<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-08T22:19:32+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எயார்பஸ் வழக்கு விசாரணை! இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகளுக்கு நீதவான் கடும் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/case-regarding-the-purchase-of-airbus-aircraft-1788903667"></link>
            <id>https://tamilwin.com/article/case-regarding-the-purchase-of-airbus-aircraft-1788903667</id>
            <summary type="text">ஏர்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பான வழக்கு இன்று (08) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்போதே வழக்கின் விசார...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏர்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பான வழக்கு இன்று (08) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. </p><p>அதன்போதே வழக்கின் விசாரணை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கத் தவறிய இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளை நீதவான் அசங்க எஸ் போதரகம கடுமையாக கண்டித்துள்ளார்.
</p><h2>கடுமையான உத்தரவு</h2><p>
இன்றைய வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள், வழக்கு தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், விசாரணைகள் இன்னும் பூர்த்தியாகவில்லை என்றும் வாய்மூலமாக நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc21afa3-fa89-42eb-8b83-c83d3c6a4966/26-6aa083651b925.webp' /></p><p>
</p><p>
அதன்போது கடுமையாக ஆத்திரமுற்ற நீதவான் அசங்க எஸ். போதரகம, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு தனியான சட்டங்களோ அதிகாரங்களோ இல்லை என்றும், நீதிமன்றத்தின் முன்னர் குறித்த ஆணைக்குழுவும் பொறுப்புக் கூறும் கடமைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
</p><p>
அத்துடன் வழக்கொன்றின் விசாரணையின் முன்னேற்றங்கள் தொடர்பில் ஒவ்வொரு தவணையின் போதும் எழுத்து மூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டியது பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து விசாரணையளார்களின் பொறுப்பாகும் என்றும் கடுமையாக அறிவுறுத்தியுள்ளார்.
</p><p>
அத்துடன் அவ்வாறான விசாரணை அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தி நீதிமன்றத்தில் முன்னிலையாகும் அதிகாரிகள் வழக்கு விசாரணை தொடர்பான முழுமையான விபரங்களை அறிந்து கொண்டே நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்றும் அவர் கடுமையான உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p>[AA0DO6Hஸ</p>]]></content>
            <updated>2026-09-08T21:52:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அச்சத்தில் நாமலின் மனைவி! ரங்க திஸாநாயக்காவால் திணறும் மகிந்த குடும்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airbus-issu-namal-arrest-mahinda-family-tiuble-1788898965"></link>
            <id>https://tamilwin.com/article/airbus-issu-namal-arrest-mahinda-family-tiuble-1788898965</id>
            <summary type="text">&amp;nbsp;ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பான சர்ச்சையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ராஜபக்ச குடும்பத்தினர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பான சர்ச்சையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ராஜபக்ச குடும்பத்தினரிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
</p><p>
லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளராக ரங்க திஸாநாயக்க பதவியேற்ற பின்னர், விசாரணைகளில் அதிரடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.</p><p>

அவர் பதவியேற்றபோது சுமார் 8,000 வழக்குகள் நிலுவையில் இருந்ததாகவும், தற்போது அவற்றில் 44 சதவீதமான வழக்குகள் முடிவுறும் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் 29-க்கும் மேற்பட்ட வழக்குகள் ராஜபக்ச குடும்பத்தினருடன் தொடர்புடையவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், 'சிரிலிய சவ்வியா' அமைப்பு மற்றும் மகரகம அபேக்ஷா வைத்தியசாலை தொடர்பான நிதி விவகாரங்கள் குறித்து குற்றத்தடுப்பு புலனாய்வுத் துறையினர் (CID) முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த தொடர் நடவடிக்கைகள் காரணமாக ராஜபக்ச குடும்பத்தின் பல உறுப்பினர்கள் சட்ட ரீதியான விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு, குடும்பம் கடும் நெருக்கடியை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.</p><p>

இந்தநிலையில், எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியில் அவரது இல்லாத குறையை ஈடுசெய்யும் வகையில், லிமினி ராஜபக்சவை அரசியல் களத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
லிமினி ராஜபக்ச மீது பல்வேறு அவதூறுகள் பரப்பப்படுவதாகவும், இதனால் அவர் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p> இது தொடர்பாக குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவிலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>


இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oxkF3F-rgZc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T21:10:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை – இந்திய சுகாதார அமைச்சர்கள் இருதரப்பு பேச்சுவார்த்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-india-health-ministers-hold-talks-1788900436"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-india-health-ministers-hold-talks-1788900436</id>
            <summary type="text">இலங்கையின் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும், இந்திய
சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டாவுக்கும் இடையே
இருத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும், இந்திய
சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டாவுக்கும் இடையே
இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று(8) நடைபெற்றது.</p><p>

கிழக்கு திமோரின் திலி நகரில் நடைபெற்று வரும் உலக சுகாதார அமைப்பின்
தென்கிழக்காசிய பிராந்தியக் குழுவின் 79 ஆவது மாநாட்டில் கலந்துகொண்டுள்ள
நிலையிலேயே, இம்மாநாட்டின் பக்க அம்சமாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
</p><h2>இலங்கையின் சுகாதாரத் துறை</h2><p>
இலங்கை எதிர்கொண்ட அனைத்துக் கடினமான தருணங்களிலும் இந்திய அரசாங்கம் வழங்கிய
ஆதரவுக்கும் நட்புறவுக்கும், இலங்கை அரசு மற்றும் மக்கள் சார்பில் தனது
நன்றியைச் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ
தெரிவித்துக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9cf69d7-b1c1-41e4-87aa-25c1fda8f7c1/26-6aa078be737ec.webp' /></p><p>
</p><p>
இலங்கையின் சுகாதாரத் துறையின் மேம்பாட்டுக்காக முன்னெடுக்கப்பட்டு வரும்
திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்களுக்கு அமைவாக, குறிப்பாகக் காசநோய் ஒழிப்பு
நடவடிக்கைகளை மேலும் வெற்றியடையச் செய்வதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும்
ஏனைய உதவிகளைத் தொடர்ச்சியாக வழங்குவதற்கு இந்திய சுகாதார அமைச்சர் இதன்போது
இணக்கம் தெரிவித்தார்.</p><p>

இதற்கு இணையான வகையில், இலங்கையின் ஆரம்ப சுகாதாரச் சேவை அமைப்பை மேலும்
வலுப்படுத்துதல் மற்றும் அதன் தரத்தை உயர்த்துதல் தொடர்பிலும் இங்கு விரிவாகக்
கலந்தாலோசிக்கப்பட்டது.
</p><p>
கிராமப்புற மட்டத்தில் மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார வசதிகளை மேலும்
விரிவாக்குவதற்குத் தேவையான ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்வது குறித்தும், அது
தொடர்பில் இரு நாடுகளின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது பற்றியும் இதன்போது
மேலதிக கவனம் செலுத்தப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T21:06:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிரான முக்கிய நகர்வில் பிரித்தானியா! வெளியிடப்பட்ட புதிய சட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/uk-published-legislation-against-iran-1788899576"></link>
            <id>https://ibctamil.com/article/uk-published-legislation-against-iran-1788899576</id>
            <summary type="text">ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் பிற விரோதச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஈரான் மீதான கடுமையான தடைகளை அறிமுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் பிற விரோதச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஈரான் மீதான கடுமையான தடைகளை அறிமுகப்படுத்துவதற்கான சட்டத்தை பிரித்தானியா வெளியிட்டுள்ளது.</p><p> 

இச்சட்டம் வர்த்தகக் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்துவதோடு, ஈரானிய கப்பல்களைக் குறிவைப்பதற்கான அதிகாரங்களையும் வழங்குவதாக கூறப்படுகிறது.</p><p>

அத்தோடு, ஈரானின் பிரித்தானிய நிதி அமைப்புக்கான அணுகலைக் கட்டுப்படுத்துதல், கூடுதல் பொருட்கள், தொழில்நுட்பம் மற்றும் சேவைகளை உள்ளடக்கிய வகையில் வர்த்தகத் தடைகளை விரிவுபடுத்துதல் மற்றும் சிறப்பு விதிவிலக்குகள் இல்லாத பட்சத்தில் ஈரானிய விமானங்கள் பிரித்தானியாவில் தரையிறங்குவதைத் தடை செய்தல் ஆகிய நடவடிக்கைகளை இச்சட்டம் உள்ளடக்கியுள்ளது என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>துறைசார் கட்டுப்பாடுகள்</h2><p>

“ஸ்னாப்பேக்” (snapback) எனப்படும் பொறிமுறையின் கீழ் ஈரான் மீது ஐ.நா. தடைகள் மீண்டும் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு அரசாங்கம் அறிவித்த திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c07c6ecd-4a88-46cd-a21f-e73f11f96346/26-6aa0725f12873.webp' /></p><p> </p><p>

நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குப் பிறகு, இச்சட்டம் 2015-ஆம் ஆண்டு ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் நீக்கப்பட்ட பல்வேறு துறைசார் கட்டுப்பாடுகளை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>ஈரானின் அணுசக்தித் திட்டம்</h2><p>
</p><p>
அத்துடன், ஈரானின் அணுசக்தித் திட்டத்துடன் தொடர்புடைய நிதி திரட்டும் திறன் மற்றும் தொழில்நுட்பப் பொருட்களைப் பெறும் திறனையும் மேலும் மட்டுப்படுத்தும் என்றும் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f861c6c-e737-4acb-9585-55b321373903/26-6aa0725ff1992.webp' /></p><p><i>Image Credit: Reuters</i></p><p>
</p><p>
இந்நிலையில், “ஈரானின் அணுசக்தி லட்சியங்களைக் கட்டுப்படுத்துவதற்கான எங்கள் நடவடிக்கைகளை இச்சட்டம் மேலும் வலுப்படுத்துகிறது” என்றும், ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெற முடியாது என்பதை உறுதிப்படுத்த இது உதவும் என்றும் பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்டீபன் டவுட்டி தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T21:00:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் எண்ணெய் கப்பல்களை தாக்கத் தொடங்கிய அமெரிக்கா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-begins-attacking-iranian-oil-tankers-1788900824"></link>
            <id>https://ibctamil.com/article/us-begins-attacking-iranian-oil-tankers-1788900824</id>
            <summary type="text">ஈரானின் பல எண்ணெய் கப்பல்கள் அமெரிக்காவால் குறிவைக்கப்பட்டுள்ளதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் பல எண்ணெய் கப்பல்கள் அமெரிக்காவால் குறிவைக்கப்பட்டுள்ளதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இருப்பினும், அவற்றின் சரியான எண்ணிக்கை அறியப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
</p><p>
இதன்போது, ஈரானின் கார்க் தீவின் கடற்கரைப் பகுதியில் ஒரு கப்பல் குறிவைக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.</p><p>&nbsp;</p><h2>கப்பல்களை வெளியெற உத்தரவு</h2><p>குறிவைக்கப்பட்ட கப்பல்களின் பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d5e6143-b907-4773-839f-153561255a8c/26-6aa075d9e2a77.webp' /></p><p>

இதனைத் தொடர்ந்து, குவைத் மற்றும் பஹ்ரைன் துறைமுகங்களின் அருகில் உள்ள அனைத்து எண்ணெய் கப்பல்களுக்கும் (அவை நங்கூரமிடப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும்) அங்கிருந்து வெளியேறுமாறு ஈரானின் புரட்சிகரப் படைப்பிரிவின் (IRGC) கடற்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>ஹோர்முஸ் நீரிணையில் கார்க் தீவு மிக முக்கியமான இடமாகும். போருக்கு முன்பு, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் 90 வீதம் இந்தத் தீவின் மூலமே கையாளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T20:57:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் 4 கார்கள் மோதிக்கொண்ட கோர விபத்து: 3 பேர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/multi-vehicle-crash-near-edinburgh-3-arrested-1788898709"></link>
            <id>https://news.lankasri.com/article/multi-vehicle-crash-near-edinburgh-3-arrested-1788898709</id>
            <summary type="text">3 Arrested Following Multi vehicle crash near Edinburgh: பிரித்தானியாவின் எடின்பர்க் விமான நிலையம் அருகே ஏற்பட்ட விபத்து தொடர்பாக 3 பேர் கைது செய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>3 Arrested Following Multi vehicle crash near Edinburgh: பிரித்தானியாவின் எடின்பர்க் விமான நிலையம் அருகே ஏற்பட்ட விபத்து தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2> விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய நபர்கள்</h2><p>
பிரித்தானியாவின் எடின்பர்க் விமான நிலையம் அருகே திங்கட்கிழமை காலை 9.25 மணியளவில் A8 கிளாஸ்கோ சாலையில் பல வாகனங்கள் மோதிய கோர சாலை விபத்தானது அரங்கேறியது.</p><p> ஹிட்-அண்ட்-ரன்(மோதிவிட்டு நிற்காமல் தப்பி ஓடிய சம்பவம்) விபத்தாக கருதப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் இந்த சம்பவத்தில், சாம்பல் நிற மெர்சிடிஸ் A250, கருப்பு நிற ரெனால்ட் கேப்டர், சாம்பல் நிற ஸ்கோடா கரோக் மற்றும் சாம்பல் நிற ஹூண்டாய் i30 ஆகிய நான்கு கார்கள் விபத்தில் சிக்கின.</p><p> விபத்து குறித்து தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
இந்த விபத்தில் ஹூண்டாய்&nbsp; i30 காரை ஓட்டி வந்த 59 வயது பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/570800f9-0f17-4be5-9392-a050ae5b9b0c/26-6aa06d96ed7a9.webp' /></p><p> மேலும் இதில் 4 பேர் வரை காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்கு பிறகு தற்போது பாதுகாப்பாக வீடு திரும்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2> 3 பேர் கைது</h2><p>
இந்த கோர சாலை விபத்து சம்பவத்தில், விபத்தை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிய 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p> இதில் 32 வயது ஆடவர் ஒருவரும், 19 மற்றும் 23 வயதுடைய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டு இருப்பதாக ஸ்காட்லாந்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.</p><p> இந்த விபத்து காரணமாக விமான நிலையத்திற்கு செல்லும் சாலை நீண்ட நேரம் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T20:50:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் முக்கிய ஆயுதத்தை தாக்கி அழித்த ஈரான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/irgc-destroyed-a-us-made-mq-1-drone-1788898304"></link>
            <id>https://ibctamil.com/article/irgc-destroyed-a-us-made-mq-1-drone-1788898304</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணைக்கு மேலே பறந்த அமெரிக்க தயாரிப்பான MQ-1 ரக ஆளில்லா விமானத்தை (ட்ரோன்) தங்கள் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்ததாக ஈரானின் புரட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணைக்கு மேலே பறந்த அமெரிக்க தயாரிப்பான MQ-1 ரக ஆளில்லா விமானத்தை (ட்ரோன்) தங்கள் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்ததாக ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது.</p><p> ஈரானிய ஒலிபரப்பு நிறுவனமான IRIB வெளியிட்ட அறிக்கையின்படி இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
</p><p>
MQ-1 என்பது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட, தொலைவிலிருந்து இயக்கப்படும் ஒரு ஆளில்லா விமானமாகும். இது பெரும்பாலும் கண்காணிப்பு மற்றும் உளவு பார்க்கும் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.</p><p></p><h2>அமெரிக்காவின் பதில்&nbsp;</h2><p>
</p><p>இந்நிலையில், ஈரானின் இந்த அறிக்கை தொடர்பாக அமெரிக்கா இதுவரை அதிகாரப்பூர்வ கருத்துக்கள் எதையும் வெளியிடவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f491f7e-e298-4755-b6af-838fbeddf5bd/26-6aa0705bdb7eb.webp' /></p><p><i>Image Credit:migflug</i></p><p>

முன்னதாக, ஹோர்முஸ் நீரிணையின் நுழைவாயிலில் அமெரிக்காவின் ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றைக் கைப்பற்றியதாகவும் IRGC-யின் கடற்படைப் பிரிவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table></h5>]]></content>
            <updated>2026-09-08T20:30:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர் முடிவுக்கு வழிவகுக்குமா! ரஷ்யா–உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் புதிய யோசனைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/zelensky-says-us-has-good-ideas-to-end-war-1788895762"></link>
            <id>https://tamilwin.com/article/zelensky-says-us-has-good-ideas-to-end-war-1788895762</id>
            <summary type="text">ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்க அமைதிப்
பேச்சுவார்த்தையாளர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் சில
&#039;நல...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்க அமைதிப்
பேச்சுவார்த்தையாளர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் சில
'நல்ல யோசனைகளை' முன்வைத்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி
செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
</p><p>
அமெரிக்கத் தூதுவர்கள் இருவரும் கடந்த வார இறுதியில் ரஷ்யா மற்றும்
உக்ரைனுக்கு விஜயம் செய்து ஜனாதிபதி ஸெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி
விளாடிமிர் புட்டின் ஆகியோருடன் பல மணிநேரப் பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.</p><h2>நல்ல யோசனைகள்</h2><p>
</p><p>
இருப்பினும், ஐந்தாவது ஆண்டாகத் தொடரும் இந்தப் போரை முடிவுக்குக்
கொண்டுவருவதில் உடனடி முன்னேற்றங்கள் எதுவும் எட்டப்படவில்லை.
</p><p>
செய்தியாளர்களுடனான உரையாடலின் போது இந்த அமைதித் திட்டம் குறித்துப்
குறிப்பிட்ட ஸெலென்ஸ்கி, அமெரிக்கத் தூதுவர்கள் முன்வைத்த புதிய யோசனைகள்
மிகவும் பயனுள்ளவையாக இருந்ததாகத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfdd8fd2-6ea7-4dcb-819d-b85c3e31ce6f/26-6aa0650997ccf.webp' /></p><p>

இது குறித்து விரிவான தகவல்களை வெளியிடாத அவர், முதலில் அமெரிக்கத்
தூதுவர்களுடன் இணைந்து இந்த திட்டங்களில் பணியாற்றுவதற்கு உக்ரைன்
ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறினார்.</p><p>

அத்துடன், இம்மாத பிற்பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைச்
சந்தித்து குளிர்கால வான் பாதுகாப்பு ஆதரவுப் பொதி குறித்து விவாதிக்கத்
திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும், மூன்று தரப்பு பேச்சுவார்த்தைகளுக்கான ஆயத்தங்களை மேற்கொள்ள உக்ரைன்,
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பிரதிநிதிகள் விரைவில் சந்திக்கவுள்ளதுடன்,
துருக்கி, ஐக்கிய அரபு இராச்சியம் அல்லது சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இக்
கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-08T20:12:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையர்களுக்கான விசா இல்லாத நுழைவை ரத்து செய்த நாடு! காரணத்தை வெளியிட்டது அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/reason-for-thailand-ended-visa-free-entry-1788893382"></link>
            <id>https://ibctamil.com/article/reason-for-thailand-ended-visa-free-entry-1788893382</id>
            <summary type="text">இலங்கை நாட்டவர்கள் சிலர் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவங்களே, இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா இல்லாத நுழைவு வசதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை நாட்டவர்கள் சிலர் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவங்களே, இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா இல்லாத நுழைவு வசதியை ரத்து செய்ய தாய்லாந்து எடுத்த முடிவுக்கு முக்கியக் காரணமாகும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.</p><p>

ஊடகச் சந்திப்பில் பேசிய அவர், தாய்லாந்து அரசாங்கம் உலக நாடுகளுக்கான தனது விசா நடைமுறைகளை மறுஆய்வு செய்து, இலங்கை உட்பட 60 நாடுகளுக்கான விசா விலக்கு வசதியை திரும்பப்பெற முடிவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

விசா இல்லாத வசதியைத் தவறாகப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டதை தாய்லாந்து அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.</p><p></p><h2>சிறப்பு விசா நடைமுறை</h2><p> </p><p>

குறிப்பாக, பௌத்த பிக்குகள் தாய்லாந்திற்குள் குஷ் வகை போதைப்பொருளைக் கொண்டுவர முயன்ற சமீபத்திய சம்பவத்தையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5dc23fa-6309-482a-9882-cf8daa6f594d/26-6aa05b8582d73.webp' /></p><p>
</p><p>
திருத்தப்பட்ட விசா விலக்கு மற்றும் வருகையின் போது விசா பெறும் வசதி (Visa on Arrival) தொடர்பான அறிவிப்புகள் ஓகஸ்ட் 31 அன்று தாய்லாந்தின் அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. </p><p>

இது குறித்து இலங்கை அரசு தாய்லாந்து அதிகாரிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. அப்போது, இலங்கைக்கு சிறப்பு விசா நடைமுறையை வழங்குவதற்காக புதிய இருதரப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள தாய்லாந்து அரசு முன்மொழிந்துள்ளது.</p><h2>வேலைவாய்ப்பு ஒப்பந்தம்</h2><p>இதற்கான வரைவு ஒப்பந்தம் தற்போது குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டு, அடுத்தகட்டமாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f60899d8-58f8-41d3-bdd7-4de7339b1f8c/26-6aa05b866fd4b.webp' /></p><p>
</p><p>
இலங்கைத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக அமைச்சர் விஜித ஹேரத் செப்டம்பர் 14 அன்று தாய்லாந்து செல்லவுள்ளார்.</p><p> 

தனது இந்தப் பயணத்தின் போது, முன்மொழியப்பட்டுள்ள புதிய இருதரப்பு விசா நடைமுறை குறித்தும் தாய்லாந்து அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T20:00:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் 600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து: 65,000க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/over-600-flights-cancelled-in-uk-1788895899"></link>
            <id>https://news.lankasri.com/article/over-600-flights-cancelled-in-uk-1788895899</id>
            <summary type="text">Over 600 Flights Cancelled in Uk After air traffic control disruption: பிரித்தானியாவில் 600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நுற்றுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Over 600 Flights Cancelled in Uk After air traffic control disruption: பிரித்தானியாவில் 600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.</p><h2> நுற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து</h2><p>பிரித்தானியாவில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p> இதனால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பல விமான நிலையங்களில் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">As of 1700 UTC, 625 flights have been canceled at airports in the UK following an earlier technical problem at NATS’ Shanwick ATC facility. <br><br>easyJet: 218<br>British Airways: 132<br>Ryanair 41<br>KLM 37<br>Eurowings 22 <a href="https://t.co/4hHZYmjFJv">pic.twitter.com/4hHZYmjFJv</a></p>&mdash; Flightradar24 (@flightradar24) <a href="https://x.com/flightradar24/status/2097372088193487276?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> Flightradar24 தரவுகள் படி, மாலை 6 மணி நிலவரத்தின் கீழ் பிரித்தானியாவில் 625 விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p></p><p> இதில், பிரிட்டிஷ் ஏர்வேஸின் 132 விமானங்கள் , ஈசிஜெட் நிறுவனத்தின் 218 விமானங்கள், ரயான்ஏர் நிறுவனத்தின் 41 விமானங்கள், கேஎல்எம் நிறுவனத்தின் 37 விமானங்கள் மற்றும் யூரோவிங்ஸ் நிறுவனத்தின் 22 விமானங்கள்&nbsp; ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p> யூரோ கட்டுப்பாட்டு அமைப்பின்(Eurocontrol) தரவுகள் படி, தெற்கு இங்கிலாந்தில் பறந்த 590 விமானங்கள் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93d91407-e2ba-444f-80ab-f85566943ab2/26-6aa0629c9dee5.webp' /></p><p> ஹீத்ரோ விமான நிலையத்தில் மட்டும் 132 விமான புறப்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 199 விமானங்கள் தாமதம் செய்யப்பட்டுள்ளன.</p><p> இந்த விமான ரத்து மற்றும் தாமதத்தின் காரணமாக கிட்டத்தட்ட 65,000க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T19:56:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி அரேபியா மீது ஹவுதிகள் தாக்குதல்: புதிய உச்சம் தொட்ட கச்சா எண்ணெய் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/oil-price-surge-after-attacks-on-saudi-by-houthis-1788897385"></link>
            <id>https://news.lankasri.com/article/oil-price-surge-after-attacks-on-saudi-by-houthis-1788897385</id>
            <summary type="text"> Oil Price Surge After Attacks on Saudi by Houthis: மத்திய கிழக்கில் சவுதி அரேபியாவிற்கும் ஹவுதி படையினருக்கும் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக கச்சா எண்ணெய...</summary>
            <content type="html"><![CDATA[<p> Oil Price Surge After Attacks on Saudi by Houthis: மத்திய கிழக்கில் சவுதி அரேபியாவிற்கும் ஹவுதி படையினருக்கும் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.</p><h2> சவுதி அரேபியா மீது ஹவுதிகள் தாக்குதல்</h2><p>மத்திய கிழக்கில் நிலவி வரும் புவிசார் பதற்றங்களுக்கு மத்தியில் புதிய மோதலாக சவுதி அரேபியாவின் நகரங்களை குறி வைத்து ஈரானிய ஆதரவு பெற்ற ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.</p><p> தெற்கு சவுதி அரேபியாவின் நான்கு நகரங்கள், எண்ணெய் உள்கட்டமைப்புகள் மற்றும் வான்வழி தளங்களை குறிவைத்து ஏமனின் ஹவுதி படையினர் பாலிஸ்டிக் ஏவுகணைகளை மற்றும் ஆளில்லா ட்ரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0de0638-bf95-47c2-a607-7a11ebdf4b6a/26-6aa0686b9ca40.webp' /></p><p> இந்த தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட 73 பேர் காயமடைந்து இருப்பதாக சவுதி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> அத்துடன் ஹவுதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஏமனின் மரிப் (Marib) நகரை குறிவைத்து சவுதி படையினர் 4 வானவழித் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fc46eb8-f4eb-43b7-ba55-f83ea84a73eb/26-6aa0686c51499.webp' /></p><p></p><h2>அதிகரித்த கச்சா எண்ணெய் விலை</h2><p>
ஏற்கனவே உள்ள பதற்றங்களுக்கு மத்தியில் கூடுதலாக மத்திய கிழக்கில் உருவாகியுள்ள இந்த மோதல் காரணமாக பல வாரங்களில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளது.</p><p> பிரித்தானிய நேரப்படி காலை 7.30 மணிக்கு, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 1.25 டொலர்கள்(1.3%) உயர்ந்து 98.25 டொலராக விற்பனை செய்யப்பட்டது.</p><p> வர்த்தகத்தின் ஆரம்பத்தில் இந்த விலை 98.79 டொலராக உயர்ந்தது. இது ஜூலை 24ம் திகதிக்கு பிறகு பதிவான அதிகபட்ச மதிப்பாகும்.</p><p> கடந்த பிப்ரவரியில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் தாக்குதலை தொடங்கிய பிறகு கச்சா எண்ணெய் விலையானது கடும் ஏற்றங்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T19:56:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு எந்த நெருக்கடியிலும் உறுதுணை! இந்திய பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rajnath-said-india-always-stands-by-sri-lanka-1788894859"></link>
            <id>https://ibctamil.com/article/rajnath-said-india-always-stands-by-sri-lanka-1788894859</id>
            <summary type="text">இலங்கை ஏதேனும் நெருக்கடியைச் சந்திக்கும் போதெல்லாம் இந்தியா எப்போதும் உறுதியாக அந்நாட்டுடன் துணை நிற்கும் என்று இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை ஏதேனும் நெருக்கடியைச் சந்திக்கும் போதெல்லாம் இந்தியா எப்போதும் உறுதியாக அந்நாட்டுடன் துணை நிற்கும் என்று இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். </p><p>

பாதுகாப்பு அமைச்சராக இலங்கைக்குத் தனது முதல் அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொண்ட அவர், இன்று(08) கொழும்பில் நடைபெற்ற இந்தியச் சமூகத்தினருடனான சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்தியாவும் இலங்கையும் நெருக்கமான கலாச்சார மற்றும் நாகரிகத் தொடர்புகளைப் பகிர்ந்து கொள்வதாகவும், இவை இருதரப்பு உறவுக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளன என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>இந்தியாவின் பொருளாதாரம்&nbsp;</h2><p>தொடர்ந்தும் உரையாற்றிய ராஜ்நாத் சிங், இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்களை எடுத்துரைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33be6b3e-381d-4050-a780-b567f2f15829/26-6aa065f9592eb.webp' /></p><p> மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழ்வதாகவும், உலகளாவிய வளர்ச்சியில் 16 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>
 மேலும், 2014-ல் சுமார் 2 டிரில்லியன் டொலராக இருந்த இந்தியப் பொருளாதாரம் தற்போது சுமார் 4 டிரில்லியன் டொலராக விரிவடைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T19:48:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கார் து நோர் நிலையத்தில் தொடருந்து சேவைகள் ஸ்தம்பிதம் ; பல மணிநேர தாமதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/train-services-at-gare-du-nord-station-paralyzed-1788896772"></link>
            <id>https://canadamirror.com/article/train-services-at-gare-du-nord-station-paralyzed-1788896772</id>
            <summary type="text">ஐரோப்பாவின் பாரிஸ் &#039;கார் து நோர்&#039; (Gare du Nord) தொடருந்து நிலையத்தில் நபரொருவர் மீது தொடருந்து மோதிய விபத்துக்குள்ளானதில் சேவைகள் இரத்து செய்யப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பாவின் பாரிஸ் 'கார் து நோர்' (Gare du Nord) தொடருந்து நிலையத்தில் நபரொருவர் மீது தொடருந்து மோதிய விபத்துக்குள்ளானதில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் பல மணிநேர தாமதமாகியதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>தொடருந்து நிலையத்துக்கும் அராஸ் (Arras) பகுதிக்கும் இடையில் இன்று (08) காலை இடம்பெற்ற நபர் ஒருவருடன் தொடர்புடைய தொடருந்து விபத்து காரணமாக, பிரதான தொடருந்து சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
</p><p>
நபர் ஒருவர் மீது தொடருந்து மோதியதையடுத்து, சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cbfd57e-c9ca-47ce-a71a-e34f9ce0c4e2/26-6aa0660687f5e.webp' /></p><p>இதன் காரணமாக இரு திசைகளிலும் தொடருந்து சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதுடன், பல சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

விபத்து இடம்பெற்ற இடத்தில் தீயணைப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இடமளிக்கும் வகையில் தொடருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக பிரெஞ்சுத் தேசிய தொடருந்து நிறுவனமான SNCF தெரிவித்துள்ளது.
</p><p>
இதன் விளைவாக கார் து நோர் தொடருந்து நிலையத்தில் பெரும் பயணிகள் நெரிசலும் குழப்ப நிலையும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>நிலையத்தின் தகவல் பலகைகளில் பல தொடருந்துகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், பல சேவைகளுக்கு நீண்ட நேர தாமதம் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குறிப்பாக, இப்பகுதியில் இயங்கும் TGV INOUI, OUIGO மற்றும் Eurostar ஆகிய அதிவேக தொடருந்து சேவைகளின் வருகை மற்றும் புறப்பாடுகளில் சுமார் நான்கு மணி நேரம் வரை தாமதம் ஏற்படக்கூடும் என பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7704eb71-4f67-4fd6-aab7-c7a591d13549/26-6aa06605d3b49.webp' /></p><p>மேலும், தொடருந்துகள் மாற்றுப் பாதைகளில் இயக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், சில பயணங்களின் மொத்த நேரம் வழக்கத்தைவிட அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனால் கார் து நோர் நிலையத்திலிருந்து பயணிக்கவுள்ள பயணிகள் தங்களது தொடருந்து சேவைகளின் தற்போதைய நிலை மற்றும் புறப்படும் நேரம் தொடர்பான தகவல்களை முன்கூட்டியே சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
விபத்து தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்த பின்னரே தொடருந்து சேவைகள் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-08T19:46:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரும் தாக்குதல் வரப்போகிறது...ஒக்டோபர் 7 தாக்குதலுக்கு முன்னரே நெதன்யாகுவுக்கு நேரடியாக தகவல் வழங்கிய UAE ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/netanyahu-was-warned-about-hamas-2023-attack-1788887397"></link>
            <id>https://tamilwin.com/article/netanyahu-was-warned-about-hamas-2023-attack-1788887397</id>
            <summary type="text">2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்துவதற்கு சுமார் ஒன்றரை வாரங்களுக்கு முன்னரே, ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் யஹ்யா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்துவதற்கு சுமார் ஒன்றரை வாரங்களுக்கு முன்னரே, ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் யஹ்யா சின்வார் பாரிய தாக்குதலொன்றைத் திட்டமிட்டு வருவதாக ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி முகமது பின் சயீத், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நேரடியாக எச்சரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இஸ்ரேலிய ஊடகமான ‘ஹாரெட்ஸ்’ மேற்கொண்ட விசாரணையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
</p><h2>மிகப்பெரிய தாக்குதல்&nbsp;</h2><p>
சுமார் 45 நிமிடங்கள் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போது, காசாவில் இருந்து “சில்சால்” எனப்படும் மிகப்பெரிய தாக்குதல் ஒன்று நடத்தப்படவுள்ளதாக பின் சயீத் எச்சரித்ததாக கூறப்படுகிறது.</p><p>இந்தத் தாக்குதல் பிராந்தியத்தில் இரத்தக்களரியையும் ஸ்திரமின்மையையும் ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் எச்சரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
மேலும், இந்தத் தாக்குதல் ஆபிரகாம் ஒப்பந்தங்களையும் பாதிக்கக்கூடும் என பின் சயீத் கவலை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

எனினும், நெதன்யாகு இந்த எச்சரிக்கைக்கு ஒப்பீட்டளவில் அமைதியாக பதிலளித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/379db03b-6a88-4337-b651-92c606f05986/26-6aa0487fd4d4d.webp' /></p><p>
</p><p>
ஹமாஸ் மேற்கு கரையில் நடவடிக்கை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கலாம் என தான் கருதுவதாக நெதன்யாகு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள இஸ்ரேல் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியிடமிருந்து கிடைத்த இந்த முக்கியமான எச்சரிக்கை குறித்து ஷின் பெட், மொசாட் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி உள்ளிட்ட உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நெதன்யாகு அறிவிக்கவில்லை என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம்&nbsp;</h2><p>
</p><p>
பின் சயீத் பின்னர் இந்த உரையாடல் குறித்து சிஐஏ இயக்குநர் வில்லியம் ஜே. பேர்ன்ஸிடமும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
</p><p>
இதனிடையே, 2023ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இஸ்ரேலின் ஷின் பெட் மற்றும் ஹமாஸ் இடையே இரகசிய நேரடி பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
கைதிகள் பரிமாற்றம் தொடர்பில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கு இரு தரப்பும் நெருங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

ஆனால், அந்த ஒப்பந்தம் இஸ்ரேல் தரப்பில் தாமதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

நீண்ட காலமாக காத்திருந்த சின்வார், 2023 செப்டெம்பரில் இடைத்தரகர் ஊடாக தான் “சில்சால்” எனப்படும் தாக்குதலைத் தயாரித்து வருவதாக எச்சரித்ததாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb6df83d-79ff-4d52-a4cf-382914bf8dfb/26-6aa04880890d5.webp' /></p><p>

அந்தத் தாக்குதலை “மிகப்பெரிய ஆச்சரியம்” மற்றும் “பயங்கரமான நடவடிக்கை” என அவர் விவரித்ததாகவும் கூறப்படுகிறது.

செப்டெம்பர் 15ஆம் திகதி சின்வாரின் எச்சரிக்கை ஷின் பெட்டை சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதனைத் தொடர்ந்து, அப்போதைய ஷின் பெட் தலைவர் ரோனென் பார், நெதன்யாகுவுக்கு அது குறித்து விளக்கமளித்ததாக கூறப்படுகிறது.

இரண்டு நாட்களுக்குப் பின்னர் நடைபெற்ற பாதுகாப்புக் கூட்டத்தில், இஸ்ரேல் “மோதலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது” என ரோனென் பார் எச்சரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>&nbsp;கடும் எதிர்வினை</h2><p>
காசா மற்றும் மேற்கு கரையில் தாக்குதல் அல்லது கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவர் பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.

எனினும், அந்தக் கூட்டத்தில் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

இதன்பின்னர், எகிப்திய புலனாய்வுத் தலைவர் அப்பாஸ் கமெலும் ஹமாஸ் “வழக்கத்திற்கு மாறானதும் பயங்கரமானதுமான நடவடிக்கை” ஒன்றைத் திட்டமிடுவதாக நெதன்யாகுவை எச்சரித்ததாக கூறப்படுகிறது.

காசா நிலைமையை இஸ்ரேல் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக நெதன்யாகு அவரிடம் தெரிவித்ததாகவும் அறிக்கை கூறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8742e07e-7c74-4322-97f3-4d6dda4b2629/26-6aa048813a4be.webp' /></p><p>

இதனையடுத்து, 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி அதிகாலை 6.29 மணியளவில் ஹமாஸின் தாக்குதல் ஆரம்பமானது.

இந்தத் தாக்குதலின்போது சுமார் 251 பேர் கடத்தப்பட்டதாகவும், பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினர் உட்பட பலர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

எனினும், ‘ஹாரெட்ஸ்’ வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நெதன்யாகுவின் அலுவலகம் முற்றிலும் மறுத்துள்ளது.
</p><p>
ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் நெதன்யாகு குறித்த காலப்பகுதியில் பேசவில்லை என்றும், அவரிடமிருந்து எந்த எச்சரிக்கையும் கிடைக்கவில்லை என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் இஸ்ரேலில் அரசியல் ரீதியாகவும் கடும் எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
முன்னாள் பிரதமர் நப்தாலி பென்னெட், ஐக்கிய அரபு அமீரக மற்றும் எகிப்திய தரப்புகளிடமிருந்து எச்சரிக்கைகள் கிடைத்தபோதும் நெதன்யாகு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், ஒக்டோபர் 7 பேரழிவுக்கு நெதன்யாகு நேரடியாக பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T19:36:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எம்பிலிப்பிட்டியவில் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shooting-near-embilipitiya-one-person-injured-1788895289"></link>
            <id>https://tamilwin.com/article/shooting-near-embilipitiya-one-person-injured-1788895289</id>
            <summary type="text">எம்பிலிப்பிட்டிய அருகே இன்று(8) நள்ளிரவை அண்மித்த நேரத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

நபரொருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>எம்பிலிப்பிட்டிய அருகே இன்று(8) நள்ளிரவை அண்மித்த நேரத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
</p><p>
நபரொருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குறித்த துப்பாக்கிச் சூட்டில் இலக்கு வைக்கப்பட்ட நபர் படுகாயமடைந்துள்ளார்.</p><h2>&nbsp;துப்பாக்கிச் சூடு&nbsp;</h2><p>
</p><p>
அதனையடுத்து அவர் தனமல்வில மருத்துவமனையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/400e09f0-a2ff-4b19-8fcb-faf69f666e86/26-6aa0617f3272b.webp' /></p><p>
</p><p>
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம்இதுவரை கண்டறியப்படவில்லை. போதைப் பொருள் வர்த்தகம் காரணமாக ஏற்பட்ட போட்டியே இதற்கான காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T19:27:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் 600 புதிய குளிர்சாதனப் பேருந்துகள் இறக்குமதி ; பயணிகள் போக்குவரத்தில் புதிய மறுமலர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/600-new-air-conditioned-buses-imported-sri-lanka-1788894993"></link>
            <id>https://jvpnews.com/article/600-new-air-conditioned-buses-imported-sri-lanka-1788894993</id>
            <summary type="text">இந்த ஆண்டின் இறுதிக்குள் இறக்குமதி செய்யப்படவுள்ள 600 புதிய குளிர்சாதனப் பேருந்துகள் மூலம் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) வலுப்படுத்தப்படும்.
இலங்கை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின் இறுதிக்குள் இறக்குமதி செய்யப்படவுள்ள 600 புதிய குளிர்சாதனப் பேருந்துகள் மூலம் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) வலுப்படுத்தப்படும்.</p><p>
</p><p></p><p>இலங்கை போக்குவரத்து சபையின் நிதியைப் பயன்படுத்தி மேலும் 200 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ca6adbf-28c7-4f82-ae41-b21ed035d243/26-6aa05f1368512.webp' /></p><p>

நேற்று (07) கடவத்தை மெட்ரோ டிப்போவின் உத்தியோகபூர்வ செயற்பாடுகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அமைச்சர், மெட்ரோ பேருந்து சேவையின் மொத்த எண்ணிக்கை இந்த மாதத்தில் 122 ஆக உயரும்.</p><p>

மேலும் 50 பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவையில் ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த ஆண்டின் இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் மெட்ரோ பேருந்துகளின் எண்ணிக்கை 172 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
</p><p>
மெட்ரோ பேருந்து சேவை மேல் மாகாணத்திற்கு அப்பால் காலி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும் விரிவாக்கப்படும் என்றும், மெட்ரோ நிறுவனத்துடன் இணைந்து தனியார் துறையினரும் இந்த சேவைகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T19:16:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் நீரிணையில் ஆளில்லா நீர்மூழ்கியை கைப்பற்றிய ஈரான்? வெளியான வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-media-reports-capture-of-unmanned-submarine-1788894679"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-media-reports-capture-of-unmanned-submarine-1788894679</id>
            <summary type="text">Iran media Reports Capture of Unmanned Submarine: நீர்மூழ்கி கப்பலை கைப்பற்றி இருப்பதாக ஈரானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.சிறைபிடிக்கப்பட்ட ஆளில்லா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran media Reports Capture of Unmanned Submarine: நீர்மூழ்கி கப்பலை கைப்பற்றி இருப்பதாக ஈரானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.</p><h2>சிறைபிடிக்கப்பட்ட ஆளில்லா நீர்மூழ்கி கப்பல்?</h2><p>ஈரானின் புரட்சிகர காவல் படையினரின் தகவலில், ஹார்முஸ் ஜலசந்தியில் வைத்து ஆளில்லா நீர்முழ்கி கப்பல் ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டு கைப்பற்றப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.</p><p> ஈரானிய இராணுவத்தின் கூற்றுப்படி இந்த ஆளில்லா நீர்மூழ்கி கப்பலானது ஆண்டுரில்(Anduril) நிறுவனத்தின் 'Dive LD' என்ற தன்னாட்சி நீர்மூழ்கி கப்பல் என தெரியவந்துள்ளது.</p><p>செவ்வாய்க்கிழமை ஈரானிய அரசு ஊடகமான IRNA மற்றும் பல செய்தி நிறுவனங்களும் ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் ஒன்றின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இருந்தன.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">⚡️BREAKING: The IRGC has released Footage of the Seizure of US Navy&#39;s Advanced Dive-LD Autonomous Underwater Vehicle<br><br>The United States was using it to Detect Mines in the Strait of Hormuz<br><br>The Dive-LD contains Classified Technology and Iran will likely Share it with Russia and… <a href="https://t.co/JznS0A2C7T">pic.twitter.com/JznS0A2C7T</a></p>&mdash; Iran Observer (@IranObserver0) <a href="https://x.com/IranObserver0/status/2097388572042998093?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> IRGC வெளியிட்ட காட்சிகளில், நீர்மூழ்கி கப்பல் எந்தவொரு சேதமும், பாதிப்புகளும் இல்லாமல் நல்ல நிலையில் இருப்பதை பார்க்க முடிந்தது.</p><p> Dive LD நீர்மூழ்கி கப்பல் கைப்பற்றப்பட்டது மட்டும் உறுதிப்படுத்தப்பட்டால் அதிநவீன ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் ஒன்றை நாடு ஒன்று கைப்பற்றும் முதல் சம்பவம் இதுவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfceedde-fcfe-4ff3-96f9-0784d2856645/26-6aa05dd8aa3c7.webp' /></p><p> &nbsp; ஈரானிய ராணுவம் மற்றும் ஊடகங்கள் இது தொடர்பான செய்தியை தீவிரமாக அறிவித்து வரும் நிலையில், இது தொடர்பாக அமெரிக்கா எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T19:11:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொனராகலையில் துப்பாக்கிச் சூடு ; தீவிர விசாரணையில் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shooting-in-monaragala-police-conduc-investigation-1788894065"></link>
            <id>https://jvpnews.com/article/shooting-in-monaragala-police-conduc-investigation-1788894065</id>
            <summary type="text">மொனராகலை தனமல்வில, கல்வல யாய பகுதியில் நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.மேலதிக விசாரணை

இந்தத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொனராகலை தனமல்வில, கல்வல யாய பகுதியில் நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65e14aca-f524-4ec0-9b5e-db11b226dfb4/26-6aa05b733baea.webp' /></p><p>துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
</p><p>
சம்பவம் தொடர்பில் தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T19:01:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நூடுல்ஸ் உணவில் உயிருடன் மிதந்த குட்டி எலி: ஆர்டர் செய்த பெண்ணிற்கு அதிர்ச்சி: வைரல் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/baby-rat-flots-in-beef-noodles-viral-video-1788891929"></link>
            <id>https://news.lankasri.com/article/baby-rat-flots-in-beef-noodles-viral-video-1788891929</id>
            <summary type="text">உணவகம் ஒன்றில் இருந்து வாங்கப்பட்ட நூடுல்ஸ் பார்சலில் குட்டி எலி ஒன்று உயிருடன் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவில் உயிருடன் கிடந்த எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உணவகம் ஒன்றில் இருந்து வாங்கப்பட்ட நூடுல்ஸ் பார்சலில் குட்டி எலி ஒன்று உயிருடன் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> உணவில் உயிருடன் கிடந்த எலி</h2><p>
ஹாங்காங்கின் குவாய் சுங் பகுதியில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் மதிய உணவிற்காக திங்கட்கிழமை அப்பகுதியில் இருந்த “வா ஜெர்” என்ற உணவகத்தில் இருந்து சாத்தே பீப் நூடுல்ஸ் உணவை ஆர்டர் செய்துள்ளார்.</p><p> &nbsp;சுமார் 10 சதவீத தள்ளுபடியுடன் ரூ. 530க்கு இந்த உணவை அவர் வாங்கியுள்ளார்.</p><p> ஆர்டர் செய்யப்பட்ட அந்த உணவை வாங்கிக் கொண்டு, சாப்பிடுவதற்காக அந்த உணவை திறந்த போது அதில் சிறிய எலி ஒன்று உயிருடன் நெளிவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aaa1cc26-404e-4bae-8892-5feb9de6cf9b/26-6aa0531ab9993.webp' /></p><p> இதையடுத்து அந்த பெண் உடனடியாக உணவு மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரத்துறையிடம் புகார் அளித்துள்ளார்.</p><h2> உணவகம் அளித்த விளக்கம்</h2><p>இந்த சம்பவம் மிகவும் பயங்கரமான மற்றும் மிகைப்படுத்தப்பட்ட சம்பவமாக தெரிகிறது. கடந்த ஓராண்டாக இந்த உணவகத்தை நடத்தி வருகிறோம். இதுவரை எலி அல்லது பூச்சிகள் தொடர்பான புகார் எதுவும் வந்தது இல்லை என்று உணவகத்தின் உரிமையாளர் மைக் தெரிவித்துள்ளார்.</p><p> இது தொழிற்பேட்டை என்பதால் எப்போதாவது எலிகள் இங்கு நடமாடுவது உண்டு. அதனால் நாங்கள் மாதந்தோறும் உணவகத்தில் ஆழமான துப்புரவு மற்றும் கிருமிநாசினி பணிகளை செய்து வருவதாக விளக்கமளித்துள்ளார்.</p><p> மேலும் இதனை யாரும் குறும்பாக செய்து இருக்கவும் வாய்ப்பில்லை, இனி வரும் காலங்களில் பூச்சு கட்டுப்பாடு நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Customer finds NEWBORN MOUSE in noodle dish in Hong Kong <a href="https://t.co/jGMxCKcrbB">pic.twitter.com/jGMxCKcrbB</a></p>&mdash; RTVisual (@RT_Visual_on_X) <a href="https://x.com/RT_Visual_on_X/status/2097310037697876293?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2> இணையத்தில் வைரலான விவகாரம்</h2><p>இந்த சம்பவம் தொடர்பாக இணையத்தில் வெளியான 18 வினாடிகள் கொண்ட வீடியோ வைரலாகி உள்ளது.</p><p> மசாலா சாஸுக்குள் குட்டி எலி ஒன்று கை, கால்களை அசைத்து கொண்டு இருப்பது நெட்டிசன்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T18:45:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். சுதுமலை வெள்ளப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி ; அதிரடி நடவடிக்கைக்கு முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/permanent-solution-flooding-problem-sudumalai-jaff-1788893010"></link>
            <id>https://jvpnews.com/article/permanent-solution-flooding-problem-sudumalai-jaff-1788893010</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் சுதுமலைப் பகுதியில் தொடர்ச்சியாக நிலவி வரும் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும் வகையில், வாய்க்கால்களைப் புனரமைத்தல் உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் சுதுமலைப் பகுதியில் தொடர்ச்சியாக நிலவி வரும் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும் வகையில், வாய்க்கால்களைப் புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>இதற்கமைய, வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களமும் வலிகாமம் தென் - மேற்கு பிரதேச சபையும் இணைந்து குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளன.
</p><p>
மேலும், மழைக்காலங்களில் அதிகளவில் தேங்கும் நீரைச் சேமித்து எதிர்காலத்தில் பயன்படுத்தும் வகையில், சுதுமலைப் பகுதியில் காணப்படும் பொருத்தமான குளங்களை உடனடியாகத் தூர்வாருவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28ce9ad5-b51a-48c0-aa54-c206d311f259/26-6aa05753d6f91.webp' /></p><p>சுதுமலைப் பகுதியில் நிலவும் வெள்ளப்பெருக்கு மற்றும் வாய்க்கால்களில் காணப்படும் தடைகள் தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p>

இதன்போது, வெள்ளநீர் இயற்கையாக வழிந்தோடி செல்லும் வகையில் நீர்வழிகளைச் சீரமைப்பதுடன், மழைக்காலங்களில் தேங்கும் அதிகளவான நீரை முறையாகத் தேக்கி வைக்கும் திறனை மேம்படுத்துவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.</p><p>

இதற்காக, அப்பகுதியில் உள்ள பொருத்தமான குளங்களை அடையாளம் கண்டு அவற்றைத் தூர்வாரி, நீர்த்தேக்க கொள்ளளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.</p><p>

சுதுமலைப் பகுதியில் வெள்ளப் பாதிப்பைத் தடுக்கும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ள பணிகள் எவ்வித தாமதமுமின்றி ஆரம்பிக்கப்படுவதுடன், நிலைமைகளுக்கு ஏற்ப மேலதிக நடவடிக்கைகளும் அடுத்த கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T18:43:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சர்களை காப்பாற்ற துடிக்கும் ரணில்! நல்லாட்சி அரசாங்கத்தில் ராஜபக்சர்களுடன் நடந்துள்ள டீல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-ranil-support-ranil-mahinda-deal-1788892577"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-ranil-support-ranil-mahinda-deal-1788892577</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைதினை தொடர்ந்து நாட்டில் அரசியல் களம் சூடிபிடித்துள்ளது.

பல முக்கிய தகவல்களும் கடந்த காலங்களில் இடம்பெற்ற ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைதினை தொடர்ந்து நாட்டில் அரசியல் களம் சூடிபிடித்துள்ளது.

பல முக்கிய தகவல்களும் கடந்த காலங்களில் இடம்பெற்ற திரைமறைவு அரசியல் நகரவுகளும் அம்பலமாகின்றன.
</p><p>
அந்தவகையில், ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவு வழங்குவதாகவும், அவர்களைப் பாதுகாப்பதாகவும் தற்போது கருத்துக்கள் வெளியாகின்றன.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாவதற்கு ராஜபக்ச குடும்பத்தின் ஆதரவு ஒரு காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.</p><p> 

இந்தநிலையில்,அனுராதபுரத்தில் நடைபெறவிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் மக்கள் கூட்டத்திற்கு, ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரப்பூர்வமாக வாழ்த்துத் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளது. </p><p>

நாமல் ராஜபக்சவின் கைது அரசியல் பழிவாங்கல் என்று கூறி, ஐக்கிய தேசியக் கட்சி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
</p><p>
இதேவேளை,
ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்புடைய 22 மில்லியன் அமெரிக்க டொலர் ஹொங்காங் வங்கி கணக்கு விவகாரத்தை, ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்கஅம்பலப்டுத்தியுள்ளார்</p><p>.

 நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், 2015ஆம் ஆண்டில் இந்த ஹாங்காங் வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

 இந்த விவகாரம் தொடர்பாக ஆரம்பகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், அப்போதைய அரசாங்கத்தில் இருந்த சிலர் தலையிட்டு அந்த நடவடிக்கைகளைத் தடுத்ததாக ஆசு மாரசிங்க பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>

 இந்தத் தகவல்கள் மூலம், முன்னாள் ஆட்சியாளர்களுக்கும் அப்போதைய நல்லாட்சி அரசாங்கத்திற்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் 'டீலிங்' (Deal) குறித்த விடயங்களை ஆசு மாரசிங்க வெளிப்படுத்தியுள்ளார் .</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக எடுத்து வருகின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/twa6VY8TL_U" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T18:41:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம் ; செப்டெம்பர் 19 முதல் கடும் அமுல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/seat-belts-are-mandatory-on-expressways-1788891400"></link>
            <id>https://jvpnews.com/article/seat-belts-are-mandatory-on-expressways-1788891400</id>
            <summary type="text">அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் ஆசனப்பட்டி (Seat belt) அணிவது தொடர்பான கட்டாய ஒழுங்குமுறை எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் மிகக் கடுமையாக அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் ஆசனப்பட்டி (Seat belt) அணிவது தொடர்பான கட்டாய ஒழுங்குமுறை எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் மிகக் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>


அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் முன் இருக்கை பயணிகள் மட்டுமன்றி, பின் இருக்கைப் பயணிகளும் கட்டாயமாக ஆசனப்பட்டி அணிய வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e9ccd4a-e10e-438c-8cbe-2a7805d7c781/26-6aa0510aa8925.webp' /></p><p>வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களில் ஆசனப்பட்டிகளைப் பொருத்துவதற்கோ அல்லது பழுதுபார்ப்பதற்கோ பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்டு, இந்த ஒழுங்குமுறை அமுல்படுத்தப்படுவது ஒத்திவைக்கப்பட்டு வந்ததாக அவர் விளக்கமளித்தார்.
</p><p>
இருப்பினும், செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் இந்த விதிமுறை கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அந்தத் திகதிக்குப் பிறகு எந்தவொரு சாக்குப்போக்குகளுக்கு இடமோ அல்லது மேலதிக கால அவகாசமோ வழங்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T18:16:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சதொசவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகம் ; சானக மதுகொட குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/prices-of-essential-commodities-high-at-sathosa-1788890561"></link>
            <id>https://jvpnews.com/article/prices-of-essential-commodities-high-at-sathosa-1788890561</id>
            <summary type="text">சதொச விற்பனை நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதுடன், வெளிச்சந்தையை விட சதொசவில் பொருட்களின் விலை அதிகமாகக் காணப்படுவதாக நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சதொச விற்பனை நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதுடன், வெளிச்சந்தையை விட சதொசவில் பொருட்களின் விலை அதிகமாகக் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சானக மதுகொட குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>
</p><p></p><p>நாடாளுமன்றத்தில் இன்று வாய்மூலக்கேள்வி நேரத்திலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.</p><p>

சதொசவில் பொருட்கள் வாங்குவதற்காகச் செல்லும் நுகர்வோர் ஏமாற்றத்துடன் திரும்புவதாகவும், ஒரே வாரத்திற்குள் சீனி, பருப்பு மற்றும் அரிசி ஆகியவற்றின் விலை குறிப்பிடத்தக்க அளவு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab770edd-f185-4664-a1bf-8200ef074096/26-6aa04dc37381e.webp' /></p><p>

தனியார் பல்பொருள் அங்காடிகளை விடவும் சதொசவில் பொருட்களின் விலை அதிகமாக இருப்பது அரசாங்கத்தின் நுகர்வோர் பாதுகாப்பு உறுதிமொழியைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
</p><p>
இதற்குப் பதிலளித்துப் பேசிய வர்த்தக அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன, கடனில் மூழ்கியிருந்த சதொச நிறுவனத்தை தற்போதைய அரசாங்கம் மீட்டு எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
</p><p>
கேள்விப்பத்திர முறையிலான கொள்முதல் தாமதங்களே பொருள் தட்டுப்பாடிற்குக் காரணம் எனக் குறிப்பிட்ட அவர், இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக அனைத்து மாவட்டங்களிலும் மொத்த விநியோகக் களஞ்சியங்கள் அமைக்கப்பட்டு, வெளிச்சந்தையை விடக் குறைந்த விலையில் பொருட்கள் விநியோகிக்கப்படும் என உறுதியளித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T18:02:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொனராகலையில் பதிவாகியுள்ள மற்றுமொரு துப்பாக்கிச் சூடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/another-shooting-today-1788889239"></link>
            <id>https://ibctamil.com/article/another-shooting-today-1788889239</id>
            <summary type="text">மொனராகலை - தனமல்வில பிரதேசத்தில் நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
தனமல்வில - கல்வல யாய பகுதியில் இந்தத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொனராகலை - தனமல்வில பிரதேசத்தில் நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p>
தனமல்வில - கல்வல யாய பகுதியில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b55f7b55-c12c-4c48-bcd5-75b785a40527/26-6aa04a39d5121.webp' /></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T17:46:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கியூபெக்கை யாரும் மிரட்ட முடியாது – மாகாண முதல்வர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/frechette-responds-to-trumps-bombardier-threats-1788888512"></link>
            <id>https://canadamirror.com/article/frechette-responds-to-trumps-bombardier-threats-1788888512</id>
            <summary type="text">மொன்றியலைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் பிரபல &#039;பாம்பர்டியர்&#039; (Bombardier) விமான தயாரிப்பு நிறுவனத்தின் விற்பனையை அமெரிக்காவில் தடை செய்யப்போவதாக அமெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொன்றியலைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் பிரபல 'பாம்பர்டியர்' (Bombardier) விமான தயாரிப்பு நிறுவனத்தின் விற்பனையை அமெரிக்காவில் தடை செய்யப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையில், அதற்கு கியூபெக் மாகாண அரசும் பாம்பர்டியர் நிறுவனமும் வலுவான பதிலடியைக் கொடுத்துள்ளன.
</p><p>பாம்பர்டியர் தயாரிக்கும் விமானங்கள் போதுமான தரம் கொண்டவை அல்ல என்று விமர்சித்த டொனால்ட் டிரம்ப், கனடா தனது விமானங்களை அமெரிக்காவில் தொடர்ந்து விற்க வேண்டுமானால், அவற்றை அமெரிக்காவிலேயே தயாரிக்க வேண்டும் எனச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
</p><p>டிரம்பின் இந்தக் கருத்துக்குப் கியூபெக் மாகாண முதல்வர் கிறிஸ்டின் ஃபிரெஷெட் பதிலடி கொடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60e2ac97-b01c-454c-bf74-d7ae8910c861/26-6aa045c2643e9.webp' /></p><p>
வம்புச்சண்டைக்கு நாங்கள் வம்புச்சண்டையால் பதிலளிக்க மாட்டோம். பாம்பர்டியர் கியூபெக்கின் பெருமை மற்றும் நமது பொருளாதாரத்தின் அடையாளம். ஆயிரக்கணக்கான கியூபெக் தொழிலாளர்கள் இதில் பணியாற்றுகின்றனர் என தெரிவித்துள்ளார்.
</p><p>சந்தையைப் பெறுவதற்காக எங்கள் நிறுவனங்கள் எங்கு உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை வேறு எவரும் தீர்மானிப்பதை கியூபெக் அனுமதிக்காது.</p><p> எங்கள் நிறுவனங்களையும் தொழிலாளர்களையும் உறுதியுடன் பாதுகாப்போம் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T17:43:21+00:00</updated>
        </entry>
    </feed>
