<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-01T16:52:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் - அமெரிக்க போர்நிறுத்தம் பலவீனமானது - புடின்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/putin-says-iran-us-ceasefire-1788281467"></link>
            <id>https://tamilwin.com/article/putin-says-iran-us-ceasefire-1788281467</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் பலவீனமானது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் பலவீனமானது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.</p><p>
இந்த ஒப்பந்தத்தை ரஷ்யா வரவேற்ற போதிலும் அந்த போர்நிறுத்தம் நிலையற்றதாகவும் மிகவும் பலவீனமானதாகவும் காணப்படுவது நிரூபணமாகியுள்ளது என தெரிவித்துள்ளார். </p><p>
அதேவேளையில், ஈரானுக்கு ரஷ்யா தொடர்ந்து தனது ஆதரவை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2de2a520-c5a6-44d1-9d66-53d5849b3962/26-6a97027cdd08d.webp' /></p><p>
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் செவ்வாய்க்கிழமை உரையாற்றியபோதே புடின் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.</p><p>
இந்த மாநாட்டின் இடையே அவர் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.</p><p>
கடந்த ஜூன் மாத மத்தியில், பாகிஸ்தான் மற்றும் கடார் ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. </p><p>
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலிய போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு, 60 நாட்கள் காலக்கெடுவுடன் கூடிய போர்நிறுத்த நீடிப்பு அதில் வழங்கப்பட்டிருந்தது.</p><p> 
அந்த காலக்கெடு தற்போது முடிவடைந்துள்ள நிலையில், தற்போதைய போர்நிறுத்தச் சூழல் குறித்து ரஷ்ய அதிபர் தனது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T16:51:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடிய தயாரிப்புகளுக்கு நுகர்வோரிடையே அதிகரிக்கும் வரவேற்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/local-demand-surges-for-canadian-made-food-1788261071"></link>
            <id>https://canadamirror.com/article/local-demand-surges-for-canadian-made-food-1788261071</id>
            <summary type="text">அமெரிக்காவுடனான வர்த்தக மோதல் நீடித்து வரும் நிலையில், கனடாவில் உள்ளூர் உணவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளதாக உற்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடனான வர்த்தக மோதல் நீடித்து வரும் நிலையில், கனடாவில் உள்ளூர் உணவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளதாக உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.</p><p> 
மளிகைக் கடைகளில் பொருட்களின் விலை அதிகரித்துள்ளபோதிலும், கனடா முழுவதும் உள்ள நுகர்வோர்கள் தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கே முன்னுரிமை அளித்துத் தேடிச் சென்று வாங்கி வருகின்றனர்.</p><p> 
அமெரிக்காவின் வர்த்தக வரிகளால் தங்களது நிறுவனம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் ஒன்டாரியோவின் போமன்வில் பகுதியில் பாய்ச்ச்மென்ட் காகிதம் விநியோகிக்கும் 'ஏவென்கோ லிமிடெட்' நிறுவனத்தின் தலைவர் கேத்லீன் சேப்மேன் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b04795de-0631-4945-bd9c-888eac22e040/26-6a96b2d116f8a.webp' /></p><p> 
சுமார் 40 சதவீத வாடிக்கையாளர்களை அமெரிக்காவில் கொண்டுள்ள இந்நிறுவனம், பிரான்ஸிலிருந்து மூலப் பொருட்களை இறக்குமதி செய்வதால் ஆரம்பத்தில் ஐரோப்பிய பொருட்கள் மீதான அமெரிக்க வரிகளால் பாதிக்கப்பட்டது. </p><p>
தற்போது அப்பொருட்கள் கனடாவில் தயாரிக்கப்பட்டு மாற்றியமைக்கப்படுவதால், மேலும் 50 சதவீத கூடுதல் வரியை எதிர்கொண்டுள்ளது. </p><p>
எனினும், கனடிய மக்கள் நேரடியாகத் தங்கள் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு ஆதரவு தெரிவிப்பதுடன், ஆன்லைன் மூலமாக நேரடியாக ஆர்டர்களையும் வழங்கி வருகின்றனர்.</p><p>
இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் வெறும் 20 ஆக இருந்த நேரடி வாடிக்கையாளர் ஆர்டர்களின் எண்ணிக்கை, புதிய அமெரிக்க வரிகள் அமலுக்கு வந்த ஒரே வாரத்தில் நூற்றுக்கணக்கில் உயர்ந்துள்ளது. </p><p>
நுகர்வோர்கள் உள்நாட்டுப் பொருட்களை கொள்வனவு விரைவாக மாறிவரும் நிலையில், சில்லறை விற்பனைக் கடைகள் தங்களது விற்பனை அலமாரிகளில் கனடிய தயாரிப்புகளுக்குப் போதிய இட ஒதுக்கீட்டை வழங்குவதில் இன்னும் தாமதம் காட்டி வருவதாக சேப்மேன் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T16:47:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பேரிடரில் மாயமான புலம்பெயர் யாழ்ப்பாண குடும்பம்; தவிக்கும் உறவுகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/migrant-jaffna-family-missing-in-nepal-disaster-1788248831"></link>
            <id>https://jvpnews.com/article/migrant-jaffna-family-missing-in-nepal-disaster-1788248831</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாள-திபெத் எல்லைப் பகுதிகளைப் பேரழிவுக்குள்ளாக்கிய வெள்ளப்பெருக்கிற்குப் பின்னர், காணாமல் போன டஜன் கணக்கான அவுஸ்திரேலியர்களில் இலங்கை வம்சாவள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேபாள-திபெத் எல்லைப் பகுதிகளைப் பேரழிவுக்குள்ளாக்கிய வெள்ளப்பெருக்கிற்குப் பின்னர், காணாமல் போன டஜன் கணக்கான அவுஸ்திரேலியர்களில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தம்பதியரும், அவர்களது இரண்டு இளம் மகன்களும் அடங்குவதாக அவுஸ்திரேலிய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. </p><p>SouthAsians &amp; Diaspora

47 வயதான சந்திரசேகரன் முரளிதரன், அவரது மனைவி 42 வயதான ஷைலஜா முரளிதரன் மற்றும் அவர்களது மகன்களான அஸ்வின் (14), ஆருஷ் (11) ஆகியோர் ‘இமயமலை பனிப்பாறை சாகசப் பயணக் குழுவுடன் (Himalayan Glacier Adventures group) சென்றுகொண்டிருந்தபோது அவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/059ce3ae-bd99-4f58-9687-95a3d53691c5/26-6a968300dd4b8.webp' /></p><h2>ஆன்மீக சுற்றுலா சென்ற குடும்பம்...</h2><p>
</p><p>
அனர்த்தம் ஏற்பட்ட நாளன்று (புதன்கிழமை) காலை உணவு அருந்திய சிறிது நேரத்திலேயே அந்தக்குடும்பத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இக்குடும்பத்தினர் சிட்னியின் வடமேற்குப் பகுதியில் வசித்து வந்தனர்.</p><p></p><p>
</p><p>
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய ஊடகங்களின் தகவல்களின்படி, சந்திரசேகரன் பூர்வீகமாக யாழ்ப்பாணத்தின் கோப்பாயைச் சேர்ந்தவர்.

அவரும் அவரது மனைவியும் அவுஸ்திரேலியாவிற்கு இடம்பெயர்ந்த முதல் தலைமுறை இலங்கையர்கள் ஆவர். 

இவர்களது இரு மகன்களும் அவுஸ்திரேலியத் தமிழர் சமூகத்தில் பிறந்தவர்கள்.</p><p></p><p>

ஆகஸ்ட் 26 அன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, ​​அந்தக்குடும்பத்தினர் கைலாச மலைப் பகுதிக்குத் தீர்த்த யாத்திரை மேற்கொண்டிருந்தனர்.

பேரிடர் நிகழ்ந்த நாளன்று காலையில்தான் அக்குடும்பத்தினருடன் கடைசியாகத் தொடர்பு கொள்ள முடிந்ததாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். </p><p>

பாதிக்கப்பட்ட பகுதியின் பெரும் பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் சாலைகள், மின்சார விநியோகம் மற்றும் தகவல் தொடர்புகளை அழித்ததால், அந்த அழைப்பிற்குப் பிறகு அவர்களது குடும்பத்தினரால் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

முரளிதரன் குடும்பத்தினர், 15 அவுஸ்திரேலியர்கள் அடங்கிய ஒரு சுற்றுலாக் குழுவுடன் பயணம் செய்து கொண்டிருந்தனர்.</p><p></p><p> </p><p>
இந்தப் பேரழிவு ஏற்பட்டபோது, ​​அக்குழுவினர் நேபாள-சீன எல்லைக்கு அருகிலுள்ள ரசுவாகதிக்கு அருகே இருந்ததாக நம்பப்படுகிறது.

வெள்ளத்தைத் தொடர்ந்து 43 அவுஸ்திரேலியர்கள் இன்னும் காணாமல் போயுள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T16:46:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்டாரியோவில் 1 மில்லியன் டொலர் மதிப்புள்ள போதைப்பொருட்கள் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/more-than-1-million-in-drugs-stolen-property-1788280388"></link>
            <id>https://canadamirror.com/article/more-than-1-million-in-drugs-stolen-property-1788280388</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் தென்மேற்கு ஒன்டாரியோ பிராந்தியம் முழுவதும் நடத்தப்பட்ட விரிவான சோதனைகளில், 1 மில்லியன் டொலருக்கும் அதிக மதிப்புடைய சட்டவிரோத போதைப்பொரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் தென்மேற்கு ஒன்டாரியோ பிராந்தியம் முழுவதும் நடத்தப்பட்ட விரிவான சோதனைகளில், 1 மில்லியன் டொலருக்கும் அதிக மதிப்புடைய சட்டவிரோத போதைப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் திருடப்பட்ட சொத்துக்களை ஒன்டாரியோ மாகாணக் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. </p><p>
கடந்த ஜனவரி மாதம் மாகாணம் முழுவதும் நிலவிய போதைப்பொருள் கடத்தல் குறித்து காவல்துறை விசாரணையைத் தொடங்கியது.</p><p> 
பிராண்ட்போர்ட் மற்றும் பிராண்ட் கவுண்டி பகுதிகளில் ஒன்றும், லண்டன் மற்றும் ஒனைடா நேஷன் பகுதியில் இன்னொன்றுமாக இரண்டு தனித்துவமான குற்றவியல் வலையமைப்புகள் சுதந்திரமாக இயங்கி வந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb1ffd12-0eae-4c9c-81bf-4477658e2de0/26-6a96fe461a24d.webp' /></p><p> </p><p>
பிராம்ப்டன் மற்றும் பாரிஸ் (Paris) பகுதிகளில் உள்ள 4 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. 
லண்டன் மற்றும் ஒனைடா நேஷன் பகுதியில் உள்ள வீடுகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. </p><p>
6.5 கிலோ ஃபென்டனில், 420 கிராம் கோகோயின் மற்றும் 250 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் பெருந்தொகைப் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p>பறிமுதல் செய்யப்பட்ட ஃபென்டனில் போதைப்பொருள் மட்டும் தெருக்களில் சுமார் 65,000 பேரின் உயிரைப் பறிக்கக்கூடிய ஆபத்தான அளவைக் கொண்டது என காவல்துறை தெரிவித்துள்ளது. </p><p>
இச்சம்பவம் தொடர்பாக 7 நபர்கள் மீது மொத்தம் 64 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய இருவரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T16:36:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் மொத்த அரசாங்கக் கடன் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-s-total-government-debt-1788280563"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-s-total-government-debt-1788280563</id>
            <summary type="text">கடந்த ஜூன் 30 ஆம் திகதி நிலவரப்படி நாட்டின் மொத்த அரசாங்கக் கடன் 97.952 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது 32.977 டிரில்லியன் ரூபா என நிதி அமைச்சின் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கடந்த ஜூன் 30 ஆம் திகதி நிலவரப்படி நாட்டின் மொத்த அரசாங்கக் கடன் 97.952 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது 32.977 டிரில்லியன் ரூபா என நிதி அமைச்சின் பொது கடன் முகாமைத்துவ அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

பொது கடன் முகாமைத்துவ அலுவலகத்தினால் கடந்த ஓகஸ்ட் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த அறிக்கையானது, கடந்த ஜூன் 30 ஆம் திகதி நிலவரப்படி மத்திய அரசாங்கத்தின் கடன் மட்டும் 31.999 டிரில்லியன் ரூபா அல்லது 95.047 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனச் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/768f2b2c-da31-46f1-92a4-eb4f5d754b95/26-6a96fef51e4e9.webp' /></p><h2 style="text-align: justify; ">உள்நாட்டுக் கடன்</h2><p> </p><p style="text-align: justify; ">

இதற்கு மேலதிகமாக, மாகாண சபைகள் மற்றும் மாகாண நிறுவனங்களின் கடன் 20 மில்லியன் டொலர்கள் என்றும், அரசாங்கப் பிணையுடனான அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் கடன் 2.885 பில்லியன் டொலர்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

கடந்த ஜூன் மாத இறுதியில் மத்திய அரசாங்கத்தின் உள்நாட்டுக் கடன் 57.039 பில்லியன் டொலர்களாக அல்லது 19.203 டிரில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளதாகச் குறித்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. </p><p style="text-align: justify; ">

அதில் செலுத்தப்படாத திறைசேரிப் பிணைமுறிகளின் அளவு 47.732 பில்லியன் டொலர்கள் அல்லது 16,069 பில்லியன் ரூபா எனவும், செலுத்தப்படாத திறைசேரி உண்டியல்களின் அளவு 7.045 பில்லியன் டொலர்கள் அல்லது 2,372 பில்லியன் ரூபா எனவும் பதிவாகியுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">&nbsp;கடந்த ஜூன் மாத இறுதியில் மத்திய அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன் 38.008 பில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளது. </p><p style="text-align: justify; ">

2026 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டின் இறுதியில் 37.468 பில்லியன் டொலர்களாக இருந்த அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன், இரண்டாவது காலாண்டின் இறுதியில் 38.008 பில்லியன் டொலர்கள் வரை 540 மில்லியன் டொலர்களால் அதிகரித்துள்ளதாகச் சம்மந்தப்பட்ட அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. </p><p style="text-align: justify; ">

அந்த வெளிநாட்டுக் கடன்களில் பலதரப்புக் கடன்களாக 14.802 பில்லியன் டொலர்களும், வர்த்தகக் கடன்களாக 12.409 பில்லியன் டொலர்களும் மற்றும் இருதரப்புக் கடன்களாக 10.797 பில்லியன் டொலர்களும் பதிவாகியுள்ளன.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-01T16:36:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வல்வெட்டித்துறையில் சட்டவிரோத விடுதி: பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவில் கடும் விவாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/controversy-arises-coordination-committee-meeting-1788279136"></link>
            <id>https://tamilwin.com/article/controversy-arises-coordination-committee-meeting-1788279136</id>
            <summary type="text">வல்வெட்டி துறையில் அமைக்கப்படுள்ள சட்டவிரோத விடுதியால் பல்வேறு சட்ட விரோத
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமராட்சி வடக்கு பிரதேச
ஒருங்கிணைப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வல்வெட்டி துறையில் அமைக்கப்படுள்ள சட்டவிரோத விடுதியால் பல்வேறு சட்ட விரோத
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமராட்சி வடக்கு பிரதேச
ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நீண்ட விவாதம் இடம்பெற்றுள்ளது.
</p><p>வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வல்வெட்டித்துறை
அமைக்கப்பட்டுள்ள விருந்தினர் விடுதியானது வல்வெட்டித்துறை நகர சபை,
கரையோர பாதுகாப்புத் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை, மது வரித்
திணைக்களம், போன்றவற்றின் சட்ட வரையறைக்குட்படாது சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;சட்ட விரோத செயற்பாடுகள்</h2><p>கரையோர பாதுகாப்பு விதிகளை மீறி கடலுக்குள் கட்டிடங்கள்
அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவற்றை அகற்றுமாறு அறிவிக்கப்பட்டும்
இதுவரை துறை சார்ந்த அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று நீண்ட
விவாதம் இடம்பெற்றது.</p><p>தொடர்ச்சியாக குறித்த விடயம் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஒரு
வருடத்துக்கு மேலாக விவாதிக்கப்படுவதாகவும், ஆனால் எந்தவித நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை என்றும், பலரும் குற்றம் சுமத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f216c0b-bea4-45cf-8375-12ce173603cf/26-6a96fdc99f490.webp' /></p><p>

இதேவேளை வல்லிபுர கோவிலுக்கு அண்மித்த பகுதியில் இந்திய நிறுவனம் ஒன்றிற்கு 25
ஏக்கர் காணி வழங்கப்பட்டு அதில் சுற்றுலா கவர்ச்சி ஏற்படுத்தும் வகையில்
பல்வேறு முதலீடுகளை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், குறித்த அமைவிடம்
தொடர்பிலும் நீண்ட விவாதம் ஏற்பட்ட நிலையில் பிரதேச மக்களுடன் இணைந்து இடங்களை
பார்வையிட்டு இந்திய முதலீட்டு திட்டத்தை அனுமதிப்பதா இல்லையா என்றும்
தீர்மானிக்கப்பட்டது.
</p><p>
வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வடமராட்சி வடக்கு
பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான றஜீவன்
ஜெயசந்திரமூர்த்தி தலைமையில் காலை 9:45 மணியளவில் ஆரம்பமானது.</p><h2>ஒருங்கிணைப்பு குழு கூட்டம்</h2><p>
</p><p>மேலும் வீதி அமைத்தல் தொடர்பான அனுமதிகள், எல்லை நிர்ணயம் தொடர்பாக மவட்ட
ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிப்பதற்கான அனுமதியும்,
பருத்தித்துறை அஞ்சல் திணைக்கள காணியிலிருந்து முழுமையாக இராணுவம் வெளியேற
வேண்டும் என்ற கோரிக்கை வைப்பது என்ற தீர்மானமும், நீதிமன்றத்திற்கு காணி
ஆனைவிழுந்தான் பகுதியில் வழங்குவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன்
மேலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6858bbb1-e6f7-47f9-856e-487036e35bdf/26-6a96fdcac400d.webp' /></p><p>
</p><p>
இன்றைய வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அரச
திணைக்கள அதிகாரிகள், பருத்தித்துறையை நகர சபை தவிசாளர், செயலாளர்,
வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர், செயலாளர், பருத்தித்துறை பிரதேச சபை உப
தவிசாளர், வடமராட்சி வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள், கிராமம் மட்ட
அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் இராணுவம் காவல்துறை, கடற்படை
ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T16:34:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை கயாடு லோஹரின் சேலை போட்டோஷூட்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/kayadu-lohar-saree-photoshoot-post-1788271923"></link>
            <id>https://viduppu.com/article/kayadu-lohar-saree-photoshoot-post-1788271923</id>
            <summary type="text">கயாடு லோஹர்ரசிகர்கள் மனம் கவர்ந்த இளம் நடிகைகளில் ஒருவர் கயாடு லோஹர். இவர் டிராகன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

இதை தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கயாடு லோஹர்</h2><p>ரசிகர்கள் மனம் கவர்ந்த இளம் நடிகைகளில் ஒருவர் கயாடு லோஹர். இவர் டிராகன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.</p><p>

இதை தொடர்ந்து இவர் நடிப்பில் அடுத்ததாக வெளியாகியுள்ள திரைப்படம் தான் இதயம் முரளி. மேலும் Immortal, Paradise, மஞ்சணத்தி உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92455e9d-5332-490a-a3b8-0c4778e97ecb/26-6a96dd3f72ff4.webp' /></p><p>

இன்ஸ்டாகிராமில் 3.2M followers கொண்டுள்ள நடிகை கயாடு லோஹர் அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவிடுவார். தற்போது சேலையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-01T16:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பனிப்பாறைகள் உருகுவதால் இமயமலைப் பிராந்தியத்திற்கு காத்திருக்கும் பேராபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/un-warns-sudden-glacial-lake-eruption-in-himalayas-1788275401"></link>
            <id>https://tamilwin.com/article/un-warns-sudden-glacial-lake-eruption-in-himalayas-1788275401</id>
            <summary type="text">இமயமலைப் பிராந்தியத்தில் எதிர்காலத்தில் பனிப்பாறைகள் உருகுவதால் ஏற்படும் பேரழிவுமிக்க வெள்ள அபாயங்கள் மேலும் அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் உத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இமயமலைப் பிராந்தியத்தில் எதிர்காலத்தில் பனிப்பாறைகள் உருகுவதால் ஏற்படும் பேரழிவுமிக்க வெள்ள அபாயங்கள் மேலும் அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச்செயலாளர் கன்னி விக்னராஜா எச்சரித்துள்ளார்.</p><p>நேபாளத்தில் கடந்த வாரம் பனிப்பாறை சரிவு காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தில்
உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,000 ஐக் கடந்துள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>​இயற்கை அனர்த்தங்களை தடுத்தல்</h2><p>

காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவாக பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதால்,
நேபாளம், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் ஆபத்தான நிலையிலுள்ள பனிப்பாறை
ஏரிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதுடன், ஆற்றோரப் பகுதிகளில் வாழும்
மில்லியன் கணக்கிலான மக்கள் இதனால் பாதிக்கப்படும் அபாயத்தை
எதிர்நோக்கியுள்ளனர்.

​</p><p>இந்த அனர்த்தங்கள் நீர்மின் உற்பத்தித் திட்டங்களை அச்சுறுத்துவதுடன், ஆறுகளின்
கரையோரப் பகுதிகளை மனிதர்கள் வாழத் தகுதியற்ற பகுதிகளாக மாற்றக்கூடும் என்றும்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1423d5f-fe49-435a-ba2a-609571a813b6/26-6a96ecce9331e.webp' /></p><p>குறிப்பாக, நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால்
நிர்மாணப்பணியில் இருந்த 15 பிரதான நீர்மின் நிலையங்கள் முற்றிலும்
சேதமடைந்துள்ளன.</p><p>

​இயற்கை அனர்த்தங்களைத் தடுக்கும் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டையும் மீறி
இத்தகைய பேரழிவுகள் நிகழும் சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளதனால்,
பாதிக்கப்பட்ட பிராந்திய மக்கள் பாதுகாப்பான உயரமான இடங்களுக்கு இடம்பெயர்வது
தொடர்பில் கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா.
அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T16:16:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் நாளைய வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/announcement-regarding-tomorrow-s-weather-1788278823"></link>
            <id>https://jvpnews.com/article/announcement-regarding-tomorrow-s-weather-1788278823</id>
            <summary type="text">நாளை (02) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் தி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாளை (02) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிடைத்துள்ளது.</p><p style="text-align: justify; "> 

நாளைக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டு அத்திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54971670-30ec-4a1f-95e4-e1a29fec5ed8/26-6a96f8298fd0f.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;பலத்த காற்று</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதன்படி, ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும்.</p><p style="text-align: justify; "> 

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி முதல் செப்டம்பர் 07 ஆம் திகதி வரை இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. </p><p style="text-align: justify; ">

அதன்படி, நாளை (02) நண்பகல் 12:10 மணிக்கு ஆனமடுவ, மொரகொல்லாகம, தம்புள்ளை, மனம்பிட்டி மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T16:07:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு வருடங்களில் மதிப்பை இழக்கப்போகும் ஹோர்முஸ் நீரிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hormuz-worthless-piece-of-water-in-2-years-1788277252"></link>
            <id>https://ibctamil.com/article/hormuz-worthless-piece-of-water-in-2-years-1788277252</id>
            <summary type="text">மாற்று எண்ணெய் வழித்தடங்கள் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை தவிர்த்துச் செல்வதால், இரண்டு ஆண்டுகளுக்குள் ஹோர்முஸ் நீரிணை அதன் மதிப்பை இழந்துவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாற்று எண்ணெய் வழித்தடங்கள் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை தவிர்த்துச் செல்வதால், இரண்டு ஆண்டுகளுக்குள் ஹோர்முஸ் நீரிணை அதன் மதிப்பை இழந்துவிடும் என்று அமெரிக்க திறைசேரிச் செயலாளர் ஸ்கொட் பெசென்ட் இன்று(01) தெரிவித்துள்ளார்.
</p><p>
"உலகெங்கிலும் நாம் இடர்களைக் குறைக்க வேண்டும். ஈரானியர்கள் ஹோர்முஸ் நீரிணையை ஒரு நெருக்கடிப் புள்ளியாகப் பயன்படுத்த முயற்சிப்பதை நம்மால் காண முடிகிறது," என்று வடக்கு கரோலினாவின் ஆஷ்வில்லில் அளித்த பேட்டி ஒன்றின்போது பெசென்ட் குறிப்பிட்டார்.</p><h2>&nbsp;இரண்டு வருடங்களில் இழக்கப்போகும் மதிப்பு</h2><p>"இது அமெரிக்காவிற்கு ஒரு நெருக்கடிப் புள்ளி அல்ல, ஆனால் இது பல, பல பிற நாடுகளுக்கு ஒரு நெருக்கடிப் புள்ளியாகும்," என்று ஜி20 நாடுகளின் அமைச்சர்களுடனான சந்திப்புகளின்போது அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0f95b7f-fa07-4192-958b-c395ec757c2f/26-6a96f7c2b7ec7.webp' /></p><p>

"இரண்டு ஆண்டுகளில் இந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழி தவிர்க்கப்பட்டுவிடும்" என்று அவர் தெரிவித்தார்.</p><p>

"இரண்டு ஆண்டுகளில், ஹோர்முஸ் நீரிணை ஒரு மதிப்பற்ற நீர்நிலையைப் போல ஆகிவிடும்," என்று அவர் கூறினார்.

"எண்ணெய் தரைவழியாகக் குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படும்," என்றும் அவர் மேலும்தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T16:05:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[14 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட பிரித்தானியக் குடும்பம்: வழக்கில் முக்கிய திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pistol-found-14-years-after-brit-family-shot-dead-1788260760"></link>
            <id>https://news.lankasri.com/article/pistol-found-14-years-after-brit-family-shot-dead-1788260760</id>
            <summary type="text">Breakthrough in murders mystery as pistol found 14 years after Brit family shot dead: 14 ஆண்டுகளுக்கு முன் பிரித்தானியக் குடும்பம் ஒன்று சுட்டுக்கொல்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>Breakthrough in murders mystery as pistol found 14 years after Brit family shot dead: 14 ஆண்டுகளுக்கு முன் பிரித்தானியக் குடும்பம் ஒன்று சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் துப்பாக்கி ஒன்று கிடைத்துள்ளதைத் தொடர்ந்து வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.</p><p>[<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86579e78-fb30-4100-a7b9-34f2dbe4cb29/26-6a96b19af2e3a.webp' />]</p><p>பிரான்சில் நடந்த பயங்கர கொலை சம்பவம் ஒன்று தொடர்பில், ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
</p><h3>
துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்
</h3><p>
2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி, பிரான்சுக்கு சுற்றுலா சென்றிருந்த ஒரு பிரித்தானியக் குடும்பம் சென்ற காரை நோக்கி, மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.</p><p>

அவர் சுட்டதில், காரிலிருந்த Saad al-Hilli (50), அவரது மனைவி Iqbal (47) மற்றும் தாயார் Suhaila Al-Allaf (74) ஆகியோர் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86579e78-fb30-4100-a7b9-34f2dbe4cb29/26-6a96b19af2e3a.webp' /></p><p>தம்பதியரின் ஒரு மகளான Zainab (7) காயத்துடன் உயிர் பிழைக்க, மறு நாள் தடயவியல் நிபுணர்கள் இறந்தவர்களின் உடல்களை அகற்றும்போது, தாய் Iqbalஇன் கால்களுக்கிடையில் அவரது இரண்டாவது குழந்தையான Zeena (4) பயந்து நடுங்கிக்கொண்டு ஒளிந்திருப்பது தெரியவந்தது.&nbsp;</p><p></p><p>
இந்த துப்பாக்கிச்சூட்டில், அவ்வழியே சைக்கிளில் வந்துகொண்டிருந்த பிரான்ஸ் நாட்டவரான Sylvain Mollier (45) என்பவரும் கொல்லப்பட்டிருந்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e47178fb-b4f3-4dab-8afb-daf1eb03c00f/26-6a96b19baa27d.webp' /></p><h3>வழக்கில் முக்கிய திருப்பம்
</h3><p>
இந்நிலையில், சம்பவம் நடந்த இடத்துக்கு அருகிலுள்ள ஏரி ஒன்றின் அடியிலிருந்து துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
விடயம் என்னவென்றால், அது ஒரு சுவிஸ் ராணுவ துப்பாக்கி. அத்துடன், 1935ஆம் ஆண்டு, அதே மொடலில் 940 துப்பாக்கிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e5ba4aa-663d-4640-bdc4-22f155bfc54b/26-6a96b19a4bb4f.webp' /></p><p>மேலும், தாக்குதல்தாரி, ஒரு முறை தன் இலக்கை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அவர் உயிரிழந்ததை உறுதி செய்யும் வகையில், இரண்டாவது முறை அதே நபரை சுடும் ஒரு கைதேர்ந்த, துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற நபர்.
</p><p>
அத்துடன், இந்த வகை துப்பாக்கிகளில் ஒரு சீரியல் நம்பர் இருக்கும். ஆகவே, அது எங்கு தயாரிக்கப்பட்டது என்பது முதல், அதை யார் பயன்படுத்தினார் என்பது வரை கண்டுபிடிக்கமுடியும்.
</p><p>
எல்லாவற்றிற்கும் மேல், தண்ணீருக்குள் எத்தனை ஆண்டுகள் கிடந்திருந்தாலும், அதிலுள்ள DNAவைக் கண்டுபிடிக்கும் வழிமுறைகள் தற்போது உள்ளதால், முன்பு கிடைத்த ஆதாரங்களை, தற்போது கிடைத்துள்ள ஆதாரத்துடன் இணைத்து குற்றவாளியைக் கண்டுபிடிப்பதை எளிதாக்கக்கூடும் என்பதே நல்ல செய்தி.
</p><p>
ஆக, அந்த துப்பாக்கி தடயவியல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. தடயவியல் நிபுணர்கள், Saad al-Hilli குடும்பத்தினரைக் கொல்ல குற்றவாளி பயன்படுத்திய துப்பாக்கி இதுதானா என்பதைக் கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டுவருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T15:52:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவி, குழந்தையை பிரிந்த பிரதீப் ஆண்டனி.. உருக்கமான பதிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/bigg-boss-pradeep-antony-separates-from-wife-1788276406"></link>
            <id>https://manithan.com/article/bigg-boss-pradeep-antony-separates-from-wife-1788276406</id>
            <summary type="text">பிக் பாஸ் புகழ் பிரதீப் ஆண்டனி குழந்தையை பிரிந்து மிகுந்த துயரில் இருப்பதாக வெளியிட்டுள்ள உருக்கமாக பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.பிரதீப் ஆண்டனிதமிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக் பாஸ் புகழ் பிரதீப் ஆண்டனி குழந்தையை பிரிந்து மிகுந்த துயரில் இருப்பதாக வெளியிட்டுள்ள உருக்கமாக பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.</p><h2>பிரதீப் ஆண்டனி</h2><p>தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகர் பிரதீப் ஆண்டனி. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘அருவி’ திரைப்படத்தின் மூலம் நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர், அதன்பிறகு ‘வாழ்’ திரைப்படத்திலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d54a99f4-4d85-46ba-b98f-6a83a877cf59/26-6a96f3d77a817.webp' /></p><p></p><p>

நடிகர் கவினின் நெருங்கிய நண்பராகவும் அறியப்படும் பிரதீப் ஆண்டனி, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 7வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். ஏற்கனவே திரைப்படங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிதான் அவரை அதிகளவில் மக்களிடம் கொண்டு சேர்த்தது.</p><p>

நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனி வெளிப்படையாகப் பேசிய விதமும், தனது கருத்துகளை தயக்கமின்றி முன்வைத்த விதமும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.</p><p> </p><p>அதே நேரத்தில், அவரது செயல்பாடுகள் நிகழ்ச்சிக்குள் பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தின.

குறிப்பாக, சில பெண் போட்டியாளர்கள் பிரதீப் ஆண்டனி மீது புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. </p><p>இதையடுத்து அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிரதீப்புக்கு ரெட் கார்டு வழங்கி வெளியேற்றப்பட்ட முடிவு அப்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. பலரும் பிக்பாஸ் குழுவின் முடிவுக்கு எதிராக தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e710ef7-88f5-4be5-bd73-a694d7f0c81c/26-6a96f3d82befa.webp' /></p><p> பிரதீப்பை வெளியேற்றியது தவறான முடிவு என்றும், அவருக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றும் சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தனர்.
</p><h2>மனைவி குழந்தையை பிரிந்தது ஏன்?&nbsp;</h2><p>பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பிரதீப் ஆண்டனி தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தினார். கடந்த 2024ஆம் ஆண்டு பூஜா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு தனது குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்தி வந்த பிரதீப்புக்கு, கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
</p><p>
குழந்தை பிறந்த செய்தி பிரதீப்பின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான ஒரு பதிவு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e5e0646-0a8b-47f1-a140-29780764f4a4/26-6a96f3d8d1cd0.webp' /></p><h2>உருக்கமான&nbsp; பதிவு&nbsp;</h2><p>
</p><p>பிரதீப் ஆண்டனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நீண்ட பதிவில், தனது மனைவி மற்றும் குழந்தையை பிரிந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

தனது வாழ்க்கையின் மிகப்பெரிய கனவு குறித்து அவர் அந்த பதிவில் உருக்கமாக பேசியுள்ளார். </p><p>ஒரு நல்ல குடும்பத்தை அமைத்துக்கொண்டு, தனது குழந்தைக்கு சிறந்த தந்தையாக வாழ வேண்டும் என்பதுதான் தனது வாழ்நாளின் மிகப்பெரிய கனவு என்று பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக தற்போது இணைந்து வாழ்வது மிகவும் கடினமாகிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64106227-c16e-4e02-aaaf-7dc0e90cc3cb/26-6a96f3d9848d4.webp' /></p><p></p><p>
</p><p>
மேலும், தனது குழந்தையின் மீது அளவுகடந்த அன்பு வைத்திருப்பதாகக் கூறியுள்ள பிரதீப், குழந்தையை பிரிந்திருப்பது தனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். </p><p>“ஒவ்வொரு நொடியும் என் குழந்தையை ரொம்பவே மிஸ் பண்றேன்” என்று அவர் தனது பதிவில் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

பிரதீப்பின் இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. </p><p>குடும்ப வாழ்க்கை குறித்து பிரதீப் ஆண்டனி வெளியிட்டுள்ள இந்த பதிவு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வரும் நிலையில், அவரது தற்போதைய நிலை குறித்து ரசிகர்கள் பலரும் வருத்தத்தையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u> <a href="https://chat.whatsapp.com/KPaiG8NNYogL3W9EipSjKP" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T15:49:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக் பாஸ் போட்டியாளராக வரும் பிரபல மேக்கப் ஆர்ட்டிஸ்ட்! யார் என பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/makeup-artist-asmitha-to-enter-bigg-boss-10-tamil-1788277086"></link>
            <id>https://cineulagam.com/article/makeup-artist-asmitha-to-enter-bigg-boss-10-tamil-1788277086</id>
            <summary type="text">பிக் பாஸ் 10ம் சீசன் தமிழில் தொடங்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கிறது. அதில் 20 பிரபலங்கள் மற்றும் 3 காமன் மேன் என மொத்தம் 23 போட்டியாளர்கள் வர இரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக் பாஸ் 10ம் சீசன் தமிழில் தொடங்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கிறது. அதில் 20 பிரபலங்கள் மற்றும் 3 காமன் மேன் என மொத்தம் 23 போட்டியாளர்கள் வர இருக்கின்றனர்.
</p><p>
பல முக்கிய சீரியல் நடிகர்கள் பலரும் போட்டியாளர்களாக வர இருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bcc29fe-5a7b-4887-a0bf-e80f215e70f7/26-6a96f1619f691.webp' /></p><h2>மேக்கப் ஆர்ட்டிஸ்ட்</h2><p>இந்நிலையில் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் மற்றும் நடிகை அஸ்மிதா என்பவர் போட்டியாளராக வருவது உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.</p><p>

அஸ்மிதா சில படங்களில் நடித்து இருந்தாலும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக அதிகம் பிரபலம். அவர் ஒரு வருடத்திற்கு முன் தனது கணவர் தன்னை தாக்கி கொடுமை படுத்தியதாக போலீசில் புகார் அளித்து கைது செய்ய வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T15:38:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைகளுக்கு பதில் வீட்டுக்காவல் ; சட்ட மறுசீரமைப்புகள் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/house-arrest-instead-of-imprisonment-1788276757"></link>
            <id>https://jvpnews.com/article/house-arrest-instead-of-imprisonment-1788276757</id>
            <summary type="text">சிறைச்சாலைகளில் தடுத்து வைப்பதற்கு பதிலாக வீட்டுக்காவலில் வைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சட்ட மறுசீரமைப்புகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சிறைச்சாலைகளில் தடுத்து வைப்பதற்கு பதிலாக வீட்டுக்காவலில் வைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சட்ட மறுசீரமைப்புகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். </p><p style="text-align: justify; ">

இன்று (01) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f131be0-cd57-4226-9828-79c6dd86d3b8/26-6a96f016eec0e.webp' /></p><h2 style="text-align: justify; ">சட்ட மறுசீரமைப்புகள்</h2><p> </p><p style="text-align: justify; ">

இதற்காகப் பல சட்ட மறுசீரமைப்புகள் குறித்து தற்போது கலந்துரையாடப்பட்டு, தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.</p><p style="text-align: justify; "> 

"நீதித்துறை அமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல மறுசீரமைப்புகளுக்கு மத்தியில் இந்தச் சட்ட மறுசீரமைப்பும் இடம்பெறுகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> சிறைச்சாலைகளின் நெருக்கடியைக் குறைத்தல், அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை விரைவுபடுத்துதல், பிணை பெற முடியாதவர்களுக்குப் பிணை வழங்குவதற்குத் தேவையான சட்ட மறுசீரமைப்புகளைச் செய்தல், சிறைச்சாலைகளுக்கு வெளியே இவ்வாறானவர்களை வீடுகளில் தடுத்து வைத்து தண்டனைக் காலத்தைக் கழிப்பதற்கான வாய்ப்பை வழங்குதல் போன்ற பல மறுசீரமைப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டு சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன என்றார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-01T15:32:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுகிறார் முன்னாள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/keir-starmer-is-stepping-member-of-parliament-1788274856"></link>
            <id>https://tamilwin.com/article/keir-starmer-is-stepping-member-of-parliament-1788274856</id>
            <summary type="text">பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது நாடாளுமன்ற
உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆளும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது நாடாளுமன்ற
உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
</p><p>
ஆளும் தொழிற்கட்சியின் ஆதரவை இழந்ததைத் தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து
விலகி சுமார் ஆறு வாரங்களே நிறைவடைந்துள்ள நிலையில், அவர் இந்த முடிவை
எடுத்துள்ளார்.</p><p>

தான் வகித்து வந்த லண்டன் ‘ஹோல்பர்ன் மற்றும் சென் பாங்க்ராஸ்’ தொகுதிக்கான
எம்.பி பதவியிலிருந்து விலகி, இனி சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் கூடுதல் கவனம்
செலுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>இராஜதந்திர நடவடிக்கை</h2><p>
</p><p>
கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தொழிற்கட்சியைப் வரலாற்றுச்
சிறப்புமிக்க பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்து பிரதமரான போதிலும்,
உள்நாட்டுக் கொள்கைகளில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் மக்களின் ஆதரவு
வீழ்ச்சி காரணமாக அவர் தனது பதவியை இழக்க நேரிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb6db646-5936-4c47-8c24-17472f37e007/26-6a96e9af8e7fe.webp' /></p><p>

எனினும், பிரான்ஸ் மற்றும் சீனாவுடனான உறவுகளைச் சீரமைத்தல், உக்ரைனுக்கான
ஆதரவு மற்றும் பாலஸ்தீன நாட்டை அங்கீகரித்தல் போன்ற சர்வதேச விவகாரங்களில்
அவரது இராஜதந்திர நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருந்தன.
</p><p>
கெய்ர் ஸ்டார்மரைத் தொடர்ந்து அண்டி பர்ன்ஹாம் பிரித்தானியாவின் புதிய
பிரதமராகப் பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T15:22:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாக்குறுதிகளை நிறைவேற்றாத அனுர அரசு : யாழில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hunger-strike-in-jaffna-against-anura-government-1788274209"></link>
            <id>https://ibctamil.com/article/hunger-strike-in-jaffna-against-anura-government-1788274209</id>
            <summary type="text">&amp;nbsp; தற்போது ஆட்சியில் உள்ள அனுர அரசாங்கம் பதவியேற்று எதிர்வரும் 12ஆம்
திகதியுடன் இரண்டு ஆண்டுகளை எட்டவுள்ள நிலையில், தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தற்போது ஆட்சியில் உள்ள அனுர அரசாங்கம் பதவியேற்று எதிர்வரும் 12ஆம்
திகதியுடன் இரண்டு ஆண்டுகளை எட்டவுள்ள நிலையில், தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி, எதிர்வரும் 12ஆம்
திகதி யாழ்ப்பாணம் சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் அடையாள உண்ணாவிரதப்
போராட்டம் நடத்தப்படவுள்ளது.</p><p>

இதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் இன்று(01)செவ்வாய்க்கிழமை மாலை, ஜனநாயக தமிழ் தேசியக்
கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் யாழ்ப்பாணம் இணுவில்
பகுதியில் உள்ள திருமண மண்டபமொன்றில் நடைபெற்றது.</p><h2>தொடந்து ஏமாற்றப்படும் தமிழ் மக்கள்</h2><p>&nbsp;இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக்
கூட்டணியின் பங்காளிக் கட்சித் தலைவரான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்கு
கருத்துத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d498123b-006c-4b61-ac0c-8740087c9aa7/26-6a96eb0fc1057.webp' /></p><p>
</p><p>
 தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள்
நிறைவேற்றப்படாமையைக் கண்டித்தும், தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு
வருகின்றனர் என்பதை வெளிப்படுத்தும் நோக்கிலும் எதிர்வரும் 12ஆம் திகதி,அடையாள உண்ணாவிரதப்
போராட்டத்தை நடத்துவதற்கு ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளதாக
அவர் தெரிவித்தார்.</p><h2>முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை</h2><p>
</p><p>
அரசாங்கம் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், பயங்கரவாதத் தடைச்
சட்டத்தை நீக்குதல், காணிகளை விடுவித்தல், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை
செய்தல், மாகாண சபைத் தேர்தலை நடத்துதல் மற்றும் புதிய அரசியலமைப்பை
உருவாக்குதல் உள்ளிட்ட தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகள்
நிறைவேற்றப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bdf159a-26b1-4242-be81-359c1f034d6a/26-6a96eb10d357d.webp' /></p><p>
</p><p>
தமிழ் மக்களின் ஆதரவையும் ஆணையையும் பெற்று ஆட்சிக்கு வந்த அரசாங்கம், வழங்கிய
வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும், தமிழ் மக்கள் தொடர்ந்தும்
ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்டு வருகின்றனர் என்பதை மக்களுக்கு
எடுத்துக்காட்டும் நோக்கிலேயே இந்தப் போராட்டம் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
இந்தப் போராட்டம் தமிழ் அரசியல் கட்சிகளின் ஒருங்கிணைந்த அழைப்பாக
முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புகள்
மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்திற்கு வலுச்சேர்க்க
வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டது.</p><p>

</p><h2>&nbsp;சொந்த நிலங்களை விடுவிக்க கோரி மக்கள் தொடர் போராட்டம்</h2><p>குறிப்பாக வலிகாமம் வடக்கில் பல பகுதிகளில் தமது சொந்த நிலங்களை
விடுவிக்குமாறு கோரி மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற
நிலையில், காணி விடுவிப்பு தொடர்பிலும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை
எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b629f2f-97e0-44c9-8c0a-12d310f64245/26-6a96eb118463d.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தின்
அபிவிருத்திப் பணிகளும் எதிர்பார்த்த அளவில் முன்னெடுக்கப்படாமல் பின்னடைவு
நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.</p><p>

இந்தியா நிதி உதவி வழங்கியுள்ள போதிலும், சம்பந்தப்பட்ட அபிவிருத்தித்
திட்டங்களை முன்னெடுப்பதற்கான உடன்படிக்கைகள் மற்றும் நடைமுறை நடவடிக்கைகளில்
காலதாமதம் ஏற்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.</p><h2>மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் கூட அக்கறை காட்டாத நிலை</h2><p>
</p><p>
தேர்தல் காலத்தில் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை வழங்குவதாக வாக்குறுதி
அளித்தவர்கள், தற்போது மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் கூட அக்கறை காட்டாத
நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba3e0a2c-34c9-4beb-937d-4541bccb3c05/26-6a96eb12398af.webp' /></p><p>
</p><p>
மேலும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் போதிய கரிசனையை
வெளிப்படுத்தவில்லை எனவும், தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு திணிக்கப்படுவதாகக்
கூறப்படும் தொல்லியல் துறை சார்ந்த நடவடிக்கைகளையும் கண்டித்தும் இந்தப்
போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
</p><p>
இதன்படி, எதிர்வரும் *12ஆம் திகதி காலை 7.30 மணியளவில் சாவகச்சேரி பேருந்து
நிலையத்தில்*, தமிழ் மக்களின் சார்பில் தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து அடையாள
உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி
தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T15:21:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[திரிஷா யார் கூட போனா உங்களுக்கு என்ன? நடிகை அம்பிகா டிவிட்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/trisha-in-london-viral-video-ambika-lashes-out-1788269675"></link>
            <id>https://viduppu.com/article/trisha-in-london-viral-video-ambika-lashes-out-1788269675</id>
            <summary type="text">நடிகை திரிஷா குறித்து சோசியல் மீடியாவில் பல விஷயங்கள் பேசப்பட்டு வரும். சமீபத்தில் நடிகை திரிஷா, திரிஷா லண்டனில் இருக்கும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை திரிஷா குறித்து சோசியல் மீடியாவில் பல விஷயங்கள் பேசப்பட்டு வரும். சமீபத்தில் நடிகை திரிஷா, திரிஷா லண்டனில் இருக்கும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வைரலானது. அந்த வீடியோவை ஒரு பெண் லீக் செய்து, Who is that trisha? என்ற கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcee41b1-8d01-4179-90b2-8ccd3c44d400/26-6a96d46d83465.webp' /></p><p> </p><p>அதனை பார்த்த நெட்டிசன்கள் பல கேள்விகளை முன் வைத்து வருகிறார்கள். திரிஷா அந்த வீடியோ விவகாரம் குறித்து நடிகை அம்பிகா தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ளார்.</p><h2>அம்பிகா</h2><p>அதில், அது திரிஷாவாக இருந்தால் என்ன? இல்லை என்றால் என்ன? லண்டனில் இருந்தால் என்ன? சீனாவில் இருந்தால் என்ன? ஒருவர் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம், அதை பற்றி நமக்கு என்ன, இதெல்லாம் ஒரு விஷயமா?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e9cf5ac-db86-4389-ba3f-ec87168dfd9b/26-6a96d46e47d71.webp' /></p><p>நாட்ல எவ்வளவோ பிரச்சனை இருக்கும்போது திரிஷா எங்க போனார்? யார் கூட போனார்? என்று விவாதத்தை வைத்து ஒரு வீடியோவை ட்ரெண்ட் செய்வது அவசியமா? என்று கேள்வி கேட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-01T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரேநாளில் தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பல மில்லியன் வருமானம் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dehiwala-zoo-earns-millions-in-a-single-day-1788269259"></link>
            <id>https://jvpnews.com/article/dehiwala-zoo-earns-millions-in-a-single-day-1788269259</id>
            <summary type="text">&amp;nbsp; பாடசாலை விடுமுறைக் காலத்தை முன்னிட்டு கடந்த 26 ஆம் திகதி தெஹிவளை விலங்கியல் பூங்காவைப் பார்வையிட 10,634 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாக தேசிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பாடசாலை விடுமுறைக் காலத்தை முன்னிட்டு கடந்த 26 ஆம் திகதி தெஹிவளை விலங்கியல் பூங்காவைப் பார்வையிட 10,634 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.சி.ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
</p><p>


இதற்கமைய, அன்றைய தினம் மாத்திரம் 2.5 மில்லியன் ரூபா சாதனை அளவிலான வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாக பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30e27381-2cad-49b4-a1f9-a22f7e0f1836/26-6a96d2cc80f09.webp' /></p><h2>&nbsp;கடந்த வருடம் பெறப்பட்ட 1.6 பில்லியன் ரூபா முறியடிப்பு</h2><p>



விலங்கியல் பூங்காவிற்கு வருகை தரும் வழமையான நாளாந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை சுமார் 2,500 ஆகக் காணப்படும் நிலையில், அன்றைய தினம் வருகை தந்தவர்களின் எண்ணிக்கை வழமையை விட நான்கு மடங்குக்கும் அதிகமாகும் என பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p>
</p><p>


அத்துடன், கடந்த வருடம் பெறப்பட்ட 1.6 பில்லியன் ரூபா மொத்த வருமானத்தை இந்த வருடத்தில் கடந்து செல்ல முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.</p><p>



தற்போது விலங்கியல் பூங்காவிற்குள் பார்வையாளர்களுக்கான உள்ளக வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்களுக்காக தினசரி விசேட திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p></p><p> </p><p>



 மேலும் பல்வேறு விலங்கு பரிமாற்றத் திட்டங்களின் கீழ், தற்போது பூங்காவில் பற்றாக்குறையாக உள்ள ஒட்டகச்சிவிங்கிகளுக்காக எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் உகாண்டாவிலிருந்து இரண்டு ஜோடி ஒட்டகச்சிவிங்கிகளையும், ஆர்மீனியாவிலிருந்து ஒரு ஜோடி வரிக்குதிரைகளையும் (Zebras) நாட்டிற்குக் கொண்டு வருவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-09-01T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[IMF வெளியேற்றம்! அடுத்தடுத்து அநுர அரசு எடுக்கப்போகும் அதிரடி முடிவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/next-government-will-take-drastic-decisions-1788274054"></link>
            <id>https://tamilwin.com/article/next-government-will-take-drastic-decisions-1788274054</id>
            <summary type="text">2028ஆம் ஆண்டு இலங்கை மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் மிகக் கடுமையான ஆண்டாக அமையும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் தெரிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2028ஆம் ஆண்டு இலங்கை மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் மிகக் கடுமையான ஆண்டாக அமையும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
</p><p>
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியை கைப்பற்றுவதற்கு கடுமையாகப் போராடும் நிலை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
லங்காசிறி ஊடகம் வழங்கும் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>IMF திட்டத்திலிருந்து வெளியேறியதன் காரணமாக இலங்கையில் பெரியளவிலான மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. மாறாக, டிட்வா புயல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஜனாதிபதியால் நாட்டை வழங்கிய வாக்குறுதிகளுக்கு ஏற்ப முன்னேற்றப் பாதைக்கு கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>
இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள எதிர்க்கட்சிகள் முயற்சிக்கும், வரிகளை குறைப்போம், சம்பள உயர்வுகளை வழங்குவோம், பணவீக்கத்தை கட்டுப்படுத்துவோம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி, ஆட்சியை கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் அவை ஈடுபடும்.
</p><p>
அதேவேளை, ஜனாதிபதி நாட்டு மக்களிடம் இன்னும் ஒரு வாய்ப்பை வழங்குமாறு கோரிக்கை விடுக்கும் நிலையும் ஏற்படலாம் என்றார். </p><p>இவ்வாறான பல்வேறு விடயங்களை உங்கள் கண்முன்னே கொண்டு வருகின்றது “ஊடறுப்பு” நிகழ்ச்சி,&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/K-gcvqPOo-E" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T14:49:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்டத்தில் குதிக்கும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/university-lecturers-to-protest-1788273876"></link>
            <id>https://tamilwin.com/article/university-lecturers-to-protest-1788273876</id>
            <summary type="text">அரச பல்கலைக்கழக அமைப்பைப் பாதிக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளைக் கோரி, நாட்டிலுள்ள அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச பல்கலைக்கழக அமைப்பைப் பாதிக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளைக் கோரி, நாட்டிலுள்ள அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள் நாளை மதிய உணவு இடைவேளையின் போது கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். </p><p>
பல்கலைக்கழக ஆசிரியர்களின் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.</p><p> 
அரசாங்கம் தங்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணத் தவறினால், அடுத்த வாரம் முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர்களின் சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இல்லங்கசிங்க எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd318ce7-c18b-4ba9-8d34-0dceb1b6d886/26-6a96e4d568a2f.webp' /></p><p>
தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற உடனேயே பல்கலைக்கழக அமைப்பைப் பாதிக்கும் சிக்கல்கள் குறித்துச் சுட்டிக்காட்டப்பட்டதாகவும், அவற்றுக்கான தீர்வு யோசனைகள் மற்றும் கடிதங்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் நேரடியாகச் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் சாருதத்த இல்லங்கசிங்க தெரிவித்தார்.</p><p> 
எனினும், பேச்சுவார்த்தைகளின் போது எட்டப்பட்ட உடன்பாடுகளையோ அல்லது முன்வைக்கப்பட்ட யோசனைகளையோ அரசாங்கம் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>
இந்தப் பிரச்சினைகளுக்குத் தொடர்ச்சியாகத் தீர்வு காணப்படாததன் காரணமாக, அரசுப் பல்கலைக்கழகங்களிலிருந்து கல்விப் பணியாளர்கள் பெருமளவில் வெளியேறி வருவதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
</p><p>ஆண்டுக்கு சுமார் 25,000 மாணவர்கள் சேர்க்கப்பட்ட போது, 5,800 விரிவுரையாளர்கள் பணியில் இருந்தனர்.
ஆண்டு மாணவர் சேர்க்கை 45,000 ஆக அதிகரித்துள்ள போதிலும், சுமார் 1,000 விரிவுரையாளர்கள் பல்கலைக்கழக அமைப்பை விட்டு வெளியேறியுள்ளனர்.
</p><p>சில கல்விப் பணிகளுக்கான பதவி வெற்றிடங்கள் அறிவிக்கப்பட்டபோதிலும், பல பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரிவுரையாளர்கள் முன்வருவதில்லை.
</p><p>அரசுப் பல்கலைக்கழக அமைப்பின் வீழ்ச்சி என்பது நாட்டின் எதிர்காலத்தின் வீழ்ச்சியாகும் என சாருதத்த இல்லங்கசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகாரிகளுடன் இது குறித்துப் பேசி அலுத்துவிட்ட நிலையில் இந்தத் தீர்மானத்திற்கு வந்துள்ளதாகக் கூறினார். </p><p>அரசாங்கம் உரிய தீர்வினை வழங்கும் வரை இந்த ஆர்ப்பாட்டங்கள் தொடரும் எனவு, தேவைப்படின் போராட்டங்கள் மேலும் தீவிரமாக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T14:47:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மற்றவர்களை கட்டுப்படுத்துவதில் கில்லாடிகளான டாப் 3 ராசிகள்... உங்க ராசியும் இதுல இருக்கா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-zodiac-signs-are-most-controlling-1788268741"></link>
            <id>https://manithan.com/article/which-zodiac-signs-are-most-controlling-1788268741</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, கல்வி, தொழில் உட்பட அவர்களின் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, கல்வி, தொழில் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.</p><p>அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில்&nbsp; பிறந்தவர்கள் மற்றவர்களை அடக்கியாளும் ஆளுமையையும் சிறந்த தலைமைத்துவ குணங்களையும் பிறப்பிலேயே கொண்டவர்களாக இருப்பார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/788105af-45d2-4341-a878-c796157d251c/26-6a96e4fe5f602.webp' /></p><p></p><p>அப்படி அனைவரையும் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதில் படு கில்லாடிகளாக திகழும் டாப் 3 ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">விருச்சிகம்</span></h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fa86bcd-156b-49e1-89d2-ec71f8373260/26-6a96e4ff13630.webp' /></p><p>விருச்சிக ராசிக்காரர்கள் இயல்பிலேயே அதிக அதிகார வேட்கையும், தங்களது செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற வலுவான எண்ணமும் கொண்டவர்களாக இருப்பார்கள்.</p><p>இருப்பினும், அவர்கள் தங்களது நோக்கங்களையும் எண்ணங்களையும் வெளிப்படையாக மற்றவர்களிடம் கூறுவதைவிட, அவற்றை மனதிற்குள் வைத்துக்கொண்டு செயல்படுவதையே அதிகம் விரும்புவார்கள்.
</p><p>
மாற்றம், சக்தி மற்றும் ஆற்றலுடன் தொடர்புடைய கிரகமாகக் கருதப்படும் செவ்வாயின் ஆதிக்கம் இவர்களுக்கு இருப்பதால், பிறரை வழிநடத்துவது, சூழ்நிலைகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றுவது மற்றும் தங்களது செல்வாக்கை நிலைநிறுத்துவது போன்ற விஷயங்களில் இயல்பான ஆர்வம் இருக்கும்.
</p><h2>மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee06360e-f028-4e89-a51c-fd79755294de/26-6a96e4ffc3b35.webp' /></p><p>
மகர ராசிக்காரர்கள் வாழ்க்கையில் வெற்றி, முன்னேற்றம் மற்றும் சாதனைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.ஒரு இலக்கை நிர்ணயித்துவிட்டால், அதை அடையும் வரை பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் செயல்படுவார்கள்.</p><p>இந்த வெற்றிக்கான தீவிர விருப்பம் சில நேரங்களில் மற்றவர்களின் மீது அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் செலுத்த வேண்டும் என்ற எண்ணமாக வெளிப்படலாம்.
</p><p>
ஒழுக்கம், பொறுப்பு மற்றும் அதிகாரத்துடன் தொடர்புடைய சனிபகவானால் ஆளப்படும் மகர ராசிக்காரர்கள், எந்தவொரு விஷயத்தையும் அவசரமாக அணுகாமல், திட்டமிட்டு செயல்படுவார்கள். மற்றவர்களை அடக்கியாளும் ஆளுமை இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.</p><h2>சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff021ba7-3840-429f-9f11-7432a032f60d/26-6a96e50077932.webp' /></p><p></p><h2>
</h2><p>சிம்ம ராசிக்காரர்கள் தங்களது தைரியம், தன்னம்பிக்கை மற்றும் கம்பீரமான அணுகுமுறைக்காகப் பெயர் பெற்றவர்கள். அவர்களின் வசீகரமான வெளித்தோற்றத்திற்குப் பின்னால், அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் தங்களது கையில் வைத்திருக்க வேண்டும் என்ற வலுவான விருப்பமும் இருக்கும்.</p><p>
கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படும் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்களுக்கு இயல்பிலேயே தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். </p><p>ஒரு குழுவில் இருந்தாலும், குடும்பத்தில் இருந்தாலும் அல்லது பணியிடத்தில் இருந்தாலும், தங்களது கருத்துக்கு மதிப்பு கிடைக்க வேண்டும் என்றும், தாங்கள் முக்கியமான நபராகக் கருதப்பட வேண்டும் என்றும் விரும்புவார்கள்.
</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://chat.whatsapp.com/KPaiG8NNYogL3W9EipSjKP" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T14:46:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[எம்.பி பதவியையும் துறக்கிறார் கெய்ர் ஸ்டார்மர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/keir-starmer-resignation-as-member-of-parliament-1788272114"></link>
            <id>https://ibctamil.com/article/keir-starmer-resignation-as-member-of-parliament-1788272114</id>
            <summary type="text">பிரிட்டனின் பிரதமர் பதவியில் இருந்து விலகிய கெய்ர் ஸ்டார்மர், தற்போது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளார்.

நாடாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரிட்டனின் பிரதமர் பதவியில் இருந்து விலகிய கெய்ர் ஸ்டார்மர், தற்போது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளார்.
</p><p>
நாடாளுமன்றப் பணிகளில் இருந்து விலகி, இனிவரும் காலங்களில் பாதுகாப்பு, அமைதி, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்களில் தனது கவனத்தைச் செலுத்தப் போவதாக ஸ்டார்மர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>விரைவில் இடைத்தேர்தல்</h2><p>கெய்ர் ஸ்டார்மரின் இந்த திடீர் விலகல் முடிவைத் தொடர்ந்து, அவர் பிரதிநிதித்துவப்படுத்திய மத்திய லண்டன் நாடாளுமன்றத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3d3c2ed-b848-4160-82d0-fc6964911a35/26-6a96e2e4a7f0b.webp' /></p><p>
</p><p>
கட்சிக்குள் ஏற்பட்ட கடுமையான அழுத்தங்கள் மற்றும் உள்நாட்டு அரசியல் குழப்பங்கள் காரணமாக ஸ்டார்மர் பதவி விலகியதைத் தொடர்ந்து ஆண்டி பர்ன்ஹாம் பிரிட்டன் பிரதமராக பதவியேற்றார்.</p><p></p><h2>ஸ்டார்மரின் திடீர் அறிவிப்பு</h2><p>
</p><p>

பிரதமர் பதவியில் இருந்து விலகி இருந்தாலும், அடுத்த பொதுத் தேர்தல் வரை தாம் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்வதாக அறிவித்திருந்தார். ஆனால் திடீரென்று அப்பதவியிலிருந்தும் விலகுவதாக ஸ்டார்மர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff37273c-34bf-4bda-b990-0dd866da618c/26-6a96e2e55a797.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T14:36:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதியில் காலை வாரிய செருப்பு ;மகள்களின் கல்விச் செலவு; வெறும் காலில் மரதன் ஓடி வென்ற தாயார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/daughters-education-mother-won-marathon-barefoot-1788268315"></link>
            <id>https://jvpnews.com/article/daughters-education-mother-won-marathon-barefoot-1788268315</id>
            <summary type="text">&amp;nbsp; மகாராஷ்டிராவில் மகள்களின் உயர் கல்விச் செலவுக்கு உதவுவதற்காக, 47 வயதான தாய் ஒருவர் வெறும் காலில் ஓடி மரதன் போட்டியில் முதலிடம் பிடித்த சம்பவம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மகாராஷ்டிராவில் மகள்களின் உயர் கல்விச் செலவுக்கு உதவுவதற்காக, 47 வயதான தாய் ஒருவர் வெறும் காலில் ஓடி மரதன் போட்டியில் முதலிடம் பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், பீட் மாவட்டம், அம்பாஜோகை பகுதியைச் சேர்ந்த ரமாபாய் ரன்வீர், தனது இரண்டு மகள்களையும் தனியாக வளர்த்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb72bc1d-b0b0-4200-bf27-bd6d1dec1d85/26-6a96cf1cbc1e7.webp' /></p><h2>பாதியில் காலை வாரிய செருப்பு</h2><p>
</p><p>
விவசாயக் கூலி வேலை செய்து வந்த அவர், தற்போது தனது மகள்கள் கல்வி கற்கும் போட்டித் தேர்வு பயிற்சி நிலையத்தில் சமையல் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.
</p><p>
இந்த நிலையில், உள்ளூர் அமைப்பொன்று நடத்திய ‘அமிர்த தௌட்’ மரதன் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 3,000 ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. </p><p></p><p>

அந்தப் பரிசுத் தொகையில் மகள்களுக்குப் புத்தகங்கள் வாங்கலாம் எனக் கருதிய ரமாபாய் போட்டியில் பங்கேற்றார்.</p><p>

போட்டியின்போது அவரது செருப்புகள் கழன்று விழுந்த நிலையில் அறுந்த செருப்பை , கழற்றி கையில் எடுத்துக்கொண்டு வெறும் காலில் ஓடி, முதலிடத்தையும் பிடித்தார்.
</p><p>
இந்த போட்டியில் அவரது மகள் பூஜா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். ரமாபாயின் ஒரு மகள் காவல்துறை பணிக்கான போட்டித் தேர்வுக்கும், மற்றொரு மகள் வங்கித் தேர்வுகளுக்கும் தயாராகி வருகின்றனர்.</p><p></p><p>

தனது வெற்றி குறித்து கருத்துரைத்த ரமாபாய், “போராடி இந்தப் பரிசை வெல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். ஓடும்போது என் மகள்களின் எதிர்காலம் மட்டுமே என் கண்முன் தெரிந்தது. </p><p>பரிசுத் தொகையில் அவர்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்குவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இன்னிலையில் மகள்களின் கல்விக்காகப் போராடி வரும் ரமாபாயின் விடாமுயற்சிக்கும், தன்னம்பிக்கைக்கும் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் மானிடோபாவில் சுழன்றடித்த சூறாவளி: கட்டடங்கள், மின் கம்பங்கள் சேதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tornado-touches-down-in-southwest-manitoba-1788259536"></link>
            <id>https://canadamirror.com/article/tornado-touches-down-in-southwest-manitoba-1788259536</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் தென்மேற்கு மானிடோபா வீசிய பலத்த சூறாவளி காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்தும், மின் கம்பங்கள் உடைந்தும், வர்த்தக நிலையங்களின் கூரைகள் பிடுங...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் தென்மேற்கு மானிடோபா வீசிய பலத்த சூறாவளி காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்தும், மின் கம்பங்கள் உடைந்தும், வர்த்தக நிலையங்களின் கூரைகள் பிடுங்கி எறியப்பட்டும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.</p><p> 
சஸ்காட்செவன் எல்லைக்கு மேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எல்க்ஹார்ன் எனும் பகுதியில், இந்தச் சூறாவளி தாக்கியதாக கனடா சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p> 
பொலிஸ் மற்றும் பொதுமக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2681ce5f-d104-4665-90f5-1d1f4871f5bc/26-6a96acd1a7bcf.webp' /></p><p> </p><p>
இந்த வானிலை மாற்றத்தின் ஒரு பகுதியாக, மானிடோபா எல்லைக்கு அருகே தென்கிழக்கு சஸ்காட்செவன் பகுதியிலும் மேலும் இரண்டு சூறாவளிகள் தாக்கியுள்ளன. </p><p>
அத்துடன் கனமழை மற்றும் பெரிய அளவிலான ஆலங்கட்டி மழையுடன் கூடிய பலத்த இடிபுயலும் அப்பகுதியைத் தாக்கியது. 
இப்புயல் காரணமாக மானிடோபாவின் பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. </p><p>
திங்கட்கிழமை காலை வரையிலான 48 மணி நேரக் கணக்கீட்டின்படி, கோலா பகுதியில் 80.5 மில்லிமீட்டரும், மினிடோனாஸ் பகுதியில் 71.7 மில்லிமீட்டரும், சான் கிளாரா பகுதியில் 71.6 மில்லிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. </p><p>
பருவத்திற்கு மாறான அதிக வெப்பமான வளிமண்டலத்துடன் குளிர் காற்றுப் பிரதேசம் இணைந்ததே இந்த திடீர் சூறாவளிக்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கியூட்டான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ப்ரியா பவானி ஷங்கர்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-priya-bhavani-shankar-cute-photoshoot-1788272128"></link>
            <id>https://cineulagam.com/article/actress-priya-bhavani-shankar-cute-photoshoot-1788272128</id>
            <summary type="text">ப்ரியா பவானி ஷங்கர்விஜய் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்களில் நடித்து வெள்ளித்திரைக்கு சென்ற பிரபலங்கள் பலர் உள்ளனர்.&amp;nbsp;அப்படி விஜய்யி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ப்ரியா பவானி ஷங்கர்</h2><p>விஜய் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்களில் நடித்து வெள்ளித்திரைக்கு சென்ற பிரபலங்கள் பலர் உள்ளனர்.&nbsp;</p><p>அப்படி விஜய்யில் சீரியல்கள் நடித்து ஏகப்பட்ட ரசிகர்கள் வட்டாரத்தை பிடித்தவர் தான் ப்ரியா பவானி ஷங்கர். ஒரேஒரு சீரியல் அதனுடன் சினிமா பக்கமே வர மாட்டேன் என்றவர் இப்போது தமிழ் சினிமாவை தாண்டி மற்ற மொழிகளிலும் படங்கள் நடித்து அசத்தி வருகிறார்.</p><p>படங்களில் செம பிஸியாக இருக்கும் ப்ரியா பவானி ஷங்கர் அண்மையில் செம கியூட் போட்டோ ஷுட் வெளியிட்டுள்ளார். இதோ அந்த போட்டோஸ்,</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T14:20:47+00:00</updated>
        </entry>
    </feed>
