<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-17T06:33:30+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[27 வயதில் தூக்கத்திலேயே உயிரிழந்த பிரபல இளம் நடிகை... ரசிகர்கள் ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-ananya-raj-dies-at-27-in-sleep-1786943591"></link>
            <id>https://cineulagam.com/article/actress-ananya-raj-dies-at-27-in-sleep-1786943591</id>
            <summary type="text">அனன்யா ராஜ்பிரபலங்களில் இறப்பு செய்தி எப்போதும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அப்படி பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை உயிரிழந்ததாக வந்த தகவல் ரச...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அனன்யா ராஜ்</h2><p>பிரபலங்களில் இறப்பு செய்தி எப்போதும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. </p><p>அப்படி பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை உயிரிழந்ததாக வந்த தகவல் ரசிகர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஹிந்தியில் 7 ஹவர்ஸ் டு ஹோ, தி பைனல் எக்சிட், கோஸ்ட் போன்ற படங்களில் நடித்தவர் தான் அனன்யா ராஜ்.</p><p> 27 வயதான இவர் தெலுங்கில் தஹ்டிலி என்ற படத்திலும் நடித்துள்ளார். மேலும் பல்வேறு குடும்படங்கள், இசை நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக பணியாற்றியவர் வெப் தொடர்களிலும் நடித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80d04654-b157-4923-89d2-8d83d2e85511/26-6a829acb02e79.webp' /></p><h2>சோக செய்தி</h2><p>
பிஸியாக நடித்து வந்தவர் ஒரு கட்டத்தில் சினிமா பக்கமே காணவில்லை, சரி கொஞ்சம் இடைவேளை எடுத்துள்ளார் என ரசிகர்கள் நினைத்தார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5258c32-efeb-4870-a3b7-e7bd15018257/26-6a829acbc023b.webp' /></p><p> </p><p>இந்த நேரத்தில் தான் அனன்யா ராஜ் பற்றி ஒரு திடுக்கிடும் தகவல் வந்தது. அதாவது அனன்யா ராஜ் மரணமடைந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். </p><p>உடல்நலம், மனநலம் தொடர்பான பிரச்சினைகளை சந்தித்து வந்த அனன்யா ராஜ் கடந்த மாதம் 15ம் தேதி வீட்டில் உறக்கத்திலேயே மரணமடைந்துவிட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி ரசிகர்களுக்கு கடும் சோகத்தை கொடுத்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T06:30:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை விடுமுறையிலுள்ள மாணவர்கள் தொடர்பில் அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/school-leave-in-sri-lanka-1786947211"></link>
            <id>https://tamilwin.com/article/school-leave-in-sri-lanka-1786947211</id>
            <summary type="text">பாடசாலை விடுமுறையிலுள்ள மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டுமென பெற்றோருக்கு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் பதில் இயக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாடசாலை விடுமுறையிலுள்ள மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டுமென பெற்றோருக்கு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் பதில் இயக்குநர் டாக்டர் பிரதீப் ரத்னசேகர அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். </p><p>

பாடசாலை விடுமுறை நாட்களில் பட்டம் விடும் விபத்துகள் அடிக்கடி பதிவாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்</h2><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், இப்போதெல்லாம் நிலவும் வறண்ட வானிலை மற்றும் பாடசாலை விடுமுறை காரணமாக, குழந்தைகளிடையே பட்டம் விடுவது பிரபலமாகியுள்ளது. 

கவனக்குறைவாக பட்டம் விடுவது கடுமையான காயங்களையும், உயிருக்கே ஆபத்தான காயங்களையும் கூட ஏற்படுத்தக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59137caa-b808-4342-aa34-02253749769c/26-6a82aa5e4e3f1.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக உயரமான இடங்களில் இருந்து பட்டம் விட முயற்சிக்கும்போது கீழே விழ நேரிடலாம். குழுக்களாகப் பட்டம் விடும்போது மோதல்கள் மற்றும் கீழே விழுவதால் விபத்துகள் ஏற்படலாம். 

உயர் மின்னழுத்த மின் கம்பிகளுக்கு அருகில் பட்டம் விடுவது மிகவும் ஆபத்தான செயல்.</p><h2>எச்சரிக்கை</h2><p> </p><p>பட்டத்தின் நூல்கள் மின் கம்பிகளுடன் தொடர்பு கொண்டால், அந்த நூல் வழியாக மின்சாரம் நபருக்குப் பாயக்கூடும். 

இத்தகைய மின் அதிர்ச்சிகள், கைகள், புஜங்கள் மற்றும் மார்புப் பகுதிகளில் உள்ள உடல் திசுக்கள், இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளுக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5c457d2-384a-494c-a8fe-7a2e2d1af23b/26-6a82aa5f06b23.webp' /></p><p>
</p><p>
சில சமயங்களில், சேதமடைந்த உடல் பாகங்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை கூட ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். </p><p>

மேலும், மின் கம்பிகள் உள்ள பகுதிகளில் குழந்தைகள் பட்டம் விடுவதைத் தடுக்க பெற்றோர்களும் பெரியவர்களும் பொறுப்பேற்க வேண்டும்.

ஏனெனில் மின்சாரத்தைக் கடத்தும் நூல்கள் உடனடி உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T06:30:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chargesheet-filed-pillaiyan-against-4-people-1786947374"></link>
            <id>https://tamilwin.com/article/chargesheet-filed-pillaiyan-against-4-people-1786947374</id>
            <summary type="text">கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட நால்வருக்கு எதிராகச் சட்டமா அதிபரினால் பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட நால்வருக்கு எதிராகச் சட்டமா அதிபரினால் பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9edf12ea-4af4-4199-99c1-ce805f485e53/26-6a82a9ea4b213.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T06:29:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பனிக்கரடியின் தூக்கத்தை கலைத்ததால் அபராதம்; கப்பல் உரிமையாளர் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/norway-fine-for-disturbing-a-polar-bear-s-sleep-1786948293"></link>
            <id>https://canadamirror.com/article/norway-fine-for-disturbing-a-polar-bear-s-sleep-1786948293</id>
            <summary type="text">&amp;nbsp; நோர்வேவுக்கு சொந்த மான தீவுக்கூடமான ஸ்வால்பார்ட் கடற்கரை பகுதி வழியாக சமீபத்தில் சுற்றுலாப்பயணியர் கப்பல் சென்றது. 

அப்போது கப்பலில் இருந்தவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நோர்வேவுக்கு சொந்த மான தீவுக்கூடமான ஸ்வால்பார்ட் கடற்கரை பகுதி வழியாக சமீபத்தில் சுற்றுலாப்பயணியர் கப்பல் சென்றது. </p><p>

அப்போது கப்பலில் இருந்தவர்கள், கரையில் பனிக்கரடி ஒன்று ஓய்வெடுப்பதை கண்டனர். அவர்கள் அக்கரடி நகர்வதை பார்க்க விரும்பியதையடுத்து, கப்பல் உரிமையாளர் ஒருவர் மூடுபனியின் போது, எச்சரிக்கைக்காக ஒலிக்க செய்யும் கப்பலின் 'பாக் ஒலியை' ஒலிக்கச் செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb2f2405-e2f1-4490-9f99-f7e9651d5b16/26-6a82aac72f7f3.webp' /></p><p>
</p><p>


இச்சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த கரடி அங்கிருந்து பயந்து ஓடியது. இச்சம்பவம் குறித்து உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. </p><p>

ஸ்வால் பார்ட் கவர்னரான லார்ஸ் பவுஸ், பனிக்கரடிக்கு தொந்தரவு கொடுத்த கப்பல் உரிமையாளருக்கு, ஐந்து இலட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். இந்த அபராதத்தால் கப்பல் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார்.
</p><p>


ஸ்வால்பார்ட் பகுதியின், 1972ம் ஆண்டு சுற்றுச்சூழல் சட்டத்தின்படி, பனிக்கரடியை தேவையற்ற முறையில் அல்லது தொந்தரவு செய்வது, துரத்துவது குற்றமாகும்</p>]]></content>
            <updated>2026-08-17T06:29:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த அரசுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கஞ்சிபானி இம்ரான்! அநுர அரசு அம்பலப்படுத்தும் இரகசியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kanjipani-s-connection-with-mahinda-government-1786934816"></link>
            <id>https://tamilwin.com/article/kanjipani-s-connection-with-mahinda-government-1786934816</id>
            <summary type="text">இலங்கையை விட்டுத் தப்பியோடிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபானி இம்ரான் இன்னும் சில நாட்களில் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என பாதுகாப்புப் பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையை விட்டுத் தப்பியோடிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபானி இம்ரான் இன்னும் சில நாட்களில் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என பாதுகாப்புப் பிரதி அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
</p><p>
தற்போது இத்தாலியில் உள்ள அவரை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>இன்டர்போல் பிடியாணை&nbsp;</h2><p>
</p><p>
அதற்கமைய, இன்டர்போல் பிடியாணையின் கீழ் தேடப்பட்டுவரும் 58 குற்றவாளிகள் இதுவரை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
</p><p>
“கஞ்சிப்பானி இம்ரான் முந்தைய மகிந்தவின் ஆட்சியின் போது அரசியல் பிரமுகர்கள் ஆபத்தான குற்றவாளிகள் மற்றும் பல நபர்களுடன் தொடர்புகளைப் பேணியுள்ளார். </p><p>இது அந்தக்காலகட்டத்தில் நாட்டின் சட்டத்தின் ஆட்சி குறித்து கேள்விகளை எழுப்புகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/403f5d07-bc81-43bc-b06b-49893e28903f/26-6a82a47b01293.webp' /></p><p>
</p><p>
இன்டர்போல் பிடியாணைகளின் கீழ் தேடப்பட்டுவந்த பல முக்கிய பாதாள உலக மற்றும் வர்த்தகக் குற்றவாளிகள் உட்பட 58 ஆபத்தான குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
</p><p>
பெரும் குற்றவியல் வலையமைப்பின் தலைவர்களை அரசாங்கம் தற்போது குறிவைத்து அவற்றை அகற்றி வருகின்றது. </p><p>இந்த முயற்சிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளன.
</p><p>
மிகவும் ஆபத்தான குற்றவாளிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு பாரிய முயற்சி தேவைப்பட்டது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் சட்டத்தின் ஆட்சியின் மேலாதிக்கத்தையும் அதிகாரத்தையும் வெளிப்படுத்துகின்றன” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p>
 </p>]]></content>
            <updated>2026-08-17T06:28:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெயரை கேட்டாலே அச்சத்தில் உறைந்த மெல்போர்ன் மக்கள்..மோசமான நிலையில் மீட்கப்பட்ட நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/melbourne-s-fadi-haddara-gun-shot-at-altona-1786948257"></link>
            <id>https://news.lankasri.com/article/melbourne-s-fadi-haddara-gun-shot-at-altona-1786948257</id>
            <summary type="text">Fadi Haddara was shot in Altona North: அவுஸ்திரேலியாவில் மெல்போர்ன் நிழலுலக பிரமுகராக அறியப்பட்ட ஃபாடி ஹத்தாரா மோசமான நிலையில் மீட்கப்பட்டார்.அவுஸ்திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Fadi Haddara was shot in Altona North: அவுஸ்திரேலியாவில் மெல்போர்ன் நிழலுலக பிரமுகராக அறியப்பட்ட ஃபாடி ஹத்தாரா மோசமான நிலையில் மீட்கப்பட்டார்.</p><p>அவுஸ்திரேலியாவில் மெல்போர்ன் நிழலுலக பிரமுகரான ஃபாடி ஹத்தாரா, சந்தேகிக்கப்படும் கும்பல் மோதல் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மோசமான நிலையில் கண்டெடுக்கப்பட்டார். </p><h2>

நிழலுலக பிரமுகராக
</h2><p>அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நிழலுலக பிரமுகராக மக்களை அச்சுறுத்தி வந்தவர் 48 வயதான ஃபாடி ஹத்தாரா (Fadi Haddara).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ef6e875-bc3b-4d53-8f13-790ae9778ea5/26-6a82aaa3e0067.webp' /></p><p>
பல ஆண்டுகளாக மெல்போர்னில் மற்றவர்கள் அஞ்சும்படியாக இருந்த ஹத்தாரா, விக்டோரியாவின் சட்டவிரோத புகையிலை வர்த்தகத்தில் ஒரு முக்கிய பங்கு வகித்ததாக சந்தேகிக்கப்பட்டது.
</p><p>
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை Altona North பகுதியில் உள்ள மேரிகோல்ட் அவென்யூவில் அமைந்திருக்கும் ஒரு வீட்டில் வைத்து ஃபாடி ஹத்தாரா (48) சுடப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டார்.
</p><h2>
உயிருக்கு ஆபத்தான நிலையில்
</h2><p>பின்னர் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார்.
</p><p>
அவர் கும்பல்களுக்கு இடையிலான மோதலில் நடந்ததாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சுடப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மேலும், காவல்துறையினர் ஒரு குற்ற நிகழ்விடத்தை அமைத்தனர். இச்சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>
&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T06:28:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் விவகாரம் - சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்த திமுக]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/minister-not-answer-dmk-walkout-in-tn-assembly-1786947869"></link>
            <id>https://news.lankasri.com/article/minister-not-answer-dmk-walkout-in-tn-assembly-1786947869</id>
            <summary type="text">dmk walkout assembly : போதைப்பொருள் விவகாரம் குறித்து அரசு உரிய விளக்கமளிக்கவில்லை என திமுக சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்துள்ளது. 

 உதயநிதி ஸ்டாலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>dmk walkout assembly : போதைப்பொருள் விவகாரம் குறித்து அரசு உரிய விளக்கமளிக்கவில்லை என திமுக சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்துள்ளது. </p><h3>

 உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு</h3><p> 

தமிழ்நாடு சட்டமன்றத்தில், இன்று கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொல்லப்பட்டது தொடர்பாக திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது.&nbsp;&nbsp;</p><p> 

இது குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான கொலைகள் நடைபெற்றுள்ளது. கோவையில் ஒடுக்கப்பட்ட பிரிவை சார்ந்த 19 வயது இளைஞன் அமுதனை 20 பேர் கொண்ட கும்பல் அடித்து கொலை செய்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36f93fa4-5561-4885-9e45-25424b751144/26-6a82a92169cc5.webp' /></p><p> 

இந்த பிரச்சனையை நான் ஏற்கனவே அவையில் எழுப்பும் பொழுது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், இது ஒரு கோஷ்டி பூசலால் நடந்த கொலை என தெரிவித்துள்ளார்.

10 பேர் சண்டை போட்டு பத்து பேர் மோதினால் அது கோஷ்டி பூசல் என்று சொல்லலாம். ஆனால், ஒரு மாணவனை 20 பேர் சேர்ந்து தாக்கி உள்ளனர். அதனால் இது படுகொலை. </p><p>மாணவர் அமுதன் விவகாரத்தில், கோவை செட்டிபாளையம் போலீசார் வழக்கு விசாரணைக்காக அமுதனை வர சொல்லியுள்ளனர்.

போதை கும்பல் குறித்து அமுதனிடம் தகவல் வாங்கிய காவல்துறையினர், குற்றவாளிகளை கண்டுபிடித்து நியாயமாக போதைப்பொருட்களை பறிமுதல் செய்திருக்க வேண்டும். </p><p>ஆனால், போதைப் பொருள் குறித்து அமுதனிடம் தகவல் பெற்ற காவல் துறையினர் குற்றவாளிகளிடமே அது குறித்தான தகவலை பகிர்ந்து உள்ளனர். அதுதான் அமுதனின் மரணத்திற்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.</p><p>

போதைப் பொருள் கும்பல் குறித்து காவல்துறையினரிடம் அமுதன் தகவல் கொடுத்ததால் தான் அமுதன் கொலை செய்யப்பட்டுள்ளார் என அவரது பெற்றோர்கள் நம்புகிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக கள ஆய்வு செய்த பல்வேறு சமூக ஆர்வலர்களும் இதே குற்றச்சாட்டை தான் முன் வைக்கிறார்கள்

இது தனிப்பட்ட கோஷ்டி பூசலாக கடந்து போய்விட முடியாது. </p><p>அரசின் அலட்சியத்தாலும் காவல்துறையின் பொறுப்பற்ற போக்கால் தான் இந்த கொலை நடந்துள்ளது. குற்றவாளிகளுக்கு தகவல் கொடுத்ததாக குற்றம் சாட்டப்படும் காவல்துறையினர் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை கலாச்சாரத்தை எதிர்த்து நிற்கும் ஒருவருக்கும் விடப்படும் எச்சரிக்கை தான் இந்த கோவை சம்பவம்.</p><p>சென்னையிலும் இதேபோன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. 

சென்னையில் திருவொற்றியூரைச் சேர்ந்த தனுஷ் குமார் போதைப்பொருள் பழக்கத்துக்கு எதிராக தட்டிக் கேட்டுள்ளார். அவரை 40 பேர் கொண்ட கும்பல் அடித்துக் கொலை செய்தனர்" என பேசினார்.&nbsp;</p><p></p><h3> 

ஜாபர் சாதிக்குடன் தொடர்பு</h3><p> 

இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், "மாணவர்கள் குழுக்களுக்கு இடையிலான முன்விரோதம் காரணமாக அமுதன் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. 

போதைப்பொருள் தொடர்பாக எந்த தகவலும் இல்லை, பழிவாங்கலே காரணம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f71df05f-1dfa-463e-8305-ab1351b94083/26-6a82a920b40b5.webp' /></p><p>போதைப்பொருள் குறித்து புகாரளித்தவரின் தகவலை போலீசார் கசியவிட்டதாக கூறுவதில் உண்மையில்லை.

போதைப்பொருள் தொடர்பாக புகாரளித்ததால் கொலை என சித்தரித்து உண்மையை திசை திருப்ப வேண்டாம். உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் காவல்துறைக்கு இல்லை. இதுவரை அமுதன் கொலையில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். </p><p>

மேலும், திமுக ஆட்சியில் டெல்லியில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்குடன் முதல்வர் குடும்பம் மற்றும் அமைச்சர்களுக்கு இருந்த தொடர்பு அனைவரும் அறிந்தது" என தெரிவித்தார். </p><p> 

இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "கடந்த ஆட்சியில் போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்பட்ட நபரை, எங்கள் தலைவர் உடனடியாக கைது செய்ததோடு, கட்சியில் இருந்தும் நீக்கிவிட்டார். </p><p>

ஆனால் தவெக ஆட்சியில் ஒரு அமைச்சரே IPL விளையாட்டின்போது பவுடர் நுணுக்கிவிட்டு, மாத்திரையை நுணுக்கியதாக கதை விட்டார். அவரிடம் காவல்துறை ஏதேனும் விசாரணை நடத்தியதா? தவெக ஏதும் நடவடிக்கை எடுத்துருக்கிறதா" என கூறினார். </p><h3> 

 அமைச்சர் சரத்குமார் விளக்கம் </h3><p>

இந்தக் குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்துப் பேசிய அமைச்சர் சரத்குமார், "அந்த வீடியோ தவறான புரிதலோடு பரப்பப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இதை ஏற்கனவே நான் தெளிவாக விளக்கிவிட்டேன். 

அதில் அவர்களுக்கு முரண்பாடு இருந்தால், அந்த நிகழ்வு நடந்தது திமுக ஆட்சியில் தான்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/607cd54d-81d4-4602-af1e-56b9a067b2fc/26-6a82a91f5bf32.webp' /></p><p>அப்போது ஸ்டேடியத்தில் போதை பொருளை அவர்கள் அனுமதித்தார்களா? விளக்கம் அளித்த பின் தேவையில்லாத கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம்" என பதிலளித்தார்.</p><h3>திமுக வெளிநடப்பு&nbsp;&nbsp;</h3><p> </p><p>

இதனையடுத்து தங்கள் கேள்விக்கு அரசு தரப்பில் உரிய பதிலளிக்கவில்லை என தெரிவித்த திமுக சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்தது.
</p><p>
வெளிநடப்பு செய்த பின்னர் பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின், "கோவையில் மாணவர் அமுதன், திருவொற்றியூரில் மாணவர் தனுஷ் ஆகியோரை போதைப் பொருள் கும்பல் அடித்துப் படுகொலை செய்துள்ளது. இதுகுறித்து பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் கேள்வி எழுப்பினோம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f2d5a12-cbc7-42f6-8a8e-c754a62bdabd/26-6a82a9200da5c.webp' /></p><p>

ஆனால், அதற்கான தெளிவான விளக்கத்தை அளிக்காமல், எதிர்க்கட்சிகளின் மேல் பழி போடும் வழக்கத்தையே தவெக அரசு செய்து வருகிறது. </p><p>கடந்த 3 மாதங்களாக சொல்லிக் கொண்டே இருக்கிறோம். தவெக அரசில் எந்தத் துறைக்கு யார் அமைச்சர் என்றே தெரியவில்லை. அந்தத்துறை குறித்த கேள்விக்கு, துறை அமைச்சர்கள் பதிலளிப்பதில்லை. </p><p>

சட்டம், ஒழுங்கு குறித்த கேள்விக்கு அந்தத் துறை அமைச்சர் அவையிலே இல்லை. எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் அளிப்பதில்லை. இதைக் கண்டித்து தான் வெளிநடப்பு செய்தோம்" என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;<iframe frameborder="0" src="//www.youtube.com/embed/zW0GYKpAVLo" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T06:24:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மறுவிசாரணைக்கு வரும் திருகோணமலை குமாரபுரம் படுகொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/trincomalee-kumarapuram-massacre-undergo-retrial-1786947861"></link>
            <id>https://jvpnews.com/article/trincomalee-kumarapuram-massacre-undergo-retrial-1786947861</id>
            <summary type="text">&amp;nbsp;1996ஆம் &amp;nbsp;ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதி திருகோணமலை, கிளிவெட்டி குமாரபுரம் கிராமத்தில் 24 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;1996ஆம் &nbsp;ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதி திருகோணமலை, கிளிவெட்டி குமாரபுரம் கிராமத்தில் 24 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில், அநுராதபுரம் மேல்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராணுவ வீரர்கள் அறுவருக்கு எதிராகவும் மறுவிசாரணை நடத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>



24 தமிழ் பொதுமக்களைக் கொலை செய்தனர் எனவும் மேலும் 25 பேருக்குக் காயம் ஏற்படுத்தினர் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a41f38e1-92c6-491e-954e-1c450312ee1f/26-6a82a91791d53.webp' /></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">09 பெண்கள் உட்பட 24 தமிழ் பொதுமக்கள் கொலை</span></p><p>


அநுராதபுரம் மேல்நீதிமன்றத்தின் தீர்ப்பை இரத்துச் செய்யக்கோரி சட்ட மா அதிபர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டைப் பரிசீலித்த பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.</p><p></p><p> மேலும், தனது உத்தரவை அநுராதபுரம் மேல்நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.



மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் அமல் ரணராஜா மற்றும் சுமுது பிரேமச்சந்திர ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
</p><p>


குற்றஞ்சாட்டப்பட்டவர்களை அடையாளம் காணும் அணிவகுப்பின்போது பதிவு செய்யப்பட்ட சில குறிப்புகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அரசுத் தரப்புக்கு மேல்நீதிமன்ற நீதிபதி அனுமதி மறுத்தமை தவறு என்ற மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்வாவின் வாதத்தை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.</p><p></p><p>
</p><p>


09 குழந்தைகள், கர்ப்பிணித் தாய் ஒருவர் அடங்கலாக 09 பெண்கள் உட்பட 24 தமிழ் பொதுமக்களைக் கொலை செய்தனர் எனவும் மேலும் 25 பேருக்குக் காயம் ஏற்படுத்தினர் எனவும் முன்னாள் இராணுவ வீரர்கள் ஆறு பேர் மீது அநுராதபுரம் மேல்நீதிமன்றத்தில் 101 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நிலையில், அவர்கள் 2016ஆம் ஆண்டில் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
</p><p>


அடையாளம் காணும் அணிவகுப்பு தொடர்பான ஆவணங்களில் அதிகாரபூர்வ கையொப்பம் இல்லை என்ற காரணத்தைக் காட்டி, விசாரணையின்போது அவற்றைச் சமர்ப்பிக்க மேல்நீதிமன்ற நீதிபதி அனுமதி மறுத்தமை ஒரு தொழில்நுட்ப ரீதியான தவறு என்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் அமல் ரணராஜா தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.</p><p></p><p>



இதற்கிடையில், அடையாளம் காணும் அணிவகுப்பு தொடர்பான ஆவணங்களில் அதிகாரபூர்வ கையொப்பம் மற்றும் திகதி இல்லாததை ஒரு முக்கிய முடிவெடுக்கும் காரணியாக மேல்நீதிமன்ற நீதிபதி கருதியமை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நீதியரசர் பிரேமச்சந்திர தனது தீர்ப்பில் தெரிவித்தார்.</p><p>



"சம்பந்தப்பட்ட சாட்சியம் ஏற்றுக்கொள்ளத் தக்கதா மற்றும் அது மதிப்பீடு செய்யப்படக்கூடியதா என்பதில்தான் நீதிபதி கவனம் செலுத்தியிருக்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார்.



குற்றஞ்சாட்டப்பட்ட தரப்புக்காக ஜனாதிபதி சட்டத்தரணி டிரந்த வலலியத்த ஆஜரானார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T06:21:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரவீந்திரநாத் கடத்தப்பட்டுப் படுகொலை - பிள்ளையானுக்கு எதிராக குற்றப்பத்திரிகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ag-files-indictments-against-pillayan-and-3-others-1786946881"></link>
            <id>https://ibctamil.com/article/ag-files-indictments-against-pillayan-and-3-others-1786946881</id>
            <summary type="text">கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.குறித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>குறித்த வழக்கானது சட்டமா அதிபரினால் பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T06:19:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பட்டம் விடுவதால் அதிகரிக்கும் விபத்துகள்; சுகாதார அமைச்சு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rise-in-accidents-due-to-kite-flying-1786947330"></link>
            <id>https://jvpnews.com/article/rise-in-accidents-due-to-kite-flying-1786947330</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டில் விடுமுறை காலத்தில் பட்டம் விடுவது தொடர்பான விபத்துகள் அதிகரித்துள்ள நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்களும் பொதுமக்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டில் விடுமுறை காலத்தில் பட்டம் விடுவது தொடர்பான விபத்துகள் அதிகரித்துள்ள நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்களும் பொதுமக்களும் அதிக கவனம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>


தற்போது நிலவும் வறண்ட காலநிலை காரணமாக குழந்தைகள் மத்தியில் பட்டம் விடும் நடவடிக்கை அதிகரித்துள்ள போதிலும், கவனக்குறைவான முறையில் பட்டம் விடுவதால் கடுமையான காயங்கள் மற்றும் உயிருக்கு ஆபத்தான விபத்துகள் ஏற்படக்கூடும் என லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பதில் பணிப்பாளரும் சிறப்பு வைத்தியருமான பிரதீப் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec00ef12-856d-4000-a513-c419e3f67e6d/26-6a82a7041b543.webp' /></p><h2>&nbsp;உயிருக்கு ஆபத்தான விபத்துகள்&nbsp;</h2><p>



</p><p>பட்டம் விடும்போது ஒருவருடன் ஒருவர் மோதுதல், கீழே விழுதல் மற்றும் கூரைகள் உள்ளிட்ட உயரமான இடங்களில் இருந்து பட்டம் விட முயற்சிப்பதால் கடுமையான காயங்கள் ஏற்படக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>


மேலும், பட்டத்தின் நூல் உயர் மின்னழுத்த மின் கம்பிகளுடன் தொடர்பு கொள்ளும்போது மின்சாரம் பாய்ந்து கடுமையான தீக்காயங்கள் ஏற்படுவதுடன், சில சந்தர்ப்பங்களில் உயிரிழப்பும் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>



இதனால் கைகள் மற்றும் மார்புப் பகுதிகளில் உள்ள திசுக்கள், இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.</p><p>



எனவே, குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு இணையாக அவர்களின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும் எனவும், பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் குழந்தைகள் பட்டம் விடும்போது தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T06:13:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[7 ஆண்டுகளில் 1000இற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/1178-inmates-have-escaped-from-prisons-1786944922"></link>
            <id>https://tamilwin.com/article/1178-inmates-have-escaped-from-prisons-1786944922</id>
            <summary type="text">கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் 1,178 கைதிகள் சிறைகளில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் என இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் 1,178 கைதிகள் சிறைகளில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர் என இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.&nbsp;</p><p>அறிக்கையின்படி, 2019இல் 153 கைதிகளும், 2020இல் 110 பேரும், 2021இல் 103 பேரும், 2022இல் 231 பேரும், 2023இல் 207 பேரும், 2024இல் 188 பேரும், 2025இல் 186 பேரும் தப்பிச் சென்றுள்ளனர்.</p><h2>நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க</h2><p>இன்றுவரை சுமார் 474 கைதிகள் மீண்டும் பிடிபட்டுள்ள நிலையில், 734 பேர் சுதந்திரமாக நடமாடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a6927a1-3f84-414b-8774-63aee9d65299/26-6a82a483cfc19.webp' /></p><p>சிறைச்சாலைகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு உறுதியளித்துள்ளது. </p><p>அதன்படி, 22வது திருத்தம் இயற்றப்பட்ட பிறகு மாகாணங்களில் மேல்முறையீட்டு நீதிமன்றம் செயல்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும், வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்துவதற்காக நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகவும் அரசு குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T06:10:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டவர்களுக்கு அரசு உதவிகள் வழங்கப்படாது: புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியின் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/reform-uk-plans-ban-benefits-for-foreign-nationals-1786943875"></link>
            <id>https://news.lankasri.com/article/reform-uk-plans-ban-benefits-for-foreign-nationals-1786943875</id>
            <summary type="text">பிரித்தானியாவின் ரீஃபார்ம் யூகே கட்சி, தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டவர்களுக்கு அரசு உதவிகள் வழங்கப்படாது என்று கூறியுள்ளது.


பிரித்தானி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் ரீஃபார்ம் யூகே கட்சி, தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டவர்களுக்கு அரசு உதவிகள் வழங்கப்படாது என்று கூறியுள்ளது.</p><p>


பிரித்தானியாவின் புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான ரீஃபார்ம் யூகே கட்சி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டவர்களுக்கு அரசு உதவிகள் வழங்கப்படுவது தடை செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
</p><h3>
வெளிநாட்டவர்களுக்கு அரசு உதவிகள்...
</h3><p>
ரீஃபார்ம் யூகே கட்சியைச் சேர்ந்த ராபர்ட் ஜென்ரிக் கூறும்போது, வெளிநாட்டவர்களின் நலனுக்காக பணம் கொடுக்க பிரித்தானிய பணியாளர்களை கட்டாயப்படுத்துவது சரியல்ல என்று கூறியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3afec38-50ea-4c3f-b1e1-51819c910e8e/26-6a82998569dc6.webp' /></p><p>
ஆகவே, தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், வெளிநாட்டவர்களுக்கு அரசு உதவிகள் வழங்கப்படுவது தடை செய்யப்படும் என்று கூறியுள்ளது ரீஃபார்ம் யூகே கட்சி.</p><p>

அக்கட்சியின் திட்டப்படி, வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் வீட்டுக்கான உதவி, ஓய்வூதியம் தொடர்பிலான உதவி, வேலை தேடுவோருக்கு வழங்கப்படும் நிதியுதவி, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உதவி மற்றும் உடற்குறைபாடுகள் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் என அனைத்து உதவிகளும் நிறுத்தப்படும். </p><p></p><p>
முக்கிய விடயம் என்னவென்றால், மூன்றாம் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல, ஐரோப்பிய ஒன்றியத்தவர்களுக்கு வழங்கப்படும் உதவிகளும் தடை செய்யப்படும் என்று கூறியுள்ளது ரீஃபார்ம் கட்சி.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T06:10:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[2,000 ரூபாவினால் அதிகரித்துள்ள தங்கத்தின் விலை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-rate-today-sri-lanka-1786946345"></link>
            <id>https://tamilwin.com/article/gold-rate-today-sri-lanka-1786946345</id>
            <summary type="text">கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (17) நாட்டில் தங்கத்தின் விலை 2,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்று காலை நிலவரப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (17) நாட்டில் தங்கத்தின் விலை 2,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
</p><p>
கொழும்பு செட்டியார் தெருவின் இன்று காலை நிலவரப்படி, 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 351,500.00 ரூபாவாக அதிகரித்துள்ளது.</p><h2>தங்க விலை</h2><p> </p><p>இதேவேளை, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை, இன்று 382,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01fb80c1-9d83-4ad0-a4be-131ff7c926d3/26-6a82a5a1626f0.webp' /></p><p> 

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.</p><p> 

இன்று உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,398 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-08-17T06:09:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரக்குறைவாக பேசிமைக்கு எதிர்ப்பு ; வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/protest-by-northern-province-development-officers-1786946702"></link>
            <id>https://jvpnews.com/article/protest-by-northern-province-development-officers-1786946702</id>
            <summary type="text">&amp;nbsp; வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் இன்றையதினம் சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.&amp;nbsp; யாழ்.கைதடியில் அமைந்துள்ள வடக்கு ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் இன்றையதினம் சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>&nbsp; யாழ்.கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cd0448f-2147-4c34-b6ce-e32c33a2c5d3/26-6a82a4901f9a2.webp' /></p><p>

வடக்கு மாகாண பிரதம செயலர் தலைமையில் கடந்த ஜூலை மாதம் 07 ஆம் திகதி இடம்பெற்ற துறைசார் மீளாய்வு கூட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தரக்குறைவாக பேசிமைக்கு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.</p><p></p><p>
</p><p>
மேலும், இந்த விடயம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நீதிமன்ற சட்ட நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.</p><p></p><p>

மேலும், வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இந்தப் போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளம் ஆகியன ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-17T06:02:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[படிப்படியாக வழமைக்கு திரும்பும் காலநிலை! நுவரெலியாவை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tourists-flocking-to-nuwara-eliya-1786941028"></link>
            <id>https://tamilwin.com/article/tourists-flocking-to-nuwara-eliya-1786941028</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நிலவிய சீரற்ற காலநிலை
காரணமாக மண்சரிவு, கற்கள் புரள்வு மற்றும் மரங்கள் முறிந்து வீதிகளில்
விழுந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நிலவிய சீரற்ற காலநிலை
காரணமாக மண்சரிவு, கற்கள் புரள்வு மற்றும் மரங்கள் முறிந்து வீதிகளில்
விழுந்தமை உள்ளிட்ட பல்வேறு அனர்த்தங்கள் ஏற்பட்டதுடன், மக்களின் அன்றாட
இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டிருந்தது.
</p><p>
இதனால், மாவட்டத்தின் சுற்றுலாத்துறையும் பாரிய பாதிப்பை எதிர்நோக்கியிருந்த
நிலையில், தற்போது காலநிலை படிப்படியாக வழமைக்கு திரும்பி வருவதையடுத்து,
நுவரெலியாவை நோக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை
அதிகரித்துள்ளது.</p><h2>நிரம்பி வழியும் சுற்றுலாப் பயணிகள்</h2><p>
</p><p>
குறிப்பாக, டெவோன் மற்றும் சென்கிளயார் நீர்வீழ்ச்சிகளை பார்வையிடுவதற்காக
பெருமளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், அப்பகுதிகளில்
அமைக்கப்பட்டுள்ள காட்சிக் கூடங்கள் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aaf01730-5f74-4eaf-9a48-b140afb4d4b3/26-6a82a2d491f15.webp' /></p><p>
இந்தியா, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இம்முறை அதிகளவான
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நுவரெலியா மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளதாக
சுற்றுலா விடுதி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.</p><h2>நடைபாதை வியாபார நடவடிக்கை</h2><p>
</p><p>
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், நீண்ட நாட்களாக மந்தநிலையில்
காணப்பட்ட நடைபாதை வியாபார நடவடிக்கைகளும் மீண்டும் சூடுபிடித்துள்ளதாக
வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b06daf37-7452-4700-ab8c-b1959d589f30/26-6a82a2d57868c.webp' /></p><p>

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து படிப்படியாக மீண்டு வரும்
நுவரெலியா மாவட்டத்தில், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவது
சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய வர்த்தகர்களுக்கும் புதிய நம்பிக்கையை
ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T06:00:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்! ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/doctors-leaving-the-country-srilanka-1786942372"></link>
            <id>https://tamilwin.com/article/doctors-leaving-the-country-srilanka-1786942372</id>
            <summary type="text">நாட்டின் தேவைகளுக்கும் நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கைகளுக்கும் ஏற்ப போட்டிப் பரீட்சைகள் மூலம் புதிதாக இணைக்கப்படும் வைத்திய நிபுணர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் தேவைகளுக்கும் நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கைகளுக்கும் ஏற்ப போட்டிப் பரீட்சைகள் மூலம் புதிதாக இணைக்கப்படும் வைத்திய நிபுணர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக வைத்திய மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.</p><p>

வைத்திய நிபுணர்களை உருவாக்குவதில் நிலவும் தனி உரிமையை மாற்றுவதற்கு ஜனாதிபதி உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

கொழும்பில் நேற்றைய தினம் (16.08.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>வருடாந்திர இடமாற்ற இறுதிப் பட்டியல்</h2><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், அரச வைத்தியசாலைகளில் பணிபுரியும் நிபுணத்துவ வைத்தியர்களுக்கான வருடாந்திர இடமாற்ற இறுதிப் பட்டியலைச் சுகாதார அமைச்சு வெளியிடத் தவறியுள்ளமையால், நிபுணத்துவ வைத்தியர்கள் கடுமையான அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/425f408d-5573-4a4c-905c-2a94fff2df05/26-6a82a18dc21d1.webp' /></p><p> 

வெளிப்புறத் தலையீடுகள் இன்றி டிஜிட்டல் முறையில் தானாகவே இந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்த வழியிருந்தும், பல்வேறு தரப்பினரின் செல்வாக்கால் இது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் தேவைகளுக்கும் நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கைகளுக்கும் ஏற்ப போட்டிப் பரீட்சைகள் மூலம் புதிதாக இணைக்கப்படும் வைத்திய நிபுணர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியுள்ளது.
</p><p>
அத்துடன், வைத்திய நிபுணர்களை உருவாக்குவதில் நிலவும் தனி உரிமையை மாற்றுவதற்கு ஜனாதிபதி உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என கோரியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T05:52:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிக மிக மோசமான தோல்வியை சந்தித்த மகுடம், ஷாக்கிங் வசூல் விவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/magudam-box-office-collection-1786940640"></link>
            <id>https://cineulagam.com/article/magudam-box-office-collection-1786940640</id>
            <summary type="text">மகுடம் வசூல்&amp;nbsp;விஷால் நடித்து இயக்கிய மகுடம் படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏதுமில்லை. ஏனென...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மகுடம் வசூல்</h2><p>&nbsp;விஷால் நடித்து இயக்கிய மகுடம் படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. </p><p>இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏதுமில்லை. ஏனெனில் இந்த படத்தின் பாடல்கள், ட்ரைலட் என எதுவுமே ரசிகர்களை கவரவில்லை. இந்நிலையில் படத்தின் திரைக்கதை நன்றாக இருந்தால் போதுமே, வேறெல்லாம் எதற்கு என ரசிகர்கள் நினைத்த நிலையில் படமும் மிக மோசமான விமர்சனங்களை பெற்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0ce5f4c-65d8-4597-bb46-fd46dadd198e/26-6a828ce34bd00.webp' /></p><p>இந்த படம் முதல் நாள் ஒரு கோடி கூட வசூல் வராத நிலையில், தற்போது 3 நாள் முடிவில் ரூ 2 கோடி வரை தான் இந்த படம் வசூல் வந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. </p><p>இதன் மூலம் விஷால் திரைப்பயணத்தில் இதுவரை வந்த படங்களில் மிக மோசமான வசூல் மற்றும் தோல்வி என்றால் அது மகுடம் படமாக தான் இருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-17T05:50:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[மது பாரில் என் ஜாய் பண்ணும் நடிகை ரைசா வில்சன்!! புகைப்படங்கள் இதோ..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/raiza-wilson-enjoy-in-bar-with-alcohol-photos-1786945109"></link>
            <id>https://viduppu.com/article/raiza-wilson-enjoy-in-bar-with-alcohol-photos-1786945109</id>
            <summary type="text">ரைசா வில்சன்கன்னட சினிமாவில் மாடலிங் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கியவர் தான் ரைசா வில்சன். அந்த துறையில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதே தமிழ் பக்கம் வந...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரைசா வில்சன்</h2><p>கன்னட சினிமாவில் மாடலிங் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கியவர் தான் ரைசா வில்சன். அந்த துறையில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதே தமிழ் பக்கம் வந்தவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் கவனம் பெற்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18ee55ee-6574-45c3-b752-8bb50de08e64/26-6a829e62068ae.webp' /></p><p>
அந்நிகழ்ச்சி முடிந்த கையோடு ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ஒரு காதல் திரைப்படம் நடித்தார். அப்படம் வெற்றி என்றாலும் அதன்பின் ரைசா நடித்த படங்கள் அவ்வளவாக வெற்றிப்பெறவில்லை.
</p><p>
ரைசா வில்சன், மது பாரில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-17T05:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லைக் கந்தனின் கொடியேற்றம் இன்று]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nallur-kandaswamy-kovil-flag-hoisting-today-1786943984"></link>
            <id>https://ibctamil.com/article/nallur-kandaswamy-kovil-flag-hoisting-today-1786943984</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா இன்று (17) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.இன்று காலை 8.1...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா இன்று (17) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.</p><p>இன்று காலை 8.15 மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்றதைத் தொடர்ந்து, காலை 10
மணிக்கு கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.</p><p>இதன்போது பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு நல்லூர் கந்தசுவாமி பெருமானை
வழிபட்டு அருளாசி பெற்றனர்.</p><p></p><h2>கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு&nbsp;</h2><p>இதேவேளை&nbsp;நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றத்தை முன்னிட்டு&nbsp;கொடியேற்றத்திற்கான புனித கொடிச்சீலை, பல தலைமுறைகளாகப் பேணப்பட்டு வரும் செங்குந்தர் பரம்பரையின் பாரம்பரிய மரபின்படி, கல்வியங்காட்டில் அமைந்துள்ள அவர்களின் இல்லத்திலிருந்து நேற்று (16) எடுத்துவரப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41d648c4-3360-4642-9824-d1a5dc30582f/26-6a829dd20dfa5.webp' /></p><p>அத்துடன்&nbsp;வருடாந்த பெருந்திருவிழாவை முன்னிட்டு நல்லூரின் முக்கிய தோரண வாசல் வளைவுகளில் சேவல் கொடி நாட்டும் நிகழ்வு நேற்று (16) சிறப்பாக இடம்பெற்றது.</p><p>அதற்கமைய நல்லூர் செம்மணியில் முதலாவது சேவல் கொடி நாட்டப்பட்டதைத் தொடர்ந்து நல்லூரான் தெற்கு மற்றும் நல்லூரான் வடக்குவாசல் வளைவுகளிலும் சேவல் கொடிகள் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/-0N-aH2Tuhc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T05:43:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் கொடியேற்றம்; குவிந்த பக்தர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nallur-kandaswamy-temple-in-jaffna-festival-2026-1786944777"></link>
            <id>https://jvpnews.com/article/nallur-kandaswamy-temple-in-jaffna-festival-2026-1786944777</id>
            <summary type="text">&amp;nbsp; வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து செப்டம்பர் மாதம் வரை 25 நாட்கள் பக்திபூர்வமாக நடைபெறவுள்ளது.</p><p>

நல்லூர் கந்தன் திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாண நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.&nbsp;
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c91ab30-6cb8-43e6-aec0-a72258e8d52f/26-6a82a113ee7fd.webp' /></p><p>இன்று காலை 8.15 அளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்றதைத் தொடர்ந்து, காலை 10 மணிக்கு கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb52ad0d-e82c-40f4-b6e7-968aec92ba8e/26-6a829f0a34342.webp' /></p><p> 

இதன்போது பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு நல்லூர் கந்தசுவாமி பெருமானை வழிபட்டு அருளாசி பெற்றனர். உள் நாட்டில் இருந்து மட்டுமல்லாது புலம் பெயர் தேசங்களில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் நல்லூர் கந்தனை தரிசிக்க நாட்டுக்கு வருகை தரவுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b65bee18-ddd4-4923-873e-08e211662e38/26-6a829f091989a.webp' /></p><p> 

நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் மட்டுமல்லாது, இக்கால பகுதியில் , வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டமானாறு செல்வ சன்னதியான் ஆலய மகோற்சப பெருவிழாவும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/HJtV8sHdAL0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-17T05:42:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இத்தாலி சிசிலி தீவில் அபூர்வ ஓவியங்கள் திருட்டு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/rare-paintings-stolen-italian-island-of-sicily-1786945134"></link>
            <id>https://canadamirror.com/article/rare-paintings-stolen-italian-island-of-sicily-1786945134</id>
            <summary type="text">&amp;nbsp; இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மெசினா அருங்காட்சியகத்தில் புகழ்பெற்ற ஓவியர் அன்டோனெல்லோ டா மெசினா வரைந்த சுமார் ரூ.770 கோடி மதிப்புள்ள 4 அபூர்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மெசினா அருங்காட்சியகத்தில் புகழ்பெற்ற ஓவியர் அன்டோனெல்லோ டா மெசினா வரைந்த சுமார் ரூ.770 கோடி மதிப்புள்ள 4 அபூர்வ ஓவியங்கள் திருடப்பட்டுள்ளன. </p><p>

நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0514118-0d55-4433-bd59-d672d3dd311a/26-6a829e6f989e8.webp' /></p><p>

அருங்காட்சியகத்தில் பாதுகாவலர்கள் இருந்தபோதும், பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை அலார அமைப்புகளை முறியடித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பாதுகாக்கப்பட்ட கண்ணாடி பெட்டியை உடைத்து குறித்த 4 ஓவியங்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.</p><p> 

தப்பியோடும் அவசரத்தில் 2 ஓவியங்களை அங்கேயே போட்டு விட்டுச் சென்றுள்ளனர். 

இந்த ஓவியங்களின் திருட்டு குறித்து இத்தாலி பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-17T05:36:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kanjipani-imran-will-be-brought-to-sri-lanka-soon-1786940561"></link>
            <id>https://ibctamil.com/article/kanjipani-imran-will-be-brought-to-sri-lanka-soon-1786940561</id>
            <summary type="text">இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற திட்டமிட்ட குற்றக் குழுவின் முக்கிய குற்றவாளியான கஞ்சிபானி இம்ரான் விரைவில் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார் என பாதுகாப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற திட்டமிட்ட குற்றக் குழுவின் முக்கிய குற்றவாளியான கஞ்சிபானி இம்ரான் விரைவில் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
</p><p>
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அத்துடன் சர்வதேச காவல்துறையின் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த 58 பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் இதுவரை இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வருதல்&nbsp;</h2><p>
</p><p>''நாட்டிலிருந்து தப்பி வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபாணி இம்ரான், மிக விரைவில் நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவரப்படுவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6420cc6-ce8c-4a69-adc3-b1f8190c57c5/26-6a829640865d5.webp' /></p><p> இதுவரை சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 58 குற்றவாளிகள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளர்.
</p><p>

இந்நாட்டில் இயங்கிவரும் மிகப்பெரிய ஐந்து போதைப்பொருள் கடத்தல்காரர்களில் இவரும் ஒருவர்.

இம்ரான் குழுவுடன் தொடர்புடைய மூவர் நான்கு நாட்களுக்கு முன்பு கொண்டுவரப்பட்டனர்.
</p><p>
இவரையும் நாளை மறுநாள் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
</p><p>
மேலும் நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு, வெளிநாடுகளில் உள்ள முக்கிய கடத்தல்காரர்களை நீதியின் முன் நிறுத்துவது ஒரு அத்தியாவசியமான நடவடிக்கை என்று பாதுகாப்புப் படைகள் சுட்டிக்காட்டுகின்றன." என்றார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T05:31:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சக்களை பிடிப்பதற்காக நீதியரசர்களின் வயதெல்லை அதிகரிக்கப்படவில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fsp-slams-npp-govt-1786944171"></link>
            <id>https://tamilwin.com/article/fsp-slams-npp-govt-1786944171</id>
            <summary type="text">நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் வாதம் ஏற்புடையதல்ல என முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் பீட உறுப்பினர் புபு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் வாதம் ஏற்புடையதல்ல என முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் பீட உறுப்பினர் புபுது ஜாகொட சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றில் எவ்வித வழக்குகளும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>கள்வர்களை பிடிப்பதற்காக இந்த சட்டத்தை சட்ட திருத்தத்தை கொண்டு வருவதாக அரசாங்க தரப்பு கூறி வருகின்றது என்ற போதிலும் உண்மையில் ராஜபக்சர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் எவ்வித வழக்குகளும் கிடையாது எனவும் எனவே அரசாங்கத்தின் வாதம் பிழையானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/406cbfb9-d878-4063-97e4-b12af2695d71/26-6a829aad52398.webp' /></p><p>
</p><p>நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் காரணிகள் முன்னுக்குப் பின் முரணானவை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
</p><p>நீதிமன்ற வழக்குகளின் நிலுவை எண்ணிக்கையை குறைப்பதற்காக ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிக்கப்படுவதாக கூறும் அரசாங்கத்தின் வாதமும் பிழையானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p> வழக்கு நிலுவை எண்ணிக்கையை குறைக்க வேண்டுமானால் நீதிமன்றங்களில் நீதிபதிகளுக்கு நிலவும் பதவி வெற்றிடங்களை நிரப்ப வேண்டுமே தவிர ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
தற்பொழுது நீதவான் மற்றும் மேல் நீதிமன்றங்களில் கடமையாற்றும் நீதவான்கள் மற்றும் நீதிபதிகள் 80 வீதமானவர்கள் 30 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.</p><p>
எனவே வயதெல்லையை நீடிக்க வேண்டிய அவசரமான அவசியம் கிடையாது என சுட்டிக்காட்டி உள்ளார்.
</p><p>மோசடிகள் ஊழல்கள் தொடர்பில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வரும் நீதவான்&nbsp; நீதிமன்றங்களின் நீதவான்களது ஓய்வு பெறும் வயது தொடர்பில் எவ்வித சிக்கல்களும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
</p><p>வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
குறிப்பாக உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் என்பனவற்றில் தலா நான்கு வெற்றிடங்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>உச்ச நீதிமன்றத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருந்த போதும் இதுவரையில் அந்த வெற்றிடங்கள் நிரப்பப்படவில்லை என சுட்டிக்காட்டி உள்ளார்.
</p><p>சட்டமா அதிபர் திணைக்களத்திலும் சுமார் 200 பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
நீதவான் நீதிமன்றங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட நீதவான்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் இவற்றை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>எனவே அரசாங்கம் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்து பதவி வெற்றிகளை நிரப்ப வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>மாறாக நீதி அரசர்களின் ஓய்வு பெறும் வயது எல்லையை அதிகரிக்க அரசியல் அமைப்பில் திருத்தங்கள் செய்வது பயனற்றது என புபுது ஜாகொட சுட்டிக்காட்டி உள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T05:23:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய கோவில் ஒன்றில் கூட்ட நெரிசலில் சிக்கி 7பேர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/stampede-bihar-s-ashok-dham-temple-7-devotees-dead-1786939909"></link>
            <id>https://ibctamil.com/article/stampede-bihar-s-ashok-dham-temple-7-devotees-dead-1786939909</id>
            <summary type="text">இந்தியாவின் பீகார் மாநிலம், லக்கிசராய் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அசோக் தாம் ஆலயத்தில் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 7 பேர் உயிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் பீகார் மாநிலம், லக்கிசராய் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அசோக் தாம் ஆலயத்தில் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.&nbsp;</p><p>இந்தச் சம்பவம் இன்று அதிகாலை&nbsp;6.45 மணியளவில் (17.08.08.2026) நடைபெற்றுள்ளது.</p><p>புனிதமான ஷ்ராவண மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமையை முன்னிட்டு சிவபெருமானை வழிபடுவதற்காக பெருமளவான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.</p><p></p><h2>7 பேர் பலி</h2><p>
</p><p>
இதன்போது, அசோக் தாம் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள இந்திரமனேஷ்வர் ஆலயத்திற்குள் நுழைவதற்காக பக்தர்கள் பெருமளவில் திரண்ட நிலையில், கூட்டம் கட்டுப்பாட்டை இழந்து கடும் நெரிசல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ba7c5e0-34b9-40b0-8654-01bead4eacfd/26-6a829611bdbd5.webp' /></p><p>இந்த நெரிசலில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண் பக்தர்கள் என இந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>

குறித்த சம்பவம் தொடர்பான முதற்கட்ட தகவல்களின்படி, ஆலய வளாகத்தில் மின்சாரக் கம்பி ஒன்று அறுந்து விழுந்தமை பக்தர்களிடையே திடீர் பீதியை ஏற்படுத்தியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதையடுத்து ஏற்பட்ட பதற்றம் மற்றும் மக்கள் ஒரே நேரத்தில் வெளியேற அல்லது பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல முற்பட்டதன் காரணமாக நெரிசல் மேலும் அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>குறிப்பாக, 2019 ஆகஸ்ட் 12ஆம் திகதி, ஷ்ராவண மாதத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் ஒரு பக்தர் உயிரிழந்ததுடன், சுமார் 15 பேர் காயமடைந்திருந்தனர்.
</p><p>
இந்நிலையில், தற்போதைய சம்பவத்தைத் தொடர்ந்து ஆலயத்தின் பாதுகாப்பு மற்றும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஏற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T05:22:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்டன்னிங் லுக்கில் நடிகை ஐஸ்வர்யா மேனன்! ரீசெண்ட் கிளிக்ஸ்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/iswarya-menon-recent-photos-post-viral-1786944552"></link>
            <id>https://viduppu.com/article/iswarya-menon-recent-photos-post-viral-1786944552</id>
            <summary type="text">ஐஸ்வர்யா மேனன்நடிகை ஐஸ்வர்யா மேனன் கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் சினிமாவில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்நது வருகிறார்.
சிவாவின் தமிழ் படம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐஸ்வர்யா மேனன்</p><p>நடிகை ஐஸ்வர்யா மேனன் கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் சினிமாவில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்நது வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47464d7b-fa4d-4868-b524-a41547214747/26-6a829c2dc99f3.webp' /></p><p>
சிவாவின் தமிழ் படம் 2 உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்து இருக்கிறார். அவரது கவர்ச்சியான இன்ஸ்டா போட்டோகளுக்கு என்றே பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.&nbsp;சமீபத்தில் Nagabandham: The Secret Treasure என்ற படத்தில் முக்கிய ரோலிலும் நடித்திருந்தார் ஐஸ்வர்யா மேனன்.&nbsp;</p><p>
தற்போது ஸ்டன்னிங் லுக்கில் ஷார்ட்டான ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-17T05:15:00+00:00</updated>
        </entry>
    </feed>
