<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-02T00:56:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தை செல்வா தூபி உடைப்பை கண்டிக்கின்றது தமிழரசுக் கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/itak-condemns-the-demolition-of-father-selva-1788308964"></link>
            <id>https://tamilwin.com/article/itak-condemns-the-demolition-of-father-selva-1788308964</id>
            <summary type="text">இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் தூபி உடைப்பைத் தாம்
வன்மையாகக் கண்டிக்கின்றார் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர்
சி்.வி.கே.சிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் தூபி உடைப்பைத் தாம்
வன்மையாகக் கண்டிக்கின்றார் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர்
சி்.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
</p><p>
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>&nbsp;தமிழரசுக் கட்சி</h2><p>
</p><p>
"தெல்லிப்பளைப் பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் நினைவுத் தூபி அடையாளந் தெரியாத விஷமிகளால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது.</p><p>

தமிழரசுக் கட்சியைத் தற்போது விமர்சிப்பவர்கள் கூட பெரியவரின் செயலை
விமர்சிப்பது கிடையாது.

அத்தகையவரின் தூபியை உடைக்கும் இந்த வன்மச் செயலை மேற்கொண்டமையைத் தமிழரசுக்
கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f665f3e-8438-46b4-9d32-d7f6ec3b2a66/26-6a97716084e6f.webp' /></p><p>
</p><p>
அரசியல் வேறுபாடுகள் அல்லது முரண்பாடுகள் அரசியலில் இயல்பானவை. இருந்தபோதும்
ஒரு நினைவுத் தூபியை இடிக்கும் அளவுக்கு அது இட்டுச் செல்வது ஏற்றுக்கொள்ள
முடியாத காரியம் என்பதோடு இந்தச் செயல் அனைவர் நெஞ்சிலும் மற்றுமோர் இடியாகவே
அமைகின்றது. </p><p>எனவே, இது தொடர்பில் எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கின்றோம்.

இந்தச் செயலைப் புரிந்த விஷமிகளைக் கைது செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட
வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T00:44:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் பெண் அரச அதிகாரிக்கு அரங்கேற்றப்பட்ட தகாத செயல் ; முன்னாள் மேயருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incident-involving-female-government-officer-1788309773"></link>
            <id>https://jvpnews.com/article/incident-involving-female-government-officer-1788309773</id>
            <summary type="text">பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் மேயர் எதிர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் மேயர் எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">



சந்தேகநபர் உடல்நலக் குறைவு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால்,&nbsp; நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்தப்படவில்லை.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2eaa7f16-bdfe-47d5-a76c-c01b1c6205f9/26-6a97710ea8765.webp' /></p><h2 style="text-align: justify; ">விளக்கமறியல்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


சிறைச்சாலை அதிகாரிகளின் அறிக்கைகளை பரிசீலித்த நீதிவான், சந்தேகநபரின் விளக்கமறியலை மேலும் நீடிக்க உத்தரவிட்டார்.
</p><p style="text-align: justify; ">


அக்கரைப்பற்று மாநகரசபை மேயராகப் பதவி வகித்த காலத்தில், அங்கு பணியாற்றிய பெண் அரச உத்தியோகத்தர் ஒருவரை திருமணம் செய்வதாகக் கூறி, பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



குறித்த பெண் சமூக வலைத்தள நேரலை மூலம் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.</p><p style="text-align: justify; "> விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
</p><p style="text-align: justify; ">


கடந்த மாதம் 18ஆம் திகதி முதன்முறையாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், பின்னர் ஓகஸ்ட் 19ஆம் திகதி மற்றும் செப்டம்பர் முதலாம் திகதி என தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக செப்டம்பர் 9ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-02T00:42:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலுக்கு சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த கதி - சடலமாக கரையொதுங்கிய நால்வர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/4-family-members-death-in-gampaha-1788308367"></link>
            <id>https://tamilwin.com/article/4-family-members-death-in-gampaha-1788308367</id>
            <summary type="text">கம்பஹா - ஜாஎல, பமுனுகம பகுதியில் அமைந்துள்ள எபமுல்ல கடற்கரையில் நீராடச்
சென்று இராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமான 13 வயது சிறுவனின்
சடலம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா - ஜாஎல, பமுனுகம பகுதியில் அமைந்துள்ள எபமுல்ல கடற்கரையில் நீராடச்
சென்று இராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமான 13 வயது சிறுவனின்
சடலம் மீட்கப்பட்டுள்ளது.</p><p>இந்த சடலமானது நேற்றைய தினம்(01.09.2026) கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>ஒரே குடும்பத்தைச் சேர்ந்த&nbsp;&nbsp;4 பேர்</h2><p> இதன் மூலம் கடலில் அடித்துச்
செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.</p><p>

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேளையில் கடலில் நீராடச் சென்ற ஒரே
குடும்பத்தைச் சேர்ந்த தாயார் மற்றும் அவரது மூன்று பிள்ளைகள் உட்பட 4 பேர்
பலத்த அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/397db5f0-d22a-4a2a-8153-38609100a928/26-6a976de8baf0f.webp' /></p><p>நேற்று முன்தினம் காலை மேற்கொள்ளப்பட்ட தீவிர தேடுதலில் 35
வயதுடைய தாய் மற்றும் 4 வயது, 12 வயதுடைய இரு சிறுமிகளின் சடலங்கள்
மீட்கப்பட்ட நிலையில், தேடப்பட்டு வந்த 13 வயது சிறுவனின் சடலம் நேற்று
செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது. </p><p>சம்பவம் நடந்ததிலிருந்து பொலிஸாரும், கடற்படையினரும், அந்தப் பகுதி கடலோர
மீட்புக் குழுவினரும் இணைந்து எபமுல்ல கடற்கரைப் பகுதி முழுவதும் தீவிர
தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டே அனைத்துச் சடலங்களையும் மீட்டுள்ளனர்.
</p><p>
இந்தப் பகுதியில் கடலில் நீராடும் போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன்
இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T00:37:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள தமிழ் கட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/democratic-tamil-national-alliance-calls-strike-1788306719"></link>
            <id>https://tamilwin.com/article/democratic-tamil-national-alliance-calls-strike-1788306719</id>
            <summary type="text">எதிர்வரும் 12ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் கட்சிகள் அடையாள
உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 12ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் கட்சிகள் அடையாள
உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
</p><p>
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல் நேற்று(01) யாழ்ப்பாணம்
இணுவில் பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.</p><h2>வாக்குறுதிகளை நிறைவேற்றப்படாமை</h2><p>அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,&nbsp; இந்த அரசாங்கம் பதவி ஏற்று 2 வருடங்கள் கடந்த போதிலும், தமிழ் மக்களுக்கு கொடுத்த
வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.</p><p>பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் காணி
விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, மாகாண சபை தேர்தல், புதிய
அரசியலமைப்பு, போன்ற விடயங்களை நிறைவேற்றுவதாக தமிழ் மக்களுக்கு ஆணை கொடுத்து
வந்த அரசாங்கம் எந்த விடயங்களையும் நிறைவேற்றவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ad3e96a-0ae1-484d-b5c4-541af1b4db64/26-6a97655372dd9.webp' /></p><p>அரசாங்கத்திற்கு உணரத்துவதற்கும், தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பதை
மக்களுக்கு வெளிப்படுத்தவும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை சாவகச்சேரி
பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளவதற்கு தீர்மானித்துள்ளது.</p><p>

அத்துடன் இந்தப் போராட்டத்திற்கு தமிழ் கட்சிகளின் இணைந்த அழைப்பாக, பல்கலைக்கழக
மாணவர்கள், சிவில் அமைப்புக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வலுச்சேர்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்கள்.</p><h2>உண்ணாவிரத போராட்டம்</h2><p>ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் அரசாங்கம் தேர்தல் காலத்தில்
தமிழ் மக்களிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வாக்குகளை பெற்று, இன்று 2
வருடங்கள் கழிந்த நிலையிலும் கொடுத்த வாக்குகள் நிறைவேற்றப்படவில்லை.</p><p>

குறிப்பாக, வலி வடக்கில் 3 பகுதிகளாக சொந்த நிலத்தை விடுவிக்குமாறு கோரி
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை
துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படாமல் தொடர்ந்தும் பின்னடிக்கப்பட்டு
வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72e2f0e9-3409-4fdd-9303-976689f3d292/26-6a976fc15378c.webp' /></p><p>

இந்தியா 600 மில்லியன் ரூபா டொலர்களை வழங்கிய போதும், வேலைகளை
செய்வதற்கான உடன்படிக்கைகளை மேற்கொள்ளாது காலம் கடத்தி வருகின்றனர்.
</p><p>
தேர்தல் காலத்தில் மாகாணசபை அதிகாரங்களை வழங்குவோம் என்றவர்கள், மாகாண சபை
தேர்தலை நடத்துவதற்கு எல்லளவும் விரும்பாத நிலை காணப்படுகிறது.</p><p>

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எந்தவித கரிசனையும் காட்டாது
இருப்பதை கண்டித்தும், திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது திணிக்கும் தொல்லியல்
துறை சார்ந்த விடயங்ளை கண்டிக்கும் முகமாகவும் எதிர்வரும் 12 ஆம் திகதிகாலை
7.30 மணியளவில் தமிழ் மக்கள் சார்ந்து தமிழ் அரசியல் கட்சிகள் அடையாள
உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T00:34:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதவி விலகுவதாக அறிவித்த கெய்ர் ஸ்டார்மர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/keir-starmer-resigns-as-mp-focuses-on-global-role-1788282525"></link>
            <id>https://news.lankasri.com/article/keir-starmer-resigns-as-mp-focuses-on-global-role-1788282525</id>
            <summary type="text">Keir Starmer resigns as MP, focuses on global role: எம்.பி பதவியிலிருந்து விலகுவதாக கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.

பதவி விலகும் ஸ்டார்மர்பிரித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Keir Starmer resigns as MP, focuses on global role: எம்.பி பதவியிலிருந்து விலகுவதாக கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.
</p><h2>
பதவி விலகும் ஸ்டார்மர்</h2><p>பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர், ஹோல்போர்ன் மற்றும் செயின்ட் பான்க்ரஸ் தொகுதியின் எம்.பி பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
</p><p>
2015 முதல் இந்த லண்டன் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி வந்த அவர், சர்வதேச விவகாரங்கள் மற்றும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் பணிகளில் கவனம் செலுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/191e355c-f77f-436a-bb20-e8e2ff5dbade/26-6a97069eb9b8e.webp' /></p><h2>இடைத்தேர்தல்</h2><p>2024 தேர்தலில் பெரும் வெற்றி பெற்று பிரதமராக இருந்த ஸ்டார்மர், கடந்த ஜூலையில் பதவி விலகினார். </p><p>அப்போது அவர் 2029 பொதுத் தேர்தல் வரை எம்.பி ஆக தொடருவதாக கூறியிருந்தாலும், தற்போது திடீர் முடிவெடுத்து விலகுவதாக அறிவித்துள்ளார்.</p><p>இதனால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
</p><p></p><p>தற்போதைய பிரித்தானிய பிரதமர் ஆன்டி பர்னாம், நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையில் ஸ்டார்மரின் உக்ரைன் தொடர்பான பணி மற்றும் ஹில்ஸ்பரோ சட்டம் போன்ற சாதனைகளை பாராட்டினார். “நாட்டிற்கு நீண்ட கால சேவை செய்தவர்” என அவர் புகழ்ந்தார்.
</p><p>
இடைத்தேர்தலில் லேபர் கட்சிக்கு முக்கிய சவாலாக பசுமைக் கட்சி (Green Party) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய உள்ளூர் தேர்தல்களில் பசுமைக் கட்சி வாக்கு விகிதத்தில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.</p><p></p><p>ஸ்டார்மர், “இது சரியான நேரம். நான் புதிய தலைமுறைக்கு வாய்ப்பு அளிக்க விரும்புகிறேன். இனி சர்வதேச பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் பணிகளில் கவனம் செலுத்துவேன்” எனக் கூறினார்.
</p><p>
சிலர் அவரை பாராட்டினாலும், எதிர்க்கட்சிகள் “மற்றொரு யூ-டர்ன்” என விமர்சித்துள்ளனர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">It has been an honour and a privilege to represent Holborn and St Pancras for the last 11 years. <br><br>My statement. <a href="https://t.co/xzu4xcIno2">pic.twitter.com/xzu4xcIno2</a></p>&mdash; Keir Starmer (@Keir_Starmer) <a href="https://x.com/Keir_Starmer/status/2094750480492609634?ref_src=twsrc%5Etfw">September 1, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T00:33:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடல்மட்ட உயர்வால் உடனடி அபாயம் - இந்திய நகரங்களுக்கு ஐ.நா எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/un-warns-kolkata-mumbai-of-sea-level-risk-1788309281"></link>
            <id>https://news.lankasri.com/article/un-warns-kolkata-mumbai-of-sea-level-risk-1788309281</id>
            <summary type="text">UN warns Kolkata Mumbai of sea level risk: கடல்மட்ட உயர்வால் உடனடி ஆபத்து இருப்பதாக இந்திய நகரங்களுக்கு ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொல்கத்தா, ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>UN warns Kolkata Mumbai of sea level risk: கடல்மட்ட உயர்வால் உடனடி ஆபத்து இருப்பதாக இந்திய நகரங்களுக்கு ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><h2>

கொல்கத்தா, மும்பை நகரங்களில் கடல்மட்ட உயர்வு </h2><p>ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட புதிய அறிக்கையில், கொல்கத்தா மற்றும் மும்பை நகரங்களில் கோடிக்கணக்கான மக்களுக்கு கடல்மட்ட உயர்வு காரணமாக உடனடி அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அறிக்கையில், இந்தியாவின் கடலோர நகரங்கள் உலகின் மிக அதிக ஆபத்தான பகுதிகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c082e6ab-02b1-49e6-966c-beeae00f4049/26-6a976f230a4d5.webp' /></p><p>2050-க்குள் கடல்மட்டம் 30-40 செ.மீ. உயர்ந்தால், மும்பை மற்றும் கொல்கத்தாவில் உள்ள சுமார் 2 கோடி மக்கள் வெள்ள அபாயத்திற்கு உள்ளாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) தெரிவித்ததாவது: “கடல்மட்ட உயர்வு, புயல், வெள்ளம் ஆகியவை இணைந்து நகரங்களில் வாழும் மக்களின் வாழ்க்கையை முற்றிலும் பாதிக்கும். உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பெரும் மனிதாபிமான நெருக்கடி உருவாகும்” என எச்சரித்துள்ளது.
</p><p></p><p>மும்பை, இந்தியாவின் நிதி தலைநகரம் என்பதால், கடல்மட்ட உயர்வு பொருளாதாரத்திற்கும் பெரும் தாக்கம் ஏற்படுத்தும். கொல்கத்தா, கங்கை டெல்டா பகுதியில் அமைந்துள்ளதால், வெள்ள அபாயம் அதிகம்.
</p><h2>
நிபுணர்கள் கூறுவதாவது:
</h2><p>
கடலோர பாதுகாப்பு சுவர்கள், பசுமை வளங்களை அதிகரித்தல், நகர திட்டமிடலில் மாற்றங்கள், கார்பன் உமிழ்வை குறைக்கும் நடவடிக்கைகள் - இவை அனைத்தும் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
</p><p>
ஐ.நா. அறிக்கையில், “இந்திய அரசு மற்றும் உள்ளூர் நிர்வாகங்கள், உலகளாவிய காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும்.இல்லையெனில், 2030-க்குள் நிலைமை மோசமடையும்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த எச்சரிக்கை, சமீபத்தில் வங்காளதேசம், வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆசியாவின் கடலோர நகரங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான அபாயத்தில் உள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T00:31:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் கட்சிகள் அடையாள உண்ணாவிரத போராட்டம்! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tamil-parties-launch-hunger-strike-against-govt-1788308158"></link>
            <id>https://ibctamil.com/article/tamil-parties-launch-hunger-strike-against-govt-1788308158</id>
            <summary type="text">எதிர்வரும் 12 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் கட்சிகள் அடையாள உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 12 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் கட்சிகள் அடையாள உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
</p><p>
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல் இன்று (01) யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
</p><p>
அதன்போது, அரசாங்கம் பதவி ஏற்று 2 வருடங்கள் கடந்த போதிலும், தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் காணி விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, மாகாண சபை தேர்தல், புதிய அரசியலமைப்பு, போன்ற விடயங்களை நிறைவேற்றுவதாக தமிழ் மக்களுக்கு ஆணை கொடுத்து எந்த விடயங்களையும் நிறைவேற்றவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>நிறைவேற்றப்படாத வாக்குகள்</h2><p>
</p><p>
அந்தவகையில், அதனை அரசாங்கத்திற்கு உணர்த்துவதற்கும், தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பதை மக்களுக்கு வெளிப்படுத்தவும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளவதற்கு தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed44d6a5-1b2d-4a95-a44f-1892a3ebfe41/26-6a976d786995e.webp' /></p><p>

அத்துடன், இப்போராட்டத்திற்கு தமிழ் கட்சிகளின் இணைந்த அழைப்பாக, பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.</p><p>

அதன்போது, அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்த போராட்டமானது, ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் அரசாங்கம் தேர்தல் காலத்தில் தமிழ் மக்களிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வாக்குகளை பெற்று, இன்று 2 வருடங்கள் கழிந்த நிலையிலும் கொடுத்த வாக்குகள் நிறைவேற்றப்படவில்லை.</p><h2>மாகாண சபை அதிகாரங்கள்</h2><p>
</p><p>
குறிப்பாக, வலி வடக்கில் 3 பகுதிகளாக சொந்த நிலத்தை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பலாலி விமான நிலையம் காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படாமல் தொடர்ந்தும் பின்னடிக்கப்பட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccfaa0a2-e875-42cf-8120-e2394e526844/26-6a976d793d00e.webp' /></p><p>
</p><p>
இந்தியா வழங்கிய 600 மில்லியன் ரூபா டொலர்களை வழங்கிய போதும், வேலைகளை செய்வதற்கான உடன்படிக்கைகளை மேற்கொள்ளாது காலம் கடத்தி வருகின்றனர்.
</p><p>
தேர்தல் காலத்தில் மாகாண சபை அதிகாரங்களை வழங்குவோம் என்றவர்கள், மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு எல்லளவும் விரும்பாத நிலை காணப்படுகிறது.</p><p>

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எவ்வித கரிசனையும் காட்டாது இருப்பதை கண்டித்தும், திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது திணிக்கும் தொல்லியல் துறை சார்ந்த விடயங்ளை கண்டிக்கும் முகமாகவும் எதிர்வரும் 12 ஆம் திகதிகாலை 7.30 மணியளவில் தமிழ் மக்கள் சார்ந்து தமிழ் அரசியல் கட்சிகள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.” என்றார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T00:30:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கழிவறை தொட்டியில் பச்சிளம் சிசுவை கைவிட முயன்ற இளம்பெண் ; பொதுமக்கள் செய்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-woman-tries-to-abandon-newborn-in-toilet-1788308841"></link>
            <id>https://jvpnews.com/article/young-woman-tries-to-abandon-newborn-in-toilet-1788308841</id>
            <summary type="text">கரவனெல்ல பொது பேருந்து நிலையத்தில் உள்ள பெண்களுக்கான பொதுக் கழிவறை தொட்டியில் பிறந்த குழந்தையை கைவிட முயன்றதாகக் கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கரவனெல்ல பொது பேருந்து நிலையத்தில் உள்ள பெண்களுக்கான பொதுக் கழிவறை தொட்டியில் பிறந்த குழந்தையை கைவிட முயன்றதாகக் கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
30 வயதுடைய குறித்த பெண் நேற்று (01) நண்பகல் 12 மணியளவில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c164ac59-2d19-4d69-9c84-64a5f55e511c/26-6a976d6b25b19.webp' /></p><h2 style="text-align: justify; ">ஆரம்பகட்ட விசாரணை</h2><p>
</p><p style="text-align: justify; ">
குறித்த பெண், அன்றைய தினமே பிறந்ததாகக் கருதப்படும் குழந்தையை கழிவறையில் இருந்த நீர்த் தொட்டிக்குள் வைத்து விட்டு அங்கிருந்து செல்ல முயன்றதாக ஆரம்பகட்ட விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p style="text-align: justify; ">

சம்பவத்தை அவதானித்த பொதுமக்கள் குறித்த பெண்ணை தடுத்து நிறுத்தியதுடன், அது தொடர்பில் காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதனையடுத்து கைது செய்யப்பட்ட பெண், குழந்தையும் கரவனெல்ல ஆரம்ப மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
</p><p style="text-align: justify; ">
மருத்துவமனைத் தகவல்களின்படி, குழந்தை தற்போது தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-02T00:27:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பியங்கர ஜயரத்ன வழக்கில் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு: நீளும் குற்றப்பட்டியல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/priyankara-jayaratne-sentenced-7-years-in-prison-1788308124"></link>
            <id>https://tamilwin.com/article/priyankara-jayaratne-sentenced-7-years-in-prison-1788308124</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவிற்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். 


ஸ்ரீலங்கன...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவிற்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.</p><p> 


ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் 330,000 ரூபா அரச பணத்தைத் தவறாகப் பயன்படுத்திய வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதுமட்டுமல்லாது அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கபட்டுள்ளன.</p><p>

சுமார் 3,000 விசா அட்டைகளை அச்சிடுவதற்கு அதிகார சபையின் நிதியிலிருந்து 1,285,200 ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியமை.</p><p>

அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து விஹெனாபாம் நிறுவனத்திற்கு 360,000 ரூபாவையும், சிலாவ் என்எஸ்பி (NSP) கணக்கிற்கு 494,000 ரூபாவையும் அரச நிதியிலிருந்து செலுத்தச் செய்தமை.</p><p>

தனது தனிப்பட்ட செயலாளரை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையில் (Civil Aviation Authority) சட்டவிரோதமாக நியமித்து, அவருக்கு அரச நிதியிலிருந்து சம்பளம் மற்றும் சலுகைகளை வழங்கியமை.
</p><p>
 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் விமானக் கொள்முதல் விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. </p><p>

கபில சந்திரசேன அளித்த வாக்குமூலத்தின்படி, இந்த டீலிங்கின் மூலம் கிடைத்த பணத்தில் 20 மில்லியன் ரூபா பியங்கர ஜயரத்னவுக்கு வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
அரச வாகனப் பயன்பாட்டில் விதிகளை மீறி, விசாரணை அறிக்கையின்படி 2,737,599 ரூபாவிற்கும் அதிகமான தொகையைத் தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காகச் செலவழித்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கபட்டுள்ளன.</p><p>

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அவர் சிவில் விமான போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றிய காலப்பகுதியில் நிகழ்ந்தவையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
</p><p>
இந்தவிடயங்கள் தொடர்பான முழுயைான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7PU8B3Mn1GA" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T00:25:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 ஆவது திருத்தம் தொடர்பில் உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும்.. நளிந்த ஜயதிஸ்ஸ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/high-court-decide-on-22nd-amendment-jayatissa-1788307083"></link>
            <id>https://tamilwin.com/article/high-court-decide-on-22nd-amendment-jayatissa-1788307083</id>
            <summary type="text">அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள
மனுக்களைப் பரிசீலித்து, அதனை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு
பெரும்பான்மை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள
மனுக்களைப் பரிசீலித்து, அதனை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு
பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியுமா என்பதை உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும் என அமைச்சர்
நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>

கொழும்பிலுள்ள அரச தகவல் திணைக்களத்தில் நேற்று(01.09.2026)நடைபெற்ற அமைச்சரவைத்
தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டுள்ளார்.</p><h2>22ஆவது திருத்தச் சட்டமூலம்</h2><p>
</p><p>
அவர் மேலும் கூறுகையில்,&nbsp; இந்தத் தீர்ப்பை வழங்கி நாடாளுமன்றத்துக்கு அறிவிப்பதற்கு
உயர்நீதிமன்றத்துக்கு 3 வார கால அவகாசம் உள்ளது. </p><p>மனுக்களை விசாரிக்க எந்தெந்த
நீதியரசர்கள் அடங்கிய அமர்வு நியமிக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும்
அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கே உண்டு.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51f2d30b-ccff-4eb8-a99d-6d6d32330e7f/26-6a97687168c05.webp' /></p><p>வெளியாட்கள் தங்களது விருப்பத்துக்கேற்ப
நீதியரசர்களை நியமிக்குமாறு கோருவதற்குச் சட்டத்தில் இடமில்லை.

ஜனாதிபதி தலைமையில் தேசிய மக்கள் சக்தி நடத்தி வரும் மக்கள் பேரணிகளுக்கும்
உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சர்வஜன வாக்கெடுப்பு விவகாரத்துக்கும்
எந்தவித தொடர்பும் இல்லை.
</p><p>
கடந்த டிசம்பர் மாதமே திட்டமிடப்பட்டுச் சீரற்ற காலநிலை காரணமாகத்
தள்ளிவைக்கப்பட்ட இக்கூட்டங்கள், கட்சியை அடித்தள மட்டத்தில் வலுப்படுத்தவே
நடத்தப்படுகின்றன. மேலும், இதற்கான செலவுகளைக் கட்சியே ஏற்கின்றது. பொதுப்பணம்
பயன்படுத்தப்படவில்லை.</p><p>

22ஆவது திருத்தத்துக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்க உரிமையுள்ள போதிலும்,
அதனைச் சாட்டாக வைத்து வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டால் நாட்டின்
அப்பாவிப் பொதுமக்களும் நோயாளிகளுமே கடுமையாகப் பாதிக்கப்படுவர். எனவே,
நோயாளிகளை பிணையாக வைத்து இத்தகைய தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட
வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T00:17:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா உடன்பட்டால் நாங்கள் தயாா் ; ஈரான் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ready-to-return-to-ceasefire-if-the-us-agrees-1788307961"></link>
            <id>https://canadamirror.com/article/ready-to-return-to-ceasefire-if-the-us-agrees-1788307961</id>
            <summary type="text">அமெரிக்கா தனது உறுதிமொழிகளை முறையாக நிறைவேற்ற முன்வந்தால், கடந்த ஜூன் மாதம் எட்டப்பட்ட போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த ஈரான் தயாராக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா தனது உறுதிமொழிகளை முறையாக நிறைவேற்ற முன்வந்தால், கடந்த ஜூன் மாதம் எட்டப்பட்ட போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த ஈரான் தயாராக உள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் தெரிவித்துள்ளாா்.
</p><p>
கிா்கிஸ்தானில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சிமாநாட்டுக்கிடையே பேசிய அவா், ‘புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகளுக்கு அமெரிக்கா திரும்பினால், ஈரான் உடனடியாக அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்’ என்று தெரிவித்தாா்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72ec6fd6-b354-4e0e-a9f1-879e0fdbb3f2/26-6a9769fae9865.webp' /></p><p>

</p><p>முன்னதாக, இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து, பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் கடந்த ஜூன் மாதம் கையொப்பமான இடைக்கால ஒப்பந்தத்தில் உடனடி போா்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.</p><p> மேலும், 60 நாள்களுக்குள் விரிவான அமைதிப் பேச்சுவாா்த்தையை முன்னெடுக்கவும் முடிவானது.
</p><p>
இதன்படி, ஹோா்முஸ் நீரிணையில் அமைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை அகற்றி, கப்பல் போக்குவரத்தை அனுமதிக்க ஈரானும்; கடல்வழி முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடைகளை விலக்கி, ஈரான் எண்ணெய் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கி மறுசீரமைப்புப் பணிகளைத் தொடங்க அமெரிக்காவும் ஒப்புக்கொண்டன.</p><p>

எனினும், ஹோா்முஸ் நீரிணை கட்டுப்பாடு தொடா்பான கருத்து வேறுபாட்டால் இந்த ஒப்பந்தம் விரைவில் முறிவடைந்த நிலையில்,இரு தரப்புக்கும் இடையே ராணுவ மோதல் அவ்வப்போது நீடித்து வருகிறது; கடந்த வார இறுதியிலும் புதிய மோதல் வெடித்தது.
</p><p>
இதற்கு மத்தியில், ஹோா்முஸ் நீரிணை மற்றும் அதைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் 2 வணிகக் கப்பல்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. </p><p>இத்தாக்குதல்களால் உயிரிழப்புகளோ, சுற்றுச்சூழல் பாதிப்போ ஏற்படவில்லை என்றும், இதற்கு இதுவரை யாரும்ம் பொறுப்பேற்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-02T00:12:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க விமானப்படை தளத்தை சிதைத்தது ஈரான்! அழிக்கப்பட்டுள்ள முக்கிய ஆயுதங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-missile-strike-on-us-drone-hangars-in-jordan-1788306589"></link>
            <id>https://ibctamil.com/article/iran-missile-strike-on-us-drone-hangars-in-jordan-1788306589</id>
            <summary type="text">ஜோர்டானில் உள்ள அமெரிக்காவின் பிரின்ஸ் ஹசன் விமானப்படைத் தளத்தின் மீது, நீண்ட தூரம் சென்று தாக்கும் RQ-4 மற்றும் MQ-9 ட்ரோன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோர்டானில் உள்ள அமெரிக்காவின் பிரின்ஸ் ஹசன் விமானப்படைத் தளத்தின் மீது, நீண்ட தூரம் சென்று தாக்கும் RQ-4 மற்றும் MQ-9 ட்ரோன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானக் கொட்டகைகளைக் குறிவைத்து, சக்திவாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) அறிவித்துள்து.
</p><p>
ஈரானிய அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB வெளியிட்ட அறிக்கையில், இத்தாக்குதலில் பல ஆளில்லா விமானங்கள் அழிக்கப்பட்டதுடன், அமெரிக்க விமான மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள் சிலர் கொல்லப்பட்டதாகவும், பல தொழில்நுட்ப உள்கட்டமைப்புகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இருப்பினும், இத்தாக்குதல் குறித்து அமெரிக்காவோ அல்லது ஜோர்டானோ உடனடியாக எந்தவொரு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலையும் வெளியிடவில்லை எனக் கூறப்படுகிறது.</p><p></p><h2>அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி</h2><p>

ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள சிரிக் நகரில் நடந்த திருமணக் கொண்டாட்டத்தின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில், ஒரு குழந்தை உட்பட நால்வர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d220cc1-5412-4422-b7af-827a47a5e1b8/26-6a9765ff20b5e.webp' /></p><p> </p><p>

அந்தச் சம்பவத்திற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே பிரின்ஸ் ஹசன் விமானப்படைத் தளத்தைக் குறிவைத்து இத்தாக்குதலை நடத்தியதாக IRGC சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>

தற்போதைய மோதலின் போது ஈரான் இந்த இராணுவத் தளத்தை பலமுறை குறிவைத்துத் தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T00:01:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சையை கிளப்பியுள்ள அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் செயல் - இணையத்தில் பரவும் காணொளி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ampitiya-sumanaratana-thero-viral-video-1788293216"></link>
            <id>https://tamilwin.com/article/ampitiya-sumanaratana-thero-viral-video-1788293216</id>
            <summary type="text">மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர், புவிச்சரித்திரவியல் அளவைகள் மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் (GSMB) மட்டக்களப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர், புவிச்சரித்திரவியல் அளவைகள் மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் (GSMB) மட்டக்களப்பு அலுவலகத்திற்குச் சென்று, அங்கே பணியாற்றும் தமிழ் அதிகாரி ஒருவரை மிரட்டியுள்ளார்.</p><p>

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத மண் அகழ்வைத் தடுக்கும் நோக்கில், மாவட்ட அபிவிருத்தி குழுவின் முடிவிற்கமைய நூற்றுக்கணக்கான மண் அகழ்வு அனுமதிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.</p><p>

இந்த அனுமதிகளைக் கோரி அலுவலகத்திற்குச் சென்ற தேரர், பணியகத்தின் பணிப்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அதிகாரியை மிரட்டிய காட்சி பதிவாகியுள்ளது.

இந்தச் செயலுக்கு சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.</p><p>

 சட்டத்தை நிலைநாட்ட முயலும் அதிகாரியை அச்சுறுத்துவதை அவர்கள் கண்டித்துள்ளனர்.</p><p>

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் இவ்வாறான சர்ச்சைக்குரிய மற்றும் இனவாதப் போக்குடைய கருத்துகளை இதற்கு முன்னரும் வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_taHX-CZ18s" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T23:58:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகளை பரீட்சைக்கு அழைத்து சென்ற தந்தையின் உயிரை பறித்த மர்ம நபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/attackers-kill-father-taking-daughter-to-exam-1788306493"></link>
            <id>https://jvpnews.com/article/attackers-kill-father-taking-daughter-to-exam-1788306493</id>
            <summary type="text">அநுராதபுர தலைமையக பொலிஸ்&amp;nbsp; வலயத்திற்கு உட்பட்ட சாலியபுர – மாண்கடவல சந்திப் பகுதியில் நேற்று (01) காலை&amp;nbsp; ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அநுராதபுர தலைமையக பொலிஸ்&nbsp; வலயத்திற்கு உட்பட்ட சாலியபுர – மாண்கடவல சந்திப் பகுதியில் நேற்று (01) காலை&nbsp; ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இந்த சம்பவத்தில் ரம்பாவ, பண்டுகாம்பயபுரப் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய மூன்று குழந்தைகளின் தந்தையே&nbsp; உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8308a68-4403-465d-97dc-79b60b5f0d6a/26-6a97643e9ce4e.webp' /></p><h2 style="text-align: justify; ">சந்தேகநபர்கள் அடையாளம்&nbsp;</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
உயிரிழந்த நபர் காலை தனது மகளை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காகப் பரீட்சை நிலையத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டு, பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்தத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">
தாக்குதலில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்துள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

இந்தக் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை அநுராதபுர தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். 
</p><p style="text-align: justify; ">
இந்த சம்பவம் குறித்து அநுராதபுர தலைமையகக் காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-01T23:48:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை கடல் எல்லைக்குள் ஈரானியக் கப்பல்கள் நுழைந்ததா..! நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-official-information-yet-arrival-iranian-ships-1788300571"></link>
            <id>https://tamilwin.com/article/no-official-information-yet-arrival-iranian-ships-1788300571</id>
            <summary type="text">இலங்கையின் கடல் எல்லைக்குள் அனுமதியின்றி ஈரானியக் கப்பல்கள் நுழைந்துள்ளன
என்று கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை அரசுக்கு உத்தியோகபூர்வ
அறிக்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் கடல் எல்லைக்குள் அனுமதியின்றி ஈரானியக் கப்பல்கள் நுழைந்துள்ளன
என்று கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை அரசுக்கு உத்தியோகபூர்வ
அறிக்கைகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும்
அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.</p><p>

கொழும்பிலுள்ள அரச தகவல் திணைக்களத்தில் நேற்று(1) நடைபெற்ற அமைச்சரவைத்
தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.</p><h2>ஈரானிய எண்ணெய் தாங்கிக் கப்பல்கள்&nbsp;</h2><p>

அவர் மேலும் கூறுகையில்,
</p><p>இலங்கையின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தை அண்மித்து ஈரானிய எண்ணெய்
தாங்கிக் கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளன என்று செய்திகள் வெளியாகியிருந்த
போதிலும், இக்கப்பல்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்துள்ளமை குறித்து
இதுவரை உத்தியோகபூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c876c99-2552-44ee-aae4-56686664ddd3/26-6a976214afe36.webp' /></p><p> </p><p>இது குறித்து வெளிவிவகார
அமைச்சிடம் விசாரித்து உண்மைத் தன்மை வெளியிடப்படும்.</p><p>

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடுமையான போர்ப் பதற்றங்கள் நிலவினாலும்,
இலங்கை எப்போதுமே தனது நடுநிலைமையான இராஜதந்திர நிலைப்பாட்டையே பேணி
வருகின்றது.</p><h2>இலங்கையின் இறையாண்மை</h2><p>உலக நாடுகள் பிளவுபட்டு நிற்கும் வேளையிலும் எந்தவொரு பக்கமும் சாராமல், மனிதநேய அடிப்படையில் உயிர்களைப் பாதுகாக்கும் நோக்கில் மட்டுமே இலங்கை செயற்பட்டு வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0c135ae-6fda-45e1-ad06-c1e371a02465/26-6a976215625f8.webp' /></p><p>
</p><p>
இதனிடையே, இலங்கையின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்துக்கு அருகில்
நங்கூரமிட்டுள்ளன என்று கூறப்படும் கப்பல்கள் குறித்து அரசு தீவிரமாகக்
கண்காணித்து வருகின்றது என்று வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் துஷார ரொட்ரிகோ
தெரிவித்துள்ளார்.</p><p> அத்துடன், இந்தக் கப்பல்கள் இலங்கையின் இறையாண்மை எல்லைக்கு
வெளியே நிறுத்தப்பட்டுள்ளமையால் அவற்றுக்கு அரசு பொறுப்பேற்காது என்றும்,
அந்தக் கப்பல்களுக்கு எவ்வித வசதிகளோ சேவைகளோ வழங்கப்படவில்லை என்றும் அவர்
தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T23:39:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு மாகாணத்திற்கான நெதர்லாந்து தூதுவரின் முதல் உத்தியோகபூர்வ விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/first-visit-of-dutch-ambassador-eastern-province-1788304773"></link>
            <id>https://tamilwin.com/article/first-visit-of-dutch-ambassador-eastern-province-1788304773</id>
            <summary type="text">நெதர்லாந்து தூதுவர் வைபே டி போயர் (Wiebe de Boer) கிழக்கு மாகாணத்திற்கு
தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை நேற்று (31) மேற்கொண்டுள்ளார்.
இதன்போது கிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெதர்லாந்து தூதுவர் வைபே டி போயர் (Wiebe de Boer) கிழக்கு மாகாணத்திற்கு
தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை நேற்று (31) மேற்கொண்டுள்ளார்.
</p><p>இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவை சந்தித்த தூதுவர்,
கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி முன்னுரிமைகள் தொடர்பில் கலந்துரையாடி
புரிந்துகொண்டுள்ளார்.</p><h2>நெதர்லாந்து தூதுவரின் விஜயம்</h2><p>

இதனைத் தொடர்ந்து, தூதுவர் திருகோணமலை மாவட்ட செயலாளர் டபிள்யூ. ஜி.
எம்.ஹேமந்த குமாரவையும் சந்தித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ee96d6a-61f4-4eb6-adcd-ee570288af30/26-6a975d882816b.webp' /></p><p>பின்னர், டச்சு காலனித்துவ பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வரலாற்றுச்
சிறப்புமிக்க திருகோணமலை கோட்டை பிரெட்ரிக் (Fort Frederick) பகுதிக்கும் அவர்
விஜயம் மேற்கொண்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-01T23:22:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அக்கரைப்பற்று முன்னாள் மேயர் அதாஉல்லாவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/akkaraipattu-mayor-chakki-ataullah-remand-extend-1788282733"></link>
            <id>https://tamilwin.com/article/akkaraipattu-mayor-chakki-ataullah-remand-extend-1788282733</id>
            <summary type="text">பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் மேயர்
அகம...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் மேயர்
அகமது செய்யது சக்கி அதாஉல்லாவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 09 ஆம் திகதி வரை
தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம்&nbsp; உத்தரவிட்டுள்ளது.</p><p>இந்த உத்தரவானது நேற்று(01.09.2026) பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2>வைத்தியசாலையில் அனுமதி</h2><p>

கடந்த 19ஆம் திகதி சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை
செப்டம்பர் 01ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான்
உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையிலேயே, அவரின் விளக்கமறியல் காலம் மேலும்
நீடிக்கப்பட்டுள்ளது.
</p><p>தற்போது சந்தேகநபரான சக்கி அதாஉல்லா சுகயீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதனால், அவர் இன்று
நீதிமன்றத்தில் நேரடியாக முன்னிலைப்படுத்தப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc0d5c24-af1a-4ccc-bb32-6e1dadef2ad9/26-6a971276916ce.webp' /></p><p>இந்த நிலையிலேயே, சிறைச்சாலை
அதிகாரிகளின் அறிக்கைகளை பரிசீலித்த நீதிவான், சந்தேகநபரை எதிர்வரும் 09ஆம்
திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளையிட்டுள்ளார்.
</p><p>அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வராகச் சக்கி அதாஉல்லா பதவி வகித்த
காலத்தில், அங்கு கடமையாற்றிய பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த பெண் அரச
உத்தியோகத்தர் ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவரைப்
பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றம்
சுமத்தப்பட்டிருந்தது.</p><h2>வழக்கு பதிவு</h2><p>குறித்த பெண் சமூக வலைத்தள (Facebook Live) நேரலையினூடாக இந்தக் குற்றச்சாட்டுகளை
வெளிப்படுத்தியதை அடுத்து, அம்பாறை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ்
பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p>இதனிடையே, வாக்குமூலம்
வழங்குவதற்காக பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த வேளையில் சந்தேகநபர் கைது
செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e4c9212-a133-470f-b697-cca410ebe33c/26-6a971275de7a8.webp' /></p><p>
இதனைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினரால் கடந்த
மாதம் 18 ஆம் திகதி அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்
செய்யப்பட்டுள்ளது. அதன்போது சந்தேகநபரை ஓகஸ்ட் 19 வரை விளக்கமறியலில் வைக்க
உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>பின்னர் ஓகஸ்ட் 19 ஆம் திகதி மீண்டும் முன்னலைப்படுத்தப்பட்ட
போது, விளக்கமறியல் செப்டம்பர் 01 வரை நீடிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது
3ஆவது முறையாக செப்டம்பர் 09 வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T23:22:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[எம்.பி. பதவியிலிருந்தும் விலகினார் பிரித்தானிய முன்னாள் பிரதமா் கியா் ஸ்டாா்மா்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/former-british-pm-keir-starmer-resigns-as-mp-1788304909"></link>
            <id>https://canadamirror.com/article/former-british-pm-keir-starmer-resigns-as-mp-1788304909</id>
            <summary type="text">பிரிட்டனின் முன்னாள் பிரதமரான கியா் ஸ்டாா்மா், தலைநகா் லண்டனின் ஹோல்போா்ன் மற்றும் செயின்ட் பான்கிராஸ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினா் (எம்.பி.) பதவியிலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரிட்டனின் முன்னாள் பிரதமரான கியா் ஸ்டாா்மா், தலைநகா் லண்டனின் ஹோல்போா்ன் மற்றும் செயின்ட் பான்கிராஸ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினா் (எம்.பி.) பதவியிலிருந்து விலகவுள்ளதாக&nbsp; அறிவித்துள்ளார்.</p><p>

ஆளும் தொழிலாளா் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் பதவி வகித்த கியா் ஸ்டாா்மா், கடந்த மாதம் அப்பொறுப்புகளிலிருந்து விலகியதைத் தொடா்ந்து ஆண்டி பா்ன்ஹாம் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றாா்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8975b2b6-9149-4bb1-97b3-5567b3f35335/26-6a975e0f32d4b.webp' /></p><p>



</p><p>பிரிட்டன் நாடாளுமன்றம் கோடைகால விடுமுறை முடிந்து, மீண்டும் தொடங்கியுள்ளது. </p><p>சா்வதேச விவகாரங்கள் மற்றும் சமூகப் பணிகளில் தனிக்கவனம் செலுத்துவதற்காக இம்முடிவை எடுத்துள்ளதாக கியா் ஸ்டாா்மா் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.</p>]]></content>
            <updated>2026-09-01T23:21:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக சக்திவாய்ந்த மோட்டார் சைக்கிள்களுடன் சிக்கிய நான்கு இளைஞர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/four-youths-caught-with-high-powered-motorcycles-1788301689"></link>
            <id>https://jvpnews.com/article/four-youths-caught-with-high-powered-motorcycles-1788301689</id>
            <summary type="text">நிக்கவரெட்டிய பகுதியில் அதிக சக்திவாய்ந்த 04 மோட்டார் சைக்கிள்களுடன் 04 சந்தேகநபர்களை நிக்கவரெட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 பொலிஸாரால் முன்னெட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிக்கவரெட்டிய பகுதியில் அதிக சக்திவாய்ந்த 04 மோட்டார் சைக்கிள்களுடன் 04 சந்தேகநபர்களை நிக்கவரெட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

</p><p> பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சிறப்புச் சோதனையின் போது மாற்றியமைக்கப்பட்ட புகைக் குழாய்களைப் பொறுத்தி, அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களைச் செலுத்திய போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1a97faa-90ce-4e6d-99fc-6103cbfb2b00/26-6a97517b0901d.webp' /></p><h2>&nbsp;மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
கைது செய்யப்பட்டவர்கள் 18, 19, 20 மற்றும் 22 வயதுடையவர்கள் என்பதுடன், அவர்கள் நிக்கவெரட்டிய, சித்திகுலிய, கொபேகனே மற்றும் சுத்திரிப்பிட்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>&nbsp;அத்துடன், கைது செய்யப்பட்ட 04 மோட்டார் சைக்கிள்களும் போலி இலக்கத்தகடுகளைப் பயன்படுத்திச் செலுத்தப்பட்டு வந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
இச்சம்பவம் தொடர்பில் நிக்கவரெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T22:45:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்லாந்து சென்ற 5,000 அமெரிக்க கடற்படையினர் - பட்டாயாவில் பொலிஸ் சோதனைகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-sailors-arrive-pattaya-raids-intensify-1788302820"></link>
            <id>https://news.lankasri.com/article/us-sailors-arrive-pattaya-raids-intensify-1788302820</id>
            <summary type="text">US sailors arrive Pattaya raids intensify: ஒரே நேரத்தில் 5,000 அமெரிக்க கடற்படையினர் தாய்லாந்து சென்றுள்ளதால், சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரிக்கலாம் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>US sailors arrive Pattaya raids intensify: ஒரே நேரத்தில் 5,000 அமெரிக்க கடற்படையினர் தாய்லாந்து சென்றுள்ளதால், சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரிக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.</p><h2>அமெரிக்க கடற்படை கப்பல்கள்</h2><p>
 
தாய்லாந்தின் பிரபல சுற்றுலா நகரமான பட்டாயாவில், அமெரிக்காவின் USS Abraham Lincoln விமானக் கப்பல் மற்றும் இரண்டு கடற்படை கப்பல்கள் தங்கவுள்ளதால், 5,000-க்கும் மேற்பட்ட கடற்படையினர் மற்றும் மாலுமிகள் வருகை தருகின்றனர்.</p><p>

இதனால் நகரத்தில் சட்டம்-ஒழுங்கு சவால்கள் அதிகரிக்கும் எனக் கருதி, பொலிசார் கடுமையான சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00ad2319-9bec-4111-ad76-ad8e75681602/26-6a9755e62136d.webp' /></p><p>வார இறுதி சோதனைகளின் விளைவாக, ஏற்கெனவே 40 முதல் 50 பேர் வரை விபச்சார சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

நகரின் கடற்கரை, இரவு வாழ்க்கை மையங்கள் மற்றும் முக்கிய சுற்றுலா பகுதிகளில் பொலிஸ் ரோந்துகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
</p><p></p><p>பட்டாயா பொலிஸ் தலைவர் அனேக் ஸ்ரத்தோங்யூ கூறியதாவது: “பாலியல் தொழிலை முழுமையாகக் கட்டுப்படுத்துவது கடினம். பொதுவிடங்களில் தொழிலாளர்கள் வாடிக்கையாளர்களை அணுகலாம், அதை உடனடியாக கண்டறிவது சாத்தியமில்லை” என்றார்.
</p><h2>
பொருளாதார வளர்ச்சி</h2><p>இந்நகரம் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு துறையை அடிப்படையாகக் கொண்டதால், அமெரிக்க கடற்படையினரின் வருகை ஹோட்டல்கள், உணவகங்கள், பார்கள், கடைகள் போன்றவற்றில் குறுகிய காலத்தில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
</p><p>
பட்டாயா மேயர் போரமாஸே நகம்பிச்சஸ் கூறியதாவது: “ஒவ்வொரு கடற்படையினரும் தினமும் 1,000 முதல் 3,000 பாத் (சுமார் 30-91 டொலர்) வரை செலவிடுவார்கள். இது நகரின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும்” என்றார்.</p><p></p><p>
</p><h2>
பாலியல் தொழில்</h2><p>பட்டாயா, வியட்நாம் போருக்காலத்தில் அமெரிக்க வீரர்கள் ஓய்வு மற்றும் பொழுதுபோக்கிற்காக வந்ததிலிருந்து, சுற்றுலா மற்றும் பாலியல் தொழில் மையமாக வளர்ந்தது. தாய்லாந்தில் பாலியல் தொழில் சட்டவிரோதமானது என்றாலும், பட்டாயா மற்றும் பாங்காக் போன்ற நகரங்களில் அது வெளிப்படையாகத் தொடர்கிறது.
</p><p>
USS Abraham Lincoln கப்பல், 200 நாட்களுக்கு மேல் கடலில் இருந்தது. இது சமீபத்திய வரலாற்றில் நீண்ட கால பணியிடைமாற்றமாகக் கருதப்படுகிறது. நீண்ட கால கடற்படை பணியால், கப்பலில் மன அழுத்தம் மற்றும் தற்கொலை முயற்சிகள் அதிகரித்ததாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T22:45:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைக்குச் செல்ல போகும் நாமல் உட்பட இன்னும் சில முக்கிய புள்ளிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/some-other-including-namal-expecting-go-to-jail-1788292485"></link>
            <id>https://tamilwin.com/article/some-other-including-namal-expecting-go-to-jail-1788292485</id>
            <summary type="text">இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலை நோக்கும்போது, முன்னாள் அரசியல்வாதிகள் பலர் பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டும், க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலை நோக்கும்போது, முன்னாள் அரசியல்வாதிகள் பலர் பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டும், கைது செய்யப்பட்டும் வருகின்றனர்.</p><p>

இவ்வாறான நிலையில், இம்மாதம் 12ஆம் திகதிக்கு முன்னர் தான் கைது செய்யப்படலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>

இதேவேளை, முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

இதனையடுத்து, முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

இவ்வாறு நாட்டில் இடம்பெற்று வரும் முக்கிய அரசியல் பிரமுகர்களின் கைது மற்றும் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தொடர்பான மேலும் பல முக்கிய தகவல்களை லங்காசிறியின் ‘நாட்டு நடப்பு’ நிகழ்ச்சியின் ஊடாக விரிவாகப் பார்க்கலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/uWbsC-8g2OU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T22:42:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு பேரிடியான அறிவிப்பு! ட்ரம்ப் நிர்வாகம் எடுக்கவுள்ள முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/h-1b-visa-holders-in-the-united-states-1788297408"></link>
            <id>https://ibctamil.com/article/h-1b-visa-holders-in-the-united-states-1788297408</id>
            <summary type="text">அமெரிக்காவில் எச்-1பி (H-1B) விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு எச்-4 (H-4) விசாவின் கீழ் வழங்கப்படும் வேலை செய்யும் உரிமையை ரத்து செய்ய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் எச்-1பி (H-1B) விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு எச்-4 (H-4) விசாவின் கீழ் வழங்கப்படும் வேலை செய்யும் உரிமையை ரத்து செய்ய ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.</p><p>
அமெரிக்காவில் தற்காலிகமாகத் தங்கிப் பணியாற்றும் வெளிநாட்டினருக்கு எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இவர்களைச் சார்ந்து வாழும் வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் 21 வயதுக்குட்பட்ட திருமணம் ஆகாதவர்களுக்கு எச்-4 விசா வழங்கப்பட்டு வருகிறது.</p><p>
ஆரம்பத்தில் எச்-4 விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் வேலை செய்ய அனுமதி இருக்கவில்லை. 2015-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தின் மூலமே, நிரந்தரக் குடியுரிமைக்கு (Green Card) விண்ணப்பித்துக் காத்திருக்கும் எச்-1பி பணியாளர்களின் துணைவர்கள் வேலை அனுமதிப் பத்திரம் (EAD) பெற்றுப் பணியாற்ற வழிவகை செய்யப்பட்டது.&nbsp;</p><p></p><h2>சட்ட நடைமுறைகள்</h2><p>
இச்சலுகையைப் பயன்படுத்தி வேலை செய்பவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியர்கள் ஆவர்; குறிப்பாக எச்-1பி பணியாளர்களின் மனைவிகளே அதிகளவில் இதன்மூலம் பயனடைந்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac9a4e5b-98f8-4867-890c-c2231a7cb16b/26-6a9742a13332c.webp' /></p><p>
தற்போது இந்த வேலை அனுமதியைத் திரும்பப் பெறுவதற்கான முதற்கட்ட சட்ட நடைமுறைகளை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தொடங்கியுள்ளதுடன், இது தொடர்பான பரிந்துரையையும் வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p>
ஏற்கனவே ட்ரம்பின் முதலாவது ஆட்சிக்காலத்தில் 2017-ஆம் ஆண்டு இவ்வாறான முயற்சி எடுக்கப்பட்டு, பின்னர் 2021-ல் கைவிடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T22:30:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் தாக்குதல்களால் அதிரும் ஈரான் ; மிரள வைத்த எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-resumes-attacks-iran-1788300904"></link>
            <id>https://canadamirror.com/article/us-resumes-attacks-iran-1788300904</id>
            <summary type="text">கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல் முயற்சிகளுக்குப் பதிலடியாக ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல் முயற்சிகளுக்குப் பதிலடியாக ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது.
</p><p>
இதற்கிடையில், பந்தர் அப்பாஸின் கிழக்கே பலத்த வெடிப்புகள் நிகழ்ந்ததாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8586c74d-ea99-4931-a058-8c5a9d69127a/26-6a974e6a4af6a.webp' /></p><p>
</p><p>
இந்தச் சூழலில், வளைகுடா பகுதியில் இருந்து "நாம் எண்ணெய் ஏற்றுமதி செய்யக்கூடாது .</p><p>என்பதே அமெரிக்காவின் விருப்பமாக இருந்தால், யாராலும் எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியாது" என்று ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் எச்சரித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-01T22:15:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்னும் சில நாட்களில் நான் கைது செய்யப்படலாம்..காரணம் இது தான் ; நாமலின் ஆருடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/i-may-be-arrested-before-the-12th-namal-1788299936"></link>
            <id>https://jvpnews.com/article/i-may-be-arrested-before-the-12th-namal-1788299936</id>
            <summary type="text">நாடு தழுவிய ரீதியில் அரசியல் கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளோம். எதிர்வரும் 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள அரசியல் கூட்டத்தை தடுக்க அதற்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாடு தழுவிய ரீதியில் அரசியல் கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளோம். </p><p style="text-align: justify; ">எதிர்வரும் 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள அரசியல் கூட்டத்தை தடுக்க அதற்கு முன்னர் என்னை கைது செய்ய அரசாங்கம் முயற்சிக்கிலாம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfe5eca2-be32-4504-9bb3-ef1ca5b9a99a/26-6a974b3d26d24.webp' /></p><h2 style="text-align: justify;">போதைப்பொருள் கொள்கலன்கள்</h2><p>
</p><p style="text-align: justify;">
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p style="text-align: justify;">
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

</p><p style="text-align: justify;">
அரசாங்கத்தின் குறைப்பாடுகளை சுட்டிக்காட்டும் போது அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலை ஆளும் தரப்பின் உறுப்பினர்களுக்கு கிடையாது. நீதியமைச்சர் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார். ஊடகவியலாளர்களுடனும் அவர் தற்போது முரண்படுகிறார்.</p><p style="text-align: justify;"></p><p>
</p><p style="text-align: justify;">
கொழும்பு துறைமுகத்தில் இருந்து ஐஸ் போதைப்பொருள் கொள்கலன்கள் இரண்டு தற்போது கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;">இதற்கு முன்னர் எவ்வித பரிசோதனைகளுமின்றிய வகையில் 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கலன்களில் என்னவிருந்தது என்பது இதுவரையில் வெளிப்படுத்தப்படவில்லை.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">&nbsp;நாடு தழுவிய ரீதியில் அரசியல் கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளோம். எதிர்வரும் 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள அரசியல் கூட்டத்தை தடுக்க அதற்கு முன்னர் என்னை கைது செய்ய அரசாங்கம் முயற்சிக்கிலாம்.</p><p style="text-align: justify;">


அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை சுட்டிக்காட்டுவதால் எங்களை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மக்களுக்காகவே நாங்கள் செயற்படுவதால் மக்களுக்காகவே எந்த சவால்களையும் எதிர்கொள்ள தயாராகவுள்ளோம் என்றார்.&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-01T22:01:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைக்கு விஜயம் செய்த நீதி அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/justice-minister-visits-mahara-prison-1788293875"></link>
            <id>https://tamilwin.com/article/justice-minister-visits-mahara-prison-1788293875</id>
            <summary type="text">நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மஹர சிறைச்சாலைக்கு
விஜயம் செய்து, அங்குள்ள அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த விஜயத்தினை அவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மஹர சிறைச்சாலைக்கு
விஜயம் செய்து, அங்குள்ள அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
</p><p>குறித்த விஜயத்தினை அவர் நேற்றைய தினம்(01.09.2026) மேற்கொண்டிருந்தார்.</p><h2>பாதுகாப்பு நடவடிக்கைகள்</h2><p>
இதன்போது சிறைச்சாலைகளுக்குள் எதிர்பாராதவிதமாக மோதல்கள் அல்லது பதற்றமான சூழ்நிலைகள்
தோற்றுவிக்கப்படும் போது, அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு
நடவடிக்கைகள் குறித்து விரிவாக பேசப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e2854b7-d101-4da6-b9f9-6c77d304a701/26-6a97368152d72.webp' /></p><p>அத்துடன் சிறைச்சாலைகளுக்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டமைப்பு மற்றும் நிர்வாக
மறுசீரமைப்புப் பணிகள் குறித்தும் அமைச்சர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T22:00:34+00:00</updated>
        </entry>
    </feed>
