<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-06T16:47:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய கருத்துக் கணிப்பில் டிரம்ப் அரசுக்கு பின்னடைவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/polls-show-majority-of-americans-oppose-trump-1786033959"></link>
            <id>https://canadamirror.com/article/polls-show-majority-of-americans-oppose-trump-1786033959</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட அண்மைய கருத்துக் கணிப்பு முடிவுகள், அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் போர் நடவடிக்கைகளுக்கு மக்களிடையே கடும் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட அண்மைய கருத்துக் கணிப்பு முடிவுகள், அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் போர் நடவடிக்கைகளுக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு நிலவி வருவதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.</p><p>
அமெரிக்க மக்களில் சுமார் 60 சதவீதத்தினர் அதிபர் டிரம்ப் போருக்குச் செல்ல எடுத்த முடிவை கடுமையாக எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
</p><p>எனினும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த வாக்காளர்களில் 60 சதவீதத்தினர் அதிபரின் இந்த முடிவுக்குத் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
 எனினும், ஒட்டுமொத்த அமெரிக்கர்களில் பெரும்பான்மையானோர் தமது எதிர்ப்பை மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளனர்.</p><p>
இந்தக் கருத்துக் கணிப்பில் வெளிவந்த மற்றொரு மிக முக்கிய அம்சம், 'போர் மற்றும் பயங்கரவாத விவகாரங்களை எந்தக் கட்சி சிறப்பான முறையில் கையாள்கிறது?' என்ற கேள்வியாகும்.</p><p>
2024ஆம் ஆண்டில் இந்த கேள்வி கேட்கப்பட்டபோது, குடியரசுக் கட்சியே இதனைச் சிறப்பாகக் கையாளும் என 10 சதவீதத்திற்கும் அதிகமான பெரும்பான்மை மக்கள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0636c25-486f-4011-9d4a-9aaa9009b17f/26-6a74b72964f89.webp' /></p><p>
திங்கள்கிழமை நடத்தப்பட்ட அண்மைய கருத்துக் கணிப்பில், 38% மக்கள் ஜனநாயகக் கட்சியும், 37% மக்கள் குடியரசுக் கட்சியும் இதனைச் சிறப்பாகக் கையாளும் எனக் கூறியுள்ளனர்.
</p><p>குறிப்பாக நாட்டின் பாதுகாப்பு, போர் மற்றும் பயங்கரவாதம் போன்ற விவகாரங்களில் வாக்காளர்களின் பார்வை பெருமளவில் மாறியுள்ளதை இந்தத் தரவு காட்டுகிறது.
</p><p>வரவிருக்கும் நவம்பர் மாத இடைக்காலத் தேர்தலை நோக்கியுள்ள அதிபர் டிரம்ப் மற்றும் அவரது குடியரசுக் கட்சிக்கு இந்தக் புள்ளிவிவரங்கள் பெரும் பின்னடைவாகவும் கடுமையான சவாலாகவும் பார்க்கப்படுகின்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T16:41:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்-கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகள் நிறுத்தம் ; மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fishing-activities-emergency-warning-fishermen-1786034486"></link>
            <id>https://jvpnews.com/article/fishing-activities-emergency-warning-fishermen-1786034486</id>
            <summary type="text">மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்பு கரையோர மீன்பிடி நடவடிக்கைகளுக்குப் பொருத்தமற்றது என மீன்பிடி மற்றும் நீரியல் வளங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்பு கரையோர மீன்பிடி நடவடிக்கைகளுக்குப் பொருத்தமற்றது என மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (06) வெளியிட்ட பலத்த காற்று தொடர்பான ஆபத்தான வானிலை எச்சரிக்கை அறிவித்தலுக்கு அமைவாகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/316e0285-6e26-4e59-95c9-c818f830f4b2/26-6a74b93760868.webp' /></p><p>இதற்கமைய, மறுஅறிவித்தல் வரை குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகக் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அனைத்து மீனவர்களுக்கும் கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

மேலும், ஏனைய பிரதேசங்களிலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்படும் படகுகளும் மாத்தறையிலிருந்து பொத்துவில் வரை பெயரிடப்பட்டுள்ள ஆபத்தான கடற்பிரதேசத்திற்குள் நுழைவதையோ அல்லது அங்கு மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதையோ தவிர்க்குமாறு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. </p><p>

நிலவும் வானிலை நிலைமை குறித்துப் வௌியிடப்படும் எதிர்கால அறிவித்தல்கள் தொடர்பில் தொடர்ச்சியான அவதானத்துடன் இருக்குமாறும், பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றிப் பொறுப்புடன் செயற்படுமாறும் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T16:41:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் போலி ஆவணங்கள் மூலம் கடத்த முயன்ற 392 வாகனங்கள் பறிமுதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/392-vehicles-at-marine-ports-in-investigation-1786033376"></link>
            <id>https://canadamirror.com/article/392-vehicles-at-marine-ports-in-investigation-1786033376</id>
            <summary type="text">போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாங்கப்பட்டு, கடல் வழியே வெளிநாடுகளுக்குக் கடத்த முயன்ற 392 வாகனங்களை கனடிய பொலிஸாரும், கனடா எல்லைச் சேவைகள் முகவர் நிறுவன...</summary>
            <content type="html"><![CDATA[<p>போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாங்கப்பட்டு, கடல் வழியே வெளிநாடுகளுக்குக் கடத்த முயன்ற 392 வாகனங்களை கனடிய பொலிஸாரும், கனடா எல்லைச் சேவைகள் முகவர் நிறுவனமும் மீட்டுள்ளன. </p><p>
பறிமுதல் செய்யப்பட்ட இந்த வாகனங்களின் மொத்த மதிப்பு 28 மில்லியன் கனடிய டாலர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.</p><p> 
கனடாவின் துறைமுகங்கள் வழியே சந்தேகத்திற்கு இடமான முறையில் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதைக் தடுப்பதற்காக, 'இன்டர்போல் ஒட்டாவா'வின் உதவியுடன் பொலிஸார் ஓராண்டு முன்னோடித் திட்டத்தைத் தொடங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6aa16a8-829f-4875-90f4-7159a7cbca2d/26-6a74b4e2e138f.webp' /></p><p> 
பன்னாட்டுச் சர்வதேசக் குற்றக் குழுக்கள், திருடப்பட்ட அல்லது போலியாகத் தயாரிக்கப்பட்ட நபர்களின் அடையாளங்களைப் பயன்படுத்தி வாகனக் கடன்களைப் பெற்று வாகனங்களை வாங்குவதாகவும், பின்னர் அதே ஆவணங்களைக் கொண்டு காப்பீடு எடுத்து மோசடியில் ஈடுபடுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. </p><p>
இத்தகைய மோசடி வாகனங்கள் கனடாவிலிருந்து ஏற்றுமதியாவதை விரைவாகக் கண்டறிந்து தடுப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 
மோசடி மூலம் பெறப்படும் கனடிய வாகனங்களின் கடத்தலைத் தடுக்க இந்த நடவடிக்கை உதவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>உற்பத்தியாளர்கள், காப்பீட்டு நிறுவனங்கள், கப்பல் நிறுவனங்கள், சட்ட அமலாக்க முகவர் நிலையங்கள் மற்றும் அரசாங்கம் ஆகியவை இணைந்தே இந்தச் சிக்கலான பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p> 
கடந்த ஆண்டில் மட்டும் கனடாவின் பல்வேறு துறைமுகங்கள் மற்றும் இரயில் நிலையங்களில் இருந்து 1,590 திருடப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T16:30:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இணையவழி சூதாட்டத்திற்கு எதிராக அதிரடி ; 146 தளங்கள் முடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-orders-closure-146-illegal-gambling-web-1786033784"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-orders-closure-146-illegal-gambling-web-1786033784</id>
            <summary type="text">இலங்கையில் இயங்கி வந்த 146 அனுமதியற்ற இணையவழி சூதாட்ட இணையதளங்களை முடக்குமாறு அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இயங்கி வந்த 146 அனுமதியற்ற இணையவழி சூதாட்ட இணையதளங்களை முடக்குமாறு அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) தெரிவித்துள்ளது.</p><p></p><p>
</p><p>
சட்டவிரோத இணையத்தள சூதாட்ட நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த இணையதளங்களை இலங்கைக்குள் அணுக முடியாத வகையில் தடுக்கும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/839dcaf5-c46d-4b76-a068-13f25ca521cb/26-6a74b67982266.webp' /></p><p>நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் சூதாட்ட ஒழுங்குமுறை அதிகாரசபை வழங்கிய அறிவித்தலின் அடிப்படையிலேயே இந்த ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
2025ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சூதாட்ட ஒழுங்குமுறை அதிகாரசபைச் சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் அதிகாரங்களுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், குறித்த சட்டத்தின் 15, 16 மற்றும் 18ஆம் பிரிவுகளின் கீழ் செல்லுபடியாகும் உரிய அனுமதிப் பத்திரமின்றி இலங்கைக்குள் இணையவழி சூதாட்ட சேவைகளை நடத்துவது அல்லது அவற்றை ஊக்குவிப்பது, சட்டத்தின் 44ஆம் பிரிவின்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என சூதாட்ட ஒழுங்குமுறை அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.
</p><p>
இந்த நடவடிக்கையின் மூலம் சட்டவிரோத இணையவழி சூதாட்டத்தை கட்டுப்படுத்துவதுடன், பொதுமக்களை சட்டவிரோத மற்றும் ஒழுங்குமுறையற்ற சூதாட்ட நடவடிக்கைகளிலிருந்து பாதுகாக்கும் நோக்கமும் முன்னிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T16:30:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஸ்யாவின் இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை பதம் பார்த்தது உக்ரைன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ukraine-attacks-two-russian-oil-refineries-1786032042"></link>
            <id>https://ibctamil.com/article/ukraine-attacks-two-russian-oil-refineries-1786032042</id>
            <summary type="text">&amp;nbsp;ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் இரண்டை தாம் தாக்கியதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

 சமூக ஊடகப் பதிவில், உக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் இரண்டை தாம் தாக்கியதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

 சமூக ஊடகப் பதிவில், உக்ரைனியப் பாதுகாப்புப் படைகள் யாரோஸ்லாவ்லில் உள்ள ஸ்லாவ்நெஃப்ட்-யானோஸ் சுத்திகரிப்பு நிலையத்தையும், பாஷ்கோர்டோஸ்தானில் உள்ள பாஷ்நெஃப்ட்-நோவோயில் சுத்திகரிப்பு நிலையத்தையும் தாக்கியதாக அவர் கூறினார்.</p><p>&nbsp;இப்பகுதியைத் தாக்கிய ஆளில்லா விமானங்கள் இடைமறிக்கப்பட்டதாகவும், ஆனால் கீழே விழுந்த சிதைவுகள் தீப்பொறிகளை ஏற்படுத்தி சுத்திகரிப்பு நிலையத்தின் சேமிப்புக் கிடங்குகளை சேதப்படுத்தியதாகவும் யாரோஸ்லாவ் ஆளுநர் கூறினார்.
</p><p>

</p><h2>பலமுறை குறிவைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையம்</h2><p>ரஷ்யாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான இது, மொஸ்கோவின் போர் முயற்சிகளை சீர்குலைக்கும் முயற்சியில் உக்ரைனால் சமீப மாதங்களில் பலமுறை குறிவைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c2bd257-bffc-4738-b717-ff99cc5ba414/26-6a74b43f378e3.webp' /></p><p>இதற்கிடையில், உக்ரைன் முழுவதும் உள்ள அதிகாரிகள், ஒரு பொதுப் பேருந்து மற்றும் உக்ரைனிய கோதுமையை ஏற்றிச் சென்ற கப்பல் மீதான தாக்குதல் உட்பட பல்வேறு ரஷ்யத் தாக்குதல்கள் நடந்ததாகத் தெரிவித்தனர்.

உக்ரைனில் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T16:20:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெர்மன் விமான நிலையத்தில் வெடிகுண்டு பொருத்தப்பட்ட ட்ரோன்! தப்பியது உக்ரைன் விமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/attempted-attack-on-ukrainian-plane-in-germany-1786032314"></link>
            <id>https://ibctamil.com/article/attempted-attack-on-ukrainian-plane-in-germany-1786032314</id>
            <summary type="text">ஜெர்மனியின் விமான நிலையம் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த உக்ரைன் சரக்கு விமானத்தின் அருகே வெடிப்பொருட்கள் பொருத்திய ட்ரோன் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜெர்மனியின் விமான நிலையம் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த உக்ரைன் சரக்கு விமானத்தின் அருகே வெடிப்பொருட்கள் பொருத்திய ட்ரோன் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
ஜெர்மனியின் லைப்சிக்/ஹாலே (Leipzig/Halle) விமான நிலையத்திலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
</p><p>
இதன்படி குறித்த விமானத்தில் இராணுவப் பயன்பாட்டுக்கான வெடிமருந்துகள் ஏற்றப்பட்டிருந்ததாக ஜெர்மன் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
</p><p></p><h2> பயங்கரவாத எதிர்ப்பு விசாரணை </h2><p>
இது குறித்து அந்நாட்டு காவல்துறை அறிக்கையை மேற்கொள்காட்டி வெளியிடப்பட்ட தகவலில், கண்டுப்பிடிக்கப்பட்ட ட்ரோனில் பொருத்தப்பட்டிருந்த வெடிபொருட்கள் உயர்தர இராணுவ பயன்பாட்டுடையது என தடவியல் நிர்ணர்கள் உறுதிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52cb7068-f38f-4800-b9dc-169dba2eaf1f/26-6a74b3cb8324e.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில் குறித்த ட்ரோனில் தொழினுட்ப கோளாறு ஏற்றட்டதன் காரணமாகவே அது வெடிக்காமல் போனதாக சில ஆய்வாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.
</p><p>


இந்த சம்பவம் தொடர்பான பயங்கரவாத எதிர்ப்பு விசாரணை தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஜெர்மனி பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.</p><p>


லைப்சிக்/ஹாலே விமான நிலையம் முக்கிய சரக்கு போக்குவரத்து மையமாக மட்டுமல்லாமல், நேட்டோ (NATO) இராணுவ தளவாட நடவடிக்கைகளுக்கும் முக்கிய மையமாக விளங்குகிறது.

 இதனை ஜெர்மன் அரசு முக்கிய தேசிய உள்கட்டமைப்பாக அறிவித்துள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T16:18:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயங்கரவாதச் செயல்பாட்டிற்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டவர் படையில் இருந்து நீக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadian-armed-forces-member-charged-1786031062"></link>
            <id>https://canadamirror.com/article/canadian-armed-forces-member-charged-1786031062</id>
            <summary type="text">கனடாவில் பயங்கரவாதச் செயல்பாடுகளுக்கு வசதி செய்து கொடுத்ததாகக் கடந்த ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட கியூபெக் பிராந்தியத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தற்போது க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் பயங்கரவாதச் செயல்பாடுகளுக்கு வசதி செய்து கொடுத்ததாகக் கடந்த ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட கியூபெக் பிராந்தியத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தற்போது கனடிய ஆயுதப்படையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.</p><p> 
மார்க்-அவுரேல் சாபோட் என்பவரது பட விலகல் குறித்தான மேலதிக விவரங்களை வழங்கத் தேசிய பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஷெரில் ஃபாரஸ்ட் மறுத்துவிட்டார். </p><p>இந்தத் தகவல்கள் 'தனியுரிமைச் சட்டத்தின்' கீழ் பாதுகாப்பக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/642b5433-9f06-469f-a7e5-f6f46ec033a3/26-6a74abd89d635.webp' /></p><p> 
கியூபெக் சிட்டி பகுதியில் அரசிற்கு எதிரான தீவிரவாதச் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, ஜூலை 2025 இல் ராயல் கனடியன் மவுண்டட் பொலிஸாரால் குற்றம் சாட்டப்பட்ட மூவரில் சாபோட்டும் ஒருவர் ஆவார். </p><p>
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான ஒரு ஆயுதப் படையை உருவாக்கத் திட்டமிட்டதாகவும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு வசதி செய்யத் தேவையான தீவிர நடவடிக்கைகளை எடுத்ததாகவும் பொலிஸ் திணைக்களம் குற்றம் சாட்டியிருந்தது. </p><p>
இதே வழக்கில் ஆயுதக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள நான்காவது சந்தேக நபர், இன்னமும் கனடிய ஆயுதப்படையில் உறுப்பினராக தொடர்கிறார்; எனினும் அவர் இராணுவப் பணிகளைச் செய்யவில்லை என்பதை செய்தித் தொடர்பாளர் ஃபாரஸ்ட் உறுதிப்படுத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T16:18:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் வீட்டு வாடகை மோசடி! பொலிஸார் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/eight-people-lose-30000-in-mississauga-apartment-1786031917"></link>
            <id>https://canadamirror.com/article/eight-people-lose-30000-in-mississauga-apartment-1786031917</id>
            <summary type="text">கனடாவின் ஒன்ராறியோ மாகாணம், மிசிசாகா நகரில் இடம்பெற்ற போலி வாடகை வீடு மோசடியில் 8 பேர் மொத்தம் 30,000 டாலர்களை இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ள பீல் பிராந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்ராறியோ மாகாணம், மிசிசாகா நகரில் இடம்பெற்ற போலி வாடகை வீடு மோசடியில் 8 பேர் மொத்தம் 30,000 டாலர்களை இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ள பீல் பிராந்திய பொலிஸார் இதில் தொடர்புடைய இரு சந்தேக நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
</p><p>கடந்த ஆண்டின் தொடக்கத்தில், சஸ்காட்செவன் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களைச் சேர்ந்த சந்தேக நபர்கள் இருவர், சமூக வலைத்தளங்கள் வாயிலாக மிசிசாகா நகரில் வீடுகள் வாடகைக்கு உள்ளதாக விளம்பரம் செய்துள்ளனர். </p><p>
வாடகைக்கு வீடு தேடிய நபர்கள் அந்த வீட்டிற்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ac6832c-4fbd-49d9-a75a-145806cfc37b/26-6a74af2f1a470.webp' /></p><p>அங்குத் தங்களை தற்போதைய வாடகைதாரர்கள் எனப் பொய்யாக அறிமுகப்படுத்திக்கொண்ட நபர்களைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.</p><p> 
பின்னர், இணையவழியில் வாடகை ஒப்பந்தங்களைச் செய்து, வீட்டை உறுதிப்படுத்துவதற்காக 'இ-டிரான்ஸ்ஃபர்' மூலம் முன்பணத்தையும் அனுப்பியுள்ளனர். </p><p>
ஆனால், குடியேறுவதற்காக அவர்கள் வீட்டிற்குச் சென்றபோதே, அது போலி விளம்பரம் என்றும், தங்களுக்கு வீடு கிடைக்காது என்றும் தெரியவந்துள்ளது. மேலும், தம்மை வீட்டு உரிமையாளர் எனக் கூறிக்கொண்ட நபரைத் தொடர்புகொள்ளவும் முடியவில்லை. </p><p>
பாதிக்கப்பட்ட 8 பேருக்கு இதுவரை தங்குமிடமோ அல்லது அவர்கள் செலுத்திய பணமோ திரும்பக் கிடைக்கவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 
சந்தேக நபர்கள், குறுகிய கால வாடகைச் சேவை இணையத்தளம் வழியாக அந்த வீட்டை தற்காலிகமாக வாடகைக்கு எடுத்து இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளனர். 
வீட்டின் உண்மையான உரிமையாளர்களுக்கு இதில் தொடர்பில்லை எனவும், சந்தேக நபர்களின் புகைப்படங்கள் எதுவும் தற்சமயம் கைவசம் இல்லை எனவும் பொலிஸார் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.</p><p>
பொதுமக்கள் வாடகைக்கு வீடு தேடும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பீல் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p>
வீட்டின் உரிமையாளர்களின் அடையாளத்தை எப்போதும் சரியாகச் சரிபார்க்கவும். போதிய முன்னெச்சரிக்கை மற்றும் கள விசாரணைகளை மேற்கொள்ளாமல், அவசரப்பட்டு ஆன்லைனில் ஒப்பந்தங்களில் கையெழுத்திடவோ அல்லது பணத்தை முன்பணமாக அனுப்பவோ வேண்டாம் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T16:17:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இந்திய வம்சாவளி நபருக்கு 8 ஆண்டுகள் சிறை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/drunk-driver-who-killed-couple-orphaned-infant-1786032432"></link>
            <id>https://canadamirror.com/article/drunk-driver-who-killed-couple-orphaned-infant-1786032432</id>
            <summary type="text">மதுபோதையில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டிச் சென்று இரு மிதிவண்டிப் பயணிகளைக் கொன்ற குற்றத்திற்காக 47 வயதான குல்தீப் சிங் கில் என்பவருக்குக் கனடா நீதிமன்றம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மதுபோதையில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டிச் சென்று இரு மிதிவண்டிப் பயணிகளைக் கொன்ற குற்றத்திற்காக 47 வயதான குல்தீப் சிங் கில் என்பவருக்குக் கனடா நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.</p><p>
கடந்த ஆண்டு செப்டம்பர் 13 அன்று வினிபெக்கில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 31 வயதான எகோர் போபோவ் மற்றும் அவரது துணைவியாரான 25 வயதான கெர்ரி பொன்னர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 
இச்சம்பவம் அவர்களின் 9 மாத பெண் குழந்தையை அனாதையாக்கியுள்ளது.
</p><p>சம்பவத்தன்று இரவு 9 மணியளவில் கெனாஸ்டன் வீதியில் அதிவேகமாக ஓட்டிச் சென்ற குல்தீப், பாதசாரிகள் மற்றும் மிதிவண்டிப் பாதையில் புகுந்து தம்பதியினர் மீது மோதியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c680d45-bbb4-4fdf-8dec-8bb1a0c470f4/26-6a74b1328498d.webp' /></p><p> </p><p>மணிக்கு 80 கி.மீ வேகம் மட்டுமே அனுமதிக்கப்பட்ட பகுதியில் அவர் 131 கி.மீ வேகத்தில் வாகனத்தை ஓட்டியுள்ளார்.</p><p>
மோதிய உடனடியாக வாகனத்தைக் கைவிட்டு அவர் தப்பி ஓடியபோதிலும், இரவு 11 மணியளவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவரது ரத்தத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் மதுவின் அளவு இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
</p><p>குல்தீப் சிங் கில் ஏற்கனவே 2016 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் மதுபோதையில் வாகனம் ஓட்டியது, உரிமம் இன்றி வாகனம் ஓட்டியது மற்றும் விபத்து ஏற்படுத்திவிட்டுத் தப்பியதற்காக அபராதமும் தடையும் விதிக்கப்பட்டவர் என்பது நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது.
</p><p>சாதாரண தண்டனைகள் இவரைத் திருத்தவில்லை என்பதையே இவரது முந்தைய குற்றப் பதிவுகள் காட்டுகின்றன என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
</p><p>வழக்கை விசாரித்த மாகாண நீதிமன்ற நீதிபதி டேவிட் அயர்லாந்து இச்சம்பவம் துயரத்திற்கும் மேலானது எனக் குறிப்பிட்டு பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்தார்.</p><p>போதையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்ததற்காக 6.5 ஆண்டுகள் மற்றும் விபத்து இடத்திலிருந்து தப்பிச் சென்றதற்காக 1.8 ஆண்டுகள் என மொத்தம் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை.கனடாவில் வாழ்நாள் முழுவதும் வாகனம் ஓட்டுவதற்குத் தடை.</p><p>இந்தியாவைச் சேர்ந்த நிரந்தரக் குடியுரிமை பெற்ற குல்தீப் சிங் கில், இந்தத் தண்டனைக்குப் பிறகு கனடாவில் இருந்து நாடுகடத்தப்படலாம் எனவும் நீதிபதி தெரிவித்தார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T16:16:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓகஸ்ட் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலை குறித்து வெளியான முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/information-released-regarding-the-price-laufs-gas-1786032931"></link>
            <id>https://jvpnews.com/article/information-released-regarding-the-price-laufs-gas-1786032931</id>
            <summary type="text">ஓகஸ்ட் மாதத்திற்கான லாஃப்ஸ் (Laugfs) வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படாது என அந்நிறுவனம் அறிவித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓகஸ்ட் மாதத்திற்கான லாஃப்ஸ் (Laugfs) வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள விலையிலேயே லாஃப்ஸ் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>

சர்வதேச சந்தையில் திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பிற பொருளாதார காரணிகளை கருத்தில் கொண்டு மாதந்தோறும் எரிவாயு விலைகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6339a675-58a7-4a30-8dac-0bf1c1090934/26-6a74b32525504.webp' /></p><p> எனினும், ஓகஸ்ட் மாதத்திற்கு விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.</p><p>இதேவேளை, லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனமும் ஓகஸ்ட் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என ஏற்கனவே அறிவித்துள்ளது.</p><p>

இதனால், நாட்டின் பிரதான சமையல் எரிவாயு விநியோக நிறுவனங்களான லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ ஆகிய இரு நிறுவனங்களும் ஓகஸ்ட் மாதத்தில் தற்போதைய விலையையே தொடர்ந்தும் பேணவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T16:15:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை ரைசாவின் ரீசெண்ட் கிளாமர் லுக் ரீல்ஸ்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/raiza-wilson-recent-reels-video-insta-1786024133"></link>
            <id>https://viduppu.com/article/raiza-wilson-recent-reels-video-insta-1786024133</id>
            <summary type="text">ரைசா வில்சன்நடிகர் தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோலின் அசிஸ்டண்ட் ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரைசா வில்சன். மாடலிங் துறையில் இருந...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரைசா வில்சன்</h2><p>நடிகர் தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோலின் அசிஸ்டண்ட் ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரைசா வில்சன். மாடலிங் துறையில் இருந்து வந்த ரைசா, அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6ee481f-4eb8-4f47-9e3c-48d6b3bdcb9f/26-6a7490c7cb9ec.webp' /></p><p> </p><p>அதன்பின் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

ஆர்யா நடித்து வெளியான மிஸ்டர் எக்ஸ் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் ரைசா.</p><p> சமீபத்தில் சப்ஸ்கிரிப்ஷனில் எக்ஸ்குளூசிவ் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர ஆரம்பித்திருக்கிறார். அவரது சப்ஸ்கிரிப்ஷனுக்கு மாதம் ரூபாய். 290 கட்டணமாக நிர்ணயித்திருக்கிறார்.</p><p>அப்படி அவரது சப்ஸ்கிரிப்ஷன் பக்கத்தை 650 பேர் இதுவரை சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.

இதனையடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது, தன்னுடைய கிளாமர் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.</p><p><br></p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Dbsx5_BvUf9/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Dbsx5_BvUf9/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Dbsx5_BvUf9/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Raiza (@raizawilson)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-06T16:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆறுகள் இணைப்புத் திட்டம்: விரைவான செயல்பாட்டுக்கு பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cm-letter-to-pm-modi-about-godavari-cauvery-link-1786030252"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cm-letter-to-pm-modi-about-godavari-cauvery-link-1786030252</id>
            <summary type="text">தமிழ்நாட்டின் நீண்டகால குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், கோதாவரி – காவிரி – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைவாகச் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டின் நீண்டகால குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், கோதாவரி – காவிரி – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
</p><p>
அந்தக் கடிதத்தில், தமிழ்நாடு மேற்பரப்பு நீர் வளங்களில் பற்றாக்குறை கொண்ட மாநிலமாக இருப்பதுடன், தனது நீர்த் தேவைகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக அண்டை மாநிலங்களைச் சார்ந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ace3c13a-d6be-476f-939f-edea3fb07ff7/26-6a74aed652e95.webp' /></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">மோடிக்கு கடிதம்&nbsp;</span></h2><p> நிலத்தடி நீர் வளங்களும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதால், மாநிலத்தின் நீர் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோதாவரி – காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் மிக முக்கியமான நீண்டகாலத் தீர்வாக அமையும் என வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
குறிப்பாக புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களின் நீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், வெள்ள உபரிநீரை நீர் தட்டுப்பாடு பகுதிகளுக்குத் திருப்பிவிடவும் இத்திட்டம் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
</p><p>
தேசிய நீர் மேம்பாட்டு முகமை தற்போது தயாரித்துள்ள திட்ட அறிக்கையை மாற்றி, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கோதாவரி – காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். என்றும், இதற்கு "தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்" என்ற அந்தஸ்து வழங்கி, விரைவுப் பாதை (Fast Track) முறையில் செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>
மேலும், தொடர்புடைய மாநிலங்களுடன் விரைவாக ஆலோசனைகளை முடித்து, விரிவான திட்ட அறிக்கையை (DPR) இறுதி செய்யவும், திட்டத்தை ஒருங்கிணைத்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செயல்படுத்த ஒன்றிய அரசு மற்றும்</p><p> பயன்பெறும் மாநிலங்கள் இணைந்து செயல்படும் சிறப்பு நோக்கு அமைப்பு (SPV) ஒன்றை உருவாக்குவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்.</p><p>

இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும், தென்னிந்தியாவின் நீண்டகால நீர்த் தேவையைப் பூர்த்தி செய்து தேசிய நீர் வளங்களை சமநிலையுடன் பயன்படுத்தும் இலக்கை அடைய பிரதமர் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T15:58:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மன் சரக்கு கப்பல் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-drones-hit-german-cargo-ship-emil-1786031510"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-drones-hit-german-cargo-ship-emil-1786031510</id>
            <summary type="text">EMIL எனும் ஜேர்மன் சரக்கு கப்பல் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஜேர்மன் சரக்கு கப்பல் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல்கருங்கடலில், ஜேர்மன் கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>EMIL எனும் ஜேர்மன் சரக்கு கப்பல் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
</p><h2>
ஜேர்மன் சரக்கு கப்பல் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல்</h2><p>கருங்கடலில், ஜேர்மன் கப்பல் நிறுவனமான Johann M. K. Blumenthal GmbH &amp; Co. KG-க்கு சொந்தமான ‘EMIL’ என்ற சரக்கு கப்பல் ரஷ்ய ட்ரோன்களால் பலமுறை தாக்கப்பட்டது.
</p><p>
இந்த சம்பவம் உக்ரைனின் ஓடெசா துறைமுகத்திலிருந்து சுமார் 21 கடல் மைல் தொலைவில் நடந்ததாக Bild பத்திரிகை தெரிவித்துள்ளது.</p><p>

கப்பலில் தீப்பற்றியதால், பல தொழில்நுட்ப அமைப்புகள் செயலிழந்தன. இதனால் கப்பல் இயக்க முடியாத நிலையில் சிக்கியது. 11 பேர் கொண்ட குழுவினர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அவர்களில் யாரும் ஜேர்மன் நாட்டவர்கள் அல்ல. உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffcb0d5d-4672-4ba2-a052-864631aaa760/26-6a74ad98a616d.webp' /></p><p>ஆனால், குழுவினரை வெளியேற்றும் போது மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடந்ததாகவும் கூறப்படுகிறது. கப்பல் தற்போது லைபீரியா நாட்டின் கொடியின் கீழ் இயங்குகிறது.
</p><p>
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தனது Telegram கணக்கில் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது. அவர்கள் தெரிவித்ததாவது, “கருங்கடலில் ஓடெசாவின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இரு சரக்கு கப்பல்களை ட்ரோன்கள் தாக்கின. அவை இராணுவப் பொருட்களை எடுத்துச் சென்றன” என்று கூறியுள்ளது.</p><p></p><h2>புதிய அச்சுறுத்தல்</h2><p>இரண்டாவது தாக்குதலில் ‘Mera Queen’ என்ற தானியக் கப்பல் குறிவைக்கப்பட்டது. இது கினி-பிசாவ் நாட்டின் கொடியின் கீழ் இயங்குகிறது. அந்த தாக்குதலில் ஒரு குழுவினர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம், கருங்கடலில் வணிகக் கப்பல்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது. </p><p>உக்ரைன் போரின் பின்னணியில், ரஷ்யா வணிகக் கப்பல்களை இராணுவப் பொருட்கள் எடுத்துச் செல்கின்றன என்ற குற்றச்சாட்டின் பேரில் குறிவைத்து தாக்குகிறது.
</p><p>
ஜேர்மன் கப்பல் ‘EMIL’ மீது நடந்த தாக்குதல், சர்வதேச கடல் போக்குவரத்து பாதுகாப்புக்கு புதிய அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T15:49:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் இன்றையதினம் கண்டெடுக்கப்பட்ட சான்றுப்பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1786029374"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1786029374</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 45ஆவது நாளான இன்றைய தினம்
வியாழக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 45ஆவது நாளான இன்றைய தினம்
வியாழக்கிழமை 08 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 5 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
அத்துடன் நாணய குற்றி ஒன்றும், சிறுவர்களுடைய ஆடைகளின் பொத்தான்களும் சான்று
பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.</p><h2>இதுவரை 494என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுப்பு</h2><p>&nbsp;அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம்
கட்டம் என இதுவரையில் 99 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ,
499 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 494என்பு கூடுகள் முற்றாக
அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdfd43bd-0247-4269-b82e-bd4e1f7253a6/26-6a74a9d4688e0.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T15:35:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாக்குதலை நிறுத்துமாறு கெஞ்சியது ஈரான் : புதுக்கதை விடுகிறார் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-begged-trump-to-stop-the-attack-1786027426"></link>
            <id>https://ibctamil.com/article/iran-begged-trump-to-stop-the-attack-1786027426</id>
            <summary type="text">ஈரான் மீது 2-ம் உலகப் போருக்கு பிறகு மிகப்பெரிய தாக்கு தலை நடத்த நாங்கள் தயாராக இருந்தோம். அப்போது ஈரான் எங்களிடம் தயவுசெய்து அதைச் செய்யாதீர்கள். நாம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது 2-ம் உலகப் போருக்கு பிறகு மிகப்பெரிய தாக்கு தலை நடத்த நாங்கள் தயாராக இருந்தோம். அப்போது ஈரான் எங்களிடம் தயவுசெய்து அதைச் செய்யாதீர்கள். நாம் பேசலாம்’ என்று கூறியது. இதையடுத்து தாக்குதலை நிறுத்தி வைத்தேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
 லாஸ் வேகாஸ் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>மக்களை கொல்ல விரும்பவில்லை</h2><p>

"ஈரானை நாங்கள் கடுமையாக தாக்கி வருகிறோம். ஆனால் நான் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளவே விரும்புகிறேன். ஏனென்றால் நான் மக்களை கொல்ல விரும்பவில்லை. இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதை விட, ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதையே விரும்புகிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ea4bd3f-c97c-4e56-810a-fa5b97e5174d/26-6a74a19c5c6af.webp' /></p><p>



ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறோம். ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களைப் பெறக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.</p><p></p><h2>அணு ஆயுதத் தயாரிப்புப் பணிகளைத் தொடர்வோம்</h2><p>


இந்த நிலையில் ஈரானின் புரட்சிகர காவல் படையின் தலைமைத் தளபதி அஹ்மத் வஹிதி கூறுகையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் வரை, ஈரானின் பாதுகாப்பிற்காக நாங்களும் அணு ஆயுதத் தயாரிப்புப் பணிகளைத் தொடர்வோம்.

அவர்கள் தங்கள் அணு ஆயுதங்களைக் கைவிட்டால், நாங்களும் அவ்வாறே செய்வோம் என்று கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d969bc8-5607-4ac7-b939-c6d85d51170e/26-6a74a19bab62c.webp' /></p><p>
</p><p>


இதற்கிடையே ஹோர்முஸ் நீரிணையில் ஓமான் அருகே சென்று கொண்டிருந்த ஒரு எண்ணை கப்பல் அருகே 2 வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக இங்கிலாந்து கடல்சார் நிறுவனம் தெரிவித்தது.

கப்பலும், அதன் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்று தெரிவித்துள்ளது</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T15:35:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாவகச்சேரி நகர சபையின் துணைத் தலைவர் பதவி நீக்கம்: ஓகஸ்ட் 19 ஆம் திகதி இறுதித் தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chavakachcheri-uc-deputy-chairman-dismissed-1786029828"></link>
            <id>https://ibctamil.com/article/chavakachcheri-uc-deputy-chairman-dismissed-1786029828</id>
            <summary type="text">சாவகச்சேரி நகர சபையின் துணைத் தலைவர் ஞானப்பிரகாசம் கிஷோரைப் பதவியில்
இருந்து நீக்கிய வடக்கு ஆளுநரின் தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட
மனு த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாவகச்சேரி நகர சபையின் துணைத் தலைவர் ஞானப்பிரகாசம் கிஷோரைப் பதவியில்
இருந்து நீக்கிய வடக்கு ஆளுநரின் தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட
மனு தொடர்பான வழக்கின் தீர்ப்பு, நேற்று (05.08.2026) வடக்கு மாகாண மேல்
நீதிமன்றத்தில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.</p><p> எனினும்,
நீதிமன்றம் தீர்ப்பை எதிர்வரும் 2026 ஓகஸ்ட் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
</p><p>
சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த
ஞானப்பிரகாசம் கிஷோரை ஆளுநர் தனது அதிகாரத்தின் கீழ் பதவியிலிருந்து
நீக்கியிருந்தார்.</p><p></p><h2>மனுத் தாக்கல் பின்னணி</h2><p>

இந்தப் பதவி நீக்க நடவடிக்கை சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டு, அதனை
இரத்துச் செய்யுமாறு கோரி ஞானப்பிரகாசம் கிஷோர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்
செய்திருந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e11abd7e-42f8-44f0-a2bf-739bb0a4b6d7/26-6a74a863d2210.webp' /></p><p>குறித்த மனு தொடர்பான விசாரணைகள் வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண
அமர்வில் பல தடவைகள் இடம்பெற்றிருந்தன. </p><p>மனுதாரர் சார்பிலும் பதிலாளிகள்
சார்பிலும் சட்டத்தரணிகள் தங்களது வாதங்களை முன்வைத்ததைத் தொடர்ந்து, வழக்கின்
தீர்ப்பு நேற்று வழங்கப்படும் என நீதிமன்றம் முன்னதாக அறிவித்திருந்தது.</p><p>இந்நிலையில், நேற்றைய நீதிமன்ற அமர்வில் வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட
போது, தீர்ப்பை வழங்காமல் அதனை எதிர் வரும் ஓகஸ்ட் 19 ஆம் திகதி வரை ஒத்தி
வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
</p><p>
இதன் மூலம் ஞானப் பிரகாசம் கிஷோரின் பதவி நீக்கம் சட்டபூர்வ மானதா? அல்லது
இல்லையா? என்பது தொடர் பான நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு மேலும் இரண்டு
வாரங்களுக்கு பின்னர் வெளியாகவுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T15:29:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரீஎன்ட்ரி கொடுத்த கெனிஷா.. ரவி மோகன் விவாகரத்து வழக்குக்கு நடுவில் போட்ட பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ravi-mohan-friend-kenisha-francis-returns-to-insta-1786029326"></link>
            <id>https://cineulagam.com/article/ravi-mohan-friend-kenisha-francis-returns-to-insta-1786029326</id>
            <summary type="text">நடிகர் ரவி மோகனின் விவாகரத்து வழக்கு சமீபத்தில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறியது. மாதம் 40 லட்சம் ஜீவனாம்சம் வேண்டும் என ஆர்த்தி கேட்க, நீதிமன்றம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் ரவி மோகனின் விவாகரத்து வழக்கு சமீபத்தில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறியது. மாதம் 40 லட்சம் ஜீவனாம்சம் வேண்டும் என ஆர்த்தி கேட்க, நீதிமன்றம் 3 லட்சம் ருபாய் மட்டுமே ஜீவனாம்சமாக தர உத்தரவிட்டுள்ளது.</p><p>மகன்களில் பள்ளி கட்டணம் உள்ளிட்டவற்றை ரவி மோகன் தான் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் கூறியிருப்பதாக ஆர்த்தியின் அம்மா பேட்டி கொடுத்தார்.
</p><h2>கெனிஷா ரீஎன்ட்ரி
</h2><p>இந்நிலையில் ரவி மோகனின் தோழி கெனிஷா சமீபத்தில் அவரை விட்டு பிரிவதாக தெரிவித்து, சென்னையை விட்டு போவதாகவும் கூறி இருந்தார். மேலும் அவர் சமூக வலைத்தளங்களில் இருந்தும் விலகி இருந்தார்.
</p><p>தற்போது கெனிஷா மீண்டும் இன்ஸ்டாகிராமில் ரீஎன்ட்ரி கொடுத்து பதிவு ஒன்றை போட்டிருக்கிறார்.
</p><p>"அமைதியான மனதுடன் மீண்டும் வருகிறேன், ஆழமான காரணத்துடன்.." என அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T15:16:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவின் மகனுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை - உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மிக முக்கிய ஆவணங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-dismissed-yoshida-request-1786013392"></link>
            <id>https://tamilwin.com/article/court-dismissed-yoshida-request-1786013392</id>
            <summary type="text">வெளிநாட்டு வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, தனக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டு வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, தனக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச விடுத்த கோரிக்கையை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.&nbsp;</p><p>முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ச ஆகிய இருவரும்&nbsp;அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தும் ஊழல் குற்றத்தைச் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில் இது தொடர்பில் உரிய அறிவிப்புகளைப் பெற்ற பின்னர் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். பொதரகம முன்னதாக உத்தரவிட்டார்.&nbsp;</p><h2>அரசாங்கத்திற்கு இழப்பு&nbsp;</h2><p>இலஞ்சம் அல்லது ஊழல் புலனாய்வு ஆணைக்குழு தாக்கல் செய்த முறைப்பாடு, நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​இருவருக்கும் எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ce5aea9-e9cb-47ce-83d0-e72134a16143/26-6a7473eb6b28d.webp' /></p><p> அதன்படி, உரிய அறிவிப்புகளைப் பெற்ற பின்னர் சந்தேக நபர்களான இருவரையும் உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கும்படி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்தைக் கோரியது, மேலும் முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
</p><p>
2006 செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் 2007 ஜூன் 8ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில், யோஷித ராஜபக்ச முறையான கல்வித் தகுதிகள் இன்றி கடற்படையில் சேர்க்கப்பட்டு, அவருக்கு பிரித்தானிய அரச இராணுவப் பயிற்சியும் வழங்கப்பட்டதாகவும், அதன் மூலம் அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தி, அவருக்கு முறையற்ற ஆதாயத்தை வழங்கியதாகவும் இலஞ்ச ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.&nbsp;</p><p></p><h2>வெளிநாட்டுப் பயணம்..</h2><p>கடந்த 31ஆம் திகதியன்று, இந்த பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் எட்டு குற்றச்சாட்டுகளின் கீழ் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. முதல் பிரதிவாதி வசந்த கரன்னாகொட மற்றும் இரண்டாவது பிரதிவாதி யோஷித கனிஷ்க ராஜபக்ச ஆவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a04a75b-8675-4f64-bd2c-55f192773aa4/26-6a7473ec32bd1.webp' /></p><p> </p><p>இதன்போது, இவ்வழக்கு தொடர்பாக 25 சாட்சிகளின் பெயர்களும் 47 ஆவணச் சான்றுகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>மேலும், சந்தேக நபரான யோஷித ராஜபக்சவுக்காக முன்னிலையான சட்டத்தரணி ரவின் நுவரபக்ச, தனது கட்சிக்காரர் ஒரு வெளிநாட்டு வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளதால், அவர் மீது விதிக்கப்பட்ட பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட ஒரு சிறப்பு மனுவின் மூலம் கோரியிருந்ததாகத் தெரிவித்தார்.</p><p>இருப்பினும், உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்தக் கோரிக்கையைப் பரிசீலிக்க இயலாது எனக் குறிப்பிட்ட தலைமை நீதிபதி, சம்பந்தப்பட்ட கோரிக்கையை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T15:15:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய மசகு எண்ணெய் இறக்குமதியை அதிகரித்த சினோபெக் நிறுவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sinopec-increased-russian-crude-oil-imports-1786028601"></link>
            <id>https://tamilwin.com/article/sinopec-increased-russian-crude-oil-imports-1786028601</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக குறைந்துள்ள மசகு எண்ணெய்
விநியோகத்தை ஈடுசெய்யும் பொருட்டு,&amp;nbsp; சீன அரசுக்குச் சொந்தமான சினோபெக் ரஷ்யா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக குறைந்துள்ள மசகு எண்ணெய்
விநியோகத்தை ஈடுசெய்யும் பொருட்டு,&nbsp; சீன அரசுக்குச் சொந்தமான சினோபெக் ரஷ்யாவின் தொலைகிழக்குப்
பகுதியிலிருந்து மசகு எண்ணெய் கொள்முதலைக் கணிசமாக அதிகரித்துள்ளது.
</p><p>
பிரேசில் மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளிலிருந்து பெறப்படும் மசகு
எண்ணெயை விட ரஷ்யாவின் எண்ணெய் குறைந்த விலையில் கிடைப்பதே இதற்கு முக்கிய
காரணமாகும்.</p><p>

இதன் மூலம் சீனாவில் உள்நாட்டு எரிபொருள் விநியோகம் சீராகப் பேணப்பட்டு
வருவதாக வர்த்தகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>மசகு எண்ணெய்&nbsp; இறக்குமதி</h2><p>

அதற்கமைய, ஜூலை முதல் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதிக்கு ரஷ்யாவின் 'இஎஸ் பி
ஓ' (ESPO) ரக மசகு எண்ணெயின் 30 முதல் 40 வரையிலான கப்பல் சரக்குகளை சினோபெக்
நிறுவனம் கொள்முதல் செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12a13652-2300-403a-b550-788233721835/26-6a74a459903ed.webp' /></p><p>
</p><p>
இது அந்நிறுவனத்தின் மொத்தச் சுத்திகரிப்புத் திறனில் 5 முதல் 6 சதவீதமாகும்.

மத்திய கிழக்குப் போருக்கு முன்னர், சினோபெக் நிறுவனம் தனது மசகு எண்ணெய்
தேவையில் பாதியை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே, குறிப்பாகச் சவூதி
அரேபியாவிடமிருந்தே இறக்குமதி செய்து வந்தது.
</p><p>
எனினும், கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சவூதியிடமிருந்து எவ்வித மசகு
எண்ணெயையும் கொள்முதல் செய்யாத இந்நிறுவனம், ஓகஸ்ட் மாதத்தில் மிகக் குறைந்த
அளவிலான எண்ணெயையே இறக்குமதி செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T15:14:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் சேதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-drone-strike-hits-russian-oil-refinery-1786028783"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-drone-strike-hits-russian-oil-refinery-1786028783</id>
            <summary type="text">Ukraine-Russian war updates: உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் சேதமடைந்துள்ளது.

உக்ரைன் இராணுவம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ukraine-Russian war updates: உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் சேதமடைந்துள்ளது.</p><p>

உக்ரைன் இராணுவம், ரஷ்யாவின் முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை நீண்ட தூர ட்ரோன் தாக்குதலின் மூலம் குறிவைத்து தாக்கியுள்ளது.
</p><h2>ரஷ்யாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்கள்</h2><p>பஷ்கோர்டோஸ்தான் பகுதியில் உள்ள Bashneft-Novoil சுத்திகரிப்பு நிலையமும், யாரோஸ்லாவ்ல் பகுதியில் உள்ள Slavneft-Yanos சுத்திகரிப்பு நிலையமும் தாக்கப்பட்டுள்ளதாக,&nbsp;உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cd45ecf-9030-43cb-9a12-263cbda4db70/26-6a74a49237829.webp' /></p><p>
Slavneft-Yanos, ரஷ்யாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் சுமார் 1.5 கோடி டன் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்படுகிறது.

3,500-க்கும் மேற்பட்டோர் இங்கு பணியாற்றுகின்றனர். கார் எரிபொருள், விமான எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.
</p><h2>
யாரோஸ்லாவ்ல் மாநில ஆளுநர் மிஹாயில் எவ்ராயேவ் தெரிவித்ததாவது:
</h2><p>
இது அந்த மாநிலத்தில் நடந்த மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல். 93 ட்ரோன்களை வான்வழி பாதுகாப்பு மற்றும் மின்னணு போர்துறை அழித்ததாகவும், விழுந்த சிதைவுகள் சுத்திகரிப்பு நிலையத்தின் சேமிப்பு தொட்டிகளை தாக்கியதாகவும் கூறினார். தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்றாலும், நால்வர் காயமடைந்தனர்.
</p><p>
“இந்த தாக்குதல் ரஷ்யாவின் எண்ணெய் வருவாயை குறைக்கும். அந்த வருவாயே உக்ரைனியர்களை கொல்லும் போருக்கு நிதியாகிறது” என்று ஜெலென்ஸ்கி சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளார்.
</p><p></p><p>ரஷ்யா உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். ஆனால் உக்ரைன் தொடர்ந்து சுத்திகரிப்பு நிலையங்கள், களஞ்சியங்கள், போக்குவரத்து அமைப்புகளை குறிவைத்து தாக்குவதால், ரஷ்யா உள்நாட்டு எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b6d53f2-7b41-404d-bada-e41cb647b057/26-6a74a492e6e98.webp' /></p><p>இதற்கிடையில், ரஷ்யா உக்ரைனின் நகரங்களில் ஏவுகணை தாக்குதல்களை அதிகரித்துள்ளது. உக்ரைனின் ஏவுகணை தடுப்பு அமைப்புகள் குறைவாக இருப்பதை பயன்படுத்தி, ரஷ்யா தாக்குதல்களை தீவிரப்படுத்துகிறது.</p><p>மேலும், கருங்கடலில் ரஷ்யா தாக்கிய கப்பல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைன் இராணுவம் இரண்டு ரஷ்ய ராணுவ கப்பல்களையும், “shadow fleet” எனப்படும் கப்பல்களையும் தாக்கியுள்ளது.</p><p>இந்த தாக்குதல், உக்ரைன் போரின் புதிய கட்டத்தை வெளிப்படுத்துகிறது. ரஷ்யாவின் பொருளாதாரத்தை நேரடியாக குறிவைத்து, எரிசக்தி துறையை பலவீனப்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T15:11:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரியனின் அரிய அதி துல்லியப் காட்சி வெளியீடு! மர்மங்களை கண்டறிந்த விஞ்ஞானிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/scientists-discover-rare-mysteries-of-the-sun-1786027402"></link>
            <id>https://ibctamil.com/article/scientists-discover-rare-mysteries-of-the-sun-1786027402</id>
            <summary type="text">சூரியனின் மேற்பரப்பில் இதுவரை தெளிவாகக் காணப்படாத மிகச் சிறிய சுழல் அமைப்புகள் மற்றும் வேகமாக நகரும் கருமையான கோடுகளை, உலகின் மிக சக்திவாய்ந்த சூரிய த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூரியனின் மேற்பரப்பில் இதுவரை தெளிவாகக் காணப்படாத மிகச் சிறிய சுழல் அமைப்புகள் மற்றும் வேகமாக நகரும் கருமையான கோடுகளை, உலகின் மிக சக்திவாய்ந்த சூரிய தொலைநோக்கி முதன்முறையாக பதிவு செய்துள்ளது. </p><p>இந்தக் கண்டுபிடிப்பு, சூரியனின் செயல்பாடுகள் குறித்த முக்கிய மர்மங்களுக்கு புதிய விளக்கத்தை வழங்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

அமெரிக்காவின் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் (NSF) டேனியல் கே. இனோயே சூரிய தொலைநோக்கி மூலம் பெறப்பட்ட புதிய படங்கள், சூரியனின் கண்களுக்கு தெரியும் வெளிப்புற அடுக்கான ஒளிமண்டலத்தில் (Photosphere), இதற்கு முன்பு தெளிவாகப் பதிவாகாத கெல்வின் -&nbsp; ஹெல்ம்ஹோல்ட்ஸ் நிலையற்ற தன்மை (Kelvin–Helmholtz Instability) என்ற இயற்பியல் நிகழ்வை முதன்முறையாக வெளிக்கொணர்ந்துள்ளன.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">The most powerful solar telescope just opened a new window to discovery about the sun.️☀️<br><br>Using the NSF Daniel K. Inouye Solar Telescope, scientists found Kelvin-Helmholtz instability, tiny, whirlpool-like patterns on the sun&#39;s surface.<a href="https://t.co/0V1qENcUR9">https://t.co/0V1qENcUR9</a><br><br>📸:… <a href="https://t.co/agp8V3ayeR">pic.twitter.com/agp8V3ayeR</a></p>&mdash; U.S. National Science Foundation (@NSF) <a href="https://x.com/NSF/status/2085338123358044661?ref_src=twsrc%5Etfw">August 6, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><h2>தேசிய சூரிய ஆய்வகம்</h2><p>

இந்த ஆய்வில் அமெரிக்க தேசிய சூரிய ஆய்வகம், ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் சூரிய மண்டல ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் உயர்மட்ட வளிமண்டல ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fc8a4b1-c5dd-4db5-b2d0-e8d84dfd4d17/26-6a74a24a648d4.webp' /></p><p>கடந்த ஏப்ரல் 14, 2025 அன்று சூரியக் கறைக்கு அருகிலிருந்த செயலில் உள்ள ஒரு பகுதியை ஆய்வாளர்கள் இந்த தொலைநோக்கி மூலம் அவதானித்தனர். </p><p>நான்கு மீட்டர் விட்டமுள்ள கண்ணாடி மற்றும் அதிநவீன உயர் தெளிவுத் திறன் கொண்ட ஒளிப்பதிவு அமைப்பின் உதவியால், சிறிய தொலைநோக்கிகளால் இதுவரை காண முடியாத காந்தப்புல எல்லைகள் மிகத் தெளிவாக பதிவாகின.
</p><p>
சூரியனின் ஒளிமண்டலம், 500 முதல் 2,000 கிலோமீட்டர் அகலமுடைய பிரகாசமான பிளாஸ்மா அணுக்களால் (Granules) மூடப்பட்டுள்ளது. இவற்றின் மையப்பகுதியில் சூடான பிளாஸ்மா மேலே எழுந்து, மேற்பரப்பில் குளிர்ந்த பின்னர் விளிம்புகளின் வழியாக மீண்டும் கீழிறங்குகிறது.</p><p>

இந்த பிளாஸ்மா அணுக்கள், அதிக காந்தப்புலம் கொண்ட பகுதிகளைச் சந்திக்கும் இடங்களில், சுமார் 20 கிலோமீட்டர் அளவுள்ள மிகச் சிறிய சுழல்கள் மற்றும் குறுகிய கருமையான கோடுகள் உருவாகியிருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.</p><p> </p><p></p><h2>47 சிறிய சுழல் அமைப்புகள்&nbsp;</h2><p>இது தொலைநோக்கியின் கோட்பாட்டு தீர்மானத் திறனின் உச்ச எல்லைக்கு நெருக்கமான அளவாகும்.

இந்த அளவிலான பொருளை சூரியனில் கண்டறிவது, சுமார் 180 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு நாணயத்தை தெளிவாகப் பார்ப்பதற்கு ஒப்பான சாதனை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/958dfd40-47fe-47d3-920e-f1c86ea25e71/26-6a74a24b1947a.webp' /></p><p>மேக்ஸ் பிளாங்க் சூரிய மண்டல ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி மிஷியல் வான் நூர்ட் கூறுகையில், "சூரியனின் மேற்பரப்பில் சுமார் 20 கிலோமீட்டர் அளவிலான அமைப்புகளைப் பதிவு செய்ய வேண்டியிருந்தது. </p><p>இது உலகின் மிகப்பெரிய சூரிய தொலைநோக்கிகளாலும், அதிநவீன கணினி மாதிரிகளாலும் மட்டுமே சாத்தியமாகும்" என்றார்.

ஆய்வின்போது மொத்தம் 47 சிறிய சுழல் அமைப்புகள் பதிவாகின. </p><p>அவற்றுக்கிடையேயான சராசரி இடைவெளி 65 கிலோமீட்டராகவும், அவற்றின் அளவு 25 முதல் 170 கிலோமீட்டர் வரையிலும் இருந்தது. அவை வினாடிக்கு 0.67 முதல் 3 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்ததாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.</p><p>

கெல்வின்–ஹெல்ம்ஹோல்ட்ஸ் நிலையற்ற தன்மை என்பது, அடுத்தடுத்த திரவங்கள் அல்லது பிளாஸ்மா அடுக்குகள் வெவ்வேறு வேகங்களில் நகரும் போது உருவாகும் இயற்பியல் நிகழ்வாகும். </p><p>வேக வேறுபாடு காரணமாக எல்லைப் பகுதியில் அலைகளும் சுழல்களும் உருவாகின்றன. இந்த நிகழ்வை சூரியனின் ஒளிமண்டலத்தில் முதன்முறையாக நேரடியாகக் கண்டறிந்திருப்பது, சூரியனின் காந்தப்புல இயக்கங்கள் மற்றும் ஆற்றல் பரிமாற்றம் குறித்த எதிர்கால ஆய்வுகளுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T15:03:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[குட்டிமணி தங்கத்துரை சிலை அமைப்பு விவகாரம்: ஏற்பாட்டாளரிடம் புலனாய்வு பிரிவு 5 மணிநேரம் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kuttimani-thangathurai-case-issus-1785999231"></link>
            <id>https://tamilwin.com/article/kuttimani-thangathurai-case-issus-1785999231</id>
            <summary type="text">புதிய இணைப்புவெலிக்கடையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி தங்கத்துரை ஆகியோரது சிலை
நிறுவுதல் ஏற்பாட்டாளரும் முன்னாள் வல்வெட்டித்துறை நகர சபை உப தவிசாள...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>வெலிக்கடையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி தங்கத்துரை ஆகியோரது சிலை
நிறுவுதல் ஏற்பாட்டாளரும் முன்னாள் வல்வெட்டித்துறை நகர சபை உப தவிசாளருமான
கந்தசாமி சதீசிடம் இன்றைய தினம்(06)&nbsp; கிளிநொச்சி விசேட குற்ற புலனாய்வு பிரிவினர்
5 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
</p><p>
நேற்றைய தினம் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையம் ஊடக கிளிநொச்சி விசேட குற்ற
பிரிவு அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று
காலை 10 மணிக்கு ஆரம்பமான விசாரணை பிற்பகல் 3 மணி வரை இடம்பெற்றுள்ளது.</p><h2>அழைப்பாணை</h2><p>இதேவேளை குறித்த கந்தசாமி சதீஷ் அவர்கள் குட்டிமணி தங்கத்துரை ஆகியோரது
சிலைகளை கிளிநொச்சியில் உள்ள சிற்ப ஆச்சாரி ஒருவர் மூலம் செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ea6da74-0082-40f2-80f2-c5035454999e/26-6a74a1e73c9cd.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில் குறித்த குட்டிமணி தங்கத்துரை ஆகியோரது சிலைகளை 14 நாட்கள்
கிளிநொச்சி சிற்பக்கூடத்திலிருந்து வெளியே கொண்டு செல்வதற்கு கிளிநொச்சி
நீதவான் நீதிமன்றம் ஊடான தடை உத்தரவை வழங்கியுள்ளதுடன் நாளைய தினம் கந்தசாமி
சதீஸ் அவர்களை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும்&nbsp;அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>வல்வெட்டித்துறை முன்னாள் உப தவிசாளரும், குட்டிமணி தங்கதுரை ஆகியோரது சிலை நிறுவுவதற்கான ஏற்பாட்டாளராக சொல்லப்படுகின்ற கந்தசாமி சதீஸ் கிளிநொச்சி விசேட குற்ற புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.</p><p>கிளிநொச்சி விசேட குற்ற புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் இவர் இன்று(6.8.2026) காலை முதல் தற்போது வரை விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோருக்கு வல்வெட்டித்துறையில் சிலை அமைப்பதற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>விசாரணை</h2><p>
</p><p>
எந்த விதமான போதுமான ஆதாரங்களோ ஆவணங்களோ சமர்ப்பிக்கப்படாத நிலையில் நேற்றைய தினம்(5.8) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த தற்காலிக தடை உத்தரவு இல்லாமலாக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f280e72e-1e38-4a52-81c4-2fc6568f3eee/26-6a74379c1a7d8.webp' /></p><p>

இந்நிலையில் நேற்று பிற்பகல் வல்வெட்டித்துறை பொலிஸ் ஊடக கிளிநொச்சி விசேட குற்ற புலனாய்வு பிரிவிற்கு விசாரணைக்காக இன்று அழைப்பதற்கான அழைப்பு ஆணை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/cNHc4rtOBGE" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-06T15:02:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தையிட்டி வீதி ;பொலிஸார் வழக்கு தள்ளுபடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/thaiyiddy-road-police-case-dismissed-1786023598"></link>
            <id>https://jvpnews.com/article/thaiyiddy-road-police-case-dismissed-1786023598</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அண்மையிலுள்ள பவானி வீதி தொடர்பில் பலாலி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதுடன், வலிகாமம...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அண்மையிலுள்ள பவானி வீதி தொடர்பில் பலாலி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதுடன், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>குறித்த வீதியில் ஏற்படுத்தப்பட்ட தடையைத் தொடர்பாக பிரதேச சபையினால் வெளியிடப்பட்ட அறிவித்தல், சமாதான சீர்குலைவை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டு கடந்த மே மாதம் 10ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றத்தில் பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்த வழக்கில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் செயலாளர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.</p><p>இந்நிலையில், குறித்த வழக்கில் சமாதான குலைவை ஏற்படுத்தியதற்கான போதுமான ஆதாரங்களை வழக்குத் தொடர்ந்த தரப்பு முன்வைக்கவில்லை என நீதிமன்றம் தெரிவித்ததையடுத்து, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு பிரதிவாதிகள் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.</p>]]></content>
            <updated>2026-08-06T15:00:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ.557 கோடி செலவு செய்துள்ள பிரதமர் மோடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pm-modis-foreign-trips-cost-rs-557-crore-1786027896"></link>
            <id>https://news.lankasri.com/article/pm-modis-foreign-trips-cost-rs-557-crore-1786027896</id>
            <summary type="text">பிரதமர் மோடி வெளிநாட்டு பயணங்களுக்கு இதுவரை ரூ.557 கோடி செலவு செய்துள்ளார்.

ரூ.557.5 கோடி செலவுஇந்திய அரசின் தரவுகளின்படி, 2021 முதல் 2026 வரை பிரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதமர் மோடி வெளிநாட்டு பயணங்களுக்கு இதுவரை ரூ.557 கோடி செலவு செய்துள்ளார்.
</p><h2>
ரூ.557.5 கோடி செலவு</h2><p>இந்திய அரசின் தரவுகளின்படி, 2021 முதல் 2026 வரை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்கு மொத்தம் ரூ.557.5 கோடி செலவிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66ef2177-0202-4b64-99cc-3d5b33d1c67e/26-6a749f7b2554d.webp' /></p><p>2021-இல் ரூ.36.1 கோடி, 2022-இல் ரூ.55.8 கோடி செலவிடப்பட்டது. அப்போது கொரோனா தொற்றுநோயால் பயணங்கள் குறைவாக இருந்தன.</p><p>

2023-இல் ரூ.93.6 கோடி, 2024-இல் ரூ.109.5 கோடி, 2025-இல் ரூ.187.8 கோடி செலவிடப்பட்டது. 2026-இல் இதுவரை 13 நாடுகளை உள்ளடக்கிய 6 பயணங்களுக்கு ரூ.74.5 கோடி செலவிடப்பட்டுள்ளது.
</p><p></p><p>இந்த காலகட்டத்தில் மிக அதிக செலவான பயணம் 2025 பிப்ரவரியில் அமெரிக்காவுக்கானது. அதற்கான செலவு ரூ.25.5 கோடிக்கு மேல். 2026-இல் நோர்வே பயணத்திற்கு மட்டும் ரூ.17 கோடி செலவாகியுள்ளது.</p><p>

வெளிநாட்டு பயணங்களுக்கான செலவுகள் தங்குமிடம், போக்குவரத்து, பாதுகாப்பு, நிகழ்ச்சி இட கட்டணம் மற்றும் “miscellaneous” என குறிப்பிடப்பட்ட பிற செலவுகளை உள்ளடக்கியதாக அரசு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7d12b2b-433b-49fa-bdbe-9bac8e982a08/26-6a749f7bd5698.webp' /></p><h2>பயணம் மேற்கொள்ளப்பட்ட நாடுகள்</h2><p>2022-இல் ஜேர்மனி, டென்மார்க், பிரான்ஸ், நேபாளம், UAE, ஜப்பான், உஸ்பெகிஸ்தான், இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளப்பட்டது.
</p><p>
2023-இல் பப்புவா நியூ கினி, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, UAE, எகிப்து, தென்னாப்பிரிக்கா, கிரீஸ் உள்ளிட்ட நாடுகள் சென்றார். </p><p>

2024-இல் UAE, பூடான், கத்தார், இத்தாலி, ஆஸ்திரியா, ரஷ்யா, போலந்து, உக்ரைன், அமெரிக்கா, சிங்கப்பூர், பிரேசில், கயானா, குவைத் உள்ளிட்ட நாடுகள் சென்றார். </p><p>2026-இல் இதுவரை இத்தாலி, இஸ்ரேல், நோர்வே, ஸ்வீடன், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரான்ஸ், இந்தோனேஷியா, UAE, மலேசியா, நெதர்லாந்து, சேஷெல்ஸ், ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகள் சென்றுள்ளார்.</p><p></p><h2>வெளிநாட்டு முதலீடுகள்</h2><p>அரசு தரவுகளின்படி, 2021 முதல் 2025 வரை மோடி மேற்கொண்ட பயணங்களின் மூலம் 381.8 பில்லியன் டொலர் (ரூ.36.3 லட்சம் கோடி) வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவுக்கு வந்துள்ளன.
</p><p>
இந்த தகவல்கள், பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் நாட்டின் பொருளாதார மற்றும் வெளிநாட்டு உறவுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதைக் காட்டுகின்றன.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T14:51:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு..ஆகஸ்ட் 7ல் விசாரணை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/vijay-sangeetha-divorce-case-hearing-august-7th-1786021689"></link>
            <id>https://viduppu.com/article/vijay-sangeetha-divorce-case-hearing-august-7th-1786021689</id>
            <summary type="text">விஜய் - சங்கீதாதமிழகத்தின் முதலமைச்சர் விஜய் - சங்கீதா 1999ல் திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு பெற்றோராகிய பல ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு டிசம்பர் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>விஜய் - சங்கீதா</h2><p>தமிழகத்தின் முதலமைச்சர் விஜய் - சங்கீதா 1999ல் திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு பெற்றோராகிய பல ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விவாகரத்து கோரி சங்கீதா செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0feb3eb1-8a25-4304-8167-78915e6d8f92/26-6a74873b502ad.webp' /></p><p> </p><p>இந்த விவரம் பிப்ரவரி மாதம் தெரிய வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது விஜய், சங்கீதா தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. மே மாதம் 19 அம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும் ஜூன் 15 ஆம் தேதி வழக்கை நீதிபதி தள்ளி வைத்தார். </p><p>அதன்பின் ஜூன் 15 ஆம் தேதி விசாரணையின் போது முதல்வர் விஜய், சங்கீதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், இருவரும் பிரபலமானவர்கள் என்பதால் பாதுகாப்பு, இதர சிக்கல்களை கருத்தில் கொண்டு வீடியோ கான்பரன்ஸில் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cad5b261-230f-4793-8273-903f5383119c/26-6a74873bf3dec.webp' /></p><h2>விசாரணை</h2><p> இதனையடுத்து வழக்கை நீதிபதி சுஜாதா விசாரணையை வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். அதன் அடிப்படையில் முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து, குடியிருப்பு உரிமை கோரி வழக்கு தொடர்ந்த நிலையில் நாளை ஆகஸ்ட் 7 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. </p><p>இருதரப்பினரும் பிரபலங்கள் என்பதால் நேரில் ஆஜராக விலக்கு கோரியுள்ள நிலையில், இருவரும் காணொளி மூலம் ஆஜராக வாய்ப்பிருப்பதாகவும் அதற்காக இணையதள முகவரி நாளை சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-06T14:45:00+00:00</updated>
        </entry>
    </feed>
