<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-12T17:20:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் காருக்கு அர்ச்சுனாதான் சாரதி...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archchuna-changes-course-on-mahinda-s-stage-1789232715"></link>
            <id>https://ibctamil.com/article/archchuna-changes-course-on-mahinda-s-stage-1789232715</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆளுமைமிக்க தலைமையின் கீழ் மட்டுமே தமிழ் - சிங்கள சமூகங்களையும் உண்மையாக ஒன்றிணைக்க முடியும் என&amp;nbsp;யாழ். மாவட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆளுமைமிக்க தலைமையின் கீழ் மட்டுமே தமிழ் - சிங்கள சமூகங்களையும் உண்மையாக ஒன்றிணைக்க முடியும் என&nbsp;யாழ். மாவட்ட சுயேச்சை குழு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.</p><p> அநுராதபுரம் மாநகர சபை மைதானத்தில் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் மகா ஜன பேரணியில்&nbsp; (Janasatana Rally) அவர் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார்.</p><p>
அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான சிங்கள மக்கள் மத்தியில், முற்றிலும் சிங்கள மொழியிலேயே தனது உரையை நிகழ்த்திய அர்ச்சுனா, டயஸ்போரா நிதி விவகாரம், இன நல்லிணக்கம் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பல கதைகளை பகிர்ந்து கொண்டார்.</p><p></p><h2>வடக்கின் அரசியல்</h2><p>மேடையில் உரையைத் தொடங்கிய அர்ச்சுனா, வடக்கு மாகாணத்தில் தேர்தல்களின் போது பின்னணியில் நிதிப் பரிமாற்றங்கள் இடம்பெறுகிறது என சுட்டிக்காட்டிய அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்</p><p> "யாழ்ப்பாணத்திலும் வடக்கிலும் அரசியல் செய்யும் பலருக்கு எங்கிருந்து பணம் வருகிறது? வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் (Tamil Diaspora), தமிழ் சமூகத்தினரும்தான் தேர்தல்களை இலக்கு வைத்து கோடிக்கணக்கான நிதியை அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு அனுப்புகிறார்கள்.</p><p>தமிழ் புலம்பெயர் சமூகத்தினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை தலைவராக உருவாக்குவதற்காக பல பில்லியன் ரூபா பணத்தை வழங்கியுள்ளனர்.</p><p>

ஆனால் தற்போது தமிழ் மக்களே தங்களது முடிவு குறித்து வருந்துகின்றனர். நான் எனது தமிழ் மக்களினதும் தமிழ் புலம்பெயர் சமூகத்தினதும் செய்தியை எடுத்துக்கொண்டு இங்கு வந்துள்ளேன்.</p><p>சிங்கள மக்களுடன் தாங்கள் எப்போதும் ஒற்றுமையாக வாழ்வோம் என்றும், அநுர குமார திசாநாயக்கவினால் தாங்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாகவும், இதனை அனைத்து சிங்கள மக்களிடமும் தெரிவிக்குமாறு அவர்கள் என்னிடம் கூறியுள்ளனர்.</p><p>தெற்கில் உள்ள சிங்கள மக்களுக்கும் வடக்கில் உள்ள தமிழ் மக்களுக்கும் இடையில் உண்மையான நல்லிணக்கம் ஏற்பட வேண்டும்.</p><p>“காட்டில் சிங்கத்திற்கும் எல்லை உண்டு, புலிக்கும் எல்லை உண்டு. தேசியக் கொடியில் சிங்கம் இருக்கிறது, வடக்கில் புலியை அடையாளமாகக் காட்டினார்கள். ஆனால், காடு என்று வரும்போது இரண்டும் ஒரே காட்டிற்குள்தான் வாழ வேண்டும்.</p><p></p><h2>நாமல் ராஜபக்சவிற்கு நன்றி</h2><p> </p><p>அதேபோல, இந்த இலங்கை என்கிற தேசத்திற்குள் சிங்கங்களாகிய சிங்கள மக்களும் புலிகளாகிய தமிழ் மக்களும் பிரிந்து மோதாமல், ஒன்றிணைந்து வாழ பழகிக்கொள்ள வேண்டும்.</p><p>கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து இரு சமூகங்களும் கைகோர்க்க வேண்டும்.</p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் ஆளுமைமிக்க தலைமையின் கீழ் மட்டுமே இந்த இரு சமூகங்களையும் உண்மையாக ஒன்றிணைக்க முடியும்.</p><p>ஒருபோதும் எனக்கு தமிழீழம் தேவையில்லை. எனக்கு வேண்டியது சிங்கள மக்களே. நான் மரணிக்கும் வரைக்கும் தமிழீழத்தை கோரப்போவதில்லை.</p><p>மேடையில் தன்னை வடக்கின் எதிர்காலத் தலைவர் என அறிமுகப்படுத்தியமைக்காக நாமல் ராஜபக்சவிற்கு நன்றி. நாமலிடம் நான் ஒரு வாக்குறுதியை வழங்கியுள்ளேன்.நாமல் ஜனாதிபயானால் அவரின் வாகனத்துக்கு சாரதிகாக வருவதாக கூறியுள்ளேன்.</p><p>அண்மைக் காலமாக நாடாளுமன்றத்தில் தமக்கு எதிராக அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகிறது. வைத்தியராக இருந்த காலத்தில் எனக்கு எதிராக எந்த வழக்குகளும் இல்லை.</p><p>ஆனால் இந்த கொத்தமல்லி ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தவுடன் தனக்கு எதிராக அதிக வழக்குகள் தாக்கல் செய்துள்ளார். 29 வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.</p><p>சட்டம் என்பது ஏழைக்கும் அரசியல்வாதிக்கும் பொதுவாக இருக்க வேண்டும்.</p><p></p><h2>அநுரவுக்கு பில்லியன் டொலர் உதவி</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் அறைக்குள் செல்வதற்கு அஞ்சுகின்றனர். அங்கு தாங்கள் என்ன பார்க்க நேரிடும் என்ற அச்சம் அவர்களிடத்தில் இருக்கிறது.</p><p>சில நேரங்களில் ஒரு பொது சுகாதார பரிசோதகர் (PHI) சபாநாயகருக்கு உணவு ஊட்டுகிறார். அல்லது அதற்கு நேர்மாறாக நடக்கிறது. </p><p>அவரது அறைக்குள் சென்றால் நாம் என்ன பார்க்க நேரிடும் என்ற அச்சம் எங்களுக்கு உள்ளது.</p><p>அநுர குமார திசாநாயக்கவை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்துள்ளீர்கள். ஆனால் அவர் ஒரு தந்திரமான நரி. ” என்றார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T17:19:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் அஜித் பங்கேற்கும் சிற்றூந்து பந்தயத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதலமைச்சர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/chief-minister-vijay-flagged-off-mini-vehicle-race-1789233383"></link>
            <id>https://canadamirror.com/article/chief-minister-vijay-flagged-off-mini-vehicle-race-1789233383</id>
            <summary type="text">இங்கிலாந்தின் லண்டன் சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்ற ‘லீ மான்ஸ் கப்’ கார் பந்தயத்தை தமிழக முதலமைச்சர் விஜய் பச்சைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்தின் லண்டன் சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்ற ‘லீ மான்ஸ் கப்’ கார் பந்தயத்தை தமிழக முதலமைச்சர் விஜய் பச்சைக்கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.</p><p>
</p><p></p><p>தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் விஜய் பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தயத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
</p><p>
நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் ‘லீ மான்ஸ் கப்’ தொடரின் சில்வர்ஸ்டோன் சுற்றுப் போட்டியையே முதலமைச்சர் விஜய் இன்று பச்சைக்கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார். இலங்கை நேரப்படி இரவு 9.45 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டி இரவு 11.45 மணிக்கு நிறைவடைய உள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/028e2d7b-185a-47e1-8112-68d69405e5d3/26-6aa588e96a348.webp' /></p><p>பந்தயத்திற்கு முன்னதாக முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகர் அஜித்குமார் இருவரும் சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். அப்போது அஜித்குமாரின் பந்தயக் காரின் மீது அமர்ந்தும் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார். </p><p>பின்னர் அஜித்குமாருக்கு கைகொடுத்து தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இருவரின் சந்திப்பு மற்றும் பந்தயத்தை விஜய் தொடங்கி வைத்த காட்சிகள் தொடர்பான காணொலிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. </p><p>இதனால் இருவரது ரசிகர்களும் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.
</p><p>
இதனிடையே, முதலமைச்சர் விஜய்யின் வருகை குறித்து நடிகர் அஜித்குமார் கூறுகையில், தனது பிஸியான பணிகளுக்கு மத்தியிலும் நேரம் ஒதுக்கி லண்டனுக்கு வந்தமை மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.
</p><p>
மேலும், தானும் விஜய்யும் ஒரே துறையில் 34 ஆண்டுகளாக பணியாற்றி வருவதாகவும், விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்றதில் தமக்கு மிகுந்த மகிழ்ச்சி இருப்பதாகவும் அஜித்குமார் குறிப்பிட்டார்.
</p><p>
விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்காக விஜய் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், தனது அழைப்பை ஏற்று லண்டனுக்கு வந்து பந்தயத்தை தொடங்கி வைத்தமை மகிழ்ச்சியளிப்பதாகவும் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
</p><p>
சர்வதேச மோட்டார் பந்தயக் களத்தில் நடைபெற்ற இந்த விஜய்–அஜித் சந்திப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T17:16:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவை அதிர வைத்த 9/11 - 25 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த இரகசியங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-intelligence-know-before-the-9-11-attacks-1789231346"></link>
            <id>https://tamilwin.com/article/us-intelligence-know-before-the-9-11-attacks-1789231346</id>
            <summary type="text">அமெரிக்காவில் இடம்பெற்ற செப்டெம்பர் 11 தாக்குதல்களின் 25 வது ஆண்டு நினைவை
முன்னிட்டு, ஒசாமா பின்லேடன் மற்றும் அல்-கொய்தா அமைப்பு குறித்து
சேகரிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் இடம்பெற்ற செப்டெம்பர் 11 தாக்குதல்களின் 25 வது ஆண்டு நினைவை
முன்னிட்டு, ஒசாமா பின்லேடன் மற்றும் அல்-கொய்தா அமைப்பு குறித்து
சேகரிக்கப்பட்ட பல டஜன் இரகசிய உளவுத்துறை ஆவணங்களை அமெரிக்க மத்திய புலனாய்வு
முகவரகமான சிஐஏ (CIA) பகிரங்கப்படுத்தியுள்ளது.
</p><p>
3,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளுக்குக் காரணமான 9/11 தாக்குதலுக்கு
முன்னர், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் உள்ளிட்ட நாட்டின்
உயர் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட தினசரி இரகசிய உளவு அறிக்கைகளே இவ்வாறு
வெளியிடப்பட்டுள்ளன.</p><h2>இரகசிய ஆவணங்கள்</h2><p>
</p><p>
சிஐஏ இயக்குநர் ஜான் ரட்க்ளிஃப் இதனைத் தனது அமைப்பின் வெளிப்படைத்தன்மைக்கான
முக்கிய நகர்வாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9a9df96-2d08-4884-a335-46a1170d0dcb/26-6aa588348cec8.webp' /></p><p>
</p><p>
வெளியிடப்பட்டுள்ள ஆவணங்களில் 1998 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்றில்,
பின்லேடனின் முக்கிய இலக்கு அமெரிக்க மண்ணில் உள்ள வொஷிங்டன் நகரைத் தாக்குவதே
என்றும், வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட விமானமொன்றை அமெரிக்க நகரம் மீது மோதித்
தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.</p><p>

அத்துடன், ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்த பின்லேடனை ஒப்படைக்க தலிபான்கள்
மறுத்தமை, நியூயோர்க் விமான நிலையத்தில் சந்தேகநபர்கள் மேற்கொண்ட பாதுகாப்புப்
சோதனை ஒத்திகைகள் மற்றும் கதிரியக்கப் பொருட்களைப் பயன்படுத்தி குண்டுகளைத்
தயாரிக்கும் முயற்சிகள் குறித்த முக்கிய தகவல்களும் இந்த ஆவணங்கள் மூலம்
வெளிச்சத்திற்கு வந்துள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T17:13:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஜித்தை ஆரத்தழுவி முத்தமிட்ட தமிழக முதலமைச்சர் விஜய் ; இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சிக் காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vijay-warmly-embraced-and-kissed-ajith-goes-viral-1789232768"></link>
            <id>https://jvpnews.com/article/vijay-warmly-embraced-and-kissed-ajith-goes-viral-1789232768</id>
            <summary type="text">இங்கிலாந்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில், தமிழக முதலமைச்சர் விஜய்யும் பிரபல நடிகர் அஜித்குமாரும் நேரில் சந்தித்து அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில், தமிழக முதலமைச்சர் விஜய்யும் பிரபல நடிகர் அஜித்குமாரும் நேரில் சந்தித்து அன்பைப் பரிமாறிக்கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>2026ஆம் ஆண்டுக்கான 'மிச்செலின் லீ மான்ஸ் கிண்ண' பந்தயத் தொடரின் 5 ஆவது சுற்று லண்டன் சில்வர்ஸ்டோன் மைதானத்தில் நடைபெறுகிறது.
</p><p>
44 பந்தய சிற்றூந்துகள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்டப் போட்டியை, ஆசியப் பிரதிநிதியாகவும் சிறப்பழைப்பாளராகவும் பங்கேற்றுள்ள தமிழக முதலமைச்சர் விஜய் பச்சைக் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cda3dff-25ba-4a41-a9bd-fd9f19d002cb/26-6aa5868242ffa.webp' /></p><p>சர்வதேசப் பந்தய வீரராக இந்தப் போட்டியில் களமிறங்கும் நடிகர் அஜித் குமார், LMP3 Pro/Am பிரிவில் 'Ajith RedAnt by Virage' அணியின் சார்பில் 16 ஆம் எண் கொண்ட 'Ligier' பந்தய சிற்றூந்தை இயக்கவுள்ளார்.
</p><p>
இந்தநிலையில், பந்தய மைதானத்துக்கு வருகை தந்த நடிகர் அஜித்தைக் கண்டதும், முதலமைச்சர் விஜய் விரைந்து சென்று அவரை நெகிழ்ச்சியுடன் ஆரத்தழுவி, அன்பு முத்தமிட்டுத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
</p><p>
தமிழ் திரையுலகில் 34 ஆண்டுகளுக்கும் மேலாக இரு துருவங்களாகக் கருதப்பட்ட இரு பெரும் நட்சத்திரங்கள், சர்வதேச விளையாட்டுக் களம் ஒன்றில் இணைந்து நின்று அன்பைப் பரிமாறிக்கொண்ட காட்சி உலகெங்கிலும் உள்ள தமிழர்களையும் ரசிகர்களையும் பேரானந்தத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><p></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">CM Vijay X Racer Ajith! https://t.co/kYlJBpF7C2</p>&mdash; AndhraBoxOffice.Com (@AndhraBoxOffice) <a href="https://x.com/AndhraBoxOffice/status/2098788805801320925?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-09-12T17:06:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அயர்லாந்து இணைப்பு குறித்த ட்ரம்பின் கருத்துக்கு பிரித்தானியா பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/britain-responds-to-trump-s-remarks-on-the-ireland-1789230957"></link>
            <id>https://tamilwin.com/article/britain-responds-to-trump-s-remarks-on-the-ireland-1789230957</id>
            <summary type="text">பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள வட அயர்லாந்து, அயர்லாந்து குடியரசுடன்
இணைவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள வட அயர்லாந்து, அயர்லாந்து குடியரசுடன்
இணைவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்கள்
குறித்து பிரித்தானிய பிரதமர் அலுவலகம் தனது விளக்கத்தை அளித்துள்ளது.</p><p>

டப்ளினில் அயர்லாந்து பிரதமரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், அயர்லாந்து குடியரசும் வட அயர்லாந்தும்
ஒன்றிணைவதை தான் விரும்புவதாகவும், அது காலப்போக்கில் நடக்கும் என்றும்
குறிப்பிட்டிருந்தார்.</p><h2>புதிய வாக்கெடுப்பு&nbsp;</h2><p>

ட்ரம்பின் இந்தக் கருத்தைத் தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள பிரித்தானிய
பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமின் ஊடகப் பேச்சாளர், வட அயர்லாந்தின் அரசியல்
நிலைப்பாடு தொடர்பில் பிரித்தானிய அரசாங்கத்தின் கொள்கையில் எவ்வித மாற்றமும்
ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4869f4a8-5779-44cc-8b0a-305cf2a5af1a/26-6aa584c862ccc.webp' /></p><p>
</p><p>
முன்னதாக பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரித்தானிய பிரதமர், வட அயர்லாந்தில்
மற்றுமொரு எல்லைக் வாக்கெடுப்பை நடத்துவதற்குப் பெரும்பாலான மக்களின் ஆதரவு
இருப்பதாகத் தெரியவில்லை என்றும், மக்கள் விருப்பத்தில் மாற்றம் ஏற்படும் வரை
புதிய வாக்கெடுப்பு எதுவும் நடத்தப்படமாட்டாது என்றும் தெளிவுபடுத்தியிருந்தமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T16:59:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-open-fire-on-van-that-defied-orders-to-stop-1789231996"></link>
            <id>https://jvpnews.com/article/police-open-fire-on-van-that-defied-orders-to-stop-1789231996</id>
            <summary type="text">கம்பஹா, அஸ்கிரிய பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த வேன் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா, அஸ்கிரிய பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த வேன் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p></p><p>சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d277f041-fd4a-44c5-b406-ec6bf577ab2f/26-6aa5837debe3b.webp' /></p><p>பொலிஸாரின் கட்டளைக்கு அமைய வேனை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்ட போதிலும், அதன் சாரதி கட்டளையை மீறி வேனை முன்னோக்கிச் செலுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதனையடுத்து, குறித்த வேனை நிறுத்தும் நோக்கில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
</p><p>
துப்பாக்கிச் சூட்டில் வேன் சாரதி காயமடைந்த நிலையில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>பின்னர் அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணம் மற்றும் வேன் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்றமை தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T16:53:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டுவின் அனுராதபுர கூட்டத்தில் தேடப்படும் பல நபர்கள் : ஜனாதிபதி அனுர பரபரப்பு தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-sympathy-for-anyone-must-face-the-law-anura-1789229684"></link>
            <id>https://ibctamil.com/article/no-sympathy-for-anyone-must-face-the-law-anura-1789229684</id>
            <summary type="text">&amp;nbsp;அனுராதபுரத்தில் நடைபெற்ற SLPP தலைமையிலான பேரணியில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகத் தேடப்படும் பல நபர்கள் காணப்படலாம் என்றும் &quot;குற்றப் புலனாய்வுத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அனுராதபுரத்தில் நடைபெற்ற SLPP தலைமையிலான பேரணியில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகத் தேடப்படும் பல நபர்கள் காணப்படலாம் என்றும் "குற்றப் புலனாய்வுத் துறை (CID) அங்கு சென்றால், அவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் பிடித்துவிடலாம்," என்று ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>சனிக்கிழமையன்று (12) பொலனறுவையில் நடைபெற்ற NPP விவசாயிகளின் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி, ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்துப் பேசுகையில் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.</p><p>&nbsp;குடும்ப உறவுகளைப் பொருட்படுத்தாமல் சட்டம் அனைவருக்கும் சமமாகப் பொருந்தும் என்று கூறினார்.</p><h2>திருடக்கூடாது என பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கவேண்டும்</h2><p>"இப்போது அழுது புலம்புவதற்குப் பதிலாக, திருடக்கூடாது என்று தந்தை அவர்களுக்கு முன்பே சொல்லியிருக்க வேண்டும். தாயாக இருந்தாலும் சரி, பாட்டியாக இருந்தாலும் சரி, சட்டம் அனைவருக்கும் பொருந்தும். பொதுப் பணத்தைத் திருடிய எவர் மீதும் எங்களுக்கு எந்த அனுதாபமும் இல்லை," என்று ஜனாதிபதி திஸாநாயக்க தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1946d6e5-7938-45e8-8f84-106c251e7575/26-6aa581ab5d4c2.webp' /></p><p>அனுராதபுரப் பேரணியானது பொது நலனுக்காக நடத்தப்படவில்லை என்றும், மாறாக ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்பவர்கள் சட்டத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மேற்கொள்ளும் முயற்சி என்றும் ஜனாதிபதி திஸாநாயக்க குற்றம் சாட்டினார்.</p><p></p><h2>நாமல் ராஜபக்ச விளக்கமறியலில்</h2><p>&nbsp;முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் கட்சியின் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்ட SLPP-யின் பிரமாண்டமான அரசியல் பேரணி அனுராதபுரத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் அவரது இந்தக் கருத்துக்கள் வெளியாகின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f70aef5a-baf6-4a96-aaf7-39bf48e4efb3/26-6aa581ac13b46.webp' /></p><p>&nbsp; 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' (SriLankan Airlines) நிறுவனத்திற்கான பெரிய ரக விமானங்களை கொள்முதல் செய்தது தொடர்பான விசாரணையில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் (CIABOC) கைது செய்யப்பட்ட SLPP-யின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் பேரணி நடைபெறுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T16:51:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dehiwela-attack-condemn-by-un-1789231593"></link>
            <id>https://tamilwin.com/article/dehiwela-attack-condemn-by-un-1789231593</id>
            <summary type="text">&amp;nbsp;தெஹிவளைப் பகுதியில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ளது.இலங...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தெஹிவளைப் பகுதியில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ளது.</p><p>இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே, இரு சிறுவர்களின் உயிரைப் பறித்த இச்சம்பவம் குறித்துத் தாம் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>இவ்வாறான வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய தரப்பினர் அதற்குப் பதிலளிக்க வேண்டும் என்று தனது 'எக்ஸ்' (X) சமூக வலைத்தளப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ac02d5e-2e3e-4a0a-a0c8-d686d30fd29b/26-6aa581eb2ce94.webp' /></p><p>
</p><p>தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையிலுள்ள வீடு ஒன்றின் மீது நேற்று (11) அதிகாலை இனந்தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில், வீட்டிலிருந்த இரண்டு சிறுவர்கள் உயிரிழந்ததுடன், அவர்களின் தந்தை படுகாயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.</p><p>
தாக்குதல் நடத்துவதற்காகச் சந்தேகநபர்கள் வந்ததாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி நேற்று பாதுக்கை, பஹல போபே பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட போதிலும், சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
</p><p>இதனிடையே, இந்த குண்டுத்தாக்குதல் இலக்கு மாறி நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
</p><p>தாக்குதலில் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும், உயிரிழந்த சிறுவர்களின் தந்தையுடைய சகோதரரின் வீட்டை இலக்கு வைத்தே குற்றவாளிகள் வந்துள்ளதாகவும், வீடு மாறியதாலேயே இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளதாகவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
</p><p>சம்பவத்தில் உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் சடலங்களும் இன்று (12) பிற்பகல் அவர்களின் உறவினர் வீட்டிற்கு எடுத்து வரப்பட்டதாக 'அட தெரண' செய்தியாளர் தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T16:47:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக வலைத்தள அவதூறு விவகாரம் ; யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட 14 மனுதாரர்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/social-media-case-hearing-against-14-respondents-1789230047"></link>
            <id>https://jvpnews.com/article/social-media-case-hearing-against-14-respondents-1789230047</id>
            <summary type="text">சமூக வலைத்தளங்கள் ஊடாக அவதூறான தகவல்களைப் பரப்பியதாகவும், அவ்வாறான செயற்பாடுகளுக்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றஞ்சாட்டி, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக வலைத்தளங்கள் ஊடாக அவதூறான தகவல்களைப் பரப்பியதாகவும், அவ்வாறான செயற்பாடுகளுக்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றஞ்சாட்டி, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறைப் பேராசிரியரும், முன்னாள் கலைப்பீடாதிபதியுமான பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராமால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, எழுத்துமூல சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>இந்த வழக்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உள்ளிட்ட 14 பேர் எதிர்மனுதாரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
</p><p>
சமூக வலைத்தளங்கள் ஊடாக தமக்கு எதிராக அவதூறான தகவல்கள் மற்றும் கருத்துக்கள் பரப்பப்பட்டதாகவும், அவ்வாறான தகவல்களைப் பரப்புவதற்கு சிலர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உடந்தையாக இருந்ததாகவும் மனுதாரர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4e1018b-4d43-4965-9083-25bd110bbc75/26-6aa57cb84f26a.webp' /></p><p>இதனையடுத்து, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
</p><p>
வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தரப்பினரின் எழுத்துமூல சமர்ப்பணங்களைப் பெறுவதற்காக மேலதிக கால அவகாசம் வழங்கப்பட்டது.</p><p>இதன்படி, வழக்கின் மேலதிக நடவடிக்கைகள் நவம்பர் மாதத்தில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையின்போது, தரப்பினரின் எழுத்துமூல சமர்ப்பணங்கள் பரிசீலிக்கப்பட்ட பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T16:41:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் ஆசிரிய மாணவி தற்கொலை விவகாரம் ; உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு அர்ச்சுனா கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/student-suicide-case-arjuna-s-appeal-to-government-1789231204"></link>
            <id>https://jvpnews.com/article/student-suicide-case-arjuna-s-appeal-to-government-1789231204</id>
            <summary type="text">யாழ் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவியை தற்கொலைக்கு தூண்டிய விரிவுரையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளும...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவியை தற்கொலைக்கு தூண்டிய விரிவுரையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை முன்வைத்தார்.</p><p> </p><p></p><p>மேலும் தெரிவிக்கையில் 

யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரியர் மாணவி ஒருவரை அங்கு கடமையாற்றும் விரிவுரையாளர் ஒருவர் பாலியல் ரீதியான வார்த்தை பிரயோகத்தால் உளநீதியாக தாக்கம் அடைந்த நிலையில் தற்கொலைக்கு முயன்று உயிர் தப்பியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f42a57e7-9d08-46e4-925f-21f901b7eb10/26-6aa58065d40af.webp' /></p><p>குறித்த மாணவி குறித்த விரிவுரையாளர் தொடர்பில் கல்லூரி நிர்வாகத்திற்கு எழுதிய கடிதம் வெளியாகி இருக்கிறது.
</p><p>
குறித்த மாணவி விரிவுரையாளரால் உளநீதியாக தாக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார் ஆனால் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.</p><p> 

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் உணவு வழங்கலில் பெரிய முறைகேடு இருப்பது உள்ளகக் கணக்காய்வு அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்ற நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. </p><p>

ஆகவே குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சர் கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டு இருக்கிறார் அதனை நான் வரவேற்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T16:40:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கவுக்கு எதிரான ஈரானிய நகர்வு! இந்தியாவுடன் விசேட பேச்சுவார்த்தையில் பெஷெஷ்கியன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-s-move-against-the-us-talks-with-india-1789230456"></link>
            <id>https://ibctamil.com/article/iran-s-move-against-the-us-talks-with-india-1789230456</id>
            <summary type="text">ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியனுக்கும் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கும் இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று&amp;nbsp;புதுடெல்லியில் இடம்பெற்றுள்ளது.இருத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியனுக்கும் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கும் இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று&nbsp;புதுடெல்லியில் இடம்பெற்றுள்ளது.</p><p>இருதரப்பு இராஜதந்திரம், மற்றும் பொருளாதாரம் குறித்து இந்த கலந்துரையாடலில் கருத்துக்கள் பகிரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>அமெரிக்காவுக்கு எதிரான போர் ஈரானுக்கு பெரும் சவாலாக மாறியுள்ள நிலையில் இந்த பேச்சுவார்த்தையின் முக்கியத்துவம் பெற்றுள்ளது.</p><p></p><h2>இந்திய சகாவுடன் நடத்திய சந்திப்பு</h2><p>புதுடெல்லியில் தனது இந்திய சகாவுடன் நடத்திய சந்திப்பில், இரு நாடுகளும் தங்களது பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதற்கான ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு பெஷெஷ்கியன் விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e87a1c1-fe1f-4464-8ccc-74e7e9a50208/26-6aa57ef901043.webp' /></p><p>
சமீபத்திய மாதங்களில் ஈரான் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் குற்றச் செயல்களுக்குச் சாட்சியாக இருந்தது என்றும், ஆனால் ஈரானிய மக்கள் தங்கள் முழு பலத்துடன் எதிர்த்து நின்று, அவர்களின் மிரட்டல்களை எதிர்த்து நின்றனர் என்றும் பெஷேஷ்கியன் திரௌபதி முர்முவிடம் கூறியுள்ளார்.</p><p>ஈரான் ஆக்கிரமிப்பாளர்கள் அல்ல, மாறாக நாங்கள் எதிரியின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நின்றோம் என்று அவர் மேலும் அவர் விலக்கியுள்ளார்.</p><p>மேலும், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் மூலம் நீடித்த அமைதியை அடைவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை முர்மு மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T16:34:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே நேரத்தில் முடங்கிய முக்கிய எண்ணெய் வழித்தடங்கள்! சவூதி எடுத்த அதிரடி முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/saudi-arabia-shuts-down-its-main-oil-pipeline-1789230091"></link>
            <id>https://tamilwin.com/article/saudi-arabia-shuts-down-its-main-oil-pipeline-1789230091</id>
            <summary type="text">ஈராக்கில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, சவூதி அரேபியா தனது
பிரதான கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய் பாதையின் செயல்பாடுகளை தற்காலிகமாக
இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈராக்கில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, சவூதி அரேபியா தனது
பிரதான கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய் பாதையின் செயல்பாடுகளை தற்காலிகமாக
இடைநிறுத்தியுள்ளது.</p><p> இது உலகளாவிய சக்தி வள சந்தையில் பெரும் தாக்கத்தை
ஏற்படுத்தியுள்ளது.</p><h2>சவூதி அரேபியா</h2><p>
</p><p>
சவூதி அரேபியாவின் அப்கேக் எண்ணெய் வயலிலிருந்து செங்கடலின் யான்பு துறைமுகம்
வரை 1,200 கிலோமீட்டர் தூரம் வரை பரந்து விரிந்துள்ள இந்த எண்ணெய் குழாய்
தொகுதி, ரியாத் மற்றும் மதினா பகுதிகளில் வைத்து தாக்குதலுக்கு
இலக்காகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dc1a216-b841-4075-8792-90c3a895f481/26-6aa57e7d431e0.webp' /></p><p>

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதன் செயல்பாடுகள் தற்காலிகமாக
நிறுத்தப்பட்டுள்ளதாக சவூதி ஆற்றல் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>

ஈராக்கின் மைசான் மாகாணத்திலிருந்தே இந்த ட்ரோன்கள் ஏவப்பட்டதாக ஈராக் பிரதமர்
அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், தனது எல்லைப் பகுதியை
தாக்குதல்களுக்கு பயன்படுத்த அனுமதித்த குற்றச்சாட்டில் அப்பகுதி இராணுவத்
தளபதியை ஈராக் அரசு பதவி நீக்கம் செய்துள்ளதுடன், ஈரான் எல்லையையும்
மூடியுள்ளது.
</p><h2>ஹோர்மூஸ் நீரிணை</h2><p>
சவூதியின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 4 முதல் 5 சதவீதம் வரை இந்த
குழாய் பாதை மூலமே கொண்டு செல்லப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbc72110-1034-4e6f-9fb0-888b0bfedfd7/26-6aa57e7c8fa30.webp' /></p><p>

ஹோர்மூஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ள நிலையில், சவூதி அரேபியா பயன்படுத்திய
பிரதான மாற்றுப் பாதையான இதுவும் தற்போது மூடப்பட்டுள்ளதால், உலக சந்தையில்
பிரெண்ட் மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 104 டொலர்களைக் கடந்து
உயர்ந்துள்ளதுடன், உலகளாவிய எரியபொருள் விநியோகத்தில் பெரும் நெருக்கடி
உருவாகியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T16:32:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளை வீட்டின் மீதான கைக்குண்டுத்தாக்குதல்: வெளிவரும் முக்கிய தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hand-grenade-attacks-by-criminal-gangs-1789226732"></link>
            <id>https://ibctamil.com/article/hand-grenade-attacks-by-criminal-gangs-1789226732</id>
            <summary type="text">தெஹிவளையில் நேற்று (11) ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட கையெறி குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக காவல்துறை தெரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளையில் நேற்று (11) ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட கையெறி குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையேயான மோதல்களில் கைக் குண்டுகளைப் பயன்படுத்தும் போக்கு அதிகமாக உள்ளது என்பது தெரியவந்துள்ளது.</p><p>பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையேயான மோதல்களில் கையெறி குண்டுகளைப் பயன்படுத்தும் போக்கு அதிகமாக உள்ளது என்பது தெரியவந்துள்ளது.</p><h2>படுகாயமடைந்த தந்தையின் கால் துண்டிப்பு</h2><p>
</p><p>
இதற்கிடையில், தெஹிவளை கையெறி குண்டுத் தாக்குதலில் ஏற்பட்ட கடுமையான காயங்கள் காரணமாக வீட்டு உரிமையாளரின் காலைத் துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7989e976-944f-4d69-be0e-c3b720518b52/26-6aa57597dabf6.webp' /></p><p>

தெஹிவளையின் சிறிசங்கபோ மாவத்தாவில் நேற்று அதிகாலை (11) அடையாளம் தெரியாத நபர் நடத்திய கையெறி குண்டுத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர்.</p><p></p><p>
</p><p>


</p><h2>இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதல்</h2><p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் இரண்டு குழுக்களுக்கு இடையேயான மோதலே இந்த கையெறி குண்டுத் தாக்குதலுக்கு வழிவகுத்தது என்று காவல்துறை வெளிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3de881f3-327a-4784-9e71-786e5bddc41d/26-6aa57598a8fd9.webp' /></p><p>
</p><p>
அதன்படி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான படோவிட்ட அசங்கவின் குழுவைப் பழிவாங்கும் நோக்கில் குடு அவிஷ்காவின் குழு இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும், அவர்கள் தவறான வீட்டைக் குறிவைத்ததாகவும் கூறப்படுகிறது.
</p><p>
இந்தத் துரதிஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்த இருவரும், தாயின் அன்பை இழந்து தந்தையின் அரவணைப்பில் வளர்ந்த 17 வயது கசுன் ரஷ்மிகா மற்றும் அவரது சகோதரர், 11 வயது துமிந்தா கிஹான் ஆவர்.
</p><p>




இறந்த குழந்தைகளின் உடல்கள் இன்று இரவு அவர்களது உறவினர்களின் வீடுகளுக்குக் கொண்டுவரப்பட உள்ளன.</p><p></p><p>
</p><p>
</p><h2>பல முக்கிய தகவல்கள்</h2><p>இதற்கிடையில், மேற்கு மாகாணப் பொறுப்பு சிரேஷ்ட பிரதி காவல்துறைத் தலைவர் (சி.ஐ.ஜி) சஜீவ மெதவத்த அவர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் மூன்று காவல்துறை குழுக்கள் நடத்திய விசாரணைகளில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b428ebb-cfac-4574-84f5-528f906390a2/26-6aa575995f32b.webp' /></p><p>
</p><p>
கடந்த காலத்தில் கடல் வழியாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட கையெறி குண்டுகள் மற்றும் போதைப்பொருட்கள் உள்ளூர் குற்றக் கும்பல்களால் பெறப்பட்டுள்ளன என்பதும் தெரியவந்துள்ளது.
</p><p>
இதற்கிடையில், குளியாபிட்டியாவில் குற்றப் புலனாய்வுத் துறையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், வெடிக்காத கையெறி குண்டு மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஆகியவற்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T15:59:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய டி20 போட்டியில் தனியாளாக ருத்ரதாண்டவம் ஆடிய தமிழக வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/vijay-shankar-fifty-in-european-t20-2026-1789228345"></link>
            <id>https://news.lankasri.com/article/vijay-shankar-fifty-in-european-t20-2026-1789228345</id>
            <summary type="text">Vijay Shankar 67 runs in 43 balls european t20: கிளாஸ்கோவ் கோஸ்மிக் அணிக்கு எதிரான போட்டியில் விஜய் ஷங்கர் அரைசதம் விளாசினார்.

ஐரோப்பிய டி20 பிரீமி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Vijay Shankar 67 runs in 43 balls european t20: கிளாஸ்கோவ் கோஸ்மிக் அணிக்கு எதிரான போட்டியில் விஜய் ஷங்கர் அரைசதம் விளாசினார்.
</p><p>
ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் போட்டியில், டப்லின் கார்டியன்ஸ் வீரர் விஜய் ஷங்கர் 43 பந்துகளில் 67 ஓட்டங்கள் விளாசினார்.</p><h2>டப்லின் கார்டியன்ஸ் 
</h2><p>
தி வில்லேஜ் மைதானத்தில் நடந்து வரும் ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் போட்டியில், கிளாஸ்கோவ் கோஸ்மிக் மற்றும் டப்லின் கார்டியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Vijay Shankar smashed 67(43) with 6 fours and 3 sixes against Glasgow Cosmic in ETPL. <br> <a href="https://t.co/b2GBvnAnFU">pic.twitter.com/b2GBvnAnFU</a></p>&mdash; CricketGully (@thecricketgully) <a href="https://x.com/thecricketgully/status/2098795082845765894?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

முதலில் துடுப்பாடிய டப்லின் கார்டியன்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.&nbsp;</p><p></p><p>

எனினும், தமிழக வீரரான விஜய் ஷங்கர் (Vijay Shankar) அதிரடியாக 43 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 67 ஓட்டங்கள் விளாசினார்.
</p><p>
இதன்மூலம் டப்லின் கார்டியன்ஸ் 19.3 ஓவர்களில் 159 ஓட்டங்கள் எடுத்தது. அலி கான் 4 விக்கெட்டுகளும், டைமல் மில்ஸ் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75fb96dc-581f-431b-a3a4-feac8eeee80e/26-6aa575f3ddf6f.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T15:52:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓடிச்சென்று அஜித்தை கட்டியணைத்த விஜய்.. படுவைரல் ஆகும் வீடியோ, புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vijay-meets-ajith-in-london-viral-photos-and-video-1789227183"></link>
            <id>https://cineulagam.com/article/vijay-meets-ajith-in-london-viral-photos-and-video-1789227183</id>
            <summary type="text">நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவரும் ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் போட்டியாளர்களாக கருத்தப்பட்டவர்கள். அவர்கள் நட்புடன் இருந்தாலும் அவர்கள் இருவரது ரசி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவரும் ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் போட்டியாளர்களாக கருத்தப்பட்டவர்கள். அவர்கள் நட்புடன் இருந்தாலும் அவர்கள் இருவரது ரசிகர்கள் எப்போதும் எதிரும் புதிருமாக தான் இருப்பார்கள்.</p><p>தற்போது விஜய் அரசியலிலும், அஜித் கார் ரேஸிலும் என வெவ்வேறு ட்ராக்கில் பயணிக்க தொடங்கி இருக்கின்றனர்.</p><p>இன்று லண்டனில் அஜித் பங்கேற்கும் கார் ரேஸை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56a1e14c-660f-4d95-9e00-fdf1dfd8bdff/26-6aa570b34212c.webp' /></p><p>
</p><h2>கட்டியணைத்த விஜய்</h2><p>

அஜித்தை பார்த்ததும் விஜய் ஓடிச்சென்று கட்டியணைத்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
</p><p>
அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் தற்போது வைரல் ஆகி வருகிறது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">That historic moment we waited for 🥰🥰 <a href="https://x.com/hashtag/thala?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#thala</a> <a href="https://x.com/hashtag/thalapathy?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#thalapathy</a> 🔥🔥🔥🔥🔥🔥🔥 <a href="https://t.co/d8R6zI2BTp">pic.twitter.com/d8R6zI2BTp</a></p>&mdash; Dinesh (@nobody_offl) <a href="https://x.com/nobody_offl/status/2098782642585948333?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-09-12T15:33:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத குடியேறியால் புதிதாக நிச்சயிக்கப்பட்ட தம்பதிக்கு நேர்ந்த சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/newly-engaged-ohio-couple-crushed-car-by-immigrant-1789226664"></link>
            <id>https://news.lankasri.com/article/newly-engaged-ohio-couple-crushed-car-by-immigrant-1789226664</id>
            <summary type="text">Newly engaged ohio couple crushed car by immigrant: அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறியால் இளைஞர் உயிரிழக்க, அவரது வருங்கால மனைவி உயிருக்கு போராடிக்கொண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Newly engaged ohio couple crushed car by immigrant: அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறியால் இளைஞர் உயிரிழக்க, அவரது வருங்கால மனைவி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.</p><p>அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் புதிதாக நிச்சயிக்கப்பட்ட நிலையில், சட்டவிரோத குடியேறி ஒருவரால் கொல்லப்பட்டார்.</p><h2> 

திருமண நிச்சயதார்த்தம் </h2><p>ஓஹியோவில் 23 வயது இளைஞரான கேமரூன் லயன் மற்றும் அவரது கல்லூரி காதலி அப்ரியல் கெர்ன்ஸ் 
(22) இருவரும் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0c4da87-c102-42ee-a53a-40ea8bf1eddb/26-6aa56eab81ffc.webp' />&nbsp;</p><p></p><p>

கடந்த 6ஆம் திகதி, இந்த தம்பதி காரில் சென்றுகொண்டிருந்தபோது வேகமாக வந்த கார் ஒன்று மோதியது. 

இதில் கேமரூன் லயன் உயிரிழந்தார்.</p><p> அவரது காதலி காதலி அப்ரியல் கெர்ன்ஸ் படுகாயமடைந்தால் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
</p><p>
இச்சம்பவம் தொடர்பில் அல்வாரோ யூரிப்-கோன்சலஸ் என்ற 33 வயது நபர் கைது செய்யப்பட்டார். அவர் சட்டவிரோத குடியேறி என்று விசாரணையில் தெரிய வந்தது.</p><p>

மாநில நெடுஞ்சாலை ரோந்துப் படையினர் யூரிப்பை தேடிக்கொண்டிருந்தபோது, அவர் தனது வாகனத்தைத் திருப்ப முயன்றபோது இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9809c4f-1fd2-4c46-88f8-41138e28dd6b/26-6aa570ba35092.webp' /></p><h2>நாடு கடத்தப்பட்டவர்</h2><p>
சந்தேக நபரான யூரிப், சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பதாகவும், இதற்கு முன்னர் ட்ரம்ப் நிர்வாகத்தால் நாடு கடத்தப்பட்டவர் என்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை பின்னர் உறுதிப்படுத்தியது.
</p><p>
அவர் மீது மோசடியான வாகனக் கொலை, மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் மோட்டார் வாகனம் இயக்குதல் ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
</p><p>
இதற்கிடையில், துயரச் சம்பவத்திற்குப் பிறகு கெர்ன்ஸின் மருத்துவச் செலவுகளுக்காகவும், அவருக்கு ஆதரவளிக்கவும் அவரது குடும்பத்தினர் நிதி திரட்டும் முயற்சியைத் தொடங்கியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b8aaa2a-490f-4bac-b6ce-36217e848992/26-6aa570b979b83.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5c6b213-c20c-4c5a-8ed8-cc922b046d3c/26-6aa570bae3b9f.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T15:30:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொங்கோவில் எபோலா பாதிப்பு: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ebola-outbreak-in-congo-who-warning-1789224125"></link>
            <id>https://tamilwin.com/article/ebola-outbreak-in-congo-who-warning-1789224125</id>
            <summary type="text">கொங்கோ ஜனநாயகக் குடியரசில் தீவிரமடைந்து வரும் எபோலா வைரஸ் தொற்றினால்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,000 ஐக் கடந்துள்ளது.அத்துடன், இந்தநோய் தற்போது...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொங்கோ ஜனநாயகக் குடியரசில் தீவிரமடைந்து வரும் எபோலா வைரஸ் தொற்றினால்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,000 ஐக் கடந்துள்ளது.</p><p>அத்துடன், இந்தநோய் தற்போது
நாட்டின் புதிய மாகாணமொன்றிற்கும் பரவியுள்ளதாக அரசாங்கத் தரவுத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
</p><p>
புண்டிக்புக்யோ ரக எபோலா வைரஸினால் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பினால்
உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,398 ஆக உயர்ந்துள்ளது.</p><h2>நோயாளி அடையாளம்</h2><p>

இதுவரை நாட்டின் ஏழு மாகாணங்களில் 7,022 பேருக்கு தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ள நிலையில், வைரஸ் பரவலின் மையப்பகுதியிலிருந்து வெகு தொலைவில்
உள்ள தெற்கு உபங்கி மாகாணத்திலும் முதல் நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d50ebe2-cca1-40f7-b943-9b24fdd9294f/26-6aa56de0bbe7b.webp' /></p><p>
</p><p>
தெற்கு கிவு மாகாணத்திலிருந்து பயணித்து, கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்த 23
வயதுடைய வாலிபர் ஒருவருக்கே எபோலா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
</p><p>
இதனைத் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணிகள்
தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.</p><h2>போதிய நிதி</h2><p>
</p><p>
பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர்களின் பற்றாக்குறை, போதிய நிதி வசதியின்மை
மற்றும் செயல்பாட்டாளர்களின் குறைபாடு காரணமாக நோய் பரவலைக்
கட்டுப்படுத்துவதில் கடும் சவால்கள் நிலவுவதாக உலக சுகாதார நிறுவனம்
தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94bba71f-a0d5-40a0-9b20-e41805182502/26-6aa56de1700e4.webp' /></p><p>

கொங்கோ வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மோசமான எபோலா பரவலாக இது
பதிவாகியுள்ளதுடன், உலகளவில் மேற்கு ஆப்பிரிக்கப் பரவலுக்கு அடுத்தபடியாக
இரண்டாவது பெரிய பாதிப்பாகவும் உருவெடுத்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T15:21:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2029 ஆம் ஆண்டில் நாட்டின் ஜனாதிபதி நாமல்! அர்ச்சுனா எம்.பி பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-2029-sl-president-archchuna-1789224913"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-2029-sl-president-archchuna-1789224913</id>
            <summary type="text">எத்தகைய தடைகள் வந்தாலும் அல்லது சிறையில் அடைத்தாலும் 2029 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ச தான் நாட்டின் ஜனாதிபதியாவது உறுதி என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>எத்தகைய தடைகள் வந்தாலும் அல்லது சிறையில் அடைத்தாலும் 2029 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ச தான் நாட்டின் ஜனாதிபதியாவது உறுதி என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.</p><p>அனுராதபுரத்தில் இன்று(12.9.2026) நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p>அத்தோடு, வடக்கில் பிறந்த தாம், என்றும் சிங்கள மக்களுடன் இணைந்தே நிற்பதாகக் குறிப்பிட்டார். </p><p>தற்போதைய நிர்வாகம் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் செயற்பாடுகள் ஏமாற்றமளிப்பதாகக் விமர்சித்த அவர், தமிழ் மற்றும் சிங்கள மக்கள் ஒன்றிணைவதன் மூலமே நாட்டின் எதிர்காலத்தை உருவாக்க முடியும் எனக் கூறினார்.</p><p>மேலும், தாம் தனித் தமிழ் ஈழக் கோரிக்கையை ஒருபோதும் முன்வைக்கப் போவதில்லை என்றும், தமிழ் மற்றும் சிங்கள மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதே தனது நோக்கம் என்றும் வலியுறுத்தினார். </p><p>அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளால் தன் மீது பல வழக்குகள் தொடரப்பட்ட போதிலும், தனது கணிப்பின்படி 2029 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்சவே நாட்டின் ஜனாதிபதியாக ஆட்சிப் பொறுப்பேற்பார் என அவர் உறுதியளித்துப் பேசினார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/JdO5NxKUdtg" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T15:17:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆரம்பமானது போராட்டம் திரைப்படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/audio-launch-ceremony-of-the-movie-porattam-1789202975"></link>
            <id>https://ibctamil.com/article/audio-launch-ceremony-of-the-movie-porattam-1789202975</id>
            <summary type="text">புதிய இணைப்புஈழத் திரையுலகில் புதியதோர் அத்தியாயத்தைப் படைக்கவிருக்கும் “போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சற்று முன்னர் யாழ்ப்பாணத்தில் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<h5>புதிய இணைப்பு</h5><p>ஈழத் திரையுலகில் புதியதோர் அத்தியாயத்தைப் படைக்கவிருக்கும் “போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சற்று முன்னர் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/5MFc9ATcE18" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>ஈழத் திரையுலகில் புதியதோர் அத்தியாயத்தைப் படைக்கவிருக்கும் “போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று யாழில் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.</p><p>

அதன்படி, குறித்த நிகழ்வானது, இன்று(12) மாலை 4.30 மணிக்கு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
</p><p>
ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி திரைக்கு வரவுள்ள நிலையில், இன்றைய இசை வெளியீட்டு விழாவில் ஏராளமான பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.</p><p>

ஈழத்து சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் இந்நிகழ்வில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு, “போராட்டம்” திரைப்படக் குழுவினருக்கு தங்களின் பேராதரவை வழங்கி விழாவை சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.</p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T15:16:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளைநிற சேலையில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் அரோரா சின்கிளேர்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/aurora-sinclair-glam-saree-reels-video-post-1789220261"></link>
            <id>https://viduppu.com/article/aurora-sinclair-glam-saree-reels-video-post-1789220261</id>
            <summary type="text">அரோரா சின்கிளேர்புதுச்சேரியை பூர்வீகமாக கொண்டு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து பிரபலமானவர் தான் அரோரா சின்கிளேர். பலூன் அக்கா என்று பலரால...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அரோரா சின்கிளேர்</h2><p>புதுச்சேரியை பூர்வீகமாக கொண்டு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து பிரபலமானவர் தான் அரோரா சின்கிளேர். </p><p>பலூன் அக்கா என்று பலராலும் புகழப்பட்டு வந்த அரோரா, பிக்பாஸ் சீசன் 9ல் போட்டியாளராக பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/700a2519-4391-43de-b3f9-2970f6f19183/26-6aa555a7472ca.webp' /></p><p>
</p><p>
தற்போது ஒருசில பாடல் ஆல்பங்களில் நடித்துள்ள அரோரா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.
</p><p>
தற்போது ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறி, வெள்ளைநிற சேலையில் கிளாமர் போட் கொடுத்து எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளர்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DdJmpY2p5cG/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DdJmpY2p5cG/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DdJmpY2p5cG/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Aurora Sinclair (@the_aurora_sinclair_)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-12T15:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈராக்கிலிருந்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் : முக்கிய எண்ணெய் குழாய் வழித் தடத்தை மூடியது சவுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/saudi-arabia-shuts-major-oil-pipeline-1789223538"></link>
            <id>https://ibctamil.com/article/saudi-arabia-shuts-major-oil-pipeline-1789223538</id>
            <summary type="text">ஈராக்கிலிருந்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்குள்ளான ஒரு நாளுக்குப் பின்னர், நாடு முழுவதும் செல்லும் தனது முக்கிய எண்ணெய் குழாய் வழித்தடத்தை தற்காலிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈராக்கிலிருந்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்குள்ளான ஒரு நாளுக்குப் பின்னர், நாடு முழுவதும் செல்லும் தனது முக்கிய எண்ணெய் குழாய் வழித்தடத்தை தற்காலிகமாக மூடியுள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.</p><p>

யேமனின் ஹவுத்தி அமைப்பு சவுதி அரேபியாவின் 'கிழக்கு-மேற்கு' குழாய் வழித்தடம் மீதான ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து இந்த தற்காலிகமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றும் கூறப்பட்டுள்ளது.</p><h2>'கிழக்கு-மேற்கு' குழாய் வழித்தடம்</h2><p>ஈரானுக்கும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலின் போது ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் போக்குவரத்து தடைப்பட்ட நிலையில், சவுதி அரேபியா தொடர்ந்து எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் இந்தக் 1,200 கிலோமீட்டர் தூரம் கொண்ட 'கிழக்கு-மேற்கு' குழாய் வழித்தடம் முக்கிய பங்காற்றியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6dd8315c-39c5-48f3-ad25-6cd7a552e280/26-6aa5692e6bb4e.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை(செப்.10) ஈராக்கிலிருந்து வந்த பல ட்ரோன்கள் தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாக சவுதி வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியது. </p><p>இந்தத் தாக்குதலைக் கண்டித்த ஈராக் அரசு, இது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது. மேலும் ஈரான் எல்லைப் பகுதி மைசான் மாகாண இராணுவத் தளபதியை பணியில் இருந்து நீக்கியது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T15:01:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய வரலாறு படைக்க வரும் போராட்டம் திரைப்படம் - யாழில் இன்று இசை வெளியீட்டு விழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/audio-launch-of-porattam-movie-today-1789203056"></link>
            <id>https://tamilwin.com/article/audio-launch-of-porattam-movie-today-1789203056</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;“போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா&amp;nbsp;இன்று பிரமாண்டமாக&amp;nbsp; இடம்பெற்றது. இந்த நிகழ்வு, இன்று (12.09.2026) யாழ்ப்பாண...</summary>
            <content type="html"><![CDATA[<p><span style="color: inherit; font-size: 1.75rem;"><b>புதிய இணைப்பு&nbsp;</b></span></p><p>“போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா&nbsp;இன்று பிரமாண்டமாக&nbsp; இடம்பெற்றது.</p><p> இந்த நிகழ்வு, இன்று (12.09.2026) யாழ்ப்பாணம் - திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் மாலை 5 மணிக்கு இடம்பெற்றது.
</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;"><b>முதலாம் இணைப்பு&nbsp;</b></span></p><p>ஈழத்தமிழர்களின் ஆதரவுடன் திரையுலகில் தடம் பதிக்க வரும் “போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக இடம்பெறவுள்ளது.&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/5MFc9ATcE18" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p><p>

இந்த நிகழ்வு, இன்று(12.09.2026) யாழ்ப்பாணம் - திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><h3>இசை வெளியீட்டு விழா</h3><p>

இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ள மண்டபத்தில் இருக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளோர் 070 341 4565 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முன்கூட்டியே தங்கள் வருகையை பதிவுச் செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a03754d7-ee3e-493a-85e7-43abd9f3eda2/26-6aa5128d83584.webp' /></p><p> </p><p>

யாழ்ப்பாணத்தில் கோலாகலமாக இடம்பெறவுள்ள இந்த இசை வெளியீட்டு விழாவில் ஏராளமான பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ள நிலையில், தாங்களும் கலந்து கொண்டு “போராட்டம்” திரைப்படக் குழுவினரை உற்சாகப்படுத்தி, விழாவை சிறப்பிக்க முடியும் என்றும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதேவேளை, ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள போராட்டம் திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T14:49:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர விடுத்துள்ள கடும் மிரட்டல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-s-warning-for-criminals-1789221204"></link>
            <id>https://tamilwin.com/article/anura-s-warning-for-criminals-1789221204</id>
            <summary type="text">நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு ஆதரவாக அரசாங்கம் ஒதுபோதும் செயற்படாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எச்சரித்துள்ளார். 

பாதாள உலகம் மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு ஆதரவாக அரசாங்கம் ஒதுபோதும் செயற்படாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எச்சரித்துள்ளார். </p><p>

பாதாள உலகம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகளில் ஈடுபடும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பல்களுக்கு ஒருபோதும் மன்னிப்பு வழங்க முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். </p><p>

பொலநறுவையில் இன்று நடைபெற்ற விவசாயிகளின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.</p><h2><b>குற்றக் கும்பல்கள்&nbsp;</b></h2><p>

நாட்டில் இயங்கி வரும் ஆயுதம் ஏந்திய குற்றக் கும்பல்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் என அவர் சூளுரைத்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/516526da-680e-47d8-a33e-699e2f119a5f/26-6aa55c9457cee.webp' /></p><p>அத்துடன் வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்து கொண்டு நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தும் 70இற்கும் மேற்பட்டவர்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/G3U3ZMS8rOA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
</p><p>
இவ்வாறான நிலையில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த மரண தண்டனையை நடைமுறைப்படுத்த வேண்டும் என சில தரப்பினர் கோரிக்கை முன்வைக்கின்றனர்.</p><p> 

எனினும் மரண தண்டனை குறித்து அரசாங்கம் இதுவரை எந்தவொரு இறுதித் தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். </p>]]></content>
            <updated>2026-09-12T14:45:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த தலைமையிலான பேரணிக்கு சிஐடி சென்றிருக்கலாம்.. பேரணியில் ஜனாதிபதி அதிரடி உரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-anura-speech-in-polonnoruwa-meeting-1789215235"></link>
            <id>https://tamilwin.com/article/president-anura-speech-in-polonnoruwa-meeting-1789215235</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;பொலன்னறுவையில்&amp;nbsp; நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, குடும்ப உறவுகளுக்கு அப்பால் சட்டம் அன...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>பொலன்னறுவையில்&nbsp; நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, குடும்ப உறவுகளுக்கு அப்பால் சட்டம் அனைவருக்கும் சமமாகவே நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
</p><p>
ராஜபக்ச குடும்பத்தினரையும், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான தற்போதைய நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, "இப்போது அழுவதை விட, திருட வேண்டாம் என்று தந்தை முன்பே சொல்லியிருக்க வேண்டும்.&nbsp;</p><p>தாயாரோ அல்லது பாட்டியோ யாராக இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான். மக்களின் பணத்தைக் கொள்ளையடித்த எவர் மீதும் நமக்கு எந்த அனுதாபமும் இல்லை" என தெரிவித்தார்.
</p><p>
அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியை இலக்கு வைத்துப் பேசிய அவர், ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகத் தேடப்பட்டு வரும் பலரை அந்தப் பேரணியில் ஒரே இடத்தில் காண முடியும் என்றார்.&nbsp;</p><p>"குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) அங்கு சென்றால் அனைவரையும் ஒரே இடத்தில் பிடித்துவிடலாம்" என்றும் குறிப்பிட்டதோடு, இந்தப் பேரணி மக்கள் நலனுக்காக நடத்தப்படவில்லை என்றும், சட்ட நடவடிக்கைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டினார். </p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>நமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் ஆகிறது - நாட்டிற்கு நல்லது என்ற கருப்பொருளின் கீழ் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டங்களின் தொடரின் ஒரு பகுதியாக விவசாயிகள் பேரணியொன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றதுஇ.&nbsp;</p><p>
பொலன்னறுவை தீப உயன வளாகத்தில் இடம்பெறும் இந்த பேரணியில் சற்றுமுன்னர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது உரையை ஆரம்பித்தார்.&nbsp;</p><p>இந்த பேரணியானது, இன்று மாலை 4.00 ஆரம்பமானது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/G7JuBD-WIBY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T14:37:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேராசிரியர் ரகுராம் தொடுத்த வழக்கு : நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-order-the-case-filed-by-professor-raghuram-1789217755"></link>
            <id>https://ibctamil.com/article/court-order-the-case-filed-by-professor-raghuram-1789217755</id>
            <summary type="text">சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாகவும் அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றஞ்சாட்டி, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ்&amp;nbsp;யாழ்ப்பாணப் பல்கலைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாகவும் அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றஞ்சாட்டி, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ்&nbsp;யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறைப் பேராசிரியரும் முன்னாள் கலைப்பீடாதிபதியுமான பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராமால் தொடர்ந்த வழக்கு&nbsp;எழுத்துமூல சமர்ப்பணத்துக்காக நவம்பர் மாதத்துக்குத் தவணையிடப்பட்டுள்ளது.</p><p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட 14 எதிர்மனுதாரர்களுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் எழுத்துமூல சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக வழக்கு தவணையிடப்பட்டது.</p><p></p><h2>அவதூறான பதிவு</h2><p>முன்னதாக 2026 ஜூலை 13 அன்று வழக்கை விசாரித்த பருத்தித்துறை நீதவான், எதிர்மனுதாரர்கள் பேராசிரியருக்கு எதிராகப் பதிவிட்ட அவதூறான கருத்துக்களைச் சமூக வலைத்தளங்களில் இருந்து உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b78342d4-2d58-4726-8107-c2e3bfc873ba/26-6aa54ff53a197.webp' /></p><p>மேலும், இனிவரும் காலங்களில் பேராசிரியர் தொடர்பாக எந்தவொரு அவதூறான பதிவுகளையும் வெளியிடக் கூடாது என எதிர்மனுதாரர்களுக்கு நீதிமன்றம் இடைக்காலக் கட்டளை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><p>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</p></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T14:35:55+00:00</updated>
        </entry>
    </feed>
