<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-31T13:55:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தப்பியோடிய கைதி பற்றைக்காட்டிற்குள் மறைந்திருந்த நிலையில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/escaped-prisoner-in-jaffna-arrested-1788182901"></link>
            <id>https://ibctamil.com/article/escaped-prisoner-in-jaffna-arrested-1788182901</id>
            <summary type="text">யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி
தப்பியோடிய நிலையில், இளவாலை பகுதியில் வைத்து மீள கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி
தப்பியோடிய நிலையில், இளவாலை பகுதியில் வைத்து மீள கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
யாழ்ப்பாணம் இளவாலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது
சிறுமியை கடந்த 2021ஆம் ஆண்டு பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்திய
குற்றத்திற்காக 24 வருட சிறைத்தண்டனையும் , பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 இலட்ச
ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், நஷ்ட ஈட்டை வழங்க தவறின் மேலும் 3
ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என யாழ்ப்பாண மேல் நீதிமன்ற
நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்து இருந்தது.
</p><p>
</p><h2>யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதி</h2><p>அந்நிலையில் மறுநாள் சனிக்கிழமை திடீர் சுகவீனம் என கூறி
கைதி, சிறைக்காவலர்களின் பாதுகாப்புடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட நிலையில் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் குறித்த கைதி
வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b5e4c63-114d-4b41-b5fd-394b70cf96da/26-6a9584cdce75d.webp' /></p><p>
</p><p>
கைதி தப்பிச் சென்ற நிலையில் ,சிறைக்காவலர்கள் தேடுதல் நடவடிக்கையில்
ஈடுபட்டதுடன் , யாழ்ப்பாண காவல்துறை விசேட குழுவினரும் தேடுதல் நடவடிக்கையில்
ஈடுபட்டிருந்த நிலையில், இளவாலை பகுதியில் உள்ள பற்றைக்காட்டிற்குள்
மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>
</p><h2>பிறிதொரு வழக்கு தாக்கல்</h2><p>கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர், சிறைக்
காவலர்களின் பாதுகாப்பில் இருந்து தப்பிச்சென்ற குற்றச்சாட்டில் பிறிதொரு
வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
எடுத்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fe290ef-5b54-4b8d-ae66-1905f960f19c/26-6a9584ce8120a.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T13:42:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் போக்குவரத்து வசதியின்றி தவிக்கும் 693 குடும்பங்கள் - அதிகாரிகளிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lack-of-transportation-facilities-in-kilinochchi-1788183602"></link>
            <id>https://tamilwin.com/article/lack-of-transportation-facilities-in-kilinochchi-1788183602</id>
            <summary type="text">கிளிநொச்சி - முட்கொம்பன் கிராமத்திற்கு மேலதிக பேருந்து சேவையை வழங்குமாறு
கோரிக்கை மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது. 

இந்த மனு இன்று(31.08.2026) கிளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - முட்கொம்பன் கிராமத்திற்கு மேலதிக பேருந்து சேவையை வழங்குமாறு
கோரிக்கை மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த மனு இன்று(31.08.2026) கிளிநொச்சி அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

கிளிநொச்சி - பூனகரி, நல்லூர் KN-59 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட மக்களின்
நலன் கருதி, மேலதிக பேருந்து சேவையை வழங்குமாறு புதிய பாதை கொத்தனி
அமைப்பினால் இலங்கை போக்குவரத்துச் சபையிடம் (SLTB) உத்தியோகபூர்வ கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1c9e4d8-ad1c-4011-ae81-fce5af3bd435/26-6a95846d3dc0a.webp' /></p><p>
</p><p>
குறித்த கிராம அலுவலர் பிரிவில் வசதி குறைந்த 693 குடும்பங்கள் வசித்து வரும்
நிலையில், அங்குள்ள பாடசாலை மாணவர்கள், அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள்
தங்களது தினசரி பயணங்களுக்கு பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாகவும், அவர்கள் பேருந்து சேவையை நம்பியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T13:41:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்டத்தில் குதித்த மூதூர் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/muttur-divisional-secretariat-officers-protest-1788181706"></link>
            <id>https://tamilwin.com/article/muttur-divisional-secretariat-officers-protest-1788181706</id>
            <summary type="text">திருகோணமலை- மூதூர் பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை- மூதூர் பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>குறித்த போராட்டமானது இன்று(31.8.2026) பிரதேச செயலகத்துக்கு முன்னால் இடம்பெற்றது.</p><h2>போராட்டம் </h2><p>
</p><p>
அரச மற்றும் மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற் சங்கம் இதனை நாடு
பூராகவும் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அதற்கு வலுசேர்க்கும் முகமாக
தம்பலாகாமம் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் குறித்த கவனயீர்ப்பு
போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d242737-318e-437c-8e1b-4475590b8176/26-6a9580dfa3a29.webp' /></p><p>
இதில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சேவை பிரமாணக் குறிப்பு, MN5 சம்பள
அளவுத் திட்டம் மற்றும் விசேட தரத்துடன் கூடிய பதவி உயர்வு முறை உள்ளிட்ட
அபிவிருத்தி உத்தியோகத்தர் களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்கு,
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை யாப்பை சீர்திருத்தும் செயற்பாட்டை விரைவாக்கு,
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை நிறுவு போன்ற பல விடயங்களை முன்வைத்து
கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T13:38:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக் தொடரில் யாழ் - கண்டி அணிகள் சிறப்பு ஆட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-tennis-premier-league-series-1788183101"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-tennis-premier-league-series-1788183101</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கை டென்னிஸ் சங்கம் (SLTA) ஏற்பாடு செய்த முதலாவது இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக் (SLTPL), 2026 ஆகஸ்ட் 27 முதல் 30 வரை கொழும்பிலுள்ள SLTA டென்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கை டென்னிஸ் சங்கம் (SLTA) ஏற்பாடு செய்த முதலாவது இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக் (SLTPL), 2026 ஆகஸ்ட் 27 முதல் 30 வரை கொழும்பிலுள்ள SLTA டென்னிஸ் வளாகத்தில் நான்கு நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளுடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது.</p><p>

இந்த நகரங்களை அடிப்படையாகக் கொண்ட தொழில்முறை பிராஞ்சைஸ் டென்னிஸ் தொடரில் கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, வெலிகம, மட்டக்களப்பு, நுவரெலியா மற்றும் குருநாகல் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்றன. </p><p>இலங்கையின் முன்னணி உள்ளூர் வீரர்களுடன் சர்வதேச வீரர்களும் இந்த தொடரில் கலந்துகொண்டனர்.</p><p></p><h2>நிலையான வர்த்தக தளம்</h2><p>

இலங்கையில் போட்டித் தரமிக்க டென்னிஸின் தரத்தை உயர்த்துவதோடு, விளையாட்டின் நீண்டகால வளர்ச்சிக்காக அடிமட்ட மற்றும் உயர்திறன் பயிற்சி திட்டங்களில் மீள்முதலீடு செய்யக்கூடிய நிலையான வர்த்தக தளத்தை உருவாக்கும் நோக்கத்திலேயே SLTPL அறிமுகப்படுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d091bbe4-cfd9-4034-b29d-58d16156966f/26-6a9582aa48237.webp' /></p><p>
</p><p>
வீரர்கள் போட்டித்தன்மை வாய்ந்த ஏலத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் தத்தமது பிராஞ்சைஸ் அணிகளில் இணைக்கப்பட்டனர். எட்டு அணிகளும் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, குழுநிலைப் போட்டிகளில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் தரவரிசை நிர்ணயிக்கப்பட்டது. </p><p>அதன் பின்னர் முதல் இடம் முதல் எட்டாவது இடம் வரை வகைப்படுத்தும் போட்டிகள் நடத்தப்பட்டன. </p><p>குழு A-யில் கண்டி கிங்ஸ் 122 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றது. குழு B-யில் யாழ்ப்பாணம் ஃபிளமிங்கோஸ் 120 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. </p><p>இவ்விரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தொடக்க SLTPL தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.
</p><p>
வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதிப் போட்டியில், கண்டி கிங்ஸ், யாழ்ப்பாணம் ஃபிளமிங்கோஸை வீழ்த்தி, இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக்கின் முதல் சாம்பியன் அணியாக மகுடம் சூடியது.</p><p></p><h2>யாழ்ப்பாணம் ஃபிளமிங்கோஸ்</h2><p> யாழ்ப்பாணம் ஃபிளமிங்கோஸ் இரண்டாம் இடத்தைப் பெற்றது.

யாழ்ப்பாணம் ஃபிளமிங்கோஸ் அணி, போட்டியின் ஐந்து தனிநபர் விருதுகளில் மூன்றை வென்று சிறப்பான சாதனையைப் பதிவு செய்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc63eda4-eebe-4352-88d0-35ff4fd5e1d9/26-6a95823ed48f7.webp' /></p><p> </p><p>வில்சன் நியாயமான விளையாட்டு (Fair Play) விருது, ஆண்கள் பிரிவு – மிகவும் மதிப்புமிக்க வீரர்&nbsp; விருது, சிறுவர்கள் பிரிவு – மிகவும் மதிப்புமிக்க வீரர்&nbsp; விருது&nbsp;என்பவற்றை பெற்றுக்கொண்டது.</p><p> இந்த தொடரின் மொத்த பரிசுத்தொகை 6.5 மில்லியன் இலங்கை ரூபாய் ஆகும். </p><p>சாம்பியன் பட்டம் வென்ற கண்டி கிங்ஸ் அணிக்கு 2.5 மில்லியன் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. </p><p>இரண்டாம் இடத்தைப் பெற்ற யாழ்ப்பாணம் ஃபிளமிங்கோஸ் அணிக்கு 1.5 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது.
</p><p>
முதன்முறையாக நடைபெற்ற SLTPL தொடரின் வெற்றிகரமான நிறைவு, இலங்கை டென்னிஸ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.</p><p> இந்த தொடர் நாட்டின் வளர்ந்து வரும் திறமையான வீரர்களை வெளிக்கொணர்ந்ததுடன், சர்வதேச பங்கேற்பையும் ஈர்த்து, இலங்கையில் டென்னிஸ் விளையாட்டின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கான நிலையான பிராஞ்சைஸ் அடிப்படையிலான போட்டி அமைப்பிற்கும் உறுதியான அடித்தளத்தை அமைத்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T13:33:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டெய்னருக்குள் சிக்கிய 420 கிலோ 'ஐஸ்; மாட்டினார் பிரபல தொழிலதிபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/420-kg-ice-drug-seized-container-businessman-1788180486"></link>
            <id>https://jvpnews.com/article/420-kg-ice-drug-seized-container-businessman-1788180486</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றிலிருந்து போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர்...</summary>
            <content type="html"><![CDATA[<p><a href="https://jvpnews.com/article/narcotics-at-colombo-port-from-pakistan-1788172052" target="_blank">&nbsp; கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன்</a> ஒன்றிலிருந்து போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 

அங்கிருந்து கைப்பற்றப்பட்ட ‘ஐஸ்’ (ICE) வகை போதைப்பொருளின் அளவு 420 கிலோகிராம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eedf3a17-9f88-400d-88d6-a36e1f5b2bd0/26-6a957808487ba.webp' /></p><p>
</p><p>
 

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நீதிமன்ற உத்தரவைப் பெற்று மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><p>

 

இதன்போது, குறித்த கொள்கலனில் மறைத்து வைத்து பாகிஸ்தானில் இருந்து இந்தப் போதைப்பொருள் தொகை இலங்கை கொண்டுவரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-31T13:32:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதாகி எட்டு மாதங்களின் பின் வெளியான வெனிசுலா முன்னாள் அதிபர் புகைப்படம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/photo-of-former-venezuelan-president-released-1788159702"></link>
            <id>https://canadamirror.com/article/photo-of-former-venezuelan-president-released-1788159702</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;அமெரிக்க காவலில் உள்ள வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, தன்னை பற்றிய புகைப்படங்களை முதன்முறையாக சமூக வலைதளங்களில் வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;அமெரிக்க காவலில் உள்ள வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, தன்னை பற்றிய புகைப்படங்களை முதன்முறையாக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். </p><p>

கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட பின்னர், சுமார் எட்டு மாதங்களுக்கு பிறகு அவர் காவலில் இருக்கும் தோற்றத்தை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3437b06b-3db8-46e5-9f55-f1c16e93b889/26-6a9526d86761a.webp' /></p><h2>நியூயார்க்கில்&nbsp; &nbsp;புரூக்ளின் மெட்ரோபாலிட்டன் தடுப்பு மையத்தில் ...</h2><p>
 
 
ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியிடப்பட்ட அந்த இரண்டு புகைப்படங்களிலும் மதுரோ சாம்பல் நிற டிராக்சூட் மற்றும் வெள்ளை நிற காலணிகள் அணிந்தபடி புன்னகையுடன் காணப்படுகிறார்.
</p><p>
 இரு கைகளாலும் வெற்றி சின்னம் காட்டும் வகையிலும் அவர் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் மெட்ரோபாலிட்டன் தடுப்பு மையத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. </p><p>

எனினும், அவை சமீபத்தில் எடுக்கப்பட்டவை அல்ல என்றும், ஜூன் 25, 2026 என்ற தேதி புகைப்படங்களில் இடம்பெற்றுள்ளது.
</p><p> 
தனது பேரக்குழந்தைகள், குழந்தைகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு அன்பையும் நம்பிக்கையையும் தெரிவிக்கும் வகையில் மதுரோ இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 தானும் தனது மனைவி சிலியா புளோரஸும் உறுதியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். </p><p>மேலும், தங்களது ஆதரவாளர்களின் பிரார்த்தனைகள் மற்றும் ஒற்றுமைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
 
மதுரோ மற்றும் அவரது மனைவி ஜனவரியில் வெனிசுலாவில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.</p><p> 

போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதம் தொடர்பான குற்றச்சாட்டுகளை அவர்கள் எதிர்கொள்கின்றனர் . எனினும் இந்த குற்றச்சாட்டுகளை மதுரோ மறுத்துள்ள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-31T13:31:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் ஏதோ கோவத்துல போட்டேன், ஆனா இப்படி மாறனும்னு நினைக்கல - நாஞ்சில் விஜயன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/nanjil-vijayan-talk-about-recent-controversy-1788169800"></link>
            <id>https://viduppu.com/article/nanjil-vijayan-talk-about-recent-controversy-1788169800</id>
            <summary type="text">நாஞ்சில் விஜயன் விஜய் டிவியில் பல வருடங்களாக காமெடி ஷோக்களில் கலக்கி வருபவர். 

இவர் சமீபத்தில் போட்ட பதிவு தான் ஒட்டுமொத்த இணையத்தையுமே அதிர்ச்சியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாஞ்சில் விஜயன் விஜய் டிவியில் பல வருடங்களாக காமெடி ஷோக்களில் கலக்கி வருபவர். 

இவர் சமீபத்தில் போட்ட பதிவு தான் ஒட்டுமொத்த இணையத்தையுமே அதிர்ச்சியாக்கியது. </p><p>இவர் தன் மனைவியை பிரிவதாக ஒரு போஸ்ட் போட, அதோடு திருநங்கை வைஷ்ணவி சாபம் பழித்து விட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/980da209-7e2e-4a01-800b-1784b8789d5b/26-6a954e4b7f069.webp' /></p><p>
</p><p>
அதனால் தான் என் மனைவியை நான் பிரிந்தேன் என அவர் கூறினார், இந்த போஸ்ட்டை போட்ட சில நிமிடங்களில் அதை டெலிட் செய்துள்ளார்.
</p><p>
ஏனெனில் நாஞ்சில் விஜயனின் நண்பர்கள் பலரும், 'இதெல்லாம் உங்களுக்குள் பேசி முடிக்கும் விஷயம், எல்லோர் வாழ்க்கையிலும் நடப்பது, ஆனால் அதை நீ போஸ்ட் போட போக தற்போது ஏதோ பெரிதாக பேசுபொருள் ஆகிவிட்டது' என சொல்ல, நாஞ்சில் விஜயன் இனி இதுபோன்ற விஷயங்களுக்கு உடனே இணையத்தில் ரியாக்ட் செய்யகூடாது என முடிவு செய்துள்ளாராம்.</p>]]></content>
            <updated>2026-08-31T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ள நிவாரணம்: சாட்ஜிபிடியை பயன்படுத்தி மோசடி செய்த நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-uses-chatgpt-for-nepal-flood-relief-scam-1788182900"></link>
            <id>https://news.lankasri.com/article/man-uses-chatgpt-for-nepal-flood-relief-scam-1788182900</id>
            <summary type="text">nepal man uses chatgpt to fake nepal flood donation: நேபாள வெள்ள நிவாரணத்தில் சாட்ஜிபிடியை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட நபரை நேபாள காவல்துறை கைது செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>nepal man uses chatgpt to fake nepal flood donation: நேபாள வெள்ள நிவாரணத்தில் சாட்ஜிபிடியை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட நபரை நேபாள காவல்துறை கைது செய்துள்ளது.
</p><h3>
நேபாள வெள்ள நிவாரணம்
</h3><p>
சீன மற்றும் நேபாள எல்லையில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 900 ஐ கடந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72e108c3-8757-49ce-b185-90292988248c/26-6a95817668498.webp' /></p><p>
இதற்கான மீட்பு பணிகளை நேபாள ராணுவம் மேற்கொண்டு வருகிறது. இந்தியா மற்றும் சீனாவிலிருந்து சுரங்க மீட்பு குழு நேபாளம் சென்று மீட்பு பணிகளில் உதவி வருகிறது. </p><p>

மேலும், புனரமைப்புப் பணிகளுக்கு 5 பில்லியன் டொலர் வரை செலவாகும் என அரசு ஆரம்பகட்ட மதிப்பீடு செய்துள்ளதாக நேபாள நிதியமைச்சர் Swarnim Wagle தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p> 

இந்நிலையில், நேபாள வெள்ள நிவாரணத்திற்கு நிதியளிப்பவர்களை குறிவைத்து நடக்கும் இணைய மோசடி குறித்து நேபாள காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது. </p><h3> 

சாட்ஜிபிடி மூலம் மோசடி </h3><p>

நேபாளத்தின் ராமேச்சாப் மாவட்டத்தில் உள்ள கோகுல்கங்கா ஊரக நகராட்சியைச் சேர்ந்த 32 வயதான பகவான் கர்கி என்பவர், பிரதமரின் பேரிடர் நிவாரண நிதிக்கு, 1,20,000 நேபாள ரூபாய் பணம் நன்கொடை வழங்கியதாக சாட்ஜிபிடி மூலம் போலியான பரிவர்த்தனை அறிக்கையை உருவாக்கியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12963b82-9eaa-45b9-af28-dbf1a787bef5/26-6a9581757f87c.webp' /></p><p>

அந்த அறிக்கையை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்த அவர், நிவாரண நிதி திரட்டுவதாகக் கூறி தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட ஒரு க்யூஆர் குறியீட்டையும் இணைத்திருந்தார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ne" dir="ltr">प्रधानमन्त्री दैवी प्रकोप उद्धार कोषको नाममा नक्कली स्टेटमेन्ट बनाएर ठगी गर्ने एक जना पक्राउ<a href="https://x.com/hashtag/NepalPolice?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#NepalPolice</a> <a href="https://x.com/hashtag/BelieveinBlue?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BelieveinBlue</a> <a href="https://x.com/hashtag/ToServeandProtect?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ToServeandProtect</a> <a href="https://x.com/hashtag/%E0%A4%A8%E0%A5%87%E0%A4%AA%E0%A4%BE%E0%A4%B2%E0%A4%AA%E0%A5%8D%E0%A4%B0%E0%A4%B9%E0%A4%B0%E0%A5%80?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#नेपालप्रहरी</a> <a href="https://t.co/CAOx4EExco">pic.twitter.com/CAOx4EExco</a></p>&mdash; Nepal Police (@NepalPoliceHQ) <a href="https://x.com/NepalPoliceHQ/status/2093921566786813957?ref_src=twsrc%5Etfw">August 30, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
இது குறித்து தகவலறிந்த நேபாள காவல்துறை, மோசடி மற்றும் டிஜிட்டல் தவறான சித்தரிப்பு சட்டங்களின் கீழ் அவரை கைது செய்துள்ளது. </p><p>

இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள நேபாள காவல்துறை, இணையத்தில் பகிரப்படும் இணைப்புகளுக்குப் பதிலாக பிரதம மந்திரி பேரிடர் நிவாரண நிதி என்ற பெயரில் உள்ள அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் மட்டும் நன்கொடை வழங்குமாறு தெரிவித்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T13:29:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[46 வயதான இலங்கையின் பிரபலம் காலமானார்; சோகத்தில் பலர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-model-chula-padmendra-has-passed-away-1788178473"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-model-chula-padmendra-has-passed-away-1788178473</id>
            <summary type="text">இலங்கையின் பிரபல மொடலிங் துறை சார்ந்த கலைஞரும், சர்வதேச ஆடைவடிவமைப்பு மற்றும் அழகிப்போட்டிப் பயிற்றுவிப்பாளருமான சுலா பத்மேந்திரா குமாரபத்திரன தனது 46...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பிரபல மொடலிங் துறை சார்ந்த கலைஞரும், சர்வதேச ஆடைவடிவமைப்பு மற்றும் அழகிப்போட்டிப் பயிற்றுவிப்பாளருமான சுலா பத்மேந்திரா குமாரபத்திரன தனது 46 ஆவது வயதில் காலமானார்.</p><p> 

 

அவரது இந்தத் திடீர் மறைவு இலங்கையின் மொடலிங் மற்றும் ஆடைவடிவமைப்புத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7174d70b-e7c2-4d3c-ad22-a74c427e3fe5/26-6a95702adac92.webp' /></p><h2>நாட்டின் முன்னணி மொடலிங் பயிற்றுவிப்பாளர்</h2><p>

 

நாட்டின் முன்னணி மொடலிங் பயிற்றுவிப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த இவர், பல புதிய கலைஞர்களை சர்வதேச அளவிற்கு உருவாக்கிய பெருமைக்குரியவர்.</p><p></p><p> </p><p>

 

ஆடைவடிவமைப்புத் துறையிலும் அழகிப்போட்டிகளுக்கான பயிற்சிகளை வழங்குவதிலும் சிறந்த வல்லுநராக அவர் அடையாளப்படுத்தப்பட்டிருந்தார்.</p><p>

 

அண்மைக்காலத்திலும் கூட பல முன்னணி மொடலிங் நிகழ்வுகள், ஆடைவடிவமைப்பு விழாக்கள் மற்றும் அழகிப்போட்டிகளில் அவர் தீவிரமாகவும் சுறுசுறுப்பாகவும் பங்கேற்று வந்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T13:29:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமர் ஹரிணி பூட்டான் பயணம் - உலக உணவு உச்சி மாநாட்டில் சிறப்புரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pm-harini-visits-bhutan-address-world-food-summit-1788181212"></link>
            <id>https://tamilwin.com/article/pm-harini-visits-bhutan-address-world-food-summit-1788181212</id>
            <summary type="text">பூட்டானுக்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று(31.08.2026) காலை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>பூட்டானுக்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று(31.08.2026) காலை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
</p><p>
இந்த விஜயத்தின் போது, பூட்டானில் நடைபெறவுள்ள 'உலக விழிப்புணர்வு உணவு
முறைமைகள்' உச்சிமாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ளும் பிரதமர், அதில்
சிறப்புரை ஆற்றவுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a792cbee-34cf-48aa-8f73-e2d32753b854/26-6a957ebc9fae1.webp' /></p><p>
அத்துடன், சர்வதேசத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளைச் சந்தித்து நிலையான உணவு
முறைமைகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது
தொடர்பான பல உத்தியோகபூர்வ சந்திப்புகளிலும் பிரதமர் ஹரிணி அமரசூரிய
கலந்து கொள்ளவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61fd6548-0d4a-4c69-b153-c44ad4c1e9f5/26-6a957ebda6ba6.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T13:25:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/increase-in-colombo-consumer-price-index-1788182620"></link>
            <id>https://jvpnews.com/article/increase-in-colombo-consumer-price-index-1788182620</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் ஓகஸ்ட் மாதத்தில் 8 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் ஓகஸ்ட் மாதத்தில் 8 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>



அந்த திணைக்களத்தால், இன்று (31) வெளியிட்டப்பட்ட கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணிற்கு அமைய, ஜூலை மாதத்தில் 7.3 சதவீதமாக பதிவான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் ஓகஸ்ட் மாதத்தில் 8 சதவீதமாக அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8665cf96-66ff-402d-912a-fd5e76084d03/26-6a95805ddce85.webp' /></p><p>
</p><p>


இதேவேளை, ஜூலை மாதத்தில் 6.3 சதவீதமாகப் பதிவாகியிருந்த உணவுப் பிரிவின் ஆண்டுக் குறியீட்டு பணவீக்க விகிதம், ஓகஸ்ட் மாதத்தில் 8.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.</p><p></p><p>
</p><p>


எனினும், உணவு அல்லாத பிரிவின் ஆண்டுக் குறியீட்டு பணவீக்க விகிதம் ஓகஸ்ட் மாதத்தில் 7.7 சதவீதம் வரை குறைவடைந்துள்ளது. இவ்விகிதம் ஜூலை மாதத்தில் 7.8 சதவீதமாகப் பதிவாகியிருந்தது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T13:20:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானிலிருந்து வந்த போதைப்பொருள் : சிக்கிய தொழிலதிபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/businessman-caught-with-drugs-from-pakistan-1788180779"></link>
            <id>https://ibctamil.com/article/businessman-caught-with-drugs-from-pakistan-1788180779</id>
            <summary type="text">கொள்கலனில் மறைத்து வைத்து பாகிஸ்தானில் இருந்து பாரியளவு போதைப்பொருளை கொண்டுவந்த பிரபல தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


தெமட்டகொட பிரதேசத்தைச் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொள்கலனில் மறைத்து வைத்து பாகிஸ்தானில் இருந்து பாரியளவு போதைப்பொருளை கொண்டுவந்த பிரபல தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>

தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரே கைது செய்யப்பட்டவராவார்.</p><p>&nbsp;கைப்பற்றப்பட்ட ‘ஐஸ்’ (ICE) வகை போதைப்பொருளின் அளவு 420 கிலோகிராம் எனப் காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><h2>&nbsp;குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் சோதனை</h2><p>கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நீதிமன்ற உத்தரவைப் பெற்று மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edd6eebb-5267-4c3a-8b2d-c4d53b8639fa/26-6a957d43bbad2.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T13:17:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டபயவின் உறக்கத்தை கூட திட்டமிட்ட ஞானாக்கா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gnana-akka-hotel-encroaches-nuwarawewa-lake-1788172144"></link>
            <id>https://ibctamil.com/article/gnana-akka-hotel-encroaches-nuwarawewa-lake-1788172144</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதியின் கோட்டபய ராஜபக்சவின் உறக்கத்தை கூட, அவரது ஆட்சிக்காலத்தில் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டு வந்த ஞானாக்கா என்பவரே தீர்மானித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதியின் கோட்டபய ராஜபக்சவின் உறக்கத்தை கூட, அவரது ஆட்சிக்காலத்தில் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டு வந்த ஞானாக்கா என்பவரே தீர்மானித்ததாக விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த விடயத்தை றுவுணு பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை விரிவுரையாளரும் ரிவிர பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் - இலங்கை புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் முன்னாள் ஊடக பணிப்பாளரான சந்தன காரியவசம் தெரிவித்துள்ளார். </p><p>


இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியில் இருந்த காலத்தில் அவருக்கு ஆலோசனை வழங்கிய அம்மையார் ஒருவர் இருந்தார்.</p><p> </p><p></p><h2>உரிமைச் சொத்து&nbsp;</h2><p>அவரை உங்களுக்கு நினைவிருக்கலாம் கோட்டாபயவின் அனைத்து செயல்பாடுகளும் அவரின் ஆலோசனைபடியே அமைந்திருந்தது.</p><p>

அமைச்சரவை நியமினம் - சிலரை பதவியில் நீக்கியமை அவர் சொற்படியே செய்தார். 

எப்படி உறங்குவது கூட அந்த அம்மையார் சொன்னபடியேதான்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e191e992-6025-434d-bf78-008d3e493596/26-6a955ef62f825.webp' /></p><p>நாம் மேலே குறிப்பிட்ட அம்மையார் தான் அநுராதபுரத்தில் சோதிடம் பார்த்து பிரபலமான ஞானக்கா.

அந்த அம்மையார் ஹோட்டல் கட்டினால் உனக்கென்ன எங்களுக்கு என்ன என்று கேள்வி எழலாம் அல்லவா ? </p><p>ஆனால் 2300 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட நுவரவௌ குளத்தை அழித்துள்ளார்கள். இது எங்களுடைய உரிமைச் சொத்து அதைத்தான் இவர்கள் நாசப்படுத்தியுள்ளனர்.</p><p></p><h2>பெரும்பாலான கட்டிடங்கள்&nbsp;</h2><p>நுவரவெவ எல்லைப் பகுதியில்தான் இந்த ஹோட்டலின் பெரும்பாலான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.</p><p>இது முற்றிலும் சட்டவிரோதமான செயல் அப்படிச் செய்ய முடியாது குளத்தின் எல்லைப் பகுதிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e22ed006-4b38-4e19-b085-d289d14f3532/26-6a955ef6e0159.webp' /></p><p>

ஒரு சாதாரண மனிதரால் இதைச் செய்ய முடியாது. நாட்டுத் தலைவரின் அரசியல் செல்வாக்கைக் கொண்டுதான் இவற்றை நிரப்பி இந்த நிலைக்குக் கட்டியிருக்கிறார்கள்.</p><p>மேலும் கோட்டாபய ராஜபக்ச பணம் வழங்கியதாகவும் ஒரு கதையும் உள்ளது.</p><p> இந்த அம்மையார் ஹோட்டல் கட்டினாரா அல்லது கோட்டாபயவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தாரா என்பது நமக்கு முக்கியமல்ல ஆனால் இந்த விடயங்கள் இப்படி நடக்க முடியாது.</p><p></p><h2>கோடிக்கணக்கான சொத்து</h2><p>கடந்த காலத்தில் குளத்தின் கரையோரங்களில் அல்லது குளத்திற்குள் கட்டப்பட்ட ஹோட்டல்களை அகற்றும் திட்டம் ஒன்று நடந்தது.</p><p> அதற்கும் நிறைய பிரச்சினைகள் வந்தன ஆனால் அநுராதபுரத்திலுள்ள இந்த ஹோட்டலுக்கு ஒன்றும் நடக்கவில்லை.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/608f8d6c-c38a-4bf6-b11e-e444cc71bf64/26-6a955ef792aec.webp' /></p><p>அதனால் அதிகாரிகள் மற்றும் அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
</p><p>
இந்த ஹோட்டல் புதிதாக அமைக்கப்பட்ட கண்டி - அனுராதபுர வீதியில் இராணுவ மருத்துவப் படைப்பிரிவை கடந்து சில மீட்டர்கள் செல்லும் போது உள்ளது.</p><p> அநுராதபுரத்தில் சோதிடம் பார்த்த சாதாரண ஒரு பெண் இப்போது கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு சொந்தக்காரராக இருப்பது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/IT-v1W9Laic" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T13:13:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க விமானப்படைதளங்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதல் : மீண்டும் அதிகரிக்கும் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-missile-attack-two-us-air-bases-jordan-1788178227"></link>
            <id>https://ibctamil.com/article/iran-missile-attack-two-us-air-bases-jordan-1788178227</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் உள்ள லராக் தீவில் அமைந்துள்ள ஈரானிய ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, ஜோர்தானில் உள்ள இரண்டு அமெரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் உள்ள லராக் தீவில் அமைந்துள்ள ஈரானிய ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, ஜோர்தானில் உள்ள இரண்டு அமெரிக்க விமானப்படை தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.</p><p>

அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு, தகுந்த பதிலடி தரப்படும் என்று இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது.</p><h2>லராக்தீவு மீது அமெரிக்கா தாக்குதல்</h2><p>ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து சுமார் 1,100 கிலோ மீட்டர் தொலைவில் லராக் தீவு அமைந்துள்ளது. இந்த தீவு ஹோர்முஸ் நீரிணையின் தெற்கிலும், கெஷம் தீவின் கிழக்கிலும் அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/867aaf0b-2f99-4b9c-b06d-cc5c43dc0048/26-6a95724c48b91.webp' /></p><p>


கெஷ்ம் ஆளுநரை மேற்கோள் காட்டி ஈரானிய அரசு ஊடகமான IRNA, லராக் தீவில் இரவு நேரத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>இரண்டு அமெரிக்க விமானப்படை தளங்களை குறிவைத்த ஈரான்</h2><p>



இந்த நிலையில், ஜோர்தானில் அமைந்துள்ள இரண்டு அமெரிக்க விமானப்படை தளங்களான கிங் ஹுசைன் மற்றும் அல்-அஸ்ரக் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b641b03d-66fc-45fd-bda5-660f623fc437/26-6a95724b95cc3.webp' /></p><p>
</p><p>
இந்த தாக்குதல் குறித்து இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை கூறுகையில், தொழில்நுட்ப மற்றும் பராமரிப்பு வசதிகள் மற்றும் போர் விமான நிலைகளை இந்த ஏவுகணைகள் குறிவைத்ததாக தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T13:06:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் 15 கூட்டமைப்புகள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-by-15-federations-development-officers-1788178245"></link>
            <id>https://tamilwin.com/article/protest-by-15-federations-development-officers-1788178245</id>
            <summary type="text">பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் 15
கூட்டமைப்புகள் இணைந்து நாடளாவிய ரீதியில் கவன ஈர்ப்பு
போராட்டங்களை முன்னெடுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் 15
கூட்டமைப்புகள் இணைந்து நாடளாவிய ரீதியில் கவன ஈர்ப்பு
போராட்டங்களை முன்னெடுத்தனர்.
</p><p>அரசு மற்றும் மாகாண அரச சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்க
கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒருங்கிணைந்த அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள் சங்கம் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக
கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது. </p><p>நாடு முழுவதும் உள்ள பிரதேச
செயலகங்கள் மற்றும் திணைக்களங்களுக்கு முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
தங்களது உரிமைகளுக்காக இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.</p><h2>போராட்டம்&nbsp;</h2><p>
</p><p>மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களுக்கு முன்பாகவும் போராட்டம் மதியம் 12:00 மணி முதல் முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44c4e0be-711a-422f-91a4-59e855bfb27a/26-6a957767d4b02.webp' /></p><p>
</p><p>கடந்த 27 வருடங்களாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இந்த கோரிக்கைகள்
தொடர்பிலான போராட்டங்கள் தொடர்கின்றன.</p><p> குறிப்பாக 1999ஆம் ஆண்டிலிருந்து
சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு முறையான
சேவைப் பிரமாணக் குறிப்பு இதுவரை இல்லாதது கவலையளிக்கும் விடயமாகவுள்ளதாக
இங்கு தெரிவிக்கப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T12:57:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல்: என்.பி.பி நடத்திய உறுப்பினர் பதவி விலகல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/attack-house-in-jaffna-national-people-power-1788179974"></link>
            <id>https://ibctamil.com/article/attack-house-in-jaffna-national-people-power-1788179974</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதான தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதான தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன் தனது உள்ளூராட்சி சபை உறுப்பினர் பதவியை பதவி விலகல் செய்துள்ளார்.</p><p>நெல்லியடி பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டின் மீது கல்லெறிந்து தாக்குதல் , நடாத்தி , வீட்டு வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு&nbsp;கருவிகளையும் குறித்த உள்ளூராட்சி உறுப்பினர் தலைமையிலான கும்பல் நேற்று முன்தினம் சேதப்படுத்தியது. </p><p>

இது தொடர்பில் வீட்டார் நெல்லியடி காவல் நிலையத்திற்கு தொலைபேசி ஊடாக அறிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கும்பலை மடக்கி பிடித்து கைது செய்தனர்.</p><p></p><h2>பதவி விலகல் </h2><p>கைது செய்யப்பட்டவர்கள் காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணைகளின் பின்னர் காவல்துறை பிணையில் செல்ல அனுமதித்தனர்&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0134901c-6b7a-4fdc-b3e7-74c2e5de2d53/26-6a9578382b2ec.webp' /></p><p>இந்நிலையில் தற்போது&nbsp; குறித்த உறுப்பினர் தனது உள்ளூராட்சி உறுப்பினர் பதவி விலகல் செய்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T12:49:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய 420கிலோ ஐஸ் போதைப்பொருள் : அதிரடியாக கைது செய்யப்பட்ட வர்த்தகர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/large-amount-of-ice-drugs-seized-at-colombo-port-1788175145"></link>
            <id>https://tamilwin.com/article/large-amount-of-ice-drugs-seized-at-colombo-port-1788175145</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp; &amp;nbsp;கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றுக்குள் இருந்து பாரியளவிலான ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கொழும்பைச் சேர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp; &nbsp;</h2><p>கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றுக்குள் இருந்து பாரியளவிலான ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கொழும்பைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட டவல்களைக் கொண்ட கொள்கலன் ஒன்றில் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்துக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் பேரில் கொழும்பு துறைமுகத்தில் இன்று(31.08.2026) திடீர்சோதனை மேற்கொள்ளப்பட்டது.
</p><p>
அதன்போது கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்ட கொள்கலன் ஒன்றில் இருந்து சுமார் 420 கிலோ எடை கொண்ட 'ஐஸ்' எனச் சந்தேகிக்கப்படும் பெருந்தொகையான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்ட கொள்கலன் ஒன்றில் இருந்து 'ஐஸ்' எனச் சந்தேகிக்கப்படும் பெருந்தொகையான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p>

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இந்தப் போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><h2>கொள்கலனில் மறைத்து வைத்து</h2><p>
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் 'ஐஸ்' வகை போதைப்பொருளாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06ef4001-4cde-4d21-b9a5-c2815eb59342/26-6a956ad6c1f0e.webp' /></p><p>

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட குறித்த கொள்கலனில் மறைத்து வைத்து இந்தப் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T12:45:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்ச நுவரவெவ குளத்தை நிரப்பி கட்டிய சொகுசு ஹோட்டல்! ஓய்வுநிலை விரிவுரையாளர் வெளிப்படுத்திய தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-anuradhapura-1788168918"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-anuradhapura-1788168918</id>
            <summary type="text">கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், அவருக்கு ஆலோசனை வழங்கிய ஒருவர் இருந்ததாகவும், அவரின் ஆலோசனைகளுக்கு அமையவே கோட்டாபய ராஜபக்ச நாட்டை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், அவருக்கு ஆலோசனை வழங்கிய ஒருவர் இருந்ததாகவும், அவரின் ஆலோசனைகளுக்கு அமையவே கோட்டாபய ராஜபக்ச நாட்டை ஆட்சி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கோட்டாபய ராஜபக்சவின் பல்வேறு செயற்பாடுகளும் குறித்த பெண்ணின் ஆலோசனைகளுக்கு அமையவே இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. </p><p>அமைச்சரவை நியமனம், சில அமைச்சர்களை பதவிகளில் இருந்து நீக்கியமை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் அவரது ஆலோசனைப்படியே மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>அவர் எவ்வாறு உறங்க வேண்டும் என்பதுகூட அந்தப் பெண்ணின் ஆலோசனைக்கு அமையவே தீர்மானிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு குறிப்பிடப்படும் பெண், அனுராதபுரத்தில் சோதிடம் பார்த்து பிரபலமான ‘ஞானக்கா’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஞானக்காவுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் சொகுசு ஹோட்டல் ஒன்று, அனுராதபுரத்தில் நுவரவெவ குளத்தை நிரப்பி அமைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தத் தகவல்களை ருஹுணு பல்கலைக்கழகத்தின்&nbsp; ஓய்வுநிலை விரிவுரையாளரும்,&nbsp; பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், இலங்கை புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் முன்னாள் ஊடகப் பணிப்பாளருமான சந்தன காரியவசம் தெரிவித்துள்ளார்.</p><p>இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p></p><h2>சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடங்கள்</h2><p>அந்த அம்மையார் ஹோட்டல் கட்டினால் உனக்கென்ன எங்களுக்கு என்ன என்று கேள்வி எழலாம் அல்லவா? 
ஆனால் 2300 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட நுவரவௌ குளத்தை அழித்துள்ளார்கள்.</p><p>இது எங்களுடைய உரிமைச் சொத்து அதைத்தான் இவர்கள் நாசப்படுத்தியுள்ளனர்.
</p><p>நுவரவெவ எல்லைப் பகுதியில்தான் இந்த ஹோட்டலின் பெரும்பாலான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. </p><p>இது முற்றிலும் சட்டவிரோதமான செயல் அப்படிச் செய்ய முடியாது. குளத்தின் எல்லைப் பகுதிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
ஒரு சாதாரண மனிதரால் இதைச் செய்ய முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e05147e-9951-449f-825b-ac96a0430e30/26-6a954ad85b05f.webp' /></p><p>நாட்டுத் தலைவரின் அரசியல் செல்வாக்கைக் கொண்டுதான் இவற்றை நிரப்பி இந்த நிலைக்குக் கட்டியிருக்கிறார்கள்.மேலும் கோட்டாபய ராஜபக்ச பணம் வழங்கியதாகவும் ஒரு கதையும் உள்ளது. இந்த அம்மையார் ஹோட்டல் கட்டினாரா அல்லது கோட்டாபயவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தாரா என்பது நமக்கு முக்கியமல்ல.</p><p>ஆனால் இந்த விடயங்கள் இப்படி நடக்க முடியாது. 
கடந்த காலத்தில் குளத்தின் கரையோரங்களில் அல்லது குளத்திற்குள் கட்டப்பட்ட ஹோட்டல்களை அகற்றும் திட்டம் ஒன்று நடந்தது. அதற்கும் நிறைய பிரச்சினைகள் வந்தன.ஆனால் அநுராதபுரத்திலுள்ள இந்த ஹோட்டலுக்கு ஒன்றும் நடக்கவில்லை. அதனால் அதிகாரிகள் மற்றும் அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.</p><p>
இந்த ஹோட்டல் புதிதாக அமைக்கப்பட்ட கண்டி - அனுராதபுர வீதியில் இராணுவ மருத்துவப் படைப்பிரிவை கடந்து சில மீட்டர்கள் செல்லும் போது உள்ளது. அநுராதபுரத்தில் சோதிடம் பார்த்த சாதாரண ஒரு பெண் இப்போது கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு சொந்தக்காரராக இருப்பது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.</p><p>&nbsp;</p><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T12:45:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் ஊழல் குற்றச்சாட்டுக்களை மூடி மறைப்பதற்காகவே இந்த முயற்சி..! முன்னாள் பிரதி சபாநாயகர் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ajith-rajapaksa-denies-his-allegations-1788179983"></link>
            <id>https://tamilwin.com/article/ajith-rajapaksa-denies-his-allegations-1788179983</id>
            <summary type="text">பாரியளவில் எரிபொருள் பயன்பாட்டின் மூலம் அரசாங்க நிதியைத் துஷ்பிரயோகம் செய்ததாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளைத் தாம் முழுமையாக நிராகரிப்பதாக முன்னாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாரியளவில் எரிபொருள் பயன்பாட்டின் மூலம் அரசாங்க நிதியைத் துஷ்பிரயோகம் செய்ததாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளைத் தாம் முழுமையாக நிராகரிப்பதாக முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் அவர் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு தனது விளக்கங்களைக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>

எரிபொருள் பயன்பாடு</h2><p>
அதில் தொடர்ந்து குறிப்பிட்டுள்ளதாவது, 

எரிபொருள் பயன்பாடு தொடர்பில் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகள் குறித்துச் சரியான முறையில் ஆராயாமல், எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய மின்னணு ஊடகங்கள் வாயிலாகப் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/321b5396-8c90-4470-a4e6-2870872175a9/26-6a9576d060a47.webp' /></p><p>

எனது பதவிக் காலத்தில் சட்டபூர்வமாகத் எனக்கு உரித்தான ஒதுக்கீடுகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வரம்புகளுக்கு உட்பட்டு மட்டுமே எரிபொருள் பெறப்பட்டது. அது தொடர்பான அனைத்து உத்தியோகபூர்வ ஆவணங்களும் அறிக்கைகளும் என்னிடம் உள்ளது.</p><p>

சரியான விசாரணை இன்றி ஊடகங்கள் முன் இவ்வாறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது வருத்தத்திற்குரியது.
</p><h2>
ஊழல் குற்றச்சாட்டுக்களை மூடி மறைக்கத் திட்டம்</h2><p>
பிரதி சபாநாயகராகக் கடமையாற்றுவதற்குப் பொருத்தமான உத்தியோகபூர்வ வாகனம் இல்லாததால், வெளியிலிருந்து வாடகை அடிப்படையில் வாகனத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புத் எனக்கு இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02bcb80a-238c-484d-b678-b81cac278838/26-6a9576d115725.webp' /></p><p>

அவ்வாறு வெளியிலிருந்து வாகனத்தைப் பெற்றிருந்தால் பெருந்தொகை பணம் செலவாகியிருக்கும் என்பதால், அந்த வாடகைக் கட்டணத்திற்காகச் செலவிடப்படவிருந்த பணத்தைச் சேமிக்கும் வகையில் நான் செயற்பட்டேன்.
</p><p>
முன்னாள் சபாநாயகர்கள் மற்றும் பிரதி சபாநாயகர்கள் தொடர்பில் காணப்பட்ட பாரம்பரியங்கள், சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு அமையவே நான் பதவியில் செயற்பட்டேன். </p><p>எவ்வித சட்டவிரோதச் செயல்களிலும் ஈடுபடவில்லை.

இதனிடையே, தற்போதைய அரசாங்கத்தில் பதவி வகிக்கும் மற்றும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நபர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மூடிமறைக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் நான் நம்புகின்றேன் என்றார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T12:43:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரவி கருணாநாயக்க பிணையில் செல்ல அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mp-ravi-karunanayake-appears-before-ciaboc-1788146344"></link>
            <id>https://ibctamil.com/article/mp-ravi-karunanayake-appears-before-ciaboc-1788146344</id>
            <summary type="text">புதிய இணைப்புஇலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பிணையில் வி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
</p><p>


இன்று (31) பிற்பகல் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டதை அடுத்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
</p><p>
 

தேசிய லொத்தர் சபையின் விசேட திட்டம் ஒன்றுக்காகச் சேர்க்கப்பட்ட மூன்று ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையான போதே அவர் கைது செய்யப்பட்டார்.
</p><p>
 

அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><h2>&nbsp;மூன்றாம் இணைப்பு</h2><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க புதுக்கடை பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>

இன்று (31) இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><h2>இரண்டாம் இணைப்பு</h2><p>இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>4 சந்தர்ப்பங்களில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்த அழைப்புக்கு அமைய அங்கு சமூகமளிக்காது, இன்று (31) முன்னிலையான நிலையிலேயே ரவி கருணாநாயக்க இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>பல மணிநேர விசாரணையைத் தொடர்ந்து, விசாரணையின் ஒரு பகுதியாக அதிகாரிகள் அவரைக் கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதே விசாரணை தொடர்பில் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவி ஷர்மிளா பெரேரா கைது செய்யப்பட்டு பின்னர் ஜூன் 30 ஆம் திகதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். </p><p>

தேசிய லொத்தர் சபையின் விசேட திட்டத்திற்காகப் பணியமர்த்தப்பட்ட மூன்று ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் அளிப்பதற்காக, அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.</p><p> 

இந்த விசாரணை தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவுசெய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரவி கருணாநாயக்கவுக்கு அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அங்கு சமூகளிக்கவில்லை.</p><p></p><h2>வீட்டிற்குச் சென்ற அதிகாரிகள்</h2><p> </p><p>

இதன்காரணமாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று முன்தினம் (29) அவரது வீட்டிற்குச் சென்றிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac7f16e0-68f6-415e-b3ad-381c2f595d0d/26-6a94f5d78fc6b.webp' /></p><p> 

எனினும், அந்தச் சமயத்திலும் அவர் வீட்டில் இருக்கவில்லை என்பதுடன், தனது மகளின் திருமண ஏற்பாடுகள் காரணமாக ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு வேறொரு திகதியை வழங்குமாறு ரவி கருணாநாயக்க தனது சட்டத்தரணிகள் ஊடாகக் கோரிக்கை விடுத்திருந்தார். </p><p>

இதற்கமைய, ரவி கருணாநாயக்க இன்றைய தினம் (31) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அங்கு அவர் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/xv-PoI9u9Hk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T12:42:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா தீவிரப்படுத்தும் பொருளாதாரத் தடை: ஈரானுக்கு புதிய நெருக்கடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-intensifies-economic-sanctions-new-crisis-iran-1788178019"></link>
            <id>https://tamilwin.com/article/us-intensifies-economic-sanctions-new-crisis-iran-1788178019</id>
            <summary type="text">வொஷிங்டன் ஈரானைக் கட்டுப்படுத்த &quot;ஒபரேஷன் எகோனமிக் அவுட்காஸ்ட்&quot; என்ற தீவிர
பொருளாதாரத் தடை பிரசாரத்தை முடக்கிவிட்டுள்ளது.

ஈரானுக்கு நிதி உதவி வழங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வொஷிங்டன் ஈரானைக் கட்டுப்படுத்த "ஒபரேஷன் எகோனமிக் அவுட்காஸ்ட்" என்ற தீவிர
பொருளாதாரத் தடை பிரசாரத்தை முடக்கிவிட்டுள்ளது.
</p><p>
ஈரானுக்கு நிதி உதவி வழங்கி வரும் மற்றொரு வங்கி மீது இந்த வாரம் புதிய தடை
விதிக்கப்படும் என அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்கொட் பெசென்ட்
அறிவித்துள்ளார்.
</p><h2>ஜோர்தான் தளங்கள் மீதான ஏவுகணை வீச்சு</h2><p>
இந்த நிலையில் அண்மையில் எகிப்தின் 'பாங்க் மிஸ்ர்' வங்கியின் UAE கிளை
அமெரிக்க நிதி அமைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டது. </p><p>அதேபோன்று, ஈரானுடன்
வர்த்தகத்தில் ஈடுபடும் வங்கிகளை டொலர் அடிப்படையிலான உலகளாவிய நிதி அமைப்பில்
இருந்து முற்றிலுமாகத் துண்டிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c06e2cc-b3af-4f12-90ad-bb882fb145ba/26-6a9571f89c168.webp' /></p><p>

எனவே ஜி20 நிதித் தலைவர்கள் கூட்டத்தில் ஈரானுடனான வர்த்தகம் குறித்து சீன
பிரதிநிதிகளுடன் பேசவுள்ளதாகவும், தேவைப்பட்டால் சீனா மீதும் தடைகள் விதிக்க
அனைத்து வழிகளும் பரிசீலனையில் உள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><p>

எவ்வாறாயினும் இந்த தடைகள் முற்றிலும் தோல்வியடையும் என ஈரானின் நிதி அமைச்சர்
அலி மதனிசாதே கூறி நிராகரித்துள்ளார்.
</p><p>
இதேவேளை போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள சூழலில், லராக் தீவுத்
தாக்குதல் மற்றும் ஜோர்தான் தளங்கள் மீதான ஏவுகணை வீச்சு ஆகியவற்றால்
பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T12:35:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/warning-regarding-hot-weather-conditions-1788176879"></link>
            <id>https://ibctamil.com/article/warning-regarding-hot-weather-conditions-1788176879</id>
            <summary type="text">வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகல மாவட்டத்தில் நாளை (01.08.2026) முதல் வெப்பமான வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகல மாவட்டத்தில் நாளை (01.08.2026) முதல் வெப்பமான வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>

குடியிருப்பாளர்கள் நீரேற்றத்துடன் இருக்கவும், முடிந்தவரை நேரடி சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்க்கவும், பகலின் வெப்பமான நேரத்தில் கடினமான வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>மேலும் நாளைய வானிலை குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்,</p><p></p><h2>வெப்பம் குறித்த வானிலை</h2><p>01ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 ஓகஸ்ட் 31ஆம் திகதி பிற்பகல் 02.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df9a4749-9a28-4b83-b05b-30e60e8ccd26/26-6a9572165906c.webp' /></p><p>ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.</p><p>நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
</p><p>
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.</p><p>

சூரியனின் தோற்ற தென்திசை நோக்கிய சார்பு இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. </p><p>அதற்கிணங்க நாளை (01ஆம் திகதி) நண்பகல் 12.10 அளவில் கல்பிட்டி, தலாவ, சிங்காரகம, கல்கடவல, நாச்சதுவ, படிகாரமடுவ, கோமரன்கல்ல மற்றும் வெருகல் ஆகிய வெப்பம் அதிகமாக இருக்கும்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T12:31:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் பானி பூரி தலைநகரம் எது தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mumbai-becomes-big-selling-city-of-pani-puri-1788173644"></link>
            <id>https://manithan.com/article/mumbai-becomes-big-selling-city-of-pani-puri-1788173644</id>
            <summary type="text">Mumbai city selling 15-25 lakhs pani puri daily:&amp;nbsp;இந்தியாவின் பானி பூரி தலைநகரமாக மகாராஷ்டிராவின் மும்பை உருவெடுத்துள்ளது.&amp;nbsp;தினமும் 15 முதல் 2...</summary>
            <content type="html"><![CDATA[<p>Mumbai city selling 15-25 lakhs pani puri daily:&nbsp;இந்தியாவின் பானி பூரி தலைநகரமாக மகாராஷ்டிராவின் மும்பை உருவெடுத்துள்ளது.&nbsp;</p><p>தினமும் 15 முதல் 25 இலட்சம் தட்டுகளை விற்பனை செய்து மகாராஷ்டிராவின் மும்பை, இந்தியாவின் பானி பூரி தலைநகரமாக உருவெடுத்துள்ளது.&nbsp;</p><h2>பானி பூரி</h2><p>
இந்தியாவின் மிகவும் பிரபலமான உணவாக உருவெடுத்துள்ளது பானி பூரி. இதற்கு முக்கிய காரணம் தெருக்களில் சாதாரணமாக, மிகக்குறைந்த விலையில் கிடைப்பதே ஆகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae848e65-c88c-4fa5-96a3-c0e1f50d52c1/26-6a955d4fc713c.webp' /></p><p>
மேலும் காரமான நீர், கசப்பான சட்னிகள் மற்றும் சுவையான நிரப்புதல்கள் இதன் சிறப்பாக இருப்பதால், நாடு முழுவதும் மிகவும் பிடித்தமான உணவாக பானி பூரி இருக்கிறது.&nbsp;</p><p>

பொதுவாக, மொறுமொறுப்பான மற்றும் உள்ளே காலியாக உள்ள பூரிகளில், மசித்த அல்லது வேகவைத்த உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, வெங்காயம் மற்றும் சட்னி ஆகியவற்றை நிரப்பி பானி பூரி தயாரிக்கப்படுகிறது.</p><p>

பின்னர் புதினா, கொத்தமல்லி, புளி, கருப்பு உப்பு மற்றும் மசாலா கலவை போன்ற பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சுவையூட்டப்பட்ட நீர் அந்தப் பூரிகளில் நிரப்பப்படுகிறது. </p><p>

பிரபலமாக உள்ள இந்த சிற்றுண்டி இந்தியா முழுவதும் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. 

டெல்லி, வட இந்தியாவின் பல பகுதிகளில் இது பொதுவாக 'கோல்கப்பா' என்றும், மேற்கு வங்காளத்தில் 'புச்கா' என்று அறியப்படுகிறது. </p><p>

ஒடிசா மற்றும் சத்தீஸ்கரில் இது பெரும்பாலும் 'குப்சப்' என்றும், சில வடக்குப் பகுதிகளில் 'பானி கே பதஷே' என்றும் பானி பூரி அழைக்கப்படுகிறது.&nbsp;</p><h2>மும்பை&nbsp;நகரம்</h2><p>
இந்திய அளவில் பானி பூரி அதிக விற்பனை செய்யப்படும் நகரமாக இருப்பது மகாராஷ்டிராவின் மும்பை என தெரிய வந்துள்ளது.
</p><p>
உணவுத் துறை அறிக்கைகள் மற்றும் சந்தை பகுப்பாய்வுகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள மதிப்பீடுகளின்படி, மும்பை நகரத்தில் தினமும் 15 இலட்சம் முதல் 25 இலட்சம் தட்டுகள் வரை பானி பூரி விற்கப்படலாம். </p><p>

இதன்மூலம் டெல்லி, கொல்கத்தா நகரங்களை முந்தி பானி பூரி நுகர்வுக்கான நாட்டின் மிகப்பெரிய மையங்களில் ஒன்றாக மும்பை கருதப்படுகிறது.</p><p> 

மும்பையின் பெருமளவிலான மக்கள்தொகை, வேகமான வாழ்க்கை முறை மற்றும் செழிப்பான தெருவோர உணவு கலாச்சாரம் ஆகியவை விரைவாகவும், மலிவாகவும் கிடைக்கக்கூடிய சிற்றுண்டிகளை நாட செய்வதனால், முதன்மையான தேர்வாக பானி பூரி உள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தைகள், இரயில் நிலையங்கள், கடற்கரைகள், வணிகப் பகுதிகள், உணவு வீதிகள், வணிக வளாகங்கள் மற்றும் உணவுக்கூடங்கள் என எங்கும் பானி பூரி கடைகளைக் காண முடியும்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bdbaaff-4608-41ce-a988-23ae7a16df95/26-6a955d4f22380.webp' /></p>]]></content>
            <updated>2026-08-31T12:30:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறு படகொன்றில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்ட புலம்பெயர்வோர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/french-police-investigate-small-boat-migrant-death-1788179231"></link>
            <id>https://news.lankasri.com/article/french-police-investigate-small-boat-migrant-death-1788179231</id>
            <summary type="text">French police investigating the death of a migrant on a small boat: சிறு படகொன்றில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்ட புலம்பெயர்வோர் தொடர்பில் பிரான்ஸ் பொலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>French police investigating the death of a migrant on a small boat: சிறு படகொன்றில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்ட புலம்பெயர்வோர் தொடர்பில் பிரான்ஸ் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.</p><p>


பிரான்சிலிருந்து சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது, புலம்பெயர்வோர் சிலர், பிரான்ஸ் நாட்டு பொலிசாரை தாக்கும் காட்சிகள் வெளியானது நினைவிருக்கலாம்.
</p><p>
அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, புலம்பெயர்வோர் வன்முறையைக் கையில் எடுக்கிறார்களோ என கேள்வி எழுந்துள்ளது.</p><h3>

சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்ட புலம்பெயர்வோர்
</h3><p>
இந்நிலையில், புலம்பெயர்வோர் வன்முறையைக் கையில் எடுக்கக்கூடும் என்னும் சந்தேகத்தை உறுதி செய்யும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46cdaf75-1282-41e8-81ea-2731d52d524a/26-6a957320b5ea2.webp' /></p><p>

வெள்ளிக்கிழமையன்று, பிரான்சிலிருந்து பிரித்தானியா நோக்கிப் புறப்பட்ட சிறுபடகொன்றில் ஆப்கன் நாட்டவரான 34 வயது புலம்பெயர்வோர் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
</p><p>
அவரை, சக புலம்பெயர்வோர் தாக்கியிருக்கலாம் என பிரான்ஸ் பொலிசார் கருதுகிறார்கள்.
</p><p>
அத்துடன், அதே படகிலிருந்து காயமடைந்த மூவரையும் பிரான்ஸ் பொலிசார் மீட்டுள்ளார்கள். அவர்களில் ஒரு ஆண் கத்தியால் குத்தப்பட்டுள்ளார், இரண்டு பெண்களுக்கு தீக்காயங்கள் இருந்துள்ளன.&nbsp;</p><p></p><p>
இந்த சம்பவம் தொடர்பில் பிரான்ஸ் பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
</p><p>
ஏற்கனவே, சென்ற மாதம் பிரான்சிலுள்ள கலாயிஸ் நகருக்கருகிலுள்ள கடற்கரை ஒன்றில் புலம்பெயர்வோர் ஒருவரின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் பிரான்ஸ் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T12:27:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பித்தல் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ministry-of-defense-renewal-of-firearms-licenses-1788177732"></link>
            <id>https://tamilwin.com/article/ministry-of-defense-renewal-of-firearms-licenses-1788177732</id>
            <summary type="text">எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
</p><p>
அதன் பிரகாரம் துப்பாக்கி அனுமதிப் பத்திரம் வைத்துள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள் 2027ஆம் ஆண்டுக்கான தமது அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பித்துக் கொள்வதற்கான நடவடிக்கை நாளை (01.09.2026) முதல் ஆரம்பமாகவுள்ளது.</p><h2>வழங்கப்பட்டுள்ள காலக்கெடு</h2><p>

துப்பாக்கி அனுமதிப் பத்திரம் வைத்துள்ள அனைத்து நபர்களும் நிறுவனங்களும் 2026 டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் தமது துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
</p><p>
2026 டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிக்கத் தவறினால், துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின் 22வது பிரிவின் விதிகளுக்கு அமைவாகச் செல்லுபடியாகும் அனுமதிப் பத்திரம் இன்றித் துப்பாக்கியை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என அந்த அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3c1be5d-20e1-4994-b732-0a3b1bb75e31/26-6a95710f48d1c.webp' /></p><h2>சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்</h2><p>
</p><p>
இதேவேளை, 2026.09.01 முதல் 2026.12.31 வரை இடைப்பட்ட காலப்பகுதியில் பதிவுகளைப் புதுப்பிக்கத் தவறுகின்ற தனியார் பாதுகாப்பு முகவர் நிலையங்களுக்குத் தாமதக் கட்டணம் விதிக்கப்படும் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காகக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு முன்னர் உரிய புதுப்பித்தல்களை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடமும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T12:18:33+00:00</updated>
        </entry>
    </feed>
