<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-05T17:31:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் காளான் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/mushrooms-sold-in-alberta-recalled-over-listeria-1785940880"></link>
            <id>https://canadamirror.com/article/mushrooms-sold-in-alberta-recalled-over-listeria-1785940880</id>
            <summary type="text">கனடாவில் &#039;ஹைலைன்&#039; நிறுவனத்தின் ஆர்கானிக் வெட்டப்பட்ட மினி பெல்லா காளான்களில் &#039;லிஸ்டீரியா&#039; பாக்டீரியா தொற்று பரவியிருக்கக்கூடும் என்ற அச்சத்தின் காரணமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் 'ஹைலைன்' நிறுவனத்தின் ஆர்கானிக் வெட்டப்பட்ட மினி பெல்லா காளான்களில் 'லிஸ்டீரியா' பாக்டீரியா தொற்று பரவியிருக்கக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, அவற்றை சந்தையிலிருந்து திரும்பப் பெறுவதாக கனடிய சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p>இந்தக் காளான்கள் அல்பெர்ட்டா மாகாணத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.</p><p>
பொதுமக்கள் இந்த காளான்களை உட்கொள்ளவோ, பயன்படுத்தவோ அல்லது விற்பனை செய்யவோ வேண்டாம் எனவும், அவற்றை உடனடியாகக் குப்பையில் வீசுமாறு அல்லது வாங்கிய இடத்திலேயே மீண்டும் ஒப்படைக்குமாறும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02dad946-81f8-49fa-9d37-0c9339fc4d98/26-6a734b92147e5.webp' /></p><p>
</p><p>லிஸ்டீரியா பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் கெட்டுப்போனது போலவோ அல்லது துர்நாற்றம் வீசுவது போலவோ தோற்றமளிக்காது; இருப்பினும் அவை மனிதர்களுக்குக் கடுமையான நோயை உண்டாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>வாந்தி, குமட்டல், தொடர் காய்ச்சல், தசை வலி, கடுமையான தலைவலி மற்றும் கழுத்து விறைப்பு போன்றவை இதன் முதன்மை அறிகுறிகளாகும்.
கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர்.
</p><p>பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்குச் லேசான காய்ச்சல் போன்ற அறிகுறிகளே தென்பட்டாலும், இது முன்கூட்டிய பிரசவம், புதிதாகப் பிறந்த குழந்தைக்குத் தொற்று ஏற்படுதல் அல்லது கருவிலேயே குழந்தை உயிரிழப்பது போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>
தீவிரமான பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் மனித உயிர்களுக்கே ஆபத்தாக முடியலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T17:30:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[17 வயது இளைஞனின் உயிரைப் பறித்த பேருந்து ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bus-that-killed-17-year-old-set-on-fire-1785950221"></link>
            <id>https://jvpnews.com/article/bus-that-killed-17-year-old-set-on-fire-1785950221</id>
            <summary type="text">மாவத்தகம, அஹஸ்யானாபிட்டிய வீதியின் சமூக மண்டபத்தின் முன்னால் மாவத்தகமையிலிருந்து அஹஸ்யானாபிட்டிய நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று, எதிர்த்திசையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாவத்தகம, அஹஸ்யானாபிட்டிய வீதியின் சமூக மண்டபத்தின் முன்னால் மாவத்தகமையிலிருந்து அஹஸ்யானாபிட்டிய நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று, எதிர்த்திசையில் வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p>

 

நேற்று (04) மதியம் இடம்பெற்ற இந்த விபத்தில் மாவத்தகம, சீராதுன்ன பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d47edccd-32fa-4360-b824-4e88719fc359/26-6a73700f052d1.webp' />&nbsp;</p><h2>&nbsp;மேலதிக சிகிச்சை</h2><p>
</p><p>
 

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளைச் செலுத்திய இளைஞனும், பின்னால் அமர்ந்து பயணித்தவரும் மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p>&nbsp;மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மோட்டார் சைக்கிளைச் செலுத்திய இளைஞன் உயிரிழந்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
 

சம்பவம் தொடர்பில் மாவத்தகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T17:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓமனுடான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியதாக ஈரான் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-s-deputy-foreign-minister-kazem-gharibabadi-1785950676"></link>
            <id>https://tamilwin.com/article/iran-s-deputy-foreign-minister-kazem-gharibabadi-1785950676</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் கடல்சார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் கடல்சார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>
கடல்சார் கப்பல்கள் நுழைவது மற்றும் வெளியேறுவதற்கான வழிகள் உட்பட பெரும்பாலான முக்கிய அம்சங்களில் இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர புரிதல் எட்டப்பட்டுள்ளதாக ஈரானின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசெம் கரிபாபாடி தெரிவித்துள்ளார்.
</p><p>ஈரானின் அதிகாரப்பூர்வ 'இர்னா' செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், இரு நாடுகளுக்கும் இடையிலான இறுதி ஒப்பந்தம் "நிறைவடையும் தருவாயில் உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dff3dfc2-9171-4ac0-9f2e-1f58c7d56ec3/26-6a7371d5aab91.webp' /></p><p>
இது தொடர்பான அவரது கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p>எவ்வாறெனினும் இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்கா தனது அதிகாரபூர்வ நிலைப்பாடை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-05T17:24:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸை மையப்படுத்திய ட்ரம்பின் எதிர்பார்ப்பை தாண்டி இறுதி கட்டத்தில் ஈரான் - ஓமான் ஒப்பந்தம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-oman-agreement-centered-hormuz-amidst-1785948271"></link>
            <id>https://ibctamil.com/article/iran-oman-agreement-centered-hormuz-amidst-1785948271</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை வழியாக முன்மொழியப்பட்ட கப்பல் போக்குவரத்து வழித்தடம் குறித்த ஓமானுடனான கூட்டறிக்கை இறுதிக்கட்ட வரைவுப் பணியில் உள்ளது என்று ஈரான் தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை வழியாக முன்மொழியப்பட்ட கப்பல் போக்குவரத்து வழித்தடம் குறித்த ஓமானுடனான கூட்டறிக்கை இறுதிக்கட்ட வரைவுப் பணியில் உள்ளது என்று ஈரான் தெரிவித்துள்ளது.</p><p>இந்தச் செயல்பாட்டில் எந்தவொரு வெளித்தரப்பினரும் தலையிடாத பட்சத்தில், இந்த திட்டம் சாத்திய போக்கை அடையும் என்றும் ஈரான் அறிவித்துள்ளது.</p><p>ஹோர்முஸ் நீரிணையின் இரு கரையோர நாடுகளாக, வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்கான பாதுகாப்பான பாதையை அமைப்பது குறித்து ஈரானும் - ஓமானும் கடந்த இரண்டு மாதங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.</p><p></p><h2>தொழில்முறை சார்ந்த பேச்சுவார்த்</h2><p>இந்நிலையில் இந்த போச்சுவார்த்தைகள் குறித்து கருத்து வெளியிட்ட ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்,&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65096043-6858-4ae4-9f9c-043a27f227c5/26-6a7370c301244.webp' /></p><p>“நமது நாட்டின் தகுதிவாய்ந்த அதிகாரிகள், இந்த முன்மொழிவை தொழில்நுட்பம், சட்டம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய கண்ணோட்டங்களில் ஆய்வு செய்துள்ளனர்.</p><p>இந்த பேச்சுவார்த்தைகளை தொழில்முறை சார்ந்தவைமற்றும் பயனுள்ளவை. </p><p>மேலும் முன்மொழியப்பட்ட பாதையின் புவியியல் ஆயக்கூறுகள் குறித்து இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.</p><p></p><h2>முக்கியப் பரிசீலனை</h2><p>முக்கியப் பரிசீலனைகள் மற்றும் உடன்பாட்டு அம்சங்கள் அடங்கிய இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டறிக்கை, அதன் இறுதிக்கட்ட ஆய்வு மற்றும் வரைவுப் பணிகளில் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de39be0b-0e33-471a-ba93-a81ad8295482/26-6a7370c3b0225.webp' /></p><p>ஈரான்-ஓமான் இடையேயான உடன்பாடு மட்டுமே அந்த மூலோபாய நீர்வழிப்பாதை வழியாகப் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்திற்கு உத்தரவாதம் அளிக்காது.</p><p>அத்தோடு, பாதுகாப்பு நிலைமையானது ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தொடர்ச்சியான நடவடிக்கைகளுடன் பிணைந்துள்ளது”&nbsp; என்று ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பாகாயி கூறியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T17:20:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹிந்தி சீரியலில் நடிக்கும் சன் டிவி மருமகள் சீரியல் ஹீரோ ராகுல்... நாயகி இவர்தானா...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/marumagal-fame-rahul-ravi-new-serial-in-hindi-1785933933"></link>
            <id>https://cineulagam.com/article/marumagal-fame-rahul-ravi-new-serial-in-hindi-1785933933</id>
            <summary type="text">மருமகள்சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று தான் மருமகள். கேப்ரியல்லா மற்றும் ராகுல் ரவி இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மருமகள்</h2><p>சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று தான் மருமகள். கேப்ரியல்லா மற்றும் ராகுல் ரவி இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள். </p><p>இப்போது பிரபுவின் தங்கை ரோஹினியின் வாழ்க்கை பிரச்சனையின் கதை தான் ஒளிபரப்பாகி வருகிறது. </p><p>அவரை அவரது கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என பிரபு மற்றும் ஆதிரை போராடி வருகிறார்கள்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1e51f90-5c93-41e2-8422-5a83d510d051/26-6a7338432453a.webp' /></p><h2>புதிய சீரியல்</h2><p>
இந்த நிலையில் மருமகள் சீரியல் புகழ் ராகுல் ரவி நடிக்கும் புதிய தொடர் குறித்த தகவல் வந்துள்ளது. </p><p>அதாவது சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியலின் சூப்பர் ஜோடி ராகுல் ரவி மற்றும் நித்யா ராம் இருவரும் ஜோடியாக ஹிந்தியில் புதிய சீரியல் நடிக்க கமிட்டாகியுள்ளார்களாம். ராஜ் நந்தினி என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடர் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DboDyVdyC5W/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DboDyVdyC5W/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DboDyVdyC5W/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Hemalatha V (@tamilserialexpress)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-05T17:17:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை ; 16 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/severe-weather-affects-over-16-000-people-1785948723"></link>
            <id>https://jvpnews.com/article/severe-weather-affects-over-16-000-people-1785948723</id>
            <summary type="text">சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 16,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

அந்த நிலையம் வெளியிட்ட பு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 16,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. </p><p style="text-align: justify;">

அந்த நிலையம் வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில், இந்த அனர்த்தத்தினால் 4,151 குடும்பங்களைச் சேர்ந்த 16,345 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e01b3d9-1656-4946-b574-04d59ce8b97a/26-6a736a352fa11.webp' /></p><h2 style="text-align: justify;">சீரற்ற வானிலை</h2><p style="text-align: justify;"> 

நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். </p><p style="text-align: justify; ">

அங்கு 1,912 குடும்பங்களைச் சேர்ந்த 7,288 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 6 மரணங்களும் பதிவாகியுள்ளன. </p><p style="text-align: justify;">

புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களில் தலா ஒரு மரணம் வீதம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"></p><p> </p><p style="text-align: justify;">

அதன்படி, சீரற்ற வானிலையால் இதுவரை மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். </p><p style="text-align: justify;">

அனர்த்த நிலைமையினால் ஒரு வீடு முழுமையாகவும், 581 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"> 

நாடு முழுவதும் 11 மாவட்டங்களைச் சேர்ந்த 383 பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்து இந்தத் தரவுகள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-05T17:15:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானின் பாதுகாப்பு வெள்ளை அறிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/china-strongly-opposes-japan-s-defense-white-paper-1785949063"></link>
            <id>https://tamilwin.com/article/china-strongly-opposes-japan-s-defense-white-paper-1785949063</id>
            <summary type="text">ஜப்பான் வெளியிட்ட புதிய பாதுகாப்பு வெள்ளை அறிக்கையில் (Defence White Paper)
சீனாவை அச்சுறுத்தலாகச் சித்தரித்துள்ளதாகவும் தாய்வான் விவகாரம் தொடர்பாகத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பான் வெளியிட்ட புதிய பாதுகாப்பு வெள்ளை அறிக்கையில் (Defence White Paper)
சீனாவை அச்சுறுத்தலாகச் சித்தரித்துள்ளதாகவும் தாய்வான் விவகாரம் தொடர்பாகத்
தேவையற்ற கருத்துகளைத் தெரிவித்துள்ளதாகவும் கூறி, ஜப்பானிய அரசாங்கத்திடம்
சீனா உத்தியோகபூர்வமாகத் தனது எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளது.
</p><p>
ஜப்பான் ஆண்டுதோறும் வெளியிடும் இந்தப் பாதுகாப்பு அறிக்கையில், தாய்வானைச்
சுற்றி சீனா தனது இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும், இதனால்
இரு தரப்பிற்கும் இடையிலான இராணுவச் சமநிலை சீனாவுக்குச் சாதகமாக விரைவாக
மாறிவருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.</p><p></p><h2>சீனா கடும் எதிர்ப்பு</h2><p>
</p><p>
இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள சீன வெளியுறவு அமைச்சு, தாய்வான் விவகாரம்
சீனாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், அதில் தலையிட ஜப்பானுக்கு எவ்வித
உரிமையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c148219c-c502-454c-bcdc-d5dd734ffc27/26-6a736d1352a36.webp' /></p><p>
</p><p>
ஜப்பான் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, ஆயுத உற்பத்தியின் மூலம்
பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்ற நோக்கில் தனது இராணுவ பலத்தை
அதிகரித்து வருகின்றது.</p><p>

எனினும், ஜப்பான் தனது வரலாற்றுப் பிழைகளிலிருந்து பாடங்கற்காமல் மீண்டும்
இராணுவமயமாக்கலை நோக்கிச் செல்வதாகச் சீனா குற்றம் சாட்டியுள்ளதுடன்,
ஜப்பானின் இந்த நகர்வுகளைக் கட்டுப்படுத்துமாறு சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை
விடுத்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T17:04:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கம்மன்பில, விமல் உள்ளிட்ட சிலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-seeks-contempt-proceedings-against-wimal-1785949079"></link>
            <id>https://tamilwin.com/article/court-seeks-contempt-proceedings-against-wimal-1785949079</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக, அரசியல் பிரமுகர்கள் உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக, அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட அறுவருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தொடரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>

கோட்டை நீதவான் பசன் அமரசிங்க முன்னிலையில் இன்று இந்தத் தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டன.</p><p>தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச, பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, திலித் ஜயவீர, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜகச்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரஅஸங்க நவரத்ன மற்றும் மஹிந்த பத்திரண,&nbsp; உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/761ce0d8-bc55-42e9-81e8-a02317c41d93/26-6a736c32eb2cd.webp' /></p><p>
</p><p>குறித்த நபர்கள் பல்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகளில் நடத்திய ஊடக சந்திப்புகள் மற்றும் அவர்கள் வெளியிட்ட கருத்துக்களை ஆய்வு செய்த நீதவான், அவர்கள் "வெளிப்படையாகவே நீதிமன்றத்தை அவமதித்துள்ளனர்" என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கே உள்ளதால், இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அங்கு சமர்ப்பிக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றப் பதிவாளருக்கு, நீதவான் பசன் அமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.</p><p>

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தற்போது மூன்று பிரதான சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>
சுரேஷ் சலே (முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர்), சரத் சமந்த (மட்டக்களப்பு புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி), ஜெக்கில் பாஸ் (தேசிய புலனாய்வுச் சேவையின் முன்னாள் அதிகாரி) ஆகியோர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>
மேலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட பலருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் மீதான விசாரணைகளும் தொடர்கின்றன.</p><p> 
இவ்வாறான ஒரு பின்னணியில், விசாரணைகளைத் திசைதிருப்பும் வகையிலும் நீதிமன்றத்தின் கௌரவத்தைப் பாதிக்கும் வகையிலும் கருத்து வெளியிட்டதாக கம்மன்பில, வீமல் வீரவன்ச, திலித் ஜயவீர உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக இந்த வழக்கு நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T17:00:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெருக்கடிக்கு மத்தியில் பதவி விலகும் ஈரான் ஜனாதிபதி :வெளியானது உண்மை நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pezeshkian-rejects-resignation-rumors-1785947404"></link>
            <id>https://ibctamil.com/article/pezeshkian-rejects-resignation-rumors-1785947404</id>
            <summary type="text">&amp;nbsp;ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன், தான் பதவி விலகத் திட்டமிட்டுள்ளதாகப் பரவும் வதந்திகளை நிராகரித்தார். மேலும், தனது நிர்வாகத்திற்கும் இஸ்லாமியப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன், தான் பதவி விலகத் திட்டமிட்டுள்ளதாகப் பரவும் வதந்திகளை நிராகரித்தார். மேலும், தனது நிர்வாகத்திற்கும் இஸ்லாமியப் புரட்சியின் தலைவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்ததோடு, தான் பதவியில் நீடித்து தனது பணிகளைத் தொடரப்போவதாகவும் தெரிவித்தார்.</p><p>அவரது நிர்வாகத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு பேட்டியில், தனது நிர்வாகம் நாட்டின் ஆயுதப் படைகளுடன் முழுமையாக ஒருங்கிணைந்து செயல்படுவதாக பெஷெஷ்கியன் வலியுறுத்தினார்.</p><h2>கருத்து வேறுபாடுகள் இருப்பதாக சிலர் காட்ட முயற்சி</h2><p>&nbsp;தனது பதவி விலகல் குறித்த யூகங்களுக்குப் பதிலளித்த பெஷெஷ்கியன், அந்த வதந்திகளை உறுதியாக மறுத்தார்.

"நான் எப்போதாவது பதவி விலக முடிவு செய்தால், அதை நானே அறிவிப்பேன். ஆனால் நான் பதவி விலக மாட்டேன், உறுதியாக நிற்பேன்," என்று அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/132e8afa-6dde-4c25-adf3-c5291da6b712/26-6a736ade10653.webp' /></p><p>

தனது நிர்வாகத்திற்கும் இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் அயதுல்லா சையத் மொஜ்தபா கமெனிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக சிலர் ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சிப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.</p><p></p><h2>பதவி விலகல் குறித்த வதந்திகள்</h2><p>
</p><p>
சமீப நாட்களாக பெஷேஷ்கியனின் பதவி விலகல் குறித்த வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து இந்தக் கருத்துக்கள் வெளிவந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cee9514-a13b-41f6-abe0-1b2abfee5a1d/26-6a736adeb75e5.webp' /></p><p>
</p><p>
முன்னதாக, ஜனாதிபதி அலுவலகத்தின் தகவல் மற்றும் தொடர்புத்துறை துணைவரான முகமது மஹ்தி தபதபாயி, அந்தச் செய்திகளை "ஆதாரமற்றவை" மற்றும் "முழுமையான பொய்" என்று நிராகரித்தார். தேசிய ஒற்றுமையைக் குலைக்கவும், ஈரானின் எதிரிகளின் நலன்களுக்குச் சேவை செய்யவும் வதந்திகளைப் பரப்பும் அரசியல் தீவிரவாதிகளை அவர் கடுமையாகச் சாடினார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T16:55:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா ஏவுகணை தளங்களை அழிக்க தயாராக இருக்கிறோம்: எச்சரிக்கை விடுத்த ஜெலென்ஸ்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-vow-to-target-russian-missile-sites-1785948296"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-vow-to-target-russian-missile-sites-1785948296</id>
            <summary type="text">ரஷ்ய ஏவுகணை தளங்களை அழிக்கப்போவதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார். ரஷ்யா ஏவுகணை தளத்தை அழிக்க தயார்
உக்ரைன் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்ய ஏவுகணை தளங்களை அழிக்கப்போவதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.</p><h2> ரஷ்யா ஏவுகணை தளத்தை அழிக்க தயார்</h2><p>
உக்ரைன் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தும் ரஷ்ய ஏவுகணை தளங்களை முற்றிலுமாக அழிக்க தயாராக இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.</p><p> ரஷ்ய ஏவுகணை தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதற்கான உறுதியான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க புதன்கிழமை கீவ்விற்கு வந்த பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங்குடன் நடைபெற்ற சந்திப்புக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f41303a3-d267-4da2-9439-ba2330ba43d0/26-6a736889e43af.webp' /></p><p></p><h2> உக்ரைன் - பிரித்தானியா பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள்</h2><p>
உக்ரைன் - பிரித்தானியா&nbsp; ஆகிய இருநாடுகளும் இணைந்து அதிநவீன போர் ஆயுதங்களை தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.</p><p> ரஷ்யா பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிக்க உதிரி பாகங்கள் வழங்கும் நிறுவனங்கள் மீது சர்வதேச தடைகளை விதிப்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.</p><p> இந்த இருதரப்பு சந்திப்பின் போது, ரஷ்யாவின் போர் இயந்திரங்களையும் பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் செயலிழக்க செய்யக்கூடிய எந்தவொரு முயற்சியும் அவசியமானது என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acfd3221-5e2c-4ea5-9398-adafe1b6f921/26-6a73688a99561.webp' /></p><p> சமீபத்திய ரஷ்ய தாக்குதலில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து மேம்பட்ட உபகரணங்களை பெற வேண்டியதன் அவசியத்தை இந்த இராஜதந்திர சந்திப்புகள் வெளிகாட்டியுள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T16:45:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதுகாப்பிற்காக இஸ்ரேல் எதையும் செய்யும் – நெதன்யாகு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-is-great-friend-says-netanyahu-1785947246"></link>
            <id>https://canadamirror.com/article/trump-is-great-friend-says-netanyahu-1785947246</id>
            <summary type="text">ஒப்பந்தங்கள் எட்டப்பட்டாலும் இல்லாவிட்டாலும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய இஸ்ரேல் &quot;தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்&quot; என அந்நாட்டுப் பிரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒப்பந்தங்கள் எட்டப்பட்டாலும் இல்லாவிட்டாலும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய இஸ்ரேல் "தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்" என அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் இஸ்ரேலுக்குக் கிடைத்த மிகச்சிறந்த நண்பர் என நெதன்யாகு புகழாரம் சூட்டியுள்ளார்.
</p><p>எனினும் இஸ்ரேலின் இருப்பு மற்றும் பாதுகாப்பு விவகாரத்தில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bdfa1bd-6364-4e11-88b4-414b10e65d01/26-6a736474e9e59.webp' /></p><p>நவீன சீயோனிச அமைப்பின் நிறுவனரான தியோடோர் ஹெர்ஸலின் தாத்தா மற்றும் பாட்டியான ஷிமோன் மற்றும் ரிவ்கா ஹெர்ஸலின் உடல்கள் ஜெருசலேமிலுள்ள ஹெர்ஸல் மலையில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்ட அரசு சடங்கு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே நெதன்யாகு இதனைத் தெரிவித்தார்.</p><p>
இத்தாலியின் ரோம் நகரில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேல் மற்றும் லெபனான் அதிகாரிகளுக்கிடையே "கட்டமைப்பு ஒப்பந்தம்" குறித்த பேச்சுவார்த்தைகள் தொடரும் சூழலிலும், தெற்கு லெபனானில் இஸ்ரேல் தனது தாக்குதல்களை நடத்தி வரும் பின்னணியில் நெதன்யாகுவின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T16:43:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண் காசாளர் மீது துப்பாக்கிச்சூடு ; பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/olice-seek-public-assistance-1785948138"></link>
            <id>https://jvpnews.com/article/olice-seek-public-assistance-1785948138</id>
            <summary type="text">மீட்டியாகொடையில் உள்ள உணவகம் ஒன்றினுள் வைத்து கடந்த வருடம் பெண் காசாளர் ஒருவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்த சம்பவத்துடன் தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மீட்டியாகொடையில் உள்ள உணவகம் ஒன்றினுள் வைத்து கடந்த வருடம் பெண் காசாளர் ஒருவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரியைக் கைது செய்வதற்கு உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>

மீட்டியாகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளுத்வெல வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் கடந்த வருடம் நவம்பர் (17) இரவு 8.15 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்திருந்த அடையாளம் தெரியாத சந்தேகநபர்கள் இருவர் பெண் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e89f315-651d-48c8-b136-8599351d2401/26-6a7367eb71e14.webp' /></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
சம்பவத்தில் படுகாயமடைந்த 48 வயதுடைய பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். சம்பவம் இடம்பெற்ற உணவகத்தில் காசாளராகக் குறித்த பெண் பணியாற்றி வந்தவராவார்.</p><p>


சம்பவம் தொடர்பில் மீட்டியாகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வருகை தந்திருந்த பிரதான துப்பாக்கிதாரி பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
அத்தோடு, கந்தர மற்றும் அம்பலாங்கொடை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடனும் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.</p><p></p><p> </p><p>மேலும் பலபிட்டிய நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேகநபருக்கு எதிராகப் பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் நீதிமன்றத்தால் பிடியானை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
</p><p>
அதற்கமைய சந்தேகநபர் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில் அவரைக் கைது செய்ய உதவுமாறு பொலிஸார் கோருகின்றனர். படத்தில் உள்ள சந்தேகநபர் உபுல் குமார எனும் ஜம்பு என்பவராவார்.</p><p></p><p> 39 வயதுடைய 871254385V என்ற தேசிய அடையாள அட்டை இலக்கத்தைக் கொண்டவராவதோடு, உடுமுல்ல ஹிக்கடுவ பகுதியைச் சேர்ந்தவராவார்.</p><p> குறித்த நபர் தொடர்பில் தகவல் ஏதேனும் அறியக்கிடைக்கும் பட்சத்தில் மீட்டியாகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி 0718591481 மற்றும் பொலிஸ் நிலையம் 0912260423 ஆகிய தொலைபேசி இலக்கங்களைத் தொடர்பு கொண்டு அறியத்தருமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T16:42:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளித்த 2026–27 பட்ஜெட் - புதிய நலத்திட்டங்கள் என்னென்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/budget-2026-gold-for-women-cycles-for-students-1785947210"></link>
            <id>https://ibctamilnadu.com/article/budget-2026-gold-for-women-cycles-for-students-1785947210</id>
            <summary type="text">2026–27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்த நிதி அமைச்சர் மரிய வில்சன், பல்வேறு புதிய நலத்திட்டங்களையும் அவற்றுக்கான நிதி ஒதுக்கீட...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026–27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்த நிதி அமைச்சர் மரிய வில்சன், பல்வேறு புதிய நலத்திட்டங்களையும் அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் அறிவித்தார். இதில், ‘வெற்றி’ என்ற பெயரில் பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.</p><h2>முக்கிய திட்டங்கள்&nbsp;</h2><p>

அதன்படி, திருமணமாகும் பெண்களுக்கு ‘அண்ணன் சீர்’ திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/658eef94-2ad1-4776-a85d-28567ab3feb8/26-6a7365e0887e2.webp' /></p><p>
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-1 பயிலும் மாணவர்களுக்கு 277 கோடி ரூபாய் மதிப்பில் ஹெல்மெட், வாட்டர் பாட்டில் உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பிராண்டட் மிதிவண்டிகள் வழங்கப்படும்.</p><p>

மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி திட்டம், 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் ‘வெற்றி மடிக்கணி’ என்ற பெயரில் செயல்படுத்தப்படும். மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தினமும் ஒரு மணி நேரம் விளையாட்டு பாடவேளை கட்டாயமாக இடம்பெறும்.
</p><p>
ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் ‘வெற்றி வீடு’ திட்டத்தில் கூரை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கான வீட்டு உதவித் தொகை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.</p><p>

கருவுற்ற பெண்களுக்கான ‘தாய் கேர்’ சேவை மற்றும் உதவி மையங்களை அமைக்க 23 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p> மேலும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் கீழ் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-05T16:38:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் லவாலில் கோர வீதி விபத்து: இரு பதின்ம வயதினர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/2-teens-dead-1-in-hospital-after-car-crash-1785938993"></link>
            <id>https://canadamirror.com/article/2-teens-dead-1-in-hospital-after-car-crash-1785938993</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள லவால் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இரு பதின்ம வயதினர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள லவால் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இரு பதின்ம வயதினர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>
அதிகாலை 1:20 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், பதிவு இலக்கத் தகடு இல்லாத வாகனம் ஒன்றைக் கண்டு அதை நிறுத்துமாறு சமிக்ஞை கொடுத்துள்ளனர். </p><p>
பொலிஸார் வாகனத்தை நிறுத்த முயன்றதும், அது வேகத்தை அதிகரித்துத் தப்பிச் சென்றது. எனினும் பொலிஸார் வாகனத்தைத் துரத்திச் செல்லவில்லை" என லவால் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் லோரண்ட் ஆர்செனோ தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dd87e84-5eae-4ece-8c1d-a03c3419b017/26-6a73443308879.webp' /></p><p> </p><p>
தப்பிச் சென்ற கார், சில நிமிடங்களில் லோரண்டைட்ஸ் புலேவார்ட்டில் அமைந்துள்ள 'அட்லாண்டிஸ் ஜிம்' கட்டடத்தின் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. </p><p>
வாகனத்தைச் செலுத்திய ஆண் ஓட்டுநரும், அதில் பயணித்த 19 வயது இளம் பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். </p><p>மேலும், வாகனத்திலிருந்த மற்றொரு 19 வயது இளைஞர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். </p><p>
வாகனத்தில் உரிமத் தகடு இல்லை என்பதும், காரின் அதிகப்படியான வேகமே விபத்துக்கு முக்கியக் காரணம் என்பதும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p>
விபத்தைத் தொடர்ந்து, செயிண்ட்-மார்ட்டின் புலேவார்ட் மற்றும் ரிச்சர்ட் தெரு ஆகியவற்றிற்கு இடைப்பட்ட லோரண்டைட்ஸ் புலேவார்ட் பகுதி முழுமையாக மூடப்பட்டு, பொலிஸார் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தித் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T16:30:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் உடன் அமுலாகும் வகையில் தடை செய்யப்பட்ட 24 இணையத்தளங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-bans-24-websites-with-immediate-effect-1785945206"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-bans-24-websites-with-immediate-effect-1785945206</id>
            <summary type="text">அனுமதிப்பத்திரங்களைப் பெறாமல் சட்டவிரோதமான முறையில் இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தயச் சேவைகளை நடத்திச் சென்ற 24 இணையத்தளங்களுக்கான அணுகலை இலங்கைக்குள்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அனுமதிப்பத்திரங்களைப் பெறாமல் சட்டவிரோதமான முறையில் இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தயச் சேவைகளை நடத்திச் சென்ற 24 இணையத்தளங்களுக்கான அணுகலை இலங்கைக்குள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்வதற்குத் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் கீழுள்ள தொலைத்தொடர்புகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p style="text-align: justify; "> 

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் சூதாட்ட விளையாட்டுக்கள் ஒழுங்குமுறை அதிகாரசபையினால், 2025 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சூதாட்ட விளையாட்டுக்கள் ஒழுங்குமுறை அதிகாரசபைச் சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் அதிகாரங்களுக்கு அமைவாக விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமையவே இந்த ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3ade9d7-4125-405b-89e2-f2e2ad5ade87/26-6a735c77882ef.webp' /></p><h2 style="text-align: justify; ">சட்டவிரோத செயல்</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

சூதாட்ட விளையாட்டுக்கள் ஒழுங்குமுறை அதிகாரசபைச் சட்டத்தின் 15, 16 மற்றும் 18 ஆம் பிரிவுகளின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரங்களைப் பெறாமல் இலங்கைக்குள் இணையவழி சூதாட்டச் சேவைகளை நடத்துவதும் அதனைப் பரப்புவதும் அச்சட்டத்தின் 44 ஆம் பிரிவின் கீழ் குற்றமும் சட்டவிரோதமான செயலுமாகும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

அதற்கமைய, குறித்த சட்டவிரோத இணையத்தளங்களை இலங்கைக்குள் இருந்து அணுகுவதைத் தடுப்பதற்காகத் தொலைத்தொடர்புகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு அனைத்துத் தொலைத்தொடர்புச் சேவை வழங்குநர்களுக்கும் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. 

அந்த இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தயச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் பெயர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-05T16:27:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல் பாதை: ஈரான் - ஓமன் இடையே இறுதியான ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-oman-finalize-commercial-route-in-hormuz-1785946881"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-oman-finalize-commercial-route-in-hormuz-1785946881</id>
            <summary type="text">ஈரானும் ஓமனும் இணைந்து ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல் பாதை ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளனர். ஈரான் - ஓமன் இடையே ஒப்பந்தம்ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானும் ஓமனும் இணைந்து ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல் பாதை ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளனர்.</p><h2> ஈரான் - ஓமன் இடையே ஒப்பந்தம்</h2><p>ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல் போக்குவரத்தை முறைப்படுத்துவதற்கான குறிப்பிட்ட புவியியல் ஆயத்தொலைவுகளை இறுதி செய்வதற்கான ஒப்பந்தத்தை ஈரானும் ஓமனும் இணைந்து வெற்றிகரமாக இறுதி செய்துள்ளனர்.</p><p> இந்த தகவலை ஈரானின் வெளியுறவு அமைச்சர் இஸ்மாயில் பகேயி உறுதிப்படுத்தியுள்ளது.</p><p> கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக இருதரப்புக்கும் இடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்த ஒப்பந்தத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3418259b-6d03-4dac-aff2-d633d7d51764/26-6a73630315537.webp' /></p><p>மூன்றாம் தரப்புகள் இதில் தலையிட்டு எந்தவொரு இடையூறும் செய்யாத பட்சத்தில், ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய விரிவான கூட்டு அறிக்கை தொடர்பான இறுதிக்கட்ட மதிப்பீடு மற்றும் வரைவுப் பணிகள் நடைபெற்று வருவதாக&nbsp; அமைச்சர் இஸ்மாயில் பகேயி குறிப்பிட்டுள்ளார்.</p><p> இருநாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டி இருந்தாலும், இந்த ஒப்பந்தம் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தியில் முறையான கடல்சார் பாதுகாப்பை உறுதி அளிக்காது என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.</p><p> மேலும் அமெரிக்காவின் கடல்சார் முற்றுகையும், ஆக்கிரமிப்பு நடவடிக்கையும் தான் இந்த நிலையற்ற தன்மைக்கு முக்கிய காரணம் என்று அமைச்சர் இஸ்மாயில் பகேயி சுட்டிக்காட்டியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T16:21:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவேக வீதிகளில் பயணிப்போரின் கவனத்திற்கு ; நீடிக்கப்பட்ட சலுகைக் காலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/expressway-users-alert-grace-period-extended-1785946796"></link>
            <id>https://jvpnews.com/article/expressway-users-alert-grace-period-extended-1785946796</id>
            <summary type="text">அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனங்களில் ஆசன பட்டி பொருத்துவதற்காக வாகன உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை அரசாங்கம் மேலும் மூன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனங்களில் ஆசன பட்டி பொருத்துவதற்காக வாகன உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை அரசாங்கம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடித்துள்ளது.
</p><p style="text-align: justify;">
மோட்டார் வாகனச் சட்டத்திற்கு அமைவாக வெளியிடப்பட்ட 2011 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கட்டளையின்படி, அதிவேக வீதிகளில் அனைத்து வாகனங்களிலும் பயணிக்கும் பயணிகளுக்கு ஆசன பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af2538a8-22fe-4389-bbaa-4ba33ca7793f/26-6a7362adbecd9.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;சலுகைக் காலம்&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify; ">


ஆசன பட்டி இல்லாத வாகனங்களில் அவற்றை மறுசீரமைத்து பொருத்துவதற்காக உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஆரம்ப சலுகைக் காலம் 2026 ஜூன் 19 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.</p><p style="text-align: justify; ">

எனவே, இந்த காலக்கெடுவை நீடிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்த அரசாங்கம், 2026 ஜூன் 17 ஆம் திகதியிட்ட 2493/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் குறித்த கட்டளையில் திருத்தம் செய்து, சலுகைக் காலத்தை 2026 செப்டம்பர் 19 வரை நீடித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;">

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் நாடாளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-05T16:20:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் தொடர்ந்தும் மீட்கப்படும் என்புக்கூடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1785944804"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1785944804</id>
            <summary type="text">&amp;nbsp;செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 44ஆவது நாளான இன்றைய தினம்
புத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 44ஆவது நாளான இன்றைய தினம்
புதன்கிழமை 08 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 8 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p>அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம்
கட்டம் என இதுவரையில் 98 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ,
491 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 489என்பு கூடுகள் முற்றாக
அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T16:12:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்-நினோ தாக்கம்: 4.9 கோடி மக்கள் பட்டினியில் வாடலாம்- ஐ.நா.]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/strong-el-nino-may-trigger-global-hunger-1785946157"></link>
            <id>https://news.lankasri.com/article/strong-el-nino-may-trigger-global-hunger-1785946157</id>
            <summary type="text">எல்-நினோவின் தாக்கத்தால் உலகில் 4.9 கோடி மக்கள் பசிப் பட்டினியில் வாடலாம் என ஐ.நா. எச்சரித்துள்ளது.

4.9 கோடி மக்கள்உலக உணவு திட்டம் (WFP) வெளியிட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல்-நினோவின் தாக்கத்தால் உலகில் 4.9 கோடி மக்கள் பசிப் பட்டினியில் வாடலாம் என ஐ.நா. எச்சரித்துள்ளது.</p><h2>

4.9 கோடி மக்கள்</h2><p>உலக உணவு திட்டம் (WFP) வெளியிட்ட புதிய அறிக்கையில், வலுவான எல்-நினோ வானிலை நிகழ்வு காரணமாக, உலகில் அதிகமாக பாதிக்கப்படவுள்ள பல பகுதிகளில் கூடுதலாக 4.9 கோடி மக்கள் பசியின் கோரப்பிடியில் சிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>
அறிக்கையின்படி, தற்போது 45 நாடுகளில் 22 சதவீதம் அதிகரிப்புடன் மொத்தம் 274 மில்லியன் மக்கள் கடுமையான உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்ள நேரிடும் அபாயம் உள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f93839d-a21c-4d8d-ae9e-1ee89ef8e932/26-6a73602ed8f99.webp' /></p><p>மத்திய அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்கா அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. மத்திய அமெரிக்காவில் 83 சதவீதம் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் 75 சதவீதம் வரை பசியால் பாதிக்கப்படும் மக்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என WFP தெரிவித்துள்ளது.
</p><p>
எல்-நினோ என்பது பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பின் வெப்பநிலை அதிகரிப்பால் ஏற்படும் இயற்கை நிகழ்வு. இது உலகளாவிய வானிலை மாறுபாடுகளை ஏற்படுத்துகிறது. ஆப்பிரிக்காவில் வறட்சி, ஆசியாவில் மழை தாமதம், சில பகுதிகளில் வெள்ளம் போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன.</p><p></p><h2>WFP அதிகாரி ஜீன்-மார்டின் பவுயர் கூறியதாவது:
</h2><p>
“இத்தகைய நிகழ்வுகள் கடந்த காலங்களில் பெரிய அளவிலான பசியை தூண்டியுள்ளன. எனவே, முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பது அவசியம்” என எச்சரித்துள்ளார்.</p><p>மேலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நிதி உதவிகளில் ஏற்பட்ட குறைவு காரணமாக, உணவு பாதுகாப்பு தொடர்பான தரவுகள் சேகரிப்பில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், இது எதிர்கால பசி நெருக்கடிகளை அடையாளம் காண சிரமத்தை ஏற்படுத்தும் எனவும் கூறப்பட்டது.</p><p>

WFP, தற்போது 18 நாடுகளில் முன்கூட்டிய நடவடிக்கை திட்டங்களை விரிவுபடுத்தி, 13 லட்சம் மக்களுக்கு பண உதவி மற்றும் பிற ஆதரவுகளை வழங்கி வருகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T16:07:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிட்டிஷ் கொலம்பியாவில் பேரழிவை ஏற்படுத்திய காட்டுத்தீ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/more-than-100-structures-lost-in-bcs-pear-lake-1785938452"></link>
            <id>https://canadamirror.com/article/more-than-100-structures-lost-in-bcs-pear-lake-1785938452</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் தெற்கு உள் பகுதியில் வேகமாகப் பரவி வரும் &#039;பியர் லேக்&#039; காட்டுத்தீயினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த விரைவு ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் தெற்கு உள் பகுதியில் வேகமாகப் பரவி வரும் 'பியர் லேக்' காட்டுத்தீயினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த விரைவு மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>
இதில் வீடுகளை இழந்த இடம்பெயர்ந்த மக்களுக்கு வரும் நாட்களில் அதிகாரப்பூர்வமாகத் தகவல்கள் தெரிவிக்கப்படவுள்ளன. </p><p>
தோம்ப்சன் நிகோலா பிராந்திய மாவட்டம் வழங்கிய தகவலின்படி, சுமார் 1,100 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு பரவியுள்ள இந்த பிரம்மாண்ட காட்டுத்தீயினால், அதன் அதிகார வரம்பிற்குட்பட்ட சுமார் 120 சொத்துக்களிலுள்ள கட்டடங்கள் முற்றிலுமாக அழிந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e7af40b-cb55-4b2d-b86b-d89ad0638a6d/26-6a734215ebd73.webp' /></p><p> </p><p>
பிக் பார் லேக், சாசம், கிளண்டன் பகுதியின் தெற்கே அமைந்துள்ள நெடுஞ்சாலை 97 மற்றும் கெல்லி லேக் வீதி ஆகியவற்றில் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.</p><p> 
பாதிக்கப்பட்ட 120 சொத்துக்களில் பெரும்பாலானவை குடியிருப்பு வீடுகளாகும். சில இடங்களில் முதன்மை வீடுகள் தப்பியிருந்தாலும், அவற்றின் கேரேஜ்கள், கொட்டகைகள் மற்றும் ஏனைய வெளிப்புறக் கட்டடங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன. </p><p>
இந்த கணக்கெடுப்பில் தோம்ப்சன் நிகோலா பிராந்திய மாவட்டத்தின் அதிகார வரம்பிற்கு வெளியே உள்ள கிளண்டன் நகர்ப்பகுதிச் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை. </p><p>காட்டுத்தீயினால் மேலும் பல கட்டடங்கள் சேதமடைந்திருக்கலாம் என நாங்கள் நம்பும் அனைத்து பகுதிகளுக்கும் இன்னும் எங்களால் செல்ல முடியவில்லை என தோம்ப்சன் நிகோலா பிராந்திய மாவட்டத்தின் தகவல் அதிகாரி கோல்டன் டேவிஸ்தெரிவித்துள்ளார்.</p><p>எதிர்வரும் நாட்களில் பாதுகாப்பு நிலைமைகள் சரியாகும் போது, முழுமையான சேத மதிப்பீட்டை மேற்கொண்டு தெளிவான தகவலக்ள பெறத் திட்டமிட்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
வார இறுதியில் வீசிய பலத்த காற்றினால் காட்டுத்தீயின் வீரியம் அதிகரித்திருந்த போதிலும், தற்போது வானிலை சற்றே சீரடைந்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T16:00:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலவில் அதிவேகத்தில் மோதிய SpaceX ரொக்கெட்- உருவான புதிய குழி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/spacex-rocket-crashes-into-moon-crater-1785945040"></link>
            <id>https://news.lankasri.com/article/spacex-rocket-crashes-into-moon-crater-1785945040</id>
            <summary type="text">SpaceX ரொக்கெட்டின் ஒரு பகுதி நிலவில் அதிவேகத்தில் மோதியுள்ளது.&amp;nbsp;&amp;nbsp;அமெரிக்க விண்வெளி நிறுவனம் SpaceX ஏவிய Falcon 9 ரொக்கெட்டின் மேல் பகுதி, கட...</summary>
            <content type="html"><![CDATA[<table class="table table-bordered"><tbody><tr><td>SpaceX ரொக்கெட்டின் ஒரு பகுதி நிலவில் அதிவேகத்தில் மோதியுள்ளது.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>அமெரிக்க விண்வெளி நிறுவனம் SpaceX ஏவிய Falcon 9 ரொக்கெட்டின் மேல் பகுதி, கட்டுப்பாட்டை இழந்து, இன்று அதிகாலை சந்திரனில் 8,700 கி.மீ வேகத்தில் மோதியது.</p><p>

இதனால், சந்திரனில் புதிய குழி உருவானதாக NASA அறிவித்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/013579f6-f382-4f53-b891-a74f1fd04a04/26-6a735bd342332.webp' /></p><h2>விண்வெளியில் கட்டுப்பாட்டை இழந்த&nbsp;ரொக்கெட் </h2><p>இந்த ரொக்கெட், கடந்த ஆண்டு ஜனவரியில் Hakuto-R விண்கலத்தை ஏவுவதற்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால், அதிக எடையுள்ள காரணமாக, ரொக்கெட் விண்வெளியில் கட்டுப்பாட்டை இழந்து, சந்திரனை நோக்கி தவறுதலாகச் சென்றது.</p><h2>உருவான புதிய குழி</h2><p>Einstein Crater அருகே நடந்ததாக கணிக்கப்பட்டுள்ளது. 14 மீட்டர் நீளமும், 4,000 கிலோ எடையும் கொண்ட இந்த ரொக்கெட் பகுதி, சந்திரனில் 18 மீட்டர் அகலம் மற்றும் 4 மீட்டர் ஆழம் கொண்ட குழியை உருவாக்கியிருக்கலாம் என NASA தெரிவித்துள்ளது.
</p><p>
உலகம் முழுவதும் உள்ள வானியல் ஆய்வாளர்கள், இந்த மோதல் நிகழ்ந்த இடத்தை தொலைநோக்கிகள் மூலம் கவனித்தனர். மேலும், தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் சந்திரன் சுற்றுப்பாதை விண்கலங்கள் அந்த இடத்தை ஆய்வு செய்ய உள்ளன.
</p><p></p><h2>அறிவியலாளர்களின் கருத்துக்கள்
</h2><p>லெஸ்டர்ப் பல்கலைக்கழகத்தின் ஹன்னா சார்ஜன்ட் கூறியதாவது: “இவ்வாறு விண்வெளி கழிவுகளை சந்திரனில் அனுப்புவது நல்லது அல்ல. இது அப்போலோ மிஷன் நினைவுச்சின்னங்கள் போன்ற முக்கிய இடங்களுக்கு சேதம் விளைவிக்கக்கூடும்” என எச்சரித்துள்ளார்.
</p><p>
ஆனால், சில விஞ்ஞானிகள், இந்த மோதல் அறிவியல் தரவுகளைப் பெறுவதற்கான வாய்ப்பாக பார்க்கப்படலாம் எனக் கூறுகின்றனர். மோதலின் வேகம், கோணம், தாக்கம் போன்ற விவரங்கள், சந்திரனின் மேற்பரப்பை ஆய்வு செய்ய உதவும்.
</p><p>
மகாவ் பல்கலைக்கழகத்தின் ரோபெர்டோ புஜியோலாக்கி கூறியதாவது: “சந்திரன் ஏற்கனவே கோடிக்கணக்கான விண்கல் தாக்குதல்களை சந்தித்துள்ளது. எனவே, இந்த மோதல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. ஆனால், திட்டமிட்ட ஆய்வுக்காக மேற்கொள்ளப்பட்டால், இது பயனுள்ளதாக இருக்கும்” எனக் கூறினார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T15:48:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் சூர்யாவை விட 3 மடங்கு அதிகம் சம்பாதித்தேன்- நடிகை ஜோதிகா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/i-earned-3-times-more-than-suriya-actress-jyothika-1785934989"></link>
            <id>https://manithan.com/article/i-earned-3-times-more-than-suriya-actress-jyothika-1785934989</id>
            <summary type="text">தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான சூர்யா - ஜோதிகா, திருமணத்திற்குப் பிறகும் சினிமாவில் வெற்றிகரமாக பயணித்து வருகின்றனர். 

ஒருவரின் வளர்ச்சிக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான சூர்யா - ஜோதிகா, திருமணத்திற்குப் பிறகும் சினிமாவில் வெற்றிகரமாக பயணித்து வருகின்றனர். </p><p>

ஒருவரின் வளர்ச்சிக்கு மற்றொருவர் உறுதுணையாக இருப்பதை பலமுறை வெளிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
2003ஆம் ஆண்டு வெளியான காக்க காக்க படத்தின் போது, ஜோதிகா முன்னணி நடிகையாக இருந்தார்.</p><p> 

அப்போது சூர்யாவை அந்தப் படத்தில் நடிக்க பரிந்துரைத்தது ஜோதிகாதான் என அவர் முன்பே தெரிவித்திருந்தார்.</p><p> </p><p>

</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/894f91ef-698c-4dee-bfa3-82dd18795f8a/26-6a73348f680cb.webp' /></p><p>இந்நிலையில், சூர்யா - ஜோதிகா அண்மையில் ஆங்கில யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p><p> 

அதில் "என் சினிமா வாழ்க்கையின் தொடக்கத்தில் சூர்யாவை விட நான் மூன்று மடங்கு அதிக சம்பளம் வாங்கினேன். தற்போது நான் அவரைவிட சுமார் 30 மடங்கு குறைவாக சம்பளம் வாங்குகிறேன்" என்று ஜோதிகா நகைச்சுவையாக கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f07aaa2c-7c25-4a5d-84b0-9d78fea425bc/26-6a73576fdc90b.webp' /><br></p><p> </p><p>

மேலும், "சூர்யா ஒரு நல்ல மனிதர், நல்ல கணவர். வீட்டில் எப்போதும் சமத்துவத்தையே கடைப்பிடிப்பார். நான் சமையல் செய்தால் அவரும் வந்து உதவுவார், குழந்தைகளை வளர்ப்பது முதல் விடுமுறைக்குச் செல்வது வரை எல்லா முடிவுகளையும் இருவரும் சேர்ந்து எடுப்போம். ஒருவரின் வளர்ச்சியை மற்றொருவர் மனதார மகிழ்ச்சியுடன் பார்க்கிறோம்" என்று ஜோதிகா பகிர்ந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2224243-a61f-481e-9a4f-8651b2d50682/26-6a735770bcc7c.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-05T15:32:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் மல்மூரில் இடம்பெற்ற வீதி விபத்து: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/motorcyclist-dead-following-collision-in-mulmur-1785937545"></link>
            <id>https://canadamirror.com/article/motorcyclist-dead-following-collision-in-mulmur-1785937545</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள மல்மூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள மல்மூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>
ஹைவே 89 மற்றும் 3ஆவது வீதி சந்திப்பில் இரு வாகனங்கள் மோதிக்கொண்டதாகப் பிற்பகல் 2:30 மணியளவில் அவசர உதவிப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. </p><p>
குறித்த சந்திப்பில் மோட்டார் சைக்கிள் ஒன்று பயணிகள் காரொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/618588ac-fa12-4f6b-8f40-4f9ad1ac6631/26-6a733e8af09fd.webp' /></p><p> 
வெலிங்டன் நோர்த் பகுதியைச் சேர்ந்த 63 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். </p><p>
காரில் பயணித்த ஓட்டுநரும் பயணியும் லேசான காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.</p><p>
தற்போது வரை விபத்துக்கான காரணம் குறித்தோ அல்லது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்தோ பொலிஸார் எந்தத் தகவலும் வெளியிடவில்லை. </p><p>சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T15:27:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026-27 தமிழ்நாடு பட்ஜெட்.., மாணவர்களுக்காக வெளியான முக்கிய அறிவிப்புகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/tamil-nadu-budget-2026-for-education-departments-1785926412"></link>
            <id>https://manithan.com/article/tamil-nadu-budget-2026-for-education-departments-1785926412</id>
            <summary type="text">2026-27ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

59 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026-27ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
</p><p>
59 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக, அதிமுக அல்லாத கட்சியாக தவெக அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.
</p><p>
இந்த பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,527 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறைக்கு ரூ.8,393 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. </p><p>

மேலும், மாணவர்கள் மற்றும் கல்வித்துறைக்கான பல முக்கிய அறிவிப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/6dIwL7m8fsw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">மாணவர்களுக்கான அறிவிப்புகள்</span><br></p><p>சூப்பர் க்ளீன் - சூப்பர் கேம்பஸ் திட்டம் 10,000 பள்ளிகளில் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.139 கோடி ஒதுக்கீடு.
</p><p>
3,734 அரசு பள்ளிகள் ரூ.2,132 கோடியில் நவீனப்படுத்தப்படும்.</p><p>

காமராஜர் பெயரில் நவீன உண்டு, உறைவிட வசதியுடன் சிறப்பு பள்ளிகள் தொடங்கப்படும்.
</p><p>
9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சீருடை, புத்தகங்கள் வழங்க ரூ.122 கோடி ஒதுக்கீடு.
</p><p>
5 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் சைக்கிள் வழங்க ரூ.277 கோடி ஒதுக்கீடு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14579f91-ed8d-43b7-bdbd-43c739487225/26-6a73133f1eb9c.webp' />&nbsp;&nbsp;<br></p><p>கல்லூரி மாணவர்களுக்கான வெற்றி மடிக்கணினி திட்டத்திற்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு.</p><p>

மாணவர் விடுதி வசதிகளை மேம்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு.
</p><p>
காமராசர் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.இதற்காக ரூ.710 கோடி ஒதுக்கீடு.</p><p>

2031க்குள் 5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) திறன் பயிற்சி வழங்கப்படும்.
</p><p>
அரசு நூலகங்கள் டிஜிட்டல் நூலகங்களாக மாற்ற ரூ.10 கோடி ஒதுக்கீடு.
</p><p>
SSC, RRB, IBPS போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையங்கள் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மையங்களிலும் அமைக்கப்படும். இதற்காக ரூ.3.38 கோடி ஒதுக்கீடு.
</p><p>
10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு.
</p><p>
5 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் ரூ.90 கோடியில் தொடங்கப்படும்.
</p><p>
பள்ளிப் பாடத்திட்டம் மறுசீரமைப்பு பணிகளுக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/AEQtNahUvog" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-05T15:27:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த இலக்கு மைத்திரி! அரசாங்கத்தை உசுப்பேற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/maithri-gets-caught-in-easter-attack-case-1785907068"></link>
            <id>https://tamilwin.com/article/maithri-gets-caught-in-easter-attack-case-1785907068</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் அரங்கேறியபோது, பாதுகாப்பு அமைச்சராகவும், முப்படைகளுக்கு பொறுப்பானவராகவும் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் அரங்கேறியபோது, பாதுகாப்பு அமைச்சராகவும், முப்படைகளுக்கு பொறுப்பானவராகவும் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருந்த நிலையில், தாக்குதல் தொடர்பான பொறுப்புக்களில் இருந்து அவர் எப்படி விலக முடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p><p> 

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தைத் தடுக்கத் தவறியதாகத் தெரிவித்துள் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.</p><h2>வழக்குத் தொடர பரிந்துரை</h2><p>2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட விஜித மலல்கொட அறிக்கைக்கு அமைவாகவே இவர்கள் இருவருக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

எனினும், அந்த அறிக்கையில் 14 பேருக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது. </p><p>

மேலும், 2019ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்று, 2022இல் நிறைவடைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd226b0d-82ef-44a8-bdb1-9ccb1e69b84b/26-6a72db6349d17.webp' /></p><p> </p><p> அந்த வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரச புலனாய்வு பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன, பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் பிரதிவாதிகளாக இருந்தனர். </p><p>

இந்த வழக்குத் தொடர்பான விசாரணைகள் முடிவுற்றப் போது, பூஜித் மற்றும் மைத்திரி ஆகிய இருவருக்கு நட்டஈடு செலுத்துமாறு தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. </p><p>

ஆனால் அப்போது உயர்நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களில் இருவரான மைத்திரிபால சிறிசேன மற்றும் நிலந்த ஜயவர்தன ஆகியோரை சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மூவரடங்கிய மேல்நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கில் இணைக்கவில்லை.</p><p> 

இதன்படி சட்டமா அதிபர் திணைக்களம் வேண்டுமென்றே தனது கடமையை மீறியுள்ளது. தண்டனை வழங்கப்பட வேண்டிய இருவரை சட்டமா அதிபர் திணைக்களம் விடுவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/010a33fa-478c-4295-9cfa-57f818b09e22/26-6a72db64037a2.webp' /></p><p> </p><p>அவ்வாறு எப்படி நடக்க முடியும்.

ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் நிலந்த ஜயவர்தன மற்றும் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக வழக்கு தொடுக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. </p><p>

தாக்குதல் சம்பவம் நடக்கும் போது பாதுகாப்பு அமைச்சு, முப்படைகளும் மைத்திரிபால சிறிசேனவிடமே இருந்தது. அவர் எப்படி பொறுப்பில் இருந்து விலக முடியும். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க வேண்டும்.</p><p> அந்த விசாரணைகள் நடக்கும் போதே 2022இல் தொடரப்பட்ட வழக்கில் இவர்கள் இருவரும் எப்படி விடுவிக்கப்பட்டனர். சட்டமா அதிபர் திணைக்களம் தெளிவாக தனது கடமைகளை மீறியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T15:25:16+00:00</updated>
        </entry>
    </feed>
