<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-14T04:33:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவிகரிப்பு தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussion-on-land-acquisition-for-palaly-airport-1786681888"></link>
            <id>https://tamilwin.com/article/discussion-on-land-acquisition-for-palaly-airport-1786681888</id>
            <summary type="text">பலாலி விமான நிலையத்திற்காக பொதுமக்களின் காணிகளை அரசாங்கம் சுவிகரிப்பது
பற்றிய கலந்துரையாடல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது....</summary>
            <content type="html"><![CDATA[<p>பலாலி விமான நிலையத்திற்காக பொதுமக்களின் காணிகளை அரசாங்கம் சுவிகரிப்பது
பற்றிய கலந்துரையாடல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.</p><p>

மயிலிட்டி வடக்கு கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத் தொகுதியில் காணி
உரிமையாளர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
மற்றும் சிவஞானம் சிறிதரன் ஆகியோருக்கு இடையில் நேற்று கலந்துரையாடல் இடம்பெற்றது.
</p><p>
இதன்போது கடந்த 04 ஆம் திகதி தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நஷ்ட ஈடு
வழங்கும் கூட்டத்தில் தமக்கு தமது காணிகள் வேண்டும் என்றும் தேவையான காணிகளை
பெறுவதை முறையாக தெரிவிக்க வேண்டும் எனவும் மக்கள் கூறியுள்ளனர்.
</p><p>
பலாலி விமான நிலையத்துக்கு என மூன்று கட்ட ஓடுதளங்களுக்கும் தேவையான 444
ஏக்கர் காலணிகள் ஏற்கனவே பொதுமக்களின் காணிகள் 1985 ஆம் ஆண்டு காலப்
பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த காணிகள் விமான நிலையத்தினை விஸ்தரிப்பதற்கு போதுமானதாக
காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T04:31:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் பணக்கார குடும்ப பட்டியல் - முதல் 10 இடத்தில் 2 தமிழ் குடும்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-tn-familes-in-top-10-india-most-valuable-family-1786541705"></link>
            <id>https://news.lankasri.com/article/2-tn-familes-in-top-10-india-most-valuable-family-1786541705</id>
            <summary type="text">2026 India Most Valuable Family Businesses List : 2026 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பணக்கார வணிக குடும்பங்களின் பட்டியலில் 2 தமிழ்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 India Most Valuable Family Businesses List : 2026 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பணக்கார வணிக குடும்பங்களின் பட்டியலில் 2 தமிழ்நாடு குடும்பங்கள் முதல் 10 இடங்களுக்குள் உள்ளது. </p><h3>

இந்தியாவின் மதிப்புமிக்க பணக்கார வணிக குடும்பங்கள்</h3><p>

பார்க்லேஸ் பிரைவேட் கிளைன்ட்ஸ் ஹுருன் நிறுவனம் 2026 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பணக்கார வணிக குடும்பங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. </p><p>

இந்த பட்டியலில் உள்ள 300 குடும்ப வணிகங்களின் கூட்டு மதிப்பு தற்போது 1.46 டிரில்லியன் டொலராக (இந்திய மதிப்பில் ரூ.138 லட்சம் கோடி) உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/395fa4d1-09ca-4adb-b6e5-4a6456dd8d68/26-6a7c768b17c35.webp' /></p><p>

2024 ஆம் ஆண்டு வெளியான பட்டியலில் இருந்து இந்த வணிகங்களின் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. </p><p>அதாவது கடந்த 2 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் சுமார் ரூ. 4,076 கோடி மதிப்பு உயர்விற்குச் சமமாகும்.&nbsp;</p><p></p><p>

இதில் ரிலையன்ஸ் குழும முகேஷ் அம்பானியின் குடும்பம் ரூ. 25.83 லட்சம் கோடி மதிப்புடன் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது. </p><p>ஆதித்யா பிர்லா குழும குமார் மங்கலம் பிர்லா குடும்பம் ரூ. 8.14 லட்சம் கோடி மதிப்புடன் 3வது இடத்தில் உள்ளது. </p><p> 

ஜிண்டால் குடும்பம் ரூ. 8.01 லட்சம் கோடி மதிப்புடன் 4வது இடத்தில் உள்ளது. </p><p> 

இந்த பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த வெள்ளையன் சுப்பையா தலைமையிலான முருகப்பா குடும்பம், ரூ. 3.06 லட்சம் கோடி மதிப்புடன் 8வது இடத்தில் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46c00b73-1f57-4c45-85be-dc35349f1ca9/26-6a7c768bbe123.webp' /></p><p> 

இதே போல், தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட ஷிவ் நாடார் குடும்பம் ரூ. 2.91 லட்சம் கோடி மதிப்புடன் 9வது இடத்தில் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a79b494b-778a-4481-a1f7-0adda816ef42/26-6a7c768c703cb.webp' /></p><p>

கௌதம் அதானி குடும்பம் ரூ.19.6 லட்சம் கோடி மதிப்புடன், முதல் தலைமுறை தொழில்முனைவோர் குடும்பங்களில் மிகவும் செல்வந்தர்களாக உள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T04:30:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏடிஎம் இயந்திரங்களில் மோசடி; இரண்டு ருமேனியர்கள் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/2-romanians-accused-of-installing-cash-trap-device-1786672336"></link>
            <id>https://canadamirror.com/article/2-romanians-accused-of-installing-cash-trap-device-1786672336</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் யோர்க் பிராந்தியத்தில் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் வரும் பாதையை அடைத்து மோசடி செய்த சம்பவம் தொடர்பாக ருமேனியாவைச் சேர்ந்த இருவர் மீது 30...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் யோர்க் பிராந்தியத்தில் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் வரும் பாதையை அடைத்து மோசடி செய்த சம்பவம் தொடர்பாக ருமேனியாவைச் சேர்ந்த இருவர் மீது 30-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
</p><p>கடந்த ஜூன் 17 முதல் ஜூலை 27 வரையிலான காலப்பகுதியில் இவ்வாறான 14 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக நிதி நிறுவனங்கள் முறையிட்டுள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
சந்தேகநபர்கள் ஏடிஎம் இயந்திரங்களின் பணம் வெளிவரும் பகுதிக்குள் இருபுறமும் ஒட்டும் தன்மையுடைய 'டேப்'களைப் பொருத்தி, வாடிக்கையாளர்களுக்கு பணம் கிடைக்காதவாறு தடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73012fc4-e4c6-4a26-8978-26fc57c3e6a2/26-6a7e74d1ac72c.webp' /></p><p> </p><p>பின்னர் வாடிக்கையாளர்கள் அங்கிருந்து சென்றதும், அங்கு சிக்கிய பணத்தை அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.</p><p>
இது தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் கடந்த வாரம் இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.</p><p> அவர்களிடம் இருந்து அதிகளவிலான இருபக்க ஒட்டு நாடாக்கள் மற்றும் இயந்திரங்களில் பயன்படுத்தப்பட்ட உலோகத் தகடுகள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
</p><p>கைது செய்யப்பட்டவர்கள் ருமேனியாவைச் சேர்ந்த ரஸ்வான் செனிகா (41) மற்றும் வாசில் ஸ்டோயன் (52) என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.</p><p> இவர்கள் இருவர் மீதும் திருட்டு மற்றும் சேதப்படுத்துதல் உள்ளிட்ட தலா 19 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p>
இவர்கள் தென்மேற்கு ஒன்டாரியோ பகுதி முழுவதும் பயணித்து இவ்வாறான குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளதால், மேலும் பல பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T04:29:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய விமான நிறுவனத்தின் தடைகளை நீக்கும் கோரிக்கை நிராகரிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/judge-denies-russian-cargo-airline-sanction-1786673080"></link>
            <id>https://canadamirror.com/article/judge-denies-russian-cargo-airline-sanction-1786673080</id>
            <summary type="text">உக்ரைன் போர் தொடங்கியதை அடுத்து கனடாவினால் பறிமுதல் செய்யப்பட்ட பிரம்மாண்ட சரக்கு விமானத்தின் உரிமையாளரான ரஷ்ய விமான நிறுவனம் தாக்கல் செய்த தடை நிவாரண...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் போர் தொடங்கியதை அடுத்து கனடாவினால் பறிமுதல் செய்யப்பட்ட பிரம்மாண்ட சரக்கு விமானத்தின் உரிமையாளரான ரஷ்ய விமான நிறுவனம் தாக்கல் செய்த தடை நிவாரண மனுவை கனடாவின் மத்திய அரசாங்க நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார்.</p><p>
ரஷ்யாவின் மிகப்பெரிய சரக்கு விமான நிறுவனமான 'வோல்கா டினெப்ர் ஏர்லைன்ஸ்', நிறுவனம் மற்றும் அதன் முன்னாள் தலைவர் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளைத் தொடர்வதற்கான கனேடிய கூட்டாட்சி அரசின் முடிவை எதிர்த்து நீதித்துறை மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தது.
</p><p>2018 ஆம் ஆண்டு முதல் இராணுவப் பொருட்களை ஏற்றிச் செல்வதை நிறுத்திவிட்டதாகக் கூறி, 2023 ஆம் ஆண்டில் கனடாவின் தடைப் பட்டியலிலிருந்து தங்கள் பெயரை நீக்குமாறு அந்த நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ff3c6f4-becc-4982-af6d-b2bb9e750246/26-6a7e77ba7187b.webp' /></p><p> 
எனினும், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
ரஷ்ய அரசாங்கத்தின் ஒப்பந்தங்கள் மற்றும் மானியங்கள் மூலம் இந்த நிறுவனம் பலனடைந்துள்ளதாகவும், அதிபர் விளாடிமிர் புடினின் அரசு மீதான தடைகளை மீற உதவியதாகவும் கனேடிய அரசு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>
கடந்த 2023 ஆம் ஆண்டு ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான 'அன்டோனோவ்-124' ரக மிகப்பெரிய சரக்கு விமானத்தை கனடா பறிமுதல் செய்தது. அந்த விமானம் இதுவரை அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளது.
</p><p>இதற்கிடையில், சர்வதேச மத்தியஸ்த செயல்முறை மூலமாக அந்தச் சரக்கு விமானத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் பெற அந்நிறுவனம் முயன்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T04:28:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பெண் ஒருவரை நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bc-dog-owner-charged-after-mauling-left-woman-1786673715"></link>
            <id>https://canadamirror.com/article/bc-dog-owner-charged-after-mauling-left-woman-1786673715</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள போர்ட் மூடி பகுதியில், பெண் ஒருவரை இரண்டு பெரிய நாய்கள் கடித்துக் குதறிய சம்பவத்தையடுத்து, அந்த நாய்களின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள போர்ட் மூடி பகுதியில், பெண் ஒருவரை இரண்டு பெரிய நாய்கள் கடித்துக் குதறிய சம்பவத்தையடுத்து, அந்த நாய்களின் உரிமையாளர் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
மெட்ரோ வான்கூவர் பகுதியில் உள்ள அந்த நகரத்தில், கடந்த மே 20 ஆம் திகதி பெண் ஒருவர் நாய்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.
</p><p>காயமடைந்த பெண் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார். அவரது காயங்களின் முழு விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், அவை மிகவும் "கடுமையானவை மற்றும் வாழ்க்கையையே மாற்றியமைக்கக்கூடியவை" என்று விவரிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48b0af45-94ab-4566-a2e3-ec61fbab3ad0/26-6a7e7a3593060.webp' /></p><p>
</p><p>தாக்குதலுக்கு முன்பே, அந்த நாய்கள் மிகவும் "ஆக்ரோஷமானவை" என நகர அதிகாரிகள் ஏற்கனவே வகைப்படுத்தியிருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>அதன்படி, அந்த நாய்களுக்கு வாய்மூடி கட்டாயமாக்கப்பட்டிருந்த போதிலும், இச்சம்பவத்தின் போது நாய்களுக்கு வாய்மூடி அணிவிக்கப்பட்டிருக்கவில்லை என பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p>
இதனையடுத்து, கவனக்குறைவாகச் செயல்பட்டு உடல்காயத்தை ஏற்படுத்தியதற்காக நாய் உரிமையாளர் மீது குற்றச்சாட்டைப் பதிவு செய்ய பிரிட்டிஷ் கொலம்பியா அரசு வழக்குரைஞர் சேவை ஒப்புதல் அளித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T04:28:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்த் பே சூதாட்ட விடுதியில் வன்முறை 44 வயது நபர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/man-arrested-violent-robbery-at-north-bay-casino-1786675267"></link>
            <id>https://canadamirror.com/article/man-arrested-violent-robbery-at-north-bay-casino-1786675267</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்டாரியோவிலுள்ள நோர்த் பே பகுதியில் அமைந்துள்ள &#039;காஸ்கேட்ஸ் கேசினோ&#039; சூதாட்ட விடுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தையடுத்து, ஸ்டர்ஜன் ஃ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்டாரியோவிலுள்ள நோர்த் பே பகுதியில் அமைந்துள்ள 'காஸ்கேட்ஸ் கேசினோ' சூதாட்ட விடுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தையடுத்து, ஸ்டர்ஜன் ஃபால்ஸ் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>பைன்வுட் பார்க் டிரைவில் உள்ள அந்தச் சூதாட்ட விடுதிக்குள் இரண்டு ஆயுதங்களுடன் நபர் ஒருவர் நுழைந்துள்ளதாகக் கிடைத்த தகவலை அடுத்து, நேற்று முன்தினம் அதிகாலை 12:15 மணியளவில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
</p><p>"அந்த நபர் சூதாட்டப் பகுதிக்குள் நுழைந்து, அங்கிருந்த பொருட்களைச் சேதப்படுத்தியதுடன், ஊழியர் ஒருவரைப் பலமுறை தாக்கியுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc23e35a-153a-45dc-b35d-78f156427a25/26-6a7e804522e12.webp' /></p><p>மேலும், 'ஸ்லாட் மெஷின்' மற்றும் கணினி ஆகியவற்றை அடித்து நொறுக்கிச் சேதப்படுத்திய அவர், ஊழியரிடம் பணத்தைக் கேட்டு மிரட்டியுள்ளார்" என்று நோர்த் பே பொலிஸார் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
</p><p>குறிப்பிட்ட அளவு ரொக்கப் பணத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர், அவர் சூதாட்ட விடுதியை விட்டு வெளியேற முயன்றுள்ளார். </p><p>ஆனால், அங்கு வந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளைக் கண்டதும், மீண்டும் கட்டிடத்திற்குள் ஓடி, அங்கிருந்த ஜன்னல் கண்ணாடியை உடைத்துத் தப்பிக்க முயன்றுள்ளார்.
எனினும், அதிகாரிகள் அவரை உடனடியாகக் கைது செய்தனர்.</p><p> பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு சோதனையிட்டதில், அவரிடம் பித்தளை கைக்கவசம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், திருடப்பட்ட கனேடியப் பணம் முழுவதும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
கைது செய்யப்பட்ட நபரின் பெயர் உள்ளிட்ட மேலதிக விவரங்கள் விசாரணைக்குப் பின்னர் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ள பொலிஸார், அவர் தற்போது பிணை விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T04:27:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பத்தரமுல்லைக்கு மாற்றப்படவுள்ள மேலும் பல அரச நிறுவனங்கள் : வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gov-institutions-to-be-established-in-battaramulla-1786680239"></link>
            <id>https://ibctamil.com/article/gov-institutions-to-be-established-in-battaramulla-1786680239</id>
            <summary type="text">கொழும்பு - கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் மேலும் பல அரச நிறுவனங்களை பத்தரமுல்லையில் அமைப்பதற்கான வசதிகள் கிடைக்கும் என எதிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் மேலும் பல அரச நிறுவனங்களை பத்தரமுல்லையில் அமைப்பதற்கான வசதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக&nbsp;நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.</p><p>அத்துடன் பத்தரமுல்லை செத்சிறிபாய நிர்வாக வளாகத்தின் 3ஆம் கட்ட நிர்மாணப் பணிகளை விரைவாக ஆரம்பிப்பதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>
நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் அரச நிறுவனங்களின் கூட்டாண்மையுடன் முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல், நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தலைமையில் நேற்று (13) நடைபெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>செத்சிறிபாய 3ஆம் கட்ட நிர்வாகக் கட்டடம்&nbsp;</h2><p>பிரதி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 2019ஆம் ஆண்டு நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், பல்வேறு நெருக்கடிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த செத்சிறிபாய 3ஆம் கட்ட நிர்வாகக் கட்டடம் 25 மாடிகளைக் கொண்டதாக அமையவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed09b8e2-88a0-4221-a09d-dadd1cf39b07/26-6a7e980182062.webp' /></p><p>சுமார் 1,359,439 சதுர அடி பரப்பளவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்தக் கட்டடத்தில் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு அலுவலக வசதிகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.</p><p>
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைமையில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்கு அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், எரிசக்தி அமைச்சு மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களின் ஒத்துழைப்பும் பெறப்படவுள்ளது. இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பிடப்பட்ட செலவு 16.7 பில்லியன் ரூபாய் ஆகும்.</p><p>&nbsp;</p><h2>அரச அலுவலகங்களை மாற்றும் திட்டம்</h2><p>கொழும்பு கோட்டை உள்ளிட்ட கொழும்பு நகரப் பகுதிகளில் தற்போது இயங்கி வரும் அரச அலுவலகங்களை படிப்படியாக பத்தரமுல்லை – ஸ்ரீ ஜயவர்தனபுர நிர்வாகப் பகுதிக்கு மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக செத்சிறிபாய 3ஆம் கட்டம் உருவாக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8001eed3-f5b1-4477-bdd9-7717d7591cd5/26-6a7e9800cc1ba.webp' /></p><p>
இந்தக் கட்டடம் நிறைவடைந்த பின்னர் கொழும்பு கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் மேலும் பல அரச நிறுவனங்களை பத்தரமுல்லையில் அமைப்பதற்கான வசதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>நிர்மாணத் திட்டங்கள் பல்வேறு தரப்பினருக்கும் அதிகபட்ச பயன்களை வழங்கும் வகையில் திட்டமிடப்பட வேண்டும், அரச நிறுவனங்கள் தனித்தனியாக செயற்படாமல் ஒட்டுமொத்த அரச சேவை என்ற அடிப்படையில் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும்.</p><p>அரச ஊழியர்களுக்கு மட்டுமன்றி பொதுமக்களுக்கும் சேவைகளைப் பெறுவதற்கு இலகுவான சூழலை ஏற்படுத்துதல், புதிய வழிகாட்டல் முறைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான போதிய வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றிலும் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்” என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T04:26:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் மக்கள் மத்தியில் அதிகரிக்கும் ஆபத்து - வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1786678877"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1786678877</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளில் தற்போது வெப்பமான வானிலை பதிவாகி வரும் நிலையில் மனநோய்க்கு இலக்காகும் ஆபத்து அதிகரித்துள்ளதாக காலி தேசிய மருத்துவமனையின் மனநல மர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளில் தற்போது வெப்பமான வானிலை பதிவாகி வரும் நிலையில் மனநோய்க்கு இலக்காகும் ஆபத்து அதிகரித்துள்ளதாக காலி தேசிய மருத்துவமனையின் மனநல மருத்துவரான ரூமி ரூபன் தெரிவித்துள்ளார். </p><p>

வெப்பநிலை உயர்வால் மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற நோய்களும் பதிவாகி வருவதாக அவர் கூறியுள்ளார்.</p><h2>மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை</h2><p> </p><p>

</p><p></p><p>இதேவேளை நாட்டின் பல மாவட்டங்களில் இன்றைய தினம் (14.08.2026) மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அதிகரித்த நிலையில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>இதன்படி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fee5ac9b-6a32-4640-8307-23d94881addf/26-6a7e92c6299c6.webp' />&nbsp; &nbsp;</p><h2>வெப்பநிலையின் அளவு</h2><p>
</p><p>
இந்த மாவட்டங்களில் வெப்பநிலை 39 முதல் 45 பாகை செல்சியஸ் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
</p><p>
அதன்படி, கடினமான வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்ளவும், போதுமான அளவு தண்ணீர் அருந்தவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T04:00:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் முதல் நாள் வசூல் கணிப்பு... இத்தனை கோடிகள் வருமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vishwanath-and-sons-movie-1st-day-bo-prediction-1786679167"></link>
            <id>https://cineulagam.com/article/vishwanath-and-sons-movie-1st-day-bo-prediction-1786679167</id>
            <summary type="text">விஸ்வநாத் &amp;amp; சன்ஸ்சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் இன்று பிரமாண்டமாக வெளிவந்துள்ள படம் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ். இந்த படம் ரசிகர்களிடம் நல...</summary>
            <content type="html"><![CDATA[<h2>விஸ்வநாத் &amp; சன்ஸ்</h2><p>சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் இன்று பிரமாண்டமாக வெளிவந்துள்ள படம் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ். </p><p>இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. முக்கியமாக குடும்ப ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. </p><p>இந்நிலையில் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் முன்பதிவு கொஞ்சம் மந்தமாக இருந்தாலும் நேற்று இரவு இந்த படத்தின் புக்கிங் செம ஜோராகவே நடந்தது. அதிலும் தெலுங்கு பக்கம் இந்த படத்தின் புக்கிங் வேற்லெவல் தான் என கூறப்படுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c20bbe17-94a0-4d08-93dd-970babc15901/26-6a7e8f80dbd11.webp' /></p><h2>முதல்நாள்</h2><p>இதை வைத்து கணிக்கையில் முதல் நாள் எப்படியும் இந்த படம் ரூ 30 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.</p><p></p><p> </p><p>அதிலும் தெலுங்கில் மட்டுமே இப்படம் ரூ 10 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என தெரிகிறது. </p><p>வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு தான், அங்கு வரும் வசூல் பொறுத்து முதல் நாள் 35 கோடி கூட வசூல் வரலாம் என தெரிகிறது, பொறுத்திருந்து பார்ப்போம்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/JTHZCJ8Rhxg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-14T04:00:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகம் நட்சத்திரத்தில் சூரியன்: பதவி உயர்வு முதல் பணவரவு வரை அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sun-transit-in-magha-nakshatra-who-get-benefits-1786628489"></link>
            <id>https://manithan.com/article/sun-transit-in-magha-nakshatra-who-get-benefits-1786628489</id>
            <summary type="text">நவகிரகங்களில் சூரியன் கிரகங்களின் ராஜாவாக அறியப்படுகிறார். ஜோதிடத்தில் சூரியனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>நவகிரகங்களில் சூரியன் கிரகங்களின் ராஜாவாக அறியப்படுகிறார். ஜோதிடத்தில் சூரியனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன.
</p><p>
சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவது போல, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தனது நட்சத்திரத்தையும் மாற்றுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11c008fe-6c9b-4e12-8a7b-728f3d192f0e/26-6a7dd91e495a6.webp' /></p><p></p><p>

அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்தில் சூரியன் தனது சொந்த நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் நுழைய உள்ளார். தற்போது ஆயில்யம் நட்சத்திரத்தில் சஞ்சரித்து வரும் சூரியன், ஆகஸ்ட் 17ஆம் தேதி மகம் நட்சத்திரத்திற்குள் நுழையப் போகிறார்.
</p><p>
சூரியன் தனது சொந்த நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் நுழைவது ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.
</p><p>அந்த வகையில், சூரியனின் இந்த நட்சத்திர மாற்றத்தால் அதிக நன்மைகளைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதை இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.</p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcb7bf8f-3b67-4846-ae30-23955c040292/26-6a7dd91eed336.webp' /></p><p> மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர மாற்றம் நல்ல முன்னேற்றத்தைத் தரும். ஆகஸ்ட் 17-க்குப் பிறகு பதவி உயர்வு அல்லது புதிய வேலை கிடைக்கும் வாய்ப்பு உருவாகும்.</p><p>புதிய தொழில் அல்லது முதலீட்டுக்கான வாய்ப்புகளும் உருவாகலாம்.நிதிநிலை மேம்படுவதுடன், குடும்பத்திலும் வாழ்க்கைத்துணையுடனும் மகிழ்ச்சியான சூழல் நிலவும். குறிப்பாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.&nbsp;</p><h2>
சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c3413c1-77c5-4f14-97fc-440ad790eb1c/26-6a7dd91fa0dd5.webp' /></p><p> சூரியன் தனது சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். தலைமைத்துவ திறன் அதிகரிக்கும். வேலையில் முன்னேற்றமும் புதிய பொறுப்புகளும் கிடைக்கும்.</p><p> நிதிநிலை மேம்படுவதுடன், பழைய முதலீடுகளில் லாபம் மற்றும் புதிய வியாபார வாய்ப்புகளும் அமையலாம். நண்பர்களின் ஆதரவும், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் கிடைக்கும்.</p><h2>

தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6959352-42c0-499e-b80e-e40e259b8b72/26-6a7dd920777f3.webp' /></p><p></p><p> தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் வெற்றி மற்றும் வளர்ச்சியைத் தரக்கூடியதாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம், பதவி உயர்வு மற்றும் சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும்.</p><p> வியாபாரிகளுக்கு லாபமும் புதிய வாய்ப்புகளும் கிடைக்கலாம். குடும்பத்தில் இருந்த பழைய பிரச்சினைகள் தீர்ந்து, மனநிம்மதி அதிகரிக்கும். முடிக்காமல் இருந்த பணிகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.</p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T04:00:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திருத்த சட்டமூலம்! 18ஆம் திகதி நாடாளுமன்றில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-ammendment-will-be-submitted-on-18th-1786679769"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-ammendment-will-be-submitted-on-18th-1786679769</id>
            <summary type="text">உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
</p><p>நீதித் துறையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அதன் செயற்பாடுகளை திறம்பட முன்னெடுக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் ஒரு நேர்மறையான நடவடிக்கையாகவே இந்தச் சட்டமூலம் அமையும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>கடுமையான எதிர்ப்பு</h2><p>
</p><p>எனினும், இந்தச் சட்டமூலத்திற்கு நீதிச்சேவை சங்கம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், எதிர்க்கட்சியின் பெரும்பாலான அரசியல் கட்சிகள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் மற்றும் மகாநாயக்க தேரர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/262cf505-39da-4936-ab36-c37b1ede2b9b/26-6a7e99fb2f549.webp' /></p><p>
</p><p>இந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 63 இலிருந்து 65ஆகவும் உயர்த்தப்படும்.</p><h2>நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் சட்டமூலம்</h2><p>
இலங்கை அரசியலமைப்பின் 121ஆவது பிரிவின் கீழ், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் ஒரு சட்டமூலத்தை (முதல் வாசிப்பு) உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவதற்கு 14 நாட்கள் அவகாசம் உள்ளது.</p><p> அவ்வாறு தாக்கல் செய்யப்படும் மனுக்களை விசாரித்து 3 முதல் 21 நாட்களுக்குள் உயர் நீதிமன்றம் தனது தீர்மானத்தை நாடாளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9dbd1a13-7f99-401a-8495-8466ae4d9f4c/26-6a7e99fbda92d.webp' /></p><p>
இந்த சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அதிகளவிலான மனுக்களைத் தாக்கல் செய்ய இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் பல்வேறு சிவில் அமைப்புகளும் எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T03:56:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு : அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள முக்கிய விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/petitioner-evidence-in-easter-attack-case-complete-1786677793"></link>
            <id>https://ibctamil.com/article/petitioner-evidence-in-easter-attack-case-complete-1786677793</id>
            <summary type="text">இலங்கையில் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் மனுதாரர் தரப்பு சாட்சியங்கள் நேற்றுடன் (13) நிறைவு பெற்றுள்ள நிலையில் எதிர்த்தர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் மனுதாரர் தரப்பு சாட்சியங்கள் நேற்றுடன் (13) நிறைவு பெற்றுள்ள நிலையில் எதிர்த்தரப்பு விசாரணை எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு தொடர்பான விசாரணைகளின் ஒரு அங்கமான முறைப்பாட்டுத் தரப்பின் சாட்சி விசாரணைகள் மூவரடங்கிய கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று (13) பிற்பகல் நிறைவடைந்தன.</p><p>

நீதிபதி நவரத்ன மாரசிங்க தலைமையில் சுஜீவ நிஷ்சங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய ஆயம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்று வருகிறது.</p><p></p><h2>24 பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்&nbsp;</h2><p>
</p><p>
நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள 23,270 குற்றச்சாட்டுகள் தொடர்பில், 2023 ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் இதுவரை மொத்தம் 547 சாட்சிகளிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 2076 வழக்குச் சான்றுகளும் குறியீடு செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6b60aeb-9c91-49e3-a491-cafe61021fd5/26-6a7e8ec28e934.webp' /></p><p>

முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் பிரதிவாதிகளிடம் எதிர்த்தரப்பு வாக்குமூலங்களைக் கோருவதற்குப் போதுமான காரணங்கள் இருப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.</p><p> இதற்கமைய, எதிர்த்தரப்பு விசாரணைகளை எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>தொடர் குண்டுத் தாக்குதல்</h2><p>

2017 நவம்பர் 01 முதல் 2019 ஏப்ரல் 21 வரை அனுராதபுரம், மாவனெல்ல, கண்டி, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை, காத்தான்குடி, கொழும்பு, தெஹிவளை போன்ற இடங்களில், சஹ்ரான் ஹாசீம் மற்றும் மரணித்த ஏனையவர்ளுடன் இணைந்து தீவிரவாத சித்தாந்தங்களை பரப்பி, ஆயுதப் பயிற்சி பெற்று, சதித் திட்டங்களை தீட்டி தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்தியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை என்பது முதன்மை குற்றச்சாட்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42377aa5-661d-4858-bfce-6363a8a16e6e/26-6a7e8ec33fccb.webp' /></p><p>

அனைத்து சந்தேகநபர்களுக்கும் எதிராக வாய்மொழி மூலமான குற்றச்சாட்டு விபரங்களை கோருவதற்குப் போதுமான தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் திருப்தி தெரிவித்தது.
</p><p>
இந்தநிலையில், நீதிமன்றத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் மூலம் சந்தேகநபர்களுக்குத் தமிழில் விளக்கிக் கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T03:48:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் நீரிணையில் 2 வணிக கப்பல்களை குறி வைத்து தாக்கிய ஈரான்: UAE கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-attacks-2-ships-in-hormuz-uae-condemn-1786678816"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-attacks-2-ships-in-hormuz-uae-condemn-1786678816</id>
            <summary type="text">ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த 2 வணிக கப்பல்களை ஈரான் தாக்கி இருப்பதாக சவுதி அரேபியா குற்றஞ்சாட்டியுள்ளது. வணிக கப்பல்கள் மீது தாக்குதல்
ஹார்முஸ் ஜலசந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த 2 வணிக கப்பல்களை ஈரான் தாக்கி இருப்பதாக சவுதி அரேபியா குற்றஞ்சாட்டியுள்ளது.</p><h2> வணிக கப்பல்கள் மீது தாக்குதல்</h2><p>
ஹார்முஸ் ஜலசந்தியில் சென்று கொண்டிருந்த தங்களது இரண்டு வணிக கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p> இதில் கப்பல் சேதமடைந்து இருப்பதாகவும், ஆனால் பணியாளர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் சவுதி தேசிய எண்ணெய் நிறுவனம்(ADNOC) தகவல் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdfba723-04c8-4e6b-88e8-e004dea713c8/26-6a7e8e21a98b3.webp' /></p><p></p><p> ஒரு வார காலத்திற்குள் ADNOC நிறுவனத்தின் நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.</p><p>கடந்த சனிக்கிழமை ஹார்முஸில் சவுதி அரசு எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p> இந்நிலையில், தற்போதைய பதற்றமான நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.</p><p>அதே நேரத்தில் ADNOC கப்பல்கள் மீதான தாக்குதல் மிகவும் பகைமையான தாக்குதல் என்று குறிப்பிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T03:40:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கையில் நடந்த பயங்கரம் - இளைஞர்கள் மீது தீவைப்பு - பிரதேச மக்கள் அடாவடித்தனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-were-set-on-fire-couple-arrested-1786673096"></link>
            <id>https://tamilwin.com/article/youth-were-set-on-fire-couple-arrested-1786673096</id>
            <summary type="text">களுத்துறை, புலத்சிங்கல பகுதியில் வீடு ஒன்றின் அருகில் வைத்து இரு இளைஞர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பில் கணவன், மனைவி உள்ளிட்ட மூவரை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை, புலத்சிங்கல பகுதியில் வீடு ஒன்றின் அருகில் வைத்து இரு இளைஞர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பில் கணவன், மனைவி உள்ளிட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். </p><p>

கடந்த 10 ஆம் திகதி இரவு இடம்பெற்ற இத்தாக்குதலில் இரு இளைஞர்களும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
பெண் ஒருவரை இளைஞர்கள் கேலி செய்தமையால் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2><b>இளைஞர்கள் மீது தீ வைப்பு</b></h2><p>

புலத்சிங்ஹல பிரதேசத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்களே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53a81398-397f-4878-ba63-ffad96e66670/26-6a7e7d2d851d2.webp' />&nbsp;</p><p>சம்பவம் தொடர்பாக 29 வயதுடைய கணவன், மனைவி மற்றும் அவர்களின் 19 வயதுடைய சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்ட தம்பதியினர்&nbsp; பெண் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருகின்றனர். </p><p>

கடந்த 10 ஆம் திகதி இரவு பெண் பணியை முடித்துவிட்டு பேருந்தில் இறங்கி கணவருடன் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இளைஞர்கள் கேலி செய்துள்ளனர். இதனால் கோபமடைந்த கணவன் அந்த இளைஞர்களைத் எச்சரித்து விட்டு சென்றுள்ளார்.</p><h3><b>வீட்டின் மீது தாக்குதல் </b></h3><p>குறித்த இளைஞர்கள் அந்த பெண்ணின் வீட்டிற்கு அருகில் சென்றுள்ளனர். 

இதன்போது இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து, தம்பதி இளைஞர்களை நோக்கி பெட்ரோல் போத்தலை வீசியதுடன் தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். </p><p>தாக்குதலில் படுகாயமடைந்த இரண்டு இளைஞர்களும் முதலில் ஹொரணை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைக்காக பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p><p>

இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் சந்தேகநபர்களின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளனர்.</p><p></p><p>&nbsp;</p><p>
</p>]]></content>
            <updated>2026-08-14T03:39:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் மகன்களைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sentencing-hearing-underway-for-new-brunswick-man-1786675932"></link>
            <id>https://canadamirror.com/article/sentencing-hearing-underway-for-new-brunswick-man-1786675932</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்திலுள்ள செயிண்ட் ஜான் நகரில், தனது இரு மகன்களைக் கொடூரமாகக் கொலை செய்த 46 வயதான ரோமன் காமிஷ்னி என்பவருக்கு ஆயுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்திலுள்ள செயிண்ட் ஜான் நகரில், தனது இரு மகன்களைக் கொடூரமாகக் கொலை செய்த 46 வயதான ரோமன் காமிஷ்னி என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
</p><p>கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் திகதி அதிகாலை, காமிஷ்னி தனது 10 மற்றும் 17 வயதுடைய இரு மகன்களையும் கத்தியால் குத்திக் கொலை செய்தார்.</p><p> 
பின்னர், 'நெயில் கன்' ஆணி அடிக்கும் கருவி மூலம் தனது தலையில் தானே அடித்துக்கொண்டு தற்கொலைக்கும் முயன்றார்.
கடந்த ஜூன் 24 அன்று இவர் மீதான முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், தற்போது இவருக்கு இரண்டு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டு, அவை ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c13f2e43-2828-4500-9573-9d5cb3d0fccd/26-6a7e82de9aefe.webp' /></p><p> </p><p>கனடாவின் சட்டப்படி முதல் நிலை கொலைக் குற்றவாளிக்கு 25 ஆண்டுகளுக்குப் பிணை பெற முடியாது.
</p><p>விவாகரத்து செய்த தனது மனைவியைப் பழிவாங்குவதற்காகவும், அவருக்குத் தண்டனை அளிப்பதற்காகவுமே காமிஷ்னி இந்த கொடூரச் செயலைச் செய்துள்ளார் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
</p><p>கொலை செய்வதற்கு முன்பாக, "நான் அனைவரையும் கொன்றுவிட்டேன், பொலிஸாரையும் ஆம்புலன்ஸையும் வரச் சொல்" என்று மனைவிக்கு அனுப்பிய குறுஞ்செய்தி மற்றும் கடிதங்கள் நீதிமன்றத்தில் ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கப்பட்டன.
</p><p>எனினும், நீதிமன்றத்தில் பேசிய காமிஷ்னி, "எனக்கு அன்றைய தினம் நடந்தது எதுவும் நினைவில் இல்லை, என் குழந்தைகளைக் கொல்லும் திட்டம் எனக்கு இருக்கவில்லை" என்று வாதிட்டார்.
</p><p>இதைக் கேட்ட நீதிபதி டேரல் ஸ்டீபன்சன், "உம்மீது மேலும் வார்த்தைகளை வீணடிக்க விரும்பவில்லை. நீர் ஒரு திட்டமிட்டு அதைச் செயல்படுத்தியுள்ளீர், அதற்கான தண்டனையை அனுபவிக்கும் நேரம் இது" என்று கூறி தண்டனையை அறிவித்தார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T03:34:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வசூலில் பட்டய கிளப்பும் லோகேஷ் கனகராஜின் DC திரைப்படம்... மொத்த கலெக்ஷன்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/lokesh-kanagaraj-dc-movie-bo-details-1786678466"></link>
            <id>https://cineulagam.com/article/lokesh-kanagaraj-dc-movie-bo-details-1786678466</id>
            <summary type="text">டிசி திரைப்படம்தமிழ் சினிமாவில் இயக்குனராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட லோகேஷ் கனகராஜ் இப்போது இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார். அருண் மாதேஸ்வரன்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>டிசி திரைப்படம்</h2><p>தமிழ் சினிமாவில் இயக்குனராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட லோகேஷ் கனகராஜ் இப்போது இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார். </p><p>அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டிசி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க அனிருத் தான் இசையமைத்துள்ளார். </p><p>சமீபத்தில் டிசி படத்தை பார்த்த சிவகார்த்திகேயன், டிசி ஒரு அதிரடியான மிகச் சிறந்த திரை அனுபவமாக அமைந்தது. </p><p>லோகேஷ் கனகராஜ் மற்றும் அருண் மாதேஸ்வரன் இணைந்து விறுவிறுப்பான தருணங்கள் நிறைந்த ஒரு வலுவான ஆக்ஷன் படத்தை வழங்கியுள்ளனர் என பாராட்டி இருந்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5326299d-eb07-4828-b364-d772a566d509/26-6a7e8da78681c.webp' /></p><h2>பாக்ஸ் ஆபிஸ்</h2><p>
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி வெளியாகி இருந்தது. ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ள இப்படம் 7 நாள் முடிவில் மொத்தமாக இதுவரை ரூ. 60 கோடிக்கும் மேலான வசூல் வேட்டை செய்துள்ளதாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/pfnU64kk3LM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-14T03:30:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[Powerball லொட்டரியில் 1 பில்லியன் டொலர் வென்ற நபர்: உரிமை கோர ஓராண்டு அவகாசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/someone-won-1-billion-powerball-1786651825"></link>
            <id>https://news.lankasri.com/article/someone-won-1-billion-powerball-1786651825</id>
            <summary type="text">Someone won $1 billion in Powerball: இல்லினாய்ஸில் உள்ள ஒருவர் பவர்பால் லொட்டரியில் 1 பில்லியன் டொலர்களை வென்றுள்ளார்.

புதன்கிழமை இரவு நடைபெற்ற 1.0...</summary>
            <content type="html"><![CDATA[<p>Someone won $1 billion in Powerball: இல்லினாய்ஸில் உள்ள ஒருவர் பவர்பால் லொட்டரியில் 1 பில்லியன் டொலர்களை வென்றுள்ளார்.
</p><p>
புதன்கிழமை இரவு நடைபெற்ற 1.04 பில்லியன் டொலர் பவர்பால் குலுக்கலுக்கான வெற்றியாளர் அமெரிக்காவின் இல்லினாய்ஸில் மாகாணத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>ஓராண்டுக்குள்</h2><p>
</p><p>இது கடந்த ஆண்டுக்குப் பிறகு கிடைத்த மிகப்பெரிய பெரும் பரிசுத்தொகை என லொட்டரி நிறுவனம் தெரிவித்துள்ளது. </p><p>மேற்கு இல்லினாய்ஸில் உள்ள ஸ்பிரிங்ஃபீல்டிலிருந்து மேற்கே சுமார் 100 மைல் தொலைவில் அமைந்துள்ள குவின்சி பகுதியில் ஒரு 'ஹை-வீ' (Hy-Vee) எரிபொருள் நிலையத்தில் இருந்து அந்தச் சீட்டு வாங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfaa94e6-0aa1-4e8d-8af0-962d24bf4dd4/26-6a7e24b381b96.webp' /></p><p> </p><p>இல்லினாய்ஸ் லொட்டரி அமைப்பின் தகவலின்படி, ஜாக்பாட் பரிசை வென்ற சீட்டை விற்பனை செய்ததற்காக Hy-Vee எரிபொருள் நிலையத்திற்கு 500,000 டொலர் ரொக்கப் போனஸ் வழங்கப்படும். </p><p>இல்லினாய்ஸ் மாகாணத்தில் லொட்டரி வெற்றியாளர் தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமலே இருக்க முடியும் என்பதால், அந்த வெற்றியாளர், 29 ஆண்டுகளில் 30 தவணைகளாக வழங்கப்படும் 1.04 பில்லியன் டொலர் மதிப்பிலான வருடாந்திரத் தவணை முறையிலான பரிசைப் பெறுவதைத் தெரிவு செய்யலாம். </p><p>அல்லது 450.5 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்ட ஒரு தொகையை மொத்தமாகப் பெறலாம். இவ்விரு தொகைகளும் வரிக்கு உட்பட்டவை ஆகும்.</p><p> குலுக்கல் நடைபெற்ற திகதியிலிருந்து ஓராண்டுக்குள் வெற்றியாளர் பரிசைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று லொட்டரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p></p><p>
மாசசூசெட்ஸில் விற்கப்பட்ட ஒரு டிக்கெட், பவர் பிளே மல்டிபிளையருடன் ஆறு எண்களில் ஐந்து எண்களைப் பொருத்தி 2 மில்லியன் டொலர்களை வென்றுள்ளது. </p><p>அதே நேரத்தில், அரிசோனா, கலிபோர்னியா, புளோரிடா மற்றும் வட கரோலினா ஆகிய நான்கு மாகாணங்களில் விற்கப்பட்ட ஐந்து டிக்கெட்டுகள் தலா 1 மில்லியன் டொலர்களை வென்றன என்று லொட்டரி நிறுவனம் தெரிவித்துள்ளது. </p><p>கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று ஆர்கன்சாஸைச் சேர்ந்த ஒருவர் 1.8 பில்லியன் டொலர்களை வென்ற பிறகு, புதன்கிழமை நடந்த குலுக்கல்தான் முதல் பில்லியன் டொலர் பவர்பால் ஜாக்பாட் ஆகும். </p><p>மே 2 அன்று புளோரிடா மற்றும் டெக்சாஸைச் சேர்ந்த இருவர் 20 மில்லியன் டொலர் பரிசைப் பகிர்ந்துகொண்ட பிறகு, கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஒருவர் முதன்மைப் பரிசை வென்றது இதுவே முதல் முறையாகும்.</p><h2>மிகப்பெரிய பவர்பால் பரிசு</h2><p> </p><p>புதன்கிழமை நடந்த ஆட்டம், தற்போதைய ஜாக்பாட் தொடரில் நடைபெற்ற 44வது தொடர்ச்சியான குலுக்கலாகும், மேலும் அதன் பரிசுத்தொகை பவர்பால் வரலாற்றில் எட்டாவது பெரிய பரிசுத்தொகையாகப் பதிவாகியுள்ளது.</p><p> 2016-ல் 1.586 பில்லியன் டொலர் பவர்பால் பரிசைப் பிரித்துக்கொண்டதன் மூலம், புளோரிடா, கலிபோர்னியா மற்றும் டென்னசியைச் சேர்ந்த மூவர் 1 பில்லியன் டொலருக்கும் அதிகமான ஜாக்பாட்டை வென்ற முதல் நபர்கள் ஆனார்கள். </p><p>பதிவுசெய்யப்பட்டதிலேயே மிகப்பெரிய பவர்பால் பரிசுத் தொகையான 2.04 பில்லியன் டொலர்கள் 2022-ல் கலிபோர்னியாவில் வெல்லப்பட்டது; கடந்த ஆண்டு ஆர்கன்சாஸில் வெல்லப்பட்ட 1.8 பில்லியன் டொலர் ஜாக்பாட் பரிசு இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b418f82-c365-487f-8b3e-06bda943ebef/26-6a7e24b433dea.webp' /></p><p> </p><p>புளோரிடா, டெக்சாஸ் மற்றும் டென்னசி உள்ளிட்ட சில மாகாணங்கள் லொட்டரி பரிசுத்தொகைக்கு வரி விதிப்பதில்லை. பெரும்பாலான பவர்பால் மற்றும் பிற முக்கிய லொட்டரி வெற்றியாளர்கள், ஆண்டுத் தவணைகளை விட மொத்தத் தொகையையே தெரிவு செய்கின்றனர். </p><p>பவர்பால் சீட்டுகள் அமெரிக்காவின் 45 மாகாணங்கள், கொலம்பியா மாவட்டம், புவேர்ட்டோ ரிக்கோ, அமெரிக்க விர்ஜின் தீவுகள் மற்றும் பிரித்தானியா ஆகியவற்றில் விற்பனை செய்யப்படுகின்றன. </p><p>குலுக்கல்கள் ஒவ்வொரு திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 10:59 மணிக்கு (ET) நடைபெறுகின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T03:30:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்வெட்டு தொடர்பில் பொதுமக்களுக்கு அமைச்சர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/information-minister-power-cut-announcement-1786596041"></link>
            <id>https://tamilwin.com/article/information-minister-power-cut-announcement-1786596041</id>
            <summary type="text">அடுத்த ஆண்டுக்குத் தேவையான நிலக்கரியைக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும் நாட்டில் மின்வெட்டு இடம்பெறாது என்றும் எரிச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த ஆண்டுக்குத் தேவையான நிலக்கரியைக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும் நாட்டில் மின்வெட்டு இடம்பெறாது என்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
</p><p>


செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து புதிய நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.</p><h2>மின் உற்பத்தி பற்றாக்குறை&nbsp;</h2><p>எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர் கூறும் இதுபோன்ற அறிக்கைகளால் பொதுமக்கள் தேவையற்ற முறையில் பீதியடைய வேண்டாம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91966d74-49bf-4849-bfea-71d8535ca520/26-6a7e8b40692b2.webp' /></p><p>மேலும், அடுத்த ஆண்டு காற்றாலைகள் மூலம் 400 கிலோவாட் மின் உற்பத்தித்திறன் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>
</p><p>தற்போது நாட்டின் மின்சார தேவையில் 48% புனல்மின் உற்பத்தி மூலம் பூர்த்தி செய்யப்படுவதாகவும், மின் உற்பத்திப் பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டு மின்வெட்டு ஏற்படாது என்றும் அமைச்சர் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T03:28:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழினப்படுகொலைக்கு நீதி கோரி வடக்கில் இன்று முதல் வெடிக்கவுள்ள போராட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/international-justice-for-the-tamil-genocide-1786676210"></link>
            <id>https://ibctamil.com/article/international-justice-for-the-tamil-genocide-1786676210</id>
            <summary type="text">இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி வடக்கில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.&amp;nbsp;தாயகச் செயலணி அமைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி வடக்கில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.&nbsp;</p><p>தாயகச் செயலணி அமைப்பின் ஏற்பாட்டில் 'நீதியின் ஓலம்' எனும் தலைப்பில் இன்று முதல் (14) எதிர்வரும் 17 ஆம் திகதி வரை இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.</p><p> செம்மணி மனிதப்புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டுவரும் அகழ்வுப்பணிகள் கடந்த சனிக்கிழமையுடன் (8) 100 நாட்களை எட்டியிருப்பதுடன், அந்த மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 500 க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் அடையாளங்காணப்பட்டுள்ளன.</p><p></p><h2>செம்மணி மனிதப் புதைகுழி</h2><p>
</p><p>
இந்தநிலையில் குறிப்பாக படுகொலை செய்யப்பட்டு, செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்ட மக்களுக்கும், அவர்களது உறவுகளுக்குமான நீதியைக் கோரியும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியுமே 'நீதியின் ஓலம் - 2' எனும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6dc8835-add7-413d-b28e-bdd81f6e88e2/26-6a7e872b65ff3.webp' /></p><p>
</p><p>
அதற்கமைய இன்று வெள்ளிக்கிழமை முதல் (14) எதிர்வரும் 16 ஆம் திகதி வரை செம்மணி மனிதப்புதைகுழி அவலம் குறித்தும், தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p>அதனைத்தொடர்ந்து 17 ஆம் திகதி (திங்கட்கிழமை) செம்மணி மனிதப்புதைகுழிக்கு அண்மையில் கவனயீர்ப்புப் பேராட்டத்தை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>இப்போராட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள், மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T03:19:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச அளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு தடை விதிக்கப்படும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srilankan-airlines-faces-serious-risk-of-sanctions-1786676889"></link>
            <id>https://tamilwin.com/article/srilankan-airlines-faces-serious-risk-of-sanctions-1786676889</id>
            <summary type="text">சர்வதேச அளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்குத் தடை விதிக்கப்படும் கடுமையான அபாயம் ஏற்பட்டுள்ளதாக சிவில் செயற்பாட்டாளர் தினேஷ் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச அளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்குத் தடை விதிக்கப்படும் கடுமையான அபாயம் ஏற்பட்டுள்ளதாக சிவில் செயற்பாட்டாளர் தினேஷ் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>
சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையொன்றின் அடிப்படையிலேயே இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
சிவில் விமான சேவைகள் அதிகார சபையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது. </p><h2><b>

விமான போக்குவரத்துகள் </b></h2><p>“ICAO அல்லது ICAO, எனப்படும் சிவில் விமான சேவையின் அதாவது Civil Aviation Organization எனப்படும் அமைப்பொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80ad9b28-1b51-41cb-b8eb-9bc93889fcb1/26-6a7e88824e23c.webp' /></p><p>அது ஸ்தாபிக்கப்படுவது உலகத்தில் விமானப் போக்குவரத்துகள் வளர்ச்சியடையும் போது, அதில் உள்ள அதிகார பலத்தை ஓரிடத்திற்கு மையப்படுத்தி, அதன் நிபந்தனைகளுக்கு இணங்க உலகின் அனைத்து விமானங்களையும் கையாளுவதே அதன் எதிர்பார்ப்பாகும்.
</p><p>
எனவே, நாமும் அதில் ஓர் உறுப்பு நாடாக இருக்கின்றோம். நாமும் அதன் சட்டதிட்டங்களுக்கு இணங்க செயற்பட வேண்டும். இந்த தணிக்கை உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படுகின்றது. </p><p>

ஒவ்வொரு நாட்டிலும் இது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படுகின்றது. ஒவ்வொரு நாட்டிலும் இது போன்ற அந்தந்த நாட்டின் சிவில் விமான சேவை குறித்த பிரமாணங்களுடன் இருக்கின்றதா, அது சட்டப்பூர்வமாக பேணப்படுகின்றதா என்பது குறித்து ஒவ்வொரு நாட்டிலும் அவர்கள் பரிசோதனையொன்றை, தணிக்கையொன்றை நடத்துகிறார்கள். </p><h3><b>

ஸ்ரீலங்கன் விமான சேவை</b></h3><p>அடுத்த ஆண்டிற்கான தணிக்கையின் முதற்கட்டப் பணிகள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் ஸ்ரீலங்கன் விமான சேவையும் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. அதில் சில முறைக்கேடுகள் கண்டறியப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a9b7548-89cf-4ce6-bd78-da23d7773a4c/26-6a7e89306314c.webp' /></p><p>மேலும் தணிக்கை சோதனையில் ஸ்ரீலங்கன் விமான சேவை தோல்வியடைந்துள்ளது. </p><p>இந்த நிலையிலேயே சர்வதேச அளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்குத் தடை விதிக்கப்படும் கடுமையான அபாயம் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-14T03:16:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவசரமாக இடமாற்றப்பட்ட இஷாரா செவ்வந்தி! தீவிரமடையும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ishara-sevwandi-angunakolele-urgent-relocation-1786675678"></link>
            <id>https://tamilwin.com/article/ishara-sevwandi-angunakolele-urgent-relocation-1786675678</id>
            <summary type="text">கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
நேற்றிரவு அவர் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.</p><h2>சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்</h2><p>

சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டிய குற்றத்திற்காக, இஷாரா செவ்வந்தி கடந்த ஆண்டு பெப்ரவரி 19 ஆம் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f3883fa-dbf6-4a85-8e85-b1c3a5ac629d/26-6a7e87daa5186.webp' />&nbsp;</p><p>

இந்நிலையில், கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் சிறப்பு பொலிஸ் குழுக்களினால் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
</p><p>
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் நேபாள பொலிஸாரின் கூட்டு நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.</p><p>

பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கொழும்பு குற்றப்பிரிவில் இவர் தடுத்து வைக்கப்பட்ட பின்னர், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டார்.</p><p>

இந்நிலையில், குறித்த வழக்கு தொடர்பான விசாரணை 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட அவரை ஆகஸ்ட் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவிட்டார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T03:14:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோவா ஸ்கோடியாவில் மனித எச்சங்கள் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/human-remains-found-near-debert-ns-rcmp-1786674694"></link>
            <id>https://canadamirror.com/article/human-remains-found-near-debert-ns-rcmp-1786674694</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்திலுள்ள கோல்செஸ்டர் கவுன்டீ பகுதியில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்திலுள்ள கோல்செஸ்டர் கவுன்டீ பகுதியில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>டெபர்ட் பகுதிக்கு அருகிலுள்ள காடடர்ந்த பகுதியில் மனித எச்சங்கள் இருப்பதாகக் கடந்த ஜூலை 22 ஆம் திகதி கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டனர்.
</p><p>மீட்கப்பட்ட எச்சங்கள் ஒரு ஆணுடையது என்றும், அவரது மரணத்தில் ஏதேனும் குற்றச் செயல்கள் அடங்கியிருக்கலாம் என நம்புவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aca255e7-b81f-45de-9b58-8d5ed9432b0b/26-6a7e7e08729d3.webp' /></p><p>
</p><p>எனினும், நோவா ஸ்கோடியா மருத்துவ பரிசோதனை சேவையின் உதவியுடன், உயிரிழந்த நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்தவும், அவரது மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியவும் புலனாய்வாளர்கள் முயன்று வருகின்றனர்.</p><p>
அந்த நபரின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதில் இருந்து, அப்பகுதியில் விரிவான தேடுதல் வேட்டைகள் நடத்தப்பட்டு வருகின்றன. </p><p>இந்த சம்பவம் குறித்து மக்களிடையே பல்வேறு வதந்திகளும் சந்தேகங்களும் எழுந்துள்ளதை நாங்கள் அறிவோம். ஆனால், எங்கள் முதன்மைப் பொறுப்பு விசாரணையின் நிமித்தம் தகவல்களைப் பாதுகாப்பதே ஆகும் என நோவா ஸ்கோடியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>இவ்விசாரணை இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே இருப்பதால், தற்போதைக்கு மேலதிக விவரங்கள் எதையும் வெளியிட முடியாது என பொலிஸார் கூறியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T03:06:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் சில உணவு வகைகள் குறித்து எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/some-whole-foods-salsas-guacamoles-recalled-1786674275"></link>
            <id>https://canadamirror.com/article/some-whole-foods-salsas-guacamoles-recalled-1786674275</id>
            <summary type="text">&amp;nbsp;ஒன்டாரியோவில் இணையவழியில் விற்பனை செய்யப்பட்ட &#039;ஹோல் ஃபுட்ஸ் மார்க்கெட்&#039; நிறுவனத்தின் சில சாஸ்கள், குவாக்கமோல் மற்றும் பிற ஆயத்த உணவுகளில் &#039;சால்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஒன்டாரியோவில் இணையவழியில் விற்பனை செய்யப்பட்ட 'ஹோல் ஃபுட்ஸ் மார்க்கெட்' நிறுவனத்தின் சில சாஸ்கள், குவாக்கமோல் மற்றும் பிற ஆயத்த உணவுகளில் 'சால்மோனெல்லா' பாக்டீரியா தொற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவை திரும்பப் பெறப்படுவதாக கனடாவின் உணவுத் ஆய்வு முகவரகம் அறிவித்துள்ளது.</p><p>
மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார மிளகாய் மூலமாகவே இந்த பாக்டீரியா பரவியுள்ளது.</p><p> 
அமெரிக்காவில் ஏற்பட்ட நோய் பரவலுக்கும் இந்த மிளகாய்களே காரணம் எனக் கூறப்படும் நிலையில், அதன் தொடர்ச்சியாகவே கனடாவிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15bf9fa8-9665-4121-b034-7a91bc6516cd/26-6a7e7c64e009a.webp' /></p><p>எனினும், கனடாவில் இந்த உணவுகளை உட்கொண்டதால் இதுவரை யாருக்கும் பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் பதிவாகவில்லை என்று கனடாவின் உணவுத் ஆய்வு முகவரகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>
திரும்பப் பெறப்படும் பொருட்களில் பல்வேறு வகையான 'சால்சா', 'குவாக்கமோல்', 'பிகோ டி காலோ' மற்றும் 'சிக்கன் கெசடிலா' போன்ற ஆயத்த உணவுகள் அடங்கும். இவை ஆகஸ்ட் 16 வரை காலாவதி திகதியைக் கொண்ட தயாரிப்புகளாகும்.
</p><p>சால்மோனெல்லா பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட உணவுகள் பார்ப்பதற்கோ அல்லது வாசனைக்கோ கெட்டுப்போனது போல் தெரியாது. </p><p>ஆனால், அவற்றை உட்கொள்வது உடல்நலக் குறைவை ஏற்படுத்தும். குறிப்பாக சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T03:00:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[Live Update: விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vishwanath-and-sons-movie-fans-review-1786674615"></link>
            <id>https://cineulagam.com/article/vishwanath-and-sons-movie-fans-review-1786674615</id>
            <summary type="text">இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விஸ்வநாத் &amp;amp; சன்ஸ் திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள், படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து சமூக வலைத்தளத்தில் வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள், படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து சமூக வலைத்தளத்தில் விமர்சனங்கள் தெரிவித்துள்ளனர். அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.</p><p></p><p>
</p><h2>
விஸ்வநாத் &amp; சன்ஸ்
</h2><p>
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விஸ்வநாத் &amp; சன்ஸ். இப்படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்; மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5844242c-7a44-461e-853b-94bcf6dcb268/26-6a7e7dbb776bc.webp' /></p><p>கருப்பு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து வெளிவரவிருக்கும் விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். மேலும், இப்படத்தின் பாடல்கள், டிரைலர் உள்ளிட்டவை இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
</p><h2>
ரசிகர்களின் விமர்சனம்</h2><p>

இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள <a href="https://www.youtube.com/watch?v=JTHZCJ8Rhxg" target="_blank">விஸ்வநாத் &amp; சன்ஸ்</a> திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள், தங்களது எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்ததா இல்லையா என்பது குறித்து விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fb6f53f-1198-4040-bb68-6dc3a21371ab/26-6a7e7dbabe6e7.webp' /></p><p>இதில், "படத்தின் முதல் பாதி சிறப்பு, ஆனால் இரண்டாம் பாதி பலவீனமாக உள்ளது. குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு பொழுதுபோக்குத் திரைப்படம். Okay-வான, மனதிற்கு இதமான குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படம். சூர்யா, மமிதா மற்றும் ராதிகா ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். இப்படத்தின் மிகப்பெரிய பலம் வெங்கி அட்லூரியின் வசனங்கள்; படத்தின் இரண்டாம் பாதியில் இன்னும் சிறந்த திரைக்கதை அமைந்திருக்கலாம்" என விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/VishwanathAndSons?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VishwanathAndSons</a> A Watchable, Clean Family Entertainer With a Good 1st Half but a Weak 2nd Half!<br><br>After a slow start, the first half feels refreshing and stays focused on the core plot with a good mix of fun and emotion. Just when you expect that flow to continue, the second…</p>&mdash; Venky Reviews (@venkyreviews) <a href="https://x.com/venkyreviews/status/2088071550868095431?ref_src=twsrc%5Etfw">August 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/VishwanathAndSons?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VishwanathAndSons</a> - VATCHABLE ONES!<br><br>Good 1st Hlf &amp; Avg 2nd Half.<br><br>OKayish Feel Good Family Entertainer!</p>&mdash; Christopher Kanagaraj (@Chrissuccess) <a href="https://x.com/Chrissuccess/status/2088071680975331479?ref_src=twsrc%5Etfw">August 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-08-14T03:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் பொது வைத்தியசாலை முன்பாக வாகனங்கள் நிறுத்த தடை! வாகன உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/parking-front-of-mannar-general-hospital-1786673767"></link>
            <id>https://tamilwin.com/article/parking-front-of-mannar-general-hospital-1786673767</id>
            <summary type="text">மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக ‘வாகனம் நிறுத்த தடை’ (No
Parking) என அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் வாகனங்களை முறையற்ற விதத்தில்
நிறுத்தும் நடவடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக ‘வாகனம் நிறுத்த தடை’ (No
Parking) என அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் வாகனங்களை முறையற்ற விதத்தில்
நிறுத்தும் நடவடிக்கைக்கு எதிராக போக்குவரத்து பொலிஸார் விசேட
நடவடிக்கையை முன்னெடுத்தனர்.</p><p>
வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள், பொதுமக்கள் மற்றும் ஏனைய வாகனப்
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதாக
கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><h2>வாகன உரிமையாளர்களுக்கு எதிராக தண்டப்பணம்&nbsp;</h2><p>
இதன்போது, முறையற்ற விதத்தில் வாகனங்களை நிறுத்திய வாகன உரிமையாளர்களுக்கு
எதிராக தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff28c209-a5d4-4186-b627-cf54391f6857/26-6a7e7c313135b.webp' /></p><p>குறித்த பகுதியில் வாகனங்களை
நிறுத்துவதற்கு கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

வைத்தியசாலை வளாகத்திற்கு முன்பாக போக்குவரத்து ஒழுங்கை பேணுவதற்கும்,
நோயாளர்களின் அவசரப் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையிலும்
இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>

எனவே, குறித்த பகுதியில் வாகனங்களை நிறுத்தாமல், போக்குவரத்து பொலிஸாரின்
அறிவுறுத்தல்களையும், வீதிப்போக்குவரத்து விதிகளையும் பொதுமக்கள்
கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e141cdd0-765c-484e-9e0b-57441b82c33e/26-6a7e7ca9ec3ed.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff28c209-a5d4-4186-b627-cf54391f6857/26-6a7e7c313135b.webp' /></p>]]></content>
            <updated>2026-08-14T02:23:51+00:00</updated>
        </entry>
    </feed>
