக்கியுள்ளார்கள். இரண்டாவது முறை தாக்கும்போது அந்தச் சிறுவன் எதிர்பாராதவிதமாக உயிரிழந்துள்ளான்.
</p><p>
பயந்துபோன, ஏடுகொண்டலு ஓட்டம் பிடிக்க, சிறுவனின் உடலை காரின் பின்பக்கத்தில் அடைத்து, காரை எடுத்துக்கொண்டு ஆந்திரா செல்ல முடிவு செய்துள்ளார் ரெட்டி.
</p><p>
ஆனால், பதற்றத்தில் அவரது கார் இரண்டு இடங்களில் விபத்துக்குள்ளாகியுள்ளது. மின் கம்பம் ஒன்றிலும், பின் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் அருகே நின்றிருந்த இரண்டு கார்கள் மீதும் ரெட்டியின் கார் மோத, அங்கிருந்தவர்கள் ரெட்டியை மடக்கிப் பிடித்துள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
அவரது காரை சோதனையிடும்போது, காரின் பின் பக்கத்தில் சிறுவன் ஒருவன் உடல் இருக்கவே, உடனடியாக பொலிசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
ரெட்டியைக் கைது செய்த பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதுடன், ஏடுகொண்டலுவையும் தேடி வருகிறார்கள்.
</p><p>
ரெட்டிக்கும் அவர் கடத்திய சிறுவன் குடும்பத்துக்கும் பகை எதுவும் இல்லை என்பது உறுதியான நிலையில், எதனால் அவர் அந்தச் சிறுவனை கடத்தினார் என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
</p><p>
இந்நிலையில், ரெட்டி பிரித்தானியாவுக்குக் கல்வி கற்கச் சென்றதில், அவரது தந்தைக்கு மூன்று கோடி ரூபாய் கடன் ஆகிவிட்டதால், அந்தக் கடனை அடைக்க, அந்தச் சிறுவனைக் கடத்தி அவனது பெற்றோரிடமிருந்து பணம் பறிக்க ரெட்டி திட்டமிட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T09:05:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷார்ட்டான ஆடையில் புகைப்படத்தை பகிர்ந்த நடிகை ரைசா வில்சன்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/raiza-wilson-recent-photoshoot-1789808665"></link>
            <id>https://viduppu.com/article/raiza-wilson-recent-photoshoot-1789808665</id>
            <summary type="text">ரைசா வில்சன்கன்னட சினிமாவில் மாடலிங் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கியவர் தான் ரைசா வில்சன். அந்த துறையில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதே தமிழ் பக்கம் வந...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரைசா வில்சன்</h2><p>கன்னட சினிமாவில் மாடலிங் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கியவர் தான் ரைசா வில்சன். அந்த துறையில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதே தமிழ் பக்கம் வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6d453b4-2c7f-453d-a0e9-f48fef9a6f3e/26-6aae502126407.webp' /></p><p>
</p><p>
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் கவனம் பெற்றார். அந்நிகழ்ச்சி முடிந்த கையோடு ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ஒரு காதல் திரைப்படம் நடித்தார்.
</p><p>
நோவா என்ற படத்தில் நடித்து வரும் ரைசா தற்போது, ஷார்ட்டான ஆடையில் எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-19T09:04:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விருந்துபச்சாரத்தில் பரபரப்பை கிளப்பிய துப்பாக்கிச்சூடு ; ஒருவர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gunfire-sparks-panic-at-a-party-1789807308"></link>
            <id>https://jvpnews.com/article/gunfire-sparks-panic-at-a-party-1789807308</id>
            <summary type="text">கேகாலை நகரிலுள்ள விருந்தகம் ஒன்றில், அதன் ஊழியர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று (18)...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கேகாலை நகரிலுள்ள விருந்தகம் ஒன்றில், அதன் ஊழியர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
நேற்று (18) இரவு நடைபெற்ற விருந்துபசாரம் ஒன்றின்போது ஏற்பட்ட தகராறு காரணமாக நிலவிய பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்த முயன்றபோதே, விருந்தக ஊழியர் ஒருவர் ஏர் ரைபிள்&nbsp; துப்பாக்கியால் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16b89286-feac-4ff3-a98f-adb7121b010a/26-6aae4ace72b64.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக கேகாலை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இந்த சம்பவம் தொடர்பில் கேகாலை பொலிஸார்&nbsp; மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-19T09:00:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[Daayra (இந்தி): திரை விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/daayra-movie-review-1789807141"></link>
            <id>https://cineulagam.com/article/daayra-movie-review-1789807141</id>
            <summary type="text">பிரித்விராஜ், கரீனா கபூர் நடிப்பில் வெளியாகியுள்ள Daayra இந்தி திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.கதைக்களம் 

2019ஆம் ஆண்டில் DCP ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்விராஜ், கரீனா கபூர் நடிப்பில் வெளியாகியுள்ள Daayra இந்தி திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc066b00-29cc-4307-9301-861017bac6dd/26-6aae4a28e99b6.webp' /></p><h2>கதைக்களம் </h2><p>

2019ஆம் ஆண்டில் DCP ராமன் குமார் செய்த ஒரு விஷயத்திற்காக மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடுகிறார்கள். 

அதனை டிவியில் பார்க்கும் ஒரு குடும்பம் சோகத்தில் இருக்க, ராகினி என்ற இளம்பெண்ணை வன்புணர்வு செய்து கொன்றவர்களை DCP ராமன் என்கவுன்டர் செய்திருக்கிறார் என்பது பின்னர் தெரிய வருகிறது.
</p><p>
அதுகுறித்து பத்திரிகையாளர்கள் சில கிடுக்குப்பிடி கேள்விகளை கேட்க, அதற்கு பதில் கொடுக்க முடியாமல் தடுமாறும் DCP ராமன் சட்டென பேட்டியை முடிக்கிறார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0827a91-65a2-44d1-9d1b-4b712ed11d7d/26-6aae4b8816ffa.webp' /></p><p>இதனால் அது போலி என்கவுன்டர் ஆக இருக்கலாம் என சந்தேகம் எழ, மற்றொரு DCP அஜோனி கோஹ்லி (கரீனா கபூர்) தனது குழுவுடன் உண்மையை கண்டுபிடிக்க களமிறங்குகிறார். </p><p>

அதனைத் தொடர்ந்து, அவருக்கு ஒவ்வொரு விஷயமாக தெரிய வர சில சந்தேகங்களும் ஏற்படுகின்றன.

பின்னர் அது போலி என்கவுன்டரா? இல்லையா? என்பதை அஜோனி நிரூபித்தாரா என்பதே மீதிக்கதை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ef756b5-d9fa-442e-8711-c3debc5681c5/26-6aae4b88dd4cd.webp' /></p><p></p><h3>படம் பற்றிய அலசல் </h3><p>

இந்தியாவை உலுக்கிய நிர்பயா சம்பவத்தை கண்முன் நிறுத்தும் கதைக்களத்தை மேக்னா குல்ஸர் எழுதி இயக்கியுள்ளார். 

பிரித்விராஜ் சுகுமாரன் இருப்பதால் இந்தி மற்றும் மலையாளம் என இருமொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது. </p><p>

ஆனால் படத்தின் திரைக்கதை ஸ்லோபர்ன் திரில்லர் ஆக மலையாளப் படம் போன்றே மெதுவாக நகரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

அதுவே படத்திற்கு பின்னடைவாகவும் அமைந்துள்ளதுதான் வருத்தம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65ba33bd-1145-4007-84fc-565e6b64089d/26-6aae4b899509a.webp' /></p><p> பிரித்விராஜ் நல்லவரா கெட்டவரா என்ற சஸ்பென்ஸை கிளைமேக்ஸ் வரை தக்கவைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

முதல் பாதி வரை வரும் கரீனா கபூர் ஒரு கட்டத்தில் காணாமல் போகிறார். பின்னர் திடீரென கதைக்குள் வருவது உறுத்தல்.
</p><p>
பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வலியையும், காவல்நிலையத்தில் எளிய மக்களை நடத்தும் விதத்தையும் எதார்த்தமாகவும், நேர்த்தியாகவும் காட்டியுள்ளார் இயக்குநர் மேக்னா.

அதே சமயம், சிறு சிறு அலட்சியங்களும் பெரிய தப்புகளுக்கு வழிவகுக்கும் என்கிற கருத்தை இயக்குநர் இன்னும் சுவாரஸ்யமான திரைக்கதையில் கூறும் வாய்ப்பை தவறவிட்டுவிட்டார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddc63714-60a8-49f3-8b70-97ff54c82071/26-6aae4b8a4d8f4.webp' /></p><p></p><p>பிரிதிவிராஜ், கரீனாவைத் தாண்டி ஷிதீ ஜோஷி, பவேஷ் பப்பாணி இருவரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். அசிந்த் கௌரின் அறிமுக காட்சி தேவையில்லாத ஆணி.

டெக்னிக்கலாக எந்த குறையும் இல்லாத படம். அமித் திரிவேதியின் பாடல்கள், கேத்தன் சோதாவின் பின்னணி இசை சிறப்பு. சௌரப் கோஸ்வாமியின் ஒளிப்பதிவு மிரட்டல்.</p><p><b><u>க்ளாப்ஸ் </u></b></p><ul><li>

கதை </li><li>

நடிகர்களின் பங்களிப்பு </li><li>

இசை </li></ul><p><b><u>

பல்ப்ஸ் </u></b></p><ul><li>

மெதுவான திரைக்கதை </li><li>

பொறுமையை சோதிக்கும் படத்தின் நீளம் </li></ul><p><b>

மொத்தத்தில் Daayra சொல்ல வந்த கருத்தை முன்னிறுத்தாமல், நட்சத்திரங்களை முதன்மைப்படுத்த பார்த்ததால் சறுக்கிவிட்டது. எனினும் ஒருமுறை பார்க்கலாம்.</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea8d39fb-ecd0-4476-9c4e-19cd3cce0d31/26-6aae54034c331.webp' /></p>]]></content>
            <updated>2026-09-19T09:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[வக்ர நிவர்த்தியடையும் சனி.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sani-vakra-peyarchi-1789806963"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sani-vakra-peyarchi-1789806963</id>
            <summary type="text">நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.

இவர் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
</p><p>
இவர் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
</p><p>
இந்நிலையில், தற்போது சனி பகவான் மீன ராசியில் ஜூலை 27ஆம் திகதி முதல் வக்ர நிலையில் பயணித்து வருகிறார்.</p><p> </p><p></p><p>மேலும், சனி டிசம்பர் 11ஆம் திகதி வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிக்கவுள்ளார். </p><p>

அந்தவகையில், சனி வக்ர நிவர்த்தி அடைவதால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.&nbsp;&nbsp;</p><h2>ரிஷபம்
</h2><ul><li>
வேலையில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
</li><li>
வாழ்க்கையில் சந்தித்து வந்த சிரமங்கள் முடிவுக்கு வரும்.
</li><li>
பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
</li><li>
பணப் பிரச்சனைகள் தீர்ந்து, நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/161d19c5-c51e-4f8f-ab3a-ae96c4fe0a61/26-6aae49758a557.webp' /></p><p>
</p><h2>
மிதுனம்
</h2><ul><li>
நல்ல பலன்கள் கிடைக்கும்.
</li><li>
புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
</li><li>
நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும்.</li><li>

பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.</li><li>

மன அழுத்தம் குறைந்து, மன அமைதி கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/430fbd3f-6b58-4652-9d95-2f5f7ea6d146/26-6aae4976417c5.webp' /></p><h2>

துலாம்</h2><ul><li>

தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
</li><li>
வேலையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
</li><li>
முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.</li><li>

நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த வேலைகள் நிறைவு பெறும்.
</li><li>
சிலருக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.&nbsp; &nbsp;</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59b09021-f855-431c-b8cc-4a120b4de449/26-6aae4976e7c16.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T08:36:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நானுஓயாவில் கோர விபத்து : இளம் பெண் பரிதாபமாக உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/road-accident-in-nanu-oya-young-woman-died-1789801457"></link>
            <id>https://ibctamil.com/article/road-accident-in-nanu-oya-young-woman-died-1789801457</id>
            <summary type="text">நுவரெலியா - நானுஓயாவில் வான் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.இன்று (19) காலை இடம்பெற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா - நானுஓயாவில் வான் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>இன்று (19) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் லிந்துலை பகுதியைச் சேர்ந்தவரும், நானுஓயாவில் வசித்து வந்தவருமான 34 வயதான குணசேகரம் திவ்யா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p>தொழில் நிமித்தம் நானுஓயாவில் இருந்து தலவாக்கலை நோக்கி குறித்த பெண் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது&nbsp; கட்டுநாயக்கவிலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்த வான் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.</p><p></p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p> 

இந்த விபத்து தொடர்பில் 42 வயதான வானின் சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ca80a21-ba95-4825-8722-f9e48fb3f7b9/26-6aae4961539f2.webp' /></p><p>

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. </p><p>குறித்த விபத்து தொடர்பில் நானுஓயா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T08:34:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசில் ராஜபக்சவுக்கு சர்வதேச பிடியாணை ; ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/international-arrest-warrant-for-basil-rajapaksa-1789806466"></link>
            <id>https://jvpnews.com/article/international-arrest-warrant-for-basil-rajapaksa-1789806466</id>
            <summary type="text">வெளிநாட்டில் இருப்பதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவைக் கண்டறிந்து, அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக இன்டர்போலின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டில் இருப்பதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவைக் கண்டறிந்து, அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக இன்டர்போலின்&nbsp; கோரப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
</p><p>


மாத்தறை, பிரவுன்ஸ் ஹில் பகுதியில் காணி கொள்வனவு செய்தமை மற்றும் ஊவா மாகாண சபைத் தேர்தலின்போது சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் 7.8 மில்லியன் ரூபாய் செலவில் 12,000 டீ-ஷெர்ட்களை விநியோகித்தமை தொடர்பான விவகாரங்களில் பசில் ராஜபக்ஷ மீது பணமோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b14ef9b4-a117-4769-9355-a4645f96dbf1/26-6aae47842cf18.webp' /></p><p>
</p><p>


இந்த விவகாரங்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், வெளிநாட்டில் உள்ளதாகக் கூறப்படும் அவரைக் கண்டறிவதற்கும் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் இன்டர்போலின் நீல அறிவிப்பை கோரியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T08:28:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜன் விவகாரத்தில் மோடியின் தலையீடு.. அநுரவிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anojan-sivarasa-saudi-death-penalty-mano-ganesan-1789805503"></link>
            <id>https://tamilwin.com/article/anojan-sivarasa-saudi-death-penalty-mano-ganesan-1789805503</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை இளைஞர் அனோஜன் சிவராசாவின் விவகாரத்திற்குத் தீர்வு காண, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை இளைஞர் அனோஜன் சிவராசாவின் விவகாரத்திற்குத் தீர்வு காண, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><h2>மோடியின் நெருங்கிய நண்பர்</h2><p>தனது 'X' தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வரும் மோடி, இலங்கையின் உயரிய சிவில் விருதான ஸ்ரீலங்கா ரத்னாவை ஏற்றுக்கொண்டவர் என்பதோடு இலங்கையின் நீண்டகால நண்பராகவும் திகழ்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12841f69-88ca-4726-8436-19aacd55933f/26-6aae4672a6f19.webp' /></p><p>
</p><p>மேலும், "உங்கள் நண்பரும் ஸ்ரீலங்கா ரத்னா விருது பெற்றவருமான பிரதமர் நரேந்திர மோடியின் அவசரக் கவனத்திற்கு அனோஜன் சிவராசாவின் இக்கட்டான நிலையை கொண்டு வருமாறு நான் வலியுறுத்துகிறேன்” என சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p>
மனிதாபிமான அடிப்படையில் ஒரு தீர்வைப் பெறுவதற்காக, இளவரசர் சல்மானிடம் மோடி தனிப்பட்ட முறையில் தலையிட்டுப் பேசுமாறு ஜனாதிபதியிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">&lt;Appeal to President&gt; I urge President <a href="https://x.com/anuradisanayake?ref_src=twsrc%5Etfw">@anuradisanayake</a> to bring <a href="https://x.com/hashtag/Anojan_Sivarasa?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Anojan_Sivarasa</a>’s desperate plight to the urgent attention of your friend, recipient of &quot;SriLanka Rathna&quot; Prime Minister Narendra Modi. <br><br>Given PM Modi’s close ties with Saudi Prime Minister and Crown Prince… <a href="https://t.co/4wFbn1RoZh">pic.twitter.com/4wFbn1RoZh</a></p>&mdash; Mano Ganesan (@ManoGanesan) <a href="https://x.com/ManoGanesan/status/2101198855983509724?ref_src=twsrc%5Etfw">September 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T08:27:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜன் விவகாரத்தில் அவசர தலையீடு: வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாட ரிசாட் எம்.பி முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/saudi-anojan-case-ssue-rishad-bathiudeen-speech-1789805713"></link>
            <id>https://tamilwin.com/article/saudi-anojan-case-ssue-rishad-bathiudeen-speech-1789805713</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி
தொடர்பில், வெளியுறவு அமைச்சருடன் நேரடியாகப் பேசுவதற்குத் தான் முயற்சித்ததாக
அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி
தொடர்பில், வெளியுறவு அமைச்சருடன் நேரடியாகப் பேசுவதற்குத் தான் முயற்சித்ததாக
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட்
பதியுதீன் தெரிவித்துள்ளார்.
</p><p>
அம்பாறை, நிந்தவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்
கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இக் கருத்தை முன்வைத்தார்.</p><p>

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:

"சவூதியில் மரண தண்டனை எதிர்கொள்ளும் கல்முனை, நற்பிட்டிமுனை இளைஞர் அனோஜனின்
நிலைமை தொடர்பாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சருடன் உடனடியாகப் பேசுவதற்குத்
தொடர்பு கொண்டேன்.</p><h2>இராஜதந்திர நடவடிக்கை</h2><p> </p><p>எனினும், அவர் தற்போது உத்தியோகபூர்வ விஜயமாக
வெளிநாட்டிற்குச் சென்றுள்ளதால் அவரை நேரடியாகத் தொடர்பு கொள்ள இயலவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3dc12095-11e8-4776-9bc2-8c3e630fd5c3/26-6aae45b25d4a1.webp' /></p><p>

இருப்பினும், இப் பாரதூரமான விவகாரத்தில் இளைஞரின் உயிரைப் பாதுகாக்கும்
பொருட்டு இலங்கை அரசாங்கம் உடனடியாக உரிய சட்ட மற்றும் இராஜதந்திர
நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்" என அவர் வலியுறுத்தினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T08:26:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதுபானக்கடையில் கொள்ளை முயற்சி - துப்பாக்கிச்சூடு நடத்த முயன்றுள்ளதாக தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/robbery-involving-a-shooting-in-trincomalee-1789801867"></link>
            <id>https://tamilwin.com/article/robbery-involving-a-shooting-in-trincomalee-1789801867</id>
            <summary type="text">திருகோணமலை – அநுராதபுர சந்தியில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையமொன்றில்
கொள்ளையிட மேற்கொள்ளப்பட்ட முயற்சி, அங்கிருந்த ஊழியர்களின் துரித
நடவடிக்கையா...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை – அநுராதபுர சந்தியில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையமொன்றில்
கொள்ளையிட மேற்கொள்ளப்பட்ட முயற்சி, அங்கிருந்த ஊழியர்களின் துரித
நடவடிக்கையால் முறியடிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என
சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>திருகோணமலை - அநுராதபுரம் சந்தியில் அமைந்துள்ள மதுபானக் கடை ஒன்றில் இருவரால்
மேற்கொள்ளப்பட்ட கொள்ளை முயற்சியை அதன் ஊழியர்கள் முறியடித்துள்ளனர்.
</p><p>
நேற்று (18) இரவு 9:45 அளவில் மோட்டார்சைக்கிளில் வந்த இருவர், பணத்தைத்
திருடித் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.&nbsp;</p><p>
இருப்பினும், ஊழியர்களின் கடும் போராட்டத்திற்குப் பின்னர் பணப் பையுடன்
கொள்ளையர்களில் ஒருவரைப் பிடிக்க முற்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df521e5b-46a8-423b-9dad-e73f44d45bd4/26-6aae45ccaf8e1.webp' /></p><h2>துப்பாக்கிச்சூடு நடத்த முயற்சி</h2><p>

அந்தச் சமயத்தில், துப்பாக்கி வைத்திருந்த நபர், ஊழியர்களை நோக்கி
துப்பாக்கிச்சூடு நடத்த முயன்ற போதிலும் இலக்கு தவறியது.</p><p>
</p><p>
அதனைத் தொடர்ந்து, இரு கொள்ளையர்களும் மோட்டார்சைக்கிளில் அநுராதபுரம் வீதி
வழியாகத் தப்பிச் சென்றனர்.

எனினும், இந்த சம்பவம் குறித்து உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார், திடீர்
தேடுதல் நடவடிக்கையை நடத்தி மிஹிந்துபுர பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து
இரண்டு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.</p><p>இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T08:20:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மண்டாடி திரைப்படம் தமிழ்நாட்டில் இதுவரை செய்துள்ள வசூல்.. விவரம் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/mandaadi-movie-tamilnadu-box-office-collection-1789801802"></link>
            <id>https://cineulagam.com/article/mandaadi-movie-tamilnadu-box-office-collection-1789801802</id>
            <summary type="text">Mandaadi movie tamilnadu box office collection: ரூ. 75 கோடி பட்ஜெட்டில் உருவாகி கடந்த வாரம் வெளியான மண்டாடி திரைப்படத்தின் தமிழ்நாடு வசூல் விவரம் வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Mandaadi movie tamilnadu box office collection: ரூ. 75 கோடி பட்ஜெட்டில் உருவாகி கடந்த வாரம் வெளியான மண்டாடி திரைப்படத்தின் தமிழ்நாடு வசூல் விவரம் வெளியாகியுள்ளது.</p><p></p><h2>

மண்டாடி
</h2><p>
தமிழ் சினிமாவின் ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்துள்ள நடிகர் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-soori-says-jason-sanjay-just-like-his-father-vijay" target="_blank">சூரி</a>யின் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் மண்டாடி. வெற்றிமாறனின் உதவி இயக்குநரான மதிமாறன் புகழேந்தி இயக்கிய இப்படத்தை RS Infotainment நிறுவனம் தயாரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b34de77-4b39-45a4-af06-aef48680ebb2/26-6aae354d72c68.webp' /></p><p></p><p> 

இப்படத்தில் சூரியுடன் இணைந்து சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படகு போட்டியை மையமாக வைத்து உருவான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d52611e-894b-40c6-895e-f773235cc78b/26-6aae354e2c956.webp' /></p><p></p><h3>தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்</h3><p>

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வரும் மண்டாடி திரைப்படம், உலகளவில் 9 நாட்களில் ரூ. 82 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இப்படம் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93f2428e-bacf-4e22-8231-8e16fa721b0c/26-6aae354edcf13.webp' /></p>]]></content>
            <updated>2026-09-19T08:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருட சென்ற இடத்தில் கடுப்பான திருடன் ; வீட்டு சுவரில் காத்திருந்த ட்விஸ்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/an-angry-thief-at-the-place-he-went-to-rob-1789804693"></link>
            <id>https://jvpnews.com/article/an-angry-thief-at-the-place-he-went-to-rob-1789804693</id>
            <summary type="text">திருட சென்ற வீட்டில் நகை, பணம் இல்லாததால் பொருட்களை உடைத்து அட்டகாசம் செய்த ஆசாமி சுவரில் &#039;சாரி&#039; என எழுதி வைத்துவிட்டு தப்பிச்சென்றார்.


கோவையில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருட சென்ற வீட்டில் நகை, பணம் இல்லாததால் பொருட்களை உடைத்து அட்டகாசம் செய்த ஆசாமி சுவரில் 'சாரி' என எழுதி வைத்துவிட்டு தப்பிச்சென்றார்.


</p><p>கோவையில் உள்ள ஒரு வீட்டில் புகுந்த மர்ம ஆசாமி, அங்கு திருடுவதற்கு நகை, பணம் இல்லாத விரக்தியில் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்திவிட்டு, சுவரில் 'சாரி' என்று எழுதி வைத்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eca4f339-b42d-4eae-938a-192c726f0130/26-6aae40974675d.webp' /></p><p>வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. சில பொருட்கள் உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன.
</p><p>
உடனடியாக படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது, அங்குள்ள பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் அனைத்தும் கீழே கொட்டப்பட்டு இருந்தன. </p><p>மேலும், கட்டிலில் இருந்த மெத்தை, சோபா, வாஷிங் மிஷின் மற்றும் பிரிட்ஜ் ஆகியவையும் சேதப்படுத்தப்பட்டு இருந்தது.&nbsp;&nbsp;</p><p></p><p>வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமி பக்கவாட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டது உள்ளார். </p><p>ஆனால் நகை, பணம் எதுவும் இல்லாத ஆத்திரத்தில், அந்த நபர் பொருட்களை சேதப்படுத்திவிட்டு, சுவரில் ஆங்கிலத்தில் 'சாரி' என்று எழுதி வைத்துவிட்டு தப்பி சென்றுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T08:12:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடும்பத்தாருடன் உரையாடிய மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-youth-faces-death-sentence-in-saudi-1789803038"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-youth-faces-death-sentence-in-saudi-1789803038</id>
            <summary type="text">சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசா, தனது குடும்பத்தாருடன் நேற்று தொலைபேசியில் உரையாடியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.இந்த உரையாடலின...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசா, தனது குடும்பத்தாருடன் நேற்று தொலைபேசியில் உரையாடியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.</p><p>இந்த உரையாடலின் போது, தன்னை சாதாரண கைதிகள் தடுத்து வைத்திருக்கும் சிறையில் இருந்து சிறப்பு சிறைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக&nbsp;அனோஜன் கூறியுள்ளார்.</p><p>
எனினும், இந்தத் தண்டனை குறித்த அடுத்தக்கட்டம் தொடர்பாக எந்தத் தகவலும் தனக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் அனோஜன் தெரிவித்ததாக குடும்ப உறுப்பினர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பொதுமன்னிப்பு&nbsp;</h2><p>

இதனிடையே, அனோஜனின் நலனை உறுதிசெய்ய, இராஜதந்திர ரீதியாக தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc0f536b-5a5c-4bf6-aa15-104fa9d61339/26-6aae3dd3ae2c9.webp' /></p><p>அதேபோன்று, சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.</p><p>ஆட்சேபகரமான சமூக ஊடகக் கருத்து ஒன்றின் காரணமாக தண்டனை விதிக்கப்பட்ட, இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
ஐந்தாண்டு சிறைத் தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டதாக வெளியான செய்திகளை தொடர்ந்து அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.</p><p></p><h2>மன்னரிடம் அவசர வேண்டுகோள்</h2><p>சவுதி அரேபியாவில் இலங்கை இளைஞன் அனோஜன் சிவராசாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி இலங்கை முஸ்லிம் சமூகத்தினரிடையே கவலையினை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d40ef2c3-e28e-4a87-b287-a7b9de13e431/26-6aae3dd30183d.webp' /></p><p>இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து, அனோஜன் சிவராசா தொடர்பில் ஜனாதிபதியிடமும் சவுதி அரேபிய மன்னரிடமும் அவசர வேண்டுகோளை முன்வைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p>மேலும் சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நட்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இலங்கை இளைஞரை உயிருடன் மீட்டுத் தருமாறு அவரது தாயார் கண்ணீர்மல்க உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T08:09:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சர்வதேச பிடியாணை : வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/interpol-notice-issued-for-ex-min-basil-rajapaksa-1789802373"></link>
            <id>https://ibctamil.com/article/interpol-notice-issued-for-ex-min-basil-rajapaksa-1789802373</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக இன்டர்போல் நீல நிற அறிவிப்பை (Blue notice) வெளியிட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக இன்டர்போல் நீல நிற அறிவிப்பை (Blue notice) வெளியிட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p><p>மாத்தறையில் உள்ள 1.5 ஏக்கர் காணியை 60 மில்லியன் ரூபாய்க்கு கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கில் பல சந்தர்ப்பங்களில் நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதால், பசில் ராஜபக்சவை கைது செய்வதற்காக இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கோரிக்கைக்கு அமைய அவருக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>சட்ட மற்றும் சர்வதேச நடவடிக்கைகள்</h2><p>இலங்கையில் நடைபெற்று வரும் சட்ட நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நபர்களைக் கண்டறிந்து மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p>இந்தநிலையில், இலங்கையில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள அதேவேளை வெளிநாடுகளில் வசிக்கும் முன்னாள் அரசியல்வாதிகள் மற்றும் தேடப்படும் பிற நபர்களைக் கண்டறிய அரசாங்கம் சர்வதேச சட்ட நடைமுறைப்படுத்தல் வழிமுறைகளைப் பயன்படுத்தி வருகின்றதாக கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/956d4a5c-b0d7-4584-af9e-9a88438ecc19/26-6aae41e2a87e5.webp' /></p><p>பசில் ராஜபக்ச தொடர்பான குற்றவியல் விசாரணைகளின் ஒரு பகுதியாக அவரது அடையாளம், இருப்பிடம் அல்லது நடவடிக்கைகள் குறித்த தகவல்களை சர்வதேச சட்ட நடைமுறைப்படுத்தல் அதிகாரிகள் பெற்றுக்கொள்வதை சாத்தியமாக்கும் வகையில் அவருக்கு எதிராக 'நீல நிற அறிவிப்பு' ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.</p><p>பசில் ராஜபக்சவுக்கு எதிராக நீல நிற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் விசாரணைக்கு நபர்கள் தேவைப்படும்போது, ​​'நீல நிற அறிவிப்பு' மூலம் இன்டர்போலுக்கு அறிவிக்கிறோம். அவர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசிப்பதற்கான முகவரி தெரிந்திருந்தால், அந்த நாட்டிற்கு அவர் தேவைப்படுகிறார் என்பதை 'நீல நிற அறிவிப்பு' உணர்த்துகிறது என்று அமைச்சர் கூறினார்.</p><p> குற்றவியல் மற்றும் இலஞ்சம் தொடர்பான வழக்குகளில் தேடப்படும் நபர்கள், அவர்கள் முன்பு வகித்த அரசியல் பதவிகள் எதுவாக இருந்தாலும், அவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரத் தேவையான சட்ட மற்றும் சர்வதேச நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T08:07:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோட்டலுக்குள் நடந்த பயங்கரம்! விருந்தின் போது வன்முறை - இருவர் மீது துப்பாக்கி சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fight-in-hotel-2-injured-1789797754"></link>
            <id>https://tamilwin.com/article/fight-in-hotel-2-injured-1789797754</id>
            <summary type="text">கேகாலையிலுள்ள ஹோட்டலில் நடைபெற்ற விருந்தின் போது, ​​மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விருந்தில் இரு தரப்பின...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேகாலையிலுள்ள ஹோட்டலில் நடைபெற்ற விருந்தின் போது, ​​மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
</p><p>
குறித்த விருந்தில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு வாக்குவாதம் முற்றியுள்ளது.
</p><p>
இதனைத் தொடர்ந்து ஹோட்டல் ஊழியர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் காயமடைந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.</p><h2><b> 

துப்பாக்கி சூடு </b></h2><p>இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/253d40eb-fec8-429d-b8ae-1eda7ed25f83/26-6aae28425bd35.webp' /></p><p>ஹோட்டல் ஊழியருக்கு துப்பாக்கி சூடு நடத்தும் உரிமை எவ்வாறு வழங்கப்பட்டது என்பது தொடர்பில் மக்கள் மத்தியில் சர்ச்சை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-19T07:59:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[31 மெட்ரிக் டன் தங்கத்தை லண்டனிலிருந்து அமெரிக்காவிற்கு மாற்ற வெனிசுலா திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/venezuela-transfer-4-bn-dollar-gold-to-new-york-1789804375"></link>
            <id>https://news.lankasri.com/article/venezuela-transfer-4-bn-dollar-gold-to-new-york-1789804375</id>
            <summary type="text">Venezuela nears 4 Bn dollar gold transfer to New York: வெனிசுலா பிரித்தானியாவில் உள்ள அதன் தங்கத்தை அமெரிக்காவிற்கு மாற்றவுள்ளது.

31 மெட்ரிக் டன் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Venezuela nears 4 Bn dollar gold transfer to New York: வெனிசுலா பிரித்தானியாவில் உள்ள அதன் தங்கத்தை அமெரிக்காவிற்கு மாற்றவுள்ளது.
</p><h2>
31 மெட்ரிக் டன் தங்கம்</h2><p>வெனிசுலா அரசு மற்றும் எதிர்க்கட்சிகள், லண்டனில் உள்ள Bank of England-இல் சிக்கியிருந்த சுமார் 31 மெட்ரிக் டன் தங்கக் கையிருப்பை (மொத்த மதிப்பு 4 பில்லியன் டொலர்) நியூயார்க் நகரில் உள்ள Federal Reserve Bank-க்கு மாற்றும் ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நிலையில் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5a542c8-3047-4e24-98b2-73722867b79f/26-6aae3f58d9b40.webp' /></p><p>2019-இல், பிரித்தானிய அரசு நிக்கோலஸ் மதுரோவை சட்டபூர்வமான ஜனாதிபதியாக அங்கீகரிக்க மறுத்ததால், அந்த தங்கம் முடக்கப்பட்டது. </p><p>அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவைடோவை பல நாடுகள் ஆதரித்தன. இதனால், வெனிசுலா அரசுக்கு தங்கத்தை பயன்படுத்த முடியாமல் போனது.</p><p>
</p><p></p><p>இப்போது, இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரொட்ரிகஸ் தலைமையிலான அரசு மற்றும் எதிர்க்கட்சிகள், அரிதாக ஒற்றுமையை வெளிப்படுத்தி, தங்கத்தை மீட்கும் முயற்சியில் இணைந்துள்ளன. ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், வெனிசுலா அரசுக்கு தங்கத்தின் சட்ட உரிமை கிடைக்கும். </p><p>ஆனால், உடனடியாக அதை விற்க முடியாது.

இந்த தங்கம் அரசின் கடன்களுக்கு அடமானமாக பயன்படுத்தப்படலாம். குறிப்பாக, ஜூன் மாதம் வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்யும் பணிகளுக்கு நிதி திரட்டுவதில் உதவியாக இருக்கும். </p><p></p><p>உலக வங்கி மதிப்பீட்டின்படி, அந்த நிலநடுக்கம் 19.6 பில்லியன் டொலர் அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஒப்பந்தம், வெனிசுலா அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே அமெரிக்காவின் ஆதரவுடன் நடந்துவரும் பேச்சுவார்த்தைகளின் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.</p><p> மேலும், இது வெனிசுலா சர்வதேச நிதி நிறுவனங்களுடன் மீண்டும் உறவை மேம்படுத்தும் வழியைத் திறக்கும்.

இன்னும் சில சட்ட மற்றும் தொழில்நுட்ப விவரங்கள் தீர்க்கப்பட வேண்டியுள்ளன. </p><p>இருப்பினும், இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், வெனிசுலா தனது பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முக்கியமான வாய்ப்பை பெறும்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T07:49:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் கோடை முடிந்தபின்பும் தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/summer-like-temperatures-rise-to-france-in-weekend-1789803987"></link>
            <id>https://news.lankasri.com/article/summer-like-temperatures-rise-to-france-in-weekend-1789803987</id>
            <summary type="text">Summer like temperatures to return to France this weekend: பிரான்சில் இந்த வார இறுதியில், மீண்டும் கோடை போன்ற வெப்பநிலை நிலவ உள்ளதாக வானிலை ஆராய்ச்சி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Summer like temperatures to return to France this weekend: பிரான்சில் இந்த வார இறுதியில், மீண்டும் கோடை போன்ற வெப்பநிலை நிலவ உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
</p><p>

பிரான்சில், மீண்டும் வெப்பநிலை அதிகரித்து 30 டிகிரி செல்ஷியஸ் வரை எட்டக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.</p><h3>

மீண்டும் கோடை போன்ற வானிலை</h3><p>

பிரான்சில், கோடையில் வழக்கத்தை விட அதிக வெப்பம் நிலவிய நிலையில், வறட்சி தொடர்வதால் மக்களின் அவஸ்தையும் தொடர்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6a3482a-708c-4342-ac4a-433d317e83d3/26-6aae3dd50df78.webp' /></p><p>
பிரான்சின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வெப்பமாகவே இருக்கும் என்றும், நாட்டின் வட பகுதியில், மதியம் வெப்பநிலை 21 முதல் 26 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கலாம் என்றும், தென்பகுதியில் வெப்பநிலை 25 முதல் 30 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கலாம் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
</p><p>
இன்னும் தெற்கு நோக்கிச் சென்றால், கோடைகாலத்தில் இருந்த அளவுக்கு வெப்பநிலை அதிகரிக்கலாம், அதாவது, 28 முதல் 29 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
அதே நேரத்தில், தெற்கு ஆல்ப்ஸ் மற்றும் கோர்சிக்கா பகுதிகளைப் பொருத்தவரை, லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
மற்ற பகுதிகளைப் பொருத்தவரை, அடுத்தடுத்த நாட்களுக்கும் அதிக வெப்பமே தொடரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக நிலவிய கோடைக்குப் பிறகு, இன்னமும் மழை இல்லாத விடயம் கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T07:47:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்டத்தில் குதித்த வடமாகாண கால்நடை வைத்தியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-by-northern-province-veterinarians-1789803147"></link>
            <id>https://tamilwin.com/article/protest-by-northern-province-veterinarians-1789803147</id>
            <summary type="text">வடமாகாண அரச கால்நடை வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்புப்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.குறித்த போராட்டமானது நேற்றையதினம்(18.9.2026) ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடமாகாண அரச கால்நடை வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்புப்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>குறித்த போராட்டமானது நேற்றையதினம்(18.9.2026) ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் இடம்பெற்றது.</p><p>இதன்போது, பெண் வைத்தியரகள் தமக்கு வாகன வசதிகள் வழங்கப்படாமையால் தாம் பெரிதும் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டினர்.</p><h2>மருந்து பற்றாக்குறை</h2><p>அத்தோடு, இந்த விடயம் தொடர்பில் மாகாண பணிப்பாளருக்கு அறிவித்தும் எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1593132442609992%2F&show_text=false&width=267&t=0" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>மேலும், மருந்து பற்றாக்குறை காணப்படுவதால் பணியாளர்களுடன் முரண்படவேண்டிய நிலை ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>எனவே தமக்கு சிறந்த மருந்துப் பொறிமுறை வேண்டும் எனவும் வைத்தியர்கள் கோரிக்கை விடுத்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T07:44:32+00:00</updated>
        </entry>
    </feed>
