<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-02T10:50:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/urgent-grade-5-scholarship-examination-results-1788346131"></link>
            <id>https://jvpnews.com/article/urgent-grade-5-scholarship-examination-results-1788346131</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனக...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>பெறுபேறுகள் வெளியானதும், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான <a href="https://www.doenets.lk/examresults" target="_blank">https://www.doenets.lk/</a> ஊடாக மாணவர்கள் தமது பெறுபேறுகளை பார்வையிட முடியும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97e2e025-c45e-454e-9cb6-82c9a496b988/26-6a97ff14b5b22.webp' /></p><p>2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஆகஸ்ட் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T10:49:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தைக்கு ஒரு வயது கூட ஆகல... பிக் பாஸ் சீசன் 10-ல் ஜாய் கிரிஸில்டா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/netizens-criticize-joy-crizildaas-alleged-bb-entry-1788332972"></link>
            <id>https://manithan.com/article/netizens-criticize-joy-crizildaas-alleged-bb-entry-1788332972</id>
            <summary type="text">bigg boss tamil season10 : ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10-வது சீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>bigg boss tamil season10 : ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி ஆரம்பமாக இருக்கின்றது.&nbsp;</p><p>இதுவரை 9 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், 10-வது சீசனையும் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். இந்த முறை வழக்கமான திரையுலக பிரபலங்களுடன், சாதாரண மக்களும் போட்டியாளர்களாக பங்கேற்க இருப்பதாக கூறப்படுவதால், நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9750a486-4755-488e-998f-91ec42445e45/26-6a97d11792fa6.webp' /></p><p></p><p>

பிக் பாஸ் சீசன் 10-ல் யார் யார் போட்டியாளர்களாக களமிறங்க உள்ளனர் என்பது குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.</p><h2>ஜாய் கிரிஸில்டா</h2><p> அந்த வகையில், ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாக தற்போது தகவல் பரவி வருகிறது.எனினும், இந்த தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/daec9d41-7280-46d1-852c-ff55855524a8/26-6a97d11847645.webp' /></p><p><b>
ஜாய் கிரிஸில்டா – மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரம்</b></p><p>
ஜாய் கிரிஸில்டா, சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதாகவும், தன்னையும் தனது குழந்தையையும் அவர் புறக்கணித்ததாகவும் புகார் தெரிவித்திருந்தார்.</p><p> இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பெரும் கவனம் பெற்றது.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில், ஜாய் கிரிஸில்டாவின் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை என்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c54258b-7845-4e99-bcc9-2a8d0b3c6bee/26-6a97d118ef71c.webp' /></p><p> </p><p>அதன் பின்னர் குழந்தையின் பொறுப்புகளை மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்றுக்கொண்டதாக கூறப்பட்டது.

மேலும், அண்மையில் குழந்தைக்கு மொட்டை அடித்து காது குத்தும் விழாவும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஜாய் கிரிஸில்டாவும் மாதம்பட்டி ரங்கராஜும் இணைந்து கலந்து கொண்டனர். இதனால், இருவருக்கும் இடையிலான விவகாரம் மீண்டும் பேசுபொருளானது.</p><p><b>
பிக் பாஸ் வாய்ப்புக்கு கடும் விமர்சனங்கள்&nbsp;</b></p><p>இந்த நிலையில், ஜாய் கிரிஸில்டா பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க உள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் உண்மையா என்பது இன்னும் உறுதியாகத் தெரியாத நிலையில், சமூக வலைத்தளங்களில் இதுகுறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46c727d0-bbd4-401b-9281-3552e3c1b15a/26-6a97d119a3485.webp' /></p><p></p><p>
சில இணையவாசிகள், குழந்தையின் தந்தை பெயருக்காக போராடிய நிலையில், குழந்தைக்கு இன்னும் ஒரு வயது கூட ஆகாத சூழலில் பிக் பாஸ் போன்ற நீண்டகால ரியாலிட்டி நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க இருப்பதாக கூறப்படுவது குறித்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். </p><p>மேலும், அவர் மேற்கொண்ட போராட்டத்தின் பின்னணியில் விளம்பர நோக்கம் இருந்ததா என்ற கேள்வியையும் சிலர் எழுப்பி வருகின்றனர்.

அதே நேரத்தில், மற்றொரு தரப்பினர் ஜாய் கிரிஸில்டாவின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவரது குழந்தை தொடர்பான முடிவுகளை வைத்து அவரை விமர்சிப்பது சரியல்ல என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p><p>பிக் பாஸ் சீசன் 10-ல் ஜாய் கிரிஸில்டா உண்மையிலேயே போட்டியாளராக பங்கேற்கிறாரா என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://chat.whatsapp.com/KPaiG8NNYogL3W9EipSjKP" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T10:48:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் குறித்து வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/doenets-grade-5-scholarship-results-1788344994"></link>
            <id>https://ibctamil.com/article/doenets-grade-5-scholarship-results-1788344994</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.&amp;nbsp;&amp;nbsp;இது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>இது தொடர்பான அறிவிப்பு இன்று(02.09.2026) வெளியிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>மாணவர்கள் தங்களது பரீட்சைக்கான முடிவுகளை <a href="https://doenets.lk/" target="_blank">doenets.lk</a> என்ற இணையதளத்தின் ஊடாகப் பார்த்துக் கொள்ளலாம்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T10:46:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சாலே தொடர்பில் நீதிமன்றின் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/courts-swift-order-regarding-suresh-saleh-1788345269"></link>
            <id>https://ibctamil.com/article/courts-swift-order-regarding-suresh-saleh-1788345269</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில் தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் முன்னாள் அரச புலனாய்வு சேவை பணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில் தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உடல்நிலை குறித்தும், அவர் தேசிய மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டுமா என்பது குறித்தும் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளருக்கு கோட்டை நீதவான் பாசன் அமரசேன இன்று (02) உத்தரவிட்டார்.
</p><p>
இச்சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி ஒக்ஸ்ஃபோர்ட் பெரேரா விடுத்த கோரிக்கையைப் பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T10:43:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேலை தருவதாக கூறி மோசடி ; ரஷ்யாவில் பரிதவிக்கும் இலங்கையர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankans-stranded-in-russia-under-job-scam-1788345006"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankans-stranded-in-russia-under-job-scam-1788345006</id>
            <summary type="text">ரஷ்யாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, இலட்சக்கணக்கில் பணத்தைப் பெற்று அங்கு ஏமாற்றப்பட்டு ஸ்தம்பித்து நிற்கும் இலங்கையர்கள் தொடர்பில் தகவல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, இலட்சக்கணக்கில் பணத்தைப் பெற்று அங்கு ஏமாற்றப்பட்டு ஸ்தம்பித்து நிற்கும் இலங்கையர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><p>

மட்டக்களப்பு, கம்புறுகமுவ, கண்டி, வத்தேகம, தம்புள்ளை, மாவனல்லை, கெக்கிராவ மற்றும் வெலிகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு ரஷ்யாவில் சிக்கித் தவித்து வருகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56e81009-4ff9-4582-8a5e-abf469cca43a/26-6a97fab017279.webp' /></p><p>சொக்லேட் தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, ஒருவரிடமிருந்து 1.8 மில்லியன் முதல் 2.1 மில்லியன் ரூபா வரை பணம் பெறப்பட்டு அவர்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.</p><p>

எனினும், அங்கு சென்றடைந்த பின்னர் உரிய வேலைகள் வழங்கப்படாமல், பணம் எதுவுமின்றி பண்ணை ஒன்றில் மிகவும் துயரமான சூழ்நிலையில் அவர்கள் காலத்தைக் கழித்து வருகின்றனர்.
</p><p>
தங்களை மீட்டு நாட்டுக்கு அழைத்து வருமாறு அல்லது முறையான விசா மற்றும் வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்குமாறு அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் காவல்துறை தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T10:30:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grade-5-scholarship-exam-results-doenets-lk-1788344756"></link>
            <id>https://tamilwin.com/article/grade-5-scholarship-exam-results-doenets-lk-1788344756</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.&amp;nbsp;&amp;nbsp;இது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>இது தொடர்பான அறிவிப்பு இன்று(02.09.2026) வெளியிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>மாணவர்கள் தங்களது பரீட்சைக்கான முடிவுகளை <a href="https://doenets.lk/" target="_blank"><b>doenets.lk </b></a>என்ற இணையதளத்தின் ஊடாகப் பார்த்துக் கொள்ளலாம்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T10:28:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள ஷம்மி சில்வா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-slc-officials-summoned-by-illegal-assets-unit-1788341989"></link>
            <id>https://ibctamil.com/article/ex-slc-officials-summoned-by-illegal-assets-unit-1788341989</id>
            <summary type="text">இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் முன்னாள் செயலாளர் கிரிஷாந்த கபுவத்த ஆகியோர், சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவில் முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் முன்னாள் செயலாளர் கிரிஷாந்த கபுவத்த ஆகியோர், சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
தற்போது நடைபெற்று வரும் ஒரு விசாரணையின் ஒரு பகுதியாக இவ்வழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. </p><p>

அதிகாரிகளின் கூற்றுப்படி, விசாரணையில் உள்ள விடயங்கள் தொடர்பான 36 அம்சங்களைக் கொண்ட ஒரு கேள்வித்தாளுக்கு பதிலளிக்குமாறு குறித்த இரண்டு முன்னாள் பதவியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p> </p><p></p><h2>நிர்வாக அமைப்பு</h2><p>நாட்டின் விளையாட்டு நிர்வாக அமைப்பிற்குள் கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் ஆளுகை தொடர்பான பிரச்சினைகள் குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இருவரும் தங்கள் பதவிகளிலிருந்து விலகியிருந்தனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a207b86b-0486-4778-85e7-f1f4370871cd/26-6a97f855431d9.webp' /></p><p>இந்நிலையில், அவர்கள் பதவி விலகி சில மாதங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-02T10:27:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[எளிதில் மற்றவர்களிடம் ஏமாறும் டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-zodiacs-are-most-innocent-by-birth-1788342445"></link>
            <id>https://manithan.com/article/which-zodiacs-are-most-innocent-by-birth-1788342445</id>
            <summary type="text">மனிதர்களாகப் பிறக்கும் ஒவ்வொருவரும் நிறம், தோற்றம், உயரம், ஆளுமை, திறமைகள் மட்டுமின்றி, தங்களின் நேர்மறை மற்றும் எதிர்மறை குணங்களிலும் தனித்துவமான வேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மனிதர்களாகப் பிறக்கும் ஒவ்வொருவரும் நிறம், தோற்றம், உயரம், ஆளுமை, திறமைகள் மட்டுமின்றி, தங்களின் நேர்மறை மற்றும் எதிர்மறை குணங்களிலும் தனித்துவமான வேறுபாடுகளைக் கொண்டிருப்பது இயல்பு.
</p><p>
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவர் பிறந்த ராசி அவர்களின் குணநலன்கள், திறமைகள் மற்றும் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22f3902f-ba03-46ec-b633-015aaa6e86b7/26-6a97f96e8b7a6.webp' /></p><p>
</p><p>
அந்த வகையில், யார் என்ன சொன்னாலும் எளிதில் நம்பி, தங்களின் அப்பாவித்தனத்தால் சில நேரங்களில் ஏமாறக்கூடிய&nbsp; அப்பாவி குணம் கொண்ட ராசிகள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>மீனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a25dfa9f-b999-4808-8d8d-fa4dcb4b50b5/26-6a97f96f3e996.webp' /></p><h2>
</h2><p>மீன ராசியில் பிறந்தவர்கள் அதீத கற்பனைத் திறன், கருணை மற்றும் இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

யாராவது தங்களிடம் உதவி என்று கேட்டுவிட்டால், மறுக்க மனமில்லாமல் தயங்காமல் உதவும் நல்ல மனம் இவர்களுக்கு உண்டு.</p><p>

ஆனால், இவர்களின் இந்த இரக்க குணமே பல நேரங்களில் வாழ்க்கையில் அதிக ஏமாற்றங்களை சந்திக்கவும் காரணமாகிவிடுகிறது. </p><p>இவர்களின் நல்ல மனதையும், உதவும் குணத்தையும் சிலர் தங்களின் தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ள நேரிடும். யார் என்ன சொன்னாலும் பின்னணி காரணம் குறித்து சிந்திக்காமல் நம்பும் குணம் இவர்களிடம் இருக்கும்.</p><h2>
தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bb1e2df-5d82-4e35-a9f6-548d0060660a/26-6a97f96fe79e5.webp' /></p><h2>
</h2><p>தனுசு ராசியில் பிறந்தவர்கள் தங்களின் சுதந்திரமான குணத்திற்கும், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மைக்கும் பெயர் பெற்றவர்கள். மனதுக்கு பிடித்தவர்கள் சொல்லும் அனைத்து உண்மையாகவே இருக்கும் என்று உறுதியாக நம்புவார்கள்.</p><p>
எந்த விஷயத்தையும் மனதில் வைத்துக்கொண்டு மறைப்பதைவிட, வெளிப்படையாக பேசுவதையே விரும்புவார்கள். குடும்ப சூழல், பொருளாதார நிலை என தனிப்பட்ட விஷயங்களைக்கூட ரகசியமாக வைத்துக்கொள்ளாமல் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளும் குணம் இவர்களிடம் இருக்கும்.
</p><p>
ஆனால், இவர்களின் இந்த வெளிப்படைத்தன்மையே சில சமயங்களில் இவர்களுக்கு எதிராகத் திரும்பிவிடும். இவர்களின் தனிப்பட்ட விஷயங்களையும் ரகசியங்களையும் தெரிந்துகொள்ளும் சிலர், சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதையே இவர்களுக்கு எதிராக பயன்படுத்தக்கூடும்.</p><h2>

துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48d29d93-b70f-4fe5-bfe1-54cafe2df3a1/26-6a97f9709ea79.webp' /></p><p></p><h2>
</h2><p>உதவி செய்து, அதற்குப் பதிலாக ஏமாற்றத்தை சந்திப்பதில் துலாம் ராசியினரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்றால் அது மிகையாகாது.
</p><p>
தங்களிடம் வசதி இல்லாத நேரத்தில்கூட, மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு இருக்கும்.
</p><p>
ஆனால், இவர்களின் அளவற்ற உதவும் மனப்பான்மையே பல சந்தர்ப்பங்களில் இவர்களை பிரச்சினைகளில் சிக்க வைப்பதுடன், எதிர்பாராத ஏமாற்றங்களையும் சந்திக்கச் செய்கிறது.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u> <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b> &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T10:25:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் : வழங்கப்பட்டன ஐம்பர், தகர கோப்பை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/in-piyankaras-hand-are-two-jumpers-a-tin-plate-1788343237"></link>
            <id>https://ibctamil.com/article/in-piyankaras-hand-are-two-jumpers-a-tin-plate-1788343237</id>
            <summary type="text">2014 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் மே தினப் பேரணிக்கு வந்தவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக இலங்கை கேட்டரிங் நிறுவனத்தின் பணத்தை முத...</summary>
            <content type="html"><![CDATA[<p>2014 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் மே தினப் பேரணிக்கு வந்தவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக இலங்கை கேட்டரிங் நிறுவனத்தின் பணத்தை முதலீடு செய்யுமாறு அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியை வற்புறுத்தியமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கில் இரண்டு குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன வெலிக்கடை சிறைச்சாலையின் விசேட பாதுகாப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>&nbsp;கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹைல், முன்னாள் அமைச்சருக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டுக்கு 7 ஆண்டுகள் வீதம் 14 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்ததுடன், அந்தச் சிறைத்தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என்றும், அத்துடன் இரண்டு இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.</p><h2>வெலிக்கடை சிறைக்கு அழைத்து வரப்பட்ட முன்னாள் அமைச்சர்&nbsp;</h2><p>நேற்று(01) மாலை 5 மணியளவில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரதான வாயிலுக்குள் நுழைந்ததும், கைதிகளுக்கு வழங்கப்படும் இரண்டு ஜம்பர்கள், தகரத் தட்டு, தகரக் கோப்பை மற்றும் கூடை என்பன வழங்கப்பட்டதுடன், அதன் பின்னர் அவர் ஒரு கைதியாகப் பதிவு செய்யப்பட்டு வழங்கப்பட்ட கைதி இலக்கம் சிறைத்தண்டனைக் காலம் முடியும் வரை பயன்படுத்தப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfa74e21-222f-4e2d-ae6e-5e51aedc2780/26-6a97f928e2f3a.webp' /></p><p>&nbsp;சிறைத்தண்டனை விதிக்கப்படும் போது ஏற்படும் கடுமையான மன உளைச்சல் காரணமாக சிறைச்சாலையில் சேர்க்கப்படும் மற்ற கைதிகளைப் போலவே பியங்கர ஜயரத்னவுக்கும் மனநல ஆலோசனை சேவை வழங்கப்பட்டதுடன், நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் சிறைச்சாலையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் மற்றும் கிடைக்கும் சலுகைகள் குறித்து அதிகாரிகள் அவருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.</p><p></p><h2>சாதாரண கைதியை போலவே நடத்தப்படுவார்</h2><p>சாதாரண கைதியைப் போலவே காலை 6 மணிக்கு வார்டிலிருந்து வெளியே அழைத்து வரப்பட்டு மாலை 5 மணிக்கு மீண்டும் வார்டுக்கு அனுப்பப்படும் முன்னாள் அமைச்சருக்கு வீட்டிலிருந்தோ அல்லது வெளித் தரப்பினரிடமிருந்தோ உணவு பெறுவதற்கு அனுமதி இல்லை என்பதுடன், சிறைச்சாலையிலிருந்து வழங்கப்படும் மூன்று வேளை உணவை மட்டுமே பெற முடியும். அத்துடன் மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் குடும்ப சந்திப்புகளின் போது சுகாதாரப் பொருட்களை மட்டுமே பெறுவதற்கு அனுமதி உண்டு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17fb9b7a-6071-4435-b784-c3266e05ddc8/26-6a97f92997d48.webp' /></p><p>&nbsp;இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன இன்று வெலிக்கடை சிறைச்சாலை அத்தியட்சகர் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளதுடன், அங்கு அவரது திறன்கள் மற்றும் ஆற்றல்கள் ஆராயப்பட்ட பின்னர், மேசன், தச்சு, அச்சு, பேக்கரி அல்லது சமையல் போன்ற சிறைச்சாலையில் இயங்கும் பொருத்தமான வேலைப் பிரிவொன்றுக்கு அவர் அனுப்பப்படவுள்ளார்.</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-09-02T10:23:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு - அமைச்சர் தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minister-permanent-solution-water-problem-batti-1788342558"></link>
            <id>https://tamilwin.com/article/minister-permanent-solution-water-problem-batti-1788342558</id>
            <summary type="text">தற்போது எல் நினோ தாக்கத்தால் ஏற்பட்ட வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர்
பற்றாக்குறை மற்றும் மாவட்டத்தின் மக்களின் குடிநீரை நிரந்தரமாக பூர்த்தி
செய்வதற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது எல் நினோ தாக்கத்தால் ஏற்பட்ட வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர்
பற்றாக்குறை மற்றும் மாவட்டத்தின் மக்களின் குடிநீரை நிரந்தரமாக பூர்த்தி
செய்வதற்கான முழு நடவடிக்கையும் வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல்
அமைச்சர் சுசில் ரணசிங்க எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு
தெரிவித்துள்ளார்.
</p><p>
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்
தலைவருமான கந்தசாமி பிரபு அழைப்பின் பேரில், வீடமைப்பு, நிர்மாணம் மற்றும்
நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க உடனான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு
பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று(01)
இடம்பெற்றது. </p><p>இதன்போது குடிநீர் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு
ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>நீர் தேவைகளை பூர்த்தி செய்ய</h2><p>
தற்போது ஏற்பட்டுள்ள எல் நினோ தாக்கத்தினால் வறட்சி நிலையால் ஏற்பட்டுள்ள
குடிநீர் பற்றாக்குறை தொடர்பாக விசாரிப்பதற்கு நீர் தேவைகளை பூர்த்தி
செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்காகன கலந்துரையாடல் இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47408e9a-872f-4c08-b9ae-1d73dc1121c3/26-6a97f6f4cb8a6.webp' /></p><p>இந்த எல் நினோ தாக்கத்தினால் மொனராகலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இரு
மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர்
வழங்கும் பிரதானமாக உன்னிச்சைக் குளத்தில் இருந்து வருகின்ற நீர் படிப்படியாக
குறைந்து வருகிறது.</p><h2>வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினை</h2><p>
</p><p>
இந்த நிலையில் மழைவீழ்ச்சி இரண்டு மாதங்களுக்குள் கிடைக்கும் என வானிலை அவதான
நிலையத்தின் ஊடாக பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த குடிநீர் பற்றாக்குறையை
எதிர் காலத்தில் தடுத்துக் கொள்வதற்காகவும் மக்களின் குடிநீர் பிரச்சனையை
பூர்த்தி செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f63b21a-bb36-4661-bf0a-c82e0e55a4d2/26-6a97f6f58ff33.webp' /></p><p>அதேவேளை எதிர் காலத்தில் மட்டு மாவட்டத்தில் குடிநீர் தொடர்பான பிரச்சினைகள்
இடம்பெறாமல் இருப்பதற்கு ஏனைய குளங்களை புனரமைப்பது தொடர்பாகவும் வளங்களை
தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதற்கு தேவையான வாகன வசதிகள், இயந்திர வசதிகள் உட்பட அனைத்தையும் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு
அமைச்சர் பணித்துள்ளார்.</p><p>இந்த கலந்துரையாடல் மூலம் மாவட்டத்தில் உள்ள குடிநீர் பிரச்சினைக்கான
நிரந்தர தீர்வையும் தற்போது வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு வழங்கியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T10:23:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[19 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வநாத் &amp; சன்ஸ்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vishwanath-and-son-19-days-box-office-collection-1788343196"></link>
            <id>https://cineulagam.com/article/vishwanath-and-son-19-days-box-office-collection-1788343196</id>
            <summary type="text">விஸ்வநாத் &amp;amp; சன்ஸ் திரைப்படம் 19 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஸ்வநாத் &amp;amp; சன்ஸ்

நடிகர் சூர்யாவை இப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் 19 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><p>
</p><h2>
விஸ்வநாத் &amp; சன்ஸ்
</h2><p>
நடிகர் சூர்யாவை இப்படியொரு கதாபாத்திரத்தில் பார்த்த பல ஆண்டுகளுக்கு ஆகிவிட்டதே என ஏக்கத்துடன் காத்திருந்த ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்த திரைப்படம்தான் விஸ்வநாத் &amp; சன்ஸ்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a834a1f8-bc01-41da-bd86-691acc2c9429/26-6a97f39f4cfae.webp' /></p><p>காதல் கதைக்களத்தில் உருவான இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து <a href="https://www.youtube.com/watch?v=BZ6nD0I5Avo" target="_blank">மமிதா பைஜூ</a>, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி வெளிவந்த இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. இருப்பினும் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de00c88d-3f2f-44eb-b6f2-256de12fdca4/26-6a97f3a006e86.webp' /></p><h2>பாக்ஸ் ஆபிஸ்
</h2><p>
விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படத்தின் வசூல் குறித்து நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில், 19 நாட்களில் உலகளவில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 19 நாட்களில் ரூ. 212 கோடி வசூல் செய்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் ரூ. 61 கோடி வசூலித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c251acb-718d-46c4-b85c-f9653c673bc9/26-6a97f3a138f59.webp' /></p><p>
</p>]]></content>
            <updated>2026-09-02T10:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சையை ஏற்படுத்திய பிரதேச சபை உறுப்பினரின் பதவி விலகல்.. வெளியான பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pradeshiya-saba-member-ganesharuban-resigned-1788343626"></link>
            <id>https://tamilwin.com/article/pradeshiya-saba-member-ganesharuban-resigned-1788343626</id>
            <summary type="text">அண்மையில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன்&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன்&nbsp;கைது செய்யப்பட்டிருந்தார்.&nbsp;</p><p>யாழ்ப்பாணத்தில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.&nbsp; &nbsp;</p><p>கைதினை தொடர்ந்து, தனது உள்ளூராட்சி சபை உறுப்பினர் பதவியில் இருந்து அவர் விலகினார்.&nbsp;</p><p>நெல்லியடி பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டின் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்திய சம்பவம், வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கெமராக்களில் பதிவாகியிருந்தது.&nbsp;</p><p>


இந்த தாக்குதல் கடந்த 29ஆம் திகதி இடம்பெற்றதாகவும் உறுப்பினர் தலைமையிலான கும்பல் ஒன்றே இவ்வாறு தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.&nbsp;</p><p>இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில்&nbsp;பிரதேச சபை உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன் பின்வரும் காணொளியில் விளக்கமளித்துள்ளார்.&nbsp;</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F27977807035179367%2F&show_text=false&width=267&t=0" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T10:16:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிக் விமான மோசடி விசாரணை! தயாராகிறது குற்றப்புலனாய்வு திணைக்களம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cid-action-on-mig-aircraft-scam-1788343706"></link>
            <id>https://ibctamil.com/article/cid-action-on-mig-aircraft-scam-1788343706</id>
            <summary type="text">இலங்கை விமானப்படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற மோசடி குறித்த வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை விமானப்படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற மோசடி குறித்த வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று(02.09.2026) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், இந்தசம்பவம் தொடர்பில், ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
முறைப்பாட்டாளர் தரப்பில் முன்னிலையான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் பிரிவு அதிகாரிகள், இந்தச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்குரிய ஆவணத் தொகுப்புகள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.</p><p>இந்நிலையில் இந்த வழக்கை&nbsp;எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டார்.</p><p><br></p><p>2006ஆம் ஆண்டு இலங்கை விமானப்படைக்காக உக்ரைனில் இருந்து நான்கு MiG-27 விமானங்களை கொள்வனவு செய்வதற்கும், ஏற்கனவே இருந்த சில விமானங்களை பழுதுபார்ப்பதற்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.</p><p>அப்போது கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தார். இந்தக் கொள்வனவு தொடர்பில் பின்னர் முறைகேடுகள் மற்றும் அரச நிதி மோசடி குற்றச்சாட்டுகள் எழுந்தன. </p><p>குறிப்பாக, இந்த ஒப்பந்தம் அரசாங்கத்துக்கு அரசாங்கம் (Government-to-Government) என்ற அடிப்படையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், பணம் உக்ரைன் அரச நிறுவனத்துக்கு நேரடியாக செலுத்தப்படாமல் Bellimissa Holdings Limited என்ற மூன்றாம் தரப்பு நிறுவனத்தின் கணக்கிற்கு செலுத்தப்பட்டதாக விசாரணைகளில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.</p><p>அப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்சவை, உக்ரைன் நிறுவனத்துடன் தொடர்புடைய உதயங்க வீரதுங்க உள்ளிட்ட தரப்பினர் சந்தித்ததாக விசாரணை ஆவணங்களை மேற்கோள் காட்டிய செய்திகள் தெரிவிக்கின்றன.</p><p> விமானப்படைத் தளபதி முன்னதாக வழக்கமான டெண்டர் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் எனக் கோரியிருந்த நிலையில், 2006 பெப்ரவரி 6ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர் உக்ரைன் தரப்பின் முன்மொழிவு முன்னெடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>எனினும், கோட்டாபய ராஜபக்ச மிக் விமான கொள்வனவில் ஊழல் செய்தார் என்பது நீதிமன்றத்தால் நிரூபிக்கப்படவில்லை.</p><p>எனினும் அவர் முன்னர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், விமான கொள்வனவில் முறைகேடு இடம்பெறவில்லை எனவும் தெரிவித்திருந்தார். </p><p>உதயங்க வீரதுங்க தொடர்பான தற்போதைய நிலை
இந்த விவகாரத்தில் முக்கிய சந்தேகநபராகக் குறிப்பிடப்படும் முன்னாள் ரஷ்யத் தூதுவர் உதயங்க வீரதுங்க தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் தொடர்கிறது.</p>]]></content>
            <updated>2026-09-02T10:15:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுக்கடலில் மோதிக் கொண்ட கப்பல்கள்: காணாமல் போன 10 மாலுமிகளை தேடும் பணி தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ship-collision-near-istanbul-10-members-missing-1788343714"></link>
            <id>https://news.lankasri.com/article/ship-collision-near-istanbul-10-members-missing-1788343714</id>
            <summary type="text">Ship Collision Near Istanbul 10 Members missing: இஸ்தான்புல் அருகே ஏற்பட்ட கப்பல் விபத்தில் 10 மாலுமிகள் வரை காணாமல் போயுள்ளனர். இஸ்தான்புல்லில் கப்பல...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ship Collision Near Istanbul 10 Members missing: இஸ்தான்புல் அருகே ஏற்பட்ட கப்பல் விபத்தில் 10 மாலுமிகள் வரை காணாமல் போயுள்ளனர்.</p><h2> இஸ்தான்புல்லில் கப்பல் விபத்து</h2><p>இஸ்தான்புல் நகரின் அருகே உள்ள மர்மரா கடலில் ரசாயன டேங்கர் கப்பலும், சரக்கு கப்பலும் மோதி விபத்துக்குள்ளாகின.</p><p> சிலிவ்ரி கடற்கரைக்கு அருகில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணிக்கு நடந்த இந்த விபத்தை துருக்கி நாட்டு Tugberk Imamoglu என்ற சரக்கு கப்பலும், Alsu என்ற ரசாயன டேங்கர் கப்பலும் மோதிக் கொண்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30a8290f-fe79-410e-8344-6e168ff848a0/26-6a97f5a370a45.webp' /></p><p></p><p>இந்த சம்பவத்தில் சரக்கு கப்பலில் இருந்தவர்களுடன் எந்தவொரு தொடர்பும் ஏற்படுத்த முடியவில்லை, அவர்களின் செல்போன்களும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் அடிப்படையில் சரக்கு கப்பலானது கடலில் மூழ்கி இருக்கலாம் என்று போக்குவரத்து அமைச்சகத்தின் கடல்சார் இயக்குநரகம் தங்களுடைய X தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.</p><h2> 10 பேரை காணவில்லை</h2><p>
இந்நிலையில் மூழ்கியதாக சந்தேகிக்கப்படும் கப்பலில் இருந்த 10 மாலுமிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a585a22f-cc83-4437-a7cc-3bb5fed7343b/26-6a97f5a4237a2.webp' /></p><p> சம்பந்தப்பட்ட பகுதியில் கிட்டத்தட்ட 14 மீட்புக் கப்பல்களும், ஒரு ஹெலிகாப்டரும் களமிறக்கப்பட்டுள்ளன.</p><p>இதற்கிடையில் மூழ்கிய கப்பலில் இருந்து உயிர் காக்கும் படகுகள் மற்றும் பாதுகாக்கும் உபகரணங்களை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T10:08:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் உணவு நஞ்சாகியதால் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indonesian-officials-suspect-food-poisoning-1788341174"></link>
            <id>https://ibctamil.com/article/indonesian-officials-suspect-food-poisoning-1788341174</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில், அரசாங்கத்தின் இலவச உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவை உண்ட 500-க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் உணவு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில், அரசாங்கத்தின் இலவச உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவை உண்ட 500-க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>இந்த சம்பவம்&nbsp;கிழக்கு ஜாவாவின் சிடோஆர்ஜோ பகுதியில் அமைந்துள்ள இஸ்லாமிய குடியிருப்புப் பாடசாலையில் நேற்று (01.09.2026) இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>இது குறித்த விசாரணையில் தெரியவருகையில், மதிய உணவு சாப்பிட்ட பின்னரே குறித்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக இந்தோனேசிய தேசிய ஊட்டச்சத்து முகவர் நிலைய அதிகாரி கெதுத் சுமேதான தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>&nbsp;500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு&nbsp;</h2><p>
</p><p>மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்களில் சுமார் 80 குழந்தைகள் பல்வேறு வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1e43d17-8147-41aa-a964-eba8ad2b1eeb/26-6a97f0244c542.webp' /></p><p>உணவு விநியோகம் செய்த சந்தேகத்திற்குரிய சமையலறை 30 நாட்களுக்குத் தற்காலிகமாக மூடப்பட்டு, அதிகாரிகளால் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p>
இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியான்டோ நாட்டிலுள்ள கோடிக்கணக்கான சிறுவர்களின் ஊட்டச்சத்து முறைகேட்டை ஒழிப்பதற்காகப் பல பில்லியன் டொலர் செலவில் இந்த இலவச உணவுத் திட்டத்தைத் தொடக்கி வைத்தார்.</p><p>
'Network for Education Watch' அமைப்பின் தரவுகளின்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி நிலவரப்படி இத்திட்டம் தொடர்பான 37,600 உணவு ஒவ்வாமை தொடர்பான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. </p><p>இந்த நிலையில் முறையற்ற உணவு சேமிப்பு மற்றும் தாமதமான விநியோகமே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T10:02:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேவின் உடல்நிலை ; அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/saleh-health-condition-court-orders-submiss-report-1788343338"></link>
            <id>https://jvpnews.com/article/saleh-health-condition-court-orders-submiss-report-1788343338</id>
            <summary type="text">முன்னாள் அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் உடல்நிலை தொடர்பில் விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கொழும்பு தே...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் உடல்நிலை தொடர்பில் விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>அவரது தற்போதைய உடல்நிலை மற்றும் மேலதிக சிகிச்சை தேவையா என்பது தொடர்பான மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aae005d5-f5e9-4de9-94c6-62e130fa0b2c/26-6a97f42c151f2.webp' /></p><p>

இந்தநிலையில், குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T10:02:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேயின் தற்போதைய உடல்நிலை! கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/report-saleh-s-health-order-colombo-hospital-1788341817"></link>
            <id>https://tamilwin.com/article/report-saleh-s-health-order-colombo-hospital-1788341817</id>
            <summary type="text">
அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவின்&amp;nbsp; தற்போதைய உடல்நிலை தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>
</p><p>அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவின்&nbsp; தற்போதைய உடல்நிலை தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான், கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p>


சுரேஷ் சலேக்கு மேலும் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறதா என்பது தொடர்பான தகவல்களையும் அறிக்கையில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><h2>ஈஸ்டர் தாக்குதல்கள்&nbsp;</h2><p>அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே , ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் பெப்ரவரி 25 அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02d33567-ed39-46a1-9072-83bdd20cdd93/26-6a97f3075540f.webp' /></p><p>இதனைத்தொடர்ந்து, தடுப்புக்காவல் உத்தரவுகளின் பேரில் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தாம் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்குள் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.
</p><p>
இந்நிலையில், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது சிகிச்சைப்பெற்று வருகின்றார்.&nbsp;&nbsp;</p><p>இந்நிலையில், சுரேஷ் சலேவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால், அவருக்கு எதிரான தடுப்புக்காவல் உத்தரவை மேலும் நீட்டிக்க வேண்டாம் என அவரது மனைவி , தாயார் ஜனாதிபதியிடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T09:57:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சேரன்-சந்தா திருமணத்திற்கு இடையில் செம கொண்டாட்டத்தில் அய்யனார் துணை சீரியல் நடிகை... ஏன் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ayyanar-thunai-serial-special-episode-post-1788342149"></link>
            <id>https://cineulagam.com/article/ayyanar-thunai-serial-special-episode-post-1788342149</id>
            <summary type="text">அய்யனார் துணைஒருவருக்கு ஒரு முறை திருமணம் தடைபடலாம், அடுத்தடுத்து தடைப்பட்டால் அவருக்கு கல்யாணம் நடக்குமா என்ற சந்தேகம் அவருடன் இருப்பவர்களுக்கே வந்து...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அய்யனார் துணை</h2><p>ஒருவருக்கு ஒரு முறை திருமணம் தடைபடலாம், அடுத்தடுத்து தடைப்பட்டால் அவருக்கு கல்யாணம் நடக்குமா என்ற சந்தேகம் அவருடன் இருப்பவர்களுக்கே வந்துவிடும். </p><p>அப்படி தாலி கட்டுவதை சென்றெல்லாம் சேரன் திருமணம் நின்றுள்ளது. எப்படியோ சேரன் காதலித்த சந்தாவை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். கோலாகலமாக பீகாரில் நிச்சயதார்த்தம் முடிந்தது, அடுத்து திருமணம் சென்னையில் நடக்க உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d72276da-c7dc-49ae-bf7d-8b0c4f7f3c6d/26-6a97f270bf0e3.webp' /></p><p> </p><p>ஆனால் திருமணத்திற்கு கிளம்பிய சந்தா குடும்பத்தினரை அவரது மாமா வீட்டிலேயே அடைத்து வைக்கிறார். அங்கிருந்து தப்பித்து எப்படி சந்தா திருமணம் செய்யும் இடத்திற்கு வரப்போகிறார் என தெரியவில்லை.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8dae047-2d7e-4535-a03d-86c76f3fe4d2/26-6a97f26fef428.webp' /></p><h2>ஸ்பெஷல்</h2><p>
சந்தா வருவாரா இல்லையா என்ற பெரிய குழப்பத்துடன் தொடரின் கதைக்களம் இப்போது நகர ஒரு சூப்பர் தகவல் வந்துள்ளது.
அதாவது சீரியலில் நிலாவாக நடிக்கும் நடிகை மதுமிதா ஒரு ஸ்பெஷல் பதிவு போட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e087764-6edb-467b-ab07-5262d4d78e4e/26-6a97f26f23ccd.webp' /></p><p> </p><p>அய்யனார் துணை சீரியல் ஒளிபரப்பாகி 500 எபிசோடுகள் எட்டிவிட்டதாம். இதனை நினைவுகூறும் வகையில் அவர் சீரியல் படப்பிடிப்பில் எடுத்த ஸ்பெஷல் புகைப்படங்களுடன் ஒரு பெரிய பதிவு போட்டுள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DcxiRuGiY9H/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DcxiRuGiY9H/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DcxiRuGiY9H/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Madhumitha H (@madhumitha.h_official)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-02T09:55:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய வான்வெளி மூடல்: அனைவருக்கும் எச்சரிக்கை விடுக்கிறோம் - ஜெலென்ஸ்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/zelensky-said-russian-airspace-closed-by-drones-1788342271"></link>
            <id>https://news.lankasri.com/article/zelensky-said-russian-airspace-closed-by-drones-1788342271</id>
            <summary type="text">Volodymyr Zelensky claims russian airspace closed: ரஷ்யா தொடங்கிய போரே, அதன் வான்வெளியை மூடும் நிலையை உருவாக்கியுள்ளது என்று வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூற...</summary>
            <content type="html"><![CDATA[<p>Volodymyr Zelensky claims russian airspace closed: ரஷ்யா தொடங்கிய போரே, அதன் வான்வெளியை மூடும் நிலையை உருவாக்கியுள்ளது என்று வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.</p><p> 

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய வான்வெளியை உக்ரேனிய ட்ரோன்கள் மூடிவிட்டதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><h2>வோலோடிமிர் ஜெலென்ஸ்கி</h2><p>

தங்களது ட்ரோன் விமானங்கள் ரஷ்ய வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு அபாயகரமானதாக மாற்றியுள்ளது என்று உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) கூறியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06c8db29-9d87-4fa6-8cdc-4d4e148b176f/26-6a97f2fbe48ee.webp' />&nbsp;</p><p></p><p>


அவர் தனது இரவு நேர காணொளி உரையில், "இன்று, ரஷ்ய வான்வெளியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு விமான நிறுவனத்திற்கும், ஒவ்வொரு காப்பீட்டு நிறுவனத்திற்கும், முக்கிய ரஷ்ய விமான நிலையங்களை இன்னும் பயன்படுத்தும் அனைவருக்கும் நாங்கள் எச்சரிக்கை விடுக்க விரும்புகிறோம்; ரஷ்ய வானம் முற்றிலும் அபாயகரமானதாக மாறி வருகிறது" என்றார். </p><p> 

 மேலும் அவர், "உக்ரைன் பொது விமானப் போக்குவரத்திற்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், ரஷ்யாவின் வான்வெளியில் ட்ரோன் விமானங்கள் இருக்கும்; மேலும் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும்" என்றும் கூறினார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbca6a82-46c9-4abf-a98a-ebf40fc28729/26-6a97f2fca4068.webp' />&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T09:54:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[எம். கே. சிவாஜிலிங்கம் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mk-sivajilingam-admitted-in-icu-colombo-hospital-1788342453"></link>
            <id>https://tamilwin.com/article/mk-sivajilingam-admitted-in-icu-colombo-hospital-1788342453</id>
            <summary type="text">வல்வெட்டித்துறை நகரசபையின் நகரபிதா எம். கே. சிவாஜிலிங்கம் உடல்நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வல்வெட்டித்துறை நகரசபையின் நகரபிதா எம். கே. சிவாஜிலிங்கம் உடல்நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

கொழும்பில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அவர் நீண்டகாலமாக உடல்நல குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T09:49:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிர சிகிச்சைப் பிரிவில் சிவாஜிலிங்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sivajilingam-in-the-icu-1788342497"></link>
            <id>https://ibctamil.com/article/sivajilingam-in-the-icu-1788342497</id>
            <summary type="text">வல்வெட்டித்துறை நகரசபையின் நகரபிதா எம். கே. சிவாஜிலிங்கம் உடல்நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வல்வெட்டித்துறை நகரசபையின் நகரபிதா எம். கே. சிவாஜிலிங்கம் உடல்நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

கொழும்பில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>அவர் நீண்டகாலமாக உடல்நல குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-02T09:48:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்ச - ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகும் நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-will-appear-in-bribery-commision-friday-1788340632"></link>
            <id>https://tamilwin.com/article/namal-will-appear-in-bribery-commision-friday-1788340632</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) எதிர்வரும் வெள்ளிக்கிழமை (4) முன்னிலையாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) எதிர்வரும் வெள்ளிக்கிழமை (4) முன்னிலையாக உள்ளார் என அவரது சட்டத்தரணி முதிதா ஆர். லோகுமுதலி தெரிவித்துள்ளார்.
</p><p>
குறிப்பிட்ட திகதியில் காலை 9.00 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு இலஞ்ச -&nbsp;ஊழல் விசாரணை ஆணைக்குழு நாமலுக்கு எழுத்துப்பூர்வமாக முறைப்படி அறிவித்துள்ளது என்று சட்டத்தரணி கூறியுள்ளார்.</p><h2>நாமலின் கோரிக்கை..&nbsp;</h2><p> </p><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, வெள்ளிக்கிழமை (4) இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என்று கடந்த திங்கட்கிழமை முதலில் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ba55a75-bbb9-4878-aa96-2a23f658e670/26-6a97ef7daa16b.webp' /></p><p>

அந்த அறிவிப்புக்கு பதிலளித்த ராஜபக்ச, அறிவிப்பு விடுக்கப்பட்ட மறுநாள் தன்னால் முன்னிலையாக முடியும் என்று ஆணைக்குழுவிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
</p><p>இந்நிலையில், இலஞ்ச ஆணைக்குழு அந்தக் கோரிக்கையை நிராகரித்ததோடு, அதனைத் தொடர்ந்து வட்ஸ்அப் வழியாக அனுப்பப்பட்ட எழுத்துப்பூர்வத் தகவல் மூலம், அவர் முதலில் திட்டமிடப்பட்ட திகதியில் ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என்று அவருக்குத் தெரிவித்துள்ளது.
</p><p>
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்காகப் பெரிய ரக விமானக் குழுமத்தைக் கையகப்படுத்தியது தொடர்பான இலஞ்சக் குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்காக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T09:45:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு; 24 மணி நேர தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/24-hour-water-cut-in-colombo-1788342480"></link>
            <id>https://jvpnews.com/article/24-hour-water-cut-in-colombo-1788342480</id>
            <summary type="text">&amp;nbsp; அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக, கொழும்பின் பல பகுதிகளில் வியாழக்கிழமை (03) முதல் 24 மண...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக, கொழும்பின் பல பகுதிகளில் வியாழக்கிழமை (03) முதல் 24 மணி நேர நீர் விநியோகத் தடை அமல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
</p><p>
நாளை வியாழக்கிழமை (03) இரவு 8:00 மணி முதல் வெள்ளிக்கிழமை (04) இரவு 8:00 மணி வரை இந்த நீர் விநியோகத் தடை நடைமுறையில் இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3a7ddd6-4f63-48ea-be00-f811f439b8e6/26-6a97f0d66f834.webp' /></p><h2>24 மணி நேர நீர் விநியோகத் தடை&nbsp;</h2><p>

நுஹேகொட, கொஹுவல, தெஹிவளை, கல்கிஸ்சை, இரத்மலானை, மொரட்டுவை, ராவதாவத்தை, சொய்சாபுரம், அங்குலானை, இந்திபெத்த, கடுபெத்த, கல்தேமுல்ல, முகத்துவாரம், கொரளவெல்ல, எகொட உயன மற்றும் கட்டுக்குருந்த ஆகிய பகுதிகளுக்கு இந்த நீர்விநியோகம் தடைப்படும். 

மேலும் சேத்சிறிபாய, ஹிம்புடான,</p><p></p><p> உடுமுல்ல வீதி, மாளிகாகொடெல்ல, வங்கி சந்தை வீதி, டபிள்யூ. ஏ. சில்வா மாவத்தை, ஹவ்லொக் வீதி, கல்யாணி வீதி, கொழும்பு 06, வைத்தியசாலை வீதி, ஜயந்தி மாவத்தை மற்றும் சாந்தி மாவத்தை ஆகிய வீதிகளும் பாதிக்கப்படும்.</p><p>


நீர் விநியோகத்தின் தரத்தை மேம்படுத்துவதற்காகவே இந்தப் பராமரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ள நீர்வழங்கல் சபை, இதனால் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதோடு, குறித்த காலத்தில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T09:45:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பஞ்சாங்கத்தில் நேபாள பேரிடன் முன்பே கணித்தது!! நடிகை நளினி சொன்ன உண்மை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/nalini-panchangam-nepal-flood-prediction-1788342948"></link>
            <id>https://viduppu.com/article/nalini-panchangam-nepal-flood-prediction-1788342948</id>
            <summary type="text">நளினிதமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை நளினி. தற்போது ஆன்மீகத்தில் ஈடுபட்டு வரும் அவர், காஞ்சிபுரத்தில் புதிதாக தொடங்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நளினி</h2><p>தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை நளினி. தற்போது ஆன்மீகத்தில் ஈடுபட்டு வரும் அவர், காஞ்சிபுரத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஸ்ரிஷ்டி தெய்வீக எம்போரியம் என்ற ஆன்மீகப் பொருட்களுக்கான விற்பனை நிலையத்தை தொடங்கி வைத்தார்.</p><p> விற்பனையை தொடங்கி வைத்து ஆன்மீகப் பொருட்கள், சுவாமி சிலைகள் போன்றவற்றை பார்வையிட்டப்பின் செய்தியாளர்களை சந்தித்து நடிகை நளினி பேசியுள்ளார். அப்போது, நேபாளத்தில் நடந்த பேரழிவு பற்றியும் பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.</p><p></p><h2>பஞ்சாங்கம்</h2><p>அதில், நேபாள நாட்டில் பேரழிவு நடைபெற இருப்பதாக பஞ்சாங்கத்தில் ஏற்கனவே தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பஞ்சாங்கத்தை பார்த்திருந்தால் ஜாக்கிரதையாக இருந்திருக்கலாம்.</p><p>ஆகையால் அனைவரும் ஒரு நாளாவது பஞ்சாங்கத்தை படித்தால் நல்லது என்று கூறியிருக்கிறார் நளினி. மேலும் பொதுமக்கள் பஞ்சாங்கத்தை முன்கூட்டியே பார்த்து அதன்படி எச்சரிக்கையாக இருந்திருந்தால் இந்த பேரழிவில் இருந்து தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்து பல உயிர்கள் காப்பாற்ற்பட்டு இருந்திருக்கலாம் என்றும் பேசியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-02T09:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவமனையில் தவறான மருந்தா... இளைஞர் உயிரிழப்பு; தமிழர் பிரதேசத்தில் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-dies-hospital-wrong-medication-mullaithivu-1788330244"></link>
            <id>https://jvpnews.com/article/youth-dies-hospital-wrong-medication-mullaithivu-1788330244</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.</p><p>

மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற குறித்த இளைஞர், வீடு திரும்பிய நிலையில் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட மருந்துகள் மற்றும் மருத்துவ ஆவணங்கள் தொடர்பில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02a1f8b8-d89c-434a-92cf-0f14c4a1854d/26-6a97c16555f11.webp' /></p><p></p><h2>&nbsp;வழங்கப்பட்ட மருந்துகள்&nbsp; தொடர்பில் சந்தேகங்கள்</h2><p> </p><p>உயிரிழந்த இளைஞரின் உடலம் தொடர்பான பிரேத பரிசோதனையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறுகையில், </p><p> 

இளைஞரின் சிகிச்சையில் எந்தவிதமான சிக்கலும் ஏற்படவில்லை எனவும், அவரது உடல்நிலைக்கு ஏற்பவே மருந்துகள் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p></p><p>
</p><p>
அதேவேளை, மருத்துவமனையிலிருந்து வெளியேறும்போது இளைஞருக்கு வழங்கப்பட்ட மருத்துவ அட்டை மற்றொருவருடையது என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
</p><p>
மருத்துவமனை ஊழியர்களால் மருத்துவ அட்டை தவறுதலாக மாற்றி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p></p><p>
இளைஞரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறியும் வகையில் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-02T09:38:45+00:00</updated>
        </entry>
    </feed>
