<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-20T11:21:41+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவர் விக்னேஷ் பர்த்டே அவுட்டிங்!! மாலத்தீவு பீச்சில் நடிகை நயன்தாரா..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/nayanthara-post-beach-photo-her-husband-birthday-1789902285"></link>
            <id>https://viduppu.com/article/nayanthara-post-beach-photo-her-husband-birthday-1789902285</id>
            <summary type="text">தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி தற்போது பாலிவுட் படங்களில் நடித்து டாப் நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நாயகியாகவும் திகழ்ந்து வருபவர் தான் நடிகை...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி தற்போது பாலிவுட் படங்களில் நடித்து டாப் நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நாயகியாகவும் திகழ்ந்து வருபவர் தான் நடிகை நயன்தாரா.

பல சர்ச்சைகளையும் சந்தித்து வரும் நயன் தாரா, டாக்சிக் படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa996240-3b90-4e90-a8c4-2d4123ddf7a4/26-6aafbdd3ea0af.webp' /></p><p>கடந்த மாதம் நயன்தாரா நடிப்பில் டாக்சிக், Hi படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, மூக்குத்தி அம்மன் 2 படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய ஆதரவை பெற்றார் நடிகை நயன்தாரா.</p><p> தற்போது தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளுக்கு மாலத்திவிற்கு சென்றுள்ளார். அங்குள்ள கடற்கரையில் கையில் செருப்புடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-20T11:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fuel-price-in-sri-lanka-1789901243"></link>
            <id>https://tamilwin.com/article/fuel-price-in-sri-lanka-1789901243</id>
            <summary type="text">செப்டெம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலை திருத்தம் நடைபெறலாம் என என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.&amp;nbsp;உலக சந்தையில் எரிபொருள் வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>செப்டெம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலை திருத்தம் நடைபெறலாம் என என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>உலக சந்தையில் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, செப்டெம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலைகள் திருத்தி அமைக்கப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

காலி பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், எரிபொருள் விலை இன்னும் அதிகமாக இருப்பதால், மேலும் விலை உயர்வை மக்களால் தாங்க முடியுமா என்பது குறித்து அரசாங்கத்திற்குள் விவாதம் நடைபெற்று வருவதாக மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T11:13:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்ச குடும்பத்திலிருந்து ஒரு புதிய அரசியல் தலைவர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-new-political-figure-from-the-rajapaksa-family-1789900660"></link>
            <id>https://ibctamil.com/article/a-new-political-figure-from-the-rajapaksa-family-1789900660</id>
            <summary type="text">ராஜபக்ச குடும்பத்தில் அரசியலில் ஈடுபட்டுள்ள பல சக்திவாய்ந்த உறுப்பினர்களுக்கு எதிரான கடுமையான ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், ராஜபக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராஜபக்ச குடும்பத்தில் அரசியலில் ஈடுபட்டுள்ள பல சக்திவாய்ந்த உறுப்பினர்களுக்கு எதிரான கடுமையான ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், ராஜபக்ச குடும்பம் தனது அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாக்க ஒரு புதிய மூலோபாய முடிவை நோக்கி நகர்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p> குடும்பத்தின் பல தலைவர்களும் செயலர்களும் சிறைத்தண்டனை அபாயத்தை எதிர்கொண்டுள்ள சூழலில், அரசியல் நடவடிக்கைகளைத் தொடர, எந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுபட்ட ஒரு புதிய நபரை முன்னிறுத்துவதில் அவர்களின் கவனம் குவிந்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.</p><p>இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p><h2>அனைத்து ராஜபக்சக்கள் மீதும் குற்றச்சாட்டு</h2><p>
</p><p>
ராஜபக்ச குடும்பத்தின் பல முக்கிய உறுப்பினர்களின் பங்கேற்புடன் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு சிறப்பு கலந்துரையாடலில் இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25b601ae-b3ef-4944-8f19-72fb5f0bfce6/26-6aafbf5ceb1c7.webp' /></p><p>
</p><p>
தற்போது அரசியலில் ஈடுபட்டுள்ள அனைத்து ராஜபக்சக்களும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளதால், மக்களிடையே எவ்வித சர்ச்சையுமற்ற, எந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாத ஒரு புதிய முகத்தை குடும்பத்திற்குள்ளேயே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
</p><h2>ஊழலற்ற புதிய முகம்</h2><p>இந்த நெருக்கடியான சூழ்நிலையைச் சமாளிப்பதற்காக, எதிர்கால அரசியல் செயல்பாடுகளையும் தலைமைத்துவத்தையும் அந்தப் புதிய நபரிடம் ஒப்படைக்க கலந்துரையாடலில் பங்கேற்ற அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5657c2ad-6a28-4819-bf5d-9cfa53b9dc8a/26-6aafbf5da193b.webp' /></p><p>
</p><p>
பொதுமக்களின் அதிருப்தியை எதிர்கொண்டு, குடும்பத்தின் பாரம்பரியத் தலைவர்கள் பின்வாங்கி, பின்னணியில் இருந்து வழிநடத்தும் அதே வேளையில், முன்னணியில் இருந்து தூய்மையான பிம்பத்துடன் ஒரு புதிய தலைமையை உருவாக்குவதே இதன் நோக்கம் என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T11:11:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொட்டாஞ்சேனையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்! மூவர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kotahena-murder-three-arrested-with-drugs-1789897522"></link>
            <id>https://tamilwin.com/article/kotahena-murder-three-arrested-with-drugs-1789897522</id>
            <summary type="text">கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் &#039;ஐஸ்&#039; போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கடந்த செப்டம்பர் 14 ஆம் திக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் 'ஐஸ்' போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

 

கடந்த செப்டம்பர் 14 ஆம் திகதி கொட்டாஞ்சேனை பகுதியில் நபரொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>பொலிஸாருக்கு கிடைத்த தகவல்&nbsp;</h2><p>பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கிரேன்ட்பாஸ், கொலன்னாவை மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதே மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/297e803a-1910-4394-9a0a-3c5af0b52e15/26-6aafbcfa51686.webp' /></p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 28 கிராம் 600 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.</p><p>
 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்குளி, கொழும்பு 14 மற்றும் கொலன்னாவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 19, 25 மற்றும் 39 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளதுடன்,&nbsp; குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p>சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T11:01:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீசைய முறுக்கு 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/meesaya-murukku-2-movie-first-review-1789900389"></link>
            <id>https://cineulagam.com/article/meesaya-murukku-2-movie-first-review-1789900389</id>
            <summary type="text">Hiphop tamizha Meesaya murukku 2 first review: ஹிப் ஹாப் தமிழா இயக்கி ஹீரோவாக நடித்துள்ள மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>Hiphop tamizha Meesaya murukku 2 first review: ஹிப் ஹாப் தமிழா இயக்கி ஹீரோவாக நடித்துள்ள மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது; படம் எப்படி உள்ளது என்பதை இந்த முதல் விமர்சனத்தில் பார்க்கலாம், வாங்க.</p><p></p><h2>

மீசைய முறுக்கு</h2><p>

பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஹிப் ஹாப் தமிழா ஆதி, இயக்கி ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் மீசைய முறுக்கு. தன்னுடைய வாழ்க்கையை வைத்து இப்படத்தை எடுத்திருப்பார். 2017-ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/290a8a27-49c4-415e-b868-a6cc045fa30c/26-6aafb66a5e18c.webp' /></p><p></p><p>
</p><h3>
மீசைய முறுக்கு 2
</h3><p>
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 9 வருடங்களுக்கு பின் <a href="https://x.com/kbsriram16/status/2101564336347185492" target="_blank">மீசைய முறுக்கு</a> 2 திரைப்படம் தற்போது உருவாகியுள்ளது. இப்படத்தையும் ஆதி இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் ஹர்ஷத் கான், சைத்ரா அச்சர், கெத்திகா ஷர்மா, ரம்யா ரங்கநாதன், கருணாஸ், பாபா பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வருகிற 25-ஆம் தேதி மீசைய முறுக்கு 2 திரையரங்குகளில் வெளியாகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df6668f3-fd1e-46bd-9bb4-720fee07131d/26-6aafb668d08c5.webp' /></p><p></p><p>இந்த நிலையில், மீசைய முறுக்கு திரைப்படத்தை பார்த்த கிரியேட்டிவ் தயாரிப்பாளர் ஒருவர் தனது X பக்கத்தில் படம் குறித்த விமர்சனத்தை பதிவிட்டுள்ளார்.</p><h3> 

முதல் விமர்சனம் </h3><p>"நேற்று இரவு மீசைய முறுக்கு 2 படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது; படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஹிப் ஹாப் தமிழாவின் நடிப்பு அபாரம் மற்றும் பாடல்களும் மிக சிறப்பாக இருந்தன. "கலைவாணியே" பாடல் மனதை தொட்டுவிட்டது. முதல் பாதி இன்றைய தலைமுறையினரை வெகுவாக கவரும் வகையில் அமைந்துள்ளது; இரண்டாம் பாதி உணர்ச்சிகரமான தருணங்களால் நிறைந்துள்ளது. குறிப்பாக, தந்தை-மகன் இடையிலான உறவை மிக அழகாக காட்சியமைக்கப்பட்டு, பார்வையாளர்களின் மனதை நெகிழ வைக்கிறது. ரம்யா ரங்கநாதனுக்கு இதில் வலிமையான கதாபாத்திரம் கிடைத்துள்ளது, பாராட்டுகள். மீசைய முறுக்கு 2 
திரைப்படம் தமிழகம் முழுவதும் நிச்சயம் ஒரு மிகப்பெரிய வரவேற்பைப் பெறும்" என கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efd4ca6d-be85-40f8-a07f-3a1e206d9c5f/26-6aafb6698e2e1.webp' /></p><p></p><p>

இவருடைய இந்த விமர்சனத்தின் மூலம் மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 25-ஆம் தேதி ரசிகர்கள் இப்படத்திற்கு என்ன விமர்சனம் தரப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Happened to watch <a href="https://x.com/hashtag/MeesayaMurukku2?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#MeesayaMurukku2</a> last night, and I absolutely loved it! 🔥<a href="https://x.com/hiphoptamizha?ref_src=twsrc%5Etfw">@hiphoptamizha</a> ‘s performance is fabulous, and the songs are fantastic! 🎶🔥<br><br>“Kalaivaniye” is a mind-blowing melody ❤️🎵<br><br>1st half is full of Gen Z Connect, and the 2nd half is packed with emotions,… <a href="https://t.co/cMccd1jstK">pic.twitter.com/cMccd1jstK</a></p>&mdash; Sriram (@kbsriram16) <a href="https://x.com/kbsriram16/status/2101564336347185492?ref_src=twsrc%5Etfw">September 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-09-20T11:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக் பாஸ் சட்டசபை; பல்டி அடித்த விஜய் சேதுபதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bigg-boss-assembly-vijay-sethupathi-controversial-1789901988"></link>
            <id>https://jvpnews.com/article/bigg-boss-assembly-vijay-sethupathi-controversial-1789901988</id>
            <summary type="text">சில நாட்களுக்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி லீடர்ஷிப் குவாலிட்டி குறித்து பேசிய சில கருத்துக்கள் விஜய் ரசிகர்களுக்கும், தவெகவின...</summary>
            <content type="html"><![CDATA[<p>சில நாட்களுக்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி லீடர்ஷிப் குவாலிட்டி குறித்து பேசிய சில கருத்துக்கள் விஜய் ரசிகர்களுக்கும், தவெகவினருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.&nbsp;</p><p>அவர் மறைமுகமாக தமிழக முதல்வர் ஜோசப் விஜயைத்தான் விமர்சிக்கிறார் என நினைத்த அவர்கள் விஜய் சேதுபதி முகம் தரக்குறைவாக சமூக வலைத்தளங்களில் விமர்சித்தனர்.</p><p>விஜய் சேதுபதி திமுகவின் ஆதரவாளர் கடந்த திமுக ஆட்சியில் அவர் எதுவுமே வாய்ஸ் பேசவில்லை ஆனால் தற்போது பேசுகிறார் என அவர்கள் கருத்து தெரிவித்தனர் .</p><p>சில தவெக எம்.எல்.ஏக்களும் விஜய் சேதுபதிக்கு எதிராக கருத்து கூறியிருந்தனர்.</p><p>இந்நிலையில், இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியில் இது தொடர்பாக விளக்கமளித்துள்ள விஜய் சேதுபதி ‘நான் பேசும் கருத்துக்கள் இந்த வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.. வெளியில் இருக்கும் ஒரு தனி நபரையோ, அல்லது அமைப்பையோ சாராது.</p><p>நான் சொல்லாமலே இது மக்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைத்தேன்.&nbsp; ஆனால் தற்போது சொல்ல வேண்டிய அவசியம் வந்துவிட்டது’ என்று கூறியிருக்கிறார்.</p>]]></content>
            <updated>2026-09-20T10:59:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலைத் திருத்தம் குறித்து அரச தரப்பின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fuel-price-revision-at-the-end-of-september-in-sl-1789900358"></link>
            <id>https://ibctamil.com/article/fuel-price-revision-at-the-end-of-september-in-sl-1789900358</id>
            <summary type="text">இலங்கையில் செப்டெம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலைத் திருத்தம் இடம்பெறக்கூடும் என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.உலக சந்தையில் எரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் செப்டெம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலைத் திருத்தம் இடம்பெறக்கூடும் என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.</p><p>உலக சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்துள்ளமையைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p>

காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">மத்திய கிழக்கு யுத்தம்</span></h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய கிழக்கு யுத்தம் ஆரம்பமானதோடு உலகின் வலுசக்தி சந்தையில், குறிப்பாக எரிபொருள் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bec81d6-4327-4eb0-95e5-a865c9048342/26-6aafbbfc3dd64.webp' /></p><p>

மார்ச், ஏப்ரல் மாதங்களில், உலகச் சந்தைக்கு நிகராக இல்லாவிட்டாலும், உள்நாட்டுச் சந்தையிலும் ஓரளவு எரிபொருள் விலையை அதிகரிக்க எமக்கு நேரிட்டது. </p><p>

பின்னர் உலகச் சந்தையில் எரிபொருள் விலை குறைந்த போது, உள்நாட்டுச் சந்தையிலும் எரிபொருள் விலையைக் குறைக்க நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மீண்டும் ஒருமுறை யுத்தம் தீவிரமடைந்தமையினால் உலகில் எரிபொருள் விலை மீண்டும் உயர்ந்து காணப்படுகிறது.</p><p>

எனவே வழமையாக நாம் ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும், அந்த மாதத்தின் சராசரி பெறுமதியைப் பார்த்து, எமக்கு எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு எவ்வளவு செலவானது என்று ஆராய்ந்து பார்த்துதான் நாம் எரிபொருள் விலையை மீளாய்வு செய்கிறோம்.</p><p></p><h2>டீசலை சந்தைக்கு விநியோகித்தல்&nbsp;</h2><p> 

அந்தவகையில் செப்டெம்பர் மாத இறுதியிலும் இந்த மீளாய்வைச் செய்ய நாம் எதிர்பார்க்கிறோம். 

ஆனாலும், ஏற்கனவே எமது எரிபொருள் விலை கணிசமான அளவு உயர்வாகவே காணப்படுவதாக நாம் கருதுகிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4642f53e-fbeb-4971-bf1e-ae517d40a212/26-6aafbbfd07edd.webp' /></p><p> 

எனவே, மேலும் ஏற்படும் விலை அதிகரிப்பை எரிபொருள் பாவனையாளர்களால் தாங்கிக்கொள்ள முடியுமா என்பது குறித்து அரசாங்கத்திற்குள் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது. </p><p>

அதேபோல, பிரச்சினை நிலவுவது எரிபொருள் விநியோகிக்கும் ஒருசில தனியார் நிறுவனங்களுக்குத்தான். அவர்கள் தான் இதில் ஏற்படும் நட்டத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது என்ற பிரச்சினையை முன்வைத்து, குறிப்பாக டீசலை சந்தைக்கு விநியோகிப்பதை மட்டுப்படுத்தியுள்ளார்கள்.</p><p> 

ஆகவே, சட்டரீதியான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து பார்த்து, ஏதாவது ஒரு உயர் மற்றும் குறைந்த விலையெல்லைகளுக்குள் அந்த நிறுவனங்களுக்குத் தங்களுடைய விலையிலேயே எரிபொருளை விற்பனை செய்ய சந்தர்ப்பம் வழங்க முடியுமா என்று நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்“ என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T10:55:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை மீண்டும் உயருமா..! அவசர பேச்சுவார்த்தைக்கு தயாராகும் இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imf-for-fuel-subsidy-amid-rising-prices-1789900149"></link>
            <id>https://tamilwin.com/article/imf-for-fuel-subsidy-amid-rising-prices-1789900149</id>
            <summary type="text">சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மீதான நிதிச்சுமையை குறைக்கும் வகையில் புதிய எரிபொருள் மானியத் திட்டமொன்றை நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மீதான நிதிச்சுமையை குறைக்கும் வகையில் புதிய எரிபொருள் மானியத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இலங்கை அரசாங்கம் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் நாளிதழ் ஒன்றிடம் இதனைத் தெரிவித்துள்ளதுடன், நிலைமையை கருத்திற்கொண்டு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>எரிபொருள் விலைகள்</h2><p>
</p><p>
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் இராணுவ பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன.</p><p>

இந்த நிலையில், அதிகரித்து வரும் எரிபொருள் செலவைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் ஐஎம்எப் உடனான கலந்துரையாடல்கள் அவசரமாக ஆரம்பிக்கப்படும் என அரசாங்க அதிகாரி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cee47dea-e562-44b4-81f4-a22fa7bc4b7f/26-6aafb9f53c1c1.webp' /></p><p>
</p><p>
எரிபொருள் விலைகள் தொடர்ந்து அதிகரித்தால், அது பொதுமக்கள் மீது பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்துவதுடன், தொழிற்துறை நடவடிக்கைகள், மின்சார உற்பத்திச் செலவு மற்றும் போக்குவரத்துத் துறை ஆகியவற்றிலும் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
எனவே, தற்போதைய நிலைமை சீராகும் வரை குறிப்பிட்ட காலத்திற்கு எரிபொருள் மானியத்தை வழங்குவது தொடர்பில் ஐஎம்எப் உடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
</p><p>
மேற்கு ஆசிய நெருக்கடியால் எரிசக்தித் துறை கடும் அழுத்தத்தை எதிர்கொண்டிருந்த நிலையில், அரசாங்கம் கடந்த ஏப்ரல் மாதம் 100 பில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணத் திட்டத்தை அறிவித்திருந்தது.

அதன் கீழ், ஒரு லீற்றர் டீசலுக்கு அதிகபட்சமாக 100 ரூபாவும், பெட்ரோலுக்கு 20 ரூபாவும் மானியம் வழங்கப்பட்டது.</p><h2>&nbsp;எரிசக்தி அமைச்சிடம் கோரிக்கை</h2><p> 

இதற்காக மூன்று மாத காலப்பகுதியில் திறைசேரிக்கு சுமார் 60 பில்லியன் ரூபா செலவாகியிருந்தது. இந்த நிவாரணத் திட்டம் ஜூலை மாதத்தின் நடுப்பகுதியில் நிறைவடைந்தது.
</p><p>
இதேவேளை, இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் ஐஎம்எப் முக்கிய நிபந்தனையொன்றை விதித்துள்ளது.
</p><p>
 அதன்படி, எரிபொருள் விலைகள் உண்மையான செலவு மாற்றங்களை பிரதிபலிக்கும் விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0cffb8a-2892-4af4-8020-10a46194b258/26-6aafb9f47cae0.webp' /></p><p>

எனினும், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளதுடன், கட்டுமானம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செலவுகளும் உயர்ந்துள்ளதால், தற்போதைய விலை மட்டத்தில் தொடர்ந்து எரிபொருள் விநியோகிப்பது சாத்தியமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளன.
</p><p>
குறிப்பாக, தற்போது ஒரு லீற்றர் டீசலுக்கு சுமார் 100 ரூபா நட்டத்தை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ள தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்கள், டீசல் விலையை அதிகரிக்க அனுமதிக்குமாறு எரிசக்தி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T10:48:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் மழையால் நீரில் விழுந்து நபர் ஒருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-dies-after-falling-into-water-ruwanwella-area-1789899818"></link>
            <id>https://ibctamil.com/article/man-dies-after-falling-into-water-ruwanwella-area-1789899818</id>
            <summary type="text">இன்று (20) காலை பெய்த கடும் மழையால் ரிடிகஹ ஓயாவின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்த நிலையில், அதில் விழுந்த 44 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 குறித்த ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று (20) காலை பெய்த கடும் மழையால் ரிடிகஹ ஓயாவின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்த நிலையில், அதில் விழுந்த 44 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
 குறித்த நபர், அம்பாகல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கபட்டுகின்றது.</p><p>இவர் அவிசாவளை - புலத்கொஹுபிட்டிய வீதியில் பொல்கட்டுவங்குவ அருகே பாயும் ரிடிகஹ ஓயாவில் தவறி விழுந்ததாக விசாரணைகளின் மூலம் தெரிவிக்கபட்டுள்ளது.</p><p></p><h2>கரவனெல்லை ஆரம்ப வைத்தியசாலை</h2><p>
</p><p>இதன் பின்னர் பிரதேசவாசிகள் மற்றும் ருவன்வெல்ல காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது, அவர் விழுந்த இடத்துக்கு கீழ்புறமுள்ள நீர்த்தேக்கத்தில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc031834-b29b-48d0-afa4-aad4d015f29f/26-6aafb9b926f24.webp' /></p><p>இந்த சம்பவம் தொடர்பில் ருவன்வெல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>மேலும் சடலத்திற்கான பிரேதப் பரிசோதனை கரவனெல்லை ஆரம்ப வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T10:47:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணிகளை விடுவிக்காது ஏமாற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்! பலாலி மக்கள் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/release-of-lands-in-valikamam-north-npp-1789898903"></link>
            <id>https://tamilwin.com/article/release-of-lands-in-valikamam-north-npp-1789898903</id>
            <summary type="text">மக்களின் காணி மக்களுக்கு என வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த அநுர
தலைமையிலான அரசாங்கம் இரண்டு வருடங்கள் கடந்தும் வலி வடக்கு காணிகளை
விடுவிக்காது கபட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்களின் காணி மக்களுக்கு என வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த அநுர
தலைமையிலான அரசாங்கம் இரண்டு வருடங்கள் கடந்தும் வலி வடக்கு காணிகளை
விடுவிக்காது கபட நாடகம் ஆடுவதாக பலாலி காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்து
கொண்ட மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
</p><p>இன்றையதினம்(20.9.2026)பலாலி காணி விடுவிப்பு கோரி மக்கள் போராட்டம் 14ஆவது வாரமாக
இடம்பெற்ற நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்
இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
</p><p>
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து
17 வருடங்கள் கடக்கின்ற நிலையில் எமது நிலத்தை விட்டு சென்று 35 வருடங்கள்
கடக்கின்றது.</p><h2>வாக்குறுதி</h2><p>

இன்றும் நாம் அனாதைகளாக வாடகை வீட்டில் வாழ்ந்து வருகின்ற நிலையில் எங்களின்
வளமான காணிகளுக்குள் இராணுவம் விவசாயம் செய்து மேலதிக வருமானத்தை உழைத்து
வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c858ab6b-8f82-4906-9896-2c2ce35eb3b6/26-6aafb9304f05a.webp' /></p><p>

தற்போது நாட்டின் ஜனாதிபதியாக இருக்கின்ற அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதி
தேர்தலுக்காக யாழ்ப்பாணம் வந்த நிலையில் பாதுகாப்பு தரப்பிடமுள்ள மக்களின்
காணிகள் மக்களுக்கு வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கினார்.

கொடுத்த வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படாமல் இரண்டு வருடங்கள் கடந்து
விட்டது.&nbsp;</p><h2>கோரிக்கை</h2><p>கடந்த ஜனாதிபதி தேர்தலில் அநுர தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்கு தமிழ்
மக்கள் கணிசமான பங்களிப்பை வழங்கிய நிலையில் அவர் கொடுத்த வாக்குறுதிகளை
உதாசீனம் செய்துவருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98f6f315-676c-4a7e-9ef6-c78cf3425299/26-6aafb9313327d.webp' /></p><p>
</p><p>
கடந்த கால அரசாங்கங்களை விட தற்போதைய அநுர தலைமையிலான அரசாங்கம் மிகக் குறைவான
காணிகளை விடுவித்துள்ள நிலையில் வழங்கிய வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற
வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T10:45:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bad-weather-sluice-gates-several-reservoirs-opened-1789900393"></link>
            <id>https://tamilwin.com/article/bad-weather-sluice-gates-several-reservoirs-opened-1789900393</id>
            <summary type="text">நுரெலியா மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கடும் மழை தொடர்ச்சியாக பெய்து
வருகிறது.&amp;nbsp;இந்நிலையில், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீரேந்து பகுதிகளில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுரெலியா மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கடும் மழை தொடர்ச்சியாக பெய்து
வருகிறது.&nbsp;</p><p>இந்நிலையில், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீரேந்து பகுதிகளில் பெய்து வரும்
கடும் மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று காலை முதல் திறக்கப்பட்டுள்ளன.</p><h2>கடும் மழை..&nbsp;</h2><p>
குறித்த நீர்த்தேக்கத்தில் ஒரு செக்கனுக்கு சுமார் 80 கன அடி நீர்
வெளியேற்றப்படுவதாகவும் எனவே இந்த நீர்த்தேக்கத்திற்கு கீழ்
தாழ்நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என
நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ebea32f-5c6f-43b9-b9ff-560d016d1d99/26-6aafb8df8fb85.webp' /></p><p>
</p><p>தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் விமலசுரேந்திர, காசல்ரி, மவுசாகலை, கெனியோன்
லக்சபான, பொல்பிட்டிய உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் மிக வேகமாக
உயர்ந்து வருவதாகவும் எனவே நீர்த்தேக்களுக்கு கீழ் பகுதியில் வாழும் மக்கள்
மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலைய
தெரிவித்துள்ளது.</p><p>
</p><p>இதேவேளை மழை தொடரச்சியாக பெய்து வருவதனால் டெவோன் சென்கிளையார் ஆகிய நீர்
வீழ்ச்சிகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்துள்ளது. எனவே இந்த நீர்
வீழ்ச்சிகளுக்கு அருகாமையில் செல்வதனை தவிர்த்து கொள்வதன் மூலம் விபத்துக்களை
தவிர்த்துக்கொள்ளலாம் என பாதுகாப்பு பிரிவினர் எச்சரித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T10:44:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டில் பெரும் துயர சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/actor-sivaji-ganesan-daughter-passed-away-1789881445"></link>
            <id>https://jvpnews.com/article/actor-sivaji-ganesan-daughter-passed-away-1789881445</id>
            <summary type="text">மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகளும், நடிகர்கள் பிரபு மற்றும் ராம்குமாரின் சகோதரியுமான சாந்தி இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகளும், நடிகர்கள் பிரபு மற்றும் ராம்குமாரின் சகோதரியுமான சாந்தி இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.</p><p>அவரது மறைவு குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>கடந்த சில தினங்களாக உடல்நலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு வந்த சாந்தி இன்று காலமாகி இருக்கிறார்,</p><p>சாந்தி மறைவுக்கு திரையுல பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-20T10:41:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[48 கடவுச்சீட்டுகளுடன் கைதான நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ex-immigration-worker-arrested-with-48-passports-1789900849"></link>
            <id>https://jvpnews.com/article/ex-immigration-worker-arrested-with-48-passports-1789900849</id>
            <summary type="text">போலி ஆவணங்களைத் தயாரிப்பதற்காகப் பிறருக்குச் சொந்தமான 48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்ததாகக் கூறப்படும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>போலி ஆவணங்களைத் தயாரிப்பதற்காகப் பிறருக்குச் சொந்தமான 48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்ததாகக் கூறப்படும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முன்னாள் அலுவலக உதவியாளர் ஒருவர் நவகமுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>கடவுச்சீட்டுகள் மற்றும் நாணயத்தாள்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்களைச் சரிபார்க்கப் பயன்படும் ஒரு போலி இயந்திரம் மற்றும் ஒரு ஸ்மார்ட்போன் ஆகியவையும் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டன.</p><h2>இந்தச் சேவைக்காக ஒரு நபருக்கு 20,000 ரூபா</h2><p>தூதரகம் ஒன்றின் ஊடாக விசா பெறுவதற்கு ஒருவருக்கு உதவுவதற்காக, கடுவெலவின் இஹல பொமிரியா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் போலி ஆவணங்கள் தயாரிக்கப்படுவதாக நவகமுவ பொலிஸ் நிலையத்தின் பிரிவுசார் புலனாய்வுப் பிரிவுக்குத் தகவல் கிடைத்ததாகக் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>இத்தகவலின் அடிப்படையில், நவகமுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) பிரதான பரிசோதகர் சுசந்த ஜயநாத்தின் அறிவுறுத்தலின் பேரில், நவகமுவ பொலிஸ் நிலையத்தின் ஊழல் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையின்போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.</p><p>விசாரணையின்போது, ​​தான் சுமார் ஐந்து ஆண்டுகள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றியதாகச் சந்தேக நபர் பொலிஸாரிடம் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>அதன் பின்னர் அவர் பத்தரமுல்லையில் உள்ள ஆட்சேர்ப்பு முகமை ஒன்றில் பணியாற்றியதாகவும், அங்கிருந்தே இந்தக் கடவுச்சீட்டுகளைப் பெற்றதாகவும் பொலிஸார் கூறினர்.</p><p>விசாரணைகளின்படி, சுற்றுலா விசாவில் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்ய விண்ணப்பிக்கும் நபர்கள் ஏற்கனவே வெளிநாடுகளுக்குப் பயணம் செய்திருப்பதாகத் தூதரகங்களுக்குத் தோற்றமளிக்கும் வகையில், பழைய கடவுச்சீட்டுகளிலிருந்து விசா பக்கங்களை நீராவி மூலம் அகற்றி, அவற்றை புதிய கடவுச்சீட்டுகளில் கவனமாக ஒட்டியதாகச் சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p>இந்தச் சேவைக்காக ஒரு நபருக்கு 20,000 ரூபாயை அறவிட்டதாகச் சந்தேக நபர் பொலிஸாரிடம் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடவுச்சீட்டுகளில் சுமார் 15 கடவுச்சீட்டுகளிலிருந்து விசா பக்கங்கள் அகற்றப்பட்டிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>மேலும், 70 வயதான இந்தச் சந்தேக நபர் கடுவல நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-20T10:40:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பாவை அடுத்து... இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்திய சவுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/saudi-stops-crude-supplies-1789900961"></link>
            <id>https://news.lankasri.com/article/saudi-stops-crude-supplies-1789900961</id>
            <summary type="text">Saudi Aramco stops crude supplies to India: சவுதி அராம்கோ இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்தியது.
சவுதி அரேபியாவின் முக்கிய கிழக்கு-மேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>Saudi Aramco stops crude supplies to India: சவுதி அராம்கோ இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்தியது.
</p><p>சவுதி அரேபியாவின் முக்கிய கிழக்கு-மேற்கு குழாய்வழித்தடத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, சவுதி அரம்கோ நிறுவனம் இந்திய சுத்திகரிப்பு ஆலைகளுக்கு கச்சா எண்ணெய் வழங்குவதை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தியுள்ளது.</p><h2>கிழக்கு-மேற்கு</h2><p>
</p><p>சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைகள் மற்றும் சரக்குக் கட்டணங்கள் உயர்ந்துள்ள நிலையில், மாற்று விநியோகத்தை நாடும் இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு, கச்சா எண்ணெய் கொள்முதல் செலவுகள் அதிகரிக்கக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f8c74c0-3530-4e7f-9bbe-04d22542eb4e/26-6aafb8a37b3ea.webp' /></p><p> </p><p>வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், ஈராக் ஆயுதக் குழுவொன்றால் இயக்கப்படும் ட்ரோன்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், கடந்த வார இறுதியில் 'கிழக்கு-மேற்கு' குழாய் வழித்தடம் மூடப்பட்டது. </p><p>ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் இடையூறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கச்சா எண்ணெயை விநியோகிப்பதற்கான சவுதி அரேபியாவின் முக்கிய மாற்றுப் பாதையாக இந்தப் குழாய் வழித்தடம் உருவெடுத்தது.</p><p></p><p> </p><p>இந்த நிலையில், செங்கடல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி ஆகிய இரண்டும் வழியாக இந்தியாவிற்கு வழங்குவதை அரம்கோ நிறுத்தியுள்ளது. குழாய்வழித் தாக்குதலுக்கு முன்பே ஹார்முஸ் வழியாக விநியோகம் மிகவும் குறைந்த நிலைக்குச் சரிந்திருந்தது. </p><p>கச்சா எண்ணெய் விலைகள் ஏற்கனவே உயர்ந்துள்ள நேரத்தில் இந்த இடையூறு ஏற்பட்டுள்ளது. சமீபத்திய சந்தை நிலவரத்தில், பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 1.36 டொலர் அல்லது 1.30 சதவீதம் சரிந்து 103.46 டொலர் ஆகவும், WTI கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 0.85 டொலர் அல்லது 0.83 சதவீதம் சரிந்து 101.06 டொலர் ஆகவும் இருந்தது. </p><p>சவுதி அரேபியா இந்தியாவுக்கு கச்சா எண்ணெயை வழங்கும் முக்கிய நாடாகத் திகழ்கிறது. போர் தொடங்கியதிலிருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 9 சதவீதத்தை 'அராம்கோ' (Aramco) நிறுவனம் வழங்கியுள்ளது. </p><p>இந்த நிலையில், இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் தற்போது சவுதி அரேபியாவிலிருந்து தங்களது ஒப்பந்தம் செய்யப்பட்ட காலவரையறைக்குட்பட்ட விநியோகத்தைப் பெறவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>சமீபத்திய இடையூறு</h2><p>
</p><p>அராம்கோ பொதுவாக இந்தியா மற்றும் பிற வாடிக்கையாளர்களுக்கு, 'ஸ்பாட்' சந்தை (spot market) மூலமாக அல்லாமல், அதிகாரப்பூர்வ விற்பனை விலையிலான வருடாந்திர ஒப்பந்தங்கள் மூலமாகவே கச்சா எண்ணெயை விநியோகம் செய்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e7ad875-6ac6-47d7-b43a-acb233cedf9a/26-6aafb8a42f4d1.webp' /></p><p> </p><p>இதனால், மாற்று விநியோக வழிகளைக் கண்டறிய வேண்டிய நிலையில் உள்ள இந்தியச் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு, ஏற்பட்டுள்ள இந்தச் சமீபத்திய இடையூறு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. </p><p>இருப்பினும், மாற்றுக் கச்சா எண்ணெயைக் கண்டறிவது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>இந்திய சுத்திகரிப்பாளர்கள் மாற்று கச்சா எண்ணெய் விநியோகத்தைக் கண்டறிவதில் நம்பிக்கையுடன் உள்ளனர், ஆனால் சர்வதேச எண்ணெய் அளவுகோல்கள் உயர்ந்துள்ளதாலும், ரஷ்ய கச்சா எண்ணெய் மீதான தள்ளுபடிகள் மறைந்துவிட்டதாலும், அந்த பீப்பாய்களின் விலை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-20T10:39:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் எரிபொருள் தட்டுப்பாடு தீவிரம் - டீசல் விலை அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/france-fuel-crisis-diesel-hits-record-high-1789900825"></link>
            <id>https://news.lankasri.com/article/france-fuel-crisis-diesel-hits-record-high-1789900825</id>
            <summary type="text">France fuel crisis diesel price hits record high: பிரான்சில் எரிபொருள் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடுபிரெஞ்சு அரசு தரவுகளின்படி...</summary>
            <content type="html"><![CDATA[<p>France fuel crisis diesel price hits record high: பிரான்சில் எரிபொருள் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.</p><h2>

எரிபொருள் தட்டுப்பாடு</h2><p>பிரெஞ்சு அரசு தரவுகளின்படி, நாட்டின் ஒவ்வொரு 9 எரிபொருள் நிலையங்களில் 1 இடத்தில் குறைந்தது ஒரு வகை பெட்ரோல் அல்லது டீசல் கிடைக்காமல் உள்ளது.
</p><p>
செப்டம்பர் 18 காலை 9 மணிக்கான அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பில், 11 சதவீத எரிபொருள் நிலையங்கள் விநியோக சிக்கல்களை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f535043b-07ca-44b5-a428-2a9ea2aafd25/26-6aafb81aa5a88.webp' /></p><p>இந்த எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. புதன்கிழமை 9 சதவீதம், வியாழக்கிழமை 10 சதவீதம், வெள்ளிக்கிழமை 11 சதவீதமாக உயர்ந்துள்ளது.
</p><p>
Grand Est பிராந்தியம் மிக மோசமான நிலையை எதிர்கொள்கிறது. அங்கு 16 சதவீத நிலையங்கள் விநியோக சிக்கல்களை சந்திக்கின்றன. Centre-Val de Loire மற்றும் Occitanie பிராந்தியங்களில் 14 சதவீத நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. Pays de la Loire 13 சதவீத நிலையங்களில் பற்றாக்குறை உள்ளது.</p><p></p><p>அரசு தரவுகள் முழுமையான நிலையை காட்டவில்லை எனவும் கூறப்படுகிறது. உதாரணமாக, ஒரு நிலையத்தில் SP95 இல்லாமல் SP98 கிடைத்தால், அது பற்றாக்குறையாகக் கணக்கிடப்படவில்லை. இதனால், பல வாகன ஓட்டிகள் உண்மையில் அதிக சிக்கல்களை சந்திக்கின்றனர்.</p><p>

இதற்கிடையில், டீசல் விலை சாதனை அளவுக்கு உயர்ந்துள்ளது. வியாழக்கிழமை டீசல் லிட்டருக்கு 2.38 யூரோவாக இருந்தது. வெள்ளிக்கிழமை அது 2.39 யூரோவை கடந்தது. சில நிலையங்களில் 2.70 யூரோ வரை விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலைகளும் அதிகரித்துள்ளன.
</p><p>
இந்த நெருக்கடியை சமாளிக்க, பிரான்ஸ் அரசு சுத்திகரிப்பு நிலைய உற்பத்தியை அதிகரித்தல், பராமரிப்பு அட்டவணைகளை மாற்றுதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. </p><p>பிரதமர் Sebastien Lecornu, மீனவர்கள், விவசாயிகள் மற்றும் கட்டுமானத் துறைக்கு கூடுதல் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
</p><p>
இந்த எரிபொருள் நெருக்கடி, பிரான்ஸ் மக்களின் அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதிக்கிறது. விலை உயர்வு மற்றும் விநியோக சிக்கல்கள், அரசின் நடவடிக்கைகள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதைக் காட்டும் முக்கிய சோதனையாக உள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T10:36:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக முதல் மரணம் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/first-death-due-to-heavy-rain-1789899285"></link>
            <id>https://tamilwin.com/article/first-death-due-to-heavy-rain-1789899285</id>
            <summary type="text">இன்று பெய்த கனமழையினால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்ததன் காரணமாக ரிட்டிகஹ ஓயாவில் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

அம்பகலவைச் சேர்ந்த 44 வயதுடைய ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று பெய்த கனமழையினால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்ததன் காரணமாக ரிட்டிகஹ ஓயாவில் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p> 

அம்பகலவைச் சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>
</p><p>
 அவிசாவளை - புலத்கொஹுபிட்டிய வீதியின் அருகே ஓடும் ரிட்டிகஹ ஓயாவில் அவர் விழுந்ததையடுத்து, அப்பகுதி மக்களும் பொலிஸாரும் இணைந்து நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் 
அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e7fb013-30d9-4959-aa94-bef7eebcf2fa/26-6aafb714f30aa.webp' /></p><p> </p><p>

இச்சம்பவம் குறித்து ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>

மேலும், கரவனெல்ல மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T10:32:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[20 வருடமாக மகிந்த ராஜபக்ச கையில் வைத்திருக்கும் வஜ்ரத்தின் இரகசியம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/secret-of-the-vajra-held-by-mahinda-rajapaksa-1789899452"></link>
            <id>https://ibctamil.com/article/secret-of-the-vajra-held-by-mahinda-rajapaksa-1789899452</id>
            <summary type="text">இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 
இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக பொதுக்கூட்டங்களின் போதும் முக்கியமான அரசியல் நிகழ்வுகளின் போது வஜ்ரத்தை தன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 
இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக பொதுக்கூட்டங்களின் போதும் முக்கியமான அரசியல் நிகழ்வுகளின் போது வஜ்ரத்தை தன்னுடைய கையில் வைத்திருக்கின்றார் என்பது செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
2005ஆம் ஆண்டு ஆன்மீக சிகிச்சையாளர் ஒருவர் இந்த வஜ்ரத்தை மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கியதாவும் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இந்த வஜ்ரம் ஆன்மீக பாதுகாப்பு, ஜோதிட நம்பிக்கை, அதிகாரத்தின் அடையாளம் மற்றும் மன உறுதிக்கான ஒரு தூண்டுதல் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த நிலையில் அண்மையில் நடந்த சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர பொதுக்கூட்டத்தின்போது மகிந்த ராஜபக்சவின் கையில் இந்த வஜ்ரம் இருக்கக்கூடிய புகைப்படங்கள் அதிகளவில சமூக வலைத்தளங்களில பகிரப்பட்டு வந்தது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/e7LboISYa4M" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T10:32:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்தஞாயிறு தாக்குதல் : இன்னும் இரண்டு நாட்களில் வரவுள்ள வரலாற்று தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2-days-left-for-final-verdict-easter-attacks-case-1789898175"></link>
            <id>https://ibctamil.com/article/2-days-left-for-final-verdict-easter-attacks-case-1789898175</id>
            <summary type="text">2026 செப்டம்பர் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, இலங்கையின் நீதித்துறை வரலாற்றிலும், 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கான நீதியை நிலைநாட்டுதல...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 செப்டம்பர் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, இலங்கையின் நீதித்துறை வரலாற்றிலும், 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கான நீதியை நிலைநாட்டுதல் செயல்முறையிலும் ஒரு மிக முக்கியமான மற்றும் தனித்துவமான நாளாகும். </p><p>அன்றைய தினம் நாட்டின் இரண்டு முக்கிய நீதிமன்றங்களில் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக அரசியல் ரீதியாகவும்&nbsp; இரண்டு முக்கிய வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு இறுதித் தீர்ப்புகள் அறிவிக்கப்படவுள்ளதே இதற்குக் காரணமாகும்.&nbsp;</p><h2>இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை</h2><p>அதில் முதல் முக்கிய நிகழ்வு, ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் நேரடியாகத் தொடர்புடைய நௌஃபர் மௌலவி உட்பட 25 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் இறுதித் தீர்ப்பை கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் அறிவிக்கவுள்ளதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1200ab00-4fde-4906-9400-a5fcb96f36a7/26-6aafb4b7122f1.webp' /></p><p> </p><p>நாட்டின் நீதித்துறை வரலாற்றில் அதிகபட்சமாக 23,000க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 2021 ஓகஸ்ட் 10 அன்று சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டது. </p><p>முன்னாள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய நியமித்த நீதிபதிகள் நவரத்ன மாரசிங்க, சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகியோரைக் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் 250க்கும் மேற்பட்ட அமர்வுகளில் இந்த விசாரணை நடைபெற்றது. </p><p>முறைப்பாட்டாளரின் 2,309 சாட்சிகளில் 547 பேரிடம் சாட்சியங்கள் பெறப்பட்டு, 2,076 ஆவணங்கள் மற்றும் வழக்குப்பொருட்கள் அடையாளப்படுத்தப்பட்ட பின்னர், முறைப்பாட்டாளரின் வழக்கு 2026 ஓகஸ்ட் 13 அன்று நிறைவடைந்தது.</p><h2>பிரதான பிரதிவாதி நௌஃபர் மௌலவி அறிக்கை</h2><p>பிரதான பிரதிவாதியான நௌஃபர் மௌலவி, பிரதிவாதி கூண்டில் இருந்து ஒரு அறிக்கையை வெளியிட்டார், அதில் தான் சஹ்ரான் ஹஷீம் மற்றும் குழுவினருடன் தொடர்பில் இருந்தபோதிலும், தாக்குதல்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20eeb3d6-45a9-4f5c-8963-a107f340ac98/26-6aafb4b7d7f54.webp' /></p><p> ஏனைய பிரதிவாதிகளான ஹயாத்து மொஹமட் அஹமட் மில்ஹான் மற்றும் மொஹமட் ஹனிஃபா ஸைனுல் ஆப்தீன் ஆகியோர், குடும்பத்தினரை அச்சுறுத்தி சிங்களத்தில் எழுதப்பட்ட வாக்குமூலங்களில் கையெழுத்து பெற்றதாகவும், தாங்கள் மதப் பிரசங்கங்களில் மட்டுமே பங்கேற்றதாகவும் தெரிவித்தனர்.</p><h2>கட்டுவாப்பிட்டி, கொச்சிக்கடை மற்றும் மட்டக்களப்பு சியோன் தேவாலயத் தாக்குதல்</h2><p> </p><p>கட்டுவாப்பிட்டி, கொச்சிக்கடை மற்றும் மட்டக்களப்பு சியோன் தேவாலயத் தாக்குதல்களுக்கு நாட்டில் முதன்முறையாக 'யூரியா நைட்ரேட்' என்ற உயர் வெடிபொருள் பயன்படுத்தப்பட்டதாக அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் வெளிப்படுத்தினார், மேலும் ஜமைக்காவில் இருந்து காணொளி தொழில்நுட்பம் மூலம் சாட்சியமளித்த முன்னாள் சட்ட மருத்துவ அதிகாரி எஸ். டி. சன்ன பெரேரா, ஷங்ரிலா மற்றும் சினமன் கிராண்ட் ஹோட்டல்களில் குண்டுதாரிகளின் மரண பரிசோதனை அறிக்கைகளை உறுதிப்படுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70f91148-9311-4129-bb64-e80051ee954b/26-6aafb4b8a6d3a.webp' /></p><p> </p><p>ஆரம்பத்திலிருந்தே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக வழக்கறிஞர்களான சுரேன் டி பெரேரா, மனுஷிகா குரே, ஹிருணி பெரேரா, சகோதரி சித்திஜா ஜயமான்ன மற்றும் சுமிரி என் பெர்னாண்டோ ஆகியோர் உட்பட ஒரு குழுவினர் ஆஜராகினர், மேலும் நீதிபதிகள் குழாம் ஓகஸ்ட் 24 அன்று செப்டம்பர் 22 அன்று இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது.</p><p>இரண்டாவது, ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னாலுள்ள சூத்திரதாரி மற்றும் சதித்திட்டத்தைக் கண்டறிய புதிதாக ஆரம்பிக்கப்பட்ட விசாரணை தொடர்பான வழக்கு அன்றைய தினமே கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாகும். </p><h2>சுரேஷ் சலே பேலியகொடையில் கைது</h2><p>பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட தகவல்களுக்குப் பிறகு, மருதானை சமூக மற்றும் சமய மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அருட்தந்தை ரோஹான் சில்வா அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆரம்பித்த இந்த விசாரணை தொடர்பாக, அரச புலனாய்வு சேவை மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலே 2026 பெப்ரவரி 25 அன்று பேலியகொடையில் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/449aaefe-4b7a-48d0-a498-3ec7dcbaa267/26-6aafb4b961390.webp' /></p><p> </p><p>இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கேணல் மொஹமட் அன்சார் மற்றும் பிரேம் ஆனந்த உடலகம ஆகியோருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டது.</p><h2>அசாத் மௌலானா அளித்த சாட்சியம்</h2><p>&nbsp; சுரேஷ் சலேக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள சாட்சியங்களில், சஹ்ரானின் சகோதரர் உட்பட குழுவினருக்கு பிணை வழங்குவதற்காக சலேவின் தலையீட்டில் இராணுவப் புலனாய்வுப் பிரிவிலிருந்து 250,000 ரூபாய் வழங்கப்பட்டதாகவும், தாக்குதல் நடந்த தினத்தின் காலை சலே, தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு அருகில் இருந்த ஒருவரை வாகனத்தில் ஏற்றிக்கொள்ள அழைப்பு விடுத்ததாகவும் பிள்ளையானின் முன்னாள் செயலாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f45fc17f-f99b-42e8-99a6-d6ce9a56c026/26-6aafb4ba167db.webp' /></p><p> நீர்கொழும்பு மற்றும் கட்டுவாப்பிட்டி தேவாலயத்தைச் சுற்றி அவதானித்த முஸ்லிம் குழுவினருக்கு சலேவின் அறிவுறுத்தலின் பேரில் உதவி வழங்கப்பட்டதாக 'பெத்தா' என்ற உளவாளி கூறியுள்ளதாகவும், அது ஒரு வலுவான சாட்சியம் என்றும் முன்னாள் நீதவான் இசுரு நெத்திகுமார குறிப்பிட்டுள்ளார். மேலும், அப்துல் அஸீஸ் ரூமியும் சலேக்கு எதிராக வாக்குமூலங்களை வழங்கியுள்ளார்.&nbsp;</p><p>&nbsp;சமீபத்திய தகவல்களின்படி, இந்தியாவின் 'Q' பிரிவுடன் தொடர்பில் இருந்த தம்பையன் என்ற இராணுவ உளவாளி மூலம் சஹ்ரானின் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு தொடர்ந்து கிடைத்து வந்துள்ளன.</p><p> </p><h2>வவுணதீவில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொலை</h2><p>2018 நவம்பர் 30 அன்று வவுணதீவில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டமை, காத்தான்குடி மோட்டார் சைக்கிள் வெடிப்பு மற்றும் தாக்குதலுக்கு முந்தைய நாள் தேவாலயங்களுக்கு பெரும் அழிவை ஏற்படுத்தப் போவதாக இந்திய 'Q' பிரிவு வழங்கிய முன் எச்சரிக்கைகளை தம்பையன் உடனடியாக இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு அறிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9beec555-23e5-4b42-95e0-e2536459e0cc/26-6aafb4babf78a.webp' /></p><p> இருப்பினும், புலனாய்வுப் பணிப்பாளர் வவுணதீவு சம்பவத்தை விடுதலைப் புலிகளே செய்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிக்கை அளித்திருந்தார், மேலும் தாக்குதலுக்குப் பிறகு சந்தேக நபர்கள் கல்முனையில் இருப்பதாக வழங்கப்பட்ட தகவல்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.</p><p> சஹ்ரானின் குழுவை உயிருடன் பிடிக்க வாய்ப்பிருந்தும், அவர்களை மொத்தமாக அழிக்கும் திட்டம் இருந்ததா என்பது சந்தேகத்திற்குரியது என்று மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.</p><h2>விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்கும்&nbsp;சுரேஷ் சலே</h2><p>கைது செய்யப்பட்ட பின்னர் உண்ணாவிரதம் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ் சலே, உண்ணாவிரதத்தை கைவிட்ட போதிலும் 100 நாட்களுக்கும் மேலாக வைத்தியசாலையில் தங்கியிருந்து விசாரணைகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும், இதில் மருத்துவ சதித்திட்டம் உள்ளதா என்பது சந்தேகத்திற்குரியது என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d037e890-2a29-4c9f-99c4-ac57a22bc32f/26-6aafb4bb76ab2.webp' /></p><p> </p><p>கோட்டை நீதவான் பசன் அமரசேன, சலேவின் மருத்துவ அறிக்கைகளை கோரிய போதிலும், தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் அவற்றை சமர்ப்பிக்கவில்லை, மேலும் சித்திரவதை குற்றச்சாட்டுகள் தொடர்பாக நியமிக்கப்பட்ட நிபுணர் சட்ட மனநல மருத்துவக் குழு கோரிய அறிக்கைகளும் வழங்கப்படவில்லை. </p><p>நீதிமன்ற உத்தரவுகளை அமுல்படுத்தாதது தொடர்பாக எதிர்வரும் 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு நீதவான் வைத்தியசாலை பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார், மேலும் ஈஸ்டர் தாக்குதல்களுக்கான நீதியை நாடும் அனைவருக்கும் இந்த செப்டம்பர் 22 ஆம் திகதி ஒரு மிக முக்கியமான நாளாக மாறியுள்ளது&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T10:29:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா; சிவப்பு அபாய முன்னெச்சரிக்கை​]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kandy-kegalle-and-nuwara-eliya-red-alert-1789900050"></link>
            <id>https://jvpnews.com/article/kandy-kegalle-and-nuwara-eliya-red-alert-1789900050</id>
            <summary type="text">கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய முன்னெச்சரிக்கை​ விடுக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;அனர்த்த முகாமைத்துவ நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய முன்னெச்சரிக்கை​ விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>அதன்படி கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை, கேகாலை மாவட்டத்தின் தெஹிஓவிட்ட, அரநாயக்க, தெரணியகல, மாவனல்ல, யட்டியாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு, அம்பகமுவ, நோர்வுட் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள மண்சரிவு அபாயம் அதிகம் உள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்குச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அவசரமாகக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p>]]></content>
            <updated>2026-09-20T10:27:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pressure-area-forming-over-andaman-sea-1789899707"></link>
            <id>https://news.lankasri.com/article/pressure-area-forming-over-andaman-sea-1789899707</id>
            <summary type="text">Pressure area forming over andaman sea-&amp;nbsp;வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Pressure area forming over andaman sea-&nbsp;வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
</p><h2>
வானிலை மையம் கூறுகையில்.., </h2><p>

வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது.
</p><p>
அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், வருகிற 22ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறும்.
</p><p>
மேலும், வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c60543c-6ff7-4d88-abf9-902d6ffd710a/26-6aafb3fae6132.webp' /></p><p>இதன் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்றும் நாளையும் இடி, மின்னல், காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
</p><p>
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சிவகங்கை, ஈரோடு, ராமநாதபுரம், நாமக்கல், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், புதுக்கோட்டை, மற்றும் நாகை மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
</p><p>
தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். </p><p>

சூறாவளி காற்று வீசக்கூடிய பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-09-20T10:23:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[படைகளை குறைக்க அமெரிக்கா திட்டம்; நேட்டோ நாடுகள் அதிர்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/reduce-troops-in-europe-us-decision-1789881922"></link>
            <id>https://canadamirror.com/article/reduce-troops-in-europe-us-decision-1789881922</id>
            <summary type="text">ஈரான் மீதான போருக்குத் தங்கள் நாட்டு வானுர்தித் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, ஐரோப்பாவிலுள்ள தனது படைகளைக் கணிசமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான போருக்குத் தங்கள் நாட்டு வானுர்தித் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, ஐரோப்பாவிலுள்ள தனது படைகளைக் கணிசமாகக் குறைக்க அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.</p><p>ஐரோப்பிய நேட்டோ (NATO) நாடுகள் அமெரிக்காவிற்குத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுத்தது "வெட்கக்கேடானது" என அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்சேத் சாடியுள்ளார்.</p><p>ஐரோப்பாவிலுள்ள 68,000 அமெரிக்க வீரர்களில் மூன்றில் ஒரு பங்கினரை (முக்கியமாக ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின்) திரும்பப் பெறுவது, அல்லது 40,000 வீரர்கள் மற்றும் ஆயுதங்களை வெளியேற்றுவது குறித்து பென்டகன் ஆலோசித்து வருகிறது.</p><p>இந்த நடவடிக்கை ஐரோப்பாவின் பாதுகாப்பைப் பாதிப்பதுடன், ரஷ்யாவிற்குச் சாதகமான சமிக்ஞையை அனுப்பக்கூடும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p>வர்த்தக வரிகள், கிரீன்லாந்து விவகாரம் மற்றும் நேட்டோ நிதியுதவி போன்ற காரணங்களால் அமெரிக்கா-ஐரோப்பா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.</p><p>இதேபோல தாய்வான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கான அமெரிக்காவின் பாதுகாப்பு ஆதரவும் தளர்ந்து வருவதாகக் வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.</p>]]></content>
            <updated>2026-09-20T10:23:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நமது அரசாங்கம் 2 ஆண்டுகள்: ஜனாதிபதி அநுர பங்கேற்கும் பிரம்மாண்ட மக்கள் பேரணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-years-anura-government-grand-public-rally-1789898771"></link>
            <id>https://tamilwin.com/article/2-years-anura-government-grand-public-rally-1789898771</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டு ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் &quot;நமது அரசாங்கம் - ஈராண்டு ஆட்சி - நாட்டிற்கு மாட்சி&quot; என்ற தொனிப்பொருளின்&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டு ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் "நமது அரசாங்கம் - ஈராண்டு ஆட்சி - நாட்டிற்கு மாட்சி" என்ற தொனிப்பொருளின்&nbsp;கீழ், பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p>அதன்படி, மாத்தறை - அக்குரஸ்ஸ பகுதியில் மாபெரும் மக்கள் பேரணி இன்று, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்று வருகின்றது. </p><p>கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் எட்டிய சாதனைகள், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் ஊழலற்ற சுபிட்சமான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இங்கு தெளிவுபடுத்தப்படவுள்ளன.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4l-ip0cLvNk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T10:21:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச சந்தையில் மீண்டும் எகிறும் தங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gold-and-silver-price-increase-today-1789893490"></link>
            <id>https://ibctamil.com/article/gold-and-silver-price-increase-today-1789893490</id>
            <summary type="text">சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (20) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (20) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.</p><p>
</p><p>
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது</p><p>அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,377.91 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.</p><p></p><h2>தங்கத்தின் விலை</h2><p>
</p><p>
அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 66.25 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3713f018-0cdc-4b92-809b-bf6e9529fff1/26-6aafb3319d45d.webp' /></p><p>கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச விலை அதிகரிப்பு காரணமாக இன்று இலங்கையிலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.</p><p>

மேலும், டொலரின் வலுவூட்டல் மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகள் இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைகின்றன எனவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T10:19:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[It's A Medical Miracle (மலையாளம்): திரை விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/its-a-medical-miracle-movie-review-1789899198"></link>
            <id>https://cineulagam.com/article/its-a-medical-miracle-movie-review-1789899198</id>
            <summary type="text">ஷராப் உதீன், சங்கீத் பிரதாப், அகிலா பார்கவன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள It&#039;s A Medical Miracle மலையாளத் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஷராப் உதீன், சங்கீத் பிரதாப், அகிலா பார்கவன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள It's A Medical Miracle மலையாளத் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e3e287b-b4d1-4d94-836a-b20a2f32da50/26-6aafb1c102ef9.webp' /></p><h2>கதைக்களம் </h2><p>

ரூபன் (சங்கீத் பிரதாப்) சாலை விபத்தில் சிக்கியதில் கோமா நிலைக்கு செல்கிறார். அவரை நர்ஸ் சூசனா நன்றாக பார்த்துக் கொள்கிறார். 

அதனால் ரூபனின் ஆரா சூசனா மீது ஈர்ப்புக்கொள்ள 2 ஆண்டுகள் நகர்கிறது. </p><p>ஆனாலும் ரூபனுக்கு சுயநினைவு திரும்பவில்லை.

இதன் காரணமாக அவரது தாய் மகனை கருணைக் கொலை செய்ய முடிவெடுக்கிறார். அதற்கான ஏற்பாடுகளை மருத்துவர்கள் செய்கின்றனர். 

இது தெரிந்து கடைசியாக ஒருமுறை ரூபனைப் பார்க்கலாம் என்று சூசனா செல்கிறார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/597d572d-a58e-401b-992c-f2fe7980861f/26-6aafb295aed4c.webp' /></p><p>அவர் அறையைவிட்டு திரும்பும்போது ஒரு விஷயம் நடக்க ரூபன் கோமாவில் இருந்து எழுகிறார். 

ஆனால், அவருக்கு தூரத்தில் ஒரு சொட்டு தண்ணீர் விழும் சத்தம் கூட அதீமாக கேட்கும் திறன் வந்துவிடுகிறது. 

அதனை ஒன்றில் மட்டும் கவனம் செலுத்தும் முறையை பயிற்சி செய்யும் ரூபன், கான்ஸ்டபிள் சூரஜ் உடன் சேர்ந்து ஒரு குழந்தைக் கடத்தலை தடுக்கிறார். </p><p>

இதற்கிடையில் மாஸ்க்மேன் என்ற மர்ம நபர் சிலரை சித்ரவதை செய்து வருவது தெரியவருகிறது. அந்நபரினால் உள்துறை அமைச்சர் மகளின் கர்ப்பம் கலைய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர்.

அந்த மாஸ்க்மேன் யார்? ரூபன் தனது சக்தியை வைத்து அவரை எப்படி கண்டுபிடித்தார்? என்பதே மீதிக்கதை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56e52ebc-fc50-4990-8b96-4e7e7111f099/26-6aafb296adc04.webp' /></p><h3>படம் பற்றிய அலசல்</h3><p> 

காமெடி, துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த சங்கீத் பிரதாப் ஹீரோவாக நடித்திருக்கும் முதல் படம் இது. 

அதேபோல் பிரேமலு படத்தில் மமிதாவின் தோழியாக நடித்திருந்த அகிலா பார்கவன் ஹீரோயினாக நடிக்க, அறிமுக இயக்குநர் ஷியாமின் கிரீஷ் இயக்கியுள்ளார். </p><p>

ஹீரோவுக்கு கிடைக்கும் சக்தி; அதை வைத்து அவர் என்னவெல்லாம் செய்வார் என்ற வழக்கமான லைன் ஆக இருந்தாலும், காட்சியமைப்புகளில் சுவாரஸ்யமாக படத்தை கொண்டு செல்கிறார் இயக்குநர். 

வில்லன் கதாபாத்திரம் ஒவ்வொரு சம்பவம் செய்த பின்னரும், ஏன் அதை செய்தார் என்ற சிறு பிளாஷ்பேக்கை காட்டியதும், அதில் சில யூகிக்க முடியாத வகையில் இருந்ததும் சூப்பர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e3a74f8-c3da-4a16-84de-ee44e829e3c8/26-6aafb2976997f.webp' /></p><p>

முதல் 15 நிமிடங்களுக்கு பின் ஜாலியான படமாக நகரும் திரைக்கதை, வில்லனின் என்ட்ரிக்கு பின் திரில்லர் மோடில் பயணிக்கிறது. 

காமெடி, எமோஷன், ரோமன்ஸ், ட்விஸ்ட் என எல்லா ஏரியாவிலும் இயக்குனர் ஷியாமின் கிரீஷ் கலக்கியிருக்கிறார். 

கதைக்கு ஏற்ற தேர்வாக ஹீரோ சங்கீத் மற்றும் ஹீரோயின் அகிலா சிறப்பாக நடித்துள்ளனர். </p><p>எமோஷனல் காட்சிகளில் சங்கீத் அதிக ஸ்கோர் செய்துள்ளார். 

ஷராப் உதீன் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். பாடி லேங்குவேஜிலும், டயலாக் டெலிவரியிலும் அட்டகாசம் செய்துள்ளார் என்றே கூறலாம். 

நான்கு பிரதான கதாபாத்திரங்களைச் சுற்றி கதை நகர்ந்தாலும், எங்குமே சலிப்பு ஏற்படாவண்ணம் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a51dc83e-8978-4471-8090-991c749123d4/26-6aafb298283fa.webp' /></p><p>முஜீப் மஜீத்தின் பின்னணி இசை மற்றும் ஒலிக்கலவை படத்திற்கு பெரும் பங்கு வகிக்கிறது. படத்தை ஸ்டைலிஷான மேக்கிங்கில் காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் அகில் சேவியர்.

ராகேஷ் சேருமாதத்தின் படத்தொகுப்பும், VFX-வும் வேறொரு தளத்திற்கு படத்தை கொண்டு சென்றுள்ளது.</p><p><b><u>க்ளாப்ஸ் </u></b></p><ul><li>

நடிகர்கள் </li><li>

இசை மற்றும் ஒலிக்கலவை </li><li>

திரைக்கதை </li><li>

ஸ்டைலிஷ் மேக்கிங் </li></ul><p><b><u>

பல்ப்ஸ் </u></b></p><ul><li>

பெரிதாக ஒன்றுமில்லை</li></ul><p> </p><p><b>


மொத்தத்தில் இந்த It's A Medical Miracle எதிர்பார்ப்பில்லாமல் காண்போருக்கு செம ஜாலி ரைடுதான். கண்டிப்பாக திரையரங்கில் பார்க்கலாம்.</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c34f06b3-9afd-45c9-8957-315edfc80a62/26-6aafb1c1b3e13.webp' /></p>]]></content>
            <updated>2026-09-20T10:17:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸ் 20-ல் டி-சர்ட்டை கழட்டி ட்ரோலர்களுக்கு சவால் விட்ட சல்மான் கான்!! வீடியோ..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/salman-khan-takes-off-shirt-on-bb20-slams-trolls-1789899207"></link>
            <id>https://viduppu.com/article/salman-khan-takes-off-shirt-on-bb20-slams-trolls-1789899207</id>
            <summary type="text">சல்மான் கான்பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராகவும் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் சல்மான் கான். தற்போது பிக்பாஸ் சீசன் 20 ந...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சல்மான் கான்</h2><p>பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராகவும் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் சல்மான் கான். தற்போது பிக்பாஸ் சீசன் 20 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் சல்மான் கான், திடீரென தன்னுடைய சட்டையை கழற்றி போஸ் கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய எபிசோட்டில், நிஜத்தில் தான் எதிர்கொண்ட ட்ரோல்கள் குறித்து பேசிய சல்மான், தன்னுடைய டி சர்ட்டை கழற்றி தன் உடற்கட்டை வெளிப்படுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da00f26d-8bef-4b1d-b796-60d327828bd3/26-6aafb1c94376e.webp' /></p><p> </p><p>அதன்பின், 'உங்களுக்கு என்ன தோணுதோ அதை சொல்லுங்கள். என்னை ட்ரோல் செய்கிறார்கள் என்று எனக்கு தெரியும், எங்களிடம் ஏராளமான ரசிகர் மன்றங்கள் இருக்கிறது. எனவே யார் என்ன செய்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியும். நாங்கள் எதிர்வினை ஆற்றாமல் இருகத்தான் நினைக்கிறோம், அவ்வளவுதான். உங்களை தாழ்த்திப் பேசி அவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். </p><p>மேலும் சிலர் காசு கொடுத்து இதை ஊக்குவிக்கும் நடிகர்கள் அல்லது தயாரிப்பாளர்காக கூட இருக்கலாம். பின் மக்கள் ஊழலை பற்றி பேசுகிறார்கள். பணத்திற்காக, படங்களுக்கு 4, 5 நட்சத்திர மதிப்பீடுகலை வழங்குகிறார்கள். அதுவும் மிகப்பெரிய ஊழல்தான், அப்படியிருக்க அறநெறி அல்லது ஒழக்கத்தை பற்றி பேச உங்களுக்கு எதாவது தகுது இருக்கிறதா?. பாய் குண்டாகிவிட்டார் என்று சொல்லி அவர்கள் என்னை ட்ரோல் செய்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da00f26d-8bef-4b1d-b796-60d327828bd3/26-6aafb1c94376e.webp' /></p><p> </p><p>வாருங்கள், இப்போது என்னை ட்ரோல் செய்யுங்கள், என்னிடம் சிக்ஸ் பேக், உடற்கட்டு எதுவும் இல்லை. உங்களுக்கு ட்ரோல் செய்வது பிடிக்கும் அல்லவா? (சட்டையை கழட்டிவிட்டு) இதைப் பார்த்து குளோஸ் அப் ஷாட் எடுங்கள், கருத்து தெரிவிக்கும் அனைவரும், முதலில் உங்களை பார்த்துவிட்டு, பின் இதை செய்யுங்கள். எங்களை ட்ரோல் செய்வதைவிட உங்கள் பெற்றோரையும் அவர்களின் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்வது நல்லது. </p><p>பாய், நீங்கள் உடல் எடையைக் குறைத்துவிட்டீர்கள் அல்லது எடையைக் கூட்டிவிட்டீர்கள்' என்று யாராவது சொன்னால் என்னால் புரிந்து கொள்ள முடியும், ஆனால் சோஹைல், வருண் அல்லது திரைத்துறையைச் சேர்ந்த யாரையாவது கேலி செய்வது சரியல்ல. தாராளமாக உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு என்னை ட்ரோல் செய்யுங்கள். நான் கிழிந்த செருப்பைக்கூட அணிகிறேன், அடுத்த முறையும் அதே செருப்போடு வருவேன், யாராவது ஒரு உடையை மீண்டும் அணிந்தால் அவர்கள் ட்ரோல் செய்யப்படுகிறார்கள் என்று காரசாரமாக பேசியிருக்கிறார்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">STANDING OVATION!<a href="https://x.com/hashtag/SalmanKhan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SalmanKhan</a> took off his T-shirt, showed his body and challenged if you want to troll, go ahead and do it.​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​<br><br>He just shut the haters up again. He doesn’t care about trolling <a href="https://x.com/hashtag/BiggBoss20?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BiggBoss20</a> <a href="https://t.co/YGbVM8X9om">pic.twitter.com/YGbVM8X9om</a></p>&mdash; Devil V!SHAL (@VishalRC007) <a href="https://x.com/VishalRC007/status/2101342695725953361?ref_src=twsrc%5Etfw">September 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-09-20T10:15:55+00:00</updated>
        </entry>
    </feed>
