<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-20T01:27:31+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[FIFA உலகக் கோப்பை ; அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியனானது ஸ்பெயின்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/spain-beat-argentina-to-win-fifa-world-cup-1784499369"></link>
            <id>https://canadamirror.com/article/spain-beat-argentina-to-win-fifa-world-cup-1784499369</id>
            <summary type="text">23-வது Fifa உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை...</summary>
            <content type="html"><![CDATA[<p>23-வது Fifa உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது,</p><p>&nbsp;அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினாவும், முன்னாள் சாம்பியன் ஸ்பெயினும் பலப்பரீட்சை நடத்தின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01079a1d-0604-42e3-a3b7-92aa579fe180/26-6a5d4cab6e36d.webp' /></p><p> </p><p>4-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் அர்ஜென்டினாவும், 2-வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றும் இலக்குடன் ஸ்பெயினும் களமிறங்கின.&nbsp;</p><p> போட்டி தொடங்கியதிலிருந்தே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. இருப்பினும் முதல் பாதியில் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d05b374a-051c-4e2a-b65f-a18de9e98018/26-6a5d54260a67c.webp' /></p><p>தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதியிலும் இரு அணிகளும் பல வாய்ப்புகளை உருவாக்கினாலும், அவற்றை கோலாக மாற்றத் தவறின. இதனால் 90 நிமிடங்கள் முடிவில் ஆட்டம் கோல் இன்றி சமநிலையில் இருந்தது.</p><p>

இதையடுத்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் (90+3) போது அர்ஜெண்டினா வீரர் என்சோ பெர்னாண்டஸ் சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார். இதனால், அந்த அணி மீதி ஆட்டத்தை 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது.&nbsp; தொடர்ந்து ஆட்டம் கூடுதல் 30 நிமிடங்களுக்கு சென்றது.</p><p> கூடுதல் நேரத்தின் போது ஸ்பெயின் வீரர் பெர்ரான் டோரஸ் அபாரமான கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்று கொடுத்தார். அதன் பிறகு அர்ஜென்டினா சமநிலை கோலுக்காக கடுமையாக போராடிய போதிலும், ஸ்பெயின் வீரர்கள் சிறப்பாக தற்காப்பில் செயல்பட்டு முன்னிலையை தக்க வைத்தனர்.</p><p>இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்திய ஸ்பெயின், 23-வது பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-20T01:14:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் இப்படியும் ஒரு சம்பவம் ; பல காலம் இளைஞன் அரங்கேற்றிய மோசமான செயல் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/such-an-incident-reported-in-batticaloa-1784507125"></link>
            <id>https://jvpnews.com/article/such-an-incident-reported-in-batticaloa-1784507125</id>
            <summary type="text">மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிள் வழங்குவதாக தெரிவித்து அதனை ஓடிப்பார்பதாக எடுத்துக் கொண்டு திருடிச் சென்ற நூதனமான சத்துருக்கொண்டான் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிள் வழங்குவதாக தெரிவித்து அதனை ஓடிப்பார்பதாக எடுத்துக் கொண்டு திருடிச் சென்ற நூதனமான சத்துருக்கொண்டான் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை நேற்று (19) கைது செய்துள்ளதுடன் திருடிச் சென்ற 3 மோட்டார் சைக்கிள்களை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
இதுபற்றி தெரியவருவதாவது,</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42990249-3bf7-41d5-b187-fdc720932de1/26-6a5d6af7151de.webp' /></p><h2 style="text-align: justify; ">விளம்பரம்</h2><p>
</p><p style="text-align: justify; ">
குறித்த நபர் காத்தான்குடி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் வாங்கி விற்பனை செய்யும் கடை ஒன்றுக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் சென்று அங்கு விற்பனைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை வாங்குவதாகவும் அதனை ஓடி பார்க்க வேண்டும் என்றதையடுத்து நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை கடை உரிமையாளர் குறித்த நபரிடம் கொடுத்தார்.
</p><p style="text-align: justify; ">
இதனையடுத்து குறித்த நபர் மோட்டார் சைக்கிளை அங்கிருந்து எடுத்து கொண்டு மட்டு திருகோணமலை வீதியில் உள்ள வீதி சமிக்கை விளக்குக்கு அருகில் நிறுத்தி கொண்டு&nbsp; இணையத்தளத்தில் மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு என விளம்பரப்படுத்திய கொக்கட்டிச் சோலை பகுதியைச் சேர்ந்த வரை தொடர்பு கொண்டு அந்த மோட்டார் சைக்கிளை வாங்குவதாகவும் உடன் குறித்த வீதி சமிக்கை விளக்குக்கு அருகில் வருமாறு அழைத்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

இதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிளை விற்பனை செய்யும் நபர் குறித்த பகுதிக்கு வந்ததும் அவரிடம் அந்த மோட்டார் சைக்கிளை ஓடி பார்க்க வேண்டும் என தெரிவித்து காத்தான்குடியில் இருந்து ஓடி பார்ப்பதாக திருடி வந்த மோட்டார் சைக்கிளை அவரிடம் கொடுத்துவிட்டு குறித்த நபரின் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று வாகரையில் விற்பனை செய்துள்ளார்.</p><p style="text-align: justify; ">இவ்வாறு 2023ம் ஆண்டு ஒரு மோட்டார் சைக்கிளையும் திருடி விற்பனை செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதனையடுத்து குறித்த நபரை கைது செய்ததுடன் திருடப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்களையும் மீட்டதுடன் குறித்த நபர் கடந்த காலத்தில் 8 குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-20T01:13:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியால் பணக்காரராகும் அதிர்ஷ்டம் இவர்களுக்கு தான் ; உங்க ராசியும் இருக்கா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lucky-zodiac-signs-to-become-rich-through-wife-1784510019"></link>
            <id>https://jvpnews.com/article/lucky-zodiac-signs-to-become-rich-through-wife-1784510019</id>
            <summary type="text">வேத ஜோதிடத்தின் படி ஒவ்வொருவரின் ராசியும் அவரவரின் ஆளுமை குணங்களை வெளிப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக ஒருவரின் ராசியின் அடிப்படையில் அவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத ஜோதிடத்தின் படி ஒவ்வொருவரின் ராசியும் அவரவரின் ஆளுமை குணங்களை வெளிப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக ஒருவரின் ராசியின் அடிப்படையில் அவர்களின் எதிர்காலம் மற்றும் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது.</p><p>

அந்த வகையில், ஜோதிடத்தின்படி, சில ராசிகளைச் சேர்ந்த ஆண்களுக்கு மனைவியால் அதிர்ஷ்டமும், பணக்கார யோகமும் வீடு தேடி வரும் என்று சொல்லப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fdb6f57-224b-4a0d-a4d4-29b5ff9f8bf2/26-6a5d76444c9b0.webp' /></p><p> </p><h2>அது எந்தெந்த ராசிகள் </h2><p><b>
ரிஷபம்: </b>ரிஷப ராசிக்காரர்கள் ஆடம்பர வசதியையும் பெறுவதற்கு பெயர் பெற்றவர்கள். இந்த ராசி ஆண்கள் நிதியை வளர்க்ககூடிய துணையை பெறுவார்கள். இவர்களுக்கு ஆடம்பர வாழ்க்கை என்றால் பிடிக்கும். இதன் காரணமாக இவர்கள் பணக்கார பெண்களை ஈர்ப்பார்கள். இவர்கள் எப்போது நிதி ரீதியாக பலமாக இருக்க வேண்டும் என்பதை நினைத்துக் கொண்டு இருப்பார்கள்.</p><p></p><p>
</p><p><b>

சிம்மம்:</b> சிம்ம ராசிக்காரர்கள் அதிகாரம் மற்றும் அந்தஸ்து மீது அதிக ஈர்ப்பு கொண்டவர்கள். இவர்களை சுற்றியுள்ளவர்கள் எப்போதும் செல்வந்தராக இருப்பார்கள். இவர்களுக்கு ஆடம்பரம் என்றால் பிடிக்கும் அதற்காக செலவு செய்வார்கள். நிதியில் பலமாக இருக்க ஆசைப்படுவார்கள். இதன் காரணமாக இந்த ஆண்களுக்கு பணக்கார மனைவி கிடைக்க வாய்ப்புள்ளது. மனைவி மூலம் இவர்களுக்கு நிதி பிரச்சனை வராது. மேலும், இருவரும் சேர்ந்து அதிக வருமானத்தை ஈட்டுவார்கள்.</p><p></p><p> </p><p><b>

துலாம்:</b> துலாம் ராசியைச் சேர்ந்த சிறுவயதில் இருந்து கஷ்டப்பட்டாலும், தங்களது துணை வந்த பின்பு அவர்களது வாழ்க்கை நன்றாக இருக்கும். இவர்கள் இருக்கும் இடத்தில் லட்சுமி தேவி குடியிருந்து, அனைத்து நிதி ரீதியான பிரச்னையையும் தீர்த்து வைப்பாராம். மேலும், திருமண உறவில் சமநிலையையும், அன்பையும் உருவாக்குவார்கள். இவர்கள் தேவையில்லாமல் செலவு செய்ய மாட்டார்கள். இதன் காரணமாக, துலாம் ராசியைச் சேர்ந்த ஆண்களுக்கு பணக்கார மனைவி கிடைக்கும் என கூறப்படுகின்றது.</p><p></p><p>
</p><p><b>
மகரம்:</b> மகர ராசிக்காரர்கள் உயர்ந்த பதவிகளை கொண்டிருப்பார்கள். இவர்கள் தங்கள் பணியில் முழு அர்ப்பணிப்புடன் செய்வார்கள். வாழ்க்கையை பொறுப்பாக வழிநடத்தும் குணம் கொண்டவர்கள். மிகவும் அமைதியாகவும், நிதானமாக இவர்கள் செயல்படுவார்கள். இப்படிப்பட்ட குணம் கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர மனைவி கிடைப்பார்கள். இவர்கள் தங்கள் துணையை மதிப்பார்கள். எடுக்கும் முடிவுகள் குறித்து அவர்களிடமும் கலந்து ஆலோசிப்பார்கள். இவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய தெளிவான சிந்தனை இருக்கும்.</p>]]></content>
            <updated>2026-07-20T01:13:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீன்பிடிக்கச் சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம்: முதியவர் சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/elderly-man-found-dead-in-anuradhapura-pond-1784509963"></link>
            <id>https://ibctamil.com/article/elderly-man-found-dead-in-anuradhapura-pond-1784509963</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் முதியவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அந்தரக்குளம் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய முதியவர் ஒருவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் முதியவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p>

அந்தரக்குளம் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p>

நொச்சியாகம காவல் பிரிவுக்குட்பட்ட அந்தரக்குளம் பகுதியில், நீர் நிரம்பிய குழியொன்றில் இருந்தே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் மேற்படி நபர் மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.</p><p>

நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த குடும்பத்தினர் அவரைத் தேடிச் சென்றுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83b18938-2d2d-4307-be69-905d0c38f6b5/26-6a5d760d23df0.webp' /></p><p>இதன்போது, அவர் சடலமாகக் கிடப்பதைக் கண்டு உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.</p><p>இதையடுத்துச் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T01:12:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கிண்ண போட்டிகளில் வரலாறு படைத்தார் எம்பாப்பே!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mbappe-makes-world-cup-history-1784509470"></link>
            <id>https://tamilwin.com/article/mbappe-makes-world-cup-history-1784509470</id>
            <summary type="text">&amp;nbsp;2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரில் அதிக கோல்களை அடித்த வீரராக முதலிடம் பிடித்து, ஃபிஃபா உலகக் கிண்ண வரலாற்றில் இரண்டு முறை &#039;கோல்டன் பூட்&#039; (Golde...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரில் அதிக கோல்களை அடித்த வீரராக முதலிடம் பிடித்து, ஃபிஃபா உலகக் கிண்ண வரலாற்றில் இரண்டு முறை 'கோல்டன் பூட்' (Golden Boot) விருதை வென்ற முதல் வீரர் என்ற சாதனையை பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே படைத்துள்ளார்.</p><p>
இத்தொடரில் 8 போட்டிகளில் விளையாடிய எம்பாப்பே 10 கோல்களை அடித்து, லியோனல் மெஸ்ஸியுடனான கடுமையான போட்டியை முறியடித்து இவ்விருதைக் கைப்பற்றினார். </p><p>
இதற்கு முன்னர் 2022 கட்டார் உலகக் கிண்ண தொடரிலும் 8 கோல்களை அடித்து எம்பாப்பே கோல்டன் பூட் விருதை வென்றிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a4495fd-0f67-4163-98fb-1bbf142c56c2/26-6a5d742440139.webp' /></p><p> 
இதன் மூலம் அடுத்தடுத்த உலகக் கிண்ண தொடர்களில் இவ்விருதை வென்ற முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
1970 ஆம் ஆண்டு மேற்கு ஜெர்மனியின் கெர்ட் முல்லருக்குப் பின்னர், ஒற்றை உலகக் கிண்ணத் தொடரில் 10 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை 27 வயதான எம்பாப்பே பெற்றுள்ளார். </p><p>
உலகக் கிண்ண வரலாற்றில் இவரை விட பிரான்ஸின் ஜஸ்ட் ஃபோன்டைன் (1958 இல் 13 கோல்கள்) மற்றும் ஹங்கேரியின் சாண்டோர் கோக்சிஸ் (1954 இல் 11 கோல்கள்) ஆகிய இருவர் மட்டுமே ஒரே தொடரில் அதிக கோல்களை அடித்துள்ளனர்.
</p><p>உலகக் கிண்ண வரலாற்றில் ஒட்டுமொத்தமாக அதிக கோல்களை அடித்த ஆண்கள் பிரிவின் சாதனையாளராக எம்பாப்பே (22 கோல்கள்) உருவெடுத்துள்ளார். இதன் மூலம் லியோனல் மெஸ்ஸியை (21 கோல்கள்) அவர் முந்தியுள்ளார்.</p><p>
சனிக்கிழமை நடைபெற்ற மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில் இங்கிலாந்திடம் பிரான்ஸ் 6-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து நான்காம் இடத்தைப் பிடித்தது.</p><p> எனினும், இப்போட்டியில் எம்பாப்பே இரண்டு கோல்களை அடித்து மெஸ்ஸியை விட முன்னிலை பெற்றார்.
</p><p>முன்னதாக குழு நிலைப் போட்டிகளில் செனகல் மற்றும் ஈராக் அணிகளுக்கு எதிராக தலா இரண்டு கோல்களையும், 32 அணிகள் சுற்றில் சுவீடனுக்கு எதிராகவும் அவர் கோல் அடித்தார். தொடர்ந்து, பராகுவேக்கு எதிரான 16 அணிகள் சுற்றில் 70ஆவது நிமிடத்தில் பெனால்டி மூலம் வெற்றி கோலையும், காலிறுதியில் மொராக்கோவுக்கு எதிராகவும் அவர் கோல் அடித்திருந்தார்.
</p><p>ஞாயிற்றுக்கிழமை நியூஜெர்சியில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் அர்ஜென்டினா 1-0 எனத் தோல்வியடைந்தது. இப்போட்டியில் 39 வயதான லியோனல் மெஸ்ஸி ஹேட்ரிக் கோல் அடித்திருந்தால் எம்பாப்பேயை முந்தியிருக்கலாம், ஆனால் அவரால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.</p><p>மெஸ்ஸி இத்தொடரில் 8 போட்டிகளில் 8 கோல்களுடன் நிறைவு செய்தார்.
 இங்கிலாந்தின் ஜூட் பெலிங்ஹாம் மற்றும் நார்வேயின் எர்லிங் ஹாலாண்ட் ஆகியோர் தலா 7 கோல்களையும், பிரான்ஸின் உஸ்மான் டெம்பேலே மற்றும் இங்கிலாந்து அணியின் தலைவர் ஹரி கேன் ஆகியோர் தலா 6 கோல்களையும் அடித்து இத்தொடரை நிறைவு செய்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T01:04:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் சினிமா பாணியில் திருட்டு: மூன்று மோட்டார் சைக்கிள்களுடன் சிக்கிய இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrested-for-motorbike-theft-in-batticaloa-1784508785"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrested-for-motorbike-theft-in-batticaloa-1784508785</id>
            <summary type="text">மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சத்துருக்கொண்டான் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சத்துருக்கொண்டான் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

குறித்த கைது நடவடிக்கை நேற்று (19-07-2026) இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>மோட்டார் சைக்கிள்</h2><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபர் காத்தான்குடி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் வாங்கி விற்பனை செய்யும் கடை ஒன்றுக்குக் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் சென்று, அங்கு விற்பனைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை வாங்குவதாகவும் அதைக் ஓட்டிப் பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதையடுத்து, நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளைக் கடை உரிமையாளர் குறித்த நபரிடம் கொடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05750930-b225-4171-837e-1c0a95baf849/26-6a5d7173e469f.webp' /></p><p>

பின்பு குறித்த நபர் மோட்டார் சைக்கிளை அங்கிருந்து எடுத்துக்கொண்டு மட்டு திருகோணமலை வீதியில் உள்ள வீதி சமிக்கை விளக்குக்கு அருகில் நிறுத்தியுள்ளார்.</p><p>
</p><p>இதன்பின்பு, இணையத்தளத்தில் மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு என விளம்பரப்படுத்திய கொக்கட்டிச்சோலை பகுதியைச் சேர்ந்த ஒரு நபரைத் தொடர்புகொண்டு, அந்த மோட்டார் சைக்கிளை வாங்குவதாகவும் உடன் குறித்த வீதி சமிக்கை விளக்குக்கு அருகில் வருமாறு அழைத்துள்ளார்.</p><p></p><h2>வாகரையில் விற்பனை</h2><p>

இதனைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளை விற்பனை செய்யும் நபர் குறித்த பகுதிக்கு வந்ததும், அவரிடம் அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிப் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்து காத்தான்குடியில் இருந்து ஓட்டிப் பார்ப்பதாகத் திருடி வந்த மோட்டார் சைக்கிளை அவரிடம் கொடுத்துவிட்டு குறித்த நபரின் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று வாகரையில் விற்பனை செய்துள்ளார்.
</p><p>
இவ்வாறு 2023ஆம் ஆண்டு ஒரு மோட்டார் சைக்கிளையும் திருடி விற்பனை செய்துள்ளதாகக் காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d087de8b-3176-4fed-8448-54b6830b2081/26-6a5d71733f198.webp' /></p><p>இதனையடுத்துக் குறித்த நபரைத் கைது செய்ததுடன் திருடப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்களையும் மீட்டதுடன், குறித்த நபர் கடந்த காலத்தில் 8 குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுக் கைது செய்யப்பட்டு நீதிமன்றப் பிணையில் வெளிவந்துள்ளதாகவும், இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>
</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T01:01:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[காரசாரமான செட்டிநாடு கோழி குழம்பு... சீக்கிரமா எப்படி செய்வது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/spicy-chettinad-chicken-kulambu-in-tamil-1784480166"></link>
            <id>https://manithan.com/article/spicy-chettinad-chicken-kulambu-in-tamil-1784480166</id>
            <summary type="text">நல்ல காரசாரமாக செட்டிநாடு பாணியில் கோழி குழம்பு வைத்து கொடுத்தால் அவ்வளவு தான் குழம்பு சட்டியே காலியாகிவிடும், அவ்வளவு சுவையாக இருக்கும். வாங்க எப்படி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்ல காரசாரமாக செட்டிநாடு பாணியில் கோழி குழம்பு வைத்து கொடுத்தால் அவ்வளவு தான் குழம்பு சட்டியே காலியாகிவிடும், அவ்வளவு சுவையாக இருக்கும். வாங்க எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்...</p><p>வீட்டில் கோழி குழம்பு செய்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒரு வெட்டு வெட்டுவார்கள். அதுவும் நல்ல காரசாரமாக செட்டிநாடு பாணியில் கோழி குழம்பு வைத்து கொடுத்தால் அவ்வளவு தான் குழம்பு சட்டியே காலியாகிவிடும், அவ்வளவு சுவையாக இருக்கும். வாங்க எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்...&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90e4eb40-06df-4f65-89d1-200be2b30e53/26-6a5d1b1d88066.webp' /></p><h2>தேவையான பொருட்கள்</h2><p>சிக்கன் - 1/2 கிலோ
<br>பெரிய வெங்காயம் - 2
பழுத்த தக்காளி <br>2
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
<br>காஷ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
<br>கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
<br>இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
<br>எண்ணெய் - தேவையான அளவு
<br>கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு
<br>உப்பு - சுவைக்கேற்ப</p><h4>அரைப்பதற்கு </h4><p>துருவிய தேங்காய் - 1/2 மூடி
<br>முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்
<br>கசகசா - 1/2 டீஸ்பூன்&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65d41563-b8bd-49d1-ba07-02b8591117d6/26-6a5d1b1e42118.webp' /></p><h4>தாளிப்பதற்கு </h4><p>கடுகு - 1/2 டீஸ்பூன்
<br>சீரகம் - 1/4 டீஸ்பூன்
<br>கருப்பு மிளகு - 1/2 டீஸ்பூன்
<br>எண்ணெய் - தேவையான அளவு</p><h2>செய்முறை </h2><p>மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், முந்திரி மற்றும் கசகசா ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.</p><p>தற்போது அடுப்பில் அகலமான கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு வதக்கி அது பொன்னிறமாக வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளுங்கள்.</p><p>இஞ்சி, பூண்டின் பச்சை வாசனை போனவுடன் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி விடவும்.
மசாலாக்களின் வாசனை போனவுடன் நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கடாயை மூடி வேகவிடவும்.
தக்காளி மென்மையாக வெந்ததும் அலசிய சிக்கன் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி மூடி மிதமான தீயில் 5 நிமிடங்களுக்கு வேகவிடவும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bc989e7-9c34-48a3-99b1-8a5b189274a3/26-6a5d1b1eecc3e.webp' /></p><p>சிக்கன் ஓரளவிற்கு வெந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து நன்றாக கலந்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறி மூடி வைத்து மிதமான தீயில் சிக்கனை வேகவிடவும்.</p><p>இதற்கிடையே மற்றொரு அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு வெடித்ததும் சீரகம் மற்றும் கருப்பு மிளகாய் சேர்த்து தாளித்துக்கொள்ளவும்.</p><p>கடைசியாக அந்த தாளிப்பை ரெடியான குழம்பில் ஊற்றி அதில் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் காரசாரமான கோழி குழம்பு சாப்பிட ரெடி.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a>&nbsp; &nbsp;</b> &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;<br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T01:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயின் சிறந்த அணி- கண்ணீர் மல்கிய மெஸ்ஸி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/messi-in-tears-as-spain-win-world-cup-1784508552"></link>
            <id>https://news.lankasri.com/article/messi-in-tears-as-spain-win-world-cup-1784508552</id>
            <summary type="text">2026 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா, ஸ்பெயினிடம் 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

Ferran Torres கூடுதல் நேரத்தில் அடித்த கோல், ஸ்பெயி...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா, ஸ்பெயினிடம் 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
</p><p>
Ferran Torres கூடுதல் நேரத்தில் அடித்த கோல், ஸ்பெயினுக்கு இரண்டாவது உலகக் கோப்பை பட்டத்தை உறுதிசெய்தது.
</p><p>
போட்டிக்குப் பிறகு, அர்ஜென்டினா கேப்டன் Lionel Messi கண்ணீர் மல்கியபடி, “ஸ்பெயின் எங்களை விட சிறந்த அணி. அவர்கள் முழுமையாக ஆட்டத்தை கட்டுப்படுத்தினர்” என்று ஒப்புக்கொண்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2017c646-655c-47d0-a2df-cd633e3ea842/26-6a5d728b52303.webp' /></p><p>MetLife Stadium-ல் நடைபெற்ற இந்த போட்டியை 80,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கண்டுகளித்தனர். </p><p>பெரும்பாலானோர் மெஸ்ஸி தனது 39 வயதில் இரண்டாவது உலகக் கோப்பையை வெல்வார் என எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், ஸ்பெயின் அணி 20-1 என்ற ஷாட் கணக்கில் முன்னிலை பெற்றது. பாஸ் விநியோகத்தில் கூட, ஸ்பெயின் 845-433 என்ற வித்தியாசத்தில் அர்ஜென்டினாவை முறியடித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a47c71f5-b7cf-4a08-8ccb-55219a6892dd/26-6a5d728a9a32f.webp' /></p><p>மெஸ்ஸி, “நாங்கள் முழு மனதுடன் விளையாடினோம். தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், இதுவரை செய்த சாதனைகளை மறக்க முடியாது. என் வீரர்களுக்கும், என் நாட்டுக்கும் நன்றி” என்று தெரிவித்தார்.
</p><p>
இந்த தோல்வி, மெஸ்ஸியின் உலகக் கோப்பை பயணத்தில் மிகுந்த உணர்ச்சி பூர்வமான தருணமாக அமைந்தது. அவர் உலகக் கோப்பை வரலாற்றில் 21 கோல்கள் அடித்துள்ளார். ஆனால், பிரான்ஸ் வீரர் Kylian Mbappé 22 கோல்களுடன் அவரை முந்தியுள்ளார்.
</p><p>
ஸ்பெயின் தற்போது ஆண்கள் மற்றும் பெண்கள் உலகக் கோப்பை பட்டங்களை ஒரே நேரத்தில் பெற்றுள்ள ஒரே நாடாக விளங்குகிறது. இது, உலக கால்பந்தில் ஸ்பெயினின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துகிறது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T00:56:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானைக் குறிவைத்து வான்வழி தாக்குதல்கள் ; அமெரிக்க இராணுவம் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/air-strikes-target-iran-amid-rising-tensions-1784508485"></link>
            <id>https://canadamirror.com/article/air-strikes-target-iran-amid-rising-tensions-1784508485</id>
            <summary type="text">ஈரானைக் குறிவைத்து வான்வழி தாக்குதல்களை தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இதன் மூலம்

தொடர்ந்து ஒன்பதாவது இரவாக நடைபெறும் இந்த தாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானைக் குறிவைத்து வான்வழி தாக்குதல்களை தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. </p><p>இதன் மூலம்

தொடர்ந்து ஒன்பதாவது இரவாக நடைபெறும் இந்த தாக்குதல்களை அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை மையம் உறுதிப்படுத்தி இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ceeb20d-b509-455a-a6c7-6b6a9da16742/26-6a5d70474f088.webp' /></p><p>
</p><p>
உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:30 மணியளவில் வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக ஈரானில் உள்ள ஆர்வலர்கள் தெரிவிக்க தொடங்கினர்.
</p><p>

முன்னதாக, ஜோர்டானில் வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதலில் துருப்புக்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, ஈரானின் துணை இராணுவ படையான புரட்சிகர காவலர்களை தங்கள் தாக்குதல்கள் குறிவைத்ததாக இராணுவம் கூறியிருந்தது.</p><p> அந்த தாக்குதலுக்கு பிறகு ஒரு படை வீரர் காணாமல் போன நிலையில், "அடையாளம் தெரியாத எச்சங்கள்" ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருவதாக இராணுவத்தின் புதிய அறிக்கை தெரிவித்தது. </p><p>போர் தொடங்கியதில் இருந்து, இதுவரை 17 அமெரிக்க படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
</p><p>
தற்போது இரண்டாவது வாரமாக தொடரும் இந்த மீண்டும் தொடங்கியுள்ள துப்பாக்கி சண்டைகளில், ஈரானில் உள்ள பாலங்கள், கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் மின்சார வசதிகளை அமெரிக்கா குறிவைத்துள்ளது.</p><p> மத்திய கிழக்கு முழுவதும் அமெரிக்காவுடன் கூட்டணி வைத்துள்ள நாடுகளை தெஹ்ரான் தாக்கி வருகிறது.</p>]]></content>
            <updated>2026-07-20T00:48:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[டோரஸ் அடித்த ஒற்றை கோல்., உலகக் கோப்பை சாம்பியனான ஸ்பெயின்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/torres-goal-seals-spains-world-cup-win-1784507899"></link>
            <id>https://news.lankasri.com/article/torres-goal-seals-spains-world-cup-win-1784507899</id>
            <summary type="text">2026 உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில், ஸ்பெயின் அணி அர்ஜென்டினாவை 1–0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, தங்களின் இரண்டாவது உலகக் கோப்பையை வென்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில், ஸ்பெயின் அணி அர்ஜென்டினாவை 1–0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, தங்களின் இரண்டாவது உலகக் கோப்பையை வென்றுள்ளது.</p><p>போட்டி மிகவும் கடினமாகவும், இரு அணிகளும் தாக்குதலில் பலவீனமாகவும் இருந்த நிலையில், கூடுதல் நேரத்தில் (Extra Time) மாற்று வீரராக வந்த Ferran Torres வெற்றிக்கான அந்த ஒற்றை கோலை அடித்தார். இந்த கோல், ஸ்பெயினுக்கு உலகக் கோப்பை பட்டத்தை உறுதிசெய்தது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8b312ca-d816-4d1b-88ba-00ef0c65d50f/26-6a5d6dfcb7fe1.webp' /></p><p>அர்ஜென்டினா அணி Lionel Messi தலைமையில் விளையாடினாலும், தாக்குதலில் பலவீனமாக இருந்தது. பல வாய்ப்புகளை பயன்படுத்த முடியாமல், அர்ஜென்டினா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
</p><p>ஸ்பெயின் அணி, 2010 இல் உலகக் கோப்பையை வென்ற பிறகு, இப்போது இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றி, ஸ்பெயின் கால்பந்து வரலாற்றில் முக்கியமான சாதனையாகக் கருதப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d715ebe8-bd69-4afa-b580-058f2cc6b9ad/26-6a5d6dfe2be80.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2f250a6-2a35-41b6-bb87-c6f43dc10a2f/26-6a5d6dfd71cc9.webp' /></p><p>போட்டியின் போது, இரு அணிகளும் டிபென்ஸில் கவனம் செலுத்தியதால், கோல் வாய்ப்புகள் குறைவாக இருந்தன. ஆனால், Torres-ன் துல்லியமான அடிக்கு அர்ஜென்டினாவின் டிபென்ஸ் முறியடிக்கப்பட்டது.
</p><p>இந்த வெற்றி, ஸ்பெயின் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் ஸ்பெயின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">WATCH: Spain lifts the FIFA World Cup trophy.<br><br>The FIFA World Cup 2026 has come to an end. <a href="https://t.co/Wcr1As5ZQP">pic.twitter.com/Wcr1As5ZQP</a></p>&mdash; Clash Report (@clashreport) <a href="https://x.com/clashreport/status/2078974318940135802?ref_src=twsrc%5Etfw">July 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T00:36:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1784507428"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1784507428</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (20-07-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனடிப்படையில் அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.


</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் பொலனறுவை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில் மனித உடலினால் உணரக்கூடிய எச்சரிக்கை மட்டத்தில் அதிகரித்த வெப்பநிலையை காணப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b7c9347-55ad-495b-9b39-35a4ab5227a6/26-6a5d6c25b3859.webp' />&nbsp;&nbsp;</p><p>மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T00:30:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/use-water-and-electricity-wisely-1784507276"></link>
            <id>https://tamilwin.com/article/use-water-and-electricity-wisely-1784507276</id>
            <summary type="text">நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால், நீரையும் மின்சாரத்தையும் மிகவும் சிக்கனமான முறையில் பயன்படுத்துமாறு நீர்ப்பாசன த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால், நீரையும் மின்சாரத்தையும் மிகவும் சிக்கனமான முறையில் பயன்படுத்துமாறு நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்ப்பாசன பணிப்பாளர் (பேரிடர் மற்றும் நீர் மேலாண்மை) எல். எஸ். சூரியபண்டார பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>தற்போது நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சுமார் 44% முதல் 45% வரையான அளவிலேயே காணப்படுகிறது எனவும் ஒக்டோபர் மாதளவில் பெரும்போக விவசாயப் பணிகளுக்காக நீர் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p> 'எல் நினோ'&nbsp; காலநிலை நிலைமைகளுக்கு மத்தியில் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ff98432-0466-4c8c-bd1e-44b2c84b9a66/26-6a5d6b8e1bdf6.webp' /></p><p>
ஒருவேளை எதிர்பார்த்தபடி மழை பெய்யாவிட்டால், தற்போதுள்ள நீரைக் கொண்டு நிலைமையை மேலாண்மை செய்வதற்கான மாற்றுத் திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சூரியபண்டார தெரிவித்துள்ளார்.</p><p>
தென்மேற்கு பருவமழை வழக்கமான ஆண்டுகளைப் போல இம்முறை போதியளவு கிடைக்கவில்லை எனவும், சில பகுதிகளில் மழை பெய்த போதிலும் அது 10 முதல் 15 மில்லிமீட்டர் போன்ற மிகக் குறைந்த அளவிலேயே பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே நீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமென அவர் கோரியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T00:28:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலியான சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை பத்திரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prison-officers-who-killed-in-riot-will-get-1784506700"></link>
            <id>https://tamilwin.com/article/prison-officers-who-killed-in-riot-will-get-1784506700</id>
            <summary type="text">&amp;nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக விரைவில் அமைச்சரவை பத்திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக விரைவில் அமைச்சரவை பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
</p><p>அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை அமைச்சரவை தீர்மானிக்கும் எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் நடத்திய வன்முறைத் தாக்குதலில் சிறைச்சாலை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 10 அதிகாரிகள் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81a09c4a-64af-4ecf-bfbb-6c51b7fa129b/26-6a5d694e4331d.webp' /></p><p> </p><p>
இந்த பயங்கர மோதலின் போது மேலும் சில அதிகாரிகளும், சுமார் 100 கைதிகளும் காயமடைந்ததுடன், 21 கைதிகளும் உயிரிழந்திருந்தனர்.
</p><p>இந்த மோதலில் உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, அவர்கள் வழக்கமாக ஓய்வு பெறும் வயது வரை முழுமையான மாதச் சம்பளத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>அதன் பின்னர் உரிய ஓய்வூதியத்தை வழங்குவதற்கும் தேவையான ஏற்பாடுகளை சிறைச்சாலைகள் திணைக்களம் தற்போது முன்னெடுத்து வருவதாக மேல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T00:22:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்திற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கும் எதிர்க்கட்சிகள்! ரணில் - சஜித் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-opposition-to-meet-over-judges-retirement-1784504336"></link>
            <id>https://ibctamil.com/article/sl-opposition-to-meet-over-judges-retirement-1784504336</id>
            <summary type="text">நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனைத்து எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும் பங...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனைத்து எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கும் விசேட ஆலோசனைக் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.</p><p>

குறித்த கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
</p><p>
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தில், முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.</p><p>
</p><p></p><h2>அரசியல் தலைவர்கள்</h2><p>இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்துக்குச் செல்லவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f14413b1-7363-47bf-9243-cd5de91f4fd6/26-6a5d68334e07b.webp' /></p><p>
சஜித் பிரேமதாஸ எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றதன் பின்னர், அவரது அலுவலகத்திற்கு ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.</p><p>
நீதியரசர்களின் ஓய்வு வயதை நீடிக்கும் அரசின் நகர்வுகள் குறித்து ஆராய்வதற்கு, அனைத்து எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கிய கூட்டமொன்றைக் கூட்டுமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ச, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் எழுத்துமூலம் கோரியிருந்தார்.</p><p></p><h2>நீதித்துறையின் சுதந்திரம்</h2><p>

அதனைத் தொடர்ந்து தொலைபேசி ஊடாகவும் அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f2b7a55-5d61-4b41-8243-62aa857511bf/26-6a5d68340c914.webp' /></p><p>

இதற்கிணங்க, எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் நாமல் ராஜபக்‌சவும் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p>

அரசின் இந்த ஓய்வு வயது நீடிப்புத் திட்டம் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் என்று எதிர்க்கட்சிகள் கருதுவதால், இது குறித்த பொதுவான நிலைப்பாட்டை எடுப்பதற்காகவே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T00:21:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் ஆடையின்றி தெருவில் ஓடிய இளம்பெண் பொறியாளர் ; இறுதியில் காத்திருந்த விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/engineer-runs-on-street-tragedy-follows-1784477724"></link>
            <id>https://jvpnews.com/article/engineer-runs-on-street-tragedy-follows-1784477724</id>
            <summary type="text">தெலுங்கானாவின் மேடிப்பள்ளியில்,&amp;nbsp; 25 வயது இளம்பெண் மர்மமான முறையில் கோவில் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தெலுங்கானாவின் மேடிப்பள்ளியில்,&nbsp; 25 வயது இளம்பெண் மர்மமான முறையில் கோவில் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p style="text-align: justify; ">
 
மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த இவர், சில மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டுவிட்டு தனது தாயுடன் வசித்து வந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b90c113-e2a6-4235-9f53-06fa93b1613f/26-6a5cf81e477e9.webp' /></p><h2 style="text-align: justify; ">தற்கொலைக்கான காரணம்</h2><p> </p><p style="text-align: justify; ">சம்பவத்தன்று இரவு, தனது தாயின் அறையை வெளியில் இருந்து பூட்டிவிட்டு, அதிகாலை 2:30 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். </p><p style="text-align: justify; ">
 
சிசிடிவி காட்சிகளில், அவர் வீதிகளில் ஆடையின்றி ஓடுவதும், ஒரு கோவிலில் சிறிது நேரம் நின்று பிரார்த்தனை செய்வதும் பதிவாகியுள்ளது. இறுதியில், அதிகாலை 3:00 மணியளவில் குளத்திற்குள் அவர் குதிப்பது தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "> மறுநாள் காலையில், தாய் கதவை உடைத்து வெளியே வந்து தேடியபோது, தேஜஸ்வினியின் உடல் குளத்தில் மிதப்பது கண்டெடுக்கப்பட்டது.
</p><p style="text-align: justify; "> 
அவர் கடும் மன உளைச்சல் மற்றும் பதற்றத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify; ">தூக்கத்தில் ஏற்படும் பயங்கர கனவுகள் மற்றும் பீதி தாக்குதல்களால் அவர் அவதிப்பட்டு வந்ததாகத் தாயின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் மனநல பாதிப்பாகவே இருக்கலாம் என காவல்துறை கருதுகிறது.</p><p style="text-align: justify; ">இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே முழுமையான விவரங்கள் தெரியவரும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T00:13:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெஸ்சியின் நீண்ட நாள் கனவை கலைத்த 106ஆவது நிமிடம்.. கண்ணீருடன் முடிந்த இறுதிப்போட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/messi-argentina-dream-2026-world-cup-fifa-1784505100"></link>
            <id>https://tamilwin.com/article/messi-argentina-dream-2026-world-cup-fifa-1784505100</id>
            <summary type="text">ஆர்ஜென்டினாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் இரண்டாவது முறையாக ஃபிஃபா உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.இந்நிலையில், உலகக் கோப்பையை வெற்றி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆர்ஜென்டினாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் இரண்டாவது முறையாக ஃபிஃபா உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.</p><p>இந்நிலையில், உலகக் கோப்பையை வெற்றிகரமாக வென்று விடைபெற வேண்டும் என்ற லியோனல் மெஸ்சியின் நீண்ட நாள் கனவு கண்ணீரோடு முடிந்தது.&nbsp;</p><p>
கடந்த 2010ஆம் ஆண்டில், முதல் உலகக் கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் பெற்ற ஸ்பெயின் அணி,16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பையை தன்வசமாக்கியுள்ளது. </p><p>தற்போதைய சாம்பியனான ஆர்ஜென்டினா, 1962இல் பிரேசில் அணிக்கு பிறகு உலகக் கோப்பையைத் தற்காத்துக் கொண்ட முதல் நாடு என்ற பெருமையைப் பெற கடுமையாகப் போராடியது.</p><p></p><h2>106ஆவது நிமிடம்..&nbsp;</h2><p> </p><p>ஆனால், ஸ்பெயின் அணியின் அபார ஆட்டத்தால் ஆர்ஜென்டினாவின் கனவு தகர்ந்தது.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் மிகவும் பலம் வாய்ந்த ஆட்டத்தைக் கொண்ட ஆர்ஜென்டினா அணியால், இறுதிப் போட்டியில் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ar" dir="rtl">دموع الوداع من الأفضل في التاريخ 🥹🥹🥹🥹 <a href="https://t.co/yJaL1GQHoP">pic.twitter.com/yJaL1GQHoP</a></p>&mdash; Messi World (@M10GOAT) <a href="https://x.com/M10GOAT/status/2078972536541376911?ref_src=twsrc%5Etfw">July 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> </p><p>மறுபுறம், ஆரம்பம் முதலே நிதானமாக ஆடிய ஸ்பெயின் அணி, ஆட்டத்தின் 106ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்டினாவின் தடுப்பாட்டத்தை உடைத்து கோல் அடித்தது. பெட்ரோ போரோ வழங்கிய பந்தை நிகோ வில்லியம்ஸ் கடத்த, அதனைப் பெற்ற பெரான் டோரஸ் மிக நேர்த்தியாக கோலாக மாற்றினார்.
</p><p>
இந்தத் தொடர் முழுவதும் ஸ்பெயின் அணி வெறும் இரண்டு கோல்களை மட்டுமே எதிரணியினருக்கு விட்டுக் கொடுத்துள்ளது. மேலும் 6 போட்டிகளில் ஒரு கோல் கூட வாங்காமல் தங்களது அபாரமான தடுப்பாட்ட வலிமையை நிரூபித்துள்ளது.</p><p></p><h2>உலகக் கோப்பைக் கனவு</h2><p> </p><p>இறுதிப் போட்டியின் கூடுதல் நேரத்திற்கு முன்பாக, ஆர்ஜென்டினாவின் என்ஸோ பெர்னாண்டஸ் சிவப்பு அட்டை பெற்று வெளியேறியதால், அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f927f9b3-15ae-4499-9bfc-e335aea72df7/26-6a5d67553fd2a.webp' /></p><p>
</p><p>ஆர்ஜென்டினாவின் கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் அடுத்தடுத்து பல கோல் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தினார்.</p><p> நிகோ வில்லியம்ஸ் அடித்த கோல் ஒன்றை விஏஆர் (VAR) தொழில்நுட்பம் மறுத்தது. அதேபோல் பெரான் டோரஸ் அடித்த மற்றொரு கோலும் ஆஃப்சைட் என அறிவிக்கப்பட்டது.</p><p>

ஆட்டத்தின் இறுதி நொடிகளில் லியோனல் மெஸ்சி தனது அசாத்திய திறமையால் மார்கோஸ் செனேசிக்கு ஒரு அருமையான பாஸ் கொடுத்தார்.</p><p> இருப்பினும், ஸ்பெயின் வீரர்கள் அதனைத் தடுத்து நிறுத்த, அர்ஜென்டினாவின் உலகக் கோப்பைக் கனவு முற்றிலுமாக முடிவுக்கு வந்தது. ஸ்பெயின் வீரர்கள் மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட, மெஸ்சியின் கடைசி உலகக் கோப்பை பயணம் கண்ணீருடன் நிறைவடைந்தது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T00:12:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் இளம் குடும்பஸ்தருக்கு அதிகாலையில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு ; போதையில் அரங்கேறிய கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-family-man-caught-in-shocking-incident-1784506091"></link>
            <id>https://jvpnews.com/article/young-family-man-caught-in-shocking-incident-1784506091</id>
            <summary type="text">மட்டக்களப்பு - ஏறாவூர், புன்னக்குடா வீதியில் தளவாய் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், 31 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பு - ஏறாவூர், புன்னக்குடா வீதியில் தளவாய் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், 31 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify;"> ஞாயிற்றுக்கிழமை (19) அதிகாலை 12.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2e82a05-7ac8-479d-a26e-7f56a674a2ee/26-6a5d66ed61e95.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p>
</p><p style="text-align: justify;">
தனியார் ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு குழுவினர், மது அருந்திவிட்டு வாகனத்தில் கடற்கரைக்கு சென்றுகொண்டிருந்த வேளையில், அதே பாதையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் மீது மோதியுள்ளனர்.</p><p style="text-align: justify;"> விபத்தில் சிக்கிய துவிச்சக்கர வண்டி முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், அதில் பயணித்த நபர் அருகிலுள்ள காட்டிற்குள் தூக்கி வீசப்பட்டார். அவரது தலையின் பின்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

உயிரிழந்தவர், ஏறாவூர் - தளவாய் பிரதேசத்தைச் சேர்ந்தவரும், ஒரு குழந்தையின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.&nbsp;</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி மதுபோதையில் இருந்தமை மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் பின்னர் குறித்த வாகனம் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியிருந்தது.</p><p style="text-align: justify;">இருப்பினும், விபத்து நடந்த இடத்தில் கிடந்த வாகனத்தின் உடைந்த உதிரிப்பாகங்களைக் கைப்பற்றிய பொலிஸார், பொதுமக்களின் ஒத்துழைப்புடன் மேற்கொண்ட துரித தேடுதல் நடவடிக்கையின் பயனாக, வாகனத்தையும் அதன் சாரதியையும் கைது செய்தனர்.</p><p style="text-align: justify; "> விபத்தின் தாக்கத்தால் வாகனத்தின் முன் கண்ணாடி உடைந்து சேதமடைந்துள்ளது.&nbsp; இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-20T00:08:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருவில் இரட்டை நிலநடுக்கம்., குறைந்தது ஆறு பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/twin-earthquakes-kill-six-in-central-peru-1784506061"></link>
            <id>https://news.lankasri.com/article/twin-earthquakes-kill-six-in-central-peru-1784506061</id>
            <summary type="text">பெருவின் மத்திய பகுதியில் ஜூலை 19 அன்று இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

இதில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெருவின் மத்திய பகுதியில் ஜூலை 19 அன்று இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

இதில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
ஐரோப்பிய நிலநடுக்க மையம் (EMSC) வெளியிட்ட தகவலின்படி, முதல் நிலநடுக்கம் 5.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. அதன் பின்னர் சில மணி நேரங்களில் இரண்டாவது நிலநடுக்கமும் ஏற்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c61fe7e4-e97e-40f4-aba8-cffc830b166e/26-6a5d66cfb74da.webp' /></p><p>இரண்டும் பெருவின் மத்திய பகுதியில் உள்ள Huancayo மற்றும் Ayacucho பகுதிகளை அதிகமாக பாதித்தன.
</p><p>
பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்ததால் மீட்பு நடவடிக்கைகள் சிரமமாக நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
</p><p>
பெருவின் ஜனாதிபதி, “இந்த பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு முழுமையான உதவிகளை வழங்கும்” என்று உறுதியளித்துள்ளார். </p><p>தற்போது தேசிய அவசர மேலாண்மை குழு மற்றும் படை வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p></p><p>பெரு, பசிபிக்கின் “Ring of Fire” பகுதியில் அமைந்துள்ளதால், அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடாகும். கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு நிலநடுக்கங்கள் பெருவில் உயிரிழப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளன.
</p><p>
இந்த சமீபத்திய நிலநடுக்கம், பெருவின் மக்கள் வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T00:06:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் அணு நிலையம் மீது அமெரிக்க தாக்குதல்- பதற்றம் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-strikes-iran-nuclear-plant-tensions-rise-1784503149"></link>
            <id>https://news.lankasri.com/article/us-strikes-iran-nuclear-plant-tensions-rise-1784503149</id>
            <summary type="text">ஈரானின் தென்மேற்கு Khuzestan மாகாணத்தில் கட்டுமானத்தில் இருந்த Darkhovin அணு மின் நிலையம் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் தென்மேற்கு Khuzestan மாகாணத்தில் கட்டுமானத்தில் இருந்த Darkhovin அணு மின் நிலையம் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. </p><p>

ஈரான் அணு ஆற்றல் அமைப்பு (AEOI) வெளியிட்ட அறிக்கையில், ஜூலை 19 அதிகாலை 3.39 மணிக்கு அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகவும், இது “ஈரானின் தேசிய சுயாட்சிக்கும், சர்வதேச சட்டத்திற்கும் எதிரான கொடூரமான நடவடிக்கை” எனவும் கூறப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/715062da-d08b-4755-be5a-d82d92e0d000/26-6a5d5b6fb38dc.webp' /></p><p>இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் ஏற்பட்டதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
</p><p>
இதற்கிடையில், ஈரான் புரட்சிகர காவல் படை (IRGC) கடற்படை, ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க ஆதரவுடன் விதிமீறி சென்றதாகக் கூறப்படும் நான்கு கப்பல்களை தடுத்து நிறுத்தியதாக அறிவித்துள்ளது. </p><p>

இதில் இரண்டு கப்பல்கள் விபத்துக்குள்ளாகி நிறுத்தப்பட்டன. மற்ற இரண்டு கப்பல்கள் எச்சரிக்கையால் தங்கள் பாதையை மாற்றியதாக IRGC தெரிவித்துள்ளது.
</p><p></p><p>அமெரிக்க மத்திய கட்டளை (US Central Command) வெளியிட்ட தகவலின்படி, கடந்த வாரம் மட்டும் ஈரானின் கடற்கரை கண்காணிப்பு, ஏவுகணை மற்றும் ட்ரோன் சேமிப்பு நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்களில் எட்டாவது சுற்று தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. </p><p>தற்போது மத்திய கிழக்கில் 50,000 க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் உயர் எச்சரிக்கையில் உள்ளனர்.

மேலும், ஈரான் இராணுவம், அமெரிக்காவின் Camp Udairi மற்றும் Ali Al Salem விமான தளங்களை ட்ரோன் தாக்குதலால் குறிவைத்ததாகவும் அறிவித்துள்ளது.
</p><p>
இந்த சம்பவங்கள், அமெரிக்கா-ஈரான் இடையேயான பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு சூழ்நிலையை மோசமாக்கியுள்ளன.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-19T23:57:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரு இளைஞர்களின் உயிரை பறித்த வாடகை வாகனம் ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/defender-crash-death-toll-rises-1784504000"></link>
            <id>https://jvpnews.com/article/defender-crash-death-toll-rises-1784504000</id>
            <summary type="text">மாத்தறை, வெல்லமடம பகுதியில் இன்று (19) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மாத்தறை, வெல்லமடம பகுதியில் இன்று (19) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify;">
விபத்தில் காயமடைந்த மேலும் ஆறு பேர் மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa626ee2-0822-4dfd-a82d-147ce6f44243/26-6a5d5ec26b589.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p>
</p><p style="text-align: justify; ">
மாத்தறையிலிருந்து தங்காலை நோக்கிச் சென்ற டிஃபெண்டர் ரக வாகனமும், எதிர்த்திசையில் வந்த சீமெந்து ஏற்றிய பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.</p><p style="text-align: justify; ">

விபத்தில் டிஃபென்டர் வாகனத்தைச் செலுத்தியதாகக் கருதப்படும் மாத்தறை வெவஹமந்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 37 மற்றும் 36 வயதுடைய&nbsp; இருவருமே உயிரிழந்தனர்.
</p><p style="text-align: justify; ">
விபத்தின் போது டிஃபென்டர் வாகனத்தில் பயணம் செய்த நான்கு பேரும், பாரவூர்தியின் சாரதி மற்றும் உதவியாளரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

இவர்களில் இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p style="text-align: justify; ">
விபத்துக்குள்ளான டிஃபெண்டர் ரக வாகனம் வாடகை அடிப்படையில் பெறப்பட்டது என விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், மாத்தறை பொலிஸார்&nbsp; மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-19T23:33:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர்களை நீதிமன்றத்தில் நிறுத்திய சம்பந்தன்: தமிழரசுக்கட்சிக்கு எதிராக எழுந்த கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sambanthan-was-a-curse-to-trinco-anushan-1784502924"></link>
            <id>https://ibctamil.com/article/sambanthan-was-a-curse-to-trinco-anushan-1784502924</id>
            <summary type="text">தமிழர்களின் பிரச்சினைகளுக்கு இரா.சம்பந்தன் தீர்வாக இருந்தார் எனத் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் தெரிவிப்பதைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாகத் திருகோணமலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழர்களின் பிரச்சினைகளுக்கு இரா.சம்பந்தன் தீர்வாக இருந்தார் எனத் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் தெரிவிப்பதைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாகத் திருகோணமலை மாநகரசபை உறுப்பினர் யோ.அனுஷாந் தெரிவித்துள்ளார்.
</p><p>
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும் தெரிவித்த அவர், தன்னைப் பொறுத்தவரையில் மறைந்த இரா.சம்பந்தன் திருகோணமலை மண்ணின் சாபக்கேடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

திருகோணமலை மாவட்ட மக்களினுடைய ஏகோபித்த தலைவராகச் சம்பந்தனைத் தமிழர்கள் ஒருகாலமும் ஏற்றுக்கொண்டது இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
அத்தோடு, தமிழர்களின் காணிப் பிரச்சினை, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் நடப்பு அரசியல் குறித்து அவர் தெரிவித்த பலதரப்பட்ட கருத்துக்களுடன் வருகின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/5_-ZdApAFhk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T23:21:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதிப்போட்டிக்கு முன் நடந்த ட்ரம்ப் - ஸ்பெயின் பிரதமர் சந்திப்பு.. பேசுபொருளான புகைப்படம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fifa-2026-football-trump-pedro-snchez-met-1784501564"></link>
            <id>https://tamilwin.com/article/fifa-2026-football-trump-pedro-snchez-met-1784501564</id>
            <summary type="text">2026 FIFA உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னதாக, ட்ரம்ப் மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகிய இரு உலகத் தலைவர்களும் ஃபிஃபா தலைவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 FIFA உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னதாக, ட்ரம்ப் மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகிய இரு உலகத் தலைவர்களும் ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவுடன் இணைந்து சந்தித்துக் கொண்ட விசேட புகைப்படம் தற்பொழுது சர்வதேச ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.</p><p>பாதுகாப்புச் செலவினங்கள் மற்றும் மத்திய கிழக்கு விவகாரங்கள் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக அமெரிக்காவிற்கும் ஸ்பெயினுக்கும் இடையில் கடுமையான இராஜதந்திர மோதல்கள் நிலவி வந்தன.</p><p></p><h2> இராஜதந்திர முரண்பாடுகள் </h2><p> இந்நிலையில் தற்போது, நியூ ஜெர்சியில் நடைபெற்ற 2026 உலகக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியின் போது இருவரும் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6922f41b-9e58-4259-a916-ae414f32b282/26-6a5d58498d5aa.webp' /></p><p> </p><p>சமீபத்திய மாதங்களாக நேட்டோ (NATO) பாதுகாப்புச் செலவினங்கள், ஈரான் விவகாரம் மற்றும் வர்த்தகக் கொள்கைகள் தொடர்பாக இரு தலைவர்களுக்கும் இடையே பகிரங்கமாக இராஜதந்திர முரண்பாடுகள் நீடித்து வந்த சூழலில், இந்தச் சந்திப்பு அரங்கேறியுள்ளது.
​</p><p>கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ட்ரம்ப், ஸ்பெயினை ஒரு மோசமான நேட்டோ கூட்டாளி எனக் கடுமையாக விமர்சித்திருந்த போதிலும், உலகக் கிண்ண இறுதிப்போட்டி மேடையில் இரு தலைவர்களும் தங்களுக்கு இடையிலான அரசியல் மாற்றுக்கருத்துக்களைத் தாண்டி, விளையாட்டுத் தூதரகத்தின் ஒரு பகுதியாகக் கைகுலுக்கி வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர். </p><p>உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் பின்னணியில் நிகழ்ந்த இந்தத் தலைவர்களின் சந்திப்பு, சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T23:20:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[16 வருடங்களுக்கு பிறகு ஸ்பெயினின் அபார வெற்றி.. 2026 - FIFAவில் எதிர்பாராத திருப்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fifa-world-cup-2026-spain-argentina-zero-goals-1784499205"></link>
            <id>https://tamilwin.com/article/fifa-world-cup-2026-spain-argentina-zero-goals-1784499205</id>
            <summary type="text">2026 Fifa உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் 16 வருடங்களுக்கு பிறகு வெற்றியீட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 Fifa உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் 16 வருடங்களுக்கு பிறகு வெற்றியீட்டியுள்ளது.&nbsp;</p><p>அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்ஜெண்டினாவும், முன்னாள் சாம்பியன் ஸ்பெயினும் பலப்பரீட்சை நடத்தின.</p><p>

4ஆவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் ஆர்ஜென்டினாவும், 2ஆவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றும் இலக்குடன் ஸ்பெயினும் களமிறங்கின. </p><p>

போட்டி தொடங்கியதிலிருந்தே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. இருப்பினும் முதல் பாதியில் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை.</p><p></p><h2>Zero goals..&nbsp;</h2><p>

தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது பாதியிலும் இரு அணிகளும் பல வாய்ப்புகளை உருவாக்கினாலும், அவற்றை கோலாக மாற்றத் தவறின. இதனால் 90 நிமிடங்கள் முடிவில் ஆட்டம் கோல் இன்றி சமநிலையில் இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6d45dc3-459c-4a58-92ba-cab1ff686e92/26-6a5d503ee8fab.webp' /></p><p>
</p><p>
இதையடுத்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் (90+3) போது ஆர்ஜென்டினா வீரர் என்சோ பெர்னாண்டஸ் சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார்.</p><p> இதனால், அந்த அணி மீதி ஆட்டத்தை 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. தொடர்ந்து ஆட்டம் கூடுதல் 30 நிமிடங்களுக்கு சென்றது.

கூடுதல் நேரத்தின் போது ஸ்பெயின் வீரர் பெர்ரான் டோரஸ் அபாரமான கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்று கொடுத்தார். </p><p>அதன் பிறகு ஆர்ஜென்டினா சமநிலை கோலுக்காக கடுமையாக போராடிய போதிலும், ஸ்பெயின் வீரர்கள் சிறப்பாக தற்காப்பில் செயல்பட்டு முன்னிலையை தக்க வைத்தனர்.</p><p>

இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டினாவை வீழ்த்திய ஸ்பெயின், 23ஆவது பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T23:03:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரிய விளைவுகளை சந்திக்கபோகும் 3 ராசிகள்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/saturn-retrograde-2026-4-zodiacs-to-be-alert-1784496356"></link>
            <id>https://ibctamil.com/article/saturn-retrograde-2026-4-zodiacs-to-be-alert-1784496356</id>
            <summary type="text">ஜோதிடத்தில் மிக மெதுவாக நகரும் சக்திவாய்ந்த சனி பகவானின் இயக்க மாற்றங்கள் மிகவும் முக்கியமானவை. அந்த வகையில், 2026 ஜூலை 27 முதல் டிசம்பர் 11 வரை (138 ...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>ஜோதிடத்தில் மிக மெதுவாக நகரும் சக்திவாய்ந்த சனி பகவானின் இயக்க மாற்றங்கள் மிகவும் முக்கியமானவை. </p><p>அந்த வகையில், 2026 ஜூலை 27 முதல் டிசம்பர் 11 வரை (138 நாட்கள்) சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் (தலைகீழ் இயக்கம்) பயணிக்கவுள்ளார்.</p><p>

நீதி மற்றும் கர்மாவின் அதிபதியான சனி வக்ரமடையும் போது, கடந்த காலப் பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கக்கூடும்.</p><p> இந்த 138 நாட்களும் சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்குச் சவாலாக அமையவுள்ளதால் அவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.</p><p>அவர்கள் எந்த ராசியினர் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>மிதுனம்</td><td><ol><li>மிதுன ராசிக்காரர்கள் சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் பணியிடத்தில் கூடுதல் அழுத்தத்தைச் சந்திக்க நேரிடலாம். </li><li>இதனால் பணிச்சுமை அதிகரிக்கலாம்.</li><li> இந்த காலகட்டத்தில் அவர்கள் அதிக சவால்களையும், எதிர்பாராத தடைகளையும் சந்திக்க நேரிடும். </li><li>இந்த நேரத்தில் சவால்களை வெற்றிகரமாக முடிக்க எச்சரிக்கை மற்றும் கவனமாக திட்டமிடல் அவசியம்.
</li><li>
அலுவலகத்தில் சக ஊழியர்களால் அவர்கள் சில சூழ்ச்சிகளில் சிக்க நேரிடலாம் இதனால் குறிப்பிட்ட நேரத்தில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை முடிக்க முடியாமல் போகலாம். </li><li>வியாபாரத்தில் லாபம் மற்றும் நஷ்டம் இரண்டுமே வரக்கூடியவை என்றாலும் லாபங்களை விட இழப்புகள் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. எதிர்பாராத நிதி தோல்விகளை நீங்கள் சந்திக்க நேரிடும் இது மனச்சோர்வை ஏற்படுத்தும்.</li></ol></td></tr><tr><td>சிம்மம் </td><td><ol><li>சிம்ம ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் தேவையற்ற செலவுகளையும் நிதி நெருக்கடிகளையும் சந்திக்க நேரிடலாம். </li><li>வேலை தொடர்பாக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும் இது மன அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும். </li><li>உங்கள் தொழில் வாழ்க்கையிலும் பல சவால்கள் இருக்கும்.</li><li>மேலும் மக்கள் உங்களிடமிருந்து அதிக வேலையை எதிர்பார்ப்பார்கள் அது உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தும்.</li><li>உங்கள் மேலதிகாரிகளுடன் சில முரண்பாடுகள் ஏற்படலாம் இதனால் நீங்கள் விரக்தியடைய நேரிடலாம்.</li><li> உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சில சோதனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் நீங்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும்.</li><li> உங்களின் அனைத்து முயற்சிகளிலும் சில தடைகளை ஏற்பட வாய்ப்புள்ளதால் நிதானமாக அடியெடுத்து வைக்கவும்.

</li></ol></td></tr><tr><td>தனுசு</td><td><ol><li>தனுசு ராசிக்காரர்கள் சனிபகவானின் இந்த வக்ர பெயர்ச்சியால் குடும்பப் பொறுப்புகள், தொழில் விஷயங்கள் மற்றும் வீடு அல்லது சொத்து தொடர்பான பிரச்சனைகளில் அழுத்தத்தை அனுபவிக்கக்கூடும். </li><li>குடும்பத் தேவைகள் அல்லது தனிப்பட்ட சூழ்நிலைகள் முக்கியமான தொழில் முடிவுகளைப் பாதிக்கக்கூடும் எனவே கவனமாகச் செயல்படுவது அவசியம். </li><li>அவர்கள் இந்த காலகட்டத்தில் பல்வேறு உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம். </li><li>அவர்கள் நினைத்த விஷயங்கள் எதுவும் இப்போதும் சாதகமாக முடிவடையாது.</li><li>அலுவலகத்தில் அவர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் மிகவும் கவனமாக செய்ய வேண்டும்.</li><li> இல்லையெனில் அது அவர்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும். </li><li>வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் இல்லையெனில் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

&nbsp;&nbsp;</li></ol></td></tr></tbody></table><br><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-19T22:59:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[FIFA உலகக் கோப்பை வரலாற்றில் மகுடம் சூடிய ஸ்பெயின்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/spain-beat-argentina-to-win-fifa-world-cup-2026-1784500087"></link>
            <id>https://ibctamil.com/article/spain-beat-argentina-to-win-fifa-world-cup-2026-1784500087</id>
            <summary type="text">23 ஆவது Fifa உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், இரண்டாவது முறையாக சாம்பியன் பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>23 ஆவது Fifa உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.</p><p> அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் இந்த இறுதிப்போட்டி நடைபெற்றது. </p><p>

இதில் நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினாவும் முன்னாள் சாம்பியன் ஸ்பெயினும் பலப்பரீட்சை நடத்தின.</p><p></p><h2>நான்காவது முறை</h2><p>

நான்காவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் அர்ஜென்டினாவும், இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றும் இலக்குடன் ஸ்பெயினும் களமிறங்கின. 

போட்டி தொடங்கியதிலிருந்தே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. </p><p>

இருப்பினும் முதல் பாதியில் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/356eb2a5-4f67-43a5-88bb-4434d3f61e94/26-6a5d56cc61c1f.webp' /></p><p>தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியிலும் இரு அணிகளும் பல வாய்ப்புகளை உருவாக்கினாலும் அவற்றை கோலாக மாற்றத் தவறின.</p><p>

இதனால் 90 நிமிடங்கள் முடிவில் ஆட்டம் கோல் இன்றி சமநிலையில் இருந்தது.

இதையடுத்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் (90+3) போது அர்ஜெண்டினா வீரர் என்சோ பெர்னாண்டஸ் சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார்.</p><p> </p><p></p><h2>உலகக் கோப்பை&nbsp;</h2><p>இதனால் அந்த அணி மீதி ஆட்டத்தை 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டதுடன் ஆட்டம் கூடுதல் 30 நிமிடங்களுக்கு சென்றது.
</p><p>
கூடுதல் நேரத்தின் போது ஸ்பெயின் வீரர் பெர்ரான் டோரஸ் அபாரமான கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்று கொடுத்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c03ec0b0-18d4-404d-a34c-88793e23ec33/26-6a5d56cd1787a.webp' /></p><p>அதன் பிறகு அர்ஜென்டினா சமநிலை கோலுக்காக கடுமையாக போராடிய போதிலும் ஸ்பெயின் வீரர்கள் சிறப்பாக தற்காப்பில் செயல்பட்டு முன்னிலையை தக்க வைத்தனர்.
</p><p>
இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்திய ஸ்பெயின், 23 ஆவது பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T22:59:29+00:00</updated>
        </entry>
    </feed>
