<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-16T05:40:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகுடம்: திரை விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/magudam-movie-review-1786857969"></link>
            <id>https://cineulagam.com/article/magudam-movie-review-1786857969</id>
            <summary type="text">விஷால் முதல் முறையாக நடித்து இயக்கியிருக்கும் மகுடம் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.கதைக்களம் 

சென்னையில் மெடிக்கல் ரெப்ரெசென்...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஷால் முதல் முறையாக நடித்து இயக்கியிருக்கும் மகுடம் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c757863-9a13-4de8-bfb0-2b1d583dcc66/26-6a8149f8769fc.webp' /></p><h2>கதைக்களம் </h2><p>

சென்னையில் மெடிக்கல் ரெப்ரெசென்டடிவ் வேலை பார்க்கும் கிருபாகரன் (விஷால்), மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். 

ஆனால், கார் இருப்பதாக மாமனாரிடம் பொய் சொல்லி திருமணம் செய்த கிருபாகரன், எப்படியாவது ஒரு கார் வாங்கிவிட வேண்டும் என முயற்சிக்கிறார். </p><p>

இதற்கிடையில் விசாகப்பட்டினத்தில் துறைமுகத்தை காட்டியாலும் லிங்கப்பாவிடம், தைவானில் இருந்து சரக்கு கப்பல் ஒன்று வருவதாகவும் அதனை இறக்கி தர வேண்டும் என்றும் மூவர் கோரிக்கை விடுக்கின்றனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa7e0f97-d43c-4917-a555-9c29e614eee1/26-6a8149f9d1bbb.webp' /></p><p>அதை செய்தால் கமிஷனாக ரூ.1000 கோடி கிடைக்கும் என்று அவர்கள் கூறினாலும், லிங்கப்பா அந்த சரக்கை நானும் இறக்க மாட்டேன், வேறு யாரையும் இறக்கவும் விடமாட்டேன் என்று எச்சரித்து அனுப்புகிறார்.
</p><p>
அதே சமயம் புது கார் வாங்கும் முயற்சியில் அவமானங்களை சந்திக்கும் கிருபாகரன், பயன்படுத்தப்பட்ட BMW கார் ஒன்றை வாங்குகிறார். 

அதில் அவர் குடும்பத்துடன் ஊட்டிக்கு பயணிக்க அங்கே ஒரு கும்பல் அவரை கொல்ல பின்தொடர்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a98716cd-1d32-4adc-9773-a2c9a4a28d8d/26-6a8149f929adc.webp' /></p><p> </p><p>

மேலும், மற்றொரு கும்பல் அங்கு வர அவர்களும் கிருபாகரன் குடும்பத்தை கொல்ல துரத்துகிறார்கள். 

கிருபாகரனை கொல்ல ஏன் முயற்சிக்கிறார்கள்? அவருக்கும் லிங்காவுக்கு என்ன சம்பந்தம்? கப்பலில் என்ன சரக்கு இருக்கிறது என்ற கேள்விகளுக்கு விடையே மீதிக்கதை.</p><h2>படம் பற்றிய அலசல் </h2><p>

இயக்குநர் ஆக வேண்டும் என்பது தன்னுடடைய 32 ஆண்டு கனவு கூறிய விஷால், இந்த படத்தின் மூலம் அதை நிறைவேற்றியிருக்கிறார். 

ஆனால், இயக்குநர் வேலையை அவர் வெற்றிகரமாக முடித்தாரா என்பதே இப்படத்தில் உள்ள பிரச்சனை.</p><p> 

பார்ப்பது சலித்துப்போன 80கள் காலகட்ட கதை என்றாலும், ஒரு முக்கிய விஷயத்தை எடுத்துக் கொண்ட இயக்குநர் விஷால், திரைக்கதையில் மோசமாக சொதப்பியிருக்கிறார். 

குடும்பத்தினர், பெண்கள் என அனைவரும் படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக, முதல் பாதியை காமெடி டிராமாவாக கொண்டு சென்றது ரொம்பவே பொறுமையை சோதித்துவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82fd2ed7-9cc1-4614-8d2b-1bde22082570/26-6a814a469b57e.webp' /></p><p>

மருந்துக்கு கூட சிரிப்பு வராதபடியான காட்சிகள் எரிச்சலூட்டுகின்றன. இரண்டாம் பாதியில் வரும் காதல் காட்சிகளை அப்படியே வெட்டியிருக்கலாம். 

இது மட்டுமல்லாமல் பல லாஜிக் சொதப்பல்கள் வேறு அப்பட்டமாக தெரிகின்றன. ஜி.வி.பிரகாஷ் தன்னால் முடிந்தவரை பின்னணி இசையில் ஸ்கோர் செய்துள்ளார்.
</p><p>
திலீப் சுப்பராயனின் சண்டைக்காட்சிகள் பிரமாதம். குறிப்பாக இடைவேளையில் வரும் சண்டைக்காட்சியில் விஷால் தூள் கிளப்பியுள்ளார். 

பிரமோஷன்களில் காட்டப்பட்ட லிங்கா என்ற வயதான கதாபாத்திரம் குறைந்த நேரமே வருவது ஏமாற்றம்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3c71134-f451-44c4-b60f-4d0802c25ab3/26-6a814a47b2e31.webp' /></p><p>நிறைய க்ளோஸ்அப் ஷாட்கள் இருப்பது உறுத்தல். 

நடிகர்களைப் பொறுத்தவரை அஞ்சலி ஆவேசமான காட்சியில் ஒன்றில் அசத்தியிருக்கிறார். துஷாரா, ஜான் விஜய் போன்றோர் தங்கள் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர். </p><p>

தம்பி ராமையா காமெடி என்ற பெயரில் எரிச்சலூட்டுகிறார். ஜெயபிரகாசிற்கு ஏன் இப்படி ஒரு கதாபாத்திரம் என்று கேட்கத் தோன்றுகிறது. 

படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த் கண்டிப்பாக 30 நிமிட காட்சிகளை நீக்கியிருக்கலாம். ரிச்சர்ட் நாதன், அபிநந்தன், ஜெய் கார்த்திக்கின் ஒளிப்பதிவு ஓகே ரகம்.</p><p><b><u>க்ளாப்ஸ் </u></b></p><p>

விஷால் </p><p>

சண்டைக்காட்சிகள்</p><p> 

பின்னணி இசை </p><p><b><u>

பல்ப்ஸ் </u></b></p><p>

லாஜிக் மீறல்கள் </p><p>திரைக்கதை </p><p>

படத்தின் நீளம் </p><h5><b>

மொத்தத்தில் இந்த மகுடம் வெண்கல கிரீடம்.&nbsp;</b></h5><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34100747-24f6-4145-b08a-9bdebab75bdc/26-6a8149f7c01a3.webp' /></p><p> 
</p>]]></content>
            <updated>2026-08-16T05:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவினால் ஓரங்கட்டப்பட்ட முக்கியஸ்தர்! பதவியைத் துறந்த பின்னர் கிடைத்த பெரிய வாய்ப்பு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prominent-figures-sidelined-by-gotabaya-1786854568"></link>
            <id>https://tamilwin.com/article/prominent-figures-sidelined-by-gotabaya-1786854568</id>
            <summary type="text">கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் எனக்கு உரிய மதிப்பளிக்கப்படவில்லை. இதன் காரணமாக அதிருப்தியடைந்ததாலேயே நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் எனக்கு உரிய மதிப்பளிக்கப்படவில்லை. இதன் காரணமாக அதிருப்தியடைந்ததாலேயே நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினேன் என்று அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>தனியார்&nbsp; ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியொன்றில் கலந்து&nbsp; கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>அமெரிக்காவுக்கான இலங்கையின் தூதுவர் என்ற பதவியை வைத்துக் கொண்டு நான் ஒருபோதும் அரசியல் செய்ததில்லை. இதனை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நன்கு அறிவார்.&nbsp;</p><h2>அமெரிக்கத் தூதுவர் பதவி&nbsp;</h2><p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் வெறும் பின்வரிசை உறுப்பினராகவே நான் இருந்தேன். எனக்கு உரிய மதிப்பளிக்கப்படவில்லை.&nbsp;</p><p>அந்த&nbsp; ஆட்சியில் கடும் அதிருப்தியடைந்ததாலேயே நானாக சுய விருப்பின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து அரசியலில் இருந்து வெளியேறினேன்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43f746e7-5c3b-4a05-835f-6899a47bbdff/26-6a814bb66e615.webp' /></p><p> </p><p>இதனையடுத்தே அமெரிக்காவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டேன். தூதுவராக நியமிக்கப்பட்டதன் பின்னர் நான் ஒருபோதும் அரசியல் செய்யவில்லை.&nbsp;&nbsp;</p><p>தூதுவராக நியமிக்கப்பட்ட காலத்தில் இருந்து பதவி விலகும் வரை இலங்கைக்கு பயன்பெறும் வகையில் செயற்பட்டேன். அமெரிக்காவிடம் இருந்து இலங்கைக்கு பல ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொடுத்துள்ளேன்.&nbsp;</p><p>தூதுவராகவும், ஒரு அரசியல்வாதியாகவும் நாட்டுக்கு என்னால் முடிந்த சேவைகளை ஆற்றியுள்ளேன். தூதுவராக நான் பணியாற்றியதை இட்டு மகிழ்ச்சியடைகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T05:36:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fuel-import-costs-increase-srilanka-1786855287"></link>
            <id>https://tamilwin.com/article/fuel-import-costs-increase-srilanka-1786855287</id>
            <summary type="text">இந்த ஆண்டின் (2026) முதல் ஆறு மாதங்களில் (ஜனவரி-ஜூன்), எரிபொருள் இறக்குமதி செலவினம் 58.8 சதவீதம் அதிகரித்து 3,168.4 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின் (2026) முதல் ஆறு மாதங்களில் (ஜனவரி-ஜூன்), எரிபொருள் இறக்குமதி செலவினம் 58.8 சதவீதம் அதிகரித்து 3,168.4 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
</p><p>
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>நிலக்கரி இறக்குமதி</h2><p>
</p><p>
இதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், எரிபொருள் இறக்குமதிச் செலவினம் 1,995.7 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63d1c783-c0f7-4dca-8720-81710fc10897/26-6a81488bbd881.webp' /></p><p>

இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், எரிபொருள் இறக்குமதிச் செலவினம் 58.8 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை மேலும் குறிப்பிடுகின்றது.</p><p>

இந்த காலகட்டத்தில், கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவினம் 7.5 சதவீதம் அதிகரித்து 479.5 மில்லியன் அமெரிக்க டொலராகவும், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய இறக்குமதிச் செலவினம் 78.7 சதவீதம் அதிகரித்து 2538.6 மில்லியன் அமெரிக்க டொலராகவும் உயர்ந்துள்ளது.
</p><p>
நிலக்கரி இறக்குமதிச் செலவினமும் 16.1 சதவீதம் அதிகரித்து 150.4 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T05:20:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் திடீரென வழிமறிக்கப்பட்ட வாகனம்! வசமாக சிக்கிய ஐவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/5-arrested-with-heroin-in-mullaitivu-1786856185"></link>
            <id>https://tamilwin.com/article/5-arrested-with-heroin-in-mullaitivu-1786856185</id>
            <summary type="text">முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் ஹெரோயினுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் நேற்று (15.08.2026) மாலை பதிவாகியுள்ளது. 

சந்தேகந...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் ஹெரோயினுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p> 

குறித்த சம்பவம் நேற்று (15.08.2026) மாலை பதிவாகியுள்ளது. </p><p>

சந்தேகநபர்கள் செம்மலை - கொக்கிளாய் வீதியில் வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த வேளை பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கையின் போது சிக்கியுள்ளனர்.</p><h2>ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றல்</h2><p> 

இதன்போது அவர்களிடமிருந்து 2 கிராம் அளவிலான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd5c3c37-4f26-49fc-93ed-f18969627dbc/26-6a8146b3c37c4.webp' /></p><p>

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும், கைப்பற்றப்பட்ட சான்று பொருளும் கொக்கிளாய் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நிலையில் சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T05:13:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்குள் சுற்றித் திரியும் மிகவும் ஆபத்தான நபர்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dangerous-persons-roaming-the-country-1786856408"></link>
            <id>https://jvpnews.com/article/dangerous-persons-roaming-the-country-1786856408</id>
            <summary type="text">2019 - 2025 வரையான காலப்பகுதியில் தண்டனைக் காலம் முடிவடைவதற்குள் சட்டவிரோதமான முறையில் சிறைச்சாலைகளில் இருந்து தப்பிச்சென்ற 709 கைதிகள் இதுவரை மீண்டும...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019 - 2025 வரையான காலப்பகுதியில் தண்டனைக் காலம் முடிவடைவதற்குள் சட்டவிரோதமான முறையில் சிறைச்சாலைகளில் இருந்து தப்பிச்சென்ற 709 கைதிகள் இதுவரை மீண்டும் கைது செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.</p><p> சிறைச்சாலைகள் திணைக்களத்தின் 2025ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கை இதனை அறிவித்துள்ளது.</p><p>இவ்வாறு தப்பிச் சென்ற கைதிகள் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக நடமாடுவது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று அலுவலகம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf940c0e-397a-4536-a746-5dad797beff4/26-6a8143d9c396c.webp' /></p><p>கடந்த 6 ஆண்டுகளில் தண்டனைக் காலம் முடிவதற்குள் சட்டவிரோதமாக சிறைகளில் இருந்து தப்பிச் சென்ற அல்லது தலைமறைவான கைதிகள் மற்றும் சந்தேகநபர்களின் எண்ணிக்கை 1, 181 ஆக காணப்படுகின்ற நிலையில், அவர்களில் 709 பேர் இதுவரை மீண்டும் கைது செய்யப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.</p><p>இதற்கிடையில், வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் கடந்த ஆண்டில் மட்டும் 825 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
அத்துடன், மெகசின் மற்றும் விளக்கமறியல் சிறைச்சாலைகளில் கைதிகள் மற்றும் சந்தேக நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வசதிகளின்மை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அதிகாரிகளும் கைதிகளும் கடும் அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T05:03:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[Weekly Horoscope: மேஷம் முதல் மீனம் வரை... அடுத்த 7 நாட்கள் 12 ராசிகளுக்கும் எப்படி அமைய போகுது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/weekly-horoscope-for-16-august-2026-to-22-august-1786854870"></link>
            <id>https://manithan.com/article/weekly-horoscope-for-16-august-2026-to-22-august-1786854870</id>
            <summary type="text">Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படும் நன்மை, தீமைகள் அனைத்தும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளுடன் தொடர்புடையவை என்று தொன்று தொட்டு&amp;nbsp; ஜோதிடத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படும் நன்மை, தீமைகள் அனைத்தும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளுடன் தொடர்புடையவை என்று தொன்று தொட்டு&nbsp; ஜோதிடத்தில் நம்பப்படுகிறது. </p><p>அந்த வகையில், அடுத்த 7 நாட்கள் 12 ராசிக்காரர்களுக்கும் கிரக நிலைகளின் அடிப்படையில் எவ்வாறு அமையப் போகிறது என்பதை&nbsp; ஜோதிட&nbsp; நிபுணர்கள் கணித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba4b79d7-d45c-4c33-95ff-bf3787ad3e11/26-6a814465bbeaa.webp' /></p><p>அதன் பிரகாரம்,&nbsp; 2026 ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 22 வரை உள்ள காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்படக்கூடிய பலன்கள் குறித்து விரிவான வார ராசிபலன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>12 ராசிகளுக்குமான சிறப்பு கணிப்பு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0cea2b4-cbff-484c-8cb0-da4f7cc3300f/26-6a814467473ae.webp' /></p><p><b>மேஷம்
</b></p><p>இந்த வாரம் நிதி இழப்பு, அவதூறு போன்றவற்றைத் தவிர்க்க குறுக்குவழிகளை நாட வேண்டாம். எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.</p><p> வியாபாரத்தில் முதலீடு செய்யும்போது கவனம் தேவை. செலவுகள் வருமானத்தை விட அதிகரிக்கலாம். மாணவர்கள் வெற்றிக்காக கூடுதல் உழைப்பு தேவை.</p><p><b>
ரிஷபம்
</b></p><p>இந்த வாரம் கலவையான பலன்கள் கிடைக்கும். வீட்டிலும் உறவுகளிலும் பதற்றம் ஏற்படலாம்; வாழ்க்கைத்துணையின் உணர்வுகளை மதிப்பது அவசியம். வியாபாரத்தில் தடைகள், பணிச்சுமை மற்றும் நிதி நெருக்கடி ஏற்படலாம். அவசர முதலீடுகளைத் தவிர்த்து, பொறுமையுடன் செயல்படுங்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.</p><p><b>

மிதுனம்
</b></p><p>மகிழ்ச்சியான வாரமாக அமையும். செல்வாக்கு மிக்கவர்கள் அல்லது நண்பர்களின் உதவியால் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். </p><p>நீண்ட தூரப் பயணம் நற்பலன் தரும். வாரத்தின் பிற்பகுதியில் நிதிநிலை மேம்படும்; புதிய வருமான வாய்ப்புகளும் உருவாகும். மாணவர்கள் உழைப்புக்கேற்ற பலனைப் பெறுவார்கள். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.</p><p>
</p><p><b>
கடகம்
</b></p><p>இந்த வாரம் திட்டமிட்டு உழைத்தால் எதிர்பார்த்ததை விட அதிக வெற்றியும் லாபமும் கிடைக்கும். சோம்பலைத் தவிர்த்து கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். </p><p>பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்; நிலுவைப் பணிகளும் முடியும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும்.</p><p></p><p><b>சிம்மம்</b></p><p>சற்று சவாலான வாரமாக இருக்கும். பணியிடத்தில் பொறுப்புகளும் பிரச்சினைகளும் அதிகரிக்கலாம். வியாபாரத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும், வாரத்தின் நடுப்பகுதியில் நிதி ரீதியில் முன்னேற்றம் ஏற்படும்.</p><p>ஆபத்தான முதலீடுகளைத் தவிர்த்து, ஒப்பந்தங்களை நன்கு ஆராய்ந்து முடிவெடுக்கவும். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்திலும் சில கருத்து வேறுபாடுகள் உருவாகி பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/602909c3-7649-419b-b14d-1432d5201b95/26-6a814467ea2d0.webp' /></p><p><b>
கன்னி</b></p><p>
அதிர்ஷ்டமான வாரம். தொழில், வியாபாரம் மற்றும் நிதியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வருமானம் அதிகரிக்கவும், பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. </p><p>வேலை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கலாம். சொத்து விவகாரங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பெற்றோர் மற்றும் வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். அவசர முடிவுகளை மட்டும் தவிர்ப்பது நல்லது.</p><p><b>

துலாம்
</b></p><p>மற்றவர்களுடன் பழகும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய வாரம். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படலாம். முக்கிய முடிவுகளை அவசரப்படாமல் எடுக்கவும்.</p><p>முதலீடு செய்யும் முன் நம்பகமானவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. பயணங்கள் போக வேண்டிய சூழல் உருவாகும். உறவுகளில் சுமாரான நிலையே காணப்படும்.
</p><p><b>
விருச்சிகம்
</b></p><p>நிம்மதியான வாரமாக அமையும். நண்பர்கள் அல்லது செல்வாக்கு மிக்கவர்களின் உதவியால் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.</p><p> நிதி பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. நீண்ட தூரப் பயணம் நற்பலன் தரும். வாரத்தின் பிற்பகுதியில் நிதிநிலை மேம்படும்; புதிய வருமான வாய்ப்புகளும் உருவாகும். மாணவர்கள் உழைப்புக்கேற்ற பலனைப் பெறுவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.</p><p><b>
தனுசு
</b></p><p>சற்று போராட்டம் நிறைந்த வாரமாக இருக்கலாம்.பணியிடத்தில் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மோதலாக மாற வாய்புள்ளது. எனவே வாக்குவபாதங்களை தவிர்ப்பது நல்லது.&nbsp;</p><p>கடின உழைப்புக்கேற்ற பலன் தாமதமாகலாம். நிதி விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும்; செலவுகளும் அதிகரிக்கலாம். எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருப்பதுடன், உடல்நலத்திலும் கவனம் செலுத்துங்கள்.</p><p><b>
மகரம்
</b></p><p>அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும் வாரம். கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் வெற்றியையும் லாபத்தையும் தரும். வேலை செய்பவர்களுக்கு பெரிய பொறுப்புகள் அல்லது பதவி கிடைக்கும்.</p><p> வருமானமும் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான பயணங்கள் பயனுள்ளதாக இருக்கும். குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/896f43f8-f2a4-44cd-a27b-34f5d49f93ce/26-6a8144689d751.webp' /></p><p></p><p>
</p><p><b>
கும்பம்
</b></p><p>பணியிடத்தில் மரியாதையும் முன்னேற்றமும் அதிகரிக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதுடன், சிக்கிய பணமும் திரும்பக் கிடைக்கும்.</p><p> குடும்ப உறவுகளில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும், குடும்பத்தினரின் கருத்துகளை மதிக்கவும். குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.</p><p><b>

மீனம்
</b></p><p>சிறப்பான வாரமாக அமையும். வருமானம் அதிகரித்து, பொருளாதார பிரச்சினைகள் குறையும்; சேமிப்பும் அதிகரிக்கும். வேலை மாற்றத்துக்கு ஏற்ற காலம் இது.</p><p> சிலருக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். பங்குச் சந்தை முதலீட்டில் கவனம் தேவை. குடும்பத்தில் திருமணம் தொடர்பான நல்ல செய்திகள் வரலாம். வாழ்க்கைத்துணையுடன் உறவு இனிமையாக இருக்கும். ஆரோக்கிய விடயத்தில் கவனம் தேவை.&nbsp;</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T05:02:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் செயற்பாடு ஜனநாயக விரோதமானது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pafferal-warns-govt-1786856544"></link>
            <id>https://tamilwin.com/article/pafferal-warns-govt-1786856544</id>
            <summary type="text">அரசாங்கம் ஜனநாயக விரோதமான முறையில் செயற்படுகின்றது என சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் பேரவையின் (பெபரல்) நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கம் ஜனநாயக விரோதமான முறையில் செயற்படுகின்றது என சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் பேரவையின் (பெபரல்) நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.</p><p>
மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துவது தொடர்பாக அரசாங்கம் ஒரு தீர்க்கமான அரசியல் தீர்மானத்தை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>பழைய விகிதாசார முறையின் கீழ் இத்தேர்தலை நடத்துவதற்கு அரசியல் கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ள போதிலும், அரசாங்கம் அதைத் தவிர்த்து செயல்படுவது ஜனநாயக விரோதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa785904-5f48-4b7a-9c47-27a11b79bc6e/26-6a814462338f9.webp' /></p><p>
</p><p>எதிர்க்கட்சியில் இருந்தபோது தேர்தல்களை கோரி தீவிரமாக போராடிய அரசாங்கம், தனது கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டவாறு உரிய காலத்தில் தேர்தல்களை நடத்துவதே மக்களின் வாக்குரிமைக்கு அளிக்கும் மரியாதையாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>தற்போதைய மாகாண சபை முறைமை பொருத்தமற்றது என கருதினால், அரசியலமைப்புத் திருத்தம் மூலம் அதனை ரத்து செய்ய வேண்டும்; இல்லையெனில், தற்போதைய நடைமுறையின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.</p><p>
அரசாங்கத்திற்கு விருப்பமிருப்பின், மிகக் குறைந்த காலத்திற்குள் மாகாண சபை தேர்தலை நடத்தி முடிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>தேர்தலை நடத்துவதற்காக இரண்டு தனிநபர் நாடாளுமன்ற உறுப்பினர் முன்மொழிவுகள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. </p><p>
எனினும், இத்தேர்தலை நடத்துவதற்கு எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து அழுத்தங்களை வழங்க வேண்டும்.
தேர்தல் விவகாரத்தில் அரசாங்கம் ஜனநாயகப் பண்புகளுடன் நடந்துகொள்வதே மிகவும் முக்கியமானதாகும் என ரோஹண ஹெட்டியாரச்சித் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T05:02:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[செந்திலை அவமானப்படுத்தும் பாண்டியன்.. மனமுடைந்து பேசிய மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ப்ரோமோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/pandian-humiliates-senthil-in-pandian-stores-1786856048"></link>
            <id>https://cineulagam.com/article/pandian-humiliates-senthil-in-pandian-stores-1786856048</id>
            <summary type="text">பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கப்போகும் விஷயங்கள் குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. 

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் தொலைக்காட்சியில் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கப்போகும் விஷயங்கள் குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.</p><p></p><h2> 

பாண்டியன் ஸ்டோர்ஸ்
</h2><p>
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் <a href="https://www.youtube.com/watch?v=-XkX0KBt-uA" target="_blank">பாண்டியன் ஸ்டோர்ஸ்</a>. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில், பழனிக்கு சொத்தில் பங்கு தர முடியாது, அவனுக்கும் இந்த வீட்டிற்கும் சம்பந்தமே இல்லை என சக்திவேல் கூற, அந்த சோகத்தில் கோமதியிடம் வந்து அதை பழனி செல்கிறார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e966d272-8eed-49ef-a656-9e53bd4beafa/26-6a8142745875e.webp' /></p><p>தனது தம்பிக்கு இப்படியொரு அநீதி நடப்பதை அறிந்தவுடன் உடனடியாக நியாயம் கேட்க சக்திவேல் வீட்டிற்கு கோமதி செல்கிறார். அங்கு இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெறுகிறது. இதன்பின், பாண்டியன் குடும்பத்தில் உள்ள அனைவரும் பழனிக்கு உறுதுணையாக வந்து நிற்கிறார்கள். ஆனாலும், பழனிக்கு சொத்தில் பங்கு கிடையாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறார் சக்திவேல். </p><h2>

வரும் வாரம்</h2><p>

பழனிக்கு சொத்தில் பங்கு தரமாட்டேன் என்கிற பிரச்சனை ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க, வேலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட செந்திலை பாண்டியன் தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறார். இருவருக்கும் இடையே இதனால் கடும் வாக்குவாதம் கூட நடைபெற்றது. அப்போது மேசையை தூக்கி எறிந்துவிட்டு சென்றார் பாண்டியன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23f5b05b-ba5f-47df-b619-e6e88cc12402/26-6a8142739ecaa.webp' /></p><p>

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில், கடைக்கு வரும் செந்திலை பார்த்து, வேலை வெட்டி எதுவும் இல்லை, அதான் கடை பக்கம் வந்திருக்கான் என பாண்டியன் கூற, செந்தில் உடனடியாக கடையில் இருந்து வெளியே செல்கிறார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a4a6472-fc62-4cda-bc15-fa5f145b5295/26-6a814272e5b83.webp' /></p><p>பின் வீட்டில், அனைவரும் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, 'குழம்பில் கொஞ்சம் காரம் கூடி போய்விட்டது' என செந்தில் கூற, 'வேலைவெட்டி இல்லாமல் சும்மா இருந்தா இந்த மாதிரி யோசிக்க தோணும். நீ இருக்கிற நிலைமையில் நான் இருந்தேன் என்றால் ஒரு வாய் சோறு கூட தொண்டைக்குள் இறங்காது' என பாண்டியன் செந்திலை அவமானப்படுத்தும் வகையில் பேசுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eea416b8-d87f-4950-8b70-7bd02748e4fa/26-6a81429a19b9c.webp' /></p><p> 

இதன்பின், தனது மாமனார் பாண்டியனை கடையில் பார்த்து பேசும் மீனா, "செந்திலை ஏதாவது சொல்வதாக இருந்தால், தனியாக அழைத்து சொல்லுங்கள். எல்லார் முன்னடியும் திட்டுவது தவறுதானே" என தனது கணவருக்காக பேசுகிறார்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/-XkX0KBt-uA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-16T05:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆற்றில் குளிக்கச்சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த பரிதாபம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-people-for-a-swim-in-the-ma-oya-1786855849"></link>
            <id>https://jvpnews.com/article/two-people-for-a-swim-in-the-ma-oya-1786855849</id>
            <summary type="text">மீரிகம, மதுருபிட்டிய பகுதியில் மாஓயா ஆற்றில் நீராடச்சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காணாமல்போயுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>மீரிகம, மதுருபிட்டிய பகுதியில் மாஓயா ஆற்றில் நீராடச்சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காணாமல்போயுள்ளார்.
</p><p>
 

நேற்று (15) பிற்பகல் மாஓயாவில் நீராடச்சென்ற மூன்று இளைஞர்களே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளனர்.</p><p>அவர்களில் இருவரை பிரதேசவாசிகள் மீட்டு தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/673cffa5-fe75-423a-be97-d5b7079f5a90/26-6a8141aacea2f.webp' /></p><p>
</p><p>
 

இதனையடுத்து தீவிர சிகிச்சை பெற்று வந்த 19 வயதுடைய மீரிகம பகுதியை சேர்ந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p>நீரில் மூழ்கி காணாமல்போன மற்றைய நபரை தேடும் பணியில் மீரிகம பொலிஸார், பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T04:57:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு ஏற்படவுள்ள பெரும் பாதிப்பு! அவசரமாக களமிறங்கும் அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/el-ni-o-impact-plan-to-prevent-food-shortages-1786856075"></link>
            <id>https://jvpnews.com/article/el-ni-o-impact-plan-to-prevent-food-shortages-1786856075</id>
            <summary type="text">இலங்கையில் எல்நினோ வானிலையால் ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறையைத் தடுக்கும் நோக்கில் விசேட திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;அதன்படி எதிர்காலத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் எல்நினோ வானிலையால் ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறையைத் தடுக்கும் நோக்கில் விசேட திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>அதன்படி எதிர்காலத்தில் உணவுப் பாதுகாப்பை பேணுவதற்கும் உணவுப் பற்றாக்குறையைத் தடுப்பதற்கும் விவசாய அமைச்சு குறித்த திட்டத்தைத் தயாரித்துள்ளது.</p><p>
இதற்காக ஒரு சாகுபடித் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், நீர் மேலாண்மை மற்றும் நீர் வளங்களின் நீடித்த பயன்பாட்டிற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c5e82a3-8fdc-4a2a-81e2-dfd4f75f96af/26-6a81428ceeb3e.webp' /></p><p>

நீரைத் திறம்படப் பயன்படுத்துவது மற்றும் வீணாவதைத் தடுப்பது குறித்து விவசாயிகளுக்குக் கல்வி புகட்டுவதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதேவேளை இலங்கையின் பல பிரதேசங்களில் நிலவும் கடுமையான வறண்ட வானிலை காரணமாக, பிரதான மற்றும் சிறிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனால் மக்கள் மற்றும் விலங்கினங்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதுடன், பெருமளவிலான பயிர்ச் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

 

நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 74 நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவு தற்போது 37% ஆகக் குறைந்துள்ளது.</p><p>
 

குறிப்பாக, விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் சிறிய குளங்களுக்கு இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T04:56:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்படையின் அதிவேக தாக்குதல் படகு விபத்து! காணாமல் போன மாலுமி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-navy-boat-accident-sailor-missing-1786853779"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-navy-boat-accident-sailor-missing-1786853779</id>
            <summary type="text">மொரட்டுவை, அங்குலானை கடற்கரையில் இருந்து சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில் கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகு ஒன்று விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததில், அதில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொரட்டுவை, அங்குலானை கடற்கரையில் இருந்து சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில் கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகு ஒன்று விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததில், அதில் இருந்த 12 கடற்படை வீரர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அங்குலானை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

</p><p>வழக்கமான ரோந்துப் பணியை முடித்துவிட்டு கொழும்பு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>

கடலில் இருந்து புகை எழுவதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அங்குலானை காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.</p><p></p><h2>மீட்பு நடவடிக்கை</h2><p>

அத்தோடு, காவல்துறையினரோ அல்லது பாதுகாப்புப் படையினரோ வரும் வரை காத்திருக்காமல், அங்குலானை பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் உடனடியாகத் தங்களின் படகுகளில் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று உயிர் காக்கும் மேலங்கிகளை அணிந்தபடி கடலில் மிதந்துகொண்டிருந்த கடற்படை வீரர்களை மீட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7788527d-8697-445e-9df6-de17e309319c/26-6a813c38007f4.webp' /></p><p>
</p><p>
தகவல் அறிந்ததும் அங்குலானை காவல்துறையினர், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியன இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.</p><h2>காணாமல் போன மாலுமி</h2><p>

கடற்றொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் பேராதரவோடு மேற்கொள்ளப்பட்ட இந்த மீட்புப் பணியின் மூலம் படகில் இருந்த 12 மாலுமிகளில் 11 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e385ab9-0904-4a96-b604-14076f50eaf2/26-6a813c38a7501.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், காணாமல் போன ஒரு மாலுமியைத் தேடும் தீவிர நடவடிக்கையில் இலங்கை விமானப்படையின் MI-17 உலங்குவானூர்தி மற்றும் பெல் 412 ரக உலங்குவானூர்திகள் மூலம் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2PWgEExkBKc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP</a> </b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-16T04:55:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் தலைநகரில் அதிபயங்கர தாக்குதல்களை தொடுக்கும் ரஷ்ய படைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/russia-launch-missile-attack-on-ukrainian-capital-1786855656"></link>
            <id>https://ibctamil.com/article/russia-launch-missile-attack-on-ukrainian-capital-1786855656</id>
            <summary type="text">உக்ரைன் தலைநகர் கீவ் மீது இன்று அதிகாலையில் ரஷ்யப் படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில், குறைந்தபட்சம் இரண்டு மாவட்டங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக அந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் தலைநகர் கீவ் மீது இன்று அதிகாலையில் ரஷ்யப் படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில், குறைந்தபட்சம் இரண்டு மாவட்டங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிகிக்கின்றன. </p><p>

இந்தத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் நகரத்தின் இராணுவ நிர்வாகம் கூறியுள்ளது.
</p><p>
வடக்கு புறநகர்ப் பகுதியிலுள்ள குடியிருப்பு அல்லாத இடத்தில், ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>தீவிர வான்வழித் தாக்குதல்கள்</h2><p>
</p><p>
இதில் பல கார்கள் தீப்பிடித்து எரிந்ததுடன், நகர மையப் பகுதிக்கு சற்று தெற்கே உள்ள மற்றொரு இடத்திலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21dd346e-da4d-407c-9483-6c7722cbb631/26-6a81421aa4b9e.webp' /></p><p><i>Image Credit:&nbsp;NBC News</i></p><p>
</p><p>
மேலும், புறநகர்ப் பகுதியில் உள்ள சந்தைக் கடைகள் தீப்பற்றி எரிவதைக் காட்டும் புகைப்படங்களும் அதிகாரப்பூர்வமற்ற டெலிகிராம் பக்கங்களில் வெளியாகியுள்ளதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
சமீபத்திய வாரங்களாகவே கீவ் மற்றும் உக்ரைனின் பிற நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா தீவிர வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-16T04:53:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[“தளபதி விஜய்” சாலை: கிராம சபையில் பரந்தூர் மக்கள் தீர்மானம் நிறைவேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/parandur-people-named-thalapathy-vijay-to-road-1786855906"></link>
            <id>https://news.lankasri.com/article/parandur-people-named-thalapathy-vijay-to-road-1786855906</id>
            <summary type="text">பரந்தூர் விமான நிலைய திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து அங்குள்ள சாலைக்கு “தளபதி விஜய்” என கிராம மக்கள் பெயர் சூட்டியுள்ளனர்.நிறுத்தி வைக்கப்பட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பரந்தூர் விமான நிலைய திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து அங்குள்ள சாலைக்கு “தளபதி விஜய்” என கிராம மக்கள் பெயர் சூட்டியுள்ளனர்.</p><h2>நிறுத்தி வைக்கப்பட்ட பரந்தூர் விமான நிலையம்</h2><p>பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கூடாது என்று பல மாதங்களாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.</p><p>பரந்தூர் மக்களின் போராட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்து இருந்தார்.</p><p> இதையடுத்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பொறுப்பேற்றதை அடுத்து பரந்தூர் விமான நிலைய திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5ac10b8-1974-4a97-a8a8-67882bf85d55/26-6a8141e3f33c9.webp' /></p><p></p><h2>&nbsp;தளபதி விஜய் சாலை</h2><p>இந்நிலையில் பரந்தூர் விமான நிலைய திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக&nbsp; அந்த கிராம மக்கள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளனர்.</p><p> தீர்மானத்தில் ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள சாலைக்கு “தளபதி விஜய்” சாலை என பெயரிடப்பட்டுள்ளது.</p><p> இந்த தீர்மானம் கிராம சபையில் ஒருமனதாக நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-16T04:52:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆற்றில் குளிக்கச்சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்! ஒருவர் பலி - மற்றொருவர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-people-for-a-swim-in-the-ma-oya-1786854323"></link>
            <id>https://tamilwin.com/article/two-people-for-a-swim-in-the-ma-oya-1786854323</id>
            <summary type="text">மீரிகம, மதுருபிட்டிய பகுதியில் மாஓயா ஆற்றில் நீராடச்சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காணாமல்போயுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>மீரிகம, மதுருபிட்டிய பகுதியில் மாஓயா ஆற்றில் நீராடச்சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காணாமல்போயுள்ளார்.
</p><p>
 

நேற்று (15) பிற்பகல் மாஓயாவில் நீராடச்சென்ற மூன்று இளைஞர்களே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளனர்.</p><h2>&nbsp;வைத்தியசாலையில் அனுமதி</h2><p>அவர்களில் இருவரை பிரதேசவாசிகள் மீட்டு தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba5c3eb8-ce1c-4f35-bfdc-9b7df90ee919/26-6a813e628a1ba.webp' /></p><p>
</p><p>
 

இதனையடுத்து தீவிர சிகிச்சை பெற்று வந்த 19 வயதுடைய மீரிகம பகுதியை சேர்ந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p>நீரில் மூழ்கி காணாமல்போன மற்றைய நபரை தேடும் பணியில் மீரிகம பொலிஸார், பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T04:37:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிகப்புநிற ஆடையில் மின்னும் பாடகி ஜோனிடா காந்தி..புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/singer-to-actress-jonita-gandhi-recent-red-dress-1786802215"></link>
            <id>https://viduppu.com/article/singer-to-actress-jonita-gandhi-recent-red-dress-1786802215</id>
            <summary type="text">ஜோனிடா காந்திஇந்திய மொழிகளில் வெளியான பல படங்களின் பாடல்களில் பாடி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வருபவர் தான் பாடகி ஜோனிடா காந்தி.

அதிகபட்ச...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜோனிடா காந்தி</h2><p>இந்திய மொழிகளில் வெளியான பல படங்களின் பாடல்களில் பாடி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வருபவர் தான் பாடகி ஜோனிடா காந்தி.
</p><p>
அதிகபட்சமாக இந்தி படங்களில் பாடி வரும் ஜோனிடா, அனிருத் இசையில் தமிழில் மிகப்பெரிய வெற்றி பாடல்களை கொடுத்து வருகிறார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b24bd83a-1ce5-4c6d-9fd8-2f6fee3f4803/26-6a80703045ae1.webp' /></p><p>
பாடகியாக மட்டும் இல்லாமல் தற்போது நடிகையாகவும் அறிமுகமாகி நடித்து வருகிறார் ஜோனிடா. சமீபத்தில் இதயம் முரளி படத்தில் கீதா என்ற ரோலில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தார்.</p><p>
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஜோனிடா, சிகப்புநிற கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p><h2>புகைப்படங்கள்</h2>]]></content>
            <updated>2026-08-16T04:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்நினோவால் இலங்கை எதிர்கொள்ளப்போகும் தாக்கம்! அவசரமாக அரசாங்கம் தயாரிக்கும் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-ni-o-impact-plan-to-prevent-food-shortages-1786851915"></link>
            <id>https://tamilwin.com/article/el-ni-o-impact-plan-to-prevent-food-shortages-1786851915</id>
            <summary type="text">இலங்கையில் எல்நினோ வானிலையால் ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறையைத் தடுக்கும் நோக்கில் விசேட திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;அதன்படி எதிர்காலத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் எல்நினோ வானிலையால் ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறையைத் தடுக்கும் நோக்கில் விசேட திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>அதன்படி எதிர்காலத்தில் உணவுப் பாதுகாப்பை பேணுவதற்கும் உணவுப் பற்றாக்குறையைத் தடுப்பதற்கும் விவசாய அமைச்சு குறித்த திட்டத்தைத் தயாரித்துள்ளது.</p><p>
இதற்காக ஒரு சாகுபடித் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.</p><h2>சிறப்பு கவனம்</h2><p>
</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், நீர் மேலாண்மை மற்றும் நீர் வளங்களின் நீடித்த பயன்பாட்டிற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p>

நீரைத் திறம்படப் பயன்படுத்துவது மற்றும் வீணாவதைத் தடுப்பது குறித்து விவசாயிகளுக்குக் கல்வி புகட்டுவதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/335f54a4-448c-4508-a9b0-fa647d520976/26-6a813b0e30090.webp' /></p><p>இதேவேளை இலங்கையின் பல பிரதேசங்களில் நிலவும் கடுமையான வறண்ட வானிலை காரணமாக, பிரதான மற்றும் சிறிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>பயிர்ச் சேதங்கள்</h2><p> இதனால் மக்கள் மற்றும் விலங்கினங்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதுடன், பெருமளவிலான பயிர்ச் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

 

நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 74 நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவு தற்போது 37% ஆகக் குறைந்துள்ளது.
</p><p>
 

குறிப்பாக, விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் சிறிய குளங்களுக்கு இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T04:27:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவை அடித்து நொறுக்கிய விஸ்வநாத் &amp; சன்ஸ் வசூல், இத்தனை கோடிகளா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vishwanath-and-sons-america-box-office-1786852757"></link>
            <id>https://cineulagam.com/article/vishwanath-and-sons-america-box-office-1786852757</id>
            <summary type="text">விஸ்வநாத் &amp;amp; சன்ஸ்
விஸ்வநாத் &amp;amp; சன்ஸ் சூர்யா, மமிதா, ராதிகா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த படம். இந்த படம் தெலுங்கு ரசிகர்களிடம்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>விஸ்வநாத் &amp; சன்ஸ்</h2><p>
விஸ்வநாத் &amp; சன்ஸ் சூர்யா, மமிதா, ராதிகா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த படம்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72f1b48f-6c2a-4e62-8ddf-461a3ae11c22/26-6a81359937315.webp' /></p><p>இந்த படம் தெலுங்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. அதோடு அமெரிக்காவில் சூர்யாவின் திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வசூல் சாதனை படைத்து வருகிறது.</p><p></p><p> </p><h2>

வசூல்</h2><p> 

இரண்டு நாட்களில் இந்த <a href="https://www.youtube.com/watch?v=9X-u8W2teXo" target="_blank">படம் </a>அமெரிக்காவில் 1.1 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது, இன்றும் முன்பதிவு மிகச்சிறப்பாக இருப்பதால் கண்டிப்பாக 1.5 மில்லியன் டாலர் வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ed2520d-23e8-4f49-8c10-76a5f11fb95f/26-6a81359880182.webp' /></p><p>இப்படம் 2 மில்லியன் டாலர் வரை அமெரிக்காவில் வசூல் இருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-16T04:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்மா இறந்த செய்தி கேட்டும் 5 ஷாட்களை முடித்து கொடுத்த ராதிகா! நெகிழ்ச்சியில் படக்குழு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/vas-team-open-radhikaas-dedication-towards-cinema-1786785078"></link>
            <id>https://manithan.com/article/vas-team-open-radhikaas-dedication-towards-cinema-1786785078</id>
            <summary type="text">radhikaas dedication towards cinema : சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் &amp;amp; சன்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படக்குழு...</summary>
            <content type="html"><![CDATA[<p>radhikaas dedication towards cinema : சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் அளித்துள்ள புரமோஷனல் பேட்டியில் நடிகை ராதிகாவின் நெகிழ்ச்சியான அர்ப்பணிப்பு குறித்து பகிர்ந்துள்ள விடயம் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.&nbsp;</p><h2>ராதிகாவின் நெகிழ்ச்சி செயல்&nbsp; &nbsp;&nbsp;</h2><p>படத்தின் முக்கியமான காமெடி காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தபோது, ராதிகாவின் தாயார் உயிரிழந்த செய்தி அவருக்கு கிடைத்துள்ளது. அப்போது காட்சியில் இன்னும் ஐந்து ஷாட்கள் மட்டுமே எடுக்க வேண்டியிருந்ததால், அதனை முடித்துவிட்டு செல்லலாமா என ராதிகா இயக்குநர் வெங்கியிடம் கேட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21c4152c-3c34-4810-8f4f-7e63d0865ff9/26-6a8032e0a5f27.webp' /></p><p></p><p>இதுகுறித்து இயக்குநர் வெங்கி கூறுகையில், தாயார் இறந்த செய்தி கிடைத்த நிலையிலும், காட்சியை முடித்துவிட்டு செல்ல ராதிகா விரும்பியதாகவும், அந்த நேரத்தில் என்ன சொல்வதென்றே தெரியாமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>நடிகை மமிதா பைஜூவும் ராதிகாவின் மனநிலையை நினைத்து மிகவும் வேதனைப்பட்டதாகக் கூறியுள்ளார். தன் தாயைப் பற்றி ராதிகா படப்பிடிப்பின்போது பலமுறை பகிர்ந்துகொண்டதாகவும், அந்தச் செய்தி கிடைத்த பிறகும் அவர் முழு ஈடுபாட்டுடன் காமெடி காட்சியில் நடித்தது தன்னை நெகிழச் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db2115b3-4408-4d93-b395-586475c58bd5/26-6a8032e156b73.webp' /></p><p>
நடிகர் சூர்யா, தாயாருக்கும் தான் சார்ந்துள்ள கலைக்கும் ராதிகா அளிக்கும் சமமான மரியாதையே இப்படிப்பட்ட அர்ப்பணிப்புக்குக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதுகுறித்து ராதிகா கூறுகையில், அந்தக் காட்சியின் 85 சதவீத படப்பிடிப்பு முடிந்திருந்ததாகவும், மீதமிருந்த ஐந்து ஷாட்களை முடிக்காமல் சென்றால் மீண்டும் இரண்டு மாதங்கள் கழித்தே அதனை படமாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d269eaf-bd0a-4c24-97e1-9b437b33fcaa/26-6a8032e231ae8.webp' /></p><p></p><p> </p><p>மேலும், அதே உணர்வை மீண்டும் கொண்டு வந்து நடிப்பது சாத்தியமற்றதாக இருந்திருக்கும் என்றும் கூறியுள்ளார்.

குறிப்பாக, தன் தாயார் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தபோதும், “நீ கிளம்பி ஷூட்டிங் போ” என்று தன்னை அனுப்பி வைத்ததாக ராதிகா தெரிவித்துள்ளார். </p><p>தாயை இழந்த துயரத்திலும், அவர் கூறிய வார்த்தைகளுக்கு மதிப்பளித்து படப்பிடிப்பை நிறைவு செய்த ராதிகாவின் அர்ப்பணிப்பு தற்போது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன் இந்த காணொளி இணையத்தில் வைரலாகி பாராட்டுக்களையும் குவித்து வருகின்றது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T04:19:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்ய தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/legal-action-against-npp-govt-1786852104"></link>
            <id>https://tamilwin.com/article/legal-action-against-npp-govt-1786852104</id>
            <summary type="text">&amp;nbsp;உச்சநீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக மனு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உச்சநீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக மனுத் தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
</p><p>இதற்கமைய, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, எதிர்க்கட்சியின் கூட்டணிக் கட்சிகள், ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் இந்த மனுக்களை தாக்கல் செய்யவுள்ளனர்.</p><p>
இவ்விடயத்தில் ஜனாதிபதி சட்டத்தரணிகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bdea788-8474-45e2-8770-12e30ff05ed6/26-6a813309e0366.webp' /></p><p>
</p><p>இலங்கையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பாக 6 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து புதிய கூட்டமைப்ப ஒன்றை அமைத்துள்ளன.</p><p>
இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியை சந்தித்த இக்கட்சியினர், இது குறித்து அவருக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.
</p><p>மேலும், வடக்கு மற்றும் கிழக்கில் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை விடுவிப்பதற்கு ஆதரவளிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்துதல் மற்றும் காணிப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணுதல் ஆகிய 3 பிரதான கோரிக்கைகளை முன்னிறுத்தியே இந்த கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T03:49:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையிலிருந்து சென்றவர் விமான நிலையத்தில் திடீரென விழுந்து மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-returning-from-sri-lanka-dies-at-chennai-1786847181"></link>
            <id>https://tamilwin.com/article/man-returning-from-sri-lanka-dies-at-chennai-1786847181</id>
            <summary type="text">இலங்கையில் இருந்து சென்றவர் சென்னை விமான நிலையத்தில் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார். 

இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய 55 வயதான ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இருந்து சென்றவர் சென்னை விமான நிலையத்தில் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார். </p><p>

இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய 55 வயதான நபரே இவ்வாறு திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார். </p><p>

சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த சையத் சிராஜுதீன் என்பவர் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு சென்றுவிட்டு, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளார்.</p><p> </p><h2><b>குடிவரவு&nbsp;சோதனை</b></h2><p>விமானத்தில் இருந்து இறங்கியவர் குடிவரவு மற்றும் சுங்கத்துறை சோதனைகளை முடித்துவிட்டு, பிராட்வே செல்வதற்காக விமான நிலைய வளாகத்தில் உள்ள மெட்ரோ தொடருந்து நிலையத்திற்கு சென்றார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5be94a1e-4545-4af1-847b-5edf6154e5b9/26-6a8124e84e5a8.webp' /></p><p>அங்குள்ள டிக்கெட் கவுண்டர் அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைக்கண்ட சக பயணிகளும், மெட்ரோ நிலைய ஊழியர்களும் உடனடியாக விமான நிலைய மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p>இதனையடுத்து விரைந்து வந்த மருத்துவ குழுவினர் முதலுதவி வழங்கிய போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். </p><p>சம்பவத்தை தொடர்ந்து விமான நிலைய பொலிஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரச மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். </p><p>இது குறித்து வழக்குப்பதிவு செய்து பொலிஸார் மேலதிக விசாரணையை நடத்தி வருகின்றனர்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T03:47:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலிய பகுதியாக காசா மற்றும் மேற்குக் கரை: அமெரிக்கா வெளியிட்ட சர்ச்சைக்குரிய வரைபடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/palestinian-territories-as-part-of-israel-us-map-1786851833"></link>
            <id>https://news.lankasri.com/article/palestinian-territories-as-part-of-israel-us-map-1786851833</id>
            <summary type="text">காசா மற்றும் வெஸ்ட் பேங்க் பகுதியை இஸ்ரேலிய பகுதியாக சித்தரித்து அமெரிக்கா வெளியிட்ட வரைபடம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காசா மற்றும் வெஸ்ட் பேங்க் பகுதியை இஸ்ரேலிய பகுதியாக சித்தரித்து அமெரிக்கா வெளியிட்ட வரைபடம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய வரைபடம்</h2><p>அண்மையில் மத்திய கிழக்கு வரைபடம் ஒன்றை அமெரிக்காவின் மத்திய கட்டளைக் குழு வெளியிட்டு இருந்தது.</p><p>அதில், பாலஸ்தீனத்தின் காசா மற்றும் வெஸ்ட் பேங்க் பகுதிகள் இஸ்ரேலின் ஒருப்பகுதியாக காட்டப்பட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p> சென்ட் காம் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் மத்திய கிழக்கு பகுதிகளுக்கு மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">This is the plan which Arab kingdoms back huh. Centcom removes Palestine and give it all to Israel. <a href="https://t.co/LWwgGe5vxr">pic.twitter.com/LWwgGe5vxr</a></p>&mdash; Ali (@MerruX) <a href="https://x.com/MerruX/status/2088750061723296252?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p>இந்த சுற்றுப்பயணத்தின் போது தளபதி அட்மிரல் பிராட் கூப்பர், மத்திய கிழக்கு நாடுகளின் முக்கிய குடிமை மற்றும் ராணுவத் தலைவர்களுடன் உயர்மட்ட ஆலோசனைகளில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.</p><p>இதில், பஹ்ரைன், ஈராக், இஸ்ரேல், ஜோர்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba2c0e81-5286-46ca-8aa5-7afe39628811/26-6a8131fb65b49.webp' /></p><p>மேலும் சுற்றுப்பயணத்தின் போது இந்த நாடுகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க வீரர்களுடன் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் உரையாடினார்.</p><p> மத்திய கிழக்கு பகுதியில் கிட்டத்தட்ட 50,000க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T03:44:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்! அரசாங்கத்திடம் வலியுறுத்தும் ரணில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ranil-urges-referendum-on-government-s-decision-1786850820"></link>
            <id>https://ibctamil.com/article/ranil-urges-referendum-on-government-s-decision-1786850820</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.</p><p> 

நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் கட்சியை மறுசீரமைக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து ஐக்கிய தேசிய கட்சி நடத்திய அவரச செயற்குழு கூட்டங்களின் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>பெரிய அளவிலான மாற்றங்கள்</h2><p>
அதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், நாட்டில் தற்போது சுமார் பதினொரு இலட்சம் வழக்குகள் தேங்கிப்போயுள்ளதாகவும், இவற்றில் பெரும்பாலானவை நீதவான் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களிலேயே நிலுவையில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10ddcc18-0099-4640-a985-26767fc6f0a0/26-6a813198a354e.webp' /></p><p>
</p><p>
மேல் நீதிமன்றங்கள் அல்லது மாவட்ட நீதிமன்றங்களிலேயே அதிகப்படியான வழக்குகள் தேங்கியுள்ளன. நாட்டில் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைவாக முடிப்பதாக இருந்தால் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஒரு இலட்சம் வழக்குகளையாவது விசாரித்து முடிவிற்குக் கொண்டு வர வேண்டும் என்றும், இவ்வாறான பெரிய அளவிலான மாற்றங்களைச் செய்வதற்குப் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று அவசியமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>மக்கள் தீர்ப்பு</h2><p>
</p><p>
தொடர்ந்து பேசிய அவர், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்க அரசாங்கம் முடிவெடுத்திருந்தால் அதற்காக மக்கள் தீர்ப்பைப் பெற வேண்டியது கட்டாயமாகும் எனக் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63bc3ea2-e195-4f1c-8c42-7d53605627c5/26-6a8131995563e.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளுடனும் தங்களால் கலந்துரையாடப்பட்டு வருவதாகத் தெரிவித்த ரணில், மேலும் தமக்கு தனிப்பட்ட நபர்கள் மீது எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், தங்களது போராட்டம் கொள்கை ரீதியானது மட்டுமே என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p>
</p><p>
நாட்டு மக்களின் உரிமைகளை மக்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், மக்களின் அந்த ஜனநாயக உரிமைகளை யாராவது திருட முற்பட்டால் அதற்கு ஒருபோதும் இடம் கொடுக்க முடியாது என உறுதியாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-16T03:42:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA['மிகவும் சிறப்பாக பணியை செய்து வருகிறார்'.. முதலமைச்சர் விஜய் குறித்து பேசிய நடிகை ஸ்ரேயா சரண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/shriya-saran-talk-about-tamilnadu-cm-vijay-1786851177"></link>
            <id>https://cineulagam.com/article/shriya-saran-talk-about-tamilnadu-cm-vijay-1786851177</id>
            <summary type="text">பிரபல நடிகை ஸ்ரேயா சரண் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முதலமைச்சர் விஜய்

தமிழ் சினிமாவின் உச்ச நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல நடிகை ஸ்ரேயா சரண் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><p></p><h2>

முதலமைச்சர் விஜய்
</h2><p>
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய், 2024-ஆம் ஆண்டு கட்சியை தொடங்கி மக்களின் பேராதரவோடு இரண்டரை ஆண்டுகளில் ஆட்சியை பிடித்துவிட்டார். திரையுலக பிரபலங்கள் பலரும் <a href="https://www.youtube.com/watch?v=HKFfzog_Xno" target="_blank">விஜய்</a>யின் ஆட்சி குறித்து பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7e81de0-bbbb-4dbd-8800-6c508d83218f/26-6a812f6d858fa.webp' /></p><p>இந்நிலையில், பிரபல நடிகை ஸ்ரேயா சரண் தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி குறித்து சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f4ff362-433d-445d-ae88-8b2e7855aa13/26-6a812f6e392fe.webp' /></p><h2>

ஸ்ரேயா ஓபன் டாக்
</h2><p>
அவர் கூறியதாவது, "தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் மிகவும் சிறப்பாக பணியை செய்து வருகிறார். மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தாலும், எளிமையாகவும், இயல்பாகவும் இருக்கிறார். மக்களுக்கு தேவையானவை என்ன என்பதை நேரடியாக தொடர்புகொண்டு அறிந்து, அதற்கேற்ப செயல்பட்டு வருகிறார். மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற ஆர்வத்துடன் அவர் செயல்படுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது" என கூறினார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e4de290-24fe-4a6d-aa9a-61c38440655f/26-6a812f6ccfb55.webp' /></p><p>மேலும் பேசிய அவர், "இனி வரும் காலங்களிலும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்யின் பயணம் மிகவும் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்" என்றார். முதல்வர் குறித்த நடிகை ஸ்ரேயா சரணின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T03:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவசரமாக இடமாற்றப்பட்ட இஷாரா செவ்வந்தி! தொடர்பை பேண ஆர்வமாகும் பெண் கைதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sewwandi-arrest-investigation-prison-1786849374"></link>
            <id>https://tamilwin.com/article/sewwandi-arrest-investigation-prison-1786849374</id>
            <summary type="text">கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின் 
சூட்கேஸ் சிறைச்சாலை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக நீதி அமைச்சின...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின் 
சூட்கேஸ் சிறைச்சாலை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக நீதி அமைச்சின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.</p><p>
பெண்களை சிறைக்கு அழைத்துச்செல்லும்போது அவர்களுக்கு கைவிலங்கு இடப்படுவதில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.</p><p></p><h2>இஷாரா செவ்வந்திக்கான சலுகை&nbsp;</h2><p>

இதேவேளை, அவர் சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டபோது சட்டவிரோதமான எதுவும் நடக்கவில்லை என்பதால் எந்த விசாரணையும் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcce3955-be7f-429b-837c-c1ac6767f577/26-6a813066b4c3e.webp' /></p><p>அவர் தற்போது அங்குனுகொலப்பலெஸ்ஸ சிறையில் ஏனைய சந்தேகநபர்களுடன் தங்கியிருப்பதாகவும், அவருக்கு எந்தவிதமான சிறப்பு சலுகைகளும் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
இதற்கிடையில், அங்குனுகொலப்பலெஸ்ஸ சிறையில் உள்ள பல கைதிகள் இஷாரா செவ்வந்தியை பற்றி அறிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
</p><p>
இருப்பினும், சிறைச்சாலை அதிகாரிகள் இஷாரா செவ்வந்தியை மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், அதனால் அவருடன் அதிக தொடர்பைப் பேண முடியாது என்றும் அங்குனுகொலப்பலெஸ்ஸ சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T03:38:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடுவெல பகுதியில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/special-traffic-plan-in-the-kaduwela-area-today-1786850195"></link>
            <id>https://ibctamil.com/article/special-traffic-plan-in-the-kaduwela-area-today-1786850195</id>
            <summary type="text">கடுவெல பகுதியைச் சுற்றி விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.சித்த ரன்கடு பத்தினி தேவாலயத்தின் தீர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடுவெல பகுதியைச் சுற்றி விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>சித்த ரன்கடு பத்தினி தேவாலயத்தின் தீர்த்த உற்சவ வருடாந்த பெரஹெரா காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>
 

குறித்த தேவாலயத்தின் ஊர்வலம் இன்று (16.08.2026) காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வீதி உலா வரவுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.</p><p></p><p>
</p><h2>பொதுமக்களுக்கு வேண்டுகோள்</h2><p>
 

இந்த ஊர்வலம் தேவாலயத்திற்கு அருகில் தொடங்கி 143 அவிசாவளை - கொழும்பு பேருந்து வீதி வழியாக கடுவெல ராஜசிங்க பாலத்தின் மீது பயணித்து பண்டாரவத்தை, பியகம பகுதிக்கு சென்று தீர்த்த உற்சவ சடங்கு நிறைவடைந்த பின்னர், மீண்டும் அதே வீதி வழியாக கடுவெல சந்தியைக் கடந்து தேவாலயத்தை சென்றடைய உள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b390c6ce-ed6e-4e91-b7ca-41fb543c3aa5/26-6a812e8236d77.webp' /></p><p>அதற்கமைய, ஊர்வலம் செல்லும் காலப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அப்பகுதி வழியாகப் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பொதுமக்களுக்கு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.</p><p>

 

மாற்று வழிகள்:


143 - அவிசாவளை - கொழும்பு பேருந்து வீதியில் வெலே சந்தியிலிருந்து போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும் வேளையில், மாற்று வழிகளாக 697 பேருந்து வீதியில் பட்டியவத்தை வீதி வழியாக 177 கடுவெல - கொள்ளுப்பிட்டி பேருந்து வீதியை அடைந்து, மாலபே திசையை நோக்கி உள்ள ராஜசிங்க மாவத்தை வழியாக மீண்டும் 143 அவிசாவளை - கொழும்பு பேருந்து வீதியை அடைந்து பயணிக்க முடியும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T03:29:26+00:00</updated>
        </entry>
    </feed>
