<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-14T05:29:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொன்சேகாவை இராணுவத்தினர் கைது செய்த போது அதே ஹோட்டலில் தங்கியிருந்த அநுர! மேடையில் சம்பவத்தை விபரித்த ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-who-was-present-when-fonseka-was-arrested-1789359287"></link>
            <id>https://tamilwin.com/article/anura-who-was-present-when-fonseka-was-arrested-1789359287</id>
            <summary type="text">
2010 ஜனாதிபதி தேர்தலின் போது ஒரே ஹோட்டலில் இருந்து தேர்தல் முடிவுகளை நானும் சரத் பொன்சேகாவும் பார்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென அந்த ஹோட்டலை இராணு...</summary>
            <content type="html"><![CDATA[<p>
2010 ஜனாதிபதி தேர்தலின் போது ஒரே ஹோட்டலில் இருந்து தேர்தல் முடிவுகளை நானும் சரத் பொன்சேகாவும் பார்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென அந்த ஹோட்டலை இராணுவத்தினர் சுற்றிவளைத்து, சரத் பொன்சேகாவை கைது செய்தனர் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். </p><p>

நொச்சியாகம பகுதியில் நேற்றையதினம்(13) இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

ஊழல்வாதிகளை கைது செய்யும் போது நான் அரசியல் பழிவாங்களில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்துகின்றனர். யாரையும் பழிவாங்க வேண்டிய தேவை எனக்குக் கிடையாது..</p><h2>அரசியல் பழிவாங்கல்&nbsp;</h2><p>

2010இல் நானும், அப்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான சரத் பொன்சேகாவும் ஒரே ஹோட்டலில் இருந்தவாறு தேர்தல் முடிவுகளை பார்த்துக் கொண்டிருந்தோம்.
</p><p>
முடிவுகள் வெளியாகி முடிந்தவுடன் அந்த ஹோட்டலை இராணுவத்தினர் சுற்றிவளைத்தனர். சரத் பொன்சேகாவும் அப்போதே கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be9a3f70-b772-4b47-ac73-7d6be55fdb44/26-6aa7820d4ca79.webp' /></p><p> </p><p>


அப்போதைய அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டியதற்காக ஊடக நிறுவனம் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். </p><p> அரச அதிகாரிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். பலர் நாட்டை விட்டுத் தப்பிச்சென்றனர். இதுதான் அரசியல் பழிவாங்கல் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-14T05:28:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் தட்டம்மையால் பெண் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/woman-dies-of-measles-in-the-us-1789363190"></link>
            <id>https://canadamirror.com/article/woman-dies-of-measles-in-the-us-1789363190</id>
            <summary type="text">அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் தட்டம்மை (Measles) நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு 40 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தடுப்பூசி மூலம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் தட்டம்மை (Measles) நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு 40 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>

தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய இந்த அரிதான நோய்த்தொற்றால் நடப்பு ஆண்டில் அமெரிக்காவில் பதிவாகும் 3-வது உயிரிழப்பு இதுவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95d97404-a458-4473-b423-ec6612e22c83/26-6aa783f83469c.webp' /></p><p>
</p><p>
பென்சில்வேனியாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருவர் தட்டம்மையால் உயிரிழந்துள்ளனர்.

பென்சில்வேனியா மாநிலத்தில் இந்த ஆண்டில் இதுவரை 676 பேருக்குத் தட்டம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது</p><p>&nbsp;இதில் 124 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிப்புக்குள்ளானவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>

அமெரிக்க அளவிலான தரவுகளின்படி 2026-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் 45-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இதுவரை 3294 பேருக்குத் தட்டம்மை பாதிப்பு பதிவாகியுள்ளது.</p><p>

2025-ஆம் ஆண்டில் 2289 பாதிப்புகளும் 3 உயிரிழப்புகளும் பதிவாகியிருந்தன.

அமெரிக்காவில் 2000-ஆம் ஆண்டிலேயே தட்டம்மை நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது.</p><p>

எனினும், அண்மைய காலங்களில் தடுப்பூசிகள் மீதான தயக்கம் மற்றும் எதிர்ப்பு காரணமாக மீண்டும் இந்த நோய் அதிகரித்து வருகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T05:19:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு: சித்திரை வீதிகளில் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/meenakshi-amman-temple-kumbabishekam-1789362952"></link>
            <id>https://ibctamilnadu.com/article/meenakshi-amman-temple-kumbabishekam-1789362952</id>
            <summary type="text">மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை சித்திரை வீதிகளில் பக்தர்கள் நின்று விழாவை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலகப்பிரசித்த பெற்ற மதுர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை சித்திரை வீதிகளில் பக்தர்கள் நின்று விழாவை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
உலகப்பிரசித்த பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழா செப்டம்பர் 17ம் தேதி நடைபெறுகிறது.
</p><p>
விழாவில் 2 ஆயிரம் பக்தர்கள், 9 ஆயிரம் விஐபிக்கள் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5374a08-68c5-4891-89a5-d4d96cffddbf/26-6aa783a54490c.webp' /><br></p><p>

காலை 7.40 மணிமுதல் 8.10 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறும், விழாவில் பங்கேற்ற பாஸ் பெற்றவர்கள் மட்டுமே சித்திரை வீதிகள் வழியாக கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.</p><p>

மற்றவர்கள் சித்திரை வீதிகளில் தடை விதிக்கப்படுவார்கள், இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
</p><p>
இந்நிலையில் குடமுழுக்கு விழா முடிந்த பின்னர் சூழ்நிலையை பொறுத்து மற்ற பக்தர்கள் போலிசாரால் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf6bb928-efdb-4d0f-ae4a-4880d16c13b6/26-6aa783a490653.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-14T05:18:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடதும்பர பகுதியில் 11 வயது பௌத்த பிக்கு உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/11-year-old-buddhist-monk-dies-in-udadumbara-area-1789361835"></link>
            <id>https://tamilwin.com/article/11-year-old-buddhist-monk-dies-in-udadumbara-area-1789361835</id>
            <summary type="text">உடதும்பர - கைக்காவலப் பகுதியில் உள்ள ஹீன் கங்கையில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி 11 வயதுடைய பௌத்த பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உடதும்பர - கைக்காவலப் பகுதியில் உள்ள ஹீன் கங்கையில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி 11 வயதுடைய பௌத்த பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (13.09.2026) இடம்பெற்றுள்ளது.
</p><p>
பொலிஸாரின் தகவலின்படி, குறித்த பிக்கு மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு விகாரையில் தங்கியிருந்து வந்துள்ளார்.</p><h2>ஆரம்பகட்ட விசாரணை</h2><p>

இந்த நிலையில் தானம் வழங்கும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக உடதும்பர பகுதிக்கு சென்றிருந்த அவர், பின்னர் வேறு சில பௌத்த பிக்குகளுடன் இணைந்து ஹீன் கங்கையில் குளிக்கச் சென்றிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3f5c53b-d6e1-42b8-a9c1-89f434126b88/26-6aa7835e7cf6d.webp' /></p><p> </p><p>

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது அந்த பிக்கு நீரில் மூழ்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>

இச்சம்பவம் குறித்து உடதும்பர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T05:17:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குளிக்கச் சென்ற 11 வயது இளம் பிக்குவிற்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/11-year-old-monk-s-tragic-bathing-incident-1789362571"></link>
            <id>https://jvpnews.com/article/11-year-old-monk-s-tragic-bathing-incident-1789362571</id>
            <summary type="text">உடுதும்புர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைக்காவல பகுதியில் பாயும் &#039;ஹீன் கங்கையில் குளிக்கச் சென்ற இளம் பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உடுதும்புர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைக்காவல பகுதியில் பாயும் 'ஹீன் கங்கையில் குளிக்கச் சென்ற இளம் பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து உடுதும்புர பொலிஸ் நிலையத்திற்குப் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee87a91f-e807-4632-9d53-93d7e0cdb4c6/26-6aa7818d3628b.webp' /></p><p style="text-align: justify; ">
மினுவாங்கொடை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள விகாரையொன்றின் 11 வயதுடைய இளம் பிக்கு ஒருவரே உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
உடுதும்பர பகுதியில் நடைபெற்ற தான நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக வருகை தந்திருந்த இப் பிக்கு, ஏனைய சில பிக்குகளுடன் இணைந்து 'ஹீன் கங்கையில் குளிக்கச் கொண்டிருந்த போதே நீரில் மூழ்கியுள்ளார் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் உடுதும்பர பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-14T05:09:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரம்மாண்டமாக உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் 2 படத்தின் டீசர்.. தீபாவளி ரிலீஸ் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/mookuthi-amman-2-teaser-and-release-date-1789362213"></link>
            <id>https://cineulagam.com/article/mookuthi-amman-2-teaser-and-release-date-1789362213</id>
            <summary type="text">சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2. இப்படத்தில் ரெஜினா, சினேகா, குஷ்பூ, ஊர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2. இப்படத்தில் ரெஜினா, சினேகா, குஷ்பூ, ஊர்வசி, யோகி பாபு, துனியா விஜய், மைனா நந்தினி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். மேலும், ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
</p><p>
இந்த நிலையில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் வருகிற நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான டீசரும் தற்போது வெளியாகியுள்ளது. இதோ பாருங்க..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UUfAemccAJ0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-14T05:03:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடகத்தில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த ராசிகளின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/guru-mangala-yoga-in-cancer-who-get-huge-luck-1789360303"></link>
            <id>https://manithan.com/article/guru-mangala-yoga-in-cancer-who-get-huge-luck-1789360303</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்களின் நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களும், ஆற்றல் வாய்ந்த கிரகங்களின் இணைவால் உருவாகும் ராஜ யோகங்களும் 12 ராசி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்களின் நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களும், ஆற்றல் வாய்ந்த கிரகங்களின் இணைவால் உருவாகும் ராஜ யோகங்களும் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.</p><p>அந்தவகையில், கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய், 2026 செப்டம்பர் 18 அன்று கடக ராசியில் நுழைந்து, நவம்பர் 12 வரை அங்கு சஞ்சரிக்கின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b524b646-df2b-4235-b9a7-a47da2b883d2/26-6aa77f50dd018.webp' /></p><p>நெருப்பு கிரகமான செவ்வாய், நீர் ராசியான கடகத்தில் நுழைவது 2026-ன் முக்கியமான கிரக மாற்றங்களில் ஒன்றாகும்.

ஏற்கனவே குருபகவான் கடக ராசியில், தனது உச்ச நிலையில் சஞ்சரித்து வருகிறார். ஜூன் 2 முதல் அக்டோபர் 31, 2026 வரை குரு கடகத்தில் இருப்பார்.</p><p> </p><p>இதனால் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 31 வரை செவ்வாய்–குரு இணைவு ஏற்பட்டு குரு மங்கள யோகம் உருவாகிறது.

இந்த யோகம் அனைத்து ராசிகளிலும் ஆதிக்கம் செலுத்தினாலும் சில ராசிக்காரர்களுக்கு அதிகளவில்&nbsp; சாதகமான பலன்களை வழங்கும். </p><p>அப்படி குரு மங்கள யோகத்தால் உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75dc8682-9df8-4e9c-bdb7-46d25dc5cdf8/26-6aa77f51ba4e3.webp' /></p><h2>
</h2><p>செவ்வாய் இந்த காலகட்டத்தில் வீடு, சொத்து மற்றும் குடும்ப வாழ்க்கையைக் குறிக்கும் 4ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறது. இதனால் பல்வேறு துறைகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.</p><p>இருப்பினும் அதற்கு கடின உழைப்பும் முயற்சியும் தேவைப்படும். உங்கள் உழைப்புக்கேற்ற பலன் நிச்சயம் கிடைக்கும்.

புதிதாக ஏதாவது தொடங்க, குறிப்பாக வியாபாரம் தொடங்க இது சிறந்த காலமாக இருக்கும்.</p><p> நிதி நிலை சாதகமாக இருப்பதுடன், முதலீடுகளும் நல்ல பலனைத் தரலாம். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். பணியிடத்திலும் சிறப்பான முன்னேற்றம் காணலாம். </p><h2>கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89cccbe9-0b2f-4014-91a0-dad4d2ed99df/26-6aa77f52742b1.webp' /></p><p>குருபகவான் ஏற்கனவே கடக ராசியில் சஞ்சரித்து வரும் நிலையில், தற்போது செவ்வாயும் இணைகிறது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்த கிரக சேர்க்கை வாழ்க்கையில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும்.</p><p> பல்வேறு விஷயங்களில் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும்.

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும். குறிப்பாக சட்டம் தொடர்பான பிரச்சினைகளில் நிவாரணம் கிடைக்கும்.</p><p>வியாபாரிகளுக்கு நல்ல லாபமும், பணியாளர்களுக்கு அலுவலகத்தில் சாதகமான பலன்களும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நல்லிணக்கமும் நிலவும்.</p><p>

நீங்கள் மேற்கொண்டு வரும் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.காதல் மற்றும் திருமண வாழ்க்கையும் சிறப்பாக அமையும். வாழ்க்கைத்துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.&nbsp;</p><h2>
விருச்சிகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/954b3e01-7cee-480e-bd5b-3c3531999574/26-6aa77f53280ad.webp' /></p><p></p><p>
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த குரு மங்கள யோகம் எதிர்பாராத நன்மைகளைத் தரக்கூடும். செவ்வாய் ஆர்வத்தையும் செயல்திறனையும் அதிகரிக்க, குருபகவான் தன்னம்பிக்கையை கொடுப்பார்.</p><p>இதனால் வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவதுடன், புதிய ஒப்பந்தங்கள் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும்.</p><p>முதலீடுகளிலிருந்தும் வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் உள்ளன.

குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்புகள் உருவாகும்.வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T05:00:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள 121,000 பேர் : ஜனாதிபதி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/121000-people-to-be-recruited-into-govt-service-1789359064"></link>
            <id>https://ibctamil.com/article/121000-people-to-be-recruited-into-govt-service-1789359064</id>
            <summary type="text">நாடளாவிய ரீதியில் 23,000 ஆசிரியர்கள் உட்பட 121,000 பேரை அரச சேவையில் புதிதாக இணைத்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் 23,000 ஆசிரியர்கள் உட்பட 121,000 பேரை அரச சேவையில் புதிதாக இணைத்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>நொச்சியாகமவில் நேற்று (13) நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.</p><p>பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலம் நாட்டின் எதிர்காலத்திற்காக அரசாங்கத்தால் அதிக முதலீடுகளைச் செய்ய முடியும் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.</p><p></p><h2>வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம்</h2><p>இதேவேளை நேற்று (13) கஹட்டகஸ்திகிலியவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, 50 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான கபிதிகொல்லேவ நீர் விநியோகத் திட்டம் மற்றும் 47 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான கீழ் மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டம் ஆகியவற்றை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24b5497f-d4f2-4e9d-bca3-7a9b4cc56d58/26-6aa77e8b1cca1.webp' /></p><p>மனித - யானை மோதல் விவகாரத்தைக் கையாளுவதற்காக 3,000க்கும் மேற்பட்ட வனவிலங்கு உதவியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் 5,000க்கும் மேற்பட்ட வனவிலங்கு அதிகாரிகளை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.</p><p>மேலும், சிவில் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த 5,000 பணியாளர்கள் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்துடன் இணைக்கப்படவுள்ளனர்” என தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T05:00:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்கவில் சட்டவிரோத போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ugandan-national-arrested-with-cocaine-1789360351"></link>
            <id>https://ibctamil.com/article/ugandan-national-arrested-with-cocaine-1789360351</id>
            <summary type="text">50 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத கொக்கைன் போதைப்பொருளுடன் உகண்டா பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பண்டாரநாயக்க சர்வதேச விமான...</summary>
            <content type="html"><![CDATA[<p>50 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத கொக்கைன் போதைப்பொருளுடன் உகண்டா பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>குறித்த நபர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைதாகியுள்ளார்.&nbsp;</p><p>

கைதானவர் 43 வயதுடைய உகண்டா பிரஜை என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>போதைப்பொருள் உருண்டைகள்</h2><p> </p><p>

சந்தேகநபர் உகண்டாவில் இருந்து கட்டாரை வந்தடைந்து, அதன்பின்னர், அங்கிருந்து கட்டார் விமான சேவைகளுக்கு சொந்தமான QR-664 விமானத்தில் நேற்று (13.09.2026) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4aa6561b-584f-41d2-b476-298a3b8172c6/26-6aa77c6800086.webp' /></p><p> </p><p>

இந்நிலையில் மதியம் வரை விமான நிலையத்தின் முதல் மாடியில் அவர் தங்கியிருந்துள்ளார்.</p><p> 

சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவுக்குக் கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. </p><p>

விமான நிலையத்தினுள் வைத்து இவர் விழுங்கியிருந்த 13 கொக்கைன் போதைப்பொருள் உருண்டைகளை வெளியேற்றப்பட்டுள்ளது. </p><p>

அதேநேரம் எஞ்சிய கொக்கைன் போதைப்பொருள் உருண்டைகளை வெளியேற்றுவதற்காக, சந்தேகநபரை நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T04:57:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட அயர்லாந்தும் அயர்லாந்துக் குடியரசும் இணையவேண்டும்: ட்ரம்ப் விருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/donald-trump-support-for-united-ireland-1789361810"></link>
            <id>https://news.lankasri.com/article/donald-trump-support-for-united-ireland-1789361810</id>
            <summary type="text">Donald Trump doubles down on support for united Ireland: ஒன்றுபட்ட அயர்லாந்து குறித்த தன் கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் ட்ரம்ப்.


அயர்லாந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Donald Trump doubles down on support for united Ireland: ஒன்றுபட்ட அயர்லாந்து குறித்த தன் கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் ட்ரம்ப்.
</p><p>

அயர்லாந்துக்கு இரண்டு நாள் பயணமாகச் சென்றிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வழக்கம்போல குட்டையைக் குழப்பிவிட்டுச் சென்றுள்ளார்.</p><h3>

ஒன்றுபட்ட அயர்லாந்து
</h3><p>
தனக்கு சம்பந்தமில்லாத நாடுகளின் அரசியலில் தலையிட்டு கருத்துக்கள் தெரிவிப்பது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு வழக்கமாகிவிட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a68fad0d-7b9a-4d29-aba5-84ef55500794/26-6aa77e935d0ba.webp' /></p><p>

கனடா, கிரீன்லாந்து, மெக்சிகோ, கியூபா மற்றும் காஸா, பனாமா கால்வாய் என பல்வேறு பகுதிகளை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்து கனவு கண்டுகொண்டிருக்கும் ட்ரம்ப், பிரித்தானியாவிலும் தனது வேலையைக் காட்டியுள்ளார்.</p><p>

சனிக்கிழமையன்று இரண்டு நாள் பயணமாக அயர்லாந்துக்குச் சென்றிருந்த ட்ரம்ப், போகிற போக்கில், ஒன்றுபட்ட அயர்லாந்தைக் காண தான் விரும்புவதாகக் கூறிச் சென்றுள்ளார்.
</p><p>
வட அயர்லாந்தும், அயர்லாந்துக் குடியரசும் இணைவது என்பது, மிகவும் இயல்பான விடயமாக தனக்குத் தோன்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார் அவர்.&nbsp;</p><p></p><p>
அவரது கருத்துக்கள், அயர்லாந்துக் கடலின் இரண்டு பக்கத்திலும் திடீர்க் குழப்பதை உருவாக்கியுள்ளதாக தி கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>

ஏற்கனவே, வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வட அயர்லாந்து ஆகிய நாடுகள் பிரித்தானியாவிலிருந்து பிரிவது தொடர்பில் பேச்சு எழுந்துள்ள நிலையில், ட்ரம்ப் வேறு குட்டையைக் குழப்ப, ஏற்கனவே இருக்கும் கவலைகள் போதாதென இப்போது பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு புதுக் கவலை உருவாகியுள்ளது எனலாம்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T04:56:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சினிமா பாணியில் அரங்கேறிய கடத்தல் ; விமான நிலையத்தை பரபரப்பாக்கிய உகண்டா பிரஜை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ugandan-national-causes-stir-at-airport-1789361652"></link>
            <id>https://jvpnews.com/article/ugandan-national-causes-stir-at-airport-1789361652</id>
            <summary type="text">50 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் உகண்டா பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">50 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் உகண்டா பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify;"> 

சந்தேகநபர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/545e8e2c-9736-4f9e-854c-e91fb4057aa8/26-6aa77df65ed12.webp' /></p><h2 style="text-align: justify;">முதற்கட்ட விசாரணை</h2><p> </p><p style="text-align: justify;">

கைதானவர் 43 வயதுடைய உகண்டா பிரஜை என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "> 

சந்தேகநபர் உகண்டாவில் இருந்து கட்டாரை வந்தடைந்து, அதன்பின்னர், அங்கிருந்து கட்டார் விமான சேவைகளுக்கு சொந்தமான QR-664 விமானத்தில் நேற்று (13) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். </p><p style="text-align: justify;">

இந்நிலையில் மதியம் வரை விமான நிலையத்தின் முதல் மாடியில் அவர் தங்கியிருந்துள்ளார்.</p><p style="text-align: justify;">[<span style="text-align: left;"></span></p><p style="text-align: justify;">சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவுக்குக் கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify;">

விமான நிலையத்தினுள் வைத்து இவர் விழுங்கியிருந்த 13 கொக்கைன் போதைப்பொருள் உருண்டைகளை வெளியேற்றப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

அதேநேரம் எஞ்சிய கொக்கைன் போதைப்பொருள் உருண்டைகளை வெளியேற்றுவதற்காக, சந்தேகநபரை நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T04:54:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் கண்ணுக்கு முன்னால் கைகளாலே பிடிக்கக்கூடிய ஆதாரங்கள்! கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-human-burial-site-investigation-1789359213"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-human-burial-site-investigation-1789359213</id>
            <summary type="text">தமிழினப் படுகொலைக்குக் கண்ணுக்கு முன்னால் கைகளாலே பிடிக்கக்கூடிய ஆதாரங்கள்
செம்மணியில் கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில், அதனை விசாரிப்பதற்கு
...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழினப் படுகொலைக்குக் கண்ணுக்கு முன்னால் கைகளாலே பிடிக்கக்கூடிய ஆதாரங்கள்
செம்மணியில் கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில், அதனை விசாரிப்பதற்கு
மீண்டும் அந்த அரசிடமே அனுமதித்தால், அது எமது இனப்படுகொலைக்கான மிகச்சிறந்த
ஆதாரங்களை நாமே இழப்பதற்குச் சமமாகிவிடும் என்று தமிழ்த் தேசியப்
பேரவையின் தலைவரும், யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.</p><p>

தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் செம்மணி மனிதப் படுகொலைக்குச் சர்வதேச
நீதி கோரி யாழ்ப்பாணத்தில் நேற்று (13.09.2026) முன்னெடுக்கப்பட்ட மாபெரும் பேரணியின்
இறுதியில், நல்லூர் கிட்டு பூங்காவில் 'தமிழ் மக்களின் நீதிக்கான குரல்' எனும்
தொனிப்பொருளில் உள்ளகப் பொறிமுறைகளை முற்றாக நிராகரிக்கும் வகையிலும், சர்வதேச
விசாரணையை ஐ.நா. பொறுப்பேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பிரகடனக்
கூட்டம் நடைபெற்றது. </p><p>அதில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>இன அழிப்பை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளல்</h2><p>அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், போர் முடிந்து 17 வருடங்களுக்குப் பிற்பாடும் கூட, சர்வதேச சமூகம்
தமிழினத்துக்கு நடைபெற்றுள்ள இன அழிப்பை பகிரங்கமாக ஏற்றுக்கொள்வதற்குத்
தயங்குகின்றது. கனடா, பிரித்தானியா போன்ற ஒரு சில நாடுகளின் தலைவர்களைத் தவிர,
ஏனையோர் உத்தியோகபூர்வமாக இந்த இனப்படுகொலை என்ற விடயத்தை ஏற்றுக்கொள்வதைத்
தவிர்த்து வருகின்றனர்.
</p><p>
இத்தகையதொரு சூழலில்தான் செம்மணி படுகொலை சார்ந்த ஆதாரங்களும் சாட்சியங்களும்
வெளிவர ஆரம்பித்துள்ளன. 1996 ஆம் ஆண்டு கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை
வழக்கில், இராணுவச் சிப்பாய்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட
நிலையில்தான், செம்மணியில் கிட்டத்தட்ட 600 இற்கும் அதிகமான உடல்கள்
புதைக்கப்பட்ட உண்மையை அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.</p><p> ஆனால், அப்போதும் கூட
அந்த உண்மைகளை மூடிமறைப்பதற்கே அரசு முயன்றது.

செம்மணியில் புது மண் கொட்டப்பட்டு, அந்தப் பிரதேசம் பல மாதங்களுக்குச் செல்ல
முடியாதவாறு இரவிரவாகச் சுத்தப்படுத்தப்பட்டது. குறிப்பிட்ட சில உடல்கள்
மீட்கப்பட்ட பின்னர் அந்த விசாரணை முடக்கப்பட்டது.

அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் எங்கள் மக்கள் நீதியைக் கோரியும் எவரும் செம்மணி
குறித்துப் பேசத் தயாராக இருக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b1cc20b-96e6-4534-b51d-17fb96f36e7a/26-6aa77ad624f62.webp' /></p><p> </p><p>இந்நிலையில், 2009 மே 18 இற்குப் பிறகு
அழிக்கப்பட்ட ஆத்மாக்களின் அநியாயம் மூடிமறைக்கப்பட்டுவிடக் கூடாது
என்பதற்காக, தற்செயலாகச் செம்மணிச் சுடலையில் கட்டுமான வேலைகள் நடைபெற்றபோது
எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இது காலம் காலமாக அரசுகள் மாறி மாறித்
தமிழினத்தைக் குறிவைத்துள்ளன என்பதை நிரூபிக்கும் மிகப்பெரிய சாட்சியமாகும்.</p><h2>செம்மணி விவகாரம்</h2><p>

ஆனால், இந்தச் சூழலில்தான் போர் முடிவதற்குச் சற்றும் நிபந்தனையற்ற ஆதரவைக்
கொடுத்து, 'எந்தவொரு இராணுவச் சிப்பாயும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட
மாட்டார்கள்' என்று பகிரங்கமாகக் கூறிய ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார
திஸாநாயக்கவின் அரசு தற்போது ஆட்சியில் உள்ளது. </p><p>அத்தகையதொரு சூழலில்தான்
செம்மணி விவகாரம் வெளிப்பட்டுள்ளது.

சிங்கள மக்களுக்கே நீதித்துறையை அரசியல் மயப்படுத்துவதாக இந்த அரசின் மீது
குற்றச்சாட்டு உள்ள நிலையில், உள்ளக விசாரணை எந்த வகையிலும் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு நீதியை வழங்காது என 2014 ஆம் ஆண்டிலேயே ஐ.நா. மனித உரிமைகள்
ஆணையாளரும் தெளிவுபடுத்தியுள்ளார்.
</p><p>
ஆகவே, செம்மணி மனிதப் படுகொலை போன்ற எந்தவொரு குற்றத்துக்கும் எவரையும்
நீதிமன்றத்தின் முன் நிறுத்த மாட்டோம் என்று பகிரங்கமாகச் சொல்லும் அரசின்ன்
கட்டுப்பாட்டில் இந்த விசாரணைகளை விட்டால், சாட்சியங்கள் அனைத்தும்
அழிக்கப்படுவதற்கே வழிவகுக்கும்.

நாளை ஜெனிவாவில் ஐ.நா. அமர்வுகள் நடைபெறும் சூழலில், தாய்மண்ணில் வாழும்
பாதிக்கப்பட்ட மக்களாகிய நாங்கள் உள்ளக விசாரணைகளை முற்றாக நிராகரிக்கின்றோம்.</p><p>

தமிழினப் படுகொலை என்பது இலங்கை அரசால்தான் செய்யப்பட்டது என்பதை உலகுக்கு
உணர்த்தி, எமது சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் எங்களை நாமே ஆளக்கூடிய சூழலை
ஏற்படுத்துவதன் மூலமே பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். அதற்கான ஒரே தீர்வு
நம்பகத்தன்மையான சர்வதேச குற்றவியல் விசாரணை மட்டுமே என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T04:41:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுமிக்கு தனியார் வகுப்பு ஆசிரியர் செய்த தகாத செயல் ; தொலைபேசியில் காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/15-year-old-girl-shocked-by-tutor-s-acts-1789360721"></link>
            <id>https://jvpnews.com/article/15-year-old-girl-shocked-by-tutor-s-acts-1789360721</id>
            <summary type="text">15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் 42 வயதான தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.


மேலதிக ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் 42 வயதான தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">

மேலதிக வகுப்பு நடத்துவதற்காக சிறுமியின் வீட்டிற்குச் சென்ற சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80362ebc-611f-40b9-8ce4-c5cd9e9508af/26-6aa77a52d2c5a.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
சந்தேகநபர் திருமணமான 42 வயதுடையவர் எனவும், அவரது மனைவி சுகாதாரத்துறையில் பணியாற்றி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயார் கண்டி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இதனையடுத்து, சந்தேகநபரின் கைத்தொலைபேசியை பொலிஸார் கைப்பற்றி பரிசோதித்துள்ளனர். </p><p style="text-align: justify; ">அதில் ஆபாசமான காட்சிகள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-14T04:38:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணியின் வயிற்றுக்குள் சிக்கிய பல கோடி ரூபா மர்மம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/uganda-man-arrested-at-katunayake-with-cocaine-1789357941"></link>
            <id>https://tamilwin.com/article/uganda-man-arrested-at-katunayake-with-cocaine-1789357941</id>
            <summary type="text">இலங்கை வந்த வெளிநாட்டு பிரஜை கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

5 கோடிக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை வந்த வெளிநாட்டு பிரஜை கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
5 கோடிக்கும் அதிகமான பெறுமதியான 90க்கும் மேற்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருள் உருண்டைகளை விழுங்கிவிட்டு நாட்டுக்கு வந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

குறித்த நபர் 43 வயதுடைய உகண்டா நாட்டைச் சேர்ந்த விவசாயி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p> </p><h2><b>வயிற்றுக்குள் சிக்கிய பல கோடி ரூபா</b></h2><p>சந்தேக நபர் உகண்டாவின் என்டபே நகரிலிருந்து இந்த கொக்கெய்ன் போதைப்பொருளை விழுங்கிவிட்ட கட்டாரின் தோஹா நகருக்கு வந்துள்ளார்.
</p><p>கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR-664 விமானம் மூலம் நேற்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சந்தேக நபர் மதியம் வரை விமான நிலையத்தின் முதலாவது மாடியில் தங்கியிருந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20aba6c7-310a-4c35-9137-45ec07ed15b4/26-6aa779a7478b9.webp' />&nbsp;&nbsp;</p><p>

சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. </p><p>அத்துடன், விமான நிலையத்தின் உள்ளே சந்தேக நபர் தான் விழுங்கியிருந்த 13 கொக்கெய்ன் உருண்டைகளை வெளியில் வெளியேற்றியுள்ளார். </p><p>

இந்த நபர் விழுங்கியுள்ள மீதமுள்ள கொக்கெய்ன் உருண்டைகளை வெளியில் எடுப்பதற்காக அவரை நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம்&nbsp; அவரை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T04:36:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[விநாயகர் சதுர்த்தி: முதலமைச்சர் விஜய் வாழ்த்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/vijay-wishes-to-vinayagar-chathurthi-1789360424"></link>
            <id>https://ibctamilnadu.com/article/vijay-wishes-to-vinayagar-chathurthi-1789360424</id>
            <summary type="text">விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழக முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவரது வாழ்த்து செய்தியில், &quot;விநாயகர் சதுர்த்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழக முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p>அவரது வாழ்த்து செய்தியில், "விநாயகர் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p> இத்திருநாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேறி, புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, </p><p>ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்

மக்களின் எண்ணங்கள் ஈடேறி, அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.<br></p>]]></content>
            <updated>2026-09-14T04:35:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி எண்ணெய் குழாய் தடங்கல்... உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 4% இழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/saudi-pipeline-global-oil-supply-1789360621"></link>
            <id>https://news.lankasri.com/article/saudi-pipeline-global-oil-supply-1789360621</id>
            <summary type="text">Saudi pipeline outage threatens global oil supply: சவுதி குழாய்வழித் தடங்கல் உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது.
செங்கடல் பகுதிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Saudi pipeline outage threatens global oil supply: சவுதி குழாய்வழித் தடங்கல் உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது.
</p><p>செங்கடல் பகுதிக்குச் செல்லும் தங்களது முக்கியக் குழாய் வழித்தடத்தை இன்னும் சில நாட்களுக்குள் மீண்டும் இயக்கத் தவறினால், ஏற்றுமதிக்கான சவுதி அரேபியாவின் எண்ணெய் இருப்பு தீர்ந்துவிடும் நிலை ஏற்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>உலக எரிபொருள் விலை</h2><p>
</p><p>அத்துடன், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 4 சதவீதம் வரை இழப்பு ஏற்படும் என்றும் சவுதி எண்ணெய் வாங்குபவர்களும் வர்த்தகர்களும் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/160079c3-9516-437c-8eae-2be767164b5c/26-6aa779efc7b0a.webp' /></p><p>
</p><p>சவுதி அரேபியாவின் எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் சரிவு, உலகளாவிய விநியோகப் பற்றாக்குறையை மேலும் மோசமாக்கும். இந்தப் பற்றாக்குறை ஏற்கனவே உலக எரிபொருள் விலைகளை வரலாறு காணாத உச்சத்திற்குத் தள்ளியுள்ளது, </p><p>உலகம் முழுவதும் பணவீக்கத்தைத் தூண்டியுள்ளது, மேலும் அமெரிக்கப் பத்திரங்களின் வருவாயை 2008 நிதி நெருக்கடிக்குப் பிறகான மிக உயர்ந்த நிலைகளுக்கு அனுப்பியுள்ளது. </p><p>வெள்ளிக்கிழமையன்று ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக சவுதி அரேபியா தனது பிரம்மாண்டமான கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய் வழித்தடத்தை மூட வேண்டிய நிலை ஏற்பட்டதிலிருந்து, சேதத்தின் அளவு அல்லது அந்த வழித்தடம் எவ்வளவு காலத்திற்குச் செயல்படாமல் இருக்கும் என்பது குறித்த முழுமையான விவரங்களை அந்த நாடு இன்னும் வெளியிடவில்லை.</p><p></p><p> </p><p>இதனிடையே, 
ஒரு தரப்பினர் சேதத்தைச் சரிசெய்ய ஐந்து முதல் ஆறு வாரங்கள் வரை ஆகலாம் என்று கூறிய நிலையில், மற்றொரு தரப்பினர் இதை விரைவாகச் சரிசெய்ய முடியும் என்றும், பழுதுபார்ப்புப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே பகுதியளவில் மீண்டும் எண்ணெய் விநியோகத்தைத் தொடங்கலாம் என்றும் கூறியுள்ளனர். </p><p>கடந்த ஆறு மாதங்களாக, அரேபிய தீபகற்பத்தின் குறுக்கே பாலைவனத்தில் செல்லும் குழாய்வழியானது, அதன் அண்டை நாடுகளின் ஏற்றுமதியை முடக்கிய ஹார்முஸ் நீரிணையின் போர்க்கால முடக்கத்தின் பெரும் பாதிப்பிலிருந்து சவுதி அரேபியாவைக் காப்பாற்றியுள்ளது.</p><p> உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியா, நாளொன்றுக்கு சுமார் 4 மில்லியன் பீப்பாய் (உலகளாவிய விநியோகத்தில் சுமார் 4%) அளவிலான எண்ணெயை செங்கடலில் உள்ள யான்பு துறைமுகத்திற்கு மாற்றுப் பாதையில் கொண்டு செல்ல இக்குழாய் வழித்தடத்தைப் பயன்படுத்தியுள்ளது. </p><p>சவுதியின் ஏற்றுமதி நடவடிக்கைகள் குறித்து நன்கு அறிந்த தொழில் துறை சார்ந்த மூன்று வட்டாரங்களின் தகவல்படி, குழாய் வழித்தடம் செயல்பாட்டில் இல்லாததால், ஏற்றுமதியைத் தொடர்ந்து மேற்கொள்ள யான்பு (Yanbu) துறைமுகத்தில் தற்போது ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு மட்டுமே போதுமான இருப்பு உள்ளது.</p><h2>கையிருப்பு தீர்ந்துவிடும்</h2><p> </p><p>சவுதி அரேபியா, செங்கடலில் உள்ள எகிப்தின் ஐன் சுக்னா துறைமுகம் மற்றும் மத்தியதரைக் கடலில் உள்ள சிடி கெரீர் துறைமுகம் ஆகியவற்றிலிருந்து வாடிக்கையாளர்களுக்குப் பல நாட்களுக்கு விநியோகம் செய்வதற்கான சரக்குகளையும் கையிருப்பு வைத்துள்ளது. </p><p>தொழிற்துறை மதிப்பீடுகளின்படி, யான்புவின் (Yanbu) சேமிப்புத் திறன் சுமார் 35 மில்லியன் பீப்பாய்களாக உள்ளது; அதேவேளையில், ஐன் சுக்னா (Ain Sukhna) மற்றும் சிடி கெரிர் (Sidi Kerir) ஆகியவை முறையே 18 மில்லியன் மற்றும் 20 மில்லியன் பீப்பாய்களைச் சேமிக்கும் திறன் கொண்டவை. </p><p>கையிருப்பு முழுமையாக இல்லை, மேலும் கிழக்கு-மேற்கு குழாய்வழித் திட்டம் மீண்டும் செயல்படத் தொடங்காவிட்டால், கையிருப்பு இறுதியில் தீர்ந்துவிடும்.</p><p>
ஹார்முஸ் மற்றும் செங்கடல் வழித்தடங்கள் வழியாக எண்ணெய் விநியோகம் குறைந்ததன் காரணமாக, ஆகஸ்ட் மாதத்தில் சவுதி அரேபியாவின் எண்ணெய் விநியோகம் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலான கால அளவில் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளதாக சர்வதேச எரிசக்தி முகமை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f84c9445-6e73-462b-92f0-acda9759ac84/26-6aa779f07becf.webp' /></p><p> </p><p>போருக்கு முன்பு, மத்திய கிழக்கு பிராந்தியத்திலிருந்து நாளொன்றுக்கு சுமார் 22 மில்லியன் பீப்பாய் எண்ணெய் விநியோகிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அளவானது நாளொன்றுக்கு 6 முதல் 9 மில்லியன் பீப்பாய்களாகக் குறைந்துள்ளதாகத் துறைசார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. </p><p>சவுதி அரேபியா கடந்த வாரம் OPEC இடம் தனது எண்ணெய் உற்பத்தியானது ஆகஸ்ட் மாதத்தில் வெறும் 6.2 மில்லியன் bpd ஆகக் குறைந்துள்ளது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-14T04:33:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 நாட்களில் சர்தார் 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sardar-2-movie-worldwide-box-office-collection-1789358336"></link>
            <id>https://cineulagam.com/article/sardar-2-movie-worldwide-box-office-collection-1789358336</id>
            <summary type="text">கார்த்தி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த சர்தார் 2 திரைப்படத்தின் 4 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சர்தார் 2 

2022-ல் வெளிவந்த ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கார்த்தி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த சர்தார் 2 திரைப்படத்தின் 4 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p>
</p><p></p><h2>சர்தார் 2 </h2><p>

2022-ல் வெளிவந்த சர்தார் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, பெரிதும் எதிர்பார்ப்புடன் கடந்த வாரம் வெளிவந்தது சர்தார் 2. இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் கார்த்தி மற்றும் எஸ்.ஜே. சூர்யா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/579e3964-cd59-4a90-98a7-3089eb75c89f/26-6aa7710394cfa.webp' /></p><p>மேலும் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், யோகி பாபு, நிழல்கள் ரவி, ஆஷிஷ் வித்யார்த் ஆகியோர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/877ad0c5-fe91-4c68-9332-185b29f7e6dd/26-6aa7710464f86.webp' /></p><p></p><h3>பாக்ஸ் ஆபிஸ் </h3><p>

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வெளியான <a href="https://news7tamil.live/how-are-the-movies-sardar-2-and-mandadi.html" target="_blank">சர்தார் 2,</a> ரசிகர்களிடையே வரவேற்பை பெற தவறிவிட்டது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வசூல் வரவில்லை. இந்த நிலையில், 4 நாட்களில் சர்தார் 2 உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 4 நாட்களில் ரூ. 16 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfac7fbc-6216-4236-8f4b-94bfada3a9b5/26-6aa771051f56b.webp' /></p>]]></content>
            <updated>2026-09-14T04:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியல் நோக்கங்களுக்காக நினைவுகூரப்படும் போராளிகளின் நினைவு நாட்கள்! ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரமுகர் ஆதங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/thileepan-commemoration-1789357431"></link>
            <id>https://tamilwin.com/article/thileepan-commemoration-1789357431</id>
            <summary type="text">தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் அரசியல் கட்சிகள் எந்தவிதமான
இடையூறுகளும் கொடுக்காது, அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து,
பொதுமக்களும் ஒன்றிண...</summary>
            <content type="html"><![CDATA[<p>தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் அரசியல் கட்சிகள் எந்தவிதமான
இடையூறுகளும் கொடுக்காது, அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து,
பொதுமக்களும் ஒன்றிணைந்து பேரெழுச்சியாக ஒரு மக்கள் புரட்சியை இந்த மண்ணிலே
உருவாக்க வேண்டும் என&nbsp;ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரமுகர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p> நினைவேந்தல் தினங்களில் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்
எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

யாழ். ஊடக அமையத்தில் நேற்றைய தினம் (13.09.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவித்த போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,

திலீபன் அண்ணனுடைய 39வது நினைவு நாளை நாங்கள் அண்மித்துக்
கொண்டிருக்கின்றோம். அந்த வகையிலே 1987ஆம் ஆண்டு திலீபன் அண்ணன் மேற்கொண்ட
இந்த அகிம்சை வழி போராட்டத்திலே அவர் தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார்.

எமது விடுதலைப் போராட்டம் இந்த மண்ணிலே நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்த
காலத்திலே அமைதிப் படையாக இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலம் எமது தாயக
நிலப்பரப்புக்கு இந்திய இராணுவம் வந்தது.</p><h2>உண்ணாவிரத போராட்டம்</h2><p>
</p><p>
அந்த காலப்பகுதியிலே தான் எங்களுக்கான ஒரு மிக மோசமான ஒரு நிலைமை இங்கே
ஏற்பட்டது.
அமைதி காக்க வந்த அந்த இந்திய இராணுவத்தினர் மாறாக அடக்குமுறைகளை இங்கே எமது
மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டபோதுதான் திலீபன் அண்ணன் அவர்கள் ஐந்து அம்ச
கோரிக்கைகளை முன்வைத்து தனது உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார். </p><p>12 நாட்கள்
உணவின்றி, நீரின்றி அவருடைய போராட்டம் தொடர்ந்தது.

திலீபன் அண்ணனுடைய வீர வரலாறுகள் தொடர்ச்சியாக இங்கே
மறைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற ஒரு சூழ்நிலையை நாங்கள் காண்கின்றோம்.
ஏனென்றால் இந்த விடயங்கள் அனைத்துமே நாங்கள் ஒரு இந்திய அரசாங்கத்துக்கு
எதிராகவோ இந்த கருத்துக்களை நாங்கள் முன்வைக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cba73ef6-018b-4b92-b6fd-d676f75a191b/26-6aa773157e7c7.webp' /></p><p> </p><p>எமது விடுதலைப்
போராட்டத்தின் மிக முக்கியமான வரலாற்றின் ஒரு பகுதி. அந்த பகுதியை வந்து
எதிர்கால சமூக சந்ததியினருக்கு நாங்கள் கொண்டு செல்ல வேண்டும், அவர்கள் இதை
புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்கள் தான் எதிர்காலத்தில் இந்த மண்ணை
ஆளப்போகின்றார்கள். அப்ப அவர்களுக்கு அந்த விடயங்கள் அனைத்தும் தெரிந்திருக்க
வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இந்த கருத்துக்களை இந்த இடத்தில் நாங்கள்
முன்வைக்கின்றோம்.</p><h2>வரலாற்று நிகழ்வுகள்</h2><p>
</p><p>
எதிர்வருகின்ற 39வது நினைவு நாளை கட்சி பேதமின்றி நாங்கள் அனைவரும் ஒன்றாக
இணைந்து, பெரும் எழுச்சியோடு நாங்கள் இந்த நினைவு நாளை நாங்கள் நினைவு கூர
வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாக இருக்கின்றது.

ஏனென்றால் இந்த வரலாற்று நிகழ்வுகள் என்பது ஒரு குறுகிய வட்டத்துக்குள், ஒரு
அரசியல் நோக்கங்களுக்காக செய்ய முடியாது. நாங்கள் அதனை அனுமதிக்கவும் முடியாது.
</p><p>
இன்றைக்கு பார்க்கப்போனால் தொடர்ச்சியாக ஒரு அரசியல் கட்சிகளுடைய தனிப்பட்ட
அரசியல் நோக்கங்களுக்காக இந்த போராளிகளுடைய நினைவு நாட்களை நினைவு கூருவது
இங்கே காணக்கூடியதாக இருக்கின்றது.</p><p> மாவீரர் துயிலுமில்லங்களாக இருந்தாலும்
சரி, போராளிகளுடைய வீரமரணம் அடைந்த எமது மாவீரர்களுடைய நினைவாலயங்கள்
இருந்தாலும் சரி, அந்த நினைவு நாட்கள் என்பது அரசியல் சார்ந்த விடயங்களாகவே
இங்கே நினைவு கூரப்படுவதை அதிகமாக எங்களால் பார்க்கக்கூடியவாறு இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T04:10:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விநாயகரின் அருளைப் பெற சதுர்த்தி நாளில் இதை படைத்து வழிபடுங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/what-are-some-auspicious-things-to-do-on-chaturthi-1789305338"></link>
            <id>https://manithan.com/article/what-are-some-auspicious-things-to-do-on-chaturthi-1789305338</id>
            <summary type="text">Ganesh Chaturthi 2026: இந்து மதத்தின் முழுமுதற் கடவுளாகப் போற்றப்படும் விநாயகரின் பிறந்த தினமான சதுர்த்தி தினத்தில் பல்வேறு வகையான சுவையான நைவேத்தியங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ganesh Chaturthi 2026: இந்து மதத்தின் முழுமுதற் கடவுளாகப் போற்றப்படும் விநாயகரின் பிறந்த தினமான சதுர்த்தி தினத்தில் பல்வேறு வகையான சுவையான நைவேத்தியங்களைப் படைத்து, அவருடைய அருளைப் பெறுவது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
</p><p>
அந்த வகையில், இன்றையதினம் (செப்டெம்பர் 14) சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது. இனிப்பு மற்றும் பல்வேறு வகையான கொழுக்கட்டைகளை விநாயகருக்குப் படைத்து வழிபடுவது தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு முக்கியமான வழிபாட்டு முறையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49a7d0d0-a84a-46c8-b8d1-b8d2602aa7c1/26-6aa6a8a0abce5.webp' /></p><p></p><p>
</p><p>
ஆனால், விநாயகரின் அருளைப் பெறுவதற்கு கொழுக்கட்டை மட்டும் போதுமானதல்ல. விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிரியமானதாகக் கருதப்படும் மேலும் சில புனிதமான பொருட்களும் உள்ளன. </p><p>

அந்தப் பொருட்களை விநாயகர் சதுர்த்தி நாளில் முறைப்படி அவருக்குப் படைத்து, பக்தியுடன் வழிபடுவதன் மூலம் விநாயகரின் அருளையும், ஆசீர்வாதத்தையும் பெறலாம் என்று சாஸ்திரங்கள் மற்றும் ஆன்மிக நம்பிக்கைகள் கூறுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/954906f3-eef8-4f7a-bae2-1ca1ac22e423/26-6aa6a8a15d06d.webp' /></p><p>
</p><p>
விநாயகரை வழிபடும்போது பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் தனித்துவமான ஆன்மிக முக்கியத்துவம் இருப்பதாகவும், அவை நம் வாழ்வில் செல்வம், மகிழ்ச்சி, வெற்றி, தடையின்மை உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்கும் எனவும் நம்பப்படுகிறது.
</p><p>
அப்படி, விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிடித்ததாகக் கருதப்படும் அந்தப் புனிதமான பொருட்கள் என்னென்ன? அவற்றை எவ்வாறு படைத்து வழிபட வேண்டும் என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.&nbsp;&nbsp;</p><h2>கொழுக்கட்டை</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af199356-5e94-4cca-8838-c9d4f8ba8c03/26-6aa6a8a216e57.webp' /></p><p>
வட இந்தியாவில் மோதகம் என்று அழைக்கப்படும் கொழுக்கட்டை இல்லாமல் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நிறைவு பெறாது. இது விநாயகருக்கு மிகவும் பிடித்த இனிப்பு என்பதால், அன்றைய தினம் அவருக்கு கட்டாயம் படைக்கப்படுகிறது. அரிசி மாவினால் செய்யப்பட்ட கொழுக்கட்டையின் உள்ளே தேங்காய் மற்றும் வெல்லம் நிரப்பப்படும். விநாயகரை வழிபடும்போது மோதகம் படைப்பது வழிபாட்டை முழுமையாக்கும் என நம்பப்படுகிறது.</p><h2>

அருகம்புல்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f215a52-0b4f-4d31-a27d-29578f5a5d99/26-6aa6a8a2bd2be.webp' /></p><h2>
</h2><p>விநாயகருக்குப் பிடித்த பொருட்களில் அருகம்புல்லும் ஒன்று. வயல்வெளிகளில் இயல்பாக வளரும் இந்த மூன்று கிளைகளைக் கொண்ட புல்லைப் பற்றிய சுவாரஸ்யமான கதை ஒன்றும் உள்ளது. தேவர்களைத் துன்புறுத்திய அனலாசுரன் என்ற அரக்கனை விநாயகர் விழுங்கியபோது, கடுமையான வயிற்று எரிச்சலால் அவதிப்பட்டார். அப்போது முனிவர்கள் அவருக்கு அருகம்புல்லைச் சமர்ப்பித்தனர். அதனால் அவரது எரிச்சல் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பின்னர் அருகம்புல் விநாயகருக்கு மிகவும் பிடித்தமானதாக மாறியது.
</p><h2>
சாமந்திப் பூ</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23aeedb0-a54c-4cd5-b9d8-f3ba861cd928/26-6aa6a8a3708e9.webp' /></p><h2>
</h2><p>விநாயகர் சதுர்த்தியன்று வீட்டிற்கு விநாயகர் சிலையை எடுத்து வரும்போது, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறச் சாமந்திப் பூக்களால் அலங்கரிப்பது வழக்கம். விநாயகருக்குச் சாமந்திப் பூக்கள் மிகவும் பிடிக்கும் என்பதால், பல கோவில்களில் அவருக்கு சாமந்திப் பூ மற்றும் அருகம்புல் மாலைகள் அணிவிக்கப்படுகின்றன.
</p><h2>
சங்கு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/704361b9-83df-428d-afc4-9332210433a7/26-6aa6a8a42658b.webp' /></p><h2>
</h2><p>நான்கு கைகளைக் கொண்ட விநாயகரின் ஒரு கையில் சங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. பல இந்துப் பண்டிகைகள் சங்கு முழக்கத்துடன் தொடங்குவது வழக்கம். விநாயகர் சதுர்த்தி பூஜையின்போதும் சங்கு முழங்குவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. சங்கு நாதம் தீய சக்திகளை விரட்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
</p><h2>
தேங்காய், வாழைப்பழம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/114b06df-5c4a-4863-824b-d6b0ccd7bd2c/26-6aa6a8a4cf681.webp' /></p><h2>
</h2><p>தேங்காயும் வாழைப்பழமும் விநாயகருக்குப் பிடித்தமான படையல்களில் அடங்கும். யானை முகத்தைக் கொண்ட விநாயகருக்கு வாழைப்பழங்கள் மற்றும் வாழை மரத்தின் அனைத்துப் பாகங்களும் விருப்பமானவை என நம்பப்படுகிறது. அதனால், அவரது சிலைகள் பெரும்பாலும் வாழை இலைகள் மற்றும் வாழைத்தண்டுகளால் அலங்கரிக்கப்படுகின்றன.</p><h2>

எருக்கம் பூ</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c254ce97-370f-44b0-b62d-e4350220091d/26-6aa6a8a58700a.webp' /></p><p></p><h2>
</h2><p>எருக்கம் பூ எதிர்மறை ஆற்றலை நீக்கும் சக்தி கொண்டதாக நம்பப்படுகிறது. விநாயகருக்கு எருக்கம் பூ மாலை சாற்றி வழிபட்டால், பக்தர்களுக்கு நல்ல ஆரோக்கியமும் நோயற்ற வாழ்வும் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே இந்த பொருட்களை படைத்து விநாயகர் சதுர்த்தியில் விநாயகர் வழிப்பாடு செய்வதால் வாழ்வில் சகல துன்பங்களும் நீங்கி செல்ல செழிப்பு பெருகும் என்று நம்ப்படுகின்றது.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b> &nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T04:01:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடப்புத்தகங்கள் மீதான வற் வரி நீக்கம் : அநுர அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vat-imposed-on-school-books-will-be-removed-anura-1789356711"></link>
            <id>https://ibctamil.com/article/vat-imposed-on-school-books-will-be-removed-anura-1789356711</id>
            <summary type="text">இலங்கையில் பாடப்புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரியை (VAT) நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் பாடப்புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரியை (VAT) நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>நொச்சியாகம பகுதியில் நேற்று (13) நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.&nbsp;</p><p>அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வரும்நிலையில் தான் அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்கிறோம்.</p><p></p><h2>வரவு - செலவுத் திட்டம்</h2><p> </p><p>பொருளாதார ரீதியில் ஸ்திரமடைந்துள்ளோம். இருப்பினும் பொருளாதார சுயாதீனத்தை இன்னும் அடையவில்லை. பொருளாதார சுயாதீனத்தை அடைவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d90915f-47ee-4c28-a4df-aba5f6baf26e/26-6aa76e275cb22.webp' /></p><p>இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதாரத்துறை ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கும், மக்களுக்கான சேவை வழங்கலையும் வினைத்திறனாக்க அடுத்தாண்டு வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்படும்.</p><p>பாடப்புத்தகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பெறுமதிசேர் வரியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 2027 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் அதற்குரிய திட்டங்கள் முன்வைக்கப்படும்“ என தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T03:52:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/one-person-died-after-being-struck-by-lightning-1789356781"></link>
            <id>https://ibctamil.com/article/one-person-died-after-being-struck-by-lightning-1789356781</id>
            <summary type="text">அநுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய, லுல்நேவ குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று பேரை மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய, லுல்நேவ குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று பேரை மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

இந்தச் சம்பவம் நேற்று (13.09.2026) மாலை சுமார் 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
</p><p>உயிரிழந்த நபர் கஹட்டகஸ்திகிலிய, பேத்கேவ பகுதியில் வசித்து வந்த 41 வயதுடையவர் என்பது தெரியவந்துள்ளது.&nbsp;</p><p></p><h2>ஒரவர் பலி&nbsp;</h2><p>
</p><p>மேலும் விசாரணைகளில் தெரியவந்தது உயிரிழந்தவர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றி, பின்னர் மருத்துவ காரணங்களால் ஓய்வு பெற்றவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c40470e-47c6-4f49-9d0a-5fd70bf39cf7/26-6aa76eeab4900.webp' /></p><p>மின்னல் தாக்குதலில் காயமடைந்த ஏனைய இருவரையும் பிரதேச மக்கள் கஹட்டகஸ்திகிலிய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.</p><p> பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் கஹட்டகஸ்திகிலிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T03:50:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய் ஆட்சியில் அஜித்திற்கு பதவியா.. பிரபலம் சொன்ன தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/a-position-for-ajith-under-cm-vijays-governance-1789355849"></link>
            <id>https://cineulagam.com/article/a-position-for-ajith-under-cm-vijays-governance-1789355849</id>
            <summary type="text">விஜய் - அஜித்விஜய், அஜித் 30 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவை ஆண்ட உச்ச நட்சத்திரங்கள். இவர்கள் இருவருமே தற்போது மிக நெருங்கிய நண்பர்கள் என்பதை சமீப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>விஜய் - அஜித்</h2><p>விஜய், அஜித் 30 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவை ஆண்ட உச்ச நட்சத்திரங்கள். இவர்கள் இருவருமே தற்போது மிக நெருங்கிய நண்பர்கள் என்பதை சமீபத்தில் நிரூபித்துவிட்டனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c9196eb-3de4-4ff2-a3ec-a0715e9c3690/26-6aa7674d58ec2.webp' /></p><p></p><p>அதிலும் அஜித்தின் கார் ரேஸ் போட்டியில் விஜய் ஓடி வந்து <a href="https://www.dinamani.com/cinema/cinema-news/2026/Sep/12/chief-minister-vijay-flagged-off-the-car-race-in-which-ajith-is-participating" target="_blank">அஜித்</a>தை கட்டி பிடித்தது எல்லோருக்கும் செம மொமண்ட் ஆக அமைந்தது.</p><h3>அஜித்திற்கு பதவியா</h3><p> </p><p>

இந்நிலையில் கார் ரேஸிற்காக டி.வி.கே ஆட்சியில் பல திட்டங்களை செய்ய முடிவு செய்துள்ளார்கள். அதை முதல்வர் அவர்களே சட்டமன்றத்தில் கூறினார். அதற்கு அஜித்தும் நன்றி தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea758d60-0db9-4f1d-af58-dcfe34f3c926/26-6aa7674ca10c2.webp' /></p><p></p><p>

தற்போது பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன், முதல்வர் விஜய், நடிகர் அஜித்திற்கு ஸ்போர்ட்ஸ் துறையில் எதாவது முக்கிய பொறுப்பு கொடுத்தாலும் கொடுக்கலாம் என கூறியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T03:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுரத்தில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anuradhapura-murder-case-1789357117"></link>
            <id>https://tamilwin.com/article/anuradhapura-murder-case-1789357117</id>
            <summary type="text">அநுராதபுரம், பரசன்கஸ்வெவ - வன்னி பளுகொல்லேவ பகுதியில் இருவருக்கு இடையில்
ஏற்பட்ட கைகலப்பின்போது, 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிப்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரம், பரசன்கஸ்வெவ - வன்னி பளுகொல்லேவ பகுதியில் இருவருக்கு இடையில்
ஏற்பட்ட கைகலப்பின்போது, 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிப்
படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது என்று
பரசன்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>

கம்பிரிகஸ்வெவ, வன்னி பளுகொல்லேவ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.</p><h2>பொலிஸார் விசாரணை&nbsp;</h2><p>
</p><p>
உயிரிழந்த இளைஞருக்கும் மற்றுமொரு இளைஞருக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி
வந்த தனிப்பட்ட பகைமை காரணமாகவே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம்
என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
</p><p>
சம்பவத்துடன் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர்
குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bae82e7-d9fe-4290-9640-67dc715ff86b/26-6aa76c3f28978.webp' /></p><p>
</p><p>
இதனிடையே, சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்ற
அநுராதபுரம் இலக்கம் 02 நீதிமன்ற நீதிவான் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டார்.</p><p>
அத்துடன் உயிரிழந்த இளைஞரின் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக அநுராதபுரம் போதனா
வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T03:39:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஷிரந்திக்கு அதிர்ச்சி - மற்றுமொரு மோசடி விசாரணை தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fcid-waiting-for-shiranthi-to-recover-1789353362"></link>
            <id>https://tamilwin.com/article/fcid-waiting-for-shiranthi-to-recover-1789353362</id>
            <summary type="text">தேசிய சேமிப்பு வங்கியில் இருந்து சிரிலிய சவிய கணக்கிற்கு நன்கொடையாக ஒரு கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டு, அந்த நிதி முறைகேடு செய்யப்பட்டது தொடர்பிலான வழக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய சேமிப்பு வங்கியில் இருந்து சிரிலிய சவிய கணக்கிற்கு நன்கொடையாக ஒரு கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டு, அந்த நிதி முறைகேடு செய்யப்பட்டது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மோசடி விசாரணைப் பிரிவு இது தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ச சிரிலிய சவிய கணக்கிற்கு தலைமை தாங்குகின்றார்.</p><h2><b>

CT ஸ்கேன் இயந்திரம்</b></h2><p>கணக்கிற்கு வந்த நிதி, கொழும்பு ரிஜ்வே ஆரியா குழந்தைகள் மருத்துவமனைக்கு CT ஸ்கேன் இயந்திரம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காகவே வரவு வைக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40a54e4f-31a2-4201-91e7-9ff8b73a9b6c/26-6aa76b8566580.webp' /></p><p>CT ஸ்கேனுக்காக நிதி திரட்டப்பட்ட போதிலும், ரிஜ்வே ஆரியா குழந்தைகள் மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது, சீன அரசாங்கத்தின் நன்கொடையாக கிடைத்த ஸ்கேன் இயந்திரம் என்பது தெரியவந்துள்ளமையே இந்த விசாரணைக்கான அடிப்படை காரணமாகும். </p><p>

தேசிய சேமிப்பு வங்கியின் நிதி நன்கொடையாக சிரிலிய சவிய கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள்ளது. </p><p>இது குறித்து வங்கி அதிகாரிகளிடமும், அப்போதைய பணிப்பாளர் சபையிடமும் நிதி மோசடி விசாரணைப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. </p><p>

சிரிலிய சவிய அமைப்பினால் எழுத்துமூலம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய குறித்த நிதி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளமை இதன்போது தெரியவந்துள்ளது.</p><h3><b> 

நிதி மோசடி விசாரணை</b></h3><p>சிரிலிய சவிய அமைப்பால் பேணப்பட்டு வரும் சிதுவெல்லவில் அமைந்துள்ள வங்கிக் கணக்கிற்கே குறித்த நிதி வரவு வைக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3a91214-05bc-436f-9631-79d0bad875a4/26-6aa76b84b06f8.webp' /></p><p>இதனிடையே, ரிஜ்வே ஆரியா குழந்தைகள் மருத்துவமனைக்கு நன்கொடையாக CT ஸ்கேன் இயந்திரம் ஒன்றை வாங்குவதற்காக அரச வங்கி ஒன்றிடமிருந்து ஒரு கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. </p><p>

அந்த நிதி குறித்த பணிக்காக பயன்படுத்தப்படாததால், அந்த நிதிக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

தற்போது ஷிராந்தி ராஜபக்ச சுகயீனமுற்றுள்ள மருத்துவமனையில் இருப்பதால் இது தொடர்பான நிலைமைகள் குறித்த விசாரணைகள் பின்னர் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. </p><p>சிரிலிய சவிய கணக்கு தொடர்பில் பல கேள்விக்குரிய நிலைமைகள் காணப்படுகின்றது. 

அது குறித்தும் விசாரணைகள் நடைமுறையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. </p><p>குறித்த கணக்கு தொடர்பாக கடந்த பெப்ரவரி 03ஆம் திகதி நிதி மோசடி விசாரணைப் பிரிவு அவரிடம் 4 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-14T03:37:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்ட பிரபல நடிகர் ஸ்ரீநாத் பாஸி...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/sreenath-bhasi-divorce-after-10-years-of-marriage-1789304857"></link>
            <id>https://viduppu.com/article/sreenath-bhasi-divorce-after-10-years-of-marriage-1789304857</id>
            <summary type="text">ஸ்ரீநாத் பாஸிசினிமா நட்சத்திரங்களின் விவாகரத்து சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ரவி மோகன், ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட பலர் மனைவிகளை பிரிந்தனர். ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஸ்ரீநாத் பாஸி</h2><p>சினிமா நட்சத்திரங்களின் விவாகரத்து சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ரவி மோகன், ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட பலர் மனைவிகளை பிரிந்தனர். இவர்கள் வரிசையில் அடுத்ததாக தன்னுடைய மனைவியை பிரிவதாக மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகர் அறிவித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed850707-f078-49a4-bf29-3d224503090d/26-6aa6a01bcaa4c.webp' /></p><p> </p><p>மலையாள சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவரான ஸ்ரீநாத் பாஸி, மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் குழிக்குள் விழும் சுபாஷ் ரோலில் நடித்திருந்தார். கடந்த 2016ல் திருவனந்தபுரத்தை சேர்ந்த ரீத்து ஜக்காரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.</p><p> திருமணத்திற்குப்பின் தான் சினிமாத்துறைக்கு வந்த ஸ்ரீநாத் பாஸி, திருமணமாவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே நண்பர்களாக இருந்துள்ளனர். அதன்பின் தம்பதிகளான இருவரும் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து விவாகரத்து பெற்றுள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bccd1791-e51f-491f-a2e4-d29259acddbc/26-6aa6a01c81849.webp' /></p><p> இதுகுறித்து ஸ்ரீநாத் பாஸி, விவாகரத்துக்குப்பின் நான் இப்போது என் பெற்றோருடன் தங்கியிருக்கிறேன். 2024ல் என்னுடைய மனைவியை பிரிந்தேன், இது யாருக்கும் தெரியாது, இப்போது தான் முதன்முதலில் பேசுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-14T03:30:00+00:00</updated>
        </entry>
    </feed>
