<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-15T13:26:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் மற்றுமொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இலங்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/another-powerful-earthquake-in-indonesia-1786798942"></link>
            <id>https://ibctamil.com/article/another-powerful-earthquake-in-indonesia-1786798942</id>
            <summary type="text">&amp;nbsp;வெளிநாட்டு தகவல்களின்படி, இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் இன்று பிற்பகல் (15) 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதன்படி, இன்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;வெளிநாட்டு தகவல்களின்படி, இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் இன்று பிற்பகல் (15) 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
</p><p>
அதன்படி, இன்று காலை நாட்டைத் தாக்கிய பேரழிவுகரமான நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>அதிகரித்த உயிரிழப்பு</h2><p>
</p><p>
ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், இன்று அதிகாலை சுமார் 3.28 மணியளவில் இந்தோனேசியாவின் மத்திய தீவுக்கூட்டத்திற்கு அருகில் ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bfb8f29-76cb-4ec3-b704-e1c06bc3fa72/26-6a8068f704bd9.webp' /></p><p>நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 38 ஆக உயர்ந்துள்ளது.</p><p></p><p> </p><h2>இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை</h2><p>இன்று பிற்பகல் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று தேசிய சுனாமி முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d214dd9-7e0b-44a7-b2c8-90a101b3edd8/26-6a8068f7bb97f.webp' /></p><p>
</p><p>
கடலோரப் பகுதிகளில் மக்களின் வாழ்வு பாதுகாப்பாக உள்ளது என்று அந்த மையம் ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T13:26:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நபர் - குழு மோதலால் ஏற்பட்ட விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-brutally-killed-in-colombo-1786797110"></link>
            <id>https://tamilwin.com/article/man-brutally-killed-in-colombo-1786797110</id>
            <summary type="text">கொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இராஜகிரிய பிரதேசத்தில் குழுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

இராஜகிரிய பிரதேசத்தில் குழுக்களுக்கு இடையில் நேற்று ஏற்பட்ட தகராறு காரணமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
தாக்குதலில் உயிரிழந்தவர் இராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என வெலிக்கடை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.</p><h2><b> 

 நபர்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தர்க்கம்</b></h2><p>குறித்த நபர்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையைத் தொடர்ந்தே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக முற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e423df7-4854-4bbf-853f-f800f96f5781/26-6a806810a13b8.webp' /></p><p>தாக்குதலில் உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக களுபோவில போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. </p><p>

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்ய மேலதிக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-15T13:23:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியின் அக்குளை மோப்பம் பிடிக்கும் பாலிவுட் நடிகர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gauahar-khan-and-zaid-darbar-personal-journey-1786799518"></link>
            <id>https://jvpnews.com/article/gauahar-khan-and-zaid-darbar-personal-journey-1786799518</id>
            <summary type="text">பாலிவுட்டில் பிரபலமான தம்பதிகளில் ஒருவராக வலம் வருபவர்கள் கௌஹர் கான் - சைத் தர்பார்.இந்த நிலையில், இருவரும் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தங்களது திரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாலிவுட்டில் பிரபலமான தம்பதிகளில் ஒருவராக வலம் வருபவர்கள் கௌஹர் கான் - சைத் தர்பார்.</p><p>இந்த நிலையில், இருவரும் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தங்களது திருமண வாழ்க்கை குறித்த பல சுவாரஸ்யமான விஷயங்களை&nbsp; &nbsp;பகிர்ந்து கொண்டுள்ளனர்.&nbsp;</p><h2>அவளிடம் இருந்து எவ்வளவு நல்ல வாசனை வருகிறது</h2><p>இதன்போது கணவரின் சில வித்தியாசமான பழக்கங்களை கௌஹர் கான் வெளிப்படையாக கூறியது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.&nbsp;</p><p>தனது கணவருக்கு இருக்கும் வித்தியாசமான பழக்கம் குறித்தும் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார். சைத் தர்பாருக்கு தனது அக்குள்களின் வாசனையை மோப்பம் பிடிப்பது பிடிக்கும் என கௌஹர் கூறியுள்ளார்.&nbsp;</p><p>&nbsp;"சைத்திற்கு எனது அக்குள்கள் எப்போதுமே நல்ல வாசனையுடன் இருப்பதாகத் தோன்றும். அவர் அடிக்கடி அதைத் தொட்டு மோப்பம் பிடிப்பார். அதன்பிறகு தனது சகோதரியிடம் சென்று, 'பார், அவளிடம் இருந்து எவ்வளவு நல்ல வாசனை வருகிறது' என்று சொல்வார் என கௌஹர்&nbsp; &nbsp;தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>கௌஹர் கான் மற்றும் சைத் தர்பார் இருவரும் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டனர்.&nbsp;</p><p>இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். திருமணத்திற்குப் பிறகு தங்களது குடும்ப வாழ்க்கையின் பல முக்கியமான தருணங்களை சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் பகிர்ந்து வரும் இந்த ஜோடி, தற்போது தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கும் இத்தகைய சுவாரஸ்யமான விஷயங்களையும் வெளிப்படையாகப் பேசியிருப்பது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-15T13:12:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெட்ரோல் ஏற்றுமதி வரி நீக்கம் - டீசல், விமான எரிபொருள் வரிகள் தொடரும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-cuts-petrol-export-duty-to-zero-1786799343"></link>
            <id>https://news.lankasri.com/article/india-cuts-petrol-export-duty-to-zero-1786799343</id>
            <summary type="text">India cuts petrol export duty: பெட்ரோல் ஏற்றுமதி வரியை இந்தியா நீக்கியுள்ளது.இந்திய அரசு பெட்ரோல் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த சிறப்பு வரியை (Spec...</summary>
            <content type="html"><![CDATA[<p>India cuts petrol export duty: பெட்ரோல் ஏற்றுமதி வரியை இந்தியா நீக்கியுள்ளது.</p><p>இந்திய அரசு பெட்ரோல் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த சிறப்பு வரியை (Special Additional Excise Duty – SAED) மற்றும் சாலை-உள்கட்டமைப்பு வரியை (Road and Infrastructure Cess – RIC) முழுமையாக நீக்கியுள்ளது.</p><p>ஆனால், டீசல் மற்றும் விமான எரிபொருள் (ATF) ஏற்றுமதிக்கு வரிகள் தொடரும் என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dff55c5b-739e-4a07-96c7-910fd014041f/26-6a8064f183273.webp' /></p><p>அரசின் அறிவிப்பின்படி, ஆகஸ்ட் 15 முதல் 31 வரை பெட்ரோல் ஏற்றுமதிக்கு எந்தவித வரியும் இல்லை. ஆனால், டீசல் ஏற்றுமதிக்கு லிட்டருக்கு ரூ.24 SAED விதிக்கப்படும். விமான எரிபொருள் ஏற்றுமதிக்கு லிட்டருக்கு ரூ.19.5 SAED தொடரும்.</p><p>இந்த மாற்றம், அரசின் இருவாரத்திற்கு ஒருமுறை நடைபெறும் மதிப்பீட்டின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகும். உலகளாவிய எரிசக்தி சந்தை நிலவரம், கச்சா எண்ணெய் விலை, பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஆகியவற்றின் சராசரி அடிப்படையில் இந்த வரிகள் மாற்றப்படுகின்றன.
</p><p></p><p>மார்ச் 2026-இல் மேற்கு ஆசியாவில் போர் தொடங்கியதால் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடியைத் தொடர்ந்து, உள்நாட்டு தேவையைப் பாதுகாக்கும் நோக்கில் அரசு இந்த ஏற்றுமதி வரிகளை அறிமுகப்படுத்தியது. </p><p>இதன் மூலம், பெட்ரோல், டீசல், ATF போன்ற முக்கிய எரிபொருட்களின் வெளிநாட்டு விற்பனையை குறைத்து, உள்நாட்டு கிடைப்பை உறுதி செய்வதே அரசின் நோக்கம்.
</p><p>
இந்த மாற்றம் ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல், டீசல், ATF-க்கு மட்டுமே பொருந்தும். உள்நாட்டு பயன்பாட்டுக்கான எரிபொருட்களுக்கு ஏற்கனவே உள்ள வரிகளில் எந்த மாற்றமும் இல்லை என அரசு தெளிவுபடுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-15T13:06:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொது இடத்தில் ஆடை மாற்றிய தொகுப்பாளினி யேகா சாகர்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/yesha-sagar-viral-after-changing-outfit-in-public-1786796572"></link>
            <id>https://viduppu.com/article/yesha-sagar-viral-after-changing-outfit-in-public-1786796572</id>
            <summary type="text">யேகா சாகர்பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையுடம் கிரிக்கெட் போட்டிகளையும் தொகுத்து வழங்கி பிரபலமானவர் தான் யேஷா சாகர். இந்திய-கனடிய வம்சாவளியை சேர்ந்த இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>யேகா சாகர்</h2><p>பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையுடம் கிரிக்கெட் போட்டிகளையும் தொகுத்து வழங்கி பிரபலமானவர் தான் யேஷா சாகர். இந்திய-கனடிய வம்சாவளியை சேர்ந்த இந்த மாடல், ஒரு நடிகையாகவும் ஃபிட்னஸ் இன்ஃப்ளூயன்ஸ்ராகவும் திகழ்ந்து வருகிறார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00b5cad5-cdab-4c04-89a5-0594abd13596/26-6a805a1e2b770.webp' /></p><p>இந்தியாவில் கல்வி பயின்ற இவர் தனது பட்டப்படிப்பை குடித்துவிட்டு 2015ல் கனடாவின் டொராண்டோவில் குடியேறினார். இதனையடுத்து பஞ்சாபி இசைத்துறையில் அறிமுகமாகி 30க்கும் மேற்பட்ட இசை வீடியோகளில் பாடியுள்ளார். தற்போது மகளிர் ஃப்ரீமியர் லீக் உள்ளிட்ட பல கிரிக்கெட் போட்டிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.</p><p>இந்நிலையில் , ஒரு உணவகத்தில் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும்போது தன்னுடைய ஆடையை மாற்றி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார் யேஷா சேகர். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியா பக்கத்தில் பகிரப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6ccc051-bf5f-474c-87e9-60d33681505e/26-6a805a1ed1925.webp' /></p>]]></content>
            <updated>2026-08-15T13:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கு பதற்றம்; அமெரிக்காவின் கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/middle-east-tension-us-issues-stern-warning-1786772116"></link>
            <id>https://canadamirror.com/article/middle-east-tension-us-issues-stern-warning-1786772116</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் அமெரிக்கா, ஈரான், லெபனான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் மற்றும் அரசியல் பதற்றங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளமை உலக நாடுகளில்&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் அமெரிக்கா, ஈரான், லெபனான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் மற்றும் அரசியல் பதற்றங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளமை உலக நாடுகளில்&nbsp; பதற்றத்தை ஏற்படுடததியுள்ளது.</p><p>இந்தநிலையில், ஈரான் தோற்கடிக்கப்பட்ட பின்னர், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்மூஸ் நீரிணையை, ":அமெரிக்காவின் பிராந்தியம்" என விரைவில் அறிவிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>எனினும், இந்த நீர்சந்தி எப்போதுமே ஈரானின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என்றும், ஈரானின் அனுமதியின்றி எந்தவொரு கப்பலும் கடந்து செல்ல முடியாது என்றும் ஈரானிய இராணுவம் பதில் அளித்துள்ளது.</p><p>இதற்கிடையில், தெஹ்ரானை முற்றாக தனிமைப்படுத்தும் நோக்கில், ஈரான் மீது இதுவரை கண்டிராத கடுமையான பொருளாதாரக் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) எச்சரித்துள்ளார்.</p><p>இதேவேளை, லெபனான் அரசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைப் போக்கை ஏற்க முடியாது என்றும், இது "சரணடைவதற்கு" சமம் என்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நைம் காசிம் (Naim Qassem) குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>லெபனான் அரசு இஸ்ரேலின் நிபந்தனைகளுக்குப் பணியக்கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>அதேவேளை&nbsp; ஏமனின் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மொகா துறைமுக நகர் மீது ஹு தி அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 2 பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதாக&nbsp; அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-15T12:59:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிறந்த குழந்தைக்கு உரிமை கொண்டாடிய வாடகை தாய்; நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/surrogate-mother-claim-rights-to-the-newborn-us-1786798720"></link>
            <id>https://canadamirror.com/article/surrogate-mother-claim-rights-to-the-newborn-us-1786798720</id>
            <summary type="text">அமெரிக்காவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள நினைத்த பெற்றோர்கள், ஒரு கட்டத்தில் வாடகை தாயிடம் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியதை தொடர்ந்து, கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள நினைத்த பெற்றோர்கள், ஒரு கட்டத்தில் வாடகை தாயிடம் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியதை தொடர்ந்து, குழந்தை பெற்றுக்கொண்ட&nbsp; பெண், குழந்தை தனக்கு தான் சொந்தம் என்று கூறி நீதிமன்றத்தை நாடியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p>அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த தம்பதிகளான ஓமர் அகமது மற்றும் நெளஷீன் கில்கர் ஆகியோர், செவிலியரான மெக்கென்னா வெஸ்ட் என்ற வாடகை தாயை அணுகி, தங்களது குழந்தையை பெற்றுத் தருமாறு கூறியுள்ளனர்.&nbsp;</p><h2>20 ஆவது வாரத்தில், குழந்தைக்கு இதய நோய்</h2><p>&nbsp;அது தொடர்பில் போடப்பட்ட ஒப்பந்தத்தில், சிசுவில் இருக்கும் குழந்தைக்கு ஏதாவது குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டால், அந்த சிசுவை கலைப்பதற்கான ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது.&nbsp;</p><p>இதையடுத்து சிசுவின் 20 ஆவது வாரத்தில், குழந்தைக்கு இதய நோய் இருப்பது கண்டறியப்பட்டது.&nbsp;</p><p>குழந்தையின் இதயம் இடது பக்கத்தில் முழுமையாக வளர்ச்சியடையாமல், போதுமான அளவு செயல்பட தவறும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக வைத்திய அறிக்கைகள் தெரிவித்தன.&nbsp;</p><p>இதய நோய் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைக்கு, பிறந்த உடனேயே சில அறுவை சிகிச்சைகள் செய்யப்பட வேண்டும் என்றும் வைத்தியர்கள் கூறியுள்ளனர்.&nbsp;</p><p>இந்த நிலையில் குழந்தையின் பெற்றோர்கள், வாடகை தாயிடம் சிசுவை கலைக்க கூறியுள்ளனர். ஆனால் அவரோ, குழந்தையை நானே வைத்துக்கொள்கிறேன் என்று கூறி, டெல்லாஸ் மாகாணத்தில் கருக்கலைப்பு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், வெளியூருக்கு தப்பி செல்ல முயன்றுள்ளார்.&nbsp;</p><p>பின்னர் அந்த வாடகை தாய் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். பிறந்த அந்த குழந்தைக்கு இதய கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.&nbsp;</p><p>இதையடுத்து பிறந்த குழந்தையுடன் வாடகைத் தாய் டெக்சாஸ் மாகாணத்திற்கு தப்பிச் செல்ல முயன்றதனால், குழந்தையின் பெற்றோர்கள் டெல்லாஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.&nbsp;</p><p>நீதிமன்றத்தில், தாங்கள் கருவை கலைக்க கூறவில்லை என அவர்கள் வாதிட்டனர். மேலும் இந்த நிகழ்வை ஒரு அரசியல் நாடகாக வாடகைத் தாய் மாற்றிவிட்டதாக கூறினர்.&nbsp;</p><p>இதைத்தொடர்ந்து டெல்லாஸ் நீதிமன்றம், குழந்தையின் வாடகை தாயை மாகாணத்தை விட்டு வெளியேற தடை விதித்து, குழந்தைக்கு தேவையான அனைத்து உயிர் காக்கும் சிகிச்சையை வழங்குமாறு உத்தரவிட்டார்.&nbsp;</p><p>மேலும் பிறந்த குழந்தைக்கு, அதன் உயிரியல் பெற்றொர்களே பொறுப்பானவர்கள் எனக் கூறி, வாடகை தாய்க்கு குழந்தை மீதான அதிகாரத்திற்கு தடை விதித்து தீர்ப்பளித்தனர்.</p>]]></content>
            <updated>2026-08-15T12:58:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் அமெரிக்காவின் பிரதேசமாக மாறப்போகும் ஹோர்முஸ் நீரிணை : ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-says-strait-of-hormuz-a-us-territory-1786786645"></link>
            <id>https://ibctamil.com/article/trump-says-strait-of-hormuz-a-us-territory-1786786645</id>
            <summary type="text">ஈரானுடன் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையை தனது நாட்டின் &quot;பிரதேசமாக&quot; அறிவிக்கும் திட்டங்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடன் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையை தனது நாட்டின் "பிரதேசமாக" அறிவிக்கும் திட்டங்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
</p><p>
வெள்ளிக்கிழமை(14) நியூயோர்க்கில் பேசிய ட்ரம்ப், எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் உரங்களின் உலகளாவிய விநியோகத்திற்கு இன்றியமையாத இந்த முக்கிய நீர்வழியை அமெரிக்கா விரைவில் உரிமை கோரும் என்று ஆதரவாளர்களிடம் கூறினார்.</p><h2>ட்ரம்பின் அறிவிப்பு</h2><p>"மிக மோசமாகத் தோற்கடிக்கப்பட்டு வரும் ஈரானை நாம் தோற்கடித்த பிறகு, மிக விரைவில் நான் ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிரதேசமாக அறிவிப்பேன்," என்று ட்ரம்ப் சிரித்துக்கொண்டே கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/496c4017-6fce-495e-9375-7ee1b5f42a70/26-6a803797ea577.webp' /></p><p>

பெப்ரவரி 28 முதல், தொடர்ச்சியான ஆக்கிரமிப்புத் தாக்குதல்களை நடத்திய பின்னர், அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுடன் போரில் ஈடுபட்டுள்ளன.

ஆனால், முன்னர் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீதத்திற்கான முக்கிய விநியோக மையமாக செயல்பட்ட அந்த நீர்வழிப்பாதை வழியான போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஈரான் பதிலளித்தது.</p><p></p><h2>போர்நிறுத்த பேச்சில் முக்கிய இடம்பிடித்த ஹோர்முஸ் நீரிணை</h2><p>

போருக்கு முன்பு அந்த நீர்வழிப்பாதையில் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை, ஆனால் இப்போது அந்த நீர்வழிப்பாதையின் மீதான கட்டுப்பாடு, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் ஒரு முக்கிய முட்டுக்கட்டையாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d28e11f-216c-414b-af18-88210a8d40f7/26-6a8037989bd7a.webp' /></p><p>
</p><p>
சமீபத்திய மாதங்களில் மீண்டும் சண்டை மூண்ட இடமாகவும் அது இருந்து வருகிறது. ஜூன் மாதம், போரில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்காக அமெரிக்காவும் ஈரானும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) கையெழுத்திட்டன, ஆனால் அந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளில் ஒன்று, "வர்த்தகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கு ஈரான் தனது சிறந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்" என்பதாகும்.
</p><p>
பின்னர் இரு தரப்பினரும் அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மீறப்பட்டதாகக் கூறினர், மேலும் மாத இறுதியில் சண்டை மீண்டும் தொடங்கியது.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T12:57:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் சிவசேனை அட்டகாசம்! பின்னணியில் தீட்டப்பட்ட ரகசிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-of-relatives-of-the-forcibly-disappeared-1786797375"></link>
            <id>https://ibctamil.com/article/protest-of-relatives-of-the-forcibly-disappeared-1786797375</id>
            <summary type="text">செம்மணியில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைதியான முறையில் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்காக அமைத்திருந்த கொட்டகையை அகற்றுமாறு சிவசேனை அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணியில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைதியான முறையில் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்காக அமைத்திருந்த கொட்டகையை அகற்றுமாறு சிவசேனை அமைப்பைச் சேர்ந்தவர் என கூறிக்கொள்ளும் ஒருவர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளமை தற்போது வடக்கு கிழக்கில் பேசுபொருளாக மாறியுள்ளது.</p><p>

கொட்டகை அமைக்கப்பட்டுள்ள இடம் ஆலயத்திற்குச் சொந்தமான இடம் எனக் கூறி அவர் குறித்த போராட்டத்திற்கு இடையூறு செய்யும் வகையில் செயற்பட்டுள்ளார்.</p><p>

இந்நிலையில், ஆலயக் காணியைக் காரணம் காட்டி மக்களை வெளியேற்றும் இந்த அமைப்பினர், வடக்கு-கிழக்கில் உள்ள பல இந்துக் கோயில்கள் ஆக்கிரமிக்கப்படும்போதும் அல்லது சிதைக்கப்படும்போதும் ஏன் மெளனமாக இருக்கிறார்கள் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
</p><p>
வெடுக்குநாறி மலை, திருக்கேதீச்சரம், மற்றும் திருக்கோணேஸ்வரம் போன்ற பகுதிகளில் நடந்த அத்துமீறல்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் குறித்து இந்த அமைப்பு எந்த ஒரு எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.
</p><p>
 தமிழர்களின் உரிமைகளுக்காகவோ அல்லது சமய உரிமைகளுக்காகவோ போராடாத இந்த அமைப்பு ஏன் இவ்வாறு செயற்படுகிறது. இது குறித்து தொடர்ந்தும் எடுத்துரைக்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/EsV_uBP_YGM" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-15T12:57:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியின் ஓலம் போராட்டத்திற்கு அனுமதி : வலி கிழக்கு தவிசாளரிடம் காவல்துறை விளக்கம் கோரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/justice-s-voice-protest-issue-1786795760"></link>
            <id>https://ibctamil.com/article/justice-s-voice-protest-issue-1786795760</id>
            <summary type="text">யாழ். செம்மணிப்பகுதியில் இடம்பெறும் நீதியின் ஓலம் 2 போராட்டம்
இனங்களுக்கிடையே அமைதியற்ற, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதற்கு
வழிவகுக்கும் விடயம...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். செம்மணிப்பகுதியில் இடம்பெறும் நீதியின் ஓலம் 2 போராட்டம்
இனங்களுக்கிடையே அமைதியற்ற, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதற்கு
வழிவகுக்கும் விடயமாக உள்ளதாகக் குறிப்பிட்டு அவ்வாறான ஒரு போராட்டத்திற்கு
வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா
நிரோஷ் அனுமதியளித்துள்ள விடயம் தொடர்பில் காவல்துறை திணைக்களம் விசாரணைகளை
ஆரம்பித்துள்ளது.&nbsp;</p><p>இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று சனிக்கிழமை (15) வலிகாமம் கிழக்கு
பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் எவ்வகையில் போராட்டத்திற்கு
அனுமதியளிக்க முடியும் என விளக்கம் கேட்டு யாழ்ப்பாண காவல் நிலைய தலைமையகத்தால் கேள்வி கேட்கப்பட்டு அவரது
அலுவலகத்தில் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp; இது தொடர்பில் தவிசாளரிடம் கேட்டபோது, யாழ்ப்பாண தலைமைப் பிரதான காவல்
பொறுப்பதிகாரியின் கடிதத்துடன் எனது அலுவலகத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் என்னை
பதிலளிக்குமாறு கோரும் கடிதத்தினை கையளித்தனர்.</p><h2>இனத்தவர்களுக்கிடையே அமைதியற்ற சூழ்நிலை&nbsp;</h2><p>அக் கடிதத்தில், செம்மணியில் போராட்டக்காரர்கள் தங்கியிருந்து போராடுவதுடன்
பேரணியாக யாழிலுள்ள ஐக்கியநாடுகள் சபையின் அலுவலகத்தில் மனு
கையளிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அப் போராட்டத்திற்கு
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் ஆகிய நீங்கள்
அனுமதி வழங்கியுள்ளமை காவல்தரப்பிற்குத் தெரிய வந்துள்ளதாகவும் இவ்வாறான
போராட்டத் தொடர் நடத்தப்படுவதன் மூலம், இலங்கையினுடைய வெவ்வேறு
இனத்தவர்களுக்கிடையே ஒருவித அமைதியற்ற சூழ்நிலை ஏற்படுவதற்கும் பொது
அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதற்கும் வழிவகுக்கும் என காவல்துறை கருதுவதாகக்
குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ba640e4-9e33-4291-840a-5b060cee134e/26-6a8061b4c705c.webp' /></p><p>மேலும் காவல்தறை பொறுப்பதிகாரியின் கடிதத்தில், காவல்துறை தரப்பின் அனுமதியின்றி
இவ்வாறான போராட்டத் தொடரை நடத்துவதற்கு உங்களால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா
எனக் கேள்வி எழுப்பியுள்ளதுடன் அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டிருப்பின் அதற்கான
சட்டபூர்வமான அடிப்படை என்ன? இவ்வாறானதொரு போராட்டத் தொடரை எம்மால்
எவ்வகையிலும் அங்கீகரிக்க முடியாது எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><h2>மக்கள் போராட்டம் என்ற அடிப்படையில்&nbsp;அனுமதி</h2><p>&nbsp;இந் நிலையில் ஜனநாயக ரீதியிலான வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்
நீதிகோரிய போராட்டத்தினை எமது பயன்பாட்டில் உள்ள நிலத்தில் நடத்துவதற்கு
கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் ஜனநாயக ரீதியிலான மனித உரிமைகளை வலியுறுத்திய
மக்கள் போராட்டம் என்ற அடிப்படையில் எமது மக்களின் உரிமைகளைக் கருத்தில்
கொண்டு தான் அனுமதியளித்ததாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர்
தியாகராஜா நிரோஷ் காவல்துறை தரப்பிற்கு எழுத்து மூலம் பதிலளித்தள்ளமை
குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13e7a550-e2c0-49ad-b002-5463087b21c2/26-6a8061b57ad90.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T12:57:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட மாகாணத்தின் மொத்த தேசிய உற்பத்திக்கான பங்களிப்பு 10 சதவீதமாக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/northern-contribution-product-increase-10-percent-1786794647"></link>
            <id>https://tamilwin.com/article/northern-contribution-product-increase-10-percent-1786794647</id>
            <summary type="text">வட மாகாணத்தின் மொத்த தேசிய உற்பத்திக்கான பங்களிப்பு தற்போது 4.5
சதவீதமாக காணப்படுகின்ற நிலையில், அதனை 10 சதவீதமாக உயர்த்தும் இலக்கை நாம்
நிர்ணயித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட மாகாணத்தின் மொத்த தேசிய உற்பத்திக்கான பங்களிப்பு தற்போது 4.5
சதவீதமாக காணப்படுகின்ற நிலையில், அதனை 10 சதவீதமாக உயர்த்தும் இலக்கை நாம்
நிர்ணயித்துள்ளோம் என
வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.</p><p>

இன்று(15.08.2026) வட மாகாண தொழிற்துறை வர்த்தக சந்தை
திறப்பு விழாவில் கலந்துகொண்டு 
உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>சிறிய மற்றும் நடுத்தர தொழில்</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், போரின் பின்னர் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்
முயற்சிகள் இன்று குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளமை பாராட்டத்தக்கது.
</p><p>
ஒவ்வொரு ஆண்டும் தொழில் முயற்சியாளர்கள் புதிய
உற்பத்திப் பொருட்களை அறிமுகப்படுத்துவதும், புதுமையாகவும் புத்தாக்கமாகவும்
சிந்தித்து தமது தொழில்களை விரிவுபடுத்துவதும் மகிழ்ச்சியளிக்கிறது.

இவ்வாறான புதிய முயற்சிகளே அவர்களை அடுத்த கட்ட வளர்ச்சிக்குக்
கொண்டு செல்லும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe188ca5-27bd-4849-bb94-3aabda72e9cc/26-6a8053329b02c.webp' /></p><p>
</p><p>
வட மாகாண உற்பத்திகளுக்கு உள்நாட்டு சந்தையைத் தாண்டி ஏற்றுமதி
சந்தையிலும் சிறந்த வாய்ப்புகள் காணப்படுகிறது. குறிப்பாக
வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் உறவுகள் வடக்கில் உற்பத்தி செய்யப்படும்
பல்வேறு பொருட்களில் ஆர்வம் கொண்டிருப்பதால், அவர்களை ஒரு முக்கிய சந்தையாகக் 
கொண்டு ஏற்றுமதியை விரிவுபடுத்த முடியும்.
</p><p>
கிளிநொச்சி மாவட்டத்தில் உற்பத்தித் திறன் அதிகமாக காணப்படுவதுடன், இந்தமுறை
சிறுபோகத்திலும் எதிர்பார்த்ததை விட அதிக விளைச்சல் கிடைத்துள்ளமை
வரவேற்கத்தக்கது.
</p><p>
இருப்பினும் இவ்வாறான உற்பத்திகளில்
பெரும்பகுதி பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்களாக மாற்றப்படாமல்
மூலப்பொருட்களாகவே வெளிமாவட்டங்களுக்கும் வெளிப்பகுதிகளுக்கும் கொண்டு
செல்லப்படுகிறது.</p><h2>வட மாகாண தொழிற்துறை</h2><p>
</p><p>
இதனால் உற்பத்தியாளர்களுக்குக் கிடைக்க
வேண்டிய அதிகபட்ச பொருளாதாரப் பயன் கிடைப்பதில்லை.

மூலப்பொருட்களை பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளாக மாற்றுவதே வட
மாகாணத்தின் தொழில் வளர்ச்சியின் அடுத்த முக்கிய கட்டமாக இருக்க வேண்டும்.
</p><p>
உற்பத்தி, பதனிடல், பொதியிடல், சந்தைப்படுத்தல் மற்றும்
ஏற்றுமதி என முழுமையான உற்பத்திச் சங்கிலியை உருவாக்குவதன் மூலம் தொழில்
முயற்சியாளர்களின் வருமானத்தையும் போட்டித்திறனையும் உயர்த்த முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f39d2f0f-e00f-4627-a8a5-c43216b9a38b/26-6a80533373c35.webp' /></p><p>
</p><p>
வட மாகாண தொழிற்துறை திணைக்களத்தால் கடந்த காலங்களில் சிறிய அளவிலான
பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளுக்குத் தேவையான இயந்திர உபகரணங்கள் தொழில்
முயற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.</p><p>எதிர்காலத்தில் மிகக் குறைந்த
வட்டியுடனான கடன் வசதிகளும் வழங்கப்படவுள்ளது. 

அரசாங்கத்தால் ஏற்படுத்தப்படும் இவ்வாறான வாய்ப்புகளை முழுமையாக
பயன்படுத்தி, தமது தொழில் முயற்சிகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டும்.
</p><p>
இந்த நிகழ்வில் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், தூய்மை இலங்கை செயலணியின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ம.மோகன், வட மாகாண தொழிற்துறை திணைக்களத்தின் பணிப்பாளர்
எஸ்.கிருஸ்ணேந்திரன், வட மாகாண பிரதம
செயலாளர் தனுஜா முருகேசன், கிளிநொச்சி மாவட்ட செயலர் சு.முரளிதரன்,
கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேளமாலிகிதன், தொழில் முயற்சியாளர்கள்,
உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகத் துறையினர் உள்ளிட்ட பலரும் 
பங்கேற்றுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T12:52:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் அடித்துக்கொல்லப்பட்ட தமிழ் பெண்! நீதி கிடைப்பதில் பாரிய சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/welikada-police-station-woman-death-1786773271"></link>
            <id>https://tamilwin.com/article/welikada-police-station-woman-death-1786773271</id>
            <summary type="text">வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழ் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அப்போதைய ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழ் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அப்போதைய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு (OIC) பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக இருந்த சிந்தக்க அனுராத வவுனியாவுக்கு இடமாற்றப்பட்டு சாதாரண சேவையில் இணைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக லண்டனில் இருந்து இயங்கும் புலனாய்வுச் செய்திச் சேவையொன்று ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
சலாகா (Salaka) நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நெத்தி குமாரவின் மனைவி சுதர்மா நெத்தி குமாரவின் வீட்டில் பதுளை, தெமோதரை தோட்டத்தைச் சேர்ந்த 42 வயதான ஆர்.ராஜகுமாரி எனும் பெண் வேலை செய்து வந்துள்ளார்.</p><h2>பொய்க்குற்றச்சாட்டு&nbsp;</h2><p> </p><p>கொழும்பில் உள்ள வீடுகளில் பணிபுரிந்துவிட்டுச் செல்லும் ஏழைத் தொழிலாளர்கள் மீது பணம், தங்கம் அல்லது மாணிக்கக் கற்களைத் திருடிவிட்டதாகப் பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுவது வழக்கமான ஒன்றாகக் காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ceae7495-a5fb-4e84-bf68-bbdbd343e716/26-6a7fff1983587.webp' /></p><p>
</p><p>
இந்தச் சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் தலையிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. </p><p>டிரான் அலஸுடன் நெருங்கிய தொடர்புடைய பெண் ஒருவர் சுதர்மா நெத்தி குமாரவின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்துள்ளார். அந்தப் பெண் மூலமாகப் பாரிய அழுத்தத்தைக் கொடுத்து, ஏழைத் தமிழ் பெண்மணி தன் வீட்டிலிருந்து சென்று இரண்டு நாட்களில் "தங்கக் கடிகாரம் மற்றும் 500 கிராம் தங்கம் திருடிவிட்டார்" எனச் சுதர்மா நெத்தி குமார பொய்க் குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளார்.
</p><p>
அதனைத் தொடர்ந்து, அப்பெண் வெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அன்றைய OIC சிந்தக்க அனுராதவின் காலத்தில் கொடூரமான முறையில் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><p>உயிரிழந்த பெண்ணின் உடலில் 34 பலத்த காயங்கள் இருந்ததாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் இரண்டு வயதில் ஒரு குழந்தை, 17 வயதில் ஒரு குழந்தை என மூன்று பிள்ளைகளின் தாயாராவார்.</p><p></p><h2>கடும் அழுத்தம்..&nbsp;</h2><p>
இச்சம்பவம் தொடர்பில் கடும் அழுத்தங்களுக்கு மத்தியில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணைகளை மேற்கொண்டபோது, அன்றைய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏமில் ரஞ்சன் (Emil Ranjan) விசாரணைகளைத் தொடர்ந்து நடத்த விடாமல் டிரான் அலஸ் மற்றும் நெத்தி குமார ஆகியோரால் கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c639875f-0328-4fe4-9ca1-f3fc243833b2/26-6a7fff1a386be.webp' /></p><p>

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டதுடன் சிலர் கைது செய்யப்பட்டனர். தற்போது இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. </p><p>இருப்பினும், தற்போது இந்த OIC சிந்தக்க அனுராதவுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டு, (RTM 14) உத்தரவின் மூலம் கிருலப்பனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக (OIC) நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>

ஏழைப் பெண்ணை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டில் உயர் நீதிமன்றத்தில் வழக்கினை எதிர்கொண்டு வரும் நபர், V8 சொகுசு வாகனத்தில் வந்தே புதிய பதவியைப் பொறுப்பேற்றுள்ளார். </p><p>இவர் ஒரு பெரும் ஊழல்வாதி என்றும், ராஜகிரிய மற்றும் வெலிக்கடை பகுதி மக்களுக்கு இவரைப் பற்றி நன்கு தெரியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவர் 11 ஸ்பா (SPA) மையங்களை நடத்தி வந்ததியாகவும், அவற்றில் இருந்து லஞ்சப் பணம் வசூலித்ததாகவும், இரண்டு ஸ்பா மையங்களைக் ஒப்பந்த அடிப்படையில் (Contract) வழங்கியிருந்தார் என்றும் கூறப்படுகிறது.
</p><p>
இவ்விடயங்கள் வெலிக்கடை பொலிஸாருக்கும், தற்போதைய பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கும் தெரியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இந்த ஏழைப் பெண்ணிற்காகப் பேசுவதற்கு யாரும் முன்வராத நிலையில், ராஜகுமாரியின் வழக்கேட்டுக்கோப்புகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T12:50:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் மீண்டும் 6.4 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/another-6-4-magnitude-earthquake-in-indonesia-1786798042"></link>
            <id>https://canadamirror.com/article/another-6-4-magnitude-earthquake-in-indonesia-1786798042</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் 6.4 ரிச்டர் அளவிலான இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது.&amp;nbsp;முன்னதாக இன்று சனிக்கிழமை (15), இந்தோனேசியாவில் 7.7 ரிச்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p><a href="https://canadamirror.com/article/death-toll-from-indonesia-earthquake-rises-to-38-1786792318" target="_blank">இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் 6.4 ரிச்டர் அளவிலான </a>இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது.&nbsp;</p><p>முன்னதாக இன்று சனிக்கிழமை (15), இந்தோனேசியாவில் 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதில் குறைந்தது 38 பேர் உயிரிழந்தனர்</p><p>நிலநடுக்கத்தைத் தொடர்ந்து டஜன் கணக்கான பின்அதிர்வுகளும் பதிவாகியுள்ள நிலையில், மீட்புப் பணியாளர்கள் நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகிலுள்ள பகுதிகளை சென்றடைய தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-15T12:47:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு எதிரான டெஸ்டில் முதல் சதத்தை பதிவு செய்த படிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/devdutt-padikkal-maiden-test-ton-vs-sri-lanka-1786795592"></link>
            <id>https://news.lankasri.com/article/devdutt-padikkal-maiden-test-ton-vs-sri-lanka-1786795592</id>
            <summary type="text">Devdutt Padikkal maiden test century: இலங்கை அணிக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணியின் தேவ்தத் படிக்கல் சதம் அடித்தார். 

காலியில் தொடங்கியுள்ள இலங்கை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Devdutt Padikkal maiden test century: இலங்கை அணிக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணியின் தேவ்தத் படிக்கல் சதம் அடித்தார். </p><p>

காலியில் தொடங்கியுள்ள இலங்கை அணிக்கு எதிரான டெஸ்டில், இந்திய அணியின் துடுப்பாட்ட வீரரான தேவ்தத் படிக்கல் சதம் விளாசினார்.&nbsp;</p><h2>தேவ்தத் படிக்கல்</h2><p>

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி காலியில் தொடங்கியுள்ளது. நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தொடங்கியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fe09029-5f18-4844-a4e6-c53fa52d4afd/26-6a80564bc750a.webp' />&nbsp;</p><p></p><p>யஷஸ்வி ஜெய்ஸ்வால் 32 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, கே.எல்.ராகுல் 77 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரிட்டையர் ஹர்ட் ஆகி வெளியேறினார்.
</p><p>
அடுத்து வந்த அணித்தலைவர் சுப்மன் கில் 16 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பிரபத் ஜெயசூர்யாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். </p><p>

மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தேவ்தத் படிக்கல் (Devdutt Padikkal), டெஸ்டில் தனது முதல் சதத்தினை பதிவு செய்தார்.&nbsp; &nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf6c67e0-b170-4505-845c-43a205915d87/26-6a80564c7a8c1.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T12:45:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி பளை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக மூன்று மாடி கட்டிடம்! மனித உரிமைகள் அதிகாரி கிளப்பும் சர்ச்சை...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kilinochchi-district-pallai-1786797573"></link>
            <id>https://tamilwin.com/article/kilinochchi-district-pallai-1786797573</id>
            <summary type="text">கிளிநொச்சி - பளை பகுதியில் புதிதாக மூன்று மாடி கொங்கிரீட் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டிருப்பதாகவும் அங்கு 100 முதல் 150 பேர் வரை வேலை செய்து வருவதாகவும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - பளை பகுதியில் புதிதாக மூன்று மாடி கொங்கிரீட் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டிருப்பதாகவும் அங்கு 100 முதல் 150 பேர் வரை வேலை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு்ள்ளது. </p><p>இதனை தமிழீழ விடுதலைப் புலிகள் முகமாக மாற்றப் போகிறார்களா? அல்லது இங்கு வெடிகுண்டுகள் தயாரிக்கப் போகிறார்களா?என அங்கிருக்கும் சிங்கள அதிகாரிகள் தங்களிடம் தெரிவிப்பதாக சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சங்கீத் ஜெயசேகர, இன்று நடத்திய ஊடக மாநாட்டில் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>
</h2><p></p><h2>49 ஏக்கர் அரசாங்கக் காடுகள் அழிப்பு</h2><p>பளை பகுதியில் சுமார் 49 ஏக்கர் அரசாங்கக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் வன அலுவலக அதிகாரி ஏழு வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.</p><p>நாங்கள் இது தொடர்பில் ஜனாதிபதி , பாதுகாப்புச் செயலாளர் ரவி செனவிரத்ன , பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால ஆகியோருக்கு தனிப்பட்ட கடிதங்கள் மூலம் அறிவித்துள்ளோம். அதற்கான ஆதாரங்கள் புகைப்படங்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>அந்தப் பகுதியில் சிங்களவர்கள் இல்லை, மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான சிங்களவர்களும் அதிகாரிகளுமே நம்மிடம் இதைக் கூறுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87bddff9-6a66-4693-9aee-6ebdae90032a/26-6a805e07eabe0.webp' /></p><p>புதிதாகக் கட்டப்பட்டு வரும் இந்தக் கட்டிடத்தின் பணிகள் இன்னும் முடியவில்லை. அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்கள் அல்லது மத்திய அரசின் எவ்வித அனுமதியும் இன்றி இவ்வளவு பெரிய கட்டிடங்களை எவ்வாறு கட்ட முடிந்தது? </p><p>இதன் பின்னணியில் இருப்பது யார்?
அங்குள்ளவர்கள் கூறும் தகவல்களின்படி, அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் உள்ளவர்கள் ஒரு வெளிநாட்டுத் திட்டமாக இதற்கு உதவி செய்வதாக கூறப்படுகிறது. </p><h2>
ஏழு வழக்குகள் தாக்கல்</h2><p>தற்போது 7 வழக்குகளைத் தாக்கல் செய்த வன அலுவலக அதிகாரியை (RFO) கொலை செய்வதற்கு&nbsp; சம்பந்தப்பட்ட தமிழர்கள் திட்டம் தீட்டியுள்ளதாகவும் தற்போது அந்த அதிகாரி பயத்தில் வழக்கு நடைபெறும் திகதிகளில் மட்டும் நீதிமன்றத்திற்கு வந்துவிட்டு, ஏனைய நாட்களில் விடுமுறை எடுத்து ஒளிந்து வாழ்கிறார்.
</p><p>இவ்வாறானதொரு சூழ்நிலையில், அரசாங்கத்தின் உயர்மட்டத்திடம் நாம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளோம். இந்த RFO மற்றும் அதே வன அலுவலகத்தில் பணிபுரியும் அவரது மனைவி ஆகிய இருவரையும் குருநாகலுக்கு இடமாற்றம் செய்து தருமாறு கேட்டுக் கொண்டோம். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5269ed52-6899-45df-9e67-e73447fc8496/26-6a805e0744e99.webp' /></p><p>முதற்கட்டமாக அவர்களின் உயிருக்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். </p><p>
மேலும் பொலிஸ் நிலையததில் உள்ள எந்தவொரு அதிகாரியும் இது குறித்து கண்டுக்கொள்ளவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>வனத்துறையின் ஏனைய அதிகாரிகளும் கூட இந்தப் பிரச்சினைக்குப் பயப்படுகிறார்கள். எனவே இது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சிடம் கேட்டுகொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T12:44:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பிரதேசத்தில் அதிர்ச்சி; இளம் தாய் கூட்டு வன்புனர்வு ; மகன் செய்த கொடும் செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mother-gang-raped-in-vavuniya-committed-by-son-1786784583"></link>
            <id>https://jvpnews.com/article/mother-gang-raped-in-vavuniya-committed-by-son-1786784583</id>
            <summary type="text">வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண் ஒருவரை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில்ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண் ஒருவரை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில்ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார்&nbsp; (14) தெரிவித்தனர். இது தொடர்பாக பொலிசார் மேலும் தெரிவித்ததாவது,</p><h2>&nbsp;முதல் கணவரின் மகனே திட்டமிட்டு&nbsp;கொடும் செயல்</h2><p>கடந்த 8 ஆம் திகதி வவுனியா, மடுகந்தை, மயிலங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை உடைத்து உட் சென்ற சிலர் அங்கிருந்த வாகனச் சாரதி மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு, வீட்டு உரிமையாளரான 51 வயது பெண் அணிந்திருந்த நகைகளை&nbsp; கொள்ளையிட்டு&nbsp; கூட்டு துஸ்பிரயோகம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.</p><p>அத்துடன் வீட்டில் மறைத்து வைத்திருந்த 80 இலட்சம் பெறுமதியான இரத்தினக் கல், 56 இலட்சம் பெறுமதியான 15 பவுணுக்கு அதிகமான தங்க நகைகள், 5 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம், 15 வாகனப் புத்தகங்கள் மற்றும் திறப்புகள், 35 காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் என பலவற்றை திருடிச் சென்றுள்ளனர்.</p><p>பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தின் குற்த்தடுப்பு பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து விரைந்து செயல்பட்ட பொலிசார் ஆபத்தான நிலையில் இருந்த, பாதிக்கப்பட்ட இருவரையும் மீட்டு வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.&nbsp;</p><p>வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கு அமைய வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.யே.எஸ்.ரத்னமலலா அவர்களின் வழிகாட்டலில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவின் பதில் பொறுப்பதிகாரி ஆர். பந்துல தலைமையில் பொலிஸ் சார்ஜன்டுகளான சந்தன (16446), கேரத் (14692), பியங்கர ( 47358), பொலிஸ் கொன்ஸ்தாபிள்களான நவகீதன் ( 8098), சுப்புன் (28752), சம்பத் ( 11388) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.</p><p>பாதிக்கப்பட இப்பெண்ணின் தொழில்சாலையில் பணியாளர்களாக வேலை செய்த 35 வயதான உக்குவெல மாத்தறை பகுதியை சேர்த்த நபர் ஒருவரையும், 29 வயதான களேமிதுனுவெல, சிவலாங்குளம் பகுதியை சேர்ந்த மற்றொரு இளைஞரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.</p><p>பெண்ணிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் , சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பாதிக்கப்பட்ட பெண்ணின் முதல் கணவரின் மகனே திட்டமிட்டு இச் சம்பவத்துக்கு மூலகாரணமாக செயல்பட்டு இக் கொள்ளைச் சம்பவத்தை நடத்தியதாக கூறப்படுகின்றது.</p><p>மகனே&nbsp; தனது காரில் களேமிதுனுவெல சிவலாங்குளம் பகுதியில் இருந்து சந்தேக நபர்களை ஏற்றி வந்து வீட்டு அருகில் வீதியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது.</p><p>மேலும் சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் திருடப்பட்ட இரத்தினக்கற்கள், தங்க நகைகள், வாகனப் புத்தகங்கள், திறப்புகள், 35 காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் என்பவற்றை மீட்டது.</p><p>அத்துடன், இச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மேலதிக விசாரணைணகளின் பின் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்</p>]]></content>
            <updated>2026-08-15T12:31:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவருடன் செம ரொமான்டிக் போட்டோ ஷுட் நடத்தியுள்ள நடிகை ஸ்ரேயா சரண்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/shriya-saran-romantic-photos-with-her-husband-1786792371"></link>
            <id>https://cineulagam.com/article/shriya-saran-romantic-photos-with-her-husband-1786792371</id>
            <summary type="text">ஸ்ரேயா சரண்நடிகை ஸ்ரேயா சரண், சினிமாவில் என்ட்ரி கொடுத்த வேகத்திலேயே முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்கள் நடித்தவர். டாப் நாயகிகளில் ஒருவராக வலம் வந்த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஸ்ரேயா சரண்</h2><p>நடிகை ஸ்ரேயா சரண், சினிமாவில் என்ட்ரி கொடுத்த வேகத்திலேயே முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்கள் நடித்தவர். </p><p>டாப் நாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர் இந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் சினிமாவிலும் படங்கள் நடித்து கவனம் பெற்றவர். 43 வயதாகும் நடிகை ஸ்ரேயா சரணுக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. </p><p>இந்த நிலையில் தனது குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு டூர் சென்ற ஸ்ரேயா கணவருடன் ரொமான்டிக் புகைப்படங்களும் எடுத்துள்ளார். இதோ,</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T12:30:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனின் நீண்ட தூர தாக்குதல்: குறிவைக்கப்பட்ட ரஷ்யாவின் ரோஸ்காஸ்மோஸ்: ஜெலென்ஸ்கி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-targets-russia-s-roscosmos-facilities-1786796771"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-targets-russia-s-roscosmos-facilities-1786796771</id>
            <summary type="text">உக்ரைனின் நீண்ட தூர ஏவுகணைகள் ரஷ்யாவின் முக்கிய தளங்களை குறிவைத்து அளித்துள்ளது. ஜெலென்ஸ்கி வெளியிட்ட அறிவிப்பு
உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தன்னுடைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் நீண்ட தூர ஏவுகணைகள் ரஷ்யாவின் முக்கிய தளங்களை குறிவைத்து அளித்துள்ளது.</p><h2> ஜெலென்ஸ்கி வெளியிட்ட அறிவிப்பு</h2><p>
உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட தகவலில், உக்ரைனிய படைகள் ரஷ்யாவின் ஆழமான எல்லைகள் வரை புகுந்து வெற்றிகரமாக நீண்ட தூரத் தாக்குதலை நடத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p> அதில், உள்நாட்டு தயாரிப்பான பிளமிங்கோ(Flamingo) ஏவுகணையை பயன்படுத்தி ரஷ்யாவின் ராணுவ மற்றும் தொழில்துறை கட்டமைப்புகளை வெற்றிகரமாக அழித்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p> குறிப்பாக ரோஸ்காஸ்மோஸ் (Roscosmos) நிறுவனத்தின் கீழ் இயங்கும் விண்வெளி மின்னணுவியல் தொழிற்சாலையான புரோகிரெஸ் சென்டரை உக்ரைனிய படைகள் வெற்றிகரமாக தாக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33ddfcff-bdce-4746-9900-461eaf927c01/26-6a805ae4ad0fc.webp' /></p><p> இந்த ரோஸ்காஸ்மோஸ் தளமானது உக்ரைனிய எல்லையில் இருந்து கிட்டத்தட்ட 700 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p> அத்துடன் உக்ரைன் எல்லையில் இருந்து 800 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீதும் திட்டமிட்டபடி தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> ரஷ்யாவின் தாக்குதல் மற்றும் போர் திறனை சிதைப்பதே இந்த தாக்குதலின் முக்கிய நோக்கம் என்று ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-15T12:26:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்படவுள்ள மிக ஆபத்தான நபர்கள்.. பதற்றத்தில் பல அரசியல்வாதிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/73-red-warranted-persons-to-bring-back-1786791354"></link>
            <id>https://tamilwin.com/article/73-red-warranted-persons-to-bring-back-1786791354</id>
            <summary type="text">வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக் குழுவினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை நாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக் குழுவினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை நாட்டிற்கு மீண்டும் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். </p><p>கண்டியில் இன்று (15) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>இதன்போது நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.</p><h2>கலக்கத்தில் பலர்..&nbsp;</h2><p> நாட்டில் நடைமுறைபடுத்தப்பட்டு வரும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்புத் திட்டங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் முன்னேற்றத்திற்கு சர்வதேச நாடுகளிலிருந்தும் வெளிநாட்டுத் தூதரகங்களிலிருந்தும் பலத்த ஆதரவும் பாராட்டும் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7edc0da8-da5a-41fc-ac04-f4361275414f/26-6a8052d9073eb.webp' /></p><p> </p><p> இந்தச் சோதனைகளை நிறுத்துமாறு தனக்கு எந்தவித வெளிப்புற அழுத்தங்களோ அச்சுறுத்தல்களோ வரவில்லை என்றும், மேலதிக சோதனைகளை நடத்துமாறு கோரிக்கைகளே கிடைக்கப் பெற்று வருவதாகவும் அவர் கூறினார். </p><p>இருப்பினும், இந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் முதலீடு செய்து ஆதரவளித்தவர்கள் தற்போது கடும் கலக்கத்தில் இருப்பதை அவதானிக்க முடிவதாக அவர் தெரிவித்தார். </p><p> அரசியல்வாதிகள் சிலர் தனக்கு எதிராக வெளியிடும் அறிக்கைகள் குறித்துத் தனக்கு எந்தப் பயமும் இல்லை என்றும், எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தினார்.</p><p></p><h2>அரசியல்வாதிகளின் நிலை&nbsp;</h2><p> </p><p>தான் எந்தவொரு சமூக அநீதியையோ அல்லது அழிவையோ ஏற்படுத்தாததால், சிறப்புப் பாதுகாப்பு இல்லாமலும் கூட நாட்டின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குத் தன்னால் பயணிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/418556f2-a4ff-4f43-a44f-75a0c207f38f/26-6a8052d9f0331.webp' /></p><p>மக்களிடையே செல்ல முடியாத நிலை தனக்கு இல்லை என்றும், பொய்களைக் கூறி சமூகத்தை அழித்த அரசியல்வாதிகளுக்கே அந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சாடினார். </p><p>மேலும் 73 பேரைச் சிவப்பு எச்சரிக்கை மூலம் நாட்டிற்கு அழைத்துவர வேண்டி உள்ளதாகவும், சர்வதேச ரீதியில் நல்ல ஒத்துழைப்பு கிடைத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T12:23:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வயலுக்கு சென்ற இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dies-after-being-attacked-by-elephant-1786795681"></link>
            <id>https://tamilwin.com/article/dies-after-being-attacked-by-elephant-1786795681</id>
            <summary type="text">வவுனியா - வடக்கு நெடுங்கேணி பிரதேசத்திற்கு உட்பட்ட குளவிசுட்டான் குறிசுட்ட குளம் பகுதியில் காட்டுயானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா - வடக்கு நெடுங்கேணி பிரதேசத்திற்கு உட்பட்ட குளவிசுட்டான் குறிசுட்ட குளம் பகுதியில் காட்டுயானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். </p><p>இந்த சம்பவம் இன்று(15.08.2026) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.</p><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p><p>குறித்த நபர், குறிசுட்டகுளம் பகுதியில் உள்ள வயல் நிலத்தினை பார்வையிட சென்ற போது யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
</p><h2>

இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு</h2><p>
இவ்வாறு உயிரிழந்தவர், இரண்டு பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய குளவிசுட்டான் நெடுங்கேணியினை சேர்ந்த குலராஜசிங்கம் ஸ்ரீதரன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74b27422-f58e-49e9-97e5-e56fb3977af1/26-6a80598cb9d0e.webp' /></p><p>
சம்பவ இடத்திற்கு விரைந்த நெடுங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு உடலத்தினை நெடுங்கேணி வைத்தியசாலை கொண்டு சென்றுள்ளனர்.
</p><p>
அதன் பின்னர், குடும்பஸ்தரின் சடலம் மேலதிக விசாரணைக்காக வவுனியா மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-15T12:21:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவை விட்டுப் புறப்பட்ட இந்திய தம்பதி: பக்கத்து வீட்டுப் பெண் செய்த செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-woman-breaks-down-for-indian-neighbours-1786796219"></link>
            <id>https://news.lankasri.com/article/us-woman-breaks-down-for-indian-neighbours-1786796219</id>
            <summary type="text">மெரிக்காவில் வாழ்ந்துவந்த ஒரு இந்திய தம்பதி அமெரிக்காவை விட்டு இந்தியாவுக்கு புறப்பட்ட நிலையில், பக்கத்து வீட்டுப் பெண்ணொருவர் அவர்களைக் கட்டியணைத்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மெரிக்காவில் வாழ்ந்துவந்த ஒரு இந்திய தம்பதி அமெரிக்காவை விட்டு இந்தியாவுக்கு புறப்பட்ட நிலையில், பக்கத்து வீட்டுப் பெண்ணொருவர் அவர்களைக் கட்டியணைத்து அழுது விடைகொடுக்கும் காட்சி ஒன்று நெகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.
</p><p>


அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் பலர் இனவெறுப்பு சம்பவங்களை எதிர்கொள்ளும் காட்சிகளை இணையத்தில் பார்த்திருப்போம்.
</p><p>
ஆனால், தங்கள் வீட்டுக்கு அருகில் வாழ்ந்துவந்த ஒரு இந்திய தம்பதியரைப் பிரிய மனமில்லாமல் அமெரிக்கப் பெண்மணி ஒருவர் கண்ணீர் விடும் காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7c8fb0d-1f9b-47af-92e3-03fabbc85200/26-6a8058bd32711.webp' /></p><p>
</p><h3>
பக்கத்து வீட்டுப் பெண் செய்த செயல்
</h3><p>
அமெரிக்காவில் வாழ்ந்து வந்த அந்த இளம் தம்பதியர் இந்தியாவுக்கே திரும்ப முடிவு செய்து இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளனர்.
</p><p>
அப்போது, அவர்களுடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்மணி, அவர்களுக்கு பிரியாவிடை கொடுக்க வந்துள்ளார்.</p><p>
</p><p>https://www.indiatoday.in/trending-news/story/us-woman-breaks-down-in-indian-neighbours-arms-as-they-prepare-to-leave-america-2971184-2026-08-14</p><p>அவர்கள் விடைபெற்றுக்கொண்டு செல்ல முயல, அவர் அவர்கள் தோள் மீது சாய்ந்துகொண்டு அழத் துவங்கியுள்ளார்.&nbsp;</p><p>அவர்கள் இருவரும் அவருக்கு ஆறுதல் கூறியும் அவரால் அவர்களை விட முடியவில்லை. </p><p>அவர்களைக் கட்டியணைத்துக்கொண்டு உங்களை நான் எவ்வளவு மிஸ் பண்ணுவேன் தெரியுமா என கேட்டு மேலும் கண்ணீர் வடித்துள்ளார் அவர்.
</p><p>
கடைசியாக, அந்த தம்பதியருக்காக பிரார்த்தனை செய்து அவர்களை அனுப்ப மனமில்லாமல் அனுப்பிவைத்துள்ளார் அந்த அமெரிக்கப் பெண்மணி.</p><p>
</p><p></p><p>இதில் முக்கிய விடயம் என்னவென்றால், இந்தக் காட்சிகள் வீடியோவாக எடுக்கப்படுவது அந்தப் பெண்மணிக்கோ அல்லது அந்த தம்பதியருக்கோ தெரியாது.

நண்பர் ஒருவர் யாருக்கும் தெரியாமல் அந்த வீடியோவை எடுத்துள்ளார்.
</p><p>
ஆக, உண்மையாகவே அந்த தம்பதியரும் அந்த அமெரிக்கப் பெண்மணியும் ஒருவரையொருவர் அவ்வளவு நேசித்துள்ளார்கள் என்பது அந்த வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.
</p><p>
வீடியோவைப் பார்வையிட்ட பலரும் நெகிழ்ந்துபோன நிலையில், இதேபோல் நல்ல அயலகத்தாரை பிரிந்து வந்த சிலர் தங்களுக்கும் இதேபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டதாகவும், பிரிந்த பின்பும் தங்கள் அயலகத்தாருடனான அன்பு நீடிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T12:17:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மானிக்கபுரம் – பாரதிபுரம் வீதி புனரமைப்புப் பணி ஆரம்பிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/manikapuram-bharathipuram-road-work-begins-1786792739"></link>
            <id>https://tamilwin.com/article/manikapuram-bharathipuram-road-work-begins-1786792739</id>
            <summary type="text">மக்களின் கோரிக்கைக்கு அமைவாக, 25 மில்லியன் ரூபாய்&amp;nbsp; நிதி ஒதுக்கீட்டில் மானிக்கபுரம் – பாரதிபுரம் இணைப்பு வீதிப் பணிகளை புதுக்குடியிருப்பு பிரதேச ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்களின் கோரிக்கைக்கு அமைவாக, 25 மில்லியன் ரூபாய்&nbsp; நிதி ஒதுக்கீட்டில் மானிக்கபுரம் – பாரதிபுரம் இணைப்பு வீதிப் பணிகளை புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஆரம்பித்து வைத்துள்ளது.</p><p>

இந்த நிகழ்வானது இன்று (15.08.2026) புது குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் கரிகாலன் தலைமையில் நடைபெற்றுள்ளது.</p><h2>வீதி புணரமைப்பு</h2><p>இந்த நிகழ்வு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், செ.திலகநாதன், பிரதேச சபை உறுப்பினர் அகிலன்,&nbsp; திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aff8394e-a0e9-41c0-8779-b03a47b18047/26-6a804bc83c6d8.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T12:12:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சில அரசியல்வாதிகள் கருத்துக்களுக்கு எந்த பயமும் இல்லை: பிரியந்த வீரசூரிய]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bring-73-major-underworld-criminals-to-the-country-1786794463"></link>
            <id>https://ibctamil.com/article/bring-73-major-underworld-criminals-to-the-country-1786794463</id>
            <summary type="text">வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள முக்கிய பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களில் சர்வதேச சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள 73 பேரை விரைவில் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள முக்கிய பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களில் சர்வதேச சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள 73 பேரை விரைவில் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
</p><p>
 

கண்டியில் இன்று (15.08.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். </p><p>இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் நூற்றுக்கு அருகாமையிலான நபர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.</p><p></p><h2>பிரியந்த வீரசூரிய </h2><p>

 

அத்துடன், நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் முன்னேற்றம் காரணமாக, வெளிநாடுகள் மற்றும் தூதரகங்களின் சிறப்பு பாராட்டும், உயர் ஒத்துழைப்பும் இதற்கு கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/024dc95a-e5b2-4d98-8e08-e57ffc2e533c/26-6a805752838a2.webp' /></p><p>
 

இந்த நடவடிக்கைகளை நிறுத்துமாறு எந்தவொரு வெளி அழுத்தங்களோ அல்லது அச்சுறுத்தல்களோ விடுக்கப்படவில்லை, சோதனைகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறு மட்டுமே கோரிக்கைகள் கிடைக்கின்றன.&nbsp;</p><p>

 

இருப்பினும், இந்த கடத்தல்களுக்கு பணம் முதலீடு செய்த மற்றும் உதவிய நபர்கள் தற்போது கடுமையாக கலக்கமடைந்துள்ளதாக அவதானிக்க முடிகிறது.
</p><p>
 

சில அரசியல்வாதிகள் என்னை பற்றி வெளியிடும் கருத்துக்கள் குறித்து எனக்கு எந்த பயமும் இல்லை எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.&nbsp;</p><p>

 

நான் சமூக அநீதியையோ அல்லது அழிவையோ செய்யாததால், சிறப்பு பாதுகாப்பு இல்லாமலும் நாட்டின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு செல்ல முடியும்.
</p><p>&nbsp;மக்களுக்கு சென்று பார்க்க முடியாத நிலை எனக்கு ஏற்படவில்லை, சமூகத்திற்கு பொய் கூறி அழிவை ஏற்படுத்திய அரசியல்வாதிகளுக்கே அத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது.</p><p>
 

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய,

 

"மேலும் 73 சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களை அழைத்து வர வேண்டியுள்ளது. மேலும் 100 பேர் வரை இருப்பதாக நம்பப்படுகிறது. </p><p>அதேபோல் எங்களுக்கு நல்ல சர்வதேச ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. அத்துடன் நாங்கள் முன்னெடுக்கும் திட்டங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் முன்னேற்றம் குறித்து வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் நாடுகள் சிறப்பு பாராட்டு தெரிவித்துள்ளன." என கூறி இருந்தார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T12:11:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகனங்களின் விலையில் அதிகரிப்பு: வெளியாகியுள்ள முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vehicle-prices-to-rise-as-surcharge-extended-1786793730"></link>
            <id>https://ibctamil.com/article/vehicle-prices-to-rise-as-surcharge-extended-1786793730</id>
            <summary type="text">

வாகன இறக்குமதி வரிகள் மீதான 50% மேலதிகக் கட்டணத்தை டிசம்பர் 31 வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கையில் வாகனங்களின் விலைகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

வாகன இறக்குமதி வரிகள் மீதான 50% மேலதிகக் கட்டணத்தை டிசம்பர் 31 வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கையில் வாகனங்களின் விலைகள் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

இன்றையதினம்(ஓகஸ்ட் 15) முடிவடையவிருந்த இந்த மேலதிக வரி விதிப்பு நீடிக்கப்பட்டுள்ளதால், புதிய வாகனங்களின் விலைகள் வெகுவாக அதிகரிக்கும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>

இதன்படி, சுஸுகி வேகன் ஆர் (Suzuki Wagon R) வாகனத்தின் விலை சுமார் ரூ. 500,000 வரையிலும், டொயோட்டா ரைஸ் (Toyota Raize) ரூ. 1 மில்லியன் வரையிலும், ஹோண்டா வெஸல் (Honda Vezel) ரூ. 1.5 மில்லியன் முதல் 2 மில்லியன் வரையிலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><h2>உயர்த்தப்பட்ட வரி&nbsp;</h2><p> </p><p>

மேலும், டொயோட்டா பிராடோ (Toyota Prado) ரூ. 3 மில்லியனாலும், லேண்ட் குரூசர் (Land Cruiser) ரூ. 5 மில்லியனாலும், டபள் கெப் (Double Cab) வாகனங்கள் ரூ. 2 மில்லியன் முதல் 2.5 மில்லியன் வரையிலும் விலை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b962beb5-66a9-4318-968f-bf5b5a0f26d1/26-6a80551f5956d.webp' /></p><p>
</p><p>
இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில், தற்போது விற்பனையகங்களில் உள்ள வாகனங்கள் மே 15 ஆம் திகதிக்கு முன்னர் திறக்கப்பட்ட கடன் கடிதங்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்டவை என்பதால், அவற்றுக்கு இந்த மேலதிக வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இருப்பினும், மே 15க்கு பிந்தைய கடன் கடிதங்களின் கீழ் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இந்த உயர்த்தப்பட்ட வரி விதிக்கப்படும் என்பதால் விலையேற்றம் தவிர்க்க முடியாதது என்றும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-15T12:09:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வத்தளை நகைக்கடையில் தீ விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fire-at-a-jewelry-shop-in-wattala-1786795644"></link>
            <id>https://jvpnews.com/article/fire-at-a-jewelry-shop-in-wattala-1786795644</id>
            <summary type="text">வத்தளை – மாபாகே சந்திப்புக்கு அருகிலுள்ள வணிக வளாகமொன்றில் அமைந்துள்ள நகைக்கடையில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தீயை கட்டுப்படுத்துவதற்காக இரண்டு தீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வத்தளை – மாபாகே சந்திப்புக்கு அருகிலுள்ள வணிக வளாகமொன்றில் அமைந்துள்ள நகைக்கடையில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>தீயை கட்டுப்படுத்துவதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது</p>]]></content>
            <updated>2026-08-15T12:07:29+00:00</updated>
        </entry>
    </feed>
