<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-28T07:27:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[திபெத்தில் உடைந்த அணை - மீட்பு பணிகளை நிறுத்திய சீனா, நேபாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dam-burst-in-tibet-rescue-operations-halted-1787902009"></link>
            <id>https://news.lankasri.com/article/dam-burst-in-tibet-rescue-operations-halted-1787902009</id>
            <summary type="text">dam burst in tibet rescue operations halted for fresh flood warns: திபெத்தில் அணை உடைந்துள்ளதால் மீண்டும் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ள நிலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>dam burst in tibet rescue operations halted for fresh flood warns: திபெத்தில் அணை உடைந்துள்ளதால் மீண்டும் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ள நிலையில் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>திபெத்தில் உடைந்த அணை

</p><p>

சீனா - நேபாள எல்லையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 469 ஆக அதிகரித்துள்ளது. 1,468 பேர் மாயமாகியுள்ளனர். </p><p>

நேபாள மற்றும் காவல்துறை, ராணுவம் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. உள்நாட்டு மக்கள் மற்றும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் மாயமாகியுள்ளனர்.</p><p> 

இந்நிலையில், திபெத் பக்கத்தில் உள்ள கியிராங் எல்லைத் துறைமுகத்திற்கு மேலே உள்ள ஒரு நீர்த்தேக்க அணை ஒன்று உடைந்துஉள்ளதாக நேபாள காவல்துறை அறிவித்துள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="no" dir="ltr">Alert !! <a href="https://t.co/grYxhc5N7Q">pic.twitter.com/grYxhc5N7Q</a></p>&mdash; Nepal Police (@NepalPoliceHQ) <a href="https://x.com/NepalPoliceHQ/status/2093216702121325051?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

மேலும், "மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அனைத்துப் பாதுகாப்புப் பணியாளர்கள், மீட்புப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும், உடனடியாகப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளது. </p><p>

இதே போல், சீனாவும் மீண்டும் பாரிய வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் மீட்பு பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.&nbsp;</p><p>வெள்ள அச்சம் காரணமாக உள்ளூர் மக்கள் மலை மீது விரைந்து ஏறி வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T07:27:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்த விவகாரம்: நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட தயாராகும் அரசாங்கம்! சம்பிக்க சாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/champika-ranawaka-statement-about-constitution-1787900551"></link>
            <id>https://tamilwin.com/article/champika-ranawaka-statement-about-constitution-1787900551</id>
            <summary type="text">அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய
தரப்பினரது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய
தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீள பெறப் போவதில்லை என அவர்
குறிப்பிடுவது நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்டுச் செயற்படத் தயாராக இருப்பதையே
மறைமுகமாகக் காட்டுகின்றது என்றும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்
முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.</p><p>
கொழும்பில் நேற்று (27.08.2026) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர்
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p><h2>சர்வதேச மட்டங்களில் கடுமையான எதிர்ப்பு</h2><p>

அவர் மேலும் கூறுகையில், எவ்விதமான விரிவான கலந்துரையாடல்களும் இல்லாமல் நீதிபதிகளின் பதவிக்காலத்தை
இரண்டு ஆண்டுகளுக்கு அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்குத் தேசிய மற்றும்
சர்வதேச மட்டங்களில் கடுமையான எதிர்ப்புகள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d083510-940a-44d9-8add-495be15e5d7c/26-6a91361f4ac7b.webp' /></p><p>

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதோடு, இந்த தீர்மானத்தை மீள் பரிசீலிக்குமாறு மகாநாயக்க தேரர்களும் வலியுறுத்தியுள்ளனர்.</p><h2>நீதிபதிகளின் பதவிக்காலம்</h2><p>
இந்த சட்டமூலம் தற்போது உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ள
பின்னணியில், எவருக்காகவும் அதனை மீளப்பெறப் போவதில்லை என ஜனாதிபதி கூறுவது,
நீதிமன்றத்துக்கு அப்பாற்பட்டு செயற்பட அரசாங்கம் தயாராகின்றது என்பதையே
வெளிப்படுத்துகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa7eb7d0-00d7-467e-a373-2fa05aad436d/26-6a91362007777.webp' /></p><p>

நீதிபதிகளின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு அதிகரிப்பது அரசாங்கத்திற்கு மட்டுமே
சாதகமாக அமையுமே தவிர, நாட்டு மக்களுக்கு அதனால் எந்தவிதப் பயனும் கிடைக்கப்
போவதில்லை. அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நீதித்துறையை
மாற்றியமைக்கும் இவ்வாறான முயற்சிகள் முற்றிலும் தவறானவை என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T07:22:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் பேருந்து நிறுத்தத்தில் கூட்டம் மீது மோதியகார்; இருவர் உயிரிழப்பு 9 பேர் காயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/car-crashes-into-crowd-at-french-bus-stop-two-dead-1787893423"></link>
            <id>https://canadamirror.com/article/car-crashes-into-crowd-at-french-bus-stop-two-dead-1787893423</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வடமேற்கு பிரெஞ்சு நகரமான கேனில், புதன்கிழமை (26) மக்கள் கூட்டத்தின் மீது கார் ஒன்று புகுந்ததில், குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்ததுடன் ஒன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வடமேற்கு பிரெஞ்சு நகரமான கேனில், புதன்கிழமை (26) மக்கள் கூட்டத்தின் மீது கார் ஒன்று புகுந்ததில், குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்ததுடன் ஒன்பது பேர் காயமடைந்த&nbsp; நிலையில் அவர்களில் ஆறு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அன்னாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p> 

 விபத்து குரித்த விசாரணை இப்போதுதான் தொடங்கியுள்ளது என்று துணை அரசு வழக்கறிஞர் பிலிப் லியோனார்டோ வியாழக்கிழமை அதிகாலையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adfec840-8ec6-433e-b23c-9945e5a6f99c/26-6a9116b15d011.webp' /></p><h2>விபத்தை ஏற்படுத்திய ரஷ்ய வம்சாவளியைச் சேர்ந்தவர்&nbsp;</h2><p>

விபத்தை ஏற்படுத்திய ரஷ்ய வம்சாவளியைச் சேர்ந்தவர் என விவரிக்கப்பட்ட 26 வயது நபர் ஒருவர், புதன்கிழமை இரவு நகரின் பிரதான ரயில் நிலையம் அருகே மக்கள் கூட்டத்தின் மீது காரை ஓட்டிச் சென்றதாகக் கூறப்பட்டதை அடுத்து, காவலில் வைக்கப்பட்டார்.
</p><p>
சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாகவும், விபத்தில் ஏற்பட்ட காயங்களால் மற்றொருவர் பின்னர் உயிரிழந்ததாகவும் பிரெஞ்சு காவல்துறை தெரிவித்துள்ளது. </p><p>

விபத்தை அடுத்து ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில் சம்பவ இடத்திலிருந்து 20 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவில் கைது செய்யப்பட்டார் என்று பிரெஞ்சு ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திற்கு ஒரு தகவல் மூலம் தெரிவிக்கப்பட்டது.
</p><p>
அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. 

தாக்குதலுக்குப் பிறகு, சந்தேக நபர் உளவுத்துறைக்கு அறிமுகமானவர் அல்ல என்றும், ஆனால் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக அவருக்கு முன்பு காவல்துறையுடன் தொடர்பு இருந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-28T07:16:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா ஏரியின் பெயரை மாற்றிய டிரம்ப்; சுட சுட பிரதமர் மார்க் கார்னி பதிலடி !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-renames-canadian-lake-mark-carney-retort-1787897383"></link>
            <id>https://canadamirror.com/article/trump-renames-canadian-lake-mark-carney-retort-1787897383</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவுடனான வர்த்தக மோதலுக்கு மத்தியில், வட அமெரிக்காவின் முக்கியமான ஐந்து பெரிய ஏரிகளில் ஒன்றான Lake Ontario-வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவுடனான வர்த்தக மோதலுக்கு மத்தியில், வட அமெரிக்காவின் முக்கியமான ஐந்து பெரிய ஏரிகளில் ஒன்றான Lake Ontario-வின் பெயரை அமெரிக்க அரசு பயன்பாட்டில் “Lake America” என மாற்ற உத்தரவிட்டுள்ளார்.</p><p> 
 
 இந்த பெயர் மாற்றம் அமெரிக்க மத்திய அரசின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டுக்கு மட்டுமே பொருந்தும். கனடா, சர்வதேச அமைப்புகள் அல்லது பிற நிறுவனங்கள் பழைய பெயரான Lake Ontario-வை தொடர்ந்து பயன்படுத்தலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5a3c4f3-b361-40c5-bf49-e174d2709d92/26-6a912628d8e21.webp' /></p><h2>நியூயார்க் இதை அந்த பெயரில் அழைக்காது</h2><p>
</p><p> 
இந்த அறிவிப்புக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 
400 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றை கொண்ட இந்த ஏரியின் பெயர், கனடா மற்றும் அமெரிக்கா நாடுகளாக உருவாவதற்கு முன்பே பயன்பாட்டில் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

அத்துடன் நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுலும் “நியூயார்க் இதை அந்த பெயரில் அழைக்காது” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
</p><p> 
Lake Ontario-வின் நீர்ப்பரப்பில் சுமார் 52 சதவீதம் கனடாவிலும், மீதமுள்ள பகுதி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்திலும் அமைந்துள்ளது.</p><p>

 இதனால் பெயர் மாற்றம் கனடாவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஏற்கனவே கனடாவுடன் பல பில்லியன் டாலர் வர்த்தக வரிகள் தொடர்பாக மோதல் நீடித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை அமெரிக்கா - கனடா உறவை மேலும் பதற்றமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-28T07:16:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொத்த கடனையும் 10 ஆண்டுகளுக்குள் இலங்கை செலுத்தும்! நந்தலால் வீரசிங்க உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-to-pay-off-debt-within-10-years-1787898814"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-to-pay-off-debt-within-10-years-1787898814</id>
            <summary type="text">இதுவரைகாலமும் தாம் பெற்றுள்ள கடன் தொகையை செலுத்தும் முழுத் திறனையும் இலங்கை கொண்டுள்ளது என தெரிவித்த மத்தியவங்கி ஆளுநர், அடுத்த 10 ஆண்டுகளில் எவ்வித இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இதுவரைகாலமும் தாம் பெற்றுள்ள கடன் தொகையை செலுத்தும் முழுத் திறனையும் இலங்கை கொண்டுள்ளது என தெரிவித்த மத்தியவங்கி ஆளுநர், அடுத்த 10 ஆண்டுகளில் எவ்வித இடையூறும் இன்றி கடமைகளை நாடு நிறைவேற்றும் எனவும் உறுதியளித்துள்ளார்.
</p><p>
கொழும்பில் நடைபெற்ற இலங்கை வெளிநாட்டுத் தூதர்கள் கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இந்த விடயத்தை வெளிப்படுத்தினர். </p><p>

மேலும் கடன் மறுசீரமைப்புச் செயல்முறையின் வெற்றியே இதற்குக் காரணம் என்றும், நாடு கடன் செலுத்தத் தவறுதல் அல்லது முன்னர் சந்தித்ததைப் போன்ற மற்றொரு கடன் நெருக்கடியை எதிர்கொள்ளாது எனவும் அவர் உறுதியளித்தார். </p><p></p><h2>தனிநபர் வருமானம்</h2><p>

நாட்டின் கடன் மறுசீரமைப்பு நிறைவடைந்த நிலையில், அடுத்த பத்தாண்டுகளில் நாட்டின் ஆண்டு வெளிநாட்டுக் கடன் கடமைகள் 4 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் குறைவாக இருக்கும் என கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7858d721-0d3e-4296-b8f8-a87e48b6672b/26-6a912ed11ae79.webp' /></p><p>
</p><p>
அந்தக் கடன் கடமைகளைச் செலுத்துவதற்குத் தேவையான உத்தியோகப்பூர்வ கையிருப்பு வலுவாக அதிகரித்து வருகிறது எனவும் கூறியுள்ளார்.
</p><p>
மேலும் தற்போது 6.8 பில்லியன் அமெரிக்க டொலராக உள்ள மத்திய வங்கியின் மொத்த உத்தியோகப்பூர்வ கையிருப்பு, இந்த ஆண்டின் இறுதியில் 8 பில்லியன் அமெரிக்க டொலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
வரும் ஆண்டுகளில், சுற்றுலா வருவாய், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடமிருந்து வரும் பணப் பரிமாற்றங்கள், மற்றும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் நிதி உதவி ஆகியவை கணிசமாகப் பங்களிப்பதன் மூலம், இந்தக் கையிருப்பு 10 பில்லியன் அமெரிக்க டொலர் என்ற அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தனிநபர் வருமானம் ஆகியவை நெருக்கடிக்கு முந்தைய நிலைகளை வெற்றிகரமாக எட்டியுள்ளதால், நாடு தனது நெருக்கடிக்கு முந்தைய வலிமைக்குத் திரும்பி வருகிறது.</p><p></p><h2>உலகளாவிய எரிபொருள் விலை</h2><p>

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, இந்த ஆண்டும் இலங்கை 4 முதல் 5 சதவிகிதம் வரை வளர்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41d72fc8-c6e9-4276-b10e-6d47da049b9a/26-6a912ed1c87de.webp' /></p><p> </p><p>

மேலும், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 5 சதவிகித வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.</p><p> </p><p>

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய பதட்டமான சூழலுக்கு மத்தியில், உலகளாவிய எரிபொருள் விலைகள் மற்றும் பருவநிலை மாற்றத்தில் உள்ள நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியிலும், இந்தப் பொருளாதார இலக்குகளை அடைந்ததற்காக இலங்கை சர்வதேச அளவில் பாராட்டப்பட்டுள்ளது.
</p><p>
எரிபொருள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்ததன் காரணமாக பணவீக்கம் தற்காலிகமாக 7 சதவிகிதம் உயர்ந்தபோதிலும், மத்திய வங்கியின் பணவியல் கொள்கை நடவடிக்கைகளால் அடுத்த ஆண்டின் முதல் பாதியில் அது 5 சதவிகிதம் என்ற ஒற்றை இலக்க நிலைக்குக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> 

மேலும், இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் நடப்புக் கணக்கு உபரி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடப்புக் கணக்கு உபரியுடன் இந்த ஆண்டை நிறைவு செய்யும் பாதையில் இலங்கை உள்ளது.</p><p> 

அரசாங்க வருவாய், 2021-2023-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவிகிதமாக இருந்ததிலிருந்து, இன்று 16 சதவிகிதமாக இருமடங்காகியுள்ளது.

மேலும், நாட்டின் முதன்மைக் கணக்கு உபரியானது, சர்வதேச நாணய நிதியத்தால் நிர்ணயிக்கப்பட்ட 2.3 சதவீத இலக்கை விட அதிகமாக உள்ளது. </p><p>

தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக நிலவும் நடப்புக் கணக்கு உபரி, அதிகரித்து வரும் சுற்றுலா வருவாய் மற்றும் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், இலங்கை தனது இறையாண்மைக் கடன் மதிப்பீட்டை தற்போதைய 'CCC' நிலையிலிருந்து, நெருக்கடிக்கு முந்தைய 'B' நிலைக்கு உயர்த்துவதற்காக சர்வதேச மதிப்பீட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T07:12:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக மேலும் இரு மனுக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-more-petitions-in-support-22nd-amendment-1787901192"></link>
            <id>https://jvpnews.com/article/two-more-petitions-in-support-22nd-amendment-1787901192</id>
            <summary type="text">&amp;nbsp; ஜனாதிபதி அனுரகுமார அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவித்து உயர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜனாதிபதி அனுரகுமார அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் மேலும் இரண்டு இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><p>

 

அவற்றில் ஒரு மனு சிஹல உருமயவின் தலைவர் சரத் மனமேந்திரவாலும், மற்றைய மனு ஓய்வுபெற்றோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் பொதுச் செயலாளர் கே. சரத் லால் பெரேராவாலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/add2c40c-483f-4279-819c-ee1eac062734/26-6a91350a0bdc9.webp' /></p><p>
</p><p>
 

குறித்த மனுக்களில் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் சட்டப்பூர்வமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>

 

 குறித்த சட்டமூலத்தை சர்வஜன வாக்கெடுப்பு இன்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் எனத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T07:10:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரிய மின்படலங்கள் பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: காலநிலை மாற்றத்தால் புதிய தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/notice-to-users-of-solar-panels-1787900844"></link>
            <id>https://tamilwin.com/article/notice-to-users-of-solar-panels-1787900844</id>
            <summary type="text">வீடுகள் மற்றும் நிறுவனங்களின் மேற்கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள 300 கிலோவோட்டிற்கும் அதிகமான திறன் கொண்ட மேற்கூரை சூரிய மின்படலங்களை, காலை 8.00 மணி முதல...</summary>
            <content type="html"><![CDATA[<p>வீடுகள் மற்றும் நிறுவனங்களின் மேற்கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள 300 கிலோவோட்டிற்கும் அதிகமான திறன் கொண்ட மேற்கூரை சூரிய மின்படலங்களை, காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க மேற்கண்ட கோரிக்கையை விடுத்துள்ளார்.</p><h2>

தற்காலிகமாக இடைநிறுத்தம்</h2><p>இதன்படி, கடந்த 27ஆம் திகதி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை குறித்த 300 கிலோவோட்டிற்கும் அதிகமான உற்பத்தித் திறன் கொண்ட மின்படலங்களை தற்காலிகமாக செயலிழக்கச் செய்யுமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06416e73-c3b8-4a2a-80fe-d70489da3501/26-6a9133ff568cc.webp' /></p><p> மின்சாரக் கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பேணுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இலங்கையில் சூரிய மின்சக்தி உற்பத்தி மற்றும் தேசிய மின் கட்டமைப்புடன் அதன் இணைப்பு தொடர்பான விதிமுறைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன.</p><p>

இதற்கமைய, 300மறுக்கும் அதிகமான திறன் கொண்ட சூரிய மின்படலங்களை வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் அவற்றின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T07:08:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலவருட சுழலில் சிக்கிய நேபாளதின் ஒரு நாள் பொருளாதார பேரழிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/flash-floods-have-caused-significant-damage-1787896200"></link>
            <id>https://ibctamil.com/article/flash-floods-have-caused-significant-damage-1787896200</id>
            <summary type="text">நேபாளத்தைத் தாக்கிய திடீர் வெள்ளத்தால்&amp;nbsp;நேபாளம் - சீனா இடையிலான முக்கிய வீதிகளும் சேதமடைந்துள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தைத் தாக்கிய திடீர் வெள்ளத்தால்&nbsp;நேபாளம் - சீனா இடையிலான முக்கிய வீதிகளும் சேதமடைந்துள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>நேபாளத்தின் பொருளாதார விடயம் தொடர்பில் விளக்கம் வழங்குகையில் அந்நாட்டு பிரதமர் பலேந்திர ஷா மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில் ''பெரும் உயிர் மற்றும் சொத்து இழப்புகளை ஏற்படுத்தியதுடன், நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்பை இந்த வெள்ளம் ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><h2>பொருளாதார சிக்கல்</h2><p>நேபாளத்தில் கடந்த புதன்கிழமை (26) ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று (27) 469 ஆக அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04286cc7-a5bb-4d48-a9b7-39b167a22807/26-6a913076a4e42.webp' /></p><p> </p><p>மேலும், 1,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் எட்டு மாவட்டங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்களுடன் 80 பாலங்கள் மற்றும் பல வீதிகளும் அழிக்கப்பட்டுள்ளன.</p><p>
மின்சார விநியோகம் உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்புகளும் பாரியளவில் சேதமடைந்துள்ளதால், இந்த அனர்த்தம் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் உள்ள நேபாளத்திற்கு மேலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது" என நேபாள பிரதமர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><h2> சீனாவுடனான முக்கிய எல்லை </h2><p>சமீபத்திய பேரழிவு ரசுவாவைச் சுற்றியுள்ள இமயமலை எல்லைப் பகுதியில் தொடங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cff5f8b0-f7d3-4242-a2aa-007e2d63f313/26-6a91307765921.webp' /></p><p>
</p><p>
அழிவு வீடுகளோடு நின்றுவிடவில்லை. 19 வாகனங்கள் செல்லும் பாலங்களும், சுமார் 40 கி.மீ. சாலையும் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p> நீர்மின் திட்டங்கள் பாதிக்கப்பட்டதோடு, சீனாவுடனான முக்கிய எல்லை வர்த்தகப் பாதையும் தடைபட்டது.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட செயற்கைக்கோள் பகுப்பாய்வு, உயரமான இமயமலைப் பகுதியில் ஒரு பனிப்பாறைச் சரிவு ஏற்பட்டதைச் சுட்டிக்காட்டியது. </p><p>இதுவே இந்தப் பேரழிவை மேலும் பேரழிவுமிக்கதாக ஆக்குகிறது. திடீரென உயரமான இடத்தில் ஏற்படும் வெள்ளம்பாறைகளையும் இடிபாடுகளையும் சுமந்து செல்வது, சாலைகள், பாலங்கள் மற்றும் மின்சார உள்கட்டமைப்புகளை நிமிடங்களிலேயே அழித்துவிடும்.</p><p>

2025 ஜூலை மாதத்தில் இப்பகுதி ஏற்கனவே ஒரு பெரிய பனிப்பாறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. அந்தப் பேரழிவு ரசுவாகதி எல்லைக் கடக்கும் இடம், நேபாள-சீன நட்புறவுப் பாலம், சாலைகள், உலர் துறைமுகம் மற்றும் பல நீர்மின் திட்டங்களைச் சேதப்படுத்தியது.</p><h2>46.7 பில்லியன் நேபாள ரூபாய்</h2><p> சியாஃப்ருபேசிக்கும் ரசுவாகதிக்கும் இடையிலான சுமார் 16 கி.மீ. சாலை பயணிக்க முடியாததாக ஆனது. கடுமையாகப் பாதிக்கப்பட்ட திட்டங்களில் 111 மெகாவாட் ரசுவாகதி நீர்மின் திட்டமும் ஒன்றாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ebab957-8e9a-4a60-9871-aca637cca510/26-6a9130781a7b1.webp' /></p><p>
</p><p>
தற்போது, ​​அதே பரந்த பிராந்தியம் மற்றொரு பேரழிவைச் சந்தித்துள்ளது. இங்குதான் நேபாளத்தின் பேரிடர் பிரச்சினை ஒரு பொருளாதாரப் பிரச்சினையாக மாறுகிறது. </p><p>அந்த நாடு பேரிடர்களுக்குப் பிறகு வெறுமனே புனரமைக்கவில்லை. அது, தனது முழுமையான பொருளாதார வருவாயை ஈட்டுவதற்கு முன்பே மீண்டும் சேதமடையக்கூடிய உள்கட்டமைப்பைப் புனரமைத்துக் கொண்டிருக்கிறது.</p><p>2024 செப்டம்பரில் ஏற்பட்ட வெள்ளமும் நிலச்சரிவுகளும் இதற்கு ஒரு தெளிவான உதாரணத்தை அளிக்கின்றன. இந்தப் பேரழிவினால் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பை உலக வங்கி 46.7 பில்லியன் நேபாள ரூபாய் என மதிப்பிட்டுள்ளது. </p><p>இது, 2025 நிதியாண்டின் நேபாள மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 0.8 சதவீதத்திற்குச் சமமாகும்.

உள்கட்டமைப்பில் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு 38.9 பில்லியன் நேபாள ரூபாய் ஆகும். சாலைகளில் மட்டும் சுமார் 28 பில்லியன் நேபாள ரூபாய் இழப்பு ஏற்பட்டது.</p><h2>சுமார் 80 சதவிகித நிலம் வெள்ளத்தில் மூழ்கியது</h2><p> </p><p>நீர்மின்சக்தித் துறையில் ஏற்பட்ட சேதம் 3 பில்லியன் நேபாள ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது, அதே சமயம் குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் துறைகளில் 5.9 பில்லியன் நேபாள ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa3d209f-e035-4457-b56c-8df09a6469e6/26-6a913078c6824.webp' /></p><p>
</p><p>
விவசாயத் துறைக்கு மேலும் 7.2 பில்லியன் நேபாள ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் 249 பேர் உயிரிழந்தனர், 177 பேர் காயமடைந்தனர் மற்றும் 10,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்தன. </p><p>ஏறக்குறைய 6,000 வீடுகள் முற்றிலுமாக அழிந்தன, மேலும் 13,000 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தன.

2017-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம், பொருளாதார ரீதியாகப் பார்க்கும்போது இன்னும் அதிக சேதத்தை ஏற்படுத்தியது. </p><p>இந்த வெள்ளம் நேபாளத்தின் 77 மாவட்டங்களில் 35 மாவட்டங்களைப் பாதித்தது. தெராய் பகுதியின் கணிசமான பகுதிகளில், சுமார் 80 சதவிகித நிலம் வெள்ளத்தில் மூழ்கியது.
</p><p>
நேபாளத்தின் வெள்ளப்பெருக்குக்குப் பிந்தைய மீட்புத் தேவைகள் மதிப்பீடு, மொத்த சேதங்களையும் இழப்புகளையும் 60.7 பில்லியன் நேபாள ரூபாய் (NPR) அல்லது அக்காலத்தில் சுமார் 584.7 மில்லியன் டொலர் என மதிப்பிட்டது. </p><p>இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 3 சதவீதமாகும். மீட்புத் தேவைகள் 73.2 பில்லியன் நேபாள ரூபாய் (NPR) அல்லது தோராயமாக 705 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டது.</p><p>

வீட்டுவசதித் துறைக்கு 187.9 மில்லியன் டொலர் என்ற மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது. நீர்ப்பாசனத் துறை சேதம் 168.1 மில்லியன் டொலராகவும், கால்நடை இழப்பு 102.7 மில்லியன் டொலராகவும், விவசாயத் துறை இழப்பு 69.5 மில்லியன் டொலராகவும் இருந்ததாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T07:02:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மல்வத்து - அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்ற ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-receive-blessing-asgiri-mahanayake-monks-1787898917"></link>
            <id>https://tamilwin.com/article/president-receive-blessing-asgiri-mahanayake-monks-1787898917</id>
            <summary type="text">கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா
விழாவில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்க, மல்வத்து மற்றும் அஸ்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா
விழாவில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்க, மல்வத்து மற்றும் அஸ்கிரி தரப்பு
மகா நாயக்க தேரர்கள் உட்பட அனுநாயக தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.</p><p>ஜனாதிபதி குறித்த விஜயத்தை நேற்றைய தினம்(27.08.2026) மேற்கொண்டிருந்தார்.</p><h2>தேரர்களிடம் ஆசி பெற்ற&nbsp;ஜனாதிபதி </h2><p>
</p><p>
முதலில் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மல்வத்து தரப்பின்
மகா நாயக்க&nbsp; திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள மகா நாயக்க
தேரரைச் சந்தித்து ஆசி பெற்றமையுடன், அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடலிலும்
ஈடுபட்டுள்ளார்.
</p><p>
அதனைத் தொடர்ந்து, மல்வத்து தரப்பின் அனுநாயக அதிவணக்கத்துக்குரிய
திம்புல்கும்புரே விமலதம்ம அனுநாயக தேரரையும் சந்தித்து, அவரிடமும் ஆசி
பெற்றதோடு சிறுகலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0db8498-50ae-4392-8f27-2f10e51f3460/26-6a912fd8130ea.webp' /></p><p>இதனை அடுத்து அஸ்கிரி மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி,
அஸ்கிரி தரப்பின் மகா நாயக்க வராகொட ஸ்ரீ ஞானரதன மகா
நாயக்க தேரரின் நலன் விசாரித்ததோடு அவருடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
</p><p>மேலும் மத்திய மாகாண ஆளுநர் நிபுணத்துவ வைத்தியர் ஹர்ச சுரங்கவும் இந்தச் சந்திப்பில்
இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T07:02:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூஜை விளக்கில் ஊதுபத்தி ஏற்றுபவரா நீங்க... இனி அந்த தவறை செய்யாதிங்க!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/not-light-an-incense-stick-from-the-puja-lamp-1787898730"></link>
            <id>https://jvpnews.com/article/not-light-an-incense-stick-from-the-puja-lamp-1787898730</id>
            <summary type="text">&amp;nbsp;பூஜை விளக்கில் இருந்து நேரடியாக ஊதுபத்தி ஏற்றுவதனால் வீட்டின் செழிப்பு மற்றும் நேர்மறை ஆற்றல் பாதிக்கப்படலாம் என்பது பாரம்பரிய நம்பிக்கையாக உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பூஜை விளக்கில் இருந்து நேரடியாக ஊதுபத்தி ஏற்றுவதனால் வீட்டின் செழிப்பு மற்றும் நேர்மறை ஆற்றல் பாதிக்கப்படலாம் என்பது பாரம்பரிய நம்பிக்கையாக உள்ளது. </p><p>எனவே ஊதுபத்தியை ஏற்ற தனியாக தீக்குச்சி அல்லது கற்பூரத்தை பயன்படுத்தலாம்

இந்து மரபில் பூஜையின்போது ஏற்றப்படும் விளக்கு தெய்வீக ஒளி மற்றும் செழிப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b124417-92ff-446c-b5b0-d39574bea4f1/26-6a912b6c5297e.webp' /></p><h2>வீட்டின் நேர்மறை ஆற்றல் பாதிக்கப்படலாம்</h2><p> </p><p>பூஜை விளக்கில் இருந்து நேரடியாக ஊதுபத்தியை ஏற்றுவது சில ஆன்மிக நம்பிக்கைகளின்படி தவிர்க்க வேண்டிய செயலாகக் கூறப்படுகிறது. 

இதனால் வீட்டின் நேர்மறை ஆற்றல் பாதிக்கப்படலாம் என்ற நம்பிக்கையும் உள்ளது. </p><p>குறிப்பாக மகாலட்சுமியின் அருள் குறைந்து பொருளாதார பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே&nbsp; &nbsp;ஊதுபத்தியை ஏற்றுவதற்கு தனியாக தீக்குச்சி அல்லது கற்பூரத்தை பயன்படுத்துவது பாரம்பரியமாக பரிந்துரைக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e584b1e8-e0fb-4079-910d-e20e9609d33d/26-6a912b6d09849.webp' /></p><h3>&nbsp;இருளை அகற்றி நல்ல எண்ணங்களை உருவாக்கும்&nbsp;பூஜை விளக்கு</h3><p> பூஜையில் பயன்படுத்தப்படும் பொருட்களை சுத்தமாகவும் முறையாகவும் பயன்படுத்துவது முக்கியமாகக் கருதப்படுகிறது

பூஜை விளக்கின் முக்கியத்துவம்
இந்து மரபில் தினசரி பூஜையின்போது விளக்கேற்றுவது முக்கியமான ஆன்மிக நடைமுறையாகக் கருதப்படுகிறது. </p><p>விளக்கின் ஒளி தெய்வீக சக்தியின் அடையாளமாகவும், இருளை அகற்றி நல்ல எண்ணங்களை உருவாக்கும் குறியீடாகவும் பக்தர்களால் பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/450abe61-d631-4200-b2d4-38a61e3f3f91/26-6a912b6e73283.webp' /></p><p>

ஏனவே எரிந்து கொண்டிருக்கும் பூஜை விளக்கிலிருந்து ஊதுபத்தியை பற்றவைப்பது சில சாஸ்திர மற்றும் ஆன்மிக நம்பிக்கைகளில் தவிர்க்க வேண்டிய செயலாகக் கூறப்படுகிறது.</p><p>செழிப்புடன் தொடர்புடைய நம்பிக்கை
சாஸ்திர நம்பிக்கைகளின்படி, பூஜைக்காக ஏற்றப்படும் விளக்கு வீட்டின் செழிப்பு மற்றும் தெய்வீக அருளைக் குறிக்கும் அடையாளமாக பார்க்கப்படுகிறது.</p><p> அந்த விளக்குச் சுடரிலிருந்து வேறு பொருளை பற்றவைப்பது நல்லதல்ல என்றும், இதனால் குடும்பத்தில் பொருளாதார சிக்கல்கள் அல்லது தேவையற்ற செலவுகள் அதிகரிக்கலாம் .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2731d205-bf34-49e2-a26b-f052431bb4cc/26-6a912b6db88dc.webp' /></p><p> </p><p>

 இந்த நடைமுறை வீட்டில் மகாலட்சுமியின் அருள் குறைவதற்கான காரணமாக அமையலாம் என்ற ஆன்மிக கருத்தும் உள்ளது. 

 பூஜை விளக்கின் ஒளி வீட்டில் நேர்மறையான சூழலை உருவாக்கும் என்று கருதப்படுகிறது.</p><p> அதே சுடரில் இருந்து ஊதுபத்தி அல்லது சாம்பிராணியை பற்றவைப்பது விளக்கின் புனிதத்தன்மையை பாதிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. 

இதனால் வீட்டின் ஆன்மிக சூழலில் எதிர்மறையான தாக்கம் ஏற்படலாம் . </p><p>எனவே, பூஜையில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய முறையில் தனித்தனியாக பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-28T07:00:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை! அஜித் பி. பெரேரா குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ajith-p-perera-statement-1787898938"></link>
            <id>https://tamilwin.com/article/ajith-p-perera-statement-1787898938</id>
            <summary type="text">அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள்
முற்றிலும் தவறானவை என்றும், அவர் இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல, மாறாக
மக்களின் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள்
முற்றிலும் தவறானவை என்றும், அவர் இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல, மாறாக
மக்களின் பிரதிநிதி மாத்திரமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் ஐக்கிய
மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.</p><p>
கொழும்பில் நேற்றைய தினம் (27.08.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத்
தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>அரசமைப்புத் திருத்தம்</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், 22ஆவது அரசமைப்புத் திருத்தம் அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும்
கேட்டறிந்த பின்னரே கொண்டுவரப்பட்டதாக ஜனாதிபதி கூறுவது உண்மைக்குப்
புறம்பானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8e5cf78-c719-4d23-9016-cf4dca1da3fb/26-6a9130bf1232e.webp' /></p><p> </p><p>நாட்டின் நீதியரசர்கள், நீதிச் சேவை ஆணைக்குழு, இலங்கை
சட்டத்தரணிகள் சங்கம், நாடாளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வைக் குழு மற்றும்
இலங்கை சட்ட ஆணைக்குழு என எந்தவொரு முக்கிய தரப்பினருடனும் அவர் இது குறித்து
எவ்வித கலந்தாலோசனையையும் நடத்தவில்லை.
</p><p>
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இது குறித்துக் கலந்துரையாட ஏப்ரல் மாதத்திலேயே
நேரம் கோரியிருந்த போதிலும், அமைச்சரவை ஒப்புதல் பெற்று வர்த்தமானி அறிவித்தல்
வெளியிடப்பட்ட பின்னரே அவர்களுக்குச் சந்திப்பு வாய்ப்பளிக்கப்பட்டது.</p><h2>ஆலோசனை</h2><p> </p><p>தான்
கூறுவது தவறு என்றால், எந்தெந்த நாள்களில் எந்தெந்தத் தரப்பினருடன் ஆலோசனை
நடத்தப்பட்டது என்ற விவரங்களை ஜனாதிபதி உடனடியாக வெளியிட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c434b7c-b9c5-4035-ae3d-6cc8f67ce1ff/26-6a9130bfdb2eb.webp' /></p><p>

ஜனாதிபதி திறந்த மனதுடன் செயற்படாமல் தன்னிச்சையாக எடுத்துள்ள
இத்தீர்மானத்தின் விளைவை இறுதியில் முழு நாடும் அனுபவிக்க நேரிடும்.
</p><p>
5 வருட காலத்துக்கு மக்கள் வழங்கிய ஆணையின்படி ஒரு மக்களின் பிரதிநிதியாக
மட்டுமே ஜனாதிபதி செயற்பட முடியுமே தவிர, நாட்டின் உரிமையாளரைப் போலச் செயற்பட
முடியாது என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T06:57:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை விஜயலட்சுமி எடுத்த முடிவால் சீமான் மகிழ்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/seeman-happy-by-actress-vijayalakshmi-twist-video-1787900306"></link>
            <id>https://jvpnews.com/article/seeman-happy-by-actress-vijayalakshmi-twist-video-1787900306</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள புதிய காணொளியில், சிலர் தன்னையும் சீமானையும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள புதிய காணொளியில், சிலர் தன்னையும் சீமானையும் தொடர்ந்து அவதூறாகப் பேசி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>

தவறை உணர்ந்து ஒருவர் மன்னிப்பு கேட்கும்போது, அவரைத் தொடர்ந்து விமர்சிக்காமல் வாழவிடுவதுதான் மனிதநேயம் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cc6ce03-12c3-4161-a971-3f28027d397c/26-6a91319400afe.webp' /></p><h2>&nbsp;சீமானுக்கு ஆதரவாக உறுதியாக நிற்பேன்</h2><p>
</p><p>
மேலும், தன்னைப் பற்றியும் சீமான் குறித்தும் தொடர்ந்து அவதூறாகப் பேசினால், இனி சீமானுக்கு ஆதரவாக உறுதியாக நிற்பேன் என்றும் விஜயலட்சுமி கூறியுள்ளார்.
</p><p>
நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாகப் பேசுவதற்காக தனக்கு பணம் வழங்கப்பட்டதாக கூறப்படும் விமர்சனங்களை மறுத்துள்ள அவர்,பணத்தைக் கொடுத்து தன்னை யாராலும் வாங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இதுவரை சீமானுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டு வந்த விஜயலட்சுமி, தற்போது அவருக்கு ஆதரவாக பேசியிருப்பது அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>
முன்னதாக, சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்திருந்த முறைப்பாடு தொடர்பான வழக்கில், இருதரப்புக்கும் இடையே உச்சநீதிமன்றத்தில் சமரசம் எட்டப்பட்டது.</p><p></p><p>

 அதேசமயம் இந்த காணொளி மூலம் தமிழக வெற்றிக் கழகத்தினரை அவர் மறைமுகமாக விமர்சித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் வெளியாகி வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-28T06:55:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை புரட்டிப்போட்ட பெருவெள்ளம்: 472 பேர் பலி - 1 535 பேர் காணாமல் போனதாக தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-toll-in-nepal-floods-rises-1787899767"></link>
            <id>https://tamilwin.com/article/death-toll-in-nepal-floods-rises-1787899767</id>
            <summary type="text">நேபாளம் - சீன எல்லைப் பகுதியில் இமயமலையில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 472 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் - சீன எல்லைப் பகுதியில் இமயமலையில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 472 ஆக அதிகரித்துள்ளது. </p><p>

மேலும், 1,535 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களில் நேபாளத்தைச் சேர்ந்த 469 பேரும், திபெத்தைச் சேர்ந்த மூவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
 இயற்கைப் பேரழிவு</h2><p>
கடந்த 26ஆம் திகதி பாறைகள், பனி, மண் மற்றும் பெருக்கெடுத்த நீர் ஆகியவை ஒன்றிணைந்து ஏற்பட்ட இயற்கைப் பேரழிவினால் இப்பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்நிலையில், “வான்டர்” என்ற வர்த்தக செயற்கைக்கோள் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்கள், வெள்ளத்திற்கு முன்னரும் பின்னரும் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்களை வெளிப்படுத்தியுள்ளன.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Our thoughts are with the communities affected by this week’s devastating flash floods in Nepal. <br><br>To support ongoing response and recovery efforts, Vantor has activated its Open Data Program, providing free access to high-resolution satellite imagery for frontline organizations… <a href="https://t.co/RqQJdqAghr">pic.twitter.com/RqQJdqAghr</a></p>&mdash; Vantor (@vantortech) <a href="https://x.com/vantortech/status/2093038515927842948?ref_src=twsrc%5Etfw">August 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
2024ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் திகதி எடுக்கப்பட்ட படங்களில், ஆற்றங்கரையில் அமைந்திருந்த பல அடுக்குகளைக் கொண்ட பெரிய எல்லைக் கட்டிடம், சாலைகள், நடைபாதைகள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புகள் தெளிவாகக் காணப்படுகின்றன.</p><h2>

வர்த்தக செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்கள்</h2><p>

ஆனால், 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் திகதி, அதாவது பேரழிவு ஏற்பட்ட ஒரு நாளுக்குப் பின்னர் எடுக்கப்பட்ட படங்களில், அந்த உள்கட்டமைப்புகளில் பெரும்பாலானவை பாறைகள், மண் மற்றும் இடிபாடுகளால் முழுமையாக மூடப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/728aac89-81e9-46b2-a4e0-d509bc20daad/26-6a9130cfb93e9.webp' /></p><p>

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பெறப்பட்ட ஏனைய செயற்கைக்கோள் படங்களிலும் வீடுகள், பாலங்கள், சாலைகள் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதையோ அல்லது இடிபாடுகளுக்குள் புதையுண்டுள்ளதையோ காண முடிகிறது.
</p><p>
இந்தப் பேரழிவைத் தொடர்ந்து, நேபாளத்தில் 977 பேரும், திபெத்தில் 558 பேரும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இன்னும் கண்டுபிடிக்கப்படாதவர்களில், அப்பகுதி வழியாகப் பயணித்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் உட்பட குறைந்தது 540 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T06:55:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளம்: சடலங்களில் நகைகளை திருடும் கும்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/nepal-floods-gang-steals-jewelry-1787899809"></link>
            <id>https://ibctamilnadu.com/article/nepal-floods-gang-steals-jewelry-1787899809</id>
            <summary type="text">நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை தேடி அவர்களின் நகைகளை ஒரு கும்பல் திருடுவதாக வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.

நேபாள இயற்கை பேரிடர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை தேடி அவர்களின் நகைகளை ஒரு கும்பல் திருடுவதாக வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.</p><p>

நேபாள இயற்கை பேரிடர் வெள்ளத்தில் சிக்கி இதுவரையிலும் 469 பேர் பலியாகியுள்ளனர், ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை காணவில்லை, மீட்புபணிகள் நடைபெற்று வருகின்றன.</p><p>

கடந்த பல்லாண்டுகளில் நேபாளம் காணாத மிக மோசமான இயற்கை பேரிடராக இது அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42410547-d16d-406d-94e1-f1ffa7147747/26-6a9130833a5eb.webp' /><br></p><p>
</p><p>
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ரசுவா, நுவாகோட், தாடிங், சிட்வான் போன்ற மாவட்டங்களில் மீட்புபணிகள் நடைபெற்று வருகிறது.
</p><p>
இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த நபர்களின் சடலங்களை தோண்டி எடுத்து அவர்களின் நகைகளை கும்பலொன்று திருடும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

அவர்களின் பெயர் உமேஷ், மதன் என்பதும் அவர்களை கைது செய்த போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.<br></p>]]></content>
            <updated>2026-08-28T06:54:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளப் பெருவெள்ளம்: மாயமான சுவிஸ் குடிமகள் குறித்து வெளியாகியுள்ள செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/missing-swiss-women-in-nepal-flood-found-alive-1787899890"></link>
            <id>https://news.lankasri.com/article/missing-swiss-women-in-nepal-flood-found-alive-1787899890</id>
            <summary type="text">A Swiss woman missing in Nepal flash flood has been found alive: நேபாளப் பெருவெள்ளத்தின்போது மாயமான சுவிஸ் குடிமகள் ஒருவர் உயிருடன் இருப்பது தெரியவந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>A Swiss woman missing in Nepal flash flood has been found alive: நேபாளப் பெருவெள்ளத்தின்போது மாயமான சுவிஸ் குடிமகள் ஒருவர் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது.</p><p>


நேபாள - திபெத் பெருவெள்ளம் 400க்கும் மேற்பட்டவர்களை பலிவாங்கியுள்ள விடயம் உலகை உலுக்கியுள்ள நிலையில், 1,000க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளார்கள்.
</p><h3>
மாயமான சுவிஸ் குடிமகள்
</h3><p>
அப்படி மாயமானவர்களில், இந்தியா, இத்தாலி, பல்கேரியா, அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ரஷ்யா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 30 பேர் மீட்கப்பட்டுள்ளதாக சுவிஸ் ஊடகமான 20 Minuten செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/561a914e-877c-4257-b77a-fdcf1c193b84/26-6a912ff41942f.webp' /></p><p> அவர்களில், சுவிஸ் குடிமகள் ஒருவரும் அடங்குவார்.&nbsp;</p><p></p><p>
சுவிஸ் குடிமகள் ஒருவர் பெருவெள்ளத்தின்போது மாயமானதாக நேபாள சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், அந்தப் பெண் தற்போது உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக 20 Minuten ஊடகம் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T06:54:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் தாக்குதல் 25வது நினைவேந்தல்... விழாவிலிருந்து பின்வாங்கிய ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-backed-out-of-attending-1787899928"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-backed-out-of-attending-1787899928</id>
            <summary type="text">Trump backed out of attending 25th anniversary: செப்டம்பர் தாக்குதல் 25வது நினைவேந்தல் நிகழ்விலிருந்து ட்ரம்ப் பின்வாங்கியுள்ளார்.
நியூயார்க்கில் செப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump backed out of attending 25th anniversary: செப்டம்பர் தாக்குதல் 25வது நினைவேந்தல் நிகழ்விலிருந்து ட்ரம்ப் பின்வாங்கியுள்ளார்.
</p><p>நியூயார்க்கில் செப்டம்பர் 11 தாக்குதலின் 25வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொள்ள மாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>அனுமதி மறுப்பு</h2><p>
</p><p>நியூயார்க் நகரை சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப், தாக்குதல் நடந்த 2001 முதல் ஒவ்வொரு வருடமும் அங்குள்ள நினைவிடத்தில் அடிக்கடி விஜயம் செய்து வந்துள்ளார். </p><p>ஆனால், 2026-ல் பென்டகனில் நடைபெறும் நினைவேந்தலில், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அவர் மரணமடைந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்த இருக்கிறார்; ஏனெனில், நியூயார்க் நினைவிடத்தில் அவருக்கு உரையாற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c369da39-ed99-4173-bcf5-1a4d99234492/26-6a91301b15eee.webp' /></p><p> </p><p>ட்ரம்ப் 'செப்டம்பர் 11 நினைவகம் மற்றும் தேசிய அருங்காட்சியகத்தில்' உரையாற்ற விரும்பி, இதற்காகத் தனது குழுவினரை முன்கூட்டியே அங்கு சென்று பார்வையிடவும் செய்திருந்தார். </p><p>ஆனால், நினைவேந்தலின்போது எந்தவொரு கட்சிச் சார்புத்தன்மையையும் தவிர்ப்பதே அருங்காட்சியகத்தின் முக்கிய நோக்கம் என்று பல தரப்பினரும் தெரிவித்தனர்; இதன்காரணமாக, 2012-ஆம் ஆண்டு முதல் அரசியல்வாதிகள் உரையாற்றுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>நியூயார்க் விழாவில் ட்ரம்ப் நிர்வாகத்தின் சார்பில் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளான பில் கிளிண்டன், பராக் ஒபாமா மற்றும் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் ஆகியோரும் கலந்துகொள்வார்கள் எனத் தெரிகிறது. </p><p>செப்டம்பர் 11-ஆம் திகதிக்கு முந்தைய இரண்டு நாட்களில், டெக்சாஸில் நடைபெறும் குடியரசுக் கட்சியின் இடைக்கால மாநாட்டிலிருந்து ட்ரம்ப் வாஷிங்டனுக்குத் திரும்புவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd8faade-d3bf-4648-bd21-d0e16affa4d6/26-6a91301bbc75a.webp' /></p><p> </p><p>கடந்த ஆண்டைப் போலவே, அரசியல்வாதிகள் உரையாற்ற அனுமதிக்கப்படும் பென்டகன் விழாக்களில் ட்ரம்ப் உரை நிகழ்த்துவார். அதன்பிறகு, 'ஐரிஷ் ஓபன்' போட்டி நடைபெறவுள்ள தனது கோல்ஃப் மைதானத்தைப் பார்வையிட அவர் அயர்லாந்துக்குச் செல்வார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T06:49:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[Toronto-வில் உலா வந்த சூப்பர் சிங்கர் பிரபல ரக்ஷிதா சுரேஷ்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/super-singer-fame-rakshita-suresh-toronto-post-1787899995"></link>
            <id>https://viduppu.com/article/super-singer-fame-rakshita-suresh-toronto-post-1787899995</id>
            <summary type="text">ரக்ஷிதா சுரேஷ்விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் சீசன் 6ல் கலந்து கொண்டு ரன்னர் அப் இடத்தினை பிடித்தவர் தான் பாடகி ரக்ஷிதா சுரேஷ் கன்னட தொலைக்காட்சியில் ல...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரக்ஷிதா சுரேஷ்</h2><p>விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் சீசன் 6ல் கலந்து கொண்டு ரன்னர் அப் இடத்தினை பிடித்தவர் தான் பாடகி ரக்ஷிதா சுரேஷ் கன்னட தொலைக்காட்சியில் லிட்டில் ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரக்ஷிதா, சூப்பர் சிங்கர் ஜூனியர் 3ல் கலந்து கொண்டார். அதன்பின் சூப்பர் சிங்கர் 6 சீசனில் கலந்து கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c02e7af-621c-46cf-be93-8b02484d0a00/26-6a91305dd78a6.webp' /></p><p>
</p><p>
இதனை தொடர்ந்து இளையரஜா, ஏஆர் ரஹ்மான், ஜிவி பிரகாஷ் குமார் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார். சமீபத்தில் கூட அமரன் படத்தில் வெண்ணிலவு சாரல் நீ என்ற பாடலை பாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
</p><p>
சமீபகாலமாக வெளிநாடுகளுக்கு சென்று இசையமைப்பாளர்களின் இசை கச்சேரிகளில் கலந்து கொண்டு பாடி அசத்தி வருகிறார். 
தற்போது, கனடாவிற்கு சென்றுள்ள ரக்ஷிதா, Toronto &amp; Montréa நடந்த கான்செட்டில் கலந்து கொண்டிருக்கிறார். அங்கு எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DciwK_dkx_A/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DciwK_dkx_A/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DciwK_dkx_A/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Rakshita Suresh (@rakshitasuresh)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-28T06:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்கள் , குழந்தைகளின் அந்தரங்க புகைப்படங்களை பகிர்ந்த இளைஞன்; பொலிஸார் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/arrest-shared-intimate-photos-women-and-children-1787899619"></link>
            <id>https://jvpnews.com/article/arrest-shared-intimate-photos-women-and-children-1787899619</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; பெண்கள் மற்றும் குழந்தைகளின் அந்தரங்க நிழற்படங்களை பகிர்ந்த பேஸ்புக் குழுக்கள் மற்றும் பக்கங்களை நடத்தி வந்த 21 வயது இளைஞர் ஒருவர் கைது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; பெண்கள் மற்றும் குழந்தைகளின் அந்தரங்க நிழற்படங்களை பகிர்ந்த பேஸ்புக் குழுக்கள் மற்றும் பக்கங்களை நடத்தி வந்த 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>
அம்பாந்தோட்டை பெலியத்தை பிரதேசத்தை சேர்ந்த இளைஞனே சம்பவத்தில் கைதாகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/767eb308-bcca-47e7-b66a-d0d4c5fa8826/26-6a912ee5050e4.webp' /></p><p></p><p>

சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவின் காவல்துறை அதிகாரிகள் குழுவினர், பெலியத்தை (Beliatta) பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபரை கைது செய்தனர்.</p><p></p><p>
</p><p>
சந்தேகநபரின் கைப்பேசி பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-28T06:44:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தைகள் முதியோர்களிடம் அதிகரிக்கும் காய்ச்சல்.. தடுப்பூசி போட அறிவுறுத்தும் மருத்துவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/fever-rising-children-elderly-vaccination-advised-1787823604"></link>
            <id>https://ibctamilnadu.com/article/fever-rising-children-elderly-vaccination-advised-1787823604</id>
            <summary type="text">தமிழகம் முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் சுவாசப் பாதை தொற்று நோய்க்கு உள்ளாக கூடிய எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.குறிப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகம் முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் சுவாசப் பாதை தொற்று நோய்க்கு உள்ளாக கூடிய எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.குறிப்பாக குழந்தைகள் முதியவர்கள் இணை நோயாளிகள் எளிதில் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அதனை தடுப்பதற்கு முக கவசம், தடுப்பூசி அவசியம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதைப் பற்றி பார்ப்போம்.</p><p>

 
இந்தத் தொற்று தொடர்பாக டாக்டா் அ.ப.ஃபரூக் அப்துல்லா கூறியதாவது: </p><p>ஆா்எஸ்வி எனப்படும் சுவாச பாதை தொற்று மற்றும் இன்ஃப்ளூயன்ஸா சாா்ந்த பிரச்சினைகளில் தாக்கம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு அதிகம் பாதிக்கிறது. இதனுடைய அறிகுறியாக மூச்சு திணறல் காய்ச்சல் இருமல் தொண்டை வலி, சோர்வு உடல் வலி சளி வாந்தி வயிற்றுப்போக்கு ஆகியவையாக உள்ளது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bcb7b49-c2fc-4a79-a6a2-dcd32e28b9c9/26-6a90085d25294.webp' /></p><p> 

தேவைப்படுபவர்கள் எக்ஸ்ரே, சளி பரிசோதனை, ரத்த பரிசோதனை மேற்கொண்டு நிமோனியா அல்லது வேறு எதுவும் பாதிப்புகள் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.</p><p> மேலும், சுவாச பாதையை விரிவு செய்யும் மருந்துகள் இருமலை கட்டுப்படுத்தக்கூடிய மருந்துகள் ஆகியவற்றை மருத்துவரின் பரிந்துரையால் எடுத்துக் கொள்வது அவசியம், முதியவர்கள் இணை நோயாளிகள் நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் பொழுது நிச்சயம் முக கவசம் அணிந்து கொள்வது பாதுகாப்பாக இருக்கும். </p><h3>


குழந்தைகள் பாதிப்பு:
</h3><p>பொதுவாகவே, பருவநிலை மாற்றம் அடையும் பொழுது நமக்கு காய்ச்சல், சளி தொண்டை வலி, நுரையீரல் பாதிப்பு போன்ற தொற்றுகள் உருவாகும். அந்த வகையில், 

நிகழாண்டிலும் கடந்த சில நாள்களாக ஆா்எஸ்வி, இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் அதிகரித்து வருகிறது.அதேசமயம், டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான குழந்தைகளும் மருத்துவமனைக்கு அதிகம் வருகிறார்கள். </p><p>

ஒரு சில இடங்களில் சால்மோனெல்லா டை‘ஃ‘பி பாக்டீரியா மூலம் உருவாகும் டைபாய்டு காய்ச்சலும் பரவி வருகிறது.
இவ்வாறான பாதிப்புகளை குறைப்பதற்கு காய்ச்சிய நீரையே குழந்தைகளுக்கும் கொடுப்பது நாமும் எடுத்துக் கொள்ள வேண்டும், முடிந்தவரை வீடுகளில் கொசுக்கள் சூழாதவாறு முழுமையான ஆடைகள் அணிவது அவசியம். </p><p>இந்த காலகட்டங்களில் தரமற்ற உணவுகள் கடைகளில் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு போடக்கூடிய தடுப்பூசி தவணைகளை நாம் எப்பொழுதும் தவற விடக்கூடாது. கூட்டமான இடங்களுக்கு குழந்தைகளை கூட்டி செல்வதை தவிர்க்க வேண்டும்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7f7ae6e-9dda-4b40-bd83-5be08a387fbb/26-6a90085e04fa6.webp' /></p><p> </p><h3>எந்தத் தடுப்பூசி அவசியம்?
</h3><p>பருவ காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஃப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வது மிக மிக அவசியம். நிமோனியா காய்ச்சலுக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் ஊக்கத்தவனையாக நிமோகாக்கல் தடுப்பூசி செலுத்த வேண்டும். </p><p>


குடிநீா் மாசுபாட்டால் ஏற்படும் கல்லீரல் அழற்சியைத் தடுக்க ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசியும், டைபாய்டு தடுப்பூசியும் மருத்துவரின் பரிந்துரைப்படி செலுத்திக் கொள்ளலாம்.


1,558 பேருக்கு இன்ஃப்ளூயன்ஸா:
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இதுவரை 1558 பேருக்கு இன்ஃப்ளூயன்ஸா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கே ஜி அருள்ராஜ் தெரிவித்திருக்கிறார். </p><h3>


இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:</h3><p> சென்னையில் ஹெச்1என்1 பாதிப்பு அச்சுறுத்தும் அளவு இல்லை. 
கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை சுமார் 1288 பேர் பாதிக்கப்பட்டனர். தற்பொழுதிய ஆண்டில் எண்ணிக்கை 1558 ஆக உள்ளது. இருந்தாலும் பொதுமக்கள் இது குறித்து பயப்பட தேவையில்லை. அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்று அவர் கூறியிருக்கிறார். </p><h3>


வழிகாட்டு நெறிமுறைகள்:
</h3><p>
இன்ஃப்ளூயன்ஸா தொற்று குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட வழிகாட்டுதலில், ஒருவருக்கு காய்ச்சல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்களின் ஆலோசனை இன்றி எந்த ஒரு மருந்துகள் உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். </p><p>

மேலும், எந்த காய்ச்சலுக்கு என்ன அறிகுறிகள் என்பதை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6deba93e-d0d7-4067-b4e1-d88708a1c418/26-6a90085f0558e.webp' /></p><h3>&nbsp;1. நோய் -டெங்கு அறிகுறிகள்:
</h3><p>டெங்கு இருப்பவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடலில் சிவப்பு தடிப்புகள் வரலாம். மருத்துவ சிகிச்சை இரண்டாம் நாளுக்கு பிறகு ரத்த பரிசோதனை, நீர் பலச்சாறு, இளநீர், உப்பு, சர்க்கரை கரைசல் அதிகமாக பருக வேண்டும். மேலும், ரத்த ரத்த தட்டணு அளவை கண்காணிப்பது அவசியம். ஓய்வு எடுத்துக் கொள்வது பரிந்துரை இல்லாமல் தேவையில்லாத மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். </p><h3>
2. நோய் - இன்ஃப்ளூயன்ஸா அறிகுறிகள்:
</h3><p>இந்த நோய் இருப்பவர்களுக்கு காய்ச்சல், இருமல், சளி, வீக்கம், தலைவலி ஆகிய அறிகுறிகள் இருக்கும். சுயமாக எந்த மருத்துவமும் செய்ய வேண்டாம். காய்ச்சிய நீரையே பருக வேண்டும். மருத்துவ பரிந்துரைத்த காலம் வரை அதற்குரிய மருந்துகளை எடுத்துக் கொள்வது அவசியம். நல்ல ஓய்வு, உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்க வேண்டும். இருமல் தும்மலின் போது கைகுட்டையால் மூடிக்கொள்வது அவசியம்.</p><h3>
3. நோய் - ஆா்எஸ்வி (சுவாசத் தொற்று) அறிகுறிகள்:</h3><p>
இந்த தொற்று இருப்பவர்களுக்கு காய்ச்சல் இருக்கும். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். சளி இருமல் பசியின்மை ஆகிய அறிகுறிகள் காணப்படும். முழுமையான ஓய்வு எடுக்க வேண்டும். அடிக்கடி கைகளை கழுவிக்கொள்ளுதல் சுவாச சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளுதல் ஆரோக்கியமான உணவு நல்ல தூக்கம் புகைப்பழக்கத்தை கைவிடுதல் அதிகமான நீர் எடுத்துக் கொள்வது அவசியம். </p><h3>


4. நோய் - டைபாய்டு அறிகுறிகள்:
</h3><p>கடுமையான காய்ச்சல் இருக்கும். பசியின்மை தலைவலி மற்றும் வயிற்று வலி உடலில் தடிப்புகள் ஆகிய அறிகுறிகள் காணப்படும். சுகாதாரமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவ சிகிச்சைக்கு பிறகும் காய்ச்சிய குடிநீர் எடுத்துக் கொள்ள வேண்டும். கைகள் எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T06:39:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் மருந்தகம் சுற்றிவளைப்பு - கைப்பற்றப்பட்டுள்ள மருந்துகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pharmacy-selling-banned-drugs-raided-in-colombo-1787897393"></link>
            <id>https://tamilwin.com/article/pharmacy-selling-banned-drugs-raided-in-colombo-1787897393</id>
            <summary type="text">அரசாங்க மருத்துவமனைகள் தவிர வேறெந்த இடத்திலும் விற்பனை செய்வதற்குத் தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்த மருந்தகம் ஒன்று கொழும்பில் சுற்றிவளைக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்க மருத்துவமனைகள் தவிர வேறெந்த இடத்திலும் விற்பனை செய்வதற்குத் தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்த மருந்தகம் ஒன்று கொழும்பில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.</p><p>

கொழும்பு - மருதானை பிரதேசத்தில் அமைந்திருந்த மருந்தகம் ஒன்றே இவ்வாறு அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.</p><h2>போதைப்பொருளுக்கு பயன்படுத்தும் மாத்திரைகள்</h2><p>

குறித்த மருந்தகத்தில் போதைப்பொருளுக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகள் மருத்துவரொருவரின் பரிந்துரையின்றி விற்பனை செய்யப்பட்டு வந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அதிகாரிகளும் மருதானை பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சோதனையின்போது, நரம்பியல் நோயாளிகளுக்கு வழங்கப்படும் வலி நிவாரணி மருந்துகள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யத் தயாராக வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cd6073c-236f-4504-ac35-c254f9e843d8/26-6a912b1b476ac.webp' /></p><h2>8 வகை மருந்துகள் கைப்பற்றல்</h2><p>மேலும், அரச வைத்தியசாலைகளுக்கு மருத்துவ விநியோகப் பிரிவினால் வழங்கப்படும், தனியார் மருந்தகங்களில் விற்பனை செய்வதற்கு சட்டத்தால் தடைசெய்யப்பட்ட 8 வகையான மருந்துகளும் அங்கு கைப்பற்றப்பட்டுள்ளன. உரிய தகுதிகள் இல்லாத ஒருவரால் இந்த மருந்தகம் நடத்தப்பட்டு வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதேவேளை, அரச வைத்தியசாலைகளுக்காக வழங்கப்படும் தடைசெய்யப்பட்ட மருந்துகள் குறித்த மருந்தகத்திற்கு எவ்வாறு கிடைத்தன என்பது தொடர்பில் சுகாதார அமைச்சு துரித விசாரணையை ஆரம்பித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T06:39:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த சடலங்களில் நகைகளை திருடிய இளைஞர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-arrested-for-steal-earring-nepal-flood-victims-1787898734"></link>
            <id>https://news.lankasri.com/article/2-arrested-for-steal-earring-nepal-flood-victims-1787898734</id>
            <summary type="text">man stealing ear rings from dead nepal flood victims: நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த சடலத்தில் இருந்து நகைகளை திருடிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p>man stealing ear rings from dead nepal flood victims: நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த சடலத்தில் இருந்து நகைகளை திருடிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><h3>
வெள்ளத்தில் உயிரிழந்த சடலங்களில் நகை திருட்டு</h3><p> 

நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 469 ஆக அதிகரித்துள்ளது. 1,468 பேர் மாயமாகியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/127fc839-3324-424f-b52f-4f50e5b362ae/26-6a912b70eecbd.webp' /></p><p>

நேபாள காவல்துறை மற்றும் ராணுவம் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. உள்நாட்டு மக்கள் மற்றும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் மாயமாகியுள்ளனர். </p><p>

இந்நிலையில் வெள்ளத்தில் உயிரிழந்து நாராயணி ஆற்றில் கரை ஒதுங்கிய சடலத்தின் காதுகளில் இருந்த தங்க காதணிகளை 2 இளைஞர்கள் அகற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.&nbsp;&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ne" dir="ltr">मृतकको कानको मुन्द्रा चोरी गर्ने व्यक्तिहरु नियन्त्रणमा लिएको सम्बन्धमा । <a href="https://t.co/pnPlnQPn9j">pic.twitter.com/pnPlnQPn9j</a></p>&mdash; Nepal Police (@NepalPoliceHQ) <a href="https://x.com/NepalPoliceHQ/status/2092950217138339990?ref_src=twsrc%5Etfw">August 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

இதனைத்தொடர்ந்து, பரத்பூர் மாநகராட்சி-1 இல் உள்ள பொக்காரா பேருந்து நிலையம் அருகே அந்த வீடியோவில் இருந்த நபர்களான 25 வயதான மதன் குருங் மற்றும் 38 வயதான உமேஷ் சௌத்ரி ஆகியோரை நேபாள காவல்துறை அடையாளம் கண்டு கைது செய்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e69a3e1-1365-4587-b719-ed8887bc672d/26-6a912b7048858.webp' /></p><p>
இந்த மாதிரியான இக்கட்டான நேரத்தில் உயிரிழந்தவர்களை குறிவைத்து நடைபெறும் கொள்ளை அல்லது வேறு எந்த மனிதாபிமானமற்ற செயலையும் பொறுத்துக்கொள்ள முடியாது என காவல்துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p>
நேபாளம் சந்தித்த மிக மோசமான வெள்ளப் பேரழிவுகளில் ஒன்றாக இது கருதப்படும் நிலையில், சேதமடைந்த சாலைகள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலங்கள், மலைபோல் குவிந்துள்ள மண் மற்றும் இடிபாடுகளுக்கு இடையே மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. </p><p>

மேலும், நேபாளத்தின் எல்லை அருகே சோசென் கோலா - புரேபு சாங்போ ஆறுகள் இணையுமிடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு, இயற்கையான தடுப்பு ஏரி உருவாகியுள்ளது. இது உடைந்தால் 2ஆம் கட்ட வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக சீன அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T06:32:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த ஒன்றரை மாதங்களில் சிறைச்சாலை நெரிசல் குறையும் - நீதி அமைச்சர் நம்பிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prison-overcrowding-will-decrease-in-next-months-1787897609"></link>
            <id>https://tamilwin.com/article/prison-overcrowding-will-decrease-in-next-months-1787897609</id>
            <summary type="text">அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை
விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது
ஒன்றரை மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை
விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது
ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் முற்றாகக் குறைக்கப்படும்
என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
தெரிவித்துள்ளார்.</p><p>

அநுராதபுரம் சிறைச்சாலையை நேற்று(27.08.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு
செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு
குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>மூன்று புதிய பகுப்பாய்வு இயந்திரங்கள்</h2><p>மேலும் கூறுகையில்,

"அரச பகுப்பாய்வாளரின் அறிக்கைகள் கிடைப்பதில் நீண்டகாலமாக ஏற்பட்டுவந்த
தாமதம் காரணமாகவே, போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சுமார் 23
ஆயிரம் கைதிகள் விசாரணைகள் முடிக்கப்படாமல் தொடர்ந்தும் விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4511c554-5d29-42a6-b7db-3c8bdc32e383/26-6a912b4b84d59.webp' /></p><p>இந்த நிலைமையை மாற்றியமைக்கும் பொருட்டு, அரச பகுப்பாய்வாளர்
திணைக்களத்துக்குப் புதிதாக 70 அதிகாரிகள் ஆள்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
மூன்று புதிய பகுப்பாய்வு இயந்திரங்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதன்
மூலம் தற்போது நாளொன்றுக்கு சுமார் 400 முதல் 500 அறிக்கைகள் வரை துரிதமாக
வழங்கப்பட்டு வருகின்றன.
</p><p>
கைதிகளின் அடிப்படைப் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் அவர்களின் உயிர் மற்றும்
உடைமைகளைப் பாதுகாப்பதை முழுமையாக உறுதிப்படுத்துவதற்காக அனைத்துச்
சிறைச்சாலைகளிலும் பிரத்தியேகமான கூட்டுப் பொறிமுறை ஒன்றையும் அரசு தற்போது
நிறுவியுள்ளது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T06:31:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்குடன் தொடர்பு ; 10 முக்கிய அரசியல்வாதிகளிடம் விசாரணை; கிலியில் பலர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/links-to-shiran-basik-10-politicians-questioned-1787892149"></link>
            <id>https://jvpnews.com/article/links-to-shiran-basik-10-politicians-questioned-1787892149</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;துபாயில் கைதாகி நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல் ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;துபாயில் கைதாகி நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல் ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி, கோடிக்கணக்கான பணம் மற்றும் பல்வேறு சலுகைகளைப் பெற்றதாகக் கூறப்படும் 10 முக்கிய அரசியல்வாதிகளிடம் எதிர்வரும் காலங்களில் விசாரணை நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>



போதைப்பொருள் வியாபாரியான ஷிரான் பாசிக் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது வெளிப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இந்த முக்கிய அரசியல்வாதிகளிடம் விசாரணை நடத்த மத்திய குற்ற புலனாய்வுப் பணியகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17bcf82c-2ef4-40ad-9a5b-e9b90289bd2f/26-6a9111b6d7f89.webp' /></p><h2>&nbsp;அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்</h2><p>



 விசாரணைக்குட்படுத்தப்படவுள்ள அரசியல்வாதிகளில் இரு முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள், இரு அமைச்சர்கள், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட பல பிரபல அரசியல்வாதிகளும் இருப்பதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>


 10 அரசியல்வாதிகளுக்கும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது அவ்வப்போது ஷிரான் பாசிக் பெருமளவு பணத்தை வழங்கியிருந்தமை தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>


மேலும், கடந்த அரசாங்கத்தில் பதவி வகித்த முக்கிய அமைச்சரொருவர், ஷிரான் பாசிக்குக்கு அனுமதியற்ற முறையில் காணிகளை நிரப்பி, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்களை நிர்மாணிப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>


அந்த நடவடிக்கைகளுக்காக முன்னாள் அமைச்சர், ஷிரான் பாசிக்கிடமிருந்து அவ்வப்போது பெருமளவு பணத்தைப் பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.



ஷிரான் பாசிக் நீண்ட காலமாக இந்த அரசியல்வாதிகளுக்காக தாராளமாக பணத்தை செலவிட்டு வந்துள்ளமை தற்போது தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p></p><p>
</p><p>


இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவிக்கையில், ஷிரான் பாசிக்கிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின்போது வெளிவரும் தகவல்களின் அடிப்படையில், அவருடன் தொடர்புகளைப் பேணி பணம் மற்றும் பல்வேறு சலுகைகளைப் பெற்ற அனைத்து அரசியல்வாதிகளிடமும் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.</p><p>



தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஷிரான் பாசிக்கிடம் நீண்ட நேரமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவருக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொத்துகள் தொடர்பிலும் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. </p><p>இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-28T06:30:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளப் பெருவெள்ளம்... மாயமான பிரித்தானியரின் பெற்றோர்: சீனாவிடம் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/briton-ask-china-for-help-missing-parents-in-flood-1787895262"></link>
            <id>https://news.lankasri.com/article/briton-ask-china-for-help-missing-parents-in-flood-1787895262</id>
            <summary type="text">Briton whose parents are missing in Nepal flash floods appeals to China for help: நேபாளப் பெருவெள்ளத்தின்போது மாயமான தன் பெற்றோரை மீட்க உதவுமாறு பிரித...</summary>
            <content type="html"><![CDATA[<p>Briton whose parents are missing in Nepal flash floods appeals to China for help: நேபாளப் பெருவெள்ளத்தின்போது மாயமான தன் பெற்றோரை மீட்க உதவுமாறு பிரித்தானியர் ஒருவர் சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
நேபாள - திபெத் பெருவெள்ளம் 400க்கும் மேற்பட்டவர்களை பலிவாங்கியுள்ள விடயம் உலகை உலுக்கியுள்ள நிலையில், 1,400க்கு மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளார்கள், அவர்களுடைய நிலை தெரியவில்லை!
</p><h3>
மாயமான பிரித்தானியரின் பெற்றோர்
</h3><p>
அப்படி மாயமானவர்களில் 33 பிரித்தானியர்களும் அடங்குவர். இந்நிலையில், பிரித்தானியக் குடிமகனான ஆனந்த் பட்டேல் என்பவர், நேபாள பெருவெள்ளத்தின்போது மாயமான தன் பெற்றோர் குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82e2ebaf-e34f-4cb7-9e80-39415fe6cdd0/26-6a911ddf5defc.webp' /></p><p>

அதாவது, நேபாளத்துக்கு புனித யாத்திரை சென்ற தன் பெற்றோரான பிபின் பட்டேல் மற்றும் மாலா பட்டேல் ஆகியோர், பெருவெள்ளம் தாக்கும் முன்பே நேபாள சீன எல்லையைக் கடந்து திபெத்துக்குள் நுழைந்திருக்கக்கூடும் என்பது, எல்லை ஆவணங்களின்படி தெரியவந்துள்ளதாக ஆனந்த் தெரிவித்துள்ளார்.
</p><h3>
சீனாவிடம் கோரிக்கை
</h3><p>
ஆகவே, தனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தன் பெற்றோரைக் கண்டுபிடிக்க உதவுமாறு சீன அதிகாரிகளிடம் நேரடியாக கோரிக்கை விடுத்துள்ளார் ஆனந்த்.&nbsp;</p><p></p><p>
தன் பெற்றோரைக் காணவில்லை என்னும் விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மட்டுமின்றி, அவர்களுடைய நிலைமை என்ன என்பது தெரியாத விடயம், மேலும் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதற்கிடையில், மற்றும் ஒரு பிரித்தானியக் குடிமகனான சுனில் அமின் என்பவர், தன் மனைவியாகிய ஹேமா அமினும் அவரது சகோதரியும் நேபாள பெருவெள்ளத்தின்போது காணாமல் போய்விட்டதாகவும், அவர்களைத் தொடர்புகொள்ள முயன்றுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T06:30:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் மீட்கப்பட்ட இரட்டைக் குழந்தைகள்! வைரலாகும் காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/twin-babies-rescued-from-nepal-floods-1787896496"></link>
            <id>https://jvpnews.com/article/twin-babies-rescued-from-nepal-floods-1787896496</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கினால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரட்டைக் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட சம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கினால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரட்டைக் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>

பெருவெள்ளத்தால் ஏற்பட்ட ஆபத்தான சூழ்நிலைக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையின் போது குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0208df1c-b0b2-40aa-a8e6-631b96873c7e/26-6a9122b2b788e.webp' /></p><h2>நெகிழ்ச்சியான வீடியோ காட்சிகள்</h2><p>

இந்த சம்பவம், பேரழிவு காலங்களில் துரிதமாக முன்னெடுக்கப்படும் மீட்புப் பணிகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.</p><p></p><p>

இரட்டைக் குழந்தைகளை நேபாள ராணுவ வீரர்கள் அரவணைத்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">VIDEO | Nepal floods: Rescued twin children comforted by Nepal Army personnel amid ongoing relief operations. <a href="https://t.co/12fLMnjS0f">pic.twitter.com/12fLMnjS0f</a></p>&mdash; Press Trust of India (@PTI_News) <a href="https://x.com/PTI_News/status/2092969173265924324?ref_src=twsrc%5Etfw">August 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
அதேவேளை நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 469 ஆக அதிகரித்துள்ளது.</p><p>

 

இந்தச் இயற்கைச் சீற்றத்தினால் 1,400-க்கும் மேற்பட்டோர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-28T06:29:45+00:00</updated>
        </entry>
    </feed>
