<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-07T00:57:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் மருதமடு அன்னையின் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mannar-madhu-shrine-festival-begins-1786063122"></link>
            <id>https://tamilwin.com/article/mannar-madhu-shrine-festival-begins-1786063122</id>
            <summary type="text">மன்னார் மருதமடு அன்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணி மாதத் திருவிழா&amp;nbsp; நேற்று 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி உள்ளது.
நேற்று (6) மாலை 5.3...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மருதமடு அன்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணி மாதத் திருவிழா&nbsp; நேற்று 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி உள்ளது.
</p><p>நேற்று (6) மாலை 5.30 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை
ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கொடியேற்றப்பட்டது.</p><p></p><h2>கொடியேற்றத்துடன் ஆரம்பம்</h2><p>

இதன் போது மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் மற்றும்
மறைமாவட்ட குருக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
</p><p>
தொடர்ந்து நவநாள் திருப்பலி இடம் பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/949b0bf7-de97-4cde-b90a-2409ab429857/26-6a752aabc78f9.webp' /></p><p>

இந்த நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான
பக்தர்கள் மடு திருத்தலத்தில் கூடி வருகின்றனர்.
</p><p>
இன்றைய தினம் வியாழக்கிழமை (6) கொடியேற்றத்தை தொடர்ந்து நவநாள் திருப்பலிகள்
தொடர்ந்து இடம்பெற்று நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி மாலை வேஸ்பர்
ஆராதனையும் 15 ஆம் திகதி காலை 6.15 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில்
ஏனைய மறைமாவட்ட ஆயர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப் பலியாக
ஒப்புக் கொடுக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T00:48:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரம்பின் வரிக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி முடிவு ; இறக்குமதியாளர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் மீள்கொடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/supreme-court-makes-sweeping-decision-on-trump-tax-1786052875"></link>
            <id>https://canadamirror.com/article/supreme-court-makes-sweeping-decision-on-trump-tax-1786052875</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த அதீத வரி நடவடிக்கையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, இறக்குமதியாளர்களிடம் இருந்து வசூல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த அதீத வரி நடவடிக்கையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, இறக்குமதியாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பெரும் தொகை மீள வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், வர்த்தக பற்றாக்குறையை காரணம் காட்டி, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து வரும் இறக்குமதிப் பொருட்களுக்கு அதிகளவிலான வரிகளை விதித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6f2faa6-7b3b-4917-b014-d693d30054df/26-6a75010d2eb7a.webp' /></p><p>இந்த வரி நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்காவின் சில மாகாணங்களும், பல்வேறு வர்த்தக நிறுவனங்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.
</p><p>
இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க உச்ச நீதிமன்றம், குறித்த அளவிலான அதீத வரிகளை விதிக்கும் அதிகாரம் அதிபருக்கு இல்லை என தீர்ப்பளித்ததுடன், டிரம்ப் நிர்வாகம் விதித்த வரிகளை ரத்து செய்தது.
</p><p>
மேலும், அந்த வரிகளின் மூலம் இறக்குமதியாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பணத்தை மீள வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
</p><p>
இதனையடுத்து, மொத்தமாக வசூலிக்கப்பட்ட 15.77 லட்சம் கோடி ரூபாய் தொகையில், இதுவரை சுமார் 60 சதவீதமான 9.50 லட்சம் கோடி ரூபாய் இறக்குமதியாளர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தத் தகவலை அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புப் பிரிவு, உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்த ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
மேலும், மீதமுள்ள தொகைகளை திருப்பி வழங்குவதற்கான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், அவையும் விரைவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-07T00:45:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கள்ளத்தொடர்பு சந்தேகம் ; மனைவியின் தொடர்பை அறிந்த கணவன் செய்த கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wife-s-illicit-affair-husband-s-cruelty-1786048409"></link>
            <id>https://jvpnews.com/article/wife-s-illicit-affair-husband-s-cruelty-1786048409</id>
            <summary type="text">இந்தியாவின் ஜெய்ப்பூரில் மனைவியின் கள்ளத்தொடர்பு விவகாரத்தைத் தொடர்ந்து, அவரை பழிவாங்கும் நோக்கில் கொடூரமாக சித்திரவதை செய்து உயிரிழக்கச் செய்ததாகக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் ஜெய்ப்பூரில் மனைவியின் கள்ளத்தொடர்பு விவகாரத்தைத் தொடர்ந்து, அவரை பழிவாங்கும் நோக்கில் கொடூரமாக சித்திரவதை செய்து உயிரிழக்கச் செய்ததாகக் கூறப்படும் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>ஜெய்ப்பூரைச் சேர்ந்த ராஜேந்திர பிரசாத் சர்மா என்ற தொழிலதிபர், தனது மனைவி கவிதா சர்மாவுக்கும், அவர்களது கார் சாரதியான முகேஷ் யாதவுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த நெருக்கமான தொடர்பை மனைவியின் தொலைபேசி உரையாடல்கள் மூலம் அறிந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5d62bea-8dea-4361-b870-02135383bf03/26-6a74ef9bf3c3f.webp' /></p><p>

இந்த விவகாரம் தொடர்பில் மனைவியுடன் நேரடியாக மோதுவதற்குப் பதிலாக, ராஜேந்திர பிரசாத் திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>காவல்துறை தகவல்களின்படி, அவர் மனைவியை நீண்ட நேரம் உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், இதன் காரணமாக கவிதா சர்மா கடுமையான உடல்நலப் பாதிப்புக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் இடம்பெற்ற நாளில் கவிதாவுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் உயிரிழந்ததாகவும், பின்னர் ராஜேந்திர பிரசாத் மருத்துவ உதவியை நாடி, அதை இயற்கையான மரணம் போன்று காட்ட முயன்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
எனினும், காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததையடுத்து, கவிதாவின் தொலைபேசி தகவல்கள் மற்றும் பிற ஆதாரங்கள் பரிசோதிக்கப்பட்டன.</p><p>மேலும், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் கடுமையான காயங்கள் காணப்பட்டதாகவும், இதையடுத்து சம்பவம் தொடர்பான உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9fc2c55-59c2-422e-94ba-9dac31d16d5d/26-6a74ef9b4e213.webp' /></p><p>
</p><p>
விசாரணையின் போது ராஜேந்திர பிரசாத் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதேவேளை, சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் கார் சாரதி முகேஷ் யாதவிடமும் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T00:44:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் ஆட்சியை கவிழ்க்கும் திட்டம் தோல்வி? மொசாட் உயர் அதிகாரிகள் இருவர் நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/israel-punishes-officials-who-failed-in-iran-deal-1786063375"></link>
            <id>https://canadamirror.com/article/israel-punishes-officials-who-failed-in-iran-deal-1786063375</id>
            <summary type="text">ஈரானின் ஆட்சியைக் கவிழ்க்கத் தவறியதால் 2 மூத்த அதிகாரிகளை இஸ்ரேலின் மொசாட் தலைவர் பணிநீக்கம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானிய அரசாங்கத்தைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் ஆட்சியைக் கவிழ்க்கத் தவறியதால் 2 மூத்த அதிகாரிகளை இஸ்ரேலின் மொசாட் தலைவர் பணிநீக்கம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
ஈரானிய அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, உளவு அமைப்பான மொசாட்டின் இரண்டு உயர் அதிகாரிகளை அதன் தலைவர் ரோமன் கோஃப்மேன் பணிநீக்கம் செய்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1afeb27-9909-4b6e-a2a2-6538f9ccf922/26-6a752a1123052.webp' /></p><p>
</p><p>
பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளில் ஒருவர் கடந்த டிசம்பர் மாதம் முதல் மொசாட்டின் உளவுத்துறை இயக்குநரகத்தின் தலைவராகப் பணியாற்றி வந்தார்.</p><p>

மற்றவர் அந்த அமைப்பின் ஈரான் பிரிவின் தலைவராவார்.
</p><p>
ஈரானில் உள்ள சிறுபான்மைக் குழுக்களை கிளர்ச்சியில் ஈடுபட வைப்பதன் மூலமும், அரசாங்கத்தை அகற்றுவதற்குப் பெருந்திரளான போராட்டங்களைத் தூண்டுவதன் மூலமும் ஈரானின் தலைமையைக் கவிழ்ப்பதற்கான எழுத்துப்பூர்வ திட்டத்தை இந்த இரு அதிகாரிகளும் தீட்டியதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-08-07T00:43:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நண்பர்கள் - குடும்பத்தினர் தயவில் வாழும் ராஜித! தொலைக்காட்சியில் குமுறல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/don-t-have-a-single-cent-of-income-now-rajitha-1786061509"></link>
            <id>https://ibctamil.com/article/don-t-have-a-single-cent-of-income-now-rajitha-1786061509</id>
            <summary type="text">


தனக்கு தற்போது நிலையான வருமானம் எதுவும் இல்லை என்றும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவில் வாழ்வதாகவும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன ...</summary>
            <content type="html"><![CDATA[<p>


தனக்கு தற்போது நிலையான வருமானம் எதுவும் இல்லை என்றும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவில் வாழ்வதாகவும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.</p><p>

ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தனது தற்போதைய நிதி நிலைமை குறித்த தனது கருத்துக்களை வெளிப்படுத்திய அவர், தற்போது தான் பயன்படுத்தும் வாகனம் ஒரு நண்பரால் வழங்கப்பட்டது என்றும், தான் வசிக்கும் வீட்டின் வாடகையைக்கூட ஒரு நெருங்கிய நண்பர் செலுத்துவதாகவும் கூறியுள்ளார்.
</p><p>
அரசியலில் நுழைவதற்கு முன்பு நாட்டில் மிகவும் வெற்றிகரமான பல் மருத்துவராக தான் பணியாற்றியதாகவும் அக்காலத்தில் மிஸ் சிறிலங்கா போட்டியாளர்கள் மற்றும் பிரபல நடிகர், நடிகைகள் உட்பட ஏராளமானோர் தன்னிடம் சிகிச்சை பெற்றதாகவும், அதன் மூலம் மிக அதிக வருமானம் ஈட்டியதாகவும் ராஜித குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>இழக்கப்பட்ட வருமானம்</h2><p>

எனினும், தான் அரசியலில் நுழைந்த பிறகு அந்த வருமான ஆதாரங்கள் அனைத்தையும் இழந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69cca4bf-8ec7-4c60-a874-8b3d2eb2f1d5/26-6a7528327f5cb.webp' /></p><p>

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “இப்போது எனக்கு ஒரு பைசா கூட வருமானம் இல்லை.என் மனைவி ஒரு சிறப்பு மருத்துவர், அதனால் அவருக்கு ஓய்வூதியம் கிடைக்கிறது. </p><p>என் பாட்டியிடமிருந்து மரபுரிமையாகப் பெற்ற ஒரு சிறிய தோட்டமும் எனக்கு உள்ளது, அது ஓரளவு வருமானத்தைத் தருகிறது. 

வாழ்வதற்குப் போதுமான பணம் எங்களிடம் இருந்தாலும், அரசியல் செய்வதற்கு அந்தப் பணம் போதாது. என் நண்பர்கள்தான் என் வாகனத்திற்கு எரிபொருள் நிரப்புகிறார்கள், வாடகையையும் செலுத்துகிறார்கள்,” எனக் கூறியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T00:35:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கலந்தியா அகதிகள் முகாமை சூறையாடிய இஸ்ரேல் : 8 நாடுகளின் கூட்டமைப்பு கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/israel-attack-qalandiya-refugee-camp-51-injured-1786061851"></link>
            <id>https://news.lankasri.com/article/israel-attack-qalandiya-refugee-camp-51-injured-1786061851</id>
            <summary type="text">கலந்தியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 51 பேர் வரை காயமடைந்துள்ளனர். இஸ்ரேலிய ராணுவத்தினரின் அத்துமீறல்மேற்குக் கரையில் உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கலந்தியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 51 பேர் வரை காயமடைந்துள்ளனர்.</p><h2> இஸ்ரேலிய ராணுவத்தினரின் அத்துமீறல்</h2><p>மேற்குக் கரையில் உள்ள கலந்தியா(Qalandiya) அகதிகள் முகாம் பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய சோதனையின் போது நடத்திய வன்முறை தாக்குதலில் குறைந்தது 51 பேர் வரை காயமடைந்து இருப்பதாக ஜெருசலேம் ஆளுநரகத்தின் தரவுகளை கொண்டு அல் ஜசீரா தகவல் வெளியிட்டுள்ளது.</p><p> இரண்டாவது நாளாக மேற்குக் கரையில் இஸ்ரேலிய படையினர் இத்தகைய சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f8bbc4b-c074-43dd-b938-a9c1878420b4/26-6a75241c9d5f5.webp' /></p><p> இந்த நடவடிக்கையில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், கிட்டத்தட்ட 70 பேர் வரை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p> அத்துடன் முகாமில் இருந்த 7 குடியிருப்பு வீடுகளை இஸ்ரேலிய படையினர் இடித்து தள்ளியுள்ளனர்.</p><p></p><p> இஸ்ரேலின் இந்த நடவடிக்கை அப்பகுதியில் வசிக்கும் சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து இருப்பதோடு பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><h2>சர்வதேச நாடுகளின் கண்டனம்</h2><p>இதற்கிடையில் மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் உள்ள 8 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இணைந்து கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bdf1417-9f02-4fff-a6aa-01ad1fa3c847/26-6a75241d4e9e8.webp' /></p><p> அதில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், இந்தோனேசியா, பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியா, ஜோர்தான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இணைந்து இஸ்ரேலிய தொடர் இராணுவ நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.</p><p>அதிலும் குறிப்பாக மருத்துவ மையங்கள், பொதுமக்களின் உள்கட்டமைப்புகள், அதிகரிக்கும் பொதுமக்கள் உயிரிழப்பு ஆகியவற்றை குறிப்பாக சுட்டிக்காட்டி கண்டித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-07T00:17:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[காசாவில் போர்நிறுத்தத்திற்கு மத்தியிலும் தொடரும் சோகம்: நாளொன்றில் ஒரு சிறுவர் பலி என யுனிசெஃப் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tragedy-continues-in-gaza-despite-ceasefire-1786061374"></link>
            <id>https://tamilwin.com/article/tragedy-continues-in-gaza-despite-ceasefire-1786061374</id>
            <summary type="text">காசாவில் போர்நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டு 300 நாட்கள் கடந்துள்ள போதிலும்,
அங்கு இதுவரை குறைந்தது 300 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>காசாவில் போர்நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டு 300 நாட்கள் கடந்துள்ள போதிலும்,
அங்கு இதுவரை குறைந்தது 300 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின்
சிறுவர் நிதியமான யுனிசெஃப் (UNICEF) கவலை வெளியிட்டுள்ளது.
</p><p>
இதன்படி, போர்நிறுத்தக் காலத்தில் நாளொன்றிற்கு சராசரியாக ஒரு சிறுவன் வீதம்
உயிரிழப்பதாகத் தெரிவித்துள்ள யுனிசெஃப், நூற்றுக்கணக்கான சிறுவர்கள் கடுமையான
காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><h2>யுனிசெஃப் கவலை</h2><p>
</p><p>
தற்போது காசாவின் மூன்றில் ஒரு பகுதிக்குள்ளேயே மக்கள் முடங்கியுள்ள நிலையில்,
போரினால் அழிக்கப்பட்ட கட்டிடங்கள் மற்றும் இடிபாடுகளுக்கு மத்தியிலேயே
தங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23558a0a-671b-48bd-944c-9fabfcfed4a7/26-6a75234a4a3a2.webp' /></p><p>
</p><p>
அத்துடன் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு, நோய்கள் மற்றும் பாதுகாப்பற்ற
குடிநீர் போன்ற பல்வேறு இன்னல்களுக்குச் சிறுவர்கள் முகங்கொடுத்து வருகின்றனர்.</p><p>

2023 ஒக்டோபர் மாதம் முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த மோதல்களில் இதுவரை
73,300க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 58,000க்கும்
அதிகமான சிறுவர்கள் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையோ இழந்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T00:14:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்ச குடும்பம் மீண்டும் சர்ச்சையில்..! லஞ்ச ஆணைக்குழுவில் புதிய முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rajapaksa-family-20-year-history-of-corruption-1786060711"></link>
            <id>https://tamilwin.com/article/rajapaksa-family-20-year-history-of-corruption-1786060711</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன்களான யோஷித ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் புதிய முறைப்பாடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன்களான யோஷித ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் புதிய முறைப்பாடு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. </p><p>

பெயர் குறிப்பிடப்படாத ஒரு நபரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், சிவில் செயற்பாட்டாளர் காமந்த துஷார இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார்.
</p><p>
சுமார் 125 ஏக்கர் தேயிலைத் தோட்டம் மற்றும் 1911-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு பழமையான பங்களா ஆகியவை சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது. </p><p>

இவை ஒசாட பிளான்டேஷன்ஸ் (Osada Plantations Private Limited) என்ற நிறுவனத்தின் மூலம் வாங்கப்பட்டதாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
</p><p>
இந்தச் சொத்துக்கள் உண்மையில் ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்புடையவையா, இதற்கான பணத்தின் மூலம் என்ன, மற்றும் பொதுப்பணம் அல்லது சட்டவிரோத பணம் இதில் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விரிவான விசாரணை தேவை என்று சிவில் அமைப்பு கோரியுள்ளது.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது NewsInsightTamil நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Qc4y5c-IPu4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T00:04:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் பெண் காவலரை கடித்து காயப்படுத்திய வன்முறையாளர்கள்: இருவர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-arrested-after-woman-police-bitten-in-norfolk-1786060112"></link>
            <id>https://news.lankasri.com/article/2-arrested-after-woman-police-bitten-in-norfolk-1786060112</id>
            <summary type="text">நோர்போக்கில்(Norfolk) தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் வன்முறையில் பொலிஸார் காயமடைந்ததை அடுத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூட்டத்தில் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்போக்கில்(Norfolk) தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் வன்முறையில் பொலிஸார் காயமடைந்ததை அடுத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p> கூட்டத்தில் வன்முறையை கட்டுப்படுத்த சென்ற போது பெண் காவலரை கடுமையாக கடித்து காயப்படுத்தியதுடன், மற்றொரு காவலர் கல்லால் தாக்கி காயமடைய செய்துள்ளனர்.</p><p> வன்முறையாளர்களின் இந்த செயல்களை காவல்துறை அதிகாரிகள் வன்மையாக கண்டித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b97bc47d-dc4b-4540-8e7c-81b3cc607284/26-6a751d51cf033.webp' /></p><p>இதற்கிடையில் புதன்கிழமை மோதல்களுக்கு பிறகு பொது அமைதியை குலைத்தல் மற்றும் ஆபத்தான ஆயுதங்களை வைத்திருத்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் 40 வயது நபர் மற்றும் 60 வயதுடைய நபர் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2> வன்முறையின் பின்னணி</h2><p>தங்குமிடங்களில் அகதிகள் தங்க வைக்கப்படுவதாக பரவிய வதந்தியை தொடர்ந்து தெட்போர்ட்டில் (Thetford) பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் கூட்டம் அத்துமீறி நுழைய முயற்சித்தது.</p><p></p><p> இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, அத்துடன் அங்கு வீடுகளில் இருந்து மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகவும் உள்ளூர் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.</p><p> இந்நிலையில் புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் காவல்துறையினர் தலையீட்டு வன்முறை நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b8e981b-a9ab-46ed-962a-c60577d7251b/26-6a751d5287857.webp' /></p><h2> காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை</h2><p>வன்முறை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை நோர்போக் காவல்துறையினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.</p><p> அதன்படி, வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 7 மணி வரை தீவிர பாதுகாப்பு நடவடிக்கை அமுலில் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.</p><p> மேலும் முகக் கவசத்தை காவல்துறையினர் அகற்ற கோரும் பட்சத்தில் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் அல்லது உடனடியாக பொலிஸாரால் கைது செய்யப்படுவார்கள் என உத்தரவிடப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T23:49:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[தப்பி ஓடிய கோட்டாபயவின் வீட்டில் கிடைத்த ஆடைகள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/clothes-found-at-the-home-of-the-fled-gota-1786058434"></link>
            <id>https://tamilwin.com/article/clothes-found-at-the-home-of-the-fled-gota-1786058434</id>
            <summary type="text">&amp;nbsp;ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் சொத்துக்கள், வெளிநாட்டுத் தொடர்புகள் மற்றும் அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றம் மற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் சொத்துக்கள், வெளிநாட்டுத் தொடர்புகள் மற்றும் அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றம் மற்றும் புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.
</p><p>
 குறிப்பாக, கோட்டாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து பேசப்படுகின்றன.
</p><p>
இவ்வாறானதொரு சூழ்நிலையில் நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் பின்வாசல் வழியாக நாங்கள் செல்லவில்லை என்று ஒரு கருத்தை முன்வைத்தார்.</p><p>

அதனை தொடர்ந்து மக்கள் அரகல நாட்களில் நடந்த பல விடயங்களை காணொளிகள் மூலமாக சமூகவலைத்தளத்தில் பதிவேற்றிவருகின்றனர்.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/KAcoBE9mDUY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T23:32:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் ; வாழ்வில் வெற்றியடையக்கூடிய ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mahalakshmi-raja-yoga-in-gemini-zodiac-signs-1786058500"></link>
            <id>https://jvpnews.com/article/mahalakshmi-raja-yoga-in-gemini-zodiac-signs-1786058500</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களும் தொடர்ந்து தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. ஒரு கிரகம் மற்ற கிரகத்துடன் இணையும் போது அவை சக்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களும் தொடர்ந்து தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. ஒரு கிரகம் மற்ற கிரகத்துடன் இணையும் போது அவை சக்திவாய்ந்த ராஜயோகங்களை உருவாக்குகின்றன. ஆகஸ்ட் மாதத்தில் சக்திவாய்ந்த பல ராஜயோகங்கள் உருவாகிறது. ஜோதிடத்தின்படி, 'மகாலட்சுமி ராஜயோகம்' என்பது மிகவும் மங்களகரமான கிரக அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b797b282-4ec5-4519-9908-94938ed9d546/26-6a751706d738c.webp' /></p><p>இந்த யோகம் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்குப் பொருளாதார ஆதாயம், தொழில் முன்னேற்றம், அங்கீகாரம் மற்றும் வெற்றியைத் தரக்கூடும். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/363cb7bd-b370-4929-8f65-63be5a0a109f/26-6a7517063562b.webp' /></p><h3>மிதுனம்
</h3><p>மிதுன ராசிக்காரர்களுக்கு, அவர்களின் சொந்த ராசியில் 'மகாலட்சுமி ராஜயோகம்' உருவாகிறது. இதனால் அவர்கள் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டம் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள், தொழில் வளர்ச்சி மற்றும் வணிக முன்னேற்றத்தைக் கொண்டுவரும். இந்த யோகத்தால் அவர்களின் பல கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகிறது. நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக வரும். அவர்களின் முயற்சிகள் அவர்களுக்கு பெரிய வெற்றியைக் கொடுக்கும்.

பெற்றோரின் ஆசீர்வாதத்தால் அவர்கள் பல சாதனைகளை அவர்கள் செய்யலாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். திருமணமாகாதவர்கள் இப்போது அவர்களுக்கு பொருத்தமான துணையைக் கண்டறிய முடியும். கடின உழைப்பிற்கான பலன்கள் தேடிவரும். நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட வாகனத்தை வாங்க வாய்ப்பு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் அவர்களின் ஆரோக்கியம் வலுவாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efd53617-d9f0-42e0-8fe1-74108cfd9177/26-6a751707862ad.webp' /></p><h3>கன்னி</h3><p>
கன்னி ராசிக்காரர்கள் இந்த சக்திவாய்ந்த கிரக அமைப்பின் மூலம் வலுவான நிதி நிலை மற்றும் புதிய வருமான வழிகளைப் பெறக்கூடும். இந்த யோகத்தால் அவர்களின் செயல்திறன் மற்றும் நம்பிக்கை இரண்டும் பன்மடங்கு அதிகரிக்கப் போகிறது. வேலையில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் சிறப்பாக செயல்பட பொருத்தமான வாய்ப்புகளைப் பெறுவார்கள், மேலும் மூத்த அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள்.&nbsp;இந்த மகாலட்சுமி யோகம் வணிகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், குறிப்பாக நீங்கள் நிலம், சொத்து அல்லது கட்டிடம் தொடர்பான வேலைகளைச் செய்பவர்கள் பெரிய லாபத்தை எதிர்ப்பார்க்கலாம். பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து பெரிய லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இந்த காலம் பொன்னான வாய்ப்புகளைத் தரும், மேலும் வெற்றிக்கான வலுவான வாய்ப்புகள் இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d912a07c-704c-4f72-88a7-1b5765335e90/26-6a7517083558c.webp' /></p><h3>மகரம்
</h3><p>மகர ராசிக்காரர்களுக்கு, மகாலட்சுமி ராஜயோகம் நிதி ஆதாயங்களையும் ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றத்தையும் கொண்டுவரக்கூடும். இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் அவர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும், மேலும் பல்வேறு காரணங்களுக்காக வெளிநாட்டுப் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகலாம். அவர்களின் காதல் வாழ்க்கை இந்த காலகட்டத்தில் சிறப்பாக இருக்கும், மேலும் சிங்கிளாக இருப்பவர்கள் அவர்கள் தேடிக்கொண்டிருந்த சரியான துணையைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு உள்ளது.

குடும்பத்தில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளை சரியான திட்டமிடல் மற்றும் குடும்பத்தினரின் உதவி மூலம் தீர்த்து வைப்பார்கள். அவர்களின் கடின உழைப்பு மற்றும் முயற்சிகளுக்கு பணியிடத்தில் பாராட்டுகளும், அங்கீகாரமும் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் அவர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் ஆரோக்கியம் உறுதுணையாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f92e41b-eba1-44d5-92b4-1b1dd949eb41/26-6a751708dbb11.webp' /></p>]]></content>
            <updated>2026-08-06T23:22:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொசாட் அமைப்பின் இரண்டு உயர் அதிகாரிகள் பணி நீக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mossad-chief-fires-2-senior-officials-1786056818"></link>
            <id>https://ibctamil.com/article/mossad-chief-fires-2-senior-officials-1786056818</id>
            <summary type="text">
ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கில் வகுக்கப்பட்டத் திட்டம் தோல்வியடைந்ததால், இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் இரண்டு உயர் அதிகாரிகளை அதன் தலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>
ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கில் வகுக்கப்பட்டத் திட்டம் தோல்வியடைந்ததால், இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் இரண்டு உயர் அதிகாரிகளை அதன் தலைவர் ரோமன் கோஃப்மேன் பணிநீக்கம் செய்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளில் ஒருவர் கடந்த டிசம்பர் மாதம் முதல் மொசாட்டின் உளவுத்துறை இயக்குநரகத்தின் தலைவராகவும், மற்றொருவர் அந்த அமைப்பின் ஈரான் பிரிவின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்ததாக தெரியவருகிறது.</p><p></p><h2>எழுத்துப்பூர்வத் திட்டம்</h2><p>
</p><p>
ஈரானில் உள்ள சிறுபான்மைக் குழுக்களைக் கிளர்ச்சி செய்யத் தூண்டி, நாடு தழுவிய அளவில் பெரும் போராட்டங்களை உருவாக்கி தற்போதைய ஈரானிய ஆட்சியை அகற்றுவதற்கான எழுத்துப்பூர்வத் திட்டத்தை இவ்விரு அதிகாரிகளும் உருவாக்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce15cba1-7a4a-4351-838b-44ff6f597b50/26-6a75170ae85b6.webp' /></p><p> </p><p>

அதன்படி, இந்தத் திட்டம் திட்டமிட்டபடி செயல்படுத்தப்படாமல் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மொசாட்டின் கட்டமைப்பு மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இவர்களது பணிநீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T23:21:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் காட்டுத் தீ கோரம் ; 148 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/wildfires-indonesia-148-acres-of-forest-destroyed-1786058090"></link>
            <id>https://canadamirror.com/article/wildfires-indonesia-148-acres-of-forest-destroyed-1786058090</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் ஜாவா தீவில் அமைந்துள்ள புகழ்பெற்ற புரோமோ தெங்கா் செமேரு தேசியப் பூங்காவில் திங்கள்கிழமை முதல் பரவி வரும் காட்டுத் தீயில், சுமாா் 148 ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் ஜாவா தீவில் அமைந்துள்ள புகழ்பெற்ற புரோமோ தெங்கா் செமேரு தேசியப் பூங்காவில் திங்கள்கிழமை முதல் பரவி வரும் காட்டுத் தீயில், சுமாா் 148 ஏக்கா் நிலப்பரப்பு எரிந்து சாம்பலாகியுள்ளது.
</p><p>
கிழக்கு ஜாவா மாகாணத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான இந்த வனப்பகுதியில் காட்டுத் தீயின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, சில சுற்றுலா மண்டலங்கள் மறுஅறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7d4093a-5280-4128-bcb2-10e17a8d1b70/26-6a75156b9b53e.webp' /></p><p>தீயணைப்பு பணியில் வீரா்கள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், செங்குத்தான மலைப்பகுதியும் பலத்த காற்றும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. </p><p>இதேபோன்று, இந்தோனேசியாவின் சுமாத்ரா, போா்னியோ தீவுகளிலும் இம்மாதத் தொடக்கத்திலிருந்து பல்வேறு இடங்களில் காட்டுத் தீ பரவி வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-06T23:14:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/danger-sri-lankan-passport-holders-switzerland-1786037862"></link>
            <id>https://tamilwin.com/article/danger-sri-lankan-passport-holders-switzerland-1786037862</id>
            <summary type="text">சமூகப் பாதுகாப்புத் தொடர்பான &#039;ஆகாபா&#039; (AHV/IV) நிதியை, இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் சுவிட்சர்லாந்தை விட்டு நிரந்தரமாக வெளியேறும்போது பெறுவதில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூகப் பாதுகாப்புத் தொடர்பான 'ஆகாபா' (AHV/IV) நிதியை, இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் சுவிட்சர்லாந்தை விட்டு நிரந்தரமாக வெளியேறும்போது பெறுவதில் தற்போதைய நடைமுறையில் சிக்கல்கள் உள்ளதாக சோசலிச ஜனநாயக கட்சியை சேர்ந்த கலாநிதி சிறி இராசமாணிக்கம் தெரிவித்தார்.</p><p>

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>

மேலும் தெரிவித்த அவர்,
</p><p>
சுவிட்சர்லாந்தில் பணியாற்றும் ஒருவர், சம்பளத்திலிருந்து கட்டாயமாகப் பிடித்தம் செய்யப்படும் தொகையில், ஓய்வுபெற்ற பின் 'ஓய்வூதியப் பணம்' (Pension) மட்டுமே அவர்களுக்குக் கிடைக்கிறது.</p><p>

 ஆனால், சமூகப் பாதுகாப்புத் தொடர்பான 'ஆகாபா' (AHV/IV) நிதியை, இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் நாட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறும்போது பெறுவதில் தற்போதைய நடைமுறையில் சிக்கல்கள் உள்ளன.
</p><p>

சுவிஸ் குடியுரிமை உள்ளவர்களுக்கு இந்தச் சலுகைகள் கிடைக்கும், ஆனால் வெறும் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு, சுவிட்சர்லாந்திற்கும் இலங்கைக்கும் இடையிலான உரிய ஒப்பந்தம் இல்லாததால், அந்தப் பணத்தை இலங்கைக்குக் கொண்டு செல்ல முடியாமல் போகிறது.</p><p>

 இது சுமார் 10,000 முதல் 15,000 பேரைப் பாதிக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது.

இந்தச் சிக்கலைத் தீர்க்கவும், இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தத்தை ஏற்படுத்தவும் சுவிட்சர்லாந்தில் உள்ள சோசலிசக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் சமூக அமைப்புகள் முன்னெடுப்புகளைத் தொடங்கியுள்ளன.</p><p>

 பாதிக்கப்பட்டவர்கள் தங்களை இணைத்துக்கொள்ளுமாறும், விபரங்களைப் பகிர்ந்து உதவுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
</p><p>
 இது ஒட்டுமொத்தப் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் ஒரு கூட்டு முயற்சியாக மாறினால் மட்டுமே அரசாங்கத்திற்கு அழுத்தத்தைக் கொடுத்து உரிமையைப் பெற முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LBHRr5sSAt8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T23:08:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[பவித்ரா லட்சுமியின் பாத்டப் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/pavithra-lakshmi-trendy-new-photoshoot-1786056405"></link>
            <id>https://cineulagam.com/article/pavithra-lakshmi-trendy-new-photoshoot-1786056405</id>
            <summary type="text">நடிகை பவித்ரா லட்சுமி படங்களில் நடித்து பிரபலம் ஆனதை விட விஜய்டிவியின் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று தான் அதிகம் பாப்புலர் ஆனார்.பவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை பவித்ரா லட்சுமி படங்களில் நடித்து பிரபலம் ஆனதை விட விஜய்டிவியின் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று தான் அதிகம் பாப்புலர் ஆனார்.</p><p>பவித்ரா கடந்த வருடம் உடல் எடை மெலிதாகி இருந்ததை நெட்டிசன்கள் விமர்சித்த நிலையில், தனது உடல்நிலை பற்றி அவர் விளக்கம் கொடுத்து இருந்தார். தான் உடல் எடையை அதிகரித்து வருவதாகவும் கூறி இருந்தார்.</p><p>தற்போது பவித்ரா பழைய லுக்கிற்கு மாறி இருக்கும் நிலையில் ரசிகர்களை கவரும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ.&nbsp;</p><p>
</p>]]></content>
            <updated>2026-08-06T22:46:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுடனான போருக்கு விரைவில் முடிவு! ட்ரம்ப் வெளியிட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-says-he-hopes-war-with-iran-will-end-soon-1786053060"></link>
            <id>https://ibctamil.com/article/trump-says-he-hopes-war-with-iran-will-end-soon-1786053060</id>
            <summary type="text">ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சில வகை ஆயுதங்களின் விநியோகத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்தோடு, சில வகை ஆயுதங்களின் விநியோகத்தில் அமெரிக்க ஆயுதப் படைகள் சவால்களைச் சந்தித்து வருவதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.</p><p> 

 ஓவல் அலுவலகத்தில் பேசிய அவர், போர் மிக விரைவில் முடியும் என்றும், ஈரானால் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஆயுதங்களின் விநியோகம்&nbsp;</h2><p>
</p><p>
ஈரானுடனான ஐந்து மாத போரின் போது, அமெரிக்க இராணுவம் தனது அதிதுல்லியமான நீண்ட தூர ஏவுகணைகளின் உலகளாவிய கையிருப்பில் பெரும் பகுதியை முடித்துவிட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a59b9977-e7e0-4cbc-82fd-38dd42ca846c/26-6a750e1d1658a.webp' /></p><p><i>Image Credit: GVA</i></p><p>
</p><p>
இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த ட்ரம்ப், அமெரிக்காவிடம் சில குறிப்பிட்ட சக்திவாய்ந்த ஆயுதங்கள் கிட்டத்தட்ட வரம்பற்ற அளவில் கையிருப்பில் உள்ள போதிலும், மற்ற சில ஆயுதங்களின் விநியோகம் சற்று குறைவாகவே உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.
</p><p>
மேலும் நிலைமையைச் சமாளிக்க, பேட்ரியாட் மற்றும் டோமாஹாக் ஏவுகணைகளுக்கான வசதிகள் உட்பட, கூடுதல் உற்பத்தி ஆலைகளை அமெரிக்கப் பாதுகாப்பு நிறுவனங்கள் கட்டியெழுப்பி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T22:44:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரியங்கா மோகன் சேலையில் அழகிய போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/priyanka-mohan-cute-in-saree-1786056230"></link>
            <id>https://cineulagam.com/article/priyanka-mohan-cute-in-saree-1786056230</id>
            <summary type="text">நடிகை பிரியங்கா மோகன் ஹோம்லி லுக் மட்டுமின்றி மாடர்ன் ஆகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

பிஸியான நடிகையாக இருக்கும் பிரியங்கா மோகன் தற்போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை பிரியங்கா மோகன் ஹோம்லி லுக் மட்டுமின்றி மாடர்ன் ஆகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.</p><p>

பிஸியான நடிகையாக இருக்கும் பிரியங்கா மோகன் தற்போது சேலையில் அழகாக போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
</p><p>
இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படங்களை பாருங்க.</p>]]></content>
            <updated>2026-08-06T22:43:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனனி அசோக்குமார் மாடர்ன் உடையில் ஹாட் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/janani-ashokkumar-modern-short-dress-photoshoot-1786056151"></link>
            <id>https://cineulagam.com/article/janani-ashokkumar-modern-short-dress-photoshoot-1786056151</id>
            <summary type="text">சின்னத்திரை நடிகை ஜனனி அசோக்குமார் தற்போது இணையத்தில் அதிகம் பிரபலம். அதற்கு காரணம் அவர் வெளியிட்டு வரும் கிளாமர் புகைப்படங்கள் தான்.

மேலும் ஹாட் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சின்னத்திரை நடிகை ஜனனி அசோக்குமார் தற்போது இணையத்தில் அதிகம் பிரபலம். அதற்கு காரணம் அவர் வெளியிட்டு வரும் கிளாமர் புகைப்படங்கள் தான்.
</p><p>
மேலும் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு அவர் இன்ஸ்டாவில் subscription மூலமாக மாதம்தோறும் லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாகவும் நெட்டிசன்கள் அவரை விமர்சிக்கின்றனர்.
</p><p>
தற்போது ஜனனி அசோக் ட்ரெண்டி உடையில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.</p>]]></content>
            <updated>2026-08-06T22:42:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[கவின் - நயன்தாரா நடித்த Hi ரிலீஸ் தள்ளிபோகிறதா? காரணம் இதுதான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/is-kavin-nayanthara-hi-movie-release-postpone-1786055928"></link>
            <id>https://cineulagam.com/article/is-kavin-nayanthara-hi-movie-release-postpone-1786055928</id>
            <summary type="text">கவின் மற்றும் நயன்தாரா இருவரும் ஜோடியாக முதல் முறையாக நடித்து இருக்கும் படம் Hi.இந்த படம் ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கவின் மற்றும் நயன்தாரா இருவரும் ஜோடியாக முதல் முறையாக நடித்து இருக்கும் படம் Hi.இந்த படம் ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது சொன்ன தேதியில் படம் வெளியாகுமா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64c42bbc-8eb8-42c5-a8e0-7844a799d440/26-6a750cfa49e37.webp' /></p><p>
</p><h2>தள்ளிபோகிறதா?
</h2><p>
சூர்யாவின் விஸ்வநாத் &amp; சன்ஸ், விஷாலின் மகுடம் போன்ற படங்கள் அதே நேரத்தில் ரிலீஸ் ஆவதால் Hi படம் தள்ளிபோக இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

இருப்பினும் படக்குழு இதுபற்றி அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. அறிவிப்பு வந்தால் தான் ரிலீஸ் தள்ளிப்போவது பற்றிய செய்தி உறுதியாகும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T22:39:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பங்களாதேசத்தில் புதிய ஜனாதிபதி தேர்வு ; தேர்தல் திகதி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bangladesh-elects-president-election-date-announce-1786054439"></link>
            <id>https://canadamirror.com/article/bangladesh-elects-president-election-date-announce-1786054439</id>
            <summary type="text">பங்களாதேசத்தின் புதிய ஜனாதிபதி தெரிவு செய்வதற்கான தேர்தல் வரும் 20ஆம் திகதி நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பங...</summary>
            <content type="html"><![CDATA[<p>பங்களாதேசத்தின் புதிய ஜனாதிபதி தெரிவு செய்வதற்கான தேர்தல் வரும் 20ஆம் திகதி நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>

பங்களாதேச ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த முகமது ஷஹாபுதீன், தனது பதவிக்காலம் நிறைவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் இருந்த நிலையில், கடந்த மாதம் 24ஆம் திகதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0f6903a-1043-479d-8e8c-cad500fa71b5/26-6a7507292721a.webp' /></p><p>முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டிருந்த முகமது ஷஹாபுதீனின் ராஜினாமாவைத் தொடர்ந்து, நாட்டில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>
இதற்கமைய, எதிர்வரும் 20ஆம் திகதி மதியம் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பங்களாதேச நாடாளுமன்ற கூட்ட அரங்கில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.</p><p>

மேலும், ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடவடிக்கைகள் வரும் 13ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

பங்களாதேச அரசியல் சூழலில் முக்கியமான கட்டமாக இந்த ஜனாதிபதி தேர்தல் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-06T22:14:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் முடிவுக்கு வரும் ஈரான் போர்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-says-he-thinks-iran-war-to-end-pretty-soon-1786051631"></link>
            <id>https://tamilwin.com/article/trump-says-he-thinks-iran-war-to-end-pretty-soon-1786051631</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட;ரம்ப், ஈரானில் நடைபெற்று வரும் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.

உலகளாவிய மற்றும் அமெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட;ரம்ப், ஈரானில் நடைபெற்று வரும் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.
</p><p>
உலகளாவிய மற்றும் அமெரிக்காவின் எரிசக்தி விலைகள் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், "இந்தப் போர் இன்னும் நீண்ட காலம் நீடிக்கும் என்று நான் நினைக்கவில்லை. இது விரைவில் முடிவுக்கு வரும்" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>முடிவுக்கு வரும்</h2><p>

இதற்கிடையில், முக்கிய கடல் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக வர்த்தகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்லும் வகையில், ஓமான் நாட்டின் மத்தியஸ்தத்துடன் ஈரான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88602a34-b960-4d22-9276-cd348aef2c2d/26-6a74ff42d84e3.webp' /></p><p> </p><p>இரு தரப்புக்கும் ஏற்ற ஒப்பந்தம் எட்டப்படுவதற்கான சூழல் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.</p><p>

அதேவேளை, போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தையில் தற்போது ஈடுபடவில்லை என்று ஈரான் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T22:10:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம்: ஊதியம் கோரி சுகாதாரப் பணியாளர்கள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ebola-outbreak-escalates-congo-health-workers-1786047460"></link>
            <id>https://tamilwin.com/article/ebola-outbreak-escalates-congo-health-workers-1786047460</id>
            <summary type="text">கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வரும்
நிலையில், தமக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைச் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வரும்
நிலையில், தமக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைச் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை
உடனடியாக வழங்குமாறு வலியுறுத்திப் பெருந்திரளான சுகாதாரப் பணியாளர்கள்
பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
இட்டுரி மாகாணத்தின் புனியா நகரில் அமைந்துள்ள ஆளுநர் பணிமனைக்கு முன்பாக
ஒன்றுதிரண்ட சுகாதாரப் பணியாளர்கள் வியாழக்கிழமை இந்த எதிர்ப்பைப்
பதிவுசெய்துள்ளனர்.</p><p></p><h2>சுகாதாரப் பணியாளர்கள் போராட்டம்</h2><p>
</p><p>
கடந்த மே மாதம் நடுப்பகுதியில் எபோலா தொற்று பரவத் தொடங்கியது முதல் தமக்குரிய
கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
</p><p>
நாட்டில் பதிவாகும் மொத்த எபோலா தொற்றாளர்களில் சுமார் 90 சதவீதமானோர் இட்டுரி
மாகாணத்திலேயே கண்டறியப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61b5857f-f8b0-4ad9-a867-4fb5a9a69317/26-6a74f6bf16d79.webp' /></p><p>
</p><p>
அரசாங்கத்தின் அண்மைய தரவுகளின்படி, இதுவரை 3,973 பேருக்குத் தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளதுடன், 1,801 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 674 நோயாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு
வருகின்றனர்.</p><p>

கிளர்ச்சிக் குழுக்களின் மோதல்கள் மற்றும் தொலைதூர கிராமங்களுக்கான
போக்குவரத்து வசதியின்மை என்பன தொற்றுக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்குப்
பெரும் சவாலாக அமைந்துள்ளன.
</p><p>
சுகாதாரப் பணியாளர்களின் இந்தப் பணிப்புறக்கணிப்பு நோயாளிகளுக்கான சிகிச்சைகள்
மற்றும் தொற்றாளர்களைக் கண்டறியும் நடவடிக்கைகளைப் கடுமையாகப் பாதிக்கும் எனக்
கவலை வெளியி்ட்டுள்ள சர்வதேச நிவாரண அமைப்புகள், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த
உடனடி நடவடிக்கைகள் அவசியமென வலியுறுத்தியுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T21:44:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இருளில் நடந்த ரகசிய சந்திப்பு..! சந்தித்தது மொஜ்தபா கமெனிதானா என ஈரான் ஜனாதிபதிக்கு சந்தேகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-president-met-mojtaba-khamenei-in-darkness-1786046532"></link>
            <id>https://tamilwin.com/article/iran-president-met-mojtaba-khamenei-in-darkness-1786046532</id>
            <summary type="text">ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian), நாட்டின் உச்சத் தலைவர் மொஜ்தபா கமெனி (Mojtaba Khamenei)யை தெஹ்ரானில் ரகசிய இடமொன்றில், முழு இரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian), நாட்டின் உச்சத் தலைவர் மொஜ்தபா கமெனி (Mojtaba Khamenei)யை தெஹ்ரானில் ரகசிய இடமொன்றில், முழு இருளில் நிறுத்தப்பட்டிருந்த கருப்பு கண்ணாடி பொருத்தப்பட்ட காரில் சந்தித்ததாக Iran International வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.</p><p>

அந்த சந்திப்பு சில நிமிடங்கள் மட்டுமே நீடித்ததாகவும், மொஜ்தபா கமெனியின் பாதுகாப்பு அதிகாரிகள் பெசெஷ்கியானுக்கு கை குலுக்கக்கூட அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.</p><p></p><h2>மொஜ்தபா கமெனி</h2><p> 

இருள் காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாத சூழல் இருந்ததால், பின்னர் "நான் பேசியவர் உண்மையில் மொஜ்தபா கமெனிதானா?" என்று ஜனாதிபதி தனது அலுவலகத்தில் கேள்வி எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p>
இந்த சந்திப்புக்காக பெசெஷ்கியான் பலமுறை கோரிக்கை வைத்ததுடன், பதவி விலகுவதாக எச்சரித்த பிறகே காமெனியின் அலுவலகம் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20174468-4839-43f8-b5e5-a87ebfa20c2a/26-6a74e9f81cec9.webp' /></p><p>
</p><p>
 ஆனால் வழக்கம்போல் உச்சத் தலைவரின் இல்லத்தில் அல்லாமல், ரகசிய இடத்தில் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
எனினும், கடந்த மே மாதத்தில் வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்தபோது, மொஜ்தபா கமெனியுடன் இரண்டரை மணி நேரம் "நட்பான சூழலில்" பேச்சுவார்த்தை நடத்தியதாக பெசெஷ்கியான் தெரிவித்திருந்தார்.</p><p></p><h2>இறுதி எச்சரிக்கை</h2><p>

இதற்கிடையில், மொஜ்தபா கமெனியுடன் தொடர்பு கொள்வது தற்போது மிகவும் கடினமாக இருப்பதாகவும், இருப்பினும் அவரது இருப்பு நாட்டுக்கு மிகப்பெரிய பலமாக உள்ளது என்றும் பெசெஷ்கியான் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1970d21-19fc-44be-ae01-0da5c056e3b2/26-6a74e9f8c25c5.webp' /></p><p>
</p><p>
மேலும், தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கை தொடர்பான முடிவுகளில் தனது அரசு புறக்கணிக்கப்படுவதாகக் கூறி, பெசெஷ்கியான் மே மாதத்தில் பதவி விலக முயன்றதாகவும், அதற்கு பதிலாக மொஜ்தபா கமெனி இறுதி எச்சரிக்கை விடுத்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
குறிப்பாக, தனது தந்தை அயத்துல்லா அலி கமெனி உயிரிழந்ததைத் தொடர்ந்து பதவியேற்ற மொஜ்தபா காமெனி கடந்த ஐந்து மாதங்களாக பொதுமக்கள் முன்னிலையில் தோன்றவில்லை என்றும், எழுத்து மூலமான அறிக்கைகள் மட்டுமே வெளியிட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T21:40:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவின் சரடோவ் விமான நிலையத்தில் விமானங்கள் பறக்க தடை: அதிகரிக்கும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-saratov-airport-cancelled-flight-service-1786052217"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-saratov-airport-cancelled-flight-service-1786052217</id>
            <summary type="text">உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் காரணமான ரஷ்யாவின் சரடோவ்(saratov) விமான நிலையம் தற்காலிகமாக முடங்கியுள்ளது. விமானங்கள் பறக்க தடை
உக்ரைனின் தொடர்ச்சியான ட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் காரணமான ரஷ்யாவின் சரடோவ்(saratov) விமான நிலையம் தற்காலிகமாக முடங்கியுள்ளது.</p><h2> விமானங்கள் பறக்க தடை</h2><p>
உக்ரைனின் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக தென்மேற்கு ரஷ்யாவில் அமைந்துள்ள சரடோவ் விமான நிலையத்தில் விமான போக்குவரத்தை ரஷ்ய அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.</p><p>முன்னதாக ரோசவியாட்சியா (Rosaviatsiya) வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், விமானம் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d705fb6-0b83-49a6-8201-ba33f39c5d82/26-6a74fe7ad69b9.webp' /></p><p>கடந்த வாரம் சரடோவ் பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.</p><p>]<br></p><p> அதே நேரத்தில் அருகில் இருந்த மூலோபாய விமான தளம் அமைந்துள்ள எங்கெல்ஸ் நகரமும் உக்ரைனிய ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.</p><p> இந்நிலையில் ரஷ்யாவில் பல்வேறு இடங்களை குறிவைத்து மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்களை உக்ரைன் மீண்டும் நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T21:37:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனில் ரஷ்யா பயங்கர தாக்குதல்! பொதுமக்கள் பலர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/russia-s-attack-on-civilians-in-ukraine-1786050333"></link>
            <id>https://ibctamil.com/article/russia-s-attack-on-civilians-in-ukraine-1786050333</id>
            <summary type="text">உக்ரைனின் கிழக்கு நகரமான பாலக்லியாவில் உள்ள வீடுகள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்போது ஏற்பட்ட தீய...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் கிழக்கு நகரமான பாலக்லியாவில் உள்ள வீடுகள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
அதன்போது ஏற்பட்ட தீயை அணைக்கவும், இடிபாடுகளை அகற்றவும் மீட்புக் குழுவினர் தீவிரமாகப் பணியாற்றி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இதேவேளை, வடக்கு சுமி பிராந்தியத்தில் உள்ள குடியிருப்புகள் மீது ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்ததுள்ளதாகவும், சுமார் 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>ஏனைய தாக்குதல்கள்</h2><p>
</p><p>
அத்தோடு, சுமி நகரிலேயே வான்வழி குண்டுகள் மூலம் நடத்தப்பட்ட மற்றுமொரு தாக்குதலில் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0945e6f4-8e33-441b-b23c-6b9bfb6a0720/26-6a74fa2dccfa3.webp' /></p><p><i>Image Credit:&nbsp;Reuters</i></p><p>

தெற்கு கெர்சன் பிராந்தியத்தில் ஒரு வான் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 6 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
</p><p> 
எவ்வாறாயினும், 2022-ல் தொடங்கிய இந்தப் போரில், பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுமே தொடர்ந்து மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> </b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T21:18:46+00:00</updated>
        </entry>
    </feed>
