<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-16T22:38:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு காத்திருக்கும் புதிய நெருக்கடி ; எல் நினோவால் புதிய பொருளாதார அச்சுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/crisis-awaiting-srilanka-economic-from-el-nino-1786919514"></link>
            <id>https://jvpnews.com/article/crisis-awaiting-srilanka-economic-from-el-nino-1786919514</id>
            <summary type="text">எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக எதிர்வரும் காலத்தில் பணவீக்கம் அதிகரிப்பதற்கான முக்கிய அபாயம் காணப்படுவதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அது கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக எதிர்வரும் காலத்தில் பணவீக்கம் அதிகரிப்பதற்கான முக்கிய அபாயம் காணப்படுவதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அது கடுமையான அச்சுறுத்தலாக அமையக்கூடும் என இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது.</p><p></p><h3>இலங்கை மத்திய வங்கி</h3><p>

ஆகஸ்ட் மாதத்திற்கான பணவியல் கொள்கை அறிக்கையினூடாக மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fad8e6b1-8013-4964-a175-13f6ad714653/26-6a823a5bdc966.webp' /></p><p>நீண்டகால வறட்சியான காலநிலை மற்றும் மழைவீழ்ச்சி அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் என்பன விவசாய உற்பத்தியைப் பாதிப்பதே இதற்குக் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>

இதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பொலன்னறுவை, மிஹிந்தலை, அனுராதபுரம், மொனராகலை உள்ளிட்ட பிரதேசங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
</p><p>
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது ஓரளவுக்கு மழை வீழ்ச்சி பதிவாகி வருகின்ற போதிலும், அனுராதபுரம், பொலன்னறுவை, வெல்லவாய, அம்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் கடுமையான வறட்சியான நிலையே நிலவுவதுடன் சிறிய குளங்கள் வற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன் காரணமாகப் பல பிரதேசங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையும் விவசாய நடவடிக்கைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
</p><p>
அத்துடன், ஹிங்குராக்கொட - கிதுல்உத்துவ கிராமத்தின் கிதுல்உத்துவ குளம் வற்றிப்போயுள்ளதால், தாம் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T22:32:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷார்ட் உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை ஐஸ்வர்யா மேனன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/iswarya-menon-trendy-short-dress-photos-1786919407"></link>
            <id>https://cineulagam.com/article/iswarya-menon-trendy-short-dress-photos-1786919407</id>
            <summary type="text">நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் படம் 2, நான் சிரித்தால் போன்ற படங்களில் நடித்தவர். அவர் தற்போது தெலுங்கில் அதிகம் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

தற்போது ஷா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் படம் 2, நான் சிரித்தால் போன்ற படங்களில் நடித்தவர். அவர் தற்போது தெலுங்கில் அதிகம் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
</p><p>
தற்போது ஷார்ட் உடையில் ட்ரெண்டியாக ஐஸ்வர்யா மேனன் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க.</p>]]></content>
            <updated>2026-08-16T22:30:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க வீரரை பிடித்துக் கொடுத்தால் ரூ.28 இலட்சம் ; ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-announce-rs-2-8-million-capturing-us-soldier-1786900847"></link>
            <id>https://canadamirror.com/article/iran-announce-rs-2-8-million-capturing-us-soldier-1786900847</id>
            <summary type="text">அமெரிக்க ராணுவ வீரர்களைக் கொன்றாலோ அல்லது உயிருடன் பிடித்து ஒப்படைத்தாலோ 30,000 அமெரிக்க டொலர் சன்மானம் வழங்கப்படும் என ஈரான் ராணுவம் அறிவித்துள்ளதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ராணுவ வீரர்களைக் கொன்றாலோ அல்லது உயிருடன் பிடித்து ஒப்படைத்தாலோ 30,000 அமெரிக்க டொலர் சன்மானம் வழங்கப்படும் என ஈரான் ராணுவம் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>இந்தத் தொகை சுமார் 28 இலட்சம் இலங்கை ரூபாய்க்கு சமமானதாகும். பெண் ஒருவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டால் சன்மானத் தொகை இரட்டிப்பாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஈரான் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அமீர் ஹதாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் தொடரும் நிலையில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1973dc7d-641d-441f-a43c-9a50d5bb4e33/26-6a81f171261f1.webp' /></p><p>இந்த சன்மானத் திட்டம் குறித்து அமீர் ஹதாமி, அமெரிக்காவுக்கு எதிரான மோதலில் பங்களிக்க விருப்பம் தெரிவித்து பெருமளவானோர் முன்வைத்த கோரிக்கைகளைத் தொடர்ந்து இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
</p><p>
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் நீடித்து வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை தொடர்பான பதற்றமும் தொடர்கிறது. </p><p>இதனால் மேற்காசியப் பிராந்தியத்தில் இராணுவ மற்றும் அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளது.
</p><p>
இதேவேளை, ஈரானுக்குள் அமெரிக்கப் படைகள் தரையிறங்கியுள்ளனவா என்பது தொடர்பில் வெளியாகும் தகவல்கள் குறித்து மாறுபட்ட செய்திகள் வெளியாகி வருகின்றன. </p><p>முன்னதாக அமெரிக்க வீரர்கள் ஈரானில் கைது செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவிய பல தகவல்கள் நம்பகமான ஆதாரங்களால் உறுதிப்படுத்தப்படவில்லை என உண்மைச் சரிபார்ப்பு நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.
</p><p>
தற்போது ஈரான் ராணுவம் அறிவித்துள்ள சன்மானத் திட்டம், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலின் தீவிரத்தை மேலும் வெளிப்படுத்துவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-16T22:12:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெற்றி தோல்வியை தாண்டி இது தான் முக்கியம்.. மகன் பற்றி பதிவிட்ட ஷாலினி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/aadvik-ajith-team-wins-in-football-shalini-photo-1786918334"></link>
            <id>https://cineulagam.com/article/aadvik-ajith-team-wins-in-football-shalini-photo-1786918334</id>
            <summary type="text">நடிகர் அஜித் கார் ரேஸில் தீவிர கவனம் செலுத்தி வந்தாலும் அடுத்து தன் மனைவி ஷாலினி தயாரிப்பில் படம் நடிக்க போகிறார். அது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் அஜித் கார் ரேஸில் தீவிர கவனம் செலுத்தி வந்தாலும் அடுத்து தன் மனைவி ஷாலினி தயாரிப்பில் படம் நடிக்க போகிறார். அது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பும் வந்துவிட்டது.</p><p>இந்நிலையில் அஜித் - ஷாலினியின் மகன் ஆத்விக் அஜித் கால்பந்து போட்டியில் கலந்துகொண்டு இருக்கிறார். அவரது அணி ஜெயித்த நிலையில் ஷாலினி மகிழ்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.
</p><h2>இது முக்கியம்
</h2><p>அவர்கள் விளையாடுவதை பார்க்க அழகாக இருந்தது. ரிசல்ட் என்ன என்பதை விட, விளையாடும் மகிழ்ச்சி என்பது தான் முக்கியம்.
</p><p>
இவ்வாறு ஷாலினி பதிவிட்டு இருக்கிறார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T22:12:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனிலுள்ள தமிழர்களின் தொடர் முயற்சிக்கு வெற்றி ; ஹாரோவில் பார்க்கிங் அபராதங்கள் ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/success-tamils-london-parking-fine-cancelled-harow-1786908795"></link>
            <id>https://jvpnews.com/article/success-tamils-london-parking-fine-cancelled-harow-1786908795</id>
            <summary type="text">லண்டன் ஹாரோவின் தெற்கு பகுதிகளில் வசிக்கும் மற்றும் அப்பகுதிக்கு வருகை தரும் தமிழர்கள் கடந்த சில மாதங்களாக எதிர்கொண்ட வாகன நிறுத்தக் கட்டணங்கள் மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டன் ஹாரோவின் தெற்கு பகுதிகளில் வசிக்கும் மற்றும் அப்பகுதிக்கு வருகை தரும் தமிழர்கள் கடந்த சில மாதங்களாக எதிர்கொண்ட வாகன நிறுத்தக் கட்டணங்கள் மற்றும் அபராதச் சீட்டு தொடர்பான பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு கிடைத்துள்ளது.</p><p>
</p><p></p><p>தெற்கு ஹாரோ பகுதிகளில் வாகன நிறுத்த விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து, வார இறுதி நாட்களில் பொருட்கள் வாங்குவதற்கும் உறவினர்களை சந்திப்பதற்கும் அப்பகுதிக்கு சென்ற பல தமிழர்கள் தொடர்ச்சியான அபராதச் சீட்டுகளை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இந்த விவகாரம் தொடர்பில் ஹாரோ தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் அறங்காவலர் குழுத் தலைவர் குமாரசாமி இந்திரஜித் குரல் கொடுத்ததுடன், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் பிரச்சினையை பொதுமக்களின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e9e0069-a623-4b5f-9f60-1d19f7e8ea35/26-6a82107cc982d.webp' /></p><p>இதனையடுத்து, ஹாரோ நகரசபைக்கு மனுக்கள் அனுப்பப்பட்டதுடன், அதிகாரிகளுடன் விசேட ஆலோசனைக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
</p><p>
இதன் தொடர்ச்சியாக ஹாரோ நகரசபைத் தலைவர் பால் ஆஸ்போர்ன் (Paul Osborn), பொதுப் பாதுகாப்பு மற்றும் அமலாக்கப் பிரிவின் மூலோபாயத் தலைவர் எம்மா ஃபேசி (Emma Phasey) மற்றும் நகரசபை அதிகாரி சுதேஷ் பாசி ஆகியோர் தமிழ் சமூகப் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
</p><p>
தமிழ் சமூகத்தினர் முன்வைத்த நியாயமான கோரிக்கைகள் மற்றும் தனிப்பட்ட சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, இதுவரை வழங்கப்பட்ட பல வாகன நிறுத்த அபராதச் சீட்டுகளை ஹாரோ நகரசபை ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து உடனடியாகத் தீர்வு வழங்கிய ஹாரோ நகரசபைக்கும் அதன் அதிகாரிகளுக்கும் ஹாரோ தமிழ்ச் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.</p><p>

இதேவேளை, தெற்கு ஹாரோ பகுதியில் வாகன நிறுத்த அபராதச் சீட்டு பெற்றுள்ளவர்களில், தங்களுக்கு நியாயமான விதிவிலக்கான காரணங்கள் இருப்பதாகக் கருதுபவர்கள், மேலதிக தகவல்கள் மற்றும் வழிகாட்டல்களுக்காக ஹாரோ நகரசபை அதிகாரிகளை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T22:12:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலி முகத்திடலில் கரை ஒதுங்கிய மர்ம சடலம் ; கொலையா? தற்கொலையா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mysterious-body-ashore-galle-face-murder-suicide-1786918171"></link>
            <id>https://jvpnews.com/article/mysterious-body-ashore-galle-face-murder-suicide-1786918171</id>
            <summary type="text">கொழும்பு, காலி முகத்திடல் கடற்கரையை ஒட்டிய பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாகக் கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.இன்று (16)...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, காலி முகத்திடல் கடற்கரையை ஒட்டிய பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாகக் கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p>இன்று (16) ஞாயிற்றுக்கிழமைகாலை கோட்டை பொலிஸாருக்குக் கிடைத்தத் தகவலின் அடிப்படையில் இச்சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3892896c-391c-4e0e-9d62-037e423d1bb6/26-6a82351d74c78.webp' /></p><p>கரை ஒதுங்கிய சடலம் சிதைந்த நிலையில் காணப்படுவதால், உயிரிழந்தவர் யார் என்பதை உடனடியாக அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
உயிரிழந்த நபர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட போது இளஞ்சிவப்பு நிற நீண்ட கை சட்டையும் மற்றும் அரைக்கால் சட்டையும் அணிந்திருந்துள்ளார்.
</p><p>
சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
உயிரிழந்தவரின் அடையாளத்தைக் கண்டறியவும், இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் தீவிர விசாரணைகளை மேற்கொள்ளவும் கோட்டை பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T22:09:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெறும் வயிற்றில் மஞ்சள் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் அற்புதமான நன்மைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/benefits-of-drinking-turmeric-water-empty-stomach-1786917439"></link>
            <id>https://jvpnews.com/article/benefits-of-drinking-turmeric-water-empty-stomach-1786917439</id>
            <summary type="text">மஞ்சள் ஆயுர்வேதத்தில் பல நூற்றாண்டுகளாக பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது. தற்போது மாறிவரும் வாழ்க்கை முறைக்கு ஏற்ப மக்கள் தங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஞ்சள் ஆயுர்வேதத்தில் பல நூற்றாண்டுகளாக பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது. தற்போது மாறிவரும் வாழ்க்கை முறைக்கு ஏற்ப மக்கள் தங்களது உடல் நலம் குறித்து மிகுந்த விழிப்புணர்வு பெற்றுள்ளதால் காலையில் வெறும் வயிற்றில் மஞ்சள் தண்ணீர் குடிக்கும் போக்கு மிக வேகமாக அதிகரித்து வருகிறது.</p><p>மஞ்சளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலை உள்ளிருந்து சுத்தமாக வைத்திருக்கவும், பல கடுமையான நோய்களில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.&nbsp;வெறும் வயிற்றில் மஞ்சள் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் எவையென நாம் இங்கு பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad2c3266-9fe9-4ad8-ad77-568588d3797c/26-6a8232429973a.webp' /></p><h3> உடலின் எந்தப் பகுதியிலும் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது</h3><p>இன்றைய தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தால் உடலில் வீக்கம் ஏற்படுவது மிகவும் பொதுவானது. இந்த வீக்கம் உங்கள் முகம் முதல் மூட்டுகள் வரை எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். இத்தகைய சூழ்நிலையில் மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உடலில் ஏற்படும் வீக்கப் பிரச்சனையை கட்டுப்படுத்துகின்றன.</p><h3>நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது</h3><p>உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருந்தால் அதை வலுப்படுத்த மஞ்சள் தண்ணீர் அருந்துங்கள். மஞ்சளில் உள்ள குர்குமின், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்த ஒரு சக்திவாய்ந்த சேர்மமாகும், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97aaba3a-9ab3-4774-8a90-73d248e475d7/26-6a823241e425e.webp' /></p><h3>இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்துகிறது</h3><p>நீரிழிவு நோயாளிகளுக்கு மஞ்சள் நீர் மிகவும் நன்மை பயக்கும். இது இரத்த சர்க்கரையை குறைக்க பயனுள்ளதாக இருக்கும். மஞ்சளில் உள்ள குர்குமின் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது, இது சர்க்கரையை கட்டுப்படுத்துவதை எளிதாக்குகிறது, எனவே நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக இதை உட்கொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d21b2ae-a5c9-4abe-8558-d81ea7213dcc/26-6a8232413dc63.webp' /></p>]]></content>
            <updated>2026-08-16T21:57:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் அறிவித்த பெரும் பணப் பரிசு... ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்பில் அதிகரித்த பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-cash-prize-panic-mounts-1786915502"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-cash-prize-panic-mounts-1786915502</id>
            <summary type="text">Iran unveils sick cash prize on American troops: அமெரிக்க வீரர்களைப் பிடிப்பவர்களுக்கோ அல்லது கொல்பவர்களுக்கோ பெரும் பணப்பரிசு வழங்கப்படும் என்று ஈரான...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran unveils sick cash prize on American troops: அமெரிக்க வீரர்களைப் பிடிப்பவர்களுக்கோ அல்லது கொல்பவர்களுக்கோ பெரும் பணப்பரிசு வழங்கப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது.
</p><p>அமெரிக்கப் படைகளை உயிருடன் பிடிப்பவர்களுக்கோ அல்லது கொல்பவர்களுக்கோ ஈரான் அதிரவைக்கும் வகையிலான பணப் பரிசை அறிவித்துள்ளது.</p><h2>படுகொலை முயற்சி</h2><p>
அத்துடன், ஒரு குறிப்பிட்ட நிபந்தனையின் கீழ் அந்தப் பரிசுத் தொகை இரட்டிப்பாக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92edd690-c241-4956-8069-6761a64b4710/26-6a822ab11e0c0.webp' /></p><p> </p><p>அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரைக் கொல்பவருக்கோ அல்லது சிறைபிடிப்பவருக்கோ 5 பில்லியன் டோமன் (30,000 அமெரிக்க டொலர்) வெகுமதி அளிக்கப்படும் என்று ஈரான் ராணுவத் தளபதி அமீர் ஹதாமி ஞாயிற்றுக்கிழமை அறிவித்ததாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. </p><p>ஈரானின் இராணுவத்தால் வழங்கப்படும் இந்தப் பரிசு, அச்செயலை நிறைவு செய்யும் துணிச்சலான ஈரானியப் பெண்களுக்கு இருமடங்காக வழங்கப்படும் என்றும் ஹதாமி தெரிவித்துள்ளார். </p><p>அத்தகைய தாக்குதல்கள் எங்கே அல்லது எப்போது நடைபெறும் என்பதை அவர் குறிப்பிடவில்லை. ஜனாதிபதி ட்ரம்ப் மீது ஈரான் மேற்கொள்வதாகக் கூறப்படும் படுகொலை முயற்சிகள் குறித்த கவலைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p></p><p>
</p><p>ஈரானிடமிருந்து வெளியான அச்சுறுத்தல் காரணமாக, ஜனாதிபதி ட்ரம்ப் 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' (Air Force One) விமானத்திலிருந்து மற்றொரு பயணிகள் விமானத்திற்கு ரகசியமாக மாற்றப்பட்டதாக கடந்த வாரம் தகவல்கள் வெளியானதாக நீதித்துறை தெரிவித்தது. </p><p>துருக்கியில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சிமாநாட்டிலிருந்து ட்ரம்ப் புறப்பட்டபோது அந்த நெருக்கடி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பிப்ரவரி மாத இறுதியில் போர் தொடங்கியதிலிருந்து, அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த 18 பேர் மரணமடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9b55e84-d454-45e0-bcd3-d337aec9468c/26-6a822ab1c4e57.webp' /></p><p> </p><p>ஈரான் அருகே F-15E ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையின்போது தவிர, ஈரானில் அமெரிக்கப் படைகள் தரைவழியாக களமிறக்கப்படவில்லை.</p><h2>அமைதிப் பேச்சுவார்த்தை</h2><p> </p><p>பல நாட்கள் நீடித்த அமெரிக்க சிறப்பு நடவடிக்கையை அடுத்து, ​​ஜெட் விமானத்தில் இருந்த விமானி மற்றும் ஆயுத அமைப்பு அதிகாரி ஆகிய இருவரும் வெற்றிகரமாக உயிருடன் மீட்கப்பட்டனர்.
</p><p>ஆறு மாதங்களுக்கு முன்பு அமெரிக்க இராணுவமும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அமெரிக்க-ஈரான் போர் வெடித்ததிலிருந்து பதற்றம் அதிகமாகவே இருந்து வருகிறது. </p><p>இதனிடையே, ஏப்ரல் மாதம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு கட்டமைப்பு அறிவிக்கப்பட்டது, ஆனால் அது இன்னும் இறுதி செய்யப்படும் நிலையில் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0410aad-38e3-424e-bc05-edbb24f05bac/26-6a822ab2758e5.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், தொடர்ச்சியாக கிட்டத்தட்ட இரண்டு வாரம் இரவு நேரத்தில் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்கள் மீது ஈரான் தாக்குதல் தொடுத்தது. </p><p>இதனால் பல மத்திய கிழக்கு நாடுகள் பாதிக்கப்பட்டன. இதனிடையே, ஹார்முஸ் நீரிணையை அமெரிக்கப் பகுதியாக அறிவிப்போம் என ட்ரம்ப் குறிப்பிட, அந்த நீர்வழிப்பாதையின் மீது அமெரிக்காவிற்கு எந்த அதிகாரமும் இல்லை என ஈரான் வெளிவிவகார துணை அமைச்சர் காசெம் கரிபாபாடி பதிலளித்துள்ளார். </p><p>ஆனால், எந்தவொரு அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவும் ஹார்முஸ் நீரிணையின் உரிமையைத் தான் கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-16T21:22:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனைத்து பிரதேசங்களிலும் நிர்வாகத் தீர்மானங்கள் பொறுப்புடன் எடுக்கப்பட வேண்டும்: பிரதி அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kalmunai-north-hospital-easten-province-1786913372"></link>
            <id>https://tamilwin.com/article/kalmunai-north-hospital-easten-province-1786913372</id>
            <summary type="text">கிழக்கு மாகாணம் போன்ற பல இனங்களும், பல மதங்களும் ஒன்றாக வாழும்
பிரதேசங்களில் நிர்வாகத் தீர்மானங்கள் சமூக நுண்ணுணர்வுடனும் மிகுந்த
பொறுப்புடனும் எடுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாணம் போன்ற பல இனங்களும், பல மதங்களும் ஒன்றாக வாழும்
பிரதேசங்களில் நிர்வாகத் தீர்மானங்கள் சமூக நுண்ணுணர்வுடனும் மிகுந்த
பொறுப்புடனும் எடுக்கப்பட வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்
வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச் சந்திரா தெரிவித்துள்ளார்.</p><p>கல்முனை
வடக்கு ஆதார வைத்தியசாலையில் தற்போது ஏற்பட்டுள்ள சர்ச்சை தொடர்பில்
ஊடகங்களுக்கு இன்று (16) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,&nbsp;தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள சில விதிமுறைகளும் சுற்றறிக்கைகளும் எமது
அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டவை அல்ல.</p><h2>நிர்வாகப் பிரச்சினை</h2><p> அவற்றில் காலத்திற்கேற்ற மாற்றங்கள்
தேவைப்பட்டால் அவற்றை மீளாய்வு செய்து, சட்டம், தொழில்சார் தேவைகள், மத
உரிமைகள் மற்றும் தனிநபர் மரியாதை ஆகிய அனைத்தையும் சமநிலைப்படுத்தும்
முற்போக்கானதும் நடைமுறைக்கு ஏற்றதுமான தீர்வை உருவாக்குவதற்கான
நடவடிக்கைகளையும் கலந்துரையாடல்களையும் நாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம்.
</p><p>ஒரு நிர்வாகப் பிரச்சினையை தமிழ்–முஸ்லிம் அல்லது வேறு எந்த
சமூகங்களுக்கிடையிலான மோதலாக மாற்றுவதற்கும், அதன் மூலம் அரசாங்கத்தின் மீது
அவநம்பிக்கையை உருவாக்குவதற்கும் எவரையும் அனுமதிக்க முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7267aae-2f3f-445b-a609-2f4673d83655/26-6a822783f33ca.webp' /></p><p>
</p><p>
இனவாதத்திற்கும் மத அடிப்படையிலான பாகுபாட்டிற்கும் இந்த அரசாங்கத்தில்
எந்தவித இடமும் இல்லை என்பதே எங்களது உறுதியான கொள்கையாகும்.
</p><p>
இந்த விடயத்தில் நாம் ஏற்கனவே செயல்பட ஆரம்பித்துள்ளோம். அனைத்து தரப்பினரின்
உரிமைகளையும், தொழில்சார் தேவைகளையும், தனிநபர் மரியாதையையும், சமூக
நல்லிணக்கத்தையும் பாதுகாக்கும் முற்போக்கான, நியாயமான மற்றும் நடைமுறைக்கு
ஏற்ற தீர்வை ஏற்படுத்த தேவையான அனைத்தையும் நாம் மேற்கொள்வோம் எனக் குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T21:19:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரொனால்டோவின் 1,000 கோல்கள் இலக்கு.. ஓய்வு குறித்து எடுத்துள்ள தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cristiano-ronaldo-hints-retirement-at-end-season-1786913789"></link>
            <id>https://tamilwin.com/article/cristiano-ronaldo-hints-retirement-at-end-season-1786913789</id>
            <summary type="text">கால்பந்து உலகின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போதைய பருவத்தின் முடிவில் தொழில்முறை கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுபெற உள்ளதாக அறிவித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கால்பந்து உலகின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போதைய பருவத்தின் முடிவில் தொழில்முறை கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுபெற உள்ளதாக அறிவித்துள்ளார்.</p><h2>வரலாற்றுச் சாதனை&nbsp;</h2><p> 20 ஆண்டுகளுக்கும் மேலான தனது கால்பந்து பயணத்தை நிறைவு செய்யவுள்ள 41 வயதான ரொனால்டோ, "இதுவே எனது கடைசி ஆண்டாக இருக்கலாம், ஒரு வரலாற்றுப் பெருமையுடன் விடைபெற விரும்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதுவரை கிளப் மற்றும் சர்வதேச போட்டிகளில் 976 கோல்களை அடித்துள்ள அவர், 1,000 கோல்கள் என்ற வரலாற்றுச் சாதனையை எட்ட இன்னும் 24 கோல்களே தேவைப்படுகின்றன. </p><p>சவுதி அரேபியாவின் அல் நசர் (Al-Nassr) அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ, சர்வதேச கால்பந்தில் அதிக கோல்கள் (146) அடித்த சாதனையைத் தன்வசம் வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T21:15:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு ; இளைஞா் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/shooting-at-american-university-youth-arrested-1786912766"></link>
            <id>https://canadamirror.com/article/shooting-at-american-university-youth-arrested-1786912766</id>
            <summary type="text">அமெரிக்காவின் விா்ஜீனியா பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக 19 வயது இளைஞரை அந்நாட்டு காவல்துறையினா் கைது செய்தனா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் விா்ஜீனியா பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக 19 வயது இளைஞரை அந்நாட்டு காவல்துறையினா் கைது செய்தனா்.
</p><p>
விா்ஜீனியா பல்கலைக்கழக வளாகம் சனிக்கிழமை நள்ளிரவில் பூட்டப்பட்டு இருந்தது. </p><p>அப்போது அங்கிருந்தோா் மீது மா்ம நபா் ஒருவா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 போ் காயமடைந்தனா். இதில் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62720d4c-43c6-4e76-a69c-cb71acc27c69/26-6a82200085cf4.webp' /></p><p>தாக்குதலில் காயமடைந்த 5 பேரில் 4 போ் மாணவா்கள் இல்லை. அதேபோல் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் மாணவா் இல்லை. </p><p>இதுகுறித்த தகவலின்பேரில் காவல்துறையினா் தாக்குதல் நடத்திய நபரை தேடும் பணியில் ஈடுபட்டனா்.</p><p>

அப்போது பல்கலைக்கழகம் அருகே மறைந்திருந்த 19 வயதான கேமரூன் ஹாரீஸ் என்பவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனா். </p><p>துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த எஞ்சிய ஒருவா் பல்கலைக்கழக மாணவா் ஆவாா். அவா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினாா்.
</p><p>
துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் குறித்து தெரியவில்லை. அதுகுறித்து காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.</p>]]></content>
            <updated>2026-08-16T20:40:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கூந்தல் அடர்த்தியாக வளர முருங்கை இலை ஹேர் பேக்: எளிய வீட்டுக் குறிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/how-to-use-drumstick-leaves-for-hair-growth-1786912045"></link>
            <id>https://ibctamil.com/article/how-to-use-drumstick-leaves-for-hair-growth-1786912045</id>
            <summary type="text">அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.

ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.
</p><p>
ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது.
</p><p>
இந்நிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.</p><p></p><p><u>🛑&nbsp;<b>தேவையான பொருட்கள்</b></u></p><ol><li>முருங்கை இலை - 2 கைப்பிடி
</li><li>தண்ணீர் - சிறிதளவு</li></ol><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac9d0346-287e-46b3-b462-370f00753e24/26-6a821d2f8d852.webp' /></p><p><u>🛑&nbsp;<b>பயன்படுத்தும் முறை&nbsp;&nbsp;</b></u></p><ol><li>முதலில் முருங்கை இலையை நன்கு கழுவி உலரவைத்து எடுத்துக்கொள்ளவும்.
</li><li>
பின்னர் இதனை ஒரு வாணலில் சேர்த்து மிதமான தீயில் வைத்து வறுத்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.</li><li>அடுத்து அரைத்த பொடியுடன் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து தலைமுடியில் உச்சந்தலை முதல் முடியின் நுனி வரை நன்கு தடவி மசாஜ் செய்ய வேண்டும்.</li><li>பின் இதனை 20 நிமிடம் அப்படியே விட்டு பின் மென்மையான ஷாம்பு கொண்டு கூந்தலை அலசலாம்.
</li><li>
இதனை தொடர்ந்து வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால் கூந்தல் அடர்த்தியாக வளரும்.

&nbsp;&nbsp;</li></ol><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-16T20:32:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹங்கேரியில் அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து ; போலந்து நாட்டினர் 12 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bus-overturns-hungary-12-polish-nationals-killed-1786911737"></link>
            <id>https://canadamirror.com/article/bus-overturns-hungary-12-polish-nationals-killed-1786911737</id>
            <summary type="text">ஹங்கேரியில் அதிகாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் போலந்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஹங்கேரியின் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹங்கேரியில் அதிகாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் போலந்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.</p><p>

ஹங்கேரியின் மெசோகெரெஸ்டெஸ் நகருக்கு அருகில் 57 பயணிகளுடன் போலந்து பதிவெண் கொண்ட சுற்றுலா பஸ் ஒன்று அதிகாலை பயணித்துக் கொண்டிருந்தபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
</p><p>
விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1e1666f-0660-4993-904b-9263393f1b92/26-6a821bfaf3b9a.webp' /></p><p>மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
சாரதி சோர்வு மற்றும் தூக்கக் கலக்கத்தில் இருந்திருக்கலாம் என்பதே விபத்துக்கான காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
விபத்தில் உயிர் தப்பிய சாரதியை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஹங்கேரி மற்றும் போலந்து தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.</p><p>இவ்விபத்து அதிகாலை நேரத்தில் இடம்பெற்றுள்ள நிலையில், நீண்ட தூர இரவு மற்றும் அதிகாலைப் பயணங்களில் சாரதிகளின் சோர்வு மற்றும் தூக்கக் கலக்கம் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இது மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.
</p><p>
சாரதிகள் தூக்கக் கலக்கத்தை உணரும்போது வாகனம் செலுத்துவதைத் தவிர்த்து, போதிய ஓய்வு எடுத்த பின்னரே பயணத்தைத் தொடர வேண்டும் என போக்குவரத்து பாதுகாப்பு நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
</p><p>
ஒரு சில விநாடிகளுக்கான தூக்கக் கலக்கம்கூட பாரிய விபத்துக்கு வழிவகுக்கக்கூடும் என்பதால், இரவு மற்றும் அதிகாலை நேரப் பயணங்களில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிப்பது அவசியமாகும்.</p>]]></content>
            <updated>2026-08-16T20:22:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/turkey-seeks-to-reopen-strait-of-hormuz-1786909737"></link>
            <id>https://ibctamil.com/article/turkey-seeks-to-reopen-strait-of-hormuz-1786909737</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் கப்பல் போக்குவரத்திற்காகத் திறப்பதே தற்போதைய முதன்மை இலக்கு என்று துருக்கி ஜனாதிபதி ரசிப் தய்யிப் எர்டோக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் கப்பல் போக்குவரத்திற்காகத் திறப்பதே தற்போதைய முதன்மை இலக்கு என்று துருக்கி ஜனாதிபதி ரசிப் தய்யிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) தெரிவித்துள்ளார்.</p><p>

சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>இந்தநிலையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தைகளில் இந்தக் கடல் வழியின் மீதான கட்டுப்பாடே மிக முக்கிய முட்டுக்கட்டையாக இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>புரிந்துணர்வு ஒப்பந்த</h2><p>இது குறித்து மேலும் தெரிவித்த அவர், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பது உலகளாவிய ரீதியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

இந்தக் கடல் வழிப்பாதையானது சர்வதேச வர்த்தகத்திற்கு குறிப்பாக எண்ணெய் மற்றும் எரிசக்தி வளங்களின் விநியோகத்திற்கு மிகவும் இன்றியமையாதது. 

எனவே, ஹோர்முஸ் ஜலசந்தி முடிந்தவரை விரைவில் மீண்டும் திறக்கப்படுவது மிக மிக முக்கியமானது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54ec8e9b-4b73-4f7f-b669-354d80dbef23/26-6a821b273b73a.webp' /></p><p>உலகளாவிய எண்ணெய் விநியோகம் எந்தவிதத் தடங்கலுமின்றிச் சீராக நடைபெறுவதையே துருக்கி ஆதரிக்கின்றது” என தெரிவித்துள்ளார்.
</p><p>
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே மீண்டும் பரஸ்பர தாக்குதல்கள் வெடித்துள்ளதைத் தொடர்ந்து இந்த நீரிணையில் கப்பல் போக்குவரத்து பெரும்பாலும் முடங்கியுள்ளது.</p><p> 

கடந்த ஜூன் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இந்தத் திங்கட்கிழமையுடன் முடிவடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T20:18:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறப்பான வாழ்க்கையைத் தேடி ட்ரம்பின் அமெரிக்காவை விட்டு வெளியேறும் ஆயிரக்கணக்கானோர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/thousands-quit-trump-usa-1786909929"></link>
            <id>https://news.lankasri.com/article/thousands-quit-trump-usa-1786909929</id>
            <summary type="text">Thousands quit Trump’s USA for better life: ஒரு சிறந்த வாழ்க்கையைத் தேடி, ஆயிரக்கணக்கானோர் ட்ரம்பின் அமெரிக்காவை விட்டு வெளியேறுகின்றனர். 
அமெரிக்காவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Thousands quit Trump’s USA for better life: ஒரு சிறந்த வாழ்க்கையைத் தேடி, ஆயிரக்கணக்கானோர் ட்ரம்பின் அமெரிக்காவை விட்டு வெளியேறுகின்றனர்.</p><p> 
அமெரிக்காவை மீண்டும் மகத்தான நாடாக மாற்றுவதாக டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்திருக்க, சாதனை அளவிலான இளம் அமெரிக்கர்கள் அமெரிக்காவை விடுத்து ஸ்கொட்லாந்தை வாழ்விடமாகத் தெரிவு செய்து வருகின்றனர்.</p><h2>இருமடங்கிற்கும் அதிகம்</h2><p>
</p><p>அமெரிக்காவில் வசிப்பவர்களிடமிருந்து பிரித்தானியக் குடியுரிமைக்கான விண்ணப்பங்கள் கடந்த வருடம் 9,300 என்ற சாதனை அளவை எட்டின; இது ஜோ பைடன் ஜனாதிபதியாக இருந்த 2022-ஆம் ஆண்டின் இதே எண்ணிக்கையை விட இருமடங்கிற்கும் அதிகமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/928d3eb4-c036-4355-bc4a-29d2771eba0b/26-6a8214ebd0ecc.webp' /></p><p> </p><p>ட்ரம்பின் அமெரிக்காவைத் தவிர்த்துவிட்டு வரும் புதியவர்களில் கணிசமான எண்ணிக்கையினர், அவரது ஸ்கொட்லாந்து வம்சாவளியைச் சேர்ந்த தாயார் மேரி ஆன் மெக்லியோட் பிறந்த மண்ணிலேயே குடியேறுவதாக ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. </p><p>The Sunday Times இதழில் வெளியான ஆய்வின்படி, ட்ரம்ப் மீண்டும் தெரிவு செய்யப்பட்டதிலிருந்து ஸ்காட்லாந்தில் வாடகைக்கு வசிக்கும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை 265-லிருந்து 431-ஆக, அதாவது 63 சதவீதம் அதிகரித்துள்ளது. </p><p>கடந்த இரண்டு வருடங்களில் 3,00,000-க்கும் மேற்பட்ட வாடகை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஸ்கொட்லாந்தில் உள்ள அமெரிக்க வாடகைதாரர்களின் சராசரி வயது 27 ஆக இருந்தது என்றே ஆய்வில் தெரிய வந்துள்ளது, அதாவது இளம் வயது தொழில்முறை நிபுணர்களே அமெரிக்காவை விட்டு வெளியேறி ஸ்கொட்லாந்தில் குடியேற அதிக ஆர்வம் காட்டுவதைக் காட்டுகிறது.</p><p></p><p> </p><p>மேலும், அமெரிக்க அரசியலில் நிலவும் நிலையற்ற தன்மை, பல அமெரிக்கர்களை பிரித்தானியாவில் புதியதொரு வாழ்விடத்தைத் தேடிச் செல்லத் தூண்டுகிறது என்ற கூற்றுகளுக்கு இப்புள்ளிவிவரங்கள் கூடுதல் வலுசேர்க்கின்றன.</p><h2>அனைவரையும் வரவேற்கும்</h2><p> </p><p>பிரித்தானியா முழுவதும், எண்ணிக்கை 3,733-லிருந்து 4,939-ஆக, 32 சதவீதம் அதிகரித்துள்ளது. மட்டுமின்றி, ஸ்கொட்லாந்தில் வசிக்கும் அமெரிக்கக் குடிமக்கள் செலுத்தும் சராசரி மாத வாடகை 1,711 பவுண்டுகளாகும்; இது மன்ஹாட்டனில் 3,756 பவுண்டுகளும் சான் பிரான்சிஸ்கோவில் 3,345 பவுண்டுகளுமாக ஒப்பிடத்தக்கது. </p><p>ஓக்லஹோமாவைச் சேர்ந்த கலைஞரும் ஸ்டாண்ட்-அப் நகைச்சுவைக் கலைஞருமான பெத் நைட், ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பிறகு அமெரிக்காவை விட்டு வெளியேறி, தற்போது கிளாஸ்கோவில் வசித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/052dcdc7-e3a9-401d-9192-0d2892f5344c/26-6a8214ec85664.webp' /></p><p> </p><p>எடின்பர்க் ஃபெஸ்டிவல் ஃபிரிஞ்சில் நிகழ்ச்சிகளை வழங்கி வரும் 41 வயதான நைட், கிளாஸ்கோ உண்மையிலேயே படைப்பாற்றல் மிக்க, அனைவரையும் வரவேற்கும் மற்றும் தாராள மனப்பான்மை கொண்ட ஓர் இடம் என்று கூறுகிறார். </p><p>எடின்பர்க் மேற்குத் தொகுதியின் லிபரல் டெமாக்ராட் நாடாளுமன்ற உறுப்பினரான கிறிஸ்டின் ஜார்டின், அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு விரைவு வழி விசாக்களை வழங்குமாறு பிரித்தானிய அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-16T19:49:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாக்குறுதிகளை மீறி மக்கள் மீது வரிச்சுமை: கந்தளாயில் பேரணியுடன் கையெழுத்து வேட்டை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tax-burden-on-the-people-rally-in-kantalai-1786909290"></link>
            <id>https://tamilwin.com/article/tax-burden-on-the-people-rally-in-kantalai-1786909290</id>
            <summary type="text">கந்தளாய் நகரில் அரசாங்கத்தின் நியாயமற்ற மற்றும் அநீதியான வரிப் கொள்கைகளுக்கு எதிர்ப்பு
தெரிவித்தும், மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடுமையான பொருளாதாரச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாய் நகரில் அரசாங்கத்தின் நியாயமற்ற மற்றும் அநீதியான வரிப் கொள்கைகளுக்கு எதிர்ப்பு
தெரிவித்தும், மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடுமையான பொருளாதாரச் சுமைகளைக்
குறைக்க வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p> 'மக்கள் போராட்ட இயக்கம்'&nbsp; சார்பில் கந்தளாய் நகரில் இன்று (16) கவனயீர்ப்புப் போராட்டமும்
கையெழுத்துச் சேகரிக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.
</p><p>போராட்டம் குறித்து மக்கள் போராட்ட இயக்கத்தின் பிரதிநிதி தட்சில
தேசப்பிரிய கருத்து தெரிவிக்கையில்:


"தற்போதைய ஜனாதிபதி முன்னர் வேட்பாளராக இருந்தபோது சுகாதாரம், உணவு
மற்றும் கல்விக்கான வரிகள் நாகரிகமடைந்த உலகிற்குப் பொருத்தமானவை அல்ல
என்றும், ஆட்சிக்கு வந்தவுடன் அவ்வரிகள் முற்றாக நீக்கப்பட்டு
பூஜ்ஜியமாக்கப்படும் என்றும் ஊடகங்கள் வாயிலாக வாக்குறுதி அளித்திருந்தார்.</p><h2>அநீதியான வரி</h2><p>
ஆனால், இன்று நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று
ஆட்சியில் இருக்கும் அவர், கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சுகாதாரம் மற்றும்
கல்விக்கு மட்டுமன்றி அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் தொடர்ந்து வரிகளை
அதிகரித்து வருகிறார்.</p><p>எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்திலும் மீண்டும் வரிகள் உயர்த்தப்படவுள்ளதாகச்
சுட்டிக்காட்டிய அவர், அரசாங்கம் பெரிய நிறுவனங்களுக்கும், பெரிய
தொழிலதிபர்களுக்கும், தமக்கு நெருக்கமான செல்வந்தர்களுக்கும் வரி நிவாரணங்களை
வழங்கிவிட்டு, ஏழை எளிய பொதுமக்கள் மீது பல்வேறு வரிகளைச் சுமத்தி அவர்களைத்
தொடர்ச்சியாகப் பீடித்து வருவதாகக் குற்றம் சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d4113a4-e872-4454-a1bb-8677a8419035/26-6a82133d9b1c4.webp' /></p><p>
</p><p>

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் 'அநீதியான வரிக்கு எதிரான
வாரத்தின்' ஒரு பகுதியாகவே கந்தளாய் நகரில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
</p><p>அரசாங்கத்தின் இந்த மக்கள் விரோத வரி கொள்கைக்கு எதிராகப் பொதுமக்கள் தங்கள்
எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், எதிர்ப்புப் பதாகையில் கையெழுத்துச்
சேகரிக்கும் நடவடிக்கைகளும் இதன்போது இடம்பெற்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T19:49:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடிய குடியுரிமைச் சான்றிதழ் பெறுவதில் கடும் தாமதம்...! வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/canada-citizenship-proof-wait-time-hits-2-yrs-1786908611"></link>
            <id>https://ibctamil.com/article/canada-citizenship-proof-wait-time-hits-2-yrs-1786908611</id>
            <summary type="text">கனடா குடியுரிமைச் சான்றிதழ் (Proof of Citizenship) பெறுவதற்கான விண்ணப்பப் பரிசீலனை காலம் 9-10 மாதங்களில் இருந்து 25 மாதங்களாக உயர்ந்துள்ளது.

ஆண்டின...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடா குடியுரிமைச் சான்றிதழ் (Proof of Citizenship) பெறுவதற்கான விண்ணப்பப் பரிசீலனை காலம் 9-10 மாதங்களில் இருந்து 25 மாதங்களாக உயர்ந்துள்ளது.</p><p>

ஆண்டின் இறுதிக்குள் இது 3 ஆண்டுகளாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய கொள்கைகள் மற்றும் பரம்பரை வழியிலான குடியுரிமை வரம்பை நீக்கிய கனடாவின் சட்டத் திருத்தம் (Bill C-3) ஆகியவற்றால், குறிப்பாக அமெரிக்காவில் வாழும் கனடிய வம்சாவளியினரிடமிருந்து விண்ணப்பங்கள் பெருமளவில் குவிந்துள்ளன.</p><p>
</p><p></p><h2>அவசர உதவி</h2><p>இந்தநிலையில் தற்போது சுமார் 1,21,800 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.</p><p> 

அவசர வேலை அனுமதிப் பத்திரம் மற்றும் அவசர உதவி தேவைப்படுவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால், சாதாரண விண்ணப்பங்களின் தாமதம் மேலும் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4ba50f1-07fa-413e-ba9f-720d7d6435ce/26-6a82134426f64.webp' /></p><p>

விண்ணப்பங்கள் சட்டப்படி நியாயமாகவும் முன்னதாக வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையிலும் பரிசீலிக்கப்படுகின்றன என்றும், குறிப்பிட்ட கால அவகாசம் என்பது தோராயமான மதிப்பீடே தவிர உத்தரவாதம் அல்ல என்றும் கனடிய குடிவரவுத் துறை (IRCC) தெரிவித்துள்ளது.
</p><p>
நிலுவையிலுள்ள பெருமளவிலான விண்ணப்பங்களை விரைந்து முடிவுக்குக் கொண்டுவர கூடுதல் ஊழியர்களைப் பணியமர்த்த வேண்டும் என குடிவரவு வழக்கறிஞர்கள் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T19:45:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூரின் தோரண வாசல் வளைவுகளில் சேவல் கொடி நாட்டப்பட்டது..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rooster-flag-hoisted-arches-of-nallur-gate-1786908658"></link>
            <id>https://tamilwin.com/article/rooster-flag-hoisted-arches-of-nallur-gate-1786908658</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த
பெருந்திருவிழா நாளை (17) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லூரின்
முக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த
பெருந்திருவிழா நாளை (17) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லூரின்
முக்கிய தோரண வாசல் வளைவுகளில் சேவல் கொடி நாட்டும் நிகழ்வு இன்று (16)
சிறப்பாக இடம்பெற்றது.
</p><p>
இதன்படி, இன்று மதியம் 12 மணியளவில் நல்லூர் செம்மணியில் முதலாவது சேவல் கொடி
நாட்டப்பட்டது. </p><p>தொடர்ந்து நல்லூரன் தெற்கு மற்றும் நல்லூரன் வடக்குவாசல்
வளைவுகளிலும் சேவல் கொடிகள் நாட்டப்பட்டன.
</p><p>
நல்லூர் கந்தனின் பெருந்திருவிழாவை வரவேற்கும் வகையிலும், ஆலயத்தின் வெளி
வீதிகள் திருவிழாக் கோலம் பூணும் வகையிலும் இடம்பெற்ற இந்நிகழ்வு பக்தர்களின்
கவனத்தை ஈர்த்தது.
</p><p>
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன்
ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லூர் சுற்றுவட்டாரம் முழுவதும் பக்தி மற்றும்
திருவிழா உணர்வுடன் களைகட்டத் தொடங்கியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-16T19:31:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலுக்கு எதிராக கிளம்பிய சர்வதேச நாடுகள்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/8-nations-slam-israel-for-rejecting-peace-plan-1786901365"></link>
            <id>https://ibctamil.com/article/8-nations-slam-israel-for-rejecting-peace-plan-1786901365</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சமாதான சபை முன்வைத்த 15 அம்சங்கள் அடங்கிய விரிவான அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்தமைக்கு கடும் கண்டனம் வெளியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சமாதான சபை முன்வைத்த 15 அம்சங்கள் அடங்கிய விரிவான அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்தமைக்கு கடும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>

இது குறித்து 8 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
</p><p>
ஐக்கிய அரபு அமீரகம், கட்டார், ஜோர்டான், இந்தோனேசியா, பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய 8 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களே இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><h2>இஸ்ரேலின் நிலைப்பாடு&nbsp;</h2><p>இஸ்ரேலின் இந்த நிலைப்பாடு அமைதிக்கான விரிவான திட்டத்தை நேரடியாக நிராகரிப்பதாகும்.
</p><p>
இது அத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவை பாதிப்பதோடு, நியாயமான மற்றும் நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்காக எடுக்கப்பட்டு வரும் கூட்டு முயற்சிகளையும் சீர்குலைக்கிறது என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dabec4ae-17bb-4840-bb80-41b0622b14ac/26-6a820dbb5f157.webp' /></p><p>இத்தகைய நிராகரிப்பு மூலம் காசாவிலும் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனத்தின் பிற பகுதிகளிலும் அமைதியைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளைத் தடுக்கும் முழுப் பொறுப்பையும் தற்போது இஸ்ரேலே ஏற்கிறது என்பது உறுதி செய்யப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

மத்தியஸ்தர்களின் தீவிர முயற்சியால் உருவாக்கப்பட்ட இந்த வழிகாட்டல் வரைபடத்தை பாலஸ்தீன அமைப்புகள் ஏற்றுக்கொண்டுள்ளன.
</p><p>
ஆயுதங்களைக் களைதல், இஸ்ரேலியப் படைகளை வாபஸ் பெறுதல், சர்வதேச நிலைப்படுத்தும் படையை அமைத்தல், காசாவின் நிர்வாக அதிகாரத்தை காசா நிர்வாகத்திற்கான தேசியக் குழுவிடம் ஒப்படைத்தல் மற்றும் காசாவை மறுசீரமைத்தல் உள்ளிட்ட முக்கிய நோக்கங்களைக் கொண்டு இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T19:21:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருக்கேதீச்சரத்தில் தொல்லியல் திணைக்களம் விகாரை அமைக்க முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vihara-at-ketheeswaram-temple-mannar-1786904774"></link>
            <id>https://tamilwin.com/article/vihara-at-ketheeswaram-temple-mannar-1786904774</id>
            <summary type="text">திருக்கேதீச்சரத்திலும் எதிர்காலத்தில் பௌத்த விகாரை ஒன்றை
அமைப்பதற்கான நிகழ்ச்சி நிரலில் தான் ஆலய வளாகத்திற்குள் அடாவடியாக பெயர்பலகை
நாட்டியுள்ளனர் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருக்கேதீச்சரத்திலும் எதிர்காலத்தில் பௌத்த விகாரை ஒன்றை
அமைப்பதற்கான நிகழ்ச்சி நிரலில் தான் ஆலய வளாகத்திற்குள் அடாவடியாக பெயர்பலகை
நாட்டியுள்ளனர் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்
தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் வரலாற்றுப் புகழ் மிக்க திருக்கேதீஸ்வரம் ஆலய வளாகத்திற்குள் அநுர
அரசாங்கத்தின் தொல்லியல் திணைக்களம் இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் எவரும்
இல்லாத நேரத்தில் தொல்லியல் திணைக்கள அனுமதி இல்லாமல் இனி எந்த
அபிவிருத்தியும் செய்ய முடியாது என பெயர்ப் பலகை ஒன்றை நாட்டியுள்ளனர்.
</p><p>
ஆலய நிர்வாகத்திற்கு தெரிவிக்காமல் அரச திணைக்களம் திருட்டுத்தனமாக ஏன்
பெயர்ப்பலகை இட வேண்டும் என பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.</p><h2>சட்டவிரோத செயற்பாடு</h2><p>

கடந்த ஆண்டுகளில் இதே போன்ற செயற்பாட்டின் மூலமே முல்லைத்தீவு குருந்தூர் மலை
ஆதிசிவன் ஐயனார் ஆலயம் மற்றும் கன்னியாய் பிள்ளையார் ஆலயம் ஆக்கிரமிக்கப்பட்டு
பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு
உட்படுத்தப்படுவதற்கு தொல்லியல் திணைக்களம் அதன் ஆணையாளர் மற்றும் அதிகாரிகள்
நீதிமன்ற கட்டளைகளை மீறி செயற்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41bfe139-91a5-45b7-82fa-6a941530a918/26-6a8209fc4d0a5.webp' /></p><p>
</p><p>
திருக்கேதீச்சரத்திலும் எதிர் காலத்தில் சிங்கள பௌத்த விகாரை ஒன்றை
அமைப்பதற்கான நிகழ்ச்சி நிரலில் தான் ஆலய வளாகத்திற்குள் அடாவடியாக பெயர்பலகை
நாட்டியுள்ளனர்.
</p><p>
சட்டவிரோத செயற்பாடுகளுக்கு தனது ஆட்சியில் இடமில்லை என கூறும் ஐனாதிபதி
அநுரகுமார திஸநாயக்காவின் பதில் என்ன, இரவோடு இரவாக பெயர்பலகை நாட்டியது
சட்டவிரோதம் இல்லையா,&nbsp; குருந்தூரில் இந்துமாத தொல்லியல் சின்னங்கள் அகற்றப்பட்டு சிங்கள பௌத்த
சின்னங்கள் இருப்பதாக கட்டுகதை ஒன்றை உருவாக்கி விகாரை அமைத்தது போன்ற
செயற்பாடுகள் எதிர் காலத்தில் திருக்கேதீச்சரத்திலும் இடம்பெறலாம் என
குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T19:08:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். நயினாதீவு கடலில் படகு கவிழ்ந்தது ; அதிர்ஷ்டவசமாக 10 பயணிகளும் உயிருடன் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-boat-capsizes-sea-fortunately-10-rescued-1786898823"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-boat-capsizes-sea-fortunately-10-rescued-1786898823</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், நயினாதீவு கடற்பகுதியில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் பயணித்த சிறுரகப் படகொன்று ஞாயிற்றுக்கிழமை (16) மாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், நயினாதீவு கடற்பகுதியில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் பயணித்த சிறுரகப் படகொன்று ஞாயிற்றுக்கிழமை (16) மாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 10 பேரும் கடற்படையினர் மற்றும் மீனவர்களின் துரித நடவடிக்கையால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p>

ஞாயிற்றுக்கிழமை நெடுந்தீவுக்கான இறுதிப் பிரதான போக்குவரத்துப் படகு சேவை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, குறிகாட்டுவான் இறங்குதுறையில் காத்திருந்த சில பயணிகளை ஏற்றிக்கொண்டு குறித்த சிறுரகப் படகு மாலை சுமார் 3.30 மணியளவில் நயினாதீவிலிருந்து புறப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc1d625b-cf5e-4e5c-b60d-d693f5035be8/26-6a81e9891e449.webp' /></p><p>படகு புறப்பட்டு சுமார் 15 நிமிடங்களுக்குப் பின்னர், மாலை 3.45 மணியளவில் நயினாதீவு கடற்பகுதியில் திடீரெனக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><p>
படகு கவிழ்ந்ததற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவத்தை அறிந்த கடற்படையினரும் அப்பகுதி மீனவர்களும் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
இதன்போது படகில் பயணித்த 10 பேரும் எவ்வித ஆபத்துமின்றி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p>
மீட்கப்பட்ட அனைவரும் நயினாதீவு பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T19:03:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெஸ்ஸியை அடுத்து... ஓய்வு குறித்து சூசகமாகத் தெரிவித்த ரொனால்டோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ronaldo-hints-at-retirement-1786905157"></link>
            <id>https://news.lankasri.com/article/ronaldo-hints-at-retirement-1786905157</id>
            <summary type="text">Ronaldo hints at retirement: விளையாட்டு வாழ்க்கையில் இந்த சீசனே தனது கடைசி சீசனாக இருக்கக்கூடும் என்று கிறிஸ்டியானோ ரொனால்டோ.
மிகவும் சிறப்பான விளையா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ronaldo hints at retirement: விளையாட்டு வாழ்க்கையில் இந்த சீசனே தனது கடைசி சீசனாக இருக்கக்கூடும் என்று கிறிஸ்டியானோ ரொனால்டோ.
</p><p>மிகவும் சிறப்பான விளையாட்டு வாழ்க்கையில், இந்த சீசன் ஒரு வீரராகத் தனது கடைசி சீசனாக இருக்கக்கூடும் என்று கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார்.</p><h2>கடைசி ஆண்டாக</h2><p>
</p><p>41 வயதான ரொனால்டோ, செவ்வாய்க்கிழமையன்று தனது இணையான ஜார்ஜினா ரோட்ரிக்ஸை மணந்துகொண்டார். மேலும், தனது குடும்பத்தை மையமாகக் கொண்ட எதிர்காலத்தைப் பற்றி அவர் திட்டமிட்டு வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d39bd43-a438-4299-a8ec-277f79d2deba/26-6a8202482a7f6.webp' /></p><p>
</p><p>ஐந்து முறை Ballon d'Or விருதும், ஐந்து முறை சாம்பியன்ஸ் லீக் பட்டங்களையும் வென்றுள்ள ரொனால்டோ, இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் லீக் தொடர்களின் கிண்ணங்களையும் வென்றுள்ளார்; மேலும், ஆண்கள் சர்வதேச கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்தவரும் இவரே. </p><p>போர்த்துகல் தேசிய அணியின் கேப்டனான ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் சாம்பியனான அல்-நஸ்ர் அணியில் ஏறக்குறைய நான்கு ஆண்டுகளாக விளையாடி வருகிறார்; அங்கு அவரது ஒப்பந்தத்தில் இன்னும் ஓராண்டு காலம் எஞ்சியுள்ளது.</p><p></p><p> </p><p>இந்த நிலையிலேயே, இது அனேகமாக தனது கால்பந்து வாழ்க்கையின் கடைசி ஆண்டாக இருக்கலாம்; ஒரு சிறப்பான முத்திரையைப் பதித்துவிட்டுச் செல்ல விரும்புவதாகவும், தனது திருமணம் குறித்த 'வோக்' (Vogue) இதழுடனான நேர்காணலில் ரொனால்டோ கூறியுள்ளார்.</p><h2>லியோனல் மெஸ்ஸி</h2><p> </p><p>மேலும், தனது எதிர்காலத்திற்கான திட்டங்கள் அனைத்தும் வகுக்கப்பட்டுவிட்டதாகவும், தன்னை எப்போதும் மும்முரமாக ஈடுபடுத்திக்கொள்ளப் பல விடயங்கள் இருப்பதால், அவற்றில் ஒன்றை மட்டும் குறிப்பிடுவது கடினம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>கால்பந்து விளையாட்டு ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தக்கூடும்; எனவே, ஒரே ஒரு வழியில் மட்டுமல்லாமல், பல்வேறு வழிகளில் நேரத்தை நிரப்ப வேண்டியிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0020c9a5-7c4b-42c4-9eb8-d6b271c3a485/26-6a820248d262c.webp' /></p><p> </p><p>இதுவரை எட்டு முறை Ballon d'Or விருதை வென்றுள்ள அவரது நீண்டகாலப் போட்டியாளரான லியோனல் மெஸ்ஸி, தான் இன்னும் எவ்வளவு காலத்திற்கு கால்பந்து விளையாடப் போகிறேன் என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை என்று சமீபத்தில் கூறியிருந்தார்.</p><p> சமீபத்திய உலகக் கிண்ணம் தொடரில் மெஸ்ஸி எட்டு கோல்கள் அடித்து அர்ஜென்டினாவை இறுதிப் போட்டி வரை வழிநடத்த, ரொனால்டோவின் போர்த்துகல் அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றிலேயே வெளியேறும் நிலை ஏற்பட்டதுகுறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T18:32:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க இராணுவ வீரர்களை கொல்பவர்களுக்கு ஈரான் அறிவித்துள்ள சன்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-announces-reward-for-killing-us-soldiers-1786904612"></link>
            <id>https://ibctamil.com/article/iran-announces-reward-for-killing-us-soldiers-1786904612</id>
            <summary type="text">அமெரிக்க இராணுவ வீரர்களை கொன்றாலோ அல்லது உயிருடன் பிடித்துக் கொடுத்தாலோ 30000 டொலர் சன்மானம் வழங்கப்படும் என்று ஈரான் இன்று(16) புதிய அறிவிப்பை வெளியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க இராணுவ வீரர்களை கொன்றாலோ அல்லது உயிருடன் பிடித்துக் கொடுத்தாலோ 30000 டொலர் சன்மானம் வழங்கப்படும் என்று ஈரான் இன்று(16) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
</p><p>

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் முடிவுக்கு வருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இருநாடுகளும் பரஸ்பரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், மேற்காசியாவில் நிலவி வரும் பதற்றம் தொடர்ந்து கொண்டே வருகிறது.</p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p> </p><p>அதேவேளையில், ஹோர்முஸ் நீரிணையை நிர்வகிக்கப் போவது யார்? என்பது குறித்த அதிகார மோதலும் நீடித்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce2d4c4e-859a-4160-b2e1-8065e472afc8/26-6a820025f2ff4.webp' /></p><p>





</p><h2>ஈரான் இராணுவ தளபதியின் அறிவிப்பு</h2><p>இந்த நிலையில், ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க இராணுவ வீரர்களை கொன்றாலோ அல்லது உயிருடன் பிடித்துக் கொடுத்தாலோ 30000 டொலர் சன்மானம் வழங்கப்படும் என்று ஈரான் இராணுவ தளபதி அமீர் ஹதாமி அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b9f3217-c974-4292-8505-492fb3413c97/26-6a820026a70ae.webp' /></p><p> </p><p>அமெரிக்க இராணுவ வீரர்களை பெண்கள் பிடித்து கொடுத்தால், இந்தத் தொகை இரட்டிப்பாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
</p><p>

கடந்த ஏப்ரல் மாதம் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானியை மீட்பதற்கான அவசரகால நடவடிக்கையைத் தவிர, ஈரானில் எந்த அமெரிக்கப்படைகளும் களமிறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T18:25:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுற்றுலாப் பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து விபத்து: 12 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bus-accident-in-hungary-12-polish-tourists-killed-1786903179"></link>
            <id>https://tamilwin.com/article/bus-accident-in-hungary-12-polish-tourists-killed-1786903179</id>
            <summary type="text">ஹங்கேரியின் கிழக்குப் பகுதியில் உள்ள M3 அதிவேக நெடுஞ்சாலையில் போலந்து
சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹங்கேரியின் கிழக்குப் பகுதியில் உள்ள M3 அதிவேக நெடுஞ்சாலையில் போலந்து
சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>குறித்த பேருந்தானது&nbsp;வீதியை விட்டு விலகி
பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>அத்துடன் இந்த விபத்தில் 10
பேர் கடுமையாகக் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>விபத்து</h2><p>செர்பியாவில் இருந்து போலந்து நோக்கி பயணித்த இப்பேருந்தில் 57 பயணிகளும்
இரண்டு சாரதிகளும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
விபத்து நடந்த இடத்திலேயே 11 பேர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் மருத்துவமனையில்
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 37 பேர் இலேசான காயங்களுக்கு
உள்ளாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/270fb1c1-229c-48ad-bcf5-437d327cd006/26-6a81fe0c958ea.webp' /></p><p>
</p><p>
சாரதி தூங்கியமையினாலேயே இப்பேருந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து
விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள
நிலையில், பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>சம்பவம் தொடர்பில் ஹங்கேரி பிரதமர் பீட்டர் மக்யார், போலந்து ஜனாதிபதி
கரோல் நவ்ரோக்கி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோர்
தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T18:15:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரோஹிங்கியா அகதிகளின் மீள்குடியேற்றத்திற்கு மியான்மார் அரசு நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/myanmar-governmen-moves-resettle-rohingya-refugees-1786903183"></link>
            <id>https://canadamirror.com/article/myanmar-governmen-moves-resettle-rohingya-refugees-1786903183</id>
            <summary type="text">மியான்மாரில் கடந்த 2017-ம் ஆண்டு இராணுவம் நடத்திய ஒடுக்குமுறை காரணமாக, லட்சக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் பக்கத்து நாடான பங்களாதேஷிற்கு தப்பியோடி முகாம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மியான்மாரில் கடந்த 2017-ம் ஆண்டு இராணுவம் நடத்திய ஒடுக்குமுறை காரணமாக, லட்சக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் பக்கத்து நாடான பங்களாதேஷிற்கு தப்பியோடி முகாம்களில் தஞ்சமடைந்தனர். </p><p>

இந்நிலையில், பங்களாதேஷ் வழங்கிய பட்டியலின்படி முதற்கட்டமாக 3 லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் மியான்மரின் ராகினே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மியான்மார் அரசு தெரிவித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cf606db-e55b-4bda-a199-2f46e8770a28/26-6a81fa9155c44.webp' /></p><p>அங்கு நிலவும் பாதுகாப்பு சூழல் சீரடைந்தவுடன், இந்த 3 லட்சம் அகதிகளையும் மியான்மார் மீண்டும் தனது நாட்டிற்குள் அனுமதிக்கும் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. </p><p>

பயங்கரவாத பின்னணி கொண்ட சிலர் தவிர, மற்றவர்களை படிப்படியாக தாய் நாட்டிற்கு அழைத்து வர பங்களாதேஷூடன் இணைந்து மியான்மார் அரசு தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-16T17:59:55+00:00</updated>
        </entry>
    </feed>
