<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-24T14:32:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 இலட்சம் ரூபாய் பணத்தை கடித்து வைத்த எலிகள்; கண்ணீரில் தம்பதிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-woman-s-secret-12-million-cash-rats-chew-1787578014"></link>
            <id>https://jvpnews.com/article/indian-woman-s-secret-12-million-cash-rats-chew-1787578014</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பெண்ணொருவர் வீட்டில் தான் எட்டு ஆண்டுகளாக சேமித்து வைத்த 12 இலட்சம் ரூபாய் பணத்தை எலிகள் கடித்துக் கிழித்துப் போட்டமை தொடர்பான புகைப்படங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பெண்ணொருவர் வீட்டில் தான் எட்டு ஆண்டுகளாக சேமித்து வைத்த 12 இலட்சம் ரூபாய் பணத்தை எலிகள் கடித்துக் கிழித்துப் போட்டமை தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.</p><p>

 


இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், நகைகள் வாங்குவதற்காக தனது கணவருக்குத் தெரியாமல் பரண் மீது இருந்த பெட்டியில் பணத்தை சேமித்து வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d0a37c0-935b-4177-9b47-5c07cc8e1a16/26-6a8c469fb2aa1.webp' /></p><h2>எட்டு ஆண்டுகள் சேமித்த&nbsp; பணம்</h2><p>
</p><p>
எட்டு ஆண்டுகள் கழித்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) நகை வாங்க முடிவு செய்த அவர், பரண் மீது இருந்த பெட்டியை கீழே இறக்கி திறந்து பார்த்துள்ளார்.</p><p>

அத்தனை வருடங்கள் தான், குருவி போல் சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த பணத்தாள்களை எலிகள் துண்டு துண்டாக கடித்துப் போட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.</p><p></p><p> </p><p>

அதன் பின்னர், விடயத்தைத் தன் கணவரிடம் கூறி, கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

பிறகு அவர், அந்த கிழிந்த பணத்தாளை எண்ணிப் பார்த்தபோது, அதில் 12 இலட்சம் ரூபாய் இருந்துள்ளது.</p><p>

எலிகள் கடித்துக் கிழித்துப் போட்ட பணத்தாள்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏரியில் நீந்திய 8 வயது சிறுமி அரிய வகை தொற்றினால் பரிதாப மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/8-year-old-dies-from-rare-brain-eating-amoeba-1787573932"></link>
            <id>https://canadamirror.com/article/8-year-old-dies-from-rare-brain-eating-amoeba-1787573932</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் ஏரியில் நீந்தியபோது அரிய வகை உயிர்க்கொல்லி அமீபா தொற்றுக்கு உள்ளானதாகக் கருதப்படும் 8 வயது சிறுமி உயிரிழந்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் ஏரியில் நீந்தியபோது அரிய வகை உயிர்க்கொல்லி அமீபா தொற்றுக்கு உள்ளானதாகக் கருதப்படும் 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.</p><p>
வடக்கு லூசியானாவின் ருஸ்டொன் பகுதியைச் சேர்ந்த லில்லியன் ஸ்மார்ட் என்ற சிறுமி, தனது 8ஆவது பிறந்தநாளை கொண்டாடிய மறுநாளான சனிக்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>Naegleria fowleri எனப்படும் இந்த நுண்ணுயிரி பொதுவாக “மூளையை உண்ணும் அமீபா” என அழைக்கப்படுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8309194-fb6e-46ca-a985-13365b716517/26-6a8c36ae0ece3.webp' /></p><p>
லிலியன் இந்த அமீபா தொற்றை க்ளேய்போர்ன் ஏரியில் நீந்தியபோது பெற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது. அந்த ஏரி ருஸ்டன் நகரிலிருந்து சுமார் 48 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.</p><p>
குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், அமீபா தொற்றினால் சிறுமியின் மூளையில் ஏற்பட்ட பாதிப்பு மிகவும் தீவிரமாக இருந்ததால் அவர் குணமடைய முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.
</p><p>லிலியன் கடந்த ஆகஸ்ட் 15ஆம் திகதி காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அவரது உடல்நிலை வேகமாக மோசமடைந்து, இரட்டைப் பார்வை உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>Naegleria fowleri பொதுவாக வெப்பமான நன்னீர் ஏரிகள், ஆறுகள் மற்றும் குளங்கள் போன்ற இடங்களில் காணப்படும். அமீபா கலந்த நீர் மூக்கின் வழியாக உடலுக்குள் சென்று மூளையை அடையும் போது தீவிர மூளைத் தொற்று ஏற்படலாம்.</p><p>
இந்தத் தொற்று நீரை விழுங்குவதன் மூலம் ஏற்படாது என்பதுடன், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கும் பரவாது.
ஆரம்ப அறிகுறிகளில் தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை காணப்படலாம்.</p><p> பின்னர் கழுத்து இறுக்கம், குழப்பநிலை, சமநிலை இழப்பு உள்ளிட்ட தீவிர அறிகுறிகள் வேகமாக உருவாகக்கூடும்.
</p><p>அண்மைய ஆண்டுகளில் வெப்பநிலை அதிகரிப்பால் வடக்கு மற்றும் மத்திய அமெரிக்கப் பகுதிகளிலும் வெப்பமான நன்னீர் பரவலாகி வருவதால், இந்த அமீபா காணப்படும் பகுதிகள் விரிவடையக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் நிலையங்களில் பல கோடி ரூபாய் மோசடி - பொறுப்பின்றி செயற்பட்ட பணிப்பாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fraud-of-crores-of-rupees-at-fuel-stations-1787581165"></link>
            <id>https://tamilwin.com/article/fraud-of-crores-of-rupees-at-fuel-stations-1787581165</id>
            <summary type="text">மட்டக்களப்பு மற்றும் கல்முனை மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள்
திணைக்களங்களின் கீழ் உள்ள நான்கு மண்ணெண்ணெய் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் செயலிழந்து அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மற்றும் கல்முனை மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள்
திணைக்களங்களின் கீழ் உள்ள நான்கு மண்ணெண்ணெய் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் செயலிழந்து அதன் பொருட்கள் திருடப்பட்டு பல கோடி ரூபா அரச சொத்தை பராமரிக்க
தவறிய வீணடித்த அந்த இரு திணைக்கள அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
எடுக்க கோரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, நிதி குற்ற பிரிவு, மனித உரிமை
ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ய உள்ளதாக ஈ.பி.டி.பி.கட்சி மட்டு மாவட்ட
ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.
</p><p>
மட்டக்களப்பு ஈ.பி.டி.பி கட்சியின் வாராந்த ஊடக மாநாடு இன்று(24.08.2026)
பாலமீன்மடு காரியாலயத்தில் இடம்பெற்றது.</p><p>

இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2> 

எரிபொருள் நிலைய பொருட்கள் திருட்டு</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

கிழக்கு மாகாண கடற்றொழிலாளர்களின் வளர்ச்சிக்காக (IFAD) சர்வதேச விவசாய மேம்பாட்டு நிதியம் அமைப்பின் நிதியுதவியுடன் கிழக்கு மாகாணத்தில் 9 மண்ணெண்ணெய் எரிபொருள்
நிரப்பு நிலையங்கள் பல கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டு, தேசத்துக்கு மகுடம்
திட்டத்தின் கீழ் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்திடம்
வழங்கப்பட்டன.</p><p>

இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் 7 மண்ணெண்ணெய் நிரப்பு நிலையங்கள்
செயலிழந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a813692-7112-48f2-a562-06dec44d8551/26-6a8c537c68eff.webp' /></p><p> </p><p>இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்லாறு, காத்தான்குடி,
எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர், பாலமுனை ஆகிய
பிரதேசங்களில் அமைக்கப்பட்ட 4 எரிபொருள் நிலையங்களும் செயலிழந்துள்ளதுடன்,
அதில் இருந்த இலத்திரனியல் பொருட்கள் கட்டிட கதவுகள் உட்பட பல இலட்சம் ரூபா
பெறுமதியான பொருட்கள் திருட்டு போயுள்ளது.
</p><p>

இவ்வாறு செயலிழந்த நிலையில் காணப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பாக, அப்போது முதல் தற்போது வரை கல்முனை பிராந்திய மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களப் பணிப்பாளராக இருந்தவர், இது குறித்து திணைக்களத்தின் மேலதிகாரிகளுக்கு அறிவிக்கவில்லை.
</p><h2>
முறைப்பாட்டை பதிவுச் செய்யாத அதிகாரி</h2><p>
அத்துடன், அங்கு இடம்பெற்ற திருட்டு தொடர்பாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யாமல், தனது கடமையை முறையாக நிறைவேற்றத் தவறியதுடன், பல கோடி ரூபாய் பெறுமதியான அரச சொத்துக்களை முறையாகப் பராமரிக்கவும் தவறியுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. </p><p>


அவ்வாறே, அப்போது கல்முனை பிராந்திய பணிப்பாளராகவும், தற்போது மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களப் பணிப்பாளராகவும் இருந்து வரும் அவர், கல்முனை மற்றும் நிந்தவூர் மண்ணெண்ணெய் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் செயலிழந்துள்ளதுடன், அங்கு திருட்டுச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளமை தொடர்பாக மேலதிகாரிகளுக்கு அறிவிக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f83f6de6-15d1-441c-93d4-7a8dbbe7a1ce/26-6a8c537d32ee8.webp' /></p><p>
</p><p>
இதன் மூலம் தனது கடமையை முறையாக நிறைவேற்றத் தவறியதுடன், பல கோடி ரூபாய் பெறுமதியான அரச சொத்துக்களை முறையாகப் பராமரிக்கவும் அவர் தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த இரு எரிபொருள் நிரப்பு நிலையங்களும் மீனவர் சங்கங்களிடம் குத்தகை அடிப்படையில் பெறப்பட்டுள்ளதுடன், மாதாந்தம் தலா 30,000 ரூபாய் மீனவர் சங்கங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
</p><p>
அத்துடன், மீனவர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு தனது சொந்தப் பணத்தில் இருந்து 10,000 ரூபாய் நிதியுதவியாக வழங்கி வருகின்றது என்றார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T14:22:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் ஆயிரக்கணக்கான மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/measures-procure-2-000-metric-tonnes-of-paddy-1787581139"></link>
            <id>https://tamilwin.com/article/measures-procure-2-000-metric-tonnes-of-paddy-1787581139</id>
            <summary type="text">மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக்
தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக்
தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்க அதிபர் க.
கனகேஸ்வரன் தெரிவித்தார்.</p><p>மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (24.8.2026) மாலை இடம்பெற்ற ஊடக
சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக, நாட்டு அரிசியின்(நெல்) விலை 120
ரூபாய், சம்பா அரிசியின்(நெல்) விலை 130 ரூபாய்க்கு கொள்வனவு செய்வதற்கு உரிய
ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.</p><h2>உரிய நடவடிக்கைகள்&nbsp;</h2><p>
</p><p>
அதேபோல் கீரிச் சம்பாவாக (நெல்) இருந்தால் 140 ரூபாய்க்கு கொள்வனவு
செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80c220f2-c043-4886-a0a3-60bb151cbaa4/26-6a8c52d664fee.webp' /></p><p>
</p><p>
தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2,000 மெட்ரிக் தொன் அளவிலான
நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>இதனைவிட, தற்போது மன்னார் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள், அதேபோன்று
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான மில் உரிமையாளர்கள் ஒவ்வொருவருக்கும் 25
மில்லியன் ரூபாய் நிதி வழங்கி, அவர்கள் ஊடாகவும் விவசாயிகளிடம் உள்ள நெல்லைக்
கொள்வனவு செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனக் குறிப்பிட்டார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T14:19:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் அதிகரிக்கும் முதியோர் மக்கள் தொகை - சமூகச் செலவுகள் உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-social-spending-hits-record-high-1787581219"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-social-spending-hits-record-high-1787581219</id>
            <summary type="text">Germany social spending hits record high: ஜேர்மனியின் முதியோர் மக்கள் தொகை காரணமாக சமூகச் செலவுகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சமூகச் செலவுகள்&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>Germany social spending hits record high: ஜேர்மனியின் முதியோர் மக்கள் தொகை காரணமாக சமூகச் செலவுகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.</p><h2>

சமூகச் செலவுகள்&nbsp;உயர்வு</h2><p>ஜேர்மனியில் முதியோர் மக்கள் தொகை அதிகரிப்பின் காரணமாக சமூகச் செலவுகள் வரலாற்றிலேயே அதிக உயர்வை எட்டியுள்ளதாக Ifo Institute வெளியிட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b09ad37a-9ad4-4f6f-bc20-1239ce36be85/26-6a8c532498538.webp' /></p><p>2025-ஆம் ஆண்டில், வயது முதிர்ச்சி மற்றும் நோய்கள் தொடர்பான செலவுகள் மொத்த சமூகச் செலவுகளில் சுமார் 70 சதவீதமாக இருந்தது.
</p><p>
1992-ஆம் ஆண்டிலிருந்து சமூகச் செலவுகளில் ஏற்பட்ட உண்மையான உயர்வில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டவை முதியோர் மற்றும் நோய்கள் தொடர்பான செலவுகளால் ஏற்பட்டதாக ஆய்வு கூறுகிறது.
</p><p>
Ifo ஆராய்ச்சியாளர் எமிலி ஹோஸ்லிங்கர், “சமூகச் செலவுகள் GDP-வை விட வேகமாக உயர்கின்றன. அதனால் பலவீனமான பொருளாதார நிலையும் சமூகச் செலவுகளின் பங்கை அதிகரிக்கச் செய்கிறது” என தெரிவித்துள்ளார்.
</p><p></p><h2>GDP-யில்&nbsp;32 சதவீதம்</h2><p>2019 முதல் 2025 வரை, சமூகச் செலவுகள் 11.5 சதவீதம் உடர்ந்துள்ளன. இது சுமார் 104 பில்லியன் யூரோ (121.33 பில்லியன் டொலர்) ஆகும். இதே காலத்தில், சமூகச் செலவுகள் GDP-யில் 29.6 சதவீதமாக இருந்தது. ஆனால் இப்போது 32 சதவீதமாக உயர்ந்துள்ளது.</p><p>

</p><h2>
செலவுகளுக்கான முக்கிய காரணிகள்:
</h2><ul><li>
முதியோர் மக்கள் தொகைக்கு மருத்துவம் மற்றும் பராமரிப்பு செலவுகள்</li><li>

கூட்டாட்சி ஓய்வூதியக் கட்டணங்கள் அதிகரித்தது
</li></ul><p></p><p>ஜேர்மனியின் மக்கள் தொகை அமைப்பில் ஏற்பட்ட மாற்றம், தலைமுறைகளுக்கிடையே நலவாழ்வு சுமையை அதிகரிக்கிறது. இதனால், அரசின் நிதி நிலைமைக்கு பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.</p><p>

இந்த நிலை, ஜேர்மனியின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கக்கூடியதாகவும், எதிர்காலத்தில் சமூகச் செலவுகள் மேலும் அதிகரிக்கக்கூடியதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T14:17:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027ஆம் ஆண்டிற்கான பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/announcement-of-exam-dates-for-the-year-2027-1787579988"></link>
            <id>https://ibctamil.com/article/announcement-of-exam-dates-for-the-year-2027-1787579988</id>
            <summary type="text">2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள முக்கிய பாடசாலைப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.இந்தப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள முக்கிய பாடசாலைப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>இந்தப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திக குமாரி லியனகே அறிவித்துள்ளார்.</p><p>
</p><p>
பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின்படி, ''5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை 2027 ஆகஸ்ட் 1ஆம் திகதி நடைபெறவுள்ளது.</p><p></p><h2>தேவையான முன்னேற்பாடுகள்</h2><p>''கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை (G.C.E. A/L) 2027 ஆகஸ்ட் 3ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d9128f8-eb29-461d-b740-a95e9ab21c21/26-6a8c4e5616d4b.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை (GIT) 2027 ஒக்டோபர் 24ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (G.C.E. O/L) 2027 டிசம்பர் 7ஆம் திகதி முதல் டிசம்பர் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது"&nbsp;என்றுள்ளது </p><p>
அறிவிக்கப்பட்டுள்ள பரீட்சைத் திகதிகளுக்கு அமைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் பாடசாலைகள் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T14:15:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[503 ஓட்டங்கள் குவித்து இந்தியா டிக்ளேர்: இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dhruv-jurel-century-in-colombo-india-503-1787580388"></link>
            <id>https://news.lankasri.com/article/dhruv-jurel-century-in-colombo-india-503-1787580388</id>
            <summary type="text">Dhruv Jurel century in Colombo: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 503 ஓட்டங்கள் குவித்தது.

கொழும்பில் நடந்து வரும் இலங்கை அணிக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Dhruv Jurel century in Colombo: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 503 ஓட்டங்கள் குவித்தது.
</p><p>
கொழும்பில் நடந்து வரும் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், இந்தியா 503 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.&nbsp;</p><h2>துருவ்&nbsp;ஜுரேல்&nbsp;சதம் </h2><p>

கொழும்பில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், இந்திய அணியில் ரிஷாப் பண்ட் 89 பந்துகளில் 63 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68c3ab27-80c7-4807-bea0-1233d25f1ac0/26-6a8c511182c43.webp' />&nbsp;</p><p></p><p>
அவரைத் தொடர்ந்து அரைசதம் கடந்த துருவ் ஜுரேல் (Dhruv Jurel) அபாரமாக ஆடி சதம் விளாசினார். </p><p>

ஜுரேல் 2 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 115 ஓட்டங்கள் விளாச, இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 503 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
</p><p>
அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளும், பிரபத் ஜெயசூரியா மற்றும் கேஷாரா நுவந்தா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். </p><h2>

பிரசித் கிருஷ்ணா கொடுத்த அதிர்ச்சி </h2><p>
பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணிக்கு இரண்டாவது ஓவரில் பிரசித் கிருஷ்ணா அதிர்ச்சி கொடுத்தார்.</p><p>

அவரது பந்துவீச்சில் லஹிரு உதாரா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய பிரபத் ஜெயசூரியா 2 ஓட்டங்களில் மானவ் சுதர் ஓவரில் அவுட் ஆனார்.</p><p> 

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 8 ஓட்டங்கள் எடுத்துள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d4ef919-f34d-4b15-86d2-a39085655b80/26-6a8c511272f50.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T14:08:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு திகதி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attakc-case-verdict-on-22-sep-1787579783"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attakc-case-verdict-on-22-sep-1787579783</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொர்பிலான வழக்கு விசாரணையின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22ம் திகதி வழங்கப்பட உள்ளது.உயிர்த்த ஞாயிறு தற...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொர்பிலான வழக்கு விசாரணையின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22ம் திகதி வழங்கப்பட உள்ளது.</p><p>உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுக்கான சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அத்தாக்குதலுக்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் 25 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணை செய்யப்பட்டது.</p><p>இந்த வழக்கின் தீர்ப்பு, செப்டம்பர் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு நிரந்தர மூவர் கொண்ட மேல் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் தீர்மானித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6110a764-4fa0-4c6e-9765-13467eeb3252/26-6a8c4ecd92aa1.webp' /></p><p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு சிறப்பு மூவர் கொண்ட மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
</p><p>உயிர்த்த ஞாயிறு வழக்கின் பிரதிவாதிகள் தரப்பு வாய்மொழிச் சமர்ப்பணங்கள் இன்று மாலை 6.00 மணியளவில் நிறைவடைந்த நிலையில், இரு தரப்பினரின் எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்களை வரும் செப்டம்பர் மாதம் 08 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் இதன்போது உத்தரவிட்டது.
</p><p>கொழும்பு சிறப்பு மூவர் கொண்ட மேல் நீதிமன்ற நீதியரசர்களான நவரத்ன மாரசிங்க (தலைமை நீதியரசர்), சுஜீவ நிஸ்சங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இத்தகவல் வெளியானது.</p><p>
இவ்வழக்கின் முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சியப் பதிவுகள் கடந்த (13) ஆம் திகதி பிற்பகலுடன் நிறைவடைந்தன.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகள் 25 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் சுமத்தப்பட்டிருந்தன.
</p><p>இவ்வழக்கில் பிரதிவாதிகளின் 10 வாக்குமூலங்களை நீதிமன்றம் சாட்சியங்களாக ஏற்றுக்கொண்டுள்ளதோடு, மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகள், வெடிபொருட்கள், வாள்கள், துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் உட்பட 2,076 வழக்குப்பொருட்கள் விசாரணையின் போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரியவந்தது.
</p><p>அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகள் பலவும், அதிகளவிலான டி.என்.ஏ அறிக்கைகள், மருத்துவ அறிக்கைகள் மற்றும் மரண பரிசோதனை அறிக்கைகளும் சான்றுகளாகப் பதிவேற்றப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p>
நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பிரதிவாதிகளுக்கு எதிராகவே சட்டமா அதிபரால் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான 23,270 குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.&nbsp;</p><p>இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்ட 25 பிரதிவாதிகளில் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி இடம்பெற்ற இந்த தொடர் தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 270க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன், 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கு ஒன்றின் தீர்ப்பின் பிரகாரம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.</p><p>உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் வழக்குகள் குறித்த விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-24T14:02:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் முதாலாளி பெண் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-attacked-with-a-sharp-weapon-in-batticaloa-1787574434"></link>
            <id>https://jvpnews.com/article/woman-attacked-with-a-sharp-weapon-in-batticaloa-1787574434</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மட்டக்களப்பில் காத்தான்குடி ஷரீப் வீதியில் வசிக்கும் 68 வயதுடைய பெண் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை (23) அன்று வீட்டில் தனியாக இருந்தபோது நபர் ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மட்டக்களப்பில் காத்தான்குடி ஷரீப் வீதியில் வசிக்கும் 68 வயதுடைய பெண் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை (23) அன்று வீட்டில் தனியாக இருந்தபோது நபர் ஒருவரால் கூரிய ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.
</p><p>
 தாக்குதலுக்குள்ளான பெண் தனது வீட்டிற்கு அருகில் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f65241fb-eb02-4083-ae9c-4396ac0cc812/26-6a8c38a38d924.webp' /></p><p> </p><p>

பொருட்கள் வாங்குவதற்காக இக்கடைக்கு வந்த இரண்டு சிறுவர்கள், இப்பெண் காயமடைந்திருப்பதைக் கண்டு அப்பகுதியில் உள்ள பெரியவர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். </p><p>
அதனைத் தொடர்ந்து, அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>
இத்தாக்குதலை நடத்தியவர் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காத்தான்குடிப் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[குட்டையாடையணிந்து போஸ்!! நடிகை ஆஷ்னா சவேரியின் புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/model-actress-ashna-zaveri-recent-photos-1787565603"></link>
            <id>https://viduppu.com/article/model-actress-ashna-zaveri-recent-photos-1787565603</id>
            <summary type="text">வல்லவனுக்கு புள்ளும் ஆயுதம் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகியவர் தான் நடிகை ஆஷ்னா சவேரி.]

இப்படத்தினை தொடர்ந்து இனிமே இப்படித்தான...</summary>
            <content type="html"><![CDATA[<p>வல்லவனுக்கு புள்ளும் ஆயுதம் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகியவர் தான் நடிகை ஆஷ்னா சவேரி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f7b96b5-1ad9-45f6-8da1-bb2b05df4233/26-6a8c16297e41b.webp' />]</p><p>
</p><p>
இப்படத்தினை தொடர்ந்து இனிமே இப்படித்தான், மீன் குழம்பும் மாண் பானையும், பிரம்மா.காம், நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு, கன்னித்தீவு, மை3, திரைவி, வல்லவன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
</p><p>
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆஷ்னா, கிளாமர் போட்டோஷூட் பதிவுகளை பகிர்வார்.தற்போது குட்டையான ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-24T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுககேளின் போராட்டத்துக்கு தமிழ்த்தேசியப் பேரவை ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/struggle-of-relatives-of-the-disappeared-jaffna-1787579075"></link>
            <id>https://ibctamil.com/article/struggle-of-relatives-of-the-disappeared-jaffna-1787579075</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டிற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் 
தமிழ்த்தேசியப் பேரவை தனத...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டிற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் 
தமிழ்த்தேசியப் பேரவை தனது முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது.
</p><p>
இது தொடர்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ்
நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையில், 

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிப் போராட்டத்தை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்ல
வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பான நேரடி சாட்சிகளாக இருந்த
தாய்மார்கள் மற்றும் வயோதிப பெற்றோர்கள் வயது முதிர்வு மற்றும் இயற்கை மரணம்
காரணமாக ஒவ்வொருவராக உயிரிழந்து வருவதாக சுகாஸ் சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>ஆதாரங்களும் அழிந்துபோகும் அபாயம்&nbsp;</h2><p>
</p><p>
அதோடு காலம் மேலும் கடந்து செல்லும் நிலையில், முக்கியமான சாட்சியங்களும்
ஆதாரங்களும் அழிந்துபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் சர்வதேச
விசாரணைக்கான வாய்ப்பு உருவானாலும் சாட்சியங்கள் இல்லாத நிலை ஏற்பட்டால்
நீதியைப் பெற்றுக்கொள்வது கடினமாகிவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2784248c-0125-4e67-b7b1-2f9f23c0d358/26-6a8c4ac60f3e8.webp' /></p><p>

''காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தமது குடும்பங்களுக்காகவோ தனிப்பட்ட நலன்களுக்காகவோ
காணாமல் ஆக்கப்படவில்லை. அவர்கள் தமிழ் மக்களின்
உரிமைகள் மற்றும் விடுதலைக்கான போராட்டத்தின் பின்னணியில் காணாமல்
ஆக்கப்பட்டவர்கள்.
</p><p>
எனவே, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்தை தனிப்பட்ட
குடும்பங்களின் பிரச்சினையாக மாத்திரம் கருதாமல், ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களின்
நீதிக்கான போராட்டமாக அணுக வேண்டும்.
</p><p>
தமிழ் மக்கள், சிவில் அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகங்கள்
மற்றும் அரசியல் தரப்புகள் அனைவரும் இந்த விடயத்தில் ஒன்றிணைந்து குரல்
கொடுக்க வேண்டும்." எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார் .</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T13:55:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் 45 கப்பல்களுக்கு ஈரான் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-bans-45-ships-in-the-strait-of-hormuz-1787579287"></link>
            <id>https://tamilwin.com/article/iran-bans-45-ships-in-the-strait-of-hormuz-1787579287</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையைக் கடப்பதற்கான புதிய விதிமுறைகளை மீறியதாகக் கூறி, 45
எண்ணெய் மற்றும் எரிவாயு கொண்டு செல்லும் கப்பல்களை ஈரான் கருப்புப்
பட்டியலில் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையைக் கடப்பதற்கான புதிய விதிமுறைகளை மீறியதாகக் கூறி, 45
எண்ணெய் மற்றும் எரிவாயு கொண்டு செல்லும் கப்பல்களை ஈரான் கருப்புப்
பட்டியலில் சேர்த்துள்ளதுடன், அவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
எனவும் எச்சரித்துள்ளது.
</p><p>
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் நீடித்து வரும்
சூழ்நிலையில், ஈரான் தனது கடல்சார் எல்லைக் கட்டுப்பாடுகளை
தீவிரப்படுத்தியுள்ளது. </p><p>இதன் ஒரு பகுதியாக, ஈரானால் புதிதாக
உருவாக்கப்பட்டுள்ள 'பாரசீக வளைகுடா நீரிணை அதிகாரசபையினால்' இந்த அதிரடி
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>ஈரான் தடை</h2><p>

குறிப்பிட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள கப்பல்கள் ஈரானியப் பிராந்தியத்திற்குள்
நுழையும் பட்சத்தில், அவை தடுத்து வைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுவதுடன்,
அவற்றில் உள்ள சரக்குகளும் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அத்துடன், இந்த தடை விதிக்கப்பட்ட கப்பல்களுடன் கடலில் வைத்து சரக்குகளைப்
பரிமாறிக்கொள்ளும் ஏனைய பிற கப்பல்களும் உடனடியாகக் கருப்புப் பட்டியலில்
சேர்க்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/045c942f-7439-4e85-b2c5-d0f508f64444/26-6a8c4d321ad3d.webp' /></p><p>
</p><p>
</p><p>மற்றும் தென்கொரியா, நோர்வே போன்ற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின்
கப்பல்களும் அடங்குகின்றன.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையைக் கடப்பதற்கு ஈரானிய கடற்படை அதிகாரிகளிடம் முன்அனுமதி பெற
வேண்டும் என்றும், பாதுகாப்பு சேவைகளுக்கான கட்டணங்களைச் செலுத்த வேண்டும்
என்றும் ஈரான் வலியுறுத்தி வருகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T13:55:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஹோர்மோஸில் புதிய நிபந்தனையை விதித்தது ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-imposes-new-conditions-on-hormuz-1787577843"></link>
            <id>https://ibctamil.com/article/iran-imposes-new-conditions-on-hormuz-1787577843</id>
            <summary type="text">ஈரான் மீதான இதுவரை இல்லாத மிகப்பெரிய நிதித் தாக்குதலை நடத்தவுள்ள திட்டம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகவும், ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போரும் இறுதிநில...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான இதுவரை இல்லாத மிகப்பெரிய நிதித் தாக்குதலை நடத்தவுள்ள திட்டம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகவும், ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போரும் இறுதிநிலையை அடைந்துள்ளதாக அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்காட் பெசென்ட் எச்சரித்துள்ளார்.
</p><p>
ஒரு பொருளாதார பேரழிவு நாளில் அமெரிக்கா அந்நாட்டுடனான அனைத்து பொருளாதார உறவுகளையும் துண்டிக்கும் என்றும், ஈரானுடன் நிதி ரீதியாக கூட்டு சேரும் எந்தவொரு நாடும் தனிமைப்படுத்தப்படும் என்றும் ஸ்காட் பெசென்ட் கூறியுள்ளார்.
</p><p>
முந்தைய அச்சுறுத்தல்கள் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் பலமுறை தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, காலக்கெடுவை நீட்டித்ததைத் தொடர்ந்து, ஈரானிய ஆட்சிக்கு பெசென்ட் இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.</p><p></p><p>
</p><h2>ஈரான் புதிய எச்சரிக்கை</h2><p>
இந்நிலையில் பெசென்ட்டின் கருத்துக்களை ஈரான் நிராகரித்ததோடு, போர் தொடர்ந்தால் அப்பகுதியிலிருந்து அனைத்து எண்ணெய் ஏற்றுமதியையும் நிறுத்திவிடும் என்றும் எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03bcae47-2496-4028-9015-833b2608e3d6/26-6a8c4715a135f.webp' /></p><p>
 

மேலும் தனது அனுமதியின்றி ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்லக்கூடாது என ஈரான் அரசு புதிய எச்சரிக்கை விடுத்துள்ளதாகஉம கூறப்படுகிறது.
</p><p>
 உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு வழக்கமாக ஈரானுக்குத் தெற்கே உள்ள நீர்வழியான குறித்த நீரிணை வழியாகச் செல்கிறது, ஆனால் பெப்ரவரி மாத இறுதியில் மோதல் தொடங்கியதிலிருந்து அந்த நாடு இந்த ஓட்டத்தைத் திறம்படத் தடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T13:47:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருணாவின் கிரான் தாக்குதல்: தராக்கி சிவராம் நூலிழையில் உயிர் தப்பிய வரலாற்று நடப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/story-shivaram-s-escape-from-the-clutches-of-fate-1787576779"></link>
            <id>https://ibctamil.com/article/story-shivaram-s-escape-from-the-clutches-of-fate-1787576779</id>
            <summary type="text">புளொட் அமைப்புக்கும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான மோதல் நிலைமைகள் 1987 ஆண்டு காலப்பகுதியில் தீவிரமடைந்திருந்தன.

இந்த காலப்பகுதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>புளொட் அமைப்புக்கும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான மோதல் நிலைமைகள் 1987 ஆண்டு காலப்பகுதியில் தீவிரமடைந்திருந்தன.</p><p>

இந்த காலப்பகுதியில் இருதரப்பு மோதல்களால் இடம்பெற்ற படுகொலைகள், மற்றும் கிரானில் இடம்பெற்ற பாரிய மோதல் சம்பவங்களை அந்த காலத்து பத்திரிகைகள் அடிகோடிட்டிருந்தன.
</p><p>
மட்டக்களப்பில் புளொட் மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்புக்களிடையே மூண்ட தாக்குதல்களின் திட்டமிடல்கள், இதில் புளொட் அமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகள் என்பவற்றையும் பத்திரிகைகள் மையப்படுத்தியிருந்தன.</p><p>
இவ்வாறு மட்டக்களப்பில் இந்த மோதல் எங்கிருந்து ஆரம்பித்தது, அதில் கொல்லப்பட்ட முக்கிய தளபதிகள் யார், மேலும் கருணா எந்த இடத்தில் தனது திட்டத்தை செயல்படுத்துகிறார் என்பது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் உண்மைகள்...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/fzi0rELjLX4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T13:46:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருணா அழைத்துச் சென்று படுகொலை செய்தாரா? 39 வருடங்களுக்குப் பின் வெளிவரும் உண்மை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/did-karuna-take-him-away-and-murder-him-1787578760"></link>
            <id>https://tamilwin.com/article/did-karuna-take-him-away-and-murder-him-1787578760</id>
            <summary type="text">இலங்கையில் இந்திய இராணுவத்தினருக்கு எதிராகச் செயற்பட்டு வந்த ஹொட் அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்த சுபாஷ், கருணாவின் பணிப்புரையின் பேரில் படுகொலை ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இந்திய இராணுவத்தினருக்கு எதிராகச் செயற்பட்டு வந்த ஹொட் அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்த சுபாஷ், கருணாவின் பணிப்புரையின் பேரில் படுகொலை செய்யப்பட்டதாகவும், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் பல்வேறு முக்கிய காரணிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
விடுதலைப்புலிகள் அமைப்பில் மட்டக்களப்பு பிரதேசத்திற்குத் தலைமை தாங்கிய கருணாவை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யுமாறு சுபாஷ், தனது உறுப்பினர்களுக்கு கட்டளை பிறப்பித்ததாக கூறப்படுகிறது. எனினும், அந்தத் தாக்குதலை அவர்கள் மேற்கொள்ளவில்லை.</p><p>

இதற்குப் பழிவாங்கும் வகையில், கிரான் சந்தியில் வைத்து புலிகள் அமைப்பின் உறுப்பினர்களால் சுபாஷ் படுகொலை செய்யப்பட்டதாகவும், அவருடன் ஹொட் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவரும் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>

இவ்வாறு கருணா - சுபாஷ் ஆகியோர் அக்காலகட்டத்தில் எவ்வாறான சம்பவங்களின் பின்னணியில் செயற்பட்டனர் என்பது தொடர்பான பல்வேறு விடயங்களை “உண்மைகள்” நிகழ்ச்சி ஆராய்கிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/fzi0rELjLX4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T13:41:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல்வரின் அறிவிப்பு போட்டி மாநிலங்களுக்கு ஜாக்பாட் - முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/mk-stalin-slams-cm-vijay-for-drop-parandur-airport-1787578770"></link>
            <id>https://ibctamilnadu.com/article/mk-stalin-slams-cm-vijay-for-drop-parandur-airport-1787578770</id>
            <summary type="text">mk stalin slams cm vijay for drop parandur airport project: பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>mk stalin slams cm vijay for drop parandur airport project: பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும் என முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.</p><h3> 

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்ட தமிழக அரசு</h3><p> 

சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் விஜய், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5424602a-b1d0-4731-baf1-bdec8f70a8c5/26-6a8c499371ff7.webp' /></p><p> 

இதுகுறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததாக கூறி திமுகவினர் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
</p><p>
முதல்வரின் இந்த அறிவிப்பை விமர்சித்துள்ள முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், "பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும் என தெரிவித்துள்ளார். </p><p>

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பரந்தூர் பன்னாட்டு விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு மாநில வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும். அற்ப அரசியல் காரணங்களுக்காகத் தமிழ்நாட்டின் நலனை அடகு வைக்கக் கூடாது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c3fda66-259b-486d-be35-772eca350ba8/26-6a8c49942354d.webp' /></p><p>
மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை விதி எண் 110-இன்கீழ் அறிவித்துவிட்டு விவாதத்துக்கோ கருத்து தெரிவிக்கவோ கூட இடமில்லாமல் செய்திருப்பது சரியல்ல.
</p><p>
மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி, ஆட்டோமொபைல் என சகல துறைகளிலும் முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டின் தலைநகரில் உலகத் தரத்திலான ஒரு விமான நிலையம் அமைவது மிக மிக அவசியமானது. அதை வேண்டாம் என மறுத்திருப்பது மாற்றமல்ல; பெருத்த ஏமாற்றம்!
</p><p>
சாத்தியமுள்ள அனைத்து மாற்று இடங்களையும் கவனமாகப் பரிசீலித்த பின்புதான் பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தலும் நிறைவடையும் தறுவாயில் உள்ளது. </p><p>

பலகட்டப் பணிகள், ஒப்புதல்கள் நிறைவடைந்த நிலையில் ஆட்சிக்கு வந்ததும் கட்டுமானம் விரைந்து தொடங்கப்பட பல திட்டங்களை நாங்கள் வைத்திருந்தோம். தற்போது அமைந்துள்ள புதிய அரசு மீண்டும் வேறு இடத்தைத் தேர்வு செய்து பணிகள் தொடங்குமுன், தமிழ்நாட்டின் வளர்ச்சியே மொத்தமாக DROP ஆகிவிடும்.</p><p> 

முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக #DravidianModel ஆட்சியில் இருந்த தமிழ்நாடு கடைசி இடத்துக்குத் தள்ளப்படும். முதலமைச்சரின் அறிவிப்பு நம் போட்டி மாநிலங்களுக்கு அடித்த ஜாக்பாட்!&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Dropping Parandur is not Change. It&#39;s an irreversible setback for Tamil Nadu&#39;s growth<br><br>The announcement made today by the Hon’ble Chief Minister of Tamil Nadu to drop the Parandur International Airport project will set the State’s development back by several years. Tamil Nadu’s… <a href="https://t.co/QHZdVdK21L">pic.twitter.com/QHZdVdK21L</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2091799886542815579?ref_src=twsrc%5Etfw">August 24, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
தொழில் வளர்ச்சி இல்லாமல் ஒரு ட்ரில்லியன் டாலர், ஒன்றரை டரில்லியன் டாலர் என்ற பொருளாதார வளர்ச்சி இலக்குகள் சாத்தியமே இல்லை.
</p><p>
எந்த யோசனையும் ஆலோசனைகளும் இல்லாமல் த.வெ.க. அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைத் தகர்க்கும் பேரிடி!" என தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T13:39:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலின் பிரபல நிழல் உலக தாதா சுட்டுக்கொலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/israel-underworld-don-yanis-yushvaev-shot-dead-1787576498"></link>
            <id>https://canadamirror.com/article/israel-underworld-don-yanis-yushvaev-shot-dead-1787576498</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இஸ்ரேலின் பிரபல நிழல் உலக தாதாவும், “காகசஸ் மாஃபியா” (Caucasian Jewish Mafia) அமைப்பின் தலைவருமான யானிஸ் யுஷ்வேவ் (Yanis Yushvaev – 40) ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இஸ்ரேலின் பிரபல நிழல் உலக தாதாவும், “காகசஸ் மாஃபியா” (Caucasian Jewish Mafia) அமைப்பின் தலைவருமான யானிஸ் யுஷ்வேவ் (Yanis Yushvaev – 40) சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

கிசாரியா (Caesarea) பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் உள்ள உணவகம் ஒன்றிலிருந்து வெளியறியபோது, மர்ம நபர் ஒருவரால் மிக அருகில் வைத்துத் தலையில் சுடப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15c822b7-abd3-4540-bba3-19c917549912/26-6a8c40b40aade.webp' /></p><p><span style="font-size: 28px;">&nbsp;</span><span style="color: inherit; font-size: 1.75rem;">தப்பியோடிய கொலையாளி</span></p><p>
</p><p>
ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட யானிஸ் யுஷ்வேவ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.</p><p> 

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்ட நிலையில், தப்பியோடிய கொலையாளியைப் பிடிக்க இஸ்ரேல் காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளது.</p><p> 

இக்கொலை சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

 40 வயதான யானிஸ் யுஷ்வேவ், இஸ்ரேலிய காவல்துறையின் குற்றப் பட்டியலில் முக்கிய நபராக இருந்துவந்துள்ளார்.</p><p> 

துப்பாக்கிச் சூடு, கையெறி குண்டு வீச்சு மற்றும் வாகனங்களுக்குத் தீ வைப்பு உள்ளிட்ட பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் இவர் மீது சந்தேகத்தின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் எந்த வழக்குகளிலும் அவர் தண்டிக்கப்படவில்லை.
</p><p>

கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளில், தான் ஒரு நேர்மையான தொழிலதிபர் என்றும், சொகுசு கார்களைப் பயன்படுத்துவதால் காவல்துறை தன் மீது வீண் சந்தேகம் கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.</p><p> 

இருப்பினும், இஸ்ரேலில் இயங்கி வரும் காகசியன் யூத மாஃபியா கும்பலின் தலைவராகச் செயல்பட்டு வந்த இவரின் படுகொலை, போட்டியின் காரணமாக நடந்திருக்கலாம் என இஸ்‌ரேல் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T13:38:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவில் மீளப்பெறப்படும் 40 இலட்சத்துக்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nearly-three-million-teslas-recalled-1787569790"></link>
            <id>https://canadamirror.com/article/nearly-three-million-teslas-recalled-1787569790</id>
            <summary type="text">மின்சார வாகனங்களின் நவீன வடிவமைப்பின் முக்கிய அடையாளமாக மாறியுள்ள மறைவு கதவுக் கைப்பிடிகள் தற்போது சீனாவின் மிகப்பெரிய வாகன மீளப்பெறும் நடவடிக்கைக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மின்சார வாகனங்களின் நவீன வடிவமைப்பின் முக்கிய அடையாளமாக மாறியுள்ள மறைவு கதவுக் கைப்பிடிகள் தற்போது சீனாவின் மிகப்பெரிய வாகன மீளப்பெறும் நடவடிக்கைக்கு காரணமாகியுள்ளன.</p><p>
சீனாவில் தயாரிக்கப்பட்ட சுமார் 29.8 இலட்சம் டெஸ்லா வாகனங்கள் உட்பட மொத்தம் 40 இலட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் இந்த நடவடிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
டெஸ்லா, ஸிபஙெ், ஸியோமி மற்றும் ஜீலி உள்ளிட்ட நிறுவனங்களின் சில மின்சார வாகனங்கள் இதில் அடங்குகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/295d0a80-a144-4194-ad41-181e2a8b9c1e/26-6a8c268101a4a.webp' /></p><p>
</p><p>விபத்து அல்லது அவசரநிலை ஏற்படும் போது, வாகனத்தின் உட்புறத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ள கதவுக் கைப்பிடிகளை கண்டுபிடித்து திறப்பது கடினமாக இருக்கலாம் என்ற பாதுகாப்பு கவலைகள் எழுந்துள்ளன.</p><p>
குறிப்பாக, கடுமையான மோதலின் காரணமாக வாகனத்தின் குறைந்த மின்னழுத்த மின்சார அமைப்பு செயலிழந்தால், பயணிகள் விரைவாக வாகனத்திலிருந்து வெளியேறுவதற்கு இது தடையாக இருக்கலாம் என்றும், வெளியில் இருந்து மீட்புப் பணியில் ஈடுபடுவோருக்கும் சிரமத்தை ஏற்படுத்தலாம் என்றும் டெஸ்லா தெரிவித்துள்ளது.</p><p>
மீளப்பெறப்படும் வாகனங்களில் உட்புறக் கதவுகளில் பாதுகாப்பு எச்சரிக்கை ஒட்டிகள் பொருத்தப்படுவதுடன், விபத்து ஏற்பட்டால் வாகனத்தின் ஜன்னல்கள் தானாகக் கீழிறங்கும் வகையில் மென்பொருள் புதுப்பிப்பு வழங்கப்பட உள்ளது.</p><p>
சீனாவில் ஸியோமி நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் தொடர்பான இரண்டு உயிரிழப்பு விபத்துகளுக்குப் பின்னரும் இந்த கதவுக் கைப்பிடி வடிவமைப்பு தொடர்பான பாதுகாப்பு கேள்விகள் தீவிரமடைந்துள்ளன.
</p><p> அந்த சம்பவங்களில் மின்சார அமைப்பு செயலிழந்ததால் கதவுகளைத் திறக்க முடியாமல் போயிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது.
இந்த மீளப்பெறும் நடவடிக்கை சீனாவுக்கு வெளியே விற்பனை செய்யப்பட்ட இதே வகை வாகனங்களுக்கும் பொருந்துமா என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T13:37:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முருகன் முப்பாட்டனா .... சீமானுக்கு குட்டு வைத்த யாழ் சிறுவன்; வைரலாகும் காணொளி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-boy-speech-goes-viral-sannathi-murugan-1787564643"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-boy-speech-goes-viral-sannathi-murugan-1787564643</id>
            <summary type="text">&amp;nbsp; முருகன் முப்பாட்டனா .....இறைவனா... என்ற தலைப்பில் மிகச்சிறப்பான ஒரு பேருரையை இந்த யாழ்ப்பாணத்துச் சிறுவன் நிகழ்த்திப் பல போலித் தமிழ் தேசியவாதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முருகன் முப்பாட்டனா .....இறைவனா... என்ற தலைப்பில் மிகச்சிறப்பான ஒரு பேருரையை இந்த யாழ்ப்பாணத்துச் சிறுவன் நிகழ்த்திப் பல போலித் தமிழ் தேசியவாதிகளின் பொய் பிரச்சாரங்களை தவிடுபொடி ஆக்கியுள்ளான். </p><p>

அதுமட்டுமல்லாது முருகன் தனது முப்பாட்டன் என கூறும் சீமானுக்கும் போற போக்கில் ஒரு டொக்கு வைத்து விட்டான் யாழ் சிறுவன்.&nbsp; </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0812aefb-233e-42d2-9e05-94e4e275bdd6/26-6a8c12652be39.webp' /></p><h2>நாடு கடந்து வைரலாகும்&nbsp; காணொளி..</h2><p>வரலாற்று பிரசித்தி பெற்ற செல்வச்சன்னதி&nbsp; ஆலய வருடாந்த மகோற்சப பெருவிழா இடம்பெற்றுவரும் நிலையில்&nbsp; ஆலயத்தில் இடம்பெற்ற சிறுவனின்&nbsp; இந்த பேச்சானது சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1092978783085202%2F&show_text=false&width=267&t=0" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>தமிழ் தேசியம் என கூறி சைவர்களை சிலர் பித்தலாட்டம் செய்து வழிமாற்றி வருகின்றதாகவும் சிறுவன் எச்சரித்துள்ளார்.
</p><p>
அத்துடன் முருகனை முப்பாட்டன் என கூறும்&nbsp; சீமான் ,சைமன், செபஸ்ரியான் போன்றவர்களின் போலி புழுகுகளை நம்பவேண்டாம் என்றும் சிறுவன் சீமானின் காலையும் வாரியுள்ளார்.</p><p></p><p>இத்தனை சிறிய வயதில் சிறுவனின்&nbsp; இந்த&nbsp;பேருரை சைவ மக்களை மெய் சிலிர்க்க&nbsp; வைத்துள்ளது.&nbsp;இந் நிலையில் சிறுவன் உருவில் வந்து முருகன் முப்பாட்டனா இறைவனா சிறப்பான பேருரையை வழங்கியது அந்த முருகனா என சமூகவலைத்தளங்களில் முருக பக்தர்கள் பதிவிட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T13:37:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள், உயிரி ஆயுதங்களை உருவாக்க உதவும் AI - எச்சரிக்கை அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/security-researchers-warn-ai-could-help-terrorists-1787578357"></link>
            <id>https://news.lankasri.com/article/security-researchers-warn-ai-could-help-terrorists-1787578357</id>
            <summary type="text">Security researchers warn ai could help terrorist groups: செயற்கை நுண்ணறிவு பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள், உயிரி ஆயுதங்களை உருவாக்க உதவுக்கூடும் என அறிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Security researchers warn ai could help terrorist groups: செயற்கை நுண்ணறிவு பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள், உயிரி ஆயுதங்களை உருவாக்க உதவுக்கூடும் என அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது. </p><p>கணினிசார் பாதுகாப்பு ஆய்வாளர்கள், செயற்கை நுண்ணறிவை வைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள், உயிரி ஆயுதங்களை உருவாக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளனர்.&nbsp;</p><h2>AI குறித்த அறிக்கை</h2><p>
கிரிம்சன் ஃப்ளேர் என்ற ஆய்வுக் குழு AI குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d59f35c-1654-48f0-8e9b-50ee29db8a85/26-6a8c4929526fd.webp' /></p><p></p><p> 

அதில் பரவலாகப் பயன்படுத்தப்படும் off - the - shelf செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகளை பயன்படுத்தி, எந்தவொரு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீறி செயல்படும் வகையில் எளிதாக மாற்றியமைக்க முடியும் என்று எச்சரிக்கின்றனர்.</p><p>

'இந்த செயற்கை நுண்ணறிவு, அனுபவமற்ற தீய சக்திகளுக்கு வெடிபொருட்கள் அல்லது இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை உருவாக்குவதற்கான குறிப்பிட்ட வழிமுறைகளை கற்றுக் கொடுக்க அனுமதிக்கிறது' என்று இந்த அறிக்கை கூறுகிறது.
</p><p>
அதாவது, அறிவியலில் அடிப்படை புரிதல் 'தீய சக்திகள்' என்று அழைக்கப்படுபவர்கள் கூட, ஆந்த்ராக்ஸ் போன்ற நம்பமுடியாத அளவிற்கு அபாயகரமான ஆயுதங்களை விரைவில் தங்களுக்கு ஆயுதபாணியாக்கிக் கொள்ள முடியும் என்கிறது.
</p><p>
மேலும், இந்த அறிக்கையானது Abliteration என்று முறைசாரா முறையில் அறியப்படும் ஒரு புதிய முறையைப் பற்றி எச்சரிக்கிறது. </p><h2>

யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து</h2><p>இது பெரும்பாலான செயற்கை நுண்ணறிவு மாதிரிகளில் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை 'நிமிடங்களில் செயலிழக்க செய்ய' அனுமதிக்கிறது. </p><p>

அதன் பின்னர் 'அழிக்கப்பட்ட' இந்த மாதிரிகளை பின் இணையத்தில் பதிவேற்றலாம். அங்கு யார் வேண்டுமானாலும் அவற்றை பதிவிறக்கம் செய்து, தங்கள் சொந்த நோக்கங்களுக்காக பயன்படுத்தலாம் என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. </p><p>

அத்துடன் OpenAI-யின் ChatGPT போன்ற chatbots, அதே அடிப்படை கட்டமைப்பைப் பயன்படுத்தும் அதே வேளையில், எவருடைய கணினியிலும் இலவசமாக பதிவிறக்கம் செய்து இயக்கக்கூடிய open-weight வகை பெரிய மொழி மாதிரிகள் (LLMs) குறித்து இந்த அறிக்கை ஆராய்கிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1444eecf-badc-4af7-89fc-e69bce165e25/26-6a8c49286b0bb.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T13:36:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல ஆலயத்தில் மூன்று இலட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட மாம்பழம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mango-auctioned-for-three-lakh-rs-vavuniya-tempile-1787578755"></link>
            <id>https://jvpnews.com/article/mango-auctioned-for-three-lakh-rs-vavuniya-tempile-1787578755</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வவுனியாவில் ஆலய திருவிழா ஒன்றின் போது மூன்று இலட்சம் ரூபாய்க்கு விநாயருக்கு படைத்த மாம்பழம் ஒன்று ஏலம் போன சம்பவம் இடம்பெற்றுள்ளது.


...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வவுனியாவில் ஆலய திருவிழா ஒன்றின் போது மூன்று இலட்சம் ரூபாய்க்கு விநாயருக்கு படைத்த மாம்பழம் ஒன்று ஏலம் போன சம்பவம் இடம்பெற்றுள்ளது.



வவுனியா, உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழா இடம்பெற்று வருகிறது.</p><p> 



இதன் ஆறாம் திருவிழாவான மாம்பழத் திருவிழா நேற்று(24) இடம்பெற்றது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d617507-8011-4fd1-bc4c-a83570ce5c8c/26-6a8c498557e2a.webp' /></p><p>



திருவிழாவில் விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று கோவில் வளர்ச்சி நிதிக்காக ஏலத்தில் விடப்பட்டது. 



மாம்பழத் திருவிழா நிறைவடைந்த பின்னர் குறித்த மாம்பழம் ஆலய நிர்வாக சபையினரால் ஏலம் விடப்பட்டிருந்தது.</p><p></p><p>
</p><p>


இதில் பத்தாயிரம் ரூபாய்க்கு மாம்பழம் முதலில் ஏலம் கூறப்பட்டு, சில நொடிகளில் 1 இலட்சம் ரூபா வரையில் சென்று பின்னர் படிப்படியாக உயர்ந்து சில நிமிடங்களில் 3 இலட்சம் ரூபாவிற்கு இறுதியாக ஏலம் முடிவடைந்தது.</p><p>

குறித்த ஏலத்தின் மூலம் கிடைத்த தொகை ஆலய வளர்ச்சி பணிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.






குறித்த ஆலய திருவிழாவின் போது, மூன்றாவது வருடமாகவும் தொடர்ச்சியாக குறித்த பெண் ஆலயத்தில்மாம்பழத்தை ஏலம் எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T13:36:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் : ஆளுநர் தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/progress-in-police-operations-northern-province-1787575007"></link>
            <id>https://tamilwin.com/article/progress-in-police-operations-northern-province-1787575007</id>
            <summary type="text">வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச்
சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி
போதைப்பொருள் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச்
சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி
போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் வீதிகளில் இளையோர் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்தி ஏனைய
வீதிப் பயனாளர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலைமையை கட்டுப்படுத்துவது
தொடர்பில் தீவிரமான நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தினார்.
</p><p>
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் புதிதாக வடக்கு மாகாண
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராகப் பொறுப்பேற்றுள்ள தினேஸ் கருணாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (24.08.2026) நடைபெற்றபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த</h2><p>இதன்போது, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு
ஆளுநர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், வடக்கு மாகாணத்தில் சட்டம்,
ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு சிறந்த
சேவையை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc31556a-2c53-4f39-b477-a1bf36c1f95f/26-6a8c4156ae1a7.webp' /></p><p>இதன்போது வடக்கு
மாகாணத்தின் நிலைமை மற்றும் பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பான கருத்துக்களும்
பரிமாறிக்கொள்ளப்பட்டன.</p><p>

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் அண்மைக்காலத்தில் முன்னேற்றம்
காணப்படுவதாகக் குறிப்பிட்ட ஆளுநர், குறிப்பாக உயிர்கொல்லி போதைப்பொருட்களின்
பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன்
அவசியத்தை வலியுறுத்தினார்.</p><p>மேலும், சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் கடத்தலுடன் தொடர்புடைய மணல்
மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது, அத்துடன் வீதிகளில் அதிவேகமாக
மோட்டார் சைக்கிள்களை செலுத்தி பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்
இளையோரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் சந்திப்பில் கவனம்
செலுத்தப்பட்டது.
</p><p>
இவ்விடயங்களில் தொடர்புடைய அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டு,
பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் உறுதிப்படுத்தும் வகையில்
தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியமும்
கலந்துரையாடப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T13:33:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் புதிய வரிகளால் கனடாவில் வேலை இழப்புகள் தவிர்க்க முடியாது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/job-loss-is-inevitable-bc-chamber-of-commerce-1787573247"></link>
            <id>https://canadamirror.com/article/job-loss-is-inevitable-bc-chamber-of-commerce-1787573247</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனேடியப் பொருட்களுக்கு புதிய கடுமையான இறக்குமதி வரிகளை விதித்துள்ள நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனேடியப் பொருட்களுக்கு புதிய கடுமையான இறக்குமதி வரிகளை விதித்துள்ள நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வேலை இழப்புகள் “தவிர்க்க முடியாதவை” எனவும், சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளதாகவும் பிரிட்டிஷ் கொலம்பிய வர்த்தக சம்மேளனம் எச்சரித்துள்ளது.</p><p>
அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக கனடா பிரதமர் மார்க் கார்னி முடிவெடுத்துள்ள நிலையில், புதிய வர்த்தக நடவடிக்கைகளை தொழில் துறையினர் கவலையுடன் அவதானித்து வருகின்றனர்.</p><p>
வர்த்தகப் போரில் ஏற்பட்டுள்ள அண்மைய மாற்றம் மீண்டும் அதே நிச்சயமற்ற சூழ்நிலைக்கே தொழில் துறையை கொண்டு சென்றுள்ளதாக வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் ஜென் ரெய்லி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48892baa-92a0-45b8-8c70-30dae2f57391/26-6a8c3400e7bbc.webp' /></p><p>
</p><p>கடந்த 21 மாதங்களில் வர்த்தக நிலைப்பாட்டில் 15 மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தத் தொடர்ச்சியான மாற்றங்கள் காரணமாக வர்த்தக நிறுவனங்கள் தொடர்ந்து நிச்சயமற்ற சூழலில் இயங்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p>
பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களே புதிய வரிகளால் அதிகளவில் பாதிக்கப்படக்கூடும் என ஜென் தெரிவித்துள்ளார்.</p><p>
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சில கனேடியப் பொருட்களுக்கு தற்போது 50 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்கப்படுவதால், அந்த அளவிலான வரியை சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களால் தாங்கிக்கொள்ள முடியாது என அவர் கூறியுள்ளார்.</p><p>
பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்தச் சூழ்நிலையிலிருந்து பாதிப்பின்றி வெளியேற முடியுமா என்பது குறித்து நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
ஏற்கனவே நெருக்கடியை எதிர்கொண்டு வரும் சொப்ட்வுட் லும்பர் எனப்படும் மென்மரத் தொழில்துறையும் புதிய வரிகளால் மேலும் பாதிக்கப்படுவதாக வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது.</p><p>
மென்மர ஏற்றுமதிக்கு ஏற்கனவே மொத்தமாக 45 சதவீத வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இதன் காரணமாக வேலை இழப்புகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கலாம் என அவர் எச்சரித்துள்ளார்.</p><p>
எனினும், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் கனடாவின் இறையாண்மை தொடர்பான விடயங்களும் முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், பிரதமர் மார்க் கார்னி எடுத்த முடிவு சரியானது என்றே தான் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த ராஜபக்ச வீட்டுப் பொருட்களுடன் வீதியில் காத்திருந்த நிலை..! பின்னணியில் நடந்த இரகசிய பேச்சுவாரத்தை அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/asp-liyanage-mahinda-maithripala-sirisena-1787533188"></link>
            <id>https://tamilwin.com/article/asp-liyanage-mahinda-maithripala-sirisena-1787533188</id>
            <summary type="text">மகிந்த ராஜபக்ச 2015ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் கொழும்பில் தங்குவதற்காக தொழிலதிபரும், தொழிற் கட்சியின் தலைவரான ஏ.எஸ்.பி.லியனகே நிர்மாணித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகிந்த ராஜபக்ச 2015ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் கொழும்பில் தங்குவதற்காக தொழிலதிபரும், தொழிற் கட்சியின் தலைவரான ஏ.எஸ்.பி.லியனகே நிர்மாணித்த சொகுசு வீடான பீகொக் மென்சன் (Peacock Mansion) வழங்குவதாக அறிவித்திருந்தார்.</p><p>இறுதியில் அதை வழங்க முடியாத சூழ்நிலையில் வீட்டுப் பொருட்களுடன் தங்காலையில் இருந்து கொழும்புக்கு வந்த மகிந்த ராஜபக்ச வீதியில் நின்ற ஒரு கதையை ஏ.எஸ்.பி.லியனகே, வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.</p><p>அவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்..</p><h2>
</h2><p></p><h2>மைத்திரி லியனகேவிடம் என்ன கூறினார்</h2><p>மகிந்த ராஜபக்சவுக்கு கொழும்பில் ஒரு வீடு வழங்குவதாக அறிவித்திருந்தேன். அதை அறிந்த அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்னை அழைத்திருந்தார்.</p><p>நான் மைத்திரியின் வீட்டுக்கு சென்றபோது ராஜித சேனாரத்தினவும் இருந்தார். அந்த வீட்டை மகிந்தவுக்கு கொடுத்தால் சிறைச்செல்ல நேரிடலாம் என்றனர்.</p><p>நான் கேட்டேன், " நான் ஏன் சிறைக்குச் செல்ல வேண்டும்? அக்காலத்தில் எதற்கெடுத்தாலும் சிறையில் அடைத்து அரசியல் பகையை தீர்த்துக்கொண்ட ஒரு கலாசாரம் இருந்தது.
</p><p>"உங்களுக்கு நாங்கள் ஒரு ஆளுநர் பதவி தருகிறோம்" என்று சொன்னார்கள். வீட்டை கொடுக்க வேண்டாம் என்று கூறினர். நான் யோசித்தேன், சிறைக்குச் செல்வதை விட ஆளுநராவது நல்லது தானே என்று.</p><p>ஆனாலும் நான் சொன்னேன், " தூதுவர் பதவி வேண்டாம்" என்று. இல்லை, ஆளுநர் பதவியை தருகிறோம், நாளை முதலே வீட்டின் கதவை மூடுங்கள் என்று எனக்கு சொன்னார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f20bb47-2c4f-4452-9adf-1842b8a1d296/26-6a8b97864362d.webp' /></p><p>ஆனால் மகிந்த வீட்டுப்பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்தார். வரும் வழியில் என்னை பல முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவரின் மனைவியும் பல அழைப்பு எடுத்திருந்தார்.</p><p>ஆனால் என்னால் அழைப்பை எடுக்க முடியாமல் இருந்தேன். கடைசியில் வேறு வழியின்றி நான் சொன்னேன், "சேர், இப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டது. என்னை மன்னிக்க வேண்டும்" என்று. </p><p>அதற்கு மகிந்த ராஜபக்ச என்னிடம் சொன்னார், "நீங்கள் பயப்பட வேண்டாம். பயமில்லாமல் இதை திறந்துவிடுங்கள், நான் இப்போது எல்லா பொருட்களையும் எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன்" என்றார். ஒன்றும் செய்ய வழியில்லாம் வீட்டை கொடுத்தேன். அதன்பின் சுமார் நான்கு மாதங்கள் சென்றன ஆளுநர் பதவி கிடைக்கவில்லை என குறிப்பிட்டார்.&nbsp;</p><p></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T13:27:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மைதானத்தில் மோதிக்கொண்ட ஜெய்ஸ்வால், அசிதா பெர்னாண்டோ - அபராதம் விதித்த ஐசிசி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/icc-fined-for-jaiswal-asitha-fernando-for-fight-1787576957"></link>
            <id>https://news.lankasri.com/article/icc-fined-for-jaiswal-asitha-fernando-for-fight-1787576957</id>
            <summary type="text">மைதானத்தில் மோதிக்கொண்ட ஜெய்ஸ்வால் மற்றும் அசிதா பெர்னாண்டோவிற்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

ஜெய்ஸ்வால், அசிதா பெர்னாண்டோவிற்கு அபராதம்

இந்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>மைதானத்தில் மோதிக்கொண்ட ஜெய்ஸ்வால் மற்றும் அசிதா பெர்னாண்டோவிற்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.</p><h3>

ஜெய்ஸ்வால், அசிதா பெர்னாண்டோவிற்கு அபராதம்</h3><p>

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dba04d0-43ba-4671-8aff-916dd2522a87/26-6a8c427e69236.webp' /></p><p> 

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 503 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது. தேவ்தத் படிக்கல் மற்றும் துருவ் ஜுரெல் சதம் விளாசியுள்ளனர். </p><p>

தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால், இலங்கை வீரர் அசிதா பெர்னாண்டோவின் ஓவரில் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகள் விளாசிய பின்னர் அவரது பந்திலே ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p>

ஜெய்ஸ்வால் விக்கெட்டை வீழ்த்தியதை அசிதா பெர்னாண்டோ கொண்டாடிய போது, இருவருக்கும் மைதானத்திலே வாக்குவாதம் ஏற்பட்டது.&nbsp;</p><p></p><p>

சக வீரர் ஒருவர் ஜெய்ஸ்வாலை சமாதானப்படுத்த முயற்சித்தார். ஆனால் திரும்பி வந்த ஜெய்ஸ்வால் தனது ஹெல்மெட் தலையால் பெர்னாண்டோவை முட்டுவது போல் தள்ளினார்.</p><p>

இது குறித்து ஐசிசி விசாரணை நடத்தியதில், இருவரும் ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக ஒப்புக்கொண்டதால், ஊதியத்தில் 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டு, தலா ஒரு தகுதிக்குறைப்புப் புள்ளி வழங்கப்பட்டது.</p><p> 

கடந்த 24 மாத காலத்தில் இரு வீரர்களும் இதற்கு முன் எந்தக் குற்றச்செயல்களிலும் ஈடுபட்டிருக்கவில்லை.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T13:18:33+00:00</updated>
        </entry>
    </feed>
