<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-28T11:46:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; வணிக வளாகத்தில் சிக்கிய மக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/earthquake-japan-people-trapped-shopping-complex-1785238647"></link>
            <id>https://jvpnews.com/article/earthquake-japan-people-trapped-shopping-complex-1785238647</id>
            <summary type="text">&amp;nbsp; தென்மேற்கு ஜப்பானில் ஏற்பட்ட 7.1 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, காஷிமா நகரில் உள்ள ஏயோன் மோல் வணிக வளாகத்திற்குள் பலர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தென்மேற்கு ஜப்பானில் ஏற்பட்ட 7.1 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, காஷிமா நகரில் உள்ள ஏயோன் மோல் வணிக வளாகத்திற்குள் பலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>


நிலநடுக்கத்தைத் தொடர்ந்து குமாமோட்டோவில் உள்ள ஏயோன் மோலில் வெடிப்பு ஏற்பட்டதாகச் சில தகவல்கள் கூறுகின்றன.



இந்த நிலநடுக்கம் கியூஷு தீவின் உட்பகுதியில் மாலை 16:27 மணிக்கு ஏற்பட்டுள்ளது.</p><h2>150,000-க்கும் மேற்பட்ட மக்கள்&nbsp; வெளியேற&nbsp; அறிவுறுத்து</h2><p> இதன் மையம் 10 கி.மீட்டர் (6 மைல்) ஆழமற்ற பகுதியில் அமைந்துள்ளது.



இந்நிலையில், 150,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான முகாம்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>


இதேவேளை, ந்நிலநடுக்கத்தைத் தொடர்ந்து விடுக்கப்பட்ட குறுகிய கால சுனாமி எச்சரிக்கை, ஒரு மணி நேரத்திற்குள் திரும்பப் பெறப்பட்டுள்ளது.



ஆழமற்ற மையப்பகுதி என்பதால் மேலும் வலுவான பின்அதிர்வுகள் ஏற்படக்கூடுமென அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.</p><p>



நாங்கள் இன்னும் காயங்கள் மற்றும் சொத்து சேதங்களின் முழு அளவை மதிப்பிட்டு வருகிறோம். எனினும், ஏற்கனவே பலருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளதென ஜப்பான் பிரதமர் சனே டகாயிச்சி ஊடகங்களுக்ககு கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>



அதேவேளை ஜப்பான், ஆண்டுக்குச் சுமார் 1,500 நிலநடுக்கங்களைச் சந்திக்கும் உலகின் மிக முக்கியமான நிலநடுக்கப் பகுதிகளில் ஒன்றாக உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-28T11:35:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியா முழுவதும் அவசர கால எச்சரிக்கை சேவை சோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/emergency-warning-service-test-across-australia-1785235260"></link>
            <id>https://tamilwin.com/article/emergency-warning-service-test-across-australia-1785235260</id>
            <summary type="text">அவுஸ்திரேலியா முழுவதும் அவசர காலங்களில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும்
வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘AusAlert’ எனும் புதிய தேசிய எச்சரிக்கை
அமைப்பின...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியா முழுவதும் அவசர காலங்களில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும்
வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘AusAlert’ எனும் புதிய தேசிய எச்சரிக்கை
அமைப்பின் முதற்கட்டச் சோதனை நேற்று (27) மதியம் 2.00 மணிக்கு
நடைபெற்றது.
</p><p>
இதன் போது நாட்டின் பெரும்பான்மையான தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள்
மற்றும் டெப்ளட்களில் பலத்த சைரன் ஒலியுடன் கூடிய சோதனைச் செய்தி தோன்றியது.
</p><p>
காட்டுத்தீ, வெள்ளப்பெருக்கு, பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அல்லது சுகாதார அவசர
நிலைகளின் போது மக்களுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்க இந்த புதிய
தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சோதனை</h2><p>
</p><p>
தற்போதைய குறுஞ்செய்தி முறையைப் போலன்றி, தொலைபேசி டவர்கள் மூலமாக நேரடியாகச்
சாதனங்களுக்கு இந்த எச்சரிக்கை ஒளிபரப்பப்படும்.
</p><p>
போன் 'Do Not Disturb' அல்லது 'Silent'&nbsp; இல் இருந்தாலும், சுமார் 10
வினாடிகளுக்கு உரத்த சைரன் ஒலிக்கும்.

மாநிலங்களுக்கு ஏற்ப மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை இந்தச் சோதனை
நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7168caae-e3a6-455b-9bf0-758f5bbd3ee6/26-6a6893d19c877.webp' /></p><p>
</p><p>
இது ஒரு சோதனையே என்பதால் பொதுமக்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை,
திரையில் தோன்றும் செய்தியைப் படித்தாலே போதுமானது என அறிவிக்கப்பட்டது.
</p><p>
குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டு இரகசியமாக தொலைபேசிகள் வைத்திருப்பவர்கள், சைரன் ஒலியால் போன் இருப்பது வெளிப்படாமல் இருக்க சோதனை
நேரத்திற்கு முன்னதாகவே போனை அணைத்து வைக்குமாறு அல்லது 'Airplane Mode'-க்கு
மாற்றுமாறு தேசிய அவசர முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T11:35:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரியல் நடிகை சுஜிதாவின் சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-sujitha-latest-photos-1785236026"></link>
            <id>https://cineulagam.com/article/actress-sujitha-latest-photos-1785236026</id>
            <summary type="text">சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் சுஜிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்து வருகிறா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் சுஜிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்து வருகிறார். </p><p>அந்த வகையில் தற்போது சேலையில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளன.</p><p>இதோ அந்த புகைப்படங்கள்:&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T11:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[5 நாட்களில் உலகளவில் ஜனநாயகன் படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? இதோ விவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/jananayagan-worldwide-box-office-collection-1785235579"></link>
            <id>https://viduppu.com/article/jananayagan-worldwide-box-office-collection-1785235579</id>
            <summary type="text">தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக உருவான திரைப்படம் ஜனநாயகன். இயக்குநர் ஹெச். வினோத் இயக்கிய இப்படத்தை கே.வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக உருவான திரைப்படம் ஜனநாயகன். </p><p>இயக்குநர் ஹெச். வினோத் இயக்கிய இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73497612-d057-4bb6-922c-0ea431f0c1f3/26-6a68887e541e9.webp' /></p><p>
</p><p>
ஜனநாயகன் திரைப்படத்தின் வசூல் விவரம் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்த நிலையில், 5 நாட்களில் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. </p><p>

அதன்படி, 5 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 222 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-28T11:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு குறித்து முக்கிய தரப்புக்களுடன் ஈரான் கலந்துரையாடல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-s-foreign-minister-discusses-strait-of-hormuz-1785219576"></link>
            <id>https://ibctamil.com/article/iran-s-foreign-minister-discusses-strait-of-hormuz-1785219576</id>
            <summary type="text">ஹோர்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, சவூதி அரேபியா மற்றும் ஓமான் வெளியுறவு அமைச்சர்களுடன் தனித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, சவூதி அரேபியா மற்றும் ஓமான் வெளியுறவு அமைச்சர்களுடன் தனித்தனியாக தொலைபேசியில் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த பேச்சுவார்தையில் ஹோர்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து அவர் விவரித்தார் என கூறப்பட்டுள்ளது.</p><p> மேற்குறிப்பிட்ட விடயம் இன்று (28.07.2026)&nbsp; அவரது டெலிகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>ஈரானின் வெளியுறவு அமைச்சர்&nbsp;</h2><p>மேலும் அந்த அறிக்கையில்&nbsp;சமீபத்திய இருதரப்பு மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடிய அவர், பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்த ஒத்துழைப்பை வலுப்படுத்தி, கூட்டு இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e264978-f142-4ecc-9c31-016964e2fe71/26-6a68922febf52.webp' /></p><p>
 

இதற்கிடையில், ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களால் சவூதி அரேபியாவை நோக்கி ஏவப்பட்ட ஆளில்லா விமானங்களை சவூதி பாதுகாப்புப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பாஸ் அராக்சியும் சவூதி வெளியுறவு அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹானும் இந்த தொலைபேசி உரையாடலை மேற்கொண்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p>

 </p>]]></content>
            <updated>2026-07-28T11:28:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் Project Bay operation ; இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/project-bay-operation-19-indian-origion-arrested-1785223031"></link>
            <id>https://canadamirror.com/article/project-bay-operation-19-indian-origion-arrested-1785223031</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கனடாவில் &#039;புரஜெக்ட் பே&#039; என்ற பெயரில் பொலிஸார் நடத்திய தீவிர தேடுதல் நடவடிக்கையில் , சுமார் 1,039 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கனடாவில் 'புரஜெக்ட் பே' என்ற பெயரில் பொலிஸார் நடத்திய தீவிர தேடுதல் நடவடிக்கையில் , சுமார் 1,039 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் மற்றும் 17 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
</p><p>


அமெரிக்க எல்லையிலிருந்து கனடாவிற்குள் சரக்கு லொரிகள் மூலமாக கொக்கைன், மெத்தம்பெட்டமைன் மற்றும் ஓப்பியம் உள்ளிட்ட ஆபத்தான போதை மருந்துகள் கடத்தப்படுவதாகக் கனடா பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1782996e-fadb-4765-a93d-00dd7409266a/26-6a68577915acd.webp' /></p><p>
</p><p>


இதனைத் தொடர்ந்து, கனடா பொலிஸார் அமெரிக்கா மற்றும் கனடா எல்லைப் பகுதிகளில் 'புரஜெக்ட் பே' என்ற சிறப்புச் சோதனையைத் ஆரம்பித்துள்ளது.</p><p>



ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள 22 இடங்கள் உட்பட விண்ட்சர், லசலே, கொரூனா, பிராம்ப்டன், மார்க்கம் மற்றும் கலேடன் ஆகிய பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டுள்ளது.</p><p>



இந்தச் சோதனையின் முடிவில் 1.7 தொன் எடையுள்ள போதை மருந்துகள் 17 துப்பாக்கிகள்

ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் சர்வதேச சந்தை மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.1,039 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.



கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-28T11:27:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் பிக்காக்ஸ் மலை ரகசியம்: புதிய தரவுகளுடன் ட்ரம்பைச் சந்திக்கும் நெதன்யாகு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pickaxe-mountain-nuke-lair-1785237844"></link>
            <id>https://news.lankasri.com/article/pickaxe-mountain-nuke-lair-1785237844</id>
            <summary type="text">ஈரானின் பிக்காக்ஸ் மலை அணுசக்தி தளம் குறித்த இஸ்ரேலின் புதிய இரகசிய உளவுத் தகவல்களை பிரதமர் நெதன்யாகு ஜனாதிபதி ட்ரம்புடன் பகிர இருப்பதாகத் தகவல்கள் தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் பிக்காக்ஸ் மலை அணுசக்தி தளம் குறித்த இஸ்ரேலின் புதிய இரகசிய உளவுத் தகவல்களை பிரதமர் நெதன்யாகு ஜனாதிபதி ட்ரம்புடன் பகிர இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>மீண்டும் மூட்டிவிடக்கூடும்</h2><p>
</p><p>போர் மற்றும் ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து விவாதிக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்திக்கவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2826489-7cec-4b4d-82df-997d93815168/26-6a689346650b0.webp' /></p><p> </p><p>இந்தச் சந்திப்பின்போது, ​​ஈரானின் அண்மைக்கால அணுசக்தி நடவடிக்கைகள் குறித்த ஆதாரங்களை நெதன்யாகுவின் குழுவினர் ஒப்படைப்பார்கள் என்று ஜெருசலேமில் உள்ள ஒரு வட்டாரம் நியூயார்க் போஸ்ட் நாளிதழிடம் தெரிவித்துள்ளது. </p><p>சுமார் 14 நாட்கள் தொடர்ச்சியாகத் தாக்குதல்கள் நடைபெற்ற நிலையில், ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கவுள்ளதாக திங்களன்று ட்ரம்ப் அறிவித்தார்; ஆனால், இஸ்ரேலின் அதிர்ச்சியூட்டும் வகையிலான அந்தத் தரவுகள் முழு அளவிலான போரை மீண்டும் மூட்டிவிடக்கூடும் என்றே அஞ்சப்படுகிறது.</p><p>பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கவுள்ளதாக ட்ரம்ப் அறிவித்தாலும், ஈரான் தரப்பில் அதை நிராகரித்துள்ளனர். மட்டுமின்றி, அமெரிக்காவுடன் தற்போதைய சூழலில் நேரடி பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p> </p><p>ஆனால், ஆயுதங்களின் பற்றாக்குறை காரணமாகவே ட்ரம்ப் ஈரான் மீதான தாக்குதலுக்கு இடைவெளி விடுகிறார் என்ற கருத்தும் ஊடகங்களில் கசிந்துள்ளது.</p><p> </p><p>இஸ்ரேலில் கடும் அரசியல் நெருக்கடியை எதிர்கொள்ளும் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானுடனான அமெரிக்கப் போரை நீட்டிக்க வேண்டும் என்றே வலியுறுத்தி வருகிறார். </p><p>இந்த நிலையில், பிக்காக்ஸ் மலைக்குள் ஆழமாக அமைந்துள்ள சுரங்கங்களுக்குள், ஈரான் ஆயிரக்கணக்கான யுரேனியம் செறிவூட்டும் மையவிலக்கு இயந்திரங்களை நகர்த்தியுள்ளதாக இஸ்ரேல் நம்புவதாக அங்குள்ள அதிகாரிகள் வால் ஸ்ட்ரீட் ஜர்னலிடம் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/479c77fd-8e4b-470d-807f-d7f850b79dee/26-6a6893472771a.webp' /></p><p> </p><p>ஜூன் 2025-இல் நடைபெற்ற 12 நாள் போரின்போது, ​​ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரான் நிர்வாகம் இந்த இடமாற்றத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது.</p><h2>அதிக பாதுகாப்புடையதாக</h2><p> </p><p>மிட்நைட் ஹேமர் என்றழைக்கப்பட்ட அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஃபோர்டோ, நடன்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய நகரங்கள் மீது பாரிய வெடிகுண்டு ஊடுருவல் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. </p><p>நடன்ஸ் அணுசக்தி நிலையத்திற்கு அருகில், கோலாங் மலைக்கு 300 அடிக்கும் அதிகமான ஆழத்தில் பிக்காக்ஸ் மலை மறைவிடம் அமைந்துள்ளது. அந்த இடம் பலத்த பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளது; அங்கு இரண்டு சுரங்கப் பாதைக் கட்டமைப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. </p><p>மேலும், மலைக்குள் சென்று, ஆழத்தில் புதைந்துள்ள ஒரு செயல்பாட்டு மையத்திற்கு இட்டுச் செல்லும் சுரங்கப்பாதைகள் இருப்பதை செயற்கைக்கோள் படங்கள் முன்னரே வெளிப்படுத்தின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de531b91-0287-4230-a677-e7973e8ef0bd/26-6a689347cc4dc.webp' /></p><p> </p><p>அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் தாக்கப்பட்ட எந்தவொரு தளத்தை விடவும் இது அதிக பாதுகாப்புடையதாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.</p><p> ஈரானின் பிற முக்கிய அணுசக்தி பதுங்கு குழிகள் மீது குண்டுவீசிய போதிலும், ட்ரம்ப் முன்பு அந்த இடத்தை மட்டும் தாக்காமல் விட்டுவிட்டார். ஆனால், அந்தப் பகுதியின் மீது அமெரிக்கா மிக விரைவில் மிகக் கடுமையான தாக்குதலை நடத்தும் என்று அவர் கடந்த வாரம் எச்சரித்தார். </p><p>ட்ரம்புடனான சந்திப்பின்போது, ​​ஈரான் தனது ஏவுகணை மற்றும் ட்ரோன் திட்டங்களை மீண்டும் கட்டமைத்து வருவதற்கான ஆதாரங்களையும் இஸ்ரேல் வெளிப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-28T11:22:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாவகச்சேரி நகர சபையின் புதிய உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுலராஜ் தெரிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chavakachcheri-uc-new-deputy-chairman-selected-1785235530"></link>
            <id>https://ibctamil.com/article/chavakachcheri-uc-new-deputy-chairman-selected-1785235530</id>
            <summary type="text">சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உப தவிசாளர் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் புதிய உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுலராஜ் திருவுளச்சீட்டு
மூலம் தெரிவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உப தவிசாளர் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் புதிய உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுலராஜ் திருவுளச்சீட்டு
மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.</p><p>சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் தெரிவு இன்றைய தினம் (28) காலை
நடைபெற்ற போதே கோகுலராஜ் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டார்.</p><p>உள்ளூராட்சி
ஆணையாளரால் விடப்பட்ட சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து, அதனை தூக்கி
வீசியதாக சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உப தவிசாளர் ஞா.கிசோர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.</p><p></p><h2>வடக்கு ஆளுநரின் வர்த்தமானி அறிவித்தல்</h2><p>குறித்த குற்றச்சாட்டு தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநரால்
நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை அதிகாரியின் விசாரணை அறிக்கையின்
பரிந்துரைக்கு அமைய உப தவிசாளர் பதவியும் அவரது சபை உறுப்புரிமையும்
கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி ஆளுநரின் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக
வறிதாக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39f10d01-0ca2-4bd7-bf74-9930fd359fed/26-6a688f36863e9.webp' /></p><p>அதன் அடிப்படையில் இன்றைய தினம் புதிய உப தவிசாளர்
தெரிவுக்காக சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்ட போது தமிழரசுக் கட்சியின் சார்பிலும், ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி சார்பிலும்
இருவர் போட்டியிட்டனர்.
</p><p>
அதில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டவருக்கு, தமிழரசு கட்சியின் 6
உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர்.</p><p>

ஜனநாயக தமிழ்தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டவருக்கு, அகில இலங்கை தமிழ்
காங்கிரஸின் 6 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ் தேசிய கட்சியின் ஒரு
உறுப்பினரும் வாக்களித்ததுடன் தேசிய மக்கள் சக்தியின் இரு உறுப்பினர்களும் வாக்களிப்பில் ஈடுபடாமல் நடுநிலை
வகித்தனர்.</p><p></p><h2>சட்டத்தரணியின் கோரிக்கை</h2><p>சாவகச்சேரி நகர சபையானது, 18 உறுப்பினர்களை கொண்ட சபையாகும். அதில் தமிழரசுக்
கட்சியின் 06 உறுப்பினர்கள், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் 06
உறுப்பினர்கள், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு உறுப்பினர்களும் உள்ள நிலையில் அதில் ஞா. கிசோரின் உறுப்புரிமை வறிதாக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbfb24e8-6de7-4b34-b958-788f12ac4786/26-6a688f37691a9.webp' /></p><p> அதன் அடிப்படையில்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு உறுப்பினர், தேசிய மக்கள் சக்தியின்
மூன்று உறுப்பினர்கள் அதில் ஒருவர் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். அதன்
அடிப்படையில் அவர்களில் இரு உறுப்பினர்கள். ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஒரு
உறுப்பினர் என சபையில் தற்போது 16 உறுப்பினர்கள் உள்ளனர்.
</p><p>
இந்நிலையில் இன்றைய தினம், உப தவிசாளர் தெரிவுக்கான கூட்டத்திற்கு 16
உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.</p><p>இதேவேளை குறித்த உப தவிசாளர் தெரிவினை நடத்த இடைக்கால தடை விதிக்குமாறு வடக்கு
மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வில் முன்னாள் உப தவிசாளர் சார்பில்
முன்னிலையான சட்டத்தரணியின் கோரிக்கையை மன்று நிராகரித்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T11:21:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் இலங்கைத் தமிழ் இளைஞனுக்கு சிறைத்தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-jailed-for-89-days-in-australia-1785221608"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-jailed-for-89-days-in-australia-1785221608</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் - பிரிஸ்பேன் ரயிலில் அறிமுகமில்லாத ஒருவரின் தலையில் கண்ணாடிப் போத்தலால் தாக்கிய இலங்கையருக்கு 3 மாதங்களுக்கும் குறைவான சிறைத் தண்டனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் - பிரிஸ்பேன் ரயிலில் அறிமுகமில்லாத ஒருவரின் தலையில் கண்ணாடிப் போத்தலால் தாக்கிய இலங்கையருக்கு 3 மாதங்களுக்கும் குறைவான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>குழந்தை பருவத்தில் அவுஸ்திரேலியாவுக்குக் குடியேற அனுமதிக்கப்பட்ட 22 வயதுடைய சரணீஸ் சிவகுமார் மற்றும் பேட்லி மொஹினி என்பவர் கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி Cleveland வழித்தடப் ரயிலில் வைத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். </p><p>இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கமராக்களில் பதிவாகியிருந்தது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்டமைக்காக மொஹினிக்கு 10 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.</p><p> </p><h2><b>இளைஞனுக்கு சிறைத்தண்டனை</b></h2><p>அத்துடன், குழப்பம் விளைவித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட சிவகுமார் நேற்று தடுப்பு காவலில் இருந்தவாறே கிளிவ்லாண்ட் நீதிமன்றத்தில் வீடியோ ஊடாக முன்னிலைப்படுத்தப்பட்டார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3b6ad47-83ca-48c8-bca8-a936b0735a66/26-6a68908900727.webp' /></p><p>தனியாகப் பயணம் செய்த பாதிக்கப்பட்ட நபரை சிவகுமாரும் மொஹினியும் நெருங்கிப் பேசியுள்ளனர். </p><p>அந்தச் சந்திப்பு விரைவில் வன்முறையாக மாறியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இளைஞர்கள் இருவரும் அந்த நபரின் தலை மற்றும் முகத்தில் பலமுறை குத்தியுள்ளனர். </p><p>மூடப்படும் ரயிலின் கதவுகள் ஊடாக அவரை வெளியே இழுத்துச் சென்று அவர் இறங்குவதைத் தடுத்து, பின்னர் மற்றொரு பெட்டிக்கு சென்றுள்ளனர். </p><h3><b>நபர் மீது தாக்குதல்</b></h3><p>எனினும் அவர்கள் விரைவில் திரும்பி வந்து அந்த நபரின் பையை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது சிவகுமார் அந்த நபரின் தலையில் கண்ணாடி போத்தலால் தாக்கியதில் அவர் இரத்தம் சிந்தத் தொடங்கியுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f19b075b-8306-45cc-867a-f4e35de17c15/26-6a689089c65a4.webp' /></p><p>இந்தத் தாக்குதலால் கடும் அதிர்ச்சிக்குள்ளான பாதிக்கப்பட்ட நபர், அதன் பின்னர் குயின்ஸ்லாந்திலிருந்து வெளியேறிவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. </p><p>தான் தற்காப்புக்காகவே செயற்பட்டதாக சிவகுமார் நீதிமன்றத்தில் வாதிட்ட போதிலும், நீதிபதி டெபோரா வஸ்தா அவரது வாதத்தை நிராகரித்தார். </p>]]></content>
            <updated>2026-07-28T11:21:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் ரயிலில் இலங்கை தமிழ் இளைஞர் அட்டகாசம்; கிடைத்த தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lankan-tamil-attacked-train-passenger-australia-1785236812"></link>
            <id>https://jvpnews.com/article/lankan-tamil-attacked-train-passenger-australia-1785236812</id>
            <summary type="text">&amp;nbsp;அவுஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் ரயில் ஒன்றில், தமக்கு அறிமுகமில்லாத ஒருவரின் தலையில் கண்ணாடிப் போத்தால் தாக்கிய இலங்கை தமிழ் இளைஞர் ஒருவருக்கு, மூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அவுஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் ரயில் ஒன்றில், தமக்கு அறிமுகமில்லாத ஒருவரின் தலையில் கண்ணாடிப் போத்தால் தாக்கிய இலங்கை தமிழ் இளைஞர் ஒருவருக்கு, மூன்று மாதங்களுக்கும் குறைவான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
சிறுவயதிலேயே அவுஸ்திரேலியாவுக்குக் குடியேற அனுமதிக்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞர் 22 வயதான சரணீஸ் சிவகுமார் (Saranees Sivakumar) மற்றும் அவருடன் குற்றத்தில் ஈடுபட்ட பாட்லி மாஹ்வினி (Baddeley Mawhinney) ஆகியோர் ஏப்ரல் 25 அன்று கிளீவ்லேண்ட் வழித்தட ரயிலில் கொடூரமான தாக்குதலை நடத்தியது சிசிடிவி (CCTV) கமராவில் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb7c3b30-a2fb-41d8-9ab7-bfcfd5d003ad/26-6a688d4d87e99.webp' /></p><h2>&nbsp;கொடூரமான தாக்குதலை நடத்திய&nbsp;சரணீஸ் சிவகுமார்</h2><p>
</p><p>
தாக்குதலில் தனது பங்கிற்காக மாவின்னிக்கு ஏற்கனவே 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கலவரத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட சிவகுமார், திங்களன்று காவலில் இருந்து காணொளிக் காட்சி மூலம் கிளீவ்லேண்ட் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
</p><p>
தனியாகப் பயணம் செய்து கொண்டிருந்த பாதிக்கப்பட்ட நபரை சிவகுமாரும் மாஹினியும் அணுகிப் பேசத் தொடங்கியதாகவும், ஆனால் அந்தச் சந்திப்பு விரைவில் வன்முறையாக மாறியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><p>
</p><p>
அவ்விருவரும் அந்த நபரின் தலை மற்றும் முகத்தில் பலமுறை குத்தியதுடன், மூடிக் கொண்டிருந்த ரயில் கதவுகள் வழியாக அவரை இழுத்துச் சென்று அவர் வெளியேறுவதைத் தடுத்த பின்னர் மற்றொரு பெட்டிக்குச் சென்றனர்.
</p><p>

 அவர்கள் விரைவில் திரும்பி வந்து அந்த நபரின் பையைப் பறிக்க முயன்ற போது சிவகுமார் ஒரு கண்ணாடிப் போத்தலால் அந்த நபரின் தலையில் தாக்கியதில் அவருக்கு ரத்தக் கசிவு ஏற்பட்டது.</p><p>

இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நபர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அதனால் அவர் குயின்ஸ்லாந்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><p>
</p><p>
தாக்க முற்பட்டவர்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவே அவ்வாறு செய்ததாக சிவகுமார் நீதிமன்றத்தில் வாதிட்டார். எனினும் இந்தத் தாக்குதலுக்காக சிவகுமாருக்கு எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது,

ஏற்கனவே 89 நாட்கள் சிறைக்காவலில் இருந்ததால், அவர் கண்காணிப்புடன் கூடிய நிபந்தனையில் விடுவிக்கப்பட்டார்.
</p><p>
அதேசமயம் சிவகுமார் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியக் குடிமகனாக மாறியதாகவும், வேலை தேடி மெல்போர்னிலிருந்து பிரிஸ்பேனுக்குச் சென்ற அவர், வீடின்றியும் வேலையின்றியும் இருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T11:05:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை யார் தெரியுமா? இன்று ரசிகர்களின் மனம் கவர்ந்த பிரபலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/popular-television-celebrity-childhood-photo-1785234362"></link>
            <id>https://cineulagam.com/article/popular-television-celebrity-childhood-photo-1785234362</id>
            <summary type="text">சிறு வயது புகைப்படம்&amp;nbsp;சின்னத்திரையில் இருந்து பலரும் வெள்ளித்திரையில் இடம்பிடித்துள்ளனர். அப்படி தனது பயணத்தை சின்னத்திரையில் ஆரம்பித்து இன்று வெள...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சிறு வயது புகைப்படம்&nbsp;</h2><p>சின்னத்திரையில் இருந்து பலரும் வெள்ளித்திரையில் இடம்பிடித்துள்ளனர். அப்படி தனது பயணத்தை சின்னத்திரையில் ஆரம்பித்து இன்று வெள்ளித்திரையில் கால்பதித்து இருக்கும் ஒருவரின் சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d571b34-ea3d-4eef-931c-b8a7afc98cf8/26-6a6883bcc86ae.webp' /></p><p>விஜய் டிவியின் மூலம் பிரபலமான பலரில் இவரும் ஒருவர். சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பாகேற்றுள்ளார். பின் தற்போது வெள்ளித்திரையில் பின்னணி பாடகியாக வலம் வருகிறார்.</p><p></p><h2>சிவாங்கி&nbsp;</h2><p> </p><p>

அவர் வேறு யாருமில்லை, சிவாங்கி தான். ஆம், பின்னணி பாடகியும் பிரபல நடிகையுமான <a href="https://www.instagram.com/p/DZfGNG-BcDz/" target="_blank">சிவாங்கி</a>யின் சிறு வயது புகைப்படம் தான் இது. இந்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fcd133b-1e27-41f5-8694-7c409201e456/26-6a6883bd7b706.webp' /></p><p>சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, பின் குக் வித் கோமாளியில் என்ட்ரி தந்து ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்தார். இதை தொடர்ந்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், டான், காசேதான் கடவுள் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். மேலும், லப்பர் பந்து, டியர், லவ் மேரேஜ் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T11:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓடும் மோட்டார் சைக்கிளில் வீதியில் பல மீற்றர்கள் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட பெண்; சம்பவத்தால் அதிர்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-dragged-road-by-a-moving-motorcycle-bihar-1785228348"></link>
            <id>https://jvpnews.com/article/woman-dragged-road-by-a-moving-motorcycle-bihar-1785228348</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியாவின் பீகார் மாநிலம், நாலந்தா மாவட்டத்தின் ராஜ்கிர் பகுதியில், ஓடும் மோட்டார் சைக்கிளில் இருந்து பெண்ணொருவர் வீதியில் பல மீற்றர்கள் தூரம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியாவின் பீகார் மாநிலம், நாலந்தா மாவட்டத்தின் ராஜ்கிர் பகுதியில், ஓடும் மோட்டார் சைக்கிளில் இருந்து பெண்ணொருவர் வீதியில் பல மீற்றர்கள் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

 இந்தச் சம்பவம் ராஜ்கிரில் உள்ள கிலா மைதானம் மற்றும் வேணுவன் பகுதிக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eeed1c79-d613-4018-abc2-e6a614730c5d/26-6a686c3deda1d.webp' /></p><h2>வீதியில் பல மீற்றர்கள் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட பெண்</h2><p>
</p><p>
மோட்டார் சைக்கிள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், பெண் ஒருவர் வாகனத்தின் கைப்பிடி அல்லது அதன் பின்பகுதியைப் பற்றிக்கொண்டு வீதியில் இழுத்துச் செல்லப்படுவது பதிவாகியுள்ளது.
</p><p>
ஒரு கட்டத்தில் மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்த சாரதி, பெண்ணுடன் சேர்ந்து வீதியில் கீழே விழுந்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இதனை அடுத்து, அங்கு திரண்ட பொதுமக்களில் ஒருவர் ஆத்திரமடைந்து மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரை தாக்க முயன்ற நிலையில் , அங்கிருந்தவர்கள் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
</p><p> 
இந் நிலையில் , பெண்ணின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அபாயகரமாக மோட்டார் சைக்கிளை இயக்கிய நபருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஊடகங்களில் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T10:56:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிஸ் விமானக் கட்டணங்கள் தொடர்பில் ஒரு முக்கிய செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/flight-fare-to-rise-in-switzerland-1785236067"></link>
            <id>https://news.lankasri.com/article/flight-fare-to-rise-in-switzerland-1785236067</id>
            <summary type="text">சுவிஸ் விமானக் கட்டணங்கள் மேலும் உயரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

சுவிஸ் விமானக் கட்டணங்கள் உயரலாம்

கடந்த ஐந்து ஆண்டுகளாகவே சுவிட்சர்லாந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிஸ் விமானக் கட்டணங்கள் மேலும் உயரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
</p><h3>
சுவிஸ் விமானக் கட்டணங்கள் உயரலாம்
</h3><p>
கடந்த ஐந்து ஆண்டுகளாகவே சுவிட்சர்லாந்தில் விமானக் கட்டணங்கள் கணிசமாக அதிகரித்து வந்துள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ccadc99-904a-4b65-ab31-116682701e30/26-6a688a64a44db.webp' /></p><p>

இந்நிலையில், வரும் மாதங்களில் விமானக் கட்டணங்கள் மேலும் உயரக்கூடும் என ஒப்பீட்டுச் சேவை நிறுவனமான கம்பாரிஸ் என்னும் நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>

2021ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, விமானப்பயணிகள் அதைவிட தற்போது கிட்டத்தட்ட 70 சதவிகிதம் அதிகமாக செலவிடுகிறார்கள் என்று கூறியுள்ளது கம்பாரிஸ் நிறுவனம்.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், இது முடிவல்ல, அடுத்த 12 மாதங்களில் விமானக் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கூறும் அந்நிறுவனம், அதற்கான முக்கியக் காரணிகள், அதிகரித்த எரிபொருள் விலை, பணியாளர் ஊதியம் மற்றும் பராமரிப்புச் செலவுகள் ஆகியவை என்கிறது.</p><p>

கம்பாரிஸ் நிறுவனத்தின் பொருளாதார நிபுணரான மைக்கேல் கூன் என்பவரின் கருத்துப்படி, குறிப்பாக, பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டுகளின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாம்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T10:54:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுற்றுலாத் துறை முதலீடுகளுக்காக ஜனாதிபதி மாளிகைகள்...! அமைச்சரவை ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-to-lease-president-palaces-for-tourism-1785233336"></link>
            <id>https://ibctamil.com/article/sl-to-lease-president-palaces-for-tourism-1785233336</id>
            <summary type="text">
நாட்டின் பல பகுதிகளில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைகளை நீண்டகால சுற்றுலா முதலீட்டுத் திட்டங்களுக்காகக் குத்தகைக்கு விடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
நாட்டின் பல பகுதிகளில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைகளை நீண்டகால சுற்றுலா முதலீட்டுத் திட்டங்களுக்காகக் குத்தகைக்கு விடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
</p><p>
அரசுக்குச் சொந்தமான சொத்துக்களைப் பொருளாதார ரீதியாகப் பயனுள்ள முறையில் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>ஜனாதிபதி மாளிகை</h2><p>பெந்தோட்ட, கதரகம, மஹியங்கனை, எம்பிலிப்பிட்டிய மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைகளே இவ்வாறு சுற்றுலாத் துறை முதலீடுகளுக்காக வழங்கப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca1450f8-bed3-45a5-9030-779486fa77b3/26-6a6886980e6b1.webp' /></p><p>

இவை முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ பயன்பாட்டிற்காகவும் ஓய்வு நேரப் பயணங்களுக்காகவும் நிர்மாணிக்கப்பட்டவையாகும்.
</p><p>
தற்போதைய ஜனாதிபதியினால் இந்த மாளிகைகள் பயன்படுத்தப்படாத போதிலும், உயர் கட்டிடக்கலை மற்றும் பொருளாதார மதிப்புடைய இச்சொத்துக்களின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் அது சார்ந்த ஏனைய செலவுகளுக்காக ஜனாதிபதி செயலகத்தின் ஊடாகத் தொடர்ந்து பெருமளவிலான அரச நிதி செலவிடப்பட்டு வருகின்றது.</p><p>
</p><p></p><h2>சொந்தமான பங்களாக்கள்</h2><p>இந்தநிலையில் அரசுக்குச் சொந்தமான பங்களாக்கள், வீடுகள் மற்றும் ஓய்வு விடுதிகளைப் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளைக் கருத்திற் கொண்டே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0761cf69-3ceb-4120-844a-6aa2839a313e/26-6a68869719015.webp' /></p><p>இதனடிப்படையில் தகுதிவாய்ந்த முதலீட்டாளர்களிடமிருந்து முன்மொழிவுகளைக் கோருவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை தனது ஆதரவை வழங்கியுள்ளது.
</p><p>
இம்மாளிகைகளின் கலாச்சார மற்றும் கட்டிடக்கலை முக்கியத்துவத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில் இவற்றைச் சுற்றுலாத் துறையுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் நாட்டிற்கு வருமானத்தை ஈட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T10:54:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி : ஒருவர் உயிரிழப்பு - நால்வர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ampara-three-wheel-accident-women-death-1785231947"></link>
            <id>https://tamilwin.com/article/ampara-three-wheel-accident-women-death-1785231947</id>
            <summary type="text">திருகோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதி வீதி வளைவில் முச்சக்கர
வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி விபத்திறகு உள்ளானதில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதி வீதி வளைவில் முச்சக்கர
வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி விபத்திறகு உள்ளானதில் ஒருவர்
உயிரிழந்ததுடன் சிறுவர் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p>குறித்த சம்பவம் நேற்று(27.07.2026) இடம்பெற்றுள்ளதாகவும் சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்
</p><p>விபத்தில் மட்டக்களப்பு வவுணதீவு ச் சேர்ந்த 47 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>சாரதி மற்றும் இரு சிறுவர்
உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a52e04e6-9e87-4786-aebd-6ac1aee1bff2/26-6a6885ff4c569.webp' /></p><p>
இதில் உயிரிழந்தவரின் சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c678250-b322-43f3-b9a8-110dc6d36281/26-6a6886006589d.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T10:52:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானை வீழ்த்தி மகுடம் சூடிய இலங்கை அணி: சமரி அதப்பத்து சரவெடி ஆட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chamari-52-and-sri-lanka-win-series-vs-pakistan-1785235789"></link>
            <id>https://news.lankasri.com/article/chamari-52-and-sri-lanka-win-series-vs-pakistan-1785235789</id>
            <summary type="text">பாகிஸ்தான் மகளிர் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

ஃபாத்திமா சனாஇலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தான் மகளிர் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
</p><h2>
ஃபாத்திமா சனா</h2><p>இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹம்பன்டோடாவில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af8ed354-a51f-4010-8c93-74afd9bb2f05/26-6a688a2f829b0.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 187 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. குல் ஃபெரோஸா 40 ஓட்டங்களும், முனீபா அலி 34 ஓட்டங்களும் எடுத்தனர். </p><p>

இலங்கை அணித்தலைவர் சமரி அதப்பத்து, சேத்தனா விமுக்தி மற்றும் கவிஷா தில்ஹரி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.</p><p>

பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் விஷ்மி குணரத்னே 12 ஓட்டங்களில் வெளியேறிய, அணித்தலைவர் சமரி அதப்பத்து அதிரடி ஆட்டத்தில் மிரட்டினார்.
</p><p>
</p><h2>சமரி அதப்பத்து</h2><p>சமரி அதப்பத்து (Chamari Athapaththu) 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05e715a1-20ac-4c58-bffc-39227941d1e0/26-6a688a304513a.webp' /></p><p> 

அடுத்து கைகோர்த்த ஹர்ஷிதா மற்றும் ஹாசினி வலுவாக கூட்டணி அமைத்து இலங்கையை வெற்றி பெற வைத்தனர். </p><p>

இலங்கை அணி 37.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.</p><p>

ஹர்ஷிதா சமரவிக்ரமா (Harshitha Samarawickrama) 71 ஓட்டங்களும், ஹாசினி பெரேரா (Hasini Perera) 50 ஓட்டங்களும் எடுத்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e64762f-c0e1-4836-8758-09c585572831/26-6a688a30e9e94.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T10:51:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்ஸ்டாகிராமில் ராகுல்காந்தியை பின்னுக்கு தள்ளிய முதலமைச்சர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/cm-vijay-187-million-followers-on-instagram-1785232155"></link>
            <id>https://manithan.com/article/cm-vijay-187-million-followers-on-instagram-1785232155</id>
            <summary type="text">இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

தங்களது திறமைகளை வெளிப்படுத்த பலரும் வீடியோக்களை பதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.</p><p> 

தங்களது திறமைகளை வெளிப்படுத்த பலரும் வீடியோக்களை பதிவிட்டு வருவதால், பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் வருமானமும் அதிகரித்து வருகிறது.
</p><p>
அதேபோல், இளைஞர்கள் தங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களையும் அதிக அளவில் பின்தொடர்கின்றனர்.</p><p>

உலக அளவில் பிரதமர் மோடியை இன்ஸ்டாகிராமில் 10.2 கோடி பேர் பின்தொடர்கின்றனர். 

மத்திய அமைச்சர் அமித் ஷாவை 3.22 கோடி பேர் பின்தொடர்கின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a490a3af-3521-4acc-bd48-f1cd612a8e7a/26-6a687b1dd49eb.webp' /></p><p>எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை 1.47 கோடி பேர் பின்தொடர்ந்து வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய்யின் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 1.87 கோடியாக உயர்ந்துள்ளது.
</p><p>
மஜ்லீஸ் தலைவர் ஓவைசியை 1.25 கோடி பேரும், டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிரியங்கா காந்தியை தலா 40 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர். </p><p>

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 23 லட்சம் பேர் பின்தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இன்ஸ்டாகிராம் தற்போது அரசியல் பிரசாரத்திற்கான முக்கிய தளமாக மாறியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T10:46:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுவெளியில் ஆயுதங்களை ஏந்தி போராட்டம்; ஈரானில் வெளியில் தூக்கிலிடப்பட்ட இருவர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-people-publicly-executed-in-iran-today-1785235675"></link>
            <id>https://canadamirror.com/article/two-people-publicly-executed-in-iran-today-1785235675</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரானில் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு நபர்களுக்கு இன்று (28) பொதுவெளியில் தூக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரானில் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு நபர்களுக்கு இன்று (28) பொதுவெளியில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகச் சவர்வதேச செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>



அபோல்ஃபாஸ்ல் செபாஹி மற்றும் அமீர்-ஹொசைன் சபாஹி ஆகிய இருவரும் கடந்த ஜனவரி 8 ஆம் திகதி பொலிஸ்அதிகாரிகளை ஆயுதங்களால் தாக்கி, பெட்ரோல் ஊற்றித் தீ வைத்து கொலை செய்ததாக இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faea2627-ba56-4f3b-969f-e300034a4d45/26-6a6888dd319ae.webp' /></p><h2>ஆயுதங்களால் தாக்கி, பெட்ரோல் ஊற்றித் தீ வைத்து கொலை&nbsp;</h2><p>
</p><p>


அத்துடன், பொதுவெளியில் ஆயுதங்களை ஏந்தி அச்சத்தை உண்டாக்கியது, நாட்டின் பொது ஒழுங்கையும் அமைதியையும் சீர்குலைத்தது மற்றும் மனசாட்சியற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது ஆகியவை முதன்மைக் குற்றச்சாட்டுகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>



இந்நிலையில், மத்திய இஸ்ஃபஹான் மாகாணத்தில் உள்ள மாலெக்ஷாஹர் நகரின் பொதுச் சதுக்கத்தில், பொதுமக்கள் முன்னிலையில் இருவரும் தூக்கிலிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன</p><p>. 



ஈரானில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி ஜனவரியில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிவையில், இந்த வன்முறைச் சம்பவங்களில் 3,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



இப்போராட்டங்களைத் தொடர்ந்து ஈரான் முழுவதும் பலர் கைது செய்யப்பட்டு மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவது அதிகரித்துள்ளது.



சர்வதேச அரசியல் விமர்சகர்களின் கூற்றுப்படி, உலக அளவில் சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக அளவில் மரண தண்டனைகளை நிறைவேற்றும் நாடாக ஈரான் உள்ளது குறிப்பிடத்தக்கது</p>]]></content>
            <updated>2026-07-28T10:46:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேயின் ரிட் மனு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/suresh-sallay-s-writ-petition-consider-on-aug-25-1785233598"></link>
            <id>https://ibctamil.com/article/suresh-sallay-s-writ-petition-consider-on-aug-25-1785233598</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.</p><p>குறித்த மனுவை மேலதிக பரிசீலனைக்காக ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>

இம்மனு இன்று (28) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டது.</p><p></p><h2>நீதிபதிகள் குழாம் உத்தரவு</h2><p> </p><p>

இதன்போது, மேலதிக சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காக இம்மனுவை ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி அழைக்குமாறு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4c18273-80c5-40c8-8fdc-5e4ebdfab871/26-6a688708ee9ee.webp' /></p><p>இந்த நிலையில் அன்றைய தினம் மனு தொடர்பான மேலதிக சமர்ப்பணங்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T10:39:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளைகளை சந்திக்க ரவி மோகனுக்கு அனுமதி; ஜீவனாம்ச தொகையும் குறைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/actor-ravi-mohan-divorce-alimony-amount-reduced-1785234996"></link>
            <id>https://jvpnews.com/article/actor-ravi-mohan-divorce-alimony-amount-reduced-1785234996</id>
            <summary type="text">&amp;nbsp; நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து வழக்கில், ஆர்த்தி கோரியிருந்த மாதம் இந்திய மதிப்பில் ரூ.40 இலட்சம் ஜீவனாம்சத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து வழக்கில், ஆர்த்தி கோரியிருந்த மாதம் இந்திய மதிப்பில் ரூ.40 இலட்சம் ஜீவனாம்சத் தொகையை நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
அதற்குப் பதிலாக, ஆர்த்திக்கு மாதம் ரூ.3 இலட்சம் ஜீவனாம்சமாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 இந் நிலையில் ரவி மோகன் தனது மகன்களை சந்திப்பதற்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3ab5656-cb24-4978-9b51-66ab54230956/26-6a688635cdc2a.webp' /></p><p>

வழக்கு தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தொடர்பான தகவல்கள் தற்போது கவனம் பெற்றுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T10:34:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை ரேகாவுடன் தனி அறையில் கமல் ஹாசன்? வெளுத்து வாங்கிய மனைவி வாணி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/kamal-rekha-were-caught-red-handed-by-his-wife-1785233355"></link>
            <id>https://viduppu.com/article/kamal-rekha-were-caught-red-handed-by-his-wife-1785233355</id>
            <summary type="text">சினிமாத்துறையை சேர்ந்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை எப்போது ரசிகர்களுக்கு ஒரு பெரும் புதிராகவே இருந்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு பின் சினிமா பிரபலங்களின...</summary>
            <content type="html"><![CDATA[<p>சினிமாத்துறையை சேர்ந்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை எப்போது ரசிகர்களுக்கு ஒரு பெரும் புதிராகவே இருந்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு பின் சினிமா பிரபலங்களின் சில சம்பவங்கள் வெளியாகும் போது பெரும் பேசுபொருளாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72944678-00d5-42a1-bf31-6aa8b2923d96/26-6a687fcdbb528.webp' /></p><p> அப்படி 1970ல் தமிழ் சினிமாவையே உலுக்கிய சம்பவமாக கமல் ஹாசன், ரேகா மற்றும் அவரது மனைவி கணபதி தொடர்பான சம்பவம் தான் பேசு பொருளானது. </p><p>1979ல் ஓட்டல் சோழா ஷெரட்டனில் கமல் ஹாசனுடன் ஒரே ரூமில் ஜெமினி கணேசனின் மகள் ரேகாவுடன் இருந்ததை கமல் மனை வாணி கணபதி பார்த்ததாக ஓட்டல் ஊழியர் பார்த்ததாக அப்போதைய பத்திரிக்கையில் பேசப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e76cc61-9aa8-4d4e-9e0a-73c791225fa5/26-6a687fce6c84d.webp' /></p><p> ஆனால் எது உண்மை என்று பெரியளவில் வெளிச்சத்திற்கு வரவில்லை. இந்த சம்பவம் குறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் அளித்த பேட்டியில், அப்போது அந்த ஓட்டலில் நான் இரவு வேலைக்கு வந்தபோது அந்த இடம் முழுவதும் ஒரே சலசலப்பாக இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bee3c27-1173-47b7-88fd-497adb5d6851/26-6a687fcf1a514.webp' /></p><p>
</p><p>
வரவேற்பறையில் இருந்த பெண்கள், கமல் ஹாசனும் ரேகா கணேசனும் ஓட்டலில், ரேகாவின் அறையில் இருந்தபோது கமலின் மனைவி வாணி கணபதி வந்து தன் கணவரை பகிரங்கமாக திட்டினார் என்பதை கூறியதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T10:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகளவில் 11 நாட்களில் 'தி ஒடிசி' திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/the-odyssey-movie-11-days-box-office-collection-1785229414"></link>
            <id>https://cineulagam.com/article/the-odyssey-movie-11-days-box-office-collection-1785229414</id>
            <summary type="text">இந்த ஆண்டு ஹாலிவுட் திரையுலகில் இருந்து எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்து மாபெரும் வசூல் சாதனை படைத்த திரைப்படம் &#039;The Obsession&#039;. இப்படம் உலகளவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டு ஹாலிவுட் திரையுலகில் இருந்து எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்து மாபெரும் வசூல் சாதனை படைத்த திரைப்படம் 'The Obsession'. இப்படம் உலகளவில் $458.6 மில்லியன் வசூல் செய்துள்ளது என தகவல் தெரிவிக்கப்படுகிறது.</p><h2>'தி ஒடிசி'</h2><p> </p><p>

இதனை தொடர்ந்து மாபெரும் எதிர்பார்ப்புடன் ஹாலிவுட்டில் இருந்து வெளியாகி வசூல் வேட்டையாடி வரும் திரைப்படம்தான் 'தி ஒடிசி'. இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த ஜூலை 17-ஆம் தேதி வெளியானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/159b65a0-df70-47ec-a3a3-7e74ec9c0134/26-6a68706a2b028.webp' /></p><p></p><h2>வசூல்&nbsp;</h2><p> </p><p>

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் முதல் நாளில் இருந்து அமோக வரவேற்பை பெற்று வரும் 'தி ஒடிசி' திரைப்படம், இதுவரை 11 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c116987-25db-46b9-a8f3-c52b9b272a2d/26-6a68706952e68.webp' /></p><p>இந்த நிலையில், 11 நாட்களில் உலகளவிலும், இந்தியாவிலும் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 11 நாட்களில் உலகளவில் ரூ. 6400 கோடியும், இந்தியாவில் மட்டுமே ரூ. 150 கோடியும் வசூலித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T10:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான்காவது வெப்ப அலையை எதிர்கொள்ளவிருக்கும் பிரித்தானியா... மக்களுக்கு வேண்டுகோள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/britain-braces-fourth-heatwave-1785234024"></link>
            <id>https://news.lankasri.com/article/britain-braces-fourth-heatwave-1785234024</id>
            <summary type="text">இந்த வருடத்தில் நான்காவது முறையாக வெப்ப அலை வீசக்கூடும் என்று பிரித்தானிய வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள அவசர மருத்துவப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த வருடத்தில் நான்காவது முறையாக வெப்ப அலை வீசக்கூடும் என்று பிரித்தானிய வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள அவசர மருத்துவப் பணியாளர்களும் தீயணைப்பு வீரர்களும் தயாராக உள்ளனர்.</p><h2>முன்னெப்போதும் இல்லாத</h2><p>
</p><p>புதன்கிழமைக்குள் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது; இதனால் வெப்பம் தொடர்பான உடல்நல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதுடன், காய்ந்துபோன பூங்காக்கள் மற்றும் கிராமப்புறங்களில் கவனமாக இருக்குமாறு தீயணைப்புத் துறைத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/561164b0-4a96-44f2-bd24-299e58951360/26-6a68857b9e609.webp' /></p><p> </p><p>வானிலை ஆய்வு மையத்தின் தற்போதையத் தரவுகளின்படி, பிரித்தானியா முழுவதும் ஜூலை மாதம் சராசரியை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக பதிவாகியுள்ளது. </p><p>மேலும், கோடைக்காலம் முடிய இன்னும் ஒரு மாதத்திற்கும் மேலாக உள்ள நிலையில், பிரித்தானியா முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 30 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான நாட்களை ஏற்கனவே எதிர்கொண்டுள்ளது.</p><p></p><p> </p><p>வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, தெற்கு இங்கிலாந்தில் ஜூலை மாதத்திற்கான சராசரி மழையளவில் 1 சதவீதம் மட்டுமே பதிவாகியுள்ளது; அதேவேளையில், ஒட்டுமொத்த இங்கிலாந்தில் 5 சதவீதமும், பிரித்தானியாவில் 20 சதவீதமும் பதிவாகியுள்ளது. </p><p>நாட்டின் கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் நிலவும் உயர் அழுத்த மண்டலத்தின் தாக்கத்தால், செவ்வாய்க்கிழமை முதல் வெப்பநிலை உயர்ந்து 30 டிகிரி செல்சியஸை எட்டும் என்றும், புதன்கிழமையன்று வெப்பம் உச்சத்தை அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b606bfb1-d51c-4350-8893-d6bf2d582668/26-6a68857c96f83.webp' /></p><h2>சுகாதார எச்சரிக்கை</h2><p> </p><p>வியாழக்கிழமை முதல் வெப்பநிலை படிப்படியாகக் குறையத் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது; எனினும், தென்கிழக்குப் பகுதியில் மற்றொரு வெப்பமான நாள் நிலவுவதால், அப்பகுதி உத்தியோகப்பூர்வ வெப்ப அலைச் சூழலிலேயே நீடிக்கக்கூடும். </p><p>இங்கிலாந்தின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளுக்கு 'அம்பர்' (amber) அளவிலான வெப்பம் சார்ந்த சுகாதார எச்சரிக்கையை விடுத்துள்ள இங்கிலாந்து சுகாதாரப் பாதுகாப்பு முகமை,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4beb7828-3c2f-4ce2-af64-48d814fdf174/26-6a68857d531e4.webp' /></p><p> </p><p>இந்த வெப்பம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், சுகாதார சேவைகளுக்கான தேவையை அதிகரிக்கக்கூடும் என்றும் திங்களன்று தெரிவித்தது. </p><p>சமீபத்திய நாட்களில் ஐரோப்பா முழுவதும், குறிப்பாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் காட்டுத்தீ காரணமாக லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், </p><p>நிலவும் தீவிர வெப்ப அலை பிரித்தானியாவிலும் காட்டுத்தீ ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கக்கூடும் என்பதால், தீயணைப்புத் துறைத் தலைவர்களும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-28T10:18:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே இரவில் மாஸ்கோவை நோக்கி சீறிப்பாய்ந்த 390 ட்ரோன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-strike-390-drones-on-moscow-overnight-1785233340"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-strike-390-drones-on-moscow-overnight-1785233340</id>
            <summary type="text">உக்ரைன் சுமார் 400 ட்ரோன்களைக் கொண்டு ரஷ்யாவின் மீது தாக்குதல் நடத்தியது.390 ட்ரோன் விமானங்கள்

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகு...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் சுமார் 400 ட்ரோன்களைக் கொண்டு ரஷ்யாவின் மீது தாக்குதல் நடத்தியது.</p><h2>390 ட்ரோன் விமானங்கள்
</h2><p>
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை உக்ரைனின் 390 ட்ரோன் விமானங்கள் ஒரே இரவில் தாக்கியுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed6d269c-8ec1-4449-9017-0d31609a8a91/26-6a68810f90c08.webp' />&nbsp;</p><p></p><p>
அதேபோல் தென்மேற்கு பெல்கோரோட் பகுதியில் நடந்த மற்றொரு தாக்குதலில், குறைந்தது 19 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
</p><p>
இந்த தாக்குதல் குறித்து பேசிய மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின், 'திங்கட்கிழமை இரவு முதல் மாஸ்கோவின் பரந்த பகுதிக்கு மேலே 390 ட்ரோன் விமானங்கள் கண்காணிக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை இடைமறிக்கப்பட்டன' என்றார்.
</p><h2>
உயிரிழப்புகள் எதுவும் இல்லை</h2><p>ஆனால், அவற்றால் எந்த சேதமோ அல்லது காயங்களோ ஏற்பட்டதாக அவர் தெரிவிக்கவில்லை.</p><p>

இதற்கிடையில், மாஸ்கோ பிராந்திய ஆளுநர் ஆன்ட்ரி வேரோபியோவ், செக்கோவ் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடிக் கட்டிடம் ட்ரோன் விமானத் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறினார்.
</p><p>
கட்டிடத்தின் முகப்பு மற்றும் இரண்டு குடியிருப்புகள் சேதமடைந்ததாகவும், உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32949dab-bffb-449d-94c1-f5cac3011fd2/26-6a68810ec7db1.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T10:13:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் மோதிய கப் வாகனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pickup-truck-crashes-into-vehicles-parked-roadside-1785233527"></link>
            <id>https://jvpnews.com/article/pickup-truck-crashes-into-vehicles-parked-roadside-1785233527</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தலவாக்கலை – லிந்துலை பிரதான வீதியில் அமைந்துள்ள லிந்துலை நகரப் பகுதியில், வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்களில் மோதிய க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தலவாக்கலை – லிந்துலை பிரதான வீதியில் அமைந்துள்ள லிந்துலை நகரப் பகுதியில், வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்களில் மோதிய கப் வாகனம், விபத்திற்குப் பின்னர் நிற்காமல் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விபத்தில் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார், சிறிய ரக வேன் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9ec0a0b-43af-4495-83e4-22dac8b016e9/26-6a688078800e4.webp' /></p><p>
</p><p>
மஹிந்திரா Bolero ரக கப் வாகனம் குறித்த வாகனங்களில் மோதிய பின்னரும், அதன் சாரதி வாகனத்தை நிறுத்தாமல் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

விபத்தின் காரணமாக கார் உள்ளிட்ட நான்கு வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன.

விபத்தை ஏற்படுத்திய கப் வாகனம் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்செல்லும் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த CCTV கண்காணிப்பு கமெராக்களில் தெளிவாக பதிவாகியுள்ளன.</p><p>

குறித்த CCTV காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, தப்பிச்சென்ற கப் வாகனத்தையும் அதன் சாரதியையும் அடையாளம் காணும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், மேலதிக விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-28T10:10:24+00:00</updated>
        </entry>
    </feed>
