<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-01T15:54:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவி, குழந்தையை பிரிந்த பிரதீப் ஆண்டனி.. உருக்கமான பதிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/bigg-boss-pradeep-antony-separates-from-wife-1788276406"></link>
            <id>https://manithan.com/article/bigg-boss-pradeep-antony-separates-from-wife-1788276406</id>
            <summary type="text">பிக் பாஸ் புகழ் பிரதீப் ஆண்டனி குழந்தையை பிரிந்து மிகுந்த துயரில் இருப்பதாக வெளியிட்டுள்ள உருக்கமாக பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.பிரதீப் ஆண்டனிதமிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக் பாஸ் புகழ் பிரதீப் ஆண்டனி குழந்தையை பிரிந்து மிகுந்த துயரில் இருப்பதாக வெளியிட்டுள்ள உருக்கமாக பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.</p><h2>பிரதீப் ஆண்டனி</h2><p>தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகர் பிரதீப் ஆண்டனி. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘அருவி’ திரைப்படத்தின் மூலம் நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர், அதன்பிறகு ‘வாழ்’ திரைப்படத்திலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d54a99f4-4d85-46ba-b98f-6a83a877cf59/26-6a96f3d77a817.webp' /></p><p></p><p>

நடிகர் கவினின் நெருங்கிய நண்பராகவும் அறியப்படும் பிரதீப் ஆண்டனி, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 7வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். ஏற்கனவே திரைப்படங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிதான் அவரை அதிகளவில் மக்களிடம் கொண்டு சேர்த்தது.</p><p>

நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனி வெளிப்படையாகப் பேசிய விதமும், தனது கருத்துகளை தயக்கமின்றி முன்வைத்த விதமும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.</p><p> </p><p>அதே நேரத்தில், அவரது செயல்பாடுகள் நிகழ்ச்சிக்குள் பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தின.

குறிப்பாக, சில பெண் போட்டியாளர்கள் பிரதீப் ஆண்டனி மீது புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. </p><p>இதையடுத்து அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிரதீப்புக்கு ரெட் கார்டு வழங்கி வெளியேற்றப்பட்ட முடிவு அப்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. பலரும் பிக்பாஸ் குழுவின் முடிவுக்கு எதிராக தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e710ef7-88f5-4be5-bd73-a694d7f0c81c/26-6a96f3d82befa.webp' /></p><p> பிரதீப்பை வெளியேற்றியது தவறான முடிவு என்றும், அவருக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றும் சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தனர்.
</p><h2>மனைவி குழந்தையை பிரிந்தது ஏன்?&nbsp;</h2><p>பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பிரதீப் ஆண்டனி தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தினார். கடந்த 2024ஆம் ஆண்டு பூஜா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு தனது குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்தி வந்த பிரதீப்புக்கு, கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
</p><p>
குழந்தை பிறந்த செய்தி பிரதீப்பின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான ஒரு பதிவு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e5e0646-0a8b-47f1-a140-29780764f4a4/26-6a96f3d8d1cd0.webp' /></p><h2>உருக்கமான&nbsp; பதிவு&nbsp;</h2><p>
</p><p>பிரதீப் ஆண்டனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நீண்ட பதிவில், தனது மனைவி மற்றும் குழந்தையை பிரிந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

தனது வாழ்க்கையின் மிகப்பெரிய கனவு குறித்து அவர் அந்த பதிவில் உருக்கமாக பேசியுள்ளார். </p><p>ஒரு நல்ல குடும்பத்தை அமைத்துக்கொண்டு, தனது குழந்தைக்கு சிறந்த தந்தையாக வாழ வேண்டும் என்பதுதான் தனது வாழ்நாளின் மிகப்பெரிய கனவு என்று பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக தற்போது இணைந்து வாழ்வது மிகவும் கடினமாகிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64106227-c16e-4e02-aaaf-7dc0e90cc3cb/26-6a96f3d9848d4.webp' /></p><p></p><p>
</p><p>
மேலும், தனது குழந்தையின் மீது அளவுகடந்த அன்பு வைத்திருப்பதாகக் கூறியுள்ள பிரதீப், குழந்தையை பிரிந்திருப்பது தனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். </p><p>“ஒவ்வொரு நொடியும் என் குழந்தையை ரொம்பவே மிஸ் பண்றேன்” என்று அவர் தனது பதிவில் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

பிரதீப்பின் இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. </p><p>குடும்ப வாழ்க்கை குறித்து பிரதீப் ஆண்டனி வெளியிட்டுள்ள இந்த பதிவு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வரும் நிலையில், அவரது தற்போதைய நிலை குறித்து ரசிகர்கள் பலரும் வருத்தத்தையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u> <a href="https://chat.whatsapp.com/KPaiG8NNYogL3W9EipSjKP" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T15:49:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக் பாஸ் போட்டியாளராக வரும் பிரபல மேக்கப் ஆர்ட்டிஸ்ட்! யார் என பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/makeup-artist-asmitha-to-enter-bigg-boss-10-tamil-1788277086"></link>
            <id>https://cineulagam.com/article/makeup-artist-asmitha-to-enter-bigg-boss-10-tamil-1788277086</id>
            <summary type="text">பிக் பாஸ் 10ம் சீசன் தமிழில் தொடங்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கிறது. அதில் 20 பிரபலங்கள் மற்றும் 3 காமன் மேன் என மொத்தம் 23 போட்டியாளர்கள் வர இரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக் பாஸ் 10ம் சீசன் தமிழில் தொடங்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கிறது. அதில் 20 பிரபலங்கள் மற்றும் 3 காமன் மேன் என மொத்தம் 23 போட்டியாளர்கள் வர இருக்கின்றனர்.
</p><p>
பல முக்கிய சீரியல் நடிகர்கள் பலரும் போட்டியாளர்களாக வர இருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bcc29fe-5a7b-4887-a0bf-e80f215e70f7/26-6a96f1619f691.webp' /></p><h2>மேக்கப் ஆர்ட்டிஸ்ட்</h2><p>இந்நிலையில் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் மற்றும் நடிகை அஸ்மிதா என்பவர் போட்டியாளராக வருவது உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.</p><p>

அஸ்மிதா சில படங்களில் நடித்து இருந்தாலும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக அதிகம் பிரபலம். அவர் ஒரு வருடத்திற்கு முன் தனது கணவர் தன்னை தாக்கி கொடுமை படுத்தியதாக போலீசில் புகார் அளித்து கைது செய்ய வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T15:38:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைகளுக்கு பதில் வீட்டுக்காவல் ; சட்ட மறுசீரமைப்புகள் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/house-arrest-instead-of-imprisonment-1788276757"></link>
            <id>https://jvpnews.com/article/house-arrest-instead-of-imprisonment-1788276757</id>
            <summary type="text">சிறைச்சாலைகளில் தடுத்து வைப்பதற்கு பதிலாக வீட்டுக்காவலில் வைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சட்ட மறுசீரமைப்புகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சிறைச்சாலைகளில் தடுத்து வைப்பதற்கு பதிலாக வீட்டுக்காவலில் வைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சட்ட மறுசீரமைப்புகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். </p><p style="text-align: justify; ">

இன்று (01) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f131be0-cd57-4226-9828-79c6dd86d3b8/26-6a96f016eec0e.webp' /></p><h2 style="text-align: justify; ">சட்ட மறுசீரமைப்புகள்</h2><p> </p><p style="text-align: justify; ">

இதற்காகப் பல சட்ட மறுசீரமைப்புகள் குறித்து தற்போது கலந்துரையாடப்பட்டு, தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.</p><p style="text-align: justify; "> 

"நீதித்துறை அமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல மறுசீரமைப்புகளுக்கு மத்தியில் இந்தச் சட்ட மறுசீரமைப்பும் இடம்பெறுகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> சிறைச்சாலைகளின் நெருக்கடியைக் குறைத்தல், அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை விரைவுபடுத்துதல், பிணை பெற முடியாதவர்களுக்குப் பிணை வழங்குவதற்குத் தேவையான சட்ட மறுசீரமைப்புகளைச் செய்தல், சிறைச்சாலைகளுக்கு வெளியே இவ்வாறானவர்களை வீடுகளில் தடுத்து வைத்து தண்டனைக் காலத்தைக் கழிப்பதற்கான வாய்ப்பை வழங்குதல் போன்ற பல மறுசீரமைப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டு சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன என்றார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-01T15:32:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுகிறார் முன்னாள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/keir-starmer-is-stepping-member-of-parliament-1788274856"></link>
            <id>https://tamilwin.com/article/keir-starmer-is-stepping-member-of-parliament-1788274856</id>
            <summary type="text">பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது நாடாளுமன்ற
உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆளும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது நாடாளுமன்ற
உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
</p><p>
ஆளும் தொழிற்கட்சியின் ஆதரவை இழந்ததைத் தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து
விலகி சுமார் ஆறு வாரங்களே நிறைவடைந்துள்ள நிலையில், அவர் இந்த முடிவை
எடுத்துள்ளார்.</p><p>

தான் வகித்து வந்த லண்டன் ‘ஹோல்பர்ன் மற்றும் சென் பாங்க்ராஸ்’ தொகுதிக்கான
எம்.பி பதவியிலிருந்து விலகி, இனி சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் கூடுதல் கவனம்
செலுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>இராஜதந்திர நடவடிக்கை</h2><p>
</p><p>
கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தொழிற்கட்சியைப் வரலாற்றுச்
சிறப்புமிக்க பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்து பிரதமரான போதிலும்,
உள்நாட்டுக் கொள்கைகளில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் மக்களின் ஆதரவு
வீழ்ச்சி காரணமாக அவர் தனது பதவியை இழக்க நேரிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb6db646-5936-4c47-8c24-17472f37e007/26-6a96e9af8e7fe.webp' /></p><p>

எனினும், பிரான்ஸ் மற்றும் சீனாவுடனான உறவுகளைச் சீரமைத்தல், உக்ரைனுக்கான
ஆதரவு மற்றும் பாலஸ்தீன நாட்டை அங்கீகரித்தல் போன்ற சர்வதேச விவகாரங்களில்
அவரது இராஜதந்திர நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருந்தன.
</p><p>
கெய்ர் ஸ்டார்மரைத் தொடர்ந்து அண்டி பர்ன்ஹாம் பிரித்தானியாவின் புதிய
பிரதமராகப் பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T15:22:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாக்குறுதிகளை நிறைவேற்றாத அனுர அரசு : யாழில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hunger-strike-in-jaffna-against-anura-government-1788274209"></link>
            <id>https://ibctamil.com/article/hunger-strike-in-jaffna-against-anura-government-1788274209</id>
            <summary type="text">&amp;nbsp; தற்போது ஆட்சியில் உள்ள அனுர அரசாங்கம் பதவியேற்று எதிர்வரும் 12ஆம்
திகதியுடன் இரண்டு ஆண்டுகளை எட்டவுள்ள நிலையில், தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தற்போது ஆட்சியில் உள்ள அனுர அரசாங்கம் பதவியேற்று எதிர்வரும் 12ஆம்
திகதியுடன் இரண்டு ஆண்டுகளை எட்டவுள்ள நிலையில், தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி, எதிர்வரும் 12ஆம்
திகதி யாழ்ப்பாணம் சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் அடையாள உண்ணாவிரதப்
போராட்டம் நடத்தப்படவுள்ளது.</p><p>

இதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் இன்று(01)செவ்வாய்க்கிழமை மாலை, ஜனநாயக தமிழ் தேசியக்
கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் யாழ்ப்பாணம் இணுவில்
பகுதியில் உள்ள திருமண மண்டபமொன்றில் நடைபெற்றது.</p><h2>தொடந்து ஏமாற்றப்படும் தமிழ் மக்கள்</h2><p>&nbsp;இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக்
கூட்டணியின் பங்காளிக் கட்சித் தலைவரான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்கு
கருத்துத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d498123b-006c-4b61-ac0c-8740087c9aa7/26-6a96eb0fc1057.webp' /></p><p>
</p><p>
 தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள்
நிறைவேற்றப்படாமையைக் கண்டித்தும், தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு
வருகின்றனர் என்பதை வெளிப்படுத்தும் நோக்கிலும் எதிர்வரும் 12ஆம் திகதி,அடையாள உண்ணாவிரதப்
போராட்டத்தை நடத்துவதற்கு ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளதாக
அவர் தெரிவித்தார்.</p><h2>முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை</h2><p>
</p><p>
அரசாங்கம் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், பயங்கரவாதத் தடைச்
சட்டத்தை நீக்குதல், காணிகளை விடுவித்தல், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை
செய்தல், மாகாண சபைத் தேர்தலை நடத்துதல் மற்றும் புதிய அரசியலமைப்பை
உருவாக்குதல் உள்ளிட்ட தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகள்
நிறைவேற்றப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bdf159a-26b1-4242-be81-359c1f034d6a/26-6a96eb10d357d.webp' /></p><p>
</p><p>
தமிழ் மக்களின் ஆதரவையும் ஆணையையும் பெற்று ஆட்சிக்கு வந்த அரசாங்கம், வழங்கிய
வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும், தமிழ் மக்கள் தொடர்ந்தும்
ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்டு வருகின்றனர் என்பதை மக்களுக்கு
எடுத்துக்காட்டும் நோக்கிலேயே இந்தப் போராட்டம் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
இந்தப் போராட்டம் தமிழ் அரசியல் கட்சிகளின் ஒருங்கிணைந்த அழைப்பாக
முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புகள்
மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்திற்கு வலுச்சேர்க்க
வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டது.</p><p>

</p><h2>&nbsp;சொந்த நிலங்களை விடுவிக்க கோரி மக்கள் தொடர் போராட்டம்</h2><p>குறிப்பாக வலிகாமம் வடக்கில் பல பகுதிகளில் தமது சொந்த நிலங்களை
விடுவிக்குமாறு கோரி மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற
நிலையில், காணி விடுவிப்பு தொடர்பிலும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை
எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b629f2f-97e0-44c9-8c0a-12d310f64245/26-6a96eb118463d.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தின்
அபிவிருத்திப் பணிகளும் எதிர்பார்த்த அளவில் முன்னெடுக்கப்படாமல் பின்னடைவு
நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.</p><p>

இந்தியா நிதி உதவி வழங்கியுள்ள போதிலும், சம்பந்தப்பட்ட அபிவிருத்தித்
திட்டங்களை முன்னெடுப்பதற்கான உடன்படிக்கைகள் மற்றும் நடைமுறை நடவடிக்கைகளில்
காலதாமதம் ஏற்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.</p><h2>மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் கூட அக்கறை காட்டாத நிலை</h2><p>
</p><p>
தேர்தல் காலத்தில் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை வழங்குவதாக வாக்குறுதி
அளித்தவர்கள், தற்போது மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் கூட அக்கறை காட்டாத
நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba3e0a2c-34c9-4beb-937d-4541bccb3c05/26-6a96eb12398af.webp' /></p><p>
</p><p>
மேலும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் போதிய கரிசனையை
வெளிப்படுத்தவில்லை எனவும், தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு திணிக்கப்படுவதாகக்
கூறப்படும் தொல்லியல் துறை சார்ந்த நடவடிக்கைகளையும் கண்டித்தும் இந்தப்
போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
</p><p>
இதன்படி, எதிர்வரும் *12ஆம் திகதி காலை 7.30 மணியளவில் சாவகச்சேரி பேருந்து
நிலையத்தில்*, தமிழ் மக்களின் சார்பில் தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து அடையாள
உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி
தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T15:21:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[திரிஷா யார் கூட போனா உங்களுக்கு என்ன? நடிகை அம்பிகா டிவிட்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/trisha-in-london-viral-video-ambika-lashes-out-1788269675"></link>
            <id>https://viduppu.com/article/trisha-in-london-viral-video-ambika-lashes-out-1788269675</id>
            <summary type="text">நடிகை திரிஷா குறித்து சோசியல் மீடியாவில் பல விஷயங்கள் பேசப்பட்டு வரும். சமீபத்தில் நடிகை திரிஷா, திரிஷா லண்டனில் இருக்கும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை திரிஷா குறித்து சோசியல் மீடியாவில் பல விஷயங்கள் பேசப்பட்டு வரும். சமீபத்தில் நடிகை திரிஷா, திரிஷா லண்டனில் இருக்கும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வைரலானது. அந்த வீடியோவை ஒரு பெண் லீக் செய்து, Who is that trisha? என்ற கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcee41b1-8d01-4179-90b2-8ccd3c44d400/26-6a96d46d83465.webp' /></p><p> </p><p>அதனை பார்த்த நெட்டிசன்கள் பல கேள்விகளை முன் வைத்து வருகிறார்கள். திரிஷா அந்த வீடியோ விவகாரம் குறித்து நடிகை அம்பிகா தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ளார்.</p><h2>அம்பிகா</h2><p>அதில், அது திரிஷாவாக இருந்தால் என்ன? இல்லை என்றால் என்ன? லண்டனில் இருந்தால் என்ன? சீனாவில் இருந்தால் என்ன? ஒருவர் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம், அதை பற்றி நமக்கு என்ன, இதெல்லாம் ஒரு விஷயமா?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e9cf5ac-db86-4389-ba3f-ec87168dfd9b/26-6a96d46e47d71.webp' /></p><p>நாட்ல எவ்வளவோ பிரச்சனை இருக்கும்போது திரிஷா எங்க போனார்? யார் கூட போனார்? என்று விவாதத்தை வைத்து ஒரு வீடியோவை ட்ரெண்ட் செய்வது அவசியமா? என்று கேள்வி கேட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-01T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரேநாளில் தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பல மில்லியன் வருமானம் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dehiwala-zoo-earns-millions-in-a-single-day-1788269259"></link>
            <id>https://jvpnews.com/article/dehiwala-zoo-earns-millions-in-a-single-day-1788269259</id>
            <summary type="text">&amp;nbsp; பாடசாலை விடுமுறைக் காலத்தை முன்னிட்டு கடந்த 26 ஆம் திகதி தெஹிவளை விலங்கியல் பூங்காவைப் பார்வையிட 10,634 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாக தேசிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பாடசாலை விடுமுறைக் காலத்தை முன்னிட்டு கடந்த 26 ஆம் திகதி தெஹிவளை விலங்கியல் பூங்காவைப் பார்வையிட 10,634 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.சி.ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
</p><p>


இதற்கமைய, அன்றைய தினம் மாத்திரம் 2.5 மில்லியன் ரூபா சாதனை அளவிலான வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாக பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30e27381-2cad-49b4-a1f9-a22f7e0f1836/26-6a96d2cc80f09.webp' /></p><h2>&nbsp;கடந்த வருடம் பெறப்பட்ட 1.6 பில்லியன் ரூபா முறியடிப்பு</h2><p>



விலங்கியல் பூங்காவிற்கு வருகை தரும் வழமையான நாளாந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை சுமார் 2,500 ஆகக் காணப்படும் நிலையில், அன்றைய தினம் வருகை தந்தவர்களின் எண்ணிக்கை வழமையை விட நான்கு மடங்குக்கும் அதிகமாகும் என பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p>
</p><p>


அத்துடன், கடந்த வருடம் பெறப்பட்ட 1.6 பில்லியன் ரூபா மொத்த வருமானத்தை இந்த வருடத்தில் கடந்து செல்ல முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.</p><p>



தற்போது விலங்கியல் பூங்காவிற்குள் பார்வையாளர்களுக்கான உள்ளக வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்களுக்காக தினசரி விசேட திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p></p><p> </p><p>



 மேலும் பல்வேறு விலங்கு பரிமாற்றத் திட்டங்களின் கீழ், தற்போது பூங்காவில் பற்றாக்குறையாக உள்ள ஒட்டகச்சிவிங்கிகளுக்காக எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் உகாண்டாவிலிருந்து இரண்டு ஜோடி ஒட்டகச்சிவிங்கிகளையும், ஆர்மீனியாவிலிருந்து ஒரு ஜோடி வரிக்குதிரைகளையும் (Zebras) நாட்டிற்குக் கொண்டு வருவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-09-01T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[IMF வெளியேற்றம்! அடுத்தடுத்து அநுர அரசு எடுக்கப்போகும் அதிரடி முடிவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/next-government-will-take-drastic-decisions-1788274054"></link>
            <id>https://tamilwin.com/article/next-government-will-take-drastic-decisions-1788274054</id>
            <summary type="text">2028ஆம் ஆண்டு இலங்கை மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் மிகக் கடுமையான ஆண்டாக அமையும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் தெரிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2028ஆம் ஆண்டு இலங்கை மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் மிகக் கடுமையான ஆண்டாக அமையும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
</p><p>
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியை கைப்பற்றுவதற்கு கடுமையாகப் போராடும் நிலை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
லங்காசிறி ஊடகம் வழங்கும் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>IMF திட்டத்திலிருந்து வெளியேறியதன் காரணமாக இலங்கையில் பெரியளவிலான மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. மாறாக, டிட்வா புயல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஜனாதிபதியால் நாட்டை வழங்கிய வாக்குறுதிகளுக்கு ஏற்ப முன்னேற்றப் பாதைக்கு கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>
இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள எதிர்க்கட்சிகள் முயற்சிக்கும், வரிகளை குறைப்போம், சம்பள உயர்வுகளை வழங்குவோம், பணவீக்கத்தை கட்டுப்படுத்துவோம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி, ஆட்சியை கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் அவை ஈடுபடும்.
</p><p>
அதேவேளை, ஜனாதிபதி நாட்டு மக்களிடம் இன்னும் ஒரு வாய்ப்பை வழங்குமாறு கோரிக்கை விடுக்கும் நிலையும் ஏற்படலாம் என்றார். </p><p>இவ்வாறான பல்வேறு விடயங்களை உங்கள் கண்முன்னே கொண்டு வருகின்றது “ஊடறுப்பு” நிகழ்ச்சி,&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/K-gcvqPOo-E" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T14:49:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்டத்தில் குதிக்கும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/university-lecturers-to-protest-1788273876"></link>
            <id>https://tamilwin.com/article/university-lecturers-to-protest-1788273876</id>
            <summary type="text">அரச பல்கலைக்கழக அமைப்பைப் பாதிக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளைக் கோரி, நாட்டிலுள்ள அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச பல்கலைக்கழக அமைப்பைப் பாதிக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளைக் கோரி, நாட்டிலுள்ள அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள் நாளை மதிய உணவு இடைவேளையின் போது கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். </p><p>
பல்கலைக்கழக ஆசிரியர்களின் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.</p><p> 
அரசாங்கம் தங்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணத் தவறினால், அடுத்த வாரம் முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர்களின் சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இல்லங்கசிங்க எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd318ce7-c18b-4ba9-8d34-0dceb1b6d886/26-6a96e4d568a2f.webp' /></p><p>
தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற உடனேயே பல்கலைக்கழக அமைப்பைப் பாதிக்கும் சிக்கல்கள் குறித்துச் சுட்டிக்காட்டப்பட்டதாகவும், அவற்றுக்கான தீர்வு யோசனைகள் மற்றும் கடிதங்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் நேரடியாகச் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் சாருதத்த இல்லங்கசிங்க தெரிவித்தார்.</p><p> 
எனினும், பேச்சுவார்த்தைகளின் போது எட்டப்பட்ட உடன்பாடுகளையோ அல்லது முன்வைக்கப்பட்ட யோசனைகளையோ அரசாங்கம் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>
இந்தப் பிரச்சினைகளுக்குத் தொடர்ச்சியாகத் தீர்வு காணப்படாததன் காரணமாக, அரசுப் பல்கலைக்கழகங்களிலிருந்து கல்விப் பணியாளர்கள் பெருமளவில் வெளியேறி வருவதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
</p><p>ஆண்டுக்கு சுமார் 25,000 மாணவர்கள் சேர்க்கப்பட்ட போது, 5,800 விரிவுரையாளர்கள் பணியில் இருந்தனர்.
ஆண்டு மாணவர் சேர்க்கை 45,000 ஆக அதிகரித்துள்ள போதிலும், சுமார் 1,000 விரிவுரையாளர்கள் பல்கலைக்கழக அமைப்பை விட்டு வெளியேறியுள்ளனர்.
</p><p>சில கல்விப் பணிகளுக்கான பதவி வெற்றிடங்கள் அறிவிக்கப்பட்டபோதிலும், பல பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரிவுரையாளர்கள் முன்வருவதில்லை.
</p><p>அரசுப் பல்கலைக்கழக அமைப்பின் வீழ்ச்சி என்பது நாட்டின் எதிர்காலத்தின் வீழ்ச்சியாகும் என சாருதத்த இல்லங்கசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகாரிகளுடன் இது குறித்துப் பேசி அலுத்துவிட்ட நிலையில் இந்தத் தீர்மானத்திற்கு வந்துள்ளதாகக் கூறினார். </p><p>அரசாங்கம் உரிய தீர்வினை வழங்கும் வரை இந்த ஆர்ப்பாட்டங்கள் தொடரும் எனவு, தேவைப்படின் போராட்டங்கள் மேலும் தீவிரமாக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T14:47:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மற்றவர்களை கட்டுப்படுத்துவதில் கில்லாடிகளான டாப் 3 ராசிகள்... உங்க ராசியும் இதுல இருக்கா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-zodiac-signs-are-most-controlling-1788268741"></link>
            <id>https://manithan.com/article/which-zodiac-signs-are-most-controlling-1788268741</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, கல்வி, தொழில் உட்பட அவர்களின் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, கல்வி, தொழில் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.</p><p>அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில்&nbsp; பிறந்தவர்கள் மற்றவர்களை அடக்கியாளும் ஆளுமையையும் சிறந்த தலைமைத்துவ குணங்களையும் பிறப்பிலேயே கொண்டவர்களாக இருப்பார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/788105af-45d2-4341-a878-c796157d251c/26-6a96e4fe5f602.webp' /></p><p></p><p>அப்படி அனைவரையும் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதில் படு கில்லாடிகளாக திகழும் டாப் 3 ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">விருச்சிகம்</span></h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fa86bcd-156b-49e1-89d2-ec71f8373260/26-6a96e4ff13630.webp' /></p><p>விருச்சிக ராசிக்காரர்கள் இயல்பிலேயே அதிக அதிகார வேட்கையும், தங்களது செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற வலுவான எண்ணமும் கொண்டவர்களாக இருப்பார்கள்.</p><p>இருப்பினும், அவர்கள் தங்களது நோக்கங்களையும் எண்ணங்களையும் வெளிப்படையாக மற்றவர்களிடம் கூறுவதைவிட, அவற்றை மனதிற்குள் வைத்துக்கொண்டு செயல்படுவதையே அதிகம் விரும்புவார்கள்.
</p><p>
மாற்றம், சக்தி மற்றும் ஆற்றலுடன் தொடர்புடைய கிரகமாகக் கருதப்படும் செவ்வாயின் ஆதிக்கம் இவர்களுக்கு இருப்பதால், பிறரை வழிநடத்துவது, சூழ்நிலைகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றுவது மற்றும் தங்களது செல்வாக்கை நிலைநிறுத்துவது போன்ற விஷயங்களில் இயல்பான ஆர்வம் இருக்கும்.
</p><h2>மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee06360e-f028-4e89-a51c-fd79755294de/26-6a96e4ffc3b35.webp' /></p><p>
மகர ராசிக்காரர்கள் வாழ்க்கையில் வெற்றி, முன்னேற்றம் மற்றும் சாதனைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.ஒரு இலக்கை நிர்ணயித்துவிட்டால், அதை அடையும் வரை பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் செயல்படுவார்கள்.</p><p>இந்த வெற்றிக்கான தீவிர விருப்பம் சில நேரங்களில் மற்றவர்களின் மீது அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் செலுத்த வேண்டும் என்ற எண்ணமாக வெளிப்படலாம்.
</p><p>
ஒழுக்கம், பொறுப்பு மற்றும் அதிகாரத்துடன் தொடர்புடைய சனிபகவானால் ஆளப்படும் மகர ராசிக்காரர்கள், எந்தவொரு விஷயத்தையும் அவசரமாக அணுகாமல், திட்டமிட்டு செயல்படுவார்கள். மற்றவர்களை அடக்கியாளும் ஆளுமை இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.</p><h2>சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff021ba7-3840-429f-9f11-7432a032f60d/26-6a96e50077932.webp' /></p><p></p><h2>
</h2><p>சிம்ம ராசிக்காரர்கள் தங்களது தைரியம், தன்னம்பிக்கை மற்றும் கம்பீரமான அணுகுமுறைக்காகப் பெயர் பெற்றவர்கள். அவர்களின் வசீகரமான வெளித்தோற்றத்திற்குப் பின்னால், அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் தங்களது கையில் வைத்திருக்க வேண்டும் என்ற வலுவான விருப்பமும் இருக்கும்.</p><p>
கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படும் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்களுக்கு இயல்பிலேயே தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். </p><p>ஒரு குழுவில் இருந்தாலும், குடும்பத்தில் இருந்தாலும் அல்லது பணியிடத்தில் இருந்தாலும், தங்களது கருத்துக்கு மதிப்பு கிடைக்க வேண்டும் என்றும், தாங்கள் முக்கியமான நபராகக் கருதப்பட வேண்டும் என்றும் விரும்புவார்கள்.
</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://chat.whatsapp.com/KPaiG8NNYogL3W9EipSjKP" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T14:46:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[எம்.பி பதவியையும் துறக்கிறார் கெய்ர் ஸ்டார்மர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/keir-starmer-resignation-as-member-of-parliament-1788272114"></link>
            <id>https://ibctamil.com/article/keir-starmer-resignation-as-member-of-parliament-1788272114</id>
            <summary type="text">பிரிட்டனின் பிரதமர் பதவியில் இருந்து விலகிய கெய்ர் ஸ்டார்மர், தற்போது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளார்.

நாடாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரிட்டனின் பிரதமர் பதவியில் இருந்து விலகிய கெய்ர் ஸ்டார்மர், தற்போது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளார்.
</p><p>
நாடாளுமன்றப் பணிகளில் இருந்து விலகி, இனிவரும் காலங்களில் பாதுகாப்பு, அமைதி, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்களில் தனது கவனத்தைச் செலுத்தப் போவதாக ஸ்டார்மர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>விரைவில் இடைத்தேர்தல்</h2><p>கெய்ர் ஸ்டார்மரின் இந்த திடீர் விலகல் முடிவைத் தொடர்ந்து, அவர் பிரதிநிதித்துவப்படுத்திய மத்திய லண்டன் நாடாளுமன்றத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3d3c2ed-b848-4160-82d0-fc6964911a35/26-6a96e2e4a7f0b.webp' /></p><p>
</p><p>
கட்சிக்குள் ஏற்பட்ட கடுமையான அழுத்தங்கள் மற்றும் உள்நாட்டு அரசியல் குழப்பங்கள் காரணமாக ஸ்டார்மர் பதவி விலகியதைத் தொடர்ந்து ஆண்டி பர்ன்ஹாம் பிரிட்டன் பிரதமராக பதவியேற்றார்.</p><p></p><h2>ஸ்டார்மரின் திடீர் அறிவிப்பு</h2><p>
</p><p>

பிரதமர் பதவியில் இருந்து விலகி இருந்தாலும், அடுத்த பொதுத் தேர்தல் வரை தாம் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்வதாக அறிவித்திருந்தார். ஆனால் திடீரென்று அப்பதவியிலிருந்தும் விலகுவதாக ஸ்டார்மர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff37273c-34bf-4bda-b990-0dd866da618c/26-6a96e2e55a797.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T14:36:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதியில் காலை வாரிய செருப்பு ;மகள்களின் கல்விச் செலவு; வெறும் காலில் மரதன் ஓடி வென்ற தாயார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/daughters-education-mother-won-marathon-barefoot-1788268315"></link>
            <id>https://jvpnews.com/article/daughters-education-mother-won-marathon-barefoot-1788268315</id>
            <summary type="text">&amp;nbsp; மகாராஷ்டிராவில் மகள்களின் உயர் கல்விச் செலவுக்கு உதவுவதற்காக, 47 வயதான தாய் ஒருவர் வெறும் காலில் ஓடி மரதன் போட்டியில் முதலிடம் பிடித்த சம்பவம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மகாராஷ்டிராவில் மகள்களின் உயர் கல்விச் செலவுக்கு உதவுவதற்காக, 47 வயதான தாய் ஒருவர் வெறும் காலில் ஓடி மரதன் போட்டியில் முதலிடம் பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், பீட் மாவட்டம், அம்பாஜோகை பகுதியைச் சேர்ந்த ரமாபாய் ரன்வீர், தனது இரண்டு மகள்களையும் தனியாக வளர்த்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb72bc1d-b0b0-4200-bf27-bd6d1dec1d85/26-6a96cf1cbc1e7.webp' /></p><h2>பாதியில் காலை வாரிய செருப்பு</h2><p>
</p><p>
விவசாயக் கூலி வேலை செய்து வந்த அவர், தற்போது தனது மகள்கள் கல்வி கற்கும் போட்டித் தேர்வு பயிற்சி நிலையத்தில் சமையல் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.
</p><p>
இந்த நிலையில், உள்ளூர் அமைப்பொன்று நடத்திய ‘அமிர்த தௌட்’ மரதன் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 3,000 ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. </p><p></p><p>

அந்தப் பரிசுத் தொகையில் மகள்களுக்குப் புத்தகங்கள் வாங்கலாம் எனக் கருதிய ரமாபாய் போட்டியில் பங்கேற்றார்.</p><p>

போட்டியின்போது அவரது செருப்புகள் கழன்று விழுந்த நிலையில் அறுந்த செருப்பை , கழற்றி கையில் எடுத்துக்கொண்டு வெறும் காலில் ஓடி, முதலிடத்தையும் பிடித்தார்.
</p><p>
இந்த போட்டியில் அவரது மகள் பூஜா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். ரமாபாயின் ஒரு மகள் காவல்துறை பணிக்கான போட்டித் தேர்வுக்கும், மற்றொரு மகள் வங்கித் தேர்வுகளுக்கும் தயாராகி வருகின்றனர்.</p><p></p><p>

தனது வெற்றி குறித்து கருத்துரைத்த ரமாபாய், “போராடி இந்தப் பரிசை வெல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். ஓடும்போது என் மகள்களின் எதிர்காலம் மட்டுமே என் கண்முன் தெரிந்தது. </p><p>பரிசுத் தொகையில் அவர்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்குவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இன்னிலையில் மகள்களின் கல்விக்காகப் போராடி வரும் ரமாபாயின் விடாமுயற்சிக்கும், தன்னம்பிக்கைக்கும் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் மானிடோபாவில் சுழன்றடித்த சூறாவளி: கட்டடங்கள், மின் கம்பங்கள் சேதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tornado-touches-down-in-southwest-manitoba-1788259536"></link>
            <id>https://canadamirror.com/article/tornado-touches-down-in-southwest-manitoba-1788259536</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் தென்மேற்கு மானிடோபா வீசிய பலத்த சூறாவளி காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்தும், மின் கம்பங்கள் உடைந்தும், வர்த்தக நிலையங்களின் கூரைகள் பிடுங...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் தென்மேற்கு மானிடோபா வீசிய பலத்த சூறாவளி காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்தும், மின் கம்பங்கள் உடைந்தும், வர்த்தக நிலையங்களின் கூரைகள் பிடுங்கி எறியப்பட்டும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.</p><p> 
சஸ்காட்செவன் எல்லைக்கு மேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எல்க்ஹார்ன் எனும் பகுதியில், இந்தச் சூறாவளி தாக்கியதாக கனடா சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p> 
பொலிஸ் மற்றும் பொதுமக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2681ce5f-d104-4665-90f5-1d1f4871f5bc/26-6a96acd1a7bcf.webp' /></p><p> </p><p>
இந்த வானிலை மாற்றத்தின் ஒரு பகுதியாக, மானிடோபா எல்லைக்கு அருகே தென்கிழக்கு சஸ்காட்செவன் பகுதியிலும் மேலும் இரண்டு சூறாவளிகள் தாக்கியுள்ளன. </p><p>
அத்துடன் கனமழை மற்றும் பெரிய அளவிலான ஆலங்கட்டி மழையுடன் கூடிய பலத்த இடிபுயலும் அப்பகுதியைத் தாக்கியது. 
இப்புயல் காரணமாக மானிடோபாவின் பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. </p><p>
திங்கட்கிழமை காலை வரையிலான 48 மணி நேரக் கணக்கீட்டின்படி, கோலா பகுதியில் 80.5 மில்லிமீட்டரும், மினிடோனாஸ் பகுதியில் 71.7 மில்லிமீட்டரும், சான் கிளாரா பகுதியில் 71.6 மில்லிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. </p><p>
பருவத்திற்கு மாறான அதிக வெப்பமான வளிமண்டலத்துடன் குளிர் காற்றுப் பிரதேசம் இணைந்ததே இந்த திடீர் சூறாவளிக்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கியூட்டான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ப்ரியா பவானி ஷங்கர்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-priya-bhavani-shankar-cute-photoshoot-1788272128"></link>
            <id>https://cineulagam.com/article/actress-priya-bhavani-shankar-cute-photoshoot-1788272128</id>
            <summary type="text">ப்ரியா பவானி ஷங்கர்விஜய் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்களில் நடித்து வெள்ளித்திரைக்கு சென்ற பிரபலங்கள் பலர் உள்ளனர்.&amp;nbsp;அப்படி விஜய்யி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ப்ரியா பவானி ஷங்கர்</h2><p>விஜய் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்களில் நடித்து வெள்ளித்திரைக்கு சென்ற பிரபலங்கள் பலர் உள்ளனர்.&nbsp;</p><p>அப்படி விஜய்யில் சீரியல்கள் நடித்து ஏகப்பட்ட ரசிகர்கள் வட்டாரத்தை பிடித்தவர் தான் ப்ரியா பவானி ஷங்கர். ஒரேஒரு சீரியல் அதனுடன் சினிமா பக்கமே வர மாட்டேன் என்றவர் இப்போது தமிழ் சினிமாவை தாண்டி மற்ற மொழிகளிலும் படங்கள் நடித்து அசத்தி வருகிறார்.</p><p>படங்களில் செம பிஸியாக இருக்கும் ப்ரியா பவானி ஷங்கர் அண்மையில் செம கியூட் போட்டோ ஷுட் வெளியிட்டுள்ளார். இதோ அந்த போட்டோஸ்,</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T14:20:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜினாமாவை வாபஸ் பெறுகிறேன் - தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா மனு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/isakki-subhaiya-plea-to-withdraw-mla-resignation-1788272406"></link>
            <id>https://ibctamilnadu.com/article/isakki-subhaiya-plea-to-withdraw-mla-resignation-1788272406</id>
            <summary type="text">isakki subhaiya plea to withdraw mla resignation: அதிமுக சார்பில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்த இசக்கி சுப்பைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>isakki subhaiya plea to withdraw mla resignation: அதிமுக சார்பில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா ராஜினாமாவை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். </p><h3>

தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா
</h3><p>
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, கடந்த மே 26 ஆம் தேதி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5a4c4dd-0eb9-44bc-a993-34cdfd60fae2/26-6a96df18799e6.webp' /></p><p>

இதனையடுத்து ஆளும் கட்சியான தவெகவில் இணைந்தார். இதே போல் 6 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்துள்ளனர்.</p><p> 

முதல்வர் விஜய் ராஜினாமா செய்துள்ள திருச்சி கிழக்கு உள்ளிட்ட 7 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ள சூழல் நிலவி வருகிறது. </p><p>

இந்த 6 பேர் உட்பட 25 அதிமுக எம்எல்ஏக்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தில், அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி தவெகவிற்கு ஆதரவளித்தனர். </p><p>

இதனால் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சபாநாயகர் ஜேசிடி பிரபாகரரிடம் மனு அளித்தார். </p><p>

இந்த தகுதி நீக்க வழக்கு நிலுவையில் உள்ள போது அவர்களின் ராஜினாமா முடிவை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஏற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d571529-0110-4121-ae94-3f7f6607f4a4/26-6a96df193190a.webp' /></p><p>

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.</p><h3> 

ராஜினாமாவை வாபஸ் பெறுவதாக மனு </h3><p>

இந்நிலையில் தனது ராஜினாமாவை வாபஸ் பெற்று, இடைத்தேர்தல் வழக்கு முடியும் வரை எம்எல்ஏ ஆக தொடர அனுமதி அளிக்குமாறு இசக்கி சுப்பையா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 
 </p><p>

இது குறித்து பேசிய அவர், வழக்கு நிலுவையில் உள்ளதால், எம்எல்ஏ இல்லாமல் தொகுதி மக்கள் கஷ்டப்படுவதால், இந்த மனுவை அளித்துள்ளேன்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>

ஆனால், இசக்கி சுப்பையா இந்த மனுவை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>மேலும், ராஜினாமாவை திரும்பப் பெறும் விதி இல்லை, தொகுதி காலியானதாக அறிவிக்கப்ட்டு விட்டது இடைத்தேர்தல் மட்டுமே தீர்வு என சட்டப்பேரவை செயலர் அலுவலகம் விளக்கமளித்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T14:20:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப் புலிகளின் அடுத்த தலைவராக தன்னை நினைத்த கே.பிக்கு கடும் பாதுகாப்பு! தென்னிலங்கையில் இருந்து கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kp-declares-himself-the-next-leader-of-ltte-1788254422"></link>
            <id>https://tamilwin.com/article/kp-declares-himself-the-next-leader-of-ltte-1788254422</id>
            <summary type="text">
பிரபாகரனுக்குப் பிறகு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் என சொல்லிவந்த குமரன் பத்மநாதன்(கே.பி) இன்று கிளிநொச்சியில் விமானப்படையின் பாதுகாப்புக்குக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>
பிரபாகரனுக்குப் பிறகு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் என சொல்லிவந்த குமரன் பத்மநாதன்(கே.பி) இன்று கிளிநொச்சியில் விமானப்படையின் பாதுகாப்புக்குக் கீழ் இருக்கின்றார். அவருக்கு எதிராக எந்தவொரு வழக்கும் இல்லை முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.</p><p>

ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>பொருளாதாரத்தை சீரழித்த யுத்தம்&nbsp;</h2><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p><p> 

எமது நாடு விடுதலைப் புலிகளின் யுத்தத்திற்கு முன்னர் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்து வந்தது. ஆனால், 87 மற்றும் 88ஆம் ஆண்டுகளின் போது மக்கள் விடுதலை முன்னணியின் கலவரத்தினால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. </p><p>

அதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் யுத்தம் காரணமாக, எமது நாடு வீழ்ச்சியடைந்தது. இந்த இரண்டு போராட்டங்களும் இடம்பெறாமல் இருந்திருந்தால், எமது நாடு அபிவிருத்தியடைந்த நாடாக மாறியிருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d009302-99f0-40fe-8b56-77196dcd467d/26-6a96b59fdc24e.webp' /></p><p>
</p><p>
 ஆனால், இவ்வாறு நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தி நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்திய யாருக்காவது வழக்குகள் இருக்கின்றதா? மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த யாருக்காவது வழக்கு இருக்கின்றதா என கேட்கின்றோம்.
</p><p>
பிரபாகரனுக்குப் பிறகு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் நான்தான் என சொல்லிக் கொண்ட குமரன் பத்மநாதன் இன்று கிளிநொச்சியில் விமானப்படையின் பாதுகாப்புக்குக் கீழ் இருக்கின்றார். அவருக்கு எதிராக ஒரு வழக்கும் இல்லை. </p><p>

ஆனால், விடுதலைப் புலிகளின் சாதாரண உறுப்பினர்கள் சிலரே இன்று சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ModBCQZYHW4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p>]]></content>
            <updated>2026-09-01T14:01:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டிற்கு அருகில் கைக்குண்டு மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hand-grenade-recovered-near-mp-house-ja-ela-1788267575"></link>
            <id>https://jvpnews.com/article/hand-grenade-recovered-near-mp-house-ja-ela-1788267575</id>
            <summary type="text">&amp;nbsp; ஜா-எல, வெலிகம்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தனவின் வீட்டிற்குப் பின்புறமாக ஓடும் தெல்கஹ அர கால்வாயில் இருந்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜா-எல, வெலிகம்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தனவின் வீட்டிற்குப் பின்புறமாக ஓடும் தெல்கஹ அர கால்வாயில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்று இன்று (01) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஜா-எல நகர சபைப் பணியாளர்கள் இன்று (01) கால்வாயைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த கைக்குண்டைக் கண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03d1f1ad-2172-4e16-899f-60e78e0d2771/26-6a96cc390ae93.webp' /></p><p>
</p><p>
இது குறித்து உடனடியாகக் கந்தானை பொலிஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து, அந்த கைக்குண்டை பாதுகாப்பாக அகற்றினர்.


 சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-01T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கம் தனிக்கட்சி ஆட்சியை நிறுவ முயற்சிக்கின்றது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-slams-npp-over-22nd-ammendment-1788270865"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-slams-npp-over-22nd-ammendment-1788270865</id>
            <summary type="text">அரசாங்கம் தனிக்கட்சி ஆட்சியை நிறுவுவதற்கு முயற்சித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த குற்றச்சாட்டை முன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கம் தனிக்கட்சி ஆட்சியை நிறுவுவதற்கு முயற்சித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p>எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.</p><h2>ஜனநாயக முறையான நியமனங்கள்</h2><p>
தேசிய மக்கள் சக்தியா அரசாங்கமானது அரசியல் நோக்கங்களை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் நகர்வுகளை முன்னெடுப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>
</p><p>இதன் ஓர் பகுதியாகவே இளைஞர் மன்றங்கள் முதல் சிவில் பாதுகாப்பு கமிட்டி வரையில் ஜனநாயக முறையில் நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதில்லை என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f046b123-9400-4414-8e25-ee9ab6c3f2bd/26-6a96d9129f2dd.webp' /></p><p>
அரசாங்கம் ஜனநாயகத்தை சீர்குலைப்பதற்கும் நீதிமன்றங்களின் சுயாதீன தன்மையை சிவைடையச் செய்வதற்கும் முயற்சிப்பதாக சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>உண்மையில் 22 ம் திருத்தச் சட்டமூலமானது தனி கட்சி ஆட்சி முறை ஒன்றை முன்னெடுக்கும் உள்நோக்கத்தை கொண்டதாக அமைந்துள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T13:56:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் சவூதி அரேபியாவின் இரு பிரம்மாண்டக் கப்பல்கள் மீது தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attack-on-two-massive-saudi-arabian-ships-hormuz-1788268379"></link>
            <id>https://tamilwin.com/article/attack-on-two-massive-saudi-arabian-ships-hormuz-1788268379</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை வழியே சவூதி அரேபியாவின் மசகு எண்ணெயைச் சுமந்து சென்ற இரு
பிரம்மாண்டக் கப்பல்கள் மீது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல்
நடத்தப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை வழியே சவூதி அரேபியாவின் மசகு எண்ணெயைச் சுமந்து சென்ற இரு
பிரம்மாண்டக் கப்பல்கள் மீது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளதாகக் கடல்சார் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
</p><p>
ஓமான் கடற்பரப்பு எல்லைக்கு அருகில் அடுத்தடுத்து சில நிமிட வேறுபாட்டில்
இடம்பெற்ற இத்தாக்குதல்களில் சவூதி அரேபியக் கொடியுடனும் லைபீரியக்
கொடியுடனும் பயணித்த இரு கப்பல்கள் சேதமடைந்துள்ளன.
</p><p>
தலா 20 மில்லியன் பீப்பாய்கள் மசகு எண்ணெயை ஏற்றிச் சென்ற இக்கப்பல்களில்
இருந்த மாலுமிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">எச்சரிக்கை</span></p><p>
</p><p>
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவி வரும் மோதல் நிலை காரணமாக ஹோர்முஸ்
நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஓமான்
மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் முன்னெடுத்து வரும் சமரச பேச்சுவார்த்தைகளிலும்
இதுவரை முன்னேற்றம் ஏற்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/703b01c0-866b-4102-9577-ae66fee6b6c3/26-6a96d805997cc.webp' /></p><p>

இப்புதிய தாக்குதல்கள் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மேலதிகத்
தாக்குதல் எச்சரிக்கைகள் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை மேலும்
உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T13:54:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுடனான 200 நாள் போருக்கு பின்னர் அமெரிக்க கடற்படை வீரர்களுக்கு கிடைத்த வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/5000-us-marines-to-rest-in-pattaya-thailand-1788269355"></link>
            <id>https://ibctamil.com/article/5000-us-marines-to-rest-in-pattaya-thailand-1788269355</id>
            <summary type="text">ஈரானுடனான 200 நாட்களுக்கும் மேலான போருக்குப் பிறகு 5,000 கடற்படை வீரர்களை ஏற்றிச் செல்லும் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பல், நாளை (02) ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடனான 200 நாட்களுக்கும் மேலான போருக்குப் பிறகு 5,000 கடற்படை வீரர்களை ஏற்றிச் செல்லும் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பல், நாளை (02) தாய்லாந்தில் நங்கூரமிட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
தாய்லாந்தின் முக்கிய சுற்றுலாத் தலமான பட்டாயாவிற்கு இந்தக் கப்பல் வரவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>நங்கூரமிடவுள்ள ஆபிரகாம் லிங்கன்</h2><p>&nbsp;200 நாட்களுக்கும் மேலாக கடலில் கழித்த பிறகு, கடற்படை வீரர்கள் ஓய்வெடுப்பதையும், அமைதியை அனுபவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு, இந்தக் கப்பல் தாய்லாந்தின் பட்டாயாவிற்கு வரவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3f914ec-ed1f-4391-a880-629920198c91/26-6a96d84e503a5.webp' /></p><p> </p><p>மேலும், உலகில் அதிக எண்ணிக்கையிலான பாலியல் தொழிலாளர்களைக் கொண்ட நகரங்களில் ஒன்றாகவும் பட்டாயா கருதப்படுகிறது.</p><p></p><p>

</p><h2>சிறப்பு திட்டத்தை தயாரித்துள்ள தாய்லாந்து</h2><p>இதற்கிடையில், பட்டாயாவிற்கு வரும் இந்தப் படையினருக்கு சேவைகளை வழங்குவதற்காக தாய்லாந்து ஒரு சிறப்புத் திட்டத்தைத் தயாரித்துள்ளது,மேலும் அவர்களுக்காக ஒரு சிறப்புப் பாதுகாப்புத் திட்டமும் நடைமுறையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b161c7a-878b-4ecf-98da-1efd47d8a6a8/26-6a96d84d9bca3.webp' /></p><p>
இந்தக் கப்பலை தாய்லாந்தில் நங்கூரமிடுவதன் மூலம் அந்த நாடு பெரும் பொருளாதாரப் பலன்களைப் பெற முடியும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T13:51:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனது மனைவி, குழந்தையை பிரிந்த பிக்பாஸ் புகழ் பிரதீப்... அவரே போட்ட ஷாக்கிங் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/bigg-boss-fame-pradeep-divorced-his-wife-1788269422"></link>
            <id>https://cineulagam.com/article/bigg-boss-fame-pradeep-divorced-his-wife-1788269422</id>
            <summary type="text">பிரதீப் ஆண்டனிதமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன் வெளியான அருவி திரைப்படத்தின் மூலம் நடிகராக களமிறங்கியவர் தான் பிரதீப் ஆண்டனி. அதன்பின் வாழ் படத்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிரதீப் ஆண்டனி</h2><p>தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன் வெளியான அருவி திரைப்படத்தின் மூலம் நடிகராக களமிறங்கியவர் தான் பிரதீப் ஆண்டனி. </p><p>அதன்பின் வாழ் படத்தில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றார். நடிகர் கவினின் நண்பரான இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7வது சீசனில் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார், அதற்கு நிகழ்ச்சியில் அவர் பங்குபெற்ற விதம் தான். </p><p>சில பெண் போட்டியாளர்கள் கொடுத்த புகாரால் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் குழு ரெட் கார்டு கொடுத்து அனுப்பியதை மக்கள் தவறு என இணையத்தில் கருத்துக்கள் தெரிவித்து வந்தனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cbe2da4-62ec-40b6-82d8-797602e9e445/26-6a96d761a5a26.webp' /></p><h2>விவாகரத்து</h2><p>
பிக்பாஸ் பிறகு பிரதீப் ஆண்டனி கடந்த 2024ம் ஆண்டு பூஜா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. </p><p>இந்த நிலையில் பிரதீப் தனது இன்ஸ்டாவில் மனைவி மற்றும் குழந்தையை பிரிந்துவிட்டதாக ஒரு பெரிய பதிவு போட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f0b105e-3923-4c68-8afd-c9c0d9e32d77/26-6a96d75fd3bac.webp' /></p><p>
</p><p>
ஒரு நல்ல குடும்பத்தை அமைத்துக்கொண்டு, என் குழந்தைக்கு சிறந்த தந்தையாக வாழ வேண்டும் என்பதுதான் என் வாழ்நாளின் மிகப்பெரிய கனவாக இருந்தது. </p><p>ஆனால், எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இணைந்து வாழ்வது ரொம்பவே கடினமாகிவிட்டது.
என் குழந்தையின் மீது நான் அளவுகடந்த பாசம் வைத்துள்ளேன். ஒவ்வொரு நொடியும் என் குழந்தையை ரொம்பவே மிஸ் பண்றேன் என பதிவு போட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89abce52-4bc1-400e-99fa-a007ff40c4bd/26-6a96d760dcdbe.webp' /></p>]]></content>
            <updated>2026-09-01T13:48:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[16 வயசு சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!! நடிகை பூமி பெட்னேகர் ஆதங்கம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/bhumi-pednekar-reacts-to-alleged-rape-16-age-girl-1788264729"></link>
            <id>https://viduppu.com/article/bhumi-pednekar-reacts-to-alleged-rape-16-age-girl-1788264729</id>
            <summary type="text">சிறுமி கூட்டுப் பாலியல்தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் தனியார் பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இணைந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சிறுமி கூட்டுப் பாலியல்</h2><p>தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் தனியார் பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இணைந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் நாடு முழுவதையும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. </p><p>சுமார் 43 கிலோமீட்டார் தூரம் ஓடிய பேருந்திலேயே இந்த கொடூரம் அரங்கியதாகவும் வடக்கு டெல்லியின் காஷ்மீரி கேட் பகுதி அருகே சிறுமையை விட்டுச் சென்றதாகவும் தகவல் வெளியானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4f149c4-76ff-498e-b1c9-9e4149819722/26-6a96c11be2c94.webp' /></p><p> குல்தீப், சந்தீப் என இருவரையும் காஷ்மீரி கேட் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் பாலிவுட் நடிகை பூமி பெட்னேகர் தனது சோசியல் மீடியாவில் கடும் கண்டத்தையும் ஆதங்கத்தையும் பகிர்ந்துள்ளார்.</p><h2>பூமி பெட்னேகர்</h2><p> </p><p>அதில், மீண்டும் மீண்டும் மீண்டும் இதே கொடூரம் நடப்பதை நாம் எப்படி பார்த்துக் கொண்டிருக்க முடியும் வெட்கக்கேடு என்று பதிவிட்டுள்ளார் பூமி பெட்னேகர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T13:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி! யாழ். ஊடகவியலாளர் ஒருவருக்கு விளக்கம் கோரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-request-for-explanation-from-a-journalist-1788268434"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-request-for-explanation-from-a-journalist-1788268434</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி
ஏற்படுத்தும் விதத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டார் என்ற காரணத்தை
சுட்டிக்காட்டி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி
ஏற்படுத்தும் விதத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டார் என்ற காரணத்தை
சுட்டிக்காட்டி ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சனுக்கு அரச ஊடக நிறுவனம்
ஒன்றினால் விளக்கம் கோரப்பட்டுள்ளமை குறித்து வடக்கு ஊடவியளாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.</p><p>
தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பிரமுகர்கள் சிலரால் குறித்த ஊடகவியலாளர்
பணியாற்றும் அரச தொலைக்காட்சி நிறுவனத்துக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய
குறித்த ஊடகவியலாளரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p>
அண்மையில் யாழ் மாவட்ட செயலகத்திற்கு நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார விஜயம்
செய்தபோது நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது போராட்டத்தை செய்தி
அறிக்கையிட்டமை, காணாமல் ஆக்கப்பட்டோர் ஒருவரது தாயின் அவலங்களை அமைச்சருக்கு
வெளிப்படுத்தியமை,ஊடகத் துறை பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன யாழ் மாவட்ட
செயலகத்திற்கு வருகைதந்த போது போராட்டம் நடத்தியமை உள்ளிட்ட பல காரணங்களை
சுட்டிக்காட்டியே விளக்கம் கோரப்பட்டுள்ளது.</p><p></p><h2>சுயாதீனமாக செயற்படும் நிலை</h2><p>இந்த விடயத்தை எமது ஊடகம் ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சனை தொடர்புகொண்டு கேட்ட நிலையில் இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார்.

மேலும் தான் கடிதம் மூலம் விளக்கத்தை வழங்கியுள்ளதாக எமக்கு சுட்டிகாட்டினார்.</p><p>
</p><p>
இது தொடர்பில் எழுத்து மூலம் கோரப்பட்டால் ஊடக நிறுவனத்திற்கு விளக்கமளிக்க
முடியும் என குறித்த ஊடகவியலாளரால் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவ்வாறு செய்ய
முடியாது எனவும் இனி செய்தி அனுப்ப தேவையில்லை என்றும் ஊடக அடையாள அட்டையை&nbsp; காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறும் குறித்த ஊடக நிறுவனத்தினரால்
அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
குறித்த ஊடகவியலாளர் சுயாதீனமாக செயற்படும் நிலையில் ஏனைய ஊடகங்களுக்கு செய்தி
அறிக்கையிட்டது தொடர்பாகவும், செம்மணி மனித புதைகுழி அகழ்வு செய்தி
அறிக்கையிடல் தொடர்பிலும், குறித்த ஊடகவியலாளரின் தனிப்பட்ட சமூக வலைத்தள
கணக்குகளின் செயற்பாடுகள் தொடர்பாகவும் தேசிய மக்கள் சக்தியினரால் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளது என பிராந்திய ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>
ஊடகவியலாளர்கள் சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் செய்தி அறிக்கையிடலை
மேற்கோள்வதற்கு உரிமையை கொண்டுள்ளபோதும் மாற்றம் என கூறி மார்தட்டி வந்த தேசிய
மக்கள் சக்தி அரசாங்கத்தினால் கடந்த அரசாங்க காலங்களை விட மிக மோசமான முறையில்
குறித்த ஊடகவியலாளர் பணி செய்யும் ஊடக நிறுவனத்திற்கு முறையிட்டு
அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதன் மூலம் ஊடக சுதந்திரம்
கேள்விக்குள்ளாகியுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>
அண்மைக்காலமாக அரசாங்கத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் உள்ளிட்ட
விடயங்களை அறிக்கையிடும் ஊடகவியலாளர்களை கண்காணித்து அது தொடர்பாக பகிரங்கமாக
எச்சரிக்கை விடும் அளவுக்கு தேசிய மக்கள் சக்தியினரின் செயற்பாடு எல்லை
மீறியுள்ளமை ஊடகவியலாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T13:37:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் மாயமான பெற்றோர் - கண்ணீருடன் நீட் தேர்வு எழுதிய மாணவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/student-appear-exam-parent-miss-in-nepal-flood-1788269676"></link>
            <id>https://news.lankasri.com/article/student-appear-exam-parent-miss-in-nepal-flood-1788269676</id>
            <summary type="text">student appears neet exam while parent missing in nepal flood நேபாள வெள்ளத்தில் தனது பெற்றோர் மாயமான நிலையிலும், மஹாராஷ்டிராவை சேர்ந்த மாணவி அழுதேகொண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>student appears neet exam while parent missing in nepal flood நேபாள வெள்ளத்தில் தனது பெற்றோர் மாயமான நிலையிலும், மஹாராஷ்டிராவை சேர்ந்த மாணவி அழுதேகொண்டே நீட் தேர்வை எழுதியுள்ளார். </p><h3>

நேபாள வெள்ளத்தில் மாயமான பெற்றோர்
</h3><p>
சீன மற்றும் நேபாள எல்லையில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும், இந்தியர்கள் உட்பட 3,900 பேர் மாயமாகியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02c608d0-4d5e-4640-972a-9ecba04568c8/26-6a96d46e6e8b0.webp' /></p><p>மாயமாகியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். </p><p>

இதில், மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 67 பேர் கொண்ட குழு கைலாச யாத்திரை மேற்கொண்டிருந்த நிலையில் அவர்களும் வெள்ளத்தில் மாயமாகியுள்ளனர்.&nbsp;</p><p></p><p>
இதில் வெங்கட்ராம் அன்னம்தேவரா அனகா அன்னம்தேவரா தம்பதியும் மாயமாகியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/796edc92-91cc-4fe9-9fff-c2cbe9ebf14e/26-6a96d46d9ee4f.webp' /></p><p>

இவர்களின் மகளான தன்வி பெற்றோர் மாயமான சோகத்திலும், ஆகஸ்ட் 30 ஆம் திகதி நடைபெற்ற இளநிலை நீட் தேர்வை எழுதியுள்ளார். </p><h3> 

கண்ணீருடன் நீட் தேர்வு எழுதிய மாணவி
</h3><p>
தேர்வுக்கு பின்னர் அழுதுகொண்டே இந்த தேர்வை எழுதியாக தன்வி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c69f4820-bb26-4fe7-88f0-aaaedb18237f/26-6a96d46f38423.webp' /></p><p>

இது குறித்து பேசிய அவர், "என் பெற்றோர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா இல்லையா என்பது தெரியாத கவலையிலே தேர்வு எழுத சென்றேன். 

ஆனால் இந்த தேர்வை நான் எழுத வேண்டும் என எனது தந்தை விரும்பினார். என் பெற்றோருக்காக இதை செய்தேன். </p><p>

தேர்வுக்குச் சற்று முன்பு எனது அனுமதி அட்டையில் இருந்த புகைப்படத்தைப் பார்த்த போது என் தந்தையின் நினைவுகள் என்னை ஆட்கொண்டது. அந்த புகைப்படத்தை என் தந்தைதான் எடுத்தார். </p><p>

3 மணி நேர தேர்வில் ஒன்றரை மணி நேரம் அழுது கொண்டே இருந்தேன். என் கண்களில் கண்ணீர் பெருகியதால் சில சமயங்களில் கேள்விகளைப் படிப்பது கடினமாக இருந்தது. </p><p>இதில் தேர்வை விட மிகவும் கடினமான விடயம், தேர்வுக்கு முன்பு என் அம்மா எப்போதும் எனக்குத் தயிரும் சீனியும் கொடுப்பார், என் தந்தை என்னை வாழ்த்துவார் இந்த முறை எனக்கு அது கிடைக்கவில்லை.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcrL_ByTnbE/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcrL_ByTnbE/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcrL_ByTnbE/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Tanvi (@tanvimakesvideos)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>

அவர்கள் கட்டாயம் திரும்பி வர வேண்டும். அவர்கள் திரும்பி வந்தே ஆக வேண்டும். அவர்கள் திரும்பி வராமல் இருக்க முடியாது. என் அம்மா எனக்கு தயிர் சீனி ஊட்டிவிட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.</p><p> 

கயிலாய யாத்திரைக்கு சென்று தனது பெற்றோர் கடைசியாகக் காணப்பட்ட இடம் குடிவரவு மையம் மற்றும் நட்புப் பாலம் ஆகியவற்றுக்கு அருகிலுள்ள பகுதி என தான்வி தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T13:34:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் நடவடிக்கைகளுக்கு அல்பர்ட்டா முதல்வர் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/albertas-smith-says-canadians-confused-by-1788259075"></link>
            <id>https://canadamirror.com/article/albertas-smith-says-canadians-confused-by-1788259075</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே தீவிரமடைந்துள்ள வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டுவருமாறு அல்பர்ட்டா மாகாண முதலமைச்சர் டேனியல் ஸ்மித் நேரடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே தீவிரமடைந்துள்ள வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டுவருமாறு அல்பர்ட்டா மாகாண முதலமைச்சர் டேனியல் ஸ்மித் நேரடியாக அமெரிக்க மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p> 
அமெரிக்காவின் 'பாக்ஸ் பிசினஸ்' ஊடகத்தில் உரையாற்றிய அவர், கனடாவின் ஒன்டாரியோ ஏரியை 'லேக் அமெரிக்கா' என பெயர் மாற்றம் செய்ய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட முயற்சி குறித்து கனடிய மக்கள் கடும் குழப்பமும் ஏமாற்றமும் அடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.</p><p> 
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பொருளாதார மற்றும் இராணுவ உறவைக் சுட்டிக்காட்டிய டேனியல் ஸ்மித், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்களுடன் கனடியப் படைகள் தோளோடு தோள் நின்று போரிட்டதையும், விரைவில் வரவிருக்கும் 9/11 பயங்கரவாதத் தாக்குதல்களின் 25வது நினைவேந்தலையும் நினைவுகூர்ந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba628219-01f7-432d-917e-db10db935e49/26-6a96ab057a610.webp' /></p><p> 
கனடாவைப் பலவீனப்படுத்த அமெரிக்கா ஏன் விரும்புகிறது என்பது எங்களுக்குப் புரியவில்லை. </p><p>நாம் இணைந்து செயல்படும்போதே வலுவாக இருக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார். 
இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 22 முதல் கனடிய ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்தது.</p><p>
இதற்குப் பதிலடியாக செப்டம்பர் 8 முதல் அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என கனடா அறிவித்துள்ளது. </p><p>
இந்த வர்த்தகப் போரினால் இரு நாடுகளிலும் உள்ள சிறு வணிகங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பெருமளவிலான வேலைவாய்ப்புகள் பறிபோகும் என ஸ்மித் எச்சரித்துள்ளார்.
</p><p>ஒன்டாரியோ முதலமைச்சர் டக் ஃபோர்ட் உள்ளிட்டோர் அனைத்துக் காரணிகளையும் வர்த்தகப் பேச்சுவார்த்தையில் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்திய போதிலும், அல்பர்ட்டா மாகாணத்தின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிகளை வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஒரு பலப்பரீட்சைக் கருவியாகப் பயன்படுத்தப் போவதில்லை என ஸ்மித் மீண்டும் தெளிவுபடுத்தினார்.</p><p> 
ட்ரம்ப் நிர்வாகமும் கனடிய பிரதமர் மார்க் கார்னியின் அரசாங்கமும் உடனடியாகப் பேச்சுவார்த்தை மேஜைக்குத் திரும்பி இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T13:30:54+00:00</updated>
        </entry>
    </feed>
