<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-16T05:26:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் போன ஞானசாரர் மீண்டும் வந்தார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-missing-gnanasara-has-returned-1789534937"></link>
            <id>https://tamilwin.com/article/the-missing-gnanasara-has-returned-1789534937</id>
            <summary type="text">


நான் சட்டத்திற்கு அஞ்சி எங்கும் ஓடி ஒளியப் போவதில்லை என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். மேல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>


நான் சட்டத்திற்கு அஞ்சி எங்கும் ஓடி ஒளியப் போவதில்லை என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். </p><p>மேல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>எதனையும் எதிர்கொள்ளத் தயார்&nbsp;</h2><p>
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

நான் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அஞ்சி காணாமல் போய்விட்டதாக இணையம் முழுவதும் செய்திகள் பரவுவதை நான் பார்த்தேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d80963f6-a9b5-43ba-8b80-e42af46ef2d9/26-6aaa2812494f0.webp' /></p><p>
</p><p>
ஆனால், பலவீனமானவர்களே ஓடிப்போய் ஒளிந்து கொள்வார்கள். நாட்டிற்காக உழைத்த நாங்கள் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கின்றோம்.</p><p>

நாங்கள் எந்த நடவடிக்கைக்கும் அஞ்சப் போவதுமில்லை. ஓடி ஒளிந்து கொள்ளப் போவதுமில்லை என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-16T05:24:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்து விபத்தை நேரலை செய்த ஹெலிகொப்டர் விபத்து - 3 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nbc-news-helicopter-crashes-in-live-bus-accident-1789535933"></link>
            <id>https://news.lankasri.com/article/nbc-news-helicopter-crashes-in-live-bus-accident-1789535933</id>
            <summary type="text">nbc news helicopter crashes during live coverage of los angeles bus crash: பேருந்து விபத்தை நேரலை செய்து கொண்டிருந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>nbc news helicopter crashes during live coverage of los angeles bus crash: பேருந்து விபத்தை நேரலை செய்து கொண்டிருந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். </p><h3>

பேருந்து விபத்தை நேரலை செய்த ஹெலிகொப்டர் விபத்து
</h3><p>
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் சாட்ஸ்வொர்த் பகுதியில் உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 5:03 மணிக்கு ஒரு மெட்ரோ பேருந்தும், SUV வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/516c6429-0705-469a-a593-944256700eae/26-6aaa26be9a91d.webp' /></p><p>

இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்திருந்தனர். தீயணைப்பு வீரர்கள் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.</p><p> 

இந்த விபத்து சம்பவத்தை நேரலை செய்ய NBC செய்தி நிறுவனத்தின் ஹெலிகொப்டர் ஒன்று உள்ளூர் நேரப்படி மாலை 7 மணியளவில் நேரலையின் போதே கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.&nbsp;</p><p></p><p>

ஹெலிகொப்டர் இரண்டு கட்டிடங்களுக்கு இடையில் உள்ள வாகன நிறுத்தத்தில் விழுந்து நொறுங்கியுள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">NBC LOS ANGELES HELICOPTER CRASHES WHILE COVERING METRO BUS CRASH<br><br>An NBC Los Angeles news (KNBC-TV) helicopter reportedly crashed in Chatsworth, California, while covering a Metro bus crash.<br><br>Further details on injuries and the circumstances of the helicopter crash are awaited. <a href="https://t.co/skIAkYVChe">pic.twitter.com/skIAkYVChe</a></p>&mdash; Subodh Kumar (@kumarsubodh_) <a href="https://x.com/kumarsubodh_/status/2100051119271752040?ref_src=twsrc%5Etfw">September 16, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

இந்த விபத்தில், ஹெலிகொப்டர் விமானி, செய்தியாளர், மற்றும் சாலையில் இருந்த நபர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cca91e3c-4675-493b-b1f8-fdc8e7061a8f/26-6aaa26bf4e299.webp' /></p><p>

மேலும், ஹெலிகொப்டர் விழுந்ததில், ஹெலிகொப்டர் மற்றும் அங்குள்ள வாகனங்களில் தீ பற்றியது. அங்கிருந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைத்தனர்.</p><p>

ஹெலிகொப்டர் விபத்து குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மற்றும் கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகம் விசாரணையில் ஈடுபடுத்தப்படும் என்று தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. </p><p>

நேரலையின் போதே ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T05:21:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepachelvan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தியாக தீபத்திற்கான மெய்யான அஞ்சலி, தமிழர் ஒற்றுமையுடனும் நேர்மையுடனும் இருப்பதாகும்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-genuine-tribute-to-the-beacon-of-sacrifice-1789533492"></link>
            <id>https://ibctamil.com/article/a-genuine-tribute-to-the-beacon-of-sacrifice-1789533492</id>
            <summary type="text">மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என வலியுறுத்திய தியாக தீபம் திலீபன் அவர்கள், ஈழத் தமிழ் மக்கள் ஒற்றுமையுடனும் உண்மையுடனும் நேர்மையுடனும் போராடுவதையே அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என வலியுறுத்திய தியாக தீபம் திலீபன் அவர்கள், ஈழத் தமிழ் மக்கள் ஒற்றுமையுடனும் உண்மையுடனும் நேர்மையுடனும் போராடுவதையே அதிகமும் விரும்பினார். </p><p>இன இலட்சத்தியத்திலும் சமூக வாழ்விலும் தமிழச் சமூகம் விழிப்பும் அறிவும் கொண்டு எழுவதே தமிழர் தேசத்திற்கான அடிப்படை என்ற கனவைக் கொண்டிருந்தார் என்பதை அவரது உரைகளில் உணர முடிகின்றது. தியாக தீபம் திலீபன் அவர்களின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் துவங்கியுள்ளன.</p><p></p><h3>தியாக தீபத்தின் நினைவுநாட்கள்</h3><p>2009இற்கு முந்தைய காலத்தில் தியாக தீபத்தின் நினைவு நாட்கள் என்றால் ஈழம் அவரது நினைவுகளால் மூழ்கியிருக்கும். கடுமையான போர், அலைச்சல், பட்டினி வாழ்வு பிய்ந்துபோன குடிசை என்ற நிலைகளிலும் வீட்டின் முன்னால் திலீபன் அவர்களின் நினைவுப்படம் வைக்கப்பட்டு பூமாலை அணிவித்து தீபம் ஏற்றப்பட்டிருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d551f4d2-3cf3-4889-bc41-e82ccb605a9b/26-6aaa25a5124ae.webp' /></p><p> ஈழத் தெருவெங்கும் திலீபனின் முகங்களால், சிவப்பு மஞ்சள் கொடிகளால் நிறைந்திருக்கும். 2009இற்குப் பின்னரான காலத்தில் தியாக தீபத்தின் நினைவுநாட்கள் புலம்பெயர் தேசங்களிலும் இணையங்களிலுமே அனுஷ்டிக்கப்படுவதுண்டு. </p><p>இப்போது ஈழ நிலத்தில் திலீபன் அவர்களின் உருவச் சிலை&nbsp;நிமிர்ந்திருக்கிறது. அவர் முன்னால் தீப ஒளிகளை இன்றைய தலைமுறையினர் ஏற்றுகின்றனர்.</p><h2>சிங்களக் கலைஞர்</h2><p>தியாக தீபம் திலீபன் அவர்களின் 39ஆவது நினைவேந்தலை முன்னிட்டு நல்லூரில் உள்ள அவரது நினைவுத் தூபி எழுச்சிக் கோலம் பூணத் தொடங்கியுள்ளது. அங்கே சிங்கள இளைஞர்களும் மக்களும்கூட சென்று தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cc27a60-d00a-41e3-8cd1-8896b946fa67/26-6aaa25a5bb110.webp' /></p><p> சிங்கள மக்களும் சிங்களக் கலைஞர்களும் தியாக தீபம் திலீபனை பெருமதிப்போடு நினைவு கொள்வதுதான் தியாக தீபத்தின் மகத்துவமாகும். சிங்களத்திலும் தியாக தீபம் பற்றிய பாடல் பெருமையுடன் நினைவுகொண்டு பாடப்படுகிறது.</p><p>நம் எழுத்துக்களால், கவிதைகளால், பாடல்களால் நினைவுகூரப்படும் தியாக தீபத்தின் நினைவுநாளை, அவர் எந்த நிலத்திற்காக, எந்த நிலத்தின் சனங்களுக்காக துளி நீரும் அருந்தால் 12 நாட்கள் நோன்பிருந்து, உயிர் துறந்தாரோ, அந்த நிலத்தில், அந்த நிலத்தின் சனங்களால் அவரது நினைவுநாளைக் கொண்டாட முடியாதிருந்த ஒரு காலத்தை எதிர்கொண்டோம்.</p><p> சிங்களப் பேரினவாத அரசும் அதன் படைகளும் தியாக தீபத்தின் நினைவுத் தூபியையும், அவர் உண்ணா நோன்பிருந்த இடத்தில் அமைக்கப்பட்ட நினைவுக் கல்லையும் சிதைத்து அழித்தது. ஆனாலும் &nbsp;எதனாலும் அழிக்க முடியாத &nbsp;திலீபனின் நினைவுகளையும் அவரது கனவையும் ஒருபோதும் அழித்துவிட முடியவில்லை.</p><h2>உண்ணா நோன்பு</h2><p>இணையத்தில் தியாக தீபம் போன்றவர்களின் நினைவுநாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்ற போது, ஈழ விடுதலை மறுப்பாளர்களும் சிங்கள அரசின் கைக்கூலிகளும் அதனை இணையப் போராளிகளின் இயலாமை என கிண்டல் செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12318e2c-9c7a-45cf-b2ca-47480423b574/26-6aaa25a67775f.webp' /></p><p> </p><p>பலம் மிக்க நவீன ஊடகமான இணையத்தில் நினைகூரப்பட்ட தியாக தீபத்தின் நினைவுநாட்களை, இப்போது ஈழ நிலத்தில் எமது மக்கள் அனுஷ்டிக்கத் தொடங்கியுள்ளனர். அத்துடன் ஒருபடி கடந்து சிங்கள மக்களும் திலீபன் நினைவிடத்திற்கு வந்து செல்கின்றனர்.</p><p> 2009 இனப்படுகொலைப் போரின் பின்னரான இன்றைய காலத்தில், நம்பிக்கையற்ற அரசியல் சூழல் நிலவும் இன்றைய காலத்தில் தியாக தீபம் திலீபன் அவர்களை நினைவு கூர்வதும் அவரது கனவை நினைகூர்வதும் மிகவும் முக்கியத்துவமான ஒன்றாக உள்ளது.</p><p>இன்றைய காலத்தில், திலீபன் அவர்களை நினைகூருகின்றபோது இரண்டு விடயங்களை வலியுறுத்த வேண்டியுள்ளது, அல்லது பின்பற்ற வேண்டியுள்ளது. ஒன்று, தன்னலமற்ற அரசியல் எமக்கு அவசியமானது.</p><p> மற்றையது, திலீபனின் கனவை மெய்ப்பிப்பதுதான் அவருக்கு செய்யும் மெய்யான மரியாதை. அதுவே அவரை நினைவுகூர்வதற்கு அர்த்தமானதாயிருக்கும்.</p><p> 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர், அதாவது ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்ட பின்னர், ஈழத் தமிழ் மக்கள் நம்பிக்கையற்ற, சூன்யமான அரசியல் சூழலிலேயே வாழ்ந்து வருகின்றனர். திலீபன் போன்ற போராளிகள் தன்னலமற்ற அரசியலால் ஈழப் போராட்டத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினர், எடுத்துரைத்தனர்.</p><h3>இனத்திற்கான அர்ப்பணிப்பு</h3><p>&nbsp;தனிப்பட்ட இருப்புக்களின் மோதல் களமாகியுள்ள தமிழ் அரசியல் சூழலில் அறம் சாகடிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/281f8edc-030b-4494-a350-c0b55e5df763/26-6aaa25a73cd63.webp' /></p><p> </p><p>ஈழத் தமிழ் இனத்தின் அரசியல் போராட்டத்தை தமிழ் தலைமைகள் கையில் எடுத்து பதினாறு ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் துகள் துகளாய் சிதறி இருக்கிறோம். </p><p>நேர்மையான அணுகுமுறை, உண்மையான பேச்சு, இனத்திற்கான அர்ப்பணிப்பு, ஒற்றுமைப்பட்ட குரல் என்று எதுவும் இல்லாமல் மாறிமாறி ஒருவரை ஒருவர் அழிக்கும் அரசியலில் ஈடுப்பட்டு ஈழத் தமிழ் மக்களை இப்போது தமிழ் அரசியல் சூழலே இனவழிப்பு செய்கிறது என்பதுதான் கசப்பான உண்மையாகும்.</p><p>அந்தப் போராட்டத்தை ஒரு அசியல் போராட்டமாக, ஒரு அரசியல் இயக்கமாக முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. திலீபன் போன்ற உன்னதமான போராளிகள் சுமந்த கனவை, எடுத்து வந்த ஆயுதத்தை தொடர்ந்து ஏந்திச் செல்வதுதான் இன்றைய காலத்தின் அவசியமாகும். </p><p>தன்னலமற்ற, ஆழமான புரிதல் கொண்ட, தமிழ் ஈழ நிலத்தின் ஆன்மாவை நேசிக்கும் இளைஞர்களும் அரசியல் தலைமைகளுமே எமக்கு அவசியமானவை. </p><p>திலீபன் போன்ற போராளிகளை நினைவுகூரும்போது, நம்மையும் நமது நிலத்தின் இன்றைய சூழலையும் குறித்து ஆழமாக சிந்திப்பது, அதன் நிமர்வுக்காய் நம் பங்களிப்பை செய்வது என்பனவே அவருக்குச் செய்யும் அஞ்சலியும் அவரை நினைவுகூர்வதன் அர்த்தமுமாக இருக்கும்.</p><p>தமிழ் மக்களின் கோரிக்கையை - அபிலாசையை ஏற்றுக்கொள்ளாத அரசியல் தீர்வு, எமது மக்களை தொடர்ந்தும் அழித் தொழிக்கும் ஆயுதம் அல்லது யுத்தமாகும். அதுவே இப்போதும் நிகழ்கிறது. </p><p>எந்தக் காலத்திலும் தமிழ் மக்களின் உரிமையைப் பறிக்காத, அவர்களை அழித்தொழிக்க முடியாத தீர்வொன்றே எமக்கு வேண்டும். அதற்காகவே திலீபன் போன்றவர்கள் கனவையும் பசியையும் சுமந்தார்கள்.</p><p> எமது மக்கள் எல்லா விடுதலையும், உரிமையும் கொண்ட சமத்துவ ஈழ மண்ணில் வாழ வேண்டும் என்பதுவே திலீபன் அவர்களின் கனவு.</p><p> &nbsp;தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் துவங்கும் இத் தருணத்தில் அவருக்கான மெய்யான அஞ்சலி குறித்தே நாம் சிந்திக்க வேண்டும். திலீபன்; எந்தக் காலத்திலும் அணையாத ஒளி. அந்த ஒளியிற்கு நாம் ஏற்றும் தீபம் உண்மையும் நேர்மையும் கொண்டதாக இருக்க வேண்டும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...! </td></tr></tbody></table><p><br></p><p>
</p><p>

</p>]]></content>
            <updated>2026-09-16T05:14:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் கொரியாவில் குற்ற செயலில் இலங்கையர்கள் குழு; அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/busan-customs-arrests-two-sri-lankans-cannabis-1789535662"></link>
            <id>https://canadamirror.com/article/busan-customs-arrests-two-sri-lankans-cannabis-1789535662</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தென் கொரியாவில், இலங்கையர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



குறித்த இலங்கையர்கள் குழுவினர், கஞ்சா பயன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தென் கொரியாவில், இலங்கையர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>


குறித்த இலங்கையர்கள் குழுவினர், கஞ்சா பயன்படுத்தி ஹாஷிஷ் போதைப்பொருளை தயாரித்து தென் கொரியாவில் விற்பனை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a97b5675-a0a8-4b00-beb4-52cadb86c910/26-6aaa25b021fbc.webp' /></p><p>சர்வதேச அஞ்சல் மூலம் அதிக செறிவுள்ள கஞ்சாவைக் கடத்தி, உள்நாட்டில் விநியோகிக்க முயன்ற இரண்டு இலங்கை நாட்டினர் சுங்கத்துறையினரால் பிடிபட்டனர்.
</p><p>
போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில், 30 வயதுகளில் உள்ள இலங்கையரான 'ஏ' மற்றும் 'பி' ஆகியோரை வழக்கு விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக புசான் பிராந்திய சுங்க சேவை 14ஆம் தேதி அறிவித்தது.</p><p> 



இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக அந்த தகவல்காள் மேலும் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-09-16T05:11:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரயில் விபத்தில் இரு பெண்கள் உயிரிழப்பு; அதிகாலை இடம்பெற்ற துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-women-killed-in-train-accident-kalutara-1789535123"></link>
            <id>https://jvpnews.com/article/two-women-killed-in-train-accident-kalutara-1789535123</id>
            <summary type="text">&amp;nbsp; களுத்துறை தெற்கு ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று (16) அதிகாலை இடம்பெற்ற ரயில் விபத்தில் தாயும் அவரது உறவினரான பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; களுத்துறை தெற்கு ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று (16) அதிகாலை இடம்பெற்ற ரயில் விபத்தில் தாயும் அவரது உறவினரான பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>

இந்த விபத்தில் தாயும் அவரது உறவினரான மகளும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். உடன் வந்த மகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38a4620f-875f-40ec-a46c-df7951f584a7/26-6aaa239555ef9.webp' /></p><h2>&nbsp; கவனக்குறைவாக நடந்து சென்று கொண்டிருந்தபோது&nbsp; துயரம்&nbsp;</h2><p>
</p><p>
இன்று காலை 4.30 மணியளவில் இவர்கள் ரயில் பாதையில் கவனக்குறைவாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, மருதானையிலிருந்து காலி நோக்கி அதிவேகமாக வந்த ரயில் இவர்கள் மீது மோதியுள்ளது.</p><p>

 மதுகம பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், அவரது மகள் மற்றும் உறவினரான மகள் ஆகிய மூவரும் அனுராதபுரத்தில் நடைபெறும் மத நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக வந்துள்ளனர்.
</p><p>


அனுராதபுரம் செல்லும் ரயிலைப் பிடிப்பதற்காக, களுத்துறை தெற்கு ரயில் நிலையத்தின் வலது பக்கமாக நடைமேடையை நோக்கி ரயில் பாதையின் வழியே இவர்கள் நடந்து சென்றபோது இந்த துயரம் நிகழ்துள்ளது.
</p><p>









உயிரிழந்தவர்களின் சடலங்கள் முதற்கட்டமாக தெற்கு களுத்துறை ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன..சடலங்களை பிரேத பரிசோதனைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



விபத்து குறித்து களுத்துறை தெற்கு பொலிஸார் தீவிர மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T05:02:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீரா சீரியல் புகழ் வைஷ்ணவி நடிக்கப்போகும் மூக்குத்தி அம்மன் சீரியலின் நாயகன் யார் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/veera-serial-fame-vaishnavi-new-project-details-1789533038"></link>
            <id>https://cineulagam.com/article/veera-serial-fame-vaishnavi-new-project-details-1789533038</id>
            <summary type="text">வீரா சீரியல்ஜீ தமிழில் வெற்றிகரமாக வீரா என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் வைஷ்ணவி மற்றும் அருண் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்கள், இந...</summary>
            <content type="html"><![CDATA[<h2>வீரா சீரியல்</h2><p>ஜீ தமிழில் வெற்றிகரமாக வீரா என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. </p><p>இதில் வைஷ்ணவி மற்றும் அருண் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்கள், இந்த ஜோடிக்கு என்று தனி ரசிகர்கள் வட்டாரமே உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9169054-b6b9-4a14-b079-013b8fed7b42/26-6aaa1b71cc2be.webp' /></p><p> </p><p>கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கப்பட்ட இந்த தொடர் முதல் பாகம் முடிவடைந்து இரண்டாவது பாகமாக ஒளிபரப்பாகி வருகிறது. </p><p>விறுவிறுப்பின் உச்சமாக கதை சென்றுகொண்டிருக்கும் நிலையில் சீரியல் குழுவிடம் இருந்து ஒரு ஷாக்கிங் நியூஸ் வந்தது. அதாவது வீரா சீரியல் விரைவில் முடிவடையப்போவதாக தகவல் வந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87028e92-3cb5-48b7-9c39-87dc37b34f6f/26-6aaa1b711ee32.webp' /></p><h2>
புதிய சீரியல்</h2><p>
இந்த நிலையில் நடிகை வைஷ்ணவி அடுத்த தொடரில் நடிக்க கமிட்டாகிவிட்டார், ஏற்கெனவே அந்த தகவலும் வந்துவிட்டது. </p><p>அதாவது மூக்குத்தி அம்மன் என்ற புதிய சீரியலில் நாயகியாக நடிக்கிறார். அந்த தொடரில் நாயகனாக நடிக்க அண்மையில் சன் டிவியில் முடிவடைந்த ஆடுகளம் சீரியல் நாயகன் சல்மான் தான் நாயகனாக நடிக்க உள்ளாராம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/292a4350-0f48-4637-9aa3-331b880ee85f/26-6aaa1b706b81b.webp' /></p>]]></content>
            <updated>2026-09-16T05:00:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்ஷ இன்று நீதிமன்றத்தில் முன்னிலை; கடும் பாதுகாப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-to-appear-in-court-today-1789534614"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-to-appear-in-court-today-1789534614</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றப் பகுதியைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றப் பகுதியைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
</p><p>
 

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் சந்தேகநபராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (16) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையிலேயே இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4a2b021-6dbb-40b2-93fc-a30044694791/26-6aaa21987c986.webp' /></p><p>
</p><p>
 

குறித்த வழக்கு விசாரணை இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T04:53:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராகுவின் நட்சத்திர மாற்றம்: 2027 ஏப்ரல் வரை இந்த ராசிகளின் நிதி முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/rahu-in-avittam-nakshatra-who-get-huge-luck-1789531972"></link>
            <id>https://manithan.com/article/rahu-in-avittam-nakshatra-who-get-huge-luck-1789531972</id>
            <summary type="text">ஜோதிடத்தில் நிழல் கிரகமாகக் கருதப்படும் ராகு, ஒரு ராசியில் சுமார் 18 மாதங்கள் தங்கி, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். ராகுவின் இந்த மாற்றங்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் நிழல் கிரகமாகக் கருதப்படும் ராகு, ஒரு ராசியில் சுமார் 18 மாதங்கள் தங்கி, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். ராகுவின் இந்த மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
</p><p>
தற்போது ராகு கும்ப ராசியில், அவிட்டம் நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார். செவ்வாய் அதிபதியாகக் கொண்ட அவிட்டம் நட்சத்திரம் செல்வம், செழிப்பு, வெற்றி ஆகியவற்றைக் குறிக்கும் மங்களகரமான நட்சத்திரமாகக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4f0f320-4a4c-486f-b7cd-ede555ea9a94/26-6aaa1f3002474.webp' /></p><p>

அவிட்டம் நட்சத்திரத்தில் ராகுவின் பயணம் சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத வளர்ச்சியையும், நிதி நிலையில் முன்னேற்றத்தையும் தரும் என ஜோதிடத்தில் ரீதியில் கணிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>ராகு இந்நட்சத்திரத்தில் 2027ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி வரை இருப்பதால், அதுவரை சில ராசிக்காரர்கள் தங்கள் முயற்சிகளில் நல்ல வெற்றியைக் காண வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p></p><p>
</p><p>அப்படி அவிட்டம் நட்சத்திரத்தில் பயணிக்கும் ராகுவால் 2027 ஏப்ரல் வரை எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகின்றார்கள் என இந்த பதிவில் பார்க்கலாம்.&nbsp;</p><h2>மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5e39011-fe63-4aa3-980d-a7e00dd21e9d/26-6aaa1f30ad09a.webp' /></p><p>
 அவிட்டம் நட்சத்திரத்தில் இருக்கப் போகும் ராகுவால் மிதுன ராசிக்காரர்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள். எந்த ஒரு வேலையை எடுத்தாலும் அதில் மாபெரும் வெற்றியைப் பெறும் வாய்ப்புள்ளது. </p><p>குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வந்து சேரும். நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும். </p><p>நீண்ட காலமாக சந்தித்து வந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வாய்ப்புள்ளது. தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது.&nbsp;</p><h2>கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f4cf78d-a7e3-4015-882d-273e42dc795a/26-6aaa1f3160211.webp' /></p><h2> </h2><p>கன்னி அவிட்டம் நட்சத்திரத்தில் இருக்கப் போகும் ராகுவால் ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 2027 வரை சிறப்பாக இருக்கப் போகிறது. நெருங்கிய நண்பர்களுடன் சேர்ந்து ஒரு புதிய முயற்சியைத் தொடங்கும் வாய்ப்புள்ளது. </p><p>இந்த முயற்சி நல்ல பலனைத் தரும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டாகும்.</p><p> புத்திசாலித்தனம் மற்றும் கடின உழைப்பால், எவ்வளவு கஷ்டமான வேலைகளையும் எளிதில் முடிக்க முடியும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் புதிய பொறுப்புக்கள் அல்லது பதவி உயர்வைப் பெறும் வாய்ப்புள்ளது.</p><h2>

கும்பம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98e66a96-77fa-4b1b-a9f4-13d341ae2f1c/26-6aaa1f3216cad.webp' /></p><p></p><h2> </h2><p>
அவிட்டம் நட்சத்திரத்தில் இருக்கப் போகும் ராகுவால் கும்ப ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 2027 வரை பொற்காலமாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். </p><p>உறவுகளைப் பொறுத்தவரை இனிமையாக இருக்கும். வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் நல்ல பாராட்டுக்களைப் பெறுவார்கள்.</p><p> நீண்ட காலமாக சந்தித்து வந்த ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் திறமைக்கேற்ற நல்ல பலனைப் பெறுவார்கள். உயர் அதிகாரிகள் வழங்கும் புதிய பொறுப்புகள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T04:52:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் ஒரே மேடையில் ரணில் மற்றும் சஜித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-and-sajith-on-the-same-stage-again-meet-1789533940"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-and-sajith-on-the-same-stage-again-meet-1789533940</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் நாளை (17) நடைபெறவுள்ள அரசியல் நிகழ்வொன்றில் ஒரே மேடையில் சந்திக...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் நாளை (17) நடைபெறவுள்ள அரசியல் நிகழ்வொன்றில் ஒரே மேடையில் சந்திக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>

ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி தனியாக பிளவுபட்டதன் பின்னர் , ரணிலும் சஜித்தும் பொதுவெளியில் எந்தவொரு நிகழ்விலும் ஒன்றாகக் கலந்துகொள்ளவில்லை.</p><h2>அதிதிகளாக ஒரே மேடையில்&nbsp;</h2><p>

இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள அரசியல் ரீதியான ஒரு நிபுணத்துவ கலந்துரையாடல் நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணிலும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்தும் பிரதம அதிதிகளாக ஒரே மேடையில் கலந்து கொள்ளவுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91daa459-7637-490a-af67-ab87a871c125/26-6aaa1fe325b14.webp' /></p><p>

மகாமான்ய டி. எஸ். சேனாநாயக்க அரசியல் பீடத்தின் பழைய மாணவர் சங்கம் (DSSPA Alumni Club) முதன்முறையாக ஏற்பாடு செய்யும் 'ஜே.ஆர். ஆளுகையும் நடுநிலையும்' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
</p><p>
கொழும்பு 07 இல் அமைந்துள்ள தேசிய நூலகம் மற்றும் ஆவணப்படுத்தல் சபை கேட்போர் கூடத்தில் நடைபெறும் இந்த நிபுணத்துவ கலந்துரையாடல் நாளை பிற்பகல் 02.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
</p><p>
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு அரசியல் தரப்புகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி பல முன்னணி சிரேஷ்ட தலைவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T04:49:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டைவிட்டு ஓடிய மஹிந்த பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ; சம்பந்தியும் ஓட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shiranthi-rajapaksa-flees-the-country-1789534301"></link>
            <id>https://jvpnews.com/article/shiranthi-rajapaksa-flees-the-country-1789534301</id>
            <summary type="text">&amp;nbsp; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
</p><p>

ஷிரந்தி ராஜபக்ஷவுடன் ரோஹித ராஜபக்ஷவின் மாமியாரான ஏன் டி லிவேராவும் புறப்பட்டுச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70ff3201-30f0-4bb3-80d2-527b725430ff/26-6aaa205edf994.webp' /></p><p>
</p><p>

இவர்கள் இன்று அதிகாலை 1.10 மணிக்கு சிங்கப்பூர் எயார்லைன்ஸ் சேவைக்குச் சொந்தமான SQ-469 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>

அதேவேளை முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ வரும் செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகவுள்ள நிலையில் நாட்டைவிட்டு வேளியேரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T04:48:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர் விசாரணைகளுக்கு மத்தியில் சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shiranthi-rajapaksa-leaves-for-singapore-1789532914"></link>
            <id>https://ibctamil.com/article/shiranthi-rajapaksa-leaves-for-singapore-1789532914</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான&amp;nbsp;ஷிரந்தி ராஜபக்ச மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான&nbsp;ஷிரந்தி ராஜபக்ச மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் SQ-469 என்ற விமானத்தில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று (16) அதிகாலை சுமார் 1:10 மணியளவில் அவர் புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

அவருடன் ரோஹித ராஜபக்சவின் மாமியாரான ஏன் டி லிவேராவும் புறப்பட்டுச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><h2>நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு</h2><p>உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, ஷிரந்தி ராஜபக்ச நேற்று (15) கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d825d0d5-d1a2-4ced-bc90-624d74db45f9/26-6aaa1e2eb81da.webp' /></p><p>
</p><p>


பின்னர், இன்று அதிகாலை மருத்துவமனையிலிருந்து அவர் நேரடியாக விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.</p><p>இந்தநிலையில், ஷிரந்தி ராஜபக்ச எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jP3ECwPjlFM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T04:48:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு புகலிடக்கோரிக்கையாளருக்கு 56,000 பவுண்டுகள்: உள்துறைச் செயலர் பரபரப்பு தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-paying-56-000-pound-for-each-returned-to-france-1789533714"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-paying-56-000-pound-for-each-returned-to-france-1789533714</id>
            <summary type="text">UK paying £56,000 for each person returned to France: பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்படும் ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கும் பிரித்தானியா 56,000 பவுண...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK paying £56,000 for each person returned to France: பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்படும் ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கும் பிரித்தானியா 56,000 பவுண்டுகள் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>


One in, one out திட்டத்தின் கீழ் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்படும் ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கும் பிரித்தானியா 56,000 பவுண்டுகள் கொடுப்பதாக பிரித்தானிய உள்துறைச் செயலர் தெரிவித்துள்ளார்.
</p><h3> 
One in, one out திட்டம்</h3><p>

பிரான்சும் பிரித்தானியாவும் செய்துகொண்டுள்ள One in, one out என்னும் ஒப்பந்தத்தின்கீழ், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் ஆங்கிலக்கால்வாய் வழியாக நுழைந்த ஒரு புகலிடக்கோரிக்கையாளர், தனக்கு பிரித்தானியாவில் குடும்பம் இருப்பதை நிரூபிக்க இயலாதபட்சத்தில் பிரான்சுக்கே திருப்பி அனுப்பப்படுவார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7de005f8-ccc4-463d-85ec-7067fd8fdd01/26-6aaa1e13c2805.webp' /></p><p>

அப்படி பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கும் பதிலாக, பிரித்தானியாவில் குடும்பம் உள்ளதை நிரூபிக்கக்கூடிய, பிரான்சிலிருந்து வரும் ஒரு புலம்பெயர்வோருக்கு பிரித்தானியா புகலிடம் அளிக்கும்.&nbsp;</p><p></p><h3>
ஒரு புகலிடக்கோரிக்கையாளருக்கு 56,000 பவுண்டுகள்</h3><p>

இந்நிலையில், அப்படி One in, one out திட்டத்தின் கீழ் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்படும் ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கும் பிரித்தானியா 56,000 பவுண்டுகள் கொடுப்பதாக பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d7df070-82b0-45cf-8c47-3ca300098de9/26-6aaa1e147ce3f.webp' /></p><p>
விடயம் என்னவென்றால், இதுவரை சுமார் 1,400 பேர் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள்.
</p><p>
ஆக, மக்கள் வரிப்பணத்தில் இவ்வளவு பெரிய தொகை பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்படும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்காக செலவிடப்படும் நிலையில், அத்திட்டத்தால் உண்மையாகவே பலன் உள்ளதா என்னும் கேள்வி எழுந்துள்ளது.
</p><p>
ஆனால், ஒரு புகலிடக்கோரிக்கையாளரை பிரித்தானியாவில் ஓராண்டுக்கு ஹொட்டல் ஒன்றில் தங்கவைப்பதற்கு ஆகும் செலவை விட இது குறைவுதான் என தனது வாதத்தை நியாயப்படுத்தியுள்ளார் ஷபானா.</p>]]></content>
            <updated>2026-09-16T04:42:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 ஆவது திருத்தம் இந்த ஆட்சியின் இறுதிப் பயணத்துக்கே வழிவகுக்கும் : ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amentment-sri-lanka-1789533055"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amentment-sri-lanka-1789533055</id>
            <summary type="text">அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவரும் அரசின் தற்போதைய
நடவடிக்கையானது, இந்த ஆட்சியின் இறுதிப் பயணத்துக்கே உறுதியாக வழிவகுக்கும்
என்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவரும் அரசின் தற்போதைய
நடவடிக்கையானது, இந்த ஆட்சியின் இறுதிப் பயணத்துக்கே உறுதியாக வழிவகுக்கும்
என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
ரஞ்சித் மத்தும பண்டார பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.</p><p>

நீதித்துறையின் சுயாதீனத்தை முற்றிலுமாகச் சுருக்கி, நாட்டில் உள்ள அத்தனை
ஜனநாயக நிறுவனங்களையும் திட்டமிட்டு வலுவிழக்கச் செய்யும் சதி முயற்சியாகவே
இத்தகைய சட்டமூலம் கொண்டுவரப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டிய வரலாற்றுத் தேவை</h2><p>
</p><p>
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>

"ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும்,
பொதுமக்களும் எவ்வித பேதமுமின்றி ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டிய
வரலாற்றுத் தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0af3b9f7-fe4d-47f9-a7a6-8bfec285121a/26-6aaa1df772ddc.webp' /></p><p>
</p><p>
இத்தகைய அடக்குமுறைச் சட்டமூலத்துக்கு எதிராக எதிர்வரும் 24 ஆம் திகதி
கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்துத்
தரப்பினரும் பெருமளவில் அணிதிரள வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>
பொருளாதாரச் சவால்களை எதிர்கொண்டுள்ள தற்போதைய சூழலில், அரசு கொண்டுவரும்
இந்தச் சர்ச்சைக்குரிய அரசியல் சட்டத் திருத்தம் நாட்டின் அரசியல் களத்தில்
புதிய கொந்தளிப்புக்கும், ஆட்சியாளர்களுக்கு எதிரான பலத்த மக்கள்
எழுச்சிக்கும் வித்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T04:41:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருச்சியில் அன்பில் மகேஷ் வீட்டில் சோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/crime-branch-conduct-a-search-at-anbil-mahesh-1789532780"></link>
            <id>https://ibctamilnadu.com/article/crime-branch-conduct-a-search-at-anbil-mahesh-1789532780</id>
            <summary type="text">திருச்சியில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் சென்னை குற்றப்பிரிவு போலிசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு தனிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருச்சியில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் சென்னை குற்றப்பிரிவு போலிசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
</p><p>
கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவரும் திமுக பிரமுகருமான பி.டி.அரசகுமார் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிசாரால் கைது செய்யப்பட்டார்.</p><p>

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் என்ற பெயரில் சங்கத்தை நடத்தி வரும் அரசகுமார் தனியார் பள்ளிகளிடம் பணம் பெற்றதாக எழுந்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த வழக்கு தொடர்பில் திருச்சியில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் போலிசார் சோதனை நடத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92d637b4-6770-498b-983f-881aeb7e8f83/26-6aaa1abbe627c.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-16T04:27:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரிய போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய படுகொலை சதித்திட்டம் முறியடிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-foil-assassination-plot-linked-to-drug-bust-1789529724"></link>
            <id>https://ibctamil.com/article/police-foil-assassination-plot-linked-to-drug-bust-1789529724</id>
            <summary type="text">சுமார் 400 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றுவதற்கான தகவலை வழங்கிய காவல்துறை உளவாளி ஒருவரை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்த வெளிநாட்டில...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுமார் 400 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றுவதற்கான தகவலை வழங்கிய காவல்துறை உளவாளி ஒருவரை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்த வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பாதாள உலகக் குழுத் தலைவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தநிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இரண்டு முக்கிய சந்தேகநபர்களை வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் திகதி கிரிந்த, அந்தகல்வெல்ல கடற்பகுதியில் சுமார் 400 கோடி ரூபாய் பெறுமதியான பாரிய ஐஸ் போதைப்பொருள் தொகையுடன் ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.</p><p></p><h2>காவல்துறை அத்தியட்சகரின் வீடு&nbsp;</h2><p>காவல்துறை உளவாளி ஒருவர் வழங்கிய துல்லியமான புலனாய்வுத் தகவலின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfe9956a-ecff-4cad-88c8-e6482ccbdda9/26-6aaa17081595f.webp' /></p><p>
</p><p>இதற்கு பழிவாங்கும் வகையில், வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த ‘ரூபன்’ மற்றும் ‘அங்கொட பிரியங்கர’ என அடையாளம் காணப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர்கள், குறித்த காவல்துறை உளவாளியை கொலை செய்ய திட்டமிட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

அவரைக் கொலை செய்த பின்னர், தலையை துண்டித்து உதவி காவல்துறை அத்தியட்சகர் ரோஹன் ஒலுகலவின் வீட்டுக்கு முன்பாக விட்டுச் செல்ல திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>முதற்கட்ட கொலைத் திட்டம் தோல்வியடைந்த பின்னர், கடந்த 5ஆம் திகதி காவல்துறை ஜீப் வாகனத்தைப் போன்ற போலி ஜீப் ஒன்றில் வந்த குழுவினர், குறித்த உளவாளியை வாகனத்தால் மோதிக் கொலை செய்ய முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், அந்த முயற்சியும் தோல்வியடைந்துள்ளது.</p><p></p><h2>வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது</h2><p>
குறித்த குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஜீப் வாகனம், கடுவெல – ஹேவாகம பகுதியில் உள்ள ஒரு வாகன திருத்துமிடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>கொலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக வருகை தந்ததாகக் கூறப்படும் இரண்டு கூலிக் கொலையாளிகள், செல்லக்கதிர்காமம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ead8ba31-0e9a-45ec-9bd3-4d6d10b7dd06/26-6aaa185bab960.webp' /></p><p>
</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 41 வயதான மதுக சாமர எனப்படும் மதுவா மற்றும் இங்கிரிய பகுதியைச் சேர்ந்த 38 வயதான நலின்&nbsp; என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
<br></p><p>அத்துடன் குறித்த காவல்துறை உளவாளியை கொலை செய்து தலையை துண்டிப்பதற்காக தயாராக வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு மன்னா கத்திகளும், போதைப்பொருள் தொகையொன்றும் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T04:23:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bags-found-in-katunayake-airport-1789528325"></link>
            <id>https://tamilwin.com/article/bags-found-in-katunayake-airport-1789528325</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை பகுதிக்கு அருகில் கைவிட்டுச் செல்லப்பட்ட நிலையில் பை ஒன்று நேற்று பிற்பகலில் விமான நிலையச் சுங்க அதிகாரிகளால் கைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை பகுதிக்கு அருகில் கைவிட்டுச் செல்லப்பட்ட நிலையில் பை ஒன்று நேற்று பிற்பகலில் விமான நிலையச் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. </p><p>

அந்த பையை சோதனையிட்ட அதிகாரிகள் ஒரு கோடி 68 லட்சத்து 3750 ரூபாய் பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையொன்றும், மனித தோலை வெண்மையாக்குவதற்கு பயன்படுத்தப்படும் கிறீம் வகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>

 குறித்த பொருட்கள் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><h2><b>

கண்டுபிடிக்கப்பட்ட பைகள்</b></h2><p>குறித்த சிகரெட்டுகள் மற்றும் கிரீம்கள் அனைத்தும் டுபாயில் இருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-648 விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c510c4a-0832-4acf-8b55-43a625654286/26-6aaa193802989.webp' /></p><p>வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகுதியில், 111,400 சிகரெட்டுகள் அடங்கிய பெட்டிகளும், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை மற்றும் சுகாதார அமைச்சின் முறையான அனுமதியின்றி நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட தோலை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் 125 கிறீம் போத்தல்களும் காணப்பட்டுள்ளன.</p><p> 

இது தொடர்பில் முறையான விசாரணையொன்றை மேற்கொண்ட விமான நிலையச் சுங்க அதிகாரிகள், சிகரெட் மற்றும் கிறீம் தொகையை பறிமுதல் செய்து, அவற்றை எதிர்வரும் நாட்களில் அழிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். 
</p>]]></content>
            <updated>2026-09-16T04:22:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் போலி காணி ஆவணங்களை தயாரித்து கோடிக்கணக்கில் பணமோசடி - சிஐடியிடம் சிக்கிய நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspect-arrested-for-millions-of-rupees-fake-deeds-1789529583"></link>
            <id>https://tamilwin.com/article/suspect-arrested-for-millions-of-rupees-fake-deeds-1789529583</id>
            <summary type="text">கொழும்பு 07, பார்ன்ஸ் வீதியில் அமைந்துள்ள காணி ஒன்றிற்கு போலி உறுதியைத் தயாரித்து நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் குற்றப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு 07, பார்ன்ஸ் வீதியில் அமைந்துள்ள காணி ஒன்றிற்கு போலி உறுதியைத் தயாரித்து நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>இன்று புதன்கிழமை (16) களுத்துறை நகரில் வைத்து இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p>குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிப்புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்&nbsp;கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h3>நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு&nbsp;போலி ஆவணங்கள்</h3><p>களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதுடைய வயோதிபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffb4ff25-57cc-4415-8adf-9f7038546db4/26-6aaa191f89491.webp' /></p><p>
சந்தேகநபர் போலி ஆவணங்களை நீதிமன்ற நடவடிக்கைகளுக்காகவும் சமர்ப்பித்துள்ளதுடன், சுமார் 01 கோடி ரூபா பெறுமதியான சொத்தினை விற்பனை செய்து பணத்தை மோசடி செய்துள்ளார்.
</p><p>இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T04:20:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[6 நாட்களில் அடித்து நொறுக்கிய மண்டாடி வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/mandaadi-6-days-box-office-collection-1789524142"></link>
            <id>https://cineulagam.com/article/mandaadi-6-days-box-office-collection-1789524142</id>
            <summary type="text">மண்டாடிசூரி வென்னிலா கபடி குழு படம் மூலம் தமிழ் நெஞ்சங்கள் மனதை கொள்ளை கொண்டவர்.அதை தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மண்டாடி</h2><p>சூரி வென்னிலா கபடி குழு படம் மூலம் தமிழ் நெஞ்சங்கள் மனதை கொள்ளை கொண்டவர்.அதை தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்கள் படங்களிலும் காமெடியனாக நடித்து வந்தவர். </p><p>ஆனால், வெற்றிமாறனின் விடுதலை படம் சூரியை ஒரு முழுநீள ஹீரோவாக மாற்றிவிட்டது. அதை தொடர்ந்து அவரும் மாமன், கருடன் என தொடர் ஹிட்டை கொடுத்து தற்போது மண்டாடி படத்திலும் மிகப்பெரிய ஹிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd968d26-6bb9-4961-9e9a-0c482dda98b7/26-6aa9f8b1abbd9.webp' /></p><p>மண்டாடி படம் வெளிவந்த 6 நாட்களில் உலகம் முழுவதும் ரூ 65 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் சூரி கூடிய விரைவில் ரூ 100 கோடி க்ளப்பில் இணைந்து முன்னணி நடிகர்களுக்கு இணையாக வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-16T04:20:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[வைரஸ் காய்ச்சல் காரணமாக ஓய்வில் இருக்கிறேன்- மு.க ஸ்டாலின் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mk-stalin-being-rest-due-to-viral-fever-1789531850"></link>
            <id>https://news.lankasri.com/article/mk-stalin-being-rest-due-to-viral-fever-1789531850</id>
            <summary type="text">M. K Stalin rests at home due to viral fever- வைரஸ் காய்ச்சல் காரணமாக ஓய்வில் இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலினுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>M. K Stalin rests at home due to viral fever- வைரஸ் காய்ச்சல் காரணமாக ஓய்வில் இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
</p><p>
மு.க.ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லை என செய்திகள் பரவி வந்த நிலையில், அவர் எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.</p><p>

வைரஸ் காய்ச்சல் காரணமாக ஓய்வில் இருப்பதாகவும், நலம் விசாரித்த உறவுகளுக்கு நன்றி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e69bcc8f-40af-4acc-891d-1833d57440fa/26-6aaa183340750.webp' /></p><h2>வெளியிட்ட பதிவு..,</h2><p>எனது உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்த அனைவருக்கும் நன்றி!
</p><p>வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சலைத் தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறேன். இதன் காரணமாக, ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் ஒத்திவைக்கப்பட்ட முப்பெரும் விழாவிற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்.</p><p>
</p><p>தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், கலையுலக நண்பர்கள் எனது அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, எனது உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்துள்ளனர். கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி, பிற கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் காட்டிய அன்பிற்கும் அக்கறைக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">எனது உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்த அனைவருக்கும் நன்றி!<br><br>வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சலைத் தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறேன். இதன் காரணமாக, ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கழகப் பொதுச் செயலாளர்…</p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2100057418885726266?ref_src=twsrc%5Etfw">September 16, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>&nbsp;&nbsp;</p><p>மருத்துவர்களின் அறிவுரைப்படி, இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்க உள்ளேன்.
</p><p>பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான நேற்று, கழக உடன்பிறப்புகள் மேற்கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தேன். அதேபோல், நாளை செப்டம்பர் 17 அன்று தந்தை பெரியாரின் பிறந்தநாளையும், திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாளையும் கழக உடன்பிறப்புகள் எழுச்சியுடன் கடைப்பிடிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
</p><p>நாளை தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதுடன், தலைமைக் கழகம் அறிவித்துள்ளபடி, சமூகநீதி நாள் உறுதிமொழியை அனைத்து கழக அலுவலகங்களிலும் ஏற்றிட வேண்டும். கழகத்தின் 78-ஆம் ஆண்டு தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், கழகக் கொடிகளைப் புதுப்பித்து ஏற்றிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்&nbsp;என தெரிவித்துள்ளார். </p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T04:17:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலிப் பத்திரங்களைத் தயாரித்து மோசடி செய்த சந்தேக நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/suspect-arrested-creating-1789529669"></link>
            <id>https://ibctamil.com/article/suspect-arrested-creating-1789529669</id>
            <summary type="text">கொழும்பு 07, பார்ன்ஸ் பிளேஸ் பகுதியில் அமைந்துள்ள சொத்து தொடர்பில் போலி உறுதி ஆவணத்தை தயாரித்து ஒரு கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு 07, பார்ன்ஸ் பிளேஸ் பகுதியில் அமைந்துள்ள சொத்து தொடர்பில் போலி உறுதி ஆவணத்தை தயாரித்து ஒரு கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், அதன் நிதி விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது சந்தேகநபர் நேற்று (15.09.2026) களுத்துறை நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த 73 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>நீதிமன்ற நடவடிக்கை</h2><p>
</p><p>
விசாரணைகளில், குறித்த சொத்து தொடர்பில் சந்தேகநபர் போலி ஆவணங்களை தயாரித்து, அவற்றை நீதிமன்ற நடவடிக்கைகளின்போதும் சமர்ப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7b8ba18-9916-429f-9d4d-a2d9fac0e56e/26-6aaa16afdf08f.webp' /></p><p>

மேலும், குறித்த சொத்தை ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து பண மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T04:10:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரிஷாத்துக்கும் சஹ்ரானுக்கும் நெருங்கிய தொடர்பு - நீதிமன்றில் தெரிவிக்கப்பட்ட சாட்சியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rishad-and-sahran-had-close-relationship-1789526024"></link>
            <id>https://tamilwin.com/article/rishad-and-sahran-had-close-relationship-1789526024</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் சுரேஷ் சலே உள்ளிட்ட தரப்பினருக்கு உள்ள தொடர்புகள் குறித்து மேலும் 2 சிறப்புக் சாட்சியங்கள் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் சுரேஷ் சலே உள்ளிட்ட தரப்பினருக்கு உள்ள தொடர்புகள் குறித்து மேலும் 2 சிறப்புக் சாட்சியங்கள் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
</p><p>
அவற்றில் ஒரு சாட்சியம், அப்போதைய இராணுவ உளவுத்துறையின் தகவல் வழங்குநர் ஒருவரால் வழங்கப்பட்டிருந்தது.
</p><p>
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு முன்னர், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அரசியல் பாதுகாப்பின் கீழ் பல சந்தர்ப்பங்களில் சஹ்ரான் ஹாசீம் மன்னார் கடல் வழியாக இந்தியா சென்றிருந்ததாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.</p><p>
</p><h2><b>
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்</b></h2><p>அரச சேவையில் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்த பிரிவின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ரஞ்சன் செனரத் பண்டாரவிற்கு வெளிநாட்டு பயணத் தடையையும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் கோரியிருந்தார். அந்தக் கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99b7c756-4431-4a77-8d92-18c5967fbe32/26-6aaa16758523f.webp' /></p><p>
அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் குறித்த வாக்குமூலங்களைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
</p><p>
சந்தேகநபரான சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சவீந்திர பெர்னாண்டோ, விசாரணைகளின் முன்னேற்றம் எனக் கூறி சமர்ப்பிக்கப்படும் பி அறிக்கைகள் பொய்யான கூற்றுகள் என தெரிவித்தார்.
</p><p>
இந்த வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
</p>]]></content>
            <updated>2026-09-16T04:09:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நீதிமன்றில் இன்று முன்னிலையாகும் நாமல்! பொலிஸார் குவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-to-appear-in-court-today-1789524245"></link>
            <id>https://tamilwin.com/article/namal-to-appear-in-court-today-1789524245</id>
            <summary type="text">புதிய இணைப்புநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சஇன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், நீதிமன்ற வளாகத்த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சஇன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், நீதிமன்ற வளாகத்தை சுற்றி பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.</p><p>சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.</p><p>நீதிமன்ற வளாகத்துக்கு அருகாமையில் மேலதிக பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
</p><p>
கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன அவர்களால் கொழும்பு காவல் சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு வழங்கப்பட்ட உத்தரவின்படி முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.</p><h2>சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல்&nbsp;</h2><p>
</p><p>
சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்த பின்னர் (04) திகதி கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/054778a2-ae82-4d7a-afef-871a00c2411c/26-6aaa09826bcb0.webp' /></p><p>இதனையடுத்து எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p>

இந்நிலையில், 2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் ரக வானூர்திகளைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு மற்றும் நிதித்தூய்தாக்கல் விவகாரம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்தேகநபராகப் பெயரிடுமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு (CID) அறிவுறுத்தியுள்ளார்.</p><h2>நீதிமன்றத்திற்கு அறிக்கை </h2><p>

இதற்கமைய, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை இது தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.</p><p>

இதற்கமைய, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை இன்று 16ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T04:08:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆண்களை ஆட்டிப்படைக்கும் குணம் கொண்ட 4 ராசிப் பெண்கள்! உங்க ராசியும் இதுல இருக்கா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-zodiac-signs-women-are-always-harsh-to-men-1789479214"></link>
            <id>https://manithan.com/article/which-zodiac-signs-women-are-always-harsh-to-men-1789479214</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவரின் தனிப்பட்ட ஆளுமை மற்றும் குணங்களுடன் மிக நெருங்கிய தொடர்பை கொண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவரின் தனிப்பட்ட ஆளுமை மற்றும் குணங்களுடன் மிக நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கும் என நம்பப்படுகின்றது.</p><p> 

அந்தவகையில், சில பெண்கள் மென்மையானவர்களாகவும், அக்கறையானவர்களாகவும் இருப்பார்கள், ஆனால் சில ராசிகளில் பிறந்த பெண்கள் குறிப்பாக ஆண்களிடம், அதிக உறுதியுடனும், கடுமையாகவும் நடந்துகொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f0b43a9-cf09-45e4-9984-e56d075a1877/26-6aa9569dd448d.webp' /></p><p></p><p>
</p><p>
அவர்களைப் பார்த்தாலே ஆண்கள் பயப்படும் அளவிற்கு நடந்து கொள்வார்கள். அப்படி ஆண்களை ஆட்டிப்படைக்கும் குணம் கொண்ட பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb41db2a-7af5-4806-9ac9-70390d5ac473/26-6aa9569e89d71.webp' /></p><h2>
</h2><p>மேஷ ராசிப் பெண்கள் செவ்வாயின் ஆதிக்கம் கொண்டவர்கள். துணிச்சல், தைரியம், உறுதி ஆகியவை இவர்களின் முக்கிய குணங்கள். </p><p>இயல்பாகவே சுதந்திரமாகச் செயல்படுவதுடன், மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுவார்கள். ஆண்களிடம் மரியாதையையும் நேர்மையையும் எதிர்பார்ப்பதால், சில நேரங்களில் கடுமையானவர்களாகத் தோன்றலாம்.</p><p> பலவீனம் அல்லது தயக்கத்தை விரும்பாத இவர்கள், தங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் நேரடியாகத் தெரிவிப்பார்கள். இவர்களின் கடினமான அணுகுமுறை, வழிநடத்த வேண்டும் என்ற விருப்பத்தையும் வலிமையையும் வெளிப்படுத்துகிறது.
</p><h2>
மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ad0298f-6019-49b3-af2f-9967bbd0f40f/26-6aa9569f3fa09.webp' /></p><h2>
</h2><p>சனிபகவானின் ஆதிக்கம் கொண்ட மகர ராசிப் பெண்கள் ஒழுக்கம், பொறுப்பு மற்றும் நடைமுறைச் சிந்தனை கொண்டவர்கள். </p><p>வாழ்க்கையை தீவிரமாக அணுகும் இவர்கள், தங்களைச் சுற்றியுள்ளவர்களிடமும் அதையே எதிர்பார்ப்பார்கள். தேவையற்ற பேச்சு மற்றும் விவாதங்களுக்கு இடமளிக்காமல், கண்டிப்புடனும் உறுதியுடனும் இருப்பார்கள். </p><p>உயர்ந்த எதிர்பார்ப்புகளும் வலுவான பொறுப்புணர்வும் இவர்களின் கடினமான குணத்திற்கு காரணமாகும். ஆண்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள ஊக்கமளித்தாலும், எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது உணர்ச்சியற்றவர்களாகத் தோன்றலாம்.</p><h2>

விருச்சிகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a454085-4037-4477-85e5-4795a3a1ea95/26-6aa9569fe900d.webp' /></p><p>
விருச்சிக ராசிப் பெண்கள் செவ்வாய் மற்றும் புளூட்டோவின் ஆதிக்கம் கொண்டவர்கள். தீவிரமான குணமும் ஆழமான உணர்வுகளும் இவர்களிடம் காணப்படும். </p><p>ஆண்களிடம் கடுமையாக நடந்துகொள்வது பெரும்பாலும் அவர்களின் பாதுகாப்பு உணர்வு மற்றும் சந்தேக மனப்பான்மையிலிருந்து உருவாகிறது. </p><p>துரோகம் மற்றும் நேர்மையின்மையை ஒருபோதும் சகித்துக்கொள்ளாத இவர்கள், பிரச்சனைகளை நேரடியாக எதிர்கொள்வார்கள். இவர்களின் கடுமையான அணுகுமுறை, உண்மையில் தங்களின் பலவீனத்தைப் பாதுகாக்கும் ஒரு கவசமாக இருக்கலாம்.</p><h2>

தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e04805d-6068-4a67-831e-81d5b6205f11/26-6aa956a0a0702.webp' /></p><p></p><h2>
</h2><p>தனுசு ராசிப் பெண்கள் குருபகவானின் ஆதிக்கம் கொண்டவர்கள். நேர்மை மற்றும் வெளிப்படையான பேச்சு இவர்களின் முக்கிய குணங்கள்.</p><p> யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லாவிட்டாலும், இவர்களின் நேரடியான பேச்சு சில ஆண்களுக்கு கடுமையாகத் தோன்றலாம். </p><p>சுதந்திரத்தை அதிகம் மதிக்கும் இவர்கள், தங்களை கட்டுப்படுத்துவதையோ தங்கள் விருப்பப்படி மாற்ற முயற்சிப்பதையோ விரும்பமாட்டார்கள். ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களை தயக்கமின்றி வெளிப்படையாகச் சுட்டிக்காட்டும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T04:01:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென குடும்பத்திற்கு முன் கதறி கதறி அழுத சக்தி, ஆறுதல் கூறிய அண்ணன்கள்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ethirneechal-thodargiradhu-serial-sep16-promo-1789527781"></link>
            <id>https://cineulagam.com/article/ethirneechal-thodargiradhu-serial-sep16-promo-1789527781</id>
            <summary type="text">எதிர்நீச்சல் தொடர்கிறதுசன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது கதை எதை நோக்கி செல்கிறது என்றே தெரியவில்லை.&amp;nbsp;பொதுவாக எல்லா சீரியல்களிலும் வில்லன் இருந...</summary>
            <content type="html"><![CDATA[<h2>எதிர்நீச்சல் தொடர்கிறது</h2><p>சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது கதை எதை நோக்கி செல்கிறது என்றே தெரியவில்லை.&nbsp;</p><p>பொதுவாக எல்லா சீரியல்களிலும் வில்லன் இருந்தால் அவருக்கு எப்போவாவது அவர் செய்யும் தவறுக்கு தண்டனை கிடைக்கும், ஆனால் இந்த&nbsp;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியாயத்திற்காக போராடும் நாயகிக்கு மட்டுமே தண்டனை கிடைக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c1606b7-d5cb-416d-95a5-29b0b5e0b26e/26-6aaa09d8aeff6.webp' /></p><p>அநியாயம் செய்யும் வில்லன் குணசேகரனுக்கு ஒரு தண்டனையும் கிடைப்பதில்லை. இப்போது கூட ஜாமின் கேன்சல் ஆகி போலீஸ் கைது செய்வார்கள் என்று தெரிந்ததும் எங்கேயோ போய் உட்கார்ந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f77c146d-98cf-4da0-8749-8cec951b5d0e/26-6aaa09d97bedb.webp' /></p><h2>புரொமோ</h2><p>குணசேகரன் குடும்பத்தை அழிக்கவே சாமிக்கு கட்டு கட்ட வேண்டும் என பூஜையை செய்ய மும்முரமாக இருக்கிறார். இந்த விஷயம் அறிந்த விசாலாட்சி குணசேகரன் செய்வது தவறு, அவன் நல்லவன் இல்லை, ஜனனி இப்போது கர்ப்பமாக இருக்கிறாள், அவள் நல்லவள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70d36851-be41-43b3-b555-c6a937e1dada/26-6aaa09d7a60c5.webp' /></p><p>அவளுக்காக ஒரு விசேஷம் நடத்தலாம் என தனது இரண்டு மகன்களிடம் கெஞ்சுகிறார். அவர்களும் அம்மா சொன்னதை கேட்க இப்போது கோலாகலமாக ஜனனிக்கு வளைகாப்பு நடக்கிறது.</p><p>அப்போது இவள் மிகவும் கஷ்டப்பட்டுட்டா, அவளும் குழந்தையும் நன்றாக இருந்தால் போதும் என கதறி அழுகிறார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/CITXV55hkrI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-16T03:40:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு அருகில் நிலவிய வளிமண்டல தளம்பல் நிலை விலகல் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/instability-in-the-lower-atmosphere-near-sri-lanka-1789527889"></link>
            <id>https://ibctamil.com/article/instability-in-the-lower-atmosphere-near-sri-lanka-1789527889</id>
            <summary type="text">இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் நிலைகொண்டிருந்த தளம்பல் நிலையானது இலங்கையை விட்டு அப்பால் நகர்ந்து செல்வதனால்&amp;nbsp; இதன் தாக்கமானது பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் நிலைகொண்டிருந்த தளம்பல் நிலையானது இலங்கையை விட்டு அப்பால் நகர்ந்து செல்வதனால்&nbsp; இதன் தாக்கமானது படிப்படியாக குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (16) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.</p><p></p><h2>இடியுடன் கூடிய மழை&nbsp;</h2><p>
</p><p>
கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c9798d3-1170-4b3f-9504-0a52d4aedfac/26-6aaa0c7589fb9.webp' /></p><p>
</p><p>
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
</p><p>
நீர்கொழும்பு தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.</p><p></p><h2>கடல் கொந்தளிப்பாகக் காணப்படும்</h2><p>

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fc2dab6-df6e-44bc-a171-f3aacc66fd3f/26-6aaa0c7644023.webp' /></p><p>காலி தொடக்கம் மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.</p><p>

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T03:25:08+00:00</updated>
        </entry>
    </feed>
