<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-22T01:31:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் 18 வரை அஸ்தமன நிலையில் புதன்! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mercury-combustion-zodiac-signs-in-dangerous-1787343311"></link>
            <id>https://ibctamil.com/article/mercury-combustion-zodiac-signs-in-dangerous-1787343311</id>
            <summary type="text">ஜோதிடத்தில் புத்திசாலித்தனம், பேச்சு மற்றும் வியாபாரத்தின் காரணியான புதன், தற்போது அஸ்தமன நிலையில் பயணித்து வருகிறார்.

பலவீனமான நிலையில் இருக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>ஜோதிடத்தில் புத்திசாலித்தனம், பேச்சு மற்றும் வியாபாரத்தின் காரணியான புதன், தற்போது அஸ்தமன நிலையில் பயணித்து வருகிறார்.
</p><p>
பலவீனமான நிலையில் இருக்கும் புதனின் இந்த அமைப்பு செப்டம்பர் 18 வரை நீடிக்கும். </p><p>இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில குறிப்பிட்ட ராசிக்காரர்கள் இக்காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
</p><p>
அவ்வாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் எவை என்று இந்த பதிவில் காண்போம்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>மேஷம்</td><td><ol><li>புதன் அஸ்தமன நிலையில் இருப்பதால் மேஷ ராசிக்காரர்கள் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். </li><li>அலுவகலத்தில் உங்களின் வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்படலாம். </li><li>நிறைய வாக்குவாதங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. </li><li>வேலையில் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும்.</li><li> இது தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும்.</li><li> இக்காலத்தில் தொழிலில் எந்த ஒரு முக்கியமான முடிவுகளையும் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. </li><li>குறிப்பாக எந்த ஒரு விஷயத்தை மேற்கொள்ளும் போதும் கவனமாக இருக்க வேண்டும்.&nbsp;&nbsp;&nbsp;</li></ol></td></tr><tr><td>கன்னி </td><td><ol><li>புதன் அஸ்தமன நிலையில் இருப்பதால் கன்னி ராசிக்காரர்கள் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். </li><li>எந்த நிதி பரிவர்த்தனைகளையும் இக்காலத்தில் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். </li><li>பெரிய முதலீடுகள் எதையும் அவசரப்பட்டு செய்வதைத் தவிர்க்க வேண்டும். </li><li>வணிகர்கள் ஒப்பந்தங்களில் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். </li><li>ஆவணங்களை படிக்காமல் கையெழுத்திடுவதைத் தவிர்க்க வேண்டும். </li><li>மொத்தத்தில் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.&nbsp;&nbsp;</li></ol></td></tr><tr><td>சிம்மம்</td><td><ol><li>புதன் அஸ்தமன நிலையில் இருப்பதால் சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் தொழில் மற்றும் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.</li><li> பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் அல்லது உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. </li><li>இக்காலத்தில் உங்களுக்கு எதிராக மற்றவர்கள் செயல்படலாம்.</li><li> எனவே அப்போது உடனடியாக அவசரப்பட்டு எதையும் செய்யாமல் அமைதியாக இருக்க வேண்டும். </li><li>அலுவலகத்தில் தகராறுகளை பெரிதாக்கவோ அல்லது கவனக்குறைவாகவோ முடிவெடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.&nbsp;&nbsp;</li></ol></td></tr></tbody></table><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-22T01:14:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் ஆலயத்திற்குச் சென்ற 400 பேரின் கண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு! மருத்துவ அறிக்கையில் வெளியான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-temple-issue-1787361148"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-temple-issue-1787361148</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பெரியவளவு பிரான்பற்று முருகன் ஆலயத்தில்
இடம்பெற்ற சம்பவத்தில், அதிக செறிவுள்ள செயற்கை ஒளியின் (HID)
வெளிப்பாட்டினால் ஏற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பெரியவளவு பிரான்பற்று முருகன் ஆலயத்தில்
இடம்பெற்ற சம்பவத்தில், அதிக செறிவுள்ள செயற்கை ஒளியின் (HID)
வெளிப்பாட்டினால் ஏற்படக்கூடிய கண் பாதிப்பே ஏற்பட்டுள்ளதாக கண் வைத்திய
நிபுணர் மலரவன் தெரிவித்துள்ளார்.</p><p>

பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான தனது மருத்துவ அறிக்கையில் இந்த விடயத்தை அவர் வெளியிட்டுள்ளார்.


 தனது மருத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p><h2>அதிகரித்துள்ள எண்ணிக்கை</h2><p>
சம்பவத்தையடுத்து பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை இரவு 9.30
மணி நிலவரப்படி 400ஐ தாண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

முன்னதாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி, 385 பேர்
பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 400ஐ
கடந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T01:12:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் விழுந்து நொறுங்கிய விமானம் ; எட்டு பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/plane-crashes-in-us-eight-dead-1787360204"></link>
            <id>https://canadamirror.com/article/plane-crashes-in-us-eight-dead-1787360204</id>
            <summary type="text">அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில், சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில், விமானிகள் மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட எட்டு பேர் பலியாகினர்.

அலாஸ்காவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில், சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில், விமானிகள் மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட எட்டு பேர் பலியாகினர்.</p><p>

அலாஸ்காவின் தலைநகரான ஆங்கரேஞ்சில் இருந்து, ‘செக்யூரிட்டி ஏவியேஷன்’ நிறுவனத்தின், ‘செஸ்னா 441’ இரட்டை இன்ஜின் கொண்ட விமானம் ஒன்று, கேப் நியூஎன்ஹாம் ரேடார் தள விமான நிலையத்துக்கு சென்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2b54b79-852e-4855-bb37-fe36cd65bffc/26-6a88f3ce688a3.webp' /></p><p>இந்த விமானத்தை அமெரிக்க ராணுவத்தின் பொறியாளர் பிரிவினர் வாடகைக்கு எடுத்தனர். </p><p>
இதில், இரண்டு விமானிகள், இரண்டு ராணுவ பொறியாளர்கள் உட்பட மொத்தம் எட்டு பேர் பயணித்தனர். </p><p>

விமானம், கேப் நியூஎன்ஹாம் தளத்தை நெருங்கும் போது திடீரென விழுந்து நொறுங்கியது.

 இதில் பயணித்த எட்டு பேரும் உயிரிழந்தனர். </p><p>விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.</p>]]></content>
            <updated>2026-08-22T00:56:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டைக் காப்பாற்ற யோஷிதவை பலிகடாவாக்கிய மகிந்த! புது புதுக் காரணம் கூறும் ராஜபக்ச தரப்பு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-reason-why-mahinda-joined-yoshitha-in-the-navy-1787358358"></link>
            <id>https://tamilwin.com/article/the-reason-why-mahinda-joined-yoshitha-in-the-navy-1787358358</id>
            <summary type="text">
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டைக் காப்பாற்றவும், படையினரின் மனதை தைரியப்படுத்தவும் தனது மகன் யோஷித ராஜபக்சவை கடற்படையில் இணைத்தார் என்று முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டைக் காப்பாற்றவும், படையினரின் மனதை தைரியப்படுத்தவும் தனது மகன் யோஷித ராஜபக்சவை கடற்படையில் இணைத்தார் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார். </p><p>

பொதுஜன பெரமுனவின் கட்சி அவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>நாட்டைக் காப்பாற்ற களமிறக்கப்பட்ட யோஷித&nbsp;</h2><p> </p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

கடந்த காலத்தில் மூன்று தசாப்தங்களாக நிலவிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்ட வந்து நாட்டைக் காப்பாற்றிய தலைவர்கள் மீதும், அதில் பங்கெடுத்த இராணுவ வீரர்கள் மீதும் பழிவாங்கும் நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b105c12-1348-4a02-930e-1f145b5e5727/26-6a88f39d4f63d.webp' /></p><p> </p><p> 

அன்று மகிந்த ராஜபக்ச நாட்டைக் காப்பாற்றவும், படையினரின் மனதை தைரியப்படுத்தவும் தனது மகன் யோஷித ராஜபக்சவை கடற்படையில் சேர்த்தார். </p><p>

அப்படிச் செய்யாவிட்டால், பிரபாகரன் இந்த நாட்டைத் தனது அரசாங்கமாக மாற்றியிருப்பார். 

வடக்கு சென்று இனறு குட்டிக் கரணம், அடிக்கும் ஜனாதிபதி உள்ளிட்ட எவராலும் அங்கு சென்றிருக்க முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0e088bb-97a1-4da5-8b24-211445b47167/26-6a88f39e035cb.webp' /></p><p>ஆனால், நாட்டைக் காப்பாற்றிய யோஷித ராஜபக்ச மீது இன்று தொடர்ச்சியாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><p> 

இதன்மூலம், தற்போதைய அரசாங்கத்தின் உறுப்பினர்கள் மீதான 300இற்கும் மேற்பட்ட கொள்கலன் கடத்தல், நிலக்கரி ஊழல் உள்ளிட்ட பல முறைகேடுகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T00:56:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகனின் உணவகத்திற்குத் தீ வைத்த தாய்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sentencing-for-mother-who-burned-down-1787322975"></link>
            <id>https://canadamirror.com/article/sentencing-for-mother-who-burned-down-1787322975</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் பேஃபீல்ட் பகுதியில் அமைந்துள்ள தனது மகனின் உணவகத்திற்குத் தீ வைத்த குற்றத்திற்காக சோனியா லார்சன் என்பவருக்கு 12 மாதங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் பேஃபீல்ட் பகுதியில் அமைந்துள்ள தனது மகனின் உணவகத்திற்குத் தீ வைத்த குற்றத்திற்காக சோனியா லார்சன் என்பவருக்கு 12 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>
சிறைத் தண்டனையுடன் இரண்டு ஆண்டுகள் கண்காணிப்புப் பிணை மற்றும் 60 மணி நேரச் சமூக சேவையும் அவருக்கு தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.</p><p>
அக்டோபர் 17, 2023 அன்று 'தி ஹப் ஆன் தி டாக்ஸ்'உணவகத்தில் ஏற்பட்ட பெருந்தீயில் கட்டிடம் கடுமையாகச் சேதமடைந்தது. இதனால் சுமார் 1.7 மில்லியன் டாலர் அளவிற்கு இழப்பு ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/663d78f2-013a-4d46-98e2-022590330be3/26-6a886261210ba.webp' /></p><p>
</p><p>அக்டோபர் 13 மற்றும் 16 ஆகிய திகதிகளிலும் சோனியா உணவகத்திற்குள் புகுந்து தீ வைக்க முயன்றது கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தெரியவந்தது. </p><p>
அக்டோபர் 17 ம் திகதி பாதுகாப்பு அலாரம் அமைப்பை முடக்கிவிட்டு திட்டமிட்டுத் தீ வைத்துள்ளார்.
திட்டமிட்டு இந்தத் தீவைப்பு சம்பவம் நடத்தப்பட்டுள்ளது, இது சமூகத்திற்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று நீதிபதி டி.ஜி. மெக்டொனால்ட் சுட்டிக்காட்டினார்.
</p><p>சோனியா இதற்கான தெளிவான காரணத்தைக் கூறவில்லை என்றாலும், அந்தச் சமயத்தில் தான் மனதளவில் கடுமையான பின்னடைவைச் சந்தித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>பாதிக்கப்பட்ட உணவகத்தின் உரிமையாளரும் சோனியாவின் மகனுமான கெவின் லார்சன், காப்பீட்டுத் தொகை போகத் தான் 1 மில்லியன் டாலருக்கும் அதிகமாக இழந்துவிட்டதாகவும், வணிகத்தை மீண்டும் தொடங்க முடியாமல் போய்விட்டது என்றும் தெரிவித்தார்.
</p><p>எனினும், தனது தாயை மன்னித்து அவருடனான உறவை மீண்டும் புதுப்பிக்க விரும்புவதாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T00:43:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த தாத்தா ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/grandfather-who-abused-granddaughter-in-tamil-area-1787343813"></link>
            <id>https://jvpnews.com/article/grandfather-who-abused-granddaughter-in-tamil-area-1787343813</id>
            <summary type="text">12 வயதுடைய பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய முதியவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>12 வயதுடைய பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய முதியவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா அவர்கள் தீர்ப்பளித்துள்ளார்.</p><p>



கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், போகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஹரதென்ன பகுதியில் இக்குற்றச்செயல் இடம்பெற்றுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec335d3c-7f5c-4687-9768-e567cf08c43c/26-6a88b3c77f1c0.webp' /></p><p>சம்பவம் நடந்த போது எதிரிக்கு 76 வயதாகும். இது தொடர்பான வழக்கின் குற்றச்சாட்டுப் பத்திரம் 2024 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.</p><p>



இவ்வழக்கு விசாரணையின் போது, எதிரி தரப்பில் அவரது 81 வயது முதுமையைக் கருத்தில் கொண்டு கருணை காட்டுமாறு விண்ணப்பிக்கப்பட்டது.
</p><p>


எனினும், பாதிக்கப்பட்ட சிறுமியின் இயற்கை பாதுகாவலர்களில் ஒருவரான பாட்டனாலேயே இக்குற்றச்செயல் புரியப்பட்டுள்ளமை, சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான உளவியல் பாதிப்புகள் மற்றும் கல்வி தடைப்பட்டிருந்தமை ஆகியவற்றை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. </p><p>



எதிரி மீதான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதால், எதிரியின் வயதைப் புறக்கணித்து 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் 50,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டதுடன்,

அதனை செலுத்தத் தவறின் மேலதிக 1 வருடம் சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 1,000,000/- (ஒரு மில்லியன் ரூபாய்) நஷ்டஈடும் செலுத்த வேண்டும் எனவும் அதனை செலுத்தத் தவறின் மேலதிக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>


அரச சட்டவாதியினால் முன்வைக்கப்பட்ட சாட்சிகள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதை அடுத்து இத்தீர்ப்பு வழங்கப்பட்டதுடன்,

இவ்வழக்கினை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் அரச சட்டவாதி ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ நெறிப்படுத்தியிருந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T00:42:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுக்கிரன் பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/astrology-sukra-peyarchi-athirsta-malai-perum-rasi-1787359240"></link>
            <id>https://jvpnews.com/article/astrology-sukra-peyarchi-athirsta-malai-perum-rasi-1787359240</id>
            <summary type="text">வேத ஜோதிடத்தின்படி, சுக்கிரன் ஒருவரின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தற்போது சுக்கிரன் அஸ்த நட்சத்திரத்திலிருந்து விலகி சித...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத ஜோதிடத்தின்படி, சுக்கிரன் ஒருவரின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தற்போது சுக்கிரன் அஸ்த நட்சத்திரத்திலிருந்து விலகி சித்திரை நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார்; இந்த மாற்றம் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்குச் சிறப்பான மற்றும் மங்களகரமான பலன்களைத் தரும். </p><p>சுக்கிரன் ஹஸ்த நட்சத்திரத்திலிருந்து விலகி, செவ்வாய் ஆளக்கூடிய சித்திரை நட்சத்திரத்தில் நுழைகிறார். இந்த நட்சத்திர பெயர்ச்சி, குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை உயர்வு, தொழில் முன்னேற்றம் மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சியை வாரி வழங்கவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f030112f-7052-43c2-8fe0-953ce65ac3e2/26-6a88f00a0483d.webp' /></p><h3>மேஷம்</h3><p>உத்தியோகம் மற்றும் தொழிலில் திறமைகளை வெளிப்படுத்த புதிய தளங்கள் அமையும். வருமானம் உயர்ந்தாலும், தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் மற்றும் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் செலுத்துவது நல்லது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26ffc69d-bcdc-40fa-bdd7-fe2759dc3263/26-6a88f00aadc84.webp' /></p><h4>ரிஷபம்</h4><p>ஐந்தாம் வீட்டில் சுக்கிரனின் சஞ்சாரம் நிகழ்வதால், படைப்பாற்றல் மற்றும் திறமைகள் மிளிரும். கலை, இசை மற்றும் எழுத்துத் துறையில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும்; சேமிப்பு கணிசமாக உயரும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர். எதிலும் அவசரப்பட்டு முடிவெடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07c0674e-b332-420d-af60-1a76450a05e4/26-6a88f00b5cc1f.webp' /></p><h3>துலாம்</h3><p>பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகளும், புதிய தொழில் கூட்டணிகளும் கைகூடும். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் ஈட்ட முடியும்; நிதி நிலைமை சீராக இருக்கும். திருமண வாழ்க்கை மற்றும் காதல் விவகாரங்களில் இணக்கமான சூழல் நிலவும். தன்னம்பிக்கை அதிகரித்து அனைத்து சவால்களையும் எளிதாகக் கையாள்வீர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a03cfa30-76f9-448e-baf5-4d9c3605b2bf/26-6a88f00c0e386.webp' /></p><h3>விருச்சிகம்</h3><p>பதினோராம் வீடான லாப ஸ்தானத்தில் சுக்கிரன் அமைவதால், எதிர்பாராத பண வரவு உண்டாகும். வாராக்கடன்கள் வசூலாகும்; செல்வாக்கு மிக்க நபர்களின் ஆதரவும் புதிய வருமான வழிகளும் கிடைக்கும். பணியிடத்தில் விரும்பிய இடமாற்றம் அல்லது பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. கூட்டுத் தொழில் மற்றும் இல்லற வாழ்வில் சிறு கருத்து வேறுபாடுகள் வரலாம் என்பதால், பேச்சில் நிதானம் தேவை.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/124c0332-357c-4b65-b570-7cdc1dbb6788/26-6a88f00cb9aca.webp' /></p><h3>மகரம்</h3><p>பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சுக்கிரன் பயணிப்பதால், தொட்டதெல்லாம் துலங்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் விலகி சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமும், தொழிலில் கூடுதல் லாபமும் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் புனிதப் பயணங்கள் அல்லது சுற்றுலா சென்று வர சாதகமான சூழல் அமையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3db858e-73d6-4fd9-9d27-a4d1c26aa07d/26-6a88f00d7f814.webp' />&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T00:41:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றத்தில் அர்ச்சுனாவின் இறுதி உரை ; அரசியல் விமர்சனத்துடன் பகிரங்க மன்னிப்பு கோரினார் அர்ச்சுனா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/archuna-apologizes-publicly-political-criticism-1787341600"></link>
            <id>https://jvpnews.com/article/archuna-apologizes-publicly-political-criticism-1787341600</id>
            <summary type="text">நாடாளுமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த மற்றும் நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக்கு வராமல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த மற்றும் நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக்கு வராமல் தட்டிகழிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
</p><p>
மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்வாகி வந்தவர்கள் தங்கள் கடமையைச் சரியாகச் செய்யத் தவறுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இன்று நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய இறுதி உரையின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c8d697c-67e0-400a-9312-f1781c1cd78b/26-6a88ab2252955.webp' /></p><p>அத்துடன், 2021 ஆம் ஆண்டில் X-Press Pearl கப்பல் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றி எரிந்ததால் நாட்டின் கடல் சூழலியலுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
மேலும், இந்த நாட்டிற்குச் சட்டப்பூர்வமாகக் கிடைக்க வேண்டிய பில்லியன் கணக்கிலான அமெரிக்க டொலர் இழப்பீட்டுத் தொகை, அதிகாரத் தரப்பினரின் முறையற்ற தலையீடுகள் காரணமாக மிகக் குறைந்த தொகையாகக் குறைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதுவே நாடாளுமன்றத்தில் ஆற்றும் கடைசி உரையாக இருக்கலாம் எனக் குறிப்பிட்ட அவர், சபை நடவடிக்கைகளின் போது அல்லது தமது பேச்சினால் யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் அல்லது அவையின் கண்ணியத்திற்கு ஏதேனும் பங்கம் ஏற்பட்டிருந்தால், அதற்குச் சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களிடமும் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்தார்.</p><p>

தமிழ் மக்களின் பிரதிநிதித்துவமும் சட்ட நடவடிக்கைக்கான கோரிக்கையும்
கடந்த காலப் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உண்மையான குரலாகத் தாம் நாடாளுமன்றத்தில் இயங்குவதாகக் குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தகுந்த நீதியும் நிவாரணமும் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
</p><p>
அத்துடன், நாட்டின் பொருளாதார சீரழிவு மற்றும் சட்ட விரோதச் செயல்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T00:41:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1787358972"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1787358972</id>
            <summary type="text">சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் திணைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (22-08-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனடிப்படையில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.






</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மன்னார், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 - 40 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a8dc5f4-84e5-4f5c-8241-14607515fbb0/26-6a88eefdda89b.webp' />&nbsp;&nbsp;</p><p>கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் பொலனறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும்.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T00:36:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[டுபாயிக்கு பறந்த மத்திய குற்றப் புலனாய்வு பணியக (CCIB)அதிகாரிகள் குழு!அழைத்து வரப்போகும் பெரும் ஆபத்தான நபர்....]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-central-crime-investigation-bureau-1787358493"></link>
            <id>https://tamilwin.com/article/the-central-crime-investigation-bureau-1787358493</id>
            <summary type="text">மத்திய குற்றப் புலனாய்வு பணியக (CCIB) அதிகாரிகள் குழுவொன்று திடீரென டுபாய் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளனர். 
கடந்த காலங்களில் கைது செய்யப்பட்ட திட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய குற்றப் புலனாய்வு பணியக (CCIB) அதிகாரிகள் குழுவொன்று திடீரென டுபாய் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளனர். 
கடந்த காலங்களில் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட பிரபல குற்றவாளியும் போதைபொருள் கடத்தல் காரர் ஒருவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்த அவரை அவசரமாக இலங்கைக்கு கொண்டு வரமுடியாது.</p><h2>

</h2><p></p><h2>அழைத்துவரவுள்ள ஆபத்தான மனிதர்</h2><p>அங்குள்ள சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்து, அவரைக் பொறுப்பேற்பதற்கும் மற்றும் விசா உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் தயாராக உள்ளதாலேயே அவசரமாக டுபாய் புறப்பட்டு சென்றுள்ளனர்.</p><p>அவர் தான் 'லலித் கன்னங்கர' அல்லது 'பஸ் லலித்' என அழைக்கப்படுபவரையே அழைத்து வரச் சென்றுள்ளனர்.
இவர் அவிசாவளை மற்றும் ஹோமாகம ஆகிய பகுதிகளில் தீவிர குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ஒருவராவார். </p><p>இந்தச் சந்தர்ப்பத்தில் அவரை கைது செய்திருப்பது இலங்கை பொலிஸாருக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். ஏனெனில், அவரை அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.</p><p>ஆனால் அவர் சட்டத்தரணிகள் ஊடாக தப்பிச் செல்வதற்கு பலமுறை முயன்றபோதிலும் அது பலனளிக்கவில்லை.டுபாயில் அவரது வழக்கு முடிவுக்கு வந்துள்ளதுடன், தற்போது அவரை அழைத்து வருவதே எஞ்சியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6306fb9-ffd6-432c-83b0-4fb70345b258/26-6a88ed1f87d86.webp' /></p><p>கடந்த காலத்தில் அவர் வந்து சென்றதாகவும் கதைகள் உலாவின. இவர் ஹோமாகம, அதுருகிரிய மற்றும் அவிசாவளை வரையிலான பகுதிகளில் இடம்பெற்ற பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவராவார்.</p><p>இந்தப் பகுதிகளில் இவரும் 'ஹந்தா' என்பவருமே செயற்பட்டு வந்தனர்.
</p><p>எவ்வாறாயினும் இன்று (22.08.2026) அல்லது 24 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 'பஸ் லலித்' இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளார். </p><p>பிரதான பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த பல முக்கிய நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் சிலரே எஞ்சியுள்ளனர். </p><p>
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உள்ளிட்ட ஏனைய பிரிவினர் வெளிநாடுகளில் உள்ள பாதாள உலகக் குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக மிகவும் சுறுசுறுப்பாகவும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வருகின்றனர் என்பதை நாம் அறிவோம். </p><p>அந்தச் செயற்பாடுகள் உரிய உத்திகளின் படியே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே, இந்த விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புகிறோம். </p><p>அவ்வாறு முடிவுக்கு வந்தால், பலரது உயிர்களைக் காப்பாற்ற முடியும். எனவே, முன்னெடுத்துச் செல்லப்படும் நடவடிக்கைகளில் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T00:32:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் திடீர் தீ பரவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fire-breaks-out-in-achchuveli-jaffna-1787356826"></link>
            <id>https://ibctamil.com/article/fire-breaks-out-in-achchuveli-jaffna-1787356826</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் திடீர் தீ பரவல்
ஏற்பட்டுள்ளது.குறித்த விபத்து சம்பவம் நேற்று (21-08-2026) இடம்பெற்றுள்ளது.தரிசு நிலமாக கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் திடீர் தீ பரவல்
ஏற்பட்டுள்ளது.</p><p>குறித்த விபத்து சம்பவம் நேற்று (21-08-2026) இடம்பெற்றுள்ளது.</p><p>தரிசு நிலமாக காணப்படும் பல ஏக்கர் புற்களைக் கொண்ட சமவெளியில் ஏற்பட்ட தீயில்
பல ஏக்கர் நிலத்தில் தீ பரவியது.</p><p></p><h2>தீயணைப்பு படையினர்</h2><p>

அருகில் உள்ள வீடுகள் மற்றும் வயல் நிலங்கள் பகுதிளவில் பாதிப்படைந்தன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adb1d32a-4358-48e3-a2c0-a78f5ace0871/26-6a88e69f2eba5.webp' /></p><p>இதையடுத்து யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்பு படையினரின் பல மணி நேர போராட்டத்தின்
பின்னர் தீயினைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T00:22:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலின் அந்த முடிவு... கடுமையாக விமர்சித்த பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/criticise-israel-over-gaza-aid-1787357869"></link>
            <id>https://news.lankasri.com/article/criticise-israel-over-gaza-aid-1787357869</id>
            <summary type="text">The decision of the Israeli military authorities: குற்றவியல் விசாரணைக்கு மறுப்பு தெரிவித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளின் முடிவுக்கு கடும் விமர்சனம்.
க...</summary>
            <content type="html"><![CDATA[<p>The decision of the Israeli military authorities: குற்றவியல் விசாரணைக்கு மறுப்பு தெரிவித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளின் முடிவுக்கு கடும் விமர்சனம்.
</p><p>காஸாவில் தொண்டு நிறுவன வாகனங்களின் அணிவகுப்பு மீது ஏப்ரல் 2024-இல் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் குறித்துக் குற்றவியல் விசாரணை எதையும் நடத்த வேண்டாம் என்று இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள் எடுத்துள்ள முடிவை பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் வெட்கங்கெட்ட செயல் என்று விமர்சித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd01fb96-07fa-4865-bfda-353295323db4/26-6a88eab0a6cb4.webp' /></p><p> </p><p>இஸ்ரேலின் அந்தத் தாக்குதல், அமெரிக்காவைச் சேர்ந்த 'வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்' (WCK) அமைப்பைச் சேர்ந்த ஏழு மனிதாபிமானப் பணியாளர்களைக் கொன்றன. </p><p>உலகளாவிய அளவில் கடும் கண்டனத்தை ஏற்படுத்திய அந்தத் தாக்குதலில், மூன்று நாடுகளைச் சேர்ந்த WCK ஊழியர்களும் கொல்லப்பட்டனர். </p><p>காஸாவில் இஸ்ரேல் முன்னெடுத்த பொறுப்புக்கூறல் இல்லாத எண்ணற்ற சம்பவங்களில் 'வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்' (World Central Kitchen) மீதான தாக்குதலும் ஒன்று என்று அந்த மூன்று நாடுகளின் கூட்டறிக்கை பதிவு செய்துள்ளது. </p><p>மேலும், கொல்லப்பட்டவர்கள் சார்பாக இஸ்ரேலிடம் இருந்து தொடர்ந்து பதில்களைத் தேடுவோம் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
காஸாவில், மிக ஆபத்தான சூழலில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து, கடும் அவசியத்தில் உள்ள பொதுமக்களுக்கு உதவ மனிதாபிமானப் பணியாளர்கள் அயராது தொடர்ந்து பணியாற்றுகின்றனர்.</p><p></p><p> </p><p>இருப்பினும், நிலையற்ற போர்நிறுத்தம் நிலவினாலும், 2025-ஆம் ஆண்டில் 186 மனிதாபிமானப் பணியாளர்கள் கொல்லப்பட்ட நிலையில், உதவிப் பொருட்களை விநியோகிப்பதற்கு காஸா தொடர்ந்து மிகவும் ஆபத்தான இடமாகவே உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். </p><p>இதனிடையே, போலந்து அரசாங்கம் மிகுந்த ஏமாற்றம் அடைந்ததாகக் கூறியதுடன், இந்தச் சம்பவம் குறித்த போலந்து விசாரணைகளுக்கு இஸ்ரேலிய அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வியாழக்கிழமையன்று அழைப்பு விடுத்தது. </p><p>லண்டனில் வெளிவிவகார அலுவலகம் தெரிவிக்கையில், தாக்குதலில் கொல்லப்பட்ட மூன்று பிரித்தானியக் குடிமக்களான ஜான் சாப்மேன், ஜேம்ஸ் ஹென்டர்சன் மற்றும் ஜேம்ஸ் கிர்பி ஆகியோரின் குடும்பங்களுக்காக பிரித்தானியா பேரதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளதாகத் தெரிவித்தது. </p><p>போர்க்காலம் முழுவதும் காஸாவில் உணவு விநியோகித்து வந்த WCK அமைப்பு, அந்தப் பயங்கரமான தாக்குதலுக்குப் பிறகு தங்கள் வாகனங்களின் நடமாட்டம் குறித்து இராணுவத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டதாகவே கூறியது. </p><p>மட்டுமின்றி, தங்களின் வாகனங்களில்,
வானிலிருந்து பார்க்கும்போது தெரியும் வகையில் குழுவின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது என்றும் தெரிவித்துள்ளது. </p><p>ஆனால், வாகனங்களில் இருந்த பல நபர்களை ஆயுதம் ஏந்திய ஹமாஸ் படையினர் எனத் தவறாகக் கருதியதாகவும், WCK வாகன அணிவகுப்பு முன்னதாக ஒருங்கிணைக்கப்பட்ட பாதையிலிருந்து விலகிச் சென்றதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) புதன்கிழமை தெரிவித்தது. </p><p>மேலும், தளபதிகளின் முடிவுகள் குற்றவியல் ரீதியான முறைகேடு குறித்த நியாயமான சந்தேகத்தை எழுப்பவில்லை என்று IDF முடிவு செய்தது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-22T00:15:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தைக்கே பல இலட்சம் ரூபா வாடகை செலுத்திய ஷிரான் பாசிக்! முன்னாள் பிரதியமைச்சர் ஒருவரின் புகைப்படமும் கண்டுபிடிப்பு...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-orders-full-financial-review-of-shiran-basik-1787316585"></link>
            <id>https://tamilwin.com/article/court-orders-full-financial-review-of-shiran-basik-1787316585</id>
            <summary type="text">&amp;nbsp;ஷிரான் பாசிக்கின் சோல்பீச் ஹோட்டலில் அமைக்கப்பட்ட ஓமான் ஹோல்டிங்ஸ் கூட்டு நிறுவனத்தின் கட்டடத்திற்காக தனது தந்தைக்கு மாதந்தோறும் 8 முதல் 8.5 இலட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஷிரான் பாசிக்கின் சோல்பீச் ஹோட்டலில் அமைக்கப்பட்ட ஓமான் ஹோல்டிங்ஸ் கூட்டு நிறுவனத்தின் கட்டடத்திற்காக தனது தந்தைக்கு மாதந்தோறும் 8 முதல் 8.5 இலட்சம் ரூபாய் வாடகை செலுத்தியுள்ளார். </p><p>தனது சொந்தத் தந்தைக்கு எவ்வாறு ஒரு நபர் வாடகை செலுத்த முடியும்? என்ற பிரச்சினை எழுந்துள்ளது. இது பணச்சலவை நடவடிக்கையாகவே இடம்பெற்றுள்ளது என புலனாய்வு அதிகாரிகள் தெரிவிப்பதுடன் அது தொடர்பிலும் தீவிர விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><h2>
</h2><p></p><h2>'சோல் பீச்' ஹோட்டல் கட்டட காணி</h2><p>
'சோல் பீச்' ஹோட்டல் தொடர்பான சாட்சியங்களை வழங்கிய போது இதை உடைத்து அகற்றியது தொடர்பாக கடந்த காலத்தில் பெரும் பேச்சுகள் எழுந்தன. அந்தப் பேச்சுகளுக்கு அப்பால் இதன் உரிமையாளர் யார் என்பது குறித்து ஷிரான் பாசிக் தனக்கு முன்னுரிமை கொடுத்துக் கூறியுள்ளார்.
</p><p>ஹோட்டல் அமைந்துள்ள காணி தனது தந்தையிடமிருந்தே கிடைத்தது என்றும் தந்தைக்கு ஆனந்த என்பவரால் நன்கொடை உறுதிப்பத்திரம் மூலம் அது வழங்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். </p><p>அவ்வாறு கிடைத்த காணியிலேயே இந்த உணவகம் அமைக்கப்பட்டு ஒரு திட்டமாக செயற்படுத்தப்பட்டதாக அவர் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளில் வெளிவந்த பிரதான விடயம் என்னவெனில்இ இந்த நன்கொடை உறுதிப்பத்திரம் என்பது முற்றிலும் பொய்யான ஒன்றாகும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14ae6d57-b84e-4ac9-bf65-f5c9425c9a5c/26-6a88496bdcbdf.webp' /></p><p>இது ஒரு போலி உறுதிப்பத்திரம் என தெரிவிக்கின்றன. மேலும்இ இந்தக் காணியின் உரிமை எந்தவொரு தனிநபருக்கும் உரியது அல்ல என்றும் இது பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்ட அரச காணியாகும.</p><p>
'சோல் பீச்' ஹோட்டல் அமைந்துள்ள அதே வளாகத்திலேயே இந்த ஓமhன் ஓல்டிங்ஸ் நிறுவனத்திற்குரிய கட்டடமும் அமைக்கப்பட்டுள்ளது. 
அரசுக்குச் சொந்தமான காணியை பலவந்தமாக ஆக்கிரமித்து இவ்வாறான கட்டடம் உயர்த்தப்பட்டுள்ளதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>இது தொடர்பாக போலி நன்கொடை உறுதிப்பத்திரத்தைத் தயாரித்தமைக்காக ஷிரானின் தந்தை மற்றும் இதற்கு உதவிய சட்டத்தரணி ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடர புலனாய்வு அதிகாரிகள் அவதானம் செலுத்தியுள்ளனர்.
</p><h2>
பெறப்பட்ட சட்டவிரோத ஆவணங்கள்</h2><p>அத்துடன் இதில் பல்வேறு நபர்கள் தொடர்புபட்டுள்ளதுடன் அவர்களின் தகவல்களும் வெளிவந்துள்ளன. மேலும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் அல்லது நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் இதற்காக எவ்வித முறையான அனுமதியும் பெறப்படவில்லை.
</p><p>குறிப்பாக இந்த ஹோட்டல் தொடருந்து பாதைக்கு அருகிலேயே அமைந்துள்ளது. அப்படியிருக்க பிரதான வீதியிலிருந்து தொடருந்து பாதையைக் கடந்து உணவகத்திற்குச் செல்வதற்காக இவர்கள் தொடருந்து திணைக்களத்திற்கு கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும். </p><p>இது பிரித்தானியர் ஆட்சிக்காலத்திலிருந்து உள்ள ஒரு சட்டமாகும் என புலனாய்வு அதிகாரிகள் கூறுகின்றனர். அந்தச் சட்டத்தின்படி அதனை ஒரு அனுமதியாகக் கொண்டு உணவகத்திற்கு மின்சாரம் மற்றும் நீர் வசதிகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
</p><p>ஆனால் இவை அனைத்துமே போலி மற்றும் சட்டவிரோதமானவை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி இந்த உணவகத்திற்காகப் பெறப்பட்ட மதுபான உரிமங்கள் கூட முற்றிலும் சட்டவிரோதமானவை எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன. </p><p>
ஷிரான் பாசிக்கிற்குச் சொந்தமான இந்த உணவகத்திற்கு வந்து சென்ற ஒரு முன்னாள் பிரதி அமைச்சர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் நகர அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சராகப் பணியாற்றிய காலத்திலேயே இந்த உணவக வளாகத்திற்கு வந்து சென்றுள்ளார். </p><p>அவர் அங்கு வந்து சென்றமைக்கான புகைப்படங்கள் உணவகத்தில் இருந்து புலனாய்வு அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T00:00:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆலய திருவிழாவில் பாதிக்கப்பட்ட 200 இற்கும் மேற்பட்டோர்...! யாழ் போதனாவில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-remanded-over-jaffna-temple-lighting-incident-1787355894"></link>
            <id>https://ibctamil.com/article/man-remanded-over-jaffna-temple-lighting-incident-1787355894</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் பிரான்பற்று முருகன் ஆலய திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட அதிகளவான
ஒளிப்பாவனையால் 200 இற்கும் மேற்பட்டோர் கண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் பிரான்பற்று முருகன் ஆலய திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட அதிகளவான
ஒளிப்பாவனையால் 200 இற்கும் மேற்பட்டோர் கண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குறித்த அணைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
இந்நிலையில் குறித்த ஒளிக்கு காரணமான மின்குமிழ்களை தம்வசம் வைத்திருந்தவர்
இளவாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.</p><p>
</p><p></p><h2>நீதவான் உத்தரவு</h2><p>இவ்வாறு கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் (21-08-2026) மல்லாகம்
நீதமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1ca252c-0fca-4758-9b90-b808f598e49a/26-6a88e2f85fbaf.webp' /></p><p>இதையடுத்து, அவரை எதிர்வரும் மூன்றாம்
திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T23:51:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை உயர்வால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/low-income-families-affected-by-fuel-price-hike-1787353712"></link>
            <id>https://jvpnews.com/article/low-income-families-affected-by-fuel-price-hike-1787353712</id>
            <summary type="text">எரிபொருள் விலை மாற்றங்கள் மற்றும் அதன் தாக்கங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>எரிபொருள் விலை மாற்றங்கள் மற்றும் அதன் தாக்கங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய பதிலளித்துள்ளார்.
</p><p>
எரிபொருள் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொள்வதாகவும், இதற்கு நீண்டகாலத் தீர்வொன்றை அரசாங்கம் முன்னெடுக்குமா என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa2374b7-f1de-4e44-9b26-4707d3128b6c/26-6a88da719a6d7.webp' /></p><p>இதற்கு பதிலளித்த பிரதமர், குறைந்த வருமானம் கொண்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இந்த ஆண்டும் அரசாங்கத்தினால் நிவாரணத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
அதன் கீழ், தேவைக்கேற்ப குறிப்பிட்ட சில துறைகளுக்கு எரிபொருள் நிவாரணம் மற்றும் மின்சாரக் கட்டணச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலும், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், அத்தியாவசியப் பொருட்களின் தடையற்ற விநியோகத்தைப் பேணுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தைப் பாதிக்கும் சூழ்நிலைகளை சமாளிப்பதற்காக சில நடைமுறைகள் மற்றும் சலுகைக் காலங்கள் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T23:50:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப் வர்த்தகக் கொள்கைக்கு எதிர்ப்பு ; கார்னியை கடுமையாக சாடிய வேன்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/vance-slams-carney-over-trump-trade-policy-1787356208"></link>
            <id>https://canadamirror.com/article/vance-slams-carney-over-trump-trade-policy-1787356208</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வரும் கனடிய பிரதமர் மார்க் கார்னியை, அமெரிக்க ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வரும் கனடிய பிரதமர் மார்க் கார்னியை, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
நியூயோர்க்கில் நடைபெற்ற நிதி திரட்டும் நிகழ்வொன்றில் வேன்ஸ் இந்தக் கருத்துகளை வெளியிட்டதாகவும், அந்த நிகழ்வில் அவர் தெரிவித்த கருத்துகள் பின்னர் வெளியாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/641dc155-6aa3-4ae9-a2ba-aaf964357f85/26-6a88e43291a30.webp' /></p><p>
</p><p>
கார்னி, ட்ரம்பை விட வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் தான் மிகவும் கடுமையாக நடந்துகொள்ளப் போவதாகக் காட்டிக்கொள்வதாக வேன்ஸ் விமர்சித்துள்ளார்.
</p><p>
எனினும், பல்வேறு முக்கியமான விடயங்களில் இறுதியில் கார்னி விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்வதாகவும், அதனை கனடாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக அவர் சித்தரிப்பது வேடிக்கையாக இருப்பதாகவும் வேன்ஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>
அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், இரு நாடுகளும் புதிய வர்த்தக உடன்பாட்டை எட்டுவதற்கான இறுதிக்கட்ட முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. </p><p>குறிப்பாக கனடியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதிக்கத் திட்டமிட்டுள்ள 50 சதவீத வரி தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.
</p><p>
அமெரிக்காவின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக கனடாவில் அமெரிக்க மதுபானங்களுக்கான சந்தை அணுகல் தொடர்பான கட்டுப்பாடுகளை நீக்குவதும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/784d7326-bad9-4c6e-a0b2-74af8199205f/26-6a88e433426a9.webp' /></p><p>இதனையடுத்து, அமெரிக்க மதுபானங்களுக்கான மாகாண ரீதியிலான கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு கனடிய மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.</p><p>

இதனிடையே, கனடாவின் வர்த்தக பேச்சுவார்த்தைக் குழுவும் அமெரிக்க அதிகாரிகளும் வாஷிங்டனில் தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றனர். புதிய அமெரிக்க வரிகள் அமுலுக்கு வருவதற்கு முன்னர் உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.</p><p>

கனடா மேலும் பல விடயங்களில் அமெரிக்காவிடம் விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்ளக் கூடாது என அந்நாட்டில் ஒரு பகுதியினர் வலியுறுத்தி வருகின்ற நிலையில், கார்னி அரசாங்கத்திற்கு உள்நாட்டிலும் அரசியல் அழுத்தம் அதிகரித்துள்ளது.</p><p>

இந்நிலையில், ஜே.டி. வேன்ஸின் விமர்சனம் அமெரிக்கா–கனடா வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் நிலவும் பதற்றத்தை மேலும் வெளிப்படுத்துவதாக சர்வதேச அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-21T23:50:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பண்டத்தரிப்பு சம்பவம் ; கண் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 385 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-number-people-affecte-eye-disease-rises-385-1787339134"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-number-people-affecte-eye-disease-rises-385-1787339134</id>
            <summary type="text">பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புச் சம்பவத்தையடுத்து, இதுவரை 385 பேர் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வை...</summary>
            <content type="html"><![CDATA[<p>பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புச் சம்பவத்தையடுத்து, இதுவரை 385 பேர் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.</p><p> 

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயம் ஒன்றில் நேற்று (20) நடைபெற்ற திருவிழாவின் போது அதிகளவில் வானவேடிக்கைகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் காரணமாக பலரின் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00d9dc20-3d30-42fa-8648-fc61ec3e086d/26-6a88a17fd9446.webp' /></p><p> 

அவர்களில் அதிகளவான சிறுவர்களும் பெண்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

ஆலய உற்சவத்தின் போது அதிகளவில் வானவேடிக்கைகள் வெடிக்கப்பட்டதுடன், இசை நிகழ்வின்போதும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது. </p><p>

இதன் காரணமாக பலருக்கு கண்களில் எரிச்சல், பார்வைக் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>

இந்நிலையில் ஆலய வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிக வலு கொண்ட சீனத் தயாரிப்பு மின் விளக்குகள் சிலவற்றை பொலிஸார் கையகப்படுத்தி எடுத்துச் சென்றுள்ளனர்.</p><p> 

கையகப்படுத்தப்பட்ட இந்த மின் விளக்குகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், அவற்றின் மின்சக்தி அளவு, பயன்பாட்டுத் தன்மை மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அவை அனுமதிக்கப்பட்டவையா? அல்லது தடை செய்யப்பட்டவையா என்பது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டு வருகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T23:38:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல சிங்கள பாடகியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி அநுர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/president-pays-last-respects-famous-sinhala-singer-1787339730"></link>
            <id>https://jvpnews.com/article/president-pays-last-respects-famous-sinhala-singer-1787339730</id>
            <summary type="text">காலமான பிரபல சிங்கள பாடகி நந்தா மாலினியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சற்றுமுன்னர் வருகை தந்துள்ளார். 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலமான பிரபல சிங்கள பாடகி நந்தா மாலினியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சற்றுமுன்னர் வருகை தந்துள்ளார்.</p><p> 

நாவலயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருமளவிலான மக்கள் தொடர்ந்தும் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். </p><p>

நந்தா மாலினியின் பூதவுடலின் இறுதிக் கிரியைகள் நாளை (22) பொரளை பொது மயானத்தில் பி.ப 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc69c7ec-317d-4dd1-8e80-98915dc2f175/26-6a88a3d39cb66.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T23:38:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மியான்மரில் மீது போர் விமானம் குண்டுகள் வீச்சு ; 3 பெண்கள் உள்பட 14 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/warplanes-bomb-buddhist-monaste-myanmar-killing-14-1787355426"></link>
            <id>https://canadamirror.com/article/warplanes-bomb-buddhist-monaste-myanmar-killing-14-1787355426</id>
            <summary type="text">மியான்மரில் பவுத்த மடாலயத்தில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.மியான்மரில் 2வது பெரிய நகரமான மாண்டலே நகரில் இருந்து மேற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>மியான்மரில் பவுத்த மடாலயத்தில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.</p><p>மியான்மரில் 2வது பெரிய நகரமான மாண்டலே நகரில் இருந்து மேற்கே 75 கிலோமீட்டர் தொலைவில் ஸ்வெல்லேஓ என்ற கிராமம் உள்ளது.</p><p>இங்கு பவுத்த மடாலயம் ஒன்று உள்ளது.


அதில் ஒரு வார கால தியான பயிற்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1fc1153-f913-4d62-90ed-45871a2f187b/26-6a88e123ba1f7.webp' /></p><p>அதன் படி, அங்கு பலரும் தியான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மியான்மர் ராணுவத்தின் போர் விமானங்கள் வான்வழியாக தாக்குதல் நடத்தியது. </p><p>இதில் 3 பெண்கள் உள்பட14 பேர் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.


தாக்குதல் குறித்து ஊர்மக்கள் கூறுகையில்,' ஜெட் விமானம்15 நிமிட இடைவெளியில் இரண்டு குண்டுகளை வீசியது. </p><p>பவுத்த நோன்பு காலம் என்பதால் மடாலயத்தில் 100க்கும் மேற்பட்டோர் தியான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த மடாலயம் அருகில் உள்ள ஒரு வீட்டை இரண்டாவது குண்டு சேதப்படுத்தியது' என்றனர்.
</p><p>

மியான்மரில் ராணுவம், ஜனநாயக ஆதரவு படைகள் மற்றும் இன ஆயுதக்குழுக்கள் இடையே தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. </p><p>இதுபோன்ற தாக்குதலில் பொதுமக்களும் உயிரிழக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-21T23:37:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலி வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்: ஈ.பி.டி.பி பிரதேச சபை உறுப்பினரிடம் வாக்குமூலம் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/val-north-uc-demands-removal-of-illegal-waste-1787355165"></link>
            <id>https://ibctamil.com/article/val-north-uc-demands-removal-of-illegal-waste-1787355165</id>
            <summary type="text">​பலாலி காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பில், ஈ.பி.டி.பி
கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்திடம் பலாலி காவல்துறையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>​பலாலி காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பில், ஈ.பி.டி.பி
கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்திடம் பலாலி காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

​</p><p>வலி வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காணிகளை விடுவிக்குமாறு
கோரி, பலாலி மற்றும் மயிலிட்டி பகுதி மக்களால் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p>குறித்த போராட்டங்களுக்கு ஈ.பி.டி.பி கட்சியினர் தொடர்ந்தும்
ஆதரவு வழங்கி வருகின்றனர்.

​</p><p></p><h2>பொதுமக்களுக்கு இடையூறு&nbsp;</h2><p>இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (16-08-2026) பலாலியில் இடம்பெற்ற
போராட்டத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட்டதாகக்
குற்றஞ்சாட்டப்பட்டு அனுஷியா ஜெயகாந்த் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக பலாலி காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

​</p><p>இதன் தொடர்ச்சியாக பலாலி காவல் நிலையத்திற்கு நேற்று (21-08-2026) அழைக்கபட்ட
அனுஷியா ஜெயகாந்திடம் காவல்துறையினர் முறையான வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டனர்.

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fea87dec-4a94-473d-894a-ff89ac26842b/26-6a88e0224f986.webp' /></p><p>இந்த விசாரணையின் போது, சட்டத்தரணி ஸ்ரனிஸ்லஸ் செலஸ்ரின் ஈ.பி.டி.பி
கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் வலி
வடக்கு நிர்வாக செயலாளர் இ. ஜெயபாலசிங்கம் (அன்பு) ஆகியோரும் அவருடன்
சென்றிருந்தனர்.</p><p>

​இதேநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் காவல் நிலையத்திலிருந்து
வெளியேறிய ஈ.பி.டி.பி உறுப்பினர்கள், உடனடியாகவே மயிலிட்டியில் இடம்பெற்ற
மக்கள் போராட்டத்திலும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T23:33:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பளையில் தமிழீழ விடுதலைப்புலிகள் பயிற்சி முகாம் வதந்தியை பரப்பிய நபர் மகிந்த வீட்டின் செல்லப் பிள்ளையா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rumor-of-an-ltte-training-camp-in-palai-1787348906"></link>
            <id>https://tamilwin.com/article/rumor-of-an-ltte-training-camp-in-palai-1787348906</id>
            <summary type="text">வடக்கு, கிழக்கிலே தமிழீழ விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கம் என்பது மிக மிக அவசியமான ஒன்றாக இருக்கின்றது. இந்தநிலையிலே, பளையில் மீண்டும் தமிழீழ விடுலைப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு, கிழக்கிலே தமிழீழ விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கம் என்பது மிக மிக அவசியமான ஒன்றாக இருக்கின்றது. இந்தநிலையிலே, பளையில் மீண்டும் தமிழீழ விடுலைப் புலிகள் பயிற்சி முகாம் இயங்கி வருவதாகவும் ,ஆறுமாடி கட்டடம் இருப்பதாகவும் பரவலாகப் பேசப்பட்டது.</p><p>ஒருவேளை, விடுதலைப்பிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் அவ்வாறான கட்டடங்கள் இருக்கின்றதோ தெரியாது என்று கூறப்பட்டது.</p><p>இந்த தகவலை வெளியிட்டவர் தென்னிலங்கையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப்பணிப்பாளர் சங்கீத் ஜயசேகர என்பவராவர்.</p><p>தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் இனவாதிகள் அத்தியாவசியத் தேவையாக இருப்பது உடனடியாக வடக்கு, கிழக்கில் ஏதாவது ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதாகும்.</p><p>மேலும், பளைப்பகுதியிலே தமிழீழ விடுதலைப்புலிகளின் முகாமாக மாற்றப்போகின்றார்களா, அல்லது, வெடிகுண்டுகள் தயாரிக்கப்போகின்றார்களா என அங்கிருக்கும் அதிகாரிகள் தமக்கு தெரிவிப்பதாக சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப்பணிப்பாளர் குறிப்பிட்டிருந்தார்.</p><p>இந்த வதந்தியை பரப்பிய பின்னணியில் இருப்பது யார், அவர் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் வீட்டோடு தொடர்புடையவரா என்பது தொடர்பான விரிவான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் விரிவாகப் பார்க்கலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mhuzVa404WY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T23:30:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமர் இன்று யாழ். விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prime-minister-to-visit-jaffna-today-1787344290"></link>
            <id>https://tamilwin.com/article/prime-minister-to-visit-jaffna-today-1787344290</id>
            <summary type="text">பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம்
செய்யவுள்ளார்.

பல்கலைக்கழகத்தின் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம்
செய்யவுள்ளார்.
</p><p>
பல்கலைக்கழகத்தின் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும்
நிகழ்வு உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கிலேயே அவர்
யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகின்றார்.
</p><p>
இந்த நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளன.
</p><p>
அதேவேளை, யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மஹோற்சவம்
இடம்பெற்று வரும் நிலையில், பிரதமர் ஆலயத்துக்கு வருகை தந்து வழிபாடு செய்வார்
எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7d4c988-f847-485f-b05b-3f14336b2850/26-6a88def5cf669.webp' /></p>]]></content>
            <updated>2026-08-21T23:27:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனப்படுகொலை ; நெதன்யாகு உள்ளிட்டோருக்கு எதிராக துருக்கி பிடியாணை நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/turkey-issues-arrest-warrant-against-netanyahu-1787354560"></link>
            <id>https://canadamirror.com/article/turkey-issues-arrest-warrant-against-netanyahu-1787354560</id>
            <summary type="text">இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச கைது நடவடிக்கையை முன்னெடுக்கும் வகையில், இன்டர்போல் ரெட் நோட்டீஸ் கோரும் நடவடிக்கையை துருக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச கைது நடவடிக்கையை முன்னெடுக்கும் வகையில், இன்டர்போல் ரெட் நோட்டீஸ் கோரும் நடவடிக்கையை துருக்கி ஆரம்பித்துள்ளது.
</p><p>
காஸா நோக்கிப் பயணித்த மனிதாபிமான உதவி கப்பல் தொடரணி மீது இஸ்ரேல் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பான வழக்கின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.</p><p>

துருக்கி நீதித்துறை அமைச்சர் அகின் குர்லெக் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நெதன்யாகு மற்றும் இஸ்ரேலிய அதிகாரி அஃபெக் மோஸ்கோவிச் ஆகியோருக்கு எதிராக கைது உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc60e97a-b3df-459f-854a-9b5d82371bcd/26-6a88ddc39d4a8.webp' /></p><p> </p><p>இதனைத் தொடர்ந்து, இருவரையும் சர்வதேச ரீதியில் தேடும் வகையில் இன்டர்போல் ரெட் நோட்டீஸ் கோரப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு, காஸாவுக்கு மனிதாபிமான உதவிகளை எடுத்துச் சென்ற Global Sumud Flotilla எனப்படும் கப்பல் தொடரணி சர்வதேச கடற்பரப்பில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த வழக்கில் மொத்தம் 35 பேர் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் துருக்கி தெரிவித்துள்ளது.</p><p> நெதன்யாகு மற்றும் மோஸ்கோவிச் மீது இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், சித்திரவதை மற்றும் சட்டவிரோதமாக சுதந்திரத்தைப் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
காஸாவுக்கு மனிதாபிமான உதவிகளை கொண்டு செல்வதற்காக புறப்பட்ட கப்பல் தொடரணியை இஸ்ரேல் படைகள் தடுத்து நிறுத்திய சம்பவம் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான செயற்பாட்டாளர்கள் தடுத்து வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.</p><p>

இந்த விவகாரம் தொடர்பில் பிரான்ஸ், இத்தாலி மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இதேவேளை, துருக்கியின் இந்த நடவடிக்கையை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் கடுமையாக விமர்சித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40965143-ee77-41e5-96c4-01ac51663d11/26-6a88ddc2e5436.webp' /></p><p>துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனை விமர்சித்துள்ள நெதன்யாகுவின் அலுவலகம், இந்த நடவடிக்கை இஸ்ரேலிய தலைமையை அச்சுறுத்தும் முயற்சி எனக் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
இன்டர்போல் ரெட் நோட்டீஸ் என்பது ஒருவரை உலகளாவிய ரீதியில் கைது செய்வதற்கான தன்னிச்சையான சர்வதேச பிடியாணை அல்ல. </p><p>மாறாக, குறித்த நபரை கண்டறிந்து, தற்காலிகமாக கைது செய்யுமாறு உறுப்பு நாடுகளின் சட்ட அமுலாக்க அதிகாரிகளிடம் கோரும் அறிவிப்பாகும். ரெட் நோட்டீஸ் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதா என்பது தொடர்பில் இன்டர்போல் தனித்தனியாக பரிசீலனை செய்யும்.
</p><p>
காஸா போர் தொடர்பில் இஸ்ரேலுக்கு எதிராக துருக்கி தொடர்ந்து கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வரும் நிலையில், நெதன்யாகுவுக்கு எதிரான இந்த புதிய சட்ட நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-21T23:23:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீர்கள்! அரிசி இறக்குமதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/do-not-hit-farmers-where-it-hurts-rice-sajith-1787351795"></link>
            <id>https://tamilwin.com/article/do-not-hit-farmers-where-it-hurts-rice-sajith-1787351795</id>
            <summary type="text">விவசாயிகளை ராஜாவாக்குவோம் எனக் கூறிவிட்டு, வெளிநாட்டிலிருந்து அரிசியை
இறக்குமதி செய்வது சரியா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
நாடாளுமன்றத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>விவசாயிகளை ராஜாவாக்குவோம் எனக் கூறிவிட்டு, வெளிநாட்டிலிருந்து அரிசியை
இறக்குமதி செய்வது சரியா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.</p><p>

2026ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசுக்குத் தேவையான
7 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காகச்
சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீடு தொடர்பான விவாதத்தில் நேற்று(21) பங்கேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.</p><p>

76 ஆண்டு கால விவசாயிகளின் சோகத்தைச் சுபீட்சமான நிலைக்கு மாற்றித் தருவோம்
எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று விவசாயிகளின் வாழ்க்கை மற்றும்
ஜீவனோபாயத்தைப் பொருளாதாரப் படுகொலையாக மாற்றியுள்ளனர் என்று அவர் குற்றம்
சாட்டினார்.</p><h2>அரிசி இறக்குமதி</h2><p>
</p><p>
அரசின் அமைச்சர்களால் முன்வைக்கப்பட்ட தரவுகளின்படி, சிவப்பு நாடு மற்றும்
வெள்ளை நாடு போன்றவற்றுக்கான உற்பத்திச் செலவைக் கணக்கிடும் போது,
விவசாயிகளுக்குக் கிடைக்கும் குறைந்த இலாபத்தைக் கொண்டு எவ்வாறு வாழ முடியும்
என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07371cad-ebd8-4e07-8358-73611577f5f6/26-6a88d9281333f.webp' /></p><p>

கீரி சம்பா உள்ளிட்ட அரிசி வகைகளுக்கு உரிய கட்டுப்பாட்டு விலைகள்
பிறப்பிக்கப்படாததற்குக் காரணம், அத்துறையுடன் தனவந்தர்கள்
சம்பந்தப்பட்டிருப்பதே ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.</p><p>நாட்டின் உண்மையான அரிசித் தேவை 2.5 மில்லியன் மெற்றிக் தொன்னாக இருக்க, 3.2
மில்லியன் மெற்றிக் தொன் உற்பத்தி செய்யப்படுகின்றது.</p><p>5 இலட்சம்
மெற்றிக் தொன் மேலதிக கையிருப்பு உள்ள நிலையிலும் 3 இலட்சத்து 40 ஆயிரம்
மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை விவசாயிகளின் வயிற்றில்
அடிப்பது போன்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-21T23:15:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர் நெருக்கடி... அதிக விலைக்கு LNG-ஐ கொள்முதல் செய்யும் இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-buys-most-expensive-lng-1787353559"></link>
            <id>https://news.lankasri.com/article/india-buys-most-expensive-lng-1787353559</id>
            <summary type="text">India buys its most expensive LNG: இந்தியா பல ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிக விலைக்கு LNG-ஐ வாங்கியுள்ளது.
ஈரான் போர் காரணமாக எரிபொருள் விநியோகம் தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>India buys its most expensive LNG: இந்தியா பல ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிக விலைக்கு LNG-ஐ வாங்கியுள்ளது.
</p><p>ஈரான் போர் காரணமாக எரிபொருள் விநியோகம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால், இந்தியாவில் உள்ள எரிசக்தி நிறுவனங்கள் 'ஸ்பாட்' சந்தையில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (LNG) கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த விலையில் வாங்கி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0eaca66-46fa-49e7-9f29-821e784581c1/26-6a88d9d949064.webp' /></p><p>
</p><p>அரசுக்குச் சொந்தமான எரிவாயு நிறுவனமான கெயில் இந்தியா லிமிடெட், சமீபத்தில் செப்டம்பர் மாதம் விநியோகிக்கப்படவுள்ள ஒரு சரக்குக்காக, ஒரு மில்லியன் பிரிட்டிஷ் வெப்ப அலகுகளுக்கு 23 டொலருக்கும் அதிகமாக செலுத்தியுள்ளது. </p><p>செப்டம்பர் மாத விநியோகத்திற்கான சரக்குக்கு, இந்தியாவின் குஜராத் மாநில பெட்ரோலியக் கழகம் (GSPC) ஒரு mmbtu-க்கு 23 டொலருக்கும் சற்று அதிகமான விலையைச் செலுத்தியதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. </p><p>2022-ஆம் ஆண்டு முதல் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டவற்றிலேயே மிகவும் அதிக விலை கொண்ட எல்.என்.ஜி. (LNG) சரக்குகள் இவை என்றே கூறுகின்றனர்.</p><p></p><p> </p><p>இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தும் உர உற்பத்தியாளர்களுக்கு அரசு உதவ முற்படுவதால், இந்தியாவில் உள்ள அரசு ஆதரவு எரிசக்தி நிறுவனங்கள் திரவ இயற்கை எரிவாயு (LNG) உடனடி சந்தையை நாடி, விலைகளை உயர்த்தி ஏலம் கேட்கின்றன. </p><p>உலகின் இரண்டாவது மிகப்பெரிய LNG விநியோகஸ்தரான கத்தாரிடமிருந்து, நீண்ட கால ஒப்பந்தங்கள் மூலம் இந்தியா வழக்கமாக எல்என்ஜியை கொள்முதல் செய்து வருகிறது. </p><p>ஆனால், மார்ச் மாதத்தில் ஈரான் நடத்திய தாக்குதல்களால் கத்தாரின் பிரம்மாண்டமான ஏற்றுமதி முனையம் சேதமடைந்தது; மேலும், ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் செல்வது இப்போதும் பெருமளவுக்கு முடக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da06e09b-e6d8-4796-9737-b1c9ba012329/26-6a88d9d9ef747.webp' /></p><p> </p><p>ஐரோப்பாவில் எரிவாயு விலைகள் கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், அங்குள்ள LNG வாங்குபவர்களுடனும் இந்தியா போட்டியிட வேண்டியுள்ளது. </p><p>இதனிடையே, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனும், இந்த வாரம் ஸ்பாட் சந்தையில் இருந்து ஒரு LNG சரக்கை வாங்க ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் விலை தொடர்பான தகவல் ஏதும் வெளியாகவில்லை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T23:03:31+00:00</updated>
        </entry>
    </feed>
