<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-08T03:39:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதுவசந்தம் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ஜீ தமிழ் தொடர் நடிகை... யார் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-new-entry-in-pudhu-vasantham-serial-1788836173"></link>
            <id>https://cineulagam.com/article/actress-new-entry-in-pudhu-vasantham-serial-1788836173</id>
            <summary type="text">புதுவசந்தம்சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதுவசந்தம் சீரியல் விரைவில் முடிவடையப் போவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பில் இருந்தே தகவல் வெளியாக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதுவசந்தம்</h2><p>சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதுவசந்தம் சீரியல் விரைவில் முடிவடையப் போவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பில் இருந்தே தகவல் வெளியாகி வருகிறது.</p><p> கடந்த ஜுலை 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது, 950 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6687eee-71b3-409d-953a-ac494b4d78ea/26-6a9f7b3b50eec.webp' />&nbsp;&nbsp;</p><p>
ஒற்றைப் பிள்ளையாக வளர்ந்த நாயகி, கூட்டுக் குடும்பத்தில் மருமகளாகச் சென்று அங்கு சந்திக்கும் சவால்களையும், கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரின் அன்பை எவ்வாறு பெறுகிறாள் என்பதை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
</p><p>இந்த தொடரில் ஷியாம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக சோனியா சுரேஷும் நடித்து வந்தனர்.
</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">நியூ என்ட்ரி</span></p><p>
விரைவில் சீரியல் முடிவடைகிறது என செய்திகள் வலம் வந்துகொண்டிருக்கும் நிலையில் இப்போது தொடரில் ஒரு நடிகையின் நியூ என்ட்ரி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. </p><p>அதாவது ஜீ தமிழில் கார்த்திகை தீபம், பூவே பூச்சூடவா சீரியல்களில் நடித்த தாணு கண்ணன் இப்போது புதுவசந்தம் தொடரில் நியூ என்ட்ரி கொடுக்கிறாராம். ஆனால் என்ன கதாபாத்திரம், என்ட்ரி குறித்த தகவல் வெளிவரவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d846993e-4dee-4c18-8372-c56d2519edee/26-6a9f7b3a77582.webp' /></p>]]></content>
            <updated>2026-09-08T03:30:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/grade-5-scholarship-exam-answer-sheet-recorrection-1788836108"></link>
            <id>https://ibctamil.com/article/grade-5-scholarship-exam-answer-sheet-recorrection-1788836108</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மீளாய்வு செய்வது குறித்து&amp;nbsp;பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மீளாய்வு செய்வது குறித்து&nbsp;பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.</p><p>அதன்படி, விடைத்தாள்களை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் நேற்று (07) முதல் செப்டெம்பர் 21 ஆம் திகதி வரை இணையவழியில் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p><p> </p><p>அதற்கமைய தகுதிபெற்ற விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் உரிய இணையத்தளத்தின் ஊடாக தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள்</h2><p>இந்த நிலையில் பரீட்சார்த்தி கல்வி கற்கும் பாடசாலையின் அதிபரால், பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி [<a href="https://onlineexams.gov.lk/" target="_blank">https://onlineexams.gov.lk</a>] என்ற இணையத்தளத்திலுள்ள SCHOOL LOGIN பகுதிக்குள் பிரவேசித்து இந்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cda01029-62b6-4064-950b-8a96b1ba3a51/26-6a9f7ed50dbfa.webp' /></p><p>இதேவேளை 2026 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம் 9ஆம் திகதி நடைபெற்ற நிலையில்&nbsp;289,867 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.</p><p>இம்மாதம் 02ஆம் திகதி வெளியான பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில்&nbsp;குறித்தப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 56,000 பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T03:18:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த பாதுகாப்பில் சிறைச்சாலையிலிருந்து நாடாளுமன்றம் வரும் நாமல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-allowed-attend-parliament-sessio-1788834583"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-allowed-attend-parliament-sessio-1788834583</id>
            <summary type="text">விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு இன்றைய தினம் நடைபெறும் நாடா...</summary>
            <content type="html"><![CDATA[<p>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு இன்றைய தினம் நடைபெறும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>நாடாளுமன்றப் பொதுச்செயலாளர் விடுத்த அறிவித்தலுக்கு அமைய, நாமல் ராஜபக்சவை அமர்வில் கலந்துகொள்ளச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><h2>கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள்&nbsp;</h2><p>நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் கலந்துகொள்வதற்கு ஏற்பாடுகளை செய்யுமாறு, நாடாளுமன்ற செயலாளர் நாயகம், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc83830f-c132-4a17-8cc4-0c77d7f448bd/26-6a9f7cf92950f.webp' /></p><p>&nbsp;எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்குத் தேவையான வசதிகளைச் செய்து தருமாறு நாமல் ராஜபக்ச விடுத்த கோரிக்கைக்கு அமையநாடாளுமன்றத்தின் விதிகள் மற்றும் தற்போதுள்ள மரபுகளின்படி, இது தொடர்பாக மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது.</p><p>
அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று (08) நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p>பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய எயார்பஸ் (Airbus) விமானங்கள் கொள்முதல் மோசடியில் சந்தேகத்தின் பேரில் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு, செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த செப்டெம்பர் 4 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T03:14:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தத்தின் ஊடாக நீதித்துறையின் சுதந்திரத்துக்கு மரண அடி : சஜித் கடும் சாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/judiciary-through-the-22nd-amendment-1788835886"></link>
            <id>https://tamilwin.com/article/judiciary-through-the-22nd-amendment-1788835886</id>
            <summary type="text">அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக நீதித்துறையை நிறைவேற்றுத்துறையின்
அடிமைத்தனத்துக்கு உட்படுத்தி, அதன் சுதந்திரத்துக்கு அரசு மரண அடி கொடுத்து
வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக நீதித்துறையை நிறைவேற்றுத்துறையின்
அடிமைத்தனத்துக்கு உட்படுத்தி, அதன் சுதந்திரத்துக்கு அரசு மரண அடி கொடுத்து
வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.</p><p>

மாத்தளையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>பாரிய அளவிலான முதலீட்டாளர்கள்</h2><p>மேலும் தெரிவிக்கையில்,

"ஜனநாயகத்துக்கான வெளியை இந்த அரசு இல்லாமல் செய்துள்ளது. 22ஆவது
திருத்தத்தின் ஊடாக நீதித்துறையின் சுதந்திரத்துக்கு மரண அடி கொடுத்து,
நிறைவேற்றுத்துறையின் அதிகாரங்களைப் பலப்படுத்திக்கொண்டு, நீதித்துறையை
ஜனாதிபதியின் அடிமைத்தனத்துக்கு உட்படுத்த அரசு முயற்சிக்கின்றது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f807f6c-186e-4803-ba7b-84ac1ace4993/26-6a9f7b2390db5.webp' /></p><p>இது 220
இலட்சம் மக்களின் ஜனநாயக உரிமைக்குப் பாரிய சவால்களை விடுகின்றது.
</p><p>
இந்த அரச தரப்பினர் பேச்சுரிமை, ஒன்று கூடும் உரிமை, தாம் விசுவாசம் கொள்ளும்
கொள்கைகளை ஏற்றுக்கொள்ளுதல் போன்றவற்றை இல்லாமல் செய்து, நாட்டை ஜே.வி.பியின்
சர்வாதிகார ஆட்சிக்குக் கொண்டு செல்ல முற்படுகின்றனர்.&nbsp;</p><p>இந்த அரசமைப்புத் திருத்தத்தின் ஊடாக நிறைவேற்றுத்துறை நீதித்துறையில் தாக்கம்
செலுத்துகின்றது என வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நினைத்தால், நாட்டுக்கு
வரவிருக்கும் முதலீடுகளும் இல்லாது போய்விடும். </p><p>தற்போதும் கூட அரசால் பாரிய
அளவிலான முதலீட்டாளர்களை நாட்டுக்கு அழைத்துவர முடியாமல் போயுள்ளதை நாம்
கவனத்தில் கொள்ள வேண்டும்.
</p><p>
தேர்தல் காலத்தில் பல கூட்டங்களை நடத்தி மக்களுக்கு வெற்றுப் பொய்
வாக்குறுதிகளை வழங்கி, தற்போது 2 வருட நிறைவைக் கொண்டாடும் இந்த அரசு, மேலும்
பல கூட்டத் தொடர்களை நடத்தி அந்தப் பொய்களை உறுதிப்படுத்திக்கொண்டு
செல்கின்றது.&nbsp;</p><h2>புள்ளடி இட்ட மக்களுக்கு</h2><p>இந்த அடக்குமுறைசார், ஏதேச்சதிகாரம் சார்ந்த அரசை நாம் தோற்கடிக்க வேண்டும்.
விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் என 220 இலட்சம் மக்களையும், மக்களின் நலன்களையும்
பாதுகாக்கும் அரசைக் கொண்டுவர வேண்டும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8ba3e76-2fe2-4b55-ba93-5bbbb237273e/26-6a9f7b246730c.webp' /></p><p>
தற்போதைய அரசின் பொய் உரைக்கும் கூட்டங்களுக்கு ஏமாந்து நாட்டின் ஒட்டுமொத்த
மக்களும் அநாதரவாகியுள்ளனர். </p><p>வயல் நிலங்கள் செழிப்படையும், தொழிற்சாலைகள்
உருவாகும் யுகம் முடிவடைந்து, தொழிற்சாலைகள் நாட்டை விட்டுச் செல்லும் யுகமே
இன்று உருவாக்கப்பட்டுள்ளது.
</p><p>
நாட்டில் ஏற்கனவே அமைந்திருக்கும் வெளிநாட்டு முதலீடுகளைப் பாதுகாத்துக்கொள்ள
முடியாத அரசாக இது காணப்படுகின்றது. முறைமையில் மாற்றத்துக்காகப் புள்ளடி இட்ட
மக்களுக்கு மேற்பார்வைக்கு மாத்திரம் சில விடயங்களைக் காட்டிவிட்டு, உண்மையான
மாற்றத்துக்கான நடவடிக்கைகளை எடுக்காமல் தடம்மாறிச் செல்கின்றனர்.</p><p>அரசுக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாமல் போயுள்ளது.
வாக்குறுதியளித்தபடி 'விட்ஸ்' ரக கார் கிடைத்தபாடில்லை, 33 வீதத்தால்
மின்சாரக் கட்டணம் குறைந்தபாடில்லை, துறைமுகத்தில் இறக்கப்படும் விலைக்கு
எண்ணெய் கிடைத்தபாடில்லை. அஸ்வெசும பயனாளர்கள் கூட இன்று பட்டியல்களிலிருந்து
வெட்டப்படுகின்றார்கள்.
</p><p>
மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நிவாரணங்களும் துண்டிக்கப்படுகின்றன.
இவ்வாறானதொரு நிலையில், ஒருவருக்கு ஒரு மாதத்துக்கு 17 ஆயிரத்து 315 ரூபாவை
வைத்துக்கொண்டு 30 நாள்களுக்கு வாழ முடியும் என அரசு கூறுவது வேடிக்கையானது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T03:04:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்மார்ட்டல் திரைப்படம் 5 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/immortal-movie-4-days-box-office-1788836085"></link>
            <id>https://cineulagam.com/article/immortal-movie-4-days-box-office-1788836085</id>
            <summary type="text">ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹர் நடிப்பில் உருவாகி சென்ற வாரம் வெளியான &#039;இம்மார்ட்டல்&#039; திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹர் நடிப்பில் உருவாகி சென்ற வாரம் வெளியான 'இம்மார்ட்டல்' திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><p>
</p><h2>
ஜி.வி. பிரகாஷ் குமார் </h2><p>

தமிழ் சினிமாவில் பல சூப்பர்ஹிட் ஆல்பங்களை தந்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் டார்லிங் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதை தொடர்ந்து திரிஷா இல்லனா நயன்தாரா, சர்வம் தாள மயம், பேச்சுலர், அடியே, ஹாப்பி ராஜ் உள்ளிட்ட 25 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f6b1094-a6a1-4480-8740-e3f3827dfb3b/26-6a9f78f8ad095.webp' /></p><p>
</p><h2>
இம்மார்ட்டல்</h2><p>

இவர் நடிப்பில் சென்ற வாரம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான திரைப்படம் இம்மார்ட்டல். அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்க, சென்சேஷனல் நடிகை கயாடு லோஹர் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4e3395a-945a-4a35-b49f-8ae00c3f6317/26-6a9f78f962361.webp' /></p><p>ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வெளியான '<a href="https://www.newindianexpress.com/entertainment/review/2026/Sep/05/tamilreview2026sep04immortal-movie-review-coherent-chills-sporadic-slumps" target="_blank">இம்மார்ட்டல்</a>' படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளன. அதுமட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வரவேற்பை பெற்று, நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து வருகிறது.
</p><h3>
வசூல் விவரம்</h3><p>

'இம்மார்ட்டல்' திரைப்படம் வெளியாகி 4 நாட்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில், இதுவரை உலகளவில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, 4 நாட்களில் இப்படம் ரூ. 7 கோடி வசூல் செய்துள்ளது. வார இறுதியை தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான நேற்றும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74762216-1e69-418e-8087-3f3234cd7662/26-6a9f78fa1768a.webp' /></p><p>4 நாட்களில் உலகளவில் ரூ. 7 கோடி வசூல் வந்துள்ள நிலையில், இனி வரும் நாட்களில் 'இம்மார்ட்டல்' திரைப்படம் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p>]]></content>
            <updated>2026-09-08T03:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று இலங்கை வரும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indian-defence-minister-arrives-in-sri-lanka-today-1788835600"></link>
            <id>https://ibctamil.com/article/indian-defence-minister-arrives-in-sri-lanka-today-1788835600</id>
            <summary type="text">இந்தியாவின் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள்
உத்தியோகபூர்வ பயணமாக இன்று செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

பாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள்
உத்தியோகபூர்வ பயணமாக இன்று செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
</p><p>
பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள்
அடங்கிய உயர்மட்டக் குழு ஒன்றும் அவருடன் இந்த விஜயத்தில் இணைந்துள்ளது.
</p><p>
இந்தப் பயணத்தின்போது, இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் இலங்கையின்
உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்து பல்வேறு முக்கிய இருதரப்பு விவகாரங்கள்
குறித்துக் கலந்துரையாடவுள்ளதுடன், கொழும்பில் உள்ள இந்திய வம்சாவளியினரையும்
சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.</p><p></p><p>
</p><h2>அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை</h2><p>
இது குறித்து மத்திய தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

"இந்தியாவும் இலங்கையும் ஆழமான நாகரிகப் பிணைப்புகளையும், பாதுகாப்பு,
பொருளாதாரம், வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள்
ஆகியவற்றின் அடிப்படையில் பன்முக ஒத்துழைப்பையும் பகிர்ந்து கொள்கின்றன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8edacdbb-214a-4b46-ae02-97755278df96/26-6a9f78873bd5e.webp' /></p><p>
இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய பொருளாதார உதவியும்,
2025 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட டித்வா புயலின் போது மீட்புப் பணிகளில்
களமிறங்கிய முதல் நாடுகளில் ஒன்றாக இந்தியா உதவிக்கரம் நீட்டியதும் இவ்விரு
தரப்பு உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளன.
</p><p>
இது, 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' என்ற கொள்கை மீதான இந்தியாவின்
தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கின்றது.
</p><p>
பாதுகாப்புத்துறை அமைச்சரின் இந்தப் பயணம் இந்தியா - இலங்கை இடையேயான
இருதரப்பு உறவுகளை மேலும் புதிய உயரத்துக்குக் கொண்டு செல்லும் என
எதிர்பார்க்கப்படுகின்றது என்றுள்ளது</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T02:57:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருடப்பட்ட ஆயிரக்கணக்கான கணக்குகள்..! இலங்கையில் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bank-accounts-have-been-stolen-from-the-owners-1788834716"></link>
            <id>https://tamilwin.com/article/bank-accounts-have-been-stolen-from-the-owners-1788834716</id>
            <summary type="text">இலங்கையில் இணையம் வழியாக தனிநபர்களின் ஆயிரக்கணக்கான வங்கிக்கணக்கு எண்களை பயன்படுத்தி நடந்த பல நிதி மோசடிகள் கண்டறியப்பட்டுள்ளன.

குற்றப்புலனாய்வுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இணையம் வழியாக தனிநபர்களின் ஆயிரக்கணக்கான வங்கிக்கணக்கு எண்களை பயன்படுத்தி நடந்த பல நிதி மோசடிகள் கண்டறியப்பட்டுள்ளன.</p><p>

குற்றப்புலனாய்வுத்துறை மற்றும் மோசடி விசாரணைப்பிரிவும் இணைந்து நடத்திய தீவிர சோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
</p><p>
வாடகை அடிப்படையில் பணம் செலுத்தி வாங்கப்பட்ட வெளிநாட்டு வங்கிக்கணக்குகளிலிருந்து, மோசடிக்காரர்கள் பல மில்லியன் ரூபாய் பணத்தை மாற்றியுள்ளனர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><h2>பெரிய அளவிலான நிதிக்குற்றங்களுக்குப் பயன்படுத்தல்</h2><p>இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள், தனிநபர்களை இலாபகரமான வணிகங்களுடன் இணைப்பதாகவும், அவற்றிலிருந்து பெறப்படும் பணம் அந்த கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்றும் கூறி, அவர்களின் வங்கிக் கணக்கு எண்களைப் பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f437d11-3fb6-4847-a36f-f196c884273b/26-6a9f786113526.webp' /></p><p>
இதன்பின்னர், அந்த கணக்குகளில் சிறிதளவு தொகையை வரவு வைப்பதன் மூலம், கணக்கு வைத்திருப்பவரின் நம்பிக்கையை பெற்று கணக்கு வைத்திருப்பவரின் 'பின் எண்' மற்றும் பிற இரகசியத் தகவல்களைத் துல்லியமாகப் பெற்று, கணக்கு வைத்திருப்பவருக்குச் சிறிதும் சந்தேகம் ஏற்படாதவாறு, அந்த கணக்கு எண்களைப் பெரிய அளவிலான நிதிக் குற்றங்களுக்குப் பயன்படுத்துகின்றனர். </p><p>

குற்றப்புலனாய்வுத் துறைக்கு இதுபோன்ற சுமார் 500 முறைப்பாடுகள் வந்துள்ளன. </p><p>

வங்கிக் கணக்குகளைத் தவறாகப் பயன்படுத்தி மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, பலர் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட்டு உள்ளனர் என்று அத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><h2>&nbsp;சமூக ஊடகங்களில் விளம்பர மோசடி</h2><p> </p><p>

வீட்டிலிருந்தே வருமானம் ஈட்டும் தொழில்களில் சேருவதற்காக, ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டு, இணைய மோசடியாளர்கள் இந்த நோக்கத்திற்காக மக்களைத் திரட்டி வருவது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6af1eaa-5f91-4952-b6c7-6d9ffeb7c3c7/26-6a9f7861c2139.webp' /></p><p> 

இந்த மோசடியாளர்கள், தாங்கள் உள்ளூர் மற்றும் சர்வதேச புகழ்பெற்ற நிறுவனங்கள் மற்றும் வணிகங்களுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், லாபத்தின் ஒரு பகுதியை கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வழங்குவதாகவும் கூறுகின்றனர். </p><p>

இறுதியில், அந்த கணக்கு எண்கள் கிரிப்டோகரன்சிகள் மூலம் வெளிநாட்டு கடத்தல்காரர்களின் கைகளுக்கு செல்கின்றன. </p><p>

கணக்கு வைத்திருப்பவர்கள் தெரிந்தே அல்லது தெரியாமலேயே மோசடிக்கு உடந்தையாகும் பட்சத்தில் அவர்களும் சட்டத்தின் முன் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் குற்றப் புலனாய்வுத் துறை கூறியுள்ளது.</p><p>

எனவே ஒருவருக்குச் சொந்தமான எந்தவொரு வங்கிக்கணக்கையும் எந்த வகையிலும் வெளித் தரப்பினருக்கு மாற்றக்கூடாது என்று குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு எச்சரித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T02:52:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமலுக்கு சிறப்பு அனுமதி - தொடரும் சலுகைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/remanded-namal-rajapaksa-to-attend-session-1788833170"></link>
            <id>https://ibctamil.com/article/remanded-namal-rajapaksa-to-attend-session-1788833170</id>
            <summary type="text">விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு இன்றைய தினம் நடைபெறும் நாடா...</summary>
            <content type="html"><![CDATA[<p>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு இன்றைய தினம் நடைபெறும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>நாடாளுமன்றப் பொதுச்செயலாளர் விடுத்த அறிவித்தலுக்கு அமைய நாமல் ராஜபக்ஷவை நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>

குறித்த விடயத்தை சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.

&nbsp;</p><p></p><h2>பிரேரணை&nbsp;</h2><p>செப்டெம்பர் மாதத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடும் என நாடாளுமன்றப் பொதுச்செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6791eea8-f556-4da3-a9b3-2f85acee3380/26-6a9f70c4ee542.webp' /></p><p>இன்று காலை 09.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நாடாளுமன்றம் கூடவுள்ளது</p><p>இன்றைய தினம் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 2489/22 மற்றும் 2493/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட இரு கட்டளைகள் அங்கீகாரத்திற்காக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.</p><p> 

அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.&nbsp;</p><p></p><h2>வீட்டில் இருந்து உணவு</h2><p>இதேவேளை கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவுக்கு வீட்டில் இருந்து உணவைப் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1bd66e0-4f07-49ad-92a9-fb2d21d8c2ab/26-6a9f70c5b1067.webp' /></p><p>அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூடத்திற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள ஊடகப் பேச்சாளர் செனக பல்லதென்ன தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், ஒரு நாளில் மூன்று பேர் வரையில் நாமல் ராஜபக்சவை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T02:35:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் மனைவியின் ஜாதகத்தில் ராஜயோகம் - ராஜபக்சர்களை நிலைகுலைய வைத்துள்ள தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-s-media-clarify-about-fake-news-1788748191"></link>
            <id>https://tamilwin.com/article/namal-s-media-clarify-about-fake-news-1788748191</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. </p><p>

அதில் முக்கியமானதாக நாமல் ராஜபக்சவின் மனைவி, அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாக அதிகளவில் பேசப்பட்ட வந்த நிலையில், அதனை நாமலின் ஊடகப் பிரிவு முற்றாக மறுத்துள்ளது. </p><p>

நாமல் மற்றும் அவரது மனைவி தொடர்பிலான செய்திகள் பொய்யான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை என நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.</p><p> </p><h2><b>

லிமினி ராஜபக்சவின் ஜாதகம் </b></h2><p>சமூக வலைத்தளங்களுக்கு வெளியிடப்பட்ட செய்தி ஒன்றில், நாமல் ராஜபக்ச சுகயீனமுற்றுள்ளதாகவும், அவருக்கு சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9622954d-3bcf-4cdd-b4cd-634de6ecedc9/26-6a9ec2abbad22.webp' /></p><p>அத்துடன், மற்றுமொரு பேஸ்புக் பக்கம் ஊடாகப் பரவிய பதிவில், நாமல் ராஜபக்சவின் இடத்தை நிரப்புவதற்காக அவரது மனைவி லிமினி ராஜபக்ச எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி அனுரராதபுரத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் மேடையில் ஏறவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. </p><p>

மற்றுமொரு செய்தி இணையத்தளம், லிமினி ராஜபக்சவின் ஜாதகம் முன்னாள் தலைவிகளான சிறிமா பண்டாரநாயக்க மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகியோரைப் போல பலத்தன்மை வாய்ந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன் அவரது வருகை புரட்சியை ஏற்படுத்தப் போவதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது. 

இவ்வாறு போலியாக தயாரிக்கப்பட்டு பகிரப்படும் செய்திப் பதிவுகளை போலி செய்தி என நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.</p><p> 

குறித்த தகவல்கள் முழுமையாக திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படும் பொய்யான பிரச்சாரங்கள் என நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவு மேலும் உறுதிப்படுத்துகிறது.</p>]]></content>
            <updated>2026-09-08T02:35:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலகக்கும்பல் தலைவரின் பரபரப்பு வாக்குமூலம்! மயானத்திலிருந்து அடுத்தடுத்து மீட்கப்பட்ட ஆயுதங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/several-guns-bus-lalia-murders-were-recovered-1788831849"></link>
            <id>https://tamilwin.com/article/several-guns-bus-lalia-murders-were-recovered-1788831849</id>
            <summary type="text">டுபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றக்கும்பலை சேர்ந்த பஸ் லலித் என்ற லலித் கண்ணங்கர என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றக்கும்பலை சேர்ந்த பஸ் லலித் என்ற லலித் கண்ணங்கர என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்&nbsp;சில துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.</p><p> ஹங்வெல்ல பகுதியிலுள்ள மயானமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பணியகம் தெரிவித்துள்ளது.</p><h2>மூன்று சந்தேகநபர்களும் கைது</h2><p>நாடு முழுவதும் 'பஸ் லலியா' செய்த கொலைகளில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் டி-56 ரக துப்பாக்கி உட்பட பல ஆயுதங்கள் நேற்று (7) இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6df5dd5b-3d07-43d9-b318-3ff93b8dd41c/26-6a9f6ec174619.webp' /></p><p>இந்த ஆயுதங்களுடன், லலித் கண்ணங்கரவின் பாதாள உலகக்கும்பலுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>இலங்கையில் கொலைகள், துப்பாக்கிச் சூடுகள், கடத்தல்கள் மற்றும் கப்பம் கோருதல் போன்ற பல குற்றச்சாட்டுகளுக்காக சர்வதேச பொலிஸாரின் (Interpol) சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டிருந்த நிலையில், இவர் டுபாயில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டார்.</p><p>இதனையடுத்து டுபாய் நீதிமன்ற உத்தரவின் பேரில் 2026 ஆகஸ்ட் 25 அன்று இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டு, தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றார்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T02:11:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இரவு நேரம் இடம்பெற்ற சோதனை : சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்ட உழவு இயந்திரம் சிக்கியது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/midnight-raid-in-jaffna-1788827685"></link>
            <id>https://ibctamil.com/article/midnight-raid-in-jaffna-1788827685</id>
            <summary type="text">யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில்
மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மருதங்கேணி காவல்துறையினரால் மடக்கி
பிடிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில்
மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மருதங்கேணி காவல்துறையினரால் மடக்கி
பிடிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்
</p><p>
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில் ,
</p><p>
கட்டைக்காடு பகுதியில் இரவு நேரத்தில் சில உழவு இயந்திரங்கள் மூலம்
சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி அருகில் உள்ள கேவில், நித்தியவெட்டை,
வெற்றிலைக்கேணி பகுதிகளுக்கு கொண்டு செல்வதாக மருதங்கேணி காவல்துறைக்கு இரகசிய
தகவல் கிடைத்தது.</p><h2>கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரம்</h2><p>இதனடிப்படையில் குறித்த பகுதியை நேற்று முன்தினம்(6) இரவு சுற்றிவளைத்த மருதங்கேணி
காவல்துறை பொறுப்பதிகாரி கெலும் பண்டார தலைமையிலான காவல்துறை குழுவினர் மணல் ஏற்றிய
உழவு இயந்திரத்தை கைப்பற்றினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bd9422c-5d23-4b83-b7fc-bcbe184170af/26-6a9f5826bf8b5.webp' /></p><p>
</p><p>
தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன்
கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி
காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
</p><p>
உழவு இயந்திரம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த நபர்
ஒருவருக்கு சொந்தமானதென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்</p><p>

குறித்த பகுதியில் இருந்து மேலும் ஒருவரும், கேவில் பகுதியில் இருந்து
இன்னொருவரும் தொடர்ச்சியாக களவாக மணல் ஏற்றிவருவது தொடர்பில் காவல்துறையினர் அவதானம்
செலுத்தியுள்ளதுடன்.விரைவில் அவர்களை கைது செய்யும் பணி
முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T01:35:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக நாடுகளிடம் ஈரானின் கோரிக்கை ; அமெரிக்காவிற்கு காத்திருக்கும் சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-s-appeal-to-world-nations-1788828274"></link>
            <id>https://canadamirror.com/article/iran-s-appeal-to-world-nations-1788828274</id>
            <summary type="text">அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒற்றுமையாகவும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என ஈரான் கோரியுள்ளது.

ஈரானின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒற்றுமையாகவும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என ஈரான் கோரியுள்ளது.
</p><p>
ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ce44754-f7ea-4444-ad6d-34cd4ed8cb62/26-6a9f5a738d1de.webp' /></p><p>

OIC என்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் புதிய பொதுச் செயலாளரான இஸ்மாயில் உல்ட் ஷெய்க் அகமதுடன் (Ismail Ould Cheikh Ahmed) தொலைபேசியில் உரையாடியபோது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.</p><p>

பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதல்கள் குறித்தும், ஈரானின் இறையாண்மைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்தும் இதன்போது OIC தலைவரிடம் அராக்சி தனது அதிருப்தியை பகிர்ந்து கொண்டார்.
</p><p>
பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய பதற்றமான சூழலை எதிர்கொள்ள இஸ்லாமிய நாடுகள் யாவும் தெளிவான மற்றும் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டியதன் அவசியத்தை அராக்சி இந்த தொலைபேசி உரையாடலின்போது வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-08T01:30:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த ராசிக்கு பொற்காலம் தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ketu-in-leo-golden-90-days-ahead-1788830724"></link>
            <id>https://jvpnews.com/article/ketu-in-leo-golden-90-days-ahead-1788830724</id>
            <summary type="text">&amp;nbsp;ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் கேது. இந்த கேது முக்தி, ஆன்மீகம், உள்ளுணர்வு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். தற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் கேது. இந்த கேது முக்தி, ஆன்மீகம், உள்ளுணர்வு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். தற்போது கேது சிம்ம ராசியிலும், மகம் நட்சத்திரத்திலும் உள்ளார்.</p><p style="text-align: justify;"> சிம்ம ராசியில் கேது டிசம்பர் மாதம் வரை இருந்து, பின் கடக ராசிக்குள் நுழைவார். எனவே அடுத்து வரும் 90 நாட்கள் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.இப்போது சிம்ம ராசியில் இருக்கும் கேதுவால் எந்த ராசிக்கு சிறப்பாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/593ae5eb-3d99-4074-a17c-561a79f656bf/26-6a9f640603982.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;உங்கள் ராசி உள்ளதா ?</h2><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify; "><b>

ரிஷபம் :</b>புதிய தொழிலை தொடங்கும் ஆசை இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "><b>


சிம்மம் :</b>புதிய நட்புகள் கிடைக்கும். அந்த நட்பால் எதிர்காலத்தில் நல்ல நன்மைகள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். அதை திறம்பட பயன்படுத்தினால் நல்ல உயரத்தை அடைவீர்கள். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; "><b>மகரம் :</b>வாழ்க்கையில் புதிய விஷயங்களை முயற்சிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட காலத்திற்குப் பிறகு உங்கள் நண்பரை/உறவினரைச் சந்திப்பது உங்கள் குடும்பத்திற்கு மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் தரும். மொத்தத்தில் அடுத்த 3 மாத காலம் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.</p>]]></content>
            <updated>2026-09-08T01:30:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு எம்.பி கள் மீது ஊழல் மோசடி விசாரணை ; கந்தசாமி பிரபு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/corruption-probe-against-batticaloa-mps-1788827813"></link>
            <id>https://jvpnews.com/article/corruption-probe-against-batticaloa-mps-1788827813</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மீது ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனவே ஊழல் மோசடி தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மீது ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. </p><p style="text-align: justify; ">எனவே ஊழல் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளில் தொடர்புபட்டவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்பட்டார்கள் சட்டம் தன் கடமையை சுயாதீனமாக செய்யும் என நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/210df6db-cff6-41bb-b16d-8b8b3437ab11/26-6a9f58a720c79.webp' /></p><h2 style="text-align: justify; ">திருட்டுக் கும்பல்</h2><p style="text-align: justify; ">
மட்டக்களப்பில் திங்கட்கிழமை (7) ஊழல் தொடர்பாக ஊடகவியலாளர் கேள்விக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
</p><p style="text-align: justify; ">
குற்றச்சாட்டுகள் தொடர்பாக மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p style="text-align: justify; ">சட்டத்திற்கு மதிப்பளித்து அனைவரும் செயல்பட வேண்டும் என்பதோடு, விசாரணையின் முடிவில் எட்டப்படும் தீர்மானங்கள் எவ்வித தலையீடுமின்றி நடைமுறைப்படுத்தப்படும்.
</p><p style="text-align: justify; ">

சட்ட ஆட்சியை நடைமுறைப்படுத்தும் ஒரு அரசாங்கம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எனவே ஜனாதிபதி வேட்பாளராக இருந்தவர்கள் ஆளுநராக இருந்தவர்கள் இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் அதே சட்டம் பாயும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
நாமல் ராஜபக்ச தற்போது சிறைவாசம் அனுபவித்து கொண்டிருக்கும் நிலையில் சமூகத்தில் பலவிதமான கருத்துக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது அதே நேரத்தில் முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் எதிர்க்கட்சி ஆளும் கட்சியாக இருந்த காலத்தில் ராஜபக்ச குடும்பத்தினரை 'திருடர்கள்' என பகிரங்கமாக விமர்சித்தார்.
</p><p style="text-align: justify; ">
இவ்வாறு ராஜபக்ஸக்கள் திருடர்கள் என சொன்ன ரணில் கடந்த காலத்தில் அவர்களுடன் சேர்ந்து ஆட்சி பீடம் ஏறிய அவர் இன்று அந்த திருடர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றார்

ரணிலுக்கு அன்று ராஜபக்ஷக்கள் திருடர்களாக தெரிந்தது இன்று அவர்கள் நல்லவர்கள் போல தெரிகின்றது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> ஆகவே இந்த திருட்டுக் கும்பலின் மகிந்த ராஜபக்ஷக்களின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க பெறுப்பேற்றுள்ளார்.</p><p style="text-align: justify; "> அவர்களின் செயல்பாடு இன்று மக்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள இந்த நாட்டை வங்குரோத்து அடைய காரணமாக இருந்தவர்களில் இவரும் ஒருவராக இருந்துள்ளதுடன் குற்ற செயல்களுடன் சம்மந்தமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இவா திருட்டு கூட்டங்களுடன் ஒன்று சேர்ந்து அவர்களை காப்பாற்ற முயற்சியில் ஈடுபடுகின்றார்.</p><p style="text-align: justify; ">
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நாட்டின் நீதித்துறை மற்றும் விசாரணை அமைப்புகள் முற்றிலும் சுயாதீனமாக இயங்கி வருகின்றன. சிறியவர்களாக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் குற்றம் நிருபிக்கப்பட்டால் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-08T01:29:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் இரு இளைஞர்களின் தகாத செயல் ; சோதனையில் காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-vavuniya-youths-involved-in-illegal-act-1788827136"></link>
            <id>https://jvpnews.com/article/two-vavuniya-youths-involved-in-illegal-act-1788827136</id>
            <summary type="text">போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றவிசாரணை பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.  

வவுனியா மாவட்ட குற்றவிசார...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றவிசாரணை பிரிவு பொலிசார் தெரிவித்தனர். </p><p style="text-align: justify; "> 

வவுனியா மாவட்ட குற்றவிசாரணை பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா கோவில்குளம் மற்றும் சமளங்குளம் பகுதியில் காலை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45a3fff4-f9ce-4952-9d46-ef9c473d8b94/26-6a9f560204a9e.webp' /></p><p style="text-align: justify; ">அவர்களிடம் இருந்து 1700போதை மாத்திரைகள் பொலிசாரால் மீட்கப்பட்டது.</p><p style="text-align: justify; ">

குறித்த கைது நடவடிக்கை வவுனியா மாவட்ட குற்றிவிசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. </p><p style="text-align: justify; ">


கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T01:29:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் முற்றுகையிடப்பட்ட வீடு ; அரங்கேறிய தகாத செயல் அம்பலம் ; வசமாக சிக்கிய ஒருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indecent-act-inside-besieged-house-in-tamil-area-1788829194"></link>
            <id>https://jvpnews.com/article/indecent-act-inside-besieged-house-in-tamil-area-1788829194</id>
            <summary type="text">மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் வீடு ஒன்றில் இடம்பெற்று வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை திங்கட்கிழமை (7) முற்றுகையிட்ட பொலிசார் உற்பத்தியில் ஈடுபட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் வீடு ஒன்றில் இடம்பெற்று வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை திங்கட்கிழமை (7) முற்றுகையிட்ட பொலிசார் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த ஒருவரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 1500 மில்லி லீற்றர் கசிப்பும், 83000 மில்லி லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்களை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்க்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து அவர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ தினமான திங்கட்கிழமை (7) ஆரையம்பதி செவநகர் பகுதியிலுள்ள குறித்த வீட்டை முற்றுகையிட்டனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cee7017-358b-4d4c-a4bd-6f793ceef0d5/26-6a9f5e0c36187.webp' /></p><p style="text-align: justify; ">

இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 54 வயதுடைய ஒரு வரை கைது செய்ததுடன் 1500 மில்லி லீற்றர் கசிப்பும், 83000 மில்லி லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்களை மீட்டனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

இதில் கைது செய்தவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-08T01:29:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாவல் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/benefits-of-eating-jamun-fruit-1788823792"></link>
            <id>https://jvpnews.com/article/benefits-of-eating-jamun-fruit-1788823792</id>
            <summary type="text">நாவல் பழத்தின் கொட்டையை உலர்த்தி பொடியாக்கி பயன்படுத்துவது பல்வேறு உடல்நல நன்மைகளை வழங்கக்கூடும் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 



குறிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாவல் பழத்தின் கொட்டையை உலர்த்தி பொடியாக்கி பயன்படுத்துவது பல்வேறு உடல்நல நன்மைகளை வழங்கக்கூடும் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> 



குறிப்பாக இதில் உள்ள நார்ச்சத்துகள் மற்றும் தாவரச் சேர்மங்கள் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு ஆதரவாக இருக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35e61886-f4c5-4b77-9387-2465ea43c0a7/26-6a9f48f19feb9.webp' /></p><h2>இரத்தச் சர்க்கரை</h2><p>சில ஆய்வுகளின்படி, நாவல் கொட்டையில் உள்ள இயற்கைச் சேர்மங்கள் இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவக்கூடும்.</p><p>



எனினும், நீரிழிவு நோயாளிகள் இதை மருந்துக்கு மாற்றாக பயன்படுத்தாமல், மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.</p><p>



நாவல் கொட்டைப் பொடியில் உள்ள நார்ச்சத்துகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, செரிமானத்தை சீராக்கவும் உதவக்கூடும்.</p><p></p><p> </p><p>



நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உடல் எடையைக் குறைக்கும் முயற்சிக்கும் துணையாக அமையலாம்.
</p><p>


இதய ஆரோக்கியம், குடல் செயல்பாடு மற்றும் உடலின் வளர்சி மாற்றத்தை ஆதரிக்கும் தன்மையும் இதில் இருக்கலாம் என சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. </p><p>



நாவல் கொட்டைப் பொடியை பயன்படுத்த விரும்புபவர்கள், வெதுவெதுப்பான நீரில் சிறிய அளவு கலந்து அருந்தலாம்.</p><p></p><p> </p><p>ஆனால் நீரிழிவு உள்ளிட்ட நீண்டகால நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள், இதை பயன்படுத்துவதற்கு முன் வைத்தியரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.



இவை பொதுவான தகவல் நோக்கங்களுக்காக வழங்கப்பட்டவையே. </p><p>உங்கள் உணவுப்பழக்கம் மற்றும் அன்றாட வாழ்க்கை முறையில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன், தகுந்த வைத்தியரிடம் ஆலோசனை மேற்கொள்ளவும்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T01:29:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊரையே பல நாட்கள் அலற வைத்த தம்பதி ; வினோதமான பூஜைகளால் பீதியில் உறைந்த கிராமம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/couple-who-terrified-the-entire-village-for-days-1788808936"></link>
            <id>https://jvpnews.com/article/couple-who-terrified-the-entire-village-for-days-1788808936</id>
            <summary type="text">திருப்பத்தூர் அருகே &quot;என் மீது கருப்பசாமி இறங்கியுள்ளார்&quot; எனக் கூறி, கணவனும் மனைவியும் கடந்த 4 நாட்களாக ஆடைகளின்றி&amp;nbsp; ஊருக்குள் வலம் வந்த சம்பவம் அப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">திருப்பத்தூர் அருகே "என் மீது கருப்பசாமி இறங்கியுள்ளார்" எனக் கூறி, கணவனும் மனைவியும் கடந்த 4 நாட்களாக ஆடைகளின்றி&nbsp; ஊருக்குள் வலம் வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் திகைப்பையும்,பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


</p><p style="text-align: justify; ">இந்த தம்பதியினர் கடந்த சில நாட்களாக வீட்டின் உள்ளே வினோதமான பூஜைகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5eeed6db-6cb8-4680-af2c-90775a49900e/26-6a9f0eea0d6a6.webp' /></p><h2 style="text-align: justify; ">தீவிர விசாரணை&nbsp;</h2><p style="text-align: justify; ">கடந்த 4 நாட்களாக தெருக்களில் அவர்கள் வலம் வர, இதை பார்த்து அதிர்ச்சியடைந்த&nbsp; பொதுமக்கள் அவர்களை தட்டிக்கேட்டபோது, "எங்களை எதிர்த்தால் நீங்கள் அனைவரும் தடம் தெரியாமல் நாசமாகிவிடுவீர்கள்" என கணவன்-மனைவி இருவரும் ஊர் மக்களை நோக்கி சாபமிட்டு, மிரட்டல் விடுத்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">&nbsp;அதுமட்டுமின்றி, தங்களை சாமி வந்த கோலத்தில் அப்படியே மொபைலில் 'லைவ் வீடியோ' எடுத்து சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக்கும்படியும் ஊர் மக்களிடம் வற்புறுத்தி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> பொதுமக்கள், ஒருகட்டத்தில் பொறுமையிழந்து ஆவேசமடைந்தனர். சாமியாடிய தம்பதியினரை மடக்கி பிடித்து, கயிறுகளால் கட்டி வைத்தனர். </p><p style="text-align: justify; ">&nbsp;தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், பொதுமக்களின் பிடியில் இருந்த தம்பதியினரை மீட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-08T01:29:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்திற்கு மெட்ரோ பேருந்து சேவை ; அமைச்சர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/metro-bus-service-coming-to-jaffna-1788801457"></link>
            <id>https://jvpnews.com/article/metro-bus-service-coming-to-jaffna-1788801457</id>
            <summary type="text">மெட்ரோ பேருந்து சேவையை மேல் மாகாணத்திற்கு அப்பால் விரிவுபடுத்தி காலி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மெட்ரோ பேருந்து சேவையை மேல் மாகாணத்திற்கு அப்பால் விரிவுபடுத்தி காலி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். </p><p style="text-align: justify; ">

இன்று (07) கடவத்தை மெட்ரோ டிப்போ முனையத்தின் செயல்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/774a4229-f2a6-463f-b8d3-2d844a4444d0/26-6a9ef1b2b7a2e.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;மெட்ரோ பேருந்து சேவை</h2><p style="text-align: justify; "> 

இம்மாதத்திற்குள் மெட்ரோ பேருந்து சேவையின் பேருந்துகளின் எண்ணிக்கையை 122 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மேலும் 50 பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.</p><p style="text-align: justify; "> 

அதன்படி, இந்த ஆண்டின் இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டின் முற்பகுதியில் மெட்ரோ பேருந்து சேவையை 172 பேருந்துகள் வரை விரிவாக்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். </p><p style="text-align: justify; ">

மெட்ரோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து பேருந்து சேவையை நடத்துவதற்கு எதிர்காலத்தில் தனியார் துறைக்கும் வாய்ப்பளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

இதற்கிடையில், நாட்டின் நகர போக்குவரத்து துறையை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், மெட்ரோ பேருந்து சேவைக்கு தேவையான உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, Clean Sri Lanka செயலகம், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் லங்கா மெட்ரோ டிரான்சிட் தனியார் நிறுவனம் ஆகியன இணைந்து மேற்கொண்டு வருகின்றன. </p><p style="text-align: justify; ">

இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கடவத்தை மெட்ரோ டிப்போ முனையத்தின் செயல்பாடுகள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. 

மெட்ரோ திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட முதலாவது டிப்போ முனையம் கடந்த 04 ஆம் திகதி பத்தரமுல்லை, தலங்கம பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "> 

மெட்ரோ பேருந்து சேவையின் நிர்வாகம், செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு பணிகளை வலுப்படுத்துவதற்காக முதற்கட்டமாக தலங்கம, கடவத்தை, ஏகல மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு 04 புதிய டிப்போக்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

தற்போது மெட்ரோ பேருந்து சேவையின் 01 ஆம் இலக்க வழியின் கீழ் மாகும்புரவிலிருந்து மகரகம ஊடாக கடவத்தை வரை சேவைகள் இயங்கி வருவதுடன், அந்த வழித்தடத்திற்கு 15 புதிய மெட்ரோ பேருந்துகளை ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

மேலும் பேருந்து நிறுத்தங்கள், ஒருங்கிணைந்த கட்டண முறைகள், டிப்போ வசதிகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட ஏனைய போக்குவரத்து சேவைகளுடனான தொடர்பை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

அத்துடன், பொதுப் போக்குவரத்து சேவையில் முக்கிய பங்காற்றும் இலங்கை போக்குவரத்து சபையை (CTB) மேலும் வலுப்படுத்துவதற்காக, இந்த ஆண்டின் இறுதிக்குள் 600 புதிய குளிரூட்டப்பட்ட (A/C) பேருந்துகளை இறக்குமதி செய்யவும், இலங்கை போக்குவரத்து சபையின் நிதியைப் பயன்படுத்தி மேலும் 200 பேருந்துகளைக் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.</p>]]></content>
            <updated>2026-09-08T01:28:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக முதல்வர் விஜய்யின் சட்டமன்ற உரை ; ஒரு மணி நேரத்தில் பதிவான விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-nadu-cm-vijay-s-assembly-speech-1788799733"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-nadu-cm-vijay-s-assembly-speech-1788799733</id>
            <summary type="text">தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று ஆற்றிய உரை டிஜிட்டல் தளங்களில் கவனம் பெற்றதாக கூறப்படுகிறது. குறிப்பாக பெண்களை அவமதிக்கும் பேச்சு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று ஆற்றிய உரை டிஜிட்டல் தளங்களில் கவனம் பெற்றதாக கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "> குறிப்பாக பெண்களை அவமதிக்கும் பேச்சுகளுக்கு எதிராக அவர் தெரிவித்த கருத்துகள் சமூக வலைதளங்களிலும் யூடியூப் தளத்திலும் வேகமாக பரவியதாக இந்த மதிப்பீடு தெரிவிக்கிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/110aa765-affa-418e-9cdf-24c92e13f74a/26-6a9eeaf77217e.webp' /></p><h2 style="text-align: justify; ">பார்வையாளர்</h2><p style="text-align: justify; "> 
முக்கிய தமிழ் செய்தி நேரலைகளை சேர்த்து பார்த்தால், ஒரே நேரத்தில் சுமார் 2.7 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்ததாக கூறப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">மேலும், உரை முடிந்த முதல் இரண்டு மணி நேரத்தில் வீடியோக்கள் மற்றும் கிளிப்புகள் மூலம் 18 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இவை அதிகாரப்பூர்வ ஒருங்கிணைந்த புள்ளிவிவரங்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p style="text-align: justify; "> 
பெண்கள்தான் தனது அரசியல் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும், பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளை பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்றும் விஜய் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> அந்த நேரத்தில் ஆன்லைன் பார்வையாளர் செயல்பாடுகள் 340 சதவீதம் வரை அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-08T01:27:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரிய ஊழல் மோசடியில் சிக்கப் போகும் பிரபல பெண் அரசியல்வாதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rossy-senanayake-in-investigation-1788755776"></link>
            <id>https://tamilwin.com/article/rossy-senanayake-in-investigation-1788755776</id>
            <summary type="text">கொழும்பு மாநகரசபையில் 2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான 15 வருட காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் பாரிய ஊழல்கள், மோசடிகள், முறைகேட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மாநகரசபையில் 2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான 15 வருட காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் பாரிய ஊழல்கள், மோசடிகள், முறைகேடுகள் மற்றும் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. </p><p>

இதனை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகள் தற்போது மிகத் தீவிரமடைந்துள்ளன.</p><p>

குறித்த விசாரணைகளுகளுக்கமைய, கொழும்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர்கள் 100 பேருக்கு மேற்பட்டோரிடம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவு நீண்ட விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.</p><p>
</p><h2><b>
மோசடிகள், முறைகேடுகள்</b></h2><p>விசாரணைகளில் சிக்கியவர்களில் முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க முக்கியமானவராக உள்ளவராக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e354273-fbc7-44e6-8086-2f639eb5db6a/26-6a9e4d4eef9bc.webp' /></p><p>அத்துடன், அரசாங்கக் கட்சியைச் சேர்ந்த மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல முன்னாள் உறுப்பினர்களும் அதில் உள்ளடங்குகின்றனர்.
</p><p>
கொழும்பு மாநகரசபைக்குள் இடம்பெற்ற பல மோசடிச் செயற்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவு மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது கொழும்பு நகரில் குறைந்த வருமானம் பெறும் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு ரூபா 3,500 வீதம் பணம் வழங்கும் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. </p><p> 

எனினும், அங்கு உண்மையான குறைந்த வருமானம் பெறுவோருக்குப் பதிலாக முன்னாள் உறுப்பினர்களால் வழங்கப்பட்ட பட்டியலுக்கே வழங்கப்பட்டுள்ளது. </p><h3><b>நிதி மோசடி</b></h3><p>முன்னாள் உறுப்பினர்களின் அரசியல் ஆதரவாளர்களின் பட்டியல்களுக்குரிய வவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளமைக்கான சாட்சிகள் வெளிவந்துள்ளன.
 
உறுப்பினர்கள் பலரும் தமது உத்தியோகபூர்வ அலுவலகங்களை நடத்திச் செல்வதாகக் கூறியும் ஏமாற்றியுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea52bc21-b4d4-4fdb-a21f-eafb7aa2460d/26-6a9e4d4fc344b.webp' /></p><p>கொழும்பு பிரதான நகரங்களை அண்மித்த வர்த்தக மதிப்புமிக்க இடங்களில் வாகனத் தரிப்பிடத்திற்காகக் காணிகளை ஒதுக்கியுள்ளனர்.
</p><p>
பின்னர் அந்த இடங்களை பெருமளவு பணத்திற்குத் தனியார் வர்த்தக நிலையங்களுக்கு விற்பனை செய்து நிதித் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளமையும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
எதிர்காலத்தில் இத்தகைய மோசடிகள் மற்றும் முறைகேடுகளுடன் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படும் முன்னாள் உறுப்பினர்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு முன்னால் பகிரங்க சாட்சி விசாரணை ஒன்றை நடத்துவதற்கும் ஆணைக்குழுவின் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
</p>]]></content>
            <updated>2026-09-08T01:27:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நட்சத்திர வீரருக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-order-about-dilantha-1788830405"></link>
            <id>https://tamilwin.com/article/court-order-about-dilantha-1788830405</id>
            <summary type="text">இலங்கையின் நட்சத்திர மோட்டார் பந்தய வீரர் டிலந்த மாலகமுவ உள்ளிட்ட நால்வருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் நட்சத்திர மோட்டார் பந்தய வீரர் டிலந்த மாலகமுவ உள்ளிட்ட நால்வருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.</p><p>
கொழும்பு பகுதியில் போலி ஆவணங்களைத் தயாரித்து காணிகளை விற்பனை செய்யும் மோசடியுடன் தொடர்புபட்டிருப்பதாக டிலந்த உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா முன்னிலையில் இக்கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போது, குறித்த நபர்களை முதலில் இவ்வழக்கின் சந்தேகநபர்களாகப் பெயரிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதவான் அறிவுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58ad2af7-f0f6-4554-867d-a8ffba8a5efa/26-6a9f62c7209e8.webp' /></p><p>
போலி ஆவணங்கள் மூலம் கொழும்பிலுள்ள காணிகளை பலவந்தமாக கையகப்படுத்தி விற்பனை செய்யும் பாரிய மோசடி தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், விசாரணைகளின் போது இவர்கள் வெளிநாடு சென்றால் விசாரணைக்கு இடையூறு ஏற்படும் எனவும் கூறி இந்த பயணத்தடையைக் கோரப்பட்டது.
</p><p>டிலந்த மாலகமுவவைத் தவிர சாந்த விதானகமகே, டெஸ்மண்ட் அமரசிங்க மற்றும் சமன் ஜெயவீர ஆகிய நால்வருக்கு எதிராகவே இப்பயணத்தடை கோரப்பட்டிருந்தது.
</p><p>கொழும்பு 07, பார்ன்ஸ் பிளேஸ் இலக்கம் 18 இல் அமைந்துள்ள 43 பேர்ச் காணியொன்றை போலி ஆவணங்கள் மூலம் தயாரித்து, பிரபல வாகன விற்பனை நிறுவனமொன்றிற்கு 1 பில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்தமை தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>
இக்காணியின் உண்மையான பெறுமதி 250 கோடி ரூபாய்க்கும் அதிகமானது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் பன்னிபிட்டியவைச் சேர்ந்த 80 வயதான ஆரியபால திஸாநாயக்க என்ற நபர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>காணி விற்பனை மூலம் கிடைத்த பணம் குறித்த நால்வரில் மூவருக்கு இடையே பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், டிலந்த மாலகமுவ என்பவருக்குப் பணத்திற்குப் பதிலாக 14 ஆடம்பர சொகுசு மோட்டார் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை கவனத்தில் கொண்ட மேலதிக நீதவான், விளக்கமறியலில் உள்ள ஆரியபால திஸாநாயக்கவின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டார்.
</p><p>மேலும், வெளிநாட்டு பயணத்தடை கோரப்பட்டுள்ள நபர்களை இச்சம்பவத்தின் சந்தேகநபர்களாகப் பெயரிட நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T01:20:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[2030-க்குள் மனிதர்கள் விலங்குகளுடன் பேச AI உதவும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ai-may-let-humans-talk-to-animals-by-2030-1788830558"></link>
            <id>https://news.lankasri.com/article/ai-may-let-humans-talk-to-animals-by-2030-1788830558</id>
            <summary type="text">AI help humans talk to animals by 2030: புதிய தொழில்நுட்ப முன்னேற்றம் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே நேரடி தொடர்பை ஏற்படுத்தும் வாய்ப்பை உருவா...</summary>
            <content type="html"><![CDATA[<p>AI help humans talk to animals by 2030: புதிய தொழில்நுட்ப முன்னேற்றம் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே நேரடி தொடர்பை ஏற்படுத்தும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.</p><p>
</p><h2>
விலங்குகளுடன் உரையாட முடியும்</h2><p>செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் 2030-க்குள் மனிதர்கள் விலங்குகளின் மொழியைப் புரிந்து கொண்டு அவர்களுடன் உரையாட முடியும் என சமீபத்திய ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/607c87b9-8221-477d-8867-b7c67c82fda3/26-6a9f635fcf333.webp' /></p><p>இந்த ஆய்வில், விலங்குகள் உபயோகிக்கும் ஒலிகள், சைகைகள் மற்றும் உடல் மொழியை AI மூலம் பகுப்பாய்வு செய்து, அதனை மனிதர்களுக்குப் புரியும் வகையில் மொழிபெயர்க்க முடியும் என கூறப்பட்டுள்ளது. </p><p>அதேபோல், மனிதர்களின் சொற்கள் மற்றும் உணர்வுகளை விலங்குகள் புரிந்துகொள்ளும் வகையில் மாற்றவும் AI உதவும்.
</p><p></p><p>விலங்குகளின் தொடர்பு முறைகள் மிகவும் சிக்கலானவை. அவற்றை மனிதர்கள் நேரடியாகப் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் AI, பெரும் அளவிலான தரவுகளை சேகரித்து, ஒலியியல் மற்றும் நடத்தைப் படிமுறைகளை ஆராய்ந்து, விலங்குகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன் கொண்டது என்று 
ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
</p><p>
இந்த கண்டுபிடிப்பு, விலங்குகள் பாதுகாப்பு, பண்ணை வளர்ப்பு, செல்லப்பிராணி பராமரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, வனவிலங்கு பாதுகாப்பு துறையில், விலங்குகளின் தேவைகள் மற்றும் எச்சரிக்கைகளை நேரடியாக அறிந்து நடவடிக்கை எடுக்க முடியும்.
</p><p></p><p>மேலும், மனிதர்கள் தங்கள் செல்லப்பிராணிகளுடன் ஆழமான உறவை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும். நாய், பூனை போன்றவை எதை உணர்கின்றன, எதை விரும்புகின்றன என்பதை நேரடியாக அறிய முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இத்திட்டம் இன்னும் ஆரம்ப நிலையில் இருந்தாலும், 2030-க்குள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T01:19:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாதாரண தர மாணவர்கள் விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/speedy-re-correction-exam-results-requested-1788829589"></link>
            <id>https://tamilwin.com/article/speedy-re-correction-exam-results-requested-1788829589</id>
            <summary type="text">&amp;nbsp;2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மீள்மதிப்பீட்டு முடிவுகளை விரைவாக வெளியிடுமாறு மாணவர்கள் கோரிக்கை விடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மீள்மதிப்பீட்டு முடிவுகளை விரைவாக வெளியிடுமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>
இப் பரீட்சை முடிவுகள் தாமதமாவதால், வேறு பாடசாலைகளுக்கு மாற எதிர்பார்க்கும் மாணவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> 
 இதன் காரணமாகவே இக்கோரிக்கையை மாணவர்கள் முன்வைப்பதாக என தெற்கு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34885aa3-92ee-43a4-ac07-61788da7b238/26-6a9f5f96d22d1.webp' /></p><p>
</p><p>2025ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையானது 2026 பெப்ரவரி 17 முதல் 26 வரை நடைபெற்றதுடன், அதற்கான முடிவுகள் 2026 ஜூன் 19 அன்று பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டன.</p><p>
அதனைத் தொடர்ந்து, குறித்த பரீட்சை முடிவுகளின் மீள்மதிப்பீடு செய்வது தொடர்பில் விண்ணப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் ஜூலை 08 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
</p><p>இந்நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதுடன், 2026ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையும் நிறைவடைந்து தற்போது விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், சாதாரண தர மீள்மதிப்பீட்டு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T01:16:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்து மதக் குழுவினரின் வருகையால் புறக்கணிக்கப்பட்ட பெண் ஊழியர்கள் ; மூடப்பட்ட ஈபிள் கோபுரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ignored-female-staff-eiffel-tower-closed-1788830004"></link>
            <id>https://canadamirror.com/article/ignored-female-staff-eiffel-tower-closed-1788830004</id>
            <summary type="text">பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உலகப் புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் அமைந்துள்ளது. பிரான்ஸ் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் லிஸ்டில் ஈபிள் கோபுரம் நிச்சயம் இருக்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உலகப் புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் அமைந்துள்ளது. பிரான்ஸ் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் லிஸ்டில் ஈபிள் கோபுரம் நிச்சயம் இருக்கும். ஆனால் நேற்று (திங்கள்கிழமை) ஈபிள் டவர் திடீரென மூடப்பட்டது. </p><p>பிரான்ஸில் புதிய கோயில் திறப்பு விழாவிற்காக வந்த சுவாமிநாராயண் சன்ஸ்தா (BAPS) அமைப்பைச் சேர்ந்த 100 பேர் அடங்கிய குழுவினர் கடந்த சனிக்கிழமை ஈபிள் கோபுரத்தை பார்வையிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/934f31e0-ddf0-45b1-ae97-e0c08ba73946/26-6a9f613656654.webp' /></p><p>

இந்தக் குழுவினர் செல்லும்போது, ஈபிள் கோபுரத்தில் பணிபுரியும் பெண் ஊழியகர்கள் ஷிப்டில் இருந்து நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஆண் ஊழியர்கள் மட்டுமே இருக்கும்படி செய்துள்ளது நிர்வாகம்.
</p><p>
இந்து மதக் குழுவினரின் வருகையின் போது, பெண் ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதாக கூறி நேற்று ஊழியர்கள் நேற்று திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>

இதற்குக் காரணமாக ஈபிள் கோபுர சுற்றுலாப் பயணிகளுக்கு நேற்று மூடப்பட்டுள்ளது.</p><p>
ஈபிள் டவரை நிர்வகிக்கும் 'SETE' நிறுவனம், "பெண்களுடனான தொடர்பை குறைக்குமாறு இந்து அமைப்பின் குழுவினர் கோரிக்கை விடுத்தது உண்மைதான், ஆனால் அந்த நிபந்தனையை நிர்வாகம் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது" என தன் தவறை ஒப்புக்கொண்டுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள பாரிஸ் BAPS கோயில் நிர்வாகம், "நாங்கள் யாருடைய பிரவேசத்தையும் தடுக்கவில்லை.

மற்ற பார்வையாளர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மட்டுமே நேரத்தை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டோம். பரஸ்பர மரியாதையையே நாங்கள் நம்புகிறோம்" எனக் கூறி மன்னிப்பு கோரியுள்ளது.</p><p>
பாரிஸ் மேயர் இமானுவேல் கிரிகோயர் கூறுகையில், "பெண்களை ஒதுக்கி வைக்கும் இத்தகைய நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாதது. பிரெஞ்சு மதிப்பீடுகளுக்கு எதிரானது" எனக் கூறி இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p>

பிரான்ஸ் தேசிய பேரவைத் தலைவர் யேல் பிரவுன் பிவெட்கூறுகையில், "வெளிநாட்டுப் பார்வையாளர்களின் கோரிக்கைகளுக்காக பெண்கள் ஒதுங்கி நிற்க வேண்டும் என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது" என சாடியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-08T01:13:46+00:00</updated>
        </entry>
    </feed>
