<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-13T12:21:05+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாபன விதிக்கோவை திருத்தத்தில் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை - வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/concession-granted-to-government-officials-1789300939"></link>
            <id>https://tamilwin.com/article/concession-granted-to-government-officials-1789300939</id>
            <summary type="text">பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால்
வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின்படி, தாபன விதிக்கோவையை விட ஊழல் எதிர்ப்புச் சட்டமே முதன்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால்
வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின்படி, தாபன விதிக்கோவையை விட ஊழல் எதிர்ப்புச் சட்டமே முதன்மை பெறும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ்
சிறப்புரிமை அல்லது விலக்களிப்பு அளிக்கப்பட்ட அரச அதிகாரிகளைப்
பொறுத்தவரையில் இது சாதகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p> 

நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் ஒரு அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ள எந்தவொரு
உரிமை, சிறப்புரிமை அல்லது விலக்களிப்பை மறுக்கும் அல்லது கட்டுப்படுத்தும்
வகையில் தாபன விதிக்கோவையின் எந்தவொரு சரத்தும் வியாக்கியானம்
செய்யப்படக்கூடாது என அமைச்சுச் செயலாளர் எஸ். ஆலோக பண்டாரவினால்
வெளியிடப்பட்ட தாபன விதிக்கோவை திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0610458-20e4-4bf4-9482-f1ee1bee83bc/26-6aa690cd7e476.webp' /></p><p>

இதற்கமைய, 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ்,
அரச ஊழியர்களுக்கு முழுமையான விலக்களிப்பு வழங்கப்படவில்லை.
</p><p>
அத்துடன் அவர்கள் கடுமையான பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை
நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-13T12:08:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியா படகு விபத்தில் அதிகரித்த பலி எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indonesia-boat-accident-death-toll-rises-1789301161"></link>
            <id>https://canadamirror.com/article/indonesia-boat-accident-death-toll-rises-1789301161</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் ஜாவா கடற்பரப்பில் மோசமான வானிலை காரணமாக பயணிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் ஜாவா கடற்பரப்பில் மோசமான வானிலை காரணமாக பயணிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>



தற்போதைய நிலவரப்படி, இந்த கப்பல் விபத்தில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 130 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adae3b52-8d36-4631-ad33-8e400fbfab04/26-6aa691aae8c71.webp' /></p><p>“Virgo Transport 8” என்ற குறித்த கப்பல் 243 பேருடன் கிழக்கு ஜாவாவில் உள்ள சுரபாயாவிலிருந்து தெற்கு கலிமந்தனில் உள்ள பஞ்சர்மசினை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது.</p><p>



கடுமையான வானிலை மற்றும் கடல் சீற்றத்துக்கு மத்தியில் கப்பல் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இதுவரை 113 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 107 பேர் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>



உயிரிழந்த 6 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து காணாமல் போன 130 பேரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
</p><p>


கப்பல் மூழ்கியதா அல்லது கவிழ்ந்ததா என்பது தொடர்பில் ஆரம்ப தகவல்களில் குழப்பம் காணப்பட்ட நிலையில், கப்பல் கவிழ்ந்ததாகவே இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். </p><p>



விபத்துக்கான துல்லியமான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T12:06:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி வேண்டும் : வெளியானது பிரகடனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-human-burial-needs-international-justice-1789300528"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-human-burial-needs-international-justice-1789300528</id>
            <summary type="text">செம்மணி சித்துப்பாத்தியில் சுமார் 600 மனித எலும்புக்கூடுகள் தமிழ்
இனப்படுகொலைக்கான சான்றுப் பொருட்களாக வெளிவந்துள்ள நிலையில் சர்வதேச நீதிகோரி
 நல்லூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி சித்துப்பாத்தியில் சுமார் 600 மனித எலும்புக்கூடுகள் தமிழ்
இனப்படுகொலைக்கான சான்றுப் பொருட்களாக வெளிவந்துள்ள நிலையில் சர்வதேச நீதிகோரி
 நல்லூர் கிட்டு பூங்காவில் இடம்பெற்ற பேரணியின் முடிவில் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>அந்த பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p><p>செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகளுக்கான சர்வதேச நீதி விசாரணை பொறிமுறை
வேண்டும்: செம்மணி சித்துப்பாத்தியில் சுமார் 600 மனித எலும்புக்கூடுகள் தமிழ்
இனப்படுகொலைக்கான சாட்சியங்களாக வெளிவந்துள்ளன.
</p><p>
</p><h2>ஐ.நா மேற்பார்வையின் கீழ் விசாரணை</h2><p>இந்த சான்றுப் பொருட்களானவை மேற்படி குற்றத்தை இழைத்த தரப்பான சிறீலங்கா
அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதானது, அவற்றை சேதப்படுத்தி குற்றங்களை
நிரூபிக்க முடியாத சூழலை ஏற்படுத்தக்கூடிய கூடிய ஆபத்துள்ளது.</p><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a29f1c77-7f85-423e-b1c2-557955e91698/26-6aa6915661825.webp' /></p><p>&nbsp; எனவே குற்றமிழைத்த தரப்பாக உள்ள சிறீலங்கா அரசின் தலையீடுகள் எதுவும் அற்ற
வகையில் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி, கொக்குத்தொடுவாய் மனிதப்
புதைகுழி, மன்னார் மனிதப் புதைகுழி உள்ளிட்ட அனைத்து புதைகுழிகளதும்
அகழ்வாராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் அதற்கான
சர்வதேச தடய அறிவியல் நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து நிபுணர்களையும் நியமித்தல்
அகழ்ந்தெடுக்கப்படும் தடயங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட அனைத்துச் செயற்பாடுகளும்
ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்டு
விசாரணைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.</p><p>&nbsp;தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு உள்ளக விசாரணைப் பொறிமுறையை முற்றாக
நிராகரிப்பதுடன், சுயாதீனமான, பாரபட்சமற்ற சர்வதேச குற்றவியல் விசாரணை
உடனடியாக ஆரம்பிக்கப்படல் வேண்டும்.</p><p>

தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசினால் இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்கள்
தொடர்பாக சில அமைப்புக்களால் சேகரிக்கப்பட்ட ஆவணங்களும், ஆதாரங்களும், சர்வதேச
குற்றவியல் விசாரணை ஒன்றுக்காக பாரப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படல்
வேண்டும்.&nbsp;</p><p>&nbsp;வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக நீதிகோரும் உள்ளகப் பொறிமுறைகளை நாம்
முற்றாக நிராகரிப்பதுடன், அதற்கான சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்று உடனடியாக
உருவாக்கப்பட வேண்டும்.</p><p></p><h2>

அரசியல் கைதிகளின் உடனடியான விடுதலை</h2><p> பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ்
நீண்டகாலமாக தண்டனை அனுபவித்துவரும் அரசியல் கைதிகள் அனைவரும் உடன்
விடுவிக்கப்பட வேண்டும் என்பதுடன் அமுலில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டம்
உடனடியாக நீக்கப்படவும் வேண்டும்.

அத்துடன் சர்வதேச நியமங்களுக்கு அமைவானது என்னும் பெயரில் வேறு எந்தவொரு புதிய
சட்டத்தையும் உருவாக்கக்கூடாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23287a42-74b2-4b31-82cf-d763d1b73fcd/26-6aa6915716cc4.webp' /></p><p>
</p><p>வடக்கு–கிழக்கு தமிழர் தாயகத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும்
வகையிலான இராணுவமயமாக்கல் அகற்றப்படல் வேண்டும்.

அம்பாறை தொடக்கம் மன்னார் வரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழர்களின்
தொன்மையான வரலாறு. கலை. பண்பாடு மற்றும் மரபுரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.</p><p></p><h2>கட்டமைப்புசார் இனவழிப்பு&nbsp;</h2><p>
தொல்லியல் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, பௌத்த கலாசார
திணைக்களம், வனவள, வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்களின் ஊடாக
மேற்கொள்ளப்பட்டிருந்த மற்றும் மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்புசார்
இனவழிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் உடனடியாக அகற்றப்படவும்
நிறுத்தப்படவும் வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aed94ebf-8f09-4f8b-bcf2-b710dc47cf32/26-6aa69157bfaa9.webp' /></p><p>
</p><p>
தமிழினப் படுகொலை மீள நிகழாமல் இருப்பதனை உறுதிப்படுத்தவும், தொடரும்
கட்டமைப்புசார் இனவழிப்பை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்தவும், நிலையான
இனநல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் - சிறீலங்காவின் ஒற்றையாட்சி அரசியல் யாப்பு
முற்றாக நீக்கப்பட்டு, தமிழ்த் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை
அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான தீர்வு எட்டப்படுவதனை சர்வதேச சமூகம்
உறுதிப்படுத்த வேண்டும் என்குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T12:04:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடு வீதியில் இளைஞனுக்கு அரங்கேறிய சம்பவம் ; பறிபோன உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incident-involving-youth-unfolds-in-middle-of-road-1789299760"></link>
            <id>https://jvpnews.com/article/incident-involving-youth-unfolds-in-middle-of-road-1789299760</id>
            <summary type="text">அநுராதபுரம் சாலியபுர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.



இன்று (13) காலை மோட்டார் சைக்கிள் ஒன்றும் பேருந்து ஒன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அநுராதபுரம் சாலியபுர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">


இன்று (13) காலை மோட்டார் சைக்கிள் ஒன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7815351d-968e-4840-9071-c534861e4d06/26-6aa68c318542a.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">



பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது மோட்டார் சைக்கிள் பேருந்துடன் மோதியுள்ளதாகவும், விபத்து இடம்பெற்ற வேளையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞர் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


விபத்தில் உயிரிழந்தவர் அநுராதபுரம், சாலியபுர பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-13T12:00:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொன்சேகா மீதான தாக்குதல் முயற்சி! சந்தேகநபரின் பிணைக்கு எதிராக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/general-sarath-fonseka-attack-case-1789299638"></link>
            <id>https://tamilwin.com/article/general-sarath-fonseka-attack-case-1789299638</id>
            <summary type="text">முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதல்
முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக
விளக்கமறியல...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதல்
முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவருக்கு மேன்முறையீட்டு
நீதிமன்றம் வழங்கிய பிணையை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேன் முறையீடு
செய்யச் சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது.</p><p>தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் எனக் கூறப்படும் தம்பையா பிரகாஷன்
(தனுஷ்) என்பவரே பிணை பெற்றவராவார்.</p><h2>வழக்குத் தாக்கல்&nbsp;</h2><p>

கடந்த 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இவர் மீது, முன்னாள் இராணுவத் தளபதி
மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் முயற்சி தொடர்பாக 2012 செப்டம்பர் 20
அன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் 230 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத்
தாக்கல் செய்யப்பட்டது.
</p><p>
வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இவர் கடந்த 14
ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20ce95c9-c2d5-4ebe-aff2-6621de9d8586/26-6aa68e208da92.webp' /></p><h2>பிணை வழங்கிய நீதிமன்றம்</h2><p>

இந்த நிலையில், நீண்டகால விளக்கமறியல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை
பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், 200,000 ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் 4
சரீரப் பிணைகளின் கீழ் இவருக்கு அண்மையில் பிணை வழங்கியது.</p><p>

எனினும், இந்த பிணை உத்தரவுக்கு எதிராகச் சட்டமா அதிபர் திணைக்களம் மேன்
முறையீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
</p><p>
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை தற்போது இறுதி கட்டத்தை
எட்டியுள்ளதாகவும், இந்த நேரத்தில் சந்தேகநபர் பிணையில் அனுமதிக்கப்பட்டால்,
அது நிலுவையில் உள்ள வழக்கு விசாரணையைப் பாதிக்கக்கூடும் என்றும் சட்டமா
அதிபர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T11:52:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்க நிற புடவையில் அசத்தல் போஸ் கொடுத்த ஆல்யா மானசா... குவியும் லைக்குகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/serial-actress-alya-manasa-gold-saree-look-viral-1789299236"></link>
            <id>https://manithan.com/article/serial-actress-alya-manasa-gold-saree-look-viral-1789299236</id>
            <summary type="text">சீரியல் நடிகை ஆல்யா மானசா தங்க நிற புடவையில் ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கவரும் வகையில் செம கியூட்&amp;nbsp; போஸ் கொடுத்து தற்போது தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீரியல் நடிகை ஆல்யா மானசா தங்க நிற புடவையில் ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கவரும் வகையில் செம கியூட்&nbsp; போஸ் கொடுத்து தற்போது தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.</p><h2>ஆல்யா மானசா</h2><p>தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் மனதை வென்ற முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆல்யா மானசா. நடன நிகழ்ச்சியான மானாட மயிலாட மூலம் மீடியா உலகில் அறிமுகமான அவர், தனது திறமையால் ரசிகர்களின் கவனத்தை விரைவில் ஈர்த்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63300ebc-0955-4f54-92ce-7fea1e6922d5/26-6aa68df259ea9.webp' /></p><p>அதன்பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நாயகியாக நடித்ததன் மூலம் பெரும் பிரபலமானார். அந்த தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த சஞ்சீவை காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68a57db7-8f7e-4ecb-9a43-ff867a700c82/26-6aa68df311d7e.webp' /></p><p>ரசிகர்களின் விருப்ப ஜோடியாக திகழும் இந்த தம்பதியினருக்கு தற்போது இரண்டு அழகான குழந்தைகள் உள்ளனர்.

தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பாரிஜாதம் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் ஆல்யா மானசாவின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19098b98-2f79-4cdd-af8b-2e088f233e62/26-6aa68df3bc16e.webp' /></p><p>சீரியல்களைத் தாண்டி விளம்பரங்கள், தனியார் நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு மேடைகளிலும் ஆல்யா மானசா தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15841d12-7c19-4259-b2f4-4955366de0fa/26-6aa68df471613.webp' /></p><p>இந்த நிலையில், ஆல்யா மானசா தங்க நிற புடவையில் அழகிய ஆபரணங்களுடன் அசத்தல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகியுள்ளதுடன் லைக்குகளையும் அள்ளி வருகின்றது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DdL9aQvE1PB/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DdL9aQvE1PB/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DdL9aQvE1PB/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by alya_manasa (@alya_manasa)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T11:51:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[13 நாட்களில் இலங்கை முழுவதும் குவிந்த சுற்றுலாப் பயணிகள் - அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tourist-arrivals-have-crossed-1-5-million-1789299650"></link>
            <id>https://tamilwin.com/article/tourist-arrivals-have-crossed-1-5-million-1789299650</id>
            <summary type="text">



இலங்கைக்கு இந்த வருடம் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.5 மில்லியனைத் தாண்டியுள்ளது என சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>



இலங்கைக்கு இந்த வருடம் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.5 மில்லியனைத் தாண்டியுள்ளது என சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. </p><p>

இதற்கமைய, ஜனவரி 1 முதல் செப்டம்பர் 6 வரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,567,007 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>

1.5 மில்லியன் பயணிகள் வருகை</h2><p>
இந்த ஆண்டு இதுவரை, இந்தியாவிலிருந்து அதிகபட்சமாக 395,377 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். 

மேலும், ஐக்கிய ராச்சியத்திலிருந்து 152,625 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 102,473 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 91,763 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e51f06f-a8a4-4b42-ab43-5abdaddb0eb5/26-6aa68d78b5e75.webp' /></p><p> </p><p>

இதற்கிடையில், செப்டம்பர் 1 முதல் 6 வரை 31,885 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T11:48:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தை ஜனாதிபதியானால் மகனும் ஜனாதிபதியாக வேண்டுமா.. இனி வாய்ப்பே இல்லை! அநுரவின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-anura-s-announcement-at-the-public-rally-1789299114"></link>
            <id>https://tamilwin.com/article/president-anura-s-announcement-at-the-public-rally-1789299114</id>
            <summary type="text">தந்தை ஜனாதிபதியாக இருந்தால் மகனும் ஜனாதிபதியாக வேண்டும் என்ற முறைமை 2024 செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்துவிட்டது என்று ஜனாதிபதி அநு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தந்தை ஜனாதிபதியாக இருந்தால் மகனும் ஜனாதிபதியாக வேண்டும் என்ற முறைமை 2024 செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்துவிட்டது என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். </p><p>

கஹட்டகஸ்திகிலிய பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற மக்கள் பேரணில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>பழைய அரசியல் முடிந்துவிட்டது&nbsp;</h2><p> </p><p>

மேலும், ஊழல்வாதிகளுக்கும், குற்றவாளிகளுக்கும் தண்டனை வழங்குவதற்கு ஏற்ற சமூகத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6593bf0c-4e47-4ab6-9e66-bd537bf7e8ca/26-6aa68b0bbc643.webp' /></p><p>

அத்துடன், தந்தை ஜனாதிபதியாகவிருந்தால் மகனும் ஜனாதிபதியாக வேண்டும், தந்தை பிரதமரானால் மகனும் பிரதமராக வேண்டும், தந்தை அமைச்சரானால் மகனும் அமைச்சராக வேண்டும் என்ற பழைய அரசியல் இரண்டு வருடங்களுக்கு முன்னரே முடிவுக்கு வந்துவிட்டது எனவும் ஜனாதிபதி அநுர குமார தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், தற்போது கஹட்டகஸ்திகிலிய பகுதியில் இடம்பெற்ற மக்கள் கூட்டத்தை அடுத்து, நொச்சியாகம பகுதியில் இடம்பெறவுள்ள மக்கள் பேரணியில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p><iframe width="1337" height="752" src="https://www.youtube.com/embed/eLsJ1Ydheq0" title="🔴 LIVE:  அனுராதபுரத்தில் ஜனாதிபதி அநுர பிரம்மாண்ட பொதுக்கூட்டம் |  President Anura Live Speech" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T11:48:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை ஜனனி அசோக் குமாரின் மஞ்சள் நிற சேலை புகைப்படங்கள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/janani-ashok-kumar-recent-yellow-saree-photos-1789299482"></link>
            <id>https://viduppu.com/article/janani-ashok-kumar-recent-yellow-saree-photos-1789299482</id>
            <summary type="text">சின்னத்திரையில் பிரபலமான நடிகை ஜனனி அசோக் குமார், மௌனராகம், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தனக்கென்று ஒரு தனி இடத்தை ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சின்னத்திரையில் பிரபலமான நடிகை ஜனனி அசோக் குமார், மௌனராகம், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தார்.</p><p></p><p>
</p><p>
மேலும், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இதயம் எனும் சீரியலில் கதாநாயகியாக நடித்து பின் அதிலிருந்து விலகினார். வேற மாறி ஆபீஸ் எனும் வெப் தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.</p><p>
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி, தற்போது இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன் பக்கம் சென்றுள்ளார். தற்போது மஞ்சள் நிற சேலையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-13T11:38:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு புறநகர் பகுதியில் கலாவதியான அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல் - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-fines-person-for-selling-expired-cosmetics-1789296772"></link>
            <id>https://tamilwin.com/article/court-fines-person-for-selling-expired-cosmetics-1789296772</id>
            <summary type="text">கொழும்பு - பொரளை பகுதியில் அமைந்துள்ள பிரபல நிறுவனமொன்று, விலைக் குறிப்புகள் இன்றி காலாவதியான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாசனைத் திரவியங்களை விற்பனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - பொரளை பகுதியில் அமைந்துள்ள பிரபல நிறுவனமொன்று, விலைக் குறிப்புகள் இன்றி காலாவதியான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாசனைத் திரவியங்களை விற்பனை செய்த குற்றத்திற்கான நீதிமன்ற தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.</p><p> 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p><p> 

பொரளை பகுதியில் இயங்கி வரும் பிரபல அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையொன்றில் கலாவதியான பொருட்கள் மற்றும் வாசணை திரவியங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுகளின் பேரில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நுகர்வோர் விவகார அதிகாரசபையால் தாக்கல் செய்யப்பட்டன.
</p><h2>
நீதிமன்ற உத்தரவு</h2><p>
இதில் ஒரு வழக்கின் தொடர்பில், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் (எண். 5) முன்பாக 3 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ஒகஸ்ட் 18 ஆம் தேதி, நுகர்வோர் விவகார அதிகாரசபை இது தொடர்பாக நடத்திய சோதனையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் அதிகபட்ச சில்லறை விலையைக் குறிப்பிடாமல் வாசனைத் திரவியங்களை விற்பனை செய்ததும், காலாவதியான அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்ததும், மற்றும் தேவையான தகவல்கள் இன்றி காலாவதியான அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/036ae438-5eb8-41c1-8111-5eef69782aeb/26-6aa68b0be1b5b.webp' /></p><p> </p><p>

இதனை அடிப்படையாகக் கொண்டு, நுகர்வோர் விவகார அதிகாரசபை இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
</p><p>

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்ட நிலையில், நீதவான் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ரூ. 300,000 அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
</p><p>
இதுபோன்ற மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் சற்று அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p><p> 
</p>]]></content>
            <updated>2026-09-13T11:37:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வெளியுறவுச் சேவையின் முதல் பெண் அதிகாரி காலமானார்.]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-s-first-female-envoy-dies-1789299059"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-s-first-female-envoy-dies-1789299059</id>
            <summary type="text">இலங்கை வெளியுறவுச் சேவையின் (முன்னாள் சிலோன் வெளிநாட்டுச் சேவை) முதல் பெண் அதிகாரியான ஐராங்கனி மானெல் அபேசேகர தனது 93ஆவது வயதில் காலமானார். இவரது இறுத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கை வெளியுறவுச் சேவையின் (முன்னாள் சிலோன் வெளிநாட்டுச் சேவை) முதல் பெண் அதிகாரியான ஐராங்கனி மானெல் அபேசேகர தனது 93ஆவது வயதில் காலமானார்.</p><p style="text-align: justify; "> இவரது இறுதிச் சடங்கு நேற்று (12) பொரளை பொது மயானத்தில் நடைபெற்றது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/335edbb1-23a2-4640-aac1-3639db2739dc/26-6aa68975345e8.webp' /></p><h2 style="text-align: justify; ">முதல் பெண்</h2><p style="text-align: justify; ">

1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி சிரேஷ்ட சிவில் அதிகாரியும் செனட் சபை உறுப்பினருமான ஈ.டபிள்யூ. கன்னங்கரவின் மகளாகப் பிறந்த மானெல் அபேசேகர, 1958ஆம் ஆண்டு வெளியுறவுச் சேவையில் இணைந்தார்.
</p><p style="text-align: justify; ">
அரச சேவை ஆண்களின் ஆதிக்கத்தில் இருந்த அந்தக் காலத்தில், வெளியுறவுச் சேவையில் நுழைந்த முதல் பெண் என்ற பெருமையை இவர் பெற்றார்.
</p><p style="text-align: justify; ">
ஜேர்மனி மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கான இலங்கையின் தூதுவராகப் பணியாற்றிய இவர், நாட்டின் சிறந்த தூதுவர்களில் ஒருவராக அடையாளப்படுத்தப்பட்டார்.

1976ஆம் ஆண்டு 92 நாட்டுத் தலைவர்கள் பங்கேற்ற அணிசேரா உச்சிமாநாட்டின் தலைமை நெறிமுறை அதிகாரியாகவும் (Chief of Protocol) இவர் பணியாற்றினார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

1970ஆம் ஆண்டு தாய்லாந்தின் பேங்கொக் நகருக்குப் பொறுப்பு அதிகாரியாக (chargé d’affaires) இவர் சென்றபோது, வானூர்தி நிலையத்துக்கு வந்த ஓட்டுநர் ஒருவர் பெண் தூதுவரை எதிர்கொள்வதில் பழக்கமில்லாமல் "வெல்கம், மெடம்-சேர்" என்று வரவேற்ற சம்பவத்தைக் குறிப்பிடும் வகையில், 2010ஆம் ஆண்டு இவர் வெளியிட்ட சுயசரிதைக்கு "மாஸ்டர்-சேர்" (Master-Sir) தலைப்பிட்டிருந்தார்.</p><p style="text-align: justify; ">

மேலும், தாய்லாந்தில் தூதுவராகப் பணியாற்றிய காலத்தில், சேபால ஏகநாயக்க என்பவரால் 169 பயணிகளுடன் கடத்தப்பட்ட இத்தாலிய விமானப் பணயக்கைதிகள் விவகாரத்தில், 40 மணி நேர பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நடத்தி அசம்பாவிதங்கள் ஏதுமின்றி நிலைமையைச் சுமுகமாக முடிவுக்குக் கொண்டுவந்ததில் இவரது இராஜதந்திர பேச்சுவார்த்தைத் திறன் முக்கிய பங்கு வகித்தது.
</p><p style="text-align: justify; ">
இலங்கை வெளியுறவுச் சேவையில் பல பெண்கள் உயர் பதவிகளை வகிப்பதற்கு மானெல் அபேசேகரவின் ஆரம்பகாலப் பணி ஒரு முக்கிய முன்னோடியாக அமைந்தது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-13T11:31:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>T.thibaharan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட-கிழக்கு சிங்களமயமாக்கல் என்பது இலங்கைத்தீவு சீனமயமாதலே]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sinhalization-of-the-north-east-sl-1789296710"></link>
            <id>https://tamilwin.com/article/sinhalization-of-the-north-east-sl-1789296710</id>
            <summary type="text">21ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே சீனாவும் இலங்கைதீவும் நெருக்கமாக கைகொடுக்க தொடங்கிவிட்டன. இதற்கு பின்னே இந்துசமுத்திர கடலாதிக்கமே முதன்மை பெறுகிறது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>21ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே சீனாவும் இலங்கைதீவும் நெருக்கமாக கைகொடுக்க தொடங்கிவிட்டன. இதற்கு பின்னே இந்துசமுத்திர கடலாதிக்கமே முதன்மை பெறுகிறது.</p><p> சீனா இந்துசமுத்திரத்தை கட்டுப்படுத்துவதே அதனுடைய புதிய பட்டுப்பாதை விஸ்தரிப்புக்கு அடித்தளமாக அமையும் என்பதனால் இலங்கையை மையப்படுத்தி பர்மாவின் கோகோ தீவு, பாகிஸ்தானின் குவாதர் துறைமுகம், செங்கடயிலே ஜிபூட்டி, மற்றும் கெனியாவின் லாமோ தீவு என்பவற்றில் தனது நிலையான துறைமுகங்களை அமைத்துக் கொண்டு விட்டது. </p><p> இந்து சமுத்திரத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைத்தீவில் நிலை எடுப்பது இன்றைய புவிசார் அரசியலிலும், பூகோள அரசியலிலும் சீனாவின் கையை ஓங்க வைப்பதற்கான மூலோபாயமாகும்.</p><h2>கடல்சார் தொழில் நடவடிக்கைகள்</h2><p>
</p><p>
இதன் அடிப்படையில் இலங்கைத்தீவை மையப்படுத்தி இந்துசமுத்திரத்தில் சீனா மேற்கொள்ளும் ஏகபோகத் தன்மை கொண்ட(Monopolistic) ஏகபோக(Monopoly) வர்த்தகக் கடல்வழி, மற்றும் கடல்சார் தொழில் நடவடிக்கைகள் குறித்து ஆராய்வது மிக அவசியமானது. </p><p>முதலில் ஏகபோக (Monopoly) என்பது ஒரு குறிப்பிட்ட சந்தை அல்லது சேவையில் ஒரே நிறுவனம் அல்லது நாடு ஆதிக்கம் செலுத்தி ஏனையவர்களின் போட்டியைக் கணிசமாகக் கட்டுப்படுத்தும் நிலைமை என்பதனையே குறித்து நிற்கிறது.
</p><p>
 அதே நேரத்தில் ஏகபோக நடத்தை(Monopolistic behaviour) என்பது குறித்த நாடோ நிறுவனமோ முழுமையான ஏகபோகம் இல்லாவிட்டாலும், முதலீடு, உட்கட்டமைப்பு, துறைமுகக் கட்டுப்பாடு, விநியோகச் சங்கிலி, நிதி மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் போட்டியாளர்களைவிட மிகப்பெரிய ஆதிக்கத்தை உருவாக்கும் செயற்பாடாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/559bd519-e281-472c-8b55-b0ae49da7803/26-6aa6886ab4d06.webp' /></p><p> </p><p>இந்த அடிப்படையில் பார்க்கும்போது, “சீனா இலங்கையில் முழுமையான கடல்வழி Monopoly ஒன்றை ஏற்கனவே உருவாக்கிவிட்டது”. </p><p>இலங்கை சார்ந்த முக்கியமான கடல்சார் உட்கட்டமைப்புகளில் சீனாவின் நீண்டகால பொருளாதார மற்றும் மூலோபாய செல்வாக்கு இன்று பெருமளவில் அளவில் அதிகரித்துள்ளது என்பதே உண்மையாகும்.
</p><p>
இலங்கைத் தீவின் தென் பகுதியில் அம்பாந்தோட்டை துறைமுகம் இதற்கு மிக முக்கியமான உதாரணமாகும். 2017 ஒப்பந்தத்தின் கீழ் China Merchants Port Holdings (CMPort) நிறுவனத்துடன் இலங்கை அரசு PPP முறையில் இணைந்தது. Hambantota International Port Group-இல் சீன நிறுவனத்திற்கு 85% பங்கும் Sri Lanka Ports&nbsp;Authority-க்கு 15% பங்கும் வழங்கப்பட்டது.</p><p> அதேவேளை, துறைமுக நிலத்தின் உரிமை சீனாவுக்கு விற்கப்படவில்லை 99 வருட குத்தகை அடிப்படையிலான இரண்டு முறை புதுப்பிக்கக்கூடிய சட்ட ஏற்பாடும் செய்யப்பட்டதாக இலங்கை அரசின் ஆவணங்கள் குறிப்பிடுவதில் இருந்து“இலங்கைத் துறைமுகத்தை சீனா முழுமையாக கைப்பற்றிவிட்டது” என்று கூறுவதில் தவறு ஏதுமில்லை. </p><p> இந்து மகா சமுத்திரத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தின் வணிக இயக்கத்தில் சீன நிறுவனத்துக்கு நீண்டகாலப் பெரும்பங்கு கிடைத்திருப்பது சீனாவின் புதிய பட்டுப்பாதை வியூகத்துக்கு கிடைத்த வெற்றி என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.
</p><p>

அதேபோல கொழும்பு துறைமுகத்திலும் சீனாவின் பங்குகள் மேலோங்கியே உள்ளது. அதே நேரத்தில் கொழும்பு துறைமுக நகரம்(Colombo Port City) மூலம் துறைமுகம், நிதி, வர்த்தகம், சேவைகள், முதலீடு மற்றும் நகர்ப்புற பொருளாதாரம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.</p><p> Port City-யின் முதன்மை மேம்பாட்டாளராக(developer) China Harbour Engineering Company செயல்படுகிறது. இது China Communications Construction Companyன் துணை நிறுவனமாகும். இலங்கையில் எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் இந்த சீன நிறுவனங்களுடன் தங்களுடைய உறவை புதுப்பித்து மேன்மேலும் பலப்படுத்துவதே வழக்கமானது.</p><h2>இலங்கை–சீனா உறவு</h2><p> </p><p>அது ஜே .ஆர் ஜெயவர்த்தனா ஆரம்பித்து வைத்த புவிசார் அரசியலை(geopolitical) அரசியல் புவியியலால் அரசியற் புவியியல்(Political Geography). வெற்றி கொள்ளும் அரசியல் ராஜதந்திர வியூகமாகும். அந்த அடிப்படையிலேயே இன்றைய எம்.பி.பி அரசாங்கமும் இலங்கை–சீனா இருதரப்பு ஒத்துழைப்பில் தொடர்ந்து முன்னெறியுள்ளன.
</p><p>
இலங்கை அரசின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்துசமுத்துவத்தின் வலுச்சமநிலையை தன்பக்கம் திருப்புவதற்காக சீனா இந்துசமுத்திர துறைமுக நாடுகளை லாவமாக கையாள முனைகிறது. </p><p>இந்த அடிப்படையில் பார்க்கின்றபோது சீனாவின் அணுகுமுறையை வெறும் “துறைமுகம் கட்டுதல்” என்று பார்ப்பதைவிட, “துறைமுகம் → தளவாட மேலாண்மை(logistics) → தொழில் → வர்த்தகம் → நிதி → சேவை” என்ற ஒரு சங்கிலித் தொடராக முழுமையான இந்து சமுத்திர வர்த்தக கடல்சார் பொருளாதார வலையமைப்பை உருவாக்கும் முயற்சியாக அமைகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de1279fb-a8f4-4b30-92b6-63400b275df9/26-6aa6886b6857c.webp' /></p><p>
</p><p> 

சீனா இலங்கையின் அனைத்து துறைமுகங்களையும் தனியாகக் கட்டுப்படுத்தாமல் இந்தியா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களும் இலற்கைப் பொருளாதாரத்தில் செயற்படுகின்றன. </p><p>ஆனால் நாட்டின் நிறுவனங்கள் துறைமுகம் + தளவாட மேலாண்மை+ தொழில் + ஆற்றல் + நகர்ப்புற முதலீடு போன்ற பல அடுக்குகளில் தொடர்ந்து பெருமளவு பங்கெடுக்கும்போது, அது சீனாவின் ஏகோபோக ஆதிக்கத்தை(monopolistic influence) உருவாக்கும் சாத்தியத்தையே ஏற்படுத்தியள்ளது. </p><p> இதை சீனாவின் ஏகபோகத் திட்டம். இதனை மேற்குலகத்தையும் இந்தியாவையும் இந்து சமுத்திர வலுச்சம் நிலையில் பின்னோக்கித் தள்ளும் ஏகோபோக கேட்பாடு என்று கூறலாம்.
</p><p>
 இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினை பயன்படுத்தி தனது “புதிய பட்டுப்பாதை“, "சந்தை குண்டு" கோட்பாட்டிற்கு இலங்கைதீவை ஒரு நெம்புகோளாக சீனா பயன்படுத்த முனைகிறது. இலங்கை இந்துசமுத்திரத்தின் முக்கிய சர்வதேச கடல்வழிகளுக்கு அருகில் அமைந்துள்ளதால், அதன் துறைமுகங்களின் மூலோபாய முக்கியத்துவம் மிக அதிகம்.</p><p> அதே நேரத்தில் இலங்கையின் வடக்கு கிழக்கு துறைமுகங்களும், நிலமும் இந்திய துணை கண்டத்தை கட்டுப்படுத்துவதற்கு ஏற்ற புவியியல் கேந்திரத் தன்னை கொண்டிருப்பதனால் தற்போது தெற்கில் தன்னை வலுப்படுத்திய பின்னர், இப்போது வடக்கு நோக்கி அது தனது கவனத்தை செலுத்த முனைகிறது.
</p><p>
 இந்தியாவுக்கு இலங்கை முக்கியமான இந்திய-இலங்கை உடன்படிக்கையில் இந்தியாவின் எதிர் நாடுகளுக்கு இலங்கை நிலப்பரப்பை பயன்படுத்த அனுமதிக்கப்படக் கூடாது என்ற நிபந்தனை உண்டு. ஆனால் வாணிபத்திற்காக என்றும், துறைமுக அபிவிருத்தி என்ற போர்வையிலும் இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தை மீறி இலங்கை அரசு சீனாவை அனுமதித்துவிட்டது. </p><p>இன்றைய வணிகத் துறைமுகங்கள் எதிர்காலத்தில் ஏற்படும் போர் சூழ்நிலைகளில் இராணுவத் தேவைகளுக்கும் பயன்படுத்தக்கூடிய திறனை உருவாக்கும் கட்டுமானப்பலம் சீனாவிடம் உண்டு. எனவே அம்பாந்தோட்டை சீனாவின் இராணுவத் தளமாக எந்த நேரமத்திலும் மாற்றி அமைக்கப்படலாம்.</p><p> 2017 ஒப்பந்தத்தில் துறைமுகத்தை இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதைத் தடுக்கும் ஏற்பாடுகளும், பாதுகாப்புப் பொறுப்பு இலங்கை அரசிடமே இருக்கிறது என பலரும் வாதிடலாம். ஆனால் இந்திய இலங்கை ஒப்பந்தம் மீறப்பட்டுத்தானே அம்மாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.</p><h2>துறைமுக வளர்ச்சி</h2><p>
</p><p>
சீனாவின் இலங்கை மீது அதீத ஈடுபாட்டை கொண்டு செயற்படுவது ஏதோ இலங்கைக்கு தானதர்மம் வழங்குவதற்காகவோ, அல்லது இலங்கை மக்களின் அவ்விருத்தியில் நன்மனம் கொண்டே அல்ல. அது தனது உலகம் தழுவிய அரசியல், பொருளியல் நலன்களை முழுமையாக அடைவதற்காக இலங்கையில் தனது சில்லறை பணத்தைக் கொட்டுவது அவசியமாகிறது. </p><p>இதனையே தமிழில் இறால் போட்டு சுறா பிடிப்பது" என்பர். சீனாவின் முதலீட்டினால் இலங்கைக்கு துறைமுக வளர்ச்சி, வேலைவாய்ப்பு, தளவாட மேலாண்மை(logistics) மற்றும் சரக்கு மாற்று ஏற்றுமதி(transshipment) வாய்ப்புகள், தொழில்துறை மண்டல வளர்ச்சி, புதிய நிதி மற்றும் சேவைத் துறை, தொழில்நுட்பப் பரிமாற்றம், அன்னியச் செலவாணி வருமானம் போன்ற பல வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fde8c46f-8f58-4281-96cc-d2064fb240cc/26-6aa6886c1b8f2.webp' /></p><p> </p><p>ஆயினும் இலங்கை தொடர்ந்து சீனாவின் கடன்கார நாடாகவே இருப்பதனையை சீனா விரும்பும். அதற்கேற்ற பொருளாதார வணிக செயற்பாடுகளையே சீனா இலங்கையில் ஊக்கிவிக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.

சீனா இலங்கை அரசுடன் நெருக்கமான உறவைப் பேணுகிறது. </p><p>அதேநேரம், தற்போது வடக்கு–கிழக்கில் உள்ள தமிழ் மக்களிடம் அபிவிருத்தி, உதவி, மீன்பிடி, வீடமைப்பு, கல்வி போன்ற சமூக-பொருளாதாரத் திட்டங்கள் மூலம் நல்லெண்ணத்தை உருவாக்குவது அதன் இராஜதந்திர வியூகத்தின் புதிய பரிமாணத்தை காட்டுகிறது. </p><p>சீனாவின் அணுகுமுறையில் ஒரு முரண்பாடு இருப்பது போல தோன்றும் ஆனால் சீனாவைப் பொறுத்தளவில் அதற்கு பூனை கருப்பாக இருந்தால் என்ன? சிவப்பாக இருந்தால் என்ன? எலி பிடிப்பதே அதன் கண்ணு கருத்துமான இலக்காகும்.

சீனாவின் இலங்கை கடல்சார் முதலீடுகளை வட- கிழக்கிற்கு நகர்த்துவது “சீனாவின் ஆக்கிரமிப்பு”என்று வர்ணிப்பது அரசியல் ரீதியாக வலுவான வாதம்தான். </p><p> சீனா வட- கிழக்கில் தமிழர்களுக்கு அபிவிருத்தி உதவி என்ற பெயரிலே மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் சிங்கள அவர்களை வடக்கு நோக்கி இழுத்து வடக்கை வடகிழக்கை சிங்கள மயமாக்களை இலகுபடுத்துவதோடு, தமிழர்களிக்கு அபிவிருத்தி உதவி் செய்வதன் மூலமாக சீனா தமிழர்களுடன் நெருக்கமான உறவை பேணுவதாக ஒரு போக்கை காட்டுவதனால் இந்தியா தமிழர்மீது அதிருப்தி கொள்ள வைப்பதான செயலாகவும் அமைகிறது. </p><p>இதன் மூலம் தமிழர்- இந்திய உறவை பிரித்து ஈழத் தமிழர்களை தனிமைப்படுத்தும் தொந்தரவு உத்தியாகவும் இது அமைகிறது. இத்தகைய வேலை திட்டத்தை சீனா எழுமாத்திரமாக செய்கின்ற ஒரு நாடு அல்ல. அது நீண்ட காலத் திட்டத்தோடும் பெரும் இலக்குகளோடும் வெற்றி என்ற நம்பிக்கையோடுமே அது ஆரம்பிக்கும்.
</p><p>
இவ்வாறுதான் இலங்கைத்தீவில் 2000 ஆண்டு வரையில் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு உச்ச நிலை அடைந்து ராணுவச் சமநிலை அடைந்தபோது சீனா தமிழக விடுதலைப் போராட்டத்திற்கு பின் கதவால் உதவுவதாக வாக்களித்தது.அபாரம் செயற்பட்டது.</p><p> அதே நேரத்தில் அது முன்தவால் இலங்கை அரசோடு இணைந்து இலங்கை அரசுக்கு ஆதரவளித்தது யுத்தத்தில் பெருமலான ஆயுத தளவாட பலங்களையும் அது செய்தது அதன் மூலம் மேற்குலக நாடுகளும் இந்தியாவும் சீனாவுடன் போட்டி போட்டு இலங்கைக்கு உதவ முன்வந்து தமது இருப்பை தக்க வைக்க அவர்களும் நுழைந்தனர். </p><p>ஆனாலும் சீனாவுக்கே வெற்றிக்கனி கிடைத்தது. விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை அழிப்பதற்கான அனைத்து ராணுவ, புலனாய்வு, இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டான் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்டார்கள். </p><p>தமிழக விடுதலைப் புலிகள் வீழ்த்தியதன் சன்மானம்தான் அம்பாந்தோட்டை துறைமுகம் என்பதை தத்துவார்த்த ரீதியில் அறிவார்ந்து ஆராய்ந்தால் உண்மை புரியும்.


தற்போது சீனா வட- கிழக்கில் அபிவிருத்தி என்ற பெயரில சிங்கள மயமாக்களை இலகுபடுத்துகிறது.</p><p> தமிழர்களுடன் அபிவிருத்தி உதவி் மூலம் நெருக்கமான உறவை பேனுவதக காட்டுவதனால் இந்தியா தமிழர்மீது அதிருப்தி கொள்ளும். இது தமிழர்- இந்திய உறவை பதிப்பதாக அமையும். இது பற்றி ஆழமாக ஆராயப்பட வேண்டியது இன்றைய காலத்தின் தேவை. ஈழத் தமிழர்கள் அறிவார்ந்த சிந்திக்க தவறின் வல்லமை வாய்ந்த நாடுகளும், வர்த்தக ஏகோபோக உரிமையை இந்து சமுத்திரத்தில் நிலைநாட்ட முனையும் நாடுகளும் ஈழத் தமிழர்களை பகடைக்காயாக பயன்படுத்துவர்.</p><h2>புவிசார் அரசியல்</h2><p> </p><p>தற்போது கொங்கொங்கில் உள்ள சீன பல்கலைக்கழகம் இலங்கை தீவுக்குள் ஒரு தமிழ் சுயாதீன தமிழரசை உருவாக்குவதற்கான சர்வதேச சட்ட தடைகளும் நடைமுறைகளும் பற்றி ஒரு ஆய்வு செய்வதாக பெரிதாக பேசப்படுகிறது. இது ஈழத் தமிழர்களுக்கு பெரு மகிழ்ச்சியை கொடுப்பதாக அமையலாம். </p><p>ஈழத் தமிழர்களை தம்பக்கம் திருப்புவதற்கான உத்தியாகும் அமையலாம். ஆனால் இதன் முடிவு மேற்குலகமும், இந்தியாவும் ஈழத் தமிழர்களை ஒதுக்கி மேலும் நசுக்குவதற்கான தந்துரோபாயத்தை கொண்ட செயற்பாடு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சீனா வட-கிழக்கில் அபிவிருத்தி செய்கிறது என்றால் அந்த அபிவிருத்தி திட்டம் நோக்கி பெருமளவு சிங்களவர்கள் கவர்ந்திழுக்கப்படுவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d76e931-46b7-4c2c-8fe0-8c4a952f3b9b/26-6aa6886cc48a5.webp' /></p><p> </p><p>ஏற்கனவே கிழக்கு மாகாணத்தின் பெரும்பகுதி எவ்வாறு சிங்களமயமாகிவிட்டது. அதேபோல வடக்கையும் கிழக்கையும் இணைக்கின்ற மணலாற்றுப் பகுதியும் சிங்களப்படுத்தப்பட்டு வடகிழக்கு மாகாணங்கள் இரண்டு துண்டாக நிலத் தொடர்பு பிரிக்கப்பட்டது. வடக்கில் ராணுவ அழுத்தம், அச்சுறுத்தல் காரணமாக ஏராளமான இளையவர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். </p><p>இதனால் அங்கு பெரும் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட தொடங்கிவிட்டது. அதனை சிங்கள மக்களைக் கொண்டு நிரப்புவதன் மூலம் சிங்கள மக்களை நிரந்தர குடியிருப்பாளராக வடக்கிலே அமர்த்தி விட முடியும். அதன் மூலம் காலப்போக்கில் தமிழர்களை இனக்கலப்பு செய்து அழித்தொழிப்புச் செய்ய முடியும். தமிழர்களைச் சிங்கள மயப்படுத்துவது என்பது இலங்கைத் தீவை சீன மயப்படுத்தலாகவே அமையும்.</p><p>

சீனா வட–கிழக்கில் தமிழர்களுடன் நேரடி உறவை உருவாக்குவது தமிழர்களை மேலும் பலவீனப்படுத்தவும் இனமயமாக்கல் செய்யவும் அதே நேரத்தில் இந்தியாவின் தமிழர் துருப்புச்சீட்டை(Tamil card) பலவீனப்படுத்தும் ஒரு திட்டமிட்ட அல்லது வேண்டுமென்றே உருவாக்கப்படும் உத்தி(deliberate strategy) என்பதை சீனா–இந்தியா–இலங்கை–தமிழர் என்ற நான்கு தரப்பினரின் புவிசார் அரசியல் உத்திகளையும் (geopolitical strategy) தனித்தனியாக ஆராய்ந்தால் இந்த உண்மை புலப்படும்.
</p><p>
இதன் மூலம் சீன“நாங்கள் இனப்பிரச்சினையில் ஒரு தரப்பை ஆதரிப்பவர்கள் அல்ல இலங்கையின் அனைத்து மக்களுடனும் அபிவிருத்தி ஒத்துழைப்பை மேற்கொள்கிறோம்.” என்பதாக அமைவதனால் இது தமிழர்களிடையே சீனாவைப் பற்றிய ஆதரவு பார்வையை உருவாக்கக்கூடியது. </p><p>ஆனால் அதிகாரம் இல்லாத தமிழர்களுக்கான அபிவிருத்தி என்பது இறுதியில் சிங்களமயமாக்கல் என்பதாகவே முடியும்.

சிங்களமயமாக்கல் என்ற வாதம் எழுமாத்திரத்திலோ அல்லது ஆராயப்படாமலோ முன் வைக்கப்படவில்லை. </p><p>மாறாக வடகிழக்கு தமிழர்களின் நில அபகரிப்பு அல்லது நில உரிமை மாற்றம், புதிய குடியேற்றங்கள், இராணுவமயமாக்கல், அரச நிர்வாக எல்லைகளின் மாற்றம், பௌத்த மத நிறுவனங்களின் விரிவாக்கம், உள்ளூர் தமிழ் மக்களின் மக்கள் தொகை விகிதத்தில் மாற்றம், மீன்பிடி வளங்களின் கட்டுப்பாடு போன்ற பல்துறை கட்டமைப்புகள் சார்ந்த தரவுகளை தனித்தனியாக ஆய்வுக்கு உட்படத்தியர் மூலம் கிடைக்கப்பெறும் தரவுகளின் அடிப்படையிலேயே சிங்களமயமாக்கல் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.</p><p>

இந்தியாவின் இலங்கை தொடர்பான கொள்கையில் வடக்கு–கிழக்கு தமிழர்களுக்கு வரலாற்று, அரசியல் மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவம் உள்ளது. இந்தியா இலங்கை மீதான மேலாண்மை செலுத்துவதற்கு தன்னை ஈழத் தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் அரசியல் உரிமைகளுக்கான ஒரு முக்கிய பங்காளியாகக் கருதுகிறது. </p><p>இந்நிலையில் சீனாவின் வடக்கு நோக்கிய அபிவிருத்தி நடவடிக்கைகளும் தமிழ் மக்களுடனான நெருங்கிச் செல்லும் தமிழர்-இந்திய உறவு சிக்கலுக்கு உள்ளாக்குகின்ற அதேநேரம் அது ஒரு மறைமுகமான புவிசார் அரசியல் தாக்கத்தை(geopolitical effect) ஏற்படுத்துவதாக இருக்கிறது.</p><h2>சீனாவின் நகர்வு</h2><p>
</p><p>
சீனா வடக்கு-கிழக்கு தமிழ்ச் சமூகத்துடன நேரடி சமூக-பொருளாதார தொடர்பையும் உருவாக்கினால், அது இந்தியாவின் பாரம்பரிய influence-க்கு போட்டியாக மாரும். சீனா திட்டமிட்ட ரீதியில் ஈழத் தமிழர் உடன் நெருக்கத்தை ஏற்படுத்துவதனால் இலங்கை அரசையும் தன்னுடைய இறுக்கமான பிடிக்குள் வைத்திருக்க முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/516af76a-01b7-4665-bc24-838e026d3d1d/26-6aa6886d7a6cf.webp' /></p><p> </p><p>அதன் மூலம் மேன்மேலும் இலங்கையிடமிருந்து வரக்கூடிய அனைத்தையும் பெறுவதற்கான வாய்ப்பையும் அது பெற்றுக் கொடுக்கும். ஆனால் மறுவலத்தில் தமிழர்கள் சீனாவுடன் அதிகமான பொருளாதார/அரசியல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டால், இந்தியா அதை தனது இராஜதந்திர, பாதுகாப்பு, மற்றும் பிராந்திய செல்வாக்கின் கோணத்தில் திறக்க விடுக்கப்படும் அச்சுறுத்தலாகவே பார்க்கும். </p><p>இதனால் தமிழர்களுக்கு ஒரு மூலோபாய இக்கட்டான நிலை (strategic dilemma) தோற்றுவிக்கும். அதாவது இது இந்தியாவின் பாரம்பரிய செல்வாக்குப் பரப்புக்குள் சீனாவின் இருப்பை அதிகரிக்கும் ஒரு இராஜதந்திர முயற்சியாக இருக்கிறது. </p><p>இது இந்தியா–தமிழர் உறவில் அவநம்பிக்கை உருவாகும் சூழலை ஏற்படுத்தக்கூடியது. ஈழத் தமிழர்கள் இந்தியா–சீனா போட்டியின் இடைநிலைக் களமாக மாற்றிவிடும் அபாயம் தற்போது சீனாவின் நகர்வால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும்.</p><p></p><p></p><p>


 </p>]]></content>
            <updated>2026-09-13T11:27:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பின்லேடன் தொடர்பான மறைக்கப்பட்ட இரகசியங்களை வெளியிட்டது சிஐஏ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cia-releases-hidden-secrets-regarding-bin-laden-1789297198"></link>
            <id>https://ibctamil.com/article/cia-releases-hidden-secrets-regarding-bin-laden-1789297198</id>
            <summary type="text">&amp;nbsp;நியூயோர்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையத்தின் மீது 2001 செப்டம்பர் 11 அன்று நடத்தப்பட்ட தாக்குதல்களின் 25வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில்,அல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நியூயோர்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையத்தின் மீது 2001 செப்டம்பர் 11 அன்று நடத்தப்பட்ட தாக்குதல்களின் 25வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில்,அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் தொடர்பான 70க்கும் மேற்பட்ட ஜனாதிபதி உளவுத்துறை அறிக்கைகளையும், 100க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட ஆவணங்களையும் சிஐஏ வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
</p><p>
செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு முன்பே, பின்லேடனின் இலக்குகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருந்ததை இந்த ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன.&nbsp;</p><h2>பின்லேடனின் முதல் இலக்கு இந்தியா</h2><p>&nbsp;ஓகஸ்ட் 28, 1998 திகதியிட்ட ஜனாதிபதி உளவுத்துறை அறிக்கை, பின்லேடன் இந்தியா உட்பட பல நாடுகளைத் தாக்கத் திட்டமிட்டிருந்ததாகக் கூறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25e08177-b89e-4a0e-a0d7-f985f99e79a9/26-6aa687936f7a8.webp' /></p><p>

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற நாடுகளில் பாகிஸ்தான், எகிப்து, குவைத், சவுதி அரேபியா, யேமன், உகண்டா மற்றும் நைஜீரியா ஆகியவை அடங்கும்.</p><p>

"பின்லேடனின் பயங்கரவாத வலையமைப்பு இன்னும் அச்சுறுத்தலாக உள்ளது" என்ற தலைப்பிலான, தகவல்களுக்கான ஆதாரம் எதுவும் குறிப்பிடப்படாத அந்த ஆவணம் வெளியிடப்படாமல் உள்ளது.
</p><p>
இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கான ஒரு குறிப்பிட்ட இடம், திகதி அல்லது செயல்படுத்தும் திட்டம் ஆகியவற்றை அது குறிப்பிடவில்லை.</p><p></p><h2>அமெரிக்கா மீது மேலும் பல தாக்குதல்கள்</h2><p>

இதற்கிடையில், ஆப்கானிஸ்தானில் உள்ள அல்-கொய்தா முகாம்கள் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, பின்லேடன் அமெரிக்கா மற்றும் ஐக்கிய ராச்சியத்திற்கு எதிராக மேலும் தாக்குதல்களைத் திட்டமிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5ba9f2f-5e9c-4cb0-a070-b68ba88946cb/26-6aa687942c63a.webp' /></p><p>
</p><p>
இந்தத் தாக்குதல்களை நடத்துவதற்காக, அல்-கொய்தா தலைவர் குறைந்தது 60 நாடுகளில் உள்ள தனிநபர்கள் மற்றும் கூட்டாளிகளின் வலையமைப்பின் ஆதரவை நாடியுள்ளதாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.</p><p></p><p>
</p><p>
</p><h2>முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு எச்சரிக்கை</h2><p>சிஐஏ வெளியிட்ட ஜனாதிபதி உளவுத்துறை அறிக்கைகள், 1998 மற்றும் 2001-க்கு இடையில் பலமுறை நாட்டின் மீது சாத்தியமான பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகளை அந்த அமைப்பு எச்சரித்ததைக் காட்டுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30eedbf5-9d83-4e05-be5a-77c73ad0d8d2/26-6aa68794edc1b.webp' /></p><p>
</p><p>
இந்த அறிக்கைகள் பில் கிளிண்டனின் ஜனாதிபதி பதவிக் காலத்தில் தொடங்கி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் ஜனாதிபதி பதவிக் காலம் வரை நீடித்த ஒரு காலகட்டத்தை உள்ளடக்கியுள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T11:23:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[மறைந்துவிட்ட அட்லாண்டிக் சூறாவளிகள்... எல் நினோ தாக்கம் என நிபுணர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/atlantic-hurricanes-gone-1789298714"></link>
            <id>https://news.lankasri.com/article/atlantic-hurricanes-gone-1789298714</id>
            <summary type="text">El Nino Might Bring Slow Storm Season: எல் நினோ புயல் பருவத்தை மந்தமாக்கக்கூடும்.
புயல்கள் உருவாவதற்கு முன்பே அவற்றை நசுக்கிவிடும் ஒரு சூப்பர் எல் நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>El Nino Might Bring Slow Storm Season: எல் நினோ புயல் பருவத்தை மந்தமாக்கக்கூடும்.
</p><p>புயல்கள் உருவாவதற்கு முன்பே அவற்றை நசுக்கிவிடும் ஒரு சூப்பர் எல் நினோ காரணமாக, இந்த சூறாவளிப் பருவத்தில் அட்லாண்டிக் பெருங்கடல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அமைதியாக உள்ளது.</p><h2>ஒரு புயல் பருவம்</h2><p> </p><p>
தேசிய சூறாவளி மையத்தின் தகவலின் அடிப்படையில், வழக்கமாக சூறாவளிப் பருவத்தின் உச்சக்கட்டமாக அமையும் இந்தக் காலகட்டத்தில், இந்த ஆண்டு இதுவரை அட்லாண்டிக் பெருங்கடலில் எந்தச் சூறாவளியும் உருவாகவில்லை; </p><p>மேலும், குறைந்தது அடுத்த ஒரு வாரத்திற்காவது சூறாவளி எதுவும் உருவாக வாய்ப்பில்லை என்றே தெரிய வருகிறது. இந்தக் பருவத்தில் ஒப்பீட்டளவில் பலவீனமான மற்றும் குறுகிய கால அளவு கொண்ட ஐந்து வெப்பமண்டலப் புயல்கள் மட்டுமே உருவாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4460be9-3328-47d5-97a1-1bccd202707d/26-6aa6881c7b1ad.webp' /></p><p> </p><p>அரசுக்குச் சொந்தமான வானிலை முன்னறிவிப்பு மையத்தின் வானிலை ஆய்வாளரான நிக் நோவெல்லா கூறியதன்படி, மணிக்கு 74 மைல் வேகத்திலான காற்றைக் கொண்ட புயல் (அதாவது 'ஹரிகேன்' என வகைப்படுத்தப்படத் தேவையான வேகத்தை எட்டிய புயல்) எதுவும் உருவாகாமலே ஒரு புயல் பருவம் இவ்வளவு நீண்ட காலத்திற்குத் தொடர்ந்தது என்பது சனிக்கிழமையன்று ஒரு சாதனையாக அமைந்தது; </p><p>குறைந்தது செயற்கைக்கோள் பயன்பாட்டுக் காலத்திலாவது இதுவே சாதனையாகும். 1950-களுக்கு முந்தைய காலகட்டத்தில், சூறாவளிப் பருவத்தின் இவ்வளவு பிந்தைய கட்டத்தில் எந்தவொரு சூறாவளியும் பதிவாகாத சில ஆண்டுகள் இருந்தன; ஆனால், கடல்சார் கண்காணிப்பு முழுமையாக இல்லாதிருந்ததால் வானிலை ஆய்வாளர்கள் அந்தப் பதிவுகளை நம்புவதில்லை.</p><p></p><p> </p><p>புயல்களின் எண்ணிக்கை, அவற்றின் வலிமை மற்றும் அவை நீடிக்கும் காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும் ஒரு அளவீட்டின்படி, ஒட்டுமொத்த சூறாவளிச் செயல்பாடும் 1950-க்குப் பிந்தைய சாதனை அளவிலான குறைந்த மட்டத்தில் உள்ளது என்று கொலராடோ மாகாணப் பல்கலைக்கழகத்தின் சூறாவளி நிபுணர் ஃபில் க்ளோட்ச்பாக் தெரிவித்துள்ளார். </p><p>அட்லாண்டிக் பகுதியில் புயல் செயல்பாடானது, ஆண்டின் இக்காலகட்டத்திற்கான இயல்பான அளவில் வெறும் 7 சதவீதமாக மட்டுமே உள்ளது. இருப்பினும் மக்கள் தங்கள் பாதுகாப்பைக் குறைத்துக்கொள்ளக் கூடாது, ஏனெனில் எல் நினோ காலகட்டத்தில்கூட, ஒரேயொரு புயல் பேரழிவை ஏற்படுத்தப் போதுமானது.</p><p> பல வல்லுநர்கள் 1992-ஆம் ஆண்டைச் சுட்டிக்காட்டினர், அது பேரழிவை ஏற்படுத்திய ஆண்ட்ரூ சூறாவளியுடன் தாமதமாக ஆனால் மிக மோசமாகத் தொடங்கியது.</p><h2>வலிமையான புயல்கள்</h2><p> </p><p>அட்லாண்டிக்கில் ஏற்படும் மிகப்பெரிய எல் நினோ விளைவு என்பது, முன்னெப்போதும் இல்லாத அளவிலான வலுவான காற்றுச் சிதைவு ஆகும். இதில், வலுவான கிழக்கத்தியக் காற்று ஒரு புயல் அமைப்பைத் தாழ்வான மட்டங்களில் தாக்கும்போது, ​​வலுவான மேற்கத்தியக் காற்று அதை உயரமான பகுதிகளில் எதிர் திசையில் தள்ளுகிறது. </p><p>இதன் விளைவாக, அவை அந்தப் புயலைச் சிதைத்துவிடுகின்றன. ஆப்பிரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில், வழக்கமாக வலிமையான புயல்கள் உருவாகி மேற்கு நோக்கி நகரும் இப்பகுதியில் நிலவும் wind shear அளவானது, ஒரு வெப்பமண்டலச் சூறாவளி தாங்கக்கூடிய அளவை விட மணிக்கு சுமார் 45 மைல்கள் அதிகமாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb672df5-f13d-4645-b67f-a9054565f106/26-6aa6881d2dd3f.webp' /></p><p> </p><p>காற்றுச் சுழற்சி அதிகமாக இல்லாத ஒரே பகுதி மெக்சிகோ வளைகுடா ஆகும். மேலும், அந்தப் புயல்கள் பருவத்தின் பிற்பகுதியில்தான் தீவிரமடையத் தொடங்கும் என்பதால், அப்பகுதிக்கு இன்னும் சில வலுவான புயல்கள் வரக்கூடும். </p><p>புயல்களுக்கு வழக்கமாக வலுவூட்டும் வகையில் கடல் நீர் வெப்பமாக இருந்தபோதிலும் (உலகெங்கிலும் உள்ள பெருங்கடல்கள் தொடர்ந்து 100 நாட்களாகப் பதிவு செய்யப்பட்ட அளவைவிட அதிக வெப்பத்துடன் காணப்படுகின்றன), இவையனைத்தையும் மீறிச் செயல்படும் 'எல் நினோ'வின் (El Nino) ஆற்றலை இது காட்டுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-13T11:22:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலி. வடக்கு காணி விடுவிப்பு கோரி பலாலியில் 13ஆவது வாரமாக போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-in-palaly-release-of-land-in-vali-north-1789298209"></link>
            <id>https://ibctamil.com/article/protest-in-palaly-release-of-land-in-vali-north-1789298209</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு மக்கள் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி பலாலி சந்தியில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

கடந்த 3...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு மக்கள் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி பலாலி சந்தியில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
</p><p>
கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இன்றைய தினம் 13ஆவது வாரமாக குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.</p><p>

தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை
அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டினர்.</p><p></p><h2>விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை&nbsp;</h2><p>இந்தநிலையில் தாம் நீண்ட காலமாக
நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் காணிகளை
விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/137a74a7-7caf-4eb0-8492-12ba31fbbec8/26-6aa687aa634f1.webp' /></p><p>இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை காணி விடுவிப்பு தொடர்பில் நாடாளுமன்றில்
உயர்மட்ட கலந்துரையாடல் நடைபெற்றுள்ள நிலையில், பலாலி கிழக்கு உள்ளிட்ட
பகுதிகளை இந்த மாதத்திற்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T11:21:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிஜோர்ன், மாபாகா-வின் மிரட்டலான பந்துவீச்சில் சுருண்ட நமீபியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/namibia-156-all-out-vs-south-africa-in-3rd-odi-1789298408"></link>
            <id>https://news.lankasri.com/article/namibia-156-all-out-vs-south-africa-in-3rd-odi-1789298408</id>
            <summary type="text">Namibia 156 runs all out vs south africa: தென் ஆப்பிரிக்க பந்துவீச்சில் நமீபியா அணி 156 ஓட்டங்களுக்கு சுருண்டது. 

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Namibia 156 runs all out vs south africa: தென் ஆப்பிரிக்க பந்துவீச்சில் நமீபியா அணி 156 ஓட்டங்களுக்கு சுருண்டது. </p><p>

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நமீபியா 156 ஓட்டங்களுக்கு சுருண்டது.&nbsp;</p><h2>அலெக்ஸாண்டர் நிதான&nbsp;ஆட்டம் </h2><p>

நமீபியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் Windhoek மைதானத்தில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d68bec31-05cf-4159-a316-4f014d050000/26-6aa687948c0da.webp' />&nbsp;</p><p></p><p>
நாணய சுழற்சியில் வென்று நமீபியா அணி முதலில் துடுப்பாடியது. அலெக்ஸாண்டர் நிதானமாக ஆட, மைக்கேல் மற்றும் ப்ரைலிங்க் சொற்ப ரன்னில் வெளியேறினர்.
</p><p>
பின்னர் ஸ்டீன்கேம்ப் 23 (36) ஓட்டங்களில் இருந்தபோது பிஜோர்ன் பந்துவீச்சில் போல்டானார். 31 ஓட்டங்கள் எடுத்திருந்த அலெக்ஸாண்டர் ரன்அவுட் ஆனார்.&nbsp;</p><h2>விக்கெட்டுகளை கைப்பற்றிய பிஜோர்ன்&nbsp;</h2><p>
அடுத்து வந்த எராஸ்மஸ் (3), ஈட்டன் (4) ஆகியோரது விக்கெட்டுகளையும் பிஜோர்ன் போர்டுன் (Bjorn Fortuin) கைப்பற்றினார்.</p><p>

மேக்ஸ் ஹெய்ங்கோ அதிரடியாக 6 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 20 ஓட்டங்கள் விளாச, சனே க்ரீன் 33 (42) ஓட்டங்கள் எடுத்த நிலையில் மாபாகா பந்துவீச்சில் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். </p><p>

36.2 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த நமீபியா அணி 156 ஓட்டங்களுக்கு சுருண்டது. பிஜோர்ன் போர்டுன் 4 விக்கெட்டுகளும், மாபாகா மற்றும் பீட்டர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T11:19:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் இருப்பவரின் வாக்குமூலத்தால் மகிந்த கைது செய்யப்படலாம்! அநுராதபுர பேரணி மேடையில் இருந்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-rajapaksa-will-also-face-imprisonment-1789274275"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-rajapaksa-will-also-face-imprisonment-1789274275</id>
            <summary type="text">
சிறையில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர், மகிந்தவுக்காகதான் செய்தோம், அவரிடம் தான் பணத்தைக் கொடுத்தோம் என பொய்யாக வாக்குமூலம் வழங்கினால், மகிந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>
சிறையில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர், மகிந்தவுக்காகதான் செய்தோம், அவரிடம் தான் பணத்தைக் கொடுத்தோம் என பொய்யாக வாக்குமூலம் வழங்கினால், மகிந்த ராஜபக்ச கைது செய்யப்படுவார்&nbsp;என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.</p><p> இன்று இப்படித்தான் நியாயமற்ற முறையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.&nbsp;</p><p>அநுராதபுரத்தில் நேற்றையதினம்(12.09.2026) இடம்பெற்ற பொதுஜன பெரமுன கட்சியின் மக்கள் பேரணியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>மகிந்தவும் கைது செய்யப்படுவார்..</h2><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p> 

எந்தவொரு சாட்சியங்களும் இன்றி இந்த அரசாங்கம் நாமல் ராஜபக்சவை கைது செய்துள்ளது. இதுதான் சட்டமா.</p><p>

தற்போது சிறையில் இருக்கும் போதைப் பொருள் கடத்தல்காரர்கள், மகிந்த ராஜபக்சவுக்காகதான் நாங்கள் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டோம், அவரிடம் பெருந்தொகை பணத்தினைக் கொடுத்துள்ளோம் என சாட்சியளித்தால் என்ன நடக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faa0595a-c76a-448e-8a78-db4346570b0b/26-6aa634825a506.webp' /></p><p>
</p><p>
அந்த போதைப்பொருள் வர்த்தகர்கள் அரசாங்கத்தின் சாட்சியாளர்களாக மாறுவார்கள். எமது தலைவர் மகிந்த சிறையில் அடைக்கப்படுவார். இது மிகவும் ஆபத்தான ஒரு விடயம்.
</p><p>
வாயில் பிட்டு வைத்திருப்பது போல அமைதியாக இருக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் நான் ஒன்றை கூற விரும்புகின்றேன்.
</p><p>
இந்த லொத்தர் சீட்டிழுப்பில் சிறைக்குச் செல்லப்போகும் அடுத்த அதிர்ஷ்டசாலி நீங்களாக இருக்கலாம். தவறு செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், உள்ளே செல்ல வாய்ப்புக்கள் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f944d29c-00e5-487f-bcbb-74c614b8a5de/26-6aa634832ef2e.webp' />&nbsp;</p><p> </p><p>


ஹிட்லர் காலத்து கெஸ்டபோ பொலிஸாரும், அநுர குமார வசம் இருக்கும் பொலிஸாரும் ஒன்றுதான். சட்டம் சமமாக பிரயோகப்படுத்தப்படவில்லை. </p><p>

தற்போது இருக்கும் அநுர குமாரக்களும், விஜித ஹேரத்களும், லால் காந்தக்களும், வசந்த சமரசிங்கக்களும் இன்று கோடீஷ்வரர்களாக மாற கருப்புப் பணமே காரணம் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T11:13:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல் மீது தாக்குதல்: ஒருவர் பலி; மூவர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/commercial-ship-attacked-in-strait-of-hormuz-1789294047"></link>
            <id>https://canadamirror.com/article/commercial-ship-attacked-in-strait-of-hormuz-1789294047</id>
            <summary type="text">ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பாக மோதல் நிலவி வரும் வேளையில், அங்கு வணிகக் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பாக மோதல் நிலவி வரும் வேளையில், அங்கு வணிகக் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. </p><p>இந்தத் தாக்குதலில் ஒருவர் பலியானதாகவும், 3 பேர் காயமடைந்ததாகவும் ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0365f89c-86b9-4135-a888-91394b34588e/26-6aa675e0c40de.webp' /></p><p>

”ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஹெங்காம் மற்றும் கெஷ்ம் தீவுகளின் கடற்கரைக்கு அருகே இன்று அதிகாலை 5 மணியளவில் வணிகக் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், ஒருவர் பலியானார். மூவர் காயமடைந்துள்ளனர்” என கெஷ்ம் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>தாக்குதல் யாரால் நடத்தப்பட்டது போன்ற விவரங்களை அவர்கள் குறிப்பிடவில்லை.


</p><p>ஹோர்முஸ் நீரிணையில் உள்ள மிகப்பெரிய தீவான கெஷ்மைச் சுற்றி நேற்று இரவு பல தாக்குதல்கள் நடைபெற்றதாகப் பதிவாகியுள்ளது.</p><p>

ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ள நிலையில், அதுதொடர்பாக ஓமனுக்கு ஈரானுக்கும் இடையில் நாளை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், அதற்கு ஒரு நாள் முன்னதாக இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
</p><p>
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் 6 மாதங்களுக்கும் மேலாகத் தொடரும் இந்தப் போரில், ஹோர்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாடு மோதலுக்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
</p><p>
அமெரிக்கா - ஈரான் இடையே சில வாரங்களுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த போர் மீண்டும் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் ஹோர்முஸ் நீரிணையில் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.</p><p>ஆறு மாதங்களுக்கு மேலாகத் தொடரும் இந்த போரால், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வாரம் மட்டுமே கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 100 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-13T11:11:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கழுத்து அறுக்கப்பட்டு கிடந்த மாமனார்.. மருமகள் செய்த சம்பவம் ; 309 முறை சென்ற தொலைபேசி அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/daughter-in-law-allegedly-hires-hitmen-1789297871"></link>
            <id>https://jvpnews.com/article/daughter-in-law-allegedly-hires-hitmen-1789297871</id>
            <summary type="text">உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள இந்திரா நகர் பகுதியில் பிரபல தொழிலதிபர் கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு மர்மமான முறையில் கொல...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள இந்திரா நகர் பகுதியில் பிரபல தொழிலதிபர் கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். </p><p style="text-align: justify; ">
 
ஆரம்பத்தில் இது வெளியாட்களின் கைவரிசை போல் தெரிந்தாலும், வீட்டில் எந்தப் பணமும் நகைகளும் திருடப்படாதது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7407d0c2-dc15-4590-87b7-1897dedd42b3/26-6aa684d683463.webp' /></p><h2 style="text-align: justify; ">திட்டமிட்ட கொலை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">தீவிர விசாரணைக்குப் பிறகு, வினீத்தின் மருமகள் தான் தன் மாமனாரை தீர்த்துக்கட்ட கூலிப்படையை ஏவியது அம்பலமாகியுள்ளது.
</p><p style="text-align: justify; "> 
வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டதாலும், பண செலவுகளில் மாமனார் கட்டுப்பாடுகளை விதித்ததாலும் ஏற்பட்ட ஆத்திரமே இந்த திட்டமிட்ட கொலைக்கு முக்கிய காரணமாகும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">
 
வினீத்தின் முன்னாள் ஊழியரான&nbsp; மற்றும் அவரது கூட்டாளி ஆகியோர் இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். </p><p style="text-align: justify; ">கொலை நடக்கும்போது குடும்பத்துடன் விருந்துக்கு சென்றிருந்த ஷாலு, விஷாலுடன் கடந்த மே மாதத்திலிருந்து 309 முறை போனில் பேசியுள்ளதும், பல தகவல்களை அழித்திருப்பதும் சைபர் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; "> 
இதற்காக 6 இலட்சம் ரூபாய்க்குப் பேரம் பேசப்பட்டு, ஷாலு கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-13T11:11:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவேக நெடுஞ்சாலை பொதுப் பேருந்துகளுக்கு அவசர அறிவிப்பு: உறுதியாக நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/seat-belts-mandatory-for-buses-on-expressways-1789296892"></link>
            <id>https://tamilwin.com/article/seat-belts-mandatory-for-buses-on-expressways-1789296892</id>
            <summary type="text">அதிவேக நெடுஞ்சாலைகளில் இயங்கும் பொதுப் பேருந்துகளில் ஆசனப்பட்டியின் பயன்பாடு செப்டெம்பர் 19ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆண...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிவேக நெடுஞ்சாலைகளில் இயங்கும் பொதுப் பேருந்துகளில் ஆசனப்பட்டியின் பயன்பாடு செப்டெம்பர் 19ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. </p><p>

ஆசனப்பட்டி வசதிகள் இல்லாத பேருந்துகள், ஆசனப்பட்டி அணியத் தவறும் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.</p><h2>புதிய விதிமுறை</h2><p> </p><p>

இந்த புதிய விதிமுறை குறித்து பேருந்து பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேலியகொட அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகளால் விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. </p><p>

பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த நடவடிக்கை செப்டெம்பர் 19 முதல் உறுதியாக நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.கே.சந்திரபால உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f23b5fb2-3147-4446-b386-d16d46fc6aca/26-6aa684a777e90.webp' /></p><h2>அபராதம் அல்லது சட்ட நடவடிக்கை</h2><p> </p><p>

விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக அபராதம் அல்லது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், நடைமுறைத் திகதிக்கு முன்னர் மேலதிக விழிப்புணர்வு திட்டங்கள் நடத்தப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
</p><p>
இதேவேளை அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பொதுப் போக்குவரத்து பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களின் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது எதிர்வரும் 19ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T11:10:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுக்கு இரக்கமற்ற தண்டனை! பகிரங்கமாக அறிவித்தார் ஜனாதிபதி அநுர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-bomb-blast-sri-lanka-1789292145"></link>
            <id>https://tamilwin.com/article/easter-bomb-blast-sri-lanka-1789292145</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய எந்தவொரு நபருக்கும் கருணை காட்டாது அனைவருமே கடுமையாக தண்டிக்கப்படுவர் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாந...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய எந்தவொரு நபருக்கும் கருணை காட்டாது அனைவருமே கடுமையாக தண்டிக்கப்படுவர் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். </p><p>

பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற மக்கள் கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

முன்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் மக்கள் நலன் சார்ந்த அரசாங்கங்களாக இருக்கவில்லை.</p><h3>இரக்கமற்ற தண்டனை&nbsp;</h3><p>ஊழல் நிறைந்த அந்த அரசாங்கங்கள் திட்டமிட்டு குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஊழல்வாதிகளையே பாதுகாத்தன.</p><p>

நாட்டில் வேரூன்றி இருக்கும் பாதாள உலகக் குழு மற்றும் போதைப் பொருள் வர்த்தகத்தின் முழுமையாக இல்லாதொழிப்பதே எமது அரசாங்கத்தின் முக்கிய பணி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7ceef95-e36d-4f44-9900-16a0226b2b62/26-6aa68334e0779.webp' />&nbsp; &nbsp;</p><p> </p><p>

இந்தக் குற்றங்களோடு தொடர்புடைய எந்தவொரு நபருக்கும் இரக்கம் காட்டப்படமாட்டாது.</p><p> 

தங்களுக்கு எதிராக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டதற்காக, தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. </p><p> 

தமக்கு எதிரான செய்தியை எழுதியதற்காக துப்பாக்கியால் ஊடகவியலாளர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19f4ef49-297a-49ae-88d4-6725d6141f14/26-6aa68335b9e59.webp' /></p><p> 

வாக்குகளைப்பெற்று, ஆட்சியதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு நாட்டில் பாரிய குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் இருக்கின்றார்கள். இந்தக் குற்றங்களுக்கு ஒருபோதும் இரக்கம் காட்டப்படமாட்டாது. </p><p>

இத்தகைய குற்றங்களுக்கு உரிய தண்டனை வழங்குதே தேசிய மக்கள் சக்தியின் பணி. அதனை நாங்கள் சரியாக செய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T11:04:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈழத்தமிழர்களுக்கு சாதகமான களம் ஜெனீவா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/geneva-is-a-favorable-arena-for-eelam-tamils-1789297055"></link>
            <id>https://ibctamil.com/article/geneva-is-a-favorable-arena-for-eelam-tamils-1789297055</id>
            <summary type="text">ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கு இன்றைக்கு இருக்கின்ற ஒரு சர்வதேச களம் ஜெனீவா எனவும் வேறு களம் எங்களுக்கு இல்லை எனவும் அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கு இன்றைக்கு இருக்கின்ற ஒரு சர்வதேச களம் ஜெனீவா எனவும் வேறு களம் எங்களுக்கு இல்லை எனவும் அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
</p><p>

ஐபிசி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், எங்களுக்கு இன்றைக்கு இருக்கின்ற சர்வதேச களமான ஜெனீவாவில் எங்களுடைய அபிலாஷைகளை எங்களுடைய கவலைகளை அங்கு சொல்லக்கூடியதற்கான ஒரு சூழல் இருக்கின்றது.
</p><p>
அதனை எங்களுடைய ஆட்கள் எவ்வளவு தூரம் சரியாக பயன்படுத்தி இருக்கிறார் என்பதில் சில விமர்சனங்கள் இருக்கும்.

எங்களுக்கு கிடைத்த ஒரு சர்வதேச களத்தினை நாங்கள் உண்மையில உச்ச வகையில பயன்படுத்த வேண்டும்.
</p><p>
ஜெனீவா கூட்டத்தொடர் நடக்கின்ற போது சர்வதேச கவனம் முழுவதும் ஜெனிவாவில் குவிந்திருக்கும்.

அந்த நேரத்தில நாங்கள் ஒரு கருத்துக்களை முன் வைக்கின்ற போது போராட்டங்களை நடத்துகின்ற போது அது சர்வதேச ரீதியாக பேசப்படுவதற்கான சூழல் வலுவாக ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கும்.</p><p>

அடுத்தது இங்கே இருந்து எங்களுடைய பிரதிநிதிகள் ஜெனிவாவிற்கு சென்று கூட்டங்களை நடாத்தி இந்த கருத்துக்களை சொல்லுகின்ற போது சர்வதேச அரசின் பிரநிதிகள், மனித உரிமை அமைப்புகளுடைய பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களுடைய பிரதிநிதிகள் ஆகியோருக்கு எங்களுடைய கவலைகளை சொல்லக்கூடிய ஒரு வாய்ப்பு உருவாகும்.” என தெரிவித்தார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/5OriHmF5PHE" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T11:03:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்மார்ட்டல் திரைப்படம் 9 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/immortal-movie-9-days-box-office-1789295089"></link>
            <id>https://cineulagam.com/article/immortal-movie-9-days-box-office-1789295089</id>
            <summary type="text">இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி. பிரகாஷ் மற்றும் சென்சேஷனல் நடிகை கயாடு லோஹர் நடிப்பில் உருவாகி கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி வெளியான படம் இம்மார்ட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி. பிரகாஷ் மற்றும் சென்சேஷனல் நடிகை கயாடு லோஹர் நடிப்பில் உருவாகி கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி வெளியான படம் இம்மார்ட்டல். இப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் 9 நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><p>
</p><h2>
இம்மார்ட்டல்</h2><p>

அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படத்தில் ஜி.வி. <a href="https://www.dinamani.com/cinema/cinema-news/2026/Sep/12/gv-prakash-is-racking-up-consecutive-successes-in-both-acting-and-music" target="_blank">பிரகாஷ் குமார்</a> மற்றும் கயாடு லோஹர் இணைந்து நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்க, லொள்ளு சபா மாறன், கதிர், டி.எம். கார்த்திக் ஸ்ரீனிவாசன், குமார் நட்ராஜன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ae79f9e-9bfe-4e08-9f8f-c95c85047aac/26-6aa679f3b832e.webp' /></p><p>ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது. மேலும், சமீபத்தில் இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் சேர்ந்து கொண்டாடினார்கள். கதாநாயகன் ஜி.வி. பிரகாஷுக்கு ஒரு பைக்கை தயாரிப்பாளர் பரிசாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cb2bb17-94aa-43e9-bfe1-4bb6724c2144/26-6aa679f4701a9.webp' /></p><p>
</p><h3>
பாக்ஸ் ஆபிஸ்
</h3><p>
இம்மார்ட்டல் திரைப்படம் முதல் நாளிலிருந்து எவ்வளவு வசூல் செய்து வருகிறது என்பதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸில் 9 நாட்களை கடந்துள்ள இம்மார்ட்டல் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 9 நாட்களில் ரூ. 12 கோடி வசூலித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e746152-6c5c-4b6a-bda3-fe66f024f3a3/26-6aa679f527ffb.webp' /></p><p></p><p>இதன்மூலம், ஹாப்பி ராஜ், யூத், விஸ்வநாத் &amp; சன்ஸ், இருமுடி திரைப்படங்களுடன் சேர்ந்து இம்மார்ட்டல் திரைப்படமும் இந்த ஆண்டு ஜி.வி. பிரகாஷுக்கு மாபெரும் வெற்றியை தந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-13T11:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தத்திற்கு எதிராக கொழும்பில் வெடிக்கவுள்ள ஆர்ப்பாட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sjb-protests-in-colombo-against-22nd-amendment-1789293344"></link>
            <id>https://ibctamil.com/article/sjb-protests-in-colombo-against-22nd-amendment-1789293344</id>
            <summary type="text">22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டும் நடவடிக்கையையும் அமைதி வழியிலான ஆர்ப்பாட்டமொன்றையும் செப்டெம்பர் 24ஆம் திகதி முன்னெடுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டும் நடவடிக்கையையும் அமைதி வழியிலான ஆர்ப்பாட்டமொன்றையும் செப்டெம்பர் 24ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.</p><p> 

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பொன்று இன்று (13) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற போது உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p> அவர் மேலும் தெரிவிக்கையில், அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஜனநாயகத்தையும், நீதிமன்றத்தின் சுதந்திரத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் சீரழித்து வருகின்றது.</p><p></p><h2>தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்</h2><p> 

22 ஆவது திருத்தத்திற்கு எதிராக முதன்முதலில் ஐக்கிய மக்கள் சக்தியே குரல் கொடுத்தது. எதிர்காலத்தில் இதற்கு எதிரான நடவடிக்கைகளையும் முன்னெடுப்புகளையும் ஜனநாயக ரீதியில் மேலும் வலுப்படுத்துவோம். தற்போது நாடு பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85de0475-6e00-4c10-b96d-651059df5c32/26-6aa67fc6dfb90.webp' /></p><p> </p><p>தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த 22ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனநாயகத்தை அழித்து, தனிக் கட்சி ஆட்சியை கொண்டு வந்து, நாட்டின் அதிகாரத்தை பெலவத்தைக்குக் கொண்டு செல்லும் முயற்சியைத் தோற்கடிக்க வேண்டும்.</p><p> 

மக்களை ஏமாற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டனர். 

நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்கள் தேசிய மக்கள் சக்திக்கு உண்டு என்பதற்காக 220 இலட்சம் மக்களின் உரிமைகளை நசுக்க இடமளிக்க முடியாது. இதற்கு எதிராக பெரும் மக்கள் பலத்தை திரட்டுவோம்.</p><p>பிரஜைகளுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் எதிராக கொண்டுவரப்படும் இந்த மோசமான 22 ஆவது திருத்தத்தை தோற்கடிப்பதற்கான பெரும் நடவடிக்கை எடுக்கப்படும். இது அரசாங்கத்தின் மாற்றத்திற்கு வழிவகுக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T10:51:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ இந்த ஆண்டின் இறுதியில் உச்சத்தை அடையக்கூடும்! வெளிவந்துள்ள புதிய அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-in-sri-lanka-1789293970"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-in-sri-lanka-1789293970</id>
            <summary type="text">எல் நினோ காலநிலை நிகழ்வு இந்த ஆண்டின் இறுதியில் உச்சத்தை அடையக்கூடும் என ஐரோப்பிய காலநிலை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஐரோப்பிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ காலநிலை நிகழ்வு இந்த ஆண்டின் இறுதியில் உச்சத்தை அடையக்கூடும் என ஐரோப்பிய காலநிலை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
</p><p>
இது தொடர்பில் ஐரோப்பிய காலநிலை கண்காணிப்பு மையம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.</p><p> 

குறித்த அறிக்கையில் மேலும்,

2026ஆம் ஆண்டைத் தொடர்ந்து, 2027ஆம் ஆண்டும் வரலாற்றில் மிகக் கடுமையான வெப்பம் நிலவும் ஆண்டாக அமையக்கூடும்.</p><h2>உலகளாவிய வெப்பநிலை தொடர்ந்து அதிகரிக்கும்</h2><p>
</p><p>உலகளாவிய வெப்பநிலை தொடர்ந்து அதிகரிக்கும் நிலை காணப்படுவதுடன், 2027ஆம் ஆண்டிலும் கடுமையான வெப்பநிலை பதிவாகும் சாத்தியம் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c13b3619-be74-41ce-984e-a1fb347a2d3f/26-6aa67fe858fd2.webp' /></p><p> 

மேலும், எல் நினோ காலநிலை நிகழ்வு இந்த ஆண்டின் இறுதியில் உச்சத்தை அடையக்கூடும். அது இதுவரை பதிவானவற்றில் மிகவும் தீவிரமான எல் நினோ நிகழ்வுகளில் ஒன்றாக அமையக்கூடும்.</p><p> 

இதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் உலகின் பல பகுதிகளில் கடுமையான வெப்பநிலை மற்றும் அதனுடன் தொடர்புடைய காலநிலை மாற்றங்களின் தாக்கங்கள் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T10:51:09+00:00</updated>
        </entry>
    </feed>
