<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-29T03:55:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவினால் ஈரானுக்கு தொடரும் அச்சுறுத்தல்! இலங்கையிடம் பாதுகாப்பு கோரி உள்நுழைந்துள்ள 20 கப்பல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-ships-seeks-safety-from-sri-lanka-1787971924"></link>
            <id>https://tamilwin.com/article/iran-ships-seeks-safety-from-sri-lanka-1787971924</id>
            <summary type="text">ஹோர்மூஸ் நீரிணைக்குள் நுழையும் ஈரானிய கப்பல்கள் மீது அமெரிக்கா தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இலங்கையிடம் பாதுகாப்பு கோரி பல கப்பல்கள் எல...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்மூஸ் நீரிணைக்குள் நுழையும் ஈரானிய கப்பல்கள் மீது அமெரிக்கா தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இலங்கையிடம் பாதுகாப்பு கோரி பல கப்பல்கள் எல்லையில் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>

இலங்கையின் கடற்பரப்பினை அண்மித்த பகுதியில் சுமார் 13இற்கும் மேற்பட்ட ஈரானிய கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளன. மேலும் பல கப்பல்கள் அந்தப் பகுதியை நோக்கி நகர்ந்து வருவதாக TankerTrackers இணையத்தளத்தின் சர்வதேச கடற்படை புலனாய்வுப் பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது.
</p><p><b style="color: inherit; font-size: 1.75rem;">ஈரானிய கப்பல்கள்</b></p><p>ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களுக்கு அமெரிக்க இராணுவம் தொடர்ந்தும் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b20d3929-6383-4f98-af0a-5b1cc6956df9/26-6a924fff201c9.webp' />&nbsp;&nbsp;</p><p><b style="color: inherit; font-size: 1.75rem;"></b></p><p>அதற்கமைய ஈரானிய கொடியுடன் கூடிய 13 எண்ணெய் தாங்கி கப்பல்கள் உட்பட மேலும் சில ஈரானிய கப்பல்கள் இலங்கையின் சர்வதேச கடற்பரப்பை அண்மித்த பகுதியில் நங்கூரமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த கப்பல்கள் மீண்டும் ஈரானிய துறைகளுக்கு சென்று எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நம்பிக்கையில் இலங்கையை அண்மித்த பகுதியில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக டேங்கர்ட்ரேக்கர்ஸ் இணை நிறுவனர் சமீர் மதானி தெரிவித்துள்ளார்.</p><p>

எனினும் இந்தக் கப்பல்களுக்கு இலங்கை அரசாங்கம் எந்தவொரு வசதிகளையோ அல்லது உதவிகளையோ வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். </p><h3><b>


அமெரிக்காவின் அச்சுறுத்தல்</b></h3><p>ஈரானிய கப்பல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. எனினும் இலங்கையின் கடற்பரப்பை தாண்டி, சர்வதேச கடலில் அவை நிலைநிறுத்தப்பட்டுள்ளதால், அவற்றுக்காக பொறுப்பை நாடு ஏற்காது என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af853996-a096-4b87-8efe-cda2bb30676b/26-6a924fffd227f.webp' /></p><p>அமெரிக்க போர்க்கப்பல்களின் தடை காரணமாக, கடந்த ஜூலை இரண்டாம் வாரத்திற்கு பின்னர் ஈரானின் கார்க் தீவிலிருந்து மத்திய கிழக்கு பகுதிக்கு வெளியே உள்ள எந்தவொரு இலக்குக்கும் எண்ணெய் ஏற்றப்படவில்லை.
</p><p>
கடந்த ஆறு மாதங்களில் அமெரிக்க கடற்படைத் தடையினால் 20 இற்கும் மேற்பட்ட ஈரானிய கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதுடன், ஈரான் துறைமுகங்களை நோக்கி வந்த 75 க்கும் மேற்பட்ட சர்வதேச கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-08-29T03:53:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி! எதிர்க்கட்சித் தலைவர் விளாசல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-premadhasa-statement-about-president-1787975378"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-premadhasa-statement-about-president-1787975378</id>
            <summary type="text">மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தை பெற்றுவிட்டு, மீண்டும்
பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க
நாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தை பெற்றுவிட்டு, மீண்டும்
பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க
நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று எதிர்க்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>
அம்பாந்தோட்டை, லுணுகம்வெஹர சீனிபுர பகுதியில் நேற்று (28.08.2026) நடைபெற்ற விவசாயிகளின்
பிரச்சினைகளை ஆராயும் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர்
இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இதன்போது, தான் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில்
நிர்மாணித்த நெல் களஞ்சியசாலையையும் அவர் நேரில் சென்று பார்வையிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46d3a2e2-fa0b-40ba-a3a6-2a06e3773b39/26-6a9256d46e0c6.webp' /></p><h2>ஜனாதிபதி பிரஸ்தாபித்த விடயம்</h2><p>
</p><p>இந்த சந்தர்ப்பத்தில் அவர் மேலும் உரையாற்றுகையில், கடந்த தேர்தல்களுக்கு முன்பு ஜனாதிபதி உள்ளிட்ட அரச அமைச்சர்கள்
வயல்வெளிகளுக்குச் சென்று நெற்கதிர்களைக் கடித்துக் கொண்டு, ஒரு கிலோகிராம் நெல்லுக்கு 150 ரூபா உத்தரவாத விலை தருவதாகப் பிரஸ்தாபித்தனர். </p><p>ஆனால், இன்று
ஒரு கிலோகிராம் நெல் 120 ரூபாவுக்கே கொள்வனவு செய்யப்படுகின்றது. விவசாயத்துறை
அமைச்சரே ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்ய 137 ரூபா செலவாகின்றது எனத்
தெரிவித்துள்ள நிலையில், விவசாயிக்கு கிலோ ஒன்றுக்கு 17 ரூபா நட்டம்
ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83f2b03c-9673-4ca8-b6f5-c65f6971ca4e/26-6a9256d529725.webp' /></p><p>
</p><p>
நெல்லைக் கொள்வனவு செய்வதாகக் கூறினாலும், தற்சமயம் ஈர நெல் 85 ரூபாவுக்கும்,
காய்ந்த நெல் 100 ரூபாவுக்கும் அரசு வெறும் 2 முதல் 3 சதவீத அளவிலேயே கொள்வனவு
செய்கின்றது. எஞ்சிய நெல்லைக் கொள்வனவு செய்யும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி
ஆலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.</p><h2>அரிசி இறக்குமதி</h2><p>
</p><p>
நாட்டின் தேவைக்கு அதிகமாக அரிசி உற்பத்தி செய்யப்படும் நிலையில், கடந்த
இரண்டு ஆண்டுகளில் 3 இலட்சத்து 80 ஆயிரம் மெட்ரிக் டொன் அரிசி
வெளிநாடுகளிலிருந்து இறக்கமதி செய்யப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு
அரிசி இறக்குமதியை எதிர்த்துப் பேசியவர்கள், இன்று அதனைச் செய்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5a46f02-4dce-4cc0-8390-b53e8f23a2d7/26-6a9256d5dbdbe.webp' /></p><p>
</p><p>
தற்போதைய பொருளாதார நெருக்கடியால் 30 முதல் 40 சதவீதமான மக்கள்
வறுமைக்கோட்டுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அஸ்வெசும உதவித் திட்டம் வெட்டப்பட்டு
வருகின்றது.

அரசு மக்களுக்குப் பொய் சொல்வதை விடுத்து, மின்சாரக் கட்டணத்தைக் குறைத்து,
வரிச் சுமையைத் தளர்த்தி மக்களுக்கு உண்மையான நிவாரணங்களை வழங்க வேண்டும் என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1017ab7f-5dfc-4766-8988-2aaddf556c6b/26-6a9256d694df1.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T03:51:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் மீது கொடூர தாக்குதல் - அதிர்ச்சியில் போதகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/attack-on-jaffna-csi-deputy-chairperson-1787972337"></link>
            <id>https://ibctamil.com/article/attack-on-jaffna-csi-deputy-chairperson-1787972337</id>
            <summary type="text">தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவரான போதகர் அன்டனி செபஸ்டியன் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் காயமடைந்த அவர், யாழ். போதனா வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவரான போதகர் அன்டனி செபஸ்டியன் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் காயமடைந்த அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். </p><p>

இந்த சம்பவம் நேற்று பிற்பகல் (28)&nbsp; இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாண திருச்சபை பிரதித் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட போதகர் செபஸ்டியன், திருச்சபையின் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார்.</p><p></p><h2>திட்டமிட்ட தாக்குதல்</h2><p> </p><p>

இந்நிலையில் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த விசேட குழுவினரால், தென்னிந்திய திருச்சபையில் பணியாற்றும் போதகர்களின் குடும்பங்களுக்கான ஒன்றுகூடலும் பயிற்சிகளும் கடந்த சில தினங்களாக நடத்தப்பட்டு வந்தன. 

நிகழ்வின் இறுதி நாளான நேற்று, பேராயர் பேத்மதயாளன் தலைமையில் போதகர்களுக்கான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f5a5703-7cf4-4b70-b311-9e3fa09e1fa6/26-6a92567a6e7e6.webp' /></p><p>கலந்துரையாடல் நிறைவடைந்து வெளியேறியபோது, பேராயர் மற்றும் ஏனைய போதகர்கள் முன்னிலையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>இதனால் இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் எனக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>இத்தாக்குதல் சம்பவம், திருச்சபை போதகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. </p><p>

தாக்குதலை நடத்திய நபர், தென்னிந்திய திருச்சபையிலிருந்து பிரிந்து சென்ற 'அமெரிக்கன் இலங்கை மிஷன்' திருச்சபையின் உறுப்பினராக இருந்து, பின்னர் மீண்டும் இதில் இணைந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T03:48:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளப் பெருவெள்ளம்... 2478 என உயர்ந்த மாயமானவர்கள் எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-flood-missing-rises-to-2478-1787974918"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-flood-missing-rises-to-2478-1787974918</id>
            <summary type="text">Nepal flash flood... number of missing rises to 2,478: நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கி மாயமானவர்கள் எண்ணிக்கை தற்போது 2478 என உயர்ந்தது.
நேபாளத்தில் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal flash flood... number of missing rises to 2,478: நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கி மாயமானவர்கள் எண்ணிக்கை தற்போது 2478 என உயர்ந்தது.</p><p>
நேபாளத்தில் பெருவெள்ளத்தைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் நாலாவது நாளை எட்டியுள்ள நிலையில், பெருவெள்ளத்தில் சிக்கி மாயமானவர்கள் எண்ணிக்கை தற்போது 2478 என உயர்ந்துள்ளது.</p><h2>இந்தியாவில்&nbsp;ஏழு உடல்கள்</h2><p>
</p><p>சீன அரசு ஊடகங்களின் தகவலின்படி, திபெத்தில் உத்தியோகப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது; மேலும் 554 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர். 570க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, </p><p>குறைந்தது 2400 பேரைக் காணவில்லை என்ற நேபாளத்தின் புள்ளிவிவரங்களுடன் இவை பொருந்துகின்றனவா என்பது குறித்த தகவல் இல்லை.</p><p> இதனிடையே, திபெத்தில் சிக்கித் தவித்த 555 சுற்றுலாப் பயணிகளையும் 499 சீனக் குடியிருப்பாளர்களையும் மீட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42947199-96df-4355-9d98-b6ec8365aa93/26-6a92550865cca.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், இந்தியாவில், நேபாளத்திலிருந்து பாயும் ஆறுகளில் இருந்து ஏழு உடல்கள் மீட்கப்பட்டதாகவும், அவை வெள்ளத்தில் பலியானவர்கள் என நம்பப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>திபெத்தில் உள்ள கைலாச மலைக்கு யாத்திரை மேற்கொண்டிருந்தவர்கள் உட்பட, உலகம் முழுவதிலுமிருந்து வந்த ஏராளமான இந்து பக்தர்கள் எல்லைப் பகுதியில் காணாமல் போயுள்ளனர்.</p><p></p><p> </p><p>புதன்கிழமை திபெத்தின் கியிராங் மாவட்டத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்திற்குப் பிறகு, 260 வெளிநாட்டினர் உட்பட 550-க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளனர் என்று சீன அரசு ஒளிபரப்பு நிறுவனமான சிசிடிவி தெரிவித்துள்ளது. </p><p>இந்த நிலையில், புதன்கிழமையன்று சீனா-நேபாள எல்லையில் ஏற்பட்ட பேரழிவுமிக்க திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, காணாமல் போனவர்கள் எண்ணிக்கை தற்போது 2,478 என அதிகரித்துள்ளது. </p><p>எல்லையின் தங்கள் பகுதியில் 1,924 பேர் காணாமல் போயுள்ளதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை அமைப்பு வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தது; அதேவேளை, திபெத்தில் காணாமல் போனவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 554 ஆக உள்ளதாகவும், ஏழு பேர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சீனாவின் சின்ஹுவா செய்தி முகமை இன்று அதிகாலை செய்தி வெளியிட்டது. </p><p>செஞ்சிலுவைச் சங்கத்தின் தகவலின்படி, நேபாளத்தில் இதுவரை 3,700-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்; எனினும், குறைந்தது 93,000 பேர் இந்தத் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0af3509-02d1-412a-a756-e246d802f98c/26-6a9255092e571.webp' /></p><p> </p><p>குறைந்தது 777 வெளிநாட்டினர் காணாமல் போயுள்ளனர்; இதில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களும் அடங்கக்கூடும்.</p><p> நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை அமைப்பு வெள்ளிக்கிழமையன்று 517 வெளிநாட்டினர் குறித்த தகவல் ஏதுமில்லை என்று தெரிவித்த நிலையில், சீன அதிகாரிகள் காணாமல் போன வெளிநாட்டினரின் எண்ணிக்கையை 260 எனக் குறிப்பிட்டுள்ளனர். </p><p>புதன்கிழமையன்று நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த வெள்ளப் பகுதிக்கு மேல் பகுதியில் அமைந்துள்ள இரண்டு ஏரிகளை நேபாளம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக, அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். </p><p>வெள்ளிக்கிழமையன்று இரண்டு ஏரிகளில் ஒன்று நிரம்பி வழியத் தொடங்கிய நிலையில், இரண்டு ஏரிகளும் முழுமையாக வற்றும் வரை வெள்ள அபாயம் நீடிக்கும் என்று அந்த அதிகாரி எச்சரித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T03:39:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவீதியில் கவிழ்ந்த கொள்கலன் வாகனம் : போக்குவரத்திற்கு சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/container-truck-overturned-in-the-middle-road-1787973315"></link>
            <id>https://ibctamil.com/article/container-truck-overturned-in-the-middle-road-1787973315</id>
            <summary type="text">ஹொரணை - கொழும்பு வீதியில் கொள்கலன் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கோனபொல சந்திக்கு அருகில் இன்று (29) அதிகாலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹொரணை - கொழும்பு வீதியில் கொள்கலன் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>கோனபொல சந்திக்கு அருகில் இன்று (29) அதிகாலை 1.00 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.</p><p>இந்த விபத்தினால் வீதியின் ஒரு வழிப்பாதை வீதிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக மொரகஹஹேன காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>விபத்திற்கான காரணம் </h2><p>ஹொரணை கைத்தொழில் வலயத்திலிருந்து கொழும்பு துறைமுகத்தை நோக்கிப் பயணித்த கொள்கலன் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d84495f4-e94c-4c32-bbfe-6b25c48c5e69/26-6a92536b8ec5e.webp' /></p><p> 

கொள்கலன் வாகனம் அதிக வேகத்தில் வந்து வளைவைக் கடக்க முயன்றமையே விபத்திற்குக் காரணம் என காவல்துறையினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T03:37:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தத்தை நிறைவேற்றியே தீருவோம்! அமைச்சர் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/we-will-implement-22nd-amendment-minister-samantha-1787971378"></link>
            <id>https://tamilwin.com/article/we-will-implement-22nd-amendment-minister-samantha-1787971378</id>
            <summary type="text">இலங்கையில் 22ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டமூலத்தை அரசு நிச்சயமாக நிறைவேற்றும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் 22ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டமூலத்தை அரசு நிச்சயமாக நிறைவேற்றும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன
தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பில் நேற்று(28.08.2026) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>22ஆவது திருத்தச் சட்டம்</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் சட்டம் ஏழை எளிய மக்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்
வகையிலும், செல்வந்தர்களுக்கும் அதிகாரம் படைத்தவர்களுக்கும் விலக்கு
அளிக்கும் வகையிலுமே காணப்பட்டது. </p><p>ஆனால், தற்போதைய ஆட்சியில் பெரியவர்,
சிறியவர் அல்லது பணக்காரர் என்ற எந்தவிதப் பாகுபாடுமின்றி சட்டம் அனைவருக்கும்
சமமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9be5fb34-544e-47aa-a36e-3b24dfea48c0/26-6a924dbae33c2.webp' /></p><p>

சட்டம் அனைவருக்கும் சமமாகச் செயற்படுவதன் காரணமாகவே, பழைய ஊழல்வாதிகளும்
குற்றவாளிகளும் அச்சமடைந்து 22ஆவது திருத்தத்துக்கு எதிராகக் கூச்சலிட்டு
வருகின்றனர். </p><p>நீதிமன்ற சுதந்திரம் சீர்குலைக்கப்பட்ட கடந்த கால நிலையை
மாற்றி, நாட்டில் சட்டத்தின் ஆட்சியைப் பலப்படுத்துவதற்காகவே இந்தத் திருத்தம்
கொண்டுவரப்படுகின்றது.</p><h2>நிதி ஒதுக்கீடு</h2><p>
</p><p>
நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்காக வரலாற்று ரீதியாக மிக அதிகமான நிதி
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய 2026ஆம் ஆண்டில் மூலதனச்
செலவினங்களுக்காக 1.3 டிரில்லியன் ரூபாவும், அடுத்த ஆண்டில் 2 டிரில்லியன்
ரூபாவும் நாட்டின் அபிவிருத்திக்காகப் பயன்படுத்தப்படவுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81d8aec3-912b-45aa-95bc-3a24a6f23871/26-6a924dbb95974.webp' /></p><p>இதன் மூலம்
வீடுகள், வீதிகள், பாடசாலைகள் மற்றும் குளங்கள் அமைக்கும் பணிகள்
வேகமாக்கப்படும்.

கடந்த காலத்தில் போதைப்பொருள், பாதாள உலகக் குற்றங்கள் மற்றும் ஊழல் போன்றவையே
ஊக்குவிக்கப்பட்டன.</p><p> ஆனால், தற்போதைய அரசு அவற்றை முழுமையாக கட்டுப்படுத்தி சட்டத்தை நிலைநாட்டி வருவதால், கட்சி பேதங்களை கடந்து நாட்டின் எதிர்கால
சந்ததியினரின் நலனுக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T03:31:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவர் பர்த்டேவுக்கு நச்சுன்னு லிப் லாக் கொடுத்த நடிகை சினேகா..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/sneha-kiss-her-husband-pranna-birthday-special-1787926847"></link>
            <id>https://viduppu.com/article/sneha-kiss-her-husband-pranna-birthday-special-1787926847</id>
            <summary type="text">சினேகா -&amp;nbsp; பிரசன்னாரசிகர்களால் புன்னகை அரசி என செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை சினேகா. இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடிய திரை பிரபலங்களில...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சினேகா -&nbsp; பிரசன்னா</h2><p>ரசிகர்களால் புன்னகை அரசி என செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை சினேகா. இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடிய திரை பிரபலங்களில் ஒருவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66668084-52a6-42dc-9008-0982ecd280be/26-6a9199416d5be.webp' />]</p><p>
</p><p>
தொடர்ந்து தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது நடிகை சினேகா, தன்னுடைய கணவரும் நடிகருமான பிரசன்னாவின் பர்த்டேவை கொண்டாடியுள்ளார்.</p><p> தற்போது தன் கணவருக்கு லிப்லாக் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DclJjY4GSoB/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DclJjY4GSoB/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DclJjY4GSoB/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Sneha (@realactress_sneha)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-29T03:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிராபத்தை தடுக்க 21 தொழிலதிபர்கள்'பஸ் லலித்'துக்கு கொடுத்த கோடிக்கணக்கான பணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lalith-kannangara-alias-bus-lalith-ccib-1787973892"></link>
            <id>https://tamilwin.com/article/lalith-kannangara-alias-bus-lalith-ccib-1787973892</id>
            <summary type="text">&amp;nbsp;டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் அழைத்துவரப்பட்ட போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட பிரதான நபரான லலித் கன்னங்கர எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் அழைத்துவரப்பட்ட போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட பிரதான நபரான லலித் கன்னங்கர என்றழைக்கப்படும் 'பஸ் லலித்' இலங்கையிலுள்ள 21 முன்னணி தொழிலதிபர்களிடம் இருந்து சுமார் 15 கோடி ரூபாயை கப்பமாகப் பெற்றுள்ளதாக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது. </p><p>
இருப்பினும் 'பஸ் லலித்' மீதான பயம் காரணமாக இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><h2>தொலைபேசியில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்</h2><p>தனது சகபாடிகளை பயன்படுத்தி பஸ் லலித் மேற்கொண்ட மனிதப் படுகொலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் டி-56 ரக துப்பாக்கிகள் உட்பட 5 துப்பாக்கிகள் தொடர்பான தகவல்களைப் பொலிஸார் பெற்றுக் கொண்டுள்ளனர்.
</p><p>
அந்தத் துப்பாக்கிகளைக் கண்டறிவதற்காகப் புலனாய்வு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2df2ba03-314e-4d5e-aaf3-8d1939416dc1/26-6a9251069862c.webp' /></p><p>வர்த்தகர்கள் கொழும்பு பகுதியில் அதிக மதிப்புள்ள காணிகளை வாங்கும்போது வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்து கப்பம் பெற்றுள்ளதாகவும் ஒரு நபர் அரசுக்குச் சொந்தமான காணியை ஆக்கிரமித்திருந்த சந்தர்ப்பத்தில் 'பஸ் லலித்' என்பவர் தனது சகபாடிகளை பயன்படுத்தி வலுக்கட்டாயமாக அந்தக் காணியைக் கைப்பற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p>சந்தேகநபர் தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். </p><p>குற்றவியல் மற்றும் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ரன்மல் கொடிதுக்குவின் அறிவுறுத்தலின் பேரில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன கொடிதுவக்கு ஆகியோரின் வழிகாட்டலில் அப்பிரிவின் பணிப்பாளர் கமல் ஆரியவன்ச உள்ளிட்ட அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T03:27:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கையில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் - ஒருவர் குத்திக் கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/brothers-fight-2-killed-1787970066"></link>
            <id>https://tamilwin.com/article/brothers-fight-2-killed-1787970066</id>
            <summary type="text">&amp;nbsp;தென்னிலங்கையில் நேற்றிரவு இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 

காலி பொலிஸ் பிரிவின் கல்வலா பகுதியில் நேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தென்னிலங்கையில் நேற்றிரவு இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். </p><p>

காலி பொலிஸ் பிரிவின் கல்வலா பகுதியில் நேற்று இரவு இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் காயமடைந்த ஒருவர் காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><h2><b>இரு குழுக்களுக்கு இடையில் மோதல்</b></h2><p>வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாக காலி பொலிஸ் துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் காலி பகுதியை சேர்ந்த 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>
பழைய பகை காரணமாக இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறின் விளைவாக இந்தக் கொலை நிகழ்ந்துள்ளது என இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66d199ce-7ea1-495e-a76e-577685b3593e/26-6a9245ec0209e.webp' /></p><p>மேலும், இந்த மோதலில் காயமடைந்த மேலும் இருவர் காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பாக, வலவத்தை பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 29 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p> 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-29T03:27:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அசிங்கப்படுத்திய சிந்தாமணி, முத்துவிற்கு ஆதரவாக விஜயா சொன்ன வார்த்தை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/siragadikka-aasai-serial-august-30-episode-promo-1787972480"></link>
            <id>https://cineulagam.com/article/siragadikka-aasai-serial-august-30-episode-promo-1787972480</id>
            <summary type="text">சிறகடிக்க ஆசைஅண்ணாமலை குடும்பத்தில் அடுத்தடுத்து ஏதாவது ஒரு பிரச்சனை வந்த வண்ணம் உள்ளது. இப்போது பாட்டிக்கு எல்லா விஷயமும் மறந்துபோக, முத்து-மீனா, ரவி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சிறகடிக்க ஆசை</h2><p>அண்ணாமலை குடும்பத்தில் அடுத்தடுத்து ஏதாவது ஒரு பிரச்சனை வந்த வண்ணம் உள்ளது. </p><p>இப்போது பாட்டிக்கு எல்லா விஷயமும் மறந்துபோக, முத்து-மீனா, ரவி-ஸ்ருதி இருவருக்கும் திருமணம் நடக்கிறது. அடுத்து கதையில் ரோஹினி-மனோஜ் விவாகரத்து பிரச்சனை வரப்போகிறது, இதில் என்ன முடிவு வரும் என தெரியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e5a44cf-5bcf-4a39-be36-25be838de256/26-6a924b8285f2c.webp' /></p><p> </p><p>
அந்த கொண்டாட்டம் முடிந்த பிறகு இப்போது மீண்டும் ஒரு விசேஷம் நடக்க உள்ளது.</p><h2>
கொண்டாட்டம்
</h2><p>அதாவது சிந்தாமணி படு பிரம்மாண்டமாக தனது மகள் ரேகா-சத்யாவிற்கு திருமண வரவேற்பு ஏற்பாடு செய்கிறார்.</p><p> இதற்காக பத்திரிக்கை எடுத்துக்கொண்டு சத்யா அம்மா வீட்டிற்கு செல்கிறார், பத்திரிக்கை கொடுத்து அழைப்பதோடு சத்யா அம்மாவிற்கு சில விஷயங்கள் கொடுக்கிறார். சத்யா அம்மா ஏழையாக இருப்பதை குத்திக்காட்டி கொஞ்சம் நகை எல்லாம் போட்டுக்கொண்டு வாருங்கள் என கூற அவர் வருத்தப்படுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f769a55a-59a0-424a-94fc-a6cb6a7cb140/26-6a924b83361a8.webp' /></p><p>
</p><p>நாளைய எபிசோடின் புரொமோவில், சிந்தாமணி விஜயா வீட்டிற்கு பத்திரிக்கை எடுத்துக்கொண்டு வருகிறார். </p><p>பின் மீனாவிடம் பணம் கொடுத்து இந்த பணத்தில் உனக்கும், முத்துவிற்கும் நல்ல உடை வாங்கிக்கொண்டு வாருங்கள், அங்கு வருபவர்கள் எல்லாம் பெரிய ஆட்கள் என்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87a0074e-6558-443f-90f1-06b156bd6cd7/26-6a924b81cfb4e.webp' /></p><p> </p><p>அதனை கேட்டதும், விஜயா என் மகன் ஒன்றும் எதுவும் இல்லாதவன் இல்லை, அவனும் ஒரு டிராவல்ஸ் ஓனர், 4, 5 கார்கள் வைத்துள்ளான் என கூற முத்து-மீனா இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-29T03:20:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் தொழிலதிபரின் மர்ம மரணம்: மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளில் ஏற்பட்டுள்ள திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dinesh-schaffter-case-cid-npp-1787971838"></link>
            <id>https://tamilwin.com/article/dinesh-schaffter-case-cid-npp-1787971838</id>
            <summary type="text">கொழும்பில் கடத்தப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம்&amp;nbsp;மீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் கடத்தப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம்&nbsp;மீண்டும் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளன.&nbsp;</p><p>கொழும்பினை சேர்ந்த தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டர் கடந்த 2022 ஆம் ஆண்டு பொரளை பொது மயானத்தில் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">பல கோணங்களில் விசாரணைகள்&nbsp;</span></p><p>இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் நிறைவேற்றுக்குழு பணிப்பாளரும், பிரபல தமிழ் தொழிலதிபருமான தினேஷ் சாப்டர் மரணமடைந்து நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவரின் மரணத்தின் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f38b6b40-39fc-4819-8b3f-bf964c8c87a8/26-6a924d660a9db.webp' />&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p>இச்சம்பவம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு கடந்த அரசாகத்தில் மந்த நிலையை அடைந்து மறைக்கப்பட்டிருந்தன.&nbsp;</p><p><span style="font-size: 14px;">இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மரணம் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு முன்னேற்றமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</span></p><p>தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) தினேஷ் ஷாப்டர் தொடர்பான புதிய விசாரணைகளை முன்னெடுத்து செல்கின்றது.</p><p>கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கும் தற்போது மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கும் இடையே பாரிய வித்தியாசம் இல்லாத வகையிலேயே விசாரணைகள் இடம்பெறுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>இருப்பினும், சில சம்பவங்கள் அதாவது சில அறிவியல் சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.</p><p>இந்த சான்றுகளின் அடிப்படையில் இது ஒரு கொலைச் சம்பவமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதுடன், அதனை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் சில ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.</p><p>அவற்றில் அவருக்கு கிடைத்த மற்றும் அவரிடமிருந்து அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் மின்னஞ்சல்கள் (Email) தொடர்பான தகவல்களை பகுப்பாய்வு செய்வதற்காக அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பப்பட்டுள்ளது.</p><h2>உறுதிப்படுத்துவதற்கான சான்றுகள்&nbsp;&nbsp;</h2><p>உயிரிழந்த நபர் வழக்கமாகப் பயன்படுத்தும் மொழி மற்றும் பாணிக்கு முற்றிலும் பொருந்தாத வேறு ஒரு பாணியிலேயே அந்த SMS மற்றும் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>எனவே, உண்மையிலேயே அதை அவர் தான் அனுப்பினாரா அல்லது இதில் மூன்றாம் தரப்பு ஏதும் தலையிட்டுள்ளார்களா என்பது குறித்தே தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8ca7608-1c36-4df8-82d4-fa491e419e94/26-6a924900c3acc.webp' />&nbsp; &nbsp;&nbsp;</p><p><span style="font-size: 14px;">மின்னஞ்சல்களுக்கு மூன்றாம் தரப்பு யாரேனும் தலையிட்டிருந்தால் நிச்சயமாக இது ஒரு கொலை என்பதை உறுதிப்படுத்தி விசாரணைகள் முடுக்கி விடப்படும் என்பதன் காரணமாக, அரச இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கையைப் பெற்றுக்கொள்வதற்காக தேவையான அனைத்து தகவல்களும், அறிக்கைகளும் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.</span></p><p>இருப்பினும், விசாரணைகளில் சில விடயங்கள் நம்பகத்தன்மையற்றதாக தோன்றினாலும், அவற்றை உறுதிப்படுத்துவதற்கான சான்றுகள் இன்னும் சரியாக கிடைக்கவில்லை என்றும் புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>எனவே, இந்த விசாரணை சரியாக முன்னெடுக்கப்பட்டு எதிர்காலத்தில் ஒரு சரியான அறிக்கை கிடைக்கும் என்றும், அவை அரச இராசாயன பகுப்பாய்வாளர் அறிக்கையுடன் ஒப்பிடப்பட்டு உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகின்றது.</p><p></p><p></p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-29T03:15:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெனிசுலாவின் மொத்த எண்ணெய் வளத்தையும் கைப்பற்றும் அமெரிக்கா... ட்ரம்பின் புதிய ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-oil-agreement-with-venezuela-1787972596"></link>
            <id>https://news.lankasri.com/article/us-oil-agreement-with-venezuela-1787972596</id>
            <summary type="text">Trump announces new US oil agreement: வெனிசுலாவுடனான புதிய அமெரிக்க எண்ணெய் ஒப்பந்தத்தை ட்ரம்ப் அறிவித்தார்.
வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump announces new US oil agreement: வெனிசுலாவுடனான புதிய அமெரிக்க எண்ணெய் ஒப்பந்தத்தை ட்ரம்ப் அறிவித்தார்.
</p><p>வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸுடன் புதிய அமெரிக்க எண்ணெய் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானதை டொனால்ட் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7151238-c2b6-4037-bf0d-69a9d0a63ae5/26-6a924bf645eec.webp' /></p><p> </p><p>
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், உறுதிசெய்யப்பட்ட 65 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருப்புகளின் மீது அமெரிக்காவுக்கு பெரும்பான்மை கட்டுப்பாடு இருக்கும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். </p><p>அதாவது வெனிசுலாவின் மொத்த எண்ணெய் வளத்தையும் அமெரிக்கா கைப்பற்றியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அம்சங்கள் என்ன என்பது இன்னும் வெளியிடப்படாத நிலையில், </p><p>தனியார் நிறுவனங்களுடனான கூட்டு முயற்சியின் மூலம் தனது வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் ஆகியோர் இதனைச் சாத்தியமாக்கியதாக அமெரிக்க ஜனாதிபதி தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார். </p><p>65 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருப்புகளை அமெரிக்க மக்களின் வரிப்பணத்தில் ஒரு டொலர் கூட செலவிடாமல் சொந்தமாக்கியுள்ளதாக ட்ரம்ப் பெருமையாக குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><p>இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் எண்ணெய் இருப்பை இரண்டு மடங்கிற்கும் அதிகமாக அதிகரிக்கும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். வெனிசுலாவில் சுமார் 303 பில்லியன் பீப்பாய் அளவுள்ள உறுதிப்படுத்தப்பட்ட எண்ணெய் இருப்பு உள்ளது; இதுவே உலகின் மிகப்பெரிய அளவாகும்.
</p><p>கடந்த ஜனவரியில் அமெரிக்கா, வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்து பதவியிலிருந்து நீக்கியதிலிருந்து, ட்ரம்ப் நிர்வாகம் தனது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வெனிசுலா கச்சா எண்ணெயின் சீரான விநியோகத்தைப் பாதுகாக்கவும், </p><p>அதே நேரத்தில் ஒரு நாளைக்கு 1.25 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்யும் ஒபெக் நாட்டின் சேதமடைந்த எரிசக்தித் துறையில் அமெரிக்க முதலீட்டை ஊக்குவிக்கவும் முயன்று வருகிறது. </p><p>நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக, பெட்ரோல் விலை உயர்வு காரணமாக ட்ரம்ப் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்; மலிவான எண்ணெய் விநியோகம் மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இந்தச் சிக்கலைக் குறைக்க முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/deb4335a-d4fc-4623-8455-a02b935e32cb/26-6a924bf6ee293.webp' /></p><p> </p><p>வெனிசுலாவின் மிகப்பெரிய எரிசக்தி இருப்புகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை உள்ளடக்கிய ஒரு டசினுக்கும் மேற்பட்ட எண்ணெய் வயல்களில் அமெரிக்கா நேரடிப் பங்கினைப் பெறுவது குறித்து, அந்நாட்டு அரசாங்கத்துடன் ட்ரம்ப் நிர்வாகம் தீவிரப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இந்த வாரத் தொடக்கத்தில் செய்தி வெளியிட்டது. </p><p>சுமார் 90 பில்லியன் பீப்பாய் அளவு உறுதிப்படுத்தப்பட்ட இருப்புக்களைக் கொண்ட, வெனிசுலாவின் மிகச் சிறந்த எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களில் அமெரிக்காவின் பங்கு தொடர்பானதாகவே இந்த விவாதம் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>வெனிசுலாவின் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே இந்தத் தகவல்கள் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தின; மதுரோவைக் கைப்பற்றிய பிறகும் உண்மையான அரசியல் மாற்றத்தைக் கொண்டுவருவதில் ட்ரம்ப் நிர்வாகம் தோல்வியடைந்த விவகாரத்தில் அவர்கள் ஏற்கனவே கடும் அதிருப்தியில் உள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T03:00:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[Hi படத்தின் முதல் நாள் வசூல் விவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/hi-movie-day-1-box-office-1787972135"></link>
            <id>https://cineulagam.com/article/hi-movie-day-1-box-office-1787972135</id>
            <summary type="text">&amp;nbsp;Hi Box officeகவின், நயன்தாரா நடிப்பில் விஷ்ணு இயக்கத்தில் நேற்று பிரமாண்டமாக வெளிவந்த படம் ஹாய். இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற...</summary>
            <content type="html"><![CDATA[<h2>&nbsp;Hi Box office</h2><p>கவின், நயன்தாரா நடிப்பில் விஷ்ணு இயக்கத்தில் நேற்று பிரமாண்டமாக வெளிவந்த படம் ஹாய். இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.</p><p> இந்நிலையில் ஹாய் படம் கண்டிப்பாக கவின் மற்றும் நயன்தாரா அவர்களுக்கு கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் இருவரும் ஹிட் கொடுத்து தமிழில் சில வருடம் ஆகிவிட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7484ef12-a225-4821-b101-a952f61b0a10/26-6a924a2a1a0f7.webp' /></p><p>இப்படம் முதல் நாள் உலகம் முழுவதும் ரூ 2 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், இன்றும் நாளையும் இப்படத்தின் வசூல் நன்றாகவே இருக்கும் என தெரிகிறது.</p>]]></content>
            <updated>2026-08-29T02:55:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெகிழ்ச்சிச் சம்பவம் : தாய் என நினைத்து சிலையை சுற்றித் திரிந்த சிறு காட்டு யானை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/baby-wild-elephant-wandered-around-the-statue-1787970276"></link>
            <id>https://ibctamil.com/article/baby-wild-elephant-wandered-around-the-statue-1787970276</id>
            <summary type="text">புதிதாக
நிர்மாணிக்கப்பட்டு வரும் யானைச் சிலை அருகே காட்டு யானை ஒன்று
சுற்றித் திரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வியப்பையும் நெகிழ்ச்சியையும்
ஏற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிதாக
நிர்மாணிக்கப்பட்டு வரும் யானைச் சிலை அருகே காட்டு யானை ஒன்று
சுற்றித் திரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வியப்பையும் நெகிழ்ச்சியையும்
ஏற்படுத்தியுள்ளது.</p><p>பதுளை மாவட்டத்தின் கிராதுருகோட்டை நகருக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>விசித்திரமான நடத்தை</h2><p>
கட்டுமானப் பணியில் உள்ள அந்த யானைச் சிலைக்கு அருகில் வந்த இளம் காட்டு யானை
ஒன்று, அங்கிருந்து நகர மறுத்து பல மணி நேரமாகச் சிலையைச் சுற்றிச் சுற்றி
வந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6e53a79-51ea-49fe-9e54-7f3035013a0c/26-6a92445f3e491.webp' /></p><p>கூட்டத்திலிருந்தோ அல்லது தாயிடமிருந்தோ பிரிந்து வழிதவறி வந்த இந்த இளம்
யானை, தூரத்தில் தெரிந்த அந்த யானையின் உருவத்தைத் தனது தாய் என்றோ அல்லது
தனது கூட்டத்தைச் சேர்ந்த ஒரு யானை என்றோ தவறாக நினைத்து அருகில் வந்து
நின்றதாகப் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
</p><p>
யானையின் இந்த விசித்திரமான நடத்தையைக் கண்ட அப்பகுதி
மக்களும் அவ்வழியாகச் சென்ற பயணிகளும் பெரும் வியப்பில் ஆழ்ந்தனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T02:48:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவு இடம்பெற்ற மோதல் - கொடூரமாக அடித்து ஒருவர் கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-person-was-brutally-beaten-to-death-1787969923"></link>
            <id>https://tamilwin.com/article/one-person-was-brutally-beaten-to-death-1787969923</id>
            <summary type="text">அம்பாந்தோட்டை - தங்காலை பொலிஸ் பிரிவின் மஹாகொட பகுதியில் ஒருவர் தடியால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த நபர், தங்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாந்தோட்டை - தங்காலை பொலிஸ் பிரிவின் மஹாகொட பகுதியில் ஒருவர் தடியால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த நபர், தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த கொலை நேற்று இரவு (28) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>

இந்த தாக்குதலில் மஹாகொட பகுதியை சேர்ந்த 35 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce965449-bfdf-4a81-a299-4af6bbff8843/26-6a9248477300b.webp' /></p><p>
தங்கல்லே பொலிஸ் நிலையத்தில் பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.</p><p>

உயிரிழந்தவருக்கும் அவரது சகோதரர்களில் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>
சம்பவம் தொடர்பில் 28 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T02:47:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமைச்சர் ராஜ்மோகனின் டபுள் மீனிங் ஜோக்!! கைத்தட்டி சிரித்த சுசித்ராவின் எக்ஸ் கணவர்!! பிரபல பதிவு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/rajmohan-double-meaning-joke-goes-viral-1787924681"></link>
            <id>https://viduppu.com/article/rajmohan-double-meaning-joke-goes-viral-1787924681</id>
            <summary type="text">அமைச்சர் ராஜ்மோகன்70 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியை தமிழ்நாட்டில் தவெக தலைவர் உள்ளே புகுந்து அனைத்துயும் மாற்றியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அமைச்சர் ராஜ்மோகன்</h2><p>70 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியை தமிழ்நாட்டில் தவெக தலைவர் உள்ளே புகுந்து அனைத்துயும் மாற்றியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சராக பதவியேற்று 100 நாட்களுக்கும் மேலாகியும் பலரும் இந்த ஆட்சியை விமர்சித்து வருகிறார்கள். தற்போது சட்டமன்ற பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக பல நாட்களாக நடந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c46d8ff0-af95-4524-ad9b-fd779b982789/26-6a9190cc14784.webp' /></p><p> </p><p>இதில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் காரசாரமாக பேசி வருகிறார்கள். அந்தவகையில் பள்ளிக் கல்வித்துரை அமைச்சர் ராஜ்மோகன், சட்டப்பேரவையில் எதிர்கட்சிகளை சமாளித்து பேசி வருகிறார்கள். பழங்கால விஷயங்கள், முக்கியமாக பேரவையில் எந்த விஷயம் பேசினாலும் விஜய்க்கு பதில் பேசும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட மும்மூர்த்தி அமைச்சர்களில் அவரும் ஒருவராக இருந்து பேசி வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2141cde2-0494-437e-b7f9-b43453b4bcc9/26-6a9190cb5f6e3.webp' /></p><h2>டபுள் மீனிங் ஜோக்</h2><p> இப்போதுகூட நேபாளம் வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்பது தொடர்பாக டெல்லிக்கு விசிட் அடித்திருக்கிறார் ராஜ்மோகன். அவ்வப்போது பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்து வரும் நிலையில், அவர் ஸ்டான்ட் அப் காமெடி செய்த வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. </p><p>அதனை சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, ஃபாரெஸ்ட் ஏரியா என்றால் என்ன? இந்நாள் பள்ளிக்கல்வி மினிஸர் அந்நாளில் அசத்திய அடல்ட் ஸ்டான்ட் அப் காமெடி என்று கூறி வீடியோவை பகிர்ந்துள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">Memories:<br><br>Forest Area என்றால் என்ன?<br><br>இந்நாள் பள்ளிக்கல்வி மினிஸ்டர் அந்நாளில் அசத்திய‌ அடல்ட் ஸ்டான்ட் அப் காமடி.<br><br> <a href="https://t.co/DBCidt62Qh">pic.twitter.com/DBCidt62Qh</a></p>&mdash; Blue Sattai Maran (@tamiltalkies) <a href="https://x.com/tamiltalkies/status/2093256066108993748?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> அந்த வீடியோவில் ராஜ்மோகன், கால்களுக்கு நடுவே கைகளை கொண்டு சென்று அப்படியே மேலே வந்தோம் என்றால் காடு பகுதி. காட்டினை ஒழுங்காக பார்த்துக்கொண்டால்தான் அடுத்த தலைமுறை இருக்கும் என்று இரட்டை ஆர்த்த காமெடியை பேசியுள்ளதுதான் அது. அதை கேட்டு பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் கைகளை தட்டி சிரிப்பது தான் தற்போது பேசுபொருளான ஒன்றாக அமைந்திருக்கிறது.</p>]]></content>
            <updated>2026-08-29T02:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த நேரத்தில் வெளியில் செல்லும் போது அவதானம்! நாட்டின் பல பகுதிகளுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sun-will-be-at-its-highest-point-many-areas-today-1787968004"></link>
            <id>https://tamilwin.com/article/sun-will-be-at-its-highest-point-many-areas-today-1787968004</id>
            <summary type="text">சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஓகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை சூரியன் இலங்கையின் பல்வேறு அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளதாக த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஓகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை சூரியன் இலங்கையின் பல்வேறு அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதன்படி, இன்று (29) நண்பகல் 12:11 மணியளவில் பல்லவநாயகன்கட்டு, அக்கரயன்குளம், அறிவியல் நகர், புதுக்குடியிருப்பு மற்றும் ஆனந்தபுரம் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சிகொடுக்கவுள்ளது.</p><h2>சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு</h2><p>இதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18bce024-262a-4f98-81c8-b3ea0a11f8e3/26-6a923f8e4aabf.webp' /></p><p>

வடமேல் மாகாணத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம்</h2><p>

மத்திய மலைநாட்டின் மேற்கு பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். </p><p>

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T02:10:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு - கிழக்கு பிரதேசங்களில் உச்சம் கொடுக்கப்போகும் சூரியன்! மக்களுக்கு முன்னெச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-heat-in-the-north-east-today-1787966933"></link>
            <id>https://ibctamil.com/article/the-heat-in-the-north-east-today-1787966933</id>
            <summary type="text">சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று இன்று மதியம் சுமார் 12.11 மணியளவில் பள்ளவராயன்கட்டு, அக்கரயன்குளம், அரிவியல் நகர், புதுக்குடியிருப்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று இன்று மதியம் சுமார் 12.11 மணியளவில் பள்ளவராயன்கட்டு, அக்கரயன்குளம், அரிவியல் நகர், புதுக்குடியிருப்பு மற்றும் அனந்தபுரம் போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் பொலனறுவை, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் காரணமாக அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அத்தோடு, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என்றும் வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.</p><p></p><h2>மழை பெய்யக்கூடிய வாய்ப்பு</h2><p>

ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுவதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27aa2d67-52f8-4f35-8434-2557eb677ed0/26-6a9235d792bb2.webp' /></p><p>
</p><p>
நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் ஓரளவு கூடும்.</p><p>

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNE</a></b>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T01:28:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[Tata Punch ev 2 ஆண்டுகளில் 70,000 கிமீ பயணம் - உரிமையாளரின் அனுபவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tata-punch-ev-70000-km-owner-review-1787966585"></link>
            <id>https://news.lankasri.com/article/tata-punch-ev-70000-km-owner-review-1787966585</id>
            <summary type="text">Tata Punch.ev 70,000 km owner review: Tata Punch.ev உரிமையாளர் ஒருவர் தனது 2 ஆண்டுகளில் 70,000 கிமீ பயண அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது,...</summary>
            <content type="html"><![CDATA[<p>Tata Punch.ev 70,000 km owner review: Tata Punch.ev உரிமையாளர் ஒருவர் தனது 2 ஆண்டுகளில் 70,000 கிமீ பயண அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.</p><p>

அவர் கூறியதாவது, “இந்த EV எனக்கு பெரும்பாலும் சிரமமில்லாத, நம்பகமான அனுபவத்தை வழங்கியது” என்கிறார்.</p><p></p><p>
</p><h2>
நம்பகத்தன்மை, சேவை</h2><p>

45,000 கிமீ-இல் பின்புற சஸ்பென்ஷனில் சிறிய சத்தம் ஏற்பட்டது. அது உத்தரவாதத்தில் (warranty) மாற்றப்பட்டது. இதைத் தவிர பெரிய பிரச்சினைகள் எதுவும் இல்லை. </p><p>

ஒவ்வொரு சிறிய சர்வீஸ் (7,500 கிமீ) சுமார் ரூ.3,000, பெரிய சர்வீஸ் (15,000 கிமீ) சுமார் ரூ.6,000 என செலவானது. 60,000 கிமீ சர்வீஸில் குளிரூட்டும் திரவம் மாற்றப்பட்டதால் ரூ.9,000 செலவானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c3eb2f6-ec8d-4da7-b910-cad76b4075fc/26-6a92347adbfab.webp' /></p><p>
</p><h2>
பேட்டரி, சார்ஜிங் </h2><p> 
HV Battery SOH 94 சதவீதம் உள்ளது. குறைந்தது 2 லட்சம் கிமீ வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் 3.3kw AC சார்ஜர் பயன்படுத்தப்பட்டு, சில நேரங்களில் DC சார்ஜிங் செய்யப்பட்டுள்ளது. </p><p>ஆனால் Punch.ev பழைய மாடல்கள் 25kWh வரை மட்டுமே சார்ஜ் செய்ய முடியும். புதிய மாடல்கள் 60kWh வரை சார்ஜ் செய்யும் திறன் பெற்றுள்ளன.</p><p></p><h2>டயர்கள், பராமரிப்பு
</h2><p>
டயர்கள் 70,000 கிமீ வரை நீடித்துள்ளன. TPMS (Tyre Pressure Monitoring System) பயன்படுத்தியதால் puncture பிரச்சினைகள் குறைந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b1a1c69-988b-42ef-b410-83d81ab13c1e/26-6a92347b94089.webp' /></p><h2>

சிறிய குறைகள்
</h2><ul><li>
SOC 20 சதவீதத்திற்கு கீழே சென்றால் ரேஞ்ச் திடீரென குறைகிறது.</li><li>

Tata, பழைய வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட பேட்டரி வசதி வழங்கவில்லை.
</li><li>
பின்புற AC vent, roof lamp, grab rail போன்ற வசதிகள் இல்லை.</li><li>

headlights மழையில் பயனற்றதாக உள்ளன.</li><li>

மாற்றங்கள் (Nodifications): Sunfilm, TPMS, dashcam, spare wheel போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன.
</li></ul><h2>
முடிவு</h2><p> 

உரிமையாளர், “முன்பு பெட்ரோல் காரில் மாதம் ரூ.12-15 ஆயிரம் செலவானது. EV-க்கு மாறியதால் சேமிப்பு அதிகமானது. ஆனால் தற்போது பயணம் குறைந்ததால், Punch.ev-ஐ வைத்திருக்க வேண்டுமா என சிந்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T01:20:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருநங்கை வீராங்கனை கிரிக்கெட் விளையாட அனுமதி - தென்னாப்பிரிக்க ஆல் ரவுண்டர் கடும் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kapp-slams-trans-cricketer-anaya-bangar-inclusion-1787965538"></link>
            <id>https://news.lankasri.com/article/kapp-slams-trans-cricketer-anaya-bangar-inclusion-1787965538</id>
            <summary type="text">Kapp slams trans cricketer Anaya Bangar inclusion: திருநங்கையாக மாறிய அனயா பங்கர் கிரிக்கெட்டில் பங்குபெற கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மரிசான் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Kapp slams trans cricketer Anaya Bangar inclusion: திருநங்கையாக மாறிய அனயா பங்கர் கிரிக்கெட்டில் பங்குபெற கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.</p><h2>

மரிசான் காப்&nbsp;கடும் எதிர்ப்பு</h2><p>அவுஸ்திரேலியாவில் டிரான்ஸ் கிரிக்கெட் வீராங்கனை அனயா பங்கர் சமூக கிரிக்கெட்டில் விளையாட அனுமதி பெற்றிருப்பது, தென்னாப்பிரிக்க ஆல் ரவுண்டர் மரிசான் காப் (Marizanne Kapp) கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c6b11be-72d6-4951-9d0e-1e9bcf6d290e/26-6a923063ec0c9.webp' /></p><p>36 வயதான காப், “இது முற்றிலும் அபத்தமானது. அனுமதி வழங்கப்படக்கூடாது” என்று தனது Instagram-ல் பதிவு செய்து, Women’s Big Bash League (WBBL)-ஐ குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.
</p><h2>
அவுஸ்திரேலியாவில் விளையாட அனுமதி </h2><p>அனயா பங்கர், இந்த ஆண்டு பாலின மாற்ற அறுவை சிகிச்சை செய்துள்ளார். இந்தியாவில் BCCI-க்கு விண்ணப்பித்தபோதும் பதில் கிடைக்காததால், அவர் Cricket Australia-வை அணுகினார். </p><p>

Cricket Australia Integrity Head ஜாக்கி பார்ட்ரிட்ஜ், “மார்ச் 2027 வரை சமூக கிரிக்கெட்டில் (Premier Cricket) விளையாடலாம். ஆனால் Elite Cricket-இல் விளையாட, testosterone அளவு 10 nmol/L-க்கு குறைவாக இருக்க வேண்டும்” என்று நிபந்தனை விதித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>அனயா பங்கர், “நான் மீண்டும் கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கிடைத்தது, இது மிகப்பெரிய நாள். ஒருகட்டத்தில் நான் கிரிக்கெட்டில் திரும்ப முடியாது என்று நினைத்தேன். Cricket Australia எனக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளது” என்று தெரிவித்தார்.
</p><p>
அனயா, இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் பங்கரின் மகள் ஆவார். அவர் சிறுவயதில் சர்பராஸ் கான் மற்றும் முஷீர் கானுடன் இள வயது பிரிவு போட்டிகளில் விளையாடியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd888f2e-30a2-4f28-82f2-dda6e21bf8f0/26-6a923064a5b70.webp' /></p><h2>ICC அனுமதிக்கவில்லை</h2><p>

BCCI அதிகாரிகள், “ICC இதற்கு அனுமதி அளிக்கவில்லை. இந்தியாவில் இது இதுபோன்ற முதல் வழக்கு என்பதால், இன்னும் தீர்மானிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த விவகாரம், பெண்கள் கிரிக்கெட்டில் டிரான்ஸ் வீரர்கள் பங்கேற்பு குறித்த சர்ச்சையை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளிப்படுகின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T01:02:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அதிரடி கைதான இளம் சீன பெண் தொழிலதிபர்கள் ; அதிகாரிகளுக்கு காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chinese-business-owners-arrested-in-sri-lanka-1787964059"></link>
            <id>https://jvpnews.com/article/chinese-business-owners-arrested-in-sri-lanka-1787964059</id>
            <summary type="text">77 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டுச் சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவந்த, இரு வெளிநாட்டுப் பெண் பயணிகள் வெள்ளிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">77 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டுச் சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவந்த, இரு வெளிநாட்டுப் பெண் பயணிகள் வெள்ளிக்கிழமை (28) விமான நிலையச் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்டவர்கள் 30 மற்றும் 35 வயதுடைய சீன நாட்டுத் தொழிலதிபர்களாக உள்ள பெண்களாவர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34041fa7-b013-456e-a539-cb6b50ab6259/26-6a922b8d908a3.webp' /></p><h2 style="text-align: justify; ">சிகரெட்&nbsp;கொள்வனவு </h2><p style="text-align: justify; ">

இவர்கள் சீனாவில் இந்த சிகரெட்டுகளைக் கொள்வனவு செய்து, மலேசியாவின் கோலாலம்பூர் நகரைச் சென்றடைந்து, அங்கிருந்து மலேசியன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான எம்.எச் -497 என்ற விமானம் மூலம் இன்று காலை 10.10 மணிக்குக் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.</p><p style="text-align: justify;">


சந்தேக நபர்கள் கொண்டுவந்த 4 பயணப் பைகளைச் பரிசோதித்தபோது, சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட 51,600 சிகரெட்டுகள் அடங்கிய 258 சிகரெட் கார்ட்டூன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
கைது செய்யப்பட்ட இரு சீனப் பெண்களையும் சுங்கப் பொறுப்பில் வைத்துள்ள கட்டுநாயக்க விமான நிலையச் சுங்க அதிகாரிகள், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-29T01:02:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவின் தீர்மானத்திற்கு ஐநா அதிருப்தி.. அரசு வெளியிட்ட திட்டவட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-un-concerns-judges-retirement-age-1787964301"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-un-concerns-judges-retirement-age-1787964301</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் மார்கரெட் சட்டர்த்வைட் எழுப்பிய கவலைகளை இலங்கை அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் மார்கரெட் சட்டர்த்வைட் எழுப்பிய கவலைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.</p><p>ஒகஸ்ட் 21ஆம் திகதி அன்று அனுப்பிய பதில் கடிதத்தில் இது தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p> </p><p>22வது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நீதித்துறை திருத்த சட்டமூலம் ஆகியவை வழக்கின் தேக்கநிலையைக் குறைக்கவும் நீதித்துறை சீர்திருத்தங்களை மேற்கொள்ளவுமே கொண்டுவரப்படுகின்றன என்றும், குறிப்பிட்ட சில நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் நோக்கம் இதில் இல்லை என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><h2>அரசாங்கத்தின் தீர்மானம்..&nbsp;&nbsp;</h2><p> இத்திட்டத்தின்படி, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் வயது 63 இலிருந்து 65 ஆகவும் உயர்த்தப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c672bb8-5665-4d6b-bea9-35304bca1998/26-6a922ebeaa11e.webp' /></p><p> தலைமை நீதிபதியின் பதவிக்காலம் 67 வயது வரை அல்லது நியமிக்கப்பட்ட நாளிலிருந்து 6 ஆண்டுகள் என வரையறுக்கப்படும். </p><p>மேலும், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 61 இலிருந்து 63 ஆகவும், ஏனைய நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 62 ஆகவும் மாற்றப்படவுள்ளதுடன், மேன்முறையீட்டு மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படவுள்ளது. </p><p> தற்போது சேவையில் உள்ள நீதிபதிகளுக்கும் இதைப் பயன்படுத்துவது அரசியல் தலையீடாகாது என்றும், அனுபவமிக்க நீதிபதிகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கே இது அவசியம் என்றும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. </p><p>இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பல தரப்பினர் இந்த சட்டமூலங்களை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில், நீதிமன்றம் வழங்கும் எந்தவொரு தீர்ப்பையும் முழுமையாக மதிப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T01:02:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதன் இரட்டை பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mercury-transit-these-zodiac-signs-will-prosper-1787965288"></link>
            <id>https://jvpnews.com/article/mercury-transit-these-zodiac-signs-will-prosper-1787965288</id>
            <summary type="text">&amp;nbsp;புதன் பகவான் தற்பொழுது சிம்ம ராசியில் பெயர்ச்சி ஆகியிருக்கிறார். அவர் செப்டம்பர் மாதம் இரண்டு முறை கன்னி மற்றும் துலாம் ராசிக்கு இடம் மாறுகிறார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;புதன் பகவான் தற்பொழுது சிம்ம ராசியில் பெயர்ச்சி ஆகியிருக்கிறார். அவர் செப்டம்பர் மாதம் இரண்டு முறை கன்னி மற்றும் துலாம் ராசிக்கு இடம் மாறுகிறார். அதாவது செப்டம்பர் 7ஆம் திகதி புதன் பகவான் கன்னி ராசியிலும் அடுத்து இருபது நாட்களில் செப்டம்பர் 26 ஆம் திகதி&nbsp; துலாம் ராசிக்கும் இடம் இடம் மாறுகிறார்.</p><p>


இதனால் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை கொடுக்கும். இதில் எந்த ராசிகள் மிகப்பெரிய அளவில்&nbsp; வாழ்க்கையை பெறப்போகிறார்கள் என்று பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cf7dbc9-3862-4a0c-b9d6-da4e777e7abc/26-6a922f6a92aea.webp' /></p><h2>&nbsp;எந்த ராசிகள்</h2><p>

</p><p><b>

மேஷம்:
</b>மேஷ ராசியினருக்கு செப்டம்பர் மாதம் மிகப்பெரிய அளவில் சாதகமான மாற்றங்களை கொடுக்கப்போகிறது. அதிலும் தொழில் மற்றும் பணம் சார்ந்த விஷயங்களில் இவர்கள் தெளிவான முடிவுகளை எடுக்கக்கூடிய நிலை உண்டாகும். எதிர்பாராத வழியில் இவர்களுக்கு பணம் சம்பாதிக்கக் கூடிய வாய்ப்புகள் உருவாகும்.
</p><p><b>
சிம்மம்:</b>
இவர்களுக்கு இந்த காலகட்டம் புதன் பகவானுடைய இரட்டை பெயர்ச்சி பொருளாதார ரீதியாக ஒரு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கப் போகிறது வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

இவர்களுக்கு தகவல்கள் மற்றும் நினைத்த காரியங்கள் கைகூடிவரும். திட்டமிட்ட செயல்களை திட்டமிட்டபடி இவர்கள் செய்து முடிப்பார்கள்.

</p><p><b>

துலாம்:
</b>துலாம் ராசிக்கு இந்த செப்டம்பர் மாதம் இவர்களுக்கு பல வகைகளில் நன்மையை வழங்கப்போகிறது. செயல் திறன் அதிகரிப்பதோடு தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் வேலை செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும். வீடு மற்றும் வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டு. நீண்ட நாட்கள் நீங்கள் திட்டமிட்ட செயல்களை திட்டமிட்டது போல் செய்து முடிப்பீர்கள்.</p>]]></content>
            <updated>2026-08-29T01:01:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[14 வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்த தந்தையின் நண்பருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-order-issued-to-man-who-abused-boy-1787962437"></link>
            <id>https://jvpnews.com/article/court-order-issued-to-man-who-abused-boy-1787962437</id>
            <summary type="text">பாடசாலை செல்லும் பதினான்கு வயதுடைய சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அவரது தந்தையின் நண்பரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01 ஆம்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பாடசாலை செல்லும் பதினான்கு வயதுடைய சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அவரது தந்தையின் நண்பரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மொரவக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் ஊருபொக்க பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5890a7f0-a9ea-4858-b9f6-d04098b06563/26-6a92244766969.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">குறித்த சிறுவன் தனது வீட்டின் அருகிலுள்ள விளையாட்டு மைதானத்திற்கு பட்டம் விடச் சென்ற போது&nbsp; &nbsp;சந்தேகநபரான தந்தையின் நண்பரால்&nbsp; துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை&nbsp; விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">சிறுவன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஊருபொக்க பொலிஸ் நிலைய அதிகாரிகள்&nbsp; விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபரை கைது செய்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">&nbsp;இச்சம்பவம் தொடர்பில் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-29T00:54:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானத்துக்குள் நுழைந்த நுளம்பு ; விமான ஊழியர்கள் இருவர் பலி ;4 பேர் வைத்தியசாலையில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/mosquito-entered-plane-two-crew-members-killed-1787964752"></link>
            <id>https://canadamirror.com/article/mosquito-entered-plane-two-crew-members-killed-1787964752</id>
            <summary type="text">வானில் பறந்துகொண்டிருந்த விமானத்துக்குள் நுழைந்த நுளம்பு கடித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் ஜெர்மனியில் இடம்பெற்றுள்ளது. 

ஜெர்மனியின் பிராங்பர்ட் விம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வானில் பறந்துகொண்டிருந்த விமானத்துக்குள் நுழைந்த நுளம்பு கடித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் ஜெர்மனியில் இடம்பெற்றுள்ளது. </p><p>

ஜெர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையத்தில் பணியாற்றும் விமான ஊழியர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர்கள் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. </p><p>

இதில் 6 விமான ஊழியர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce412184-42b8-4bdf-a595-4662bafd20ef/26-6a922d51f0e22.webp' /></p><p> </p><p>

அனோபிலஸ் என்கிற நுளம்பு கடித்ததாலேயே குறித்த 6 விமான ஊழியர்களும் மலேரியாவால் பாதிக்கப்பட்டதாக மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. </p><p>


பல ஆண்டுகளுக்கு முன்பே ஜெர்மனியில் மலேரியா நோய்த் தாக்கத்தை முற்றாக ஒழித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.</p><p> எனினும், வெளிநாடுகளுக்கு சென்ற விமானத்துக்குள் நுழைந்த நுளம்புகளே மீண்டும் ஜெர்மனி சென்றிருக்கலாம் என்றும் அவை குறித்த விமான ஊழியர்களை கடித்ததாலேயே, அவர்கள் மலேரியாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் மருத்துவர்கள் உறுதிப்பட கூறுகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-29T00:52:45+00:00</updated>
        </entry>
    </feed>
