<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-05T08:34:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முத்து-மீனாவிற்கு ஷாக் கொடுத்த விஜயா, சிந்தாமணி அடுத்த பிளான்... சிறகடிக்க ஆசை சீரியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/siragadikka-aasai-serial-episode-1785916118"></link>
            <id>https://cineulagam.com/article/siragadikka-aasai-serial-episode-1785916118</id>
            <summary type="text">சிறகடிக்க ஆசை&amp;nbsp;சிறகடிக்க ஆசை சீரியலில், பாட்டி உடல்நிலை சரியில்லை என்பதால் அண்ணாமலை ஊருக்கு சென்றுவிட்டார். இந்த நேரத்தில் முத்து-மீனா வீட்டின் மா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சிறகடிக்க ஆசை&nbsp;</h2><p>சிறகடிக்க ஆசை சீரியலில், பாட்டி உடல்நிலை சரியில்லை என்பதால் அண்ணாமலை ஊருக்கு சென்றுவிட்டார். </p><p>இந்த நேரத்தில் முத்து-மீனா வீட்டின் மாடியில் தங்களுக்காக ஒரு அறை கட்ட ஏற்பாடு செய்கிறார்கள். அண்ணாமலை இல்லை என்பதால் விஜயாவை மேஸ்திறியிடம் பணம் கொடுக்க கேட்க விஜயா வழக்கம் போல் முடியாது என கூறிவிடுகிறார். </p><p>அந்த நேரத்தில் ஸ்ருதி விஜயாவிடம் சென்று இப்படியெல்லாம் செய்தால் யூடியூபில் போடலாம் என கூற பணம் கொடுக்க ஒப்புக் கொள்கிறார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/106ceaca-9c07-4bda-921f-5cdf0da81ce8/26-6a72f13ad197e.webp' /></p><h2>எபிசோட்</h2><p>
இன்றைய எபிசோடில், முதல் செங்கல் எடுத்து வைக்க அத்தை வர வேண்டும் என மீனா கேட்க முத்து என் அம்மா வரமாட்டாங்க என்கிறார். அந்த நேரத்தில் முத்து, ஸ்ருதியால் தான் அம்மாவை வர வைக்க முடியும் என கூற அவரும் அதையே செய்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07442f73-295a-44dc-8ac8-5bce73e7ba16/26-6a72f13ba5968.webp' /></p><p> </p><p>யூடியூபில் வைரல் ஆக ஸ்ருதி சொன்னது போல் மாடிக்கு வந்து விஜயா எல்லா விஷயத்தையும் செய்கிறார். பின் விஜயா தொடங்க மிகவும் சிறப்பாக முத்து-மீனா வீட்டு வேலைகள் தொடங்குகிறது. </p><p>அடுத்து சிந்தாமணி போட்ட பிளான் போல் ரேகா அவரது அப்பாவிற்காக வீட்டிற்கு வருகிறார், சத்யாவை உன் அப்பாவுடன் இங்கே இரு என்கிறார். அடுத்து சிந்தாமணி என்ன பிளான் போடுவாரோ பொறுத்திருந்து காண்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f614c153-dfd6-4b87-814f-78c4ed69118f/26-6a72f13c70856.webp' /></p>]]></content>
            <updated>2026-08-05T08:30:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[52-வது பர்த்டே!! நடிகை கஜோல் தேவ்கனின் சொத்து மதிப்பு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/kajol-has-an-estimated-net-worth-of-rs-240-crores-1785918399"></link>
            <id>https://viduppu.com/article/kajol-has-an-estimated-net-worth-of-rs-240-crores-1785918399</id>
            <summary type="text">கஜோல்1992 வெளிவந்த Bekhudi என்கிற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கஜோல். தொடர்ந்து பாலிவுட்டில் நடித்து வந்த இவர், தமிழில் 1997ல் வெளிவந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கஜோல்</h2><p>1992 வெளிவந்த Bekhudi என்கிற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கஜோல். தொடர்ந்து பாலிவுட்டில் நடித்து வந்த இவர், தமிழில் 1997ல் வெளிவந்த மின்சார கனவு படத்தில் நடித்தார்.

இதன்பின் பல ஆண்டுகள் கழித்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்திருந்தார்.</p><p> இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் இவர் நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் கஜோல்.

இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e476497-fb14-457f-b011-e79ca8de78e8/26-6a72f3c14c3bb.webp' /></p><p> </p><p>கிட்டத்தட்ட 33 ஆண்டுகளாக உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் கஜோல், தற்போது வரை நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். ஆகஸ்ட் 5 ஆம் தேதி இன்று தன்னுடைய 52வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். </p><p>ஒரு படத்திற்கு ரூ. 4 கோடி வரை சம்பளமாக வாங்கும் நடிகை கஜோலின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ. 240 கோடி முதல் ரூ. 249 கோடி வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T08:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[க.பொ.த உயர்தர - புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/al-examination-scholarship-examination-bad-weather-1785917107"></link>
            <id>https://tamilwin.com/article/al-examination-scholarship-examination-bad-weather-1785917107</id>
            <summary type="text">5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெறவிருக்கும் திகதிகளில்&amp;nbsp;மழை பெய்தால், பாதிப்புகளைக் கண்காணித்து உரிய நடவடிக்கைகளை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெறவிருக்கும் திகதிகளில்&nbsp;மழை பெய்தால், பாதிப்புகளைக் கண்காணித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க ஒரு சிறப்புப் பிரிவு அமைக்கப்படும் என்று பேரிடர் மேலாண்மை மையம் அறிவித்துள்ளது.</p><p>தற்போது நிலவும் மோசமான வானிலையை கருத்திற்கொண்டு நடைபெறவுள்ள புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகளை (GCE A/L) நடத்துவது தொடர்பாக இன்று (05) ஒரு சிறப்புக் கலந்துரையாடல் இடம்பெற்றது.</p><p>வானிலை ஆய்வுத் திணைக்களம், பேரிடர் மேலாண்மை மையம் (DMC) மற்றும் பரீட்சைகள் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.</p><h2>பேரிடர் மீட்பு நடவடிக்கைகள்&nbsp;</h2><p>இதன்போது, எதிர்வரும் நாட்களில் மோசமான வானிலை நிலவினாலும், பரீட்சைகள் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/617a5ad3-b26f-48ed-a5b2-f9c62d7126e6/26-6a72f2cb880dc.webp' /></p><p>அதற்கமைய, ஒகஸ்ட் 6, 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் மழை பெய்தால், பரீட்சை நடவடிக்கைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்காணித்து, அதற்கு பதிலளிக்கும் வகையில் தனது செயல்பாட்டு அறையில் ஒரு சிறப்புப் பிரிவு அமைக்கப்படும் என்று பேரிடர் மேலாண்மை மையம் அறிவித்துள்ளது.
</p><p>
 

வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் உதவி வழங்குவதற்காக, படகுகளும் பேரிடர் மீட்புக் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. </p><p>

 

2026ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை, ஒகஸ்ட் 9ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள 2,723 பரீட்சை மையங்களில் நடைபெற உள்ளது.</p><p>

 

அதேநேரம், 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை, ஒகஸ்ட் 10 முதல் செப்டெம்பர் 5ஆம் திகதி வரை 2,532 பரீட்சை மையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T08:28:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனிதர்களால் முடியவில்லை; Cryptography துறையில் AI வரலாற்றுச் சாதனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ai-achieves-historic-milestone-field-cryptography-1785918562"></link>
            <id>https://canadamirror.com/article/ai-achieves-historic-milestone-field-cryptography-1785918562</id>
            <summary type="text">&amp;nbsp;உலகின் தலைசிறந்த கிரிப்டோகிராஃபி வல்லுநர்கள் இரண்டு ஆண்டுகள் தீவிரமாக ஆராய்ந்தும் கண்டுபிடிக்கத் தவறிய கணிதவியல் பிழையை (Mathematical Flaw), இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உலகின் தலைசிறந்த கிரிப்டோகிராஃபி வல்லுநர்கள் இரண்டு ஆண்டுகள் தீவிரமாக ஆராய்ந்தும் கண்டுபிடிக்கத் தவறிய கணிதவியல் பிழையை (Mathematical Flaw), இந்த AI மாடல் வெறும் 60 மணி நேரத் தேடலில் மிகத் துல்லியமாகக் கண்டுபிடித்து உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
</p><p>
செயற்கை நுண்ணறிவுத் (AI) துறையில் முன்னணி நிறுவனமான ‘ஆந்த்ரோபிக்’ (Anthropic) உருவாக்கியுள்ள தனது அதிநவீன ‘க்ளாட் மைத்தோஸ்’ (Claude Mythos) என்ற மாடல், தகவல் பாதுகாப்புத் துறையில் (Cryptography) பெரும் வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f6fb970-d96a-4295-8101-02ef53f36bf5/26-6a72f463f32b0.webp' /></p><h2>&nbsp;60 மணி நேரத் தேடலில் மிகத் துல்லியமாகக் கண்டுபிடிப்பு</h2><p> </p><p>

எதிர்காலக் குவாண்டம் கணினிகளின் அச்சுறுத்தலில் இருந்து டிஜிட்டல் தகவல்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டு, அமெரிக்கத் தேசியத் தரநிலை அமைப்பால் (NIST) பரிசீலிக்கப்பட்டு வந்த ‘HAWK’ என்ற டிஜிட்டல் கையொப்ப அமைப்பிலேயே இந்த பிழை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 மனித வல்லுநர்கள் இரண்டு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகும் இதைக் கவனிக்காத நிலையில், ‘க்ளாட் மைத்தோஸ்’ இதன் உள் அமைப்பில் இருந்த கணிதச் சமச்சீர்மையைக் (Mathematical Symmetry) கண்டறிந்து, அதன் பாதுகாப்புக் குறியீட்டின் வலிமையை பாதியாகக் குறைத்துக் காட்டியுள்ளது.
</p><p>
மேலும், இணைய வங்கிச் சேவைகள் மற்றும் தகவல்தொடர்புகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் AES-128 குறியீட்டு அமைப்பிலும் ‘மோபியஸ் பிரிட்ஜ்’ (Möbius Bridge) என்ற புதிய தாக்குதல் நுட்பத்தை இந்த AI மாடல் சுயமாக உருவாக்கியுள்ளது. </p><p>தொடக்கத்தில் “இந்த வேலையைச் செய்ய முடியாது” என மறுத்த AI, ஆராய்ச்சியாளர்களின் தொடர் வழிகாட்டலுக்குப் பிறகு சுமார் 100 கோடி டோக்கன்களைப் (Tokens) பயன்படுத்திச் சுயமாகச் சிந்தித்து இந்த புதிய கணிதத் தாக்குதல் முறையைக் கண்டறிந்துள்ளது.</p><p>
தற்போது இந்த பிழைகள் கண்டறியப்பட்ட HAWK அமைப்பு பயன்பாட்டில் இல்லாததாலும், AES-128 சோதனைக் பதிப்பிலேயே ஆய்வு செய்யப்பட்டதாலும் நடைமுறையில் உள்ள இணைய வங்கி அல்லது பொதுமக்களின் தகவல்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என ஆந்த்ரோபிக் தெளிவுபடுத்தியுள்ளது. </p><p>

அதேசமயம் , மனித சங்கேத வல்லுநர்களால் பல ஆண்டுகள் கண்டறிய முடியாத சிக்கலான கணிதக் குறைபாடுகளை AI மாடல்கள் சில மணி நேரங்களில் கண்டுபிடிப்பது, எதிர்காலத் தகவல்தொடர்பு பாதுகாப்புத் துறையில் ஒரு புதிய சவாலாக பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T08:27:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[துபாயில் தொழிற்சாலை பகுதியில் ஏற்பட்ட 7 குண்டு வெடிப்புகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dubai-jebel-ali-explosions-spark-massive-fire-1785918285"></link>
            <id>https://news.lankasri.com/article/dubai-jebel-ali-explosions-spark-massive-fire-1785918285</id>
            <summary type="text">துபாயின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஜெபெல் அலி தொழிற்சாலை மண்டலம் இன்று அதிகாலை பல குண்டு வெடிப்புகளால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

20 நிமிடங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாயின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஜெபெல் அலி தொழிற்சாலை மண்டலம் இன்று அதிகாலை பல குண்டு வெடிப்புகளால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
</p><p>
20 நிமிடங்களில் குறைந்தது ஏழு வெடிப்புகள் நிகழ்ந்ததாக அரபு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வெடிப்புகள் தொடர்ந்து ஏற்பட்டதால், அந்த பகுதியில் பெரிய அளவில் புகை மூட்டம் பரவியது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3731d5a6-39eb-433c-8601-47dfd1007733/26-6a72f34ec5032.webp' /></p><p>சம்பவம் நடந்த இடம் ஜெபெல் அலி துறைமுகம் மற்றும் ஜெபெல் அலி சுதந்திர வணிக மண்டலம் (Jafza) அருகே அமைந்துள்ளது. இது 1985-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, தற்போது 150-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 11,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கும் முக்கிய வணிக மையமாகும்.</p><p>

வெடிப்புகளுக்குப் பிறகு தீ பரவிய நிலையில், அதிகாரிகள் உடனடியாக தீயணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதுவரை எந்த அமைப்பும் சம்பவத்திற்குப் பொறுப்பேற்கவில்லை. </p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">BREAKING: Yemen&#39;s Houthis have struck the industrial area of Jebel Ali in Dubai, UAE, per initial reports. Widespread fires and plumes of smoke over the area and multiple explosions in Dubai in the past few minutes. <a href="https://t.co/eMH9ASsNeT">pic.twitter.com/eMH9ASsNeT</a></p>&mdash; The Hormuz Letter (@HormuzLetter) <a href="https://x.com/HormuzLetter/status/2084798929317613584?ref_src=twsrc%5Etfw">August 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>மேலும், தீ விபத்தை படம் பிடித்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
ஜெபெல் அலி துறைமுகம், அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் மற்றும் முக்கிய நெடுஞ்சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளதால், இந்த சம்பவம் உலகளாவிய வணிகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
</p><p>
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் ஈரான் தொடர்பான பேச்சுவார்த்தைகள் குறித்து கருத்து தெரிவித்தார். அவர், “ஹார்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும். இல்லையெனில் ஈரான் கடுமையாக தாக்கப்படும்” என எச்சரித்தார்.
</p><p>
இந்த வெடிப்புகள் மற்றும் தீ விபத்து, மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் அரசியல் மற்றும் பாதுகாப்பு பதற்றங்களை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் உள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T08:22:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன மழையால் மூழ்கிய நிந்தவூர் வயல் நிலங்கள்: விவசாயிகள் பெரும் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1785912812"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1785912812</id>
            <summary type="text">அம்பாறை - நிந்தவூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கனமழை காரணமாக பல நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் நீரினுள்
மூழ்கியுள்ளதாக பிரதே...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை - நிந்தவூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கனமழை காரணமாக பல நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் நீரினுள்
மூழ்கியுள்ளதாக பிரதேச விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.</p><p>

இயற்கை சீற்றத்தின் திடீர் மாற்றத்தால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும்
சீரற்ற காலநிலை காரணமாக நிந்தவூர் விவசாயப் பிரிவுப் பகுதிகளில்
பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.</p><h2>நீர்மட்டம் உயர்வு</h2><p>

பால் பிடிக்கும் பருவத்திலும், வளர்ந்த நிலையிலும் காணப்பட்ட நெற்பயிர்கள்
பலத்த காற்றினால் தரைமட்டமாகச் சாய்ந்துள்ளதுடன், தொடர் மழையால் வயல்வெளிகளில்
நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகின்றது. </p><p>இதனால், பயிர்கள் அழுகும் நிலை
ஏற்பட்டுள்ளதோடு, நீரில் மூழ்கிய நெல் மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளதாகவும்
விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6043b434-f9bf-4c4e-b612-1892a3fc57e1/26-6a72f2a63bca9.webp' /></p><p>

வடிகான் வாய்க்கால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் மற்றும் நீர்வரத்து
அதிகரிப்பு காரணமாக வயல்களிலிருந்து மழைநீர் வெளியேறுவதில் பெரும் தாமதம்
ஏற்பட்டுள்ளது.</p><h2>பொருளாதார பேரிடி</h2><p>
</p><p>
எரிபொருள் விலை உயர்வு, உரம் மற்றும் விதை நெல் செலவுகளுக்கு மத்தியில் கடன்
பட்டாவது சிறுபோக/பெரும்போகச் செய்கையினை மேற்கொண்ட விவசாயிகளுக்கு இந்நிலைமை
பெரும் பொருளாதார பேரிடியை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c1e4ae8-d485-498a-8463-e185b9af9d1c/26-6a72f2a71bdca.webp' /></p><p>
</p><p>
எனவே, பாதிப்புக்குள்ளான வயல்நிலங்களை விவசாயத் திணைக்கள அதிகாரிகளும் கமநல
சேவை அலுவலர்களும் உடனடியாகப் பார்வையிட்டு, பயிர்ச்சேத மதிப்பீடுகளை விரைவாக
மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.</p><p>
</p><p>
அத்துடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டைப் பெற்றுக்கொடுக்க
அரசாங்கமும் விவசாயக் காப்பீட்டுச் சபையும் முன்வர வேண்டும் எனவும் அவர்கள்
வலியுறுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02498b63-e5c5-4a01-9888-2d44d2dfeceb/26-6a72f2a803215.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T08:22:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மன் திரைத்துறையினருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ள செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/german-govt-to-cut-film-funding-for-cost-saving-1785918064"></link>
            <id>https://news.lankasri.com/article/german-govt-to-cut-film-funding-for-cost-saving-1785918064</id>
            <summary type="text">அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டில், கலாச்சாரம் மற்றும் ஊடகங்களுக்காக ஒதுக்கப்படும் தொகை 8 சதவிகிதம் குறைக்கப்பட உள்ளது.


ஜேர்மனியின் 2027ஆம் ஆண்டுக்கான...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டில், கலாச்சாரம் மற்றும் ஊடகங்களுக்காக ஒதுக்கப்படும் தொகை 8 சதவிகிதம் குறைக்கப்பட உள்ளது.</p><p>


ஜேர்மனியின் 2027ஆம் ஆண்டுக்கான ஃபெடரல் பட்ஜெட் திரைத்துறையினருக்கு ஏமாற்றம் அளிக்கக்கூடியதாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.</p><h3>

திரைத்துறையினருக்கு ஏமாற்றத்தை அளிக்கும் பட்ஜெட்
</h3><p>
ஜேர்மனியின் 2027ஆம் ஆண்டுக்கான ஃபெடரல் பட்ஜெட்டில், கலாச்சாரம் மற்றும் ஊடகத்துறைக்கு ஒதுக்கப்படும் தொகை, 2.57 பில்லியன் யூரோக்களிலிருந்து 2.36 பில்லியன் யூரோக்களாக குறைக்கப்படும் என அரசின் வரைவு மசோதா ஒன்று தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/921be116-11df-4f94-adca-d617a09b4fbb/26-6a72f2727a507.webp' /></p><p>

செலவுகளைக் குறைப்பதற்காக ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் தலைமையிலான அரசு இப்படி ஒரு நடவடிக்கையை எடுக்க இருக்கும் நிலையில், German Federal Film Fund (DFFF) மற்றும் German Motion Picture Fund (GMPF) என்னும் அரசின் நிதியுதவிகள், 50 மில்லியன் யூரோக்கள் குறைக்கப்பட உள்ளதால், 250 மில்லியன் யூரோக்களாக இருந்த நிதியுதவி, 200 மில்லியன் யூரோக்களாக குறைய உள்ளது.&nbsp;</p><p></p><p>
விடயம் என்னவென்றால், இதற்கு முன் அரசின் நிதியுதவி 133 மில்லியன் யூரோக்களாக இருந்த நிலையில், இந்த ஆண்டு, அதாவது, 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம்தான் அதை 250 மில்லியன் யூரோக்களாக அதிகரிப்பதாக கலாச்சாரத் துறை அமைச்சரான Wolfram Weimer அறிவித்திருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a505c1c4-fa22-44e5-ac53-217c3101b7e0/26-6a72f271c571b.webp' /></p><p>

அதை நம்பி சர்வதேச அளவில் ஜேர்மன் சினிமாவை சிறப்புறச் செய்ய திரைத்துறையினர் திட்டமிட்டுக்கொண்டிருந்த நிலையில், அடுத்த ஆண்டு திரைத்துறைக்கு ஒதுக்கப்படும் தொகை 8 சதவிகிதம் குறைய இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T08:21:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீ(ச்)ஷாவின் அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா - கிளிநொச்சியில் பிரம்மாண்ட ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/food-festival-taste-celebrate-reecha-augest-1785914903"></link>
            <id>https://ibctamil.com/article/food-festival-taste-celebrate-reecha-augest-1785914903</id>
            <summary type="text">தமிழரின் தொன்மை மிக்க உணவு மரபை உலகறியச் செய்யும் வகையில் &quot;றீ(ச்)ஷாவின் அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா&quot; கிளிநொச்சி - இயக்கச்சியில் கோலாகலமாக ஆரம்பமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழரின் தொன்மை மிக்க உணவு மரபை உலகறியச் செய்யும் வகையில் "றீ(ச்)ஷாவின் அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா" கிளிநொச்சி - இயக்கச்சியில் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.
</p><p>
“உணவே மருந்து – மருந்தே உணவு” என்ற நம் மூதாதையர் வாக்கிற்கு உயிர் கொடுக்கும் வகையில், அறுசுவையும் அள்ளித் தரும் இந்த மாபெரும் உணவுத் திருவிழா எதிர்வரும் 7, 8, 9,10 ஆகிய நான்கு நாட்களும்&nbsp;றீச்ஷா வளாகத்தில் நடைபெறவுள்ளது.</p><h2>
தாயகமும் புலமும் கைகோர்க்கும் தருணம்
</h2><p>
இலங்கைத் தாயகத்தில் வாழும் தமிழர்கள் மட்டுமன்றி கனடா, லண்டன், ஜேர்மனி, சுவிஸ், பிரான்ஸ், அவுஸ்திரேலியா உள்ளிட்ட புலம்பெயர் நாடுகளில் வாழும் நம் தமிழ் உறவுகளும் இந்த உணவுத் திருவிழாவில் பங்குபற்றவுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51dae8b5-6cca-4e37-a380-732e559d1405/26-6a72f1ee495eb.webp' /></p><p>வடக்கு - கிழக்கின் பாரம்பரிய சுவையை தேடி புலம்பெயர் தமிழர்கள் பலர் தாயகம் நோக்கி பயணமாகியுள்ளனர். இது வெறும் திருவிழா அல்ல - தாயகத்துக்கும் புலத்துக்கும் இடையிலான சுவைப் பாலம்!</p><p>
உலகளாவிய சமையல் கலைஞர்கள்

இலங்கையின் புகழ்பெற்ற சமையல் வல்லுநர்களுடன் சர்வதேச தரம் வாய்ந்த சமையல் கலைஞர்களும் இணைந்து, ஒடியல் கூழ், பிட்டு, பனங்காய் பணியாரம் நண்டு பிரட்டல் வரை நாவூறும் பாரம்பரிய உணவுகளை பரிமாறவுள்ளனர்.</p><p>றீ(ச்)ஷாவின் பிரம்மாண்டமான உணவுத் திருவிழாவிற்கு Qick Food, IBC தமிழ், LANKASRI ஆகியன அனுசரணை வழங்குகின்றன.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">சிறப்பம்சங்கள்&nbsp;&nbsp;</span></h2><p>
</p><ul><li>100க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகள்
</li><li>நேரடி சமையல் செய்முறை விளக்கங்கள்
</li><li> பனை, தென்னை சார்ந்த உணவுகளுக்கான தனி அரங்கு</li><li>சிறுவர்களுக்கான பாரம்பரிய சிற்றுண்டி போட்டிகள்</li><li> கலை கலாசார நிகழ்ச்சிகள்

தமிழர் உணவு மரபின் தனித்துவத்தை, ஆரோக்கியத்தை, சுவையை ஒரே இடத்தில் அனுபவிக்க இது ஒரு அரிய வாய்ப்பு. </li></ul><p> அட்சய பாத்திரம்போல அள்ள அள்ள குறையாத சுவையை ருசிக்க றீ(ச்)ஷாவின் உணவுத் திருவிழாவிற்கு வாருங்கள்!&nbsp;</p><p>
நுழைவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள<b> 077 777 2353 / 077 777 2354</b> என்ற இலக்கங்களை தொடர்புகொள்ளுங்கள்.</p><p>அனைவரும் வருக! சுவைத்து மகிழ்க!</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T08:18:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக தாய்ப்பால் வாரம் 2026: குழந்தைக்கு முதல் தடுப்பூசியான சீம்பாலின் முக்கியத்துவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/world-breastfeeding-week-benefits-of-colostrum-1785916361"></link>
            <id>https://manithan.com/article/world-breastfeeding-week-benefits-of-colostrum-1785916361</id>
            <summary type="text">world breastfeedingweek : ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7ஆம் தேதி வரை உலகம் முழுவதும் ‘உலக தாய்ப்பால் வாரம்’&amp;nbsp; கடைப்பிடிக்கப்படுகிறது. புதிதாகப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>world breastfeedingweek : ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7ஆம் தேதி வரை உலகம் முழுவதும் ‘உலக தாய்ப்பால் வாரம்’&nbsp; கடைப்பிடிக்கப்படுகிறது. </p><p>புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியம், வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்துவதில் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதுடன் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த வாரத்தின் முக்கிய நோக்கமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7c74062-08e7-4922-81bf-34a5104e6939/26-6a72f11e9fdbb.webp' /></p><h2>

சீம்பால் என்றால் என்ன?
</h2><p>குழந்தை பிறந்த பிறகு தாயின் மார்பகங்களில் இருந்து முதன்முதலாக சுரக்கும் அடர்த்தியான மஞ்சள் நிறப் பால் சீம்பால் எனப்படுகிறது. அளவில் குறைவாக இருந்தாலும், இது சாதாரண பால் அல்ல; புதிதாகப் பிறந்த குழந்தையின் உடலுக்குத் தேவையான மிக முக்கியமான ஊட்டச்சத்துகளையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கொண்ட இயற்கையின் அற்புதமான உணவாகும்.
</p><p>
பிறந்த குழந்தையின் சிறிய வயிற்றுக்கு ஏற்ற வகையில் மிகச் சரியான அளவில் உருவாகும் சீம்பால், குழந்தையின் வாழ்க்கையின் முதல் பாதுகாப்பு அரணாக செயல்படுகிறது. இதனால்தான் மருத்துவர்கள் இதனை “இயற்கையின் முதல் தடுப்பூசி” என்று குறிப்பிடுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3afcc665-5fff-41ac-a623-6d2d599ab68c/26-6a72f11f581ba.webp' /></p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">சீம்பாலின் முக்கிய நன்மைகள்</span></p><p><b>இயற்கையின் முதல் தடுப்பூசி
</b></p><p>சீம்பாலில் அதிக அளவில் காணப்படும் Immunoglobulin A (IgA) எனப்படும் நோய் எதிர்ப்பு புரதம், குழந்தையின் குடல் மற்றும் சுவாசப் பாதைகளில் பாதுகாப்புப் படலமாக செயல்படுகிறது. இதன் மூலம் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா, வைரஸ் உள்ளிட்ட கிருமிகளின் தாக்குதலிலிருந்து குழந்தையை பாதுகாக்க உதவுகிறது.</p><p>
பிறந்த உடனேயே குழந்தைக்கு கிடைக்கும் இந்த இயற்கையான பாதுகாப்பு, அதன் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாக வளர்வதற்கு அடித்தளமாக அமைகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7ca30dd-add9-4060-ab9c-47a3e295a280/26-6a72f1200859b.webp' /></p><p><b>குடல் ஆரோக்கியம் மற்றும் செரிமான வளர்ச்சி
</b></p><p>பிறந்த குழந்தையின் செரிமான மண்டலம் மிகவும் மென்மையான நிலையில் இருக்கும். சீம்பாலில் உள்ள சிறப்பு ஊட்டச்சத்துகள் குழந்தையின் குடல் சுவர்களை வலுப்படுத்தி, ஆரோக்கியமான குடல் வளர்ச்சிக்கு உதவுகின்றன.</p><p>

மேலும், குழந்தையின் உடல் தாய்ப்பாலை எளிதாக ஏற்றுக்கொள்ளும் வகையில் செரிமான அமைப்பை தயார் செய்கிறது.</p><p><b>மஞ்சள் காமாலை ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவும்</b></p><p>
பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் மஞ்சள் காமாலையைத் தடுப்பதிலும் சீம்பால் முக்கிய பங்கு வகிக்கிறது. இது இயற்கையான லேசான மலமிளக்கியாக செயல்பட்டு, குழந்தையின் முதல் மலமான மெகோனியம் (Meconium) வெளியேற உதவுகிறது.

இதன் மூலம் உடலில் தேங்கக்கூடிய பிலிரூபின் அளவு குறைந்து, மஞ்சள் காமாலை ஏற்படும் வாய்ப்பு குறைய உதவுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0b62efe-5bb6-4f48-b7c0-608f407dce68/26-6a72f120ad530.webp' /></p><p>
</p><p><b>மூளை, கண் பார்வை மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவும்</b></p><p>
சீம்பாலில் உள்ள வைட்டமின் A, வைட்டமின் E, வைட்டமின் K, துத்தநாகம் (Zinc) உள்ளிட்ட அத்தியாவசிய சத்துகள் குழந்தையின் கண் பார்வை, மூளை வளர்ச்சி மற்றும் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு தேவையான ஆதரவை வழங்குகின்றன.

குழந்தையின் ஆரம்பகால வளர்ச்சியில் இந்த ஊட்டச்சத்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
</p><p><b>குழந்தையின் வயிற்றுக்கு ஏற்ற உயர்தர உணவு</b></p><p>
சீம்பாலில் உள்ள புரதச்சத்துகள் உயர்தரமானவை. அதே நேரத்தில், கொழுப்பு அளவு குறைவாக இருப்பதால் புதிதாகப் பிறந்த குழந்தையின் மென்மையான வயிற்றில் எளிதாக செரிமானமாகிறது.
</p><p>
குழந்தையின் தேவைக்கேற்ற வகையில் இயற்கையால் உருவாக்கப்பட்ட முழுமையான முதல் உணவாக சீம்பால் விளங்குகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6219c456-6097-4332-b4f7-1f71aab2d9d5/26-6a72f1215c6d1.webp' /></p><p></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">முதல் ஒரு மணி நேரம் ஏன் முக்கியம்?</span></h2><p>மருத்துவர்கள் கூறுவதன்படி, குழந்தை பிறந்த முதல் ஒரு மணி நேரம் “தங்க நேரம்” (Golden Hour) எனப்படுகிறது. இந்த முக்கியமான நேரத்திற்குள் குழந்தைக்கு தாய்ப்பால், குறிப்பாக சீம்பால் வழங்குவது அதன் வாழ்நாள் ஆரோக்கியத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைக்கிறது என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.</p><p>சில இடங்களில் நிலவும் தவறான நம்பிக்கைகள் காரணமாக சீம்பாலை பிழிந்து அகற்றும் பழக்கம் காணப்படுகிறது. ஆனால், குழந்தைக்கு மிகவும் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்த இந்த அரிய உணவை ஒருபோதும் வீணாக்கக் கூடாது என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். </p><p>தாய்ப்பால் என்பது குழந்தைக்கு கிடைக்கும் முதல் உணவு மட்டுமல்ல; அது அன்பு, பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தின் முதல் பரிசாகும். எனவே, குழந்தை பிறந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் சீம்பால் வழங்கி, ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்க அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T08:16:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கை வருகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-foreign-secretary-visits-sri-lanka-1785917773"></link>
            <id>https://jvpnews.com/article/indian-foreign-secretary-visits-sri-lanka-1785917773</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (05) காலை இலங்கைக்கு வருகை தந்துள்ளார். 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (05) காலை இலங்கைக்கு வருகை தந்துள்ளார். 

வாட்டுக்கு வருகை தந்த இந்திய வெளியுறவுச் செயலாளரை , இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, வரவேற்றார்.
</p><p>
இந்த விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்திக்கவுள்ளதோடு, ஏனைய அதிகாரிகளையும் அவர் சந்திக்கவுள்ளார் என்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8ccb7fa-837d-4f66-baf1-456a97f36b35/26-6a72f14f41048.webp' /></p><p>
</p><p>
இந்த விஜயமானது, இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், ஏற்கனவே நடைபெற்று வரும் உயர்மட்டத் தொடர்புகளை மேம்படுத்தி, இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய ஒத்துழைப்புத் துறைகளை முன்னெடுத்துச் செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T08:14:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[2030இற்குள் விரிவாகும் அதிவேக நெடுஞ்சாலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-add-132-km-to-expressway-network-by-2030-1785914833"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-add-132-km-to-expressway-network-by-2030-1785914833</id>
            <summary type="text">2030ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கையின் தேசிய அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பு&amp;nbsp; கூடுதலாக 132 கிலோமீட்டர் அளவுக்கு விரிவாக்கப்படும் என போக்குவரத்து அமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>2030ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கையின் தேசிய அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பு&nbsp; கூடுதலாக 132 கிலோமீட்டர் அளவுக்கு விரிவாக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த விரிவாக்கத்திற்குப் பங்களிக்கும் நான்கு முன்னெடுப்புகளில், மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டு முக்கியப் பகுதிகளில் தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. </p><h2>நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகள்</h2><p>கடவத்தையிலிருந்து மிரிகம வரையிலான 37 கிலோமீட்டர் நீளமுள்ள முதல் கட்டப் பகுதியும், பொத்துஹேராவிலிருந்து கலகெதரா வரையிலான 33 கிலோமீட்டர் நீளமுள்ள மூன்றாம் கட்டப் பகுதியும் இதில் அடங்கும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fef77485-1ec1-434d-85be-f234a5979448/26-6a72ee95d4407.webp' /></p><p>நாட்டின் மத்திய வழித்தடம் முழுவதும் இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் இவ்விரு பிரிவுகளின் கட்டுமானப் பணிகளும் தீவிரமாக முன்னேறி வருகின்றன.
</p><p>
தற்போது நடைபெற்று வரும் பணிகளுக்குக் கூடுதலாக, குருநாகல் - தம்புள்ள அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்டமான குருநாகல் - கலேவெல வீதித் திட்டம் 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>38 கிலோமீட்டர் நீளமுள்ள இப்பிரிவின் மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 233 பில்லியன் ஆகும். இது, உள்நாட்டு கட்டுமான நிறுவனங்களின் சேவைகளைப் பயன்படுத்தும் வெளிப்படையான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த ஒப்பந்தப்புள்ளி செயல்முறையின் மூலம் வழங்கப்படும் </p><p>மேலும், 24 கிலோமீட்டர் நீளமுள்ள ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகளும் இந்த ஆண்டுக்குள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
</p><p>முதன்முறையாக, இந்த அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் சொந்த உள்நாட்டு நிதியிலிருந்து நிதியளிக்கப்படும். நிலையான தேசிய உள்கட்டமைப்பு வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, அரசாங்கத்தின் உத்திசார் அபிவிருத்திக் கொள்கைக் கட்டமைப்பை முழுமையாகப் பின்பற்றி இந்த முன்னெடுப்புகள் செயல்படுத்தப்படுகின்றன என்றும் அமைச்சர்&nbsp;பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T08:10:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் சொகுசு பேருந்துக்கு தீவைத்த மர்ம நபர்கள்.. வெளியான சிசிடிவி காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cctv-footage-kaduwela-bus-arson-attack-today-1785915933"></link>
            <id>https://tamilwin.com/article/cctv-footage-kaduwela-bus-arson-attack-today-1785915933</id>
            <summary type="text">கடுவெல பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் சொகுசுப் பேருந்து ஒன்றிற்கு இன்று (05) அதிகாலை முகமூடி அணிந்த இருவர் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றமை அப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடுவெல பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் சொகுசுப் பேருந்து ஒன்றிற்கு இன்று (05) அதிகாலை முகமூடி அணிந்த இருவர் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில், பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில்&nbsp;இச்சம்பவம் பதிவான சிசிடிவி காட்சிகள் கிடைக்கப் பெற்றுள்ளன.&nbsp;</p><p>இன்று அதிகாலை 2.30 மணி முதல் 2.45 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பேருந்திற்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.&nbsp;</p><p>இதனை கண்டு, அருகில் இருந்த மற்றொரு பேருந்திலிருந்த ஓட்டுநரும் நடத்துனரும் கூச்சலிட்டுள்ளனர். இதன்போதே அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.</p><h2>தனிப்பட்ட பகை..&nbsp;</h2><p>இதற்கிடையில், தீ வைக்கப்பட்ட பேருந்திற்குள் ஓட்டுநரும் நடத்துனரும் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், மற்றைய பேருந்திலிருந்த சகாக்களின் கூச்சலைக் கேட்டு அவர்கள் பேருந்திலிருந்து வெளியே குதித்து உயிர்தப்பியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3f0b5b0-44d1-43c7-a58c-2a6fa164ba1a/26-6a72ecc436422.webp' /></p><p>நெடுஞ்சாலை வழியாக கடுவெல - மாத்தறை இடையே இயக்கப்படும் சொகுசுப் பேருந்திற்கே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும், தீயினால் பேருந்து முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p><p>அதேநேரம், குறித்த பேருந்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கடுவெல - கொள்ளுப்பிட்டி சாதாரண சேவை பேருந்துகள் இரண்டும் தீயினால் லேசான சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.&nbsp;</p><p>

தனிப்பட்ட பகை காரணமாகவே இந்தத் தீ வைப்புச் சம்பவம் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T08:09:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாடு அரசின் 2026–27ஆம் ஆண்டுக்கான பாதீடு ; 1 கிராம் தங்க மோதிரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-nadu-budget-2026-27-thai-maman-gold-ring-1785917389"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-nadu-budget-2026-27-thai-maman-gold-ring-1785917389</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முதலமைச்சர் விஜய் தலமையிலான தமிழ்நாடு அரசின் 2026–27ஆம் ஆண்டுக்கான பாதீடு அறிக்கையில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முதலமைச்சர் விஜய் தலமையிலான தமிழ்நாடு அரசின் 2026–27ஆம் ஆண்டுக்கான பாதீடு அறிக்கையில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" மூலம் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளன. </p><p> 

குழந்தையின் பிறப்பைக் கொண்டாடும் வகையிலும், தாய்மையின் மகத்துவத்தையும் தாய்மாமனின் பாசத்தையும் போற்றும் வகையிலும், இந்த 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளதாக பாதீடு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2aca5215-b10d-4802-987c-ef54d769fa6a/26-6a72efce5d261.webp' /></p><p>
</p><p>
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளதுடன், திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்காக ரூ.560 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
</p><p>
பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்தத் திட்டம், அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு சேவைகளை மேலும் ஊக்குவிக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-05T08:07:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[குப்பையில் வீசப்பட்ட லொட்டரி சீட்டுக்கு ரூ.10.98 கோடி - தேடி கண்டுபிடித்த தூய்மை பணியாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/italian-garbagemen-recover-rs-10cr-lottery-ticket-1785917027"></link>
            <id>https://news.lankasri.com/article/italian-garbagemen-recover-rs-10cr-lottery-ticket-1785917027</id>
            <summary type="text">இத்தாலியில், பெண் ஒருவர் குப்பையில் வீசிய லொட்டரி சீட்டுக்கு ரூ.10.98 கோடி பரிசு விழுந்ததையடுத்து, அதனை குப்பையில் தேடி கண்டுபிடித்துள்ளனர். 

குப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இத்தாலியில், பெண் ஒருவர் குப்பையில் வீசிய லொட்டரி சீட்டுக்கு ரூ.10.98 கோடி பரிசு விழுந்ததையடுத்து, அதனை குப்பையில் தேடி கண்டுபிடித்துள்ளனர். </p><h3>

குப்பையில் இருந்த ரூ.10.98 கோடி லொட்டரி டிக்கெட்
</h3><p>
இத்தாலியை சேர்ந்த பெண் ஒருவர், குலுக்கலுக்கு பின்னர் அருகிலுள்ள கடைக்குச் சென்று லொட்டரி சீட்டை சரிபார்த்தபோது, அங்கிருந்த இயந்திரம் பணம் வழங்க முடியாது என்று காட்டியது. </p><p>

மிகப்பெரிய தொகைகளை சிறிய கடைகளில் பெற முடியாது என அந்த இயந்திரம் காட்டியதை, தனக்கு பரிசு விழவில்லை என தவறாக நினைத்த அந்த பெண் லொட்டரி சீட்டை கடையிலே விட்டு வந்துவிட்டார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b839051c-8bbd-47d6-a408-eec0b6d2ac1c/26-6a72ee6445ddf.webp' /></p><p>

வீட்டிற்கு சென்ற பின்னர், அவர் வழக்கமாகத் தேர்வு செய்யும் எண்களே வெற்றி பெற்றுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.&nbsp;அந்த எண்ணிற்கு 1 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.10.98 கோடி) பரிசு கிடைத்துள்ளது.</p><p>
அவர் மீண்டும் கடைக்கு சென்ற போது, ஏற்கனேவே அந்த சீட்டை குப்பையில் வீசி அதனை குப்பை லொறி எடுத்து சென்று விட்டது.&nbsp;</p><p></p><p> 

ஆனால் அந்த குப்பை லொறியை அவர்களால் கண்டுபிடிக்க முடிந்ததால் ஒரு கழிவு மேலாண்மை நிறுவனத்தின் உதவியுடன் பாதுகாப்பாக குப்பைகளை ஆராய்ந்து, ஒரு நாளுக்கு மேலாக தேடி, அந்த லொட்டரி சீட்டை கண்டறிந்துள்ளனர். </p><p>

ஆனால், அதிசயமாக அந்த லொட்டரி சீட் எந்த சேதமும் இல்லாமல் அப்படியே இருந்தது" என அதனை தேடிய SANB நிறுவனத்தின் நிர்வாகியான ராபர்டோ நிக்கோலா டோஸ்கானோ தெரிவித்துள்ளார். </p><p>

இதனை அந்த வெற்றி பெற்ற பெண்ணிடம் தெரிவித்த போது அவர் உணர்ச்சிவசப்பட்டு அழுதுள்ளார். தேடியதற்கான செலவை SANB நிறுவனதிற்கு வழங்க உள்ளார்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T08:05:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் மோசமான வறட்சி: உணவு உற்பத்தி பாதிக்கப்படலாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-drought-to-affect-food-production-1785912294"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-drought-to-affect-food-production-1785912294</id>
            <summary type="text">பிரித்தானியாவில் மோசமான வறட்சி காரணமாக உணவு உற்பத்தி பாதிக்கப்படலாம் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.


பிரித்தானியாவில், சுமார் 190 ஆண்டுகளில் இல்லாத அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் மோசமான வறட்சி காரணமாக உணவு உற்பத்தி பாதிக்கப்படலாம் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
</p><p>

பிரித்தானியாவில், சுமார் 190 ஆண்டுகளில் இல்லாத அளவில் தற்போது வறண்ட வானிலை நிலவிவருகிறது.
</p><p>
இந்நிலையில், அதன் காரணமாக உணவு உற்பத்தி கணிசமாக பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><h3>
உணவு உற்பத்தி பாதிக்கப்படலாம்</h3><p>

வறட்சி காரணமாக, பாண், பியர், காலை உணவுக்கான தானியங்கள் மற்றும் கால்நடைகளுக்கான தீவனங்கள் தயாரிக்கத் தேவையான, பார்லி, ஓட்ஸ், சிலவகை எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றின் உற்பத்தி, இந்த ஆண்டில் 19.5 மில்லியன் டன்களாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக Energy and Climate Intelligence Unit (ECIU) என்னும் ஆய்வமைப்பு தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16695edb-87dc-4911-b2aa-773e81d8a891/26-6a72dbe8295d1.webp' /></p><p>

1984ஆம் ஆண்டு, உணவு தானிய உற்பத்தி தொடர்பில் ஆவணப்படுத்தல் துவங்கியபிறகு, இதற்கு முன் 2020ஆம் ஆண்டு மேற்குறிப்பிட்ட தானியங்களின் உற்பத்தி 19.8 மெட்ரிக் டன்களாக இருந்ததே இதற்கு முன் குறைவான உற்பத்தியாக கருதப்படுகிறது. தற்போதைய நிலை அதைவிட மோசமாக காணப்படுகிறது.&nbsp;</p><p></p><p>

இதனால், விவசாயிகளுக்கு 390 மில்லியன் பவுண்டுகள் வரை வருவாய் இழப்பு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்த சூழலிலும், சில எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி ஓரளவு நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதே சற்றே ஆறுதலைக் கொடுக்கும் விடயமாகும்.
</p><p>
பிரித்தானியாவின் முக்கிய சாகுபடி பயிரான கோதுமையைப் பொருத்தவரை, மழையின்மையால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cba08af9-86aa-40f5-b230-3c84533995ff/26-6a72dbe8cdb83.webp' /></p><p>
தங்களால் முடிந்ததை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்னும் தீவிர முயற்சியில் விவசாயிகள் முன்கூட்டியே அறுவடை செய்ய, கிடைத்தது, வழக்கமான அளவில் பாதிதான் உள்ளது.
</p><p>
வழக்கமாக, சராசரியாக ஹெக்டேர் ஒன்றிற்கு 7.9 டன் கோதுமை விளையும் நிலையில், இம்முறை, வெறும் 6.8 டன் கோதுமைதான் விளைந்துள்ளதாக Agriculture and Horticulture Development Board (AHDB) என்னும் அமைப்பு தெரிவித்துள்ளது.</p><p>

ஆக, பிரித்தானியா தேசிய பாதுகாப்பை அதிகரிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், அதில் உணவு உற்பத்தி என்னும் விடயத்தையும் சேர்த்துக்கொள்ளுமாறு உணவுப்பொருட்கள் உற்பத்தியாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T08:05:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய இளம் கடத்தல்காரர்கள்- தமிழர் பகுதியில் தொடர் சோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-smugglers-caught-with-ice-drugs-1785916761"></link>
            <id>https://tamilwin.com/article/young-smugglers-caught-with-ice-drugs-1785916761</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கண்டறியும் நோக்கில், நடத்தப்பட்ட சோதனையில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கண்டறியும் நோக்கில், நடத்தப்பட்ட சோதனையில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p> 

இந்த நடவடிக்கை நேற்று(04.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>


இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அம்பாகஹவெல்ல பகுதியைச் சேர்ந்த 21 வயது முதல் 23 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><h2> 

இளம் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது</h2><p>
இந்த நடவடிக்கையின் போது, 2,800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் ஈட்டப்பட்டதாகச்
சந்தேகிக்கப்படும் 14,700 ரூபாய் ரொக்கப் பணமும் பொலிஸாரால் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0d5729f-7ed8-455a-bddb-be53454ad904/26-6a72edb3ac955.webp' /></p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக
சட்ட நடவடிக்கைகளுக்காக இங்ஹினியாகல பொலிஸ் நிலையத்தில்
ஒப்படைக்கப்பட்டுள்ளது. </p><p> 

இந்த நிலையில், சந்தேகநபர்களை விசாரணையின் பின்னர், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T08:01:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிம்பிளான வெள்ளை நிற உடையில் கலக்கும் காஜல் அகர்வால் போட்டோ ஷுட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/kajal-agarwal-latest-simple-attire-photoshoot-1785916622"></link>
            <id>https://cineulagam.com/article/kajal-agarwal-latest-simple-attire-photoshoot-1785916622</id>
            <summary type="text">காஜல் அகர்வால்நடிகை காஜல் அகர்வால், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து நிறைய ஹிட் படங்கள் கண்டவர். தமிழை தாண்டி தெலுங்கிலும் முன்னணி நாயகிய...</summary>
            <content type="html"><![CDATA[<h2>காஜல் அகர்வால்</h2><p>நடிகை காஜல் அகர்வால், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து நிறைய ஹிட் படங்கள் கண்டவர். </p><p>தமிழை தாண்டி தெலுங்கிலும் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் கடந்த சில வருடங்களுக்கு முன் கௌதம் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.</p><p>இவர் ஒரு மகனும் உள்ளார். அவ்வப்போது நடிகை காஜல் அகர்வால் தனது மகனின் புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம்.</p><p>கடந்த சில வாரங்களுக்கு முன் நடிகை காஜல் அகர்வால் நடித்த தி இந்தியா ஸ்டோரி என்ற வெப் தொடர் வெளியானது, மக்களின் வரவேற்பையும் பெற்றது.</p><p>தற்போது காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாவில் வெள்ளை நிற சிம்பிளான உடையில் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார், அதனை இப்போது பார்ப்போம்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T08:00:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கூட்டம் கூட்டமாக நடமாடித் திரியும் மான்கள் - குவியும் சுற்றுலாப் பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/foreign-tourists-visiting-trincomalee-1785914864"></link>
            <id>https://ibctamil.com/article/foreign-tourists-visiting-trincomalee-1785914864</id>
            <summary type="text">ஜூலை மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 196,845 ஆக பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜூலை மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 196,845 ஆக பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>திருகோணமலை பிரதான கடற்கரைப் பகுதியை அண்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள மான் பூங்காவில் நடமாடித் திரியும் மான் இனங்களை பார்வையிடுவதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தருவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>உள்நாட்டு - வெளிநாட்டு சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு திருகோணமலை மான் பூங்கா முக்கிய பங்காற்றுகின்றது</p><p></p><h2>சுற்றுலாப்பயணிகள்</h2><p>திருகோணமலையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோணேஸ்வரர் ஆலயம், ஃப்ரெட்ரிக் கோட்டை (Fort Fredrick), நகரப் பிரதான பஸ் நிலையம் என நகரின் பல்வேறு பகுதிகளிலும் இவை கூட்டமாக உலா வருகின்றன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7ac9b2c-cf7b-4630-9762-f0398f76d642/26-6a72ececf150a.webp' />&nbsp;&nbsp;</p><p>
மான் இனங்களை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் தலையாய கடப்பாடாகும். இந்த மான்களின் நடமாட்டம் வெறும் மான் பூங்காவுடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை.</p><p>இயற்கை மான் இனங்களை பாதுகாப்பதற்காக பலதரப்பட்ட திட்டங்களை அரச தரப்பின் ஊடாக மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடான ஒத்துழைப்புக்கள் காணப்படுகின்றன.&nbsp;&nbsp;</p><p>

மான்கள் வசிக்கும் அப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளால் வீசப்படும் பொலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மான்களின் செரிமானத்துக்குப் பொருந்தாத உணவுப் பண்டங்களை அந்த மான்கள் உண்பதால் மான்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது.</p><p> இதனால் சுற்றுப்புறச் சூழலின் தூய்மை பேணப்படவேண்டும் என்றும் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அறிவுறுத்தப்படுகின்றனர். </p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T07:57:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[5 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/suspect-arrested-narcotics-worth-50-million-rupees-1785916617"></link>
            <id>https://jvpnews.com/article/suspect-arrested-narcotics-worth-50-million-rupees-1785916617</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மினுவாங்கொடை, அம்பகஹவத்தை பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, 5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 12 கிலோகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மினுவாங்கொடை, அம்பகஹவத்தை பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, 5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 12 கிலோகிராம் 'ஹாஷிஷ்' போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>

கொனஹேன முகாமின் விசேட அதிரடிப்படை உளவுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இச்சோதனை நடத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68c647f4-7d66-4fc2-a24e-e21a0a619f7d/26-6a72ecca6c515.webp' /></p><p>
</p><p>
மினுவாங்கொடை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது சந்தேகநபரை வழிமறித்துச் சோதனையிட்டதில், அவரிடமிருந்து 06 கிலோகிராம் ஹாஷிஷ் போதைப்பொருள் முதலில் கைப்பற்றப்பட்டது.
</p><p>
சந்தேகநபரிடம் நடத்திய தொடர் விசாரணைகளை அடுத்து, அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மேலும் 06 கிலோகிராம் ஹாஷிஷ் கண்டெடுக்கப்பட்டது.</p><p>

கைப்பற்றப்பட்ட 12 கிலோகிராம் ஹாஷிஷ் போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி 5 கோடி ரூபாவுக்கும் அதிகமென விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் சந்தேகநபர் மினுவாங்கொடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-05T07:54:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹர்ஷ டி சில்வாவின் தந்தை காலமானார் - இறுதி சடங்குகள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/haris-de-silva-passes-away-1785915274"></link>
            <id>https://tamilwin.com/article/haris-de-silva-passes-away-1785915274</id>
            <summary type="text">தேசிய ஆவணக் காப்பகத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளராகவும், அமைச்சுச் செயலாளராகவும் பணியாற்றிய மூத்த சிரேஷ்ட நிர்வாக அதிகாரி ஹாரிஸ் டி சில்வா தனது 9...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய ஆவணக் காப்பகத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளராகவும், அமைச்சுச் செயலாளராகவும் பணியாற்றிய மூத்த சிரேஷ்ட நிர்வாக அதிகாரி ஹாரிஸ் டி சில்வா தனது 93ஆவது வயதில் காலமானார்.</p><p> 

இவர், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் தந்தையும் ஆவார். </p><p>

இலங்கையின் அரச பதிவேடுகள் மற்றும் ஆவணக் காப்பக அமைப்பைப் பாதுகாத்தல், பேணுதல் மற்றும் நவீனமயமாக்குவதில் நீண்டகாலத் தலைமைத்துவத்தை வழங்கிய ஹாரிஸ் டி சில்வா, பொது நிர்வாகத் துறையிலும் ஈடுபாடுடன் செயற்பட்டார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இறுதிச் சடங்குகள்</span></p><p>

இதனைத் தொடர்ந்து, நாட்டின் ஆவணக் காப்பக மற்றும் ஆவணக் காப்பகக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றிய புகழ்பெற்ற அதிகாரியாகவும் அறியப்படுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a7f2936-fdf0-4617-b17c-cf6fdf6a2bfd/26-6a72e78c3aab0.webp' /></p><p>

மறைந்த ஹாரிஸ் டி சில்வாவின் திருவுடல் இன்று(05.08.2026) காலை 9.00 மணி முதல் கிருலபொன், பூர்வராம வீதத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொது அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.</p><p> 

அதன் பின்னர், இறுதிச் சடங்குகள் இன்று(05) பிற்பகல் கிருலபொன் பொது மயானத்தில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p><p><br></p><p><br></p><p><br></p><p> 



</p>]]></content>
            <updated>2026-08-05T07:47:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுற்றுலா பயணிகளை கவரும் திருகோணமலை மான்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/trincomalee-deer-attract-tourists-1785914109"></link>
            <id>https://jvpnews.com/article/trincomalee-deer-attract-tourists-1785914109</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளை திருகோணமலை மான்கள் அதிகம் கவர்துள்ளதாக கூறப்படுகின்றது.

திருகோணமலை மான் பூங்காவில் நடமாடித் திரியும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளை திருகோணமலை மான்கள் அதிகம் கவர்துள்ளதாக கூறப்படுகின்றது.
</p><p>
திருகோணமலை மான் பூங்காவில் நடமாடித் திரியும் மான் இனங்களை பார்வையிடுவதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தந்து, அங்குள்ள மான்களுடன் பொழுதைக் கழிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46009c7a-2f5a-43d5-b861-c1b2650c2b88/26-6a72e30121ea5.webp' /></p><h2>வரலாற்றுச் சிறப்புமிக்க கோணேஸ்வரர் ஆலயம்</h2><p>திருகோணமலையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோணேஸ்வரர் ஆலயம், ஃப்ரெட்ரிக் கோட்டை (Fort Fredrick), நகரப் பிரதான பஸ் நிலையம் என நகரின் பல்வேறு பகுதிகளிலும் இவை கூட்டமாக உலா வருகின்றன.</p><p>

இயற்கை மான் இனங்களை பாதுகாப்பதற்காக பலதரப்பட்ட திட்டங்களை அரச தரப்பின் ஊடாக மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடான ஒத்துழைப்புக்கள் காணப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fe07cc9-c9ed-4606-8e4b-058a71d091a2/26-6a72e2fef20f4.webp' /></p><p>

அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை இங்கு அதிகமாக காணப்படுகிறது. இதனால் சுற்றுலாத்துறை விருத்தி செய்யப்படுவதை திருகோணமலை மாவட்டத்தில் சிறந்த எடுத்துக்காட்டாக காணப்படுகிறது.
</p><p>
உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு திருகோணமலை மான் பூங்காவும் சான்று பகிர்கின்றன. 

 மான்களின் நடமாட்டம் வெறும் மான் பூங்காவுடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e8518e3-50f6-46f0-8298-c27dc6ac1c89/26-6a72e2ffac9d7.webp' /></p><h3>&nbsp;மான்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை&nbsp;</h3><p>

அதேசமயம் மான்கள் வசிக்கும் அப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளால் வீசப்படும் பொலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மான்களின் செரிமானத்துக்குப் பொருந்தாத உணவுப் பண்டங்களை அந்த மான்கள் உண்பதால் மான்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது. </p><p>

 எனவே சுற்றுப்புறச் சூழலின் தூய்மை பேணப்படவேண்டும் என்றும் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ef4697f-0164-4246-8f2c-4faff57268ab/26-6a72e30068d71.webp' /></p><p> </p><p>

அத்துடன், திருகோணமலையில் உள்ள மொத்த மான் இனங்களின் தொகையினை ஒவ்வொரு வருடமும் உரிய அரச தரப்பு துறைசார் நிறுவனங்கள் கணக்கெடுக்க வேண்டும் என்பதுடன் இதுபோன்ற விடயங்களை மக்கள் மத்தியில் விழிப்பூட்ட வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T07:46:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்னும் 2 நாட்களில்..! றீச்சா பண்ணையின் மாபெரும் உணவுத் திருவிழா - இன்றே பதிவு செய்யுங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reechsha-farm-s-food-festival-1785912270"></link>
            <id>https://tamilwin.com/article/reechsha-farm-s-food-festival-1785912270</id>
            <summary type="text">கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள றீச்சாவில் நடைபெறவுள்ள மாபெரும் உணவுத் திருவிழா இன்னும் சில தினங்களில் கோலாகலமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள றீச்சாவில் நடைபெறவுள்ள மாபெரும் உணவுத் திருவிழா இன்னும் சில தினங்களில் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.
</p><p>
இந்த மாபெரும் உணவுத் திருவிழா எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பமாகி, 8 மற்றும் 9ஆம் திகதிகள் உட்பட மூன்று நாட்கள் மாலை 6 மணி முதல் 10 வரை&nbsp; நடைபெறவுள்ளது.
</p><h2>
நீங்களும் இணைந்து கொள்ளலாம்... </h2><p>

இந்த உணவுத் திருவிழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்கள் கலந்துக் கொள்ளவுள்ளதுடன், 
சுற்றுலாப் பயணிகளும் இணைந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d41bca07-6d93-41aa-8497-6866b9108153/26-6a72e9b816980.webp' /></p><p>
</p><p>
அத்துடன், உணவுத் திருவிழாவை முன்னிட்டு றீச்சாவில் இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
</p><p>
மேலும், றீச்சாவின் உணவுத் திருவிழாவிற்கு <b>QICK FOOD </b>அனுசரணை வழங்குவதுடன், லங்காசிறி, தமிழ்வின் மற்றும் ஐபிசி தமிழ் ஆகிய ஊடகங்கள் இணைந்து இந்நிகழ்வை சிறப்பிக்கவுள்ளன.</p><p>உணவு திருவிழாவில் நீங்களும் ஒரு ஆளாக இருக்க வேண்டும் என்றால் 077 7772354 என்ற இலக்கத்திற்கு தொடர்புக் கொண்டு உங்களுடைய டிக்கெட்டுக்களை பெற்றுக் கொள்ளும் அதே சமயத்தில், அக்க்ஷய பாத்திரத்தில் நீங்களும் ஒரு நபராக இருந்து உணவை சுவைக்கலாம்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T07:46:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தர பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரிய மனு! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-order-regarding-advanced-level-examination-1785912427"></link>
            <id>https://tamilwin.com/article/court-order-regarding-advanced-level-examination-1785912427</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக்கோரி மாணவர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட&amp;nbsp;அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு எடுத்துக்கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக்கோரி மாணவர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட&nbsp;அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.</p><p>உயர் நீதிமன்றம் இன்று (05) இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">பரீட்சை திணைக்களத்தின் அறிவிப்பு&nbsp;</span></p><p>க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதல் மற்றும் இரண்டாம் முறையாக தோற்றவுள்ள ஐந்து மாணவர்கள் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d3826a4-5a1d-414a-9521-bf827a309c44/26-6a72eb28cd7aa.webp' /></p><p>இதேவேளை, 2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.</p><p>
10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பரீட்சைகள் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/IeSYrculFA0" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-05T07:42:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை பாக்யஸ்ரீ போர்ஸின் ரீசெண்ட் போட்டோஸ்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/bhagyashri-borse-recent-photoshoot-post-1785915929"></link>
            <id>https://viduppu.com/article/bhagyashri-borse-recent-photoshoot-post-1785915929</id>
            <summary type="text">பாக்யஸ்ரீ போர்ஸ்தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் பாக்யஸ்ரீ போர்ஸ். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த லெனின் படம் மெகா ஹிட் ஆகியுள...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பாக்யஸ்ரீ போர்ஸ்</h2><p>தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் பாக்யஸ்ரீ போர்ஸ். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த லெனின் படம் மெகா ஹிட் ஆகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/802e775f-58f9-4d90-8820-ad2fbb2ec7d6/26-6a72ea2024a14.webp' /></p><p>
</p><p>
இதனால் செம சந்தோஷத்தில் இருக்கும் இவருக்கு தமிழில் இவர் நடித்த காந்தா படத்திற்கும் நிறைய விருதுகள் குவிந்து வருகின்றன். தற்போது இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் சேயோன் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.</p><p> தற்போது க்யூட்டான லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-05T07:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[6 நாட்களில் இந்தியாவில் Spider-Man: Brand New Day திரைப்படம் செய்துள்ள வசூல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/spider-man-brand-new-day-6-days-india-box-office-1785913100"></link>
            <id>https://cineulagam.com/article/spider-man-brand-new-day-6-days-india-box-office-1785913100</id>
            <summary type="text">பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வெளியான Spider-Man: Brand New Day திரைப்படம் இந்தியாவில் 6 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வெளியான Spider-Man: Brand New Day திரைப்படம் இந்தியாவில் 6 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.</p><p></p><h2>

Spider-Man: Brand New Day
</h2><p>
Shang-Chi and the Legend of the Ten Rings திரைப்படத்தின் மூலம் மார்வெல் யூனிவெர்சில் இணைந்தவர் இயக்குனர் டெஸ்டின் டேனியல் கிரெட்டன். இப்படத்தை தொடர்ந்து மார்வெல் தயாரிப்பில் எடுக்கப்பட்ட <a href="https://www.youtube.com/watch?v=8VENH1WwhyE&amp;t=3s" target="_blank">Spider-Man</a>: Brand New Day திரைப்படத்தையும் இவரே இயக்கியுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0916896c-ec39-41f2-886c-feb1ae81f8bf/26-6a72df0fbde9f.webp' /></p><p>இதுவரை வெளிவந்த ஸ்பைடர் மேன்: ஹோம் கமிங், பார் பிரம் ஹோம், நோ வே ஹோம் உள்ளிட்ட அனைத்து திரைப்படங்களும் அமோக வரவேற்பை பெற்றுள்ளன. இதனால் ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படத்தையும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b1d45f4-53c8-4fd6-a52d-c3a670072b35/26-6a72df11320ae.webp' /></p><h2>இந்திய வசூல் விவரம்
</h2><p>
டாம் ஹோலாண்ட், ஜென்டயா, சாடி சிங்க், ஜோன் பெர்ந்தல் ஆகியோர் நடித்துள்ளனர். 2,100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலகளவில் ரூ. 10,000 கோடி வசூலை நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/785d6219-28d2-4121-b2ee-810bfaef7960/26-6a72df107a267.webp' /></p><p>இந்நிலையில், இந்தியாவில் Spider-Man: Brand New Day திரைப்படம் 6 நாட்களில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 6 நாட்களில் இந்தியாவில் மட்டுமே ரூ. 347 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T07:30:00+00:00</updated>
        </entry>
    </feed>
