<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-28T02:52:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் சந்தைப் பொருட்களுக்கு அதிரடி சோதனை - அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/announcement-issued-by-the-ministry-of-science-1785205844"></link>
            <id>https://tamilwin.com/article/announcement-issued-by-the-ministry-of-science-1785205844</id>
            <summary type="text">தேசிய உணவுப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, சந்தையில் விற்பனை செய்யப்படும் நுகர்வோர் பொருட்களின் தரம் மற்றும் தரநிலைகளைச் சரிபார்க்கும் ஒரு சிறப்புத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய உணவுப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, சந்தையில் விற்பனை செய்யப்படும் நுகர்வோர் பொருட்களின் தரம் மற்றும் தரநிலைகளைச் சரிபார்க்கும் ஒரு சிறப்புத் திட்டம் ஒன்று செயற்படுத்தப்படவுள்ளதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு அறிவித்துள்ளது</p><p>இது தொடர்பான அறிவிப்பு இன்று(28.07.2026) வெளியிடப்பட்டுள்ள நிலையில், பெட்டா பொதுச் சந்தை வளாகத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் 
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><h2>


உணவு பொருட்கள் உட்பட சோதனை</h2><p>


இதன்போது, சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் உணவுப் பொருட்கள், மின்சார உபகரணங்கள் மற்றும் பொம்மைகள் போன்ற நுகர்வோர் பொருட்கள், நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு இணங்குகின்றனவா என்பதைச் சரிபார்க்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0376d6bc-f1c1-4242-9521-4fead4ce1b65/26-6a68151cdd4e6.webp' /></p><p> 

நுகரப்படும் உணவுப் பொருட்களில் மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் உள்ளனவா என்பதை ஆராய்வதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகின்றது. 


அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் உள்ள இலங்கைத் தர நிர்ணய நிறுவனம் (SLS) மற்றும் தொழிற்துறை தொழில்நுட்ப நிறுவனம் (ITI) ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்களும் இந்தத் தரச் சோதனைத் திட்டத்தில் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
</p><p>
பொருட்களின் நிலை குறித்து நுகர்வோருக்கு நேரடியாகத் தெரிவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோருக்குத் தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். </p><h2>


பெட்டாவில் ஆரம்பமாகும் சோதனை நடவடிக்கை</h2><p>
இது தொடர்பான நிகழ்வில் கலந்துக் கொண்ட பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன கருத்து தெரிவிக்கையில்,</p><p> 

"உணவுப் பொருட்கள், மின்னணுப் பொருட்கள் மற்றும் பொம்மைகள் ஆகியவை ஒரே தரத்தில் உள்ளதா என்பதைச் சரிபார்ப்பது நாங்கள் செய்யும் பணிகளில் ஒன்றாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ea2a87b-bd33-4147-af51-4293f52c7b35/26-6a68151db2fba.webp' /></p><p> </p><p>

எங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள எஸ்.எல்.எஸ் நிறுவனம் மற்றும் ஐ.டி.ஐ நிறுவனம் ஆகியவை, தொடர்புடைய பிற நிறுவனங்களுடன் இணைந்து கோட்டைக்குச் சென்று, உணவில் ஏதேனும் கலக்கப்பட்டுள்ளதாக என்பதையும், மற்ற பொருட்களின் தரநிலைகள் அதற்கேற்ப உள்ளதா என்பதையும் சரிபார்க்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.</p><p>

 நாங்கள் பெட்டாவுக்குச் சென்று அங்குள்ள மக்களின் நிலை குறித்த தகவல்களை வழங்குவோம். மேலும், வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் அதில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோருக்கும் போதுமான விளக்கங்களையும் கொடுக்கவுள்ளோம் என்றார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T02:34:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் தூதரகம் அருகில் துப்பாக்கிச் சூடு - குறி வைக்கப்படும் அமெரிக்கர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shots-fired-at-us-consulate-in-toronto-canada-1785201746"></link>
            <id>https://ibctamil.com/article/shots-fired-at-us-consulate-in-toronto-canada-1785201746</id>
            <summary type="text">கனடாவின் டொராண்டோ நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.உள்ளூர் நேரப்படி அதிகாலை 04:45 மண...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் டொராண்டோ நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.</p><p>உள்ளூர் நேரப்படி அதிகாலை 04:45 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்ததுள்ளது.</p><p>“அப்பகுதியில் துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டதாகவும், ஒரு வெள்ளை நிற செடான் கார் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்வது காணப்பட்டதாகவும்” டொராண்டோ காவல்துறை X தள பதிவில் தெரிவித்தது.</p><p></p><h2>அடையாளம் காணப்படவில்லை</h2><p>அப்பகுதி சுற்றிவளைக்கப்பட்டு, வெற்றுத் தோட்டா கண்டெடுக்கப்பட்டன. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், சந்தேக நபர்கள் யாரும் அடையாளம் காணப்படவில்லை என்றும் காவல்துறை குறிப்பிட்டது.</p><p> </p><p>

</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a137ba1c-f1b6-4dcd-a96a-1801148e137f/26-6a680bde8c041.webp' /></p><p>கடந்த நான்கு மாத காலத்தில் இவ்வாறானதொரு சம்பவம் பதிவான இரண்டாவது சந்தர்ப்பம் இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>கடந்த மார்ச் 10 ஆம் திகதியும் இந்தக் கட்டிடத்தை இலக்கு வைத்து பல துப்பாக்கிப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.</p><p>

டொராண்டோ பகுதியில் உள்ள யூத தொழுகைக்கூடங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட மூன்று துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைத் தொடர்ந்தே இச்சம்பவமும் இடம்பெற்றிருந்தது.</p><p></p><h2>பலப்படுத்த பாதுகாப்பு</h2><p> </p><p>

இதன் காரணமாக, கனடாவின் மிகப்பெரிய நகரமான டொராண்டோவில் அமைந்துள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தூதரகங்களின் முன்பாகப் பாதுகாப்பைப் பலப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bffa08f7-e42d-4aee-9652-93fbeaf80c72/26-6a680bddd46f4.webp' /></p><p> 

டொராண்டோ பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்குப் பணம் கொடுத்து, யூத தொழுகைக்கூடங்கள், யூத பாடசாலைகள் மற்றும் அமெரிக்க தூதரகம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தூண்டப்பட்டுள்ளமை தொடர்பில் அந்நாட்டு காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். </p><p>

மார்ச் மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், அந்த நடவடிக்கையின் போது காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T02:26:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச அளவில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/international-recognition-for-sri-lanka-1785204542"></link>
            <id>https://tamilwin.com/article/international-recognition-for-sri-lanka-1785204542</id>
            <summary type="text">இலங்கை பொருளாதார அளவில் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக சர்வதேச நாணய நிதியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

2026 ஆம் ஆண்டின் முதலீட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பொருளாதார அளவில் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக சர்வதேச நாணய நிதியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

2026 ஆம் ஆண்டின் முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை அறிக்கையின்படி, இலங்கைக்கு இந்த அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.</p><p></p><p> </p><p>

தொடர்புடைய அறிக்கையின்படி, மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.</p><h2>

இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்</h2><p>

இதன்படி, வியட்நாம் முதலிடத்திலும், பெலிஸ் இரண்டாம் இடத்திலும், மொசாம்பிக் மூன்றாம் இடத்திலும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a005680-c372-4e55-971b-56d6afb37152/26-6a680f7eac8d9.webp' /></p><p>
</p><p>
கடன் வெளிப்படைத்தன்மை மற்றும் முதலீட்டு உறவுகள் ஆகிய துறைகளில் இலங்கை இதுவரை விரைவான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது என்றும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டுகிறது.</p><p>

கடன் வெளிப்படைத்தன்மைக்கான குறிப்பிட்ட தரவரிசைகளிலும் இலங்கை 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T02:11:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ. 5 கோடி மதிப்புள்ள சொந்த வீடு.. நடிகை மமிதா பைஜூவின் சொத்து மதிப்பு.. முழு விவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-mamitha-baiju-net-worth-1785149354"></link>
            <id>https://cineulagam.com/article/actress-mamitha-baiju-net-worth-1785149354</id>
            <summary type="text">மமிதா பைஜூமலையாளத்தில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய அளவில் சென்சேஷனல் கதாநாயகியாக வலம் வருகிறார் மமிதா பைஜூ. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஜனநாயக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மமிதா பைஜூ</h2><p>மலையாளத்தில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய அளவில் சென்சேஷனல் கதாநாயகியாக வலம் வருகிறார் மமிதா பைஜூ. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஜனநாயகன் திரைப்படம் வசூலில் வேட்டையாடி வருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bafa461-5fec-4cc0-a7fc-45cf4effb8e3/26-6a6737ad6cabd.webp' /></p><p></p><p>இதை தொடர்ந்து விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படம் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>சொத்து மதிப்பு</h2><p>
</p><p>
திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் <a href="https://www.youtube.com/watch?v=BZ6nD0I5Avo" target="_blank">மமிதா பைஜூ</a>வின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. </p><p>அந்த தகவலின்படி, நடிகை மமிதா பைஜூ தற்போது ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். கேரளாவில் இவருக்கு சொந்தமாக உள்ள வீட்டின் மதிப்பு ரூ. 3 கோடி முதல் ரூ. 5 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4957104-9133-4d14-b8ed-d3fdb58c29a2/26-6a6737acbb20a.webp' /></p><p>

மொத்தத்தில் நடிகை மமிதா பைஜூவின் சொத்து மதிப்பு ரூ. 20 கோடி முதல் ரூ. 30 கோடி வரை இருக்கும் என தகவல் தெரிவிக்கிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-28T02:04:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சம் தொடும் உணவுப் பொருட்களின் விலை - அமைச்சர் பதவி விலக வேண்டும்: கடும் அழுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prices-of-essential-food-items-increased-minister-1785197844"></link>
            <id>https://ibctamil.com/article/prices-of-essential-food-items-increased-minister-1785197844</id>
            <summary type="text">நுகர்வோர் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறிய
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்
வசந்த சமரசிங்க உட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுகர்வோர் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறிய
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்
வசந்த சமரசிங்க உடனடியாக பதவி விலகல் செய்ய வேண்டும் என்று அகில
இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p>அரிசி, பால்மா, முட்டை மற்றும் இறைச்சி உள்ளிட்ட பொருள்களின் விலை உயர்வுக்கு அமைச்சரின் அறியாமையும், நுகர்வோர் விவகார அதிகார சபையின் ஒத்துழைப்பின்மையுமே காரணம் என சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அச்சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><p>
</p><h2>முட்டை விலை உயர்வு</h2><p>
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருள்களும் மூலப்பொருள்களும் மிக வேகமாகக் விலை
உயர்ந்து வருகின்றன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8d91922-cff9-41d6-a56b-4d94a773d219/26-6a67fa52b2215.webp' /></p><p>இரண்டு வாரங்களுக்கு முன்னர் குறைந்த விலையில் விற்பனையான
பெரிய முட்டை ஒன்று தற்போது 46 - 47 ரூபாவாகவும், 45 கிராம் சிறிய முட்டை 42
ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
</p><p>
உலகளவில் யுத்தம் நடைபெறுகின்றதா அல்லது ஹோர்மூஸ் நீரிணையில் பிரச்சினை உள்ளதா
என வினவும் வகையில் ஒரே அடியில் 20 ரூபா வரை முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளது.</p><p>முன்னாள் எதிர்க்கட்சியினரான தற்போதைய ஆட்சியாளர்கள் அன்று கூறியது போல்,
முட்டை விற்பனையில் அமைச்சர்களுக்குத் தரகுப் பணம் கிடைப்பதனாலேயே இந்த விலை
உயர்வு ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுகின்றது.</p><p></p><h2>சந்தையில் நிலவும் முறைகேடு</h2><p>

கீரி சம்பா அரிசிச் சந்தையில் நிலவும் முறைகேடான வணிகக் கும்பலின்
ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த வசந்த சமரசிங்க அமைச்சரால் முடிவதில்லை.
அமைச்சரின் பொறுப்பு திருடர்களைப் பிடிப்பது அன்று. மாறாக, நுகர்வோர் மற்றும்
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதே ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/489dac68-126f-4fbf-b475-b3d4ae7bd822/26-6a67fa541cf01.webp' /></p><p> அவருக்குப் காவல்துறை பணியைச் செய்ய
விருப்பமாக இருந்தால், காவல்துறை மா அதிபர் பதவியை வழங்கிவிட்டுத் தகுதியான ஒருவரை
அமைச்சராக நியமிக்க வேண்டும்.</p><p>
அரிசிச் சந்தையின் முறைகேடுகளுக்கு எதிராகத் தாங்கள் குரல் கொடுக்கும்போது,
விவசாய நிலங்களில் சோளம் பயிரிடுமாறு விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த
கூறுவது அரிசித் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி ஆலை உரிமையாளர்கள் விலையை உயர்த்தவே
வழிவகுக்கும். </p><p>மேலும், விவசாயிகள் பற்றிப் பேசி நாடாளுமன்றம் சென்ற நாமல்
கருணாரத்ன போன்றவர்கள் இன்று விவசாயிகளுக்கு எதிராகப் பேசுகின்றனர்.
</p><p>
தற்போது இந்த முறைகேடான வணிகக் கும்பலினால் நுகர்வோரின் அடிப்படை உரிமைகள்
கடுமையாக மீறப்பட்டுள்ளன. அரிசி, பால்மா, முட்டை மற்றும் இறைச்சி உள்ளிட்ட
பொருள்களின் விலை உயர்வுக்கு அமைச்சரின் அறியாமையும், நுகர்வோர் விவகார அதிகார
சபையின் ஒத்துழைப்பின்மையுமே காரணம்." - என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T02:04:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரிய மோசடியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட அதிசொகுசு வாகனங்கள் - முக்கிய அரசியல்வாதி மீது வலைவீச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/500-luxary-vehicles-illegally-imported-1785200922"></link>
            <id>https://tamilwin.com/article/500-luxary-vehicles-illegally-imported-1785200922</id>
            <summary type="text">பல கோடி ரூபா வரி ஏய்ப்பு செய்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 500 சொகுசு வாகனங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.சுங்க வரியை ஏய்த்து,...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல கோடி ரூபா வரி ஏய்ப்பு செய்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 500 சொகுசு வாகனங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p>சுங்க வரியை ஏய்த்து, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு பதிவு செய்யப்பட்ட சுமார் 500 வாகனங்கள் வீதிகளில் செலுத்தப்பட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. </p><p>
இது தொடர்பாக பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு தற்போது தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.</p><p></p><h2>சட்டவிரோதமாக வாகன இறக்குமதி</h2><p>நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட இந்த வாகனங்களில் பெரும்பாலானவை அதிநவீன சொகுசு வாகனங்கள் எனவும் இவை பாகங்களாகப் பிரிக்கப்பட்டு நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு மீண்டும் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p>இந்த சட்டவிரோத நடவடிக்கைக்குச் சில ஊழல் நிறைந்த சுங்க அதிகாரிகளும், வாகனங்களை சட்டவிரோதமாகப் பதிவு செய்வதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1adc73a6-fd85-4d93-8cb8-05460c3bf22c/26-6a68011bc9b23.webp' /></p><p>
சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்டு தற்போது வீதிகளில் செலுத்தப்பட்டு வரும் பெரும்பாலான வாகனங்களை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு ஏற்கனவே அடையாளப்படைத்தியுள்ளது.
</p><p>அடையாளம் காணப்பட்டுள்ள சொகுசு வாகனங்களை விரைவில் பொலிஸ் பொறுப்பில் எடுப்பதற்குப் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு தயார் நிலையில் உள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>இந்த சட்டவிரோதப் பதிவுகள் அனைத்தும் கடந்த கால அரசாங்கங்களின் ஆட்சியின் போதே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>சுங்க அதிகாரிகள் மீது பாயும் சட்டம்</h2><p>

போலி ஆவணங்கள் மூலம் வாகனங்களைப் பதிவு செய்த குற்றச்சாட்டின் கீழ், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர்கள் இருவர் உட்படப் பல அதிகாரிகள் அண்மையில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77dce21f-ced4-4cda-8d71-fe408272e62a/26-6a680cd3d8a47.webp' /></p><p>
</p><p>கடந்த 2023 ஆம் ஆண்டு பாணந்துறை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனைகளில், இரகசியமாக கொண்டுவரப்பட்டு பதிவு செய்யப்பட்ட சுமார் 100 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. </p><p>
அவற்றில் பெரும்பாலான வாகனங்களை அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய நபர்களே பயன்படுத்தி வந்துள்ளனர்.</p><p>
அப்போதைய சோதனைகளின் போது மேலும் 400 போலி வாகனங்கள் தொடர்பான ஆவணங்கள் கண்டறியப்பட்ட நிலையில், அன்றைய பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் அந்த விரிவான விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T01:59:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றத்தில் முன்னிலையான அர்ச்சுனா எம்.பிக்கு பறந்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mp-ramanathan-archchuna-appears-in-court-1785200808"></link>
            <id>https://ibctamil.com/article/mp-ramanathan-archchuna-appears-in-court-1785200808</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்குப் பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதுகோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்குப் பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது</p><p>கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நேற்று (27) ஒரு சட்டத்தரணி மூலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முன்னிலையாகியிருந்தார்.
</p><p>
கோட்டை காவல் நிலைய உத்தியோத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>கோட்டை நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது முன்னிலையாகத் தவறியதன் காரணமாக, கடந்த 24 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றம் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்குப் பிடியாணை பிறப்பித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd2c2864-8e98-4635-bcd5-1611eb4da16c/26-6a6803647062c.webp' /></p><p>இவ்வழக்கில் அர்ச்சுனா இராமநாதன் மட்டுமல்லாமல், வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவரது பிணையாளிகளும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
</p><p>
அதன்படி, கோட்டை நீதவான் நீதிமன்றம் நாடாளுமன்ற உறுப்பினருக்குப் பிடியாணை பிறப்பித்திருந்தது.</p><p>

இந்நிலையில், நேற்றைய தினம் சட்டத்தரணி ஒருவர் ஊடாக நாடாளுமன்றத்தில் முன்னிலையான அர்ச்சுனா இராமநாதனுக்கு பிணை வழங்கப்பட்டது. </p><p>அத்துடன் இவ்வழக்கு ஒக்டோபர் 09 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T01:49:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகரிக்கப்போகும் மழைவீழ்ச்சி! மக்களுக்கு வெளியாகியுள்ள முன்னெச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rainfall-is-expected-to-increase-next-few-days-1785199612"></link>
            <id>https://ibctamil.com/article/rainfall-is-expected-to-increase-next-few-days-1785199612</id>
            <summary type="text">நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழைவீழ்ச்சி ஓரளவு அதிகரித்துக் காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழைவீழ்ச்சி ஓரளவு அதிகரித்துக் காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
</p><p>
சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><h2>பலத்த காற்று</h2><p>
</p><p>
இதேவேளை, நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6fcd839-9e89-45ad-977c-2fd96ff2c408/26-6a67fd30c2c99.webp' /></p><p>
</p><p>
அத்தோடு, மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலனறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில் மனித உடலினால் அதிகரித்த வெப்பநிலையை உணரக்கூடியதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.</p><p>
</p><h2>
கடல் பிராந்தியங்கள்
</h2><p>
நீர்கொழும்பு தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad2ed0ff-aae8-453d-a159-fdeb670ae362/26-6a67fd31789ec.webp' /></p><p>
</p><p>
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 km வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-28T01:16:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு: NPPயின் தலைமைத்துவ குழுவிலிருந்து வந்த எதிர்ப்பு...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/senior-npp-lawyer-judges-retirement-age-extension-1785200192"></link>
            <id>https://tamilwin.com/article/senior-npp-lawyer-judges-retirement-age-extension-1785200192</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை நீடிப்பதற்கான தீர்மானத்திற்கு தேசிய மக்கள் சக்திகுள்ளேயே எதிர்ப்புகள் உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்விடயம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை நீடிப்பதற்கான தீர்மானத்திற்கு தேசிய மக்கள் சக்திகுள்ளேயே எதிர்ப்புகள் உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>இவ்விடயம் தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகள் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றி NPPயின் தலைமைத்துவ குழு உறுப்பினரான சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
</p><p>இது தொடர்பில் மேலும் உரையாற்றிய அவர் 
இந்தப் போராட்டம் கட்சிகளுக்கு இடையிலான போராட்டமோ அல்லது அரசாங்கத்துக்கு எதிரான போராட்டமோ அல்ல. இந்தப் போராட்டத்தின் அர்த்தம் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.</p><h2>

</h2><p></p><h2>கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பம்</h2><p>கட்சியினால் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. யாரோ தனிநபர்கள் அல்லது ஏதேனும் தரப்பினர் மத்தியில் அப்படி ஒரு யோசனை இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது.
</p><p>இவ்விடயம் தொடர்பில் என்னை அமைதியாக இருக்குமாறு கூறியபோது, நான் எனது நிலைப்பாட்டைத் தெரிவித்தேன். அதற்குப் பின்னர் தலைமைக் குழு கூட்டத்திலும் நான் கூற வேண்டியதைக் கூறிவிட்டேன்.</p><p>நான் இதற்கு எதிராக செயற்படுவேன் என்று தெளிவுபடுத்தினேன்.
நான் 45 ஆண்டுகளாக சட்டத்தரணியாகப் பணியாற்றியுள்ளேன். அதற்கு மேலாக சுமார் 50 ஆண்டுகள் இடதுசாரி இயக்கத்தில் செயற்பட்டுள்ளேன். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f86e71b-32d8-4187-b86f-86011b391848/26-6a68000800eab.webp' /></p><p>நாகரிகமான சமூகத்தில் நாகரிகமான மனிதர்களாக வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்குவதே எமது அரசியலின் நோக்கமாகும். எனது அரசியலிலும் நான் அதையே பின்பற்றி வந்துள்ளேன்.
</p><p>எனது எதிர்ப்பை எழுத்துப்பூர்வமாக ஜனாதிபதிக்கும் வழங்கியுள்ளேன். 1970களில் பண்டாரநாயக்க அதன் பின்னர் ஜே.ஆர். ஜெயவர்தன மற்றும் நிஹால் ஜயவிக்ரம போன்றவர்களுக்கு எதிராக நாம் போராடியது நினைவிருக்கிறது. </p><p>நாகரிகமான சமூகத்தில் நாகரிகமான மனிதர்களாக வாழ்வதற்கு நீதிமன்ற சுதந்திரம் அவசியம் என்ற ஒரே நோக்கத்திற்காகவே நாம் போராடினோம்.
</p><p>நீதிமன்ற சுதந்திரம் இல்லாவிட்டால் நாம் அடிமைத்தனத்திற்கு தள்ளப்படுவோம். நிறைவேற்று அதிகாரம் தனக்கு வேண்டியதைச் செய்ய முடியும். </p><p>அத்தகைய சூழ்நிலை நாட்டில் அராஜகத்தையே ஏற்படுத்தும்.
எனவே, நாட்டில் மிகவும் முக்கியமான விடயம் நீதிமன்ற சுதந்திரமாகும். அது வீழ்ச்சியடைந்தால், நீதிமன்ற சுதந்திரம் என்ற ஒட்டுமொத்தக் கோட்பாடும் முற்றாகச் சரிந்துவிடும். </p><p>அதன் பின்னர் நாம் எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு சர்வாதிகார சமூகம் உருவாவதற்கான சூழலையே விட்டுச் செல்வோம் என குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T01:06:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ.14,000 பட்ஜெட்டில் சூப்பரான பேட்டரியுடன் புதிய Vivo மொபைல் அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/vivo-t5e-launched-with-5500mah-battery-1785200621"></link>
            <id>https://news.lankasri.com/article/vivo-t5e-launched-with-5500mah-battery-1785200621</id>
            <summary type="text">Vivo நிறுவனம் தனது T-சீரிஸ் ஸ்மார்ட்போன் வரிசையில் புதிய Vivo T5e மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மொபைல், 5,500mAh பெரிய பேட்டரி மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Vivo நிறுவனம் தனது T-சீரிஸ் ஸ்மார்ட்போன் வரிசையில் புதிய Vivo T5e மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த மொபைல், 5,500mAh பெரிய பேட்டரி மற்றும் Unisoc T7225 சிப் செட் கொண்டதாகும்.
</p><p>
Vivo T5e, 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு வசதியுடன் ஒரே வேரியண்டில் கிடைக்கிறது. விலை ரூ.13,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09bad8de-2e19-45d7-8f93-32267283c6cd/26-6a67ffef10940.webp' /></p><p>Aero Blue மற்றும் Shadow Grey என இரண்டு நிறங்களில் வாங்கலாம். Flipkart, Vivo ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் விற்பனை நிலையங்களில் கிடைக்கிறது.
</p><p>
இந்த மொபைல், 6.74-இஞ்ச் HD+ LCD டிஸ்ப்ளே (90Hz refresh rate) உடன் வருகிறது. OriginOS 6 (Android 16 அடிப்படையில்) இயங்குதளம் கொண்டுள்ளது. RAM-ஐ 4GB வரை virtual RAM மூலம் விரிவாக்கலாம். மேலும், 2TB வரை microSD கார்டு ஆதரவு உள்ளது.
</p><p></p><p>புகைப்படத்திற்காக, 8MP பின்புற கேமரா மற்றும் 5MP முன்புற கேமரா வழங்கப்பட்டுள்ளது. 15W wired fast charging வசதி கொண்ட 5,500mAh பேட்டரி, 47 மணி நேரம் இசை, 18 மணி நேரம் வீடியோ, 28 மணி நேரம் voice calls, 13.5 மணி நேரம் சமூக ஊடக பயன்பாட்டை வழங்கும் என Vivo தெரிவித்துள்ளது.</p><p>

மேலும், IP64 rating மற்றும் Military-Grade Durability சான்றிதழ் பெற்றுள்ளது. பேட்டரி நான்கு ஆண்டுகள் வரை ஆரோக்கியமாக இருக்கும் என நிறுவனம் உறுதியளித்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-28T01:01:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியல் வருகை உறுதியா? ரசிகர்களிடம் தனுஷ் வைத்த கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/actor-dhanush-sparks-political-entry-buzz-1785199991"></link>
            <id>https://news.lankasri.com/article/actor-dhanush-sparks-political-entry-buzz-1785199991</id>
            <summary type="text">சென்னையில் நடைபெற்ற இரத்த தான முகாமில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ், தனது ரசிகர்களிடம், சினிமா கொண்டாட்டங்களைத் தாண்டி, மக்கள் நலத்திட்டங்களில் அதிகம் ஈட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னையில் நடைபெற்ற இரத்த தான முகாமில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ், தனது ரசிகர்களிடம், சினிமா கொண்டாட்டங்களைத் தாண்டி, மக்கள் நலத்திட்டங்களில் அதிகம் ஈடுபட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
</p><p>
இந்த உரை, அவர் அரசியலுக்கு வருவாரா என்ற புதிய ஊகங்களை தூண்டியுள்ளது.
</p><p>
தனுஷ், “இவ்வளவு மக்கள் ஒன்று கூடுவது மிகப்பெரிய சக்தி. அந்த ஒற்றுமைக்கு ஒரு நோக்கம் தேவை. உங்கள் பகுதியில் உள்ள மக்களின் தேவைகளை புரிந்து, அவர்களுக்கு உதவுங்கள். நான் உங்களைப் பற்றி இன்னும் பெருமைப்பட விரும்புகிறேன்” என ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40f42e8a-94d2-44af-9702-c6e903f8a030/26-6a67fd799df28.webp' /></p><p>அந்த நிகழ்வில், ரசிகர் மன்றத்திற்கான புதிய கொடியையும் அவர் வெளியிட்டார். இதனால், விஜய் அரசியலுக்குள் வந்த பாதையைப் போல தனுஷும் அதே வழியில் செல்லக்கூடும் என்ற கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
</p><p>
விஜய், தனது ரசிகர் மன்றங்களை மக்கள் நல அமைப்புகளாக மாற்றி, பின்னர் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கி, தமிழக முதல்வராக உயர்ந்தார்.
</p><p>
இதேபோல், தனுஷ் ரசிகர்களிடம் நலத்திட்டங்களில் ஈடுபடுமாறு கூறியிருப்பது, அவரும் அரசியலுக்குள் வருவாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/Dhanush?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Dhanush</a> gives a Strong hint about his Political Entry:<br><br>&quot;So many people have gathered in one place.. This kind of unity has a power..💪 You need to give that unity a purpose.. Not just through audio launches and meet ups. Join hands and do more welfare work.. Do whatever you can…</p>&mdash; Laxmi Kanth (@iammoviebuff007) <a href="https://x.com/iammoviebuff007/status/2081407645572063497?ref_src=twsrc%5Etfw">July 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>சமூக ஊடகங்களில் பலர், “விஜய் அரசியலுக்கு வந்தால், தனுஷ் ஏன் வரக்கூடாது?” என கருத்து தெரிவித்துள்ளனர். சிலர், “தமிழகத்திற்கு கல்வியறிவு, ஒழுக்கம், துணிச்சல் கொண்ட குரல்கள் தேவை” என தனுஷை வரவேற்றுள்ளனர்.
</p><p>
இருப்பினும், தனுஷ் இதுவரை அரசியலில் நேரடியாக ஈடுபடுவதாக உறுதிப்படுத்தவில்லை. அவர், தனது ரசிகர் மன்றங்களை இரத்த தானம், வெள்ள நிவாரணம், கல்வி உதவி போன்ற சமூக சேவைகளில் ஈடுபடுத்தி வருகிறார்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-28T00:51:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிரான நடவடிக்கை ; அமெரிக்க வீரர்கள் காயம் தொடர்பில் புதிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/action-against-iran-new-infor-injuries-us-soldiers-1785182382"></link>
            <id>https://canadamirror.com/article/action-against-iran-new-infor-injuries-us-soldiers-1785182382</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் இதுவரை 624க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களமான பென்டகன் அறிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் இதுவரை 624க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களமான பென்டகன் அறிவித்துள்ளது.</p><p>
</p><p>
அமைதி உடன்படிக்கை முறிந்ததைத் தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையே மோதல்கள் நீடித்து வரும் நிலையில், பலியான மற்றும் காயமடைந்த வீரர்களின் புள்ளிவிபரங்களை பென்டகன் இரகசியமாக மாற்றியமைத்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/569d1b08-e890-429c-853b-1232391e402a/26-6a67b8afdabe8.webp' /></p><p>பலியான வீரர்களின் பட்டியலை "வெளிநாட்டு நடவடிக்கைகள்" என்ற புதிய பிரிவின் கீழ் வகைப்படுத்தி பென்டகன் வெளியிட்டுள்ள தரவுகள், போரின் உண்மைத் தன்மையை மறைக்கும் முயற்சி என முன்னாள் இராணுவ அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
</p><p>
எனினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இணையதளத் தரவுகளில் மாற்றம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ள பென்டகன், அதனைச் சரிசெய்யும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் விளக்கமளித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-28T00:45:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணமாகி ஐந்து மாதங்களிலே மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-woman-murdered-five-months-after-marriage-1785195324"></link>
            <id>https://jvpnews.com/article/young-woman-murdered-five-months-after-marriage-1785195324</id>
            <summary type="text">தமிழ்நாட்டின் தென்காசியில் குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண் ஒருவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டின் தென்காசியில் குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண் ஒருவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p>

தென்காசி மங்கம்மாள் சாலை சாஸ்தா கோவில் பகுதியைச் சேர்ந்த சக்தி வீரமணிகண்டன் (33), இருசக்கர வாகன பழுதுநீக்கும் தொழிலாளி ஆவார்.</p><p> </p><h3>மேலதிக விசாரணை</h3><p>அவரது மனைவி அன்னலட்சுமி (23). இவர்களுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றிருந்தது.

திருமணமான முதல் வாரத்திலிருந்தே தம்பதியருக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f11b76a6-16b2-4fe1-817c-9ed45bc47141/26-6a67eb3e87822.webp' /></p><p>இதுதொடர்பாக அன்னலட்சுமி தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முநைப்பாடு அளித்திருந்தார். காவல்துறையினர் இருதரப்பினருக்கும் அறிவுரை வழங்கிய போதிலும், பிரச்சினை தொடர்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்த நிலையில், நேற்று காலை மீண்டும் ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரமடைந்ததாகக் கூறப்படும் சக்தி வீரமணிகண்டன், அரிவாளால் அன்னலட்சுமியை சரமாரியாக வெட்டியதாக காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த அன்னலட்சுமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
</p><p>
சம்பவத்துக்குப் பின்னர் தப்பிச் சென்ற சக்தி வீரமணிகண்டன், பின்னர் தென்காசி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
</p><p>
அன்னலட்சுமியின் பெற்றோர் முறைப்பாட்டின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கொலைக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T00:44:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு, வடக்கு பகுதிகளில் கடும் வெப்பம் ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/severe-heat-eastern-northern-areas-meteorological-1785199420"></link>
            <id>https://jvpnews.com/article/severe-heat-eastern-northern-areas-meteorological-1785199420</id>
            <summary type="text">கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்று (28) வெப்பச் சுட்டெண் &quot;எச்சரிக்கை&quot; மட்டத்தை எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்று (28) வெப்பச் சுட்டெண் "எச்சரிக்கை" மட்டத்தை எட்டக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>
</p><p></p><p>வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பிற்பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு மேற்குறிப்பிட்ட பகுதிகளில் அதிகரித்துக் காணப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f30c7bc3-953e-445b-bc38-80e4b9ff29c6/26-6a67fb3dc53a7.webp' /></p><p>அதிக வெப்பம் காரணமாக உடல் நலப் பாதிப்புகள் ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதால், பொதுமக்கள் போதுமான அளவு நீர் அருந்துதல், நேரடி வெயிலில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்த்தல் மற்றும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
</p><p>
குறிப்பாக சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் அதிக வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள கூடுதல் கவனம் செலுத்துமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T00:43:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க - ஈரான் போர்நிறுத்த பேச்சுவார்த்தை! ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/friendly-negotiations-about-conflict-with-iran-1785196319"></link>
            <id>https://ibctamil.com/article/friendly-negotiations-about-conflict-with-iran-1785196319</id>
            <summary type="text">ஈரானுடனான மோதல் குறித்து மிகவும் நட்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மூன்றாவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடனான மோதல் குறித்து மிகவும் நட்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
தொடர்ந்து மூன்றாவது நாளாக இரு தரப்பினரும் பதில் தாக்குதல்களை நடத்தாமல் நிறுத்தி வைத்துள்ள நிலையில் அவர் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.
</p><p>
ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போர் முடிவுக்கு வரும் என்பதில் நம்பிக்கை தெரிவிக்கும் வகையில், "ஏதாவது நல்ல முடிவு எட்டுவதற்கு வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.</p><p></p><h2>ஈரான் மறுப்பு&nbsp;</h2><p>
</p><p>
இருப்பினும், தற்போதைய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், போர் நிறுத்தத்திற்கு முன் செய்து கொண்டிருந்த தாக்குதல்களை அமெரிக்கா மீண்டும் தொடரும் என்றும் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/545ed955-b034-4838-986b-28b517b80cdb/26-6a67fa57535aa.webp' /></p><p><i>Image Credit:&nbsp;The American Prospect</i></p><p> </p><p>

இவ்வாறானதொரு பின்னணியில், எவ்வித நேரடிப் பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை என்று ஈரான் அரசு மறுத்துள்ளது.</p><p>

இதன்படி, இரு நாடுகளுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்யும் நாடுகள் பேச்சுவார்த்தைக்கு மற்றொரு வாய்ப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டதால், ஈரான் மீதான தாக்குதல்களை இடைநிறுத்த முடிவு செய்ததாக ட்ரம்ப் கூறியுள்ளார்.</p><p></p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table></h5><p>

</p>]]></content>
            <updated>2026-07-28T00:39:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதன் சூரியனால் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/puthan-suriyanai-athirstam-perum-rasi-1785198976"></link>
            <id>https://jvpnews.com/article/puthan-suriyanai-athirstam-perum-rasi-1785198976</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில் புதன் மிகவும் சக்திவாய்ந்த கிரகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார். கிரகங்களின் இளவரசரான புதன் ஜோதிடத்தில் வணிகம், புத்திக்கூர்மை மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில் புதன் மிகவும் சக்திவாய்ந்த கிரகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார். கிரகங்களின் இளவரசரான புதன் ஜோதிடத்தில் வணிகம், புத்திக்கூர்மை மற்றும் பேச்சாற்றல் போன்றவற்றின் அதிபதியாகக் கருதப்படுகிறார். எனவே புதனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஜோதிடரீதியாக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6e96166-6653-4fde-aab2-6feb8d72694e/26-6a67f98246cdb.webp' /></p><p>ஆகஸ்ட் மாதத்தில் புதன் ஒரு முக்கியமான கிரக மாற்றத்திற்கு ஆளாகப்போகிறார். கிரகங்களின் இளவரசரான புதன் கிரகங்களின் ராஜாவான சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்குள் நுழையப்போகிறார். </p><p>இந்த கிரக மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிக்காரர்கள் இதனால் கூடுதல் நன்மைகளை அனுபவிக்கப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be9d87a8-657c-4b1e-b231-b4aea594bfb5/26-6a67f98190a56.webp' /></p><h4>மிதுனம்</h4><p>
மிதுன ராசியின் ஆளும் கிரகமாக புதன் இருப்பதால் இந்த கிரக மாற்றம் அவர்களின் வாழ்க்கையில் சிறப்பான பலன்களைத் தரப்போகிறது. இந்த காலம் புதிய வருமான ஆதாரங்களைக் கண்டறிய ஏற்றது, மேலும் மிதுன ராசிக்காரர்களின் சம்பளம் இந்த காலகட்டத்தில் கணிசமாக அதிகரிக்கக்கூடும். வேலைகளை மாற்றுவது பற்றி நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால், உங்கள் தொழில்முறை இலக்குகளுடன் பொருந்தக்கூடிய புதிய வாய்ப்புகளைக் கவனியுங்கள். </p><p>உங்கள் உடன்பிறந்தவர்களுடனான உங்கள் உறவு வலுவடையும், மேலும் அவர்களின் ஆதரவு தனிப்பட்ட அல்லது தொழில்முறை சூழ்நிலைகளில் பயனுள்ளதாக இருக்கும்.

வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் பெரிய லாபத்தை எதிர்பார்க்கலாம். இதற்கிடையில், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் முந்தைய முதலீடுகளிலிருந்து பயனடைய வாய்ப்புள்ளது, இதன் விளைவாக குறிப்பிடத்தக்க வருவாய் கிடைக்கும். ஒட்டுமொத்தமாக, இந்த காலகட்டம் நிதி வளர்ச்சி மற்றும் தொழில்முறை முன்னேற்றத்தை ஊக்குவிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b624c321-2b79-42a7-880f-9455d2e86498/26-6a67f982ecfa0.webp' /></p><h3>சிம்மம்
</h3><p>புதன் சிம்ம ராசிக்குள் நுழைவதால் அவர்கள் நேரடியான பலன்களை பெறப்போகிறார்கள். இந்த காலகட்டத்தில் வெற்றியை நோக்கிய அவர்களின் பயணம் மிகவும் வேகமாக இருக்கும். மேலும் அவர்களின் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். எனவே அவர்கள் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் முன்னணியில் இருப்பார்கள்.

வாழ்க்கையில் மகிழ்ச்சியானத் தருணங்களைக் காண்பார்கள். </p><p>திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். நீண்ட கால ஆசைகளை நிறைவேற்ற இது மிகவும் பொருத்தமான நேரமாகும். அவர்களின் கடின உழைப்பிற்கான பலனை இப்போது அறுவடை செய்யலாம். அனைத்து பணிகளும் சரியான நேரத்தில் முடிக்கப்படும். இந்த காலகட்டத்தில் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் சிறந்த முறையில் நிர்வகிக்கவும், பயன்படுத்தவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b3ea80d-c59d-40fd-91b2-d7d1129c4d5f/26-6a67f9839f841.webp' /></p><h3>தனுசு
</h3><p>தனுசு ராசிக்காரர்கள் புதனின் இந்த ராசி மாற்றத்தால் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் அனுபவிக்கப் போகிறார்கள். இந்த காலகட்டத்தில் அவர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கக்கூடும். இந்த பெயர்ச்சியால் வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு பெரிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம், இதனால் லாபம் அதிகரிக்கும்.

வணிகத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த நல்ல வாய்ப்புகள் உள்ளன. </p><p>சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை பிரச்சனைகளில் இருந்து இந்த நேரத்தில் விடுபடுவார்கள். இந்த இரண்டு பெயர்ச்சிகளிலும் அவர்கள் எந்த பெரிய ஆரோக்கிய பிரச்சினையையும் சந்திக்க மாட்டார்கள். மொத்தத்தில் இந்த காலகட்டம் அவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a21acdeb-24e7-44ce-849f-dfdca775befa/26-6a67f98450a50.webp' /></p>]]></content>
            <updated>2026-07-28T00:36:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றத்தில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/arjuna-ramanathan-granted-bail-appearing-court-1785195727"></link>
            <id>https://tamilwin.com/article/arjuna-ramanathan-granted-bail-appearing-court-1785195727</id>
            <summary type="text">கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நேற்று (27) ஒரு சட்டத்தரணி மூலம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நேற்று (27) ஒரு சட்டத்தரணி மூலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முன்னிலையாகியிருந்தார்.
</p><p>
கோட்டை பொலிஸ் நிலைய உத்தியோத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>வழக்கு விசாரணை</h2><p>

கோட்டை நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது முன்னிலையாகத் தவறியதன் காரணமாக, கடந்த 24ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றம் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்குப் பிடியாணை பிறப்பித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4347b215-5c0b-45c2-92ad-9e1d998f67c8/26-6a67f7f2f3bf5.webp' /></p><p>

இவ்வழக்கில் அர்ச்சுனா இராமநாதன் மட்டுமல்லாமல், வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவரது பிணையாளிகளும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
</p><p>
அதன்படி, கோட்டை நீதவான் நீதிமன்றம் நாடாளுமன்ற உறுப்பினருக்குப் பிடியாணை பிறப்பித்திருந்தது.
</p><p>
இந்நிலையில், நேற்றைய தினம் சட்டத்தரணி ஒருவர் ஊடாக நாடாளுமன்றத்தில் முன்னிலையான அர்ச்சுனா இராமநாதனுக்கு பிணை வழங்கப்பட்டது.

அத்துடன் இவ்வழக்கு ஒக்டோபர் 09 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T00:29:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹிந்தவிற்கு எதிரான 100 கோடி ரூபா ஊழல் குற்றச்சாட்டில் சாட்சியமளித்த முக்கிய பிரமுகர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajin-vaas-give-statement-against-mahinda-1785198091"></link>
            <id>https://tamilwin.com/article/sajin-vaas-give-statement-against-mahinda-1785198091</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்கள் சுமார் 100 கோடி ரூபா லஞ்சம் பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் நாடாளும...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்கள் சுமார் 100 கோடி ரூபா லஞ்சம் பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன சாட்சியமளித்துள்ளார்.
</p><p>லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் அவர் மூன்று மணித்தியாலங்கள் சாட்சியமளித்துள்ளார்.</p><p>
இராணுவத் தலைமையகம் அமைந்திருந்த காணியை 'ஷாங்க்ரி-லா' ஹோட்டலுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையின் போது, சுமார் 100 கோடி ரூபா லஞ்சமாகப் பெறப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சஜின் வாஸ் குணவர்தன வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af6c33c3-ef3e-429b-9926-c6244d466d50/26-6a67f60d6a761.webp' /></p><p>
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன நேற்றைய தினம் லஞ்ச ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.</p><p>
ஆணைக்குழுவின் அறிவித்தலுக்கு அமைய அங்கு சென்ற அவர், சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.</p><p>
குறித்த லஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொண்டதாக குற்றம்சாட்டி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராகவே ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>
 ‘லஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரையத்திற்கு எதிரான பிரஜைகள் சக்தி’ அமைப்பு இந்த முறைப்பாட்டை செய்துள்ளது.</p><p>
சிங்கப்பூரைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரால் வழங்கப்பட்ட சத்தியக்கடதாசியின் படி, TPL Itma நிறுவனம் மற்றும் Heliat எனும் ஆலோசனைக் நிறுவனம் ஆகியவற்றின் ஊடாக இந்தப் பணம் வழங்கப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>சஜின் வாஸ் குணவர்தன ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்துக்களை மேற்கோள் காட்டியே இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. </p><p>
மேலும், அப்பணம் தங்கல்ல பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கும் சீ.எஸ்.என். ஊடக வலைப்பின்னலுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையிலேயே, அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக லஞ்ச ஊழல் ஆணைக்குழு அவரை அழைத்திருந்தது.</p><p>
வாக்கு மூலத்தில் எவ்வாறான விடயங்களை சஜின் வாஸ் குணவர்தன குறிப்பிட்டார் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T00:21:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய மாணவர்களுக்கு கனடாவின் குடியேற்றத் துறை முக்கிய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-clarifies-work-rules-for-students-1785192359"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-clarifies-work-rules-for-students-1785192359</id>
            <summary type="text">கனடாவில் படிக்கும் இந்திய மாணவர்களின் வேலை அனுமதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கனடாவின் IRCC துறை முக்கிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் படிக்கும் இந்திய மாணவர்களின் வேலை அனுமதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கனடாவின் IRCC துறை முக்கிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது.</p><p>IRCC தெரிவித்ததாவது: “Study Permit விதிகளில் வேலை செய்யலாம் என்று குறிப்பிட்டிருந்தால்தான் மாணவர்கள் வேலை செய்ய முடியும். வகுப்புகள் நடைபெறும் காலத்தில், மாணவர்கள் வாரத்திற்கு அதிகபட்சம் 24 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கப்படுவர்.</p><p>இதை மீறுவது குடியேற்றச் சட்டத்தை மீறுவதாக கருதப்படும். எதிர்காலத்தில் அனுமதி மறுக்கப்படலாம் அல்லது நாடு கடத்தல் போன்ற கடுமையான விளைவுகள் ஏற்படலாம்” என எச்சரித்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32bccffb-d7af-4beb-8d30-259e07e7011a/26-6a67dfaa7a277.webp' /></p><p>இந்த அறிவிப்பு, போர்டேஜ் கல்லூரி (Portage College) மாணவர்கள் வேலை அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தியதையடுத்து வெளியிடப்பட்டது.
</p><p>
கல்லூரி தரப்பில், “மாணவர்கள் சட்ட ஆலோசனை பெற வேண்டும். நாங்கள் தொடர்ந்து IRCC உடன் விளக்கங்களைப் பெற முயற்சித்து வருகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p></p><p>மேலும், மாணவர்கள் எதிர்கால விண்ணப்பங்களுக்கு தேவையான ஆவணங்களை பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் என கல்லூரி அறிவுறுத்தியுள்ளது.</p><p> இதில் Study Permit, சேர்க்கை கடிதங்கள் (Joining Letter), கல்வி பதிவுகள், பாடநெறி நிறைவு ஆவணங்கள், மதிப்பெண் பட்டியல், PGWP விண்ணப்பங்கள், IRCC மறுப்பு கடிதங்கள் உள்ளிட்டவை அடங்கும்.
</p><p>
இந்த விளக்கம், கனடாவில் படிக்கும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களுக்கு மிக முக்கியமானதாகும். வேலை அனுமதி விதிகளை மீறாமல், சட்டப்படி வேலை செய்வது மட்டுமே பாதுகாப்பான வழி என IRCC தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-28T00:16:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027-க்குள் Prototype உருவாக்க வேண்டும்., ஐரோப்பிய ஒன்றியத்திடம் உக்ரைன் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-seeks-eu-missile-shield-prototype-1785197867"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-seeks-eu-missile-shield-prototype-1785197867</id>
            <summary type="text">உக்ரைன், 2027 நடுப்பகுதிக்குள் ஐரோப்பிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் (European Missile Defence System) முதல் மாதிரியை உருவாக்க வேண்டும் என கோரியுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன், 2027 நடுப்பகுதிக்குள் ஐரோப்பிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் (European Missile Defence System) முதல் மாதிரியை உருவாக்க வேண்டும் என கோரியுள்ளது.</p><p>உக்ரைன் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், “ஐரோப்பிய நாடுகள் இணைந்து ஒரு ஒருங்கிணைந்த பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்குவது அவசியம்” என தெரிவித்துள்ளார்.</p><p>இந்த திட்டம், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் போலந்து போன்ற நாடுகளின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afd26aa3-a1e8-4bbf-abf5-aa33bbc5a690/26-6a67f52cdf049.webp' /></p><p>உக்ரைன், ரஷ்யாவின் தொடர்ச்சியான ஏவுகணை தாக்குதல்களை எதிர்கொள்ள, தன்னுடைய வான்வழி பாதுகாப்பை வலுப்படுத்த முயற்சிக்கிறது.</p><p>

“நாங்கள் 2027க்குள் ஒரு செயல்பாட்டு மாதிரியை உருவாக்க விரும்புகிறோம். இது ஐரோப்பிய பாதுகாப்பு கூட்டணியின் அடித்தளமாக இருக்கும்” என அந்த அதிகாரி கூறியுள்ளனர்.</p><p>
</p><p></p><p>இந்த அமைப்பு, பல்வேறு நாடுகளின் ரேடார், ஏவுகணை தடுப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு திறன்களை ஒருங்கிணைக்கும். இதன் மூலம், ரஷ்யாவின் நீண்ட தூர ஏவுகணை தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் திறன் பெறப்படும்.</p><p>

ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பு நிதியிலிருந்து இதற்கான ஆரம்ப நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், உக்ரைன் இதனை “ஐரோப்பாவின் பாதுகாப்பு சுவராக” உருவாக்க விரும்புகிறது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இந்த முயற்சி, நாட்டின் பாதுகாப்பை மட்டுமல்லாது, ஐரோப்பிய நாடுகளின் தொழில்நுட்ப ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T00:15:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027 உலகக் கிண்ணத்துக்கான திட்டம் ; வைபவ் சூர்யவன்ஷி குறித்து முன்னாள் இந்திய வீரர் யோசனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-indian-player-thoughts-vaibhav-suryavanshi-1785186051"></link>
            <id>https://jvpnews.com/article/former-indian-player-thoughts-vaibhav-suryavanshi-1785186051</id>
            <summary type="text">2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் தொடக்க வீரராக ரோஹித் சர்மாவுடன் இணைந்து இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி க...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் தொடக்க வீரராக ரோஹித் சர்மாவுடன் இணைந்து இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஃபரூக் என்ஜினியர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>சிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, இந்திய ஒருநாள் அணியில் இடம்பெறுவதற்கான முழுத் தகுதியையும் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e8be452-07cc-4bac-8e84-c33e7c6a1bd4/26-6a67c7052af60.webp' /></p><p>இடதுகை மற்றும் வலதுகை துடுப்பாட்ட வீரர்களின் கலவையானது அணியின் பலத்தை அதிகரிக்கும் எனத் தெரிவித்த ஃபரூக் என்ஜினியர், இந்த அணுகுமுறை எதிரணிகளுக்கு சவாலாக அமையும் என்றும் கூறியுள்ளார்.
</p><p>
மேலும், ஷுப்மன் கில்லை 4ஆம் இலக்கத்தில் களமிறக்குவது இந்திய அணியின் மத்திய வரிசையை வலுப்படுத்தும் என்றும், விராட் கோலி 3ஆம் இலக்கத்தில் தொடர்ந்து விளையாடலாம் என்றும் அவர் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
</p><p>
2027 உலகக் கிண்ணத்தை இலக்காகக் கொண்டு இந்திய அணி தனது அணிக்கட்டமைப்பைத் திட்டமிடும் நிலையில், இளம் வீரர்களின் பங்களிப்பு தொடர்பான விவாதங்கள் கிரிக்கெட் வட்டாரங்களில் அதிகரித்து வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T00:09:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற நான் தொடர்ந்தும் முயற்சித்து வருகிறேன் - இம்ரான் மகரூப் எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imran-maghroob-committed-to-people-s-needs-1785195174"></link>
            <id>https://tamilwin.com/article/imran-maghroob-committed-to-people-s-needs-1785195174</id>
            <summary type="text">கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவது தொடர்பில் தொடர்ச்சியாக 
முயற்சி செய்து வருகிறேன் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவது தொடர்பில் தொடர்ச்சியாக 
முயற்சி செய்து வருகிறேன் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
</p><p>
நேற்று(27.07.2026) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>கிண்ணியா தள வைத்தியசாலை</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

திருகோணமலையில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட கிண்ணியா பிரதேசம்
மட்டுமன்றி, அதனைச் சூழவுள்ள பல கிராமங்களின் மக்களும் தங்களது அத்தியாவசிய
சுகாதார சேவைகளுக்காக கிண்ணியா தள வைத்தியசாலையையே நம்பியுள்ளனர்.</p><p>

எனவே, இந்த
வைத்தியசாலையை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வந்து அதன் தரத்தையும்
சேவைகளையும் மேம்படுத்த வேண்டும் என்பது நீண்டகாலமாக மக்களால்
முன்வைக்கப்பட்டு வரும் நியாயமான கோரிக்கையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84295278-69b3-4006-bd30-0084e79ab9a1/26-6a67eae08bf7e.webp' /></p><p>
</p><p>
இந்த மக்களின் கோரிக்கையை நான் ஒரு அரசியல் கோஷமாக அல்லாது, மக்களின் அடிப்படை
உரிமையாகக் கருதி பல வருடங்களாக தொடர்ச்சியாக முயற்சித்து வருகின்றேன்.
</p><p>
இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உரைகளிலும், நாடாளுமன்ற ஒத்திவைப்பு
பிரேரணைகளின் போதும், திருகோணமலை மாவட்ட மக்களின் சார்பில் பலமுறை இந்தக்
கோரிக்கையை முன்வைத்து அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.</p><h2>தொடர் முயற்சி</h2><p>

அதேபோன்று, ஆட்சியில் இருந்த அமைச்சர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும்
கிழக்கு மாகாண ஆளுநர்களை பலமுறை நேரில் சந்தித்து இந்த விடயத்தின் அவசியத்தை
வலியுறுத்தியுள்ளேன்.
</p><p>
இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள், நாட்டின் பொருளாதார நெருக்கடி
மற்றும் நிர்வாகச் சவால்கள் காரணமாக இந்த முயற்சி எதிர்பார்த்த வேகத்தில்
முன்னேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bce30087-00ad-4d93-9ff1-d0237abc78ca/26-6a67ebd9695f7.webp' /></p><p>

இருந்தபோதிலும், மக்களின் நலனுக்கான இந்தக் கோரிக்கை கைவிடப்படாமல்
தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற உறுதியுடன் நான் செயல்பட்டு
வந்துள்ளேன்.
</p><p>
அதன் ஒரு முக்கிய அங்கமாக, 2025 டிசம்பர் 15 ஆம் திகதி கிழக்கு மாகாண 
ஆளுநருக்கு உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பி, கிண்ணியா தள வைத்தியசாலையை
மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு கோரிக்கை
விடுத்தேன் என குறிபப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-28T00:00:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை அதிகரித்துள்ள ஜேர்மனி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-boosts-israel-arms-exports-1785196824"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-boosts-israel-arms-exports-1785196824</id>
            <summary type="text">ஜேர்மனி, 2026-ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், இஸ்ரேலுக்கு சுமார் 800 மில்லியன் யூரோ மதிப்பிலான ஆயுத ஏற்றுமதி அனுமதிகளை வழங்கியுள்ளது.இது கடந்த 20 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனி, 2026-ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், இஸ்ரேலுக்கு சுமார் 800 மில்லியன் யூரோ மதிப்பிலான ஆயுத ஏற்றுமதி அனுமதிகளை வழங்கியுள்ளது.</p><p>இது கடந்த 20 மாதங்களில் வழங்கியதை விட அதிகம் என ஜேர்மன் அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த அனுமதிகளில் பெரும்பாலானவை ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வழங்கப்பட்டதாகவும், அதில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட மதிப்பு ஒரு பெரிய கப்பல் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f03e239c-2cea-47ae-b1cc-438ce679ba1b/26-6a67f11ab313c.webp' /></p><p>அந்த திட்டம், TKMS நிறுவனம் தயாரித்த Dolphin II வகை அணு திறன் கொண்ட INS Drakon நீர்மூழ்கிக் கப்பலாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
</p><p>
இந்த நீர்மூழ்கிக் கப்பல், அணு ஆயுதங்களை ஏவக்கூடிய Vertical Launching System (VLS) வசதியுடன் இருக்கக்கூடும். இதனால், இஸ்ரேல் கடல் வழியாக இரண்டாவது தாக்குதலை நடத்தும் திறனைப் பெறும்.
</p><p></p><p>ஜேர்மனியின் இந்த நடவடிக்கை, காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் ஏற்பட்ட அழிவை கருத்தில் கொண்டால், சர்ச்சைக்குரியதாகும்.</p><p> பல்வேறு ஆய்வாளர்கள், “இஸ்ரேல் இந்த நீர்மூழ்கிக் கப்பல்களை காசா மீது தாக்குதல் நடத்தவும், அணு ஆயுதங்களை நிலைநிறுத்தவும் பயன்படுத்துகிறது” என எச்சரித்துள்ளனர்.
</p><p></p><p>ஜேர்மனியின் ஆயுத ஏற்றுமதி கொள்கை பல முறை மாற்றம் கண்டுள்ளது. 2023 அக்டோபரில் காசா மீது இஸ்ரேல் நடத்திய போர் காரணமாக, சில அனுமதிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. ஆனால், பின்னர் மீண்டும் அனுமதிகள் வழங்கப்பட்டன.
</p><p>
ஜேர்மனி, தற்போது ஐரோப்பாவின் மிகப்பெரிய இராணுவ செலவினம் செய்யும் நாடாக மாறி வருகிறது. 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில், 13.87 பில்லியன் யூரோ மதிப்பிலான ஆயுத ஏற்றுமதி அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T23:58:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வழங்காமல் இழுத்தடிப்பு செய்யும் ட்ரம்ப் நிர்வாகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/400-m-dollar-allocated-us-congress-for-ukraine-1785194894"></link>
            <id>https://ibctamil.com/article/400-m-dollar-allocated-us-congress-for-ukraine-1785194894</id>
            <summary type="text">

ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ஆயுதங்கள் அவசரமாகத் தேவைப்படும் நிலையிலும், அந்நாட்டிற்காக அமெரிக்க காங்கிரஸ் ஒதுக்கிய 400 மில்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>

ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ஆயுதங்கள் அவசரமாகத் தேவைப்படும் நிலையிலும், அந்நாட்டிற்காக அமெரிக்க காங்கிரஸ் ஒதுக்கிய 400 மில்லியன் டொலர் நிதியைச் செலவிட்டு முடிக்க 2029 நிதியாண்டு வரை ஆகும் என்று டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
</p><p>
கடந்த மே மாதம் பென்டகன் அமெரிக்க செனட் சபை உறுப்பினர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் இந்தச் செலவுத் திட்டம் விவரிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>விநியோகக் காலம்</h2><p> 

இருப்பினும், இரு மாதங்கள் கடந்தும் அந்த நிதி இன்னும் வழங்கப்படவில்லை அல்லது ஒப்பந்தங்கள் மூலமாக ஒதுக்கீடு செய்யப்படவும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/047e9848-1413-4315-bd6b-be11a451a400/26-6a67ecf3ee10c.webp' /></p><p><i>Image Credit: Fortune</i></p><p>

இந்நிலையில், இவ்வளவு மெதுவாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதற்குக் காங்கிரஸின் ஜனநாயகக் கட்சியினரும், ட்ரம்பின் குடியரசுக் கட்சியினர் சிலரும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.</p><p>

இந்த விநியோகக் கால அட்டவணையின்படி, நிதி 2026 நிதியாண்டிற்குள் ஒதுக்கப்பட்டு, அனைத்து உதவிகளும் செப்டம்பர் 30, 2029-க்குள் முழுமையாகச் சென்றடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>ஜெலென்ஸ்கி - ட்ரம்ப் சந்திப்பு&nbsp;</h2><p> </p><p>

இதற்கிடையில், உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி செவ்வாயக்கிழமை வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்பைச் சந்திக்கவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b25dd566-632b-42fa-820d-5751543d8c98/26-6a67ecf4a8a37.webp' /></p><p><i>Image Credit:&nbsp;
NBC News</i></p><p> </p><p>

இந்தச் சந்திப்பில் வான் பாதுகாப்புத் திறன்கள் மற்றும் ட்ரோன் ஒப்பந்தம் குறித்து அவர் வலியுறுத்துவார் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.அதன் பிறகு, அமெரிக்க செனட் சபையின் 100 உறுப்பினர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-27T23:42:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அடிக்கடி பழுதடையும் அரச பேருந்து.. கடும் சிரமத்திற்குள்ளாகும் பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/students-delayed-getting-school-due-broken-bus-1785194363"></link>
            <id>https://tamilwin.com/article/students-delayed-getting-school-due-broken-bus-1785194363</id>
            <summary type="text">பருத்தித்துறையில் இருந்து வடமராட்சி கிழக்கு கேவில் வழியாக சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து அடிக்கடி பழுதடைவதால் பயணிகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பருத்தித்துறையில் இருந்து வடமராட்சி கிழக்கு கேவில் வழியாக சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து அடிக்கடி பழுதடைவதால் பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p><p>குறித்த பேருந்து, பருத்திதுறையில் இருந்து மாலை 6 மணிக்கு சேவையை ஆரம்பித்து கட்டை காட்டில்
தரித்து காலையில் பருத்தித்துறையை நோக்கி சேவையில் ஈடுபடும்.
</p><p>
இந்த பேருந்தில் பாடசாலை மாணவர்கள், அரச
உத்தியோகத்தர்கள், வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள் என பலர் பயணம் செய்து
வருகின்றனர்.</p><p>இந்நிலையில், நேற்று (27.07.2026) காலை முதலாவது சேவையாக கட்டைக்காட்டிலிருந்து ஆரம்பித்து
பருத்தித்துறை நோக்கி செல்லும் வழியில் நாகர்கோயில் குடியிருப்பு பகுதியில்
பழுதடைந்ததால், அதில் பயணத்தினை மேற்கொண்ட மாணவர்கள் உட்பட பலரும் 45
நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.</p><p></p><h2>பாதிக்கப்படும் பயணிகள்&nbsp;</h2><p> இதனால் பருத்தித்துறையில்
உள்ள பல உயர்தர பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களும் வழமையாக கிளினிக்
சிகிச்சைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்கள் உட்பட அரச
உத்தியோகத்தர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9dedb48c-7aa9-4a87-902d-3ef19adcaa4d/26-6a67eae52baa4.webp' /></p><p>இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 762 வழி சேவை மக்களின் நலன் கருதி
குடியிருப்புகள் ஊடாக தங்களுடைய சேவைகளை செய்து வருகின்ற போதும் இரவு தங்கல்
சேவைக்காக ஈடுபடும் குறித்த பேருந்து பழைய பேருந்தாக இருப்பதினால் அடிக்கடி காலை
நேரங்களில் பழுதடைந்து வருகின்றது.</p><p>

இதேவேளை பல்கலைக்கழகத்திற்குச் செல்கின்ற மாணவர்கள் கேவிலிலிருந்து
பருத்தித்துறை நோக்கி செல்கின்ற பேருந்து தாமதமாக செல்வதனால் பெரிதும்
பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>
நேற்றைய தினம் நாகர்கோவில் பகுதியில் பேருந்து பழுதான நிலையில் பிறிதொரு
பேருந்து ஒரு மணித்தியாலம் தாமதித்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T23:34:39+00:00</updated>
        </entry>
    </feed>
