<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-30T16:22:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆளும் கட்சி அமைச்சர் மீது அர்ஜூன் மகேந்திரன் சுமத்தும் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/arjuna-mahendran-denies-changing-name-1788106187"></link>
            <id>https://tamilwin.com/article/arjuna-mahendran-denies-changing-name-1788106187</id>
            <summary type="text">&amp;nbsp;அமைச்சர் ஆனந்த விஜேபால பொய்யுரைப்பதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி வழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமைச்சர் ஆனந்த விஜேபால பொய்யுரைப்பதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
</p><p>மத்திய வங்கி பிணைமுறி வழக்கு தொடர்பில் தேடப்பட்டு வரும் நிலையில் அவர் இந்த கருத்தினை ஆங்கில ஊடகமொன்றுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
தான் சட்டப்பூர்வமாக பெயரை மாற்றிக்கொண்டதாக அரசாங்க அமைச்சர் வெளியிட்ட கூற்றை "முற்றிலும் பொய்" என நிராகரித்து, அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்கு நேரடி சவால் விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3f239d7-e8c4-4b65-b228-f2bad936715b/26-6a9455ccc92ab.webp' /></p><p>
</p><p>ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தன் மீதான இந்த குற்றச்சாட்டை உறுதியாக மறுத்துள்ள அவர், அந்த மறுப்பு அறிக்கையை வெளியிடுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>மத்திய வங்கி பிணைமுறி வழக்கில் தேடப்படும் அர்ஜுன் மகேந்திரன், 'ஹர்ஜன் அலெக்சாண்டர்' (Harjan Alexander) என தனது பெயரை மாற்றியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அண்மையில் தெரிவித்திருந்தார்.
</p><p>நான் பெயரை மாற்றியுள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் பகிரங்கக் கூற்று வெளியிட்டுள்ளமை எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என்பதை உங்களுக்கும் உங்கள் வாசகர்களுக்கும் அறியத் தருகிறேன்" என மகேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>சிங்கப்பூர் முகவரியைக் குறிப்பிட்டுள்ள அவர், "லக்ஷ்மன் அர்ஜுன் மகேந்திரன்" (Lakshman Arjuna Mahendran) என்ற தனது அதிகாரப்பூர்வ பெயரிலேயே இக்கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார் என குறித்த ஆங்கில ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி வழக்கு தொடர்பாக இலங்கை அதிகாரிகளால் தேடப்பட்டு வரும் அர்ஜுன் மகேந்திரனை, சிங்கப்பூரிலிருந்து நாட்டிற்கு அழைத்து வருவதில் சட்ட ரீதியான தடைகள் நிலவி வருகின்றன.
</p><p>இந்த நிலையில், அவரை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான மாற்று வழிகளை இலங்கை அதிகாரிகள் ஆராய்ந்து வரும் வேளையில், அவரது அடையாளத்தை மையப்படுத்தி அரசாங்கம் முன்வைத்த கூற்றை அர்ஜுன் மகேந்திரன் நேரடியாக மறுத்துள்ளார்.
</p><p>சிங்கப்பூரில் வசித்து வரும் அர்ஜூன் மகேந்திரன் அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் வகையில் அமைச்சரின் கருத்தை நிராகரித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
இந்த விவகாரம் தொடர்பில் ஆளும் தரப்பின் நிலைப்பாடு எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>
இந்த மறுப்பு அறிக்கையை அர்ஜூன் மகேந்திரன் வெளியிட்டாரா என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் எதனையும் குறித்த ஊடகம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T16:10:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவு குருந்தூர் விகாரைக்கு மீண்டும் பொலிஸ் பாதுகாப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-security-restore-kurundur-temple-mullaitivu-1788105870"></link>
            <id>https://jvpnews.com/article/police-security-restore-kurundur-temple-mullaitivu-1788105870</id>
            <summary type="text">முல்லைத்தீவு குருந்தூர் ரஜமஹா விகாரை வளாகத்திலிருந்து அகற்றப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குவதற்குப் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு குருந்தூர் ரஜமஹா விகாரை வளாகத்திலிருந்து அகற்றப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குவதற்குப் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.</p><p> </p><p></p><p>விகாரையில் அகற்றப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு கோரி, விகாராதிபதி கல்கமுவே சந்தபோதி தேரரினால் அமைச்சுக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்குப் பதிலளிக்கும் வகையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de887f7c-e10f-402c-9f61-fc3cf64c4ae5/26-6a94548fc020c.webp' /></p><p>இந்தக் கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில், விகாரைக்குத் தேவையான பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனப் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, விகாராதிபதி தேரருக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T16:05:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை மாணவன் அதிகாலைவேளை குத்திக்கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/schoolboy-stabbed-to-death-1788105284"></link>
            <id>https://ibctamil.com/article/schoolboy-stabbed-to-death-1788105284</id>
            <summary type="text">எஹெலியகொட, எரெபொல பகுதியில் இன்று(30) அதிகாலை சுமார் 12.20 மணியளவில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 17 வயது பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்ததாக காவல்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>எஹெலியகொட, எரெபொல பகுதியில் இன்று(30) அதிகாலை சுமார் 12.20 மணியளவில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 17 வயது பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
உயிரிழந்த அந்த மாணவன் நேற்று முன்தினம், எரெபொல பாடசாலைக்கு அருகில் தனது நண்பனுடன் உரையாடிக் கொண்டிருந்த காணொளி தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு இளைஞனுடன் வாக்குவாதம் செய்துள்ளான்.</p><h2>இன்று அதிகாலைவேளை தாக்குதல்</h2><p>பின்னர், இந்த தகராறு தீவிரமடைந்த நிலையில், இரவில் மாணவனின் வீட்டிற்கு அருகே இரு தரப்பினரும் மீண்டும் மோதிக்கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08226adc-f3ff-434e-a910-3b74fa8b5421/26-6a94540876048.webp' /></p><p>
</p><p>
கத்திக்குத்து காயங்களால் படுகாயமடைந்த அந்த மாணவன், எஹெலியகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தான்.

சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் தற்போது அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். </p><p>அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை எஹெலியகொட காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T16:03:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையைச் சூறையாடிய குடும்ப அரசியலின் கறுப்புப் பக்கம்! பதவிகளை விட்டு ஓடிய குடும்ப சாம்ராஜ்யம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dark-side-the-family-politics-plundered-sri-lanka-1788101604"></link>
            <id>https://tamilwin.com/article/dark-side-the-family-politics-plundered-sri-lanka-1788101604</id>
            <summary type="text">சுதந்திரத்திற்குப் பிறகு சேனாநாயக்க மற்றும் பண்டாரநாயக்க குடும்பங்கள் மூலம் இலங்கையில் வாரிசு அரசியல் வேரூன்றியது எனலாம்.

 இது உயர் பதவிகள் ஒரு குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுதந்திரத்திற்குப் பிறகு சேனாநாயக்க மற்றும் பண்டாரநாயக்க குடும்பங்கள் மூலம் இலங்கையில் வாரிசு அரசியல் வேரூன்றியது எனலாம்.

 இது உயர் பதவிகள் ஒரு குறிப்பிட்ட மேல்தட்டு வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வழிவகுத்தது.</p><p>

இல் ஜே.ஆர். ஜெயவர்தனாவால் கொண்டு வரப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை, அதிகாரங்கள் ஒருவரிடம் குவியவும், பிற்காலத்தில் சர்வாதிகாரப் போக்குக்கும் வழிவகுத்தது.
</p><p>
 2005 முதல் மகிந்த ராஜபக்ச தலைமையிலான குடும்பத்தினர் நாட்டின் மிக முக்கியமான அமைச்சுகளைத் தங்கள் வசப்படுத்தினர்.</p><p> 

பல பிரம்மாண்ட கட்டுமானத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், அதில் பெரும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
</p><p>
அறிவியல் பூர்வமற்ற தன்னிச்சையான பொருளாதார முடிவுகள் (வரி குறைப்பு மற்றும் உரத் தடை போன்றவை) 2022-இல் நாடு திவாலாவதற்குக் காரணமாயின.
</p><p>
2022-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் எழுச்சிப் போராட்டம் (அரகலய), குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டியது.</p><p>

முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/PO3VtzCPTMY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T15:48:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் மகளை அத்துமீறலுக்கு உட்படுத்திய தந்தை : நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-verdict-father-who-raped-daughter-in-jaffna-1788104000"></link>
            <id>https://ibctamil.com/article/court-verdict-father-who-raped-daughter-in-jaffna-1788104000</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்திய
தந்தைக்கு 16 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

கோப்பாய் பகுதியில் கடந்த 200...</summary>
            <content type="html"><![CDATA[<p><p>யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்திய
தந்தைக்கு 16 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
</p><p>
கோப்பாய் பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு மகளை அத்துமீறலுக்கு உட்படுத்திய
குற்றத்தில் தந்தை கைது செய்யப்பட்டார்.</p><p>அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த
நிலையில் தீர்ப்புக்காக நேற்றுமுன்தினம்(28) வெள்ளிக்கிழமை வழக்கு அழைக்கப்பட்டது.</p><h2>16 வருட சிறைத்தண்டனை</h2><p>
</p><p>
அதன்போது , எதிரியான தந்தையை குற்றவாளியாக கண்ட மன்று , 16 வருட
சிறைத்தண்டனை விதித்ததுடன் , பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 5 இலட்ச ரூபாய்
இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் இழப்பீடு வழங்க தவறின் மேலும் 3 வருட
சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என மன்று தீர்ப்பளித்தது.&nbsp;</p><p><br></p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cc20b12-90f3-43ca-a9e5-83062fe6b4bd/26-6a944efd25da3.webp' /></p><p></p><p></p><p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp; &nbsp;</p></p>]]></content>
            <updated>2026-08-30T15:40:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[Punjabi Chicken Gravy : சப்பாத்தி, பூரிக்கு பக்காவாக பொருந்தும் பஞ்சாபி சிக்கன் கிரேவி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/punjabi-style-chicken-gravy-recipe-1788101543"></link>
            <id>https://manithan.com/article/punjabi-style-chicken-gravy-recipe-1788101543</id>
            <summary type="text">Punjabi Chicken Gravy : இந்த வார ஞாயிற்றுக்கிழமை காலை உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது பூரி செய்யப் போகிறீர்களா? அதற்கு தொட்டுக்கொள்ள சிக்கன் கிரேவி ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>Punjabi Chicken Gravy : இந்த வார ஞாயிற்றுக்கிழமை காலை உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது பூரி செய்யப் போகிறீர்களா? அதற்கு தொட்டுக்கொள்ள சிக்கன் கிரேவி செய்யலாம் என்று திட்டமிட்டிருக்கிறீர்களா? </p><p>அப்படியானால், நீங்கள் வழக்கமாகச் செய்யும் சிக்கன் கிரேவியை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, இந்த முறை ஒரு வித்தியாசமான பஞ்சாபி ஸ்டைல் சிக்கன் கிரேவியை செய்து பாருங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/037189ec-4f46-4f9c-a186-dbc68c0a6dc0/26-6a944e160fc73.webp' /></p><p>
</p><p>
பஞ்சாபி சமையலின் சிறப்பே அதன் மணமும், மசாலாவின் சுவையும், கிரேவியின் அடர்த்தியும் தான். சிக்கனை நன்கு மசாலாக்களுடன் சேர்த்து சமைப்பதால், ஒவ்வொரு துண்டிலும் மசாலாவின் சுவை நன்றாக ஊறியிருக்கும்.</p><p> குறிப்பாக, சூடான சப்பாத்தி அல்லது மொறுமொறுப்பான பூரியுடன் இந்த சிக்கன் கிரேவியை சேர்த்து சாப்பிடும்போது அதன் சுவை இன்னும் அட்டகாசமாக இருக்கும்.

அசத்தல் சுவையில் பஞ்சாபி சிக்கன் கிரேவியை வீட்டிலேயே எளிமையாக எப்படி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16b4b79e-cf49-40bc-83ad-935d56f32997/26-6a944e16bbbd0.webp' /></p><p></p><h2>தேவையான பொருட்கள்</h2><p><b>சிக்கனை ஊற வைக்க</b></p><p> சிக்கன் – 1/2 கிலோ
</p><p>மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி 
</p><p>சீரகத் தூள் – 1/2 தே.கரண்டி </p><p>
உப்பு – தேவையான </p><p>அளவு
பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
</p><p>தயிர் – 50 மி.லி
</p><p>கொத்தமல்லி&nbsp; - சிறிதளவு</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7b5afc4-a6c9-41c4-be02-cb9e6e64b967/26-6a944e176fceb.webp' /></p><p>
</p><p><b>கிரேவி செய்ய</b></p><p> எண்ணெய் – 2 மேசைக்கரண்டி&nbsp;</p><p>
நெய் – 1&nbsp;மேசைக்கரண்டி </p><p>பட்டை – 1 துண்டு
</p><p>கிராம்பு – 5
</p><p>ஏலக்காய் – 2
</p><p>கருப்பு ஏலக்காய் – 1
</p><p>பிரியாணி இலை – 1
</p><p>சீரகம் – 1/2 தே.கரண்டி</p><p>
மிளகு – 1/4 தே.கரண்டி&nbsp;</p><p>வெங்காயம் – 2&nbsp; பொடியாக நறுக்கியது
</p><p>இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 1/2 மேசைக்கரண்டி </p><p>
தக்காளி – 2 (அரைத்தது)</p><p>மிளகாய் தூள் – 1 தே.கரண்டி</p><p>மல்லித் தூள் – 1 1/2 தே.கரண்டி</p><p>மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி</p><p>
ஊற வைத்த சிக்கன்</p><p>
தண்ணீர் – 100 மி.லி
</p><p>கரம் மசாலா – 1 தே.கரண்டி&nbsp;</p><p>
உப்பு – தேவையான அளவு
</p><p>கசூரி மெத்தி – 1 தே.கரண்டி&nbsp;</p><p>கொத்தமல்லி – சிறிதளவு</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/705a57d4-2476-4a0d-865e-1edbfb487e2e/26-6a944e1822563.webp' /></p><h2>செய்முறை&nbsp;</h2><p>முதலில் சிக்கனை நன்றாகக் கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் மிளகாய்த்தூள், சீரகத்தூள், தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், தயிர் மற்றும் சிறிது கொத்தமல்லி சேர்த்து நன்றாகப் கலந்துவிட்டு, இதை மூடி வைத்து சுமார் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.</p><p>
அடுத்து, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடாக்கவும்.அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், கருப்பு ஏலக்காய், பிரியாணி இலை, சீரகம் மற்றும் மிளகு சேர்த்து தாளிக்கவும்.

பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கிக்கொள்ள வேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5b7dc6a-b3ef-452e-ac68-2015aa084229/26-6a944e18cb832.webp' /></p><p></p><p>அதனுடன் இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். அடுத்து அரைத்த தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.&nbsp;</p><p>தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகக் கிளறிவிட்டு இப்போது ஊறவைத்த சிக்கனைச் சேர்த்து, மசாலா சிக்கனுடன் நன்றாக கலக்கும் வரை 5–8 நிமிடங்கள் கிளறிவிட&nbsp; வேண்டும்.&nbsp;</p><p>
பின்னர் 100 மில்லி தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு மற்றும் 1 டீஸ்பூன் கரம் மசாலா சேர்த்து நன்றாகக் கிளறவும். பாத்திரத்தை மூடி, குறைந்த தீயில் சுமார் 20–30 நிமிடங்கள் சிக்கனை வேகவிட வேண்டும்.&nbsp;</p><p>
சிக்கன் நன்றாக வெந்ததும் மூடியைத் திறந்து ஒரு முறை கிளறி, மேலே கசூரி மெத்தி மற்றும் சிறிது கொத்தமல்லி தூவி கலந்தால், அவ்வளவுதான் மணமும் சுவையும் நிறைந்த பஞ்சாபி சிக்கன் கிரேவி தயார்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> &nbsp;</a></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T15:39:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றும் பேருந்துகளுக்கு இறுகும் பிடி : விடுக்கப்பட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/buses-school-students-and-teachers-registered-1788102363"></link>
            <id>https://ibctamil.com/article/buses-school-students-and-teachers-registered-1788102363</id>
            <summary type="text">&amp;nbsp;வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் செல்லும்
பேருந்துகள் அனைத்தும் &#039;சிசுசெரிய&#039; சேவையின் கீழ் பதிவு செய்யப்பட்டு, உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் செல்லும்
பேருந்துகள் அனைத்தும் 'சிசுசெரிய' சேவையின் கீழ் பதிவு செய்யப்பட்டு, உரிய
அனுமதிகளுடன் மட்டுமே பாடசாலை போக்குவரத்துச் சேவையில் ஈடுபட வேண்டும். </p><p>பதிவு
செய்யப்படாமலும் உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்யாமலும் இவ்வாறான சேவையில்
ஈடுபடும் பேருந்துகளுக்கு எதிராக முன்னறிவிப்பின்றி சட்ட நடவடிக்கை
கடுமையாக்கப்படும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின்
தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.</p><h2>&nbsp;'சிசுசெரிய' சேவை</h2><p>&nbsp;வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான
போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பேருந்துகள், வீதிப் பயணிகள் போக்குவரத்து
அதிகாரசபையில் முறையாகப் பதிவு செய்யப்படுவது கட்டாயமாகும். எனினும், உரிய
அனுமதியோ அல்லது பதிவோ இன்றி, 'சிசுசெரிய' சேவையின் கீழ் இடம்பெறாமல் சில
பேருந்துகள் தொடர்ந்தும் பாடசாலை போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டு வருவது
கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f826067-7216-4d6d-abe0-af76573baf95/26-6a944a64a0312.webp' /></p><p>
</p><p>
இத்தகைய பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு கடந்த ஐந்து
மாதங்களாக நேரடியாக எச்சரிக்கைகளும் தேவையான அறிவுறுத்தல்களும்
வழங்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>உடனடியாக சட்ட நடவடிக்கை</h2><p> </p><p>இருந்தபோதிலும், இதுவரை உரிய பதிவுகளை மேற்கொள்ளாத மற்றும்
நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யாத தரப்பினர் தொடர்ந்து பாடசாலை
சேவையில் ஈடுபட்டால், அவர்களுக்கு எதிராக அதிகாரசபையால் உடனடியாக சட்ட
நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0420dd95-583d-454d-8950-e6a5cbe4f6a9/26-6a944a6552494.webp' /></p><p>

எனவே, பாடசாலை மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஏற்றிச் செல்லும் பேருந்து
சேவைகளை நடத்தும் அனைத்து தரப்பினரும் நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு
அமைவாக தங்களைப் பதிவு செய்து, தேவையான தகுதிகள் மற்றும் அனுமதிகளைப்
பெற்றுக்கொள்ளுமாறு வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின்
தலைவர் கேட்டுக்கொண்டார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T15:21:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தந்தையின் மோசமான செயல் - 8 வருடங்களாக போராடிய மகளுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/father-sexually-abused-his-daughter-1788102709"></link>
            <id>https://tamilwin.com/article/father-sexually-abused-his-daughter-1788102709</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை தவறான நடத்தைக்கு உட்படுத்திய தந்தைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

இந்த வழக்கு நேற்றுமுன்தினம்(28....</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை தவறான நடத்தைக்கு உட்படுத்திய தந்தைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. </p><p>

இந்த வழக்கு நேற்றுமுன்தினம்(28.08.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><h2>

தந்தைக்கு 16 வருட சிறைத்தண்டனை</h2><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

கோப்பாய் பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு மகளை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aeac3f49-1434-44a3-952f-15194a375326/26-6a94492793d0f.webp' /></p><p> </p><p>

இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், குறித்த தந்தைக்கு 16 வருட சிறைத்தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 5 இலட்ச ரூபாய்
இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இழப்பீடு வழங்க தவறின் மேலும் 3 வருட
சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்ற தீர்ப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T15:15:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடர்: நடத்தும் உரிமையை இழந்த இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sri-lanka-lose-rights-of-champions-trophy-2027-1788102474"></link>
            <id>https://news.lankasri.com/article/sri-lanka-lose-rights-of-champions-trophy-2027-1788102474</id>
            <summary type="text">Sri lanka lose rights of women&#039;s champions trophy 2027: 2027-யில் நடைபெற உள்ள மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் உரிமையை இலங்கை இழந்தது.

2027...</summary>
            <content type="html"><![CDATA[<p>Sri lanka lose rights of women's champions trophy 2027: 2027-யில் நடைபெற உள்ள மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் உரிமையை இலங்கை இழந்தது.
</p><p>
2027-யில் நடைபெற உள்ள ஆறு அணிகள் பங்கேற்கும், மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் உரிமையை இலங்கை இழந்தது.&nbsp;</p><h2>இலங்கை</h2><p>

2026 ஆடவர் டி20 உலகக்கிண்ணத்தை இணைந்து நடத்திய இலங்கை, 2027 பிப்ரவரியில் நடைபெறும் மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் நடத்த இருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c700151-6dbb-4785-84a0-0ef48d168229/26-6a94492b3f077.webp' /></p><p></p><p>

ஆனால், இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் மாற்றுக்குழு எனப்படும் இடைக்கால நிர்வாகம் செயல்பட்டு வருவது சிக்கலாகியுள்ளது. </p><p>

ஏனெனில், அரசியல் ரீதியாக நியமிக்கப்படும் நிர்வாக அமைப்புகளை ஐசிசி அங்கீகரிப்பதில்லை. 

இதன் காரணமாக மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் உரிமையை இலங்கை இழந்துள்ளது.
</p><p>
போட்டியை நடத்தும் அணி நேரடியாக தொடரில் விளையாட தகுதி பெறுவது வழக்கம். ஆனால், ஐசிசி தரவரிசையில் முதல் 6 இடங்களைப் பிடித்திருக்கும் அணிகள் மட்டும் இத்தொடரில் பங்கேற்க முடியும்.&nbsp;</p><h2>பங்கேற்க முடியாத சூழல்</h2><p>

இலங்கை அணி 7வது இடத்தில் உள்ளதாலும், தொடரை நடத்தும் உரிமையை இழந்ததாலும் இலங்கை இதில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
</p><p>
இலங்கைக்கு பதிலாக 6வது இடத்தில் உள்ள மேற்கிந்திய தீவுகளுக்கு இதில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கக்கூடும். 2027 மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்தியாவில் நடைபெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.</p><p>

என்றாலும், போட்டியை நடத்தவுள்ள புதிய நாடு எது என்பது, அக்டோபரில் நடைபெறவுள்ள அடுத்த ஐசிசி நிர்வாகக் குழு கூட்டத்தில் உறுதி செய்யப்படும்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63a7feb1-3ba5-4350-ad89-be1c8d87256e/26-6a94492a813e1.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T15:13:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிலிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்ட நெதன்யாகுவின் மகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/netanyahu-son-urgently-evacuated-from-the-us-1788102510"></link>
            <id>https://tamilwin.com/article/netanyahu-son-urgently-evacuated-from-the-us-1788102510</id>
            <summary type="text">இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மூத்த மகனான யாயிர் நெதன்யாகுவிற்கு
விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலையடுத்து, அவர் அமெரிக்காவிலிருந்து அவசரமாக
...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மூத்த மகனான யாயிர் நெதன்யாகுவிற்கு
விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலையடுத்து, அவர் அமெரிக்காவிலிருந்து அவசரமாக
இஸ்ரேலுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்நாட்டு உளவு அமைப்பான
ஷின் பெட் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>

சமூக வலைத்தளங்கள் வாயிலாக எழுந்த கணிசமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை
மதிப்பீடு செய்த பின்னரே, அவரது பாதுகாப்புப் படையினருடன் அவரை உடனடியாக
தாயகம் திருப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>அவசரமாக வெளியேற்றம்</h2><p>
</p><p>
கடந்த டிசம்பர் மாதம் புளோரிடாவில் வசித்து வந்த யாயிர் நெதன்யாகுவைக் இலக்கு
வைத்து ஈரானிய சதித்திட்டம் ஒன்று தீட்டப்பட்டதாக முன்னதாக அமெரிக்க ஊடகங்கள்
செய்தி வெளியிட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89cba172-73a7-4d0b-8d2f-4b020c92aa4a/26-6a94487b39e52.webp' /></p><p>

வலதுசாரி செயற்பாட்டாளரும் பாட்காஸ்ட் நிகழ்ச்சி நடத்துனருமான யாயிர்
நெதன்யாகு, கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவின் புளோரிடாவில் சொகுசு வாழ்க்கை
வாழ்ந்து வந்தமை இஸ்ரேலில் பலத்த விமர்சனங்களை தோற்றுவித்திருந்தது.
</p><p>
குறிப்பாக காசா போர் தீவிரமடைந்த வேளையில், நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய
இராணுவத்தினர் போருக்கு அழைக்கப்பட்ட நிலையில் இவர் வெளிநாட்டில்
தங்கியிருந்தமை அரசாங்க எதிர்ப்பாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
</p><p>
இதேவேளை, தமது மகன்களில் ஒருவரைக் கொல்ல ஈரான் முயற்சிப்பதாக பிரதமர்
பெஞ்சமின் நெதன்யாகு அண்மையில் தெரிவித்திருந்த கூற்றை உறுதிப்படுத்தும்
வகையில் இந்த அவசர வெளியேற்ற நடவடிக்கை அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்
சுட்டிக்காட்டியுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T15:13:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இப்போ எங்கே அநுர..! நாட்டை மீண்டெழ முடியாத நிலைக்கு தள்ளியதாக அசாத் சாலி குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/azad-sali-criticized-the-anura-government-1788102081"></link>
            <id>https://tamilwin.com/article/azad-sali-criticized-the-anura-government-1788102081</id>
            <summary type="text">அநுரவை ஆட்சி பீடம் ஏற்றுவதற்காக பெண்கள் அனைவரும் வீதிகளில் இறங்கி வாக்கு கேட்டனர். ஆனால், அவர்களுக்காக அநுர என்ன செய்திருக்கிறார் என முன்னாள் மேல் மாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுரவை ஆட்சி பீடம் ஏற்றுவதற்காக பெண்கள் அனைவரும் வீதிகளில் இறங்கி வாக்கு கேட்டனர். ஆனால், அவர்களுக்காக அநுர என்ன செய்திருக்கிறார் என முன்னாள் மேல் மாகாண ஆளுநர் முகமது அசாத் சாலி கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிவிட்டு நாட்டை விட்டு வெளியேறியபோது, நாட்டை மீட்பதற்காக சஜித்தோ அல்லது அநுரவோ முன்வரவில்லை. மாறாக, எமது நாட்டு மக்களுக்காக ரணில் விக்ரமசிங்கவே ஆட்சிக்கு வந்தார்.
</p><p>
ஆனால், தற்போது நாம் அவரை மறந்துவிட்டோம். வீதிகளில் இறங்கி அநுரவுக்காக வாக்கு கேட்ட பெண்களுக்காக இதுவரை அநுர ஒரு அமைச்சரவையைக்கூட சரியாக அமைக்கவில்லை.
</p><p>
அதேபோன்று, இனிவரும் காலங்களில் மாகாண சபைகள் இருக்காது என்பது போன்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.</p><p>

நாம் அனைவரும் மீண்டும் ஒன்றிணைந்தால், அநுரவையும் அவரது கட்சியையும் வீட்டுக்கு அனுப்ப முடியும் என்றார்.&nbsp; &nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/p4KAtEJ4-UY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T15:03:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரவி தேஜா இருமுடி பட லாபத்தில் வரும் பங்கு.. மொத்தம் எத்தனை கோடி பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ravi-teja-huge-share-in-irumudi-profit-1788102077"></link>
            <id>https://cineulagam.com/article/ravi-teja-huge-share-in-irumudi-profit-1788102077</id>
            <summary type="text">நடிகர் ரவி தேஜாவின் இருமுடி படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதில் அவருக்கு சம்பளமாக எவ்வளவு தரப்பட்டது என்கிற த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் ரவி தேஜாவின் இருமுடி படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதில் அவருக்கு சம்பளமாக எவ்வளவு தரப்பட்டது என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.</p><p>அவர் சம்பளமாக பெரிய தொகை வாங்க வில்லையாம், அதற்கு பதிலாக லாபத்தில் பங்கு தொகையை அவர் பெறுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6b9350b-90a0-4b4e-9260-058a745c88d0/26-6a9445bee036b.webp' /></p><p>
</p><h2>இத்தனை கோடியா?
</h2><p>ரவி தேஜா சம்பளமாக ஒரு படத்திற்கு 15 - 20 கோடி மட்டுமே வாங்குகிறார். ஆனால் இருமுடி படத்தின் லாபத்தில் அவர் பங்கு வாங்கியதால் அவருக்கு சுமார் 50 கோடி ரூபாய் வரை கிடைக்கிறதாம்.
</p><p>அவரது முடிவு தற்போது அவருக்கு பெரிய லாபத்தை கொடுத்து இருக்கிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T15:02:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈபிடிபியும்,இராணுவமுமே பிள்ளைகளை கடத்தியது : மூன்று பிள்ளைகளின் வரவுக்காக ஏங்கும் தாயின் குமுறல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mother-says-epdp-and-military-kidnapped-children-1788091703"></link>
            <id>https://ibctamil.com/article/mother-says-epdp-and-military-kidnapped-children-1788091703</id>
            <summary type="text">சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், மூன்று பிள்ளைகளின் புகைப்படத்தை
நெஞ்சோடு அணைத்தபடி பதிலுக்காக காத்திருக்கும் ஒரு தாயின் கண்ணீர் கதை இது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், மூன்று பிள்ளைகளின் புகைப்படத்தை
நெஞ்சோடு அணைத்தபடி பதிலுக்காக காத்திருக்கும் ஒரு தாயின் கண்ணீர் கதை இது.
</p><p>
“அன்று செய்தி பார்த்துக் கொண்டிருந்தார்கள்… துப்பாக்கிகளுடன் வந்தவர்கள்
அழைத்துச் சென்றார்கள். அதன் பிறகு என் பிள்ளைகளை நான் பார்க்கவே இல்லை…”</p><h2>தாயின் காத்திருப்பு மட்டும் இன்னும் முடிவடையவில்லை</h2><p>20 ஆண்டுகள் கடந்துவிட்டன.
ஆனால் அந்தத் தாயின் காத்திருப்பு மட்டும் இன்னும் முடிவடையவில்லை.

தனது மூன்று பிள்ளைகளின் புகைப்படங்களை கையில் ஏந்தியபடி, “என் பிள்ளைகள்
எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது?” என்ற கேள்வியுடன் இன்றும் பதிலைத் தேடி
வருகிறார் அந்தத் தாய்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7328a4c0-867c-498e-b6d1-631afe18b277/26-6a94214d72b7a.webp' /></p><p>
</p><p>
தனது பிள்ளைகளை EPDP மற்றும் இராணுவத்தினரே அழைத்துச் சென்றதாக அவர்
குற்றஞ்சாட்டுகிறார். எனினும், அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில்
இதுவரை உறுதியான பதில் கிடைக்கவில்லை என அவர் தெரிவிக்கிறார்.</p><p></p><p>
</p><p>
</p><h2>எண்ணற்ற குடும்பங்களின் வலி</h2><p>ஆண்டுகள் கடந்தாலும், ஒரு தாயின் நம்பிக்கை மட்டும் மங்கவில்லை.
ஒருநாள் தனது பிள்ளைகள் பற்றிய உண்மை வெளிவரும் என்ற எதிர்பார்ப்புடன் அவர்
தொடர்ந்து காத்திருக்கிறார்.</p><p>
</p><p>
அவரது கைகளில் இருக்கும் அந்த மூன்று இளைஞர்களின் புகைப்படங்கள், ஒரு
குடும்பத்தின் நினைவுகள் மட்டுமல்ல; பதில் கிடைக்காமல் காத்திருக்கும் எண்ணற்ற
குடும்பங்களின் வலியையும் பிரதிபலிக்கின்றன.
</p><p>
“உண்மை வெளிவரும் வரை எங்கள் தேடல் நிற்காது…”

இது ஒரு தாயின் குரல் மட்டுமல்ல.
பல ஆண்டுகளாக பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும் குடும்பங்களின் மௌனக்
குரலும் கூட.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T14:58:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவு குருந்தூர் விகாரைக்கு மீண்டும் காவல்துறை பாதுகாப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-security-kurundur-temple-in-mullaitivu-1788100599"></link>
            <id>https://ibctamil.com/article/police-security-kurundur-temple-in-mullaitivu-1788100599</id>
            <summary type="text">&amp;nbsp;முல்லைத்தீவு குருந்தூர் ரஜமகா விகாரை வளாகத்திலிருந்து அகற்றப்பட்டிருந்த காவல்துறை பாதுகாப்பை மீண்டும் வழங்குவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார...</summary>
            <content type="html"><![CDATA[<p><p>&nbsp;முல்லைத்தீவு குருந்தூர் ரஜமகா விகாரை வளாகத்திலிருந்து அகற்றப்பட்டிருந்த காவல்துறை பாதுகாப்பை மீண்டும் வழங்குவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. </p><p>

விகாரையில் அகற்றப்பட்ட காவல்துறை பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு கோரி, விகாராதிபதி கல்கமுவே சந்தபோதி தேரரினால் அமைச்சுக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்குப் பதிலளிக்கும் வகையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>அமைச்சரின் அறிவிப்பு</h2><p>இந்தக் கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில், விகாரைக்குத் தேவையான காவல்துறை பாதுகாப்பை மீண்டும் வழங்குவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, விகாராதிபதி தேரருக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a139ed59-56f3-4aaa-9335-62fe38322c04/26-6a9443c38c1da.webp' /></p></p><p></p><p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p></p>]]></content>
            <updated>2026-08-30T14:53:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[14 வயதில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை - 4 ஆண்டுகளுக்குப் பின் வந்த நீதிமன்றத் தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sexual-abuse-of-a-14-year-old-girl-1788100850"></link>
            <id>https://tamilwin.com/article/sexual-abuse-of-a-14-year-old-girl-1788100850</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் 14 வயது சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞருக்கு 24 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் 14 வயது சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞருக்கு 24 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

கடந்த 2021ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><h2>
24 வருட சிறைத்தண்டனை</h2><p>
இந்த விடயம் தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்தால், யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைகள் கடந்த 4 வருடங்களாக இடம்பெற்று வந்த நிலையில், நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5a6b744-faa7-4214-9be5-e091a504f45a/26-6a944139cd26d.webp' /></p><p> </p><p>


சம்பவம் மீதான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதற்கமைய, சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞருக்கு 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 இலட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

அத்துடன், நஷ்ட ஈட்டை வழங்க தவறின் மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை
அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T14:42:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாராலும் தோற்கடிக்கவே முடியாத 3 ராசியினர்! இவர்களிடம் வம்பு வச்சிக்காதீங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/zodiac-sign-who-are-unbeatable-1788094134"></link>
            <id>https://manithan.com/article/zodiac-sign-who-are-unbeatable-1788094134</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவரின் பிறப்பு ராசியும் நட்சத்திரமும் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவரின் பிறப்பு ராசியும் நட்சத்திரமும் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
</p><p>
எதிர்கால முன்னேற்றம், பொருளாதார நிலை, தொழில் வாய்ப்புகள், தனித்திறமைகள், உடல் அமைப்பு, மனப்பாங்கு, குணநலன்கள் மற்றும் சமூக ஆளுமை என பல அம்சங்களில் ராசி மற்றும் நட்சத்திரத்தின் தாக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66936507-8b18-482f-8179-bb6657ba8b0d/26-6a942bee05769.webp' /></p><p>

அந்த வகையில், சில குறிப்பிட்ட ராசிகளில் பிறந்தவர்கள் அபாரமான அறிவாற்றல், தன்னம்பிக்கை, மன உறுதி மற்றும் எந்தச் சவாலையும் எதிர்கொள்ளும் துணிச்சல் கொண்டவர்களாகத் திகழ்வார்கள்.</p><p> இவர்களை&nbsp; தோற்கடிப்பதும், மன உறுதியை உடைப்பதும் மிகவும் கடினம்.அப்படிப்பட்ட அபூர்வமான ஆளுமை, அசைக்க முடியாத மனவலிமை மற்றும் சிறப்பான திறமைகளுடன் பிறந்த ராசியினர் யார் யார் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.</p><h2>விருச்சிகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b58c274-1239-4b6c-a032-2f0527d3bae6/26-6a942beeb2088.webp' /></p><p></p><h2>
</h2><p>விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் மர்மமான இயல்பு, கவர்ச்சியான ஆளுமை மற்றும் அசாத்திய துணிச்சலுக்கு பெயர் பெற்றவர்கள். </p><p>வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும், அவற்றை தைரியமாக எதிர்கொண்டு சாதிக்கும் மனஉறுதி இவர்களிடம் இருக்கும்.

தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும், தவறுகளை தட்டிக்கேட்கவும், எதிர்ப்புகளை எதிர்கொள்ளவும் ஒருபோதும் தயங்கமாட்டார்கள். </p><p>மாற்றத்தை ஏற்றுக்கொண்டு சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் திறனும் இவர்களுக்கு உண்டு. அதனால் இவர்களை எளிதில் தோற்கடிப்பது மிகவும் கடினம்.</p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e37b696-2220-4445-a65b-6fdb9b17b5a7/26-6a942bef64f5a.webp' /></p><p>
சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசியினர் வலிமையான ஆளுமை, தலைமைத்துவ குணம் மற்றும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். </p><p>தாங்கள் செல்லும் இடங்களில் தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், மற்றவர்களை ஈர்க்கும் காந்த ஆற்றலும் இவர்களிடம் இருக்கும்.
</p><p>
எத்தனை முறை வாழ்க்கையில் விழுந்தாலும், மீண்டும் அதே நம்பிக்கையுடன் எழுந்து நிற்கும் மனவலிமை இவர்களுடைய மிகப்பெரிய பலமாகும். விடாமுயற்சியுடன் செயல்படுவதால் இவர்களை எளிதில் தோற்கடிக்க முடியாது.
</p><h2>மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/109ebae3-71e7-4308-82d4-5cff778a726b/26-6a942bf01b50b.webp' /></p><p></p><h2>
</h2><p>மகர ராசியில் பிறந்தவர்கள் சிறந்த அறிவாற்றல் மற்றும் நிதானமான சிந்தனை கொண்டவர்கள். எந்த விஷயத்தையும் பல கோணங்களில் ஆராய்ந்து, மற்றவர்கள் கவனிக்காத விஷயங்களையும் கூர்ந்து கவனிக்கும் திறன் இவர்களிடம் இருக்கும்.</p><p>

சிக்கலான சூழ்நிலைகளையும் நம்பிக்கை, திறமை மற்றும் தன்னம்பிக்கையுடன் கையாள்வார்கள். இவர்களின் நிதானமும் விடாமுயற்சியும் எதிரிகளை திணறடிக்கும். </p><p>எவ்வளவு காலம் எடுத்தாலும், முயற்சியை கைவிடாமல் இறுதியில் வெற்றியை தங்களுடையதாக மாற்றிக்கொள்வார்கள்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://chat.whatsapp.com/KPaiG8NNYogL3W9EipSjKP" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T14:39:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான் தாக்குதல்: உயிரிழப்பு 38 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-toll-russian-airstrike-kyiv-region-rises-38-1788099502"></link>
            <id>https://tamilwin.com/article/death-toll-russian-airstrike-kyiv-region-rises-38-1788099502</id>
            <summary type="text">உக்ரைனின் கீவ் (Kyvia) பிராந்தியத்திலுள்ள இராணுவ வெடிபொருள் சேமிப்புக்
கிடங்கு மீது ரஷ்யா நடத்திய மிக தீவிரமான வான் தாக்குதலில் உயிரிழந்தோரின்
எண்ணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் கீவ் (Kyvia) பிராந்தியத்திலுள்ள இராணுவ வெடிபொருள் சேமிப்புக்
கிடங்கு மீது ரஷ்யா நடத்திய மிக தீவிரமான வான் தாக்குதலில் உயிரிழந்தோரின்
எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி
தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும் காணாமல் போயுள்ள நால்வரைத் தேடும் பணிகள் தொடர்ந்தும்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><h2>வான் தாக்குதல்</h2><p>
</p><p>
கடந்த வெள்ளிக்கிழமை இரவு கீவ் நகரை இலக்கு வைத்து ரஷ்யப் படைகள் மேற்கொண்ட
இந்த தாக்குதலே, நடப்பாண்டில் அப்பகுதியில் இடம்பெற்ற மிக மோசமான தாக்குதலாக
பதிவாகியுள்ளது.
</p><p>
பீரங்கி குண்டுகள், மிதிவெடிகள் மற்றும் ட்ரோன்கள் உள்ளடங்கலாக பல்வேறு வெடி
பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம் மீதே இந்த குண்டுவீச்சு
நடத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df077810-ec3e-4761-af3a-ad4265fb0584/26-6a943ff3719e0.webp' /></p><p>
</p><p>
தாக்குதலால் ஏற்பட்ட தீ பரவலை தீயணைப்புப் படையினர் பெருமளவில்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள போதிலும், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள
அழிவுகளும் பாதிப்புகளும் மிக அதிகமாக காணப்படுவதாக ஜனாதிபதி ஸெலென்ஸ்கி
குறிப்பிட்டுள்ளார்.</p><p> அத்துடன் இடிபாடுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்தும்
தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

கடந்த வாரம் முழுவதும் ரஷ்யா உக்ரைன் மீது சுமார் 2,000 ட்ரோன்கள், 1,600
வான்வழி குண்டுகள் மற்றும் 31 ஏவுகணைகளை ஏவி கடுமையான தாக்குதல்களை
நடத்தியுள்ளது.
</p><p>
ரஷ்யாவின் இத்தகைய ஒவ்வொரு தாக்குதல்களுக்கும் குற்றங்களுக்கும் உரிய பதிலடி
நிச்சயம் வழங்கப்படும் எனவும் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T14:36:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரும் பேரழிவில் சிக்கிய நேபாளம் - 750 பேர் பலி: உதவிக்கரம் நீட்டும் நட்பு நாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nepal-is-caught-in-a-major-disaster-1788100169"></link>
            <id>https://tamilwin.com/article/nepal-is-caught-in-a-major-disaster-1788100169</id>
            <summary type="text">நேபாளம் - சீனா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பாரிய பனிப்பாறை சரிவு
காரணமாக உருவான வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவுகளில் சிக்கி
உயிரிழந்தவர்களின் எண்ணிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் - சீனா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பாரிய பனிப்பாறை சரிவு
காரணமாக உருவான வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவுகளில் சிக்கி
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 750ஆக அதிகரித்துள்ளதுடன், 3 000
மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இமாலயப் பிராந்தியத்தில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இந்த கோர விபத்தினால்
சுமார் 90,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம்
மதிப்பிட்டுள்ளது.
</p><p>
நேபாளப் பகுதியில் 734 பேரும், சீனப் பகுதியில் 16 பேரும் உயிரிழந்துள்ளதாக
உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளிலும்
பல்லாயிரக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் தீவிர தேடுதல் நடவடிக்கைகளில்
ஈடுபட்டுள்ளனர்.</p><h2>

நேபாளத்தில் உயர்வடையும் ஆற்று நீர்மட்டம்</h2><p>
தொடர்ச்சியான மோசமான வானிலை மற்றும் ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால்
மீட்புப் பணிகளில் பாரிய சவால்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9db217c-d5f1-430c-823e-e1c19b719652/26-6a943e9caeca4.webp' /></p><p>
</p><p>
வெள்ளத்தால் சேதமடைந்த நீர்மின் நிலையங்களின் சுரங்கப் பாதைகளில்
நூற்றுக்கணக்கானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், அவர்களை மீட்கும்
பணிகளுக்கு சர்வதேச உதவிகள் கோரப்பட்டுள்ளன.
</p><p>
இதனிடையே, மீட்கப்பட்ட உடல்களில் பெரும்பான்மையானவை அடையாளம் காண முடியாத
அளவிற்கு சிதைவடைந்துள்ளதால், அவற்றின் டி.என்.ஏ மாதிரிகள் மற்றும்
புகைப்படங்களை சேகரித்த பின்னர் நேபாளத்தில் உடல்களை நல்லடக்கம் செய்யும்
பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>
உலக வெப்பமயமாதல் காரணமாகவே இமயமலையில் பனிப்பாறை உறுதியிழந்து இந்த பேரழிவு
ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9859dfae-2932-4d1f-b63d-a145a166a184/26-6a943e9d7f5f9.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T14:30:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை முழுவதும் தீவிரமடையும் டெங்கு நோய் தொற்று]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-outbreak-intensifies-across-sri-lanka-1788098502"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-outbreak-intensifies-across-sri-lanka-1788098502</id>
            <summary type="text">நாடு முழுவதும் மொத்தம் 50 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பகுதிகள் டெங்கு நோய்க்கான உயர் அபாய வலயங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன என்று தேசிய டெங்கு கட்டுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு முழுவதும் மொத்தம் 50 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பகுதிகள் டெங்கு நோய்க்கான உயர் அபாய வலயங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
</p><p>


அத்துடன், இலங்கையில் இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில், 95,174 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dffa74ff-8842-42bf-badc-a7b2bc36060a/26-6a9437c7a37d1.webp' /></p><h2>டெங்கு நோயாளர்கள்&nbsp;</h2><p>



இந்த மொத்த எண்ணிக்கையில், ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் 9,838 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
</p><p>


மேல் மாகாணத்தில் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுகள் பதிவாகி வருகின்றன.

இந்த ஆண்டில் இதுவரை அங்கு 50,358 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.</p><p> 



தெற்கு மாகாணத்தில் 13,854 நோய்த்தொற்றுகளும், அதனைத் தொடர்ந்து மத்திய மாகாணத்தில் 8,659 நோய்த்தொற்றுகளும், சபரகமுவ மாகாணத்தில் 7,825 நோய்த்தொற்றுகளும் பதிவாகியுள்ளன.</p><p>



கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 20,276 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>



இதற்கிடையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்படி, இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் டெங்கு தொடர்பான 72 மரணங்கள் பதிவாகியுள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-30T14:30:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 33 பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/33-arrested-for-illegal-fishing-activities-1788089492"></link>
            <id>https://jvpnews.com/article/33-arrested-for-illegal-fishing-activities-1788089492</id>
            <summary type="text">கடற்படையினரால் கடந்த சில நாட்களில் முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முறியடிக்கும் நடவடிக்கைகளின் மூலம் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கடற்படையினரால் கடந்த சில நாட்களில் முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முறியடிக்கும் நடவடிக்கைகளின் மூலம் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p style="text-align: justify; ">

கடந்த 16 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கிழக்கு மற்றும் வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகங்களினால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25b7ab4f-71ce-4b66-a9e0-26e50b38d28c/26-6a94149687358.webp' /></p><h2 style="text-align: justify; ">சட்ட நடவடிக்கை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதன்போது 18 டிங்கிப் படகுகளும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். </p><p style="text-align: justify; ">

திருகோணமலை இலக்கந்தை, நிலாவெளி, கல்குடா, கொக்குத்தொடுவாய், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு உள்ளிட்ட பல கரையோர மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கிய வகையில் கடற்படையினரால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், மீன்பிடிப் படகுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குச்சவெளி, மூதூர், முல்லைத்தீவு, கொக்கிலாய், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அலுவலகங்களிலும், கல்குடா மற்றும் நிலாவெளி பொலிஸ் நிலையங்களிலும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-30T14:30:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரதி கண்ணம்மா வினுஷா தேவிக்கு திருமணம் முடிந்தது... வைரலாகும் வீடியோ!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/serial-actress-vinusha-devi-wedding-video-viral-1788098823"></link>
            <id>https://manithan.com/article/serial-actress-vinusha-devi-wedding-video-viral-1788098823</id>
            <summary type="text">சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த பிரபல சீரியல் நடிகை வினுஷா தேவிக்கு இன்று திருமணம் முடிந்துள்ளது. குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாக வருவது...</summary>
            <content type="html"><![CDATA[<p>சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த பிரபல சீரியல் நடிகை வினுஷா தேவிக்கு இன்று திருமணம் முடிந்துள்ளது. குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாக வருவதுடன் லைக்குகளையும் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது. </p><h2>

சீரியல் நடிகை </h2><p>வினுஷா

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலம் ஆனவர் தான் வினுஷா தேவி. 

அந்த சீரியலில் முதலில் ரோஷினி ஹரிப்ரியன் தான் கண்ணம்மாவாக நடித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d14e22be-f80f-4ff7-9b52-278ad07dfc77/26-6a943d81a165b.webp' /></p><p></p><p>ரோஷினியை சீரியல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவர் கண்ணம்மாவாக பட்டிதொட்டி எல்லாம் பிரபலமான நிலையில் அந்த சீரியலில் இருந்து திடீரென்று விலகிவிட்டார்.</p><p>
இதையடுத்தே அந்த கதாபாத்திரத்தில் வினுஷா தேவியை நடிக்க வைத்தார்கள். ஆரம்பத்தில் எதற்கெடுத்தாலும் ரோஷினி ஹரிப்ரியனுடன் வினுஷாவை ஒப்பிட்டு பேசினார்கள் பாரதி கண்ணம்மா சீரியல் பார்த்தவர்கள்.</p><p>அதன் பிறகு ரோஷினியை மறந்து வினுஷாவை மட்டும் கண்ணம்மாவாக ஏற்றுக் கொண்டார்கள்.அந்த அளவுக்கு&nbsp;வினுஷா தேவி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d0de727-8bec-487f-b61e-c5f8a6a80518/26-6a943d8291949.webp' /></p><p>
பாரதி கண்ணம்மா சீரியலை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் கலந்து கொண்டு 28 நாட்கள் தாக்குப்பிடித்தார்.</p><p>தொடர்ந்து டிவி சீரியல்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். 

அதன் பின் தற்போது விஜய் டிவியில் அவர் சுட்டும் விழி சுடரே என்ற சீரியலில் நடித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc0c5913-2ea8-4298-ba03-efa219751832/26-6a943d8347b96.webp' /></p><p></p><p>இந்நிலையில்,&nbsp; வினுஷா தேவிக்கு அவரது காதலர் உடன் திருமணம் நடந்து முடிந்து இருக்கிறது. அவர் கடந்த சில வருடங்களாக லிங்கேஸ்வரன் என்பவரை காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் வெகுவிமர்சையாக நடந்து முடிந்ததை காாணளி வெளியிட்டு வினுஷா தேவி மகிழ்ச்சியாக அறிவித்துள்ளார்.குறித்த காணொளி இணையத்தில் வைராலாகியுள்ளதுடன் வாழ்த்துக்களையும் லைக்குகளையும் குவித்து வருகின்றது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcpsfdEJwYN/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcpsfdEJwYN/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcpsfdEJwYN/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Vinusha Devi (@vinusha_devi)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T14:29:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இடம்பெற்ற இருவேறு கொலை : இருவருக்கு விதிக்கப்பட்டது மரணதண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-sentenced-to-death-in-jaffna-1788097977"></link>
            <id>https://ibctamil.com/article/two-sentenced-to-death-in-jaffna-1788097977</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலை சம்பவங்களில் குற்றவாளிகளாக
காணப்பட்ட இருவருக்கு , யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன்
மரண தண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலை சம்பவங்களில் குற்றவாளிகளாக
காணப்பட்ட இருவருக்கு , யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன்
மரண தண்டனை விதித்துள்ளார்.
</p><p>
திருநெல்வேலி பகுதியில் ,கடந்த 2012ஆம் ஆண்டு மது போதையில் இளைஞன் ஒருவரை
மூர்க்கத்தனமாக அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை
முன்னெடுத்த காவல்துறையினர் 09 நபர்களை கைது செய்திருந்தனர்.&nbsp;</p><h2>எதிரி மீதான குற்றச்சாட்டு நிரூபணம்</h2><p>குறித்த 09 நபர்களையும் எதிரிகளாக பெயர் குறிக்கப்பட்டு , மேல் நீதிமன்றில்
சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள்
இடம்பெற்று வந்தன</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cd678f7-a143-47df-b1b0-5a864c83779b/26-6a943d7a04a09.webp' /></p><p>

இந்நிலையில் , குறித்த வழக்கு நேற்றையதினம்(29) வெள்ளிக்கிழமை தீர்ப்புக்காக எடுத்து
கொள்ளப்பட்ட வேளை , 09ஆம் எதிரி மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி
நிரூபிக்கப்பட்டமையால் ,09ஆம் எதிரிக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி , ஏனைய 08
எதிரிகள் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் , 08 பேரையும் மன்று விடுவித்தது.</p><p></p><h2>இளைஞனுக்கு மரண தண்டனை</h2><p>
</p><p>
அதேவேளை ,பருத்தித்துறை வல்லிபுரம் குறிச்சி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை
கடந்த 2014ஆம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் கைதான இளைஞன்
மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டமையால் ,
இளைஞனுக்கு மரண தண்டனை விதித்து ,மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a6f2ad6-9b78-47cb-a893-c2705e53c897/26-6a94450127ac4.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T14:26:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க பொருட்களை புறக்கணிக்கும் கனடா இளைஞர்கள் ; ட்ரம்பின் வரியால் வந்த வினை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadian-youths-boycott-american-products-1788091318"></link>
            <id>https://canadamirror.com/article/canadian-youths-boycott-american-products-1788091318</id>
            <summary type="text">டிரம்ப்பின் வரிவிதிப்பு எதிரொலியாக அமெரிக்க பொருட்களை புறக்கணித்து கனடா இளைஞர்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

கனடாவுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>டிரம்ப்பின் வரிவிதிப்பு எதிரொலியாக அமெரிக்க பொருட்களை புறக்கணித்து கனடா இளைஞர்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
</p><p>
கனடாவுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடுமையான வரிவிதிப்பை அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdfb473c-307e-468b-8faa-ab075c73cf28/26-6a941bb812682.webp' /></p><p> </p><p>இதன்படி, கனடாவின் 2 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான சரக்குகளுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டது.</p><p>&nbsp;இந்த இறக்குமதி வரி விதிப்புக்கு கனடா பிரதமர் மார்க் கர்னியின் அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. பதிலுக்கு கனடாவும், 15 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை அமெரிக்க பொருட்களுக்கு வரி விதித்து அதிரடி காட்டியது.
</p><p>
இந்த இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மோதல் அதிகரித்து காணப்படும் சூழலில், கனடா இளைஞர்கள் தங்களுடைய தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில், நடந்து கொள்கின்றனர்.


</p><p>
அவர்கள் அமெரிக்க தயாரிப்பு பொருட்களை நிராகரித்து வருகின்றனர். இதன்படி, அமெரிக்காவின் ஒயின் உள்ளிட்ட மதுபானங்கள் பல்வேறு மாகாணங்களில் உள்ள குடோன்களில் இருந்து நீக்கப்படுகின்றன.</p><p>

கனடாவில் வாடிக்கையாளர்களின் போக்கிலும் பெரும் மாற்றம் காணப்படுகிறது. இதுபற்றி மான்ட்ரியல் சூப்பர்மார்க்கெட் மேலாளரான பீட்டர் கியானோபோலிஸ் கூறும்போது, பொருட்கள் எங்கிருந்து வருகின்றன என வாடிக்கையாளர்கள் கேட்கின்றனர். </p><p>இந்த மனப்போக்கு அவர்களிடம் அதிகரித்து உள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T14:04:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய் - தகப்பன் பாதுகாப்பில் இருந்த 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி..! தமிழர் பகுதியை அதிர வைத்த நீதிமன்ற தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-sexually-assaulted-5-year-old-boy-1788098200"></link>
            <id>https://tamilwin.com/article/youth-sexually-assaulted-5-year-old-boy-1788098200</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் 5 வயது சிறுவனை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட இளைஞருக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் 5 வயது சிறுவனை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட இளைஞருக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p> 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

பெற்றோர் பாதுகாப்பில் இருந்த 5 வயது சிறுவனை, இளைஞர் ஒருவர் தவறான நடத்தைக்கு உட்படுத்தியுள்ளார்.
</p><p>
இதனைத் தொடர்ந்து, குறித்த இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 19 வருட சிறைத்தண்டனை விதித்து , யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் தீர்ப்பளித்துள்ளார்.
</p><h2>
19 வருட சிறைத்தண்டனை</h2><p>
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab8264e4-b3b5-4afc-acf8-9e94989ced88/26-6a9437f95db38.webp' /></p><p> </p><p>

இதற்கமைய, பெற்றோரின் பாதுகாப்பில் இருந்த சிறுவனை தவறாக வழி நடத்திய குற்றத்திற்காக 7 வருட சிறைத்தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், குறித்த சிறுவனை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றத்திற்காக 12 வருட சிறைத்தண்டனையும், 25 ஆயிரம் தண்டப்பணமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட
சிறுவனுக்கு 05 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையும், தவறும் பட்சத்தில் 3 வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் தீர்ப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T14:02:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[காகித தொழிற்சாலையில் தீ விபத்து ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fire-breaks-out-at-paper-factory-1788094271"></link>
            <id>https://jvpnews.com/article/fire-breaks-out-at-paper-factory-1788094271</id>
            <summary type="text">எம்பிலிபிட்டிய காகித தொழிற்சாலையில் கழிவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலை ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) பிற்பகல் 3.20 மணியளவில...</summary>
            <content type="html"><![CDATA[<p>எம்பிலிபிட்டிய காகித தொழிற்சாலையில் கழிவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலை ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) பிற்பகல் 3.20 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>


தீ பரவுவதைத் தடுப்பதற்காகக் காகித தொழிற்சாலையின் தீயணைப்புப் பிரிவு, இராணுவத்தினர், பொலிஸார், எம்பிலிபிட்டிய நகர சபை மற்றும் செவனகல சர்க்கரை ஆலையின் தீயணைப்புப் பிரிவு ஆகியவை இணைந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு தீ தற்போது முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9beeab37-faec-4b8c-96f5-7a1d2c32491f/26-6a9427412dcd6.webp' /></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
காகித தொழிற்சாலைக்குக் கொண்டு வரப்பட்ட கழிவுப் பொருட்கள் சேமிக்கப்பட்டிருந்த பகுதியிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
</p><p>
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-30T14:00:24+00:00</updated>
        </entry>
    </feed>
