<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-07T16:46:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொரளை சிறைச்சாலைக்குள் பதற்றத்தை ஏற்படுத்திய கும்பல் யார்...! குற்றப் பின்னணி தொடர்பில் அதிர்ச்சித் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prison-fight-details-about-person-who-died-1786116214"></link>
            <id>https://tamilwin.com/article/prison-fight-details-about-person-who-died-1786116214</id>
            <summary type="text">பொரளை புதிய மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பதறத்தில் உயிரிழந்த கைதி தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொரளை புதிய மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பதறத்தில் உயிரிழந்த கைதி தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><p> 

இந்த பதற்றம் காரணமாக கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 கைதிகள் காயமடைந்துள்ளனர். </p><p>

வெளிப்புறத்திலிருந்து ஒரு தரப்பினரால் சிறைச்சாலை வளாகத்திற்குள் வீசப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் பொதியொன்றைச் சிறைச்சாலை அதிகாரிகள் பொறுப்பேற்றமையினால் மோதல் இடம்பெற்றுள்ளது.</p><p> </p><h2><b>குற்றக் கும்பல்</b></h2><p>இதன்போது சில கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளை அச்சுறுத்தியதுடன், பின்னர் சுமார் 45 கைதிகள் கொண்ட குழுவினர் சிறைக் கதவை உடைத்து வெளியே வந்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8f69bd9-37d1-4b9a-8dc9-b65d967a3be4/26-6a760b0dbde35.webp' /></p><p>அவர்களில் பெரும்பான்மையினர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்கொஸ்மல்லி என்பவரின் ஆதரவாளர்கள் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். </p><p>அமைதியற்ற முறையில் நடந்துகொண்ட குழுவினர் சிறைச்சாலை வாயிலின் ஊடாக வெளியே செல்ல முற்பட்டுள்ளனர். இதன் போது, சிறைச்சாலை அதிகாரிகள் நிலைமையைக் கட்டுப்படுத்தக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர். </p><p>கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த முகமது அஸ்மான் ஷெரிப்தீன் என்ற 35 வயதுடையவராவார் என தெரியவந்துள்ளது. </p><h3><b>உயிரிழந்த கைது</b></h3><p>அவர் கல்கிஸ்ஸ வட்டரப்பல வீதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை, நீர்கொழும்பில் இடம்பெற்ற இரட்டைக் கொலை உள்ளிட்ட பல கொலைகளுடன் தொடர்புடையர் ஆவார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06deaf0c-b270-4512-88ca-bea34c24d349/26-6a760aa4089a8.webp' /></p><p>மேலும், ஹோமாகம ஹந்தயா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரின் ஒப்பந்தத் துப்பாக்கிச் சூடு நடத்துநராகவும் செயற்பட்டுள்ளார். </p><p>குற்றவாளிக்கு எதிராக காலி, அம்பாறை, நீர்கொழும்பு, ஹோமாகம உள்ளிட்ட பல நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p> அத்துடன், கனேமுல்ல சஞ்சீவ படுகொலையின் துப்பாக்கிச் சூடு நடத்துநராக முதற்கட்டமாகச் சந்தேகிக்கப்பட்டவரும் இவராகும். </p><p>சம்பவத்தில் காயமடைந்த மேலும் 10 கைதிகள் சிகிச்சைகளுக்காகச் சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. 


</p>]]></content>
            <updated>2026-08-07T16:43:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் சட்டவிரோத கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/more-than-4000-plants-seized-from-marijuana-1786119864"></link>
            <id>https://canadamirror.com/article/more-than-4000-plants-seized-from-marijuana-1786119864</id>
            <summary type="text">கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள பிரேஸ்பிரிட்ஜ் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கஞ்சா உற்பத்தி மையம் தொடர்பான பல மாத கால விசாரணை நிறைவுக்கு வந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள பிரேஸ்பிரிட்ஜ் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கஞ்சா உற்பத்தி மையம் தொடர்பான பல மாத கால விசாரணை நிறைவுக்கு வந்துள்ளதாக ஒண்டாரியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 
பிரேஸ்பிரிட்ஜில் உள்ள லிட்டில் ரோடு பகுதியில் சட்டவிரோத கஞ்சா தோட்டம் இயங்கி வருவதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், கடந்த வசந்த காலத்தில் பொலிஸார் விசாரணையைத் தொடங்கினர். </p><p>
இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 16ம் திகதி பொலிஸார் மற்றும் அரசு நிறுவனங்களின் உதவியுடன் அந்த இடத்தில் பொலிஸார் அதிரடி சோதனை நடத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f62cf667-7bb8-4e9e-92ab-996354705e1b/26-6a7606ba96119.webp' /></p><p> </p><p>
சோதனை ஆணைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, அங்கு வளர்க்கப்பட்டு வந்த 4,000-க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் மற்றும் கஞ்சா சாகுபடிக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை பொலிஸார் பறிமுதல் செய்தனர். </p><p>
இந்த விசாரணை நடவடிக்கையின் முடிவில், சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் நார்த் யார்க் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T16:33:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை: குறைக்கப்படும் வரிகள்: எதிர்பார்க்கப்படும் சலுகைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-usa-interim-trade-deal-talk-happens-1786120266"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-usa-interim-trade-deal-talk-happens-1786120266</id>
            <summary type="text">வரியை குறைப்பது தொடர்பான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்து கனடாவும், அமெரிக்காவும் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.கனடா - அமெரிக்கா இட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரியை குறைப்பது தொடர்பான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்து கனடாவும், அமெரிக்காவும் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>கனடா - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை</h2><p>
&nbsp;விகிதாச்சார வரிகள் மற்றும் கட்டண மோதல்களை குறைப்பது தொடர்பான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்து கனடாவும், அமெரிக்காவும் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தி குளோப் அண்ட் மெயில் செய்தி தகவல் வெளியிட்டுள்ளது.</p><p> வரிகளை குறைப்பதற்காக அல்லது விலக்கு பெறுவதற்காக அமெரிக்காவின் சில வர்த்தக கோரிக்கைகளுக்கு கனடா இணங்க கூடும் என்று தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34511ba8-814d-4a7e-8f53-642555a1f6c9/26-6a76084c5a42c.webp' /></p><h2>கனடாவின் சாத்தியமான சலுகைகள்</h2><p>அமெரிக்க கார்கள் மீதான வரிகளை திரும்ப பெறுதல், அமெரிக்க மதுபானங்கள் மீதான தடையை நீக்குதல், அமெரிக்க நிறுவனங்களுக்கான கொள்முதல் தடையை தளர்த்துவது. பால் பொருட்கள் ஒதுக்கீட்டை தீர்மானிப்பதில் அமெரிக்காவிற்கு கூடுதல் பங்கு வழங்குவது, சீனாவுடனான வர்த்தக கொள்கையை சீரமைப்பது ஆகியவற்றில் கனடா சலுகைகள் வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4036562a-5b19-48b9-b2c0-aab047ebf43b/26-6a76084ba9bc1.webp' /></p><p></p><h2> அமெரிக்காவின் பதில் நடவடிக்கை</h2><p>கனடாவின் இந்த சலுகைகளுக்கு மாற்றாக, ஸ்டீல் மற்றும் அலுமினியம் மீதான தற்போதைய வரியை அமெரிக்கா நீக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> அத்துடன் ஆகஸ்ட் 19ம் திகதி முதல் அமெரிக்கா அமுல்படுத்தும் என எச்சரித்துள்ள வரிகளில் இருந்தும் கனடாவுக்கு விலக்கு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-07T16:31:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[UPI கட்டணம் வணிகர்களுக்கு மட்டுமே, வாடிக்கையாளர்களுக்கு இல்லை - நிர்மலா சீதாராமன் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/upi-charges-only-merchants-not-customers-1786119093"></link>
            <id>https://news.lankasri.com/article/upi-charges-only-merchants-not-customers-1786119093</id>
            <summary type="text">UPI கட்டணம் வணிகர்களுக்கு மட்டுமே, வாடிக்கையாளர்களுக்கு இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வணிகர்களுக்கு மட்டுமேபுதிய வரி திருத்த மசோதா தொடர்பாக, UPI...</summary>
            <content type="html"><![CDATA[<p>UPI கட்டணம் வணிகர்களுக்கு மட்டுமே, வாடிக்கையாளர்களுக்கு இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது.
</p><h2>
வணிகர்களுக்கு மட்டுமே</h2><p>புதிய வரி திருத்த மசோதா தொடர்பாக, UPI பரிவர்த்தனைகளில் கட்டணம் (Merchant Discount Rate - MDR) வணிகர்களுக்கு மட்டுமே விதிக்கப்படும், வாடிக்கையாளர்களுக்கு எந்தச் செலவும் இல்லை என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0785faf2-9970-4c20-8f62-ca163e5b0ee2/26-6a7603b7db95f.webp' /></p><p>காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ், “சாதாரண மக்கள் UPI பயன்படுத்த கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்” எனக் கூறியதற்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். </p><p>

அவர், MDR வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும், வாடிக்கையாளர்களுக்கு எந்தச் செலவும் இல்லை என்று உறுதிசெய்தார். </p><p>மேலும், இந்தக் கட்டணம் வங்கிகள் மற்றும் ஃபின்டெக் நிறுவனங்கள் தங்களது உள்கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் புதுமை முதலீடுகளை அதிகரிக்க உதவும் என்றும் தெரிவித்தார்.</p><p></p><h2>எப்போது நடைமுறைக்கு வரும்</h2><p>

UPI மற்றும் சேவைகள் தொடர்பான Steering Committee, NPCI தலைமையில் MDR குறித்து முடிவு எடுக்கும். ஆனால் அது, நாடாளுமன்றத்தில் Taxation and Other Laws (Amendment) Bill, 2026 நிறைவேற்றப்பட்ட பிறகே நடைமுறைக்கு வரும். </p><p>இந்த மசோதா, Payment and Settlement Systems Act, 2007-இல் திருத்தம் செய்து, UPI மற்றும் RuPay கார்டு பரிவர்த்தனைகளில் zero-MDR அமைப்பை மாற்றுவதற்கு சட்ட ஆதாரம் வழங்குகிறது.
</p><p>
அதாவது, மசோதா MDR-ஐ நேரடியாக அறிமுகப்படுத்தவில்லை, ஆனால் எதிர்காலத்தில் அரசு அறிவிப்புகள் மூலம் zero-MDR அமைப்பை மாற்றுவதற்கு சட்ட அடிப்படை ஏற்படுத்துகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T16:09:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேருக்கு நேர் மோதி கோர விபத்து - வங்கி முகாமையாளர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bank-officer-dies-in-accident-1786115929"></link>
            <id>https://tamilwin.com/article/bank-officer-dies-in-accident-1786115929</id>
            <summary type="text">அனுராதபுரம் - பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில், வங்கி அதிகாரி உயிரிழந்துள்ளார். எப்பதொல பகுதியில் உள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் - பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில், வங்கி அதிகாரி உயிரிழந்துள்ளார். </p><p>எப்பதொல பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றின் முகாமையாளர் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p> உயிரிழந்தவர் அனுராதபுரத்தை சேர்ந்த ரொஹான் ஜயந்த பண்டார என்ற 43 வயதுடைய திருமணமாகாதவராவார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p> </p><h2><b>நேருக்கு நேர் மோதி விபத்து </b></h2><p>அனுராதபுரத்தில் இருந்து எப்பதொல நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள், அனுராதபுரம் நோக்கி சென்ற தனியார் பேருத்துடன் நேருக்கு நேர் மோதி&nbsp; விபத்து ஏற்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1e84822-d9ef-44b4-a56b-0f999c81516a/26-6a75ffd2569ca.webp' /></p><p>மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்வதற்காக வீதியின் வலது பக்கமாக மோட்டார் சைக்கிளை செலுத்திய வேளையில் எதிரே வந்த பேருத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. </p><p>விபத்தில் காயமடைந்த வங்கி முகாமையாளர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்ததாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். </p><p>விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-07T15:55:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலக்கு வைக்கப்பட்ட அரசுப்படையின் ராணுவ முகாம்கள் ; திடீர் தாக்குதல்களால் பறிக்கப்பட்ட உயிர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sudden-attacks-target-cities-many-killed-1786107522"></link>
            <id>https://canadamirror.com/article/sudden-attacks-target-cities-many-killed-1786107522</id>
            <summary type="text">ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. </p><p>இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5379e5cc-9395-452d-8ff7-5f850e9fe9c8/26-6a75d683b4e1e.webp' />&nbsp;</p><p>
</p><p>
ஏமனின் சில பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதம் உள்பட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.</p><p>
ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் ஏமனில் இரு நாடுகளும் மறைமுக மோதலில் ஈடுபட்டு வருகின்றன.</p><p>

அதேவேளை, அமெரிக்கா, ஈரான் மோதலின்போது ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தினர் .</p><p> இந்த தாக்குதலுக்கு சவுதி பதிலடி கொடுத்தது.

இந்நிலையில், ஏமனில் அரசுப்படையினர் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர்.
</p><p>
ஏமனின் ஹட்ரமொட், மரிப் ஆகிய நகரங்களில் அரசுப்படையினரின் ராணுவ முகாம்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். </p><p>இந்த தாக்குதலில் அரசுப்படையினர் 30 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர்.</p>]]></content>
            <updated>2026-08-07T15:45:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட என்புக்கூடுகள் 500 - ஐ தாண்டியது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bones-missing-from-chemmani-burial-site-excavation-1786112388"></link>
            <id>https://ibctamil.com/article/bones-missing-from-chemmani-burial-site-excavation-1786112388</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணி 100 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரையில் 507 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணி 100 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரையில் 507 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதற்கமைய இன்றைய தினம்(07.08.2026) 7 என்புக்கூடுகள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>56ஆவது நாளாக முன்னெடுப்பு</h2><p> </p><p>

இதுவரை அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் சுமாராக 501 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/900e59b6-e580-4f61-adbd-5009c1b8f379/26-6a75e985ab0d9.webp' /></p><p>

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 46ஆவது நாளாக இன்றைய தினம் பணிகள் இடம்பெற்றுள்ளன.
</p><p>
இதில், புதிதாக 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T15:45:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக முதல்வர் விஜயின் வழக்கில் திடீர் திருப்பம் ; விவகாரத்து மனுவை திரும்பப் பெற்ற சங்கீதா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cm-vijay-s-wife-sangeetha-withdraws-divorce-case-1786098208"></link>
            <id>https://jvpnews.com/article/cm-vijay-s-wife-sangeetha-withdraws-divorce-case-1786098208</id>
            <summary type="text">தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றுள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றுள்ளார்.</p><p style="text-align: justify;">

மனு திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு முடித்து வைக்கப்படுவதாக செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8dcf428-010c-493a-9e87-18083b0c16bb/26-6a75b221aabe7.webp' /></p><h2 style="text-align: justify; ">விசாரணை</h2><p style="text-align: justify; ">

இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் முதலமைச்சர் விஜய் தரப்பில் ஆஜராக விலக்கு கோரப்பட்டது. ஆனால் நீதிமன்றம் சட்டசபை முடிந்தபின்பு ஆஜராக கோரியிருந்தது. </p><p style="text-align: justify;">பின்னர் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மனுவை திரும்பப் பெற்றுள்ளார் சங்கீதா.

விஜய் மற்றும் சங்கீதாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">வழக்கு விசாரணைக்கு வந்தபோது இருவரும் நேரில் ஆஜராகாமல், அவர்களது வழக்கறிஞர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகினர். இருவரும் பிரபலமானவர்கள் என்பதால், வீடியோ மூலம் ஆஜராக அனுமதி வழங்குமாறு தரப்புகள் கோரிக்கை வைத்திருந்தன.
</p><p style="text-align: justify;">
இன்று நடைபெற்ற விசாரணையின்போது, சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்ததால் முதல்-அமைச்சர் விஜய் நேரில் ஆஜராக முடியவில்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify; ">
அதே நேரத்தில், லண்டனில் இருந்த சங்கீதா வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜராகி, விவாகரத்து மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை முடித்து வைத்து கோர்ட்டு உத்தரவிட்டது.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-07T15:44:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியின் பழமையான மரம்: 1100 ஆண்டுகள் வாழ்ந்த யூ மரம் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germanys-1100-year-old-yew-tree-found-1786117456"></link>
            <id>https://news.lankasri.com/article/germanys-1100-year-old-yew-tree-found-1786117456</id>
            <summary type="text">ஜேர்மனியின் பவேரியன் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் 1100 ஆண்டுகள் பழமையான யூ (Yew) மரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் பழமையான மரம்ஸ்டீபிஸ் என்ற கிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியின் பவேரியன் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் 1100 ஆண்டுகள் பழமையான யூ (Yew) மரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><h2>

ஜேர்மனியின் பழமையான மரம்</h2><p>ஸ்டீபிஸ் என்ற கிராமம் அருகே, ஆஸ்திரிய எல்லைக்கு அருகில் உள்ள பசுமை மேடுகளில் வளர்ந்து கொண்டிருக்கும் இந்த மரம், ஜேர்மனியின் பழமையான மரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8298b698-3704-4e86-af66-6c153cd5b984/26-6a75fd527a5ec.webp' /></p><p>இந்த மரத்தின் வயது, அதன் வளர்ச்சி வளையங்களை (growth rings) ஆய்வு செய்வதன் மூலம் கண்டறியப்பட்டது. ஆய்வாளர்கள் எடுத்த மாதிரிகள் அடிப்படையில், மரத்தின் வயது 900 முதல் 1300 ஆண்டுகளுக்குள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால், சராசரியாக 1100 ஆண்டுகள் பழமையானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்த யூ மரம், Taxus baccata எனப்படும் ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்தது. இயற்கை சூழலில் இவ்வளவு நீண்ட காலம் வாழும் யூ மரங்கள் மிக அரிது. </p><p></p><h2>இன்றும் பழங்களைத் தருகிறது!</h2><p>1100 மீட்டர் உயரத்தில், குளிரான வடமேற்கு சரிவில் வளர்ந்தாலும், இன்றும் இலைகள் மற்றும் பழங்களைத் தருகிறது.

மரத்தின் தண்டு சுமார் 5.10 மீட்டர் சுற்றளவு கொண்டது. இதனால், ஜேர்மனியில் பதிவான மிகப் பெரிய யூ மரமாகவும் இது அறியப்படுகிறது.</p><p>இதற்கு முன்பு, லோயர் சாக்ஸனியில் உள்ள Upstedt கிராமத்தின் லைம் மரம் (சுமார் 1000 ஆண்டுகள்) பழமையானதாக கருதப்பட்டது. ஆனால், ஸ்டீபிஸ் யூ மரம் அதனை மிஞ்சியுள்ளது.</p><p></p><p>
</p><h2>
தேசிய பாரம்பரிய மரம்</h2><p>ஜேர்மன் டெண்ட்ராலஜிக்கல் சொசைட்டி, இந்த மரத்தை “தேசிய பாரம்பரிய மரம்” (National Heritage Tree) என அறிவிக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், மரம் நீண்ட காலம் பாதுகாக்கப்பட்டு, இயற்கையாக வளர்ந்து கொண்டிருக்க வழிவகுக்கும்.
</p><p>
இந்த மரம், பல்லாயிரம் ஆண்டுகளாக சூழல் மாற்றங்கள், மனித வரலாற்று நிகழ்வுகள் அனைத்தையும் கடந்து வாழ்ந்து வந்துள்ளது. பறவைகள், பூச்சிகள், பூஞ்சைகள் போன்ற உயிரினங்களுக்கு வாழ்விடமாகவும் இது முக்கிய பங்கு வகிக்கிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T15:42:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்தடுத்து வெடித்த கலவரங்கள்.. ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-mechanism-prison-security-inmate-welfare-1786113139"></link>
            <id>https://tamilwin.com/article/president-mechanism-prison-security-inmate-welfare-1786113139</id>
            <summary type="text">நாட்டிலுள்ள அனைத்து சிறைகளிலும் சிறைப் பாதுகாப்பு, கைதிகளின் நலன் மற்றும் அவசரகால பதிலளிப்பு ஆகியவற்றை நிவர்த்தி செய்வதற்காக ஒரு கூட்டு பொறிமுறையை நிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டிலுள்ள அனைத்து சிறைகளிலும் சிறைப் பாதுகாப்பு, கைதிகளின் நலன் மற்றும் அவசரகால பதிலளிப்பு ஆகியவற்றை நிவர்த்தி செய்வதற்காக ஒரு கூட்டு பொறிமுறையை நிறுவுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
சிறைகளில் நிலவும் தற்போதைய நிலைமையையும், கைதிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக நடைமுறையில் உள்ள நடவடிக்கைகளையும் ஆய்வு செய்வதற்காக, ஜனாதிபதி தலைமையில் (7) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஒரு சிறப்பு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>பாதுகாப்பு நடவடிக்கைகள்..&nbsp;</h2><p>

முன்மொழியப்பட்ட இந்த பொறிமுறையானது, கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆய்வு செய்வதுடன், அவர்களின் நலனைக் கண்காணித்து, அவசர காலங்களில் பதிலளிப்புகளை ஒருங்கிணைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d6d17be-e8d0-48f8-8347-a263f3fb07bf/26-6a75fb03bf397.webp' /></p><p>
இந்த பொறிமுறையானது அனைத்து 33 சிறைகளையும் உள்ளடக்கி, சிறைகள் திணைக்களம், இலங்கை பொலிஸார், சிறப்பு பணிப்படை (STF) மற்றும், தேவைப்பட்டால், ஆயுதப்படைகளின் அதிகாரிகளையும் கொண்டிருக்கும். இது அடுத்த வாரம் நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>
இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த பொறிமுறையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் கைதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
இக்கூட்டத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷனா நனயக்கார, பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பாதுகாப்பு மற்றும் நீதி அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, மற்றும்&nbsp; சிறைச்சாலைகள் மற்றும் புலனாய்வு சேவைகளின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T15:40:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதிகளின் பிணை நடைமுறைகளை விரைவுபடுத்த நடவடிக்கை ; அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/steps-taken-to-expedite-bail-procedures-prisoners-1786117047"></link>
            <id>https://jvpnews.com/article/steps-taken-to-expedite-bail-procedures-prisoners-1786117047</id>
            <summary type="text">சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் பிணை நடைமுறைகளை விரைவுபடுத்துவதற்கும், அரசு பகுப்பாய்வாளர் அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் தாமதத்தைத் தவிர்ப்பதற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் பிணை நடைமுறைகளை விரைவுபடுத்துவதற்கும், அரசு பகுப்பாய்வாளர் அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் தாமதத்தைத் தவிர்ப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார தெரிவித்துள்ளார்.</p><p></p><p>கொழும்பில்,இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள காணொளிப்பதிவிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0565ddb0-dc33-4675-a836-787c98ec4932/26-6a75fbb93b090.webp' /></p><p>அரசு பகுப்பாய்வாளர் அறிக்கைகள் தாமதமானதால் விளக்கமறியலில் உள்ள கைதிகள் பிணை பெறுவதில் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வந்த நிலையில், அதனை நிவர்த்தி செய்ய 70 புதிய பணியாளர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் புதிய நவீன இயந்திரங்களும் கொண்டுவரப்படவுள்ளன.
</p><p>
இதன் மூலம் மாதமொன்றிற்கு 7,500 முதல் 9,000 வரையிலான அறிக்கைகளை விரைவாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>

மேலும், போதைப்பொருள் தொடர்பான சட்டத் திருத்தங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், மேல்நீதிமன்றங்கள் மூலமாகவே விரைவாக பிணை பெறும் வாய்ப்பும் ஏற்படுத்தப்படவுள்ளது.</p><p>

எனவே, சிறைச்சாலைக்குள் ஒரு சிலர் ஏற்படுத்தும் வன்முறைகளுக்கோ அல்லது சதித்திட்டங்களுக்கோ பலியாகாமல் பொறுமையுடன் செயற்படுமாறும், அரச உடைமைகளுக்கோ அல்லது சிறைச்சாலைச் சொத்துக்களுக்கோ சேதம் விளைவிக்க வேண்டாம் என்றும் கைதிகளிடம் தெரிவித்துக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T15:37:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக் பாஸ் 10 லோகோவுடன் வந்த புது ப்ரோமோ! இணையத்தில் வைரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/bigg-bos-10-tamil-new-promo-with-logo-reveal-1786116894"></link>
            <id>https://cineulagam.com/article/bigg-bos-10-tamil-new-promo-with-logo-reveal-1786116894</id>
            <summary type="text">விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. விரைவில் பத்தாவது சீசன் தொடங்க இருக்கும் இடையில் அதில் போட்டியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. விரைவில் பத்தாவது சீசன் தொடங்க இருக்கும் இடையில் அதில் போட்டியாளர்களாக யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருக்கிறது.</p><p>மறுபுறம் சாதாரண பொதுமக்களில் இருந்து போட்டியாளர்களை தேர்ந்தெடுக்க பிக் பாஸ் காமன் மேன் என்ற நிகழ்ச்சியும் விஜய் டிவியில் விரைவில் தொடங்க இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fe7be3c-f265-4106-b73b-9effa1ce7d7a/26-6a75fb208c9bb.webp' /></p><p>
</p><h2>புது ப்ரோமோ
</h2><p>தற்போது பிக் பாஸ் 10 ஆண்டுகள் தொட்டு இருப்பதை கொண்டாடும் விதமாக ஒரு ப்ரோமோவை வெளியிட்டு இருக்கின்றனர்.
</p><p>அதில் விஜய் சேதுபதி டான்ஸ் ஆடுவது போல காட்டப்பட்டிருக்கிறது. அந்த ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ பாருங்க.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7BI2QqcvjJE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-07T15:35:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சேலையில் மயக்கும் நடிகை பிரியங்கா மோகன்..புகைப்படங்கள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/priyanka-mohan-recent-photoshoot-post-1786025805"></link>
            <id>https://viduppu.com/article/priyanka-mohan-recent-photoshoot-post-1786025805</id>
            <summary type="text">பிரியங்கா மோகன்கன்னடம், தெலுங்கு மொழிகளில் அறிமுகமாகி தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் போன்ற ஹிட் படங்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் தான்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிரியங்கா மோகன்</h2><p>கன்னடம், தெலுங்கு மொழிகளில் அறிமுகமாகி தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் போன்ற ஹிட் படங்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை பிரியங்கா மோகன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae05c3bd-eda7-42fb-b978-18380d0571e8/26-6a749757e4ee1.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து, எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர், பிரதர்ஸ், ஓஜி உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவர் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான மேட் இன் கொரியா படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.</p><p>

தற்போது 666 ஆபரேஷன் ட்ரீம் தேட்டர் என்ற படத்தில் நடித்துள்ளார் பிரியங்கா. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா, வீக்கெண்ட் ஆனால் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்வார். தற்போது சிகப்பு நிற சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-07T15:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் புனரமைக்கப்படாத பாலம்! உடைந்து விழும் நிலையில் மக்கள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/people-protest-as-bridge-collapses-1786111523"></link>
            <id>https://ibctamil.com/article/people-protest-as-bridge-collapses-1786111523</id>
            <summary type="text">கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பரவிப்பாஞ்சான் பகுதி ஏ-9
வீதியில் இருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த
இரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பரவிப்பாஞ்சான் பகுதி ஏ-9
வீதியில் இருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த
இரும்பு பாலம் சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் குறித்த பாலத்தை திருத்தி
தரும்படி&nbsp;இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>குறித்த போராட்டமானது இன்று (07.08.2026) பாலத்தினுள் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>பாலத்தின் அடித்தளங்கள்</h2><p>

1980 ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட பாலம் 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில்
சேதமடைந்து விடுதலைப் புலிகளால் தற்காலிக பாலமாக அமைத்து நீண்ட காலமாக
பாவனையில் இருந்து 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற பின்னர் இராணுவத்தினரின்
ஆளுமைக்குள் இருந்து குறித்த இடத்தை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து பல
போராட்டங்களை முன்னெடுத்த பின்னர் பகுதி பகுதியாக குறித்த பிரதேசத்தை 2018 ஆம்
ஆண்டு மீட்டேடுத்தார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9dccaef-f9a5-43d6-bc7a-e90bbfaf75a6/26-6a75e624a7afc.webp' /></p><p>அதன் பின்னர் மாவட்டத்துக்கு பல அபிவிருத்திகள்
வந்தபோதும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பரவிப்பாஞ்சான் கிரமத்தின்
வீதிகளை புறம் தள்ளப்பட்டு ஒதுக்கப்பட்டே காணப்பட்டுள்ளது.</p><p>தற்போது பாலத்தின்
அடித்தளங்கள் பலவீனமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில்
உள்ளது.</p><p> இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கைகள்
இடம்பெறாத நிலையில் குறித்த பாலத்தை திருத்தி தரும்படி போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
இந்தப் பாலத்தைப் பயன்படுத்தி வந்த பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உயிர்
பயத்துடனேயே கடக்க வேண்டிய சூழல் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T15:25:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு ஏமனில் மீண்டும் தீவிரமடையும் மோதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/conflict-intensifies-again-in-eastern-yemen-1786115292"></link>
            <id>https://tamilwin.com/article/conflict-intensifies-again-in-eastern-yemen-1786115292</id>
            <summary type="text">ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை இலக்கு
வைத்து இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத்
தாக்குதல்களை நடத்தியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை இலக்கு
வைத்து இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத்
தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சவூதி ஆதரவு இராணுவப் படை அதிகாரி ஒருவர்
தெரிவித்துள்ளார்.</p><p>

சவூதி அரேபிய தலைமையிலான கூட்டுப் படைகளுக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும்
இடையே மீண்டும் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையிலேயே இத்தாக்குதல்
இடம்பெற்றுள்ளது.
</p><p>
ஏமன் தலைநகர் சனாவிற்கு (Sanaa) மேற்கே உள்ள பகுதியிலிருந்தே இந்த ஏவுகணைகள்
ஏவப்பட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்குத்
தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>தாக்குதல்கள்&nbsp;</h2><p>
</p><p>
மாரேப் நகரின் பல பகுதிகளை இலக்கு வைத்து இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும்,
இதில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டிருக்கக் கூடும் எனவும்
அப்பகுதிவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d64ae4d1-6812-4fa4-b1d4-2bd0afcdbb43/26-6a75f733b279a.webp' /></p><p>
</p><p>
இதனிடையே, சவூதி அரேபியாவின் தென்மேற்கு எல்லைப் பகுதியான நஜ்ரான் (Najran)
பிராந்தியத்தின் மீதும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக
சவூதி தலைமையிலான கூட்டுப் படையின் உத்தியோகபூர்வ பேச்சாளர் மேஜர் ஜெனரல்
துர்கி அல்-மால்கி உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p>

பொதுமக்கள் வாழும் பகுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலில் பெண்
மற்றும் குழந்தை உட்பட 11 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள சவூதி
கூட்டுப் படை, ஹூதி அமைப்பினரின் இச்செயலை வன்மையாகக் கண்டித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T15:23:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வறட்சியை சமாளிக்க தமிழக அரசு ரூ.288.97 கோடி நிதி ஒதுக்கீடு - வெளியான அரசாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/tn-gov-allocates-288-97-crore-to-manage-drought-1786114462"></link>
            <id>https://ibctamilnadu.com/article/tn-gov-allocates-288-97-crore-to-manage-drought-1786114462</id>
            <summary type="text">தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால், பல்வேறு பகுதிகளில் நீராதாரங்கள் பாதிக்கப்பட்டு விவசாய பணிகளில் சிரமம் ஏற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால், பல்வேறு பகுதிகளில் நீராதாரங்கள் பாதிக்கப்பட்டு விவசாய பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது.</p><p>குறிப்பாக மழையை நம்பி சாகுபடி செய்யும் விவசாயிகள், வறட்சியின் தாக்கத்தை சமாளிக்க தமிழக அரசு உரிய நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b96cb310-1959-4370-a1d0-1fe4c7ddccda/26-6a75f544be0b8.webp' /></p><h2>ரூ.288.97 கோடி நிதி ஒதுக்கீடு&nbsp;</h2><p> </p><p>இந்நிலையில், வறட்சி நிலையை சமாளிக்கும் வகையில் ரூ.288.97 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.</p><p>இந்த நிதியின் மூலம் வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகளில் நீர் ஆதாரங்களை மேம்படுத்தவும், விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் வசதியை உறுதி செய்யவும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.</p><p>
</p><p>
இதன் ஒரு பகுதியாக, தேவையான இடங்களில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள கிணறுகளை தூர்வாரி நீர்மட்டத்தை அதிகரித்தல், நீர் சேமிப்பு மற்றும் விநியோக வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>

இந்த நடவடிக்கைகள் மூலம் வறட்சியின் தாக்கத்தை குறைத்து, விவசாயிகளுக்கு தேவையான நீர் வசதியை ஏற்படுத்துவதுடன், சாகுபடி பணிகள் தொடர்ந்து நடைபெறுவதற்கும் உதவியாக இருக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-07T15:20:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை விட்டு வெளியேறிய 3791 சிறப்பு மருத்துவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3791-specialist-doctors-have-left-the-country-1786115955"></link>
            <id>https://ibctamil.com/article/3791-specialist-doctors-have-left-the-country-1786115955</id>
            <summary type="text">2020-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 3,791 சிறப்பு மருத்துவர்கள் இலங்கையை விட்டு வெளியேறினர் என்று பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2020-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 3,791 சிறப்பு மருத்துவர்கள் இலங்கையை விட்டு வெளியேறினர் என்று பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர்களில் பெரும்பாலானோர் முதுகலைப் படிப்பைத் தொடர வெளிநாடுகளுக்குச் சென்றிருந்ததாகவும், மற்றவர்கள் வேலைவாய்ப்புக்காகவோ, தங்கள் வாழ்க்கைத் துணையுடன் வெளிநாடு சென்றிருந்ததாகவும், கூறியுள்ளார்.
</p><p>
இந்த ஆண்டு இதுவரை 280 மருத்துவர்கள் வெளிநாடு செல்ல விண்ணப்பித்துள்ளதாக விஜேமுனி தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஊதியமில்லா விடுப்பு&nbsp;</h2><p>

2020-ஆம் ஆண்டு முதல் ஜூன் 2026-ஆம் ஆண்டுக்குள் 1,429 மருத்துவர்களுக்கு வெளிநாடு செல்வதற்காக ஊதியமில்லா விடுப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p>


அதே காலகட்டத்தில், 140 சிறப்பு மருத்துவர்களுக்கும் வெளிநாட்டுப் பயணத்திற்காக ஊதியமில்லா விடுப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.</p><p>

வெளிநாடுகளுக்குக் குடிபெயர்வதற்கு முன்பு பதவி விலகும் அல்லது பணியிலிருந்து விலகும் மருத்துவர்கள் குறித்த தரவுகளை சுகாதார அமைச்சகம் பராமரிப்பதில்லை என்று துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T15:19:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோ மேயர் தேர்தல் கருத்துக் கணிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/olivia-chow-leads-toronto-mayoral-race-1786113237"></link>
            <id>https://canadamirror.com/article/olivia-chow-leads-toronto-mayoral-race-1786113237</id>
            <summary type="text">கனடாவின் டொராண்டோ மேயர் தேர்தலுக்கான ரேஸில் தற்போதைய மேயர் ஒலிவியா சௌ தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
 புதிதாகக் களமிறங்கியுள்ள முன்னாள் மத்திய அமைச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் டொராண்டோ மேயர் தேர்தலுக்கான ரேஸில் தற்போதைய மேயர் ஒலிவியா சௌ தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
</p><p> புதிதாகக் களமிறங்கியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் கிறிஸ் அலெக்ஸாண்டர் 10 சதவீத ஆதரவுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாக புதிய கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது.</p><p> 
லியாசன் ஸ்ட்ராடஜீஸ் நிறுவனம் ஆகஸ்ட் 4 மற்றும் 5-ஆம் திகதிகளுக்கு இடையில் 1,000 டொராண்டோவாசிகளிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56d96f90-6f08-46fa-9f71-e417102f0cd8/26-6a75ecd789724.webp' /></p><p>
</p><p>ஒலிவியா சௌ: 47% , பிராட் பிராட்போர்ட்: 40% , கிறிஸ் அலெக்ஸாண்டர்: 10% மற்றும் மற்ற வேட்பாளர்கள்: 3% வாக்குகள் பெற்றுக்கொள்வார்கள் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
</p><p>கிறிஸ் அலெக்ஸாண்டர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன் நடத்தப்பட்ட முந்தைய ஆய்வில், 'மற்ற வேட்பாளர்களுக்கு' 10% ஆதரவு இருந்தது. </p><p>தற்போது அந்த ஆதரவு அலெக்ஸாண்டரை நோக்கி நகர்ந்துள்ளதாக லியாசன் ஸ்ட்ராடஜீஸ் தலைவர் டேவிட் வலன்டின் தெரிவித்துள்ளார். </p><p>
முடிவெடுக்காத வாக்காளர்கள் உட்பட அனைத்து மக்களிடமும் நடத்தப்பட்ட கணிப்பில், ஒலிவியா சௌ 38%, பிராட்போர்ட் 32%, அலெக்ஸாண்டர் 8% ஆதரவைப் பெற்றுள்ளனர்.
</p><p> இன்னும் 20 சதவீத வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்று முடிவெடுக்காமல் உள்ளனர். தேர்தல் முடிவை தீர்மானிப்பதில் இந்த 20% வாக்காளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T15:18:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வோகான் பூங்காவில் தகாத செயலில் ஈடுபட்ட ஊழியர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/vaughan-amusement-park-ride-operator-charged-1786111302"></link>
            <id>https://canadamirror.com/article/vaughan-amusement-park-ride-operator-charged-1786111302</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் வோகான் பகுதியில் உள்ள பிரபல பொழுதுபோக்கு பூங்காவில், சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டின் கீழ் சவாரி இயங்குனர் ஒருவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் வோகான் பகுதியில் உள்ள பிரபல பொழுதுபோக்கு பூங்காவில், சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டின் கீழ் சவாரி இயங்குனர் ஒருவர் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளார்.
</p><p>இச்சம்பவத்தில் மேலும் பல சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
</p><p>யார்க் பிராந்திய பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த மே 25 அன்று சிறுமி ஒருவர் தனது நண்பர்களுடன் பெயர் குறிப்பிடப்படாத பொழுதுபோக்கு பூங்காவிற்குச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee64b643-6cda-4305-b89d-b6b646cc1aad/26-6a75e54883ee8.webp' /></p><p> </p><p>
அங்கு அவர் சவாரி ஒன்றில் ஏற முயன்றபோது, பாதுகாப்புப் பரிசோதனைகளைச் செய்வதாகக் கூறி, அங்கிருந்த ஊழியர் அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
</p><p>இச்சம்பவம் தொடர்பாக பிராம்ப்டன் நகரைச் சேர்ந்த ஜுகாத் தாமி என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>அவர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.</p><p>
இவரிடம் மேலும் சிலர் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகக் கருதும் பொலிஸார், பொதுமக்கள் அடையாளம் காணும் பொருட்டு சந்தேகநபரான தாமியின் புகைப்படத்தை வெள்ளிக்கிழமை வெளியிட்டனர்.</p><p>
இந்த விசாரணை தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்தால், யார்க் பிராந்திய பொலிஸின் சிறப்புப் பிரிவை 1-866-876-5423 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது Crime Stoppers அமைப்பையோ அநாமதேயமாகத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T15:17:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோவில் இந்த வார இறுதியில் காலைநிலை குறித்த எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/rain-sun-and-possible-thunderstorms-1786112413"></link>
            <id>https://canadamirror.com/article/rain-sun-and-possible-thunderstorms-1786112413</id>
            <summary type="text">&amp;nbsp;இந்த வார இறுதியில் டொராண்டோவில் வெயில், மழை மற்றும் அதிக ஈரப்பதம் கலந்த வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
கனடிய சுற்றுச்சூழல் திணைக்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இந்த வார இறுதியில் டொராண்டோவில் வெயில், மழை மற்றும் அதிக ஈரப்பதம் கலந்த வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>
கனடிய சுற்றுச்சூழல் திணைக்களத்தின் கணிப்பின்படி என இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>வெள்ளிக்கிழமை பிற்பகலில் வெப்பநிலை அதிகபட்சமாக 27 பாகை செல்சியஸாக பதிவாகும். பகுதி மேகமூட்டமான வானிலையுடன் 40 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதுடன், இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியக்கூறும் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ab15b33-7a32-45ca-8433-598cfb1d3ad1/26-6a75e99f70750.webp' /></p><p> </p><p>
ஈரப்பதம் காரணமாக உணரும் வெப்பநிலை 34 ஆக இருக்கும். இரவில் வெப்பநிலை குறைந்தபட்சமாக 21பாகை செல்சியஸாக குறையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.</p><p> 
சனிக்கிழமையன்றும் இதேபோன்ற வானிலையே தொடரும். அதிகபட்ச வெப்பநிலை 29 பாகை செல்சியாக உயரும். 60 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதுடன் இடியுடன் கூடிய மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.</p><p>
 இடையிடையே மேகமூட்டமான சூழல் நிலவுவதுடன், வெப்பநிலை 37 வரை எட்டக்கூடும். இரவில் குறைந்தபட்ச வெப்பநிலை 19 பாகை செல்சியதாக இருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
</p><p>ஞாயிற்றுக்கிழமையன்று வெப்பநிலை அதிகபட்சமாக 28 பாகை செல்சியஸ் வரை இருக்கும். 30 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அன்றைய இரவு நேரத்தில் வெப்பநிலை 18 பாகை செல்சியாககக் குறையக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T15:15:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[190 ஆண்டுகளில் மிக வறட்சியான ஜூலை., இங்கிலாந்தில் பதிவான வானிலை சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/england-faces-record-drought-heatwave-alerts-1786113811"></link>
            <id>https://news.lankasri.com/article/england-faces-record-drought-heatwave-alerts-1786113811</id>
            <summary type="text">இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் நீண்ட காலமாக மழை பெய்யாமல் வறட்சி நிலை தொடர்கிறது.

கடந்த 190 ஆண்டுகளில் பதிவான மிக வறட்சியான ஜூலை மாதமாக இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் நீண்ட காலமாக மழை பெய்யாமல் வறட்சி நிலை தொடர்கிறது.</p><p>

கடந்த 190 ஆண்டுகளில் பதிவான மிக வறட்சியான ஜூலை மாதமாக இந்த 2026 ஜூலை மாதத்தை பிரித்தானிய வானிலை மையம் (Met Office) அறிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/461229bd-ce5d-46c8-a930-19c1a0ff97d9/26-6a75f3a9c8f01.webp' /></p><h2>சாதனை&nbsp;</h2><p>பிரித்தானியாவில் பல வானிலை நிலையங்கள் தங்களது பழைய சாதனைகளை முறியடித்துள்ளன.

சர்ரேயில் உள்ள விஸ்லி பகுதியில் தொடர்ந்து 51 நாட்கள் மழையின்றி வறட்சி நிலவுகிறது. </p><p>லின்கன்ஷையரில் உள்ள கோனிங்ஸ்பி பகுதியில் 42 நாட்கள் மழையின்றி சாதனை படைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், வசந்த காலத்திலிருந்து நிலவும் உயர் அழுத்த மண்டலம். இது மேகங்கள் உருவாகாமல் தடுப்பதால், மழை பெய்யாமல் போயுள்ளது.</p><p></p><p>

சில இடங்களில் சிறிய அளவில் மழை பெய்தாலும், வறட்சி பாதித்த பகுதிகளில் அது போதுமானதாக இல்லை. இதனால் புல்வெளிகள் வாடி, பசுமை நிலங்கள் மஞ்சள் நிறமாக மாறியுள்ளன.
</p><p>
1893-ஆம் ஆண்டு லண்டனின் மைல் எண்ட் பகுதியில் 73 நாட்கள் மழையின்றி இருந்தது மிக நீண்ட சாதனையாகும். அதனைத் தொடர்ந்து 1976-ஆம் ஆண்டு விஸ்லியில் 36 நாட்கள், 2018-ஆம் ஆண்டு கோனிங்ஸ்பியில் 33 நாட்கள் மழையின்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79ed4db2-bdd6-48b0-a2ad-fdaa3127a8d9/26-6a75f3aa821ce.webp' /></p><h2>வானிலை:&nbsp;மழை பெய்யும் வாய்ப்பு இல்லை</h2><p>வரும் வாரங்களில் வானிலை சிறிது மாறுபடும் என கணிக்கப்பட்டாலும், வறட்சியை முடிவுக்கு கொண்டு வரும் அளவுக்கு மழை பெய்யும் வாய்ப்பு இல்லை. வறட்சி முடிவடைய, தொடர்ந்து மற்றும் பரவலாக மழை பெய்ய வேண்டும். ஆறுகள், நீர்த்தேக்கங்கள், நிலத்தடி நீர் ஆகியவை நிரம்பும் அளவுக்கு மழை பெய்யும் போது மட்டுமே வறட்சி முடிவடையும்.
</p><p>
மேலும், அடுத்த வாரங்களில் வெப்பநிலை மீண்டும் 30 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் 35 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் UK Health Security Agency பல இடங்களில் மஞ்சள் நிற வெப்ப எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.
</p><p></p><p>இந்த வெப்ப அலை காரணமாக, முதியவர்கள், குழந்தைகள் மற்றும் உடல் நலக்குறைவுள்ளவர்கள் அதிக பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது. மருத்துவ சேவைகள் மீது அழுத்தம் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T15:00:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாவூறும் சுவையில் பாய் வீட்டு நெய்ச்சோறு.., எப்படி செய்வது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ghee-rice-recipe-in-tamil-1786105810"></link>
            <id>https://news.lankasri.com/article/ghee-rice-recipe-in-tamil-1786105810</id>
            <summary type="text">பொதுவாக பாய் வீட்டு ஸ்பெஷல் உணவுவகைகளில் பிரியாணிக்கு அடுத்த இடத்தில் இருப்பது நெய் சோறுதான்.

நெய்ச்சோறுடன் மிளகு முட்டை கிரேவி, செட்டிநாடு சிக்கன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக பாய் வீட்டு ஸ்பெஷல் உணவுவகைகளில் பிரியாணிக்கு அடுத்த இடத்தில் இருப்பது நெய் சோறுதான்.</p><p>

நெய்ச்சோறுடன் மிளகு முட்டை கிரேவி, செட்டிநாடு சிக்கன், மட்டன் சுக்கா சேர்த்து சாப்பிட்டால் ருசி அருமையாக இருக்கும்.</p><p>

அந்தவகையில், நாவூறும் சுவையில் பாய் வீட்டு ஸ்டைல் நெய்ச்சோறு எப்படி செய்வதென்று பார்ப்போம்.</p><p></p><p>
</p><h2>
தேவையான பொருட்கள்</h2><ul><li> 
 
நெய் - 2 ஸ்பூன்</li><li> 
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன் </li><li>பிரியாணி இலை</li><li> 
பட்டை- 1 துண்டு</li><li> 
கிராம்பு- 3</li><li> ஏலக்காய்- 2</li><li> 
அன்னாசிப்பூ- 1</li><li>
 ஜாவித்ரி- 2 </li><li>
கல்பாசி- 2
</li><li>வெங்காயம் - 2 </li><li>
முந்திரி - 10</li><li> 
பச்சை மிளகாய் - 4 </li><li>
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்</li><li> 
புதினா இலை </li><li>
கொத்தமல்லி இலை</li><li> 
உப்பு - 1 ஸ்பூன்
</li><li>தக்காளி - 1&nbsp;</li><li> தண்ணீர் - 1¾ கப்</li><li> 
பாஸ்மதி - 1 கப்
</li></ul><h2>
செய்முறை</h2><p> 

முதலில் ஒரு பாத்திரத்தில் நெய், தேங்காய் எண்ணெய், பட்டை , கிராம்பு, அன்னாசிபூ, ஏலக்காய், பிரியாணி இலை, ஜாவித்ரி, கல்பாசி சேர்த்து கிளற வேண்டும்.
</p><p>
பின் இதில் வெங்காயம், முந்திரி, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cd8c904-7aba-4539-951f-3d7abd9fc366/26-6a75d03670269.webp' /></p><p>பின்னர் இதில் புதினா, கொத்தமல்லி, தக்காளி மற்றும் உப்பு சேர்த்து கிளற வேண்டும்.</p><p>

அடுத்து இதில் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் 20 நிமிடம் ஊறவைத்த அரிசியை சேர்த்து வேகவைக்கவும்.</p><p>

இதற்கடுத்து தண்ணீர் முழுவதையும் அரிசி உறியும் போது மூடி போட்டு 20 நிமிடம் தம் போட வேண்டும்.
</p><p>
இறுதியாக இதன் மேல் லேசாக நெய், எண்ணெய்யில் பொரித்த வெங்காயம் சேர்த்து கிளறினால் சுவையான நெய்ச்சோறு தயார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T15:00:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[அது நடந்தால் ரஜினி உடனே ரூ.1 கோடி கொடுப்பார்: லதா ரஜினிகாந்த்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/rajinikanth-will-give-1-cr-rivers-connecting-latha-1786114080"></link>
            <id>https://cineulagam.com/article/rajinikanth-will-give-1-cr-rivers-connecting-latha-1786114080</id>
            <summary type="text">நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த் தற்போது அமைப்பு தொடங்கி நடத்தி வருகிறார். அதன் நிகழ்ச்சி இன்று நடந்த நிலையில் அதில் பேசிய லதா ஒரு முக்கிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த் தற்போது அமைப்பு தொடங்கி நடத்தி வருகிறார். அதன் நிகழ்ச்சி இன்று நடந்த நிலையில் அதில் பேசிய லதா ஒரு முக்கிய விஷயத்தை கூறி இருக்கிறார்.</p><p>நீண்ட காலமாக நீடித்து வரும் காவிரி நதிநீர் பிரச்சனை பற்றி செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். '2002லேயே ரஜினி நதிநீர் இணைப்புக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக கூறினார். அதை உங்கள் இயக்கம் மூலம் தர வாய்ப்பு இருக்கிறதா.. அதற்காக உங்கள் இயக்கம் வலியுறுத்துமா?' என கேட்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f119b90f-a595-4219-972e-a72aed7fe54e/26-6a75f0225c1d9.webp' /></p><p>
</p><h2>தொடங்கினால் உடனே தருவார்
</h2><p>நதிகள் இணைப்பு திட்டம் தொடங்கினால் அடுத்த நிமிடமே ரஜினி ஒரு கோடி ரூபாய் கொடுப்பார் என லதா தெரிவித்து உள்ளார்.</p><p>

மேலும் உங்கள் இயக்கத்துக்கு ரஜினி ஆதரவு எவ்வளவு இருக்கிறது என கேட்டதற்கு. "அது குடும்பத்திற்குள் நடக்கும் private விஷயம். அதை எல்லாம் வெளிப்படையாக சொல்ல முடியாது" என பதில் கூறி இருக்கிறார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T14:48:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை மோதல் குறித்து அநுர வெளியிட்ட சிறப்பு அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/anura-issues-special-report-on-prison-conflict-1786113636"></link>
            <id>https://ibctamil.com/article/anura-issues-special-report-on-prison-conflict-1786113636</id>
            <summary type="text">நாட்டிலுள்ள அனைத்து சிறைகளிலும் சிறைப் பாதுகாப்பு மற்றும் கைதிகள் நலன் மற்றும் அவசரகால பதிலளிப்பு ஆகியவற்றை நிவர்த்தி செய்வதற்காக ஒரு கூட்டுப் பொறிமுற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டிலுள்ள அனைத்து சிறைகளிலும் சிறைப் பாதுகாப்பு மற்றும் கைதிகள் நலன் மற்றும் அவசரகால பதிலளிப்பு ஆகியவற்றை நிவர்த்தி செய்வதற்காக ஒரு கூட்டுப் பொறிமுறையை நிறுவுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.</p><p> 

சிறைகளில் நிலவும் தற்போதைய நிலைமை மற்றும் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. </p><p>

முன்மொழியப்பட்ட இந்த செயல்முறையானது, கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆய்வு செய்து, அவர்களின் நலனைக் கண்காணித்து, அவசர காலங்களில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>33 சிறைச்சாலைகள் </h2><p>இந்த செயல்முறையானது அனைத்து 33 சிறைச்சாலைகளையும் உள்ளடக்கி, சிறைச்சாலைகள் திணைக்களம், இலங்கை காவல்துறை, சிறப்பு பணிப்படை (STF) மற்றும் தேவைப்படுமிடங்களில் ஆயுதப்படைகளின் அதிகாரிகளையும் கொண்டிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/821d0f98-6baf-45d3-a3e7-af4a2371e6d2/26-6a75ee65de6cb.webp' /></p><p>
</p><p>
இந்த திட்டம் அடுத்த வாரம் நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T14:40:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைகளை உடைத்து கொண்டு தப்பிக்க முயற்சிக்கும் கைதிகள்! அநுரவை வீழ்த்த நடக்கும் சதியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/magazine-prison-colombo-issues-anura-1786108221"></link>
            <id>https://tamilwin.com/article/magazine-prison-colombo-issues-anura-1786108221</id>
            <summary type="text">இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளிலே அண்மைக் காலங்களாக இடம்பெறும் மோதல்கள் ஒருங்கிணைக்கப்பட்ட குழுவினால் திட்டமிட்ட விதத்திலே இடம்பெறுவதாக&amp;nbsp; சமூக செயற்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளிலே அண்மைக் காலங்களாக இடம்பெறும் மோதல்கள் ஒருங்கிணைக்கப்பட்ட குழுவினால் திட்டமிட்ட விதத்திலே இடம்பெறுவதாக&nbsp; சமூக செயற்பாட்டாளர் ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.</p><p>அத்தோடு, ஊழல்வாதிகள், கடந்த கால அரசாங்கத்திலே குற்றச் செயல்களிலே ஈடுபட்டோர் தாங்கள் போய் சிறைச்சாலைகளில் இருப்பதற்கு சிறைச்சாலைகள் உகந்த நிலையில் இல்லை என்பதை எடுத்துக்காட்டுவதற்கு இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>சிறைச்சாலைக்கு செல்ல இருக்கக்கூடிய ஊழல்வாதிகளும் கடந்த காலத்தில் குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளும் தங்களுக்கு சிறைச்சாலைகள் சரியான விதத்தில் இல்லை, அங்கு பாதுகாப்பு இல்லை என்ற விடயத்தை கூறி சிறைக்கு செல்வதை தடுக்க முயல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>இவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக அரசாங்கம் நிச்சயம் தண்டணை வழங்கும்.சிறைச்சாலைகள் இல்லாவிட்டாலும் புதிய சிறைச்சாலைகள் உருவாக்கப்பட்டு ஊழல்வாதிகள் அடைக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/OdsoL-OTxHs" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T14:37:50+00:00</updated>
        </entry>
    </feed>
