<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-18T18:32:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானில் மசூதிக்கு அருகே கார் குண்டுவெடிப்பு: 4 வயது குழந்தை உட்பட 21 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/car-bombing-at-pakistan-s-kohat-mosque-21-dead-1789755728"></link>
            <id>https://news.lankasri.com/article/car-bombing-at-pakistan-s-kohat-mosque-21-dead-1789755728</id>
            <summary type="text">Car Bombing at Pakistan’s Kohat Mosque 21 dead: பாகிஸ்தானில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கார் குண்டுவெடிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Car Bombing at Pakistan’s Kohat Mosque 21 dead: பாகிஸ்தானில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> கார் குண்டுவெடிப்பு</h2><p>வடமேற்கு பாகிஸ்தானில் வெள்ளிக்கிழமை தொழுகையை குறிவைத்து மசூதி அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 21 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><p> இதில் 15 காவல்துறை அதிகாரிகளும், 4 வயது குழந்தையும் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இந்த சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p> கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள கோஹத் நகரில் இந்த கோர தாக்குதலானது அரங்கேறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb0e0761-6341-44c6-b6f5-43885c164f3c/26-6aad815275d39.webp' /></p><p></p><p> கார் குண்டுவெடிப்பு சம்பவத்துடன் சேர்த்து, அதற்கு அருகில் அமைந்துள்ள காவல்துறை முகாம் மீது ஆயுதமேந்திய கும்பல் ஒன்று திடீர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியது.</p><p> இந்த தாக்குதல் தொடர்பாக வெளியான வீடியோ காட்சிகளில், சம்பவ இடம் முழுவதும் இடுபாடுகளால் குழம்பி இருப்பதாகவும்,&nbsp; காயமடைந்தவர்களுக்கு பொதுமக்கள் உதவுவதும் பதிவாகியுள்ளது.</p><p>இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதற்கிடையில் சம்பவ இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அங்கு பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.<br></p>]]></content>
            <updated>2026-09-18T18:22:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிராக அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு தயாராகும் அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-prepares-for-next-phase-of-action-against-iran-1789753256"></link>
            <id>https://ibctamil.com/article/us-prepares-for-next-phase-of-action-against-iran-1789753256</id>
            <summary type="text">ஈரான் மீது கூடுதல் இராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வரும் நிலையில், அந்நாடு அமெரிக்காவுடன் ஒரு உடன்பாட்டை நாடுவதாக அமெரிக்க ஜனாதிபதி தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது கூடுதல் இராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வரும் நிலையில், அந்நாடு அமெரிக்காவுடன் ஒரு உடன்பாட்டை நாடுவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
</p><p>தொலைபேசி நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்ட அவரிடம், ஈரானை முற்றிலுமாக அழிப்பதா என்பது குறித்து பரிசீலித்து வருவதாக சமீபத்தில் கூறிய கருத்துக்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில் இதற்கு பதில் வழங்கிய அவர், "என்ன நடக்கிறது என்று பொருத்திருந்துபார்ப்போம்," என கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>இருதரப்பு&nbsp;உடன்பாடு</h2><p>அத்தோடு, இருதரப்பும் ஒரு உடன்பாட்டை எட்டுவதில் ஆர்வமாக உள்ளது என ட்ரம்ப் மேலும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97609579-c9e6-4986-97b9-4d3590bd5fd3/26-6aad77a9734d3.webp' /></p><p>“ஈரான் நிதி ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் எல்லா வகையிலும் இழந்து வருகிறது. </p><p>அந்த ஒப்பந்தம் சரியானதாக இல்லையென்றால், நான் அதைப் பற்றி யோசிக்கக் கூட மாட்டேன்.ஆனால் தற்சமயம், அவர்கள் எல்லா வகையிலும் இழந்து கொண்டிருப்பதால், ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள்.” என கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-18T18:15:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தான் பள்ளிவாசலில் பயங்கர வெடிப்பு ; 17 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/massive-explosion-mosque-pakistan-17-people-killed-1789754556"></link>
            <id>https://canadamirror.com/article/massive-explosion-mosque-pakistan-17-people-killed-1789754556</id>
            <summary type="text">வடகிழக்கு பாகிஸ்தானில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடகிழக்கு பாகிஸ்தானில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42644175-ff2b-452d-aa7b-0d2012885136/26-6aad7cbd97847.webp' /></p><p>இந்த வெடிப்புச் சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இன்றையதினம் மத வழிபாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோதே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் வெடிப்புக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-09-18T18:02:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாசா - ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 946 மில்லியன் டொலர் ஒப்பந்தம்: விண்வெளிக்கு பறக்கும் 3 குழுக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/spacex-nasa-new-946-million-contract-1789754457"></link>
            <id>https://news.lankasri.com/article/spacex-nasa-new-946-million-contract-1789754457</id>
            <summary type="text">SpaceX-Nasa New $946 Million Contract: சுமார் 1 பில்லியன் மதிப்பிலான விண்வெளி பயண ஒப்பந்தத்தை நாசாவிடம் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. நாசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>SpaceX-Nasa New $946 Million Contract: சுமார் 1 பில்லியன் மதிப்பிலான விண்வெளி பயண ஒப்பந்தத்தை நாசாவிடம் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.</p><h2> நாசா - ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம்</h2><p>சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கூடுதலாக 3 விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கான ஒப்பந்த திருத்தத்தை நாசா மேற்கொண்டுள்ளது.</p><p> இதற்காக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் 946 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தை நாசா மேற்கொண்டுள்ளது.</p><p> இந்த ஒப்பந்த திருத்தத்தின் மூலம் நாசா - ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் கூட்டுப்பணி இந்த புத்தாண்டின் இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e74f904c-02fc-41be-8315-67d86b0741c8/26-6aad7c5a96590.webp' /></p><p> புதிய ஒப்பந்தத்தின் கீழ் Crew-15, Crew-16 மற்றும் Crew-17 ஆகியவை புதிய பயணங்களை மேற்கொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இதன்மூலம் நாசாவின் வணிக விண்வெளி போக்குவரத்து திட்டத்தின் கீழ் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மேற்கொள்ளும் 17வது விண்வெளி பயணம் இதுவாகும்.</p><p> விண்கலத்தை விண்ணில் செலுத்துவது,&nbsp; பூமியின் சுற்று வட்டப்பாதையில் விண்கலத்தை இயக்குவது மற்றும் வீரர்களை பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவது ஆகியவை ஒப்பந்தத்தில் வரையறுக்கப்பட்ட முக்கிய பணிகள் ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/807aa45d-66ae-4715-9619-cc42e0b26f6d/26-6aad7c5b4eb3a.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T18:01:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் 7 வருடங்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்ட பெண் - 20 000 டொலரை வெகுமதியாக அறிவித்த பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-dead-in-a-foreign-country-after-7-years-1789754294"></link>
            <id>https://tamilwin.com/article/woman-dead-in-a-foreign-country-after-7-years-1789754294</id>
            <summary type="text">2019ஆம் ஆண்டு பிரிட்டனில் காணாமல் போயிருந்த மூன்று பிள்ளைகளின் தாயின் உடல் எச்சங்கள், காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதியில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019ஆம் ஆண்டு பிரிட்டனில் காணாமல் போயிருந்த மூன்று பிள்ளைகளின் தாயின் உடல் எச்சங்கள், காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதியில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொலைச் சதி செய்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

 கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாகக் காணாமல் போயிருந்த 44 வயதான ஜோன் ஷீனின் உடல் எச்சங்கள், அவர் காணாமல் போன இடத்திலிருந்து 60 மைல்களுக்கும் அதிகமான தொலைவில் உள்ள தென்மேற்கு லண்டனின் ஃபெல்தாம் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீக்குப் பின்னர் கண்டெடுக்கப்பட்டுள்ளன. </p><p>

இந்தச் சம்பவம் தொடர்பாக, இங்கிலாந்து நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கிய துறைமுக நகரமான சவுத்தாம்ப்டனைச் சேர்ந்த 56 வயதான ஹாம்ப்ஷயர் என்பவரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><h2>


தீ விபத்தில் சிக்கிய உடல் எச்சங்கள்</h2><p>
குறித்த பெண், கடைசியாக டிசம்பர் 5, 2019 அன்று, ஃபேர்ஹாமிலிருந்து தனது சொந்த ஊரான சவுத்தாம்ப்டனுக்கு ஒரு தோழியுடன் சென்ற பொழுது காணாமல் போயுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebae6b93-1c9e-477e-9828-2163c68b9551/26-6aad7c33e071d.webp' />&nbsp;&nbsp;</p><p> </p><p>

அதன் பின்னர், பல மாதங்களாக அவரிடமிருந்து எந்தத் தகவலும் வராததால், குடும்ப உறுப்பினர்கள் பெப்ரவரி 2020ஆம் ஆண்டு பொலிஸாரிடம் முறைப்பாடளித்துள்ளனர்.</p><p>“லிட்டில் ஜோ” என்றும் அறியப்பட்ட, ஐந்து அடி உயரமுள்ள அந்தப் பெண் காணாமல் போனது குறித்து பொலிஸார் ஒரு விரிவான விசாரணையை ஆரம்பித்தனர்.</p><p>

இதன்போது, 4,000-க்கும் மேற்பட்ட தகவல்களும், 300-க்கும் மேற்பட்ட வாக்குமூலங்களும் பெறப்பட்டன. அவர் இருந்த பன்னிரண்டுக்கும் மேற்பட்ட முகவரிகளிலும், பல படகுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
</p><p>
பெட்பான்ட் லேக்ஸ் கண்ட்ரி பார்க் அருகே இரண்டு ஹெக்டேர் பரப்பளவில் தீ விபத்து ஏற்பட்ட சில நாட்களுக்குப் பின்னர், ஆகஸ்ட் 12 அன்று அந்த வழியே சென்ற ஒருவர் அந்த எலும்புக்கூடு எச்சங்களை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதனைத் தொடர்ந்து, டிஎன்ஏ மற்றும் தடயவியல் சோதனைகள் மூலம் அந்த உடல் ஷீனுடையது என்பதை பொலிஸார் உறுதி செய்துள்ளனர். </p><h2>

20,000 டொலர்கள் வெகுமதி</h2><p>
அவருக்கு நிலையான முகவரி, வங்கிக் கணக்கு அல்லது கார் எதுவும் இல்லாததால், பொலிஸாரின் விசாரணை கடுமையாகத் தடைபட்டது. </p><p>இந்தச் சம்பவம் தொடர்பாக 2020ஆம் ஆண்டு, ஐந்து ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/557e3821-fe4d-4279-86de-01757290ac4d/26-6aad7c34ae13c.webp' /></p><p>
</p><p>
அவரது இரண்டு மகள்களான லெய்லா மற்றும் ஹெய்லி, தங்கள் தாயை மிகவும் இனிமையான மற்றும் நட்பான பெண் என்று விவரித்தனர்.

 இருப்பினும், அவர் ஒரு பாலியல் தொழிலாளியாகவும் பணியாற்றியதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர். </p><p>

எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டது விசாரணைக்கு புதிய வழிகளைத் திறந்துள்ளது என்று துப்பறியும் தலைமை ஆய்வாளர் டோபி எல்காக் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதற்கிடையில், இந்த விசாரணைக்கு உதவும் துல்லியமான தகவல்களை வழங்குபவர்களுக்கு 20,000 டொலர்கள் வெகுமதி வழங்க கிரைம்ஸ்டாப்பர்ஸ் மீண்டும் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T18:00:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறீதரனை சந்தித்த ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/met-with-itak-member-of-parliament-shritharan-1789753078"></link>
            <id>https://tamilwin.com/article/met-with-itak-member-of-parliament-shritharan-1789753078</id>
            <summary type="text">இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்ச் இலங்கை தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சிவஞானத்தை சந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்ச் இலங்கை தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சிவஞானத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.</p><p>குறித்த சந்திப்பானது இன்று(18.09.2026) இடம்பெற்றுள்ளது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fmarc.andre.franche%2Fposts%2Fpfbid0CkyvfNcAa58cM9Ca5eEv65LDiJD7hnVVzz3F3XMzSLG2yPTeszEzcUC1rPyu5zfSl&show_text=true&width=500" width="500" height="250" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p> </p><p>இந்த சந்திப்பின் போது நல்லிணக்க முயற்சிகளில் சமூகப் பங்கேற்பை வலுப்படுத்துவதற்கான கூட்டணிகளை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளித்து, வடக்கில் காணிகளை விடுவித்தல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான நிலைவரங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T17:58:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியா கடலில் நீந்திக் கொண்டிருந்தவருக்கு நேர்ந்த துயரம் ; சுறா தாக்கி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/shark-viciously-attacks-swimmer-australian-waters-1789753255"></link>
            <id>https://canadamirror.com/article/shark-viciously-attacks-swimmer-australian-waters-1789753255</id>
            <summary type="text">மேற்கு அவுஸ்ரிரேலியாவில் கடலில் நீந்திக் கொண்டிருந்த ஒருவர் சுறா மீன் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கு அவுஸ்ரிரேலியாவில் கடலில் நீந்திக் கொண்டிருந்த ஒருவர் சுறா மீன் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
மேற்கு அவுஸ்ரிரேலியாவில் பெர்த் நகருக்கு அருகே அமைந்த புகழ்பெற்ற சோரெண்டோ கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்த ஒருவரை எதிர்பாராத விதமாக அங்கு வந்த சுறா மீன் கொடூரமாகத் தாக்கியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b39c065-11ce-46c9-906e-ad6c5098a424/26-6aad77a8ea31c.webp' /></p><p>கடற்கரையிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவிலேயே இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான நபரை மீட்கவும், தாக்குதல் நடத்திய சுறாவைக் கண்டறியவும் காவல்துறையினர் உடனடியாகக் விரைந்துள்ளனர்.
</p><p>
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியிலுள்ள கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மூடப்பட்டுள்ளன.
</p><p>
மேலும், காவல்துறையின் சிறப்புப் படகுகள் மற்றும் உலங்கு வானுார்திகள் மூலம் அந்த பகுதியில் தீவிரத் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
</p><p>
இருப்பினும், தாக்குதல் நடத்திய சுறாவின் இனம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் கண்டறியப்படவில்லை எனத் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-18T17:41:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[170க்கும் மேற்பட்டோர் பலி அமெரிக்க தாக்குதல்! போர்க்குற்றச்சாட்டை முன்வைக்கிறது ஐ.நா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-attack-iran-un-levels-war-crime-allegation-1789752495"></link>
            <id>https://ibctamil.com/article/us-attack-iran-un-levels-war-crime-allegation-1789752495</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிரான போரின் ஆரம்பக் கட்டத்தில் அமெரிக்கா நடத்திய இரண்டு வான்வழித் தாக்குதல்கள் போர்க்குற்றங்களாகக் கருதப்படலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான போரின் ஆரம்பக் கட்டத்தில் அமெரிக்கா நடத்திய இரண்டு வான்வழித் தாக்குதல்கள் போர்க்குற்றங்களாகக் கருதப்படலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் (UN) உண்மை கண்டறியும் குழு தனது புதிய அறிக்கையில் அதிரடியாகத் தெரிவித்துள்ளது. </p><p>அதேவேளையில், தனது நாட்டு அரசாங்கத்திற்கு எதிராகப் போராடிய மக்கள் மீது ஈரான் நடத்திய ஒடுக்குமுறைகள் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களாக அமையலாம் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள இந்த சுயாதீன விசாரணை அறிக்கையில்,</p><p></p><h2>சர்வதேச குற்றவியல்</h2><p>சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) போன்ற சர்வதேச நீதிமன்றங்களால் எதிர்காலத்தில் சட்ட ஆதாரங்களாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99b7f509-635f-4e61-8354-f476595582a3/26-6aad74b1d9e74.webp' /></p><p>ஈரானிய அதிகாரிகளின் தகவல்படி, கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி ஈரானின் தெற்கு நகரமான மினாப்பில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 120 குழந்தைகள் மற்றும் 26 ஆசிரியர்கள் உட்பட குறைந்தது 156 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.</p><p> பலி எண்ணிக்கையில் சிறு முரண்பாடுகள் இருந்தாலும், சமீபத்திய அமெரிக்க இராணுவ வரலாற்றில் மிக மோசமான பொதுமக்கள் உயிரிழப்பாக இது பதிவாகியுள்ளது.</p><p>அதே நாளில், தெற்கு நகரமான லாமெர்டில் உள்ள விளையாட்டு மையம் மற்றும் குடியிருப்புப் பகுதியை இலக்கு வைத்து அமெரிக்கா நடத்திய இரண்டாவது தாக்குதலையும் ஐ.நா குழு விசாரித்தது. </p><p>இத்தாக்குதலில் 22 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா உறுதிப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு வான்வழித் தாக்குதல்களிலும், பொதுமக்கள் மற்றும் பொதுச் சொத்துக்களுக்குப் பாரிய சேதத்தை ஏற்படுத்தும் வகையிலான தன்னிச்சையான தாக்குதல்களை அமெரிக்கா நடத்தியுள்ளது” என்றும், இவை போர்க்குற்றங்களாகக் கருதப்பட போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும் ஐ.நா அறிக்கை சுட்டிகாட்டுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-18T17:28:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் அடுத்தடுத்து வாள் வெட்டு சம்பவங்கள் - போராட்டத்தில் குதித்த வர்த்தகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-kilinochchi-1789752266"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-kilinochchi-1789752266</id>
            <summary type="text">கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி கிளிநொச்சி நகர் மற்றும் கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் கவனய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி கிளிநொச்சி நகர் மற்றும் கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
</p><p>

இந்த போராட்டமானது, இன்று(18.09.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>


கிளிநொச்சி சேவைச்சந்தை முன்பாக ஆரம்பித்த
கவனயீர்ப்பு பேரணி, கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்று மாவட்ட மேலதிக
அரசாங்கதிபர் நளாயினி இன்பராஜ்விடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றும் போராட்டத்தில் ஈடுப்பட்ட வர்த்தகரங்களால் கையளிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3dacad13-1970-45e5-9037-29e903d75804/26-6aad744d55968.webp' /></p><p> </p><p>

கிளிநொச்சி நகரில் தொடர்ச்சியாக வர்த்தகர்களை அச்சுறுத்தும்
வகையில் வாள் வெட்டுக்குழுக்கள் வாள் வெட்டுத்தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும், கடந்த வாரங்களில் மாத்திரம் தொடர்ச்சியாக இரண்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48b07e5b-3f7a-43c4-b76e-3cce230607e2/26-6aad744e54de5.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a61c2b0c-3a6c-44e2-8d24-daab569952c1/26-6aad744f29fb8.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T17:27:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடருந்து பொது முகாமையாளருக்கு எதிராக ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/complaint-against-the-general-manager-of-railways-1789752278"></link>
            <id>https://jvpnews.com/article/complaint-against-the-general-manager-of-railways-1789752278</id>
            <summary type="text">தொடருந்து பொது முகாமையாளர் ரவீந்திர பத்மப்பிரியவுக்கு எதிராக இன்று (18) கையூட்டல் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடருந்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடருந்து பொது முகாமையாளர் ரவீந்திர பத்மப்பிரியவுக்கு எதிராக இன்று (18) கையூட்டல் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தினால் குறித்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da7c166c-b345-4d81-b440-42964f768e1c/26-6aad73d75ce7b.webp' /></p><p>தொடருந்து திணைக்களத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள், தொடருந்து பயணச்சீட்டு விநியோகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் மற்றும் திணைக்களத்திற்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதி இழப்புகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T17:24:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானில் பொலிஸ் வளாகப் பள்ளிவாசல் மீது தாக்குதல் : 16 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suicide-attack-police-complex-mosque-in-pakistan-1789751033"></link>
            <id>https://tamilwin.com/article/suicide-attack-police-complex-mosque-in-pakistan-1789751033</id>
            <summary type="text">பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் வளாகமொன்றின் மீது
மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளதுடன்,
57...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் வளாகமொன்றின் மீது
மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளதுடன்,
57 பேர் காயமடைந்துள்ளனர்.
</p><p>
கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் கோஹாட் நகரில் அமைந்துள்ள பொலிஸ்
வளாகத்திற்குள் வெள்ளிக்கிழமை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மற்றும்
அவர்களின் குடும்பத்தினரைக் இலக்குவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்காத நிலை</h2><p>வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை வளாகத்தின் வெளிச்சுவர் மீது மோதி
வெடிக்கச் செய்த பயங்கரவாதிகள், அதனைத் தொடர்ந்து துப்பாக்கிப் பிரயோகத்திலும்
ஈடுபட்டுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03d428ae-6b66-42e7-a241-a0bc73d64ace/26-6aad716740e10.webp' /></p><p>
இந்தத் தாக்குதலில் ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 16 பேர்
உயிரிழந்துள்ளதுடன், பொலிஸாரின் பதில் தாக்குதலில் தாக்குதலில் ஈடுபட்ட ஏழு
பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளதாக மாகாணப் பொலிஸ் தலைமை அதிகாரி
தெரிவித்துள்ளார்.
</p><p>
தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், பாகிஸ்தானிய
தலிபான் (TTP) இயக்கம் இந்தத் தாக்குதலுக்கும் தமக்கும் தொடர்பில்லை என
அறிவித்துள்ளது.</p><p>எல்லைப் பகுதிகளில் தீவிரவாதக் குழுக்களின் தாக்குதல்கள் அதிகரித்து வரும்
நிலையில், பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்தே இவ்வாறான
தாக்குதல்களைத் திட்டமிடுவதாக பாகிஸ்தான் குற்றம் சுமத்தி வருகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T17:19:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[48 மணி நேர அடையாளப் போராட்டம் நிறைவு - கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதாக அரசாங்கம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/48-hour-symbolic-protest-concludes-1789751559"></link>
            <id>https://tamilwin.com/article/48-hour-symbolic-protest-concludes-1789751559</id>
            <summary type="text">தொடருந்து பொது மேலாளரைப் பதவி நீக்கம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காகத் தொடங்கப்பட்ட 48 மணி நேர அடையாளப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடருந்து பொது மேலாளரைப் பதவி நீக்கம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காகத் தொடங்கப்பட்ட 48 மணி நேர அடையாளப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த போராட்டமானது, இன்று(18.09.2026) நள்ளிரவு முதல் நிறைவடையவுள்ளதாக இலங்கை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது. </p><h2>

போராட்டம் நிறைவு</h2><p>
இந்தப் போராட்டம் வெற்றி பெற்றதாகவும், முந்தைய தொழிற்சங்கங்கள் செய்தது போன்று, மக்களைத் துன்புறுத்தி சீர்குலைக்கும் போராட்டத்தை நடத்தும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் அதன் தலைவர் சுமேத சோமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/107cd0c5-e8ac-4939-b1d3-ccb82336a5a1/26-6aad7138df729.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T17:13:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு உத்தரவிற்கான திகதி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/date-set-for-the-order-writ-petition-filed-sallay-1789751564"></link>
            <id>https://jvpnews.com/article/date-set-for-the-order-writ-petition-filed-sallay-1789751564</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளம...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்குட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா? என்பது தொடர்பான உத்தரவு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>நீண்ட பரிசீலனைகளின் பின்னர் வாய்மொழிச் சமர்ப்பணங்களை முன்வைப்பது இன்று (18) நிறைவுற்றதைத் தொடர்ந்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரான நீதியரசர் ரொஹான்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49205dbf-e3dc-40e4-894a-44d258d1f7b2/26-6aad710e26d46.webp' /></p><p>இன்றைய தினம் மனுதாரரான சுரேஷ் சலே சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தனவின் பதில் வாய்மொழிச் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவுறுத்தப்பட்டன.</p><p> 

அதனைத் தொடர்ந்து, எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை அடுத்த மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் தரப்பினருக்கு உத்தரவிட்டது.</p><p> 

அதன் பின்னர், இம்மனுவை விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா? என்ற உத்தரவும் இடைக்கால நிவாரணக் கோரிக்கைகள் தொடர்பான உத்தரவும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் நீதியரசர்கள் குழாம் திகதியிட்டது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T17:13:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சம் தொடும் பதற்றம்! சவூதியில் தரையிறங்கவுள்ள அமெரிக்காவின் 48 F-35 போர் விமானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/48-usf35-fighter-jets-set-to-land-in-saudi-arabia-1789737625"></link>
            <id>https://ibctamil.com/article/48-usf35-fighter-jets-set-to-land-in-saudi-arabia-1789737625</id>
            <summary type="text">சவூதி அரேபியாவின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், அந்நாட்டிற்கு 48 F-35 ரக போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்க திட்டமிட்டுள்ளது.இந்த திட்டத்துக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், அந்நாட்டிற்கு 48 F-35 ரக போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்க திட்டமிட்டுள்ளது.</p><p>இந்த திட்டத்துக்கு டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
</p><p>
இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசியப் பாதுகாப்பு இலக்குகளை வலுப்படுத்தும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>ஒப்பந்தத்தின் மதிப்பு</h2><p>
</p><p>
வெளிநாட்டு ஊடகங்களின் தகவலின்படி, இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 24.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13426204-27fe-4aa6-9210-d6837a07d9b6/26-6aad5d1eb44f5.webp' /></p><p>

இதற்கிடையில், சவூதி அரேபியாவிற்குச் சொந்தமான F-15 ரக போர் விமானம் ஒன்றை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி அமைப்பு அறிவித்துள்ள சூழலில், அமெரிக்கா சவூதி அரேபியாவிற்கு 48 F-35 போர் விமானங்களை வழங்கியிருப்பது ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-18T17:06:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இருந்த ஒலிபெருக்கி உபகரணங்களை அகற்றிய காவல்துறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-removed-the-speaker-thileepan-s-memorial-1789751090"></link>
            <id>https://ibctamil.com/article/police-removed-the-speaker-thileepan-s-memorial-1789751090</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில், உரிய அனுமதியின்றிப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி ஒலிபெருக்கி சாதனங்களை யாழ்ப்பாணப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில், உரிய அனுமதியின்றிப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி ஒலிபெருக்கி சாதனங்களை யாழ்ப்பாணப் காவல்துறையினர் அகற்றி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரத்தின் 4ஆம் நாள் நிகழ்வுகள் நினைவிடத்தில் அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே இச்சம்பவம் அரங்கேறியுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>திடீரென நினைவிடத்திற்கு வந்த யாழ்ப்பாணப் காவல்துறையினர் , பொது இடத்தில் ஒலிபெருக்கி சாதனங்களை இயக்குவதற்கு முறையான மற்றும் சட்டபூர்வமான அனுமதி பெறப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><h2>நினைவேந்தல் நிகழ்வுகள்</h2><p> இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த ஒலிபெருக்கிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்களை உடனடியாகக் கழற்றி, காவல்துறை வாகனத்தில் ஏற்றி எடுத்துச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb3feddc-12ca-4b06-80ea-fb0c61014757/26-6aad6f34f0e2c.webp' /></p><p>நினைவேந்தல் நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்த வேளையில் காவல்துறையினர்&nbsp; மேற்கொண்ட இந்த நடவடிக்கை, அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியிலும் அப்பகுதியிலும் சிறிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6368bf35-bc93-4a99-b50c-79956b6b83b9/26-6aad6f35ac79f.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-18T17:05:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதியில் அனோஜனிற்கு இறுதி நிமிடங்களில் நடந்த மறைக்கப்பட்ட உண்மைகள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/final-moments-for-anojan-in-saudi-arabia-1789750970"></link>
            <id>https://tamilwin.com/article/final-moments-for-anojan-in-saudi-arabia-1789750970</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் உயிருக்கு போராடும் அனோஜனின் தாய் மற்றும் தந்தை, “எப்படியாவது எங்களுடைய மகனை மீட்டுத் தாருங்கள்” என இலங்கை அரசாங்கத்திடமும் மக்களிடமு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் உயிருக்கு போராடும் அனோஜனின் தாய் மற்றும் தந்தை, “எப்படியாவது எங்களுடைய மகனை மீட்டுத் தாருங்கள்” என இலங்கை அரசாங்கத்திடமும் மக்களிடமும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>

முகநூலில் பதிவிட்ட ஒரு பதிவுக்காக அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சிலர் தெரிவித்து வருகின்றனர். எனினும், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படவில்லை என்றும், மாறாக 5 வருட சிறைத்தண்டனையும் 3,000 சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.
</p><p>
இவ்வாறு இருவேறு தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், உண்மை என்ன என்பது தொடர்பில் பலரும் குழப்பத்தில் உள்ளனர்.</p><p>

இந்நிலையில், அனோஜன் தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கோரி முகநூலில் காணொளியொன்றையும் வெளியிட்டுள்ளார்.</p><p>

அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை என்ன? அவரை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா? இந்த விடயம் தொடர்பில் மேலும் பல தகவல்களுடன், செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி ஆராய்கின்றது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jPMCFUTKFaI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T17:03:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூடுபிடிக்கும் எயார்பஸ் விவகாரம்.. தப்பியோடிய நாமலின் உறவினர்களுக்கு இன்டர்போல் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-airbus-case-interpol-cid-1789735331"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-airbus-case-interpol-cid-1789735331</id>
            <summary type="text"> எயார்பஸ் கொள்வனவு இலஞ்ச ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிணை கோரிக்கை தொடர்பான...</summary>
            <content type="html"><![CDATA[<p> எயார்பஸ் கொள்வனவு இலஞ்ச ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவு செப்டம்பர் 29ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>அதுவரை அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டதுடன், பாதுகாப்புத் தரப்பு செப்டெம்பர் 22க்குள்ளும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 25க்குள்ளும் எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை தாக்கல் செய்ய வேண்டும் எனப் பணித்தார்.</p><p>

வழக்கு விசாரணையின் போது முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு தொடர்பிலும் நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.</p><h2>சமல் ராஜபக்சவிடம் வாக்குமூலம்</h2><p> </p><p>அத்துடன், முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவுக்குத் தப்பியோடிய ஷசீந்திர ராஜபக்ச மற்றும் அவுஸ்திரேலியாவுக்குத் தப்பியோடிய பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோருக்கு எதிராக இன்டர்போல் மூலம் 'சிவப்பு எச்சரிக்கை' (Red Notice) விடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbddea59-2f6a-4f04-b5a6-9ca52b707b98/26-6aad3cdca58dd.webp' /></p><p> </p><p>மேலும், நாமல் ராஜபக்சவுக்கு பிணை வழங்குவதற்குரிய முக்கியமான சூழ்நிலைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
நாமல் ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவிந்திர பெர்னாண்டோ, எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கையில் நாமலின் பெயர் இடம்பெறவில்லை என்றும், நிமல் பெரேராவின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>சர்வதேச பிடியாணை&nbsp;</h2><p> </p><p>அத்துடன், இந்திய அரசின் அழைப்பின் பேரில் இந்தியாவிற்குச் செல்லவிருந்த விஜயம் இரத்தாகின்றமை மற்றும் செப்டெம்பர் 26 அன்று ஹங்குரன்கெத்த விகாரையொன்றில் கொத்தணி சூட்டும் நிகழ்வில் பங்கேற்க முடியாமை ஆகியவற்றை சிறப்புச் சூழ்நிலைகளாகக் கருதி பிணை வழங்குமாறு கோரியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9a2d4b1-6e37-472a-944f-4d2f6d1f88f2/26-6aad3cdd9806e.webp' /></p><p>

எனினும், இந்திய விஜயமோ அல்லது மதச் சடங்கோ பிணை வழங்குவதற்கான சிறப்புச் சூழ்நிலைகளாக அமையாது என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> மேலும், "வெலிகம பே" சம்பவம் தொடர்பிலும் நிமல் பெரேராவின் கணக்கில் 175 மில்லியன் ரூபாவிற்கும் அதிக சந்தேகத்திற்கிடமான பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளமை குறித்து விசாரணைகள் நடந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். </p><p>இருதரப்பு சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த பின்னர் நீதிவான், நாமல் ராஜபக்சவை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p><p>you may like this</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_7gpEcJPq9g" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T16:56:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி விமான தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்: சேதமடைந்த இத்தாலிய போர் விமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/italian-fighter-jet-get-attacked-in-saudi-1789750272"></link>
            <id>https://news.lankasri.com/article/italian-fighter-jet-get-attacked-in-saudi-1789750272</id>
            <summary type="text"> Italian Fighter Jet get attacked in Saudi: சவுதி விமான தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இத்தாலிய போர் விமானம் சேதமடைந்து இருப்பது உறுதி செய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p> Italian Fighter Jet get attacked in Saudi: சவுதி விமான தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இத்தாலிய போர் விமானம் சேதமடைந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><h2> இத்தாலிய போர் விமானம் சேதம்</h2><p>ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படைக்கும் சவுதி அரேபியாவின் ராணுவத்திற்கும் இடையே மோதலானது தீவிரமடைந்து வருகிறது.</p><p> இந்த சூழ்நிலையில் வியாழக்கிழமை மேற்கு சவுதி அரேபியாவின் தைஃப் பகுதியில் அமைந்துள்ள கிங் பஹ்த் விமான தளத்தின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.</p><p> இந்த தாக்குதலில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இத்தாலிய ராணுவத்திற்கு சொந்தமான போர் விமானம் ஒன்று பலத்த சேதமடைந்துள்ளது.</p><p></p><p> இந்த தகவலை வெள்ளிக்கிழமை இத்தாலிய பாதுகாப்பு அமைச்சர் குவிடோ குரோசெட்டோ உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27bf1d00-880a-4463-8fa7-010bbe0631ac/26-6aad6c022e425.webp' /></p><p> தாக்குதலுக்கு உள்ளான போர் விமானம், ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிரான கூட்டுப்படைக்காக இத்தாலியின் தரப்பாக வழங்கப்பட்ட போர் விமானம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இதில் இத்தாலிய வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், வேறு எந்தவொரு உபகரணங்களும் சேதம் அடைய வில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p> மேலும் பதற்றமான இந்த பகுதியில் இத்தாலிய வீரர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நிலைமையை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T16:51:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேகமாக உருகும் இமயமலை பனிப்பாறைகள் - பேரழிவுகள் அதிகரிக்கும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/himalayan-glaciers-near-dangerous-tipping-point-1789749105"></link>
            <id>https://news.lankasri.com/article/himalayan-glaciers-near-dangerous-tipping-point-1789749105</id>
            <summary type="text">Himalayan glaciers melting accelerates: இமயமலை பனிப்பாறைகள் வேகமாக உருகிவருகிறது.

புதிய ஆய்வு&amp;nbsp;எச்சரிக்கைஇமயமலைப் பனிப்பாறைகள் கடந்த பத்து ஆண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Himalayan glaciers melting accelerates: இமயமலை பனிப்பாறைகள் வேகமாக உருகிவருகிறது.</p><p>
</p><h2>
புதிய ஆய்வு&nbsp;எச்சரிக்கை</h2><p>இமயமலைப் பனிப்பாறைகள் கடந்த பத்து ஆண்டுகளை விட 65 சதவீதம் வேகமாக உருகி வருகின்றன என்று புதிய ஆய்வு எச்சரிக்கிறது.
</p><p>
இதனால் பனிப்பாறை ஏரிகள், நிலச்சரிவு, திடீர் வெள்ளம் போன்ற பேரழிவுகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b43a4a35-0e31-4eb8-bba1-5f94b0a63e8b/26-6aad67742bf05.webp' /></p><p>தெற்கு ஆசியாவில் இருந்து வெளிப்படும் Black Carbon புகைத் துகள்கள், பனிப்பாறை உருக மூன்றில் ஒரு பங்கு காரணமாக உள்ளன. குறிப்பாக, செங்கல் அடுக்குகள் (brick kilns) மற்றும் தொழிற்சாலைகள் 32 முதல் 42 சதவீதம் வரை கார்பன் உமிழ்வை ஏற்படுத்துகின்றன. </p><p>இந்த துகள்கள் பனி மீது படிந்து, சூரிய வெப்பத்தை அதிகம் உறிஞ்சி, உருகலை வேகப்படுத்துகின்றன.
</p><p></p><h2>மிகுந்த ஆபத்தில் 56 ஏரிகள்&nbsp;</h2><p>இந்த அறிக்கை இந்தியாவில் உள்ள 189 ஆபத்தான பனிப்பாறை ஏரிகளை ஆய்வு செய்து, 56 ஏரிகள் மிகுந்த ஆபத்தானவை என வகைப்படுத்தியுள்ளது.</p><p> இவை உடைந்து போனால், கிராமங்கள், சாலைகள், பாலங்கள், அடிப்படை வசதிகள் அனைத்தும் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்படலாம்.

மேலும், இமயமலைப் பகுதியில் சுமார் 40,000 பனிப்பாறைகள் உள்ளன.</p><p> ஆனால், 0.1 சதவீதம் மட்டுமே முறையாக கண்காணிக்கப்படுகின்றன. இதனால் எதிர்கால பேரழிவுகளை முன்கூட்டியே கணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

இந்த மாற்றங்கள் மலைப்பகுதிகளை மட்டுமல்லாமல், தெற்காசியாவின் நீர்வளத்தையும் பாதிக்கின்றன. </p><p>2050-க்குள் பெரும்பாலான இமயமலை நதிகள் “peak water” நிலையை அடைந்து, பின்னர் நீர்வரத்து குறையும் அபாயம் உள்ளது. நூற்றாண்டின் இறுதிக்குள் பனிப்பாறைகளின் 80 சதவீதம் வரை இழக்கப்படும் அபாயம் உள்ளது.
</p><p></p><p>இமயமலை சூழல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 20 சதவீதத்திற்கும் மேல் ஆதரவு அளிக்கிறது. விவசாயம், உணவு உற்பத்தி, மின்சாரம், சுற்றுலா, வாழ்வாதாரம் அனைத்தும் இதனைச் சார்ந்துள்ளன.
</p><p>
கார்பன் உமிழ்வை குறைப்பது, பனிப்பாறைகளை கண்காணிப்பது, முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துவது, வன மேலாண்மை மற்றும் நிலையான சுற்றுலா திட்டங்களை உருவாக்குவது அவசியம் என இந்த ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-18T16:28:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை உலுக்கிய சம்பவம்; 17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்; உடலை நாய்கள் தின்ற கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/teen-gang-raped-girl-in-delhi-body-eaten-dogs-1789735928"></link>
            <id>https://jvpnews.com/article/teen-gang-raped-girl-in-delhi-body-eaten-dogs-1789735928</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியா டெல்லியில் 17 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது.

சம்பவம் தொடர்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியா டெல்லியில் 17 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் மூன்று பேர் சிறுவர்கள் என கூறப்படுகின்றமை மேலும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a9ad39f-abf2-4e68-94b7-6130fe663c63/26-6aad33f9af371.webp' /></p><h2>&nbsp;முக்கியக் குற்றவாளி மற்றும் மூன்று சிறார்கள் கைது</h2><p> </p><p>
 
 
செப்டம்பர் 13-ஆம் தேதி வடமேற்கு தில்லி ஸ்வரூப் நகர் பகுதியில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் உடல் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.</p><p></p><p>
</p><p> 
பாதிக்கப்பட்ட சிறுமியும், குற்றவாளிகளும் முன்பே அறிமுகமானவர்கள் என்பதும், அவர்கள் ஒரு டெம்போவில் பயணித்தபோது இந்த கொடூர சம்பவம் அரங்கேறியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p> 
சிறுமி மது அருந்த செய்து வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கத்திகளால் குத்திக் கொல்லப்பட்ட பிறகு உடல் அங்கு வீசப்பட்டுள்ளது. 
 
நாய்கள் உடலை சேதப்படுத்தியிருந்ததால் ஆரம்பத்தில் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது.</p><p></p><p> </p><p>குடும்பத்தினர் புகாரளிக்காத நிலையில், சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து நூதன முறையில் துப்பு துலக்கப்பட்டது.

 
50-க்கும் மேற்பட்ட கேமராக்களை ஆராய்ந்து டெம்போவை கண்டறிந்த காவல் துறையினர், தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு முக்கியக் குற்றவாளி மற்றும் மூன்று சிறார்களை கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>
17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கொலை செய்யப்பட்டு வீசி எறிந்த உடலை நாய்கள் தின்ற கொடூர சம்பவம் நடுங்க்க வைத்துள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T16:20:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதியில் அனுஜனுக்கு எதிரான வழக்கு ; இலங்கை அரசு தீவிர கண்காணிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/case-anujan-saudi-arabia-srilanka-government-watch-1789748226"></link>
            <id>https://jvpnews.com/article/case-anujan-saudi-arabia-srilanka-government-watch-1789748226</id>
            <summary type="text">சவுதி அரேபியாவில் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள இலங்கைச் பிரஜையான அனுஜன் சிவராசாவின் வழக்கை தாம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வெளிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவில் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள இலங்கைச் பிரஜையான அனுஜன் சிவராசாவின் வழக்கை தாம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>அமைச்சின் கூற்றுப்படி, ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் இவ்வழக்கின் முன்னேற்றங்களைப் பின்பற்றி வருவதோடு, கொழும்பிலுள்ள சவுதி அரேபியத் தூதரகத்துடனும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6ae1c6e-db96-414c-9196-b928f2d5e9c4/26-6aad640472f8e.webp' /></p><p> </p><p>

இராஜதந்திர வழிகள் ஊடாகச் சம்பந்தப்பட்ட சவுதி அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், அனுஜனின் நலன்களைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அமைச்சு கூறியுள்ளது. </p><p>

நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், குறித்த இலங்கைப் பிரஜைக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T16:17:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜன் சிவராசவுக்கு பொதுமன்னிப்பு வழங்குங்கள்! அலி சப்ரி வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/grant-a-general-amnesty-to-anojan-sivarasa-1789748071"></link>
            <id>https://ibctamil.com/article/grant-a-general-amnesty-to-anojan-sivarasa-1789748071</id>
            <summary type="text">ஆட்சேபகரமான சமூக ஊடகக் கருத்து ஒன்றின் காரணமாக தண்டனை விதிக்கப்பட்ட, இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு முன்னாள் வெளியுறவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆட்சேபகரமான சமூக ஊடகக் கருத்து ஒன்றின் காரணமாக தண்டனை விதிக்கப்பட்ட, இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.</p><p>

ஐந்தாண்டு சிறைத் தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டதாக வெளியான செய்திகளை தொடர்ந்து அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
</p><p>
இதன்படி தெரிவிக்கப்பட்டுள்ள இந்த முன்னேற்றம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த சப்ரி, இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் மரண தண்டனையை உறுதிப்படுத்தவில்லை என்றும், முறையான எழுத்துப்பூர்வ தீர்ப்பு இன்னும் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.</p><p></p><h2>மௌனம் காக்க வேண்டியதில்லை</h2><p>
</p><p>
சவூதி அரேபியாவின் இறையாண்மை மற்றும் சட்ட அமைப்புக்கு மரியாதை அளிப்பதற்கு, நியாயமற்ற தண்டனைகளை எதிர்கொண்டு மௌனம் காக்க வேண்டியதில்லை, என்றும் சப்ரி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5a882e7-d3de-43b5-b55a-5dbc2f5a59f4/26-6aad636947ebc.webp' /></p><p>

புண்படுத்தும் சமூக ஊடகக் கருத்துக்காக ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதிப்பது வரம்பு மீறிய செயல் என்று விவரித்த அவர், இதுபோன்ற ஒரு செயலுக்கு மரண தண்டனை விதிப்பது மிகவும் விகிதாச்சாரமற்றது, மனிதாபிமானமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
சிவராசா சில நிமிடங்களிலேயே அந்தக் கருத்தை நீக்கிவிட்டு, பகிரங்கமான காணொளி மன்னிப்பு ஒன்றை வெளியிட்டதாக வந்த செய்திகள் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் சப்ரி கூறியுள்ளார்.
</p><p>
“ஒரு முஸ்லிமாக, நான் அல்லாஹ்வின் கருணையில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளேன். 

நாம் அவனை அளவற்ற அருளாளனாகவும், நிகரற்ற அன்பாளனாகவும் போற்றுகிறோம். மனிதத் தவறுகளுக்கு நாம் பதிலளிக்கும் விதத்திலும் அந்த விழுமியங்களே வழிகாட்ட வேண்டும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-18T16:15:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழரக் கட்சியிடம் கோரிக்கை - அனோஜனின் உயிரைக் காப்பாற்ற போராடும் இலங்கை மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/request-regarding-anojan-s-death-1789745713"></link>
            <id>https://tamilwin.com/article/request-regarding-anojan-s-death-1789745713</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இலங்கை
கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இளைஞன் சிவராசா அனோஜன் தொடர்பில் இலங்கை
அரசாங்கம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இலங்கை
கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இளைஞன் சிவராசா அனோஜன் தொடர்பில் இலங்கை
அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு, அவரது உயிரைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.</p><p> 

இந்த விடயம் தொடர்பில், இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுவினரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் இலங்கையின் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட உப தலைவரும் தம்பலாகாமம் பிரதேச சபையின் உப தவிசாளருமான வி. விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
</p><p>
 ஊடகங்களுக்கு இன்று(18.09.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>

அனோஜனுக்கு மரண தண்டனை</h2><p>
மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, </p><p>


அனோஜனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக
வெளியாகும் செய்திகள் மிகவும் கவலையளிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43a74cbe-f331-4acf-8706-143226ec3a72/26-6aad61a39ba1b.webp' /></p><p> </p><p>ஒரு இலங்கையரின் உயிர்
தொடர்பான விடயம் என்பதால், இந்த விடயத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுக
வேண்டியது அவசியமாகும்.
</p><p>
அனோஜனின் குடும்பத்தினரின் நிலைமையையும் கருத்தில் கொண்டு, அவருக்கு சட்ட உதவி
கிடைப்பதற்கும், மரண தண்டனையை தவிர்ப்பதற்கான சட்ட மற்றும் இராஜதந்திர
முயற்சிகளை மேற்கொள்வதற்கும் இலங்கை அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
</p><p>
சவூதி அரேபிய அரசாங்கத்துடன் தேவையான இராஜதந்திர மட்டத்திலான
பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து, இந்த விடயத்திற்கு சாத்தியமான மனிதாபிமான
தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். </p><p>அனோஜனின் குடும்பத்தினர் அனுபவித்து வரும் துயரமான சூழ்நிலையை கருத்தில்
கொண்டு, அவர்களின் எதிர்பார்ப்புக்கு உரிய பதில் கிடைக்க வேண்டும். இந்த
விடயத்தில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T16:07:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் போர் தொடங்கிய பிறகு ரஷ்யாவில் நடக்கும் முதல் நாடாளுமன்ற தேர்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-holds-first-election-since-ukraine-war-1789746803"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-holds-first-election-since-ukraine-war-1789746803</id>
            <summary type="text">Russia holds first election since Ukraine war: ரஷ்யாவில் நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடங்கியுள்ளது.

ரஷ்யாவில் நாடாளுமன்ற தேர்தல்2022-ஆம் ஆண்டு உக்ரைன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russia holds first election since Ukraine war: ரஷ்யாவில் நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடங்கியுள்ளது.</p><h2>

ரஷ்யாவில் நாடாளுமன்ற தேர்தல்</h2><p>2022-ஆம் ஆண்டு உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து, ரஷ்யாவில் முதல் முறையாக நாடாளுமன்ற தேர்தல் தொடங்கியுள்ளது.
</p><p>
செப்டம்பர் 18 முதல் 20 வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த தேர்தலில், சுமார் 111 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதியுடையவர்களாக உள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/602da3b1-e75c-4956-a17d-f1cfc7dfb56a/26-6aad5e753cf7e.webp' /></p><p>இந்த தேர்தல் மூலம் 450 இடங்களைக் கொண்ட ஸ்டேட் டூமா (State Duma) எனப்படும் நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இதில் பாதி இடங்கள் கட்சிப் பட்டியல் மூலம், மற்ற பாதி தனிப்பட்ட தொகுதிகள் மூலம் நிரப்பப்படுகின்றன.</p><p>
வாக்குப்பதிவு முறைமைகள் பாரம்பரிய வாக்குச்சாவடிகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

யுனைடெட் ரஷ்யா கட்சி (United Russia Party) பெரும்பான்மையைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p></p><p>போருக்கு எதிராக வெளிப்படையாகக் குரல் கொடுத்த யாப்லோகோ கட்சி (Yabloko Party) கட்சிப் பட்டியலில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை. சிலர் தனிப்பட்ட தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
</p><h2>
மக்கள் ஆதரவு</h2><p>ஜனாதிபதி விளாடிமிர் புடின், தொலைக்காட்சி உரையில், இந்த தேர்தலை ரஷ்ய படைகளுக்கு மக்கள் ஆதரவு காட்டும் நிகழ்வாக&nbsp;இருக்கும் என கூறினார்.</p><p> அவர், “உங்கள் வாக்கு, எங்கள் வீரர்களுக்கு பின்னால் கோடிக்கணக்கான மக்கள் நிற்கிறார்கள் என்பதை உலகிற்கு காட்டும்” என்று தெரிவித்தார் .</p><p></p><p>இந்த தேர்தல், ரஷ்யாவின் பொருளாதார சவால்களுக்கும், மேற்கத்திய தடைகளுக்கும், எரிபொருள் பற்றாக்குறைகளுக்கும் நடுவே நடைபெறுகிறது.</p><p> உக்ரைன் தாக்குதல்களால் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், ரஷ்யா தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டதாகக் கூறும் உக்ரைனின் நான்கு பிராந்தியங்களிலும், கிரிமியாவிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.</p><p> உக்ரைன் அரசு, இந்த தேர்தலை சட்டவிரோதமானது எனக் கூறி, சர்வதேச சமூகத்தை அங்கீகரிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.
</p><p>
முதல் நிலை முடிவுகள் செப்டம்பர் 20 இரவு வெளியாகும் எனவும், முழுமையான முடிவுகள் செப்டம்பர் 21 அன்று அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-18T16:06:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொந்த அத்தையைக் கழுத்தறுத்துக் கொன்ற 7 வயது சிறுவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/7-year-old-boy-slits-own-aunt-throat-and-kills-her-1789747083"></link>
            <id>https://canadamirror.com/article/7-year-old-boy-slits-own-aunt-throat-and-kills-her-1789747083</id>
            <summary type="text">பிரான்ஸின் வால்-து-மார்ன் (Val-de-Marne) பகுதியில், 7 வயது சிறுவன் ஒருவன் தனது சொந்த அத்தையை கத்தியால் குத்தியதில், அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸின் வால்-து-மார்ன் (Val-de-Marne) பகுதியில், 7 வயது சிறுவன் ஒருவன் தனது சொந்த அத்தையை கத்தியால் குத்தியதில், அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>சென்-மோர்-டெ-போஸ் (Saint-Maur-des-Fossés) நகரில் இன்று வெள்ளிக்கிழமை (செப்டெம்பர் 18) அதிகாலை சுமார் 4.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். </p><p>அப்போது, வீதியில் பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்ததையும், மற்றொரு பெண் துணியொன்றைப் பயன்படுத்தி அவரது கழுத்துப் பகுதியில் ஏற்பட்டிருந்த காயத்தில் இருந்து வெளியேறிய இரத்தத்தை கட்டுப்படுத்த முயன்றுகொண்டிருந்ததையும் காவல்துறையினர் அவதானித்துள்ளனர்.
</p><p>
அவர்களுக்கு அருகில் சிறுவன் ஒருவனும் நின்றுகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07d1c20f-cd37-4965-af6c-daec0b1c07e3/26-6aad5f8ce5041.webp' /></p><p>பலத்த காயமடைந்திருந்த பெண்ணுக்கு அவசரகால மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்ற முயன்ற போதிலும், அதிகளவான இரத்தப்போக்கு காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
</p><p>
உயிரிழந்தவர் நதியா எஸ். (Nadia S.) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த நதியாவுக்கு உதவி செய்ய முயன்ற பெண் அவரது சொந்த சகோதரியான யாஸ்மினா எஸ். (Yasmina S.) என்பதும், அவருக்கு அருகில் நின்றுகொண்டிருந்தது யாஸ்மினாவின் 7 வயது மகன் என்பதும் தெரியவந்துள்ளது.</p><p>விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி, வியாழக்கிழமை இரவு யாஸ்மினாவின் வீட்டிற்கு நதியா தங்குவதற்காக சென்றுள்ளார்.
</p><p>
இதன்போது, நள்ளிரவு வேளையில் தலைமுடியை நேராக்குவது (Hair straightening) தொடர்பாக இரு சகோதரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
வாக்குவாதம் பின்னர் கடும் சண்டையாக மாறியதுடன், நதியா தனது சகோதரியான யாஸ்மினாவை தாக்கியதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

இந்தச் சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்த யாஸ்மினாவின் 7 வயது மகன், திடீரென வீட்டின் குளியலறைக்குச் சென்று அங்கிருந்த கத்தியை எடுத்துக்கொண்டு வந்து நதியாவின் கழுத்துப் பகுதியில் குத்தியதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கத்திக்குத்துக்கு உள்ளான நதியா, உதவி கோரி வீட்டிலிருந்து வெளியேறி வீதியை நோக்கி ஓடியுள்ளார். </p><p>எனினும், சிறிது தூரம் சென்ற நிலையில் அவர் இரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்ததாகவும், பின்னர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c97667ea-1e17-479b-b57e-3e128d426a6c/26-6aad5f8da14eb.webp' /></p><p>சம்பவத்தின் போது யாஸ்மினாவின் இடது மணிக்கட்டிலும் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கும் அவசரகால மருத்துவக் குழுவினர் சிகிச்சை வழங்கியுள்ளனர்.
</p><p>
அதேவேளை, 7 வயது சிறுவனின் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>எனினும், சம்பவத்தைத் தொடர்ந்து சிறுவன் மருத்துவப் பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் பிரான்ஸ் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>

ஒரு குடும்பத்திற்குள் ஏற்பட்டதாகக் கூறப்படும் தகராறு, எதிர்பாராத வகையில் வன்முறையாக மாறி, இறுதியில் 7 வயது சிறுவனின் கைகளால் அவரது சொந்த அத்தை உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-18T15:58:18+00:00</updated>
        </entry>
    </feed>
