<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-04T13:41:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை உலுக்கிய சோகம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/4-members-same-family-death-landslide-ginigathena-1785847511"></link>
            <id>https://jvpnews.com/article/4-members-same-family-death-landslide-ginigathena-1785847511</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாட்டில் நிலவும் <a href="https://jvpnews.com/article/death-toll-from-disasters-rises-to-7-1785819725" target="_blank">சீரற்ற வானிலையால் மண்மேடு சரிந்து</a> விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>

நேற்று நுவரெலியா கினிகத்தென பொல்பிட்டியாவில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.


வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்த நிலையிலே குறித்த நான்கு பேரும் மண்ணில் புதையுண்டு உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d02d4423-7327-479f-b699-f6a4319d119f/26-6a71ded8c8c12.webp' /></p><p>
சம்பவத்தில், குசும் ரத்நாயக்க (தாய்) ஷ்யாமா குமுதுனி ரத்நாயக்க, (மூத்த சகோதரி)மனேல் குமுதுனி ரத்நாயக்க (இளைய சகோதரி) மஹின்ச தினேத் ரத்நாயக்க (மகன்). ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.</p><p></p><p>&nbsp; நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T13:31:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏர் இந்தியா விமானம் குலுங்கியதில் 12 பயணிகள் காயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/12-passengers-injured-air-india-flight-turbulence-1785839287"></link>
            <id>https://canadamirror.com/article/12-passengers-injured-air-india-flight-turbulence-1785839287</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தாய்லாந்தின் பூக்கெட்டிலிருந்து புது டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று, இன்றைய (04) பயணத்தின்போது பலத்த காற்றினால் குலுங்கியது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தாய்லாந்தின் பூக்கெட்டிலிருந்து புது டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று, இன்றைய (04) பயணத்தின்போது பலத்த காற்றினால் குலுங்கியது. 

இதனால் விமானம் சிறிது நேரம் கீழே இறங்கியதுடன், இதன்போது குறைந்தது 12 பயணிகள் இலகுவான காயங்களுக்கு ஆளாகினர். </p><p>

பல்வேறு தகவல்களின்படி, இந்த சம்பவத்தின் போது விமானம் சுமார் 300 அடி உயரம் வரை கீழே இறங்கியதாக கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e32943e-2fac-41db-ba16-6714207c783e/26-6a71beb96dbcf.webp' /></p><p>
</p><p>
தேசியத் தலைநகரில் தரையிறங்கிய AI2379 விமானத்திலிருந்து அனைத்துப் பயணிகளும் விமானக் குழுவினரும் கீழே இறங்கியதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக விமான நிலையத்திலுள்ள மருத்துவ மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
</p><p>
விமானத்தின் உள்ளே எடுக்கப்பட்ட காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

ஜம்மு-காஷ்மீர் தலைநகரை நெருங்கும்போது, ​​டெல்லி-ஸ்ரீநகர் இண்டிகோ விமானம் ஒன்று கடுமையான ஆலங்கட்டி மழையால் ஏற்பட்ட கொந்தளிப்பில் சிக்கி, தரையிறங்க முயன்ற போது விமானத்தின் முன்பகுதி சேதமடைந்த ஒரு வருடத்திற்கும் மேலான காலத்திற்குப் பின்னர் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-04T13:30:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் இன்று 04 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/04-new-nests-identified-in-semmani-1785848940"></link>
            <id>https://tamilwin.com/article/04-new-nests-identified-in-semmani-1785848940</id>
            <summary type="text">செம்மணியில் இன்றையதினம்(04.08.2026) 43ஆம் நாள் அகழ்வு பணியின் போது, 04 என்பு கூடுகள்
புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.இந்நிலையில் ஏற்கனவே அடையாளம் காண...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணியில் இன்றையதினம்(04.08.2026) 43ஆம் நாள் அகழ்வு பணியின் போது, 04 என்பு கூடுகள்
புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p>இந்நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 2
என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.</p><p>அத்துடன் ஒரு மனித என்புக்கூட்டு
தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p></p><h2>இதுவரையில் 97 நாட்கள் அகழ்வு பணிகள்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80a578f1-db59-4860-89ca-feeed94553df/26-6a71e89a836a0.webp' /></p><p>

செம்மணி புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என
இதுவரையில் 97 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், 483 என்பு
கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 481 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c06c5ee5-e60e-4276-8f86-d4ba9512dbf6/26-6a71e89b62965.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8feb38e1-47d6-4022-bae3-f706b46529e9/26-6a71e89c39fb3.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T13:30:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சந்தானம் பட நடிகை ஆஞ்சல் சிங்கின் ஹனிமூன் புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/aanchal-singh-wedding-and-honeymoon-pics-1785845288"></link>
            <id>https://viduppu.com/article/aanchal-singh-wedding-and-honeymoon-pics-1785845288</id>
            <summary type="text">ஆஞ்சல் சிங்2013ல் இலங்கையில் ஹீரோயினாக அறிமுகமாகி சினிமாவில் எண்ட்ரி கொடுத்து பிரபலமானவர் தான் நடிகை ஆஞ்சல் சிங். பாலிவுட் படங்களில் நடித்த ஆஞ்சல், சி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஆஞ்சல் சிங்</h2><p>2013ல் இலங்கையில் ஹீரோயினாக அறிமுகமாகி சினிமாவில் எண்ட்ரி கொடுத்து பிரபலமானவர் தான் நடிகை ஆஞ்சல் சிங். பாலிவுட் படங்களில் நடித்த ஆஞ்சல், சிபிராஜின் ஜாக்சன் துறை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழில் எண்ட்ரி கொடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6c6294c-1227-4cfb-a299-d7a6d74cb169/26-6a71d62f8992b.webp' /></p><p> </p><p>அதன்பின் சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். பஞ்சாபி மொழிக்கு தாவிய ஆஞ்சல், 3 படங்களில் நடித்தப்பின் ஆளே காணாமல் போனார்.</p><p> இந்நிலையில் ஆஞ்சல் சிங் தன்னுடைய திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். ஒரு வாரத்திற்கு முன் அவருக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dba5a64a-5d1d-4613-be2b-f6fef57b5df3/26-6a71d630395ae.webp' /></p><p> </p><p>தற்போது திருமணம் முடிந்தநிலையில் தன்னுடைய கணவருடன் ஃபிரான்ஸ், கிரீஸ் நாடுகளுக்கு ஹனிமூன் சென்றுள்ளார். அங்கு எடுத்த ஹனிமூன் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பலரது வாழ்த்துக்களையும் பெற்று வருகிறார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Dbkk9mzDZSq/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Dbkk9mzDZSq/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Dbkk9mzDZSq/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Aanchal GS Singh (@anchalsinghofficial)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-04T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தைகளின் மனநலத்திற்கு தீங்கு; மூன்று வழக்குகளைத் தீர்க்க டிக்டாக் ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/harm-children-mental-health-tiktok-agrees-3cases-1785850258"></link>
            <id>https://canadamirror.com/article/harm-children-mental-health-tiktok-agrees-3cases-1785850258</id>
            <summary type="text">&amp;nbsp; டிக்டாக் சமூக ஊடகத் தளத்தில் போதையூட்டும் உள்ளடக்கங்களை உருவாக்கி, இளைஞர்களின் மனநலத்திற்குத் தீங்கு விளைவித்ததாகக் குற்றம் சாட்டித் தொடரப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; டிக்டாக் சமூக ஊடகத் தளத்தில் போதையூட்டும் உள்ளடக்கங்களை உருவாக்கி, இளைஞர்களின் மனநலத்திற்குத் தீங்கு விளைவித்ததாகக் குற்றம் சாட்டித் தொடரப்பட்ட மூன்று வழக்குகளைத் தீர்த்துக்கொள்ள டிக்டாக் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
</p><p>
கலிபோர்னியா மாநில நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சுமார் 3,300 ஒத்த வழக்குகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சோதனை வழக்குகளாக இந்த மூன்று வழக்குகளும் கருதப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7f18e3a-3736-4b0a-af78-59a75bc8d553/26-6a71e99454194.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ், கூகுளுக்கு சொந்தமான யூடியூப் மற்றும் ஸ்னாப் இன்க். ஆகியவற்றுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன, </p><p>மேலும் அவை ஒக்டோபரில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளை 15 முதல் 18 வயதுக்குட்பட்ட மூன்று இளைஞர்கள் தாக்கல் செய்துள்ளனர்.
</p><p>
சமூக ஊடகத் தளங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் பதட்டம், மனச்சோர்வு, தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளுதல் மற்றும் உண்ணுதல் கோளாறுகள் போன்ற மனநலப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><p>

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளன, மேலும் இளம் பயனர்களைப் பாதுகாக்க விரிவான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-04T13:29:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது டொனால்ட் ட்ரம்ப் பாய்ச்சல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/donald-trump-lashes-out-at-iran-1785849953"></link>
            <id>https://canadamirror.com/article/donald-trump-lashes-out-at-iran-1785849953</id>
            <summary type="text">ஈரான் மீது டொனால்ட் ட்ரம்ப் பாய்ச்சல்!

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல்கள் தொடர்பில் ஈரான் இரட்டை வேடம் போடுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது டொனால்ட் ட்ரம்ப் பாய்ச்சல்!

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல்கள் தொடர்பில் ஈரான் இரட்டை வேடம் போடுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றாஞ்சாட்டியுள்ளார்.</p><p>



இது தொடர்பில், தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.



அந்த பதிவில்,ஈரானின் தலைவர்கள், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் கெஞ்சிக் கேட்கின்றனர். ஆனால் பொதுவெளியில் தாங்கள் அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c4020c7-2f03-4811-b389-62a0840b1c4d/26-6a71e86807c7d.webp' /></p><p>
</p><p>


அதுமட்டுமன்றி ஓமன் நாட்டுடன் மட்டுமே பேசி வருகிறோம் என்று கூறி ஈரான் தலைவர்கள் இரட்டை வேடம் போடுகின்றனர் என்று ட்ரம்ப் குற்றாஞ்சாட்டியுள்ளார்.</p><p>



ஹார்முஸ் ஜலசந்தி, முழுமையாக அமெரிக்கக் கடற்படையின் கட்டுப்பாட்டிலும், அமெரிக்காவின் 'எஃகு சுவர்' போன்ற கடற்படை முற்றுகையிலும் தான் இயங்குகிறது.அமெரிக்கா அனுமதித்தால் மட்டுமே அங்கு எதுவும் நடக்கும்.
</p><p>


ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக ஈரான் அளிக்கும் விளக்கங்கள் வெற்றுப் பேச்சுக்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><p>



ஈரான் எக்காலத்திலும் அணு ஆயுதங்களைப் பெற அனுமதிக்கப்பட மாட்டாது என்றும், ஓர் ஒப்பந்தம் ஏற்படும் வரை அல்லது அவர்கள் முற்றிலுமாகச் சரணடையும் வரை இந்த ராணுவ மற்றும் பொருளாதார முடக்கம் தொடரும் என்றும் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-04T13:23:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய வம்சாவளி அமெரிக்கா கிரிக்கெட் வீரருக்கு 8 ஆண்டுகள் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/icc-bans-india-origin-usa-cricketer-akhilesh-reddy-1785849470"></link>
            <id>https://news.lankasri.com/article/icc-bans-india-origin-usa-cricketer-akhilesh-reddy-1785849470</id>
            <summary type="text">இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க கிரிக்கெட் வீரர் போடுகம் அகிலேஷ் ரெட்டிக்கு ஐசிசி 8 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. 

அகிலேஷ் ரெட்டிக்கு ஐசிசி 8 ஆண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க கிரிக்கெட் வீரர் போடுகம் அகிலேஷ் ரெட்டிக்கு ஐசிசி 8 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. </p><h3>

அகிலேஷ் ரெட்டிக்கு ஐசிசி 8 ஆண்டுகள் தடை
</h3><p>
இந்திய வம்சாவளியான போடுகம் அகிலேஷ் ரெட்டி, அமெரிக்க கிரிக்கெட் அணிக்காக 4 சர்வதேச T20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8788d074-41be-40b2-8e49-da0415622367/26-6a71e67fa8979.webp' /></p><p>

நவம்பர் 19, 2025 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற அபுதாபி டி10 தொடரின்போது, 'ஆஸ்பின் ஸ்டாலியன்ஸ்' அணியின் முதல் போட்டிக்கு முன்பாக, ஹொட்டல் அறையில் தனது சக வீரர் ஒருவரை பந்துவீச்சின்போது திட்டமிட்டு கூடுதல் ஓட்டங்களை விட்டுக்கொடுக்குமாறு வறுபுறுத்தியுள்ளார். </p><p>

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அந்த வீரர், உடனடியாக ஐசிசியின் ஊழல் தடுப்புப் பிரிவில் (ACU) புகார் அளித்துள்ளார்.&nbsp;</p><p></p><p> 

போட்டி தொடங்கும் முன்பாகவே அவர் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து, நவம்பர் 21 ஆம் திகதி தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டார்.</p><p> 

 இது குறித்து ஐசிசி ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் நடத்திய விசாரணையில், போட்டியின் முடிவை அல்லது போக்கை தவறான முறையில் மாற்ற முயன்றது, மற்றொரு வீரரை சூதாட்டம் தொடர்பான ஊழலில் ஈடுபட தூண்டியது மற்றும் விசாரணைக்கு தேவையான வாட்ஸ்அப் செய்திகள் உள்ளிட்ட ஆவணங்களை அழித்தது ஆகிய 3 குற்றச்சாட்டுகளை உறுதி செய்தது. </p><p>

இதனையடுத்து, கிரிக்கெட் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட அகிலேஷ் ரெட்டிக்கு ஐசிசி 8 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. </p><p>

இந்த தடை அவர் இடைநீக்கம் செய்யப்பட்ட நவம்பர் 21 ஆம் திகதி முதல் பொருந்தும் என்பதால்,2033 நவம்பர் 21 வரை அவர் கிரிக்கெட் விளையாட முடியாது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T13:17:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்.., அவசியம் தெரிஞ்சிக்கோங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/lung-cancer-early-signs-in-tamil-1785842420"></link>
            <id>https://manithan.com/article/lung-cancer-early-signs-in-tamil-1785842420</id>
            <summary type="text">நுரையீரல் புற்றுநோய் உலகளவில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் புற்றுநோய்களில் ஒன்றாக உள்ளது. 

நுரையீரல் புற்றுநோய் என்பது நுரையீரலில் உள்ள செல்களின் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுரையீரல் புற்றுநோய் உலகளவில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் புற்றுநோய்களில் ஒன்றாக உள்ளது. </p><p>

நுரையீரல் புற்றுநோய் என்பது நுரையீரலில் உள்ள செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியாகும்.</p><p>

புகைபிடித்தல், நச்சு வாயுக்கள் மற்றும் மரபியல் காரணங்களால் இது ஏற்படுகிறது. </p><p>

ஆரம்ப நிலையில் இதன் அறிகுறிகள் சாதாரண சுவாச பிரச்சினைகளைப் போல இருப்பதால், பலருக்கு நோய் தாமதமாகவே கண்டறியப்படுகிறது.</p><p>
</p><p>ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிந்து சிகிச்சை பெற்றால், குணமடையும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>
அந்தவகையில், நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் குறித்து பார்க்கலாம்.</p><h2>யாருக்கு அதிக ஆபத்து?</h2><p>

நேரடியாக அல்லது மறைமுகமாக புகைப்பிடிக்கும் புகைக்கு ஆளாகுபவர்கள்.
</p><p>
காற்று மாசுபாடு, அஸ்பெஸ்டாஸ், சிலிக்கா போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களுடன் பணிபுரிபவர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/890bc0a4-5796-464a-a129-a726359740ff/26-6a71cb7449984.webp' />
</p><p>
நச்சு வாயுக்களுக்கு அடிக்கடி ஆளாகுபவர்கள்.
</p><p>
குடும்பத்தில் நுரையீரல் புற்றுநோய் வரலாறு உள்ளவர்கள்.
</p><p>
நீண்டகால நுரையீரல் நோய்கள் உள்ளவர்கள்.
</p><h2>
கவனிக்க வேண்டிய அறிகுறிகள்
</h2><ul><li>
மூன்று வாரங்களுக்கு மேல் நீடிக்கும் இருமல்.
</li><li>
இருமலுடன் ரத்தம் வருதல்.
</li><li>
காரணமின்றி உடல் எடை குறைதல் மற்றும் பசி குறைதல்.
</li><li>
நெஞ்சுவலி அல்லது மூச்சுத்திணறல்.
</li><li>
மீண்டும் மீண்டும் நெஞ்சுத் தொற்று ஏற்படுதல்.
</li><li>
தொடர்ந்து குரல் கரகரப்பாக இருப்பது அல்லது அதிக சோர்வு.</li></ul><h2>தடுப்பது எப்படி?
</h2><ul><li>புகைப்பிடிப்பதை முழுமையாக நிறுத்த வேண்டும்.</li><li>
பிறர் புகையை சுவாசிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
</li><li>காற்று மாசுபாடு மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
</li><li>நீடித்த இருமல் அல்லது சுவாசப் பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.</li></ul>]]></content>
            <updated>2026-08-04T13:14:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்வி அமைச்சின் அலட்சியப் போக்கை எதிர்த்து ஆசிரியர் - அதிபர் கூட்டமைப்பு போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/teacher-principal-federation-protest-1785847024"></link>
            <id>https://tamilwin.com/article/teacher-principal-federation-protest-1785847024</id>
            <summary type="text">கல்வித் துறையில் நிலவும் பல்வேறு நெருக்கடிகளுக்குத் தீர்வு கோரியும், இலவசக்
கல்வியைப் பாதுகாக்கவும் வலியுறுத்தியும், ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கக்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்வித் துறையில் நிலவும் பல்வேறு நெருக்கடிகளுக்குத் தீர்வு கோரியும், இலவசக்
கல்வியைப் பாதுகாக்கவும் வலியுறுத்தியும், ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கக்
கூட்டமைப்பு சார்பில், கொழும்பு - பத்தரமுல்லையிலுள்ள 'இசுருபாய' கல்வி
அமைச்சுக்கு முன்பாக இன்று (08.04.2026) கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p>
இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கை ஆசிரியர் சங்கத்தின்
பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின், அரசின் தற்போதைய கல்விப் போக்கையும் கல்விச்
சீர்திருத்தங்களையும் கடுமையாகச் சாடினார்.
</p><p>
கல்வி சீர்திருத்தங்கள், பரீட்சை முறை மாற்றம் மற்றும் புதிய கல்வித்
திட்டங்கள் குறித்துக் கல்வி அமைச்சரும் அதிகாரிகளும் மேடைக்கு மேடைப்
பேசினாலும், நடைமுறையில் எந்தவித முன்னேற்றமும் இன்றி வெறும் காலத்தைக்
கடத்தும் தந்திரங்களையே அரசாங்கம் கையாள்கின்றது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.</p><p></p><p>
</p><p>
மேலும், அரசாங்கம் படிப்படியாக இலவசக் கல்வியைச் சீரழித்து, கல்வித் துறையைத்
தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது என்றும், மறுபுறம் அரச
பல்கலைக்கழகங்களில் கல்வித் துறையில் பட்டம் பெற்ற 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
பட்டதாரிகள் ஆசிரியர்களாக நியமிக்கப்படாமல் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர்
என்றும் அவர் கவலை வெளியிட்டார்.
</p><p>
எனவே, இலவசக் கல்வி உரிமையைப் பாதுகாக்கவும், கல்வித் துறையின்
தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும் அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட்டுப் போராட
வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
</p><p>
இந்தப் போராட்டத்தின் போது, பாடத்திட்டத் தொகுதிகள் மற்றும் பதவி உயர்வுகளில்
ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு உடனடியாகத் தீர்வு வழங்கக் கோரிப்
பிரதான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cd454b2-6573-457c-bd9a-5f91d7c72931/26-6a71e2e881127.webp' /></p><h2>'மொடியூல்' சிக்கல்களுக்குத் தீர்வு</h2><p>

'மொடியூல்' முறையினால் பாதிக்கப்பட்டு அவற்றைப் பூர்த்தி செய்ய முடியாத
ஆசிரியர்களுக்கு எந்தவித நிபந்தனையுமின்றி பதவி உயர்வுகளை வழங்க வேண்டும்.
</p><p>அத்துடன், அவர்களின் சேவையை உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும் மற்றும் பகுதி
அளவில் மொடியூல்களைப் பூர்த்தி செய்த ஆசிரியர்களை எஞ்சிய தடைகளில் இருந்து
விடுவிக்க வேண்டும். </p><h2>நிபந்தனையற்ற பதவி உயர்வு</h2><p>
கடந்த 30.06.2025 வரை நிபந்தனையுடன் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு
முந்தைய தரநிலைத் தடைகளில் இருந்து விலக்களிக்க வேண்டும்.</p><h2>மறுமதிப்பீடுகளுக்குத் தடை</h2><p></p><h2> </h2><p>ஏற்கனவே மொடியூல்களைப் பூர்த்தி செய்து எதிர்காலத்தில் பதவி உயர்வு பெறவுள்ள
ஆசிரியர்களை மீண்டும் மீண்டும் மதிப்பீடுகளுக்கு அல்லது பரீட்சைகளுக்கு
உட்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். </p><h2>புதிய மொடியூல் உள்ளடக்கம்</h2><p>
புதிய மொடியூல்களின் உள்ளடக்கங்களை உடனடியாக ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b66350fa-6c7b-4fe0-a60a-e2093253987d/26-6a71e2e96ee7d.webp' /></p><p>
</p><p>
கல்வி அமைச்சு ஆசிரியர்களின் நியாயமான இந்தக் கோரிக்கைகளுக்கு உடனடியாகச்
செவிசாய்க்கத் தவறினால், வரும் நாள்களில் இந்தப் போராட்டங்கள் மேலும்
தீவிரமடையும் என்று ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின்
பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T13:13:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் தொடர்ந்து இடம்பெறும் மின்தடை: மின் பாவனையாளர்கள் விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/power-outages-in-mannar-electricity-consumer-1785848902"></link>
            <id>https://tamilwin.com/article/power-outages-in-mannar-electricity-consumer-1785848902</id>
            <summary type="text">மன்னார் பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு பகல் பாராது தொடர்ச்சியாக அடிக்கடி
மின் தடை ஏற்படுவதாகவும், இதனால் மின் பாவனையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு பகல் பாராது தொடர்ச்சியாக அடிக்கடி
மின் தடை ஏற்படுவதாகவும், இதனால் மின் பாவனையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு
முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

அடிக்கடி மின் தடை காரணமாக எதிர்வரும் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்
தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்து
வருவதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக சீரான மின் விநியோகம் இடம் பெற்று வந்த
நிலையில் தற்போது தொடர்ச்சியாக இரவு பகல் பாராது மின்தடை ஏற்பட்டு வருகிறது.</p><p></p><h2>மின்தடை</h2><p>
</p><p>
திடீர் திடீர் என இரவு பகல் பாராது மின்தடை ஏற்படுவதால் மின் பாவனையாளர்களின் மின் உபகரணங்கள் சேதமடைவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>மேலும் கடந்த காலங்களில் பரீட்சை காலம் நெருங்கு கின்ற போது மன்னாரில்
அடிக்கடி மின் தடை ஏற்படுவதை போன்று தற்போது புலமைப்பரிசில் பரீட்சை மற்றும்
உயர் தர பரீட்சை நெருங்கும் காலப்பகுதியில் குறித்த மின்தடை இடம் பெற்று
வருவதாக மின் பாவனையாளர்களும்,மாணவர்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1465099-7d84-49e2-aae8-8fd85b022134/26-6a71e5510c4ab.webp' /></p><p>
</p><p>
குறித்த மின் தடை தொடர்பாக மன்னார் மின்சார சபை அதிகாரிகள் மற்றும் வடக்கிற்கு
பொறுப்பான மின்சார சபை அதிகாரிகள் உரிய பதிலை வழங்குவதில்லை என
பாதிக்கப்பட்டவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த உரிய அதிகாரிகள் குறித்த விடையத்தில் கவனம்
செலுத்தி அடிக்கடி ஏற்படும் மின் தடையை நிவர்த்தி செய்ய துரித நடவடிக்கை
எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T13:12:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/good-news-for-public-servants-1785848189"></link>
            <id>https://ibctamil.com/article/good-news-for-public-servants-1785848189</id>
            <summary type="text">பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தலைமையில், அரசு ஊழியர்கள் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் பணிகள் இன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தலைமையில், அரசு ஊழியர்கள் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் பணிகள் இன்று (04) ஆணைக்குழு அலுவலகத்தில் அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டன.
</p><p>
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவால் முன்வைக்கப்பட்ட ஒரு முன்மொழிவின்படி இந்த ஆணைக்குழு நிறுவப்பட்டுள்ளது.</p><h2>சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான&nbsp; பிரச்சனைகளுக்குத் தீர்வு</h2><p>2026 ஜூன் 22 திகதியிட்ட விசேட வர்த்தமானி எண் 2494/05-இல் இது அறிவிக்கப்பட்டது.

ஓய்வுபெற்ற அமைச்சக செயலாளர் அசோக பீரிஸ் தலைவராகவும், நாலக்க திசாநாயக்க செயலாளராகவும் கொண்ட இந்த ஆணைக்குழுவில் பதினைந்து உறுப்பினர்கள் உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adc1d3fe-fa2b-4da6-9e13-cd72520f9434/26-6a71e3f1b2a6e.webp' /></p><p>
</p><p>
அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான தற்போதைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது, அரசு ஊழியர்களின் தொழில்முறையை மேம்படுத்துவது, மற்றும் புதிய தொழில்நுட்பப் போக்குகள் மற்றும் உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப பொதுச் சேவையை எவ்வாறு கட்டமைப்பு ரீதியாக சீர்திருத்த வேண்டும் என்பது குறித்த பரிந்துரைகளை வழங்குவது ஆகிய பொறுப்புகள் இந்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T13:10:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இடம்பெற்ற சுற்றுலா துறைசார்ந்த முக்கிய கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/important-discussion-tourism-sector-held-in-jaffna-1785848119"></link>
            <id>https://tamilwin.com/article/important-discussion-tourism-sector-held-in-jaffna-1785848119</id>
            <summary type="text">சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்கவின் பங்கேற்புடன் யாழில்
சுற்றுலா துறைசார்ந்த முக்கிய கலந்துரையாடல் இன்று(04.08.2026) இடம்பெற்றது.

யாழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்கவின் பங்கேற்புடன் யாழில்
சுற்றுலா துறைசார்ந்த முக்கிய கலந்துரையாடல் இன்று(04.08.2026) இடம்பெற்றது.
</p><p>
யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணநாதன் இளங்குமரன், றஜீவன்
ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோரும் வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்தி பணியக
தலைவர் ஜெ.விவேகானந்தன் உள்ளிட்ட சுற்றுலா துறைசார்ந்த அதிகாரிகள், சுற்றுலா
பொலிஸார், முதலீட்டாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் என பலரும் கலந்துகொண்டனர்.</p><p></p><h2>சுற்றுலா பகுதிகளுக்கு விஜயம்</h2><p>இதன்போது சுற்றுலா துறைசார்ந்த நிலவும் பிரச்சினைகள், சவால்கள் தொடர்பாக
கலந்துரையாடப்பட்டு அது பற்றி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும்
ஆராயப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8133c11b-c5f0-4db1-85c7-9ddea5fb2f58/26-6a71e3a261964.webp' /></p><p>
காரைநகர் கசூரீனா கடற்கரை, நெடுந்தீவு உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு விஜயம்
செய்த பிரதி அமைச்சர் அங்குள்ள குறை நிறைகளை கேட்டறிந்து கொண்டதுடன்
எதிர்காலத்தில் செய்ய வேண்டிய விடயங்களையும் ஆராய்ந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf5b760a-25c1-4e42-9bd4-ff3551b8853b/26-6a71e3a33b65e.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T13:05:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[UAE-யில் பாஸ்போர்ட் புதுப்பிப்பு கட்டணம் உயர்வு- இந்தியர்கள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-expats-hope-passport-fee-cut-in-uae-1785848545"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-expats-hope-passport-fee-cut-in-uae-1785848545</id>
            <summary type="text">UAE: ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள், பாஸ்போர்ட் புதுப்பிப்பு கட்டண (Passport renewal fee) உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>UAE: ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள், பாஸ்போர்ட் புதுப்பிப்பு கட்டண (Passport renewal fee) உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

ஜூலை 1 முதல் பாஸ்போர்ட் புதுப்பிப்பு கட்டணம் 60 சதவீதம் அதிகரித்துள்ளது.

முன்பு AED 280 இருந்த கட்டணம் தற்போது AED 450-ஆக உயர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72282767-4d87-4cc2-b080-7cd1d5817640/26-6a71e2e3bce19.webp' /></p><p> இதனால், மாதம் AED 800-1000 சம்பளம் பெறும் குறைந்த வருமான தொழிலாளர்கள் பெரும் சுமையைச் சந்திக்கின்றனர்.
</p><p>
இந்த உயர்வுக்கு எதிராக Pravasi Legal Cell (PLC) எனப்படும் சமூக அமைப்பு, Delhi High Court-இல் பொதுநல வழக்கு (PIL) தாக்கல் செய்தது. அவர்கள், “இந்த கட்டண உயர்வு வெளிநாடுகளில் வாழும் தொழிலாளர்களுக்கு அநியாயமான சுமையை ஏற்படுத்துகிறது” என்று வாதிட்டுள்ளனர்.
</p><p></p><p>இதனைத் தொடர்ந்து, Delhi High Court, இந்திய வெளிநாட்டு விவகார அமைச்சகத்துக்கு (MEA) மூன்று வாரங்களுக்குள் மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டுள்ளது. தற்போது, அந்த காலக்கெடு முடிவடைய 10 நாட்கள் மட்டுமே உள்ளன.
</p><p>
UAE-யில் சுமார் 4.5 மில்லியன் இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் பாஸ்போர்ட் புதுப்பிப்பை GCC-இல் உள்ள இந்திய தூதரகங்கள் வழியாகச் செய்கிறார்கள். கட்டண உயர்வு இவர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
PLC அமைப்பு, முன்னாள் நீதிபதிகள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரால் நடத்தப்படுகிறது. அவர்கள், “இந்த கட்டண உயர்வு ரத்து செய்யப்படும்” என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

இந்த வழக்கு, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் சட்ட உரிமைகள் மற்றும் நிதி சுமை குறைப்பு தொடர்பான முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-04T13:00:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன் கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bad-weather-hatton-zonal-school-holiday-1785846703"></link>
            <id>https://tamilwin.com/article/bad-weather-hatton-zonal-school-holiday-1785846703</id>
            <summary type="text">நாளையதினம் (05), ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் மூட தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, மத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாளையதினம் (05), ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் மூட தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.</p><p>

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, மத்திய மாகாண கல்வி பணிப்பாளரின் ஆலோசனையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மோசமான வானிலை</h2><p>இது தொடர்பில் இன்று&nbsp;ஹட்டன் வலயக் கல்விப்பணிமனை உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c6fed54-771b-4b8b-ada0-5b241fb2b63e/26-6a71dfb418b79.webp' /></p><p>மோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் நாளை (05) முதல் மீண்டும் வழமையாக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.&nbsp;</p><p>இருப்பினும்,&nbsp;ஹட்டன் பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக,&nbsp;ஹட்டன் கல்வி வலய பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T12:48:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாந்தோட்டையில் யானை தாக்கி உணவக ஊழியர் ஒருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/injured-attacked-by-elephant-in-hambantota-1785846832"></link>
            <id>https://tamilwin.com/article/injured-attacked-by-elephant-in-hambantota-1785846832</id>
            <summary type="text">அம்பாந்தோட்டை போதனா வைத்தியசாலைக்கு அருகில் நேற்று(03.08.2026) மாலை இடம்பெற்ற காட்டு
யானைத் தாக்குதலில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

அம்பாந்தோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாந்தோட்டை போதனா வைத்தியசாலைக்கு அருகில் நேற்று(03.08.2026) மாலை இடம்பெற்ற காட்டு
யானைத் தாக்குதலில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.</p><p>

அம்பாந்தோட்டை போதனா வைத்தியசாலையின் உணவக ஊழியர் ஒருவரே இவ்வாறு யானையின்
தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
</p><p></p><h2>சம்பவம் தொடர்பான விசாரணை</h2><p>
அவர் மற்றொரு நபருடன் வைத்தியசாலைக்கு அருகிலுள்ள பகுதிக்குச் சென்றிருந்தபோதே
இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad2c0de2-1ed6-4fb2-8b56-10caf19934da/26-6a71df3e8193c.webp' /></p><p> இதன்போது, அவருடன் சென்ற மற்றைய நபர்
அதிர்ஷ்டவசமாக அங்கிருந்து ஓடித் தப்பியுள்ளார்.</p><p>தாக்குதலில் படுகாயமடைந்த நபர் உடனடியாக மீட்கப்பட்டு அம்பாந்தோட்டை போதனா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், தற்போது அங்கு தீவிர சிகிச்சை பெற்று
வருகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca55a440-7ee6-4e71-bb69-7c4b47b1d976/26-6a71df3f5280c.webp' /></p><p>
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாந்தோட்டை வனஜீவராசிகள்
திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T12:47:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pradhusas</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-bundles-of-kerala-cannabis-arrested-in-mannar-1785847246"></link>
            <id>https://tamilwin.com/article/man-bundles-of-kerala-cannabis-arrested-in-mannar-1785847246</id>
            <summary type="text">மன்னார்- தாழ்வுபாடு கிராமத்தில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளை பொலிஸார் மீட்டுள்ளதோடு நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

மன்னார் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார்- தாழ்வுபாடு கிராமத்தில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளை பொலிஸார் மீட்டுள்ளதோடு நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
</p><p>
மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று(3) மாலை விரைந்து செயல்பட்ட பொலிஸ் நிலை குற்றத்தடுப்பு பிரிவினர் தாழ்வுபாடு கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் சோதனையிட்டனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>இதன் போது குறித்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான
9 கிலோ 400 கிராம் எடை கொண்ட கேரள கஞ்சா பொதிகளை கைப்பற்றியதோடு சந்தேக நபர்
ஒருவரையும் கைது செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c2e38dd-a111-4e49-baf7-99947cef0369/26-6a71dedd97e05.webp' /></p><p>

கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள் மற்றும் கைது செய்யப்பட்ட நபர் மன்னார் பொலிஸ்
நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p>மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T12:45:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அகதி நாய் ...தமிழக பொலிஸார் தகாத வார்த்தையால் இலங்கை ஏதிலி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-refugee-dies-puzhal-abused-by-police-1785833881"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-refugee-dies-puzhal-abused-by-police-1785833881</id>
            <summary type="text">தமிழகம் - புழல் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் ஒன்றில் பொலிஸார் தகாத வார்த்தையால் ஏசியதால இலங்கை தமிழ் ஏதிலி உயிரை மாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகம் - புழல் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் ஒன்றில் பொலிஸார் தகாத வார்த்தையால் ஏசியதால இலங்கை தமிழ் ஏதிலி உயிரை மாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

குறித்த இலங்கை தமிழ் ஏதிலி அண்மையில் சிறை சென்று அண்மையில் விடுதலையானவர் என்றும் அவர் தினமும் பொலிஸ் நிலையம் சென்று கையொப்பம் இட்டு வருபவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84ce7e32-1623-43bf-8e8e-66820b7ab532/26-6a71a99b41910.webp' /></p><h2>அகதி நாய் என கூறி தகாத வார்த்தை</h2><p>
</p><p>
இந் நிலையில் ஒரு நாள் பொலிஸ் நிலையம் செல்லாத நிலையில் பின்பு கையெழுத்து இட சென்றபோது அங்கிருந்த பொலிஸார் , அகதி நாய் என கூறி தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகின்றது.</p><p></p><p> </p><p> 

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தமிழ் ஏதிலி, வீட்டுக்கு செல்லாது எலிமருந்தை குடித்து உயிரிழந்தாக கூறப்படுகின்றது. 

அவரது உயிரிழப்பை அடுத்து , புழல் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்கள் ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>
இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார், இளம் பெண்கள், மற்றும் ஆண்கள் என சுமார் 100 பேரை கைது செய்ததாக கூறப்படுகின்றது.

அதோடு முகாமை விட்டு மக்கள் வெளியேறாத வகையில் தடுத்ட்க்ஹதுடன், வெளியாட்கள் யாரும் முகாம் உள்ளே செல்வதற்கும் அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T12:43:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிஸ் சுற்றுலா செல்வோருக்கு ஒரு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-customs-warns-over-fake-goods-1785827785"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-customs-warns-over-fake-goods-1785827785</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்பவர்கள் எதையெல்லாம் கொண்டுசெல்லக்கூடாது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.



சுவிட்சர்லாந்துக்கு சுற்றுல...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்பவர்கள் எதையெல்லாம் கொண்டுசெல்லக்கூடாது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
</p><p>


சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்பவர்கள் எதையெல்லாம் கொண்டுசெல்லக்கூடாது என்பது குறித்து சுவிஸ் சுங்க அதிகாரிகள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.
</p><h3>
சுவிஸ் சுற்றுலா செல்வோருக்கு ஒரு எச்சரிக்கை</h3><p>

சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா வருபவர்கள், போலி ஆடம்பர கைப்பைகள், கைக்கடிகாரங்கள் மற்றும் நகைகளைக் கொண்டுவரக்கூடாது என்றும், அப்படிக் கொண்டுவந்தால் அவை பறிமுதல் செய்து அழிக்கப்படும் என்றும் சுவிஸ் சுங்க அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11507680-cb7f-42fa-b69e-58f63b5037d3/26-6a7191cb02926.webp' /></p><p>

அத்துடன், 10,000 சுவிஸ் ஃப்ராங்குகளுக்கு மேல் ரொக்கமோ அல்லது பத்திரங்களோ கொண்டு வந்தால், அது குறித்து கேட்கப்பட்டால் தெரியப்படுத்தவேண்டும் என்றும், 150 சுவிஸ் ஃப்ராங்குகளுக்கு அதிக தொகையுடைய பொருட்கள் வாங்கினால், அதற்கு மதிப்புக் கூட்டு வரி செலுத்தவேண்டியிருக்கும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
மேலும், பவளம், சிப்பிகள், தந்தம், குறிப்பிட்ட மரங்கள் அல்லது தாவரங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட உயிரினங்களிலிருந்து தயாரிக்கப்படும் நினைவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதங்களும் விதிக்கப்படலாம் என்றும் சுவிஸ் சுங்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T12:40:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குற்றங்களைத் தீர்க்க உதவும் கமெராக்களை மோசமான விடயங்களுக்காக பயன்படுத்தும் அமெரிக்க பொலிசார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-police-accused-of-misusing-cctv-cameras-1785847185"></link>
            <id>https://news.lankasri.com/article/us-police-accused-of-misusing-cctv-cameras-1785847185</id>
            <summary type="text">அமெரிக்க பொலிசாரில் பலர் குற்றவாளிகளை கண்காணிப்பதற்கான கமெராக்களை, தங்கள் முன்னாள் இந்நாள் மனைவிகள், காதலிகளை கண்காணிக்க பயன்படுத்தியது தெரியவந்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க பொலிசாரில் பலர் குற்றவாளிகளை கண்காணிப்பதற்கான கமெராக்களை, தங்கள் முன்னாள் இந்நாள் மனைவிகள், காதலிகளை கண்காணிக்க பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.</p><p>


அமெரிக்கா முழுவதும், பொலிசாரில் பலர் குற்றவாளிகளை கண்காணிப்பதற்கான கமெராக்களை பயன்படுத்தி, தங்கள் முன்னாள் இந்நாள் மனைவிகள், காதலிகள், தங்களுக்குத் தெரிந்த பெண்கள் முதலானோரை பின் தொடர்ந்ததும், துன்புறுத்தியதும் தெரியவந்துள்ளது.
</p><h3>
கவனம் ஈர்த்த சம்பவம்</h3><p>

ஜார்ஜியாவைச் சேர்ந்த மார்ஸ்லி பேக்லீ என்னும் பெண், பொலிசாரான தன் முன்னாள் காதலர் மைக்கேல் ஸ்டெஃப்மேன் தன்னை கண்காணிப்பதை தெரிந்துகொண்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c7b7339-6dc4-4938-85c4-d339704899eb/26-6a71dd93602d7.webp' /></p><p>
மார்ஸ்லி எந்த கடைக்கு செல்கிறார், எந்த மருத்துவரை சந்திக்கிறார், யார் யாரை சந்திக்கிறார் என அனைத்து விடயங்களும் மைக்கேலுக்கு தெரிந்துள்ளது.
</p><p>
தன் வீட்டில் மைக்கேல் கமெரா எதையாவது மறைத்துவைத்துள்ளாரா, அல்லது ஜிபிஎஸ் மூலம் தன்னை கண்காணிக்கிறாரா என தேடிய மார்ஸ்லி, ஒரு கட்டத்தில் மைக்கேல் தன்னைப் பின்தொடர்வதாக முடிவே செய்துள்ளார்.
</p><p>
பின்னர், தான் குற்றவாளிகளை கண்காணிக்க பயன்படும், Flock Safety camera என்னும் கமெராவைப் பயன்படுத்தித்தான் மார்ஸ்லியின் நடமாட்டத்தைக் கண்காணித்ததாக மைக்கேல் ஒப்புக்கொண்டுள்ளார்.
</p><p>
அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், மைக்கேல் 13 மாதங்களாக சுமார் 600 முறை மார்ஸ்லியையும் அவரது மகளையும் கண்காணித்தது தெரியவந்தது.&nbsp;</p><p></p><p>

2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மைக்கேல் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது பெண்களை பின்தொடர்தல், துன்புறுத்துதல் மற்றும் கண்காணிப்பு கமெராக்களை தவறாக பயன்படுத்தியது முதலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
</p><p>
துரதிர்ஷ்டவசமாக, வழக்கு விசாரணைக்கு வரும் முன்பே, 2026ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் மைக்கேல் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
</p><h3>
குறைந்தது 50 சம்பவங்கள்</h3><p>

விடயம் என்னவென்றால், இப்படி பெண்களை பின்தொடர்ந்து துன்புறுத்தியதாக நாடு முழுவதும் குறைந்தது 50 பொலிசார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது அல்லது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0f4dad2-10da-425f-83c4-c2d12c78ddaf/26-6a71dd92ad935.webp' /></p><p>
அவற்றில் 26 வழக்குகளில் பொலிசார் தங்கள் முன்னாள் இந்நாள் மனைவிகள், காதலிகள், தங்களுக்குத் தெரிந்த பெண்கள், தாங்கள் சந்திக்க விரும்பும் பெண்கள் என பலரை பின்தொடர்ந்ததும் துன்புறுத்தியதும் ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.</p><p>

இந்த விடயம் வெளியாகி பரபரப்பை உருவாக்கியுள்ள நிலையில், சம்பந்தப்பட கமெராக்களை தயாரிக்கும் நிறுவனம், கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை சேர்க்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
</p><p>
ஆனால், அதற்கு முன்பே, இந்த நடவடிக்கைகளால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளார்கள்.
</p><p>
பயந்துபோய், வழக்கமான அன்றாட வேலைகளை மாற்றிக்கொண்டது, உறவினர்களின் வாகனங்களை வாங்கி பயன்படுத்துவது, தங்களைக் கண்காணிப்பது முடிந்தும், அது தெரியாமல் பயந்துகொண்டே இருந்தது என தாங்கள் அனுபவித்த துன்பங்கள், மக்களை பாதுகாக்கவேண்டிய பொலிசாரே, தங்களைத் தொடர்ந்து கண்காணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திவிட்டதாக அந்தப் பெண்கள் தெரிவித்துள்ளார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T12:39:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவை வழிநடத்த தயாரான தோற்றமா என விமர்சனம்: காரணமாக அமைந்த புகைப்படம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/louise-haigh-dressed-to-start-work-for-uk-1785846993"></link>
            <id>https://news.lankasri.com/article/louise-haigh-dressed-to-start-work-for-uk-1785846993</id>
            <summary type="text">பிரித்தானியாவின் மிக மூத்த அமைச்சராக பொறுப்பேற்றுள்ள லூயிஸ் ஹேக்கின் காலணி கேள்வியை எழுப்பியுள்ளது.&amp;nbsp;லூயிஸ் ஹேக்&amp;nbsp;
ஆண்டி பர்ன்ஹாம் விடுமுறைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் மிக மூத்த அமைச்சராக பொறுப்பேற்றுள்ள லூயிஸ் ஹேக்கின் காலணி கேள்வியை எழுப்பியுள்ளது.&nbsp;</p><h2>லூயிஸ் ஹேக்&nbsp;</h2><p>
ஆண்டி பர்ன்ஹாம் விடுமுறைக்காக வெளிநாடு சென்றதைத் தொடர்ந்து, பிரித்தானியாவின் மிக மூத்த அரசு அமைச்சராக லூயிஸ் ஹேக் (Louise Haigh) பொறுப்பேற்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7826e2d8-6def-4efd-a045-0d5c67a86a05/26-6a71dcd42dc3f.webp' />&nbsp;</p><p></p><p>
39 வயதான லூயிஸ் ஹேக் First Secretary of State என்ற பதவியின் மூலம் செயல்பட உள்ள நிலையில், ஒயிட்ஹாலில் தனது கடமைகளை செய்துகொண்டிருந்தபோது புகைப்படம் எடுக்கப்பட்டார். </p><p>

அப்போது தேய்ந்துபோன விளையாட்டு காலணிகளுடன் நடந்து சென்றது லூயிஸ் கவனிக்கப்பட்டது. இது தற்போது பிரித்தானியாவை வழிநடத்த தயாரான தோற்றமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.&nbsp;</p><h2>முதல் அரசு செயலாளர்</h2><p>
1960-களின் பிற்பகுதியில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பார்பரா கேஸில் வகித்த 'முதல் அரசு செயலாளர்'; அதாவது மற்ற அனைத்து அரசு செயலாளர்களையும் விட உயர்ந்த அந்தஸ்தைக் குறிக்கும் பதவி - என்ற பொறுப்பை வகிக்கும் முதல் பெண்மணி இவராவார்.</p><p> 

'ரெட் லூ' என்று அழைக்கப்படும் லூயிஸ் ஹேக், இந்த வாரம் வழக்கம் போல் பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>

ஆனால், பிரதமர் பர்ன்ஹாம் இல்லாத நிலையில் அவர் அன்றாட முடிவுகளை எடுக்க மாட்டார் என எண் 10 (டவுனிங் ஸ்ட்ரீட்) வலியுறுத்தியுள்ளது.
</p><p>
இந்த சூழலில்தான் அவர் செவ்வாயன்று சாம்பல் நிற பேன்ட் சூட், வெளிர் நிற கை இல்லாத மேலாடை மற்றும் தேய்ந்துபோன ஒரு ஜோடி வெள்ளை அடிடாஸ் காலணிகளுடன் அமைச்சரவை அலுவலகத்திற்குள் நுழைவது காணப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5132cd59-e284-4360-848c-f2a49eae1fe2/26-6a71dcd4dfd33.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T12:34:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய் டிவியில் முடிவுக்கு வரப்போகும் ஹிட்டாக ஒளிபரப்பாகும் சீரியல்... எந்த தொடர் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/hit-serial-coming-to-an-end-in-vijay-tv-1785844664"></link>
            <id>https://cineulagam.com/article/hit-serial-coming-to-an-end-in-vijay-tv-1785844664</id>
            <summary type="text">விஜய் டிவிதமிழில் ரசிகர்கள் ரசித்து பார்க்கும் தொலைக்காட்சிகளில் ஒன்றாக உள்ளது விஜய் டிவி. சீரியல்கள் மூலம் இவர்கள் முதலில் ரீச் பெறவில்லை, மாறாக வித்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>விஜய் டிவி</h2><p>தமிழில் ரசிகர்கள் ரசித்து பார்க்கும் தொலைக்காட்சிகளில் ஒன்றாக உள்ளது விஜய் டிவி. சீரியல்கள் மூலம் இவர்கள் முதலில் ரீச் பெறவில்லை, மாறாக வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்கள் மூலம் மக்களிடம் ரீச் ஆனார்கள்.</p><p>ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், நிறைய கேம் ஷோக்கள், காமெடி ஷோக்கள் என நிறைய ஒளிபரப்பாகி இருக்கிறது. இப்போதும் அப்படிபட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானாலும் சில வருடங்களுக்கு முன் ஒளிபரப்பான ஷோக்கள் தான் ரசிகர்களின் பேவரெட்டாக உள்ளது.</p><p>விஜய் டிவியில் எந்த ஒரு ஷோ எடுத்தாலும் அதில் மாகாபா ஆனந்த்-பிரியங்கா வந்துவிடுவார்கள், இவர்கள் இல்லாத நிகழ்ச்சியே இல்லை என்றாகிவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e15ef912-bbad-4385-a5cc-782fd523c286/26-6a71d70accbd0.webp' /></p><h2>கிளைமேக்ஸ்</h2><p>ரியாலிட்டி ஷோக்கள் மூலம் மக்களிடம் ரீச் ஆனவர்கள் அடுத்து சீரியல்களில் கலக்க தொடங்கினர். இப்போது சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, அழகே அழகு என நிறைய வெற்றிகரமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a31bf4e7-6cee-4425-a20d-1794681abad1/26-6a71d709d7cc2.webp' /></p><p>தற்போது என்னவென்றால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு சீரியல் முடிவுக்கு வரப்போகும் தகவல் வந்துள்ளது.</p><p>அதாவது இரண்டு ஜோடிகளின் வாழ்க்கை கதையாக ஒளிபரப்பாகி வந்த சிந்துபைரவி தொடர் விரைவில் கிளைமேக்ஸ் எட்ட உள்ளதாம்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DbnTC0byYif/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DbnTC0byYif/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DbnTC0byYif/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Hemalatha V (@tamilserialexpress)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-04T12:30:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[திரிஷாவிடம் உதயநிதி ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கணும்!! நடிகை குஷ்பூ கண்டனம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/udhayanidhi-should-ask-apology-with-trisha-khusbu-1785844577"></link>
            <id>https://viduppu.com/article/udhayanidhi-should-ask-apology-with-trisha-khusbu-1785844577</id>
            <summary type="text">மேகதாதுவில் அணை கட்டுவது, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து தஞ்சாவூரில் திமுக கட்சி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய உதயநிதி, முத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேகதாதுவில் அணை கட்டுவது, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து தஞ்சாவூரில் திமுக கட்சி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய உதயநிதி, முதலமைச்சர் விஜய்யை, நடிகை திரிஷாவுடன் ஒப்பிட்டு தரக்குறைவாக பேசியதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இன்று அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.</p><p> உதயநிதியின் கைதை கண்டித்து, அவர் பேசியதை எதிர்ப்பும் கிளம்பி வரும் நிலையில், நடிகையும், பாஜக மாநில துணைத்தலைவருமான குஷ்பூ எக்ஸ் தளத்தில் தன்னுடைய கருத்தை பகிர்ந்திருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/454146f4-1327-44ba-aa7c-700faa02bc8b/26-6a71d36422f16.webp' /></p><h2>நடிகை குஷ்பூ</h2><p> உதயநிதி ஸ்டாலினின் பேச்சை கேட்டேன். மிகவும் தரக்குறைவாக, மலிவாகவும், பெண்களின் கண்ணியத்தை இழவுபடுத்தும் வகையிலும் பேசியுள்ளார். வாரிசு அரசியல் கலாசாரத்தின் பிரதிபலிப்பாக உதயநிதி பேச்சு இருந்தது. இந்த மனநிலையில் இருப்பவர்கள் ஒரு அரசியல் கட்சியை எப்படி வழிநடத்துவார்கள்.</p><p> இவர்கள் தான் நாளை தமிழகத்தை ஆளவும் விரும்புகிறார்கள். நம்மை கடவுள்தான் காப்பாற்ற வேண்டு, பெண்களை இழிவுபடுத்துவதையும், அவமதிப்பையும், கேவலப்படுத்துவதையும் அரசியல் நாடமாக்குகிறார்கள். </p><p>அதற்கு தங்கள் ஆதரவாளர்களின் கைத்தட்டல், விசில் எதிர்பார்த்து பேசுவோரிடம் வேறு என்ன எதிர்ப்பார்க்க முடியும். இதை சாதாரணமாக கடந்து செல்லமுடியது. சாதாரணமாக நினைப்பவர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்கிறேன். பெண்களின் கண்ணியம் அரசியல் பலிபீடமாக மாறுகிறது. உங்கள் குடும்பம் உட்பட எந்த குடும்பமும் அதன் விளைவுகளிலிருந்து தப்பிக்க முடியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98fc8e54-2d63-451e-a736-096901951211/26-6a71d364e75c2.webp' /></p><p> அரசியல் கருத்து வேறுபாடுகள் இயல்புதான், ஆனால் பொதுவெளியில் வைக்கப்படும் கருத்துகளுக்கு எல்லைகள் இருக்க வேண்டும். பெண்கள் எப்போதும் மரியாதையுடன் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும், அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தப்படும் பகடைக்காய்களாக பேசக்கூடாது. உதயநிதியால் தன்னுடைய அரசியல் எதிரியின் செயல்திறன், தலைமைத்துவத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அதனால் தனிப்பட்ட அவதூறுகளையும், தரக்குறைவான வார்த்தைகளும் பயன்படுத்தி எளிதாக தப்பிக்கும் வழியாக மாற்றி விடுகிறார்கள். </p><h2>திரிஷாவிடம்</h2><p>உதயநிதி, முக ஸ்டாலின் கடந்த காலங்கலில் பல சர்ச்சைகளை சந்தித்து இருக்கலாம், அதை பொது வாழ்வின் தரமாகவோ, அரசியல் நாகரீகத்தின் அளவுகோலாகவோ மாற்றக் கூடாது. பொதுமேடையில் நடிகை திரிஷாவை இழிவுப்படுத்தியதற்காக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, அவரிடம் எந்த நிபந்தனையுமின்றி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும், தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டு, அதற்காக மன்னிப்பு கேட்கும் துணிச்சலும், நாகரீகமும் உதயநிதிக்கு இருக்கிறஹா என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்று குஷ்பூ விளாசி பேசியுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Heard <a href="https://x.com/hashtag/Udhayanidhi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Udhayanidhi</a> Stalin&#39;s speech. It was crass, cheap and deeply derogatory; reflecting the very political culture he seems eager to inherit.<br><br>If those with such a mindset aspire to lead a political party and one day govern the state, then God help us. What else can one expect…</p>&mdash; KhushbuSundar (@khushsundar) <a href="https://x.com/khushsundar/status/2084488734167405040?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-08-04T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேயின் மனு மீதான விசாரணை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-saleh-s-petition-court-order-1785845808"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-saleh-s-petition-court-order-1785845808</id>
            <summary type="text">தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து, தேசிய புலனாய்வுப் பிரிவின்
முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே சமர்ப்பித்துள்ள மனுவில்
தலையிட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து, தேசிய புலனாய்வுப் பிரிவின்
முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே சமர்ப்பித்துள்ள மனுவில்
தலையிட்டு கருத்துக்களை முன்வைக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால
மனுக்கள் மீதான பரிசீலனை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று(04.08.2026) ஆரம்பமானது.
</p><p>
இதன்போது, குறித்த இடைக்கால மனுக்களைத் தாக்கல் செய்த 'தேசஹிதைஷி தேசிய
இயக்கம்' மற்றும் 'தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கம்' ஆகிய அமைப்புக்களின்
சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தமது ஆரம்ப வாதங்களை
முன்வைத்தனர்.</p><p></p><h2>இடைக்கால மனு</h2><p>இரு தரப்பு வாதப் பிரதிவாதங்களையும் கவனத்தில் கொண்ட மேன்முறையீட்டு
நீதிமன்றம், இந்த இடைக்கால மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனையை எதிர்வரும் 6ஆம்
திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e8a756a-27ba-4a51-8589-21b5f7c97d94/26-6a71dadd9b758.webp' /></p><p>

இதேவேளை, இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சுரேஷ் சலேயின்
மனைவியும் நீதிமன்றத்தில் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T12:29:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூஜித் மற்றும் ஹேமசிறியின் மரண தண்டனையால் ஆபத்தில் இருந்து தப்பித்த சக்திவாய்ந்த அரசியல்வாதிகள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/politician-who-escaped-pujitha-s-death-sentence-1785834024"></link>
            <id>https://tamilwin.com/article/politician-who-escaped-pujitha-s-death-sentence-1785834024</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதித்துவிட்டு சக்திவாய்ந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதித்துவிட்டு சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் சிலரை தப்பிக்க&nbsp; வைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றதா என சிவில் செயற்பாட்டாளர் மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.</p><p>கொழும்பில் நேற்றையதினம்(03) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர்&nbsp; மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.&nbsp;</p><h2>உண்மையைக் கண்டறிக..</h2><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>போதியளவான உளவுத் தகவல்கள் இருந்தும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்கத் தவறியதாகத் தெரிவித்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8807a0a8-3052-4e00-9ba8-d771b60b8cb3/26-6a71b54840c89.webp' /></p><p>உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்காக சூழ்ச்சி செய்தவர்கள், நிதியுதவி வழங்கியவர்கள் மற்றும் ஆதரவாக செயல்பட்ட&nbsp; அனைத்து அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீது நியாயமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.&nbsp;</p><p>உண்மையைக் கண்டறிந்து தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் முறையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/467a3ad1-2bd6-41c4-bc19-a5ba382b96c0/26-6a71b5490d19e.webp' /></p><p>எனினும், பூஜித் மற்றும் ஹேமசிறி ஆகிய இருவருக்கு மாத்திரம் தண்டனை வழங்கிவிட்டு தொடர்புடைய சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் சிலரை இந்த அரசாங்கம் தப்பிக்க வைக்க முயற்சிக்கின்றதோ என்ற சந்தேகம் எமக்கு உள்ளது.&nbsp;</p><p>ஏனெனில், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக முன்னர் விசாரணை செய்து குற்றச்சாட்டுக்களுக்கு இலக்கான சில உயர் அதிகாரிகளிடமே மீண்டும் தற்போதைய விசாரணைகளும் ஒப்படைக்கப்பட்டிருப்பது&nbsp; இந்த வழக்கின் நடுநிலைத்தன்மையைப் பாதிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T12:29:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-front-of-the-kandawala-ds-1785843457"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-front-of-the-kandawala-ds-1785843457</id>
            <summary type="text">சஜித் பிரேமதாச அமைச்சராக இருந்த காலத்தில் 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்ட
வீட்டுத்திட்டத்திற்கான நிதியை வழங்க வலியுறுத்தி கிளிநொச்சி மாவட்டத்தின்
கண்டாவளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>சஜித் பிரேமதாச அமைச்சராக இருந்த காலத்தில் 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்ட
வீட்டுத்திட்டத்திற்கான நிதியை வழங்க வலியுறுத்தி கிளிநொச்சி மாவட்டத்தின்
கண்டாவளை பிரதேச செயலக பிரிவை சேர்ந்த மக்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.&nbsp;</p><p>குறித்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் (04.08.2026) கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகையில், 2018ஆம்
ஆண்டு தமக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட
வீட்டுத்திட்டமானது இடைநடுவில் கைவிடப்பட்ட நிலையில் தமது நகைகளை அடகு வைத்து பெற்ற பணத்தில் ஓரளவு பூரணப்படுத்தி வாழ்ந்து வருகிறோம்.</p><h2>வீட்டுத்திட்டத்தை பூர்த்தி செய்ய வேண்டும்</h2><p></p><p>தற்போது டித்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐம்பது இலட்சம் ரூபா
வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் அதனுள் தங்களை உள்வாங்கி தமது
வீட்டுத்திட்டத்தை பூர்த்தி செய்வதற்கான மிகுதி பணத்தை வழங்க வேண்டுமென கோரியுள்ளனர்.&nbsp;</p><p>இந்த நிலையில் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கண்டாவளை பிரதேச செயலாளர்
தங்கவேலாயுதம் பிருந்தாகரனிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T12:27:10+00:00</updated>
        </entry>
    </feed>
