<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-08T19:29:19+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எம்பிலிப்பிட்டியவில் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shooting-near-embilipitiya-one-person-injured-1788895289"></link>
            <id>https://tamilwin.com/article/shooting-near-embilipitiya-one-person-injured-1788895289</id>
            <summary type="text">எம்பிலிப்பிட்டிய அருகே இன்று(8) நள்ளிரவை அண்மித்த நேரத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

நபரொருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>எம்பிலிப்பிட்டிய அருகே இன்று(8) நள்ளிரவை அண்மித்த நேரத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
</p><p>
நபரொருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குறித்த துப்பாக்கிச் சூட்டில் இலக்கு வைக்கப்பட்ட நபர் படுகாயமடைந்துள்ளார்.</p><h2>&nbsp;துப்பாக்கிச் சூடு&nbsp;</h2><p>
</p><p>
அதனையடுத்து அவர் தனமல்வில மருத்துவமனையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/400e09f0-a2ff-4b19-8fcb-faf69f666e86/26-6aa0617f3272b.webp' /></p><p>
</p><p>
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம்இதுவரை கண்டறியப்படவில்லை. போதைப் பொருள் வர்த்தகம் காரணமாக ஏற்பட்ட போட்டியே இதற்கான காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T19:27:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் 600 புதிய குளிர்சாதனப் பேருந்துகள் இறக்குமதி ; பயணிகள் போக்குவரத்தில் புதிய மறுமலர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/600-new-air-conditioned-buses-imported-sri-lanka-1788894993"></link>
            <id>https://jvpnews.com/article/600-new-air-conditioned-buses-imported-sri-lanka-1788894993</id>
            <summary type="text">இந்த ஆண்டின் இறுதிக்குள் இறக்குமதி செய்யப்படவுள்ள 600 புதிய குளிர்சாதனப் பேருந்துகள் மூலம் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) வலுப்படுத்தப்படும்.
இலங்கை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின் இறுதிக்குள் இறக்குமதி செய்யப்படவுள்ள 600 புதிய குளிர்சாதனப் பேருந்துகள் மூலம் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) வலுப்படுத்தப்படும்.</p><p>
</p><p></p><p>இலங்கை போக்குவரத்து சபையின் நிதியைப் பயன்படுத்தி மேலும் 200 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ca6adbf-28c7-4f82-ae41-b21ed035d243/26-6aa05f1368512.webp' /></p><p>

நேற்று (07) கடவத்தை மெட்ரோ டிப்போவின் உத்தியோகபூர்வ செயற்பாடுகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அமைச்சர், மெட்ரோ பேருந்து சேவையின் மொத்த எண்ணிக்கை இந்த மாதத்தில் 122 ஆக உயரும்.</p><p>

மேலும் 50 பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவையில் ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த ஆண்டின் இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் மெட்ரோ பேருந்துகளின் எண்ணிக்கை 172 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
</p><p>
மெட்ரோ பேருந்து சேவை மேல் மாகாணத்திற்கு அப்பால் காலி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும் விரிவாக்கப்படும் என்றும், மெட்ரோ நிறுவனத்துடன் இணைந்து தனியார் துறையினரும் இந்த சேவைகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T19:16:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் நீரிணையில் ஆளில்லா நீர்மூழ்கியை கைப்பற்றிய ஈரான்? வெளியான வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-media-reports-capture-of-unmanned-submarine-1788894679"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-media-reports-capture-of-unmanned-submarine-1788894679</id>
            <summary type="text">Iran media Reports Capture of Unmanned Submarine: நீர்மூழ்கி கப்பலை கைப்பற்றி இருப்பதாக ஈரானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.சிறைபிடிக்கப்பட்ட ஆளில்லா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran media Reports Capture of Unmanned Submarine: நீர்மூழ்கி கப்பலை கைப்பற்றி இருப்பதாக ஈரானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.</p><h2>சிறைபிடிக்கப்பட்ட ஆளில்லா நீர்மூழ்கி கப்பல்?</h2><p>ஈரானின் புரட்சிகர காவல் படையினரின் தகவலில், ஹார்முஸ் ஜலசந்தியில் வைத்து ஆளில்லா நீர்முழ்கி கப்பல் ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டு கைப்பற்றப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.</p><p> ஈரானிய இராணுவத்தின் கூற்றுப்படி இந்த ஆளில்லா நீர்மூழ்கி கப்பலானது ஆண்டுரில்(Anduril) நிறுவனத்தின் 'Dive LD' என்ற தன்னாட்சி நீர்மூழ்கி கப்பல் என தெரியவந்துள்ளது.</p><p>செவ்வாய்க்கிழமை ஈரானிய அரசு ஊடகமான IRNA மற்றும் பல செய்தி நிறுவனங்களும் ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் ஒன்றின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இருந்தன.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">⚡️BREAKING: The IRGC has released Footage of the Seizure of US Navy&#39;s Advanced Dive-LD Autonomous Underwater Vehicle<br><br>The United States was using it to Detect Mines in the Strait of Hormuz<br><br>The Dive-LD contains Classified Technology and Iran will likely Share it with Russia and… <a href="https://t.co/JznS0A2C7T">pic.twitter.com/JznS0A2C7T</a></p>&mdash; Iran Observer (@IranObserver0) <a href="https://x.com/IranObserver0/status/2097388572042998093?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> IRGC வெளியிட்ட காட்சிகளில், நீர்மூழ்கி கப்பல் எந்தவொரு சேதமும், பாதிப்புகளும் இல்லாமல் நல்ல நிலையில் இருப்பதை பார்க்க முடிந்தது.</p><p> Dive LD நீர்மூழ்கி கப்பல் கைப்பற்றப்பட்டது மட்டும் உறுதிப்படுத்தப்பட்டால் அதிநவீன ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் ஒன்றை நாடு ஒன்று கைப்பற்றும் முதல் சம்பவம் இதுவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfceedde-fcfe-4ff3-96f9-0784d2856645/26-6aa05dd8aa3c7.webp' /></p><p> &nbsp; ஈரானிய ராணுவம் மற்றும் ஊடகங்கள் இது தொடர்பான செய்தியை தீவிரமாக அறிவித்து வரும் நிலையில், இது தொடர்பாக அமெரிக்கா எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T19:11:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையர்களுக்கான விசா இல்லாத நுழைவை ரத்து செய்த நாடு! காரணத்தை வெளியிட்டது அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/reason-for-thailand-ended-visa-free-entry-1788893382"></link>
            <id>https://ibctamil.com/article/reason-for-thailand-ended-visa-free-entry-1788893382</id>
            <summary type="text">இலங்கை நாட்டவர்கள் சிலர் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவங்களே, இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா இல்லாத நுழைவு வசதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை நாட்டவர்கள் சிலர் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவங்களே, இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா இல்லாத நுழைவு வசதியை ரத்து செய்ய தாய்லாந்து எடுத்த முடிவுக்கு முக்கியக் காரணமாகும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.</p><p>

ஊடகச் சந்திப்பில் பேசிய அவர், தாய்லாந்து அரசாங்கம் உலக நாடுகளுக்கான தனது விசா நடைமுறைகளை மறுஆய்வு செய்து, இலங்கை உட்பட 60 நாடுகளுக்கான விசா விலக்கு வசதியை திரும்பப்பெற முடிவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

விசா இல்லாத வசதியைத் தவறாகப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டதை தாய்லாந்து அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.</p><p></p><h2>சிறப்பு விசா நடைமுறை</h2><p> </p><p>

குறிப்பாக, பௌத்த பிக்குகள் தாய்லாந்திற்குள் குஷ் வகை போதைப்பொருளைக் கொண்டுவர முயன்ற சமீபத்திய சம்பவத்தையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5dc23fa-6309-482a-9882-cf8daa6f594d/26-6aa05b8582d73.webp' /></p><p>
</p><p>
திருத்தப்பட்ட விசா விலக்கு மற்றும் வருகையின் போது விசா பெறும் வசதி (Visa on Arrival) தொடர்பான அறிவிப்புகள் ஓகஸ்ட் 31 அன்று தாய்லாந்தின் அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. </p><p>

இது குறித்து இலங்கை அரசு தாய்லாந்து அதிகாரிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. அப்போது, இலங்கைக்கு சிறப்பு விசா நடைமுறையை வழங்குவதற்காக புதிய இருதரப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள தாய்லாந்து அரசு முன்மொழிந்துள்ளது.</p><h2>வேலைவாய்ப்பு ஒப்பந்தம்</h2><p>இதற்கான வரைவு ஒப்பந்தம் தற்போது குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டு, அடுத்தகட்டமாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f60899d8-58f8-41d3-bdd7-4de7339b1f8c/26-6aa05b866fd4b.webp' /></p><p>
</p><p>
இலங்கைத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக அமைச்சர் விஜித ஹேரத் செப்டம்பர் 14 அன்று தாய்லாந்து செல்லவுள்ளார்.</p><p> 

தனது இந்தப் பயணத்தின் போது, முன்மொழியப்பட்டுள்ள புதிய இருதரப்பு விசா நடைமுறை குறித்தும் தாய்லாந்து அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T19:05:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொனராகலையில் துப்பாக்கிச் சூடு ; தீவிர விசாரணையில் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shooting-in-monaragala-police-conduc-investigation-1788894065"></link>
            <id>https://jvpnews.com/article/shooting-in-monaragala-police-conduc-investigation-1788894065</id>
            <summary type="text">மொனராகலை தனமல்வில, கல்வல யாய பகுதியில் நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.மேலதிக விசாரணை

இந்தத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொனராகலை தனமல்வில, கல்வல யாய பகுதியில் நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65e14aca-f524-4ec0-9b5e-db11b226dfb4/26-6aa05b733baea.webp' /></p><p>துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
</p><p>
சம்பவம் தொடர்பில் தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T19:01:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நூடுல்ஸ் உணவில் உயிருடன் மிதந்த குட்டி எலி: ஆர்டர் செய்த பெண்ணிற்கு அதிர்ச்சி: வைரல் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/baby-rat-flots-in-beef-noodles-viral-video-1788891929"></link>
            <id>https://news.lankasri.com/article/baby-rat-flots-in-beef-noodles-viral-video-1788891929</id>
            <summary type="text">உணவகம் ஒன்றில் இருந்து வாங்கப்பட்ட நூடுல்ஸ் பார்சலில் குட்டி எலி ஒன்று உயிருடன் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவில் உயிருடன் கிடந்த எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உணவகம் ஒன்றில் இருந்து வாங்கப்பட்ட நூடுல்ஸ் பார்சலில் குட்டி எலி ஒன்று உயிருடன் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> உணவில் உயிருடன் கிடந்த எலி</h2><p>
ஹாங்காங்கின் குவாய் சுங் பகுதியில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் மதிய உணவிற்காக திங்கட்கிழமை அப்பகுதியில் இருந்த “வா ஜெர்” என்ற உணவகத்தில் இருந்து சாத்தே பீப் நூடுல்ஸ் உணவை ஆர்டர் செய்துள்ளார்.</p><p> &nbsp;சுமார் 10 சதவீத தள்ளுபடியுடன் ரூ. 530க்கு இந்த உணவை அவர் வாங்கியுள்ளார்.</p><p> ஆர்டர் செய்யப்பட்ட அந்த உணவை வாங்கிக் கொண்டு, சாப்பிடுவதற்காக அந்த உணவை திறந்த போது அதில் சிறிய எலி ஒன்று உயிருடன் நெளிவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aaa1cc26-404e-4bae-8892-5feb9de6cf9b/26-6aa0531ab9993.webp' /></p><p> இதையடுத்து அந்த பெண் உடனடியாக உணவு மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரத்துறையிடம் புகார் அளித்துள்ளார்.</p><h2> உணவகம் அளித்த விளக்கம்</h2><p>இந்த சம்பவம் மிகவும் பயங்கரமான மற்றும் மிகைப்படுத்தப்பட்ட சம்பவமாக தெரிகிறது. கடந்த ஓராண்டாக இந்த உணவகத்தை நடத்தி வருகிறோம். இதுவரை எலி அல்லது பூச்சிகள் தொடர்பான புகார் எதுவும் வந்தது இல்லை என்று உணவகத்தின் உரிமையாளர் மைக் தெரிவித்துள்ளார்.</p><p> இது தொழிற்பேட்டை என்பதால் எப்போதாவது எலிகள் இங்கு நடமாடுவது உண்டு. அதனால் நாங்கள் மாதந்தோறும் உணவகத்தில் ஆழமான துப்புரவு மற்றும் கிருமிநாசினி பணிகளை செய்து வருவதாக விளக்கமளித்துள்ளார்.</p><p> மேலும் இதனை யாரும் குறும்பாக செய்து இருக்கவும் வாய்ப்பில்லை, இனி வரும் காலங்களில் பூச்சு கட்டுப்பாடு நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Customer finds NEWBORN MOUSE in noodle dish in Hong Kong <a href="https://t.co/jGMxCKcrbB">pic.twitter.com/jGMxCKcrbB</a></p>&mdash; RTVisual (@RT_Visual_on_X) <a href="https://x.com/RT_Visual_on_X/status/2097310037697876293?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2> இணையத்தில் வைரலான விவகாரம்</h2><p>இந்த சம்பவம் தொடர்பாக இணையத்தில் வெளியான 18 வினாடிகள் கொண்ட வீடியோ வைரலாகி உள்ளது.</p><p> மசாலா சாஸுக்குள் குட்டி எலி ஒன்று கை, கால்களை அசைத்து கொண்டு இருப்பது நெட்டிசன்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T18:45:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். சுதுமலை வெள்ளப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி ; அதிரடி நடவடிக்கைக்கு முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/permanent-solution-flooding-problem-sudumalai-jaff-1788893010"></link>
            <id>https://jvpnews.com/article/permanent-solution-flooding-problem-sudumalai-jaff-1788893010</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் சுதுமலைப் பகுதியில் தொடர்ச்சியாக நிலவி வரும் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும் வகையில், வாய்க்கால்களைப் புனரமைத்தல் உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் சுதுமலைப் பகுதியில் தொடர்ச்சியாக நிலவி வரும் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும் வகையில், வாய்க்கால்களைப் புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>இதற்கமைய, வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களமும் வலிகாமம் தென் - மேற்கு பிரதேச சபையும் இணைந்து குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளன.
</p><p>
மேலும், மழைக்காலங்களில் அதிகளவில் தேங்கும் நீரைச் சேமித்து எதிர்காலத்தில் பயன்படுத்தும் வகையில், சுதுமலைப் பகுதியில் காணப்படும் பொருத்தமான குளங்களை உடனடியாகத் தூர்வாருவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28ce9ad5-b51a-48c0-aa54-c206d311f259/26-6aa05753d6f91.webp' /></p><p>சுதுமலைப் பகுதியில் நிலவும் வெள்ளப்பெருக்கு மற்றும் வாய்க்கால்களில் காணப்படும் தடைகள் தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p>

இதன்போது, வெள்ளநீர் இயற்கையாக வழிந்தோடி செல்லும் வகையில் நீர்வழிகளைச் சீரமைப்பதுடன், மழைக்காலங்களில் தேங்கும் அதிகளவான நீரை முறையாகத் தேக்கி வைக்கும் திறனை மேம்படுத்துவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.</p><p>

இதற்காக, அப்பகுதியில் உள்ள பொருத்தமான குளங்களை அடையாளம் கண்டு அவற்றைத் தூர்வாரி, நீர்த்தேக்க கொள்ளளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.</p><p>

சுதுமலைப் பகுதியில் வெள்ளப் பாதிப்பைத் தடுக்கும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ள பணிகள் எவ்வித தாமதமுமின்றி ஆரம்பிக்கப்படுவதுடன், நிலைமைகளுக்கு ஏற்ப மேலதிக நடவடிக்கைகளும் அடுத்த கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T18:43:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சர்களை காப்பாற்ற துடிக்கும் ரணில்! நல்லாட்சி அரசாங்கத்தில் ராஜபக்சர்களுடன் நடந்துள்ள டீல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-ranil-support-ranil-mahinda-deal-1788892577"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-ranil-support-ranil-mahinda-deal-1788892577</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைதினை தொடர்ந்து நாட்டில் அரசியல் களம் சூடிபிடித்துள்ளது.

பல முக்கிய தகவல்களும் கடந்த காலங்களில் இடம்பெற்ற ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைதினை தொடர்ந்து நாட்டில் அரசியல் களம் சூடிபிடித்துள்ளது.

பல முக்கிய தகவல்களும் கடந்த காலங்களில் இடம்பெற்ற திரைமறைவு அரசியல் நகரவுகளும் அம்பலமாகின்றன.
</p><p>
அந்தவகையில், ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவு வழங்குவதாகவும், அவர்களைப் பாதுகாப்பதாகவும் தற்போது கருத்துக்கள் வெளியாகின்றன.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாவதற்கு ராஜபக்ச குடும்பத்தின் ஆதரவு ஒரு காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.</p><p> 

இந்தநிலையில்,அனுராதபுரத்தில் நடைபெறவிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் மக்கள் கூட்டத்திற்கு, ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரப்பூர்வமாக வாழ்த்துத் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளது. </p><p>

நாமல் ராஜபக்சவின் கைது அரசியல் பழிவாங்கல் என்று கூறி, ஐக்கிய தேசியக் கட்சி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
</p><p>
இதேவேளை,
ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்புடைய 22 மில்லியன் அமெரிக்க டொலர் ஹொங்காங் வங்கி கணக்கு விவகாரத்தை, ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்கஅம்பலப்டுத்தியுள்ளார்</p><p>.

 நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், 2015ஆம் ஆண்டில் இந்த ஹாங்காங் வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

 இந்த விவகாரம் தொடர்பாக ஆரம்பகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், அப்போதைய அரசாங்கத்தில் இருந்த சிலர் தலையிட்டு அந்த நடவடிக்கைகளைத் தடுத்ததாக ஆசு மாரசிங்க பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>

 இந்தத் தகவல்கள் மூலம், முன்னாள் ஆட்சியாளர்களுக்கும் அப்போதைய நல்லாட்சி அரசாங்கத்திற்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் 'டீலிங்' (Deal) குறித்த விடயங்களை ஆசு மாரசிங்க வெளிப்படுத்தியுள்ளார் .</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக எடுத்து வருகின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/twa6VY8TL_U" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T18:41:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம் ; செப்டெம்பர் 19 முதல் கடும் அமுல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/seat-belts-are-mandatory-on-expressways-1788891400"></link>
            <id>https://jvpnews.com/article/seat-belts-are-mandatory-on-expressways-1788891400</id>
            <summary type="text">அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் ஆசனப்பட்டி (Seat belt) அணிவது தொடர்பான கட்டாய ஒழுங்குமுறை எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் மிகக் கடுமையாக அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் ஆசனப்பட்டி (Seat belt) அணிவது தொடர்பான கட்டாய ஒழுங்குமுறை எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் மிகக் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>


அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் முன் இருக்கை பயணிகள் மட்டுமன்றி, பின் இருக்கைப் பயணிகளும் கட்டாயமாக ஆசனப்பட்டி அணிய வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e9ccd4a-e10e-438c-8cbe-2a7805d7c781/26-6aa0510aa8925.webp' /></p><p>வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களில் ஆசனப்பட்டிகளைப் பொருத்துவதற்கோ அல்லது பழுதுபார்ப்பதற்கோ பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்டு, இந்த ஒழுங்குமுறை அமுல்படுத்தப்படுவது ஒத்திவைக்கப்பட்டு வந்ததாக அவர் விளக்கமளித்தார்.
</p><p>
இருப்பினும், செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் இந்த விதிமுறை கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அந்தத் திகதிக்குப் பிறகு எந்தவொரு சாக்குப்போக்குகளுக்கு இடமோ அல்லது மேலதிக கால அவகாசமோ வழங்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T18:16:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சதொசவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகம் ; சானக மதுகொட குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/prices-of-essential-commodities-high-at-sathosa-1788890561"></link>
            <id>https://jvpnews.com/article/prices-of-essential-commodities-high-at-sathosa-1788890561</id>
            <summary type="text">சதொச விற்பனை நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதுடன், வெளிச்சந்தையை விட சதொசவில் பொருட்களின் விலை அதிகமாகக் காணப்படுவதாக நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சதொச விற்பனை நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதுடன், வெளிச்சந்தையை விட சதொசவில் பொருட்களின் விலை அதிகமாகக் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சானக மதுகொட குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>
</p><p></p><p>நாடாளுமன்றத்தில் இன்று வாய்மூலக்கேள்வி நேரத்திலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.</p><p>

சதொசவில் பொருட்கள் வாங்குவதற்காகச் செல்லும் நுகர்வோர் ஏமாற்றத்துடன் திரும்புவதாகவும், ஒரே வாரத்திற்குள் சீனி, பருப்பு மற்றும் அரிசி ஆகியவற்றின் விலை குறிப்பிடத்தக்க அளவு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab770edd-f185-4664-a1bf-8200ef074096/26-6aa04dc37381e.webp' /></p><p>

தனியார் பல்பொருள் அங்காடிகளை விடவும் சதொசவில் பொருட்களின் விலை அதிகமாக இருப்பது அரசாங்கத்தின் நுகர்வோர் பாதுகாப்பு உறுதிமொழியைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
</p><p>
இதற்குப் பதிலளித்துப் பேசிய வர்த்தக அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன, கடனில் மூழ்கியிருந்த சதொச நிறுவனத்தை தற்போதைய அரசாங்கம் மீட்டு எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
</p><p>
கேள்விப்பத்திர முறையிலான கொள்முதல் தாமதங்களே பொருள் தட்டுப்பாடிற்குக் காரணம் எனக் குறிப்பிட்ட அவர், இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக அனைத்து மாவட்டங்களிலும் மொத்த விநியோகக் களஞ்சியங்கள் அமைக்கப்பட்டு, வெளிச்சந்தையை விடக் குறைந்த விலையில் பொருட்கள் விநியோகிக்கப்படும் என உறுதியளித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T18:02:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் பதிவாகியுள்ள மற்றுமொரு துப்பாக்கிச் சூடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/another-shooting-today-1788889239"></link>
            <id>https://ibctamil.com/article/another-shooting-today-1788889239</id>
            <summary type="text">மொனராகலை - தனமல்வில பிரதேசத்தில் நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
தனமல்வில - கல்வல யாய பகுதியில் இந்தத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொனராகலை - தனமல்வில பிரதேசத்தில் நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p>
தனமல்வில - கல்வல யாய பகுதியில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b55f7b55-c12c-4c48-bcd5-75b785a40527/26-6aa04a39d5121.webp' /></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T17:46:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கியூபெக்கை யாரும் மிரட்ட முடியாது – மாகாண முதல்வர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/frechette-responds-to-trumps-bombardier-threats-1788888512"></link>
            <id>https://canadamirror.com/article/frechette-responds-to-trumps-bombardier-threats-1788888512</id>
            <summary type="text">மொன்றியலைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் பிரபல &#039;பாம்பர்டியர்&#039; (Bombardier) விமான தயாரிப்பு நிறுவனத்தின் விற்பனையை அமெரிக்காவில் தடை செய்யப்போவதாக அமெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொன்றியலைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் பிரபல 'பாம்பர்டியர்' (Bombardier) விமான தயாரிப்பு நிறுவனத்தின் விற்பனையை அமெரிக்காவில் தடை செய்யப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையில், அதற்கு கியூபெக் மாகாண அரசும் பாம்பர்டியர் நிறுவனமும் வலுவான பதிலடியைக் கொடுத்துள்ளன.
</p><p>பாம்பர்டியர் தயாரிக்கும் விமானங்கள் போதுமான தரம் கொண்டவை அல்ல என்று விமர்சித்த டொனால்ட் டிரம்ப், கனடா தனது விமானங்களை அமெரிக்காவில் தொடர்ந்து விற்க வேண்டுமானால், அவற்றை அமெரிக்காவிலேயே தயாரிக்க வேண்டும் எனச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
</p><p>டிரம்பின் இந்தக் கருத்துக்குப் கியூபெக் மாகாண முதல்வர் கிறிஸ்டின் ஃபிரெஷெட் பதிலடி கொடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60e2ac97-b01c-454c-bf74-d7ae8910c861/26-6aa045c2643e9.webp' /></p><p>
வம்புச்சண்டைக்கு நாங்கள் வம்புச்சண்டையால் பதிலளிக்க மாட்டோம். பாம்பர்டியர் கியூபெக்கின் பெருமை மற்றும் நமது பொருளாதாரத்தின் அடையாளம். ஆயிரக்கணக்கான கியூபெக் தொழிலாளர்கள் இதில் பணியாற்றுகின்றனர் என தெரிவித்துள்ளார்.
</p><p>சந்தையைப் பெறுவதற்காக எங்கள் நிறுவனங்கள் எங்கு உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை வேறு எவரும் தீர்மானிப்பதை கியூபெக் அனுமதிக்காது.</p><p> எங்கள் நிறுவனங்களையும் தொழிலாளர்களையும் உறுதியுடன் பாதுகாப்போம் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T17:43:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் நேர்ந்த கொடூர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் பரிதாப பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/greater-sudbury-crash-claims-two-brothers-lives-1788887958"></link>
            <id>https://canadamirror.com/article/greater-sudbury-crash-claims-two-brothers-lives-1788887958</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள கிரேட்டர் சட்பரி பகுதியில் நிகழ்ந்த கொடூர வீதி விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு இளம் சகோதரர்கள் உயிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள கிரேட்டர் சட்பரி பகுதியில் நிகழ்ந்த கொடூர வீதி விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு இளம் சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>கடந்த செப்டம்பர் 5 அன்று காலை 9:55 மணியளவில், வேலி ஈஸ்ட் பகுதியில் உள்ள 'ஹேன்மர் வேலி ஷாப்பிங் சென்டர்' அருகே 'முனிசிபல் ரோடு 80' பாதையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.</p><p> 
கிழக்கே பயணித்த நீல நிற கார், ஷாப்பிங் சென்டர் பார்க்கிங்கில் இருந்து இடதுபுறம் திரும்பி மேற்கே செல்ல முயன்ற கருப்பு நிற எஸ்யுவி வாகனத்துடன் பலமாக மோதியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7125ac12-2e98-496c-a865-f035acc3f93c/26-6aa04397af236.webp' /></p><p> </p><p>
நீல நிற காரை ஓட்டிவந்த 21 வயது இளைஞர் ஆர்டின் யார்க் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். </p><p>
காரில் பயணித்த அவரது சகோதரரான 20 வயது இளைஞர் ட்ரேக் யார்க் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><p> 
எஸ்யுவி வாகனத்தை ஓட்டிவந்த 43 வயது பெண் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.</p><p>விபத்துக்கான காரணம் குறித்து சட்பரி பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p> இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது ‘டாஷ்கேம்’ காட்சிகள் வைத்திருப்பவர்கள் உடனடியாக சட்பரி பொலிஸாரைத் (705-675-9171) தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T17:42:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரும் தாக்குதல் வரப்போகிறது...ஒக்டோபர் 7 தாக்குதலுக்கு முன்னரே நெதன்யாகுவுக்கு நேரடியாக தகவல் வழங்கிய UAE ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/netanyahu-was-warned-about-hamas-2023-attack-1788887397"></link>
            <id>https://tamilwin.com/article/netanyahu-was-warned-about-hamas-2023-attack-1788887397</id>
            <summary type="text">2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்துவதற்கு சுமார் ஒன்றரை வாரங்களுக்கு முன்னரே, ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் யஹ்யா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்துவதற்கு சுமார் ஒன்றரை வாரங்களுக்கு முன்னரே, ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் யஹ்யா சின்வார் பாரிய தாக்குதலொன்றைத் திட்டமிட்டு வருவதாக ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி முகமது பின் சயீத், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நேரடியாக எச்சரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இஸ்ரேலிய ஊடகமான ‘ஹாரெட்ஸ்’ மேற்கொண்ட விசாரணையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
</p><h2>மிகப்பெரிய தாக்குதல்&nbsp;</h2><p>
சுமார் 45 நிமிடங்கள் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போது, காசாவில் இருந்து “சில்சால்” எனப்படும் மிகப்பெரிய தாக்குதல் ஒன்று நடத்தப்படவுள்ளதாக பின் சயீத் எச்சரித்ததாக கூறப்படுகிறது.</p><p>இந்தத் தாக்குதல் பிராந்தியத்தில் இரத்தக்களரியையும் ஸ்திரமின்மையையும் ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் எச்சரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
மேலும், இந்தத் தாக்குதல் ஆபிரகாம் ஒப்பந்தங்களையும் பாதிக்கக்கூடும் என பின் சயீத் கவலை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

எனினும், நெதன்யாகு இந்த எச்சரிக்கைக்கு ஒப்பீட்டளவில் அமைதியாக பதிலளித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/379db03b-6a88-4337-b651-92c606f05986/26-6aa0487fd4d4d.webp' /></p><p>
</p><p>
ஹமாஸ் மேற்கு கரையில் நடவடிக்கை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கலாம் என தான் கருதுவதாக நெதன்யாகு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள இஸ்ரேல் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியிடமிருந்து கிடைத்த இந்த முக்கியமான எச்சரிக்கை குறித்து ஷின் பெட், மொசாட் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி உள்ளிட்ட உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நெதன்யாகு அறிவிக்கவில்லை என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம்&nbsp;</h2><p>
</p><p>
பின் சயீத் பின்னர் இந்த உரையாடல் குறித்து சிஐஏ இயக்குநர் வில்லியம் ஜே. பேர்ன்ஸிடமும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
</p><p>
இதனிடையே, 2023ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இஸ்ரேலின் ஷின் பெட் மற்றும் ஹமாஸ் இடையே இரகசிய நேரடி பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
கைதிகள் பரிமாற்றம் தொடர்பில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கு இரு தரப்பும் நெருங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

ஆனால், அந்த ஒப்பந்தம் இஸ்ரேல் தரப்பில் தாமதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

நீண்ட காலமாக காத்திருந்த சின்வார், 2023 செப்டெம்பரில் இடைத்தரகர் ஊடாக தான் “சில்சால்” எனப்படும் தாக்குதலைத் தயாரித்து வருவதாக எச்சரித்ததாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb6df83d-79ff-4d52-a4cf-382914bf8dfb/26-6aa04880890d5.webp' /></p><p>

அந்தத் தாக்குதலை “மிகப்பெரிய ஆச்சரியம்” மற்றும் “பயங்கரமான நடவடிக்கை” என அவர் விவரித்ததாகவும் கூறப்படுகிறது.

செப்டெம்பர் 15ஆம் திகதி சின்வாரின் எச்சரிக்கை ஷின் பெட்டை சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதனைத் தொடர்ந்து, அப்போதைய ஷின் பெட் தலைவர் ரோனென் பார், நெதன்யாகுவுக்கு அது குறித்து விளக்கமளித்ததாக கூறப்படுகிறது.

இரண்டு நாட்களுக்குப் பின்னர் நடைபெற்ற பாதுகாப்புக் கூட்டத்தில், இஸ்ரேல் “மோதலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது” என ரோனென் பார் எச்சரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>&nbsp;கடும் எதிர்வினை</h2><p>
காசா மற்றும் மேற்கு கரையில் தாக்குதல் அல்லது கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவர் பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.

எனினும், அந்தக் கூட்டத்தில் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

இதன்பின்னர், எகிப்திய புலனாய்வுத் தலைவர் அப்பாஸ் கமெலும் ஹமாஸ் “வழக்கத்திற்கு மாறானதும் பயங்கரமானதுமான நடவடிக்கை” ஒன்றைத் திட்டமிடுவதாக நெதன்யாகுவை எச்சரித்ததாக கூறப்படுகிறது.

காசா நிலைமையை இஸ்ரேல் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக நெதன்யாகு அவரிடம் தெரிவித்ததாகவும் அறிக்கை கூறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8742e07e-7c74-4322-97f3-4d6dda4b2629/26-6aa048813a4be.webp' /></p><p>

இதனையடுத்து, 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி அதிகாலை 6.29 மணியளவில் ஹமாஸின் தாக்குதல் ஆரம்பமானது.

இந்தத் தாக்குதலின்போது சுமார் 251 பேர் கடத்தப்பட்டதாகவும், பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினர் உட்பட பலர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

எனினும், ‘ஹாரெட்ஸ்’ வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நெதன்யாகுவின் அலுவலகம் முற்றிலும் மறுத்துள்ளது.
</p><p>
ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் நெதன்யாகு குறித்த காலப்பகுதியில் பேசவில்லை என்றும், அவரிடமிருந்து எந்த எச்சரிக்கையும் கிடைக்கவில்லை என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் இஸ்ரேலில் அரசியல் ரீதியாகவும் கடும் எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
முன்னாள் பிரதமர் நப்தாலி பென்னெட், ஐக்கிய அரபு அமீரக மற்றும் எகிப்திய தரப்புகளிடமிருந்து எச்சரிக்கைகள் கிடைத்தபோதும் நெதன்யாகு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், ஒக்டோபர் 7 பேரழிவுக்கு நெதன்யாகு நேரடியாக பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T17:40:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுவர்களை வேலைக்கு அமர்த்தினால் பெருந்தொகை அபராதம்! திருத்தப்பட்டது சட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/child-labour-fines-from-rs-10-000-to-rs-100-000-1788888095"></link>
            <id>https://ibctamil.com/article/child-labour-fines-from-rs-10-000-to-rs-100-000-1788888095</id>
            <summary type="text">சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் வேலைவாய்ப்பு (திருத்த) சட்டமூலத்திற்கு சான்றளித்துள்ளார். 

இதன்மூலம், இத்திருத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் வேலைவாய்ப்பு (திருத்த) சட்டமூலத்திற்கு சான்றளித்துள்ளார். </p><p>

இதன்மூலம், இத்திருத்தச் சட்டம் "2026-ஆம் ஆண்டின் பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் வேலைவாய்ப்பு (திருத்த) சட்டம் எண் 21" என அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
</p><p>
தொழிலாளர் அமைச்சர் அனில் ஜயந்தவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டமூலம், ஓகஸ்ட் 20 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) சபாநாயகரின் சான்றளிப்பைப் பெற்றது.</p><p></p><h2>அபராதத் தொகை&nbsp;</h2><p>
</p><p>
இந்த புதிய திருத்தத்தின் மூலம், 1956-ஆம் ஆண்டின் 47-ஆம் எண் பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் வேலைவாய்ப்புச் சட்டத்தின் கீழ் செய்யப்படும் குற்றங்களுக்கான அபராதத் தொகை ரூ. 10,000-இலிருந்து ரூ. 100,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3b905f0-f044-42f8-9f5c-d3b2baeb827b/26-6aa04624053b2.webp' /></p><p>
</p><p>
இச்சட்டம் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதைக் கடுமையாகத் தடை செய்கிறது.
</p><p>
தற்போதைய சமூக மற்றும் பொருளாதார நிலைகளுக்கு ஏற்ப குற்றங்களுக்கான தண்டனைகளை மாற்றியமைக்கவும், சிறுவர் தொழிலாளர் முறையைத் தடுத்து, தொழில்துறையில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் உரிமைகளைப் பலப்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T17:30:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேத்தியை வளர்க்க ரூ.45 லட்சம் இழப்பீடு கேட்ட தாய்: மகன் மீது நீதிமன்றத்தில் வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mother-demands-45-lakhs-for-raising-granddaughter-1788888277"></link>
            <id>https://news.lankasri.com/article/mother-demands-45-lakhs-for-raising-granddaughter-1788888277</id>
            <summary type="text">Mother demands 45 lakhs for raising granddaughter in China: சீனாவில் 15 ஆண்டுகள் பேத்தியை வளர்த்தற்காக மகனிடம் ரூ.45 லட்சம் கேட்டு தாய் ஒருவர் வழக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Mother demands 45 lakhs for raising granddaughter in China: சீனாவில் 15 ஆண்டுகள் பேத்தியை வளர்த்தற்காக மகனிடம் ரூ.45 லட்சம் கேட்டு தாய் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.</p><h2> பேத்தியை வளர்த்ததற்கு ஊதியம் கேட்ட பாட்டி</h2><p>சீனாவின் கிழக்கு பகுதியில் வாழும் 60 வயது மதிக்கத்தக்க “சு”(Xu) என்ற பெண், தன்னுடைய மகன் லியாங் என்பவர் மீது ஷாங்காய் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.</p><p> அதில், கடந்த 2014ம் ஆண்டு தன்னுடைய மகன் லியாங் அவருடைய மனைவியை பிரிந்தார். இதையடுத்து மகன் லியானும், அவரது 4 வயது மகளையும் சேர்த்து கவனித்து வந்தேன்.</p><p>லியாங் அவனுடைய மகளை பராமரிக்கும் மொத்த கடமையையும் என்னிடமே ஒப்படைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92058509-e602-4dc1-906b-9e2bfe9940b3/26-6aa044d6e16aa.webp' /></p><p> நானும் கடந்த 15 ஆண்டுகளாக தன்னுடைய பேத்தியின் அன்றாட செலவுகள், மருத்துவ மற்றும் கல்வி கட்டணங்கள் என அனைத்தையும் என்னுடைய சொந்த பணத்தில் கவனித்து வந்தேன்.</p><p> </p><p></p><p>ஆனால் லியாங் சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அவனுடைய மனைவியுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.</p><p> மகளை மட்டும் தன்னிடமே விட்டு விட்டுச் சென்றுவிட்டார். இப்போது நான் பொருளாதார நெருக்கடியினாலும், முதுமையாலும் பாதிக்கப்பட்டுள்ளேன்.</p><p> என்னுடைய மகனுக்கு குடும்ப பொறுப்பு என்பது கொஞ்சம் கூட இல்லை. ஒரு தந்தையாக அவனது கடமையை செய்ய தவறி விட்டான்.</p><p> இனிமேலும் என்னால் அவனுடைய பண உதவி இல்லாமல் பேத்தியை கவனித்து கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.</p><p> அத்துடன் 15 ஆண்டுகளாக பேத்தியை பராமரித்ததற்காக 3,60,000 யுவான் தொகையை கட்டணமாக என்னுடைய மகன் வழங்க வேண்டும் என்றும் தாய் “சு” நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;தாயின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த இருந்த மகன் லியாங், அப்போது தனக்கு மாதம் வெறும் ரூ.37000 மட்டுமே ஊதியமாக இருந்ததாகவும், தன்னுடைய சக்தி உட்பட்டு அனைத்து உதவிகளையும் தன்னுடைய மகளுக்கு செய்ததாக தெரிவித்தார்.</p><h2> சட்ட நிபுணர்களின் கருத்து</h2><p>தாய் “சு” தொடர்ந்த வழக்கு தொடர்பாக ஷாங்காய் சட்ட வல்லுநகர்கள் வழங்கிய தகவலில், இது குடும்ப உறவுகளை வியாபாரமாக்குவது அல்ல, மாறாக குடும்ப பொறுப்புகளை தெளிவுபடுத்தும் ஒன்று என தெரிவித்துள்ளனர்.</p><p> குழந்தையை வளர்க்கும் பொறுப்பு முதலில் பெற்றோர்களுடையது, பின்னர் அவர்களால் முடியவில்லை என்றால் தான் தாத்தா-பாட்டிகள் தங்களது உதவிகளை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T17:26:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொனால் ட்ரம்ப் வெளியிட்ட வரைபடப் பதிவால் சர்ச்சை: ஐஸ்லாந்து கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/controversy-over-map-post-by-donald-trump-1788886635"></link>
            <id>https://tamilwin.com/article/controversy-over-map-post-by-donald-trump-1788886635</id>
            <summary type="text">அமெரிக்கக் கொடியால் மூடப்பட்ட வரைபடம் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்
ட்ரம்ப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து, ஐஸ்லாந்துக்கான
அமெரிக்கத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கக் கொடியால் மூடப்பட்ட வரைபடம் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்
ட்ரம்ப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து, ஐஸ்லாந்துக்கான
அமெரிக்கத் தூதுவரை அழைத்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சு தனது அதிருப்தியைத்
தெரிவித்துள்ளது.
</p><p>
டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்ட
வரைபடத்தில் அமெரிக்கா, கனடா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, மெக்சிகோ, மத்திய
அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகள் அனைத்தும் அமெரிக்கக் கொடியால்
மூடப்பட்டு 'அமெரிக்க ஐக்கிய நாடுகள்' என பெயரிடப்பட்டிருந்தது.
</p><p>
இந்த வரைபடப் பதிவு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என ஐஸ்லாந்து
வெளியுறவு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கிரீன்லாந்தை அமெரிக்கா கையகப்படுத்த வேண்டும் என ட்ரம்ப் தெரிவித்து வரும்
கருத்துக்கள் ஏற்கனவே வாஷிங்டன் மற்றும் டென்மார்க் இடையே ராஜதந்திர
பதற்றங்களை ஏற்படுத்தியிருந்தன.</p><h2>கண்டனம்</h2><p>
</p><p>
கிரீன்லாந்து மக்கள் ஒருபோதும் அமெரிக்காவின் அங்கமாக மாற விரும்பவில்லை என
டென்மார்க் பிரதமரும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7ffe90c-4b3c-4080-8f17-442eb62384fb/26-6aa0422149055.webp' /></p><p>

ஐரோப்பிய ஒன்றியம் கிரீன்லாந்தில் 200 மில்லியன் யூரோ முதலீட்டை அறிவித்த சில
மணிநேரங்களிலேயே ட்ரம்பின் இந்தப் பதிவு வெளியாகியுள்ளது.</p><p>

எனினும், இந்த சம்பவம் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறையோ அல்லது தூதரகங்களோ
உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T17:22:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா யாருக்கும் பணிந்து போகாது - கனடியப் பிரதமர் எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-hits-back-with-counter-tariffs-1788887540"></link>
            <id>https://canadamirror.com/article/canada-hits-back-with-counter-tariffs-1788887540</id>
            <summary type="text">&amp;nbsp;கனடா யாருக்கும் பணிந்து போகாது என கனடியப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் மற்றும் கனடாவின் பதிலடி வரிகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடா யாருக்கும் பணிந்து போகாது என கனடியப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் மற்றும் கனடாவின் பதிலடி வரிகள் குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
</p><p>அமெரிக்கா முன்வைத்த ஒப்பந்தத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை; அதேபோல் அவர்கள் கேட்டதையும் எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. </p><p>இதன் விளைவாக, எங்களைப் பாதிக்கவும், பிரிக்கவும் திட்டமிட்டு அமெரிக்கா இந்தப் புதிய வரிகளை விதித்துள்ளது என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65acff90-1d1b-4c84-83a6-963cad1218a5/26-6aa041f9dec51.webp' /></p><p>
</p><p>அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் நிலையிலிருந்து கனடா விலகுவதற்கு நிச்சயமாகச் சில விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். </p><p>ஆனால், அமெரிக்காவின் கோரிக்கைகளுக்குப் பணிந்து போவது அதைவிட மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கனடிய மக்களுக்குப் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>
இந்தச் சவால்களில் இருந்து மீண்டு, கனடா மேலும் வலுவான மற்றும் உறுதியான நாடாக உருவெடுப்பதே இதன் முதன்மை நோக்கம் என தெரிவித்துள்ளார். </p><p>
அமெரிக்காவின் வர்த்தகப் போருக்குப் பதிலடி கொடுக்கும் கனடாவின் நடவடிக்கைகள் குறித்துப் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p>
 இதன் மூலம் எந்தவொரு நாடும் இனி கனடாவைப் பிணைக்கைதியாகப் பிடித்து வைக்க முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T17:13:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியப் பெருங்கடலில் மூழ்கிய படகு: கனடா சுற்றுலாப் பயணியை உயிருடன் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tourist-rescued-after-yacht-found-submerged-1788887059"></link>
            <id>https://canadamirror.com/article/tourist-rescued-after-yacht-found-submerged-1788887059</id>
            <summary type="text">இந்தியப் பெருங்கடலின் தொலைதூரப் பகுதியில் தனது படகு பகுதியளவு நீரில் மூழ்கிய நிலையில், சிறிய ரப்பர் படகில் தத்தளித்துக் கொண்டிருந்த கனடாவைச் சேர்ந்த ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியப் பெருங்கடலின் தொலைதூரப் பகுதியில் தனது படகு பகுதியளவு நீரில் மூழ்கிய நிலையில், சிறிய ரப்பர் படகில் தத்தளித்துக் கொண்டிருந்த கனடாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியை அவுஸ்திரேலிய மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
</p><p> அவர் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>
அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரிலிருந்து இந்தோனேசியாவின் ஜகார்த்தாவுக்குத் தெற்கே உள்ள அவுஸ்திரேலிய பிராந்தியமான 'கிறிஸ்மஸ் தீவு' நோக்கி அவர் தனது கேடமரான் வகை படகில் பயணித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d3df428-eff9-4beb-b76f-05b581c2784b/26-6aa04014d7b5e.webp' /></p><p>
ஞாயிற்றுக்கிழமையன்று கனடாவிலுள்ள தனது குடும்பத்தினருடன் அவர் இரண்டு முறை தொடர்பு கொள்ளத் தவறியுள்ளார். </p><p>இதனால் சந்தேகமடைந்த அவரது சகோதரர் உடனடியாக அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளார்.</p><p>
தகவல் கிடைத்ததும் அவுஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்பு ஆணையம் தேடுதல் பணியைத் தொடங்கியது.</p><p> 
கிறிஸ்மஸ் தீவுக்குக் கிழக்கு-தென்கிழக்கே சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில், பகுதியளவு நீரில் மூழ்கிய நிலையில் அவரது படகை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்தனர்.
</p><p>மாலுமி தனது படகின் சிறிய துணைப் படகில் தஞ்சமடைந்திருந்தது தெரியவந்தது.
மீட்பு ஹெலிகாப்டர் மூலம் அவருக்கு உயிர் காக்கும் 'லைஃப் ராஃப்ட்', அவசர தகவல் கருவி, உணவு மற்றும் நீர் ஆகியவை வான்வழியாக வீசப்பட்டன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T17:06:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரயில் பயணிகளுக்கு இலகுவான சேவை ; தனியார் துறைக்கும் ஆன்லைன் பருவச்சீட்டு வசதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/convenient-service-train-passengers-online-ticket-1788887154"></link>
            <id>https://jvpnews.com/article/convenient-service-train-passengers-online-ticket-1788887154</id>
            <summary type="text">தனியார் துறை ஊழியர்கள் ரயில் மாதாந்த பருவச்சீட்டுக்களை இணையவழி மூலம் பெற்றுக்கொள்வதற்கான வசதியை எதிர்வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனியார் துறை ஊழியர்கள் ரயில் மாதாந்த பருவச்சீட்டுக்களை இணையவழி மூலம் பெற்றுக்கொள்வதற்கான வசதியை எதிர்வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த இலங்கைத் ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>
</p><p></p><p>இதற்கமைய, ரயில்வே திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள seatreservation.railway.gov.lk இணையத்தளத்தின் ஊடாகத் தேவைக்கேற்ப மாதாந்த பருவச்சீட்டுகளை இணையவழியில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு தனியார் துறை ஊழியர்களுக்குக் கிடைக்கும்.</p><p>

 

இதுவரை அரச துறைக்கு மட்டுமே நடைமுறையிலிருந்த இந்த வசதியைத் தனியார் துறைக்கும் வழங்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று (08) பத்தரமுல்லைப் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1b9e86e-ef13-478a-8cd9-40a7893e05ab/26-6aa04074448a7.webp' /></p><p>போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதார விவகாரங்கள் பற்றிய பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்னவும் கலந்துகொண்டார்.
</p><p>
 

மாதாந்த பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும்போது இதுவரை பயணிகள் எதிர்கொண்ட சிரமங்களைக் குறைப்பதே இந்த புதிய முறையின் நோக்கமாகும். </p><p>இதற்கு முன்னர் பருவச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பப் படிவம், புகைப்படம், வதிவிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டையின் பிரதி சமர்ப்பிக்கப்பட வேண்டியிருந்ததுடன், குறிப்பிட்ட வரம்பிற்குட்பட்ட நேரத்திற்குள்ளேயே அந்தச் சேவையைப் பெற வேண்டியிருந்தது.
</p><p>
 

புதிய முறையின் கீழ், பயணிகளின் அடையாளமும் பயனர் கணக்கும் (User account) சரிபார்க்கப்பட்ட பின்னர், வீட்டில் இருந்தபடியே இணையவழியில் பருவச்சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும்.
</p><p>
 

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு, இலங்கைத் ரயில்வே திணைக்களம் மற்றும் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.
</p><p>
 

ரயில் சேவையை டிஜிட்டல் மயமாக்கும் பரந்த திட்டத்தின் கீழ், பயணிகளுக்கு மிகவும் திறமையான மற்றும் இலகுவான சேவையை வழங்குவதற்கான மற்றொரு கட்டமாகவே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
 

தற்போது களனிவெலி ரயில் பாதையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில ரயில் நிலையங்களை மையப்படுத்தி ஸ்மார்ட் டிக்கெட் (Smart ticket) முன்னோடித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், ரயில் ஆசனங்களை இணையவழியில் முன்பதிவு செய்யும் வசதிகளும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T17:06:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சரண குணவர்தனவின் தண்டனையை குறைப்பதாக இலஞ்சம் பெற்ற நீதிமன்ற உதவியாளருக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-assistant-remanded-over-bribe-1788885887"></link>
            <id>https://ibctamil.com/article/court-assistant-remanded-over-bribe-1788885887</id>
            <summary type="text">முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு விதிக்கப்பட்டதண்டனையை குறைப்பதாக வாக்குறுதியளித்து, அவரின் மனைவியிடமிருந்து ரூ. 750,000 இலஞ்சம் பெற்றதாகக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு விதிக்கப்பட்டதண்டனையை குறைப்பதாக வாக்குறுதியளித்து, அவரின் மனைவியிடமிருந்து ரூ. 750,000 இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில், ஒரு நீதிமன்ற உதவியாளர் செப்டம்பர் 22 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழு (CIABOC) சமர்ப்பித்த உண்மைகளைக் கருத்தில் கொண்ட பின்னர், கொழும்பு பிரதான நீதிபதி அசங்க பொதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.</p><h2>சந்தேக நபர் கைது</h2><p>கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் அளித்த புகாரின் பேரில் தொடங்கப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, ஜி.ஏ. சரித் குமார என அடையாளம் காணப்பட்ட அந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cc919d2-abdf-4ad2-b6a8-7484ed1ba5ca/26-6aa03eeee4d36.webp' /></p><p>

சந்தேக நபர் தொலைபேசி மூலம் நீதிபதியைத் தொடர்புகொண்டு ஒரு வழக்கு குறித்து கலந்துரையாட முயன்றதாக CIABOC நீதிமன்றத்தில் தெரிவித்தது.</p><p></p><h2>உரையாடலில் ஈடுபட மறுத்த&nbsp;நீதிபதி </h2><p> நீதிமன்ற வழக்குகள் குறித்து கலந்துரையாடும் அவரது அதிகாரத்தை நீதிபதி கேள்விக்குட்படுத்தி, அத்தகைய உரையாடலில் ஈடுபட மறுத்துவிட்டார்.

சந்தேக நபர், இவ்விஷயத்தை நீதிமன்றத்தில் கலந்துரையாட முடியாது என்றும், இதுகுறித்து தனியாக சந்தித்து கலந்துரையாடலாம் என்றும் நீதிபதியிடம் கூறியதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a2e62ec-3577-49d0-8a6e-69740427255d/26-6aa03eee39f21.webp' /></p><p>

இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், அத்தனகல்ல நீதிமன்றத்தைச் சேர்ந்த ஓர் அதிகாரி மற்றும் கொழும்பு உயர் நீதிமன்றப் புத்தகக் கட்டுநர் மீதும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக சிஐஏபிஓசி (CIABOC) தெரிவித்துள்ளது.
</p><p>
முன்னாள் பிரதி அமைச்சரும், அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவருமான குணவர்தன, சபைக்குச் சொந்தமான வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான 18 குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜூன் மாதம் தண்டனை விதிக்கப்பட்டார்.</p><p> இந்தத் தண்டனையை 16 ஆண்டுகளில் அனுபவிக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T16:59:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[50க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்து ஆடம்பர கார்களைத் திருடிய கும்பல்: 4 சிறுவர்கள் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/4-teens-charged-in-connection-with-50-break-ins-1788885456"></link>
            <id>https://canadamirror.com/article/4-teens-charged-in-connection-with-50-break-ins-1788885456</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் டொரண்டோ பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த ஆடம்பர கார்களின் சாவிகளைத் திருடிச் சென்ற வலையமைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் டொரண்டோ பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த ஆடம்பர கார்களின் சாவிகளைத் திருடிச் சென்ற வலையமைப்பைச் சேர்ந்த 4 சிறுவர்களை யோர்க் பிராந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p> 
வீடுகளின் கேரேஜ்கள் மற்றும் வீதிமுற்றங்களில் நிறுத்தப்பட்டிருந்த உயர்ரக ஆடம்பர வாகனங்களின் சாவிகளைத் திருடும் சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, பொலிஸார் ‘புராஜெக்ட் ஹவ்லர்’ என்ற பெயரில் சிறப்பு விசாரணையைத் தொடங்கினர். </p><p>
பல வாரங்கள் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில், இந்தத் தொடர் திருட்டுகளுக்குப் பின்னால் ஒரு சிறுவர் கும்பல் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bb45a68-3131-4369-8efd-bce4c4d6c436/26-6aa039d23ff71.webp' /></p><p> </p><p>
சில சம்பவங்களின் போது, இவர்கள் துப்பாக்கி உள்ளிட்ட ஆபத்தான ஆயுதங்களைக் காட்டி வீட்டின் உரிமையாளர்களை மிரட்டியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> 
ரிச்மண்ட் ஹில் பகுதியில் முந்தைய நாள் திருடப்பட்ட வாகனத்தில் சந்தேக நபர்கள் பயணிப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். 
டொரண்டோவின் 'தார்ன்க்ளிஃப் பார்க் டிரைவ்' மற்றும் 'ஓவர்லியா பூலேவார்ட்' பகுதியில் வைத்து பொலிஸார் அவ்வாகனத்தைச் சுற்றி வளைத்தனர். </p><p>
தப்பி ஓட முயன்ற 3 சிறுவர்களைத் துரத்திச் சென்று பொலிஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட 7 ஆடம்பர வாகனங்கள் மீட்கப்பட்டன.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய 4வது சிறுவனையும் பொலிஸார் கைது செய்தனர். </p><p>
கைது செய்யப்பட்டவர்கள் டொரண்டோவைச் சேர்ந்த 13, 14 மற்றும் இரண்டு 17 வயதுடைய சிறுவர்கள் ஆவர்.</p><p> 
கனடாவின் ‘இளையோர் குற்றவியல் நீதிச் சட்டத்தின்’ விதிகளின்படி, கைது செய்யப்பட்ட சிறுவர்களின் பெயர்களையோ அல்லது அடையாளங்களையோ வெளியிட பொலிஸாருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>
இவ்வழக்கில் மேலும் பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T16:54:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆல்ப்ஸ் மலையில் மாயமான கனடா வீராங்கனை: ஒரு வார தேடுதலுக்குப் பின் மீட்புப் பணிகள் நிறுத்தம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/italy-suspends-search-for-canadian-skyrunner-1788885885"></link>
            <id>https://canadamirror.com/article/italy-suspends-search-for-canadian-skyrunner-1788885885</id>
            <summary type="text">&amp;nbsp;ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் மாயமான கனடாவைச் சேர்ந்த &#039;ஸ்கைரன்னர்&#039; கெய்லி மெக்கிரிஸ்டலைத் தேடும் பணியை இத்தாலிய அதிகாரிகள் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் மாயமான கனடாவைச் சேர்ந்த 'ஸ்கைரன்னர்' கெய்லி மெக்கிரிஸ்டலைத் தேடும் பணியை இத்தாலிய அதிகாரிகள் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளனர். </p><p>
4,478 மீட்டர் உயரமுள்ள மேட்டர்ஹார்ன் சிகரத்தின் இத்தாலி பகுதியில், திங்கள்கிழமை வரை ஹெலிகாப்டர் மூலம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளதாக இத்தாலி மலை மீட்புப் படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். </p><p>
தேடுதல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போதிலும், கெய்லி மெக்கிரிஸ்டல் பயன்படுத்திய மின்னணு சாதனங்களில் இருந்து ஏதேனும் சிக்னல்கள் வருகின்றதா என்பதை 'வால் டி ஆஸ்டா' பிராந்தியத்தைச் சேர்ந்த மலை மீட்புப் பொலிஸார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da6da693-1d77-4d63-b107-335858181bb7/26-6aa03b7f60878.webp' /></p><p>38 வயதான கெய்லி மெக்கிரிஸ்டல், கடினமான மற்றும் அதிக உயரமான மலைப்பகுதிகளில் ஓடிப் பழகிய பல ஆண்டுகால அனுபவம் கொண்டவர் என்று 'அத்லெடிக்ஸ் கனடா' அமைப்பு தெரிவித்துள்ளது.</p><p> 
மேட்டர்ஹார்ன் சிகரத்தை 5 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் ஏறி இறங்கி புதிய உலக சாதனை படைப்பதற்காக அவர் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>கடந்த செப்டம்பர் 1 அன்று, சுமார் 3,800 மீட்டர் உயரத்தில் உள்ள மலை தங்குமிடத்திற்கு அருகில் செல்ஃபீ ஒன்றை எடுத்த பிறகு, சுமார் 4,250 மீட்டர் உயரத்தில் போலந்து நாட்டைச் சேர்ந்த மலை ஏறுபவர்களால் அவர் கடைசியாகப் பார்க்கப்பட்டார். அதன்பின்னர் அவர் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T16:54:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பாரிய விபத்து: 4 இளைஞர்கள் பரிதாப பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/four-dead-after-two-vehicle-crash-near-1788886271"></link>
            <id>https://canadamirror.com/article/four-dead-after-two-vehicle-crash-near-1788886271</id>
            <summary type="text">கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் உள்ள வின்னிபெக் பீச் பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட கொடூர விபத்தில் 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் உள்ள வின்னிபெக் பீச் பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட கொடூர விபத்தில் 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கிம்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 
நெடுஞ்சாலை 229-ல் மேற்காகப் பயணித்த கார் ஒன்று, நெடுஞ்சாலை 8-ஐக் கடக்க முயன்றபோது, தெற்கு நோக்கி வந்த வேன் ஒன்றுடன் பலமாக மோதியது. </p><p>
இந்தச் சந்திப்பில் கிழக்கு மற்றும் மேற்கு நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு 'நிற்குமாறு' எச்சரிக்கைப் பலகைகள் அமைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ca2f6d9-f1b1-4749-b10f-db90748128a8/26-6aa03d0187a1d.webp' /></p><p> 
மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் வீதியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டன. </p><p>அதில் ஒரு வாகனம் தலைகீழாகக் கவிழ்ந்தது. 
மேற்கு நோக்கிச் சென்ற காரில் பயணித்த 4 பேருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். </p><p>
காரை ஓட்டிவந்த வின்னிபெக்கைச் சேர்ந்த 18 வயது பெண், கிம்லியைச் சேர்ந்த 18 வயது இளைஞர், சேண்டி ஹூக்கைச் சேர்ந்த 18 வயது பெண் மற்றும் ஒன்டாரியோவின் இயர் ஃபால்ஸைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
</p><p>வேனில் பயணித்த வின்னிபெக்கைச் சேர்ந்த 49 வயது ஓட்டுநர், ஒரு பெண் மற்றும் இரு குழந்தைகள் என 4 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் அனைவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் வின்னிபெக் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர்.
</p><p>இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார், விபத்துக்கான முழுமையான காரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T16:54:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதிப்போர் குறித்து சவேந்திர சில்வா அதிரடி விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shavendra-silva-explains-the-final-phase-of-war-1788886428"></link>
            <id>https://jvpnews.com/article/shavendra-silva-explains-the-final-phase-of-war-1788886428</id>
            <summary type="text">இறுதிப்போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகத் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா திட்டவட்டமாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இறுதிப்போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகத் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.</p><p></p><p>

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், தன் மீதான குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும், சர்வதேச அளவில் தன் மீது விதிக்கப்பட்ட தடைகளுக்கான அடிப்படை குறித்து கேள்வி எழுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

இலங்கைப் பாதுகாப்பு படையினர் புலிகளுக்கு எதிராகத் தொழில்முறை ரீதியிலேயே போரிட்டனர் என்றும், இறுதி இராணுவ நடவடிக்கையின் போது பொதுமக்கள் உயிரிழப்புகளைக் குறைக்கப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be71e49c-4e5d-4a5b-b01b-eab88e704612/26-6aa03d9de3626.webp' /></p><p>

2020 ஆம் ஆண்டு அமெரிக்காவும், 2025 ஆம் ஆண்டில் பிரித்தானியாவும் தன் மீது விதித்துள்ள தடைகளுக்கான காரணங்களை தொடர்ந்து கேட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், தான் ஒரு போர்க் குற்றவாளி அல்ல என்றும் தாய்நாட்டுக்காகவே போரிட்டதாகவும் தெரிவித்தார்.
</p><p>
இராணுவத்தினர் வேண்டுமென்றே பொதுமக்களை இலக்கு வைக்கவில்லை எனக் கூறிய சவேந்திர சில்வா, போரின் போது பொதுமக்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும், ஆனால் அவை திட்டமிட்டுச் செய்யப்பட்டவை அல்ல என்றும் விளக்கமளித்தார்.
</p><p>
2009 ஆம் ஆண்டு போரின் இறுதிக் கட்டத்தில் தனது 58 ஆவது படைப்பிரிவு 123,000 க்கும் அதிகமான பொதுமக்களை மீட்டதாகவும், சரணடைந்த சுமார் 12,000 புலிகள் உறுப்பினர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் தனது படைப்பிரிவிடமே சரணடைந்ததாகவும் குறிப்பிட்டார்.

அவ்வாறு சரணடைந்தவர்கள் பின்னர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
</p><p>
புலிகளின் வட பிராந்திய சிரேஷ்ட தளபதி ஒருவர் சிவில் உடையில் ஆயுதத்துடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், சீருடை அணியாத போராளிகள் கொல்லப்படும் போது அவர்கள் பொதுமக்களாகக் கணக்கிடப்படும் சூழல் நிலவுவதாகக் கூறினார்.
</p><p>
மேலும், புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதாகவும் சாடினார்.
</p><p>
அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்கள் சர்வதேச ரீதியில் இராணுவத்தின் பக்க நியாயங்களை சரியாக முன்வைக்கத் தவறியதே தன் மீதான குற்றச்சாட்டுகள் சர்வதேச அளவில் வலுப்பெறக் காரணம் என அவர் விமர்சித்தார்.
</p><p>
குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்துடன் கூடிய ஆதாரங்களுடன் நேரடியாக விவாதத்துக்கு வருமாறு சர்வதேச அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்த அவர், தவறு நடந்திருந்தால் அதை ஏற்றுக்கொள்ளத் தயார் என்றும் தெரிவித்தார்.
</p><p>
மேலும், புலிகள் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும், தமிழ் மக்களின் குறைகளுக்கு அரசியல் ரீதியாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T16:53:56+00:00</updated>
        </entry>
    </feed>
