<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-01T06:52:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவசர அவசரமாக பெலவத்தை தலைமையகத்துக்குள் முடக்கப்படும் அதிகாரங்கள்! விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/powers-frozen-within-the-pelawatte-headquarters-1788244417"></link>
            <id>https://tamilwin.com/article/powers-frozen-within-the-pelawatte-headquarters-1788244417</id>
            <summary type="text">அவசர அவசரமாக அரசமைப்பு சீர்திருத்தத்தை கொண்டுவந்து நாட்டின் அனைத்து
அதிகாரங்களையும் தனது தலைமையகத்துக்குள் முடக்கி, ஏனைய அரசியல் கட்சிகளை
அழித்துச் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவசர அவசரமாக அரசமைப்பு சீர்திருத்தத்தை கொண்டுவந்து நாட்டின் அனைத்து
அதிகாரங்களையும் தனது தலைமையகத்துக்குள் முடக்கி, ஏனைய அரசியல் கட்சிகளை
அழித்துச் சர்வாதிகாரப் பாதையில் செல்ல ஜே.வி.பி. அரசு முற்படுகின்றது என்று
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா குற்றம்சாட்டியுள்ளார்.
</p><p>
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,</p><h2>ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்&nbsp;</h2><p>

"ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள், மகாநாயக்க தேரர்கள் மற்றும் சிவில்
அமைப்புகள் நாட்டின் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று
எச்சரித்துள்ள நிலையில், தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற
முற்படாத அரசு, அரசமைப்புச் சீர்திருத்தம் மூலம் அனைத்து அதிகாரங்களையும்
பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி. தலைமையகத்துக்குள் முடக்கி ஏனைய கட்சிகளை அழிக்க
முயல்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfd292be-1031-4d7b-bf94-d33947db7d90/26-6a96751c5e675.webp' /></p><p>
</p><p>
பொருளாதாரம் சீரடைந்துள்ளதாகக் கூறப்பட்டாலும், அத்தியாவசியப் பொருள்களின்
விலைகள் 3 முதல் 4 மடங்கு வரை உயர்ந்துள்ளன. </p><p>எரிபொருள் விலையைக் குறைப்பதாகக்
கூறிவிட்டு இன்று லீற்றருக்கு 100 ரூபாவுக்கும் அதிகமாக அரசு உயர்த்தியுள்ளது.</p><h2>&nbsp;வடக்கு, கிழக்கு மக்களுக்கு பொய் வாக்குறுதி</h2><p>

கடந்த காலத்தில் ராஜபக்சக்களைப் பற்றியிருந்த 'அதிகார போதை' நோயே இன்று
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசையும் பற்றியுள்ளது.
</p><p>
அமைச்சர்கள் வீதிச் சந்தைகளுக்குச் சென்று மக்களிடம் பேசிப் பார்த்தால் உண்மை
நிலை புரியும்.

வடக்கு, கிழக்கு மக்களுக்குப் பொய் வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளைப் பெற்ற
அரசு, ஜனநாயகத்தின் பிரதான அங்கமான மாகாண சபைத் தேர்தலை நடத்த எந்தவொரு
விருப்பமும் இன்றி மக்களை ஏமாற்றி வருகின்றது.</p><p> மன்னார் எண்ணெய் அகழ்வு போன்ற
கதைகளைப் பரப்புவது தேர்தல்களைக் காலந்தாழ்த்தும் ஒரு முயற்சியே.

எது எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தி கிராம மட்டத்தில் அமைதியான முறையில்
மறுசீரமைப்புப் பணிகளை முன்னெடுத்து, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக
மக்களை அணிதிரட்டும் என்றார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T06:48:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் சந்திப்பு; உலகின் கவனம் ஈர்க்கும் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/meeting-between-chinese-and-russian-leaders-1788245259"></link>
            <id>https://canadamirror.com/article/meeting-between-chinese-and-russian-leaders-1788245259</id>
            <summary type="text">&amp;nbsp; சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினும் கிர்கிஸ்தான் பிஷ்கெக்கில் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் இடையேஇ ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினும் கிர்கிஸ்தான் பிஷ்கெக்கில் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் இடையேஇ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.</p><p>கடந்த மே மாதத்திற்குப் பிறகு இருவரும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

சர்வதேச ஒழுங்கில் நிச்சயமற்ற தன்மைகள் அதிகரித்திருந்தாலும்பீய்ஜிங் மற்றும் மொஸ்கோ இடையேயான உறவுகள் மேலும் உறுதியடைந்துள்ளதாக ஜின்பிங் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77f345a3-1dd7-4269-b500-522cf196d2c9/26-6a96750d37f3b.webp' /></p><p>.

யுக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர் ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையிலும் இரு நாடுகளுக்குடையேயான ஒத்துழைப்பு அனைத்து துறைகளிலும் வெற்றிகரமாக வளர்ந்து வருவதாக புடின் தெரிவித்தார்.</p><p>

இந்த இரண்டு நாள் உச்சி மாநாடு பிராந்திய பாதுகாப்பு மற்றும் பொருளாதார அமைப்பான ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 25 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.</p><p>

இதில் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் மற்றும் துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்துவான் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T06:44:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோட்டன் சமவெளிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-restrictions-tourists-visiting-horton-plains-1788243401"></link>
            <id>https://tamilwin.com/article/new-restrictions-tourists-visiting-horton-plains-1788243401</id>
            <summary type="text">ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவில் தினசரி வருகையாளர் வரம்புகளுக்கு இணையவழி முன்பதிவு முறையை அறிமுகப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

சுற்றாடல் பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவில் தினசரி வருகையாளர் வரம்புகளுக்கு இணையவழி முன்பதிவு முறையை அறிமுகப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
</p><p>
சுற்றாடல் பிரதி அமைச்சர் எண்டன் ஜயக்கொடி தலைமையில் அண்மையில் ஹோர்ட்டன் சமவெளி பூங்காவில் நடைபெற்ற விசேட களப் பரிசோதனை மற்றும் முன்னேற்ற ஆய்வுச் சந்திப்பின்போதே இந்த யோசனைகள் ஆலோசிக்கப்பட்டுள்ளன.
</p><h2>கட்டண முறையை மாற்றியமைக்க</h2><p>
இதன்படி, இணையவழி நேர முன்பதிவு முறைமைமூலம் பூங்காவுக்குள் நுழையும் பயணிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், முகாமையை மேம்படுத்தவும் முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43bdf43b-c181-4c2a-8515-2d5061f76e6d/26-6a96726662028.webp' /></p><p>
அத்துடன், சுற்றாடல் பொறுப்புமிக்க சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் கட்டண முறையை மாற்றியமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
</p><p>
யுனெஸ்கோ உலக பாரம்பரிய மையமான இந்தப் பூங்காவின் நீண்டகாலப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T06:42:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ஜூன் மகேந்திரனின் சர்ச்சைக்குரிய வாக்குமூலம்! தன்னுடன் இருக்கும் நபரால் தயக்கம் காட்டும் அநுர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/arjun-mahendran-s-controversial-statement-1788237488"></link>
            <id>https://tamilwin.com/article/arjun-mahendran-s-controversial-statement-1788237488</id>
            <summary type="text">
மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய அர்ஜூன் மகேந்திரனின் சர்ச்சைக்குரிய வாக்குமூலம் ஒன்றின் காரணமாகவே அவரை நாட்டிற்கு அழைத்து வராமல் அநுர தர...</summary>
            <content type="html"><![CDATA[<p>
மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய அர்ஜூன் மகேந்திரனின் சர்ச்சைக்குரிய வாக்குமூலம் ஒன்றின் காரணமாகவே அவரை நாட்டிற்கு அழைத்து வராமல் அநுர தரப்பு தயக்கம் காட்டுவதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். </p><p>


நேற்றையதினம்(31.08.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

திருடர்களை கைது செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.&nbsp; மாறாக அரசியல் நாடகத்திற்காக அதனை செய்வதையே நாங்கள் எதிர்க்கின்றோம்.</p><h2>தயங்கும் அநுர&nbsp;</h2><p> </p><p>

திருடர்களை கைது செய்வது போல, நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு வந்தவர்களுக்கு எதிராகவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>

மத்திய வங்கி பிணை முறி மோசடியில் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதாக இந்த அரசாங்கம் தெரிவித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea4af4c1-2fdc-4c49-9551-b586be5b478a/26-6a965efef3221.webp' /></p><p> </p><p> 


எனினும், தற்போது அர்ஜூன் மகேந்திரன் அவருடைய பெயரை அலெக்ஸாண்டர் என மாற்றிக் கொண்டிருப்பதால் அவரை நாட்டுக்கு அழைத்து வருவதில் சட்டச் சிக்கல் இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. </p><p>

அர்ஜூன் மகேந்திரனை சிங்கப்பூரில் இருந்து நாட்டுக்குக் கொண்டுவருவதற்கு சிங்கப்பூரில் எந்த சட்டச் சிக்கல்களும் இல்லை.

அர்ஜூன் மகேந்திரனை அழைத்து வர முடியாது என அரசாங்கம் கூறுவதில் எவ்வித உண்மைத்தன்மையும் கிடையாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14771ef8-ee61-4022-b9c2-7bac5ef58efb/26-6a965effa90bd.webp' /></p><p> </p><p>மாறாக, பிணைமுறி கணக்கை அதிகரிப்பதற்கு தனக்கு யாரால், எவ்வாறு அழுத்தம் கொடுக்கப்பட்டது என்பது குறித்து அர்ஜூன் மகேந்திரன் உறுதியான சாட்சியம் ஒன்றை வழங்கியிருந்தார்.
</p><p>
அர்ஜூன் மகேந்திரன் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய நபர் தற்போது, ஜனாதிபதி அநுரகுமாரவுடனேயே இருக்கின்றார். இதன் காரணமாகவே, அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதில் அரசாங்கம் தயக்கம் காட்டுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T06:39:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் நேர்ந்த கொடூரம் - கணவனின் வாள்வெட்டு தாக்குதல் மனைவி பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/wife-dies-in-sword-attack-on-husband-mullaithivu-1788241683"></link>
            <id>https://ibctamil.com/article/wife-dies-in-sword-attack-on-husband-mullaithivu-1788241683</id>
            <summary type="text">கணவன் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதில்
படுகாயமடைந்த மனைவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி
உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணவன் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதில்
படுகாயமடைந்த மனைவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி
உயிரிழந்துள்ளார்.
</p><p>குறித்த சம்பவம் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் நேற்று (31.08.2026) இரவு இடம்பெற்றுள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
இந்த சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/069d25bd-071f-4649-8c3d-f477524ef40d/26-6a9668b56b509.webp' /></p><p>மனைவி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய கணவனும் காயங்களுக்கு உள்ளான நிலையில்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகைள புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றார்கள்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T06:38:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[CID பணிப்பாளராக ரொஷான் அமரசிங்க நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/roshan-amarasinghe-appointed-as-cid-director-1788244860"></link>
            <id>https://jvpnews.com/article/roshan-amarasinghe-appointed-as-cid-director-1788244860</id>
            <summary type="text">&amp;nbsp; சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ரொஷான் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.சிரேஷ்ட காவல்துறை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ரொஷான் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் (SSP) ரொஷான் அமரசிங்க, இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>இலங்கை காவல்துறை தலைமையகத்தினால் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது</p>]]></content>
            <updated>2026-09-01T06:38:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை முழுவதும் 72 டெங்கு மரணங்கள் பதிவு - பல பகுதிகள் அதி அபாய வலயங்களாக அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-fever-in-sri-lanka-1788242272"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-fever-in-sri-lanka-1788242272</id>
            <summary type="text">இலங்கை முழுவதும் 72 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை முழுவதும் 72 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
அத்துடன் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 95,493ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

நாடு முழுவதும் 72 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், அதன் இறப்பு வீதம் 0.076% ஆகப் பதிவாகியுள்ளது.</p><h2>டெங்கு நோயாளர்கள் பதிவு</h2><p> 

இந்த ஆண்டில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளனர். அந்த எண்ணிக்கை 29,964 ஆகும். 

இதற்கு மேலதிகமாக, ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும், ஆகஸ்ட் மாதத்தில் 10,157 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். </p><p>

நாட்டின் மொத்த டெங்கு நோயாளர்களில் 50,506 பேர் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/734b3a61-fd28-4feb-8bfe-25342d3ddc4b/26-6a96728b9299f.webp' /></p><p> </p><p>

அத்துடன் தெற்கு மாகாணத்தில் இருந்து 13,886 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் இருந்து 8,710 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.</p><h2>கம்பஹா மாவட்டத்தில் அதிகளவு நோயாளர்கள்</h2><p> </p><p>

மாவட்ட மட்டத்தில் கருதும் போது, அதிகளவிலான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அது மொத்த நோயாளர்களில் 21.31% ஆகும். </p><p>

கொழும்பு மாவட்டத்தில் 18,914 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 6,977 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். 

அத்துடன் நாடு முழுவதும் உள்ள 50 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் மேலும் அதி அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T06:37:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா இடைத்தேர்தல்கள்: பெரும்பான்மை பெற்றது மார்க் கார்னி கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/liberal-party-got-majority-by-won-3-byelections-1788244331"></link>
            <id>https://canadamirror.com/article/liberal-party-got-majority-by-won-3-byelections-1788244331</id>
            <summary type="text">Liberal party sweeps all three byelections: கனடா இடைத்தேர்தல்கள் மூன்றிலும் லிபரல் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.


திங்கட்கிழமை நடைபெற்ற மூன்று இட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Liberal party sweeps all three byelections: கனடா இடைத்தேர்தல்கள் மூன்றிலும் லிபரல் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
</p><p>

திங்கட்கிழமை நடைபெற்ற மூன்று இடைத்தேர்தல்களிலும் பிரதமர் மார்க் கார்னியின் லிபரல் கட்சி, முழுமையான வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.</p><p>

திங்கட்கிழமையன்று, ஒன்ராறியோ, கியூபெக் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெற்ற நிலையில், மூன்றிலுமே பிரதமர் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71680174-1c00-4e6a-8b5f-8f21df081902/26-6a96716c92979.webp' /></p><p>

தேர்தலில், லிபரல் கோட்டைகளான ஒன்ராறியோவின் Beaches–East York தொகுதியையும், பிரிட்டிஷ் கொலம்பியாவின் North Vancouver–Capilano தொகுதியையும் லேபர் கட்சி தக்கவைத்துக்கொண்டுள்ளதுடன், பியர் பொய்லியேவின் கன்சர்வேடிவ் கட்சியிடமிருந்து கியூபெக்கின் Chicoutimi–Le Fjord தொகுதியையும் கைப்பற்றியுள்ளது.</p><p>

விடயம் என்னவென்றால், கடந்த சில மாதங்களில் நிகழ்ந்த தொடர் ராஜினாமாக்களுக்குப் பிறகு, திங்கட்கிழமை இரவு நிலவரப்படி, ஆளும் லிபரல் கட்சி 170 இருக்கைகளைக் கொண்டிருந்தது.</p><p>

இந்நிலையில், தற்போது இந்த மூன்று தொகுதிகளில் கிடைத்துள்ள வெற்றியால் லிபரல் கட்சிக்கு 173 இருக்கைகள் கிடைத்துள்ளன.
</p><p>
173 இருக்கைகள் என்பது, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறத் தேவையானதை விட ஒரு இடம் கூடுதலாகும்.
</p><p>
ஆக, இந்தப் பெரும்பான்மையுடன், லிபரல் கட்சியினர் எதிர்க்கட்சியால் கவிழ்க்கப்படும் அபாயம் இன்றி 2029 வரை ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T06:36:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேலதிக வகுப்பிற்கு சென்ற மூன்று மாணவிகள் மாயம் - பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/three-17-year-old-schoolgirls-missing-1788243589"></link>
            <id>https://tamilwin.com/article/three-17-year-old-schoolgirls-missing-1788243589</id>
            <summary type="text">பலாங்கொடையில் உள்ள பின்னவலா - எல்லராவ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மூன்று பாடசாலை மாணவிகள் காணாமல் போயுள்ளதாக பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலாங்கொடையில் உள்ள பின்னவலா - எல்லராவ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மூன்று பாடசாலை மாணவிகள் காணாமல் போயுள்ளதாக பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுச் செய்யப்பட்டுள்ளது. </p><p>

இந்த சம்பவம் நேற்று(31.08.2026) இடம்பெற்றுள்ளது.
</p><h2>
மாயமான 3 பாடசாலை மாணவிகள்</h2><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

காணாமல் போன மூன்று மாணவிகளும் பலாங்கொடை பகுதியில் உள்ள ஒரு முன்னணி பாடசாலையில் கல்வி பயின்று வந்துள்ளனர். </p><p>

இவர்கள் நேற்றைய தினம்(31) வழக்கம் போன்று பயிற்சி வகுப்பிற்குச் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a683ffc0-b83c-48f3-b37d-562e8965928a/26-6a96723246225.webp' /></p><p> </p><p> ஆனால் இதுவரையில், அவர்கள் வீடு திரும்பவில்லை என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> 

காணாமல் போன மாணவிகள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், பலாங்கொடை பொலிஸாருக்கும் பெற்றோரும் உடனடியாக பின்வரும் தொலைபேசி எண்களுக்குத் தெரிவிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றனர். </p><ul><li>

பலாங்கொடை பொலிஸ் நிலையம்: 045-2287222 </li><li>

பெற்றோரின் தொலைபேசி எண்கள்: 076-7070913 / 077-1658788</li></ul><p> 

இந்த சம்பவம் குறித்து பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p>

</p>]]></content>
            <updated>2026-09-01T06:35:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்ட்டன் சமவெளிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-restrictions-tourists-visiting-horton-plains-1788244418"></link>
            <id>https://jvpnews.com/article/new-restrictions-tourists-visiting-horton-plains-1788244418</id>
            <summary type="text">மத்திய மலைநாட்டிலுள்ள உலகப் புகழ்பெற்ற ஹோட்டன் சமவெளி தேசிய உணர்திறன்மிக்க சூழலியல் அமைப்பைப் பாதுகாப்பதற்காக, அங்குச் செல்லும் பார்வையாளர்களின் எண்ணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய மலைநாட்டிலுள்ள உலகப் புகழ்பெற்ற ஹோட்டன் சமவெளி தேசிய உணர்திறன்மிக்க சூழலியல் அமைப்பைப் பாதுகாப்பதற்காக, அங்குச் செல்லும் பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கு நாளாந்த கட்டுப்பாடு மற்றும் இணையவழி முன்பதிவு முறையை அறிமுகப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.</p><p>
</p><p></p><p>சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தலைமையில் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் திகதி ஹோட்டன் சமவெளியில் நடைபெற்ற விசேட கூட்டத்தின் போதே இதற்கான திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.
</p><p>
அதன்படி, இணையவழி மூலம் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பதிவு செய்யும் முறையின் மூலம், எந்தவொரு நேரத்திலும் பூங்காவிற்குள் இருக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் துல்லியமாகக் ஒழுங்குபடுத்த முடியும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/071797ae-2029-4a4e-81d7-1ee514950259/26-6a9671c3ced5e.webp' /></p><p>அதிகப்படியான கூட்டத்தைக் குறைக்கவும், சுற்றுச்சூழலுக்குப் பொறுப்பான உயர்தர சுற்றாடல் சார்ந்த சுற்றுலாவை ஊக்குவிக்கவும் புதிய கட்டண மூலோபாயம் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ள ஹோட்டன் சமவெளி, தனது தனித்துவமான உயிர்பல்வகைமை பெருக்கத்திற்கும் நுட்பமான மலைக்காட்டுச் சூழலுக்கும் பெயர் பெற்றதாகும்.
</p><p>
சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கே. ஆர். உடுவாவல, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனப்பாதுகாப்புத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் ஹோட்டன் சமவெளி பூங்கா காப்பாளர் ஆகியோர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், நீண்டகால சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிசெய்து நிலையான சூழல் சுற்றுலா மாதிரியை உருவாக்குவதே இதன் நோக்கம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T06:33:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாக்ஸ் ஆபிஸ்: 4 நாட்களில் ஹாய் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. விவரம் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/hi-movie-4-days-box-office-1788243707"></link>
            <id>https://cineulagam.com/article/hi-movie-4-days-box-office-1788243707</id>
            <summary type="text">கடந்த வாரம் வெளியான ஹாய் திரைப்படத்தின் 4 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

ஹாய்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக கவின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த வாரம் வெளியான ஹாய் திரைப்படத்தின் 4 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><h2> 

ஹாய்
</h2><p>
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக கவின் வளர்ந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஓரிரு திரைப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை மக்கள் மத்தியில் பெறவில்லை. இந்த சமயத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான திரைப்படம்தான் ஹாய்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b2f3da3-7c52-4350-af64-2d2f85fe75dd/26-6a966eff9a5c1.webp' /></p><p>அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தில் ராதிகா சரத்குமார், பாக்யராஜ், பிரபு, கதிர், குரேஷி என பலரும் நடித்துள்ளனர். எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.</p><h2>

பாக்ஸ் ஆபிஸ்</h2><p>

இந்நிலையில், ஹாய் திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 4 நாட்களில் இப்படம் ரூ. 8 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be29381a-ccc7-40f1-b41c-a3f431b27b1d/26-6a966efed9c97.webp' /></p>]]></content>
            <updated>2026-09-01T06:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[52 ஆலயங்களில் இன்று முதல் அமுலாகும் தடை; ஆன்மீக சுற்றுலா செல்வோர் அவதானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ban-mobile-phones-in-52-temples-across-tamil-nadu-1788244272"></link>
            <id>https://jvpnews.com/article/ban-mobile-phones-in-52-temples-across-tamil-nadu-1788244272</id>
            <summary type="text">&amp;nbsp; தமிழகத்தில் உள்ள 52 முதுநிலை கோயில்களில் ஆன்மீகச் சூழலையும் புனிதத்தன்மையையும் பாதுகாக்கும் நோக்கில், கோயிலுக்குள் கைபேசிகளை கொண்டு செல்வதற்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தமிழகத்தில் உள்ள 52 முதுநிலை கோயில்களில் ஆன்மீகச் சூழலையும் புனிதத்தன்மையையும் பாதுகாக்கும் நோக்கில், கோயிலுக்குள் கைபேசிகளை கொண்டு செல்வதற்கு இன்று (1) முதல் முழுமையான தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.</p><p>

கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்கள் கைபேசிகள் மூலம் நிழற்படம், காணொளி மற்றும் செல்ஃபி எடுப்பதுடன், சமூக வலைதளங்களில் பதிவிடுவதால் பிற பக்தர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்க்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14da4330-46cd-4e67-899a-d675767619f6/26-6a96713247baa.webp' /></p><h2>பறிமுதல் செய்யப்படுவதோடு, அபராதமும் விதிக்கப்படும்</h2><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் தங்களது கைப்பேசிகளைப் பாதுகாப்பாக ஒப்படைப்பதற்காக நுழைவு வாயில்கள் மற்றும் பாதணி பாதுகாப்பு மையங்கள் அருகில் பிரத்தியேகப் பாதுகாப்பு பெட்டக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>
சென்னை வடபழனி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் ராமேசுவரம் ராமநாதசாமி கோயில் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 52 முதுநிலை கோயில்களில் இந்தத் தடை நடைமுறைப்படுத்தப்படுகின்றது.</p><p>

விதியை மீறி கைபேசிகளைக் கொண்டுவருபவர்களிடம் இருந்து அவை பறிமுதல் செய்யப்படுவதோடு, அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-01T06:28:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா இடைத்தேர்தல்கள்: பிரதமர் மார்க் கார்னி கட்சி அமோக வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/carney-liberal-party-sweeps-all-3-byelections-1788243776"></link>
            <id>https://news.lankasri.com/article/carney-liberal-party-sweeps-all-3-byelections-1788243776</id>
            <summary type="text">Liberal party sweeps all three byelections: கனடா இடைத்தேர்தல்கள் மூன்றிலும் லிபரல் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.


திங்கட்கிழமை நடைபெற்ற மூன்று இட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Liberal party sweeps all three byelections: கனடா இடைத்தேர்தல்கள் மூன்றிலும் லிபரல் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.</p><p>


திங்கட்கிழமை நடைபெற்ற மூன்று இடைத்தேர்தல்களிலும் பிரதமர் மார்க் கார்னியின் லிபரல் கட்சி, முழுமையான வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
</p><h3>
பிரதமர் மார்க் கார்னி கட்சி அமோக வெற்றி
</h3><p>
திங்கட்கிழமையன்று, ஒன்ராறியோ, கியூபெக் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெற்ற நிலையில், மூன்றிலுமே பிரதமர் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dcfc344-8432-4e49-8b7c-3b416556ea15/26-6a966f423c4ec.webp' /></p><p>
தேர்தலில், லிபரல் கோட்டைகளான ஒன்ராறியோவின் Beaches–East York தொகுதியையும், பிரிட்டிஷ் கொலம்பியாவின் North Vancouver–Capilano தொகுதியையும் லேபர் கட்சி தக்கவைத்துக்கொண்டுள்ளதுடன், பியர் பொய்லியேவின் கன்சர்வேடிவ் கட்சியிடமிருந்து கியூபெக்கின் Chicoutimi–Le Fjord தொகுதியையும் கைப்பற்றியுள்ளது.
</p><p>
விடயம் என்னவென்றால், கடந்த சில மாதங்களில் நிகழ்ந்த தொடர் ராஜினாமாக்களுக்குப் பிறகு, திங்கட்கிழமை இரவு நிலவரப்படி, ஆளும் லிபரல் கட்சி 170 இருக்கைகளைக் கொண்டிருந்தது.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், தற்போது இந்த மூன்று தொகுதிகளில் கிடைத்துள்ள வெற்றியால் லிபரல் கட்சிக்கு 173 இருக்கைகள் கிடைத்துள்ளன.

173 இருக்கைகள் என்பது, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறத் தேவையானதை விட ஒரு இடம் கூடுதலாகும்.
</p><p>
ஆக, இந்தப் பெரும்பான்மையுடன், லிபரல் கட்சியினர் எதிர்க்கட்சியால் கவிழ்க்கப்படும் அபாயம் இன்றி 2029 வரை ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T06:23:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-gold-price-today-22k-1788242777"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-gold-price-today-22k-1788242777</id>
            <summary type="text">இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (01-09-2026) நிலவரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
</p><p>
இதனடிப்படையில், இன்றைய (01-09-2026) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,362,809 ரூபாவாக காணப்படுகின்றது.
</p><p>
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 48,080 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
</p><p></p><h2>தங்கப் பவுண்</h2><p>அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 384,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.
</p><p>
அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 44,080 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cde1242e-4f25-4623-9128-ea034bccea9b/26-6a966e17010f1.webp' /></p><p>

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 352,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 42,070 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 336,600 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-01T06:18:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக் விவகாரம்! CCIDயில் முன்னிலையான தனசிறி அமரதுங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dhanasiri-amaratunga-to-ccib-1788242396"></link>
            <id>https://tamilwin.com/article/dhanasiri-amaratunga-to-ccib-1788242396</id>
            <summary type="text">தெஹிவளை - கல்கிஸ்ஸ முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க&amp;nbsp; மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CCID) முன்னிலையாகியுள்ளார்.போதைப்பொருள் கடத்தல்காரர் எனக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை - கல்கிஸ்ஸ முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க&nbsp; மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CCID) முன்னிலையாகியுள்ளார்.</p><p>போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக் தொடர்பான விசாரணை ஒன்றுக்காக வாக்குமூலம் அளிப்பதற்கு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>டுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T06:17:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[குரோஷியாவில் இலங்கை வீரர் தாவி சமரவீரவுக்கு வெள்ளிப் பதக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-tavi-samaraweera-wins-silver-medal-1788243094"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-tavi-samaraweera-wins-silver-medal-1788243094</id>
            <summary type="text">இலங்கை மேசை டென்னிஸ் பந்து வீரர் தாவி சமரவீர மற்றுமொரு வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

குரோஷியாவில் நடைபெற்ற மேசை டென்னிஸ் பந்து தரவரிசைப் போட்டியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மேசை டென்னிஸ் பந்து வீரர் தாவி சமரவீர மற்றுமொரு வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.</p><p></p><p>

குரோஷியாவில் நடைபெற்ற மேசை டென்னிஸ் பந்து தரவரிசைப் போட்டியில் இந்த வெற்றியை பதிவு செய்துள்ளார்.</p><p>

11 வயதுக்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் தாவி சமரவீர வெள்ளிப் பதக்கம் வென்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e16fde21-3b8f-454b-961b-2df99aed6efb/26-6a966c980f617.webp' /></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T06:11:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூட்டானைச் சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prime-minister-harini-reached-bhutan-1788242565"></link>
            <id>https://tamilwin.com/article/prime-minister-harini-reached-bhutan-1788242565</id>
            <summary type="text">&#039;உலக விழிப்புணர்வு உணவு முறைமைகள்&#039; உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய பூட்டானைச்
சென்றடைந்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>'உலக விழிப்புணர்வு உணவு முறைமைகள்' உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய பூட்டானைச்
சென்றடைந்துள்ளார்.
</p><p>
பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று(31.09.2026) மாலை பூட்டானின் பாரோ சர்வதேச விமான
நிலையத்தைச் சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.
</p><h2>பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள்</h2><p>
பூட்டானைச் சென்றடைந்த இலங்கைப் பிரதமரைப் பூட்டான் பிரதமர் டஷோ ஷெரிங் டோப்கே
மற்றும் அந்நாட்டு அரசின் மூத்த அதிகாரிகள் விமான நிலையத்தில் நேரில் சென்று
வரவேற்றுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c908f5c6-587e-4cea-a33b-1bd29607a40a/26-6a966c22678f4.webp' /></p><p>
பூட்டானில் ஆகஸ்ட் 31ஆம் திகதி முதல் செப்டெம்பர் 4ஆம் திகதி வரை நடைபெறும்
முதலாவது 'உலக விழிப்புணர்வு உணவு முறைமைகள்' உச்சிமாநாட்டில் உலகின் பல்வேறு
நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், அரச பிரதிநிதிகள் மற்றும் உணவு முறைமை தொடர்பான
நிபுணர்கள் கலந்துகொண்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T06:10:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் தமிழ்ப் பொறியியலாளர் குடும்பம் உட்பட 39 அவுஸ்திரேலியர்கள் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/39-australians-tamil-engineer-missing-nepal-floods-1788242956"></link>
            <id>https://canadamirror.com/article/39-australians-tamil-engineer-missing-nepal-floods-1788242956</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த தமிழ்ப் பொறியியலாளர் 47 வயது சந்திரசேகரன் முரளிதரன், 42 வயதான அவரது மனைவி ஷைலஜா முரளிதரன் மற்றும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த தமிழ்ப் பொறியியலாளர் 47 வயது சந்திரசேகரன் முரளிதரன், 42 வயதான அவரது மனைவி ஷைலஜா முரளிதரன் மற்றும் அவர்களின் இரு மகன்களான 14 வயதான அஷ்வின், 11 வயதான ஆருஷ் ஆகியோர் நேபாள - திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கோர திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமாகியுள்ளனர்.
</p><p>
கைலாஷ் மலை யாத்திரைக்காக 'ஹிமாலயன் கிளேசியர் அட்வென்ச்சர்ஸ்' அமைப்பின் மூலம் சுற்றுலாப் பயணிகளாகச் சென்ற இந்தத் குடும்பத்தினருடன், காலை உணவுக்குப் பிறகு எந்தத் தொடர்பும் இல்லை என்று உறவினர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79e4cd38-bcb2-48a8-866b-43ed56c97f81/26-6a966c0e07210.webp' /></p><h2>திபெத் - நேபாள எல்லைக்கு மாயமான&nbsp; குடும்பம்</h2><p>
</p><p>
திபெத் - நேபாள எல்லைக்கு அருகிலுள்ள குடியேற்றச் சோதனைச் சாவடியை நோக்கிச் செல்ல அவர்கள் தயாராக இருந்தபோதுதான் இந்தத் பேரிடர் நிகழ்ந்துள்ளது.</p><p>

இந்த வெள்ளப்பெருக்கால் அப்பகுதியில் கிராமங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டு மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
</p><p>
ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங், நேபாளப் பகுதியில் குறைந்தது 39 ஆஸ்திரேலியர்கள் மாயமாகியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளதோடு, அவர்களைத் தேடும் பணியில் அவசர அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
</p><p>
மேலும் காணாமல் போன தமிழ்க் குடும்பத்தினர் மற்றும் அனைத்துப் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பான திரும்புதலுக்காகவும், மீட்புப் பணிகளுக்காகவும் தமிழ் அவுஸ்திரேலிய சமூகமும் உலகத் தமிழர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-01T06:06:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆங்கிலக்கால்வாயில் உயிரிழந்த நபர்: கவனம் ஈர்த்துள்ள ஒரு செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-family-pleads-french-authority-to-release-body-1788242693"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-family-pleads-french-authority-to-release-body-1788242693</id>
            <summary type="text">British family pleads with French authorities to release body of relative who died in Channel: பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் உயிரிழந்த நபர...</summary>
            <content type="html"><![CDATA[<p>British family pleads with French authorities to release body of relative who died in Channel: பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் உயிரிழந்த நபரின் உடலை ஒப்படைக்குமாறு பிரித்தானியக் குடும்பம் ஒன்று பிரான்ஸ் அதிகாரிகளைக் கோரியுள்ளது.</p><p>


பிரெஞ்சு நீதிமன்றம் ஒன்றின் முன் ஒரு கூட்டம் சீக்கியர்கள் நின்று ஆர்ப்பாட்டம் செய்யும் காட்சிகள் பல்வேறு ஊடகங்களில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளன.</p><h3>

ஆங்கிலக்கால்வாயில் உயிரிழந்த நபர்
</h3><p>
பிரான்சிலுள்ள Dunkirk நகரில் அமைந்துள்ள அந்த நீதிமன்றம் முன் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள அந்த நபர்கள் கையில் வைத்துள்ள பதாகைகளில் ஒரு சீக்கியரின் படம் இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66d5e056-a562-4c9f-b4d0-53c319474e31/26-6a966b0681e7e.webp' /></p><p>
அவரது பெயர், ஜஸ்மீத் வத்வா (Jasmeet Wadhwa, 32). இந்த ஜஸ்மீத், தனது தாயாகிய ஹர்பன்ஸ் கௌர் வத்வாவுடன் (Harbans Kaur Wadhwa) ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்றுள்ளார்.
</p><p>
ஏப்ரல் மாதம், பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில், தன் தாய் கண் முன்னே உயிரிழந்துள்ளார் ஜஸ்மீத்.&nbsp;</p><p></p><h3>

கவனம் ஈர்த்துள்ள ஒரு செய்தி
</h3><p>
விடயம் என்னவென்றால், ஜஸ்மீத்தும் அவரது தாயும், ஆப்கானிஸ்தானில் தாலிபான்களிடமிருந்து தப்பி பிரான்சுக்கு வந்துள்ளார்கள்.
</p><p>
அவர்கள் எங்கிருந்து புறப்பட்டவர்கள், ஏன் ஆப்கானிஸ்தானுக்குச் சென்றார்கள் என்பது தெரியவில்லை.
</p><p>
அப்படி ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி, பிரான்ஸ் வந்தடைந்த ஜஸ்மீத்தும் அவரது தாயும் சிறுபடகொன்றின் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது, ஜஸ்மீத்தும், சூடான் நாட்டவர் ஒருவரும் ஆங்கிலக்கால்வாயில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்கள்.
</p><p>
அதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் உடல் பிரான்சுக்கே திரும்பக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஜஸ்மீத்தின் தாயும் பிரான்சுக்கே சென்றுள்ளார்.
</p><p>
இப்போது, பிரான்சில் வைக்கப்பட்டுள்ள ஜஸ்மீத்தின் உடலை தங்களிடம் ஒப்படைக்குமாறு அவருடைய உறவினர்கள் பிரான்ஸ் அதிகாரிகளைக் கோரியுள்ளனர்.</p><p>

அதன் ஒரு பகுதியாகத்தான் Dunkirk நகரில் அமைந்துள்ள நீதிமன்றம் முன் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் அவர்கள்.
</p><p>
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், ஜஸ்மீத்தின் உடலைக் கோரி பிரான்ஸ் சென்றுள்ளவர்கள், பிரித்தானியர்கள். அதாவது, பிரித்தானியக் குடியுரிமை பெற்ற சீக்கியர்கள்.
</p><p>
ஆக, ஜஸ்மீத்தின் உறவினர்கள் பிரித்தானியாவில் முறைப்படி அனுமதி பெற்று வாழ்ந்துவரும் நிலையில், ஜஸ்மீத் ஏன் முறைப்படி பிரித்தானியா வர விண்ணப்பிக்கவில்லை என்பது தெரியவில்லை.
</p><p>
இதற்கிடையில், ’one in, one out’ திட்டத்தின் கீழ் தன்னை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ளுமாறு ஜஸ்மீத்தின் தாய் பிரித்தானிய உள்துறை அலுவலகத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.
</p><p>
ஆனால், அவரிடம், அவர் ஆப்கன் நாட்டவர் என்பதற்கான அடையாள ஆவணமான Tazkira என்னும் ஆவணம் இல்லை.
</p><p>
ஆகவே, பிரித்தானிய உள்துறை அலுவலகம் அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
</p><p>
இந்நிலையில்தான், ஜஸ்மீத்தின் உடலை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி, பிரித்தானியாவிலிருக்கும் அவரது உறவினர்கள் பிரான்சுக்குச் சென்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.
</p><p>
பொதுவாக, பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் ஆங்கிலக்கால்வாயில் உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படுவதில்லை.
</p><p>
அவர்கள் உடலை ஒப்படைக்கக்கோரி அவர்களுடைய உறவினர்கள் இதுபோல் வெளிப்படையாக ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபடுவதில்லை.</p><p>

ஆகவேதான் இந்த செய்தி கவனம் ஈர்த்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T06:05:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் தலைக்கவசமின்றிப் பயணித்தவர்களுக்கு எதிராக வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/case-filed-against-those-traveling-without-helmets-1788242698"></link>
            <id>https://jvpnews.com/article/case-filed-against-those-traveling-without-helmets-1788242698</id>
            <summary type="text">சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துச் சட்டங்களை மீறிச் செயற்பட்டமை மற்றும் பாதுகாப்புத் தலைக்கவசம் (Helmet) அணியாமல் மோட்டார் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துச் சட்டங்களை மீறிச் செயற்பட்டமை மற்றும் பாதுகாப்புத் தலைக்கவசம் (Helmet) அணியாமல் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்தியமை தொடர்பில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போது 10 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>
</p><p></p><p>சம்மாந்துறை பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவு பொலிஸாரினால் நேற்று திங்கட்கிழமை (31)&nbsp; இத்திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வேதமுல்லவின் மேற்பார்வையில், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சியின் ஆலோசனைக்கு அமைவாக இச்சோதனை நடத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a861be2-3061-45b5-883d-97ef8e379f0a/26-6a966b0c56205.webp' /></p><p> மேலும், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் நெறிப்படுத்தலில், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் நேரடி வழிகாட்டலில் பொலிஸ் குழுவினர் இக்கள நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
</p><p>
இதன்போது, பிரதான வீதிகளில் ஹெல்மட் அணியாமல் அபாயகரமான முறையில் வாகனங்களைச் செலுத்தியவர்கள் மற்றும் வீதிப் போக்குவரத்து விதிமுறைகளைப் பேணாத சாரதிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுடன், 10 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டன.
</p><p>
பொதுமக்களின் வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இத்தகைய திடீர் சோதனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்ட சம்மாந்துறை பொலிஸார், போக்குவரத்து விதிகளை மீறிச் செல்பவர்கள் மற்றும் தலைக்கவசமின்றி வாகனம் செலுத்துவோருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T06:05:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டு கட்சியின் முன்னாள் மேயர் CCIB இல் விசாரணைக்கு முன்னிலை...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-mayor-ordered-to-statement-over-drug-kingpin-1788235603"></link>
            <id>https://ibctamil.com/article/ex-mayor-ordered-to-statement-over-drug-kingpin-1788235603</id>
            <summary type="text">🛑 புதிய இணைப்புதெஹிவளை - கல்கிசை மாநகரசபையின் முன்னாள் மேயர் தனசிரி அமரதுங்க, வாக்குமூலம் அளிப்பதற்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் (CCIB) ச...</summary>
            <content type="html"><![CDATA[<h5><b><u>🛑 புதிய இணைப்பு</u></b></h5><p>தெஹிவளை - கல்கிசை மாநகரசபையின் முன்னாள் மேயர் தனசிரி அமரதுங்க, வாக்குமூலம் அளிப்பதற்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் (CCIB) சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார்.
</p><p>
தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் பெருமளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் (Shiran Basik) தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாகவே இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><h5><b><u>🛑 முதலாம் இணைப்பு</u></b></h5><p>மொட்டு கட்சியின் தெஹிவளை - கல்கிசை முன்னாள் மேயர் தனசிரி அமரதுங்கவிற்கு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் (CCIB) முன்னிலையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p>பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் (Shiran Basik) தொடர்பான விசாரணைகள் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக இவ்வாறு அவரை முன்னிலையாகுமாரு தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில் இன்று (01-09-2026) அவரை&nbsp;CCIB இல் முன்னிலையாகுமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>கடத்தல்காரர்களில் ஒருவர்</h2><p>

இலங்கைக்குப் பெருமளவில் போதைப்பொருட்களை விநியோகிக்கும் முக்கிய பாதாள உலகக் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், டுபாயில் கைது செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
</p><p>தற்போது தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பொறுப்பில் உள்ள சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் மேயரிடம் வாக்குமூலம் பெறத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15d7ffe9-8f67-424f-a4b5-74e903ef2b6d/26-6a9656943ca12.webp' /></p><p>இதனடிப்படையில் இன்று காலை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகுமாறு முன்னாள் மேயர் தனசிரி அமரதுங்கவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரன்மல் கொடிதுவாக்குவின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p>
</p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T06:04:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரணில் மற்றும் சஜித் தரப்பு இணைந்து தேர்தலில் களமிறங்க இணக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-government-is-certain-to-lose-the-election-1788240305"></link>
            <id>https://tamilwin.com/article/the-government-is-certain-to-lose-the-election-1788240305</id>
            <summary type="text">தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் தேசிய மக்கள் சக்தி அரசு தோல்வியடைவது நிச்சயம்
என்றும், வரவிருக்கும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள்
சக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் தேசிய மக்கள் சக்தி அரசு தோல்வியடைவது நிச்சயம்
என்றும், வரவிருக்கும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள்
சக்தியும் இணைந்து ஒரே பொதுப் பட்டியலில் போட்டியிடுவதற்குத் தீர்மானித்துள்ளன
என்றும் முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
</p><p>
கண்டியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
அவர் மேலும் கூறுகையில்,
</p><p>
"மாகாண சபைத் தேர்தலோ அல்லது உள்ளூராட்சி சபைத் தேர்தலோ எது நடத்தப்பட்டாலும்
அரசு அதில் தோல்வியடைவது உறுதி. இந்தத் தேர்தல் தோல்வி பயத்தின் காரணமாகவே
அரசு தேர்தல்களை நடத்தாமல் தொடர்ச்சியாகக் காலத்தைக் கடத்தி வருகின்றது.</p><h2>ஒன்றிணையும் எதிர்க்கட்சிகள்</h2><p>
அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரும் வரை அரசு எந்தவொரு தேர்தலையும் நடத்தப்
போவதில்லை என்பதே எனது கணிப்பு.</p><p>

எதிர்க்கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவினாலும், தேர்தல் என்று
வரும்போது எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாகக் கைகோர்க்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17eefa3a-ee5d-48e3-91a6-303a3801a990/26-6a966afdc3685.webp' /></p><p> </p><p>ஐக்கிய தேசியக்
கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது குறித்து
ஏற்கனவே சுமுகமான தீர்மானத்துக்கு வந்துள்ளன.

அதற்கமைய, வரவிருக்கும் தேர்தலில் இரு கட்சிகளையும் சேர்ந்த வேட்பாளர்கள் ஒரே
பொதுப் பட்டியலில் களமிறக்கப்படுவார்கள்.
</p><p>
போட்டியிடும் தேர்தல் சின்னம் எது என்பது ஒரு சிறிய விவகாரமே தவிர அது
ஒருபோதும் பிளவை ஏற்படுத்தாது. இரு பிரதான சக்திகளும் ஒன்றிணைவதே இங்கு
முதன்மையானது என்பதால் வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ள இரண்டும் ஒரே அணியாக
இணைந்து செயற்படும்" என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T06:04:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பர் 7 முதல் அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mercury-make-badra-rajyog-on-07-sep-who-get-luck-1788236563"></link>
            <id>https://manithan.com/article/mercury-make-badra-rajyog-on-07-sep-who-get-luck-1788236563</id>
            <summary type="text">வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, கல்வி மற்றும் வியாபாரத்தின் காரணியாக விளங்குகிறார். மிதுனம், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, கல்வி மற்றும் வியாபாரத்தின் காரணியாக விளங்குகிறார். </p><p>மிதுனம், கன்னி ராசிகளின் அதிபதியான புதன், சந்திரனுக்கு அடுத்தபடியாக வேகமாக ராசி மாறக்கூடிய கிரகமாகும்.

இந்நிலையில், புதன் செப்டம்பர் 07ஆம் தேதி தனது சொந்த ராசியான கன்னியில் நுழைகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b8b71e4-f272-4f2a-830a-95d89a80a6f0/26-6a96589b28044.webp' /></p><p></p><p> இதன் மூலம் மிகவும் மங்களகரமான பத்ரா ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான வளர்ச்சி, லாபம், பேச்சில் செல்வாக்கு மற்றும் பணவரவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
</p><p>
அப்படியென்றால், புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ரா ராஜயோகத்தின் மூலம் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் காணப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><h2>மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54e54d1c-5c7d-4019-a34a-f31b7b62db98/26-6a96589bd0778.webp' /></p><h2>
</h2><p>மிதுன ராசியின் அதிபதியாக புதன் இருப்பதால், இந்த புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ரா ராஜயோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு பல்வேறு வகைகளில் சாதகமான பலன்களை வழங்கும். </p><p>குறிப்பாக, வாழ்க்கையில் வசதிகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பணியிடத்தில் உங்களின் புத்திசாலித்தனம், திறமை மற்றும் செயல்திறன் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். </p><p>இதன் மூலம் பணியிடத்தில் உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கலாம்.

வியாபாரம் செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.புதிய வீடு மற்றும் நிலம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கூடி வரும்.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">தனுசு</span></h2><p><span style="font-size: 14px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50a92c19-f8e5-46b4-983a-080d3ce1a312/26-6a96589c821b3.webp' /></span></p><p>
புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ரா ராஜயோகம் தனுசு ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைத் தரக்கூடும். </p><p>குறிப்பாக, வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகலாம். </p><p>ஏற்கனவே பணியில் இருப்பவர்களும் தங்களது திறமையை வெளிப்படுத்தி முன்னேற்றம் காண்பார்கள்.

தொழிலதிபர்களுக்கு பெரிய அளவில் புதிய ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான புதிய வாய்ப்புகளும் அமையும்.&nbsp;<br></p><h2>
சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f551859-d343-413c-b69b-6b3f6791701f/26-6a965a1e8fad9.webp' /></p><p>
புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ரா ராஜயோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக நல்ல பலன்களை வழங்கக்கூடும். குறிப்பாக, திடீர் பணவரவு அல்லது எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. </p><p>நீண்ட காலமாக கைக்கு வராமல் இருந்த பணம் திரும்பக் கிடைப்பதுடன், வங்கி இருப்பும் அதிகரிக்கலாம்.

ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. </p><p>இந்தக் காலகட்டத்தில் உங்களின் பேச்சுத்திறன் சிறப்பாக இருக்கும். இனிமையான மற்றும் திறமையான பேச்சின் மூலம் பல முக்கியமான காரியங்களை எளிதாகச் சாதித்து முடிப்பீர்கள். </p><p>குறிப்பாக, மார்க்கெட்டிங் மற்றும் ஊடகத் துறையில் பணிபுரிபவர்களுக்கு இந்த காலம் மிகவும் சாதகமாக அமையக்கூடும்.</p><h2>

கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f2efe05-cc6c-4a91-9819-5ff836c70f01/26-6a965a1f7f25f.webp' /></p><p></p><p>
கன்னி ராசியின் முதல் வீட்டில் புதன் சஞ்சரிப்பதால் பத்ரா ராஜயோகம் உருவாகிறது. புதன் கன்னி ராசியின் அதிபதியாக இருப்பதால், இந்த யோகம் கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலன்கள் கிடைக்கும்.&nbsp;</p><p> குறிப்பாக, முக்கியமான விஷயங்களில் சரியான முடிவுகளை எடுக்கும் திறன் மேம்படும்.

உங்களின் புத்திசாலித்தனம் மற்றும் திறமையைப் பயன்படுத்தி பல்வேறு வெற்றிகளைப் பெறுவீர்கள். </p><p>பணியிடத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் நல்ல பெயரைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம்.
</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://chat.whatsapp.com/KPaiG8NNYogL3W9EipSjKP" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T06:02:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் முதல் நாளிலேயே உயர்ந்த தங்கம் விலை: இன்றைய விலை நிலவரம் இதோ!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sept-1st-2026-gold-and-silver-price-in-chennai-1788241771"></link>
            <id>https://manithan.com/article/sept-1st-2026-gold-and-silver-price-in-chennai-1788241771</id>
            <summary type="text">ஆகஸ்ட் மாதம் முழுவதும் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், மாத இறுதியில் அடுத்தடுத்து சரிவை பதிவு செய்தது. இதனால் தங்கம் வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆகஸ்ட் மாதம் முழுவதும் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், மாத இறுதியில் அடுத்தடுத்து சரிவை பதிவு செய்தது.</p><p> இதனால் தங்கம் வாங்க திட்டமிட்டிருந்த பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் விலை மாற்றத்தை உன்னிப்பாக கவனித்து வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3631843b-165d-42a1-9547-5cd375fa9d42/26-6a966a3723ec2.webp' /></p><p></p><p>
அந்த வகையில், ஆகஸ்ட் 31ஆம் தேதி தங்கம் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டது. அதன்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.135 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,370க்கும், சவரனுக்கு ரூ.1,080 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,14,960க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p><h2>இன்றைய நிலவரம்&nbsp;</h2><p>
</p><p>
இந்நிலையில், புதிய மாதத்தின் தொடக்க நாளிலேயே தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.14,385க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,15,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2813e7b-f574-415e-ae74-23cd03aab549/26-6a966a37d0de2.webp' /></p><p></p><p>இதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையிலும் இன்று உயர்வு பதிவாகியுள்ளது. 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.12,155க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.97,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8ef7d40-2322-461a-b45f-4c07d83b276b/26-6a966a3882225.webp' /></p><p>
</p><p>
மறுபுறம், தங்கத்திற்கு மாறாக வெள்ளி விலை இன்று சரிவை சந்தித்துள்ளது. அதன்படி, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.255க்கும், ஒரு கிலோ ரூ.2,55,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://chat.whatsapp.com/KPaiG8NNYogL3W9EipSjKP" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T06:01:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சேரன்-சந்தா திருமணத்தின் ஸ்பெஷல் வீடியோ வெளியானது... அய்யனார் துணை சீரியல் புரொமோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/cheran-chandha-kalyanam-serial-ayyanar-thunai-1788242350"></link>
            <id>https://cineulagam.com/article/cheran-chandha-kalyanam-serial-ayyanar-thunai-1788242350</id>
            <summary type="text">அய்யனார் துணைவிஜய் தொலைக்காட்சியில் கடந்த வருடம் புதுமுகங்கள் சிலர் நடிக்க நாம் பார்த்து பழகிய கலைஞர்கள் பலர் நடிக்க தொடங்கப்பட்ட தொடர் தான் அய்யனார் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அய்யனார் துணை</h2><p>விஜய் தொலைக்காட்சியில் கடந்த வருடம் புதுமுகங்கள் சிலர் நடிக்க நாம் பார்த்து பழகிய கலைஞர்கள் பலர் நடிக்க தொடங்கப்பட்ட தொடர் தான் அய்யனார் துணை.</p><p>சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் என 4 பேரின் வாழ்க்கை கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகிய இந்த சீரியல் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a82117c-fced-4595-8265-5f9b62ff6188/26-6a966c15dc726.webp' /></p><p>கதையில் சோழன்-நிலா ஜோடிக்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளார்கள். அவர்களை அடுத்து கதையில் பொறுப்புள்ள அண்ணனாக இருக்கும் சேரனுக்கு எப்போது திருமணம் நடக்கும் என பெரிய கேள்வி இருந்து வந்தது. அவருக்கும் திருமணம் நடக்கும் என தாலி கட்டுவதை வந்து நின்றுபோன கதையெல்லாம் உள்ளது.</p><p>கடைசியில் இப்போது ஏகப்பட்ட போராட்டங்களுக்கு பிறகு சேரன்-சந்தா திருமணம் கோலாகலமாக நடக்க உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72658d74-7c99-466d-81aa-3daf767e4382/26-6a966c16ab453.webp' /></p><h2>புரொமோ</h2><p>பீகார் சென்று சேரன் நிச்சயதார்த்தத்தை சந்தாவுடன் செய்துமுடித்துவிட்டு சென்னை வந்த குடும்பத்தினர் அடுத்து திருமண வேலைகளை பரபரப்பாக செய்து வருகின்றனர். இதற்கு இடையில் சந்தாவை அவரது மாமா மிரட்டி வீட்டில் அடைக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04d13b79-4467-46f9-97f2-025148a431b6/26-6a966c1519009.webp' /></p><p>அவர் பீகாரில் இருந்து எப்படி தப்பித்து சேரனை திருமணம் செய்துகொள்ள போகிறார் என்பது தெரியவில்லை.</p><p>இந்த நிலையில் தான் சேரன்-சந்தா திருமணம் கோலாகலமாக நடக்கவுள்ள நிலையில் இருவரும் பங்குபெறும் வகையில்&nbsp;ஸ்பெஷல் மியூசிக் வீடியோ வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/dQcZtQIq6P4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-01T06:00:49+00:00</updated>
        </entry>
    </feed>
