<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-20T03:32:19+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்! மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minor-flood-warning-issued-for-low-lying-areas-1789873864"></link>
            <id>https://tamilwin.com/article/minor-flood-warning-issued-for-low-lying-areas-1789873864</id>
            <summary type="text">மகாவலி கங்கையை சுற்றியுள்ள தாழ்நில பகுதிகளுக்கு சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.நீர்ப்பாசன...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகாவலி கங்கையை சுற்றியுள்ள தாழ்நில பகுதிகளுக்கு சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.</p><p>நீர்ப்பாசன திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.&nbsp;</p><h2>சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்&nbsp;</h2><p>இதன்படி, மகாவலி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்துள்ள நிலையில், பஸ்பாகே கோரளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மகாவலி கங்கையை சுற்றியுள்ள தாழ்நிலப்பகுதிகளுக்கு சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce1ae49f-8eaa-4bde-b72a-cfbc97e155f0/26-6aaf512bc1da2.webp' /></p><p>

 

எனவே, அப்பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் அங்குள்ள வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
 

மேலும், மகாவலி கங்கைக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T03:21:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொது வீதியோர மீன் விற்பனைக்கு இறுதி எச்சரிக்கை: மீறினால் நீதிமன்ற நடவடிக்கை எனச் சுகாதாரப் பிரிவு எச்சரிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/final-warning-roadside-fish-sales-health-dept-1789873483"></link>
            <id>https://tamilwin.com/article/final-warning-roadside-fish-sales-health-dept-1789873483</id>
            <summary type="text">பொது வீதியோரங்களில் சட்டவிரோதமான முறையில் மீன் விற்பனையில் ஈடுபடும்
வியாபாரிகளுக்கு எதிராக எவ்வித சமரசமுமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொது வீதியோரங்களில் சட்டவிரோதமான முறையில் மீன் விற்பனையில் ஈடுபடும்
வியாபாரிகளுக்கு எதிராக எவ்வித சமரசமுமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும் எனச் சுகாதார அதிகாரிகளால் இறுதி எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
பொது வீதியோரங்களில் மீன் விற்பனை செய்யப்படுவது குறித்து இன்று (19)
அவதானிக்கப்பட்டதைத் தொடர்ந்து இக் கடுமையான எச்சரிக்கை அறிவித்தல்
வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்..&nbsp;</h2><p>
</p><p>
இது தொடர்பில் ஏற்கனவே சில வழக்குகள் நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள
நிலையில், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில்
வீதியோரங்களில் மீன் விற்பனை செய்பவர்களுக்கு இன்று இறுதி சந்தர்ப்பமாக
எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e559d641-cde2-467c-8c89-afcbfc615c73/26-6aaf4fa7c76f5.webp' /></p><p>
</p><p>
இனிவரும் நாட்களில் சட்டத்தை மீறிப் பொது வீதியோரங்களில் மீன் விற்பனையில்
ஈடுபடுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு எதிராகத்
தயவுதாட்சணியமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, அனைத்து மீன் வியாபாரிகளும் நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் சுகாதார
விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்றி, பொதுச் சுகாதாரத்தையும் சுற்றுச்சூழலையும்
பாதுகாக்கும் வகையில் பொறுப்புடன் செயற்படுமாறு சுகாதார அதிகாரிகள்
கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T03:15:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய் மார்க்கெட்டை எட்டி பிடித்த சூர்யா, இத்தனை கோடிகள் Scene படத்திற்கு வியாபாரமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/suriya-catches-up-vijay-market-1789873108"></link>
            <id>https://cineulagam.com/article/suriya-catches-up-vijay-market-1789873108</id>
            <summary type="text">சூர்யாசூர்யா இந்த வருடம் செம கம்பேக் கொடுத்து தன் செகண்ட் இன்னிங்ஸை தொடங்கிவிட்டார். அதிலும் கருப்பு உலகம் முழுவதும் பிரம்மாண்ட வெற்றியை அவருக்கு பெற்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சூர்யா</h2><p>சூர்யா இந்த வருடம் செம கம்பேக் கொடுத்து தன் செகண்ட் இன்னிங்ஸை தொடங்கிவிட்டார். அதிலும் கருப்பு உலகம் முழுவதும் பிரம்மாண்ட வெற்றியை அவருக்கு பெற்று தந்தது. அதை தொடர்ந்து விஸ்வநாத் அண்ட் சன்ஸ் செம க்ளாஸ் வெற்றியை இவருக்கு பெற்று தந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7552e7ea-a276-4880-af72-b853c2c90501/26-6aaf4bd94e267.webp' /></p><p></p><h3>சீன்&nbsp;</h3><p>இந்நிலையில் சூர்யா அடுத்து மலையாள இயக்குனர் ஜீது மாதவன் இயக்கத்தில் சீன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c822e63-42d5-4b27-90c2-bb329b8add45/26-6aaf4bd7d32d5.webp' /></p><p></p><p>அதோடு இப்படத்தின் வியாபாரம் தற்போது தொடங்கிவிட்டது, மேலும் கேரளாவில் இப்படத்தை ரூ. 10 கோடிக்கு கோகுலம் சினிமாஸ் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a39df23e-25ca-4c1a-8d83-097f48a30589/26-6aaf4bd88f0b9.webp' /></p><p></p><p>இதை வைத்து பார்க்கையில் கண்டிப்பாக இந்த படத்தின் மூலம் <a href="https://www.dailythanthi.com/ampstories/photo-story/20-years-of-surya-jyothika-marriage-fans-love-photos" target="_blank">சூர்யா</a>, விஜய்யின் மார்க்கெட்டை எட்டி பிடித்துவிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-20T03:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் மோசமடையும் காலநிலை - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/landslide-warnings-issued-for-several-districts-1789871766"></link>
            <id>https://tamilwin.com/article/landslide-warnings-issued-for-several-districts-1789871766</id>
            <summary type="text">நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு&amp;nbsp;தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.நுவரெலியா, காலி, களு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு&nbsp;தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.</p><p>நுவரெலியா, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (20) மாலை 7.00 மணி முதல் நாளை மாலை 7.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><h2>விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை</h2><p>அதன்படி, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f98a27f1-9ead-4a8d-8327-4584a5246bc2/26-6aaf4a777695b.webp' /></p><h2>பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை</h2><p>காலி மாவட்டத்தின் நாகொட</p><p>களுத்துறை மாவட்டத்தின் பாலின்தநுவர</p><p>கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை</p><p>கேகாலை மாவட்டத்தின் தெரணியகல</p><p>இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல, இரத்தினபுரி, குருவிற்ற, நிவித்திகலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மக்களும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T02:52:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படை சமூகத்தினருக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/important-announcement-for-the-fishing-communities-1789870798"></link>
            <id>https://ibctamil.com/article/important-announcement-for-the-fishing-communities-1789870798</id>
            <summary type="text">வங்காள விரிகுடாவின் அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகியுள்ளதாகவும், அது அடுத்த சில நாட்களில் மேலும் வலுவடையும் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>வங்காள விரிகுடாவின் அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகியுள்ளதாகவும், அது அடுத்த சில நாட்களில் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
 

இதன் தாக்கத்தால் வங்காள விரிகுடா கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்பதால், கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படை சமூகத்தினர் அவதானத்துடன் செயற்படுமாறும், எதிர்வரும் வானிலை அறிவிப்புகள் மற்றும் முன்னறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p>இந்த நிலையில் கங்கேசன்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p>

 

நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ca5f4b1-12b5-44c8-9a5e-3a24af131994/26-6aaf48cae6eb5.webp' /></p><p>

 

காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும் என்பதுடன், காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 30-40 கி.மீ. வரை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p>
 

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக கங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.
</p><p>
 

மேலும், அக்கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதுடன், புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் சுமார் 2.0 - 2.5 மீற்றர் வரை உயரக்கூடும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T02:45:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர் அவதானம்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-about-substandard-baby-diapers-1789870722"></link>
            <id>https://tamilwin.com/article/warning-about-substandard-baby-diapers-1789870722</id>
            <summary type="text">இலங்கையில் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் சில குழந்தைகளுக்கான டயப்பர்கள் குறித்து&amp;nbsp;நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.டயப்பர்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் சில குழந்தைகளுக்கான டயப்பர்கள் குறித்து&nbsp;நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>டயப்பர்கள் பயன்படுத்தும்போது அவை கிழிவது மற்றும் மக்கிப்போவது தொடர்பாக நுகர்வோரிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளுக்கமைய , நுகர்வோர் விவகார அதிகாரசபை சிறப்பு விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளது.</p><h2>திடீர் சோதனைகள் </h2><p>
 

இந்த விசாரணைகளின் போது, கொட்டாவை மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் உள்ள இரண்டு வணிக இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d77b14d-1a7e-48e8-9c63-eff153d3db6f/26-6aaf45e90b70e.webp' /></p><p>

 

இதன்போது, பதிவு செய்யப்பட்ட இறக்குமதியாளரின் பெயர், முகவரி, தொலைபேசி எண் அல்லது இணையதள விவரங்களைக் குறிப்பிடாமல், 85ஆம் இலக்க கட்டளையை மீறி இறக்குமதி செய்யப்பட்ட குழந்தை டயப்பர்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தியமை மற்றும் மொத்தமாக விநியோகித்தமை தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
</p><p>
 

குறித்த வழக்கு நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கொட்டாவை கடையில் உள்ள நிறுவனத்திற்கு 10,000 ரூபாயும், புறக்கோட்டை கடையில் உள்ள நிறுவனத்திற்கு 25,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>முறைப்பாடுகளுக்கு...</h2><p>
</p><p>எனவே குழந்தை டயப்பர்கள் போன்ற சுகாதார பொருட்களைக் கொள்முதல் செய்யும்போது, பொதியில் குறிப்பிட்டுள்ள இறக்குமதியாளரின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட தொடர்புடைய லேபிள் தகவல்களை பரிசீலிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbff5047-08bd-4755-a948-f654c3dc4737/26-6aaf45e9b3921.webp' /></p><p>
</p><p>இவற்றினை பயன்படுத்தும்போது கிழிதல் அல்லது வேறு ஏதேனும் தரக்குறைபாடுகள் ஏற்படுமாயின், அலுவலக நேரங்களில்1977 என்ற உடனடி அழைத்து முறைப்பாடு செய்யுமாறும் அந்த அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T02:33:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியல்வாதிகளுக்கு சிறையில் சிறப்பு சலுகைகளா! விளக்கும் அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-special-security-for-politicians-in-prison-1789869772"></link>
            <id>https://tamilwin.com/article/no-special-security-for-politicians-in-prison-1789869772</id>
            <summary type="text">&amp;nbsp;அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு சிறைச்சாலையில் விசேட சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சிறையிலட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு சிறைச்சாலையில் விசேட சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>சிறையிலடைக்கப்படும் அரசியல்வாதிகளின் பாதுகாப்பிற்காக அவர்களுக்கு சிறப்புப் பாதுகாப்பினை வழங்குவதற்குச் சிறைச்சாலைகள் திணைக்களம் கடமைப்படவில்லை என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>
சிறைச்சாலையிலுள்ள ஏனைய கைதிகளுக்கு வழங்கப்படும் பொதுவான பாதுகாப்பே அரசியல்வாதிகளுக்கும் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19893c8c-9955-42d1-a32f-1d1c306d806d/26-6aaf3ece63bde.webp' /></p><p>
</p><p>அவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் பானங்களிலும் எந்தவித சிறப்புச் சலுகையோ அல்லது விசேட மாற்றங்களோ இருக்காது என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.</p><p>
அண்மைய நாட்களாகவே எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p><p>
ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட சில முக்கிய அரசியல் பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T02:03:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக் கடற்பரப்பினை சூழ எழுந்துள்ள அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/21-iraninan-ships-around-the-lankan-sea-1789869099"></link>
            <id>https://tamilwin.com/article/21-iraninan-ships-around-the-lankan-sea-1789869099</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கைக் கடற்பரப்பிற்கு அருகாமையில் 21 ஈரானிய கப்பல்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எழுந்துள்ள பதற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கைக் கடற்பரப்பிற்கு அருகாமையில் 21 ஈரானிய கப்பல்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எழுந்துள்ள பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் உள்ள சர்வதேச கடற்பரப்பில் 47 கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 
அவற்றில் 21 கப்பல்கள் ஈரானுக்குச் சொந்தமானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>
'MarineTraffic.com' இணையதளத்தின் தரவுகளின் அடிப்படையில், மாத்தறையிலிருந்து காலி, கொழும்பு மற்றும் நீர்கொழும்பு வரையிலான இலங்கையை அண்டிய சர்வதேச கடல் பகுதியில் இந்த 21 ஈரானிய கப்பல்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/072bf828-085b-4366-b7a9-ffdac9a818d5/26-6aaf3c312cd4a.webp' /></p><p> </p><p>
ஸ்ட்ரீம் (Stream), ஹால்டி (Halti), ட்ரீம் II (Dream II), சீ க்ளிஃப் (Sea Cliff), ஸ்னோ (Snow), ஹெல்ம் (Helm), டைமண்ட் II (Diamond II), டீப் சீ (Deep Sea), டினோ I (Dino I), ஹெர்பி (Herby), செவின் (Sevin), ஆம்பர் (Amber), ஹென்னா (Henna), ஹியூஜ் (Huge), டோர் (Dore), சோனியா I (Sonia I), பெலிசிட்டி (Felicity), டியூன் (Dune), ஹீரோ II (Hero II), டெய்ஸி (Daisy) மற்றும் ஷிபா (Shiba) ஆகிய ஈரானிய கப்பல்களே இவ்வாறு இலங்கையைச் சுற்றியுள்ள சர்வதேச கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>இந்த ஈரானிய கப்பல்கள் கடந்த ஜூலை மாதம் முதல் இலங்கைக்கு அருகிலுள்ள சர்வதேச கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. 
மேலும், இலங்கை அருகே நிறுத்தப்பட்டுள்ள இந்த அனைத்து ஈரானிய கப்பல்களும் அமெரிக்காவினால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட கப்பல்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>ஏற்கனவே இலங்கைக் கடற்பரப்பிற்கு அருகாமையில் ஈரானிய கப்பல்களை அமெரிக்கா தாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T01:59:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு விடுத்துள்ள அபாய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imf-warns-about-loan-repayment-1789868450"></link>
            <id>https://tamilwin.com/article/imf-warns-about-loan-repayment-1789868450</id>
            <summary type="text">இலங்கையின் கடன் மீளச் செலுத்தும் திறன் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் கடன் நிலைபேறுதன்மை நிலவினாலும், அது தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் கடன் மீளச் செலுத்தும் திறன் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் கடன் நிலைபேறுதன்மை நிலவினாலும், அது தொடர்பான ஆபத்துக்கள் இன்னும் அதிக மட்டத்திலேயே காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் மதிப்பீடு செய்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.</p><p>
அடுத்த ஆண்டு (2027) மார்ச் மாதத்துடன் தற்போதைய சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் நிறைவடையும் போதும் இந்த அதிக ஆபத்துள்ள நிலைமை நீடிக்கும் என நாணய நிதியத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>
கடந்த 2026 மே 28 அன்று இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று வாரியத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலும் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1790b61-3920-4a90-9fd1-f99e69801e3b/26-6aaf39a966324.webp' /></p><p>
</p><p>கடன் மறுசீரமைப்பு நிறைவடையும் தருவாயில் உள்ளபோதிலும் கடன் நிலைபேறுதன்மை குறித்த ஆபத்து அதிகமாகவே உள்ளது எனச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. </p><p>
இந்த பின்னணியில், 2027ஆம் ஆண்டில் இலங்கை மீண்டும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட வேண்டியிருக்கும் என பொருளாதார மற்றும் நிதித் துறை நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். </p><p>
இது குறித்து அரசாங்கத்தின் உள்மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகக் கூறப்படும் போதிலும், 2027 இல் சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய கடன் வேலைத்திட்டத்திற்குச் செல்வது தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>
இதேவேளை, நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. </p><p>இதன்போது, நாடு அடைந்துள்ள பொருளாதார வெற்றிகளை மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும் சுமையைக் குறைக்கவும் பயன்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என ஜனாதிபதி பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T01:41:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டெம்பர் 24இல் நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள சகல பாதைகளையும் முற்றுகையிட அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/call-to-blockade-all-roads-parliament-september-24-1789866743"></link>
            <id>https://tamilwin.com/article/call-to-blockade-all-roads-parliament-september-24-1789866743</id>
            <summary type="text">அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் மூலம் நீதித்துறையைத் தனது
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்படும் அரசின் முயற்சியை முறியடிப்பதற்காக,
எதிர்வரும் 24ஆம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் மூலம் நீதித்துறையைத் தனது
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்படும் அரசின் முயற்சியை முறியடிப்பதற்காக,
எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள அனைத்துப் பிரதான
பாதைகளையும் முற்றுகையிடுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் ஐக்கிய ஒருங்கிணைந்த
தொழிற்சங்க கூட்டமைப்பின் அமைப்பாளர் ஆனந்த பாலித அழைப்பு விடுத்துள்ளார்.
</p><p>
கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று(19.09.2026)ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். </p><h2>சாதாரண பொதுமக்களுக்கான சிவில் பாதுகாப்பு</h2><p>மேலும் தெரிவித்ததாவது:-"அரசு தனது ஊழல்வாதிகளைப் பாதுகாக்கவும், அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும்
அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தை அவசரமாக நிறைவேற்ற முயல்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d350c6b-f014-4029-bcbf-0d15a1cc0da1/26-6aaf3656ab267.webp' /></p><p>

மக்கள் இறையாண்மையைப் பாதுகாக்கும் வகையில், நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு
பெரும்பான்மைக்கு மேலாக இதற்குச் சர்வஜன வாக்கெடுப்பு நிச்சயம் நடத்தப்பட
வேண்டும்.
</p><p>
இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்காத எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரையும்
நாடாளுமன்றத்துக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்பதே செப்டெம்பர் 24ஆம்
திகதி நடக்கவுள்ள போராட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
</p><p>
இதற்காகச் சட்டத்தரணிகள் சங்கம், 54 தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள்
அனைவரும் திரண்டு வர வேண்டும்.</p><p>

நாட்டில் பாதாள உலகக் குற்றங்களும் போதைப்பொருள் புழக்கமும் பாடசாலைகள் வரை
ஊடுருவியுள்ள நிலையில், சாதாரண பொதுமக்களுக்கான சிவில் பாதுகாப்பு முற்றாகச்
சீர்குலைந்துள்ளது.</p><h2>குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியாமல்</h2><p>அண்மையில் வறிய குடும்பத்தைச் சேர்ந்த இரு அப்பாவிச் சிறுவர்கள் இரவில்
உறங்கிக்கொண்டிருந்தபோது கொடூரமாகக் கொல்லப்பட்ட போதிலும், அரசு அது குறித்து
எவ்வித அனுதாபமும் தெரிவிக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/446b9139-1b73-447f-aecd-4de6af0420d1/26-6aaf3657628d4.webp' /></p><p> பாதாள உலகத்தையும் குற்றங்களையும்
ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று குற்றச் செயல்களைக்
கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
</p><p>
இந்தியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டுக்கு இலங்கைக்கு அழைப்பு
விடுக்கப்படவில்லை. இந்தியா மற்றும் சீனாவிடம் பெருமளவிலான கடன்களைப்
பெற்றுள்ள போதிலும், இவ்வாறான சர்வதேச மாநாடுகளில் இலங்கை புறக்கணிக்கப்படுவது
தற்போதைய அரசுக்குச் சர்வதேச அளவில் எவ்வித இராஜதந்திர அங்கீகாரமும் இல்லை
என்பதையே காட்டுகின்றது.
</p><p>
மேலும், எரிபொருள் விலைச்சூத்திரத்தைச் சரியாக நடைமுறைப்படுத்தாமல் கனிம
எண்ணெய் கூட்டுத்தாபனம் 27 பில்லியன் ரூபாவை இலாபமாக ஈட்டியுள்ள போதிலும்,
புதிய எரிபொருள் சேமிப்புத் தொட்டிகளை உருவாக்காமல், திருகோணமலை தொட்டிகளையும்
வெளிநாடுகளுக்கு வழங்கிவிட்டு மீண்டும் சட்டவிரோதமான முறையில் எரிபொருள்
விலையை உயர்த்த அரசு ஆயத்தமாகி வருகின்றது" என்றும் குறிப்பட்டுள்ளார்.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-09-20T01:27:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதலருடன் 2 மாதம் உல்லாசம் ; வீட்டுக்கு திரும்பி வந்து கணவரின் அந்தரங்க உறுப்பில் கடித்து வைத்த மனைவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/illicit-romance-lover-wife-husband-private-part-1789842438"></link>
            <id>https://jvpnews.com/article/illicit-romance-lover-wife-husband-private-part-1789842438</id>
            <summary type="text">காதலருடன் 2 மாத உல்லாசம் அனுபவித்து விட்டு, வீட்டுக்கு திரும்பி வந்த மனைவி, கணவரின் அந்தரங்க உறுப்பில் கடித்து வைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>காதலருடன் 2 மாத உல்லாசம் அனுபவித்து விட்டு, வீட்டுக்கு திரும்பி வந்த மனைவி, கணவரின் அந்தரங்க உறுப்பில் கடித்து வைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.</p><p></p><p>

உத்தர பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் வசித்து வருபவர் சாதனா. இவருடைய கணவர் தீபக். இந்த தம்பதிக்கு, 3 வயது பெண் குழந்தை உள்பட 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.</p><h3>குடும்பத் தகராறு</h3><p> </p><p>இந்த நிலையில், தீபக்கின் நண்பருடன் சாதனாவுக்கு நட்பு ஏற்பட்டது.

இதன்பின்னர் அவருடனான உறவு நெருக்கமடைந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc6f1d97-7c00-48f3-9ac9-ef69c907b07d/26-6aaed407b589f.webp' /></p><p>ஒரு நாள் யாரிடமும் எதுவும் கூறாமல் அவருடன் சாதனா ஓடி விட்டார். 2 மாதங்களாக அவருடனேயே தங்கி, உல்லாசம் அனுபவித்து வந்த சாதனா, நேற்று முன்தினம் கணவரின் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.</p><p>அப்போது, சாதனாவுடன் தீபக் வாக்குவாதம் செய்துள்ளார். இதில், இருவருக்கும் மோதல் ஏற்பட்டு வன்முறையில் முடிந்தது. விசயம் பொலிஸ் வரை சென்றது. இந்த சம்பவம் பற்றி பொலிஸார் கூறும்போது, சாதனாவின் மூக்கை தீபக் கடித்து விட்டார் என புகார் பதிவானது. </p><p>இதனால், தீபக் கைது செய்யப்பட்டு உள்ளார் என்றனர்.

தீபக், சாதனாவின் தலையில் தாக்கியதுடன், அவருடைய மூக்கை கடித்து, சாக்கடையில் வீசி விட்டார். </p><p>இந்த சண்டையின்போது மாமனாரும், மாமியாரும் சாதனாவின் கைகளை பிடித்து கொண்டனர் என சாதனா குற்றச்சாட்டாக கூறியுள்ளார். </p><p>இதனால் பலத்த காயமடைந்த மீட்ட பொலிஸார் அவரை சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.</p><p>எனினும், தீபக்கின் தாய் கூறும்போது, தீபக்கின் நண்பருடன் சாதனா ஓடி விட்டார். இதுபற்றி பொலிசிடம் கூறினோம். அவர்கள் சமரசம் செய்து வைத்தனர். ஆனால், யாரும் எதிர்பாராமல் பக்கத்து வீட்டு மாடியில் இருந்து எங்களுடைய வீட்டுக்குள் சாதனா குதித்து விட்டார். </p><p>குழந்தைகளை அழைத்து செல்ல முற்பட்டார்.

இந்த தகராறில், தீபக்கின் அந்தரங்க உறுப்புகளை சாதனா கடித்து வைத்து விட்டார். </p><p>பின்னர், அவராகவே தரையில் தலையைக்கொண்டு மோதி காயம் ஏற்படுத்தி கொண்டார் என கூறினார். இதுதொடர்பாக சாதனாவுக்கு எதிராக முறைபாடு அளித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T01:09:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நியூயார்க்கில் நிறுவப்பட்ட இலவச பொது கழிப்பறைகள் ; 10 நிமிடத்திற்கு மேல் உள்ளே இருந்தால் கதவு திறந்துவிடும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/free-public-toilets-installed-in-new-york-1789844490"></link>
            <id>https://canadamirror.com/article/free-public-toilets-installed-in-new-york-1789844490</id>
            <summary type="text">அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பொதுமக்களின் தேவைக்காக, நகரின் 5 முக்கிய பகுதிகளில் மொத்தம் 17 இலவச பொது கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த கழிப்பறைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பொதுமக்களின் தேவைக்காக, நகரின் 5 முக்கிய பகுதிகளில் மொத்தம் 17 இலவச பொது கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. </p><p>இந்த கழிப்பறைகளை யார் வேண்டுமானாலும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த கழிப்பறைகள் திறந்திருக்கும்.</p><p>இந்த கழிப்பறைகள் இருக்கும் இடத்தை கண்டறிய பிரத்யேக மொபைல் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பல வசதிகள் இருந்தாலும், இந்த கழிப்பறைகளை பயன்படுத்துவதற்கு ஒரு முக்கியமான விதி உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b50bc855-abe8-4d3b-89f4-a81c584c7d64/26-6aaedc0ca9f45.webp' /></p><p>அதாவது, கழிவறைக்கு உள்ளே சென்றுவிட்டால் 10 நிமிடத்திற்குள் வேலையை முடித்துவிட்டு வெளியே வந்துவிட வேண்டும். </p><p>கழிவறையை பயன்படுத்த தொடங்கியதில் இருந்து கவுண்ட் டவுன் ஓடத் தொடங்கிவிடும். 5 நிமிடங்கள் ஆனவுடன் ஒரு ஆடியோ எச்சரிக்கை வரும். தொடர்ந்து 8-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு எச்சரிக்கை வரும்.</p><p>இதைத் தொடர்ந்து 10-வது நிமிடத்தில் கடைசியாக ஒரு எச்சரிக்கை ஒலிக்கும். அதன் பிறகு சில வினாடிகளில் கழிப்பறையின் கதவு தானாக திறந்துவிடும். </p><p>இத்தகைய நவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த கழிப்பறையை நியூயார்க் நகரில் நிறுவுவது தொடர்பான அறிவிப்பை நியூயார்க் மேயர் சோஹ்ரான் மம்தானி வெளியிட்டார்.
</p><p>
இது குறித்து அவர் கூறுகையில், “கழிப்பறைகள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளோம். கழிப்பறை என்பது செல்போனில் ஸ்கோரல் செய்து கொண்டிருக்கும் இடமாக இருக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13fd3acc-a29a-4d68-af3f-0931088c64df/26-6aaedc0bf1e78.webp' /></p><p>இந்த நவீன கழிப்பறை திட்டத்திற்காக நியூயார்க் நகர நிர்வாகம் சுமார் 4 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.38 கோடி) செலவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
</p><p>
இத்தகைய கழிப்பறைகளை நிறுவுவதற்கு முன்னதாக, இது குறித்து ஆய்வுகளும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. </p><p>அதாவது சராசரியாக ஒரு நபர் மூன்றரை நிமிடங்கள் கழிப்பறையை பயன்படுத்துகிறார் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும், எனவே 10 நிமிடங்கள் என்பது பெரும்பாலான நபர்களுக்கு போதுமான நேரமாகவே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T01:08:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தம்புள்ளை அதிபரின் உயிரைப் பறித்த விபத்து ; பேருந்து சாரதி குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/accident-life-dambulla-principal-detail-bus-driver-1789862435"></link>
            <id>https://jvpnews.com/article/accident-life-dambulla-principal-detail-bus-driver-1789862435</id>
            <summary type="text">தம்புள்ளை தேசிய பாடசாலையின் அதிபர் பயணித்த சிற்றூந்துடன் மோதிய பேருந்தின் சாரதி, விபத்து இடம்பெற்ற வேளையில் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை தெரியவந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தம்புள்ளை தேசிய பாடசாலையின் அதிபர் பயணித்த சிற்றூந்துடன் மோதிய பேருந்தின் சாரதி, விபத்து இடம்பெற்ற வேளையில் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>மேலும், குறித்த பேருந்துக்கு முறையான சேவை அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை என்பதும் காவல்துறையினரால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d748790a-9513-4355-b5f3-c65a095b18da/26-6aaf2225befab.webp' /></p><p>தம்புள்ளை - ஹபரணை பிரதான வீதியின் தம்புள்ளை, பெல்வெஹெர பகுதியில் நேற்று (18) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p>

விபத்தில் சிற்றூந்தை ஓட்டிச் சென்ற தம்புள்ளை தேசிய பாடசாலையின் அதிபராக கடமையாற்றிய, இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜானக விஜேசிங்க (38) என்பவரே உயிரிழந்துள்ளார்.
</p><p>
அத்துடன், இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
விபத்து தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பேருந்து சாரதியை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T01:07:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவ்வாய் பெயர்ச்சியால் பணமும், சொத்துக்களும் குவிய போகும் ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sevvai-peyarchiyal-panam-soththu-kuvium-rasi-1789863029"></link>
            <id>https://jvpnews.com/article/sevvai-peyarchiyal-panam-soththu-kuvium-rasi-1789863029</id>
            <summary type="text">ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். மேஷம் மற்றும் விருச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியான செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.&nbsp;இருப்பினும் இந்த பெயர்ச்சியின் போது குரு பகவான் இந்த ராசியில் இருப்பதால், செவ்வாயுடன் சேர்க்கை நிகழ்கிறது. இப்படியான நிகழ்வின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9082e7b9-070b-4c9d-bde6-e054cf2d78b4/26-6aaf2477c9863.webp' /></p><p>முக்கியமாக இப்பெயர்ச்சி அனைவருக்கும் சிறப்பான பலனை தந்துவிடாது, சில ராசிக்காரர்களுக்கு மோசமாகவும் இருக்கலாம். குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் இந்த பெயர்ச்சியால் சொந்த வீடு, கார் வாங்கும் கனவு நனவாகும் வாய்ப்புள்ளது. இப்போது செவ்வாய் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் சொத்துக்களை வாங்கி குவிக்கும் யோகத்தை பெறுகிறார்கள் என பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c8adf65-85d8-4d1f-a950-f59136c52481/26-6aaf24771fd24.webp' /></p><h4>மேஷம்
</h4><p>மேஷ ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல ஆதாயங்களைப் பெறுவார்கள். மேலும் புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்களும் கிடைக்கலாம். அதுமட்டுமின்றி பல புதிய வழிகளில் இருந்து பணம் வந்து குவியும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd39cfb4-3c9c-4be0-be7c-3c1bdc5fd6a3/26-6aaf247881180.webp' /></p><h4>விருச்சிகம்</h4><p>
விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இதன் மூலம் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கலாம். பரம்பரை சொத்து தொடர்பான விஷயங்களில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அது முடிவுக்கு வருவதோடு, அதன் மூலம் நல்ல ஆதாயங்களும் கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56e6facc-2b01-43f8-8681-2c803e846460/26-6aaf247933887.webp' /></p><h4>தனுசு
</h4><p>தனுசு ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்வில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். பரம்பரை சொத்து விஷயங்களில் உள்ள பிரச்சனைகள் தீரும். சொல்லப்போனால் மூதாதையர் சொத்து கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது. ஆனால் எந்த ஒரு பெரிய முதலீடுகளை செய்வதாக இருந்தாலும், ஆவணங்களை நன்கு படித்து பார்த்து, பின் முடிவெடுக்க அறிவுறுத்தப்படுகிறது. புதிய வழிகளில் இருந்த பணம் தேடி வரும். இதன் மூலம் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5c57dee-3727-48be-96f8-5afbac7eb261/26-6aaf2479dbc0c.webp' /></p>]]></content>
            <updated>2026-09-20T01:07:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனுக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுக்க இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச நடவடிக்கை - விஜித ஹேரத்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/highest-efforts-underway-secure-a-pardon-anojan-1789864152"></link>
            <id>https://tamilwin.com/article/highest-efforts-underway-secure-a-pardon-anojan-1789864152</id>
            <summary type="text">சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜன்
விவகாரத்தில் இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச தலையீடுகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜன்
விவகாரத்தில் இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச தலையீடுகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்
சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
</p><p>
இந்தச் சம்பவத்தை முன்னிலைப்படுத்தி சமூக வலைத்தளங்கள் ஊடாக இன
நல்லிணக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் கருத்துக்களைப் பதிவேற்றம்
செய்வதை அனைவரும் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
</p><h2>இரு தரப்பினருக்கும் இடையில் கருத்து முரண்பாடு</h2><p>
சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கல்முனைப் பகுதியைச் சேர்ந்த சிவராசா
அனோஜன் விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21fd3aac-994a-48f0-adc7-13380bed92b6/26-6aaf304b0faa5.webp' /></p><p>
</p><p>
அவர் மேலும் தெரிவித்ததாவது:-&nbsp;"கதிர்காமம் பாதயாத்திரை சென்ற குழுவுடன் இருந்த நாயின் மீது நடத்தப்பட்ட
தாக்குதலைத் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் இரு தரப்பினருக்கும் இடையில்
கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. </p><p>இவ்வாறான பின்னணியில் சவூதியில் தொழில்
புரிந்த கல்முனைப் பகுதியைச் சேர்ந்த அனோஜன் என்ற இளைஞர் சமூக வலைத்தளத்தில்
பதிவேற்றம் செய்த கருத்தால் இன்று அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இலங்கை இளைஞரான அனோஜன் விவகாரத்தில் இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச
தலையீடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. </p><h2>அனோஜனுக்கு மன்னிப்பு</h2><p>கொழும்பில் உள்ள சவூதி தூதரகத்துடன்
அமைச்சின் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
அனோஜன் விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு சமூக வலைத்தளங்கள் ஊடாக இன
நல்லிணக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் கருத்துக்களைப் பதிவேற்றம்
செய்வதை அனைவரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dbf6e10-b3ae-4165-ba37-effc7c73a1fc/26-6aaf304bbf70c.webp' /></p><p>

அனோஜனுக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசு என்ற அடிப்படையில்
முழுமையான நடவடிக்கைகளை இராஜதந்திர மட்டத்தில் முன்னெடுத்துள்ளோம்.</p><p> நாடு என்ற
அடிப்படையில் இந்த விடயத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இன
நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்பட வேண்டிய
பொறுப்பு அனைவருக்கும் உண்டு" என்றும் குறிப்பட்டுள்ளார்.</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/AzfhA81atbs" width="640" height="360" class="note-video-clip"></iframe>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T01:06:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சரத் பொன்சேகாவால் அடையாளப்படுத்தப்பட்ட நபர்கள்! ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் அடுத்த கட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-next-stage-of-the-easter-attack-case-1789866294"></link>
            <id>https://ibctamil.com/article/the-next-stage-of-the-easter-attack-case-1789866294</id>
            <summary type="text">ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தற்போது பேசப்படும் சில நபர்கள் குறித்து தான் முன்னரே சுட்டிக்காட்டியிருந்ததாக முன்னாள் இராணுவத் தளபதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தற்போது பேசப்படும் சில நபர்கள் குறித்து தான் முன்னரே சுட்டிக்காட்டியிருந்ததாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பில் நேற்று (19) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவிதுள்ளார்.</p><p>

“சிலரைக் குறித்து நான் முன்னரே சுட்டிக்காட்டியிருந்தேன். தற்போது மீண்டும் அதே நபர்கள் தொடர்பில் பேசப்படுகின்றனர். இந்த விசாரணைகளில் விரைவில் முடிவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன்” என சரத் பொன்சேகா மேலும், கூறியுள்ளார்.</p><p></p><h2>நாட்டைச் சூறையாடிய&nbsp;ராஜபக்‌சர் </h2><p>
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் ஆர்வத்துடன் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தான் கருதுவதாகவும், இதனை வரவேற்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d6909af-ba88-459b-9150-260ddae6bcd4/26-6aaf32367eae7.webp' /></p><p>அத்தோடு, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஈஸ்டர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோருவதற்கு உரிமையுடையவர் எனவும் சுட்டிக்காட்டினார்.</p><p>தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,&nbsp;</p><p>ராஜபக்‌சர் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் தொடர்பான விடயங்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.</p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் குடும்பத்தைச் சேர்ந்த பலர் நாட்டைச் சூறையாடியதாக தான் ஏற்கனவே கூறியுள்ளேன். அந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்டத்தின் முன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.</p><p></p><h2>சட்டரீதியான விசாரணை</h2><p>ஷிரந்தி ராஜபக்‌ச தொடர்பாகவும் சட்டரீதியான விசாரணைகள் இடம்பெற வேண்டும். பணப் பரிவர்த்தனைகள் இடம்பெற்றிருந்தால் அதற்கும் சட்டத்தின் முன் பதிலளிக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f10ae28c-8c36-4f52-a3e6-90dd38c87195/26-6aaf323734ebf.webp' /></p><p>2029ஆம் ஆண்டு நாமல் ராஜபக்‌ச நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என யாராவது எதிர்பார்ப்பது முட்டாள்தனமான விடயம்.</p><p>அவ்வாறான முடிவு நாட்டுக்கு விரும்பத்தக்கதல்ல. நாமல் அரசியலில் முன்னேறுவதற்கான பாதை திறந்தே இருக்கின்றது. அவர் அந்தப் பாதையில் செல்லலாம்” என கூறியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T01:05:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 16 வயது சிறுவனை தகாத முறையில் துன்புறுத்தியதாக இலங்கையர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-man-arrested-in-canada-16-year-old-boy-1789865580"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-man-arrested-in-canada-16-year-old-boy-1789865580</id>
            <summary type="text">கனடாவின் விட்பி பகுதியில் 16 வயது சிறுவனை தகாத முறையில் துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 62 வயதான இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் விட்பி பகுதியில் 16 வயது சிறுவனை தகாத முறையில் துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 62 வயதான இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக டர்ஹாம் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>விட்பி பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணியாற்றி வந்த சம்பத் பெரேரா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ec64692-47dc-4c80-9556-42fa67b37a9b/26-6aaf2e6dd3d33.webp' /></p><p>குறித்த மருந்தகத்தில் பணியாற்றிய 16 வயது சிறுவன் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சந்தேக நபர் மீது தகாத முறையில் செயற்பட்டதாக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
</p><p>
இந்நிலையில், குறித்த நபரால் வேறு எவரேனும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டால், அவர்கள் முன்வந்து பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு டர்ஹாம் பிராந்திய பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T00:53:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப் புலிகளின் தலைவருக்கு உருவச்சிலை! திலீபன் நினைவேந்தலால் பொங்கி எழுந்த சரத் வீரசேகர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sarathweerasekera-furiously-thileepan-memorial-1789865411"></link>
            <id>https://ibctamil.com/article/sarathweerasekera-furiously-thileepan-memorial-1789865411</id>
            <summary type="text">வடக்கில் திலீபனுக்கு நினைவேந்தல் நிகழ்த்தப்பட்டு உருச்சிலை
அமைக்கப்பட்டுள்ளமை இராணுவத்தை அவமதிக்கும் ஒரு செயலாகும் என&amp;nbsp;முன்னாள் பொதுமக்கள் பாதுகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கில் திலீபனுக்கு நினைவேந்தல் நிகழ்த்தப்பட்டு உருச்சிலை
அமைக்கப்பட்டுள்ளமை இராணுவத்தை அவமதிக்கும் ஒரு செயலாகும் என&nbsp;முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், எதிர்காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனுக்கும் உருவச்சிலை அமைக்க அரசு அனுமதியளிக்குமா என&nbsp; சீற்றத்துடன் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>கொழும்பில் நேற்று சனிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி
உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.</p><p></p><h2>விடுதலைப்புலிகள் அமைப்பின் கொள்கை</h2><p>
</p><p>
அவர் மேலும் கூறுகையில்,

"வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விடுதலைப்புலிகள் அமைப்பின் கொள்கைகள்
தற்போது வெளிப்படையாகவே வெளிப்படுத்தப்பட்டு வருவதுடன், பௌத்த சின்னங்களும்
மரபுரிமைகளும் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7a37f5a-d783-43f5-b6d2-1ed80d2475fe/26-6aaf2dc672755.webp' /></p><p>
</p><p>
வடக்கில் திலீபனுக்கு நினைவேந்தல் நிகழ்த்தப்பட்டு உருச்சிலை
அமைக்கப்பட்டுள்ளமை இராணுவத்தை அவமதிக்கும் செயலாகும். </p><p>இவ்வாறான சூழலில்,
எதிர்காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கும் உருவச்சிலை அமைக்க இந்த அரசு அனுமதியளிக்குமா
என்று நாம் கேட்கின்றோம்.
</p><p>
திலீபனின் உருவச்சிலை திறப்பு நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் சீருடையுடன்
கலந்துகொண்டுள்ளனர். கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனை
ஏற்றுக்கொள்வாரா?</p><p>

இவ்வாறான செயற்பாடுகள் ஊடாகப் பாடசாலை மாணவர்கள் மத்தியில் பிரிவினைவாதம்
விதைக்கப்படுகின்றது.
</p><p>
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசியல் ரீதியில் பிரபலமடைய வேண்டும்
என்பதற்காக அரசு பாதுகாப்பு சார்ந்த விடயங்களை அலட்சியப்படுத்தி வருகின்றது.

கடந்த நல்லாட்சி அரசும் இதேபோன்று செயற்பட்டதன் இறுதிக் கட்டமாகவே உயிர்த்த
ஞாயிறு குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது. </p><p>மேலும் அரசியல் வெற்றிகளுக்காகப்
பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்களை எந்தக் காரணம் கொண்டும் அலட்சியப்படுத்த
வேண்டாம் என அரசிடம் கேட்டுக்கொள்கின்றேன்." என்றார்.</p><p></p><p><b>you may like this&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/toUCR-sCchQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T00:50:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலை வழக்கில் சிக்கப் போகும் ஷிரந்தி - இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள விசாரணைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/thajudeen-murder-shiranthi-in-struggle-1789787626"></link>
            <id>https://tamilwin.com/article/thajudeen-murder-shiranthi-in-struggle-1789787626</id>
            <summary type="text">முன்னாள் ஆட்சியாளர்களான ராஜபக்ச குடும்பத்தினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் சமகால அரசாங்கம் இறுக்கமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது....</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஆட்சியாளர்களான ராஜபக்ச குடும்பத்தினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் சமகால அரசாங்கம் இறுக்கமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. </p><p>

தற்போதைய நிலவரத்தில் ராஜபக்ச குடும்பத்தில் அனைவரும் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் விசாரணைக்காக முன்னிலையாகி உள்ளனர். </p><p> 

இந்நிலையில் ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை மற்றும் பல நிதி மோசடிகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2><b>குற்றங்கள் தொடர்பில் வாக்குமூலம்</b></h2><p>

இந்தக் குற்றங்கள் தொடர்பில் ஷிரந்தி ராஜபக்சவிடமிருந்து எதிர்வரும் நாட்களில் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>முதற்கட்டமாக எதிர்வரும் 24 ஆம் திகதி அவர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.</p><p>

CT ஸ்கேனருக்காக நிதி திரட்டியமை, தாஜுதீன் கொலை, நீலப் படையணி வழக்கு மற்றும் சிரலிய சவிய தொடர்பில் ஷிரந்தியிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4228bcd-dd2d-4186-a00b-78128c47672f/26-6aaeb3279e021.webp' />&nbsp;&nbsp;</p><p> </p><p>

அதற்கமைய, இந்த வழக்குகள் தொடர்பான அறிக்கைகள் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க விசாரணைக் குழுக்கள் தயாராகி வருகின்றன. </p><p>

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மருத்துவ பரிசோதனைக்காக ஷிரந்தி ராஜபக்ச, சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். 

அங்கு பிரபலமான மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> எனினும் உல்லாசமாக சிங்கப்பூரில் சுற்றித்திரிந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><p><br></p><p> 
</p>]]></content>
            <updated>2026-09-20T00:42:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெனீவாவில் புலம்பெயர் தமிழர்களின் வகிபாகத்தை பாராட்டிய மொட்டுக் கட்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/geneva-human-rights-convention-2026-slpp-1789864461"></link>
            <id>https://tamilwin.com/article/geneva-human-rights-convention-2026-slpp-1789864461</id>
            <summary type="text">இலங்கைக்கு வெளியே மிகப்பெரிய, சக்திவாய்ந்த ஒரு தமிழ் புலம்பெயர் சமூகம் (Diaspora) இருக்கின்றது. அதாவது இலங்கை அரசாங்கத்தை விடவும் சக்திவாய்ந்த சமூகமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு வெளியே மிகப்பெரிய, சக்திவாய்ந்த ஒரு தமிழ் புலம்பெயர் சமூகம் (Diaspora) இருக்கின்றது. அதாவது இலங்கை அரசாங்கத்தை விடவும் சக்திவாய்ந்த சமூகமாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பானவர்கள் திகழ்கிறார்கள் என நாமல் ராஜபக்சவின் விடுதலைக்காக ஜெனீவா சென்றதாக பேசப்பட்ட மொட்டுக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும் நாமலின் நெருங்கிய நம்பருமான மிலிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>ஜெனீவா சென்று வந்த பின்னர் வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அதில் அவர் தொடர்ந்து பேசியதாவது. </p><h2> 
</h2><p></p><h2>ஜெனீவாவில் நடந்த பெனல் கலந்துரையாடல்</h2><p>தமிழின படுகொலை மற்றும் தமிழீழத்திற்கான போராட்டத்தில் அவர்களின் பெரும் முயற்சியை நான் ஜெனீவாவில் 2022 இலும் பார்த்தேன். அந்த விடயத்தில் நாம் இப்போது தோற்றுப்போயிருக்கிறோம். </p><p>நான் கலந்துகொண்ட ஒரு விவாத அரங்கில் (Panel Discussion), "துர்கா" என்ற பெண் தமிழின படுகொலை தொடர்பில் பேசினார். அவர் மிகவும் புத்திசாலி, அவுஸ்திரேலியாவில் கல்வி கற்றவர். </p><p>அவரைப் போல மூன்று நான்கு தமிழ் யுவதிகள் பேசினார்கள். அவர்கள் ஒரு வகையில் "சிறிய லக்ஷ்மன் கதிர்காமர்" போன்றவர்கள் அவர்கள் கொண்டிருக்கும் நிலைப்பாட்டில் அதாவது பிரிவினைவாத கோட்பாட்டில்.
</p><p>அவர்களுடன் போட்டியிட அல்லது மோத வேண்டுமானால், நமது தேசியவாதக் முகாமிலிருந்தும் (Nationalist camp) ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ், லண்டன் பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம் போன்ற சிறந்த இடத்தில் பயின்ற, திறமையான, புத்திசாலித்தனமான, இந்த கருத்தியலைச் சரியாகப் புரிந்துகொண்ட இளைஞர்களை உருவாக்க வேண்டும். </p><p>அது உடனடியாக நடக்கக்கூடிய ஒன்றல்ல.
ஏனெனில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இருந்தே அவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் சில ஆளுமைகளை உருவாக்கினார்கள் . </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf9e17d5-ef51-40e3-9084-61b7ad08f1b5/26-6aaf2a0f8db0a.webp' /></p><p>உதாரணமாக இப்போது கனடாவில் கெரி ஆனந்தசங்கரி அமைச்சராக இருக்கிறார். 
இப்போது அவர்கள் இருக்கும் நாட்டில் இரண்டு மூன்று அரசியல் கட்சிகள் இருந்தால், அந்த எல்லா கட்சிகளிலுமே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானர்கள் இருக்கிறார்கள். </p><p>அதனால் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் அவர்களுக்குப் பிரச்சினையில்லை. 
எனவே இது மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட (Organized) ஒரு விடயம். </p><p>இதற்கு முகங்கொடுப்பது எப்படி என்பது குறித்து நாம் தனியாகப் பேச வேண்டும். பல்கலைக்கழகங்களில் பயின்ற, தேசியவாதச் சிந்தனையுள்ள புத்திசாலி இளைஞர்களாகிய உங்களுக்கு இதை முன்னெடுத்துச் செல்வதில் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது.</p><p>இலங்கையின் மனித உரிமைகள் அறிக்கை என்பது ஒவ்வொருவரும் நிச்சயமாகப் பார்க்க வேண்டிய ஒரு விடயமாகவே நான் பார்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T00:39:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவப் பரிசோதனை கட்டணப் பட்டியல் போலியானது ; நுகர்வோர் அதிகாரசபை எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/medical-test-fee-lis-fake-consumer-authority-alert-1789864462"></link>
            <id>https://jvpnews.com/article/medical-test-fee-lis-fake-consumer-authority-alert-1789864462</id>
            <summary type="text">பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கான கட்டணங்கள் அடங்கிய பட்டியல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், அது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கான கட்டணங்கள் அடங்கிய பட்டியல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், அது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை முக்கிய தெளிவுபடுத்தலை வெளியிட்டுள்ளது.</p><p></p><p>

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் குறித்த அறிவித்தல் அதிகாரப்பூர்வமானது அல்ல எனத் தெரிவித்துள்ள அதிகாரசபை, அதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கட்டணங்களும் வர்த்தமானி அறிவித்தல் மூலம் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணங்கள் என பொதுமக்கள் கருத வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3605d829-56e0-4fd5-b15b-5bf6936a0050/26-6aaf2a0f98332.webp' /></p><p>நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தகவலின்படி, குறிப்பிட்ட சில மருத்துவப் பரிசோதனைகளுக்கே வர்த்தமானி அறிவித்தல் மூலம் அதிகபட்சக் கட்டணங்கள் அதிகாரப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
</p><p>
அதன்படி,
</p><p>
முழுமையான இரத்தப் பரிசோதனை (FBC) – ரூ.400
</p><p>
டெங்கு NS1 என்டிஜென் பரிசோதனை – ரூ.1,200
</p><p>
கொவிட்-19 PCR பரிசோதனை – ரூ.6,500
</p><p>
கொவிட்-19 விரைவு என்டிஜென் (RAT) பரிசோதனை – ரூ.2,000
</p><p>
மேற்கண்ட கட்டணங்கள் பரிசோதனை மற்றும் அறிக்கை ஆகியவற்றுக்கான அதிகபட்சக் கட்டணங்களாகும்.
</p><p>
இதற்கு மேலதிகமாக, சமூக ஊடகங்களில் பரவி வரும் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள FBS, RBS, HbA1C, Lipid Profile, LFT, RFT, UFR, CRP, CT, MRI, Ultrasound, Mammogram மற்றும் DEXA உள்ளிட்ட பரிசோதனைகளுக்கான கட்டணங்கள், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் உத்தரவுகளின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணங்கள் அல்ல எனவும் அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.
</p><p>
எனவே, சமூக ஊடகங்களில் பரவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பாமல், மருத்துவப் பரிசோதனை கட்டணங்கள் தொடர்பில் அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.
</p><p>
இது தொடர்பில் மேலதிக தெளிவுபடுத்தல்களைப் பெற 1977 என்ற உடனடி அழைப்பு இலக்கத்தைத் தொடர்புகொள்ளுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T00:34:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜன் விவகாரத்தில் இராஜதந்திர அழுத்தம் அவசியம்! ஜனாதிபதியிடம் சிறீதரம் எம்.பி வேண்டுகோள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/diplomatic-pressure-is-essential-the-anon-affair-1789864288"></link>
            <id>https://ibctamil.com/article/diplomatic-pressure-is-essential-the-anon-affair-1789864288</id>
            <summary type="text">பல தசாப்தங்களாக நீடித்த கொடூரமான போரினால் சமூக, பொருளாதார மற்றும் உளவியல் ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களில்அனோஜனின் குடும்பமும் ஒன்றாகும...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல தசாப்தங்களாக நீடித்த கொடூரமான போரினால் சமூக, பொருளாதார மற்றும் உளவியல் ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களில்அனோஜனின் குடும்பமும் ஒன்றாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.</p><p>சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின்&nbsp;சிவராசா தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுதிய விசேட கடிதத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.</p><p>இது குறித்து கடிதத்தில் பின்வரும் விடயங்களை சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>&nbsp;அனோஜனின் குடும்பப் பின்னணி</h2><p>“இஸ்லாமியப் போதனைகள் கருணை, மன்னிப்பு, நீதி மற்றும் மனிதாபிமானம் ஆகிய உயரிய விழுமியங்களை உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0433f48d-605e-4a71-ae08-8502853e0c8f/26-6aaf2962bb761.webp' /></p><p>அந்த உயரிய அறவிழுமியங்களின் அடிப்படையில் அனோஜனின் குடும்பப் பின்னணி, வயது, சமூக மற்றும் பொருளாதாரச்சூழல் என்பவற்றைக் கருத்திற்கொண்டு தர்மம் மற்றும் அறத்தின் அடிப்படையில் இவ்விடயத்துக்கு சாதகமான தீர்வொன்றை வழங்குவதற்கான இராஜதந்திர ரீதியான அழுத்தங்களை வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.</p><p>

மதநிந்தனைக் குற்றச்சாட்டில் கடந்த மாதத் தொடக்கத்தில் சவுதி அரேபிய நீதிமன்றத்தினால் 5 வருடகால சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்ட இலங்கையரான சிவராசா அனோஜனின் மேன்முறையீட்டை அடுத்து, தற்போது அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசா தொழில் வாய்ப்புக்காக சவுதி அரேபியாவுக்குச் சென்று அங்கு வசித்துவந்த நிலையில், நபிகள் நாயகம் தொடர்பாக சமூக ஊடகத்தில் தவறான பதிவு ஒன்றை வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பான விடயங்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.</p><p>இதுகுறித்து சவுதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவருக்கு கடந்த மாதம் 3 ஆம் திகதி கடிதமொன்றையும் அனுப்பியிருந்தேன்.
</p><p>
குடும்பத்தின் கடுமையான பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு அனோஜன் சவுதி அரேபியாவில் டைனமிக் அன்ட் எக்ஸலன்ஸ் அரேபியா கம்பனி என்ற நிறுவனத்தில் தொழிலாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.</p><p></p><h2>குடும்பத்தின் அன்றாட வாழ்வாதாரம்</h2><p>சவுதி அரேபியா தனது மதப் பாரம்பரியம், இஸ்லாமிய விழுமியங்கள் மற்றும் சட்ட ஆட்சியை மிக உயர்ந்த முறையில் பேணிவரும் ஒரு நாடாகும் என்பதை நான் முழுமையான மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b43b8ca8-3cda-4dd6-b6a6-84092211de86/26-6aaf296374497.webp' /></p><p> </p><p>ஒவ்வொரு நாட்டுக்கும் தனது சட்டங்களை நடைமுறைப்படுத்தும் இறைமையுரிமை இருப்பதையும் மதிக்கிறேன்.
</p><p>

அனோஜன் சிவராசா குற்ற நோக்கத்துடன் சவுதி அரேபியாவுக்குச் செல்லவில்லை. அவரது தந்தை சிவராசா மற்றும் தாய் யோகேஸ்வரி ஆகியோரின் குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைப் பகிர்ந்து, அவர்களது வாழ்க்கையை முன்னேற்றும் நோக்கத்துடனேயே வெளிநாட்டு வேலைவாய்ப்பை அணுகியுள்ளார். </p><p>அவரது உழைப்பே குடும்பத்தின் அன்றாட வாழ்வாதாரத்தின் பிரதான ஆதாரமாக இருந்து வருகின்றது.
</p><p>
இந்நிலையில் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனை அவரை மாத்திரமன்றி, அவரைச் சார்ந்த முழுக்குடும்பத்தின் வாழ்வையும் முற்றாக முடக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.
</p><p>
அன்றாட வாழ்க்கைச் செலவுகளையே மிகுந்த சிரமத்துடன் எதிர்கொள்ளும் ஒரு குடும்பத்தின் எதிர்கால வாழ்வை ஒட்டுமொத்தமாகச் சீர்குலைக்கும் விளைவையே இது ஏற்படுத்தும்.</p><p> இஸ்லாமியப் போதனைகள் கருணை, மன்னிப்பு, நீதி மற்றும் மனிதாபிமானம் ஆகிய உயரிய விழுமியங்களை உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றன” என தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T00:31:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[லட்சணமாக பாவாடை தாவணியில் பாடகி சிவாங்கி வெளியிட்ட போட்டோஸ்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/singer-sivaangi-latest-photoshoot-1789819402"></link>
            <id>https://cineulagam.com/article/singer-sivaangi-latest-photoshoot-1789819402</id>
            <summary type="text">சிவாங்கிவிஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் எத்தனையோ பாடகர்கள் தமிழ் சினிமாவில் களமிறங்கியுள்ளனர்.தென்னிந்திய சினிமாவை தாண்டி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சிவாங்கி</h2><p>விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் எத்தனையோ பாடகர்கள் தமிழ் சினிமாவில் களமிறங்கியுள்ளனர்.</p><p>தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் சினிமாவிலும் கலக்குகிறார்கள். அப்படி சூப்பர் சிங்கர் நிகழச்சி மூலம் களமிறங்கி பிரபலமான சிவாங்கி குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார்.</p><p>கோமாளியாக சில சீசன்கள் இருந்தவர் கடைசியாக தன்னை போட்டியாளராகவும் நிரூபித்துள்ளார்.</p><p>அண்மையில் லட்சணமாக சிவாங்கி பாவாடை தாவணியில் வெளியிட்ட புகைப்படத்தை காண்போம்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T00:30:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிரிக்கெட் தெரிவுக்குழு முன்னாள் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க ரூ. 75 மில்லியன் நட்டஈடு கோரி வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-cricket-selection-75-milion-in-compensation-1789863705"></link>
            <id>https://jvpnews.com/article/former-cricket-selection-75-milion-in-compensation-1789863705</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவர் பதவியிலிருந்து, தனது 2 வருடப் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரே நியாயமற்ற வகையில் தாம் நீக்கப்பட்டமைக்கு எத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவர் பதவியிலிருந்து, தனது 2 வருடப் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரே நியாயமற்ற வகையில் தாம் நீக்கப்பட்டமைக்கு எதிராக முன்னாள் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க, 75 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.</p><p>
</p><p></p><p>விளையாட்டுத் துறை அமைச்சரின் அனுமதியுடன், 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் திகதி முதல் இரண்டு வருட காலத்துக்கு தான் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
எனினும், ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு, எவ்வித முன்னறிவிப்போ அல்லது உரிய நடைமுறையோ இன்றி தனது நியமனம் திடீரென முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41aaf117-8fb1-4108-8dde-6aec5ff4c42f/26-6aaf271a58328.webp' /></p><p>தனது ஏனைய வணிக மற்றும் தொழில்முறை நடவடிக்கைகளை ஒதுக்கிவைத்துவிட்டு, நாட்டில் கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சிக்காகத் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த தீடீர் நீக்கம் காரணமாகத் தனக்குக் கிடைக்க வேண்டிய ஊதியம் இழக்கப்பட்டுப் பாரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தனது தொழில்முறை நற்பெயருக்கும் நம்பகத்தன்மைக்கும் கடுமையாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
இதற்கமைய, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் மற்றும் கிரிக்கெட் இடைக்கால குழுவிடமிருந்து 75 மில்லியன் ரூபாயை அவர் நட்டஈடாகக் கோரியுள்ளார்.
</p><p>
இந்த வழக்கில், அந்த குழுவின் தலைவர் எரான் விக்ரமரத்ன உள்ளிட்ட கிரிக்கெட் இடைக்கால குழுவின் 9 உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் ஆகிய தரப்பினர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T00:22:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை: 7 நிபந்தனைகளை முன்வைத்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-communicated-7-conditions-for-u-s-1789860945"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-communicated-7-conditions-for-u-s-1789860945</id>
            <summary type="text"> Iran Communicated 7 Conditions for U.S: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது. 7 நிபந்தனைகளை முன்வைத்த ஈரான்அமெரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p> Iran Communicated 7 Conditions for U.S: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது.</p><h2> 7 நிபந்தனைகளை முன்வைத்த ஈரான்</h2><p>அமெரிக்காவுடன்&nbsp; போர் நிறுத்த பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குவதற்கான முக்கிய நிபந்தனைகளை ஈரான் அதிகாரப்பூர்வமாக அனுப்பி வைத்துள்ளது.</p><p> பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்னதாக கத்தாரின் ராஜதந்திர வழிகள் மூலமாக ஈரான் தங்களது முக்கிய நிபந்தனைகளை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துள்ளது என ஈரான் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாயின் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/812c4e0d-03bc-4b32-bfca-08f824359a1c/26-6aaf1c531ac79.webp' /></p><p> ஈரான் அனுப்பிய நிபந்தனைகளை அமெரிக்கா தவறாக புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு இல்லை என்றும் ரெசாய் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அமெரிக்கா தற்போது எதிர்கொண்டு வரும் மூலோபாய சிக்கல்களில் இருந்து விடுபட வேண்டும் என்றால் ஈரான் முன்வைத்துள்ள நிபந்தனைகளையும், ஈரானின் இறையாண்மையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.</p><h2>அமெரிக்காவின் பார்வை</h2><p>ஈரானுக்கு எதிரான விவகாரத்தில் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததை அடுத்து இந்த முன்னேற்றமானது நடந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63978084-80bd-48be-ad86-e4eebe12bf2a/26-6aaf1c53c7751.webp' /></p><p>அதில், நீண்ட கால போரை முடிவுக்கு கொண்டு வர ராஜந்திர வழிகளை பின்பற்றுவதா அல்லது கடுமையான ராணுவ நடவடிக்கைகளை பின்பற்றுவதா என்று இறுதி முடிவு செய்யப்படும் என டிரம்ப் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T00:21:56+00:00</updated>
        </entry>
    </feed>
