<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-24T05:37:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இடம்பெற்ற அநீதிக்கு சர்வதேச விசாரணை மட்டுமே தீர்வு - யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-university-students-union-1784870074"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-university-students-union-1784870074</id>
            <summary type="text">இலங்கை அரசாங்கமானது ஒருபோதும் இலங்கையில் நடந்த அநீதிக்கு தீர்வினை வழங்காது, ஒரு சர்வதேச நீதிப் பொறிமுறை மூலமே இதற்கு தீர்வு கிட்டும் என யாழ்ப்பாண பல்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசாங்கமானது ஒருபோதும் இலங்கையில் நடந்த அநீதிக்கு தீர்வினை வழங்காது, ஒரு சர்வதேச நீதிப் பொறிமுறை மூலமே இதற்கு தீர்வு கிட்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பொருளாளர் கண்ணதாசன் சுடரோன் தெரிவித்துள்ளார். </p><p>

சித்துப்பாத்தி இந்து மயானத்துக்கு அண்மையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p></p><p> 

இது குறித்து அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த உள்ளப் பொறிமுறை மூலம் இற்றைவரை எமக்கான நீதி கிடைக்கவில்லை. இங்கே செயற்படுகின்ற காணாமல் ஆக்கப்பட்டோரது அலுவலகம் சரி, அரசாங்கத்தின் நீதிப் பொறிமுறைகள் சரி வெறும் தரவுகளை அறிக்கையிடும் வகையிலேயே அமைகிறது.</p><h2>முறையான சர்வதேச பொறிமுறை</h2><p> </p><p>அரசாங்கத்தின் இயந்திரமாக செயல்படும் நீதித்துறையினால் எமது பிரச்சினைகளுக்கான தீர்வினை ஒருபோதும் பெற்றுக் கொடுக்க முடியாது. ஒரு முறையான சர்வதேச பொறிமுறை ஊடாகவே எம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான தீர்வு கிடைக்க முடியும்.</p><p></p><p> </p><p>2010ஆம் ஆண்டு நீக்கப்பட்ட GSP+ வரிச் சலுகை மீண்டும் 2017ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றகயத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டது. </p><p>அதன்போது பயங்கரவாத தடைச் சட்டமானது நீக்கப்பட வேண்டும் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கையாக இருந்தது. ஆனால் இன்றைக்கு வரை மக்களை அடக்குகின்ற பயங்கரவாத தடைச் சட்டம் உள்ளிட்ட விடயங்கள் நீக்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58d9b832-369e-4fc2-baee-f947f557dcde/26-6a62f95ab56c9.webp' /></p><p> </p><p>இது இவ்வாறு இருக்கையில் ஐரோப்பிய ஒன்றியத்தினர் இங்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களை சரியாக சந்திக்காமல் செல்வது ஒரு கண்துடைப்பு விடயமாகவே பார்க்கப்படுகிறது.</p><p> அந்தவகையில் நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை கேட்பது யாதெனில் இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட அநீதியை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் தட்டிக் கேட்காது. எனவே இதற்கு முறையான ஒரு சர்வதேச பொறிமுறை செயற்படுத்தப்பட வேண்டும் என்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T05:35:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் கொலை குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/man-who-killed-top-democrat-her-husband-sentenced-1784870768"></link>
            <id>https://canadamirror.com/article/man-who-killed-top-democrat-her-husband-sentenced-1784870768</id>
            <summary type="text">அமெரிக்காவின் மின்னசோட்டா மாநில முன்னாள் சபாநாயகரும் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான மெலிசா ஹார்ட்மேன் மற்றும் அவரது கணவர் மார்க் ஹார்ட்மேன் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் மின்னசோட்டா மாநில முன்னாள் சபாநாயகரும் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான மெலிசா ஹார்ட்மேன் மற்றும் அவரது கணவர் மார்க் ஹார்ட்மேன் ஆகியோரைப் படுகொலை செய்த வழக்கில், குற்றவாளியான வான்ஸ் போல்டருக்கு இரட்டை ஆயுள் தண்டனையுடன் மேலதிகமாக 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
</p><p>வியாழக்கிழமை நடைபெற்ற வழக்கின் இறுதி விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், துப்பாக்கிச் சூட்டில் தப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் நீதிமன்றத்தில் உணர்ச்சிப்பூர்வமாக சாட்சியளித்தனர்.
</p><p>கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் 14 அன்று அதிகாலை 3:30 மணியளவில், பொலிஸ் அதிகாரி போல முகமூடி மற்றும் சீருடை அணிந்து வந்த குற்றவாளி போல்டர், மெலிசா ஹார்ட்மேனின் வீட்டின் கதவைத் தட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59fab932-9eea-4f5d-bd33-d064d2a424ff/26-6a62f7722805c.webp' /></p><p> </p><p>கதவைத் திறந்த கணவர் மார்க்கை சுட்டு வீழ்த்திய பின், வீட்டிற்குள் புகுந்து மாடிக்கு ஓடிய நாடாளுமன்ற உறுப்பினர் மெலிசாவையும் சுட்டுக்கொன்றார். </p><p>அவர்களின் செல்லப் பிராணியான நாயையும் அவர் விட்டுவைக்கவில்லை.
இதற்கு முன்பாக, அதே இரவில் மாநில செனட்டர் ஜான் ஹோஃப்மேன் மற்றும் அவரது மனைவி யுவெட் ஆகியோரின் வீட்டிற்குச் சென்று அவர்களைச் சுட்டுப் படுகாயப்படுத்தியுள்ளார்.
மேலும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கும் அவர் சென்றுள்ளார். </p><p>இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததுடன், மாநில வரலாற்றிலேயே மிகப்பெரிய பொலிஸ் தேடுதல் வேட்டைக்கு வழிவகுத்தது.
மரண தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக, குற்றவாளி போல்டர் ஜூன் மாதத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார். </p><p>இதனைத் தொடர்ந்து, அமெரிக்க மாவட்ட நீதிபதி ஜான் ஆர். டன்ஹெய்ம் தீர்ப்பளிக்கும் போது:
"எனது பல ஆண்டுகால நீதித்துறை அனுபவத்தில் ஆயிரக்கணக்கான வழக்குகளை விசாரித்த பிறகு நான் வழங்கும் மிக நீண்ட தண்டனை இதுவாகும்.</p><p> ஆனால் இந்தத் தண்டனை அவருக்கு மிகவும் தகுதியானது தான்" எனக் குறிப்பிட்டார்.
நீதிமன்றத்தில் சாட்சியளித்த மெலிசாவின் மகள் சோஃபி மற்றும் மகன் காலின் ஆகியோர், தங்கள் பெற்றோர் மற்றும் செல்லப் பிராணியை இழந்து வாழும் வேதனையை விவரித்து கண்ணீர் விட்டனர்.
</p><p>செனட்டர் ஜான் ஹோஃப்மேன் மற்றும் அவரது மனைவி கூறுகையில், அந்த கொடூர இரவுக்குப் பிறகு தங்கள் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டதாகவும், பாதுகாப்பிற்காக வீட்டின் கதவுகளை இரும்பால் மாற்றியிருப்பதாகவும், ஒவ்வொரு நாளும் பயத்துடனேயே வாழ்வதாகவும் குறிப்பிட்டனர்.
</p><p>அதேவேளை, வரி செலுத்தும் மக்களின் பணத்தில் குற்றவாளிக்கு ஆயுள் முழுவதும் உணவு அளிப்பதற்குப் பதிலாக அவருக்கு மரண தண்டனை வழங்கப்படாதது குறித்து மார்க் ஹார்ட்மேனின் குடும்பத்தினர் கடும் அதிருப்தி வெளியிட்டனர்.</p><p>
நீதிமன்றத்தில் பேசிய குற்றவாளி போல்டர், "என்னால் இழப்பு, வலி, சோகம் மற்றும் தனிமையைச் சந்தித்த ஒவ்வொரு நபரிடமும் நான் உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T05:32:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொகுசுப் பேருந்துகளில் குறைபாடுகள் காணப்பட்டால் அறிவிக்கலாம் - பொது மக்களுக்கு வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fine-for-a-bus-that-approved-national-transport-1784865571"></link>
            <id>https://tamilwin.com/article/fine-for-a-bus-that-approved-national-transport-1784865571</id>
            <summary type="text">தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் (NTC) வழித்தட அனுமதி வழங்கப்பட்டு, வடக்கு
மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்குச் சேவையில் ஈடுபடும் சொகுசுப்
பேருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் (NTC) வழித்தட அனுமதி வழங்கப்பட்டு, வடக்கு
மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்குச் சேவையில் ஈடுபடும் சொகுசுப்
பேருந்துகளில் ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால், வடக்கு மாகாண வீதிப் பயணிகள்
போக்குவரத்து அதிகார சபைக்குப் பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும் என
அதிகார சபையின் தலைவர், பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>அத்துடன்,
அதிகார சபையின் சோதனையின் அடிப்படையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின்
அனுமதி பெற்ற பேருந்து ஒன்றுக்கு 20,000 ரூபா தண்டப்பணம்
விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p></p><h2>மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவில்,</h2><p>
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் அனுமதி வழங்கப்பட்ட பேருந்துகளிலும் சோதனை
நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து
அதிகார சபையின் திடீர் பரிசோதகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01d8a58c-ef2c-4423-8d49-f7d807e8d684/26-6a62ef50940cd.webp' /></p><p>
இதற்கமைவாக, மன்னார் - கற்பிட்டி வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்ட
பேருந்தில் அதிகார சபையின் திடீர் பரிசோதகர்கள் சோதனைகளை மேற்கொண்டனர்.</p><p>
இதன்போது குறித்த பேருந்து செல்லுபடியான வழித்தட அனுமதிப்பத்திரத்தைக்
கொண்டிருக்கவில்லை என்பதுடன், பயணிகளுக்குப் பயணச்சீட்டுகளும்
வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது. </p><p>இக்குற்றச்சாட்டுகள்
தொடர்பில் அதிகார சபையால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலம்
அறிவிக்கப்பட்டது. </p><p>இந்த முறைப்பாட்டுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்
முடிவில், உரிய அனுமதி நிபந்தனைகளை மீறியமைக்காக குறித்த பேருந்துக்கு 20,000
ரூபா நிர்வாகத் தண்டப்பணமாக விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து
ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.</p><h2>பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள்</h2><p>எதிர்காலத்தில் இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் வடக்கு மாகாணம் முழுவதும் மேலும்
தீவிரப்படுத்தப்படும். </p><p>அண்மைக் காலமாகச் சில சொகுசுப் பேருந்துகளின் சேவைகள்
தொடர்பில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு முறைப்பாடுகள் அதிகார சபைக்குக்
கிடைக்கப்பெற்றுள்ளன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3708e28-0fd5-4bb2-aabe-bb0eba509740/26-6a62f8e52d0d8.webp' /></p><p>குறிப்பாக, பேருந்தின் ஆசனங்களைச் சரிப்படுத்த முடியாத
நிலை காணப்படுதல், ஆசனங்களில் மூட்டைப்பூச்சிக் கடிக்கு உள்ளான சம்பவங்கள்
மற்றும் குளிரூட்டி (A/C) முறையாகச் செயற்படாமை போன்ற பல குறைபாடுகள்
தொடர்பில் பயணிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.</p><p>

எனவே, பயணிகள் இத்தகைய சொகுசுப் பேருந்துகளில் பயணம் செய்யும்போது
மேற்கண்டவாறான குறைபாடுகளையோ அல்லது முறைகேடுகளையோ எதிர்கொண்டால், அதற்கான
தகுந்த ஆதாரங்களுடன் 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்குத் தமது
முறைப்பாடுகளைத் தாமதமின்றி அனுப்பி வைக்க முடியும் எனவும் மேலும்
தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T05:32:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய இராஜாங்க அமைச்சராக இலங்கை தமிழ்ப் பெண் உமா குமரன்; முதல் வரலாற்றுச் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/lanka-tamils-uma-kumaran-uk-new-cabinet-minister-1784871247"></link>
            <id>https://canadamirror.com/article/lanka-tamils-uma-kumaran-uk-new-cabinet-minister-1784871247</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தலைமையிலான அரச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தலைமையிலான அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை புலமபெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

பிரித்தானியாவின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சில் (Foreign, Commonwealth and Development Office) வெளிவிவகார அமைச்சர் எட் மிலிபாண்ட் தலைமையின் கீழ் இராஜாங்க அமைச்சராக அவர் பதவியேற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54d46103-9b72-4b51-bd41-d15ac82db539/26-6a62f95118016.webp' /></p><h2>பிரித்தானிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை வகிக்கும் முதல் தமிழ் பெண்</h2><p> </p><p>இதன் மூலம் பிரித்தானிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை வகிக்கும் முதல் தமிழ் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.
</p><p>
இலங்கையில் உள்நாட்டுப் போரின் காரணமாக பிரித்தானியாவில் குடியேறிய தமிழ் பெற்றோருக்கு பிறந்த உமா குமரன், அண்மைய பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.</p><p> தற்போது அமைச்சுப் பொறுப்பை ஏற்றதைத் தொடர்ந்து, தனது சமூக ஊடகப் பதிவில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள அவர், “எனது பெற்றோருக்கு பாதுகாப்பான புகலிடமாக இருந்த பிரித்தானியா, அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வாய்ப்பை வழங்கியது.</p><p> இன்று அந்த நாட்டிற்கு அமைச்சராக சேவையாற்றுவது பெருமைக்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார்.


பிரித்தானிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைப்பில் இராஜாங்க அமைச்சர் பதவி, நாடாளுமன்ற துணைச் செயலாளர் பதவியை விட உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.</p><p> அமைச்சரவை அமைச்சருக்கு அடுத்த முக்கிய நிர்வாகப் பொறுப்புகளில் ஒன்றாக இந்தப் பதவி விளங்குகிறது.

இதற்கு முன்னர் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ரணில் ஜயவர்தன, லிஸ் ட்ரஸ் தலைமையிலான அரசாங்கத்தில் சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமிய விவகாரங்களுக்கான அமைச்சராகப் பணியாற்றியிருந்தார்.</p><p>

உமா குமரனின் நியமனம், பிரித்தானிய அரசியலில் இலங்கைத் தமிழ் சமூகத்தின் பிரதிநிதித்துவத்திற்கும், அந்நாட்டின் பல்வகைமை மற்றும் உள்ளடக்கத்தை பிரதிபலிக்கும் முக்கிய முன்னேற்றமாகவும் அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T05:32:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்டத்தால் திணறும் டெல்லி - நள்ளிரவில் மோடி வெளியிட்ட செல்ஃபி வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pm-narendra-modi-has-released-a-selfie-video-1784864129"></link>
            <id>https://ibctamil.com/article/pm-narendra-modi-has-released-a-selfie-video-1784864129</id>
            <summary type="text">பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் நேற்று நள்ளிரவு வெளியிட்ட மூன்று நிமிட காணொளி தற்போது பேசுபொருளாகி உள்ளது.நீட் வினாத்தாள் கசிவு சம்பவங்களைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் நேற்று நள்ளிரவு வெளியிட்ட மூன்று நிமிட காணொளி தற்போது பேசுபொருளாகி உள்ளது.</p><p>நீட் வினாத்தாள் கசிவு சம்பவங்களைத் தடுக்க, கடுமையான தண்டனைகளை உறுதி செய்யும் புதிய வரைவுச் சட்டம் குறித்து இன்று (24) நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.</p><p>குறித்த காணொளியில் பிரதமர் மேலும் தெரிவிக்கையில், வினாத்தாள் கசிவு என்பது ஒரு சிறிய விஷயம் அல்ல. </p><h2>பெற்றோர்களுக்கும் மிகுந்த வேதனை</h2><p>இது லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.</p><p> </p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">More strict actions against paper leaks to come in tomorrow’s Cabinet! <a href="https://t.co/NRysBukk5U">pic.twitter.com/NRysBukk5U</a></p>&mdash; Narendra Modi (@narendramodi) <a href="https://x.com/narendramodi/status/2080357811662492096?ref_src=twsrc%5Etfw">July 23, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>நமது முதன்மைப் பொறுப்பு மாணவர்கள் ஒரு கல்வி ஆண்டை வீணடிக்கக் கூடாது என்பதே ஆகும். அதனால்தான் 22 லட்சம் மாணவர்களுக்கான மறுதேர்வை மிகக் குறைந்த காலத்தில் நடத்தி, கடந்த ஜூலை 19 அன்று முடிவுகளையும் வெளியிட்டோம்.</p><p> இத்தவறில் ஈடுபட்டவர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், நாம் இத்துடன் திருப்தியடைந்து விடக்கூடாது.</p><h2>கடுமையான தண்டனை</h2><p> எனவே தான் விரைவு நீதிமன்றங்கள் மற்றும் கடுமையான தண்டனைகளுக்கான விதிகளை உள்ளடக்கிய வரைவுச் சட்டத்தைத் தயாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d00bc1f2-4dd2-49aa-9325-70dc452f935f/26-6a62e11cd7147.webp' /></p><p> 

இந்த வரைவுச் சட்டம் இன்று அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு இறுதி வடிவம் பெறவுள்ளது.</p><p> வரும் திங்கள்கிழமை தொடங்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் இரண்டாவது வாரத்தில் இந்த மசோதாவை இரு அவைகளிலும் விரைவாக நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்" என பிரதமர் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-24T05:31:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல்நாளில் உலகளவில் தரமான வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யன் ஜனநாயகன்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vijay-jananayagan-worldwide-bo-collection-1784869628"></link>
            <id>https://cineulagam.com/article/vijay-jananayagan-worldwide-bo-collection-1784869628</id>
            <summary type="text">ஜனநாயகன்ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் எதிர்ப்பார்த்து காத்திருந்த திரைப்படம் ஜனநாயகன். படத்தின் கதை, இயக்குனர், இசை, இதில் நடித்த நடிகர்கள் என அ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜனநாயகன்</h2><p>ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் எதிர்ப்பார்த்து காத்திருந்த திரைப்படம் ஜனநாயகன். </p><p>படத்தின் கதை, இயக்குனர், இசை, இதில் நடித்த நடிகர்கள் என அனைத்தையும் தாண்டி மக்கள் படத்தை காண நினைத்தது ஒரே ஒரு விஷயம் தான், விஜய். திரையில் இத்தனை வருடம் பார்த்து ரசித்த ஒரு நாயகன் இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்பது எல்லோருக்கும் வருத்தம் தான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/631bdb7d-7a64-4071-8049-4d6d033f4330/26-6a62f6a0bf618.webp' /></p><p> எனவே ரசிகர்கள் ஜனநாயகன் எப்படி இருந்தாலும் சரி விஜய்க்காக படத்தை கொண்டாடியே ஆக வேண்டும் என இருக்கிறார்கள்.
</p><p>ரசிகர்களை தாண்டி பிரபலங்கள் அனிருத், மமிதா பைஜு, கீர்த்தி சுரேஷ், த்ரிஷா, ஜீவா, அர்ஜுன் தாஸ், ஜெயம் ரவி என பல நடிகர்கள் முதல் நாளே இப்படத்தை ரசிகர்களுடன் பார்த்து கொண்டாடினார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/235afa03-3233-40c3-afeb-54f00924f722/26-6a62f69fe1331.webp' /></p><h2>
பாக்ஸ் ஆபிஸ்</h2><p>
முதல் நாளில் சென்னையில் மட்டும் படம் ரூ. 6 கோடிக்கு மேலும், தமிழகத்தில் ரூ. 29 முதல் ரூ. 30 கோடி வரை வசூலித்திருந்தது. விஜய்யின் ஜனநாயகன் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 90 கோடிக்கு மேலாக தரமான வசூல் வேட்டை செய்துள்ளதாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/j_uvC8MiYs0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-24T05:30:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானத்தை கடத்த டக்ளஸ் தேவானந்தா போட்ட திட்டம் : வெலிக்கடை சிறை அனுபவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/douglas-devananda-s-welikada-prison-experience-1784869953"></link>
            <id>https://ibctamil.com/article/douglas-devananda-s-welikada-prison-experience-1784869953</id>
            <summary type="text"> 1983 ஆம் ஆண்டில் வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தை தொடர்ந்து கைதிகளை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்காக விமானத்தில் ஏற்றிய போது குறி...</summary>
            <content type="html"><![CDATA[<p> 1983 ஆம் ஆண்டில் வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தை தொடர்ந்து கைதிகளை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்காக விமானத்தில் ஏற்றிய போது குறித்த விமானத்தைக் கடத்துவதற்கு தான் திட்டமிட்டதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.</p><p>ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>1983ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற கலவரத்தின் போது தமிழ் கைதிகள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட காலத்தில் அங்கிருந்த கைதிகளில் டக்ளஸ் தேவானந்தாவும் ஒருவராவார்.</p><p>
இந்தநிலையில் இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

1983 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் திகதி சிறைச்சாலையிலிருந்து எங்களை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
</p><p>
யாழ்ப்பாணம் அல்லது மட்டக்களப்பிற்கு தான் எங்களை கொண்டு போவார்கள் என்று தெரியும்.

வெலிக்கடையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு விமானத்தில் ஏற்றிய போது விமானத்தைக் கடத்துவோம் என்ற எண்ணம் வந்தது. </p><p> விமானத்தைக் கடத்தி இந்தியாவிற்கு கொண்டு செல்வோம் என நினைத்தேன். அந்த நேரம் சக கைதிகள் இதனை விரும்பவில்லை. அதனால் அந்த திட்டத்தைக் கைவிட்டேன்.</p><p>
</p><p>
பின்னர் விமான நிலையத்தில் இறங்கி சிறைச்சாலைக்கு கொண்டு வரும் நேரத்தில் இடையில் ஏதாவது செய்யலாம் என யோசித்தேன். எனினும் நான் தப்பினால் மற்றவர்கள் எல்லாம் பாதிக்கப்படுவார்கள் என நினைத்தேன்.</p><p>

நாங்கள் சிலர் தப்பியோடாமல் பெருமளவானோர் தப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் சிறைச்சாலைக்குள் சென்றோம்.

கூட்டு முயற்சியின் பயனாக ஒன்றரை மாதங்களுக்குள் மட்டக்களப்பு சிறைச்சாலை உடைக்கப்பட்டது.” என தெரிவித்தார்.</p><p><b>இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க.....</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_u3PpAPiRaY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><br><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T05:29:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனா எம்.பி.க்கு எதிராகப் பிடியாணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/an-arrest-warrant-was-issued-against-mp-arjuna-1784868846"></link>
            <id>https://ibctamil.com/article/an-arrest-warrant-was-issued-against-mp-arjuna-1784868846</id>
            <summary type="text">யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர்&amp;nbsp;அர்ச்சுன ராமநாதனுக்கு&amp;nbsp;கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;ஃ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர்&nbsp;அர்ச்சுன ராமநாதனுக்கு&nbsp;கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>ஃபோர்ட் காவல் அதிகாரிகளின் கடமையைத் தடுத்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் அவர் முன்னிலையாக தவறியதன் காரணமாக இந்த பிடியாணை பிறப்பிக்கபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. </p><p></p><h2>எம்.பி. அர்ச்சுனாவுக்கு எதிராகப் பிடியாணை</h2><p>மேலும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவரது பிணைத்தாரர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6171b06c-6607-4fb2-9d94-054cb31d369d/26-6a62f6f4f3a21.webp' /></p><p>

அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்&nbsp;எம்.பி. அர்ச்சுனாவுக்கு பிடியாணை பிறப்பிக்க நீதித்துறை நடுவர் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T05:24:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு பிடியாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mp-archuna-ramanathan-arrest-warrant-1784868758"></link>
            <id>https://tamilwin.com/article/mp-archuna-ramanathan-arrest-warrant-1784868758</id>
            <summary type="text">யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெற்று வரும் ஒரு வழக்கு த...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

நடைபெற்று வரும் ஒரு வழக்கு தொடர்பாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்&nbsp;அவர் இன்று (24)முன்னிலையாகத் தவறியதையடுத்து, இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p></p><h2>வழக்கு விசாரணைக்கு வந்தபோது</h2><p>நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ​​அவரது பிணையாளர்களும் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d1648b1-dbf1-4ecc-8735-5d89b9687b2c/26-6a62f344c2d36.webp' /></p><p>கோட்டை பொலிஸ் அதிகாரிகள் தங்கள் கடமைகளை ஆற்றிக்கொண்டிருந்தபோது, ​​அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்ததை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p>

</p>]]></content>
            <updated>2026-07-24T05:24:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதி முன்னிலையில் தூத்துக்குடி வாலிபர் பிரேத பரிசோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/post-mortem-thoothukudi-youth-body-conducted-1784870404"></link>
            <id>https://ibctamilnadu.com/article/post-mortem-thoothukudi-youth-body-conducted-1784870404</id>
            <summary type="text">தூத்துக்குடி அமுதா நகர் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 24). சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக கூறி கடந்த 17ம் தேதி போலிசார் அருணாச்சலத்தை கைது ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>தூத்துக்குடி அமுதா நகர் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 24). </p><p>சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக கூறி கடந்த 17ம் தேதி போலிசார் அருணாச்சலத்தை கைது செய்து தென்பாகம் போலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
</p><p>
அங்கு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு தயார் செய்து கொண்டிருந்த போது, மயங்கி விழுந்ததாக போலிஸ் தெரிவித்தனர்.</p><p>

இந்நிலையில் அவரது தலையில் காயம் ஏற்பட உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a44cdc94-b87b-4616-abbc-550138d17fa4/26-6a62f6ac04d9c.webp' /><br></p><p>
</p><p>
போலிஸ் நிலையத்தில் அருணாச்சலத்தை தாக்கியதே அவரது மரணத்துக்கு காரணம் என அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
</p><p>
மேலும் நீதித்துறை நடுவர் முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும், பிரேத பரிசோதனையை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
</p><p>
இதன்படி இன்று காலை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜய ராஜசேகர் முன்னிலையில் பிரேத பரிசோதனை தொடங்கியுள்ளது, வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டும் வருகிறது.</p><p>

கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மருத்துவர் பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர்.<br></p>]]></content>
            <updated>2026-07-24T05:23:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களுடைய காணிகள் மக்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும் - ஆளும் தரப்பு தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-s-temple-lands-to-be-divided-h-sunil-mp-1784863715"></link>
            <id>https://tamilwin.com/article/people-s-temple-lands-to-be-divided-h-sunil-mp-1784863715</id>
            <summary type="text">மக்களுக்குச் சொந்தமான நிலத்தை மக்களுக்கும், விகாரைக்குச் சொந்தமான நிலத்தை
விகாரைக்கும் பிரித்துக் கொடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்
எட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்களுக்குச் சொந்தமான நிலத்தை மக்களுக்கும், விகாரைக்குச் சொந்தமான நிலத்தை
விகாரைக்கும் பிரித்துக் கொடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்
எடுத்து வருகிறோம் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்
ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன் தையிட்டி காணி விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தற்போது விரிவான
பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றதெனவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>தையிட்டி விவகாரம்</h2><p>
</p><p>


மேலும் தெரிவிக்கையில், </p><p>

அனைத்து தரப்பினரையும் அழைத்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.

குறிப்பாக, நீதி அமைச்சர், வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்றொழில் அமைச்சர், ஆளுநர், மாவட்டச்
செயலாளர், பிரதேச செயலாளர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும்
நாடாளுமன்றத்திற்கும் எமது அமைச்சுக்கும் பலமுறை அழைத்து இந்தப்
பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம்.</p><p> 

அத்துடன் அந்தப் பகுதியின் காணி உரிமையாளர்களான
மக்களையும் நாங்கள் நேரில் சந்தித்துப் பேசினோம்.

இந்தப் பேச்சுவார்த்தைகளின் விளைவாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு காணி
அளவீட்டுப் பணிகளை மேற்கொள்வதற்காக அனைத்து அதிகாரிகளும் வலிகாமம் - தையிட்டி
பகுதிக்குச் சென்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/965d66b6-3830-4898-9117-71c520ff8ff6/26-6a62de918ce31.webp' /></p><p> </p><p>ஆனால் அங்கு ஏற்பட்ட சிறிய சிக்கல் காரணமாக அதை
முழுமையாகச் செய்ய முடியாமல் போனது.

எங்களின் நோக்கம் என்னவென்றால், இந்தச் சிக்கல்கள் அனைத்தையும் தீர்த்து, காணி
உரிமையாளர்களான எமது மக்களுக்குச் சொந்தமான காணிகளை அவர்களிடம்
ஒப்படைக்க வேண்டும் என்பதே ஆகும்.
</p><p>
அதேநேரம், 1972ஆம் ஆண்டின் காணி அளவீட்டு ஆவணங்களிலேயே இந்த விகாரை பற்றி
குறிப்பிடப்பட்டுள்ளது. விகாரையின் ஜின்தோட்ட நந்தாராம நாயக்க தேரர் மிகவும்
தெளிவான புரிதலோடு இருக்கிறார்.</p><p></p><h2>அரசியல் சுயநலன்கள்</h2><p> </p><p>அந்தப் பகுதி மக்களோடு இணைந்து, மிகவும்
நல்லிணக்கத்தோடு பணியாற்றக்கூடிய ஒரு மத குருவாக அவர் உள்ளார்.

நாங்கள் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்த விரும்பவில்லை. </p><p>மக்களுக்குச் சொந்தமான
நிலத்தை மக்களுக்கும், விகாரைக்குச் சொந்தமான நிலத்தை விகாரைக்கும் பிரித்துக்
கொடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். 

மிக
விரைவில் எமது அதிகாரிகளுடன் மீண்டும் அப்பகுதிக்குச் செல்வோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c79aea9-79a9-4fbf-8976-e91d8646b420/26-6a62de90ce97d.webp' /></p><p>இரு தரப்பினரிடையேயும்
உண்மையான நல்லிணக்கம் ஏற்கனவே நிலவுகிறது. 

அரசியல் காரணங்களுக்காகவும் சுயநல
அரசியல் தேவைகளுக்காகவுமே அங்கு நல்லிணக்கம் இல்லை என்பது போன்ற தோற்றம்
சித்தரிக்கப்படுகிறது.</p><p>
</p><p>அந்த அரசியல் சுயநலன்களுக்குப் பலியாகாமல், எமது மக்களுக்குரிய காணிகளையும்
விகாரைக்குரிய காணிகளையும் சரியாக அளவீடு செய்து, உரிய ஆவணங்களை மக்களிடம்
ஒப்படைப்பதே எமது திட்டமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T05:22:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனா எம்.பிக்கு பிடியாணை; யாழ்ப்பாண நீதிமன்றம் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/arrest-warrant-for-mp-arjuna-jaffna-court-order-1784870060"></link>
            <id>https://jvpnews.com/article/arrest-warrant-for-mp-arjuna-jaffna-court-order-1784870060</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
</p><p>


கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e584ebdd-f113-45b2-8172-8bfc365ec068/26-6a62f58fc844a.webp' /></p><p>



இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதும், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
</p><p>


இதையடுத்து, அர்ச்சுனா இராமநாதனை கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் வகையில் பிடியாணை பிறப்பித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-24T05:12:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைக் கலவர வழக்கில் புதிய தகவல் ; CID விசாரணை தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-priso-17-people-killed-shooting-cid-inform-1784869795"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-priso-17-people-killed-shooting-cid-inform-1784869795</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் கலவரம் தொடர்பாக இதுவரை 969 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், 40 சந்தேக நபர்களின் புனைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் கலவரம் தொடர்பாக இதுவரை 969 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், 40 சந்தேக நபர்களின் புனைப்பெயர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் துறை (CID) இன்று (23) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><h4>மேலதிக விசாரணை</h4><p>இந்த வன்முறைச் சம்பவம் ஒரு 'குற்றம்' என நீதிமன்றம் முறைப்படி உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca2b5ed9-d3c2-4429-87e2-29ed2c8c4a89/26-6a62f3a4a8945.webp' /></p><p>விசாரணையாளர்கள் இது தொடர்பான 28 பிரேதப் பரிசோதனை அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். </p><p>அதில், உயிரிழந்தவர்களில் 17 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காரணமாகவே மரணித்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.
</p><p>


கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைக்குள் வெடித்த கடுமையான மோதல்களில், 10 சிறை அதிகாரிகளும் 21 கைதிகளும் உட்பட மொத்தம் 31 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>


இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T05:10:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-import-restricted-1784869311"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-import-restricted-1784869311</id>
            <summary type="text">இந்த ஜூலை மாதத்தில் நாட்டில் வாகன இறக்குமதி பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஜூலை மாதத்தில் நாட்டில் வாகன இறக்குமதி பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜெயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
</p><p>ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குமுறைகள் மீதான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>வாகனங்களின் இறக்குமதிக்கான வரி</h2><p>
</p><p>தேர்ந்தெடுக்கப்பட்ட சில வாகன வகைகளின் இறக்குமதிக்கான தீர்வை வரிகளை மூன்று மாத காலத்திற்கு அதிகரிக்க நடவடிக்கை எடுத்தோம். அந்த நடவடிக்கையின் பலனாக, இந்த ஜூலை மாதத்தில் வாகன இறக்குமதி வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6469fb49-76b6-4622-8448-2b2dd53be67f/26-6a62f1c09d557.webp' /></p><p>இம்மாதத்தின் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் முறையே 1.81 மில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் 1.19 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் கடிதங்களே வழங்கப்பட்டுள்ளன.
</p><p>இந்த ஜூலை மாதத்தின் முதல் 21 நாட்களில், வாகன இறக்குமதிக்காக நாளொன்றுக்கு வழங்கப்பட்ட கடன் கடிதங்களின் சராசரிப் பெறுமதி 3.5 மில்லியன் அமெரிக்க டொலர் மட்டத்தில் பேணப்பட்டு வருகின்றது என தெரிவித்துள்ளார்.
</p><p>நிலவும் சூழலில் 7 சதவீதத்திற்கும் அதிகமான வருமானத்தைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T05:07:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மழை அங்கியுடன் அடங்கிய மழலையில் உயிர் - இதுவே தீர்வு: யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/international-investigation-jaf-uni-students-union-1784868173"></link>
            <id>https://ibctamil.com/article/international-investigation-jaf-uni-students-union-1784868173</id>
            <summary type="text">இலங்கை அரசாங்கமானது ஒருபோதும் இலங்கையில் நடந்த அநீதிக்கு தீர்வினை வழங்காது.
ஒரு சர்வதேச நீதிப் பொறிமுறை மூலமே இதற்கு தீர்வு கிட்டும் என யாழ்ப்பாண
பல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசாங்கமானது ஒருபோதும் இலங்கையில் நடந்த அநீதிக்கு தீர்வினை வழங்காது.
ஒரு சர்வதேச நீதிப் பொறிமுறை மூலமே இதற்கு தீர்வு கிட்டும் என யாழ்ப்பாண
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பொருளாளர் கண்ணதாசன் சுடரோன்
தெரிவித்துள்ளார்.
</p><p>அண்மையில் இடம்பெற்ற
போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கண்ணதாசன் சுடரோன் இதனை தெரிவித்துள்ளார். </p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த உள்ளப் பொறிமுறை மூலம் இற்றைவரை எமக்கான
நீதி கிடைக்கவில்லை.</p><p></p><p> </p><h2>அரசாங்கத்தின் நீதிப் பொறிமுறை</h2><p>இங்கே செயற்படுகின்ற காணாமல் ஆக்கப்பட்டோரது அலுவலகம்
சரி, அரசாங்கத்தின் நீதிப் பொறிமுறைகள் சரி வெறும் தரவுகளை அறிக்கையிடும்
வகையிலேயே அமைகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92965557-f4ec-4250-a78e-61097d02b32f/26-6a62f2c475ede.webp' /></p><p>அரசாங்கத்தின் இயந்திரமாக செயல்படும் நீதித்துறையினால் எமது பிரச்சினைகளுக்கான
தீர்வினை ஒருபோதும் பெற்றுக் கொடுக்க முடியாது. </p><p>ஒரு முறையான சர்வதேச பொறிமுறை
ஊடாகவே எம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான தீர்வு கிடைக்க முடியும்.

2010ஆம் ஆண்டு நீக்கப்பட்ட GSP+ வரிச் சலுகை மீண்டும் 2017ஆம் ஆண்டு ஐரோப்பிய
ஒன்றகயத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டது. </p><p>அதன்போது பயங்கரவாத தடைச் சட்டமானது
நீக்கப்பட வேண்டும் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கையாக இருந்தது.</p><p></p><p> </p><h2>பயங்கரவாத தடைச் சட்டம்</h2><p>ஆனால்
இன்றைக்கு வரை மக்களை அடக்குகின்ற பயங்கரவாத தடைச் சட்டம் உள்ளிட்ட விடயங்கள்
நீக்கப்படவில்லை.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73eda22a-082c-49ec-aaed-3484e77869a2/26-6a62f2c3bd4ae.webp' /></p><p>
இது இவ்வாறு இருக்கையில் ஐரோப்பிய ஒன்றியத்தினர் இங்கு வந்து பாதிக்கப்பட்ட
மக்களை சரியாக சந்திக்காமல் செல்வது ஒரு கண்துடைப்பு விடயமாகவே
பார்க்கப்படுகிறது. </p><p>அந்தவகையில் நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை கேட்பது யாதெனில்
இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட அநீதியை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் தட்டிக்
கேட்காது. </p><p>எனவே இதற்கு முறையான ஒரு சர்வதேச பொறிமுறை செயற்படுத்தப்பட வேண்டும்
என்றார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T05:06:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கதிர்காமம் காட்டுப்பாதை இன்றுடன் பூட்டு ;40ஆயிரத்துக்கு மேற்பட்ட பாதயாத்திரீகர்கள் பயணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kataragama-forest-route-closed-today-1784869507"></link>
            <id>https://jvpnews.com/article/kataragama-forest-route-closed-today-1784869507</id>
            <summary type="text">வரலாற்றுப்பிரசித்தி பெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்குச் செல்லும்
பாதயாத்திரீகர்களுக்கான காட்டுப்பாதை இன்று (24) வெள்ளிக்கிழமை மூடப்படவிருக்கிறது.
 அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுப்பிரசித்தி பெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்குச் செல்லும்
பாதயாத்திரீகர்களுக்கான காட்டுப்பாதை இன்று (24) வெள்ளிக்கிழமை மூடப்படவிருக்கிறது.</p><p>
 அதன்படி இன்று பிற்பகல் 3 மணியுடன் கதிர்காமம் காட்டுப்பாதை பூட்டப்படும்.
 இந்த வருட பாதயாத்திரைக்கான காட்டுப் பாதை கடந்த 10 ஆம் திகதி திறக்கப்பட்ட நிலையில் 15 தினங்களின் பின் இன்று மூடப்படவுள்ளது.</p><p></p><p>
</p><p>
இம்முறை இதுவரை இப்பாதையால் சுமார் 40ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பயணித்துள்ளதாக உகந்தமலை முருகன் ஆலய வண்ணக்கர் தெரிவித்தார்.
அதேவேளை பாதயாத்திரையின்போது இதுவரை மாரடைப்பால் நான்குபேர் மரணித்துள்ளனர்.
</p><p> உகந்தமலை முருகனாலய வருடாந்த உற்சவம் கடந்த 15ஆம் திகதி ஆரம்பமான நிலையில் எதிர்வரும் 30 ஆம் திகதி நிறைவடையும்</p><p>.

இந் நிலையில் வரலாற்றில் கானகப் பாதை திறந்த( 10) முதல் நாளில் சுமார் 16000 பாதயாத்திரீகர்கள் பயணித்தமை இதுவே முதல் முறையாகும்&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T05:03:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவின் சில பகுதிகளில் உத்தியோகப்பூர்வமாக வறட்சி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/drought-declared-in-uk-regions-1784869461"></link>
            <id>https://news.lankasri.com/article/drought-declared-in-uk-regions-1784869461</id>
            <summary type="text">குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்கான தடைகளால் 23 மில்லியன் பிரித்தானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வட வேல்ஸ் மற்றும் அப்பர் செவர்ன் (Upper Seve...</summary>
            <content type="html"><![CDATA[<p>குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்கான தடைகளால் 23 மில்லியன் பிரித்தானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வட வேல்ஸ் மற்றும் அப்பர் செவர்ன் (Upper Severn) பகுதிகளில் வறட்சி அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>மிக வெப்பமான கோடை</h2><p>
</p><p>இப்பகுதியில் இம்மாதத்திற்கான எதிர்பார்க்கப்பட்ட மழையளவில் 2 சதவீதத்திற்கும் குறைவான அளவே இதுவரை பதிவாகியுள்ளது; மேலும், இப்பகுதியின் பெரும்பகுதிகளில் ஆறுகளில் பாயும் நீரின் அளவு மிகக் குறைவாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cebd191-36b6-4605-890e-8ec00518aac1/26-6a62f382849ca.webp' /></p><p> </p><p>இந்தக் கோடையில் நாட்டின் பல பகுதிகளில் பரவலான வறண்ட வானிலை நிலவியதைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் வறட்சி நிலையை அறிவிக்கும் முதல் பகுதியாக இது அமைந்துள்ளது. </p><p>மேலும், பதிவு செய்யப்பட்டதிலேயே மிக வெப்பமான கோடைக்காலங்களில் ஒன்றை மக்கள் அனுபவித்து வரும் நிலையில், வறட்சி நிலையை அறிவித்த பிரித்தானியாவின் முதல் பகுதி இதுவாகும். </p><p>ஜூலை மாதத்திற்கான சராசரி மழையளவில் வெறும் 3 சதவீதத்தை மட்டுமே பிரித்தானியா பெற்றுள்ளதால், நாட்டின் பல பகுதிகள் நீண்டகால வறண்ட வானிலை நிலையை எதிர்கொண்டுள்ளன.</p><p></p><p> </p><p>பிரித்தானியாவின் சில பகுதிகள் இதற்கு முன்பும், குறிப்பாக 2018 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளிலும் வறட்சியைச் சந்தித்துள்ளன. தொடர்ந்து நிலவும் வெப்பமான வானிலையால், லட்சக்கணக்கான குடும்பங்கள் குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்கான தடையைச் சந்திக்க நேர்ந்துள்ளது. +</p><p>தேம்ஸ் வாட்டர் (Thames Water) நிறுவனம், தனது குடிநீர் வாடிக்கையாளர்களில் 10 மில்லியன் பேருக்குத் தற்காலிகமாக ஹோஸ்பைப் (hosepipe) பயன்பாட்டுத் தடையை விதித்துள்ளது. மேலும் 2.4 மில்லியன் வாடிக்கையாளர்கள் கட்டுப்பாடுகளுக்குள் வருவார்கள் என்று சவுத் ஈஸ்ட் வாட்டர் (South East Water) நிறுவனமும் இந்த வாரம் அறிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c996f0e-1051-4885-879e-648db9ebf7a0/26-6a62f3833c4ff.webp' /></p><h2>1,000 பவுண்டுகள் அபராதம்</h2><p> </p><p>சசெக்ஸ், சர்ரே, ஹாம்ப்ஷயர் மற்றும் பெர்க்ஷயர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வீடுகளும் தற்போது இந்த மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பிரித்தானியர் ஒருவர் ஹோஸ்பைப்பைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், 1,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும்; இருப்பினும், இதிலிருந்து சில விலக்குகளும் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad7023b0-b7f7-4d4d-80e6-fa4af85eff87/26-6a62f383dfe24.webp' /></p><p> 'புளூ பேட்ஜ்' (Blue Badge) வைத்திருப்பவர்கள், முன்னுரிமைச் சேவைகள் பதிவேட்டில் (Priority Services Register) உள்ளவர்கள் மற்றும் மருத்துவத் தேவைக்காகக் குழாய் (hose) மூலம் தண்ணீர் பயன்படுத்த வேண்டியவர்கள் ஆகியோருக்கு இவிதிமுறைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.</p><p> மட்டுமின்றி, புதிதாகப் பதிக்கப்பட்ட புல்வெளியில் நான்கு வாரங்களுக்குப் பிறகு தண்ணீர் பாய்ச்சவும், செல்லப்பிராணிகளைச் சுத்தம் செய்யவும், மீன் குளங்களை நிரப்பவும் குழாயைப் (hose) பயன்படுத்தலாம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T05:02:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/moon-transit-in-scorpio-who-get-bad-luck-1784866713"></link>
            <id>https://manithan.com/article/moon-transit-in-scorpio-who-get-bad-luck-1784866713</id>
            <summary type="text">நவகிரகங்களில் சந்திரன் மிகவும் வேகமாக நகரும் மற்றும் மென்மையான கிரகமாகக் கருதப்படுகிறார். இன்று சந்திரன் துலாம் ராசியிலிருந்து விலகி, தனது நீச்ச வீடான...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களில் சந்திரன் மிகவும் வேகமாக நகரும் மற்றும் மென்மையான கிரகமாகக் கருதப்படுகிறார். இன்று சந்திரன் துலாம் ராசியிலிருந்து விலகி, தனது நீச்ச வீடான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளது.</p><p>

ஜோதிட நம்பிக்கையின்படி, சந்திரன் இந்த நிலையில் இருக்கும் காலத்தில் சில ராசிக்காரர்களுக்கு உணர்வுரீதியான ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம்.மேலும், நிதி மற்றும் தொழில் தொடர்பான விஷயங்களிலும் சில சவால்களைச் சந்திக்க நேரிடும் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0a83964-8ff8-4da8-ace2-759d770921be/26-6a62eff1ed76d.webp' /></p><p>
எனவே, இந்த காலகட்டத்தில் குறிப்பிட்ட ராசிக்காரர்கள் செலவுகள், தொழில் தொடர்பான முடிவுகள் மற்றும் அன்றாடத் திட்டமிடல் போன்றவற்றில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.&nbsp;</p><p>குறித்த பெயர்ச்சியின் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் பிரதிபலித்தாலும், அதிகளவில் சவால்களையும், பிரச்சினைகளையும் சந்திக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e652a29-0f53-4ddd-90b8-d8a22b9ce7c0/26-6a62eff29d0bd.webp' /></p><p>சந்திரன் தற்போது மேஷ ராசியின் எட்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால், எதிர்பாராத செலவுகள் அல்லது பண இழப்புகள் ஏற்படலாம். எனவே வரவு-செலவுகளை கவனமாக திட்டமிடுங்கள். </p><p>சொத்து தொடர்பான முக்கிய முடிவுகளை தற்காலிகமாகத் தவிர்ப்பது நல்லது. உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். பணியில் முன்னேற்றம் தாமதமாகும் நிலை காணப்படுகின்றது.</p><p>தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். தம்பதிகளுக்குள் சிறிய கருத்து வேறுபாடுகளும் பெரிய மோதாலாக மாற வாய்ப்பு உள்ளது.
</p><h2>
மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6300e9f5-25ae-4068-b349-1b9bb0456bcc/26-6a62eff349fa9.webp' /></p><p>
மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திரன் ஆறாம் வீட்டில் சஞ்சரிப்பதால், வேலை மற்றும் தொழிலில் சில சவால்கள் ஏற்படலாம்.</p><p> நீதிமன்ற வழக்குகள், எதிரிகளால் ஏற்படும் பிரச்சினைகள் போன்றவற்றில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.&nbsp; இந்த காலகட்டத்தில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும்போது கூடுதல் கவனம் அவசியம். </p><p>பொறுமையுடன் செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். கொடுத்த கடனை வசூலிப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.</p><h2>

தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a40c3be-5abf-4ee6-a866-2a9b44a26176/26-6a62eff3e97dc.webp' /></p><p></p><h2>
</h2><p>தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திரன் பன்னிரண்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால், எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கலாம். உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் மருத்துவச் செலவுகள் நிதி நிலையை பாதிக்க வாய்ப்புள்ளது.<br></p><p>பணியில் இருப்பவர்கள் கவனமாக செயல்பட வேண்டும். வியாபாரிகளுக்கு இது சவாலான காலமாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.</p><p> எந்த விஷயத்திலும் அலட்சியம் காட்டாமல் செயல்பட்டால் தேவையற்ற இழப்புகளைத் தவிர்க்கலாம். புதிய முதலீடுகளை இந்த காலகட்டத்தில் தவிர்ப்பது நல்லது.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T05:02:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் ஆபத்தான நிலைமை..! அறிகுறிகள் தென்படுபவர்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rat-fever-and-dengu-fever-high-warrning-people-1784860758"></link>
            <id>https://tamilwin.com/article/rat-fever-and-dengu-fever-high-warrning-people-1784860758</id>
            <summary type="text">நாட்டில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.&amp;nbsp;இலங்கையில் பதிவாகும் தொற்று நோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.&nbsp;</p><p>இலங்கையில் பதிவாகும் தொற்று நோய்களினால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.</p><p>ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய அந்தச் சங்கத்தின் பொருளாளர் எம்.ஏ.சி. பிரசாத், எலியின் சிறுநீரில் காணப்படும் பக்றீரியாவினால் இந்த நோய் பரவுவதாகத் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><h2>நோயினால் பாதிக்கப்படக்கூடியவர்கள்</h2><p>குறிப்பாக விவசாயிகள், சேறு நிறைந்த சூழலில் பணிபுரிவோர், வடிகான் சுத்திகரிப்பாளர்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கைவிடப்பட்ட வயல்வெளிகள் அல்லது சதுப்பு நிலங்களில் விளையாடும் சிறுவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6021c0b-4b52-4a61-90b4-8cd3bc88c822/26-6a62f06ce0c3a.webp' /></p><p>எலியின் சிறுநீரில் உள்ள லெப்டோஸ்பைரா பக்டீரியா, தோல், கண்கள் அல்லது சளி சவ்வுகளில் உள்ள சிறிய கீறல்கள் வழியாக மனித உடலுக்குள் நுழைகின்றது என்று தெரிவித்துள்ளார்.
</p><p>தேங்கி நிற்கும் நீர் உள்ள இடங்கள், தேங்கி நிற்கும் நீர்நிலைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் குளிக்கும் போது இந்நோய் பரவும் அபாயம் உள்ளது என்றும், எனவே அத்தகைய சமயங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
சேறு நிறைந்த சூழலில் பணிபுரியும் முன், மருத்துவ ஆலோசனையின் படி டாக்ஸிசைக்ளின் எனப்படும் பொடுகு நீக்கும் மருந்தை பெறுவது மிகவும் முக்கியம் என்றும், அதனை மருத்துவ அதிகாரி மற்றும் பொது சுகாதார ஆய்வாளர்களின் அலுவலகங்களிலிருந்து இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>அறிகுறிகள் தென்படுபவர்களுக்கு எச்சரிக்கை</h2><p> </p><p>இருப்பினும், மருத்துவ ஆலோசனையின் பெயரில் உரிய தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/831093e2-a23b-4f59-b37a-12a1cb07af65/26-6a62f06dc7f7c.webp' /></p><p>
டெங்கு காய்ச்சல் மற்றும் டெங்குவின் ஆரம்ப அறிகுறிகள் மிகவும் ஒத்தவை என்றும், காய்ச்சல், தலைவலி, உடல் வலி மற்றும் கண்களில் வலி போன்ற அறிகுறிகள் தோன்றக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>

மேலும், அத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், தாமதமின்றி மருத்துவரை அணுகி, நோயை சரியாக கண்டறிய தேவையான இரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>குறித்த அறிகுறிகள் தென்பட்டால் சுயமாக வைத்தியம் செய்வதையோ அல்லது சிகிச்சையைப் தாமதப்படுத்துவதையோ தவிர்த்து, உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறு இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் பொதுமக்களை வலியுறுத்துகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T04:56:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கு பதற்றத்தால் 100 அமெரிக்க டொலரை தாண்டிய மசகு எண்ணெய் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/oil-prices-cross-100-on-middle-east-tensions-1784868688"></link>
            <id>https://canadamirror.com/article/oil-prices-cross-100-on-middle-east-tensions-1784868688</id>
            <summary type="text">மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இரு மாத வீழ்ச்சிக்குப் பின்னர் மீண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இரு மாத வீழ்ச்சிக்குப் பின்னர் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.</p><p>இதன் காரணமாக, ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலரைக் கடந்து அதிகரித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f83ee7e6-9e70-4493-8cb6-90bbb35a2385/26-6a62ef525c3c9.webp' /></p><p>இதன்படி, சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 100.60 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
</p><p>
அதேபோன்று, WTI ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் விலையும் அதிகரித்து 92.13 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-24T04:52:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருப்பன் வாரான் டா, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் சூர்யாவின் கருப்பு... எந்த டிவி, எப்போது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/suriya-karuppu-movie-world-television-premiere-1784867653"></link>
            <id>https://cineulagam.com/article/suriya-karuppu-movie-world-television-premiere-1784867653</id>
            <summary type="text">கருப்புநடிகர் சூர்யா, சூரரைப் போற்று படத்திற்கு பிறகு பெரிய அளவில் ஹிட் கொடுக்க போராடி வந்தார். பெரிய பட்ஜெட்டில், வித்தியாசமான கதைக்களத்தில் உருவான க...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கருப்பு</h2><p>நடிகர் சூர்யா, சூரரைப் போற்று படத்திற்கு பிறகு பெரிய அளவில் ஹிட் கொடுக்க போராடி வந்தார். </p><p>பெரிய பட்ஜெட்டில், வித்தியாசமான கதைக்களத்தில் உருவான கங்குவா வசூலில் வேறு புரட்சி செய்யும் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் படம் முதலுக்கே மோசமாக படு தோல்வி அடைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45b70b8d-5f83-4225-8db7-4243ec2f6fe5/26-6a62ee1e48d7e.webp' /></p><p> </p><p>அதன்பின் சூர்யாவின் சினிமா கெரியரை தூக்கி நிறுத்தும் வகையில் அமைந்த திரைப்படம் தான் கருப்பு. </p><p>ஆர்.ஜே.பாலாஜி இயக்கி, முக்கிய வேடத்தில் நடித்த இந்த கருப்பு திரைப்படத்தில் சூர்யா, த்ரிஷா என பலர் நடித்தார்கள். கடந்த மே மாதம் வெளியான இப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கி மாஸ் வசூல் செய்து இந்த வருடத்தின் வெற்றிப் படங்களின் லிஸ்டில் இடம் பிடித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/732c07b1-656c-4497-af88-7760a62bb22b/26-6a62ee1d79e72.webp' /></p><h2> 
தொலைக்காட்சி</h2><p>
ரூ. 130 முதல் ரூ. 150 கோடி வரையிலான பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ. 300 கோடிக்கும் மேலான வசூல் வேட்டை செய்தது.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இப்படம் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2de4b2cb-884f-4933-9230-c608534abedf/26-6a62ee1c9d6f2.webp' /></p><p> </p><p>ஜீ தமிழில் சூர்யாவின் பிளாக் பஸ்டர் திரைப்படம் கருப்பு ஒளிபரப்பாக உள்ளது, ஆனால் எப்போது என்ற விவரம் வெளியாகவில்லை.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Y4fZuCDEtWI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-24T04:50:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[விளையாட்டுத்துறை அமைச்சர் மீது குற்றம் சுமத்தும் பிரபல வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/yupun-disappointed-by-sports-minister-s-1784868129"></link>
            <id>https://tamilwin.com/article/yupun-disappointed-by-sports-minister-s-1784868129</id>
            <summary type="text">&amp;nbsp;விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே மீது பிரபல வீரர் யுபுன் அபேகோன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே மீது பிரபல வீரர் யுபுன் அபேகோன் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுவதற்குத் தான் அரசாங்கத்திடம் 300,000 அமெரிக்க டொலர்களை நிபந்தனையாகக் கேட்டதாக வெளியாகும் செய்திகளை இலங்கை ஓட்டப்பந்தய வீரர் யுபுன் அபேகோன் முற்றாக மறுத்துள்ளார்.</p><p> 
இந்தத் தொகையானது முந்தைய அரசாங்கங்களால் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள தொகைகளே தவிர, புதிய கோரிக்கை அல்ல என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e38a59b-d9be-4db9-9f8c-c75cb7f9d540/26-6a62ed2294db9.webp' /></p><p>
</p><p>விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அண்மையில் தெரிவித்த கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.</p><p>
2021 ஆம் ஆண்டு முதல் எனக்கும் எனது பயிற்சி குழுவினருக்கும் வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகைகளே இந்த 300,000 டாலர் எனக் குறிப்பிட்ட யுபுன் அபேகோன், இது தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்டுள்ளார்.
</p><p>நான் தொடர்ந்து போட்டியிடுவதற்கு 300,000 டொலர்களை நிபந்தனையாகக் கேட்கவில்லை. முந்தைய அமைச்சர்கள் அளித்த வாக்குறுதிகள் மற்றும் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையிலேயே இந்தத் தொகை அமைந்திருந்தது.
</p><p>இதற்கான அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளன. நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகத் தீர்க்கப்படாமல் உள்ள இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்குமாறு மட்டுமே நான் அமைச்சரிடம் கேட்டுக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.
</p><p>அண்மையில் தடகள விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அபேகோன், அமைச்சரின் பகிரங்கக் கருத்துக்கள் தனது கோரிக்கையைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கவலை வெளியிட்டார்.
</p><p>'யுபுன் எம்மிடம் 300,000 டொலர் கேட்டார், எங்களால் கொடுக்க முடியாது' என்ற தவறான எண்ணத்தை அமைச்சரின் கூற்று உருவாக்கியுள்ளது.
</p><p>இக்கருத்து தன்னை அரசியல் சேற்றுக்குள் இழுப்பதாகவும், பணத்துக்காக மட்டுமே இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியதாக மக்கள் மத்தியில் காட்ட முற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
</p><p>தான் ஒருபோதும் அரசியலில் ஈடுபட்டதில்லை என்றும், வேறு ஒரு நாட்டிற்காகப் போட்டியிடும் வாய்ப்புகள் இருந்தபோதிலும் இலங்கைக்காக விளையாடுவதற்கே முன்னுரிமை அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>
"இத்தாலிய குடியுரிமையைப் பெறும் வாய்ப்புகள் இருந்தபோதிலும், நான் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதையே தேர்ந்தெடுத்தேன். </p><p>இலங்கை தேசியக் கொடியைப் பெருமையுடன் ஏந்திச் சென்றேன். நாட்டிற்காகப் விளையாடிய ஒரு விளையாட்டு வீரனை இவ்வாறு சித்தரிப்பதை நான் வன்மையாக மறுக்கிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
இந்த 300,000 டாலர் தொகையானது தனது பயிற்சிக் கட்டணங்கள் மற்றும் இலங்கைக்காகப் போட்டியிட்டபோது அவரும் அவரது குழுவினரும் செய்த செலவுகளுக்கான நிலுவை மட்டுமே தவிர புதிய நிதியுதவி அல்ல என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.</p><p>
அரசாங்கம் பணம் தர மறுத்ததால் தான் ஓய்வு பெறவில்லை என்றும், பல வருடங்களாகத் தீர்க்கப்படாத பிரச்சினைகள் மற்றும் விளையாட்டுத் துறையில் உள்ள அமைப்பின் மீதான விரக்தியினாலேயே தான் தடகளப் போட்டிகளில் பங்கேற்பதிலிருந்து ஓய்வு பெற்றதாகவும் யுபுன் அபேகோன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T04:42:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடி உதிர்வை நிரந்தரமாக நிறுத்த உதவும் நல்லெண்ணெய்.., எப்படி பயன்படுத்துவது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/how-to-use-sesame-oil-to-stop-hair-fall-1784867395"></link>
            <id>https://news.lankasri.com/article/how-to-use-sesame-oil-to-stop-hair-fall-1784867395</id>
            <summary type="text">பொதுவாக ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் முடி உதிர்வு.

தூக்கமின்மை, உணவு முறை, மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் முடி உதிர்வு.</p><p>

தூக்கமின்மை, உணவு முறை, மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற காரணங்களால் முடி உதிர்வு பிரச்சனைகள் ஏற்படுகிறது.</p><p>

அந்தவகையில், முடி உதிர்வை நிரந்தரமாக நிறுத்த நல்லெண்ணெய்யை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.</p><p>நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ, மக்னீசியம், மற்றும் துத்தநாகம் (ஜிங்க்) போன்ற உடல் நலத்திற்கு உதவும் சத்துக்கள் நிறைந்துள்ளன.</p><p>&nbsp;</p><h2>

எப்படி பயன்படுத்துவது?</h2><p>

முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நல்லெண்ணெயை எடுத்து மிதமாக சூடுபடுத்தவும்.
</p><p>
பின் மிதமான சூட்டில் உள்ள எண்ணெயை உச்சந்தலை மற்றும் முடியின் வேர்வரை நன்கு தேய்க்கவும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f80fcc9f-a9ab-444d-8936-963ee056a7fd/26-6a62ea458698b.webp' /></p><p>அடுத்து விரல் நுனிகளால் உச்சந்தலையில் வட்ட வடிவில் 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.
</p><p>
இதற்கடுத்து 40 நிமிடங்கள் அப்படியே ஊறவிடவும். பின்னர் மென்மையான ஷாம்பூவை பயன்படுத்தி தலைக்கு குளிக்கலாம்.</p><h2>

கிடைக்கும் நன்மைகள்
</h2><p>
நல்லெண்ணெயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ஒமேகா கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் குளிர்கால முடி உதிர்வை குறைகிறது.
</p><p>
நல்லெண்ணெய் உச்சந்தலையை சுத்தமாக வைத்திருப்பதோடு, அரிப்பு மற்றும் பொடுகு தொல்லையை குறைக்கிறது.</p><p>
</p><p></p><p>முடியில் ஏற்படும் வறட்சி, முடியின் நுனியில் ஏற்படும் பிளவுகள் மற்றும் மாசுக்களால் ஏற்படும் பாதிப்புகளை இது சரிசெய்கிறது.</p><p>

இந்த எண்ணெய் நரைப்பதை தடுத்து, முடியின் கருமை நிறத்தை பாதுகாக்க உதவுகிறது.</p><p>

மேலும், உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T04:32:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[படகில் இந்தியா நுழைய முயன்ற இரு இலங்கையர்கள் கைது ; தமிழக பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-nadu-police-are-actively-investigating-1784867024"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-nadu-police-are-actively-investigating-1784867024</id>
            <summary type="text">கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த இருவர், இன்று காலை கடல் வழியாக படகில் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றபோது தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளன...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த இருவர், இன்று காலை கடல் வழியாக படகில் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றபோது தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h3>ஆரம்பகட்ட விசாரணை</h3><p>



கைது செய்யப்பட்ட இருவரும் தமிழகத்தின் இராமேஸ்வரம் கடற்கரையில் கரையிறங்கி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றபோதே பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65b6b274-d8a0-4f3b-93f8-abbb7b20bdbd/26-6a62ed0d246b3.webp' /></p><p>கைது செய்யப்பட்டவர்கள் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் மற்றும் விஸ்வநாத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
</p><p>


இவர்கள் தமிழகத்திற்குள் போதைப்பொருள் கடத்தல் நோக்கில் ஊடுருவியவர்களா அல்லது மோசடிக் கும்பலுடன் தொடர்புடையவர்களா என்பது குறித்து தமிழக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>



மேலும், கைது செய்யப்பட்ட இருவரும் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் சரளமாக உரையாடக்கூடியவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T04:23:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்ற அமர்வு : நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் இன்று]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/debate-no-confidence-motion-against-justice-minist-1784866162"></link>
            <id>https://ibctamil.com/article/debate-no-confidence-motion-against-justice-minist-1784866162</id>
            <summary type="text">இன்றைய&amp;nbsp;(24.07.2026)&amp;nbsp;நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில்&amp;nbsp;சற்று முன்னர் ஆரம்பமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>இன்றைய<span style="font-size: 14px; color: inherit;">&nbsp;</span>(24.07.2026)<span style="font-size: 14px; color: inherit;">&nbsp;</span><span style="color: inherit;">நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (</span>Jagath Wickramaratne<span style="color: inherit;">) தலைமையில்&nbsp;</span><span style="color: inherit;">சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.</span></p><p>காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.00 வரை நடைபெறவுள்ளது.</p><p>அதன்படி, காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.</p><h2>நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்&nbsp;</h2><p> </p><p>காலை 10.00 மணி முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27 (2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>அதனைத் தொடர்ந்து காலை 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலான காலப்பகுதிக்குள் நீதியமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வாக்கெடுப்பை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ede2174c-ebb1-4244-9aee-db25a08c3959/26-6a62f8ee67ef7.webp' /></p><p>எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்த 37 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் கூடிய நம்பிக்கையில்லா பிரேரணை நேற்று முன்தினம் (22) சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டது.
</p><p>
அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறையின்போது, தமக்குரிய அமைச்சுப் பொறுப்புகளை அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உரிய முறையில் நிறைவேற்றத் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்தே இந்த நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7w3j8717jt0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-24T04:21:22+00:00</updated>
        </entry>
    </feed>
