<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-20T08:21:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி மரண தண்டனை விவகாரம்: அனோஜனுக்காக அரசிடம் முக்கிய கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/capital-punishment-in-saudi-arabia-1789891037"></link>
            <id>https://tamilwin.com/article/capital-punishment-in-saudi-arabia-1789891037</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும்
இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன் விவகாரத்தில் அரசின் தலையீடுகள் மிகவும்
மந்த கதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும்
இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன் விவகாரத்தில் அரசின் தலையீடுகள் மிகவும்
மந்த கதியிலேயே உள்ளன என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற
உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், இத்தகையதொரு விவகாரத்தில் பிரதி வெளிவிவகார
அமைச்சரை விட ஜனாதிபதி அல்லது பிரதமர் நேரடியாகத் தலையிடுவதே பொறுத்தமானது
என்றும் வலியுறுத்தினார்.</p><p>

சிவராசா அனோஜன் விவகாரத்தில் பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் ஐக்கிய மக்கள்
சக்தியின் முன்னெடுப்புகள் குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே
அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><h2>சவூதி அரேபியா</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,

"சவூதி அரேபியாவின் அரச தீர்மானத்துடன் தொடர்புடைய இந்த விவகாரத்தில் தற்போதைய
இலங்கை அரசின் தலையீடுகள் மிகவும் மந்தமாகவே காணப்படுகின்றன.</p><p>

பிரதி வெளிவிவகார அமைச்சரின் தலையீட்டால் எந்தவொரு பலனையும் எதிர்பார்க்க
முடியாது என்பதால், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அல்லது பிரதமர் ஹரிணி
அமரசூரியவாவது இதில் நேரடியாகத் தலையிட வேண்டும்.</p><p>

சவூதி நாட்டின் சட்டங்கள் குறித்த அறிவின்றி மேற்படி இளைஞர் சமூக
வலைத்தளத்தில் பதிவிட்டமை தவறாக இருக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0213e02-53d0-447e-b1bd-f7276a71de5a/26-6aaf94ec39570.webp' /></p><p>எனினும், அவர் மனிதாபிமான
அடிப்படையில் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எங்களது பணிவான
கோரிக்கையாகும்.

பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் ஐக்கிய மக்கள் சக்தி இந்த விவகாரத்தில்
முழுமையான கவனம் செலுத்தியுள்ளது. </p><p>தனிப்பட்ட ரீதியிலும் இதற்காக நான்
செயற்படவுள்ளேன்.அதற்கமைய, சிவராசா அனோஜனுக்கான பொதுமன்னிப்பைக் கோரி, கொழும்பிலுள்ள சவூதி
தூதரகத்தின் ஊடாக அந்நாட்டு மன்னர் சல்மான் பின் அப்துல்அஸீஸ் அல் சவூத்திடம்
எழுத்துமூலம் நான் நேரடியாகக் கோரிக்கை விடுக்கவுள்ளேன்.</p><p>

இந்த வாரத்துக்குள் அந்தக் கடிதம் சவூதி தூதுவரிடம் கையளிக்கப்படும் என குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T08:10:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமரி அதப்பத்து ருத்ரதாண்டவம்! பாகிஸ்தான் அணியை தரைமட்டமாக்கி..இறுதிப்போட்டியில் இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chamari-athapaththu-smash-83-runs-help-sl-beat-pak-1789891748"></link>
            <id>https://news.lankasri.com/article/chamari-athapaththu-smash-83-runs-help-sl-beat-pak-1789891748</id>
            <summary type="text">Sri Lanka women beat pakistan by 8 wickets: மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

நிஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Sri Lanka women beat pakistan by 8 wickets: மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
</p><p>
நிஸ்ஷினில் நடந்த மகளிர் ஆசியக் கிண்ணத் தொடரின் முதல் அரையிறுதியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.&nbsp;</p><h2>ஆயிஷா ஜாபர்&nbsp;71</h2><p>முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 177 ஓட்டங்கள் குவித்தது. ஆயிஷா ஜாபர் 40 பந்துகளில் 71 ஓட்டங்களும், ஷாவால் ஜூல்பிகர் 54 ஓட்டங்களும் விளாசினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c006304-4471-4817-8ab3-8549b20f4de4/26-6aaf94a701d7f.webp' /></p><p></p><p>பின்னர் ஆடிய இலங்கை அணி சமரி அதப்பத்துவின் அதிரடியில், 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>சமரி அதப்பத்து&nbsp;ருத்ரதாண்டவம்</h2><p>
அணித்தலைவர் சமரி அதப்பத்து (Chamari Athapaththu) ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 83 ஓட்டங்களும், ஹாசினி பெரேரா (Hasini Perera) 26 பந்துகளில் 42 ஓட்டங்களும் விளாசினர். </p><p>இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது.&nbsp;22ஆம் திகதி இந்திய அணியை கோரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் இலங்கை எதிர்கொள்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b10a956-d41a-43a4-ba32-a47e8c501005/26-6aaf94a7ac840.webp' /></p>]]></content>
            <updated>2026-09-20T08:07:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச சந்தையில் மீண்டும் எகிறும் தங்கம் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gold-prices-soar-again-in-the-international-market-1789891166"></link>
            <id>https://jvpnews.com/article/gold-prices-soar-again-in-the-international-market-1789891166</id>
            <summary type="text">சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (20) அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (20) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.</p><p>அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,377.91 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.</p><p>அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 66.25 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.</p><p>கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச விலை அதிகரிப்பு காரணமாக இன்று இலங்கையிலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.</p><p>மேலும், டொலரின் வலுவூட்டல் மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகள் இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைகின்றன எனவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-09-20T07:59:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முக்கிய நகர்வு - சஜித் உள்ளிட்ட 10 எம்.பி.க்களுக்கு அழைப்பு விடுத்துள்ள சிஐடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/saleh-s-link-to-the-easter-attacks-sajith-cid-1789887805"></link>
            <id>https://tamilwin.com/article/saleh-s-link-to-the-easter-attacks-sajith-cid-1789887805</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு தொடர்பு இருப்பதாக நாடாளும...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 10 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பெற சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.</p><p>

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துகள் நாடாளுமன்ற சிறப்புரிமையின் கீழ் பாதுகாக்கப்படுவதால், அவர்களிடம் வாக்குமூலம் பெறுவது அவர்களின் தன்னார்வ சம்மதம் மற்றும் முழுமையான ஒத்துழைப்பின் அடிப்படையிலேயே இடம்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>&nbsp;உயிர்த்த ஞாயிறு தாக்குதல்</h2><p>
சுரேஷ் சலே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக அவர்களிடம் நம்பகமான தகவல்கள் அல்லது ஆதாரங்கள் இருக்கலாம் என்ற அடிப்படையில், அந்தத் தகவல்கள் என்ன என்பதை ஆராய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
</p><p>
இதற்கமைய, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில், நாடாளுமன்ற ஹன்சார்ட் அறிக்கைகளில் பதிவாகியுள்ள குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளின் பிரதிகள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1def562-8ea5-4505-8af5-39fa7c245f99/26-6aaf8e0437109.webp' /></p><p>
</p><p>
அதன் பின்னர், சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>விசாரணைக்கு உதவும் வகையில் இந்தத் தகவல்கள் பெறப்படுவதாகவும், இது முழுமையாக தன்னார்வ அடிப்படையிலான செயல்முறை என்றும் விசாரணை அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கவுள்ளனர்.</p><p>இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள 24 சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.</p><h2>வழக்கு விசாரணை&nbsp;</h2><p>
கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றுள்ளது.</p><p> </p><p>

நீதிபதிகள் நவரத்ன மாரசிங்க, சுஜீவ நிஷங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகியோர் இந்தக் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

வழக்கில் இருதரப்பினரும் தங்களது இறுதி எழுத்துமூல சமர்ப்பிப்புகளை கொழும்பு அலுத்கடே எம்.எம்.சி. கட்டிடத்தில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் சமர்ப்பித்து நிறைவு செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c82481d4-d495-44dc-ad5c-53950b3e63e0/26-6aaf8e04e2822.webp' /></p><p>



இதற்கிடையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் சலே, கடந்த 100 நாட்களுக்கு அண்மித்த காலமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அவர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவது அவசியமா என்பதை உறுதிப்படுத்தும் மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கோரியிருந்தார்.
</p><p>
எனினும், அவ்வாறான அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறியதாகக் கூறப்படும் நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T07:58:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியாவில் கடும் மழை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heavy-rain-in-nuwara-eliya-1789890852"></link>
            <id>https://jvpnews.com/article/heavy-rain-in-nuwara-eliya-1789890852</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.&amp;nbsp;இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.</p><p>&nbsp;இன்று (20) காலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதுடன், பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;மழையுடன் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக, நுவரெலியா மாவட்டத்தின் பல பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்தும் சிரமமான நிலையை எட்டியுள்ளது.</p><p>குறிப்பாக, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கலகல, பிட்டவல, கினிகத்தேனை, தியகல, வட்டவளை மற்றும் ஹட்டன் பகுதிகளிலும், ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் குடாகம, கொட்டகலை, சென் கிளேர், தலவாக்கலை, ரதல்ல மற்றும் நானுஓயா பகுதிகளிலும் அடிக்கடி கடும் பனிமூட்டம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதனால், சாரதிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு, வேகக் கட்டுப்பாட்டுடன் பயணிக்குமாறும், வாகனங்களுக்கு இடையில் போதிய இடைவெளியைப் பேணுமாறும், தேவையற்ற முந்திச் செல்லும் நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p>மாவட்டத்தின் பல பகுதிகளில் வீசிய கடும் காற்று காரணமாக மரங்கள் மற்றும் கிளைகள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்துள்ளதால், பல இடங்களில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-20T07:54:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் காட்டு யானை அட்டகாசம்: உயிர்தப்பிய வயோதிப குடும்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wild-elephant-rampage-in-keppapulavu-1789889822"></link>
            <id>https://tamilwin.com/article/wild-elephant-rampage-in-keppapulavu-1789889822</id>
            <summary type="text">முல்லைத்தீவு- கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு பகுதியில் நேற்று(19.9.2026) இரவு புகுந்த காட்டு யானை, வீட்டு யன்னல்களை உடைத்து அட்டகாசத்தில்
ஈடுபட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு- கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு பகுதியில் நேற்று(19.9.2026) இரவு புகுந்த காட்டு யானை, வீட்டு யன்னல்களை உடைத்து அட்டகாசத்தில்
ஈடுபட்டுள்ளது.</p><p>

குறித்த வீட்டில் வயோதிப குடும்பம் வசித்து வந்த நிலையில், காட்டு யானை
வீட்டிற்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தியபோது உயிர்தப்பியுள்ளனர்.
</p><p>அத்துடன், வீட்டின் வளாகத்தில் இருந்த பயன்தரும் மரங்களையும் காட்டு யானை
சேதப்படுத்தியுள்ளது.</p><h2>கோரிக்கை</h2><p> </p><p>இதேவேளை, அப்பகுதியிலுள்ள ஏனைய வீடுகளின்
வளாகங்களுக்குள் புகுந்த யானை, தென்னை உள்ளிட்ட பயன்தரும் மரங்களையும்
சேதப்படுத்திச் சென்றுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் அறிந்துகொண்ட கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞா.
யூட்சன் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து
நிலைமைகளை கேட்டறிந்து கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bbf8bea-59c9-4dc8-9768-d0ba3e1d79a8/26-6aaf9028db96f.webp' /></p><p>
</p><p>குடியிருப்புகளுக்குள் காட்டு யானைகள் தொடர்ச்சியாக புகுந்து மக்களின்
வீடுகள், பயன்தரும் மரங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை சேதப்படுத்தி வருவதாக
அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
எனவே, காட்டு யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து மக்களின் உயிர்களையும்
உடமைகளையும் பாதுகாக்கும் வகையில், யானை வேலிகளை அமைத்து தமது பாதுகாப்பை
உறுதிப்படுத்துவதுடன், மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தித்
தருமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T07:50:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை; தெஹ்ரானின் அனுமதி கட்டாயம் ; ஈரான் அதிரடி சட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/strait-of-hormuz-tehran-permission-mandatory-iran-1789887109"></link>
            <id>https://canadamirror.com/article/strait-of-hormuz-tehran-permission-mandatory-iran-1789887109</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை வழியாகத் தரவு கேபிள்களை (Data cables) அமைப்பதற்குத் தெஹ்ரானின் அனுமதி கட்டாயம் என்பதை வலியுறுத்தும் சட்டப் பிரிவுக்கு ஈரானிய உயர் அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை வழியாகத் தரவு கேபிள்களை (Data cables) அமைப்பதற்குத் தெஹ்ரானின் அனுமதி கட்டாயம் என்பதை வலியுறுத்தும் சட்டப் பிரிவுக்கு ஈரானிய உயர் அதிகாரிகளின் சிறப்புக்குழு ஒப்புதல் அளித்துள்ளதாகப் ஃபார்ஸ் (Fars) செய்தி முகமை தெரிவித்துள்ளது.</p><p>உளவுத்துறை அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் சட்ட விவகாரங்களுக்கான துணைத் தலைவரின் அலுவலகம் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் இந்தச் சிறப்புக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.</p><p>'பிரிவு 10' (Article 10) என்று முறைப்படி அழைக்கப்படும் இந்தச் சட்டப் பிரிவு, இந்த நீரிணை வழியாகச் செல்லும் பிற தரவுத் தகவல் தொடர்பு சாதனங்களுக்கும் பொருந்தும் என ஃபார்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.</p><p>ஈரானின் இந்தச் சட்டத்தின் துல்லியமான விவரங்கள் பல ஒழுங்குமுறை விதிகளின் கீழ் கொண்டுவரப்பட உள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-20T07:47:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரொறன்ரோ - கியுபெக் அதிவேக ரயில் திட்டத்திற்கு எதிராகப் போர்க்கொடி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/hundreds-rally-against-proposed-speed-rail-line-1789889507"></link>
            <id>https://canadamirror.com/article/hundreds-rally-against-proposed-speed-rail-line-1789889507</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவில் ரொறன்ரோ மற்றும் கியுபெக் நகருக்கு இடையே அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அதிவேக ரயில் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான மக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவில் ரொறன்ரோ மற்றும் கியுபெக் நகருக்கு இடையே அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அதிவேக ரயில் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான மக்கள் சனிக்கிழமை பிற்பகலில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>
கியுபெக் மாகாணத்தில் ஒட்டாவா மற்றும் மொண்ட்ரியல் நகரங்களுக்கு இடையே அமைந்துள்ள கிராமப்புற பகுதியான ரிகோவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. </p><p>இதில் பெருமளவிலான விவசாயிகள் கலந்துகொண்டு, இத்திட்டம் தங்கள் வாழ்வாதாரத்தையும் விவசாய நிலங்களையும் கடுமையாகப் பாதிக்கும் எனத் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e1f9098-f360-4b79-a2c8-d650de7e7a39/26-6aaf8be5427e8.webp' /></p><p>
இத்திட்டத்தின் பாதை அமைக்கும் பகுதியில் தனது குடும்பத்தின் 3,000 ஏக்கர் நிலம் உள்ளடங்குவதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டால் அது தங்கள் விவசாய வணிகத்தைப் பேரழிவிற்கு உள்ளாக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>மேலும், இது தேவையற்ற சுற்றிச்செல்லும் பாதைகளையும் கூடுதல் செலவுகளையும் ஏற்படுத்தி, எதிர்காலத்தில் விவசாயப் பண்ணைகளின் இயங்குதளத்தையே கேள்விக்குறியாக்கும் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.
</p><p>ரொறன்ரோ முதல் கியுபெக் வரை ஒட்டாவா, மொண்ட்ரியல், லாவால் மற்றும் துரோவா-ரிவியேர் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்த அதிவேக ரயில் திட்டத்தை 'ஆல்டோ' நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. இத்திட்டத்தின் முதற்கட்ட பாதை ஒட்டாவா மற்றும் மொண்ட்ரியல் இடையே அமைக்கப்படவுள்ளது.
</p><p>இது குறித்துப் பேசிய ஆல்டோ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், "ரொறன்ரோ-கியுபெக் நகரப் பிராந்தியமானது 1.7 கோடி மக்களைக் கொண்ட கனடாவின் மிகப்பெரிய பொருளாதாரப் பகுதியாகும். </p><p>இது நாட்டின் மக்கள் தொகையில் 41 சதவீதத்தையும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 40 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பையும் வழங்குகிறது. </p><p>உலகளவில் இத்தகைய பிராந்தியங்களில் அதிவேக ரயில் திட்டங்கள் பெரும் வெற்றியடைந்துள்ளன" எனக் கூறினார்.
எனினும், இத்திட்டத்தின் நிதிச் செலவு மற்றும் நம்பகத்தன்மை குறித்துப் போராட்டத்தின் போது உரையாற்றியவர்கள் பலத்த சந்தேகங்களை எழுப்பினர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T07:46:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதியில் அனோஜனின் விடுதலைக்காக இனம், மதம், மொழி கடந்து கையெழுத்து சேகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/signature-campaign-in-saudi-anojan-s-release-1789888772"></link>
            <id>https://jvpnews.com/article/signature-campaign-in-saudi-anojan-s-release-1789888772</id>
            <summary type="text">சவுதியில்&amp;nbsp; சிறைபிடிக்கப்பட்டுள்ள அனோஜனின் விடுதலைக்கான பிரம்மாண்டமான கையெழுத்து சேகரிப்பு மற்றும் கவனயீர்ப்புப் போராட்டமானது இன்று இடம்பெற்றது.ஞா...</summary>
            <content type="html"><![CDATA[<p><a href="https://jvpnews.com/article/anojan-death-sentence-in-saudi-protest-srilanka-1789882739" target="_blank">சவுதியில்&nbsp; சிறைபிடிக்கப்பட்டுள்ள அனோஜனின்</a> விடுதலைக்கான பிரம்மாண்டமான கையெழுத்து சேகரிப்பு மற்றும் கவனயீர்ப்புப் போராட்டமானது இன்று இடம்பெற்றது.</p><p>ஞாயிற்றுக்கிழமை (20)&nbsp; காலை 9:00 மணி முதல், நற்பிட்டிமுனை முதலாம் கட்டைச் சந்தியில் இக்கவனயீர்ப்பு நிகழ்வு ஆரம்பமாகி வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது.</p><p>இனம், மதம், மொழி என அனைத்து எல்லைகளையும் கடந்து, மனிதாபிமானத்துடன் ஒரு மனித உயிரைப் பாதுகாப்பதற்காக யாவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கில்,கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.</p><p>அனோஜனின் விடுதலைக்கான நீதியை வலியுறுத்தியும், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் நடைபெறும் இப்போராட்டத்தில், பிரதேச பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் எனப் பலரும் கட்சி, மத பேதமின்றிப் பெருந்திரளாகக் கலந்துகொண்டு தங்களது ஆதரவுக் கரங்களை நீட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T07:46:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவுதிகளால் பதற்றத்தில் சவுதி அரேபியா... வார இறுதியில் வெள்ளை மாளிகைத் திரும்பிய ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-arrives-back-white-house-1789890524"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-arrives-back-white-house-1789890524</id>
            <summary type="text">Trump arrives back at White House amid tensions with: பதற்றங்களுக்கு மத்தியில் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார்.
சவுதி அரேபியாவில் உள்ள முக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump arrives back at White House amid tensions with: பதற்றங்களுக்கு மத்தியில் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார்.
</p><p>சவுதி அரேபியாவில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த தளங்கள் மீது நடத்தப்பட்ட தொடர் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு ஹவுதிகள் பொறுப்பேற்ற நிலையில், டொனால்ட் ட்ரம்ப் விடுமுறையை முன்கூட்டியே முடித்துக்கொண்டுள்ளார்.</p><h2>கேம்ப் டேவிட் ஓய்விடத்தில்</h2><p>
</p><p>ரியாத் விமான நிலையத்தின் மீது கரும் புகை சூழ்ந்து காணப்பட்ட காணொளி வெளியானதை அடுத்து, யேமன் ஹவுதிகள் தங்கள் தலைநகரை பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்க முயன்றதை சவுதி அரேபியா சனிக்கிழமை உறுதி செய்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c862f5e-e5c2-4c9f-8928-5f8ca65c365c/26-6aaf8fde7fa83.webp' /></p><p>
</p><p>ட்ரம்ப் முதலில் வார இறுதி முழுவதும் கேம்ப் டேவிட் ஓய்விடத்தில் தங்கிவிட்டு, ஞாயிற்றுக்கிழமை வெள்ளை மாளிகைக்குத் திரும்புவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. </p><p>இருப்பினும், சனிக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 7:57 மணிக்கு, ட்ரம்ப் Marine One ஹெலிகொப்டரில் வெள்ளை மாளிகை திரும்பியுள்ளார்.</p><p></p><p> </p><p>சவுதி அரேபியாவுக்கு எதிராக, பொதுமக்களுக்கான விமான நிலையங்கள் மீதான தாக்குதல்கள் உட்பட, விரோத நடவடிக்கைகளில் ஹவுதிகள் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சகம் உறுதிப்படுத்தியது. </p><p>மேலும், இந்த இராணுவ மோதல் மிக வேகமாகத் தீவிரமடைய வாய்ப்புள்ளது. மத்திய கிழக்குக்கு வெளியே உள்ள அமெரிக்கர்கள், அப்பகுதிக்குச் செல்வது மற்றும் அதன் வழியாகப் பயணம் செய்வது குறித்துத் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
</p><p>சண்டை தீவிரமடைந்த பின்னர் ஹவுதிகள் ரியாத் மீது இலக்கு வைத்தது, மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
ஹவுதிகளுக்கு எதிராகப் போரிடும் சவுதி தலைமையிலான கூட்டணி, அதிகாலையில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் குறித்த அறிக்கையை மிகத் தாமதமாகவே வெளியிட்டது.</p><h2>தாக்கியதாக ஹவுதிகள்</h2><p> இதனிடையே, ரியாத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும், யான்புவில் உள்ள சவுதி எண்ணெய் நிறுவனமான 'அராம்கோ'வின் (Aramco) வசதிகளையும் தாக்கியதாக ஹவுதிகள் முன்னதாக உரிமை கோரியிருந்தனர். </p><p>ஹார்முஸ் நீரிணையை அடுத்து, மற்றொரு முக்கியமான உலகளாவிய கப்பல் போக்குவரத்துப் பாதைக்கு அருகில் அதிகரித்து வரும் மோதல், சந்தைகளுக்குப் புதிய நெருக்கடிகளைக் கொண்டுவந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-20T07:45:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 படத்துல நிர்வாணமா நடிச்சேன்னு உள்ளாடை இல்லாமல் சண்ட போட சொன்னார்!! ராதிகா ஆப்தே..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/radhika-apte-opens-up-about-the-assumptions-scene-1789891026"></link>
            <id>https://viduppu.com/article/radhika-apte-opens-up-about-the-assumptions-scene-1789891026</id>
            <summary type="text">ராதிகா ஆப்தேபாலிவுட் சினிமாவில் பலவிதமான போல்ட்டான படங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருபவர் தான் நடிகை ராதிகா ஆப்தே. தற்போது லஸ்ட் ஸ்டோரி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ராதிகா ஆப்தே</h2><p>பாலிவுட் சினிமாவில் பலவிதமான போல்ட்டான படங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருபவர் தான் நடிகை ராதிகா ஆப்தே. தற்போது லஸ்ட் ஸ்டோரிஸ் 3 ஆந்தாலஜியில் நடித்துள்ளார். லஸ்ட் ஸ்டோரிஸ் 3 வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வரும் நிலையில், தான் நடித்த படுக்கையறை காட்சி மற்றும் முத்தக்காட்சிகள் குறித்து ஓபனாக பேசியிருக்கிறார் ராதிகா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09cc9cbb-9008-4520-b136-6e608030ca54/26-6aaf91d47dd7d.webp' /></p><p> </p><p>அதில், நான் ஆரம்பத்தில் 4, 5 படங்களில் முழுமையாக நிர்வாணமாக நடித்திருக்கிரேன். அதனால் இவங்க எப்படி வேண்டுமானாலும் நடிப்பார்கள் என்று நினைக்கிறார்கள். நான் அவர்களிடம், நான் ஏற்கனவே அப்படி நடித்திருக்கிறேன் என்பதற்காக இப்போது இதுபோல் நடிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது என்று சொல்கிறேன்.</p><p> தற்போது முத்தம் அல்லது நெருக்கமான காட்சியில் நடிக்கச் சொன்னால், அது கதைக்கு தேவையா என்பதை கேட்டுவிட்டுத்தான் அக்காட்சியில் நடிக்கலாமா? வேண்டாமா? என்று முடிவெடுக்கிறேன். ஆனால் சிலர், கொஞ்சம் கொஞ்சம் என்று சொல்வார்கள். கொஞ்சம் கிஸ்ஸிங், கொஞ்சம்..15 செகண்ட் இம்ப்ரோவைஸ் என்று கூறுவார்கள். அப்போது நான், சாரி எனக்கு புரியவில்லை என்று கேட்பேன், அவர்கள் அப்படி சொல்வது எனக்கு வேடிக்கையாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98972209-4d1b-4b75-9482-a6465123246b/26-6aaf91d5328b6.webp' /></p><p> </p><h2>உள்ளாடை இல்லாமல்</h2><p>இதையெல்லாம்விட மற்றொரு சம்பவம் இருக்கு. ஷூட்டிங் ஸ்பாட்டில், நீங்கள் ஒரு ஆக்ஷன் காட்சியில் நடிக்க வேண்டுமென்றார்கள். அப்போது சட்டையின் பட்டன்களை கழட்ட சொன்னார்கள். உடனே நான் இது ஆக்ஷன் காட்சிதானே, அதற்கு ஏன் சட்டை பட்டனை கழட்ட வேண்டும் என்றேன். </p><p>அதற்கு அவர்கள், இந்த சண்டை காட்சியில் நீங்கள் சட்டை பட்டனை கழட்டிவிட்டு உள்ளாடையுடன் மட்டுமே சண்டைப்போட வேண்டும் என்றார்கள். இதைக் கேட்டதும் இதன்மூலம் என்ன சாதிக்க முயற்சி செய்கிறீர்கள் என்று கேட்டேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bae20038-a34c-4d34-a1ae-ef906df13e0a/26-6aaf91d5e40ed.webp' /></p><p> அப்படத்தின் பெயரை இப்போது என்னால் சொல்ல முடியாது, நான் சொன்னால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். ஏனென்றால், அந்த மாதிரியான காட்சி அப்படத்தில் இல்லை. அந்த காட்சியில் நான் நடிக்கவில்லை. ஒரு நடிகர் ஏற்கனவே சில நெருக்கமான காட்சியில் நடித்திருக்கிறார் என்பதற்காக, தொடர்ந்து அதே மாதிரியான காட்சிகளில் நடிக்க சம்பதிப்பார் என்று நினைக்கக்கூடாது. </p><p>அந்த காட்சி ஒரு கதைக்கு ஏன் தேவை, அதன் நோக்கம் என்ன என்பதை இயக்குநர்கள் தெளிவாக விளக்க வேண்டும். ஒரு படம் வெற்றிப்பெற வேண்டும் என்பதற்காக நடிகர்களின் விருப்பத்தையும் தனிப்பட்ட எல்லைகளையும் மீறி அழுத்தம் கொடுக்கக்கூடாது என்று ராதிகா ஆப்தே வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-20T07:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அவதானம் - கிங் கங்கை கரையோர மக்களுக்கு அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minor-flood-warning-issued-along-the-gin-river-1789889182"></link>
            <id>https://tamilwin.com/article/minor-flood-warning-issued-along-the-gin-river-1789889182</id>
            <summary type="text">சீரற்ற வானிலை காரணமாக கிங் கங்கையை சூழவுள்ள பல தாழ்நில பகுதிகளுக்குச் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசன ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீரற்ற வானிலை காரணமாக கிங் கங்கையை சூழவுள்ள பல தாழ்நில பகுதிகளுக்குச் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p> நீர்ப்பாசன திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p>தற்போது வரை பதிவாகியுள்ள மழை வீழ்ச்சிக்கமைவாக, எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் சிறிய அளவிலான வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><h2>தாழ்நிலப்பகுதிகளில் வாழும்&nbsp;மக்களுக்கு&nbsp;எச்சரிக்கை </h2><p>
</p><p>
 

இதற்கமைய, கிங் கங்கையைச் சார்ந்த தவலம, நாகொட, பத்தேகம மற்றும் வலிவிட்டிய - திவிதுர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட கிங் கங்கைப் பள்ளத்தாக்கின் தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு&nbsp;எச்சரிக்கை&nbsp;விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db40352b-d48b-43e2-b084-eac2bc40013e/26-6aaf8dfcb27ad.webp' /></p><p>எனவே அப்பகுதி மக்கள் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T07:42:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாவலப்பிட்டி பகுதியில் பெருக்கெடுத்த வெள்ளம் - நீரில் மூழ்கிய அதிகமான வீடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/floods-in-nawalapitiya-1789887819"></link>
            <id>https://ibctamil.com/article/floods-in-nawalapitiya-1789887819</id>
            <summary type="text">நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில்&amp;nbsp; பலத்த மழை காரணமாக மகாவலி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் பல தாழ்நிலப் பகுதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில்&nbsp; பலத்த மழை காரணமாக மகாவலி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் பல தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.</p><p>இன்று (20.09.2026) அதிகாலை முதல் பெய்து வரும் கனமழையால், அப்பகுதிகளில் உள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.</p><p>இதன் காரணமாக 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் இடத்தை விட்டு இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>மகாவலி கங்கையின் நீர்மட்டம்</h2><p>
</p><p>
 

குறிப்பாக, நாவலப்பிட்டியின் கித்துல்கோட்டே, லபுவெல்கொட்டுவ மற்றும் ஜயசுந்தரஓவிட்ட ஆகிய பகுதிகளில் உள்ள பல தாழ்நிலப் பகுதிகளும் வீடுகளும் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22c641d6-ffcb-48f5-9914-df173c1fbd9d/26-6aaf8dcd08881.webp' /></p><p>வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களில் சிலர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மகாவலி கங்கையின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>
வெள்ள நிலைமை தொடர்பில் பிரதேச மக்கள் அவதானமாக இருக்குமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T07:40:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகைகள் தமன்னா மற்றும் சோபிதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/tamanna-bhatia-sobhita-dhulipala-latest-photos-1789888010"></link>
            <id>https://cineulagam.com/article/tamanna-bhatia-sobhita-dhulipala-latest-photos-1789888010</id>
            <summary type="text">இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திரையுலக பிரபலங்கள் அவ்வப்போது தங்களது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்வார்கள். அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திரையுலக பிரபலங்கள் அவ்வப்போது தங்களது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்வார்கள். அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும்.</p><p> அந்த வகையில், தற்போது முன்னணி நடிகைகளான தமன்னா மற்றும் சோபிதா ஆகிய இருவரும் இன்ஸ்டாகிராமில் தங்களுடைய சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளனர். இவை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. </p><p>இதோ அந்த புகைப்படங்கள்:</p>]]></content>
            <updated>2026-09-20T07:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் சிறுவனிடம் மோசமாக நடந்த இலங்கையர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/srilankan-man-charged-in-sexual-assault-of-16-boy-1789888462"></link>
            <id>https://ibctamil.com/article/srilankan-man-charged-in-sexual-assault-of-16-boy-1789888462</id>
            <summary type="text">கனடாவில் சிறுவன் ஒருவனை துன்புறுத்திய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.16 வயது சிறுவனை தகாத முறையில் துன்புறுத்தியதாகக் கூறப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் சிறுவன் ஒருவனை துன்புறுத்திய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>16 வயது சிறுவனை தகாத முறையில் துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 62 வயதான இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளதாக டர்ஹாம் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>விட்பி பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணியாற்றி வந்த சம்பத் பெரேரா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>குற்றச்சாட்டுகள்&nbsp;</h2><p>
</p><p>

குறித்த மருந்தகத்தில் பணியாற்றிய 16 வயது சிறுவன் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acf2c1f9-ce1b-46f2-bf58-a969143bd7be/26-6aaf8b0520237.webp' /></p><p>சந்தேக நபர் மீது தகாத முறையில் செயற்பட்டதாக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.</p><p>
இந்நிலையில், குறித்த நபரால் வேறு எவரேனும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டால், அவர்கள் முன்வந்து காவல்துறையினரை தொடர்பு கொள்ளுமாறு டர்ஹாம் பிராந்திய காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T07:32:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிங்களவர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் அநுர அரசு! விமல் பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/freedom-of-remembrance-in-the-north-wimal-1789888620"></link>
            <id>https://tamilwin.com/article/freedom-of-remembrance-in-the-north-wimal-1789888620</id>
            <summary type="text">வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் இனவாதிகளும் அடிப்படைவாதிகளும்
சுதந்திரமாகச் செயற்பட்டு வரும் நிலையில், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த
சிங்களவர்களை...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் இனவாதிகளும் அடிப்படைவாதிகளும்
சுதந்திரமாகச் செயற்பட்டு வரும் நிலையில், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த
சிங்களவர்களையே தற்போதைய அரசு நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது என்றும் தேசிய
சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச
தெரிவித்தார்.</p><p>

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
அவர் மேலும் கூறுகையில்,

"யுத்தத்தை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவந்து, நாட்டின் தேசிய பாதுகாப்பை
உறுதிப்படுத்தி, இறையாண்மையைப் பாதுகாத்த முப்படையின் தளபதிகளும் அவர்களின்
குடும்பத்தாரும், அத்துடன் முன்னாள் அரச தலைவர்களின் குடும்பத்தாரும் இன்று
அரசால் திட்டமிட்டு நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.</p><h2>திலீபனின் நினைவேந்தல்</h2><p>

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் இனவாதிகளும் அடிப்படைவாதிகளும்
எவ்வித தடையுமின்றிச் சுதந்திரமாகச் செயற்படுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/408760cf-6d40-4279-a2b5-d3a1fa44a2af/26-6aaf8b46e2920.webp' /></p><p> </p><p>வடக்கில் திலீபனின்
நினைவேந்தல் நிகழ்வும் அரச அனுசரணையுடனேயே முன்னெடுக்கப்படுகின்றது. </p><p>ஆனால்,
இந்தப் பகுதிகளில் சிங்களவர்களின் உரிமைகள் திட்டமிட்ட முறையில்
மறுக்கப்படுவதுடன், சிங்களவர்களின் உரிமைகளை இல்லாதொழிக்கும் இத்தகைய
செயற்பாடுகளுக்கு அரசு மறைமுகமாக ஆதரவு வழங்கி வருவதை அவதானிக்க முடிகின்றது எனத் தெரித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T07:30:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[போஸ்ட் ஆபிஸ் RD திட்டத்தில் ரூ.8000 முதலீடு.., எவ்வளவு பணம் கிடைக்கும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/post-office-rd-scheme-details-in-tamil-1789889244"></link>
            <id>https://news.lankasri.com/article/post-office-rd-scheme-details-in-tamil-1789889244</id>
            <summary type="text">எதிர்காலத்திற்காகச் சேமிக்க விரும்புபவர்கள் போஸ்ட் ஆபிஸின் தொடர் வைப்பு நிதித் திட்டத்தில் (RD) முதலீடு செய்யலாம். 

அரசு சார்ந்த இத்திட்டத்தில் சந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்காலத்திற்காகச் சேமிக்க விரும்புபவர்கள் போஸ்ட் ஆபிஸின் தொடர் வைப்பு நிதித் திட்டத்தில் (RD) முதலீடு செய்யலாம். </p><p>

அரசு சார்ந்த இத்திட்டத்தில் சந்தை அபாயங்கள் இல்லாமல், நிர்ணயிக்கப்பட்ட வட்டி மூலம் வருமானம் பெறலாம்.
</p><p>
போஸ்ட் ஆபிஸ் தொடர் வைப்பு நிதித் திட்டம் என்பது மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையைச் சேமிக்கும் அரசு திட்டமாகும்.</p><p> 

ஒரே நேரத்தில் அதிக தொகையை முதலீடு செய்ய முடியாதவர்களுக்கு, மாதாந்திர சேமிப்பு முறையில் முதலீடு செய்யலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83aa4e53-a20f-44b7-b3b6-9773a83ecef7/26-6aaf8ade993c4.webp' /></p><p>மனைவியின் பெயரில் மாதம் ரூ.8,000 முதலீடு செய்தால், 5 ஆண்டுகளில் ரூ.5.70 லட்சம் வரை பணத்தை உருவாக்கலாம்.</p><p>

இத்திட்டத்தின் கால அளவு 5 ஆண்டுகள் அல்லது 60 மாதங்கள் ஆகும். இதில் மாதம் ரூ.100 முதல் முதலீடு செய்யலாம்.</p><p> 

வட்டி காலாண்டு அடிப்படையில் கூட்டு வட்டி முறையில் கணக்கிடப்படுகிறது. வட்டி விகிதத்தை மத்திய அரசு நிர்ணயிக்கிறது.</p><p>RD கணக்கைத் தொடங்கி மாதம் ரூ.8,000 முதலீடு செய்தால், 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.4.80 லட்சம் சேமிக்கப்படும். </p><p>

<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4d0be0b-d6cd-49bc-a80b-4acf1d8e1ecc/26-6aaf8adf4ed03.webp' />
</p><p>
வட்டியுடன் சேர்த்து முதிர்வின்போது சுமார் ரூ.5.70 லட்சம் கிடைக்கும். இதன் மூலம் சுமார் ரூ.90,000 வரை வட்டி வருமானம் கிடைக்கும்.</p><p>
</p><p>இந்தத் திட்டத்தில் வட்டி காலாண்டு அடிப்படையில் கூட்டு வட்டி முறையில் கணக்கிடப்படுகிறது.&nbsp; &nbsp;முதலீடு செய்த அசல் தொகையுடன், ஏற்கெனவே கிடைத்த வட்டிக்கும் வட்டி கணக்கிடப்படுகிறது.</p><p>

மேலும், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடன் பெறும் வசதியும் உள்ளது.</p><p> 

அவசரத் தேவைகளில் முதிர்வுக்கு முன்பாகக் கணக்கை முடித்துக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T07:28:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டில் பெரும் துயர சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/actor-sivaji-ganesan-daughter-passed-away-1789881445"></link>
            <id>https://jvpnews.com/article/actor-sivaji-ganesan-daughter-passed-away-1789881445</id>
            <summary type="text">மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகளும், நடிகர்கள் பிரபு மற்றும் ராம்குமாரின் சகோதரியுமான சாந்தி இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகளும், நடிகர்கள் பிரபு மற்றும் ராம்குமாரின் சகோதரியுமான சாந்தி இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.</p><p>அவரது மறைவு குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>கடந்த சில தினங்களாக உடல்நலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு வந்த சாந்தி இன்று காலமாகி இருக்கிறார்,</p><p>சாந்தி மறைவுக்கு திரையுல பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-20T07:24:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த மழை ;நாவலப்பிட்டியில் நீரில் மூழ்கிய வீடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heavy-rain-houses-submerged-in-nawalapitiya-1789886358"></link>
            <id>https://jvpnews.com/article/heavy-rain-houses-submerged-in-nawalapitiya-1789886358</id>
            <summary type="text">நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (20) அதிகாலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மகாவலி கங்கை பெருக்கெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (20) அதிகாலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மகாவலி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் பல தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.</p><p>இதன் காரணமாக, அப்பகுதிகளில் உள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால் சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>குறிப்பாக, நாவலப்பிட்டியின் கித்துல்கோட்டே, லபுவெல்கொட்டுவ மற்றும் ஜயசுந்தரஓவிட்ட ஆகிய பகுதிகளில் உள்ள பல தாழ்நிலப் பகுதிகளும் வீடுகளும் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாகப் பதிவாகியுள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T07:13:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய ஒன்றியத்தின் 'இணை உறுப்பினர்' அழைப்பு: கனடா பிரதமருக்கு சவாலாக உருவெடுக்குமா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nanos-canadians-back-closer-eu-ties-but-not-1789888046"></link>
            <id>https://canadamirror.com/article/nanos-canadians-back-closer-eu-ties-but-not-1789888046</id>
            <summary type="text">&amp;nbsp;ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்கிய உறவை ஏற்படுத்துவதை கனடா மக்கள் வரவேற்ற போதிலும், இந்த விவகாரம் கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு அரசியல் ரீதியில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்கிய உறவை ஏற்படுத்துவதை கனடா மக்கள் வரவேற்ற போதிலும், இந்த விவகாரம் கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு அரசியல் ரீதியில் ஒரு சிக்கலான சவாலாக மாறக்கூடும் என்று பிரபல கருத்துக்கணிப்பாளர் நிக் நானோஸ் எச்சரித்துள்ளார்.</p><p>
உலகின் மிகப்பெரிய வர்த்தக கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியம், கனடாவை தனது முதலாவது 'இணை உறுப்பினராக' இணைவது குறித்து ஆராயுமாறு வரலாற்றுப்பூர்வ அழைப்பொன்றை விடுத்துள்ளது. </p><p>
இந்த முன்மொழிவு முழுமையான உறுப்பினர் அந்தஸ்தை உள்ளடக்கியது அல்ல என்பதுடன், தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத ஒரு புதிய அந்தஸ்தாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0f9b8b9-d525-4c8f-a08e-27bf3c592c3f/26-6aaf86303fcfb.webp' /></p><p>
</p><p>இந்த அழைப்பை விடுத்து உரையாற்றிய ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் அர்சுலா வொன் டெர் லேயன், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான பகிரப்பட்ட மதிப்புகளை சுட்டிக்காட்டினார்.</p><p> 
செயற்கை நுண்ணறிவு, பருவநிலை மாற்றம், ஆர்க்டிக் பகுதிகள், புவிசார் அரசியல், உக்ரைன் விவகாரம், பாதுகாப்பு, மூலப்பொருட்கள் மற்றும் விநியோகச் சங்கிலி என பல துறைகளில் இரு தரப்பும் ஒரே பார்வையைக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
</p><p>இந்த அழைப்பை வியாழக்கிழமை வரவேற்ற கனடா பிரதமர் மார்க் கார்னி, கனடா முழுமையான ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் அந்தஸ்தைக் கோரவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். </p><p>
மேலும், "கனடாவின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படாத வரையில்" மட்டுமே இந்த பிரத்யேக கூட்டாண்மை சாத்தியப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
</p><p>கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் பிரெட் ஹவுஸ் கருத்து தெரிவிக்கையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதித் தரநிலைகள் மற்றும் விதிகளை கனடா ஏற்றுக்கொள்வது அதிக செலவீனங்களை ஏற்படுத்தும் என்றார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T07:13:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊவாபரணகம தபகொல்ல மலை வெடிப்பு; தாழ்ந்த பூமி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heat-wave-occurred-in-uva-baranagama-1789888359"></link>
            <id>https://jvpnews.com/article/heat-wave-occurred-in-uva-baranagama-1789888359</id>
            <summary type="text">ஊவாபரணகம, யாலகமுவ, தபகொல்ல மலை வெடித்துள்ளது என&amp;nbsp; அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஞாயிற்றுக்கிழமை (20) அன்று&amp;nbsp; தெரிவித்துள்ளது.தபகொல்ல மலையின் தற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊவாபரணகம, யாலகமுவ, தபகொல்ல மலை வெடித்துள்ளது என&nbsp; அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஞாயிற்றுக்கிழமை (20) அன்று&nbsp; தெரிவித்துள்ளது.</p><p>தபகொல்ல மலையின் தற்போது 700 மீட்டர் அளவிலான பகுதி வெடித்துள்ளது. அந்தப் பிளவுகள் 10 முதல் 12 அங்குல அளவில் காணப்படுவதுடன், சில இடங்களில் பூமி 7 முதல் 8 அடி வரை ஆழத்திற்குத் தாழ்ந்து போயுள்ளதாகவும் ஊவாபரணகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>&nbsp;கடந்த நாட்களில் நிலவிய கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக காட்டை யாரோ தீயிட்டு எரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தற்போது நிலவும் மழையுடன் இவ்வாறு அந்த விரிசல்கள் அதிகரித்து, மழை நீர் ஓடுவதால் பூமி தளரத் தொடங்கியுள்ளதாகவும்&nbsp; அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.</p><p>இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ள தபகொல்ல மலையைச் சுற்றி வீடுகளோ அல்லது மனித குடியிருப்புகளோ இல்லை என்றும்,&nbsp; &nbsp;அந்த மலையைச் சுற்றி பல ஏக்கர் பரப்பளவில் மிளகுச் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-20T07:12:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-massive-thunder-and-lightning-1789887869"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-massive-thunder-and-lightning-1789887869</id>
            <summary type="text">நாட்டின் பல மாவட்டங்களுக்கு பலத்த இடி மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.இன்று (20.09.2026) காலை 11.00 மண...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல மாவட்டங்களுக்கு பலத்த இடி மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.</p><p>இன்று (20.09.2026) காலை 11.00 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, இரவு 11.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதால், திணைக்களம் 'அம்பர்' எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p></p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>இதன்படி, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் பல இடங்களில் கடும் மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0431b37-14a0-4ce2-bea6-da0d37228785/26-6aaf866d1c2e9.webp' />&nbsp;&nbsp;</p><p>


இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது</p><p>மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இடியுடன் கூடிய மழையின் போது திறந்த வெளிகள், நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் அல்லது நீர்நிலைகளில் தங்கியிருப்பதைத் தவிர்க்கவும். மரங்களின் கீழ் தஞ்சம் அடைவதைத் தவிர்த்து, பாதுகாப்பான கட்டிடங்களுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T07:10:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சேலையில் மயக்கும் கிளாமரில் நடிகை தமன்னா!! புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/thevvaan-promotion-saree-look-tamannaah-1789887718"></link>
            <id>https://viduppu.com/article/thevvaan-promotion-saree-look-tamannaah-1789887718</id>
            <summary type="text">கேடி, வியாபாரி, கல்லூரி, பையா, அயன், படிக்காதவன், சுறா, சிறுத்தை போன்ற படங்களில் நடித்து தமிழில் பிரபலமானவர் நடிகை தமன்னா.

பாலிவுட்டில் டாப் நடிகைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேடி, வியாபாரி, கல்லூரி, பையா, அயன், படிக்காதவன், சுறா, சிறுத்தை போன்ற படங்களில் நடித்து தமிழில் பிரபலமானவர் நடிகை தமன்னா.

பாலிவுட்டில் டாப் நடிகையாக ஜொலித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7128dc0d-612f-4ef2-af75-070ebd641444/26-6aaf84f1202f4.webp' /></p><p> </p><p>நடிப்பை தாண்டி பிசினஸிலும் ஈடுபட்டு சம்பாதித்து வரும் தமன்னா, பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

தற்போது சித்தார்த் மல்ஹோத்ராவுடன் இணைந்து TheVVAAN என்ற படத்தில் நடித்துள்ளார். </p><p>படத்தின் பிரமோஷனுக்காக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் தமன்னா, கிளாமர் சேலையில் அணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-20T07:02:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய மக்கள் சக்திக்குள் எந்தப் பிளவும் இல்லை! அமைச்சர் கே.டி. லால்காந்த சுட்டிக்காட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-split-within-npp-rumors-regarding-pm-1789887193"></link>
            <id>https://tamilwin.com/article/no-split-within-npp-rumors-regarding-pm-1789887193</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்திக்குள் எவ்விதமான பிளவுகளும் இல்லை எனவும், பிரதமர்
சுயாதீனமாக இயங்கவுள்ளார் என்று கூறப்படும் தகவல்களில் எந்தவிதமான உண்மையும்
இல்லை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்திக்குள் எவ்விதமான பிளவுகளும் இல்லை எனவும், பிரதமர்
சுயாதீனமாக இயங்கவுள்ளார் என்று கூறப்படும் தகவல்களில் எந்தவிதமான உண்மையும்
இல்லை எனவும் அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார்.</p><p>

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.</p><p>

அவர் மேலும் தெரிவித்ததாவது, ஆரம்பத்தில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது
என்றும், பின்னர் தேசிய மக்கள் சக்திக்கும் ஜே.வி.பிக்கும் இடையே முரண்பாடுகள்
உருவாகியுள்ளன என்றும் பல்வேறு செய்திகள் பரப்பப்பட்டன.</p><h2>புதிய வதந்திகள்</h2><p> எனினும், அவ்வாறான
எந்தவொரு நிலைமையும் எங்குமே இடம்பெறவில்லை. தற்போது பிரதமர் தொடர்பாகப் புதிய வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a810966-2c6f-4496-8daa-7fb21724b7c4/26-6aaf848a292db.webp' /></p><p>
</p><p>பிரதமருக்கு எதிராக ஜே.வி.பி. சூழ்ச்சி செய்வதாகக் கூறப்படுகின்றது. இவை
அனைத்தும் முற்றிலுமாக உண்மைக்குப் புறம்பான தகவல்களாகும்.
</p><p>
பைத்தியங்கள் பலவற்றைப் பேசலாம், குழப்பங்களை ஏற்படுத்தலாம். ஆனால்,
வைத்தியர்கள் எதற்கும் குழம்பமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T07:00:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாக்ஸ் ஆபிஸ் : 10 நாட்களில் உலகளவில் சர்தார் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sardar-2-movie-10-days-worldwide-collection-1789887150"></link>
            <id>https://cineulagam.com/article/sardar-2-movie-10-days-worldwide-collection-1789887150</id>
            <summary type="text">Sardar 2 movie 10 days worldwide collection: கார்த்தி நடிப்பில், இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளியான சர்தார் 2 திரைப்படம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Sardar 2 movie 10 days worldwide collection: கார்த்தி நடிப்பில், இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளியான சர்தார் 2 திரைப்படம் உலகளவில் 10 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க.</p><p></p><p>
</p><h2>
சர்தார் 2</h2><p>

இயக்குநர் பி.எஸ். மித்ரன் தமிழ் சினிமாவில் இரும்புத்திரை படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை பெற்ற இவர், ஹீரோ, சர்தார் என அடுத்தடுத்து படங்களை இயக்கினார். இதில் ஹீரோ படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e78209a1-d5a7-40ef-80c1-ebb88bff63f0/26-6aaf82b116461.webp' /></p><p></p><p>சர்தார் முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து கார்த்தி - பி.எஸ். மித்ரன் கூட்டணி மீண்டும் சர்தார் 2 படத்திற்காக இணைந்தது. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/660ffc17-1402-4ffc-9d94-ba54fd7bbc24/26-6aaf82b1c269d.webp' /></p><p></p><h3>

பாக்ஸ் ஆபிஸ்</h3><p>
கடந்த வாரம் வெளிவந்த <a href="https://cinema.dinamalar.com/news/kollywood/karthi-and-suriya-could-not-advance-to-the-first-row-why/140939" target="_blank">சர்தார் 2</a> திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் எதிர்பார்த்த வசூலை பாக்ஸ் ஆபிஸில் பெறவில்லை.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8df567b7-8585-447a-bee8-d7d707f17ab8/26-6aaf82b27bbf2.webp' /></p><p></p><p>இப்படத்தின் வசூல் ஒவ்வொரு நாளும் எவ்வளவு வருகிறது என்பதை தொடர்ந்து பார்த்து வரும் நிலையில், 10 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் வந்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சர்தார் 2 திரைப்படம் உலகளவில் 10 நாட்களில் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T07:00:00+00:00</updated>
        </entry>
    </feed>
