<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-19T12:31:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 பில்லியன் டொலரை எட்டும் Anthropic 2026 வருமானம் - விரைவில் IPO திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/anthropic-revenue-hits-100-bn-dollar-ipo-nears-1789820980"></link>
            <id>https://news.lankasri.com/article/anthropic-revenue-hits-100-bn-dollar-ipo-nears-1789820980</id>
            <summary type="text">Anthropic revenue hits 100 Bn dollar: Anthropic நிறுவனத்தின் வருமானம் 100 பில்லியன் டொலரை எட்டவுள்ளது.

100 பில்லியன் டொலர்AI துறையில் வேகமாக வளர்ந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Anthropic revenue hits 100 Bn dollar: Anthropic நிறுவனத்தின் வருமானம் 100 பில்லியன் டொலரை எட்டவுள்ளது.</p><h2>

100 பில்லியன் டொலர்</h2><p>AI துறையில் வேகமாக வளர்ந்து வரும் Anthropic நிறுவனம், 2026-இல் 100 பில்லியன் டொலர் அளவுக்கு ஆண்டு வருமானத்தை எட்டும் நிலையில் உள்ளது.</p><p>

New York Times மற்றும் Bloomberg வெளியிட்ட தகவலின்படி, Anthropic-ன் Claude AI மென்பொருளுக்கான வணிகத் தேவைகள் மிகவும் அதிகரித்துள்ளதால், வருமானம் கடந்த ஆண்டு 9 பில்லியனிலிருந்து, 2026 ஜூலை மாதத்தில் 65 பில்லியனாக உயர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2086d9ad-2cac-4aa0-8507-f06518e678d9/26-6aae80368fb44.webp' /></p><p>
</p><h2>
IPO திட்டம்</h2><p>இந்த வளர்ச்சி, Anthropic-க்கு IPO (Initial Public Offering) நடத்தும் திட்டத்தை வலுப்படுத்தியுள்ளது. நிறுவனம் ஜூன் மாதம் SEC-க்கு (Securities and Exchange Commission) ரகசியமாக IPO ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. </p><p>Reuters மற்றும் Wall Street Journal தகவலின்படி, IPO நவம்பர் மாதம் நடைபெற வாய்ப்புள்ளது.

Anthropic-ன் வாடிக்கையாளர்களில் Fortune 10 நிறுவனங்களில் 8 நிறுவனங்கள் அடங்குகின்றன. </p><p></p><p>Claude AI மென்பொருள், கோடிங், அலுவலக பணிகள் மற்றும் தொழில்நுட்ப செயல்பாடுகளை எளிமைப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், AI பாதுகாப்பு குறித்த பொதுமக்களின் கவலைகள் அதிகரித்து வருகின்றன. </p><p>Anthropic CEO Dario Amodei, “அடுத்த தலைமுறை AI மாதிரிகளை உருவாக்கும் வேகத்தை குறைக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.</p><p>

Anthropic-ன் IPO, AI துறையில் மிகப்பெரிய பங்குச் சந்தை அறிமுகமாக இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். நிறுவனம் தற்போது 965 பில்லியன் டொலர் மதிப்பீட்டில் உள்ளது.
</p><p>
இந்த IPO வெற்றிகரமாக நடந்தால், Anthropic நிறுவனம் OpenAI மற்றும் Google போன்ற போட்டியாளர்களை விட வலுவான நிலையைப் பெறும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T12:27:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர்ந்து பிரித்தானிய அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக உள்ள சட்டவிரோத புலம்பெயர்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/7-migrants-found-hiding-in-back-of-lorry-in-uk-1789820198"></link>
            <id>https://news.lankasri.com/article/7-migrants-found-hiding-in-back-of-lorry-in-uk-1789820198</id>
            <summary type="text">Seven migrants are found hiding in back of a lorry in England: இங்கிலாந்தில், லொறி ஒன்றின் பின்னால் புலம்பெயர்வோர் ஏழு பேர் மறைந்திருந்தது கண்டுபிடிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Seven migrants are found hiding in back of a lorry in England: இங்கிலாந்தில், லொறி ஒன்றின் பின்னால் புலம்பெயர்வோர் ஏழு பேர் மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p>


பிரித்தானியா சட்டவிரோத புலம்பெயர்தலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்துவருவது அனைவரும் அறிந்ததே.&nbsp;</p><p>
படகுகள் மூலம் புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் நிலையில், அந்த படகுகளை இயக்குவோருக்கு சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் புதிதாக சட்டம் கூட இயற்றியாயிற்று.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60bd6a5b-7da4-42a8-b254-04bf264d6339/26-6aae7d28126ce.webp' /></p><p>

ஆனாலும், சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துதல் பிரித்தானிய அரசுக்கு பெரும் சவாலாகவே உள்ளது.
</p><h3>
பெரும் சவாலாக உள்ள சட்டவிரோத புலம்பெயர்தல்</h3><p>

<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65a9b104-632a-4630-8b38-377ce3c5c510/26-6aae7d27533af.webp' /></p><p>காரணம் என்னவென்றால், முதலில் லொறிகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் சட்டவிரோத புலம்பெயர்வோர்.&nbsp;</p><p>

ஆனால், கெடுபிடிகள் அதிகரிக்கவே, சிறு படகுகள் மூலம் புலம்பெயர்வோரை பிரித்தானியாவுக்குள் அனுப்பத் துவங்கினார்கள் ஆட்கடத்தல்காரர்கள்.
</p><p>
இப்போது, படகுகள் மூலம் ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைவோரைத் தடுக்க பிரான்ஸ், பெல்ஜியம் முதலான நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்துகொண்டுள்ளது பிரித்தானிய அரசு.&nbsp;</p><p>

விடயம் என்னவென்றால், படகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைய கெடுபிடிகள் அதிகரிக்கவே, மீண்டும் லொறிகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்றுவருகிறார்கள் சட்டவிரோத புலம்பெயர்வோர்.

அவ்வகையில், நேற்று முன்தினம், இங்கிலாந்திலுள்ள Hertfordshireஇலுள்ள சாலை ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த லொறி ஒன்றை மடக்கிச் சோதனையிட்டுள்ளனர் பொலிசார்.&nbsp;</p><p></p><p>
அப்போது, அந்த லொறிக்குள் புலம்பெயர்வோர் 7 பேர் மறைந்திருந்தது தெரியவந்துள்ளது.</p><p>

சட்டவிரோத புலம்பெயர்தலுக்கு உதவியாக இருந்ததாக, அந்த லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T12:26:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேற்கு யேமனில் ஹூதி அமைப்பினருக்கு ஆதரவாக பேரணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/rally-in-support-of-the-houthi-movement-1789820370"></link>
            <id>https://canadamirror.com/article/rally-in-support-of-the-houthi-movement-1789820370</id>
            <summary type="text">&amp;nbsp;மேற்கு யேமனில் சண்டை தீவிரமடைந்து வரும் நிலையில், ஹூதி அமைப்பினருக்கு ஆதரவாகவும், சவுதி அரேபியாவுக்கு எதிராகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் யேமன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மேற்கு யேமனில் சண்டை தீவிரமடைந்து வரும் நிலையில், ஹூதி அமைப்பினருக்கு ஆதரவாகவும், சவுதி அரேபியாவுக்கு எதிராகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் யேமன் தலைநகர் சணாவின் (Sanaa) வீதிகளில் திரண்டு பேரணி நடத்தினர்.
</p><p>
இந்த டையலை யேமனின் தென்மேற்கு பகுதியிலுள்ள தைஸ் மாகாணத்தின் அல்-வாசியா (Al-Waziiyah) மாவட்டத்தில் நடந்த கடுமையான மோதல்கள் மற்றும் வான்வழித் தாக்குதல்களில் 30 ஹூதி போராளிகள் கொல்லப்பட்டதாக யேமன் அரசுப்படைகள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06e16c4e-dd8c-478c-9d71-18256d73ee25/26-6aae7dd39f166.webp' /></p><p>

இந்தச் சண்டையில் 60க்கும் மேற்பட்ட ஹூதி அமைப்பினர் காயமடைந்துள்ளனர்.</p><p>

இதற்கிடையில் யேமன் அரசுப்படையினர் மற்றும் வான்படை, அல்-வாசியா மாவட்டத்தில் உள்ள ஹூதிகளின் வாகனங்கள், ஆயுதங்கள் மற்றும் கூட்டங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக யேமன் ஆயுதப் படைகளின் ஊடக மையம் செய்தி வெளியிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-19T12:19:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கரூரில் ஜனநாயகன் சூட்டிங்..ஆதாரம் CBI கையில்!! சவுக்கு சங்கர் சொன்ன ரகசியம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/jananayagan-shooting-took-place-in-karur-savukku-1789819851"></link>
            <id>https://viduppu.com/article/jananayagan-shooting-took-place-in-karur-savukku-1789819851</id>
            <summary type="text">கரூரில் ஜனநாயகன் சூட்தவெக சார்பில் சட்டமன்ற தேர்தலுக்கு முன் கரூரில் பரப்புரை நடந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கரூரில் ஜனநாயகன் சூட்</h2><p>தவெக சார்பில் சட்டமன்ற தேர்தலுக்கு முன் கரூரில் பரப்புரை நடந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஆட்சி மாறியும் விசாரணை நடைபெற்று வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce25ac4e-2cfd-4a42-aed0-c69e7ae133f6/26-6aae7bcd9791b.webp' /></p><p> </p><p>கரூர் கூட்ட நெரிசல் குறித்து விமர்சகர் சவுக்கு சங்கர் பேசியுள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. </p><p>கரூர் சம்பவம் நடந்தபோது ஜனநாயகன் படத்திற்காக ஷூட்டிங் நடந்தது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. படத்தின் இயக்குநர் எச் வினோத், அதை மறுத்திருந்தார். </p><p>இந்நிலையில், யூடியூப்பரான சவுக்கு சங்கர், அங்கு ஷூட்டிங் நடந்தது உண்மைதான். சினிமா கேமராவில் ஷூட் செய்யப்பட்ட காட்சிகளை சிபிஐ கைப்பற்றி வைத்துள்ளனர், ஆனால் படத்தில் பயன்படுத்தப்படவில்லை என்று கூறியிருக்கிறார்.</p>]]></content>
            <updated>2026-09-19T12:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்று துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருளுடன் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-suspects-arrested-three-firearms-and-heroin-1789819313"></link>
            <id>https://ibctamil.com/article/two-suspects-arrested-three-firearms-and-heroin-1789819313</id>
            <summary type="text">கொஹுவலா, விஜயபா மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்திய பின்னர்,காவல்துறை சிறப்பு அதிரடிப்படையினர் ஒரு குற்றக் கும்பலைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொஹுவலா, விஜயபா மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்திய பின்னர்,காவல்துறை சிறப்பு அதிரடிப்படையினர் ஒரு குற்றக் கும்பலைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களை மூன்று துப்பாக்கிகளுடன் கைது செய்துள்ளனர்.
</p><p>
சந்தேக நபர்களைக் கைது செய்தபோது, ​​அவர்களிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது</p><p>விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அதிகாரிகள் குழு ஒன்று சோதனை நடத்தி இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்தது.</p><p>

</p><h2>&nbsp;துப்பாக்கிகளுடன்,தோட்டாக்கள்&nbsp;
மற்றும் முச்சக்கரவண்டி பறிமுதல்</h2><p>சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மூன்று துப்பாக்கிகளுடன், எட்டு தோட்டாக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு முச்சக்கர வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b426d22-f0f1-497b-8132-befbf470a4d3/26-6aae7c22e887c.webp' /></p><p>
</p><p>
சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளில், இப்போதைப்பொருட்கள் திட்டமிட்ட குற்றவாளியும் பெருமளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான 'களுபோவில அவிஷ்க' என்பவரின் உள்நாட்டு போதைப்பொருள் வலையமைப்பைக் கையாளுபவர்கள் எனத் தெரியவந்துள்ளது.</p><p>

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரும், அவருக்குப் போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த அதே பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரும் ஆவர்.</p><p></p><p>

 

</p><h2>காவல்துறை போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைப்பு</h2><p>சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ce7ff4b-f57e-4a10-a480-bed5e1604cd5/26-6aae7c239d0b7.webp' /></p><p>
</p><p>
 

கடந்த 14ஆம் திகதி கொஹுவல காவல்துறை பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 02 கிலோ ஐஸ் போதைப்பொருள் மற்றும் 504 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் இவர்களது நெருங்கிய கூட்டாளிகள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T12:12:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[திலீபனின் நினைவிடத்தில் பொலிஸாரால் அகற்றப்பட்ட ஒலிபெருக்கி.. கஜேந்திரகுமார் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/thiyaga-theebam-thileepan-police-gajendrakumar-1789818783"></link>
            <id>https://tamilwin.com/article/thiyaga-theebam-thileepan-police-gajendrakumar-1789818783</id>
            <summary type="text">தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அனுமதியின்றி ஒலிபெருக்கி பயன்படுத்தப்பட்டது எனக் குற்றஞ்சாட்டி, அங்கிருந்த ஒலிபெருக்கிச் சாதனங்களை யாழ்ப்பாணம் பொல...</summary>
            <content type="html"><![CDATA[<p>தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அனுமதியின்றி ஒலிபெருக்கி பயன்படுத்தப்பட்டது எனக் குற்றஞ்சாட்டி, அங்கிருந்த ஒலிபெருக்கிச் சாதனங்களை யாழ்ப்பாணம் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியிட்டுள்ள முகப்புத்தக பதிவில், "இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகரை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவருடன் பேசினேன்.
</p><p>தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்விற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பயன்படுத்தப்பட்ட ஒலியமைப்பை, பொலிஸாரின் அனுமதி பெறப்படவில்லை என்ற காரணத்தினால் பொலிஸார் அகற்றியுள்ளதாக அவரிடம் தெரிவித்தேன்.</p><h2>புலனாய்வுத் தகவல் அறிக்கை</h2><p>
</p><p>நிகழ்வை ஏற்பாடு செய்த குழுவின் உறுப்பினர்கள், ஒலிபெருக்கி அமைப்பைப் பயன்படுத்துவதற்கான அனுமதியைக் கோரி எழுத்துமூலமான கோரிக்கையுடன் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் சென்றபோது, தலைமையக ஆய்வாளர் அங்கு இல்லை என்றும், விண்ணப்பத்தை இன்று சமர்ப்பிக்குமாறும் கூறி, அந்தக் கோரிக்கையை ஏற்க பொலிஸார் மறுத்துள்ளனர்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fpermalink.php%3Fstory_fbid%3Dpfbid0JEtmSaHCtjXKFnVPEHEDpvWn5bCdfZJCc6kQiZ4anASNXEpVjUjGwxJm3FvcM3YUl%26id%3D61567246753629&show_text=true&width=500" width="500" height="584" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p>
இன்று மீண்டும் ஏற்பாட்டாளர்கள் எழுத்துமூலமான கோரிக்கையுடன் பொலிஸாரிடம் சென்றபோதும், அதனை ஏற்க பொலிஸார் மறுத்துள்ளனர்.</p><p>
இதையடுத்து பொலிஸ் அத்தியட்சகர், தலைமையக ஆய்வாளருடன் தாம் பேசுவதாகவும், ஏற்பாட்டாளர்களை மீண்டும் அனுமதி கோருமாறு அறிவுறுத்துவதாகவும் என்னிடம் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3372be04-1775-4e36-90a1-48b0d1c87d8a/26-6aae7b2f02581.webp' /></p><p>
சில நிமிடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் தலைமையக ஆய்வாளர், என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஒலிபெருக்கி அமைப்பைப் பயன்படுத்துவதற்கான அனுமதியைக் கோரி ஏற்பாட்டாளர்களை விண்ணப்பிக்குமாறு அவர்களிடம் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
</p><p>எனினும், புலனாய்வுத் தகவல் அறிக்கை (Intelligence Report) பெறப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T12:08:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[96 ஓட்டங்கள் இலக்கு: 20வது ஓவரில் எட்டிய ஹொங்கொங் சீனா..திணறடித்த ஜப்பான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hongkong-china-beat-japan-by-4-wickets-1789819506"></link>
            <id>https://news.lankasri.com/article/hongkong-china-beat-japan-by-4-wickets-1789819506</id>
            <summary type="text">HongKong China beat Japan by 4 Wickets: ஜப்பான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹொங்கொங் சீனா வெற்றி பெற்றது.

ஜப்பான...</summary>
            <content type="html"><![CDATA[<p>HongKong China beat Japan by 4 Wickets: ஜப்பான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹொங்கொங் சீனா வெற்றி பெற்றது.
</p><p>
ஜப்பான் அணி நிர்ணயித்த 96 ஓட்டங்கள் இலக்கினை, ஹொங்கொங் சீனா 20வது ஓவரில் எட்டி வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>ஜப்பான் 95 ஓட்டங்கள் &nbsp;&nbsp;</h2><p>
ஹொங்கொங் சீனா மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி கான்டோவில் நடந்தது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8344673-d249-4f9f-a05e-6080a670b4c3/26-6aae7b4a891dd.webp' />&nbsp;</p><p></p><p>

முதலில் ஆடிய ஜப்பான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 95 ஓட்டங்கள் எடுத்தது. பெஞ்சமின் இட்டோ டேவிஸ் 35 ஓட்டங்கள் எடுத்தார்.
</p><p>
எஹ்சான் கான் 3 விக்கெட்டுகளும், யாசிம் முர்தஸா 2 விக்கெட்டுகளும், அனஸ் கான் மற்றும் ராணா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
</p><p>
பின்னர் ஆடிய ஹொங்கொங் சீனா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

ஷாஹித் வாசிப் மற்றும் ஹசன் கான் இருவரும் வெற்றிக்காக போராடினர். </p><p>ஹசன் கான் 25 ஓட்டங்களில் வெளியேற, ஹொங்கொங் சீனா 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 99 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
</p><p>
மிரட்டலாக பந்துவீசிய பெஞ்சமின் இட்டோ டேவிஸ் 3 விக்கெட்டுகளும், சார்லி ஹரா 2 விக்கெட்டுகளும், மகோடோ ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T12:06:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் மயானத்தை துப்பரவு செய்ய சென்ற ஊரவர்களுக்கு காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shock-awaits-villagers-cleaning-vavuniya-cemetery-1789819519"></link>
            <id>https://jvpnews.com/article/shock-awaits-villagers-cleaning-vavuniya-cemetery-1789819519</id>
            <summary type="text">வவுனியா, கந்தபுரம் பகுதியில் உள்ள சுடலையில் கிராம மக்கள் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, ரி-56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 06 மக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வவுனியா, கந்தபுரம் பகுதியில் உள்ள சுடலையில் கிராம மக்கள் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, ரி-56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 06 மகசின்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; ">

கந்தபுரம் மயானப் பகுதியில் அப்பகுதி கிராம மக்கள் இணைந்து துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7e9dbff-0e81-4f4b-91f6-1edfeb96fc93/26-6aae7a811503f.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இது குறித்து உடனடியாக வவுனியா பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
</p><p style="text-align: justify; ">
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வவுனியா பொலிஸார், அங்கு கண்டெடுக்கப்பட்ட 06, ரி-56 ரக துப்பாக்கிக்க மகசின்களையும் பாதுகாப்பாக மீட்டுச் சென்றனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
குறித்த மகசின்கள் யாரால், எப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டன என்பது குறித்தும், அப்பகுதியில் வேறு ஏதேனும் பொருட்கள் உள்ளனவா என்பது குறித்தும் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-19T12:05:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[காசாவில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்: கல்வி அமைச்சு அவசர கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gaza-school-ministry-of-education-s-urgent-appeal-1789818917"></link>
            <id>https://tamilwin.com/article/gaza-school-ministry-of-education-s-urgent-appeal-1789818917</id>
            <summary type="text">காசாவில் புதிய கல்வி ஆண்டிற்காகப் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில், அங்குள்ள கல்வி நிறுவனங்களையும் கல்விச் சமூகத்தையும்
பாதுகாப்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>காசாவில் புதிய கல்வி ஆண்டிற்காகப் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தநிலையில், அங்குள்ள கல்வி நிறுவனங்களையும் கல்விச் சமூகத்தையும்
பாதுகாப்பதற்கு சர்வதேச சமூகம் உடனடியாகத் தலையிட வேண்டும் எனக் காசா கல்வி
அமைச்சு அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
காசா மீதான போரை உடனடியாக நிறுத்துவதற்கும், பாடசாலைகள் மற்றும் ஆசிரியர்களின்
பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு இந்த கோரிக்கையின் மூலம்
வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>புதிய கல்வி ஆண்டு</h2><p>
புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் இன்று (19.9) ஆரம்பமாகியுள்ள
நிலையில், சுமார் ஐந்து இலட்சம் மாணவர்கள் மீண்டும் கல்வியைத் தொடர
ஆரம்பித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e221c4da-eceb-484d-adc9-9a44f0045306/26-6aae7a6f694c8.webp' /></p><p>
</p><p>
இவர்களில் பெரும்பான்மையான மாணவர்கள் தற்காலிக கற்றல் மையங்கள் மற்றும்
மீதமுள்ள பாடசாலைக் கட்டிடங்களிலேயே தங்களது கல்வியைத் தொடர்கின்றமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T12:05:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர்வோர் பயணிக்கும் பிரம்மாண்ட படகை இயக்கிய நபருக்கு சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-jails-teen-asylum-for-steering-migrant-boat-1789819228"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-jails-teen-asylum-for-steering-migrant-boat-1789819228</id>
            <summary type="text">UK jails teen asylum seeker for steering overcrowded Channel migrant boat: பிரம்மாண்ட புலம்பெயர்வோர் படகொன்றை இயக்கிய நபருக்கு பிரித்தானியாவில் சிறைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK jails teen asylum seeker for steering overcrowded Channel migrant boat: பிரம்மாண்ட புலம்பெயர்வோர் படகொன்றை இயக்கிய நபருக்கு பிரித்தானியாவில் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
</p><p>

பிரித்தானியா சட்டவிரோத புலம்பெயர்தலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்துவருவது அனைவரும் அறிந்ததே.</p><p>

இந்நிலையில், பிரம்மாண்ட புலம்பெயர்வோர் படகொன்றை இயக்கிய இளைஞர் ஒருவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
</p><h3>
பிரம்மாண்ட படகை இயக்கிய நபருக்கு சிறை
</h3><p>
பிரான்சிலிருந்து புலம்பெயர்வோர் ஆங்கிலக்கால்வாய் வழியாக சிறு ரப்பர் படகுகளில் பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சிகள் நாடாளுமன்றம் வரை ஒலித்துவரும் நிலையில், ‘சிறுபடகுகள்’ என்னும் பதம் ஊடகங்களில் முக்கிய இடம்பெற்றுவந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9008bf55-4ac4-4dd0-bf73-204e21205137/26-6aae795ddf0d0.webp' /></p><p>

அரசியல்வாதிகள், சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரால் பெரும் தொல்லை என்னும் ரீதியில் முழங்கிக்கொண்டிருக்க, அதை கேலிக்கூத்தாக்குவதுபோல, சிறு படகுகள் இல்லை, பெரிய படகுகள் மூலம் புலம்பெயர்வோரை அனுப்பத் துவங்கினார்கள் ஆட்கடத்தல்காரர்கள்.
</p><p>
ஆக, இந்த பிரம்மாண்ட படகுகளால் அரசுக்கு புதிய தலைவலி துவங்கிய நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த ஆண்டு, அதாவது, 2026ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், புதிய சட்டம் ஒன்றை இயற்றியது பிரித்தானியா.&nbsp;</p><p></p><p>
அதன்படி, படகுகள் மூலம் புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் நிலையில், அந்த படகுகளை இயக்குவோருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
</p><p>
இந்நிலையில், சமீபத்தில் 165 புலம்பெயர்ந்தோரை பிரித்தானியாவுக்கு கொண்டுவர முயன்ற பிரம்மாண்ட படகொன்றை மடக்கிப் பிடித்தனர் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள்.
</p><p>
அந்த படகை இயக்கிய சூடான் நாட்டைச் சேர்ந்த Chan Mathok Atak (19) என்னும் இளைஞருக்கு நேற்று கேன்டர்பரி க்ரௌன் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5a386db-11da-446d-9511-bffa768ed182/26-6aae795eb3d35.webp' /></p><p>
Chanக்கு இரண்டு ஆண்டுகள் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தண்டனைக்காலம் முடிவடைந்ததும், அவர் தன் சொந்த நாட்டுக்கு நாடுகடத்தப்படவும் வாய்ப்புள்ளதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
</p><p>
Chan இயக்கிய படகில் 31 சிறுவர்கள் உட்பட 165 புலம்பெயர்ந்தோருடன் பயணித்த நிலையில், அந்த படகில் பாதுகாப்பு உடைகளோ, உபகரணங்களோ, முதலுதவி சிகிச்சைக்கான மருந்துகளோ இல்லை.
</p><p>
அத்துடன், ஒரே ஒரு சிறிய இயந்திரத்தின் உதவியுடன், 165 புலம்பெயர்ந்தோருடன் நகர முடியாமல், மெல்ல நகர்ந்துகொண்டிருந்தது அந்தப் படகு.
</p><p>
ஆக, அத்தனை உயிர்களை ஆபத்தான வகையில் ஆங்கிலக்கால்வாயில் பயணிக்கவைத்ததற்காக, அந்த படகை இயக்கியதாக கருதப்படும் Chan கைது செய்யப்பட்டு அவருக்கு சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T12:00:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிய விளையாட்டு போட்டியில் முதல்முறையாக ஏதிலிகள் அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/refugee-team-1st-time-participate-in-asian-games-1789818510"></link>
            <id>https://news.lankasri.com/article/refugee-team-1st-time-participate-in-asian-games-1789818510</id>
            <summary type="text">refugees team first time participate in asian games: ஆசிய விளையாட்டு போட்டியில் முதல்முறையாக ஏதிலிகள் அணி இடம் பெற்றுள்ளது. 

ஆசிய விளையாட்டு போட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>refugees team first time participate in asian games: ஆசிய விளையாட்டு போட்டியில் முதல்முறையாக ஏதிலிகள் அணி இடம் பெற்றுள்ளது. </p><h3>

ஆசிய விளையாட்டு போட்டியில் ஏதிலிகள் அணி</h3><p> 

20 வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் இன்று தொடங்கி, அக்டோபர் 4 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
</p><p>
இந்தத் தொடரில், 45 நாடுகளை சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c32ad5bc-207a-4a9a-9eaf-40053c695b64/26-6aae76901a580.webp' /></p><p>

இந்த ஆசிய விளையாட்டு போட்டியில், முதல் முறையாக ஆசிய ஏதிலிகள் அணியும் பங்குபெற உள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p>

இந்த ஏதிலிகள் அணியில், டேக்வாண்டோவில் பங்கேற்கும் 2 விளையாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Meet Tala Al-Hunaidi and Mahmoud Al Hussein.<br><br>They’re Syrian refugees living in Jordan and they’re about to make history.<br><br>They will become members of the first-ever Refugee Team to compete at an Asian Games. <a href="https://x.com/hashtag/AichiNagoya2026?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AichiNagoya2026</a> <a href="https://t.co/eVBvztmyhO">pic.twitter.com/eVBvztmyhO</a></p>&mdash; UNHCR, the UN Refugee Agency (@Refugees) <a href="https://x.com/Refugees/status/2101160862983548942?ref_src=twsrc%5Etfw">September 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
24 வயதான மஹ்மூத் அல் ஜாசிம் அல் முகமது அல் ஹுசைன் ஆடவர் 80 கிலோ கியோருகி பிரிவிலும், 18 வயதான தலாஹ் அல் ஹசன் அல் ஹினிடே மகளிர் 49 கிலோ கியோருகி பிரிவிலும் போட்டியிடுவார்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67404e6c-10ab-4596-92ba-644782a99fb9/26-6aae7690c2451.webp' /></p><p>
சிரியாவை சேர்ந்த இந்த 2 விளையாட்டு வீரர்களும் ஜோர்டானில் உள்ள அஸ்ராக் ஏதிலிகள் முகாமில் வசிக்கின்றனர். </p><p>

இருவரில் யாரேனும் தங்கம் வென்றால், பதக்க வழங்கும் விழாவின் போது OCA கொடி ஏற்றப்பட்டு, OCA கீதம் இசைக்கப்படும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T11:48:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை பெற்றுக்கொடுங்கள் : அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/request-to-the-gover-grant-pardon-to-anojan-1789816743"></link>
            <id>https://ibctamil.com/article/request-to-the-gover-grant-pardon-to-anojan-1789816743</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அறியாமல் ஒரு தவறை செய்து அந்த தவறுக்காக அவரும், அவரது குடும்பமும் பல
தடவைகள் மன்னிப்பும் கோரியுள்ள நிலையில் சவூதி அரேபியாவில் நீதிமன்ற
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அறியாமல் ஒரு தவறை செய்து அந்த தவறுக்காக அவரும், அவரது குடும்பமும் பல
தடவைகள் மன்னிப்பும் கோரியுள்ள நிலையில் சவூதி அரேபியாவில் நீதிமன்ற
தீர்ப்பின் பிரகாரம் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான
எஸ்.அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரை விடுதலை செய்து நாட்டிற்கு அழைத்து
வருவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என
காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>அனோஜன் தொடர்பான விடயம் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும்
மட்டுமல்ல எங்களுக்கும் மிகுந்த வேதனையையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அவரது குடும்பத்தின் துயரத்தை கருத்திற்கொண்டு, மனிதாபிமான
அடிப்படையில் இவ்விடயத்தில் தலையீடு செய்து, சவூதி அரேபிய அரசாங்கத்துடன்
இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க இலங்கை அரசாங்கம்
நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><h2>&nbsp;சாத்தியமான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும்</h2><p>அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை தொடர்பான சட்டரீதியான நிலைமைகள்,
மேல்முறையீட்டு வாய்ப்புகள் மற்றும் மன்னிப்பு கோருவதற்கான நடைமுறைகள்
குறித்து உரிய சட்ட ஆலோசனைகளைப் பெற்று, சவூதி அரேபிய அதிகாரிகளின்
ஒத்துழைப்புடன் அவருக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கான அனைத்து சாத்தியமான
முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/906e9dfd-c462-4886-b58a-18064bcd8033/26-6aae7602c5c87.webp' /></p><p>மேலும், இவ்விடயம் தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, சவூதிக்கான
இலங்கைத் தூதரகம், முஸ்லிம் எம்.பிக்கள், ஆளும் தரப்பு மற்றும் எதிர்தரப்பு
எம்.பிக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயற்படுவதுடன்,
அனோஜனின் குடும்பத்தினருக்கு தேவையான தகவல்கள் மற்றும் சட்டரீதியான
வழிகாட்டல்களையும் வழங்க வேண்டும்.</p><p></p><h2>நாடு திரும்புவதற்கான நடவடிக்கை</h2><p>இலங்கைப் பிரஜை ஒருவரின் உயிர் மற்றும் எதிர்காலம் தொடர்பான இவ்விடயத்தில்
அரசாங்கம் தாமதமின்றி தலையிட்டு, அனோஜனுக்கு மன்னிப்பு கிடைத்து அவர்
பாதுகாப்பாக விடுதலை பெற்று நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள
வேண்டும் என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a39e89c-ea20-4801-bb8f-896cb2f0adb3/26-6aae7603795a6.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T11:47:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் காவல்துறையினர் மறித்த வேளை கீழே விழுந்து இளைஞன் திடீர் மரணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/youth-stopped-by-police-in-jaffna-dies-suddenly-1789817166"></link>
            <id>https://ibctamil.com/article/youth-stopped-by-police-in-jaffna-dies-suddenly-1789817166</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரை காவல்துறையினர் மறித்த வேளை அவர் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் - காரைந...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரை காவல்துறையினர் மறித்த வேளை அவர் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.</p><p>யாழ்ப்பாணம் - காரைநகர் வீதியில், மானிப்பாய் தேவாலயத்திற்கு முன்பாக இன்றையதினம் (19) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>இதன்போது சபாபதிப்பிள்ளை வீதி, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த தபேந்திரன் தினுசன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p></p><h2>யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை</h2><p>சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் - காரைநகர் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரை மானிப்பாய் போக்குவரத்து காவல்துறையினர் மறித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5eb43f3d-98bf-464d-abbf-554f847e9bd8/26-6aae7504eb432.webp' /></p><p>இதன் போது குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திய பின்னர் தானாகவே
கீழே சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> பின்னர் குறித்த இடத்திலேயே அந்த இளைஞர் அசைவற்று காணப்பட்ட நிலையில் அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த நிலையில் குறித்த இளைஞரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T11:43:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்வரும் 24ஆம் திகதி கொழும்பிற்கு வருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/join-together-on-the-24th-sajith-premadasa-s-call-1789817517"></link>
            <id>https://tamilwin.com/article/join-together-on-the-24th-sajith-premadasa-s-call-1789817517</id>
            <summary type="text">அரசமைப்பின் 22ஆவது திருத்தம் ஊடாக ஜனாதிபதியும் அரசாங்கத்தின்
பெரும்பான்மையும் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை மீறுவதாகத் தெரிவித்த
எதிர்க்கட்சித் தலைவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22ஆவது திருத்தம் ஊடாக ஜனாதிபதியும் அரசாங்கத்தின்
பெரும்பான்மையும் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை மீறுவதாகத் தெரிவித்த
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசாங்கத்தின் ஜனநாயக விரோத போக்கைத்
தோற்கடிக்க எதிர்வரும் 24ஆம் திகதி காலை கொழும்பு - பொல்துவ சந்தியில்
ஒன்றிணையுமாறும் மக்களிடம் பகிரங்க கோரிக்கை விடுத்தார்.
</p><p>
இளம் பெண் சட்டத்தரணிகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (18.09.2026) நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>ஜனநாயகத்துக்கு மரண அடி</h2><p>நாட்டின் ஜனநாயக முறையானது சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம் மற்றும்
நீதித்துறை ஆகிய மூன்று தூண்களின் அதிகாரப் பகிர்வு மற்றும் அவற்றுக்கிடையிலான
தடைகள் மற்றும் சமன்பாடுகளின் அடிப்படையிலேயே பாதுகாக்கப்படுகின்றது என்று
குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய 22ஆவது திருத்தச் சட்டம் மூலம்
இந்த ஜனநாயகத்துக்கு மரண அடி கொடுக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e9b3739-af62-452f-99f3-0e42c81730f7/26-6aae7545a836c.webp' /></p><p>
</p><p>
நிறைவேற்று அதிகாரத் தூணின் ஜனாதிபதியும் பெரும்பான்மைப் பலம் கொண்ட
சட்டவாக்கமும் நாட்டின் நீதி அதிகாரத்தைக் கட்டுப்படுத்தி, நீதிமன்றத்தை
நிறைவேற்று அதிகாரத்தின் அடிமையாக்கும் கீழ்தரமான முயற்சியில் அரசு
ஈடுபட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
</p><p>
மேலும், அரசமைப்பின் 3, 4, 83, 107 ஆம் பிரிவுகளின்படி, சர்வஜன வாக்கெடுப்பு
இன்றி 22 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுமாயின் அது மக்களின் இறையாண்மையையும்
வாக்களிக்கும் உரிமையையும் மீறும் செயலாகும் என்றார்.</p><h2>உள்நாட்டு அடிமைத்துவ யுகம்</h2><p>
</p><p>
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களுக்குத் தீர்வு, ஊழல் மற்றும்
மோசடிகளுக்குத் தண்டனை போன்ற கோஷங்களை முன்னிறுத்தி, நீதிமன்றத்தின்
சுதந்திரத்தை இல்லாது செய்து நாட்டில் தனிக்கட்சி ஆட்சியை ஸ்தாபிக்க அரசு
முயல்கின்றது எனத் தெரிவித்த சஜித் பிரேமதாஸ, இதன் மூலம் ஜே.வி.பி. தவிர வேறு
எவருக்கும் அரசியல் சுதந்திரமோ, பேச்சுரிமையோ இல்லாத நிலையை ஏற்படுத்தி,
மக்களை அரசின் நிரந்தர அடிமைகளாக்கும் உள்நாட்டு அடிமைத்துவ யுகத்தை நோக்கி
அரசு நகர்வதாகவும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62ea2268-af15-4716-beab-b870f7564597/26-6aae754773792.webp' /></p><p>
</p><p>
நாட்டில் வறுமை அதிகரித்து, வாழ்க்கைச் செலவு உயர்ந்து, நேரடி வெளிநாட்டு
முதலீடுகள் குறைந்துள்ள இந்தச் சூழலில், 2027 ஆம் ஆண்டு ஐ.எம்.எவ். ஒப்பந்தம்
நிறைவுக்கு வரவுள்ள நிலையில், இவற்றுக்கான தீர்வாகத்தான் 22 ஆவது திருத்தச்
சட்டம் அமைந்துள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.</p><p>

எனவே, தனிக்கட்சி ஆட்சியை நோக்கிய அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளைத்
தோற்கடிப்பதற்காக, எதிர்வரும் 24 ஆம் திகதி காலை கொழும்பு - பொல்துவ சந்தியில்
நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்துத் தரப்பினரையும் அவர்
கேட்டுக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6707fc89-bb1c-41be-b173-21b61f349fb7/26-6aae7546a0273.webp' /></p>]]></content>
            <updated>2026-09-19T11:43:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜன் விடயத்தில் ரிசானா நபீக்கின் சம்பவத்தை நினைவுகூர்ந்த பைசர் முஸ்தபா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anojanan-facing-the-death-penalty-in-saudi-arabia-1789817047"></link>
            <id>https://tamilwin.com/article/anojanan-facing-the-death-penalty-in-saudi-arabia-1789817047</id>
            <summary type="text">சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ளதாகக் கூறப்படும் இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கு, இராஜதந்திர மற்றும் சட்ட ரீதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ளதாகக் கூறப்படும் இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கு, இராஜதந்திர மற்றும் சட்ட ரீதியில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
ஒரு நாட்டின் இறையாண்மையையும் சட்டத்தையும் மதிக்கும் அதேவேளை, தமது நாட்டுப் பிரஜை ஒருவரை காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளக்கூடிய அனைத்து சட்ட மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டியது தற்போதைய முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>சிவராசா அனோஜன்&nbsp;</h2><p>
</p><p>அம்பாறை, நார்ப்பிட்டிமுனை பகுதியைச் சேர்ந்த சிவராசா அனோஜன் சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்த நிலையில், சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்தொன்றை அடிப்படையாகக் கொண்டு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த ஜூலை 15ஆம் திகதி சவுதி நீதிமன்றமொன்றினால் அவருக்கு 5 வருட சிறைத்தண்டனையும் 30 இலட்சம் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>

இதற்கு எதிராக முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டைத் தொடர்ந்து, அவருக்கான தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி, ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகத்துக்கு வாய்மொழியாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3c084dc-c3ed-4dcd-ade0-753fe1317490/26-6aae7433aeec7.webp' /></p><p>எனினும், மரண தண்டனை தொடர்பான உத்தியோகபூர்வ எழுத்துமூல நீதிமன்றத் தீர்ப்பு இதுவரை இலங்கைத் தூதரகத்துக்கு கிடைக்கவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>
இந்த எழுத்துமூல தீர்ப்பை உடனடியாகப் பெற்றுக்கொள்வது அவசியம் என பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.</p><p> தீர்ப்பின் சட்ட அடிப்படையை சரியாக ஆராய்ந்து, சட்டத்தரணிகளின் ஆலோசனைக்கு அமைய அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>ரிசானா நபீக்கின் சம்பவம்</h2><p>
</p><p>&nbsp;அனோஜன் சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் அந்தப் பதிவை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே அதனை நீக்கி, பகிரங்கமாக மன்னிப்பு கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த விடயத்தை கருத்திற்கொண்டு, மனிதாபிமான அடிப்படையில் சவுதி அதிகாரிகளிடம் தண்டனையை தளர்த்துமாறு அல்லது அரச மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்க முடியும் என பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p>
இலங்கைக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகளை பயன்படுத்தி, உயர்மட்ட அரச மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d8ff83e-62d8-4b5a-884f-20c84f1a2aed/26-6aae74347db3d.webp' /></p><p>

அத்துடன், இந்த விடயத்தில் அரசாங்கமும் எதிர்க்கட்சியும் கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

ரிசானா நபீக்கின் சம்பவத்தை நினைவுகூர்ந்த பைசர் முஸ்தபா

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்ட இலங்கைப் பணிப்பெண்ணான ரிசானா நபீக்கின் சம்பவத்தை நினைவுகூர்ந்த பைசர் முஸ்தபா, வெளிநாடுகளில் கடுமையான சட்டப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இலங்கையர்களுக்கு ஆரம்பம் முதலே முறையான சட்ட ஆலோசனையும் இராஜதந்திர பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.</p><p>

சரியான சட்ட ஆலோசனை, நம்பகமான சட்டப் பிரதிநிதித்துவம் மற்றும் துல்லியமான மொழிபெயர்ப்பு ஆகியவை இல்லாததால் கடந்த காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் மிகவும் வேதனையானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இதனிடையே, தற்போதுள்ள இராஜதந்திர பொறிமுறையின் ஊடாக அனோஜனுக்கு தேவையான அதிகபட்ச தூதரக உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T11:42:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாமர சம்பத்திடம் சிறீதரன் எம்பி விடுத்த சவால்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sritharan-mp-responds-to-blames-on-him-1789817600"></link>
            <id>https://tamilwin.com/article/sritharan-mp-responds-to-blames-on-him-1789817600</id>
            <summary type="text">அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு முழுமையாக
ஆதரவு வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.&amp;nbsp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு முழுமையாக
ஆதரவு வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.&nbsp;</p><p> கிளிநொச்சியில்
நிகழ்வொன்றின் பின்பு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே
இதனை குறிப்பிட்டார்.</p><p>இதன்போது அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், "நாட்டுக்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது
நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
​</p><h2>முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு..&nbsp;</h2><p>தம் மீதும் சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகளை
நிரூபிக்குமாறு சாமர சம்பத்திடம் நாடாளுமன்றத்தில் சவால் விடுத்தேன், இதுவரை எந்த குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியவில்லை.
​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/351f8739-5d5f-4ce5-975d-3c6ded079655/26-6aae74bf6cebb.webp' /></p><p>ஊழல், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் நாட்டின்
பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் நேர்மறையான நடவடிக்கைகளுக்குத்
தமிழரசு கட்சி தொடர்ந்து ஆதரவளிக்கும்.
​</p><p>போதைப்பொருள் மற்றும் மதுப்
பயன்பாட்டினால் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ் இளைஞர்களும்
கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p> வன்முறைகள் அதிகரித்துள்ளன, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மதுபான சாலைகளை மூடும்
நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தருகின்றோம்.&nbsp;</p><p>இந்த ஆண்டில் மாகாண சபை தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை, அடுத்த ஆண்டு அதற்கான அறிவிப்பு வரும்போது முதலமைச்சர் வேட்பாளர்
குறித்த முடிவுகள் பரிசீலிக்கப்படும்” என தெரிவித்தார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T11:40:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இளைஞனுக்கு நேர்ந்த துயரம் ; பொலிஸார் மறித்ததும் நிலத்தில் விழுந்து உயிரிழந்த இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragedy-befalls-young-man-in-jaffna-1789817965"></link>
            <id>https://jvpnews.com/article/tragedy-befalls-young-man-in-jaffna-1789817965</id>
            <summary type="text">இன்று காலை மானிப்பாய் பொலிஸார் வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்தபோது, அதில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இன்று காலை மானிப்பாய் பொலிஸார் வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்தபோது, அதில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

சுன்னாகம், சபாபதிப்பிள்ளை வீதியைச் சேர்ந்த 26 வயதுடய இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1b43e6d-00be-467f-8e2c-9589ac34a5d5/26-6aae746e868b1.webp' /></p><h2 style="text-align: justify; ">உடற்கூற்றுப் பரிசோதனை</h2><p style="text-align: justify; ">குறித்த இளைஞன் இன்று யாழ்ப்பாணம் - காரைநகர் வீதியில், மானிப்பாய் தேவாலயத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது போக்குவரத்துப் பொலிஸார் அவரை வழிமறித்தனர்.</p><p style="text-align: justify; ">
 

இதன்போது, அந்த இளைஞன் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திய பின்னர் தானாகவே கீழே சரிந்து விழுந்து அசைவற்று காணப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

முறைப்படி அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
 

அவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-19T11:39:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனை விடுவிக்க ஜனாதிபதி நேரடியாகத் தலையிட வேண்டும்! முன்னாள் இராஜாங்க அமைச்சர் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anojan-saudi-case-anura-h-m-m-harees-1789815836"></link>
            <id>https://tamilwin.com/article/anojan-saudi-case-anura-h-m-m-harees-1789815836</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா
அனோஜனின் விவகாரத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுகி அவரது
விடுதலைக்காக ஜனாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா
அனோஜனின் விவகாரத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுகி அவரது
விடுதலைக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேரடியாகத் தலையிட்டு உச்சகட்ட
இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று முன்னாள் இராஜாங்க
அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும்
குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "எஸ். அனோஜன் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள் இலங்கையர்கள் அனைவருக்கும்
கவலையையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளன. </p><p>குறிப்பாக, அவரது தாயார் தனது
மகனின் நிலை தொடர்பில் அனுபவித்து வரும் வேதனையும் கண்ணீரும் வார்த்தைகளால்
விவரிக்க முடியாததாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) தொடர்பில் அனோஜன் கருத்து வெளியிட்ட விடயத்தில் அவர்
மன்னிப்பு கோரியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>அனோஜனின் விடுதலை</h2><p> </p><p>ஒரு மனிதர் தனது தவறை
உணர்ந்து மன்னிப்பு கோரும் நிலையில், இஸ்லாம் வலியுறுத்தும் ஒற்றுமை,
சமாதானம், மன்னிப்பு, கருணை மற்றும் மனிதாபிமானம் போன்ற அடிப்படைப் பண்புகளை
இந்த விடயத்தில் கடைப்பிடிப்பது மிகவும் அவசியமாகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4dd2c8b-6663-4ec5-8317-16a9a6881755/26-6aae73637a10f.webp' /></p><p>

இந்த விடயத்தில் இலங்கை ஜனாதிபதி நேரடியாகத் தலையிட முன்வர வேண்டும்.
குறிப்பாக, இலங்கை அரசு தற்போது கட்டியெழுப்பி வரும் சமூக நல்லிணக்கத்தை
மேலும் வலுப்படுத்தும் வகையில், அனோஜனின் விடுதலைக்காக சவூதி அரேபிய அரசுடன்
உயர்மட்ட இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.
</p><p>
நாட்டிலுள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த விடயத்தில்
கட்சி அரசியலுக்கு அப்பால் ஒன்றிணைந்து ஜனாதிபதியையும், வெளிநாட்டலுவல்கள்
அமைச்சரையும் சந்திக்க வேண்டும். </p><p>அனோஜனின் விடுதலைக்காக அரசு மேற்கொள்ள
வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியிடமும், வெளிவிவகார
அமைச்சரிடமும் நேரடியாக வலியுறுத்த வேண்டும்.
</p><p>
அத்துடன், சவூதி அரேபிய அதிகாரிகளுடனான பேச்சுகளில் மன்னிப்பு கோரும் நடைமுறை,
சட்ட ரீதியான வாய்ப்புகள் மற்றும் இராஜதந்திர ரீதியான சாத்தியங்கள்
அனைத்தையும் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.</p><h2>உயர்மட்ட பேச்சு</h2><p>
</p><p>
தனது பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிரஜை என்ற அடிப்படையிலும், ஒரு இலங்கையர் என்ற
அடிப்படையிலும், சகோதரர் அனோஜன் விடுதலை பெற்று தனது தாயாரையும்
குடும்பத்தினரையும் சந்திப்பதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்த வேண்டும் என
எதிர்பார்க்கின்றேன்.</p><p>

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சும், வெளிவிவகார அமைச்சும் இந்த விடயத்தில்
உச்சகட்ட கரிசனையுடன் செயற்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a547fef5-7ec5-4466-adcb-28ea0badc1d8/26-6aae7364391b3.webp' /></p><p> </p><p>சவூதி அரேபிய அரசுடனும் சம்பந்தப்பட்ட
அதிகாரிகளுடனும் தொடர்ந்து உயர்மட்ட பேச்சுகளை நடத்தி, அனோஜனுக்கு மன்னிப்பு
கிடைத்து அவரது தண்டனை நீக்கப்பட்டு விடுதலை பெறுவதற்கான அனைத்து
சாத்தியங்களையும் ஆராய வேண்டும்.</p><p>
எனவே, ஜனாதிபதி நேரடியாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும்
அதிகாரிகளை ஒருங்கிணைத்து, சவூதி அரேபிய அரசுடன் உச்சக்கட்ட இராஜதந்திர
முயற்சிகளை முன்னெடுத்து, சகோதரர் எஸ். அனோஜன் பாதுகாப்பாக இலங்கைக்குத்
திரும்புவதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும் என்றும் எச்.எம்.எம். ஹரீஸ்
மேலும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T11:39:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[புடின் கட்சிக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும்... வழங்கப்பட்ட வாக்குச் சீட்டுகளில் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-voters-favour-of-putin-1789817772"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-voters-favour-of-putin-1789817772</id>
            <summary type="text">Russian voters are handed ballot papers with an X already marked: ரஷ்ய வாக்காளர்களுக்கு ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுகள் வழங்கப்படுகின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russian voters are handed ballot papers with an X already marked: ரஷ்ய வாக்காளர்களுக்கு ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன.
</p><p>ரஷ்ய வாக்காளர்களுக்கு, விளாடிமிர் புடினின் கட்சிக்கு ஆதரவாக ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன.</p><h2>குறியீடு இடப்பட்ட</h2><p>
</p><p>போர்க்காலச் சூழலில் நடைபெறும் தனது முதல் நாடாளுமன்றத் தேர்தலுக்கான மூன்று நாள் வாக்குப்பதிவை ரஷ்யா வெள்ளிக்கிழமையன்று தொடங்கியது; இதில் குறிப்பிடத்தக்க எதிர்க்கட்சிகள் ஏதுமில்லாத நிலையில், விமர்சகர்களால் 'போலி' என்று குறிப்பிடப்படும் இத்தேர்தல் புடினின் அரசியல் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9e9df98-18a5-4025-9f4f-c8a9feabe4a4/26-6aae73ae515bb.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், சைக்‌டிவ்கார் (Syktyvkar) நகர வாக்காளர்களுக்கு, புடினின் 'யுனைடெட் ரஷ்யா' கட்சிக்கு ஆதரவாக ஏற்கனவே குறியீடு இடப்பட்ட வாக்குச்சீட்டுகள் தவறுதலாக வழங்கப்பட்டதாக கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஒலெக் மிகைலோவ் குற்றம் சாட்டியுள்ளார். </p><p>இதற்கிடையில், தென்மேற்கு ரஷ்யாவின் வொரோனேஷ் (Voronezh) நகரில், ஒருவர் பல வாக்குச் சீட்டுகளை வாக்குப்பெட்டியில் போடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.</p><p></p><p> </p><p>செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலும் இதே போன்றதொரு சம்பவம் பதிவாகியுள்ளது; அங்கு வாக்குச்சாவடி ஊழியர் ஒருவர் சுமார் 100 வாக்குச்சீட்டுகளைப் பெட்டிக்குள் திணிப்பது காணொளியில் பதிவாகியுள்ளது. </p><p>இதற்கிடையில், ஐக்கிய ரஷ்யாவுக்கு வாக்களிக்குமாறு உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து, அரசு நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், தாங்கள் பூர்த்தி செய்த வாக்குச் சீட்டுகளின் புகைப்படங்களை தங்கள் மேலதிகாரிகளுக்கு அனுப்பும்படி கட்டளையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. </p><p>சமாரா பிராந்தியத்தில், அடையாளம் தெரியாத நபர்கள் கையில் வாக்குச் சீட்டுகளுடன் வெளியேறுவதைக் காண முடிந்தது, அதே சமயம் சகலின் தீவில், நடமாடும் வாக்குச் சாவடிகள் பார்வையாளர்கள் இல்லாமல் இயங்கின.</p><p></p><p> </p><p>எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் நடத்திய தொலைதூர ட்ரோன் தாக்குதல்கள் பரவலான எரிபொருள் நெருக்கடியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இந்தத் தேர்தல் நடைபெற்றுள்ளது. </p><p>வைல்ட்பெர்ரீஸ் மற்றும் ஓசோன் ஆகிய இணையவழி சில்லறை விற்பனையாளர்களுக்குச் சொந்தமான கிடங்குகளும் தாக்கப்பட்டன. இந்தச் சேதம் ரஷ்யப் பொருளாதாரத்தின் சிக்கல்களைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன், லட்சக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் போரின் தாக்கத்தை உணரச் செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0aa433a-2d7e-40cf-920f-2b3e304c9e04/26-6aae73af06f92.webp' /></p><p> </p><p>கிராஸ்னோடர் பிராந்தியத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ட்ரோன் தாக்குதலால் ஜன்னல்கள் உடைந்ததைத் தொடர்ந்து, அந்த வாக்குச்சாவடி வேறொரு இடத்திற்கு மாற்றப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது என்று மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் எல்லா பாம்ஃபிலோவா தெரிவித்தார். </p><p>போர் தொடங்கிய பிறகு ரஷ்யாவால் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட, ஆனால் இன்னும் முழுமையாகக் கட்டுப்பாட்டில் இல்லாத உக்ரைனின் நான்கு பிராந்தியங்களைச் சேர்ந்த மக்களும் முதன்முறையாக இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கின்றனர். </p><p>2014-இல் ரஷ்யாவால் சட்டவிரோதமாக இணைத்துக்கொள்ளப்பட்ட கருங்கடல் தீபகற்பமான கிரீமியாவிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-19T11:32:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோபல் பரிசு தொடர்பில் ஒரு புதிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nobel-prize-money-raised-1789817361"></link>
            <id>https://news.lankasri.com/article/nobel-prize-money-raised-1789817361</id>
            <summary type="text">Nobel prize sum raised: நோபல் பரிசுக்கான பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.


நோபல் அறக்கட்டளை, நோபல் பரிசுக்கான பரிசுத்தொகையை உயர்த்தியுள்ளது.

நோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nobel prize sum raised: நோபல் பரிசுக்கான பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.


நோபல் அறக்கட்டளை, நோபல் பரிசுக்கான பரிசுத்தொகையை உயர்த்தியுள்ளது.</p><h3>

நோபல் பரிசு தொடர்பில் ஒரு புதிய தகவல்</h3><p>

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை வென்றவர்கள் பெயர்கள், அக்டோபர் மாதம் 5 முதல் 12ஆம் திகதிக்குள்ளான காலகட்டத்தில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், நோபல் பரிசை வழங்கும் நோபல் அறக்கட்டளை, நோபல் பரிசுக்கான பரிசுத்தொகையை உயர்த்தியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b9f6b4f-af68-4c75-9204-124349154b21/26-6aae72134355d.webp' /></p><p>
ஆம், இதற்கு முன் நோபல் பரிசு வென்றவர்களுக்கு 11 மில்லியன் குரோனர் (kronor) வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு நோபல் பரிசு வெல்பவர்களுக்கு 12 மில்லியன் குரோனர் வழங்கப்பட உள்ளது.
</p><p>
நோர்வே பணமான 12 மில்லியன் குரோனர் என்பது, 1.27 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இலங்கை மதிப்பில் அது, 42,22,53,628.20 ரூபாய்.&nbsp;</p><p></p><p>

நோபல் பரிசுகள் வழங்குவது துவங்கப்பட்டு 125 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து, அதைக் கொண்டாடும் வகையில் இந்த பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக நோபல் அறக்கட்டளையின் இயக்குநரான Hanna Stjarne தெரிவித்துள்ளார்.
</p><p>
முதல் நோபல் பரிசு, 1901ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அப்போது நோபல் பரிசுக்கான பரிசுத்தொகை 150,782 குரோனர் ஆகும்.</p>]]></content>
            <updated>2026-09-19T11:29:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் ஏற்பட்ட பயங்கர கலவரம்.. காவலில் அடைக்கப்பட்ட 37 சுரங்கத் தொழிலாளர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/37-detained-miners-die-in-nigeria-1789816208"></link>
            <id>https://tamilwin.com/article/37-detained-miners-die-in-nigeria-1789816208</id>
            <summary type="text">நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் (Niger State) சட்டவிரோதமாகத் தங்கம் வெட்டி
எடுத்ததாகச் சந்தேகத்தின் பேரில் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 37...</summary>
            <content type="html"><![CDATA[<p>நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் (Niger State) சட்டவிரோதமாகத் தங்கம் வெட்டி
எடுத்ததாகச் சந்தேகத்தின் பேரில் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 37
சுரங்கத் தொழிலாளர்கள், காவலில் இருந்தபோது உயிரிழந்தனர்.
</p><p>
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட மக்கள் போராட்டத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில்,
அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நைஜர் மாநிலத்தின் தலைநகரான மின்னா (Minna) பகுதியில், 'நைஜீரியா பாதுகாப்பு
மற்றும் சிவில் பாதுகாப்பு அமைப்பு' (NSCDC) அதிகாரிகள் சட்டவிரோத தங்கச்
சுரங்கங்களுக்கு எதிராக அதிரடி சோதனை நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான
தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு NSCDC-ன் சிறை முகாமில் அடைக்கப்பட்டனர்.</p><h2>வெடித்த போராட்டம்..&nbsp;</h2><p>
</p><p>
அவ்வாறு காவலில் வைக்கப்பட்டிருந்த தொழிலாளர்களில் 37 பேர் அடுத்தடுத்து
உயிரிழந்தனர்.

சிறை முகாமில் ஏற்பட்ட எதிர்பாராத நோய் பரவல் காரணமாகவே தொழிலாளர்கள்
உயிரிழந்ததாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f24b6c3-c964-471f-a0cb-401c0a3c8e63/26-6aae6f84b258d.webp' /></p><p>

ஆனால் போதிய காற்றோட்டம் இல்லாத சிறிய சிறை அறையில் (Overcrowded cell),
அளவுக்கு அதிகமான நபர்களை அடைத்து வைத்ததால் ஏற்பட்ட மூச்சுத்திணறலே இந்த
மரணங்களுக்குக் காரணம் எனத் தப்பிய தொழிலாளர்களும் உறவினர்களும் குற்றம்
சாட்டியுள்ளனர்.</p><p>

தொழிலாளர்களின் மரண செய்தி பரவியதைத் தொடர்ந்து, நீதி கேட்கும் ஆயிரக்கணக்கான
மக்கள் மின்னா நகரின் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை
வீசியதுடன், துப்பாக்கிச்சூடும் நடத்தினர்.

இந்த மோதலில் போராட்டக்காரர் ஒருவர் உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணைகள்
தெரிவிக்கின்றன.
</p><p>
இந்த நிலையில் மின்னா பகுதியில் வன்முறை மேலும் பரவாமல் தடுக்க நைஜர் மாநில
ஆளுநர் உமர் பாகோ (Umar Bago) உடனடியாக 24 மணி நேர ஊரடங்கு உத்தரவைப்
பிறப்பித்துள்ளார்.
</p><p>
இதேவேளை அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கூறி, NSCDC கொமாண்டண்ட் சுபெரு சியாக்கா
அனிவியே (Suberu Siaka Aniviye) உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் தொழிலாளர்களின் மரணம் குறித்து விரிவான உயர்நிலை விசாரணை நடத்த மாநில
அரசு உத்தரவிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T11:19:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருட சென்ற இடத்தில் கடுப்பான திருடன் ; வீட்டு சுவரில் காத்திருந்த ட்விஸ்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/an-angry-thief-at-the-place-he-went-to-rob-1789804693"></link>
            <id>https://jvpnews.com/article/an-angry-thief-at-the-place-he-went-to-rob-1789804693</id>
            <summary type="text">திருட சென்ற வீட்டில் நகை, பணம் இல்லாததால் பொருட்களை உடைத்து அட்டகாசம் செய்த ஆசாமி சுவரில் &#039;சாரி&#039; என எழுதி வைத்துவிட்டு தப்பிச்சென்றார்.


கோவையில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருட சென்ற வீட்டில் நகை, பணம் இல்லாததால் பொருட்களை உடைத்து அட்டகாசம் செய்த ஆசாமி சுவரில் 'சாரி' என எழுதி வைத்துவிட்டு தப்பிச்சென்றார்.


</p><p>கோவையில் உள்ள ஒரு வீட்டில் புகுந்த மர்ம ஆசாமி, அங்கு திருடுவதற்கு நகை, பணம் இல்லாத விரக்தியில் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்திவிட்டு, சுவரில் 'சாரி' என்று எழுதி வைத்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eca4f339-b42d-4eae-938a-192c726f0130/26-6aae40974675d.webp' /></p><p>வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. சில பொருட்கள் உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன.
</p><p>
உடனடியாக படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது, அங்குள்ள பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் அனைத்தும் கீழே கொட்டப்பட்டு இருந்தன. </p><p>மேலும், கட்டிலில் இருந்த மெத்தை, சோபா, வாஷிங் மிஷின் மற்றும் பிரிட்ஜ் ஆகியவையும் சேதப்படுத்தப்பட்டு இருந்தது.&nbsp;&nbsp;</p><p></p><p>வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமி பக்கவாட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டது உள்ளார். </p><p>ஆனால் நகை, பணம் எதுவும் இல்லாத ஆத்திரத்தில், அந்த நபர் பொருட்களை சேதப்படுத்திவிட்டு, சுவரில் ஆங்கிலத்தில் 'சாரி' என்று எழுதி வைத்துவிட்டு தப்பி சென்றுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T11:18:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் துப்பாக்கி முனையில் நடந்த திருட்டு முயற்சி முறியடிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/attempted-robbery-at-gunpoint-in-trincomalee-1789815580"></link>
            <id>https://ibctamil.com/article/attempted-robbery-at-gunpoint-in-trincomalee-1789815580</id>
            <summary type="text">திருகோணமலை - அநுராதபுரம் சந்தியில் அமைந்துள்ள மதுபானக் கடை ஒன்றில் இருவரால்
மேற்கொள்ளப்பட்ட திருட்டு முயற்சியை அங்கிருந்த ஊழியர்கள் முறியடித்துள்ளனர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - அநுராதபுரம் சந்தியில் அமைந்துள்ள மதுபானக் கடை ஒன்றில் இருவரால்
மேற்கொள்ளப்பட்ட திருட்டு முயற்சியை அங்கிருந்த ஊழியர்கள் முறியடித்துள்ளனர்.</p><p>இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று (18) இரவு 9:45 அளவில் உந்துருளியில் வந்த இரு கொள்ளையர்கள், பணத்தைத்
திருடித் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். எனினும், ஊழியர்களின் கடும் போராட்டத்திற்குப் பின்னர் பணப் பையுடன்
கொள்ளையர்களில் ஒருவரைப் பிடிக்க முற்பட்டனர்.</p><p>

அந்தச் சமயத்தில், துப்பாக்கி வைத்திருந்த மற்றைய நபர் ஊழியர்களை நோக்கி
துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற போதிலும் இலக்கு தவறியது. அதனைத் தொடர்ந்து, இரு கொள்ளையர்களும் உந்துருளியில் ஏறி அனுராதபுரம் வீதி
வழியாகத் தப்பிச் சென்றனர்.</p><p></p><h2>இரண்டு சந்தேகநபர்களும் கைது</h2><p>
எனினும், இந்த சம்பவம் குறித்து உடனடியாகச் செயற்பட்ட காவல்துறையினர், திடீர்
தேடுதல் நடவடிக்கையை நடத்தி மிஹிந்துபுர பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து
இரண்டு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b97c270c-8e94-4591-a5c5-4b5c46b66635/26-6aae6e9927c3e.webp' /></p><p>
</p><p>குறித்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் உப்புவெளி காவல் நிலையத்தில்
கடமையாற்றி வரும் காவல்துறையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்தவர் எனவும்
தெரியவருகிறது.</p><p>குறித்த இருவரும் மது போதையில் இருந்துள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் தற்போது மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T11:15:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவலிங்கத்தை அவமதித்தவர் வீட்டிலிருக்கையில் அனோஜனுக்கு தலை துண்டிப்பு தண்டனை - சிறீதரன் ஆவேசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anojan-death-panalty-case-1789814362"></link>
            <id>https://tamilwin.com/article/anojan-death-panalty-case-1789814362</id>
            <summary type="text">சிவலிங்கத்தை கீழ்த்தரமாக எழுதியவர் வீட்டில் இருக்கப் போகிறார், அல்லாஹ்வை கீழ்த்தரமாக பதில் எழுதிய அனோஜனுக்கு தலை துண்டிக்கப்பட போகிறது என நாடாளுமன்ற உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிவலிங்கத்தை கீழ்த்தரமாக எழுதியவர் வீட்டில் இருக்கப் போகிறார், அல்லாஹ்வை கீழ்த்தரமாக பதில் எழுதிய அனோஜனுக்கு தலை துண்டிக்கப்பட போகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். </p><p>

கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை உள்ளூராட்சி வாரத்தின் இறுதி நாள் நிகழ்வும், பரிசளிப்பு விழாவும் இன்று (19.09.2026 கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
</p><p>
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>அனோஜன் விவகாரம்</h2><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், நாம் இங்கு பேசிக் கொண்டிருக்கும் போது அனோஜனுடைய தலையை துண்டிப்பதை பற்றி ஒரு நாடு சிந்தித்துக் கொண்டிருக்கிறது. எங்களோடு பிறந்த ஒரு மனிதன், உங்களுடைய சகோதரன் உயிரோடு வருவானா அல்லது அவனது உடல் தான் வருமா நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்ற சிக்கல் நீடிக்கிறது. </p><p>நேற்று காலை கூட அமைச்சர் விஜித ஹேரத்துடன் பேசியிருந்தேன். ஜனாதிபதியினுடைய செயலாளரோடும் போசியிருந்தேன். இந்த விடயம் தொடர்பில் உங்களது அதீத கவனமும் அந்த உயிரை காப்பாற்றுகின்ற விடயமும் ஒரு அரசுக்குரியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38423397-8319-4c0c-85ac-17eb3543cfef/26-6aae6e9a8b399.webp' /></p><p> </p><p>யாரோ ஒருவர் ஊர்வலம் போகும்போது நாயைக் கொண்டு போனார்கள். அதற்கு சுப்பிரமணி என பெயரையும் வைத்து விட்டார்கள். தெருவில் நின்ற ஒருவர் அதனை காலால் தட்டி விட்டார். அதனை எங்களுடைய ஆட்களே பெரிதுபடுத்தினார்கள். அதற்கு நிறைய விமர்சனங்களை எழுதினார்கள்.</p><h2>தண்டனை</h2><p> </p><p>இந்த நிலையில் அந்த மார்க்கத்தை சேர்ந்த ஒருவர் சிவலிங்கத்தை கீழ்த்தரமாக எழுதினார். பொறுக்க முடியாத அனோஜன் அல்லாஹ்வை பற்றி கீழ்த்தரமாக எழுதினார். </p><p>இரண்டுமே பொருத்தமில்லாத ஒன்று தான். எழுதக்கூடாது தான். ஆனால் அவர் எழுதினார். இவர் பதில் எழுதினார். இவருக்கு தலை போகிறது. ஆனால் அவர் வீட்டில் இருக்கப்போகிறார். </p><p>அனோஜனின் பதிவை மொழி பெயர்த்து கொடுத்தவர் ஒரு தமிழ் பேசும் இனத்தைச் சேர்ந்தவர். அனோஜனுக்கு தண்டனை கிடைப்பதற்கு காரணம் இலங்கையில் இருக்கின்ற தமிழ் பேசுகின்ற இந்த சகோதரர்கள் தான் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T11:15:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கையில் நோட்டு, வாலிபால்!! 80-s லுக்கில் மாறிய நடிகை சன்னி லியோன்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/sunny-leone-80s-look-photos-post-viral-1789815773"></link>
            <id>https://viduppu.com/article/sunny-leone-80s-look-photos-post-viral-1789815773</id>
            <summary type="text">சன்னி லியோன்ஆபாச படங்கள் மூலம் பிரபலமான நடிகை சன்னி லியோன், அதிலிருந்து வெளியேறி இந்தியாவில் குடியேறினார். பல படங்களில் நடித்து பிரபலமான சன்னி, மலையாள...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சன்னி லியோன்</h2><p>ஆபாச படங்கள் மூலம் பிரபலமான நடிகை சன்னி லியோன், அதிலிருந்து வெளியேறி இந்தியாவில் குடியேறினார். பல படங்களில் நடித்து பிரபலமான சன்னி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05816e84-f1ba-40fe-af07-f3add8601cff/26-6aae6be1dfda1.webp' /></p><p>திருமணமாகி 4 குழந்தைகளை பெற்றும், தத்தெடுத்தும் வளர்த்து வரும் சன்னி லியோ, பணத்தேவைக்காக ஆபாச படங்களில் நடித்தது குறித்து Karenjit Kaur: The Untold Story of Sunny Leone என்ற தன்னுடைய சுயசரிதை வலைத்தொடரில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.</p><p> தற்போது 80ஸ் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-19T11:15:00+00:00</updated>
        </entry>
    </feed>
