<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-18T14:28:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிதியுதவியை குறைத்த பிரித்தானிய அரசு - ஏழை நாடுகள் கடும் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-aid-cuts-hit-poorest-nations-hardest-1789741548"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-aid-cuts-hit-poorest-nations-hardest-1789741548</id>
            <summary type="text">UK aid cuts hit poorest nations hardest: ஏழ்மையான நாடுகளுக்கான நிதியுதவியை பிரித்தானிய அரசு குறைத்துள்ளது.

ஏழை நாடுகள் கடும் பாதிப்புமுன்னாள் பிரதம...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK aid cuts hit poorest nations hardest: ஏழ்மையான நாடுகளுக்கான நிதியுதவியை பிரித்தானிய அரசு குறைத்துள்ளது.
</p><h2>
ஏழை நாடுகள் கடும் பாதிப்பு</h2><p>முன்னாள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசின் நிதியுதவி குறைப்புகள், உலகின் மிக ஏழை நாடுகளை கடுமையாக பாதித்துள்ளன.
</p><p>
புதிய புள்ளிவிவரங்களின்படி, குறைந்த வருமான நாடுகளுக்கான நிதியுதவி 6.7 சதவீதம் குறைக்கப்பட்டு, 118 மில்லியன் பவுண்டு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70d148f1-7782-4cad-b828-7af808f1d33b/26-6aad49eeb177e.webp' /></p><p>2025-ஆம் ஆண்டில், பிரித்தானியாவின் மொத்த உதவி நிதி (Official Development Assistance) தேசிய வருமானத்தின் 0.44 சதவீதமாகக் குறைந்தது. இது 2024-இல் இருந்த 0.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 987 மில்லியன் பவுண்டு குறைவு. </p><p>ஸ்டார்மர் அரசு, இந்த நிதியை பாதுகாப்புத் துறைக்கு மாற்றும் திட்டத்தை அறிவித்திருந்தது.
</p><p></p><p>Bond என்ற தொண்டு அமைப்பின் கொள்கை இயக்குநர் கிடியன் ராபினோவிட்ஸ், “இந்த நிதி குறைப்புகள் ஏழை நாடுகளுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சியாரா லியோனில் தாய்மை சுகாதார சேவைகள், ஆப்பிரிக்காவில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி திட்டங்கள் மூடப்படுகின்றன” என்று தெரிவித்தார்.</p><p>

உதவி நிதியின் மிகப்பெரிய பகுதி (18.4%) பிரித்தானியாவில் அகதிகளுக்கான செலவுகளுக்கு பயன்படுத்தப்பட்டது. உக்ரைன், ஏமன், ஆப்கானிஸ்தான் ஆகியவை முக்கிய உதவி பெறும் நாடுகளாகும். ஆனால், எதிர்காலத்தில் ஏமனுக்கு 28 சதவீதம் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு 39 சதவீதம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p></p><p>அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றின் உதவி குறைப்புகளும் சேர்ந்து, உலகளாவிய மனிதாபிமான அமைப்புகள் மிகப்பெரிய நிதி பற்றாக்குறையை சந்திக்கின்றன. கடந்த ஆண்டு, 64 மில்லியன் மக்கள் உதவி பெற முடியாமல் போனதாக Alnap அறிக்கை தெரிவித்துள்ளது.</p><p>

Bond அமைப்பு, புதிய பிரதமர் ஆன்டி பர்னாம், ஸ்டார்மர் அரசு மேற்கொண்ட உதவி குறைப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-18T14:22:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிக்கவே முடியாதுன்னு மிரட்டிய தயாரிப்பாளர்..பரிபோன கமல் பட வாய்ப்பு!! நடிகர் சம்பத் ராம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/sampath-ram-recalls-producer-threatning-kamal-film-1789726328"></link>
            <id>https://viduppu.com/article/sampath-ram-recalls-producer-threatning-kamal-film-1789726328</id>
            <summary type="text">பிரபலமானவர் தான் நடிகர் சம்பத் ராம். சமீபத்தில் தான் சினிமாவில் நடிக்கவே முடியாதபடி செய்துவிடுவேன் என்று மிரட்டப்பட்ட சமபவத்தை பகிர்ந்துள்ளார். அதில்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபலமானவர் தான் நடிகர் சம்பத் ராம். சமீபத்தில் தான் சினிமாவில் நடிக்கவே முடியாதபடி செய்துவிடுவேன் என்று மிரட்டப்பட்ட சமபவத்தை பகிர்ந்துள்ளார். அதில், நான் கமல் ஹாசன் நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் அவருடன் இருக்கும் 7 பேரில் ஒருவனாக தேர்ந்தெடுக்கப்பட்டு நடித்தேன். </p><h2>சம்பத் ராம்</h2><p>அதில் கமிட்டாவதற்கு 3 மாதத்திற்கு முன், சரத்குமாரின் சத்ரபதி படத்தில் வில்லன் ரோலில் நான் ஒப்பந்தமானேன். ஒரு 10 நாட்கள் அப்படத்தின் ஷூட்டிங் சென்ற நிலையில் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டது. கிட்டத்தட்ட 6 மாசம் செல்ல முடியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb2ebc5f-6f02-42a4-9f36-da37f03a1d6d/26-6aad0e7a153b7.webp' /></p><p> </p><p>சத்ரபதி பட தரப்பும் மெயின் வில்லன் என்பதால் வேறு படத்தில் கமிட்டாக வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அந்த சமயத்தில் வசூல்ராஜா எம்பிபிஎஸ் பட வாய்ப்பு வந்தது. இவ்வளவு பெரிய சான்ஸை விட முடியுமா? என்று நினைத்து சத்ரபதி பட தயாரிப்பு கம்பெனியிடம் சென்று நான் விஷயத்தை கூறினேன். </p><p>கமலுடன் நான் நடித்தது இல்லை, மிகப்பெரிய படம் என்பதால் கேட்டேன். அவர்களும் சரி போய் நடிங்க, பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/079a8f0b-f3d2-46ed-9ad0-afbf7d84e185/26-6aad0e7abe493.webp' /></p><h2>மிரட்டிய தயாரிப்பாளர்</h2><p>வசூல் ராஜா படத்துக்கு 40 நாட்கள் கால்ஷீட் கேட்டார்கள். ஒரு 10 நாட்கள் ஷூட்டிங் சென்றிருக்கும், திடீரென சத்ரபதி பட ஷூட்டிங் தொடங்கியது. எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. நான் போய் நீங்கள் சொல்லித்தானே கமல் படத்தில் நடிக்கப்போனேன். </p><p>மிகப்பெரிய படமாச்சே என்று நான் சொல்ல, அந்த விஷயம் பட தயாரிப்பாளர் காதுக்கு செல்ல, என்னை அழைத்தார். நீங்க வந்தே ஆகணும், அப்படி வராவிட்டால் இங்கே மட்டுமல்ல எங்கேயும் நடிக்க முடியாது என்று மிரட்டிவிட்டார். இதனால் நான் வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தைவிட்டு விலகும் சூழல் ஏற்பட்டது. </p><p>அது என் வாழ்க்கையில் மறக்க முடியாத, மன புழுங்கிப்போன நேரம் என்று சொல்லலாம். அதை மட்டும் செய்திருந்தால் படம் முழுக்க வரும் கேரக்டர் தான், 3 பாடல்களில் நான் வந்தேன், ஆனால் ஒரு பாடலில் தான் நடித்தேன். சத்ரபதி படம் பெரிய படம் தான், ஆனால் அதைவிட வசூல் ராஜா படம் மிகப்பெரியது என்று கூறியிருக்கிறார்.</p>]]></content>
            <updated>2026-09-18T14:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் உள்ள நாமலுக்கு இந்திய அரசாங்கத்திடம் இருந்து அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-call-from-the-ind-govt-1789736920"></link>
            <id>https://ibctamil.com/article/namal-call-from-the-ind-govt-1789736920</id>
            <summary type="text">விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு&amp;nbsp; இந்திய அரசாங்கத்திடமிருந்து அந்நாட்டிற்கு விஜயம் செய்வதற்கான அழைப்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு&nbsp; இந்திய அரசாங்கத்திடமிருந்து அந்நாட்டிற்கு விஜயம் செய்வதற்கான அழைப்பு கிடைத்துள்ளதாக&nbsp; ஜனாதிபதி சட்டத்தரணி ஷமிந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.</p><p>ஏர்பஸ் (Airbus) விமானங்களை கொள்முதல் செய்தபோது 100 மில்லியன் ரூபா லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது அவர் இதனை கூறியுள்ளார்.</p><p>இந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, இம்மாதம் 29 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><h2>மனு மீதான தீர்ப்பு&nbsp;</h2><p>
அவரது பிணை மனு மீதான தீர்ப்பு அன்றைய தினமே அறிவிக்கப்படும் என்றும் நீதவானின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>இந்நழலையிலேயே சந்தேகநபரான நாமல் ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷமிந்திர பெர்னாண்டோ, இந்திய அரசாங்கத்திடமிருந்து அந்நாட்டிற்கு விஜயம் செய்வதற்கான அழைப்பு ஒன்றை தனது கட்சிக்காரர் பெற்றுள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார். </p><p>அவர் நீதிமன்றத்தில் பின்வருமாறு சமர்ப்பித்தார்: எனது கட்சிக்காரருக்கு இந்திய அரசாங்கத்திடமிருந்து விஜயம் செய்வதற்கான அழைப்பு கிடைத்துள்ளது. </p><p>இந்த விஜயத்திற்கான திகதிகள் செப்டம்பர் 27 முதல் ஒக்டோபர் 1 வரை ஆகும். மேலும், ஹங்குரன்கெத்த பொத்குல் விகாரையின் தலைமைத் தேரர், செப்டம்பர் 26 அன்று அந்த விகாரையில் நடைபெறவுள்ள 'கோத' (கோபுர உச்சி) ஸ்தாபிப்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு எனது கட்சிக்காரருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.</p><h2>வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு</h2><p> </p><p>இந்த ஊர்வலம் தலதா பெரஹெராவுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும். </p><p>எனது கட்சிக்காரர் இதில் கலந்துகொள்ளத் தவறினால், அது தலைமைத் தேரருக்குச் செய்யப்படும் அவமரியாதையாக அமையும்.</p><p>இந்த முக்கிய காரணிகளைக் கருத்தில் கொண்டு சந்தேகநபருக்குப் பிணை வழங்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.</p>]]></content>
            <updated>2026-09-18T14:09:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவுக்கு புதிய அஞ்சல் அலுவலக கட்டடம் திறப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-post-office-building-opened-in-mullaitivu-1789737792"></link>
            <id>https://jvpnews.com/article/new-post-office-building-opened-in-mullaitivu-1789737792</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முல்லைத்தீவு அஞ்சல் அலுவலகத்துக்கு புதிதாக அமைக்கப்பட்ட அஞ்சல் அலுவலக கட்டடம் இன்று (18) சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முல்லைத்தீவு அஞ்சல் அலுவலகத்துக்கு புதிதாக அமைக்கப்பட்ட அஞ்சல் அலுவலக கட்டடம் இன்று (18) சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவினால் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. </p><p>

அந்தவகையில் அஞ்சல் அலுவலகத்தின் பெயர்ப்பலகை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவினால் திரைநீக்கம் செய்யப்பட்டதுடன், புதிய கட்டடமும் நாடாவெட்டி திறந்து வைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bcebe1c-bd36-450a-9f35-2d70d9f20ba2/26-6aad3b43012e2.webp' /></p><p> </p><p>

அதனைத் தொடர்ந்து புதிய அஞ்சல் அலுவலக கட்டடத்தில் மக்களுக்கான அஞ்சல் சேவைகளையும் அமைச்சர் இதன்போது ஆரம்பித்து வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e713087-80d7-47de-b513-520fa072cf96/26-6aad3b423fa33.webp' /></p><p></p><p> </p><p>

மேலும் இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பர்களான துரைராசா ரவிகரன், மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், செல்லத்தம்பி திலகநாதன், முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரன், அஞ்சல் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், வடமாகாண அஞ்சல் அதிபர், முல்லைத்தீவு மாவட்ட அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் பங்கேற்றிருந்தார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a395037-06c1-48ec-b3a5-6589f35af8a0/26-6aad3b43c303d.webp' />]</p>]]></content>
            <updated>2026-09-18T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவின் நிழல் போர் குறித்து உண்மைகள்: பிரித்தானியர்களிடம் வெளிப்படுத்தும் கட்டாயத்தில் பிரதமர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/burnham-faces-of-clarify-russian-war-reflects-1789739518"></link>
            <id>https://news.lankasri.com/article/burnham-faces-of-clarify-russian-war-reflects-1789739518</id>
            <summary type="text">Uk pm burnham faces of clarify russian war reflects: பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம், ரஷ்யாவின் நிழல் போர் குறித்த விடயங்களை வெளிப்படுத்தும் கோரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Uk pm burnham faces of clarify russian war reflects: பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம், ரஷ்யாவின் நிழல் போர் குறித்த விடயங்களை வெளிப்படுத்தும் கோரிக்கைகளை எதிர்கொள்கிறார். </p><p>

நேட்டோ நட்பு நாடுகளுக்கு எதிராக ரஷ்யா நடத்தும் நிழல் போரினால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து, பிரித்தானியர்களிடம் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை ஆண்டி பர்ன்ஹாம் எதிர்கொள்கிறார்.&nbsp;</p><h2>ரஷ்யாவின் நிழல் போர்&nbsp;</h2><p>

உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் ஐரோப்பிய நாடுகள் (நேட்டோ) மீது ரஷ்யா ட்ரோன் விமானங்கள் அல்லது ரொக்கெட்டுகளைக் கொண்டு கலப்புத் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f667a8e9-330e-4287-8acb-3890958677c1/26-6aad441283b29.webp' /></p><p>
அதனைத் தொடர்ந்து, பெலாரஸில் இருந்து லிதுவேனியாவின் வான்வெளிக்குள் நுழைந்ததாகக் கூறப்பட்ட ஒரு ட்ரோன் விமானத்தை நேட்டோ போர் விமானிகள் இந்த வாரம் சுட்டு வீழ்த்தினர்.&nbsp;</p><p></p><p>
இந்த நிலையில், பிரித்தானிய பிரதமரான ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) நேட்டோ நட்பு நாடுகளுக்கு எதிராக ரஷ்யா நடத்தும் நிழல் போரினால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து, மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை எதிர்கொள்கிறார்.
</p><p>
இதுகுறித்து பேசியுள்ள டோரி தலைவர் கெமி பேடனோக் மற்றும் Reform UK-வின் நைஜல் ஃபாரேஜ் ஆகிய இருவரும், பிரித்தானியாவை எவ்வாறு பாதுகாக்க வைத்திருக்கத் திட்டமிட்டுள்ளார் என்பதை பிரதமர் இன்னும் விரிவாக விளக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.&nbsp;</p><h2>அவசரத்திற்கு ஈடுகொடுக்குமாறு</h2><p>

பேடனோக்கின் பதிவில் இராணுவ ஆயத்தப் பணிகளைத் தீவிரப்படுத்துவதிலும், பாதுகாப்பு செலவினங்களை அதிகரிப்பதாலும் நேட்டோ கூட்டாளிகளின் வளர்ந்து வரும் அவசரத்திற்கு ஈடுகொடுக்குமாறு பர்ன்ஹாம் மற்றும் தொழிலாளர் கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/538246be-664f-4110-a211-824ebcecf5ff/26-6aad4592e8eb8.webp' /></p><p>
ரஷ்யா லிதுவேனியாவின் வான்வெளியை மீறியதாக வெளியான சமீபத்திய தகவல்கள் மிகுந்த கவலையளிக்கின்றன. 

இந்த நிலையில் மேக்ரோன் மற்றும் டஸ்க் ஆகியோர் காட்டும் அவசரமான செயல்பாடுகள் அந்த கவலையை மேலும் அதிகரிக்கின்றன.</p><p>

ரஷ்யாவிடம் இருந்து வரும் அச்சுறுத்தலை அரசு போதுமான அளவு தீவிரமாக எடுத்துக் கொள்கிறதா என்பது தெளிவாக இல்லை.</p><p> 

நேட்டோ மீது 2030-க்குள் தாக்குதல் நடத்தப்படலாம் என்று அரசின் சொந்த உளவுத்துறை மதிப்பீடு கூறுகிறது; அதேவேளையில் சிறிய அளவிலான ஊடுருவல்களும் ஏற்கனவே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58e89cad-fb31-4ce1-a2cb-3692c6cb57c0/26-6aad4411c4582.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T13:57:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரோஸ் மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினருக்கிடையிலான சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eros-and-tamil-liberation-tigers-hold-key-meeting-1789739216"></link>
            <id>https://tamilwin.com/article/eros-and-tamil-liberation-tigers-hold-key-meeting-1789739216</id>
            <summary type="text">ஈழவர் ஜனநாயக முன்னணியின் (ஈரோஸ்) செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன் மற்றும்
புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா
ஆகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழவர் ஜனநாயக முன்னணியின் (ஈரோஸ்) செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன் மற்றும்
புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா
ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று(17) இரவு மட்டக்களப்பில் இடம்பெற்றது.
</p><p>
வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் தழுவிய ரீதியில் தமிழ் பேசும் மக்களின்
வாழ்வாதாரம், இருப்பு மற்றும் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான தர்க்க
ரீதியான முன்னெடுப்புகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.</p><h2>சந்திப்பு</h2><p>
</p><p>
குறித்த விடயங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் இரு கட்சிகளும் ஒருமித்து
பயணிப்பது தொடர்பிலும், மக்களுக்கான பயணத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி
இரு கட்சிகளும் ஒருமித்து செயற்படுவதெனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6bfc026-43ce-49f8-afd0-7aa338aaa010/26-6aad427bd1321.webp' /></p><p>
</p><p>
முதற்கட்டமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள முன்னாள் போராளிகளின்
வாழ்வாதாரம் குறித்த விடயத்தில் முயற்சிகள் மேற்கொள்வதெனவும், அதனைத்
தொடர்ந்து வடக்கு கிழக்கு மலையக மக்களின் இருப்பு தொடர்பிலான பிரச்சனைகளுக்கு
உரிய தீர்வினை கண்டறிதல், கல்வி விவசாய நடவடிக்கைளை ஊக்குவித்தல் போன்ற
விடயங்களைக் கையாள்வதன் ஊடாக அரசியல் இருப்பு தொடர்பிலும் நடவடிக்கை எடுப்பதாக
இதன்போது கலந்துரையாடப்பட்டது.</p><p>

குறித்த சந்திப்பில் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின்
செயற்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T13:54:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிய விளையாட்டு வீரர்கள் தங்க ரூ.268 கோடிக்கு கப்பலை வாடகைக்கு எடுத்துள்ள ஜப்பான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/japan-rent-268-cr-cruise-ship-for-asian-games-1789739371"></link>
            <id>https://news.lankasri.com/article/japan-rent-268-cr-cruise-ship-for-asian-games-1789739371</id>
            <summary type="text">japan rent rs 268 crores cruise ship for asian games: ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் தங்குவதற்காக ஜப்பான் ரூ.268 கோடிக்கு சொகுசு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>japan rent rs 268 crores cruise ship for asian games: ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் தங்குவதற்காக ஜப்பான் ரூ.268 கோடிக்கு சொகுசு கப்பலை வாடகைக்கு எடுத்துள்ளது.</p><h3> 

ஆசிய விளையாட்டு போட்டி
</h3><p>
20 வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நாளை தொடங்கி, அக்டோபர் 4 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/763561e5-315d-4688-805d-d3975bb8db97/26-6aad416c85319.webp' /></p><p> 

இந்தத் தொடரில், 45 நாடுகளை சேர்ந்த 17,000 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். </p><p>

வழக்கமாக சர்வதேச விளையாட்டு தொடர்களின் போது, வீரர்கள் தங்குவதற்கு பல அடுக்கு குடியிருப்புகளுடன் கூடிய விளையாட்டு கிராமம் உருவாக்கப்படும்.</p><h3> 

ரூ.268 கோடிக்கு வாடகையில் சொகுசு கப்பல்</h3><p> 

ஆனால் ஜப்பான், வீரர்களை தங்க வைக்க ‘கோஸ்டா செரீனா’ என்ற இத்தாலிய சொகுசு கப்பலை வாடகைக்கு அமர்த்தியுள்ளது. </p><p>

சுமார் 300 மீட்டர் நீளமும், 100,000 டன்களுக்கும் அதிகமான எடையும், 1,500 அறைகளும் கொண்ட இந்தக் கப்பலில், சுமார் 4,000 விளையாட்டு வீரர்களும் அதிகாரிகளும் தங்க வைக்கப்படுவார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73c478f0-7825-4dc0-a141-bd37c7e100b8/26-6aad416d3acdc.webp' /></p><p>

28 மில்லியன் டொலர்( இந்திய மதிப்பில் ரூ.268 கோடி) செலவில் அந்த கப்பல் வாடகைக்கு எடுக்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><h3>

வசதி குறைபாடு
</h3><p>
நகோயா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த கப்பலில், தங்குமிட வசதி குறைபாடு குறித்து பல்வேறு நாடுகளும் புகார் தெரிவித்துள்ளன.</p><p> 

2 வீரர்களுக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதை 3 பேர் பகிர்ந்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இந்திய வீரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

போட்டியை நடத்தும் ஜப்பானை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கும் இந்த பிரச்சினை உள்ளதாக கூறப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dccab355-0e2a-4d09-bbd5-68f096f1980d/26-6aad416de2b82.webp' /></p><p>

மேலும், தென் கொரியா அணியைச் சேர்ந்த ஒரு வீரர் தனது குடிலில் தண்ணீர் கசியும் தொட்டியையும், தரை முழுவதும் ஈரமாக இருப்பதையும் காட்டும் காணொளியை, "தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள்" என்ற தலைப்புடன் சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.&nbsp;</p><p></p><p>
இதே போல், தாய்லாந்து வீரர்கள் சொகுசு கப்பலின் வரவேற்பு மையத்தில் தரையில் படுத்து உறங்கிய காட்சிகள் வெளியாகி சர்ச்சையாகி உள்ளது. </p><p>

சில பயிற்சியாளர்கள் போன்ற சில அதிகாரிகள், வெளியே வெவ்வேறு ஹொட்டல்களுக்கு சென்று தங்கியுள்ளனர். </p><p>

ஜப்பானில் ஒரு பெரிய சர்வதேச விளையாட்டு நிகழ்வுக்கு, ஒரு சொகுசுக் கப்பல் தங்குமிடமாகப் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை," என்று அந்த சொகுசுக் கப்பலை வரவேற்கும் விழாவில் ஏற்பாட்டாளர் ஓமுரா தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T13:49:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் வாடும் நாமலுக்கு இந்திய அரிசிடமிருந்து அழைப்பு.. பிணைக்காக போராடும் மொட்டுதரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-airbus-case-bail-application-reasons-given-1789726135"></link>
            <id>https://tamilwin.com/article/namal-airbus-case-bail-application-reasons-given-1789726135</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிணை கோரிக்கையில், இந்திய அரசின் அழைப்பு மற்றும் திட்டமிடப்பட்ட பௌத்த மத சடங்கு ஆகியவை முக்கிய காரணங்களாக சட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிணை கோரிக்கையில், இந்திய அரசின் அழைப்பு மற்றும் திட்டமிடப்பட்ட பௌத்த மத சடங்கு ஆகியவை முக்கிய காரணங்களாக சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>எயார்பஸ் இலஞ்ச ஊழல் வழக்கின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர், இன்று (18) கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் முன்னிலைபடுத்தப்பட்டார்.</p><p>நீதிமன்றம் அவரது பிணை மனுவை நிராகரித்த நிலையில், தற்போது விதிவிலக்கான சூழ்நிலைகள் உருவாகியுள்ளதாக நாமல் ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷமிந்திர பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><h2>முக்கிய நிகழ்வுகள்..&nbsp;</h2><p> இந்தியாவிற்கு விஜயம் செய்யுமாறு இந்திய அரசாங்கத்திடம் இருந்து ராஜபக்சவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், அவர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினால் அந்த விஜயத்தை இரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a284b1dc-f852-4c3a-882e-7b6c823e1bd4/26-6aad1844cca28.webp' /></p><p> </p><p>அதுமாத்திரமன்றி, வருடாந்த ஹிங்குராக்கொட எசல பெரஹரவின் போது இடம்பெறும் மதச்சடங்கில் கலந்துகொள்ளுமாறும் பிரதம பௌத்த மதகுரு ஒருவரால் நாமல் ராஜபக்சவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் மன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில் பாதுகாப்புத் தரப்பின் கூற்றுப்படி, செப்டெம்பர் 26ஆம் திகதி அன்று இரவு 7:42 மணிக்கு விகாரையொன்றில் கொத்தணி சூட்டும் நிகழ்வில் பங்கேற்க நாமல் ராஜபக்ச திட்டமிட்டிருந்தார் என்றும், அதில் கலந்துகொள்ள முடியாமை அழைப்பு விடுத்த மதகுருவை அவமதிப்பதாக அமையும் என்றும் அவரது சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1efba68a-9014-4cdb-88e6-c9207a51ed19/26-6aad1845bb5a3.webp' /></p><p> மேலும், எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கையில் ராஜபக்சவின் பெயர் இடம்பெறவில்லை என்றும், தொழிலதிபர் நிமல் பெரேராவின் வாக்குமூலங்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தியும் சட்டத்தரணி வாதிட்டுள்ளார்.</p><p> இந்தச் சமர்ப்பிப்புகளுக்குப் பதிலளித்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, இந்திய விஜயமோ அல்லது மதச் சடங்கோ பிணை வழங்குவதற்குரிய விதிவிலக்கான சூழ்நிலைகளாக அமையாது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/0ZMklSZuEVo" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-18T13:48:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூடுபிடிக்கும் எயார்பஸ் விவகாரம்.. தப்பியோடிய நாமலின் உறவினர்களுக்கு இன்டர்போல் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-airbus-case-interpol-cid-1789735331"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-airbus-case-interpol-cid-1789735331</id>
            <summary type="text"> எயார்பஸ் கொள்வனவு இலஞ்ச ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிணை கோரிக்கை தொடர்பான...</summary>
            <content type="html"><![CDATA[<p> எயார்பஸ் கொள்வனவு இலஞ்ச ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவு செப்டம்பர் 29ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>அதுவரை அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டதுடன், பாதுகாப்புத் தரப்பு செப்டெம்பர் 22க்குள்ளும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 25க்குள்ளும் எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை தாக்கல் செய்ய வேண்டும் எனப் பணித்தார்.</p><p>

வழக்கு விசாரணையின் போது முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு தொடர்பிலும் நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.</p><h2>சமல் ராஜபக்சவிடம் வாக்குமூலம்</h2><p> </p><p>அத்துடன், முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவுக்குத் தப்பியோடிய ஷசீந்திர ராஜபக்ச மற்றும் அவுஸ்திரேலியாவுக்குத் தப்பியோடிய பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோருக்கு எதிராக இன்டர்போல் மூலம் 'சிவப்பு எச்சரிக்கை' (Red Notice) விடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbddea59-2f6a-4f04-b5a6-9ca52b707b98/26-6aad3cdca58dd.webp' /></p><p> </p><p>மேலும், நாமல் ராஜபக்சவுக்கு பிணை வழங்குவதற்குரிய முக்கியமான சூழ்நிலைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
நாமல் ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவிந்திர பெர்னாண்டோ, எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கையில் நாமலின் பெயர் இடம்பெறவில்லை என்றும், நிமல் பெரேராவின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>சர்வதேச பிடியாணை&nbsp;</h2><p> </p><p>அத்துடன், இந்திய அரசின் அழைப்பின் பேரில் இந்தியாவிற்குச் செல்லவிருந்த விஜயம் இரத்தாகின்றமை மற்றும் செப்டெம்பர் 26 அன்று ஹங்குரன்கெத்த விகாரையொன்றில் கொத்தணி சூட்டும் நிகழ்வில் பங்கேற்க முடியாமை ஆகியவற்றை சிறப்புச் சூழ்நிலைகளாகக் கருதி பிணை வழங்குமாறு கோரியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9a2d4b1-6e37-472a-944f-4d2f6d1f88f2/26-6aad3cdd9806e.webp' /></p><p>

எனினும், இந்திய விஜயமோ அல்லது மதச் சடங்கோ பிணை வழங்குவதற்கான சிறப்புச் சூழ்நிலைகளாக அமையாது என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> மேலும், "வெலிகம பே" சம்பவம் தொடர்பிலும் நிமல் பெரேராவின் கணக்கில் 175 மில்லியன் ரூபாவிற்கும் அதிக சந்தேகத்திற்கிடமான பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளமை குறித்து விசாரணைகள் நடந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். </p><p>இருதரப்பு சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த பின்னர் நீதிவான், நாமல் ராஜபக்சவை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T13:41:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் விளக்கமறியல் பின்னணியில் உள்ள ஒரே ஆதாரம்! மொட்டு தரப்பு வெளிப்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-sole-evidence-behind-namals-remand-1789735640"></link>
            <id>https://ibctamil.com/article/the-sole-evidence-behind-namals-remand-1789735640</id>
            <summary type="text">சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எயார்பஸ் விமான ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும் குறித்த விமான நிறுவனத்துக்கும் இடையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எயார்பஸ் விமான ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும் குறித்த விமான நிறுவனத்துக்கும் இடையில் எந்தவொரு மின்னஞ்சல் பரிமாற்றமும் இடம்பெறவில்லை என அவரது தரப்பு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.</p><p>நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எந்தவொரு மின்னஞ்சலிலும் அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை என அவர்&nbsp; தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
</p><p>
நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “அரசாங்கத்தின் சில தரப்பினர் நீதிமன்றத்தில் இடம்பெற்ற விடயங்களைத் திரிபுபடுத்தி சமூகமயப்படுத்த முயற்சிப்பதாக சுட்டிக்காட்டினார்.</p><p>
</p><p></p><h3>மின்னஞ்சல் பரிமாற்றங்கள்</h3><p>கடந்த சில நாட்களாக பேசுபொருளாகியுள்ள மின்னஞ்சல் பரிமாற்றங்கள் குறித்த விமான நிறுவனத்தின் சில உள்நாட்டு அதிகாரிகளுக்கு இடையில் மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும், அதில் நாமலின் தலையீடு அல்லது அவர் இலஞ்சம் பெற்றமை தொடர்பில் எவ்விதக் குறிப்பும் இல்லை எனவும் அவர் வலியுறுத்தினார்.
</p><p>
அத்துடன், ஷமீந்திர ராஜபக்சவின் கணக்கில் பணம் வைப்பிலிடப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகளும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என சட்டத்தரணி தெரிவித்தார்.
</p><p>
இந்த வழக்கு தொடர்பில் இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ள ஒரே சாட்சியம் நிமல் பெரேரா என்பவர் அரசாங்கத்திடம் வழங்கியுள்ள வாக்குமூலம் மட்டுமே எனக் குறிப்பிட்ட அவர், சாட்சியச் சட்டத்தின் அடிப்படையில் ஒரு குற்றத்தின் உடந்தையாளரின் வாக்குமூலத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு ஒருவரை குற்றவாளியாக்க முடியாது என்பது சட்டத்தை அறிந்த எவரும் ஏற்றுக்கொள்ளும் விடயம் எனவும் கூறியுள்ளார்.</p><p>
நாமலை அரசியல் ரீதியாக ஒடுக்குவதற்காக பொதுச் சொத்துச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி அவரை சிறையில் அடைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய சட்டத்தரணி மனோஜ் கமகே, நாமல் சிறையில் அடைக்கப்பட்டாலும் பொதுஜன பெரமுனவையோ அல்லது மக்கள் எழுச்சியையோ எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாது என மேலும் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-09-18T13:40:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை உலுக்கிய சம்பவம்; 17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்; உடலை நாய்கள் தின்ற கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/teen-gang-raped-girl-in-delhi-body-eaten-dogs-1789735928"></link>
            <id>https://jvpnews.com/article/teen-gang-raped-girl-in-delhi-body-eaten-dogs-1789735928</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியா டெல்லியில் 17 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது.

சம்பவம் தொடர்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியா டெல்லியில் 17 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் மூன்று பேர் சிறுவர்கள் என கூறப்படுகின்றமை மேலும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a9ad39f-abf2-4e68-94b7-6130fe663c63/26-6aad33f9af371.webp' /></p><h2>&nbsp;முக்கியக் குற்றவாளி மற்றும் மூன்று சிறார்கள் கைது</h2><p> </p><p>
 
 
செப்டம்பர் 13-ஆம் தேதி வடமேற்கு தில்லி ஸ்வரூப் நகர் பகுதியில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் உடல் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.</p><p></p><p>
</p><p> 
பாதிக்கப்பட்ட சிறுமியும், குற்றவாளிகளும் முன்பே அறிமுகமானவர்கள் என்பதும், அவர்கள் ஒரு டெம்போவில் பயணித்தபோது இந்த கொடூர சம்பவம் அரங்கேறியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p> 
சிறுமி மது அருந்த செய்து வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கத்திகளால் குத்திக் கொல்லப்பட்ட பிறகு உடல் அங்கு வீசப்பட்டுள்ளது. 
 
நாய்கள் உடலை சேதப்படுத்தியிருந்ததால் ஆரம்பத்தில் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது.</p><p></p><p> </p><p>குடும்பத்தினர் புகாரளிக்காத நிலையில், சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து நூதன முறையில் துப்பு துலக்கப்பட்டது.

 
50-க்கும் மேற்பட்ட கேமராக்களை ஆராய்ந்து டெம்போவை கண்டறிந்த காவல் துறையினர், தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு முக்கியக் குற்றவாளி மற்றும் மூன்று சிறார்களை கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>
17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கொலை செய்யப்பட்டு வீசி எறிந்த உடலை நாய்கள் தின்ற கொடூர சம்பவம் நடுங்க்க வைத்துள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T13:35:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மற்றொரு பெண்ணைச் சந்தித்ததாக காதலனை கொலை செய்த பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/murdered-banker-he-flirted-with-colleague-london-1789714590"></link>
            <id>https://canadamirror.com/article/murdered-banker-he-flirted-with-colleague-london-1789714590</id>
            <summary type="text">&amp;nbsp;பெண் ஒருவர் காதலனை கொலை செய்த்தாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் லண்டனின் ஓல்ட் பெய்லி (Old Bailey) நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பெண் ஒருவர் காதலனை கொலை செய்த்தாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் லண்டனின் ஓல்ட் பெய்லி (Old Bailey) நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது. </p><p> 

மற்றொரு பெண்ணைச் சந்தித்ததாகத் தெரிவித்த தனது காதலனைக் கத்தியால் குத்திக் கொன்றதாகவும், பின்னர் அவர்கள் ஒன்றாக வசித்து வந்த குடியிருப்பிலேயே அவரது உடலை ஒன்பது நாட்களுக்கு மறைத்து வைத்திருந்ததாகவும் பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58f85310-027c-4d9b-986b-d6c60603a25e/26-6aace09fa9908.webp' /></p><h2>பெண் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக&nbsp; மின்னஞ்சல்</h2><p> </p><p>

உயிரிழந்தவர் ஹென்ரிக் ஸ்லோத்சா (Henrik Slothsa) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் சிட்டிபேங்கில் (Citibank) பணியாற்றிய 52 வயதுடைய டேனிஷ் வங்கி அதிகாரி ஆவார்.

 காதலனை கொலை செய்ததாகக் கூறப்படும் காதலி 50 வயதுடைய போலந்து நாட்டவருமான ஜோனா சியர்ப்கா (Joanna Sierpka) ஆவார்.</p><p>
மார்ச் 15 அன்று, குற்றம் சாட்டப்பட்ட பெண் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக் குறிப்பால் உணர்த்தும் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியதைத் தொடர்ந்து, தெற்கு லண்டனில் உள்ள அந்த குடியிருப்பின் கதவை உடைத்துக்கொண்டு போலீசார் உள்ளே நுழைந்தனர். </p><p>

போலீசார் உள்ளே சென்றபோது, ​​அவர் எட்டு அங்குல சமையலறை கத்தியால் தனது கழுத்தை அறுக்க முயன்று கொண்டிருந்தார்.
</p><p>
அதேவேளையில், வீட்டின் படுக்கையறையில் திரு. ஸ்லோத்சாவின் சிதைந்த நிலையில் இருந்த உடலையும் அவர்கள் கண்டெடுத்தனர். அப்போது, ​​உடலுக்கு அருகில் காய்ந்த ரத்தப் படலம் ஒன்றும் காணப்பட்டது.
</p><p>
தனது காதலனைக் கொலை செய்ததில் எந்தவிதமான சர்ச்சையும் இல்லை என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் டேனி ராபின்சன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். தனது மனநிலை காரணமாகவே இச்செயலைச் செய்ததாகக் கூறி 'கொலைக்குற்றமற்ற மரணத்தை' (manslaughter) ஒப்புக்கொண்டாலும், அரசுத் தரப்பு அவர் மீது திட்டமிட்ட கொலைக் குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளது.</p><p> 

மேலும், கடந்த சில மாதங்களாகவே அவர்களது உறவில் விரிசல் ஏற்பட்டு வந்ததும் நீதிமன்றத்தில் தெரியவந்தது. நவம்பர் 2025-ல் நடைபெற்ற ஒரு நிறுவன நிகழ்வில் சந்தித்த மற்றொரு ஊழியருடன் ஸ்லோத்சா நெருக்கமாகியிருந்தார்&nbsp; சியர்ப்காவின் பிறந்தநாளன்று, தனது பணியிடத்தில் வேறொரு பெண்ணைச் சந்தித்திருப்பதாக அவரிடம் அவர் கூறியிருந்தார்.</p><p>

பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ (British American Tobacco) நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவில் முன்பு பணியாற்றிய சியர்ப்காவின் நண்பர்கள், வேலையை இழந்த பிறகு அவர் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்தனர்.
</p><p>
 ஸ்லோத்சாவைக் கொன்ற பிறகு, அவரது மொபைல் போன் மூலம் அவரது மேலாளருக்கு வாட்ஸ்அப் (WhatsApp) செய்திகளை அனுப்பிய அவர், ஸ்லோத்சாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாகப் பொய்யான தகவலைத் தெரிவித்திருந்தார். </p><p>

வீட்டிற்குள் காலி மது பாட்டில்களையும் போலீசார் கண்டெடுத்தனர்; இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது</p>]]></content>
            <updated>2026-09-18T13:35:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே எண்களை நம்பியதனால் ஒருவருக்கு அடித்த அதிர்ஸ்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/lucky-numbers-win-innisfil-man-25-million-1789714073"></link>
            <id>https://canadamirror.com/article/lucky-numbers-win-innisfil-man-25-million-1789714073</id>
            <summary type="text">கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், இன்னிஸ்ஃபில் நகரைச் சேர்ந்த ஸ்டான்லி ஜே என்ற பிளம்பர், &#039;லொட்டோ மேக்ஸ்&#039; குலுக்கலில் 2.5 மில்லியன் கனடிய டாலர்கள் பரிசாக வென...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், இன்னிஸ்ஃபில் நகரைச் சேர்ந்த ஸ்டான்லி ஜே என்ற பிளம்பர், 'லொட்டோ மேக்ஸ்' குலுக்கலில் 2.5 மில்லியன் கனடிய டாலர்கள் பரிசாக வென்றுள்ளார். </p><p>
40 ஆண்டுகளாகப் பிளம்பராகப் பணியாற்றி வரும் ஸ்டான்லி, கடந்த ஜூலை 24 அன்று வுட்ஸ்டாக் நகரில் உள்ள ஒரு மளிகைக் கடையில் தனது காதலியைச் சந்திக்கச் சென்றபோது இந்த லொட்டரி சீட்டை கொள்வனவு செய்துள்ளார். </p><p>
பல ஆண்டுகளுக்கு முன்பு 'க்விக் பிக்' முறையில் தனக்குக் கிடைத்த அதே எண்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்ததே இவருக்கு இந்த மாபெரும் வெற்றியைத் தந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76a556c8-d241-4f7c-b55c-82945cd59769/26-6aacde9aa880b.webp' /></p><p> </p><p>
லொட்டரி முடிவுகளைச் செயலி மூலம் சரிபார்த்தபோது, தான் 25,000 டொலர் மட்டுமே வென்றதாக ஸ்டான்லி நினைத்துள்ளார்.</p><p> 
ஆனால் அவரது காதலி சரிபார்த்த போதே அது 25 மில்லியன் டொலர் என்பது தெரியவந்தது. 
அந்தத் தொகை தனது வங்கிச் கணக்கிற்கு வந்த பிறகே, தான் உண்மையாகவே கோடீஸ்வரனாகிவிட்டதை அவரால் நம்ப முடிந்தது.
</p><p>ஏரிக்கரையில் ஒரு புதிய வீடு மற்றும் கிளாசிக் 'ஹாட்-ராட்' (hot-rod) கார் கொள்வனவு செய்தல், சூரிய ஒளியும் கடற்கரையும் நிறைந்த சுற்றுலாத் தலங்களுக்குத் தனது காதலியை அழைத்துச் செல்வது மற்றும் தனது மகள் மற்றும் பேத்தியைப் பரிசுகளால் மகிழ்விப்பது என இந்த பரிசுப் பணத்தில் செய்யப் போகும் விடயங்களை பட்டியலிட்டுள்ளார்.</p><p>
தனது நெருங்கிய வட்டாரத்திற்கு மட்டும் இந்தத் தகவலை மெதுவாகத் தெரிவிக்க நினைத்த போதிலும், இந்த செய்தி நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே வேகமாகப் பரவி, அனைவரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். </p><p>
இந்த வெற்றி தனது வாழ்க்கைக்குப் பெரிய பாதுகாப்பையும் நிம்மதியையும் தந்துள்ளதாக ஸ்டான்லி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T13:35:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நாளை றிஷாட் பதியுதீனிடம் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rishad-bathiudeen-explanation-easter-attacks-1789727928"></link>
            <id>https://jvpnews.com/article/rishad-bathiudeen-explanation-easter-attacks-1789727928</id>
            <summary type="text">&amp;nbsp; ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தற்காலத்தில் பரவி வரும் செய்திகள் தொடர்பில் விளக்கமளிக்கும் விஷேட ஊடக சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

அகில இலங்கை மக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தற்காலத்தில் பரவி வரும் செய்திகள் தொடர்பில் விளக்கமளிக்கும் விஷேட ஊடக சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
</p><p>
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொள்ளும் இவ்விஷேட ஊடக சந்திப்பு நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நாளை (19) சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவட்ட செயலாளர் எம். எம். ஏ. காதர் அறிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57b04152-d2d1-4f6d-a54f-f53e5547703e/26-6aad14ba36809.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T13:32:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதியில் அனோஜனுக்கு மரண தண்டனை; மனோ கணேசன் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/srilankan-migrant-anojan-sentenced-saudi-1789738445"></link>
            <id>https://jvpnews.com/article/srilankan-migrant-anojan-sentenced-saudi-1789738445</id>
            <summary type="text">&amp;nbsp; சவூதி அரேபியாவில் மரண தண்டனை அறிவிக்கபட்டுள்ள இலங்கை பிரஜை சிவராசா அனோஜன் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சவூதி அரேபியாவில் மரண தண்டனை அறிவிக்கபட்டுள்ள இலங்கை பிரஜை சிவராசா அனோஜன் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.



இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சிவராசா அனோஜன் விடயத்தில், கருணை, மனிதாபிமான, அடிப்படைகளில் பரிசீலித்து அவருக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பில் கனிவுடன் பரிசீலிக்குமாறு, சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகம்மது பின் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் சவுத்க்கு,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/661b68fe-802f-4022-bd91-48ea8d04f4ab/26-6aad3dceb0d47.webp' /></p><p> இலங்கை குடியரசிற்கான சவூதி அரேபிய தூதுவரை நேரடியாக சந்தித்து, அவர் ஊடாக, ஒரு கூட்டு வேண்டுகோளை முன்வைக்க வேண்டும் என, தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை (PCTSP) அங்கத்தவ சகோதர கட்சி தலைவர்களிடம் கோரி உள்ளேன்.</p><p></p><p> </p><p>



இது தொடர்பில் நாம் பேரவைக்குள் அவசரமாக உரையாடுகின்றோம். 



மேலும், இவ்விடயத்தை நமது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஊடாகவும் முன்னெடுத்து, இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக இவ்விடயத்தை சவூதி அரேபியா அரசிடம் எடுத்து செல்லுமாறும் கோருகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T13:31:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டுக் கட்சியில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய பெண்ணிடம் கேட்ட மோசமான இலஞ்சம்! பகிரங்கப்படுத்திய பெண்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/podujana-peramuna-mahinda-rajapaksa-1789736720"></link>
            <id>https://tamilwin.com/article/podujana-peramuna-mahinda-rajapaksa-1789736720</id>
            <summary type="text">&amp;nbsp;உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு) கட்சியிலிருந்து போட்டியிடத் தயாரான நிலையில்&amp;nbsp; வேட்புமனு வழங்குவதற்காகத் தன்னிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு) கட்சியிலிருந்து போட்டியிடத் தயாரான நிலையில்&nbsp; வேட்புமனு வழங்குவதற்காகத் தன்னிடம் 'பாலியல் இலஞ்சம்' கேட்டதாக ''லக்மவட்ட ஹடக்' அமைப்பின் தலைவியும் நடிகையுமான மதுஷா ராமசிங்க
தென்னிலங்கை வலையொளி தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p>அது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த கருத்து
எந்த ஊடகத்திலும் நான் இதைச் சொல்வேன்.மஹிந்த ராஜபக்சவுடன் மிக நெருக்கமாகச் செயல்படும் அவரது தனிப்பட்ட செயலாளர்களில் ஒருவர் இவர்.அதை நான் பொறுப்புடன் கூறுகிறேன்.</p><p></p><h2>வேட்பு மனுத் தாக்கலின் போது நடந்த சம்பவம்</h2><p>பெயர்களைக் கூறுவது எனக்குப் பிரச்சினையில்லை. நான் பெயர்களைக் கூறுவேன். ஆனால் சிக்கல் என்னவென்றால் நான் பொலிஸுக்குச் சென்றபோது 'வீடியோக்கள் இருக்கிறதா?' என்று கேட்கிறார்கள். </p><p>நாம் ஒரு கட்சி அலுவலகத்திற்கோ அல்லது நாட்டின் தலைவரைச் சந்திக்கவோ செல்லும்போது காணொளி எடுத்தா செல்கிறோம்?
'ஆடை களையாவிட்டால் வேட்புமனு இல்லை' என்று கூறினார்கள். </p><p>வேட்புமனுத் தாக்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இவ்வாறு கூறினார்கள். அவர் தனது வாயால் மூன்று முறை கூறினார். 
அண்ணே நான் எத்தனை வருடங்களாகப் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் பணியாற்றியுள்ளேன் என்று பார்க்கிறீர்களா?' எனக் கேட்டேன். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d40d23d-ce08-409d-b8c5-4229e7ad0d45/26-6aad37131f72b.webp' /></p><p>நீங்கள் நீண்டகாலமாக அரசியலில் இருக்கிறீர்கள் தானே என்றார்.
நான் நல்லாட்சி அரசாங்கத்தின் அமைப்பாளர் பதவியை வேண்டாம் என்று நிராகரித்துவிட்டு முதன்முதலில் வெளியே வந்த நபர். </p><p>சோபித்த தேரர் நல்லாட்சியின் முதல் நிறைவு விழாவை நடாத்தும்போது அவர் இயற்கை எய்தினாரா அல்லது படுகொலை செய்யப்பட்டாரா என்ற கேள்வி எழுந்தவேளையில் முதுகெலும்புடன் வெளியே வந்த ஒரே ஆள் நான் மட்டும்தான்.
</p><p>கட்சியின் உயர்மட்டத் தலைவர்களிடம் சொல்வதானால் இவர்கள் மூலமாகவே செல்ல வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நான் மதிக்கிறேன். அவருக்கு இந்தச் சம்பவம் முழுமையாகத் தெரியாது. </p><p>ஆனால் அந்த நேரத்தில் அவராலும் எதுவும் செய்ய முடியாது. ஏனெனில் 'இவரைச் சேர்த்துக் கொண்டால் நாங்கள் விலகுவோம்' என்று அங்கிருக்கும் குழுக்கள் அச்சுறுத்துகின்றன. இதனாலே நான் அரசியலில் இருந்து விலகி இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.</p><p></p><p>&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T13:23:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் ஜனாதிபதிகள் - முக்கிய பிரமுகர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-presidents-house-confession-sunil-wattagala-1789719077"></link>
            <id>https://tamilwin.com/article/former-presidents-house-confession-sunil-wattagala-1789719077</id>
            <summary type="text">முன்னாள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் உட்பட மூத்த அரசியல்வாதிகளின் இல்லங்களுக்குச் சென்று வாக்குமூலம் பதிவு செய்யும் நடைமுறையை நிறுத்த அரசாங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் உட்பட மூத்த அரசியல்வாதிகளின் இல்லங்களுக்குச் சென்று வாக்குமூலம் பதிவு செய்யும் நடைமுறையை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.&nbsp;</p><p>விசாரணை நோக்கங்களுக்காக, எந்தவொரு நிலையில் உள்ள நபரும் சம்பந்தப்பட்ட சட்ட அமலாக்க முகமைகளின் முன் நேரில் முன்னிலையாக வேண்டும் என்று பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.&nbsp;</p><p>
அரசியல் அந்தஸ்து அல்லது பதவியைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் சட்டம் சமமாகப் பொருந்தும் கொள்கையை இந்த முடிவு வலுப்படுத்துகிறது என்று அவர் வலியுறுத்தினார்.</p><h2>இல்லத்தில் விசாரணை..&nbsp;</h2><p>
</p><p>மேலும் அவர், "குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID), இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC), சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதித்துறை போன்ற அரச நிறுவனங்களை அரசியல் தலையீடுகளிலிருந்து விடுவிப்பதன் மூலம் விசாரணைகளில் வெற்றி காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8729b9a-928a-40b4-9c45-1f1d5af228f7/26-6aacf7300e648.webp' /></p><p> சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும் அரச நிறுவனங்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் தற்போதைய நிர்வாகம் வலுவான நடவடிக்கைகளை எடுத்துள்ளது, இந்த நிறுவனங்கள் அரசியல் தலையீடின்றி தங்கள் கடமைகளைத் திறம்படச் செய்யக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.</p><p>

இலங்கை அரசியலமைப்பின் 12(1)ஆவது பிரிவின்படி, ஒவ்வொரு தனிநபருக்கும் சட்டத்தின் சமமான பாதுகாப்புக்கு உரிமை உண்டு.</p><p>அரச சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் ஊழல் நடவடிக்கைகளைக் கையாள்வதில் பாரபட்சத்திற்கு இடமில்லை, அரசியல் சார்புகள் அல்லது சமூக அந்தஸ்தின் அடிப்படையில் சட்டம் மாறுபட்ட விதத்தில் பயன்படுத்தப்பட்ட காலம் முடிவுக்கு வந்துள்ளது.</p><p></p><h2>விடுக்கப்படும் எச்சரிக்கை&nbsp;</h2><p> இதன் விளைவாக, எவ்வளவு செல்வாக்கு மிக்கவராக இருந்தாலும், இனி எந்தவொரு முக்கியப் பிரமுகரும் (VIP) தங்கள் இல்லத்திலிருந்தே வாக்குமூலம் அளிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb6dc97d-712f-4ca3-bb0b-d03577b00abf/26-6aacf73103483.webp' /></p><p>
</p><p>
நீதித்துறை செயல்முறை அல்லது விசாரணைகளிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் நபர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.</p><p>நாட்டிற்குள் இருக்கும் சந்தேக நபர்களை அழைத்து வர பிரிவு 106இன் கீழ் சட்ட அறிவிப்புகள் விடுக்கப்படும் அதே வேளையில், வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகளை நாடு கடத்தி வர இன்டர்போல் (Interpol) 'சிவப்பு அறிவிப்புகள்' (Red Notices) பயன்படுத்தப்படுகின்றன.</p><p> சட்டத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுடன் தொடர்புடைய 74 சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்” என குறிப்பிட்டார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T13:22:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிவியாவில் புதிய காட்டுப் பூனை இனம் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/new-tiger-cat-species-found-in-bolivia-1789737789"></link>
            <id>https://news.lankasri.com/article/new-tiger-cat-species-found-in-bolivia-1789737789</id>
            <summary type="text">New tiger cat species found in Bolivia: பொலிவியாவில் புதிய காட்டுப்பூனை இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

புதிய காட்டுப்பூனை இனம்பொலிவியாவின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>New tiger cat species found in Bolivia: பொலிவியாவில் புதிய காட்டுப்பூனை இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
</p><h2>
புதிய காட்டுப்பூனை இனம்</h2><p>பொலிவியாவின் யுங்காஸ் (Yungas) மலைப்பகுதியில், மேகக் காடுகளில் வாழும் சிறிய காட்டுப் பூனை ஒன்று, புதிய இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

“லியோபார்டஸ் டில்காயோ” (Leopardus tilcayo) என அறிவிக்கப்பட்ட இந்த புலி பூனை, கடந்த நூற்றாண்டுக்கு பிறகு உலகில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் புதிய பூனை இனமாகும்.

உள்ளூர் மக்கள் இதனை “டில்காயோ” என்று அழைக்கின்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6162224-1a76-4503-8426-737bc3e47b2f/26-6aad3b3f253c5.webp' /></p><h2>புலி பூனை</h2><p>இது தென் அமெரிக்காவின் பல பகுதிகளில் காணப்படும் புலி பூனைகளின் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த பூனை சுமார் 46 செ.மீ. நீளமும், 1.4 கிலோ எடையும் கொண்டது.</p><p> சாதாரண வீட்டுப் பூனையைக் காட்டிலும் சிறியது. இதன் தோல் வெளிர் பழுப்பு நிறத்தில், உடலெங்கும் ஒழுங்கற்ற வடிவிலான புள்ளிகளுடன் காணப்படுகிறது.</p><p>
</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/573b3f46-3a37-4184-88ac-94e5de3c8491/26-6aad3c42365d4.webp' /></p><p>அதன் வாழ்க்கை முறைகள் குறித்து விஞ்ஞானிகள் இன்னும் முழுமையான தகவல்களை கொண்டிருக்கவில்லை. ஆனால், அதன் கழிவுகளில் எலிகள் போன்ற சிறிய விலங்குகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், அவை அதன் உணவாக இருக்கலாம் என கருதப்படுகிறது. </p><p>மேலும், கேமரா-வலைகள் மூலம், இது இரவில் அதிகமாகச் செயல்படும் விலங்காக இருக்கலாம் என அறியப்பட்டுள்ளது.</p><p>

இந்த ஆய்வை முன்னெடுத்த தேசிய புவியியல் ஆராய்ச்சியாளர் பாவ்லா நோகல்ஸ் அஸ்கர்ருன்ஸ், “பொலிவியாவில் காணப்படும் இந்த பூனை, பிரேசிலில் காணப்படும் புலி பூனைகளின் விவரங்களுடன் பொருந்தவில்லை. அதனால், இது தனித்த இனமாக இருக்கலாம் என நாங்கள் சந்தேகித்தோம்” என்று கூறினார்.</p><p>
</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64546fb5-c3a7-4152-9855-8053c6dfd17c/26-6aad3c42e3a46.webp' /></p><p>DNA ஆய்வுகள் மூலம், புலி பூனைகள் ஐந்து தனித்த இனங்களாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதில், டில்காயோ சுமார் 14 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மற்ற புலி பூனைகளிலிருந்து பிரிந்தது என கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், பெருவின் யுங்காஸ் பகுதியில் “லியோபார்டஸ் டிக்ரினஸ் ஆன்டிசுயோ” (Leopardus tigrinus antisuyo) என்ற புதிய துணை இனமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த கண்டுபிடிப்பு, உலக விலங்கியல் வரலாற்றில் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-18T13:19:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் - செப்டம்பர் 28 ஆம் தேதி தொடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/thaimaman-gold-ring-scheme-launch-on-september-28-1789737283"></link>
            <id>https://ibctamilnadu.com/article/thaimaman-gold-ring-scheme-launch-on-september-28-1789737283</id>
            <summary type="text">thaimaman gold ring scheme launch starts on september 28: தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை செப்டம்பர் 28 ஆம் தேதி முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>thaimaman gold ring scheme launch starts on september 28: தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை செப்டம்பர் 28 ஆம் தேதி முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். </p><h3>

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்</h3><p>

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில் இன்று (18.9.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்கம் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fd522a0-a609-4517-b72b-0df9d14ce613/26-6aad394567628.webp' /></p><p> 

இந்த திட்டம் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15, 2026 அன்று தொடங்கி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த தேதி மாற்றப்பட்டு செப்டம்பர் 28 ஆம் தேதி முதல்வர் விஜய்யால் தொடங்கி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு தாய்-சேய் நலனை மேம்படுத்துவதற்கு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது.</p><p> 

கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி, இலவச பிரசவம் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தை பராமரிப்பு சேவைகள், அவசர மகப்பேறு சிகிச்சை. ஊட்டச்சத்து அளித்தல். பிரசவத்திற்காக மருத்துவமனையைத் திட்டமிடும் முறை. கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் கூட்டுக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு மென்பொருள் (PICME) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு மாநிலத்தில் தாய்-சேய் நலக் குறியீடுகள் குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன. </p><p>

தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்ந்த சேவைகளில் மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தில். தாய்மாமன் சீர்மரபைப் பிரதிபலிக்கும் வகையிலும் வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டத்தின்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையில் "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' என்ற சிறப்பு நலத்திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.</p><p> 

இத்திட்டத்தின் கீழ், 22.06.2026 அன்று முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்கமோதிரம் வழங்கப்படும். இதற்கான அரசாணை 23.06.2026 அன்று வெளியிடப்பட்டது.</p><p>
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 7.80 இலட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இவற்றில் 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன என்று தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு-6ல் (National Family Health Survey-6) பதிவாகியுள்ளது. 

இவற்றில் 4.20 இலட்சம் பிரசவங்கள் (53%) அரசு மருத்துவமனைகளில் நிகழ்கின்றன. </p><p>அதில் 90 சதவீதம் சீமாங் மையங்களில் (CEMONC Centres) நடைபெறுகின்றன. இதன்மூலம். பாதுகாப்பான பிரசவம் மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளின் பிறப்பை உறுதி செய்வதில் பொது சுகாதார அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.
</p><p>
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரு கிராம் எடை கொண்ட தங்க மோதிரம் வழங்கப்படும். </p><p>

அதற்கென தனித்துவமான வரிசை எண்ணும் (Unique Serial Number), சேதப்படுத்த முடியாத பாதுகாப்புப் பெட்டகமும் (Tamper-proof Packaging) வழங்கப்படும்.</p><p> 

இத்திட்டத்திற்காக முதல் தவணையாக 1,28,000 தங்கமோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.</p><p>

தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள். PICME-யில் பதிவு செய்யப்பட்டு RCH அடையாள எண் (RCHID) பெற்றிருக்க வேண்டும்.
</p><p>
இத்திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 28.09.2026 அன்று தொடங்கி வைக்கப்படவுள்ளது. </p><p>

மேலும், அரசு மருத்துவமனைகளில் 22.06.2026 முதல், திட்டம் தொடங்கப்படும் நாள் வரை பிறக்கும் குழந்தைகளுக்கு 107 மையங்களில் (Hubs) தினமும் 100 குழந்தைகள் வீதம் 28.09.2026 முதல் வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p> 

இத்திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்படும் நாளிலிருந்து அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும்போது தங்கமோதிரம் வழங்கப்படும்.
</p><p>
இத்திட்டம். அரசு மருத்துவ சேவைகளில் மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதோடு, மருத்துவமனைகளில் பாதுகாப்பான பிரசவமுறையை ஊக்குவிப்பதாகவும். தாய்-சேய் நலப் பாதுகாப்பை வலுப்படுத்துவதாகவும். குழந்தை நலனில் அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது" என தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T13:15:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிவியாவின் அடர்ந்த காடுகளில் மிகவும் சிறிய வடிவிலான புதிய விலங்கினம் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-wild-cat-species-discovered-in-bolivia-1789735968"></link>
            <id>https://tamilwin.com/article/new-wild-cat-species-discovered-in-bolivia-1789735968</id>
            <summary type="text">பொலிவியாவின் அடர்ந்த காடுகளில் மிகவும் சிறிய வடிவிலான புதிய காட்டுப்பூனை
இனம் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் முறைப்படி கண்டறிந்து பெயரிட்டுள்ளனர்.

கடந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிவியாவின் அடர்ந்த காடுகளில் மிகவும் சிறிய வடிவிலான புதிய காட்டுப்பூனை
இனம் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் முறைப்படி கண்டறிந்து பெயரிட்டுள்ளனர்.</p><p>

கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலான காலத்தில், புதிய உயிருள்ள பூனை இனம் ஒன்று
முறைப்படி கண்டறியப்பட்டு பெயரிடப்படுவது இதுவே முதல்முறையாகும்.
</p><p>
உள்ளூர் மக்களால் 'டில்காயோ' என அழைக்கப்படும் இப்பூனைக்கு 'லியோபார்டஸ்
டில்காயோ' (Leopardus tilcayo) என ஆராய்ச்சியாளர்கள் விஞ்ஞானப்
பெயரிட்டுள்ளனர்.</p><h2>அபூர்வப் பூனை</h2><p>
</p><p>
பொலிவியாவின் மேக மூட்டம் நிறைந்த யுங்காஸ் காட்டுப் பகுதியில் வாழும் இது,
சாதாரண வீட்டுப் பூனையை விட சிறியதுடன், சுமார் 1.4 கிலோகிராம் எடையும், 46
சென்டிமீட்டர் நீளமும் கொண்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da4c1297-7160-4ec4-9467-30c13a4426bf/26-6aad3949757db.webp' /></p><p>
</p><p>
வெளிர் பழுப்பு நிற உடலின் மீது ஒழுங்கற்ற புள்ளிகளைக் கொண்டுள்ள இப்பூனைகள்,
இரவில் தீவிரமாக இயங்கக்கூடியவை என்றும், சிறிய எலிகளை உணவாகக் கொள்ளக்கூடியவை
என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>&nbsp;புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள இந்த அபூர்வப் பூனை இனம் அழியும் ஆபத்தை
எதிர்கொண்டுள்ள விலங்குகளின் பட்டியலில் சேரக்கூடும் என்பதால், அவற்றின்
வாழ்விடங்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியமென சூழலியலாளர்கள்
வலியுறுத்துகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T13:14:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு கடத்தப்படவுள்ள பசில்! இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள செயன்முறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/basil-rajapaksa-set-to-be-deported-1789734914"></link>
            <id>https://ibctamil.com/article/basil-rajapaksa-set-to-be-deported-1789734914</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தும் முறைசார்ந்த செயல்முறை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தும் முறைசார்ந்த செயல்முறை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>பல்வேறு குற்றவியல் வழக்குகள் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்ட கைது பிடியாணைகள் குறித்து முன்னிலையாப தவறியதன் காரணமாக அவருக்கு சர்வதேச பிடியானை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p>இந்த விடயத்தை தென்னிலங்கை ஊடகமொன்று காவல்துறையை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.</p><h2>INTERPOL உதவி</h2><p>லொஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வருவதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சரை இலங்கை நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்த INTERPOL உதவியையும், சிவப்பு அறிவிப்பையும் கோருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிலவும் இருதரப்பு நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த இராஜதந்திர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
மாத்தறை பகுதியில் காணி கொள்வனவு தொடர்பாக பல மில்லியன் ரூபாய் பெறுமதியான நிதி முறைகேடுகள் இடம்பெற்றதாக நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு (FCID) தாக்கல் செய்துள்ள வழக்குகளுடன் தொடர்புடைய நீதிமன்ற நடவடிக்கைகளில் முன்னிலையாக தவறியதன் காரணமாகவே இந்தக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அவர் அமெரிக்கக் குடிமகனாக இருந்தாலும், குறித்த இருதரப்பு ஒப்பந்தத்தின் சட்ட விதிகளின் அடிப்படையிலும், வெளிவிவகார அமைச்சுக்கும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரகசிய கடிதப் பரிமாற்றங்களின் ஊடாகவும் நாடு கடத்தல் கோரிக்கை முறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>சர்வதேச சட்ட நடவடிக்கை&nbsp;</h2><p>

எவ்வாறாயினும், இந்த சர்வதேச சட்ட நடவடிக்கை தானாகவே கைது செய்வதற்கோ அல்லது அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கோ வழிவகுக்காது. </p><p>சம்பந்தப்பட்ட அமெரிக்க சட்ட நடைமுறைகள் மற்றும் சமர்ப்பிக்கப்படும் ஆதார ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்ட பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும்.
</p><p>
இத்தகைய உயர்மட்ட அரசியல் பிரமுகர் ஒருவருக்கு எதிராக சர்வதேச அளவில் சட்ட நடைமுறையாக்க&nbsp; நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவது, இலங்கையின் நீதித்துறை வரலாற்றிலும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் முக்கியமான திருப்புமுனையாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T13:05:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை நெருக்கடி: நாடு முழுவதும் 500 நிலையங்கள் ஆபத்தில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fuel-supply-crisis-looms-as-foreign-oil-companies-1789735466"></link>
            <id>https://tamilwin.com/article/fuel-supply-crisis-looms-as-foreign-oil-companies-1789735466</id>
            <summary type="text">இலங்கையில் வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்களின் விநியோக நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்களின் விநியோக நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் 500 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் எச்சரித்துள்ளது.</p><h2>500 எரிபொருள் நிரப்பு நிலையங்கள்</h2><p>

கொழும்பில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் இந்த நிலைமை தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
அங்கு Lanka IOC, Sinopec மற்றும் RM Packs உள்ளிட்ட எரிபொருள் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b062e94f-66f2-472a-853e-5ecd24d343c1/26-6aad35bb06f4f.webp' /></p><p>
</p><p>
வெளிநாட்டு நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் எரிபொருளை, அதனை இறக்குமதி செய்வதற்கான செலவைவிட குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதனால் எரிபொருளை வழக்கமான முறையில் விநியோகிப்பதில் நிறுவனங்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
</p><p>
இந்த நிலைமை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு மட்டுமன்றி, அன்றாடம் போதுமான எரிபொருள் கிடைக்காமல் சிரமப்படும் பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.</p><h2>அரசாங்கத்திடம் கோரிக்கை</h2><p>

அரசுக்கு சொந்தமான இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் எரிபொருளை வழங்கி வருகின்றது.</p><p> </p><p>ஆனால் வெளிநாட்டு நிறுவனங்கள் எரிபொருளை நேரடியாக இறக்குமதி செய்வதால், அதிகளவான செயற்பாட்டு செலவுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6fb2028-5632-40c1-9b64-01f21a66ff58/26-6aad35bbe55d6.webp' /></p><p>
</p><p>
இதன் காரணமாக நாட்டில் எரிபொருள் விநியோகத்தை சீராகப் பேணுவது மேலும் சிக்கலாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணும் வகையில், எரிபொருள் விலையை ஒழுங்குபடுத்துவதற்காக சுயாதீனமான நிறுவனமொன்றை அமைக்குமாறு சங்கத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

நாடு முழுவதும் ஒரே மாதிரியான எரிபொருள் விலையை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T13:01:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆரஞ்சு நிற தாவணி அழகில் மயக்கும் சீரியல் நடிகை கிரேஸி தங்கவேல்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/serial-actress-gracy-thangavel-halk-saree-photos-1789734769"></link>
            <id>https://cineulagam.com/article/serial-actress-gracy-thangavel-halk-saree-photos-1789734769</id>
            <summary type="text">கிரேஸி தங்கவேல்விஜய் தொலைக்காட்சியில் நிறைய சீரியல்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிறது.&amp;nbsp;அப்படி மதிய நேரத்தில் மக்களின் ஆதரவுடன் ஒளிபரப்பாகி வரும் சீரி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கிரேஸி தங்கவேல்</h2><p>விஜய் தொலைக்காட்சியில் நிறைய சீரியல்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிறது.&nbsp;</p><p>அப்படி மதிய நேரத்தில் மக்களின் ஆதரவுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் கண்மணி அன்புடன். இந்த தொடரில் முதலில் நல்ல கதாபாத்திரமாக இருந்த வெண்ணிலா கேரக்டர் இப்போது வில்லியாக மாறியுள்ளது.</p><p>வெண்ணிலா வேடத்தில் கெத்தாக நடித்துவருபவர் தான் கிரேஸி தங்கவேல். இவர் அண்மையில் ஆரஞ்சு நிற தாவணியில் வெளியிட்ட அழகிய போட்டோஸ் இதோ,</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T13:00:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் இன்னும் சின்னப் பொண்ணு..இவ்வளவு ஆர்வமா இருக்கீங்க!! நடிகை பிரியா வாரியர்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/when-will-you-get-married-priya-varrier-responds-1789725248"></link>
            <id>https://viduppu.com/article/when-will-you-get-married-priya-varrier-responds-1789725248</id>
            <summary type="text">பிரியா பிரகாஷ் வாரியர்கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த நடிகை பிரியா பிரகாஷ் வாரியர், ஒரு அடார் லவ் என்ற படத்தில் நடித்து பிரபலமானார். அப்படத்தில் கன் ச...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிரியா பிரகாஷ் வாரியர்</h2><p>கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த நடிகை பிரியா பிரகாஷ் வாரியர், ஒரு அடார் லவ் என்ற படத்தில் நடித்து பிரபலமானார். அப்படத்தில் கன் சிமிட்டும் காட்சியில் ஒரே இரவில் பிரபலமான பிரியா, இந்தி, கன்னடம், தெலுங்கு போன்ற மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99398e25-a7e4-4ef2-8ca0-c23dfa9bd359/26-6aad0a420fba0.webp' /></p><p> </p><p>சமீபத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், குட் பேட் அக்லி, சர்வம் மாயா போன்ற படங்களில் நடித்தார். தமிழில் பாடல் பாடி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டும் வருகிறார்.</p><p> இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து வந்த பிரியா வாரியரிடம், நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்ற கேள்வியை ஒரு ரசிகர் கேட்டுள்ளார்.</p><p> அதற்கு அவர், நீங்கள் ஏன் எனக்கு திருமணம் செய்து வைக்க இவ்வளவு ஆர்வமாக இருக்கிறீர்கள், நான் இன்னும் சின்னப் பொண்ணுதான் என்று கூறியிருக்கிறார்.</p>]]></content>
            <updated>2026-09-18T13:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு... இப்படி செய்து அசத்துங்க!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/health-benefits-of-ennai-kathirikai-kulambu-1789733808"></link>
            <id>https://manithan.com/article/health-benefits-of-ennai-kathirikai-kulambu-1789733808</id>
            <summary type="text">ennai kathirikai kulambu : பொதுவாக எல்லா காலங்களிலும் எளிதாகக் கிடைக்கக்கூடிய கத்தரிக்காய், குறைந்த கலோரி கொண்டதோடு, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ennai kathirikai kulambu : பொதுவாக எல்லா காலங்களிலும் எளிதாகக் கிடைக்கக்கூடிய கத்தரிக்காய், குறைந்த கலோரி கொண்டதோடு, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த ஆரோக்கியமான காய்கறிகளில் ஒன்றாகும்.</p><p>

இதயத்துக்கும் மூளைக்கும் தேவையான ஆரோக்கிய ஆதரவை வழங்கும் கத்தரிக்காய், செரிமானத்தை மேம்படுத்துவதுடன், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதிலும் பங்காற்றுகிறது.

குறிப்பாக, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கப் போராடுபவர்களுக்கு கத்தரிக்காய் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13dedbb4-f3b4-4efd-9c65-2aa7b7e47816/26-6aad350626244.webp' /></p><p> மேலும், இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றச் சத்துக்கள், உடலில் ஏற்படும் செல்லுலார் சேதத்திற்கு எதிராக பாதுகாப்பு நன்மைகளை வழங்குகின்றன.

அதுமட்டுமல்லாமல், கத்தரிக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுவதோடு, குறைந்த கிளைசெமிக் குறியீடு காரணமாக இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கவும் துணைபுரிகிறது.</p><p> கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுவதன் மூலம் இதய ஆரோக்கியத்திற்கும் ஆதரவாக இருக்கிறது.

இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட கத்தரிக்காயை, பலரும் தங்கள் உணவுப் பட்டியலில் இருந்து ஒதுக்கி வைத்துவிடுகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80047500-bc0d-4c0a-87fd-402a23b6cbcc/26-6aad3506d0e82.webp' /></p><p>இந்த பிரச்சினைக்கு முடிவுகட்டி வீட்டில் உள்ள அனைவருரையும் கத்தரிக்காயை கேட்டு சாப்பிடும் அளவுக்கு, அசைவ உணவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு எவ்வாறு செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>தேவையான பொருட்கள்</h2><p>
கத்திரிக்காய் – 250 கிராம்
</p><p>
சின்ன வெங்காயம் – 10
</p><p>
பெரிய வெங்காயம் – 2
</p><p>
தக்காளி – 2
</p><p>
தேங்காய் துருவல் – ½ கப்
</p><p>
இஞ்சி – 1 துண்டு
</p><p>
பூண்டு – 4 பல்
</p><p>
கடுகு – ¼ தேக்கரண்டி
</p><p>
வெந்தயம் – ¼ தேக்கரண்டி
</p><p>
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
</p><p>
தனியாத்தூள் – 1 தேக்கரண்டி
</p><p>
மஞ்சள்தூள் – ½ தேக்கரண்டி
</p><p>
சீரகம் – 1 தேக்கரண்டி
</p><p>
சோம்பு – 1 தேக்கரண்டி
</p><p>
புளித்தண்ணீர் – 1 கப்
</p><p>
காய்ந்த மிளகாய் – 2
</p><p>
நல்லெண்ணெய் – 1 குழிக்கரண்டி
</p><p>
கறிவேப்பிலை – 1 கீற்று
</p><p>
கொத்தமல்லித்தழை – தேவையான அளவு
</p><p>
உப்பு – தேவையான </p><p>அளவு

தண்ணீர் – தேவையான அளவு</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b65197b-7ba5-4de4-93b5-c7dee75b8ca6/26-6aad3507870e4.webp' /></p><p>
</p><h2>
செய்முறை</h2><p>
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கவும்</p><p>வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c06456b3-5fe1-4ce8-91d8-327eaf122121/26-6aad35083d2bb.webp' /></p><p>அதனையடுத்து மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துவிட்டு, அதனையடுத்து தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி ஆரவிட வேண்டும்.</p><p>பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் மாற்றி அதனுடன் தேங்காய் துருவல், சோம்பு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.</p><p>
அதன் பின்பு கத்திரிக்காய் எடுத்து முழுவதுமாக வெட்டாமல் எக்ஸ் வடிவில் வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.



பின்னர் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கத்திரிக்காய் சேர்த்து நன்றாக வதக்கி தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6ab25b2-266a-42f1-89ff-0e99a75c5d9b/26-6aad3508e511f.webp' /></p><p>
</p><p>
அதனையடுத்து அதே பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் , கறிவேப்பில்லை சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.</p><p>

பின்னர் சின்னவெங்காயம் சேர்த்து வதக்கி, இதோடு அரைத்த மசாலா சேர்த்து நன்றாக கலந்து மூடி வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வேகவிட வேண்டும்.</p><p>அதனையடுத்து புளி தண்ணீர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/360c796d-7866-4228-bf55-a8f1115d96be/26-6aad350998dfc.webp' /></p><p>

அதன் பின்பு வதக்கிய கத்திரிக்காயையும் சேர்த்து லேசாக வதக்கி மூடி போட்டு 5 நிமிடம் மிதமான சூட்டில் மூடி வைக்க வேண்டும்.

கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கினால் அவ்வளவு தான், அசத்தல் சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தயார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T12:57:59+00:00</updated>
        </entry>
    </feed>
