<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-21T12:21:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் ஆலயத்தில் பலரது கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்திய மின்விளக்குகள் பறிமுதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chinese-electric-lamps-seized-by-police-1787313684"></link>
            <id>https://ibctamil.com/article/chinese-electric-lamps-seized-by-police-1787313684</id>
            <summary type="text">

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நேற்றைய ஆலயத் திருவிழாவின் போது நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பான விசாரணைகள் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நேற்றைய ஆலயத் திருவிழாவின் போது நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
கண் பாதிப்புக்கான காரணத்தை கண்டறியும் நோக்கில் காவல்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஆலய வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிக சக்தி கொண்ட சீனத் தயாரிப்பு மின் விளக்குகள் சிலவற்றை காவல்துறையினர் கையகப்படுத்தி எடுத்துச் சென்றுள்ளனர்.
</p><p>
கையகப்படுத்தப்பட்ட மின் விளக்குகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், அவற்றின் மின்சக்தி அளவு, பயன்பாட்டுத் தன்மை மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அவை அனுமதிக்கப்பட்டவையா அல்லது தடை செய்யப்பட்டவையா என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகிறது.</p><p></p><h2>நூற்றுக்கணக்கானவர்கள் பாதிப்பு&nbsp;</h2><p>
</p><p>
இந்நிலையில், குறித்த மின் விளக்குகள் காரணமாக நூற்றுக்கணக்கான மக்களுக்கு கண்களில் எரிச்சல், பார்வைக் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a34f6294-7e71-4c1c-a132-724473664568/26-6a88418b02d85.webp' /></p><p> </p><p>

முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுமார் 120 பேரும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 46 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-08-21T12:16:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்ர தங்கம் பாவம்; யாழில் காதல் தோல்வியால் உயிரை மாய்த்த இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-takes-his-own-life-in-jaffna-due-heartbreak-1787312334"></link>
            <id>https://jvpnews.com/article/youth-takes-his-own-life-in-jaffna-due-heartbreak-1787312334</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்.நெல்லியடியில் காதல் தோல்வியால் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

உயிரிழந்த இளைஞர் காதல் தோல்வி காரணமாக கடிதம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்.நெல்லியடியில் காதல் தோல்வியால் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

உயிரிழந்த இளைஞர் காதல் தோல்வி காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.
</p><p>
இறப்பதற்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் " என்ர தங்கம் பாவம்! அவளை யாரும் தொல்லைப்படுத்த வேண்டாம் " எனக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb3c31ff-b7f2-4225-ba50-2667664ab443/26-6a8838d02f835.webp' /></p><p> </p><p>&nbsp;சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T12:11:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நவாலி ஆலய திருவிழாவால் பனை மரம் ஒன்றும் பாதுகாப்பு வேலியும் தீப்பற்றி எரிந்த அசம்பாவிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/an-incident-occurred-where-palm-tree-safety-fence-1787312501"></link>
            <id>https://tamilwin.com/article/an-incident-occurred-where-palm-tree-safety-fence-1787312501</id>
            <summary type="text">நவாலி அந்திரான் கிராமத்தில் நேற்று(21) இரவு நடைபெற்ற திருவிழாவின் போது
வாணவேடிக்கையால் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது
பனை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவாலி அந்திரான் கிராமத்தில் நேற்று(21) இரவு நடைபெற்ற திருவிழாவின் போது
வாணவேடிக்கையால் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p> இதன்போது
பனை மரம் ஒன்றும் மற்றும் பாதுகாப்பு வேலியும் தீப்பற்றி எரிந்ததுடன், சில
பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.</p><h2>ஆலய திருவிழா</h2><p>

ஆதலால், இவ்வாறான சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக வழிபாட்டு தலங்களின்
நிர்வாகங்களுக்கு பலமுறை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க
அதிபர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/019f66ac-5f15-48a9-9d0c-8af64fc7a396/26-6a883f31dc659.webp' /></p><p>
</p><p>
தேவையற்ற ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடித்தல், லேசர் ஒளிக்கீற்றுகளைப்
பயன்படுத்துதல், யானைகளை அழைத்துச் செல்லுதல் உள்ளிட்ட பொதுமக்களின்
பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு
தொடர்ச்சியாக கோரிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் ஊடகங்கள் வாயிலாகவும்
விடுக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் சில ஆலயங்கள் வழங்கப்பட்ட
அறிவுறுத்தல்களுக்கு உரிய முறையில் செவிசாய்க்காமல், பொதுமக்களுக்கு சிரமத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுத்து வருவது
கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
எனவே, வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தினர், மதகுருமார்கள் உள்ளிட்ட
பொறுப்புக்கூற வேண்டிய அனைத்து தரப்பினரும் இவ்விடயம் தொடர்பில் உரிய
நடவடிக்கைகளை முன்னெடுத்து, எதிர்காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை
உறுதிப்படுத்தும் வகையில் சமூகப் பொறுப்புணர்வுடன் திருவிழா நடவடிக்கைகளை
முன்னெடுக்க வேண்டும் என அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T12:06:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[20 நாட்களில் 8 ஆயிரத்தை தாண்டிய நோயாளர்கள் - இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் பெரும் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/8-000-dengue-patients-registered-in-20-days-of-aug-1787311377"></link>
            <id>https://tamilwin.com/article/8-000-dengue-patients-registered-in-20-days-of-aug-1787311377</id>
            <summary type="text">ஓகஸ்ட் மாதத்தின் முதல் 20 நாட்களில் இலங்கை முழுவதும் மொத்தம் 8,043 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓகஸ்ட் மாதத்தின் முதல் 20 நாட்களில் இலங்கை முழுவதும் மொத்தம் 8,043 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், இந்த ஆண்டில் இதுவரையில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 93,381ஆக உயர்ந்துள்ளதாகவும், டெங்கு தொடர்பான 71 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் NDCU கூறுகிறது.</p><h2>டெங்கு நோய் தொற்று</h2><p>
</p><p>
தற்போது டெங்கு நோயால் ஏற்படும் இறப்பு விகிதம் 0.076% ஆக உள்ளது என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>

ஓகஸ்ட் மாதத்தின் முதல் 20 நாட்களில் 8,043 நோய்த்தொற்றுகள் பதிவாகியிருந்தாலும், ஜூலையில் பதிவான 29,964 நோய்த்தொற்றுகள் மற்றும் ஜூன் மாதத்தில் பதிவான 21,533 நோய்த்தொற்றுகளுடன் ஒப்பிடும்போது ஓகஸ்ட் மாதத்தில் ஒரு சிறிய சரிவு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> கூடுதலாக, மொத்த நோய்த்தொற்றுகளில் 52.94%, அதாவது 49,440 நோயாளிகள், மேற்கு மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளனர்.</p><p>

தெற்கு மாகாணத்தில் 13,697 நோய்த்தொற்றுகளும், மத்திய மாகாணத்தில் 8,441 நோய்த்தொற்றுகளும் பதிவாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4c16795-f85a-4a5a-9253-913c9d6ed239/26-6a883aa31b5f8.webp' /></p><p>
</p><p>
மாவட்ட அளவில், கம்பஹாவில் அதிகபட்சமாக 19,888 வழக்குகளும், அதனைத் தொடர்ந்து கொழும்பு மாவட்டத்தில் 18,535 வழக்குகளும், கண்டி மாவட்டத்தில் 6,755 வழக்குகளும் பதிவாகியுள்ளன.</p><p>மொத்தம் 76 சுகாதார மருத்துவ அதிகாரப் பகுதிகள் டெங்கு நோய்க்கான அதிக அபாயமுள்ள பகுதிகளாகத் தொடர்ந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை சுத்தம் செய்து சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்குமாறும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறும் சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T11:59:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் வடக்கு - கிழக்கு காணி இழந்த மக்கள் அமைப்புக்களின் ஒன்றிணைந்த ஆர்ப்பாட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/people-who-lost-their-land-in-the-north-and-east-1787313381"></link>
            <id>https://ibctamil.com/article/people-who-lost-their-land-in-the-north-and-east-1787313381</id>
            <summary type="text">வடக்கு கிழக்கில் கையகப்படுத்தியுள்ள பொது மக்களின் காணிகளை மக்களிடமே
வழங்கு என வலியுறுத்தி வடக்கு - கிழக்கு காணி இழந்த மக்கள் அமைப்புக்கள்
ஒன்றிணைந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு கிழக்கில் கையகப்படுத்தியுள்ள பொது மக்களின் காணிகளை மக்களிடமே
வழங்கு என வலியுறுத்தி வடக்கு - கிழக்கு காணி இழந்த மக்கள் அமைப்புக்கள்
ஒன்றிணைந்த கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.</p><p>குறித்த போராட்டம்,&nbsp; இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கிளிநொச்சி பழைய
கச்சேரிக்கு முன்னால் இடம்பெற்றது.</p><p>

காலை 10 மணிக்கு ஆரம்பமான குறித்த போராட்டத்தில் காணிகளை இழந்த முல்லைத்தீவு
கேப் பாப்புலவு மக்கள் அமைப்பு, மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரவை போராட்ட குழு,
யாழ் வலி வடக்கு தையிட்டி, மயிலிட்டி பலாலி ,வசாவிளான் போராட்ட அமைப்புக்கள்,
கிராஞ்சி மற்றும் ,பொன்னாவெளி அமைப்புக்கள் பங்குற்றி இருந்தன.</p><p></p><h2>பல்வேறு கோரிக்கைகள்&nbsp;</h2><p>

போராட்டத்தில் பங்குபெற்றவர்கள் "மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு,
அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களை அழிக்காதே, தையிட்டி என்ன தருசு நிலமா,
மயிலத்தமடு மாதவனை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்று" என கோஷங்களை
எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ebade4b-0cea-4a9f-afd7-4f6360faf510/26-6a883ce857238.webp' /></p><p>
</p><p>
போராட்டத்தில் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் பிரதேச சபை உறுப்பினர்கள்
தவிசாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T11:56:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வருங்கால முதல்வரேன்னு சொன்ன ரசிகர்!! சிவகார்த்திகேயன் கொடுத்த ரியாக்ஷன்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/varugalaa-muthalvarey-sivakarthikeyan-react-video-1787313231"></link>
            <id>https://viduppu.com/article/varugalaa-muthalvarey-sivakarthikeyan-react-video-1787313231</id>
            <summary type="text">சிவகார்த்திகேயன்முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன், அக்ஷயா தங்க நகை கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசின...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சிவகார்த்திகேயன்</h2><p>முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன், அக்ஷயா தங்க நகை கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார் மேடையில் நின்று கொண்டிருந்த சிவகார்த்திகேயனை பார்த்து ஒரு ரசிகர், வருங்கால முதல்ச்வரே என்று கோஷமிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cb02d87-838f-4884-9286-920d07d82624/26-6a883c517857e.webp' /></p><p> அதனால் ஷாக்கான சிவகார்த்திகேயன், வாயில் விரல் வைத்து 'உஷ்' என்று அமைதியாக இருக்குமாறி சைகை காட்டினார். இந்த சம்பவம் இணையத்தில் பகிரப்பட்டு வைரலானாலும் சிரித்தபடி தன்னுடைய ரியாக்ஷனை கொடுத்தாலும், நெட்டிசன்கள் சில சம்பவங்களை நினைவுப்படுத்தி வருகிறார்கள்.</p><p> அதாவது, கோட் படத்தில் விஜய், சிவகார்த்திகேயனிடம், துப்பாக்கிய புடிங்க சிவா என்று கூறியிருப்பார். அதேபோல் வருங்காலங்களில் விஜய், சிவகார்த்திகேயனிடம் தன்னுடைய பொறுப்பை ஒப்படைப்பாரோ என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="et" dir="ltr">Varugalaa Muthalvarey - <a href="https://x.com/hashtag/Sivakarthikeyan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Sivakarthikeyan</a> 🤫😅!! <a href="https://t.co/MYNgCYleQZ">pic.twitter.com/MYNgCYleQZ</a></p>&mdash; Gv (@gowtham0725) <a href="https://x.com/gowtham0725/status/2090684116475986292?ref_src=twsrc%5Etfw">August 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-08-21T11:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் விமான விபத்தில் பலியான இந்திய வம்சாவளி தம்பதியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-origin-couple-dies-in-wales-plane-crash-1787312416"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-origin-couple-dies-in-wales-plane-crash-1787312416</id>
            <summary type="text">Indian origin husband and wife who died in plane crash pictured: விமான விபத்தில் உயிரிழந்த இந்திய வம்சாவளி தம்பதியரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indian origin husband and wife who died in plane crash pictured: விமான விபத்தில் உயிரிழந்த இந்திய வம்சாவளி தம்பதியரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.</p><p>


ஒரு இந்திய வம்சாவளி தம்பதியர் இங்கிலாந்திலிருந்து வேல்ஸ் நாட்டுக்கு பயணிக்கும்போது அவர்களுடைய விமானம் மாயமானது.
</p><p>
அந்த சம்பவம் தொடர்பில் புதிய தகவல்கள் சில வெளியாகியுள்ளன.
</p><h3>
இந்திய வம்சாவளி தம்பதியர்
</h3><p>
இங்கிலாந்திலுள்ள Syston என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த கேத்தன் ஸ்வாலி (59) மற்றும் ஷீத்தல் ஸ்வாலி (55) தம்பதியர், கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, ஆகத்து மாதம் 14ஆம் திகதி, Tatenhill விமான நிலையத்திலிருந்து வேல்ஸ் நாட்டிலுள்ள Caernarfon விமான நிலையத்துக்கு சிறிய ரக விமானம் ஒன்றில் புறப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/567680ab-28f1-4850-acb2-46973553b652/26-6a8839224a416.webp' /></p><p>
ஆனால், அவர்கள் Caernarfon விமான நிலையம் வந்தடையாததால், அவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், அவர்களுடைய விமானம், வேல்ஸ் நாட்டிலுள்ள Gwynedd என்னுமிடத்தில் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கிக் கிடந்தது தெரியவந்தது.&nbsp;</p><p></p><p>

சம்பவ இடத்தை அவசர் உதவிக்குழுவினர் அடைந்த நிலையில், கேத்தன், ஷீத்தல் தம்பதியர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டிருந்தது தெரியவந்துள்ளது.
</p><p>
தம்பதியரின் மரணம் அவர்களுடைய குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ள நிலையில், அவர்களுக்கு இரங்கல் செய்திகள் குவிந்த வண்ணம் உள்ளன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T11:40:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 மணி நேர நீர்வெட்டு..! தமிழர் பகுதி மக்களுக்கு வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/4-hour-water-cut-in-batticaloa-1787309879"></link>
            <id>https://tamilwin.com/article/4-hour-water-cut-in-batticaloa-1787309879</id>
            <summary type="text">எல் நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில்
நாளை(22) முதல் 4 மணி நேரம் நீர் வெட்டு மேற்கொள்ள
தீர்மானிக்கப்பட்டுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில்
நாளை(22) முதல் 4 மணி நேரம் நீர் வெட்டு மேற்கொள்ள
தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>எனவே மக்கள் நீரை சிக்கனமாக பாவிக்குமாறு தேசிய
நீர்வழங்கல் அதிகாரசபை மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன்
அறிவித்துள்ளார்.</p><h2>நீர் வெட்டு</h2><p>

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை காரணமாக உன்னிச்சை குளத்தின்
நீர்மட்டம் வெகுவாக குறைடைந்து செல்லுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f9a03dc-a5e4-47ce-b824-5b255ed8496c/26-6a883252de40d.webp' /></p><p>இந்த நிலையில் தொடர்ச்சியாக
நீர் வளங்களை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே நாளை முதல் காலை 10.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணி வரை
நாளாந்தம் நீர் வெட்டை மேற்கொள்ளுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
</p><p>இதேவேளை தற்போது உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் வரலாற்றில் முதல் தடவையாக 10
அடியாக குறைந்துள்ளதுடன் தற்போது மழை பெய்வதற்கான சாத்திய கூறுகள் இல்லை என
வானிலை ஆராய்ச்சி மையம் எதிர்வு கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d1d8f8f-28ea-4e59-a323-b730f0aff4dd/26-6a8839a7a6326.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T11:39:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் சிறப்பு விமான விபத்தில் 8 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/alaska-charter-flight-crash-kills-8-1787307360"></link>
            <id>https://tamilwin.com/article/alaska-charter-flight-crash-kills-8-1787307360</id>
            <summary type="text">அண்மையில் மேற்கு அலாஸ்காவில் உள்ள தொலைதூர இராணுவ ரேடார் தளத்தில் நடந்த வாடகை விமான விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில் மேற்கு அலாஸ்காவில் உள்ள தொலைதூர இராணுவ ரேடார் தளத்தில் நடந்த வாடகை விமான விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
</p><p>
அலாஸ்காவின் மிகப்பெரிய நகரமான ஆங்கரேஜிலிருந்து சுமார் 725 கிலோமீட்டர் (450 மைல்கள்) மேற்கே அமைந்துள்ள கேப் நியூவென்ஹாம் ரேடார் தள விமான நிலையத்தை அணுகும்போது அந்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><h2>விமான விபத்து</h2><p>
</p><p>
இந்த சம்பவத்தின்போது விமானத்தில் ஆறு பயணிகளும் இரண்டு விமானிகளும் இருந்ததாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் (NTSB) அலாஸ்கா பிராந்தியத் தலைவர் கிளின்ட் ஜான்சன் கூறியுள்ளார்.
</p><p>
ஆங்கரேஜை தளமாகக் கொண்ட செக்யூரிட்டி ஏவியேஷன் என்ற விமான வாடகை நிறுவனத்தால் இயக்கப்படும் செஸ்னா 441 ரக விமானம் இது என அறிக்கைகள் அடையாளம் காட்டியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54977dd3-5880-4d65-bb85-d9938404ffd2/26-6a88387adb7ee.webp' /></p><p> </p><p>விபத்து குறித்த செய்தியைத் தொடர்ந்து, அலாஸ்கா செனட்டர் லிசா முர்கோவ்ஸ்கி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.</p><p>
"நான் அலாஸ்கா முழுவதும் செக்யூரிட்டி ஏவியேஷனுடன் விரிவாகப் பயணம் செய்துள்ளேன், மேலும் அவர்களின் அனுபவம் வாய்ந்த பல விமானிகளைச் சந்தித்துள்ளேன்," என அந்தத் தொலைதூரப் பகுதியில் செயல்படும் வாடகை நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.</p><p>விமானப்படை அலாஸ்கன் கட்டளைப் பிரிவு ‘நமது இராணுவக் குடும்பத்திற்கான இழப்பு’ என இரங்கல் தெரிவிக்கிறது.&nbsp; அந்த விமானம் “பொதுமக்களுக்கான ஒப்பந்த விமானம்” என அமெரிக்க இராணுவத்தின் அலாஸ்கன் கட்டளைப் பிரிவு கூறியதாக அசோசியேட்டட் பிரஸ் மேற்கோள்காட்டியுள்ளது.</p><p>
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T11:38:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு இலங்கையர்களுக்கு தென் கொரியாவில் நீண்ட கால வதிவிட விசா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/long-term-residence-visas-for-two-srilankans-1787311444"></link>
            <id>https://ibctamil.com/article/long-term-residence-visas-for-two-srilankans-1787311444</id>
            <summary type="text">தென் கொரியாவில் கடலில் விழுந்து நொறுங்கிய விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளின் உயிரைக் காப்பாற்றிய இரண்டு இலங்கையர்களுக்கு நீண்ட கால வதிவிட விசாக்களை...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் கொரியாவில் கடலில் விழுந்து நொறுங்கிய விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளின் உயிரைக் காப்பாற்றிய இரண்டு இலங்கையர்களுக்கு நீண்ட கால வதிவிட விசாக்களை வழங்க தென் கொரிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.</p><p>

உள்ளூர் ஊடக அறிக்கை ஒன்றின்படி, 2022 ஒகஸ்ட் 12 அன்று, சியோலுக்குத் தெற்கே சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள
ஹ்வாசொங் கடற்கரைக்கு அப்பால் மஞ்சள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று இலங்கையர்களால் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
</p><p>
விபத்து நடந்த உடனேயே அவர்கள் செயல்பட்டு, தாங்கள் பணிபுரிந்து கொண்டிருந்த கொரிய மீன்பிடிப் படகின் உதவியுடன், கடலில் விழுந்த இரண்டு விமானிகளையும் மீட்டுப் பாதுகாப்பாகக் கரைக்குக் கொண்டு வந்தனர்.</p><p></p><h2>வேலைவாய்ப்பு அனுமதி</h2><p>
</p><p>
விபத்து நடந்த நேரத்தில், இந்த இலங்கையர்கள் வேலைவாய்ப்பு அனுமதி முறையின் (EPS) கீழ் வழங்கப்பட்ட 'E-9' விசாக்களில் தென் கொரியாவில் பணிபுரிந்து வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c452ce3-e2fd-4ee3-b4fa-b9bfd6bf039d/26-6a88387cb9d36.webp' /></p><p> பொதுவாக, அந்த விசா வகையின் கீழ் ஒரு வெளிநாட்டுப் பணியாளர் தென் கொரியாவில் அதிகபட்சமாக 4 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் மட்டுமே தங்கியிருக்க முடியும்.</p><p>

விமானிகளின் உயிரைக் காப்பாற்றுவதில் அவர்கள் ஆற்றிய சிறப்பான பங்களிப்பையும், அவர்களின் மனிதாபிமானப் பணிகளையும் அங்கீகரிக்கும் விதமாக, தென் கொரிய நீதி அமைச்சு, சம்பந்தப்பட்ட இரண்டு இலங்கையர்களுக்கும் இந்த நீண்ட கால விசாக்களை வழங்கியுள்ளது. </p><p>இந்த விசாக்கள், அவர்கள் தங்கள் விசாக்களை மீண்டும் மீண்டும் புதுப்பிக்க வேண்டிய அவசியமின்றி, நாட்டில் நிரந்தரமாகத் தங்குவதற்கு உரிமை அளிக்கின்றன.
</p><p>
இந்தச் சம்பவத்திற்கு உதவிய மற்ற இலங்கையரும் ஏற்கனவே நீண்ட கால விசா வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T11:37:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மானிப்பாய் சபைக்கு தீச்சட்டியுடன் வந்த உறுப்பினரால் பரபரப்பு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/member-arriving-manipay-council-carrying-fire-pot-1787310834"></link>
            <id>https://tamilwin.com/article/member-arriving-manipay-council-carrying-fire-pot-1787310834</id>
            <summary type="text">மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று(21) தவிசாளர் கந்தையா ஜெசீதன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, பிரதேச சபை உறுப்பினர் நா. பகீரதன், தீச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று(21) தவிசாளர் கந்தையா ஜெசீதன் தலைமையில் நடைபெற்றது.
</p><p>
இதன்போது, பிரதேச சபை உறுப்பினர் நா. பகீரதன், தீச்சட்டியுடன் திடீரென சபைக்குள் நுழைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.</p><h2>சுகாதாரப் பிரச்சினை</h2><p>
</p><p>
கல்லூண்டாய் குப்பை மேடு தொடர்ச்சியாக தீப்பற்றி எரிவதால், அப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களையும் சுகாதாரப் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருவதாக உறுப்பினர் நா. பகீரதன் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4eaca82c-3581-4f2b-a5eb-1bfc92a48a20/26-6a883480a4332.webp' /></p><p>

குறிப்பாக, குப்பை மேட்டில் பொலித்தீன் மற்றும் பம்பஸ் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் எரிவதால் அப்பகுதி மக்கள் சுவாசம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
இந்தப் பிரச்சினை தொடர்பில் மானிப்பாய் பிரதேச சபை, யாழ்ப்பாண மாநகர சபை உள்ளிட்ட பல்வேறு தரப்புகளிலும் பலமுறை பேசப்பட்டுள்ளதுடன், ஊடகங்கள் மூலமும் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><h2>யாழ்ப்பாண மாநகர சபை</h2><p>
</p><p>
எனினும், இதுவரை பிரச்சினைக்கு தீர்க்கமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.</p><p>

இதனை வெளிப்படுத்தும் வகையில், கல்லூண்டாய் குப்பை மேட்டில் எரிக்கப்படும் கழிவுப் பொருட்களை அடையாளப்படுத்தும் விதமாக நெருப்பு சட்டியுடன் சபைக்குள் நுழைந்ததாகவும் நா. பகீரதன் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c2cd70b-2b99-4399-991b-88c201cd1d52/26-6a88348189f10.webp' /></p><p>
</p><p>
மேலும், கல்லூண்டாய் குப்பை மேடு தொடர்பில் மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் க. ஜெசீதனின் நடவடிக்கைகள் தமக்கு திருப்தியளிக்கவில்லை எனவும் அவர் கூறினார்.</p><p>

யாழ்ப்பாண மாநகர சபையின் நடவடிக்கைகளுக்கு தவிசாளர் துணைபோவதாகவும், இந்த விடயம் தொடர்பில் தாம் பலமுறை கோரிக்கைகளை முன்வைத்த போதிலும், அதற்கான உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் நா. பகீரதன் குற்றஞ்சாட்டினார்.
</p><p>
மக்கள் எதிர்கொள்ளும் சுகாதாரப் பிரச்சினைக்கு விரைவான தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T11:29:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜூலை மாதத்தில் நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-s-inflation-rises-1787309574"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-s-inflation-rises-1787309574</id>
            <summary type="text">நாட்டின் நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்த நுகர்வோர் பணவீக்க விகிதத்திற்கமைய, ஜூலை மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. 

இதற்கமைய, ஜூன் மாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்த நுகர்வோர் பணவீக்க விகிதத்திற்கமைய, ஜூலை மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. </p><p>

இதற்கமைய, ஜூன் மாதத்தில் 6.5 சதவீதமாகப் பதிவாகியிருந்த நாட்டின் பணவீக்கம், ஜூலை மாதம் வரை 7.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><h2>உணவு அல்லாத பிரிவின் பணவீக்கம்</h2><p>

அத்துடன், ஜூன் மாதத்தில் 3.3 சதவீதமாகப் பதிவாகியிருந்த உணவுப் பிரிவின் பணவீக்க விகிதம், ஜூலை மாதத்தில் 4.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1fc3a62-941a-46c5-b51e-3972cc40805d/26-6a883641db0ab.webp' /></p><p>

இதற்கிடையில், ஜூன் மாதத்தில் 9.3 சதவீதமாக இருந்த உணவு அல்லாத பிரிவின் பணவீக்கம், ஜூலை மாதத்தில் 9.2 சதவீதமாகக் குறைவடைந்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T11:28:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; உயிரிழந்த அதிகாரிகாளுக்கு இழப்பீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-prison-clash-compensation-death-officers-1787311827"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-prison-clash-compensation-death-officers-1787311827</id>
            <summary type="text">&amp;nbsp; நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்வு இன்று (21) சிறைச்சாலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்வு இன்று (21) சிறைச்சாலை தலைமையகத்தில் இடம்பெற்றது. </p><p>

இதன்போது, உயிரிழந்த ஒவ்வொரு அதிகாரியின் குடும்பத்தினருக்கும் மற்றும் பிள்ளைகளுக்கும் தலா 20 இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eeb11805-f070-48c9-b3ec-4be3e13c491b/26-6a8836d4877c7.webp' /></p><h2>&nbsp;அக்ஹார காப்பீட்டுத் தொகை</h2><p> 

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தின் போது சிறைச்சாலை அவசரப் பிரதிபலிப்பு தந்திரோபாயப் பிரிவைச் சேர்ந்த 10 அதிகாரிகள் உயிரிழந்தனர்.</p><p> 

இதற்கமைய, தேசிய காப்பீட்டு அறக்கட்டளை நிதியத்தின் அக்ஹார காப்பீட்டுத் தொகையின் கீழ் அவர்களது உறவினர்களுக்கு இந்த இழப்பீட்டுத் தொகை இன்று வழங்கப்பட்டது. </p><p>

நிகழ்வில் கருத்துத் தெரிவித்த தேசிய காப்பீட்டு அறக்கட்டளை நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி யுஷான் தரங்க, இவ்வாறான எதிர்பாராத சந்தர்ப்பங்களில், குறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் அனைத்தையும் முழுமையாகப் பெறாமல், இந்தச் சூழ்நிலையை எதிர்கொண்ட சிறைத்துறை அதிகாரிகளுக்கு இந்த இழப்பீட்டுத் தொகையை மிக விரைவாகவும் துரிதமாகவும் வழங்க காப்பீட்டு அறக்கட்டளை நிதியம் தீர்மானித்ததாகத் தெரிவித்தார்.</p><p> 

மேலும், இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சிறைச்சாலைகள் பதில் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த, உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவது மாத்திரமன்றி, மேலும் பல நிவாரணங்களை வழங்கும் வேலைத்திட்டமொன்றையும் சிறைச்சாலை திணைக்களம் ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.</p>]]></content>
            <updated>2026-08-21T11:27:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சைவ திருவிழாக்களில் கலந்துக் கொள்ளும் பக்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-issued-to-devotees-attending-festivals-1787311314"></link>
            <id>https://tamilwin.com/article/warning-issued-to-devotees-attending-festivals-1787311314</id>
            <summary type="text">நேற்றைய தினம்(20) எமது யாழ். மாவட்ட சைவத்திருக்கோவில் ஒன்றில் இடம்பெற்ற திருவிழா
நிகழ்வின் அதீத வெளிச்சத்தை வெற்றுக்கண்ணால் பார்த்த பலர் கண்
பாதிப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேற்றைய தினம்(20) எமது யாழ். மாவட்ட சைவத்திருக்கோவில் ஒன்றில் இடம்பெற்ற திருவிழா
நிகழ்வின் அதீத வெளிச்சத்தை வெற்றுக்கண்ணால் பார்த்த பலர் கண்
பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்ட்டிருக்கின்றமை மிகுந்த துயரத்தைத் தோற்றுவித்துள்ளது என தென் கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார் தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>

சைவ கோயில்களில் இடம்பெற்ற களியாட்டங்கள்</h2><p>

 அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
</p><p>
இந்த சம்பவத்தை போன்று, கடந்த மாதங்களில் சில ஆலய திருவிழாக்களில் மிகவும் விரும்பத்தகாத ஆடல்பாடல் நிகழ்ச்சிகள் சைவ சமயங்களிடையே பெறும் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8488106b-6459-4dc9-90e9-8198d0cfc59f/26-6a883595465e5.webp' /></p><p>
</p><p>
சைவ பரிபாலன சபை இந்து கலாச்சார திணைக்களம் என்பன சில ஒழுங்குவிதிகளை
கட்டுப்பாடுகளை ஏற்கனவே திருக்கோவில்களிடம் வலியுறுத்தி உள்ளன அது
வரவேற்கத்தக்கது.</p><h2>

பக்தர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை</h2><p>

ஆதலினால் அன்புக்குரிய ஆலய அறங்காவலர்களே எக்காரணம் கொண்டும் ஆலய
திருவிழாக்களில் இவ்வாறான எந்த களியாட்டங்களிற்கோ அதிக வெளிச்சம் பாய்ச்சல்
நிகழ்வுகளிற்கோ ஒலி எழுப்புதலுக்கோ இடம் அளிக்காதீர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/435be783-98d7-4c09-b0e3-de96be9b6a0a/26-6a88359621188.webp' /></p><p>
</p><p>
இந்த விடயத்தை மிகவும் சிரத்தை எடுத்து தலைமேற்கொண்டு கோவிலை தழுவிய குடிகள்
குடிகளை தழுவிய கோவில் என்பதற்கு உயிர் கொடுக்குமாறு அனைத்து ஆலயம் சார்ந்த
சைவ பெருமக்களையும் கேட்டுக் கொள்கின்றோம். </p><p>

அதே நேரம் சட்டத்தை மிக இறுக்கமாக
நடைமுறைப்படுத்துமாறு சகல சம்பந்தப்ட்ட தரப்புக்களையும் கோருவதுடன்
அவர்களிற்கு அனைத்து சைவ சமயிகளும் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டு
கொள்கின்றோம்

பாதிக்கப்பட்ட பக்தர்கள் விரைந்து குணம்பெற அன்பே உருவான இறை சிவனை
பிரார்த்திக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p><br><br><b><i>you may like this..</i></b></p><hr><p><b><i><br></i></b></p><hr><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4WCYiz2i_Z4" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-08-21T11:25:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிஸ் உணவகம் மற்றும் குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து: 5 பேரை காணவில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-town-of-thusis-fire-incident-5-missing-1787310939"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-town-of-thusis-fire-incident-5-missing-1787310939</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் வரை மாயமாகியுள்ளனர்.சுவிட்சர்லாந்தில் தீ விபத்துசுவிட்சர்லாந்தின் துசிஸ்(Thusis) நகரில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் வரை மாயமாகியுள்ளனர்.</p><h2>சுவிட்சர்லாந்தில் தீ விபத்து</h2><p>சுவிட்சர்லாந்தின் துசிஸ்(Thusis) நகரில் உள்ள உணவகம் மற்றும் அதன் மேல் தளத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.</p><p> இந்த சம்பவத்தில் 5 பேர் வரை காணாமல் போயிருப்பதாகவும், 8 பேர் வரை காயமடைந்து இருப்பதாகவும் உள்ளூர் காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ab57061-aebe-46ef-b10e-3afd2d89b597/26-6a88335ca9b12.webp' /></p><p> மொத்தம் 14 பேர் வரை இடிபாடுகளுக்கு நடுவிலிருந்து உயிர் தப்பிய நிலையில் இதில் 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.</p><p></p><p> நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில் இது தொடர்பாக அவசர உதவி பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><p> இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த 100 தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தில் பற்றிய தீயை அணைக்க களமிறக்கப்பட்டனர்.</p><p> தீயை முழுமையாக கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.</p><p>தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய உள்ளூர் காவல் துறையினர் மற்றும் அரசு வழக்கறிஞர் அலுவலகம் இணைந்து கூட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p> காணாமல் போன 5 பேரின் விவரங்கள் மற்றும் அடையாளங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T11:15:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/veteran-actress-sowcar-janaki-passes-away-1787308741"></link>
            <id>https://ibctamil.com/article/veteran-actress-sowcar-janaki-passes-away-1787308741</id>
            <summary type="text">
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி, தனது 94 வயதில் வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி, தனது 94 வயதில் வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார்.
</p><p>
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில், இதய நோய் பாதிப்பிற்காக, வியாழக்கிழமையன்று அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
1950ஆம் ஆண்டு செளகார் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான ஜானகி, அதன்பின்னர், செளகார் என்ற சிறப்பு பெயரோடு சேர்த்து செளகார் ஜானகி என அழைக்கப்பட்டார்.</p><p></p><h2>தமிழ்த் திரையுல அறிமுகம்</h2><p>
</p><p>
1952-இல் வளையாபதி திரைப்படத்தின் வாயிலாகத் தமிழ்த் திரையுலகில் செளகார் ஜானகி அறிமுகமானார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96d057ce-d5cd-4a61-8713-91901241a9ba/26-6a88304fc9bd0.webp' /></p><p> </p><p>

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுடன் செளகார் ஜானகி நடித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை செளகார் ஜானகி பெற்றுள்ளார். </p><p>

தமிழில் புதிய பறவை, நீர்க்குமிழி, மகாகவி காளிதாஸ், தில்லுமுல்லு, எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்கள் செளகார் ஜானகிக்கு பெரும் புகழை சேர்த்தன. </p><p>

2020-ஆம் ஆண்டில், சௌகார் ஜானகி தனது 400-ஆவது திரைப்படமான சந்தானத்தின் ''பிஸ்கோத்'' படத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T11:15:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[Onam Special: ஓணம் சத்யா கேரளாவின் பாரம்பரிய விருந்தில் உணவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/what-is-special-in-onam-sadhya-feast-1787309028"></link>
            <id>https://manithan.com/article/what-is-special-in-onam-sadhya-feast-1787309028</id>
            <summary type="text">கேரளாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஓணம் ஒன்று. அந்த ஓணம் பண்டிகை நாளில் இடம் பெறக்கூடிய ஓணம் சத்யா என்பது கேரளாவில் பாரம்பரிய உணவு விருந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேரளாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஓணம் ஒன்று. அந்த ஓணம் பண்டிகை நாளில் இடம் பெறக்கூடிய ஓணம் சத்யா என்பது கேரளாவில் பாரம்பரிய உணவு விருந்தாகும். மேலும், "கானம் விற்றாவது ஓணம் உண்" என்ற பழமொழிக்கு ஏற்ப ஓணம் பண்டிகையில் உணவுக்கும் விருந்தோம்பலுக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. </p><p>மேலும், ஓணம் பண்டிகை சுமார் பத்து நாட்கள் கொண்டாட கூடிய ஒரு முக்கியமான பண்டிகையாகும். அதில் திருவோணம் நாளில் சத்யா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஒன்றாக அமர்ந்து இந்த பாரம்பரிய விருந்தை மகிழ்ந்து உண்பார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09d461fa-30e0-4e97-bd24-45f0c03de4a2/26-6a882be6590f6.webp' /></p><p></p><p> </p><p>இந்த உணவு ஓணம் சத்யாவில் பலவிதமான சைவ உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. சாதம், பருப்பு, நெய், சாம்பார், ரசம், மோர் அவியல், தோரன், காலன், ஓலன், எரிசேரி, கூட்டு, பச்சடிக்கு செடி உள்ளிட்ட பல உணவு வகைகள் இதில் இடம் பெறுகிறது. </p><p>அதேபோல், இனிப்பு வகைகளில் அடை பிரதமன், பால், பாயாசம் உள்ளிட்ட பாயாசங்கள் முக்கிய இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சர்க்கரை புரட்டி, பப்படம், ஊறுகாய் உள்ளிட்டவையும் சத்யா விருந்து சுவையை இன்னும் அதிகரிக்கிறது. மற்றொரு சிறப்பு உணவு வாழை இலையில் தான் பரிமாறப்படுகிறது.</p><p> வாழை இலை உணவு பரிமாறும் பாரம்பரியம் கேரளாவின் கலாச்சாரத்துடன் நீண்ட காலமாக ஒன்றிணைந்தது. சத்யாவில் இடம்பெறும் உணவுகளில் தேங்காய் பால், தேங்காய், தயிர் மோர் போன்றவை அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebb0c29a-3929-4d12-83cb-ee8b6310a129/26-6a882be713775.webp' /></p><p></p><p> இதனால் ஓணம் சத்யா உணவுகளுக்கு தனித்துவமான கேரள சுவையும் மனமும் கிடைக்கிறது. அதை போல், பலவிதமான உணவுகள் இடம் பெறும் என்று ஓணம் சத்யாவில் செரிமானத்திற்கு உதவக்கூடிய வகைகள் இஞ்சி கறி, இஞ்சி புளி போன்ற உணவுகளும் சேர்க்கப்படுகிறது. </p><p>இவற்றில் உள்ள புளிப்பு காரம் மற்றும் நறுமணம் சத்யா விருந்தின் சுவையை மேலும் அதிகரிக்கிறது. முக்கியமாக ஓணம் சத்யா என்பது வெறும் உணவு விருந்து மட்டுமல்ல குடும்பத்தினர் நண்பர்கள் உறவினர்கள் என எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவை பகிர்ந்து கொள்வதின் வழியாக குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி அதோடு விருந்தோம்பலை வெளிப்படுத்தும் கேரளாவின் முக்கியமான பாரம்பரிய நிகழ்வாகவும் இது திகழ்கிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T11:10:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் ரெஜினாவில் மீட்கப்பட்ட மனித எச்சம் அடையாளம் காணப்பட்டது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/human-remains-found-in-regina-backyard-1787309950"></link>
            <id>https://canadamirror.com/article/human-remains-found-in-regina-backyard-1787309950</id>
            <summary type="text">கனடாவின் ரெஜினா நகரில் உள்ள ஒரு வீட்டின் பின்புறத்தில் கடந்த ஜூன் மாதம் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள், வேய்ன் ஜோசப் பிரீட் என்பவருடையது என அடையாளம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ரெஜினா நகரில் உள்ள ஒரு வீட்டின் பின்புறத்தில் கடந்த ஜூன் மாதம் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள், வேய்ன் ஜோசப் பிரீட் என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் காவல்துறை அறிவித்துள்ளது.</p><p>
ரெஜினா காவல் சேவை வெளியிட்ட தகவலின்படி, 'ரெடாலாக் தெருவின்' 1300 எண்ணுள்ள வீட்டின் வெளியே இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. </p><p>
வேய்ன் ஜோசப் பிரீட் காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f67f1ec0-7ddb-4e87-b6d9-91a192c2039c/26-6a882f8038761.webp' /></p><p>எனினும், பொலிஸ் டிஎன்ஏ தரவுத்தளத்தை சோதித்ததன் மூலமே இவரது எச்சங்கள் துல்லியமாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவருக்கு தற்போது 34 வயதாகியிருக்கும் எனக் குறிப்பிட்ட காவல்துறையினர், இவரது குடும்பத்தினருக்கு இத்தகவலைத் தெரிவித்துள்ளனர்.
</p><p> மேலும், இந்தச் சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்துத் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த ஜூன் 9 ஆம் திகதி இந்த மனித எச்சங்கள் குறித்துக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. </p><p>முதற்கட்ட விசாரணையில், இந்த உடற்பாகங்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாவது அந்த இடத்தில் புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது தெரியவந்துள்ளது.
</p><p>அந்த வீட்டின் உரிமையாளர் கூறுகையில், 2009 ஆம் ஆண்டு முதல் தாம் இந்த வீட்டைக் வைத்துள்ளதாகவும், அன்றிலிருந்து இதுவரை 7 முதல் 8 வாடகைதாரர்கள் அங்குத் தங்கிச் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>ரெஜினாவின் 'நார்த் சென்ட்ரல்' பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>பொதுமக்கள் அளித்த தகவல்களும் குறிப்புகளுமே வேய்ன் ஜோசப் பிரீட்டை அடையாளம் காண மிகவும் உதவியாக இருந்ததாகக் தெரிவித்த காவல்துறையினர், தகவல் அளித்த அனைவருக்கும் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T11:08:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா மருத்துவமனையில் செவிலியர் மீது தாக்குதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nurse-beaten-in-psychiatric-ward-of-hospital-1787306826"></link>
            <id>https://canadamirror.com/article/nurse-beaten-in-psychiatric-ward-of-hospital-1787306826</id>
            <summary type="text">கனடாவின் கியூபெக் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மனநல அவசர சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் செவிலியர் ஒருவர், கோபமடைந்த நோயாளி ஒருவரால் கொடூரமாகத் தாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் கியூபெக் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மனநல அவசர சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் செவிலியர் ஒருவர், கோபமடைந்த நோயாளி ஒருவரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.</p><p> 
'CHU de Québec-Université Laval' மருத்துவமனையில் பணிபுரியும் பாட்ஸி வான் டேம் என்ற செவிலியர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இந்த அதிர்ச்சி சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6304065-a99a-4cd1-89e1-c777fb835b8f/26-6a88234bc68d8.webp' /></p><p> 
நோயாளி ஒருவர் தனது சக ஊழியரைத் தாக்க முயன்றபோது, அவரைக் காப்பாற்ற வான் டேம் இடையூறாகச் சென்றுள்ளார். 
அப்போது அந்த நோயாளி வான் டேமைப் பிடித்துக்கொண்டு, அவரது முடியைப் பிடித்து இழுத்து, கழுத்தை நெரிக்க முயன்று சரமாரியாகத் தாக்கியுள்ளார். </p><p>
"அவர் தனது முழு பலத்தையும் கொண்டு என்னை அடித்தார். எனது சக ஊழியர் மிகுந்த சிரமத்திற்கு இடையே தப்பித்துச் சென்றுவிட, நான் மட்டும் அந்த நோயாளியிடம் தனியாகச் சிக்கிக் கொண்டேன்" என்று கூறிய வான் டேம், "நான் நரகத்தை அனுபவித்தேன். என் உயிருக்கே பயந்து நடுங்கினேன்" எனத் தனது காயமடைந்த முகத்தைச் சுட்டிக்காட்டி வேதனையுடன் தெரிவித்தார்.</p><p> 
நிதி குறைப்பு காரணமாக மனநலப் பிரிவில் பிரத்யேகப் பாதுகாப்பு ஊழியர்கள் நியமிக்கப்படாததே இந்தத் தாக்குதலுக்கு முதன்மைக் காரணம் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>நிதிகள் எதுவும் களத்தில் பணிபுரியும் எங்களுக்கு வந்து சேருவதில்லை; அதிகாரிகளின் முடிவுகளுக்கானப் பலனைத்தான் நான் என் காயங்கள் மூலம் அனுபவிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T11:08:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்படை முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டா! நீதிமன்றில் அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/harakatta-who-is-being-held-at-a-naval-camp-1787306407"></link>
            <id>https://ibctamil.com/article/harakatta-who-is-being-held-at-a-naval-camp-1787306407</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹரக் கட்டா என அழைக்கப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்ன குறித்த வழக்கு விசாரணை நேற்று இடம்பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹரக் கட்டா என அழைக்கப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்ன குறித்த வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றுள்ளது.</p><p>இந்த வழக்கில் சந்தேகநபருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில் இந்த வழக்கில் ஹரக் கட்டாவும் கருத்துக்களை முன்வைக்க சந்தரப்பம் வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h3>முழங்கால் பாதிப்பு</h3><p>இந்த வழக்கிற்காக பிரதிவாதியான ஹரக் கட்டா ‘சூம்’ தொழில்நுட்பத்தின் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7741ba3d-fa22-4533-acc7-ae7c1c36533d/26-6a88256246955.webp' /></p><p> </p><p>அவர் தொலைக்காட்சித் திரை ஊடாக கையை உயர்த்தி, தாம் எதிர்நோக்கும் நிலைமை குறித்து நீதிமன்றத்தில் முறையிட்டார்.</p><p>&nbsp;தமக்கு பொருத்தமான சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், தற்போது தாம் கடற்படை முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். </p><p>மேலும், தங்காலை பழைய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது தனது முழங்கால் பாதிப்புக்காக ஆயுர்வேத சிகிச்சை வழங்கப்பட்டதாகவும், தற்போது அந்தச் சிகிச்சை கிடைப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.</p><p></p><h2>பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்</h2><p> </p><p>இதன்போது ஹரக் கட்டா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சாலிய சமரசிங்க, தமது சேவை பெறுநரை பொருத்தமான சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், அவர் தற்போது கடற்படை அதிகாரிகளின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97c9590a-175f-44f4-bd27-edbdee915d5a/26-6a882562efa22.webp' /></p><p> </p><p>இந்நிலையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹரக் கட்டா என அழைக்கப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்ன உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாது என கொழும்பு மேல் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று (ஆகஸ்ட் 20) கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.</p><p>
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>

இதன்போது அரசுத் தரப்பு சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி சஜித் பண்டார, நீதிமன்றம் முன்னர் வழங்கிய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T11:07:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவு ; இரண்டு பெண்களுக்கும் இரண்டு ஆண்களுக்கும் தலா 100 பிரம்படிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sexual-relations-100-lashes-2-men-2women-indonesia-1787309599"></link>
            <id>https://canadamirror.com/article/sexual-relations-100-lashes-2-men-2women-indonesia-1787309599</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தோனேசியாவின் தீவிர இஸ்லாமிய மாகாணமான ஆச்சேவில், திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவில் ஈடுபட்டதற்காக இரண்டு பெண்களுக்கும் இரண்டு ஆண்களுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தோனேசியாவின் தீவிர இஸ்லாமிய மாகாணமான ஆச்சேவில், திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவில் ஈடுபட்டதற்காக இரண்டு பெண்களுக்கும் இரண்டு ஆண்களுக்கும் தலா 100 பிரம்படிகள் என அதிகாரிகள் பகிரங்கமாகத் தண்டிக்கப்பட்டனர்.
</p><p>


வயது வெளியிடப்படாத அந்த நால்வரும், மாகாணத் தலைநகரான பண்டா ஆச்சேவில் உள்ள ஒரு பொதுப் பூங்காவில், டஜன் கணக்கானோர் பார்க்கக் கூடியிருக்க, பிரம்படி வாங்கினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/addb105f-1375-4c30-bcae-5ca2746c6634/26-6a882e20db38d.webp' /></p><h2>கட்டிப்பிடித்தல் மற்றும் முத்தமிடுதல்</h2><p>
</p><p>
குழந்தைகள் உட்பட கூட்டத்தில் இருந்த சிலர், பிரம்படி மீண்டும் மீண்டும் விழுந்தபோது இன்னும் கடுமையாக என்று கத்தினார்கள்.
</p><p>
வியாழக்கிழமை நடந்த பிரம்படித் தாக்குதலில், கட்டிப்பிடித்தல் மற்றும் முத்தமிடுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய உடல்ரீதியான நெருக்கம் என்ற சிறிய குற்றத்திற்காக மேலும் நான்கு பேருக்கு தலா 22 பிரம்படிகள் வழங்கப்பட்டன.
</p><p>
ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாக இருந்ததற்காக இதில் கைகோர்ப்பதும் அடங்கும். மற்ற இருவருக்குத் தலா ஏழு கசையடிகள் வழங்கப்பட்டன. அதேசமயம் மது அருந்திய ஒருவருக்கு 20 முறை பிரம்படி கொடுக்கப்பட்டது.
</p><p>
இவை அனைத்தும் ஆச்சேவில் நிகழும் குற்றங்களாகும். இந்தோனேசியாவின் இந்த மாகாணத்தில்தான், 2002 முதல் அமலில் உள்ள ஷரியா இஸ்லாமியச் சட்டத்தின் ஒரு வடிவம் பின்பற்றப்படுகிறது, மேலும் இது 2015-இல் மேலும் கடுமையாக்கப்பட்டது.</p><p>

தென்கிழக்கு ஆசிய நாடான ஆச்சேவில் பிரம்படி சட்டப்பூர்வமான தண்டனை முறையாக இல்லாவிட்டாலும், சூதாட்டம் மற்றும் ஓரினச்சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களைத் தண்டிப்பதற்காக அதற்கு வலுவான ஆதரவு உள்ளது.</p><p>

மாகாணத்தில் 30 ஆண்டுகால பிரிவினைவாதக் கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக 2005-ல் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு சுயாட்சியை ஆச்சே அனுபவித்து வருகிறது.</p><p>

இந்தோனேசியா உலகின் மிகப்பெரிய முஸ்லிம் பெரும்பான்மை நாடாக இருந்தாலும், அது அதிகாரப்பூர்வமாக ஆறு மதங்களையும் பழங்குடி நம்பிக்கைகளையும் அங்கீகரிக்கிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T11:07:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் இறுதிநாளாக வாக்குமூலம் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/confessions-from-relatives-of-the-disappeared-1787309587"></link>
            <id>https://ibctamil.com/article/confessions-from-relatives-of-the-disappeared-1787309587</id>
            <summary type="text">காணாமல் போனோருக்கான அலுவலகத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவினர்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை இன்று (21) இறுதிநாளாக
யாழ்ப்பாணம் பிரதேச செயல...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமல் போனோருக்கான அலுவலகத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவினர்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை இன்று (21) இறுதிநாளாக
யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
</p><p>யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்நடவடிக்கையில், விசாரணைக்
குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு
வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.
</p><p>இதன்போது யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல்வேறு கிராம சேவையாளர்
பிரிவுகளைச் சேர்ந்தவர்களுடன், வேலணை, ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு
உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும்
அதிகளவில் கலந்து கொண்டனர்.</p><p></p><h2>உரிய விசாரணைகள்</h2><p>
</p><p>வாக்குமூலம் பெறும் நடவடிக்கையின்போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர்,
வயது, காணாமல் ஆக்கப்பட்ட காலப்பகுதி, சம்பவம் இடம்பெற்ற விதம் மற்றும் அது
தொடர்பான ஏனைய முக்கிய தகவல்கள் குறித்து உறவினர்களிடம் விசாரணைகள்
மேற்கொள்ளப்பட்டு பதிவுகள் செய்யப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfb2053f-699b-453e-801b-6ae6a2c33213/26-6a882fff487e5.webp' /></p><p>
</p><p>காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கும்,
அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் உரிய விசாரணைகள்
முன்னெடுக்கப்படுவதற்கும் இந்த வாக்குமூலம் பதிவு நடவடிக்கை முக்கியத்துவம்
வாய்ந்ததாக அமைந்துள்ளது.</p><p>இதன்போது நீண்டகாலமாக தமது உறவுகளின் நிலை தொடர்பில் எதிர்பார்ப்புடன்
காத்திருக்கும் குடும்பங்கள் தங்களிடம் உள்ள தகவல்கள் மற்றும் ஆவணங்களை
அதிகாரிகளிடம் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T11:02:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பின்லாந்து வான்வெளியில் ரஷ்ய விமானம் - விசாரணை தொடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-jet-suspected-in-finland-airspace-probe-1787306187"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-jet-suspected-in-finland-airspace-probe-1787306187</id>
            <summary type="text">Russian jet suspected in Finland airspace: பின்லாந்து வான்வெளியில் ரஷ்ய விமானம் நுழைந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

பின்லாந்து பாதுகாப்பு அமைச்சகம், ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russian jet suspected in Finland airspace: பின்லாந்து வான்வெளியில் ரஷ்ய விமானம் நுழைந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
</p><p>
பின்லாந்து பாதுகாப்பு அமைச்சகம், ரஷ்யாவின் ஒரு விமானம் பின்லாந்து வான்வெளியில் நுழைந்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணையை தொடங்கியுள்ளது.
</p><p>
இந்த சம்பவம் ஆகஸ்ட் 20, 2026 அன்று கிழக்கு பால்டிக் கடலின் போர்வோ அருகே நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b30842fb-2b18-442b-bd22-57baff2e8f32/26-6a88269be355c.webp' /></p><h2>ஆய்வு&nbsp;</h2><p>அந்த ரஷ்ய விமானம் பின்லாந்து வான்வெளியில் சில நிமிடங்கள் பறந்ததாகவும், சில கிலோமீட்டர் தூரம் பின்லாந்து எல்லைக்குள் நுழைந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் அது சர்வதேச வான்வெளிக்குத் திரும்பியதாக கூறப்படுகிறது.
</p><p>
பின்லாந்து விமான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் உடனடியாக செயல்படுத்தப்பட்டு, அந்த விமானத்தின் பாதையை கண்காணித்தன. தற்போது ரேடார் மற்றும் பிற தரவுகள் ஆய்வு செய்யப்படுகின்றன.
</p><p></p><p>பின்லாந்து பாதுகாப்பு அமைச்சர் அண்டி ஹக்கனென், “எந்தவொரு வான்வெளி மீறலையும் மிகுந்த முக்கியத்துவத்துடன் எடுத்துக்கொள்கிறோம். விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.</p><h2>

ஒரு சம்பவம் அல்ல
</h2><p>
இதுப்போன்ற சம்பவம் முதல்முறைய அல்ல. கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களிலும் ரஷ்ய விமானங்கள் பின்லாந்து வான்வெளியில் நுழைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது பின்லாந்து, ரஷ்ய தூதரக அதிகாரியை அழைத்து எதிர்ப்பு தெரிவித்தது.
</p><p>
பின்லாந்து, ரஷ்யாவுடன் 1,340 கிலோமீட்டர் நீளமான நில எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இது நேட்டோ (NATO) உறுப்பினரான பின்லாந்துக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான மிக நீளமான எல்லையாகும். 2023 ஏப்ரல் மாதம் பின்லாந்து நேட்டோ கூட்டணியில் இணைந்ததிலிருந்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்த சம்பவம், பால்டிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு சூழ்நிலையை மேலும் பதற்றமாக்கியுள்ளது. பின்லாந்து எல்லை பாதுகாப்பு படை, இந்த விமானம் திட்டமிட்டே நுழைந்ததா அல்லது வழிச் சிக்கலால் ஏற்பட்டதா என்பதை ஆராய்கிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T11:00:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இதை கட்டாயம் கவனியுங்கள்..! வாகனம் வைத்திருப்போருக்கு பொலிஸாரின் முக்கிய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-issued-a-warning-regarding-vehicle-thefts-1787308016"></link>
            <id>https://tamilwin.com/article/police-issued-a-warning-regarding-vehicle-thefts-1787308016</id>
            <summary type="text">மோட்டார் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை கவனக்குறைவாக நிறுத்தி வைப்பதால், அவற்றை குற்றவாளிகள் திருடிச் செல்லும் சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>மோட்டார் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை கவனக்குறைவாக நிறுத்தி வைப்பதால், அவற்றை குற்றவாளிகள் திருடிச் செல்லும் சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யு. வுட்லர், 

வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் திருடப்படுவதுடன், அவற்றுக்குள் வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் பெறுமதியான பொருட்களும் திருடப்படுவதாக தெரிவித்துள்ளார்.</p><h2>பொலிஸார் எச்சரிக்கை</h2><p>
</p><p>
சில சந்தர்ப்பங்களில் முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், வாகனத்தை இயக்க நிலையில் வைத்துவிட்டு வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், மோட்டார் சைக்கிள் அல்லது முச்சக்கர வண்டியின் சாவியை வாகனத்திலேயே விட்டுச் செல்வதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/648d3db6-2d0f-495c-b210-76ff8d4e9209/26-6a882e99f31e5.webp' /></p><p> </p><p>

இவ்வாறான சந்தர்ப்பங்களை பயன்படுத்தி குற்றவாளிகள் மிகக் குறுகிய நேரத்தில் வாகனங்களை திருடிச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், வீடுகளுக்கு வெளியே வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வைப்பதுடன், வீட்டு வளாகத்தின் வாயில் கதவுகளுக்கு பூட்டு போடாமல் இருப்பதால் வாகனங்கள் திருடப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>வாகனத் திருட்டு</h2><p>

நெரிசல் அதிகமான இடங்களில் வாகனங்களை நிறுத்தும்போது, அருகிலுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு அது தொடர்பில் தெரியப்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p> 

வணிக வளாகங்களில் வாகனங்களை நிறுத்தும்போது, அங்குள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர் அல்லது பணியாளரிடம் தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/baf75c5f-6c97-4927-9434-6555eabf9e47/26-6a882e9ac690e.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, இரவு நேரங்களில் இருள் சூழ்ந்த அல்லது மக்கள் நடமாட்டம் குறைந்த இடங்களில் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவதை தவிர்க்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
</p><p>
வாகனம் திருடப்பட்டால், உடனடியாக 119 அல்லது 118 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கங்களுக்கு அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p><p><br><br><b><i>YOU MAY LIKE THIS..<br><br><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/PjDQ294dN3c" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-08-21T11:00:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பலரின் கண்ணுக்கு பிரச்சனையான மின் விளக்குகள் பறிமுதல்; சீனா தயாரிப்பாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/eye-injury-china-light-at-jaffna-temple-festival-1787306941"></link>
            <id>https://jvpnews.com/article/eye-injury-china-light-at-jaffna-temple-festival-1787306941</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின் போது, நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின் போது, நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>

கண் பாதிப்புக்கான உண்மையான காரணத்தைக் கண்டறியும் நோக்கில் பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6f6d1da-b07c-47e9-b6c8-49a9842a3ea9/26-6a8823beca16d.webp' /></p><p> </p><p>

இதன் ஒரு கட்டமாக, ஆலய வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிக வலு கொண்ட சீனத் தயாரிப்பு மின் விளக்குகள் சிலவற்றை பொலிஸார் கையகப்படுத்தி எடுத்துச் சென்றுள்ளனர்.</p><p></p><p> </p><p>

கையகப்படுத்தப்பட்ட இந்த மின் விளக்குகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், அவற்றின் மின்சக்தி அளவு, பயன்பாட்டுத் தன்மை மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அவை அனுமதிக்கப்பட்டவையா? அல்லது தடை செய்யப்பட்டவையா என்பது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f86c828c-38eb-4529-b83e-f050220a1eb1/26-6a882ffca7165.webp' /></p><h2>&nbsp;நூற்றுக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதி</h2><p>பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின்&nbsp;&nbsp;அதிகப்படியான வெடிகள் கொளுத்தப்பட்டமை மற்றும் சக்திவாய்ந்த லேசர் விளக்குகள் பயன்படுத்தப்பட்டமை காரணமாக, கண்ணில் பாதிப்பு அடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>முதல்கட்டத் தகவல்களின்படி, தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 46 பேரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 120 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edc3a2f3-d94d-48ad-ba98-fba942116361/26-6a882ffd979b0.webp' /></p><p>
</p><p>
பொதுமக்கள் எந்தவிதப் பதற்றமும் இன்றி உடனடியாக வைத்தியசாலையை நாடலாம் எனவும், அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இதேவேளை, ஆலயத் திருவிழாவின்போது மின் இணைப்புகளை வழங்கியவர்கள் இளவாலைப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T10:58:43+00:00</updated>
        </entry>
    </feed>
