<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-11T11:20:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வற்றாப்பளையில் இராணுவ வசமிருந்த காணி விடுவிப்பு! உரிமையாளரிடம் கையளிக்கவும் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/land-in-use-by-the-military-released-1789124837"></link>
            <id>https://ibctamil.com/article/land-in-use-by-the-military-released-1789124837</id>
            <summary type="text">முல்லைத்தீவு மாவட்டத்தின் வற்றாப்பளைச் சந்திப் பகுதியில் இலங்கை இராணுவத்தின் பயன்பாட்டிலிருந்த 41.8 பேர்ச் அரச மற்றும் தனியார் காணி, பொதுமக்களின் தேவை...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்டத்தின் வற்றாப்பளைச் சந்திப் பகுதியில் இலங்கை இராணுவத்தின் பயன்பாட்டிலிருந்த 41.8 பேர்ச் அரச மற்றும் தனியார் காணி, பொதுமக்களின் தேவைகளுக்காக விடுவிக்கப்பட்டுள்ளது.</p><p>தீவு சுற்றுலா முன்பதிவுசெய்யுங்கள்

59 ஆவது படைப்பிரிவினரால் விடுவிக்கப்பட்ட குறித்த காணி, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் முன்னிலையில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரிடம் திங்கட்கிழமை (10) உத்தியோக பூர்வமாகக் கையளிக்கப்பட்டது.</p><p></p><h2>சட்டபூர்வ உரிமையாளிடம் கையளிப்பு</h2><p>

மேலும், இராணுவப் பயன்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள தனியார் காணியின் உரிமை தொடர்பான உறுதிப்படுத்தல் நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், குறித்த காணி அதன் சட்டபூர்வ உரிமையாளரிடம் முறையாகக் கையளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe33c184-5ae2-49cd-96c5-e7033057c375/26-6aa3e3cad0460.webp' /></p><p>
</p><p>
இக்காணி விடுவிப்பு நடவடிக்கையானது, பொதுமக்களின் காணி உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும், மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்குமான முக்கிய முன்னேற்றமாக அமைந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T11:19:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்சவுக்கு தனது குடும்ப பராமரிப்புக்கு கூட பணமில்லையாம்?சந்தேகத்தை ஏற்படுத்துகிறது மாமாவின் கருத்து...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lanka-sportreizen-founder-thilak-weerasinghe-1789085458"></link>
            <id>https://tamilwin.com/article/lanka-sportreizen-founder-thilak-weerasinghe-1789085458</id>
            <summary type="text">&amp;nbsp;நாமல் ராஜபக்ச மற்றும் லிமினி ஆகியோர் தமது இரண்டு பிள்ளைகளுடன் கொழும்பு நெக்ரிஸ் வீதியில் அமைந்துள்ள எனது இரு மாடி வீட்டில் மேல்மாடியிலே வசித்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நாமல் ராஜபக்ச மற்றும் லிமினி ஆகியோர் தமது இரண்டு பிள்ளைகளுடன் கொழும்பு நெக்ரிஸ் வீதியில் அமைந்துள்ள எனது இரு மாடி வீட்டில் மேல்மாடியிலே வசித்து வருவதாக பிரபல தொழிலதிபரும், எல்.எஸ்.ஆர் (LSR) குழுமத்தின் தலைவரும்,லிமினியின் தந்தையுமான திலக் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>நாமலின் குடும்பத்தின் அனைத்து பராமரிப்புச் செலவுகள், உணவுப் பொருட்கள் மற்றும் பிள்ளைகளின் கல்விச் செலவுகள் உள்ளிட்ட அனைத்து அன்றாடச் செலவுகளையும் தனது சொந்தப் பணத்திலிருந்தே செலவிடுவதாகவும் நாமலின் பணம் எதுவும் பெற்றுக் கொள்வதில்லை என்ற தொனியிலே குறிப்பிடுகிறார்.
</p><h2>
</h2><p></p><h2>ராஜபக்ச குடும்பத்துடனான உறவு</h2><p>வலையொளித்தளம் ஒன்றிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.அது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
வீட்டிற்குள் எந்தவொரு அரசியல் கலந்துரையாடலோ அல்லது பிரசார நடவடிக்கைகளோ நடைபெறுவதில்லை. </p><p>நாமல் ராஜபக்ச வீட்டிற்கு வந்ததும் மிகவும் எளிமையான குடும்ப வாழ்க்கையையே வாழ்கிறார் என்றும் தெரிவிக்கிறார். ராஜபக்ச குடும்பத்துடனான ஏற்படுத்திக் கொண்ட உறவின் காரணமாக தனக்கும் தனது தொழில்களுக்கும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோதிலும், </p><p>2015ஆம் ஆண்டு ராஜபக்ச குடும்பத்தினர் அதிகாரத்தில் இல்லாத காலத்தில் நடைபெற்ற இந்தத் திருமணம் பிள்ளைகளின் விருப்பத்தின் பேரில் நடந்ததொன்று என்பதால், அது குறித்து தான் ஒருபோதும் வருந்தவதில்லை என்றும் அவர் கூறுகிறார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71709390-04bf-4a15-ba5c-5ad148ff3581/26-6aa34714dcfc4.webp' /></p><p>ராஜபக்சக்களை மக்கள் திருடர்கள் என்று சொல்கிறார்கள். லிமினியின் தந்தையும் ஒரு திருடன். அப்படியானால் லிமினிக்கும் இதில் ஒரு பங்கு இருக்கிறது என பல கதைகள் கூறப்பட்டாலும் நான் அவ்வாறான எந்த சம்பவத்திற்கு சம்பந்தமில்லை.</p><p>நான் மிகவும் கஷ்டப்பட்டு உருவாக்கியது தான் எனது வியாபாரமாகும். 
திருமணம் என்பதை ஒரே நாளில் செய்துவிட முடியாது. அதற்கு முடிவெடுக்க வேண்டும். இரண்டு குடும்பங்களும் இணைந்து எடுக்கும் முடிவு அது. </p><p>அங்கு அரசியல் ரீதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அது ஒரு குடும்ப முடிவு. மேலும் நாமலை எனக்கு இப்போது மட்டுமல்ல, பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தெரியும். அவர் அசைவம் சாப்பிடாத, மது அருந்தாத ஒரு நல்ல பிள்ளை என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T11:19:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீண்ட நேரம் வெளியில் இருப்பவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1789124268"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1789124268</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளுக்கு வெப்பம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அதன்படி வட மத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் யாழ்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளுக்கு வெப்பம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p> 

அதன்படி வட மத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>வெப்பச் சுட்டெண் எச்சரிக்கை நிலை</h2><p> 

இதன்படி, நாளை (12.09.2026) பகல் வேளையில் வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளில், மனித உடலில் உணரப்படும் வெப்பத்தின் அளவான வெப்பச் சுட்டெண் எச்சரிக்கை நிலைக்கு உயர்வடையக் கூடும். </p><p>

சார்பு ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையைக் கொண்டு இந்த வெப்பச் சுட்டெண் கணக்கிடப்படுகிறது. இதுவே உங்கள் உடலில் உணரப்படும் வெப்பநிலையாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6e946ce-a90f-4d63-ba6f-8d90211c6536/26-6aa3e38e95b7d.webp' /></p><h2>பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்</h2><p> </p><p>

நீண்ட நேரம் வெயிலில் இருப்பதும் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் சோர்வை ஏற்படுத்தும் என்றும், தொடர்ந்து இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது வெப்பத் தசைப்பிடிப்பு போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p> 

எனவே, பொதுமக்கள் போதுமான அளவு நீர் அருந்துமாறும், கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளை தவிர்த்து கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T11:18:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் குருத்வாராவுக்குள் தாக்குதல் நடத்திய நபர் மீது குற்றச்சாட்டு பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-police-charge-man-for-1789125288"></link>
            <id>https://canadamirror.com/article/canada-police-charge-man-for-1789125288</id>
            <summary type="text">Canada police charge man for screwdriver stabbings at gurdwara: கனடாவில் குருத்வாராவுக்குள் தாக்குதல் நடத்திய நபர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada police charge man for screwdriver stabbings at gurdwara: கனடாவில் குருத்வாராவுக்குள் தாக்குதல் நடத்திய நபர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p>

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாண தலைநகரான எட்மண்டன் நகரில் அமைந்துள்ள குருத்வாரா ஒன்றிற்குள் நுழைந்த ஒருவர் தாக்குதல் நடத்திய விடயத்தில் அந்த நபர் மீது பொலிசார் குற்றச்சாட்டுகள் பதிவு செய்துள்ளார்கள்.</p><p><span style="color: inherit;">ஆகத்து மாதம் 21ஆம் திகதி, அதிகாலை 5.00 மணியளவில், எட்மண்டன் நகரில் அமைந்துள்ள குருத்வாரா ஒன்றிற்குள் நுழைந்த ஒருவர் பிரார்த்தனை செய்யும் அறைக்குள் நுழைய முயன்றுள்ளார்.</span></p><p>
அவரை இரண்டு பேர் தடுக்க முயல, அவர் தன் கையில் வைத்திருந்த ஸ்குரூ டிரைவரால் அவர்களை தாக்கியுள்ளார்.</p><p>

உடனடியாக மற்றவர்கள் அவர் மீது பாய்ந்து அவரைப் பிடித்து பொலிசார் வரும்வரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்திருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b973d26-c999-4383-82bf-94015929dd8a/26-6aa3e2f216ef3.webp' /><br></p><p>காயமடைந்த 75 மற்றும் 51 வயதுடைய இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.</p><p>
இந்நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் அந்த நபரைக் கைது செய்துள்ளார்கள்.</p><p>

விடயம் என்னவென்றால், ஏற்கனவே தாக்குதல் தொடர்பில் சிறையிலடைக்கப்பட்டிருந்த அந்த 27 வயது நபர், முன் தினம்தான், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.</p><p><span style="color: inherit;">தாக்குதல் நடத்திய அந்த நபருடைய பெயர் ஆஸ்டின் (Austin Sim-Pelletier, 27) என தற்போது பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.</span></p><p>
அவர் மீது தாக்குதல், ஆயுதம் வைத்திருந்தது முதலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
</p><p>
அவர் எதற்காக தாக்குதல் நடத்தினார் என்பது இதுவரை தெரியவரவில்லை.

இந்நிலையில், இது ஒரு சிக்கலான வழக்கு என்றும், இந்த தாக்குதல் இனவெறுப்பு தொடர்பானதா என்பதை அறிவதற்காக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
ஆஸ்டின், இம்மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுகிறார்.&nbsp; &nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-11T11:17:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-orders-closure-of-mutur-hospital-canteen-1789124193"></link>
            <id>https://tamilwin.com/article/court-orders-closure-of-mutur-hospital-canteen-1789124193</id>
            <summary type="text">திருகோணமலை – மூதூர் தள வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையை&amp;nbsp;மூட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வைத்தியசாலையின் சுகாதார நிலை
தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை – மூதூர் தள வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையை&nbsp;மூட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>வைத்தியசாலையின் சுகாதார நிலை
தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், சுகாதாரத் தரம் குறைபாடுடையதாக
கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பொதுசுகாதார பரிசோதகரால் மூதூர் நீதவான்
நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த சிற்றுண்டிச்சாலைக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்
பதிவு செய்யப்பட்ட நிலையில், விசாரணையைத் தொடர்ந்து சிற்றுண்டிச்சாலையை
எதிர்வரும் 18ஆம் திகதி வரை மூடுமாறு மூதூர் நீதவான் U. வசீம் அஹமட்
உத்தரவிட்டுள்ளார்.</p><h2>சுகாதாரப் பாதுகாப்பு</h2><p>

மேலும், ஒரு வாரத்தின் பின்னர் குறித்த சிற்றுண்டிச்சாலையின் சுகாதார நிலை
தொடர்பான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பொதுசுகாதார பரிசோதகருக்கு
நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5924356e-d140-436d-a881-89b3dfcb2f19/26-6aa3e2e9043b7.webp' /></p><p>

பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் அதிகாரிகளின் கண்காணிப்பு
தொடர்கிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T11:16:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் குருத்வாராவில் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம்: சமீபத்திய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-police-charge-man-for-screwdriver-stabbings-1789124923"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-police-charge-man-for-screwdriver-stabbings-1789124923</id>
            <summary type="text">Canada police charge man for screwdriver stabbings at gurdwara: கனடாவில் குருத்வாராவுக்குள் தாக்குதல் நடத்திய நபர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada police charge man for screwdriver stabbings at gurdwara: கனடாவில் குருத்வாராவுக்குள் தாக்குதல் நடத்திய நபர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p>

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாண தலைநகரான எட்மண்டன் நகரில் அமைந்துள்ள குருத்வாரா ஒன்றிற்குள் நுழைந்த ஒருவர் தாக்குதல் நடத்திய விடயத்தில் அந்த நபர் மீது பொலிசார் குற்றச்சாட்டுகள் பதிவு செய்துள்ளார்கள்.
</p><h2>
குருத்வாராவுக்குள் தாக்குதல் நடத்திய நபர்
</h2><p>
ஆகத்து மாதம் 21ஆம் திகதி, அதிகாலை 5.00 மணியளவில், எட்மண்டன் நகரில் அமைந்துள்ள குருத்வாரா ஒன்றிற்குள் நுழைந்த ஒருவர் பிரார்த்தனை செய்யும் அறைக்குள் நுழைய முயன்றுள்ளார்.
</p><p>
அவரை இரண்டு பேர் தடுக்க முயல, அவர் தன் கையில் வைத்திருந்த ஸ்குரூ டிரைவரால் அவர்களை தாக்கியுள்ளார்.</p><p>

உடனடியாக மற்றவர்கள் அவர் மீது பாய்ந்து அவரைப் பிடித்து பொலிசார் வரும்வரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்திருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b905f58d-a12b-4944-98a7-6c26404e3eec/26-6aa3e247d9867.webp' /><br></p><p>

காயமடைந்த 75 மற்றும் 51 வயதுடைய இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
</p><p>
இந்நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் அந்த நபரைக் கைது செய்துள்ளார்கள்.</p><p>

விடயம் என்னவென்றால், ஏற்கனவே தாக்குதல் தொடர்பில் சிறையிலடைக்கப்பட்டிருந்த அந்த 27 வயது நபர், முன் தினம்தான், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.
</p><h2>
குற்றச்சாட்டு பதிவு</h2><p>

தாக்குதல் நடத்திய அந்த நபருடைய பெயர் ஆஸ்டின் (Austin Sim-Pelletier, 27) என தற்போது பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
</p><p>
அவர் மீது தாக்குதல், ஆயுதம் வைத்திருந்தது முதலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
</p><p>
அவர் எதற்காக தாக்குதல் நடத்தினார் என்பது இதுவரை தெரியவரவில்லை.

இந்நிலையில், இது ஒரு சிக்கலான வழக்கு என்றும், இந்த தாக்குதல் இனவெறுப்பு தொடர்பானதா என்பதை அறிவதற்காக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
ஆஸ்டின், இம்மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுகிறார்.&nbsp; &nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-11T11:13:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ள சவுதி எண்ணெய் விநியோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/saudi-oil-supply-hits-low-1789125361"></link>
            <id>https://news.lankasri.com/article/saudi-oil-supply-hits-low-1789125361</id>
            <summary type="text">Saudi oil supply hits more than three-decade low: சவுதி எண்ணெய் விநியோகம் கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.
சவுதி அரேபியாவின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Saudi oil supply hits more than three-decade low: சவுதி எண்ணெய் விநியோகம் கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.
</p><p>சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் விநியோகம் ஆகஸ்ட் மாதத்தில் நாளொன்றுக்கு 2.3 மில்லியன் பீப்பாய்கள் குறைந்து 6 மில்லியன் பீப்பாய்களாக சரிந்ததாகவும், இது கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலான காலத்தில் மிகக் குறைந்த அளவு என்றும் சர்வதேச எரிசக்தி முகமை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a388eb7-805f-4c2b-bef0-5f9906e150ee/26-6aa3e2f36e37e.webp' /></p><p>
</p><p>பாப் அல்-மண்டேப் (Bab el-Mandeb) நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள், சவுதி அரேபியாவின் ஜசான் (Jazan) சுத்திகரிப்பு நிலையம் மற்றும் யான்பு (Yanbu) அருகே உள்ள கப்பல் போக்குவரத்து ஆகியவற்றின் மீது ஏமனின் ஹவுதி அமைப்புகளுடன் தொடர்புடைய குழுக்கள் தாக்குதல் நடத்தியது,</p><p> மற்றும் ஈரானின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்கள் ட்ரோன்களைப் பயன்படுத்தி சவுதி அரேபியாவின் அப்கைக் (Abqaiq) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைத் தாக்கியது உள்ளிட்ட நிகழ்வுகளைத் தொடர்ந்தே இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளதாக IEA தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. </p><p>ஆகஸ்ட் மாதத்தில் சவுதி அரேபியாவின் விநியோகம் குறித்த IEA-வின் மதிப்பீடு, அந்நாடு தெரிவித்த அளவை விடக் குறைவாக உள்ளது; கடந்த மாதம் நாள் ஒன்றிற்கு 7.122 மில்லியன் பீப்பாய் அளவிலான விநியோகத்தை மேற்கொண்டதாக சவுதி அரேபியா பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பிடம் (OPEC) தெரிவித்திருந்தது.</p><p></p><p> </p><p>அதேவேளையில், ஆகஸ்ட் மாதத்தில் 6.238 மில்லியன் bpd உற்பத்தியை மேற்கொண்டதாகவும் சவுதி அரேபியா OPEC-இடம் கூறியது. மத்திய கிழக்கு வளைகுடாப் பகுதியில் உற்பத்தி மீட்சி அடைவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தைக் காரணம் காட்டி, </p><p>2026-ஆம் ஆண்டிற்கான சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் விநியோக முன்னறிவிப்பை, நாளொன்றுக்கு 8,85,000 பீப்பாய்கள் குறைத்து 7.6 மில்லியன் பீப்பாய்களாக சர்வதேச எரிசக்தி முகமை (IEA) தனது மாதாந்திர எண்ணெய் சந்தை அறிக்கையில் திருத்தியமைத்துள்ளது. </p><p>செங்கடல் பகுதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதிகள் மற்றும் Dark shipping எனப்படும் மறைமுகக் கப்பல் போக்குவரத்துகள் உட்பட, சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி அளவு மாத அடிப்படையில் 1.1 மில்லியன் பீப்பாய்கள் (bpd) குறைந்து 3.5 மில்லியன் பீப்பாய்களாக சரிந்ததாகவும், அதேவேளையில் கையிருப்பு அளவு 4,00,000 பீப்பாய்கள் குறைந்ததாகவும் சர்வதேச எரிசக்தி முகமை (IEA) தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T11:12:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு மக்கள் பிரச்சினைகள் குறித்து உயர்மட்டக் கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussion-on-batticaloa-people-issues-1789124944"></link>
            <id>https://tamilwin.com/article/discussion-on-batticaloa-people-issues-1789124944</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட எல்லைக் கிராமமான தோணிதாண்டமடுப் பகுதியில் நிலவும் நிர்வாக எல்லைச் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட எல்லைக் கிராமமான தோணிதாண்டமடுப் பகுதியில் நிலவும் நிர்வாக எல்லைச் சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
</p><p>
இந்த கலந்துரையாடல், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று(11.09.2026)&nbsp; நடைபெற்றுள்ளது. 

​</p><p>இதன்போது, கடந்த 06.09.2026 அன்று பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த வன இலாகா அதிகாரிகளால் தோணிதாண்டமடு பகுதி மக்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. </p><h2>

வாழ்வாதார நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடல்</h2><p>
மேலும், தோணிதாண்டமடுக் கிராமமானது பிரதேச செயலகம், கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் பொலிஸ் அதிகாரப் பிரிவுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக எல்லைக்குள் அமைந்திருந்த போதிலும், வன இலாகா திணைக்களத்தின் அதிகார எல்லை பொலன்னறுவை மாவட்டத்தின் கீழ் உள்ளதால் அப்பகுதி மக்கள் விவசாயம் உள்ளிட்ட வாழ்வாதார நடவடிக்கைகளில் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதோடு மற்றும் சில அதிகாரிகளினால் நெருக்கடிக்குள் உள்ளாவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் சுற்றாடல் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார்.

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26b98882-463c-4d94-b67f-11bb6e64c4b4/26-6aa3e19a234b9.webp' /></p><p>இந்த பிரச்சினைகளை கேட்டறிந்த சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க படபெந்தி, இது தொடர்பில் திணைக்கள மட்டத்தில் விரிவாக ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
</p><p>
தொடர்ந்து, வரவிருக்கும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இந்த பிரச்சினையை முதன்மைப்படுத்தி, குறித்த கிராமத்தின் வன இலாகா பரிபாலன அதிகாரத்தை மட்டக்களப்பு மாவட்டத்திற்குப் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பதாகவும் உறுதியளித்தார்.

​</p><p>இந்த விசேட கலந்துரையாடலில் சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க படபெந்தி, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்ரன் ஜெயக்கொடி மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T11:11:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[காஸாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் ; ஒரே குடும்பத்தின் நால்வா் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/israeli-airstrikes-on-gaza-kill-civilians-1789124968"></link>
            <id>https://canadamirror.com/article/israeli-airstrikes-on-gaza-kill-civilians-1789124968</id>
            <summary type="text">வடக்கு காஸா பகுதியில் ஒரு வீட்டின்மீது இஸ்ரேல் வியாழக்கிழமை அதிகாலை நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த கணவன், மனைவி மற்றும் அவா்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு காஸா பகுதியில் ஒரு வீட்டின்மீது இஸ்ரேல் வியாழக்கிழமை அதிகாலை நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த கணவன், மனைவி மற்றும் அவா்களின் 2 பெண் குழந்தைகள் உயிரிழந்தனா்.
</p><p>
இத்தாக்குதலில் ஆயுதக் குழுவைச் சோ்ந்த முவாமன் அகமது கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b016cb68-0601-4862-8b87-62a635b2367d/26-6aa3e1696b74a.webp' /></p><p> </p><p>எனினும், அவரின் குடும்பத்தினா் உயிரிழப்பு குறித்து எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.

</p><p>
கடந்த ஆண்டு எட்டப்பட்ட அமெரிக்க ஆதரவு போா்நிறுத்தத்துக்குப் பிறகும், காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்களால் இதுவரை 1,300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா்.</p>]]></content>
            <updated>2026-09-11T11:09:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் பூஞ்சை உதவியுடன் உருவாக்கப்பட்ட சவப்பெட்டி: ஒரு அரிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mushroom-coffin-sustainable-burial-australia-1789124657"></link>
            <id>https://news.lankasri.com/article/mushroom-coffin-sustainable-burial-australia-1789124657</id>
            <summary type="text">Sydney woman becomes first in Australia to be buried in mushroom coffin: சிட்னி நகரைச் சேர்ந்த பெண்ணொருவர், அவுஸ்திரேலியாவிலேயே பூஞ்சையால் உருவாக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Sydney woman becomes first in Australia to be buried in mushroom coffin: சிட்னி நகரைச் சேர்ந்த பெண்ணொருவர், அவுஸ்திரேலியாவிலேயே பூஞ்சையால் உருவாக்கப்பட்ட சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்பட்ட முதல் பெண் என்னும் பெயரைப் பெற்றுள்ளார்.
</p><p>

கடந்த வாரம், அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தனது 70 வயதுகளில் உயிரிழந்த கரோலின் என்னும் பெண்ணுக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது.
</p><h2>
பூஞ்சையால் உருவாக்கப்பட்ட சவப்பெட்டி</h2><p>

சுவாரஸ்யம் என்னவென்றால், அவரை அடக்கம் செய்யப் பயபடுத்தப்பட்ட சவப்பெட்டி, பூஞ்சை ஒன்றின் உதவியால் தயாரிக்கப்பட்டதாகும்.
</p><p>
அதாவது, மைசீலியம் என்னும் பூஞ்சை, வேளாண்மைக் கழிவாகிய சணல் நாருடன் கலக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட சூழலில், தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒரு சவப்பெட்டியாக உருவமைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9028732f-6f4b-4397-b9e2-42a896d70f78/26-6aa3e0ab81fe2.webp' />&nbsp;<br></p><p>

இந்த சவப்பெட்டியை லூப் பயோடெக் என்னும் நிறுவன் உருவாக்கியுள்ளது.
</p><p>
இந்த சவப்பெட்டியின் சிறப்பம்சம் என்னவென்றால், வழக்கமான மரத்தாலான சவெப்பெட்டிகள் மட்கி மண்ணுடன் மண்ணாக 50 ஆண்டுகள் ஆகும் நிலையில், இந்த பூஞ்சை சவப்பெட்டி மட்க 45 நாட்கள் மட்டுமே ஆகும்.
</p><p>
அத்துடன், அது மண்ணை மாசுபடுத்துவதற்கு பதில், மண்ணை வளமுள்ளதாக மாற்றும்.
</p><p>
விடயம் என்னவென்றால், பல நாடுகளில் இறந்தவர்களை அடக்கம் செய்வது கடினமான விடயமாகிவருகிறது.
</p><p>
தகனம் செய்யும் முறையை பலரும் பின்பற்றத் துவங்கியுள்ளார்கள் என்றாலும், அதனால், காற்று மாசு அதிகம். நீரைப் பயன்படுத்தி தகனம் செய்யும் சில முறைகள் உள்ளன. ஆனால், அவை செயல்படும் முறை, மக்களை கொஞ்சம் யோசிக்கவைக்கக்கூடும்.
</p><p>
இப்படிப்பட்ட சுழலில், இந்த பூஞ்சை சவப்பெட்டி முறை இயற்கையுடன் இணைந்து, சுற்றுச்சுழலுக்கும் உகந்ததாக உள்ளதால் வரவேற்பை பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது<br></p>]]></content>
            <updated>2026-09-11T11:06:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா - உக்ரைன் இடையே 100 ஆண்டுகால வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/pm-carney-zelenskyy-sign-100-year-partnership-1789100101"></link>
            <id>https://canadamirror.com/article/pm-carney-zelenskyy-sign-100-year-partnership-1789100101</id>
            <summary type="text">&amp;nbsp;கனடிய பிரதமர் மார்க் கார்னி மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையே 100 ஆண்டுகால கூட்டாண்மைப் பிரகடனம் மற்றும் ட்ரோன் உற்பத்திக்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடிய பிரதமர் மார்க் கார்னி மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையே 100 ஆண்டுகால கூட்டாண்மைப் பிரகடனம் மற்றும் ட்ரோன் உற்பத்திக்கான ஒத்துழைப்பு உட்பட பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.</p><p>
வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கனடாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இந்த உறவு கடந்த 100 ஆண்டுகளாகச் செழித்தோங்கியுள்ளது.</p><p> இந்தப்போர் முடிந்த பின்னரும், வரவிருக்கும் நூற்றாண்டிலும் இது மேலும் வலுவடையும்" என பிரதமர் மார்க் கார்னி தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/926e5628-613a-415a-b4f4-a85af10ccba2/26-6aa3804726e72.webp' /></p><p>
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை 'விரிவான மூலோபாயக் கூட்டாண்மையாக' உயர்த்தவும், பாதுகாப்பு மற்றும் முக்கிய கனிமவளத் துறைகளில் இணைந்து செயல்படவும் பிரகடனம் கையெழுத்தாகியுள்ளது.
</p><p>கனடிய ஆயுதப் படைகளுக்காகத் தேசிய ட்ரோன் சந்தை ஒன்றை கனடா தொடங்கவுள்ளது. இதன் மூலம் அடுத்த 2 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான ட்ரோன்களை உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p> இதில் உலகளவில் முன்னணி வகிக்கும் உக்ரைனிய ட்ரோன் நிறுவனங்கள் கனடிய நிறுவனங்களுடன் இணைந்து ட்ரோன்களை உருவாக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
ரஷ்யாவின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில், குறைந்த செலவில் அதிக எண்ணிக்கையிலான ஏவுகணைத் தடுப்புகளை உருவாக்கும் உக்ரைனின் 'புரொஜெக்ட் ஃப்ரேயா' திட்டத்திற்குக் கூடுதல் ராணுவ உதவி வழங்க கனடா உறுதியளித்துள்ளது.</p><p>
2022-இல் போர் தொடங்கியதிலிருந்து கனடா உக்ரைனுக்கு 8.5 பில்லியன் டொலர் ராணுவ உதவியையும், நாட்டின் புனரமைப்புப் பணிகளுக்காக 750 மில்லியன் டாலரையும் வழங்கியுள்ளது. </p><p>அத்துடன் ரஷ்யா மீது 3,500-க்கும் மேற்பட்ட தடைகளையும் கனடா விதித்துள்ளது.
கால்கரி சந்திப்பைத் தொடர்ந்து, பானிஃப் நகரில் நடைபெறும் கனடிய லிபரல் அரசின் அமைச்சரவை திட்டமிடல் மன்றத்தில் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி உரையாற்றுகிறார்.</p><p> பிரான்ஸின் ஏவியான்-லே-பைன்ஸ் நகரில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற G7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் மார்க் கார்னி விடுத்த அழைப்பின் பேரிலேயே ஸெலென்ஸ்கி இதில் பங்கேற்கிறார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T11:00:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[மண்டாடி பிரம்மாண்ட வெற்றி! சூரியின் அடுத்த படத்தின் இமாலய சம்பளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/soori-salary-after-mandaadi-success-1789123487"></link>
            <id>https://cineulagam.com/article/soori-salary-after-mandaadi-success-1789123487</id>
            <summary type="text">சூரி 

சூரி தமிழ் சினிமாவில் காமெடியனாக வந்து இன்று உச்சம் நோக்கி பயணிக்கிறார். இவர் நடிப்பில் வெளியான விடுதலை, மாமன், கருடன் என அனைத்து படங்களும் ஹ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சூரி</h2><p> 

சூரி தமிழ் சினிமாவில் காமெடியனாக வந்து இன்று உச்சம் நோக்கி பயணிக்கிறார். இவர் நடிப்பில் வெளியான விடுதலை, மாமன், கருடன் என அனைத்து படங்களும் ஹிட் ஆக தற்போது வெளிவந்த மண்டாடி படமும் பிரம்மாண்ட வரவேற்பு பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9034a558-99c0-49f8-b395-ff6a912c76c2/26-6aa3dba3a92d6.webp' /></p><p> 

கண்டிப்பாக இந்த படம் ரூ. 100 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><h2>

சம்பளம்</h2><p>

இதை தொடர்ந்து சூரி அடுத்து சென்னை வெள்ளத்தை மையமாக வைத்து அயலான் இயக்குனர் ரவிகுமார் இயக்கப்போகும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை மைத்ரி நிறுவனம் தயாரிக்கவுள்ளது, இப்படத்தின் பட்ஜெட் ரூ. 50 கோடி இருக்க, சூரியின் சம்பளம் ரூ. 25 கோடி என கூறப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c59660c1-80e5-4250-861f-c8da315f35d0/26-6aa3dba2f1419.webp' /></p><p></p><p>கண்டிப்பாக இது சூரியின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வளர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சூரி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராகிவிட்டார் என்றே கூறலாம்.</p>]]></content>
            <updated>2026-09-11T11:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மயிலிட்டியில் 21ஆவது வாரமாக தொடரும் நில மீட்புப் போராட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/land-reclamation-protest-in-mayiliddy-21st-week-1789123040"></link>
            <id>https://ibctamil.com/article/land-reclamation-protest-in-mayiliddy-21st-week-1789123040</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் 21ஆவது வாரமாக போராட்டத்தை முன்னெடுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் 21ஆவது வாரமாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.</p><p>மயிலிட்டியில் அமைந்துள்ள இராணுவத்தினரின் "கொமோண்டோ" பங்களா முன்பாக இன்றைய தினம் (11.09.2026) இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p>வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.</p><p></p><h2>வெளியேறாத பாதுகாப்பு தரப்பினர்&nbsp;</h2><p>இந்தநிலையில் யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07add671-f06d-4195-85fc-48d3df8e02ea/26-6aa3dbc544059.webp' /></p><p>தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வருவதுடன் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்குமாறு பிரதி வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்தனர்.</p><p>
</p><p>
இந்தநிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 21ஆவது வாரமாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.</p><p>இந்தப் போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர், காணி உரிமையாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T10:58:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஞானசார தேரருக்கு வழங்கிய மன்னிப்பு: தெளிவில்லா நிலையில் மைத்திரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/maithri-concerned-about-the-gnanasara-thero-case-1789121837"></link>
            <id>https://ibctamil.com/article/maithri-concerned-about-the-gnanasara-thero-case-1789121837</id>
            <summary type="text">கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த ஜனாதிபதி மன்னிப்பை இரத்து செய்து வெளியிடப்பட்டுள்ள நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் தமக்கு இதுவரை எவ்வித தக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த ஜனாதிபதி மன்னிப்பை இரத்து செய்து வெளியிடப்பட்டுள்ள நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் தமக்கு இதுவரை எவ்வித தகவலும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பு கங்காராம விகாரையில் இன்று நடைபெற்ற மத நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும் தாம் எப்போதும் அரசியலமைப்புக்கு அமைவாகவே செயற்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
</p><p></p><h2>நீதிமன்ற தீர்ப்பு&nbsp;</h2><p>
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை இரத்து செய்த நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது,

“அது தொடர்பில் எனக்கு இன்னும் சரியான விபரங்கள் தெரியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eaeff31a-c608-48a9-a3c5-dce786ba9637/26-6aa3ddd464722.webp' /></p><p> </p><p>அதனால் அதைப் பற்றி இப்போது எதுவும் கூற முடியாது.</p><p> ஜனாதிபதி மன்னிப்பு உரிய ஆய்வுகளின் பின்னரே வழங்கப்பட்டது.

எனது காலகட்டத்தில் நான் மிகவும் கருணையுடன் அந்த நடவடிக்கையை மேற்கொண்டேன். </p><p>இப்போது எந்த சூழ்நிலையில் இந்த விடயம் உள்ளது என்பது குறித்து என்னால் கூற முடியாது.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் எனது அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. எனது பதவிக் காலமும் குறைக்கப்பட்டது. எனது அதிகாரங்கள் குறைக்கப்பட்டன.
</p><p>
அதன் பின்னர் என்னைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர்கள் மீண்டும் அந்த மாற்றங்களை நீக்கி, 19ஆவது திருத்தத்தில் இருந்த அதிகாரங்களுக்குப் பதிலாக 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தினர்.
</p><p>
அதன் மூலம் ஜனாதிபதிக்கு பெருமளவிலான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, தற்போது அது தொடர்பில் எங்களால் எதுவும் கூற முடியாது.” என்றார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T10:57:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027 முதல் பாடசாலைகளில் வரவுள்ள நடைமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/school-bag-weight-to-be-significantly-reduced-2027-1789121133"></link>
            <id>https://tamilwin.com/article/school-bag-weight-to-be-significantly-reduced-2027-1789121133</id>
            <summary type="text">இலங்கையின் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலைச் சிறுவர்களின் பைகளின் எடை கணிசமாகக் குறைக்கப்படும் என்றும், 2027ஆம் ஆண்டு முதல் 6ஆம் வகுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலைச் சிறுவர்களின் பைகளின் எடை கணிசமாகக் குறைக்கப்படும் என்றும், 2027ஆம் ஆண்டு முதல் 6ஆம் வகுப்பிற்கு தொகுதி அடிப்படையிலான கற்றல் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.</p><p>

பாடசாலைப் பைகளின் எடையைக் குறைப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த நாடாளுமன்றக் கேள்விக்கு பதிலளித்த பிரதமர், சீர்திருத்தங்களின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட செயல்பாடு சார்ந்த கற்றல் முறையானது, மாணவர்கள் வீட்டிற்கும் பாடசாலைக்கும் இடையில் எடுத்துச் செல்ல வேண்டிய புத்தகங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் என்று கூறியுள்ளார்.</p><h2>புத்தகங்களை மட்டும் வீட்டிற்கு எடுத்துச் செல்ல</h2><p>

முன்மொழியப்பட்ட திட்டத்தின்படி, வகுப்பறைச் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் புத்தகங்கள் பாடசாலையிலேயே வைக்கப்படும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/376435b5-778b-45f2-a9a8-5273743bc608/26-6aa3ddbf71981.webp' /></p><p>இதனால், மாணவர்கள் அவற்றை ஒவ்வொரு நாளும் பாடசாலைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
</p><p>தவணையின் இறுதியில் மாணவர்கள் தங்கள் பணிகளை முடித்த பிறகு, புத்தகங்களை மட்டும் வீட்டிற்கு எடுத்துச் சென்றால் போதுமானது என்று அவர் கூறியுள்ளார்.</p><h2>பொருத்தமான பாடத்தொகுப்புகள்</h2><p>
</p><p>
2027ஆம் ஆண்டு முதல் 6ஆம் வகுப்புக்கு பாடத்தொகுதி அடிப்படையிலான கற்றல் முறையும் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7372e8f-8acb-4a83-9864-7caf29e2445f/26-6aa3ddc02ed79.webp' /></p><p>
</p><p>
பெரிய பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக, குறிப்பிட்ட கல்வியாண்டுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் பொருத்தமான பாடத்தொகுப்புகள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
</p><p>
இந்த மாற்றங்களால் மாணவர்கள் எடுத்துச்செல்லும் பாடசாலைப் பைகளின் எடை கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>[LOOASKP
]</p>]]></content>
            <updated>2026-09-11T10:54:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் நடந்த விபத்து - மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-that-occurred-this-morning-in-trincomalee-1789123788"></link>
            <id>https://tamilwin.com/article/accident-that-occurred-this-morning-in-trincomalee-1789123788</id>
            <summary type="text">திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று(11.09.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயமடைந்துள்ளார்.</p><p>

இந்த சம்பவம் இன்று(11.09.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
சாரதி படுகாயம்</h2><p>
துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள சுற்றுவட்டத்தில், இலங்கை
போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதியதில்
இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a8a75c4-789e-4fd8-9d56-6271e555ce59/26-6aa3dce286d32.webp' /></p><p>
</p><p>
இதன்போது படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி திருகோணமலை பொது வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><p><br></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T10:51:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக சூடான தேநீர், கோப்பியாால் மூன்று மடங்காகும் புற்றுநோய் அபாயம் ; ஆய்வில் வெளியான அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/very-hot-tea-and-coffee-may-pose-health-risks-1789123015"></link>
            <id>https://jvpnews.com/article/very-hot-tea-and-coffee-may-pose-health-risks-1789123015</id>
            <summary type="text">ஒரு மில்லியன் மக்களை உள்ளடக்கி பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் ஆய்வொன்றின் மூலம், அதிக சூடான தேநீர், கோப்பி மற்றும் ஏனைய பானங்களைக் குடிப்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஒரு மில்லியன் மக்களை உள்ளடக்கி பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் ஆய்வொன்றின் மூலம், அதிக சூடான தேநீர், கோப்பி மற்றும் ஏனைய பானங்களைக் குடிப்பதால் உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரிக்கக்கூடும் என தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;">International Journal of Cancer இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வின் மூலமே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e832f9c7-22c3-4fd3-b4a1-47695288e30e/26-6aa3db76d2ea5.webp' /></p><h2 style="text-align: justify; ">உணவுக்குழாய் புற்றுநோய்</h2><p> </p><p style="text-align: justify;">

மிதமான சூட்டில் பானங்களை அருந்துபவர்களுடன் ஒப்பிடுகையில், "அதிக சூட்டில்" பானங்களை விரும்பிக் குடிப்பவர்களுக்கு 'எசோபேகியல்ஸ்குவாமஸ் செல் கார்சினோமா'வகை புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இரண்டு மடங்கு அதிகமாகும்.

</p><p style="text-align: justify;">
பானங்களை "மிக அதிக சூட்டில்" குடிப்பவர்களுக்கு இந்த ஆபத்து மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரிக்கிறது.

உணவுக்குழாய்&nbsp; என்பது வாயிலிருந்து வயிற்றுக்கு உணவையும் பானங்களையும் கொண்டு செல்லும் தசைநார் குழாயாகும்.</p><p style="text-align: justify;">

வெப்பநிலையைக் கருத்திற் கொண்ட பின்னரும் கூட, ஒரு நாளைக்கு 6 அல்லது அதற்கு மேற்பட்ட தடவைகள் சூடான பானங்களைக் குடிப்பவர்களுக்கு, 6 தடவைகளுக்கும் குறைவாகக் குடிப்பவர்களை விட இந்நோய் ஏற்படும் ஆபத்து 71% அதிகமாக உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;">[<span style="text-align: left;"></span></p><p style="text-align: justify;">சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகவரகம் 65°C க்கும் அதிகமான வெப்பநிலையில் குடிக்கப்படும் பானங்களை "மிக அதிக சூடான பானங்கள்" என வரையறுத்துள்ளதுடன், இவற்றை அருந்துவது மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்கக்கூடிய சாத்தியக்கூறு கொண்டது எனவும் வகைப்படுத்தியுள்ளது.</p><p style="text-align: justify;">அதேவேளை, பொதுமக்களுக்கு உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான ஒட்டுமொத்த சாத்தியக்கூறு ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளதாகவும், இந்த ஆய்வு முடிவுகள் சூடான பானங்களுக்கும் புற்றுநோய்க்கும் இடையிலான தொடர்பை மட்டுமே சுட்டிக்காட்டுகின்றனவே தவிர, சூடான பானங்களே நேரடியாகப் புற்றுநோயை உண்டாக்குகின்றன என்பதை முழுமையாக நிரூபிக்கவில்லை என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-11T10:48:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்னை யாரும் திட்டாதீங்க..இயக்குநராக காரணம் இதுதான்!! ஜேசன் சஞ்சய் செய்த செயல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/jason-sanjay-salem-crowd-makes-thalapathy-vijay-1789123844"></link>
            <id>https://viduppu.com/article/jason-sanjay-salem-crowd-makes-thalapathy-vijay-1789123844</id>
            <summary type="text">ஜேசன் சஞ்சய்முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து முடிவுக்கு வந்த நிலையில், மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் அக்டோபர் 2ஆம் தேதி ரிலீஸாகவுள்ள சிக்மா படத்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜேசன் சஞ்சய்</h2><p>முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து முடிவுக்கு வந்த நிலையில், மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் அக்டோபர் 2ஆம் தேதி ரிலீஸாகவுள்ள சிக்மா படத்தின் பிரமோஷன் நடந்து வருகிறது. பல பேட்டிகளில் கலந்து கொண்டு வரும் ஜேசன் சஞ்சய், தந்தை, தாய், சகோதரி பற்றிய பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.</p><p></p><p> </p><p>அம்மாவுக்கு இப்படி நடந்துவிட்டதால் அப்பாவிடம் பேசுவதை நிறுத்துவிட்டதாகவும், தாய்க்கு ஆதரவாக இருந்து, தான் ஒரு நல்ல மகன் என நிரூபித்துக் கொண்டிருக்கிறார் என தாய்மார்கள் பேசினார்கள். </p><h2>என்னை யாரும் திட்டாதீங்க</h2><p>நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மேடையேறி பேசும் போது, இந்த நேரத்தில் என் குடும்பத்திற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்றதும் அரங்கமே அதிர்ந்துள்ளது. சில நிமிடம் ஜேசனை பேசவிடாமல் அரங்கில் இருந்தவர்கள் விஜய், விஜய் என்று மகிழ்ச்சியிக் கரகோஷமிட்டார்கள். இதைப்பார்த்த ஜேசன், தம்ஸ்அப் காட்டினார். இதன்மூலம் அப்பா மீது கோபம் இல்லை என்று நிரூபித்துவிட்டார் ஜேசன் என்ற கருத்துக்களும் பரவி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3daf46ff-4cbc-4635-93ed-69d0a98cfe98/26-6aa3dd07ae159.webp' /></p><p> மேலும், நான் இயக்குநராக போகிறேன் என்பதை முதன்முதலில் அம்மாவிடம் தான் சொன்னேன் என்று தெரிவித்துள்ளார். பின், எந்த படம் உங்களை பயங்கரமாக இன்ஸ்பையர் செய்து இயக்குநராக வைத்தது என்ற கேள்விக்கு, அப்பா படம் தான் என்று சொல்வார்கள் அங்கிருந்தவர்கள் நினைத்தனர்.</p><p> ஆனால் அதை புரிந்து கொண்ட ஜேசன், என்னை யாரும் திட்டாதீங்க, பிரேசிலிய படமான சிட்டி ஆஃப் காட் படம் தான் நான் இயக்குநராக காரணமாக இருந்தது என்று ஜேசன் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-11T10:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆரோக்கிய பால்மாவில் புழு; பிரபல நடிகை பகீர் காணொளி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/actress-bipasha-basu-tiny-tiny-worms-milk-powder-1789123649"></link>
            <id>https://jvpnews.com/article/actress-bipasha-basu-tiny-tiny-worms-milk-powder-1789123649</id>
            <summary type="text">ஆரோக்கிய பால்மாவில் புழுக்கள் காணப்பட்டதாகக் கூறப்படும் காணொளி மற்றும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிபாஷா பாசு, இது தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆரோக்கிய பால்மாவில் புழுக்கள் காணப்பட்டதாகக் கூறப்படும் காணொளி மற்றும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிபாஷா பாசு, இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
 நுகர்வோர் வாங்கும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa9a71d2-149d-4496-82b3-65c46aaab46a/26-6aa3dc42dcd78.webp' /></p><h2>விற்பனை நிலையங்களில் ஆய்வு</h2><p>
</p><p>
பிபாஷா பாசுவின் பதிவு சமூக வலைத்தளங்களில் பரவலான கவனத்தைப் பெற்ற நிலையில், மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாக அதிகாரிகள் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் ஆய்வுகளை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
இதன்போது, பால் மற்றும் பன்னீர் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் இடம்பெறுவதாகக் கூறப்படும் கலப்படம் தொடர்பிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p></p><p>

மேலும், விதிமுறைகளைப் பின்பற்றாததாகக் கண்டறியப்பட்ட சில நிறுவனங்களின் உரிமங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-09-11T10:44:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வக்ர நிலையில் உத்திரட்டாதிக்குள் நுழையும் சனி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் 2027 வரை ஏற்றம் தான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/saturn-transit-in-uthirattathi-who-get-huge-luck-1789100576"></link>
            <id>https://manithan.com/article/saturn-transit-in-uthirattathi-who-get-huge-luck-1789100576</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்களி்ன் நிலையில் ஏற்படும் மாற்றங்களானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க சாதக, பாதக மாற்றங்களை ஏற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்களி்ன் நிலையில் ஏற்படும் மாற்றங்களானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க சாதக, பாதக மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகின்றது.&nbsp;</p><p>குறிப்பாக நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரும் கிரகம் சனிபகவானின் பெயர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15fa5b1f-d98c-48b6-8997-783a74cfc3c8/26-6aa38ac37da08.webp' /></p><p> </p><p>ஜோதிடத்தில் ஒழுக்கம், கடின உழைப்பு, நீதி ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்படும் சனிபகவான் அக்டோபர் 9 அன்று வக்ர நிலையில் ‘உத்திரட்டாதி’ நட்சத்திரத்திற்குள் நுழைந்து, பிப்ரவரி 8, 2027 வரை அங்கேயே சஞ்சரிக்க உள்ளார். </p><p>சனிபகவானின் சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதியில் அவர் நுழைவது சில ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் நிதி ரீதியாக சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><p></p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12bc5e6f-8a82-4dd2-9cd6-c2969fb830ce/26-6aa38ac433fc4.webp' /></p><h2>
</h2><p>ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் தொழில் மற்றும் நிதி விஷயங்களில் சாதகமான மாற்றங்களைத் தரும். நீண்ட காலமாக தடைப்பட்ட பணிகள் வெற்றிகரமாக நிறைவடையும்.</p><p>வேலையில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள், பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.</p><p>முயற்சிகளில் வெற்றி கிடைப்பதுடன், வாழ்க்கையின் பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் ஏற்படும்.&nbsp; உடல்நலப் பிரச்சினைகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்ப்பும் கிடைக்கும்.
</p><h2>
துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/019ec1ee-a79d-4ddc-8490-01a80b16b214/26-6aa38ac4dc1d2.webp' /></p><h2>
</h2><p>துலாம் ராசிக்காரர்களுக்கு சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைவது நிதி ரீதியாகச் சாதகமாக இருக்கும். நீண்ட காலமாக இருந்த நிதிச் சிக்கல்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.</p><p> வருமானம் அதிகரிப்பதுடன், கடந்த கால முதலீடுகளிலிருந்தும் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.

வேலை மாற்றம் செய்ய விரும்புபவர்களுக்கு இது சாதகமான காலமாக இருக்கும்.</p><p> பணியாளர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கலாம்.மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சிகரமாக அமையும்.
</p><h2>
மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3958370-e9a0-48e0-b125-affeae765bef/26-6aa38ac5963f6.webp' /></p><h2>
</h2><p>மகர ராசியின் அதிபதியாக சனிபகவான் இருப்பதால், இந்த காலகட்டம் அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும். தொழிலில் ஸ்திரத்தன்மை அதிகரிப்பதுடன், பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வாய்ப்புகளும் கிடைக்கும்.</p><p> நிதிநிலை எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். நீண்ட கால முதலீடுகளுக்கு இது ஏற்ற நேரமாக அமையும்.

புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும்.</p><p> ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம்.
</p><h2>
கும்பம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a869779-ceb2-4a18-a624-164ac9cce675/26-6aa38ac649202.webp' /></p><p></p><p>
கும்ப ராசிக்காரர்களுக்கு சனிபகவான் நட்சத்திரம் மாறுவது தொழில் மற்றும் நிதி ரீதியாக முக்கியமான மாற்றங்களைத் தரும். தங்கள் துறையில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.&nbsp;</p><p>திடீர் பணவரவால் நிதிநிலை மேம்படும். கடின உழைப்புக்கு அங்கீகாரமும், முயற்சிகளுக்கு பாராட்டும் கிடைக்கும்.

திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். </p><p>துணையுடன் தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். கடந்த கால பணப்பிரச்சினைகளும் படிப்படியாக முடிவுக்கு வரம்.மொத்தத்தில் 2027 பெப்ரவரி வரையில் இந்த ராசிகளுக்கு பொற்காலமாக இருக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T10:40:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலணியால் தாக்க முயன்ற அதிகாரி - கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் குதித்த தமிழர் மறுவாழ்வு முகாம் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-by-people-in-the-tamil-rehabilitation-camp-1789122900"></link>
            <id>https://tamilwin.com/article/protest-by-people-in-the-tamil-rehabilitation-camp-1789122900</id>
            <summary type="text">மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள இலங்கை தமிழர் ஒருவர்
தனித்துணை ஆட்சியரிடம் மருத்துவ விடுப்பு கேட்க சென்ற போது அவரை காலணியால்
தாக்க முய...</summary>
            <content type="html"><![CDATA[<p>மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள இலங்கை தமிழர் ஒருவர்
தனித்துணை ஆட்சியரிடம் மருத்துவ விடுப்பு கேட்க சென்ற போது அவரை காலணியால்
தாக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p> 

அதிகாரியின் இந்த செயற்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்து, இலங்கை தமிழர்கள் தனித்துணை
ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக சுமாராக ஐந்து மணி நேரம் இலங்கை தமிழர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். </p><p>


இந்த போராட்டமானது நேற்று(10.09.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ
வழியின்றி இலங்கைத் தமிழர்கள் கடல் வழியாக தனுஷ்கோடிக்கு வந்திறங்கிய இலங்கைத்
தமிழர்களை மீட்டு மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு
முகாமில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் வசித்து
வருகின்றனர்.</p><p> இவர்களை கண்காணிப்பதற்காக மண்டபத்தில் தனித்துணை
ஆட்சியர் அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது.</p><h2>

போராட்டக்காரர்களின் கோரிக்கை</h2><p>

இலங்கை தமிழர்கள் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் தங்கி உள்ள தங்கள்
உறவினர்கள் வீட்டுக்கு செல்வதற்கும், மருத்துவம் சிகிச்சை மற்றும் கல்வி
பயில வெளியூர் சென்றாலும் தனித்து தனித்துணை ஆட்சியரிடம் விடுப்பு பெற்று
செல்ல வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9430e89f-4eca-4f98-8dec-b0423385ff25/26-6aa3d9b623132.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில் உள்நாட்டு போர் காரணமாக இலங்கையில் இருந்து அகதியாக தனுஷ்கோடி
வந்திறங்கி 2007 ஆம் ஆண்டு முதல் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில்
வசித்து வரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜெகன் (50) என்பவர் மருத்துவ
சிகிச்சைக்காகவும், உடல் நலம் சரியில்லாததால் மருத்துவ உதவிக்காக தமிழ்நாடு
சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிப்பதற்காக சென்னை செல்ல
மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தனித்துணை ஆட்சியரிடம் மனு
அளித்திருந்தார்.</p><p>

மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர், விடுப்பு வழங்குவதற்கு தனித்துணை ஆட்சியர்
இலஞ்சம் கேட்டதாக சொல்லப்படுகின்றது.

ஜெகன் பணம் கொடுக்காததால் தொடர்ந்து அவருடைய விடுப்பு மனு நிராகரிக்கப்பட்டு
வந்த நிலையில், நேற்று(10.09.2026) இலங்கை தமிழர் ஜெகன் தனித்துறை
ஆட்சியரை சந்தித்து விடுப்பு விண்ணப்பம் தொடர்பாக கேட்க சென்றபோது தனி துணை
ஆட்சியர் கலை மன்னன் இலங்கைத் தமிழர் ஜெகனை காலணியை கழற்றி அடிக்க
முயன்றுள்ளார்.
</p><p>
இதனை வீடியோவாக பதிவு செய்த இலங்கை தமிழர் ஜெகன், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். </p><p>

 இதனிடையே இலங்கை தமிழரை தனி துணை ஆட்சியர் காலணியால்
தாக்க முயன்றதை கண்டித்து தனித்துணை ஆட்சியர் அலுவலகத்தை இலங்கை தமிழர்கள்
சுமார் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><h2>
 இலங்கைத் தமிழரை காலணியால் தாக்க முயன்ற அதிகாரி</h2><p>

இது குறித்து தகவலறிந்த ராமநாதபுரம் வட்டாட்சியர் காளீஸ்வரர் ஜெகன் மற்றும்
போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை தமிழரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26d91475-ebe9-45a8-a407-13a96630bdea/26-6aa3d9b715b98.webp' /></p><p>
</p><p>
இதன்போது, தனித்துறை ஆட்சியர் கலை மன்னன், மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும், அவரை
உடனடியாக பணியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் மற்றும் இலங்கை தமிழர்கள்
விடுப்பு எடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை நீக்க வேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.
</p><p>
இலங்கை தமிழர்களின் கோரிக்கைகளை கேட்டுக்கொண்ட இராமநாதபுரம் வட்டாட்சியர்
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரனிடம் தகவல் தெரிவிப்பதாகவும்
வரும் திங்கட்கிழமை தனித்துணை ஆட்சியர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாவட்ட
ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பார் என உத்தரவாதம் அளித்ததை அடுத்து
போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை தமிழர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு
முகாமுக்குள் சென்றனர்.</p><p>

மருத்துவ விடுப்பு கேட்ட இலங்கைத் தமிழரை காலணியால் தாக்க முயன்ற தனித்துறை
ஆட்சியரின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிக அளவு பகிரப்பட்டு வந்த நிலையில் இது
குறித்து பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c787ea7-095f-4e87-9d6a-491715be3a6d/26-6aa3d9b7e20ac.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T10:37:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னை பயிர்ச்செய்கைக்கு மானியம்! ஒதுக்கப்பட்டுள்ள பெருந்தொகை நிதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/subsidy-to-protect-coconut-crops-1789118455"></link>
            <id>https://ibctamil.com/article/subsidy-to-protect-coconut-crops-1789118455</id>
            <summary type="text">





எல் நினோ காலநிலையின் சாத்தியமான தாக்கங்களில் இருந்து தென்னை விவசாயத்தைக் பாதுகாக்கவும், அதன் பாதிப்புகளைக் குறைக்கவும் தென்னை பயிர்செய்கை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>





எல் நினோ காலநிலையின் சாத்தியமான தாக்கங்களில் இருந்து தென்னை விவசாயத்தைக் பாதுகாக்கவும், அதன் பாதிப்புகளைக் குறைக்கவும் தென்னை பயிர்செய்கை சபை ஒரு சிறப்பு மானியத் திட்டத்தைத் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>

இதற்காக 2,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயகொடி தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>தென்னை உற்பத்தி</h2><p>
</p><p>
அதேவேளை, இதுவரை எல் நினோ நிலையினால் தென்னை பயிர்ச்செய்கைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a5f5574-5398-4064-ba0d-1a4ae6f75950/26-6aa3d93f5045f.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், வரவிருக்கும் மாதங்களில் வறட்சியான வானிலை நீடித்தால், அது தென்னை உற்பத்தியைப் பாதிக்கக்கூடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T10:36:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாவகச்சேரியில் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்திற்கான தயார்ப்படுத்தல் - அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-at-chavakachcheri-1789120904"></link>
            <id>https://tamilwin.com/article/protest-at-chavakachcheri-1789120904</id>
            <summary type="text">யாழ். சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் நாளைய தினம் (12.09.2026) முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பருத்தித்துறை நகரசபை உற...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் நாளைய தினம் (12.09.2026) முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p> 

குறித்த போராட்டம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தமிழர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நாளை காலை ஏழு மணி முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
</p><p>
இதன்போது மாபெரும் கண்டன பேரணியும், உண்ணாவிரத போராட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.</p><h2>பேரணியும், உண்ணாவிரதப் போராட்டமும்&nbsp;</h2><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி சார்பில் குறித்த பேரணியும், உண்ணாவிரதப் போராட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cff60e94-8c73-47aa-9e1a-1a29558efa4d/26-6aa3d7081fbc7.webp' /></p><p> </p><p>

அனைவரும் கட்சி பேதங்களின்றியும், காணாமலாக்கப்பட்ட உறவுகள், பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்பு பிரதிநிதிகள், தொழிற்சங்கங்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

குறித்த போராட்டம் அபகரிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்க கோரியும், மாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்தக் கோரியும், பயங்கரவாத தடை சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர், செம்மணி புதைகுழி விவகாரங்களுக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்று கோரியும், அரசியல் கைதிகளின் உடனடி விடுதலையை வலியுறுத்தியும் இடம்பெறவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T10:33:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த ராஜபக்சவிற்கு நெருக்கமான முன்னாள் ஜோதிடருக்கும் சிக்கல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-rajapaksa-royal-astrologer-interrogation-1789091165"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-rajapaksa-royal-astrologer-interrogation-1789091165</id>
            <summary type="text">மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது பணியாற்றிய அவரது முன்னாள் அரச ஜோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தனவிடம் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது பணியாற்றிய அவரது முன்னாள் அரச ஜோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தனவிடம் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு நேற்று விசாரணை மேற்கொண்டிருந்தது.
</p><p>
சிரிலிய சவிய தொடர்பாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்து வரும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் நேற்று முன்னிலையாகியிருந்தார்.
</p><p>
மேலும், தொடர்புடைய விசாரணை சம்பந்தமான சுமனதாஸ அபேகுணவர்தனவிடமிருந்து பல மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது.</p><h2>மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கு காரணம்</h2><p>

மகிந்தவின் ஆட்சி காலத்தில் இவர் தேசிய சேமிப்பு வங்கி (NSB) மற்றும் ஈ.டி.எப் (ETF) வாரிய இயக்குநராகவும் பதவி வகித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df56bd11-da41-44de-9ec9-982d59c90d78/26-6aa3d77db578d.webp' /></p><p>
</p><p>
2015 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை முன்கூட்டியே தேர்தலை நடத்த வைத்து அவரது தோல்விக்கு காரணமானதாக இவர் மீது சர்ச்சைகள் எழுந்த நிலையில், சிங்கப்பூருக்கு தப்பிச்சென்றிருந்தார்.</p><p>
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டமை, தேர்தல் நாளை நிர்ணயித்தமை, மகிந்த ராஜபக்சவின் வேட்புமனுவுக்கான நேரத்தை தீர்மானித்துதமை, வாக்களிக்கச் செல்வதற்கான நேரத்தை தீர்மானித்தமை என இவரே கணித்திருந்த நிலையில் பெரும் சர்ச்சையில் சிக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>

இந்நிலையில், நாமல் ராஜபக்சவின் கைது உட்பட ராஜபக்சர்களுக்கு நெருக்கமான பலர் தொடர்ச்சியாக விசாரணைகளுக்காக முன்னிலையாகி வருகின்றனர்.
</p><p>
இந்நிலையில்,முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரின் பிரதான ஜோதிடராகவும் ஆலோசகராகவும் பல ஆண்டுகள் பணியாற்றிய சுமனதாஸ அபேகுணவர்தனவும் தற்போது விசாரணைக்காக முன்னிலையாகியுள்ளார்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p>&nbsp;</p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/xsF4WHQwQHk" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-11T10:28:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் மாவட்டத்தின் பிரச்சினைகள் குறித்து விசேட கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/issues-concerning-mannar-district-were-examined-1789121110"></link>
            <id>https://tamilwin.com/article/issues-concerning-mannar-district-were-examined-1789121110</id>
            <summary type="text">மன்னார் மாவட்டத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்து
கலந்துரையாடப்பட்டது.மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் பொது நிர்வாகம், மாகாண சபைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்டத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்து
கலந்துரையாடப்பட்டது.</p><p>மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்
பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன பங்கேற்புடன் இந்த விசேட
கலந்துரையாடல் இடம்பெற்றது.</p><p> குறிப்பாக அரச நிர்வாகம் மற்றும் ஊழியர் பற்றாக்குறை
தொடர்பாகவும், பொது நிர்வாக அமைச்சின் வழிகாட்டலின் கீழ், மாவட்டத்தில்
நிலவும் அதிகாரி மற்றும் ஊழியர் பற்றாக்குறைக்கான உடனடி தீர்வுகள் வழங்குவது
குறித்து ஆராயப்பட்டது.</p><h2>வாழ்வாதாரப் பிரச்சினை</h2><p>
</p><p>
மேலும் மல்வத்து ஓயா திட்டத்தின் மூலம் மன்னார் பிரதேசத்தில் பாரிய
அபிவிருத்திகளை மேற்கொள்வது குறித்தும், அதன் மூலம் பிராந்திய மக்களின்
சுகாதார மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது
பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
</p><p>
மக்களின் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், எதிர்வரும் 16 ஆம்
திகதி முதல் மருத்துவமனை பணிகளை முறையாக ஆரம்பிப்பதற்கான முதல் கட்ட
நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/172f1634-8c14-46d1-9144-1bde98ad4524/26-6aa3d7a7d93e7.webp' /></p><p>பிராந்தியத்தில் உள்ள இயற்கை வளங்களை
அதிகபட்ச பயனுள்ள முறையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து
கலந்துரையாடப்பட்டது.
</p><p>
குறிப்பாக அரச அதிகாரிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், அவர்களுக்கு
தேவையான வாகன வசதிகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேவையான இயந்திர
உபகரணங்களை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர்
சுட்டிக்காட்டினார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T10:28:25+00:00</updated>
        </entry>
    </feed>
