<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-23T04:41:41+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியல் கைதிகள் தொடர்பில் நாடாளுமன்றில் அமைச்சர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minister-information-regarding-political-prisoners-1784780277"></link>
            <id>https://tamilwin.com/article/minister-information-regarding-political-prisoners-1784780277</id>
            <summary type="text">சிறைச்சாலை கட்டளை சட்டத்தில் &#039;அரசியல் கைதி&#039; என்ற பதத்துக்கு எத்தகைய
பொருள்கோடலும் வழங்கப்படவில்லை என்றும், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல்
கைதிகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலை கட்டளை சட்டத்தில் 'அரசியல் கைதி' என்ற பதத்துக்கு எத்தகைய
பொருள்கோடலும் வழங்கப்படவில்லை என்றும், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல்
கைதிகள் என்று எவரும் சிறைப்படுத்தப்படவில்லை என்றும் நீதி மற்றும் தேசிய
ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமர்வில், வாய்மூல விடைக்கான
வினாக்கள் வேளையின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்
பி. பெரேரா எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p></p><h2>சிறைச்சாலை கட்டளை சட்டம் மற்றும் ஒழுங்குவிதிகள்</h2><p>
</p><p>
"சிறைச்சாலை கட்டளைச் சட்டம் மற்றும் ஏனைய ஒழுங்குவிதிகளில் 'அரசியல் கைதிகள்'
என எந்தவொரு தனிக் குழுவும் குறிப்பிடப்படவில்லை. நீதிமன்றங்களின் ஊடாக கைதிகள் சந்தேகநபர்களாகவோ அல்லது குற்றவாளிகளாகவோ அடையாளப்படுத்தப்பட்டு
விளக்கமறியலிலோ அல்லது தடுப்புக்காவலிலோ வைக்கப்படுகின்றார்களே தவிர, அரசியல்
கைதிகள் என எவரும் நீதிமன்றத்தால் சிறைப்படுத்தப்படவில்லை.சர்வதேச
மட்டத்திலான பொருள் கோடல்களையே நாம் ஏற்கின்றோம் என்றும்&nbsp;தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/006c45ae-c352-4d18-983d-aaf64c0a1ff3/26-6a619b6d808f0.webp' /></p><p>இதன்போது தேர்தல் காலத்தில் வடக்கு -
கிழக்கில் பிரசாரம் செய்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசியல் கைதிகளை
விடுதலை செய்வதாக உறுதியளித்தாரே, அந்த நிலைப்பாட்டில் அரசு இன்றும் உள்ளதா என
அஜித் பி. பெரேரா எம்.பி. மேலதிக கேள்வியாக எழுப்பியுள்ளார்.</p><h2>கைதிகளின் பட்டியல்</h2><p>

இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார,</p><p> கைதிகளின் பட்டியலை தான்
பலமுறை ஆராய்ந்துள்ளதாகவும், இவர்கள் அனைவருக்கு எதிராகவும் நீதிமன்றங்களில்
வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுப் பலர் குற்றவாளிகளாகவும்
தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

"நாட்டின் சட்டத்தை மீறிய குற்றத்துக்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருப்பினும், அப்போதைய அரசியல் சூழலைக் கருத்திற்கொண்டு சிறைச்சாலைகளில்
நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் விசேட கவனம்
செலுத்தப்பட்டுள்ளது. </p><p>முன்னாள் நீதியரசர் துரைராசா சமர்ப்பித்துள்ள
அறிக்கைக்கு அமைய, கைதிகளின் தண்டனைக் காலத்தைக் குறைக்கவும் பொதுமன்னிப்பு
வழங்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றும் நீதி அமைச்சர் கூறியுள்ளார்.
</p><p>
மேலும், இந்த விடயத்தில் வடக்கு, கிழக்கு, தெற்கு என முழு நாடும்
உள்ளடக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T04:41:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[13 நாள் முடிவில் அதர்வாவின் இதயம் முரளி செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/idhayam-murali-movie-bo-details-1784780310"></link>
            <id>https://cineulagam.com/article/idhayam-murali-movie-bo-details-1784780310</id>
            <summary type="text">இதயம் முரளி&amp;nbsp;ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் கடந்த ஜுலை 10ம் தேதி வெளியான திரைப்படம் இதயம் முரளி.
அதர்வா, ஃபகத் பாசில், ப்ரீத்தி முகுந்தன், கயாது லோஹர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>இதயம் முரளி&nbsp;</h2><p>ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் கடந்த ஜுலை 10ம் தேதி வெளியான திரைப்படம் இதயம் முரளி.
</p><p>அதர்வா, ஃபகத் பாசில், ப்ரீத்தி முகுந்தன், கயாது லோஹர், ரக்ஷன், டிராவிட் செல்வம், நிஹாரிகா, ஏஞ்சலீன் உள்ளிட்டோர் நடிக்க இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. காதல், நகைச்சுவை, எமோஷ்னல் காட்சிகள் என படம் தயாராகி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.</p><p>
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இப்படம் அடுத்த மாதம் ஓடிடி ரிலீஸ் என கூறப்படுகிறது. அதாவது ஆகஸ்ட் 7ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகவுள்ளதாம்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf4e93f5-8395-4f94-bcbd-d91ed340fad0/26-6a6196e90206a.webp' /></p><h2>பாக்ஸ் ஆபிஸ்</h2><p>படத்தின் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூலுக்கு எந்த குறையும் இல்லை. </p><p>இப்படம் 13 நாள் முடிவில் ரூ. 30 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/MiHS8MVc5K0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-23T04:40:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணம் ; யாழ் தனியார் ஆய்வுகூடத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-private-laboratory-fined-rs-30-lakh-1784777019"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-private-laboratory-fined-rs-30-lakh-1784777019</id>
            <summary type="text">தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்படும் சில மருத்துவப் பரிசோதனைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் தொடர்பில் பாவனையாளர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்படும் சில மருத்துவப் பரிசோதனைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் அதிகபட்சக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.</p><p> </p><p></p><p>இதற்கமைய, முழுமையான இரத்தப் பரிசோதனை (Full Blood Count - FBC) ஒன்றிற்காகத் தனியார் துறையினரால் அறவிடக்கூடிய அதிகபட்சக் கட்டணம் 400 ரூபாவாகும்.</p><p> 

எனினும், யாழ்ப்பாணம், பலாலி வீதி, கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றினால் குறித்த பரிசோதனைக்காக 550 ரூபாய் வீதம் அறவிடப்பட்டுள்ளமை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பொன்றின் போது கண்டறியப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f583057b-8258-4873-8612-f636ac2d9a79/26-6a61893c90845.webp' /></p><p>இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. </p><p>

இதன்போது, பிரதிவாதி நிறுவனம் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து, குறித்த நிறுவனத்திற்கு 3 மில்லியன் ரூபாய் அபராதத்தை நீதிமன்றம் விதித்துள்ளது.</p><p> 

மேலும், இழைக்கப்பட்ட குற்றம் தொடர்பில் பிரதிவாதி நிறுவனத்தின் சொந்தச் செலவிலேயே பிரதான பத்திரிகைகளில் அறிவிப்பொன்றைப் பிரசுரிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>

தனியார் மருத்துவமனை அல்லது மருத்துவ ஆய்வுகூடங்களில் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போது, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணங்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. </p><p>

நீங்கள் செலுத்தும் பணத்திற்குச் சரியான பட்டியல் அல்லது பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொள்வது உங்களது நுகர்வோர் உரிமையாகும் எனவும், தேவையான சந்தர்ப்பங்களில் அதனை ஒரு முக்கிய சான்றாகப் பயன்படுத்த முடியும் எனவும் அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.</p><p> 

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணத்தை விடக் கூடுதலாகப் பணம் அறவிடப்படும் சந்தர்ப்பங்கள் தொடர்பில், அலுவலக நேரங்களில் 1977 என்ற அவசரத் தொலைபேசி இலக்கத்தின் ஊடாகப் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு முறைப்பாடளிக்க முடியும்.</p>]]></content>
            <updated>2026-07-23T04:37:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு சோதனையின் போது வீடொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gun-found-in-house-during-dengue-check-1784781360"></link>
            <id>https://jvpnews.com/article/gun-found-in-house-during-dengue-check-1784781360</id>
            <summary type="text">தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, பெலவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட வளாகப் பரிசோதனையொன்றின் போது, வீடொன்றிலிருந்து துப்பாக்கியொன...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, பெலவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட வளாகப் பரிசோதனையொன்றின் போது, வீடொன்றிலிருந்து துப்பாக்கியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p></p><p>பத்தரமுல்லை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால், இராணுவம், விமானப்படை, இலங்கை பொலிஸ் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் நேற்று (22) இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

பெருமளவிலான நாய்கள் வளர்க்கப்படும், மிகவும் அசுத்தமான நிலையில் காணப்பட்ட வீடொன்றைச் சோதனையிட்ட போதே, அங்கிருந்து உயிருள்ள டெங்கு நுளம்புக் குடம்பிகள் மற்றும் குறித்த துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b6287ad-621d-41c3-9bf8-0e9d1ba1d85e/26-6a619a31eb3b8.webp' /></p><p>இதனையடுத்து, பொலிஸாரால் குறித்த துப்பாக்கி பொறுப்பேற்கப்பட்டதுடன், வீட்டின் உரிமையாளரான பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

உயிருள்ள நுளம்புக் குடம்பிகள் காணப்பட்ட மற்றுமொரு வீட்டைச் சோதனையிட்ட போது, அவ்வீட்டின் உரிமையாளர் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதால், இரு தரப்பினருக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. </p><p>

அதேநேரம் நுளம்புக் குடம்பிகளுடன் வளாகங்களைப் பேணிய குற்றத்தின் கீழ், இந்த நடவடிக்கையின் போது இனங்காணப்பட்ட 13 நபர்களுக்கு எதிராகக் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>

டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை உடனடியாக அழித்து, டெங்கு ஒழிப்பு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T04:36:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ சேவை - அமைச்சரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/metro-bus-service-to-northern-province-1784777949"></link>
            <id>https://ibctamil.com/article/metro-bus-service-to-northern-province-1784777949</id>
            <summary type="text">இலங்கையின் நகர்ப்புறப் போக்குவரத்துச் சேவையை நவீனமயமாக்குவது தொடர்பான அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் நகர்ப்புறப் போக்குவரத்துச் சேவையை நவீனமயமாக்குவது தொடர்பான அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க விளக்கமளித்துள்ளார்.</p><p>அந்தவகையில், அடுத்த ஆண்டு முதல் வடக்கு மாகாணத்தில் மெட்ரோ பேருந்து சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>விசேட தேவையுடையோர் </h2><p>மேலதிக கேள்வியை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம், வடக்கு மாகாணத்தில் பெருந்தொகையான விசேட தேவையுடையோர் இருக்கின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf871de2-d32d-4b76-a2b6-05273cbfc9c6/26-6a619b19b897a.webp' /></p><p>மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து சக்கர நாற்காலிகள் பயன்படுத்தும் பெரும்பாலான நோயாளர்கள் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு போகும் சூழல் நிலவுகின்றது.</p><p> மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குறைந்தது ஒருநாளைக்கு ஒரு மெட்ரோ பஸ் சேவையை உங்களால் ஒழுங்கு செய்ய முடியுமாக இருந்தால் அதன்மூலம் பெரும்பாலான நோயாளர்கள் பயனடைவார்கள். இதனால் அதனை செய்ய முடியுமா? என்றார்.</p><p></p><h2>மெட்ரோ சேவை அறிமுகம்</h2><p>இதற்கு எழுந்து பதிலளித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க அடுத்த வருடத்தில் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மெட்ரோ சேவைகளை அறிமுகப்படுத்த நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed59e2c0-cc67-4c51-b40c-2b5826692329/26-6a619b18d2b38.webp' /></p><p>

வடக்கு மாகாணத்தில் பொது போக்குவரத்து சேவையை வினைத்திறனாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T04:35:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா–சவூதி அணுசக்தி ஒப்பந்தம் ; உலக கவனம் ஈர்த்த புதிய உடன்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-saudi-nuclear-deal-new-agreement-1784780730"></link>
            <id>https://canadamirror.com/article/us-saudi-nuclear-deal-new-agreement-1784780730</id>
            <summary type="text">அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

அமெரிக்க எரிசக்தி திணைக்கள செயலாளர் கிறிஸ் ரய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
</p><p>
அமெரிக்க எரிசக்தி திணைக்கள செயலாளர் கிறிஸ் ரய்ட் (Chris Wright) மற்றும் சவூதி எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல் அஜீஸ் பின் சல்மான் ஆகியோர் அமைதியான முறையில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திலும், அதனுடன் இணைந்த இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க எரிசக்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>சவூதி அணுசக்தித் திட்டத்தில் அமெரிக்க நிறுவனங்களுக்கு "பெரிய அளவிலான அணுகலை" அமைதியான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் வழங்கும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85879756-2867-44fc-aeda-f95e0a394c30/26-6a6197bb73a01.webp' /></p><p>இந்த ஒப்பந்தமானது "அமைதியான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம்" மற்றும் "இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்" ஆகிய இரண்டு உடன்படிக்கைகளைக் கொண்டுள்ளது.
</p><p>
உலகளாவிய அணு ஆயுதப் பரவல் தடுப்பு தரநிலைகளை இது வலுப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த ஒப்பந்தம் தற்போது மதிப்பாய்வுக்காக அமெரிக்க காங்கிரஸுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் அமெரிக்க எரிசக்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதேவேளை, இந்த ஒப்பந்தம் அணு ஆயுதப் பரவலுக்கு வழிவகுத்துவிடுமோ என்ற அச்சம் அமெரிக்காவிலும், மத்திய கிழக்கின் முக்கிய பங்காளியான இஸ்ரேலிலும் எழுந்துள்ளது. </p><p>இதற்கு முன்பு ஐக்கிய அரபு இராச்சியத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் மிகவும் கடுமையான ஆய்வுக் கட்டுப்பாடுகளையும், சொந்தமாக அணு எரிபொருள் உற்பத்தி செய்யும் உரிமையற்ற தன்மையையும் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
</p><p>
எனினும், அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளரான மார்க்கோ ரூபியோ (Marco Rubio), உலகளவில் அணு ஆயுதப் பரவலுக்கான எந்தவொரு ஆபத்தையும் விளைவிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்கா ஈடுபடாது எனத் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-07-23T04:25:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-debate-on-export-and-import-control-act-1784780534"></link>
            <id>https://ibctamil.com/article/today-debate-on-export-and-import-control-act-1784780534</id>
            <summary type="text">இன்றைய&amp;nbsp;(23.07.2026)&amp;nbsp;நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன&amp;nbsp;தலைமையில்&amp;nbsp;சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.காலை 09.30...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>இன்றைய<span style="font-size: 14px; color: inherit;">&nbsp;</span>(23.07.2026)<span style="font-size: 14px; color: inherit;">&nbsp;</span><span style="color: inherit;">நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன&nbsp;</span><span style="color: inherit;">தலைமையில்&nbsp;</span><span style="color: inherit;">சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.</span></p><p>காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.</p><p>அதன்படி, காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. </p><p>காலை 10.00 மணி முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>காலை 11.30 முதல் மாலை 02.30 வரை வரை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுபாட்டு) சட்டத்தின் கீழ் 2493/03 மற்றும் 2493/39 ஆகிய இலக்க வர்த்தமான பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட இரண்டு விதிமுறைகள் குறித்த விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>மாலை 2.30 மணி முதல் பி.ப. 5.30 மணிவரையில் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை குறித்த விவாதம் இடம்பெறவுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Nx5ZIIRSS8g" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-23T04:22:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உற்பத்திச் செலவு அதிகரிப்பு ; சாராய விலையில் புதிய திருத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/increase-production-costs-revision-liquor-prices-1784780187"></link>
            <id>https://jvpnews.com/article/increase-production-costs-revision-liquor-prices-1784780187</id>
            <summary type="text">உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, 750 மில்லிலீற்றர் கொள்ளளவு கொண்ட அதிவிசேஷ சாராய (Super Special Arrack) போத்தலின் விலை 20 ரூபாயால் அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, 750 மில்லிலீற்றர் கொள்ளளவு கொண்ட அதிவிசேஷ சாராய (Super Special Arrack) போத்தலின் விலை 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>இந்த விலை அதிகரிப்பு உடனடியாக அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfefb591-4ef7-4f9e-b2b5-03f2d5de3f46/26-6a61959ce9d64.webp' /></p><p>உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளமை காரணமாகவே இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட தரப்புகள் தெரிவித்துள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T04:16:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கூர்மையான ஆயுதத்தினால் தாக்கி நபரொருவர் பலி - மற்றொருவர் பலத்த காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/person-died-after-being-attacked-sharp-weapon-1784778545"></link>
            <id>https://tamilwin.com/article/person-died-after-being-attacked-sharp-weapon-1784778545</id>
            <summary type="text">அம்பாறை - உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லாதுகல பகுதியில் கூர்மையான ஆயுதத்தினால் தாக்குதலுக்குள்ளாகி நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் பலத்த காயமட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை - உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லாதுகல பகுதியில் கூர்மையான ஆயுதத்தினால் தாக்குதலுக்குள்ளாகி நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

இச்சம்பவம் நேற்று புதன்கிழமை (22) இரவு இடம்பெற்றுள்ளதாக&nbsp;பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>சந்தேகநபரை கைது செய்வதற்காக விசாரணை</h2><p>இந்த தாக்குதலில் உயிரிழந்தவர் லாதுகல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என பொலிஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/218626ce-a12e-4814-9fb2-4942c34b62c9/26-6a6194851b922.webp' /></p><p>சந்தேகநபருக்கும் உயிரிழந்த நபருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து, சந்தேகநபர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இந்த கொலையை செய்துள்ளமை மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>

தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்காக உஹன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-23T04:13:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய அமெரிக்கா-சவுதி அரேபியா அணுசக்தி ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-saudi-deal-causing-concern-1784780039"></link>
            <id>https://news.lankasri.com/article/us-saudi-deal-causing-concern-1784780039</id>
            <summary type="text">அமெரிக்கத் தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, சவுதி அரேபியாவில் சிவில் அணுசக்தித் திட்டத்தை நிறுவுவதற்கான ஒரு முக்கிய ஒப்பந்தம் ஒன்றை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கத் தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, சவுதி அரேபியாவில் சிவில் அணுசக்தித் திட்டத்தை நிறுவுவதற்கான ஒரு முக்கிய ஒப்பந்தம் ஒன்றை இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.</p><h2>விளைவுகளை ஏற்படுத்தும்</h2><p>
</p><p>குறித்த ஒப்பந்தமானது மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்காவின் அதிகார மையங்கள் முழுவதும் கவலையை ஏற்படுத்தியுள்ள ஒரு நகர்வாகவே பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/005741cc-3f87-4f19-b8ac-31cb1d1f6a99/26-6a61961f2ea0a.webp' /></p><p>
</p><p>ஒப்பந்தத்தின் பெரும்பகுதி இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை, ஆனால் சவுதி அரேபியா உள்நாட்டிலேயே யுரேனியத்தைச் செறிவூட்டும் திறனைக் கொண்டிருக்குமா என்பதும், அது அணு ஆயுதப் பெருக்கத்திற்கு என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் குறித்த கவலைகளே நிலவுகின்றன. </p><p>அமெரிக்க எரிசக்தித் துறைச் செயலாளர் கிறிஸ் ரைட் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், எண்ணெய் வளம் மிக்க சவுதி அரேபியாவின் எரிசக்தித் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலேயே இந்த 30 ஆண்டு கால ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டுள்ளது. </p><p>பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் பொருளாதாரத் திட்டத்தின் கீழ், சவுதி அரேபியா சில மின்சார உற்பத்திக்கு அணுசக்தியைப் பயன்படுத்தவும், அதன் மூலம் ஏற்றுமதிக்கான எண்ணெய் விநியோகத்தை அதிகரித்து, எண்ணெய் விற்பனையை உயர்த்தவும் இலக்கு கொண்டுள்ளது. </p><p>இந்த ஒப்பந்தம் அந்நாட்டின் அணுசக்தி உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அமெரிக்க நிறுவனங்களை முக்கியப் பங்காற்றச் செய்வதோடு, சீனா மற்றும் ரஷ்யா போன்ற போட்டியாளர்கள் அங்கு காலூன்றுவதையும் தடுக்கும்.</p><p></p><p> </p><p>இந்த ஒப்பந்தம் பல பில்லியன் டொலர் மதிப்புடையதாகக் கருதப்படுகிறது; மேலும், இது பைடன் நிர்வாகத்தின் காலத்தில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட ஒரு திட்டத்தின் தொடர்ச்சியாகும். </p><p>இந்த ஒப்பந்தம் சவுதி அரேபியாவில் யுரேனியம் செறிவூட்டும் நிலையத்தை அமைப்பதற்கு வழிவகுப்பதாகக் கூறப்படுகிறது; எனினும், அத்தகைய நிலையம் அவசியமானது என்று அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா இணைந்து மேற்கொள்ளும் ஆய்வு முடிவு செய்தால் மட்டுமே இது சாத்தியமாகும். </p><p>மட்டுமின்றி, அணுசக்தித் துறையைக் கொண்ட பல நாடுகள் யுரேனியத்தை உள்நாட்டிலேயே செறிவூட்டுவதில்லை; அதற்குப் பதிலாக, அணு உலைகளுக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதையே அவை சார்ந்திருக்கின்றன.</p><h2>அணு ஆயுதத்தை உருவாக்கும்</h2><p> </p><p>ஆனால், இத்தகைய ஒப்பந்தம் சவுதி அரேபியாவை அணு ஆயுதத்தை உருவாக்கும் பாதையில் இட்டுச் செல்லக்கூடும் என்று அணு ஆயுதப் பரவல் தடுப்பு அமைப்புகள் பல ஆண்டுகளாக எச்சரித்து வந்துள்ளன. </p><p>மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேலிடம் மட்டும் அணு ஆயுதங்கள் இருக்கும் நிலையில், தனது பிராந்தியப் போட்டியாளரான ஈரான் அணு ஆயுதத்தைப் பெற்றால், தானும் அணு ஆயுதத்தைப் பெற வேண்டியிருக்கும் என்று சவுதி முன்பு கூறியுள்ளது. </p><p>மேலும், இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் இருப்பதைக் கண்டுகொள்ளாத அமெரிக்கா, ஈரான் அணு ஆயுதங்களை அடைவதையோ அல்லது ஆயுதத் தரத்திற்குத் தேவையான அளவிற்கு யுரேனியத்தை செறிவூட்டுவதையோ தடுப்பதற்காகவே தற்போது ஒரு போரில் ஈடுபட்டு வருவதாக விளக்கமளிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3b9cbed-b61a-472a-856a-55fca5c6d0e1/26-6a61961e6fee4.webp' /></p><p> இந்த நிலையில், அணு ஆயுதப் பரவலுக்கான அபாயத்தை ஏற்படுத்தும் வகையிலான எந்தவொரு ஒப்பந்தத்தையும் உலகின் எந்தவொரு நாட்டுடனும் அமெரிக்கா மேற்கொள்ளப்போவதில்லை என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ சவுதி ஒப்பந்தம் குறித்த கவலைகளை நிராகரித்துள்ளார்.&nbsp;</p><p>ஆனால், முந்தைய அணுசக்தி ஒப்பந்தங்களில் இருந்த கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் இல்லை என்று நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். </p><p>அமெரிக்கா ஐக்கிய அரபு அமீரகத்துடன் இதேபோன்ற ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டபோது, ​​அணுசக்தியை விரும்பும் நாடுகளுக்கான தங்கத் தரநிலை என்று அறியப்பட்ட ஒரு நடவடிக்கையாக, ஐக்கிய அரபு அமீரகம் செறிவூட்டலை நாடவோ அல்லது பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளைப் பதப்படுத்தவோ கூடாது என்று ஒப்புக்கொண்டது. சவுதி-அமெரிக்க ஒப்பந்தத்தில் இந்தத் தங்கத் தரநிலை இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T04:12:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு, கிழக்கு கரையோரப் பகுதிகள் குறித்து அநுரவின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protect-the-northern-and-eastern-coastal-areas-1784777205"></link>
            <id>https://ibctamil.com/article/protect-the-northern-and-eastern-coastal-areas-1784777205</id>
            <summary type="text">இலங்கையில் புதிதாக அபிவிருத்தியடைந்து வரும் வடக்கு மற்றும் கிழக்குக் கரையோரப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கு அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் புதிதாக அபிவிருத்தியடைந்து வரும் வடக்கு மற்றும் கிழக்குக் கரையோரப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கு அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.</p><p>ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (22) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.&nbsp;&nbsp;</p><p>அத்துடன் கடற்கரைப் பகுதிகளை அபிவிருத்தி செய்த பின்னர் அங்கு மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நிர்மாணங்களால் கடற்கரைக்கு பெரும் சேதம் ஏற்படுவதால், அதனைத் தடுப்பதற்கு அதிகபட்ச சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><h2>வனப்பாதுகாப்பு திணைக்களம்</h2><p>அந்த நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக செயற்பாட்டுக் குழுவை நியமிக்குமாறும் ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b12a53d1-7197-4887-bb88-b0c3d15324e7/26-6a618de1ea1bc.webp' /></p><p>வனஜீவிகள் மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களங்களுக்கு உரிய ஓய்வு விடுதிகளை அபிவிருத்தி செய்து, நவீன மற்றும் உயர் தொழில்நுட்பத்துடன் மக்களுக்கு வழங்குவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. </p><p>

மேலும், மலர் வளர்ப்பை ஒரு கைத்தொழிலாக அபிவிருத்தி செய்வதற்கும், உயிர் பல்வகைமையைப் பாதுகாப்பதற்கும் தேசிய தாவரவியல் பூங்காக்களை அபிவிருத்தி செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T04:10:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்த வேண்டும்! எதிர்க்கட்சித் தலைவர் சஜித் வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/renewable-energy-sajith-premadasa-1784779317"></link>
            <id>https://tamilwin.com/article/renewable-energy-sajith-premadasa-1784779317</id>
            <summary type="text">பேச்சை செயலுக்குக் கொண்டு வந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்தி
வலுப்படுத்துவது அனைவரினதும் பொறுப்பாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேச்சை செயலுக்குக் கொண்டு வந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்தி
வலுப்படுத்துவது அனைவரினதும் பொறுப்பாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாச தெரிவித்துள்ளார்.</p><p>

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் பந்தாரநாயக்க சர்வதேச
மாநாட்டு மண்டபத்தில் நேற்று (22.07.2026) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>நிறுவனங்களுக்கு இடையே பாரபட்சம்</h2><p></p><p>அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், மின்சாரத் தீர்வை விகிதத்தைக் கணக்கிடும்போது மூலதனச் செலவினங்களில் பாரிய
மற்றும் சிறிய அளவிலான நிறுவனங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டப்படுகின்றது.
பெரிய நிறுவனங்கள் வரிச் சலுகைகளைப் பெறும் நிலையில், நுண், சிறிய மற்றும்
நடுத்தர அளவிலான சூரிய சக்தி உற்பத்தியாளர்களும் முயற்சியாளர்களும்
பாதுகாக்கப்பட வேண்டும்.
</p><p>
சூரிய பலகைகள் மற்றும் பேட்டரி சேமிப்பு உபகரணங்களில் பெரிய நிறுவனங்களுக்குச்
சாதகமான சூழல் காணப்பட்டாலும், சிறிய நிறுவனங்களுக்கு அது பாதகமாக அமைகின்றது.
சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வங்கிக் கடன்களை நம்பியுள்ள நிலையில்,
பெரிய நிறுவனங்களுக்குப் பசுமை நிதிகளுக்கான எளிதான அணுகல் கிடைப்பதையும்,
நாணய மாற்று வீதங்களைப் பயன்படுத்தி அவை சாதகமான பலன்களைப் பெறுவதையும்
சுட்டிக்காட்டினார்.</p><p></p><p>
</p><p>
அதிகப்படியான எரிசக்தி உற்பத்தி இல்லாத பகுதிகளில் பேட்டரி முறைமைகள்
நிறுவப்படாமல், தேவை உள்ள பகுதிகளில் சமூக பேட்டரி முறைமைகள் மற்றும்
மெய்நிகர் மின் நிலையக் கருத்துருவைக் கொண்டு விநியோக துணை நிலையம் மட்டத்தில்
அவற்றை இணைக்க வேண்டும்.</p><h2>சூரிய சக்தித் துறையில் கடுமையான வீழ்ச்சி</h2><p>

முறையற்ற விலை நிர்ணயம் மற்றும் கட்டணக் கொள்கைகளால் சூரிய சக்தித் துறையில்
கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. </p><p>இதனால் நேரடியாக 1 இலட்சம் வேலைவாய்ப்புகள்
இழக்கப்பட்டுள்ளதுடன், நிறுவனங்களின் எண்ணிக்கை 1,150 இல் இருந்து 560 ஆகக்
குறைந்து, மறைமுகமாக 4 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சூழலுக்கு உகந்த எரிசக்தியை மேம்படுத்துவதற்குப் பதிலாகத் தடைகளை ஏற்படுத்தி,
எரிபொருள் மற்றும் அனல் மின் நிலைய மாபியாக்களை வெற்றிபெற அனுமதிக்கக் கூடாது.</p><p></p><p>
</p><p>எந்த அரசியல் கொள்கை சார்ந்தவராகவும் இருந்தாலும், தேசிய நலனைக்
கருத்திற்கொண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பாதுகாப்பதற்கான முதலீட்டாளர்
உகந்த சூழலை உருவாக்க வேண்டும் என்றார்.</p>]]></content>
            <updated>2026-07-23T04:10:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்க்கட்சியை அகற்ற முடியாது ; அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-warns-the-government-opposition-1784779751"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-warns-the-government-opposition-1784779751</id>
            <summary type="text">எதிர்க்கட்சியை அகற்றிவிடலாம் என அரசாங்கம் நினைத்தால் அது பெரும் தவறான எண்ணமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொதுக்கூட...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சியை அகற்றிவிடலாம் என அரசாங்கம் நினைத்தால் அது பெரும் தவறான எண்ணமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91ecfbf6-c745-41a0-aed2-e1eb1664e4c5/26-6a6193e8750ba.webp' /></p><p>

பிரதி அமைச்சர் ஒருவர் எதிர்க்கட்சியை முற்றிலும் அகற்றிவிட்டதாகவும், மீதமுள்ளவற்றையும் விரைவில் அகற்றிவிடுவோம் என்றும் கூறுவது ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கூற்று என அவர் சாடினார்.
</p><p>
அத்துடன் நீதித்துறையின் நியமனங்களை அல்லது நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதன் மூலம் அரசாங்கம் தனது குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முற்படுவதாகவும், அடக்குமுறை மற்றும் அச்சுறுத்தல்கள் மூலம் எதிர்க்கட்சியை ஒடுக்க முடியாது என்றும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T04:09:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோமாகம தீ விபத்தில் உயிரிழந்த தமிழ் யுவதி உட்பட ஐவர்..! பிரேத பரிசோதனை தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/homagama-fire-accident-death-details-1784770563"></link>
            <id>https://tamilwin.com/article/homagama-fire-accident-death-details-1784770563</id>
            <summary type="text">ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் இடம்பெற்ற தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் பல தகவல்கள் வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் இடம்பெற்ற தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>குறித்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் (21) காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஐவர் உயிரிழந்த நிலையில், அவர்களின் உடலங்கள் மீதான மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>மரபணு பரிசோதனை</h2><p>

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் முழுமையாக அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்துள்ளதால், அவை ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு&nbsp; மரபணு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1a5bfbb-1cf4-4538-9088-c8ba66a53387/26-6a6187a2ef917.webp' /></p><p>
</p><p>
இந்த பரிசோதனை முடிவுகள் வெளியாவதற்கு ஐந்து நாட்கள் வரை செல்லலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த, மரியோ எட்வர்ட் என்ற, சுமார் 15 வருடங்களாக குறித்த தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்த ஒருவரும் அடங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.</p><p>இந்த சம்பவத்தில் உயிரிழந்த தெனியாயவைச் சேர்ந்த 19 வயதுடைய சஹன் உதார ஆறு மாதங்களுக்கு முன்பு அங்கு பணிக்கு சேர்ந்துள்ளதுடன், அவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த கமகே திலீப் மதுசங்க (வயது 19) என்பவர் 4 நாட்களுக்கு முன்பே பணியில் இணைந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p>

உயிரிழந்தவர்களில் நால்வர் அங்கு, பணிக்கு சேர்ந்து சில மாதங்களே ஆகின்றன என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><h2>உயிரிழந்தவர்களின் விபரம்&nbsp;</h2><p>
</p><p>இந்த சம்பவத்தில் ஹட்டன் - மஸ்கெலியாவைச் சேர்ந்த 26 வயதுடைய வரதராஜ் தமயந்தி என்ற யுவதியும்&nbsp; உயிரிழந்துள்ளதுடன், இவர் குறித்த தொழிற்சாலையில், 6 மாதங்களுக்கு முன்பே பணியில் இணைந்து கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.</p><p>இந்த சம்பவத்தில் உயிரிழந்த மற்றையவர் அட்டகலம்பன்ன பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சச்சின் தில்ஷான் என்பவரென கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/193e67e8-3d5b-4cd7-80c3-d100831fff0f/26-6a6187a39dbf9.webp' /></p><p>

இவர் ருமேனியா நாட்டுக்கு தொழிலுக்காக செல்வதற்கு விசா கிடைக்கும் வரை தற்காலிகமாக அங்கு பணிபுரிந்து வந்தவர் என தெரியவந்துள்ளது.</p><p>

வேலைவாய்ப்பு பணியகத்தில் இரண்டு நாட்கள் பயிற்சியை நிறைவுசெய்துள்ள இவர், பணியில் இணைந்து இரண்டு வாரங்களேயாவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதனிடையே, இந்த தொழிற்சாலையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கும் நடவடிக்கையின்போது, மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் அங்குள்ள பல குறைபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
குறிப்பாக, தொழிற்சாலையில் முறையான தீயணைப்பு பாதுகாப்பு அமைப்பு இன்மையை பிரதானமாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.</p><h2>அதிகாரிகள் வழங்கிய கால அவகாசம்</h2><p>
</p><p>
அத்துடன், 20 நாட்களுக்குள் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரிகள், கடந்த மாதம் 2 ஆம் திகதியன்று எழுத்துமூலம் குறித்த தொழிற்சாலையில் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87577604-9dcd-4293-9726-9ec68de707ab/26-6a6187a44e0d2.webp' /></p><p>
இந்த கால அவகாசம் முடிவடைவதற்கு ஒரு நாள் மாத்திரமே இருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.</p><p>

இதேவேளை,&nbsp; மின்சாரக் கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
</p><p>தொழிற்சாலைகளில் 80 முதல் 100-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்த போதிலும், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான போதிய பாதுகாப்பு வழிமுறைகளும் அவசரகாலத் திட்டங்களும் அங்கு முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T04:04:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் பெயரில் புதிய மோசடி ; வங்கி வாடிக்கையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/scam-name-police-urgent-warning-to-bank-customers-1784779340"></link>
            <id>https://jvpnews.com/article/scam-name-police-urgent-warning-to-bank-customers-1784779340</id>
            <summary type="text">பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்கள் மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெற்று வரும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்கள் மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெற்று வரும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸ் தலைமையகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p></p><p>

வட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி, போலி பொலிஸ் அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்து பண மோசடிகளில் ஈடுபடுகின்ற சம்பவங்கள் தொடர்பாக அண்மைக் காலமாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த மோசடிகளில் ஈடுபடுவோர், இலங்கை மத்திய வங்கி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) அல்லது பொலிஸ் விசாரணைப் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் எனத் தங்களை அறிமுகப்படுத்தி, தொலைபேசி அழைப்புகள் மூலம் பொதுமக்களை தொடர்புகொள்கின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/600e4c8a-0feb-4fd9-b8fc-88d5ea89b564/26-6a61924d9165c.webp' /></p><p>அதன்போது, வங்கிக் கணக்குகள் சட்டவிரோத பணப் பரிமாற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி, வழக்குத் தொடரப்படும் அல்லது கணக்குகள் முடக்கப்படும் என அச்சுறுத்துகின்றனர். </p><p>பின்னர், "இரகசிய விசாரணை" நடைபெற்று வருவதாகக் கூறி, அதற்கு ஒத்துழைத்தால் பிரச்சினையில் இருந்து விடுவிக்கப்படும் என நம்பவைத்து, வட்ஸ்அப் மூலம் போலியான பொலிஸ் அடையாள அட்டைகள், அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்களை அனுப்புகின்றனர்.
</p><p>
அதனைத் தொடர்ந்து, வங்கிக் கணக்குகளை சரிபார்க்க வேண்டும் அல்லது முடக்கப்பட்ட கணக்குகளை மீளச் செயல்படுத்த வேண்டும் என்ற பெயரில் OTP (One-Time Password) இலக்கங்களை கேட்பதுடன், வங்கிக் கணக்கில் உள்நுழைய தேவையான தகவல்களையும் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர். </p><p>மேலும், பணத்தை வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றுமாறோ அல்லது USDT உள்ளிட்ட கிரிப்டோ நாணயங்கள் மூலம் பணம் அனுப்புமாறோ அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

எந்தவொரு அரச அல்லது தனியார் நிறுவனமும் தொலைபேசி அழைப்புகள் அல்லது வட்ஸ்அப் ஊடாக தேசிய அடையாள அட்டை இலக்கம், வங்கிக் கணக்கு விபரங்கள், வங்கி அட்டை இலக்கங்கள், CVV இலக்கம், கடவுச்சொற்கள் அல்லது OTP இலக்கங்களைக் கோருவதில்லை என்பதை பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9e09250-2a75-427e-a896-e2e5111677c7/26-6a61924e3f9e7.webp' /></p><p>

மேலும், "கணக்கு முடக்கப்படும்", "வழக்குத் தொடரப்படும்" போன்ற அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணத்தை வேறு கணக்குகளுக்கு மாற்றவோ அல்லது தனிப்பட்ட தகவல்களைப் பகிரவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
சந்தேகத்திற்கிடமான எந்தவொரு அழைப்போ அல்லது தகவலோ கிடைத்தால், சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிறுவனத்தின் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
அதேவேளை, இலங்கைப் பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களமோ அல்லது இலங்கை மத்திய வங்கியோ தனிப்பட்ட வட்ஸ்அப் இலக்கங்கள் ஊடாக விசாரணைகளை நடத்துவதில்லை. மேலும், வங்கிக் கணக்குகளில் பணம் வைப்பு செய்யுமாறு கோருவதும் இல்லை என பொலிஸ் தலைமையகம் தெளிவுபடுத்தியுள்ளது.
</p><p>
அறியாத நபர்களிடமிருந்து வரும் இணைய இணைப்புகள் (Links), இணையவழிப் பரிசுகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான செயலிகள் (Apps) ஆகியவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இவ்வாறான மோசடிகள் தொடர்பில் தகவல் கிடைத்தால் அல்லது சந்தேகம் ஏற்பட்டால், கணினி குற்ற விசாரணைப் பிரிவுக்கு உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.
</p><p>
தொடர்புக்கு,</p><p>
கணினி குற்ற விசாரணைப் பிரிவு பணிப்பாளர்: 071 859 2918
</p><p>கணினி குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள்: 071 859 1765
</p><p>கணினி குற்ற விசாரணைப் பிரிவு (அலுவலகம்): 011 230 0756
</p><p>
மேலும், இதுபோன்ற இணையவழி நிதி மோசடிகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நேரில் சென்று எழுத்துமூல முறைப்பாடுகளையும் பதிவு செய்ய முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T04:02:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் டைட்டில் கார்ட்... வைரலாகும் போட்டோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vijay-jananayagan-movie-title-card-photo-viral-1784778420"></link>
            <id>https://cineulagam.com/article/vijay-jananayagan-movie-title-card-photo-viral-1784778420</id>
            <summary type="text">ஜனநாயகன்தளபதி ரசிகர்கள் இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்தே இந்த ஒரு நாளுக்காக அதிகம் காத்திருந்தார்கள். அதாவது நடிகர் விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜனநாயகன்</h2><p>தளபதி ரசிகர்கள் இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்தே இந்த ஒரு நாளுக்காக அதிகம் காத்திருந்தார்கள். அதாவது நடிகர் விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் படத்தை காண ஆர்வமாக இருந்த ரசிகர்களுக்கு இன்று வரப் பிரசாதமாக படம் வெளியாகிவிட்டது.</p><p>வழக்கம் போல் தமிழகமெங்கும் திருவிழா கோலமாக உள்ளது, காலை முதல் ஷோ தொடங்கிய நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். ஜனநாயகன் படத்தின் டைட்டில் கார்ட் தொடங்கி முடிவு வரை ரசிகர்கள் ஒரே கொண்டாட்டம் தான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1b371ca-fb04-4810-8c69-b1694e6ed0dc/26-6a618eb636ecd.webp' /></p><p>சமூக வலைதளங்களிலும் ரசிகர்களின் கொண்டாட்ட வீடியோக்கள் பல வெளியாகியுள்ளது.</p><p>படம் வெளியாகிவிட்டது, இதில் ஒரு விஷயம் எப்படி வரும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள், வேறு என்ன டைட்டில் கார்ட் தான்.</p><p>தளபதி விஜய் மட்டும் வருமா அல்லது தமிழக முதலமைச்சர் வருமா என்பதை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருந்தனர். பின் படம் தொடங்கிய போது எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல தமிழக முதலமைச்சர் விஜய் என வர ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு ஒரு எல்லையே இல்லை என்பது போல் ஆகிவிட்டது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/hPCdinzXbPo" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-23T04:00:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியாவுடன் முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-signs-key-agreement-with-saudi-arabia-1784769314"></link>
            <id>https://canadamirror.com/article/us-signs-key-agreement-with-saudi-arabia-1784769314</id>
            <summary type="text">மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவுடன் தனது சிவில் அணுசக்தித் திட்டத்தை மேம்படுத்துவதற்கு வழிவகுக்கும் வகையில், அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் ஒப்பந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவுடன் தனது சிவில் அணுசக்தித் திட்டத்தை மேம்படுத்துவதற்கு வழிவகுக்கும் வகையில், அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>

இந்த ஒப்பந்தத்தின் துல்லியமான விபரங்கள் இதுவரை பகிரப்படவில்லை என்பதுடன், இது இன்னமும் அமெரிக்க காங்கிரஸின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7796aa23-a22d-440a-86df-b91bacd2f2ba/26-6a616b23bee68.webp' /></p><p> </p><p>

இது பல தசாப்த காலம் நீடிக்கக்கூடிய, பில்லியன் கணக்கிலான டொலர்கள் மதிப்பிலான கூட்டுப் பங்கான்மையாகும். 

இதில் சவூதியின் அணுசக்தித் திட்டத்துடன் அமெரிக்க நிறுவனங்களும் நிபுணர்களும் இணைந்து பணியாற்றவுள்ளனர்.</p><p> 

அத்துடன் இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உத்தரவாத ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தாகியுள்ளது. </p><p>

அமெரிக்காவுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் கூட்டு ஆய்வுக்குப் பிறகு, இறக்குமதி செய்யப்படும் எரிபொருளை நம்பியிருப்பதற்குப் பதிலாக, அமெரிக்காவினால் கட்டப்படும் செறிவூட்டல் நிலையத்தில் சவூதி அரேபியா தனது சொந்த மண்ணிலேயே யுரேனியத்தைச் செறிவூட்டி எரிபொருளை உற்பத்தி செய்ய அனுமதிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. </p><p>

இந்த ஒப்பந்தம் சவூதி அரேபியா தனது சொந்த அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கு வழிவகுக்கக்கூடும் என சிலர் கவலை வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-23T03:52:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியுடன் சென்று கொண்டிருந்த போது தெய்வாதீனமாக உயிர் தப்பிய ஹர்ஷ டி சில்வா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/harsha-de-silva-escaped-from-an-accident-1784777682"></link>
            <id>https://tamilwin.com/article/harsha-de-silva-escaped-from-an-accident-1784777682</id>
            <summary type="text">தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த போது இடம்பெறவிருந்த பாரிய விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நூலிழையில் உயிர்தப்பியுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த போது இடம்பெறவிருந்த பாரிய விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நூலிழையில் உயிர்தப்பியுள்ளார்.
</p><p>
தான் முகம் கொடுத்த அவசர ஆபத்தான சந்தர்ப்பத்தில் உடனடியாக செயற்பட்ட 1969 என்ற வீதி அவசர உதவிக்குழுவினரின் சிறப்பான சேவையை பாராட்டி, தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். </p><p>

தனது X கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ள ஹர்ஷ டி சில்வா&nbsp; இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><h2><b>வீதி விபத்து</b></h2><p>

கடந்த 20ஆம் திகதி மாலை தனது மனைவியுடன் பயணித்துக் கொண்டிருந்த போது இந்த பயங்கரமான அனுபவத்திற்கு முகங்கொடுக்க நேர்ந்ததாக குறிப்பிடுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56ff4324-d95d-4225-87e0-49edcaefaa3c/26-6a618f8f2ae88.webp' /></p><p>மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் என்ற அளவில் அதிக வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்த வாகனத்தின் பின் சக்கரத்தில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாகத் தான் நூலிழையில் தப்பியதாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்நேரத்தில் 1969 என்ற உடனடி அழைப்பு இலக்கம் ஊடாக விடுக்கப்பட்ட ஒரே ஒரு அறிவித்தலை அடுத்து, சில நிமிடங்களுக்குள் குறித்த இடத்திற்கு வந்த உதவிக்குழுவினர் சம்பந்தப்பட்ட சிக்கலை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><h3><b>

சாரதிகளிடம் கோரிக்கை </b></h3><p>அக்குழுவினரின் தொழில்சார் நிபுணத்துவத்தையும் கனிவான சேவையையும் பாராட்டுக்குரியது என ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/811d5dac-e200-44c6-ba91-a440d6c92697/26-6a618f8fd56eb.webp' /></p><p>சக்கரத்தை மாற்றுவது அவர்களின் உத்தியோகபூர்வ பொறுப்பிற்கு அப்பாற்பட்ட நிலையிலிருந்த போதிலும்,&nbsp; அதற்கு இடமளிக்காது அக்காரியத்தையும் அவர்களே செய்து முடித்ததாக பதிவிட்டுள்ளார். </p><p>

இச்சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கு முன்னர் தமது வாகனங்களின் சக்கரங்களின் நிலை குறித்து முற்கூட்டியே பரிசோதனையில் ஈடுபடுமாறு அவர் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-23T03:50:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கார் - மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து : சாரதி படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/car-motorcycle-head-on-collision-driver-injured-1784776741"></link>
            <id>https://tamilwin.com/article/car-motorcycle-head-on-collision-driver-injured-1784776741</id>
            <summary type="text">ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் நுவரெலியா வீதியில், மல்லிப்பூ சந்திக்கு அண்மையில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் நுவரெலியா வீதியில், மல்லிப்பூ சந்திக்கு அண்மையில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.</p><p>குறி்த்த விபத்தானது&nbsp;நேற்று(22.07.2026) மாலை இடம்பெற்றுள்ளது.</p><p>இதன்போது மோட்டார் சைக்கிள் சாரதி கடுமையாக காயமடைந்து டிக்கோயா கிளங்கன்
ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>பொலிஸார் மேலதிக விசாரணை</h2><p>
</p><p>குறித்த விபத்து கொட்டகலை பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த மோட்டார்
சைக்கிளும், நுவரெலியா நோக்கி பயணித்த வெளிநாட்டு பிரஜை ஒருவரை ஏற்றிச் சென்ற
காரும் நேருக்கு நேர் மோதியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/216563e3-4ed4-40a6-a184-2176eea0cc13/26-6a618dd8b81bb.webp' /></p><p>கார் சாரதி முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த
மோட்டார் சைக்கிளுடன் மோதியதாகக் சம்பவத்தினை நேரில் கண்டோர் தெரிவித்துள்ளனர்.
</p><p>விபத்து ஏற்பட்டவுடன் 1990 'சுவசெரிய' அவசர மருத்துவ சேவைக்கு
அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவசர மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு
விரைந்து சென்று காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதிக்கு முதலுதவி வழங்கி,
டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
</p><p>இந்த விபத்துக்கான காரணம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T03:48:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நூடுல்ஸ் பிரியர்களா நீங்கள்? இதோ மருத்துவர்களின் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/noodles-lovers-beware-danger-health-issue-1784711071"></link>
            <id>https://manithan.com/article/noodles-lovers-beware-danger-health-issue-1784711071</id>
            <summary type="text">நூடுல்ஸ் விரும்பி சாப்பிடும் நபர்களுக்கு மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கையைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.நூடுல்ஸ்இன்றைய வேகமான வாழ்க்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நூடுல்ஸ் விரும்பி சாப்பிடும் நபர்களுக்கு மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கையைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.</p><h2>நூடுல்ஸ்</h2><p>இன்றைய வேகமான வாழ்க்கையில் சாப்பிடுவதற்கு கூட நேரம் இல்லாமல் பலரும் செல்கின்றனர். சில இளைஞர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் நபர்கள் சில நிமிடங்களில் தயாரிக்கப்படும் நூடுல்ஸை அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர்.</p><p>ஏனெனில் இதனை சீக்கிரம் தயாரிப்பதுடன், சுவையும் அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கின்றது. ஆனால் அடிக்கடி நூடுல்ஸ் சாப்பிடுவதால் உடலில் பல்வேறு பிரச்சனை ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p>பெரும்பாலான இன்ஸ்டன்ட் நூடுல்ஸில் மைதா மாவு, அதிக உப்பு, சுவையூட்டிகள், பாதுகாப்பு சேர்மங்கள், செயற்கை நிறம், குறைந்த நார்ச்சத்து, மற்றும் ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86bdd70d-bad1-4bda-9655-322423c859d0/26-6a60e16e851d8.webp' /><br></p><h2>என்னெ்ன பிரச்சனைகள் ஏற்படும்?</h2><p>நூடுல்ஸில் அதிக கலோரி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் இருப்பதால் அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும் அபாயம் ஏற்படுகின்றது.</p><p>இதில் அதிக சோடியம் காணப்படுவதால் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு, இதய நோய் அபாயம் அதிகரிக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10840b2a-ad50-4b5e-964f-c8e1e87614c5/26-6a60e16f380b7.webp' /><br></p><p></p><p>மைதாவில் தயாரிக்கப்படும் நூடுல்ஸ் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை வேகமாக உயர்த்துவதுடன், டைப் 2 நீரிழிவு அபாயத்தினையும் அதிகரிக்கின்றது.</p><p>நூடுல்ஸில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் மலச்சிக்கல், வயிறு உப்புசம், செரிமான கோளாறு பிரச்சனைகள் ஏற்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/645f7918-0fa3-43b8-b15a-add7e266fc04/26-6a60e17093883.webp' /><br></p><p>குழந்தைகளுக்கு புரதம், வைட்டமின், தாதுக்கள் மிகவும் முக்கியமாகும். ஆனால் நூடுல்ஸினை அடிக்கடி சாப்பிடும் போது இந்த சத்துக்கள் போதுமான அளவில் கிடைக்காமல் வளர்ச்சி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.</p><p>அதிக உப்பு உட்கொள்வதால் சிறுநீரகம் கூடுதலாக வேலை செய்யும் நிலை ஏற்படுகின்றது. ஆகவே நீண்ட காலம் இவ்வாறு வேலை செய்தால் சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம்.</p><p>நூடுல்ஸ் வயிறு நிரம்பிய உணர்வை அளித்தாலும், உடம்பிற்கு தேவையான மற்றும் முழுமையான சத்துக்களை வழங்குவதில்லை. ஆகவே சோர்வு மற்றும் சத்துக்குறைவு ஏற்படுகின்றது.<br></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01268368-114e-4a79-a2d4-ddfed74547bb/26-6a60e16fdd515.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;<br></i></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T03:45:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதித்துறை விவாதத்துக்கு அரசு அனுமதி மறுப்பு: கொழும்பில் அவசர கூட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/meeting-in-colombo-chaired-by-opposition-leader-1784777272"></link>
            <id>https://tamilwin.com/article/meeting-in-colombo-chaired-by-opposition-leader-1784777272</id>
            <summary type="text">நீதித்துறை தொடர்பான விடயங்களை நாடாளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளச்
சந்தர்ப்பம் வழங்காமை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள்&amp;n...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதித்துறை தொடர்பான விடயங்களை நாடாளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளச்
சந்தர்ப்பம் வழங்காமை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள்&nbsp; தொடர்பில் கொழும்பில் அவசர கூட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின்
தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சியைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.</p><p></p><h2>நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்கும் விடயங்கள்</h2><p>
</p><p>
இதன்போது ஜனநாயக ஆட்சி முறையின் அடிப்படையான சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம்
மற்றும் நீதித்துறைக்கு இடையேயான அதிகாரப் பகிர்வு மற்றும் 'தடைகள் மற்றும்
சமன்பாடுகள்' ஆகியவற்றின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6012c947-3688-43f8-b4b2-5747e0ea40a6/26-6a618dfb5b703.webp' /></p><p>

நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் விடயங்கள் வெளிப்படையாக நாடாளுமன்ற
விவாதத்துக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதில் உறுப்பினர்கள் கவனம்
செலுத்தினர்.
</p><p>
நீதித்துறை தொடர்பான விடயங்கள் குறித்து நாடாளுமன்ற விவாதம் நடத்தச்
சந்தர்ப்பம் வழங்காமை ஜனநாயக ஆட்சிக் கோட்பாடுகளைப் பாதிக்கும் செயலாகும் எனக்
குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இது தொடர்பாக
எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நாடாளுமன்ற மற்றும் அரசியல் ரீதியான
நடவடிக்கைகள் குறித்து உறுப்பினர்களுடன் விரிவாகக் கலந்துரையாடினார்.
</p><p>
இந்த அவசரக் கூட்டத்தில் ரோஹினி விஜேரத்ன, சித்ரால் பெர்னாண்டோ, வி.
இராதாகிருஷ்ணன், சமிந்த விஜேசிறி, கயந்த கருணாதிலக, ஜே. சி. அலவத்துவல, சுஜித்
சஞ்சய பெரேரா, காவிந்த ஜயவர்தன, சதுர கலப்பத்தி, கபீர் ஹாஷீம், ரவி
கருணாநாயக்க, எம். எஸ். ஏ. வாசித், ரோஹண பண்டார, டபிள்யூ. எச். எம். தர்மசேன,
பி. ஆரியவங்ச, தயாசிறி ஜயசேகர, அனுராத ஜயரத்ன, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, ரிஷாத்
பதியுதீன், ரவூப் ஹகீம், இராமநாதன் அர்ச்சுனா, நிசாம் காரியப்பர், எம். எஸ்.
உதுமாலெப்பே, சானக மதுகொட, சுரங்க ரத்நாயக்க மற்றும் செல்வம் அடைக்கலநாதன்
உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T03:44:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேவாலயத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு ; தப்பிச் செல்ல பயன்படுத்திய கார் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/car-used-to-escape-shooting-recovered-1784777971"></link>
            <id>https://jvpnews.com/article/car-used-to-escape-shooting-recovered-1784777971</id>
            <summary type="text">மாத்தறை, தெவிநுவர தேவாலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரியினால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுப் தப்பிச் செல்லப் பயன்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை, தெவிநுவர தேவாலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரியினால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுப் தப்பிச் செல்லப் பயன்படுத்தப்பட்ட கார் திக்வெல்ல பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>நேற்று புதன்கிழமை (22) இரவில் புதிய பெலியத்த வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றைச் சோதனையிட முயன்ற போது, அதன் சாரதி காரை நிறுத்தாமல் வேகமாகச் செலுத்தித் தப்பிச்செல்ல முயன்றுள்ளார்.
</p><p>
இதன்போது கட்டுப்பாட்டை இழந்த கார் வாய்க்கால் ஒன்றில் விழுந்து வீதியை விட்டு விலகி நின்றுள்ளதுடன், அதிலிருந்த சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6941b1be-22b5-4014-af47-2e83bc03576a/26-6a618cf46da48.webp' /></p><p>

பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, குறித்த காரே தெவிநுவரையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் என்பது பொலிஸாரால் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>

நேற்று அதிகாலை வேளையில் காரில் வந்த குழுவொன்று, பிஸ்டல் ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி தெவிநுவர, கந்தர பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டுத் தப்பியோடியிருந்தது.
</p><p>

கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏதண்ட வீதி, தெவிநுவர பகுதியில் அமைந்துள்ள மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் நபரொருவரின் வீட்டின் மீதே இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
துப்பாக்கிதாரிகள் காரில் வந்து துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டுத் தப்பியோடும் காட்சிகள் அங்குள்ள சிசிரிவி கெமாராவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T03:39:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆற்றில் நீராடச் சென்ற சிறுவன் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/teen-missing-after-drowning-in-mahaweli-river-1784776715"></link>
            <id>https://ibctamil.com/article/teen-missing-after-drowning-in-mahaweli-river-1784776715</id>
            <summary type="text">ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுச் சிறுவனொருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார். கம்பளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல - உடோவிட்ட பகுதியில் மகாவலி ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுச் சிறுவனொருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்.</p><p> </p><p>கம்பளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல - உடோவிட்ட பகுதியில் மகாவலி ஆற்றில் நேற்று (22) மாலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.</p><p>வெலிகல்ல பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த மாணவன்&nbsp;தனது இரு நண்பர்களுடன் இணைந்து மகாவலி கங்கையின் தெனியேகல கடவைப் பகுதியில் நீராடிக் கொண்டிருந்த போதே சுழலில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e318d191-8f9e-4fe7-a878-327defe3ce53/26-6a618b3652e7c.webp' /></p><p>ஏனைய 2 சிறுவர்களும் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாகக் மீட்கப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>
கம்பளை காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்ட அவசரத் தகவலையடுத்து, காணாமல் போன சிறுவனைத் தேடும் விசேட மீட்புப் பணிகளும் மேலதிக விசாரணைகளும் கம்பளை காவல்துறையினரினால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>இச்சம்பவம் தொடர்பில் கம்பளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T03:32:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[எங்களுக்கு மறுக்கப்பட்டது... எவராலும்: மத்திய கிழக்கு, அமெரிக்காவிற்கு ஈரானின் கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/big-warning-to-us-middle-east-1784776786"></link>
            <id>https://news.lankasri.com/article/big-warning-to-us-middle-east-1784776786</id>
            <summary type="text">ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் சூழலை, போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்ப ஈரான் அனுமதிக்காது என்று அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகரும் தலைமைப் பேச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் சூழலை, போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்ப ஈரான் அனுமதிக்காது என்று அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகரும் தலைமைப் பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாஃப் எச்சரித்துள்ளார்.</p><h2>காலிபாஃப் எச்சரிக்கை</h2><p>
</p><p>ஹார்முஸ் பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகள் இல்லாததில்தான் அந்த நீரிணையின் பாதுகாப்பு அடங்கியுள்ளது என்றும் காலிபாஃப் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13847309-194b-448f-b0e0-35cb76023210/26-6a618ad6daa1e.webp' /></p><p> மேலும், ஈரான் தனது கச்சா எண்ணெயை விற்பனை செய்ய அனுமதிக்கப்படாவிட்டால், எந்தவொரு வளைகுடா நாடும் தனது எண்ணெயை விற்பனை செய்ய ஈரான் அனுமதிக்காது என்றும் காலிபாஃப் எச்சரிக்கை விடுத்துள்ளார். </p><p>தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த மோதல் தற்போது முழு வெற்றி அல்லது முழு தோல்வி என்ற நிலையை எட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். </p><p>
ஹார்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் நடத்தும் ஒவ்வொரு தாக்குதலின் போதெல்லாம், அமெரிக்கப் படைகள் அந்த நாட்டின் ஒரு பாலம் அல்லது மின் நிலையத்தை அழித்துவிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்த நிலையிலேயே காலிபாஃப் பதிலளித்துள்ளார்.</p><p></p><p> </p><p>இரு தரப்பினரும் பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகளைத் தொடர்ந்து குறிவைத்து வரும் நிலையில், ஈரானுக்கு எதிராகத் தொடர்ந்து 12-வது இரவாகத் தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது. </p><p>இந்த நிலையில், ஹார்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாட்டை மீண்டும் நிலைநாட்டவும், சர்வதேச கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்கவும் அமெரிக்கா முயன்று வரும் நிலையில், </p><p>இப்பிராந்தியக் கடல் பகுதிகளில் பயணிக்கும் வணிகக் கப்பல்கள் மற்றும் பொதுமக்களான மாலுமிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடிய ஈரானின் திறனை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்தியக் கட்டளை மையம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfb5c1db-94d9-4b14-a018-2451d1ef72c5/26-6a618ad7b86c4.webp' /></p><h2>கண்ணுக்குக் கண்</h2><p> தூதுக்குழு முன்னெடுக்கும் முயற்சிகளில் பகிரங்கமாக முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் எதுவும் தென்படாத நிலையிலும், உலகளாவிய எரிசக்திக்கு மிக முக்கியமானதும் பெருமளவில் மூடப்பட்டிருப்பதுமான ஹார்முஸ் நீரிணை குறித்த சர்ச்சையில் இரு தரப்பும் தங்கள் பிடிவாதத்தில் உறுதியாக இருக்கும் நிலையிலும், அமெரிக்காவின் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. </p><p>இஸ்ரேலால் தூண்டப்பட்டு, பொதுவாக அமெரிக்க மக்களாலும் நிராகரிக்கப்பட்ட இந்தப்போர், உலகளாவிய பொருளாதாரத்தில் மேலும் சீர்குலைவை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளதுடன், இந்த இலையுதிர் காலத்தில் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக எரிபொருள் விலையையும் உயர்த்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa96c7db-dd18-4498-bbc0-699fed158e88/26-6a618ad91678c.webp' /></p><p> </p><p>இதனிடையே, ஈரான் கண்ணுக்குக் கண் என்ற தற்காப்புக் கோட்பாடுக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் என்று அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்ச்சி தெரிவித்துள்ளார். </p><p>அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, வறட்சியால் வாடும் அண்டை வளைகுடா நாடுகளுக்குக் குடிநீர் வழங்கும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் எரிசக்தி உள்கட்டமைப்புகளையும் ஈரான் குறிவைத்துள்ளது. </p><p>ஒரு நாட்டின் அடிப்படை உள்கட்டமைப்பு இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால் ஒழிய, இத்தகைய தாக்குதல்களை சர்வதேசச் சட்டம் பொதுவாகத் தடை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T03:19:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியல் கைதிகள் என்று எவரும் சிறையில் இல்லை - கை விரித்த நீதி அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-govt-says-it-has-no-political-prisoners-1784773112"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-govt-says-it-has-no-political-prisoners-1784773112</id>
            <summary type="text">நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல்
கைதிகள் என்று எவரும் சிறைப்படுத்தப்படவில்லை என்றும் நீதி மற்றும் தேசிய
ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல்
கைதிகள் என்று எவரும் சிறைப்படுத்தப்படவில்லை என்றும் நீதி மற்றும் தேசிய
ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமர்வில், வாய்மூல விடைக்கான
வினாக்கள் வேளையின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்
பி. பெரேரா எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,

"சிறைச்சாலை கட்டளைச் சட்டம் மற்றும் ஏனைய ஒழுங்குவிதிகளில் 'அரசியல் கைதிகள்'
என எந்தவொரு தனிக் குழுவும் குறிப்பிடப்படவில்லை.</p><p></p><p> </p><h2>அரசியல் கைதிகளை விடுதலை&nbsp;</h2><p>நீதிமன்றங்களின் ஊடாகக்
கைதிகள் சந்தேக நபர்களாகவோ அல்லது குற்றவாளிகளாகவே அடையாளப்படுத்தப்பட்டு
விளக்கமறியலிலோ அல்லது தடுப்புக் காவலிலோ வைக்கப்படுகின்றார்களே தவிர, அரசியல்
கைதிகள் என எவரும் நீதிமன்றத்தால் சிறைப்படுத்தப்படவில்லை. சர்வதேச
மட்டத்திலான பொருள்கோடல்களையே நாம் ஏற்கின்றோம் என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/443c5b78-5c1f-4c03-b035-c6799bed2f53/26-6a617c255cb79.webp' /></p><p>
நீதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிடுகையில், தேர்தல் காலத்தில் வடக்கு -
கிழக்கில் பிரசாரம் செய்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசியல் கைதிகளை
விடுதலை செய்வதாக உறுதியளித்தாரே, அந்த நிலைப்பாட்டில் அரசு இன்றும் உள்ளதா என
அஜித் பி. பெரேரா எம்.பி. மேலதிக கேள்வியாக எழுப்பினார்.
</p><p>
இதற்குப் பதிலளித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, கைதிகளின் பட்டியலைத் தான்
பலமுறை ஆராய்ந்துள்ளதாகவும், இவர்கள் அனைவருக்கு எதிராகவும் நீதிமன்றங்களில்
வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுப் பலர் குற்றவாளிகளாகவும்
தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.</p><p></p><p>
</p><h2>முழு நாடும் உள்ளடக்கப்படும்</h2><p>
"நாட்டின் சட்டத்தை மீறிய குற்றத்துக்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், அப்போதைய அரசியல் சூழலைக் கருத்திற்கொண்டு சிறைச்சாலைகளில்
நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் விசேட கவனம்
செலுத்தப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ef25f6f-3616-4d3d-90ca-eb5eee78e196/26-6a617c2475336.webp' /></p><p>முன்னாள் நீதியரசர் துரைராசா சமர்ப்பித்துள்ள
அறிக்கைக்கு அமைய, கைதிகளின் தண்டனைக் காலத்தைக் குறைக்கவும் பொதுமன்னிப்பு
வழங்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றும் நீதி அமைச்சர் கூறினார்.</p><p>

மேலும், இந்த விடயத்தில் வடக்கு, கிழக்கு, தெற்கு என முழு நாடும்
உள்ளடக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T03:13:29+00:00</updated>
        </entry>
    </feed>
