<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-11T10:32:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்பது அம்பலம் : பொதுஜன பெரமுன]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-lack-of-public-support-for-the-government-1789120261"></link>
            <id>https://tamilwin.com/article/the-lack-of-public-support-for-the-government-1789120261</id>
            <summary type="text">மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் நாளுக்கு நாள் காலதாமதம் செய்வதன் மூலம்,
தற்போதைய அரசுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்ற உண்மையை அரசே நாட்டுக்கு
வெளிப்படுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் நாளுக்கு நாள் காலதாமதம் செய்வதன் மூலம்,
தற்போதைய அரசுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்ற உண்மையை அரசே நாட்டுக்கு
வெளிப்படுத்தி வருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர்
சாகர காரியவசம் தெரிவித்தார்.</p><p>

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
அவர் மேலும் கூறுகையில்,
</p><p>
"தேசிய மக்கள் முன்னணிக்கு மக்கள் ஆதரவு அதிகமாக இருக்கின்றது எனக்
கூறப்படுகின்றது. அந்தக் கட்சியால் ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்களுக்குப்
பெருந்திரளான மக்கள் கலந்துகொள்வதையும் பார்க்க முடிகின்றது.</p><h2>மக்கள் ஆணை</h2><p> </p><p>ஆனால், ஒரு
கூட்டத்துக்குத் திரளும் மக்களின் எண்ணிக்கையை மாத்திரம் வைத்துக்கொண்டு, நாடு
முழுவதும் அந்தக் கட்சிக்கு அதிகளவான மக்கள் ஆதரவு இருப்பதாகக் கூற முடியாது.</p><p>

ஜே.வி.பி. மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்ற காலங்களிலும் பெரிய கூட்டங்களை
நடத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள அவர்களின் உறுதியான உறுப்பினர்களே அத்தகைய
கூட்டங்களுக்குச் செல்வர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d71db15f-6024-481e-8b31-e105f62f0c29/26-6aa3d6c776244.webp' /></p><p>
</p><p>
அரசுக்கு மக்கள் மத்தியில் உண்மையான ஆதரவு இருக்குமானால், தேர்தலை நடத்தி அதனை
நிரூபிக்க வேண்டும். மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து காலதாமதம் செய்வதன்
மூலம் மக்களின் ஜனநாயக உரிமை மட்டுப்படுத்தப்படுகின்றது. </p><p>தேர்தலை நடத்தாமல்
காலம் கடத்துவதைப் பார்க்கும் போது, அரசுக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவு
குறித்து அரசுக்கே அச்சம் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளது.

எந்தவொரு அரசும் மக்கள் ஆணையின் அடிப்படையிலேயே ஆட்சியை முன்னெடுக்க வேண்டும்.
</p><p>மக்கள் தமது வாக்குரிமை மூலம் விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கான அளவுகோல்
தேர்தலாகும். எனவே, பொய்ப் பிரசாரங்களை விடுத்து, மாகாண சபைத் தேர்தலை
உடனடியாக நடத்தி மக்களின் உண்மையான தீர்ப்பை அரசு பெற்றுக்கொள்ள வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T10:25:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[செஸ் வரியை நீக்குவதற்கு திட்டம் : அமைச்சர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/abolish-cess-tax-and-introduce-a-new-customs-duty-1789119452"></link>
            <id>https://ibctamil.com/article/abolish-cess-tax-and-introduce-a-new-customs-duty-1789119452</id>
            <summary type="text">இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை நீக்கிவிட்டு, புதிய சுங்கவரி முறையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை நீக்கிவிட்டு, புதிய சுங்கவரி முறையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.</p><p>உள்நாட்டுத் தொழில்முனைவோரைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் கட்டம் கட்டமாக இந்த செஸ் வரிகளை நீக்க எதிர்பார்ப்பதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.</p><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உள்நாட்டுத் தொழில்முனைவோரைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இறக்குமதிப் பொருட்கள் மீது செஸ் வரி விதிக்கப்பட்டது.</p><p></p><h2>இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்கள்</h2><p>இருந்த போதிலும், பல உள்நாட்டுத் தொழில்கள் இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களையே தங்கியுள்ளதாகவும், அந்த உற்பத்திகளின் செலவும் அதற்கேற்ப உயர் மட்டத்தில் காணப்படுவதால், கட்டம் கட்டமாக செஸ் வரியை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b2e847d-2911-4360-87b6-d2a6ebade9a5/26-6aa3d565b182c.webp' /></p><p>இதற்கமைய, முதற்கட்டமாக இடைநிலைப் பொருட்களுக்குச் சலுகைக் காலத்துடன் செஸ் வரி படிப்படியாக நீக்கப்படும்.</p><p>இதன் மூலம், உள்நாட்டுத் தொழில்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் மற்றும் முறையான உற்பத்திச் செயல்பாட்டிற்கு உற்பத்தியாளர்களைப் பழக்கப்படுத்துவதற்கான திறனையும், அவர்களுக்கு அவசியமான மூலப்பொருள் செலவைக் குறைப்பதன் மூலம் உற்பத்திச் செலவைக் குறைக்கும் அணுகுமுறையையும் அரசாங்கம் இதன் மூலம் எதிர்பார்க்கிறது.</p><p></p><h2>புதிய சுங்கவரி கட்டமைப்பு</h2><p>

இதற்கமைய செஸ் வரியை நீக்குவதுடன் புதிய சுங்கவரி கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும், அதற்கமைய 4 பிரிவுகளின் கீழ் அந்தச் சுங்கவரி முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/deee5a25-e650-4707-a4cc-ac899053ab3a/26-6aa3d5667c7ae.webp' /></p><p> 

குறித்த 4 பிரிவுகளின் கீழ் 0%, 10%, 20% மற்றும் 30% என்ற அடிப்படையில் புதிய சுங்கவரி அறிமுகப்படுத்தப்படும், மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்திகளுக்காகப் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு 0% வீதமும், முடிவுற்ற பொருட்களாக இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட பொருட்களுக்கு அதிகபட்சமாக 30% வரை புதிய சுங்கவரி விதிக்கப்படும். </p><p>

இதற்கமைய, உள்நாட்டுத் தொழில்முனைவோரைப் பாதுகாப்பதனை இந்த வேலைத்திட்டத்தின் மூலம் அரசாங்கம் மேலும் எதிர்பார்க்கிறது“ என&nbsp; அவர்&nbsp; மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T10:20:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[Claude AI பயன்படுத்தி அமெரிக்க கடற்படை தளங்களை குறிவைத்த ஈரான் - Anthropic கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-misused-claude-ai-for-target-us-navy-bases-1789122190"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-misused-claude-ai-for-target-us-navy-bases-1789122190</id>
            <summary type="text">Iran misused Claude AI to target US naval bases: Claude AI பயன்படுத்தி அமெரிக்க கடற்படை தளங்கள் குறிவைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

Anthropic வெளியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran misused Claude AI to target US naval bases: Claude AI பயன்படுத்தி அமெரிக்க கடற்படை தளங்கள் குறிவைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
</p><h2>
Anthropic வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை</h2><p>அமெரிக்க AI நிறுவனம் Anthropic வெளியிட்ட புதிய அறிக்கையில், ஈரானுக்கு தொடர்புடைய குழுக்கள் Claude AI-ஐ பயன்படுத்தி அமெரிக்க கடற்படை தளங்களை குறிவைக்க தகவல்களை சேகரித்ததாக கூறப்பட்டுள்ளது.
</p><p>
அந்த குழுக்கள், பொதுவாக இணையத்தில் கிடைக்கும் தகவல்களை Claude மூலம் பகுப்பாய்வு செய்து, “Targeting Handbooks” எனப்படும் வழிகாட்டி ஆவணங்களை உருவாக்கியதாக Anthropic தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18379d3f-a5c9-4a17-9e2b-8d94bebb837f/26-6aa3d68fd84bd.webp' /></p><p>இதில் அமெரிக்க கடற்படை வீரர்களின் பெயர்கள், கப்பல்கள் மற்றும் விமானங்களின் அடையாள எண்கள், செயற்கைக்கோள் படங்கள், மற்றும் பொதுவாக வெளிப்படும் இணையதளங்கள் ஆகியவை சேகரிக்கப்பட்டுள்ளன.
</p><p>
மேலும், Claude-ஐ பயன்படுத்தி கப்பல் தொடர்பு அமைப்புகள், Cisco சாதனங்கள், VSAT terminals போன்றவற்றின் பலவீனங்களை ஆராய்ந்ததாகவும் அறிக்கை கூறுகிறது.
</p><p></p><p>ஈரான் சமீபத்தில் USS Delbert D Black, USS John Paul Jones போன்ற அமெரிக்க போர் கப்பல்களை ஏவுகணைகளால் தாக்கியிருந்தது. அதேபோல், பஹ்ரைனில் உள்ள US Navy Fifth Fleet தலைமையகம் குறிவைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.</p><p>
</p><h2>
நேரடியாக பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் இல்லை</h2><p>Anthropic-ன் அறிக்கையில், Claude AI மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்கள் நேரடியாக தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் இல்லை எனவும், ஆனால் AI-ஐ தவறாக பயன்படுத்தும் அபாயம் மிகுந்தது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதே நேரத்தில், ஈரான் கலாச்சார மற்றும் தொடர்பு அமைப்புடன் தொடர்புடைய கணக்குகள், ஆயத்துல்லா அலி கமேனியின் இறுதி ஊர்வல திட்டங்கள் மற்றும் வாரிசு தொடர்பான ஆவணங்களை Claude-இல் பதிவேற்றியதாகவும் Anthropic கண்டறிந்துள்ளது.
</p><p>
இந்த தகவல்கள், AI தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு உலகளாவிய பாதுகாப்பிற்கு பெரிய சவாலாக மாறி வருவதை வெளிப்படுத்துகின்றான்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T10:19:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பிரதேசத்தில் பெரும் துயரம்; அநியாயமாக பறிபோன உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-young-girl-falling-into-a-well-in-mullaitivu-1789120402"></link>
            <id>https://jvpnews.com/article/death-young-girl-falling-into-a-well-in-mullaitivu-1789120402</id>
            <summary type="text">&amp;nbsp; முல்லைத்தீவில் கிணற்றில் தவறி விழுந்து இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் முல்லைத்தீவு - திருமுறிகண்...</summary>
            <content type="html"><![CDATA[<p><a href="https://jvpnews.com/article/youth-dies-hospital-wrong-medication-mullaithivu-1788330244" target="_blank">&nbsp; முல்லைத்தீவில்</a> கிணற்றில் தவறி விழுந்து இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
சம்பவத்தில் முல்லைத்தீவு - திருமுறிகண்டியை வசிப்பிடமாகக் கொண்ட யுவதியே உயிரிழதுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d103d733-b534-4cc2-a12a-827a56a76282/26-6aa3d140aed02.webp' /></p><p></p><p> </p><p>இன்னிலையில் யுவதியின் எதிர்பாராத இந்த இழப்பால் யுவதியின் உறவுகள் அதிர்ச்சியை யும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>மேலும் சம்பவம்&nbsp; தொடர்பில்&nbsp; மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.</p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T10:18:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிட்னியில் திடீரென ரத்தான பல விமானங்கள்; தவித்த பயணிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/friday-many-flights-suddenly-cancelled-in-sydney-1789122001"></link>
            <id>https://canadamirror.com/article/friday-many-flights-suddenly-cancelled-in-sydney-1789122001</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அவுஸ்திரேலியாவின் பரபரப்பான சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் பற்றாக்குறையினால் இன்று (11) வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அவுஸ்திரேலியாவின் பரபரப்பான சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் பற்றாக்குறையினால் இன்று (11) வெள்ளிக்கிழமை காலை பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டதுடன், பெருமளவிலான விமானங்கள் தாமதமடைந்ததாக அந்நாட்டு வான்வழிப் போக்குவரத்து முகாமைத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
</p><p>

திடீரென ஏற்பட்ட பணியாளர்கள் தட்டுப்பாட்டினால் வான்வழிப் போக்குவரத்து பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வான்வழிப் போக்குவரத்து முகாமைத்துவ நிர்வாகம் 'ஏர்சர்வீசஸ் அவுஸ்திரேலியா' அவசரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமுல்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/422bcff2-1a41-489f-a4ee-922c6f4ea66f/26-6aa3d5d2d1dbc.webp' /></p><p>
</p><p>
ஆதன் காரணமாக வருகை தரவிருந்த சுமார் 14 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதுடன், பல விமானங்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் புறப்பட முடியாமல் தாமதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இது தொடர்பில் ஏர்சர்வீசஸ் அவுஸ்திரேலியா' பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி பீட்டர் கரன் கூறுகையில் , 

சிட்னி விமான நிலையத்திற்கு 41 கட்டுப்பாட்டாளர்கள் தேவைப்படும் நிலையில், 08 பேர் நீண்டகால விடுப்பில் உள்ளதால், திடீரென ஏற்பட்ட ஒருவரின் விடுப்புக்கூட பெரும் இடையூறை ஏற்படுத்தியது.
</p><p>
காலை 8:15 மணியளவில் போக்குவரத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டு, பிற்பகலில் விமானங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பின.
</p><p>
கடந்த ஜூலை மாதத்திற்குப் பின்னர் சிட்னி விமான நிலையத்தில் சுமார் 06 முறை விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் ஆபத்தான நிலைகள் பதிவாகியுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
</p><p>
கட்டுப்பாட்டாளர்களின் பணிச்சுமை மற்றும் சோர்வினால் இந்தச் சம்பவங்கள் நடந்ததா என்பது குறித்து அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றதாகவும் தெரிவிகப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T10:17:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவுதிகளுக்கு எதிராக உதவி கேட்ட சவுதி பட்டத்து இளவரசர்: கைவிரித்த ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-declines-saudi-prince-call-1789121636"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-declines-saudi-prince-call-1789121636</id>
            <summary type="text">Trump declines Saudi crown prince&#039;s call: சவுதி பட்டத்து இளவரசரின் கோரிக்கையை நிராகரித்த ட்ரம்ப்.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump declines Saudi crown prince's call: சவுதி பட்டத்து இளவரசரின் கோரிக்கையை நிராகரித்த ட்ரம்ப்.
</p><p>சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை இருமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஹவுதிகளுக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்துமாறு வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>நேரடி ராணுவ ஈடுபாடு</h2><p>
</p><p>சவுதி இளவரசரின் கோரிக்கையை ட்ரம்ப் நிராகரித்ததாகவும், ஹவுதிகளுக்கு எதிராக தற்போதைக்கு நேரடி ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் எண்ணம் நிர்வாகத்திற்கு இல்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியதாகவும் Axios செய்தி வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb33ed51-a4a0-4a88-95ff-e78823ef7e24/26-6aa3d4667fcd5.webp' /></p><p> </p><p>Axios செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, ஏமனில் வேகமாகத் தீவிரமடைந்து வரும் மோதல் குறித்து அமெரிக்கா மிகுந்த கவலை கொண்டுள்ளது; அதேவேளையில், நேரடி ராணுவ ஈடுபாட்டைத் தவிர்த்துக்கொண்டே சவுதி அரேபியாவுக்கான தனது ஆதரவை அது அதிகரித்து வருகிறது. </p><p>இந்த நிலையில், அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் தளபதியான அட்மிரல் பிராட் கூப்பர், அவசர ஒருங்கிணைப்புப் பேச்சுவார்த்தைகளுக்காக வியாழக்கிழமையன்று சவுதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொண்டார் என்றார் தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><p> </p><p>இதனிடையே, மற்றொரு ராணுவ மோதலைத் தவிர்த்து, ஈரான் மற்றும் ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாப்பதில் அமெரிக்கப் படைகள் கவனம் செலுத்துவதே ட்ரம்ப்பின் உத்தரவு என்று அமெரிக்க ராணுவ மற்றும் சிவில் அதிகாரிகள் சமீபத்திய வாரங்களில் தங்கள் சவுதி அரேபிய இணையான அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். </p><p>ஏற்கனவே ஏமன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், செங்கடலில் கப்பல் போக்குவரத்தை ஹவுதி தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காக ஒரு சர்வதேசக் கூட்டணியை உருவாக்க சவுதி அரேபியா முயன்று வந்துள்ளது. </p><p>சனா சர்வதேச விமான நிலையத்தில் ஈரானிய சிவில் விமானம் ஒன்று தரையிறங்குவதைத் தடுக்க முயன்ற சவுதி போர் விமானங்களை தங்கள் படைகள் எதிர்கொண்டதாக ஹவுதிகள் கூறிய ஜூலை மாதத் தொடக்கத்திலிருந்தே இந்த மோதல் தீவிரமடைந்துள்ளது.</p><h2>ட்ரம்ப் கடும் முயற்சி</h2><p> </p><p>மேலும், ஈரான் விவகாரத்தில் இஸ்ரேலின் அழுத்தம் காரணமாகத் தலையிட்டு, அதில் இருந்து வெளியேற முடியாமல் ட்ரம்ப் நிர்வாகம் தத்தளித்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f535a981-3369-4778-a0cb-b5c5209b4c97/26-6aa3d46732e31.webp' /></p><p> பெரும்பாலான அமெரிக்க மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்த இராணுவ மோதலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ட்ரம்ப் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். </p><p>ஆனால், இஸ்ரேலை பகைத்துக்கொள்ள முடியாமல் ஈரானுடனான ஒப்பந்தங்கள் முடிவுக்கு வராமல் உள்ளது. இந்த நெருக்கடியான நிலையிலேயே சவுதி அரேபியாவின் கோரிக்கையை ட்ரம்ப் நிராகத்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T10:10:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியா வெடுக்குநாறிமலையில் சைவ வழிபாடுகளுக்கும் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hindu-worship-allowed-at-veddikunarimalai-1789120804"></link>
            <id>https://jvpnews.com/article/hindu-worship-allowed-at-veddikunarimalai-1789120804</id>
            <summary type="text">வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் எதிர்வரும் 12ஆம் திகதி பௌத்த மற்றும் சைவ வழிபாடுகள் இடம்பெறவுள்ள நிலையில், இருதரப்பினரும் ஒரே நேரத்தில் அங்கு க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் எதிர்வரும் 12ஆம் திகதி பௌத்த மற்றும் சைவ வழிபாடுகள் இடம்பெறவுள்ள நிலையில், இருதரப்பினரும் ஒரே நேரத்தில் அங்கு கூடுவதால் அமைதிக்கு பாதிப்பு ஏற்படலாம் என நெடுங்கேணி பொலிஸார் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.
</p><p style="text-align: justify; ">
இதையடுத்து ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பௌத்த தேரர் தரப்பினர் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b102e89d-38d8-4292-9be4-787ef0353bbe/26-6aa3d1264ddcb.webp' /></p><h2 style="text-align: justify; ">வழிபாடுகள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
வழக்கு விசாரணையின் போது, தொல்பொருள் பகுதிகளுக்கு சேதம் ஏற்படுத்தாத வகையிலும், புதிய கட்டுமானங்களை மேற்கொள்ளாமலும் வழிபாடுகளை நடத்த வேண்டும் என நீதிமன்றம் இருதரப்பினருக்கும் உத்தரவிட்டது.
</p><p style="text-align: justify; ">
அன்றைய தினம் சைவ மக்களின் வழிபாட்டுக்கு தடைவிதிக்க வேண்டும் என பொலிஸார் மற்றும் தேரர் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும், ஆலய நிர்வாகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

மேலும், வெடுக்குநாறிமலையில் வழிபடும் உரிமைக்கு தடையிட முடியாது என ஏற்கனவே உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.</p><p style="text-align: justify; ">

இதனையடுத்து, 12ஆம் திகதி சைவ மக்களும் வழமையான பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-11T10:03:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; ஈடுசெய்ய முடியாத இழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/solomon-pappaiah-has-passed-away-1789115302"></link>
            <id>https://jvpnews.com/article/solomon-pappaiah-has-passed-away-1789115302</id>
            <summary type="text">

பிரபல பட்டிமன்ற நடுவரும், முன்னாள் பேராசிரியருமான சாலமன் பாப்பையா (90) காலமான சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

 1936-ஆம் ஆண்டு பிறந்த இவர், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>

பிரபல பட்டிமன்ற நடுவரும், முன்னாள் பேராசிரியருமான சாலமன் பாப்பையா (90) காலமான சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 1936-ஆம் ஆண்டு பிறந்த இவர், தமிழ்ப் பட்டிமன்றங்களை உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடையே கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர்.</p><p>

தனது பாமரத்தனமான நகைச்சுவை, எளிய தமிழ் மற்றும் அனுபவமிக்க நடுவர் திறமையால் பல தலைமுறை மக்களைக் கவர்ந்தவர் சாலமன் பாப்பையா .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e587906-c46b-45d5-8023-8d1e982b4656/26-6aa3bf5f5ee17.webp' /></p><p></p><h2>&nbsp;தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றக் கலைக்கும் பேரிழப்பு</h2><p> </p><p>கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி, தமிழ்த் தொண்டாற்றிய இவர், பல தமிழ் நூல்களையும், உரைகளையும் எழுதியுள்ளார்

இவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றக் கலைக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.</p><p></p><p>கலகலப்பாக பட்டிமன்றங்களை நடத்துவதில் புகழ்பெற்றவர் சாலமன் பாப்பையா. அன்பு தாய்மார்களே, அருமை பெரியோர்களோ, இனிய குழந்தைகளே என்றொலிக்கும் கணீர்க் குரலுக்கு சொந்தக்காரர்.&nbsp;இதுவரை அவர் 12,000க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>&nbsp;2021ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் பத்மஸ்ரீ விருது உள்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார் சாலமன் பாப்பையா அவர்கள்</p><p> </p><p>அவரது மறைவுக்குப் பல்துறைச் சார்ந்த பிரபலங்களும், தமிழார்வலர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T10:00:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரபரப்பாக தயாராகும் பரதநாட்டிய மேடை.. ரேவதி உயிருக்கு காத்திருக்கும் ஆபத்து - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/karthigai-deepam-serial-today-episode-sep-11-2026-1789120088"></link>
            <id>https://cineulagam.com/article/karthigai-deepam-serial-today-episode-sep-11-2026-1789120088</id>
            <summary type="text">தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியல...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ரேவதி சாமுண்டீஸ்வரி சொன்ன டாகுமெண்டில் கையெழுத்து போட போகும் சமயத்தில் கார்த்திக் தடுத்து நிறுத்திய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.</p><p>அதாவது கார்த்தி நான் இந்த குடும்பத்தை சேர்க்கணும்னு நினைச்சுகிட்டு இருக்கேன் ஆனா நீ கையெழுத்து போட்டா ஒரு காலமும் இது நடக்காது என ரேவதியை திட்டுகிறான். </p><p>
அதன் பிறகு, பாட்டி கோவில் கும்பாபிஷேகத்திற்கான வேலைகளை கவனிக்க சொன்ன கார்த்திக் பரதநாட்டியம் ஆடுவதற்கான வேலைகளை கவனிக்க செல்கிறான். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்கிறான்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c33d373c-2f71-45c3-a313-a7ab21d87692/26-6aa3ce5b8b4f7.webp' /></p><p>மறுபக்கம் சிவனாண்டி ரவுடி ஒருவனை சந்தித்து அவனிடம் பணமும் துப்பாக்கியையும் கொடுத்து பரதநாட்டியம் ஆடிக்கொண்டிருக்கும் போது ரேவதியை போட்டு தள்ள வேண்டும் சொல்கிறான். </p><p>
இதையடுத்து ரேவதி பரதநாட்டிய மேடைக்கு கிளம்பி வர அங்கு அவளுக்காக செய்யப்பட்ட ஏற்பாடுகளை பார்த்து சந்தோஷம் அடைகிறாள். சாமுண்டீஸ்வரி வீட்டிலே ராஜராஜன், ரோகினி, மயில்வாகனம் ஆகியோர் ரேவதியின் பரத நாட்டியத்தை பார்க்க கிளம்பி வருகின்றனர். </p><p>
சந்திரகலா இதை போட்டு கொடுத்து சாமுண்டீஸ்வரி அழைத்துக்கொண்டு ஒரு பரதநாட்டிய டான்ஸர் வீட்டுக்கு வருகிறாள். இந்த ஊர்லயே சிறந்த பரதநாட்டிய டான்சர் நீங்கதான்.. ஆனா கார்த்திக் உங்கள வேண்டாம்னு சொல்லிட்டு ரேவதிக்கு இந்த வாய்ப்பு கொடுத்து இருக்காரு என்று சொல்லி அவளை ஏற்றி விட்டு நிகழ்ச்சிக்கு வந்து பிரச்சனை செய்ய ஏற்பாடு செய்கின்றனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d0bd149-19b3-4366-bd2f-a6fca84ae87b/26-6aa3ce5c4a4bb.webp' /></p><p>இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T10:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆறு கோரிக்கைகளை முன்வைத்து சாவகச்சேரியில் மாபெரும் போராட்டம்: பொதுமக்களுக்க அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-in-chavakachcheri-over-six-demands-1789118679"></link>
            <id>https://ibctamil.com/article/protest-in-chavakachcheri-over-six-demands-1789118679</id>
            <summary type="text">தமிழ் மக்களுக்கு எதிரான தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கண்டித்தும் ஆறு கோரிக்கைகளை முன்வைத்தும் மாபெரும் கண்டனப் பேரணியும் உண்ண...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் மக்களுக்கு எதிரான தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கண்டித்தும் ஆறு கோரிக்கைகளை முன்வைத்தும் மாபெரும் கண்டனப் பேரணியும் உண்ணாவிரதப் போராட்டமும் சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் நடைபெறுவது குறித்து பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.&nbsp;</p><p>
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தில் கட்சி பேதமின்றி அனைவரும் கலந்துகொள்ளுமாறு பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபியினால் அழைப்பு விடுக்கபட்டுள்ளது.</p><p>
இன்று (11.09.2026) தனது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.</p><p></p><h2>&nbsp;செம்மணி புதைகுழி விவகாரம்</h2><p>
</p><p>
அபகரிக்கப்பட்ட காணிகளை மீள விடுவித்தல், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துதல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்குதல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் செம்மணி புதைகுழி விவகாரங்களுக்கு சர்வதேச நீதிப் பொறிமுறையின் ஊடாக விசாரணை நடத்துதல், அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்தல் உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13de714c-6d04-427b-a05a-c32430c34182/26-6aa3cf5e50492.webp' /></p><p>
</p><p>
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட அனைவரும் கட்சி பேதமின்றி போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு ஜெயகோபி அழைப்பு விடுத்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T09:57:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/salmon-papaya-passed-away-1789120013"></link>
            <id>https://manithan.com/article/salmon-papaya-passed-away-1789120013</id>
            <summary type="text">பட்டிமன்றங்களின் மூலம் உலகெங்கும் வாழும் தமிழர்களின் மனங்களைக் கவர்ந்த புகழ்பெற்ற தமிழறிஞரும், பேராசிரியரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா (90)...</summary>
            <content type="html"><![CDATA[<p>பட்டிமன்றங்களின் மூலம் உலகெங்கும் வாழும் தமிழர்களின் மனங்களைக் கவர்ந்த புகழ்பெற்ற தமிழறிஞரும், பேராசிரியரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா (90), வயது முதிர்வு காரணமாக இன்று (11.09.2026) மதுரையில் காலமானார்.</p><h2>சாலமன் பாப்பையா&nbsp;</h2><p>
</p><p>
மதுரையைச் சேர்ந்த இவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியதுடன், பட்டிமன்றப் பேச்சாளர், எழுத்தாளர், பதிப்பாசிரியர், நடிகர் எனப் பன்முகத் திறமையுடன் விளங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/060623fa-dd55-4804-9cb1-e12d85f1e287/26-6aa3d065a8d35.webp' /></p><p> </p><p>கம்பீரமான குரல், நகைச்சுவை கலந்த பேச்சு மற்றும் எளிமையான இனிய தமிழ் மூலம் உலகத் தமிழர்களின் அன்பைப் பெற்ற இவர், இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளிலும் பட்டிமன்றங்களை நடத்தி தமிழ் மொழியின் சிறப்பையும் நகைச்சுவையையும் உலகெங்கும் கொண்டு சேர்த்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b696d52-b93d-438b-a1ca-1726649c448e/26-6aa3d0665cdc5.webp' /></p><p></p><p> </p><p>சிவாஜி, பாய்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழுக்குச் செய்த சிறப்பான சேவையைப் பாராட்டி தமிழக அரசு 2000ஆம் ஆண்டு கலைமாமணி விருதும், இந்திய அரசு 2021ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் வழங்கி கௌரவித்தது.</p><p></p><p>
</p><p>
அவரது மறைவு தமிழ் உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது நகைச்சுவை நிறைந்த பேச்சும், நயமான பட்டிமன்றத் தீர்ப்புகளும் என்றும் தமிழ் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T09:57:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிள்கள் மோதி இருவர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/continuing-road-accidents-kantalai-peraaru-area-1789113834"></link>
            <id>https://tamilwin.com/article/continuing-road-accidents-kantalai-peraaru-area-1789113834</id>
            <summary type="text">கந்தளாய் – பேராறு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள்
விபத்தில் இருவர் காயமடைந்து கந்தளாய் ஆதார வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாய் – பேராறு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள்
விபத்தில் இருவர் காயமடைந்து கந்தளாய் ஆதார வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த விபத்தானது நேற்று(10.09.2026) மாலை இடம்பெற்றுள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

வெலிங்டன் சந்தியிலிருந்து பேராறு நோக்கி இரு மோட்டார் சைக்கிள்கள் பயணித்துக்
கொண்டிருந்தபோது, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவரும், மற்றைய மோட்டார்
சைக்கிளில் ஒருவருமாகப் பயணித்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9436baa-22ce-4f74-8090-f85b25c6a265/26-6aa3cf8cf29a5.webp' /></p><p>முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள்
திடீரென வலதுபுறமாகத் திரும்ப முயன்றபோது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள்
கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது. </p><p>இந்த
விபத்து CCTV காட்சிகளிலும் பதிவாகியுள்ளது.
</p><p>
மோதலின் காரணமாக இரு மோட்டார் சைக்கிள்களிலும் பயணித்த மூவரும் வீதியில்
தூக்கி வீசப்பட்ட நிலையில், இருவர் காயமடைந்து வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய்
பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T09:53:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொத்மலை பிரிவிலுள்ள பாடசாலை ஒன்றை மீளத் திறக்கக் கோரி போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/parents-protest-demanding-the-reopening-school-1789119009"></link>
            <id>https://tamilwin.com/article/parents-protest-demanding-the-reopening-school-1789119009</id>
            <summary type="text">கொத்மலை கல்வி வலயத்திற்குட்பட்ட டன்சினன் குறிஞ்சி தமிழ் வித்தியாலயம் விடுமுறை நிறைவடைந்த பின்னரும் திறக்கப்படாத நிலையில், அதனை உடனடியாக
மீளத் திறக்கக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொத்மலை கல்வி வலயத்திற்குட்பட்ட டன்சினன் குறிஞ்சி தமிழ் வித்தியாலயம் விடுமுறை நிறைவடைந்த பின்னரும் திறக்கப்படாத நிலையில், அதனை உடனடியாக
மீளத் திறக்கக் கோரி பெற்றோர்களும், மாணவர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
கடந்த ஆண்டு ஏற்பட்ட டிட்வா புயலின் தாக்கத்தின்போது, பாடசாலை அமைந்துள்ள
டன்சினன் கீழ்ப்பிரிவு பகுதியில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன.
</p><p>
இதன் காரணமாக குறித்த பாடசாலையிலும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத
நிலை ஏற்பட்டிருந்தது.

எனினும், பின்னர் மக்கள் தங்களது சொந்த வீடுகளுக்கு மீளத் திரும்பியதைத்
தொடர்ந்து, பாடசாலை கல்வி நடவடிக்கைகளும் மீள ஆரம்பிக்கப்பட்டதாக
தெரிவிக்கப்படுகிறது.</p><h2>பிரதான கோரிக்கை</h2><p>
</p><p>
இந்த நிலையில், ஓகஸ்ட் மாத பாடசாலை விடுமுறை நிறைவடைந்த பின்னரும் குறிஞ்சி
தமிழ் வித்தியாலயம் மீளத் திறக்கப்படவில்லை என பெற்றோர்களும் மாணவர்களும்
தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/352e079d-50dd-41d5-9cf7-fc5c812e6e85/26-6aa3cecb58c4b.webp' /></p><p>

தற்போது பாடசாலை அமைந்துள்ள பகுதியிலோ அல்லது கிராமத்திலோ குறிப்பிடத்தக்க
பாதிப்புகள் எதுவும் இல்லாத நிலையில், பாடசாலை தொடர்ந்தும் மூடப்பட்டிருப்பது
மாணவர்களின் கல்வியை பாதிப்பதாக பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p>

பல கல்வியாளர்களையும் சமூகத்தின் பல்வேறு துறைகளில் சிறந்து
விளங்கியவர்களையும் உருவாக்கிய இந்தப் பாடசாலையை மீண்டும் திறந்து,
மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்பதே பெற்றோர் மற்றும் மாணவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T09:50:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பருத்தித்துறையில் இராணுவம் மற்றும் கடற்படையால் அபகரிக்கப்பட்ட காணிகள்! உடனடியாக விடுவிக்ககோரி போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/land-seized-by-the-army-and-navy-protest-to-leave-1789119155"></link>
            <id>https://tamilwin.com/article/land-seized-by-the-army-and-navy-protest-to-leave-1789119155</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வடமராட்சி, பருத்தித்துறை பகுதியில் இராணுவத்தினராலும்
கடற்படையினராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வடமராட்சி, பருத்தித்துறை பகுதியில் இராணுவத்தினராலும்
கடற்படையினராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>தபாலகத்திற்கு சொந்தமான காணி,
நீதிமன்றக்காணி, பருத்தித்துறை நகர சபைக்கு சொந்தமான காணிகள் மற்றும்
பருத்தித்துறை வெளிச்சவீட்டுப் பகுதி ஆகியவற்றை உடனடியாக விடுவிக்க
வலியுறுத்தியும், ஆயுதப்படைகள் அங்கிருந்து வெளியேறக்கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>ஜனாதிபதிக்கான கோரிக்கை மகஜர் கையளிப்பு</h2><p>



பருத்தித்துறை நகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போராட்டம், பருத்தித்துறை
துறைமுகப் பகுதியில் ஆரம்பமாகி, பேரணியாக வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தை
சென்றடைந்து அங்கு ஜனாதிபதிக்கான கோரிக்கை மகஜர் கையளிக்கும் நிகழ்வு
இடம்பெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea2a4c92-f049-471e-a985-ec9cb6ad69af/26-6aa3ce2de6e3a.webp' /></p><p>
</p><p>குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், முன்னாள் மாகாண சபை
உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன், நகர சபையை தவிசாளர் வின்சன் டி போல்
டக்லஸ் போல், பருத்துத்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஷ்,
வலிக்காமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஷ், வடமராட்சி தெற்கு
மேற்கு பிரதேச சபை தவிசாளர் அரசியல், செயற்பாட்டாளர்கள், சமூக
செயற்பாட்டாளர்கள், பருத்தித்துறை வர்த்தகர்கள், பிரதேச மக்கள், நலன்
விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
</p><p>
இப்பேராணியில் வெளியேறு வெளியேறு இராணுவமே வெளியேறு, மக்களின் காணிகளை
மக்களுக்கு வழங்கு, தபாலக காணியிலிருந்து வெளியேறு, போன்ற கோசங்கள்
முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p> பருத்தித்துறை துறைமுகத்திற்கு எதிராகவுள்ள காணி, மற்றும்
வெளிச்சம் வீடு என்பன இராணுவம் கடற்படையால்
ஆக்கிரமிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. </p><p>தற்போது தபாலகம், நீதிமன்றம்
என்பனவற்றிகான கட்டடங்கள் புதிதாக அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ள
நிலையில் காணி இன்மை காரணமாக திரும்பும் நிலை காணப்படுவதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T09:47:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸ் சீசன் 10 வீட்டைவிட்டு எவிக்ட்டாகி வெளியேறிய முதல் ஆள்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/biggbosstamil10-firstweek-evicted-details-leaked-1789119898"></link>
            <id>https://viduppu.com/article/biggbosstamil10-firstweek-evicted-details-leaked-1789119898</id>
            <summary type="text">பிக்பாஸ் சீசன் 10பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கியது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் காமன் மேட் போட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிக்பாஸ் சீசன் 10</h2><p>பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கியது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் காமன் மேட் போட்டியில் வெற்றிப்பெற்ற முனியம்மாள் பிக்பாஸ் சீசன் 10 வீட்டிற்குள் போட்டியாளராக சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f93f333-a8e6-45de-9d0f-1c0162befbbb/26-6aa3cd9d62282.webp' /></p><p>
</p><p>
நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில், உடல்நிலை பிரச்சனையால் பிளாக் பாண்டி பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு பதில் காமன் மேன் ஷோவில் இருந்து செலக்ட் ஆகிய மணிவண்ணன் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17a3be76-f7b4-4281-8185-9224a72abfcc/26-6aa3cd9e1843a.webp' /></p><h2>1st எவிக்ட்</h2><p> </p><p>இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக எவிக் செய்யப்பட்டு வெளியேறியுள்ள போட்டியாளர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சக போட்டியாளர்களாக சவின்யா, தான்யா, முனியம்மாள் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்ட நிலையில் பிக்பாஸ் சீசன் 10 வீட்டைவிட்டு முதல் ஆளாக எவிக்ட்டாகி சென்றுள்ளார் சவின்யா.</p>]]></content>
            <updated>2026-09-11T09:44:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேலை சென்ற யுவதிக்கு நேர்ந்த கதி ; வசமாக பிடிபட்ட இரு இளைஞர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-woman-attacked-on-way-to-work-1789118964"></link>
            <id>https://jvpnews.com/article/young-woman-attacked-on-way-to-work-1789118964</id>
            <summary type="text">ஆடைத்தொழிற்சாலைசேவையை முடித்துவிட்டுத் தனது சகோதரனுடன் நடந்தபடியே வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த 21 வயது ஆடைத்தொழிற்சாலை யுவதி ஒருவர், கந்தகெட்டிய, ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஆடைத்தொழிற்சாலைசேவையை முடித்துவிட்டுத் தனது சகோதரனுடன் நடந்தபடியே வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த 21 வயது ஆடைத்தொழிற்சாலை யுவதி ஒருவர், கந்தகெட்டிய, பதுலுஓயா சந்தைக்கு அருகில் முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">இச்சம்பவம் தொடர்பில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் இருவர் முச்சக்கர வண்டியுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கந்தகெட்டியப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82e7565d-d661-4f65-ae1a-f15a7024e2b9/26-6aa3cb705fdbf.webp' /></p><h2 style="text-align: justify; ">இருவர் கைது </h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கடத்தப்பட்ட ஆடைத்தொழிற்சாலை யுவதி, மஹியங்கனை, சொரபொர இடதுகரைப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய சந்தேகநபரின் வீட்டில் தற்காலிகமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது எவ்வித ஆபத்துமின்றிப் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் சொரபொர இடதுகரைப் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞரும், மஹியங்கனை, தம்பறாவப் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞரும் ஆவர் எனப் பொலிஸார் கூறினர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-11T09:35:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA['இந்த நோய் எனக்கு வராமல் இருந்திருக்கலாம்'.. மனம் திறந்து பேசிய சமந்தா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/samantha-about-myositis-1789118843"></link>
            <id>https://cineulagam.com/article/samantha-about-myositis-1789118843</id>
            <summary type="text">முன்னணி நடிகையாக இந்திய சினிமாவில் வலம் வரும் சமந்தா ரூத் பிரபு மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது நடந்த விஷயங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னணி நடிகையாக இந்திய சினிமாவில் வலம் வரும் சமந்தா ரூத் பிரபு மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது நடந்த விஷயங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.</p><p></p><p> </p><h2>

நடிகை சமந்தா
</h2><p>
தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமான <a href="https://cinema.dinamalar.com/news/kollywood/looking-forward-to-motherhood-samantha-i-am-ready-for-a-comp/140788" target="_blank">சமந்தா </a>தற்போது பான்-இந்தியன் ஸ்டாராக கலக்கிக்கொண்டு இருக்கிறார். படங்கள், வெப் தொடர்கள் என தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'மா இண்டி பங்காரம்' திரைப்படம் உலகளவில் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a523e571-2d14-4a03-a8ee-baf36f673357/26-6aa3caf41b274.webp' /></p><p>
</p><h3>
கர்ப்பமாக இருக்கும் சமந்தா</h3><p>

'மா இண்டி பங்காரம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, தான் கர்ப்பமாக இருப்பதாகவும் சினிமாவிலிருந்து சிறிது காலம் மெட்டர்னிட்டி பிரேக் (Maternity Break) எடுக்கப்போவதாக கூறினார். தற்போது கர்ப்ப காலத்தில் உள்ள சமந்தா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் போட்டோஷூட்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c523439-03f3-4c09-820d-7704303689fd/26-6aa3c97e77d28.webp' /></p><p>அண்மையில் கூட கர்ப்ப காலத்தில் இதுவரை 11 கிலோ உடல் எடை அதிகரித்துள்ளதாகவும், தாய்மை பயணம் தனக்கு புதிய தன்னம்பிக்கையையும் பலத்தையும் கொடுத்திருப்பதாகவும் நெகிழ்ச்சியாக கூறியிருந்தார்.</p><h2> 

மனம் திறந்த சமந்தா
</h2><p>
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்த சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7df37942-5103-439c-8003-ad4ad711dd23/26-6aa3c97fddd4b.webp' /></p><p></p><p> </p><h3>அவர் கூறியது:</h3><p>

"மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது என் அடையாளத்தை நான் இழந்துவிட்டது போல் உணர்ந்தேன். எனது கட்டுப்பாட்டில் எதுவும் இல்லை என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. மன உறுதி, நம்பிக்கை, எதிர்பார்ப்பு போன்ற முக்கியமான குணங்களை இந்த நோய் எனக்கு கற்றுக்கொடுத்தது. இதனால் என் வாழ்க்கை இன்னும் மேம்பட்டுள்ளது."</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78479efc-d8e4-4f2d-8e84-97f1de1c6397/26-6aa3caf36185b.webp' /></p><p>"இந்த நோய் எனக்கு வராமல் இருந்திருக்கலாம் என நான் நினைத்திருக்கிறேன். ஆனால், இது எனக்கு கற்றுக்கொடுத்த பாடங்கள் என் வாழ்க்கையின் விலைமதிப்பற்ற அங்கமாக மாறிவிட்டன. ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்க வேண்டும்? என்ற கட்டத்தை தாண்டி, இதிலிருந்து நான் கற்றுக்கொள்ள ஏதோ உள்ளது என்ற தெளிவை அடைய எனக்கு சிறிது காலம் ஆனது" என கூறினார்.</p>]]></content>
            <updated>2026-09-11T09:34:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-officer-in-charge-jaffna-kks-police-station-1789119053"></link>
            <id>https://jvpnews.com/article/new-officer-in-charge-jaffna-kks-police-station-1789119053</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தின் தலைமை பொலிஸ் அதிகாரியாக பிரதான பொலிஸ் பரிசோதகர் S.M காந்தவல நேற்று (10) கடமையினை பொறுப்பேற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தின் தலைமை பொலிஸ் அதிகாரியாக பிரதான பொலிஸ் பரிசோதகர் S.M காந்தவல நேற்று (10) கடமையினை பொறுப்பேற்றார்.</p><p>

இதற்கு முன்னர் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிய நிலையில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டார் .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae145df9-26d8-4fc5-82f9-7d9cd7c80667/26-6aa3ca4ee2137.webp' /></p>]]></content>
            <updated>2026-09-11T09:27:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியா 190 அணு குண்டுகள் வரை உருவாக்கியிருக்கலாம் - விரைவில் பிரித்தானியாவை முந்த வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indias-nuclear-arsenal-may-reach-190-warheads-1789117199"></link>
            <id>https://news.lankasri.com/article/indias-nuclear-arsenal-may-reach-190-warheads-1789117199</id>
            <summary type="text">India’s Nuclear Arsenal May Reach 190 Warheads: இந்தியாவிடம் தற்போது 190 அணு குண்டுகள் வரை இருக்கலாம் என ஆய்வு வெளியாகியுள்ளது.

190 அணு குண்டுகள் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>India’s Nuclear Arsenal May Reach 190 Warheads: இந்தியாவிடம் தற்போது 190 அணு குண்டுகள் வரை இருக்கலாம் என ஆய்வு வெளியாகியுள்ளது.</p><h2>

190 அணு குண்டுகள் </h2><p>அமெரிக்காவின் Federation of American Scientists (FAS) வெளியிட்ட புதிய ஆய்வின் படி, இந்தியா தற்போது 140 முதல் 225 அணு குண்டுகளுக்குத் தேவையான புளுடோனியம் உற்பத்தி செய்திருக்கலாம். அதில் 190 அணு குண்டுகள் வரை உருவாக்கப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

இந்தியாவின் அணு ஆயுத களஞ்சியம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. புதிய விமானங்கள், நில அடிப்படையிலான ஏவுகணைகள் மற்றும் கடல் அடிப்படையிலான ஏவுகணைகள் ஆகியவற்றை கொண்டு இந்தியா தனது பாதுகாப்பு திறனை விரிவாக்கி வருகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb44026d-aff6-45ad-91b2-1b2d4546aa12/26-6aa3c311897f0.webp' /></p><p>இந்த ஆய்வின் படி, இந்தியா தற்போது ஒன்பது வகையான அணு ஆயுத ஏவுகணை அமைப்புகளை இயக்குகிறது. இதில் இரண்டு விமானங்கள், ஆறு நில அடிப்படையிலான ஏவுகணைகள் மற்றும் ஒரு கடல் அடிப்படையிலான ஏவுகணை அடங்கும்.
</p><p>
மும்பை அருகே உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் Dhruva ரியாக்டர் மற்றும் 2010 வரை செயல்பட்ட CIRUS ரியாக்டர் ஆகியவை இந்தியாவின் புளுடோனியம் உற்பத்தியின் மூலமாக இருந்தன.</p><p> 2026 ஏப்ரலில், கல்பாக்கத்தில் உள்ள 500-MWt Prototype Fast Breeder Reactor (PFBR) செயல்பாட்டைத் தொடங்கியது. இது ஆண்டுக்கு சுமார் 140 கிலோ புளுடோனியம்-239 உற்பத்தி செய்யக்கூடிய திறன் கொண்டதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>பிரித்தானியாவை விட அதிகமாக</h2><p>சமீபத்திய SIPRI அறிக்கையின் படி, இந்தியாவிடம் சுமார் 170 அணு குண்டுகள் உள்ளன. அதே அளவு பாகிஸ்தானிடமும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

இந்த ஆய்வு, இந்தியாவின் அணு ஆயுத களஞ்சியம் விரைவில் பிரித்தானியாவை விட அதிகமாக இருக்கக்கூடும் எனவும், சீனாவின் வளர்ச்சி இந்தியாவை அதிகப்படியான ஆயுத மேம்பாட்டுக்கு தூண்டுகிறது எனவும் குறிப்பிடுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T09:25:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாலமன் பாப்பையா காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/solomon-pappaiah-passed-away-1789115391"></link>
            <id>https://ibctamilnadu.com/article/solomon-pappaiah-passed-away-1789115391</id>
            <summary type="text">பட்டிமன்ற பேச்சாளரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா வயது மூப்பின் காரணமாக மதுரையில் இன்று காலமானார்.

1936ம் ஆண்டு பிறந்தவர் சாலமன் பாப்பையா, மதுரை அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பட்டிமன்ற பேச்சாளரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா வயது மூப்பின் காரணமாக மதுரையில் இன்று காலமானார்.</p><p>
</p><p>
1936ம் ஆண்டு பிறந்தவர் சாலமன் பாப்பையா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றியவர்.
</p><p>
திருக்குறள் உட்பட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு சாலமன் பாப்பையா உரை எழுதி இருக்கிறார், 12000க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்திய புகழுக்குரியவர்.
</p><p>
வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார், 2000ம் ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருதினையும், 2021ம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5baf705c-a387-42ff-9687-ab6791c90bd7/26-6aa3bc3c9673c.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-11T09:20:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரட்டை கோபுர தாக்குதல்களின் 25வது ஆண்டு நினைவு நாள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/25th-anniversary-of-the-twin-towers-attacks-1789118530"></link>
            <id>https://canadamirror.com/article/25th-anniversary-of-the-twin-towers-attacks-1789118530</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவில் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி நடத்தப்பட்ட இரட்டை கோபுரத் தீவிரவாதத் தாக்குதல்களின் 25வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவில் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி நடத்தப்பட்ட இரட்டை கோபுரத் தீவிரவாதத் தாக்குதல்களின் 25வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. </p><p>

நியூயோர்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் மீது இரண்டு விமானங்கள் மோதி தாக்குதல் நடத்தின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f96f3f1-6af7-4399-bb8c-8808c501b26a/26-6aa3c847d7ff4.webp' /></p><h2>இரண்டு விமானங்கள் மோதி தாக்குதல்&nbsp;</h2><p> </p><p>இரண்டாவது தாக்குதல் முதல் தாக்குதலுக்குப் பிறகு 17 நிமிடங்கள் கழித்து நிகழ்ந்தது. </p><p>

கட்டடங்கள் தீப்பிடித்ததால் மேல் தளங்களில் சிக்கிய மக்கள் அவதிப்பட்ட நிலையில், இரண்டு மணி நேரத்திற்குள் 110 மாடிகளைக் கொண்ட இரண்டு கோபுரங்களும் தூசு மண்டலமாக இடிந்து விழுந்தன. </p><p>

வொஷிங்டன் டிசி அருகில் உள்ள அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகனின் மேற்குப் பகுதியை மூன்றாவது விமானம் தகர்த்தது. 

பயணிகளின் கடுமையான எதிர்ப்பால் நான்காவது விமானம் பென்சில்வேனியாவில் உள்ள திறந்தவெளியொன்றில் விழுந்து நொறுங்கியது. </p><p>

இது வொஷிங்டனில் உள்ள பாராளுமன்றக் கட்டடத்தை குறிவைத்துத் தாக்கப்படவிருந்ததாக நம்பப்படுகிறது. இந்தத் தாக்குதல்களில் கடத்தல்காரர்கள் 19 பேர் தவிர்த்து மொத்தம் 2,977 பேர் உயிரிழந்தனர். </p><p>

இவர்களில் பெரும்பாலோர் நியூயோர்க்கைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும், அமெரிக்க வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் 441 அவசரகால மீட்புப் பணியாளர்கள் இதில் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். </p><p>

இந்தத் தாக்குதல்களும், அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் இந்த நூற்றாண்டின் முதல் இரண்டு தசாப்தங்களுக்குரிய வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை கொள்கைகளை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகித்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p> 

இந்த நிலையில் குறித்த தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து, தாக்குதல்கள் நடைபெற்ற நியூயோர்க், வெர்ஜீனியா மற்றும் பென்சில்வேனியா ஆகிய மூன்று முக்கிய இடங்களிலும் அதிகாரப்பூர்வ நினைவு சடங்குகள் இன்று இடம்பெறுகின்றன. </p><p>

அத்துடன், இன்றைய தினம் லண்டனில் உள்ள குவீன் எலிசபெத் ஒலிம்பிக் பூங்காவிலும் உயிரிழந்தவர்களின் நினைவாக விசேட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.</p>]]></content>
            <updated>2026-09-11T09:19:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[வற்றிப்போகும் கிணறுகள்: சீனிபுர பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wells-dried-up-drought-trinco-drinking-water-1789117308"></link>
            <id>https://tamilwin.com/article/wells-dried-up-drought-trinco-drinking-water-1789117308</id>
            <summary type="text">தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக கந்தளாய் சீனிபுர பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அத்தோட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக கந்தளாய் சீனிபுர பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>அத்தோடு,&nbsp;அப்பகுதியிலுள்ள
கிணறுகளின் நீர்மட்டம் வற்றியுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p>
இந்நிலையில், கந்தளாய் பிரதேச சபையினால் வாரத்திற்கு ஒருமுறை குடிநீர் கொண்டு
வந்து விநியோகிக்கப்படுவதாகவும், எனினும் தற்போதைய தேவைக்கு அது போதுமானதாக
இல்லை என அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.</p><h2>கோரிக்கை</h2><p>

மேலும், வறட்சி காரணமாக காடுகளிலும் நீராதாரங்கள் குறைந்துள்ளதால், குடிநீரைத்
தேடி காட்டு யானைகள் கிராமப் பகுதிகளுக்குள் நுழையும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக
மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d7b6291-4349-4dfd-bef8-03b16a26a285/26-6aa3c6d84e672.webp' /></p><p>சீனிபுர மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக
நிரந்தரத் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை
விடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T09:16:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ccib-questions-shiran-basik-s-father-1789103827"></link>
            <id>https://ibctamil.com/article/ccib-questions-shiran-basik-s-father-1789103827</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;சமீபத்தில் துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட, முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் என சந்தேகிக்கப்படும் ஷிரான் பாசிக்கின் தந்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>சமீபத்தில் துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட, முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் என சந்தேகிக்கப்படும் ஷிரான் பாசிக்கின் தந்தை, சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து தொடர்பான விசாரணை ஒன்றின் தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவால் (CCIB) கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 

அறிக்கைகளின்படி, ஷிரான் பாசிக் கம்பஹா பகுதியில் உள்ள ஒரு ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில், தனது தந்தையின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட ஒரு வீட்டை வாங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
 

ஷிரான் பாசிக்கின் தந்தை, சொத்து சம்பந்தமாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (11) CCIB முன் முன்னிலையாக அறிவுறுத்தப்பட்டிருந்தார்.
</p><p>
அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p><b><i><u>மற்றுமொரு ஆடம்பர வீடு....! ஷிரான் பாசிக்கின் தந்தையிடம் CCIB விசாரணை</u></i></b></p><p>போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் தற்போது விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>



டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஷிரான் பாசிக், கம்பஹா பகுதியில் அமைந்துள்ள ஆடம்பரக் குடியிருப்புத் தொகுதியொன்றில், சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான வீடு ஒன்றை கொள்முதல் செய்துள்ளதாகவும், அது அவரது தந்தையின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.</p><p>இதற்கமைய, இது தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக, ஷிரான் பாசிக்கின் தந்தையை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><h2>முடக்க அதிகாரிகள் நடவடிக்கை</h2><p> 



இதற்கமைய, இது தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக, ஷிரான் பாசிக்கின் தந்தையை இன்றைய தினம் (11) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d7718b5-0d31-469c-944c-8e30830bc171/26-6aa3a0d2e5ad1.webp' /></p><p>இதேவேளை, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தல்கார் என அறியப்ஸபடும் மொஹமட் ஷிரான் பாசிக்கின் நெருங்கிய சகாவான ரணதுங்க ஆரச்சிஸே நலின் அர்ஜுன என்பவரால் சட்டவிரோதமான முறையில் ஈட்ப்பட்ட பணத்தைக் கொண்டு கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் உடமைககளை முடக்குவதற்குச் குற்றவரும்படி விசாரணை பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. </p><p>இதற்கமைய, வியாழக்கிழமை (10) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 14 நாட்களுக்குக் குறித்த சொத்துக்கள் மற்றும் உடமைகள் முடக்கப்பட்டுள்ளன.</p><p>விசாரணை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த சந்தேகநபரால் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்தைக்கொண்டு கொள்முதல் செய்யப்பட்ட சொத்துக்களை வேறு எவருக்கும் விற்பனை செய்வதோ, உரிம மாற்றம் செய்வதோ அல்லது அதில் மாற்றங்களை ஏற்படுத்துவதை தடுத்து, அவற்றை முடக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T09:13:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுவனை கண்டித்த ஆசிரியை: மிரட்டிய தந்தைக்கு சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-jailed-threatening-behead-sons-teacher-1789117869"></link>
            <id>https://news.lankasri.com/article/man-jailed-threatening-behead-sons-teacher-1789117869</id>
            <summary type="text">A father has been jailed for threatening his son&#039;s teacher in France: பிரான்சில், தன் மகனைக் கண்டித்த ஆசிரியையை மிரட்டிய தந்தை சிறையில் அடைக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>A father has been jailed for threatening his son's teacher in France: பிரான்சில், தன் மகனைக் கண்டித்த ஆசிரியையை மிரட்டிய தந்தை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.</p><p>


பிரான்சிலுள்ள Le Fauga என்னும் கிராமத்தில், அப்தெல்காதர் (47) என்னும் நபரின் மகன் வகுப்பில் சேட்டை பண்ணிக்கொண்டிருந்ததால், அவனை வேறொரு வகுப்பில் அமர வைத்துள்ளார் அவனது ஆசிரியை.
</p><h2>
சிறுவனை கண்டித்த ஆசிரியை</h2><p>

அப்போதும் அவன் அமைதியாகாததால், வம்பு செய்கிறவன் போல் நடந்துகொள்ளாதே என அவனைத் திட்டினாராம் அந்த ஆசிரியை.
</p><p>
அந்தச் சிறுவன் தன் ஆசிரியை தன்னைத் திட்டியதை தன் தந்தையிடம் சென்று கூற, அவர் பள்ளிக்குச் சென்று, கார் பார்க்கிங்கில் வைத்து அந்த ஆசிரியையை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93309a0e-dcb9-4bdc-9372-6453415a0493/26-6aa3c615bbc9e.webp' /><br></p><p>

பின்னர் அவர் பள்ளிக்கு வரவழைக்கப்பட, அந்த ஆசிரியையைப் பார்த்து, நீ ஆணாக இருந்திருந்தால் உன் தலையை வெட்டி விடுவேன் என்று மிரட்டியுள்ளார் அப்தெல்காதர்.
</p><p>
அதைக் கேட்டு பயந்துபோன ஆசிரியை மருத்துவ விடுப்பில் போய்விட்டாராம். பிற ஆசிரியர்களும் பள்ளிக்கு வர அஞ்சுகிறார்களாம்.
</p><p>
இந்நிலையில், விடயம் நீதிமன்றத்தை எட்ட, அப்தெல்காதருக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பிரான்ஸ் சட்டப்படி, பிள்ளைகளால் பிரச்சினை ஏற்படும்போது அவர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவார்கள் என்பதால், சம்பந்தப்பட்ட மாணவனும் அவனது தங்கையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட உள்ளார்கள்.</p><p>

ஒரு பள்ளியில் ஒரு மாணவனை ஒரு ஆசிரியை திட்ட, அவனது தந்தை ஆசிரியையை மிரட்ட, ஏன் இப்படி சட்டம் வரை இந்த விடயத்தில் தலையிட்டு சிறைத்தண்டனை வரை செல்கிறது என்றால், அதற்குக் காரணம் உள்ளது.
</p><p>
2020ஆம் ஆண்டு, சாமுவேல் (Samuel Paty) என்னும் ஆசிரியர் குறித்து ஒரு மாணவி தன் தந்தையிடம் பொய்யாக புகார் ஒன்றைக் கூற, அவர் அதை நம்பி மதம் சார்ந்த பிரச்சினையாக மாற்ற, பயங்கரவாத எண்ணம் செசன்ய அகதியான Abdoullakh Anzorov என்பவன், சாமுவேலை தலையை வெட்டிக் கொன்றுவிட்டான்.
</p><p>
அதே நிலை தனக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்று பயந்தே இந்த ஆசிரியையும் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார்.
</p><p>
ஆகவேதான் இந்த விடயத்தை பிரான்ஸ் அரசு கையில் எடுத்துள்ளதுடன், அப்தெல்காதருக்கு சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.<br></p>]]></content>
            <updated>2026-09-11T09:13:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை ரூபாயின் மதிப்பில் சிறிய மாற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/slight-change-in-the-value-of-the-sri-lankan-rupee-1789118114"></link>
            <id>https://jvpnews.com/article/slight-change-in-the-value-of-the-sri-lankan-rupee-1789118114</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான(11) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.



இதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான(11) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
</p><p>


இதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றும் சிறிய அளவிலான மாற்றம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/014b50ea-ac2f-4496-bc05-06ed86855069/26-6aa3c6aa45498.webp' /></p><p>
</p><p>


அமெரிக்க டொலரின் இன்றைய சராசரி கொள்வனவு விலை 324.0476 ரூபாயாகவும், அதன் விற்பனை விலை 333.0703 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.</p><p></p><p> 



அமெரிக்க டொலர் தவிர, ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களான அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்க் உள்ளிட்ட ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களின் விற்பனை விலைகளும் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று சற்று ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-09-11T09:12:11+00:00</updated>
        </entry>
    </feed>
