<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-08T08:33:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு தேசிய வைத்தியசாலையில் போதைப்பொருள் விற்பனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drug-sales-at-colombo-national-hospital-1788856389"></link>
            <id>https://jvpnews.com/article/drug-sales-at-colombo-national-hospital-1788856389</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரு ஊழியர்கள் மருதானைப் பொலிஸாரால் கைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரு ஊழியர்கள் மருதானைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>


சம்பவம் தொடர்பில் கைதான 34 மற்றும் 37 வயதுடைய சந்தேகநபர்கள், மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் செப்டெம்பர் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b81edc08-2708-47b6-9e6b-fc4cfeda29a0/26-6a9fc8473d7ff.webp' /></p><p>
</p><p>


பொரளை – வானத்தமுல்ல பகுதியில் இருந்து போதைப்பொருட்களைப் பெற்று, வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் வெளிநபர்களுக்கு விற்பனை செய்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>



 கைது செய்யப்பட்ட இரு ஊழியர்களையும் உடனடியாக பணி இடைநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-08T08:30:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளம் நடிகை சஞ்சனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-sanjana-krishnamoorthy-latest-photos-1788851361"></link>
            <id>https://cineulagam.com/article/actress-sanjana-krishnamoorthy-latest-photos-1788851361</id>
            <summary type="text">இளைஞர்களின் மனம் கவர்ந்த இளம் நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி. 

கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான &#039;வதந்தி&#039; வெப் தொடரில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இளைஞர்களின் மனம் கவர்ந்த இளம் நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e612b2e2-2511-4102-ba84-ede4c060e45a/26-6a9fb4a44a8df.webp' /></p><p> </p><p>

கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான 'வதந்தி' வெப் தொடரில் நடித்து பிரபலமானார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f24a704f-bd35-46bc-8b5a-d550196fe151/26-6a9fb4a51c305.webp' /></p><p>இதன்பின், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய 'லப்பர் பந்து' திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/018855ce-17ff-4e78-a352-1a6b0aaab82a/26-6a9fb4a5c7e7b.webp' /></p><p>
</p><p>
இதை தொடர்ந்து 'தக் லைஃப்', 'பரிமளா &amp; கோ' மற்றும் 'டிசி' ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74b5cad0-dc1c-45b9-a7f5-60db08078b76/26-6a9fb52024e7e.webp' /></p><p>மேலும், தற்போது கவினுடன் இணைந்து 'பேர் சொல்லும் பிள்ளை' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2510890c-654f-48b5-afa6-e777670f1297/26-6a9fb520de6ac.webp' /></p><p>இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை சஞ்சனா பதிவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ad8e4ed-39d9-4aaf-8854-863472c7572b/26-6a9fb5219d70c.webp' /></p><p> 

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-09-08T08:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[சதொசவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு! நுகர்வோர் ஏமாற்றத்துடன் திரும்புவதாக நாடாளுமன்றில் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prices-of-essential-commodities-high-in-sathosa-1788853502"></link>
            <id>https://tamilwin.com/article/prices-of-essential-commodities-high-in-sathosa-1788853502</id>
            <summary type="text">சதொசவில் ஒரே வாரத்திற்குள் சீனி, பருப்பு மற்றும் அரிசி ஆகியவற்றின் விலை குறிப்பிடத்தக்க அளவு உயர்த்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சானக மதுகொட தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சதொசவில் ஒரே வாரத்திற்குள் சீனி, பருப்பு மற்றும் அரிசி ஆகியவற்றின் விலை குறிப்பிடத்தக்க அளவு உயர்த்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சானக மதுகொட தெரிவித்துள்ளார்.</p><p> 

நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (08.09.2026) அவர் மேலும் தெரிவிக்கையில்,

சதொச விற்பனை நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதுடன், வெளிச்சந்தையை விட சதொசவில் பொருட்களின் விலை அதிகமாகக் காணப்படுகிறது.</p><h2>ஏமாற்றத்துடன் திரும்பும் நுகர்வோர்</h2><p>

சதொசவில் பொருட்கள் வாங்குவதற்காகச் செல்லும் நுகர்வோர் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். ஒரே வாரத்திற்குள் சீனி, பருப்பு மற்றும் அரிசி ஆகியவற்றின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவு உயர்த்தப்பட்டுள்ளன.
</p><p>
தனியார் பல்பொருள் அங்காடிகளை விடவும் சதொசவில் பொருட்களின் விலை அதிகமாக இருப்பது அரசாங்கத்தின் நுகர்வோர் பாதுகாப்பு உறுதிமொழியைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
</p><p>
இதற்குப் பதிலளித்துப் பேசிய வர்த்தக அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன, கடனில் மூழ்கியிருந்த சதொச நிறுவனத்தை தற்போதைய அரசாங்கம் மீட்டு எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04914546-41da-464a-999e-681d68d0d10d/26-6a9fc744b37a3.webp' /></p><h2>பொருள் தட்டுப்பாடு</h2><p>
</p><p>
கேள்விப்பத்திர முறையிலான கொள்முதல் தாமதங்களே பொருள் தட்டுப்பாடிற்குக் காரணம் எனக் குறிப்பிட்ட அவர், இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக அனைத்து மாவட்டங்களிலும் மொத்த விநியோகக் களஞ்சியங்கள் அமைக்கப்பட்டு, வெளிச்சந்தையை விடக் குறைந்த விலையில் பொருட்கள் விநியோகிக்கப்படும் என உறுதியளித்தார்.</p><p>

அத்துடன் 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் சுமார் 31 சதொச விற்பனையகங்கள் மூடப்பட்டுள்ளன எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T08:29:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் இருந்து அழைத்த பெண் - இலங்கையில் பெண் உட்பட இருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/old-lady-cheated-by-foreign-lady-1788841936"></link>
            <id>https://tamilwin.com/article/old-lady-cheated-by-foreign-lady-1788841936</id>
            <summary type="text">களுத்துறையில் பரிசு ஒன்றை அனுப்புவதாக கூறி, 65 வயது மூதாட்டி மற்றும் அவரது 16 வயது பேரன் ஏமாற்றபபட்டுள்ளனர். இருவரையும் ஏமாற்றி 8 லட்சத்து 88 ஆயிரம் ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறையில் பரிசு ஒன்றை அனுப்புவதாக கூறி, 65 வயது மூதாட்டி மற்றும் அவரது 16 வயது பேரன் ஏமாற்றபபட்டுள்ளனர்.</p><p> இருவரையும் ஏமாற்றி 8 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கணக்கில் வரவு வைத்து மோசடி செய்த சம்பவம் தொடர்பாக தெற்கு களுத்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>தெற்கு களுத்துறை, மெனெரிதென்ன பகுதியை சேர்ந்த 65 வயதுடைய பெண்ணொருவரே இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.</p><p> </p><h2><b> இருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி</b></h2><p>தனது 16 வயது பேரனின் தொலைபேசிக்கு கடந்த பெப்ரவரி 11 ஆம் திகதி வெளிநாட்டு பெண் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10be2010-13f1-4a25-9b46-9d572f08bad5/26-6a9fc66cedd4c.webp' /></p><p>தான் வைத்தியர் எனவும், கணவர் இறந்ததன் பின்னர் சொத்துக்களை மாமனார் பலவந்தமாக பறித்துக்கொள்ள முயல்வதால் நீதிமன்றத்திற்கு செல்வதாகவும் தெரிவித்துள்ளார். </p><p>வழக்கினை வெல்வதற்காக பிரார்த்தனை செய்யுமாறு கோரியுள்ளார். </p><p>அத்துடன், பேரனுக்கு பரிசொன்றை அனுப்புவதாகவும் தெரிவித்ததாக வயோதிபெண் பொலிஸாரிடம் செய்துள்ள முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>வழக்கில் வெற்றி பெற்றமைக்கான தகவலுடன் நீதிமன்றத்திற்கு அருகில் எடுத்த புகைப்படமொன்றையும் மோசடி செய்த பெண் அனுப்பியுள்ளார்.</p><p> </p><h3><b>பரிசுப் பெட்டி</b></h3><p>பெப்ரவரி 16 ஆம் திகதி கடிகாரம், உடைகள், கையடக்கத் தொலைபேசி, வாசனைத் திரவியம், பாதணிகள், மடிக்கணினி போன்ற பரிசுப் பொருட்களின் புகைப்படங்களையும் அனுப்பியு்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4f26849-d2b6-4876-a9ec-64418667bcfc/26-6a9fc66da20dc.webp' /></p><p>17 ஆம் திகதி பரிசுப் பெட்டி தபாலில் அனுப்பப்பட்டுள்ளதால் அதற்காக 98 ஆயிரம் ரூபா பணத்தை அனுப்ப வேண்டும் எனத் தெரிவித்தார். </p><p>பின்னர் இலங்கையர் ஒருவர் விமான நிலையத்திலிருந்து தொடர்புகொண்டு 98 ஆயிரம் ரூபாவை அனுப்புமாறு கூறி வங்கிக் கணக்கிலக்கத்தைக் கொடுத்துள்ளார். </p><p>இதன்போது நாங்கள் அப்ப பணத்தை அனுப்பினோம். பின்னர் பரிசுப் பெட்டியின் எடை அதிகமாக இருப்பதால் மேலும் 1.5 இலட்சம் ரூபாவை வைப்புச் செய்யுமாறு கூறியுள்ளனர். </p><p>இவ்வாறு பல தடவைகள் தொடர்பு கொண்டு 8 லட்சத்து 88 ஆயிரம் ரூபாவை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.</p><p> தாங்கள் இந்தப் பணத்தை அயல் வீட்டு பெண்ணொருவரிடம் வீடொன்றினை விற்றுப் பெற்ற பணமாகும். </p><p>மீண்டும் கடந்த வாரம் 4 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவை வங்கிக் கணக்கில் வரவு வைக்குமாறு கூறியபோது, மேலதிகமாகப் பணம் இல்லை எனக் கூறியதாக பாதிக்கப்பட்ட வயோதிப பெண் குறிப்பிட்டுள்ளார். </p><p>களுத்துறை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-08T08:25:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலிய குடியிருப்புகளுக்கு பிரித்தானியா வர்த்தகத் தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/britain-imposes-trade-ban-on-israeli-settlements-1788843113"></link>
            <id>https://canadamirror.com/article/britain-imposes-trade-ban-on-israeli-settlements-1788843113</id>
            <summary type="text">&amp;nbsp; மேற்குக்கரையில் உள்ள இஸ்ரேலிய குடியிருப்புகளுக்கு வர்த்தகத் தடைகளை விதிக்க பிரித்தானியா தீர்மானித்துள்ளதாக பிரித்தானிய ஊடகச் செய்திகள் தெரிவிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மேற்குக்கரையில் உள்ள இஸ்ரேலிய குடியிருப்புகளுக்கு வர்த்தகத் தடைகளை விதிக்க பிரித்தானியா தீர்மானித்துள்ளதாக பிரித்தானிய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. </p><p>

இந்தத் தீர்மானம் குறித்த அறிவிப்பை பிரதமர் எண்டி பர்னம் இன்று (08) வெளியிடவுள்ளதாக 'நியூயோர்க் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb1850cb-331d-4cd3-bc19-92b8c217d00b/26-6a9f946b4b2f4.webp' /></p><p> 

கடந்த ஜூலை மாதம் அதிகாரத்திற்கு வந்த பின்னர், பிரதமர் தலையிடும் மிகப்பெரிய வெளிநாட்டுக் கொள்கை தீர்மானமாக இது அமையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p> 

அதேசம்யம் பிரித்தானியாவின் இந்தத் தீர்மானத்திற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளிடமிருந்து பலத்த எதிர்ப்புகள் கிளம்பக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T08:16:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அங்கு வேண்டாம் ... இங்கே தயாரியுங்கள்; கனடா நிறுவனத்திற்கு டிரம்ப் போட்ட உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-order-to-the-canadian-company-bombardier-1788851716"></link>
            <id>https://canadamirror.com/article/trump-order-to-the-canadian-company-bombardier-1788851716</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவில் தமது வானுார்திகளை விற்பனை செய்ய வேண்டுமானால் கனடாவைச் சேர்ந்த &#039;போம்பார்டியர்&#039; (Bombardier) நிறுவனம் அமெரிக்காவிலேயே தனது வானுார்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவில் தமது வானுார்திகளை விற்பனை செய்ய வேண்டுமானால் கனடாவைச் சேர்ந்த 'போம்பார்டியர்' (Bombardier) நிறுவனம் அமெரிக்காவிலேயே தனது வானுார்திகளை தயாரிக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
</p><p>
அமெரிக்க சந்தை வேண்டுமெனில் அவர்கள் இங்குதான் உற்பத்தி செய்ய வேண்டும், அமெரிக்காவை ஒரு 'பிக்பேங்க்' (piggybank) என்ற சொந்த சொத்து போன்று நடத்துவதை நிறுத்த வேண்டும்" என்றும்&nbsp; &nbsp;ட்ரம்ப்,&nbsp;சமூக வலைத்தளத்தில்&nbsp; பதிவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ffc5397-f5ee-4696-a80a-fd4e1a3c730e/26-6a9fb6068a22c.webp' /></p><h2>அமெரிக்கா -கனடா&nbsp; வர்த்தக மோதல்</h2><p>

அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே வர்த்தக மோதல்கள் வெடித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
</p><p>
கனடா பொருட்கள் மீது ட்ரம்ப் வரி விதித்துள்ளதால், அதற்குப் பதிலடியாக கனடாவும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமெரிக்கப் பொருட்கள் மீது இறக்குமதி வரிகளை நடைமுறைப்படுத்தவுள்ளது.
</p><p>
கனடா தனது நாட்டின் வங்கிகளையும், அமெரிக்க நிறுவனங்களையும் குறிப்பாக ( கல்ஃப்ஸ்ட்ரீம் ஏரோஸ்பேஸ் - Gulfstream Aerospace) நிறுவனத்தை தமது சந்தையில் வியாபாரம் செய்ய அனுமதிக்கவில்லை என்று ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>&nbsp;அதேசமயம்&nbsp; &nbsp;போம்பார்டியர் நிறுவனத்தின் 50 வீத வருமானம் அமெரிக்காவில்தான் கிடைக்கிறது.
</p><p>
இந்த நிலையில், ட்ரம்பின் அறிவிப்பு, நெட்ஜெட்ஸ்' (NetJets) போன்ற பெரிய தனியார் ஜெட் வானுார்தி நிறுவனங்களை நேரடியாகப் பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-08T08:15:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பிரமாண்டமாக இடம்பெறவுள்ள போராட்டம் திரைப்பட இசை வெளியீட்டு விழா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/porattam-tamil-movie-audio-launch-event-jaffna-1788854853"></link>
            <id>https://ibctamil.com/article/porattam-tamil-movie-audio-launch-event-jaffna-1788854853</id>
            <summary type="text">ஈழத் திரையுலகில் புதியதோர் அத்தியாயத்தைப் படைக்கவிருக்கும் “போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா யாழில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

யாழ்ப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத் திரையுலகில் புதியதோர் அத்தியாயத்தைப் படைக்கவிருக்கும் “போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா யாழில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
</p><p>
யாழ்ப்பாணம் - திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி மாலை 5 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
</p><p>
இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ள மண்டபத்தில் இருக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளோர் <b>070 341 4565</b> என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முன்கூட்டியே தங்கள் வருகையை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.</p><p>

யாழ்ப்பாணத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்த இசை வெளியீட்டு விழாவில் ஏராளமான பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ள நிலையில் 
தாங்களும் கலந்து கொண்டு, “போராட்டம்” திரைப்படக் குழுவினரை உற்சாகப்படுத்தி, விழாவை சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் அழைத்து நிற்கின்றனர்.</p><p>இதேவேளை ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள ‘போராட்டம்’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T08:14:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் போர்க் குற்றவாளி இல்லவே இல்லை...! சர்வதேச ஊடகத்திடம் சென்று இப்படி கதறும்சவேந்திர சில்வா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/im-not-a-war-criminal-shavendra-silva-1788840173"></link>
            <id>https://ibctamil.com/article/im-not-a-war-criminal-shavendra-silva-1788840173</id>
            <summary type="text">இறுதிப்போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகத் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மறுத்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இறுதிப்போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகத் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மறுத்துள்ளார்.</p><p>
</p><p>குறித்த விடயத்தை சவேந்திர சில்வா இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.</p><p>தன் மீதான குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும், சர்வதேச அளவில் தன் மீது விதிக்கப்பட்ட தடைகளுக்கான அடிப்படை குறித்து கேள்வி எழுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பொதுமக்கள் உயிரிழப்பு</h2><p>இலங்கைப் பாதுகாப்பு படையினர் புலிகளுக்கு எதிராகத் தொழில்முறை ரீதியிலேயே போரிட்டனர் என்றும், இறுதி இராணுவ நடவடிக்கையின் போது பொதுமக்கள் உயிரிழப்புகளைக் குறைக்கப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba6f1233-64b0-4ec5-a65c-5c490830813f/26-6a9fafbd10660.webp' /></p><p>2020 ஆம் ஆண்டு அமெரிக்காவும், 2025 ஆம் ஆண்டில் பிரித்தானியாவும் தன் மீது விதித்துள்ள தடைகளுக்கான காரணங்களை தொடர்ந்து கேட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், தான் ஒரு போர்க் குற்றவாளி அல்ல என்றும்&nbsp;சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.</p><p>சவேந்திர சில்வா தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பது உண்மைதான், ஆனால் சர்வதேச ரீதியாக அவர் மீது கடுமையான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. </p><p>அவர் கூறுவது போல அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை என்பது எந்த வகையில் உண்மையாகும்.</p><p></p><h2>சவேந்திர சில்வா வழிநடத்திய இராணுவப் பிரிவு&nbsp;</h2><p>
</p><p>
ஐக்கிய நாடுகள் சபை (UN) மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சவேந்திர சில்வா மற்றும் அவர் வழிநடத்திய இராணுவப் பிரிவு (58ஆம் பிரிவு) மீது பல குற்றச்சாட்டுகளை வெளிப்படையாக பதிவு செய்துள்ளன. </p><p>அவை இன்றும் இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள் காணாமலாக்கப்படுதல் உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்திய ஆதாரமாகின்றது.</p><p>

நம்பகமான ஆதாரங்கள் 
 2009ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின் இறுதிப் பகுதியில், சரணடைய வந்தவர்களை சட்டவிரோதமாகக் கொன்றது (Extrajudicial killings), சித்திரவதை செய்தது மற்றும் பொதுமக்களை இலக்கு வைத்துத் தாக்கியது போன்ற தீவிரமான மனித உரிமை மீறல்களில் சவேந்திர சில்வாவின் படைப்பிரிவுக்குப் பொறுப்பு இருப்பதாக ஐ.நா விசாரணை அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன. </p><p>

இந்த குற்றச்சாட்டுகளுக்கு நம்பகமான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி, அமெரிக்கா 2020இல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் நாட்டிற்குள் நுழைவதற்குத் தடை விதித்தது.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">வல்லரசுகளின் தடை</span></h2><p>

 பிரித்தானிய அரசும் (UK) 2025ஆம் ஆண்டில் அவர் மீது பயணத்தடை மற்றும் சொத்து முடக்கம் போன்ற தடைகளை விதித்தது.

அவர் சரணடைய முயன்ற தலைவர்களைக் கொல்ல உத்தரவிட்டார் மற்றும் அவரது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த படையினர் சட்டவிரோதக் கொலைகளைச் செய்தனர் என பிரித்தானியாவின் தடைக்கான காரணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05c40261-a417-447a-b40e-a2d7ae48450b/26-6a9fc4d2e6574.webp' /></p><p>2020 இல் அமெரிக்காவும், 2025 இல் பிரித்தானியாவும் தன் மீது விதித்துள்ள தடைகளுக்கான அடிப்படைக் காரணங்களைத் தான் தொடர்ந்து கேட்டு வருவதாக சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார். </p><p>ஒரு நாட்டின் இராணுவ தளபதி மீது உலகின் வல்லரசு நாடுகள் பயணத்தடை மற்றும் சொத்து முடக்கங்களை விதிப்பது என்பது சாதாரணமான ஒன்றல்ல.</p><p>சர்வதேச சட்டங்களின்படி, நம்பகமான மற்றும் தீவிரமான மனித உரிமை மீறல் ஆதாரங்களின் அடிப்படையிலேயே இத்தகைய 'மகிந்த்ச்கி பாணி' (Magnitsky-style) தடைகள் விதிக்கப்படுகின்றன. </p><p>சவேந்திர சில்வா தனக்குக் காரணம் தெரியவில்லை என்று கூறுவது, இந்தத் தடைகளுக்குப் பின்னால் உள்ள சர்வதேச அழுத்தங்களையும், உலக நாடுகள் இலங்கையின் உள்நாட்டுப் பொறுப்புக்கூறல் (Accountability) செயல்முறையின் மீது வைத்துள்ள அதிருப்தியையும் மறைக்க முயலும் ஒரு அரசியல் உத்தியாகவே தெரிகிறது.</p><p>இலங்கையின் உள்நாட்டு அரசியல் சூழலில், சவேந்திர சில்வா போன்ற இராணுவத் தலைவர்கள் நாட்டைப் பயங்கரவாதத்திலிருந்து மீட்ட 'யுத்த நாயகர்களாகவே' (War Heroes) பெரும்பான்மை மக்களால் பார்க்கப்படுகிறார்கள். </p><p>ஆனால், சர்வதேச சமூகத்தைப் பொறுத்தவரை, பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் மனித உரிமைகளை மீறுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.</p><p>இந்த நேர்காணலின் மூலம், உள்நாட்டில் தமக்கிருக்கும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி சர்வதேசக் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்க முடியும் என்ற ஒரு பிம்பத்தை சவேந்திர சில்வா கட்டமைக்க முயல்கிறாரா என்ற கேள்வி எழுவதாக தோன்றுகிறது.</p><p> ஆனால், அவர் சர்வதேச நீதிமன்றங்களை எதிர்கொள்ளத் தயார் என்று கூறினாலும், இலங்கை அரசாங்கம் இதுவரையில் எந்தவொரு சர்வதேச அல்லது கலப்பு நீதிமன்ற விசாரணைகளுக்கும் இடமளிக்கவில்லை என்பது இங்கு உற்றுநோக்கத்தக்கது.</p><p>
</p><p>
சுருக்கமாகக் கூறின், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என சவேந்திர சில்வா தொடர்ந்து மறுத்து வந்தாலும், சர்வதேச நாடுகள் மற்றும் ஐநா சபை அவர் மீது மிக முக்கியமான போர்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்தே தடைகளை விதித்துள்ளன என்பதே நிதர்சனம்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T08:08:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளைகள் சேர்கைக்கு இரண்டரை இலட்சம் லஞ்சம் பெற்ற பிரபல பாடசாலை அதிபர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/school-principal-accepts-a-bribe-2-5-lakh-rupees-1788842008"></link>
            <id>https://jvpnews.com/article/school-principal-accepts-a-bribe-2-5-lakh-rupees-1788842008</id>
            <summary type="text">&amp;nbsp; காலிப் பகுதி பிரபல பாடசாலை அதிபர் இரண்டு பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்ப்பதற்காக இலஞ்சமாக இரண்டரை இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்ட ஒருவர் கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; காலிப் பகுதி பிரபல பாடசாலை அதிபர் இரண்டு பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்ப்பதற்காக இலஞ்சமாக இரண்டரை இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

சந்தேகநபரான அதிபர், குறித்த பிள்ளைகளைச் சேர்ப்பதற்காக ஒரு பிள்ளைக்கு மூன்று லட்சம் ரூபாய் வீதம் இருவருக்கும் ஆறு லட்சம் ரூபாய் கோரிய பின்னர் அத்தொகை மூன்று லட்சம் ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/342abc73-56b2-402e-9095-18f829a24598/26-6a9f9019cb1c5.webp' /></p><h2>ஆறு லட்சம் ரூபாய்&nbsp;லஞ்சம் </h2><p> 

அதில் ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டு 2026ஆம் ஆண்டின் முதலாம் ஆண்டிற்கு ஒரு பிள்ளையைச் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

மற்றைய பிள்ளையை 8ஆம் வகுப்பில் சேர்ப்பதற்காக எஞ்சிய ஒன்றரை லட்சம் ரூபாயில் 50,000 ரூபாயைப் பெற்றுக்கொண்டு அப்பிள்ளையையும் பாடசாலையில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p> 

 பிள்ளைகளை பாடசாலையில் சேர்ப்பதற்குத் தேவையான பணிகளைச் செய்து கொடுத்தமைக்காக மேலும் இரண்டரை இலட்சம் ரூபாய் பணம் கோரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p> 

அப்பணத்தைக் கொடுக்காவிட்டால் இரண்டு பிள்ளைகளையும் பாடசாலையை விட்டு நீக்கிவிடுவதாகக் கூறி, இரண்டரை இலட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற முயன்றபோதே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.</p><p> 

 கைதான அதிபர் காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படு வருகின்றது.</p><p style="margin-left: 25px;"></p>]]></content>
            <updated>2026-09-08T08:06:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகன் சிறையில் ... களத்தில் குதிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rally-in-anuradhapura-led-by-mahinda-rajapaksa-1788852883"></link>
            <id>https://jvpnews.com/article/rally-in-anuradhapura-led-by-mahinda-rajapaksa-1788852883</id>
            <summary type="text">&amp;nbsp; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் அனுராதபுரத்தில் பேரணி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந் நிலையில் அனுராதபுரத்தில் ஏற்பாடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் அனுராதபுரத்தில் பேரணி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இந் நிலையில் அனுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணிக்கு ஐக்கிய தேசியக் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f563a342-a320-465c-b856-ef38984ee800/26-6a9fba94db441.webp' /></p><p></p><h2>முன்னதாக&nbsp;நாமல் ராஜபக்ஷ தலைமையில்&nbsp; பேரணி&nbsp; ஏற்பாடு</h2><p>

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
அதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தலைமையில் இந்த பேரணி முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p></p><p>
</p><p>
எனினும், அதனை சீர்குலைக்கும் நோக்கிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டதாக அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
 இந்த கைது நடவடிக்கையால் தளராமல், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில், அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள பேரணி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T08:04:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹாரி – மேகன் பிரிட்டன் திரும்பினாலும் அதிகாரம் கிடையாது: மன்னர் அதிரடி !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/no-power-for-harry-and-meghan-return-to-britain-1788854835"></link>
            <id>https://canadamirror.com/article/no-power-for-harry-and-meghan-return-to-britain-1788854835</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவிலிருந்து பிரித்தானியாவுக்கு மீண்டும் குடிபெயர்ந்துள்ள இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதியினர், அரச குடும்பத்தின் பிரதிநிதிகளாகவோ அல்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவிலிருந்து பிரித்தானியாவுக்கு மீண்டும் குடிபெயர்ந்துள்ள இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதியினர், அரச குடும்பத்தின் பிரதிநிதிகளாகவோ அல்லது பணிபுரியும் உறுப்பினர்களாகவோ செயல்பட முடியாது என பிரித்தானிய மன்னர் சார்லஸ் உத்தியோகபூர்வக் கடிதம் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p>

கடந்த 2020-ஆம் ஆண்டு அரச குடும்பத்தின் பொறுப்புகளிலிருந்து விலகி அமெரிக்காவில் குடியேறிய ஹாரி-மேகன் தம்பதியினர், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டனுக்குத் திரும்பியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fbb6c62-3f2c-4c21-b7d4-b4bf37c74acf/26-6a9fc2351b3a6.webp' /></p><h2>&nbsp;ஆறு ஆண்டுகளுக்குப்&nbsp;திரும்பிய&nbsp;ஹாரி – மேகன்</h2><p> </p><p>

இந்த திடீர் வருகையைத் தொடர்ந்து, அரச குடும்பத்தில் அவர்களின் அதிகாரம் மற்றும் அந்தஸ்து என்ன என்பது குறித்துப் பல்வேறு ஊகங்கள் எழுந்தன.</p><p> இந்நிலையில், அரச குடும்பத்தின் மூத்த நிர்வாகியான லார்ட் சாம்பர்லேனுக்கு (Lord Chamberlain) மன்னர் சார்லஸ் அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
</p><p>
அரசுத் துறைகள், ராணுவ அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த உத்தியோகபூர்வக் கடிதத்தில், “ஹாரி மற்றும் மேகன் தம்பதியினர் அரச பிரதிநிதிகளாகச் செயல்பட மாட்டார்கள். 

அவர்களின் ‘ஹிஸ்/ஹெர் ராயல் ஹைனஸ்’ (HRH) என்ற அரச குடும்பத்தின் சிறப்புப் பட்டங்கள் தொடர்ந்து இடைநீக்கத்திலேயே இருக்கும்” என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. </p><p>

மேலும், பிரிட்டனில் அவர்கள் மேற்கொள்ளும் தொண்டு மற்றும் வணிகச் செயல்பாடுகள் அனைத்தும் தனிப்பட்ட நபர்களின் நடவடிக்கையாகவே கருதப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
ஹாரி மற்றும் மேகன் தம்பதியினர் பிரிட்டனில் சாதாரணக் குடிமக்களாக வாழவே விரும்புகின்றனர் என்பதை உறுதிப்படுத்தவே மன்னர் இந்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார் எனப்க்கிங்ஹாம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p> 

அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் போர்ச்சுகல் ஆகிய இடங்களில் வீடுகளை வைத்துள்ள இத்தம்பதியினர், தங்களது குழந்தைகளின் கல்விக்காகவே பிரிட்டனுக்குத் திரும்பியுள்ள நிலையில், மன்னர் சார்லஸின் இந்த அறிவிப்பு சர்வதேசத்தின் கவனத்தைப் பெற்றுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-08T08:04:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் பள்ளிப்பிள்ளைகளின் புத்தகப்பைகள் ஏன் மிக பளுவானவையாக உள்ளன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/school-bags-weight-recommendations-in-france-1788854494"></link>
            <id>https://news.lankasri.com/article/school-bags-weight-recommendations-in-france-1788854494</id>
            <summary type="text">The problem of heavy school bags persists despite official weight recommendations in France: பிரான்சில் இந்த அளவுக்குதான் மாணவர்களின் புத்தகப்பைகளின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>The problem of heavy school bags persists despite official weight recommendations in France: பிரான்சில் இந்த அளவுக்குதான் மாணவர்களின் புத்தகப்பைகளின் எடை இருக்கவேண்டும் என பரிந்துரை இருந்தபோதிலும், அந்தப் பிரச்சினை நீண்ட காலமாக நீடிக்கிறது.
</p><p>

பளுவான புத்தகப்பைகள் என்னும் பிரச்சினை, உலக நாடுகள் பலவற்றில் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
</p><p>
பிள்ளைகள் முதுகில் பையைத் தொங்கவிட்டுக்கொண்டு, தூக்க முடியாமல், கூன் போட்டபடி பையை இழுத்துக்கொண்டு நடப்பதைப் பார்த்தால் எந்த பெற்றோருக்கும் மனம் வருந்தும்.</p><h3>

பளுவான புத்தகப்பைகள்
</h3><p>
பிரான்சைப் பொருத்தவரை, ஒரு மாணவன் அல்லது மாணவியின் பையின் எடை, அவர்களுடைய உடல் எடையில் 10 சதவிகிதத்துக்கு மேல் இருக்ககூடாது என பிரான்ஸ் கல்வி அமைச்சகத்தின் பரிந்துரை ஒன்று கூறுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78555fe7-aa80-489a-abbb-6d4fa5b34b81/26-6a9fc0dfa3ac1.webp' /></p><p>
அதாவது, 25 கிலோ உடல் எடையுள்ள ஒரு மாணவரின் புத்தகப்பை, 2.5 கிலோவுக்கு மேல் இருக்கக்கூடாது.
</p><p>
ஆனால், பல பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், பயிற்சி புத்தகங்கள், பைல்கள், லேப்டாப், விளையாட்டு உபகரணங்கள், உணவு மற்றும் தண்ணீர் என இத்தனை பொருட்களை மாணவ மாணவியர் ஒரு பையில் அடைத்துக்கொண்டு செல்வதால், அவர்கள் சுமக்கும் சுமை 17 சதவிகிதத்தைத் தாண்டிவிடுவதாக கூறுகிறார்கள் துறைசார் நிபுணர்கள்.
</p><p>
விடயம் என்னவென்றால், இவ்வளவு எடையுள்ள பையைத்தான் பிள்ளைகள் சுமக்கவேண்டும் என்பது வெறும் பரிந்துரைதான். அது விதி அல்ல.
</p><p>
ஆக, அதை விதியாக்கவேண்டும் என்கிறார்கள் பெற்றோரும், துறைசார் நிபுணர்களும்.&nbsp;</p><p></p><p>
மேலும், சில புத்தகங்களை பள்ளியிலேயே வைத்துவிட்டுவரும் வகையில் லாக்கர்களை அமைக்கலாம் என்றும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த பளுவான புத்தகப்பைகள், பிள்ளைகளின் முகுகுக்கு பிரச்சினையை உருவாக்குவதுடன், நிலைமையை மேலும் மோசமாக்கவும் கூடும்.
</p><p>
ஆக, பெற்றோரும், பிள்ளைகளின் பைகளை சோதித்து, இன்று எந்தெந்த புத்தகங்களைக் கொண்டு சென்றால் போதும் என்பதை கவனித்து தினமும் தேவையான புத்தகங்கள், நோட்டுகளைக் கொடுத்துவிடுவதாலும் பிரச்சினைகளை சிறிது குறைக்கலாம்.
</p><p>
சில நாடுகளில், ஒரு முழு புத்தகத்தையும் ஆண்டு முழுவதும் ஒரு மாணவன் அல்லது மாணவி தூக்கிக்கொண்டு செல்லாமல், ஒரு பருவத்துக்கு (Term) இவ்வளவு பாடம் என திட்டமிட்டு புத்தகங்களை அச்சிடும் நிலை உள்ளது. அதையும் பின்பற்றலாம்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T08:03:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரவி மோகனின் இயக்கத்தில் உருவாகும் ‘An Ordinary Man’ - இசையமைப்பாளர் இவரா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/kenisha-composing-music-jayam-ravi-movie-1788853537"></link>
            <id>https://manithan.com/article/kenisha-composing-music-jayam-ravi-movie-1788853537</id>
            <summary type="text">தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன். இவரது திரைப்படங்கள் மட்டுமின்றி, இவர் தேர்வு செய்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன். இவரது திரைப்படங்கள் மட்டுமின்றி, இவர் தேர்வு செய்து நடிக்கும் கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன.
</p><p>
கடைசியாக இவரது நடிப்பில் ‘பராசக்தி’ திரைப்படம் வெளியானது. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த ரவி மோகன், தனது மிரட்டலான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8ea6557-4463-4d51-a46c-b40f04064499/26-6a9fbff0909e8.webp' /></p><p></p><p>
</p><p>
தற்போது ரவி மோகன் ‘கராத்தே பாபு’, ‘பென்ஸ்’, ‘ப்ரோ கோட்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஒருபுறம் நடிகராக தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையில், மறுபுறம் திரைப்படம் ஒன்றை இயக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையையும் நிறைவேற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
</p><h2>
இயக்குநராக ரவி மோகன்
</h2><p>சில ஆண்டுகளுக்கு முன்பு ‘ரவி மோகன் ஸ்டூடியோஸ்’ என்ற பெயரில் தனது சொந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை ரவி மோகன் தொடங்கினார். தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் முதல் திரைப்படத்தை உருவாக்கும் பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9f2e500-2949-4e54-b1dd-3aa6c74e5bf0/26-6a9fbff14550a.webp' /></p><p>
</p><p>
அதன்படி, ‘An Ordinary Man’ என்ற திரைப்படத்தை ரவி மோகன் இயக்கி வருகிறார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.

இப்படத்தில் நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்து வருகிறார். </p><p>படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்திற்கு யார் இசையமைக்கிறார் என்பது குறித்தும் கடந்த சில நாட்களாக பல்வேறு செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f3bf6c0-d9e2-4f44-a1f2-157bb1d40169/26-6a9fbff1ed2cd.webp' /></p><p></p><p>
</p><h2>
இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு
</h2><p>இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ரவி மோகன் இயக்கி வரும் ‘An Ordinary Man’ திரைப்படத்திற்கு கெனிஷா இசையமைக்கிறார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நடிகராக பல்வேறு வெற்றிப் படங்களை வழங்கி வரும் ரவி மோகன், தற்போது இயக்குநராகவும் புதிய பயணத்தை தொடங்கியுள்ளதால், ‘An Ordinary Man’ திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு வலுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Dc-XM9hhCZa/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Dc-XM9hhCZa/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Dc-XM9hhCZa/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Ravi Mohan Studios (@ravimohanstudios)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T08:00:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஞ்சக்காட்டு மைனா!! நடிகை ஜனனி அசோக் குமாரின் ரீசெண்ட் புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/janani-ashok-kumar-yellow-saree-photoshoot-1788852862"></link>
            <id>https://viduppu.com/article/janani-ashok-kumar-yellow-saree-photoshoot-1788852862</id>
            <summary type="text">ஜனனி அசோக் குமார்சின்னத்திரையில் பிரபலமான நடிகை ஜனனி அசோக் குமார், மௌனராகம், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தனக்கென்று...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜனனி அசோக் குமார்</h2><p>சின்னத்திரையில் பிரபலமான நடிகை ஜனனி அசோக் குமார், மௌனராகம், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தார். </p><p>மேலும், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இதயம் எனும் சீரியலில் கதாநாயகியாக நடித்து பின் அதிலிருந்து விலகினார்.

வேற மாறி ஆபீஸ் எனும் வெப் தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19ec015b-9d92-4d06-b7ef-a1fb742ab23a/26-6a9fba8ca5d7f.webp' /></p><p>
</p><p>
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி, தற்போது இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன் பக்கம் சென்றுள்ளார்.

1.4 மில்லியன் பேர் ஃபாலோ செய்யும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரத்யேக புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தனிப்பட்ட அப்டேட்களை பெறும் வசதியை ஆரம்பித்துள்ளார். </p><p>இந்த சப்ஸ்கிரிப்ஷன் மூலம் அவர் மாதம் சுமார் 6 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுகிறாராம். தற்போது மஞ்சள் நிற சேலையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-08T08:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பட்ஜெட்டை விட 60 மடங்கு அதிக லாபம் தந்த 'ஹனுமன் அன்ஷ்' திரைப்படம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/hanuman-ansh-movie-budget-and-box-office-1788850115"></link>
            <id>https://cineulagam.com/article/hanuman-ansh-movie-budget-and-box-office-1788850115</id>
            <summary type="text">பாலிவுட் திரையுலகில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வரும் &#039;ஹனுமன் அன்ஷ்&#039; திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் வசூல் விவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாலிவுட் திரையுலகில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வரும் 'ஹனுமன் அன்ஷ்' திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><h2>

'ஹனுமன் அன்ஷ்'
</h2><p>
இயக்குநர் விஷால் சத்ருவேதி இயக்கத்தில் ஷோபினவ் சத்யா நடிப்பில் உருவாகி கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்த திரைப்படம் 'ஹனுமன் அன்ஷ்'. இப்படத்தை ஸ்வாம்பு மீடியா நெட்வொர்க் மற்றும் ஹோலி கவ் ஹோம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d17b691-68a2-4a31-867c-b71fa65e9110/26-6a9fafc7299cf.webp' /></p><h3>

ரிலீஸ்
</h3><p>
இப்படத்தில் சந்தன் கே ஆனந்த், அனில் ரஸ்தோகி, நிகில் துபே, பகவான்தாஸ் படேல் ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த மாதம் வெளியான இப்படம் சிறந்த விமர்சனத்தை பெற்றது. முதல் வாரத்தில் சற்று குறைவான வசூல் ஈட்டியிருந்தாலும், அதன்பின் இப்படத்தை காண ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்தனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16990a83-cbdf-4955-90f1-181301f1c65b/26-6a9fafc6723d2.webp' /></p><p>ரசிகர்கள் கொடுத்த பேராதரவின் காரணமாக இப்படத்திற்கு இரண்டாவது வாரத்தில் இருந்து வசூல் மழை தொடங்கியது. 'ஹனுமன் அன்ஷ்' திரைப்படம் வெளியாகி ஒரு மாதத்திற்கும் மேலாகியும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது.</p><p></p><p> </p><h4>

பட்ஜெட், வசூல் விவரம்</h4><p>

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'ஹனுமன் அன்ஷ்' திரைப்படம் ரூ. 1.80 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. ரூ. 1.80 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 130 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் 'ஹனுமன் அன்ஷ்' திரைப்படம் பட்ஜெட்டை விட 60 மடங்கு லாபத்தை அள்ளிக்கொடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3c9f85f-a881-4045-a003-6496be19a196/26-6a9fafc7dc276.webp' /></p>]]></content>
            <updated>2026-09-08T08:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மக்களுக்கு ஷாக் கொடுத்த தங்கம் விலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gold-prices-shock-the-people-of-sri-lanka-1788854154"></link>
            <id>https://jvpnews.com/article/gold-prices-shock-the-people-of-sri-lanka-1788854154</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (08) 1,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று (07) 24 க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (08) 1,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
நேற்று (07) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 376,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று அதன் விலை 377,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/502dc738-2f38-49fd-80a1-4bd32038e987/26-6a9fbf8bf081e.webp' /></p><p>
</p><p>
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 377,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 347,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.</p><p></p><p>

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,375 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-08T07:52:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஆற்றல் - 2027ஆம் ஆண்டிற்கு பாபா வங்காவின் கணிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/baba-vanga-prediction-about-2027-humans-superpower-1788853590"></link>
            <id>https://news.lankasri.com/article/baba-vanga-prediction-about-2027-humans-superpower-1788853590</id>
            <summary type="text">baba vanga prediction about 2027 humans get super power: 2027ஆம் ஆண்டில் சிலருக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஆற்றல் கிடைக்கும் என பாபா வங்கா கணிப்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>baba vanga prediction about 2027 humans get super power: 2027ஆம் ஆண்டில் சிலருக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஆற்றல் கிடைக்கும் என பாபா வங்கா கணிப்பு தெரிவித்துள்ளார்.</p><h3> 

2027ஆம் ஆண்டிற்கு பாபா வங்காவின் கணிப்பு</h3><p> 

பால்கன் நாடுகளின் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் பாபா வங்கா, 1911ஆம் ஆண்டில் பல்கேரியாவில் பிறந்து, 1996 ஆம் ஆண்டில் மரணமடைந்தவர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/493b1ce9-d43d-49b6-a46b-968a0c182506/26-6a9fbd580ecaa.webp' /></p><p>
சிறு வயதிலேயே கண்பார்வையை இழந்த பாபா வங்கா, அதன் பின்னர் எதிர்காலத்தை கணிக்கும் திறனை பெற்றதாக கூறப்படுகிறார். </p><p>

9/11 இரட்டைக்கோபுர தாக்குதல், இளவரசி டயானா மரணம், கோவிட் என இவர் பல்வேறு நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்ததாக நம்பப்படுவதால், பாபா வங்கா உலகளவில் கவனம் பெற்றார்.&nbsp;</p><p>

இந்நிலையில், 2027 ஆம் ஆண்டில் நடக்கப்போவதாக கூறப்படும் இவரின் விசித்திரமான கணிப்பு ஒன்று குறித்து அவரது ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர்.&nbsp;</p><p></p><p> 

 2027 ஆம் ஆண்டில் ஒரு மர்மமான நோய் அல்லது மரபணுப் பரிசோதனை சில மனிதர்களுக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஆற்றல்களை வழங்கும் என அவர் கணித்துள்ளதாக கூறப்படுகிறது. </p><p>

இந்த நோய் அல்லது பரிசோதனை பலரை பாதித்தாலும், ஒரு சிலருக்கு மட்டுமே இந்த சக்திகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. </p><p>

ஆனால், அவர்களின் சக்திகள் என்னவாக இருக்கும் அல்லது இது எப்படி நிகழும் என்பது குறித்த தகவல்கள் எதுவும் இல்லை. </p><p>

இதே போல் 2026 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் வேற்று கிரகவாசிகள் மனிதர்களை தொடர்பு கொள்ளக்கூடும் என கணிப்பு தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், புதிய உலகப் போர், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பெரும் இயற்கை பேரழிவுகள், தொழில்நுட்ப அச்சுறுத்தல்கள் ஆகியவை குறித்தும் கணிப்பு தெரிவித்திருந்தார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T07:46:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்வரும் செப்டம்பர் 19 முதல் இலங்கையில் கடுமையாக நடைமுறைக்கு வரும் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eat-belt-rule-on-expressways-from-september-19-1788851075"></link>
            <id>https://tamilwin.com/article/eat-belt-rule-on-expressways-from-september-19-1788851075</id>
            <summary type="text">அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணியும் திட்டத்தை எதிர்வரும் செப்டம்பர் 19 முதல் அரசாங்கம் கடுமையாக நடைமுறைப்படுத்தும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணியும் திட்டத்தை எதிர்வரும் செப்டம்பர் 19 முதல் அரசாங்கம் கடுமையாக நடைமுறைப்படுத்தும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். </p><p>

நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (08.09.2026) கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>வாகனங்களில் ஆசனப்பட்டி</h2><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த விதி ஓராண்டுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் சில பயன்படுத்தப்பட்ட வாகனங்களில் ஆசனப்பட்டி பொருத்தப்படாததால், நடைமுறை காரணங்களால் அதன் அமலாக்கம் தாமதமானது.
</p><p>
ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டதால், செப்டெம்பர் 19 முதல் இந்த விதியைக் கடுமையாக நடைமுறைப்படுத்த நாங்கள் இப்போது முடிவு செய்துள்ளோம்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பாடசாலை வான்களுக்கும் இந்தப் புதிய விதி பொருந்தும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acef53b3-b083-43fc-baee-281616e99356/26-6a9fbb4e646e8.webp' /></p><h2>சாலைத் தகுதிச் சோதனை</h2><p>
</p><p>
அத்துடன் பேருந்துகள் மற்றும் வான்கள் உள்ளிட்ட அனைத்து பயணிகள் போக்குவரத்து வாகனங்களும், இந்த ஆண்டின் இறுதி முதல் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை அல்லது 5000 கிலோமீட்டர் பயணித்த பிறகு சாலைத் தகுதிச் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் நல்ல ஓட்டும் நிலையில் இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம். 

பிரேக் மற்றும் டயர் பிரச்சினைகள் உட்பட வான்கள் மற்றும் பேருந்துகளில் உள்ள குறைபாடுகளால் சில பெரிய விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதை நாங்கள் கவனித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T07:38:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[Hanuman Ansh (ஹிந்தி): திரை விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/hanuman-ansh-movie-review-1788852840"></link>
            <id>https://cineulagam.com/article/hanuman-ansh-movie-review-1788852840</id>
            <summary type="text">இந்தியில் சுமார் 2 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, 100 கோடி ரூபாயைத் தாண்டி வசூலில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் ஹனுமன் அன்ஷ் திரைப்படம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியில் சுமார் 2 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, 100 கோடி ரூபாயைத் தாண்டி வசூலில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் ஹனுமன் அன்ஷ் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd66b827-b9f2-49ac-a87b-b6ba3ed83531/26-6a9fba6bd3465.webp' /></p><p></p><h2>கதைக்களம் </h2><p>

ராம் நந்தன் போஸாலே என்ற புரட்சியாளர், தனது பசியைப் போக்கி காவலர்களிடம் இருந்து காப்பாற்றிய நீம் கரோலி பாபாவின் வாழ்க்கையின் தொடக்கம் குறித்து பேசுகிறார். 

1905-ஆம் ஆண்டில் பிராஜில் வசிக்கும் லக்ஷ்மி நாராயணன் என்ற சிறுவனின் அம்மா இறந்துவிடுகிறார். </p><p>அவர் கடவுளிடம் சென்றுவிட்டார் என்று உறவினர்கள் கூற, நானும் கடவுள் ராமரிடம் செல்கிறேன் என்கிறான் லக்ஷ்மி நாராயணன்.

இந்த சமயத்தில் அவனது அப்பா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள, அது சுத்தமாக பிடிக்காத லக்ஷ்மி நாராயணன் வீட்டைவிட்டு வெளியேறி ஹனுமனின் பக்தனாக துறவறம் மேற்கொள்கிறான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a106062a-5f6a-4a39-9eca-6bbdfbe7a909/26-6a9fbadb9468c.webp' /></p><p> 

ஒவ்வொரு ஊராக துறவிகளுடன் இணைந்து கடவுளை துதிக்கும் லக்ஷ்மி நாராயணன், ராஜ்கோட்டில் உள்ள ஒரு வைஷ்ணவக் கோயிலை அடைகிறான்.

அங்கு வயதான அர்ச்சகர் சந்திக்கும் சிறுவன், அந்த கோயில் பல ஆண்டுகளுக்கு முன் வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்றியதாக மரம் தன்னிடம் கூறியது என்று கூறுகிறான். </p><p>

அதைக் கேட்டு வியக்கும் முதியவர் அவனை சோதித்துப் பார்க்க முடிவு செய்கிறார். ஆனால், சிறுவன் லக்ஷ்மி நாராயணன் அமைதியாக அங்கிருந்து வெளியேறி விடுகிறான்.

பின்னர் ஒரு ஊரில் கடவுள் வழிபாடு முடிந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுவதை காண்கிறான்.

ஆனால், அங்கு சில சிறுவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதை காணும் லக்ஷ்மி நாராயணன், தனக்கு வழங்கப்பட்ட ஒரு கையளவு பிரசாதத்தை அவர்களுக்கு கொடுக்க அங்கு நிகழும் அற்புதத்தை பூசாரி கண்டு ஆச்சரியப்படுகிறார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bf32609-790a-44cb-b10a-447b53d1d864/26-6a9fbadc6594d.webp' /></p><p>உடனே அந்த சிறுவர்களையும் சரிசமமாக நடத்தி, இலை போட்டு பந்தி பரிமாறி, லக்ஷ்மி நாராயணனை கடவுளின் அவதாரமாக வணங்குகிறார் அந்த பூசாரி.

இவ்வாறாக சிறுவன் லக்ஷ்மி நாராயணன் சில அற்புதங்களை நிகழ்த்தி லக்ஷ்மிதாஸ் ஆகி, பின் எப்படி நீம் கரோலி பாபாவாக உருமாறினார் என்பதே மீதிக்கதை.</p><h2>படம் பற்றிய அலசல் </h2><p>
 
உத்தர்பிரதேசத்தில் லக்ஷ்மி நாராயணனாக பிறந்து நீம் கரோலி பாபாவாக வாழ்ந்து மறைந்தவரின் வரலாற்றை, டாக்டர்.விஷால் சதுர்வேதி திரைப்படமாக இயக்கியுள்ளார்.

நீம் கரோலி பாபா சிறுவயது முதல் பெரியவராக வளர்ந்து வரையிலான காட்சிகளை மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர்.
</p><p>
பொதுவாக, ஆன்மிகம் சார்ந்த படங்கள் என்றாலே கிராஃபிக்ஸை பயன்படுத்தி எதார்த்தத்தை மீறிய காட்சிகளாக எடுப்பார்கள். 

ஆனால், இந்த திரைப்படத்தில் அப்படி இல்லாமல் மருந்துக்கு மட்டுமே கிராஃபிக்ஸை ஒரே ஒரு காட்சி பயன்படுத்தி, மற்ற காட்சிகளை மிகவும் எதார்த்தமாக காட்டியதால் படத்துடன் எளிதாக ஒன்ற முடிகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17aab44e-04e4-48a8-be8d-63d301962a81/26-6a9fbadd1c899.webp' /></p><p>அன்பு, தீங்கு செய்யாமை, உதவி செய்தல் போன்றவற்றை வசனங்களாக போதனை செய்யாமல், போகிற போக்கில் ரசிக்கும் வகையில் காட்டியவிதம் மிகச்சிறப்பு.

இளம் வயது பாபாவாக நடித்திருக்கும் விஹான் ஷெட்கே நடிப்பில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். வசன உச்சரிப்பு, உடல்மொழி என அட்டகாசமான நடிப்பை தந்திருக்கிறார்.
</p><p>
விஹானின் நடிப்பைப் பார்க்கும்போது இன்னும் கூட இளம் வயது பாபாவின் காட்சிகளை நீட்டியிருக்கலாமே என்று கேட்க தோன்றும்.

நடிகர் ஷோபினாவ் சத்யா, நீம் கரோலி பாபாவாகவே வாழ்ந்திருக்கிறார் என்றே கூறலாம். அந்தளவிற்கு ஒரு பாபாவின் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63317ba4-1001-46d9-9f27-4d3e0345b1f4/26-6a9fbaddcbb58.webp' /></p><p>ரயிலில் இருந்து தன்னை வலுக்கட்டாயமாக இறங்கிவிட்டதும் அவர் கோபத்தை கட்டுப்படுத்தி சிரிக்கும் காட்சி மிரட்டல்.

சாந்தமான முகத்தை வைத்துக்கொண்டு அவர் பேசும் வசனங்கள் பிரமாதம். படத்தில் வரும் பிற கதாபாத்திரங்களும் கச்சிதமாக நடித்துள்ளனர். 

காட்சிக்கு காட்சி எங்கும் தொய்வில்லாமல் ரசிக்கும்படியாக திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் விஷால் சதுர்வேதி. </p><p>

படத்திற்கு மற்றொரு பலம் சாது சுஷில் திவாரியின் பாடல்களும், பின்னணி இசையும். விஷால் பாவாவின் ஒளிப்பதிவு அருமை. சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவை காட்டிய விதம் சிறப்பு. 

இரண்டரை மணிநேரம் திரைப்படத்தை நேர்த்தியாக கொடுத்துள்ளார் படத்தொகுப்பாளர் ஷான்க் ராஜாத்யாக்ஷா.</p><p></p><p><b><u>க்ளாப்ஸ் </u></b></p><p>

ஷோபினாவ் சத்யா, விஹான் ஷெட்கே
</p><p> 
தொய்வில்லாத திரைக்கதை </p><p>காட்சியமைப்புகள்</p><p>
பாடல்கள், பின்னணி இசை </p><p><b><u>

பல்ப்ஸ் </u></b></p><p>

பெரிதாக ஒன்றுமில்லை </p><h5><b>


மொத்தத்தில் நல்ல கருத்துக்களை கூறியிருக்கும் இந்த Hanuman Ansh திரைப்படத்தை, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.</b></h5><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45d61863-25d2-4414-9c84-d72c6a2aa3cd/26-6a9fba6b24a3c.webp' /></p>]]></content>
            <updated>2026-09-08T07:36:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் மனைவியின் ஜாதகத்தில் ராஜயோகம் - ராஜபக்சர்களை நிலைகுலைய வைத்துள்ள தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-s-media-clarify-about-fake-news-1788748191"></link>
            <id>https://tamilwin.com/article/namal-s-media-clarify-about-fake-news-1788748191</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. </p><p>

அதில் முக்கியமானதாக நாமல் ராஜபக்சவின் மனைவி, அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாக அதிகளவில் பேசப்பட்ட வந்த நிலையில், அதனை நாமலின் ஊடகப் பிரிவு முற்றாக மறுத்துள்ளது. </p><p>

நாமல் மற்றும் அவரது மனைவி தொடர்பிலான செய்திகள் பொய்யான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை என நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.</p><p> </p><h2><b>

லிமினி ராஜபக்சவின் ஜாதகம் </b></h2><p>சமூக வலைத்தளங்களுக்கு வெளியிடப்பட்ட செய்தி ஒன்றில், நாமல் ராஜபக்ச சுகயீனமுற்றுள்ளதாகவும், அவருக்கு சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9622954d-3bcf-4cdd-b4cd-634de6ecedc9/26-6a9ec2abbad22.webp' /></p><p>அத்துடன், மற்றுமொரு பேஸ்புக் பக்கம் ஊடாகப் பரவிய பதிவில், நாமல் ராஜபக்சவின் இடத்தை நிரப்புவதற்காக அவரது மனைவி லிமினி ராஜபக்ச எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி அனுரராதபுரத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் மேடையில் ஏறவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. </p><p>

மற்றுமொரு செய்தி இணையத்தளம், லிமினி ராஜபக்சவின் ஜாதகம் முன்னாள் தலைவிகளான சிறிமா பண்டாரநாயக்க மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகியோரைப் போல பலத்தன்மை வாய்ந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன் அவரது வருகை புரட்சியை ஏற்படுத்தப் போவதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது. 

இவ்வாறு போலியாக தயாரிக்கப்பட்டு பகிரப்படும் செய்திப் பதிவுகளை போலி செய்தி என நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.</p><p> 

குறித்த தகவல்கள் முழுமையாக திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படும் பொய்யான பிரச்சாரங்கள் என நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவு மேலும் உறுதிப்படுத்துகிறது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T07:35:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள 23,000 பேர் : பிரதமர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/recruitment-of-23-000-teachers-in-sl-pm-harini-1788850553"></link>
            <id>https://ibctamil.com/article/recruitment-of-23-000-teachers-in-sl-pm-harini-1788850553</id>
            <summary type="text">நாட்டிலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்காக 23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சைகள் நடத்தப்பட்டுள்ளதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டிலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்காக 23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சைகள் நடத்தப்பட்டுள்ளதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.</p><p>நாடாளுமன்றில் இன்று (08) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலும், நடப்பு ஆண்டுக்குள் ஆசிரியர் வெற்றிடங்களில் 50 சதவீதத்தை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.</p><p></p><h2>&nbsp;டிஜிட்டல் பொருளாதார அமைச்சு</h2><p>அத்துடன் பாடசாலைகளில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள மின்னணு சாதனங்களை பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கான தெளிவான நடைமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29f3e7aa-a49e-4802-8b83-87d3968a1f72/26-6a9fba151ffc4.webp' /></p><p>
</p><p>
மேலும், டிஜிட்டல் பொருளாதார அமைச்சுடன் இணைந்து கல்வித்துறைக்கான புதிய வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T07:32:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளைஞரொருவர் கொடூரமாக அடித்து தீயிட்டு எரித்துக்கொலை! சவப்பெட்டியில் மறைக்கப்பட்ட சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/friend-killed-and-burned-after-drinking-alcohol-1788850598"></link>
            <id>https://tamilwin.com/article/friend-killed-and-burned-after-drinking-alcohol-1788850598</id>
            <summary type="text">கண்டி - தலத்துவோயா பொலிஸ் எல்லைக்குட்பட்ட பவ்லானா கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் அடித்துக்கொலை செய்யப்பட்டு பின்னர் எரிக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் உடல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி - தலத்துவோயா பொலிஸ் எல்லைக்குட்பட்ட பவ்லானா கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் அடித்துக்கொலை செய்யப்பட்டு பின்னர் எரிக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இன்று காலை (8) உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தலத்துவோயா பொலிஸ் தெரிவித்துள்ளது.
</p><p>
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர், பவ்லானா கிராமத்தை சேர்ந்த முதியன்செலகே சாந்த சஞ்சய பண்டார (29) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><h2>பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு&nbsp;</h2><p>
</p><p>
தனது அண்ணனை இரண்டு நாட்களாகக் காணவில்லை என்ற சந்தேகத்தின் பேரில், அவரது தம்பி தலத்துவோயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02a0ce4f-a837-447d-8dd5-20582a36810f/26-6a9fb9f44ac19.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து அவர் கடைசியாக சந்தித்த இரண்டு நண்பர்களிடம் விசாரணை நடத்திய பின்னர், இந்த கொலை குறித்த தகவலை பொலிஸ் கண்டறிந்துள்ளது.</p><p>

மது அருந்திவிட்டு தங்கள் நண்பரை கொலை செய்த பின்னர், உடலை எரித்து வனப்பகுதிக்கு எடுத்துச் சென்று, சவப்பெட்டியில் வைத்து வனப்பகுதியில் மறைத்து வைத்ததாக சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த கொலை சம்பவம் தொடர்பாக இன்று (8) நீதித்துறை விசாரணை நடைபெற உள்ளது. </p><p>

இச்சம்பவம் குறித்து தலத்துவோயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T07:32:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடகங்களின் பயன்பாடு குறித்து கவலையடையும் பிரதமர் ஹரிணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/great-need-cultured-people-on-social-media-harini-1788850843"></link>
            <id>https://tamilwin.com/article/great-need-cultured-people-on-social-media-harini-1788850843</id>
            <summary type="text">சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது சிறுவர்கள், பெண்கள் மற்றும்
நிர்க்கதியானவர்களை இலக்காகக் கொண்டு வெளியிடப்படும் கருத்துக்களைப்
பார்க்கும்போது, ஒரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது சிறுவர்கள், பெண்கள் மற்றும்
நிர்க்கதியானவர்களை இலக்காகக் கொண்டு வெளியிடப்படும் கருத்துக்களைப்
பார்க்கும்போது, ஒரு பண்பாடான மனிதனின் தேவை தெளிவாகப் புலப்படுவதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
</p><p>
கம்பஹா நகர சபை கேட்போர் கூடத்தில் நேற்று(07.09.2026) நடைபெற்ற 'கம்பஹா இலக்கிய விழாவில்'
பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு
குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>மாற்றத்துக்கான பயணத்தை ஆரம்பித்து</h2><p>மேலும் தெரிவிக்கையில்,

"பண்பாடான மனிதர் என்பவர் புத்தகங்கள் மற்றும் நூல்களிலிருந்து அறிவை மட்டும்
பெற்றவரோ அல்லது மனப்பாடம் செய்தவற்றை முன்வைப்பவரோ அல்ல. மாறாக, இலக்கியப்
படைப்புகளின் ஊடாகத் தனது உள்ளார்ந்த மனநிலையில் மாற்றத்தை
ஏற்படுத்திக்கொண்டு, மனிதநேய உணர்வைச் சமூகத்திற்கு வெளிப்படுத்தும் ஒருவரே
பண்பாடான மனிதராவார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cf1a24c-a318-4571-b533-3eda13a84b45/26-6a9fb9618a6d6.webp' /></p><p>அத்தகைய மாற்றத்தையும் உணர்வுபூர்வமான தன்மையையும் கொண்ட
மனிதரால் வேறு எந்தவொரு நபருக்கும் அவமதிப்போ, மனவேதனையோ அல்லது அவமரியாதையோ
ஏற்படாது.</p><p>'பண்பாடான பிரஜையொன்றைக் கண்டடைதல்' என்ற இக்கருப்பொருள் மிகவும்
காலத்துக்கேற்றதாகும். </p><p>நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பல்,
உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துதல்
ஆகியவற்றுக்கு இணையாக, மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பண்பாடான மனிதனை
உருவாக்குவதும் அரசாங்கத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும்.
</p><p>
மாற்றத்துக்கான பயணத்தை ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் இந்தத்
தருணத்தில், அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு இவ்வாறான நடவடிக்கைகள் மிகவும்
முக்கியமானவையாகும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T07:31:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அய்யனார் துணை சீரியல் நடிகரின் மகன் திருமணம்! கலந்துகொண்ட நடிகர் விக்ரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ayyanar-thunai-serial-actor-son-marriage-1788848498"></link>
            <id>https://cineulagam.com/article/ayyanar-thunai-serial-actor-son-marriage-1788848498</id>
            <summary type="text">அய்யனார் துணை சீரியல் நடிகர் சூப்பர் குட் கண்ணனின் மகன் திருமணத்தில், அவருடைய ஆருயிர் நண்பரும் முன்னணி நடிகருமான விக்ரம் கலந்துகொண்டுள்ளார். அந்த புகை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அய்யனார் துணை சீரியல் நடிகர் சூப்பர் குட் கண்ணனின் மகன் திருமணத்தில், அவருடைய ஆருயிர் நண்பரும் முன்னணி நடிகருமான விக்ரம் கலந்துகொண்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7132781f-afd0-455d-b0eb-fa88865f2859/26-6a9fa9771b7a8.webp' /></p><p></p><p>
</p><h2>
சூப்பர் குட் கண்ணன்</h2><p>

திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சூப்பர் குட் கண்ணன். இவர் மௌன ராகம், அவளும் நானும், பொன்னி உள்ளிட்ட பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், தற்போது விஜய் தொலைக்காட்சியின் நம்பர் 1 சீரியலான '<a href="https://www.youtube.com/watch?v=HwSvIketREU" target="_blank">அய்யனார் </a>துணை'யில் கதாநாயகியின் தந்தையாக நடித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61618de0-58f8-47eb-bba9-31a310894204/26-6a9fa975aaa40.webp' /></p><p>
</p><h2>
மகன் திருமணம்
</h2><p>
இந்நிலையில், நடிகர் சூப்பர் குட் கண்ணனின் மகன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த திருமணத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a8746ed-ba52-4f9e-af57-fe943d5335f4/26-6a9fa97662237.webp' /></p><p></p><p>
</p><h3>பதிவு
</h3><p>
இதுகுறித்து நடிகர் கண்ணன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், " என் மகன் ஆகாஷ் திருமணத்தில் என் ஆருயிர் நண்பன் விக்ரமுடன்" என தெரிவித்துள்ளார். மேலும், ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை திருமண ஜோடிக்கு சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DdAyuDly6Ss/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DdAyuDly6Ss/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DdAyuDly6Ss/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Supergood Kannan (@supergoodkannan)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-08T07:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட மாகாண பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள்; பிரதமர் ஹரிணி கூறிய விடயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/teacher-action-to-fill-the-vacancy-npc-pm-harini-1788852368"></link>
            <id>https://jvpnews.com/article/teacher-action-to-fill-the-vacancy-npc-pm-harini-1788852368</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வட மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்காக 23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சைகள் நடத்தப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வட மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்காக 23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சைகள் நடத்தப்பட்டுள்ளதாகத் பிரதமர் ஹரிணி அமரசூரிய, நாடாளும்ன்றில் இன்று (8) தெரிவித்துள்ளார்.
</p><p>
வட மாகாண பாடசாலைகளில் 170 தகவல் தொழில்நுட்ப (ICT) ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், ICT ஆசிரியர் பணியிடங்களில் சுமார் 31 சதவீத வெற்றிடமாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0d71a82-bd2d-40db-8a15-ce00b4405d0b/26-6a9fb891d8913.webp' /></p><h2>&nbsp;23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு&nbsp;</h2><p>
</p><p>
குறிப்பாக தீவகம், தென்மராட்சி மற்றும் மடு ஆகிய கல்வி வலயங்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமான ICT ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ICT ஆசிரியர் வெற்றிடங்கள் காரணமாக, பாடசாலைகளில் பழுதடையும் கணினிகள், ஸ்மார்ட் பலகைகள் மற்றும் மடிக்கணினிகளைப் பழுதுபார்ப்பதிலும், அவற்றுக்கான தொழில்நுட்ப மதிப்பீட்டு அறிக்கைகளை வழங்குவதிலும் பெருமளவு தாமதம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

இதற்குப் பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்காக 23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சைகள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், நடப்பு ஆண்டுக்குள் ஆசிரியர் வெற்றிடங்களில் 50 சதவீதத்தை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.</p><p></p><p>

இதனிடையே, பாடசாலைகளில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள மின்னணு சாதனங்களை எரிப்பது அல்லது மண்ணில் புதைப்பது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அவற்றை முறையாக மறுசுழற்சி செய்வதற்கான நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

அதற்குப் பதிலளித்த பிரதமர், மின்னணுக் கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கான தெளிவான நடைமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சுடன் இணைந்து கல்வித்துறைக்கான புதிய வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய இதன்போது மேலும், தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T07:23:08+00:00</updated>
        </entry>
    </feed>
