<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-18T06:25:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் சட்டவிரோத ஆன்லைன் கஞ்சா விநியோக வலையமைப்பு முடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/more-than-366k-seized-in-illegal-online-cannabis-1789712272"></link>
            <id>https://canadamirror.com/article/more-than-366k-seized-in-illegal-online-cannabis-1789712272</id>
            <summary type="text">கனடாவின் விண்ட்சர் நகரில் இயங்கி வந்த சட்டவிரோத ஆன்லைன் கஞ்சா விநியோக வலையமைப்பைக் கண்டறிந்து ஒன்டாரியோ மாகாணக் காவல் துறை முடக்கியுள்ளது. 
ஜூலை 2026...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் விண்ட்சர் நகரில் இயங்கி வந்த சட்டவிரோத ஆன்லைன் கஞ்சா விநியோக வலையமைப்பைக் கண்டறிந்து ஒன்டாரியோ மாகாணக் காவல் துறை முடக்கியுள்ளது. </p><p>
ஜூலை 2026-இல் '420 ஹைவே' என்ற பெயரில் செயல்பட்ட ஆன்லைன் கஞ்சா விநியோக கும்பல் குறித்து காவல் துறை விசாரணையைத் தொடங்கியது. </p><p>
ஒன்டாரியோ மது மற்றும் சூதாட்ட ஆணையம் அல்லது 'ஹெல்த் கனடா' அமைப்புகளின் உரிய அனுமதியின்றி, விண்ட்சர் நகரின் பல்வேறு இடங்களில் இருந்து இவர்கள் கஞ்சா பொருட்களை விநியோகித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca741649-821d-46ea-bceb-4ff33937108c/26-6aacd7925b0bb.webp' /></p><p> </p><p>
செப்டம்பர் 2 அன்று, விண்ட்சர் காவல்துறையினருடன் இணைந்து பொலிஸார் நடத்திய சோதனையில், நகரில் உள்ள இரண்டு வீடுகள் மற்றும் ஒரு சேமிப்புக் கிடங்கில் இருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.</p><p> 
366000 டொலர் பெறுமதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
உலர் கஞ்சா மற்றும் அடர் கஞ்சா பொருட்கள், ஹேஷ் மற்றும் உண்ணக்கூடிய கஞ்சா பொருட்கள், வேப், உபகரணங்கள் மற்றும் கஞ்சா பேக்கிங் சாதனங்கள், சட்டவிரோத புகையிலைப் பொருட்கள் மற்றும் 24,000 கனடிய டாலர் ரொக்கம் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
</p><p>இச்சம்பவம் தொடர்பாக சார்னியா நகரைச் சேர்ந்த 28 வயது நபர் ஒருவர் மற்றும் விண்ட்சரைச் சேர்ந்த 42, 57 மற்றும் 41 வயதுடைய மூன்று நபர்கள் என மொத்தம் நான்கு பேர் மீது போதைப்பொருள் தொடர்பான பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T06:22:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நச்சு புகை ; யாழ்ப்பாணத்தில் இரவில் ஏற்பட்ட பதற்ற நிலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/toxic-smoke-garbage-fire-in-kallundai-jaffna-1789712708"></link>
            <id>https://canadamirror.com/article/toxic-smoke-garbage-fire-in-kallundai-jaffna-1789712708</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் கல்லூண்டாய் பகுதியில் நேற்று (17) அமைந்துள்ள யாழ்ப்பாண மாநகர சபையின் குப்பைமேடு பற்றி எரிந்ததால் அங்கு வந்த மக்கள் போராட்டத்தில் ஈட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் கல்லூண்டாய் பகுதியில் நேற்று (17) அமைந்துள்ள யாழ்ப்பாண மாநகர சபையின் குப்பைமேடு பற்றி எரிந்ததால் அங்கு வந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.</p><p> 

மானிப்பாய் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கல்லுண்டாய் பகுதியில் உள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் குப்பைமேடானது நேற்று இரவு பற்றி எரிந்ததனால் யாழ்ப்பாணம் - காரைநகர் வீதி சுமார் 2 கிலோ மீட்டருக்கு மேலாக புகையால் மூடப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cdca1fd-f61a-467a-a463-264963179a5a/26-6aacd9458a012.webp' /></p><h2>மக்கள் ஆத்திரம்</h2><p> </p><p>

அத்துடன் நவாலி கல்லூண்டாய் பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள்ளும் நச்சு புகை சென்றது. இதனால் குப்பைமேடு பகுதிக்கு வந்த நவாலி பகுதி மக்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><p>

தீனை அணைக்குமாறு மக்கள் கூறியும், மாநகர சபையின் பணியாளர்கள், வாகனம் உள்ளே செல்ல முடியாத நிலையில் பாதை உள்ளதாக தெரிவித்ததனால் கோபமுற்ற மக்கள் முரண்பாட்டில் ஈடுபட்டனர்.</p><p>

அதன் பின்னர் அந்த இடத்திற்கு வந்த பொலிஸார் எரியும் இடத்தினை போய் பார்வையிட்ட பின்பு, அந்த இடத்திற்கு செல்வதற்கு வழி சீராக இருப்பதாகவும், உடனடியாக தீயினை அணைக்குமாறும் கூறினர்.</p><p> 

குறித்த குப்பை மேடானது வாரா வாரம் தொடர்ச்சியாக எரிவதாகவும், இதுவரை யாழ்ப்பாணம் மாநகர சபையோ, மானிப்பாய் பிரதேச சபையோ அதனை தடுப்பதற்கு எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். </p><p>

மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர் பகீரதன், தேசிய மக்கள் சக்தியின் மானிப்பாய் தொகுதி அமைப்பாளர் சுரேன், மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜோன் ஜிப்ரிகோ ஆகியோர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று அந்த தீயை அணைப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-09-18T06:22:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்க விலை கிடுகிடு உயர்வு – சவரனுக்கு ரூ.1,160 அதிகரிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/today-sept-18th-gold-and-silver-price-in-chennai-1789708645"></link>
            <id>https://manithan.com/article/today-sept-18th-gold-and-silver-price-in-chennai-1789708645</id>
            <summary type="text">இன்றைய செப்டம்பர் 18ஆம் தேதிக்கான தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய செப்டம்பர் 18ஆம் தேதிக்கான தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p> செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், இன்று தங்கம் விலை திடீரென உயர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1b69169-a509-459f-bdbc-7a29c1cc5815/26-6aacd25b745d0.webp' /></p><p></p><p>

நேற்று, செப்டம்பர் 17ஆம் தேதி, 22 காரட் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.14,010 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.1,12,080 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.</p><h2>இன்றைய நிலவரம்&nbsp;</h2><p>
</p><p>
இந்நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, 22 காரட் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.145 அதிகரித்து ரூ.14,155 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து ரூ.1,13,240 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. </p><p>ஒரே நாளில் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வு, தங்க நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.18 காரட் தங்கம் விலையும் உயர்வு
அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35499b2e-c723-476a-ab69-ede0557fcedb/26-6aacd25c26c78.webp' /></p><p> ஒரு கிராமுக்கு ரூ.145 உயர்ந்து ரூ.11,925 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து ரூ.95,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
</p><p>தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.255 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரம் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69bd23e1-82eb-4eb2-b824-91ab848ee0d4/26-6aacd25ccd2cd.webp' /></p><p></p><p>
</p><p>
இதனால், செப்டம்பர் மாதத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தொடர்ந்து காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், இன்று இரு உலோகங்களின் விலையும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளமை நகை வாங்குபவர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <u style=""><b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></b></u>&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T06:21:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வீடுகளுக்குள் புகுந்த நச்சுப்புகை ; நள்ளிரவில் வீதிக்கிறங்கிய மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/toxic-smoke-invades-jaffna-homes-1789712302"></link>
            <id>https://jvpnews.com/article/toxic-smoke-invades-jaffna-homes-1789712302</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் – கல்லூண்டாய் பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண மாநகர சபையின் குப்பைமேடு நேற்று (17) தீப்பற்றி எரிந்ததால், அப்பகுதியில் நச்சுப்புகை பரவியதால்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணம் – கல்லூண்டாய் பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண மாநகர சபையின் குப்பைமேடு நேற்று (17) தீப்பற்றி எரிந்ததால், அப்பகுதியில் நச்சுப்புகை பரவியதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அங்கு பதற்றமான சூழ்நிலையும் ஏற்பட்டது.</p><p style="text-align: justify; ">



மானிப்பாய் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் யாழ்ப்பாணம் மாநகர சபையினால் பராமரிக்கப்படும் குப்பைமேடே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e547c65e-66ba-4e91-9175-9cceaecba965/26-6aacd7aff0965.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;நச்சுப்புகை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இதன் காரணமாக யாழ்ப்பாணம் – காரைநகர் பிரதான வீதி சுமார் இரண்டு கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்திற்கு புகைமண்டலமாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">


அத்துடன், நவாலி மற்றும் கல்லூண்டாய் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள்ளும் நச்சுப்புகை சென்றதாகவும், இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் குப்பைமேடு பகுதிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; ">



சம்பவ இடத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் இருந்த போதிலும், தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டினர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



தீயை அணைக்குமாறு மக்கள் வலியுறுத்தியபோது, தீயணைப்பு வாகனம் உள்ளே செல்வதற்கான பாதை சீராக இல்லை என மாநகர சபை பணியாளர்கள் தெரிவித்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அவர்களுடன் முரண்பட்டதாகவும் கூறப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">


இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்து, எரியும் பகுதியை பார்வையிட்டனர். தீ ஏற்பட்டுள்ள பகுதிக்கு செல்வதற்கான பாதை சீராக இருப்பதாக தெரிவித்த பொலிஸார், உடனடியாக தீயை அணைக்குமாறு மாநகர சபை பணியாளர்களிடம் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


எனினும், பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், பொலிஸார் கடும் தொனியில் அறிவுறுத்திய பின்னரே தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; ">



இதேவேளை, குறித்த குப்பைமேடு வாராந்தம் தொடர்ச்சியாக தீப்பற்றி எரிந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். </p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">இதனைத் தடுப்பதற்கு யாழ்ப்பாண மாநகர சபையோ அல்லது மானிப்பாய் பிரதேச சபையோ இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.</p><p style="text-align: justify; ">



மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் பகீரதன், தேசிய மக்கள் சக்தியின் மானிப்பாய் தொகுதி அமைப்பாளர் சுரேன் மற்றும் மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜோன் ஜிப்ரிகோ ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; ">



தொடர்ச்சியாக குப்பைமேடு தீப்பற்றி எரிவதால் ஏற்படும் புகை மற்றும் சுகாதார பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-18T06:21:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அனுர அரசாங்கத்தின் ஈராண்டு வெற்றி கொண்டாட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/celebration-of-two-year-success-of-npp-government-1789712135"></link>
            <id>https://jvpnews.com/article/celebration-of-two-year-success-of-npp-government-1789712135</id>
            <summary type="text">&amp;nbsp; ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, அக்குரஸ்ஸவில் எதிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, அக்குரஸ்ஸவில் எதிர்வரும் 20 ஆம் திகதி பிற்பகல் 2:00 மணிக்கு மாபெரும் மக்கள் பேரணியொன்று நடைபெறவுள்ளது.
</p><p>
இந்த நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொள்ளவுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38dd86a9-c612-470a-9a5f-ad484de1e451/26-6aacd708a0a22.webp' /></p><p>
</p><p>
"எமது அரசாங்கம் – இரண்டு ஆண்டுகள். நாட்டிற்கு ஆசிர்வாதம்" என்ற கருப்பொருளின் கீழ் இந்த மக்கள் பேரணி இடம்பெறவுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T06:12:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வற்றாப்பளையில் நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த நபர்! சிசிடிவியில் பதிவான காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/public-assistance-sought-to-identify-the-thief-1789711257"></link>
            <id>https://tamilwin.com/article/public-assistance-sought-to-identify-the-thief-1789711257</id>
            <summary type="text">முல்லைத்தீவு - வற்றாப்பளை பகுதியில் வீட்டில் இருந்தவர்கள் நித்திரையில்
இருந்த வேளையில், மதிலேறி வீட்டின் வளவுக்குள் புகுந்த நபரொருவர் வீட்டின் யன்னலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - வற்றாப்பளை பகுதியில் வீட்டில் இருந்தவர்கள் நித்திரையில்
இருந்த வேளையில், மதிலேறி வீட்டின் வளவுக்குள் புகுந்த நபரொருவர் வீட்டின் யன்னலை உடைத்து உள்ளே நுழைந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுச்
சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது.
</p><p>
குறித்த சம்பவம் கடந்த 16.09.2026 அன்று நள்ளிரவு 11.50 மணியளவில்
இடம்பெற்றுள்ளது.</p><h2>சிசிடிவி காட்சி பதிவு</h2><p>
</p><p>
வீட்டில் இருந்தவர்கள் நித்திரையில் இருந்த நிலையில், மதிலேறி வீட்டின்
வளவுக்குள் நுழைந்த நபர், அதிகாலை 2.20 மணிவரை வீட்டுக்குள் நுழைவதற்கு
முயற்சி மேற்கொண்டுள்ளமை சிசிடிவி காட்சிகள் மூலம் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7752ab45-00a7-4ba7-a21d-9a94a6d2448e/26-6aacd60f419b0.webp' /></p><p>இதனையடுத்து வீட்டின் யன்னலை உடைத்து வீட்டுக்குள் நுழைந்த குறித்த நபர்,
சாமியறையில் வைக்கப்பட்டிருந்த 51,000 ரூபா பணத்தையும் இரண்டு பவுண் தங்க
நகைகளையும் கொள்ளையிட்டுள்ளார். வீட்டில் இருந்தவர்கள்
கூச்சலிட்டதையடுத்து, குறித்த நபர் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.</p><h2>விசாரணை முன்னெடுப்பு</h2><p>சம்பவம் தொடர்பில் உடனடியாக 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு தகவல்
வழங்கப்பட்டதையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.
</p><p>இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/375b2d64-3438-4df1-b33c-35ec06f251a3/26-6aacd61060893.webp' /></p><p>
</p><p>மேலும், குறித்த திருட்டில் ஈடுபட்ட நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியும்
கோரப்பட்டுள்ளது. சந்தேகநபரை அடையாளம் காணும் பட்சத்தில் அருகிலுள்ள பொலிஸ்
நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T06:11:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் பரிதாப நிலை - அதிர்ச்சியில் தமிழ் அரசியல்வாதி உட்பட ராஜபக்ச கூட்டணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-s-worst-condition-1789698608"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-s-worst-condition-1789698608</id>
            <summary type="text">இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவாக வேண்டும் என்ற கனவில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தீவிரமாக செயற்பட்டு வருகிறார். 

அதற்கு சில தமிழ் நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவாக வேண்டும் என்ற கனவில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தீவிரமாக செயற்பட்டு வருகிறார். </p><p>

அதற்கு சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பொதுஜன பெரமுன 
கட்சியினர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றனர். </p><p>

இந்நிலையில் தற்போதைய கள நிலவரம் அந்த தரப்பினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p> </p><h2><b>

பாரிய கூட்டம்</b></h2><p>கடந்த 12ஆம் திகதி அனுராதபுரத்தில் அநுர அரசாங்கத்திக்கு எதிராகவும், நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவாகவும் பாரிய கூட்டம் ஒன்று நடைபெற்றது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b576f6f-d86d-4615-93ea-4658c145e233/26-6aaca8b8617cc.webp' /></p><p>இந்த கூட்டத்தின் பின்னர் நாமல் ராஜபக்ச முற்றிலும் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். </p><p>

அவரது நிலைமை நேற்று முன்தினம் கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. </p><p>

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச, கடந்த 04 ஆம் திகதி ஊழல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு சென்றிருந்தார்.</p><p> </p><h3><b>

ஏமாற்றத்தில் நாமல்</b></h3><p>அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது திரண்டிருந்த ஆதரவாளர்களும் நேற்று முன்தினம் அங்கு இருக்கவில்லை. </p><p>

ஆதரவாளர்களுக்கு பதிலாக, முன்னாள் அமைச்சர்களான அனுர பிரியதர்சன யாப்பா, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட பிணையில் வெளிவந்துள்ள ஒரு சிலர் மட்டுமே வருகை தந்திருந்தனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8743562-403c-40f5-a2f1-896ebe2f2455/26-6aaca8b919bdb.webp' /></p><p>பாரிய மக்கள் ஆதரவு உள்ளதாக காட்டிக்கொண்ட ராஜபக்ச தரப்பினருக்கு, இந்த செயற்பாடு பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. </p><p>

அதேவேளை, நாமலை அடுத்த ஜனாதியாக மாற்றப் போவதாக சூளுரைத்துள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும் பெரும் அதிருப்தியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. </p>]]></content>
            <updated>2026-09-18T06:07:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வதாக கூறி ஷாப்பிங் செய்யும் ஷிரந்தி ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shiranthi-spotted-at-singapore-shopping-mall-1789711122"></link>
            <id>https://jvpnews.com/article/shiranthi-spotted-at-singapore-shopping-mall-1789711122</id>
            <summary type="text">மருத்துவத் தேவைக்காகச் சிங்கப்பூர் சென்றதாகக் கூறப்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச, சிங்கப்பூரில் ஷாப்பிங்கில் ஈடு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மருத்துவத் தேவைக்காகச் சிங்கப்பூர் சென்றதாகக் கூறப்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியான <a href="https://jvpnews.com/article/shiranthi-rajapaksa-singapore-hospital-appear-fcid-1789624681" target="_blank">ஷிரந்தி ராஜபக்ச</a>, சிங்கப்பூரில் ஷாப்பிங்கில் ஈடுபடுவதாகக் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் சில புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
</p><p style="text-align: justify; ">
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச, கொழும்பிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த செப்டம்பர் 16 ஆம் திகதி அதிகாலை நாட்டைவிட்டு வான் வழியாகச் சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/263a0220-562c-4c34-8a9b-2b269924e8e1/26-6aacd313eb391.webp' /></p><h2 style="text-align: justify; ">வைரலாகும் புகைப்படம்</h2><p style="text-align: justify; "> இதயம் தொடர்பான மேலதிக சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூரில் உள்ள பிரபல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.</p><p style="text-align: justify; ">

எனினும், நிதி மோசடி விசாரணைப் பிரிவில் (FCID) எதிர்வரும் செப்டம்பர் 24 ஆம் திகதி முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த பின்னணியில், அவர் அவசரமாக நாட்டைவிட்டு வெளியேறியது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இந்தச் சூழலில், அவர் மருத்துவச் சிகிச்சைக்காகச் சென்றதாகக் கூறப்பட்டாலும், சிங்கப்பூரில் ஷாப்பிங் மால் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் அவர் ஷாப்பிங்கில் ஈடுபடுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகின்றன. </p><p style="text-align: justify; ">இது பொதுமக்களிடையேயும் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-18T06:07:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[39வது பர்த்டே!! கணவருடன் ரொமான்டிக் போட்டோஷூட்டில் நடிகை ஸ்ருதிகா அர்ஜுன்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/shrutika-arjun-39-birthday-photoshoot-with-husband-1789711590"></link>
            <id>https://viduppu.com/article/shrutika-arjun-39-birthday-photoshoot-with-husband-1789711590</id>
            <summary type="text">ஸ்ருதிகா அர்ஜுன்நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2002ல் வெளியான ஸ்ரீ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்ருதிகா அர்ஜுன். 14 வயதில் நடிக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஸ்ருதிகா அர்ஜுன்</h2><p>நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2002ல் வெளியான ஸ்ரீ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்ருதிகா அர்ஜுன். 14 வயதில் நடிக்க ஆரம்பித்த ஸ்ருதிகாவுக்கு ஸ்ரீ படம் பெரியளவில் ஹைப் கொடுக்கவில்லை. </p><p>அதன்பின் ஆல்பம் படத்திலும் தித்திக்குதே படத்திலும் நடித்த ஸ்ருதிகா சினிமாவில் இருந்து விலகினார்.
தொழிலதிபரை திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தையை பெற்ற ஸ்ருதிகா, குக் வித் கோமாளி 3 சீசனில் பங்கேற்று டைட்டிலை கைப்பற்றினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7bbe291-9635-43f7-97f1-0409db5ee759/26-6aacd4ee5320a.webp' /></p><p>பின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்த ஸ்ருதிகா, பிக்பாஸ் இந்தி 18வது சீசனில் கலந்து கொண்டு கிட்டத்தட்ட 96 நாட்கள் வீட்டில் இருந்து எவிக்ட்டாகி வெளியேறினார். </p><p>நேற்றுடன் தன்னுடைய 39வது பிறந்தநாளை ஆரம்பித்துள்ள ஸ்ருதிகா, தன் கணவர் அர்ஜுனுடன் ரொமான்டிக் போட்டோஷூட் எடுத்த இணையத்தில் பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-18T06:06:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளையில் வீட்டின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்; ஒப்பந்த கொலை பகீர் தகவல்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-lot-of-information-murder-children-in-dehiwala-1789710130"></link>
            <id>https://jvpnews.com/article/a-lot-of-information-murder-children-in-dehiwala-1789710130</id>
            <summary type="text">&amp;nbsp;கொழும்பு தெஹிவலா, சிறிசங்க போ மாவத்தாவில் 11ஆம் தேதி அதிகாலை ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட கையெறி குண்டுத் தாக்குதல் தொடர்பாக பல விவரங்கள் வெளிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கொழும்பு தெஹிவலா, சிறிசங்க போ மாவத்தாவில் 11ஆம் தேதி அதிகாலை ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட கையெறி குண்டுத் தாக்குதல் தொடர்பாக பல விவரங்கள் வெளியாகியுள்ளன. </p><p>

இந்தத் தாக்குதலில் இரண்டு சிறார்கள் கொல்லப்பட்டனர் மற்றும் அவர்களது தந்தை படுகாயம் அடைந்தார். துபாயில் பதுங்கியிருக்கும் "கோஸ் மல்லி" என்ற பாதாள உலகக் கும்பல் தலைவனால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b9a342c-b3a5-4766-9278-7001eddf86db/26-6aaccf34677cd.webp' /></p><h2>தாக்குதலுக்காக ரூ. 1,20,000 வழங்கப்பட்டது&nbsp;</h2><p> 

மேலும், ஒரு மூத்த காவல்துறை அதிகாரி தயாரித்த அறிக்கைகளின்படி, தாக்குதல் நடத்திய "மது" என்ற "கோஸ் மாமா" என்பவருக்கு இந்தத் தாக்குதலுக்காக ரூ. 1,20,000 வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது.</p><p>

மேற்கு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், விசாரணையின் போது, ​​தாக்குதலுக்காகப் பெற்ற பணத்தை ஐஸ் போதைப்பொருள் உட்கொள்வதற்கும் மற்றும் பிற செயல்களுக்கும் செலவழித்ததாகக் கூறினார்.</p><p></p><p>

 "கோஸ் மல்லி" என்ற பாதாள உலகத் தலைவனின் உறவினர்களான அவரது பெற்றோரும், அவரது குடும்பத்தினரும் பலாப்பழம் வெட்டி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்ததால், அவருக்கு இந்தப் புனைப்பெயர் கிடைத்தது. </p><p>மேலும் அவருக்கு ரூ. கடந்த ஆண்டு மே 19 அன்று நெடிமலை பகுதியில் நடந்த கொலை தொடர்பாக, "அவிஷ்கா" என்றழைக்கப்படும் பாதாள உலக உறுப்பினர் மூலம் 500,000 கைமாற்றப்பட்டது, மேலும் அந்தப் பணத்தின் பெரும்பகுதி ஐஸ் போதைப்பொருளுக்காக செலவிடப்பட்டது.</p><p></p><p> </p><p>அந்தக் கொலை தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், கடந்த மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
</p><p>
மொனராகலையின் பிபில பகுதியிலிருந்து வியாபாரத்திற்காக பலாப்பழம் கொண்டு வந்த ஒருவரின் வீட்டில் பதுங்கியிருந்தபோது, ​​கொழும்பு தெற்கு குற்றப்பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் குமார (84762) பெற்ற தகவலின் அடிப்படையில் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். </p><p>பொலிஸ் விசாரணையின் போது, ​​அடுத்த வீட்டில் வசிக்கும் ஹெட்டி அரச்சிங்கே நலின் குசந்தா என்ற முச்சக்கர வண்டி ஓட்டுநரின் வீட்டை தவறுதலாகக் குறிவைத்து கையெறி குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்தது.</p><p></p><p>
</p><p>
கொல்லத் திட்டமிட்ட நபரின் வீட்டிற்குப் பதிலாக, அடுத்த வீட்டில் உள்ள தனது சகோதரனின் வீட்டை தவறுதலாகச் சுட்டிக்காட்டிய தெஹிவளையைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவரும் கொழும்பு தெற்கு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>கேள்விக்குட்பட்ட வீட்டைச் சுட்டிக்காட்டியதற்காக அவருக்கு ரூ. 20,000 வழங்கப்பட்டுள்ளது.</p><p> மேலும், அவ்விருவரையும் சங்கபோதி மாவத்தாவிற்கு ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியின் ஓட்டுநரும், ரூ. 6,000 லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் தெஹிவலா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டபோது, ​​சந்தேக நபர்களிடமிருந்து 'ஐஸ்' என்ற போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டிருந்தது.</p>]]></content>
            <updated>2026-09-18T06:04:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரந்தி தொடர்பில் தகவல் வழங்க மறுத்த மகிந்தவின் ஊடகப் பிரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cannot-reveal-about-shiranthi-s-place-1789700661"></link>
            <id>https://tamilwin.com/article/cannot-reveal-about-shiranthi-s-place-1789700661</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தற்போது எங்கு இருக்கிறார் என கூற முடியதென மகிந்தவின் ஊடகப் பேச்சாளரான மனோஜ் கமகே தெரிவித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தற்போது எங்கு இருக்கிறார் என கூற முடியதென மகிந்தவின் ஊடகப் பேச்சாளரான மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.</p><p>

 ஷிரந்தி தொடர்பான தகவலை வெளியிட அவரது குடும்பத்தினர் தயாராக இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

எனினும் மகிந்த ராஜபக்சவை கவனித்துக் கொள்ளும் நோக்கில் விரைவில் அவர் நாடு திரும்புவார் என குறிப்பிட்டுள்ளார்.</p><h2><b>

அழைப்பாணை </b></h2><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச எதிர்வரும் 24 ஆம் திகதி பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d38074d-e816-4939-a9dd-b6b03b9fa763/26-6aacd38d504f2.webp' /></p><p>அவர் நேற்று முன்தினம் அதிகாலை சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றார். </p><p>நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த ஷிரந்தி மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றதாக மனோஜ் கமகே தெரிவித்தார். </p><p>நேற்று முன்தினம் அவர் நாட்டை விட்டு வெளியேறும்போது விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் அழைப்பாணையை அவர் பெற்றுக்கொண்டதாகவும் கமகே குறிப்பிட்டார்.
</p><p>
இதேவேளை சிங்கப்பூரில் நேற்றையதினம் ஆடம்பர ஆடைகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் சுற்றித்திரிந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 
</p>]]></content>
            <updated>2026-09-18T06:01:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திலித் ஜயவீரவின் ரிட் மனு தீர்ப்புக்கு திகதி நிர்ணயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/date-set-verdict-on-dilith-jayaweera-writ-petition-1789711356"></link>
            <id>https://jvpnews.com/article/date-set-verdict-on-dilith-jayaweera-writ-petition-1789711356</id>
            <summary type="text">&amp;nbsp; நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவினால் தாக்கப்பட்டுள்ள ரிட் மனு தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் 30 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக மேன்முறையீட்டு நீத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவினால் தாக்கப்பட்டுள்ள ரிட் மனு தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் 30 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (18) அறிவித்துள்ளது. </p><p>

அதற்கமைய, இம்மனு தொடர்பான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்வரும் 30 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec7ab023-f402-4206-875e-0e992c811306/26-6aacd3fe333f8.webp' /></p><p>
</p><p>


குறித்த ரிட் மனுவானது இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோஹான்த அபேசூரிய தலைமையிலான மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> 

நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டி கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை வலுவிழக்கச் செய்யும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர இந்த ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T05:59:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வாகனங்களின் விலைகளில் வீழ்ச்சி : வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vehicle-prices-drop-significantly-in-sri-lanka-1789708882"></link>
            <id>https://ibctamil.com/article/vehicle-prices-drop-significantly-in-sri-lanka-1789708882</id>
            <summary type="text">இலங்கையின் உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>

கொழும்பில் நேற்று முன்தினம் (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அந்தச் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரிஞ்சிகே இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p>இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;குறிப்பாக சிறிய ரக வாகனங்களின் விலைகள் குறைந்தது 10 இலட்சம் ரூபாயாவது குறைந்துள்ளன.</p><p></p><h2>குறைந்துள்ள விலை&nbsp;</h2><p> டொயோட்டா யாரிஸ், டொயோட்டா ரைஸ், ஹோண்டா வெசல், சுஸுகி வேகன் ஆர், டைகாட்சு மீரா மற்றும் சுஸுகி வேன்கள் போன்ற நாட்டில் பிரபலமான வகைகளின் விலைகள் 4 இலட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை குறைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a206f4e4-d648-477d-86a2-c3f12a144b42/26-6aacd332e1db7.webp' />&nbsp;</p><p>வாகனம் வாங்க விரும்பும் நுகர்வோர் அவற்றை முன்பதிவு செய்வதற்கு இது மிகவும் ஏற்ற தருணம். சந்தையில் உள்ள பல விற்பனையாளர்கள் ஏற்கனவே நட்டத்தில் வாகனங்களை விற்பனை செய்து வருவதால், எதிர்காலத்தில் விலைகள் மேலும் குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>எனினும், தற்போதைய சந்தை நிலவரங்களால் விலை குறைவு போக்கு தொடரக்கூடும் என்றாலும், சந்தை ஒரு நிலையான நிலையை அடைந்ததும் வாகனங்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.</p><p></p><h2>வாகன இறக்குமதி கட்டுப்பாடு</h2><p>ஐந்து ஆண்டுகால வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளால் ஏற்பட்ட வாகனப் பற்றாக்குறை பெருமளவு தணிந்திருந்தாலும், சந்தையில் எஞ்சியிருக்கும் இடைவெளியை நிரப்ப இன்னும் அதிகமான வாகனங்கள் தேவை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de629e75-6e01-49a9-b507-950fe5eb4e75/26-6aacd3323943f.webp' /></p><p> இருப்பினும், உண்மையான சந்தை தேவையை விட அதிகமாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதே தற்போதைய விலை சரிவுக்கு நேரடியாகக் காரணமாக அமைந்துள்ளது. </p><p>உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலை குறைவுக்கு அரசாங்கம் விதித்த கூடுதல் கட்டணமும் (surcharge) ஒரு குறிப்பிட்ட அளவிற்குப் பங்களித்துள்ளது”&nbsp; என அவர் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T05:57:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் மிக வயதான பெண்மணி மேரி ரோசாவுக்கு 111-வது பிறந்தநாள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/oldest-living-person-celebrates-her-111th-birthday-1789710737"></link>
            <id>https://canadamirror.com/article/oldest-living-person-celebrates-her-111th-birthday-1789710737</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் தற்போதைய மிக வயதான வாழும் நபரான மேரி ரோசா, வியாழக்கிழமை செப்டம்பர் 17, 2026) தனது 111-வது பிறந்தநாளைக் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் தற்போதைய மிக வயதான வாழும் நபரான மேரி ரோசா, வியாழக்கிழமை செப்டம்பர் 17, 2026) தனது 111-வது பிறந்தநாளைக் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் விமரிசையாகக் கொண்டாடினார்.</p><p> 
ஒன்டாரியோவின் எட்டோபிகோக் பகுதியில் உள்ள 'தி வில்லேஜ் ஆஃப் ஹம்பர் ஹைட்ஸ்' முதியோர் இல்லத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. 
செப்டம்பர் 17, 1915 அன்று பிறந்த மேரி ரோசா, கனடாவில் பெண்களுக்கு வாக்குரிமை இல்லாத காலத்தில் பிறந்தவர். </p><p>முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களைக் கடந்து வாழ்ந்த இவர், இரண்டாம் உலகப்போரின் போது தையல் கலை நிபுணராகவும் பணி மேலாளராகவும் பணியாற்றியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4da10dfa-587a-4cdc-b0f4-500c67778fb8/26-6aacd192b7968.webp' /></p><p> 
எல்லோரையும் நேசியுங்கள், மகிழ்ச்சியாக வாழுங்கள் என்பதே ரோசாவின் முதன்மை அறிவுரை. மேலும், அவர் காய்கறிகளை விரும்பி உண்பதும் அவரது ஆரோக்கியத்திற்கு ஒரு காரணம் என அவரது மகள் கேத்தரின் சினிலாஸோ தெரிவித்துள்ளார்.</p><p> 
ரோசாவின் தந்தை 105 வயது வரையிலும், சகோதரி 103 வயது வரையிலும் வாழ்ந்துள்ளனர்.
பெரிய அளவிலான திட்டமிடல்கள் ஏதுமின்றி, எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில் ரோசாவிற்குப் பிடித்த எலுமிச்சை கேக் வெட்டப்பட்டது.</p><p> வரும் வார இறுதியில் அவரது பேரக் குழந்தைகள் மற்றும் கொள்ளுப் பேரக் குழந்தைகளுடன் மீண்டும் ஒரு குடும்ப விழா திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>
முதியோர் இல்லத்தின் ஒருங்கிணைப்பாளர் நாதன் காஸ்டனெடா, ரோசாவை "உற்சாகத்தின் உறைவிடம்" எனக் குறிப்பிட்டு, அவர் 120 வயது வரை வாழ வேண்டும் எனத் தனது விருப்பத் வாழ்த்தைத் தெரிவித்தார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T05:53:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடுமையான புகலிடக் கட்டுப்பாடுகள்: சுவிஸ் நாடாளுமன்றம் ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-house-support-tighter-measures-on-asylum-1789710427"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-house-support-tighter-measures-on-asylum-1789710427</id>
            <summary type="text">The Swiss House of Representatives has voted in favour of tighter measures on asylum: சுவிஸ் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கடுமையான புகலிடக் கட்டுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>The Swiss House of Representatives has voted in favour of tighter measures on asylum: சுவிஸ் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கடுமையான புகலிடக் கட்டுப்பாடுகளுக்கு ஆதரவாக சுவிஸ் நாடாளுமன்றத்தின் கீழவை உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.
</p><p>

நேற்று வியாழக்கிழமையன்று, சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்தின் கீழவையில், புகலிடக்கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் வகையிலான தீர்மானம் ஒன்று முன்வைக்கப்பட்டது.</p><h3>

கடுமையான புகலிடக் கட்டுப்பாடுகள்
</h3><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1f7a500-0a94-4285-8199-30606ad4bbfc/26-6aacd05d44926.webp' /></p><p>சுவிஸ் மக்கள் கட்சி முன்வைத்த அந்த தீர்மானம், எல்லை கடந்து பயணிக்கும் பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்குதல் தொடர்பான விதிகளை மாற்றுதல், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் பயங்கர குற்றங்களில் ஈடுபடும் நிலையில், அவர்களுடைய குடியுரிமையை ரத்து செய்து அவர்களை நாடுகடத்துதல் முதலான நடவடிக்கைகளை எடுக்க அரசைக் கோருகிறது.&nbsp;</p><p></p><p>
மேலும், ஆப்கன் நாட்டுப் பெண்கள் புகலிடம் கோரும் விடயத்தில், தாமாகவே அவர்கள் புகலிடம் பெற தகுதிபெறும் நிலையை மாற்றி, தற்காலிக அனுமதி நிலை மட்டுமே வழங்குதல், புகலிடம் தொடர்பான விடயங்களில் ஒத்துழைக்காத நாடுகளுக்கு தடைகள் விதித்தல் ஆகிய விடயங்களும் அந்த தீர்மானத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p>
மொத்தத்தில், புகலிடம் தொடர்பான விதிகளை கடுமையாக்க அந்த தீர்மானம் கோரிய நிலையில், சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்தின் கீழவையில் பெரும்பான்மை ஆதரவுடன் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T05:49:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஜித்தின் Dare Devil படத்தில் இருந்த வெளியேறிய மோகன்லால்... அவருக்கு பதில் இந்த கன்னட நடிகரா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/is-kannada-actor-joins-ajith-dare-devil-movie-1789709414"></link>
            <id>https://cineulagam.com/article/is-kannada-actor-joins-ajith-dare-devil-movie-1789709414</id>
            <summary type="text">அஜித்கடந்த வருடம் நடிகர் அஜித் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி இருந்தது. விடாமுயற்சி கொஞ்சம் சொதப்ப குட் பேட் அக்லி ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அஜித்</h2><p>கடந்த வருடம் நடிகர் அஜித் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி இருந்தது. </p><p>விடாமுயற்சி கொஞ்சம் சொதப்ப குட் பேட் அக்லி படு மாஸ் வெற்றியை அடைந்தது. இப்படத்தை தொடர்ந்து படங்கள் நடிப்பதை கொஞ்சம் நிறுத்தி தனது கனவை நோக்கி பயணித்து வந்தார் அஜித். சமீபத்தில் அஜித்குமார் பங்கேற்ற சில்வர்ஸ்டோன் சர்கியூட் கார் பந்தயத்தை விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். </p><p>அந்த நிகழ்ச்சியில் இருவரும் கட்டித் தழுவிக் கொள்ள ரசிகர்கள் அந்த புகைப்படங்களை கொண்டாடினார்கள்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cc79724-f18e-4054-a579-b536f2e05fb2/26-6aaccff442972.webp' /></p><h2>டேர் டெவில்
</h2><p>
கார் ரேஸில் தனது முழு கவனத்தை போட்டுள்ள அஜித் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். </p><p>குட் பேட் அக்லி பட புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் டேர் டெவில் என்ற படத்தில் நடிக்க அப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிக்க உள்ளார். வரும் நவம்பர் 2ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என அறிவித்துள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de23a6e6-fd30-4977-b0b3-96071941867e/26-6aaccff52fdcf.webp' /></p><p> </p><p>இந்த படத்தில் முக்கிய ரோல்களில் மலையாள சினிமா நடிகர் மோகன்லால் மற்றும் லேட்டஸ்ட் சென்சேஷன் நடிகை ஸ்ரீலீலா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இருவருமே தேதி பிரச்சனை காரணமாக வெளியேறியுள்ளார்களாம். </p><p>மோகன்லால் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க கன்னட சினிமா நடிகர் சுதீப்பிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3bae5a3-c540-4a0d-872a-d05e9ccda80e/26-6aaccff5f3c38.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T05:46:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் நள்ளிரவில் வீடு புகுந்து பணம் உள்ளிட்ட தங்க நகைகள் திருட்டு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gold-jewelry-stolen-from-a-house-in-vattappalai-1789707173"></link>
            <id>https://ibctamil.com/article/gold-jewelry-stolen-from-a-house-in-vattappalai-1789707173</id>
            <summary type="text">முல்லைத்தீவு - வற்றாப்பளைப் பகுதியில் நள்ளிரவில் வீடொன்றின் யன்னலை உடைத்து உள்நுழைந்த நபர் ஒருவர், ரொக்கப் பணம் மற்றும் தங்க நகைகளைக் திருடிச்சென்றுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - வற்றாப்பளைப் பகுதியில் நள்ளிரவில் வீடொன்றின் யன்னலை உடைத்து உள்நுழைந்த நபர் ஒருவர், ரொக்கப் பணம் மற்றும் தங்க நகைகளைக் திருடிச்சென்றுள்ளார்.&nbsp;</p><p>

கடந்த (16.09.2026) ஆம் திகதி நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 

வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில், வீட்டின் மதிலேறி உள்நுழைந்த நபர், அதிகாலை 2.20 மணி வரை வீட்டினுள் நுழையப் பலமுறை முயற்சித்துள்ளமைக்கான சான்றுகள் வீட்டிலுள்ள பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியுள்ளன.</p><p></p><h2>மேலதிக நடவடிக்கை</h2><p> </p><p>பின்னர் வீட்டின் யன்னலை உடைத்து உள்ளே நுழைந்த நபர், சாமியறையில் வைக்கப்பட்டிருந்த 51,000 ரூபாய் பணத்தையும் இரண்டு பவுண் தங்க நகைகளையும் திருடியுள்ளார்.
</p><p>
இதன்போது வீட்டினுள் நபர் ஒருவரின் நடமாட்டத்தை உணர்ந்த வீட்டார்கள் கூச்சலிடவே, திருடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c68b95e7-8cf7-4013-83dc-f251c52568f0/26-6aaccfe587d19.webp' /></p><p>


சம்பவம் குறித்து 119 என்ற காவல்துறை அவசர இலக்கத்திற்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர். </p><p>

சந்தேகநபரை 3 நாட்களுக்குள் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்ததாக உறவினர்கள் கூறினர்.
</p><p>
இத்திருட்டுச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். </p><p>

அத்துடன், சிசிரிவி காட்சிகளில் பதிவாகியுள்ள நபரை அடையாளம் காணப் பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளதுடன், தகவல் தெரிந்தால் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு உடனடியாக அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p>`</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T05:45:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குற்றவாளிகளை பிடிக்க அதிரடியாக தயாராகும் பாதுகாப்பு அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-martial-arts-training-for-sri-lankan-police-1789709723"></link>
            <id>https://tamilwin.com/article/new-martial-arts-training-for-sri-lankan-police-1789709723</id>
            <summary type="text">இலங்கைப் பொலிஸாருக்கு சந்தேக நபர்களைக் கைது செய்யும்போதும், வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்தவும் புதியதொரு தற்காப்பு சண்டைப் பயிற்சி கற்பிக்கப்படுகின்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைப் பொலிஸாருக்கு சந்தேக நபர்களைக் கைது செய்யும்போதும், வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்தவும் புதியதொரு தற்காப்பு சண்டைப் பயிற்சி கற்பிக்கப்படுகின்றது.</p><p>

இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்களின் தற்காப்புத் திறனை மேம்படுத்தவும், தேவையற்ற உடல்ரீதியான பாதிப்பை ஏற்படுத்தாமல் வன்முறையாளர்களை சட்டப்பூர்வமாகக் கைது செய்யும் திறனை அதிகரிக்கவும், கிராவ் மகா (Krav Maga) தற்காப்பு சண்டை முறை பொலிஸ் பயிற்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><h2>தீவிர பயிற்சி..&nbsp;</h2><p>

எதிர்வரும் நாட்களில் குறித்த கிராவ் மகா (Krav Maga) பயிற்சியானது சகல பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7bc4f4a-2f15-469b-a0dc-91a2599e7bb1/26-6aacce6daad67.webp' /></p><p>
</p><p>
பொலிஸ் கல்லூரியின் பயிலுனர் பயிற்றுவிப்பாளர்களுக்காக முதன்முறையாக நடத்தப்பட்ட இந்த நான்கு நாள் பயிற்சித் திட்டம், 2026 செப்டெம்பர் 10 முதல் 15 வரை களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்றது.</p><p>

33 பயிலுனர் பயிற்றுவிப்பாளர்கள் உட்பட அதிகாரிகள் இந்தப் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர். மேலும், இறுதி நாளில் கிராவ் மகா (Krav Maga) தற்காப்புக் கலையின் கூறுகளைக் கொண்ட ஒரு சிறப்பு செயல்விளக்கமும் அளிக்கப்பட்டது.
</p><p>
இந்தப் பயிற்சியின் மூலம், பொலிஸ் கல்லூரியின் பயிற்சி பெறும் அதிகாரிகளுக்கும், எதிர்காலத்தில் பல்வேறு மேம்பட்ட பயிற்சிப் படிப்புகளை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கும் கிராவ் மகா (Krav Maga) பயிற்சியை வழங்க இயலும்.
</p><p>
அதன் ஊடாக பொலிஸாரின் தற்காப்புத்திறன், உடல் வலிமை மேம்படுவதுடன் சட்டரீதியான கைது நடவடிக்கைகளும் இலகுவமாக மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T05:44:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அபிஷேக் சர்மாவின் சாதனை சதம் - ஆப்கானிஸ்தானுக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றிய இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/abhishek-sharma-record-ton-india-won-series-vs-afg-1789710044"></link>
            <id>https://news.lankasri.com/article/abhishek-sharma-record-ton-india-won-series-vs-afg-1789710044</id>
            <summary type="text">abhishek sharma record ton lead india won t20 series vs afg: அபிஷேக் சர்மாவின் சாதனை சதத்தால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது T20 போட்டியில் வெற்றி பெற...</summary>
            <content type="html"><![CDATA[<p>abhishek sharma record ton lead india won t20 series vs afg: அபிஷேக் சர்மாவின் சாதனை சதத்தால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது T20 போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.</p><h3> 

தொடரை கைப்பற்றிய இந்தியா </h3><p>

ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையேயான 3வது T20 போட்டி நேற்று டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் நடைபெற்றது.</p><p> 

நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/168274b4-477c-4ff7-80e8-4205a0948349/26-6aaccee043fec.webp' /></p><p> 

முதலில் துடுப்பாட்டம் ஆடிய இந்திய அணி, அபிஷேக் சர்மாவின் அதிரடி சதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 221 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d09a736e-497e-46a0-adf7-3aebc3676e8f/26-6aaccede2e342.webp' /></p><p>
 222 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான், 14.1 ஓவர்களில் 94 ஓட்டங்கள் மட்டுமே குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது.&nbsp;</p><p></p><p>இதன் மூலம், 127 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா, 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e04bbafe-88bb-42e4-a756-bb90ccc82b78/26-6aacceded9064.webp' /></p><p> 

34 பந்துகளில், 9 பவுண்டரி, 11 சிக்ஸர்கள் உட்பட 108 ஓட்டங்கள் குவித்த அபிஷேக் சர்மா, ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.</p><h3> 

சாதனைகள் </h3><p>

இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த இந்தியர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்துள்ளார். முன்னதாக, 2017 ஆம் ஆண்டில் ரோகித் சர்மா 35 பந்துகளில் சதமடித்திருந்தார்.&nbsp;</p><p>

மேலும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் விளாசியவர்கள் பட்டியலில் 30 பந்துகளில் சதம் விளாசிய அபிஷேக் சர்மா 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/194d8fed-ec31-45a6-8fa2-7d73b0ba9954/26-6aaccedf8d1d5.webp' /></p><p> 

எஸ்டோனியா வீரர் சாஹில் சவுகான் சைப்ரஸ் அணிக்கு எதிராக வெறும் 27 பந்துகளில் சதம் அடித்து முதலிடத்தில் உள்ளார். </p><p> 

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளில், டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த வீரராக அபிஷேக் சர்மா சாதனை படைத்துள்ளார். முன்னதாக சிக்கந்தர் ராசா மற்றும் பின் ஆலன் 33 பந்துகளில் சதம் அடித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p> 

மேலும், டி20 கிரிக்கெட்டில், 10 சதங்களை அடித்து அதிக சதங்களை அடித்த இந்தியராக விராட் கோலி இருந்தார். தற்போது அபிஷேக் சர்மா இந்த சாதனையை சமன் செய்துள்ளார். </p><p>

இதே போல், சர்வதேச டி20 கிரிக்கெட்டில், இந்திய அணி, முதல் முறையாக பவர் பிளேவில் 100 ஓட்டங்களை அடித்துள்ளது.</p><p>

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்கள் வித்தியாசத்தில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்த அணிகளின் பட்டியலில், கனடாவின் சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது. 

இரு அணிகளும் தலா 10 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளன.</p><p>இந்திய அணி 221 ரன்களை அடித்ததன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில், அதிக 200+ ஓட்டங்களை அடித்த அணிகளின் பட்டியலில் இந்திய அணி இதுவரை 53 முறை 200+ ஓட்டங்களை அடித்து முதலிடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா 31 முறை 200+ ஓட்டங்களை கடந்து இரண்டாவது இடத்தில் உள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T05:40:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க ராணுவத்தின் எஃப்-16 ரக போர் விமானத்திற்கு நேர்ந்த கதி ; பயிற்சியின் போது விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/what-happened-to-us-military-s-f-16-fighter-jet-1789702501"></link>
            <id>https://canadamirror.com/article/what-happened-to-us-military-s-f-16-fighter-jet-1789702501</id>
            <summary type="text">டெக்சாஸை தளமாக கொண்ட அமெரிக்க ராணுவத்தின் எஃப்-16 ரக போர் விமானம் ஒன்று, மிச்சிகனில் நடந்த பயிற்சி நடவடிக்கையின் போது விபத்துக்குள்ளானது. விபத்தைத் தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>டெக்சாஸை தளமாக கொண்ட அமெரிக்க ராணுவத்தின் எஃப்-16 ரக போர் விமானம் ஒன்று, மிச்சிகனில் நடந்த பயிற்சி நடவடிக்கையின் போது விபத்துக்குள்ளானது. </p><p>விபத்தைத் தொடர்ந்து போர் விமானத்தில் இருந்த விமானி வெளியேற முடிந்ததாக, அந்த விமானத்திற்கு சொந்தமான பிரிவு தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92766bc1-b9c0-4100-98b2-b6fde6121ee7/26-6aacb1672d139.webp' /></p><p>

"149-ஆவது ஃபைட்டர் விங்கிற்கு ஒதுக்கப்பட்ட டெக்சாஸ் ஏர் நேஷனல் கார்டின் எஃப்-16 ஃபைட்டிங் ஃபால்கன் விமானம், டிராவர்ஸ் சிட்டி அருகே வழக்கமான பயிற்சி பணியின் போது விபத்துக்குள்ளானது," என்று அந்தப் பிரிவு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p>
"விமானி விமானத்திலிருந்து வெற்றிகரமாக வெளியேறினார். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது," என்று அது மேலும் விவரங்கள் அளிக்காமல் தெரிவித்தது.
</p><p>
மேலும், அந்த வடக்கு மாகாணத்தின் இரண்டு அமெரிக்க செனட்டர்களில் ஒருவரான கேரி பீட்டர்ஸ், பேசும் போது, "டிராவர்ஸ் சிட்டிக்கு அருகே நடந்த விமான விபத்து குறித்து நான் அறிந்திருக்கிறேன். </p><p>இந்தச் சம்பவம் குறித்த கூடுதல் தகவல்களைப் பெற நாங்கள் பணியாற்றி வருவதால், நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்" என்றும் கூறினார்.</p>]]></content>
            <updated>2026-09-18T05:40:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் இந்தப் பகுதியில் நிலநடுக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/earthquake-shakes-residents-in-kootenays-1789709888"></link>
            <id>https://canadamirror.com/article/earthquake-shakes-residents-in-kootenays-1789709888</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள குட்டனேஸ் பிராந்தியத்தில் வியாழக்கிழமை அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
வியாழக்கிழமை அதிகாலை 5:31 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள குட்டனேஸ் பிராந்தியத்தில் வியாழக்கிழமை அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.</p><p>
வியாழக்கிழமை அதிகாலை 5:31 மணிக்கு, நெல்சன் நகரத்திற்கு வடகிழக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராஃபோர்ட் பே சமூகம் அருகே, பூமிக்கு அடியில் 4 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.</p><p>
இந்நிலநடுக்கத்தின் அளவை 'எர்த்குவிக்ஸ் கனடா' அமைப்பு முதலில் ரிக்டர் அளவில் 4.4 ஆகப் பதிவு செய்து, பின்னர் 3.7 ஆகக் குறைத்து திருத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06f6af9f-bf5a-4054-8fa4-4856ef2c0391/26-6aacce4207b06.webp' /></p><p> </p><p>எனினும், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இதனை 4.2 ரிக்டர் அளவாகப் பதிவு செய்துள்ளது.
இந்த அதிர்வுகள் கிரான்புரூக், நெல்சன், காஸ்டில்கர், டிரெயில், கிரெஸ்டன் மற்றும் ஸ்லோகன் வேலி உள்ளிட்ட பல பகுதிகளிலும் உணரப்பட்டதாகப் பொதுமக்கள் தெரிவித்தனர்.
</p><p>இந்த நிலநடுக்கத்தால் கட்டிடப் பாதிப்புகளோ அல்லது பிற சேதங்களோ ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை என்று பிரிட்டிஷ் கொலம்பியாவின் அவசரகால மேலாண்மை அலுவலகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T05:39:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நைஜீரியாவில் மெத்தனால் கலந்த மதுபானத்தை குடித்த 48 போ் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/48-die-from-methanol-laced-alcohol-in-nigeria-1789709761"></link>
            <id>https://canadamirror.com/article/48-die-from-methanol-laced-alcohol-in-nigeria-1789709761</id>
            <summary type="text">தெற்கு நைஜீரியாவில் மெத்தனால் கலந்திருப்பதாக சந்தேகிக்கப்படும் மதுபானதத்தைக் குடித்து 48 போ் உயிரிழந்தனா். மேலும், சுமாா் 100 போ் மருத்துவமனைகளில் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு நைஜீரியாவில் மெத்தனால் கலந்திருப்பதாக சந்தேகிக்கப்படும் மதுபானதத்தைக் குடித்து 48 போ் உயிரிழந்தனா். </p><p>மேலும், சுமாா் 100 போ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c3e1979-cff3-4cc9-a6cd-33f28ef0dc52/26-6aaccdc310ff1.webp' /></p><p>
</p><p>
ஓண்டோ மாகாணத்தில் உள்ள ஒடிக்போ, இரேலே ஆகிய உள்ளாட்சிப் பகுதிகளில் பதிவான இச்சம்பவங்களில் மொத்தம் 182 போ் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p>இது தொடா்பாக இதுவரை 15 போ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-18T05:36:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலாவதியான உணவுப் பொருட்கள் மீட்பு: உரிமையாளருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/seizure-of-expired-food-items-legal-action-1789708662"></link>
            <id>https://tamilwin.com/article/seizure-of-expired-food-items-legal-action-1789708662</id>
            <summary type="text">கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவுக்குட்பட்ட
உணவக /வர்த்தக நிலையமொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான
பெருந்தொகையான...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவுக்குட்பட்ட
உணவக /வர்த்தக நிலையமொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான
பெருந்தொகையான உணவுப் பொருட்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்களால்
கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>

குறித்த வர்த்தக நிலையத்தில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற மற்றும்
காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகப் பொதுமக்களிடமிருந்து
நேற்று முன்தினம் (16.09.2026) முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது.</p><h2>திடீர் சோதனை</h2><p>

இம்முறைப்பாட்டையடுத்து, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சகீலா இஸ்ஸடீனின் அவசர உத்தரவிற்கமைய,
பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லபீர் தலைமையிலான
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உடனடியாக செயற்பட்டு குறித்த கடையில் திடீர் சோதனையை மேற்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d5c1756-bf00-4180-91f9-fb148578f5bb/26-6aaccc0b5a03b.webp' /></p><p>

இதன்போது, பொதுமக்களின் சுகாதாரத்திற்குத் தீவிர அச்சுறுத்தலை
ஏற்படுத்தக்கூடிய வகையில் காலாவதி திகதி முடிவடைந்த பல்வேறு உணவுப் பொருட்கள்
விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு அதிகாரிகளால் பறிமுதல்
செய்யப்பட்டன.</p><p>

உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிகளை மீறிச் செயற்பட்டமைக்காகச் சம்பந்தப்பட்ட
வர்த்தக நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை
எடுப்பதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் திணைக்கள
அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T05:29:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[அழகா, சிவப்பா இருக்க நீ செட்டாக மாட்டன்னு சொன்னாங்க!! நடிகை ஷாஷா சிவகுமார்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/refused-to-give-chance-because-i-was-beautiful-1789709293"></link>
            <id>https://viduppu.com/article/refused-to-give-chance-because-i-was-beautiful-1789709293</id>
            <summary type="text">ஷாஷா சிவகுமார்ரத்னம், லவ் ஓ லவ் போன்ற படங்களில் சிறுசிறு ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஷாஷா சிவகுமார். தற்போது என்ன விலை என்ற படத்தில் கருணாசி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஷாஷா சிவகுமார்</h2><p>ரத்னம், லவ் ஓ லவ் போன்ற படங்களில் சிறுசிறு ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஷாஷா சிவகுமார். தற்போது என்ன விலை என்ற படத்தில் கருணாசின் தங்கை ரோலில் நடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a9fab21-53ad-4d44-84bb-91305acc0fc2/26-6aaccbef333f8.webp' /></p><p> இப்படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஷாஷா, இதுவரை பல படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்திருக்கிறேன். பல ஆடிஷன்களில் நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீங்க, உயரமா இருக்கீங்க, சிவப்பா இருக்கீங்க, அதனால் இந்த கேரக்டருக்கு செட்டாக மாட்டீங்க என்று திருப்பி அனுப்பி இருக்கிறார்கள். </p><p>என்ன விலை படத்தில் நான் மீனவ கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறேன். டல் மேக்கப் போட்டு வெயிலில் நின்று நிறத்தை குறைத்து நடித்திருக்கிறேன். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17011649-1414-4bef-b35e-14ad3d8ba290/26-6aaccbefe0434.webp' /></p><p>முதன்முறையாக கிராமப்புறப் பெண்ணாக நடித்திருக்கீறேன். படப்பிடிப்பு தளத்திற்கு செல்வதற்கு முன்பே இந்த கதாபாத்திற்காக என்னை தயார்படுத்திக் கொண்டேன். அது நடிப்பதற்கு எளிதாக இருந்தது. இது எனக்கு முற்றிலும் மாறுபட்ட அனுபவம் என்று பேசியுள்ளார் ஷாஷா சிவகுமார்.</p>]]></content>
            <updated>2026-09-18T05:28:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருந்தொகை பணமோசடியில் சிக்கிய தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/four-bank-officials-fraud-bail-ban-enter-bank-1789706580"></link>
            <id>https://tamilwin.com/article/four-bank-officials-fraud-bail-ban-enter-bank-1789706580</id>
            <summary type="text">நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை வெளிநாடுகளுக்கு கடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தனியார் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை வெளிநாடுகளுக்கு கடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தனியார் வங்கிகளின் நான்கு முகாமையாளர்களும்&nbsp;பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>சந்தேகநபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (17) முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து&nbsp;பிணையில்&nbsp;செல்ல கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். பொதரகம உத்தரவிட்டுள்ளார்.</p><h2>பிறப்பிக்கப்பட்ட உத்தரவு</h2><p>அதன்படி, ஒவ்வொரு சந்தேகநபரையும் ரூ. 25,000 ரொக்க பிணையிலும், தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு பிணைதாரர்களுடனும் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8065d49-d488-44e5-9f11-3408a46d74f1/26-6aacca25d5f7b.webp' /></p><p>
</p><p>
மேலும், சந்தேகிக்கப்படும் வங்கி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்குள் நுழைவதற்கும் தடை விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இச்சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான ஜெஃப்ரி முகமது மற்றும் முக்கிய தொழிலதிபராகிய முகமது இன்ஃபார்ட் ஆகியோரை அடுத்த மாதம் 1 ஆம் திகதி வரை மேலும் காவலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சம்பவத்தில் முதல் சந்தேகநபர் மீது கொழும்பு உயர் நீதிமன்றத்தில் போதைப்பொருள் சட்டம் மற்றும் பணச்சலவைச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தல் மூலம் 6.5 மில்லியன் ரூபாய்க்கு மேல் சம்பாதித்து வங்கியில் வைப்பு செய்துள்ளதாகவும் அரச சட்ட ஆலோசகர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.</p><h2>அம்பலமாகியுள்ள மாபெரும்&nbsp;&nbsp;மோசடி </h2><p>
</p><p>நாட்டிலிருந்து 190 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கையாடல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைகளின் போது இந்த மாபெரும் மோசடி அம்பலமாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97326fbb-a613-4037-9b0b-a1c7757443ff/26-6aacca268891f.webp' /></p><p> </p><p>இந்த வழக்கில் முதல் சந்தேகநபர் ஜெஃப்ரி முகமது ஆவார். அவர் 36 நிறுவனங்களை நிறுவியுள்ளதுடன், அவற்றுடன் தொடர்புடைய மேலும் 5 நிறுவனங்கள் பற்றிய தகவல்களும் கண்டறியப்பட்டுள்ளன.</p><p>சம்பவம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்டு, நீதிமன்றம் சந்தேகிக்கப்படும் வங்கி அதிகாரிகளுக்குப் பிணை வழங்கியுள்ளதுடன், இரண்டு முக்கிய சந்தேகநபர்களையும் நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டு, வழக்கை அன்றைய தினம் வரை ஒத்திவைத்துள்ளது.</p><p></p><p><br><br><i style="font-weight: bold;">You May Like This..</i></p><p><i style="font-weight: bold;"><br></i><br><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1343734677584395%2F&show_text=true&width=267&t=0" width="267" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p>]]></content>
            <updated>2026-09-18T05:20:42+00:00</updated>
        </entry>
    </feed>
