<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-20T15:29:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா மாவட்டத்தின் பிரதான வீதிகளில் மண்சரிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/landslides-on-main-roads-in-nuwara-eliya-1789917244"></link>
            <id>https://tamilwin.com/article/landslides-on-main-roads-in-nuwara-eliya-1789917244</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து பல பிரதான
வீதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதனால் பொது போக்குவரத்துக்கு பாதிப்பு
ஏற்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து பல பிரதான
வீதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதனால் பொது போக்குவரத்துக்கு பாதிப்பு
ஏற்பட்டுள்ளது.</p><p>இன்று(20.9.2026) மதியம் பெய்து வரும் கனமழையால் ஹட்டன் மஸ்கெலியா பிரதான சாலையில் வணராஜா
கெந்தகொல்லை கிறிஸ்தவ தேவாலயம் பகுதியில் பாரிய மண் சரிவு காரணமாகப்
போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
</p><p>ஹட்டன் - பொகவந்தலாவை, ஹட்டன் - சாமிமலை, ஹட்டன் - மஸ்கெலியா, ஹட்டன் -
நோர்வூட் பகுதிகளுக்குச் செல்லும் பிரதான சாலையில் போக்குவரத்து தடை ஏற்பட்டு
உள்ளது.</p><h2>மண்சரிவு&nbsp;</h2><p>
</p><p>
இதனை தொடர்ந்து வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து
வீதியில் கொட்டி கிடந்த மண்ணை அகற்றியதனை தொடர்ந்து போக்குவரத்து வழமைக்கு
திரும்பியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dee1a012-e8b2-425c-aee7-ecd8bb220136/26-6aaffb1fd8c88.webp' /></p><p>
</p><p>இதேவேளை கினிகத்தேனை மினுவன் தெனிய பிரதான வீதியில் மண்சரிவு ஏற்பட்டதனால்
பொது போக்குவரத்து சில மணித்தியாலங்கள் முற்றாக தடைப்பட்டது.</p><p>
வீதியில் சரிந்த மண்ணை அகற்றியதனை தொடர்ந்து குறித்த வீதியில் ஒரு வழி
போக்குவரத்து இடம்பெற்று வருகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T15:26:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா முழுவதும் பறந்த தானியங்கி விமானம் - வரலாற்று சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/autonomous-plane-flies-across-america-1789917950"></link>
            <id>https://news.lankasri.com/article/autonomous-plane-flies-across-america-1789917950</id>
            <summary type="text">Autonomous plane flies across America: அமெரிக்காவில் முதல் முறையாக தானியங்கி (Autonomous) விமானம் மனித பைலட் இல்லாமல், நாடு முழுவதும் பறந்துள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>Autonomous plane flies across America: அமெரிக்காவில் முதல் முறையாக தானியங்கி (Autonomous) விமானம் மனித பைலட் இல்லாமல், நாடு முழுவதும் பறந்துள்ளது.</p><p>

Joby Aviation நிறுவனம் உருவாக்கிய Cessna Caravan விமானம், 3,199 மைல்கள் தூரம் பறந்து இந்த வரலாற்று சாதனையை படைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b19c66c-d485-4b3f-8ad7-7fec77873ac6/26-6aaffafff2ef2.webp' /></p><p>இந்த விமானம் செப்டம்பர் 7 அன்று காலிஃபோர்னியாவின் Concord நகரில் இருந்து புறப்பட்டு, பல்வேறு இடங்களில் இடைநிறுத்தங்களுடன் பயணம் செய்தது. </p><p>புறப்படும் தருணம் முதல் தரையிறங்கும் வரை, முழுமையாக கணினி கட்டுப்பாட்டில் இயங்கியது.

விமானம் Phoenix Deer Valley போன்ற மிகப் பிஸியான விமான நிலையங்களில் பாதுகாப்பாக செயல்பட்டதோடு, புயல், இடியுடன் கூடிய மழை போன்ற கடுமையான வானிலை சவால்களையும் தானாக சமாளித்தது.</p><p></p><p>Joby Aviation நிறுவனர் JoeBen Bevirt, “இந்த பயணம் விமானத் துறையின் புதிய யுகத்தை காட்டுகிறது. தானியங்கி விமானங்கள், தொலைதூர பகுதிகளை இணைக்க, அவசர உதவிகளை வழங்க, பேரழிவுகளுக்கு விரைவாக பதிலளிக்க, இராணுவ நடவடிக்கைகளில் பைலட்டுகளை ஆபத்திலிருந்து காப்பாற்ற உதவும்” எனக் கூறினார்.</p><p>

இந்த விமானம் டெக்சாஸ் Fort Worth Alliance Airport மற்றும் South Carolina Shaw Air Force Base ஆகிய இடங்களில் தரையிறங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65b65015-039a-405a-bea4-7d929cde9891/26-6aaffb00bfe08.webp' /></p><p> </p><h2>ரைட் சகோதரர்களுக்கு அஞ்சலி</h2><p>செப்டம்பர் 14 அன்று, North Carolina Kitty Hawk பகுதியில் உள்ள Wright Brothers National Memorial மேல் பறந்து, 1903-ல் முதல் முறையாக விமானத்தில் பிறந்ததற்கு Wilbur மற்றும் Orville Wright சகோதரர்களுக்கு அஞ்சலி செலுத்தியது.
</p><p>
இப்போது, இந்த தானியங்கி விமானம் மீண்டும் California நோக்கி திரும்பும் பயணத்தைத் தொடங்கியுள்ளது.</p><p> இதில் Washington D.C., Kentucky, Kansas, Oklahoma, Utah, Oregon போன்ற இடங்களில் இடைநிறுத்தங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.</p><p>

இந்த சாதனை, விமானத் துறையில் தானியங்கி தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை வெளிப்படுத்தும் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T15:22:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளையதினம் பாடசாலைகள் நடைபெறுமா..! கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/inclement-weather-decision-regarding-schools-1789916110"></link>
            <id>https://ibctamil.com/article/inclement-weather-decision-regarding-schools-1789916110</id>
            <summary type="text">நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நாளை (21) பாடசாலைகளை நடத்துவது குறித்துத் தீர்மானிக்கும் அதிகாரம் அந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நாளை (21) பாடசாலைகளை நடத்துவது குறித்துத் தீர்மானிக்கும் அதிகாரம் அந்தந்த மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. </p><p>

கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ கொழும்பு ஊடகமொன்றிடம் இதனைத் தெரிவித்தார்.</p><h2>&nbsp;நுவரெலியா பாடசாலைகளுக்கான அறிவிப்பு</h2><p>&nbsp;இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா கல்வி வலயத்தில் நாளை (21) பாடசாலைகளை நடத்துவதில் சிரமம் காணப்படுமாயின், அது குறித்துத் தீர்மானிக்கும் அதிகாரத்தை வலயக் கல்விப் பணிப்பாளர் அதிபர்களுக்கு வழங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e66f367-1470-49d0-a2d8-5dfb00525147/26-6aaff8907b7c8.webp' /></p><p> </p><p>

இதற்கமைய, சம்பந்தப்பட்ட பாடசாலைகளை நடத்துவதா இல்லையா என்பது குறித்த தீர்மானத்தை உரிய பாடசாலை அதிபர்களே மேற்கொள்வர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T15:15:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப்பிற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பிரான்ஸ் தீவில் மேக்ரோன் - கார்னி சந்திப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/macron-and-carney-meet-on-a-french-trump-1789915293"></link>
            <id>https://tamilwin.com/article/macron-and-carney-meet-on-a-french-trump-1789915293</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு மறைமுகப் பதிலடி கொடுக்கும்
வகையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் மற்றும் கனடிய பிரதமர்
மார்க் கார...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு மறைமுகப் பதிலடி கொடுக்கும்
வகையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் மற்றும் கனடிய பிரதமர்
மார்க் கார்னி ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.</p><p>குறித்த கலந்துரையாடலானது பிரான்சின் கட்டுப்பாட்டிலுள்ள செயிண்ட் பியர் மற்றும்
மிக்வலோன் தீவில் நடைபெறவுள்ளது.</p><p>

அட்லாண்டிக் கடற்பகுதியில் கனடா எல்லைக்கு அருகில் அமைந்துள்ள குறித்த
தீவானது, வட அமெரிக்காவில் பிரான்சின் இறையாண்மைக்கு உட்பட்ட ஒரேயொரு
பகுதியாகும்.</p><h2>அமெரிக்க ஐக்கிய நாடுகள்</h2><p>

அண்மையில் ஜனாதிபதி ட்ரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், கனடா,
கிரீன்லாந்து மற்றும் பிரான்ஸ் தீவுகள் உட்பட வட அமெரிக்கக் கண்டத்தின் பல
பகுதிகளை அமெரிக்கக் கொடியால் மூடி, 'அமெரிக்க ஐக்கிய நாடுகள்' எனச்
சித்தரிக்கும் புகைப்படமொன்றைப் பகிர்ந்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf3cc91b-9486-4bdd-b8ef-3274387b9d11/26-6aaff2be3fb04.webp' /></p><p>
</p><p>
இதற்கு பிரான்ஸ் தரப்பில் நேரடியாக எந்தவொரு எதிர்ப்பும் தெரிவிக்கப்படாத
நிலையில், தற்போது ஜனாதிபதி மேக்ரோன் அத்தீவுக்கு விஜயம் மேற்கொள்வதுடன்,
அங்கு கனடிய பிரதமரையும் சந்திக்கவுள்ளமை இராஜதந்திர ரீதியில் முக்கியத்துவம்
வாய்ந்த நகர்வாகப் பார்க்கப்படுகின்றது.</p><h2>எரிசக்தி நெருக்கடி&nbsp;</h2><p>
</p><p>
2014ஆம் ஆண்டிற்குப் பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் அத்தீவிற்கு விஜயம்
செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில்
பங்கேற்பதற்காகச் செல்லும் வழியிலேயே பிரான்ஸ் ஜனாதிபதி இவ்விஜயத்தை
மேற்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f634af82-c0b1-4c8b-87f7-a5a1b9b1c4b2/26-6aaff2bee75d0.webp' /></p><p>
</p><p>
இச்சந்திப்பின் போது இரு தலைவர்களும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும்
கனடா - ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான நெருங்கிய பொருளாதார உறவுகள்
குறித்தும் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T15:00:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவறி வீழ்ந்தவர் உயிரிழந்தார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/flood-person-who-fell-accidentally-lost-their-life-1789909648"></link>
            <id>https://jvpnews.com/article/flood-person-who-fell-accidentally-lost-their-life-1789909648</id>
            <summary type="text">அவிசாவளை - புலத்கோஹுபிட்டிய வீதியின் பொல்கட்டுவங்குவ பகுதிக்கு அருகில் பாயும் ரிட்டிகஹ ஓயாவில் தவறி வீழ்ந்த ஒருவர் உயிரிழந்தார்.&amp;nbsp;இன்று (20) காலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவிசாவளை - புலத்கோஹுபிட்டிய வீதியின் பொல்கட்டுவங்குவ பகுதிக்கு அருகில் பாயும் ரிட்டிகஹ ஓயாவில் தவறி வீழ்ந்த ஒருவர் உயிரிழந்தார்.&nbsp;</p><p>இன்று (20) காலை பெய்த பலத்த மழை காரணமாக ரிட்டிகஹ ஓயாவின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்த நிலையில், இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p>பிரதேச மக்களும், ருவன்வெல்ல பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, அவர் விழுந்த இடத்திற்குச் சற்றுக் கீழேயுள்ள நீர்நிலையொன்றிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இவ்வாறு தவறி வீழ்ந்து உயிரிழந்தவர் அம்பாகல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>சம்பவம் தொடர்பில் ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், பிரேதப் பரிசோதனை கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-20T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை அனிகா சுரேந்திரனின் அவுட்டிங் கிளிக்ஸ்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/anikha-surendran-rencent-australia-trip-photos-1789906892"></link>
            <id>https://viduppu.com/article/anikha-surendran-rencent-australia-trip-photos-1789906892</id>
            <summary type="text">மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன்.

என்னை எறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b63aed83-94cf-4f62-a6b5-d533d61550c6/26-6aafcfd4da0d2.webp' /></p><p>
என்னை எறிந்தால், விஸ்வாசம் படங்களில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா, தெலுங்கில் தி கோஸ்ட் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.


அதன்பின் புட்ட மொம்மா, ஓ மை டார்லிங், PT சார், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இந்ரா போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
</p><p>
14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்ற நடிகை அனிகா, வெளிநாட்டுக்கு அவுட்டிங் சென்று எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-20T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை பாடசாலைகளை திறப்பது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/school-can-close-by-principals-1789915714"></link>
            <id>https://tamilwin.com/article/school-can-close-by-principals-1789915714</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தில் பாடசாலைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு மாவட்டத்தில் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் அதிபர்கள் தீர்மானிக்க முடியும் என அறிவிக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தில் பாடசாலைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு மாவட்டத்தில் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் அதிபர்கள் தீர்மானிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>பாடசாலைகளை திறப்பதா இல்லையா என்ற தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வலயக் கல்வி பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
இதன்படி பாடசாலைகளை நாளைய தினம் நடத்துவது குறித்து அதிபர்கள் தீர்மானிக்க உள்ளனர்.</p><p>
சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1a6da91-633e-48d3-97d4-dea2513934df/26-6aaff2442e25a.webp' /></p><p>
</p><p>இதன்படி அதிபர்கள் பாடசாலை திறப்பது தொடர்பில் தீர்மானங்களை எடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>இதேவேளை சீரற்ற காலநிலை நிலவும் மாவட்டங்களில் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.&nbsp;</p><p>கடந்த 24 மணித்தியாலயங்களாக நாட்டின் சில பகுதிகளில் கடுமையான மழை பெய்து வரும் நிலையில் கல்வி அமைச்சு இந்த தீாமானத்தை எடுத்துள்ளது.</p><p>குறிப்பாக மத்திய மற்றும் சபகரகமுவ மாகாணங்கள் கடும் மழையுடனான காலநிலையினால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>கடந்த 24 மணித்தியாலங்களில&nbsp;்கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டியில் 210 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T14:48:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனின் விடுதலைக்காக திருகோணமலையிலும் ஒன்றிணைந்த இளைஞர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/youth-in-trinco-also-unite-for-anojan-s-release-1789914761"></link>
            <id>https://ibctamil.com/article/youth-in-trinco-also-unite-for-anojan-s-release-1789914761</id>
            <summary type="text">சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுதலை
செய்யக் கோரி திருகோணமலை மாவட்ட இளைஞர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி இன்று (20)
திருகோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுதலை
செய்யக் கோரி திருகோணமலை மாவட்ட இளைஞர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி இன்று (20)
திருகோணமலை கடற்கரை பகுதியில் உள்ள காந்தி உருவச்சிலைக்கு பின்னால் இளைஞர்கள்
கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>திருகோணமலையில் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு நிகழ்வில் இளைஞர்கள்
மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறும் இரு நிமிட மௌன அஞ்சலியுடன் சிவராசா அனோஜனுக்கு
மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்கி, அவரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை
எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.</p><h2>ராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தை</h2><p>
</p><p>
இலங்கை அரசாங்கம் குறித்த விடயத்தில் தலையிட்டு, சவுதி அரேபிய அரசாங்கத்துடன்
உரிய ராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து சிவராசா அனோஜனின்
உயிரைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள்
வலியுறுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd97ffb1-cbc9-4a76-b251-bea34d5755c6/26-6aaff117941a6.webp' /></p><p>
</p><p>
இந்த கவனயீர்ப்பில் சிவராசா அனோஜனின் குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவிக்கும்
வகையிலும், அவரின் விடுதலைக்காக பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும்
இளைஞர்கள் பங்கேற்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T14:45:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமர்சனத்தை எதிர்கொள்ளுங்கள் - மீண்டும் பேசுபொருளான விஜய் சேதுபதியின் பேச்சு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/again-vijay-sethupathi-talk-about-criticism-in-bb-1789913611"></link>
            <id>https://manithan.com/article/again-vijay-sethupathi-talk-about-criticism-in-bb-1789913611</id>
            <summary type="text">பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி ஏற்கனவே பேசிய கருத்துகள் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது மீண்டும்விமர்சனம் வந்தால் அதை எதிர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி ஏற்கனவே பேசிய கருத்துகள் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது மீண்டும்விமர்சனம் வந்தால் அதை எதிர்கொள்ள வேண்டும்; விமர்சனத்தை எதிர்கொள்வதுதான் முதிர்ச்சியின் அடையாளம் என்ற கருத்தை தெரிவித்து மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.</p><h2>விஜய் சேதுபதி சர்ச்சை கருத்து&nbsp;</h2><p>
</p><p>
கமல்ஹாசனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் 10வது சீசனையும் அவரே தொகுத்து வழங்குகிறார்.

சமீபத்திய நிகழ்ச்சியில் போட்டியாளருக்கு அறிவுரை வழங்கிய விஜய் சேதுபதி, தலைமைத்துவம், வாக்குறுதிகள், பொறுப்பு உள்ளிட்டவை குறித்து பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/307a49ea-a1ef-43d8-85e3-43b392d29544/26-6aafed41155b7.webp' /></p><p></p><p>இதனைத் தொடர்ந்து, அவர் தமிழக அரசியலை மறைமுகமாக விமர்சித்ததாக சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். இதனால் விஜய் சேதுபதிக்கு எதிராகவும் விமர்சனங்கள் எழுந்தன.</p><h2>மீண்டும் வைரலான பேச்சு</h2><p>
இதையடுத்து, தனது முந்தைய கருத்து குறித்து விளக்கம் அளித்த விஜய் சேதுபதி, அந்தப் பேச்சு பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களை மட்டுமே குறிப்பதாகவும், அதனை வேறு விதமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d69ee41-4991-49a0-808e-ab707a217b2c/26-6aafed41bcecc.webp' /></p><p></p><p>
</p><p>
இந்நிலையில், இந்த வார நிகழ்ச்சியிலும் விஜய் சேதுபதி பேசிய ஒரு கருத்து மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

போட்டியாளர்களிடம் பேசும்போது, விமர்சனம் வந்தால் அதை எதிர்கொள்ள வேண்டும்; விமர்சனத்தை எதிர்கொள்வதுதான் முதிர்ச்சியின் அடையாளம் என்ற கருத்தை விஜய் சேதுபதி தெரிவித்தார்.
</p><p>
இந்தப் பேச்சைத் தொடர்ந்து மீண்டும் சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது. ஒரு தரப்பினர், இது போட்டியாளர்களுக்கு அவர் வழங்கிய பொதுவான அறிவுரை என்றும், மற்றொரு தரப்பினர், கடந்த வாரம் ஏற்பட்ட சர்ச்சையின் பின்னணியில் இந்தக் கருத்தையும் பார்க்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
</p><p>
இதனால், விஜய் சேதுபதியின் இந்தப் பேச்சும் தற்போது சமூக வலைதளங்களில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இரு தரப்பினரிடையே விவாதப் பொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>
</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T14:43:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒக்டோபர் மாதம் முதல் அதிகரிக்கும் எரிபொருள் விலை..! ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fuel-price-sri-lanka-anura-speech-today-1789908441"></link>
            <id>https://tamilwin.com/article/fuel-price-sri-lanka-anura-speech-today-1789908441</id>
            <summary type="text">ஒக்டோபர் மாதம் முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அதன் தாக்கத்தை குறைப்பதற்காக அரசாங்கம் மானியம் வழங்க எதிர்பார்த்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒக்டோபர் மாதம் முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அதன் தாக்கத்தை குறைப்பதற்காக அரசாங்கம் மானியம் வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
அக்குரஸ்ஸையில் இன்று (20) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.</p><h2>எரிபொருளின் விலை&nbsp;</h2><p>
</p><p>
சர்வதேச சந்தையில் நிலவும் எரிபொருள் விலைகளின் அடிப்படையில், ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் நாட்டில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இறக்குமதி செய்யப்படும் எரிபொருளின் விலை மற்றும் விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் செலவைக் கணக்கிடும்போது, ஒக்டோபர் மாதம் முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்க வேண்டியிருக்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/711d9c7c-59dd-405e-8bef-d6e23191c2e9/26-6aafd801b5316.webp' /></p><p>
</p><p>
எனினும், இந்த விலை உயர்வினால் பொதுமக்களுக்கு ஏற்படும் சுமையை குறைப்பதற்காக அரசாங்கம் மானியம் வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மக்கள் மீது பெரும் சுமை ஏற்படும்போது, அந்தச் சுமையை முழுமையாக அவர்களிடமே சுமத்த முடியாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சுமையைக் குறைப்பதற்கு அரசாங்கம் சில உதவிகளை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><p><br></p><p><br><b><i>You may like this..<br></i></b></p><p><b><i><br></i></b></p><p><b><i><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/zo6oa5L9e30" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-09-20T14:41:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் தாயும் மகனும் சடலமாக மீட்பு: சம்பவ இடத்திற்கு சென்ற நீதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-found-thonikkal-vavuniya-bearing-stab-wounds-1789908011"></link>
            <id>https://tamilwin.com/article/body-found-thonikkal-vavuniya-bearing-stab-wounds-1789908011</id>
            <summary type="text">வவுனியா தோணிக்கல் பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் தாயின்
சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், தூக்கில் தொங்கிய நிலையில் மகனின் சடலம்
காணப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா தோணிக்கல் பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் தாயின்
சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், தூக்கில் தொங்கிய நிலையில் மகனின் சடலம்
காணப்பட்ட நிலையில் பதில் நீதவான் த. ஆர்த்தி&nbsp; சம்பவ இடத்திற்கு சென்று
பார்வையிட்டார்.
</p><p>
குறித்த சடலங்கள் நேற்று (19.09) மாலை மீட்கப்பட்டுள்ளது. </p><p>சம்பவம் தொடர்பாக
மேலும் தெரியவருவதாவது,&nbsp;</p><h2>வைத்தியசாலையில் அனுமதி</h2><p>
</p><p>
வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தாயும் அவரது மகனும் இருந்துள்ளனர்.&nbsp; இந்த நிலையில் உறவினர் இருவர் மாலை குறித்த வீட்டிற்கு சென்ற போது தாய் இரத்த
காயங்களுடன் வீட்டின் பிரதான அறையில் வீழ்ந்து கிடந்துள்ளார்.
</p><p>
இதனையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/367d2106-a1f5-4822-a8cc-98149b92ffec/26-6aafee0f5077a.webp' /></p><p> எனினும் அவர் முன்னரே சாவடைந்துள்ளதாக வைத்தியசாலையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த வீட்டின் அறை ஒன்றிற்குள் அவரது மகன் தூக்கில் தொங்கிய நிலையில்
சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.</p><h2>உடற்கூற்று பரிசோதனை</h2><p> சம்பவ இடத்திற்கு
சென்ற குற்றத் தடுப்பு பொலிசார் தடவியல் பொலிசாரின் உதவியுடன் விசாரணைகளை
முன்னெடுத்துள்ளனர்.
</p><p>
இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு இன்று (20.09) பதில் நீதவான் த.
ஆர்த்தி சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை பார்வையிட்டு, சடலங்களை உடற்கூற்று
பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9ae750a-f2aa-4c56-b42a-1e1e35ff4aca/26-6aafee105b291.webp' /></p><p>
</p><p>
இதன்போது திடீர் மரண விசாரணை அதிகாரி சுரேந்திர சேகர் மற்றும் வவுனியா தலைமை
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே. எஸ்.ரத்னமலலா ஆகியோரும் பிரசன்னமாகி
விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
</p><p>
குறித்த சம்பவத்தில் தோணிக்கல் பகுதியை சேர்ந்த 60 வயதுடைய அலஸ்கிறின் என்ற
பெண்ணும் அவரது மகனான 35வயதுடைய அயந்தன்&nbsp; &nbsp;என்ற இளைஞருமே சடலமாக
மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-20T14:32:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதியில் தவறவிடப்பட்ட தங்க ஆபரணம்; உயியவரிடம் ஒப்படைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gold-jewelry-lost-on-the-street-handed-over-owner-1789909227"></link>
            <id>https://jvpnews.com/article/gold-jewelry-lost-on-the-street-handed-over-owner-1789909227</id>
            <summary type="text">ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் தவறவிடப்பட்ட, சுமார் 3 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்கக் கைச்சங்கிலியைக் கண்டெடுத்த இளைஞர்கள் இருவர், அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் தவறவிடப்பட்ட, சுமார் 3 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்கக் கைச்சங்கிலியைக் கண்டெடுத்த இளைஞர்கள் இருவர், அதனைப் பொகவந்தலாவ காவல் நிலைய பொறுப்பதிகாரி நுவான் மதுசங்கவிடம் ஒப்படைத்துள்ளனர்.</p><p>பொகவந்தலாவ பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி வாகனத்தில் பயணித்த ரமேஷ் பிருந்தன் மற்றும் மனோராஜ் ஆகிய இருவருக்கே இந்தத் தங்கச் சங்கிலி வீதியில் கிடைத்துள்ளது.</p><p>உடனடியாக அவர்கள் உரிய உரிமையாளரைக் கண்டறியும் நோக்கில் தமது பேஸ்புக்கில் இது குறித்துப் பதிவிட்டனர்.&nbsp;</p><p>அதனைத் தொடர்ந்து, உரிமையாளர் அடையாளம் காணப்பட்டு காவல்நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு குறித்த நகை ஒப்படைக்கப்பட்டது.</p><p>கைச்சங்கிலியின் உரிமையாளர் பொகவந்தலாவ கிவ் தோட்டப் பகுதியைச் சேர்ந்தவராவார்.</p><p>கால்நடை வளர்ப்பு மூலமாகச் சிறுகச் சிறுகச் சேமித்து வாங்கிய இந்தத் தங்கக் கைச்சங்கிலியை, தமது தேவைக்காக ஹட்டன் நோக்கிச் சென்றபோதே தவறவிட்டதாகக் குறிப்பிட்ட உரிமையாளர், நகையை மீட்டுத் தந்த இளைஞர்களின் மனிதநேயத்தை வாழ்நாளில் மறக்க முடியாது எனக் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-20T14:30:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடன் பேச்சு : 07 நிபந்தனைகளை விதித்துள்ள ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-sets-7-conditions-for-negotiations-with-us-1789913302"></link>
            <id>https://ibctamil.com/article/iran-sets-7-conditions-for-negotiations-with-us-1789913302</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்கா- ஈரான் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உடன்பாடு எட்டப்பட்டால்தான் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் முடிவுக்கு வரும் என்ற நிலை உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்கா- ஈரான் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உடன்பாடு எட்டப்பட்டால்தான் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் முடிவுக்கு வரும் என்ற நிலை உள்ளது.
</p><p>

இந்த நிலையில் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை தொடர ஈரான் 7 நிபந்தனைகளை விதித்துள்ளது.&nbsp;</p><p>இது தொடர்பாக ஈரானின் உயரிய தேசிய பாதுகாப்பு சபையின் செயலாளர் மொஹ்சென் ரெசாய் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது</p><h2>எங்களுடைய செய்தி தெளிவானது</h2><p>
எங்களுடைய செய்தி தெளிவானது. சந்தேகத்திற்கு இடமற்றது. அமெரிக்கா தான் உருவாக்கியுள்ள இக்கட்டான சூழலிலிருந்து விடுபடவும், அதில் மேலும் சிக்கிக் கொள்வதை தவிர்க்கவும் விரும்பினால், ஈரானின் உரிமைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5db9fcba-fb29-4346-a557-cd7711e6b76b/26-6aafeb9436412.webp' /></p><p> அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தை நடைபெற வேண்டுமென்றாலும் நாங்கள் நிபந்தனைகள் முன்வைக்கிறோம்.

இவ்வாறு மொஹ்சென் ரெசாய் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஈரானின் கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்குமா&nbsp;</h2><p>
</p><p>

அதேவேளை7 நிபந்தனைகள் என்ன என்பதை அவர் தெரிவிக்கவில்லை. ஈரானின் கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்குமா என்றும் தெரியவில்லை.&nbsp; &nbsp; </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dde56756-4617-4721-94c6-c14a2f2bb93f/26-6aafeb94e2550.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T14:21:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய மண்ணில் முதல் முறையாக இயங்கிய ஜப்பான் போர் விமானங்கள் - Veer Guardian 2026 பயிற்சி தொடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/japan-jets-fly-from-india-in-historic-drill-1789913730"></link>
            <id>https://news.lankasri.com/article/japan-jets-fly-from-india-in-historic-drill-1789913730</id>
            <summary type="text">Japan fighter jets fly from India first time in history: இந்தியாவில் முதல் முறையாக ஜப்பான் போர் விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.

Veer Guardian 2026&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>Japan fighter jets fly from India first time in history: இந்தியாவில் முதல் முறையாக ஜப்பான் போர் விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.
</p><h2>
Veer Guardian 2026&nbsp;பயிற்சி</h2><p>ராஜஸ்தானின் ஜோத்பூர் விமானப்படை நிலையத்தில் நடைபெறும் ‘Veer Guardian 2026’ எனும் இருதரப்பு விமானப் பயிற்சியில், இந்தியா மற்றும் ஜப்பான் விமானப்படைகள் இணைந்து பங்கேற்றுள்ளன.
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Chief of the Air Staff Air Marshal AP Singh met Japan Air Self-Defense Force Chief of Staff General Takehiro Morita during the joint air exercise ‘Veer Guardian 2026’ at Air Force Station.<a href="https://x.com/IAF_MCC?ref_src=twsrc%5Etfw">@IAF_MCC</a> <a href="https://x.com/hashtag/VeerGuardian2026?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VeerGuardian2026</a> <a href="https://x.com/hashtag/IndiaJapan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#IndiaJapan</a> <a href="https://x.com/hashtag/IAF?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#IAF</a> <a href="https://x.com/hashtag/JASDF?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#JASDF</a> <a href="https://x.com/hashtag/Defence?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Defence</a> <a href="https://t.co/2vAmotKT71">pic.twitter.com/2vAmotKT71</a></p>&mdash; DD India (@DDIndialive) <a href="https://x.com/DDIndialive/status/2101670029133860922?ref_src=twsrc%5Etfw">September 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இந்திய விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் A.P. சிங் தனியாக தேஜஸ் விமானத்தில் பறந்தார். ஜப்பான் விமானப்படை தளபதி ஜெனரல் டகேஹிரோ மோரிடா ஒரு பைலட்டுடன் சேர்ந்து தேஜஸ் விமானத்தில் பறந்தார்.
</p><p>
இது இரு நாடுகளின் பரஸ்பர மரியாதை மற்றும் கூட்டாண்மையை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.</p><p>
</p><p></p><h2>பங்கேற்ற விமானங்கள்</h2><p>இந்த பயிற்சியில் இந்தியாவின் தேஜஸ், Su-30MKI, ரஃபேல் விமானங்கள் பங்கேற்கின்றன. ஜப்பானின் F-2A போர் விமானங்களும் இதில் இணைந்துள்ளன.</p><p>

ஏர் மார்ஷல் சிங், “ஜப்பான் விமானங்கள் இந்திய மண்ணில் செயல்படுவது எங்கள் இருதரப்பு உறவின் வரலாற்றில் மிகப்பெரிய மைல்கல்லாகும். இது பரஸ்பர நம்பிக்கை, தொழில்முறை ஒத்துழைப்பு மற்றும் அமைதிக்கான உறுதியை வெளிப்படுத்துகிறது” என்று கூறினார்.
</p><p>
ஜப்பான் தளபதி மோரிடா, “இந்த பயிற்சி, பரஸ்பர புரிதலை வலுப்படுத்தி, நீடித்த ஒத்துழைப்பை மேம்படுத்தும். தேஜஸ் விமானம் இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் ‘Make in India’ முயற்சியையும் பிரதிபலிக்கிறது” என்று தெரிவித்தார்.
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/ExVeerGuardian26?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ExVeerGuardian26</a><br><br>As part of Exercise Veer Guardian 26, General Takehiro Morita, Chief of Staff, Japan Air Self-Defense Force (JASDF) and Air Chief Marshal AP Singh, Chief of the Air Staff, visited Air Force Station Jodhpur and flew the indigenous <a href="https://x.com/hashtag/Tejas?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Tejas</a> fighter aircraft.<br><br>Air… <a href="https://t.co/s4KTCjdkvH">pic.twitter.com/s4KTCjdkvH</a></p>&mdash; Indian Air Force (@IAF_MCC) <a href="https://x.com/IAF_MCC/status/2101673834948739143?ref_src=twsrc%5Etfw">September 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>14 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், நடவடிக்கை (Mission) திட்டமிடல், பொறியியல், விமான பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்முறை பரிமாற்றங்கள் இடம்பெறுகின்றன.
</p><p>
மேலும், இந்தியாவின் தேஜஸ் MK-2 மேம்பட்ட போர் விமானம் விரைவில் உருவாகும் என்றும், இது இந்தியாவின் பாதுகாப்பு விமானத் துறையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்றும் ஏர் மார்ஷல் சிங் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த பயிற்சி, இந்தியா-ஜப்பான் உறவுகளை வலுப்படுத்தும் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T14:12:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்னல் வேகத்தில் கோல் அடித்த தாமஸ் முல்லர்: வான்கூவர் வெற்றி (வீடியோ)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/thomas-muller-stunning-goal-vancouver-won-in-mls-1789913487"></link>
            <id>https://news.lankasri.com/article/thomas-muller-stunning-goal-vancouver-won-in-mls-1789913487</id>
            <summary type="text">வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் சால்ட் லேக்கினை வீழ்த்தியது.

MLS போட்டியில் கனடாவின் வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணி, சால்ட் லேக் அணியை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் சால்ட் லேக்கினை வீழ்த்தியது.
</p><p>
MLS போட்டியில் கனடாவின் வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணி, சால்ட் லேக் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.</p><h2>தாமஸ் முல்லர்</h2><p>

வான்கூவர் ஒயிட்கேப்ஸ் மற்றும் சால்ட் லேக் அணிகள் மோதிய MLS போட்டி அமெரிக்கா பர்ஸ்ட் ஃபீல்ட் மைதானத்தில் நடந்தது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Too much space for Müller 🔥👊<br><br>Diaby and Thomas find our second of the match 🤩<a href="https://x.com/hashtag/RSLvVAN?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#RSLvVAN</a> | <a href="https://x.com/hashtag/RSL?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#RSL</a> 0 - 2 <a href="https://x.com/hashtag/VAN?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VAN</a> <a href="https://t.co/TUL0oTRJH0">pic.twitter.com/TUL0oTRJH0</a></p>&mdash; Vancouver Whitecaps FC (@WhitecapsFC) <a href="https://x.com/WhitecapsFC/status/2101497720141656485?ref_src=twsrc%5Etfw">September 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் வான்கூவர் ஒயிட்கேப்ஸ் வீரர் பிரையன் ஒயிட் (Brian White) கோல் அடித்தார்.&nbsp;</p><p></p><p>

அதனைத் தொடர்ந்து, ஜேர்மானிய நட்சத்திர வீரர் தாமஸ் முல்லர் (Thomas Muller) 29வது நிமிடத்தில் மின்னல் வேகத்தில் கோல் அடித்தார்.&nbsp;</p><h2>வான்கூவர் வெற்றி </h2><p>
பின்னர் இரண்டாம் பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணியில் யாடலி டையாபி கோல் அடித்தார்.</p><p> 

இறுதிவரை சால்ட் லேக் அணியால் கோல் அடிக்க முடியாததால், வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.&nbsp; &nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cc0a0af-690a-492c-86d4-fadee9daa48f/26-6aafe992ea8f9.webp' /></p>]]></content>
            <updated>2026-09-20T14:08:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேஷம் முதல் மீனம் வரை.., திருமண பொருத்த ரகசியங்கள் என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/12-rasi-marriage-rasi-palan-in-tamil-1789907349"></link>
            <id>https://news.lankasri.com/article/12-rasi-marriage-rasi-palan-in-tamil-1789907349</id>
            <summary type="text">திருமண வாழ்க்கை என்பது அனைவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமானதாகும்.

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய அது எந்த நேரத்திலும், காலகட்டத்திலும் நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருமண வாழ்க்கை என்பது அனைவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமானதாகும்.</p><p>

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய அது எந்த நேரத்திலும், காலகட்டத்திலும் நடக்கிறது என்பது மிகவும் முக்கியமானதாகும்.</p><p>

அதனால்தான் திருமணம் சுபமுகூர்த்தத்தில் நடத்தப்பட அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.</p><p>

மேலும், நமது ராசியானது நம்முடைய திருமண வாழ்க்கையில் முக்கியப்பங்கு வகிக்கிறது.</p><p>

ஆண்களுக்கு சுக்கிரனும், பெண்களுக்கு குருவும் திருமணத்துக்கான முக்கிய கிரகங்களாகக் கருதப்படுகின்றன.
</p><p>
அந்தவகையில், மேஷம் முதல் மீனம் வரையான ராசிக்காரர்களுக்கு, திருமண பொருத்த ரகசியங்கள் குறித்து இராம்ஜி சுவாமிகள் இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oy7VKp1e9Mc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T14:00:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகாவலி நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் திறப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/five-spill-gates-of-the-mahaweli-reservoir-opened-1789909425"></link>
            <id>https://jvpnews.com/article/five-spill-gates-of-the-mahaweli-reservoir-opened-1789909425</id>
            <summary type="text">மகாவலி மேற்கு நீரேந்து பிரதேசங்களில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.&amp;nbsp;இதன் காரணமாக கண்டி, பொல்கொல்ல மகாவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகாவலி மேற்கு நீரேந்து பிரதேசங்களில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.&nbsp;</p><p>இதன் காரணமாக கண்டி, பொல்கொல்ல மகாவலி நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் இன்று (20) திறக்கப்பட்டதாக கடைமை நேர பொறியியலாளர் திசர பண்டார தெரிவித்தார்.</p><p>திறக்கப்பட்டுள்ள 05 வான் கதவுகள் வழியாக வினாடிக்கு 21,000 கன அடி நீர் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு வெளியேற்றப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரவித்தார்.</p><p>மழை மேலும் தீவிரமடைந்தால் அனைத்துக் கதவுகளையும் திறக்க வேண்டி வரலாம் என்பதால், பொல்கொல்ல அணைக்குக் கீழ் பகுதியில் இருபுறமும் வசிக்கும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.</p>]]></content>
            <updated>2026-09-20T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி நாராயணசாமி காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sivaji-ganesan-elder-daughter-shanthi-passed-away-1789886624"></link>
            <id>https://manithan.com/article/sivaji-ganesan-elder-daughter-shanthi-passed-away-1789886624</id>
            <summary type="text">நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகளும், திரைப்படத் தயாரிப்பாளருமான சாந்தி நாராயணசாமி இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவு சிவாஜி கணேசனின் குடும்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகளும், திரைப்படத் தயாரிப்பாளருமான சாந்தி நாராயணசாமி இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவு சிவாஜி கணேசனின் குடும்பத்தினருக்கும், திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
</h2><p>தமிழ் சினிமாவில் நடிப்பின் உச்சமாகக் கருதப்படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தனது தனித்துவமான நடிப்புத் திறன், குரல் வளம், வசன உச்சரிப்பு மற்றும் கதாபாத்திரங்களை வெளிப்படுத்தும் விதம் ஆகியவற்றால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்.பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த ரசிகர்களால் இன்றளவும் அவரது நடிப்பு போற்றப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36534c79-53fd-4105-9eb5-c8bf940f1801/26-6aaf83bf69770.webp' /></p><p></p><h2>
சிவாஜி கணேசனின் குடும்பம்
</h2><p>சிவாஜி கணேசன் - கமலா கணேசன் தம்பதியினருக்கு ராம்குமார், பிரபு ஆகிய இரு மகன்களும், சாந்தி, ராஜ்வி ஆகிய இரு மகள்களும் உள்ளனர். இவர்களில் மூத்த மகளாக சாந்தி நாராயணசாமி இருந்தார்.
</p><p>
தனது மூத்த மகள் சாந்தியின் பெயரை நினைவுகூரும் வகையில், சென்னை அண்ணாசாலையில் சிவாஜி கணேசன் ஒரு திரையரங்கையும் கட்டியிருந்தார்.இதன் மூலம் சாந்தியின் பெயர் அவரது குடும்பத்துடனும், திரையுலகுடனும் நெருக்கமாக இணைந்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa97a7bb-280f-4417-898b-62a88c2df270/26-6aaf83c01e83f.webp' /></p><p>
</p><p>சாந்தி நாராயணசாமி குடும்பப் பின்னணியைக் கொண்டவராக மட்டுமின்றி, திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டிருந்தார்.</p><p>சிவாஜி கணேசன் நடிப்பில் 1974-ஆம் ஆண்டு வெளியான ‘தங்கப்பதக்கம்’ திரைப்படத்தை அவர் தயாரித்திருந்தார். காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம் சிவாஜி கணேசனின் குறிப்பிடத்தக்க படைப்புகளில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.சாந்தி நாராயணசாமியின் கணவர் நாராயணசாமி. இவர்களுக்கு சத்யலட்சுமி என்ற மகள் உள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6a1346b-75c9-4dca-9f3b-2ee2ea17773a/26-6aaf83c0c97f7.webp' /></p><p></p><h2>
சாந்தி நாராயணசாமி மறைவு</h2><p>இந்த நிலையில், சிவாஜி கணேசனின் மூத்த மகளும், நடிகர்கள் பிரபு மற்றும் ராம்குமாரின் சகோதரியுமான சாந்தி நாராயணசாமி இன்று அதிகாலை காலமானார்.
</p><p>
அவரது மறைவுச் செய்தி சிவாஜி கணேசனின் குடும்பத்தினரையும், அவருக்கு நெருக்கமானவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. </p><p>திரையுலகில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் குடும்பத்துடன் தொடர்புடைய முக்கியமான நபராகவும், திரைப்படத் தயாரிப்பாளராகவும் அறியப்பட்ட சாந்தி நாராயணசாமியின் மறைவு குடும்பத்தினருக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T13:57:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து சேகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/signature-campaign-demanding-anojans-release-1789911220"></link>
            <id>https://ibctamil.com/article/signature-campaign-demanding-anojans-release-1789911220</id>
            <summary type="text">சவுதி அரேபியாவில் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை நாட்டிற்கு மீண்டும் அழைத்துவர இராஜதந்திர நடவடிக்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவில் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை நாட்டிற்கு மீண்டும் அழைத்துவர இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, நற்பிட்டிமுனை பகுதியில் இன்று (20) விசேட கையெழுத்து சேகரிப்பும் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.&nbsp;&nbsp;</p><p>சமூக ஊடகப் பதிவொன்றைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அனோஜனுக்கு ஆரம்பத்தில் 5 வருட சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்த நிலையில், மேன்முறையீட்டின் அடிப்படையில் இத் தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்</h2><p>&nbsp;எனினும், இது தொடர்பான எழுத்துமூலமான உத்தியோகபூர்வ தீர்ப்பு இதுவரை இலங்கை வெளிவிவகார அமைச்சுக்குக் கிடைக்கப்பெறவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3604d25-5669-4cd1-8e9c-410fd6b3aa73/26-6aafe60054886.webp' /></p><p>இப் பின்னணியில், அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கம் அவசர உயர்மட்ட இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனக் கோரி இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>“ஒரு உயிரைக் காப்போம் - மனிதாபிமானத்துடன் கரம் கொடுப்போம்”&nbsp;</h2><p>&nbsp;“ஒரு உயிரைக் காப்போம் - மனிதாபிமானத்துடன் கரம் கொடுப்போம்” என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இக் கவனயீர்ப்புக்கு இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து நற்பிட்டிமுனை மக்கள் உட்படப் பெருந்திரளான பொதுமக்கள் ஆதரவு வழங்கினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3440f33-cf23-4c44-9ea1-0c11192a7aee/26-6aafe60127605.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p><p> </p>]]></content>
            <updated>2026-09-20T13:56:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஜினிக்கு வில்லியாக மிரட்டும் வித்யா பாலன்.. ஜெயிலர் 2 வீடியோவை பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vidya-balan-as-kantha-in-jailer-2-1789912357"></link>
            <id>https://cineulagam.com/article/vidya-balan-as-kantha-in-jailer-2-1789912357</id>
            <summary type="text">சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் 2 படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ஜெயிலர் முதல் பாகத்தின் மிகப்பெரிய வெற்றி தான் அதற்கு காரணம்.வரும...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் 2 படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ஜெயிலர் முதல் பாகத்தின் மிகப்பெரிய வெற்றி தான் அதற்கு காரணம்.</p><p>வரும் அக்டோபர் 15ம் தேதி ஜெயிலர் 2 ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் தற்போது கதாபாத்திரங்களை ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e24acd50-8d18-4853-945c-f04f58d7fcbc/26-6aafe5272556e.webp' /></p><p>
</p><h2>காந்தா - வித்யா பாலன்
</h2><p>ஹிந்தி நடிகை வித்யா பாலன் ஜெயிலர் 2ல் காந்தா என்ற ரோலில் நடித்து இருக்கிறார். மாஸ் லுக்கில் அவர் புகை பிடிப்பது போல டீசரில் காட்டப்பட்டு இருக்கிறது.
</p><p>வைரலாகும் ப்ரோமோவை பாருங்க.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Introducing Vidya Balan as Kantha from the world of <a href="https://x.com/hashtag/Jailer2?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Jailer2</a> 💥<a href="https://x.com/rajinikanth?ref_src=twsrc%5Etfw">@rajinikanth</a> <a href="https://x.com/Nelsondilpkumar?ref_src=twsrc%5Etfw">@Nelsondilpkumar</a> <a href="https://x.com/anirudhofficial?ref_src=twsrc%5Etfw">@anirudhofficial</a> <a href="https://x.com/vidya_balan?ref_src=twsrc%5Etfw">@vidya_balan</a> <a href="https://x.com/iam_SJSuryah?ref_src=twsrc%5Etfw">@iam_SJSuryah</a> <a href="https://x.com/hashtag/SurajVenjaramoodu?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SurajVenjaramoodu</a> <a href="https://x.com/vijaykartikdop?ref_src=twsrc%5Etfw">@vijaykartikdop</a> <a href="https://x.com/Nirmalcuts?ref_src=twsrc%5Etfw">@Nirmalcuts</a> <a href="https://x.com/ChethanDsouza?ref_src=twsrc%5Etfw">@ChethanDsouza</a> <a href="https://x.com/AlwaysJani?ref_src=twsrc%5Etfw">@AlwaysJani</a> <a href="https://x.com/KiranDrk?ref_src=twsrc%5Etfw">@KiranDrk</a> <a href="https://x.com/hashtag/PallaviSingh?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#PallaviSingh</a> <a href="https://x.com/valentino_suren?ref_src=twsrc%5Etfw">@valentino_suren</a> <a href="https://x.com/alagiakoothan?ref_src=twsrc%5Etfw">@Alagiakoothan</a>… <a href="https://t.co/kaCWF3beIN">pic.twitter.com/kaCWF3beIN</a></p>&mdash; Sun Pictures (@sunpictures) <a href="https://x.com/sunpictures/status/2101657636487995490?ref_src=twsrc%5Etfw">September 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-09-20T13:52:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[1600 ட்ரோன்களை வீழ்த்தி..மிகப்பெரிய தாக்குதல் முறியடிப்பு - ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-said-downing-1600-ukraine-drones-1789911568"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-said-downing-1600-ukraine-drones-1789911568</id>
            <summary type="text">Russian mayor said we downing 1,600 drones: உக்ரைனின் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை முறியடித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைனின் 1,600 ட்ரோன்களை சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russian mayor said we downing 1,600 drones: உக்ரைனின் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை முறியடித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
</p><p>
உக்ரைனின் 1,600 ட்ரோன்களை சுட்டுவீழ்த்தி, மிகப்பெரிய தாக்குதலை முறியடித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.&nbsp;</p><h2>உக்ரைன் மிகப்பெரிய தாக்குதல் </h2><p>
ரஷ்யாவின் நாடாளுமன்றத் தேர்தலின் இடையே, மாஸ்கோ பகுதியில் உக்ரைன் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3dbe4da-9fbf-429f-8628-bea4ce9ed0d5/26-6aafe33ff0927.webp' /></p><p></p><p>
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதுகுறித்து மேயர் செர்ஜி சோபியானின் கூறுகையில், "1600-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதன் மூலம், மிகப்பெரிய உக்ரேனிய ட்ரோன் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டது. பல ட்ரோன்கள் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தை அடைந்தன.</p><p>

அவற்றில் ஒன்று அடுக்குமாடிக் குடியிருப்பு மீது தாக்கியது. தேர்தல்களை சீர்குலைக்கும் நோக்கத்துடன் இந்த முன்னெப்போதும் இல்லாத தாக்குதல் தெளிவாகத் திட்டமிடப்பட்டது. ஆனால், எதிரி இதை சாதிக்க தவறிவிட்டார்" என்றார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/182e812a-e688-4608-a144-21fbe91da0cb/26-6aafe340c6d7c.webp' /></p>]]></content>
            <updated>2026-09-20T13:41:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[புரட்டாசி மாத கிரக மாற்றங்கள்: இந்த ராசிகளுக்கு ராஜயோகம் உறுதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/purattasi-rasipalan-2026-who-get-huge-luck-1789908146"></link>
            <id>https://manithan.com/article/purattasi-rasipalan-2026-who-get-huge-luck-1789908146</id>
            <summary type="text">தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும், புனிதமானதுமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, இந்த மாதத்தில் பெரும்பாலான இந்துக்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும், புனிதமானதுமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, இந்த மாதத்தில் பெரும்பாலான இந்துக்கள் அசைவ உணவுகளைத் தவிர்த்து, விரதம், வழிபாடு, பூஜை போன்ற ஆன்மிகச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.</p><p> பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்புப் பெற்ற இந்த மாதம், மன அமைதி, பக்தி மற்றும் ஆன்மிக சிந்தனையை வளர்க்கும் காலமாகவும் பலரால் கருதப்படுகிறது.

ஆன்மிக ரீதியாக மட்டுமல்லாமல், ஜோதிட ரீதியாகவும் புரட்டாசி மாதம் மிகவும் முக்கியமானதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c04cf47d-8c7c-4b86-9559-4ff888665f6c/26-6aafde0b97fb4.webp' /></p><p> </p><p>இந்த மாதத்தில் ஏற்படும் கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் அவற்றின் நிலைமாற்றங்கள், ஒவ்வொரு ராசியினரின் வாழ்க்கையிலும் வெவ்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று ஜோதிடத்தில் நம்பப்படுகிறது.
</p><p>
புரட்டாசி மாதத்தில் குருபகவான் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார்.அதேபோல், சுக்கிரனும் கேதுவும் சிம்ம ராசியில் சஞ்சரிக்கின்றனர். மேலும், சூரியன் கன்னி ராசியில் புதனுடன் இணைந்து புதாதித்திய யோகத்தை உருவாக்குகிறார்.</p><p> </p><p>இந்த கிரக நிலைகள் காரணமாக தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை, உறவுகள் மற்றும் தனிப்பட்ட முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
</p><p>
இந்த கிரக மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் ஏதேனும் ஒரு வகையில் இருக்கலாம் என்றாலும், சில ராசிக்காரர்களுக்கு புரட்டாசி மாதம் கூடுதல் சாதகமான பலன்களை வழங்கும் காலமாக அமையும் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p>அப்படி புரட்டாசி மாதம் முழுவதும் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><p></p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcd8f88f-0d94-4d00-a70c-872e6c93418b/26-6aafde0c4c344.webp' /></p><h2>
</h2><p>மேஷ ராசிக்காரர்களுக்கு புரட்டாசி மாதம் சிறப்பாக அமையும். திட்டமிட்ட பணிகள் அனைத்தும் சரியான நேரத்தில் நிறைவேறும். </p><p>செவ்வாயின் அருளால் தைரியமும் உற்சாகமும் அதிகரிக்கும். வாழ்க்கையின் பல துறைகளிலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். மாதத்தின் நடுப்பகுதியில் குருபகவானின் அருளால் குறிப்பிடத்தக்க நிதி ஆதாயம் கிடைக்கலாம்.</p><p> கடனாகக் கொடுத்த பணம் எதிர்பாராத விதமாக திரும்பக் கிடைக்கும். புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும், பழைய கடன்களையும் அடைக்க முடியும்.வணிக விரிவாக்கத் திட்டங்கள் நிறைவேறும்.

உறவுகளைப் பொறுத்தவரை மாதம் சாதகமாக இருக்கும்.</p><p>காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். வாழ்க்கைத் துணையுடன் தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.</p><h2>

ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe06674c-b9ff-44a9-9b92-a7af48dd94d6/26-6aafde0d01cd7.webp' /></p><p>
ரிஷப ராசிக்காரர்களுக்கு புரட்டாசி மாதம் நல்ல வாய்ப்புகள் நிறைந்ததாக இருக்கும். ராசி அதிபதியான சுக்கிரன் நான்காம் இடத்தில் கேதுவுடன் இணைந்திருப்பதால், முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்த விஷயங்கள் முடிவுக்கு வரும். </p><p>கடின உழைப்புக்கான பலன்களை முழுமையாகப் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.

சரியான வாய்ப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் செல்வத்தை அதிகரிக்கலாம்.</p><p> சுக்கிரனின் அருளால் வருமானம் உயரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். பணியில் கடின உழைப்புக்குப் பதவி உயர்வும், மரியாதையும் கிடைக்கும்.</p><p>இதனால் நிதி நிலை வலுப்படும். முதலீடுகள் மற்றும் நண்பர்களின் உதவியால் நீண்டகால ஆசைகள் நிறைவேற வாய்ப்புள்ளது.
</p><h2>
துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/601f5ddf-2eb3-437e-8181-cfa532bad0c9/26-6aafde0dae99e.webp' /></p><p>
துலாம் ராசிக்காரர்களுக்கு புரட்டாசி மாதம் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளைத் திறக்கும்.குருபகவானின் அருள் முழுமையாகக் கிடைக்கும். </p><p>வெற்றியை நோக்கிய பயணம் வேகமடையும்; நிதி நிலையும் சிறப்பாக இருக்கும். வாழ்க்கையின் பல துறைகளிலும் முன்னேற்றம் காண்பீர்கள்.மகிழ்ச்சியான தருணங்கள் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் அன்பும் அமைதியும் நிலவும்.</p><p> நீண்டகால ஆசைகளை நிறைவேற்ற இது ஏற்ற காலமாகும். கடின உழைப்புக்கான பலன்களைப் பெறுவீர்கள்.திட்டமிட்ட பணிகள் சரியான நேரத்தில் முடியும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்துவது முக்கியம்.</p><h2>
மீனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3585644e-10fc-4779-b091-9cc6d052d0d4/26-6aafde0e6c1db.webp' /></p><p></p><h2>
</h2><p>மீன ராசிக்காரர்களுக்கு புரட்டாசி மாதம் பல நல்ல யோகங்கள் நிறைந்ததாக இருக்கும். வருமானம் அதிகரிக்கலாம்; எதிர்பாராத நிதி ஆதாயங்களுக்கும் வாய்ப்புள்ளது.</p><p> நீண்ட நாட்களாக இருந்த நிதிச் சிக்கல்கள் குறையும். நீண்டகால ஆசைகளில் பல நிறைவேறலாம்.

திருமண வாழ்க்கையில் அன்பும் பரஸ்பர பாசமும் அதிகரிக்கும். </p><p>வாழ்க்கைத் துணைக்கு ஆச்சரியப் பரிசுகள் வழங்கும் வாய்ப்பும் ஏற்படலாம். இந்த மாதம் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அமையும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நண்பர்களுடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகளும் உருவாகலாம்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b> &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T13:34:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி மக்கள் தீபமேந்திப் பிரார்த்தனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-light-lamps-and-pray-for-anojan-s-release-1789910009"></link>
            <id>https://tamilwin.com/article/people-light-lamps-and-pray-for-anojan-s-release-1789910009</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரைப் பாதுகாப்பாக விடுதலை
செய்யக் கோரி சம்மாந்துறை – வளத்தாப்பிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரைப் பாதுகாப்பாக விடுதலை
செய்யக் கோரி சம்மாந்துறை – வளத்தாப்பிட்டி பகுதியில் பொதுமக்கள் ஒன்றுகூடித்
தீபமேந்தி விசேட பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.</p><p>

வளத்தாப்பிட்டி பகுதியில் நேற்று(19) இடம்பெற்ற இந்நிகழ்வில், அப்பகுதியைச்
சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கைகளில் தீபங்களை ஏந்தி அனோஜனின் உயிரைக்
காப்பாற்றவும், சவூதி அரசு அவருக்கு மன்னிப்பு வழங்கவும் மனமுருகிப்
பிரார்த்தனை செய்தனர்.</p><h2>பிரார்த்தனை</h2><p>

அத்துடன், அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி இலங்கை அரசாங்கத்திற்கும் சவூதி
தூதரகத்திற்கும் அனுப்பி வைப்பதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுள்ள அவசர மனுவிலும்
மக்கள் திரளாகக் கையொப்பமிட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2eba0a6d-ac11-4164-ad1a-396559f03775/26-6aafde6047312.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரை நாட்டிற்கு மீட்டு வர வேண்டும் என
வலியுறுத்தி கல்முனை, நற்பிட்டிமுனை உட்பட நாட்டின் பல்வேறு பாகங்களிலும்
தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைமைகள்
ஒன்றிணைந்து பல்வேறு மனிதாபிமான நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T13:33:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தம்; மழை தொடரும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/low-pressure-area-in-bay-of-bengal-rains-lanka-1789906911"></link>
            <id>https://jvpnews.com/article/low-pressure-area-in-bay-of-bengal-rains-lanka-1789906911</id>
            <summary type="text">நாட்டிற்கு வடகிழக்காக அந்தமான் பகுதிக்கு அருகில், வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டிற்கு வடகிழக்காக அந்தமான் பகுதிக்கு அருகில், வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>இதனால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் ஏதும் இருக்காது என்றாலும், இத் தொகுதியை நோக்கிய காற்று வீசுகை காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப் படுகிறது.</p><h2>இடியுடன் கூடிய மழை பெய்யும்</h2><p>மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.&nbsp;</p><p>இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது.</p><p>வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது.</p><p>ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.</p><p>மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ. 80 ஆயிரம் விஐபி டிக்கெட் வேஸ்ட்!! சிம்பொனியால் ஏமாந்துபோன யுவன் ரசிகைகள் புலம்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/yuvan-symphony-concert-fans-critics-controversy-1789905854"></link>
            <id>https://viduppu.com/article/yuvan-symphony-concert-fans-critics-controversy-1789905854</id>
            <summary type="text">யுவன் சங்கர் ராஜாசென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சமீபத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் Walking Through The Rainbow - A Symphonic Experienc...</summary>
            <content type="html"><![CDATA[<h2>யுவன் சங்கர் ராஜா</h2><p>சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சமீபத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் Walking Through The Rainbow - A Symphonic Experience என்ற பிரத்யேக கான்செர்ட் நடந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2699fe1-6c4a-4183-92db-d6d6f9d5a7fd/26-6aafcbc035cbb.webp' /></p><p> </p><p>யுவனின் ஐகானிக் பாடல்கள் எல்லாம் இடம்பெறும் என்று நினைத்து டிக்கெட் புக் செய்து ரசிகர்கள் சென்றுள்ளனர். ஆனால் பாட்டு பாடாமல் சிம்பொனி மட்டும் இசைக்கப்பட்டுள்ளது.</p><p> இதனால் அதிருப்தி அடைந்த பெண்கள், யுவன் பாடுவார் என்று எதிர்பார்த்து வந்தோம், அவர் ஒன்று இரண்டு பாடலாவது பாடி இருக்கலாம். இசையை கேட்க கேட்க எல்லாம் ஒரேமாதிரி மியூசிக் மாதிரிதான் எங்களுக்கு தெரிந்தது. விஐபி டிக்கெட் 80 ஆயிரம் எடுத்து வந்தோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8b27459-d317-4bbf-8ff5-f1303b031e0b/26-6aafcbc0e8d43.webp' /></p><p> இவ்வளவு பெரிய ஏமாற்றமாகிவிட்டது, ஆனால் யுவனை பார்த்த திருப்தியில் கிளம்புகிறோம் என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர் இதற்கு சிலர், சிலர் சிம்பொனியை தவறாக புரிந்து கொண்டு வந்துவிட்டார்கள், அதைக் கேட்கும்போது நன்றாக இருந்தது. யுவனின் கேரியரில் ஹைலைட்டான விஷயத்தை அப்படியே சிம்பொனியா கொடுத்து இருந்தார் என்றும் கூறி வருகிறார்கள்.</p>]]></content>
            <updated>2026-09-20T13:30:00+00:00</updated>
        </entry>
    </feed>
