<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-23T19:24:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமல், கம்மன்பில உட்பட ஆறு பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/wimal-gammanpila-six-referred-contempt-of-court-1787511262"></link>
            <id>https://ibctamil.com/article/wimal-gammanpila-six-referred-contempt-of-court-1787511262</id>
            <summary type="text">நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆறு அரசியல் செயற்பாட்டாளர்கள் மீது மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்காக தகவல்கள் சமர்ப்பிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆறு அரசியல் செயற்பாட்டாளர்கள் மீது மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்காக தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், முன்னாள் தேசிய புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சாலி கைது செய்யப்பட்டதை எதிர்த்து கடந்த ஜூலை 7 முதல் ஜூலை 15 வரை சத்தியாகிரகப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. </p><p>

இந்தப் போராட்டத்தின் போது, நீதித்துறை செயல்பாடுகளை பகிரங்கமாக விமர்சித்து கருத்து வெளியிட்டதாக முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் சுகீஸ்வர பண்டார, திலித் ஜயவீர, அசங்க நவரத்ன, சிரேஷ்ட விரிவுரையாளர் மகிந்த பத்திரன ஆகிய ஆறு பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>தொடரப்படும் வழக்கு</h2><p>

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர், கடந்த ஓகஸ்ட் 5 ஆம் திகதி கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் உண்மைகளை அறிக்கையாகச் சமர்ப்பித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8e7ad2c-820c-46ce-a7f7-7bffc31b56e2/26-6a8b43a64fee4.webp' /></p><p>
</p><p>
இதன்படி, அந்த ஆவணங்களைப் பரிசீலித்த நீதவான் நீதிமன்றம், குறித்த நபர்களின் கருத்துக்கள் முதல் பார்வையில் நீதித்துறை நடவடிக்கைகளை விமர்சிப்பதாக அமைந்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
இந்நிலையில், கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய, சம்பந்தப்பட்ட ஆறு பேருக்கும் எதிராக நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுகளின் கீழ் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்காக தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T19:02:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tourist-arrival-numbers-released-for-sri-lanka-1787510910"></link>
            <id>https://jvpnews.com/article/tourist-arrival-numbers-released-for-sri-lanka-1787510910</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14 இலட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 

அ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14 இலட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

அதற்கமைய, ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 18 ஆம் திகதி வரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,468,980 ஆகப் பதிவாகியுள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca432deb-5263-4ecd-9cab-6df916aaf83a/26-6a8b407fb8bff.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை</h2><p style="text-align: justify; "> 

இதனிடையே, ஒகஸ்ட் 01 ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 125,562 எனவும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

ஒகஸ்ட் மாதத்தில் இதுவரை வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 27,884 ஆகும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இதனிடையே, ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அவ்வெண்ணிக்கை 366,114 ஆகும்.</p><p style="text-align: justify; "> 

மேலும், ஆண்டின் இதுவரையான காலத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் பெப்ரவரி மாதத்திலேயே வருகை தந்துள்ளதுடன், அவ்வெண்ணிக்கை 279,328 ஆகப் பதிவாகியுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-23T19:00:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதியின் வருகை நுழைவாயிலில் இரகசியமாக நுழைந்த ஹேமரத்தன தேரர்! ஆரம்பமாகிறது அடுத்த விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pallegama-hemarathana-thero-in-new-trouble-1787496981"></link>
            <id>https://ibctamil.com/article/pallegama-hemarathana-thero-in-new-trouble-1787496981</id>
            <summary type="text">அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற வளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற வளாகத்திற்குள் வந்தார் என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p>

சிறுமி ஒருவரை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேகநபர் எவ்வாறு கடந்த 21ஆம் திகதி நீமிமன்றுக்கு வருகைத்தந்தார் என்பது தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>

இது குறித்து அனுராதபுர பிரதான நீதவான் சியபத் சசிந்து விக்ரமதன, அனுராதபுர மேல் நீதிமன்ற வளாகத்தின் காவல்துறை பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><h2>ஹேமரத்தன தேரருக்கு எதிராக&nbsp;&nbsp;வழக்கு </h2><p><span style="color: inherit;">தகாத செயற்பாட்டு சம்பவம் தொடர்பில் பல்லேகம ஹேமரத்தன தேரருக்கு எதிராக அனுராதபுர பிரதான நீதவான் நீதிமன்றில் உள்ள வழக்கு கடந்த 21ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</span></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13584407-d1c1-4539-902a-b1e3d07813c3/26-6a8b0a1734ded.webp' /></p><p>இதன்போது, சட்டத்தரணி சானக அபேவிக்ரம நீதிமன்றில் முன்வைத்த விசேட கருத்துக்களை கருத்திற்கொண்டே பிரதான நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T18:55:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் முக்கிய பிரிவொன்றின் உயர் அதிகாரிகளுக்கு இடமாற்றம்! வெளியாகியுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/transfers-for-officers-govt-management-service-1787507833"></link>
            <id>https://ibctamil.com/article/transfers-for-officers-govt-management-service-1787507833</id>
            <summary type="text">அரசாங்கத்தின் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் உயர் அதிகாரிகளுக்கான 2027ஆம் ஆண்டிற்கான வருடாந்திர இடமாற்றங்களை நடைமுறைப்படுத்த பொது நிர்வாகம், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தின் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் உயர் அதிகாரிகளுக்கான 2027ஆம் ஆண்டிற்கான வருடாந்திர இடமாற்றங்களை நடைமுறைப்படுத்த பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. </p><p>

18/2026 இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கைக்கு அமைவாக, இந்த இடமாற்றங்கள் 2027 ஜனவரி 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.</p><p></p><h2>

இடமாற்றங்களுக்கான தகுதிகள்
</h2><p>
இதன்படி, ஒரே பணியிடத்தில் 05 ஆண்டுகள் சேவையாற்றிய அலுவலர்கள் கட்டாய இடமாற்றத்திற்கு உட்படுத்தப்படுவதுடன், 02 ஆண்டுகள் சேவையாற்றிய அலுவலர்களும் இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்களாவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16ce05d5-7e17-4446-bf57-77a83bd129b5/26-6a8b3e38d0a21.webp' /></p><p>
</p><p>
இதற்கான விண்ணப்பங்களை பொது நிர்வாகத்திற்கான முகாமைத்துவ தகவல் அமைப்பு (MIS) மூலம் நிகழ்நிலையில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.</p><p>

அத்துடன், அதிகாரிகள் தமது அடிப்படை தனிப்பட்ட விவரங்கள் மற்றும் முந்தைய சேவை நிலையங்களின் தகவல்களை கணினியில் துல்லியமாக புதுப்பிப்பது அவசியமாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><h2>
மேல்முறையீடு செய்தல்</h2><p>

இதேவேளை, 2026 ஓகஸ்ட் 25 முதல் டிசம்பர் 31 வரையிலான காலப்பகுதியில் குறிப்பிட்ட சில இடமாற்ற கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/409c957c-d1d4-4a6c-a93a-f076fd9cb892/26-6a8b3e3985d51.webp' /></p><p> </p><p>

அத்தோடு, வருடாந்திர இடமாற்ற உத்தரவுகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய விரும்பும் அதிகாரிகள், தமக்கு இடமாற்ற உத்தரவு கிடைக்கப்பெற்ற நாளிலிருந்து 14 நாட்களுக்குள் அதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், அதிகாரிகளின் பணிக்காலம், தற்போதைய பணிநிலையம் மற்றும் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு இந்த இடமாற்ற செயல்முறை முன்னெடுக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T18:39:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு உலகளாவிய அச்சுறுத்தல்கள்... உணவுப் பொருட்களின் விலை உயரும்: எச்சரிக்கும் JPMorgan]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/food-prices-predicted-to-surge-1787510091"></link>
            <id>https://news.lankasri.com/article/food-prices-predicted-to-surge-1787510091</id>
            <summary type="text">Americans could soon be hit by a grocery-price surge: விரைவில் மளிகைப் பொருட்களின் விலை உயர்வால் அமெரிக்கர்கள் பாதிக்கப்படலாம்.
இரண்டு உலகளாவிய அச்சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Americans could soon be hit by a grocery-price surge: விரைவில் மளிகைப் பொருட்களின் விலை உயர்வால் அமெரிக்கர்கள் பாதிக்கப்படலாம்.
</p><p>இரண்டு உலகளாவிய அச்சுறுத்தல்கள் ஒன்றிணைந்து உலகின் உணவு விநியோகத்தை நெருக்குவதால், அமெரிக்கர்கள் விரைவில் மளிகைப் பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்படலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/236ad929-e40b-4de7-a967-099ead09e789/26-6a8b3d4d87777.webp' /></p><p>
</p><p>உரத் தட்டுப்பாடுகள் சக்திவாய்ந்த எல் நினோவுடன் இணைவதால், 2027-ஆம் ஆண்டின் முதல் பாதியில் உலகளாவிய உணவுச் செலவுகள் ஐந்து சதவீதம் உயரக்கூடும் என்று ஜேபிமோர்கனின் புதிய பகுப்பாய்வு ஒன்று எச்சரித்துள்ளது. </p><p>உலகளவில் இறக்குமதி செய்யப்படும் அதிக நைட்ரஜன் கொண்ட விவசாய உரமான யூரியாவில் 36 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை வழங்கும் பாரசீக வளைகுடாப் பகுதியில் முதல் அச்சுறுத்தல் உருவாகி வருகிறது. </p><p>ஈரான மீதான போர் உர உற்பத்தியை மந்தமாக்கியுள்ளது; அத்துடன் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தி, விலைகளை உயர்த்தியுள்ளன. </p><p>அந்தப் பற்றாக்குறைகள், சில மாதங்களுக்குள் அறுவடையைப் பாதிக்கத் தொடங்கக்கூடும்; இது முதலில் தென் அமெரிக்க மக்காச்சோளத்தையும், பின்னர் அமெரிக்கா மற்றும் பிற முக்கிய உற்பத்தியாளர்களின் கோதுமையையும், ஆசியா முழுவதிலுமுள்ள நெற்பயிர்களையும் பாதிக்கும் என்றே ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p></p><p> </p><p>அதே வேளை, எல் நினோ (El Niño) நிகழ்வானது உலகம் முழுவதும் மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தி, முக்கியமான விவசாயப் பகுதிகளை வறட்சி, வெள்ளம் மற்றும் கடும் வெப்பத்திற்கு ஆளாக்கக்கூடும். </p><p>வெப்பமண்டல உற்பத்தியாளர்கள், குறிப்பாக பிரேசில் மற்றும் இந்தியா, பெரும் ஆபத்தை எதிர்கொள்கின்றனர். ஏனெனில், அங்கு பாரசீக வளைகுடா உரங்களை அதிக அளவில் சார்ந்திருக்கும் நிலை, வரலாற்று ரீதியாக எல் நினோ பயிர் இழப்புகளால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுடன் ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ளது. </p><p>இந்த நிலையில், அமெரிக்கா மிக மோசமான நேரடி விளைவுகளிலிருந்து தப்பினாலும், உலகளாவிய அளவில் விளைச்சல் குறைவதாலும் பயிர்கள், உரங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வதாலும், அமெரிக்கர்கள் உணவுக்காக அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0c8c4f2-ee0f-47eb-b23d-a39b8c3f7b19/26-6a8b3d4e3bd30.webp' /></p><p> </p><p>எடையின் அடிப்படையில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் உரமான நைட்ரஜன், உலகின் மிக முக்கியமான மூன்று உணவுகளை உற்பத்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஜேபிமோர்கனின் பகுப்பாய்வின் அடிப்படையில், உலகளாவிய நைட்ரஜன் உரத் தேவையில் பாதிக்கும் மேற்பட்டவை மக்காச்சோளம், கோதுமை மற்றும் அரிசி பயிர்களுக்கேத் தேவைப்படுகிறது. </p><p>அதே சமயம், வரலாற்று ரீதியாக மக்காச்சோள உற்பத்திச் செலவில் 21 சதவீதமும், கோதுமைக்கு 19 சதவீதமும் உரச் செலவாக இருந்து வந்துள்ளது. மிகவும் பொதுவான நைட்ரஜன் உரங்களில் ஒன்றான யூரியா, இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது. </p><p>இதனைப் பொதுவாக விதைகள் நடப்படும் சமயத்தில் பயன்படுத்த வேண்டும். பயிர்கள் ஏற்கனவே விதைக்கப்பட்ட பிறகு உரம் வந்து சேர்ந்தால், விவசாயிகள் அதை மாதங்கள் கழித்து இட்டுவிட்டு அதே பலனை எதிர்பார்க்க முடியாது.</p><p></p><p> </p><p>தாமதமாக இடப்படும் உரங்கள் அம்மோனியா வாயுவாக மாறக்கூடும்; இதனால், அவை ஊட்டமளிக்க வேண்டிய தாவரங்களுக்கே பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எண்ணெயைப் போலன்றி, நைட்ரஜன் உரமானது நிலையற்ற தன்மையுடனும் நச்சுத்தன்மை வாய்ந்த அம்மோனியாவாக மாறக்கூடியதாகவும் இருப்பதால், அதற்கென பரவலான உத்திசார் இருப்புகள் (strategic reserves) பராமரிக்கப்படுவதில்லை. </p><p>உரத்திற்கு பற்றாக்குறை ஏற்படும்போது 
விவசாயிகளுக்கு வேறு வழிகளே இல்லை: விளைச்சலைப் பாதுகாக்க அதிக விலை கொடுப்பது, குறைந்த உரத்தைப் பயன்படுத்தி சிறிய அறுவடையை ஏற்றுக்கொள்வது, அல்லது வேறு பயிருக்கு மாறுவது. இதில் ஒவ்வொரு தெரிவும் செலவுகளை அதிகரிக்கும் அல்லது உலகச் சந்தைகளுக்கு வரும் உணவு அளவைக் குறைக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது. </p><p>முதல் பெரிய சோதனை தென் அமெரிக்காவில் வரக்கூடும், அங்கு செப்டம்பர் முதல் ஜனவரி வரை மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. உலகின் முன்னணி விவசாய ஏற்றுமதியாளர்களில் ஒன்றான பிரேசில், பாரசீக வளைகுடாவிலிருந்து நைட்ரஜன் உரத்தை பெருமளவில் இறக்குமதி செய்யும் நாடாகவும் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c805070-3537-44f3-ba96-30516a0d9e3e/26-6a8b3d4f96173.webp' /></p><p> அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, இந்தியா மற்றும் ரஷ்யாவில் செப்டம்பர் மாதம் முதல் பயிரிடப்படும் குளிர்கால கோதுமையும் பாதிக்கப்படலாம், அதே நேரத்தில் இந்தியா, வங்கதேசம், இந்தோனேசியா மற்றும் வியட்நாமில் உள்ள இலையுதிர் மற்றும் குளிர்கால நெல் பயிர்களும் இதேபோன்ற அபாயங்களை எதிர்கொள்கின்றன. </p><p>உர உற்பத்தி முழுத் திறனுக்குத் திரும்ப ஒன்று முதல் நான்கு ஆண்டுகள் ஆகலாம் என்றும், அதே சமயம் கடுமையாகச் சேதமடைந்த சில இயற்கை எரிவாயு ஆலைகள் மீண்டுவர மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் தேவைப்படலாம் என்றும் ஜேபிமோர்கன் மதிப்பிட்டுள்ளது. </p><p>உர ஆலைகளுக்கு எரிவாயு வழங்கும் இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பு செயல்படத் தொடங்கும் வரை, அவற்றை மீண்டும் இயக்க முடியாது. இது மேலும் ஒரு முட்டுக்கட்டையை உருவாக்குகிறது. </p><p>இதற்கிடையில், ஏற்கனவே உரம் பெறுவதற்குப் போராடி வரும் அதே நாடுகளுக்கு, எல் நினோ மேலும் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் என அச்சுறுத்துகிறது. இது மழைப்பொழிவின் திசையை மாற்றலாம், வறட்சியை மோசமாக்கலாம், வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தலாம் மற்றும் காட்டுத்தீயைத் தீவிரப்படுத்தலாம்; இதன் விளைவுகள் பிராந்தியத்தைப் பொறுத்து வியத்தகு முறையில் மாறுபடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ee1a3ab-4fa0-4775-8a77-c6e52ba1869a/26-6a8b3d4ee4d02.webp' /></p><p> </p><p>வெப்பமண்டலப் பகுதிகளில் வேளாண் உற்பத்தியில் சராசரியாக 3.5 சதவீத சரிவும், மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் 2.4 சதவீத வளர்ச்சியும் ஏற்படுவதோடு கடந்தகால 'எல் நினோ' (El Niño) நிகழ்வுகள் தொடர்புடையதாக இருந்தன என்று அந்த அறிக்கை கண்டறிந்துள்ளது. </p><p>அமெரிக்கா மற்றும் இந்தியாவில் கிடைத்த அதிகப்படியான விளைச்சல் பிற இடங்களில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ததால், உலகளாவிய கோதுமை விநியோகம் ஓரளவுக்கு நிலையாக இருந்தது; ஆனால் அரிசி மற்றும் கோகோ ஏற்றுமதி பெருமளவு சரிவைச் சந்தித்தது. </p><p>உற்பத்தி சரிந்ததால் உள்நாட்டு விநியோகத்தைப் பாதுகாப்பதற்காக இந்தியாவும் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகளை விதித்தது; ஒரு நாட்டில் ஏற்படும் பயிர் இழப்புகள் மற்ற இடங்களில் உள்ள உணவுச் சந்தைகளை எவ்வளவு விரைவாகப் பாதிக்கக்கூடும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T18:35:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலதா மாளிகை பெரஹராவில் அடாவடித்தனம் செய்தவருக்கு பொலிஸாரின் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-take-action-against-perahera-troublemaker-1787508700"></link>
            <id>https://jvpnews.com/article/police-take-action-against-perahera-troublemaker-1787508700</id>
            <summary type="text">கண்டி, ஶ்ரீ தலதா மாளிகைக்கு முன் பெரஹராவில் பாதுகாப்பு கடமையில் ஈடுப்படிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை தகாத வார்த்தைகளால் பேசி, அவர்களின் கடமைக்கு இடைய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கண்டி, ஶ்ரீ தலதா மாளிகைக்கு முன் பெரஹராவில் பாதுகாப்பு கடமையில் ஈடுப்படிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை தகாத வார்த்தைகளால் பேசி, அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபரொருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (23), கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify;">

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்திற்குள் நுழையும் பிரதான சோதனைச் சாவடிக்கு அருகிலேயே பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/314101d8-e8a7-4bff-b1b7-46ff45b98dcb/26-6a8b37de4549c.webp' /></p><p>
</p><p style="text-align: justify;">
இதனை அடுத்து, குறித்த சந்தேகநபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify; ">&nbsp;அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-23T18:30:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாயமாக மறைந்த மகிந்தவுக்கு எதிரான 450 கோப்புகள்! 2 வருடங்களில் என்ன ஆனது..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/450-files-against-mahinda-missing-1787506237"></link>
            <id>https://tamilwin.com/article/450-files-against-mahinda-missing-1787506237</id>
            <summary type="text">கடந்த தேர்தல் காலத்தின்போது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக 450 கோப்புகள் இருப்பதாக தெரிவித்து பிரசாரம் செய்த அரசாங்கம் தற்போது அதனை மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த தேர்தல் காலத்தின்போது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக 450 கோப்புகள் இருப்பதாக தெரிவித்து பிரசாரம் செய்த அரசாங்கம் தற்போது அதனை மறந்துவிட்டது என்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.</p><p> 

மக்கள் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>எங்கே மகிந்தவுக்கு எதிரான ஆதாரங்கள்&nbsp;</h2><p>
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பெருந்தொகை இலஞ்சப் பணம் பெற்றதாகவும், அதனுடன் தொடர்புடைய காசோலைகளின் இலக்கங்கள் மற்றும் மகிந்தவுக்கு எதிராக 450 கோப்புகள் இருப்பதாக தெரிவித்து கடந்த தேர்தல் காலத்தில் இந்த அரசாங்கம் பிரசாரங்களை முன்வைத்து வந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/702baed3-3a69-491c-87d0-bc1f80ea1fed/26-6a8b3389bbbeb.webp' /></p><p> </p><p>

எனினும், ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களாகியுள்ள நிலையில் தற்போது அந்தப் போலி பிரசாரங்களையெல்லாம் இந்த அரசாங்கம் மறந்து விட்டது.
</p><p>
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னர் வெளியிட்ட எந்தவொரு அறிவிப்பையும் வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை.
</p><p>
விவசாயிகளின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள், தற்போது விவசாயிகளை கசிப்பு குடிப்பவர்கள் என் கூறி அவமானப்படுத்துகின்றது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>&nbsp;</p><p> 

</p>]]></content>
            <updated>2026-08-23T18:15:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூஜை அறையில் நண்பனின் தலை ; பிரிந்த மனைவியுடன் சேர கணவன் செய்த கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/husband-s-cruel-act-to-reunite-with-estranged-wife-1787507361"></link>
            <id>https://jvpnews.com/article/husband-s-cruel-act-to-reunite-with-estranged-wife-1787507361</id>
            <summary type="text">பிரிந்து சென்ற தன் மனைவியுடன் சேர்வதற்காக கணவன் அவரின் நண்பரை கொலை செய்து நரபலி கொடுத்த சம்பவம் ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒடிசா ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பிரிந்து சென்ற தன் மனைவியுடன் சேர்வதற்காக கணவன் அவரின் நண்பரை கொலை செய்து நரபலி கொடுத்த சம்பவம் ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

</p><p style="text-align: justify;">ஒடிசா மாநிலம் பாலங்கீர் மாவட்டம் தேபதமுண்டா என்கிற கிராமத்தில் வசித்து வந்தவர் சந்தோஷ் கார்செல்(45). சில நாட்கள்&nbsp; முதல் இவரை காணவில்லை.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f44921db-97d1-42ce-bf03-9fec9dbf89ff/26-6a8b32a2a507a.webp' /></p><h2 style="text-align: justify; ">தீவிர விசாரணை</h2><p> </p><p style="text-align: justify; ">இந்நிலையில் அவரின் உடல் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் நேற்று ஒரு குளத்தில் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக பொலிஸ் விசாரணை செய்தனர்.</p><p style="text-align: justify;">

விசாரணையில் கடைசியாக சந்தோஷ் தனது நண்பருடன் சென்றது விசாரணையில் தெரியவந்தது.</p><p style="text-align: justify;"> எனவே நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சந்தோஷை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.</p><p style="text-align: justify; ">&nbsp;தலை எங்கே என்று கேட்டபோது தனது வீட்டின் பூஜை அறையில் இருப்பதாக அவர் கூறினார். அதன்பின் அவரிடம் தீவிர விசாரணை நடத்தபோதுதான் உண்மை தெரியவந்தது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
3வருடங்களுக்கு முன்பு தனது மனைவி பிரிந்து சென்று விட்டார். அவருடன் மீண்டும் சேரவேண்டுமென்றால் நரபலி கொடுக்க வேண்டும் என ஒரு சாமியார் கூறினார்.</p><p style="text-align: justify;"> எனவேதான் எனது நண்பன் சந்தோஷை கொலை செய்து அவனுடைய தலையை பூஜை அறையில் வைத்திருக்கிறேன்.. உடலை குளத்தில் வீசி விட்டேன்’ என வாக்குமூலம் கொடுத்தார். </p><p style="text-align: justify;">அவரின் வீட்டில் இருந்த பூஜை அறையில் புதைக்கப்பட்டிருந்த சந்தோஷின் தலையை பொலிசார் தோண்டி எடுத்தனர்.&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-23T17:49:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[முச்சக்கர வண்டியை மோதித்தள்ளிய தொடருந்து! ஸ்தலத்திலேயே பலியான சாரதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/accident-involving-a-three-wheeler-and-a-train-1787506579"></link>
            <id>https://ibctamil.com/article/accident-involving-a-three-wheeler-and-a-train-1787506579</id>
            <summary type="text">மருதானையில் இருந்து புறப்பட்ட சாகரிகா தொடருந்தில் முச்சக்கர வண்டி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் பலத்த காயமடைந்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மருதானையில் இருந்து புறப்பட்ட சாகரிகா தொடருந்தில் முச்சக்கர வண்டி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் பலத்த காயமடைந்துள்ளார்.</p><p>

அலுத்கம, கணேகம புராண விகாரைக்கு அருகில் உள்ள தொடருந்து குறுக்குப்பாதையில் இன்று(23) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
</p><p>
இதன்போது, விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், காயமடைந்த பயணி சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>போராட்டத்தில் ஈடுபட்ட&nbsp;பிரதேசவாசிகள் </h2><p>
</p><p>
அதனைதொடர்ந்து, குறித்த தொடருந்து குறுக்குப்பாதையில் எச்சரிக்கை மணிகளும் சமிக்ஞைகளும் மட்டுமே உள்ளதாகவும், பாதுகாப்பு தடுப்பு இல்லாததால் தொடர்ந்து விபத்துகள் நடப்பதாகவும் கூறி பிரதேசவாசிகள் கடலோர தொடருந்து பாதையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e3372df-6e65-46fe-bc7e-69a1df62a28c/26-6a8b315fd1d4d.webp' /></p><p>
</p><p>
இதனால் தொடருந்து சேவைகள் தற்காலிகமாக தடைபட்ட நிலையில், காவல்துறையினர் தலையிட்டு தொடருந்து திணைக்கள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.</p><p> 

அதன்படி, ஒரு வாரத்திற்குள் பிரச்சனைக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டு, கடலோர தொடருந்து சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவருகிறது.</p><p>&nbsp;</p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table></h5>]]></content>
            <updated>2026-08-23T17:45:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு படையெடுத்துள்ள பெருந்தொகை சுற்றுலாப் பயணிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tourist-arrivals-in-2026-1787505519"></link>
            <id>https://ibctamil.com/article/tourist-arrivals-in-2026-1787505519</id>
            <summary type="text">இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) சமீபத்திய தகவல்களின்படி, இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை 14.6 லட்சத்திற்கும் (1.46 மில்லியன்)...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) சமீபத்திய தகவல்களின்படி, இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை 14.6 லட்சத்திற்கும் (1.46 மில்லியன்) அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.</p><p> 

கடந்த ஜனவரி 1 முதல் ஓகஸ்ட் 18 வரையிலான காலப்பகுதியில் மொத்தம் 14,68,980 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக SLTDA தெரிவித்துள்ளது. இதில் ஓகஸ்ட் மாதத்தின் முதல் 18 நாட்களில் மட்டும் 1,25,562 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.</p><p>
ஓகஸ்ட் மாதத்தில் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடுகளின் பட்டியலில் 27,884 வருகைகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 13,980 சுற்றுலாப் பயணிகளுடன் பிரித்தானியா இரண்டாம் இடத்தையும், 8,776 வருகைகளுடன் பிரான்ஸ் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.</p><p></p><h2>அதிகபட்ச மாதாந்திர வருகை&nbsp;</h2><p>
இதேவேளை, இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகளை அனுப்பிய நாடாகவும் இந்தியாவே முன்னணியில் உள்ளது. இதுவரை இந்தியாவில் இருந்து 3,66,114 பயணிகள் வந்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82d6fb96-4a1e-46d1-b9f9-38784f481020/26-6a8b2d61eff64.webp' /></p><p>

இதனைத் தொடர்ந்து பிரித்தானியாவில் இருந்து 1,44,381 பயணிகளும், சீனாவில் இருந்து 97,073 பயணிகளும் வருகை தந்துள்ளனர். மேலும், இந்த ஆண்டில் இதுவரை பதிவான மாதாந்திர வருகைகளில் பெப்ரவரி மாதத்திலேயே அதிகபட்சமாக 2,79,328 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.</p><p></p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table></h5>]]></content>
            <updated>2026-08-23T17:27:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசடியில் தொடர்ந்து சிக்கும் நாமல் - 6 மணிநேரம் சி.ஐ.டி விசாரணையில் நடந்தது என்ன...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reason-behind-the-namal-s-investigation-1787494281"></link>
            <id>https://tamilwin.com/article/reason-behind-the-namal-s-investigation-1787494281</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி 6 மணி நேரம் வாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி 6 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னணி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.</p><p> கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள தங்காலை பே ஹோட்டல் கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்காக நாமல் அழைக்கப்பட்டிருந்தார்.
</p><p>
ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்புடைய CSN தொலைக்காட்சி ஊடாகப் ஈட்டப்பட்ட பணத்தை கொண்டே இந்த ஹோட்டல் வர்த்தகப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p> </p><h2><b>

வாக்குமூலம் பதிவு </b></h2><p>இதனடிப்படையிலேயே இந்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கிருந்து சென்றுள்ளார். </p><p>அத்துடன் நாமலுக்கு எதிராகப் புதிய குற்றச்சாட்டுகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74269162-f58b-44a6-9f60-c9ec104d4e02/26-6a8b2bf985a63.webp' /></p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான நாமல் ராஜபக்ச, இதற்கு முன்பும் பல்வேறு நிதி முறைகேடுகள் தொடர்பாக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். </p><p>

Krish Lanka நிறுவனத்தால் ரக்பி விளையாட்டு மேம்பாட்டிற்காக வழங்கப்பட்ட 70 மில்லியன் ரூபாய் நிதியைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படுகின்றது. </p><p>

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 2025ஆம் ஆண்டு ஜனவரியில் சட்டமா அதிபரால் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. </p><p>மேலும் NR Consultancy நிறுவனத்துடன் தொடர்புடைய 15 மில்லியன் ரூபாய் பணமோசடி பரிமாற்றம் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டன. </p><p>எவ்வாறாயினும், Gowers Corporation நிறுவனத்துடன் தொடர்புடைய மற்றொரு பணமோசடி வழக்கில் 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொழும்பு மேல்நீதிமன்றத்தால் நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். </p><p>அவரது சட்டத் தகுதிகள் மற்றும் இலங்கை சட்டக் கல்லூரியில் இணைந்து கொள்வது தொடர்பிலும் குற்றப் புலனாய்வு திணைக்களம் அண்மையில் விசாரணை ஒன்றை ஆரம்பித்திருந்தது. </p><p> எனினும் அந்த குற்றச்சாட்டுகளை நாமல் வன்மையாக மறுத்துள்ளார். இந்த புதிய அழைப்பு முற்றிலும் தங்காலை பே ஹோட்டல் பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு மட்டுமே என தகவல்கள் வெளியாகி உள்ளன. </p>]]></content>
            <updated>2026-08-23T17:21:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்பது வளைவுப் பாலத்தில் வெடிப்பு ; சமூக ஊடக செய்தி தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/social-media-news-new-details-emerge-1787505203"></link>
            <id>https://jvpnews.com/article/social-media-news-new-details-emerge-1787505203</id>
            <summary type="text">எல்ல பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற &#039;ஒன்பது வளைவுப் பாலத்தில்&#039; புதிதாகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பாலம் எந்நேரமும் இடிந்து விழும் அப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">எல்ல பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற 'ஒன்பது வளைவுப் பாலத்தில்' புதிதாகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பாலம் எந்நேரமும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளி முற்றிலும் தவறானது எனக் கண்டறியப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் காணொளி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அண்மைய நாட்களில் ஒன்பது வளைவுப் பாலத்தில் புதிய வெடிப்புகளோ அல்லது ஆபத்தான நிலைமையோ ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a757119-8c44-407a-adff-483ebddbec15/26-6a8b2a3585f18.webp' /></p><h2 style="text-align: justify; ">பாலத்தில் நீர் கசிவு&nbsp;</h2><p style="text-align: justify; ">கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இப் பாலத்தில் நீர் கசிவு மற்றும் வெடிப்பு தொடர்பான தகவல்கள் பரவிய போது, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இலங்கை ரயில்வே திணைக்கள நிபுணர்கள் இணைந்து கள ஆய்வு மேற்கொண்டனர்.</p><p style="text-align: justify; ">&nbsp;அப்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பாலத்தின் கட்டமைப்பில் எந்தவிதமான வெடிப்புகளோ அல்லது ஆபத்தான குறைபாடுகளோ இல்லை என்பது தெளிவாகக் கண்டறியப்பட்டது.</p><p style="text-align: justify; margin-left: 25px;"></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">&nbsp;கடந்த ஆண்டு நிலவிய ஒரு செய்தியை மையமாக வைத்து, புதிதாக வெடிப்பு ஏற்பட்டுப் பாலம் ஆபத்தான நிலையில் இருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-23T17:13:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்டத்தில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/phis-strike-tommorow-1787504864"></link>
            <id>https://tamilwin.com/article/phis-strike-tommorow-1787504864</id>
            <summary type="text">&amp;nbsp;பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நாளைய தினம் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நாளைய தினம் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
</p><p>கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக, பொது சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனிய இடமாற்றம் செய்யப்பட்டதனை எதிர்த்துத்து, நாளை காலை 8.00 மணி முதல் நாடு தழுவிய அளவில் தீவிர தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p> இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இந்த விடயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bed6a7f-50a6-4870-a471-2e68c89f158e/26-6a8b28e29116a.webp' /></p><p>
இப்பிரச்சனை குறித்து ஏற்கனவே அதிகாரிகளுக்குத் தெரிவித்தும், சுகாதார அமைச்சு இதுவரை எவ்வித தீர்வும் வழங்கவில்லை என அச்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.</p><p>
நாட்டின் அனைத்து பொது சுகாதார பரிசோதகர்களும் நிர்வாகத்திற்கு வழங்கும் அனைத்து வகையான தரவுகள் மற்றும் அறிக்கைகளை வழங்குவது முற்றிலுமாக நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>எந்தவொரு தரவு அமைப்பையும் (Data systems updating) புதுப்பிக்கும் பணிகள் இடைநிறுத்தப்படும். இந்தப் போராட்டக் காலத்தில் விடுபடும் எந்தவொரு தரவுகளும் மீண்டும் ஒருபோதும் அமைப்புகளில் சேர்க்கப்படாது எனச் சங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
</p><p>அதிகாரி பி.எச். மிகஸ்தெனியவின் தன்னிச்சையான இடமாற்றத்தை உடனடியாக ரத்து செய்து, நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
</p><p>கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பொது சுகாதார பரிசோதகர்களின் எண்ணிக்கையைக் குறைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>எனினும், இப் பிரச்சினைகள் குறித்து நியாயமான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்குத் தயார் என பொதுச் சுகாதார அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T17:08:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேவிற்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அநுர அரசாங்கமே பொறுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-responsible-if-suresh-sallay-is-harmed-1787503768"></link>
            <id>https://tamilwin.com/article/president-responsible-if-suresh-sallay-is-harmed-1787503768</id>
            <summary type="text">தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவுக்கு ஏதேனும் ஆபத்து அல்லது பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு ஜனாதிபத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவுக்கு ஏதேனும் ஆபத்து அல்லது பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>தேசிய அமைப்புக்களின் ஒன்றியத்தினால் இந்த பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை மூன்றாவது முறையாகத் தடுத்து வைக்கும் உத்தரவைப் பிறப்பிப்பதைத் தவிர்த்து, அவரை உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு அந்த அமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ec69a46-c306-4f65-a9d7-33a68fa274b1/26-6a8b2499be26d.webp' /></p><p>
</p><p>கொழும்பில் நடைபெற்ற “சலேவுக்கான நீதி - உரையாடல் அரங்கம்” என்ற செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில் அவ்வமைப்பின் பிரதிநிதிகள் இக்கோரிக்கையை விடுத்துள்ளனர்.</p><p>
மேலும் தாமதிக்காமல் அவரை உடனடியாக சட்டத்தின் முன், அதாவது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p>
சுரேஷ் சலேவின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் இந்த அரசாங்கத்தினை நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T16:50:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொடூர குற்றம் சாட்டப்பட்டுள்ள மஞ்சள் காவிக்கு சிறப்பு சலுகை - உடனடியாக விசாரிக்குமாறு நீதிபதி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-consideration-for-pallegama-thero-1787491679"></link>
            <id>https://tamilwin.com/article/special-consideration-for-pallegama-thero-1787491679</id>
            <summary type="text">அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற வளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற வளாகத்திற்குள் வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. </p><p>

சிறுமி ஒருவரை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேகநபர் எவ்வாறு அங்கு வந்தார் என்பது தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>

இது குறித்து அனுராதபுர பிரதான நீதவான் சியபத் சசிந்து விக்ரமதன, அனுராதபுர மேல் நீதிமன்ற வளாகத்தின் பொலிஸ் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜி. தர்மசிறிக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p> </p><h2><b>

மீண்டும் விசாரணை</b></h2><p>தகாத செயற்பாட்டு சம்பவம் தொடர்பில் பல்லேகம ஹேமரத்தன தேரருக்கு எதிராக அனுராதபுர பிரதான நீதவான் நீதிமன்றில் உள்ள வழக்கு கடந்த 21ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e075c43e-aec1-47f1-b811-efd9a182de07/26-6a8afc6b4e102.webp' /></p><p>இதன்போது, சட்டத்தரணி சானக அபேவிக்ரம நீதிமன்றில் முன்வைத்த விசேட கருத்துக்களை கருத்திற்கொண்டே பிரதான நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.<br><br><b><i>you may like this..<br><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/HLy_ny-xG4I" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-08-23T16:46:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்கைத் துரிதப்படுத்தும் அநுர தரப்பு! விபரங்களை வெளியிட்டு வரும் நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opposition-mps-case-to-be-heard-1787503492"></link>
            <id>https://tamilwin.com/article/opposition-mps-case-to-be-heard-1787503492</id>
            <summary type="text">தற்போதைய அநுர அரசாங்கம் மக்கள் பிரச்சினைகளை விடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளை துரிதப்படுத்தவும், அவர்களை சிறைக்கு அனுப்புவதற்குமே விசேட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அநுர அரசாங்கம் மக்கள் பிரச்சினைகளை விடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளை துரிதப்படுத்தவும், அவர்களை சிறைக்கு அனுப்புவதற்குமே விசேட கவனம் செலுத்தி வருகின்றது என்று பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>
காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>மக்களின் வாழ்க்கைத் தரம்&nbsp;</h2><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

மக்களுக்கு வளமான வாழ்க்கையை வழங்குவதாக வாக்குறுதியளித்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஜனாதிபதியினதும், 159 ஆளும் தரப்பு உறுப்பினர்களது வாழ்க்கை தான் வளமாகியுள்ளது. நாட்டு மக்களின் வாழ்க்கை ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a1453f6-4982-4778-a06f-f3ffc6b12e4e/26-6a8b2385b0812.webp' /></p><p> 

திறைசேரி நிரம்பிவழிகின்றது என அரசாங்கம் குறிப்பிடுகின்றது. ஆனால், மக்கள் வாழ்க்கைத் தரம் வறுமையால் நிரம்பி வழிகின்றது. </p><p>

மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்த அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளை விரைவுப்படுத்தவும், தண்டனைப் பெற்றுக் கொடுக்கவும் மாத்திரமே இந்த அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T16:45:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் நீரிணையில் ஈராக்கின் எண்ணெய் கப்பல்களுக்கு சிறப்பு அனுமதி: ஈரான் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iraqi-oil-tankers-to-pass-1787503534"></link>
            <id>https://news.lankasri.com/article/iraqi-oil-tankers-to-pass-1787503534</id>
            <summary type="text">Iran grants permission for Iraqi oil tankers: ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல பல ஈராக்கிய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி.
பல்வேறு வழிகள் மூலம் ஈரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran grants permission for Iraqi oil tankers: ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல பல ஈராக்கிய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி.
</p><p>பல்வேறு வழிகள் மூலம் ஈராக் விடுத்த தொடர்ச்சியான கோரிக்கைகளைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல அந்த நாட்டின் பல எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d69cb413-0aa8-462f-bc70-b710e4ba5543/26-6a8b23b148f44.webp' /></p><p>
</p><p>குறித்த தகவலை ஈரானின் அரசு செய்தி நிறுவனமான IRNA சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் ஈராக்கிற்கு மேற்கொண்ட பயணத்தின் போது, ​​ஈராக்கிய எண்ணெய் கப்பல்களுக்கு சிறப்பு அனுமதி பெறுவது பாக்தாத்தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக இருந்தது என்றும் IRNA குறிப்பிட்டுள்ளது. </p><p>சமீப நாட்களில் ஈராக்கிய எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல ஈரான் வழிவகை செய்துள்ளதாகவும், ஹார்முஸ் வழியாக ஈராக்கிய எண்ணெயை ஏற்றுமதி செய்வது குறித்து பாக்தாத் ஈரானிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் ஈராக்கிய ஜனாதிபதி நிசார் அமேதி சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.</p><p></p><p> </p><p>மட்டுமின்றி, பாக்தாத் உரையாடல் கொள்கை மாநாட்டில் பேசிய அவர், இந்த விவகாரம் சிக்கலானதாகவே நீடிக்கிறது என்றும் கூறிப்பிட்டிருந்தார். </p><p>இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு இராணுவ நடவடிக்கையை அடுத்து ஈரான் ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை முடக்கியதால், மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈராக்கும் ஒன்றாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e217293-bbc2-42e4-9575-6a72b0a1c67f/26-6a8b23b099847.webp' /></p><p> </p><p>நீரிணையில் கப்பல் போக்குவரத்து போருக்கு முந்தைய நிலைகளை விட கணிசமாகக் குறைவாகவே உள்ளது, மேலும் அப்பகுதியில் கப்பல்கள் தொடர்ந்து தாக்குதல்களை எதிர்கொள்கின்றன. </p><p>ஈரான் போர் தொடங்குவதற்கு முன்பு ஈராக் ஒரு நாளைக்கு சுமார் 4 மில்லியன் பீப்பாய் எண்ணெயை உற்பத்தி செய்து வந்தது. </p><p>இந்த நிலையில், துருக்கியின் செஹான் துறைமுகம் வழியாக தனது ஏற்றுமதியை விரிவுபடுத்தவும், சிரியாவின் பனியஸ் துறைமுகம் மற்றும் ஜோர்டானின் அகாபா துறைமுகம் வழியாக எண்ணெய் ஏற்றுமதியைத் தொடங்கவும் பாக்தாத் முயற்சிகள் முன்னெடுத்து வருகிறது என்று பிரதமர் அலி அல்-ஜைதி வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T16:43:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[117ம் பிறந்தநாளைக் கொண்டாடிய உலகின் மிக வயதான பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/born-in-1909-worlds-oldest-living-person-1787503011"></link>
            <id>https://tamilwin.com/article/born-in-1909-worlds-oldest-living-person-1787503011</id>
            <summary type="text">&amp;nbsp;உலகின் மிக வயதான வாழ்ந்துகொண்டிருக்கும் நபராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிரித்தானியப் பெண்மணி எதேல் கேட்டர்ஹாம், தனது 117-வது பிறந்தநாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உலகின் மிக வயதான வாழ்ந்துகொண்டிருக்கும் நபராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிரித்தானியப் பெண்மணி எதேல் கேட்டர்ஹாம், தனது 117-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.</p><p> 
இங்கிலாந்தின் சர்ரே பகுதியில் உள்ள பராமரிப்பு இல்லத்தில் ஆகஸ்ட் 21 அன்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து இவர் இந்த வரலாற்றுச் சாதனையை மகிழ்வோடு கொண்டாடினார்.</p><p> 
ஆகஸ்ட் 21, 1909 அன்று ஹாம்ப்ஷயரில் பிறந்த இவர், 117 வயதை எட்டிய முதல் பிரித்தானிய நபர் என்ற புதிய சாதனையை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e866399-a42c-4f55-ba4e-788ad57531a1/26-6a8b21a5089b9.webp' /></p><p> </p><p>
ஏப்ரல் 2025-இல் பிரேசிலைச் சேர்ந்த கன்னியாஸ்திரி இனா கனபாரோ லூகாஸ் தனது 116 வயதில் காலமானதைத் தொடர்ந்து, எதேல் கேட்டர்ஹாம் உலகின் மிக வயதான வாழ்ந்துகொண்டிருக்கும் நபராக மாறினார்.</p><p> 
இரண்டு உலகப் போர்களையும் கடந்து வாழ்ந்துள்ள இவர், தனது 110-வது வயதில் கொரோனா தொற்றிலிருந்தும் மீண்டு வந்தார். </p><p>
1927-ஆம் ஆண்டு, தனது 18-வது வயதில் தனியாக இந்தியாவிற்குப் பயணம் செய்து, ஒரு பிரித்தானியக் குடும்பத்திற்குப் பராமரிப்பாளராக வேலை பார்த்துள்ளார். </p><p>
தற்போது இவர் 117 வயதை எட்டியிருந்தாலும், வரலாற்றிலேயே மிக அதிக காலம் வாழ்ந்த பிரான்ஸ் நாட்டின் ஜீன் கால்மென்ட் என்பவரின் 122 ஆண்டுகள் 164 நாட்கள் என்ற சாதனையை விட இவர் சில ஆண்டுகள் குறைவாகவே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T16:37:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[8 வருட இரகசிய சேமிப்பு ; ஒரே இரவில் எலியால் நேர்ந்த விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/8-years-secret-storage-overnigh-disaste-caused-rat-1787478493"></link>
            <id>https://jvpnews.com/article/8-years-secret-storage-overnigh-disaste-caused-rat-1787478493</id>
            <summary type="text">இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், நகை வாங்குவதற்காக குடும்பப் பெண் ஒருவர் 8 ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்த பணத்தை எலிகள் கடித்துச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், நகை வாங்குவதற்காக குடும்பப் பெண் ஒருவர் 8 ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்த பணத்தை எலிகள் கடித்துச் சிதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b679495-fdb4-4d5e-9c2f-32a55de5a922/26-6a8ac1dee058c.webp' /></p><p>

கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர், தங்க நகை வாங்க வேண்டும் என்ற நோக்கில் தனது கணவருக்குத் தெரியாமல் கடந்த 8 ஆண்டுகளாக ஒரு பெட்டியில் இரகசியமாகப் பணத்தைச் சேமித்து வந்துள்ளார்.
</p><p>
சேமிப்புத் தொகை 12 இலட்சம் ரூபாயை எட்டிய நிலையில், நகை வாங்குவதற்காக நேற்று அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்துள்ளார்.
</p><p>
அப்போது, பெட்டிக்குள் இருந்த பணத்தாள்கள் அனைத்தும் எலிகளால் கடித்து சிதைந்திருந்ததைக் கண்டு அவர் பேரதிர்ச்சியடைந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T16:32:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உரிமமின்றி மானை வேட்டையாடிய கனேடியருக்கு அபராதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/illegal-moose-harvest-leads-to-5k-fine-hunting-1787502196"></link>
            <id>https://canadamirror.com/article/illegal-moose-harvest-leads-to-5k-fine-hunting-1787502196</id>
            <summary type="text">கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தைச் சேர்ந்த மார்க் ஜோடோயின் என்பவர், முறையான உரிமமின்றி &#039;மூஸ்&#039; வகை மானை வேட்டையாடிய குற்றத்திற்காக 5,000 டொலர் அபராதமும், ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தைச் சேர்ந்த மார்க் ஜோடோயின் என்பவர், முறையான உரிமமின்றி 'மூஸ்' வகை மானை வேட்டையாடிய குற்றத்திற்காக 5,000 டொலர் அபராதமும், ஒரு ஆண்டு வேட்டையாடத் தடையும் விதிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டுள்ளார்.
</p><p>அக்டோபர் 25, 2024 அன்று மாடாவா பகுதிக்கு அருகில் உள்ள முகாம் ஒன்றில் பாதுகாப்புக் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, சட்டவிரோதமாகச் சுடப்பட்டுத் தொங்கவிடப்பட்டிருந்த ஆண் மூஸ் மானின் உடலைக் கண்டறிந்தனர்.
</p><p>விசாரணையில் ஜோடோயினைக் கண்டறிந்த அதிகாரிகள், அவரிடம் அந்த மானின் தலை இருப்பதைக் கண்டுபிடித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a081c694-94be-4407-b6ee-67073228df6b/26-6a8b1e7645b80.webp' /></p><p> </p><p>ஆரம்பத்தில் மான் கிடைத்தது குறித்து முரணான தகவல்களைக் கூறிய அவர், பின்னர் அதைத் தானே வேட்டையாடியதாக ஒப்புக்கொண்டார்.
</p><p>வேட்டையாடுவதற்கான உரிமையைக் கோர ஒரு அமைப்பின் உறுப்பினர் அட்டையை அவர் காண்பித்தார். </p><p>
ஆனால், ஒன்டாரியோ சட்டப்படி வேட்டையாடுவதற்கான மரபுவழி உரிமையை நிரூபிக்க அந்த அட்டை போதுமானது அல்ல என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
</p><p>முறையான வேட்டை உரிமம் மற்றும் டேக் இல்லாததால், உரிமமின்றி பெரிய விலங்கை வேட்டையாடிய குற்றத்தை ஜோடோயின் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.</p><p> 
இதைத் தொடர்ந்து ஏப்ரல் 23, 2026 அன்று நார்த் பே நீதிமன்றத்தில் அவருக்கு அபராதமும் வேட்டைத் தடையும் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T16:27:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கிற்கு பரவிய ஆபத்தான பறவைக் காய்ச்சல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/australia-confirms-first-h5n1-bird-flu-case-1787501196"></link>
            <id>https://canadamirror.com/article/australia-confirms-first-h5n1-bird-flu-case-1787501196</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கு ஒன்றுக்கு H5N1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
தெற்கு அவுஸ்திரேலியா மாநிலத்தில் உள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கு ஒன்றுக்கு H5N1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. </p><p>
தெற்கு அவுஸ்திரேலியா மாநிலத்தில் உள்ள பீச்போர்ட் கடலோரப் பகுதியில் இறந்து கிடந்த நீண்ட மூக்கு ஃபர் சீல் என்ற கடல் பாலூட்டி ஒன்றின் உடலில் இந்த கொடிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.</p><p>
ஜூன் மாதம் அவுஸ்திரேலியாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ், முதன்முதலில் இடம்பெயரும் கடல் பறவைகளிடம் கண்டறியப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f44e2252-654c-48d6-a124-e13aa79a443b/26-6a8b1a8e3dcba.webp' /></p><p> </p><p>தொடர்ந்து உள்ளூர் பறவைகளுக்கும் பரவிய நிலையில், தற்போது கடல் பாலூட்டியான சீல் வரை பரவியுள்ளது.</p><p>
இறந்து கிடந்த சீல் உடலின் வெளிப்புறத்தில் எந்தக் காயங்களும் இல்லை எனவும், பிற கடல் பாலூட்டிகள் இதனால் பாதிக்கப்பட்டது போல் உடனடியாகத் தெரியவில்லை என்றும் அவுஸ்திரேலிய விவசாயத் துறை அமைச்சர் ஜூலி காலின்ஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>பாறைப் பகுதிகளில் கடல் பறவைகளுக்கு மிக அருகில் வாழும் இயல்புடையதால், சீல் போன்ற விலங்குகளுக்கு இந்த வைரஸ் மிக எளிதாகப் பரவும் வாய்ப்புள்ளதாகத் தலைமை கால்நடை அதிகாரி ஸ்கை ஃப்ரூகன் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>கடந்த 2025-ஆம் ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவின் சப்-அண்டார்டிக் தீவான ஹெர்ட் தீவில் இந்த வைரஸ் பரவியதில் 13,000-க்கும் மேற்பட்ட குட்டி சீல்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>
அவுஸ்திரேலியா முழுவதும் இதுவரை 297 வழக்குகள் பதிவாகியுள்ள போதிலும், நாட்டின் கோழிப் பண்ணைகளிலோ அல்லது விவசாயத் துறையிலோ இந்த வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை என ஃபெடரல் அரசு அறிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T16:26:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரயிலுடன் மோதிய முச்சக்கரவண்டி ; சாரதிக்கு நேர்ந்த கதி ; போராட்டத்தில் குதித்த மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tuk-tuk-collides-with-train-driver-dies-1787502321"></link>
            <id>https://jvpnews.com/article/tuk-tuk-collides-with-train-driver-dies-1787502321</id>
            <summary type="text">இன்று (23) பிற்பகல் கடற்கரை வீதி புகையிரதப் பாதையின் அலுத்கம,விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இன்று (23) பிற்பகல் கடற்கரை வீதி புகையிரதப் பாதையின் அலுத்கம,விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நபரொருவர் பலத்த காயமடைந்துள்ளார். </p><p style="text-align: justify; ">

மருதானை புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்ட 'சாகரிகா' புகையிரதத்துடன், முச்சக்கர வண்டி ஒன்று மோதுண்டதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19739fdc-0de4-404b-ac92-d1776308a9fe/26-6a8b1ef3caec5.webp' /></p><h2 style="text-align: justify; ">போராட்டத்தில் மக்கள்</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மற்றைய நபர் சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். </p><p style="text-align: justify; ">

குறித்த புகையிரதக் கடவையில் சமிக்ஞைகள் மற்றும் எச்சரிக்கை ஒலிகள் மட்டுமே உள்ளன என்றும், பாதுகாப்பு கடவை இல்லாத காரணத்தினால் தொடர்ச்சியாக இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறுவதாகவும், அதிகாரிகள் அதற்கு எவ்வித தீர்வும் வழங்கவில்லை எனவும் குற்றம் சாட்டி பிரதேச மக்கள் புகையிரதப் பாதையை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். </p><p style="text-align: justify; ">

இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாகக் கடற்கரை வீதித் புகையிரதப் பாதையின் போக்குவரத்திற்குப் பாரிய இடையூறு ஏற்பட்டது.</p><p style="text-align: justify; "> 

பின்னர் பொலிஸார் தலையிட்டு, புகையிரதத் திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு தேவையான தீர்வுகளை வழங்குவதாக அளித்த வாக்குறுதியின் பேரில் பிரதேச மக்கள் போராட்டத்தைக் கைவிட்டதுடன், தற்போது அந்தப் பாதையில் புகையிரதப் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T16:25:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹபரனையில் காட்டுத்தீ ; 100 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு நாசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/habarana-wildfire-destroys-over-100-acres-1787500643"></link>
            <id>https://jvpnews.com/article/habarana-wildfire-destroys-over-100-acres-1787500643</id>
            <summary type="text">ஹபரனை- ஹுருளு சுற்றாடல் பூங்கா காப்பகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) பிற்பகல் 2.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் காட்டுத்தீ காரணமாக 100 ஏக்கருக்கும் அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஹபரனை- ஹுருளு சுற்றாடல் பூங்கா காப்பகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) பிற்பகல் 2.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் காட்டுத்தீ காரணமாக 100 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு எரிந்து சாம்பலாகியுள்ளது.</p><p style="text-align: justify; ">

காட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த வேட்டைக்காரர்களே தீ மூட்டியிருக்கலாம் என வனப்பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51c4e804-e436-474c-a652-c544b798e09a/26-6a8b186620780.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
வனப்பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஹபரனை பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
மேலும், சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், ஹபரணை வனப்பாதுகாப்பு அதிகாரிகளும் ஹபரனை பொலிஸாரும் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-23T15:57:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[கயல் சீரியல் அடுத்த வார ப்ரோமோ! தீபிகாவிடம் இருந்து தப்பிய கயல் செய்த அதிரடி விஷயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/kayal-serial-next-week-promo-kayal-beats-deepika-1787500052"></link>
            <id>https://cineulagam.com/article/kayal-serial-next-week-promo-kayal-beats-deepika-1787500052</id>
            <summary type="text">சன் டிவியில் கயல் சீரியலில் எழிலை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என கயல் தீவிரமாக போராடி வருகிறார்.இதே ஸ்டோரி லைனை வைத்து இன்னும் எத்தனை மாதங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சன் டிவியில் கயல் சீரியலில் எழிலை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என கயல் தீவிரமாக போராடி வருகிறார்.</p><p>இதே ஸ்டோரி லைனை வைத்து இன்னும் எத்தனை மாதங்கள் கதை செல்லும் என ஷோவின் ரசிகர்கள் சலிப்படையும் அளவுக்கு தான் கதை சென்று கொண்டிருக்கிறது.
</p><p>எழிலாக நடித்து வரும் சஞ்சீவ் சீரியலில் இருந்து விலகிவிட்டார் என ஒரு தகவல் ஏற்கனவே வந்தது குறிப்பிடத்தக்கது.
</p><p>இது ஒரு புறம் இருக்க தற்போது அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் என்ன நடந்தது என பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c914a3b3-90a1-42f4-a1fb-b61cf720fff4/26-6a8b161653411.webp' /></p><p>
</p><h2>தப்பிய கயல்
</h2><p>கயலை எரித்து கொலை செய்ய வேண்டும் என தீபிகா முயற்சி செய்கிறார். ஆனால் அந்த நேரம் பார்த்து மழை வந்து அவரை காப்பாற்றி விடுகிறது. கயல் தற்போது எழுந்து கடும் கோபத்துடன் ரவுடிகளை கட்டையால் அடித்து துவைக்கிறார். மேலும் எழில் எங்கே என தீபிகாவையும் அடித்து கேட்கிறார் அவர். </p><p>
இப்போதாவது தெரிய வருமா? ப்ரோமோவை பாருங்கள்&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/XR0yuT5Xk-Y" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-23T15:48:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பரில் உருவாகும் ராஜயோகங்கள்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக அமையப் போகுது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/september-matha-rasipalan-zodics-who-get-luck-1787497482"></link>
            <id>https://manithan.com/article/september-matha-rasipalan-zodics-who-get-luck-1787497482</id>
            <summary type="text">ஜோதிடத்தின் படி, 2026 செப்டம்பர் மாதம் முக்கியமான கிரக மாற்றங்களால் சிறப்பாக அமையப் போகிறது. செப்டம்பர் 2ஆம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாமில...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தின் படி, 2026 செப்டம்பர் மாதம் முக்கியமான கிரக மாற்றங்களால் சிறப்பாக அமையப் போகிறது. செப்டம்பர் 2ஆம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாமில் நுழைவதால் மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது. </p><p>தொடர்ந்து, செப்டம்பர் 7ஆம் தேதி புதன் கன்னியில் நுழைந்து பத்ரா ராஜயோகத்தை உருவாக்குகிறார்.

அதன் பின்னர், செப்டம்பர் 17ஆம் தேதி சூரியன் கன்னியில் நுழைந்து புதனுடன் இணைவதால் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de3fd9dd-f557-4f3c-8cf7-a4c906f3c035/26-6a8b13c273a46.webp' /></p><p> செப்டம்பர் 18ஆம் தேதி செவ்வாய் கடகத்தில் நுழைந்து குருவுடன் சேர்ந்து பயணிக்கிறார். இந்த கிரக மாற்றங்கள் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும், 3 ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் குறிப்பாக அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது.</p><p> தொழில், நிதி நிலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களைக் காணும் வாய்ப்பு உள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d2e34fa-3aa3-4141-9afa-7eb95fb05671/26-6a8b13c3415b5.webp' /></p><p>
மேஷ ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் சிறப்பாக அமையும். நிதி நிலை மேம்படுவதுடன், கடின உழைப்புக்கான நல்ல பலனும் கிடைக்கும். </p><p>பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு லாபமும், தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பும் கிடைக்கலாம். மொத்தத்தில் புதிய பொறுப்புகளும் வாய்ப்புகளும் தேடி வரும்.
</p><h2>
கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56f810a2-6829-4871-a3dc-f442587d6c82/26-6a8b13c3e63f3.webp' /></p><h2>
</h2><p>கன்னி ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் வெற்றிகரமானதாக இருக்கும். வேலை, தொழில் என அனைத்திலும் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். </p><p>முதலீடுகளில் லாபம் கிடைக்கவும், வியாபாரத்தை விரிவுபடுத்தவும் வாய்ப்புள்ளது. பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீர்ந்து சாதகமான முடிவு கிடைக்கலாம். நிதி நிலை மேம்படுவதுடன், திட்டமிட்ட காரியங்களும் வெற்றியடையும்.</p><h2>

துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98ae87e0-5a0b-4623-ab71-fccfb014a93b/26-6a8b13c49a996.webp' /></p><p></p><h2>
</h2><p>துலாம் ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் அதிர்ஷ்டமானதாக அமையும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதுடன், சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கலாம். </p><p>புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த மாத முதலீடுகளும் நல்ல பலனைத் தரக்கூடும். மொத்தத்தில் நிதி நிலை சிறப்பாக இருக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T15:41:52+00:00</updated>
        </entry>
    </feed>
