<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-20T14:14:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்னல் வேகத்தில் கோல் அடித்த தாமஸ் முல்லர்: வான்கூவர் வெற்றி (வீடியோ)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/thomas-muller-stunning-goal-vancouver-won-in-mls-1789913487"></link>
            <id>https://news.lankasri.com/article/thomas-muller-stunning-goal-vancouver-won-in-mls-1789913487</id>
            <summary type="text">வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் சால்ட் லேக்கினை வீழ்த்தியது.

MLS போட்டியில் கனடாவின் வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணி, சால்ட் லேக் அணியை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் சால்ட் லேக்கினை வீழ்த்தியது.
</p><p>
MLS போட்டியில் கனடாவின் வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணி, சால்ட் லேக் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.</p><h2>தாமஸ் முல்லர்</h2><p>

வான்கூவர் ஒயிட்கேப்ஸ் மற்றும் சால்ட் லேக் அணிகள் மோதிய MLS போட்டி அமெரிக்கா பர்ஸ்ட் ஃபீல்ட் மைதானத்தில் நடந்தது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Too much space for Müller 🔥👊<br><br>Diaby and Thomas find our second of the match 🤩<a href="https://x.com/hashtag/RSLvVAN?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#RSLvVAN</a> | <a href="https://x.com/hashtag/RSL?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#RSL</a> 0 - 2 <a href="https://x.com/hashtag/VAN?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VAN</a> <a href="https://t.co/TUL0oTRJH0">pic.twitter.com/TUL0oTRJH0</a></p>&mdash; Vancouver Whitecaps FC (@WhitecapsFC) <a href="https://x.com/WhitecapsFC/status/2101497720141656485?ref_src=twsrc%5Etfw">September 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் வான்கூவர் ஒயிட்கேப்ஸ் வீரர் பிரையன் ஒயிட் (Brian White) கோல் அடித்தார்.&nbsp;</p><p></p><p>

அதனைத் தொடர்ந்து, ஜேர்மானிய நட்சத்திர வீரர் தாமஸ் முல்லர் (Thomas Muller) 29வது நிமிடத்தில் மின்னல் வேகத்தில் கோல் அடித்தார்.&nbsp;</p><h2>வான்கூவர் வெற்றி </h2><p>
பின்னர் இரண்டாம் பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணியில் யாடலி டையாபி கோல் அடித்தார்.</p><p> 

இறுதிவரை சால்ட் லேக் அணியால் கோல் அடிக்க முடியாததால், வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.&nbsp; &nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cc0a0af-690a-492c-86d4-fadee9daa48f/26-6aafe992ea8f9.webp' /></p>]]></content>
            <updated>2026-09-20T14:08:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேஷம் முதல் மீனம் வரை.., திருமண பொருத்த ரகசியங்கள் என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/12-rasi-marriage-rasi-palan-in-tamil-1789907349"></link>
            <id>https://news.lankasri.com/article/12-rasi-marriage-rasi-palan-in-tamil-1789907349</id>
            <summary type="text">திருமண வாழ்க்கை என்பது அனைவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமானதாகும்.

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய அது எந்த நேரத்திலும், காலகட்டத்திலும் நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருமண வாழ்க்கை என்பது அனைவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமானதாகும்.</p><p>

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய அது எந்த நேரத்திலும், காலகட்டத்திலும் நடக்கிறது என்பது மிகவும் முக்கியமானதாகும்.</p><p>

அதனால்தான் திருமணம் சுபமுகூர்த்தத்தில் நடத்தப்பட அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.</p><p>

மேலும், நமது ராசியானது நம்முடைய திருமண வாழ்க்கையில் முக்கியப்பங்கு வகிக்கிறது.</p><p>

ஆண்களுக்கு சுக்கிரனும், பெண்களுக்கு குருவும் திருமணத்துக்கான முக்கிய கிரகங்களாகக் கருதப்படுகின்றன.
</p><p>
அந்தவகையில், மேஷம் முதல் மீனம் வரையான ராசிக்காரர்களுக்கு, திருமண பொருத்த ரகசியங்கள் குறித்து இராம்ஜி சுவாமிகள் இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oy7VKp1e9Mc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T14:00:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகாவலி நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் திறப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/five-spill-gates-of-the-mahaweli-reservoir-opened-1789909425"></link>
            <id>https://jvpnews.com/article/five-spill-gates-of-the-mahaweli-reservoir-opened-1789909425</id>
            <summary type="text">மகாவலி மேற்கு நீரேந்து பிரதேசங்களில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.&amp;nbsp;இதன் காரணமாக கண்டி, பொல்கொல்ல மகாவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகாவலி மேற்கு நீரேந்து பிரதேசங்களில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.&nbsp;</p><p>இதன் காரணமாக கண்டி, பொல்கொல்ல மகாவலி நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் இன்று (20) திறக்கப்பட்டதாக கடைமை நேர பொறியியலாளர் திசர பண்டார தெரிவித்தார்.</p><p>திறக்கப்பட்டுள்ள 05 வான் கதவுகள் வழியாக வினாடிக்கு 21,000 கன அடி நீர் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு வெளியேற்றப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரவித்தார்.</p><p>மழை மேலும் தீவிரமடைந்தால் அனைத்துக் கதவுகளையும் திறக்க வேண்டி வரலாம் என்பதால், பொல்கொல்ல அணைக்குக் கீழ் பகுதியில் இருபுறமும் வசிக்கும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.</p>]]></content>
            <updated>2026-09-20T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி நாராயணசாமி காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sivaji-ganesan-elder-daughter-shanthi-passed-away-1789886624"></link>
            <id>https://manithan.com/article/sivaji-ganesan-elder-daughter-shanthi-passed-away-1789886624</id>
            <summary type="text">நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகளும், திரைப்படத் தயாரிப்பாளருமான சாந்தி நாராயணசாமி இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவு சிவாஜி கணேசனின் குடும்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகளும், திரைப்படத் தயாரிப்பாளருமான சாந்தி நாராயணசாமி இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவு சிவாஜி கணேசனின் குடும்பத்தினருக்கும், திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
</h2><p>தமிழ் சினிமாவில் நடிப்பின் உச்சமாகக் கருதப்படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தனது தனித்துவமான நடிப்புத் திறன், குரல் வளம், வசன உச்சரிப்பு மற்றும் கதாபாத்திரங்களை வெளிப்படுத்தும் விதம் ஆகியவற்றால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்.பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த ரசிகர்களால் இன்றளவும் அவரது நடிப்பு போற்றப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36534c79-53fd-4105-9eb5-c8bf940f1801/26-6aaf83bf69770.webp' /></p><p></p><h2>
சிவாஜி கணேசனின் குடும்பம்
</h2><p>சிவாஜி கணேசன் - கமலா கணேசன் தம்பதியினருக்கு ராம்குமார், பிரபு ஆகிய இரு மகன்களும், சாந்தி, ராஜ்வி ஆகிய இரு மகள்களும் உள்ளனர். இவர்களில் மூத்த மகளாக சாந்தி நாராயணசாமி இருந்தார்.
</p><p>
தனது மூத்த மகள் சாந்தியின் பெயரை நினைவுகூரும் வகையில், சென்னை அண்ணாசாலையில் சிவாஜி கணேசன் ஒரு திரையரங்கையும் கட்டியிருந்தார்.இதன் மூலம் சாந்தியின் பெயர் அவரது குடும்பத்துடனும், திரையுலகுடனும் நெருக்கமாக இணைந்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa97a7bb-280f-4417-898b-62a88c2df270/26-6aaf83c01e83f.webp' /></p><p>
</p><p>சாந்தி நாராயணசாமி குடும்பப் பின்னணியைக் கொண்டவராக மட்டுமின்றி, திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டிருந்தார்.</p><p>சிவாஜி கணேசன் நடிப்பில் 1974-ஆம் ஆண்டு வெளியான ‘தங்கப்பதக்கம்’ திரைப்படத்தை அவர் தயாரித்திருந்தார். காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம் சிவாஜி கணேசனின் குறிப்பிடத்தக்க படைப்புகளில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.சாந்தி நாராயணசாமியின் கணவர் நாராயணசாமி. இவர்களுக்கு சத்யலட்சுமி என்ற மகள் உள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6a1346b-75c9-4dca-9f3b-2ee2ea17773a/26-6aaf83c0c97f7.webp' /></p><p></p><h2>
சாந்தி நாராயணசாமி மறைவு</h2><p>இந்த நிலையில், சிவாஜி கணேசனின் மூத்த மகளும், நடிகர்கள் பிரபு மற்றும் ராம்குமாரின் சகோதரியுமான சாந்தி நாராயணசாமி இன்று அதிகாலை காலமானார்.
</p><p>
அவரது மறைவுச் செய்தி சிவாஜி கணேசனின் குடும்பத்தினரையும், அவருக்கு நெருக்கமானவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. </p><p>திரையுலகில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் குடும்பத்துடன் தொடர்புடைய முக்கியமான நபராகவும், திரைப்படத் தயாரிப்பாளராகவும் அறியப்பட்ட சாந்தி நாராயணசாமியின் மறைவு குடும்பத்தினருக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T13:57:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து சேகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/signature-campaign-demanding-anojans-release-1789911220"></link>
            <id>https://ibctamil.com/article/signature-campaign-demanding-anojans-release-1789911220</id>
            <summary type="text">சவுதி அரேபியாவில் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை நாட்டிற்கு மீண்டும் அழைத்துவர இராஜதந்திர நடவடிக்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவில் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை நாட்டிற்கு மீண்டும் அழைத்துவர இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, நற்பிட்டிமுனை பகுதியில் இன்று (20) விசேட கையெழுத்து சேகரிப்பும் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.&nbsp;&nbsp;</p><p>சமூக ஊடகப் பதிவொன்றைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அனோஜனுக்கு ஆரம்பத்தில் 5 வருட சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்த நிலையில், மேன்முறையீட்டின் அடிப்படையில் இத் தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்</h2><p>&nbsp;எனினும், இது தொடர்பான எழுத்துமூலமான உத்தியோகபூர்வ தீர்ப்பு இதுவரை இலங்கை வெளிவிவகார அமைச்சுக்குக் கிடைக்கப்பெறவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3604d25-5669-4cd1-8e9c-410fd6b3aa73/26-6aafe60054886.webp' /></p><p>இப் பின்னணியில், அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கம் அவசர உயர்மட்ட இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனக் கோரி இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>“ஒரு உயிரைக் காப்போம் - மனிதாபிமானத்துடன் கரம் கொடுப்போம்”&nbsp;</h2><p>&nbsp;“ஒரு உயிரைக் காப்போம் - மனிதாபிமானத்துடன் கரம் கொடுப்போம்” என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இக் கவனயீர்ப்புக்கு இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து நற்பிட்டிமுனை மக்கள் உட்படப் பெருந்திரளான பொதுமக்கள் ஆதரவு வழங்கினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3440f33-cf23-4c44-9ea1-0c11192a7aee/26-6aafe60127605.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p><p> </p>]]></content>
            <updated>2026-09-20T13:56:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஜினிக்கு வில்லியாக மிரட்டும் வித்யா பாலன்.. ஜெயிலர் 2 வீடியோவை பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vidya-balan-as-kantha-in-jailer-2-1789912357"></link>
            <id>https://cineulagam.com/article/vidya-balan-as-kantha-in-jailer-2-1789912357</id>
            <summary type="text">சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் 2 படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ஜெயிலர் முதல் பாகத்தின் மிகப்பெரிய வெற்றி தான் அதற்கு காரணம்.வரும...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் 2 படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ஜெயிலர் முதல் பாகத்தின் மிகப்பெரிய வெற்றி தான் அதற்கு காரணம்.</p><p>வரும் அக்டோபர் 15ம் தேதி ஜெயிலர் 2 ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் தற்போது கதாபாத்திரங்களை ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e24acd50-8d18-4853-945c-f04f58d7fcbc/26-6aafe5272556e.webp' /></p><p>
</p><h2>காந்தா - வித்யா பாலன்
</h2><p>ஹிந்தி நடிகை வித்யா பாலன் ஜெயிலர் 2ல் காந்தா என்ற ரோலில் நடித்து இருக்கிறார். மாஸ் லுக்கில் அவர் புகை பிடிப்பது போல டீசரில் காட்டப்பட்டு இருக்கிறது.
</p><p>வைரலாகும் ப்ரோமோவை பாருங்க.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Introducing Vidya Balan as Kantha from the world of <a href="https://x.com/hashtag/Jailer2?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Jailer2</a> 💥<a href="https://x.com/rajinikanth?ref_src=twsrc%5Etfw">@rajinikanth</a> <a href="https://x.com/Nelsondilpkumar?ref_src=twsrc%5Etfw">@Nelsondilpkumar</a> <a href="https://x.com/anirudhofficial?ref_src=twsrc%5Etfw">@anirudhofficial</a> <a href="https://x.com/vidya_balan?ref_src=twsrc%5Etfw">@vidya_balan</a> <a href="https://x.com/iam_SJSuryah?ref_src=twsrc%5Etfw">@iam_SJSuryah</a> <a href="https://x.com/hashtag/SurajVenjaramoodu?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SurajVenjaramoodu</a> <a href="https://x.com/vijaykartikdop?ref_src=twsrc%5Etfw">@vijaykartikdop</a> <a href="https://x.com/Nirmalcuts?ref_src=twsrc%5Etfw">@Nirmalcuts</a> <a href="https://x.com/ChethanDsouza?ref_src=twsrc%5Etfw">@ChethanDsouza</a> <a href="https://x.com/AlwaysJani?ref_src=twsrc%5Etfw">@AlwaysJani</a> <a href="https://x.com/KiranDrk?ref_src=twsrc%5Etfw">@KiranDrk</a> <a href="https://x.com/hashtag/PallaviSingh?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#PallaviSingh</a> <a href="https://x.com/valentino_suren?ref_src=twsrc%5Etfw">@valentino_suren</a> <a href="https://x.com/alagiakoothan?ref_src=twsrc%5Etfw">@Alagiakoothan</a>… <a href="https://t.co/kaCWF3beIN">pic.twitter.com/kaCWF3beIN</a></p>&mdash; Sun Pictures (@sunpictures) <a href="https://x.com/sunpictures/status/2101657636487995490?ref_src=twsrc%5Etfw">September 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-09-20T13:52:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[1600 ட்ரோன்களை வீழ்த்தி..மிகப்பெரிய தாக்குதல் முறியடிப்பு - ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-said-downing-1600-ukraine-drones-1789911568"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-said-downing-1600-ukraine-drones-1789911568</id>
            <summary type="text">Russian mayor said we downing 1,600 drones: உக்ரைனின் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை முறியடித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைனின் 1,600 ட்ரோன்களை சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russian mayor said we downing 1,600 drones: உக்ரைனின் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை முறியடித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
</p><p>
உக்ரைனின் 1,600 ட்ரோன்களை சுட்டுவீழ்த்தி, மிகப்பெரிய தாக்குதலை முறியடித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.&nbsp;</p><h2>உக்ரைன் மிகப்பெரிய தாக்குதல் </h2><p>
ரஷ்யாவின் நாடாளுமன்றத் தேர்தலின் இடையே, மாஸ்கோ பகுதியில் உக்ரைன் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3dbe4da-9fbf-429f-8628-bea4ce9ed0d5/26-6aafe33ff0927.webp' /></p><p></p><p>
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதுகுறித்து மேயர் செர்ஜி சோபியானின் கூறுகையில், "1600-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதன் மூலம், மிகப்பெரிய உக்ரேனிய ட்ரோன் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டது. பல ட்ரோன்கள் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தை அடைந்தன.</p><p>

அவற்றில் ஒன்று அடுக்குமாடிக் குடியிருப்பு மீது தாக்கியது. தேர்தல்களை சீர்குலைக்கும் நோக்கத்துடன் இந்த முன்னெப்போதும் இல்லாத தாக்குதல் தெளிவாகத் திட்டமிடப்பட்டது. ஆனால், எதிரி இதை சாதிக்க தவறிவிட்டார்" என்றார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/182e812a-e688-4608-a144-21fbe91da0cb/26-6aafe340c6d7c.webp' /></p>]]></content>
            <updated>2026-09-20T13:41:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[புரட்டாசி மாத கிரக மாற்றங்கள்: இந்த ராசிகளுக்கு ராஜயோகம் உறுதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/purattasi-rasipalan-2026-who-get-huge-luck-1789908146"></link>
            <id>https://manithan.com/article/purattasi-rasipalan-2026-who-get-huge-luck-1789908146</id>
            <summary type="text">தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும், புனிதமானதுமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, இந்த மாதத்தில் பெரும்பாலான இந்துக்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும், புனிதமானதுமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, இந்த மாதத்தில் பெரும்பாலான இந்துக்கள் அசைவ உணவுகளைத் தவிர்த்து, விரதம், வழிபாடு, பூஜை போன்ற ஆன்மிகச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.</p><p> பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்புப் பெற்ற இந்த மாதம், மன அமைதி, பக்தி மற்றும் ஆன்மிக சிந்தனையை வளர்க்கும் காலமாகவும் பலரால் கருதப்படுகிறது.

ஆன்மிக ரீதியாக மட்டுமல்லாமல், ஜோதிட ரீதியாகவும் புரட்டாசி மாதம் மிகவும் முக்கியமானதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c04cf47d-8c7c-4b86-9559-4ff888665f6c/26-6aafde0b97fb4.webp' /></p><p> </p><p>இந்த மாதத்தில் ஏற்படும் கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் அவற்றின் நிலைமாற்றங்கள், ஒவ்வொரு ராசியினரின் வாழ்க்கையிலும் வெவ்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று ஜோதிடத்தில் நம்பப்படுகிறது.
</p><p>
புரட்டாசி மாதத்தில் குருபகவான் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார்.அதேபோல், சுக்கிரனும் கேதுவும் சிம்ம ராசியில் சஞ்சரிக்கின்றனர். மேலும், சூரியன் கன்னி ராசியில் புதனுடன் இணைந்து புதாதித்திய யோகத்தை உருவாக்குகிறார்.</p><p> </p><p>இந்த கிரக நிலைகள் காரணமாக தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை, உறவுகள் மற்றும் தனிப்பட்ட முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
</p><p>
இந்த கிரக மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் ஏதேனும் ஒரு வகையில் இருக்கலாம் என்றாலும், சில ராசிக்காரர்களுக்கு புரட்டாசி மாதம் கூடுதல் சாதகமான பலன்களை வழங்கும் காலமாக அமையும் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p>அப்படி புரட்டாசி மாதம் முழுவதும் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><p></p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcd8f88f-0d94-4d00-a70c-872e6c93418b/26-6aafde0c4c344.webp' /></p><h2>
</h2><p>மேஷ ராசிக்காரர்களுக்கு புரட்டாசி மாதம் சிறப்பாக அமையும். திட்டமிட்ட பணிகள் அனைத்தும் சரியான நேரத்தில் நிறைவேறும். </p><p>செவ்வாயின் அருளால் தைரியமும் உற்சாகமும் அதிகரிக்கும். வாழ்க்கையின் பல துறைகளிலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். மாதத்தின் நடுப்பகுதியில் குருபகவானின் அருளால் குறிப்பிடத்தக்க நிதி ஆதாயம் கிடைக்கலாம்.</p><p> கடனாகக் கொடுத்த பணம் எதிர்பாராத விதமாக திரும்பக் கிடைக்கும். புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும், பழைய கடன்களையும் அடைக்க முடியும்.வணிக விரிவாக்கத் திட்டங்கள் நிறைவேறும்.

உறவுகளைப் பொறுத்தவரை மாதம் சாதகமாக இருக்கும்.</p><p>காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். வாழ்க்கைத் துணையுடன் தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.</p><h2>

ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe06674c-b9ff-44a9-9b92-a7af48dd94d6/26-6aafde0d01cd7.webp' /></p><p>
ரிஷப ராசிக்காரர்களுக்கு புரட்டாசி மாதம் நல்ல வாய்ப்புகள் நிறைந்ததாக இருக்கும். ராசி அதிபதியான சுக்கிரன் நான்காம் இடத்தில் கேதுவுடன் இணைந்திருப்பதால், முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்த விஷயங்கள் முடிவுக்கு வரும். </p><p>கடின உழைப்புக்கான பலன்களை முழுமையாகப் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.

சரியான வாய்ப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் செல்வத்தை அதிகரிக்கலாம்.</p><p> சுக்கிரனின் அருளால் வருமானம் உயரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். பணியில் கடின உழைப்புக்குப் பதவி உயர்வும், மரியாதையும் கிடைக்கும்.</p><p>இதனால் நிதி நிலை வலுப்படும். முதலீடுகள் மற்றும் நண்பர்களின் உதவியால் நீண்டகால ஆசைகள் நிறைவேற வாய்ப்புள்ளது.
</p><h2>
துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/601f5ddf-2eb3-437e-8181-cfa532bad0c9/26-6aafde0dae99e.webp' /></p><p>
துலாம் ராசிக்காரர்களுக்கு புரட்டாசி மாதம் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளைத் திறக்கும்.குருபகவானின் அருள் முழுமையாகக் கிடைக்கும். </p><p>வெற்றியை நோக்கிய பயணம் வேகமடையும்; நிதி நிலையும் சிறப்பாக இருக்கும். வாழ்க்கையின் பல துறைகளிலும் முன்னேற்றம் காண்பீர்கள்.மகிழ்ச்சியான தருணங்கள் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் அன்பும் அமைதியும் நிலவும்.</p><p> நீண்டகால ஆசைகளை நிறைவேற்ற இது ஏற்ற காலமாகும். கடின உழைப்புக்கான பலன்களைப் பெறுவீர்கள்.திட்டமிட்ட பணிகள் சரியான நேரத்தில் முடியும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்துவது முக்கியம்.</p><h2>
மீனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3585644e-10fc-4779-b091-9cc6d052d0d4/26-6aafde0e6c1db.webp' /></p><p></p><h2>
</h2><p>மீன ராசிக்காரர்களுக்கு புரட்டாசி மாதம் பல நல்ல யோகங்கள் நிறைந்ததாக இருக்கும். வருமானம் அதிகரிக்கலாம்; எதிர்பாராத நிதி ஆதாயங்களுக்கும் வாய்ப்புள்ளது.</p><p> நீண்ட நாட்களாக இருந்த நிதிச் சிக்கல்கள் குறையும். நீண்டகால ஆசைகளில் பல நிறைவேறலாம்.

திருமண வாழ்க்கையில் அன்பும் பரஸ்பர பாசமும் அதிகரிக்கும். </p><p>வாழ்க்கைத் துணைக்கு ஆச்சரியப் பரிசுகள் வழங்கும் வாய்ப்பும் ஏற்படலாம். இந்த மாதம் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அமையும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நண்பர்களுடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகளும் உருவாகலாம்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b> &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T13:34:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி மக்கள் தீபமேந்திப் பிரார்த்தனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-light-lamps-and-pray-for-anojan-s-release-1789910009"></link>
            <id>https://tamilwin.com/article/people-light-lamps-and-pray-for-anojan-s-release-1789910009</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரைப் பாதுகாப்பாக விடுதலை
செய்யக் கோரி சம்மாந்துறை – வளத்தாப்பிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரைப் பாதுகாப்பாக விடுதலை
செய்யக் கோரி சம்மாந்துறை – வளத்தாப்பிட்டி பகுதியில் பொதுமக்கள் ஒன்றுகூடித்
தீபமேந்தி விசேட பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.</p><p>

வளத்தாப்பிட்டி பகுதியில் நேற்று(19) இடம்பெற்ற இந்நிகழ்வில், அப்பகுதியைச்
சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கைகளில் தீபங்களை ஏந்தி அனோஜனின் உயிரைக்
காப்பாற்றவும், சவூதி அரசு அவருக்கு மன்னிப்பு வழங்கவும் மனமுருகிப்
பிரார்த்தனை செய்தனர்.</p><h2>பிரார்த்தனை</h2><p>

அத்துடன், அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி இலங்கை அரசாங்கத்திற்கும் சவூதி
தூதரகத்திற்கும் அனுப்பி வைப்பதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுள்ள அவசர மனுவிலும்
மக்கள் திரளாகக் கையொப்பமிட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2eba0a6d-ac11-4164-ad1a-396559f03775/26-6aafde6047312.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரை நாட்டிற்கு மீட்டு வர வேண்டும் என
வலியுறுத்தி கல்முனை, நற்பிட்டிமுனை உட்பட நாட்டின் பல்வேறு பாகங்களிலும்
தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைமைகள்
ஒன்றிணைந்து பல்வேறு மனிதாபிமான நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T13:33:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தம்; மழை தொடரும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/low-pressure-area-in-bay-of-bengal-rains-lanka-1789906911"></link>
            <id>https://jvpnews.com/article/low-pressure-area-in-bay-of-bengal-rains-lanka-1789906911</id>
            <summary type="text">நாட்டிற்கு வடகிழக்காக அந்தமான் பகுதிக்கு அருகில், வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டிற்கு வடகிழக்காக அந்தமான் பகுதிக்கு அருகில், வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>இதனால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் ஏதும் இருக்காது என்றாலும், இத் தொகுதியை நோக்கிய காற்று வீசுகை காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப் படுகிறது.</p><h2>இடியுடன் கூடிய மழை பெய்யும்</h2><p>மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.&nbsp;</p><p>இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது.</p><p>வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது.</p><p>ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.</p><p>மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ. 80 ஆயிரம் விஐபி டிக்கெட் வேஸ்ட்!! சிம்பொனியால் ஏமாந்துபோன யுவன் ரசிகைகள் புலம்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/yuvan-symphony-concert-fans-critics-controversy-1789905854"></link>
            <id>https://viduppu.com/article/yuvan-symphony-concert-fans-critics-controversy-1789905854</id>
            <summary type="text">யுவன் சங்கர் ராஜாசென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சமீபத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் Walking Through The Rainbow - A Symphonic Experienc...</summary>
            <content type="html"><![CDATA[<h2>யுவன் சங்கர் ராஜா</h2><p>சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சமீபத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் Walking Through The Rainbow - A Symphonic Experience என்ற பிரத்யேக கான்செர்ட் நடந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2699fe1-6c4a-4183-92db-d6d6f9d5a7fd/26-6aafcbc035cbb.webp' /></p><p> </p><p>யுவனின் ஐகானிக் பாடல்கள் எல்லாம் இடம்பெறும் என்று நினைத்து டிக்கெட் புக் செய்து ரசிகர்கள் சென்றுள்ளனர். ஆனால் பாட்டு பாடாமல் சிம்பொனி மட்டும் இசைக்கப்பட்டுள்ளது.</p><p> இதனால் அதிருப்தி அடைந்த பெண்கள், யுவன் பாடுவார் என்று எதிர்பார்த்து வந்தோம், அவர் ஒன்று இரண்டு பாடலாவது பாடி இருக்கலாம். இசையை கேட்க கேட்க எல்லாம் ஒரேமாதிரி மியூசிக் மாதிரிதான் எங்களுக்கு தெரிந்தது. விஐபி டிக்கெட் 80 ஆயிரம் எடுத்து வந்தோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8b27459-d317-4bbf-8ff5-f1303b031e0b/26-6aafcbc0e8d43.webp' /></p><p> இவ்வளவு பெரிய ஏமாற்றமாகிவிட்டது, ஆனால் யுவனை பார்த்த திருப்தியில் கிளம்புகிறோம் என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர் இதற்கு சிலர், சிலர் சிம்பொனியை தவறாக புரிந்து கொண்டு வந்துவிட்டார்கள், அதைக் கேட்கும்போது நன்றாக இருந்தது. யுவனின் கேரியரில் ஹைலைட்டான விஷயத்தை அப்படியே சிம்பொனியா கொடுத்து இருந்தார் என்றும் கூறி வருகிறார்கள்.</p>]]></content>
            <updated>2026-09-20T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fuel-prices-hiked-again-1789904535"></link>
            <id>https://jvpnews.com/article/fuel-prices-hiked-again-1789904535</id>
            <summary type="text">உலகச் சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்துள்ளமையைக் கருத்திற் கொண்டு, செப்டெம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலைத் திருத்தம் இடம்பெறக்கூடும் என ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகச் சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்துள்ளமையைக் கருத்திற் கொண்டு, செப்டெம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலைத் திருத்தம் இடம்பெறக்கூடும் என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>தற்போது எரிபொருள் விலையானது ஏற்கனவே உயர்வான மட்டத்தில் காணப்படுகின்ற நிலையில், மேலும் ஒரு விலை அதிகரிப்பை மக்களால் தாங்கிக்கொள்ள முடியுமா என்பது தொடர்பில் அரசாங்கத்திற்குள் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>மத்திய கிழக்கு யுத்தம் ஆரம்பமானதோடு உலகின் வலுசக்தி சந்தையில், குறிப்பாக எரிபொருள் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது.&nbsp;</p><p>மார்ச், ஏப்ரல் மாதங்களில், உலகச் சந்தைக்கு நிகராக இல்லாவிட்டாலும், உள்நாட்டுச் சந்தையிலும் ஓரளவு எரிபொருள் விலையை அதிகரிக்க எமக்கு நேரிட்டது.&nbsp;</p><p>பின்னர் உலகச் சந்தையில் எரிபொருள் விலை குறைந்த போது, உள்நாட்டுச் சந்தையிலும் எரிபொருள் விலையைக் குறைக்க நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்.&nbsp;</p><p>ஆனால் துரதிர்ஷ்டவசமாக மீண்டும் ஒருமுறை யுத்தம் தீவிரமடைந்தமையினால் உலகில் எரிபொருள் விலை மீண்டும் உயர்ந்து காணப்படுகிறது.&nbsp;</p><p>எனவே வழமையாக நாம் ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும், அந்த மாதத்தின் சராசரி பெறுமதியைப் பார்த்து, எமக்கு எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு எவ்வளவு செலவானது என்று ஆராய்ந்து பார்த்துதான் நாம் எரிபொருள் விலையை மீளாய்வு செய்கிறோம்.&nbsp;</p><p>அந்தவகையில் செப்டெம்பர் மாத இறுதியிலும் இந்த மீளாய்வைச் செய்ய நாம் எதிர்பார்க்கிறோம்.&nbsp;</p><p>ஆனாலும், ஏற்கனவே எமது எரிபொருள் விலை கணிசமான அளவு உயர்வாகவே காணப்படுவதாக நாம் கருதுகிறோம்.&nbsp;</p><p>அதேபோல, பிரச்சினை நிலவுவது எரிபொருள் விநியோகிக்கும் ஒருசில தனியார் நிறுவனங்களுக்குத்தான். அவர்கள் தான் இதில் ஏற்படும் நட்டத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது என்ற பிரச்சினையை முன்வைத்து, குறிப்பாக டீசலை சந்தைக்கு விநியோகிப்பதை மட்டுப்படுத்தியுள்ளார்கள்.&nbsp;</p><p>ஆகவே, சட்டரீதியான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து பார்த்து, ஏதாவது ஒரு உயர் மற்றும் குறைந்த விலையெல்லைகளுக்குள் அந்த நிறுவனங்களுக்குத் தங்களுடைய விலையிலேயே எரிபொருளை விற்பனை செய்ய சந்தர்ப்பம் வழங்க முடியுமா என்று நாங்கள் ஆராய்ந்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.</p><p><br></p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T13:27:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருளுக்கான விலைத் திருத்தத்தில் நிவாரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/relief-in-fuel-price-revision-president-anura-1789910657"></link>
            <id>https://jvpnews.com/article/relief-in-fuel-price-revision-president-anura-1789910657</id>
            <summary type="text">எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள எரிபொருளுக்கான விலைத் திருத்தத்தின் போது நிவாரணத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள எரிபொருளுக்கான விலைத் திருத்தத்தின் போது நிவாரணத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>இதேவேளை, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் எவரும் இல்லை என்றும், ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் சட்டத்தின் முன் சமமானவர்கள் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.</p><p>அக்குரஸ்ஸயில் தற்சமயம் இடம்பெற்று வரும் மக்கள் சந்திப்பின் போது, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T13:24:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் தடைகளால் இருளில் மூழ்கிய கியூபா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/cuba-plunged-into-darkness-due-to-us-sanctions-1789910301"></link>
            <id>https://canadamirror.com/article/cuba-plunged-into-darkness-due-to-us-sanctions-1789910301</id>
            <summary type="text">அமெரிக்காவின் எரிசக்தித் தடையால் பாதிக்கப்பட்டுள்ள கியூபாவில், மீண்டும் ஒரு பெரும் தேசிய மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால்&amp;nbsp; நாடு இருளில் மூழ்கியுள்ளது.ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் எரிசக்தித் தடையால் பாதிக்கப்பட்டுள்ள கியூபாவில், மீண்டும் ஒரு பெரும் தேசிய மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால்&nbsp; நாடு இருளில் மூழ்கியுள்ளது.</p><p>நாட்டின் மத்திய பகுதியில் உள்ள உயர் மின்னழுத்த மின்கடத்திப் பாதைகளில் ஏற்பட்ட கோளாறு மற்றும் மோசமான வானிலை காரணமாகவே இந்த மின்கட்டமைப்பு முடக்கம் ஏற்பட்டுள்ளது.</p><p>2024 பிற்பகுதிக்குப் பிறகு நிகழ்ந்த 12வது பிரதான மின்வெட்டான இது, நடப்பு ஆண்டில் மட்டும் ஏற்படும் 6வது சம்பவமாகும்.</p><p>இதனால் மக்கள் குடிநீர், சமையல் எரிவாயு மற்றும் மின்சாரமின்றி பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.</p><p>தலைநகர் ஹவானாவில் பாதிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மின் விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாகவும், நிலைமைக்கேற்ப படிப்படியாக மின்சாரம் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் 'யூனியன் எலக்ட்ரிகா' (UNE) நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>அமெரிக்காவின் இந்த எண்ணெய்த் தடையால் கியூபா ஒரு "அமைதியான காசாவாக" மாறும் அபாயம் உள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-20T13:18:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி நாளை யாழில் மெழுகுவர்த்தி போராட்டம் : அனைவரையும் அணிதிரள அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/candlelight-protest-in-jaffna-anojan-s-release-1789909750"></link>
            <id>https://ibctamil.com/article/candlelight-protest-in-jaffna-anojan-s-release-1789909750</id>
            <summary type="text">சவுதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி நாளையதினம் பண்ணைப்பகுதியில் மெழுகுவர்த்தி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி நாளையதினம் பண்ணைப்பகுதியில் மெழுகுவர்த்தி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
</p><p>
யாழ்ப்பாண பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் நாளை மாலை ஐந்து மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>பொது அமைப்புகள் விடுத்துள்ள அழைப்பு</h2><p>இந்த போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொண்டு அனோஜனின் விடுதலைக்கு ஆதரவுக்கரம் நீட்டுமாறு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f7d8b66-f77d-471b-a0f2-acd09df1b1a2/26-6aafdce7dbc70.webp' /></p><p>&nbsp; அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தற்போது கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>

இதேவேளை அரசாங்கமும் அனோஜனின் விடுதலைக்காக தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்ளும் என அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T13:17:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[படைகளை குறைக்க அமெரிக்கா திட்டம்; நேட்டோ நாடுகள் அதிர்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/reduce-troops-in-europe-us-decision-1789881922"></link>
            <id>https://canadamirror.com/article/reduce-troops-in-europe-us-decision-1789881922</id>
            <summary type="text">ஈரான் மீதான போருக்குத் தங்கள் நாட்டு வானுர்தித் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, ஐரோப்பாவிலுள்ள தனது படைகளைக் கணிசமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான போருக்குத் தங்கள் நாட்டு வானுர்தித் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, ஐரோப்பாவிலுள்ள தனது படைகளைக் கணிசமாகக் குறைக்க அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.</p><p>ஐரோப்பிய நேட்டோ (NATO) நாடுகள் அமெரிக்காவிற்குத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுத்தது "வெட்கக்கேடானது" என அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்சேத் சாடியுள்ளார்.</p><p>ஐரோப்பாவிலுள்ள 68,000 அமெரிக்க வீரர்களில் மூன்றில் ஒரு பங்கினரை (முக்கியமாக ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின்) திரும்பப் பெறுவது, அல்லது 40,000 வீரர்கள் மற்றும் ஆயுதங்களை வெளியேற்றுவது குறித்து பென்டகன் ஆலோசித்து வருகிறது.</p><p>இந்த நடவடிக்கை ஐரோப்பாவின் பாதுகாப்பைப் பாதிப்பதுடன், ரஷ்யாவிற்குச் சாதகமான சமிக்ஞையை அனுப்பக்கூடும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p>வர்த்தக வரிகள், கிரீன்லாந்து விவகாரம் மற்றும் நேட்டோ நிதியுதவி போன்ற காரணங்களால் அமெரிக்கா-ஐரோப்பா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.</p><p>இதேபோல தாய்வான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கான அமெரிக்காவின் பாதுகாப்பு ஆதரவும் தளர்ந்து வருவதாகக் வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.</p>]]></content>
            <updated>2026-09-20T13:14:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனை விடுதலை செய்யக் கோரி யாழில் நாளை மெழுகுவர்த்திப் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/saudi-arabia-anojan-issue-updates-tamil-1789909411"></link>
            <id>https://tamilwin.com/article/saudi-arabia-anojan-issue-updates-tamil-1789909411</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனை விடுதலை செய்யக் கோரி, நாளை (21) மாலை 5 மணிக்கு ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனை விடுதலை செய்யக் கோரி, நாளை (21) மாலை 5 மணிக்கு யாழ்ப்பாணத்தில் மெழுகுவர்த்திப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
</p><p>
யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொது அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>மெழுகுவர்த்திப் போராட்டம்</h2><p>
</p><p>
சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை குறைத்து, அவரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தும் வகையில் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77821797-d74f-424a-a7e0-180eefb09cd2/26-6aafdc1030ec4.webp' /></p><p>
</p><p>
பொதுமக்கள் இந்த மெழுகுவர்த்திப் போராட்டத்தில் கலந்துகொண்டு அனோஜனுக்கான ஆதரவை வெளிப்படுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a6e5fdd-e0dc-45fa-bbb7-389dc45e56d6/26-6aafdc1106713.webp' /></p>]]></content>
            <updated>2026-09-20T13:13:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய ஒன்றியத்தின் 'இணை உறுப்பினர்' அழைப்பு: கனடா பிரதமருக்கு சவாலாக உருவெடுக்குமா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nanos-canadians-back-closer-eu-ties-but-not-1789888046"></link>
            <id>https://canadamirror.com/article/nanos-canadians-back-closer-eu-ties-but-not-1789888046</id>
            <summary type="text">&amp;nbsp;ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்கிய உறவை ஏற்படுத்துவதை கனடா மக்கள் வரவேற்ற போதிலும், இந்த விவகாரம் கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு அரசியல் ரீதியில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்கிய உறவை ஏற்படுத்துவதை கனடா மக்கள் வரவேற்ற போதிலும், இந்த விவகாரம் கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு அரசியல் ரீதியில் ஒரு சிக்கலான சவாலாக மாறக்கூடும் என்று பிரபல கருத்துக்கணிப்பாளர் நிக் நானோஸ் எச்சரித்துள்ளார்.</p><p>
உலகின் மிகப்பெரிய வர்த்தக கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியம், கனடாவை தனது முதலாவது 'இணை உறுப்பினராக' இணைவது குறித்து ஆராயுமாறு வரலாற்றுப்பூர்வ அழைப்பொன்றை விடுத்துள்ளது. </p><p>
இந்த முன்மொழிவு முழுமையான உறுப்பினர் அந்தஸ்தை உள்ளடக்கியது அல்ல என்பதுடன், தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத ஒரு புதிய அந்தஸ்தாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0f9b8b9-d525-4c8f-a08e-27bf3c592c3f/26-6aaf86303fcfb.webp' /></p><p>
</p><p>இந்த அழைப்பை விடுத்து உரையாற்றிய ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் அர்சுலா வொன் டெர் லேயன், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான பகிரப்பட்ட மதிப்புகளை சுட்டிக்காட்டினார்.</p><p> 
செயற்கை நுண்ணறிவு, பருவநிலை மாற்றம், ஆர்க்டிக் பகுதிகள், புவிசார் அரசியல், உக்ரைன் விவகாரம், பாதுகாப்பு, மூலப்பொருட்கள் மற்றும் விநியோகச் சங்கிலி என பல துறைகளில் இரு தரப்பும் ஒரே பார்வையைக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
</p><p>இந்த அழைப்பை வியாழக்கிழமை வரவேற்ற கனடா பிரதமர் மார்க் கார்னி, கனடா முழுமையான ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் அந்தஸ்தைக் கோரவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். </p><p>
மேலும், "கனடாவின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படாத வரையில்" மட்டுமே இந்த பிரத்யேக கூட்டாண்மை சாத்தியப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
</p><p>கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் பிரெட் ஹவுஸ் கருத்து தெரிவிக்கையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதித் தரநிலைகள் மற்றும் விதிகளை கனடா ஏற்றுக்கொள்வது அதிக செலவீனங்களை ஏற்படுத்தும் என்றார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T13:13:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல்; அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/security-threat-middle-east-warning-americans-1789909956"></link>
            <id>https://canadamirror.com/article/security-threat-middle-east-warning-americans-1789909956</id>
            <summary type="text">மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு,&amp;nbsp; அங்குள்ள அமெரிக்க குடிமக்களுக்கு அமெரிக்க தூதரகங்கள் மற்றும் வெளிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு,&nbsp; அங்குள்ள அமெரிக்க குடிமக்களுக்கு அமெரிக்க தூதரகங்கள் மற்றும் வெளியுறவுத்துறை பாதுகாப்பு எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.</p><p>இதன்படி, லெபனான், ஈராக், ஈரான், காசா, சிரியா மற்றும் ஏமன் உள்ளிட்ட பகுதிகளுக்கு அமெரிக்கர்கள் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும், அங்கு ஏற்கனவே வசிக்கும் அமெரிக்கர்கள் பாதுகாப்பான முறையில் வெளியேறுவது குறித்து பரிசீலிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>குறிப்பாக, லெபனான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளுக்கு "பயணம் செய்ய வேண்டாம்" என அமெரிக்க வெளியுறவுத்துறை கடுமையான பயண ஆலோசனைகளை வழங்கியுள்ளது.</p><p>மேலும், சவூதி அரேபியா, பஹ்ரைன், ஓமன், கட்டார், குவைத் மற்றும் ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறும் அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் காரணமாக ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்கள், பயங்கரவாத அச்சுறுத்தல்கள் மற்றும் வானூர்தி போக்குவரத்து இடையூறுகள் ஏற்படக்கூடும் என அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது.</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T13:12:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கெக்கிராவை சுதஸ்ஸன தேரர் துறவறத்திலிருந்து நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kekkirawa-sudassana-thero-expelled-monastic-order-1789907930"></link>
            <id>https://tamilwin.com/article/kekkirawa-sudassana-thero-expelled-monastic-order-1789907930</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தியின் பிரதான விமர்சகர்களில் ஒருவரான கெக்கிராவை சுதஸ்ஸன தேரர், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் துறவறத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தியின் பிரதான விமர்சகர்களில் ஒருவரான கெக்கிராவை சுதஸ்ஸன தேரர், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் துறவறத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
</p><p>
கெக்கிராவை சுதஸ்ஸன தேரர், தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வர முன்னதாக அக்கட்சியின் தீவிர ஆதரவாளராகவும், பிரச்சாரப் பேச்சாளர்களில் ஒருவராகவும் இருந்தார்.</p><p>

எனினும் பின்வந்த காலங்களில் அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் பிரதான விமர்சகர்களில் ஒருவராக மாறிப் போயிருந்தார்.</p><h2>பொருத்தமற்ற வார்த்தை</h2><p> அதற்காக அவர் பயன்படுத்திய சில வார்த்தைகள் பௌத்த துறவிகளுக்கு பொருத்தமற்ற வார்த்தைப் பிரயோகங்கள் என்ற விமர்சனமும் எழுந்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4a82201-51a2-4f1b-ab10-b353fe800026/26-6aafd9b668c7e.webp' /></p><p> </p><p>அதன் காரணமாக அவரை பௌத்த சாசனத்தில் (துறவறத்தில்) இருந்து நீக்க வேண்டும் என்று ஆளுங்கட்சியின் ஆதரவாளர்கள் போர்க்கொடி ஏந்தியிருந்தனர்.
</p><p>
இவ்வாறான பின்னணியில் பௌத்த தர்மத்தின் சிற்சில நம்பிக்கைகளைக் கேள்விக்குட்படுத்தியதாக தெரிவித்து, கெக்கிராவை சுதஸ்ஸன தேரரை மகாசங்கத்திலிருந்து -துறவறத்தில் இருந்து- உடனடியாக நீக்குவதாக ராமயண நிகாய உயர்பீடம் அதிரடியாக அறிவித்துள்ளது.</p><h2>பௌத்த நம்பிக்கை</h2><p>
</p><p>
இந்தியாவில் பிறந்த புத்தர் வான் வழியாக இலங்கைக்கு விஜயம் செய்தார் என்பதைப் போன்ற சிற்சில பௌத்த நம்பிக்கைகளை குறித்த தேரர் கேள்விக்குட்படுத்தியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d1c78b5-c8a0-4433-99ad-b405698e1ddc/26-6aafd7037027d.webp' /></p><p>
</p><p>
அவ்வாறான அவரது தர்மபோதனைகள் பௌத்த மக்களை தவறாக வழிநடத்தும் தன்மை கொண்டவை என்று குற்றம் சாட்டப்பட்டே தற்போது அவர் துறவறத்தில் இருந்து நீக்ககப்பட்டுள்ளார்.
</p><p>
இதற்கிடையே ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவரான ராஜாங்கனே சத்தாதிஸ்ஸ தேரரும் தனது காவியுடையைக் களைந்து சாதாரண வாழ்க்கை வாழப்போவதாக அறிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T13:04:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 மணி நேரத்தில் 2 ஏவுகணைகளை சோதனை செய்த வட கொரியா - உலக நாடுகள் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/north-korea-fires-two-missiles-in-3-hours-1789909593"></link>
            <id>https://news.lankasri.com/article/north-korea-fires-two-missiles-in-3-hours-1789909593</id>
            <summary type="text">North Korea fires two missiles in 3 hours: 3 மணி நேரத்தில் 2 ஏவுகணைகளை வட கொரியா சோதனை செய்துள்ளது.  

பாலிஸ்டிக் ஏவுகணைக சோதனைவட கொரியா கிழக்கு கடற...</summary>
            <content type="html"><![CDATA[<p>North Korea fires two missiles in 3 hours: 3 மணி நேரத்தில் 2 ஏவுகணைகளை வட கொரியா சோதனை செய்துள்ளது. </p><h2> 

பாலிஸ்டிக் ஏவுகணைக சோதனை</h2><p>வட கொரியா கிழக்கு கடற்கரையிலிருந்து மூன்று மணி நேர இடைவெளியில் இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது.</p><p> இது கடந்த வாரம் நடந்த சோதனைகளுக்குப் பிறகு மீண்டும் நிகழ்ந்ததால், உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c51480eb-8287-4bb4-8f1e-f77a6360190f/26-6aafda5b478eb.webp' /></p><p>
</p><h2>
3 மணி நேரத்தில் 2 ஏவுகணைகள்</h2><p>முதல் ஏவுகணை வோன்சான் (Wonsan) பகுதியில் இருந்து மதியம் 3 மணிக்கு ஏவப்பட்டது. இது சுமார் 450 கிமீ தூரம் பறந்ததாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. இரண்டாவது ஏவுகணை மாலை 5.50 மணிக்கு அதே பகுதியில் இருந்து ஏவப்பட்டு 600 கிமீ தூரம் பறந்ததாகவும் கூறப்படுகிறது.
</p><p>
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம், இந்த ஏவுகணைகள் பாலிஸ்டிக் வகையைச் சேர்ந்தவை என்றும், அவை ஜப்பானின் Exclusive Economic Zone-க்கு வெளியே விழுந்ததாகவும் தெரிவித்துள்ளது.
</p><p></p><p>தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில், இந்த சோதனைகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை நேரடியாக மீறுகின்றன என்று கண்டனம் தெரிவித்துள்ளது. ஜப்பானும் பீஜிங்கில் உள்ள தூதரக வழியாக அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
</p><p>
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கோயிசுமி, “வட கொரியாவின் இந்த நடவடிக்கைகள் ஜப்பான், பிராந்தியம் மற்றும் உலக அமைதிக்கு நேரடி அச்சுறுத்தல்” என்று தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>இதற்கிடையில், வட கொரியா தனது அணு திட்டத்திற்கு எதிராக ஐ.நா. அணு கண்காணிப்பு அமைப்பு எடுத்த தீர்மானத்தை நிராகரித்துள்ளது. </p><p>மேலும், அமெரிக்கா தலைமையிலான கடற்படை பயிற்சிகள் தான் தீவிர நிலையை உருவாக்குகின்றன என்று கிம் யோ ஜோங் (Kim Yo Jong) குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>

இந்த சோதனைகள், கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன. உலக நாடுகள், வட கொரியா உடனடியாக ஏவுகணை சோதனைகளை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T13:03:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒக்டோபர் மாதம் முதல் அதிகரிக்கும் எரிபொருள் விலை..! ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fuel-price-sri-lanka-anura-speech-today-1789908441"></link>
            <id>https://tamilwin.com/article/fuel-price-sri-lanka-anura-speech-today-1789908441</id>
            <summary type="text">ஒக்டோபர் மாதம் முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அதன் தாக்கத்தை குறைப்பதற்காக அரசாங்கம் மானியம் வழங்க எதிர்பார்த்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒக்டோபர் மாதம் முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அதன் தாக்கத்தை குறைப்பதற்காக அரசாங்கம் மானியம் வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
அக்குரஸ்ஸையில் இன்று (20) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.</p><h2>எரிபொருளின் விலை&nbsp;</h2><p>
</p><p>
சர்வதேச சந்தையில் நிலவும் எரிபொருள் விலைகளின் அடிப்படையில், ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் நாட்டில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இறக்குமதி செய்யப்படும் எரிபொருளின் விலை மற்றும் விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் செலவைக் கணக்கிடும்போது, ஒக்டோபர் மாதம் முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்க வேண்டியிருக்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/711d9c7c-59dd-405e-8bef-d6e23191c2e9/26-6aafd801b5316.webp' /></p><p>
</p><p>
எனினும், இந்த விலை உயர்வினால் பொதுமக்களுக்கு ஏற்படும் சுமையை குறைப்பதற்காக அரசாங்கம் மானியம் வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மக்கள் மீது பெரும் சுமை ஏற்படும்போது, அந்தச் சுமையை முழுமையாக அவர்களிடமே சுமத்த முடியாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சுமையைக் குறைப்பதற்கு அரசாங்கம் சில உதவிகளை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T12:56:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/commemoration-of-thyaga-deepam-thileepan-1789908581"></link>
            <id>https://jvpnews.com/article/commemoration-of-thyaga-deepam-thileepan-1789908581</id>
            <summary type="text">ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, நீராகாரமின்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, நீராகாரமின்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நடைபெற்று வருகின்றன.</p><p>இதன் தொடர்ச்சியாக, ஆறாம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) யாழ்ப்பாணம்&nbsp; நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் நடைபெற்றது.</p><p>இதேவேளை, நினைவேந்தல் நிகழ்வில் பொதுமக்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T12:49:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[48 கடவுச்சீட்டுகளுடன் கைதான நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ex-immigration-worker-arrested-with-48-passports-1789900849"></link>
            <id>https://jvpnews.com/article/ex-immigration-worker-arrested-with-48-passports-1789900849</id>
            <summary type="text">போலி ஆவணங்களைத் தயாரிப்பதற்காகப் பிறருக்குச் சொந்தமான 48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்ததாகக் கூறப்படும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>போலி ஆவணங்களைத் தயாரிப்பதற்காகப் பிறருக்குச் சொந்தமான 48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்ததாகக் கூறப்படும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முன்னாள் அலுவலக உதவியாளர் ஒருவர் நவகமுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>கடவுச்சீட்டுகள் மற்றும் நாணயத்தாள்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்களைச் சரிபார்க்கப் பயன்படும் ஒரு போலி இயந்திரம் மற்றும் ஒரு ஸ்மார்ட்போன் ஆகியவையும் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டன.</p><h2>இந்தச் சேவைக்காக ஒரு நபருக்கு 20,000 ரூபா</h2><p>தூதரகம் ஒன்றின் ஊடாக விசா பெறுவதற்கு ஒருவருக்கு உதவுவதற்காக, கடுவெலவின் இஹல பொமிரியா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் போலி ஆவணங்கள் தயாரிக்கப்படுவதாக நவகமுவ பொலிஸ் நிலையத்தின் பிரிவுசார் புலனாய்வுப் பிரிவுக்குத் தகவல் கிடைத்ததாகக் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>இத்தகவலின் அடிப்படையில், நவகமுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) பிரதான பரிசோதகர் சுசந்த ஜயநாத்தின் அறிவுறுத்தலின் பேரில், நவகமுவ பொலிஸ் நிலையத்தின் ஊழல் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையின்போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.</p><p>விசாரணையின்போது, ​​தான் சுமார் ஐந்து ஆண்டுகள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றியதாகச் சந்தேக நபர் பொலிஸாரிடம் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>அதன் பின்னர் அவர் பத்தரமுல்லையில் உள்ள ஆட்சேர்ப்பு முகமை ஒன்றில் பணியாற்றியதாகவும், அங்கிருந்தே இந்தக் கடவுச்சீட்டுகளைப் பெற்றதாகவும் பொலிஸார் கூறினர்.</p><p>விசாரணைகளின்படி, சுற்றுலா விசாவில் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்ய விண்ணப்பிக்கும் நபர்கள் ஏற்கனவே வெளிநாடுகளுக்குப் பயணம் செய்திருப்பதாகத் தூதரகங்களுக்குத் தோற்றமளிக்கும் வகையில், பழைய கடவுச்சீட்டுகளிலிருந்து விசா பக்கங்களை நீராவி மூலம் அகற்றி, அவற்றை புதிய கடவுச்சீட்டுகளில் கவனமாக ஒட்டியதாகச் சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p>இந்தச் சேவைக்காக ஒரு நபருக்கு 20,000 ரூபாயை அறவிட்டதாகச் சந்தேக நபர் பொலிஸாரிடம் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடவுச்சீட்டுகளில் சுமார் 15 கடவுச்சீட்டுகளிலிருந்து விசா பக்கங்கள் அகற்றப்பட்டிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>மேலும், 70 வயதான இந்தச் சந்தேக நபர் கடுவல நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-20T12:44:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[48 கடவுச்சீட்டுகளுடன் 70 வயது முதியவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/70-year-old-man-arrested-with-48-passports-1789906948"></link>
            <id>https://ibctamil.com/article/70-year-old-man-arrested-with-48-passports-1789906948</id>
            <summary type="text">நவகமுவ காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை குழுவினர், நவகமுவ காவல் பிரிவின் மேல் பொமிரியா பகுதியில் நேற்று இரவு (19) நடத்திய சோதனையில், போலி ஆவணங்களைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகமுவ காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை குழுவினர், நவகமுவ காவல் பிரிவின் மேல் பொமிரியா பகுதியில் நேற்று இரவு (19) நடத்திய சோதனையில், போலி ஆவணங்களைத் தயாரித்ததாக தெரிவித்து சந்தேக நபர் ஒருவரை கைது செய்தனர்.</p><p>

சந்தேக நபர், மேல் பொமிரியா பகுதியின் கடுவெல பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஆவார்.&nbsp;</p><h2>சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள்</h2><p>&nbsp;சந்தேக நபரிடமிருந்து 48 கடவுச்சீட்டுகள், ஒரு போலி கண்டறியும் கருவி மற்றும் ஒரு கைபேசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70dde76d-2894-41e9-9537-5dd5a886b58e/26-6aafd005ead7f.webp' /></p><p>
</p><p>
நவகமுவ காவல்துறையினர் இதுகுறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T12:23:01+00:00</updated>
        </entry>
    </feed>
