<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-27T01:42:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தை மக்கள் தொடர்ந்தும் ஆதரிக்கின்றனர் – பிரதீப்குமார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-are-with-npp-govt-says-pratheep-1785115105"></link>
            <id>https://tamilwin.com/article/people-are-with-npp-govt-says-pratheep-1785115105</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை மக்கள் தொடர்ந்தும் ஆதரித்து வருவதாக பெருந்தோட்ட மற்றும் சமுதாய உள்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை மக்கள் தொடர்ந்தும் ஆதரித்து வருவதாக பெருந்தோட்ட மற்றும் சமுதாய உள்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
</p><p>எதிர்க்கட்சியினர் எவ்வாறான விமர்சனங்களை முன்வைத்த போதிலும், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடனும் தற்போதைய அரசாங்கத்துடனுமே நிற்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
ஹட்டனில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47cbd9e8-fc6f-48cb-8cff-f155664c4fc3/26-6a66b1e2aaf45.webp' /></p><p>
</p><p>அண்மையில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தொடர்ந்து எதிர்க்கட்சி முற்றிலும் அரசியல் ரீதியாக நலிவடைந்து போயுள்ளது என்பது தெளிவாகிறது என தெரிவித்துள்ளார்.
</p><p>அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்வதை விடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் பலமானதொரு எதிர்க்கட்சியை உருவாக்கவே முயல வேண்டும் என தெரிவித்துள்ளார்.</p><p>
இன்று எதிர்க்கட்சியைச் சுற்றி சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்கள், பிணையில் இருப்பவர்கள் மற்றும் பல்வேறு ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய நபர்களே சூழ்ந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஜனாதிபதியுடனும் அரசாங்கத்துடனும் இருக்கிறார்கள் எனவும், குறிப்பாக பெருந்தோட்டங்களைச் சேர்ந்த மக்களில் 95 சதவீதமானோர் அரசாங்கத்துக்கே ஆதரவாக உள்ளனர் எனவும் பிரதி அமைச்சர் பிரதீப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T01:18:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரை நூற்றாண்டு இலங்கையை ஆளும் சாபமும், தென்னிலங்கையின் வரலாற்று குருட்டுத்தனமும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/curse-that-has-ruled-sri-lanka-for-half-a-century-1785114215"></link>
            <id>https://ibctamil.com/article/curse-that-has-ruled-sri-lanka-for-half-a-century-1785114215</id>
            <summary type="text">1982 ஆம் ஆண்டின் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் , வழக்கமான வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்த நீதிபதிகளும், அரச வழக்கறிஞர்களும் அன்றைய நாளை வழமையான ஒரு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>1982 ஆம் ஆண்டின் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் , வழக்கமான வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்த நீதிபதிகளும், அரச வழக்கறிஞர்களும் அன்றைய நாளை வழமையான ஒரு சாதாரணத் தீர்ப்புக்கான நாளாகவே பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், அன்று சாட்சிக் கூண்டில் நின்றிருந்த இரு மனிதர்கள் பேசத் தொடங்கியபோது, அந்த நீதிமன்ற அறை இலங்கைத் தீவின் கடந்த காலப் பாவங்களையும், எதிர்காலச் சீரழிவையும் பதிவுசெய்யும் வரலாற்று அரங்கமாக மாறி நின்றது.&nbsp;</p><p>
தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) அமைப்பின் தலைவர்களான குட்டிமணியும் தங்கத்துரையும் மரண தண்டனைத் தீர்ப்புக்கு முன் ஆற்றிய அந்த உரைகள், தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் நியாயத்தைப் பேசியவை மட்டுமல்ல அது இலங்கை எனும் பேரினவாதக் கட்டமைப்பு தன் சொந்தக் கையால் தன் கண்ணைக் குத்திக்கொள்ளப் போகும் வரலாற்றுத் துயரத்தைப் பதிவு செய்த அரசியல் திறனாய்வு ஆகும்.</p><h3>
தென்னிலங்கையின் முகத்தில் அறைந்த வதைமுகாம்களின் இடப்பெயர்வு</h3><p>
அன்று குட்டிமணி பேசுகின்றபோது சுட்டிக்காட்டிய ஶ்ரீலங்கா தேசத்திற்கான மிக ஆபத்தான எச்சரிக்கை என்னவென்றால் "இன்று தமிழ் இளைஞர்கள் மீது பிரயோகிக்கப்படும் அதே சித்திரவதைகளும் வதைமுகாம்களும், நாளை ஹம்பாந்தோட்டைக்கும் குருநாகலுக்கும் கொண்டு செல்லப்படலாம்."</p><p>

அன்று கொழும்பிலும் தென்னிலங்கையிலும் வாழ்ந்த பேரினவாத மேட்டிமைவாதிகள் இந்த வார்த்தைகளைக் கேட்டு எள்ளி நகையாடியிருக்கக் கூடும். ஆனால், அரசு எனும் அதிகார இயந்திரத்திற்கு இனம், மொழி, மதம் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது . எப்போதும் அதற்குத் தேவை அடக்குமுறைக்கான ஒரு நியாயப்பாடு மட்டுமே என்பதை குட்டிமணி அன்றே அம்பலப்படுத்தினார்.</p><p>

அவர் சொன்னபடியே நடந்தது. தமிழ் இளைஞர்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டமும் (PTA), அவசரகாலச் சட்டங்களும், சித்திரவதைக் கூடங்களும் 1980 களின் பிற்பகுதியில் ஶ்ரீலங்காவின் தென்னிலங்கைச் சிங்கள இளைஞர்களையே காவு வாங்கியது.&nbsp;</p><p>
ஜே.வி.பி கிளர்ச்சியின் போது பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் கொன்றொழிக்கப்பட்டு, அவர்களின் உடல்கள் ஆறுகளில் மிதந்தபோதுதான், குட்டிமணி எச்சரித்த அந்த ‘வதைமுகாம்களின் இடப்பெயர்வு’ தென்னிலங்கைக்குப் புரிந்தது.</p><p>

இருபத்தோராம் நூற்றாண்டிலும், அதாவது 2022 ‘அரகலய’ போராட்டத்தின் போது அரச அடக்குமுறைக்கு எதிராக வீதிக்கு வந்த சிங்கள இளைஞர்கள் மீது அதே பயங்கரவாதத் தடைச் சட்டம் பாய்ந்தபோது, அரசுசார் வன்முறை என்பது சிங்களச் சமூகத்தையும் விட்டுவைக்காது என்ற குட்டிமணியின் தீர்க்கதரிசனம் மீண்டும் ஒருமுறை இரத்தக்கறையுடன் அதே கொழும்பில் நிரூபணமானது.</p><h3>
ஶ்ரீலங்காவின் இனவாதப் போதையும், நடுத்தெருவில் நின்ற பொருளாதாரமும்</h3><p>
அதேபோலவே அன்றைய நீதிமன்ற கூண்டில் தங்கத்துரையின் அரசியல் விமர்சனம் இன்னும் ஆழமானது. அதாவது சிங்கள அதிகார வர்க்கத்தின் வர்க்க நலன்களையும், அவர்கள் மக்களை ஏமாற்றும் நுட்பத்தையும் அவர் தோலுரித்துக் காட்டினார் .&nbsp;</p><p>
அதாவது"இனப் பிரச்சினையைப் பூதாகரமாக்கி, அரசியல் பிழைப்பு நடத்துவது சிங்கள மக்கள் மத்தியில் எடுபடாத ஒரு காலம் வரும். அன்றுதான் சிங்கள மக்கள் தாம் மொழி தவிர்த்த ஏனைய விடயங்களில் அடிமைப்படுத்தப்பட்டிருப்பதை உணர்வார்கள்."</p><p>
இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதலே, நாட்டின் உண்மையான பொருளாதாரச் சீரழிவு, ஊழல், மேட்டிமை வர்க்கத்தின் சுரண்டல் ஆகியவற்றை மறைக்க ஆட்சியாளர்களுக்குக் கிடைத்த ஒரே அரசியல் மூலதனம் , தமிழர் எதிர்ப்பு மற்றும் ‘சிங்கள-பௌத்த ஆபத்து’ என்ற பூச்சாண்டிதான்.</p><p>

அன்றுமுதல் இன்றுவரை அரசியல்வாதிகள் ஊட்டிய இனவாத போதையில் திளைத்திருந்த தென்னிலங்கைச் சமூகம், நாட்டின் பொருளாதாரம் படிப்படியாகக் கட்டமைப்பு ரீதியாகச் சிதைக்கப்படுவதைக் கவனிக்கத் தவறியது.&nbsp;</p><p>

கடந்த 2022 இல் ஶ்ரீலங்க தேசம் முற்றாகத் திவாலாகி, எரிபொருளுக்கும் உணவுக்குமாக மக்கள் வீதிகளில் இறங்கி ஆட்சியாளர்களை விரட்டியடித்தபோதுதான் அன்றைய தங்கத்துரையின் வார்த்தைகள் உண்மையான வலிமையைப் பெற்றன.&nbsp;</p><p>
"இனவாதப் பகையை ஊட்டி எம்மை ஏமாற்றிவிட்டார்கள்" என்று போராட்டத்தில் ஈடுபட்ட தென்னிலங்கை இளைஞர்கள் உரக்கப் பேசியபோது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே தங்கத்துரை சொன்ன அந்த வரலாற்றுச் சக்கரம் சுழன்று முடித்திருந்தது.</p><h3>
 அபிவிருத்தி எனும் பொய் பிம்பமும், தமிழரின் சுயமரியாதையும்</h3><p>
இன்று வரை கொழும்பை ஆளும் ஆட்சியாளர்கள் அவர்கள் வலதுசாரிகளாக இருந்தாலும் சரி, இடதுசாரி வேஷம் போட்டவர்களாக இருந்தாலும் சரி தமிழ் மக்களின் பிரச்சினையை வெறும் "பொருளாதாரப் பிரச்சினை" என்றும் "அபிவிருத்தி சார்ந்த குறைபாடு" என்றும் சுருக்கவே முயல்கிறார்கள்.</p><p>
ஆனால், தங்கத்துரை அன்றே கேட்ட கேள்வி இதற்கு மிகப்பொருத்தமான ஒன்றாகும் அதாவது "உங்களிடம் தமிழ் மக்கள் எதை எதிர்பார்த்தார்கள்? பொருளாதாரத்தையோ அன்றி வேலைவாய்ப்பையோ அல்ல . இத்தீவில் தமிழர் தொடர்ந்து தமிழராக வாழ்வதற்கு என்ன உத்தரவாதம் உங்களால் வழங்க முடியும்?"</p><p>

இன்றைய சூழலிலும் வடக்கு-கிழக்கில் தொடரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், தொல்லியல் துறை என்ற பெயரிலான நில ஆக்கிரமிப்புகள், இராணுவமயமாக்கல் ஆகியவை தங்கத்துரையின் அன்றைய அந்தக் கேள்விக்கு இன்றளவும் கொழும்பு பதில் வைத்திருக்கவில்லை என்பதையே காட்டுகின்றன.&nbsp;</p><p>
உண்மையில் உரிமையற்ற அபிவிருத்தி என்பது ஒரு அடிமைக்கு வழங்கப்படும் வசதியான கூடு மட்டுமே தவிர, அது சுதந்திரமல்ல என்பதில் தமிழ் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.</p><h3>
தோண்டப்பட்ட கண்களும், சிங்கள தேசத்தில் கழன்று விழுந்த பௌத்த விழுமியங்களும்</h3><p>
"நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்" என்ற குட்டிமணியின் இறுதி ஆசை, ஒரு தனிநபரின் உணர்ச்சிப் பெருக்கு அல்ல அது ஒரு தேசத்தின் விடுதலையை நோக்கிய ஆகச்சிறந்த அரசியல் அர்ப்பணிப்பு ஆகும் .</p><p>

அன்று நீதிமன்றம் அளித்த மரண தண்டனையைக் காட்டிலும், குட்டிமணியின் அந்த வார்த்தைகளின் அரசியல் பலத்தைக் கண்டு கலங்கிந ஶ்ரீலங்க அரச இயந்திரம், 1983 கறுப்பு ஜூலை வெலிக்கடைச் சிறைப் படுகொலையின் போது சிறைக்குள்ளேயே அவர்களைக் கொடூரமாகப் படுகொலை செய்தது. குட்டிமணியின் கண்களைத் தோண்டி எடுத்த அந்த அரச வன்முறையானது , ஶ்ரீலங்க அரசு தன் சொந்தச் சட்டத்தின் மீதும், நீதியின் மீதும் கொண்டிருந்த அஞ்சாமையைக் காட்டவில்லை அதற்கு மாறாக அது அவர்களின் பயத்தையும், நாகரிகமற்ற காட்டுமிராண்டித்தனத்தையுமே உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டியது.</p><p>

குட்டிமணியும் தங்கத்துரையும் அன்று அங்கு பேசியது வெறும் அரியல் ஆர்வமுடைய விடுதலை வேட்கை கொண்ட இரண்டு இளைஞர்களின் எழுந்தமானமான உணர்வுந்திய வெறும் வார்த்தைகள் அல்ல அது இலங்கைத் தீவு தனக்குத் தானே தோண்டிக் கொண்ட அரசியல் குழியைப் பற்றிய முன் அறிவிப்பு ஆகும்.</p><p>
இன்று இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் கதவுகளைத் தட்டிக்கொண்டும், அரசியல் மறுசீரமைப்புப் பற்றிப் பேசிக்கொண்டும் இருந்தாலும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையையும், கடந்த காலப் போர்க்குற்றங்களுக்கான நீதியையும் அங்கீகரிக்காத வரை இந்தத் தீவுக்கு விமோசனம் இல்லை.</p><p>
"அடுத்தவனின் சுதந்திரத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் எந்தவொரு சமூகமும், தனது சொந்தச் சுதந்திரத்தையும் தக்கவைத்துக்கொள்ள முடியாது" என்ற குட்டிமணி-தங்கத்துரையின் எச்சரிக்கையை தென்னிலங்கை சமூகம் என்றைக்கு முழுமையாக உணர்கிறதோ, அன்றைக்குத்தான் இந்தத் தீவில் உண்மையான அரசியலும் விடுதலையும் சாத்தியமாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td><b>பொறுப்பு துறப்பு!
</b><br>இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் பா.பிரியங்கன் அவரால் எழுதப்பட்டு, 27 July, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-27T01:10:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆளும் கட்சி உறுப்பினர் ஹசித நிரோசனின் கருத்து கட்சியின் நிலைப்பாடு அல்ல]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-stand-clearifiy-about-basl-prisident-1785114121"></link>
            <id>https://tamilwin.com/article/npp-stand-clearifiy-about-basl-prisident-1785114121</id>
            <summary type="text">இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ விஜேசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடத் தயாராகி வருவதாக நாடாளும...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ விஜேசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடத் தயாராகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன தெரிவித்த கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
</p><p>இந்த கருத்து , கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல என தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>நாடாளுமன்றத்தில் இவ்வாறான உரைகளை நிகழ்த்தும்போது அவை தனிப்பட்ட முறையில் இடம்பெறுவதாகவும், அந்த கூற்றுகளுக்கான பொறுப்பு சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரையே சாரும் என்றும் அபேசிங்க சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/891abf95-202d-47cf-8df5-8577a6736292/26-6a66ae0bb01c9.webp' /></p><p>
இவ்விவகாரம் தொடர்பாக கட்சிக்குள் எவ்வித பொதுவான கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டு தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால அரசியல் பயணம் எதிர்வரும் செப்டம்பர் 6-ஆம் திகதி களுத்துறை மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் எனவும், அங்கு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் மக்களுடன் இணைய எதிர்பார்ப்பதாகவும் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.</p><p>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது தொடர்பாக தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அது குறித்து மேலும் விவாதித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இது தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்து வரும் எதிர்ப்புகள் குறித்தும் கட்சியின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T01:02:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி மாளிகையின் பயன்பாடு குறித்து வெளியான முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-didnt-use-the-prisident-house-1785112631"></link>
            <id>https://tamilwin.com/article/anura-didnt-use-the-prisident-house-1785112631</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி மாளிகைகளை பயன்படுத்தாத போதிலும் அதனை வேறும் நபர்கள் பயன்படுத்தியுள்ளதாக தகவல்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி மாளிகைகளை பயன்படுத்தாத போதிலும் அதனை வேறும் நபர்கள் பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>கடந்த 2025 ஆம் ஆண்டில் நாட்டில் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் ஜனாதிபதி அறுர தங்கவில்லை என்ற போதிலும், அவற்றில் பெரும்பாலானவற்றில் பல்வேறு நபர்கள் தங்கியிருந்ததாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. </p><p>
கடந்த 2025ம் ஆண்டில் இவ்வாறு ஜனாதிபதி மாளிகைகளில் 3,089 பேர் தங்கியுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af450456-4464-4273-b160-462fc8500144/26-6a66a83927cdc.webp' /></p><p>
அந்அலுவலகம் வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையில், இக்காலப்பகுதியில் நடத்தப்பட்ட கூட்டங்களின் எண்ணிக்கை 3 ஆகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>நாடு முழுவதிலும் காணப்படும் 7 ஜனாதிபதி மாளிகைகளது மின்சாரம், தொலைபேசி உள்ளிட்ட ஏனைய வசதிகளுக்காக அந்த ஆண்டில் 32,982,675 ரூபா செலவிடப்பட்டுள்ளது.
</p><p>கதிர்காமம், மஹியங்கனை மற்றும் பெந்தோட்டை மாளிகைகளில் 2025 ஆம் ஆண்டில் எந்தவொரு கூட்டமோ அல்லது தங்குதலோ இடம்பெறவில்லை என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>எனினும், 2025 ஆம் ஆண்டில் தொலைபேசி, மின்சாரம் உள்ளிட்ட ஏனைய செலவுகளுக்காக ரூபா 2,447,754 செலவிடப்பட்டுள்ளது.</p><p>
ஜனாதிபதிக்கென ஒதுக்கப்பட்ட 7 மாளிகைகள் கொழும்பு கோட்டை, கண்டி, அனுராதபுரம், கதிர்காமம், மஹியங்கனை, நுவரெலியா மற்றும் பெந்தோட்டை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>
தேர்தல் காலத்திலுயே ஜனாதிபதி மாளிகைகளை பயன்படுத்தப் போவதில்லை என தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>இதேவேளை, இந்த ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருந்த நபர்கள் யார் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T00:57:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஜித்திற்கு லஞ்ச விசாரணை ஆணைக்குழு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sajith-summoned-before-ciaboc-1785111551"></link>
            <id>https://ibctamil.com/article/sajith-summoned-before-ciaboc-1785111551</id>
            <summary type="text">லஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அழைப்பாணையில், ஆணைக்குழுவின் முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>லஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>குறித்த அழைப்பாணையில், ஆணைக்குழுவின் முன் இன்று(27) முன்னிலையாகுமாறே தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>நாடாளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமாக சமிந்த குலரத்ன நியமிக்கப்பட்டது தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை தொடர்பிலேயே அவருக்கு இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.</p><p></p><h2>மாற்றப்பட்ட திகதி</h2><p> </p><p>எவ்வாறாயினும், தான் ஒகஸ்ட் 03 ஆம் திகதி ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகவுள்ளதாக தனது சட்டத்தரணிகள் மூலம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c139ea40-6e5a-4722-9e16-c27f63d780f2/26-6a66ac2327f4e.webp' /></p><p> அந்த வகையில், சமிந்த குலரத்ன தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைவாக கடந்த சில மாதங்ளுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகம் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-27T00:56:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரம்பின் 50% வரி விதிப்பு அச்சுறுத்தல்: ஆல்பர்ட்டா பிரதமரின் அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/alberta-premier-says-she-wont-retaliate-trumps-1785076499"></link>
            <id>https://canadamirror.com/article/alberta-premier-says-she-wont-retaliate-trumps-1785076499</id>
            <summary type="text">கனடியப் பொருட்கள் மீது 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கைக்குப் பதிலடியாக, அமெரிக்க மதுபானங்களுக்குத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடியப் பொருட்கள் மீது 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கைக்குப் பதிலடியாக, அமெரிக்க மதுபானங்களுக்குத் தடை விதிக்கப் போவதில்லை என ஆல்பர்ட்டா மாகாணப் பிரதமர் டேனியல் ஸ்மித் தெரிவித்துள்ளார். </p><p>
சனிக்கிழமை ஒளிபரப்பான வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>தங்களது கடைகளில் அமெரிக்கப் பொருட்களை விற்பனைக்கு வைப்பது மற்றும் நுகர்வது குறித்த முடிவை சில்லறை வியாபாரிகளிடமும், நுகர்வோரிடமுமே விட்டுவிடுவதாகக் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/824fa86f-abb5-425c-ad1b-c86a9b2e5fb1/26-6a661b14a3e13.webp' /></p><p>
கனடாவிலிருந்து அமெரிக்காவிற்குள் செல்லும் எந்தவொரு பொருளுக்கும் அமெரிக்கா தடை விதிக்கவில்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
</p><p>எனவே பதிலுக்கு நாம் தடை விதிப்பது என்பது சற்று தீவிரமான நடவடிக்கையாகிவிடும் எனவும் நாம் இதைக் நிதானமாகவும் அமைதியாகவும் கையாள வேண்டும் எனவும் உணர்ச்சிவசப்படாமல், துறை சார்ந்த சிக்கல்களை ஒவ்வொன்றாக அணுகித் தீர்க்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>கடந்த ஆண்டு டிரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் கருத்துகளுக்குப் பதிலடியாக, கனடாவின் பல மாகாண மதுபானக் கட்டுப்பாட்டு வாரியங்கள் அமெரிக்க மதுபானங்களை வாங்குவதை நிறுத்தியிருந்தன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T00:54:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை உலுக்கிய கொள்ளைக் கும்பல் ; PickMe சாரதி கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shocking-twist-in-pickme-driver-murder-case-1785086629"></link>
            <id>https://jvpnews.com/article/shocking-twist-in-pickme-driver-murder-case-1785086629</id>
            <summary type="text">நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி மற்றும் பிற ஆயுதங்களைப் பயன்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தி பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி மற்றும் பிற ஆயுதங்களைப் பயன்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தி பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரையும், அவரது மகனையும் ஹோமகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், பனாகொட இராணுவ முகாமின் விளையாட்டுப் பிரிவின் பொறுப்பாளராக முன்னர் பணியாற்றிய முன்னாள் இராணுவ அதிகாரி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h3>ஆரம்பகட்ட விசாரணை</h3><p> </p><p>ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர் தனது மகனுடன் இணைந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cf33b6f-49a7-4bc8-aa71-8e753ce779f5/26-6a6642a85c088.webp' /></p><p>
கடந்த 16ஆம் திகதி அதிகாலை ஹோமகம, கலகஹேன பகுதியில் உள்ள கால்வாயொன்றில் இருந்து வாடகை மோட்டார் சைக்கிள் சேவையில் (PickMe) ஈடுபட்டிருந்த சாரதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. </p><p>பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில், அவரது கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.</p><p>

கொலை செய்யப்பட்ட சாரதியின் மோட்டார் சைக்கிள், தங்க நெக்லஸ், கையடக்கத் தொலைபேசி மற்றும் பணப்பை ஆகியனவும் கொள்ளையிடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, உயிரிழந்த PickMe சாரதி மற்றொருவரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்றிருந்தது கண்டறியப்பட்டது.</p><p> இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், அந்த நபரே சாரதியைக் கொலை செய்திருந்ததாகவும், பின்னர் அவர் மற்றும் அவரது தந்தை இணைந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.</p><p>

விசாரணைகளின்படி, கொலை இடம்பெற்ற மறுநாளே, சந்தேகநபர்கள் உயிரிழந்த சாரதியின் மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி மொரகஹஹேன பகுதியில் பெண்ணொருவரை கூர்மையான ஆயுதங்களால் அச்சுறுத்தி அவரது தங்க நெக்லஸை கொள்ளையிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h3>மேலதிக விசாரணை</h3><p>
</p><p>
மேலும், ஹோமகம, அவிசாவளை, கிரியுல்ல மற்றும் தெஹியோவிட்ட பகுதிகளில் இடம்பெற்ற நான்கு தனித்தனி ஆயுதக் கொள்ளைச் சம்பவங்களுடனும் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c79eb11-d6a2-4146-bb59-2fefa3289316/26-6a6642a7a84eb.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், ஹோமகம, பிட்டிபன பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேகநபர் தங்கியிருப்பதாக கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், முன்னாள் இராணுவ அதிகாரியும் அவரது மகனும் கைது செய்யப்பட்டனர்.</p><p>

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டொன்றும், 500 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>அத்துடன், குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல்சர் ரக மோட்டார் சைக்கிளும், இரத்தக்கறை படிந்திருந்த மோட்டார் சைக்கிள் தலைக்கவசமொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமகம பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். </p><p>கைது செய்யப்பட்ட தந்தை மற்றும் மகனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T00:54:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெலென்ஸ்கியை முதல் வெளிநாட்டு விருந்தினராக வரவேற்கும் புதிய பிரித்தானிய பிரதமர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/burnham-welcomes-zelenskiy-as-first-guest-1785109278"></link>
            <id>https://news.lankasri.com/article/burnham-welcomes-zelenskiy-as-first-guest-1785109278</id>
            <summary type="text">பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆன்டி பர்னாம், தனது பதவியேற்புக்குப் பிறகு முதல் வெளிநாட்டு விருந்தினராக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை வரவேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆன்டி பர்னாம், தனது பதவியேற்புக்குப் பிறகு முதல் வெளிநாட்டு விருந்தினராக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை வரவேற்கிறார்.</p><p>இந்த சந்திப்பு, பிரித்தானியா உக்ரைனுக்கு வழங்கும் உறுதியான ஆதரவை மீண்டும் வலியுறுத்துகிறது.
</p><p>
இரு தலைவர்களும் பிரித்தானியாவில் உள்ள கடற்படை தளத்தில் சந்தித்து, பிரித்தானியா தலைமையில் நடைபெறும் பயிற்சி திட்டங்கள் உக்ரைன் படைகளின் திறனை எவ்வாறு மேம்படுத்துகின்றன என்பதை நேரடியாக பார்வையிட உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7727cc1-91be-4c8b-8512-3d7a7bcb95d8/26-6a669b2055d0a.webp' /></p><p>“பிரித்தானியா எப்போதும் உக்ரைனுடன் தோளோடு தோள் நின்று போராடும். ரஷ்யா எங்கள் உறுதியை சந்தேகிக்கக் கூடாது” என்று பர்னாம் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த விஜயத்தின் போது, கடந்த மூன்று வாரங்களாக பிரித்தானியாவில் பயிற்சி பெற்ற 200-க்கும் மேற்பட்ட உக்ரைன் படையினரையும் கடற்படையினரையும் இரு தலைவர்களும் சந்திக்க உள்ளனர். </p><p>‘Exercise Sea Breeze’ எனப்படும் கடல் பாதுகாப்பு மற்றும் கண்ணிவெடி எதிர்ப்பு பயிற்சியில் அவர்கள் பங்கேற்றுள்ளனர்.
</p><p></p><p>2022ஆம் ஆண்டு ரஷ்யா முழுமையான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, பிரித்தானியா உக்ரைனுக்கு 25 பில்லியன் பவுண்டு மதிப்பிலான உதவிகளை வழங்கியுள்ளது. </p><p>இதில் 16 பில்லியன் பவுண்டு இராணுவ உதவியும், 5.6 பில்லியன் பவுண்டு இராணுவத்திற்கு அப்பாற்பட்ட உதவிகளும் அடங்கும்.</p><p>முன்னாள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பதவி விலகுவதற்கு முன் உக்ரைனுக்கு சென்றபோது, 16 Gripen போர் விமானங்களை வழங்க 300 மில்லியன் யூரோ உதவி அறிவித்திருந்தார்.
</p><p>
இந்த சந்திப்பு, பிரித்தானியா-உக்ரைன் உறவை மேலும் வலுப்படுத்துவதோடு, ரஷ்யாவிற்கு எதிரான போராட்டத்தில் உக்ரைனுக்கு சர்வதேச ஆதரவு தொடர்வதை வெளிப்படுத்துகிறது.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-27T00:52:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[NISAR S-Band SAR தரவுகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வெளியிட்ட ISRO]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/isro-opens-nisar-s-band-sar-data-access-1785113512"></link>
            <id>https://news.lankasri.com/article/isro-opens-nisar-s-band-sar-data-access-1785113512</id>
            <summary type="text">இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), NISAR S-Band Synthetic Aperture Radar (SAR) தரவுகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிட்டது.

இதன் மூலம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), NISAR S-Band Synthetic Aperture Radar (SAR) தரவுகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிட்டது.</p><p>

இதன் மூலம் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பயனர்கள், பேரிடர் மேலாண்மை, வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு போன்ற துறைகளில் மேம்பட்ட செயற்கைக்கோள் தரவுகளை பயன்படுத்த முடியும்.
</p><h2>
NISAR திட்டம்</h2><p>NASA–ISRO Synthetic Aperture Radar (NISAR) உலகின் முதல் இரட்டை அலைவரிசை (L-band மற்றும் S-band) ரேடார் செயற்கைக்கோள் ஆகும். இது 12 நாட்களுக்கு ஒருமுறை பூமியின் மேற்பரப்பை உயர் தெளிவுத்திறனுடன், அனைத்து வானிலை சூழலிலும் படம்பிடிக்கும் திறன் கொண்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9697c68-a7ee-4514-84ca-776935ec7fb7/26-6a66abaa2fd45.webp' /></p><p>
</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">தரவு செயலாக்கம்</span></h2><p> S-band SAR தரவுகள் ISRO-வின் தரை நிலையங்களில் சேகரிக்கப்பட்டு, NRSC, ஷாத்நகர் (IMGEOS) மையத்தில் செயலாக்கப்படுகின்றன. ஜூலை 8, 2026 முதல் தொடங்கிய Cycle 25-இல் சேகரிக்கப்பட்ட அனைத்து தரவுகளும் தற்போது பதிவிறக்கத்திற்குத் தயாராக உள்ளன. பழைய தரவுகள் மறுசெயலாக்கம் செய்யப்பட்டு படிப்படியாக காப்பகத்தில் சேர்க்கப்படும்.
</p><h2>
பயன்பாடுகள்</h2><p>வெளியிடப்பட்ட தரவுகளில் Standard SAR datasets, Interferometric products, Pixel offset products ஆகியவை அடங்கும். இவை பேரிடர் மேலாண்மை, நிலப்பயன்பாடு ஆய்வு, புவியியல் அபாய மதிப்பீடு, வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு போன்ற பல்வேறு துறைகளில் பயன்படும்.</p><p></p><p>
</p><h2>
அணுகுமுறை</h2><p> 
பதிவுசெய்யப்பட்ட பயனர்கள் ISRO-வின் Bhoonidhi போர்டல் மூலம் NISAR தரவுகளை தேடவும், காட்சிப்படுத்தவும், பதிவிறக்கவும் முடியும். மேலும், தரவு மாற்றம், geospatial analysis, SAR processing போன்ற கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்த வெளியீடு, இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி திறனை உலகளவில் வலுப்படுத்துவதோடு, அறிவியல் ஆராய்ச்சிக்கும், நடைமுறை பயன்பாடுகளுக்கும் பெரும் பங்களிப்பை வழங்குகிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-27T00:52:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் புதிய திட்டத்தை கடுமையாக விமர்சித்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/private-bus-owners-association-criticizes-govt-1785111743"></link>
            <id>https://tamilwin.com/article/private-bus-owners-association-criticizes-govt-1785111743</id>
            <summary type="text">இலங்கைப் போக்குவரத்துச் சபையில் (SLTB) 600 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தை இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைப் போக்குவரத்துச் சபையில் (SLTB) 600 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தை இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் விமர்சித்துள்ளது.</p><p> இந்த நடவடிக்கை தனியார் பேருந்துத் தொழிலை மேலும் பாதிக்கும் ஒரு தேசியக் குற்றம் என்றும் அச்சங்கம் கூறியுள்ளது.</p><p>

</p><p>இது தொடர்பில் அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, "SLTB 6,000 பேருந்துகளைப் பெறுவதில் தனியார் பேருந்து நடத்துனர்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.</p><p>ஆனால் வெறுமனே பேருந்துகளைச் சேர்ப்பது அரசால் நடத்தப்படும் போக்குவரத்துச் சேவையின் நிதி மற்றும் செயல்பாட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்குமா?&nbsp;</p><p></p><h2>பிரச்சினைகளுக்கு தீர்வு&nbsp;</h2><p>அவர்கள் 600 பேருந்துகளைக் கொண்டு வந்தாலும் சரி, 6,000 பேருந்துகளைக் கொண்டு வந்தாலும் சரி, எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், அதிக பேருந்துகளைக் கொண்டு வருவதால் மட்டும் SLTB ஒருபோதும் மீண்டு வராது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/098725da-25b5-4c2f-a3e9-465e89c40db0/26-6a66ab8391cfb.webp' /></p><p>
பொதுப் போக்குவரத்துப் பயணிகளில் கணிசமான பங்கை தனியார் பேருந்துகளே தொடர்ந்து ஏற்றிச் செல்கின்றன, முறையான சாத்தியக்கூறு மதிப்பீடு இல்லாமல் SLTB பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தனியார் நடத்துனர்களைப் பாதகமாகப் பாதிக்கும்.</p><p>

SLTB கிட்டத்தட்ட ரூபா தினசரி 2 கோடி பயணிகள் பயணம் செய்வதுடன், 2025ஆம் ஆண்டில் தொடருந்து திணைக்களமானது 47 பில்லியன் ரூபாய் செலவினத்திற்கு எதிராக 17 பில்லியன் ரூபாய் வருவாயைப் பதிவு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் புள்ளிவிவரங்கள்&nbsp;சமர்ப்பிக்கப்பட்டன.&nbsp;</p><p>

கூடுதல் பேருந்துகளை வாங்குவதோடு மட்டும் நின்றுவிடாமல், மாநிலப் போக்குவரத்தில் உள்ள செயல்திறன் குறைபாடுகளைச் சரிசெய்ய வேண்டும்.&nbsp;</p><p>மேலும், பேருந்து சேவைகளின் விரிவாக்கம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சங்கம் பரிசீலித்து வருகின்றது” என்றார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T00:51:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[முறை தவறிய அதிகாரி ; எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/officer-who-erred-action-taken-1785112870"></link>
            <id>https://jvpnews.com/article/officer-who-erred-action-taken-1785112870</id>
            <summary type="text">கம்பஹா, வத்துப்பிட்டிவல முதலீட்டு வலய காவல்துறை சாவடியில் பணியாற்றும் ஒரு உதவி காவல்துறை அதிகாரி பொதுமக்களிடம் முறையற்ற மற்றும் அச்சுறுத்தும் வகையில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா, வத்துப்பிட்டிவல முதலீட்டு வலய காவல்துறை சாவடியில் பணியாற்றும் ஒரு உதவி காவல்துறை அதிகாரி பொதுமக்களிடம் முறையற்ற மற்றும் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து, உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>

இந்தச் சம்பவம், 2026 ஜூலை 23 ஆம் திகதி,வத்துப்பிட்டிவல மருத்துவமனைக்கு அருகிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் முன்பாக இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/095d4f0b-dcc8-4838-8840-8d40001a8c5a/26-6a66a9284a579.webp' /></p><p>சீருடையில் இருந்த அந்த அதிகாரி, அங்கிருந்தவர்களுடன் கடுமையான, அச்சுறுத்தும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>
இதனையடுத்தே அவர்,நிறுவனங்கள் நெறிமுறை விதிகளின்படி, பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T00:41:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[Toyota Fortuner போட்டியாக இந்தியாவில் புதிய Kia Sorento அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kia-sorento-to-rival-toyota-fortuner-in-india-1785112814"></link>
            <id>https://news.lankasri.com/article/kia-sorento-to-rival-toyota-fortuner-in-india-1785112814</id>
            <summary type="text">இந்தியாவில் பிரபலமான Toyota Fortuner-க்கு போட்டியாக, Kia நிறுவனம் தனது புதிய Sorento SUV-வை அறிமுகப்படுத்தத் தயாராகியுள்ளது.

ஏற்கனவே உலக சந்தைகளில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் பிரபலமான Toyota Fortuner-க்கு போட்டியாக, Kia நிறுவனம் தனது புதிய Sorento SUV-வை அறிமுகப்படுத்தத் தயாராகியுள்ளது.
</p><p>
ஏற்கனவே உலக சந்தைகளில் விற்பனை செய்யப்படும் இந்த 7-சீட்டர் SUV, இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p></p><h2>

பாதுகாப்பு அம்சங்கள்</h2><p>Sorento, சர்வதேச சந்தையில் 9 ஏர்பேக், TPMS, ESC, ABS, VSM, ரோல்ஓவர் சென்சார் போன்ற பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது.
</p><p>
ANCAP சோதனையில் 5-நட்சத்திர மதிப்பீடு பெற்றுள்ளது. இந்தியாவில் BNCAP சோதனையிலும் இதே தரத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/489f293e-8c62-4fc7-b7f9-1b68dd77a4c7/26-6a66a8f0ce099.webp' /></p><p>
</p><h2>
டிஜிட்டல் வசதிகள்</h2><p>இரண்டு 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள் கொண்ட கர்வ் டூயல்-ஸ்கிரீன் அமைப்பு, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் Android Auto மற்றும் Apple CarPlay ஆகியவை வழங்கப்படுகின்றன. டூயல்-சோன் கிளைமேட் கண்ட்ரோல் டாஷ்போர்டில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.</p><h2>

Driver Assist</h2><p>Level-2+ ADAS அம்சங்கள், லேன் கீப் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமெட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங், 360-டிகிரி கேமரா, பிளைண்ட்-ஸ்பாட் மோனிட்டரிங் போன்ற வசதிகள் கிடைக்கும்.
</p><h2>
பிரீமியம் வசதிகள்</h2><p>வெண்டிலேட்டட் மற்றும் ஹீட்டட் சீட்கள், 14-வழி பவர் டிரைவர் சீட், 10-வழி பவர் கோ-டிரைவர் சீட், பனோராமிக் சன்ரூஃப், கேப்டன் சீட்கள் (இரண்டாம் வரிசை), அனைத்து வரிசைகளிலும் USB போர்ட்கள், வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் உள்ளன.</p><p></p><p>
</p><h2>
வடிவமைப்பு</h2><p>20-இன்ச் அலாய் வீல்கள், வெர்டிகல் LED ஹெட்லைட்கள், ரூஃப் ரெயில்கள் ஆகியவை Sorento-வுக்கு வலுவான, ஸ்டைலிஷ் தோற்றத்தை அளிக்கின்றன.</p><p>

இந்த SUV, இந்திய சந்தையில் Toyota Fortuner-க்கு வலுவான போட்டியாளராக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-27T00:38:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[கையில் அறுவை சிகிச்சை.. தமிழ்நாட்டுக்கு வந்த நடிகர் ராம் சரண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ram-charan-wrist-surgery-family-arrive-coimbatore-1785110230"></link>
            <id>https://cineulagam.com/article/ram-charan-wrist-surgery-family-arrive-coimbatore-1785110230</id>
            <summary type="text">நடிகர் ராம் சரண் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். அவர் பெத்தி என்ற படத்தில் நடித்தபோது கையில் காயம் ஏற்பட்ட நிலையில் அதற்காக சிகிச்சை எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் ராம் சரண் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். அவர் பெத்தி என்ற படத்தில் நடித்தபோது கையில் காயம் ஏற்பட்ட நிலையில் அதற்காக சிகிச்சை எடுத்து வருகிறார்.</p><p>அவரது கையில் wrist cartilage tear ஏற்பட்டு இருப்பதால் அதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக கோவைக்கு ராம் சரண் குடும்பத்தின் வந்திருக்கிறார்.</p><h2>அறுவை சிகிச்சை
</h2><p>கோவையில் இருக்கும் கங்கா மருத்துவமனையில் ராம் சரணுக்கு அறுவை சிகிச்சை நடக்க இருக்கிறது. அதற்காக ராம் சரண் மற்றும் அவர் குடும்பத்தினர் எல்லோரும் விமானம் மூலமாக ஹைதராபாத்தில் இருந்து கோவைக்கு வந்தனர்.</p><p>அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Telugu mega power star Ram Charan is to undergo surgery on his wrist at a private hospital in <a href="https://x.com/hashtag/Coimbatore?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Coimbatore</a> on Monday.<a href="https://x.com/xpresstn?ref_src=twsrc%5Etfw">@xpresstn</a> <a href="https://x.com/NewIndianXpress?ref_src=twsrc%5Etfw">@NewIndianXpress</a> <a href="https://x.com/AlwaysRamCharan?ref_src=twsrc%5Etfw">@AlwaysRamCharan</a> <a href="https://x.com/hashtag/RamCharan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#RamCharan</a> <a href="https://t.co/cPAThoemkV">pic.twitter.com/cPAThoemkV</a></p>&mdash; S Mannar Mannan (@mannar_mannan) <a href="https://x.com/mannar_mannan/status/2081385392578908421?ref_src=twsrc%5Etfw">July 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-07-27T00:30:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிரக மாற்றங்களால் எதிர்பார்க்காத அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/zodiac-signs-that-get-lucky-due-planetary-changes-1785111995"></link>
            <id>https://jvpnews.com/article/zodiac-signs-that-get-lucky-due-planetary-changes-1785111995</id>
            <summary type="text">ஆகஸ்ட் மாதம் இன்னும் சில நாட்களில் பிறக்கப்போகிறது. ஆகஸ்ட் மாதத்தில் பல சக்திவாய்ந்த கிரக மாற்றங்கள் நிகழ உள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் நடக்கப்போகும் கிரக ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆகஸ்ட் மாதம் இன்னும் சில நாட்களில் பிறக்கப்போகிறது. ஆகஸ்ட் மாதத்தில் பல சக்திவாய்ந்த கிரக மாற்றங்கள் நிகழ உள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் நடக்கப்போகும் கிரக மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு அவர்கள் எதிர்பார்க்காத அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகிறார்கள். ஆகஸ்ட் மாதம் முழுவதும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் பல நேர்மறையான மாற்றங்கள் காத்திருக்கிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bac1f02-c9ac-4d14-8367-4fc20e31698f/26-6a66a5bd04d28.webp' /></p><h3>ரிஷபம்</h3><p>
ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் அற்புதமான மாதமாக இருக்கப்போகிறது. நீங்கள் ஒரு புதிய வீடு அல்லது சொத்து வாங்குவது பற்றி யோசித்துக்கொண்டிருந்தால், இந்த மாதம் அதற்கு சிறந்த நேரமாகும். உங்கள் வீட்டிற்கு மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டுவர விலையுயர்ந்த பொருட்களுக்கும் நீங்கள் செலவிடலாம். வேலை தேடுபவர்களுக்கு சில நேர்மறையான செய்திகள் தேடிவரும். உங்கள் சமூக அந்தஸ்து மேம்படும், மேலும் உங்களின் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

இந்த மாதம் நிதி முதலீடுகளுக்கு, குறிப்பாக நீண்ட கால இலக்குகளுக்கு சாதகமானது, இந்த காலகட்டத்தில் செய்யப்படும் முதலீடுகள் லாபத்தைத் தரக்கூடும். உங்கள் ஆரோக்கியம் நிலையானதாக இருக்கும், மேலும் நீங்கள் மிகவும் உற்சாகமாக உணருவீர்கள். சரியான அணுகுமுறையுடன், இந்த நேரத்தை நீங்கள் சிறப்பாகப் பயன்படுத்தி உங்கள் இலக்குகளை அடையலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7b7f923-0bcf-46b1-aaac-5ebc66d0c543/26-6a66a5bfbc2aa.webp' /></p><h3>சிம்மம்
</h3><p>ஆகஸ்ட் மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு நேர்மறையானப் பலன்களைக் கொடுக்கும் மாதமாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகள் இறுதியாக நிறைவடைந்து, நிம்மதியான உணர்வைத் தரக்கூடும். நிதிநிலை அதிகரிப்பதால் இந்த காலகட்டத்தில் பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, நீங்கள் குடும்பத்துடன் தரமான நேரத்தை அனுபவிப்பீர்கள்.</p><p>உங்கள் தன்னம்பிக்கை அதிகரிப்பது பல்வேறு துறைகளில் நீங்கள் சிறந்து விளங்க உதவும். இந்த புதிய நம்பிக்கை நீங்கள் ஒரு காலத்தில் அடைய முடியாதது என்று நினைத்த சாதனைகளுக்கான கதவுகளைத் திறக்கும். மொத்தத்தில் இந்த மாதத்தில் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் மேலோங்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/126ac2e7-1870-488a-a4bf-d1e1aaabddb5/26-6a66a5bf0ce5f.webp' /></p><h3>துலாம்
</h3><p>துலாம் ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் மகிழ்ச்சியான மாதமாக இருக்கப்போகிறது. ஆகஸ்ட் மாதத்தில் நடக்கும் சக்திவாய்ந்த கிரக மாற்றங்கள் அவர்களின் வாழ்க்கையில் பல திருப்பங்களைக் கொண்டுவரப்போகிறது. இந்த காலகட்டத்தில் வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் மற்றும் தொழில் முன்னேற்றங்கள் ஏற்படலாம், அதே நேரத்தில் வியாபாரிகள் நேர்மறையான முன்னேற்றங்கள் மற்றும் நிதி ஆதாயங்களை எதிர்பார்க்கலாம்.

அவர்களின் பொருளாதார நிலை மேம்படுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இந்த நேரத்தில் செய்யப்படும் முதலீடுகள் நல்ல வருமானத்தைத் தரக்கூடும். மேலும், அவர்களின் முடிவெடுக்கும் திறன்கள் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது வணிகம் மற்றும் தனிப்பட்ட விஷயங்களில் சிறந்த முடிவுகளை எடுக்க உதவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d31ba3a0-ed3b-4714-b60c-c99dc966c556/26-6a66a5be5d4c4.webp' /></p><h3>கும்பம்
</h3><p>ஆகஸ்ட் மாதம் கும்ப ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கும் மாதமாக இருக்கும். இந்த கிரக மாற்றங்களால், வாகனங்கள் மற்றும் புதிய வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டம் சிறப்பாக இருக்கும் மற்றும் அலுவலகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும்.

நிதிரீதியாக, இந்த காலம் மிகவும் நம்பிக்கைக்குரியதாக இருக்கும். மூதாதையர் சொத்துக்கள் கைக்கு வருவதற்கும் மற்றும் கடன் பிரச்சினைகள் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. உங்கள் நிதித் திட்டங்கள் வெற்றிகரமாக இருக்கும், இது உங்கள் சேமிப்பை அதிகரிக்கும். மொத்தத்தில் இந்த மாதம் அவர்களுக்கு மிகவும் முக்கியமான சிறப்பான மாதமாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a73774f8-3dc3-4c6e-8aad-e8dbbb04356f/26-6a66a5bdaa322.webp' /></p>]]></content>
            <updated>2026-07-27T00:26:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் நடிகை மீனாட்சி சவுத்ரி.. அழகிய புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/meenakshi-chaudhary-stills-from-chicago-1785111342"></link>
            <id>https://cineulagam.com/article/meenakshi-chaudhary-stills-from-chicago-1785111342</id>
            <summary type="text">நடிகை மீனாட்சி சவுத்ரி தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பாப்புலர் நடிகையாக இருப்பவர். அவர் தற்போது அமெரிக்காவுக்கு சென்று இருக்கிறார்.

அவர் சிக்காகோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை மீனாட்சி சவுத்ரி தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பாப்புலர் நடிகையாக இருப்பவர். </p><p>அவர் தற்போது அமெரிக்காவுக்கு சென்று இருக்கிறார்.

அவர் சிக்காகோவில் ட்ரெண்டியான உடையில் வலம் வந்து இருக்கிறார்.</p><p> அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

அழகிய புகைப்படங்கள் இதோ.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T00:17:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவுரா பிரிட்ஜ் மீது மணிரத்னம் பட ஷூட்டிங்! விஜய் சேதுபதி - சாய் பல்லவி பாடல்காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vijay-sethupathi-sai-pallavi-shoot-howrah-bridge-1785109592"></link>
            <id>https://cineulagam.com/article/vijay-sethupathi-sai-pallavi-shoot-howrah-bridge-1785109592</id>
            <summary type="text">தக் லைப் படம் பெரிய தோல்வி அடைந்த நிலையில் அடுத்து எந்த படமும் இயக்காமல் இருந்தார் மணிரத்னம். அதன் பின் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவிவை வைத்து ஒரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தக் லைப் படம் பெரிய தோல்வி அடைந்த நிலையில் அடுத்து எந்த படமும் இயக்காமல் இருந்தார் மணிரத்னம். அதன் பின் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவிவை வைத்து ஒரு புது படத்தை தொடங்கி இருக்கிறார்.</p><p>அந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/492a0fb7-5782-4600-8244-8be28bac1ebb/26-6a669c5a07ecd.webp' /></p><p>
</p><h2>ஹவுரா பிரிட்ஜ் ஷூட்டிங்
</h2><p>
இந்நிலையில் கொல்கத்தாவில் பெயர்பெற்ற ஹவுரா பிரிட்ஜ் மீது பாடல் ஷூட்டிங் நடைபெற்று இருக்கிறது.
</p><p>
அதை பார்த்த நெட்டிசன்கள் 96 படம் போல இருப்பதாக கூறி வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e68f160e-037b-4ad6-875b-15bc3cee8990/26-6a669c5ad50db.webp' /></p>]]></content>
            <updated>2026-07-26T23:46:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீர்ந்து வரும் அமெரிக்காவின் ஆயுதங்கள்! ட்ரம்ப் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-dismisses-reports-of-weapons-shortages-1785107857"></link>
            <id>https://ibctamil.com/article/trump-dismisses-reports-of-weapons-shortages-1785107857</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவிடம் ஆயுதங்கள் தீர்ந்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளார்.

இது...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவிடம் ஆயுதங்கள் தீர்ந்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளார்.
</p><p>
இது குறித்த பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள அறிக்கையில், “உலகில் உள்ள எவரையும் விட எங்களிடம் அதிகமான ஆயுதங்கள் உள்ளன, மேலும் எங்களுக்குத் தேவையானதை விட மிக அதிகமாகவே உள்ளன” என்று அவர் கூறியுள்ளார்.</p><p>

அமெரிக்க கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவரான ஜெனரல் டொன் கெய்ன், வான் பாதுகாப்பு இடைமறிப்பு ஏவுகணைகளின் கையிருப்பு குறைந்து வருவது குறித்து வெள்ளை மாளிகைக்குத் அறிவித்துள்ளதாக அந்த அமெரிக்க நாளிதழ் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.</p><p></p><h2>ட்ரம்பின் புதிய பதிவுகள்</h2><p>

இவ்வாறானதொரு பின்னணியிலேயே ட்ரம்ப், மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11ead10d-3b22-4d6b-bf8d-1d17256d9065/26-6a669accbe256.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளப் பக்கத்தில், ஈரானிய எண்ணெய் கப்பல் ஒன்றைக் கைப்பற்றுவது போலவும், ஈரானின் கார்க் தீவு எண்ணெய் ஏற்றுமதி முனையத்தின் மீது தாக்குதல் நடத்துவது போலவும் சித்தரிக்கும் பல செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட படங்களைப் பகிர்ந்துள்ளார்.
</p><p>
அதில் ஒரு படத்தில், அமெரிக்கக் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பலில் ட்ரம்ப் இருப்பது போலவும், மற்றொரு படத்தில் கார்க் முனையத்தின் மீது போர் விமானங்கள் குண்டு வீசுவது போலவும் காட்டப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T23:40:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மயான காவலர் மீது துப்பாக்கிச் சூடு ; முக்கிய சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shooting-at-a-guard-at-a-cemetery-suspect-arrested-1785108669"></link>
            <id>https://jvpnews.com/article/shooting-at-a-guard-at-a-cemetery-suspect-arrested-1785108669</id>
            <summary type="text">தெஹிவளையில் அமைந்துள்ள பொது மயானம் ஒன்றில் காவலர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை குற்றப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளையில் அமைந்துள்ள பொது மயானம் ஒன்றில் காவலர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவருக்கு உதவியதாகக் கூறப்படும் குறித்த சந்தேகநபர், நுகேகொட, டெல்கந்த சந்திப்புப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 7,200 மில்லிகிராம் 'ஐஸ்' (Ice) போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50a39beb-8050-4580-9de3-b8e0125c53ba/26-6a6698bf1a876.webp' /></p><p>விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான திஸநாயக்க முதியன்செலகே அவிஷ்க ஹெஷான் என்றழைக்கப்படும் "போதியா வட்டே அவிஷ்கா"வின் நெருங்கிய கூட்டாளி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் இடம்பெற்ற வேளையில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலுடன் தொடர்புடையவர் என்றும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர் என்றும் நம்பப்படும் ஒருவரின் தந்தையின் இறுதிச் சடங்கு தெஹிவளை பொது மயானத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்ததாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
</p><p>
அந்த நேரத்தில், வெள்ளை நிற ஆடைகள் மற்றும் பாதுகாப்புத் தலைக்கவசம் அணிந்திருந்த இருவர் மயானத்திற்குள் நுழைந்ததாகவும், அவர்களில் ஒருவர் கால்நடையாக சென்று காவலர் மீது பல முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T23:32:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளம் பெண்கள் மீது காரை ஏற்ற முயன்ற பொலிஸ் அதிகாரி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-officer-arrested-run-over-young-women-car-1785107240"></link>
            <id>https://tamilwin.com/article/police-officer-arrested-run-over-young-women-car-1785107240</id>
            <summary type="text">இரண்டு இளம் பெண்கள் மீது காரை ஏற்ற முயன்ற ஹோமாகம சிரேஷ்ட பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி, மீகோட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரண்டு இளம் பெண்கள் மீது காரை ஏற்ற முயன்ற ஹோமாகம சிரேஷ்ட பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி, மீகோட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>சந்தேக நபரான அந்த பிரதம ஆய்வாளர், நேற்று முன்தினம் இரவு (25) இரண்டு இடங்களில் இந்த விபத்துக்களை ஏற்படுத்தியதாகத் கூறப்படுகின்றது.</p><p></p><h2>தப்பிச் செல்ல முயற்சி..</h2><p>
</p><p>
பொலிஸ் தகவலின்படி, முதல் விபத்து ஹை லெவல் சாலையில் உள்ள மீகோட பெட்ரோல் நிலையம் அருகேயும், இரண்டாவது விபத்து வத்தரேக்க 20ஆவது தூண் பகுதியிலும் நிகழ்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07afb96d-deaf-4024-8b33-d7e19595a9c8/26-6a6696b649e1a.webp' /></p><p> சந்தேக நபரான பொலிஸ் அதிகாரி, நேற்று முன்தினம் இரவு 11.30 மணி முதல் 11.57 மணிக்குள் இந்த இரண்டு விபத்துக்களையும் நிகழ்த்தி, இளம் பெண்கள் மீது மோதிவிட்டு காரை ஓட்டிச் சென்றுள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில், சந்தேக நபரான பிரதம ஆய்வாளர் மதுபோதையில் காரை ஓட்டியது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T23:25:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு நெதன்யாகு விடுத்த கடுமையான எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/netanyahu-s-stern-warning-to-iran-1785098572"></link>
            <id>https://ibctamil.com/article/netanyahu-s-stern-warning-to-iran-1785098572</id>
            <summary type="text">இஸ்ரேல் மீது நேரடியாகவோ அல்லது அதன் ஆதரவு அமைப்புகள் மூலமாகவோ நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் மிகவும் சக்திவாய்ந்த முறையில் பதிலடி கொடுக்கப்படும் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேல் மீது நேரடியாகவோ அல்லது அதன் ஆதரவு அமைப்புகள் மூலமாகவோ நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் மிகவும் சக்திவாய்ந்த முறையில் பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு ஈரானை எச்சரித்துள்ளார்.
</p><p>
ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில், போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானின் ஆட்சி வீழ வேண்டும் அல்லது சவூதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு ஈரான் கொடுக்க வேண்டிய விலையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
ட்ரம்ப்பின் இராஜதந்திர முயற்சிகளுக்குத் தான் முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்த நெதன்யாகு, ஒப்பந்தத்துடன் அல்லது ஒப்பந்தம் இல்லாமல் ஈரானின் அணுசக்தித் திட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.</p><p></p><h2>ட்ரம்பின் முன்மொழிவு&nbsp;</h2><p>

முறையான உறவுகளை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சவூதி-இஸ்ரேல் உறவை சீராக்குவதற்கு ட்ரம்ப் முன்மொழிந்த நிபந்தனையான ரியாத்துக்கு ராணுவ அணுசக்தி திட்டம் இல்லாமல், சிவில் அணுசக்தித் திட்டத்தை வழங்கும் முன்மொழிவை தான் ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9afda122-a8bf-4802-98a9-6d3640e68ee2/26-6a66714e223b5.webp' /></p><p><i>Image Credit: Reuters</i></p><p>
</p><p>
லெபனான் குறித்துப் பேசிய நெதன்யாகு, இஸ்ரேலியப் படைகள் ஹெஸ்பொல்லாவை இஸ்ரேல்-லெபனான் எல்லையிலிருந்து 5 முதல் 8 மைல்கள் வரை பின்னோக்கித் தள்ளியுள்ளதாகவும், அதன் தோராயமாக 150,000 ஏவுகணைகள் மற்றும் ரொக்கெட்டுகளில் சுமார் 94 வீதத்தை அழித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank" style=""><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T23:23:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஞாயிற்றுக்கிழமை அதிகரித்த ஜனநாயகன் வசூல்.. ஹிந்தியில் மட்டும் எத்தனை கோடி பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/jana-nayagan-hindi-box-office-first-week-total-1785108176"></link>
            <id>https://cineulagam.com/article/jana-nayagan-hindi-box-office-first-week-total-1785108176</id>
            <summary type="text">விஜய்யின் ஜனநாயகன் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வாரம் திரைக்கு வந்தது. விஜய்யின் முந்தைய படங்களில் சாதனை வசூலை இந்த படம் தொடவில்லை என்றாலும...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஜய்யின் ஜனநாயகன் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வாரம் திரைக்கு வந்தது. விஜய்யின் முந்தைய படங்களில் சாதனை வசூலை இந்த படம் தொடவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வசூலை பெற்று வருகிறது.</p><p>ஜனநாயகன் முழு படமும் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆகி இருந்ததும் வசூல் குறைந்ததற்கு காரணமாக சொல்லப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5a17d42-0870-4f83-ab2a-8f40829aaccb/26-6a6696d23d8a0.webp' /></p><p>
</p><h2>ஹிந்தி வசூல்</h2><p>ஜனநாயகன் ஹிந்தியில் ஜனநேடா என்கிற பெயரில் ரிலீஸ் ஆகி இருந்தது. முதல் நாளில் ஹிந்தியில் வெறும் 1.65 கோடி ரூபாய் நெட் வசூலை படம் பெற்று இருந்தது.
</p><p>இருப்பினும் அடுத்தடுத்த நாட்களில் வசூல் அதிகரித்தது. ஞாயிறு அன்று சுமார் 3 கோடி ரூபாய் நெட் வசூல் வந்திருக்கிறதாம். அதன் மூலமாக முதல் வார இறுதியில் மொத்த நெட் வசூல் 9 கோடியை தொட்டு இருக்கிறது.
</p><p>அடுத்தடுத்த நாட்களில் வசூல் அதிகரிக்குமா அல்லது குறையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T23:23:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீராடச் சென்ற 18 வயது இளம் பிக்கு நீரில் மூழ்கி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-monk-drowns-while-bathing-1785107094"></link>
            <id>https://jvpnews.com/article/young-monk-drowns-while-bathing-1785107094</id>
            <summary type="text">மொனராகலை மாவட்டம், வெல்லவாய, தெலுல்ல பகுதியில் அமைந்துள்ள கிரிந்தி ஓயாவில் நீராடச் சென்ற 18 வயதுடைய இளம் பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொனராகலை மாவட்டம், வெல்லவாய, தெலுல்ல பகுதியில் அமைந்துள்ள கிரிந்தி ஓயாவில் நீராடச் சென்ற 18 வயதுடைய இளம் பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஊவா குடாஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>

ஊவா குடாஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெலுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நடைபெற்ற அன்னதான நிகழ்வில் பங்கேற்பதற்காக வந்திருந்த பௌத்த பிக்குகள் சிலர், நிகழ்வுக்குப் பின்னர் நேற்று கிரிந்தி ஓயாவுக்கு நீராடச் சென்றுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d74ae5ad-17da-4752-b55b-f1bfa7a5ae80/26-6a66929849a12.webp' /></p><p>அப்போது, நீராடிக்கொண்டிருந்த இளம் பிக்கு ஒருவர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.</p><p>இதையடுத்து, அருகிலிருந்த பிரதேச மக்கள் உடனடியாக அவரை மீட்டு தணமல்வில ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். </p><p>எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உயிரிழந்தவர் 18 வயதுடைய இளம் பிக்கு என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊவா குடாஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T23:05:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை பிரக்யா நக்ரா சேலையில் ஹாட் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/pragya-nagra-sizzling-in-saree-1785106501"></link>
            <id>https://cineulagam.com/article/pragya-nagra-sizzling-in-saree-1785106501</id>
            <summary type="text">இன்ஸ்டாகிராமில் 1.5 மில்லியனுக்கும் மேல் ரசிகர்களை வைத்து இருப்பவர் நடிகை பிரக்யா நக்ரா. அவர் கிளாமர் உடையில் வெளியிடும் ஸ்டில்கள் தொடர்ந்து ரசிகர்களை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்ஸ்டாகிராமில் 1.5 மில்லியனுக்கும் மேல் ரசிகர்களை வைத்து இருப்பவர் நடிகை பிரக்யா நக்ரா. அவர் கிளாமர் உடையில் வெளியிடும் ஸ்டில்கள் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
</p><p>
தற்போது பிரக்யா நக்ரா மஞ்சள் நிற சேலையில் செம ஹாட் ஆக போஸ் கொடுத்து இருக்கிறார்.

அந்த ஸ்டில்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-07-26T22:55:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மயானத்திற்குள் வெள்ளை ஆடையுடன் திடீரென நுழைந்த மர்ம நபர்கள்.. வெளியான திடுக்கிடும் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dehiwala-cemetery-guard-shooter-rider-arrested-1785104117"></link>
            <id>https://tamilwin.com/article/dehiwala-cemetery-guard-shooter-rider-arrested-1785104117</id>
            <summary type="text">தெஹிவலயில் உள்ள பொது மயானம் ஒன்றில் காவலரை மோட்டார் சைக்கிளில் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவலயில் உள்ள பொது மயானம் ஒன்றில் காவலரை மோட்டார் சைக்கிளில் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவர் என குற்றம் சாட்டப்படும் குறித்த நபர், நுவகொடவில் உள்ள டெல்கந்த சந்திப்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>
சந்தேக நபரிடமிருந்து 7,200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><h2>போதைப்பொருள் கடத்தல்காரர்&nbsp;</h2><p>
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான திஸநாயக்க முதியன்செலகே அவிஷ்க ஹெஷான் என்றழைக்கப்படும் போதியா வட்டே அவிஷ்காவின் நெருங்கிய கூட்டாளி என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98de6714-2831-4818-b6a5-bf8d02013d17/26-6a668a942f29e.webp' /></p><p>குறித்த மயானத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் என்று நம்பப்படும் ஒருவரின் தந்தையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுக் கொண்டிருந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இதன்போது, ​​வெள்ளை உடை, பாதுகாப்பு தலைக்கவசங்கள் அணிந்திருந்த இருவரில் ஒருவர் கால்நடையாக வந்து பலமுறை சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T22:39:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த பாடசாலை மாணவி ; பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/schoolgirl-suicide-after-making-wrong-decision-1785105086"></link>
            <id>https://jvpnews.com/article/schoolgirl-suicide-after-making-wrong-decision-1785105086</id>
            <summary type="text">ஹட்டன் பொகவந்தலாவை திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் பொகவந்தலாவை திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p></p><p>குறித்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.
</p><p>
இது குறித்து தெரியவருகையில், பொகவந்தலாவை மோரார் பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66e0030a-2563-40c3-934b-bd82d84fad93/26-6a668ac06d68f.webp' /></p><p>குறித்த மாணவி கடந்த 24ஆம் திகதி வீட்டில் இருந்த இரத்த அழுத்தத்திற்கு தேவையான மருந்துகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டுள்ளார்.
</p><p>
இந்நிலையில் பாடசாலையில் வைத்து மாணவி மயக்கமடைந்த நிலையில் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
மாவட்ட வைத்தியசாலையாக இருந்தும் சிகிச்சைக்கு போதிய வசதிகள் இல்லாத நிலையில் காணப்படும் அந்த வைத்தியசாலையில் இருந்து கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
</p><p>
இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
</p><p>
இது குறித்து பொகவந்தலாவை காவல்துறையினரை தொடர்பு கொண்டு கேட்டபோது, இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது ஊடகத்திற்கு அறிவித்தனர்.
</p><p>
எனினும் மாணவியின் இந்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக குடும்பத்தினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T22:31:36+00:00</updated>
        </entry>
    </feed>
