<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-13T05:26:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்று உயிர்களை காவுகொண்ட மோஹினி எல்ல பகுதியில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/security-fence-in-the-mohini-ella-area-1789275172"></link>
            <id>https://tamilwin.com/article/security-fence-in-the-mohini-ella-area-1789275172</id>
            <summary type="text">நல்லதண்ணீர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோஹினி எல்ல பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற வாகன விபத்துக்களைத் தடுக்கும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்லதண்ணீர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோஹினி எல்ல பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற வாகன விபத்துக்களைத் தடுக்கும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. </p><p>

கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி, மஸ்கெலியா நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று மோஹினி எல்ல பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. </p><p>

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe896d6d-626e-4fc7-a478-a0a1be267e68/26-6aa6324abdf6c.webp' /></p><h2>குறித்த பகுதியின் பாதுகாப்பு</h2><p> 

இந்த சம்பவம் இடம்பெற்றதைத் தொடர்ந்து, அதே பகுதியில் கார் ஒன்றும் விபத்துக்குள்ளானது. இதனையடுத்து, குறித்த பகுதியின் பாதுகாப்பு தொடர்பில் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகளிடையே கவலை ஏற்பட்டிருந்தது. </p><p>

மோஹினி எல்ல அமைந்துள்ள பகுதி, வளைவுகள் மற்றும் ஆபத்தான நில அமைப்பைக் கொண்டுள்ளதால், வாகனங்கள் வீதியை விட்டு விலகும் சந்தர்ப்பங்களில் பாரிய விபத்துக்கள் ஏற்படும் அபாயம் காணப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/345aee59-dd8c-4b30-8eb0-1638646a92e0/26-6aa6324bc6851.webp' /></p><p> </p><p>

இந்த நிலையில், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துக்களைத் தடுக்கும் நோக்கில் வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. 

இதன் ஒரு பகுதியாக, ஆபத்தான இடத்தில் பாரிய பாதுகாப்புத் தடுப்புக் கம்பங்கள் நாட்டப்பட்டு, பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.</p><h2>வீதிப் பாதுகாப்புச் சமிக்ஞை</h2><p> </p><p>

அத்துடன், வாகன சாரதிகள் அவதானமாக பயணிப்பதற்காக தேவையான வீதிப் பாதுகாப்புச் சமிக்ஞைகளும் பொருத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84a392f1-fdc0-48eb-82a1-c5bd84c09da0/26-6aa6324ca1fec.webp' /></p><p> </p><p>

இதன்மூலம், வாகனங்கள் வீதியை விட்டு விலகி ஆபத்தான பகுதிக்குள் செல்வதைத் தடுப்பதுடன், குறித்த பகுதியில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விபத்துக்களையும் உயிரிழப்புக்களையும் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>

மூன்று உயிர்களை காவுகொண்ட மோஹினி எல்ல பகுதியில் தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ச்சியாக முறையாக பராமரிக்கப்பட வேண்டியது அவசியமாகும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dde3024d-dffe-45bb-afb8-e922d56bf370/26-6aa6324d7e04b.webp' /></p><p>	
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06a50021-2721-4cfe-aad0-6757d054a707/26-6aa6324e5b28d.webp' /></p><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22bd8044-9f5d-493c-aff5-81282a98f0c2/26-6aa6324f34cc9.webp' />&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T05:24:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நண்பா.... ஓடிச்சென்று அஜித்தை கட்டித்தழுவிய CM விஜய்! படு வைரலாகும் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/cm-vijay-hugs-ajith-in-london-video-goes-viral-1789276436"></link>
            <id>https://manithan.com/article/cm-vijay-hugs-ajith-in-london-video-goes-viral-1789276436</id>
            <summary type="text">லண்டன் சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை துவக்கி வைக்க சென்றபோது, ஓடிச் சென்று அஜித்தை ஆரத் தழுவிய வீடியோ தற்போத...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டன் சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை துவக்கி வைக்க சென்றபோது, ஓடிச் சென்று அஜித்தை ஆரத் தழுவிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p><h2>அஜித் - விஜய் சந்திப்பு&nbsp;</h2><p>தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக பல ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்கள் அஜித் மற்றும் விஜய்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9657a4f4-6afd-4c5a-bf0b-6cfbb0be1c7f/26-6aa6333095550.webp' /></p><p> </p><p>இருவரும் ஒரே காலகட்டத்தில் உச்ச நட்சத்திரங்களாக உயர்ந்ததுடன், அவர்களுக்கென தனித்தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியவர்கள்.</p><p>இவர்களது படங்கள் வெளியாகும் போதெல்லாம் தமிழ் சினிமா மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகமே திருவிழா கோலம் பூண்ட காலங்களும் உண்டு.ஆனால், காலம் மாற… இருவரது பயணமும் தற்போது வெவ்வேறு திசைகளில் சென்று கொண்டிருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16cdc716-14fd-4e8d-889f-a9a5d88149c7/26-6aa6333149d8e.webp' /></p><p></p><h2>
அரசியலில் விஜய் ரேஸ் களத்தில் அஜித்...</h2><p>நடிகர் விஜய் சினிமாவிலிருந்து அரசியல் களத்திற்கு தனது பயணத்தைத் தொடங்கி, தமிழக அரசியலில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளார்.</p><p> மறுபுறம், அஜித் தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும், கார் பந்தயம் மீதான தனது ஆர்வத்தை தற்போது தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்.</p><p>குறிப்பாக சர்வதேச அளவிலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டிகளில் அஜித்தின் பங்கேற்பும், அவரது ரேசிங் அணியின் செயல்பாடுகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85ebd37e-fa5c-4556-9921-5e60f55891e8/26-6aa63331f2177.webp' /></p><p></p><p>இந்நிலையில்,&nbsp;லண்டனில் அஜித் பங்கேற்ற கார் ரேஸை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தத காணொளி இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.</p><h2>

கட்டியணைத்த விஜய்</h2><p>
அஜித்தை பார்த்ததும் சிறு குழந்தை போல் விஜய் ஓடிச்சென்று கட்டியணைத்துள்ளார். குறித்த அந்த காணொளி தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் தற்போது வைரல் ஆகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">That historic moment we waited for 🥰🥰 #thala #thalapathy 🔥🔥🔥🔥🔥🔥🔥 https://t.co/d8R6zI2BTp</p>&mdash; Dinesh (@nobody_offl) <a href="https://x.com/nobody_offl/status/2098782642585948333?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T05:23:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரண தண்டனை குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை : அநுர அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-final-decision-regarding-the-death-penalty-1789275434"></link>
            <id>https://ibctamil.com/article/no-final-decision-regarding-the-death-penalty-1789275434</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் விவகாரங்களில் அரசாங்கம் எவ்வித சமரசங்களுக்கோ அல்லது மன்னிப்புக்கோ தயார் இல்லை என ஜனாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் விவகாரங்களில் அரசாங்கம் எவ்வித சமரசங்களுக்கோ அல்லது மன்னிப்புக்கோ தயார் இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.</p><p>அத்துடன் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துதற்கு மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில்&nbsp;இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p>
பொலன்னறுவையில் நேற்று (12) நடைபெற்ற விவசாயிகளின் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவர்கள்&nbsp;</h2><p>இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் இயங்கி வரும் ஆயுதம் ஏந்திய குற்றக் கும்பல்கள் முற்றிலும் ஒழிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c9a73ed-97cc-4c94-a88e-a0b9e6eb7ed3/26-6aa62fa594ce0.webp' /></p><p> வெளிநாடுகளில் இருந்து கொண்டு, உள்நாட்டில் குற்றக் குழுக்களை இயக்கிய 70க்கும் மேற்பட்டோர் இதுவரை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.</p><p>அதேவேளை, குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த மரண தண்டனையை நடைமுறைப்படுத்த வேண்டும் எனச் சமூகத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன.</p><p>இருந்த போதிலும், அது குறித்து அரசாங்கம் இதுவரை எந்தவொரு இறுதித் தீர்மானத்தையும் எடுக்கவில்லை“ எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T05:12:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பணிப்புறக்கணிப்புக்குத் தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/railway-unions-prepare-for-strike-action-1789276280"></link>
            <id>https://jvpnews.com/article/railway-unions-prepare-for-strike-action-1789276280</id>
            <summary type="text">ரயில்வே திணைக்களத்தில் நிலவும் நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக புதிய ரயில்வே பொது முகாமையாளர் ஒருவரை அரசாங்கம் துரிதமாக நியமிக்கும் என எதிர்பார...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ரயில்வே திணைக்களத்தில் நிலவும் நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக புதிய ரயில்வே பொது முகாமையாளர் ஒருவரை அரசாங்கம் துரிதமாக நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

அவ்வாறு இல்லாவிட்டால், பல ரயில் தொழிற்சங்கங்கள் இணைந்து எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பை நிச்சயமாக முன்னெடுப்போம் என அச்சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f33f1db-63e9-4c53-a629-060ace34189a/26-6aa6307a2b32d.webp' /></p><h2 style="text-align: justify; ">பணிப்புறக்கணிப்பு</h2><p style="text-align: justify; ">

 

இந்தப் பணிப்புறக்கணிப்புக்காக வரலாற்றில் முதன்முறையாக ரயில் பயணிகள் சங்கங்களின் ஆதரவும் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுமேத சோமரத்ன மேலும் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; ">

 

ரயில் தாமதங்கள் உள்ளிட்ட பயணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தொடர்ந்தும் முறையான தீர்வுகள் கிடைக்கப்பெறாமையால், தமது சங்கமும் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக ஹீந்தெனிய, பட்டிபொட ஐக்கிய ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ஆர்.ஏ.ரணதுங்க தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

எவ்வாறாயினும், ரயில்வே திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகப் ரயில்வே தொழிற்சங்கங்களுக்கு நாளை (14) போக்குவரத்துப் பிரதி அமைச்சருடன் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

 

அதற்கமைய, நாளைய தினம் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் முறையான தீர்வுகள் கிடைக்கப்பெறாவிட்டால், திட்டமிட்டபடி பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் எனப் ரயில்வே தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-13T05:11:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்தார் 2.1% என்றால் மண்டாடி 10%-ஆ!! BookMyShow-ல் அடித்து நொறுக்கும் மண்டாடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/mandaadi-movie-surpasses-sardar-2-in-bookmyshow-1789273827"></link>
            <id>https://cineulagam.com/article/mandaadi-movie-surpasses-sardar-2-in-bookmyshow-1789273827</id>
            <summary type="text">சர்தார் 2 - மண்டாடிவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக சர்தார் 2 மற்றும் மண்டாடி படங்கள் திரைக்கு வந்தது. இந்த இரண்டு படங்களும் திரைக்கு வந்து 3 நாட்கள் ஆகிவி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சர்தார் 2 - மண்டாடி</h2><p>விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக சர்தார் 2 மற்றும் மண்டாடி படங்கள் திரைக்கு வந்தது. இந்த இரண்டு படங்களும் திரைக்கு வந்து 3 நாட்கள் ஆகிவிட்டன. இதில் சர்தார் 2 இத்தனை நாட்களில் வெறும் ரூ. 13 கோடி வசூல் செய்து மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07ebdd48-c576-4c7c-bf48-cb71ca991ef5/26-6aa626e633c92.webp' /></p><p></p><h2>அடித்து நொறுக்கும் மண்டாடி</h2><p>

அதே நேரத்தில் மண்டாடி வெறித்தனமாக திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடி வருகிறது. ரூ. 25 கோடிகளை தாண்டிய மண்டாடி விநாயகர் சதுர்த்தி ஆன நாளை ரூ. 45 கோடிகள் வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8902c8c7-5007-47a9-b180-1838eff87695/26-6aa626e6e470e.webp' /></p><p>அதோடு புக் மை ஷோ ஆப்-ல் சர்தார் 2 ஒரு நாளில் 30+ ஆயிரம் டிக்கெட்டுகள் தான் விற்றுள்ளது, அதே நேரத்தில் மண்டாடி ரூ. 3 லட்சம் டிக்கெட்டுகள் விற்க 1:10 என்ற கணக்கில் மண்டாடி செம லீட் வைத்து வருகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85c83275-33e9-40b4-9c4e-f57bbda5f305/26-6aa626e7a2cf2.webp' /></p><p></p><p>கண்டிப்பாக சூரியின் திரைப்பயணத்தில் மண்டாடி மைல்கல் படம் தான் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கருத்து கூறி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-13T05:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதையலுக்குள் சிக்கிய ராஜபக்ச குடும்பம் - அணைக்கட்டுக்குள் இருந்து வெளிவரும் பூதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/moneragala-tank-treasure-hunt-probe-intosasheendra-1789271664"></link>
            <id>https://tamilwin.com/article/moneragala-tank-treasure-hunt-probe-intosasheendra-1789271664</id>
            <summary type="text">மொனராகலை குளம் உடைக்கப்பட்டதன் பின்னணியில் ராஜபக்சர்களின் புதையல் தேடும் நடவடிக்கை உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், அது குறித்து தீவிர ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொனராகலை குளம் உடைக்கப்பட்டதன் பின்னணியில் ராஜபக்சர்களின் புதையல் தேடும் நடவடிக்கை உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், அது குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் தெரிவித்தார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் அண்மையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த உரையாற்றும் போது பிரதியமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். </p><p>

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p> </p><h2><b>

புதையல் தோண்டும் நடவடிக்கை</b></h2><p>மொனராகலை மாவட்டத்தின் மதகம பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கல்கமுவ கிராம நிலதாரி பிரிவில் அமைந்துள்ள பாலேகந்த குளத்தை புனரமைப்பதற்காக, அதன் அணைக்கட்டு 2020 மே மாதத்தில் உடைக்கப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a64f114a-e849-4b10-a7fb-ea47075bcf79/26-6aa6227ca93b7.webp' /></p><p>குளத்தின் புனரமைப்பு பணிகளுக்காக ஆரம்பத்தில் 82.2 மில்லியன் ரூபாய் மதிப்பிடப்பட்டிருந்தது. எனினும் பின்னர் அது 167.26 மில்லியன் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டது. </p><p>அரசாங்கம் இதுவரை இத்திட்டத்திற்காக 70.5 மில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
</p><p>
அலவலக அறிக்கைகளின்படி, குளத்தின் புனரமைப்புப் பணிகளில் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.</p><p> 

எனினும் சமகால அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் குமார தெரிவிக்கையில், அண்மையில் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின்படி, இதுவரை செலவிடப்பட்டுள்ள 70.5 மில்லியன் ரூபாய்க்கு இணையான எந்தவொரு பணியும் அங்கு நடைபெறவில்லை எனக் குறிப்பிட்டார்.</p><p>
</p><h3><b>
 ஷஷீந்திர ராஜபக்ஷ மீது குற்றம்</b></h3><p>முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஷ மீது குற்றம் சாட்டப்படும் இந்த புதையல் தேடும் மோசடியை மறைப்பதற்காகவே இந்த புனரமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் அது குறித்த விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b12b633f-e030-4f6c-be93-92218e2f78dd/26-6aa6227befe84.webp' /></p><p>இத்திட்டம் சுமார் ஆறு வருடங்களாக முடங்கியுள்ளதால், தமது வாழ்வாதாரத்திற்காக இக்குளத்தை நம்பியிருந்த நூற்றுக்கணக்கான விவசாயக் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-09-13T04:58:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நடுவீதியில் இளைஞனுக்கு நடத்தப்பட்ட கொடூரம்; வசமாக பிடிபட்ட சந்தேகநபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/brutal-attack-on-youth-in-jaffna-street-1789275311"></link>
            <id>https://jvpnews.com/article/brutal-attack-on-youth-in-jaffna-street-1789275311</id>
            <summary type="text">ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச் சந்தியில் வைத்து நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச் சந்தியில் வைத்து நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல் விவகாரத்தில், நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">

நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த பிரச்சினை தொடர்பான வழக்கு, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் கடந்த 9 ஆம் திகதி விசாரணைக்காக எடுக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2724bcef-0b19-4f20-9419-6322d79805d3/26-6aa62cf3b0bdd.webp' /></p><h2 style="text-align: justify; ">வாள்வெட்டுத் தாக்குதல்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இந்த வழக்கில் சாட்சியமளித்துவிட்டுத் திரும்பும்போதே, குறித்த இளைஞர் மீது இந்த வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
</p><p style="text-align: justify; ">
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் தலைமறைவாகியிருந்த நிலையில், வவுனியா - நெடுங்கேணி பகுதியில் வைத்து யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">

இக்குற்றச் செயலில் நேரடியாக ஈடுபட்ட மூவர் மற்றும் அச்செயலுக்குத் திட்டமிட்ட ஒருவர் என மொத்தம் நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்ட நபர்களிடம் தற்போது மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவர்களை நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.
</p><p style="text-align: justify; ">
அதேவேளை, சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு வாள்கள், ஒரு கத்தி, ஓர் உள்ளூர்க் கைக்குண்டு மற்றும் இரண்டு மோட்டார்சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-13T04:55:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/instruction-patients-national-eye-hospital-colombo-1789271006"></link>
            <id>https://tamilwin.com/article/instruction-patients-national-eye-hospital-colombo-1789271006</id>
            <summary type="text">கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் சிகிச்சை மையங்களுக்கு வருகை தரும் நோயாளிகளுக்கு வைத்தியசாலை நிர்வாகம் முக்கிய அறிவித்தலொன்றினை வழங்கியுள்ளது.சிகிச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் சிகிச்சை மையங்களுக்கு வருகை தரும் நோயாளிகளுக்கு வைத்தியசாலை நிர்வாகம் முக்கிய அறிவித்தலொன்றினை வழங்கியுள்ளது.</p><p>சிகிச்சை மையங்களுக்கு வருகை தரும் நோயாளிகளுக்கான அடுத்த சிகிச்சை திகதியை கைபேசிகளுக்கு குறுஞ்செய்தி (S.M.S.) மூலம் தெரிவிக்கும் புதிய முறை தொடங்கப்பட்டுள்ளது என வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ஜெயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், இந்த முறைமை நோயாளிகளுக்கு அடுத்த சிகிச்சை திகதியை எளிதாக கண்டறிய உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.</p><h2>80000 நோயாளிகளுக்கு குறுஞ்செய்தி</h2><p>

இதன்படி, சிகிச்சை மையம் 80000 நோயாளிகளுக்கு குறுஞ்செய்திகளை அனுப்ப தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da3a83a4-faa9-4fa3-aebf-69a8be56eef4/26-6aa62d5f4b52d.webp' /></p><p>
</p><p>
தினமும் சுமார் 600 நோயாளிகள் சிகிச்சைக்காக தேசிய வைத்தியசாலைக்கு வருவதாகவும், தினமும் சுமார் 100 புதிய நோயாளிகள் பதிவு செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>

மேலும், 24 மணி நேரமும் செயல்படும் கண் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை சேவையும் செயல்பாட்டில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வரும் நாளன்று நடைமுறைகள் முடிந்த பிறகு, வைத்தியசாலை பதிவேட்டை அறை எண் 10 ல் ஒப்படைக்க வேண்டும் என்றும், பின்னர் அதே நாளில் அடுத்த சிக்கிச்சை திகதியை குறிப்பிடும் குறுஞ்செய்தி நோயாளிகளின் கைபேசிகளுக்கு அனுப்பப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T04:52:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவ்வாய் பெயர்ச்சி: செப்டம்பர் 18 முதல் சிக்கல்களை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mars-transit-in-cancers-who-should-be-careful-1789273696"></link>
            <id>https://manithan.com/article/mars-transit-in-cancers-who-should-be-careful-1789273696</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்களின் நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்களின் நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.</p><p>அந்தவகையில், ரகங்களின் தளபதியாகக் கருதப்படும் செவ்வாய். தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் உள்ளிட்டவற்றின் காரணியாக செவ்வாய் விளங்குகிறார். மற்ற கிரகங்களுடன் ஒப்பிடும்போது, செவ்வாய் ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் வரை தங்கியிருப்பார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9459197-c206-4ae7-8ae6-c19fe8eefa63/26-6aa62aa3560cf.webp' /></p><p></p><p>தற்போது செவ்வாய் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில், வரும் செப்டம்பர் 18-ம் தேதி சந்திரன் ஆளும் கடக ராசிக்குள் செவ்வாய் நுழையவுள்ளார். இந்தப் பயணத்தின்போது செவ்வாய் கடக ராசியில் நவம்பர் 12-ம் தேதி வரை இருப்பார்.</p><p>
ஜோதிடத்தில், கடக ராசியில் செவ்வாய் நீச்சமடைவதாகக் கருதப்படுகிறது. அதேபோல், சந்திரன் மற்றும் செவ்வாய் ஆகிய இரு கிரகங்களின் ஆற்றல்களும் ஒன்றுக்கொன்று மாறுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், செவ்வாய் கடக ராசிக்குள் நுழைவது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.</p><p>

குறிப்பாக, சில ராசிக்காரர்கள் இந்த செவ்வாய் பெயர்ச்சியால் பல்வேறு பிரச்சனைகளையும் சவால்களையும் சந்திக்க நேரிடலாம். எனவே, செவ்வாய் கடக ராசிக்குள் நுழைவதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c73dca1-667e-4248-b6a5-5e23f0bfa355/26-6aa62aa409d76.webp' /></p><h2>
</h2><p>கடக ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக வார்த்தைகளிலும் புதிய முடிவுகளை எடுப்பதிலும் நிதானம் தேவை.&nbsp;</p><p>பணியிடத்தில் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருப்பதுடன், வேலைகளை முடிப்பதில் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும்.</p><p> மன அழுத்தம் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டக்கூடாது. பண விஷயங்களிலும் வழக்கத்தைவிட கூடுதல் கவனம் தேவை.
</p><h2>
துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6511da21-231c-4c00-bd07-cc37a8c06869/26-6aa62aa4b5b3f.webp' /></p><h2>
</h2><p>துலாம் ராசியின் 10-வது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் வாழ்வில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம், குறிப்பாக பணியிடத்தில் சிரமங்கள் ஏற்படக்கூடும். </p><p>வேலையை முடிப்பதில் தடைகள் வரலாம். கூட்டு தொழிலைத் தவிர்ப்பது நல்லது. எந்த ரிஸ்க் எடுத்தாலும் நன்கு யோசித்த பிறகே முடிவு செய்ய வேண்டும்.</p><p>அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். திருமணமான தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக பணத்தை கையாளும்&nbsp; போதும் புதிய முதலீடுகளின் போதும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.&nbsp;</p><h2>
மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1148746a-941f-46f2-befc-aa07f7c26eab/26-6aa62aa5696de.webp' /></p><p></p><p>
மகர ராசியின் 7-வது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலம் சவாலானதாக இருக்கலாம். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் மற்றும் தற்காலிக பிரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. </p><p>தன்னம்பிக்கை குறையக்கூடும். கோபத்தைத் தவிர்த்து, பேசும்போது வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டும். யாருடனும் மோதலில் ஈடுபட வேண்டாம்.</p><p>இல்லையெனில் அது பெரிய பிரச்சனையாகி நீதிமன்றம் வரை செல்லக்கூடும். கலைத் துறையில் இருப்பவர்களுக்கும் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழிலில் கவனம் தேவை.&nbsp;</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <u><b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></b></u></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T04:47:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[லீடர்னா என்னன்னு தெரியாம,புரியாம!! விஜய் சேதுபதி யாரை கூறுகிறார்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/vijay-sethupathi-remark-on-leadership-vijay-fans-1789275104"></link>
            <id>https://viduppu.com/article/vijay-sethupathi-remark-on-leadership-vijay-fans-1789275104</id>
            <summary type="text">லீடர்னா என்னன்னுபிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் ஆகிய நிலையில் இன்றை பிரமோ வீடியோவில் விஜய் சேதுபதி, லீபர்ஷிப் பற்றிய பேசிய விஷயம் இணையத்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>லீடர்னா என்னன்னு</h2><p>பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் ஆகிய நிலையில் இன்றை பிரமோ வீடியோவில் விஜய் சேதுபதி, லீபர்ஷிப் பற்றிய பேசிய விஷயம் இணையத்தில் காரசாரமாக பேசு பொருளாகியுள்ளது. </p><p>முதல் வாரத்தில் தலைவராக பொறுப்பேற்ற சாதிகாவிடம், லீடர்னா என்னன்னு தெரியாமல், லீடர்ஷிப்னா என்னன்னு புரியாமல் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு, பிரச்சனை என்றதும் எதிர்க்கட்சி மீது பழியை போட்டுவிட்டு அங்கிருந்து ஓடுவது லீடர்ஷிப்புக்கான குவாலிட்டி இல்லை, ஏமாற்று வேலை என்று பேசினார் விஜய் சேதுபதி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fcea643-d337-4b20-8d40-39ce01634375/26-6aa62be311b6e.webp' /></p><p> </p><p>இதனை பார்த்த பலரும் விஜய் சேதுபதி, விஜய்யை தான் தாக்கி பேசுகிறார் என்று விமர்சித்து வருகிறார்கள். எதனால் உங்கள் வாக்குறுதிகள் செய்யப்படவில்லை, எந்த பிரச்சனை வந்தாலும் அந்நேரத்தில் சரியாக முடிவெடுக்க வேண்டும். </p><p>பிரச்சனை வந்ததும் ஓடிப்போகக்கூடாது என்று மீண்டும் அழுத்தமாகவும் விஜய் சேதுபதி பேசியிருக்கிறார். இதனை பலரும் யாரை குறிவைத்து அவர் பேசினார் என்று ஒருசில சோசியல் மீடியாக்களில் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">யாரை சொல்கிறார்? <a href="https://t.co/PX7VyLAjK4">pic.twitter.com/PX7VyLAjK4</a></p>&mdash; Valaipechu J Bismi (@jbismi_offl) <a href="https://x.com/jbismi_offl/status/2098959391278113137?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-09-13T04:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டுக் கட்சியின் பேரணிக்கு பதிலடி! அநுராதபுரத்தில் இன்று களமிறங்கும் அநுர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/akd-address-two-npp-rallies-in-anuradhapura-today-1789273967"></link>
            <id>https://ibctamil.com/article/akd-address-two-npp-rallies-in-anuradhapura-today-1789273967</id>
            <summary type="text">ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்று ஞாயிற்றுக்கிழமை (13) அனுராதபுர மாவட்டத்தில் நடைபெறவுள்ள இரண்டு பொதுக்கூட்டங்களில் உரையாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்று ஞாயிற்றுக்கிழமை (13) அனுராதபுர மாவட்டத்தில் நடைபெறவுள்ள இரண்டு பொதுக்கூட்டங்களில் உரையாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

தேசிய மக்கள் சக்தியின் "மக்கள் ஆட்சி – இரு வருட வலிமை, அனைவருக்கும் முன்னேற்றம்" என்ற பிரச்சாரப் பேரணித் தொடரின் ஒரு பகுதியாக குறித்த பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>பொதுக்கூட்டங்கள்</h2><p>
</p><p>
அதன்படி, முதலாவது பொதுக்கூட்டம் கஹடகஸ்கிலியவில் உள்ள வாராந்தச் சந்தை மைதானத்தில் பிற்பகல் 2.00 மணிக்குத் தொடங்கவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39c07f04-0e17-4ee5-82de-937bd301c42d/26-6aa6299bed2b7.webp' /></p><p>

இரண்டாவது பொதுக்கூட்டம் நொச்சியாகமவில் உள்ள சிங்காரகம மைதானத்தில் மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
</p><p>
அனுராதபுரத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுன தனது "ஜன சடன" பேரணியை நடத்திய மறுநாளே இந்தப் பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T04:42:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வந்த வர்த்தகர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/trader-who-came-to-sri-lanka-arrested-in-a-raid-1789274451"></link>
            <id>https://jvpnews.com/article/trader-who-came-to-sri-lanka-arrested-in-a-raid-1789274451</id>
            <summary type="text">குஷ் போதைப்பொருள் தொகையை நாட்டுக்குக் கொண்டுவந்த விமானப் பயணி ஒருவர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேக நபர் குறித்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">குஷ் போதைப்பொருள் தொகையை நாட்டுக்குக் கொண்டுவந்த விமானப் பயணி ஒருவர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">

சந்தேக நபர் குறித்த போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டுவந்து, விமான நிலையத்தின் வர்த்தகர்களுக்கான பசுமை வழி ஊடாக வெளியேற்ற முயன்றபோது சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04713894-3c31-44cc-b49a-5210350b2a7e/26-6aa62954d9b76.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருள்</h2><p style="text-align: justify; ">


இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் மாத்தறை, வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய வர்த்தகர் ஒருவர் ஆவார்.
</p><p style="text-align: justify; ">

சந்தேக நபர் நேற்று (12) மாலையில் தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து நாட்டுக்கு வந்துள்ளார்.</p><p style="text-align: justify; ">


இதன்போது அவர் 668 கிராம் குஷ் போதைப்பொருளை 3 பொதிகளாகத் தயாரித்து, தான் அணிந்திருந்த காற்சட்டையில் மறைத்து நாட்டுக்குக் கொண்டு வந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">

இந்தப் போதைப்பொருள் தொகையின் மதிப்பு 66 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; ">


கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் அவர் கொண்டுவந்த குஷ் போதைப்பொருள் தொகையும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-13T04:41:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பணிப்புறக்கணிப்பில் குதிக்கப்போகும் தொடருந்து திணைக்கள தொழிற்சங்கங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/railway-unions-to-launch-strike-1789271868"></link>
            <id>https://ibctamil.com/article/railway-unions-to-launch-strike-1789271868</id>
            <summary type="text">தொடருந்து திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காமையால் அந்த திணைக்கள தொழிற்சங்கங்கள்&amp;nbsp;பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தகவல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடருந்து திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காமையால் அந்த திணைக்கள தொழிற்சங்கங்கள்<b>&nbsp;</b>பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>அந்த திணைக்களத்தில் நிலவும் நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக புதிய தொடருந்து பொது முகாமையாளர் ஒருவரை அரசாங்கம் துரிதமாக நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>

 

அவ்வாறு இல்லாவிட்டால், பல தொடருந்து தொழிற்சங்கங்கள் இணைந்து எதிர்வரும் வியாழக்கிழமை (17) ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பை நிச்சயமாக முன்னெடுப்போம் என அச்சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.</p><p></p><h2>பேச்சுவார்த்தைக்கு அழைப்பு</h2><p>
 

இந்தப் பணிப்புறக்கணிப்புக்காக வரலாற்றில் முதன்முறையாக தொடருந்து பயணிகள் சங்கங்களின் ஆதரவும் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுமேத சோமரத்ன மேலும் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b7f5d2c-9498-4cf9-a33f-14ab77e3ff71/26-6aa6269882f01.webp' /></p><p>
</p><p>
 

தொடருந்து தாமதங்கள் உள்ளிட்ட பயணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தொடர்ந்தும் முறையான தீர்வுகள் கிடைக்கப்பெறாமையால், தமது சங்கமும் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக ஹீந்தெனிய, பட்டிபொட ஐக்கிய தொடருந்து பயணிகள் சங்கத்தின் தலைவர் ஆர்.ஏ.ரணதுங்க தெரிவித்தார்.</p><p>

 

எனினும், தொடருந்து திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகப் தொடருந்து தொழிற்சங்கங்களுக்கு நாளை (14) போக்குவரத்துப் பிரதி அமைச்சருடன் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p>

 

அதற்கமைய, நாளைய தினம் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் முறையான தீர்வுகள் கிடைக்கப்பெறாவிட்டால், திட்டமிட்டபடி பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் என தொடருந்து தொழிற்சங்கங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T04:33:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு ; சொகுசு வேனுக்குள் அரங்கேறிய தகாத செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-shooting-at-midnight-1789273765"></link>
            <id>https://jvpnews.com/article/police-shooting-at-midnight-1789273765</id>
            <summary type="text">கம்பஹா, அஸ்கிரிய பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது பொலிஸாரால் நேற்று (12) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

 

மேல் மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா, அஸ்கிரிய பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது பொலிஸாரால் நேற்று (12) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
 

மேல் மாகாணப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வேன் ஒன்றின் மூலம் கம்பஹா பிரதேசத்திற்கு போதைப்பொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக முற்கூட்டியே கிடைத்த தகவலுக்கு அமைவாக வெலிவேரிய பொலிஸ் நிலையத்தின் உத்தியோகத்தர்கள் குழுவொன்று நேற்றைய தினம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99c2670f-bf64-40a1-a98d-5dbbd240e160/26-6aa626a6a7253.webp' /></p><h2>துப்பாக்கிச் சூடு&nbsp;</h2><p>
 

அதற்கமைய, குறித்த வேன் கம்பஹா உடுகம்பொல நோக்கிப் பயணம் செய்வதை உறுதிப்படுத்திக் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஜீப் வண்டி மூலம் குறித்த வேனை நுணுக்கமாகப் பின்தொடர்ந்துள்ளனர்.</p><p>

 

இதன்போது, பொலிஸ் உத்தியோகத்தர்கள் தன்னைத் பின்தொடர்வதை அறியாத வேனின் சாரதி, உடுகம்பொல வீதியின் மல்வத்த சந்தைப் பகுதியில் வேனை வீதியோரமாக நிறுத்தியுள்ள நிலையில், பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஜீப்பிலிருந்து இறங்கி வேனைப் பரிசோதிக்க முற்பட்டுள்ளனர்.
</p><p>
 

இதன்போது வேனின் சாரதி, வீதியில் சென்ற பல வாகனங்களை விபத்துக்குள்ளாக்கியவாறு வேனைப் பல தடவைகள் உடனடியாக முன்னும் பின்னுமாக இயக்கியதுடன், பொலிஸ் ஜீப் மீதும் மோதி உத்தியோகத்தர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தித் தப்பியோட முயன்றுள்ளார்.
</p><p>
 

இதனையடுத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் வேன் நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வேனின் சாரதியும் காயமடைந்துள்ளார்.
</p><p>
 

காயமடைந்த சாரதியைப் பொலிஸ் பாதுகாப்புடன் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, வேனுக்குள் இருந்து 15 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் 9 கிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T04:29:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் இராணுவ தலைவர்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iranian-military-leaders-warn-the-us-and-israel-1789272273"></link>
            <id>https://tamilwin.com/article/iranian-military-leaders-warn-the-us-and-israel-1789272273</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தங்கள் நாட்டிற்கு எதிராக செய்யும் எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் உடனடி கடுமையான மற்றும் வலுவான பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தங்கள் நாட்டிற்கு எதிராக செய்யும் எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் உடனடி கடுமையான மற்றும் வலுவான பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் இராணுவத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர். </p><p>

ஈரானிய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அமீர் ஹதாமி பேசுகையில், ஈரானிய இராணுவமும் ஈரானிய புரட்சிகர காவல்படையும் (IRGC) இணைந்து எத்தகைய எதிரி நடவடிக்கையையும் முறியடிக்க தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவித்தார்.</p><h2>இரும்புக் கேடயமாக செயற்படும் படைகளுக்கு இடையிலான ஒற்றுமை</h2><p> 

இரு படைகளுக்கும் இடையிலான ஒற்றுமை, நாட்டின் எதிரிகளின் சதித்திட்டங்களிலிருந்து பாதுகாக்கும் "இரும்புக் கேடயமாக" செயல்படுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a0c9b77-db36-4653-a1e4-f6e1105deb47/26-6aa6237093946.webp' /></p><p> 

இதேவேளை, IRGC தளபதி மேஜர் ஜெனரல் அகமத் வஹீதி தெரிவிக்கையில், எதிரி நாடுகள் ஈரானின் இராணுவ திறனை குறைவாக மதிப்பிட்டு பின்னர் தங்கள் தவறை உணர்ந்து கொண்டதாகக் கூறினார்.</p><p> 

ஈரானிய இராணுவமும் IRGCயும் அமெரிக்க ஆதரவு பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராகப் போர்க்களத்தில் பலத்த அடிகளைக் கொடுத்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T04:21:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் ஜெயா டிவியில் 'ஜாக்பாட்' நிகழ்ச்சி.. தொகுத்து வழங்குகிறார் நடிகை குஷ்பூ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/after-15-years-jaya-tv-jackpot-show-telecast-today-1789270784"></link>
            <id>https://cineulagam.com/article/after-15-years-jaya-tv-jackpot-show-telecast-today-1789270784</id>
            <summary type="text">ஜெயா டிவியில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் &#039;ஜாக்பாட்&#039; நிகழ்ச்சி இன்று (செப்டம்பர் 13) ஒளிபரப்பாகவுள்ளது. இதனை நடிகை குஷ்பூ தொகுத்து வழங்குகிறார். 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜெயா டிவியில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 'ஜாக்பாட்' நிகழ்ச்சி இன்று (செப்டம்பர் 13) ஒளிபரப்பாகவுள்ளது. இதனை நடிகை குஷ்பூ தொகுத்து வழங்குகிறார்.</p><p></p><h2> 

'ஜாக்பாட்'</h2><h2>
</h2><p>
முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜெயா டிவியில் கடந்த 15 வருடங்களுக்கு முன் சூப்பர்ஹிட்டாக ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி 'ஜாக்பாட்'. இதனை நடிகை குஷ்பூ தொகுத்து வழங்கி வந்தார். 90ஸ் கிட்ஸ் இந்த நிகழ்ச்சியை அவ்வளவு எளிதாக மறந்துவிட மாட்டார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c08efb9-1854-4cf7-aa88-868f671424f5/26-6aa61b03801db.webp' /></p><p>
</p><h3>மீண்டும் 'ஜாக்பாட்' </h3><p>
இந்த நிலையில், மீண்டும் 15 ஆண்டுகளுக்கு பின் 'ஜாக்பாட்' நிகழ்ச்சி ஜெயா டிவியில் இன்று செப்டம்பர் 13-ஆம் தேதி ஒளிபரப்பாகிறது.

புதிய அரங்கம், புதிய சுற்றுகள், சவால்கள் என பல புதுமைகளுடன் இந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1435783-2aea-4fea-ad93-0599006fb37c/26-6aa61b0436286.webp' /></p><p> இந்த முறையும் 3 அணிகளுக்கு இடையிலான போட்டியாகவே இதனை உருவாக்கியுள்ளனர். கணவன் - மனைவி, நண்பர்கள் என என்ன உறவாக இருந்தாலும் ஓர் அணியாக இணைந்து இந்த போட்டியில் பங்கேற்கலாம். </p><h4>ரூ. 10 லட்சம்</h4><p>

இந்த போட்டியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள், இறுதியில் ரூ. 10 லட்சம் வரை வெல்லும் வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு சிறப்பு பரிசுகளும் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a54f0ddb-c0ad-4bf9-821e-bf464f6ae565/26-6aa61b04e1fb8.webp' /></p><p></p><p>அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் '<a href="https://www.youtube.com/watch?v=mfgGlaCYi-o" target="_blank">ஜாக்பாட்</a>' நிகழ்ச்சி இன்று இரவு 8 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது.</p>]]></content>
            <updated>2026-09-13T04:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள் தயாரித்து விற்பனை! இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-arrested-for-producing-fake-driving-licenses-1789271212"></link>
            <id>https://ibctamil.com/article/two-arrested-for-producing-fake-driving-licenses-1789271212</id>
            <summary type="text">போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து விற்பனை செய்து வந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த இருவரை நுகேகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து விற்பனை செய்து வந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த இருவரை நுகேகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் கைது செய்துள்ளனர்.</p><p> 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு சாரதி அனுமதிப்பத்திரங்களும் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
பொரலஸ்கமுவ, வேரஹெர பகுதியில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு அருகில் இந்தச் சட்டவிரோத வலையமைப்பு செயல்பட்டு வந்துள்ளது.</p><p></p><h2>கைது நடவடிக்கை</h2><p> 

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தால் வழங்கப்படும் அசல் அனுமதிப்பத்திரங்களை போன்றே போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து, அவற்றை ரூ. 40,000 முதல் ரூ. 45,000 வரையிலான தொகைகளுக்கு இவர்கள் விற்பனை செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6232008-d1ac-4ce0-9d50-a85cec1d74f3/26-6aa6202bbfcae.webp' /></p><p>
</p><p>
அதன்படி, கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் மூலம் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
காவல் துறையினரின் கூற்றுப்படி, ஒரு சந்தேக நபர் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன நிறுத்துமிடத்திற்கு அருகிலும், மற்றொருவர் வேரஹாரவில் உள்ள ஓட்டுநர் பயிற்சி நிறுவனம் ஒன்றிலும் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்டவர்கள் தும்மலசூரிய, யதம்வெல மற்றும் பொரலஸ்கமுவ, கட்டுவாவல ஆகிய இடங்களைச் சேர்ந்த 35 மற்றும் 43 வயதுடைய நபர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சந்தேக நபர்கள் நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T04:11:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா குடியுரிமைச் சான்றிதழ் விண்ணப்பங்கள் தேக்கம்: காத்திருப்பு காலம் 33 மாதங்களாக அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/proof-of-citizenship-applications-surge-estimated-1789263996"></link>
            <id>https://canadamirror.com/article/proof-of-citizenship-applications-surge-estimated-1789263996</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவில் புதிய சி-3 சட்டத் திருத்தம் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, பரம்பரை வழியிலான குடியுரிமைச் சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவில் புதிய சி-3 சட்டத் திருத்தம் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, பரம்பரை வழியிலான குடியுரிமைச் சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையும், அவற்றுக்கான காத்திருப்பு காலமும் மிகக் கடுமையாக அதிகரித்துள்ளன.</p><p>
கனடா குடியேற்ற, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.</p><p>
தற்போது 1,36,000க்கும் அதிகமானோர் குடியுரிமைச் சான்றிதழ் முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2ef4fb4-606e-4aae-84d3-b7c9754c385b/26-6aa6007e164fd.webp' /></p><p> </p><p>ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 14,000 விண்ணப்பங்கள் அதிகம் ஆகும்.
விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கான காலம் 33 மாதங்களுக்கும் மேலாக அதிகரித்துள்ளது. </p><p>ஆகஸ்ட் மாத நிலவரப்படி 25 மாதங்களாக இருந்த இக்காலம், ஒரே மாதத்தில் மேலும் 8 மாதங்கள் உயர்ந்துள்ளது.
பிற நாடுகளிலிருந்து பெறப்படும் விண்ணப்பங்களுக்கு மேலதிகமாக 3 முதல் 4 மாதங்கள் வரை தேவைப்படும்.</p><p>
மே 31 நிலவரப்படி, புதிய விதிகளின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 51 சதவீதம் அமெரிக்காவில் பிறந்தவர்களுடையதாகும். </p><p>அமெரிக்காவின் தற்போதைய அரசியல் சூழலே இந்த திடீர் அதிகரிப்புக்கு முக்கியக் காரணம் எனப்படுகிறது.
</p><p>அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக மெக்சிகோ, பொலிவியா, ஐக்கிய ராஜ்யம், சீனா, இந்தியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்தும் அதிகளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.&nbsp;</p><p>சிக்கலான விண்ணப்பங்களுக்கு மேலதிக ஆவணப் பரிசீலனைகளும் தீவிர சரிபார்ப்புகளும் தேவைப்படுவதாலேயே காலதாமதம் ஏற்படுவதாகவும், இதர பல காரணிகளும் இந்த அதிகரிப்புக்குக் காரணம் எனவம் அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T04:11:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொன்றியலில் ரயில் மோதி 30 வயது ஊழியர் பலி: காவல்துறை விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/police-say-30-year-old-railroad-worker-killed-1789263625"></link>
            <id>https://canadamirror.com/article/police-say-30-year-old-railroad-worker-killed-1789263625</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் மொன்றியல் நகரில் தண்டவாளத்தில் ரயில் மோதியதில் 30 வயதுடைய ரயில்வே ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் மொன்றியல் நகரில் தண்டவாளத்தில் ரயில் மோதியதில் 30 வயதுடைய ரயில்வே ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>நகரின் வில்லே-மேரி பகுதியில், ஜாக்-கார்ட்டியர் பாலத்திற்கு அருகில் உள்ள டு லோரிமியர் அவென்யூ மற்றும் நோட்ரே-டேம் தெரு சந்திப்பில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p>தண்டவாளத்தில் ஊழியர் பணியில் இருந்தபோது ரயில் நகரத் தொடங்கியதே விபத்திற்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக மொன்றியல் காவல்துறை செய்தி தொடர்பாளர் மானுவல் குடூர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1203d4c5-f6f6-4d79-9d9c-b931dc03c78b/26-6aa5ff0b79ae6.webp' /></p><p>
உயிரிழந்தவர் 'கனடியன் பசிபிக் கேன்சஸ் சிட்டி' நிறுவனத்தில் மொன்றியல் துறைமுகப் பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த 30 வயதுடைய ஊழியர் ஆவார்.
</p><p>பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கும் சக ஊழியர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இத்துயரமான சூழலில் அவர்களுக்கு ஆதரவாக நிற்பதே எங்களின் முதன்மை இலக்கு. ரயில்வே ஊழியர்களின் பாதுகாப்பே எங்களின் உயரிய முன்னுரிமை" என கனடியன் பசிபிக் கேன்சஸ் சிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு பணிக்குச் சென்ற ரயில்வே ஊழியர் மீண்டும் வீடு திரும்பவில்லை.</p><p> இன்று இதைவிட வேறு எதுவும் முக்கியமில்லை. விசாரணை தீவிரமடையும் போது, அரசு மற்றும் ரயில்வே நிர்வாகத்திடமிருந்து முறையான பதில்களைப் பெற அழுத்தம் கொடுப்போம் என டீம்ஸ்டர்ஸ் கனடா தொழிற்சங்கத் தலைவர்கள் பிரான்சுவா லாபோர்ட் மற்றும் போல் புஷே தெரிவித்துள்ளனர்.
</p><p>விபத்துக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய மொன்றியல் காவல்துறையின் தெற்குப் பிரிவும், குற்றவியல் தொழில்நுட்பக் குழுவினரும் களத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T04:10:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனமழை பெய்யக்கூடும்! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/today-srilanka-weather-report-1789272022"></link>
            <id>https://tamilwin.com/article/today-srilanka-weather-report-1789272022</id>
            <summary type="text">நாட்டில் இன்று பல இடங்களில் சுமார் 100 மி.மீ வரையில் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 ​வடமத்திய, மத்திய, சபரகமுவ, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் இன்று பல இடங்களில் சுமார் 100 மி.மீ வரையில் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

</p><p> ​வடமத்திய, மத்திய, சபரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின்
சில இடங்களில் சுமார் 100 மி.மீ வரையில் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்
திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>
</p><p>
பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடி மின்னலுடன் கூடிய மழை
பெய்யக்கூடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89cf9eb9-70b0-48a9-9bb0-0f62a0436166/26-6aa61fd8eeca3.webp' /></p><p>மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை
மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும்
திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p>

​இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களிலும் தற்காலிகமாக
வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய
ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T04:00:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[243 பேர்களுடன் கடலில் மாயமான இந்தோனேசியப் பயணிகள் கப்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indonesia-passenger-ship-missing-1789272093"></link>
            <id>https://news.lankasri.com/article/indonesia-passenger-ship-missing-1789272093</id>
            <summary type="text">Indonesian passenger ship missing at sea: கடலில் காணாமல் போன இந்தோனேசியப் பயணிகள் கப்பல்.
ஜாவா கடற்பகுதியில் தொடர்பு துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indonesian passenger ship missing at sea: கடலில் காணாமல் போன இந்தோனேசியப் பயணிகள் கப்பல்.
</p><p>ஜாவா கடற்பகுதியில் தொடர்பு துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 243 பேருடன் சென்ற இந்தோனேசியப் பயணிகள் கப்பல் ஒன்று காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>தொடர்பு துண்டிப்பு</h2><p>
</p><p>முதற்கட்ட தகவலில், மோசமான வானிலை நிலவிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இச்சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed973b3f-eda4-4abe-983d-db42c45cc725/26-6aa6201f5a5aa.webp' /></p><p> இந்தோனேசியாவின் தேடுதல் மற்றும் மீட்புப் பணி முகமை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. விர்கோ டிரான்ஸ்போர்ட் 8 (Virgo Transport 8) என்ற அந்த கப்பல், கிழக்கு ஜாவா நகரமான சுரபாயாவிலிருந்து தெற்கு கலிமந்தன் நகரமான பன்ஜார்மாசின் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அந்த முகமை தெரிவித்துள்ளது. </p><p>மேலும், அறிக்கை வெளியிடப்பட்ட நேரத்தில், அந்தக் கப்பலைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும், அது எங்குள்ளது என்பது தெரியவில்லை என்றும் அந்த முகமை தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>இதனிடையே, மீட்புக் குழுவினர் தேடுதல் பணியைத் தொடங்கியுள்ளதாகவும், அது கடைசியாக அறியப்பட்ட இடத்திற்கு ஒரு குழுவை அனுப்பியுள்ளதாகவும் அந்த முகமை குறிப்பிட்டுள்ளது.
</p><p>17,000 தீவுகளைக் கொண்ட தீவுக்கூட்டமான இந்தோனேசியா, போக்குவரத்தின் முக்கிய வழியாகப் படகு சேவைகளை பெரிதும் நம்பியுள்ளது; ஏனெனில், விமானப் பயணத்தை விடக் கடல் வழிப் பயணங்கள் குறைந்த செலவுடையதாகவும் எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் உள்ளன. </p><p>இருப்பினும், பாதுகாப்புத் தரநிலைகள் எப்போதும் கடுமையாக அமுல்படுத்தப்படுவதில்லை; இதன் விளைவாக விபத்து விகிதம் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T03:58:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டுவின் அனுராதபுர பேரணியில் புறக்கணிக்கப்பட்ட சுதந்திரக்கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/slfp-ignored-at-the-slpp-s-anuradhapura-rally-1789270267"></link>
            <id>https://ibctamil.com/article/slfp-ignored-at-the-slpp-s-anuradhapura-rally-1789270267</id>
            <summary type="text">சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுரம் பேரணிக்கு சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு அழைப்பு விக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுரம் பேரணிக்கு சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு அழைப்பு விக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
பதுளையில் நேற்று (12) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில போன்றோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சுதந்திர கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.</p><p></p><h2>துமிந்த திசாநாயக்கவிற்கு அழைப்பு&nbsp;&nbsp;</h2><p> </p><p>சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க அநுராதபுரத்திலேயே உள்ளார். எனவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் மாத்திரமே என்னால் அங்கு செல்ல முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83fb4ead-adf0-4f3a-a843-0325d5e22d90/26-6aa61c060c462.webp' /></p><p> கட்சிக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விக்கப்படாத நிலையில், என்னால் அந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாது“ என தெரிவித்திருந்தார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T03:53:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[Blockbuster ஆன DC படத்தின் இறுதி வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/dc-movie-final-box-office-1789269464"></link>
            <id>https://cineulagam.com/article/dc-movie-final-box-office-1789269464</id>
            <summary type="text">டிசிலோகேஷ் கனகராஜ், வாமிகா, சஞ்சனா நடிப்பில் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் வெளிவந்து செம்ம ஓட்டம் ஓடிய படம் டிசி. 

இப்படத்தின் மிகப்பெரிய பலமாக பார்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>டிசி</h2><p>லோகேஷ் கனகராஜ், வாமிகா, சஞ்சனா நடிப்பில் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் வெளிவந்து செம்ம ஓட்டம் ஓடிய படம் டிசி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c7144de-19da-419d-a1c3-81f7a26a2096/26-6aa615db796ed.webp' /></p><p></p><p> 

இப்படத்தின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்பட்டது அனிருத் இசை தான், அவர் இசை ஒட்டுமொத்த ஜென் சி கூட்டத்தையும் கவர்ந்து இழுக்க திரையரங்கிற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். தற்போது கூட இப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் லோகேஷ், அருண், அனிருத்துக்கு பிரம்மாண்ட கார் ஒன்றை மூவருக்கும் பரிசாக அளித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32b83b73-d400-4451-a48d-5eb89d633dcf/26-6aa615dc32319.webp' /></p><h2>இறுதி வசூல்</h2><p> </p><p>

இந்நிலையில் <a href="https://www.dinamani.com/cinema/cinema-news/2026/Aug/31/ott-release-date-of-the-dc-movie" target="_blank">டிசி </a>படம் முழுவதும் ஓடிமுடிந்து சன் நெக்ஸ்ட் தளத்திற்கு வந்து விட்டது, இப்படம் உலகம் முழுவதும் ரூ. 110+ கோடிகள் வசூல் செய்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecc02b1a-c08e-4119-9017-46e548ad069b/26-6aa615dcdf8dc.webp' /></p><p></p><p>இதில் தமிழ்நாட்டை தாண்டி கேரளா, தெலுங்கு, மற்றும் ஓவர்சீஸிலும் இப்படம் ரூ. 20 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது, கண்டிப்பாக இதே கூட்டணி மீண்டும் இணையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-13T03:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்ச சிக்கப்போகும் மையப்புள்ளி! மிக் தொடர்பில் மறைக்கப்பட்ட பல தகவல்கள் கசிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-mig-deal-1789257886"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-mig-deal-1789257886</id>
            <summary type="text">சர்ச்சைக்குரிய மிக் (MiG) விமானக் கொள்னவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவில் (FCID) ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்ச்சைக்குரிய மிக் (MiG) விமானக் கொள்னவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகி வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் மிக் கொள்வனவு தொடர்பில் பல மறைக்கப்பட்ட தகவல்கள் கசிந்துள்ளன.
</p><p>பாவித்த 4 மிக்-27 தாக்குதல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கும், அந்த நேரத்தில் இலங்கை விமானப்படையிடம் இருந்த 3 மிக்-27 போர் விமானங்கள் மற்றும் விமானிகளைப் பயிற்றுவிக்கும் 1 மிக்-23 விமானம் ஆகியவற்றை பழுதுபார்ப்பதற்கும் 2006 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் திகதி இலங்கை விமானப்படை ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது .
</p><p></p><h2>இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தம்</h2><p>இவை இரண்டு நாடுகளுக்கு இடையே நேரடியாக நடந்த ஒரு கொடுக்கல் வாங்கல் (G2G) போலக்காட்டப்பட்டுள்ளது. </p><p>உக்ரைன் அரசுக்கு சொந்தமான "உக்ரின்மாஷ்" (Ukrinmash) என்ற அரசு ஏற்றுமதி நிறுவனத்துடன் நேரடியாக நடைபெற்ற கொடுக்கல்வாங்கல் என்றே கூறப்பட்டது. </p><p>மேலும், இதை இரண்டு நாடுகளுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கலாகக் காட்டவே பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இருப்பினும், இந்த கொடுக்கல் வாங்கல் இரண்டு நாடுகளுக்கு இடையே நடந்த ஒன்று அல்ல என்பது பின்னர் தெரியவந்திருந்தது. </p><p>கொடுப்பனவுகளும் உக்ரைன் அரசு நிறுவனமான "உக்ரின்மாஷ்" நிறுவனத்திற்குச் செய்யப்படவில்லை; மாறாக "பெல்லிமிஸா ஹோல்டிங்ஸ்" (Bellimissa Holdings) என்ற தனியார் நிறுவனத்திற்கே செலுத்தப்பட்டிருந்தது. </p><p>
 </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e5b493f-8d3f-4522-bea5-388ce9f927ab/26-6aa5e8a14aabf.webp' /></p><p>கொள்முதல் செய்தல் மற்றும் பழுதுபார்த்தல் தொடர்பாக நியாயமற்ற விலைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. முழுமையான கொள்முதல் மற்றும் பழுதுபார்ப்பிற்காக இலங்கை செலுத்திய மொத்தத் தொகை 14.67 மில்லியன் அமெரிக்க டொலர்கள்.</p><p>விசாரணைகளில் இது 15.66 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரியவந்தது. 


4 மிக் விமானங்கள், ஒரு விமானம் 2.462 மில்லியன் டொலர்கள் என்ற விலையில் வாங்கப்பட்டுள்ளன. </p><p>2006 இல் இந்த 4 விமானங்கள் வாங்கப்பட்ட அதே கையிருப்பிலிருந்தே (Stock), 2000 ஆம் ஆண்டு மே 25 மற்றும் அக்டோபர் 24 ஆகிய திகதிகளில் பயன்படுத்தப்பட்ட 6 மிக் விமானங்களும், மேலே குறிப்பிடப்பட்ட பயிற்சி விமானமும் வாங்கப்பட்டன. </p><p>2000 ஆம் ஆண்டில் இந்த விமானங்களை வாங்கும் போது அதன் விலை: மே 25 இல் வாங்கும் போது 1.75 மில்லியன் அமெரிக்க டொலர்கள், அக்டோபர் 24 இல் வாங்கும் போது 1.6 மில்லியன் டொலர்கள். மே 25 இல் 4 விமானங்களும், அக்டோபர் 24 இல் 2 விமானங்களும் வாங்கப்பட்டன.</p><h2>
விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்</h2><p>ஆனால், 2000 ஆம் ஆண்டில் விமானங்கள் வாங்கப்பட்ட போது இருந்த அதே கையிருப்பில் எஞ்சியிருந்த 4 விமானங்கள் தான் 2006 ஆம் ஆண்டில் வாங்கப்படுகின்றன. </p><p>அப்படியென்றால், 2000 ஆம் ஆண்டில் வாங்கப்படாமல் 6 ஆண்டுகள் பழமையான இந்த 4 மிக் போர் விமானங்களும், 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு விமானம் 2.462 மில்லியன் டொலர்கள் என இரட்டிப்பு விலைக்கு வாங்கப்பட்டுள்ளன. </p><p>இது எப்படி நடந்தது?

2000 ஆம் ஆண்டில் 6 விமானங்களை வாங்கச் சென்ற போது, விமானங்களைத் தேர்வு செய்யும் தரப் பரிசோதனைகளில் இந்த 4 விமானங்களும் நிராகரிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5abe18d-dc27-47b6-91bd-ec275aa26812/26-6aa5e8a1f3c8d.webp' /></p><p>அந்த 4 விமானங்கள் தான், 2006 ஆம் ஆண்டில் அதிக விலை கொடுத்து இங்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதுவும் தற்போது வெளிடைவாகியுள்ளது.
</p><p>
விமானிகளைப் பயிற்றுவிக்கும் மிக்-23 என்ற விமானம் 2000 ஆம் ஆண்டில் 900,000 அமெரிக்க டொலர்களுக்கு (9 லட்சம் டொலர்) வாங்கப்பட்டது. </p><p>ஆனால், புதிய ஒப்பந்தத்தின் பின்னர் இந்த விமானத்தைப் பழுதுபார்க்க செலவிடப்பட்ட தொகை 1.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள். விமானத்தை வாங்கியது 0.9 மில்லியன் டொலருக்கு, ஆனால் அதை பழுதுபார்க்க 1.1 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.</p><p>ஒரு புதிய விமானத்தை வாங்குவதை விட, பழைய விமானத்தைப் பழுதுபார்க்க அதிக பணம் செலவிடப்பட்டுள்ளமை உள்ளிட்ட பல தகவல்கள் இன்னும் வெளிவரவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T03:34:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி அரேபியா மீது ட்ரோன் தாக்குதல்... ஈரானுடனான மூன்று எல்லைக்கடவைகளை மூடிய ஈராக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/shuts-three-crossings-to-iran-1789270540"></link>
            <id>https://news.lankasri.com/article/shuts-three-crossings-to-iran-1789270540</id>
            <summary type="text">Iraq shuts three crossings to Iran.
ஈரானுடனான மூன்று எல்லைக் கடவைகளை ஈராக் மூடியது.
சவுதி அரேபியாவின் கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய் மீதான ட்ரோன் தாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iraq shuts three crossings to Iran.
ஈரானுடனான மூன்று எல்லைக் கடவைகளை ஈராக் மூடியது.
</p><p>சவுதி அரேபியாவின் கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய் மீதான ட்ரோன் தாக்குதல்கள் தங்கள் பிரதேசத்திலிருந்து ஏவப்பட்டதை உறுதிசெய்துள்ள நிலையில், ஈராக் அது குறித்து விசாரித்து வரும் வேளையில், ஈரானுடனான சில எல்லைக் கடவைகளை மூடியுள்ளது.</p><h2>எல்லைக் கடவை</h2><p>
</p><p>ஈரானில் ட்ரோன் ஏவுதளங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஈரானுடனான தனது மூன்று எல்லைக் கடவைகளை ஈராக் அரசாங்கம் தற்காலிகமாக மூடியதாக, ஈராக்கிய பாதுகாப்பு வட்டாரம் ஒன்று சனிக்கிழமையன்று தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ce403a2-2649-464f-88b5-bd798d9f0af8/26-6aa61a0edb05f.webp' /></p><p> </p><p>வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், மூடப்பட்ட கடப்புப் பாதைகள்: பஸ்ரா மாகாணத்தில் ஷலம்கே (Shalamcheh), மைசான் மாகாணத்தில் அல்-ஷிப் (al-Shib) மற்றும் தியலா மாகாணத்தில் மண்டலி (Mandali) ஆகியவையாகும். </p><p>மட்டுமின்றி, தாக்குதல்களை நடத்தியவர்கள் ஈரானுக்குத் தப்பிச் சென்றுவிடக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவே, எல்லைக் கடவைகளை மூடுமாறு ஈராக் முக்கியமாக உத்தரவிட்டிருந்தது. </p><p>தென்கிழக்கு மாகாணமான மைசானின் அல்-தய்ப் எல்லைப் பகுதியில் ட்ரோன் ஏவுதளங்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதி மூடப்பட்டது; அங்கு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.</p><p></p><p>
</p><p>இதற்கிடையில், எல்லைக்கு அருகே ட்ரோன்களை ஏவும் தளங்கள் கண்டறியப்பட்டது குறித்து கூட்டு விசாரணை நடத்துவதற்கான ஈரானின் கோரிக்கைக்கு ஈராக் பிரதமர் அலி அல்-சைதி ஒப்புதல் அளித்துள்ளதாக, ஈராக் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியின் செய்தித் தொடர்பாளர் சபா அல்-நுமான் சனிக்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். </p><p>அந்த ட்ரோன்கள் எங்கே கண்டெடுக்கப்பட்டன அல்லது எத்தனை இருந்தன என்பது குறித்த கூடுதல் விவரங்கள் அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.</p><p> முன்னதாக, அந்தத் தாக்குதல் மைசான் மாகாணத்திலிருந்து நடத்தப்பட்டதாகப் பிரதமர் அலுவலகம் கூறியது; அதனைத் தொடர்ந்து பிரதமர் அல்-சைதி அங்குள்ள ராணுவத் தளபதியை அப்பதவியிலிருந்து நீக்கினார். </p><p>கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய்த்தொடர் மீதான தாக்குதல் வியாழக்கிழமையன்று நடைபெற்றது; அதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த வழித்தடத்தின் செயல்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சவுதி அரேபியா மறுநாள் அறிவித்தது.</p><h2>சவுதி குற்றச்சாட்டு</h2><p> </p><p>இந்த நிலையில், ஈரான் ஆதரவு ஆயுதமேந்திய குழுக்கள் உட்பட கணிசமான செல்வாக்கைக் கொண்டுள்ள ஈராக்கிலிருந்தே அந்த ட்ரோன்கள் ஏவப்பட்டதாக சவுதி அரேபியா வெள்ளிக்கிழமை தெரிவித்தது. </p><p>இந்தத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. ஈரான் ஆதரவு ஆயுதப் போராளிகளின் கூட்டமைப்பான ஈராக்கின் இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம் (IRI), ஓர் அறிக்கையில், இந்தத் தாக்குதல் நாங்கள் உரிமை கோராத ஒரு கௌரவம் என்று கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/875bd499-d397-43e5-b54c-1f1d2876bb61/26-6aa61a0f90988.webp' /></p><p> </p><p>இருப்பினும், ஈராக்கில் உள்ள ஈரானுடன் தொடர்புடைய குழுக்கள் தங்களது எண்ணெய் உள்கட்டமைப்பை இலக்கு வைப்பதாக சவுதி அரேபியா ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ளது. இதனிடையே, தற்போது அதிகாரப்பூர்வமற்ற பயணமாக அயர்லாந்தில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், குழாய்வழித் தாக்குதல்களுக்குப் பின்னால் ஈரான் இருக்கக்கூடும் என்று கூறினார். </p><p>ஆனால் அந்த குற்றச்சாட்டுகளை ஆதரிக்க ட்ரம்ப் எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை.
குழாய்வழித் திட்டத்தின் தற்காலிக நிறுத்தம் சவுதி அரேபியாவுக்கு ஒரு பெரும் பின்னடைவாகும். </p><p>அமெரிக்காவும் ஈரானும் ஹார்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டிற்காகப் போராடுவதால், பகுதியளவு மூடப்பட்டிருக்கும் அந்த நீரிணைக்கு சவுதி அரேபியா கொண்டிருந்த ஒரே முக்கிய மாற்று வழி இந்த வழித்தடமே ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02a56df3-4925-4277-ab7a-3f139f7aa988/26-6aa61a10424d2.webp' /></p><p> </p><p>அந்தக் குழாய் வழித்தடம் இல்லாவிட்டால், இடைநிறுத்தம் நீக்கப்படும் வரை அல்லது ஹார்முஸ் நீரிணை உத்தியோகப்பூர்வமாக மீண்டும் திறக்கப்படும் வரை, சவுதி அரேபியா தனது எண்ணெயை கணிசமான அளவில் ஏற்றுமதி செய்வதற்குச் சாத்தியமான வழி ஏதுமில்லை. </p><p>வளைகுடாப் பகுதியிலிருந்து எண்ணெய் ஏற்றுமதி மேலும் குறைவது மொத்த விற்பனை விலைகளை உயர்த்தக்கூடும்; அதேவேளையில், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் ஏழு மாதங்களை நெருங்கும் சூழலில், இது ஈரானின் பேரம் பேசும் சக்தியையும் அதிகரிக்கக்கூடும்.
</p><p>சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் இராணுவப் படைகளைத் தோற்கடித்து, ஏமனின் முழு செங்கடல் கடற்கரைப் பகுதியையும் கைப்பற்றியுள்ள, ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதிகளின் மின்னல் வேகத் தாக்குதல்களுக்கு மத்தியிலேயே குழாய் வழித்தடத்தின் மீதான இந்தத் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன.
</p><p>சவுதி அரேபியா ஏமன் அரசாங்கத்தின் முக்கிய ஆதரவாளராக உள்ளது; சவுதி அரேபியாவுக்குச் சொந்தமான கப்பல்கள் செங்கடல் வழியாகச் செல்ல அனுமதிக்கப்படாது என்று ஹவுதிகள் அறிவித்துள்ளதும் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-13T03:32:35+00:00</updated>
        </entry>
    </feed>
