<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-09T09:37:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த இந்தியப் பிரஜையின் உடல் நல்லடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-of-indian-national-who-died-in-negombo-prison-1788945233"></link>
            <id>https://tamilwin.com/article/body-of-indian-national-who-died-in-negombo-prison-1788945233</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் உயிரிழந்த இந்தியரான உம்னிதாத் சரத்சந்திரனின் உடல், அரசாங்க செலவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
நீர்கொழும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் உயிரிழந்த இந்தியரான உம்னிதாத் சரத்சந்திரனின் உடல், அரசாங்க செலவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
</p><p>நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதல் தொடர்பான வழக்கு, நேற்று (08) நீர்கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் ஷிலானி பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பொலிசார் குறித்த அறிவித்தலை சமர்ப்பித்துள்ளனர்.
</p><p>
அதன் பிரகாரம் இந்த மாதம் 2ஆம் தேதி நீர்கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான மாணிக்க ஹேன பொது மயானத்தில் இந்தியப் பிரஜையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.</p><h2>கோரிக்கை&nbsp;</h2><p>
</p><p>
இதற்கிடையில்இ இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் 11 சந்தேக நபர்களின் பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்டன.

அவர்களை அடையாளம் காண்பதற்காக, மூடிய ஆடைகளுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீர்கொழும்பு சிறை அத்தியட்சகருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குற்றப் புலனாய்வுத் துறை கோரிக்கை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b1f1b1e-bc2b-40ab-8f32-6d5af78c3024/26-6aa127c01c196.webp' /></p><p>
</p><p>
மேலும், இதுவரை 81 சந்தேக நபர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.</p><p>

இந்தச் சம்பவம் தொடர்பாக ஏறத்தாழ 2200 வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், வழக்கு ஆதாரங்களாகக் பொலிசாரின் காவலில் எடுக்கப்பட்டு அரசாங்க ரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்ட பொருட்கள் குறித்து இதுவரை எந்த அறிக்கையும் பெறப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T09:35:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு புதிய CEO நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-ceo-appointed-for-srilankan-airlines-1788946503"></link>
            <id>https://jvpnews.com/article/new-ceo-appointed-for-srilankan-airlines-1788946503</id>
            <summary type="text">&amp;nbsp;ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக விபுல் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இவர் இதற்கு முன்னர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக விபுல் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
 

இவர் இதற்கு முன்னர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பொறியியல் பிரிவின் தலைவராகவும் கணக்கு வைப்பு முகவராகவும் பணியாற்றியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16086760-6984-498d-bbb7-fb916200ebb3/26-6aa12848e685b.webp' /></p><h2>புதிய நிர்வாகக் குழு&nbsp;</h2><p>&nbsp;கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தைத் தனது மையமாகக் கொண்டு, சுமார் 35 இடங்களுக்கு 23 விமானங்களைக் கொண்ட தொகுப்பை இயக்கும் 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' (SriLankan Airlines), 'ஒன்வேர்ல்ட்' (oneworld) கூட்டணியின் ஓர் உறுப்பினராகவும், இந்தியச் சந்தையைத் தனது முதன்மை வருவாய் ஆதாரமாகவும் கொண்டுள்ளது.</p><p>

 நீண்ட காலமாகத் தலைமைத்துவ வெற்றிடம் நிலவிய சூழலில், மார்ச் 2025 முதல் யசந்த திஸாநாயக்க தற்காலிக தலைமை நிர்வாக அதிகாரியாகவும் (CEO), மார்ச் 2026-இல் தலைவர் சரத் கணேகொட பதவி விலகியதைத் தொடர்ந்து திமல் அரந்தர தற்காலிகத் தலைவராகவும் பணியாற்றினர்.</p><p> 

அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 7-8 தேதிகளில் சரத் கணேகொட தலைமையில் புதிய நிர்வாகக் குழு மீண்டும் நியமிக்கப்பட்டது.
</p><p>
சுமார் 340 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான திரண்ட நஷ்டத்துடன் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள அரசுக்குச் சொந்தமான இந்த விமான நிறுவனத்தைச் சீரமைப்பதற்கான ஒரு முக்கியத் திட்டத்தின் பின்னணியிலேயே இந்தத் தலைமைத்துவ மாற்றம் நிகழ்ந்துள்ளது. </p><p>

இதற்காக, ஜூன் 2026-இல் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜயசூரிய தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது.</p><p>இக்குழுவில் டுமிந்த ஹுலங்கமுவ, தேஷால் டி மெல், டுமித் பெர்னாண்டோ, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் விமான நிறுவனத்தின் தலைவர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.</p><p>

 சர்வதேச நிதிக் கழகத்தின் (IFC) ஆலோசனை ஆதரவைப் பெறும் இக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஆறு மாதங்களுக்குள் சீர்திருத்தங்கள் தொடங்கப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்துத் துறை பிரதி அமைச்சர் ஜனிதா ருவன் கொடிதுவக்கு தெரிவித்திருந்தார்.</p>]]></content>
            <updated>2026-09-09T09:32:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோலாகலமாக நடந்த சேரன்-சந்தா திருமணம், அடுத்து வந்த குட் நியூஸ்... அய்யனார் துணை சீரியல் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/good-news-for-ayyanar-thunai-serial-fans-1788945357"></link>
            <id>https://cineulagam.com/article/good-news-for-ayyanar-thunai-serial-fans-1788945357</id>
            <summary type="text">அய்யனார் துணைசேரனை நினைவு தெரிந்தது முதல் காதலித்து வந்த கார்த்திகாவால் அவர் வேறொரு பெண்ணுடன் இருப்பதை பார்க்கவே முடியவில்லை.நிச்சயதார்த்தத்திலேயே மிக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அய்யனார் துணை</h2><p>சேரனை நினைவு தெரிந்தது முதல் காதலித்து வந்த கார்த்திகாவால் அவர் வேறொரு பெண்ணுடன் இருப்பதை பார்க்கவே முடியவில்லை.</p><p>நிச்சயதார்த்தத்திலேயே மிகவும் வருந்திய கார்த்திகா திருமண வரவேற்பில் சேரன்-சந்தாவை ஒன்றாக பார்த்து மிகவும் வருந்தினார், சந்தா இடத்தில் தன்னை வைத்தெல்லாம் பார்த்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84136f4a-b5d1-4bfe-ad74-d7689ae46336/26-6aa123ce7aaf2.webp' /></p><p> </p><p>அந்நிகழ்ச்சி முடிந்ததும் தனியாக நின்ற சேரனிடம் கார்த்திகா தனது மனதில் இருக்கும் வருத்தத்தை, கேள்வியை வெளிப்படுத்தி திடீரென அவரை கட்டிப்பிடித்துக்கொண்டார். இதனால் பிரச்சனை வெடித்து சேரன்-சந்தா திருமணம் நடக்குமா என்றாகிவிட்டது.</p><p>ஆனால் இன்றைய எபிசோடில், எல்லோரும் பேச சேரனின் காதலை முழுவதுமாக புரிந்துகொண்ட சந்தா அவரை திருமணம் செய்ய ஒப்புக்கொள்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90cccdde-c6e4-4b41-ac85-8a43c0f52843/26-6aa123cf30bd2.webp' /></p><h2>குட் நியூஸ்</h2><p>நாளைய எபிசோடில், சேரன்-சந்தாவிற்கு கோலாகலமாக திருமணம் நடக்க உள்ளது. இந்த நிலையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் அய்யனார் துணை சீரியல் குறித்து ஒரு குட் நியூஸ் வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1d934c0-0645-4962-a083-e83f93e43ac2/26-6aa123cfdc49b.webp' /></p><p>அது என்னவென்றால்,&nbsp;தமிழில் உருவாக்கப்பட்ட அய்யனார் துணை சீரியல் இதுவரை கன்னடம், மலையாளம், தெலுங்கு, மராத்தி, ஹிந்தி என ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வரும் நிலையில் 7வதாக பெங்காலியில் விரைவில் ரீமேக் செய்யப்பட உள்ளதாம். தொடருக்கு Ashirbad எனவும் பெயரிடப்பட்டுள்ளதாம்.</p>]]></content>
            <updated>2026-09-09T09:30:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபருக்குச் சிறைத்தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/man-sentenced-in-organized-crime-gun-smuggling-1788936564"></link>
            <id>https://canadamirror.com/article/man-sentenced-in-organized-crime-gun-smuggling-1788936564</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் கனடா எல்லைக்கு இடையே துப்பாக்கி மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட திட்டமிட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த பிரையன் ஹேமில்டன்-ஹையட் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் கனடா எல்லைக்கு இடையே துப்பாக்கி மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட திட்டமிட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த பிரையன் ஹேமில்டன்-ஹையட் என்பவருக்குக் கனடிய நீதிமன்றம் 6 ஆண்டுகள் மற்றும் 9 மாத சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.</p><p>
எல்லை தாண்டிய துப்பாக்கி மற்றும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த லண்டன் பொலிஸார் மேற்கொண்ட புரெஜெக்ட் சேப் என்ற கூட்டுப் பொலிஸ் நடவடிக்கையின் கீழ் 2023 ஜூலையில் 41 வயதான பிரையன் கைது செய்யப்பட்டார்.
</p><p>திட்டமிட்ட குற்றக் குழுவில் அங்கம் வகித்தமை, சட்டவிரோத துப்பாக்கிக் கடத்தல் மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளை இவர் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்புக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01c37e6c-d50f-4e60-85fd-22a2c7c82b4d/26-6aa10175f2a33.webp' /></p><p>
</p><p>அரசுத் தரப்பு மற்றும் பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர்களின் கூட்டுப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட நீதிபதி அலிசா மிட்செல், இவருக்கு 6 ஆண்டுகள் 9 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தார்.
</p><p>எளிதாகப் பணம் சம்பாதிக்கும் நோக்கில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டது தீவிரமான குற்றமாகும் என நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.
</p><p>ஏற்கனவே காவலில் கழித்த காலம் கணக்கிடப்பட்டதன் அடிப்படையில், இவர் மேலும் 2 ஆண்டுகள் வரை மட்டுமே சிறையில் தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும்.
முன்னர் எவ்வித குற்றப் பின்னணியும் இல்லாத பிரையன், இச்சதித்திட்டத்தில் ஈடுபட்டதற்காக நீதிமன்றத்தில் தனது ஆழந்த மனவருத்தத்தைத் தெரிவித்தார்.
</p><p>இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் இருவருக்கு ஏற்கனவே தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு நபருக்கான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T09:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியை பறிகொடுத்து கதறும் பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-losing-thali-chain-nallur-chariot-festival-1788935884"></link>
            <id>https://jvpnews.com/article/woman-losing-thali-chain-nallur-chariot-festival-1788935884</id>
            <summary type="text">&amp;nbsp;&amp;nbsp;நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியை பறிகொடுத்து கதறும் பெண்!

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் தேர்த் திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;<a href="https://jvpnews.com/article/nallur-kandan-blesses-devotees-from-chariot-1788928177" target="_blank">&nbsp;நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவி</a>ல் தாலிக்கொடியை பறிகொடுத்து கதறும் பெண்!

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் (9) தாலிக்கொடியைப் பறிகொடுத்து பெண் ஒருவர் கதரி அழுத காணொளி சமூக ஊடகங்க்களில் வெளியாகியுள்ளது.</p><p> 

 
இன்று காலை நல்லூரான் தேர்த் திருவிழாவை காண வந்த பெண் தாலிக்கொடியை பறிகொடுத்து விட்டு தாயொருவர் நிலத்தில் இருந்து அழுதவாறு நின்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4c78acd-8686-4669-97e9-c56a4860aea8/26-6aa10168d6818.webp' /></p><p></p><h2>திருடர்கள் குறித்து பொலிஸார்&nbsp; &nbsp;எச்சரிக்கை</h2><p> 

 அந்த பெண் மட்டுமல்லாது விலையுயர்ந்த அணிகலன்களை பறிகொடுத்து விட்டு தவித்த வண்ணம் உள்ளார்கள். சிலர் காவல்துறையினரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்லதாகவும் கூறப்படுகின்றது.</p><p></p><p>

அதேவேளை நல்லூர் கந்தன் ஆலய திருவிழா திருடர்கள் குறித்து பொலிஸார் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1390156846568193%2F&show_text=false&width=380&t=0" width="380" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p>]]></content>
            <updated>2026-09-09T09:25:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுக் கழிப்பறைக்கு டொனால்ட் டிரம்ப் பெயர்: கனடாவில் வெளிப்பட்ட விசித்திர எதிர்ப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-memorial-rogue-sign-put-up-to-washroom-in-bc-1788937935"></link>
            <id>https://canadamirror.com/article/trump-memorial-rogue-sign-put-up-to-washroom-in-bc-1788937935</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பொதுக் கழிப்பறை ஒன்றிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பெயர் சூட்டப்பட்ட சம்பவம் பெரும் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பொதுக் கழிப்பறை ஒன்றிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பெயர் சூட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் நகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>
விக்டோரியா நகரின் பிரபல 'கேலோப்பிங் கூஸ்' நடைபாதை அருகே அமைந்த பொதுக் கழிப்பறையின் நுழைவாயிலில், "டொனால்ட் ஜே. டிரம்ப் நினைவகம்" என்ற மரத்தாலான பலகை மர்ம நபர்களால் பொருத்தப்பட்டிருந்தது.</p><p>
ஞாயிற்றுக்கிழமை இதுகுறித்துத் தகவல் கிடைத்ததும், மாலை 6 மணியளவில் அந்தப் பலகையை விக்டோரியா நகர சபை அதிகாரிகள் அகற்றிவிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/353e4324-d78d-420c-9a74-d5546cfc1b23/26-6aa106d134d26.webp' /></p><p> 
அந்த இடத்தில் பாதுகாப்பு கேமராக்கள் இல்லாததால் பலகையை வைத்தது யார் என்பதைக் கண்டறிய முடியவில்லை.
</p><p> கனடா - அமெரிக்க வர்த்தகப் போரினால் ஆத்திரமுற்ற மக்கள், டிரம்ப் மீதான தங்கள் எதிர்ப்பை இத்தகைய விசித்திர வழிகளில் காட்டி வருகின்றனர். </p><p>
கடந்த கோடையில், உள்ளூர் கலைஞர் ஒருவர் குதிரைச் சாணத்தைப் பயன்படுத்தி டிரம்பின் உருவப்படத்தை வரைந்தார். </p><p>அந்த ஓவியம் 1,800 டொலருக்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
ஒருபுறம் மக்கள் கழிப்பறைக்குப் பெயர் சூட்டி எதிர்ப்பைப் பதிவுசெய்ய, மறுபுறம் பி.சி. மாகாண முதல்வர் டேவிட் ஈபி, அமெரிக்க எல்லைப் பகுதிகளில் "கனடா ஒருபோதும் அமெரிக்காவின் 51வது மாநிலமாகாது" என்ற எச்சரிக்கைப் பலகையை நிறுவி, டிரம்பின் வர்த்தகக் கொள்கைகளுக்குத் தனது அதிகாரப்பூர்வ எதிர்ப்பையும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T09:21:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியா தூதரகத்தை மூட இஸ்ரேல் உத்தரவு; 30 நாட்கள் கெடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/israel-orders-closure-of-british-consulate-1788945593"></link>
            <id>https://canadamirror.com/article/israel-orders-closure-of-british-consulate-1788945593</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கிழக்கு ஜெருசலேமில் உள்ள பிரித்தானியாவின் துணைத் தூதரகத்தை 30 நாட்களுக்குள் மூடுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கிழக்கு ஜெருசலேமில் உள்ள பிரித்தானியாவின் துணைத் தூதரகத்தை 30 நாட்களுக்குள் மூடுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

 காசா தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பிரித்தானிய அதிகாரிகள் மற்றும் ரமல்லாவில் பணியாற்றும் பிரித்தானிய ஊழியர்கள் 7 நாட்களுக்குள் அங்கிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14caf05c-a6d9-472f-af13-2a32c44d52c9/26-6aa124baeec29.webp' /></p><p>

இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு எதிராக பிரித்தானியா அண்மையில் விதித்த தடைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
</p><p>
இஸ்ரேல் மற்றும் பிரித்தானியா இடையிலான உறவுகளில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்த உத்தரவு வெளியாகியுள்ளமை மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-09T09:16:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை; ரஷ்ய தூதர அதிகாரிகளை வெளியேற்றிய ஹங்கேரி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/hungary-expels-russian-diplomatic-officials-1788945287"></link>
            <id>https://canadamirror.com/article/hungary-expels-russian-diplomatic-officials-1788945287</id>
            <summary type="text">&amp;nbsp; தூதரக நிலைமைக்கு முரணான &quot;ஏற்றுக்கொள்ள முடியாத&quot; நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, ரஷ்யாவைச் சேர்ந்த 10 தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தூதரக நிலைமைக்கு முரணான "ஏற்றுக்கொள்ள முடியாத" நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, ரஷ்யாவைச் சேர்ந்த 10 தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு ஹங்கேரி உத்தரவிட்டுள்ளது.</p><p>

ஹங்கேரியின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான இந்த முடிவு, ரஷ்யாவுடன் தூதரக உறவுகளைத் துண்டித்துக் கொள்வதாக அர்த்தப்படாது என்று ஹங்கேரியின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான அனிதா ஓர்பன் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8258778-e0d0-4813-b295-744763e2c4ed/26-6aa1238886720.webp' /></p><h2>ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை</h2><p>
</p><p>
எனினும், ஹங்கேரியின் இந்த நடவடிக்கைக்கு "கடுமையான மற்றும் வேதனையான" பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்திப்பலகை மரியா சகாரோவா தெரிவித்தார்.</p><p>

2022 இல் யுக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்புக்குப் பிறகு, ரஷ்யாவின் ஐரோப்பிய ஒன்றிய நட்பு நாடுகளில் ஹங்கேரியும் ஒன்றாக இருந்தது.
</p><p>
இது ஒரு "சட்டபூர்வமான முடிவு" என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர் கிறிஸ்டியன் விகாண்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அத்துடன், நிலைமையை ஐரோப்பிய ஒன்றியம் "தொடர்ந்து நெருக்கமாக ஒருங்கிணைக்கும்" என்றும் கூறினார்.</p><p>

யுக்ரைன் மீதான முழு அளவிலான போரைத் தொடர்ந்து பல ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் ரஷ்ய தூதர்களை வெளியேற்றியிருந்தபோதும், இதுவரை ஹங்கேரி மாத்திரம் அந்த நடவடிக்கையில் ஈடுபடாமல் இருந்து வந்த நிலையில் தற்போது ரஷ்ய தூதர அதிகாரிகளை ஹங்கேரி வெளியேற்றியுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T09:11:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அறிவியல் பூர்வமான தரவுகளுடன் புதிய தேசிய இளைஞர் கொள்கை: அமைச்சர் சுனில் குமார் கமகே அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-national-youth-policy-based-on-scientific-data-1788944255"></link>
            <id>https://tamilwin.com/article/new-national-youth-policy-based-on-scientific-data-1788944255</id>
            <summary type="text">இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை
அமைச்சின் நேரடித் தலையீட்டுடன், இளைஞர் அபிவிருத்தி குறித்த தேசிய மாநாடு
ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை
அமைச்சின் நேரடித் தலையீட்டுடன், இளைஞர் அபிவிருத்தி குறித்த தேசிய மாநாடு
மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இளைஞர் விவகாரங்கள்
மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார் கமகே தெரிவித்தார்.</p><p>

கொழும்பிலுள்ள அரச தகவல் திணைக்களத்தில் நேற்று(8.9.2026) நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக்
குறிப்பிட்டார்.
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, நாட்டின் எந்தவொரு துறையிலும் உணர்திறன் மிக்க, அபிவிருத்தியடைந்த தேசியக்
கொள்கைகள் இல்லாத நிலை காணப்படுகின்றது.</p><h2>சமூக அபிவிருத்தி</h2><p> எனவே, அரசு என்ற ரீதியில் இளைஞர்களின்
முன்னேற்றத்துக்காகப் பொறுப்புக்கூறக்கூடிய, அறிவியல் பூர்வமான கொள்கை ஒன்றை
உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகும்.
</p><p>
அரசின் கொள்கைப் பிரகடனத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாகவே, இளைஞர்
சமுதாயத்துக்கான புதிய தேசியக் கொள்கையை வகுக்கும் பணிகள் முறைப்படி
ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cf90e9c-fb00-4510-9050-2bdf27eb52a1/26-6aa122add149c.webp' /></p><p>
</p><p>
புதிய தேசியக் கொள்கையை வகுக்கும் செயற்பாட்டின் முதற்கட்டமாக, இளைஞர்கள்
எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளையும் உள்ளடக்கும் வகையில் 9 முக்கிய
துறைகளின் கீழ் ஆராய்ச்சிப் பத்திரங்களைச் சமர்ப்பிப்பதற்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
வெறுமனே கொள்கைகளை அறிவிக்காமல், பெறப்படும் இந்த ஆராய்ச்சிப் பத்திரங்களின்
முடிவுகள் மற்றும் அறிவியல் பூர்வமான தரவுகளின் அடிப்படையிலேயே புதிய இளைஞர்
கொள்கை தயாரிக்கப்படும்.
</p><p>
இளைஞர் சமுதாயத்தின் மறைந்திருக்கும் திறன்களை முறையாக அடையாளம் கண்டு,
நாட்டின் நிலையான பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் அவர்களைத் தீவிரப்
பங்காளிகளாக்குவதே இந்தத் தேசிய மாநாட்டின் முதன்மை நோக்கமாகும் எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T09:11:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏர்பஸ் கொள்முதல் மோசடி! ஆப்பிள் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட விசேட மின்னஞ்சல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/airbus-scam-special-email-sent-to-apple-1788941030"></link>
            <id>https://ibctamil.com/article/airbus-scam-special-email-sent-to-apple-1788941030</id>
            <summary type="text">ஏர்பஸ் கொள்முதல் மோசடி சம்பவத்தின் விசாரணைகள் குறித்து&amp;nbsp; குற்றப்புலனாய்வு திணைக்களம், ஆப்பிள் நிறுவனத்திற்கு விசேட மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏர்பஸ் கொள்முதல் மோசடி சம்பவத்தின் விசாரணைகள் குறித்து&nbsp; குற்றப்புலனாய்வு திணைக்களம், ஆப்பிள் நிறுவனத்திற்கு விசேட மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளது.</p><p>இந்த மோசடி சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான, சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரி கபில சந்திரசேனவின்(காலஞ்சென்ற) கைபேசியிலிருந்து தரவுகளைப் பெறுவதற்கான நீதிமன்ற உத்தரவுக்கு அமைய சி.ஐ.டி குறித்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.</p><p>இந்த விடயத்தை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (09) கோட்டை நீதவான் நீதிமன்றிற்கு சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><h2>குற்றப் புலனாய்வுத் திணைக்களம்&nbsp;</h2><p>இந்தச் சம்பவம் தொடர்பான நீதித்துறை நடுவர் விசாரணை இன்று (09) மீண்டும் கூடியபோது, ​​குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் மேலும் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3797040-adc9-48d1-8832-e333950a82f2/26-6aa1151e1f3a5.webp' /></p><p>&nbsp;இந்நிலையில் உயிரிழந்த சந்தேக நபரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் மரண விசாரணை அதிகாரியின் அறிக்கை ஆகியவை இன்னும் பெறப்படவில்லை என்றும் அரசு தரப்பு நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.</p><p>அதன்படி, அந்த அறிக்கைகளை உடனடியாக நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறு மரண விசாரணை அதிகாரிக்கும் அரசுப் பகுப்பாய்வாளருக்கும் நீதிமன்றம் ஒரு நினைவூட்டலை விடுத்தது.
</p><p>
அதன்படி, இந்த வழக்கை ஒக்டோபர் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T09:09:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே மாவட்டத்தில் பணியாற்றும் கணவன் IPS- மனைவி IAS!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/husband-wife-appointed-as-ias-ips-vellore-1788944782"></link>
            <id>https://ibctamilnadu.com/article/husband-wife-appointed-as-ias-ips-vellore-1788944782</id>
            <summary type="text">தமிழ்நாட்டின் வேலூரில் ஒரே மாவட்டத்தில் கணவன் IPS மற்றும் மனைவி IAS ஆக பணியாற்றுகின்றனர்.
வேலூர் மாநகராட்சியின் புதிய மற்றும் பெண் ஆணையராக கேத்ரின் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டின் வேலூரில் ஒரே மாவட்டத்தில் கணவன் IPS மற்றும் மனைவி IAS ஆக பணியாற்றுகின்றனர்.
</p><p>வேலூர் மாநகராட்சியின் புதிய மற்றும் பெண் ஆணையராக கேத்ரின் சரண்யா IAS நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இவரது கணவர் ஏற்கனவே வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிவராமன் IPS பணியாற்றி வருகிறார்.
</p><p>
ஒரே மாவட்டத்தில் கணவர் சிவராமன் காவல்துறை அதிகாரியாகவும், மனைவி மாநகராட்சி நிர்வாக ஆணையராகவும் பணியாற்றுவது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>
வேலூர் மாநகராட்சி அமைக்கப்பட்டதற்கு பின்னர் ஆணையராக பொறுப்பேற்கும் முதல் பெண் அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68bb1af4-5859-4439-bc46-75900bdd32ab/26-6aa121c033e0b.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-09T09:07:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கபில சந்திரசேன மரணத்தில் தொடரும் மர்மம்! கைபேசியில் உள்ள இரகசிய தரவுகள் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kapila-chandrasena-mobile-phone-data-apple-company-1788935834"></link>
            <id>https://tamilwin.com/article/kapila-chandrasena-mobile-phone-data-apple-company-1788935834</id>
            <summary type="text">மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேனவின் ஆப்பிள் கைபேசியிலிருந்து தரவுகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேனவின் ஆப்பிள் கைபேசியிலிருந்து தரவுகளை பெறுவதற்கான நீதிமன்ற உத்தரவு, ஆப்பிள் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பப்பட்டுள்ளது.</p><p>

குற்றப் புலனாய்வுத்திணைக்களம் இன்று (09) கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேனவிடம் தெரிவித்துள்ளது.</p><h2>நீதவான் விசாரணை</h2><p>
</p><p>
இச்சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று (09) மீண்டும் தொடங்கப்பட்டபோது, ​​குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த உண்மைகளை கூடுதல் அறிக்கையுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c615cb3-09cb-417c-af69-20b988f18787/26-6aa1062f762c6.webp' /></p><p>

சம்பந்தப்பட்ட கைபேசியின் தரவுகள் தொடர்பாக முந்தைய நாள் பெறப்பட்ட நீதிமன்ற உத்தரவு, ஆகஸ்ட் 18 அன்று அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டதாக அரசு தரப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.</p><p>

இச்சம்பவத்தில் காலஞ்சென்ற சந்தேகநபரின் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் பகுப்பாய்வாளர் அறிக்கை இன்னும் பெறப்படவில்லை என்றும் அரசு தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><h2>பிரேத பரிசோதனை மற்றும் பகுப்பாய்வாளர் அறிக்கை</h2><p>
அதன்படி, அந்த அறிக்கைகளை உடனடியாக நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு பிரேதப் பரிசோதகருக்கும் அரசாங்கப் பகுப்பாய்வாளருக்கும் நீதிமன்றம் ஒரு நினைவூட்டலை வழங்கியுள்ளது.</p><p>இந்த வழக்கை அக்டோபர் 14 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/-6UFFQLSCYg" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-09-09T09:06:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குற்ற கும்பலுக்கு பொலிஸார் காட்டிய அதிரடி ; மீட்கப்பட்ட போலி பொலிஸ் ஜீப் வண்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-foil-underworld-gang-s-plot-1788944199"></link>
            <id>https://jvpnews.com/article/police-foil-underworld-gang-s-plot-1788944199</id>
            <summary type="text">பொலிஸ் உளவாளி ஒருவரைக் கொலை செய்ய முயன்ற பாதாள உலகக் கும்பலால் பயன்படுத்தப்பட்ட போலி பொலிஸ் ஜீப் வண்டி ஒன்றை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் நேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பொலிஸ் உளவாளி ஒருவரைக் கொலை செய்ய முயன்ற பாதாள உலகக் கும்பலால் பயன்படுத்தப்பட்ட போலி பொலிஸ் ஜீப் வண்டி ஒன்றை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் நேற்று (08) கைப்பற்றியுள்ளனர்.</p><p style="text-align: justify; ">

 

கடந்த 2025 நவம்பர் 29ஆம் திகதி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவின் வழிநடத்தலில் கிரின்த கடலோரப் பகுதியில் 325 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், 8 சந்தேகநபர்கள் மற்றும் 6 வாகனங்களைக் கைது செய்ய இந்த உளவாளியே தகவல்களை வழங்கியிருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f1c8097-4269-447f-b9af-31c49000c2e5/26-6aa11f4884f1e.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருள்</h2><p style="text-align: justify; "> 

 

இந்த ஐஸ் போதைப்பொருளின் மதிப்பு 500 கோடி ரூபாய்க்கும் அதிகம் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; ">

 

இருப்பினும், வெளிநாட்டில் இருக்கும் 'ரூபன்' மற்றும் 'அங்கொட பிரியங்கர' ஆகிய பாதாள உலகக் குற்றவாளிகளால் மொழிபெயர்க்கப்பட்ட இந்த கடத்தல் பொலிஸாரிடம் சிக்கியதால் ஏற்பட்ட இழப்புக்குப் பழிவாங்கும் வகையில், அந்த உளவாளியைக் கடத்திக் கொலை செய்து, அவரது தலையை உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டின் முன் போட்டுவிட்டுச் செல்ல குற்றவாளிகள் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 

எனினும் அந்தத் திட்டம் தோல்வியடைந்ததை அடுத்து, 9 மாதங்களுக்குப் பிறகு, அதாவது 2026 செப்டம்பர் 05ஆம் திகதி காலை 06 மணியளவில் கிரிந்த துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த உளவாளியை இந்த போலி பொலிஸ் ஜீப் வண்டியால் மோதி கொலை செய்ய குற்றவாளிகள் முயன்றுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

இதன்போது உளவாளி அதிலிருந்து தப்பிக்க முயன்றபோது காயமடைந்துள்ளதுடன், அவர் தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">சம்பவத்தின் பின்னர் தப்பிச் சென்ற ஜீப் வண்டி குறித்துக் கிடைத்த தகவலின் அடிப்படையில் செயற்பட்ட வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர், கடுவெல – ஹேவாகம பகுதியில் உள்ள பட்டறை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போது இந்த போலி பொலிஸ் ஜீப் வண்டியைக் கண்டுபிடித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

அதற்கமைய வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட ஜீப் வண்டி மேலதிக விசாரணைகளுக்காகக் கிரிந்த பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.&nbsp; &nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-09T09:04:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜயா ஆரத்தி எடுக்க வீட்டிற்கு வந்த ரோஹினி, அடுத்து நடந்தது?... சிறகடிக்க ஆசை புரொமோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/siragadikka-aasai-9th-to-13th-september-2026-promo-1788943745"></link>
            <id>https://cineulagam.com/article/siragadikka-aasai-9th-to-13th-september-2026-promo-1788943745</id>
            <summary type="text">சிறகடிக்க ஆசைவிவாகரத்து கிடைக்குமா இல்லையா என இழுத்துக் கொண்டிருந்த மனோஜ்-ரோஹினி பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது.மனோஜை விவாகரத்து செய்ய ஒப்புக்கொள்கி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சிறகடிக்க ஆசை</h2><p>விவாகரத்து கிடைக்குமா இல்லையா என இழுத்துக் கொண்டிருந்த மனோஜ்-ரோஹினி பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது.</p><p>மனோஜை விவாகரத்து செய்ய ஒப்புக்கொள்கிறேன் என கையெழுத்து போட்டு நீதிமன்றத்தில் தனக்கு சாதகமாக வழக்கை திருப்பிக்கொண்டார் ரோஹினி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6c93c6a-b7a7-45e4-b193-122ac8ad22f7/26-6aa11f9a647e0.webp' /></p><p> </p><p>கர்ப்பமாக இருக்கும் ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததால் நீதிமன்றம் மனோஜ் தான் ரோஹினி குழந்தையின் அப்பா, அதனால் அவருக்கான எல்லா செலவுகளையும் மனோஜ் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.</p><p>நீதிமன்ற உத்தரவை கேட்டதில் இருந்து விஜயா செம கோபம் அடைகிறார், ரோஹினி தனது வீட்டிற்கு வரக்கூடாது என கூற பின் நீதிமன்ற உத்தரவை மீற முடியாது என அனைவரும் கூறுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62a2e630-17f2-4674-8f0c-274be12f2504/26-6aa11f9b32c8f.webp' /></p><h2>புரொமோ</h2><p>தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து வரப்போகும் கதைக்களத்தின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. அதில் ரோஹினி மனோஜிடம், முதன்முறையாக திருமணம் ஆகி எப்படி சென்றோமோ அப்படியே இப்போது இருவரும் வீட்டிற்கு செல்வோம் என்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/091b85a5-f3f9-4c35-a691-80b9d46d30aa/26-6aa11f9962d4b.webp' /></p><p>இருவரும் வீட்டிற்கு ஜோடியாக செல்ல விஜயா செம கோபமடைகிறார், அவரது மாமியார் ஆரத்தி எடு என கூறியதை மறுக்க முடியாமல் இருவருக்கும் ஆரத்தி எடுக்கிறார்.</p><p>மீனா இதை வெளியே கொட்டு நமக்கு வேண்டாதது எல்லாம் வீட்டிற்கு வந்துவிட்டது என்கிறார். இதோ புரொமோ,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/P-3_U5bsDGc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-09T08:58:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் - வேட்பாளர்களை அறிவித்த திமுக]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/dmk-announced-candidates-for-by-election-1788939245"></link>
            <id>https://ibctamilnadu.com/article/dmk-announced-candidates-for-by-election-1788939245</id>
            <summary type="text">dmk announced candidates for madurantakam and dharapuram by election: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை திமுக அறிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>dmk announced candidates for madurantakam and dharapuram by election: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது. </p><h3>

இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்த திமுக</h3><p> 

தமிழ்நாட்டில் 7 சட்டமன்ற தொகுதிகள் காலியானாதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd4a5756-594d-4f02-991a-6ef0525d7999/26-6aa10bef28636.webp' /></p><p>

இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. அக்டோபர் 6 ஆம் திகதி வாக்குப்பதிவும், அக்டோபர் 8 ஆம் திகதி வாக்கு எண்னிக்கையும் நடைபெற உள்ளது.&nbsp;</p><p></p><p> 

இந்நிலையில் 2 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது.</p><p>

மதுராந்தகம் தொகுதியில் திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் ஐ.பரந்தாமன் மற்றும் தாராபுரம் தொகுதியில் சுகன்யா போட்டியிடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T08:54:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[AfD கட்சியின் வெற்றிக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/thousands-of-people-protest-after-afd-election-win-1788943422"></link>
            <id>https://news.lankasri.com/article/thousands-of-people-protest-after-afd-election-win-1788943422</id>
            <summary type="text">Thousands of people took to the streets across Germany after the AfD paty&#039;s election win: AfD கட்சியின் வெற்றிக்கு எதிராக ஜேர்மனியில் ஆயிரக்கணக்கானோர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Thousands of people took to the streets across Germany after the AfD paty's election win: AfD கட்சியின் வெற்றிக்கு எதிராக ஜேர்மனியில் ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
</p><p>


ஜேர்மன் கட்சிகள் பலவும், பொதுமக்களில் ஒரு பிரிவினரும் பயந்ததுபோலவே, ஜேர்மன் மாகாணமொன்றில் நடைபெற்ற தேர்தலில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி ஒன்று அமோக வெற்றி பெற்றுவிட்டது.</p><h3>

புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி அமோக வெற்றி</h3><p>

ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத்தில் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி, தேர்தல் நடைபெற்றது.
</p><p>
அந்தத் தேர்தலில் வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் என கருத்துக்கணிப்புகள் கூறியிருந்தன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60e1a3f3-772d-469e-92cf-8858702d12f8/26-6aa11c3fa4579.webp' /></p><p>

வழக்கமாக இந்த விடயத்தில் கருத்துக்கணிப்புகள் பொய்யாகும் நிலையில், யாரும் எதிர்பாராதவிதமாக, 44 சதவிகித வாக்குகளைப் பெற்று AfD கட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது.&nbsp;</p><p></p><h3>
ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்
</h3><p>
இந்நிலையில், ஜேர்மனியில் பல்வேறு நகரங்களில் AfD கட்சியின் வெற்றிக்கு எதிராக பொதுமக்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.</p><p>

AfD கட்சி, ரஷ்ய ஆதரவுக் கட்சியான BSW கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
</p><p>
அப்படி, AfD கட்சி ஆட்சி அமைக்குமானால், Saxony-Anhalt மாகாணம், தீவிர வலதுசாரி, புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி ஆளும் முதல் ஜேர்மன் மாகாணமாகிவிடும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ad91c3e-c8b5-4549-8533-59bba1083261/26-6aa11c4057146.webp' /></p><p>

ஆக, ஒரு தீவிர வலதுசாரிக் கட்சி ஆட்சி அமைப்பதைப் பார்த்துக்கொண்டு மக்கள் அமைதியாக இருந்துவிடக்கூடாது என்கிறார்கள் ஆர்பாட்டங்களில் பேசுபவர்கள்.&nbsp;</p><p>
AfD கட்சி, கடுமையான புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கைகள் கொண்ட கட்சி ஆகும்.
</p><p>
புலம்பெயர்ந்தோரை மட்டுமின்றி, புலம்பெயர்தல் பின்னணி கொண்ட ஜேர்மன் குடிமக்களையும் நாடுகடத்துவது போன்ற தீவிரக் கொள்கைகள் அக்கட்சிக்கு உண்டு.
</p><p>
அத்துடன், AfD கட்சியினரில் பலர் ரஷ்ய ஜனாதிபதியான புடினுக்கு நெருக்கமானவர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c08334d5-04cf-4a20-81ad-d08b1c908062/26-6aa11c410f88b.webp' /></p><p>
</p><p>
ஆக, AfD கட்சி அரசு அமைக்குமானால், அரசு, உளவுத்துறை தொடர்பான தகவல்களைப் பெற முயற்சிக்கலாம்.
</p><p>
அப்படி முக்கிய தகவல்களை அணுக AfD கட்சி அரசுக்கு அனுமதி கிடைக்கும் நிலையில், அது நாட்டுக்கு பாதுகாப்பானதாக அமையுமா என ஏற்கனவே பாதுகாப்புத்துறை மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T08:52:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜயின் ஆட்சி நீடிக்குமா....ஜாதகம் கூறுவது என்ன!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/will-chief-minister-vijay-s-tenure-last-horoscope-1788941486"></link>
            <id>https://jvpnews.com/article/will-chief-minister-vijay-s-tenure-last-horoscope-1788941486</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; தமிழக வெற்றிச் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான சி.ஜோசப் விஜய்யின் பிறந்த ஜாதகம் மற்றும் அவரது பதவியேற்பு நேர ஜாதகத்தை அடிப்படையாகக் கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; தமிழக வெற்றிச் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான சி.ஜோசப் விஜய்யின் பிறந்த ஜாதகம் மற்றும் அவரது பதவியேற்பு நேர ஜாதகத்தை அடிப்படையாகக் கொண்டு பிரபல ஜோதிடர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வெளியான தகவல்கள்&nbsp; பேசுபொருளாகியுள்ளது.</p><p>

தென்னிந்திய அரசியலில் விஜய் தற்போது மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளார். தமிழக அரசியலில் அவரது செல்வாக்கும், மக்கள் மத்தியில் அவருக்குள்ள பிரபலமும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55db420d-f0b6-44bf-84b2-708251d4e2e0/26-6aa114afec1bd.webp' /></p><h2>சவால்களை சமாளித்தால்&nbsp; 2031 வரை ஆட்சியில் நீடிப்பார்&nbsp;</h2><p>
</p><p>
அவரது பிறந்த ஜாதகத்தைப் பார்க்கும்போது, சுக்கிரன் வலிமையான நிலையில் இருப்பது முக்கியமான அம்சமாகத் தெரிகிறது. 
சுக்கிரன் பொதுவாக வசதி, செல்வம், கவர்ச்சி, புகழ் மற்றும் மக்களைக் கவரும் தன்மை ஆகியவற்றுடன் தொடர்புடைய கிரகமாகக் கருதப்படுகிறது.
</p><p>
ஆனால், அவரது பதவியேற்பு ஜாதகத்தை ஆழமாக ஆய்வு செய்யும்போது, 2029 வரை இந்த ஆட்சி நீடிப்பதில் சில முக்கியமான சந்தேகங்கள் இருப்பதாக ஜோதிடடர்கள் கூறியுள்ளதாக&nbsp; தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p>

மேலும், 2027-ஆம் ஆண்டிற்குப் பிறகு அரசுக்கு எதிராகக் கூர்மையடையும் விமர்சனங்கள், கூட்டணிக் கட்சிகளுக்குள் எழும் முரண்பாடுகள் மற்றும் சொந்தக் கட்சிக்குள்ளேயே உருவாகக்கூடிய உட்கட்சி எதிர்ப்புகள் ஆகியவை 2028-ஆம் ஆண்டை மிகவும் சவாலான காலகட்டமாக மாற்றும் எனக் கூறப்படுகிறது.</p><p>

 இத்தகைய அரசியல் மற்றும் நிர்வாக நெருக்கடிகள் காரணமாகவே, 2029-ஆம் ஆண்டு வரை இந்த ஆட்சி தொய்வின்றி நீடிக்குமா என்ற கேள்வி ஜோதிட ரீதியாக முன்வைக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
அதேவேளையில், ஒருவேளை இக்கட்டான 2028-ஆம் ஆண்டின் சவால்களைக் கடந்து விஜய் தலைமையிலான அரசு 2029 வரை வெற்றிகரமாக நிலைத்துவிட்டால், அதன்பின்னர் 2031 வரை&nbsp; ஆட்சியில் நீடிப்பார் என்றும்&nbsp; &nbsp; ஜோதிட ஆய்வு சுட்டிக்காட்டுகிறதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T08:51:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்பரப்பில் பலத்த காற்று எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/strong-wind-warning-sea-areas-hambantota-pottuvil-1788943461"></link>
            <id>https://jvpnews.com/article/strong-wind-warning-sea-areas-hambantota-pottuvil-1788943461</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்பரப்பில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை தொடர்பில் வானிலை ஆய்வுத் திணைக்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்பரப்பில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை தொடர்பில் வானிலை ஆய்வுத் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>


வானிலை ஆய்வுத் திணைக்களத்தினால் இன்று (09) காலை 11 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை நாளை (10) வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ec54264-d1b9-4211-a963-fa05b7722529/26-6aa11c66744e5.webp' /></p><p>
</p><p>


இதன்படி, குறித்த கடற்பரப்பில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும், கடல் கொந்தளிப்பாக காணப்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


எனவே, குறித்த கடற்பகுதிகளில் உள்ள மீனவர்கள் மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்படுமாறு வானிலை ஆய்வுத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T08:41:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா மாவட்டத்தின் பின்னடைவு - நாடாளுமன்றில் மஞ்சுள சுரவீர சரமாரியாக கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lagging-behind-of-nuwara-eliya-manjula-suraveera-1788941807"></link>
            <id>https://tamilwin.com/article/lagging-behind-of-nuwara-eliya-manjula-suraveera-1788941807</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டம் எதிர்கொண்டுள்ள நீண்டகால அபிவிருத்தி மற்றும் சமூகப்
பிரச்சினைகள் தொடர்பில், நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டம் எதிர்கொண்டுள்ள நீண்டகால அபிவிருத்தி மற்றும் சமூகப்
பிரச்சினைகள் தொடர்பில், நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினரும், நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான
மஞ்சுள சுரவீர, நாடாளுமன்றத்தில் நேற்று (08.09.2026) பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.
</p><p>
நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர் என்ற ரீதியில்,
மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் சில கேள்விகளை முன்வைக்க
விரும்புவதாகத் தெரிவித்த அவர்,

குறைந்த கல்வியறிவு காணப்படும் மாவட்டம் எது?

குறைந்த அளவில் வீதி அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்ட மாவட்டம் எது?

மந்தபோசணம் அதிகமாக காணப்படும் மாவட்டம் எது?

அரச சேவையாளர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வந்து சேவையாற்ற வேண்டிய நிலை
காணப்படும் மாவட்டம் எது?

என்ற கேள்விகளை முன்வைத்துள்ளார்.</p><h2>சுட்டிக்காட்டப்பட்டுள்ள பிரச்சினைகள்</h2><p>
</p><p>
அத்துடன், சுத்தமான குடிநீரை குறைந்த அளவில் பயன்படுத்தும் பகுதிகள் மற்றும்
மக்கள் தொடர்பான பிரச்சினைகளையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/809bdf8d-8975-4851-aca9-8f67c3eb59e5/26-6aa11b7d323ce.webp' /></p><p>

நுவரெலியா மாவட்டம் நீண்டகாலமாக எதிர்கொண்டுவரும் இவ்வாறான அடிப்படைப்
பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும்
அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், 'எந்நாளும் 88, 89 பற்றி எழுதிக்கொண்டு வந்து அதனை மாத்திரம்
பேசிக்கொண்டிருப்பது போதாது' எனக் குறிப்பிட்ட மஞ்சுள சுரவீர, நாட்டின்
தற்போதைய அரசியல் சூழலில் மக்கள் விழிப்படைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.</p><h2>அணிதிரளும் மக்கள்</h2><p>
</p><p>
மக்கள் தற்போதைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும்,
அரசாங்கத்துடன் இணைந்து பயணிப்பதற்கு மக்கள் அணிதிரண்டு வருவதாகவும் அவர்
நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
</p><p>
நுவரெலியா மாவட்டத்தின் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, குடிநீர் மற்றும் அரச
சேவைகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் தொடர்பில் நீண்டகால தீர்வுகள் அவசியம் என
வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள்
எதிர்காலத்தில் எந்தளவுக்கு முன்னெடுக்கப்படுகின்றன என்பதே தற்போது கவனத்தை
ஈர்த்துள்ள விடயமாக உள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T08:40:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியா மாநகரமுதல்வரை பதவிநீக்கும் வர்த்தமானி ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gazette-issued-removing-vavuniya-mayor-1788942881"></link>
            <id>https://jvpnews.com/article/gazette-issued-removing-vavuniya-mayor-1788942881</id>
            <summary type="text">வவுனியா மாநகரமுதல்வரை பதவிநீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்கால தடைக்கட்டளையினை இம்மாதம் 23 ஆம் திகதிவரை நீடித்து வவுனியா மேல்நீதிமன்றம் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வவுனியா மாநகரமுதல்வரை பதவிநீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்கால தடைக்கட்டளையினை இம்மாதம் 23 ஆம் திகதிவரை நீடித்து வவுனியா மேல்நீதிமன்றம் இன்று (09) புதன்கிழமை உத்தரவிட்டது.
</p><p style="text-align: justify; ">
எதிர்மனுதாரர் தரப்பு சட்டத்தரணியால் (அரசதரப்பு) எழுத்துமூல சமர்ப்பணங்களை வழங்க அவகாசம் கோரிமையால் இந்த இரண்டு வாரம் காலஅவகாசம் மன்றால் வழங்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76625e66-975b-4449-932a-a5ca6bcde778/26-6aa11b0da4b9e.webp' /></p><h2 style="text-align: justify; ">இடைக்காலத் தடை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify;">
வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை விண்ணப்பம் வவுனியா மேல்நீதிமன்றில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p style="text-align: justify;"> 

குறித்த விண்ணப்பத்தில் மாநகர முதல்வர் மீதான இடைக்காலத் தடையை நீடிப்பதா அல்லது அதனை விலக்குவதா என்பது தொடர்பாக கடந்த தவணையில் நீண்ட விவாதம் நடைபெற்றிருந்தது. </p><p style="text-align: justify;">


அந்த வகையில் இருதரப்பு விவாதங்களையும் எழுத்துமூல சமர்ப்பணமாக வழங்குமாறும், அதனை கடந்த28 ஆம் திகதி அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கடந்ததவணை வழங்கப்பட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">

அதன்படி, மனுதாரர் சார்பில் எழுத்துமூல சமர்ப்பணங்கள் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.</p><p style="text-align: justify;"> 

எனினும், எதிர்மனுதாரர் தரப்பு சட்டத்தரணியால் எழுத்துமூல சமர்ப்பணங்களை வழங்க அவகாசம் கோரிமையால் இந்த இரண்டு வாரம் காலஅவகாசம் மன்றால் இன்று வழங்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify;">
அத்துடன், முதல்வரை பதவி நீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்காலத் தடைக்கட்டளை இம் மாதம் 23ஆம் திகதி வரை மன்றால் நீடிக்கப்பட்டிருக்கிறது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-09T08:38:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பில் மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/change-in-the-value-of-the-sri-lankan-rupee-1788943211"></link>
            <id>https://jvpnews.com/article/change-in-the-value-of-the-sri-lankan-rupee-1788943211</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் இன்று (09) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.



அமெரிக்க டொலரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் இன்று (09) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
</p><p>


அமெரிக்க டொலரின் இன்றைய சராசரி கொள்வனவு விலை 324.2860 ரூபாயாகவும், அதன் விற்பனை விலை 333.2894 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a2fb51a-6a14-4922-9850-92a3508b24d7/26-6aa11b6d5cc2f.webp' /></p><p> 



அமெரிக்க டொலர் தவிர, ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களான அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்க் உள்ளிட்ட ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களின் விற்பனை விலைகளும் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று சற்று ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றது.&nbsp; </p><p>&nbsp; &nbsp; </p>]]></content>
            <updated>2026-09-09T08:37:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் பெயரில் போலி விளம்பரங்கள்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fake-advertisements-in-the-name-police-police-warn-1788940954"></link>
            <id>https://tamilwin.com/article/fake-advertisements-in-the-name-police-police-warn-1788940954</id>
            <summary type="text">இலங்கை பொலிஸின் பெயர் மற்றும் அடையாளங்களை பயன்படுத்தி இடம்பெறும் மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பொலிஸின் பெயர் மற்றும் அடையாளங்களை பயன்படுத்தி இடம்பெறும் மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலி விளம்பரங்கள் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டு வருவதாக பொலிஸ் திணைக்களம் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><h2>பொலிஸ் திணைக்களத்தின் அறிவுறுத்தல்</h2><p>


இவ்வாறான விளம்பரங்கள் மற்றும் தகவல்கள் உத்தியோகபூர்வமானவை அல்ல என்றும், போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50f044e9-7402-4759-b326-8d5ed6876b6a/26-6aa115eda1b9b.webp' />&nbsp;</p><p>
</p><p>


இலங்கை பொலிஸின் பெயர், இலச்சினை மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்தி AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் விளம்பரங்கள் அல்லது அறிவித்தல்கள் உண்மையானவை அல்ல என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
</p><p>


எனவே, இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ இலச்சினையுடன் கூடிய உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்படும் தகவல்கள் மற்றும் அறிவித்தல்களை மட்டுமே பொதுமக்கள் நம்புமாறு பொலிஸ் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p></p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T08:30:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்லோரும் எதிர்ப்பார்த்த சன் டிவியின் சன் சிங்கர் நிகழ்ச்சியின் முதல் புரொமோ... இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/most-waited-sun-singer-promo-is-out-1788938392"></link>
            <id>https://cineulagam.com/article/most-waited-sun-singer-promo-is-out-1788938392</id>
            <summary type="text">சன் டிவிசீரியல்கள் பக்கம் எங்களை நெருங்கவே முடியாது என பல வருடங்களாக நம்பர் 1 இடத்தில் கெத்து காட்டி வருகிறது சன் டிவி.&amp;nbsp;விஜய் மற்றும் ஜீ தமிழ் தொ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சன் டிவி</h2><p>சீரியல்கள் பக்கம் எங்களை நெருங்கவே முடியாது என பல வருடங்களாக நம்பர் 1 இடத்தில் கெத்து காட்டி வருகிறது சன் டிவி.&nbsp;</p><p>விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகள் சீரியல்களை தாண்டி ரியாலிட்டி ஷோக்களிலும் மாஸ் காட்ட சன் டிவியிலும் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. ரஞ்சிதமே, டாப் குக்கூ டூப் குக்கூ என நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் புதிய நிகழ்ச்சி குறித்து புரொமோ வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d593ac7-2cbf-4326-ae55-460e66adba31/26-6aa10fdb70195.webp' /></p><p>இதுவரை ஒளிபரப்பான இந்த சன் சிங்கர் நிகழ்ச்சிகளில் அனுராதா ஸ்ரீராம், கிரிஸ், கங்கை அமரன் என பலர் நடுவர்களாக உள்ளனர். </p><p>இந்த சன் சிங்கர் நிகழ்ச்சியின் ஒரு சீசனில் நடுவரிடம் வைர மோதிரம் வாங்கிய போட்டியாளர் எல்லாம் உள்ளனர். ஒரு சீசனில் குழந்தை ஒன்று காதோடுதான் நான் பாடுவேன் என்ற பாலை பாடி அசத்த அதைக்கேட்டு மெய்மறந்த கங்கை அமரன் குழந்தைக்கு வைர மோதிரம் எல்லாம் அணிவித்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78ce3c8b-e264-40db-bd80-894d173c5169/26-6aa10fdc4c867.webp' /></p><h2>
புரொமோ
</h2><p>விரைவில் சன் சிங்கர் 8வது சீசன் ஒளிபரப்பாக துவங்க உள்ளது. இந்த புதிய சீசனின் முதல் புரொமோ தற்போது வெளியாகியுள்ளது. </p><p>பல மாநிலத்தில் இருந்து சன் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த குட்டீஸ் புரொமோ இதோ,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/AxkWPXNbBck" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-09T08:30:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[AI-ல் கிளாமர் காட்டும் நடிகை ராய் லட்சுமி!! 80ஸ் லுக் போட்டோஸ்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/raai-laxmi-ai-photos-with-80s-look-viral-1788942445"></link>
            <id>https://viduppu.com/article/raai-laxmi-ai-photos-with-80s-look-viral-1788942445</id>
            <summary type="text">ராய் லட்சுமிகற்க கசடற படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகியவர் தான் நடிகை ராய் லட்சுமி. இதனையடுத்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் நடித்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ராய் லட்சுமி</h2><p>கற்க கசடற படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகியவர் தான் நடிகை ராய் லட்சுமி. இதனையடுத்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் நடித்து வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b107622c-a160-42fa-8223-1b0b36d8b967/26-6aa1187b25281.webp' /></p><p>

இரும்பு குதிரை, நீயா 2, மிருகா, சிண்ட்ரெல்லா போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது வோல்ப் படத்தில் நடித்து வரும் ராய் லட்சுமிக்கு 37 வயதாகிறது.</p><p> இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ராய் லட்சுமி, கிளாமர் பதிவுகளை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார்.

தற்போது, AI மூலம் டிரெண்ட் செய்யப்படும் 80-s லுக் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-09T08:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா மீதான கனடாவின் பதிலடி வரியால் பாதிக்கப்படவிருக்கும் பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/list-of-products-to-be-affect-in-canada-tariff-1788942406"></link>
            <id>https://canadamirror.com/article/list-of-products-to-be-affect-in-canada-tariff-1788942406</id>
            <summary type="text">&amp;nbsp;List of products from the United States subject to counter tariffs: அமெரிக்கா மீதான கனடாவின் பதிலடி வரியால் பாதிக்கப்படவிருக்கும் பொருட்கள் குறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;List of products from the United States subject to counter tariffs: அமெரிக்கா மீதான கனடாவின் பதிலடி வரியால் பாதிக்கப்படவிருக்கும் பொருட்கள் குறித்த விவரம்.</p><p>

கனடா அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தகப்போர் மும்முரமாகிவருகிறது.</p><p>

27.6 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான கனேடியப் பொருட்கள் மீது 50 சதவிகித சுங்க வரியை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b954e07-952e-43de-bc16-2acf238e8dd5/26-6aa118476b422.webp' /></p><p>
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதே 27.6 பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்கள் மீது 15 முதல் 50 சதவிகித சுங்க வரி விதிக்க கனடா முடிவு செய்துள்ளது.
</p><p>
விடயம் என்னவென்றால், இந்த வரிவிதிப்பால் கனேடிய மக்களும்தான் பாதிக்கப்பட உள்ளார்கள். ஏனென்றால், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அந்தப் பொருட்களை கனேடியர்கள்தான் வாங்கப்போகிறார்கள்!
</p><p>
கனடாவின் பதிலடி வரி விதிப்பால் அதிக அளவில் பாதிக்கப்படப்போவது உணவு மற்றும் பானங்கள்தான். உணவு தயாரிக்கத் தேவையான பொருட்கள், பால் பொருட்கள், ஆகியவை அதிகம் பாதிக்கப்பட உள்ளன.
</p><p>
அடுத்தபடியாக, வீட்டு உபயோகப் பொருட்களும், விவசாயத்துக்குத் தேவையான பொருட்களும் விலை உயர இருக்கின்றன.
</p><p>
விவசாயத்துக்குத் தேவையான பொருட்கள் விலை உயர உள்ளதால், அதுவும் உணவுப்பொருட்கள் விலையை பாதிக்கக்கூடும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59688694-c407-4c94-8971-595e740a1c43/26-6aa11848202b1.webp' /></p><p>
மேலும், கடல் உணவுகள், மரச்சாமான்கள், அழகு சாதனப்பொருட்கள், ஆண்களுக்கான உடைகள், பாதுகாப்பு உடைகள் போன்றவையும் விலை அதிகரிக்கலாம்.</p><p>

இதுபோக, கிரேன்கள், ஜாக் மற்றும் ஃபோர்க்லிஃப்ட், ரயில் பெட்டிகள், இயந்திரங்களில் பொருத்தப்படும் பம்புகள், மின்விசிறிகள் ஆகியவையும் விலை உயரலாம்.</p><p>

இவற்றை எல்லா பொதுமக்களும் வாங்குவதில்லை என்பது உண்மைதான். ஆனால், அவற்றை வாங்கும் நிறுவனங்கள் அவற்றிற்கான செலவை நுகர்வோர் மீதுதான் திணிக்கும். ஆக, அதிலும் மக்கள்தான் பாதிக்கப்பட உள்ளார்கள்.
</p><p>
மேலும், அமெரிக்க ஸ்டீல், காப்பர் தயாரிப்புகளும் விலை அதிகமாக உள்ளன.
</p><p>
ட்ரம்ப் ஜனாதிபதியானதைத் தொடர்ந்து, அமெரிக்கா கனடா மீது வரிகள் விதிக்கத் துவங்கியதிலிருந்தே கனேடிய மக்கள் பலர் கனேடிய தயாரிப்புகளையே வாங்கத் துவங்கியுள்ளார்கள்.
</p><p>
விடயம் என்னவென்றால், அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான இந்த வரிப்போரால், அவைகளும் விலை உயர உள்ளன.
</p><p>
ஆனாலும், தாங்கள் கனேடியப் பொருட்களையே வாங்கப்போகிறோம் என உறுதியாகக் கூறுகிறார்களாம் 60 சதவிகித கனேடியர்கள்!</p>]]></content>
            <updated>2026-09-09T08:26:55+00:00</updated>
        </entry>
    </feed>
