<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-14T12:26:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[க. பொ.த சாதாரண தர பாடங்களில் ஏற்படவுள்ள மாற்றம் ; வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/changes-coming-to-g-c-e-o-l-subjects-in-sri-lanka-1789388377"></link>
            <id>https://jvpnews.com/article/changes-coming-to-g-c-e-o-l-subjects-in-sri-lanka-1789388377</id>
            <summary type="text">கல்வி பொதுத் தராதார சாதாரண தரத்திற்காக வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உட்பட 7 பாடங்களை உள்ளடக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி சீர்திருத்தங்கள் த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கல்வி பொதுத் தராதார சாதாரண தரத்திற்காக வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உட்பட 7 பாடங்களை உள்ளடக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான உபகுழுவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இக்குழு அண்மையில் கூடியபோதே இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17222359-ca44-401c-8fde-412fca777ab5/26-6aa7e65b10c33.webp' /></p><h2 style="text-align: justify; ">கல்விச் சீர்திருத்தங்கள்</h2><p style="text-align: justify; "> 

இதன்போது 12 மற்றும் 13ஆம் தரங்களுக்கு சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் ஒழுக்கநெறி ஆகிய தொகுதிகளை (Modular) உள்ளடக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. </p><p style="text-align: justify; ">

இங்கு 2027ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பொதுக் கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் முன்பள்ளிக் கல்விச் சீர்திருத்தங்களின் முன்னேற்றம் குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

பொதுக் கல்விச் சீர்திருத்தங்களின் ஆரம்பக் கட்டமாக 2 மற்றும் 6ஆம் தரங்களுக்குத் தேவையான செயற்பாட்டுப் புத்தகங்கள், ஆசிரியர் வழிகாட்டிகள் மற்றும் தொகுதிகள் (Modules) தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தொடர் திட்டங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதாக பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "> 

முன்பள்ளிக் கல்வியை முறைப்படுத்துவதற்காக தேசிய முன்பள்ளிக் கொள்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதுடன், முன்பள்ளிகளைப் பதிவுசெய்தல், பாடத்திட்டங்கள் மற்றும் ஆசிரியர் வழிகாட்டிகளைத் தயாரித்தல் மற்றும் ஆசிரியர் பயிற்சித் திட்டங்களை முன்னெடுப்பது உள்ளிட்ட பணிகள் இடம்பெற்று வருவதாகவும் இங்கு மேலும் வெளிப்படுத்தப்பட்டது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-14T12:20:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன் நகரில் வாடகை நிலுவை செலுத்தாத 10 கடைகளுக்கு சீல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/10-shops-in-hatton-sealed-for-non-payment-of-rent-1789387793"></link>
            <id>https://tamilwin.com/article/10-shops-in-hatton-sealed-for-non-payment-of-rent-1789387793</id>
            <summary type="text">ஹட்டன் நகரில் வாடகை நிலுவையை செலுத்தத் தவறிய 10 கடைகளுக்கு இன்று(14.9.2026) சீல் வைக்கப்பட்டுள்ளதாக நகரசபையின் தலைவர் அசோக கருணாரத்ன தெரிவித்தார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் நகரில் வாடகை நிலுவையை செலுத்தத் தவறிய 10 கடைகளுக்கு இன்று(14.9.2026) சீல் வைக்கப்பட்டுள்ளதாக நகரசபையின் தலைவர் அசோக கருணாரத்ன தெரிவித்தார்.
</p><p>
ஹட்டன் நகர சபைக்கு சொந்தமான கடை அறைகளுக்கான வாடகை நீண்ட காலமாக
செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ள நிலையில், அவற்றை அறவிடும் நடவடிக்கையின் ஒரு
கட்டமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, ஹட்டன்–டிக்கோயா நகர சபைக்கு சொந்தமான
வர்த்தக நிலையங்களில் இருந்து நிலுவையில் உள்ள வாடகை மற்றும் ஏனைய கட்டணங்களை
அறவிடுவதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நகர சபை
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>சிவப்பு அறிவித்தல்</h2><p>

இதன் அடிப்படையில், ஹட்டன் நகரில் நீண்ட காலமாக வாடகை நிலுவையை செலுத்தாத கடை
உரிமையாளர்களுக்கு பல தடவைகள் அறிவித்தல்கள் வழங்கப்பட்டதுடன், இறுதி
எச்சரிக்கையாக சிவப்பு அறிவித்தல்களும் வழங்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66f1628d-811f-492a-923d-77d207b44d2a/26-6aa7e67a4c8ed.webp' /></p><p>
</p><p>
எனினும், உரிய காலத்திற்குள் நிலுவைத் தொகையை செலுத்தாத 10 கடைகளுக்கே இன்று
சீல் வைக்கப்பட்டுள்ளதாக நகர சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.&nbsp;</p><p>ஹட்டன்–டிக்கோயா நகர சபையின் தலைவர் அசோக கருணாரத்ன தெரிவிக்கையில்,

நகர சபைக்கு சொந்தமான கடைகளில் இருந்து இதுவரை சுமார் 14 கோடி ரூபாய் வரையிலான
வாடகை நிலுவைத் தொகை அறவிடப்பட வேண்டியுள்ளது.</p><h2>நிலுவைத் தொகை</h2><p>&nbsp;நீண்ட காலமாக பெருந்தொகையான வாடகை நிலுவையை செலுத்தாத கடை உரிமையாளர்களுக்கு
பல சந்தர்ப்பங்களில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட போதிலும், நிலுவைத் தொகை
செலுத்தப்படாத நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99e69896-5816-4e04-8aab-e50914791055/26-6aa7e67b27c21.webp' /></p><p>மேலும், சில கடை உரிமையாளர்கள் சீல் வைக்கப்பட்ட பின்னர் குறிப்பிட்ட தொகையை
செலுத்தி, மீதமுள்ள நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு கால அவகாசம்
கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T12:20:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கட்டளை மீறிச்சென்ற டிப்பர் வாகனங்கள்: காவல்துறை துப்பாக்கி சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tipper-truck-transporting-illegally-sand-jaffna-1789386717"></link>
            <id>https://ibctamil.com/article/tipper-truck-transporting-illegally-sand-jaffna-1789386717</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், கொடிகாமம் - மீசாலை வடக்கு புத்தூர் வீதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்று, சமிக்ஞையை மீறி தப்பிச் செல்ல முயன்ற இரண்டு டிப்பர் வாகனங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், கொடிகாமம் - மீசாலை வடக்கு புத்தூர் வீதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்று, சமிக்ஞையை மீறி தப்பிச் செல்ல முயன்ற இரண்டு டிப்பர் வாகனங்கள் மீது காவல்துறை விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.</p><p> 

நேற்று(13.09.2026) இரவு 11.15 இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>

சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற இரு டிப்பர் வாகனங்களை புத்தூர் வீதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வழிமறித்துள்ளனர்.</p><p></p><h2>சாரதிகள் இருவரும் கைது</h2><p> </p><p>

இருப்பினும், அவர்களின் சமிக்ஞையை மீறி வாகனங்கள் நிறுத்தப்படாமல் வேகமாகச் சென்றுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bfc6853-92a6-4cb6-90b8-9a0f166bbef6/26-6aa7e4df78081.webp' /></p><p> </p><p>

இதனையடுத்து, அதிரடிப்படையினர் குறித்த டிப்பர் வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி அவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். </p><p>

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சோதனையில் இரு டிப்பர் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவற்றைச் செலுத்தி வந்த சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர். </p><p>

இச்சம்பவம் தொடர்பில் கொடிகாமம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T12:14:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[டீசல் விற்பனையால் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் பெரு நட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/petroleum-corporation-losses-from-diesel-sales-1789386153"></link>
            <id>https://ibctamil.com/article/petroleum-corporation-losses-from-diesel-sales-1789386153</id>
            <summary type="text">டீசல் விற்பனையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார்.

இருப்பினும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>டீசல் விற்பனையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார்.
</p><p>
இருப்பினும், பெட்ரோல் விற்பனை மூலம் எந்தவொரு தனியார் எண்ணெய் நிறுவனத்திற்கும் நஷ்டம் ஏற்படுவதில்லை என்று தலைவர் குறிப்பிடுகிறார்.</p><h2>நஷ்டத்தை சமாளிக்க முடியும்&nbsp;</h2><p>தற்போது எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு ஒரு லிட்டர் டீசலுக்கு சுமார் ரூ. 60 நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறிய தலைவர், கடந்த காலங்களில் சுத்திகரிப்பு மூலம் கிடைத்த இலாபத்தைக் கொண்டு இந்த நஷ்டத்தை சமாளிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c64f1ea5-6b65-4ea5-8dfd-46f59572c4d7/26-6aa7e42695f3e.webp' /></p><p>

இன்று (14) நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது எண்ணெய் கூட்டுத்தாபனத் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T12:10:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ காலநிலையில் வாழ்வாதாரங்களை இழந்த இலங்கை மக்கள் - அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankans-lost-their-livelihoods-due-el-ni-o-1789387662"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankans-lost-their-livelihoods-due-el-ni-o-1789387662</id>
            <summary type="text">தற்போது நாட்டில் நிலவும் எல் நினோ காலநிலை காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளதாகவும், குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது நாட்டில் நிலவும் எல் நினோ காலநிலை காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளதாகவும், குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், வறட்சி காரணமாக தோட்டச் செய்கைகளுக்குப் போதுமான நீர் கிடைக்காத நிலையில், நிலங்கள் வறண்டு வருவதால் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p>

இதனால், சிலர் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c5c235c-b35a-4794-97a9-e094068c413f/26-6aa7e3e7f001b.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், கடந்த 16 வருடங்களாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் தென்னைப் பயிர்ச்செய்கை, தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக காய்ந்து போகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்தப் பிரச்சினையை அரசாங்க அதிகாரிகள் கவனத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும் எனவும், அவ்வாறு வழங்கினால் தங்களது வாழ்வாதாரங்களைத் தொடர முடியும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36e1e48e-6565-40a6-865c-dbb4e2c739be/26-6aa7e3e8da45d.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T12:09:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜிதவுக்கு எதிரான வழக்கு விசாரணை! நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/further-hearing-in-rajitha-case-set-for-november-1789387089"></link>
            <id>https://ibctamil.com/article/further-hearing-in-rajitha-case-set-for-november-1789387089</id>
            <summary type="text">
முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக, 2012 ஆம் ஆண்டு முகத்துவாரம் மீன்பிடித் துறைமுகத்தை தனியார் நிறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>
முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக, 2012 ஆம் ஆண்டு முகத்துவாரம் மீன்பிடித் துறைமுகத்தை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (14) மேலதிக விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. &nbsp;</p><p> 

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹைல் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
விசாரணையின் போது, முறைப்பாட்டாளர் தரப்பினால் முன்னிலைப்படுத்தப்பட்ட சாட்சிகளிடம் இருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளால் குறுக்கு விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba8fc6a3-ace6-4d9e-94ca-3b532f58e042/26-6aa7e3d1385c6.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து, வழக்கு குறித்த மேலதிக விசாரணையை எதிர்வரும் நவம்பர் 17 ஆம் திகதி வரை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T12:08:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[தள்ளாடிய அணி..7 சிக்ஸர்களுடன் 29 பந்தில் 68 ஓட்டங்கள் விளாசிய அமீரக வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/khuzaima-tanveer-blast-68-runs-uae-won-by-6-wkts-1789386839"></link>
            <id>https://news.lankasri.com/article/khuzaima-tanveer-blast-68-runs-uae-won-by-6-wkts-1789386839</id>
            <summary type="text">UAE beat malaysia by 6 wickets: ஐக்கிய அரபு அமீரக அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மலேசியாவை வீழ்த்தியது. 


மலேசியா அணிக்கு எதிரான டி20 போட்டிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>UAE beat malaysia by 6 wickets: ஐக்கிய அரபு அமீரக அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மலேசியாவை வீழ்த்தியது. </p><p>


மலேசியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>ஆயன் அஃப்ஸல்&nbsp;அபார பந்துவீச்சு </h2><p>
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மலேசியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கோலாலம்பூரில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50990714-cce5-4a08-9b16-39480cbda35a/26-6aa7e34650712.webp' /></p><p></p><p>
முதலில் ஆடிய மலேசிய அணியில் விரன்தீப் சிங் 32 ஓட்டங்களும், சையத் அஸிஸ் 28 ஓட்டங்களும் எடுத்தனர். </p><p>

இதன்மூலம் மலேசியா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ஓட்டங்கள் எடுத்தது. ஆயன் அஃப்ஸல் கான் 3 விக்கெட்டுகளும், குஸைமா தன்வீர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1d31749-6086-4e91-9546-e089a6110617/26-6aa7e34557231.webp' /></p><h2> 

குஸைமா தன்வீர்</h2><p>பின்னர் ஆடிய அமீரக அணியில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிய, 67 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை அணி இழந்தது.
</p><p>
அப்போது அதிரடியில் மிரட்டிய குஸைமா தன்வீர் (Khuzaima Tanveer) 29 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 68 ஓட்டங்கள் விளாச, அமீரக அணி 16.5 ஓவர்களில் 150 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.</p><p>அரைசதம் விளாசியதுடன் 2 விக்கெட்களும் வீழ்த்திய குஸைமா தன்வீர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68a76247-d76e-4192-83d6-c9df0cec4624/26-6aa7e3470b933.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6d77d12-dbde-49dd-b9d5-d8c590706871/26-6aa7e347b347d.webp' /></p>]]></content>
            <updated>2026-09-14T12:03:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடும்பத்திற்குள்ளேயே நடந்த சதியால் துரோகத்தில் சிக்கிய கோட்டாபய]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-was-betrayed-by-family-1789384066"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-was-betrayed-by-family-1789384066</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக சதித் திட்டம் ஒன்று தீட்டப்பட்டிருந்தமைக்கான வலுவான சாட்சியங்கள் தற்போது வெளிவந்துள்ளதாக தென்னிலங்கை ஊ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக சதித் திட்டம் ஒன்று தீட்டப்பட்டிருந்தமைக்கான வலுவான சாட்சியங்கள் தற்போது வெளிவந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.</p><p> 

ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் எதிர்காலத்தை நாமல் ராஜபக்சவிடம் கையளிப்பதற்காக இந்த சதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
</p><p>
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச போட்டியிட, ஷிராந்தி, மகிந்த உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.</p><p> </p><h2><b>

 துரோகத்தில் சிக்கிய கோட்டாபய </b></h2><p> அதற்கு எதிராக கடும் நிலைப்பாட்டில் அவர்கள் இருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bd68079-94c4-423f-b672-9bfcb0d30177/26-6aa7e23d370c4.webp' /></p><p>எனினும், வியத்மக அமைப்பை நிறுவி, அரசியல் களத்தை அமைத்துக்கொண்டு முன்னோக்கி வந்த கோட்டாபய ராஜபக்ச, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தனது வேட்புமனுவை வலுவாக உறுதிப்படுத்திக் கொண்டார்.
</p><p>
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர், நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று கோட்டாபய ராஜபகச் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொண்டார்.
</p><p>
இந்த நிலையில் கோட்டாபயவிற்கு எதிராக, நாமல் ராஜபக்சவின் அரசியல் பெரிய அண்ணா என்று வர்ணிக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் தலைமையில் அரசாங்கத்திற்குள் உட்கட்சி மோதல் ஏற்பட்டது.</p><h3><b>

ராஜபக்சவின் அரசியல்</b></h3><p>இதனால், 2022ஆம் ஆண்டு மார்ச் 03 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/431da20b-02c7-4d83-b5dd-592b770adb59/26-6aa7e23ded411.webp' /></p><p>அதனைத் தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர்கள் இருவரும் இனி ஒருபோதும் ராஜபக்சக்களுடன் அரசியல் செய்யப்போவதில்லை எனத் தெரிவித்திருந்தனர்.
</p><p>
ஆனால், தற்போது கோட்டாபய ராஜபக்சவை முற்றிலும் கைவிட்டுவிட்டு, அவர்கள் இருவரும் உள்ளிட்ட தரப்பினர் தற்பொழுது நாமல் ராஜபக்சவுடன் கைகோர்த்து கொண்டதன் ஊடாக இந்த தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-14T12:03:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[துருக்கி பில்லியனரின் விமானம் விபத்தில் சிக்கியது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/turkey-billionaire-plane-crash-in-libya-airport-1789387271"></link>
            <id>https://news.lankasri.com/article/turkey-billionaire-plane-crash-in-libya-airport-1789387271</id>
            <summary type="text">turkey billionaire Hamdi Akın private plane crash at libya airport: துருக்கி பில்லியனர் ஹம்டி அகினுக்கு சொந்தமான வர்த்தக விமானம் லிபியாவில் தரையிறங்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>turkey billionaire Hamdi Akın private plane crash at libya airport: துருக்கி பில்லியனர் ஹம்டி அகினுக்கு சொந்தமான வர்த்தக விமானம் லிபியாவில் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியுள்ளது. </p><h3>

விபத்தில் சிக்கிய துருக்கி பில்லியனரின் விமானம்
</h3><p>
துருக்கியின் இஸ்தான்புல் அத்தாதுர்க் விமான நிலையத்திலிருந்து, செஸ்னா சிடேஷன் லாட்டிட்யூட் வர்த்தக விமானம் லிபியாவுக்குச் சென்று கொண்டிருந்தது.</p><p>

உள்ளூர் நேரப்படி காலை 10:07 மணிக்கு மிஸ்ராட்டா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்று தீப்பிடித்து விபத்தில் சிக்கியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27db9c99-b561-4f13-a654-3cce58ffc595/26-6aa7e208ef020.webp' /></p><p>விமான நிலைய அவசர மீட்புக் குழுவினர் விரைந்து சென்று தீயை அணைத்து, விமானத்தில் இருந்த 2 விமானிகள் மற்றும் ஒரு விமானப் பணியாளரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

மூவரும் காயமின்றி நலமுடன் உள்ளதாக தெரிய வந்துள்ளது. </p><p>இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விமானப் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டதாக லிபியாவின் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p>
துருக்கியிலிருந்து வந்த அந்த விமானம், 3 லிபிய அரசியல் பிரமுகர்களை துருக்கிக்கு ஏற்றிச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. </p><p>

இவர்களில், திரிப்போலியைத் தளமாகக் கொண்ட பாதுகாப்புத் துறை துணைச் செயலாளர் அப்தெல்சலாம் ஜூபியின் சகோதரரான முகமது ஜூபியும் அடங்குவார்.
</p><p>
TC-AKF என்ற பதிவு எண்ணைக் கொண்ட இந்த வர்த்தக விமானமானது துருக்கி தொழிலதிபர் ஹம்டி அகினுக்குச் சொந்தமானது ஆகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e22d6517-142f-4c70-a9ac-1cbff16e9ed3/26-6aa7e209a176c.webp' /></p><p>

72 வயதான ஹம்டி அகின், அக்ஃபென் ஹோல்டிங்கின் இயக்குநர்கள் குழுவின் தலைவர் ஆவார்.</p><p> 

போர்ப்ஸ் நிறுவன மதிப்பீட்டின் படி, ஹம்டி அகின் 2.7 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் துருக்கியின் முதல் 10 பணக்கார பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T12:01:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வீடொன்றுக்குள் அரங்கேறிய தகாத செயல் ; வசமாக பிடிபட்ட இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/improper-act-reported-inside-jaffna-house-1789386349"></link>
            <id>https://jvpnews.com/article/improper-act-reported-inside-jaffna-house-1789386349</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 210 லீட்டர் கசிப்பும் மீட்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 210 லீட்டர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது</p><p style="text-align: justify; "> 

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அச்செழு பகுதியில் வீடொன்றினுள் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டினை பொலிசார் சுற்றி வளைத்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a940893-40b6-4c7f-a421-fcebf77d1249/26-6aa7de6f5cb47.webp' /></p><h2 style="text-align: justify; ">கசிப்பு உற்பத்தி</h2><p style="text-align: justify; "> 

வீட்டினுள் பொலிஸார் சென்ற வேளையில் பெரிய பரலில் எரிவாய்வை பயன்படுத்தி கசிப்பு காய்ச்சிக்கொண்டிருந்த 34 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்தனர்.</p><p style="text-align: justify; ">அதனை அடுத்து வீட்டில் ஏற்கனவே காய்ச்சி , விற்பனைக்காக வைத்திருந்த 210 லீட்டர் கசிப்பு , 160 லீட்டர் கோடா , ஒரு போத்தல் சாராயம் , எரிவாயு சிலிண்டர் பரல்கள் உள்ளட்டவற்றையும் சான்று பொருளாக பொலிஸார் மீட்டுள்ளனர்</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்ட நபரை அச்சுவேலி போலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-14T12:00:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அலரி மாளிகை வளாகத்தில் விழுந்து கிடந்த றக்பி வீரர் தாஜுதீன்! சிரந்தியால் மூடிமறைக்கப்பட்ட சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/thajudeen-shiranthi-rajapaksa-police-1789371851"></link>
            <id>https://tamilwin.com/article/thajudeen-shiranthi-rajapaksa-police-1789371851</id>
            <summary type="text">அலரி மாளிகையில் ரக்பி வீரரான தாஜுதீன் விழுந்து கிடந்த நிலையில், சிரந்தி ராஜபக்சவின் கோரிக்கைக்கமைய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அநுர சேனநாயக்கவே இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அலரி மாளிகையில் ரக்பி வீரரான தாஜுதீன் விழுந்து கிடந்த நிலையில், சிரந்தி ராஜபக்சவின் கோரிக்கைக்கமைய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அநுர சேனநாயக்கவே இந்த சம்பவத்தை விபத்தாக மாற்றுவதற்கு உதவி செய்தார் என்ற 
திடுக்கிடும் தகவலை புலனாய்வு ஆதரங்களை மேற்கோள் காட்டி இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அஜித் தர்மபால தெரிவித்துள்ளார்.</p><p>

இந்த அமைப்பின் தலைமை அலுவலகம் லண்டனில் அமைந்துள்ளது. </p><p>

இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;&nbsp;</p><h2>

</h2><p></p><h2>அநுர சேனாநாயக்க என்ன சொன்னார்</h2><p>2015ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க - மைத்திரிபால இருவருடைய நல்லாட்சியில் தாஜுதீனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. ஆனால் அதற்கு மேல் செல்வதற்கு அன்றைய ஆட்சியாளர்கள் இடம் கொடுக்கவில்லை.</p><p>

அண்மையில் இந்த சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன. </p><p>

இதற்கமைய, மேற்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இருந்த அநுர சேனநாயக்க, தாஜுதீன் வழக்கில் வெலிக்கடை சிறைச்சாலையின் சிறப்புச் செல்லில் இருந்தபோது அவர் கூறியதே இந்த சம்பவமாகும்.
</p><p>
அநுர சேனநாயக்க அன்று காலை உடற்பயிற்சிக்குச் செல்ல ஆயத்தமாக வெள்ளை நிற காற்சட்டையும் காலணியும் அணிந்திருந்த வேளையில் “சிரந்தி மேடம்” அழைப்பதாக பொலிஸ் காவலர் ஒருவர் கூறினார்.
</p><p>
அநுர சேனநாயக்க தொலைபேசியை எடுத்தபோது “அநுர நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? விரைவில் வீட்டிற்கு வாருங்கள் ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது” என சிரந்தி ராஜபக்ச கூறினார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ecbb19f-52a9-4fb1-a4c3-7f8b02c1f5ab/26-6aa7a5cdaa625.webp' /></p><p>&nbsp;அநுர சேனநாயக்க அந்த ஆடையுடனேயே அலரி மாளிகைக்குச் சென்றுள்ளார். 

அங்கு சென்றபோது “ஒரு சம்பவம் நடந்துவிட்டது எமது பிள்ளைகளைக் காப்பாற்றுங்கள்” என்று சிரந்தி கூறினார்.
</p><p>
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த பொழுது, ரக்பி வீரர் தாஜுதீன் படுகாயமடைந்து விழுந்து கிடந்தார். அநுர சேனநாயக்க தொட்டுப் பார்த்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.</p><p> 

“சிரந்தி மேடம் இந்த பையன் இறந்துவிட்டான்” என்று கூறியதும் “ஏதாவது செய்யுங்கள் அநுர” எனக் கூறினார். 

உடனடியாக அநுர சேனநாயக்க மேலும் சிலருடன் பேசி உடலை நாரஹேன்பிட்டியில் விபத்து நடந்ததாகக் கூறப்படும் இடத்திற்கு கொண்டு சென்று காரின் சாரதி ஆசனத்திற்குப் பக்கத்தில் (இடது பக்க ஆசனத்தில்) வைத்து சம்பவத்தைச் சித்தரித்துள்ளனர்.
</p><p>
நல்லாட்சியில் தாஜுதீன் கடுமையாக தாக்கப்பட்டே கொல்லப்பட்டார் என்றும், விபத்தில் நடந்த மரணம் இல்லை என்றும் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.&nbsp;</p><h2>சி.ஐ.டி விசாரணை</h2><p>நாரஹேன்பிட்டி போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியான ஐ.பி. சுமித்த சில்வாவை அழைத்து அநுர சேனநாயக்க இந்த சம்பவத்தை ஒரு வாகன விபத்தாக மாற்றி, கார் தீப்பற்றி எரிந்த காரணத்தினால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கட்டளையிட்டுள்ளார்.</p><p> 



2015-2016 காலப்பகுதியில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த ஷானி அபயசேகர நடத்தப்பட்ட விசாரணையில் சுமித்த சில்வா கைது செய்யப்பட்டார்.
</p><p>
அப்போது அவர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் அதிபர் அநுர சேனநாயக்கவின் வழிகாட்டலிலேயே தான் இதைச் செய்ததாக நீதிவான் முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார். </p><p>ஆனால் கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக் காலத்தில், ஷானி அபயசேகரவும் அவரது குழுவினரும் தன்னைப் பயமுறுத்தியதாலேயே அவ்வாறு கூறியதாக சுமித்த சில்வா மாறுப்பட்ட கருத்தை கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8663d16-78b4-4475-bc59-c3c9989329d4/26-6aa7a5ce5f7fc.webp' /></p><p>தற்போதைய நிலைமையில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதும் பயணத்தடை விதிக்கப்பட்டிருக்கும்போதும் சுமித்த சில்வா எவ்வாறு அவுஸ்திரேலியாவிற்குச் சென்றார் என்பது கேள்விக்குறியாகவுள்ளது.
</p><p>மேலும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சட்ட மருத்துவ அதிகாரி ஜேம்ஸ் சமரகோன், அநுர சேனநாயக்க மற்றும் சம்பவ இடத்தை சுத்தம் செய்த பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். </p><p>இருப்பினும் தாஜுதீன் கொலைச் சம்பவத்தின் விசாரணைகள் இன்னும் முழுமை பெறவில்லை.</p><p>குறித்த சம்பவத்தில் நேரடியாக தொடர்புபட்டிருந்தவர்கள் மரணமடைந்துள்ள நிலையில் இப்போது வெளிவந்திருக்கும் தகவல்களின் படி மிகவும் பாரதூரமானதாக தோன்றுகிறது.</p><p></p><p>&nbsp; &nbsp;&nbsp;</p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/5sC3lP4KtB4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-14T11:53:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் கடற்தொழிலாளரின் வலையில் சிக்கிய 300 கிலோகிராம் நிறையுடைய பிரம்மாண்ட கொப்பறா மீன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/300-kg-koppara-fish-caught-in-mannar-1789386233"></link>
            <id>https://tamilwin.com/article/300-kg-koppara-fish-caught-in-mannar-1789386233</id>
            <summary type="text">மன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மன்னார் கடற்தொழிலாளர் ஒருவரின் வலையில் இன்று (14.09.2026) அதிகாலை ஆழ்கடல் மீனான “கொப்பறா” என அழைக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மன்னார் கடற்தொழிலாளர் ஒருவரின் வலையில் இன்று (14.09.2026) அதிகாலை ஆழ்கடல் மீனான “கொப்பறா” என அழைக்கப்படும் ஆழ்கடல் மீன் சிக்கியுள்ளது.
</p><p>
சுமார் 300 கிலோகிராம் எடையுடைய குறித்த மீன் ஆழ் கடலில் வாழ்ந்து வரும் நிலையில்
குறித்த கடற்தொழிலாளர்களின் வலையில் சிக்கியுள்ளது.</p><h2>அகப்பட்டுள்ள மீன்</h2><p>இது வேகமாக நீந்தக்கூடிய நீளமான
மூக்குடைய மீன் வகையாகக் காணப்படுகின்றது.
</p><p>இந்த நிலையில் குறித்த பிரம்மாண்டமான மீன் தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில்
கவனம் பெற்றுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T11:52:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்சார வாகனங்களில் ஒட்டாவா நோக்கிப் பயணிக்கும் முதியவர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/these-canadian-seniors-are-driving-evs-1789385999"></link>
            <id>https://canadamirror.com/article/these-canadian-seniors-are-driving-evs-1789385999</id>
            <summary type="text">சுற்றுச்சூழலுக்குப் உகந்த பசுமைக் கொள்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோரி, கனடாவில் முதியவர்கள் சிலர் மின்சார வாகனங்களில் நாட்டின் தலைநகரான ஒட்டாவாவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுற்றுச்சூழலுக்குப் உகந்த பசுமைக் கொள்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோரி, கனடாவில் முதியவர்கள் சிலர் மின்சார வாகனங்களில் நாட்டின் தலைநகரான ஒட்டாவாவை நோக்கிப் பேரணியாகப் பயணித்து வருகின்றனர்.
</p><p>பிரிட்டிஷ் கொலம்பியாவின் விக்டோரியா நகரில் தொடங்கிய இந்த வாகன அணிவகுப்பு, கடந்த வார இறுதியில் சஸ்காட்செவானில் உள்ள ரெஜினா நகரை வந்தடைந்தது.</p><p>
'சீனியர்ஸ் கிளைமேட் விட்னஸ்' (Seniors’ Climate Witness) என்ற அமைப்பு இந்த விழிப்புணர்வுப் பேரணியை ஒருங்கிணைத்துள்ளது.
இவ்வணிவகுப்பு வரும் வெள்ளிக்கிழமை ஒட்டாவாவை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f57388f5-b145-4d7a-a41b-3f70413d3c77/26-6aa7dd10b8be7.webp' /></p><p> </p><p>
அங்கு, அட்லாண்டிக் கனடாவில் இருந்து வரும் மற்றொரு வாகன அணிவகுப்புடன் இணைந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து மனு அளிக்கத் திட்டமிட்டுள்ளனர். </p><p>கனடிய நாடாளுமன்றத்தின் இலையுதிர்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதையொட்டி இந்த போராட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்பை விரிவுபடுத்த தேசிய அளவிலான புதிய திட்டத்தையும் அரசு அறிவித்துள்ளது. கொள்கைகளை அறிவிப்பதோடு நிறுத்தாமல், அவற்றை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பதே தற்போதைய பிரதான கோரிக்கையாக உள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-14T11:47:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மண்டேலாவுடன் தன்னை ஒப்பிட்ட நாமல் ராஜபக்ச - கொந்தளிப்புடன் பதிலடிக் கொடுத்த நஜித் இந்திக்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-compared-himself-to-mandela-1789385996"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-compared-himself-to-mandela-1789385996</id>
            <summary type="text">ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச, தன்னை முன்னாள் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச, தன்னை முன்னாள் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிட்டுப் பேசியதற்கு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக்க கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>

அனுராதபுரத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>

நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிடுகை தவறு</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>

தற்போது நாமல் ராஜபக்ச சிறையில் இருப்பதும், அந்தக் காலகட்டத்தில் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலா சிறையில் இருந்ததும் ஒன்றல்ல. இரண்டுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் உள்ளன.

“சிலரைச் சிரமங்கள் உடைத்துவிடுகின்றன. ஆனால், மற்றவர்களை அவை மேலும் வலிமையாக்குகின்றன” என நெல்சன் மண்டேலா கூறியதை நாமல் ராஜபக்ச மேற்கோள் காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/605fdbd6-8d28-49df-a1f6-e6114e87af75/26-6aa7dd741ff75.webp' /></p><p>
</p><p>
தென்னாப்பிரிக்காவின் இனவெறி ஆட்சிக்கு எதிரான போராட்டத்திற்காக நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். எனினும், நாமல் ராஜபக்ச தன்னை நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிடுவது கண்டனத்திற்குரியது.
</p><p>
அடக்குமுறை மற்றும் இனவெறி கொண்ட ஓர் அமைப்புக்கு எதிராகப் போராடியதற்காக மண்டேலா சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதியாகி, இனவெறி ஆட்சியிலிருந்து நாடு மாற்றமடைவதற்கு தலைமை தாங்கினார்.</p><h2>

 செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியல்</h2><p>
அதேவேளை, ராஜபக்சர்களின் குடும்ப ஆட்சிக் காலத்தில் இனவாதத்தையும் மதவாதத்தையும் அடிப்படையாகக் கொண்டே அவர்கள் செயற்பட்டனர்.

இவ்வாறான நிலையில், நெல்சன் மண்டேலாவை மேற்கோள் காட்டுவது மறைந்த அந்த தென்னாப்பிரிக்கத் தலைவருக்கு இழைக்கப்படும் அநீதியாகவே பார்க்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60ec789a-1231-4d5f-99e7-d7817c66d051/26-6aa7dd74e313c.webp' /></p><p>

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக பெரிய ரக விமானங்களைக் கொள்முதல் செய்வது தொடர்பான ஊழல் குற்றச்சாட்டு விசாரணையின் அடிப்படையில், செப்டெம்பர் 4ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவான CIABOC ஆல் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டார்.

அவர் செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
விமானக் கொள்முதல் பரிவர்த்தனை தொடர்பான நிதியில், தொழிலதிபர் ஒருவரின் ஊடாக நாமல் ராஜபக்ச 100 மில்லியன் ரூபாயைப் பெற்றதாக CIABOC குற்றம் சாட்டியுள்ளது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T11:42:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல வழக்குகளுடன் தொடர்புடைய குழு அநுராதபுரத்தில்! ஒன்றுகூடியவர்களின் பின்னணி தொடர்பில் பிரதி அமைச்சர் கூறும் விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/deputy-minister-arun-hemachandra-1789384164"></link>
            <id>https://tamilwin.com/article/deputy-minister-arun-hemachandra-1789384164</id>
            <summary type="text">அநுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றுகூடியவர்களின் பின்னணி என்ன என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும், பல்வேறு வழக்குகளுடன் தொடர்புடைய குழுவினரை அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றுகூடியவர்களின் பின்னணி என்ன என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும், பல்வேறு வழக்குகளுடன் தொடர்புடைய குழுவினரை அங்கு காண முடிந்தது என பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். </p><p>

தேசிய மக்கள் சக்தியின் சோசலிச இளைஞர் ஒன்றியத்தின் மூதூர் தொகுதிக்கான இளைஞர் மாநாடு நேற்று (13.09.2026) மாலை மூதூர் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. </p><p>

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>மக்களுக்கான ஆட்சி</h2><p> </p><p>

மேலும் தெரிவிக்கையில், இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஊழல்வாதிகளிடமிருந்து பொறுப்பேற்ற நாட்டை, எதிர்கால இளைஞர்களுக்கு செழிப்பான நாடாக கையளிக்க வேண்டும். இந்த நாட்டில் இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் இனிமேல் இடமளிக்க முடியாது. எங்களுக்கு வாக்களித்த மக்களின் அரசியல் மாற்றத்தை நாம் செய்தே தீருவோம். 

இது மக்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி; மக்களுக்கான ஆட்சி. பரம்பரை குடும்ப அரசியலை தோற்கடித்தே தீருவோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1cd65ad-fd27-4938-8b2e-b3024a306ec2/26-6aa7dbb51f120.webp' /></p><p> </p><p>கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடி, வீண்விரயம் மற்றும் பிழையான அரசியல் கலாசாரத்துக்கும் இனவாதத்துக்கும் இனிமேல் இந்த நாட்டில் இடமளிக்கக்கூடாது. இதற்காகவே தூய்மையான மக்கள் நலன் கொண்ட இளைஞர் படையணியை உருவாக்கி வருகின்றோம். அவர்களின் கைகளில் நாட்டை ஒப்படைக்க வேண்டும். </p><p>

இந்த நாட்டில் பல்வேறு சமூகங்களும் ஒற்றுமையாக வாழ்ந்த நிலையில், அரசியல் நோக்கங்களுக்காக மக்களிடையே இனவாதத்தையும் மதவாதத்தையும் உருவாக்கி, இன ஒற்றுமையையும் தேசிய ஐக்கியத்தையும் சீர்குலைத்தனர். எனினும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இனவாத மற்றும் மதவாத அரசியலை மக்கள் தோற்கடித்து, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியை நிறுவினர்.</p><h2>ஊழல் குற்றச்சாட்டு</h2><p> </p><p>

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் எந்தவொரு அரசாங்க காலத்திலும் அரசியல்வாதிகள் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெறவில்லை. அந்த அரசியல் கலாசாரத்திற்கு நாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். இனிமேல் அரச சொத்துக்களை களவாடுபவர்களுக்கும் சூறையாடுபவர்களுக்கும் நிச்சயமாக சட்டத்தின் முன் தண்டனை கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7bd86d7-60d5-428b-ac93-b47a4e9b405f/26-6aa7dbb6036db.webp' /></p><p> </p><p>அவ்வாறான புதிய அரசியல் கலாசாரத்தை நாம் நாட்டில் உருவாக்கி வருகின்றோம். 

விசாரணைகளை துரிதப்படுத்தி, நீதித்துறையை வலுப்படுத்தி, சுயாதீனமான நீதித்துறையை பாதுகாத்து கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. உறுதியான பொருளாதாரத்தை கட்டியெழுப்பி, நாளைய இளைஞர்களிடம் வளமான நாட்டை ஒப்படைப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.</p><p> 

2025ஆம் ஆண்டில் அந்நியச் செலாவணி கையிருப்பு உள்ளிட்ட பொருளாதாரத் துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எட்டியுள்ளோம். வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை மேலும் வலுவான துறையாக மாற்றியுள்ளோம். ஏற்றுமதி பொருளாதாரத்திலும் முக்கியமான முன்னேற்றங்களை அடைந்துள்ளோம். இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த ஆண்டாகவும் 2025 அமைந்துள்ளது.</p><h2>அநுராதபுர கூட்டம்</h2><p> </p><p>வெளிநாட்டு முதலீடுகளும் அதிகரித்து வருகின்றன.

மத்திய கிழக்கு மோதல் எமது நாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனினும், அதனை அரசாங்கம் சாமர்த்தியமாக கையாண்டு, அந்த நிலைமையிலிருந்து நாட்டை மீட்டெடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccde1e17-ced8-4e55-a65a-f96e9e699e2b/26-6aa7dbb6d2e3e.webp' /></p><p> அநுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றுகூடியவர்களின் பின்னணி என்ன என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். பல்வேறு வழக்குகளுடன் தொடர்புடைய குழுவினரை அங்கு காண முடிந்தது.</p><p> 

‘அடுத்த ஜனாதிபதியாக நாமலே ஆக்குவோம்’ என்ற கோஷத்துடன் அவர்கள் வந்திருந்தாலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை தோற்கடித்து, தங்களுக்கு எதிரான வழக்குகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கமே அவர்களின் அரசியல் ஒன்றுகூடலின் பின்னணியில் காணப்படுகிறது. எத்தகைய வேடம் போட்டாலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களுடைய அரசாங்கம். அதனை எவராலும் தோற்கடிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/255efa8e-cf62-4620-9b05-43566f0f4fa9/26-6aa7dbb7b980e.webp' /></p>]]></content>
            <updated>2026-09-14T11:39:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெலிக்கடைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற சிறைக் காவலர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/guard-was-arrested-for-attempting-to-smuggle-1789383210"></link>
            <id>https://ibctamil.com/article/guard-was-arrested-for-attempting-to-smuggle-1789383210</id>
            <summary type="text">வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்களை கொண்டு செல்ல முயன்ற சிறைச்சாலை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.&amp;nbsp;குறித்த கைது நடவடிக்கை இன்று (14...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்களை கொண்டு செல்ல முயன்ற சிறைச்சாலை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>குறித்த கைது நடவடிக்கை இன்று (14.09.2026) இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>

சிறைச்சாலை ஆணையாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் எஸ்.கே. பள்ளேதென்ன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மேலதிக சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>
குறித்த சிறைச்சாலை காவலர் தனது காலணிக்குள் மறைத்து வைத்து 98 கிராம் ஐஸ் போதைப்பொருளையும், 16 கிராம் ஹெரோயினையும் சிறைச்சாலைக்குள் கொண்டு செல்ல முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0de05f9b-bd37-4510-a54c-61d14f5af655/26-6aa7dbee8cba2.webp' /></p><p>சிறைச்சாலையின் பிரதான நுழைவாயிலுக்கு உட்புற பகுதியில் சிறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது, அவரது காலணிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சிறைச்சாலை காவலரையும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T11:35:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[9வது வகுப்பு மாணவி கர்ப்பம் ; பாடசாலைக்குள் அரங்கேறிய சம்பவம்; அதிபர் உள்ளிட்டோர் நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/grade-9-student-pregnant-shocking-school-incident-1789385647"></link>
            <id>https://jvpnews.com/article/grade-9-student-pregnant-shocking-school-incident-1789385647</id>
            <summary type="text">ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு கிளாட் பழங்குடியினர் நல பெண்கள் ஆதிவாசி விடுதியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்த 15 வயது சிறுமி ஒருவர் கர்ப்பமடை...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு கிளாட் பழங்குடியினர் நல பெண்கள் ஆதிவாசி விடுதியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்த 15 வயது சிறுமி ஒருவர் கர்ப்பமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p style="text-align: justify; ">உடல்நலக் றைவு காரணமாக காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு பரிசோதனை செய்தபோது, சிறுமி கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ccdfd24-58bb-4848-98bd-14d84114989b/26-6aa7dbb10e99b.webp' /></p><h2 style="text-align: justify; ">விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "> 
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், பாடசாலையில் ஒப்பந்த அடிப்படையில் சமையற்காரராக பணிபுரிந்தவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p style="text-align: justify; ">

 
மாணவியின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் ஏற்பட்ட தீவிர பற்றாக்குறை மற்றும் நிர்வாகத்தின் அலட்சியத்தைக் கருத்திற்கொண்டு, பள்ளியின் தலைமை ஆசிரியை, விடுதி காப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் உள்ளிட்ட மூன்று பேரை இடைநீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
 
பழங்குடியினர் மாணவிகள் தங்கிப் பயிலும் இதுபோன்ற விடுதிகளில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தவும், தீவிர கண்காணிப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கவும் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> சிறுமிகளுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய இடங்களில் இது போன்ற பாலியல் குற்றங்கள் அரங்கேறுவது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அரசுப் பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-14T11:34:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளிமண்டலத்தில் தளம்பல் நிலை: நாளை வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heavy-rainfall-exceeding-sri-lanka-tomorrow-1789384007"></link>
            <id>https://tamilwin.com/article/heavy-rainfall-exceeding-sri-lanka-tomorrow-1789384007</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கைக்கு அண்மித்த கீழ் வளிமண்டலத்தில் நிலவும் தளம்பல் நிலை காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நாட்டின் பல பிரதேசங்களில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கைக்கு அண்மித்த கீழ் வளிமண்டலத்தில் நிலவும் தளம்பல் நிலை காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>நாட்டின் பல பிரதேசங்களில் நாளை (15) மழை உடனான வானிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>

இதற்கமைய, நாளைய தினம் மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மேகமூட்டமான வானிலை காணப்படும் என்பதுடன் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>முன்னெச்சரிக்கை</h2><p> </p><p>

குறிப்பாக இந்தப் பிரதேசங்களின் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5416f93-901a-4b7a-9a4f-ad698a086bcf/26-6aa7da432f823.webp' /></p><p> 

இது தவிர, நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது. </p><p>

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை குறைத்துக் கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T11:33:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடிவடையும் மேக்ரானின் பதவிக்காலம்: அடுத்த ஜனாதிபதி யார்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/french-extreme-candidate-in-2027-presidential-race-1789378488"></link>
            <id>https://news.lankasri.com/article/french-extreme-candidate-in-2027-presidential-race-1789378488</id>
            <summary type="text">French extreme candidates steam ahead in 2027 presidential race: 2027ஆம் ஆண்டுக்கான பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில், தீவிர வலதுசாரியினர் முதலானோருக்கு மக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>French extreme candidates steam ahead in 2027 presidential race: 2027ஆம் ஆண்டுக்கான பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில், தீவிர வலதுசாரியினர் முதலானோருக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருக்கும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
</p><p>

பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானின் பதவிக்காலம், 2027ஆம் ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைய உள்ளது.
</p><p>
இந்நிலையில், அடுத்து யார் பிரான்சின் ஜனாதிபதியாவார் என்னும் கேள்வி வலுத்தவண்ணம் உள்ளது.
</p><h3>
அடுத்த ஜனாதிபதி யார்?
</h3><p>
சமீபத்திய ஆய்வொன்றில், வலதுசாரிக் கட்சியான National Rally கட்சியைச் சார்ந்த மரீன் லெ பென்னுக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71910714-27d4-491e-b40e-348dc8e31448/26-6aa7bfb9eb337.webp' /></p><p>

முதல் சுற்றுத் தேர்தலில், மரீன் லெ பென்னுக்கு 33 முதல் 36 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.&nbsp;</p><p></p><p>

அத்துடன், தீவிர இடதுசாரியினரான ஜான் லூக் மெலன்ஷான் இரண்டாம் இடத்தைப் பிடிப்பார் என்றும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35b52fed-b67c-43ad-9d3b-04def56a3eeb/26-6aa7bfbaa3dd5.webp' /></p><p>
மேக்ரான் ஆட்சியில் பிரதமராக இருந்த Edouard Philippeம் பிரான்ஸ் ஜனாதிபதிக்கான போட்டியில்இருக்கிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95e59149-5079-4138-b68b-98f3409f6d33/26-6aa7bfbb5729f.webp' /></p><p>
மெலன்ஷானைப் பொருத்தவரை, அவர் ஏற்கனவே 2012, 2017 மற்றும் 2022ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட்டும், அவரால் இரண்டாவது சுற்றை எட்டவேமுடியாமல் போய்விட்டது.
</p><p>
அதேபோல, மரீன் லெ பென்னும் 2017 மற்றும் 2022ஆம் ஆண்டு தேர்தல்களில் போட்டியிட்டும் மேக்ரானிடம் தோற்றுப்போனார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T11:30:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய் சேதுபதியை மிக மோசமாக பேசிய RJ ஷா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/rj-sha-criticizes-vijay-sethupathi-talk-1789376495"></link>
            <id>https://viduppu.com/article/rj-sha-criticizes-vijay-sethupathi-talk-1789376495</id>
            <summary type="text">&amp;nbsp;விஜய் சேதுபதி மிகவும் தைரியமாக தன் கருத்தை கூறும் நடிகர். இவருக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;விஜய் சேதுபதி மிகவும் தைரியமாக தன் கருத்தை கூறும் நடிகர். இவருக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. </p><p>இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது எல்லோரும் அறிந்ததே.
</p><p>
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் விஜய் சேதுபதி, ஒரு தலைவன் எதையும் கேட்காமல், எதிரணி மீது பழி போடுவது சரியில்லை என பேசியிருப்பார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fcec837-a12f-4e22-b37f-ce79df24b25a/26-6aa7b7f2b1d21.webp' /></p><p>

உடனே பலரும் இவர் முதல்வர் விஜய்யைதான் தாக்கியுள்ளார் என கடுமையாக விஜய் சேதுபதி அவர்களை எதிர்க்க, ஆர் ஜே ஷா அவர்கள், மாஸ்டர் படத்தில் எந்த ஒரு நடிகனும் செய்யாத தனது பஞ்ச் டயலாக் ஐயம் வெயிட்டிங்கை உங்களை பேச வைத்து அழகு பார்த்தார், அவரை பேச உங்களுக்கு எப்படி மனசு வந்தது, இதற்கு பெயர் என்ன தெரியுமா, நானும் ரவுடி தான் படத்தில் நீங்க ஒரு வார்த்தை சொல்வீர்களே, அது தான் என மோசமாக விஜய்யை விமர்சித்துள்ளார். </p><p> 

இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் ஆர் ஜே ஷா அவர்களுக்கு வந்துகொண்டு இருக்கிறது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DdO65Yhtnt2/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DdO65Yhtnt2/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DdO65Yhtnt2/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Sha (@rjsha007)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-14T11:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இந்திய வம்சாவளி வீட்டு உரிமையாளர் கைது: பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indian-lady-arrested-in-canada-harrass-tenant-1789385020"></link>
            <id>https://canadamirror.com/article/indian-lady-arrested-in-canada-harrass-tenant-1789385020</id>
            <summary type="text">Indian landlady in Canada held after harassing tenant: கனடாவில் தன் வீட்டில் குடியிருப்பவருக்கு தொல்லை கொடுத்ததாக இந்திய வம்சாவளிப்பெண்ணொருவர் கைது செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indian landlady in Canada held after harassing tenant: கனடாவில் தன் வீட்டில் குடியிருப்பவருக்கு தொல்லை கொடுத்ததாக இந்திய வம்சாவளிப்பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>

கனடாவில், தன் வீட்டு உரிமையாளர் தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக புகாரளித்துள்ள கனேடியர் ஒருவர், அது தொடர்பில் சமூக ஊடகங்களில் பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
</p><h3>
வீட்டில் குடியிருப்பவருடன் பிரச்சினை</h3><p>

ராஜ் திவானா என்னும் இந்திய வம்சாவளியினரான பெண், தனது வீட்டை கனேடியர் ஒருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef5a84a1-40f3-4e56-a47c-66a0b9493912/26-6aa7d93e0bda9.webp' /></p><p>
ஆனால், அந்தக் கனேடியர் தான் வாடகைக்கு வசிக்கும் வீட்டில் தான் பார்பிக்யூ பயன்படுத்தியதைத் தொடர்ந்து பிரச்சினை உருவானதாக தெரிவித்துள்ளார்.</p><p>

பார்பிக்யூ பயன்படுத்துவதால் வீட்டுச் சுவர்களில் கரி பிடிப்பதாக அந்தப் பெண் கூற, அது கரி அல்ல துரு என்று கூறியுள்ளார் அந்தக் கனேடியர்.
</p><p>
அவர் பார்பிக்யூ முறையில் உணவு தயாரிக்கும்போது திவானா தடுக்க முயல, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.
</p><p>
இப்படியே திவானா தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துவருவதாக குற்றம் சாட்டும் அந்தக் கனேடியர் அதற்கு ஆதாரமாக வீடியோக்களை வெளியிட, ஒரு கட்டத்தில் பொலிசார் திவானாவைக் கைது செய்துள்ளார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T11:26:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான மழைவீழ்ச்சி : வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/40-pt-rainfall-recorded-in-vavuniya-in-2026-1789384590"></link>
            <id>https://ibctamil.com/article/40-pt-rainfall-recorded-in-vavuniya-in-2026-1789384590</id>
            <summary type="text">வவுனியா மாவட்டத்தில் 2026 ஜனவரி மாதம் முதல் இதுவரை 40 வீதமான மழை வீழ்ச்சியே பதிவாகியுள்ளதாக வவுனியா மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா மாவட்டத்தில் 2026 ஜனவரி மாதம் முதல் இதுவரை 40 வீதமான மழை வீழ்ச்சியே பதிவாகியுள்ளதாக வவுனியா மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன்
தெரிவித்துள்ளார்.
</p><p>வவுனியா மாவட்டத்தின் காலநிலை தொடர்பாக ஊடகவியலாளரால் கேள்வியெழுப்பப்பட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தினை பொறுத்தவரை வருடாந்த சராசரி மழை வீழ்ச்சியானது 1400
மில்லிமீற்றர் வரை காணப்படுகின்றது. எனினும், இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல்
இன்று வரையான காலப்பகுதியில் 559.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியே
பதிவாகியுள்ளது.</p><p></p><h2>அதிகளவான மழை&nbsp;</h2><p>
இதேவேளை நேற்றையதினம் (13)&nbsp; 21.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி
கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இம்மாதம் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை
பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06a18bdb-3cff-4b3e-8578-f254eb1aa4d2/26-6aa7d9058c45d.webp' /></p><p>
</p><p>இம்மாதத்தின் இறுதியில்
இருந்து வடகீழ் பருவமழை ஆரம்பமாகவுள்ளது. அத்துடன் எதிர்வரும் ஒக்டோபர்
மற்றும் நவம்பர் மாதங்களில் மாவட்டத்தில் அதிகளவான மழை பெய்யக்கூடும்.</p><p>

குறிப்பாக இக்காலப்பகுதியில் தாழமுக்க நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில்,
மாவட்டத்தில் வழக்கத்தை விட அதிகளவான கனமழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள்
உள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T11:24:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசிலுக்கு இறுகும் பிடி : அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வந்த சிறப்பு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/move-to-deport-basil-rajapaksa-to-sri-lanka-1789383780"></link>
            <id>https://ibctamil.com/article/move-to-deport-basil-rajapaksa-to-sri-lanka-1789383780</id>
            <summary type="text">அமெரிக்காவில் வசிக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவருவதற்காக, இலங்கை சட்ட அதிகாரிகளுக்கும் அமெரிக்க நீதித் துறைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் வசிக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவருவதற்காக, இலங்கை சட்ட அதிகாரிகளுக்கும் அமெரிக்க நீதித் துறைக்கும் இடையேயான இரகசியத் தகவல் பரிமாற்றம் அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

அந்தத் தகவல் பரிமாற்றத்தின்படி, பசில் ராஜபக்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நாட்டின் சட்ட அதிகாரிகள் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>அமெரிக்காவின் இந்த வலுவான சட்ட அழுத்தத்தை எதிர்கொண்டு, பசில் ராஜபக்சவின் கட்சியும் ஒரு சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

பசில் ராஜபக்ச தனது இலங்கைக்கு குடியுரிமையைத் துறக்க ஒரு சிறப்பு கோரிக்கையை விடுத்துள்ளார்.</p><h2>குடியுரிமையை துறக்க முடிவு&nbsp;</h2><p>

வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சு மூலம் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு இந்தக் கோரிக்கை பெறப்பட்ட போதிலும், உள்ளூர் அதிகாரிகள் இதுவரை அதற்கு எந்த அதிகாரபூர்வ பதிலும் அளிக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd8337b8-9e27-4a52-b31b-00dca16484ce/26-6aa7d946a77e9.webp' /></p><p>



பசில் ராஜபக்சவை நாட்டிற்கு ஒப்படைப்பது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் இலங்கைக்கு ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.</p><p></p><h2>நீதிமன்ற உத்தரவை பெற இலங்கைக்கு அமெரிக்கா அட்வைஸ்&nbsp;</h2><p>
</p><p>
கடுமையான ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டின் பேரில் பசில் ராஜபக்ச மீது நாட்டின் நீதிமன்றங்களில் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, நீதிமன்ற உத்தரவைப் பெறுமாறு அமெரிக்கா இலங்கைக்கு அறிவுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddb0a9c2-08fd-44af-8e5c-3a27d2fecfac/26-6aa7d945f18ba.webp' /></p><p>

அந்த அறிவுறுத்தல்களின் அடிப்படையில், பசிலுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

சம்பந்தப்பட்ட வழக்கில் பசில் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால், அவருக்கு எதிராக மீண்டும் ஒரு பிடியாணை பெற்று, அவரை அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு ஒப்படைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
</p><p>
அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவுடன் எடுக்கப்படும் இந்த சட்ட நடவடிக்கையின் காரணமாக, பசில் ராஜபக்சவின் எதிர்கால அரசியல் மற்றும் சட்டரீதியான இருப்பு கடுமையாக சவாலுக்கு உள்ளாகியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T11:23:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெலிக்கடை சிறைக்குள் அதிகாரி செய்த செயல் ; காலணிக்குள் இருந்த ஆபத்தான பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/welikada-prison-officer-s-shocking-act-revealed-1789384831"></link>
            <id>https://jvpnews.com/article/welikada-prison-officer-s-shocking-act-revealed-1789384831</id>
            <summary type="text">வெலிக்கடை சிறைச்சாலைக்குள் காலணிகளில் மறைத்து போதைப்பொருள் கொண்டு செல்ல முயன்ற சிறை அதிகாரி ஒருவர் இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளார்.



கிடைத்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வெலிக்கடை சிறைச்சாலைக்குள் காலணிகளில் மறைத்து போதைப்பொருள் கொண்டு செல்ல முயன்ற சிறை அதிகாரி ஒருவர் இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">


கிடைத்த தகவலின் அடிப்படையில், வெலிக்கடை சிறைச்சாலையின் பிரதான நுழைவாயிலுக்குள் சிறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96514428-9d26-4e27-9a8f-e6616d0eb3f8/26-6aa7d8810fbe3.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இவ்வாறு கைது செய்யப்பட்டவர் வெலிக்கடை சிறைச்சாலையில் பணியாற்றும் சிறை காவலர் ஒருவராவார்.</p><p style="text-align: justify; ">



சந்தேகநபரான அதிகாரி அணிந்திருந்த காலணிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 96 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 16.7 கிராம் ஹெரோயினும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify; ">


சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "> 



கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; ">



சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T11:20:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டில் குடியிருப்பவருடன் பிரச்சினை: இந்திய வம்சாவளி பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-origin-lady-arrest-in-canada-harrass-tenant-1789384601"></link>
            <id>https://news.lankasri.com/article/india-origin-lady-arrest-in-canada-harrass-tenant-1789384601</id>
            <summary type="text">Indian landlady in Canada held after harassing tenant: கனடாவில் தன் வீட்டில் குடியிருப்பவருக்கு தொல்லை கொடுத்ததாக இந்திய வம்சாவளிப்பெண்ணொருவர் கைது செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indian landlady in Canada held after harassing tenant: கனடாவில் தன் வீட்டில் குடியிருப்பவருக்கு தொல்லை கொடுத்ததாக இந்திய வம்சாவளிப்பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>


கனடாவில், தன் வீட்டு உரிமையாளர் தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக புகாரளித்துள்ள கனேடியர் ஒருவர், அது தொடர்பில் சமூக ஊடகங்களில் பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
</p><h3>
வீட்டில் குடியிருப்பவருடன் பிரச்சினை</h3><p>

ராஜ் திவானா என்னும் இந்திய வம்சாவளியினரான பெண், தனது வீட்டை கனேடியர் ஒருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c49579ac-3f94-4d86-8988-30c2b3465ba4/26-6aa7d79a977df.webp' /></p><p>
ஆனால், அந்தக் கனேடியர் தான் வாடகைக்கு வசிக்கும் வீட்டில் தான் பார்பிக்யூ பயன்படுத்தியதைத் தொடர்ந்து பிரச்சினை உருவானதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">BARBECUE TURNS INTO A LEGAL BATTLE IN CANADA!!<br><br>Indian landlady clashes with tenant over grilling, as viral videos show heated confrontations and the tenant alleges repeated harassment, property interference and intimidation. <a href="https://t.co/ysWj4ihPIx">pic.twitter.com/ysWj4ihPIx</a></p>&mdash; Gajabkiduniyaa (@Gajabkiduniyaa) <a href="https://x.com/Gajabkiduniyaa/status/2098634409419379112?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

பார்பிக்யூ பயன்படுத்துவதால் வீட்டுச் சுவர்களில் கரி பிடிப்பதாக அந்தப் பெண் கூற, அது கரி அல்ல துரு என்று கூறியுள்ளார் அந்தக் கனேடியர்.&nbsp;</p><p></p><p>
அவர் பார்பிக்யூ முறையில் உணவு தயாரிக்கும்போது திவானா தடுக்க முயல, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.</p><p>

இப்படியே திவானா தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துவருவதாக குற்றம் சாட்டும் அந்தக் கனேடியர் அதற்கு ஆதாரமாக வீடியோக்களை வெளியிட, ஒரு கட்டத்தில் பொலிசார் திவானாவைக் கைது செய்துள்ளார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T11:20:12+00:00</updated>
        </entry>
    </feed>
