<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-13T16:28:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சபாநாயகருக்கு எதிராக தயாசிறி சர்வதேசத்தில் முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dayasiri-lodges-complaint-speaker-internationally-1789316284"></link>
            <id>https://jvpnews.com/article/dayasiri-lodges-complaint-speaker-internationally-1789316284</id>
            <summary type="text">சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் (IPU), பொதுநலவாய நாடாளுமன்ற சங்கம் (C...</summary>
            <content type="html"><![CDATA[<p>சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் (IPU), பொதுநலவாய நாடாளுமன்ற சங்கம் (CPA) மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு எழுத்துப்பூர்வ முறைப்பாடுகளைச் சமர்ப்பித்துள்ளார். 

கடந்த செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் எழுப்ப முயன்ற சிறப்புரிமைப் பிரச்சினையை முன்வைப்பதற்குச் சபாநாயகர் வாய்ப்பளிக்காமலும், அதற்குத் இடையூறு ஏற்படுத்தியமையையும் அடிப்படையாகக் கொண்டே இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd75f066-103e-4123-aecf-1e220d0f2beb/26-6aa6ccbe27835.webp' /></p>]]></content>
            <updated>2026-09-13T16:18:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருணா, பிள்ளையானை தொடர்ந்து மகிந்த குடும்பத்தின் பகடைக்காயாக மாறியுள்ள அர்ச்சுனா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-gods-for-the-rajapaksa-family-1789309240"></link>
            <id>https://ibctamil.com/article/three-gods-for-the-rajapaksa-family-1789309240</id>
            <summary type="text">மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பம் ஆட்சியில் இருந்த காலங்களில், நாட்டில் ஒரு பயங்கரமான சூழ்நிலையை நிலைநிறுத்த பயங்கரவாதத்தைப் பயன்படுத்திய மூன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பம் ஆட்சியில் இருந்த காலங்களில், நாட்டில் ஒரு பயங்கரமான சூழ்நிலையை நிலைநிறுத்த பயங்கரவாதத்தைப் பயன்படுத்திய மூன்று குழுக்களும் இப்போது அக்குடும்பத்தின் மீட்பர்களாக மாறியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
</p><p>
ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய கூட்டாளிகள் அனைவரும் ஒன்று கூடி, நேற்று (12) அனுராதபுரத்தில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்க நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனை அழைத்ததன் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><h2>ராஜபக்ச குடும்பத்தின் முன்னைய பகடைக்காய்கள்</h2><p>பிரபாகரன் தனது கடவுள் என்று அவர் அறிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cbd002d-f437-480c-8f55-ac96c1f23fde/26-6aa6b13a3a578.webp' /></p><p>இதற்கு முன்பு, கருணாவும் பிள்ளையானும் ராஜபக்ச குடும்பத்தின் அரசியலில் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்பட்டனர். </p><p>பிரபாகரனைக் கடவுள் என்று பிரகடனம் செய்த அர்ச்சுன ராமநாதனும், மஹிந்த ராஜபக்சவும் ஒரே மேடையில் அமர்ந்திருந்த நிகழ்வு, இந்த நாட்டு மக்களுக்கு ஒரு புதிய அரசியல் கண்ணோட்டத்திற்கான சிறந்த சான்றை வழங்கியுள்ளது என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்&nbsp; என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T16:06:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றம் வருகிறது 22 ஆவது திருத்த சட்டமூலம் : எம்.பிக்களுக்கு விடுக்கப்பட்ட கட்டுப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/22nd-amendment-to-be-presented-to-parliament-1789313312"></link>
            <id>https://ibctamil.com/article/22nd-amendment-to-be-presented-to-parliament-1789313312</id>
            <summary type="text">இருபத்திரண்டாவது அரசியலமைப்பு (திருத்த) சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்த) சட்டமூலம் மீதான உச்ச நீதிமன்றத்தின் கருத்துரையை சபாநாயகர் 22ஆம் திகதி ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இருபத்திரண்டாவது அரசியலமைப்பு (திருத்த) சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்த) சட்டமூலம் மீதான உச்ச நீதிமன்றத்தின் கருத்துரையை சபாநாயகர் 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார் என வட்டாரங்கள் தெரிவித்தன.
</p><p>
இருபத்திரண்டாவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் பெறப்பட்ட சுமார் 70 மனுக்களை உச்ச நீதிமன்றம் பரிசீலித்தது.</p><h2>ஆளும், எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு</h2><p>&nbsp; இதற்கிடையில், இருபத்திரண்டாவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்த) சட்டமூலம் மீதான விவாதம் நடைபெறும் இரண்டு நாட்களிலும், ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் தங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதர பயணங்களைத் தவிர்த்து கொழும்பிலேயே தங்கியிருக்குமாறு அறிவுறுத்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3419a3bf-5e5b-4888-8bc4-2f6a7b4bfa25/26-6aa6c9d7964c7.webp' /></p><p>

மேலும், அந்த நாட்களில் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
அரசியலமைப்பின் இருபத்தி இரண்டாவது திருத்தம் மற்றும் நீதித்துறை (திருத்த) சட்டமூலம் மீதான விவாதத்தை 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நடத்த நாடாளுமன்ற விவகாரக் குழு, 10 ஆம் திகதி, வியாழக்கிழமை அன்று முடிவு செய்தது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T16:05:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் சிறந்த செவிலியர் விருதை வென்ற பிரித்தானிய வாழ் மலையாளி - ரூ.2 கோடி பரிசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-malayali-wins-global-nursing-award-2026-1789315641"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-malayali-wins-global-nursing-award-2026-1789315641</id>
            <summary type="text">UK Malayali wins Global Nursing Award 2026: உலகின் சிறந்த செவிலியர் விருதை பிரித்தானிய வாழ் மலையாளிவென்றுள்ளார்.

Global Nursing Award 2026கொச்சியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK Malayali wins Global Nursing Award 2026: உலகின் சிறந்த செவிலியர் விருதை பிரித்தானிய வாழ் மலையாளிவென்றுள்ளார்.
</p><h2>
Global Nursing Award 2026</h2><p>கொச்சியில் நடைபெற்ற சிறப்பு விழாவில், பிரித்தானியாவில் செவிலியராக பணியாற்றும் மலையாளி பெண்ணான அஜிமோல் பிரதீப் (Agimol Pradeep) உலகளாவிய Aster Guardians Global Nursing Award 2026 விருதைப் பெற்றார்.
</p><p>
இந்த விருது, உலகம் முழுவதும் 214 நாடுகளில் இருந்து பதிவு செய்யப்பட்ட 1.34 லட்சம் செவிலியர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7dadc3d-bcd1-48fb-b154-6a39b231edd6/26-6aa6ca3a93d0d.webp' /></p><h2>அஜிமோல் பிரதீப்</h2><p>அஜிமோல், லண்டனின் King’s College Hospital-இல் மூத்த Transplant Coordinator-ஆகவும், Salford University-இல் Honorary Senior Lecturer-ஆகவும் பணியாற்றுகிறார். </p><p>அவரின் பணி, உடல் உறுப்பு மற்றும் ஸ்டெம்-செல் தானம், நர்சிங் கல்வி, மற்றும் சர்வதேச நர்சிங் பணியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கும் முயற்சிகள் ஆகியவற்றில் சிறப்பாக இருந்ததால் இந்த விருது வழங்கப்பட்டது.</p><p>
</p><p></p><p>அவர் தொடங்கிய “உபஹார்” (Upahaar) முயற்சி மூலம் 10,000-க்கும் மேற்பட்ட ஸ்டெம்-செல் தானதாரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இது, குறிப்பாக தெற்கு ஆசிய நோயாளிகளுக்கு உறுப்பு தானம் குறைவால் ஏற்பட்ட சிக்கல்களை தீர்க்க உதவியுள்ளது.
</p><h2>
உலகின் எந்த மருத்துவமனையிலும் மலையாளி நர்ஸ்...</h2><p>விழாவில், கேரள முதல்வர் வி.டி. சதீசன் உரையாற்றியபோது, “இந்த விருது, கேரளா உலகம் முழுவதும் அதிகமான செவிலியர்களை உருவாக்கும் மாநிலம் என்பதை நிரூபிக்கிறது. உலகின் எந்த மருத்துவமனையிலும் மலையாளி நர்ஸ் இருப்பார் என்பது பெருமை” எனக் குறிப்பிட்டார்.
</p><p>
மேலும், கேரளாவை உலக சுகாதார மையமாக மாற்றும் நோக்கில், சர்வதேச தரத்திலான caregiving பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.</p><p></p><h2>

ரூ.2 கோடி பரிசுத்தொகை</h2><p>இந்த விருது, USD 250,000 (சுமார் ரூ.2 கோடி) பரிசுத்தொகையுடன் வழங்கப்பட்டது. அஜிமோலின் சாதனை, உலகளாவிய நர்சிங் துறையில் இந்தியர்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T16:05:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் ஆற்றில் 29 வயது இளைஞனின் சடலம் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/body-of-29-year-old-man-recovered-from-river-1789314996"></link>
            <id>https://jvpnews.com/article/body-of-29-year-old-man-recovered-from-river-1789314996</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (13) மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைசடலமாக மீட்கப்பட்டவர் பழைய சந்தை வீதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (13) மீட்கப்பட்டுள்ளது.</p><p> </p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>சடலமாக மீட்கப்பட்டவர் பழைய சந்தை வீதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00647540-cef1-471f-9452-d0f44f9ef5f7/26-6aa6c7b6f20eb.webp' /></p><p>குறித்த இளைஞன் காணாமல் போயிருந்த நிலையில், அது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு உறவினர்களால் தேடப்பட்டு வந்த நிலையிலேயே அவரது சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. </p><p>

சம்பவ இடத்திற்கு விரைந்த காரைதீவு பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர். 

பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.</p><p> 

அவர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை வௌியிடப்படவில்லை. 

சம்பவம் தொடர்பில் காரைதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T15:56:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோ திரைப்பட விழாவில் கீர்த்தி சுரேஷ்... வைரலாகும் Stunning போட்டோஷூட்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/keerthy-suresh-look-at-toronto-film-festival-1789313570"></link>
            <id>https://manithan.com/article/keerthy-suresh-look-at-toronto-film-festival-1789313570</id>
            <summary type="text">தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். </p><p>ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படத்தின் வெளியீட்டிற்கு முன்பாகவே, சர்வதேச அளவில் இப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afa57800-af4c-4ea8-921d-c188cc6fd760/26-6aa6c4fdcddd2.webp' /></p><p></p><p> </p><p>குறிப்பாக, டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் (Toronto International Film Festival) ‘டோரதி’ திரைப்படம் திரையிடப்பட்டதுடன், அங்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களிடையே நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
</p><p>
இந்த சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷ், தனது அழகும், ஸ்டைலும் மிளிரும் வகையில் எடுத்துக்கொண்ட Stunning போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.</p><p></p><p>வித்தியாசமான லுக்கில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றன.&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T15:45:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக் பாஸ் 10 வீட்டில் புது வைல்டு கார்டு என்ட்ரி.. கருப்பு பட நடிகை தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/bigg-boss-9-tamil-anandhi-as-new-wild-card-1789312906"></link>
            <id>https://cineulagam.com/article/bigg-boss-9-tamil-anandhi-as-new-wild-card-1789312906</id>
            <summary type="text">பிக் பாஸ் 10ம் சீசன் தொடங்கி ஒரு வாரம் முடிந்து இருக்கிறது. எதிர்பார்த்தது போலவே முதல் நாளில் இருந்தே பல பிரச்சனைகள் மற்றும் சர்ச்சைகள் என வர தொடங்கி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக் பாஸ் 10ம் சீசன் தொடங்கி ஒரு வாரம் முடிந்து இருக்கிறது. எதிர்பார்த்தது போலவே முதல் நாளில் இருந்தே பல பிரச்சனைகள் மற்றும் சர்ச்சைகள் என வர தொடங்கி இருக்கிறது.</p><p>அரசியல் பற்றி விஜய் சேதுபதி பேசிய கருத்துக்களும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதெல்லாம் ஒருபுறம் இருக்க தற்போது ஒரு புது வைல்ட் கார்டு என்ட்ரி வீட்டில் நுழைந்திருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/213b5094-1cf9-4a94-9e74-975cdb9f8a52/26-6aa6bf8c9a216.webp' /></p><p>
</p><h2>ஆனந்தி</h2><p>பிரபல நடிகை ஆனந்தி தான் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வருகிறார்.
</p><p>அவர் சமீபத்தில் கருப்பு படத்தில் நடித்து இருந்த நிலையில் அதில் தனது எல்லா காட்சிகளும் நீக்கப்பட்டு விட்டது என வருத்தமாக பேசி இருந்தார் என்பது குறிபிடத்தக்கது.&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T15:23:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சக்களின் நிலைமை மோசம்! ஆபத்தை தடுக்க முடியாத கையறு நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-mahinda-crime-1789310832"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-mahinda-crime-1789310832</id>
            <summary type="text">கடந்த காலத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் ஒப்பிட்டு பார்க்கின்ற பொழுது தற்போது இடம்பெறும் கைதுகள் திருப்தி அளிக்கக் கூடிய வகையில் இருக்கின்றது என ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த காலத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் ஒப்பிட்டு பார்க்கின்ற பொழுது தற்போது இடம்பெறும் கைதுகள் திருப்தி அளிக்கக் கூடிய வகையில் இருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் எனத் தெரிவித்துள்ளார் .</p><p>லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அத்தோடு, ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்தில் தாம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>அரச வம்சத்தில் பிறந்தவராக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி குற்றம் செய்திருந்தால் நிச்சயமாக அதற்குரிய தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>மேலும், நியாயமான கைதுகளை தாம் வரவேற்பதாகவும், பக்கச்சார்பான பழிவாங்கும் கைதுகள் இடம்பெறுமான இருந்தால் நிச்சயமாக எதிர்த்து நிற்போம் எனவும் அவர் கூறினார்.</p><p>மேலும், ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றியுள்ள தற்போதைய அரசியல் சூழ்நிலை, எதிர்கொள்ளும் சவால்கள், ஆபத்துகளைத் தடுப்பதில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை மற்றும் இலங்கையின் தற்போதைய அரசியல் மாற்றங்கள் குறித்தும் ஊடறுப்பு நிகழ்ச்சியில் விரிவாக பார்க்கலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/BbNQPnS1qrA" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T15:21:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆஸ்திரேலியா மெல்பர்னில் என்ஜாய் பண்ணும் நடிகை அனிகா சுரேந்திரன்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/anikha-surendran-recent-australia-trip-photos-1789304677"></link>
            <id>https://viduppu.com/article/anikha-surendran-recent-australia-trip-photos-1789304677</id>
            <summary type="text">அனிகா சுரேந்திரன்மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை அனிகா சுரேந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அனிகா சுரேந்திரன்</h2><p>மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன்.
</p><p>
என்னை எறிந்தால், விஸ்வாசம் படங்களில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா, தெலுங்கில் தி கோஸ்ட் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09e4ba2d-7a79-4459-afe3-d0912248b037/26-6aa69f7357933.webp' /></p><p>
</p><p>

அதன்பின் புட்ட மொம்மா, ஓ மை டார்லிங், PT சார், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இந்ரா போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.</p><p>

14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்ற நடிகை அனிகா, ஆஸ்திரேலியாவின் மெல்பர்டன் நகருக்கு சென்று என் ஜாய் செய்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-13T15:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் அச்சக பிரிவில் பணியாற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்ன]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/piyankara-assigned-to-prison-printing-unit-1789311605"></link>
            <id>https://ibctamil.com/article/piyankara-assigned-to-prison-printing-unit-1789311605</id>
            <summary type="text">சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்ன, சிறையின் அச்சுப் பிரிவில் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்ன, சிறையின் அச்சுப் பிரிவில் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
</p><p>
சிறைத்தண்டனை விதிக்கப்படும் அரசியல்வாதிகள் பெரும்பாலும் அதன் அச்சுப் பிரிவிற்கே நியமிக்கப்படுகின்றனர்.</p><h2>14 ஆண்டுகள் சிறைத் தண்டனை&nbsp;</h2><p>கொழும்பு மே தின அணிவகுப்பில் (2014) பங்கேற்ற ஆனமடுவ தொகுதியைச் சேர்ந்த ஆதரவாளர்கள் குழுவினருக்கும், தனது அரசியல் ஆதரவாளர்கள் குழுவினருக்கும் மாரவிலவில் உள்ள ஒரு விடுதியில் விருந்து அளித்து அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தியது உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்னவிற்கு, கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹைல் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை (ஏழு ஆண்டுகளில் அனுபவிக்கப்பட வேண்டும்) விதித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6035b9a-6520-4a27-9401-8f5bdc9bff49/26-6aa6ba7832062.webp' /></p><p>
</p><p>
2014ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தின ஊர்வலத்தில் கலந்துகொண்ட அரசியல் ஆதரவாளர்கள் குழுவொன்றுக்கு உணவு வழங்குவதற்காக ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்திற்கு சொந்தமான கணக்கிலிருந்து 330,000 ரூபா பணத்தை செலவிட்டு அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியமை, குறித்த செயலை செய்வதற்கு ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளரை தூண்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.&nbsp; &nbsp;</p><p></p><p> </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T15:00:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் முகவரியொன்றில் வந்த அவசர அழைப்பு..40 வயது பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/40-year-old-woman-arrested-acid-attack-in-sussex-1789311256"></link>
            <id>https://news.lankasri.com/article/40-year-old-woman-arrested-acid-attack-in-sussex-1789311256</id>
            <summary type="text">40 year old woman arrested acid attack in sussex: பிரித்தானியாவில் பெண்ணொருவர் திராவகம் வீசிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

பிரித்தானியாவின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>40 year old woman arrested acid attack in sussex: பிரித்தானியாவில் பெண்ணொருவர் திராவகம் வீசிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.</p><p>

பிரித்தானியாவின் மேற்கு சசெக்ஸில் வந்த அவசர அழைப்பைத் தொடர்ந்து 40 வயது பெண் கைது செய்யப்பட்டார். </p><h2>40 வயது பெண் கைது </h2><p>

மேற்கு சசெக்ஸில் உள்ள க்ராலியில் ஒரு முகவரிக்கு அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bbd06a6-abb6-4fc9-9b18-8bafddfa7587/26-6aa6b9ad81351.webp' />
</p><p>
</p><p>

அங்கு திராவகம் வீசப்பட்டதால் பாதிக்கப்பட்ட 40 வயது ஆண் ஒருவர் மீட்கப்பட்டார்.&nbsp;</p><p>

அத்துடன் கடுமையான உடல் காயத்தை ஏற்படுத்தியதாக, சந்தேகத்தின் பேரில் 40 வயது பெண் கைது செய்யப்பட்டார். </p><p>

அவசர சேவைகள் சம்பவ இடத்தில் இருந்த நிலையில், அதிகாரிகள் சாலையின் ஒரு பகுதியை சுற்றி வளைத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T14:53:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாவடிப்பள்ளி ஆற்றில் கரையொதுங்கிய ஆணின் சடலம் - அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/male-body-washes-ashore-in-mavadippalli-river-1789295882"></link>
            <id>https://tamilwin.com/article/male-body-washes-ashore-in-mavadippalli-river-1789295882</id>
            <summary type="text">புதிய இணைப்புஅம்பாறை - மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இன்று (13.09.2026) கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>அம்பாறை - மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இன்று (13.09.2026) கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, குறித்த சடலம் சாய்ந்தமருது, பழைய சந்தை வீதியைச் சேர்ந்த 29 வயதுடைய அஸ்ஜத் என்ற இளைஞனுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
</p><p>
இதனையடுத்து, சடலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த இளைஞன் காணாமல் போயிருந்த நிலையில், அது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு, உறவினர்களால் தேடப்பட்டு வந்துள்ளார்.
</p><p>
இந்நிலையில், இன்று (13) மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>அம்பாறை- மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின்
சடலம் இன்று(13.9.2026) கரையொதுங்கிய நிலையில்
கண்டெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஆற்றில் சடலமொன்று மிதப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து சம்பவ
இடத்திற்கு விரைந்த காரைதீவு பொலிஸார், சடலத்தை மீட்டு விசாரணைகளை
ஆரம்பித்துள்ளனர்.
</p><p>
உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>அத்துடன்,
அவர் நீரில் மூழ்கி இறந்தாரா அல்லது வேறு ஏதும் காரணங்களா என்பது தொடர்பிலும்
பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/784f47df-d4e5-4311-9dd7-ce75403b3cb7/26-6aa67d0cdcb46.webp' /></p><p>

சடலம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் பிரேத பரிசோதனைக்கான
ஏற்பாடுகளைக் காரைதீவு பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T14:49:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசில் ராஜபக்ச கைது செய்யப்படுவதை தடுக்க திரைமறைவில் நடைபெறும் டீல்! பிரபல தொழிலதிபரும் தொடர்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/basil-rajapaksa-dhammika-perera-1789261133"></link>
            <id>https://tamilwin.com/article/basil-rajapaksa-dhammika-perera-1789261133</id>
            <summary type="text">இலங்கையில் இன்றைய நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பற்றியே பேசப்படுகிறது, அதில் மிக அதிகமாக உச்சரிக்கப்பட்ட ஒரு பெயர் இருக்கிறது. ஆனால் இப்போது அந்த ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இன்றைய நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பற்றியே பேசப்படுகிறது, அதில் மிக அதிகமாக உச்சரிக்கப்பட்ட ஒரு பெயர் இருக்கிறது. </p><p>ஆனால் இப்போது அந்த பெயர் கேட்பதில்லை. தேர்தல் காலங்களில் அந்தப் பெயர் அதிகமாகக் கேட்கும். அவர்தான் பசில் ராஜபக்ச.
அவர் தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.</p><p> ஆனால் அவர் அந்த வழக்குகளுக்கு முன்னிலையாகக் கூட இலங்கைக்கு வரவில்லை. அவர் அமெரிக்காவில் இருப்பதாகவே கூறப்படுகிறது. சில வழக்குகள் விசாரணைக்கு வந்த போது உடல்நலக் குறைவு என அவருடைய சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தனர்.</p><h2>
</h2><p></p><h2>தொழிலதிபருடனான டீல்</h2><p>நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட் சம்பவங்களில் கூட அவர் இலங்கைக்கு வரவில்லை. முன்னாள் அமைச்சரான பசில் ராஜபக்ச என்ன செய்கிறார்? </p><p>இலங்கையிலிருந்த பிரபல நபர்கள் பலர் கைது செய்யப்பட்டு வரும் பின்னணியில், பசில் ராஜபக்சவை ஏன் கைது செய்யவில்லை? அவரை ஏன் இலங்கைக்குக் கொண்டு வரவில்லை? போன்ற விடயங்களும் அரசியல் மேடைகளிலும் திரை மறைவிலும் பேசப்பட்டு வருகின்றன.</p><p>
புதிய தகவலின்படி, பசில் ராஜபக்ச இலங்கையிலுள்ள ஒரு பிரபல தொழிலதிபருடன் "டீல்" (Deal) ஒன்றைச் செய்துகொண்டுள்ளதாகப் பேசப்படுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e398dff-20d8-4a4c-a974-42c34e9c4867/26-6aa5f54f84faa.webp' /></p><p>தன்னைக்கைது செய்யாமல் இருப்பதற்கு ஏதேனும் வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து பேச்சுவார்த்தைகள் மூலமாகவும், ஒரு டீல் மூலமாகவும் நகர்ந்து கொண்டிருப்பதாக அரசியல் மேடைகளின் திரை மறைவில் பேசப்படுகிறது.
</p><p>பொதுவாக எப்போதும் பல்வேறு டீல்கள் பற்றி பேசப்படும் அரசியல் திரை மறைவில், இந்த டீல் பற்றியும் பேசப்படுவதாகக் கூறப்படுகிறது. </p><p>அந்தத் தொழிலதிபரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனும் தொடர்புகளைப் பேணி வருபவர் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>எப்படியோ, பசில் ராஜபக்ச அவருடன் ஒரு டீல் போட்டுக்கொண்டு, தன்னைக்கைது செய்யாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.</p><p>you may like this video</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/BLkNC88_Llw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T14:38:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bribery-probe-against-speaker-jagath-1789307824"></link>
            <id>https://jvpnews.com/article/bribery-probe-against-speaker-jagath-1789307824</id>
            <summary type="text">சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

குறித்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.</p><p style="text-align: justify; ">

குறித்த விசாரணைகளின் ஒருகட்டமாக, சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு பொறுப்பேற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1839bb4d-4b38-4b06-a827-0e2b31730af3/26-6aa6abb1b2679.webp' /></p><p style="text-align: justify; ">

பாராளுமன்ற அதிகாரிகளால் இந்த ஆவணங்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "> அவற்றில் சபாநாயகரின் தனிப்பட்ட பணியாளர்களின் விபரங்கள், அவர்களின் சம்பள விபரங்கள் மற்றும் வாகன பயன்பாடு தொடர்பான அனைத்து தகவல்களும் உள்ளடங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.</p><p style="text-align: justify; ">


பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் இந்த முறைப்பாடு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
இதேவேளை, ஊழல் எதிர்ப்புச் சட்டத் திருத்தம் தொடர்பான விவாதம் நடைபெறவுள்ள நிலையில், சபாநாயகர் அந்த விவாதத்துக்கு தலைமை தாங்குவதோ அல்லது குறித்த சட்டமூலத்தை சான்றளித்து கையொப்பமிடுவதோ பொருத்தமற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளா</p>]]></content>
            <updated>2026-09-13T14:30:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் 40 பில்லியன் யூரோ முதலீடு செய்யும் UAE]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uae-40-bn-euro-germany-investment-boosts-tech-1789309395"></link>
            <id>https://news.lankasri.com/article/uae-40-bn-euro-germany-investment-boosts-tech-1789309395</id>
            <summary type="text">UAE to invest 40 Bn Euro in Germany to boosts tech: ஐக்கிய அரபு அமீரகம், ஜேர்மனியில் 40 பில்லியன் யூரோ முதலீட்டை அறிவித்துள்ளது.40 பில்லியன் யூரோ&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>UAE to invest 40 Bn Euro in Germany to boosts tech: ஐக்கிய அரபு அமீரகம், ஜேர்மனியில் 40 பில்லியன் யூரோ முதலீட்டை அறிவித்துள்ளது.</p><h2>40 பில்லியன் யூரோ&nbsp;முதலீடு</h2><p> </p><p>

ஜேர்மனியுடன் பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) 40 பில்லியன் யூரோ (சுமார் $46.5 பில்லியன்) முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
</p><p>
இந்த அறிவிப்பு, UAE ஜனாதிபதி ஷேக் முகமது பின் சாயித் அல் நஹ்யான் ஜேர்மனியின் தலைநகர் பெர்லினில், ஜேர்மன் சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸுடனான சந்திப்பின்போது வெளியிடப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08ec913b-0149-46ec-9ee6-2918228fa98f/26-6aa6b3c64fc8c.webp' /></p><h2>முதலீட்டு துறைகள்
</h2><ul><li>டேட்டா சென்டர்கள்: சுமார் 1 GW திறன் கொண்ட டேட்டா சென்டர்கள் ஜேர்மனியில் அமைக்கப்பட உள்ளன.
</li><li>
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு
</li><li>
தொழில், எரிசக்தி, மேம்பட்ட தொழில்நுட்பங்கள்</li></ul><p></p><h2>

ஒப்பந்தங்கள் மற்றும் கூட்டாண்மைகள்
</h2><ul><li>
UAE-ஜேர்மனி இடையே Investment Council உருவாக்கப்பட்டது.
</li><li>
வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த Strategic Dialogue தொடங்கப்பட்டது.
</li><li>
இரு நாடுகளின் நிறுவனங்கள் 29 ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டன. இதன் மொத்த மதிப்பு 9.4 பில்லியன் யூரோ ஆகும்.
</li><li>
சுமார் 10 பில்லியன் யூரோ முதலீடு Bavaria மாநிலத்திற்கு செல்கிறது.</li></ul><p></p><h2>
விமான சேவை விரிவாக்கம்
</h2><p>UAE விமான நிறுவனம் Emirates, பெர்லின் மற்றும் துபாய் இடையே நேரடி சேவை தொடங்க அனுமதி பெற்றுள்ளது. இதற்கு முன்பு ஜேர்மனியின் விதிமுறைகள் காரணமாக Emirates பெர்லினுக்கு சேவை வழங்க முடியவில்லை.</p><h2>

பொருளாதார உறவுகள்</h2><ul><li>
UAE, ஜேர்மனியின் வளைகுடா பிராந்தியத்தில் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது.</li><li>

இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் கடந்த ஆண்டு 15 பில்லியன் டொலரை கடந்தது.
</li><li>
BMW, Siemens, ThyssenKrupp போன்ற ஜேர்மன் நிறுவனங்கள் அமீரகத்தில் செயல்படுகின்றன.</li></ul><p>

இந்த முதலீடு, டிஜிட்டல் மாற்றம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றில் ஜேர்மனிக்கு பெரும் ஆதரவாக இருக்கும். UAE-யின் நீண்டகால கூட்டாண்மை நோக்கத்தை இது வெளிப்படுத்துகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T14:28:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எங்களை கொன்று புதைத்தவர்களிடம் நீதியை கேட்பதில் எந்த அர்த்தமும் இல்லை : கந்தையா பாஸ்கரன் ஆணித்தரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-grave-issue-kandiah-bhaskaran-1789302296"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-grave-issue-kandiah-bhaskaran-1789302296</id>
            <summary type="text">கட்சி ரீதியாக ஆண்டாண்டு காலமாக கோரி நிற்கின்ற இந்த சர்வதேச விசாரணை எதற்காக என்று சொன்னால் எங்களை கொலை செய்து புதைத்தவர்களிடையே போய் நீதியை கேட்பதில் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்சி ரீதியாக ஆண்டாண்டு காலமாக கோரி நிற்கின்ற இந்த சர்வதேச விசாரணை எதற்காக என்று சொன்னால் எங்களை கொலை செய்து புதைத்தவர்களிடையே போய் நீதியை கேட்பதில் எந்தவித அரத்ததமும் இல்லை என தெரிவித்தார் ஐபிசி தமிழ் பணிப்பாளரும் பிரபல தொழிலதிபருமான கந்தையா பாஸ்கரன்.</p><p>செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதிகோரி யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற பேரணிக்கு பின்னர் நல்லூர் கிட்டு பூங்காவில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>செம்மணி என்புக்கூடுகளை பாதுகாக்கவேண்டும்</h2><p>&nbsp;செம்மணியில் 600 ற்கும் மேற்பட்ட என்புக்கூடுகள் மீட்கப்பட்டள்ளன. அவற்றை பாதுகாப்பான முறையில் பாதுகாக்கப்படவேண்டிய தேவை இருக்கிறது.அதைக்கூட இல்லாமல் செய்வதற்கும் அவற்றை நீர்த்து போகச் செய்வதற்குமான யுக்திகள் இங்கே கையாளப்படும்.எனவே அவை உரிய முறையில் பாதுகாக்கப்படகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/uNgyYbf5yD4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><h2>&nbsp;அனுரவின் தேர்தல் பிரசார வாக்குறுதிகள்&nbsp;</h2><p>&nbsp;இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸநாயக்க, தேர்தலி பிரசாரத்திலே வைத்த கோரிக்கை இந்த நாட்டிலே இனவாதம் மற்றும் மதவாதம் இருக்கக்கூடாது இந்த நாடு ஒருமித்த நாடாக எல்லோருக்குமான நாடாக இந்த நாட்டை மாற்றுவோம் என்ற தொனிப்பொருளில் அவருடைய தேர்தல் பிரசாரங்கள் அமைந்திருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c57b6f0-3a4f-43f6-9354-8ddf9591f440/26-6aa6a59e6f945.webp' /></p><p>&nbsp; &nbsp;இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன.
இந்த நாட்டிலே பாரிய குண்டுத்தாக்குதல் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது.அனுர குமார ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் அந்த ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களுக்கு சூத்திரதாரிகளாக இருந்தவர்களை அதற்கு துணை நின்றவர்களை அந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏராளமானவர்களை விசாரணைக்கு உட்படுத்தி இன்று சிலர் சிறையில் இருப்பதை எண்ணி மகிழ்ச்சியடைகின்றோம்.</p><p></p><h2>செம்மணி போன்ற இடங்களில் உறங்கும் உறவுகள்</h2><p>அதேநேரத்தில் இந்த நாட்டில் வாழக்கூடிய தமிழர்களாகிய நாங்கள் 1958 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டுவரையும் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கை அரசாங்கத்தாலும் அதன் இராணுவத்தாலும் கொன்று குவித்தும் காணாமல் ஆக்கப்பட்டும் இன்று செம்மணி போன்ற பல இடங்களில் எச்சங்களாக உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36ac4409-4a28-465a-96f1-0a122d45b66a/26-6aa6a59f2cd6c.webp' /></p><p>&nbsp;இந்த இலங்கைத்தீவிலே எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் எங்களுக்கான நீதி ஒருபோதுமே சாத்தியமில்லை. இதை முதலில் எமது தமிழ் பேசும் மக்கள் ஒரு விடயத்தை புரிந்து கொள்ளவேண்டும்.</p><p>இரண்டு இனங்களுக்கான மோதல் இங்கு நடைபெற்றது.அந்த மோதலில் எங்களை கொன்று குவித்த அவர்களிடமே போய் இதை விசாரித்து நீதி தாருங்கள் என்று கேட்பது ஒரு மடைமைத்தனமான வேலையாகத்தான் இருக்கும்.</p><p></p><h2>சர்வதேச விசாரணையே ஒரே ஒரு பொறிமுறை</h2><p>&nbsp;அதனால்தான் நாங்கள் சர்வதேச ரீதியாக அங்கே கொன்றொழிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வேண்டி நிற்கின்றோம்.சர்வதேச ரீதியாக இந்த நீதியை கொண்டுவரவேண்டுமாக இருந்தால் தமிழர் தரப்பிலே முக்கியமான பணி ஒன்று இருக்கிறது.அதுதான் தமிழராகிய நாம் எல்லோரும் ஒன்றுபடவேண்டும்.ஒரு குடையின் கீழ் வரவேண்டும். ஒருமித்த கோரிக்கையாக இந்த புலம்பெயர்ந்த தேசங்களுக்கு எமது கோரிக்கையை வைக்கவேண்டும்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fde79592-89aa-495f-95ad-85f54f9b4f1e/26-6aa6bb9e4441a.webp' /></p><p>எம்மவர்களில் சிலர் உள்ளக விசாரண போதும் என்ற பொறிமுறைக்குள்ளும் பலகட்சித்தலைவர்கள் இல்லை இதற்கு சர்வதேச விசாரணை தான் தீர்வு என்ற பட்சத்திலும் இங்கே ஒரு மாறுபட்ட கருத்துக்கள் எமது இனத்திற்குள்ளேயே இருக்கின்றது.</p><p>&nbsp;இதை எல்லாம் முற்றாக களைந்து ஒரு ஒன்றுபட்ட இனமாக தமிழருடைய எத்தனை உயிர் இழப்புக்களுக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் சர்வதேச விசாரணையே ஒரே ஒரு பொறிமுறை என்ற அந்த கோட்பாட்டின் கீழ் அனைத்து தமிழர்களுகம் ஒன்றாக ஒரே குரலில் ஓங்கி ஒலிப்போமாக இருந்தால் நிச்சயமாக ஒருமாற்றம் எட்டும் என்ற ஒரு நம்பிக்கை இருக்கின்றது.
</p><p>
வென்றாக வேண்டும் எங்கள் நிலம் ஒன்றாக வேண்டும் தமிழர்கள் எங்களுடைய இலக்கு ஒன்றதான் இனத்தின் விடுதலை.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T14:26:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றிலேயே இப்படி ஒரு டம்மி முதலமைச்சரை பார்த்தது கிடையாது - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/udhayanidhi-says-never-seen-dummy-cm-like-this-1789309538"></link>
            <id>https://ibctamilnadu.com/article/udhayanidhi-says-never-seen-dummy-cm-like-this-1789309538</id>
            <summary type="text">வரலாற்றிலேயே இப்படி ஒரு டம்மி முதலமைச்சரை பார்த்தது கிடையாது என உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். 

உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் 

சென்னையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றிலேயே இப்படி ஒரு டம்மி முதலமைச்சரை பார்த்தது கிடையாது என உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். </p><h3>

உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் </h3><p>

சென்னையில் நடைபெற்ற திமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1e7d5ae-99e0-4e31-aa62-4f3413467f48/26-6aa6b2643927c.webp' /></p><p> 

இந்த நிகழ்வில் பேசிய அவர், "நம்முடைய திராவிட முன்னேற்ற கழகம் இன்னும் 2 நாட்களில் முப்பெரும் விழாவை கொண்டாட இருக்கிறோம். 76வது ஆண்டை நிறைவு செய்து 77வது ஆண்டில் திராவிட முன்னேற்ற கழகம் அடியெடுத்து வைக்க இருக்கிறது. </p><p>

இந்த 77 வருடங்களில் நமது இயக்கம் எத்தனையோ வெற்றிகளையும், தோல்விகளையும் பார்த்துள்ளது. தேர்தல் வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு எப்போதும் மக்களுடன் நிற்கும் இயக்கம் தான் நம்முடைய திராவிட முன்னேற்ற கழகம். </p><p>

கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் சிறப்பான எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறோம். ஒவ்வொரு நாளும் இங்குள்ள டம்மி ஆட்சியாளர்களால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.</p><p> 

இந்த ஆட்சியில் தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் மின்வெட்டு, சட்ட ஒழுங்கு பற்றி நான் சொல்ல தேவையில்லை. இதை பற்றி கேள்வி கேட்டால் முதலமைச்சரால் பதில் சொல்ல முடியவில்லை. </p><p>

அதனால் நமது கழகம் மேல, தலைவர் மேல அவதூறு கிளப்பிட்டு இருக்காங்க. தமிழ்நாட்டில் வரலாற்றிலேயே இப்படி ஒரு அநாகரீகமான, டம்மி முதலமைச்சரை பார்த்தது கிடையாது.</p><p> 

பல்வேறு வாக்குறுதிகளை சொல்லி ஆட்சிக்கு வந்தாங்க. ஆனால் 4 மாதத்தில் ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை. நமது திராவிட மாடல் ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களின் பெயர்களை மாற்றி செயல்படுத்தி வருகிறார்கள். </p><p>

அடுத்த கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதன் காரணமாக 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் வருகிறது. </p><p>

நமக்கு இடைத்தேர்தலில் கிடைக்கும் வெற்றி, இந்த ஆட்சிக்கு கிடைக்கும் வீழ்ச்சியின் தொடக்கமாக இருக்க வேண்டும். இந்த இடைத்தேர்தலில் நாம் அனைவரும் இணைந்து டம்மி முதலமைச்சருக்கு சரியான பாடத்தை புகட்ட வேண்டும்" என பேசியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T14:25:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுடன் சந்திப்பு நடத்துவது பற்றித் தனக்கு எந்த அக்கறையும் இல்லை: ட்ரம்பின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gulf-nations-hold-talks-with-iran-strait-of-hormuz-1789308337"></link>
            <id>https://tamilwin.com/article/gulf-nations-hold-talks-with-iran-strait-of-hormuz-1789308337</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையின் எதிர்காலம் குறித்து விவாதிப்பதற்காக வளைகுடா நாடுகள் நாளை(13) ஈரானுடன் சந்திப்பு நடத்துவது பற்றித் தனக்கு எந்த அக்கறையும்
இல்லை என...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையின் எதிர்காலம் குறித்து விவாதிப்பதற்காக வளைகுடா நாடுகள் நாளை(13) ஈரானுடன் சந்திப்பு நடத்துவது பற்றித் தனக்கு எந்த அக்கறையும்
இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>

அயர்லாந்து குடியரசில் உள்ள டூன்பெக் நகரில் அமைந்துள்ள தனது கோல்ஃப் ஓய்வு
விடுதியில் ஊடகவியலாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஈரானிய சிரேஷ்ட அதிகாரிகளுடன்
பேச்சுவார்த்தை நடத்துவது அந்த நாடுகளின் தனிப்பட்ட விருப்பம் எனச்
சுட்டிக்காட்டினார்.</p><h2>அமெரிக்காவுடன் ஒப்பந்தம்</h2><p>

ஈரான் அரசாங்கம் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள மிகவும்
தீவிரமாக விரும்புவதாகத் தனது பழைய கூற்றை ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cffdb161-12c7-451c-823a-759a40cb53e4/26-6aa6b1a30f45e.webp' /></p><p>எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கு முன்னரோ அல்லது
அதற்கு உடனடியாவோ இந்தப் போர் முடிவுக்கு வரும் என்றும் குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T14:22:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விநாயகரின் அருளைப் பெற சதுர்த்தி நாளில் இதை படைத்து வழிபடுங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/what-are-some-auspicious-things-to-do-on-chaturthi-1789305338"></link>
            <id>https://manithan.com/article/what-are-some-auspicious-things-to-do-on-chaturthi-1789305338</id>
            <summary type="text">Ganesh Chaturthi 2026: இந்து மதத்தின் முழுமுதற் கடவுளாகப் போற்றப்படும் விநாயகரின் பிறந்த தினமான சதுர்த்தி தினத்தில் பல்வேறு வகையான சுவையான நைவேத்தியங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ganesh Chaturthi 2026: இந்து மதத்தின் முழுமுதற் கடவுளாகப் போற்றப்படும் விநாயகரின் பிறந்த தினமான சதுர்த்தி தினத்தில் பல்வேறு வகையான சுவையான நைவேத்தியங்களைப் படைத்து, அவருடைய அருளைப் பெறுவது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
</p><p>
அந்த வகையில், நாளைய தினம் (செப்டெம்பர் 14) சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது. இனிப்பு மற்றும் பல்வேறு வகையான கொழுக்கட்டைகளை விநாயகருக்குப் படைத்து வழிபடுவது தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு முக்கியமான வழிபாட்டு முறையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49a7d0d0-a84a-46c8-b8d1-b8d2602aa7c1/26-6aa6a8a0abce5.webp' /></p><p></p><p>
</p><p>
ஆனால், விநாயகரின் அருளைப் பெறுவதற்கு கொழுக்கட்டை மட்டும் போதுமானதல்ல. விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிரியமானதாகக் கருதப்படும் மேலும் சில புனிதமான பொருட்களும் உள்ளன. </p><p>

அந்தப் பொருட்களை விநாயகர் சதுர்த்தி நாளில் முறைப்படி அவருக்குப் படைத்து, பக்தியுடன் வழிபடுவதன் மூலம் விநாயகரின் அருளையும், ஆசீர்வாதத்தையும் பெறலாம் என்று சாஸ்திரங்கள் மற்றும் ஆன்மிக நம்பிக்கைகள் கூறுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/954906f3-eef8-4f7a-bae2-1ca1ac22e423/26-6aa6a8a15d06d.webp' /></p><p>
</p><p>
விநாயகரை வழிபடும்போது பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் தனித்துவமான ஆன்மிக முக்கியத்துவம் இருப்பதாகவும், அவை நம் வாழ்வில் செல்வம், மகிழ்ச்சி, வெற்றி, தடையின்மை உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்கும் எனவும் நம்பப்படுகிறது.
</p><p>
அப்படி, விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிடித்ததாகக் கருதப்படும் அந்தப் புனிதமான பொருட்கள் என்னென்ன? அவற்றை எவ்வாறு படைத்து வழிபட வேண்டும் என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.&nbsp;&nbsp;</p><h2>கொழுக்கட்டை</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af199356-5e94-4cca-8838-c9d4f8ba8c03/26-6aa6a8a216e57.webp' /></p><p>
வட இந்தியாவில் மோதகம் என்று அழைக்கப்படும் கொழுக்கட்டை இல்லாமல் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நிறைவு பெறாது. இது விநாயகருக்கு மிகவும் பிடித்த இனிப்பு என்பதால், அன்றைய தினம் அவருக்கு கட்டாயம் படைக்கப்படுகிறது. அரிசி மாவினால் செய்யப்பட்ட கொழுக்கட்டையின் உள்ளே தேங்காய் மற்றும் வெல்லம் நிரப்பப்படும். விநாயகரை வழிபடும்போது மோதகம் படைப்பது வழிபாட்டை முழுமையாக்கும் என நம்பப்படுகிறது.</p><h2>

அருகம்புல்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f215a52-0b4f-4d31-a27d-29578f5a5d99/26-6aa6a8a2bd2be.webp' /></p><h2>
</h2><p>விநாயகருக்குப் பிடித்த பொருட்களில் அருகம்புல்லும் ஒன்று. வயல்வெளிகளில் இயல்பாக வளரும் இந்த மூன்று கிளைகளைக் கொண்ட புல்லைப் பற்றிய சுவாரஸ்யமான கதை ஒன்றும் உள்ளது. தேவர்களைத் துன்புறுத்திய அனலாசுரன் என்ற அரக்கனை விநாயகர் விழுங்கியபோது, கடுமையான வயிற்று எரிச்சலால் அவதிப்பட்டார். அப்போது முனிவர்கள் அவருக்கு அருகம்புல்லைச் சமர்ப்பித்தனர். அதனால் அவரது எரிச்சல் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பின்னர் அருகம்புல் விநாயகருக்கு மிகவும் பிடித்தமானதாக மாறியது.
</p><h2>
சாமந்திப் பூ</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23aeedb0-a54c-4cd5-b9d8-f3ba861cd928/26-6aa6a8a3708e9.webp' /></p><h2>
</h2><p>விநாயகர் சதுர்த்தியன்று வீட்டிற்கு விநாயகர் சிலையை எடுத்து வரும்போது, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறச் சாமந்திப் பூக்களால் அலங்கரிப்பது வழக்கம். விநாயகருக்குச் சாமந்திப் பூக்கள் மிகவும் பிடிக்கும் என்பதால், பல கோவில்களில் அவருக்கு சாமந்திப் பூ மற்றும் அருகம்புல் மாலைகள் அணிவிக்கப்படுகின்றன.
</p><h2>
சங்கு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/704361b9-83df-428d-afc4-9332210433a7/26-6aa6a8a42658b.webp' /></p><h2>
</h2><p>நான்கு கைகளைக் கொண்ட விநாயகரின் ஒரு கையில் சங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. பல இந்துப் பண்டிகைகள் சங்கு முழக்கத்துடன் தொடங்குவது வழக்கம். விநாயகர் சதுர்த்தி பூஜையின்போதும் சங்கு முழங்குவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. சங்கு நாதம் தீய சக்திகளை விரட்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
</p><h2>
தேங்காய், வாழைப்பழம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/114b06df-5c4a-4863-824b-d6b0ccd7bd2c/26-6aa6a8a4cf681.webp' /></p><h2>
</h2><p>தேங்காயும் வாழைப்பழமும் விநாயகருக்குப் பிடித்தமான படையல்களில் அடங்கும். யானை முகத்தைக் கொண்ட விநாயகருக்கு வாழைப்பழங்கள் மற்றும் வாழை மரத்தின் அனைத்துப் பாகங்களும் விருப்பமானவை என நம்பப்படுகிறது. அதனால், அவரது சிலைகள் பெரும்பாலும் வாழை இலைகள் மற்றும் வாழைத்தண்டுகளால் அலங்கரிக்கப்படுகின்றன.</p><h2>

எருக்கம் பூ</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c254ce97-370f-44b0-b62d-e4350220091d/26-6aa6a8a58700a.webp' /></p><p></p><h2>
</h2><p>எருக்கம் பூ எதிர்மறை ஆற்றலை நீக்கும் சக்தி கொண்டதாக நம்பப்படுகிறது. விநாயகருக்கு எருக்கம் பூ மாலை சாற்றி வழிபட்டால், பக்தர்களுக்கு நல்ல ஆரோக்கியமும் நோயற்ற வாழ்வும் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே இந்த பொருட்களை படைத்து விநாயகர் சதுர்த்தியில் விநாயகர் வழிப்பாடு செய்வதால் வாழ்வில் சகல துன்பங்களும் நீங்கி செல்ல செழிப்பு பெருகும் என்று நம்ப்படுகின்றது.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b> &nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T14:22:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி எண்ணெய் குழாய்த் தொடர் முடக்கம்: உலகளாவிய எண்ணெய் விநியோகம் குறையும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shutdown-of-saudi-oil-pipeline-network-1789308931"></link>
            <id>https://tamilwin.com/article/shutdown-of-saudi-oil-pipeline-network-1789308931</id>
            <summary type="text">சவூதி அரேபியாவின் பிரதான கிழக்கு-மேற்கு மசகு எண்ணெய் குழாய்த்தொடர் மீது
நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் அதன் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில்,
அடுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவின் பிரதான கிழக்கு-மேற்கு மசகு எண்ணெய் குழாய்த்தொடர் மீது
நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் அதன் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில்,
அடுத்த சில நாட்களுக்குள் அது மீள இயங்காவிட்டால் உலகளாவிய எண்ணெய்
விநியோகத்தில் 4 சதவீத இழப்பு ஏற்படும் என வர்த்தகர்கள் எச்சரித்துள்ளனர்.
</p><p>

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருந்த சூழலில், சவூதி அரேபியா தனது தினமும் 4
மில்லியன் பீப்பாய்கள் மசகு எண்ணெயை செங்கடலில் உள்ள யான்பு துறைமுகத்திற்குத்
திருப்பி அனுப்ப இந்த குழாய்த்தொடரையே பயன்படுத்தி வந்தது.
</p><p>
தற்போது இந்த குழாய்த்தொடர் முடங்கியுள்ளதால், யான்பு துறைமுகத்தில் உள்ள
இருப்புக்கள் மூலம் இன்னும் 5 முதல் 7 நாட்களுக்கு மாத்திரமே ஏற்றுமதியைத்
தொடர முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
</p><h2>எரிபொருள் விலையேற்றம்</h2><p>
இந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள சேதங்களைச் சீரமைக்க 5 முதல் 6 வாரங்கள் வரை செல்லக்கூடும் என ஒரு
தரப்பும், விரைவில் பகுதியளவில் பணிகளைத் தொடங்க முடியும் என மற்றொரு தரப்பும்
தெரிவித்து வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/289a9c8e-b1eb-46c8-aff2-2d9cfb49877a/26-6aa6b033eeea3.webp' /></p><p>

இருப்பினும் சவூதி அரசு இந்த சீரமைப்புப் பணிகள் குறித்து அதிகாரப்பூர்வ
தகவல்கள் எதையும் இன்னும் வெளியிடவில்லை.</p><p>

ஏற்கனவே சர்வதேசச் சந்தையில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் பணவீக்கம்
அதிகரித்துள்ள நிலையில், சவூதியின் எண்ணெய் விநியோகமும் குறைந்தால் உலகளாவிய
ஆற்றல் நெருக்கடி மேலும் தீவிரமடையும் என சர்வதேச ஆற்றல் முகமை (IEA) கவலை
வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T14:16:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழல் நிறைந்த அரசியலுக்கு ஒருபோதும் இடமில்லை ஜனாதிபதி திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-corrupt-politics-president-asserts-firmly-1789306935"></link>
            <id>https://ibctamil.com/article/no-corrupt-politics-president-asserts-firmly-1789306935</id>
            <summary type="text">கடந்த காலத்தில் காணப்பட்ட ஊழல் நிறைந்த அரசியலுக்கு இனி நாட்டில் மீண்டும் ஒருபோதும் இடம் கிடைக்காது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். 

&quot;எமது அரசாங...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த காலத்தில் காணப்பட்ட ஊழல் நிறைந்த அரசியலுக்கு இனி நாட்டில் மீண்டும் ஒருபோதும் இடம் கிடைக்காது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> 

"எமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் - நாட்டிற்குச் சுபிட்சம்" என்ற கருப்பொருளின் கீழ் மாவட்ட மட்டத்தில் நடத்தப்படும் மக்கள் பேரணித் தொடரில், கஹட்டகஸ்திகிலிய நகரில் இன்று பிற்பகல் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.</p><h2>ஊழல்வாதிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தொடரும்</h2><p>&nbsp;நாட்டில் பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியலில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f71c47b-23d7-436b-aa5b-b9aae7c6a6f4/26-6aa6ae4294ae5.webp' /></p><p> 



 

ஊழல்வாதிகள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T14:13:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோர்டான் ஹெர்மன் மிரட்டல் ஆட்டம்: நமீபியாவை ஒயிட்வாஷ் செய்த தென் ஆப்பிரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/south-africa-whitewash-namibia-in-odi-series-1789307920"></link>
            <id>https://news.lankasri.com/article/south-africa-whitewash-namibia-in-odi-series-1789307920</id>
            <summary type="text">
South africa whitewash namibia in odi series: நமீபியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி முழுமையாக கைப்பற்றியது.

நமீபியா அணிக்கு எத...</summary>
            <content type="html"><![CDATA[<p>
South africa whitewash namibia in odi series: நமீபியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி முழுமையாக கைப்பற்றியது.</p><p>

நமீபியா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது. </p><h2>சுருண்ட நமீபியா
</h2><p>
Windhoek-யில் நடந்த மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் நமீபியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca2e264a-aace-4812-9ef0-471accb30ada/26-6aa6ae08df328.webp' /></p><p></p><p>
முதலில் ஆடிய நமீபியா அணி 156 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக சனே க்ரீன் 33 ஓட்டங்கள் எடுத்தார். பிஜோர்ன் போர்டுன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.</p><p>
பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 21.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a176beb8-60e2-442f-8d34-ad79b2a9728e/26-6aa6ae0835899.webp' />&nbsp;</p><h2>ஹெர்மன்&nbsp;</h2><p>

ஜோர்டான் ஹெர்மன் (Jordan Hermann) 59 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 77 ஓட்டங்கள் விளாசினார். கோன்னோர் எஸ்டர்ஹுய்ஸன் 68 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 68 ஓட்டங்கள் எடுத்தார். </p><p>

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 3-0 என்ற கணக்கில் நமீபியாவை ஒயிட்வாஷ் செய்தது. </p><p>

தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் பிஜோர்ன் போர்டுன் ஆட்டநாயகன் விருதும், ஜோர்டான் ஹெர்மன் மற்றும் ரூபென் ட்ரம்பல்மேன் இருவரும் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96594be4-f108-48be-a703-2bc798a7171b/26-6aa6ae077fdcb.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/320d6b6f-7b01-4340-84c9-af07eb1c1a21/26-6aa6ae0695166.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T14:04:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலாமைகளை வைத்துச் சுற்றுலாப் பயணிகளிடம் பணம் பறித்த மூவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-held-for-sea-turtle-tourist-scam-1789306269"></link>
            <id>https://jvpnews.com/article/three-held-for-sea-turtle-tourist-scam-1789306269</id>
            <summary type="text">கடலாமைகளைச் சுற்றுலாப் பயணிகளுக்குக் காண்பித்து பணம் ஈட்டியதுடன், அந்த விலங்குகளுக்குத் துன்புறுத்தல் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட மூவரை உனவட்டுன ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கடலாமைகளைச் சுற்றுலாப் பயணிகளுக்குக் காண்பித்து பணம் ஈட்டியதுடன், அந்த விலங்குகளுக்குத் துன்புறுத்தல் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட மூவரை உனவட்டுன சுற்றுலாப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
தல்பே பகுதியைச் சேர்ந்த 23, 41 மற்றும் 45 வயதுடைய மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8575faa-de78-460a-9a6d-f675174e7cf6/26-6aa6a59eddb03.webp' /></p><h2 style="text-align: justify; ">குற்றச்சாட்டுகள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கொண்டு கடலாமைகளுக்கு உணவளிக்கச் செய்தல், ஆமைகளைக் கைகளால் மேலே தூக்கித் துன்புறுத்துதல் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடம் பலவந்தமாகப் பணம் பறிக்க முயன்றமை போன்ற குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify; ">
குறித்த பகுதியில் இதற்கு முன்னரும் இதேபோன்று சுற்றுலாப் பயணிகளுக்குக் கடலாமைகளைக் காண்பித்துப் பணம் பறித்த இருவர் உனவட்டுன சுற்றுலாப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
</p><p style="text-align: justify; ">
உனவட்டுன சுற்றுலாப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஹபராதுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-13T14:00:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாகும் வரை ஈழம் கேட்க மாட்டேன் ; அர்ச்சுனா எம்.பியின் பேச்சுக்கு விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/arjuna-mp-i-will-never-demand-eelam-again-1789295771"></link>
            <id>https://jvpnews.com/article/arjuna-mp-i-will-never-demand-eelam-again-1789295771</id>
            <summary type="text">2029ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ வெற்றிபெற்று நாட்டின் ஜனாதிபதியாவார் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2029ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ வெற்றிபெற்று நாட்டின் ஜனாதிபதியாவார் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
அனுராதபுரத்தில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96e738b9-67d0-44ee-9909-836c4cf97f7b/26-6aa67c9d37a49.webp' /></p><h2 style="text-align: justify; ">அரசியல் தீர்வு</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
தனக்கு "கருநாக்கு" இருப்பதாகக் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தான் முன்னர் கூறிய பல அரசியல் கணிப்புகள் உண்மையாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
</p><p style="text-align: justify; ">
அந்தவகையில், எதிர்காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டாலும் அல்லது என்ன தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் 2029 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாவதைத் தடுக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; ">

தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையிலான நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு உரிய அரசியல் தீர்வு காண்பதற்கு, வடக்கையும் தெற்கையும் இணைக்கும் தலைவராக நாமல் ராஜபக்ஷவே திகழ்வார் என்றும், அவருக்குத் தேவையான ஆதரவை வழங்கத் தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அத்துடன், தான் உயிருடன் இருக்கும் வரை தனி ஈழக் கோரிக்கையை முன்வைக்கப்போவதில்லை என்றும் அவர் இதன்போது உறுதியளித்தார்.
</p><p style="text-align: justify; ">
மேலும், தற்போதைய அரசாங்கம் தனது அரசியல் பயணத்தைத் தடுப்பதற்காக தன் மீது 29 வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், தற்போதைய ஆட்சிமுறைகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் அணுகுமுறைகள் குறித்தும் கடுமையாக விமர்சித்தார்.</p><p style="text-align: justify; ">அர்ச்சுனா எம்.பியின் இந்த கருத்துக்களுக்கு சமூக ஊடகங்களில் பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-13T14:00:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அயர்லாந்துக்கு ட்ரம்ப் திடீர் பயணம் ; போராட்டத்தில் குதித்த மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-makes-surprise-trip-to-ireland-1789305329"></link>
            <id>https://canadamirror.com/article/trump-makes-surprise-trip-to-ireland-1789305329</id>
            <summary type="text">அமெரிக்காவில் நவம்பர் மாதம் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வரவிருக்கிறது. மற்றொரு பக்கம் ஈரான் நாட்டுடன் கடுமையான போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த பரபரப்பான...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் நவம்பர் மாதம் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வரவிருக்கிறது. மற்றொரு பக்கம் ஈரான் நாட்டுடன் கடுமையான போர் பதற்றம் நிலவி வருகிறது. </p><p>இந்த பரபரப்பான சூழ்நிலையிலும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அயர்லாந்து நாட்டுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61492a0c-e08c-48ab-ae4a-39fd350d74f9/26-6aa6a1f33b8db.webp' /></p><p>அங்குள்ள டூன்பெக் நகரில் தனது நிறுவனத்திற்குச் சொந்தமான மைதானத் தில் நடக்கும் 'ஐரிஷ் ஓபன்' கோல்ப் போட்டியை ரசிப்பதற்காக அவர் அங்கு சென்றுள்ளார்.</p><p>


இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் இறுதிப்போட்டியில் அவரே நேரில் நின்று கோப்பையையும் வழங்குகிறார்.</p><p> இது அரசுமுறைப் பயணம் இல்லை என்றாலும், அயர்லாந்து அதிபர் கேத்தரின் கான்னோலி மற்றும் பிரதமர் மைக்கேல் மார்ட்டின் ஆகியோரை சந்தித்து அவர் ஆலோசனை நடத்த உள்ளார். </p><p>அயர்லாந்தில் ட்ரம்பின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதிகளில் இறங்கி தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-13T13:59:32+00:00</updated>
        </entry>
    </feed>
