<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-20T18:25:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனி வீட்டுக்கே வரும்சுகாதார சேவைகள் ; ஜனாதிபதி அறிவித்த புதிய சுகாதாரத் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/healthcare-services-coming-you-doorstep-new-scheme-1789927154"></link>
            <id>https://jvpnews.com/article/healthcare-services-coming-you-doorstep-new-scheme-1789927154</id>
            <summary type="text">பொதுமக்களுக்கு மிகவும் நெருக்கமான சிறந்த மற்றும் இலவச சுகாதாரச் சேவையை உருவாக்குவதாகவும், இதன்கீழ் தாதியொருவர் வீட்டுக்கே சென்று சுகாதார சேவைகளை வழங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுமக்களுக்கு மிகவும் நெருக்கமான சிறந்த மற்றும் இலவச சுகாதாரச் சேவையை உருவாக்குவதாகவும், இதன்கீழ் தாதியொருவர் வீட்டுக்கே சென்று சுகாதார சேவைகளை வழங்கும் புதிய முறையொன்றை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>மாத்தறை, அக்குரஸ்ஸவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.</p><p>

சுகாதாரத் துறையின் ஊடாகப் பொருளாதாரப் பலன்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதற்காக பல பிரதான மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ec1e54e-cdec-4fcc-8390-bfe0613d78d4/26-6ab01ef49092d.webp' /></p><p>அதற்கமைய, பொதுமக்கள் அனைவருக்கும் இலவச சுகாதாரச் சேவை மேலும் நெருக்கமாக்கப்படுவதுடன், உலகளவில் உள்ள அதிநவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் முறைகளைக் கண்டறிந்து அவற்றுக்கான நிதி எதிர்வரும் ஆண்டில் ஒதுக்கப்படவுள்ளது.
</p><p>
இதன் ஒரு கட்டமாக, அடுத்த ஆண்டுக்குள் 16 இடங்களில் 'கெத் லெப்' (Cath Lab) வசதிகள் ஆரம்பிக்கப்படும்.
</p><p>
மேலும், இதய நோய் சத்திர சிகிச்சைகளுக்காக காணப்பட்ட 1 முதல் 2 வருட காலக் காத்திருப்புப் பட்டியல், குறுகிய காலத்திற்குள் 15 நாட்களாகக் குறைக்கப்படவுள்ளதாகவும், இதன் மூலம் சுகாதாரத்துறையின் ஊடாகப் பொருளாதாரப் பலன்கள் நேரடியாக மக்களைச் சென்றடையும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T18:03:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 இலட்சம் ரூபாய் வரை விற்பனையான போலிச் சான்றிதழ்..! 200 பேருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fake-certificate-printing-press-operating-gampaha-1789924317"></link>
            <id>https://tamilwin.com/article/fake-certificate-printing-press-operating-gampaha-1789924317</id>
            <summary type="text">கம்பஹா - இம்புல்கொட, ராஜசிங்க பகுதியில் வாடகை வீட்டில் இயங்கி வந்த போலி பட்டச் சான்றிதழ்கள், ஆவணங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ முத்திரைகளைத் தயாரிக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா - இம்புல்கொட, ராஜசிங்க பகுதியில் வாடகை வீட்டில் இயங்கி வந்த போலி பட்டச் சான்றிதழ்கள், ஆவணங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ முத்திரைகளைத் தயாரிக்கும் ஒரு பெரிய அச்சகம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த நடவடிக்கையின் போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><h2>
27 வயது நபர் கைது</h2><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

கம்பஹா பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>

இதன்போது அம்பாந்தோட்டை - தங்கல்லை பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><h2>

அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் முத்திரைகள்&nbsp;</h2><p>

இந்த கும்பல், மாதம் ரூ. 35,000க்கு வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்துள்ளது. 

சுற்றிவளைப்பின் போது, 2 மடிக்கணினிகள், 2 ஸ்மார்ட்போன்கள், ஒரு வண்ண அச்சுப்பொறி, 35 போலிச் சான்றிதழ்கள், நிறுவனத் தலைவர்களின் 51 அதிகாரப்பூர்வ முத்திரைகள் மற்றும் 3 புடைப்பு முத்திரைகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5e8975f-d803-4244-a797-783672988e4e/26-6ab01463abfe8.webp' /></p><p> 

பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் தலைவர்களின் அதிகாரப்பூர்வ முத்திரைகள் மற்றும் கடிதத் தலைப்புகள் இந்த இடத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன.
</p><p>
இவற்றில் உள்நாட்டு வருவாய்த் திணைக்களம், இலங்கைத் தேர்வுகள் திணைக்களம், ஒரு தனியார் வங்கி மற்றும் பேராதெனிய, ஸ்ரீ ஜெயவர்தனபுர, களனி, மொரட்டுவ, ருஹுனு, ராஜரட்ட, வயம்ப, ஊவ வெல்லஸ்ஸ உள்ளிட்ட பல அரசாங்க மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் உத்தியோகபூர்வ முத்திரைகளும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
</p><h2>
4 இலட்சம் வரை விலைப்போன போலிச் சான்றிதழ்</h2><p>

இந்த மோசடி சுமார் ஒரு வருடமாக இடம்பெற்று வந்த நிலையில், சந்தேக நபர் சாதாரண சான்றிதழ்களை ரூ. 25,000 முதல் 50,000 வரையிலான விலையில் விற்பனை செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a97874a4-c17e-462c-879b-ea1397c37acc/26-6ab0146480218.webp' /></p><p> </p><p>

இருப்பினும், ஜப்பான் போன்ற வெளிநாடுகளுக்குத் தேவையான கள்ளச் சான்றிதழ்கள் ரூ.400,000 விலைக்குத் தயாரிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.</p><p>

இவ்வாறு தயாரிக்கப்பட்ட கள்ள ஆவணங்களைப் பயன்படுத்தி சுமார் 200பேர் வெளிநாடு சென்றுள்ளதாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார். யக்கல பொலிஸார், இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>அத்துடன், விசாரணைகள் நிறைவில், சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NaZHCffaXtk" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T18:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் பிரதான ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு ; வெள்ள அபாய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/water-levels-in-several-reservoirs-continue-rise-1789926488"></link>
            <id>https://jvpnews.com/article/water-levels-in-several-reservoirs-continue-rise-1789926488</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாகப் பிரதான ஆறுகள் சிலவற்றின் நீர்மட்டம் கணிசமான அளவு உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாகப் பிரதான ஆறுகள் சிலவற்றின் நீர்மட்டம் கணிசமான அளவு உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> 

இதற்கமைய, களனி கங்கையின் க்ளென்கோர்ஸ் (Glencourse) பகுதியிலும், நில்வளா ஆற்றின் பாணடுகம பகுதியிலும் தற்போது சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4223806-11bf-466b-b637-066303438cc1/26-6ab01c598c87a.webp' /></p><p>மேல்நில நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக, பின்வரும் பகுதிகளிலுள்ள ஆறுகளின் நீர்மட்டம் எச்சரிக்கை மட்டத்தில் காணப்படுகின்றது:</p><p>

களனி கங்கை: ஹங்வெல்ல, நோர்வுட் கெசல்கமு ஓயா மற்றும் குருகொட ஓயா </p><p>

களு கங்கை: மகுரு கங்கை, மில்லகந்த (குடா கங்கை) மற்றும் இரத்தினபுரி </p><p>

கிங் கங்கை: தவலம மற்றும் பத்தேகம </p><p>

மகாவலி கங்கை: பேராதனை 

கடந்த 12 மணித்தியாலங்களில் (இரவு 9:00 மணி வரையான காலப்பகுதியில்) நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்துள்ளதுடன், அதிகபட்ச மழைவீழ்ச்சியாகக் கித்துல்கல பகுதியில் 89.6 மி.மீ பதிவாகியுள்ளது.</p><p> 

இதுதவிர நாவலப்பிட்டி (81.9 மி.மீ), கிரிவுல்ல (78.4 மி.மீ) மற்றும் தெரணியகல (76.7 மி.மீ) ஆகிய பகுதிகளிலும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T17:49:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் ஜனாதிபதியை சந்திப்பதற்கு தயார் நிலையில் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-ready-to-meet-iranian-president-1789926242"></link>
            <id>https://ibctamil.com/article/trump-ready-to-meet-iranian-president-1789926242</id>
            <summary type="text">ஈரான் தொடர்பாக அமெரிக்கா முக்கியமான முடிவுகளை எடுக்க உள்ளதாக அமெரிக்க ஜகாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் ஜனாதிபதி&amp;nbsp;மசூத் பெசெஷ்கியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் தொடர்பாக அமெரிக்கா முக்கியமான முடிவுகளை எடுக்க உள்ளதாக அமெரிக்க ஜகாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். </p><p>ஈரான் ஜனாதிபதி&nbsp;மசூத் பெசெஷ்கியானை சந்திப்பதற்கும் தான் தயாராக இருப்பதாகவும்&nbsp;ட்ரம்ப் கூறியுள்ளார்.</p><p>அமெரிக்கா - ஈரான் மோதல் நிலை குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே ட்ரம்ப் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p></p><h2>ஈரானின் நடவடிக்கை&nbsp;</h2><p>இதன்போது, ஈரானின் நடவடிக்கை அமைதியாக இருக்க வேண்டும் என்றும்,&nbsp;தான் முடிவு எடுக்கும் நிலையில் இருக்கின்றேன் எனவும், அவற்றால் மிகப் பெரிய விடயங்கள் நடைபெற உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f685114a-d59e-4a43-8c4d-e4ea08f67a6f/26-6ab01b63ce1d6.webp' /></p><p>ஈரான் தொடர்பாக அமெரிக்காவின் முன் உள்ள விருப்பங்களில், ஈரானை முழுமையாக அழிப்பது, பொருளாதார ரீதியாக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து அந்நாட்டை வீழ்ச்சியடையச் செய்வது அல்லது புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவது ஆகியவை இருப்பதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.</p><p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணை முக்கிய விவகாரமாக மாறியுள்ளது.
</p><p>
மத்திய கிழக்கு போரின் பின்னணியில் ஹோர்முஸ் நீரிணையின் போக்குவரத்தைத் தடுக்க ஈரான் முயற்சித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், அந்த நீரிணையை மீண்டும் திறப்பதற்கான தனது நிபந்தனைகளை மத்தியஸ்தர்கள் மூலம் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக ஈரானின் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்துநர் முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T17:44:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் தாக்குதலில் கொல்லப்பட்ட ரஷ்ய தேர்தல் அதிகாரி: பேருந்து மீது குறிவைத்து தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-election-officer-killed-in-ukraine-attack-1789925970"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-election-officer-killed-in-ukraine-attack-1789925970</id>
            <summary type="text">Russia Election Officer Killed in Ukraine Attack: உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்ய தேர்தல் அதிகாரி கொல்லப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russia Election Officer Killed in Ukraine Attack: உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்ய தேர்தல் அதிகாரி கொல்லப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> உக்ரைன் தாக்குதலில் கொல்லப்பட்ட ரஷ்ய தேர்தல் அதிகாரி</h2><p> கெர்சன் மாகாணத்தில் நடைபெற்ற ரஷ்ய தேர்தல் பணியின் போது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் தேர்தல் அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p> இந்த தகவலை ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் எல்லா பாம்ஃபிலோவா உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p>மேலும், கெர்சன் பகுதியில் பொதுமக்கள் பயணித்த பேருந்தை குறிவைத்து உக்ரைன் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் வரை கொல்லப்பட்டதாகவும், அதில் ஒருவர் Nizhneserogozsky மாவட்டத்தில் வாக்குப்பதிவு மையம் எண் 220 தேர்தல் ஆணைய உறுப்பினர் ஓல்கா பெட்ரோவ்னா டெம்யானென்கோ எனவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfb278de-52ba-4610-9809-b8a46fd8fe51/26-6ab01a53d60ce.webp' /></p><p></p><p>ரஷ்யாவின் தேர்தல் செயல்முறைகளை சீர் குலைக்கும் விதமாக தொலைதூர கிழக்கு பகுதிகளில் உக்ரைன் நாச வேலைகளில் ஈடுபட்டு வருவதாக ரஷ்யாவின் டிஜிட்டல் மேம்பாட்டு அமைச்சகம் முன்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p> உக்ரைனின் இந்த பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவானது தொடர்ந்து நடைபெற்றது.</p><p> மாஸ்கோவில் நடைபெற்ற வாக்குப்பதிவில் காலை 10 மணி நிலவரப்படி கிட்டத்தட்ட 3.2 மில்லியன் மக்கள் வாக்களித்துள்ளனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T17:39:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கம்பஹாவில் போலிச் சான்றிதழ் தயாரிப்பு நிலையம் முற்றுகை ; 27 வயது இளைஞர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fake-certificate-production-center-raided-gampaha-1789925537"></link>
            <id>https://jvpnews.com/article/fake-certificate-production-center-raided-gampaha-1789925537</id>
            <summary type="text">கம்பஹா, இம்புல்கொட, ராஜசிங்க மாவத்தையிலுள்ள வாடகை வீடொன்றில் பெருமளவில் போலிப் பட்டச் சான்றிதழ்கள், உத்தியோகபூர்வ ஆவணங்கள் மற்றும் நிறுவனங்களின் முத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா, இம்புல்கொட, ராஜசிங்க மாவத்தையிலுள்ள வாடகை வீடொன்றில் பெருமளவில் போலிப் பட்டச் சான்றிதழ்கள், உத்தியோகபூர்வ ஆவணங்கள் மற்றும் நிறுவனங்களின் முத்திரைகளை அச்சிட்டு வந்த நிலையமொன்றை முற்றுகையிட்ட பொலிஸார், நபரொருவரைக் கைது செய்துள்ளனர்.</p><p> </p><p></p><p>கம்பஹா பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலுக்கமைய, புலனாய்வாளர்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட நுட்பமான விசாரணையைத் தொடர்ந்து, யக்கல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அறிவிக்கப்பட்டு இந்த முற்றுகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><p> 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தங்காலையைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞராவார். 

மாதமொன்றிற்கு 35,000 ரூபாய் வாடகைக்குப் பெறப்பட்ட வீடொன்றிலேயே இவர் இந்த மோசடியை முன்னெடுத்து வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de9e21bd-f1e6-45c7-b96a-191da811735b/26-6ab018a343584.webp' /></p><p> 

இந்த முற்றுகையின் போது 2 மடிக்கணினிகள், 2 ஸ்மார்ட் கைபேசிகள், 1 வர்ண அச்சு இயந்திரம் , 35 போலிச் சான்றிதழ்கள், நிறுவனத் தலைவர்களின் 51 உத்தியோகபூர்வ முத்திரைகள் மற்றும் 3 எம்போஸ் (Emboss) முத்திரைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. </p><p>

பல்கலைக்கழகங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் தலைவர்களின் உத்தியோகபூர்வ முத்திரைகளும் கடிதத் தலைப்புகளும் (Letterheads) இந்த இடத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. </p><p>

அவற்றுள் உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை பரீட்சைத் திணைக்களம், தனியார் வங்கியொன்று மற்றும் பேராதனை, ஸ்ரீ ஜயவர்தனபுர, களனி, மொரட்டுவை, ருஹுண, ரஜரட்ட, வயம்ப, ஊவா வெல்லஸ்ஸ உள்ளிட்ட பல அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் உத்தியோகபூர்வ முத்திரைகளும் அடங்குகின்றன.</p><p> 

சுமார் ஒரு வருட காலமாக இந்தச் சட்டவிரோதத் தொழில் இடம்பெற்று வந்துள்ளதோடு, சாதாரண சான்றிதழ்களைச் சந்தேகநபர் 25,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரையிலான தொகைக்கு விற்பனை செய்துள்ளார்.</p><p> 

எனினும், ஜப்பான் போன்ற வெளிநாடுகளுக்குத் தேவையான போலிச் சான்றிதழ்களை 4 இலட்சம் ரூபாய் வரை பெற்றுக்கொண்டு தயாரித்துக் கொடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

இவ்வாறு தயாரிக்கப்பட்ட போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இதுவரை சுமார் 200 பேர் வரை வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகச் சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><p> 

யக்கல பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T17:32:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீரிமலையில் அத்துமீறி கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் - உடனடி நடவடிக்கை கோரி மக்கள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-keerimalai-1789922276"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-keerimalai-1789922276</id>
            <summary type="text">கீரிமலை பகுதியில் வலி.தெற்கு பிரதேச சபையினரால் கட்டுப்பாடின்றி கொட்டப்பட்ட
கழிவுகளை மீள அள்ள வேண்டும் என கொட்டும் மழையிலும் அப்பகுதி மக்களால் போராட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கீரிமலை பகுதியில் வலி.தெற்கு பிரதேச சபையினரால் கட்டுப்பாடின்றி கொட்டப்பட்ட
கழிவுகளை மீள அள்ள வேண்டும் என கொட்டும் மழையிலும் அப்பகுதி மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த போராட்டமானது, இன்று(20.09.2026) கீரிமலையில் குப்பை கொட்டப்பட்ட இடத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.</p><p> 

 வலி. வடக்கின் ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் வலி. தெற்கு பிரதேச
சபையின் இலத்திரனியல் கழிவுகள், பிளாஸ்ரிக் கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள்
உள்ளிட்ட சுமார் 300 டிப்பர் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.</p><p>

அவற்றினை மீள அள்ள வேண்டும் என கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அப்பகுதி மக்கள்
தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றனர்.
</p><h2>
மருத்துவ கழிவுகள்</h2><p>
இதேவேளை, தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கொட்டப்பட்ட
கழிவுகள் மாத இறுதிக்குள் மீள அள்ளப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டு, அது
தொடர்பில் ஒருங்கிணைப்பு குழு தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ச.
சிறிபவானந்தராசா, வலி. வடக்கு தவிசாளர் சோ. சுகிர்தனுக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8e0fd4a-83b5-43c6-ba2d-fb84b3a14173/26-6ab00c52009f5.webp' /></p><p>
</p><p>
அத்துடன், உள்ளூராட்சி ஆணையாளர் ச. சுதர்சனும் கழிவுகளை மீள அள்ள வேண்டும் என
பணித்துள்ளார்.</p><p>

இவ்வாறான நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தெல்லிப்பழை புற்றுநோய்
வைத்தியசாலையின் மருந்தேற்றும் ஊசிகள், இரத்தம் தேய்ந்த பஞ்சுகள் உள்ளிட்ட
ஆபத்தான மருத்துவ கழிவுகள் அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ளன.
</p><p>
இதுபோன்ற கழிவுகள் அப்பகுதி மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில், குப்கைகளை அகற்றும் நடவடிக்கைளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a21d4807-c140-42d9-9cb2-c7c369b2561a/26-6ab00c5302a9e.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d8ab59b-a6e1-4b2b-b7f5-8a45001edd6e/26-6ab00c53d65f0.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8eacd8e0-93fd-4bea-a2cc-4eb94178f534/26-6ab00c54b6c8d.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T17:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனின் விடுதலைக்காக கையெழுத்து சேகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/collecting-signatures-for-anojan-s-release-1789925149"></link>
            <id>https://jvpnews.com/article/collecting-signatures-for-anojan-s-release-1789925149</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை நாட்டிற்கு மீண்டும் அழைத்துவர இராஜதந்திர நடவடிக்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை நாட்டிற்கு மீண்டும் அழைத்துவர இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, நற்பிட்டிமுனை பகுதியில் இன்று (20) விசேட கையெழுத்து சேகரிப்பும் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டன.</p><p> </p><p></p><p>சமூக ஊடகப் பதிவொன்றைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அனோஜனுக்கு ஆரம்பத்தில் 5 வருட சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்த நிலையில், மேன்முறையீட்டின் அடிப்படையில் இத் தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30b23313-e26a-4dde-bd67-352442dc6047/26-6ab0171ea2970.webp' /></p><p>எனினும், இது தொடர்பான எழுத்துமூலமான உத்தியோகபூர்வ தீர்ப்பு இதுவரை இலங்கை வெளிவிவகார அமைச்சுக்குக் கிடைக்கப்பெறவில்லை. </p><p>

இப் பின்னணியில், அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கம் அவசர உயர்மட்ட இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனக் கோரி இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

“ஒரு உயிரைக் காப்போம் - மனிதாபிமானத்துடன் கரம் கொடுப்போம்” என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இக் கவனயீர்ப்புக்கு இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து நற்பிட்டிமுனை மக்கள் உட்படப் பெருந்திரளான பொதுமக்கள் ஆதரவு வழங்கினர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T17:25:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருக்கெடுத்து ஓடும் மகாவலி ஆறு வெள்ளத்தில் மூழ்கின நாவலபிட்டியவில் பல கிரமங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/several-areas-in-nawalapitiya-inundated-1789923931"></link>
            <id>https://ibctamil.com/article/several-areas-in-nawalapitiya-inundated-1789923931</id>
            <summary type="text">இன்று அதிகாலை (20) முதல் நாவலபிட்டியாவின் பஸ்பாகே கொரள பிரதேச செயலகப் பகுதியில் மகாவலி ஆறு பெருக்கெடுத்து ஓடியதால், தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள பல வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று அதிகாலை (20) முதல் நாவலபிட்டியாவின் பஸ்பாகே கொரள பிரதேச செயலகப் பகுதியில் மகாவலி ஆறு பெருக்கெடுத்து ஓடியதால், தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. </p><p>இதன் காரணமாக சுமார் 100 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக பஸ்பாகே கொரள பிரதேச செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><h2>பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன</h2><p>நாவலபிட்டியாவில் உள்ள கித்துல்கொட்டை, லபுவெல்கொட்டுவ, ஜெயசுந்தராவ்திய உள்ளிட்ட பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6edc5df-720c-4d8e-81c5-b900199ce4cb/26-6ab016f157837.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T17:25:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத மீன்பிடித்தல்: கனடா நபருக்கு 4,500 டொலர் அபராதம்; மீன்பிடிக்கத் தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ont-man-fined-4500-suspended-from-fishing-1789922994"></link>
            <id>https://canadamirror.com/article/ont-man-fined-4500-suspended-from-fishing-1789922994</id>
            <summary type="text">சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக கனடாவின் தண்டர்பே நகரைச் சேர்ந்த பால் ஹர்டில் என்பவருக்கு 4,500 கனடிய டொலர் அபராதம் விதிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக கனடாவின் தண்டர்பே நகரைச் சேர்ந்த பால் ஹர்டில் என்பவருக்கு 4,500 கனடிய டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒன்ராறியோ மாகாணத்தில் மீன்பிடிக்க 5 ஆண்டுகளுக்குத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>
அணைக்கு கீழ்நோக்கிய 23 மீட்டருக்குள் சட்டவிரோதமாக மீன்பிடித்தது, தூண்டில் பயன்படுத்தாமல் வலை மூலம் 'ரெயின்போ டிரவுட்' மீன்களைப் பிடித்தது மற்றும் இயற்கை வள பாதுகாப்பு அதிகாரியிடம் தவறான வாக்குமூலம் அளித்தது ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் இவர் குற்றவாளியாகக் காணப்பட்டார்.
</p><p>இயற்கை வள அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d9902cb-526f-45aa-a26b-0ce742e145f0/26-6ab00eb3ee30f.webp' /></p><p>
</p><p> மே 1, 2025 அன்று சூனியா நகராட்சியில் உள்ள இஷ்கிபிபிள் க்ரீக் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடிக்கப்படுவதாகப் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர்.
</p><p>ஹைவே 11/17 இல் பால் ஹர்டிலின் வாகனத்தை மறித்துச் சோதனையிட்ட அதிகாரிகள், அவர் அணைக்கு கீழ்நோக்கிய 23 மீட்டர் எல்லைக்குள் 'டிப் நெட்' வலையைப் பயன்படுத்தி மீன்களைப் பிடித்ததை உறுதி செய்தனர். 
மேலும், விசாரணையின் போது அவர் அதிகாரிகளுக்குப் பொய் தகவல்களைக் கூறி திசைதிருப்ப முயன்றதும் தெரியவந்தது.
</p><p>தண்டர்பே ஒன்ராறியோ நீதிமன்றத்தில், சமாதான நீதிபதி J. A. பெர்னார்ட் காரோன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
</p><p>இலையுதிர் காலத்தில் சால்மன் மீன்களின் இடப்பெயர்வு காலம் தொடங்கவுள்ள நிலையில், இந்தச் சம்பவம் அனைத்து மீனவர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பாதுகாப்பு அதிகாரி ரொன் ஆர்னல்ட் தெரிவித்துள்ளார்.
</p><p>இயற்கை வளங்கள் தொடர்பான சட்டவிரோதச் செயல்கள் குறித்து தகவல் தெரிவிக்க அமைச்சகத்தின் இலவச உதவி எண்ணான 1-877-847-7667 அல்லது 'க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' அமைப்பைத் தொடர்புகொள்ளலாம்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T17:06:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரை மணி நேரம் அநுர மனோவுடன் கதைத்தது என்ன..! அனோஜனின் தற்போதைய நிலைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussed-with-anura-mano-for-half-an-hour-1789923176"></link>
            <id>https://tamilwin.com/article/discussed-with-anura-mano-for-half-an-hour-1789923176</id>
            <summary type="text">அனோஜனின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் தொலைபேசியில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டதாக ஐக்கிய மக்கள் சக்தி கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனோஜனின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் தொலைபேசியில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.</p><p>

லங்காசிறி ஊடகம் வழங்கும் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
அநுர குமார திஸாநாயக்கவுடன் வழக்கமாக அரை மணி நேரம் உரையாடுவது வழக்கம். அனோஜனின் நிலைப்பாட்டையும் எடுத்துரைத்துள்ளேன்.
</p><p>
விரைவில் சவூதி அரேபிய அரசாங்கத்துடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு, அவரது தண்டனையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் ஜனாதிபதிக்கு வலியுறுத்தினேன்.</p><p>

ஊழல்வாதிகளை அநுர அரசாங்கம் தேடித் தேடி கைது செய்வது பாராட்டுக்குரியது. என்றாலும், அநுர அரசாங்கத்திலும் ஊழல்வாதிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் தகுந்த தண்டனை வழங்கினால் நன்றாக இருக்கும் என்றார்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/BhMshQ0voX8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T17:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனை மீட்க அரசு முழு அளவில் செயற்படும் - பிமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/government-will-act-fully-to-rescue-anojan-bimal-1789922689"></link>
            <id>https://jvpnews.com/article/government-will-act-fully-to-rescue-anojan-bimal-1789922689</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனை மீட்டெடுப்பதற்கு அரசாங்கம் அதிகபட்ச தலையீட்டை செலுத்தியுள்ளதாக போக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனை மீட்டெடுப்பதற்கு அரசாங்கம் அதிகபட்ச தலையீட்டை செலுத்தியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p></p><p> 

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி பதிலளிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் இந்த விடயம் தொடர்பில் அதிகபட்ச தலையீட்டை மேற்கொண்டு வருகிறோம் எனக் குறிப்பிட்டார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afe86027-14f1-42e1-b133-3f011e98238d/26-6ab00d82e7527.webp' /></p><p>வெளிவிவகார அமைச்சரும் வெளிவிவகார அமைச்சும் இதில் தலையிட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. 

அதேபோன்று ஜனாதிபதி செயலகமும் இதில் தலையீடுகளை மேற்கொண்டு வருகிறது. </p><p>

நாங்கள் இதன் ஆரம்பக் கட்டத்திலேயே இருக்கிறோம், இதில் எவ்வித தாமதமும் ஏற்படவில்லை. </p><p>

எனினும், இவ்வாறான விடயங்களைக் கையாளும் போது குறிப்பிட்ட இராஜதந்திர நடைமுறைகளின்படியே செய்ய வேண்டும். </p><p>

ஏனெனில் அந்தந்த நாடுகளுக்கென சட்டதிட்டங்கள் காணப்படுகின்றன. </p><p>

இருப்பினும், அவரை மீட்டெடுப்பதற்கு நாங்கள் அதிகபட்சமாக தலையிட்டு நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T16:44:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பின்தங்கிய நிலையில் ஐரோப்பாவின் AI உள்கட்டமைப்பு - 10 ஆடுகளில் 600 பில்லியன் செலவினம் தேவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/europe-faces-600b-ai-infrastructure-gap-1789922853"></link>
            <id>https://news.lankasri.com/article/europe-faces-600b-ai-infrastructure-gap-1789922853</id>
            <summary type="text">Europe faces 600 billion dollar AI infrastructure gap: ஐரோப்பாவின் AI தொழில்நுட்ப வளர்ச்சிக்கு 600 பில்லியன் யூரோ செலவிடவேண்டியுள்ளது.

600 பில்லியன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Europe faces 600 billion dollar AI infrastructure gap: ஐரோப்பாவின் AI தொழில்நுட்ப வளர்ச்சிக்கு 600 பில்லியன் யூரோ செலவிடவேண்டியுள்ளது.</p><h2>

600 பில்லியன் யூரோ வரை செலவினம் தேவைப்படும்</h2><p>ஐரோப்பாவில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அடுத்த பத்து ஆண்டுகளில் 600 பில்லியன் யூரோ வரை செலவினம் தேவைப்படும் என ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) எச்சரித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e27d438-e3b1-45cd-9088-0fea58fb87fc/26-6ab00e277be24.webp' /></p><p>ECB தலைவர் கிரிஸ்டின் லகார்ட், ஐரோப்பாவில் தற்போதைய தரவு மைய திறன் தேவைக்கு போதவில்லை. 2025-ல் 3 GW-ஆக இருந்த திறன், 2036-ல் 20 GW-ஆக அதிகரிக்கும் என்று கூறயுள்ளார்.
</p><p>
ஐரோப்பிய நிறுவனங்கள் 2026-ல் தங்களின் மொத்த முதலீட்டில் 10 சதவீதத்தை AI-க்கு செலவிட உள்ளன. மேலும், AI தொடர்பான கடன், நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட புதிய கடன்களில் 25 சதவீத வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p>ஐரோப்பிய தொழிலாளர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தற்போது AI பயன்படுத்துகின்றனர். இது இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்த அளவை விட இரட்டிப்பு மடங்காகும். AI பயன்பாடு உற்பத்தித் திறனை அடுத்த பத்து ஆண்டுகளில் 4 சதவீதம் வரை உயர்த்தும் என ECB கணித்துள்ளது.
</p><p>
ஆனால், IMF விடுத்துள்ள எச்சரிக்கையில், AI-யின் நன்மைகள் மற்றும் செலவுகள் நாடுகள், பிராந்தியங்கள், தொழிலாளர்கள் இடையே சமமாகப் பகிரப்படாது என கூறியுள்ளது. தொழிலாளர்கள் சிலர் உற்பத்தி திறனை உயர்த்தினாலும், சிலர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.
</p><p></p><p>ஐரோப்பா, AI திறனில் அமெரிக்கா மற்றும் சீனாவை விட பின்தங்கியுள்ளது. 2025-ல் அமெரிக்கா 59 முக்கிய AI மாதிரிகளை உருவாக்கிய நிலையில், சீனா 35 உருவாக்கியது. ஆனால், பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா தலா ஒன்றையே உருவாக்கின. உலகளாவிய AI கணினி திறனில் அமெரிக்கா 75 சதவீதத்தை வைத்திருக்க, ஐரோப்பா வெறும் 5 சதவீதம் மட்டுமே கொண்டுள்ளது.
</p><p>
இதனை சமாளிக்க, ஐரோப்பிய ஆணையம் 7 AI Gigafactories அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக 10 பில்லியன் யூரோ அரசு நிதி மற்றும் 20 பில்லியன் யூரோ தனியார் முதலீடு ஈர்க்கப்படும்.

AI விரிவாக்கம், மின்சார உள்கட்டமைப்புக்கும் சவாலாக உள்ளது. தற்போது தரவு மையங்கள் ஐரோப்பாவின் மின்சார பயன்பாட்டில் 3 சதவீதம் பங்காற்றுகின்றன. இது விரைவில் அதிகரிக்கும் என IMF எச்சரித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T16:44:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அல் - அக்ஸா பள்ளிவாசலுக்குள் இஸ்ரேலிய அமைச்சர்! ஜோர்தான் கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/israeli-minister-inside-al-aqsa-mosque-1789922420"></link>
            <id>https://ibctamil.com/article/israeli-minister-inside-al-aqsa-mosque-1789922420</id>
            <summary type="text">ஜெரூசலமில் உள்ள&amp;nbsp; அல்-அக்ஸா பள்ளிவாசல் வளாகத்திற்குள் இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென்-க்விர்&amp;nbsp; நுழைந்த சம்பவத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜெரூசலமில் உள்ள&nbsp; அல்-அக்ஸா பள்ளிவாசல் வளாகத்திற்குள் இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென்-க்விர்&nbsp; நுழைந்த சம்பவத்தை ஜோர்தானின் வெளிவிவகார அமைச்சு கடுமையாகக் கண்டித்துள்ளது.</p><p>

இதனை ஏற்றுக்கொள்ள முடியாத ஆத்திரமூட்டல் என சுட்டிக்காட்டிய ஜோர்தான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சுஃப்யான் அல்-மோமானி, இஸ்ரேலிய அமைச்சர்கள் மற்றும் குடியேற்றவாசிகளின் தொடர்ச்சியான அத்துமீறல்கள் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் வெளிப்படையான மீறல்களை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இவ்வாறான ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் தொடர்வதால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்தும் அவர் எச்சரித்துள்ளார்.
</p><p></p><h2>மதத் தல&nbsp;ஆக்கிரமிப்பு</h2><p><span style="font-size: 14px;">ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலேம் நகரத்தின் மீதும், அங்குள்ள இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ புனிதத் தலங்கள் மீதும் இஸ்ரேலுக்கு எந்தவித இறையாண்மையும் இல்லை&nbsp; எனவும் அல்-மோமானி வலியுறுத்தியுள்ளார்.</span></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77f54cec-51d7-4f31-9ab6-f9c4f0d6f4e3/26-6ab00c76f3199.webp' /></p><p>
</p><p>
மேலும், மதத் தலங்களை ஆக்கிரமிப்பதைத் தடுப்பதுடன், அவற்றை வழிபாட்டாளர்கள் அணுகுவதற்கு விதிக்கப்படும் அனைத்து கட்டுப்பாடுகளையும் நிறுத்துவதற்காக சர்வதேச சமூகம் உறுதியான சர்வதேச நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T16:40:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டில் உறங்கிய பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/schoolboy-dies-after-being-struck-by-lightning-1789921104"></link>
            <id>https://ibctamil.com/article/schoolboy-dies-after-being-struck-by-lightning-1789921104</id>
            <summary type="text">அகலவத்தை, டெல்பே, ஹலோவிட்டா பகுதியில் உள்ள வீட்டின் தரையில் உறங்கிக் கொண்டிருந்த பதினைந்து வயது பள்ளி மாணவன், மின்னல் தாக்கியதில் உயிரிழந்ததாக அகலவத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அகலவத்தை, டெல்பே, ஹலோவிட்டா பகுதியில் உள்ள வீட்டின் தரையில் உறங்கிக் கொண்டிருந்த பதினைந்து வயது பள்ளி மாணவன், மின்னல் தாக்கியதில் உயிரிழந்ததாக அகலவத்தை காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
உயிரிழந்தவர், அகலவத்தை, டெல்பே, ஹலோவிட்டா முகவரியில் வசித்து வந்த, அகலவத்தை மிஹிந்து மத்திய மகா வித்யாலயத்தில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவரான ஹசிதா பிரதீப் குமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.&nbsp;</p><h2>வீட்டின் தரையில் உறங்கியவேளை தாக்கிய மின்னல்</h2><p>அறையின் தரையில் உறங்கிக் கொண்டிருந்தபோது மாணவனை மின்னல் தாக்கியது. இதனையடுத்து அகலவத்தை பிம்பூரா பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த மாணவன் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66240643-e851-4de4-b9da-ac57a19e4ebe/26-6ab00a606254f.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T16:34:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிபிராஜ் மகன் செய்த சாதனை.. குவியும் வாழ்த்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sibiraj-son-wins-gold-in-isso-games-2026-27-1789921484"></link>
            <id>https://cineulagam.com/article/sibiraj-son-wins-gold-in-isso-games-2026-27-1789921484</id>
            <summary type="text">நடிகர் சிபிராஜ் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர். சோலோ ஹீரோவாக மட்டுமின்றி மல்டிஸ்டாரர் படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.சிபிராஜ் தீவிரமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் சிபிராஜ் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர். சோலோ ஹீரோவாக மட்டுமின்றி மல்டிஸ்டாரர் படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.</p><p>சிபிராஜ் தீவிரமான விஜய் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது அப்பா சத்யராஜ் மற்றும் சகோதரி இருவரும் திமுக ஆதரவாளர்கள் என்பதால் கடந்த தேர்தல் நேரத்தில் அவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்து பதிவிடும் விஷயங்கள் பரபரப்பாக பேசப்பட்டன. </p><p>
சிபிராஜ் தற்போது அவரது மகன் செய்த சாதனை பற்றி நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e74b2810-67f2-4518-a9dc-25ef979849f1/26-6ab008d2eda74.webp' /></p><p>
</p><h2>தங்க பதக்கம்
</h2><p>சர்வதேச பள்ளிகளுக்கு இடையேயான ISSO Games 2026-27ல் அவரது மகன் டேக்வாண்டோ போட்டியில் தங்க பதக்கம் பெற்று இருக்கிறார்.
</p><p>மும்பையின் Dhirubhai Ambani International Schoolல் இந்த போட்டிகள் நடந்து இருக்கிறது.
</p><p>போட்டோக்களை வெளியிட்டு சிபிராஜ் மகன் வெற்றி பெற பயிற்சி அளித்தவர்களுக்கு நன்றி கூறி இருக்கிறார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T16:29:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாணவர்கள் முகத்தை மூடத் தேவையில்லை..! இத்தாலி அரசாங்கம் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/italian-government-guidelines-on-student-attire-1789921635"></link>
            <id>https://tamilwin.com/article/italian-government-guidelines-on-student-attire-1789921635</id>
            <summary type="text">இத்தாலியிலுள்ள பாடசாலைகளில் புர்க்கா மற்றும் நிகாப் போன்ற முகத்தை மூடும்
ஆடைகளைத் தடை செய்வதற்கும், ஒரு வகுப்பறையில் அனுமதிக்கப்படும் வெளிநாட்டு
மாண...</summary>
            <content type="html"><![CDATA[<p>இத்தாலியிலுள்ள பாடசாலைகளில் புர்க்கா மற்றும் நிகாப் போன்ற முகத்தை மூடும்
ஆடைகளைத் தடை செய்வதற்கும், ஒரு வகுப்பறையில் அனுமதிக்கப்படும் வெளிநாட்டு
மாணவர்களின் எண்ணிக்கைக்கு வரையறை விதிப்பதற்கும் அந்நாட்டு அரசாங்கம் புதிய
சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.</p><p>

இத்தாலி பிரதமரின் “பிரதர்ஸ் ஒஃப் இத்தாலி” கட்சியின் இளைஞர் அணி ஆண்டுக்
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி இந்த அறிவிப்பை
வெளியிட்டுள்ளார்.</p><h2>

பாடசாலைகளில் புதிய நடைமுறை</h2><p>
இதன்படி, பாடசாலைகளில் முகத்தை மூடிக்கொண்டு கல்வி கற்க அனுமதி
அளிக்கப்படமாட்டாது என்றும், இத்தாலியில் கலாச்சாரம் அல்லது பாரம்பரியத்தின்
பெயரால் எந்தவொரு பெண் பிள்ளையும் தனது முகத்தை மறைத்து வாழ வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4317424a-8fd5-47b8-93fa-85e7735c6d4c/26-6ab0099c21a5b.webp' />&nbsp; &nbsp;</p><p>
</p><p>
அத்துடன், வெளிநாட்டு மாணவர்கள் பாடசாலை அமைப்பில் விரைவாக இணைந்து
கொள்வதற்காக ஒரு வகுப்பறையில் அவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தத்
திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>வகுப்பறையில் பெரும்பாலான குழந்தைகளுக்கு மொழி புரியாவிட்டால் அது சமூக
ஒருங்கிணைப்பாக அமையாது மாறாகப் புறக்கணிப்பாகவே அமையும் எனக் குறிப்பிட்ட
பிரதமர், தீவிர மொழிப் பிரச்சினை எதிர்கொள்ளும் வெளிநாட்டு மாணவர்களின்
பெற்றோர்களும் இத்தாலிய மொழியைக் கற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்படும் என்றும்
தெரிவித்துள்ளார்.</p><p>

புதிய முன்மொழிவு விரைவில் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், 
இத்தாலிய பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களில் சுமார் 11.6 சதவீதமானோர்
வெளிநாட்டுப் பிரஜைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T16:28:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு முக்கிய தகவல் ; கல்வி அமைச்சு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-information-students-attending-school-1789921594"></link>
            <id>https://jvpnews.com/article/important-information-students-attending-school-1789921594</id>
            <summary type="text">நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நாளை (21) பாடசாலைகளை நடத்துவது குறித்துத் தீர்மானிக்கும் அதிகாரம் அந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நாளை (21) பாடசாலைகளை நடத்துவது குறித்துத் தீர்மானிக்கும் அதிகாரம் அந்தந்த மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ இதனை உறுதிப்படுத்தினார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aff3b24a-b368-45d9-9d7c-3baa0891f59e/26-6ab0093c32f4e.webp' /></p><p>மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தி நடவடிக்கைகளை எடுக்குமாறும், வெளியிடப்படும் புதிய அறிக்கைகள் குறித்தும் அதிக அவதானம் செலுத்துமாறும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T16:26:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/australia-beat-zimbabwe-by-1-wicket-in-3rd-odi-1789920941"></link>
            <id>https://news.lankasri.com/article/australia-beat-zimbabwe-by-1-wicket-in-3rd-odi-1789920941</id>
            <summary type="text">Australia beat zimbabwe by 1 wicket: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>Australia beat zimbabwe by 1 wicket: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><p>

ஹராரேயில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில், அவுஸ்திரேலிய அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.&nbsp;</p><h2>சிக்கந்தர் ரஸா 81 ஓட்டங்கள் </h2><p>

அவுஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹராரேயில் நடந்தது. முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 271 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06c6b430-6ede-4367-9a0e-f2675f1154ea/26-6ab007b6a7d6f.webp' />&nbsp;</p><p></p><p>அணித்தலைவர் சிக்கந்தர் ரஸா 72 பந்துகளில் 81 ஓட்டங்களும், கிரேக் எர்வின் 59 ஓட்டங்களும் எடுத்தனர். 

நேதன் எல்லிஸ் 3 விக்கெட்டுகளும், ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் ஆடம் ஜம்பா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ca51f0b-e903-48dc-bd29-9ba408353dab/26-6ab009333c8ff.webp' /></p><p>
பின்னர் ஆடிய அவுஸ்திரேலிய அணியில் ஜோஷ் இங்கிலிஸ் (Josh Inglis) நிதானமாக ஆடி 103 ஓட்டங்கள் குவித்தார்.&nbsp;</p><h2>அவுஸ்திரேலியா வெற்றி </h2><p>

ஆனால், ஏனைய வீரர்கள் சொதப்பியதால் 245 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகள் என அவுஸ்திரேலியா தடுமாறியது.</p><p>

அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நேதன் எல்லிஸ் (Nathan Ellis), ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 36 ஓட்டங்கள் எடுத்தார். </p><p>

இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் 272 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இங்கிலிஸ் ஆட்டநாயகன் விருதும், கூப்பர் கோனொலி தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d851c868-594b-43a9-aa29-dbf48dd9f732/26-6ab00a415f0c3.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cce22224-a463-42eb-8673-cc15ff602b09/26-6ab007b77ae42.webp' /></p>]]></content>
            <updated>2026-09-20T16:16:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளையதினம் பாடசாலைகள் நடைபெறுமா..! கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/inclement-weather-decision-regarding-schools-1789916110"></link>
            <id>https://ibctamil.com/article/inclement-weather-decision-regarding-schools-1789916110</id>
            <summary type="text">நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நாளை (21) பாடசாலைகளை நடத்துவது குறித்துத் தீர்மானிக்கும் அதிகாரம் அந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நாளை (21) பாடசாலைகளை நடத்துவது குறித்துத் தீர்மானிக்கும் அதிகாரம் அந்தந்த மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. </p><p>

கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ கொழும்பு ஊடகமொன்றிடம் இதனைத் தெரிவித்தார்.</p><h2>&nbsp;நுவரெலியா பாடசாலைகளுக்கான அறிவிப்பு</h2><p>&nbsp;இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா கல்வி வலயத்தில் நாளை (21) பாடசாலைகளை நடத்துவதில் சிரமம் காணப்படுமாயின், அது குறித்துத் தீர்மானிக்கும் அதிகாரத்தை வலயக் கல்விப் பணிப்பாளர் அதிபர்களுக்கு வழங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e66f367-1470-49d0-a2d8-5dfb00525147/26-6aaff8907b7c8.webp' /></p><p> </p><p>

இதற்கமைய, சம்பந்தப்பட்ட பாடசாலைகளை நடத்துவதா இல்லையா என்பது குறித்த தீர்மானத்தை உரிய பாடசாலை அதிபர்களே மேற்கொள்வர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T16:14:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜன் வழக்கில் வெளியான புதிய தகவல் ; குடும்பத்திடம் வெளியான அதிர்ச்சித் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-penalty-for-anojan-shocking-news-revealed-1789920775"></link>
            <id>https://jvpnews.com/article/death-penalty-for-anojan-shocking-news-revealed-1789920775</id>
            <summary type="text">சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ள அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை அவர் தனது குடும்பத்தினரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ள அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை அவர் தனது குடும்பத்தினரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p></p><p>இன்று (20) காலை 10.30 மணியளவில் அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்தபோது, அவரது தம்பி ஹம்சிதனுக்கு சவுதி அரேபியாவிலிருந்து அனோஜன் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்போது, அனோஜனுடன் சுமார் 10 நிமிடங்கள் உரையாடியதாகவும், ஜூன் 30ஆம் திகதி அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் அவருடன் இறுதியாக உரையாடியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c68fb67f-33e7-4a95-9acb-486efc3c842d/26-6ab0060915506.webp' /></p><p>அனோஜன் மீது முதலில் சைபர் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு தொடரப்பட்டதாகவும், அந்த வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
இதனைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கத்தின் ஊடாக அவரது தண்டனையை குறைப்பதற்கான மேன்முறையீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இந்நிலையில், தமக்கு வழங்கப்பட்ட தண்டனை போதுமானதாக இல்லை எனக் கூறி வழக்குத் தொடர்ந்த சவுதி தரப்பும் மேன்முறையீடு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அதன்போது, நபியை அவமதித்தல் மற்றும் அந்த உள்ளடக்கத்தை பலரிடம் பரப்பியமை உள்ளிட்ட மேலும் சில குற்றச்சாட்டுகள் வழக்கில் இணைக்கப்பட்டு, வழக்கு வேறு கோணத்தில் மீண்டும் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதன் பின்னர் அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும், இந்தத் தீர்ப்பு தொடர்பாக அவருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குடும்பத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05e68323-0f69-4eef-9fee-c866fd324252/26-6ab00609bf886.webp' /></p><p>
</p><p>
மேலும், தனது குடும்பத்தினருடன் தொடர்புகொண்டு நிலைமையைத் தெரிவிக்கும் வாய்ப்பும் அவருக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
தனது தண்டனை தொடர்பிலும், அது தொடர்பாக ஏற்பட்டுள்ள சில தவறான புரிதல்கள் குறித்தும் அனோஜன் விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எதிர்வரும் 7ஆம் திகதி வரை அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறையிலிருந்து தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளும் வாய்ப்பு அவருக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.</p><p>

இந்நிலையில், அனோஜனின் விடுதலைக்காக உரிய சட்ட மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவரை ஆதரிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அனோஜனின் வழக்கு தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் மற்றும் அவரின் விடுதலைக்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகள் குறித்து தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T16:13:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/school-can-close-by-principals-1789915714"></link>
            <id>https://tamilwin.com/article/school-can-close-by-principals-1789915714</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தில் தொடர் சீரற்ற காலநிலைக் காரணமாக பாடசாலைகளின் விடுமுறை தொடர்பிலான தீர்மானங்களை அதிபர்கள் எடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தில் தொடர் சீரற்ற காலநிலைக் காரணமாக பாடசாலைகளின் விடுமுறை தொடர்பிலான தீர்மானங்களை அதிபர்கள் எடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த அறிவிப்பை வலயக் கல்வி பணிப்பாளர் வெளியிட்டுள்ளார். </p><p>

இதற்கமைய, நாளை தினம்(21.09.2026) பாடசாலை விடுமுறை தொடர்பிலான தீர்மானங்களை அதிபர்கள் எடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>பாடசாலை விடுமுறை</h2><p>
சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf92da5e-162f-4c0a-9a3c-3a4c4406d342/26-6aafff3d0732e.webp' /></p><p>இதேவேளை சீரற்ற காலநிலை நிலவும் மாவட்டங்களில் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. </p><p>இதற்கமைய, கடந்த 24 மணித்தியாலயங்களாக நாட்டின் சில பகுதிகளில் கடுமையான மழை பெய்து வரும் நிலையில் கல்வி அமைச்சு இந்த தீாமானத்தை எடுத்துள்ளது.</p><p>குறிப்பாக மத்திய மற்றும் சப்கரகமுவ மாகாணங்கள் கடும் மழையுடனான காலநிலையினால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>கடந்த 24 மணித்தியாலங்களில&nbsp;்கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டியில் 210 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T16:05:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[34 பில்லியன் சொத்து இருந்தும் மகளின் ஸ்டார்ட்அப்புக்கு நிதியளிக்க மறுத்த மெலிண்டா கேட்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/melinda-gates-denies-funding-daughters-startup-1789919559"></link>
            <id>https://news.lankasri.com/article/melinda-gates-denies-funding-daughters-startup-1789919559</id>
            <summary type="text">Melinda Gates denies funding daughter’s startup: 3.30 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருந்தும், சொந்த மகளுக்கு தொழில் தொடங்க பணம் தர மறுத்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Melinda Gates denies funding daughter’s startup: 3.30 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருந்தும், சொந்த மகளுக்கு தொழில் தொடங்க பணம் தர மறுத்துள்ளார் மெலிண்டா கேட்ஸ்.</p><p>
</p><h2>
மெலிண்டா கேட்ஸ்</h2><p>&nbsp;மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸின் முன்னாள் மனைவி மற்றும் உலகின் மிகப்பெரிய பணக்கார பெண்களில் ஒருவரான மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ், 34 பில்லியன் டொலர் ( ரூ.3.30 லட்சம் கோடி) சொத்து இருந்தும், தனது மகளின் ஸ்டார்ட்அப்பிற்கு நிதி வழங்க மறுத்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74cd0447-e958-4f71-8152-32d394dafc63/26-6ab00148bde2d.webp' /></p><p>மெலிண்டா, “இது உண்மையான வியாபாரம் என்றால், பிற முதலீட்டாளர்கள் அதனை ஆதரிக்க வேண்டும். நான் பணம் கொடுக்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.
</p><p>
மேலும், தனது மகள் மறுப்பு மற்றும் சவால்களை எதிர்கொண்டு வளர வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p></p><p>பில் கேட்ஸ், தனது குழந்தைகள் தன்னுடைய செல்வத்தில் 1 சதவீதத்திற்கும் குறைவாக மட்டுமே பெறுவார்கள் என்று முன்பே அறிவித்திருந்தார். இதே கொள்கையை மெலிண்டாவும் பின்பற்றுகிறார்.</p><h2>

இளைய மகளின்&nbsp;ஃபேஷன்-டெக் ஸ்டார்ட்அப்</h2><p>அவர்களின் இளைய மகள் ஃபீபி கேட்ஸ் (Phoebe Gates), தனது ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக நண்பருடன் சேர்ந்து Phia என்ற ஃபேஷன்-டெக் ஸ்டார்ட்அப்பை தொடங்கியுள்ளார். இந்த பிளாட்ஃபார்ம், 40,000-க்கும் மேற்பட்ட வலைத்தளங்களில் உள்ள ஆடைகள் விலைகளை ஒப்பிட்டு, பயனாளர்களுக்கு சிறந்த சலுகைகளை கண்டுபிடிக்க உதவுகிறது.
</p><p></p><p>மெலிண்டா, பெண்கள் தொழில் முனைவோர் நிதி திரட்டுவதில் அதிக சவால்களை சந்திக்கின்றனர் என்றும், தன்னம்பிக்கை மற்றும் பொறுமையுடன் முன்னேற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த முடிவு, கேட்ஸ் குடும்பத்தின் சுயமாக முன்னேற வேண்டும் என்ற கொள்கையை வெளிப்படுத்துகிறது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T15:49:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தக்காளியை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் 7 முக்கிய நன்மைகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/amazing-benefits-of-eating-one-raw-tomato-daily-1789915920"></link>
            <id>https://manithan.com/article/amazing-benefits-of-eating-one-raw-tomato-daily-1789915920</id>
            <summary type="text">குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பும் காய்கறிகளின் பட்டியவில் தக்காளி நிச்சயம் முக்கிய இடம் பிடித்துவிடும். அறிவியலின் பிரகாரம் இது...</summary>
            <content type="html"><![CDATA[<p>குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பும் காய்கறிகளின் பட்டியவில் தக்காளி நிச்சயம் முக்கிய இடம் பிடித்துவிடும். அறிவியலின் பிரகாரம் இது ஒரு பழவகையாகவே அறியப்படுகின்றது.
</p><p>
இது பார்ப்பதற்கு எவ்வளவுக்கு அழகாக இருக்கின்றதோ அதைவிட பல மடங்கு ஆரோக்கிய நன்மைகளையும், மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளமையே இதன் சிறப்பம்சம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf152276-5e86-49fb-b61a-54a14ae8962f/26-6aaffc57844fc.webp' /></p><p>நம் அன்றாட உணவில் எளிதாக சேர்த்துக்கொள்ளக்கூடிய காய்கறிகளில் தக்காளியும் ஒன்று. சாலட், சாண்ட்விச் அல்லது உணவுடன் சேர்த்து தக்காளியை பச்சையாக சாப்பிடுவது பல்வேறு ஊட்டச்சத்துகளைப் பெற உதவும்.</p><p>குறிப்பாக இதில் வைட்டமின் C, பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் லைகோபின் போன்ற முக்கியமான சத்துக்கள் உள்ளன.தக்காளியை வழக்கமாக உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கக்கூடிய முக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பாரக்கலாம்.</p><p></p><p><b>இதய ஆரோக்கியம்</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30b3b91a-a7a9-4dac-bff7-1ed115bfc5b3/26-6aaffc583827a.webp' /><b></b></p><p>

தக்காளியில் உள்ள லைகோபின் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கக்கூடும். குறிப்பாக பொட்டாசியம் உடலில் ரத்த அழுத்தத்தை சீராகப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான உணவுமுறையின் ஒரு பகுதியாக தக்காளியை சேர்த்துக்கொள்வது இதய ஆரோக்கியத்துக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்க்கும்.</p><p><b>சரும ஆரோக்கியம்</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c37056c-681d-48a3-9660-1d0a7e4d24a4/26-6aaffc5995f5c.webp' /></p><p>
தக்காளியில் உள்ள வைட்டமின் C உள்ளிட்ட ஆன்டி-ஆக்சிடன்ட்கள் சரும செல்களைப் பாதுகாக்கவும், சருமத்தின் இயல்பான ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவுகின்றன.&nbsp;</p><p><b>செரிமானம்&nbsp;</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e01ec02-f466-4bf5-91dd-6b86ea1f2e1c/26-6aaffc58dfcd3.webp' /><b></b></p><p>
தக்காளியில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து உள்ளதால், இது சீரான செரிமானத்திற்கு உதவக்கூடும். போதுமான நார்ச்சத்து உட்கொள்வது மலச்சிக்கலைத் தடுப்பதற்கும் குடல் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கும் உதவுகிறது.</p><p><b>நோய் எதிர்ப்பு ஆற்றல்</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d73ea560-d0a1-474d-a7ee-2c8f1229219b/26-6aaffc5a4caa2.webp' /><b></b></p><p>
தக்காளியில் உள்ள வைட்டமின் C, உடலின் இயல்பான நோய் எதிர்ப்பு செயல்பாட்டிற்கு தேவையான முக்கியமான சத்துகளில் ஒன்றாகும். எனவே தக்காளியை உணவில் சேர்த்துக்கொள்வது சமச்சீரான உணவுமுறையின் ஒரு பகுதியாக நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்திற்கும் துணைப்புரியும்.</p><p><b>&nbsp;ஆன்டி-ஆக்சிடன்ட்</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6759a5e5-8798-4a5b-b958-f401bebd5769/26-6aaffc5b031fe.webp' /><b></b></p><p><b> </b></p><p>தக்காளியில் காணப்படும் லைகோபின் போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உடலில் உருவாகும் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்திலிருந்து செல்களைப் பாதுகாக்க உதவுகின்றன. சில ஆய்வுகளில் தக்காளி மற்றும் லைகோபின் உட்கொள்ளுதல் சில வகை புற்றுநோய்களின் அபாயத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.</p><p><b>உடல் எடை கட்டுப்பாடு&nbsp;</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5861323-51d7-477f-8003-7dd1dc953cee/26-6aaffc5bae74c.webp' /><b></b></p><p>

தக்காளியில் கலோரிகள் குறைவாகவும் நீர்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், உடல் எடையை கட்டுப்படுத்த விரும்புபவர்கள் அதை சாலட் அல்லது உணவின் ஒரு பகுதியாக சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் தக்காளியை மட்டும் சாப்பிடுவதால் உடல் எடை குறையும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒட்டுமொத்த உணவுமுறை மற்றும் உடற்பயிற்சியும் இதில் முக்கியம்.</p><p><b>கண் ஆரோக்கியம்</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e965a3fd-6f2a-4800-a615-a8464999bc88/26-6aaffc5c625ef.webp' /></p><p></p><p><b></b></p><p>உதவும்

தக்காளியில் வைட்டமின் A-க்கு தேவையான கரோட்டினாய்டுகள் மற்றும் லூட்டின் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை கண்களின் இயல்பான ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும்.</p><p>மொத்தத்தில், தக்காளி ஒரு சத்தான காய்கறி.அதை தினசரி உணவில் அளவோடு சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமான உணவுமுறைக்கு நல்ல பங்களிப்பாக இருக்கும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T15:45:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் எதிர்ப்பை மீறி புலம்பெயர்ந்தோருக்கு புகலிடம்: குழந்தைளுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/protesters-marched-in-crowborough-for-asylum-camp-1789919083"></link>
            <id>https://news.lankasri.com/article/protesters-marched-in-crowborough-for-asylum-camp-1789919083</id>
            <summary type="text">Protesters marched in crowborough for asylum camp: பிரித்தானியாவில் முன்னாள் இராணுவத் தளம் புலம்பெயர்ந்தோருக்கான புகலிட முகமாக மாற்றப்பட்டதையடுத்து போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Protesters marched in crowborough for asylum camp: பிரித்தானியாவில் முன்னாள் இராணுவத் தளம் புலம்பெயர்ந்தோருக்கான புகலிட முகமாக மாற்றப்பட்டதையடுத்து போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர்.
</p><p>
பிரித்தானியாவில் மக்களின் எதிர்ப்பை மீறி, முன்னாள் இராணுவத் தளம் ஒன்று புலம்பெயர்ந்தோருக்கான முகாமாக மாற்றப்பட்டதால் போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர்.&nbsp;</p><h2>புலம்பெயர்ந்தோருக்கான புகலிட முகாம் </h2><p>

சசெக்ஸின் Crowborough-யில் முன்னாள் இராணுவத் தளம் ஒன்று, ஆண் புலம்பெயர்ந்தோருக்கான புகலிட முகாமாக மாற்றப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb20abd0-93a7-433e-a7a4-6c248a65e775/26-6ab00014c4066.webp' />&nbsp;</p><p></p><p>

ஆனால், அங்கு வசிப்பவர்களின் பாதுகாப்பு, வளங்களின் மீதான அழுத்தம் மற்றும் தளத்தின் அளவு ஆகியவற்றிற்கு எதிராக உள்ளூர் மக்களின் கடும் எதிர்ப்பு எழுந்தது.</p><p> 

அந்த எதிர்ப்பையும் மீறி புகலிட முகாம் செயல்படத் தொடங்கிய நிலையில், அதன் கொள்ளளவை 540 ஆக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2>ஆர்ப்பாட்டத்தில்&nbsp;ஆயிரக்கணக்கானோர் </h2><p> </p><p>

இதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் குடும்பங்கள் மற்றும் சிறு குழந்தைகள் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். </p><p>

'Crowborough வேண்டாம் என்கிறது' என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி மக்கள் திரண்டனர்.

இந்த பேரணி இராணுவத் தளத்தில் தொடங்கி நகர மையத்திற்குள் நகர்ந்தது.
</p><p>
 அதே சமயம், 'புலம்பெயர்ந்தோர் வரவேற்கப்படுகிறார்கள்', 'கருணையே எங்கள் பலம்' மற்றும் 'ஒன்றாக இணைந்தால் வலிமை' என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி எதிர் ஆர்ப்பாட்டக்காரர்களும் வந்திருந்தனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5738972c-62a8-497c-b6d2-96c350805f9d/26-6ab00015b024e.webp' /></p>]]></content>
            <updated>2026-09-20T15:44:39+00:00</updated>
        </entry>
    </feed>
