<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-13T05:36:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராஜதந்திரத்தில் இலங்கைக்கு முன்னுரிமை அளிக்கும் சீனா : புதிய சீனத்தூதர் வழங்கியுள்ள உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/china-will-prioritize-sri-lanka-in-diplomacy-1786597547"></link>
            <id>https://tamilwin.com/article/china-will-prioritize-sri-lanka-in-diplomacy-1786597547</id>
            <summary type="text">சீனா எப்போதும் தனது அண்டை நாட்டு இராஜதந்திரத்தில் இலங்கைக்கு முன்னுரிமை
அளிக்கிறது என இலங்கைக்கான புதிய சீன தூதர் வெய்
ஹுவாக்சியாங் தெரிவித்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனா எப்போதும் தனது அண்டை நாட்டு இராஜதந்திரத்தில் இலங்கைக்கு முன்னுரிமை
அளிக்கிறது என இலங்கைக்கான புதிய சீன தூதர் வெய்
ஹுவாக்சியாங் தெரிவித்துள்ளார்
</p><p>
இலங்கைக்கு நேற்று (12.08) வருகை தந்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,</p><h2>இந்திய பெருங்கடலின் முத்து</h2><p>'இந்திய பெருங்கடலின் முத்து' என்று அழைக்கப்படும் ஜனநாயக சோசலிசக்
குடியரசான இலங்கைக்கு, மக்கள் குடியரசு சீனாவின் முழு அதிகாரமும் பொறுப்பும்
கொண்ட தூதுவராக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அவர்களால் நியமிக்கப்பட்டிருப்பது
எனக்குக் கிடைத்த மாபெரும் கௌரவமும் பாக்கியமும் ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b8c99a7-c019-4073-8c75-9bca833cd7b3/26-6a7d566888f93.webp' />&nbsp;</p><p> நீண்ட பாரம்பரியமும்
புகழ்பெற்ற நாகரிகமும், கண்ணைக் கவரும் அழகிய இயற்கைக் காட்சிகளும், கனிவான
மற்றும் விருந்தோம்பல் பண்பைக் கொண்ட மக்களையும் கொண்டுள்ள இந்த வளமான பூமி
என் உள்ளத்தில் மகிழ்வூட்டுவதுடன், வியப்பையும் ஏற்படுத்துகிறது.
</p><p>
சீனாவும் இலங்கையும் நீண்ட வரலாற்றைக் கொண்டு, காலப்போக்கில் மேலும்
வலுவடைந்து வரும் பாரம்பரிய நட்பைக் கொண்டுள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே, பழங்கால 'பட்டுப்பாதை' வழியே கப்பல்கள் வந்து சென்றன. இது நமது இரு
நாடுகளுக்கு இடையிலான நட்புறவின் சிறப்பான அத்தியாயத்தைப் பிணைத்தது. </p><p>எழுபது
ஆண்டுகளுக்கு முன்பு கையெழுத்தான இறப்பர்-அரிசி ஒப்பந்தம் பேரிடர் காலங்களில்
நாம் ஒருவருக்கொருவர் காட்டிய பரஸ்பர ஆதரவுக்கும் ஒற்றுமைக்கும் சான்றாக
விளங்கியது.</p><p>

தூதரகத் தொடர்புகள் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து, நமது இரு நாடுகளும்
எக்காலத்திலும் இக்கட்டான சூழ்நிலைகளில் தோளோடு தோள் நின்று, கை கோர்த்து
முன்னேறி வந்துள்ளன. </p><p>'பட்டுப்பாதை மற்றும் சாலை' திட்டத்தின் கீழும், பல்வேறு
துறைகளிலும் ஒத்துழைப்பை நாங்கள் உறுதியுடன் வளர்த்து ஆழப்படுத்தியுள்ளோம்.
இதன் மூலம் சீனா மற்றும் இலங்கையைச் சேர்ந்த மில்லியன் கணக்கான மக்கள் பயன்
பெற்றுள்ளனர்.</p><h2>இரு நாடுகளுக்கான நீண்ட வரலாறு</h2><p>

நீண்ட வரலாற்று நெடுகிலும் திரும்பிப் பார்த்தால் பௌத்த நூல்களைத் தேடி
மேற்கு நோக்கிப் பயணம் செய்த துறவி பாஹியனின் தனிநேயப் பயணம் முதல், அலைகளைப்
பிளந்து சென்ற அட்மிரல் ஜெங் ஹேவின் மாபெரும் கடற்படை வரை சீனாவில் உள்ள
புஜியான் மாகாணத்தின் குவாங்சௌ நகரில் குடியேறி அந்நாட்டையே சொந்த நாடாக்கிக்
கொண்ட சிலோன் இளவரசன் முதல், சீனக் குழந்தைகளுக்கு மூன்று குட்டி யானைகளைப்
பரிசளித்த இலங்கை மக்களின் உண்மையான பாசம் வரை, மேலும் சீனாவின் இலங்கை கூட்டு
நீர் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மாதிரி நிலையம் உயிரின் மூலத்தைப்
பாதுகாப்பது முதல், தீவு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மாணவர்களுக்குப்
பயனளிக்கும் பாடசாலைச் சீருடைத் துணிகள் வரை— மலைகளையும் கடல்களையும் கடந்து,
காலத்தின் சோதனைகளைத் தாண்டி நிலைத்திருக்கும் சீனா - இலங்கை நட்பு எப்போதும்
மிக அரவணைப்பான மற்றும் இதயத்திற்கு நெருக்கமான ஒளியை வீசி வருகிறது.
</p><p>
இந்த நல்வேளையில், சீனா - இலங்கை நட்பைப் பேணிப் பாதுகாத்து ஆதரித்த இரு
நாடுகளின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியையும்
மரியாதையையும் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e48bcb5b-0e9d-4568-b341-71dcbb6bbc72/26-6a7d56693911a.webp' /></p><p>

சீனா - இலங்கை நட்புறவின் எதிர்காலம் பரந்ததாகவும் நம்பிக்கைக்குரியதாகவும்
உள்ளது. 2025 ஆம் ஆண்டில், ஜனாதிபதி ஷி ஜின்பிங் அவர்கள் இலங்கைக்குப் பயணம்
மேற்கொண்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரணி அமரசூரிய ஆகியோரைத்
தனித்தனியாகச் சந்தித்து, முக்கியமான ஒருமித்த கருத்துகளையும் பலனளிக்கும்
ஒத்துழைப்பு விளைவுகளையும் எட்டினார்கள். </p><p>இந்த உயர்மட்டப் பரிமாற்றங்கள் நமது
இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு புதிய மூலோபாய வழிகாட்டலை வழங்கியுள்ளன.
சீனா-இலங்கை உறவுகள் இப்போது கடந்த கால வெற்றிகளின் மீது கட்டமைப்பதற்கும்
எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவதற்கும் ஒரு வரலாற்றுச் வாய்ப்பை
எதிர்கொண்டுள்ளன.
</p><p>
சீனா எப்போதும் தனது அண்டை நாட்டு இராஜதந்திரத்தில் இலங்கைக்கு முன்னுரிமை
அளிக்கிறது. நமது இரு நாடுகளும் வளர்ச்சி மற்றும் புத்துயிர் பெறும் பாதையில்
சக பயணிகளாகவும், வெற்றி - வெற்றி ஒத்துழைப்புக்கான நல்ல பங்காளிகளாகவும்
திகழ்கின்றன.</p><p> நாம் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் நல்ல சகோதரர்களாகவும்
நண்பர்களாகவும் இருக்கிறோம். தற்போதைய நிலவரப்படி, சீனக் கம்யூனிஸ்ட்
கட்சியின் மத்தியக் குழுவின் உறுதியான தலைமையின் கீழும், பொதுச் செயலாளர் ஷி
ஜின்பிங் அவர்களை மையமாகக் கொண்டும், சீன நவீனமயமாக்கல் மூலம் அனைத்துப்
பரிமாணங்களிலும் ஒரு மாபெரும் நாட்டை உருவாக்குவதற்கும் தேசிய புத்துணர்ச்சியை
மேம்படுத்துவதற்கும் சீன மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
இலங்கையும் பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொண்டு, மக்களின் வாழ்வாதாரத்தை
மேம்படுத்தி, 'செழிப்பான நாடு, அழகான வாழ்க்கை' என்ற தொலை நோக்குப் பார்வையை
அடைவதற்குப் பாடுபட்டு வருகிறது.

இலங்கையுடன் தோளோடு தோள் நின்று நடக்க சீனா தயாராக உள்ளது. </p><p>நமது வளர்ச்சி
உத்திகளை வலுப்படுத்தி, பரஸ்பர வெற்றி மற்றும் பகிரப்பட்ட செழிப்புக்கான பரந்த
வாய்ப்புகளைத் திறக்கவும், உண்மையான பரஸ்பர உதவியும் என்றென்றும் நீடிக்கும்
நட்பும் கொண்ட நமது மூலோபாய கூட்டுறவுக் கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தவும்,
பகிரப்பட்ட எதிர்காலத்தைக் கொண்ட சீனா - இலங்கை சமூகத்தை இணைந்து
கட்டமைக்கவும் சீனா தயாராக உள்ளது.</p><h2>சீனா, இலங்கை தூதரக உறவுகள் நிறுவப்பட்ட 70 ஆவது ஆண்டு</h2><p>அடுத்த ஆண்டு, சீனாவும் இலங்கையும் தூதரக உறவுகள் நிறுவப்பட்ட 70 வது ஆண்டு
நிறைவையும், இறப்பர்-அரிசி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட 75 வது ஆண்டு
நிறைவையும் கொண்டாடவுள்ளன.</p><p> இந்த முக்கியமான திருப்பு முனையில், இலங்கைக்கான
தூதுவராகப் பணியாற்ற எனது தாய் நாட்டாலும் அதன் மக்களாலும் நான்
நியமிக்கப்பட்டுள்ளேன். இது எனக்கு வழங்கப்பட்டுள்ள புகழ்பெற்ற பணியும்
குறிப்பிடத்தக்க பொறுப்புமாகும் என்பதை நான் ஆழமாக உணர்கிறேன்.</p><p>

வரவிருக்கும் ஆண்டுகளில், எனது சகாக்களும் நானும் எங்களது கடமைகளை முழு
மனதுடன் அர்ப்பணித்து, உறுதியுடன் முன்னேறுவோம். எங்களது பாரம்பரிய நட்பை
முன்னெடுத்துச் செல்லவும், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை
விரிவுபடுத்தவும், சீன நிறுவனங்கள் மற்றும் குடிமக்களின் சட்டப்பூர்வ உரிமைகள்
மற்றும் நலன்களைப் பாதுகாக்கவும் எங்களால் இயன்ற அனைத்தையும் செய்வோம்.</p><p>

இந்த முயற்சியில், சீனா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் உள்ள பல்வேறு
துறைகளைச் சேர்ந்த நண்பர்களின் ஆதரவும் உதவியும் இல்லாமல் எனது பணியைச் செய்ய
முடியாது. </p><p>உங்களுடன் அடிக்கடி தொடர்பு கொள்ளவும், நெருக்கமான உரையாடல்களை
நடத்தவும், ஆழமான நட்பைப் பேணவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். </p><p>மேலும்
உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் வரவேற்கிறேன். சீனா-இலங்கை
உறவுகளுக்குப் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க நாம் அனைவரும் கை கோர்த்து
அயராது பாடுபடுவோம் என தெரிவித்துள்ளார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T05:30:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிசி பாக்ஸ் ஆபிஸ்: 6 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/dc-movie-6-days-worldwide-box-office-1786595960"></link>
            <id>https://cineulagam.com/article/dc-movie-6-days-worldwide-box-office-1786595960</id>
            <summary type="text">லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளிவந்த டிசி திரைப்படத்தின் 6 நாட்கள் வசூல் எவ்வளவு என்று பார்க்கலாம் வாங்க.

டிசி

பிளாக்பஸ்டர் இயக்குநர் என பெயர் எடுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளிவந்த டிசி திரைப்படத்தின் 6 நாட்கள் வசூல் எவ்வளவு என்று பார்க்கலாம் வாங்க.</p><p></p><p>
</p><h2>
டிசி
</h2><p>
பிளாக்பஸ்டர் இயக்குநர் என பெயர் எடுத்த லோகேஷ் கனகராஜ், தற்போது பிளாக்பஸ்டர் ஹீரோவாகியுள்ளார். அறிமுக நடிகராக இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் டிசி. இப்படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/806fc3f7-e0f8-42f5-af38-78f52107418f/26-6a7d4a7bc7680.webp' /></p><p>அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் என்று சொல்வதை விட, ஒவ்வொரு காட்சிக்கும் தனது பின்னணி இசையாலும், பாடல்களாலும் உயிர் கொடுத்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படத்தில் லோகேஷுடன் இணைந்து வாமிகா கேபி, சஞ்சனா, அவினாஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.</p><h2>6 நாட்கள் வசூல்</h2><p> 

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த வாரம் திரைக்கு வந்த <a href="https://www.youtube.com/watch?v=DSmdlruqxMg&amp;t=2s" target="_blank">டிசி </a>திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் முதல் நாளிலிருந்து வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d481a6e2-8da9-4116-9d3f-91cd5271d73e/26-6a7d4a7b1bdb6.webp' /></p><p>

இந்நிலையில், லோகேஷ் கனகராஜின் டிசி திரைப்படம் 6 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 6 நாட்களில் இப்படம் ரூ. 55 கோடி வசூல் செய்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-13T05:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா - கித்துள்கலை பகுதியில் கைகுண்டு மீட்பு : விசாரணைகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hand-grenade-recovered-in-nuwara-eliya-1786597198"></link>
            <id>https://tamilwin.com/article/hand-grenade-recovered-in-nuwara-eliya-1786597198</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தின் கித்துள்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்
கைகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று(12.08.202...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தின் கித்துள்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்
கைகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
நேற்று(12.08.2026) கித்துள்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்
சந்தேகத்திற்கிடமான முறையில் கைகுண்டு ஒன்று காணப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல்
கிடைத்துள்ளது.
</p><p>
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கித்துள்கலை பொலிஸார், குறித்த கைகுண்டு
தொடர்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்ததுடன், அதிரடிப்படையினருக்கும்
தகவல் வழங்கியுள்ளனர்.</p><h2>கைகுண்டு மீட்கப்பட்ட பகுதி</h2><p>இதனைத் தொடர்ந்து பொலிஸாரும் அதிரடிப்படையினரும் இணைந்து சம்பவ இடத்தை
பாதுகாப்பான முறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, மீட்கப்பட்ட கைகுண்டை
உரிய பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய செயலிழக்கச் செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e07da03-9b27-4fa3-b0ae-e8232b876e9c/26-6a7d55a1ba1e7.webp' /></p><p>

இதனால் அப்பகுதியில் ஏற்படக்கூடிய ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
எவ்வாறாயினும், குறித்த கைகுண்டு எவ்வாறு அப்பகுதிக்கு வந்தது, அது எவ்வளவு
காலமாக அங்கு இருந்தது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள்
வெளியாகவில்லை.
</p><p>
சம்பவம் தொடர்பாக கித்துள்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p>

கைகுண்டு மீட்கப்பட்ட பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேலும்
ஏதேனும் வெடிபொருட்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் உள்ளனவா என்பது
தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T05:29:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் கணவன் தாக்குதலை தடுத்ததால் தூக்கிலிடப்பட்ட 23 வயதான இளம் பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/23-year-old-marzieh-nieri-hanged-in-iran-1786598914"></link>
            <id>https://canadamirror.com/article/23-year-old-marzieh-nieri-hanged-in-iran-1786598914</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரானில் பாலியல் தாக்குதலுக்கு முயன்ற ஒருவரிடமிருந்து தற்காப்புக்காகச் செயல்பட்டதாகக் கூறிய 23 வயதான மர்ஸியே நெய்ரி தூக்கிலிடப்பட்டுள்ளார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரானில் பாலியல் தாக்குதலுக்கு முயன்ற ஒருவரிடமிருந்து தற்காப்புக்காகச் செயல்பட்டதாகக் கூறிய 23 வயதான மர்ஸியே நெய்ரி தூக்கிலிடப்பட்டுள்ளார்.


அந்தத் தண்டனை 2026 ஆகஸ்ட் 8 அதிகாலை கஸ்வின் மத்திய சிறையில் நிறைவேற்றப்பட்டது.
</p><p>
குடும்ப அழுத்தத்தின் காரணமாக தனது 17-வது வயதில் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படும் நெய்ரி, 2021 அக்டோபரில் தனக்கு 18 வயதாக இருந்தபோது, மதுபோதையில் இருந்த தனது கணவரின் தொழில் கூட்டாளி ஒருவர் தன்னை பாலியல் ரீதியாகத் தாக்க முயன்றதாக தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd10c2e8-b983-4edb-83d4-a96bdcbd7c7f/26-6a7d5603f3682.webp' /></p><h2>கணவரின் தொழில் கூட்டாளி&nbsp;&nbsp;பாலியல் துன்புறுத்தல்</h2><p> 

அப்போது தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சமையலறைக் கத்தியைப் பயன்படுத்தியதாகவும், ஏற்பட்ட மோதலில் அந்த நபரும் தனது கணவரும் உயிரிழந்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.</p><p> 

சம்பவத்துக்குப் பின்னர் சில நாட்களில் அதிகாரிகளிடம் சரணடைந்த அவர், தனது செயல் தற்காப்புக்காக மேற்கொள்ளப்பட்டது என வாதிட்டபோதும், ஈரான் நீதிமன்றங்கள் அந்த வாதத்தை ஏற்கவில்லை. </p><p>

இதையடுத்து, ஈரானின் ‘கிசாஸ்’ எனப்படும் பழிக்குப் பழி சட்ட நடைமுறையின் கீழ் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 


 2026ஆம் ஆண்டில் இதுவரை ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண்களின் எண்ணிக்கை குறைந்தது 14 ஆக உயர்ந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. </p><p>

தன்னை பாலியல் ரீதியாகத் தாக்க முயன்ற ஒருவரைக் கொன்றதாகக் கூறப்பட்ட வழக்கில் 2014ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்ட ரெய்ஹானே ஜப்பாரியின் வழக்குடன் நெய்ரியின் வழக்கும் ஒப்பிடப்படுகிறது.
</p><p>
 ஈரானின் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தில் ‘கிசாஸ்’ உள்ளிட்ட நடைமுறைகள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் சட்டப் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.</p><p>

 இருப்பினும், நெய்ரி பாலியல் தாக்குதலுக்கு உள்ளானார் என்பது நீதிமன்றத்தால் நிரூபிக்கப்படவில்லை ஆனால் அவர் முன்வைத்தது தற்காப்பு வாதம் என்று செய்திகள் கூறுகிறது</p>]]></content>
            <updated>2026-08-13T05:26:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் கணவன் - இலங்கையில் இளம் மனைவியின் மோசமான செயலால் ஏற்பட்டுள்ள விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-arrested-for-threatening-1786596707"></link>
            <id>https://tamilwin.com/article/man-arrested-for-threatening-1786596707</id>
            <summary type="text">இணைய வழிக் கணினி விளையாட்டுகள் மூலம் அறிமுகமான பெண்ணின் தகாத புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹாவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இணைய வழிக் கணினி விளையாட்டுகள் மூலம் அறிமுகமான பெண்ணின் தகாத புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கம்பஹாவின் புறநகர் பகுதியான கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக திக்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
திக்வெல்ல பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணின் கணவர் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளார். </p><p>

இதனை தொடர்ந்து, இளம் மனைவி இணைய விளையாட்டுகள் ஊடாக அறிமுகமான சந்தேக நபருடன் முறையற்ற காதலில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>
</p><h2><b>
இளம் மனைவியின் செயல்</b></h2><p>அத்துடன், அந்த இளைஞருடன் அவர் பயணங்கள் மேற்கொண்ட போது இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a287d2f-7a81-44a6-a467-086dc99c19d1/26-6a7d50496edd5.webp' /></p><p>வெளிநாட்டில் வசிக்கும் தனது கணவர் மீண்டும் இலங்கை திரும்புவார் என்ற தகவலைத் தொடர்ந்து, குறித்த பெண் காதலை கைவிட்டுள்ளார். </p><p>

அதனால் கோபமடைந்த சந்தேக நபர் இவ்வாறு பெண்ணின் தகாத புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
இவ்வாறு புகைப்படங்களை சமூக வலைத்தளத்திற்கு அனுப்புவதற்கு முன்னர், தன்னுடன் மீண்டும் இணையாவிட்டால் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக அச்சுறுத்தியுள்ளார்.
</p><h3><b>
பழி வாங்கும் நடவடிக்கை</b></h3><p>அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகளை விடுத்ததுடன், தேவையான சந்தர்ப்பங்களில் அவரை அழைத்துச் சென்றுள்ளார்.

இளைஞனின் அழைப்புகளுக்கும் குறுஞ்செய்திகளுக்கும் குறித்த பெண் பதிலளிக்காமல் இருந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0a1c6a3-7325-45db-9cd0-432c40e34099/26-6a7d504a21607.webp' /></p><p>இதன் காரணமாக பழி வாங்கும் நோக்கில் சந்தேக நபர் பெண்ணின் புகைப்படத்துடன் “<b>காதலி காணாமல் போயுள்ளார் கண்டுபிடித்துத் தாருங்கள்</b>” என சமூக வலைத்தளத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
</p><p>
அத்துடன், கணவருக்கும் வட்ஸ்அப் குறுஞ்செய்திகள் ஊடாக மனைவியின் தகாத புகைப்படங்களை அனுப்பியுள்ளதாகவும் பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கண்டறிந்துள்ளனர்.
</p><p>
தனது தகாத புகைப்படங்கள் சமூக வலைத்தளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் திக்வெல்ல பொலிஸில் முறைப்பாடு செய்தார். </p><p>

அதற்கமைய பொலிஸின் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள், சந்தேக நபரை முன்தினம் கைது செய்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-13T05:15:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பகலில் இருளில் மூழ்கிய பல ஐரோப்பிய நாடுகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/solar-eclipse-european-countries-plunged-darkness-1786597206"></link>
            <id>https://jvpnews.com/article/solar-eclipse-european-countries-plunged-darkness-1786597206</id>
            <summary type="text">&amp;nbsp; ஐரோப்பிய கண்டத்தில் பல பகுதிகளில் நேற்று (12) அரிய வகை முழுச் சூரிய கிரகணம் தென்பட்டது. இதன்போது நிலவு சூரியனை முழுமையாக மறைத்ததால், ஐரோப்பிய ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஐரோப்பிய கண்டத்தில் பல பகுதிகளில் நேற்று (12) அரிய வகை முழுச் சூரிய கிரகணம் தென்பட்டது. </p><p>இதன்போது நிலவு சூரியனை முழுமையாக மறைத்ததால், ஐரோப்பிய நாடுகளில் பல பகுதிகள் பகல் வேளையிலேயே இருளில் மூழ்கின.



இந்த அரிய வானியல் நிகழ்வைக் காண ஸ்பெயின் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d1645f8-3419-487d-8371-87af5e5d1432/26-6a7d4f57da715.webp' /></p><h2>அரிய வானியல் நிகழ்வைக் காண குவிந்த&nbsp; கோடிக்கணக்கான மக்கள்&nbsp;&nbsp;</h2><p>
</p><p>


கிரீன்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் வடக்கு ஸ்பெயின் ஆகிய பகுதிகளைக் கடந்து முழுச் சூரிய கிரகணம் தென்பட்டதுடன், ஐரோப்பிய பிரதான நிலப்பரப்பில் 1999ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11ஆம் திகதிக்குப் பின்னர் தென்பட்ட முதல் முழுச் சூரிய கிரகணம் இதுவாகும்.
</p><p>


சூரியன், நிலவு மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது, நிலவு சூரியனை மறைப்பதன் காரணமாக சூரிய கிரகணம் ஏற்படுகிறது.



ஸ்பெயினின் பல நகரங்கள் மற்றும் திறந்தவெளி மைதானங்களில் திரண்ட மக்கள், தெளிவான வானிலைக்கு மத்தியில் சில நிமிடங்கள் நீடித்த முழு இருளை வியப்புடன் கண்டுகளித்தனர்.
</p><p>


அதேவேளை, சுவிட்சர்லாந்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள சாசரல் மலைப்பகுதி உள்ளிட்ட பல இடங்களிலும் பகுதிச் சூரிய கிரகணம் தென்பட்டது.
</p><p>


பிரித்தானியாவில் சூரியனின் 90 சதவீதத்துக்கும் அதிகமான பகுதியை நிலவு மறைத்த நிலையில், பகுதிச் சூரிய கிரகணம் தெளிவாகக் காட்சியளித்தது. லண்டனில் உள்ள பிரபல பிக் பென் மணிக்கூட்டு கோபுரத்தின் பின்னணியிலும் கிரகணம் காட்சியளித்தது.</p><p>



மேலும், பர்மிங்ஹாமில் நடைபெற்ற ஐரோப்பிய தடகள சம்பியன்ஷிப் போட்டியின்போதும் ரசிகர்கள் இந்த அரிய வானியல் நிகழ்வை ரசித்ததுடன், ஹங்கேரியின் அகாட் பகுதியில் உள்ள அவதானிப்புக் கோபுரத்திலும் வானியல் ஆர்வலர்கள் கிரகணத்தை பார்வையிட்டுள்ளனர்&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T05:14:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒஹாயோ சிறைச்சாலையில் மின்னல் தாக்கி 16 கைதிகள் காயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/16-inmates-injured-lightning-strikes-ohio-prison-1786598221"></link>
            <id>https://canadamirror.com/article/16-inmates-injured-lightning-strikes-ohio-prison-1786598221</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் சிறைச்சாலை ஒன்றில் மின்னல் தாக்கியதில் 16 கைதிகள் காயமடைந்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை இரவு உணவுக்குப் பிறகு சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் சிறைச்சாலை ஒன்றில் மின்னல் தாக்கியதில் 16 கைதிகள் காயமடைந்துள்ளனர்.</p><p>

செவ்வாய்க்கிழமை இரவு உணவுக்குப் பிறகு சிறை வளாகத்தில் உள்ள கட்டடங்களுக்கு இடையே கைதிகள் சென்று கொண்டிருந்தபோதே அனர்த்தம் நேர்ந்துள்ளது.

காயமடைந்தவர்களில் ஒருவர் உடனடியாக உலங்குவானூர்தி மூலம் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1186937-aedb-4070-969a-d492e438ae62/26-6a7d534f2630a.webp' /></p><p> 

சிகிச்சை பெற்ற 9 கைதிகள் மீண்டும் சிறைக்குத் திரும்பியுள்ள நிலையில் பலத்த காயமடைந்த ஒருவர் உட்பட 7 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ஒஹாயோ புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் சிறைச்சாலை பணியாளர்கள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
</p><p>
ஒஹாயோ, இந்தியானா மற்றும் இலினாய்ஸ் உள்ளிட்ட அமெரிக்காவின் மத்திய மேற்கு பிராந்தியங்களில் சூறாவளி, பலத்த காற்று மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாகப் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. 

மேலும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை குறைந்தது 3 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-13T05:14:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகிலேயே அதிக ஊதியம் வழங்கும் நாடுகள்: முதலிடம் பிடித்துள்ள நாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-tops-in-highest-salary-paying-countries-1786597545"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-tops-in-highest-salary-paying-countries-1786597545</id>
            <summary type="text">highest salary paying countries: உலகிலேயே பணியாளர்களுக்கு அதிக ஊதியம் வழங்கும் நாடுகள் பட்டியலில், சுவிட்சர்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.


2025ஆம...</summary>
            <content type="html"><![CDATA[<p>highest salary paying countries: உலகிலேயே பணியாளர்களுக்கு அதிக ஊதியம் வழங்கும் நாடுகள் பட்டியலில், சுவிட்சர்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.</p><p>


2025ஆம் ஆண்டுக்கான, பணியாளர்களுக்கு அதிக ஊதியம் வழங்கும் டாப் 10 நாடுகள் பட்டியல் ஒன்று வெளியாகியுள்ள நிலையில், அந்தப் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
</p><h3>
அதிக ஊதியம் வழங்கும் டாப் 10 நாடுகள்</h3><p> பட்டியல்

சுவிட்சர்லாந்து, சராசரியாக பணியாளர்களுக்கு வழங்கும் ஆண்டு ஊதியம், 131,416 டொலர்கள் ஆகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69f97f91-d935-4613-aef0-aa11b75614b5/26-6a7d50aad1905.webp' /></p><p>
பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள நாடு, லக்ஸம்பர்க், அந்நாடு, தன் பணியாளர்களுக்கு வழங்கும் சராசரி ஆண்டு ஊதியம், 108,672 டொலர்கள்.</p><p>

அதிக ஊதியம் வழங்கும் டாப் 10 நாடுகள் பட்டியலில் மூன்றாவது இடத்தை அமெரிக்காவும், நான்காவது இடத்தை டென்மார்க்கும் பிடித்துள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b019491-6805-462c-b91a-3fb09a1f234f/26-6a7d50ab85286.webp' /></p><p>
அமெரிக்கா தன் பணியாளர்களுக்கு வழங்கும் சராசரி ஆண்டு ஊதியம், 105,482 டொலர்கள், டென்மார்க் வழங்கும் ஆண்டு ஊதியம், 93,305 டொலர்கள்.</p><p>

பட்டியலில் ஐஸ்லாந்து ஐந்தாவது இடத்தையும், அவுஸ்திரேலியா ஆறாவது இடத்தையும், பெல்ஜியம் ஏழாவது இடத்தையும் பிடித்துள்ளன.&nbsp;</p><p></p><p>அந்நாடுகள் தங்கள் பணியாளர்களுக்கு வழங்கும் சராசரி ஆண்டு ஊதியம், முறையே, 89,075, 87,156, 86,773 டொலர்கள்.
</p><p>
அதிக ஊதியம் வழங்கும் டாப் 10 நாடுகள் பட்டியலில் பிரித்தானியாவுக்கு எட்டாவது இடம் கிடைத்துள்ளது. அந்நாடு தன் பணியாளர்களுக்கு வழங்கும் சராசரி ஆண்டு ஊதியம், 82,403 டொலர்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce909199-7c48-4209-b093-bed53d132650/26-6a7d50ac4d97d.webp' /></p><p>

டாப் 10 பட்டியலில் ஒன்பதாவது இடத்தை அமீரகமும், பத்தாவது இடத்தை ஜேர்மனியும் பெற்றுள்ளன. அந்நாடுகள் தங்கள் பணியாளர்களுக்கு வழங்கும் சராசரி ஆண்டு ஊதியம், முறையே, 82,076, 81,534 டொலர்கள்.
</p><p>
இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால், நாட்டிலுள்ள அனைத்துப் பணியாளர்களுக்கும் இதே ஊதியம் கிடைக்கும் என உறுதியாக கூறமுடியாது.
</p><p>
அதேபோல, சுவிட்சர்லாந்து, லக்ஸம்பர்க் போன்ற நாடுகள் அதிக ஊதியம் வழங்கினாலும், அந்த நாடுகளில் விலைவாசியும், வீட்டு வாடகை மற்றும் விலையும் அதிகம் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது.
</p><p>
ஆகவே, ஒரு நாடு தன் பணியாளர்களுக்கு அதிக ஊதியம் வழங்குகிறது என்பதாலேயே, அந்நாட்டில் வாழ்க்கைத்தரம் உயர்வாக இருக்கும் என்னும் முடிவுக்கும் வந்துவிடமுடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T05:12:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/eric-meyer-the-new-us-ambassador-to-sri-lanka-1786597530"></link>
            <id>https://jvpnews.com/article/eric-meyer-the-new-us-ambassador-to-sri-lanka-1786597530</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் (Eric Meyer) உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுள்ளார். 

அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் லாண்டோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் (Eric Meyer) உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுள்ளார்.</p><p> 

அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் லாண்டோ (Landau) தலைமையில் நடைபெற்ற இந்த வாழ்த்து மற்றும் பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம் எரிக் மேயருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba55bb2f-478e-4cd8-9b4e-0ea01039486d/26-6a7d509c0b13e.webp' /></p><p> </p><p>

எரிக் மேயர் (Eric Meyer)&nbsp; , தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களில் பரந்த அனுபவம் கொண்ட ஒரு மூத்த வெளியுறவுச் சேவை அதிகாரியாவார். 

தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், அவர் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் மூத்த அதிகாரியாகப் பணியாற்றினார்.</p><p> 

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகமும் எரிக் மேயரை&nbsp;(Eric Meyer)&nbsp; வரவேற்றுள்ளதோடு, அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பங்களிப்பை மேலும் வலுப்படுத்த அவரது தலைமையின் கீழ் பணியாற்றத் தூதரகக் குழு ஆவலுடன் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது. </p><p>

வொஷிங்டன் மற்றும் கொழும்புக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதிலும், பகிரப்பட்ட நலன்கள் மற்றும் முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்வதிலும் எரிக் மேயரின் (Eric Meyer)&nbsp; பதவிக் காலம் கவனம் செலுத்தும் என்றும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T05:03:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷங்கர் படத்தில் நடிக்க மறுத்த அஜித், உடைத்து பேசிய பத்திரிகையாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ajith-shankar-project-latest-updte-1786581878"></link>
            <id>https://cineulagam.com/article/ajith-shankar-project-latest-updte-1786581878</id>
            <summary type="text">அஜித்&amp;nbsp;ஷங்கர் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் இயக்குனர். இவர் இயக்கத்தில் நடிக்க இந்தியாவின் அனைத்து நடிகர்களும் போட்டி போட்டு கொண்டு இருக்கிறா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அஜித்</h2><p>&nbsp;ஷங்கர் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் இயக்குனர். இவர் இயக்கத்தில் நடிக்க இந்தியாவின் அனைத்து நடிகர்களும் போட்டி போட்டு கொண்டு இருக்கிறார்கள்.</p><p> இந்நிலையில் ஷங்கர் கடந்த சில வருடங்களாக பெரிய ஹிட் படம் கொடுக்க தடுமாறி வருகிறார், அடுத்து வேள்பாரி பிரமாண்ட படத்தை எடுக்கும் திட்டத்தில் இருக்க, முதலில் ஒரு ஆக்‌ஷன் படம் எடுத்து மீண்டும் தான் இடத்தை பிடித்துகொண்டு பிறகு வேல்பாரி எடுக்கலாம் என நினைத்த இவர் ஒரு சில நடிகர்களிடம் பேசி வருகிறாராம்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac0b9b0e-444b-4e63-ab93-2e750c701311/26-6a7d137f7aa38.webp' /></p><p>இந்த கேப்-ல் ஷங்கர் அடுத்து அஜித்துடன் இணைகிறார் என கூறி வந்த நிலையில், ஒரு பத்திரிகையாளர் அஜித் ஏற்கனவே ஷங்கர் படத்தில் நடிப்பதற்கு மறுத்துள்ளார், ஏனெனில் ஷங்கர் படங்களுக்கு மிக கடுமையாக உழைக்க வேண்டும், அது நமக்கு செட் ஆகாது என அஜித் சொன்னதாக அந்த பத்திரிகைதாளர் கூறியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-13T05:00:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுக்கிரனால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்கும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/venus-make-malavya-rajyog-who-get-huge-luck-1786595701"></link>
            <id>https://manithan.com/article/venus-make-malavya-rajyog-who-get-huge-luck-1786595701</id>
            <summary type="text">ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாகக் கருதப்படுபவர் சுக்கிரன். அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரகனாக விளங்கும் சுக்கிரன், ரிஷபம் மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாகக் கருதப்படுபவர் சுக்கிரன். அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரகனாக விளங்கும் சுக்கிரன், ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாகவும் உள்ளார்.</p><p>

தற்போது சுக்கிரன் கன்னி ராசியில் பயணித்து வருகிறார். ஆகஸ்ட் மாத தொடக்கத்தில்தான் சுக்கிரன் கன்னி ராசிக்குள் நுழைந்தார். கன்னி ராசியின் அதிபதி புதன் ஆவார்.

இந்நிலையில், சுக்கிரன் செப்டம்பர் மாத தொடக்கத்தில் துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5a49a06-3241-4d5f-8a6d-5b23eb8dd02b/26-6a7d4f25b8ec9.webp' /></p><p></p><p> </p><p>துலாம் ராசியின் அதிபதியும் சுக்கிரனே என்பதால், சுக்கிரன் தனது சொந்த ராசியில் சஞ்சரிக்கும்போது மிகவும் மங்களகரமானதும், பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றுமான மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.</p><p>

மாளவ்ய ராஜயோகம் செல்வம், செழிப்பு, காதல், சொத்து, தொழில் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்கக்கூடியதாகக் கருதப்படுகிறது.
</p><p>
இந்த ராஜயோகத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்பட்டாலும், குறிப்பிட்ட 4 ராசிக்காரர்கள் இதன் மூலம் சிறப்பான நிதி நன்மைகளையும், தொழில் முன்னேற்றத்தையும் பெறப்போகின்றார்கள்.</p><p>அப்படி சுக்கிரன் ஆசியால் பல்வேறு வழிகளிலும் சாதக பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><h2>துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af136db1-dfd4-4b11-8243-03e3b21220b6/26-6a7d4f266b4fe.webp' /></p><p> துலாம் ராசியின் முதல் வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது. இதனால் தன்னம்பிக்கையும் ஆளுமையும் அதிகரிக்கும். </p><p>பணியில் புதிய பொறுப்புகள், வியாபாரத்தில் விரிவாக்க வாய்ப்புகள் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வருவதுடன், புதிய வருமான வாய்ப்புகளும் உருவாகும்.
</p><h2>
மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63b7ad1e-3601-4f2a-b045-8cfcd41f0aca/26-6a7d4f271d006.webp' /></p><p>மகர ராசியின் 10-ஆம் வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. </p><p>முதலீடுகள் மூலம் லாபமும், புதிய வருமான ஆதாரங்கள் தானாக உருவாகும். திருமண வாழ்க்கையில் நீண்டகாலமாக இருந்து வந்த சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும்.&nbsp;</p><h2> கும்பம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/010b166a-8498-4a45-b7a9-70a8e4549a37/26-6a7d4f27c662d.webp' /></p><p>கும்ப ராசியின் 9-ஆம் வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும் காலமாக இது அமையும். வெளிநாட்டு தொழில் தொடர்புடையவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கலாம். </p><p>போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுபவர்களுக்கு சாதகமான செய்திகள் வர வாய்ப்புள்ளது. பணியிலும் வருமானத்திலும் முன்னேற்றம் ஏற்படலாம்.</p><h2>

கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3aaf9c5-baa1-4360-a7e0-1674aafd5771/26-6a7d4f28788e6.webp' /></p><p></p><p> கடக ராசியின் 4-ஆம் வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது. இதனால் செல்வச் சேர்க்கை அதிகரிக்கலாம். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். </p><p>குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிப்பதுடன், புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளும் கைகூடலாம். வியாபாரத்தில் லாபமும், நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவேறும் வாய்ப்பும் உள்ளது.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T04:59:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஜித்தின் பிளாக்பஸ்டர் படத்தில் நடிக்க ஆசைப்பட்ட விஜய்.. இப்படியொரு சம்பவம் நடந்ததா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/vijay-wanted-to-work-in-ajith-movie-1786596635"></link>
            <id>https://viduppu.com/article/vijay-wanted-to-work-in-ajith-movie-1786596635</id>
            <summary type="text">அஜித்தின் திரை வாழ்க்கையில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படங்களில் ஒன்று மங்காத்தா. இப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். 

மங்காத்தா பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அஜித்தின் திரை வாழ்க்கையில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படங்களில் ஒன்று மங்காத்தா. இப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். </p><p>

மங்காத்தா படப்பிடிப்பு மற்றும் விஜய்யின் வேலாயுதம் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரே சமயத்தில் நடைபெற்றது. அப்போது அஜித் - விஜய் இருவரும் நேரில் சந்தித்து கொண்டனர். விஜய்க்கு அஜித் பிரியாணி சமைத்து போட, அஜித்துக்கு வாட்ச் ஒன்றை விஜய் பரிசளித்தார். அந்த புகைப்படங்கள், வீடியோ கூட இணையத்தில் படுவைரலானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44b1df4b-68f7-48dd-9f89-489682cad583/26-6a7d4d1e0fd95.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில் மங்காத்தா படத்தின் வெற்றிக்கு விஜய் வெங்கட் பிரபு டீமிற்கு ஒரு பார்ட்டி வைத்துள்ளார். </p><p>அப்போது பேசும்போது, நடிகர் விஜய் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம், அர்ஜுன் சார் கதாபாத்திரத்தில் நடிக்க என்னிடம் கேட்டுருக்கலாமே, நான் நடித்திருப்பேனே நம்ம அஜித் சார் 50வது படத்திற்காக என கூறினாராம். பின் வெங்கட் பிரபு உண்மையாகவா அண்ணா என கேட்க, உண்மையாக தான் நானே நடித்திருப்பேனே என விஜய் சொன்னாராம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc65e7c7-6ffe-4d95-a38a-1ad955561e27/26-6a7d4d1eb8c5d.webp' /></p><p>இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் உலா வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-13T04:50:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சரியான முறையில் செயற்படுத்தப்படுகின்றன! பிரதேசசபை தவிசாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/praise-for-government-and-the-president-1786594703"></link>
            <id>https://tamilwin.com/article/praise-for-government-and-the-president-1786594703</id>
            <summary type="text">இந்த நாட்டின் கொள்கைகள் சரியான சட்ட திட்டங்களுக்கு அமைய ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சரியான முறையில்
செயற்படுத்தப்படுகின்றன என&amp;nbsp;மண்மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த நாட்டின் கொள்கைகள் சரியான சட்ட திட்டங்களுக்கு அமைய ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சரியான முறையில்
செயற்படுத்தப்படுகின்றன என&nbsp;மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>மட்டக்களப்பில் நேற்றைய தினம் (12.08.2026) இடம்பெற்ற நிகழ்வில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>மேலும்
தெரிவிக்கையில், 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 600 மில்லியன் ரூபா வரவு
செலவுத் திட்டத்தை எனது பிரதேசசபையில் நாங்கள் கொண்டு வந்திருந்தோம். அதில்
சுமார் நூறு மில்லியன் ரூபா நிதியை நாம் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கீடு
செய்திருக்கின்றோம்.</p><h2>ஆயுர்வேத மருத்துவ சேவை</h2><p>
</p><p>


பெரியகல்லாரிலும், இதே போன்று ஓர் ஆயுர்வேத வைத்தியசாலை அமைந்துள்ளது.
இப்பிரதேசத்தில் இருக்கின்ற இந்த ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு எமது பிரதேச
சபையால் வருடத்திற்கு சுமார் பத்து மில்லியன் ரூபாய்க்கு பெறுமதியான
மருந்துகளை நாங்கள் வழங்குகின்றோம். </p><p>இந்த சேவையை நாம் நேரடியாகவே கிழக்கு மாகாண
ஆளுநர் ஊடாக இந்த ஓந்தாச்சிமடம் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு நாம்
ஒப்படைக்கின்றோம்.



ஏனெனில் சிறந்த ஒரு ஆயுர்வேத மருத்துவ சேவையினை ஓந்தாச்சிமடம் வைத்தியசாலை
வழங்குவதற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53b9f1ab-7a75-40b2-b7f5-6037219ceb3b/26-6a7d4c7b4f971.webp' /></p><p> இலங்கையில் முதன் முதலாக
இலத்திரனியல் ஆயுள்வேத வைத்தியசாலையாக இந்த ஆயுள்வேத வைத்தியசாலை
செயற்படுகின்றது. சாதாரணமாக 10 மில்லியன் ரூபாய் நிதி ஒரு பிரதேச சபையினால்
வழங்கப்படுகின்ற பணம் சிதைந்து போகின்றது. அதனை சரியான முறையில் நோயாளிகளுக்கு
பயன்படுத்தப்பட வேண்டும். அதனை நாம் இந்த கிழக்கு மாநகர ஆளுநர் ஊடாக
வழங்குவதற்குள்ளோம்.</p><h2>நிதி ஒதுக்கீடு</h2><p>





இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்கள் மட்டக்களப்புக்கு விஜயம் செய்த போது அவர்
கூறியவிடயம் சுகாதாரத்துறை அபிவிருத்தி மற்றும் வெளிநாட்டவர்களின் வருகை
தொடர்பிலும் தெரிவித்திருந்தார். அது நல்ல விடயம் அதற்காக வேண்டி
ஓந்தாச்சிமடம் கடற்கரையை அழகுபடுத்தி நவீனமயப்படுத்தி தருவதற்கு கிழக்கு மாகாண
சபை எனக்கு 12 மில்லியன் ரூபாய்க்களை ஒதுக்கீடு செய்திருக்கின்றது.</p><p> அதற்காக
நான் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.





கிழக்கு மாகாணத்திலேயே முதலாவது கடற்கரை பிரதேசமாக இந்த ஓந்தாச்சிமடம்
கடற்கரையை மாற்றி அமைக்க வேண்டும் என நான் நினைக்கின்றேன். அதற்கு அனைவரது
ஒத்துழைப்பையும் வேண்டி இருக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T04:48:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஹிஸ்புல்லாஹ் எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mp-hizbullah-investigate-f-bribery-or-corruption-1786596512"></link>
            <id>https://jvpnews.com/article/mp-hizbullah-investigate-f-bribery-or-corruption-1786596512</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, இலஞ்சம் அல்லது ஊழல் முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவில் வாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, இலஞ்சம் அல்லது ஊழல் முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக வருகை தந்துள்ளார்.</p><p>

சொத்துக்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48245d22-059d-4bb6-ad58-e69d14ab8de9/26-6a7d4ca238506.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T04:46:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய் மற்றும் தம்பியை கொன்ற இந்திய வம்சாவளி சிறுவன்: ChatGPT-யில் தேடிய சர்ச்சைக்குரிய விவகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-origin-teen-kiled-mom-and-brother-in-us-1786596343"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-origin-teen-kiled-mom-and-brother-in-us-1786596343</id>
            <summary type="text">அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் பகுதியில் தாய் மற்றும் தம்பியை கொன்றதாக 17 வயது இந்திய வம்சாவளி சிறுவன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. தாய் மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் பகுதியில் தாய் மற்றும் தம்பியை கொன்றதாக 17 வயது இந்திய வம்சாவளி சிறுவன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.</p><h2> தாய் மற்றும் தம்பியை கொன்ற இந்திய வம்சாவளி சிறுவன்</h2><p>அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணம் ஆக்டன் பகுதியில் குடும்பம் ஒன்றிற்கு சொந்தமான சொத்தில் வசித்து வந்த 45 வயது தயது சுதா வெங்கடேசன் மற்றும் அவரது 14 வயது மகன் சித்தார்த் அரவிந்த் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> இந்த கொலை வழக்கில் கொல்லப்பட்டவர்களின் மகன் மற்றும் சகோதரரான 17 வயது இந்திய வம்சாவளி சிறுவன் அர்ஜுன் அரவிந்த் மீது முறைப்படி கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">WATCH: 17-year-old Arjun Aravind arrested overnight in Wayland, charged with murdering his mother, brother inside their Acton home. <br><br>District Attorney Marian Ryan says evidence suggests the teen used ChatGPT to research “fantasy stories regarding killing his family”<br><br>🔗:… <a href="https://t.co/CrUPnkgY0R">pic.twitter.com/CrUPnkgY0R</a></p>&mdash; Stephen Quinn (@stephenquinntv) <a href="https://x.com/stephenquinntv/status/2087633374240284997?ref_src=twsrc%5Etfw">August 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>அர்ஜுன் அரவிந்த் மீது இரண்டு கொலை வழக்குகள், இரண்டு தாக்குதல் வழக்குகள் மற்றும் அனுமதியின்றி மோட்டார் வாகனத்தை திருடிச் சென்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p> கடந்த செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், உயிரிழந்தவர்கள் கொல்லப்பட்டதற்கான காரணம் மற்றும் முறை குறித்து தலைமை மருத்துவ பரிசோதகர்கள் இன்னும் அறிக்கை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><h2> கைது நடவடிக்கை மற்றும் சர்ச்சைக்குரிய இணையதள தேடல்</h2><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">WATCH: 17-year-old Arjun Aravind arrested overnight in Wayland, charged with murdering his mother, brother inside their Acton home. <br><br>District Attorney Marian Ryan says evidence suggests the teen used ChatGPT to research “fantasy stories regarding killing his family”<br><br>🔗:… <a href="https://t.co/CrUPnkgY0R">pic.twitter.com/CrUPnkgY0R</a></p>&mdash; Stephen Quinn (@stephenquinntv) <a href="https://x.com/stephenquinntv/status/2087633374240284997?ref_src=twsrc%5Etfw">August 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், தாயாரின் காரில் சந்தேகத்திற்குரிய அர்ஜுன் தப்பியோடியதை உறுதிப்படுத்தினர்.</p><p> இதையடுத்து தேடுதல் வேட்டை முடக்கி விட்டிருந்த அதிகாரிகள், வேலாண்ட் பகுதி வாகன நிறுத்துமிடத்திற்கு அருகே சந்தேகத்திற்குரிய காரை கண்டுபிடித்து அர்ஜுனையும் எந்தவொரு எதிர்ப்பும் இன்றி கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> மேலும் சொந்த குடும்பத்தினரையே கொல்வது தொடர்பான தத்துவார்த்த கருத்துகளையும் கற்பனைகளையும் அர்ஜுன் அரவிந்த் இணையம் மற்றும் ChatGPT-யில் தேடி இருப்பதாக டிஜிட்டல் தடயவியல் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T04:45:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையர்களின் உணர்ச்சிப்பூர்வ முகநூல் பதிவு! புகைப்படம் ஒன்று தொடர்பில் பொலிஸாரின் அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-police-emergency-alert-1786594189"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-police-emergency-alert-1786594189</id>
            <summary type="text">சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.&amp;nbsp;ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;</p><p>மோட்டார் சைக்கிளில் இருந்தவாறு இளைஞன் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் கடந்த இரண்டு நாட்களாக புகைப்படம் ஒன்று அதிகமாக பகிரப்பட்டு வந்தது.&nbsp;&nbsp;</p><p>கொஹூவல பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் இவ்வாறு பணி முடிந்து,&nbsp; நிறுத்தப்பட்டிருந்த தனது மோட்டார் சைக்கிளில் உறங்கிய நிலையில்,&nbsp; தூக்கத்திலேயே அவருடைய உயிர் பிரிந்துவிட்டதாக தெரிவித்து இந்த பதிவு அதிகமாக பகிரப்பட்டிருந்தது.&nbsp;</p><h2>பகிராதீர்கள்....</h2><p>இந்தநிலையில், குறித்த புகைப்படத்தை வெளியிட்டு பொதுமக்களுக்கு பொலிஸார் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.&nbsp;</p><p>குறித்த எச்சரிக்கை பதிவில்,&nbsp;</p><p>சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யான செய்திகள், போலியான தகவல்கள் மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையிலான தகவல்களை (Fake News) பரப்புவது இலங்கையில் தண்டனைக்குரிய குற்றமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbd87bc4-29ff-4eba-9151-66898c1863e3/26-6a7d4bd55c328.webp' /></p><p>
</p><p>இவ்வாறான தகவல்கள் சமூகத்திற்கு ஏற்படுத்தும் பாதிப்பு மிகவும் அதிகமாகும். எனவே, எந்தவொரு தகவலையும் பகிர்வதற்கு&nbsp; செய்வதற்கு முன்னர் சரிபார்க்கவும்.</p><p>பகிரப்படும் தகவலின் மூலம் உண்மையானதா,&nbsp; நம்பகமான உத்தியோகபூர்வ செய்தி மூலங்களால் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக என்பதை சரிபார்க்கவும்.&nbsp;</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fsrilankapoliceofficial%2Fposts%2Fpfbid0CJyCfrGyKUhUQgThBbTCxUqJFZdy3sLKo6ojbCjmRi2q5dqpoXbYErdpRveUnnnHl&show_text=true&width=500" width="500" height="699" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p>உண்மையான தகவல் என உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே இவ்வாறான தகவல்களைப் பகிரவும்.&nbsp; &nbsp;வேண்டுமென்றே பொய்யான தகவல்களைப் பரப்பி, பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் நபர்களுக்கு எதிராக, தண்டனைச் சட்டக்கோவை மற்றும் கணினிக் குற்றச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>உண்மைத்தன்மையைச் சரிபார்க்காமல் எதையும்&nbsp; பகிராதீர்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T04:45:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் 21 வயதுடைய இலங்கை இளைஞர் கொலை; சம்பவத்தால் அதிர்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/21-year-old-sri-lankan-youth-murdered-in-japan-1786596130"></link>
            <id>https://jvpnews.com/article/21-year-old-sri-lankan-youth-murdered-in-japan-1786596130</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஜப்பானின் சிபா (Chiba) மாநிலத்தில் 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஜப்பானின் சிபா (Chiba) மாநிலத்தில் 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியு
ள்ளது.
</p><p>
ஜப்பானில் கல்வி பயின்று வந்த இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2eb2a695-5e38-4d5f-9ea2-9d58241afec2/26-6a7d4b23a383b.webp' />]</p><p> </p><h2>18 வயதுடைய இலங்கை இளைஞர்&nbsp;&nbsp;கைது</h2><p>

குறித்த கொலையை அவருடன் தங்கியிருந்த 18 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவரே செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p> 

இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை அந்நாட்டுப் பொலிஸார் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. </p><p>

சந்தேகநபரான 18 வயது இளைஞரை அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

 விசாரணையின் போது, தானும் தனது தாயாரும் அவமதிக்கப்பட்டதால் ஏற்பட்ட கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக அந்த செய்திகள்&nbsp; மேலும் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-08-13T04:39:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான ஹிஸ்புல்லாஹ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hizbullah-appears-before-bribery-commission-1786595395"></link>
            <id>https://tamilwin.com/article/hizbullah-appears-before-bribery-commission-1786595395</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (13) முன்னிலையாகியுள்ளார்.சொத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (13) முன்னிலையாகியுள்ளார்.</p><p>சொத்துக்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p><br></p><p>

</p>]]></content>
            <updated>2026-08-13T04:37:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் பதவியேற்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-appoints-eric-meyer-as-new-ambassador-to-sl-1786593173"></link>
            <id>https://ibctamil.com/article/us-appoints-eric-meyer-as-new-ambassador-to-sl-1786593173</id>
            <summary type="text">இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் (Eric Meyer) உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுள்ளார்.வோஷிங்டனில் அமைந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் (Eric Meyer) உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுள்ளார்.</p><p>வோஷிங்டனில் அமைந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இப்பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.</p><p>இதனைத் தொடர்ந்து, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம் எரிக் மேயருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டது.</p><p></p><h2>வெளியுறவுச் சேவை அதிகாரி</h2><p>

எரிக் மேயர், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களில் பரந்த அனுபவம் கொண்ட ஒரு சிரேஸ்ட வெளியுறவுச் சேவை அதிகாரியாவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66f2dd4c-a91f-4b9d-97aa-5d59a73dcb12/26-6a7d46ca39a1b.webp' /></p><p> 

தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், அவர் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் சிரேஸ்ட அதிகாரியாகப் பணியாற்றினார்.</p><p> 

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகமும் எரிக் மேயரை வரவேற்றுள்ளதோடு, அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பங்களிப்பை மேலும் வலுப்படுத்த அவரது தலைமையின் கீழ் பணியாற்றத் தூதரகக் குழு ஆவலுடன் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>எரிக் மேயரின் பதவிக் காலம்</h2><p> </p><p>

வொஷிங்டன் மற்றும் கொழும்புக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதிலும், பகிரப்பட்ட நலன்கள் மற்றும் முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்வதிலும் எரிக் மேயரின் பதவிக் காலம் கவனம் செலுத்தும் என்றும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97127749-59a1-4b3e-afd1-fbd9864d6d19/26-6a7d46c97d946.webp' /></p><p> </p><p>

பொருளாதார ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பு, நல்லாட்சி மற்றும் வளர்ச்சி உள்ளிட்ட பல துறைகளில் அமெரிக்காவும் இலங்கையும் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையிலேயே மேயரின் இந்த நியமனம் அமைந்துள்ளது. </p><p>

புதிய தூதுவரை கொழும்பிற்கு வரவேற்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கும் அவருடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T04:30:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நயன்தாரா அணிந்திருக்கும் புடவை முதல் மோதிரம் வரை, அவற்றின் விலை எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/nayanthara-orange-saree-bracelet-and-ring-price-1786592398"></link>
            <id>https://cineulagam.com/article/nayanthara-orange-saree-bracelet-and-ring-price-1786592398</id>
            <summary type="text">டாக்சிக் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு நயன்தாரா அணிந்து வந்திருந்த புடவை, பிரேஸ்லெட் மற்றும் மோதிரத்தின் விலை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன....</summary>
            <content type="html"><![CDATA[<p>டாக்சிக் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு நயன்தாரா அணிந்து வந்திருந்த புடவை, பிரேஸ்லெட் மற்றும் மோதிரத்தின் விலை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p></p><p>
</p><h2>
நயன்தாரா </h2><p>

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, ஜவான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பான்-இந்தியன் ஸ்டாராக வலம் வருகிறார். அடுத்ததாக சல்மான் கானுக்கு ஜோடியாக இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f1c13fc-4fd4-4896-8286-e6fb740b5f57/26-6a7d3c9321ced.webp' /></p><p> 

இதுமட்டுமின்றி மூக்குத்தி அம்மன் 2, Hi என அடுத்தடுத்த பல திரைப்படங்கள் நயன்தாராவின் நடிப்பில் வெளிவரவுள்ளன. இந்நிலையில், வருகிற ஆகஸ்ட் 26-ஆம் தேதி இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் டாக்சிக் வெளியாகிறது.</p><h2>

டிரைலர் வெளியீட்டு விழா
</h2><p>
<a href="https://www.youtube.com/watch?v=JsD-LmCkUpY" target="_blank">டாக்சிக் </a>திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. பட ப்ரோமோஷனில் பெரிதும் கலந்துகொள்ளாத நயன்தாரா, இதில் கலந்துகொண்டார். மேலும், தான் ஏன் படத்தின் ப்ரோமோஷன் விழாக்களில் கலந்துகொள்வதில்லை, டாக்சிக் ப்ரோமோஷனில் மட்டும் ஏன் கலந்துகொண்டேன் என்பது குறித்தும் விவரமாக கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3968f11-3079-4236-b03d-189b26e94d3d/26-6a7d3c926d2ec.webp' /></p><p> </p><h2>

புடவை, பிரேஸ்லெட் மற்றும் மோதிரத்தின் விலை </h2><p>

டாக்சிக் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா அணிந்திருந்த ஆரஞ்சு நிற புடவை, பிரேஸ்லெட் மற்றும் மோதிரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், அவர் அணிந்திருந்த புடவையின் விலை ரூ. 22,900 என்றும், பிரேஸ்லெட்டின் விலை ரூ. 23 லட்சம் என்றும், மோதிரத்தின் விலை ரூ. 6.25 லட்சம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efcc6b37-c4e8-4de0-aba6-1251b2f986af/26-6a7d3c91a7a94.webp' /></p>]]></content>
            <updated>2026-08-13T04:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 9 இந்திய கடற்றொழிலாளர்கள் படகுடன் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/9-indian-fishermen-arrested-trespassing-sri-lankan-1786593360"></link>
            <id>https://ibctamil.com/article/9-indian-fishermen-arrested-trespassing-sri-lankan-1786593360</id>
            <summary type="text">தலைமன்னார், உருமலை முனைக்கு அப்பால் உள்ள இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய கடற்றொழிலாளர்கள் இல...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமன்னார், உருமலை முனைக்கு அப்பால் உள்ள இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
நேற்று (12.08.2026) இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கையின்போதே குறித்த கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
</p><p>
சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த அவர்கள், தடைசெய்யப்பட்ட இழுவலை முறையைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த நிலையில், இந்திய இழுவைப்படகு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>9 கடற்றொழிலாளர்கள் கைது</h2><p>கைது செய்யப்பட்ட 9 கடற்றொழிலாளர்களும், அவர்கள் பயன்படுத்திய படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21e8cfca-4c19-4314-b7d0-66f5aabcc476/26-6a7d461f40979.webp' /></p><p>
இதனிடையே, மன்னார் தீவு மற்றும் இராமர் பாலத்தைச் சுற்றியுள்ள மன்னார் வளைகுடா கடற்பகுதி, சர்வதேச மற்றும் உள்ளூர் மட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கடல்சார் பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்தப் பகுதியில் கடல்சார் வளங்களைப் பாதுகாப்பதற்காக விசேட கடற்றொழில் முகாமைத்துவ மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T04:25:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய என்.சந்திரசேகரன் - பங்குகள் வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/n-chandrasekaran-step-down-as-tata-sons-chairman-1786517952"></link>
            <id>https://news.lankasri.com/article/n-chandrasekaran-step-down-as-tata-sons-chairman-1786517952</id>
            <summary type="text">N.Chandrasekaran resigns tata sons chairman : டாடா சன்ஸ் தலைவர் பதவியை தமிழ்நாட்டை சேர்ந்த என்.சந்திரசேகரன் ராஜினாமா செய்துள்ள நிலையில், டாடா குழும பங...</summary>
            <content type="html"><![CDATA[<p>N.Chandrasekaran resigns tata sons chairman : டாடா சன்ஸ் தலைவர் பதவியை தமிழ்நாட்டை சேர்ந்த என்.சந்திரசேகரன் ராஜினாமா செய்துள்ள நிலையில், டாடா குழும பங்குகள் சரிவை சந்தித்துள்ளது.</p><h3> 

டாடா சன்ஸ் தலைவர் பதவி விலகல்</h3><p> 

400 பில்லியன் டொலர் மதிப்புள்ள டாடா குழுமத்தின் தாய் நிறுவனமாக டாடா சன்ஸ் உள்ளது. 

இது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), டாடா மோட்டார்ஸ் மற்றும் ஏர் இந்தியா உட்பட 30க்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் கட்டுப்படுத்துகிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/DoDeWAGUz9s" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
</p><p>
டாடா சன்ஸ் நிறுவனத்தின் 66% பங்குகள், குழுமத்தின் தொண்டுப் பிரிவான டாடா டிரஸ்ட்ஸுக்குச் சொந்தமானது.
</p><p>
கடந்த 2017 ஆம் ஆண்டு டாடா சன்ஸ் தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d60c043-2735-4bf5-9063-76fc6ec81d95/26-6a7c19c135852.webp' /></p><p>

அவரது பதவிக்காலம் பிப்ரவரி 2027 ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்வதாக என்.சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.</p><p> 

ஆகஸ்ட் 18 அன்று நடைபெறவுள்ள நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்திற்கு முன்னதாக இந்த ராஜினாமா நடைபெற்றுள்ளது. </p><p>

டாடா டிரஸ்ட்ஸின் தலைவர் நோயல் டாடா உடனான கருத்து வேறுபாடு மற்றும் எதிர்ப்பு காரணமாகவே இந்த ராஜினாமா முடிவை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.&nbsp;</p><p></p><p> 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டாடா குழுமத்தில் எனது 40 ஆண்டுகால தொழில் வாழ்க்கையை நிறைவு செய்துள்ளேன். இந்த மதிப்புமிக்க நிறுவனத்திற்குப் பங்களிக்கும் மிகுந்த மனநிறைவைத் தரும் வாய்ப்பிற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். </p><p>

கடந்த 10 ஆண்டுகளாக டாடா சன்ஸ் நிறுவனத்தை வழிநடத்தியது ஒரு பெரும் கௌரவமாகவும் ஆழ்ந்த பொறுப்பாகவும் இருந்துள்ளது.</p><p>

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக எனது தற்போதைய பதவிக்காலம் பிப்ரவரி 20, 2027 அன்று முடிவடைகிறது. சர் தோரப்ஜி டாடா அறக்கட்டளை மற்றும் சர் ரத்தன் டாடா அறக்கட்டளை ஆகியவை எனது அடுத்த பதவிக்காலத்தை ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்க ஒருமனதாகத் தீர்மானித்துப் பரிந்துரைத்தன. இதனை டாடா சன்ஸ் நியமனம் மற்றும் ஊதியக் குழு மற்றும் இயக்குநர்கள் குழு பதிவுசெய்து பரிந்துரைத்தது. </p><p>

அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 24, 2026 அன்று டாடா சன்ஸ் இயக்குநர்கள் குழுவில் அந்தத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், இயக்குநர்கள் குழு உறுப்பினர்களில் ஒருவர் அதற்கு ஆதரவளிக்காததால் அந்த முன்மொழிவு நிறைவேற்றப்படவில்லை. ஒருமித்த ஆதரவு இல்லாத நிலையில், நான் அந்த முடிவை ஒத்திவைக்கத் தேர்ந்தெடுத்தேன்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Tata Sons Chairman, N Chandrasekaran, released a statement, &quot;I have communicated to the Tata Sons Board that I have decided not to offer myself for reappointment when my term ends on Feb 20, 2027. I have asked the Board to decide on the succession soon to ensure a proper… <a href="https://t.co/cG5eBoftOg">pic.twitter.com/cG5eBoftOg</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2087419418230104302?ref_src=twsrc%5Etfw">August 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

அந்த இயக்குநர் குழுக் கூட்டம் நடந்து 6 மாதங்கள் ஆகிவிட்டன, ஆனால் இன்றுவரை எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. டாடா சன்ஸ் ஒரு மிகப் பெரிய நிறுவனம், மேலும் பல முக்கியத் திட்டங்கள் செயல்படுத்தும் இறுதிக்கட்டத்தில் உள்ளன.</p><p> 

பிப்ரவரி 2027 க்கு அப்பால் குழுமத்தை வழிநடத்த ஒரு தலைவர் இருப்பது அவசியம் என்பது மட்டுமல்லாமல், ஊழியர்கள், முதலீட்டாளர்கள், கூட்டாளிகள் மற்றும் பிற சம்பந்தப்பட்ட தரப்பினருக்குத் தலைமைத்துவம் குறித்த தெளிவும் முக்கியமானது. </p><p>

இந்தச் சூழ்நிலைகளில், 2027 பிப்ரவரி 20 அன்று எனது பதவிக்காலம் முடிவடையும்போது, ​​மறுநியமனத்திற்கு என்னை முன்மொழியப் போவதில்லை என முடிவு செய்துள்ளதை, இன்று காலை டாடா சன்ஸ் வாரியத்திற்குத் தெரிவித்துள்ளேன். </p><p>முறையான அதிகாரப் பரிமாற்றத்தை உறுதி செய்வதற்காக, அடுத்த வாரிசு நியமனம் குறித்து விரைவில் முடிவெடுக்குமாறு வாரியத்தைக் கேட்டுக்கொண்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.</p><h3> 

பங்குகள் வீழ்ச்சி</h3><p> 

சந்திரசேகரனின் ராஜினாமாவையடுத்து, டாடா குழுமப் பங்குகள் இன்று 4% வரை சரிவை சந்தித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e57f18d-aceb-46e8-bea9-5fcb9875d71f/26-6a7c19c2918af.webp' /></p><p>

ஜாகுவார் லேண்ட் ரோவரின் உரிமையாளரான டாடா மோட்டார்ஸ், 2.8 சதவீதமும், TCS 4.1 சதவீதம் சரிவையும் சந்தித்துள்ளது. </p><h3>

யார் இந்த என்.சந்திரசேகரன்?
</h3><p>
தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் பிறந்த என்.சந்திரசேகரன், தனது பள்ளிக்கல்வியை மோகனூரில் உள்ள அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddef3a49-af30-4558-9b16-c69a9e76c814/26-6a7c19c1db96e.webp' /></p><p> 

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தையும், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் கணினிப் பிரிவில் முதுகலையில் பட்டம் பெற்றுள்ளார்.&nbsp;</p><p> 

1987 ஆம் ஆண்டு, டாடா குழுமத்தின் TCS நிறுவனத்தில் பயிற்சியாளராக வாழ்க்கையை தொடங்கி, 2009 ஆம் ஆண்டு அதன் தலைமை செயல் அதிகாரியாக(CEO) நியமிக்கப்பட்டார்.
</p><p>
2024-25 நிதியாண்டில் ரூ.155.81 கோடி சம்பளம் பெற்ற என்.சந்திரசேகரன், இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நிறுவனத் தலைவர் என்ற பெருமையை பெற்றார்.&nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T04:25:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன் ஹிஸ்புல்லா எம்.பி இலஞ்சம் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mp-hizbullah-arrives-at-bribery-commission-1786594658"></link>
            <id>https://ibctamil.com/article/mp-hizbullah-arrives-at-bribery-commission-1786594658</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, இலஞ்சம் அல்லது ஊழல் முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு&amp;nbsp;வருகை தந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, இலஞ்சம் அல்லது ஊழல் முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு&nbsp;வருகை தந்துள்ளார். </p><p>அவர் சற்றுமுன்னர் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக (CIABOC) வருகை தந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>சொத்துக்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9975654b-d0bb-4fd5-a68a-b9299eca618b/26-6a7d483fc9a94.webp' /></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T04:23:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேவை மயக்கத்தில் வைத்து உண்மையை கண்டுபிடிக்க நடவடிக்கை! வைத்தியர்கள் தீவிர முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/medical-board-to-hospital-to-examine-salley-1786593963"></link>
            <id>https://tamilwin.com/article/medical-board-to-hospital-to-examine-salley-1786593963</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலேவை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலேவை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
</p><p>
அவரை மருத்துவ சோதனைக்கு உட்படுத்துவதற்கு ஐவரடங்கிய மருத்துவக் குழுவினர் கடந்த வாரம் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.
</p><p>
அங்கு வருகை தந்த மருத்துவக் குழுவினர் முற்பகல் 9.00 மணிமுதல் மாலை வரை அவரைப் பரிசோதித்ததாக தேசிய மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><h2><b>
ஐவரடங்கிய மருத்துவக் குழு</b></h2><p>கோட்டை நீதவான் பசன் அமரசேனவினால் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய மருத்துவக் குழுவினரே இவ்வாறு பரிசோதனை செய்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f82ee1dc-4226-4243-9925-4796d0410099/26-6a7d456f789d3.webp' /></p><p>அத்துடன், எதிர்வரும் வாரம் சலேயின் குடும்ப உறவினர்களைச் சந்திப்பதற்கும் மருத்துவக் குழு தீர்மானித்துள்ளது.
</p><p>
கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமையவே இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.</p><p>

சிரேஷ்ட நிபுணத்துவ நீதவான் மனநல மருத்துவர் சுசித் மெண்டிஸின் தலைமையில் நியமிக்கப்பட்ட இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நிபுணத்துவ மருத்துவர் சித்தாஹரி அபயநாயக்க, நிபுணத்துவ மருத்துவர் தசந்தி அக்மீமன, நிபுணத்துவ மருத்துவர் துலைக்கா அமரசிங்க வாஸ், நிபுணத்துவ மருத்துவர் வஜிர தர்மவர்தன ஆகியோர் செயற்படுகின்றனர்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T04:17:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய வைத்தியசாலையை அண்டிய பகுதிகளில் அதிகரித்துள்ள குற்றச்செயல்கள்! மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/national-hospital-colombo-1786582167"></link>
            <id>https://tamilwin.com/article/national-hospital-colombo-1786582167</id>
            <summary type="text">கொழும்பு தேசிய வைத்தியசாலை சூழல் குற்றச்செயற்பாட்டாளர்களிடமிருந்து மீட்கப்படாத ஒரு வலயமாக மாறியுள்ளதால் வைத்தியசாலைக்கு வரும் பொது மக்கள் அவதானமாக செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு தேசிய வைத்தியசாலை சூழல் குற்றச்செயற்பாட்டாளர்களிடமிருந்து மீட்கப்படாத ஒரு வலயமாக மாறியுள்ளதால் வைத்தியசாலைக்கு வரும் பொது மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p> 
வைத்தியசாலைக்கு முன்னால் இருக்கும் பகுதியான நொரிஸ் கெனல் வீதியில் கடைகளுக்கு மத்தியில் ஒரு பொதுக்கழிப்பறை அமைந்துள்ளது. </p><p>இருப்பினும், இரவு 7 மணியின் பின்னர் குறித்த இடம் போதைக்கு அடிமையானவர்களின் புகலிடமாக மாறிவிடுகின்றது. 
இந்தக் கழிப்பறை கொழும்பு மாநகரசபையினால் நிர்வகிக்கப்பட்டாலும் இரவு வேளையில் எந்தவொரு வெளிச்சமும் இருப்பதில்லை. </p><h2>

</h2><p><span style="color: inherit; font-size: 1.75rem;">போதைக்கு அடிமையானவர்களின் ஆதிக்கம்</span></p><p>இரவில் இந்த இருள் சூழ்ந்த பாதையால் பயணிக்கும் ஒரு அப்பாவி மனிதன் தன் ஆடை மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ள பெரும் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.</p><p> கூர்மையான ஆயுதங்களைக் காட்டிப் பயமுறுத்துதல், பணம் பறித்தல், தாக்குதல் நடத்துதல் ஆகியவை இந்த இடத்தில் தினமும் நடைபெறும் சம்பவங்களாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e745a55-0786-447e-9129-e52e91ab42a4/26-6a7d1499a19d0.webp' /></p><p> </p><p>கடைகளுக்கு வரும் மனிதர்களை பயமுறித்தி கப்பம் பெறுதல் மற்றும் வைத்தியசாலையில் வேலை செய்யும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.</p><p>குறித்த பகுதிகளில் வியாபாரம் செய்யும் பெண்மணிகள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் ரூ. 400 - 500 ஐப் பறிக்கிறார்கள். 'இந்தக் கடைப் பக்கத்தில் எங்கும் நிற்காதீர் உன்னை வெட்டிவிடுவேன்' என்று ரூ. 400 - 500 ஐப் பறிக்கிறார்கள்.</p><p>இங்கிருக்கும் 'பாபா' என்றழைக்கப்படும் போதைப்பொருள் வியாபாரி பொலிஸ் அதிகாரி போல் நடித்துக் கப்பம் பெறுவதும் கூர்மையான ஆயுதங்களால் தாக்குவதும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது.</p><h2>பண மோசடி</h2><p>அதுமட்டுமன்றி தேசிய வைத்தியசாலையைச் சுற்றி நடக்கும் மாபெரும் மோசடி என்னவென்றால் தானத்திற்கு எனக் கூறி பொதுமக்களிடம் இருந்து பணம் சேகரிப்பதாகும். </p><p>இவ்வாறு சேகரிக்கப்படும் பணம் நேரடியாகவே போதைப்பொருள் வாங்குவதற்குச் செல்கிறது.
 நாளாந்த வருமானம் 10,000 ரூபாவையும் மிஞ்சுவதாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c460e9b-a5d3-42e8-885b-2f783bd22878/26-6a7d4d5b0a587.webp' /></p><p> </p><p>இவ்வாறு மோசடியாகப் பணம் சேகரித்த பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல வருடங்களாகத்தான் இதைச் செய்து வருகிறார்கள். </p><p>மேலும் வைத்திசாலையின் பொலிஸ் காவலரணில் அடையாள அட்டைகள் மற்றும் பணப்பைகள் குவிந்து கிடக்கின்றன.
</p><p>பொலிஸ் போக்குவரத்து அதிகாரிகள் தமது கடமையை முறறையாக செய்தபோதிலும் தேசிய வைத்தியசாலை சூழலின் பாதுகாப்புத் தொடர்பாக பெரும் கேள்விக்குறியான சூழ்நிலையே நிலவுகிறது. </p><p>இது குறித்து விரைவான தீர்வை வழங்குவதற்கு பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நேரடி கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T04:11:33+00:00</updated>
        </entry>
    </feed>
