<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-10T00:35:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீழ்ச்சியின் விளிம்பில் ஈரானிய ஆட்சி! நெதன்யாகுவின் அறிவிப்பால் அதிகரிக்கும் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-s-regime-on-brink-of-collapse-says-netanyahu-1788999601"></link>
            <id>https://ibctamil.com/article/iran-s-regime-on-brink-of-collapse-says-netanyahu-1788999601</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் ஆறு மாதங்களாக நடைபெற்று வரும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் ஆட்சி வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் ஆறு மாதங்களாக நடைபெற்று வரும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் ஆட்சி வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
</p><p>
நெதன்யாகு, தெற்கு சிரியாவில் உள்ள இஸ்ரேலியப் படைகளை நேரில் சென்று பார்வையிட்டபோது இதனை கூறியுள்ளார்.</p><p>

பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் உடன், இஸ்ரேல்-சிரிய எல்லையில் அமைந்துள்ள ஹெர்மன் மலையின் சிரியப் பகுதியில் நின்று பேசிய அவர், "இன்னும் செய்ய வேண்டிய பணிகள் உள்ளன.

 ஈரானில் உள்ள பயங்கரவாத ஆட்சியை வீழ்த்துவதே நமது முக்கிய பணியாகும்.</p><p></p><h2>ஈரான் ஆட்சியின் வீழ்ச்சி&nbsp;</h2><p>நாம் அதை அடைவதற்கு மிக அருகில் இருக்கிறோம். அந்த முழு கூட்டணியும் இறுதியில் வீழும் என்பதை நாம் அறிவோம்" என்று வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f44ee1b8-b6cf-422d-b266-8c9248a06a05/26-6aa1fad8087ed.webp' /></p><p><i>Image Credit:&nbsp;jewishchronicle</i></p><p>
</p><p>
சிரியாவை நீண்டகாலமாக ஆட்சி செய்த பஷார் அல்-அசாத்தின் ஆட்சி டிசம்பர் 2024-இல் வீழ்ந்ததைத் தொடர்ந்து, தெற்கு சிரியாவில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மண்டலத்தில் இஸ்ரேலியப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
</p><p>
1974 முதல் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கோலன் பகுதியில் இஸ்ரேல் மற்றும் சிரியப் படைகளைப் பிரித்து வைத்திருந்த, ஐக்கிய நாடுகள் சபையால் கண்காணிக்கப்பட்ட பழைய இடைப்பட்ட பகுதியையே தற்போது இப்படைகள் ஆக்கிரமித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T00:33:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[135 ஏக்கர் தேயிலைத் தோட்டம் - வெளிவரும் முக்கிய ஆவணங்கள்! ராஜபக்ச குடும்பத்திற்கு மீண்டும் சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/investigation-against-rohitha-yositha-rajapaksha-1789000004"></link>
            <id>https://tamilwin.com/article/investigation-against-rohitha-yositha-rajapaksha-1789000004</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர்களான யோசித ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக, கண்டி தொலஸ்பகே பகுதியில் அமைந்துள்ள 135 ஏக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர்களான யோசித ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக, கண்டி தொலஸ்பகே பகுதியில் அமைந்துள்ள 135 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
</p><p>
இலஞ்சம், ஊழல் மற்றும் வீண் விரயத்திற்கு எதிரான குடிமக்கள் சக்தி அமைப்பின் தலைவர் காமந்த துஷார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவில் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.</p><p>

குறித்த காணி தொடர்பான பரிவர்த்தனையை உறுதிப்படுத்தும் உறுதி ஆவண இலக்கம் மற்றும் வரைபட இலக்கம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாக காமந்த துஷார தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், குறித்த காணியில் 1918ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழைய பங்களா தொடர்பான தகவல்கள் மற்றும் ஏனைய ஆவணங்களும் தம்மிடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இந்த ஆவணங்களை விசாரணை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்</p><p>.

இந்நிலையில், முறைப்பாட்டாளரான காமந்த துஷார தனது வாக்குமூலத்தை வழங்குவதற்காக பொலிஸ் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த 135 ஏக்கர் காணி தொடர்பான விசாரணையை குற்றத்திலிருந்து உருவான சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு (PCID) முன்னெடுத்து வருகிறது.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக எடுத்து வருகின்றது லங்காசிறியின் நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/shVEUuotw3g" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T00:31:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனித குலத்தை AI அழிக்கலாம்! 10% -க்கும் அதிகமான வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ai-could-wipe-out-humanity-within-the-next-10-yrs-1788980667"></link>
            <id>https://news.lankasri.com/article/ai-could-wipe-out-humanity-within-the-next-10-yrs-1788980667</id>
            <summary type="text">AI Could Wipe Out Humanity Within the Next 10 Years: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்(AI) மனித குலத்திற்கு அழிவை ஏற்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>AI Could Wipe Out Humanity Within the Next 10 Years: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்(AI) மனித குலத்திற்கு அழிவை ஏற்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><h2> மனித குலத்திற்கு காத்திருக்கும் பேராபத்து</h2><p>அடுத்த 10 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது(AI) மனித குலத்தையே முற்றிலுமாக அழிக்கலாம் என்றும், அதற்கான வாய்ப்புகள் 10% -க்கும் அதிகமாக இருப்பதாக முன்னணி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனமான ஆந்த்ரோபிக்(Anthropic) அமைப்பின் மூத்த பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் எவன் ஹூபிங்கர் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90f70de2-7ac7-4ad2-9ed4-1a85b0008d86/26-6aa1adbd55529.webp' /></p><p>ஆந்த்ரோபிக் நிறுவனத்தில் இருந்து விலகியவரும், ஓபன் ஏஐ(OpenAI) நிறுவனத்தில் பணியாற்றியவருமான ஜேக்கப் காக்சன்(Jacob Coxon) வெளியிட்ட பதிவுக்கு பதிலளித்த எவன் ஹூபிங்கர்(Evan Hubinger) இவ்வாறு பதிலளித்துள்ளார்.</p><p> X தளத்தில் பதிலளித்துள்ள எவன் ஹூபிங்கர், தற்போதைய AI மாடல்களால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் மிகவும் குறைவு என்றாலும், எதிர்காலத்தில் இந்த AI தொழில்நுட்பங்கள் தங்களை தாங்களே மேம்படுத்திக் கொண்டு மிகப் பெரிய ஆதிக்கத்தை செலுத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று எச்சரித்துள்ளார்.</p><p>மேலும் அவை மனித குலத்தின் இருப்பிற்கே அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.</p><p> ஆனால் இதில், AI மாடல்கள் எவ்வாறு மனித குலத்தை அழிக்கும் என்பதற்கான பிரத்யேக நிகழ்வுகளை அவர் விளக்கவில்லை.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c305c317-2279-41c1-bfc3-57fe13041a34/26-6aa1adbece5ef.webp' /></p><h2>விவாதங்களும், சந்தேகங்களும்</h2><p>இந்த கருத்துகள் துறைசார் வல்லுனர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இடையே பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.</p><p> ஐ.நா அமைப்பின் AI ஆலோசகரும், கணினி விஞ்ஞானியுமான டேம் வெண்டி ஹால், AI அச்சுறுத்தல் தொடர்பான இந்த சமூக வலைதள பதிவை கண்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.</p><p> மேலும் நிறுவனங்கள் பங்குச் சந்தைக்குள் நுழையும் போது இத்தகைய விவகாரங்களை விளம்பர உத்தியாக பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e85963a2-8514-48b9-8d9e-be7ff104e031/26-6aa1adbe0e885.webp' /></p><p> அத்துடன் இத்தகைய ஆபத்தான மதிப்பீடுகள் கொண்ட நிறுவனங்கள் மீது முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.</p><p> சமீபத்தில் பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில்,&nbsp; இங்கிலாந்து AI பாதுகாப்பு நிறுவனத்திடம், ஆந்த்ரோபிக் நிறுவனம் தங்களது அதிநவீன புதிய AI மாடலை ஆபத்து மதிப்பீட்டிற்கு வழங்கவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T00:25:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 மாதங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியான வீடியோ: கோபத்தில் சொந்த மகளை கொன்ற தந்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ahmedabad-sofia-premeditated-honor-killing-1788999857"></link>
            <id>https://news.lankasri.com/article/ahmedabad-sofia-premeditated-honor-killing-1788999857</id>
            <summary type="text">Ahmedabad Sofia Premeditated Honor Killing: அகமதாபாத்தில் சொந்த மகளையே அவரது தந்தை மற்றும் சகோதரர் கொடூரமாக தாக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ahmedabad Sofia Premeditated Honor Killing: அகமதாபாத்தில் சொந்த மகளையே அவரது தந்தை மற்றும் சகோதரர் கொடூரமாக தாக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> தந்தையும், சகோதரரும் சேர்ந்து நடத்திய சதி</h2><p>
அகமதாபாத்தில் சோபியா என்ற 22 வயது பெண் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணியாற்றி வந்த நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பு ஆண் ஒருவருடன் சோபியா இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவியுள்ளது.</p><p> இதனால் கடும் கோபமடைந்த சோபியாவின் குடும்பத்தினர், சமூக அவமானத்துக்கு பயந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.</p><p> இதையடுத்து ஆகஸ்ட் 12ம் திகதி இரவு சோபியாவை மோட்டார் சைக்கிள் சவாரிக்கு செல்வோம் என்று அவரது தந்தை மொஹமந்த் ஃபரூக் மற்றும் அவரது 38 வயது சகோதரர் மொஹமந்த் ஹபில் ஆகிய இருவரும் வெளியே அழைத்து சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42480047-29be-432d-8cfd-a92a7e22f18f/26-6aa1f8b373b2f.webp' /></p><p> கெல்ஜிபுரா கிராமத்திற்கு அருகில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மண் பாதையில் பைக்கை நிறுத்திய சகோதரர் ஹபில், சோபியாவின் தலையில் இரும்பு சுத்தியால் மூன்று முறை தாக்கியுள்ளார்.</p><p>பின்னர் கொலையை மறைப்பதற்காக மீண்டும் சோபியாவின் உடலை சாலைக்கு கொண்டு வந்து, வாகன விபத்து போல் சித்தரிப்பதற்காக அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளையும், அவர்களையும் சேதப்படுத்தி கொண்டனர்.</p><p> பின்னர் பொலிஸார் தகவல் கொடுத்த அவர்கள், கெல்ஜிபுரா சந்திப்பு அருகில் வேகமாக வந்த கார் ஒன்று தங்களை மோதிவிட்டு நிற்காமல் சென்றதாகவும், இதில் தன்னுடைய சகோதரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p> இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோபியா அடுத்த நாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.</p><h2> பொலிஸாருக்கு எழுந்த சந்தேகம்</h2><p>
சோபியாவின் தந்தை மற்றும் சகோதரர் அளித்த விவரங்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்த காரணத்தினால் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><p> அப்போது மூன்று மாதங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியான வீடியோ குறித்தும், சோபியா மீது குடும்பத்தினர் கொண்டிருந்த கோபம் குறித்தும் பொலிஸார் கண்டுபிடித்தனர்.</p><p> மேலும் சோபியாவை அடித்து கொன்றுவிட்டு விபத்து போல் காட்சிப்படுத்தியதையும் பொலிஸார் விசாரணையில் உறுதிப்படுத்தினர்.</p><p> இந்நிலையில் சோபியாவின் தந்தை மொஹமந்த் ஃபரூக் மற்றும் சகோதரர் மொஹமந்த் ஹபில் இருவரும் கைது செய்யப்பட்டு கொலை குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-10T00:24:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீபாவளி ரேஸில் குதித்த சூர்யா.. &quot;சீன்&quot; படத்தின் டீஸர் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/suriya-scene-movie-teaser-1788999561"></link>
            <id>https://cineulagam.com/article/suriya-scene-movie-teaser-1788999561</id>
            <summary type="text">ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா அடுத்து நடித்து வரும் படத்தை சூர்யா 47 என தற்காலிகமாக அழைத்து வந்தனர். இந்நிலையில் அந்த படத்திற்கு &quot;சீன்&quot; என டைட்டில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா அடுத்து நடித்து வரும் படத்தை சூர்யா 47 என தற்காலிகமாக அழைத்து வந்தனர். இந்நிலையில் அந்த படத்திற்கு "சீன்" என டைட்டில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.</p><p>இந்த படத்தில் சூர்யா போதை பழக்கம் இருக்கும் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4517a334-0051-4a95-a72e-26f67d8dd096/26-6aa1f78ad6489.webp' /></p><p>
</p><h2>தீபாவளி ரிலீஸ்
</h2><p>தீபாவளி ஸ்பெஷலாக வரும் நவம்பர் 6ம் தேதி இந்த படம் திரைக்கு வரும் என்றும் அறிவித்து உள்ளனர்.
</p><p>
வெளியாகி வைரல் ஆகும் டீஸர் இதோ.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_nuRAflabx8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-10T00:20:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமல் வீரவன்ச - கம்மன்பில உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கில் முக்கிய உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/permission-granted-to-hear-contempt-court-charges-1788998061"></link>
            <id>https://tamilwin.com/article/permission-granted-to-hear-contempt-court-charges-1788998061</id>
            <summary type="text">அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை கைது செய்வதற்கு எதிராக நடத்தப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை கைது செய்வதற்கு எதிராக நடத்தப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பில், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு முறைப்பாட்டை தொடர்ந்து முன்னெடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இந்த உத்தரவு நேற்றுமுன்தினம் 8ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2>சுரேஷ் சலே&nbsp;கைது</h2><p>
</p><p>
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர, சுகீஸ்வர பண்டார, அசங்க நவரத்ன மற்றும் மகிந்த பதிரண ஆகிய 6 பேருக்கு எதிராகவே இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
சுரேஷ் சலேவை கைது செய்வதற்கு எதிராக கடந்த ஜூலை 7ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகம் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe04cc62-c608-43bf-ab20-fe0bfddbb27d/26-6aa1f32e34c13.webp' /></p><p>
</p><p>
இதன்போது குறித்த 6 பேரும் தெரிவித்த சில கருத்துகள் நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையில் இருந்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

இந்த விடயம் தொடர்பான முறைப்பாடு முதலில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது.</p><h2>வழக்கு விசாரணை</h2><p>

இந்நிலையில், வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கு போதுமான காரணங்கள் உள்ளதா என்பதை மேன்முறையீட்டு நீதிமன்றம் பரிசீலிக்கும்.

போதுமான காரணங்கள் இருப்பதாக நீதிமன்றம் தீர்மானித்தால், குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறு உத்தியோகபூர்வ அறிவிப்பு அனுப்பப்பட்டு அதன் பின்னர் வழக்கு விசாரணை நடைபெறும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2db042f5-300b-4b66-9155-5815b47bd43b/26-6aa1f32f2ca40.webp' /></p><p>குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் தங்கள் தரப்பு சாட்சிகளை முன்வைத்து, தங்களது நிலைப்பாட்டை விளக்குவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.
</p><p>
இறுதியில், நீதிமன்ற அவமதிப்பு குற்றம் இடம்பெற்றதா இல்லையா என்பது குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என கூறப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T00:14:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல்! இருவர் பலி - 20 பேர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-killed-in-russian-drone-attack-in-ukraine-1788997506"></link>
            <id>https://ibctamil.com/article/two-killed-in-russian-drone-attack-in-ukraine-1788997506</id>
            <summary type="text">


உக்ரைனின் வடக்குப் பகுதியிலுள்ள சுமி நகரில் உள்ள ஒரு வணிக வளாகம் ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் இருவர் பலியாகியுள்ளதுடன், 20 பேர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>


உக்ரைனின் வடக்குப் பகுதியிலுள்ள சுமி நகரில் உள்ள ஒரு வணிக வளாகம் ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் இருவர் பலியாகியுள்ளதுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.
</p><p>
ஆரம்பத்தில் மூவர் உயிரிழந்ததாகத் தெரிவித்த ஆளுநர் ஹிரிகோரோவ், பின்னர் டெலிகிராம் தளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு என்று திருத்திப் பதிவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
தாக்குதலால் அப்பகுதியில் கடும் தீ விபத்து ஏற்பட்டதாகவும் ஆளுநர் வெளியிட்ட புகைப்படங்களில் கட்டிடம் மிக மோசமாகச் சேதமடைந்து, இடிபாடுகள் தரையில் சிதறிக் கிடப்பது காணக் கூடியதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>&nbsp;</p><h2>தொடர்ந்து மீட்புப் பணி</h2><p>
</p><p>
பாதிக்கப்பட்டவர்களில் நான்கு பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ள நிலையில், மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc4a95a3-2e87-4d2d-9278-9574bbd6fbd4/26-6aa1f4cea5552.webp' /></p><p>
</p><p>
ரஷ்ய எல்லையை ஒட்டியுள்ள சுமி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் நீண்டகாலமாக தீவிர தாக்குதல்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், இப்பகுதியில் ஒரு பாதுகாப்பு இடைவெளி மண்டலத்தை உருவாக்க விரும்புவதாக ரஷ்யா ஏற்கனவே தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-09-10T00:07:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் நிலவிய பாதுகாப்பற்ற நிலையை அரசாங்கம் இல்லாதொழித்துள்ளது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-will-not-turn-back-1788998106"></link>
            <id>https://tamilwin.com/article/npp-will-not-turn-back-1788998106</id>
            <summary type="text">நாட்டில் நிலவிய பாதுகாப்பற்ற நிலையை அரசாங்கம் முற்றாக இல்லாதொழித்துள்ளது என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவிய பாதுகாப்பற்ற நிலையை அரசாங்கம் முற்றாக இல்லாதொழித்துள்ளது என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
</p><p>சமூகச் சீரழிவு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு மற்றும் பாதுகாப்பற்ற நிலைமை முற்றாக ஒழிப்பதில் தற்போதைய அரசாங்கம் வெற்றியடைந்துள்ளதாக 
நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய பாதகமான சூழ்நிலைகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/865f556a-384f-4932-a5f4-cfcabf3fd79f/26-6aa1f1db99587.webp' /></p><p>
</p><p>அரசாங்கம் ஆரம்பித்துள்ள இந்த வேலைத்திட்டத்தை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பின்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனவும், அதனை தற்காலிகமாகவோ அல்லது நிறுத்துவதற்கு எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இந்தப் பயணம் முன்னோக்கியே செல்லும், ஒரு கணமேனும் தற்காலிகமாக நிறுத்தக்கூடிய ஒரு முற்றுப்புள்ளி, அல்லது ஒரு கால்புள்ளியை வைக்கக்கூடிய மட்டத்தில் நாடு இப்போது இல்லை என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
</p><p>நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் உறுதிப்படுத்தி, மக்கள் அச்சமின்றி வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என்பதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>தற்போதுள்ள சாதகமான நிலையை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அமைச்சர் சரோஜா போல்ராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T23:55:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் தாக்குதல் முயற்சிகள் படுதோல்வி! அமெரிக்கா விடுத்துள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-rejects-irgc-claim-strikes-on-navy-destroyers-1788988757"></link>
            <id>https://ibctamil.com/article/us-rejects-irgc-claim-strikes-on-navy-destroyers-1788988757</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் அமெரிக்கக் கடற்படையின் இரண்டு அழிப்புக் கப்பல்களைத் தாக்கியதாக ஈரான் புரட்சிகரப் படைகள் (IRGC) விடுத்திருந்த அறிக்கையை அமெரிக்க இராணு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் அமெரிக்கக் கடற்படையின் இரண்டு அழிப்புக் கப்பல்களைத் தாக்கியதாக ஈரான் புரட்சிகரப் படைகள் (IRGC) விடுத்திருந்த அறிக்கையை அமெரிக்க இராணுவத்தின் மத்தியக் கட்டளை மையம் (CENTCOM) மறுத்துள்ளது.
</p><p>
அமெரிக்கக் கடற்படையின் எந்தவொரு போர்க்கப்பலும் தாக்கப்படவில்லை எனவும் IRGC மேற்கொண்ட அனைத்துத் தாக்குதல் முயற்சிகளும் தோல்வியடைந்தன எனவும் அதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
முன்னதாக வளைகுடாப் பகுதியில் இரண்டு அமெரிக்கக் கப்பல்கள் மற்றும் எட்டு எண்ணெய் தாங்கிக் கப்பல்களைத் தங்கள் கடற்படை இலக்கு வைத்துத் தாக்கியதாகவும், இத்தாக்குதல்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாகவும் IRGC கூறியிருந்தது.</p><p></p><h2>தாக்கப்பட்ட ஈரானிய கப்பல்கள்</h2><p> </p><p>

அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குப் பதிலடியாகவே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36bcaae9-7165-4f5e-98fa-95e879cd9122/26-6aa1f18d0cd2e.webp' /></p><p>
</p><p>
எனினும், கடந்த வாரத்தில் ஈரானின் 10 எண்ணெய் தாங்கிக் கப்பல்களை அமெரிக்கப் படைகள் அழித்துள்ளதாக CENTCOM தெரிவித்துள்ளது.
</p><p>
இக்கப்பல்கள் IRGC-க்கு நிதியளிக்கும் பல பில்லியன் டொலர் மதிப்புள்ள நிழல் வலைப்பின்னலின் ஒரு பகுதி என்று அமெரிக்க இராணுவம் விவரித்துள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T23:53:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதிக் கிரியைக்கு சென்ற தாயும் மகனும் விபத்தில் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mother-and-son-dies-in-an-accident-1788967752"></link>
            <id>https://tamilwin.com/article/mother-and-son-dies-in-an-accident-1788967752</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் இடம்பெற்ற கோர வீதி விபத்தொன்றில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மரிதன்கடவல நகரில் நேற்று(9) காலை 10.35 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் இடம்பெற்ற கோர வீதி விபத்தொன்றில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

மரிதன்கடவல நகரில் நேற்று(9) காலை 10.35 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. </p><p>

தம்புள்ளை பகுதியில் உறவினர் ஒருவரின் இறுதிக் கிரியை நிகழ்விற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே விபத்து இடம்பெற்றுள்ளது.</p><h2><b>தாயும் மகனும் பலி</b></h2><p> 

இவ்வாறு உயிரிழந்தவர்கள், 47 வயதுடைய மதுஷானி குணசிங்க மற்றும் அவரது மகனான 24 வயதுடைய நிகேஷ் ருவந்த தில்ஷன் என்பவர்களாகும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f82ebf32-8c1a-42c2-a69a-520e71e1e129/26-6aa187ff8745e.webp' /></p><p>உயிரிழந்த இளைஞன் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பல்கலைக்கழக மாணவர் என தெரியவந்துள்ளது. </p><p>


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T23:49:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜ்நாத் சிங்கை சந்தித்தார் பிரதமர் ஹரிணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/harini-meets-india-defence-minister-rajnath-singh-1788996743"></link>
            <id>https://tamilwin.com/article/harini-meets-india-defence-minister-rajnath-singh-1788996743</id>
            <summary type="text">இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் பாதுகாப்புத்துறை
அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங்கை, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று(9) ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் பாதுகாப்புத்துறை
அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங்கை, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று(9) நாடாளுமன்றத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.</p><p>

இந்தச் சந்திப்பின்போது, நாடு கடினமான காலகட்டங்களை எதிர்கொண்ட தருணங்களில்
இந்திய அரசு வழங்கிய தொடர்ச்சியான ஆதரவுக்குப் பிரதமர் தனது பாராட்டுக்களைத்
தெரிவித்தார்.</p><h2>இலங்கை - இந்தியா</h2><p>

குறிப்பாக, 'டித்வா' சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து இந்தியா வழங்கிய
உதவிகளுக்கு நன்றி தெரிவித்த அவர், அனர்த்த நிவாரண உதவிகளுக்காக இந்தியா
'சாகர் பந்து நடவடிக்கை'யை ஆரம்பிக்கப்பட்டதையும் வரவேற்றார்.
</p><p>
பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
"இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு இராஜதந்திர மற்றும் பொருளாதார
ஒத்துழைப்புகளுக்கும் அப்பாலானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff5ebf43-aba5-448e-b0cb-1229fe4a3b4e/26-6aa1ee9f04abe.webp' /></p><p> </p><p>இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால
நட்புறவின் ஒருங்கிணைந்த பகுதியாகக் கலாசார, வரலாற்று மற்றும் சமயத்
தொடர்புகள் விளங்குகின்றன. வர்த்தகம், அபிவிருத்தி, பாதுகாப்பு மற்றும் கல்வி
உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா மிக முக்கிய பங்காளியாகத் திகழ்கின்றது.</p><p>

பாதுகாப்புத்துறையில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நீண்டகால ஒத்துழைப்பைத்
தொடர்ந்து பேணி, மேலும் வலுப்படுத்த வேண்டும்.

நாடாளுமன்ற மற்றும் அரச துறைகள் உள்ளிட்ட திறன் அபிவிருத்தித் துறைகளில் இரு
நாடுகளும் ஒத்துழைப்பைப் பேணி வருகின்றன.</p><h2>பேச்சுவார்த்தை</h2><p> </p><p>இது நிறுவன ரீதியான ஆற்றல்களைப்
பலப்படுத்துவதற்கும் நல்லாட்சியை முன்னெடுப்பதற்கும் பங்களிப்புச்
செய்கின்றது என குறிப்பிட்டார்.</p><p>
சுற்றுலா மற்றும் கல்வித் துறைகளில் பிராந்திய ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன்
அவசியம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b0d130b-fd8a-419c-b4fb-fe7f1ceeb659/26-6aa1ee9fb5448.webp' /></p><p> </p><p>அறிவுப் பரிமாற்றம்,
புத்தாக்கம் மற்றும் திறன் அபிவிருத்தியைப் பலப்படுத்துவதற்காக, இந்திய
தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற விசேட கல்வி நிறுவனங்கள் மற்றும் திட்டங்கள்
உட்பட இரு நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு இடையே அதிக ஒத்துழைப்புக்கான
சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, இந்தியப் பாதுகாப்பு
அமைச்சின் இணைச் செயலாளர் கலாநிதி அமித் தெலாங், இந்திய வெளியுறவு அமைச்சின்
இணைச் செயலாளர் பிரசன்னா ஸ்ரீவஸ்தவா, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி,
பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிநாட்டலுவல்கள்,
வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலா அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T23:41:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நூலிழையில் தப்பிய ஜெலென்ஸ்கி! பயணித்த விமானத்தை நெருங்கி வந்த ட்ரோன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/danger-posed-to-zelenskyy-s-plane-by-a-drone-1788987096"></link>
            <id>https://ibctamil.com/article/danger-posed-to-zelenskyy-s-plane-by-a-drone-1788987096</id>
            <summary type="text">நோர்வே மன்னரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒஸ்லோ சென்ற விமானம், செவ்வாய்க்கிழமை மால்டோவாவிலிருந்து புறப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வே மன்னரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒஸ்லோ சென்ற விமானம், செவ்வாய்க்கிழமை மால்டோவாவிலிருந்து புறப்பட்டபோது ட்ரோன் ஒன்றினால் தாக்கப்படும் அபாயத்தை எதிர்கொண்டதாக நோர்வே பிரதமர் யோனாஸ் கார் ஸ்டோர் தெரிவித்துள்ளார்.</p><p>

மல்டோவிய வான்வெளியில் நுழைந்த இரு ரஷ்ய ட்ரோன்கள் காரணமாக, செவ்வாய்க்கிழமை கிஷினாவ் விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்து சில மணிநேரம் இடைநிறுத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அதனால் அந்நாட்டின் தலைநகருக்கு வரவிருந்த பல விமானங்கள் மல்டோவாவுக்கு வெளியே உள்ள விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டதுடன் வான்வெளியிலேயே காத்திருக்கப் பணிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.</p><p></p><h2>ஜெலென்ஸ்கியின் விமானம்</h2><p>

இந்நிலையிலேயே, மல்டோவாவிலிருந்து புறப்படத் தயாராக இருந்தபோது ஜெலென்ஸ்கியின் விமானம் ட்ரோன் ஒன்றால் தாக்கப்படும் நிலை ஏற்பட்டதாக நோர்வே பிரதமர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1975ecf8-dae2-4737-9ed6-418826162677/26-6aa1ca9e0f363.webp' /></p><p><i>Image Credit:&nbsp;kyivindependent</i></p><p>
</p><p>
எவ்வாறாயினும், ஜெலென்ஸ்கியின் விமானம் தொடர்பான நார்வே பிரதமரின் இந்தக் கூற்று குறித்து மல்டோவா அதிகாரிகள் எவ்விதக் கருத்தும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T23:34:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் வாங்கியது லஞ்சமா நன்கொடையா! குழப்பத்தில் மகிந்த தரப்பு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/was-what-namal-received-a-bribe-or-a-donation-1788987416"></link>
            <id>https://tamilwin.com/article/was-what-namal-received-a-bribe-or-a-donation-1788987416</id>
            <summary type="text">நிமல் பெரேரா என்பவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நாமல் ராஜபக்ச பெற்றதாக கூறப்படும் பணம் ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிமல் பெரேரா என்பவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

நாமல் ராஜபக்ச பெற்றதாக கூறப்படும் பணம் லஞ்சமா அல்லது நன்கொடையா என்பது தொடர்பில் மகிந்த ராஜபக்ச தரப்பில் குழப்பம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இந்நிலையில், லஞ்சம் பெறுவதும் வழங்குவதும் தவறு என சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், பணத்தை முதலில் வழங்கியதாக கூறப்படும் நிமால் பெரேராவையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும் என விமர்சித்துள்ளார்.
</p><p>
நாமல் ராஜபக்சவின் கைது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என கருதும் தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
</p><p>
மறுபுறம், நாமல் ராஜபக்ச தரப்பினர், குறித்த பணம் லஞ்சமாக பெறப்படவில்லை என்று உதயகம்மன்பில குறிப்பிடுகின்றார்.
</p><p>
இவ்விவகாரத்தில் பணம் வழங்கியவர் மற்றும் பெற்றவர் ஆகிய இரு தரப்பினரிடமும் சமமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/25vMZicgGkI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T23:24:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[VJ அஞ்சனா சேலையில் அசத்தலான போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vj-anjana-black-saree-photoshoot-1788994229"></link>
            <id>https://cineulagam.com/article/vj-anjana-black-saree-photoshoot-1788994229</id>
            <summary type="text">சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளராக இருப்பவர் அஞ்சனா. டிவி நிகழ்ச்சிகளை தாண்டி அவர் பட விழாக்கள் மற்றும் விருது விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளை தான் அதிகம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளராக இருப்பவர் அஞ்சனா. டிவி நிகழ்ச்சிகளை தாண்டி அவர் பட விழாக்கள் மற்றும் விருது விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளை தான் அதிகம் தொகுத்து வழங்கி வருகிறார்.</p><p>இன்ஸ்டாவில் 1.4 மில்லியன் ரசிகர்களை வைத்திருக்கும் அஞ்சனா அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.&nbsp;</p><p>&nbsp;தற்போது கருப்பு நிற சேலையில் அவர் போஸ் கொடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.</p><p>
</p>]]></content>
            <updated>2026-09-09T22:50:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை க்ரித்தி ஷெட்டி அழகிய போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/krithi-shetty-cute-photos-1788994104"></link>
            <id>https://cineulagam.com/article/krithi-shetty-cute-photos-1788994104</id>
            <summary type="text">இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி தற்போது தமிழ், தெலுங்கில் முக்கிய ஹீரோயினாக இருந்து வருகிறார். தமிழில் அவர் விக்னேஷ் சிவனின் LIK படத்தில் நடித்து இருந்த நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி தற்போது தமிழ், தெலுங்கில் முக்கிய ஹீரோயினாக இருந்து வருகிறார். தமிழில் அவர் விக்னேஷ் சிவனின் LIK படத்தில் நடித்து இருந்த நிலையில் அது பிளாப் ஆனது.
</p><p>
தற்போது க்ரித்தி அடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இன்ஸ்டாவில் அவர் வெளியிடும் போட்டோக்களும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
</p><p>
க்ரித்தி கியூட்டாக போஸ் கொடுத்துள்ள லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.</p>]]></content>
            <updated>2026-09-09T22:48:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடு ட்ரிப்.. ஹாட் உடையில் மிர்னா மேனன் லேட்டஸ்ட் ஸ்டில்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/mirnaa-menon-sizzling-in-phi-phi-island-trip-1788993949"></link>
            <id>https://cineulagam.com/article/mirnaa-menon-sizzling-in-phi-phi-island-trip-1788993949</id>
            <summary type="text">ஜெயிலர் பட புகழ் நடிகை மிர்னா மேனன் ஹாட் உடையில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள். 

அவர் தற்போது தாய்லாந்தின் Phi Phi தீவுக்கு ட்ரிப் சென்று இருக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜெயிலர் பட புகழ் நடிகை மிர்னா மேனன் ஹாட் உடையில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள். </p><p>

அவர் தற்போது தாய்லாந்தின் Phi Phi தீவுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு ரெசார்ட்டில் கிளாமராக அவர் வலம் வந்த அழகிய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
</p><p>
அந்த போட்டோக்களுக்கு ரசிகர்களிடம் லைக்குகள் குவிந்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-09T22:45:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹாட் உடையில் படவிழாவுக்கு வந்த ஸ்ரேயா சரண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/shriya-saran-sizzling-at-drishyam-event-1788993584"></link>
            <id>https://cineulagam.com/article/shriya-saran-sizzling-at-drishyam-event-1788993584</id>
            <summary type="text">நடிகை ஸ்ரேயா சரண் தற்போது ஹிந்தியில் திரிஷ்யம் 3 படத்தில் நடித்து இருக்கிறார். Drishyam: The Conclusion
என பெயரிடப்பட்டு இருக்கும் அந்த படம் விரைவில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை ஸ்ரேயா சரண் தற்போது ஹிந்தியில் திரிஷ்யம் 3 படத்தில் நடித்து இருக்கிறார். Drishyam: The Conclusion
என பெயரிடப்பட்டு இருக்கும் அந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
</p><p>
அந்த படத்தின் விழாவில் ஸ்ரேயா சரண் ஹாட் ஆன உடையில் வலம் வந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.</p><p>&nbsp;வீடியோவும் இதோ.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-permalink="https://www.instagram.com/p/DdEcO0jghmZ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DdEcO0jghmZ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DdEcO0jghmZ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Shriya Saran (@shriya_saran1109)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-09T22:39:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[iPhone 18 Pro வந்துவிட்டது! Apple செய்த அதிரடி மாற்றங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/apple-debuts-iphone-18-pro-and-iphone-18-pro-max-1788989510"></link>
            <id>https://tamilwin.com/article/apple-debuts-iphone-18-pro-and-iphone-18-pro-max-1788989510</id>
            <summary type="text">ஆப்பிள் நிறுவனம் தனது புதிய iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய ஐபோன்களில் கேமரா, செயல்திறன், பேட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆப்பிள் நிறுவனம் தனது புதிய iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
</p><p>
புதிய ஐபோன்களில் கேமரா, செயல்திறன், பேட்டரி மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் முக்கிய மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><h2>புதிய அம்சங்கள்</h2><p> </p><p>2nm தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட A20 Pro chip இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. </p><p>புதிய thermal system மூலம் நீண்ட நேரம் அதிக செயல்திறனை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், முதன்முறையாக ஐபோனின் 48MP Fusion Main Camera-வில் variable aperture வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Meet iPhone 18 Pro and iPhone 18 Pro Max! We’ve made huge advancements to our camera (hello, variable aperture!), battery life, and performance, making this lineup our most powerful and intelligent yet. <a href="https://t.co/y1eeCB0O9O">pic.twitter.com/y1eeCB0O9O</a></p>&mdash; Greg Joswiak (@gregjoz) <a href="https://x.com/gregjoz/status/2097779754720178234?ref_src=twsrc%5Etfw">September 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> இதன் மூலம் வெளிச்சத்துக்கு ஏற்ப aperture தானாக மாறுவதுடன், பயனர்கள் கேமரா அமைப்புகளை கைமுறையாகவும் கட்டுப்படுத்த முடியும்.

புகைப்படங்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்க உதவும் Apple Reference Image தொழில்நுட்பமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>குறிப்பாக செய்தி புகைப்படக்காரர்கள் மற்றும் தொழில்முறை புகைப்படக் கலைஞர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

புதிய மாதிரிகளில் iOS 27 மற்றும் புதிய Siri AI வசதியும் இடம்பெற்றுள்ளது.</p><h2>செப்டெம்பர்&nbsp; முதல்</h2><p> </p><p>குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களின் context-ஐ புரிந்துகொண்டு பயனர்களுக்கு உதவும் வகையில் Siri AI உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆரம்பத்தில் beta பதிப்பாக வெளியாகிறது.</p><p>

iPhone 18 Pro-ன் eSIM-only பதிப்பு 36 மணி நேரம் வரையிலும், Pro Max 45 மணி நேரம் வரையிலும் video playback வழங்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30e2c595-96a0-470c-a246-2cde3739f55d/26-6aa1d48768f64.webp' /></p><p> </p><p>மேலும், சுமார் 15 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.

கருப்பு, வெள்ளி, Glacier மற்றும் புதிய Burgundy நிறங்களில் வெளியாகும் இந்த போன்களின் சேமிப்பு திறன் 256GB முதல் 2TB வரை உள்ளது.
</p><p>
அமெரிக்காவில் iPhone 18 Pro-ன் ஆரம்ப விலை 1,199 டொலர், Pro Max-ன் ஆரம்ப விலை 1,299 டொலர் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>செப்டெம்பர் 12 முதல் முன்பதிவு தொடங்கும் நிலையில், செப்டம்பர் 18 முதல் விற்பனைக்கு வருகின்றது என்று கூறப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-09-09T22:09:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நீதிமன்றில் சாட்சியமளித்த இளைஞர் மீது வாள்வெட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-attacked-sword-testifying-in-jaffna-court-1788983027"></link>
            <id>https://jvpnews.com/article/youth-attacked-sword-testifying-in-jaffna-court-1788983027</id>
            <summary type="text">யாழ்ப்பாணம்- ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம்- ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>குறித்த சம்பவமானது வேலணை அராலிச் சந்தி பகுதியில் இன்று (9) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
</p><p>

நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த பிரச்சினை தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், குறித்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக பாதிக்கப்பட்ட இளைஞர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d9dac7a-57f7-4e0d-b936-9e46dd1a6b12/26-6aa1b6f590b73.webp' /></p><p>வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் அவர் வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, வேலணை அராலிச் சந்தி பகுதியில் அவரை வழிமறித்த மற்றைய தரப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் நபர்கள் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
தாக்குதலாளிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சிலர் தற்போது கிளிநொச்சி பகுதியில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>தாக்குதலில் கடும் காயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T22:01:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் வழக்கு ; பிரதிவாதிகள் தரப்பு சாட்சியமும் நிறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/easter-attack-investigation-concluded-1788990084"></link>
            <id>https://jvpnews.com/article/easter-attack-investigation-concluded-1788990084</id>
            <summary type="text">2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நேற்று (08) நிறைவடைந்தது.
கொழும்பு, நீர்கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நேற்று (08) நிறைவடைந்தது.</p><p>
</p><p></p><p>கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளில் இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பான இந்த வழக்கு மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3290c5ad-d692-4b2c-8bcd-933da5f58016/26-6aa1d28598308.webp' /></p><p>

அரசுத் தரப்பு 249 நாட்கள் சாட்சியங்களை முன்வைத்த நிலையில், பட்டியலிடப்பட்ட 2,309 சாட்சிகளில் 547 பேர் மட்டுமே நீதிமன்றில் சாட்சியமளித்தனர். </p><p>பிரதிவாதிகள் தரப்பு சாட்சியங்களும் தற்போது நிறைவடைந்துள்ளன.

இந்தத் தாக்குதல்களில் 224 பேர் உயிரிழந்ததுடன், 584 பேர் காயமடைந்தனர். </p><p>24 பிரதிவாதிகளுக்கு எதிராக மொத்தம் 23,270 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 22ஆம் திகதி காலை 9 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T21:41:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தலுக்கு பிறகு ஈரான் போர் முடிவுக்கு வரும், எரிபொருள் விலை குறையும்: டிரம்ப் கணிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-predicts-after-election-iran-war-conclude-1788985409"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-predicts-after-election-iran-war-conclude-1788985409</id>
            <summary type="text">Trump Predicts After Election Iran War Will Conclude: இடைக்கால தேர்தலுக்கு பிறகு ஈரான் உடனான மோதல் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump Predicts After Election Iran War Will Conclude: இடைக்கால தேர்தலுக்கு பிறகு ஈரான் உடனான மோதல் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.</p><h2> ஈரான் மோதல் எப்போது முடிவுக்கு வரும்?</h2><p>அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறும் இடைக்காலத் தேர்தலுக்கு பிறகு,&nbsp; ஈரானுடனான மோதல் உடனடியாக&nbsp; முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ab86c4b-cd76-49ec-8fea-b2eab6dc810d/26-6aa1c043298fd.webp' /></p><p> அத்துடன் உச்சத்தை தொட்டு வரும் எரிபொருள் விலையும் பெருமளவு குறையும் என்று டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.</p><p> புதன்கிழமை டெக்சாஸ் மாநிலம் டல்லாஸுக்கு(Dallas) புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த டொனால்ட் டிரம்ப் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.</p><p>அப்போது புவிசார் பதற்றங்களுக்கும், உள்நாட்டு பொருளாதார நிவாரணத்திற்கும் உள்ள தொடர்பினை டிரம்ப் விளக்கினார்.</p><p></p><p>மேலும் இடைக்காலத் தேர்தலுக்கு பிறகு எண்ணெய் விலைகள்(oil prices) அதள பாதாளத்திற்கு செல்லும் என்றும், எரிவாயுகளின்(gasoline) விலை கலன்(gallon) ஒன்றுக்கு 2 டொலர்கள் வரை குறையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.</p><p> ஈரானுடனான தூதரக உறவுகள் குறித்து பேசிய டிரம்ப், மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Trump on Iran:<br><br>I think the war will end immediately after the election. <a href="https://t.co/KT1CthdgeD">pic.twitter.com/KT1CthdgeD</a></p>&mdash; Clash Report (@clashreport) <a href="https://x.com/clashreport/status/2097757200932294731?ref_src=twsrc%5Etfw">September 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> அணுசக்தி ஒப்பந்தத்தை விட கூடுதலான நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டு வருவதாகவும், ஆனால் அதே சமயம் ஈரானுடன் வழக்கமான ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா விரும்பவில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p> போர் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்பதை வெளிப்படுத்திய டிரம்ப், எத்தகைய வழிமுறைகளில் போரை முடிவுக்கு கொண்டு வரப் போகிறோம் என்பது குறித்து கூடுதல் தகவலை அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T21:32:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[iPhone 18 தொடரை அறிமுகம் செய்த ஆப்பிள்: அசத்தும் புதிய சிறப்பம்சங்கள் என்னென்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/apple-unveils-iphone-18-pro-series-highlights-1788989325"></link>
            <id>https://news.lankasri.com/article/apple-unveils-iphone-18-pro-series-highlights-1788989325</id>
            <summary type="text">Apple unveils Iphone 18 Pro Series, What are the Highlights: ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 18 ப்ரோ தொடர் ஸ்மார்ட்போனை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Apple unveils Iphone 18 Pro Series, What are the Highlights: ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 18 ப்ரோ தொடர் ஸ்மார்ட்போனை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.</p><h2>புதிய ஸ்மார்ட்போன் தொடர்களை அறிமுகப்படுத்திய ஆப்பிள்</h2><p>ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர நிகழ்வு புதன்கிழமை நடைபெற்ற நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 18 ப்ரோ(iPhone 18 Pro) மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்(iPhone 18 Pro Max) மாடல் ஸ்மார்ட்போன்களை ஆப்பிள் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்களானது Deep Black, Refined Silver, Glacier Blue, Burgundy ஆகிய நிறங்களில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">From iPhone Duo, iPhone 18 Pro, and iPhone 18 Pro Max to Apple Watch Series 12, Apple Watch Ultra 4, and AirPods 5… here&#39;s a look at all of the latest announcements dropping today! <a href="https://x.com/hashtag/AppleEvent?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AppleEvent</a> <a href="https://t.co/YvswtNEA7m">pic.twitter.com/YvswtNEA7m</a></p>&mdash; Tim Cook (@tim_cook) <a href="https://x.com/tim_cook/status/2097766713278525689?ref_src=twsrc%5Etfw">September 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p> ஆப்பிள் ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி(CEO) ஜான் டெர்னுஸ்(John Ternus), அறிமுகமாகும் புதிய ஐபோன்களில் மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு, சக்தி வாய்ந்த செயல்திறன் மற்றும் அதிக ஆற்றலை உள்ளடக்கிய பற்றரி மற்றும் சிறந்த கேமரா வசதிகள் ஆகியவை முன்னேற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><h2>ஐபோன் 18 தொடரின் முக்கிய அம்சங்கள்</h2><p> ஐபோன் 18 மாடல்களில் 2 நானோமீட்டர் செயல்முறை நோட் மூலம் உருவாக்கப்பட்ட A20 ப்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது.</p><p> அத்துடன் சிறந்த செயல்திறனை உறுதிப்படுத்தும் விதமாக 7-கோர் ஜிபியு (GPU) இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> அத்துடன் மாற்றியமைக்க கூடிய கேமரா துளை(changeable Aperture Values) அம்சம் கொண்ட அதிநவீன கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/639eb9f7-25e0-4da2-8299-7bcb7b7bf41a/26-6aa1cf8eba9ab.webp' /></p><p> மேலும் ஒரே சார்ஜில் 45 மணி நேரம் தொடர்ச்சியாக வீடியோ ஓட கூடிய பிளேபேக் திறன் வழங்கப்பட்டுள்ளது.</p><h2> விலை மற்றும் விற்பனை விவரங்கள்</h2><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3025a0e-437d-4609-8fd7-a5ba4c4d894f/26-6aa1cf8f6db75.webp' /></p><p>அமெரிக்காவில் ஐபோன் 18 ப்ரோவின் விலை $1,199 ஆகவும், ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் விலை $1,299 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.</p><p>இதற்கான முன் பதிவுகள் செப்டம்பர் 12ம் திகதி தொடங்குகிறது. அத்துடன் இதன் அதிகாரப்பூர்வ விற்பனை செப்டம்பர் 18ம் திகதி முதல் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.<br></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T21:29:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையேயான கப்பல் சேவை ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ferry-between-nagapattinam-kankesanthurai-cancelle-1788988702"></link>
            <id>https://jvpnews.com/article/ferry-between-nagapattinam-kankesanthurai-cancelle-1788988702</id>
            <summary type="text">நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன்துறை இடையே வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கப்பல் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன்துறை இடையே வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.</p><p> </p><p></p><p>இந்நிலையில், கப்பல் போக்குவரத்து தொடர்பான பாதுகாப்பு, ஆய்வு சான்றிதழ்கள் மற்றும் விதிமுறைகள் குறித்து ஆய்வு செய்வதற்காகச் சென்னையில் இருந்து வருகை தந்த வணிக கடல்சார் துறை அதிகாரிகள் நாகையில் இயக்கப்படும் கப்பல்களை ஆய்வு செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5ff2434-2248-4a75-a955-a8a4821f3d0d/26-6aa1cd202b1ce.webp' /></p><p>இந்த ஆய்வின் போது சில குறைபாடுகள் கண்டறியப்பட்டதாகவும், அக்குறைபாடுகளைச் சரிசெய்யும் வரை கப்பல் சேவையை ரத்து செய்யுமாறு சென்னை வணிக கடல்சார் துறை சார்பில் கடிதம் வழங்கப்பட்டதாகவும் தெரிகிறது. </p><p>இதனையடுத்து, தற்போது கப்பல்களில் அவசியமான சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
</p><p>
இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்தவுடன் வரும் 11ஆம் திகதிக்குப் பின்னர் பயணிகள் சேவை மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>அதுவரை நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன்துறை இடையே திட்டமிடப்பட்ட அனைத்துப் பயணங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T21:19:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சபையில் தனது கைது குறித்து பேச மறுத்த நாமல்.. வெளியான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-joined-parliament-after-arrest-1788950728"></link>
            <id>https://tamilwin.com/article/namal-joined-parliament-after-arrest-1788950728</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நேற்றைய தினம், நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, அவரின் கைது தொடர்பில் கருத்து எதுவும் தெரிவித்திருக்கவில்லை.&amp;nb...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நேற்றைய தினம், நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, அவரின் கைது தொடர்பில் கருத்து எதுவும் தெரிவித்திருக்கவில்லை.&nbsp;</p><p>இந்நிலையில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு விடயம் குறித்து பேசுவது நீதிமன்ற அவமதிப்பாக மாறும் என்பதால், நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரையின் போது தனது அண்மைய கைது குறித்து பேசுவதைத் தவா்த்துக் கொண்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சானக மதுகொட தெரிவித்தார்.&nbsp;</p><h2>நாடாளுமன்ற நடைமுறை</h2><p>இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மதுகொட, நாடாளுமன்றத்தை குண்டுவைத்து தகர்க்கவும், வளாகத்திற்கு தீ வைக்கவும் முயன்ற வரலாற்றைக் கொண்ட சில அரசாங்க உறுப்பினர்களைப் போல் அல்லாமல், நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளை நன்கு அறிந்தவர் என குறிப்பிட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa60ecf8-dda5-43a4-b07f-b7addc54b7bd/26-6aa13de7f2b69.webp' /></p><p>

நாமல் ராஜபக்ச தனது கைது குறித்தும் நீதித்துறையின் நடத்தை குறித்தும் பேசுவார் என எதிர்பார்த்ததாக தெரிவித்த நீதித்துறை பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவுக்கு பதிலளிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்தார்.</p><p>

இவ்விடயம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது இது குறித்து கருத்துத் தெரிவிக்காமல் தவிர்த்ததன் மூலம் நாமல் ராஜபக்ச நாடாளுமன்ற நடைமுறைக்கு அமைவாகவே செயற்பட்டுள்ளதாக மதுகொட மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/6Kzmt4sOp9A" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-09T21:17:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ; ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/renewed-tension-middle-east-iran-attacks-jordan-1788987170"></link>
            <id>https://canadamirror.com/article/renewed-tension-middle-east-iran-attacks-jordan-1788987170</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஜோர்டான் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஜோர்டான் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

ஜோர்டானின் பப்ரக் மற்றும் அஸ்ரக் பகுதிகளில் அமைந்துள்ள அமெரிக்க விமானப்படைத் தளங்களை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்ற நிலை தீவிரமடைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee93aa5f-1445-4947-ad5d-191e905b75df/26-6aa1c723cc8a9.webp' /></p><p> </p><p>இதற்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளில் உள்ள இலக்குகள் மீதும், பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது.</p><p>

இதனிடையே, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் சர்வதேச கப்பல் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதுடன், கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்திருந்தது.

பின்னர் இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து சில நாட்கள் மத்திய கிழக்கில் பதற்றம் தணிந்திருந்தது. </p><p>எனினும், கடந்த மாத இறுதியில் இருந்து ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மீண்டும் அவ்வப்போது மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
</p><p>
இந்த நிலையில், ஈரானின் கார்க் தீவில் நிறுத்தப்பட்டிருந்த ஐந்து கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. </p><p>அமெரிக்க போர்க்கப்பல் ஒன்றின் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.</p><p>

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடியாக ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை ஈரான் குறிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

மேலும், இரண்டு அமெரிக்கக் கப்பல்கள், எட்டு கச்சா எண்ணெய் கப்பல்கள் மற்றும் பத்து சரக்குக் கப்பல்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

எனினும், இந்தத் தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.</p>]]></content>
            <updated>2026-09-09T20:52:56+00:00</updated>
        </entry>
    </feed>
