<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-27T08:29:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியை வெள்ளையாக்க முகப்பூச்சு கொடுத்த கணவர் - உறவினர்கள் கண் முன் நடந்த கொடூரம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/husband-dies-due-to-marital-dispute-1787818549"></link>
            <id>https://tamilwin.com/article/husband-dies-due-to-marital-dispute-1787818549</id>
            <summary type="text">வவுனியா - நெடுங்கேணி, நையினாமடு பிரதேசத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா - நெடுங்கேணி, நையினாமடு பிரதேசத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.</p><p>

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

நெடுங்கேணி - நைனாமடு பகுதியில் வசித்து வந்த குறித்த குடும்பஸ்தர்,
தனது மனைவிக்கு 1000 ரூபாய் பெறுமதியான வெள்ளையாகும் முகப்பூச்சு ஒன்றை வாங்கி
கொடுத்துள்ளார். 

எனினும் மனைவி அதனை பூசவில்லை. </p><p>இதனால் கோபமுற்ற கணவர்
மண்ணெண்ணெய்யை தன் மீது ஊற்றி தீ வைக்க முயன்றுள்ளார்.</p><h2>

9 நாட்கள் உயிருடன் இருந்த குடும்பஸ்தர்</h2><p>

இதனைத் தொடர்ந்து, தம்பி முறையானவரிடம் இருந்த தீ மூட்டும் கருவியை பறிக்க முற்பட்ட போது எதிர்பாராத விதமாக தீ மூட்டப்பட்டு பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25bde6eb-d0e1-4c96-a5cd-1f9eee5c9857/26-6a8ff344f1739.webp' /></p><p> 

இதன்போது விரைந்து செயற்பட்ட அவருடைய உறவினர்கள், இளைஞரை மீட்டு, வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
</p><p>
இருப்பினும், சிகிச்சை பலனின்றி குறித்த குடும்பஸ்தர் 9 நாட்களின்
பின் உயிரிழந்துள்ளார்.</p><p>

இந்த சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T08:24:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வயதான பெற்றோரின் சொத்தை பறித்து துரத்திவிட்ட மகன்; இலங்கையில் இப்படி ஒரு மோசமான சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/son-seizes-elderly-parents-assets-them-out-1787812367"></link>
            <id>https://jvpnews.com/article/son-seizes-elderly-parents-assets-them-out-1787812367</id>
            <summary type="text">&amp;nbsp; வயதான பெற்றோரின் சொத்தை பறித்து விட்டு அவர்களை அநாதரவாக, மகன் வீதிக்கு துரத்திவிட்ட துயரம் சம்பவம் ஒன்று தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளது.

சம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வயதான பெற்றோரின் சொத்தை பறித்து விட்டு அவர்களை அநாதரவாக, மகன் வீதிக்கு துரத்திவிட்ட துயரம் சம்பவம் ஒன்று தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த வயதான அந்த தம்பதிகளிற்கு ஒரு மகன், மற்றும் மகள் உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63a9cd9f-45e7-48fa-9b93-404d63ee60ec/26-6a8fda10ab4aa.webp' /></p><h2>இருக்க வசிப்பிடமின்றி&nbsp; வீதிக்கு வந்த&nbsp; பெற்றோர்கள்</h2><p> மகன் ஜப்பான் நாட்டுக்கு சென்று வந்த நிலையில் செல்வ செழிப்புடன் வாழ்ந்து வருகின்றார். மகள் கணவனை இழந்து வறுமையில் வாடுவதாக அந்த வயோதிப தம்பதிகள் கூறியுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
இந் நிலையில் வெளினாட்டில் இருந்து திரும்பிய தமது மகன், பெற்றோரின் சொத்துக்ளை பறித்ததோடு அவர்காளின் உடமைகளுக்கும் தீவைத்து, விட்டைவிட்டு வெளியேற்றி விட்டதாக கண்ணீருடன் அந்த வயதான தம்பதிகள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
தமது மகள் மிகவும் வறுமையில் வாடுவதாக தெரிவித்துள்ள அந்த வயதான தம்பதி, தாம் தங்குவதற்கு இருப்பிடம் ஒன்றை தேடிவருவதாக கூறியுள்ளனர்.</p><p></p><p> 

அதேவேளை பெற்றோரை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என அண்மையில் அரசாங்கம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.</p><p>

குறித்த தம்பதியின் சோக கதை சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், பெற்றோரை கைவிட்ட மகன் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க வெண்டும் என சமூக வலைத்தளவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T08:21:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூப்பர் சிங்கர் மானசியின் சமீபத்திய அழகிய புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/super-singer-manasi-latest-photoshoot-1787815012"></link>
            <id>https://cineulagam.com/article/super-singer-manasi-latest-photoshoot-1787815012</id>
            <summary type="text">விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமாகியுள்ளனர். அப்படி பிரபலமானவர்களில் ஒருவர் மானசி. இவர் சமூக வலைத்தளத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமாகியுள்ளனர். அப்படி பிரபலமானவர்களில் ஒருவர் மானசி. இவர் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். </p><p>அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தன்னை பின்தொடர்பவர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்நிலையில், தற்போது சேலையில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:</p>]]></content>
            <updated>2026-08-27T08:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இயற்கையின் கோர தாண்டவத்தில் 1000 பேரை காணவில்லை; நேபாள வெளியுறவு அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/1-000-missing-in-floods-nepal-foreign-minister-1787818908"></link>
            <id>https://jvpnews.com/article/1-000-missing-in-floods-nepal-foreign-minister-1787818908</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், அங்கு சுற்றுலாவுக்கு வந்திருந்த 300 இந்தியர்கள் உட்பட சுமார் 1000 பேரை காணவில்லை என நேபாள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், அங்கு சுற்றுலாவுக்கு வந்திருந்த 300 இந்தியர்கள் உட்பட சுமார் 1000 பேரை காணவில்லை என நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கனால் தெரிவித்துள்ளார்.</p><p>

நேபாளத்​தின் வடக்கு எல்​லை​யான ரசுவா மாவட்​டத்​தில், இமயமலைப் பகு​தி​களில் பனிமலை​கள் உடைப்பு காரண​மாக கோசி, திரிசூலி நதி​களில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்​ளப்​பெருக்கில் சிக்கி 175 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb4f13ae-f253-40ab-a065-afa9bc84b357/26-6a8ff39e57ad7.webp' /></p><h2>300 இந்தியர்கள் உட்பட சுமார் ஆயிரம் பேரை காணவில்லை&nbsp;</h2><p> </p><p>300 இந்தியர்கள் உட்பட சுமார் ஆயிரம் பேரை காணவில்லை என கூறப்படுகிறது.

இது தொடர்பாக நேபாள நாட்டின் தூதரக வட்டாரங்கள் கூறுகையில், “இதுவரை 175 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.</p><p> உள்ளூர் மக்கள் சுற்றுலாப் பயணிகள் உட்பட பலரை காணவில்லை. தற்போதைய தகவலின்படி, 28 நாடுகளைச் சேர்ந்த 476 பேரை காணவில்லை. இந்த எண்ணிக்கை ஆய்வுக்கு உட்பட்டது

வெள்ள பாதிப்பு தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கனால் கூறுகையில், ”ரசுவா பகுதியில் இந்த துயரச் சம்பவத்தில் 160 பேர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.</p><p></p><p> </p><p>ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளன. தற்போது அவர்களில் பலர் காணாமால் போயுள்ளனர். இந்த பேரிடரின் முழு அளவை நாங்கள் மதிப்பீடு செய்து வருகிறோம்.</p><p>

இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 300 இந்தியர்கள் - இவர்களில் பெரும்பாலானோர் மானசரோவர் யாத்ரீகர்கள் - காணாமால் போயுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.</p><p></p><p> </p><p>அவர்களைத் தொடர்பு கொள்ள அரசாங்கம் முயன்று வருகிறது. வெளிநாட்டினரில் சுமார் 500 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

நேபாள குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் நாங்கள் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளோமோ அதே அளவு வெளிநாட்டினரின் பாதுகாப்பு மற்றும் நலனிலும் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம்.</p><p> இந்திய அரசு ஏற்கனவே நிவாரண உதவிகளை அனுப்பியுள்ளது. நாங்கள் எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த நெருக்கடியான நேரத்தில் நேபாளத்துக்கு துணை நிற்குமாறும், நாடு தன்னைத்தானே மீட்டெழுப்ப தொடர்ந்து இங்கு வருகை தருமாறும் நாங்கள் உலக நாடுகளிடம் வேண்டுகோள் விடுக்கிறோம்.</p><p></p><p> </p><p>உடனடி நிவாரண நடவடிக்கைகள் மட்டுமல்லாது, நேபாளத்துடன் உலகம் தொடர்ந்து இணைந்திருப்பதும் நாங்கள் மீண்டு வர மிக முக்கியம்.

கடந்த 2015ல் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்துக்குப் பிறகும் நாங்கள் வலிமையுடன் மீண்டு வந்தோம். நேபாளம் தன்னைத்தானே சீரமைத்துக்கொள்ளும்.” என தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-27T08:19:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை முடக்கம் ; தற்காலிக கடற்பாதைக்கு ஈரான் அதிரடி திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/strait-of-hormuz-iran-plans-temporary-sea-route-1787818715"></link>
            <id>https://canadamirror.com/article/strait-of-hormuz-iran-plans-temporary-sea-route-1787818715</id>
            <summary type="text">அமெரிக்காவுடனான மோதல் நிலைமை தொடரும் சூழலில், ஹோர்முஸ் நீரிணை வழியாக இடம்பெறும் கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில் ஈரானும் ஓமானும் புதிய பேச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடனான மோதல் நிலைமை தொடரும் சூழலில், ஹோர்முஸ் நீரிணை வழியாக இடம்பெறும் கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில் ஈரானும் ஓமானும் புதிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளன.
</p><p>
இதன் மூலம் கப்பல் போக்குவரத்திற்கான தற்காலிகப் பாதையொன்றை விரைவில் அறிவிக்க முடியும் என ஓமான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4f697c8-b580-470e-bbec-f791d60c2517/26-6a8ff2dd24896.webp' /></p><p>கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து உருவான போர் சூழல் காரணமாக, உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுப் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணை வழித்தடம் பாதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுப் போக்குவரத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாக நடைபெறுவதால், அதன் தொடர்ச்சியான முடக்கம் சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த நிலையில், பாதுகாப்பான கடற்பயணத்தை மீளமைக்கும் நோக்கில் கூட்டுத் தற்காலிக கடற்பாதையொன்றை அமைப்பது தொடர்பாக ஈரானும் ஓமானும் உடன்பாடு கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>அத்துடன், அப்பகுதியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவது தொடர்பிலும் இரு நாடுகளும் இணைந்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
இதனிடையே, ஈரான் மீது தற்போதைக்கு புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தும் திட்டம் அமெரிக்காவிடம் இல்லை எனவும், அதற்கு பதிலாக பொருளாதார ரீதியிலான அழுத்தங்களை மேலும் தீவிரப்படுத்த அமெரிக்கா முயன்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/884a6ac8-0929-4fc6-b45c-91ed2a06976e/26-6a8ff2ddcbe95.webp' /></p><p>இதன் ஒரு பகுதியாக, ஈரானால் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட கப்பல்கள் மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
எனினும், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளில் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படாத நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் பயணிப்பது தொடர்ந்தும் ஆபத்து நிறைந்ததாகவே காணப்படுகின்றது.
</p><p>
இந்த நிலைமையில், ஈரான்–ஓமான் பேச்சுவார்த்தையின் முடிவாக அறிவிக்கப்படவுள்ள தற்காலிக கடற்பாதை, சர்வதேச கடல் போக்குவரத்து மற்றும் உலக எரிசக்திச் சந்தையின் நிலைத்தன்மைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-27T08:18:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சந்தேகத்திற்கிடமான வெடிபொருள் வெடித்ததில் இரண்டு பெண்கள் மருத்துவமனையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bursting-firecrackers-two-women-admitted-hospital-1787817829"></link>
            <id>https://ibctamil.com/article/bursting-firecrackers-two-women-admitted-hospital-1787817829</id>
            <summary type="text">புத்தளம் மீ ஓயா வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக கொண்டு வரப்பட்ட வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட குண்டு வெடித்ததில் இரு பெண்கள் காயமடைந்துள்ளனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p>புத்தளம் மீ ஓயா வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக கொண்டு வரப்பட்ட வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட குண்டு வெடித்ததில் இரு பெண்கள் காயமடைந்துள்ளனர்.
</p><p>குறித்த வேட்டைக்காக வைக்கப்பட்டதாக சந்தேக்கிக்கப்படும் வெடிபொருள் ஒன்றை , வீட்டில் வளர்க்கப்படும் நாய் தனது வாயில் எடுத்துக்கொண்டு வந்த நிலையில், அதனை நிறப்பூச்சு பூசுவதற்குப் பயன்படுத்தப்படும் தூரிகையால் தட்டிப் பார்க்க முயன்றபோதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>இதன் பின்னர் காயமடைந்த இரு பெண்களும் புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p></p><h2>இரு பெண்கள் காயம்</h2><p>அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4333e1fa-6d99-4a20-8684-cf21de656eff/26-6a8ff291a8c0b.webp' /></p><p>&nbsp;மற்றைய பெண் சிகிச்சை பெற்ற பின்னர் மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
சம்பவம் தொடர்பில்புத்தளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...! </td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T08:17:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயங்கரவாத தடைச்சட்டம் இந்த ஆண்டுக்குள் இரத்துச் செய்யப்படும் : நீதி அமைச்சர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pta-will-be-completely-repealed-by-this-year-in-sl-1787813486"></link>
            <id>https://ibctamil.com/article/pta-will-be-completely-repealed-by-this-year-in-sl-1787813486</id>
            <summary type="text">பயங்கரவாத தடைச்சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>பயங்கரவாத தடைச்சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். </p><p>அத்துடன் தேசிய பாதுகாப்பையும், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p> பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் தொடர்பில் வினவியபோது அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>&nbsp;பாதாள குழுக்களுடன் தொடர்புடைய குற்றங்கள்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,

பயங்கரவாத தடைச்சட்டம் எந்தளவுக்கு மோசமானது என்பதை நாங்கள் நன்கு அறிவோம். இந்த நாட்டில் வரலாற்று ரீதியில் பல முரண்பாடுகள் ஏற்படுவதற்கு அந்த சட்டம் பிரதான காரணியாக அமைந்துள்ளது.</p><p>1979 ஆண்டு தற்காலிக ஏற்பாடாக கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் இன்றளவில் நடைமுறையில் உள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஒருசில ஏற்பாடுகள் அடிப்படை மனித உரிமைகளுக்கும், ஜனநாயக கொள்கைக்கும் எதிரானது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1686f6b-00d2-4caa-9b71-0877779ad4e8/26-6a8fefa489555.webp' /></p><p> </p><p>தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் இந்த குறைபாடுகள் முன்வைக்கப்பட்டு, பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்வோம் என்று மக்களுக்கு வாக்குறுதி வழங்கினோம்.</p><p> இருப்பினும் போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களுடன் தொடர்புடைய குற்றங்கள், பயங்கரவாதத்துடன் தொடர்புடைய செயற்பாடுகளுக்கு இந்த சட்டத்துக்கு அமையவே செயற்படவேண்டிய நிலைமை காணப்படுகிறது.
</p><p>
தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்திற்கொண்டு புதிய சட்டம் ஒன்றை இயற்றுவதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்படும்&nbsp;</h2><p>

இதற்கமைய 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்து புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தவேண்டிய தேவையின் அடிப்படையில், குறித்த விடயங்களுக்கு உரிய அடிப்படை எண்ணக்கருவை தயாரிப்பதற்காக விசேட நிபுணத்துவக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த தொழில்நுட்ப விசேட நிபுணத்துவக் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள முதனிலை சட்ட வரைவை அடிப்படையாகக் கொண்டு 'பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாத்தல்' எனும் சட்டத்தை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3279d26-cd64-4fad-b629-244e3cc7d3f8/26-6a8fefa53e399.webp' /></p><p>
</p><p>
அதற்கமைய சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்துக்கு சட்ட மா அதிபர் அனுமதி அளித்துள்ளார். இந்த சட்டமூலம் வெகுவிரைவில் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்படும். அதனைத் தொடர்ந்து முதலாம் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
</p><p>
பயங்கரவாத தடைச்சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். இந்த சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும்.</p><p> தேசிய பாதுகாப்பையும், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும்.

புதிய சட்ட உருவாக்கத்துக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.</p><p> பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்ய வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தும் தரப்பினர் நடைமுறை நெருக்கடிகள் மற்றும் பூகோள பயங்கரவாதம் உள்ளிட்ட பொதுவான காரணிகளை முன்னிலைப்படுத்தி ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்“ என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T08:06:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு டொலரின் பெறுமதி 2 மில்லியன் ஈரான் ரியால்கள்: கடும் பெறுமதி வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/one-us-dollar-now-costs-2-million-rials-1787817560"></link>
            <id>https://canadamirror.com/article/one-us-dollar-now-costs-2-million-rials-1787817560</id>
            <summary type="text">அமெரிக்கா விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் போரினால் ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக, ஈரானின் நாணயமான ரியால் வரலாறு காணாத சரிவைச் சந்தித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் போரினால் ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக, ஈரானின் நாணயமான ரியால் வரலாறு காணாத சரிவைச் சந்தித்து திறந்த சந்தையில் ஒரு அமெரிக்க டொலருக்கு 2 மில்லியன் ரியால்களாகத் தாழ்ந்துள்ளது.</p><p>
சுமார் 9.2 கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஈரானில், இந்த நாணய வீழ்ச்சி மற்றும் தீவிர பணவீக்கம் காரணமாக மக்களின் கொள்வனவு திறன் கடுமையாகக் குறைந்துள்ளதுடன் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் பல மடங்கு உயர்ந்துள்ளன.
</p><p>போர் தொடங்குவதற்கு முன்பிருந்த விலைகளுடன் ஒப்பிடுகையில் அத்தியாவசியப் பொருட்களின் தற்போதைய சராசரி விலையேற்ற விவரம்:
சமையல் எண்ணெய்: 177% உயர்வு, கோழி இறைச்சி : 74% உயர்வு, தக்காளி: 71% உயர்வு, இன்சுலின் மருந்து (சர்க்கரை நோய் சிகிச்சை): 642% கடும் உயர்வு, குழந்தைகளுக்கான பால் மாவு: 95% உயர்வு, பாரசிட்டமால் மற்றும் அடிப்படை மருந்துகள்: 93% உயர்வு என தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e391755f-0a3f-4280-ac70-f22fc043482c/26-6a8fee5a13e0d.webp' /></p><p>
தலைநகர் தெஹ்ரானில் வசிக்கும் குடும்பங்களின் வாராந்திர மளிகைச் செலவுகள் 20% முதல் 30% வரை அதிகரித்துள்ளன. </p><p>
குழந்தைகளுக்கான பராமரிப்பு நிலையக் கட்டணம் நாளொன்றுக்கு 50 லட்சம் ரியால்கள் வரை உயர்ந்துள்ளதால் சாதாரண குடும்பங்கள் பெரும் நிதிச் சுமையை எதிர்நோக்கியுள்ளன. </p><p>
ஆடை மற்றும் சில்லறை வர்த்தகத் துறையில் விற்பனை 40% வரை சரிவடைந்துள்ளது. மூலப்பொருட்களின் விலை, தொழிலாளர் ஊதியம் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் உயர்ந்துள்ளதால், வரவிருக்கும் குளிர்காலத்திற்குள் பல சிறு வர்த்தகங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p><p>
ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்கு எதிராக அமெரிக்கா மற்றும் சர்வதேச நாடுகள் பல தசாப்தங்களாக விதித்து வரும் பொருளாதாரத் தடைகள், அமெரிக்க-இஸ்ரேல் போர் காரணமாக ஏற்பட்ட துறைமுக முற்றுகைகள் மற்றும் உற்பத்தி முடக்கங்கள் என்பன நாட்டின் பொருளாதாரத்தை முற்றாக முடக்கியுள்ளன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T08:02:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[‘யாழ் டிங்கர்ஸ்’ அணியின் உரிமையாளராக இலங்கை கிரிக்கெட் வீரர் மதீஷ பதிரண]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/madheesha-becomes-the-owner-jaffna-tinkers-team-1787817694"></link>
            <id>https://jvpnews.com/article/madheesha-becomes-the-owner-jaffna-tinkers-team-1787817694</id>
            <summary type="text">இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பதிரண, தனது முதல் விளையாட்டு முதலீடாக ‘டிங்கர்ஸ்’ அணியின் உரிமையைப் பெற்றுள்ளார்.
தனது நீண்டகால ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பதிரண, தனது முதல் விளையாட்டு முதலீடாக ‘டிங்கர்ஸ்’ அணியின் உரிமையைப் பெற்றுள்ளார்.</p><p>
</p><p></p><p>தனது நீண்டகால மேலாளரும் வர்த்தக கூட்டாளருமான அமில கலுகலேவுடன் இணைந்து இந்த முதலீட்டை மேற்கொண்டுள்ள மதீஷ பதிரண, அணியின் நிர்வாகப் பங்காளராக அமில கலுகலேவை நியமித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dbb590d-2a11-49f7-a3b1-596139e5ce94/26-6a8feedfe8b73.webp' /></p><p>



‘சிலோன் பிக்கிள் லீக்’ போட்டியில் ‘யாழ் டிங்கர்ஸ்’ என்ற பெயரில் அணி களமிறங்கவுள்ளது. இதன் மூலம் பிக்கிள்போல் விளையாட்டில் அணிக்கான தனித்துவமான போட்டி அடையாளத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
</p><p>


இதுகுறித்து மதீஷ பதிரண தெரிவிக்கையில், “இது வெறுமனே ஒரு அணி அல்ல. நான் உண்மையாக நம்பும் ஒரு எண்ணக்கரு. யாழ் டிங்கர்ஸ் அணியை இரசிகர்கள் தங்களுடைய அணி என பெருமையுடன் அழைக்கும் வகையில் உருவாக்க விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
</p><p>


அணியின் மூலோபாய மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை அமில கலுகலே முன்னெடுக்கவுள்ளார்.
</p><p>


எதிர்வரும் சிலோன் பிக்கிள் லீக் ஏலத்திற்காக யாழ் டிங்கர்ஸ் அணி தயாராகி வருவதுடன், சிறந்த வீரர்களை உள்ளடக்கிய அணியை உருவாக்குவதிலும் இரசிகர் சமூகத்தை கட்டியெழுப்புவதிலும் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T08:01:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை தொடர் முடக்கம் - தற்காலிக பாதை அமைக்க ஈரான் அதிரடி திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/continued-blockade-of-the-strait-of-hormuz-1787817556"></link>
            <id>https://tamilwin.com/article/continued-blockade-of-the-strait-of-hormuz-1787817556</id>
            <summary type="text">அமெரிக்காவுடனான மோதல் நிலைமை தொடரும் சூழலில், ஹோர்முஸ் நீரிணை வழியூடான கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ஈரானும் ஓமானும் புதிய பேச்சுவார்த்தைகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடனான மோதல் நிலைமை தொடரும் சூழலில், ஹோர்முஸ் நீரிணை வழியூடான கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ஈரானும் ஓமானும் புதிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளன.
</p><p>
இதன் மூலம் கப்பல் போக்குவரத்திற்கான தற்காலிகப் பாதையொன்றை விரைவில்
அறிவிக்க முடியும் என ஓமான் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய
தாக்குதல்களுடன் ஆரம்பித்த போர் சூழல் காரணமாக, உலகளாவிய கச்சா எண்ணெய்
மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாளிப் போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கை
வகிக்கும் ஹோர்முஸ் நீரிணைப் பாதை முடங்கியுள்ளது.
</p><h2>
பொருளாதார ரீதியிலான அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா</h2><p>
இந்த நிலையில், பாதுகாப்பான கடற்பயணத்தை மீளமைக்கும் பொருட்டு கூட்டுத்
தற்காலிகப் பாதையொன்றை அமைப்பது குறித்தும், அப்பகுதியில் உள்ள கண்ணிவெடிகளை
அகற்றுவது குறித்தும் இரு நாடுகளும் உடன்பாடு கண்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9db83750-d0d7-41f5-9839-03ae99754945/26-6a8feea0044bf.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, ஈரான் மீது தற்போதைக்கு புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தும்
திட்டம் அமெரிக்காவிடம் இல்லை என்றும், பொருளாதார ரீதியிலான அழுத்தங்களையே
தீவிரப்படுத்த அமெரிக்கா முயல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இதன் ஒரு பகுதியாக ஈரானால் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட கப்பல்கள்
மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக உலகச் சந்தையில் மசகு
எண்ணெய் விலையில் சரிவு பதிவாகியுள்ளது.
</p><p>
இருப்பினும், அமெரிக்கா - ஈரான் இடையிலான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளில்
குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் ஏற்படாத நிலையில், ஹோர்முஸ் நீரிணை
வழியூடான பயணம் இன்னும் ஆபத்து நிறைந்ததாகவே காணப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T08:00:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[திரிஷாவுக்காக என்னை அசிங்கப்படுத்துறீங்க..இனி சீமான் தான்!! தவெகவினருக்கு எச்சரிக்கை விடுத்த விஜயலட்சுமி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/i-will-stand-by-seeman-vijayalakshmi-issue-1787817965"></link>
            <id>https://viduppu.com/article/i-will-stand-by-seeman-vijayalakshmi-issue-1787817965</id>
            <summary type="text">விஜயலட்சுமிநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி நடிகை விஜயலட்சுமி பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகளை அளித்து வருகிறார்....</summary>
            <content type="html"><![CDATA[<h2>விஜயலட்சுமி</h2><p>நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி நடிகை விஜயலட்சுமி பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகளை அளித்து வருகிறார். அவர் அளித்த புகாரில் இரு தரப்புக்கும் உச்ச நீதிமன்றத்தில் சமரசம் ஏற்பட்டது. </p><p>தற்போது பெங்களூருவில் வசித்து வரும் விஜயலட்சுமி, இந்த பிரச்சனைக்கு முடிவுக்கு வந்தப்பின் வீடியோ ஏதும் வெளியிடாமல் இருந்தார். சமீபநாட்களாக மீண்டும் தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் வீடியோவை வெளியிட்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb3436f9-376d-42f2-8f89-4ae7c694d611/26-6a8fefefdf019.webp' /></p><h3>இனி சீமான் தான்</h3><p> இந்நிலையில், சமீபத்திய வீடியோவில், இன்னைக்கு நாம் தமிழர் கட்சிக்கு நான் சப்போர்ட் செய்து பேசுன உடனே அடுத்து சொல்லுவாங்க, நாம் தமிழர் கட்சியோட ஒருங்கிணைப்பாளர் பெரிய தொகையை விஜயலட்சுமிக்கு செட்டில் பண்ணிட்டாரு, அதான் அவங்க பக்கம் பேசிட்டாங்க என்று. ஒன்னும் கிடையாது, என்னை யாராலும் இதுவரைக்கும் பணம் கொடுத்து விலக்கு வாங்க முடியாது. </p><p>எனக்கு தப்புன்னு தோணுச்சுன்னா நானே பேசுவேன். நான் தான் இத்தனை நாள் நாம் தமிழர் கட்சியை எதிர்த்துட்டு இருந்தேன் இல்லையா? ஆனா நான் ஒரு வாரமா பார்க்கிறேன், ஒருத்தங்க தப்பு பண்ணதை தப்புன்னு உணர்ந்து, அவங்க திருந்தும் போது ஒரு வாய்ப்பு கேட்கும்ப்போது அவங்களை வாழ விடணும், அதுதான் மனிதநேயம்னு சொல்றது. அதைத்தான் நான் பண்ணேன். </p><p>நான் இதுவரைக்கும் விஜய் அண்ணா என்று அவருக்காக வீடியோ வெளியிட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அண்ணாவுடைய ரசிகர்கள் நீங்கள் என்னையே அசிங்கப்படுத்திட்டீங்க.. திரிஷாவுக்காக என்னை இழுத்து கேவலப்படுத்துறீங்களா? இது என்ன வகையில் நியாயம்?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b0300ef-34e2-410a-bf36-55d4bb38ff4b/26-6a8feff092762.webp' /></p><p>ஆனா, நானும் பார்க்கிறேன், சும்மா பேச்சு எடுத்தா என்னையும் கொச்சைப்படுத்திக்கிட்டு, நாம் தமிழர் கட்சியையும் கொச்சைப்படுத்திட்டு நீங்க இததான் பண்ணிட்டு இருக்கப் போறீங்கன்னா, ஐ அம் ரெடி, இனிமேல் என்னோட வழக்கை பத்தி நீங்க யாராவது கொச்சையா பேசுனிங்கன்னா, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்காக உறுதியாக பேசுவேன் என்று அந்த வீடியோவில் விஜயலட்சுமி பேசியிருக்கிறார்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ta" dir="ltr">அணில்ஸ் கூட்டத்துக்கும் இவங்களுக்கும் பிரச்சனை பெருசா இருக்கும் போல… <br><br>அம்பாசமுத்திரம் தொகுதிக்கே வந்து அண்ணன் சீமானுக்கு ஆதரவா பிரச்சாரம் பன்றேன்னு சொல்ல வைச்சுட்டானுக!<br> <a href="https://t.co/tjnTNjYgMX">pic.twitter.com/tjnTNjYgMX</a></p>&mdash; தமிழன் சத்யா (@tamilansathya02) <a href="https://x.com/tamilansathya02/status/2092676189932621880?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> தவெகவினரை தான் அவர் இப்படி பேசியிருக்கிறார் என்று நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். சிலர் வீடியோவை சரியாக பாருங்கள், இது விஜயலட்சுமி பேசியதில்லை, யாரோ எடிட் பண்ணி ஷேர் செய்திருக்கிறார்கள் என்றும் குஊறி வருகிறார்கள்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ta" dir="ltr">தவெக இளைஞர்கள் சகோதரி விஜயலட்சுமி அவர்களிடம் வீண் விவாதங்களை வைத்துக்கொள்ள வேண்டாம் <a href="https://x.com/hashtag/TNNeedsSeeMan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TNNeedsSeeMan</a> <a href="https://t.co/Vd69sORZ2O">pic.twitter.com/Vd69sORZ2O</a></p>&mdash; David Bilal Ashwin (@BillaAshwin) <a href="https://x.com/BillaAshwin/status/2092658459472969909?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-08-27T08:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அலாஸ்காவில் ஏரிக்குள் பாய்ந்த விமானம்: 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/small-plane-sink-into-seldovia-lagoon-4-dead-1787817044"></link>
            <id>https://news.lankasri.com/article/small-plane-sink-into-seldovia-lagoon-4-dead-1787817044</id>
            <summary type="text">அலாஸ்காவில் சிறிய ரக விமானம் ஒன்று ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அலாஸ்காவில் ஏரிக்குள் விழுந்த விமானம்அமெரிக்காவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அலாஸ்காவில் சிறிய ரக விமானம் ஒன்று ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><h2> அலாஸ்காவில் ஏரிக்குள் விழுந்த விமானம்</h2><p>அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள செல்டோவியா(Seldovia) கடற்கரைப் பகுதிக்கு அருகே உள்ள கடல்நீரேரிப் பகுதியில் (tidal lagoon) பைப்பர் PA-24 (Piper PA-24) ரக சிறிய விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p> சம்பந்தப்பட்ட விமானம் புதன்கிழமை பிற்பகலில் ஆஞ்சரேஜ் நகரில் உள்ள மெரில் ஃபீல்டு விமான நிலையத்தில் இருந்து செல்டோவியா உள்ளூர் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a937387-7fc6-4c5b-8b57-72be1f9a9ab5/26-6a8fec5605c3c.webp' /></p><p> தண்ணீரில் விழுந்து விபத்துக்குள்ளான விமானம் கிட்டத்தட்ட 17 அடி ஆழத்தில் மூழ்கிய நிலையில் அதில் பயணித்த 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.</p><p></p><h2> மீட்பு பணிகள் தீவிரம்</h2><p>
விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததும் அலாஸ்கா மாநில காவல்துறையினர் ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.</p><p> விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்த மக்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்க முயற்சி செய்தனர், ஆனால் அதிகமான ஆழம் மற்றும் விமானம் நீருக்குள் மூழ்கி இருந்ததால் அவர்களால் எந்தவொரு தீவிரமான முயற்சிகளையும் செய்ய முடியவில்லை.</p><p> மாலை 6 மணியளவில் மீட்புக் குழுவினர் விமானத்தின் இடிபாடுகளில் இருந்து உயிரிழந்த 4 பெரியவர்களின் உடல்களையும் மீட்டெடுத்தனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T07:50:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற உணவகத்திற்கு நீதிமன்றம் பிறபித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/jaffna-restaurant-fined-rs-9-5-lakh-1787816712"></link>
            <id>https://canadamirror.com/article/jaffna-restaurant-fined-rs-9-5-lakh-1787816712</id>
            <summary type="text">போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமை தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றி...</summary>
            <content type="html"><![CDATA[<p>போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமை தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 950,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.</p><p></p><p>நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் யாழ்ப்பாண மாவட்ட விசாரணை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 1 லீற்றர் குடிநீர் போத்தலொன்றுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த 120 ரூபாய் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக 200 ரூபாவிற்கு நுகர்வோர் ஒருவருக்கு குறித்த உணவகத்தால் விற்பனை செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a462196-615b-4fe0-8368-b69a43cc606c/26-6a8feb093b80b.webp' /></p><p>இதற்கமைவாக, குறித்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், கடந்த 25 ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதேவேளை, ஒரு பொருளைக் கொள்வனவு செய்யும் போது அதிலுள்ள அச்சிடப்பட்ட விலை மற்றும் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையைச் சரிபார்க்குமாறும், செலுத்தும் பணத்திற்கான சரியான பற்றுச்சீட்டைப் பெற்று அதைப் பாதுகாப்பாக வைத்திருக்க பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது. </p><p>

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்தல் அல்லது வேறு ஏதேனும் நுகர்வோர் சட்டங்களை மீறும் செயற்பாடுகள் குறித்த தகவல்கள் தெரிந்தால், அலுவலக நேரங்களில் 1977 என்ற நுகர்வோர் அவசர தொலைபேசி இலக்கத்தினூடாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு அறிவிக்குமாறு அந்த அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T07:46:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் உள்ள இலங்கையர்கள்: காத்மண்டு தூதரகத்தின் விசேட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/urgent-notice-for-sri-lankans-in-nepal-1787801934"></link>
            <id>https://ibctamil.com/article/urgent-notice-for-sri-lankans-in-nepal-1787801934</id>
            <summary type="text">புதிய இணைப்புநேபாளத்தில் நிலவும் தற்போதைய வெள்ளப்பெருக்கு அனர்த்த சூழ்நிலைக்கு மத்தியில், அங்கு வசிக்கும் மற்றும் தங்கியுள்ள இலங்கைப் பிரஜைகள் குறித்த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நேபாளத்தில் நிலவும் தற்போதைய வெள்ளப்பெருக்கு அனர்த்த சூழ்நிலைக்கு மத்தியில், அங்கு வசிக்கும் மற்றும் தங்கியுள்ள இலங்கைப் பிரஜைகள் குறித்த புள்ளிவிபரத் தகவல்களைக் காத்மண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ளது.</p><p>தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களின்படி, நேபாளத்தில் மொத்தம் 83 இலங்கையர்கள் உள்ளனர்.</p><p>பிரிவு வாரியான விபரங்கள்</p><p>
மாணவர்கள்: 23
</p><p>
பணியாளர்கள் (வேலை செய்பவர்கள்): 28
</p><p>
சுற்றுலாப் பயணிகள்: (குறிப்பிட்ட எண்ணிக்கை பதிவாகவில்லை)
</p><p>
நேபாளப் பிரஜைகளைத் திருமணம் செய்தவர்கள் : 5
</p><p>

ஏனையோர்: 27
</p><p>
மொத்த எண்ணிக்கை : 83</p><p></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>நேபாளத்தில் நிலவும் அவசர நிலைமையைக் கருத்தில் கொண்டு, அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் விழிப்புடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.</p><p>

வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அதிகம் ஏற்படக்கூடிய அபாயமுள்ள மாவட்டங்களில் அருகாமையில் வசிக்கும் இலங்கையர்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>இதுவரை அனர்த்ததில் சிக்கி&nbsp;500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம்</h2><p> 
</p><p>எனவே அந்நாட்டில் அவசர உதவி அல்லது ஒருங்கிணைப்பு தேவைப்படும் இலங்கையர்கள் காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தை 24 மணி நேர ஹாட்லைன் +977 9851048653 அல்லது slemk.kathmandu@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாக தொடர்புகொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/364bd7f6-1401-4309-90c9-3387051d9ed8/26-6a8fba964485e.webp' /></p><p>
</p><p>
எனினும், நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இதுவரை எந்தவொரு இலங்கையரும் பாதிக்கப்பட்டதாக தகவல் கிடைக்கவில்லை என இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>காணாமல் போனவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரும், அமெரிக்காவைச் சேர்ந்த 54 பேரும், இங்கிலாந்தைச் சேர்ந்த 33 பேரும் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரும் அடங்குகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T07:43:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழின விடுதலைக்காக உயிர்நீத்த தியாகி பொன் சிவகுமாரன் இறுதி நொடியில் பேசிய விடயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pon-sivakumaran-spoke-at-the-last-moment-1787815701"></link>
            <id>https://ibctamil.com/article/pon-sivakumaran-spoke-at-the-last-moment-1787815701</id>
            <summary type="text">தமிழின விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒருவரான தியாகி பொன் சிவகுமாரன் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் இருந்த தனது தாய் மற்றும் சகோத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழின விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒருவரான தியாகி பொன் சிவகுமாரன் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் இருந்த தனது தாய் மற்றும் சகோதரர்களிடம் பேசிய நெகிழ்ச்சியான வார்த்தைகள் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளன.</p><p>

மரணப்படுக்கையில் இருந்த சிவகுமாரனைப் பார்த்து கவலையடைந்த சகோதரியிடம், ”ஏன் அழுகிறாய், நான் மீண்டும் உன் வயிற்றில் பிறப்பேன், இந்த மண்ணின் விடுதலைக்காக போராடுவேன்”என்று தெரிவித்துள்ளார்.
</p><p>
தமிழின விடுதலைக்காக போராடிய பொன் சிவகுமாரன் 1950 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் - உரும்பிராயில் பிறந்து ஈழ விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழ் மாணவர்களின் கல்விக்காகவும் அயராது பாடுபட்டு 1974 ஆம் ஆண்டு தனது 24 ஆவது வயதில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பின் போது நஞ்சருந்தி உயிரிழந்தார்.</p><p>

ஈழப்போராட்ட வராற்றில் முதன் முதலில் நஞ்சருந்தி உயிர் நீத்த வீரரான பொன் சிவகுமாரன் உயர்தரத்தில் கல்வி கற்ற போது இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வித் தரப்படுத்தல் முறைக்கு எதிராக போராடி தமிழ் மாணவர்களின் எதிர்காலத்திற்கு சேவையாற்றியுள்ளார்.
</p><p>
மேலும் தியாகி பொன் சிவகுாரனின் மறைவின் பின்னர் பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியிலும் ஏராளமான மக்கள் பெரும் திரளாக திரண்டு அஞ்சலி செலுத்தியமை அக்கால கட்டத்தில் தமிழ் மக்களின் மனநிலையை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/AHIq_O-T3Ho" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T07:41:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தச் சட்டம் : சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் தோற்கடிப்பார்கள்! முன்னாள் அமைச்சர் நம்பிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amendment-people-will-defeat-in-referendum-1787814772"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amendment-people-will-defeat-in-referendum-1787814772</id>
            <summary type="text">அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலமானது ஜனநாயகத்திற்கும்
சர்வாதிகாரத்திற்கும் இடையிலான சமராகும் எனவும், இச்சமரில் சர்வாதிகாரத்தைத்
தோற்கடித்து மக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலமானது ஜனநாயகத்திற்கும்
சர்வாதிகாரத்திற்கும் இடையிலான சமராகும் எனவும், இச்சமரில் சர்வாதிகாரத்தைத்
தோற்கடித்து மக்கள் ஜனநாயகத்தைப் பாதுகாப்பார்கள் என முன்னாள் அமைச்சர்
ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.</p><p>
இது குறித்து ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது,"22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட
வேண்டும்.</p><p> அவ்வாறு நடத்தப்பட்டால் மக்கள் அதனை நிச்சயம் தோற்கடிப்பார்கள்.</p><h2>ஆதரவாளர்கள் மத்தியில்</h2><p>

மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் தாங்கள் தோல்வியடைவோம் என்பது அரசுக்கு
நன்றாகத் தெரியும் என்பதாலேயே தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d9810fb-76b2-4ed5-82db-5d7bd08abeda/26-6a8fe8fec47b0.webp' /></p><p>

அன்று இருந்த மக்கள் விடுதலை முன்னணிக்கும் இன்று இருக்கும் கட்சிக்கும்
இடையில் பாரிய வித்தியாசம் உள்ளது.</p><p> இதனால் அவர்களின் சொந்த ஆதரவாளர்கள்
மத்தியிலேயே தற்போது பெரும் அதிருப்தி நிலவி வருகின்றது.
</p><p>
இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு
வரும் போராட்டங்களின் பின்னணியில் தற்போதைய அரசே செயற்பட்டு வருகின்றது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T07:41:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[டாக்சிக் திரைப்படம் முதல் நாள் தமிழகத்தில் இத்தனை கோடி வசூலா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/toxic-movie-first-day-tamilnadu-box-office-1787813235"></link>
            <id>https://cineulagam.com/article/toxic-movie-first-day-tamilnadu-box-office-1787813235</id>
            <summary type="text">டாக்சிக்யஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் பிரமாண்டமாக நேற்று வெளிவந்த படம் டாக்சிக். இப்படத்தில் நயன்தாரா, கியாரா, ஹுமா, ருக்மினி, தாரா என இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>டாக்சிக்</h2><p>யஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் பிரமாண்டமாக நேற்று வெளிவந்த படம் டாக்சிக். இப்படத்தில் நயன்தாரா, கியாரா, ஹுமா, ருக்மினி, தாரா என இந்தியாவின் முன்னணி நடிகைகள் இதில் நடித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7584f40-025f-481c-b9bc-20e4d66a60af/26-6a8fdd774246d.webp' /></p><p>இந்நிலையில் இந்த படம் மிக மோசமான விமர்சனங்களை தான் ரசிகர்களிடம் பெற்று வருகிறது. ஆனாலும் இப்படத்தின் முதல் நாள் வசூலில் எந்த குறையும் இல்லை என்றே எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><h2>தமிழக&nbsp;வசூல் </h2><p> </p><p>

அதிலும் தமிழகத்தில் இந்த படம் முதல் நாள் மிகப்பெரிய வசூலை பெற்றுள்ளது. பலரும் இந்த படமெல்லாம் இங்கு ஓப்பனிங் வருமா என நினைத்த நிலையில் தமிழகத்தில் இப்படம் முதல் நாள் ரூ 7 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b35732b8-feed-4c6b-8723-d6f9cbc60de9/26-6a8fdd7686949.webp' /></p><p>இது நல்ல <a href="https://www.youtube.com/watch?v=7TwkpFlc0dA" target="_blank">வசூல் </a>என்றாலும், இரண்டாம் நாளான இன்று வசூல் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-27T07:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யேர்மனியில் ஊஞ்சல் இராட்டினத்தில் சிக்கிய பார்வையாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/spectators-trapped-swing-ride-in-germany-hamburg-1787807638"></link>
            <id>https://canadamirror.com/article/spectators-trapped-swing-ride-in-germany-hamburg-1787807638</id>
            <summary type="text">&amp;nbsp; யேர்மனியில் ஊஞ்சல் இராட்டினத்தில் சிக்கியிருந்த திருவிழா பார்வையாளர்கள் மீட்கப்பட்டனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, 70 மீட்டர் (230 அடி) நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யேர்மனியில் ஊஞ்சல் இராட்டினத்தில் சிக்கியிருந்த திருவிழா பார்வையாளர்கள் மீட்கப்பட்டனர்.
</p><p>
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, 70 மீட்டர் (230 அடி) நீளமுள்ள அந்த சவாரி வாகனம் பழுதடைந்து நகர்வதை நிறுத்தியதால், 23 பயணிகள் பாதி வழியில் சிக்கிக்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62cbea48-8ccf-4cb6-843f-355919b18e08/26-6a8fc797cb7f9.webp' /></p><p>
மத்திய ஹாம்பர்க்கில் உள்ள ஊஞ்சல் இராட்டினத்தில் 25 மீட்டர் (82 அடி) உயரத்தில் சிக்கிக்கொண்டிருந்த சுமார் இருபதுக்கும் மேற்பட்ட திருவிழா பார்வையாளர்கள், 90 நிமிடப் போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டனர்.
</p><p>
ஹம்பர்கர் டோம் திருவிழா, நகரின் செயிண்ட்-பாலி பகுதியில் ஆண்டுக்கு மூன்று முறை நடத்தப்படுகிறது. இது ஜெர்மனியின் மிக நீண்ட காலமாக நடைபெறும் மற்றும் அதிக பார்வையாளர்களைக் கொண்ட கேளிக்கைச் சந்தைகளில் ஒன்றாகும். ஆண்டுதோறும் சுமார் 10 மில்லியன் விருந்தினர்களை இது ஈர்க்கிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T07:37:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தின் எல்லை தாண்டிய பேரழிவு! காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 1300 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/latest-update-on-nepal-floods-1787813698"></link>
            <id>https://ibctamil.com/article/latest-update-on-nepal-floods-1787813698</id>
            <summary type="text">நேபாளத்திலும் சீனாவிலும் காணாமல் போனதாகப் பட்டியலிடப்பட்டவர்களின் எண்ணிக்கை வியத்தகு அளவில் உயர்ந்துள்ளது.இது இமயமலைப் பகுதியில் அரங்கேறிய எல்லை தாண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்திலும் சீனாவிலும் காணாமல் போனதாகப் பட்டியலிடப்பட்டவர்களின் எண்ணிக்கை வியத்தகு அளவில் உயர்ந்துள்ளது.</p><p>இது இமயமலைப் பகுதியில் அரங்கேறிய எல்லை தாண்டிய பேரழிவின் அளவை எடுத்துக்காட்டுகிறது.
</p><p>இதன்படி நேபாளத்தில் 826 பேர் காணாமல் போயுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சமீபத்திய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&amp;href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1784502835906575%2F&amp;show_text=false&amp;width=560&amp;t=0" width="560" height="314" style="border-width: medium; border-style: none; overflow: hidden;" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p></p><h2>அதிகாரப்பூர்வ அறிக்கை</h2><p>எனினும் எதிர்வு கூறல் தகவல்களின் அடிப்படையில்,&nbsp; காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 1,300-ஐத் தாண்டியிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37496ddb-b21d-4247-80c3-3e7851a22486/26-6a8fe66942835.webp' /></p><p>அதிகாரப்பூர்வ அறிக்கைகளின்படி காணாமல் போன 590 சுற்றுலாப் பயணிகளில், 476 பேர் வெளிநாட்டினர் என்றும், மற்றும் 114 பேர் நேபாள நாட்டவர் எனவும் கூறப்பட்டுள்ளது.</p><p>
இந்தப் பட்டியலில் 177 இந்தியர்கள், 63 அமெரிக்கர்கள், 53 உக்ரேனியர்கள், 34 அவுஸ்திரேலியர்கள், 33 பிரித்தானியர்கள், 25 கனடியர்கள், 8 ஜெர்மானியர்கள், 6 சிங்கப்பூரர்கள் மற்றும் 6 தென்னாப்பிரிக்கர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>ஆரம்பகட்டப் பேரழிவு ஏற்பட்டு சுமார் 22 மணி நேரத்திற்குப் பிறகு, சீனா-நேபாள வர்த்தகத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் கையாளும், கடுமையாகப் பாதிக்கப்பட்ட துறைமுகமான கியிராங் துறைமுகத்தை சீன அவசரகால மீட்புக் குழுவினர் வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> மேலும்,&nbsp; எல்லைப் பிராந்தியத்தில் உள்ள மற்ற முக்கிய வர்த்தக உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார நடவடிக்கைகள் நீண்டகாலம் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T07:37:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் சிக்கியுள்ள 106 தமிழர்கள் - அமைச்சர் ராஜ்மோகன் சட்டமன்றத்தில் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/minister-rajmohan-says-106-tamil-peoples-in-nepal-1787816203"></link>
            <id>https://news.lankasri.com/article/minister-rajmohan-says-106-tamil-peoples-in-nepal-1787816203</id>
            <summary type="text">106 tamil peoples in nepal : நேபாளத்தில் 106 தமிழர்கள் சிக்கியுள்ளதாக சட்டமன்றத்தில் அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்துள்ளார்.

நேபாளத்தில் சிக்கியுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>106 tamil peoples in nepal : நேபாளத்தில் 106 தமிழர்கள் சிக்கியுள்ளதாக சட்டமன்றத்தில் அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்துள்ளார்.
</p><h3>
நேபாளத்தில் சிக்கியுள்ள 106 தமிழர்கள்
</h3><p>
நேபாளத்தில் நேற்று பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0a245d7-3b46-41c2-8d66-89cccdf3c123/26-6a8fe90d717bd.webp' /></p><p> 

1,500க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் உள்ளது.&nbsp;</p><p></p><p>

இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 103 பேர் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 3 தமிழர்கள் நேபாளத்தில் சிக்கியுள்ளதாக பள்ளிக்கல்விதுறை அமைச்சர் ராஜ்மோகன் தமிழ்நாடு சட்டமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cccb90e5-2a43-4eb8-a3f8-101efc98921d/26-6a8fe90cadc85.webp' /></p><p> 

இதில் கும்பகோணத்தை சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற சுற்றுலா நிறுவனம் மூலம், தமிழ்நாட்டை சேர்ந்த 54 பேர் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 57 பேர் நேபாளத்திற்கு சென்றுள்ளனர்.&nbsp;</p><p>

இதில், ஒரு பேருந்தில் உள்ள 20 பேர் பாதுகாப்பாக ராணுவ முகாமில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களை சாலை வழியாக காட்மாண்டுக்கு கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீதமுள்ள 37 பேர் குறித்து தகவல் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.</p><p>

சென்னையை சேர்ந்த மகாதேவ் கைலாஷ் ஏஜென்சி மூலம் 49 தமிழர்கள் நேபாளம் சென்றுள்ளனர். அவர்களின் நிலை குறித்தும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அவர்களை மீட்பது தொடர்பாக அங்குள்ள இந்திய தூதரகத்திடம் பேசி வருகிறோம்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T07:37:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க துாதரகங்களில் விசா நேர்காணல்கள் நிறுத்தம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/world-wise-visa-interviews-us-embassies-suspended-1787816351"></link>
            <id>https://jvpnews.com/article/world-wise-visa-interviews-us-embassies-suspended-1787816351</id>
            <summary type="text">&amp;nbsp;உலகெங்கிலும் உள்ள அமெரிக்க துாதரகங்களில் விசா நேர்காணல்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளதாக தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உலகெங்கிலும் உள்ள அமெரிக்க துாதரகங்களில் விசா நேர்காணல்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், குடியேற்ற கட்டுப்பாடு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார். மாணவர்கள், வேலை பார்ப்போர், வர்த்தகம், சுற்றுலா என பல விசாக்களில் கடும் விதிமுறைகளை கொண்டு வந்துள்ளார்.</p><p></p><h2>காலவரையின்றி நிறுத்தம்</h2><p>



அந்த வகையில் சுற்றுலா அல்லது வணிகத்திற்காக வந்து, அகதி அந்தஸ்து கோரியுள்ள, 2 இலட்சம் வெளிநாட்டினரின் விசாக்களை ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
</p><p>


இந்நிலையில், உலகெங்கிலும் உள்ள அமெரிக்க துாதரகங்கள் மற்றும் துாதரக அலுவலகங்களில் விசா நேர்காணல்கள் நேற்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
</p><p>


அமெரிக்க அரசு வழங்கும் நலத்திட்டங்களைச் சார்ந்து வாழும் வாய்ப்புள்ள விண்ணப்பதாரர்களை கண்டறிந்து நிராகரிப்பது மற்றும் விசா விண்ணப்பங்களை மிகவும் தீவிரமாகவும், ஒரே மாதிரியாகவும் ஆய்வு செய்வது குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


அதேசமயம் நிறுத்தப்பட்ட நேர்காணல் எப்போது மீண்டும் தொடங்கும் என்ற விபரத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிடவில்லை</p>]]></content>
            <updated>2026-08-27T07:36:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[AI தொழில்நுட்பத்தால் மூளைக்கட்டியை அகற்றி பிரித்தானிய மருத்துவர்கள் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/london-neurosurgeons-ai-operation-brain-tumour-1787814129"></link>
            <id>https://ibctamil.com/article/london-neurosurgeons-ai-operation-brain-tumour-1787814129</id>
            <summary type="text">நேரடி செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் மூளைக் கட்டியை அகற்றி பிரித்தானிய மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.&amp;nbsp;பிரித்தானியாவின் பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேரடி செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் மூளைக் கட்டியை அகற்றி பிரித்தானிய மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.&nbsp;</p><p>பிரித்தானியாவின் பெட்ஃபோர்ட்ஷயரை சேர்ந்த 48 வயதுடைய ரைஸ் ஹிபர்ட் என்பவரின் பிட்யூட்டரி சுரப்பியில் இருந்த கட்டியை இவ்வாறு அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.</p><p>லண்டனில் உள்ள தேசிய நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவமனையின் (NHNN) மருத்துவர்களால் இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>மூளைக் கட்டி&nbsp;அறுவை சிகிச்சை</h2><p>

</p><p>அறுவை சிகிச்சையின் போது, AI தொழில்நுட்பம் மூளையின் நேரலைக் காட்சிகளை நிகழ்நேரத்தில் பகுப்பாய்வு செய்து, முக்கியமான இரத்த நாளங்கள் மற்றும் பார்வை நரம்புகள் உள்ளிட்ட பகுதிகளைத் தனித்தனியாக அடையாளம் காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42674f4d-6152-47f3-8186-71c84bc9b468/26-6a8fe5c15ffd6.webp' /></p><p>இதன் மூலம், கட்டியை அகற்றும்போது தவிர்க்கவேண்டிய பகுதிகளை துல்லியமாக கண்டறிய முடிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> 

பிட்யூட்டரி சுரப்பி, இரத்த நாளங்கள் மற்றும் பார்வை நரம்புகள் ஒன்றுக்கொன்று மிக அருகில் அமைந்துள்ளதால், அறுவை சிகிச்சையின் போது சிறிய அளவிலான தவறுகூட பார்வையைப் பாதிக்கக்கூடும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.</p><p>

2024ஆம் ஆண்டு கட்டி இருப்பது கண்டறியப்பட்ட ஹிபர்ட், அறுவை சிகிச்சை மூலம் தனது பார்வை பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது மீண்டும் தனது பணிக்குத் திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>

இந்த AI தொழில்நுட்பம் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் (UCL) ஆராய்ச்சியாளர்களால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான மூளை அறுவை சிகிச்சைக் காணொளிகளைப் பயன்படுத்திப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T07:34:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் மூழ்கி நபர் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/person-dies-drowning-sea-at-dickwella-galle-1787815833"></link>
            <id>https://jvpnews.com/article/person-dies-drowning-sea-at-dickwella-galle-1787815833</id>
            <summary type="text">&amp;nbsp; காலி திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதிகம கடற்கரையில் நேற்று புதன்கிழமை (26) நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; காலி திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதிகம கடற்கரையில் நேற்று புதன்கிழமை (26) நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
உயிரிழந்தவர் திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபராவார்.

குறித்த நபர் கடலில் நீராடிக் கொண்டிருந்த போதே நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b107ddb-c061-4217-a7ef-a8f32f691b36/26-6a8fe79b4eeb2.webp' /></p><p>

மேலும், இச் சம்பவம் குறித்து திக்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-27T07:27:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/old-men-death-in-road-accident-1787815337"></link>
            <id>https://ibctamil.com/article/old-men-death-in-road-accident-1787815337</id>
            <summary type="text">அனுராதபுரம் - திறப்பனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து திறப்பனை காவல்துறை பிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் - திறப்பனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
குறித்த விபத்து திறப்பனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் ஞானிக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது </p><p>





திறப்பனையிலிருந்து கல்குளம் நோக்கிச் சென்ற வான் ஒன்று சைக்கிள் ஓட்டுநர் மீது மோதிய விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>சாரதி கைது</h2><p>






 விபத்தில் பலத்த காயமடைந்த சைக்கிள் ஓட்டுநர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b4ca328-538d-4a65-8632-9e4415415fd8/26-6a8fe5abdcf0f.webp' /></p><p>





உயிரிழந்தவர் 66 வயதுடைய கல்குளம் பகுதியைச் சேர்ந்த முதியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>





வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், திறப்பனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T07:24:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் சிக்கிய 24 கனடியர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் மாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/24-canadians-reportedly-among-the-missing-1787815303"></link>
            <id>https://canadamirror.com/article/24-canadians-reportedly-among-the-missing-1787815303</id>
            <summary type="text">நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளத்தில் கட்டிடங்கள், பாலங்கள் மற்றும் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டு பேரழிவு ஏற்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளத்தில் கட்டிடங்கள், பாலங்கள் மற்றும் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டு பேரழிவு ஏற்பட்டுள்ளது.
</p><p> போதேகோசி ஆற்றுப் பகுதியில் பேரிரைச்சலுடன் சீறிப் பாய்ந்த வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் அடித்துச் செல்லப்பட்ட பயங்கரக் காட்சிகள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன.
இந்தச் சம்பவத்தில் 24 கனடியர்கள் காணாமல் போயுள்ளதாக நேபாள சுற்றுலா வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p> 
மேலும் அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் காணாமல் போயுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/887cecda-9aea-4354-9707-6f2c21fe6e6d/26-6a8fe58888b14.webp' /></p><p>
</p><p>இந்த பேரழிவு குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி நேபாளத்தின் போதேகோசி ஆற்றுப் பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளம் மிகவும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது என கனடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.</p><p>
துயரத்தில் இருக்கும் மக்கள், அன்பானவர்களை இழந்தவர்கள் மற்றும் உறவுகளின் தகவல்களுக்காகக் காத்திருப்பவர்கள் அனைவருக்கும் கனடியர்களின் எண்ணங்கள் துணையாக இருக்கும். எங்களது அரசாங்கம் இந்தச் சூழ்நிலையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
</p><p>கனடாவின் வெளியுறவுத் துறை தூதரக அதிகாரிகள் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட கனடியர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
</p><p>இந்தச் சம்பவத்தால் கனடாவில் வாழும் நேபாள மற்றும் திபெத்திய சமூகத்தினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T07:23:54+00:00</updated>
        </entry>
    </feed>
