<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-27T10:16:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு : நிவாரணப் பொருட்களுடன் விரையும் இந்திய விமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/india-sends-37-5-tonnes-relief-materials-to-nepal-1787822865"></link>
            <id>https://ibctamil.com/article/india-sends-37-5-tonnes-relief-materials-to-nepal-1787822865</id>
            <summary type="text">நேபாளம் மற்றும் சீனாவுக்கு உட்பட்ட திபெத் பிராந்தியத்தில் நேற்று (26) ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை&amp;nbsp; 200க்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் மற்றும் சீனாவுக்கு உட்பட்ட திபெத் பிராந்தியத்தில் நேற்று (26) ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை&nbsp; 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 900க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>இந்த நிலையில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு இந்திய அரசு நேற்று (26) 10 தொன் நிவாரணப் பொருட்களை விமானம் மூலம் அனுப்பிவைத்த நிலையில் இன்று 37.5 தொன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைத்துள்ளது.</p><p>
இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,“நேபாளத்துக்காக 37.5 தொன் நிவாரணப் பொருட்கள், மருந்துகள், உணவு பொதிகளை ஏற்றிக்கொண்டு இரண்டாவது விமானம் புறப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஜெய்சங்கரின் பதிவு&nbsp;</h2><p> இந்தியா - நேபாள அதிகாரிகளுடன் நெருங்கிய, தொடர்ச்சியான தொடர்பில் உள்ளது. நிவாரணப் பணிகளுக்கு இந்தியா தொடர்ந்து வலுவான ஆதரவை அளிக்கும்” என தெரிவித்துள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A second flight has just taken off, carrying 37.5 tonnes of HADR material, medicines &amp; food packets for Nepal.<br><br>India remains in close and continuous touch with the Nepalese authorities. We will continue to strongly support the ongoing relief efforts.<br><br>🇮🇳🇳🇵 <a href="https://t.co/4m46leqfkC">pic.twitter.com/4m46leqfkC</a></p>&mdash; Dr. S. Jaishankar (@DrSJaishankar) <a href="https://x.com/DrSJaishankar/status/2092849615360114978?ref_src=twsrc%5Etfw">August 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>இதேவேளை முன்னதாக நேற்று அவர் வெளியிட்ட பதிவில், “பேரழிவை ஏற்படுத்தி உள்ள வெள்ளப்பெருக்கால் நேபாளத்துக்கு ஆதரவு அளிக்கும் நோக்கில் 10 தொன் நிவாரணப் பொருட்கள் மற்றும் மருந்துகளை அனுப்பி உள்ளோம். </p><p>உயிரிழந்த குடும்பங்களுடனும் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எங்கள் வருத்தங்களை பகிர்ந்துகொள்கிறோம். இந்த சவாலை எதிர்கொள்ள இந்தியா நேபாளத்துடனும் அதன் மக்களுடனும் துணை நிற்கிறது” என தெரிவித்திருந்தார்.</p><p>மேலும் இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி&nbsp; நேபாளத்தைச் சேர்ந்த 295 பேரும், இந்தியாவைச் சேர்ந்த 133 பேரும், அமெரிக்கா, உக்ரைன், அவுஸ்திரேலியா, பிரித்தானியா, கனடா, மலேசியா போன்ற பல நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் காணாமல் போயுள்ளனர்.</p><p>அத்துடன் மீட்புப் பணிகளை மேற்கொள்ள இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர் நேபாளத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T10:11:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது அரசியலமைப்பு திருத்தம்! BASL மனுவை நிராகரிக்க கோரி NPP எம்.பி இடையீட்டு மனு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/npp-mp-petitions-to-dismiss-basl-petition-1787825355"></link>
            <id>https://ibctamil.com/article/npp-mp-petitions-to-dismiss-basl-petition-1787825355</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுண ஆரச்சி, முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக இலங்கை சட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுண ஆரச்சி, முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) இரு அதிகாரிகள் தாக்கல் செய்துள்ள விசேட தீர்மான மனுவை நிராகரிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
</p><p>
BASL பொருளாளர் T.M.S. பசிந்து சில்வா மற்றும் உதவிச் செயலாளர் லகித இசிவர வகிஷ்ட ஆரச்சி ஆகியோர் முன்னதாக 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புச் சட்டபூர்வத்தன்மையை சவால் செய்து விசேட தீர்மான மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
</p><p>
இந்தத் திருத்தங்கள் நீதித்துறையின் சுயாதீனத்தை பாதிப்பதாகவும், அவற்றை நடைமுறைப்படுத்த மக்களின் அங்கீகாரத்துடன் கூடிய சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்றும் BASL மனுதாரர்கள் வாதிட்டுள்ளனர்.</p><p></p><h2>மனு மீதான விசாரணை</h2><p>இந்நிலையில் நிபுண ஆரச்சி தனது மனுவில், இந்த வழக்கில் இடையீட்டாளராக இணைந்து, சட்டத்தரணி ஊடாக BASL மனு மீதான விசாரணையில் பங்கேற்க அனுமதிக்குமாறு உயர்நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05e4c1ef-5fd8-4d39-93fb-ed04368b1721/26-6a900ccd71995.webp' /></p><p>மேலும், BASL மனுதாரர்கள் முன்வைத்துள்ள பல முக்கிய வாதங்களை அவர் நிராகரித்துள்ளதுடன், அவை ஆதாரமற்றவை, சட்ட அடிப்படையற்றவை அல்லது சட்டரீதியாக நிலைக்க முடியாதவை எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T10:09:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[45,000 றோஜாக்கள்.... காதலை சொல்லி இணையவாசிகளை திகைக்கவிட்ட இளைஞன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bengaluru-based-youtuber-romance-proposing-viral-1787824174"></link>
            <id>https://jvpnews.com/article/bengaluru-based-youtuber-romance-proposing-viral-1787824174</id>
            <summary type="text">&amp;nbsp; கன்னடத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவர் பிரம்மாண்டமான பூங்கொத்தை உருவாக்கி தனது காதலிக்கு மிக வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்திய நிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கன்னடத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவர் பிரம்மாண்டமான பூங்கொத்தை உருவாக்கி தனது காதலிக்கு மிக வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்திய நிகழ்வு இணையத்தில் வைரலாகி, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
</p><p>
இந்தச் சிறப்புமிக்க தருணத்திற்காக 40,000 முதல் 45,000 வரை புதிய மலர்களைக் கொண்டு இராட்சத அளவில் இந்த பிரம்மாண்ட பூங்கொத்து தயாரிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a649fa70-c782-4c27-b13e-3a55fcef9141/26-6a9008301c494.webp' /></p><h2>இணையவாசிகளை திகைக்கவிட்ட இளைஞன்</h2><p>
</p><p>
ஒரு மலரின் சராசரி விலை ரூ.20 என கணக்கிடப்பட்டால், இந்த பிரம்மாண்ட பூங்கொத்து தயாரிப்பதற்கான மலர்களின் செலவு மட்டும் சுமார் ரூ.9 இலட்சத்தை (இந்திய ரூபாவில்) எட்டும் என்று இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

இருப்பினும், போக்குவரத்து மற்றும் தொழிலாளர் செலவுகளைப் பொறுத்து இதன் இறுதி மதிப்பு மாறுபடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p></p><p>
காதலை வெளிப்படுத்த இது ஒரு அதிநவீன மற்றும் பிரம்மாண்டமான வழியா அல்லது சமூக வலைதள விளம்பர உத்தியா என இணையவாசிகள் மத்தியில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.</p><p>

இருப்பினும் இந்த வித்தியாசமான முயற்சி பலரையும் ஆச்சரியத்திலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-27T10:01:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர் மக்களால் பெர்லின் நகர காவல்துறைக்கு ஏற்பட்ட நூதன சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/berlin-police-are-struggling-1787824243"></link>
            <id>https://news.lankasri.com/article/berlin-police-are-struggling-1787824243</id>
            <summary type="text">Hard to find enough German-speaking recruits: போதுமான ஜேர்மன் மொழி பேசும் புதிய காவலர்களைத் திரட்டுவதில் பெர்லின் காவல்துறை சிரமப்பட்டு வருகிறது.
புல...</summary>
            <content type="html"><![CDATA[<p>Hard to find enough German-speaking recruits: போதுமான ஜேர்மன் மொழி பேசும் புதிய காவலர்களைத் திரட்டுவதில் பெர்லின் காவல்துறை சிரமப்பட்டு வருகிறது.
</p><p>புலம்பெயர்ந்த மக்களின் விண்ணப்ப எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், போதுமான ஜேர்மன் மொழி பேசும் கவலர்களை நியமிப்பதில் பெர்லின் நிர்வாகம் சிரமப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a04eaa18-3cf8-49f9-a442-7f9f7bf9073c/26-6a9008760e43e.webp' /></p><p>
</p><p>விண்ணப்பதாரர்களில் 40 சதவீதம் பேர் ஜேர்மன் மொழித் தேர்வில் தோல்வியடைந்ததாக நகர காவல் படைத் தலைவர் பார்பரா ஸ்லோவிக் மெய்செல் தெரிவித்துள்ளார். </p><p>நகரத்திற்குப் புதிய காவலர்கள் மிகவும் தேவைப்படுவதாலும், அதே சமயம் தரத்தைக் குறைத்துக்கொள்ள முடியாததாலும், இது தனக்கும் காவல்துறைக்கும் ஒரு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாக அவர் கூறியுள்ளார். </p><p>உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவிக்கையில், விண்ணப்பதாரர்கள் உள்ளனர், ஆனால் உயர் தரநிலைகளை எங்களால் குறைக்க முடியாத நிலை உள்ளது என்றார்.</p><p></p><p> மேலும், நாங்கள் எங்கள் காவல் நடவடிக்கைகளை நாளுக்கு நாள் விளக்க வேண்டியுள்ளது... மட்டுமின்றி, சில சமயங்களில் விடயங்களை எழுத்துப்பூர்வமாகவும் ஆவணப்படுத்த வேண்டியுள்ளது என்றார். </p><p>2025-ஆம் ஆண்டு முதல் 1,200 தொடக்க நிலை பணியிடங்களில் சுமார் கால் பங்கு நிரப்பப்படாமல் உள்ளன என்றும், தகுதியான விண்ணப்பதாரர்களுக்காக மிகவும் கடுமையான போட்டியை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/825271b1-bdfa-48b4-883f-3d92557f802b/26-6a900876b4c9b.webp' /></p><p> </p><p>மேலும் தகுதியானவர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். 2025 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் பயிற்சியைத் தொடங்கிய 240 பயிற்சி மாணவர்களில், பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு ஜேர்மன் மொழியில் கூடுதல் பயிற்சி தேவைப்பட்டது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>
ஜேர்மனியில் உள்ள மற்ற எந்தப் படையையும் விட, பெர்லினில்தான் புலம்பெயர்ந்த பின்னணியைச் சேர்ந்த அதிகாரிகளின் விகிதம் 37 சதவீதமாக மிக அதிகமாக உள்ளது. விண்ணப்பதாரர்கள் கணினியில் எழுதும் தேர்விலும், அத்துடன் சொல்வெழுத்துத் தேர்வு மற்றும் அவர்களின் ஜேர்மன் இலக்கணத் திறன் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.
</p><p>அவர்கள், ஜேர்மனியின் அடிப்படைச் சட்டக் கோட்பாடுகள் குறித்து தங்களுக்கு ஆழமான புரிதல் இருப்பதையும், அவற்றை பொதுமக்களுக்கு விளக்கத் திறனுள்ளவர்களாக இருப்பதையும் நிரூபிக்க வேண்டும். குறிப்பாக அடுத்த மாதம் கிழக்குப் பகுதியில் நடைபெறவிருக்கும் முக்கியத் தேர்தல்களை முன்னிட்டு, இடம்பெயர்வு மற்றும் நாட்டில் அது வகிக்கும் பங்கு குறித்த விவாதம் மேலும் சூடுபிடித்துள்ளது. </p><p>பெருந்தொற்றின் முதல் ஆண்டைத் தவிர, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜேர்மனியில் சட்டவிரோதக் குடியேற்றம் ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலத்தில் இல்லாத அளவிற்கு மிகக் குறைந்த நிலைக்குச் சரிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2eaafbe-e06e-40be-9194-49316308acca/26-6a90087768748.webp' /></p><p> </p><p>கடந்த மே மாதம் ஆட்சிக்கு வந்தபோது எல்லைக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்குவதாக உறுதியளித்த, சேன்ஸலர் ஃபிரெட்ரிக் மெர்ஸின் ஆட்சிக்காலத்தில் இந்தச் சாதனை அளவிலான புள்ளிவிவரங்கள் பதிவாகியுள்ளன.
</p><p>2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை, 106,298 முதல் முறை தஞ்சம் கோரும் விண்ணப்பங்கள் தேசிய குடிவரவு முகமையான பாம்ஃப் (Bamf) மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், 2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஜேர்மனி தனது மிகக் குறைந்த வருடாந்திர மொத்த எண்ணிக்கையைப் பதிவு செய்யும் பாதையில் உள்ளது.
</p><p>2024-ல், இந்த எண்ணிக்கை 229,751 ஆக, இருமடங்குக்கும் அதிகமாக இருந்தது. கடந்த ஆண்டு, எல்லையைக் கட்டுப்படுத்தும் பொறுப்பில் உள்ள ஃபெடரல் காவல்துறை, 62,526 சட்டவிரோத நுழைவுகளைப் பதிவு செய்தது; இது 2023-ஆம் ஆண்டின் எண்ணிக்கையில் பாதியாகும். </p><p>இதற்கிடையில், மே முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் எல்லையைக் கடக்க முயன்ற 33,000 பேரில் கிட்டத்தட்ட 75 சதவிகிதத்தினர் நிராகரிக்கப்பட்டனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T09:48:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதியில் இறங்கித் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும்...! சஜித் தரப்பு எடுத்துரைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/take-control-to-protect-democracy-harshana-1787820618"></link>
            <id>https://ibctamil.com/article/take-control-to-protect-democracy-harshana-1787820618</id>
            <summary type="text">இந்த அரசு தானாகவே வீழும் வரை பார்த்துக்கொண்டிருக்காமல் நாட்டின்
ஜனநாயகத்தையும் உரிமைகளையும் பாதுகாக்க மக்கள் அனைவரும் உடனடியாக வீதியில்
இறங்கித் தலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த அரசு தானாகவே வீழும் வரை பார்த்துக்கொண்டிருக்காமல் நாட்டின்
ஜனநாயகத்தையும் உரிமைகளையும் பாதுகாக்க மக்கள் அனைவரும் உடனடியாக வீதியில்
இறங்கித் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின்
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.</p><p>

கம்பஹாவில் நேற்று (26-08-2026) மக்கள் சந்திப்பொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பெரும்பான்மையான மக்கள்</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “அரசை மாற்ற வேண்டும் எனப் பெரும்பான்மையான மக்கள் விரும்பிய போதிலும் அதனை
யாராவது ஒருவர் செய்து தருவார்கள் என வீட்டில் காத்திருப்பது நடைமுறைக்குச்
சாத்தியமற்றது. </p><p>ஜனநாயகப் போராட்டத்தில் மக்களே நேரடியாகக் களமிறங்க வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be4fd669-e286-40f1-9c52-c366347efe66/26-6a9004fa68cef.webp' /></p><p>தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எதனையும் தற்போதைய அரசு
நிறைவேற்றவில்லை.</p><p> மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலையைக் குறைத்தல்,
நெல்லுக்கு 150 ரூபா நியாயமான விலை வழங்குதல் மற்றும் நிறைவேற்று அதிகார
ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் போன்ற வாக்குறுதிகள் எச்கரிக்கப்படவில்லை.</p><p> </p><p></p><h2>மக்கள் விடுதலை&nbsp;</h2><p>இதனால்
இன்று விவசாயிகள் நெல்லை 95 ரூபாவுக்கே விற்கும் அவல நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளனர்.
</p><p>
நாட்டில் நீதித்துறை மீது அழுத்தங்களைப் பிரயோகித்து அதனை அரசியல்மயமாக்குவதன்
மூலம் வடகொரியாவைப் போன்ற ஒரு கட்சி மட்டுமே ஆட்சி செய்யும் சர்வாதிகாரப்
போக்கை நோக்கி அரசு நகர முற்படுகின்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/998edbaf-a06c-4f95-88a0-f3f4376a602c/26-6a9004f9b3c83.webp' /></p><p>மக்கள் பிரதிநிதிகளோ அரச நிறுவனங்களின் தலைவர்களோ சுயாதீனமாகச் செயற்பட
முடியாமல் பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகளின்
உத்தரவுகளுக்கேற்பவே அனைத்துப் பணிகளும் நடைபெறுகின்றன.
</p><p>
எனவே, நாட்டில் ஜனநாயகம் முற்றாக அழிந்துபோவதைத் தடுக்கவும் மற்றும் சர்வாதிகார
ஆட்சியை வீழ்த்தவும் பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் உடனடியாக ஒன்றுபட
வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-27T09:45:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[டாக்சிக் பட நடிகை நயன்தாராவின் அட்டை விளம்பர போட்டோஷூட்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/nayanthara-after-toxic-release-photoshot-pics-1787823164"></link>
            <id>https://viduppu.com/article/nayanthara-after-toxic-release-photoshot-pics-1787823164</id>
            <summary type="text">நயன்தாராதென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து தற்போது பாலிவுட்டிலும் கால்பதித்து வருபவர் தான் நடிகை நயன்தாரா. சமீபத்தில் நட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நயன்தாரா</h2><p>தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து தற்போது பாலிவுட்டிலும் கால்பதித்து வருபவர் தான் நடிகை நயன்தாரா. </p><p>சமீபத்தில் நடிகையும் இயக்குநருமான கீது மோகன் தாஸ் இயக்கத்தில் டாக்சிக் படத்தில் ஹீரோ யஷுக்கு அக்கா ரோலில் நடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c24b5516-403b-428a-82f3-2abe3a3400f4/26-6a90044369bfa.webp' /></p><p> படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், நயன் தாரா, கிளாமர் லுக்கில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். </p><p>அட்டை விளம்பரத்திற்காக அவர் வெளியிட்டு அந்த போட்டோஷூட்டை பார்த்து ரசிகர்கள் தங்களின் ரியாக்ஷானை பதிவிட்டு வருகிறார்கள்.</p>]]></content>
            <updated>2026-08-27T09:45:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வீரர் சோனல் தினுஷவை சச்சினுடன் ஒப்பிட்ட BCCI துணைத் தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sonal-compared-dinusha-to-sachin-tendulkar-1787823758"></link>
            <id>https://ibctamil.com/article/sonal-compared-dinusha-to-sachin-tendulkar-1787823758</id>
            <summary type="text">இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இலங்கை துடுப்பாட்ட வீரர் சோனல் தினுஷவை, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இலங்கை துடுப்பாட்ட வீரர் சோனல் தினுஷவை, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு BCCI துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா பாராட்டியுள்ளார்.
</p><p>
சமூக வலைத்தளப் பதிவில் சுக்லா, “இலங்கையின் இந்த சோனல் அற்புதமான வீரர். டெண்டுல்கரைப் போலத் தெரிகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த டெஸ்ட் வீரராக உருவாக முடியும்” எனக் குறிப்பிட்டு, இலங்கை கிரிக்கெட்டையும் பதிவில் இணைத்துள்ளார்.</p><p>
இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தினுஷ தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதன் பின்னணியிலேயே சுக்லாவின் இந்தப் பாராட்டு வெளியாகியுள்ளது.</p><p></p><h2>100 ஓட்டங்கள்</h2><p>நான்கு இன்னிங்ஸ்களில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை தினுஷ பெற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55d936d7-91e2-47f0-a303-1ff600618ccb/26-6a90069061d4c.webp' /></p><p>
</p><p>இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இனிங்ஸில் 100 ஓட்டங்களையும், இரண்டாம் இனிங்ஸில் 84 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.</p><p>மேலும், இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 103 ஓட்டங்களை பெற்றுள்ள நிலையில்&nbsp; இரண்டாவது இன்னிங்ஸான இன்றைய இறுதி நாளில் மற்றொரு அரைச்சதம் கடந்து தற்போதுவரை 98 ஓட்டங்களை ஆட்டமிக்காது பெற்றுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">This Sonal of Srilanka is an amazing player. Looking like Tendulkar. Can be a wonderful test player in international cricket. <a href="https://x.com/OfficialSLC?ref_src=twsrc%5Etfw">@OfficialSLC</a></p>&mdash; Rajeev Shukla (@ShuklaRajiv) <a href="https://x.com/ShuklaRajiv/status/2092835598235304013?ref_src=twsrc%5Etfw">August 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
இலங்கை அணி தோல்வியைத் தவிர்க்கப் போராடிய நிலையில், தினுஷ கடைநிலை துடுப்பாட்ட வீரர்களுடன் இணைந்து நீண்ட நேரம் துடுப்படுத்தாடி வருகிறார்.</p><p>இந்தத் தொடரில் தினுஷவின் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டமும், இந்தியாவின் சுழற்பந்து வீச்சை திறம்பட எதிர்கொண்ட விதமும் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்களிடையே பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
</p><p>
25 வயதான சோனல் தினுஷவின் இந்த ஆட்டம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கைக்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T09:42:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 270 ஆக உயர்வு: சுமார் 1500 பேர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-flash-flood-270-dead-1500-missing-1787823682"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-flash-flood-270-dead-1500-missing-1787823682</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கரமான வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது. அதிகரிக்கும் உயிரிழந்தோர் எண்ணிக்கை
நேபாள - திபெத் எல்லைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கரமான வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது.</p><h2> அதிகரிக்கும் உயிரிழந்தோர் எண்ணிக்கை</h2><p>
நேபாள - திபெத் எல்லையில் போட்டே கோஷி(Bhote Koshi) நதியில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளத்தில் ரசுவா, நுவாகோட் மற்றும் தாதிங் மாவட்டங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.</p><p> இந்த திடீர் பயங்கர வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb966226-fd9d-4565-b025-cee9dc606592/26-6a9006440b9f6.webp' /></p><p>அத்துடன் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 1500 ஆக அதிகரித்துள்ளது என்று நேபாள காவல்துறையினர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.</p><p> வெள்ளத்தில் சிக்கி காயமடைந்தவர்களில் 66 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள கிட்டத்தட்ட 4.50 காவல்துறை அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><h2> காணாமல் போன வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலா பயணிகள்</h2><p>நேபாள வெள்ளத்தில் காணாமல் போன வெளிநாட்டினரின் எண்ணிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e83c14f-553b-4b03-8a53-2047f52cac92/26-6a900644b7ea6.webp' /></p><p> சீன வெளியுறவு அமைச்சகத்தின் தகவல்படி கிட்டத்தட்ட 100 சீனர்கள் காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> நேபாள நாட்டின் சுற்றுலா வாரியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, கிட்டத்தட்ட 644 சர்வதேச பயணிகள் இதுவரை என்ன ஆனார்கள் என்பது தெரியவரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இந்தியர்கள் 178 பேர், நேபாளத்தினர் 127, அமெரிக்கர்கள் 65, மலேசியர்கள் 53, உக்ரைனியர்கள் 51, அவுஸ்திரேலியர்கள் 35, பிரித்தானியர்கள் 33 பேர் காணாமல் போயுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T09:41:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கையர்கள் அச்சமின்றி நாடு திரும்பலாம் - அமைச்சர் பிமல் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankans-refugees-in-india-can-return-home-1787821798"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankans-refugees-in-india-can-return-home-1787821798</id>
            <summary type="text">இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது
கைதுகளுக்கோ உள்ளாகாமல், நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது
கைதுகளுக்கோ உள்ளாகாமல், நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும்
பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கு தேவையான சட்டரீதியான தளர்வுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி
அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
</p><p>
யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்று(26.08.2026) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள்</h2><p>
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோருடன் இணைந்து நடைபெற்ற
இச்சந்திப்பில், ஜனாதிபதியுடனான உயர்மட்டக் கலந்துரையாடலில் எட்டப்பட்ட
தீர்மானங்கள் உள்ளிட்ட மாவட்ட மட்டத்திலான முக்கிய விடயங்கள் தொடர்பில்
விளக்கமளிக்கப்பட்டது.
</p><p>
அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்ததாவது,&nbsp;யுத்த காலத்தில் முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்
அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கையர்கள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம்
ஊடாக நாடு திரும்பியபோது வழங்கப்பட்டிருந்த சில விதிவிலக்குகள், அண்மையில்
பலாலி விமான நிலையம் ஊடாக நாடு திரும்பிய சிலருக்கு வழங்கப்படாததன் காரணமாக
கைதுச் சம்பவங்கள் இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce7ac819-a773-40a9-8c38-f17f005c0f77/26-6a9003bee7900.webp' /></p><p>இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்
க.இளங்குமரன் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோரின்
தலையீட்டின் மூலம் குறித்த நபர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர்
விடுவிக்கப்பட்டனர்.</p><p>

இதனைத் தொடர்ந்து, இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவையில் முக்கிய
தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன்படி உயிரைப் பாதுகாப்பதற்காக
முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கைப் பிரஜைகள் அனைவரும்
தற்போது நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் அச்சமின்றித்
தாயகம் திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.</p><p>நாடு திரும்பும் இவ்வாறான நபர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவதற்கும்,
தேவையான காணிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்
தலைவர்களாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஊடாக
தேவையான உதவிகள் வழங்கப்படும்.</p><p> அத்துடன், கடந்த ஆகஸ்ட் 20ஆம் திகதி ஜனாதிபதி
தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட
தீர்மானங்களுக்கு அமைவாக, தேசிய பாதுகாப்பையும் மக்களின் உரிமைகளையும்
சமநிலையில் பேணியவாறு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணிகளை
விடுவிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது
தெரிவித்தார்.</p><h2>அகழ்ந்தெடுக்கப்பட்ட எச்சங்கள்</h2><p>மேலும், 2025 ஜனவரி முதல் 2026 ஆகஸ்ட் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில்
யாழ்ப்பாணத்தில் 65 ஏக்கர், கிளிநொச்சியில் 128 ஏக்கர், முல்லைத்தீவில் 615
ஏக்கர், மன்னாரில் 135 ஏக்கர் மற்றும் வவுனியாவில் 150 ஏக்கருக்கும் அதிகமான
காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c390d7b-623d-44a8-85ef-b732bf8d3d17/26-6a9003bfb8d97.webp' /></p><p>
இதனிடையே, பலாலி விமான நிலைய வீதியின் கிழக்குப் பகுதியில் தற்போது விவசாய
நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பொதுமக்களுக்கு எதிர்வரும் செப்டெம்பர்
மாதத்திற்குள் வீடுகளை அமைத்து நிரந்தரமாகக் குடியேறுவதற்கு அனுமதி வழங்க
நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>இதேவேளை, காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் சர்வதேச தினத்தை முன்னிட்டு
நேற்றுமுன்தினம்(25.08.2026) நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவின் பங்கேற்புடன் பிரதான
நிகழ்வு நடைபெற்றது.
</p><p>
தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்றபோது அடையாளம் காணப்பட்ட 15,966 குடும்பங்களில்
11,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கான அடிப்படை ஆவணப் பணிகள் நிறைவு
செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக வரவு செலவுத் திட்டத்தில் 300 மில்லியன் ரூபா
ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>அதேபோன்று, அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் மருத்துவ அதிகாரிகளின்
அர்ப்பணிப்பின் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 565
எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
அகழ்ந்தெடுக்கப்பட்ட எச்சங்களில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும்,
சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை
முன்னெடுக்கவும் நீதி அமைச்சு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும்
அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T09:40:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் 6 நாட்களில் செய்துள்ள வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/bethlehem-kudumba-unit-6-days-box-office-1787822746"></link>
            <id>https://cineulagam.com/article/bethlehem-kudumba-unit-6-days-box-office-1787822746</id>
            <summary type="text">நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் வெளிவந்த பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தின் 6 நாட்கள் வசூல் விவரம் இதோ.

பெத்லகேம் குடும்ப யூனிட்

பிரேமலு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் வெளிவந்த <a href="https://www.youtube.com/watch?v=BZ6nD0I5Avo" target="_blank">பெத்லகேம் </a>குடும்ப யூனிட் படத்தின் 6 நாட்கள் வசூல் விவரம் இதோ.</p><p></p><h2>

பெத்லகேம் குடும்ப யூனிட்
</h2><p>
பிரேமலு திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றார் இயக்குநர் கிரிஷ் ஏ.டி. இவர் இயக்கத்தில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் பெத்லகேம் குடும்ப யூனிட்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14cdab5c-9c3c-4590-a60b-fbcde99623b0/26-6a90029d1949e.webp' /></p><p>இப்படத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ இணைந்து நடித்துள்ளனர். பீல் குட் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
</p><h2>
பாக்ஸ் ஆபிஸ்</h2><p>

ஒவ்வொரு புதிய திரைப்படம் வெளிவரும்போதும், அப்படத்தின் ஒவ்வொரு நாள் வசூல் குறித்தும் தொடர்ந்து பார்ப்போம். அந்த வகையில், கடந்த வாரம் வெளிவந்து பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படத்தின் 6 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c861a10b-2ffe-45db-9580-bcaf87ed0a6a/26-6a90029dc350a.webp' /></p><p>அதன்படி, 6 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 115 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p>]]></content>
            <updated>2026-08-27T09:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்குடன் தொடர்புடைய அரசியல்வாதிகளுக்கு வலை வீச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/investigations-regarding-the-politicians-1787808951"></link>
            <id>https://tamilwin.com/article/investigations-regarding-the-politicians-1787808951</id>
            <summary type="text">முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக்குடன் நெருங்கிய தொடர்பு பேணிய முக்கிய அரசியல்வாதிகள் குறித்த விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக்குடன் நெருங்கிய தொடர்பு பேணிய முக்கிய அரசியல்வாதிகள் குறித்த விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பாசிக் தற்பொழுது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>பாசிக்கிடம், பல கோடி ரூபாய் பணம் மற்றும் பல்வேறு சலுகைகளைப் பெற்றதாகக் கூறப்படும் 10 முக்கிய அரசியல்வாதிகளிடம் விரைவில் விசாரணை நடத்தப்படவுள்ளது.</p><h2>கடந்த அரசாங்கத்தில் இருந்த முன்னாள் அமைச்சர்</h2><p>
ஷிரான் பாசிக்கிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் போது வெளிவந்த அதிர்ச்சித் தகவல்களின் அடிப்படையில், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் இந்த அரசியல்வாதிகளிடம் விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a668adef-7429-4b00-837e-77d516c92c25/26-6a8fd8ec69dbc.webp' /></p><p>
இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ள அரசியல்வாதிகளில் இரண்டு முன்னாள் பெண் அமைச்சர்கள், இரண்டு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட பல பிரபல அரசியல்வாதிகள் அடங்குவர் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>குறிப்பிட்ட 10 அரசியல்வாதிகளுக்கும் தேர்தல் பிரசாரப் பணிகளின் போது ஷிரான் பாசிக் அவ்வப்போது பெருந்தொகை பணத்தை வழங்கியுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.</p><p>
மேலும், கடந்த அரசாங்கத்தில் இருந்த சக்திவாய்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், ஷிரான் பாசிக்கு சட்டவிரோதமாக நிலங்களை நிரப்பி அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்களைக் கட்டுவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
</p><p> இந்த உதவிகளுக்காக அந்த முன்னாள் அமைச்சர் ஷிரான் பாசிக்கிடமிருந்து அவ்வப்போது பெருந்தொகை பணத்தைப் பெற்றுள்ளார்.</p><h2>சொந்தமான பல கோடி ரூபாய் சொத்துக்கள்</h2><p>
</p><p>ஷிரான் பாசிக் நீண்டகாலமாகவே இந்த அரசியல்வாதிகளுக்காக தாராளமாகப் பணத்தைச் செலவிட்டுள்ளமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f0721e2-2180-4908-a9d0-f99b6642eb79/26-6a8fccbc714b1.webp' /></p><p>
</p><p>ஷிரான் பாசிக்கிடம் நடத்தப்படும் விசாரணைகளில் வெளிவரும் தகவல்களின் அடிப்படையில், தொடர்பு வைத்துக்கொண்டு பணம் மற்றும் பலதரப்பட்ட சலுகைகளைப் பெற்ற அனைத்து அரசியல்வாதிகளிடமும் விரிவான விசாரணை நடத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய குறிப்பிட்டுள்ளார்.</p><p>
தற்போது தடுப்புக் காவலில் உள்ள ஷிரான் பாசிக்கிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அவருக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் குறித்தும் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன. </p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T09:26:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிரகரி வாவியில் போனியை கொடூரமாகத் தாக்கிய இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-brutally-attacked-pony-ride-at-gregory-lake-1787822591"></link>
            <id>https://jvpnews.com/article/youth-brutally-attacked-pony-ride-at-gregory-lake-1787822591</id>
            <summary type="text">&amp;nbsp; நுவரெலியா கிரகரி வாவியைச் சுற்றியுள்ள பகுதியில் போனி ஒன்றை இளைஞர் ஒருவர் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கும் காட்சிகள் அடங்கிய காணொளி சமூக ஊடகங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நுவரெலியா கிரகரி வாவியைச் சுற்றியுள்ள பகுதியில் போனி ஒன்றை இளைஞர் ஒருவர் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கும் காட்சிகள் அடங்கிய காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>


போனியைத் தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 26 வயதுடைய இளைஞரை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதானவர் நுவரெலியா ஸ்ட்ராபத் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ca953f6-3827-457b-88af-1c440be33206/26-6a90020133041.webp' /></p><h2>உரிய அனுமதிகளுடன் போனி சவாரி சேவை</h2><p>
</p><p>


கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நாளை 28ஆம் திகதி நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>


இதேவேளை, கிரகரி வாவிக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், சுற்றுலாத்துறைக்காக பயன்படுத்தப்படும் விலங்குகள் துன்புறுத்தப்படாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>


 உரிய அனுமதிகளுடன் போனி சவாரி சேவையில் ஈடுபட்டு வரும் நடத்துநர்கள், தனிநபர் ஒருவரின் செயல் காரணமாக அனைத்து போனி நடத்துநர்கள் மீதும் தவறான கருத்து ஏற்படுவது நியாயமற்றது எனத் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>



விலங்குகளின் சுகாதாரம், உணவு, ஓய்வு மற்றும் சேவை நிலைமைகள் தொடர்பில் தெளிவான தரநிலைகளை அறிமுகப்படுத்தி, போனி சவாரி சேவைகளை அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-27T09:20:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உயிருடன் உள்ளாரா? ; டிரம்ப் வெளியிட்ட புதிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-supreme-leader-mojtaba-khamenei-alive-trump-1787822261"></link>
            <id>https://canadamirror.com/article/iran-supreme-leader-mojtaba-khamenei-alive-trump-1787822261</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மொஜ்தபா கமேனி உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “மொஜ்தபா கமேன...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மொஜ்தபா கமேனி உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “மொஜ்தபா கமேனி உயிரிழந்திருப்பார் என்று நான் நினைக்கவில்லை. அவர் மிகவும் கடுமையாக காயமடைந்திருக்கலாம்.
</p><p>
அவரது உடலின் இடதுபக்கம், முழங்கை மற்றும் கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டிருக்கலாம். எனினும், அவர் உயிரிழந்துவிட்டார் என்று நான் நம்பவில்லை” எனக் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aaae3f01-489b-4113-868c-28a5324e417b/26-6a9000b721118.webp' /></p><p>
</p><p>
மேலும், “ஒருவேளை மொஜ்தபா கமேனி உயிருடன் இல்லை என்றால், ஈரான் மிகச் சிறந்த ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறது” என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் மொஜ்தபா கமேனி படுகாயமடைந்ததாகவும், அதன்பின்னர் அவர் பொதுவெளியில் தோன்றவில்லை என்றும் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
எனினும், அவரது தற்போதைய உடல்நிலை அல்லது இருப்பிடம் குறித்து ஈரான் தரப்பில் தெளிவான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இதனிடையே, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது.</p><p>போரை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர முடியும் என டிரம்ப் தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், ஈரானுக்கு எதிரான பொருளாதார அழுத்தங்களையும் அவரது நிர்வாகம் தீவிரப்படுத்தி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/487971f6-33f9-4f6b-be20-bc4a81045d56/26-6a9000b7c63c5.webp' /></p><p>
</p><p>
இந்த பொருளாதார நடவடிக்கைகள் பலன் அளித்து வருவதாகத் தெரிவித்துள்ள டிரம்ப், “விரைவில் மிகப்பெரிய வெற்றியைப் பெறப்போகிறோம்” எனவும் கூறியுள்ளார்.
</p><p>
அத்துடன், உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை தற்போது முழுமையாக திறக்கப்பட்டுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
மொஜ்தபா கமேனியின் உடல்நிலை மற்றும் அவர் பொதுவெளியில் தோன்றாததன் பின்னணி தொடர்பில் பல்வேறு ஊகங்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், இந்த விவகாரம் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-27T09:17:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க மதுபானங்களுக்கு 50% வரி விதிக்கும் கனடிய மாகாணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/saskatchewan-premier-announces-50-tariff-on-1787814605"></link>
            <id>https://canadamirror.com/article/saskatchewan-premier-announces-50-tariff-on-1787814605</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள் மீது 50 சதவீத பரஸ்பர வரியை விதிக்கத் தமது அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கனடாவின் சஸ்காட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள் மீது 50 சதவீத பரஸ்பர வரியை விதிக்கத் தமது அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கனடாவின் சஸ்காட்செவன் மாகாண முதல்வர் ஸ்காட் மோ அறிவித்துள்ளார்.</p><p> 
இந்த வர்த்தக நடவடிக்கை வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
கனடா மற்றும் சஸ்காட்செவன் மாகாணப் பொருட்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள வரி உயர்வு மற்றும் அதற்குப் பதிலாக மேற்கொள்ளப்படும் எதிரடி வர்த்தக நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f789167-e6ac-4f89-ae61-bac6645c9339/26-6a8fe2cef2d54.webp' /></p><p> </p><p>
கடந்த ஆகஸ்ட் 22 அன்று கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மதுபானங்கள் மீது 50 சதவீத வரியைச் சுமத்தியதற்குப் பதிலடியாகவே சஸ்காட்செவன் மாகாணத்தின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.</p><p>
அமெரிக்க மதுபானங்களை கடைகளின் அலமாரிகளிலிருந்து முற்றிலுமாக அகற்றும் திட்டம் எதுவும் மாகாண அரசிடம் இல்லை என்பதை ஸ்காட் மோ தெளிவுபடுத்தியுள்ளார்.
மக்கள் தங்களுக்கான தேர்வை தாங்களே மேற்கொள்வதற்கு சுதந்திரம் அளிப்பதே எங்களது அரசின் முதன்மையான கொள்கை என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
சஸ்காட்செவனில் அமெரிக்க மதுபானங்களின் விற்பனை ஏற்கனவே 40 சதவீதம் சரிவடைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>அரசாங்கம் விதிக்கும் தடையை விட நுகர்வோரின் இந்தத் தீர்மானமே வலுவான செய்தியை அமெரிக்காவிற்கு உணர்த்தும் என அவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T09:16:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் சிக்கியுள்ள 103 தமிழ்நாட்டு பயணிகள் - 4 அமைச்சர்களை டெல்லிக்கு அனுப்பும் முதல்வர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cm-vijay-send-4-ministers-to-delhi-nepal-rescue-1787821873"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cm-vijay-send-4-ministers-to-delhi-nepal-rescue-1787821873</id>
            <summary type="text">4 tamilnadu ministers to reach delhi for nepal flood rescue நேபாளத்தில் 103 தமிழ்நாட்டு பயணிகள் சிக்கியுள்ள நிலையில், மீட்பு பணிகளை துரிதப்படுத்த 4 அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>4 tamilnadu ministers to reach delhi for nepal flood rescue நேபாளத்தில் 103 தமிழ்நாட்டு பயணிகள் சிக்கியுள்ள நிலையில், மீட்பு பணிகளை துரிதப்படுத்த 4 அமைச்சர்கள் டெல்லி செல்ல உள்ளனர்.
</p><h3>
நேபாளத்தில் சிக்கியுள்ள 103 தமிழ்நாட்டு பயணிகள்
</h3><p>
நேபாளத்தில் நேற்று பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b31be87-4925-49e4-9be6-a6b906e29409/26-6a8fff3373eb4.webp' /></p><p>1,500க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளனர்.

இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 103 பேர் நேபாளத்தில் சிக்கியுள்ளதாக பள்ளிக்கல்விதுறை அமைச்சர் ராஜ்மோகன் தமிழ்நாடு சட்டமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.</p><p> 

இதில் கும்பகோணத்தை சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற சுற்றுலா நிறுவனம் மூலம், தமிழ்நாட்டை சேர்ந்த 54 பேர் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 57 பேர் நேபாளத்திற்கு சென்றுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98313be1-8a43-4788-b61a-d7b7540974e3/26-6a8fff3427f9b.webp' /></p><p>
இதில், ஒரு பேருந்தில் உள்ள 20 பேர் பாதுகாப்பாக ராணுவ முகாமில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களை&nbsp; காட்மாண்டுக்கு கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. </p><p>மீதமுள்ள 37 பேர் குறித்து தகவல் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

சென்னையை சேர்ந்த மகாதேவ் கைலாஷ் ஏஜென்சி மூலம் 49 தமிழர்கள் நேபாளம் சென்றுள்ளனர். அவர்களின் நிலை குறித்தும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அவர்களை மீட்பது தொடர்பாக அங்குள்ள இந்திய தூதரகத்திடம் பேசி வருகிறோம்" என தெரிவித்துள்ளார். </p><h3>

 டெல்லி விரையும் 4 அமைச்சர்கள் </h3><p>

இதனையடுத்து நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு சுற்றுலா பயணிகளை மீட்பது குறித்து முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் அவசர ஆலோசனை நடத்தினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4fac3d1-138a-4444-865b-69003eec4a99/26-6a8fff32af3ca.webp' /></p><p>
இதனையடுத்து, அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வினோத், தென்னரசு ஆகிய 4 பேரையும் மீட்பு பணிகளை மத்திய அரசுடன் இணைந்து தீவிரப்படுத்த முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆசிஷ் குமார் தலைமையிலான குழு நேபாளம் செல்ல உள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-27T09:12:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலருக்கு ஆயுதம்: அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/n-korea-condemns-us-over-125m-arms-sale-to-s-korea-1787821931"></link>
            <id>https://news.lankasri.com/article/n-korea-condemns-us-over-125m-arms-sale-to-s-korea-1787821931</id>
            <summary type="text">N Korea Condemns US Over 125m arms sale to S Korea: தென் கொரியாவிற்கு அமெரிக்கா ஆயுத விற்பனை செய்வதை வட கொரியா கடுமையாக கண்டித்துள்ளது. அமெரிக்காவுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>N Korea Condemns US Over 125m arms sale to S Korea: தென் கொரியாவிற்கு அமெரிக்கா ஆயுத விற்பனை செய்வதை வட கொரியா கடுமையாக கண்டித்துள்ளது.</p><h2> அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை</h2><p>தென் கொரியாவிற்கு ஆயுத விற்பனை தொடர்பில் புதிதாக ஒப்புதல் அளித்துள்ள அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.</p><p>அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தங்கள் நாட்டிற்கு எதிரான நேரடி விரோதப் போக்கு என்று வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது.</p><p> வட கொரிய அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான KCNA வாயிலாக வெளியிடப்பட்ட அறிக்கையில், அமெரிக்காவின் இந்த செயலுக்கு வட கொரியா வெளியுறவு அமைச்சகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cf74da9-a66b-4cf9-9439-e0095171fd1a/26-6a8fff6d0834f.webp' /></p><p></p><p> அத்துடன் நிலைமை மோசமானதாக அமைந்தால் உடனடியாகவும், சக்திவாய்ந்த முறையிலும் பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 125 மில்லியன் டொலர் ராணுவ தளவாடங்களுக்கான ஒப்புதலை தென் கொரியாவிற்கு அமெரிக்கா அளித்ததை அடுத்து இந்த இராஜதந்திர மோதல் ஏற்பட்டுள்ளது.</p><p> தென் கொரியாவின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் 103 'AIM-9X Sidewinder Block II' ஆகிய ஏவுகணைகளும் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T09:12:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் ஊஞ்சல் இராட்டினத்தில் சிக்கிய பார்வையாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/spectators-trapped-swing-ride-in-germany-hamburg-1787807638"></link>
            <id>https://canadamirror.com/article/spectators-trapped-swing-ride-in-germany-hamburg-1787807638</id>
            <summary type="text">ஜேர்மனியில் ஊஞ்சல் இராட்டினத்தில் சிக்கியிருந்த திருவிழா பார்வையாளர்கள் மீட்கப்பட்டனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, 70 மீட்டர் (230 அடி) நீளமுள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியில் ஊஞ்சல் இராட்டினத்தில் சிக்கியிருந்த திருவிழா பார்வையாளர்கள் மீட்கப்பட்டனர்.
</p><p>
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, 70 மீட்டர் (230 அடி) நீளமுள்ள அந்த சவாரி வாகனம் பழுதடைந்து நகர்வதை நிறுத்தியதால், 23 பயணிகள் பாதி வழியில் சிக்கிக்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62cbea48-8ccf-4cb6-843f-355919b18e08/26-6a8fc797cb7f9.webp' /></p><p>
மத்திய ஹாம்பர்க்கில் உள்ள ஊஞ்சல் இராட்டினத்தில் 25 மீட்டர் (82 அடி) உயரத்தில் சிக்கிக்கொண்டிருந்த சுமார் இருபதுக்கும் மேற்பட்ட திருவிழா பார்வையாளர்கள், 90 நிமிடப் போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டனர்.
</p><p>
ஹம்பர்கர் டோம் திருவிழா, நகரின் செயிண்ட்-பாலி பகுதியில் ஆண்டுக்கு மூன்று முறை நடத்தப்படுகிறது.</p><p> இது ஜேர்மனியின் மிக நீண்ட காலமாக நடைபெறும் மற்றும் அதிக பார்வையாளர்களைக் கொண்ட கேளிக்கைச் சந்தைகளில் ஒன்றாகும். ஆண்டுதோறும் சுமார் 10 மில்லியன் விருந்தினர்களை இது ஈர்க்கிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T09:08:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் பயன்படுத்திய பொலிஸ் சாரதி பணியிடைநீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/batticaloa-police-driver-suspended-for-drug-use-1787821542"></link>
            <id>https://jvpnews.com/article/batticaloa-police-driver-suspended-for-drug-use-1787821542</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டக்களப்பில் விபத்து சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பொலிஸ் வாகன சாரதி, போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மட்டக்களப்பில் விபத்து சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பொலிஸ் வாகன சாரதி, போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்று (26) பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>


கடந்த 24ஆம் திகதி இரவு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்துக்குச் சொந்தமான ஜீப் வண்டியில் பொலிஸார் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59ebb3e1-9ef1-431a-a28b-7700ed6d2f91/26-6a8ffde7923ab.webp' /></p><h2>ஜீப் வண்டி மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்து</h2><p>
</p><p>


இதன்போது மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அருகில், ஜீப் வண்டி மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது

. </p><p>இதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபரின் ஒரு கால் முறிந்ததுடன், அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.</p><p></p><p>
</p><p>


விபத்தைத் தொடர்ந்து பொலிஸ் வாகன சாரதி கைது செய்யப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். </p><p>பின்னர் கடந்த 25ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை, ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் நீதவான் விடுவித்தார்.</p><p>



எனினும், மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் குறித்த பொலிஸ் சாரதி கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கை மூலம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், பொலிஸ் தலைமையகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த சாரதியை உடனடியாக பணியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-27T09:02:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற வீரர் ராஜா முத்துப்பாண்டியை நேரில் அழைத்து வாழ்த்திய நடிகை சிம்ரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/simran-meets-congratulates-raja-muthupandi-1787815243"></link>
            <id>https://cineulagam.com/article/simran-meets-congratulates-raja-muthupandi-1787815243</id>
            <summary type="text">காமன்வெல்த் போட்டியில் ஆண்கள் 65 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த தமிழகத்தைச் சேர்ந்த பளுதூக...</summary>
            <content type="html"><![CDATA[<p>காமன்வெல்த் போட்டியில் ஆண்கள் 65 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த தமிழகத்தைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துப்பாண்டியை நடிகை சிம்ரன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f34b6cb-6d1f-4be6-acc5-f4fc91c62191/26-6a8fe55351ab8.webp' /></p><p>இந்தச் சந்திப்பின்போது, ராஜா முத்துப்பாண்டி தனது காமன்வெல்த் வெள்ளிப் பதக்கத்தை சிம்ரனிடம் பெருமையுடன் காண்பித்தார். அவரது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியைப் பாராட்டிய சிம்ரன், இந்தச் சாதனை ஒரு தொடக்கம் மட்டுமே என்றும், எதிர்காலத்தில் மேலும் பல உயரங்களை அடைய வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
</p><p>மேலும், “இந்த வெற்றியின் மூலம் நீங்கள் ஏற்கனவே இந்தியாவுக்கும் நமது தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள். குறிப்பாக, நமது தமிழகத்தைச் சேர்ந்த நீங்கள் சர்வதேச அரங்கில் இத்தகைய சாதனையைப் படைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது. இதே உறுதியுடனும் விடாமுயற்சியுடனும் தொடர்ந்து தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் மேலும் பல வெற்றிகளையும் பதக்கங்களையும் வென்று சாதிக்க வேண்டும்,” என்று சிம்ரன் ராஜா முத்துப்பாண்டியை வாழ்த்தி ஊக்கப்படுத்தினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8023a143-4ca4-4abf-9ec8-5a1af5c1b580/26-6a8fe5540540d.webp' /></p><p>தொடர்ந்து, ராஜா முத்துப்பாண்டியுடன் அன்பாக உரையாடிய சிம்ரன், அவரது சொந்த ஊரான கோவில்பட்டி மற்றும் குடும்பத்தினர் குறித்தும் விசாரித்தார். தனது சொந்த ஊர் கோவில்பட்டி என்பதை ராஜா முத்துப்பாண்டி தெரிவித்தபோது, அந்த ஊருடன் தனக்குள்ள திரைப்படத் தொடர்பான நினைவுகளையும் சிம்ரன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
</p><p>சந்திப்பின் இறுதியில், ராஜா முத்துப்பாண்டி தனது வெள்ளிப் பதக்கத்துடன் நடிகை சிம்ரனுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். சர்வதேச அளவில் சாதனை படைத்த தமிழக வீரரின் வெற்றியைப் பாராட்டி, அவரது எதிர்காலப் பயணத்திற்கு ஊக்கமளிக்கும் ஒரு இனிய தருணமாக இந்தச் சந்திப்பு அமைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd088061-e951-4046-a634-80a3e9802db2/26-6a8fe554aec24.webp' /></p>]]></content>
            <updated>2026-08-27T09:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[லஞ்சப் பணத்தை பிரித்துக்கொள்ள உறுதிமொழி எடுத்த கவுன்சிலர்கள்; வைரலாகும் காணொளி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/up-councillors-pledged-to-share-the-bribe-money-1787820262"></link>
            <id>https://jvpnews.com/article/up-councillors-pledged-to-share-the-bribe-money-1787820262</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியா உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜ​கான்​பூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர் கங்கை நீரின் மீது சத்​தி​யம் செய்​து, லஞ்​ச​மாக கிடைக்​கும் பணத்தை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியா உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜ​கான்​பூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர் கங்கை நீரின் மீது சத்​தி​யம் செய்​து, லஞ்​ச​மாக கிடைக்​கும் பணத்தை தங்​களுக்​குள் நேர்மையாக பகிர்ந்து கொள்​வது தொடர்​பாக உறுதி மொழி எடுத்த ஒரு வீடியோ சமூக ஊடகங்​களில் வைரலாகி உள்ளது. </p><p>
 

 வெளியான காணொளியில் , ஒரு​வர் வாட்​டர் பாட்​டிலில் உள்ள கங்கை நீரை அங்​குள்ள மற்ற நபர்​களின் கைகளில் ஊற்​றுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f94306c3-76ea-48db-ad8c-6f93a6c0ae5f/26-6a8ff8e75de97.webp' /></p><h2>&nbsp;கங்கை நீரின் மீது சத்​தி​யம்</h2><p> </p><p>அதன் பிறகு அவர் “மாநக​ராட்​சிக்கு கிடைக்​கும் பணம் 60 கவுன்​சிலர்​களுக்​கும் சமமாகப் பகிரப்​படும். குழு​வில் உள்ள யாருக்​காவது பிரச்​சினை ஏற்​பட்​டால், அனை​வரும் ஒற்​றுமை​யாக அவருக்கு ஆதர​வாக நிற்போம்” என சத்​தி​யம் செய்​கிறார்.</p><p></p><p>
</p><p>

அதைத் தொடர்ந்து மற்ற அனை​வரும் அதே வாக்​கி​யங்​களை மீண்​டும் கூறி சத்​தி​யம் செய்​கின்​றனர். மேலும், அந்த வீடியோவில் சத்​தி​யத்தை மீறிய ஒரு​வரை துரோகி என்று குறிப்பிடுவதும் இடம்​பெற்​றுள்​ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Yogi Adityanath ji should take immediate action against councillors who are openly talking about corruption, rising above party politics and acting against such conduct regardless of which party holds the majority.<br><br>In Shahjahanpur, Uttar Pradesh, municipal councillors reportedly… <a href="https://t.co/MQd9V4zJi1">pic.twitter.com/MQd9V4zJi1</a></p>&mdash; The Frustrated Indian (@FrustIndian) <a href="https://x.com/FrustIndian/status/2092255366788608158?ref_src=twsrc%5Etfw">August 25, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> </p><p>இந்த வீடியோ கவுன்​சிலர்​கள் மீது ஊழல் குற்​றச்​சாட்​டு​களை கிளப்​பி​யுள்​ளது.

இது தொடர்​பாக மாநக​ராட்சி ஆணை​யர் சவும்யா குரு​ராணி , “இந்த வீடியோ 2025 நவம்​பரில், முந்​தைய மாநக​ராட்சி ஆணை​யர் பதவி​யில் இருந்த காலத்​தில் பதிவு செய்யப்​பட்​ட​தாகவும், எனினும் அது குறித்து விசாரணை தொடங்க்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளன.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T08:52:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழின விடுதலைக்காக உயிர்நீத்த தியாகி பொன் சிவகுமாரன் இறுதி நொடியில் பேசிய விடயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pon-sivakumaran-spoke-at-the-last-moment-1787815701"></link>
            <id>https://ibctamil.com/article/pon-sivakumaran-spoke-at-the-last-moment-1787815701</id>
            <summary type="text">தமிழின விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒருவரான தியாகி பொன் சிவகுமாரன் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் இருந்த தனது தாய் மற்றும் சகோத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழின விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒருவரான தியாகி பொன் சிவகுமாரன் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் இருந்த தனது தாய் மற்றும் சகோதரர்களிடம் பேசிய நெகிழ்ச்சியான வார்த்தைகள் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளன.</p><p>

மரணப்படுக்கையில் இருந்த சிவகுமாரனைப் பார்த்து கவலையடைந்த சகோதரியிடம், ”ஏன் அழுகிறாய், நான் மீண்டும் உன் வயிற்றில் பிறப்பேன், இந்த மண்ணின் விடுதலைக்காக போராடுவேன்”என்று தெரிவித்துள்ளார்.
</p><p>
தமிழின விடுதலைக்காக போராடிய பொன் சிவகுமாரன் 1950 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் - உரும்பிராயில் பிறந்து ஈழ விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழ் மாணவர்களின் கல்விக்காகவும் அயராது பாடுபட்டு 1974 ஆம் ஆண்டு தனது 24 ஆவது வயதில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பின் போது நஞ்சருந்தி உயிரிழந்தார்.</p><p>

ஈழப்போராட்ட வராற்றில் முதன் முதலில் நஞ்சருந்தி உயிர் நீத்த வீரரான பொன் சிவகுமாரன் உயர்தரத்தில் கல்வி கற்ற போது இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வித் தரப்படுத்தல் முறைக்கு எதிராக போராடி தமிழ் மாணவர்களின் எதிர்காலத்திற்கு சேவையாற்றியுள்ளார்.
</p><p>
மேலும் தியாகி பொன் சிவகுாரனின் மறைவின் பின்னர் பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியிலும் ஏராளமான மக்கள் பெரும் திரளாக திரண்டு அஞ்சலி செலுத்தியமை அக்கால கட்டத்தில் தமிழ் மக்களின் மனநிலையை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/AHIq_O-T3Ho" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T08:48:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் போராட்டக் களத்தில் தாய்மார்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் - சுமந்திரன் கடும் கண்டனம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-attack-mothers-at-protest-site-in-jaffna-1787820259"></link>
            <id>https://tamilwin.com/article/police-attack-mothers-at-protest-site-in-jaffna-1787820259</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
பொலிஸாரால் தாக்கப்பட்டமைக்கும், அமைச்சர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளுக்கும்
இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
பொலிஸாரால் தாக்கப்பட்டமைக்கும், அமைச்சர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளுக்கும்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான
எம்.ஏ.சுமந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில், வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு யாழ். மாவட்ட செயலகத்தில்
நேற்றுமுன்தினம்(25.08.2026) நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.</p><h2> 

காணாமல் ஆக்கப்பட்டோர் தாய்மார்கள் விசனம்</h2><p>
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மாவட்ட செயலகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59408c33-c7b9-42e5-954c-93f8f98a3528/26-6a8ff96187381.webp' /></p><p>
</p><p>
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்களுடன் பொலிஸார் மூர்க்கத்தனமாக
நடந்து கொண்டதுடன், அவர்களை மாவட்ட செயலகத்துக்கு வெளியே ஆடைகள் கழரும்
நிலையிலும் இழுத்துத் தள்ளி அப்புறப்படுத்தினர்.
</p><p>
இந்த வன்முறையைக் கைபேசியினூடாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
உள்ளிருந்தவாறே அவதானித்தார் என்றும், போராட்டம் பற்றிச் செய்தி சேகரித்த
ஊடகவியலாளர்களை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடுமையாக வசைபாடினார்
என்றும் செய்திகள் வெளியாகின.</p><h2>

நீதி அமைச்சர் செயலுக்கு எழும் கண்டனம்</h2><p>
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பலரும் தங்களின் கண்டனங்களை வெளிப்படுத்தி வரும்
நிலையில், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளதாவது,</p><p>நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள்
மற்றும் தாய்மார்களை இலங்கைப் பொலிஸார் மிக மோசமாகத் தாக்கி
அப்புறப்படுத்தியதை மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b689f00-d319-448b-9198-e27d8eaac00c/26-6a8ff96274246.webp' /></p><p>

 அதேபோன்று, இந்த நிகழ்வுகளை
உள்ளேயிருந்து தனது கைபேசியில் பார்த்து இரசித்துக் கொண்டிருந்த நீதி
அமைச்சரின் செயற்பாட்டையும், இந்தச் சம்பவத்தை வெளிப்படுத்திய
ஊடகவியலாளர்களைப் பொதுவெளியில் சபித்த அமைச்சர் சந்திரசேகரின் செயலையும்
வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T08:47:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய U19 அணியில் இடம்பிடித்துள்ள டிராவிட், சேவாக் மகன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sehwag-and-dravid-sons-in-india-u19-squad-vs-aus-1787819688"></link>
            <id>https://news.lankasri.com/article/sehwag-and-dravid-sons-in-india-u19-squad-vs-aus-1787819688</id>
            <summary type="text">sehwag and dravid sons in india u19 squad: அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய U19 அணியில் முன்னாள் வீரர்கள் டிராவிட் மற்றும் சேவாக்கின் மகன்கள் இடம்பிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>sehwag and dravid sons in india u19 squad: அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய U19 அணியில் முன்னாள் வீரர்கள் டிராவிட் மற்றும் சேவாக்கின் மகன்கள் இடம்பிடித்துள்ளார்.
</p><h3>
இந்திய U19 அணியில் டிராவிட், சேவாக் மகன்கள்
</h3><p>
கடைசியாக 2012 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர்கள் சேவாக் மற்றும் ராகுல் டிராவிட் இணைந்து விளையாடினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e97d63a-3f71-4a40-8f91-e82b376cd558/26-6a8ff6a9c8809.webp' /></p><p> 

தற்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு அதே அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் டிராவிட் மற்றும் சேவாக்கின் மகன்கள் இந்திய அணிக்காக விளையாட உள்ளனர்.&nbsp;</p><p></p><p> 

வரும் செப்டம்பர் மாதத்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான அவுஸ்திரேலியா அணி, இந்தியாவிற்கு வருகை தந்து 3 ஒருநாள் மற்றும் 2 பலநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">🚨 News 🚨<br><br>India U19 squad for Australia U19 Men’s Tour of India announced.<br><br>The tour consists of three One-Day matches and two Multi-Day fixtures.<br><br>Venues 🏟️: Rajkot and Ahmedabad<br><br>More Details ▶️ <a href="https://t.co/o2pF8bj3RJ">https://t.co/o2pF8bj3RJ</a><br><br> <a href="https://x.com/hashtag/INDU19vAUSU19?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#INDU19vAUSU19</a> <a href="https://t.co/Ud0tvcqaBe">pic.twitter.com/Ud0tvcqaBe</a></p>&mdash; BCCI (@BCCI) <a href="https://x.com/BCCI/status/2092854647908442568?ref_src=twsrc%5Etfw">August 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

இதற்கான இந்திய U19 அணியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் ஒருநாள் போட்டிக்கான அணியில் ராகுல் டிராவிட்டின் இளைய மகன் அன்வே டிராவிட் மற்றும் சேவாக்கின் மூத்த மகனான ஆர்யவிர் சேவாக் இடம் பிடித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56e3beb2-ab53-4761-9bfc-46e8549b6d4a/26-6a8ff6aa8028b.webp' /></p><p>

17 வயதான அன்வே டிராவிட் முன்னதாக கடந்த மாதம் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய U 19 அணியில் இடம்பெற்றிருந்தார். விக்கெட் கீப்பரான இவர் அந்த தொடரில் 2 போட்டிகளில் விளையாடி, 14 மற்றும் 87 ஓட்டங்கள் எடுத்தார்.
</p><p>
டெல்லி பிரீமியர் லீக்கில் விளையாடி வரும் 18 வயதான ஆர்யாவீர் இந்திய அணியில் இடம் பெறுவது இதுவே முதல் முறை ஆகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T08:39:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடல் வளத்தைப் பாதுகாக்க புதிய முயற்சி ; தமிழர் பகுதியில் உருவாகும் பவள அருங்காட்சியகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-initiative-to-protect-marine-resources-1787819808"></link>
            <id>https://jvpnews.com/article/new-initiative-to-protect-marine-resources-1787819808</id>
            <summary type="text">திருகோணமலை, நிலாவெளியில் அமைக்கப்பட்டுவரும் பவளப் பாதுகாப்பு மையம் மற்றும் ஆய்வுகூடம், எதிர்காலத்தில் பவள அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையமாக மேம...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை, நிலாவெளியில் அமைக்கப்பட்டுவரும் பவளப் பாதுகாப்பு மையம் மற்றும் ஆய்வுகூடம், எதிர்காலத்தில் பவள அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையமாக மேம்படுத்தப்படவுள்ளது.</p><p>
</p><p></p><p>இதன் மூலம் பல்கலைக்கழக மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் இலங்கையின் கடல் சூழலியல் அமைப்புகள் தொடர்பில் கற்றறிந்து, ஆய்வுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.</p><p>

இந்த மையத்தின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20e5b519-dfa8-4fdf-856f-d897f4718ace/26-6a8ff721856a8.webp' /></p><p>அதன் பின்னர், பவளப் பாதுகாப்பு மற்றும் மீளுருவாக்க நடவடிக்கைகளுடன், பல்வேறு செயற்பாடுகளையும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
</p><p>
பவள இனங்கள், கடல் சூழலியல் அமைப்புகள் மற்றும் அவற்றைப் பாதுகாக்கும் முறைகள் தொடர்பில் அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான தளமாகவும், பவளப் பாறைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் மையமாகவும் இது செயற்படவுள்ளது.</p><p>

கடல் உயிரினப் பல்வகைமையைப் பாதுகாப்பது, கடல் வளங்களை நிலையான முறையில் நிர்வகிப்பது மற்றும் எதிர்கால தலைமுறைகளுக்காக இயற்கைச் சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.
</p><p>
மேலும், நாட்டின் நிலையான சுற்றுச்சூழல் கொள்கையின் கீழ், இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் இதுபோன்ற கடல் உயிரினப் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T08:37:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்னி ராசியில் சூரியன் பெயர்ச்சி : இந்த 4 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sun-transit-in-virgo-who-get-huge-luck-1787817507"></link>
            <id>https://manithan.com/article/sun-transit-in-virgo-who-get-huge-luck-1787817507</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன், தன்னம்பிக்கை, கௌரவம், தலைமைப்பண்பு ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறார். மாதம் ஒரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன், தன்னம்பிக்கை, கௌரவம், தலைமைப்பண்பு ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறார். </p><p>மாதம் ஒருமுறை ராசி மாறும் சூரியன், சிம்ம ராசியின் அதிபதியாவார்.

தற்போது சிம்ம ராசியில் பயணிக்கும் சூரியன், செப்டம்பர் 17ஆம் தேதி கன்னி ராசிக்குள் நுழைந்து, அக்டோபர் 17ஆம் தேதி வரை அங்கு இருப்பார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd9c2ab9-5658-4cb7-9c88-7ca977f37f3d/26-6a8ff6bbcec24.webp' /></p><p></p><p> </p><p>கன்னி ராசியின் அதிபதி புதன் என்பதால், இந்தப் பெயர்ச்சி வேலைகளில் ஒழுக்கம், பகுப்பாய்வு திறன் மற்றும் திட்டங்களை திறம்பட செயல்படுத்தும் மனப்பான்மையை அதிகரிக்கக்கும் என்று ஜோதிட கணிப்புகள் குறிப்பிடுகின்றன.</p><p>

சூரியனின் இந்தப் பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களையும் பாதித்தாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு வாழ்வில் அதிர்ஷ்ட கதவை திறக்கப்போகின்றது. அப்படி அதிர்ஷ்டத்தின் முழு பலனையும் அனுபவிக்கப்போகும் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.&nbsp;</p><h2>கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44884c7c-b142-4a4e-b99e-376e28f8b4ec/26-6a8ff6bc85366.webp' /></p><p>கன்னி ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் தன்னம்பிக்கையும், முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும்.பணியிடத்தில் கடின உழைப்புக்குப் பலன் கிடைக்கும்.</p><p>அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றி பெறுவீர்கள். தொழிலதிபர்களுக்கு லாபம் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். சிலருக்கு தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பும், சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
</p><h2>
மீனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0b65767-6fb6-4262-984b-651efe3385b0/26-6a8ff6bd37dd7.webp' /></p><p>
மீன ராசியின் 7-வது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் தொழில் ரீதியாக முக்கியமான காலமாக அமையும். புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். </p><p>வியாபாரிகளுக்கு புதிய நட்புகள் மூலம் லாபம் தரும் ஒப்பந்தங்கள் அமையலாம். உயர் அதிகாரிகளின் உதவியுடன் நீண்டகால பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளியிடம் வெளிப்படையாக இருப்பது நல்லது.</p><h2>
சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7212b1c6-e681-4a54-aaab-c3af44477560/26-6a8ff6bddd958.webp' /></p><h2>
</h2><p>சிம்ம ராசியின் 2-வது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, புதிய வழியில் வருமானம் கிடைப்பதற்கான வழிகள் திறக்கும்.</p><p>பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்குப் பலன் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவும், நல்ல உறவும் கிடைக்கும். திட்டங்களைச் சரியாக செயல்படுத்தினால் நல்ல பலன்களைப் பெறலாம்.
</p><h2>
தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/372b8953-4f1a-4b48-9975-11ca3f80a919/26-6a8ff6be91957.webp' /></p><p></p><p>
தனுசு ராசியின் 10-வது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் தொழிலில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் தலைமைப்பண்புகள் பாராட்டப்படும்.</p><p> சிலருக்கு பதவி உயர்வு, புதிய பொறுப்புகள் அல்லது சம்பள உயர்வு கிடைக்கலாம். தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் தேடி வரும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிப்பதுடன், நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பணிகளும் வெற்றிகரமாக முடியும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW&nbsp;</b></a></u></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T08:35:35+00:00</updated>
        </entry>
    </feed>
