<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-10T18:17:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மசகு எண்ணெயை அவசரமாக கொள்வனவு செய்யும் சீனா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/china-refineries-scramble-for-non-iran-crude-1789059908"></link>
            <id>https://ibctamil.com/article/china-refineries-scramble-for-non-iran-crude-1789059908</id>
            <summary type="text">சீனாவின் சுயாதீன மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், மேற்கு ஆப்ரிக்கா, கனடா மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலிருந்து மசகு எண்ணெயை அவசரமாகக் கொள்வனவு செய்ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவின் சுயாதீன மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், மேற்கு ஆப்ரிக்கா, கனடா மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலிருந்து மசகு எண்ணெயை அவசரமாகக் கொள்வனவு செய்ய முற்பட்டு வருகின்றன.</p><p>ஈரானிய மற்றும் ரஷ்ய விநியோகங்களில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான இராணுவ மோதல்கள் தீவிரமடைந்துள்ளது.</p><p>
</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>இதனால், ஹோர்முஸ் நீரிணை வழியிலான எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, பிரெண்ட் ரக மசகு எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் பீப்பாய் ஒன்றுக்கு 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.
</p><p>
இந்நிலையிலேயே சீன நிறுவனங்கள் மாற்று வழிகளில் எண்ணெயைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e6e8625-5b94-4fd8-a70b-d0f4e2eb2654/26-6aa2f16a8b024.webp' /></p><p>இதன் காரணமாக சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச ஆற்றல் மாநாட்டிற்கு சீன நிறுவனங்களின் பிரதிநிதிகள் பெருமளவில் சென்றுள்ளதுடன் சந்தையில் மசகு எண்ணெய்க்கான கூடுதல் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
</p><p>
அதேவேளை, சீனாவின் உள்நாட்டு எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யவும், ஆண்டின் இறுதிக்குள் தமக்கு ஒதுக்கப்பட்ட இறக்குமதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி முடிக்கவும் இத்தகைய அவசர கொள்வனவுகள் தீவிரமடைந்துள்ளதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T18:05:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[செங்கடலின் முக்கிய கடற்கரை நகரை கைப்பற்றிய ஹவுதிக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/houthis-capture-key-red-sea-coastal-city-1789063221"></link>
            <id>https://canadamirror.com/article/houthis-capture-key-red-sea-coastal-city-1789063221</id>
            <summary type="text">தெற்கு செங்கடலில் அமைந்துள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஸூக்கார் தீவின் (Zuqar Island) கட்டுப்பாட்டை ஹூதி கிளர்ச்சியாளர்கள் முழுமையாகக் கைப்பற்றிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு செங்கடலில் அமைந்துள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஸூக்கார் தீவின் (Zuqar Island) கட்டுப்பாட்டை ஹூதி கிளர்ச்சியாளர்கள் முழுமையாகக் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/210b914e-fbf6-46fa-9b8e-c4a37e343c11/26-6aa2f036e176b.webp' /></p><p>

படகுகளில் வந்து மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் தரைவழித் தாக்குதலைத் தொடர்ந்து குறித்த தீவு ஹூதி கிளர்ச்சியாளர்களின் பிடிக்குள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்தக் கைப்பற்றலின் ஊடாக, செங்கடலின் கடல்சார் பிராந்தியத்தில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தமது இராணுவ மற்றும் மூலோபாய பலத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்ள முற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-10T18:00:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழலால் உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/oil-prices-rise-unstable-situation-in-middle-east-1789061803"></link>
            <id>https://canadamirror.com/article/oil-prices-rise-unstable-situation-in-middle-east-1789061803</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழல் காரணமாகவும் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்து நிலை காரணமாகவும், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழல் காரணமாகவும் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்து நிலை காரணமாகவும், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை 105 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6228de5c-1cf4-45eb-8595-b81e9a406a36/26-6aa2eaad25497.webp' /></p><p>புளூம்பர்க் (Bloomberg) செய்திச் சேவை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 4.25% (4.30 டொலர்) அதிகரித்து 105.51 டொலராக உயர்ந்துள்ளது.
</p><p>
அத்துடன், அமெரிக்காவின் NYMEX WTI ரக மசகு எண்ணெய் விலையும் 4.24% (4.07 டொலர்) அதிகரித்து 100.12 டொலரை எட்டியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-10T17:36:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைத் தமிழரை செருப்பால் அடிக்க முற்பட்ட இராமேஸ்வரம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் ஆட்சியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-tamils-in-rameshwaram-been-disrespected-1789061152"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-tamils-in-rameshwaram-been-disrespected-1789061152</id>
            <summary type="text">இராமேஸ்வரத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள் சார் ஆட்சியர் கலை மன்னனிடம் விடுப்பு கேட்டு வந்த இலங்கைத் தமிழரை தகாத
வார்த்தையில் பேசி செருப்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இராமேஸ்வரத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள் சார் ஆட்சியர் கலை மன்னனிடம் விடுப்பு கேட்டு வந்த இலங்கைத் தமிழரை தகாத
வார்த்தையில் பேசி செருப்பால் அடிக்க முற்பட்ட சம்பவம் இன்று (10) பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக
தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக வந்த இலங்கை தமிழர்களை தமிழக
அரசு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு
முகாமில் தங்க வைத்துள்ளனர்.
</p><p>
மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 1500க்கும் மேற்பட்ட இலங்கை
தமிழர்கள் வசித்து வருகின்றனர்.</p><h2>&nbsp;மருத்துவ சிகிச்சை</h2><p>
</p><p>
இலங்கை தமிழர்கள் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் உள்ள உறவினர்களை
சந்திக்க செல்லவும், மருத்துவ சிகிச்சைக்கு செல்லும் போது மண்டபம் இலங்கை
தமிழர் மறுவாழ்வு முகாம் சார் ஆட்சியரிடம் விடுப்பு பெற வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c328e82b-66cb-4265-9f68-2a8d6834ba95/26-6aa2e97d7ac08.webp' /></p><p>

அதன் அடிப்படையில் இலங்கை தமிழரான ஜெகன் என்பவர் சென்னையில் மருத்துவ
சிகிச்சைக்கு செல்வதற்காக மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் சார்
ஆட்சியரிடம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விண்ணப்பித்துள்ளார்.</p><p>
ஆனால் விடுப்பு அளிப்பதற்கு சார் ஆட்சியர் பணம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகின்றது.
</p><p>
பணம் அளிக்காததால் இலங்கைத் தமிழர் ஜெகனுக்கு விடுப்பு அளிக்காமல் இருந்து
வந்த நிலையில் இன்று மீண்டும் விடுப்பு விண்ணப்பம் குறித்து கேட்க சென்ற
ஜெகனை சார் ஆட்சியர் கலை மன்னன் தகாத வார்த்தையால் பேசி செருப்பால் அடிக்க
முயன்ற காணொளி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில், இது தொடர்பில் பலரும் கடும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T17:34:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுரம் வீதியில் நோயாளர் காவு வண்டி கோர விபத்து! சாரதி பரிதாப உயிரிழப்பு- 6 பேர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ambulance-accident-driver-tragically-killed-1789061136"></link>
            <id>https://tamilwin.com/article/ambulance-accident-driver-tragically-killed-1789061136</id>
            <summary type="text">குருநாகலிலிருந்து மீகலாவ மருத்துவமனைக்கு மருந்துகள் மற்றும் எழுதுபொருள்களை
ஏற்றிச் சென்ற&amp;nbsp; நோயாளர் காவு வண்டி ஒன்று, பாதெனிய - அனுராதபுரம் வீதியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருநாகலிலிருந்து மீகலாவ மருத்துவமனைக்கு மருந்துகள் மற்றும் எழுதுபொருள்களை
ஏற்றிச் சென்ற&nbsp; நோயாளர் காவு வண்டி ஒன்று, பாதெனிய - அனுராதபுரம் வீதியில் உள்ள
கத்தபஹுவ பகுதியில் லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p>குறித்த விபத்தானது இன்று(10.9.2026) பிற்பகல் 3:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.</p><p>விபத்தில் நோயாளர் காவு வண்டி&nbsp; சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><h2>&nbsp;மேலதிக விசாரணை</h2><p>
</p><p>நோயாளர் காவு வண்டியில் பயணித்த நால்வரும், லொறியில் இருந்த இருவரும்
படுகாயமடைந்த நிலையில் உடனடியாக மீட்கப்பட்டு அம்பன்பொல மற்றும் கல்கமுவ
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b433d62e-80d2-4608-aa8f-2369a48d62e4/26-6aa2e8124592b.webp' /></p><p>
</p><p>
இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T17:25:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ChatGPT-ல் 80s Retro புகைப்படங்கள் ; உங்கள் தனியுரிமைக்கு ஆபத்தா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/80s-retro-photos-on-chatgpt-risk-to-your-privacy-1789060326"></link>
            <id>https://jvpnews.com/article/80s-retro-photos-on-chatgpt-risk-to-your-privacy-1789060326</id>
            <summary type="text">AI தொழில்நுட்பத்தின் புதிய டிரெண்டாக உருவெடுத்துள்ள 80களின் Retro பாணி புகைப்படங்களை உருவாக்க, பயனர்கள் தங்களது புகைப்படங்களை ChatGPT உள்ளிட்ட AI சேவை...</summary>
            <content type="html"><![CDATA[<p>AI தொழில்நுட்பத்தின் புதிய டிரெண்டாக உருவெடுத்துள்ள 80களின் Retro பாணி புகைப்படங்களை உருவாக்க, பயனர்கள் தங்களது புகைப்படங்களை ChatGPT உள்ளிட்ட AI சேவைகளில் பதிவேற்றி வருகின்றனர்.</p><p> </p><p></p><p>இந்த டிரெண்ட் சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் பெற்றுள்ள நிலையில், புகைப்படங்களை AI சேவைகளில் பதிவேற்றும்போது தனியுரிமை தொடர்பான சில முக்கிய அம்சங்களை பயனர்கள் கவனிக்க வேண்டும் என எச்சரிக்கப்படுகிறது.
</p><p>
ஸ்மார்ட்போனில் எடுக்கப்படும் புகைப்படங்கள் வெறும் காட்சிப் பதிவுகள் மட்டுமல்ல.</p><p> சில புகைப்படக் கோப்புகளில் படம் எடுக்கப்பட்ட திகதி, நேரம், பயன்படுத்தப்பட்ட சாதனத்தின் தகவல் மற்றும் சில சந்தர்ப்பங்களில் இருப்பிடத் தகவல் உள்ளிட்ட metadata இடம்பெற்றிருக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48acc394-3364-4911-a41f-6c567ecdb7eb/26-6aa2e4e86bee9.webp' /></p><p>

இதனால், ஒரு புகைப்படத்தை AI சேவையில் பதிவேற்றும்போது, அந்தப் புகைப்படம் தொடர்பான தரவுகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது முக்கியமானதாகிறது. </p><p>ghatGPT-ல் பதிவேற்றப்படும் புகைப்படங்கள், அந்த உரையாடல் மற்றும் கணக்கு அமைப்புகளுக்கு ஏற்ப சேவை அமைப்புகளில் கையாளப்படலாம். </p><p>தரவு எவ்வளவு காலம் வைத்திருக்கப்படுகிறது, அது AI மாடல் மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறதா என்பவை பயன்படுத்தப்படும் சேவை மற்றும் பயனர் தேர்ந்தெடுத்த தனியுரிமை அமைப்புகளைப் பொறுத்து மாறுபடலாம்.
</p><p>
மேலும், பயனர் AI சேவையைப் பயன்படுத்தும்போது IP முகவரி, சாதனத் தகவல் மற்றும் சேவையைப் பயன்படுத்தும் விதம் தொடர்பான சில தொழில்நுட்பத் தகவல்கள் சேகரிக்கப்படலாம்.&nbsp;</p><h3>புகைப்படங்களை Upload செய்யும்போது என்ன கவனிக்க வேண்டும்?
</h3><p>
AI மூலம் புகைப்படங்களை மாற்றுவது அல்லது Retro பாணியில் உருவாக்குவது பொதுவாக ஒரு பொழுதுபோக்கு அனுபவமாக இருந்தாலும், தனிப்பட்ட புகைப்படங்களைப் பதிவேற்றும்போது சில முன்னெச்சரிக்கைகள் அவசியம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7aeaf6f6-5698-408f-92b9-9d915425d18f/26-6aa2e4e9221a3.webp' /></p><p>மற்றவர்களின் புகைப்படங்களை அவர்களின் அனுமதியின்றி பதிவேற்றுவதைத் தவிர்க்கவும்.
</p><p>குழந்தைகளின் புகைப்படங்களை தேவையின்றி AI சேவைகளில் பதிவேற்ற வேண்டாம்.</p><p>
முகவரி, தொலைபேசி எண், அடையாள ஆவணங்கள் போன்ற முக்கியத் தகவல்கள் தெரியும் புகைப்படங்களைப் பதிவேற்ற வேண்டாம்.
</p><p>புகைப்படங்களில் இருக்கும் metadata குறித்து கவனமாக இருக்கவும்.
</p><p>AI சேவையின் Privacy மற்றும் Data Controls அமைப்புகளைப் பார்த்து, தேவையான கட்டுப்பாடுகளைச் செயல்படுத்தவும்.
</p><p>தேவையில்லாத புகைப்படங்கள் மற்றும் உரையாடல்களை சேமித்து வைப்பதைத் தவிர்க்கவும்.&nbsp;</p><p>80s Retro, Anime, Cinematic உள்ளிட்ட பல்வேறு AI புகைப்பட டிரெண்ட்கள் தொடர்ந்து பிரபலமாகி வருகின்றன. </p><p>இவற்றை பயன்படுத்துவது குறித்து அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என்றாலும், “AI சேவைக்கு நாம் என்ன தரவை வழங்குகிறோம்?” என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம்.</p><p>

குறிப்பாக, தனிப்பட்ட அல்லது முக்கியமான தகவல்கள் இடம்பெற்றுள்ள புகைப்படங்களை பதிவேற்றுவதற்கு முன், அந்த AI சேவையின் தனியுரிமைக் கொள்கை மற்றும் தரவு கட்டுப்பாட்டு அமைப்புகளை சரிபார்ப்பது பாதுகாப்பான நடைமுறையாகும்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T17:12:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோர்டானில் ஈரான் ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க விமானங்கள் சேதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-missiles-damage-us-jets-in-jordan-1789047864"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-missiles-damage-us-jets-in-jordan-1789047864</id>
            <summary type="text">Iran missiles damage US jets in Jordan: ஜோர்டானில் ஈரானின் ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க விமானங்கள் சேதமடைந்துள்ளன.

அமெரிக்க போர் விமானங்கள் சேதம்ஜோர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran missiles damage US jets in Jordan: ஜோர்டானில் ஈரானின் ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க விமானங்கள் சேதமடைந்துள்ளன.</p><h2>

அமெரிக்க போர் விமானங்கள் சேதம்</h2><p>ஜோர்டானில் உள்ள Muwaffaq Salti விமான தளம் (Al-Azraq) மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பல அமெரிக்க போர் விமானங்கள் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
அமெரிக்காவின் A-10 Thunderbolt (Warthog) விமானம் கடுமையாக சேதமடைந்தது, அதன் ஒரு சிறகு முற்றிலும் அழிந்துவிட்டது. மேலும், சுமார் எட்டு F-15 போர் விமானங்கள் சிறிய அளவில் சேதங்களை சந்தித்தன. ஆனால் அவை பின்னர் சேவைக்கு திரும்பியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/287e3fff-93d3-4de8-a047-6496616859ca/26-6aa2b50007a97.webp' /></p><p>இந்த தாக்குதலின் போது, அமெரிக்க படைகள் 30-க்கும் மேற்பட்ட Patriot interceptor missiles-ஐ பயன்படுத்தி எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டன.
</p><p>
ஈரான், தண்டனை நடவடிக்கை (punitive operation) என அழைக்கப்படும் இந்த தாக்குதலை, அமெரிக்கா தனது ஐந்து ஈரான் எண்ணெய் கப்பல்களை அழித்ததற்கான பதிலடி எனக் கூறியுள்ளது.
</p><p></p><p>ஜோர்டான் அரசு, “எங்கள் வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் 20 ஏவுகணைகளில் 18-ஐ தடுத்து நிறுத்தின. மீதமுள்ள 2 ஏவுகணைகள் மக்கள் வசிப்பிடமற்ற பகுதிகளில் விழுந்தன. உயிரிழப்புகள் எதுவும் இல்லை” என தெரிவித்ததாவது.
</p><p>
இந்த சம்பவம், அமெரிக்கா-ஈரான் இடையேயான நீண்டகால பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. Strait of Hormuz மற்றும் Bab-el-Mandeb போன்ற முக்கிய கடல் வழித்தடங்களில் இரு தரப்பும் தங்கள் தாக்குதல்களை அதிகரித்து வருகின்றன.
</p><p>
சர்வதேச அரசியல் வல்லுநர்கள் எச்சரிப்பதாவது, “இந்த தாக்குதல்கள், மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றத்தை உலகளாவிய எரிபொருள் விநியோகத்திற்கும், பாதுகாப்பிற்கும் பெரும் ஆபத்தாக மாற்றுகின்றன” எனக் கூறுகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T17:07:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை சாரணர் இயக்கத்துக்கும் ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/meeting-between-sri-lanka-scout-association-anura-1789058891"></link>
            <id>https://tamilwin.com/article/meeting-between-sri-lanka-scout-association-anura-1789058891</id>
            <summary type="text">இலங்கை சாரணர் இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது.
&amp;nbsp;குறித்த கலந்துயைாடலானது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சாரணர் இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது.
</p><p>&nbsp;குறித்த கலந்துயைாடலானது இன்று(10.9.2026) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.</p><p>
2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள 11ஆவது தேசிய சாரணர்
ஜம்போரி தொடர்பிலும், அதன் அமைப்பு முன்னெடுக்கும் பணிகளின் தற்போதைய நிலைமை
மற்றும் முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.</p><h2>கருத்துப் பரிமாற்றங்கள்</h2><p>

இதன்போது, தேசிய சாரணர் ஜம்போரியின் உத்தியோகபூர்வ சின்னம் ஜனாதிபதியிடம்
கையளிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.
</p><p>
இலங்கை சாரணர் இயக்கத்தால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள்
மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாகவும் கருத்துப் பரிமாற்றங்கள்
மேற்கொள்ளப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04076adc-b7bb-4387-a392-e01f612cd812/26-6aa2e38875e3f.webp' /></p><p>
</p><p>
சாரணர் இயக்கத்தை அதிகளவிலான பாடசாலைகளுக்கு விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம்
குறித்தும், அரசு முன்னெடுத்து வரும் போதைப்பொருள் ஒழிப்புத் திட்டங்களுக்கு
சாரணர் இயக்கம் வழங்கக்கூடிய பங்களிப்பின் முக்கியத்துவம் தொடர்பிலும்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.
</p><p>
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, பிரதம சாரணர் ஆணையாளர்
சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார, இலங்கை சாரணர் இயக்கத்தின் தலைவர் ரன்சிரி
பெரேரா, இலங்கை சாரணர் இயக்கத்தின் பிரதிப் பிரதம ஆணையாளர் (பதில்) கபில
பெரேரா, செயற்குழுத் தலைவர் கமல்நாத் ஜினதாச, ஜம்போரி இணை அமைப்பாளர் ஆணையாளர்
பொறியியலாளர் அமில் அபேசுந்தர உள்ளிட்ட இலங்கை சாரணர் இயக்கத்தின் சிரேஷ்ட
பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T17:07:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டன் வீதியில் நடந்த கத்திக்குத்து: 4 பேர் வரை மருத்துவமனையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/london-street-stabbing-4-hospitalised-1789059949"></link>
            <id>https://news.lankasri.com/article/london-street-stabbing-4-hospitalised-1789059949</id>
            <summary type="text">லண்டனின் முக்கிய வீதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 4 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.லண்டனில் கத்திக்குத்து தாக்குதல்வியாழக்கிழமை மதியம் தென்கிழக...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டனின் முக்கிய வீதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 4 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>லண்டனில் கத்திக்குத்து தாக்குதல்</h2><p>வியாழக்கிழமை மதியம் தென்கிழக்கு லண்டனின் பரபரப்பான வீதியில் நடந்த திடீர் கத்திக்குத்து தாக்குதலில் 4 பேர் வரை காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>செப்டம்பர் 10ம் திகதி மதியம் 2 மணியளவில் ப்ராம்லி உயர் வீதியில் அரங்கேறிய கத்திக்குத்து சம்பவம் குறித்து அவசர சேவைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><p> இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த 4 பேரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ab0552a-5b1b-4985-b12b-72329fbb5a0e/26-6aa2e36f07ce5.webp' /></p><p> இந்த சம்பவத்தை தொடர்ந்து குறிப்பிட்ட இடத்திற்கு சிறப்பு பாராமெடிக் குழுவினர், ஆம்புலன்ஸ் குழுக்கள், வான்வழி ஆம்புலன்ஸ்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என அனைவரும் வரவழைக்கப்பட்டனர்.</p><p>இந்த வன்முறை சம்பவத்தில் கிட்டத்தட்ட 7 சந்தேக நபர்களை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T17:05:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலைக்கு அடியில் ஈரானின் ரகசிய அணு உலை; டிரம்ப் எச்சரிக்கையால் அச்சத்தில் உலகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-secret-nuclear-facility-beneath-the-mountain-1789032264"></link>
            <id>https://canadamirror.com/article/iran-secret-nuclear-facility-beneath-the-mountain-1789032264</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஈரானின் நட்டாண்ஸ் அணுஉலை மையத்திற்கு அருகே அமைந்துள்ள ‘பிக்ஆக்ஸ் மலை’ (Pickaxe Mountain) என்ற மிகவும் சக்திவாய்ந்த நிலத்தடி அணுஆயுதத் தளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஈரானின் நட்டாண்ஸ் அணுஉலை மையத்திற்கு அருகே அமைந்துள்ள ‘பிக்ஆக்ஸ் மலை’ (Pickaxe Mountain) என்ற மிகவும் சக்திவாய்ந்த நிலத்தடி அணுஆயுதத் தளத்தின் மீது அமெரிக்கப் படைகள் மிக விரைவில் தாக்குதல் நடத்தக்கூடும் என 


 டிரம்ப் விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

ஈரான் தனது அணுஆயுதத் திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கிரானைட் பாறைகளுக்கு அடியில் 300 அடிக்கும் அதிகமான ஆழத்தில் ‘பிக்ஆக்ஸ்’ நிலத்தடிப் சுரங்கப் பாதையை அமைத்து அதில் ஆயிரக்கணக்கான அதிநவீன சென்ட்ரிஃபியூஜ்களை மாற்றி அமைத்துள்ளதாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9910475-09c5-43c2-8487-886c761e08b8/26-6aa27749d8ace.webp' /></p><h2>அமெரிக்கப் படைகள் மிகக் கொடூரமாகத் தாக்கி அழிக்கும்</h2><p>
</p><p>
 மேலும், அங்குச் சந்தேகத்திற்கிடமான அணுசக்தி நடவடிக்கைகள் அதிகரித்து வருவதை அமெரிக்கச் செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.
</p><p>
இதுகுறித்து வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், “ஈரானைப் பற்றியும் பிக்ஆக்ஸ் மலையில் யார் யாருடைய நடமாட்டம் இருக்கிறது என்பதையும் நாங்கள் உளவு அமைப்புகள் மூலம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். </p><p>ஈரான் எந்தவொரு சூழ்நிலையிலும் அணுஆயுதம் தயாரிப்பதை அனுமதிக்க முடியாது. அங்கே ஏதேனும் அணுசக்தி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டால், மிக விரைவில் பிக்ஆக்ஸ் தளத்தை அமெரிக்கப் படைகள் மிகக் கொடூரமாகத் தாக்கி அழிக்கும்” என எச்சரித்துள்ளார்.</p><p>

அமெரிக்காவின் இந்த அதிரடி அச்சுறுத்தலுக்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரான் நாடாளுமன்றப் பிரதிநிதிகள், உலகின் மிகவும் பலமாகப் பாதுகாக்கப்பட்ட அணுஆயுதத் தளமான பிக்ஆக்ஸ் மலை மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது ஒட்டுமொத்த மத்திய கிழக்குப் பிராந்தியத்தையும் போர்க் களமாக மாற்றிவிடும் என எச்சரித்துள்ளனர்.
</p><p>
இந் நிலையில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தொடரும் இந்த மோதல் போக்கால் சர்வதேச அளவில் அணுஆயுதப் போர் அபாயம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-10T16:59:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாதாரண தரப் பரீட்சை 7 பாடங்களாக மட்டுப்படுத்த பரிந்துரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drastic-change-in-the-education-system-1789059466"></link>
            <id>https://jvpnews.com/article/drastic-change-in-the-education-system-1789059466</id>
            <summary type="text">2027ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்புகளுக்கு அமைய, சாதாரண தரப் பரீட்சையை 7 பாடங்களாக மட்டுப்படுத்துவதற்குப் பரிந்துரைக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்புகளுக்கு அமைய, சாதாரண தரப் பரீட்சையை 7 பாடங்களாக மட்டுப்படுத்துவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்ற, புதிய கல்வி மறுசீரமைப்புகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான நாடாளுமன்ற துணைக்குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a48635e6-6976-46d0-a6f8-d4aa6489ca36/26-6aa2e18bb0a41.webp' /></p><p>கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, இது தொடர்பான அறிக்கையை குறித்த கூட்டத்தில் சமர்ப்பித்துள்ளார்.</p><p>

அதற்கமைய, புதிய பாடத்திட்டக் கட்டமைப்பின் கீழ், ஒரு பாடவேளை 40 நிமிடங்களாகவும், பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
</p><p>
சாதாரண தரப் பரீட்சை 7 பாடங்களை உள்ளடக்கியதாக அமையும் எனவும், வரலாறு மற்றும் அழகியல் பாடங்களும் இதில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
தாய்மொழி, ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் சமயம் உள்ளிட்ட கட்டாயப் பாடங்களுக்கு தொடர்ச்சியான மற்றும் தொகுப்பு மதிப்பீட்டு முறைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.</p><p>

மேலும், 10 மற்றும் 11ஆம் தரங்களில் தொழிற்கல்விப் பாடங்களை அறிமுகப்படுத்தவும், 12 மற்றும் 13ஆம் தரங்களில் சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் ஒழுக்கநெறி தொடர்பான பாடத் தொகுதிகளை உள்ளடக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T16:58:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஜித், விஜய் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த ஒரு விஷயம், மாஸ் Moment... சமூக வலைதளம் தெறிக்கப்போகிறது...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/cm-vijay-going-to-meet-ajith-in-car-race-1789058500"></link>
            <id>https://cineulagam.com/article/cm-vijay-going-to-meet-ajith-in-car-race-1789058500</id>
            <summary type="text">அஜித்-விஜய்நடிகர் விஜய் சினிமாவில் பயணித்த காலத்தில் அவருக்கு போட்டியாக ரசிகர்களால் பார்க்கப்பட்டது அஜித் தான். இருவரும் சினிமாவை தாண்டி நல்ல நண்பர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அஜித்-விஜய்</h2><p>நடிகர் விஜய் சினிமாவில் பயணித்த காலத்தில் அவருக்கு போட்டியாக ரசிகர்களால் பார்க்கப்பட்டது அஜித் தான். </p><p>இருவரும் சினிமாவை தாண்டி நல்ல நண்பர்களாக தான் உள்ளார்கள், எப்போதும் தங்களை அப்படியே அடையாளப்படுத்தி வந்தார்கள். </p><p>ஆனால் ரசிகர்கள் தான் இருவரின் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரத்தை வைத்து சண்டை போட்டு வந்தார்கள். இப்போது சினிமாவை விட்டு விஜய் அரசியலில் களமிறங்கி தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்று பல சாதனைகள் செய்து வருகிறார். </p><p>அதேபோல் அஜித் சினிமாவில் கொஞ்சம் கேப் எடுத்து தனக்கு பிடித்த கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார், பல போட்டிகளில் ஜெயித்தும் வருகிறார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a20a8b7e-353d-4f9e-a3df-7122c7fa4831/26-6aa2e13496fc5.webp' /></p><h2>மாஸ் தகவல்</h2><p>
இருவரும் ஒன்றாக இருக்கும், சந்திக்கும் புகைப்படங்கள் வராதா என ஏங்கும் ரசிகர்கள் பலர் உள்ளனர், அவர்களின் ஆசை இப்போது நிறைவேற உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7371bd72-6c47-4bee-9379-2e8c417ec39f/26-6aa2e13395167.webp' /></p><p> </p><p>அதாவது தொழில் வளர்ச்சிக்காக வெளிநாடு செல்லும் விஜய், லண்டனில் சில்வர்ஸ்டோன் சர்கியூட்டில் அஜித் பங்கேற்கும் லீ மேன்ஸ் கப் கார் ரேசை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளாராம்.</p><p> </p><p>இந்த செய்தி அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ள நிலையில் ரசிகர்கள் அந்த தருணத்திற்காக ஆவலாக வெயிட்டிங்.</p>]]></content>
            <updated>2026-09-10T16:57:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் பதிலடியில் சிதைந்துபோன அமெரிக்க கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/10-us-ships-fighter-jets-damaged-irans-response-1789056935"></link>
            <id>https://ibctamil.com/article/10-us-ships-fighter-jets-damaged-irans-response-1789056935</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில், 10 அமெரிக்க கப்பல்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிவித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில், 10 அமெரிக்க கப்பல்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது.


ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க கடற்படை போர்க்கப்பல் மீது சமீபத்தில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ஏவுகணைகளை வீசி தாக்கியது.&nbsp;</p><p>இதற்குப் பதிலடியாக, கடந்த 8ம் திகதி அமெரிக்க இராணுவம், ஈரானுக்குச் சொந்தமான 5 கச்சா எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்தது. இதனால் ஆத்திரமடைந்த ஈரான், அன்று இரவே மேற்காசியாவில் உள்ள ஜோர்டானின் பப்ரக், அஸ்ரக் நகரங்களில் இயங்கி வரும் அமெரிக்க இராணுவத் தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.</p><h2>அமெரிக்காவின் புகழ்பெற்ற விமானம் சேதம்</h2><p>


தாக்குதலில், நவீன போர் விமானங்களில் மிகவும் புகழ்பெற்ற எப்-15 ரக 8 விமானங்கள் சேதமடைந்தததாக தகவல் வெளியாகி உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0c68b1c-d073-4496-a754-92e4ca32f91d/26-6aa2dc86bcc45.webp' /></p><p> இதேபோன்று 'வார்ஹாக்' என்று அழைக்கப்படும் ஏ-10 ரக தாக்குதல் விமானம் ஒன்று பலத்த சேதமடைந்து, அதன் ஒரு சக்கரம், இறக்கை காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.</p><p> இந்தத் தாக்குதலில் அமெரிக்க தரப்பில் யாரும் உயிரிழக்கவில்லை என அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
</p><p>

இந்நிலையில் தங்களுடைய, 5 எண்ணெய் டேங்கர் கப்பல்களை அமெரிக்கா மூழ்கடித்ததற்கு பதிலடியாக, அமெரிக்காவின், 2 போர்க் கப்பல்கள், 8 எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.</p><p></p><h2>10 கப்பல்கள் மீதும் தாக்குதல்</h2><p> மேலும், தடையை மீறிச் சென்றதாக மற்ற நாடுகளைச் சேர்ந்த, 10 கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.


ஹோர்முஸ் நீரிணையை தாண்டி, ஓமான் வளைகுடா மற்றும் அரபிக் கடல் பகுதிகளிலும் ஈரான் தன் கட்டுப்பாட்டு மண்டலத்தை விரிவுபடுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/726ca560-0bdb-403c-881a-eb862e3c25ef/26-6aa2dc8771ffa.webp' /></p><p> அனுமதியின்றி இந்தப் பகுதிக்குள் நுழையும் கப்பல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஈரான் எச்சரித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு பரல் 100 டொலரைத் தாண்டி விற்பனையாகி வருகிறது.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T16:46:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவப் பரிந்துரையின்றி மயக்க மாத்திரை விற்பனை ; மருந்தக உரிமையாளர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sale-sleeping-pills-without-medical-prescription-1789058553"></link>
            <id>https://jvpnews.com/article/sale-sleeping-pills-without-medical-prescription-1789058553</id>
            <summary type="text">மருத்துவப் பரிந்துரையின்றி மயக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் மாத்திரைகளை விற்பனை செய்ததாகக் கூறப்படும் மருந்தக உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு, எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மருத்துவப் பரிந்துரையின்றி மயக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் மாத்திரைகளை விற்பனை செய்ததாகக் கூறப்படும் மருந்தக உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>ஹெம்மாத்தகம, கம்பளை சந்திப் பகுதியில் உள்ள மருந்தகமொன்றின் உரிமையாளரான 41 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த பெண், போதைப்பொருள் மாத்திரைகளைப் பயன்படுத்துவோர் மத்தியில் “பெத்தி அக்கா” என அழைக்கப்படுவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/202e1b1c-fc37-4cb1-9a79-466cadcf67bb/26-6aa2ddfab8da6.webp' /></p><p>கேகாலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர் மற்றும் ஹெம்மாத்தகம காவல் நிலையப் பொறுப்பதிகாரி சமிந்த குணரத்ன ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய, காவல்துறை பரிசோதகர் சமன் குமார உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினரால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>

இதன்போது, காவல்துறையினரால் உத்தி நடவடிக்கைக்காக பொதுமகன் ஒருவர் பயன்படுத்தப்பட்டுள்ளார்.
</p><p>
அவருக்கு 500 ரூபாய் பணம் வழங்கப்பட்டு, மருத்துவப் பரிந்துரைச் சீட்டின்றி மயக்கத்திற்காகத் தவறாகப் பயன்படுத்தப்படும் வகையிலான மாத்திரைகளை கொள்வனவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அந்தச் சந்தர்ப்பத்தில் குறித்த மருந்தக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில், சந்தேகநபர் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர்களுக்கு மருத்துவப் பரிந்துரையின்றி குறித்த மாத்திரைகளை விற்பனை செய்ததாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

மேலும், மாவனெல்ல, கம்பளை, அரநாயக்க, ஹோரேவல மற்றும் திப்பிட்டிய உள்ளிட்ட பகுதிகளுக்கு உந்துருளிகள் மூலம் நபர்களை அனுப்பியும், சில சந்தர்ப்பங்களில் சந்தேகநபர் தானே உந்துருளியில் சென்று மாத்திரைகளை விநியோகித்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹெம்மாத்தகம காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T16:42:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் லண்டனில் இருவர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-arrested-in-london-over-iran-nsa-offences-1789055457"></link>
            <id>https://ibctamil.com/article/two-arrested-in-london-over-iran-nsa-offences-1789055457</id>
            <summary type="text">ஈரானுடன் தொடர்புடைய சந்தேகத்தில் லண்டனில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஈரானுடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய தேசிய பாதுகாப்புச் சட்ட மீறல்கள் குறித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடன் தொடர்புடைய சந்தேகத்தில் லண்டனில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>ஈரானுடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய தேசிய பாதுகாப்புச் சட்ட மீறல்கள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>சம்பவத்தில்&nbsp;60 வயதுடைய நபர் ஒருவரும் 42 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>விசேட விசாரணை</h2><p>லண்டன் மெட்ரோபொலிட்டன் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணைகளின் அடிப்படையில் இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dcb2f8a-bd9c-4835-965a-ef9838a2a765/26-6aa2d87c1c811.webp' /></p><p>லண்டன் முழுவதும் உள்ள யூத மற்றும் ஈரானிய சமூகங்களுடன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் இவ்வருட தொடக்கத்தில் இடம்பெற்ற எந்தவொரு சம்பவங்களுடனோ அல்லது தாக்குதல்களுடனோ இந்த விசாரணைக்குத் தொடர்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>லண்டன் காவல்துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T16:35:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாக்குறுதிகளை இப்போதாவது உடனடியாக நிறைவேற்றுங்கள் - நாடாளுமன்றத்தில் அரசிடம் சஜித் வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-request-government-in-parliament-1789057277"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-request-government-in-parliament-1789057277</id>
            <summary type="text">கடந்த தேர்தல் காலத்தில் தற்போதைய அரசைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்
எதிர்க்கட்டத்தில் இருந்தபோது வழங்கிய வாக்குறுதிகளை இன்று ஆட்சியமைத்தவுடன்
ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த தேர்தல் காலத்தில் தற்போதைய அரசைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்
எதிர்க்கட்டத்தில் இருந்தபோது வழங்கிய வாக்குறுதிகளை இன்று ஆட்சியமைத்தவுடன்
மறந்துவிட்டனர் என்று குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,
அந்த விவகாரங்களை இப்போதாவது உடனே நிறைவேற்றுமாறும் நாடாளுமன்றத்தில் இன்று
வலியுறுத்தினார்.
</p><p>
அவர் மேலும் உரையாற்றுகையில்,

"2020.01.01 முதல் 2025.03.31 வரை ஓய்வுபெறத் தகுதி பெற்ற ஒரு இலட்சத்து 54
ஆயிரம் பேருக்கு 03 - 2016 இலக்க சுற்றறிக்கையின்படியே சம்பளம்
தயாரிக்கப்பட்டுள்ளதால் கடும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.</p><p> எனவே, இவர்களது
ஓய்வூதியப் பணிக்கொடுப்பனவு முரண்பாடுகளைத் தீர்த்து, நிலுவைத் தொகையை
உடனடியாக வழங்குமாறு கோருகின்றேன். இல்லாவிட்டால் அது மனித மற்றும் அடிப்படை
உரிமைகளை மீறும் செயலாகும்.
</p><p>
'த பைனான்ஸ்' நிறுவனம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 6 ஆயிரத்து
300 வைப்பாளர்கள் கடும் அசௌகரியத்துக்குள்ளாகியுள்ளனர். மத்திய வங்கியின்
நிர்வாகத்தின் கீழ் இருந்தபோது இந்த நிறுவனத்தில் பாரிய நட்டம்
ஏற்படுத்தப்பட்ட போதிலும், வைப்பாளர்கள் அனைவருக்கும் முழுத் தொகையையும் வழங்க
அரசு வெளிப்படைத்தன்மையுடன் சொத்துக்களை ஏலமிட வேண்டும்.</p><h2>&nbsp;இரண்டாம் கட்டப்பணிகள்</h2><p>
</p><p>
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் இரண்டாம் கட்டப்
பணிகள் 2025 ஜனவரி 3ஆம் திகதிக்குள் நிறைவடைய வேண்டியிருந்த போதிலும், இன்னும்
முடிக்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/809f7d88-9abf-4d79-b4f6-b22e4ff7faa2/26-6aa2db996c876.webp' /></p><p> </p><p>திட்டப் பணிப்பாளர் கூட இல்லாமல், அமைச்சரவை அல்லது
துறைமுக அதிகார சபையின் அங்கீகாரமின்றி சட்டவிரோதமாக இடம்பெறும் இந்தப் பணிகள்
குறித்து உள்ளக கணக்காய்வு மற்றும் நாடாளுமன்ற விசாரணையை நடத்த வேண்டும்.
</p><p>
தங்களை அதிகாரத்துக்குக் கொண்டுவருவதற்காகப் பாடுபட்ட ஒரு இலட்சத்து 50 ஆயிரம்
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி
உத்தியோகத்தர்களுக்கும் இன்னும் முறையான சேவைப்பிரமாணக் குறிப்புகள்
வழங்கப்படவில்லை. </p><p>திறைசேரியில் பணம் நிரம்பியுள்ள நிலையில், 'அத்தம' திட்டம்
மூலம் மக்களிடம் பணம் சேகரிப்பதை விட்டுவிட்டு இவர்களது பிரச்சினைகளுக்குத்
தீர்வு வழங்குங்கள்.
</p><p>
இஸ்ரேல் நாட்டின் உட்கட்டமைப்புத் துறை வேலைவாய்ப்புகளுக்காகப் பதிவு செய்த
1,200 பேருக்கு இன்னும் வாய்ப்பு வழங்கப்படாமல் லொட்டரி முறை இன்னும்
நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது.</p><p></p><h2>22ஆவது திருத்தம்&nbsp;</h2><p> </p><p>இதனால் 560 பேர் காத்திருப்புப் பட்டியலில்
உள்ள நிலையில், அரசு ஊடாகச் செல்ல வேண்டிய வாய்ப்பு தாமதப்படுத்தப்படுவதால்
அப்பாவி இளைஞர்கள் தனியாரிடம் சென்று 35 இலட்சம் வரை செலவழித்துப்
பாதிக்கப்படுகின்றனர்.

நாட்டில் தனிக் கட்சி அரசை ஸ்தாபிக்கும் நடவடிக்கையாகவே 22ஆவது திருத்தம்
கொண்டுவரப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56ee9f63-de7d-4952-b527-872a0df188f4/26-6aa2db9a60b9b.webp' /></p><p> </p><p>இது நீதியின் சுதந்திரத்துக்கு விடப்படும் மரண
அடியாகும். இதன் மூலம் மக்களின் வறுமையோ வேலையின்மையோ தீர்க்கப்படப் போவதில்லை
என்பதால் இதனை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.
</p><p>
நெல் ஒரு கிலோவுக்கு 150 ரூபா உத்தரவாத விலை வழங்கப்படும் எனத்
வாக்குறுதியளித்துவிட்டு, இன்று 120 ரூபாவே வழங்கப்படுவதால் விவசாயிகள் கிலோ
ஒன்றுக்கு 17 ரூபா நட்டத்தைச் சந்தித்து நிர்க்கதியாகியுள்ளனர்.</p><p>
விவசாயிகளுக்குக் கொத்தமல்லி சூத்திரத்தின் கதியே ஏற்பட்டுள்ளது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பிரகாரம் நுவரெலியா
மாவட்டத்தில் ஒரு நபருக்கு 30 நாள்களுக்கு வாழ்வதற்கு 18 ஆயிரத்து 200 ரூபா
போதுமானது என்று கூறப்படுகின்றது. இந்தத் தொகையைக் கொண்டு யதார்த்தத்தில்
ஒருவரால் வாழ முடியுமா என அரசிடம் கேள்வி எழுப்புகின்றேன்." என்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T16:34:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒருமுறை சார்ஜ் செய்தால் 178 கிமீ ரேஞ்சு - புதிய BGauss C12 MaxR மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bgauss-c12-maxr-ev-scooter-launched-1789057628"></link>
            <id>https://news.lankasri.com/article/bgauss-c12-maxr-ev-scooter-launched-1789057628</id>
            <summary type="text">BGauss C12 MaxR EV Scooter Launched: இந்தியாவில் மின்சார வாகன சந்தையில் புதிய போட்டியாளராக BGauss C12 MaxR அறிமுகமாகியுள்ளது.

இதன் விலை ரூ.1.46 லட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>BGauss C12 MaxR EV Scooter Launched: இந்தியாவில் மின்சார வாகன சந்தையில் புதிய போட்டியாளராக BGauss C12 MaxR அறிமுகமாகியுள்ளது.</p><p>

இதன் விலை ரூ.1.46 லட்சம் (ex-showroom) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டர், ஒரே சார்ஜில் 178 கிமீ IDC-certified range வழங்குகிறது. அதிகபட்ச வேகம் 75 kmph ஆகும். 4.2 kW peak power கொண்ட HyperZen in-wheel motor மூலம் இயக்கப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e285f7b-3799-49e1-b4cf-eeac68da50fb/26-6aa2da5f22ed6.webp' /></p><h2>முக்கிய அம்சங்கள்:
</h2><p><b>பேட்டரி:</b> 3.8 kWh LFP battery, IP67 rating உடன் வருகிறது.
</p><p><b>
பாதுகாப்பு</b>: 110 பாதுகாப்பு அம்சங்கள் (safety &amp; protection functions) கொண்ட Battery Management System கொடுக்கப்பட்டுள்ளது.
</p><p><b>
Ride Modes</b>: மூன்று ride mode-கள் உள்ளன.
</p><p><b>
வடிவமைப்பு</b>: Premium styling, urban mobility தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p><b>

தொழில்நுட்பம்</b>: Integrated gear transmission, MCU system - maintenance குறைவு.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae3f23f5-7cc7-4104-9b2f-17ffc951b3cb/26-6aa2da5fcf6eb.webp' /></p><p>BGauss நிறுவனம், “இந்த ஸ்கூட்டர் performance, practicality, premium design ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. நகரப் பயணங்களுக்கு சிறந்த தீர்வாக இருக்கும்” என தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த மாடல், connected features மற்றும் intelligent storage solutions உடன் வருகிறது. belt/chain drive தேவையில்லாமல், gear transmission மூலம் torque-ஐ திறம்பட வழங்குகிறது.</p><p>
சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களை விரும்பும் பயனர்களுக்கு, BGauss C12 MaxR ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T16:24:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்வித்துறையில் அதிரடி மாற்றம் ; GPA முறைக்கு பதிலாக அறிமுகமாகிறது புதிய 'Weighted Average Marks' முறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-weighted-average-marks-system-education-sector-1789056818"></link>
            <id>https://jvpnews.com/article/new-weighted-average-marks-system-education-sector-1789056818</id>
            <summary type="text">தொழிற்கல்விப் பிரிவுகள், தொழில் வழிகாட்டல் மற்றும் வெளிநாட்டு மொழிகளைக் கற்கும் வாய்ப்புகளும் மாணவர்களுக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பிரதமரும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொழிற்கல்விப் பிரிவுகள், தொழில் வழிகாட்டல் மற்றும் வெளிநாட்டு மொழிகளைக் கற்கும் வாய்ப்புகளும் மாணவர்களுக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்ற, புதிய கல்வி மறுசீரமைப்புகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான நாடாளுமன்ற துணைக்குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.</p><p>

தற்போதுள்ள GPA என்ற நிலைப் புள்ளி சராசரி முறைக்கு பதிலாக, ஒவ்வொரு பாடத்தின் தன்மைக்கு ஏற்ப இறுதி பெறுபேற்றை கணக்கிடும் ‘Weighted Average Marks’ எனப்படும் நிறையிடப்பட்ட சராசரி மதிப்பெண் முறையை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96b42142-082a-4442-ab8e-570b77969c07/26-6aa2d73449c28.webp' /></p><p>அத்துடன், புதிய ஆரம்பக் குழந்தைப் பருவ பாடத்திட்டக் கட்டமைப்பு மற்றும் ஆசிரியர் வழிகாட்டி கையேட்டின் அடிப்படையில், 2027 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ள முன்பள்ளி அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் கவனம் செலுத்தியுள்ளார்.
</p><p>
தேசிய கொள்கைக்கு அமைவாக முன்பள்ளி அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, முன்பள்ளி ஆசிரியர்களின் தொழில்முறை தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
</p><p>
புதிய கல்வி மறுசீரமைப்புகள், கல்வித்துறையில் உள்ள அனைத்து தொழில்சார் தரப்பினரின் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால், அதன் முழுமையான பயனை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக அனைத்து தரப்பினரும் பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

இதனிடையே, இலங்கையின் பொதுக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு, தேசிய கல்வி ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான கருத்தியல் ஆவணம் மற்றும் பாடசாலை மட்ட மதிப்பீடு மற்றும் சான்றிதழ் வழங்கலுக்கான கட்டமைப்பு ஆகிய கொள்கை ஆவணங்கள் கல்வி அமைச்சுக்கு கிடைத்துள்ளதாகவும், அவை அமைச்சரவை அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T16:13:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க வரி தள்ளுபடி - சுவிஸ் நிறுவனங்களுக்கு 2 பில்லியன் டொலர் திருப்பிச் செலுத்தப்பட வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-firms-gain-2-bn-dollar-us-tariff-refunds-1789055967"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-firms-gain-2-bn-dollar-us-tariff-refunds-1789055967</id>
            <summary type="text">Swiss firms gain 2 Billion dollar US tariff refunds: சுவிட்சர்லாந்து நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் விதிக்கப்பட்ட சுங்க வரிகள் தொடர்பாக பெரிய நிவாரணம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Swiss firms gain 2 Billion dollar US tariff refunds: சுவிட்சர்லாந்து நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் விதிக்கப்பட்ட சுங்க வரிகள் தொடர்பாக பெரிய நிவாரணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.</p><p>

UBS வங்கி வெளியிட்ட புதிய மதிப்பீட்டின் படி, சுவிஸ் நிறுவனங்கள் செலுத்தப்பட்ட தொகையில் 2 பில்லியன் டொலர் வரை திருப்பிப் பெறலாம்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe4f4c33-6dc9-41e0-b994-c638c64ec911/26-6aa2d3e11acbf.webp' /></p><p>இந்த நிவாரணம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட டிரம்ப் விதித்த சுங்க வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததன் பின்னர் கிடைக்கிறது.</p><p> 2025 ஏப்ரல் முதல் 2026 பிப்ரவரி வரை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மருத்துவ கருவிகள், துல்லியமான கருவிகள், கடிகாரங்கள் போன்ற பொருட்களுக்கு அதிகளவில் திருப்பிச் செலுத்தல் கிடைக்கும் என UBS தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், காபி, இயந்திரங்கள், மின்சார உபகரணங்கள் போன்ற பொருட்களுக்கும் பகுதி நிவாரணம் கிடைக்கும். </p><p></p><p>ஆனால், “இந்த நிவாரணம் நேரடியாக ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அல்ல, இறக்குமதி நிறுவனங்களுக்கே முதலில் வழங்கப்படும். எனவே, சுவிஸ் நிறுவனங்கள் முழுமையான நன்மையைப் பெற முடியாமல் போகலாம்” என UBS தெரிவித்துள்ளது.
</p><p>
அமெரிக்கா-சுவிட்சர்லாந்து இடையேயான புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் படி, எதிர்காலத்தில் சுங்க வரிகள் 12.5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயரக்கூடும்.</p><p> இருப்பினும், மருந்துகள் (Pharmaceuticals) போன்ற முக்கிய ஏற்றுமதி பொருட்கள் பெரும்பாலும் விலக்கு பெறுவதால், நடைமுறையில் சுங்க வரி சுமார் 6 சதவீதம் மட்டுமே இருக்கும் என UBS வல்லுநர்கள் கூறுகின்றனர்.
</p><p>
இந்த நிவாரணம், சுவிஸ் நிறுவனங்களுக்கு பொருளாதார ஊக்கம் அளிக்கும் நிலையில், அமெரிக்கா-சுவிட்சர்லாந்து இடையேயான வர்த்தக உறவுகள் புதிய பரிமாணத்தை அடையும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T15:56:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[14 நாட்கள் தொடர்ந்து முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? மருத்துவ விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/what-happens-if-you-eat-eggs-daily-for-14-days-1789052853"></link>
            <id>https://manithan.com/article/what-happens-if-you-eat-eggs-daily-for-14-days-1789052853</id>
            <summary type="text">மலிவு விலையில் எளிதாகக் கிடைக்கும் சத்தான உணவுகளில் முட்டைக்கு எப்போதுமே முக்கிய இடம் உண்டு. புரதத்தின் சிறந்த மூலமாக விளங்கும் முட்டை, சிறுவர்கள் முத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலிவு விலையில் எளிதாகக் கிடைக்கும் சத்தான உணவுகளில் முட்டைக்கு எப்போதுமே முக்கிய இடம் உண்டு. புரதத்தின் சிறந்த மூலமாக விளங்கும் முட்டை, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக உள்ளது.
</p><p>
உடலுக்குத் தேவையான பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் முட்டையில் நிறைந்துள்ளதால், இது ஒரு முழுமையான உணவாகவும் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fca75f9-a56b-4e7c-a304-2283ac8c117b/26-6aa2cc7ad7af8.webp' /></p><p> </p><p>ஒரு முட்டையை உட்கொள்வதன் மூலம் சுமார் 75–76 கலோரிகள், 6–7 கிராம் புரதம், 5 கிராம் கொழுப்பு மற்றும் 1.6 கிராம் நிறைவுற்ற கொழுப்பு கிடைக்கிறது.
</p><p>
முட்டையில் உள்ள இந்த ஊட்டச்சத்துக்கள் தசைகளின் வளர்ச்சிக்கு உதவுவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பேணவும், புதிய செல்கள் மற்றும் திசுக்களின் உருவாக்கத்திற்கும் பங்களிக்கின்றன.</p><p></p><p>

இத்தனை நன்மைகளைக் கொண்ட முட்டையை அவ்வப்போது சாப்பிடுவதைவிட, தினமும் ஒன்று என்ற அடிப்படையில் தொடர்ந்து 14 நாட்கள் சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது குறித்து எய்ம்ஸ், ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்ஃபோர்டில் பயிற்சி பெற்ற, 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இரைப்பைக் குடலியல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி,&nbsp; தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
</p><p>
அவர் குறிப்பிட்டுள்ளபடி, தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8d0be16-ea26-4908-93e4-088c0e0d2976/26-6aa2cc7b8a5ae.webp' /></p><h2>ஆரோக்கிய நன்மைகள்&nbsp;</h2><p></p><p><b>மூளைக்கு நல்லது:</b> முட்டையில் உள்ள கோலைன், நினைவாற்றல் மற்றும் கவனத்தை மேம்படுத்த உதவுகிறது.
</p><p><b>கொலஸ்ட்ரால்: </b>முட்டை நல்ல கொலஸ்ட்ரால் (HDL) அளவை மேம்படுத்த உதவுவதுடன், சமச்சீரான உணவின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளும்போது இதய ஆரோக்கியத்திற்கும் துணைப்புரியும் என&nbsp;டாக்டர் சௌரப் சேத்தி குறிப்பிடுகின்றார்.</p><p><b>கண்களுக்கு நல்லது: </b>மஞ்சள் கருவில் உள்ள லுடீன் மற்றும் ஸீக்ஸாந்தின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகின்றன.
</p><p><b>முடி, சருமம், நகங்களுக்கு</b>: முட்டையில் உள்ள புரதம் மற்றும் சல்பர் சார்ந்த அமினோ அமிலங்கள் கெராட்டின் உற்பத்திக்கு உதவுகின்றன.
</p><p><b>முக்கிய ஊட்டச்சத்துக்கள்:</b> முட்டையில் உயர்தர புரதம், கோலைன், இரும்பு, அயோடின், ஒமேகா-3, வைட்டமின்கள் A, D, E, B12 உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன.</p><p><b>
பசியைக் கட்டுப்படுத்தும்:</b> காலை உணவில் முட்டையை சேர்த்துக்கொள்வது நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தர உதவும்.
</p><p>முட்டை சாப்பிடாதவர்கள் டோஃபு, டெம்பே, எடமாமே போன்ற சோயா உணவுகளை தாவர அடிப்படையிலான புரதத்தின் நல்ல ஆதாரங்களாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DWQFMzyj8Nf/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DWQFMzyj8Nf/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DWQFMzyj8Nf/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Saurabh Sethi MD MPH | Gastroenterologist (@doctor.sethi)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T15:44:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த ராஜபக்சவின் மேடையில் அர்ச்சுனா எம்.பி..! நாமலின் மோசடி தொடர்பில் சபையில் பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/archchuna-on-mahinda-rajapaksa-s-stage-1789037307"></link>
            <id>https://tamilwin.com/article/archchuna-on-mahinda-rajapaksa-s-stage-1789037307</id>
            <summary type="text">


செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள மக்கள் கூட்டத்தில் தான் கலந்து கொள்ளவுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>


செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள மக்கள் கூட்டத்தில் தான் கலந்து கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். </p><p>

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>நாமலுக்காக மேடை ஏறுவேன்..</h2><p> 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

சமூக வலைத்தளங்களில் எமது இனத்தை அழித்த மகிந்த ராஜபக்சவின் மேடையில் ஏறுவது குறித்து பல பிரசாரங்கள் முன்வைக்கப்படுகின்றன.</p><p> </p><p>

அது, மகிந்த ராஜபக்ச அல்ல, நாளை ரணில் விக்ரமசிங்க அழைத்து அவருடயை மேடையில் ஏறச் சொன்னாலும் அந்த மேடைக்குச் செல்வேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eefc24be-d809-4d3e-b204-a7971f9dcf2d/26-6aa28e4f082cd.webp' /></p><p>
</p><p>
எமது அடுத்த ஜனாதிபதி சஜித் பிரேமதாச, அவர் அழைத்தாலும் அவருடைய மேடைக்கும் நான் செல்வேன். எதிர்க்கட்சியில் இருக்கக்கூடிய எந்தவொரு அரசியல்வாதிக்கும் எனது ஆதரவு இருக்கும். அதேபோலத்தான் நாமல் ராஜபக்சவும். </p><p>

நாமல் ராஜபக்ச மோசடியில் ஈடுபட்டிருந்தாலோ, அவர் மீதான தனிப்பட்டக் குற்றங்களையோ நான் ஆதரிக்கவில்லை. அது எனக்குத் தொடர்பற்றது. </p><p> எதிர்க்கட்சி உறுப்பினராக அவரை நான் ஆதரிக்கின்றேன்.

நாமல் ராஜபக்ச அல்ல, எனது மக்களுக்காக யாருடைய மேடையிலும் ஏறத் தயார் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/FxHDUaTrx9Q" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-10T15:37:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு : சட்டத்தின் பிடியிலிருந்து தப்பினார் மைத்திரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/maithri-escaped-amnesty-act-regarding-gnanasara-1789053238"></link>
            <id>https://ibctamil.com/article/maithri-escaped-amnesty-act-regarding-gnanasara-1789053238</id>
            <summary type="text">பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசாரதேரருக்கு பொது மன்னிப்பு அளித்தமை செல்லாது என உச்ச நீதிமன்றம் இன்று(20) தீர்ப்பளித்த அதேவேளை இந்த மன்னிப்பை...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசாரதேரருக்கு பொது மன்னிப்பு அளித்தமை செல்லாது என உச்ச நீதிமன்றம் இன்று(20) தீர்ப்பளித்த அதேவேளை இந்த மன்னிப்பை அளித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.</p><p>காணாமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட உள்ளிட்ட பல தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரித்த பின்னர், நீதிபதிகள் சம்பத் அபேகோன் மற்றும் சோபிதா ராஜகருணா ஆகியோர் உடன்பட்ட 58 பக்கத் தீர்ப்பை, நீதிபதி ஜனக் டி சில்வா இன்று வழங்கினார்.</p><p>இது தொடர்பில் நீதிபதி தெரிவித்தவை வருமாறு,</p><h2>எவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினார்</h2><p>
</p><p>
"முன்னாள் ஜனாதிபதி, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் (சட்டம்) சமர்ப்பித்த பரிந்துரையின் அடிப்படையில் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9b8f0ff-85df-4efa-8789-66ba2e873122/26-6aa2ce2e7af1e.webp' /></p><p>
</p><p>
 மகாநாயக்க தேரர்கள், தியவதன நிலமே மற்றும் பிற மதத் தலைவர்களும் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கக் கோரியிருந்ததாக முன்னாள் ஜனாதிபதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அரசியலமைப்பின் 34(1) பிரிவின்படி, ஜனாதிபதி தனக்கு அளிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மன்னிப்பு வழங்க வேண்டும். இருப்பினும், இந்த வழக்கில், இந்த பிரதிவாதிக்கு மன்னிப்பு வழங்கியதற்கான காரணங்களை ஜனாதிபதி விளக்கத் தவறிவிட்டார்.</p><p>

எனவே, அரசியலமைப்பின் 12(1) பிரிவால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமையை ஜனாதிபதி மீறியுள்ளார் என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது."</p><p></p><p>

</p><h2>மைத்திரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கவில்லை&nbsp;</h2><p>அதன்படி, முன்னாள் ஜனாதிபதி பிரதிவாதி ஞானசாரருக்கு மன்னிப்பு வழங்கினார். வணக்கத்திற்குரியவருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு,சட்டத்தின்படி நீதிமன்றத்தின் பார்வையில் செல்லாதது மற்றும் பயனற்றது என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/407afa52-1a34-4a1a-a3f0-696e5073cb67/26-6aa2ce2f2dfbb.webp' /></p><p>

இருப்பினும், மேலதிக செயலாளர் (சட்டம்) சமர்ப்பித்த பரிந்துரைகளின் அடிப்படையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த மன்னிப்பை வழங்கியுள்ளதால், முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் மேலும் நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கவில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வா தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T15:35:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸாரை உடனே தொடர்பு கொள்ள புதிய அலைபேசிச் செயலி அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-mobile-app-launched-contact-police-immediately-1789054140"></link>
            <id>https://jvpnews.com/article/new-mobile-app-launched-contact-police-immediately-1789054140</id>
            <summary type="text">அவசர கால நிலைமையின் போது விரைவாக பொலிஸாருக்குத் தெரியப்படுத்துவதற்காக புதிய அலைபேசிச் செயலி (Mobile App) ஒன்றை அறிமுகப்படுத்த இலங்கை பொலிஸார் நடவடிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவசர கால நிலைமையின் போது விரைவாக பொலிஸாருக்குத் தெரியப்படுத்துவதற்காக புதிய அலைபேசிச் செயலி (Mobile App) ஒன்றை அறிமுகப்படுத்த இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p> </p><p></p><p>"Sri Lanka Police App" என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலியில், தேசிய அடையாள அட்டை வைத்துள்ள எந்தவொரு இலங்கையரும் பதிவு செய்ய முடியும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.</p><p> 

இந்தச் செயலியில் உள்ள SOS பொத்தானை அவசர காலத்தில் 10 வினாடிகள் அழுத்தி இயங்கச் செய்வதன் மூலம், குறிப்பிட்ட நபர் இருக்கும் இடம் தொடர்பான தகவல்களை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அனுப்ப முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7105a395-f202-444b-8fbf-c83fc6382d08/26-6aa2ccbdba294.webp' /></p><p> </p><p>

119 அவசர அழைப்பு இலக்கத்தின் ஊடாக பொலிஸாருக்குத் தெரியப்படுத்துவதுடன், இந்தச் செயலியின் மூலமாகவும் விரைவாகத் தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். </p><p>

குழந்தைக்கு ஏதேனும் விபத்து அல்லது அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ள சந்தர்ப்பத்தில் கூட இந்தச் செயலியின் மூலம் பொலிஸாருக்குத் தெரியப்படுத்த முடியும் என்றும், அது தொடர்பில் பொலிஸார் விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். </p><p>

Play Store ஊடாக Sri Lanka Police App செயலியைப் பதிவிறக்கம் செய்து பதிவு செய்ய முடியும் என்பதுடன், தேசிய அடையாள அட்டை உள்ள சிறுவர்களுக்கும் இதில் பதிவு செய்ய வாய்ப்பு அளிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். </p><p>

மேலும், இந்த பொலிஸ் செயலியைத் தவறாகப் பயன்படுத்த முடியாது என்றும், 2025 ஆம் ஆண்டில் 119 அவசர அழைப்பு இலக்கத்தைத் தவறாகப் பயன்படுத்திய 91 நபர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T15:29:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு- கிழக்கு மற்றும் மலையக எம்.பிக்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் விசேட கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-holds-special-talks-mps-from-north-east-1789050727"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-holds-special-talks-mps-from-north-east-1789050727</id>
            <summary type="text">வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும்
எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன்&amp;nbsp; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும்
எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன்&nbsp; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.</p><p>குறித்த கலந்துரையாடலானது இன்று(10.9.2026) நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
</p><p>
தற்போதைய பொருளாதார நிலைமையுடன் சேர்த்து வடக்கு, கிழக்கு மற்றும் மலையக
மக்கள் முகங்கொடுத்து வரும் சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள்
குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதன்போது இங்கு வருகை
தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விடயங்களைக் கேட்டறிந்தார்.</p><h2>பணவீக்க நிலைமை&nbsp;</h2><p>
</p><p>
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களினது தற்போதைய வாழ்க்கைத்தரம், பொருளாதார
நிலை மற்றும் குடும்ப வருமான மட்டம் என்பற்றில் நாட்டின் தற்போதைய பணவீக்க
நிலைமை மற்றும் நாளாந்த வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என்பன செலுத்தும்
தாக்கங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0c33973-a248-4d24-bc2b-74836e4964dc/26-6aa2c822c4b0f.webp' /></p><p> </p><p>அவ்வாறே, குறித்த பிரதேசங்களில்
நிலவும் அடிப்படை பௌதீக வசதிகள் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் எதிர்நோக்கும்
சிரமங்கள் குறித்து இங்கு பிரதானமாக கவனம் செலுத்தப்பட்டது.
</p><p>
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் சுகாதாரம் மற்றும் கல்வித் தேவைகள்,
தரமான சுகாதார சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் உள்ள அணுகல், பாடசாலைக் கல்வி
மற்றும் பிள்ளைகளின் போஷாக்கு மட்டம் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள்
குறித்தும் இங்கு ஆழமாக கலந்துரையாடப்பட்டன.</p><h2>பொருளாதாரப் பிரச்சினை</h2><p>
</p><p>
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் நீண்டகாலமாக முகங்கொடுத்துவரும் சமூக,
பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு நடைமுறை ரீதியான தீர்வுகளைக் காணவும், அவர்களின்
வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும் எடுக்கப்பட வேண்டிய நடைமுறை ரீதியிலான
எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் இங்கு பரிமாறிக்
கொள்ளப்பட்டன.
</p><p>
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள்
குறித்து தொடர்ந்தும் கவனம் செலுத்தி, நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும்
வெளியேயும் அவற்றுக்குத் தேவையான தலையீடுகளைச் செய்வதன் முக்கியத்துவத்தை
எதிர்க்கட்சித் தலைவர் இங்கு வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்
மத்தியில் எடுத்துரைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b855cca-828e-44ed-9454-470acce4bf9a/26-6aa2c823a1401.webp' /></p><p>
</p><p>
மேலும், இந்தப் பிரதேசங்களில் வாழும் மக்களின் உண்மையான பிரச்சினைகள் குறித்து
பிரதேச மட்டத்தில் தகவல்களைத் திரட்டி அவற்றுக்குத் தீர்வுகளைப்
பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் நெருக்கமான
ஒருங்கிணைப்பைப் பேணுவது தொடர்பிலும் இங்கு மேலும் கவனம் செலுத்தப்பட்டது.</p><p>இந்தச் சந்திப்பில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற
உறுப்பினர்களான கதிரவேலு சண்முகம் குகதாசன், எம்.ஏ.எம்.தாஹிர், டாக்டர்
இளையதம்பி சிறிநாத், ஞானமுத்து ஸ்ரீநேசன், எம்.எஸ். உதுமாலெப்பை, செல்வம்
அடைக்கலநாதன், டாக்டர் பத்மநாதன் சத்தியலிங்கம், கே. காதர் மஸ்தான்,
கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T15:20:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி அரேபியாவை தாக்கிய ஹவுதி - மெக்கா ஒப்பந்தத்தில் இராணுவ நடவடிக்கையை மறுத்த பாகிஸ்தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pakistan-declines-military-action-on-mecca-pact-1789053395"></link>
            <id>https://news.lankasri.com/article/pakistan-declines-military-action-on-mecca-pact-1789053395</id>
            <summary type="text">Pakistan declines military action on Mecca Pact: சவுதி அரேபியாவை ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்கிய நிலையில், பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டை வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Pakistan declines military action on Mecca Pact: சவுதி அரேபியாவை ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்கிய நிலையில், பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.</p><h2>

இராணுவ நடவடிக்கையை மறுத்த பாகிஸ்தான் </h2><p>மெக்கா ஒப்பந்தம் (Mecca Pact) படி, சவுதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகள் ஒருவர்மீது தாக்குதல் நடந்தால், அது மூவர்மீதும் தாக்குதல் எனக் கருதப்படும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
ஆனால், பாகிஸ்தான் வெளிநாட்டு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சஜ்ஜாத் ஹைதர் கான் தெரிவித்ததாவது: “இப்போதைக்கு இராணுவ நடவடிக்கை எதுவும் பேசப்படவில்லை. காலம் வரும் போது, ஒப்பந்தத்தின் படி செயல்படுவோம்” எனக் கூறினார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bc32ea5-d1b5-46ba-8beb-3c9c60d5ee67/26-6aa2caf2a0a11.webp' /></p><p>சமீபத்தில் நடந்த ஹவுதி தாக்குதலில், சவுதி அரேபியாவில் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், எண்ணெய் நிலையங்கள் மற்றும் பல வசதிகள் சேதமடைந்தன. இதனால், பாகிஸ்தான் சவுதி அரேபியாவுக்கு நேரடியாக இராணுவ உதவி வழங்குமா என்ற கேள்வி எழுந்தது.</p><p>

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா அசிஃப், மெக்கா ஒப்பந்தத்தை நேட்டோவின் Article 5-க்கு ஒப்பிட்டார். அதாவது, ஒரு உறுப்பினர்மீது தாக்குதல் நடந்தால், அது அனைவர்மீதும் தாக்குதல் எனக் கருதப்படும். ஆனால், ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட இராணுவ நடவடிக்கைகள் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.
</p><p></p><h2>வல்லுநர்கள் கருத்து</h2><p> இது நேட்டோ போன்ற கூட்டமைப்பு அல்ல, புதிய பிராந்திய கூட்டணி உருவாகவில்லை. பாகிஸ்தான் தனது உள்நாட்டு பொருளாதார சவால்களையும், அமெரிக்கா-ஈரான் இடையேயான நடுவர் நிலைப்பாட்டையும் கருத்தில் கொண்டு, நேரடி இராணுவ நடவடிக்கையைத் தவிர்க்க விரும்புகிறது என தெரிவித்துள்ளனர்.
</p><p>
சவுதி அரேபியாவுக்கு பாகிஸ்தானுடன் ஏற்கனவே பாதுகாப்பு ஒப்பந்தம் உள்ளது. மேலும், Gulf Cooperation Council (GCC) உடன் 2000 முதல் கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் உள்ளது. ஆனால், இவை நேட்டோவின் Article 5 போல தானாகவே இராணுவ நடவடிக்கையைத் தூண்டவில்லை.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T15:18:11+00:00</updated>
        </entry>
    </feed>
