<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-15T02:25:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கழிவுகளால் நிரம்பும் வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை பிரதேசம்..! தொடரும் அசமந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/urging-action-regarding-garbage-in-keerimalai-area-1789438627"></link>
            <id>https://ibctamil.com/article/urging-action-regarding-garbage-in-keerimalai-area-1789438627</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான
முறையில் கழிவுகளை கொட்டிய, வலி.தெற்கு பிரதேச சபை அவற்றை மீள அள்ள வேண்டும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான
முறையில் கழிவுகளை கொட்டிய, வலி.தெற்கு பிரதேச சபை அவற்றை மீள அள்ள வேண்டும்
என வலி. வடக்கு பிரதேச சபை காலக்கெடு விதித்தும் குப்பைகள் மீள அள்ளப்படாமல்,
தீயிட்டு கொளுத்தப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
</p><p>
வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு கடந்த 20 ஆம் திகதி தவிசாளர்
சோ.சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.
</p><p>
அதன் போது சபை ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் சுண்ணக்கல் அகழப்பட்ட
பாரிய பள்ளங்களுக்குள், வலி. தெற்கு பிரதேச சபையினர், சட்டவிரோதமான முறையில்
இலத்திரனியல் கழிவுகள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகளை
கொட்டியமை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.</p><p></p><p>
</p><h2>மூச்சு விட சிரமப்படும் நிலை&nbsp;&nbsp;</h2><p>
அதனை தொடர்ந்து, கொட்டப்பட்ட கழிவுகளை வலி. தெற்கு பிரதேச சபையினர்
செப்டெம்பர் 13 ஆம் திகதிக்கு முன்னர் மீள அள்ள வேண்டும் எனவும், அது
தொடர்பிலான அறிவித்தலை வலி. தெற்கு பிரதேச சபைக்கு உடனடியாக அனுப்ப வேண்டும்
என சபையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2a709bc-66eb-4690-9f7d-c9d455ff49fe/26-6aa8abc5680b7.webp' /></p><p>அந்நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 13 ஆம் திகதியுடன் குப்பைகளை மீள
அள்ள கொடுத்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் , வலி. வடக்கு பிரதேச சபை
உறுப்பினர்கள் இன்றைய தினம் குப்பைகள் கொட்டப்பட்ட பகுதிக்கு சென்ற வேளை
குப்பைகள் மீள அள்ளப்படாது, தீயிட்டு கொளுத்தப்பட்ட நிலையில், குப்பை
மேட்டில் இருந்து புகை எழுந்த வண்ணம் காணப்பட்டுள்ளது.</p><p>
அது தொடர்பில் அயலில் வசிக்கும் மக்களிடம் உறுப்பினர்கள் வினாவிய போது,
தொடர்ந்து குப்பைகள் அப்பகுதிகளில் கொட்டப்படுவதாகவும், குப்பைகளுக்கு
தினமும் தீ வைப்பதனால் எழும் புகை மண்டலத்தால், வீடுகளில் மூச்சு விட
சிரமப்படும் நிலையிலே வாழ்கின்றோம். </p><p>இதனை நிறுத்துமாறு பல்வேறு தரப்பினரிடமும்
கோரிக்கை விடுத்த போதிலும், தம்மை பற்றி யாரும் கவனத்தில் எடுக்கவில்லை என
கவலை தெரிவித்துள்ளனர்</p><p></p><p>
</p><h2>அடுத்த கட்ட நடவடிக்கை</h2><p>
அதேவேளை அனுமதியின்றி கழிவுகளை கொட்டியமை தொடர்பில் பிரஸ்தாபிப்பதற்கு என
இன்றைய தினம் திங்கட்கிழமை சிறப்பு கூட்டத்தினை நடாத்துவது எனவும் , அதன்
போது, வலி. தெற்கு பிரதேச சபையினர் கழிவுகளை மீள அள்ளாது விடின் அடுத்த கட்ட
நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கூட்டத்தில் தீர்மானிப்பதாக கடந்த 20ஆம் திகதி
நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2218e67a-7d38-4cdc-9801-d4125b1e0776/26-6aa8abc48ea58.webp' /></p><p>அந்நிலையில் குறித்த கூட்டம் இன்றைய தினம் நடைபெறவில்லை. கூட்டம்
நிறுத்தப்பட்டமை தொடர்பில் சபை உறுப்பினர்களுக்கு அறிவிக்கவில்லை எனவும் எதிர்வரும் வியாழக்கிழமை சபையின் வழமையான மாதாந்த கூட்டத்திற்கே கடிதம்
கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளமையும்
குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T02:23:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[500 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகத்திற்கு கட்டுப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/restrictions-on-fuel-supply-at-500-fuel-stations-1789436026"></link>
            <id>https://tamilwin.com/article/restrictions-on-fuel-supply-at-500-fuel-stations-1789436026</id>
            <summary type="text">இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை நடாத்திச் செல்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை நடாத்திச் செல்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. </p><p>

தனியார் எரிபொருள் நிறுவனங்களால் 500 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால், இந்த நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. </p><p>

அதற்கமைய, லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திற்கு சொந்தமான 250 எரிபொருள் நிரப்பு நிலையங்கள், சினொபெக் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் 150 மற்றும் ஆர்.எம். பார்க் நிறுவனத்திற்கு சொந்தமான 100 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் என மொத்தம் 500 நிலையங்களுக்கு டீசல் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.</p><p> </p><h2><b>

எரிபொருள் இறக்குமதி</b></h2><p>குறித்த நிறுவனங்கள் நாட்டிற்கு எரிபொருளை இறக்குமதி செய்யும் விலைக்கும், உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்யும் விலைக்கும் இடையில் காணப்படும் பாரிய இடைவெளியே இந்த நிலைக்குக் காரணம் என சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee50eb56-0873-4b1c-a1a4-115e18ff3a09/26-6aa8a3c55c954.webp' /></p><p>நேற்று கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p> “இதன் காரணமாகப் பொதுமக்களும், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.</p><p> தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களை நடாத்திச் செல்வதிலும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. </p><h3><b>விலை சூத்திரம்</b></h3><p>தற்போதைய அரசாங்கத்தின் விலைச் சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருளை விற்பனை செய்வதனால் தமக்கு பாரிய நட்டம் ஏற்படும் என குறித்த தனியார் நிறுவனங்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல்களின் போது தெரிவித்தனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94c55659-d546-4418-8ddf-be395f36e788/26-6aa8a3c6183d0.webp' /></p><p>இவ்வாறு ஏற்படும் நட்டத்தைக் குறைத்துக் கொள்வதற்காகவே குறித்த நிறுவனங்கள் சந்தைக்கான எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளன. </p><p>எனினும், இந்த நிறுவனங்கள் எமக்குத் தொடர்ந்தும் எரிபொருளை வழங்குவதாக உறுதியளித்திருந்தன” என குமார் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-15T02:11:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலட்சக்கணக்கானோருக்கு அரசாங்க தொழில் வாய்ப்பு - அரசாங்க தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/1-20-000-people-recruited-goverment-job-this-year-1789436693"></link>
            <id>https://tamilwin.com/article/1-20-000-people-recruited-goverment-job-this-year-1789436693</id>
            <summary type="text">இந்த ஆண்டு பரீட்சைகள் மற்றும் நேர்காணல்கள் மூலம் தகுதியின் அடிப்படையில் 1,20,000 க்கும் மேற்பட்ட புதிய நபர்கள் அரச சேவையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டு பரீட்சைகள் மற்றும் நேர்காணல்கள் மூலம் தகுதியின் அடிப்படையில் 1,20,000 க்கும் மேற்பட்ட புதிய நபர்கள் அரச சேவையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளார்.</p><p>இதன்படி, தனிப்பட்ட பட்டியல்களின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அமைச்சர்களையும் அரச சேவையில் சேர்க்கும் கலாச்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.</p><p>கேகாலை, ருவன்வெல்லாவில் நேற்று (14) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டபோது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,</p><h2>பொதுமக்களுக்கு&nbsp;&nbsp;வழங்கப்படும்&nbsp;சேவைகள் </h2><p>
உள்கட்டமைப்பு மற்றும் மனித வளங்களை மேம்படுத்துவதன் மூலம் உள்ளூராட்சி திணைக்களங்களால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71ed0dc0-9ab3-4432-9db8-262204466860/26-6aa8a7c6e7a5b.webp' /></p><p>
</p><p>
பொது நிதிகளை சிக்கனமாகவும் வீணாக்காமலும் பயன்படுத்தி, 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்ற அரசாங்கத்தின் பிரதான நோக்கத்தை அடைவதற்கு பொதுச் சேவையும் உள்ளூராட்சி நிறுவனங்களும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.</p><p>பிறப்பு முதல் இறப்பு வரையிலும், இறப்பிற்கு பிறகும் கூட, பல தேவைகளில் இந்த உள்ளூராட்சி நிறுவனங்களின் பங்களிப்பு மிக அதிகமாக உள்ளது. இது மக்களின் வாழ்க்கையுடன் மிகவும் நெருக்கமாகப் பிணைந்துள்ளது. </p><p>இருப்பினும், சில சமயங்களில், இந்த உள்ளாட்சி அமைப்புகள் வழங்கும் சேவைகள் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததைக் காண்கிறோம். எனவே, இந்த உள்ளாட்சி வாரத்தை மீண்டும் செயல்படுத்த நினைத்தோம். இதை ஒரு வாரத்திற்குள் மட்டுப்படுத்தாமல், இந்தத் திட்டம் வழங்கும் அறிவு, புரிதல் மற்றும் அனுபவத்தைப் பயன்படுத்தி, வரும் ஆண்டு முழுவதும் இந்தச் சேவையை மக்களுக்கு வழங்க வேண்டும்.</p><h2>அரச சேவைக்காக ஆட்சேர்ப்பு</h2><p>
</p><p>
இன்று, நடமாடும் சேவைகள் செயல்பாட்டில் உள்ளன. எதிர்காலத்தில், உள்கட்டமைப்பு மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பல்வேறு கல்வித் திட்டங்கள், கலை, கலாச்சார மற்றும் விளையாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட, மக்களைப் பாதிக்கும் அத்தியாவசிய சேவைகளை ஒரே வளாகத்தில் வழங்குவது மற்றும் அவற்றை அடிமட்டத்திற்குக் கொண்டு செல்வது உட்பட, இந்த வாரம் ஏற்பாடு செய்யப்படும்.
</p><p>மத்திய அரசின் கீழ் இது தான் நிலை. மாகாண சபைகளின் கீழும் இதே நிலை தான். எனவே, ஒரு அரசாங்கமாக, இந்த ஆண்டு மட்டும் அரச சேவைக்காக 1,20,000-க்கும் மேற்பட்டோரை நியமிக்க தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம்.சில ஆட்சேர்ப்புகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.</p><p>செப்டம்பர் 01, 2019 நிலவரப்படி 180 நாட்களை நிறைவுசெய்த, தற்காலிக, பதவி, ஒப்பந்தம் போன்ற அடிப்படையில் இருந்த அனைவரையும் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T02:05:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை சினேகா முதல் எதிர்நீச்சல் பார்வதி வரை.. வியநகர் சதுர்த்தி கொண்டாடிய பிரபலங்களின் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vinayagar-chaturthi-celebrities-special-photoshoot-1789368860"></link>
            <id>https://cineulagam.com/article/vinayagar-chaturthi-celebrities-special-photoshoot-1789368860</id>
            <summary type="text">இன்று விநாயகர் சதுர்த்தி நாளை முன்னிட்டு திரை பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை ரசிகர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்கள். மேலும், தங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று விநாயகர் சதுர்த்தி நாளை முன்னிட்டு திரை பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை ரசிகர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்கள். </p><p>மேலும், தங்களது விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். நடிகை சினேகா முதல் எதிர்நீச்சல் சீரியல் நடிகை பார்வதி வரை பிரபலங்கள் வெளியிட்ட விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் புகைப்படங்கள் இதோ..</p>]]></content>
            <updated>2026-09-15T01:58:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் நள்ளிரவில் நடந்த பயங்கரம் - கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/18-years-old-boy-killed-brutally-1789434493"></link>
            <id>https://tamilwin.com/article/18-years-old-boy-killed-brutally-1789434493</id>
            <summary type="text">கொழும்பு, கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><h2><b>

 ஆரம்பகட்ட விசாரணை</b></h2><p>உயிரிழந்தவர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b4f3026-8f5a-4b8f-9d24-5272bb4f78b1/26-6aa89c8eeeaa4.webp' /></p><p>தனிப்பட்ட தகராறு ஒன்று முற்றியதன் காரணமாக இருவரால் இந்தக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
 இந்த கொலை தொடர்பில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்களை கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p><h3><b>

பழைய தகராறு </b></h3><p>இதேவேளை, யக்கலமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரகெட்டிய பிரதேசத்தில் நபர் ஒருவர் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eef92656-57cb-41af-8789-135f041a1ab7/26-6aa89c8fa3950.webp' /></p><p>யக்கலமுல்ல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யக்கலமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடையவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p>

 பழைய தகராறு காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி, கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இந்தக் கொலை செய்யப்பட்டுள்ளது.</p><p> 

27 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், யக்கலமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T01:47:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை அதுல்யா ரவி சேலையில் அழகிய போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/athulya-ravi-saree-photoshoot-1789434734"></link>
            <id>https://cineulagam.com/article/athulya-ravi-saree-photoshoot-1789434734</id>
            <summary type="text">நடிகை அதுல்யா ரவி ஹோம்லி லுக் மட்டுமின்றி கிளாமரிலும் ரசிகர்களை கவர்ந்து வருபவர். இன்ஸ்டாகிராமில் மட்டும் அதுல்யாவுக்கு 2.4 மில்லியன் ரசிகர்கள் இருக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை அதுல்யா ரவி ஹோம்லி லுக் மட்டுமின்றி கிளாமரிலும் ரசிகர்களை கவர்ந்து வருபவர். இன்ஸ்டாகிராமில் மட்டும் அதுல்யாவுக்கு 2.4 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.</p><p>தற்போது விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக அதுல்யா ரவி அழகிய சேலையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க.
</p><p>ரசிகர்களிடம் இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T01:40:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[222222222V என்ற அடையாள அட்டை எண்ணால் ஷிரந்தி தொடங்கிய வங்கி கணக்கு! தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fraudulent-funds-piling-up-shiranthi-bank-ac-num-1789436250"></link>
            <id>https://ibctamil.com/article/fraudulent-funds-piling-up-shiranthi-bank-ac-num-1789436250</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ‘சிரிலியா’ வங்கிக் கணக்கில், அவரது பெயருக்கு போலியான தேசிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ‘சிரிலியா’ வங்கிக் கணக்கில், அவரது பெயருக்கு போலியான தேசிய அடையாள அட்டை இலக்கம் பயன்படுத்தப்பட்டிருந்த விடயம் மீண்டும் விசாரணையை மையப்படுத்தியுள்ளது.</p><p>குறித்த வங்கிக் கணக்கில் ஷிரந்தி ராஜபக்ஷவின் தேசிய அடையாள அட்டை இலக்கமாக ‘222222222V’ என்ற இலக்கம் குறிப்பிடப்பட்ட விடயம் முன்னதாக பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது.</p><p>இந்நிலையில் தற்போதைய விசாரணையில் குறித்த விடயம் மீண்டும் கவணம் பெற்றுள்ளது.</p><p></p><h2>சந்தேகத்திற்கிடமான நிதிப் பரிவர்த்தனை</h2><p>சுடுவெல்ல பகுதியில் உள்ள அரச வங்கிக் கிளையொன்றில், ஷிரந்தி ராஜபக்ச உள்ளிட்ட மூவரின் பெயர்களில் கூட்டுக் கணக்காக ‘சிரிலியா’ கணக்கு திறக்கப்பட்டுள்ளது.</p><p>
இந்தக் கணக்கில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் தேசிய அடையாள அட்டை இலக்கம் தொடர்பான தகவல்கள் தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் முக்கிய கவனம் பெற்றுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b73eb0a3-4f10-4e41-9369-a0306120ce6e/26-6aa8a15c6391c.webp' /></p><p>
</p><p>
அத்துடன், குறித்த வங்கிக் கணக்கின் ஊடாக பல சந்தேகத்திற்கிடமான நிதிப் பரிவர்த்தனைகள் இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>மேலும், மகரகம அபேக்ஷா மருத்துவமனைக்கு PET ஸ்கேன் கருவியொன்றை கொள்வனவு செய்வதற்காக ஷிரந்தி ராஜபக்ச நிதி திரட்டும் பிரசாரமொன்றை முன்னெடுத்திருந்ததாகவும், இதற்காக தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து ஒரு மில்லியன் ரூபாய் பெறப்பட்டு ‘சிரிலியா’ கணக்கில் வரவு வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
எனினும், அதே காலப்பகுதியில் சீனாவிலிருந்து சுமார் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான PET ஸ்கேன் கருவியொன்று இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T01:37:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்லாந்தில் கோய் மீன்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 51 வயது முதியவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/elderly-man-sexually-harassed-koi-fish-1789419453"></link>
            <id>https://canadamirror.com/article/elderly-man-sexually-harassed-koi-fish-1789419453</id>
            <summary type="text">தாய்லாந்தில் அண்டை வீட்டாரின் தனியார் கோய் மீன் வளர்ப்புத் தொட்டிக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் 51 வயது நபர் ஒருவர், மீன்களுக்கு பாலியல் துஷ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்தில் அண்டை வீட்டாரின் தனியார் கோய் மீன் வளர்ப்புத் தொட்டிக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் 51 வயது நபர் ஒருவர், மீன்களுக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் அதிர்ச்சி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

தாய்லாந்தின் துங் சோங் ஹோங் பகுதியில் உள்ள தனியார் குளமொன்றில் கடந்த செப்டம்பர் 7ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e024373a-87ef-4dd7-b0b8-b8bfd1eaf57f/26-6aa85fbe930c2.webp' /></p><p>குறித்த நபர் மிதிவண்டியில் அப்பகுதிக்கு வந்த பின்னர், குளத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், அங்கு வளர்க்கப்பட்டிருந்த கோய் மீன்களுக்கு துஷ்பிரயோகம் செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவத்தை வீட்டுப் பணியாளரும் குளத்தின் உரிமையாளரும் அவதானித்து அவரை எதிர்கொண்டபோது, சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். </p><p>இதனையடுத்து உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில், குளத்தில் வளர்க்கப்பட்ட கோய் மீன்கள் தொடர்ச்சியாக விசித்திரமான முறையில் உயிரிழந்ததை அவதானித்த உரிமையாளர், காரணம் தொடர்பில் சந்தேகமடைந்துள்ளார்.
</p><p>
மேலும், குளத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான பொருளொன்று கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த CCTV காட்சிகளை ஆய்வு செய்தபோதே சம்பவத்தின் பின்னணி தெரியவந்துள்ளது.

இதையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சந்தேகநபரை மறுநாள் லாக் சி பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். </p><p>கைது செய்யப்பட்டபோது, சம்பவத்தன்று அணிந்திருந்த ஆடைகளையே அவர் அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ac78282-8bc1-448c-a744-93b27c474e82/26-6aa85fbf47e2a.webp' /></p><p>விசாரணைகளின்போது குறித்த நபர் சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதாகவும், போதைப்பொருள் பயன்படுத்தியிருந்ததாகவும் பொலிஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.</p><p>
மேலும், கடந்த காலங்களிலும் விலங்குகள் மற்றும் பொருட்கள் தொடர்பில் இதுபோன்ற தகாத செயல்களில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.</p><p>

சுமார் ஏழு முதல் எட்டு ஆண்டுகளாக கோய் மீன்களை வளர்த்து வரும் குளத்தின் உரிமையாளர், மீன்கள் வித்தியாசமான நிலையில் உயிரிழந்ததைக் கண்டு ஆரம்பத்தில் அவை ஒன்றுடன் ஒன்று மோதியதன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என கருதியதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
எனினும், CCTV காட்சிகளை ஆய்வு செய்த பின்னரே உண்மையான காரணம் தெரியவந்துள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் விலங்கு வதை, சொத்து சேதம், ஒழுக்கக்கேடான செயற்பாடு மற்றும் இரவு நேரத்தில் அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து தாய்லாந்து பொலிஸார் பரிசீலித்து வருகின்றனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-09-15T01:34:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை காதலியைப் பார்க்க இந்தியாவிலிருந்து படகில் வந்த 14 வயது சிறுவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/boy-who-came-india-see-his-sri-lankan-girlfriend-1789428469"></link>
            <id>https://jvpnews.com/article/boy-who-came-india-see-his-sri-lankan-girlfriend-1789428469</id>
            <summary type="text">முகநூல் ஊடாக அறிமுகமான இலங்கைச் சிறுமியை நேரில் சந்திப்பதற்காக, இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு வந்ததாகக் கூறப்படும் 14 வயது சிறுவன் ஒருவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முகநூல் ஊடாக அறிமுகமான இலங்கைச் சிறுமியை நேரில் சந்திப்பதற்காக, இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு வந்ததாகக் கூறப்படும் 14 வயது சிறுவன் ஒருவர் தலைமன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குறித்த சிறுவன் இந்தியாவின் ராமேஸ்வரம் – தனுஷ்கோடி பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

முகநூல் ஊடாக இலங்கையைச் சேர்ந்த சிறுமி ஒருவருடன் சிறுவனுக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரை நேரில் சந்திப்பதற்காகவே இலங்கைக்கு வருவதற்கு முயற்சித்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bb924a7-6051-4f09-9f66-b585cedf6525/26-6aa882f6cb9e0.webp' /></p><p>

இலங்கைக்கு வருவதற்கான படகுக் கட்டணத்தை செலுத்துவதற்கு போதிய பணம் இல்லாத நிலையில், சிறுவன் தன்னிடமிருந்த தங்கச் சங்கிலியை படகோட்டியிடம் வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

மேலும், இலங்கைக்கு வந்தபோது சிறுவனிடம் இந்திய நாணயத்தில் 280 ரூபாய் மட்டுமே இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்நிலையில், இலங்கைக்குள் வந்த சிறுவனை தலைமன்னார் பொலிஸார் கைது செய்து, மேலதிக நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.</p><p>

வழக்கை விசாரித்த தலைமன்னார் நீதிமன்றம், குறித்த 14 வயது சிறுவனை சிறுவர் காப்பகத்தில் தங்க வைக்க உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>
இச்சம்பவம், சமூக ஊடகங்கள் வாயிலாக அறிமுகமாகும் நபர்களை நேரில் சந்திப்பதற்காக சிறுவர்கள் ஆபத்தான முறையில் பயணிப்பதால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T01:34:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய மர்ம பொதி - தப்பியோடிய பயணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mystery-box-in-katunayake-airport-1789435229"></link>
            <id>https://tamilwin.com/article/mystery-box-in-katunayake-airport-1789435229</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தின் 6 ஆம் இலக்கப் பொதி பகுதியில் அருகில் மர்மமான முறையில் கைவிடப்பட்டிருந்த பொதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அந்த பொதிக்குள் பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தின் 6 ஆம் இலக்கப் பொதி பகுதியில் அருகில் மர்மமான முறையில் கைவிடப்பட்டிருந்த பொதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.</p><p> அந்த பொதிக்குள் பெருமளவு குஷ் ரக போதைப்பொருள் விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p> இரண்டு பொதிகளுக்குள் காற்றுப்புகாதவாறு 60 பொட்டலங்களாக பொதியிடப்பட்டிருந்தது. </p><h2><b>தப்பியோடிய பயணி</b></h2><p>இந்தப் போதைப்பொருள், நேற்று தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து வருகை தந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL-405 விமானத்தில் வந்த பயணி ஒருவரால் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/349ea38a-d730-44c7-abd5-e1cde87819d2/26-6aa89ffcd1764.webp' /></p><p>விமான நிலையத்திற்குள் வைத்து சிக்கிக் கொள்வோம் என்ற பயத்தின் காரணமாகவே குறித்த பயணி இந்தப் போதைப்பொருளைக் கைவிட்டுத் தப்பியோடியிருக்கலாம் எனப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். </p><p>குறித்த பொதிகளைக் கொண்டுவந்த விமானப் பயணி யார் என்பதைக் கண்டறிவதற்காக தற்போது விசேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. </p><p>கைப்பற்றப்பட்ட குஷ் போதைப்பொருள் தொகுதி இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் கையளிக்கப்படவுள்ளது. 
</p>]]></content>
            <updated>2026-09-15T01:32:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு விதிக்கப்பட்ட 15 ஆண்டு சிறைத்தண்டனை உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/15-year-prison-sentence-man-sexually-daughter-1789435637"></link>
            <id>https://jvpnews.com/article/15-year-prison-sentence-man-sexually-daughter-1789435637</id>
            <summary type="text">மகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்ட சந்தேகநபருக்கு மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 15 வருட கடூழிய சிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்ட சந்தேகநபருக்கு மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 15 வருட கடூழிய சிறைத்தண்டனையை மேன் முறையீட்டு நீதிமன்றம் திங்கட்கிழமை (14) உறுதி செய்தது.

நீதிபதி அமல் ரணராஜா, நீதிபதி சுமுது பிரேமச்சந்திர ஆகியோர் அடங்கிய மேன் முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் நேற்றைய தினம் மேற்படி வழக்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.</p><p> </p><p></p><p>இதன்போது பிரதிவாதி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டில் எவ்வித அடிப்படையும் இல்லை என நீதிபதிகள் அமர்வு குறித்த மேன்முறையீட்டை தள்ளுபடி செய்திருந்தது.
</p><p>
2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தன் மகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் குறித்த நபாருக்கு எதிராக 3 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4703caca-dc2c-45a5-b456-5c51183cfff3/26-6aa89ef79966a.webp' /></p><p>இந்நிலையில் நீண்ட விசாரணையின் பின்னர், தண்டனைச் சட்டக் கோவையின் 364(3) பிரிவின் கீழ், ஒரு குற்றச்சாட்டில் அவர் குற்றவாளியாக காணப்பட்டதை அடுத்து அம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம், 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்தது. ஏனைய இரண்டு குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை விடுவித்திருந்தது.
</p><p>

சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 10 ஆயிரம் ரூபா அபராதமும், பாதிக்கப்பட்ட மகளுக்கு 4 இலட்சம் ரூபா இழப்பீடு செலுத்துமாறு உத்தரவிடப்பட்டது.</p><p> அபராதம் மற்றும் இழப்பீடு செலுத்தத் தவறும் பட்சத்தில் தலா 6 மாதங்கள் மேலதிக சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.</p><p> </p><p> சம்பவம் இடம்பெற்ற நேரம் அல்லது திகதி தெளிவில்லையெனவும், மகளின் சாட்சியத்தை நம்ப முடியாது எனக் கூறியும் பிரதிவாதி மேன்முறையீடு செய்திருந்தார்.
</p><p>
எனினும், முறைப்பாட்டாளரின் சாட்சியங்கள் மிகவும் நம்பகமானவை எனத் தெரிவித்த நீதிபதி கலாநிதி சுமுது பிரேமசந்திர, மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட எவ்வித அடிப்படை காரணமும் இல்லை எனக் குறிப்பிட்டார். </p><p> அதற்கமைய குற்றவாளியின் மேன்முறையீட்டை நிராகரித்த நீதிமன்றம், 2025 ஜூலை 16 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட 15 வருட கடூழிய சிறைத்தண்டனை, அபராதம் மற்றும் இழப்பீடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்துமாறும் உத்தரவிட்டது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T01:27:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்த மக்களுக்குப் பைத்தியமில்லை – ஐக்கிய மக்கள் சக்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-chance-for-rajapakshes-any-more-1789435638"></link>
            <id>https://tamilwin.com/article/no-chance-for-rajapakshes-any-more-1789435638</id>
            <summary type="text">ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சி பீடமேற்றுவதற்கு மக்களுக்கு பைத்தியம் கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. 
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சி பீடமேற்றுவதற்கு மக்களுக்கு பைத்தியம் கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. 
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெஷா விதனகே இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p>2022 ஆம் ஆண்டு நாட்டை பொருளாதார ரீதியாக வங்ரோத்தடையச் செய்த ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை மீண்டும் நாட்டின் ஜனாதிபதி பீடமேற்றுவதற்கு இந்த நாட்டு மக்களுக்குத் பைத்தியம் எதுவும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ed46766-9178-4fbb-a4e7-7eec218cef40/26-6aa89ef7b8bf4.webp' /></p><p>
</p><p>தற்போது குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் நாமல் ராஜபக்ச மீதான குற்றச்சாட்டுகள் உண்மையென்றால், அவர் பத்து சிறைச்சாலைகளில் அடைக்கப்படுவதைக் கூடத் தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
</p><p>2029-இல் இவர்தான் நல்ல பையன் எனக் கூறி, அவரை மீண்டும் ஜனாதிபதியாக்குவதற்கு யாராவது ஆதரவாகக் கையை உயர்த்தினால், அவர்கள் சோறு சாப்பிடும் மனிதர்களாக இருக்க முடியாது என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
</p><p>தங்களைப் போல் அல்லாமல் ராஜபக்சக்களிடம் அதிகளவில் பணம் உள்ளது. அதனால், எந்நேரத்திலும் பேருந்துகளில் ஆட்களை ஏற்றிவந்து பிரம்மாண்டமான பேரணிகளை நடத்த அவர்களால் முடியும்.</p><p> ஆனால், அத்தகைய செயற்கையான கூட்டங்களைக் கண்டு அச்சப்படவோ அல்லது பெரிதாக யோசிக்கவோ தேவையில்லை ஹேசா விதானகே தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T01:27:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப்புலிகள் விவகாரத்தில் இரட்டை வேட அரசியல்! மொட்டுவின் ஆட்டத்திற்கு அநுர பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ltt-org-and-the-politics-of-double-standards-1789435134"></link>
            <id>https://ibctamil.com/article/ltt-org-and-the-politics-of-double-standards-1789435134</id>
            <summary type="text">விடுதலைப்புலிகள் அமைப்பு என்றவுடன் கடந்த காலங்களில் எதிர்ப்பை வெளியிட்ட அரசியல் தரப்பினர், இன்று தங்களுக்கு சாதகமான ஒருவர் என குரல் கொடுத்ததும் வீரன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விடுதலைப்புலிகள் அமைப்பு என்றவுடன் கடந்த காலங்களில் எதிர்ப்பை வெளியிட்ட அரசியல் தரப்பினர், இன்று தங்களுக்கு சாதகமான ஒருவர் என குரல் கொடுத்ததும் வீரன் என கூறிவருகின்றனர் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

அநுராதபுரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
</p><p>
தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், 

தற்போது என்ன நடக்கின்றது என்பதை மக்கள் கண்டிருப்பார்கள். இவ்வளவு காலமும் மேடைகளில் குரல் கொடுத்த எதிர் தரப்பினரின் கருத்துக்கள் எல்லாம் பொய் ஆகிவிட்டது.</p><p></p><h2>இனத்தின் வரலாறு</h2><p>ஒருவர் தன்னை விடுதலைப்புலிகள் அமைப்பு சார்ந்தவர் என குரல் கொடுக்கிறார். அவரை மேடையில் ஏற்றி வைத்துள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84cf6ec1-46d9-4274-af1c-0b8fdbb18e87/26-6aa89d00cc34a.webp' /></p><p>
</p><p>
அந்த நபரை வேறு தரப்பினர் மேடைக்கு ஏற்றியிருந்தால் என்ன நடந்திருக்கும். விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவு, நாட்டை பிரிக்க முயற்சி என கூறியிருப்பார்கள்.
 
இதுதான் இவர்களின் கேடுகெட்ட அரசியல். இவர்கள் எல்லாம் போலி தேசப்பற்றாளர்கள்.</p><p>ஒரு இனத்தின் வரலாற்றை மதிக்காத போக்கையே கொண்டுள்ளனர்.</p><p>

இவர்கள் மக்களை மதத்தைஇ இனத்தை காட்டி ஏமாற்றியிருக்கின்றார்கள். உலகம் மாறியும் இவர்கள் இன்றும் மாறவில்லை” என்றார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T01:19:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை ; 100 மி.மீ.க்கும் மேல் மழை பெய்யும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heavy-rain-warning-for-several-parts-of-sri-lanka-1789434882"></link>
            <id>https://jvpnews.com/article/heavy-rain-warning-for-several-parts-of-sri-lanka-1789434882</id>
            <summary type="text">மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>இதனால் குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், மழையுடன் கூடிய காலநிலையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d58be973-5d6a-47b4-82b0-96d97b67c51c/26-6aa89c03f2678.webp' /></p><p>மேலும், பலத்த மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தாழ்வான பகுதிகள் மற்றும் நீர்நிலைகளை அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T01:15:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[லட்சுமி நாராயண ராஜயோகம் ; ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lakshmi-narayana-raja-yogam-raja-valkai-valum-rasi-1789434072"></link>
            <id>https://jvpnews.com/article/lakshmi-narayana-raja-yogam-raja-valkai-valum-rasi-1789434072</id>
            <summary type="text">ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்கள் மற்றும் அவற்றின் சேர்க்கையால் உருவாகும் யோகங்கள் மனித வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் செப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்கள் மற்றும் அவற்றின் சேர்க்கையால் உருவாகும் யோகங்கள் மனித வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் செப்டம்பர் மாத இறுதியில் ஒரு அற்புதமான கிரக சேர்க்கை நிகழவுள்ளது.&nbsp;வேத நாட்காட்டியின் படி, சுக்கிரன் செப்டம்பர் 27 ஆம் திகதி தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7861c63-79af-48ef-85ad-64fd56dc2b35/26-6aa898dac436f.webp' /></p><p>இப்படிப்பட்ட ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது செப்டம்பர் இறுதியில் புதன் சுக்கிரனின் சேர்க்கையால் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1a06d56-92d9-48ed-a2e0-d48b50af92f9/26-6aa898da14219.webp' /></p><h4>மிதுனம்
</h4><p>மிதுன ராசியின் 5 ஆவது வீட்டில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி நன்மைகளைப் பெறுவார்கள். அதுவும் ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பங்குச் சந்தை, ஊடகம், ஐடி துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் மிகவும் சாதகமாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8341a78-50d4-4133-a3a8-3d9f6240ac94/26-6aa898db889ae.webp' /></p><h4>துலாம்
</h4><p>துலாம் ராசியின் முதல் வீட்டில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதன் காரணமாக இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். வணிகர்கள் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அரசு தொடர்பான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு வேலைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். சுக்கிரனின் அருளால் பணப்பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e67718f3-be0b-41d6-93ea-d9b8ca112898/26-6aa898dc40f26.webp' /></p><h4>தனுசு
</h4><p>தனுசு ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் புதிய பொறுப்புக்களைப் பெறலாம். நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும். ஆடம்பர செலவுகளை அதிகம் செய்தாலும், நிதி நிலை சிறப்பாகவே இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36ebce32-68c0-45d2-9b38-7025b95c9934/26-6aa898dcebfc7.webp' /></p><h4>கும்பம்
</h4><p>கும்ப ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். ஊடகம், மார்கெட்டிங் மற்றும் கலைத் துறையில் இருப்பவர்கள், தங்கள் வேலையில் நேர்மறையான பலன்களைப் பெறுவார்கள். சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/841bba2d-0a1e-4ad4-b344-fcc48c08868e/26-6aa898dda82a4.webp' /></p>]]></content>
            <updated>2026-09-15T01:01:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுமதி பத்திர கோரிக்கைக்கு கடற்றொழிலாளர்களிடம் 7 இலட்சம் இலஞ்சம் கோரிய அரச அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/7-lakh-bribe-demanded-from-fishermen-1789433724"></link>
            <id>https://ibctamil.com/article/7-lakh-bribe-demanded-from-fishermen-1789433724</id>
            <summary type="text">மட்டக்களப்பில் சுருக்கு வலை பயன்படுத்தி சிறிய முரல் மீன்களைப் பிடிப்பதற்கான அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்துக் கொடுப்பதற்காக, கடற்றொழில் மற்றும் நீரிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பில் சுருக்கு வலை பயன்படுத்தி சிறிய முரல் மீன்களைப் பிடிப்பதற்கான அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்துக் கொடுப்பதற்காக, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் சில உத்தியோகத்தர்கள் படகு உரிமையாளர்களிடம் இருந்து இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஒரு படகு உரிமையாளரிடம் இருந்து தலா 35,000 ரூபாய் வீதம் 20 படகு உரிமையாளர்களிடம் இருந்து சுமார் 7 இலட்சம் ரூபாய் இலஞ்சமாகப் பெறப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பின் ஊடகப் பேச்சாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
</p><p>கடற்றொழில் அமைச்சர் உடனடியாக இது தொடர்பில் விசாரணை நடத்தி, குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><h2>நீண்டகால கோரிக்கை&nbsp;</h2><p>இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4b0ba38-8392-488c-abad-4998d8cf91fe/26-6aa8977f199ec.webp' /></p><p>“மட்டக்களப்பு பிரதேச கடற்றொழிலாளர்கள் நீண்டகாலமாக சுருக்கு வலையைப் பயன்படுத்தி சிறிய முரல் மீன்களைப் பிடித்து வருவதாகவும், இதற்கான அனுமதிப் பத்திரத்தை வழங்குமாறு அவர்கள் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.</p><p>

இதனையடுத்து தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையமான நாரா (NARA) நிறுவன அதிகாரிகள் கள ஆய்வை மேற்கொண்டதாகவும், கடற்றொழிலாளர்களிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சிறிய முரல் மீன்களைப் பிடிப்பதற்கு சுருக்கு வலையைப் பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்படாது என அறிக்கை சமர்ப்பித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
</p><p>
அதனைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்டு சிறிய முரல் மீன்களைப் பிடிப்பதற்காக சுருக்கு வலையைப் பயன்படுத்துவதற்கான அனுமதிப் பத்திரங்கள் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
</p><p>
எனினும், 2026ஆம் ஆண்டுக்கான அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும், நாரா நிறுவனம் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும், கடற்படை அதிகாரிகள் வந்து பார்வையிட வேண்டும் என பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனால் ஜனவரி மாதம் புதுப்பிக்கப்பட வேண்டிய அனுமதிப் பத்திரங்கள் சுமார் ஆறு மாதங்கள் வரை புதுப்பிக்கப்படாமல் இருந்துள்ளது.</p><p> பின்னர் அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பிப்பதற்காக ஒரு படகு உரிமையாளரிடம் 50,000 ரூபாய் இலஞ்சமாகக் கோரப்பட்டதாகவும், அந்தத் தொகையை வழங்க முடியாது என படகு உரிமையாளர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, தலா 35,000 ரூபாய் வழங்க முன்வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது” என கூறியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T00:55:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைவிடப்பட்ட பயணப் பை ; ரூ.320 மில்லியன் போதைப்பொருள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/narcotics-320-million-seized-at-katunayake-airport-1789432675"></link>
            <id>https://jvpnews.com/article/narcotics-320-million-seized-at-katunayake-airport-1789432675</id>
            <summary type="text">கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட இரண்டு பயணப் பைகளிலிருந்து சுமார் 320 மில்லியன் ரூபாய் பெறுமதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட இரண்டு பயணப் பைகளிலிருந்து சுமார் 320 மில்லியன் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ (Kush) ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே குறித்த போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c1a35a6-6d57-4ae2-b51f-f9f326a48ce8/26-6aa8936524024.webp' /></p><p>

கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட இரண்டு பயணப் பைகளையும் சுங்க அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியபோது, அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ‘குஷ்’ ரக போதைப்பொருள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T00:38:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவுக்காகவே மீண்டும் ஒன்றுபட்டுள்ளோம்..! ரோஹித அபேகுணவர்தன எம்.பி விடுத்த அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/we-have-united-again-for-the-sake-of-mahinda-1789430564"></link>
            <id>https://tamilwin.com/article/we-have-united-again-for-the-sake-of-mahinda-1789430564</id>
            <summary type="text">சிறைச்சாலை என்பது நாமல் ராஜபக்சவுக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. கடந்த
நல்லாட்சி அரசின் காலத்திலும் அவர் சிறைப்படுத்தப்பட்டுள்ளார். எனவே, சிறைக்கு
அனுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலை என்பது நாமல் ராஜபக்சவுக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. கடந்த
நல்லாட்சி அரசின் காலத்திலும் அவர் சிறைப்படுத்தப்பட்டுள்ளார். எனவே, சிறைக்கு
அனுப்புவதன் மூலம் அவர் எதற்காகவும் அச்சமடையப் போவதில்லை என்று புதிய
ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.</p><p>

இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது, "நாங்கள் மகிந்த வேண்டாம் என்று கூறிவிட்டு ரணில் விக்ரமசிங்கவின் பக்கம்
செல்லவில்லை.</p><h2>நெருக்கடியான சந்தர்ப்பத்தில்</h2><p>கடுமையான பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கித் தவித்த அந்த
இக்கட்டான காலகட்டத்தில்தான் நாட்டைப் பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்க, மிகக்
குறுகிய காலத்துக்குள் நாட்டை அந்தப் பேராபத்திலிருந்து வெற்றிகரமாகப்
பாதுகாத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72410334-94a2-4d26-a1e6-96972e9b0cfb/26-6aa892585138b.webp' /></p><p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் எங்களுக்கும் இடையில் கடந்த காலங்களில் சில
கொள்கை ரீதியான கருத்து முரண்பாடுகள் காணப்பட்டமை உண்மையே.</p><p> அதற்காக இத்தகைய
ஒரு நெருக்கடியான சந்தர்ப்பத்தில் நாம் பிரிந்து நிற்க முடியாது. </p><p>மகிந்த
ராஜபக்சவுக்காகவே நாம் மீண்டும் ஒன்றுபட்டுள்ளோம்.

தற்போதைய அரசியல் மற்றும் சமூகச் சூழலில் எழுந்துள்ள நெருக்கடியான
சந்தர்ப்பத்தில் சகல எதிர்க்கட்சிகளும் எந்தவித பேதமுமின்றி ஒன்றுபட வேண்டும்.</p><p>
அந்த ஒற்றுமையே எதிர்காலத்தில் அனைவருக்கும் உரிய பாதுகாப்பாக அமையும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T00:34:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய் சேதுபதி பேச்சால் வெடித்த சர்ச்சை.. விளக்கம் கொடுத்த விஜய் டிவி தரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vijay-sethupathi-controversy-vijay-tv-clarify-1789432284"></link>
            <id>https://cineulagam.com/article/vijay-sethupathi-controversy-vijay-tv-clarify-1789432284</id>
            <summary type="text">பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதற்கு விளக்கம் கொடுத்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறது விஜய் ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதற்கு விளக்கம் கொடுத்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறது விஜய் டிவி.</p><p>அரசியல், தலைவர், தலைமைத்துவம் பற்றி பேசிய விஜய் சேதுபதி மறைமுகமாக முதலமைச்சர் விஜய்யை தான் தாக்கி பேசினார் என சர்ச்சை எழுந்தது. அதனால் விஜய் சேதுபதியை மட்டுமின்றி விஜய் டிவியையும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8960902e-050e-4a3e-ad3a-0fc2432a509a/26-6aa891de62167.webp' /></p><p>
</p><h2>விளக்கம்</h2><p>"பிக் பாஸ் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி. அதற்கான format, theme மற்றும் ஆட்ட சூழல் ஆகியவை இருக்கின்றன.
</p><p>இந்த நிகழ்ச்சியில் வரும் சூழ்நிலைகள், விவாதங்கள், கருத்துக்கள் மற்றும் உரையாடல்கள் அனைத்தும் ஷோவின் உள்ளே நடப்பதை மட்டுமே குறிப்பிடுவதாக புரிந்துகொள்ளப்படவேண்டும்.
</p><p>இந்த நிகழ்ச்சியில் சொல்லப்படும் கருத்துக்கள் ஷோவுக்கு வெளியில் இருக்கும் எந்த ஒரு நபரையோ, அமைப்பையோ, கருத்தியாலையோ சூழ்நிலையையோ விமர்சிப்பதாக எடுத்துக்கொள்ள கூடாது.
</p><p>அவ்வாறு பிக் பாஸ் நிகழ்ச்சியை தாண்டி வெளியில் நடப்பதை பற்றி விமர்சிப்பதாக எடுத்துக்கொண்டால் அதை நாங்கள் பிரதிநிதிப்படுத்துவதாகவோ, அங்கீகரிப்பதாகவோ எடுத்துக்கொள்ள கூடாது".
</p><p>இவ்வாறு விஜய் டிவி அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="zxx" dir="ltr"><a href="https://t.co/VQ0MrMZZYN">pic.twitter.com/VQ0MrMZZYN</a></p>&mdash; Vijay Television (@vijaytelevision) <a href="https://x.com/vijaytelevision/status/2099524264131170639?ref_src=twsrc%5Etfw">September 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-09-15T00:31:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய பணியாளர்களை கொண்ட எண்ணெய் கப்பல்: ஹோர்முஸ் நீரிணையில் முழுமையாக தீக்கிரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ship-completely-gutted-by-fire-strait-of-hormuz-1789431579"></link>
            <id>https://ibctamil.com/article/ship-completely-gutted-by-fire-strait-of-hormuz-1789431579</id>
            <summary type="text">ஹார்முஸ் ஜலசந்தியின் தெற்கு பகுதியில் எல் கையா (El Gaia) என்ற பனாமா கொடி தாங்கிய எண்ணெய் கப்பல் ஒன்று தடை செய்யப்பட்ட கடற்பகுதிக்குள் நுழைந்ததை அடுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹார்முஸ் ஜலசந்தியின் தெற்கு பகுதியில் எல் கையா (El Gaia) என்ற பனாமா கொடி தாங்கிய எண்ணெய் கப்பல் ஒன்று தடை செய்யப்பட்ட கடற்பகுதிக்குள் நுழைந்ததை அடுத்து அங்கிருந்த கண்ணிவெடிகளில் மோதி பெரும் விபத்தில் சிக்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>இந்த வெடித்ததில் எண்ணெய் கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு அது கப்பல் முழுதும் பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்நிலையில் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அனைத்து தீயணைப்பு முயற்சிகளும் தோல்வியடைந்ததாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><h2>மீட்பு முயற்சி தோல்வி</h2><p>இதன்படி மீட்பு முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து சுமார் 180 மீட்டர் நீளம் கொண்ட இந்தக் கப்பல் தற்போது முழுமையாக தீயில் எரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ebc2104-34e1-4d1a-9042-ecb4f4c8816c/26-6aa890b9df98a.webp' /></p><p> ஈரானிய கடற்படை இதுவரை இந்த கப்பல் விபத்தில் சிக்கியமை தொடர்பான துல்லியமான நேரத்தை வெளியிடவில்லை.
</p><p>
கப்பல் மற்றும் பணியாளர்கள் நிலைமை
தரவுகளின் படி, “எல் கையா” கப்பல் சுமார் 48,000தொன் எடை கொள்ளளவு கொண்டது என்றும் விபத்து ஏற்பட்ட கப்பலில் இந்திய மாலுமிகள் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>

இதுவரை 13 பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மாயமான மாலுமி ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T00:26:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோர்தான் தாக்குதலில் புதிய திருப்பம் ; ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பின்னால் புதிய மர்மம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/a-new-mystery-behind-iran-s-missile-attack-1789431790"></link>
            <id>https://canadamirror.com/article/a-new-mystery-behind-iran-s-missile-attack-1789431790</id>
            <summary type="text">ஜோர்தானில் உள்ள முவாஃபக் அல்-சால்டி (Muwaffaq Al-Salti) வான்படை முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு சீன செயற்கைக்கோள் புகைப்படங்கள் பயன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோர்தானில் உள்ள முவாஃபக் அல்-சால்டி (Muwaffaq Al-Salti) வான்படை முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு சீன செயற்கைக்கோள் புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து அமெரிக்க புலனாய்வாளர்கள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
</p><p>
இந்த ஏவுகணைத் தாக்குதலில் 3 அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
தாக்குதலுக்கு முன்னர், சம்பந்தப்பட்ட இராணுவ முகாமின் அதிநவீன செயற்கைக்கோள் புகைப்படங்களை ஈரான் பெற்றிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3d0ecb3-2a51-4938-92e4-084d96dc57b4/26-6aa88ff03bfda.webp' /></p><p>இந்த தாக்குதலின் மூலம் அமெரிக்க வீரர்களின் இருப்பிடம், இராணுவ தளவாடங்கள் மற்றும் முகாமின் கட்டமைப்பு குறித்த விவரங்களை ஈரான் பெற்றிருக்கலாம் என அமெரிக்கா சந்தேகிக்கிறது.
</p><p>
தாக்குதலுக்குப் பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலமாக, முகாமிற்கு ஏற்பட்ட சேதங்களை ஈரான் அதிகாரிகள் மதிப்பீடு செய்திருக்கக் கூடும் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.</p><p>

தாக்குதல் நடந்த சில மணி நேரங்களிலேயே அல்-சால்டி முகாமின் காணொளிகள் வெளியானதைத் தொடர்ந்து, இலக்கு வைக்கப்பட்ட இடத்திலிருந்து இவ்வளவு விரைவாக ஈரான் எவ்வாறு தகவல்களைப் பெற்றது என்பது குறித்து அமெரிக்கா விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-15T00:23:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எயார்பஸ் நிறுவன மின்னஞ்சலால் ஆபத்தில் நாமல் ராஜபக்ச! முக்கிய பல தகவல்கள் கசிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airbus-namal-rajapaksa-email-1789391769"></link>
            <id>https://tamilwin.com/article/airbus-namal-rajapaksa-email-1789391769</id>
            <summary type="text">எயார்பஸ் ரக வானூர்தி கொடுக்கல் வாங்கலில் 100 மில்லியன் டொலர் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>எயார்பஸ் ரக வானூர்தி கொடுக்கல் வாங்கலில் 100 மில்லியன் டொலர் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் 
ராஜபக்ச இது ஒரு அரசியல் பழிவாங்கல் என்றும் கூற முனைந்தாலும்
சம்பவம் தொடர்பான விசாரணைகளில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் 
2013 மார்ச் 23 ஆம் திகதியிட்ட மின்னஞ்சல் (Email) ஒன்றின் மூலம் பல கதைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.</p><p>அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரான நாமல் ராஜபக்ச விமானங்களை கொள்வனவு செய்யும் யோசனையை ஜனாதிபதி மூலமாக அமைச்சரவைக்கு சமர்ப்பித்து விடயத்தை முடித்து தருவதாக மின்னஞ்சல் மூலம் அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. </p><p>
அது தொடர்பில் எயார்பஸ் (Airbus) நிறுவனம் அனைத்து மின்னஞ்சல்களையும் வழங்கியுள்ளது. எயார்பஸ் கொள்வனவு தொடர்பான வேலையை நான் தந்தைக்குச் சொல்லி செய்து தருகிறேன் தந்தை மூலமாக அல்லது ஜனாதிபதி மூலமாக இதற்குத் தேவையான அமைச்சரவை அனுதியை பெற்று தருவதாக கூறியுள்ளார்.
</p><h2>நாமலின் பங்களிப்பு</h2><p>இதற்கு இணையாக 2013 மார்ச் 27 ஆம் திகதி அன்றைய சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன இக்கொள்வனவுக்கான அனுமதியைக் கோரி அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பpத்துள்ளார்.</p><p>VZMHUS</p><p> </p><p>அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் ஏப்ரல் 13 ஆம் திகதி அன்றைய நிதியமைச்சராக இருந்த மஹிந்த ராஜபக்ச அமைச்சரவைக்கு அறிவித்துள்ளது. என்னவென்றால் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சுயாதீன பணிப்பாளர் சபையைக் கொண்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு அமைச்சரவை அனுமதி தேவையில்லை என்று கூறியுள்ளார்.</p><p>அதேபோல் இலங்கைக்கு வந்த எயார்பஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகளை நாமல் ராஜபக்ச சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மேலும் இந்த பாரிய அளவிலான விமானக் கொள்வனவின் போது விமான ஓட்டும் பயிற்சி மையம் (Pilot Training Centre) ஒன்றும் பெருந்தொகை செலவில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>
ஹம்பாந்தோட்டையில் விமான ஓட்டும் பயிற்சி</h2><p>அந்தப் பயிற்சி மையத்தை தனது சொந்த தேர்தல் தொகுதியான ஹம்பாந்தோட்டையில் நிறுவுமாறு எயார்பஸ் நிறுவன பிரதிநிதிகளிடம் நாமல் ராஜபக்ச கோரியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>மின்னஞ்சல் சான்றுகள் மூலம் இத்தகவல்கள் வெளிவந்துள்ளதாகவே லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தற்போது நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
நிமல் பெரேரா அளித்துள்ள வாக்குமூலம் தனக்கு எயார்பஸ் நிறுவனத்துடனோ அல்லது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடனோ எந்தவொரு தொடர்பும் இருக்கவில்லை. </p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26f8eb70-d0ad-4b6a-a54c-4d4f3d98ea46/26-6aa7f39bafd6d.webp' /></p><p>ஆனாலும் நாமல் ராஜபக்ச வெளிநாட்டு ஆலோசனைச் சேவை ஒன்றின் மூலம் பணம் கிடைக்கவுள்ளதாகவும் அப்பணத்தை வைப்பு செய்வதற்கு வெளிநாட்டு கணக்கு ஒன்றைத் தருமாறும் கோரியுள்ளார்.</p><p>தனக்கு வெளிநாட்டு ஆலோசனை சேவை மூலம் பணம் வரவுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த சந்தர்ப்பத்திலேயே நிமல் பெரேரா தனக்குச் சொந்தமான 'SABREVISION' என்ற நிறுவனத்தின் கணக்கு இலக்கத்தை வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார். </p><p>
இந்தக் கணக்கிற்கு 'Biz Solutions' எனும் நிறுவனம் மூலம் அதாவது அப்போதைய கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜயநாயக்க பணிப்பாளராக இருந்த புரூணையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தில் இருந்து 2014 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 8 இலட்சம் அமெரிக்க டொலர் பணம் நிமல் பெரேராவின் வெளிநாட்டு கணக்கிற்கு வைப்பு செய்யப்பட்டுள்ளது. </p><p>பின்னர் அந்த பணத்தை இலங்கையில் 100 மில்லியன் ரூபாவை (10 கோடி) நாமல் ராஜபக்சவிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;&nbsp;</p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jpF2dBCZozI" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-15T00:21:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக எண்ணெய் சந்தைக்கு புதிய நெருக்கடி ; சவூதி எண்ணெய் இருப்பு தீரும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/risk-of-saudi-oil-reserves-running-dry-1789430944"></link>
            <id>https://canadamirror.com/article/risk-of-saudi-oil-reserves-running-dry-1789430944</id>
            <summary type="text">சவூதி அரேபியாவின் முக்கிய கிழக்கு–மேற்கு எண்ணெய் குழாய் வலையமைப்பு சில நாட்களுக்குள் மீண்டும் இயக்கப்படாவிட்டால், யான்பு துறைமுகத்தில் உள்ள எண்ணெய் இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவின் முக்கிய கிழக்கு–மேற்கு எண்ணெய் குழாய் வலையமைப்பு சில நாட்களுக்குள் மீண்டும் இயக்கப்படாவிட்டால், யான்பு துறைமுகத்தில் உள்ள எண்ணெய் இருப்பு தீர்ந்து, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 4% வரை பாதிப்பு ஏற்படக்கூடும் என எண்ணெய் வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சமீபத்தில் இடம்பெற்ற ஆளில்லா விமானத் தாக்குதல்களால் குழாய் வலையமைப்பு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>இதன் காரணமாக யான்பு துறைமுகத்தில் தற்போது 5 முதல் 7 நாட்களுக்கு மட்டுமே போதுமான ஏற்றுமதி இருப்பு உள்ளதாக தொழில்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
</p><p>
குறித்த குழாய் மூலம் நாளொன்றுக்கு சுமார் 4 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் யான்புவுக்கு கொண்டு செல்லப்பட்டு வந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22857be3-d88a-4f2f-8d39-d18124c6b0dc/26-6aa88ca24b946.webp' /></p><p>மாற்று வழியாக எண்ணெயை ஏற்றுமதி செய்யும் வசதிகள் இருந்தாலும், அவற்றின் சேமிப்பு இருப்புகளும் வரையறுக்கப்பட்டவை என தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதனிடையே, சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA), ஹோர்மூஸ் மற்றும் செங்கடல் வழியாக எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் சவூதி அரேபியாவின் எண்ணெய் விநியோகம் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.</p><p>

சவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி, போருக்கு முன்னர் நாளொன்றுக்கு 10.9 மில்லியன் பீப்பாய்களாக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் 6.2 மில்லியன் பீப்பாய்களாக குறைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இந்த நிலை நீடித்தால், ஏற்கனவே அதிகரித்துள்ள உலகளாவிய எரிபொருள் விலைகள் மேலும் உயர்ந்து, சர்வதேச பணவீக்க அழுத்தம் தீவிரமடையும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-15T00:09:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரியல் நடிகர் சித்து ஹீரோவாக நடித்துள்ள 'தி டார்க் ஹெவன்']]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sidhu-starrer-the-dark-heaven-pre-release-event-1789434195"></link>
            <id>https://cineulagam.com/article/sidhu-starrer-the-dark-heaven-pre-release-event-1789434195</id>
            <summary type="text">நாட்டார் கதையை மையமாக வைத்து ஒரு முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் &#039;தி டார்க் ஹெவன்&#039; . இப்படத்தை பாலாஜி இயக்கி உள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டார் கதையை மையமாக வைத்து ஒரு முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் 'தி டார்க் ஹெவன்' . இப்படத்தை பாலாஜி இயக்கி உள்ளார்.இவர் ஏற்கெனவே 'D3' என்ற படத்தை இயக்கியவர்.</p><p>அவர் இயக்கியிருக்கும் இரண்டாவது படமான இந்த 'தி டார்க் ஹெவன்' படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா , ரித்விகா ஆகியோருடன் , வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே,படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம், இசை: சக்தி பாலாஜி, பாடல் வரிகள்: லாவர்தன். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ளன.
</p><p>கொலையும் கொலை சார்ந்த ஒரு துப்பறியும் கதையாக உருவாகி இருக்கும் இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி ,ராமநாதபுரம், குற்றாலம் ,முக்கூடல்,தென்காசி போன்ற பகுதிகளில் இதுவரை கேமரா வெளிச்சம் படாத இடங்களில் தேடிப் பிடித்துப் படப்பிடிப்பு செய்துள்ளார்கள்.
</p><p>செப்டம்பர் 18ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிற இப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் அரங்கில் நடைபெற்றது.
</p><p>அறிமுக விழாவில் இசையமைப்பாளர் சக்தி பாலாஜி பேசும்போது,
</p><p>"நான் ஏற்கெனவே ’உடன்பால்’, ’ஜாக்கி ’ படங்களுக்கு இசையமைத்து இருக்கிறேன். க்ரைம் திரில்லர் படத்திற்கு இசையமைத்தது இதுதான் முதல் முறை. இயக்குநர் பாலாஜி முதலில் அப்படிச் சொன்ன இந்தக்கதை எனக்குப் பிடித்திருந்தது. அவர் சொன்ன ஒன்லைன் மிகவும் சுவாரஸ்யமானது. அதேபோல படத்தை எடுத்திருக்கிறார்.இந்தப் படத்திற்கு இசையமைத்தது மறக்க முடியாத அனுபவம்.
</p><p>படத்தில் நடித்திருக்கும் சித்து, ரித்விகா, தர்ஷிகா எல்லோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். படத்தின் காட்சிகளை மிகச் சிறப்பாக எடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மணி .ஒரு பெரிய படத்திற்குரிய திரையரங்கு அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும். அனைவரும் திரையரங்கில் வந்து படத்தைப் பார்க்க வேண்டும் ஆதரிக்க வேண்டும் "என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c965adbd-dbf8-42e2-bca4-c8d5fb97558d/26-6aa89988a58f9.webp' /></p><p>
</p><p>ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பிகே பேசும்போது,
</p><p>" நான் இயக்குநர் பாலாஜியுடன் ஏற்கெனவே ’டி3 ’ படத்தில் பணியாற்றியிருக்கிறேன். இது அவருடன் பணியாற்றும் இரண்டாவது படம் .வழக்கமாக மலைப் பிரதேசங்களில் அழகான இடங்களில் படிப்பு நடத்துவது என்பது வேறு. மர்மமும் திகிலும் நிறைந்த ஒரு கதைக்கு அதே இடங்களில் படப்பிடிப்பு நடத்துவது என்பது வேறு. கிரைம் திரில்லர் படங்களுக்கு இயற்கை அழகோடு மர்மமும் திகிலும் நிறைந்து காணப்படும் இடங்களாக இருக்க வேண்டும். அப்படி அழகும் மர்மமும் இணைந்த இடங்களைத் தேடி தேடிக் கண்டுபிடித்து இயக்குநர் படப்பிடிப்பு நடத்தினார். நாங்களும் அப்படிக் காடு,மலை என்று சிரமப்பட்டு சென்று படமாக்கினோம்.வாகனங்கள் செல்ல முடியாத இடங்களுக்கெல்லாம் நீண்ட தூரம் படப்பிடிப்புக் கருவிகளைச் சுமந்து கொண்டு சென்று படப்பிடிப்பு நடத்தினோம்.அந்த சிரமங்கள் எல்லாம் காட்சிகளைப் பார்த்துவிட்டு மற்றவர்கள் பாராட்டும் போது இப்போது தெரிவதில்லை" என்றார்.
</p><p>படத்தில் நடித்துள்ள பிக் பாஸ் புகழ் தர்ஷிகா பேசும்போது,
</p><p>" ’தி டார்க் ஹெவன்’ எனது முதல் படம். பொதுவாக எனக்கு த்ரில்லர் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அனைவரும் விரும்பிப் பார்க்கும் படங்களாக இருக்கக்கூடியவை த்ரில்லர் படங்கள்தான்.அப்படி ஒரு படமாக இந்த ’தி டார்க் ஹெவன்’ இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தப் படத்தில் ஒளிப்பதிவு, இசை எல்லாம் சிறப்பாக உள்ளன. நடித்திருக்கும் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் படத்திற்காகக் கடினமாக உழைத்திருக்கிறார்கள். கண்டிப்பாக செப்டம்பர் 18ஆம் தேதி திரையரங்கில் சென்று இந்தப் படத்தை பார்த்து ஆதரியுங்கள்.உங்களது நேர்மையான விமர்சனங்களைக் கூறுங்கள் "என்றார்.
</p><p>நடிகை ரித்விகா பேசும்போது,
</p><p>"பெரிய படங்களின் வெளியீடுகள் காரணமாக இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி மாறிமாறிப் போய்க்கொண்டிருந்தது. இப்போது செப்டம்பர் 18 அன்று உறுதியாக திரையரங்குகளில் வெளியாகிறது. நிறைய த்ரில்லர் படங்கள் வருகின்றன. போலீஸ்காரர், முகமூடி மனிதர், இன்வெஸ்டிகேஷன் என்று எல்லாம் ஒரே மாதிரியான தோற்றத்திலேயே இருக்கும். ஆனால் இது கண்டிப்பாக அப்படி இருக்காது. வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை தரும் படமாக இது இருக்கும்.
</p><p>ஏற்கெனவே எடுத்த படத்தை அப்படியே வைத்துவிட்டு மீண்டும் படம் எடுப்பது என்பது இரட்டை உழைப்பைப் போட வேண்டிய நிலை.கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அப்படி இந்தப் படத்திற்காக படக்குழுவினர் அனைவரும் இருமடங்கு உழைத்து இருக்கிறார்கள். சவாலான இடங்களில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். ஒரே ஒரு ஷாட்டுக்காகக் கூட மூன்று மணி நேரம் நான்கு மணி நேரம் சென்று காத்திருந்து எடுத்திருக்கிறார் இயக்குநர். தொழில்நுட்ப ரீதியாகவும் நன்றாக உழைத்து இருக்கிறார்கள்.
</p><p>நாங்கள் நடிப்புக் கலைஞர்கள் ஒருமுறை நடித்தால் அவர்கள் இரண்டு மடங்கு உழைத்தார்கள்.இந்தப் படம் நிச்சயமாக திரையரங்கில் ஒரு திருப்தியான அனுபவத்தைத் தரக்கூடியதாக இருக்கும்.
</p><p>படங்கள் திரையரங்குப் படங்கள், ஓடிடி படங்கள் என்று இரண்டு பிரிவாகப் பார்க்கப்படுகின்றன. எல்லாப் படங்களையும் திரையரங்கில் சென்று பார்க்க வேண்டும்.திரையரங்குக்கு வந்த பிறகு ஓடிடியில் வந்தால் மட்டும் அப்போது பார்க்கலாம் .அதுவரை திரையரங்கில் பார்ப்பது தான் நல்ல அனுபவத்தைத் தரக்கூடியதாக இருக்கும்.’தி டார்க் ஹெவன்’ கண்டிப்பாக நல்ல திரையரங்கு அனுபவத்தை தரும். நம்பி வரலாம். ஏமாற்றாது" என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5582d18a-c47e-425c-9c08-15d60a501521/26-6aa89987be2c8.webp' /></p><p>
</p><p>படத்தின் இயக்குநர் பாலாஜி பேசும்போது,
</p><p>"ஒரு படத்தைப் பாதிக்கு மேல் எடுத்து முடித்து அப்படியே வைத்து விட்டு பிறகு ஆரம்பிப்பது என்பது மிகவும் சவாலான ஒரு விஷயம். மீண்டும் இந்தப் படத்தைத் தொடங்கி முடித்து இன்று நான் உங்கள் முன் நிற்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு உதவி செய்தவர்களை மறக்க முடியாது. அப்படி மூன்று பேருக்கு நான் நன்றி கூற வேண்டும்.ஒரு படத்தை எடுத்து முடித்துவிட்டு என்ன செய்வது என்று நான் தடுமாறிக் கொண்டிருந்த போது மீண்டும் எடுக்கும் போது எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது சரண் ,கோபால் சார், மற்றும் எனது படக்குழுவினர்.இந்த மூவரும் இல்லை என்றால் இந்தப் படம் எடுத்து இருக்கவே முடியாது.அவர்களுக்கு நான் முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு படத்தை முக்கால்வாசி எடுத்துவிட்டு மீண்டும் அதே படத்தை மறுபடியும் எடுப்பது என்பது மன ரீதியாக மிகவும் அழுத்தம் தரக்கூடிய தொந்தரவு தரக்கூடிய ஒரு விஷயம். அதைத் தொடர்ந்து கொண்டு செல்வது என்பது சிரமமாகத்தான் இருக்கும்.அப்படி இருந்த எனது நெருக்கடியான சூழலில் சித்து சார் என்னிடம் நடந்து கொண்ட விதம் எனக்கு அவர் மீது பெரிய மரியாதையை ஏற்படுத்தியது. அவர் கடந்த காலத்தைப் பற்றி எதுவும் நினைக்காமல் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.கடந்த காலத்தைப் பற்றி அவர் எதுவுமே கேட்கவில்லை.அது அவரிடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இன்று வரை சுதந்திரமாக பணியாற்றுவதற்கு அது ஒரு பெரிய காரணம்.அதற்கு அவருக்கு மிகவும் நன்றி.
</p><p>அதேபோல இரண்டாவது முறை ஆரம்பித்தபோது பழையதைப் பற்றியும் கடந்த காலத்தைப் பற்றியும் யாருமே பேசவில்லை; கேட்கவில்லை .இந்தப் படத்தை எப்படிக் கொண்டு செல்வது என்பதில் தான் அனைவரது கவனமும் இருந்தது .அதற்கு அனைவருக்கும் நன்றி.அப்படியே படத்தை முடிக்கவும் செய்தோம்.துணை நிற்பவர்கள் சரியாக இருந்தால் நாம் போய்ச் சேர வேண்டிய இடம் சரியாக அமையும் என்பதற்கு இந்தப் படமே ஒரு சாட்சி. அவர்களே எனது பாடம்.அவர்கள் கொடுத்த ஊக்கத்தால்தான் பெரிய அளவில் இந்தப் படத்தை எடுத்துக் கொண்டு சென்றோம்.
</p><p>இந்த படத்திற்காக அனைவரும் சிரமப்பட்டோம். சிரமங்களில் நான் பெரிதாக நினைப்பது என்னவென்றால் தூக்கம் இல்லாமல் உழைப்பது என்பதைத்தான்.மூன்று மணி நேரம் கூடத் தூங்க முடியாமல் சில நேரம் உழைத்து இருக்கிறோம். அப்போது தூக்கம் இல்லாத அந்த உடல் ரீதியான பிரச்சினை எங்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது. அந்தத் தொந்தரவிலிருந்து மீள்வது பெரும் போராட்டமாக இருந்தது.
</p><p>அதிலிருந்து மீள்வதற்கு நாங்கள் நீண்ட நாள்கள் மிகவும் சிரமப்பட்டோம்.எனது படத்தில் நடித்திருக்கும் சித்து, ரித்விகா, தர்ஷிகா என அனைவருமே நன்றாக நடித்தார்கள் .அதுமட்டுமல்லாமல் அவர்களோடு அனுபவமுள்ள பெரிய நட்சத்திரங்களும் நடித்து இருக்கிறார்கள். வேல ராமமூர்த்தி சார் , நிழல்கள் ரவி சார் , ஜெயக்குமார் சார் போன்ற அனுபவம் உள்ள நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள். அவர்கள் படப்பிடிப்பில் இருந்ததால் இன்று வர முடியவில்லை.
</p><p>மிகவும் முக்கியமான விஷயம் இது ஒரு நாட்டார் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் த்ரில்லர் படம் என்பதுதான்.டீஸர்,டிரெய்லர் எல்லாம் பார்த்து விட்டு அனைவரும் நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள் என்றால் அதற்கு ஒளிப்பதிவாளர் மணிகண்டனுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். எங்கள் இருவருக்கும் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வரும். அது படைப்பு நன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தானே தவிர தனிப்பட்ட முறையில் அல்ல. எங்களது மனஸ்தாபங்கள் எல்லாம் பேக் அப் சொல்வதற்குள் காணாமல் போய்விடும்.
</p><p>அவர் நல்ல திறமைசாலி .அவர் பெரிய இடத்துக்கு வருவார். எனது இதயத்தில் இருந்து இதை நான் கூறுகிறேன். இந்தப் படத்தில் ரித்விகா வருவதற்கு முன்பு இந்த படத்தின் தரம் வேறு மாதிரி இருந்தது. வந்த பிறகு அது வேறு மாதிரியான உயரத்துக்குச் சென்றது. முக்கியமாக இந்தப் படத்தில் வரும் நான்கு பாத்திரங்களைப் பெரிதாக நம்பிக் கொண்டிருக்கிறேன் . பாரி,உமையாள், கனி இன்னொரு பாத்திரம் என இந்த நான்கையும் பிரதானமாக வைத்து நான் உருவாக்கி இருக்கிறேன். ரித்விகா ஏற்றுள்ள பாத்திரம் இந்தப் படத்திற்குப் பிறகு பேசக்கூடியதாக இருக்கும் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்தப் படத்திற்குப் பிறகு அவரிடம் இதைக் கேட்பார்கள்.இவர்கள் எல்லாம் இல்லை என்றால் இந்தப் படம் இந்த நிலைக்கு இன்று வந்து இருக்காது என்பதை நான் உறுதியாகச் சொல்வேன். அனைவருக்கும் மிக்க நன்றி. செப்டம்பர் 18ஆம் தேதி இந்தப் படம் திரையரங்கில் வெளியாகிறது. நல்லதொரு திரையரங்க அனுபவமாக நிச்சயமாக இந்தப் படம் இருக்கும் .படத்தைப் பார்த்து விட்டு உங்கள் உங்கள் நேர்மையான விமர்சனங்களைச் சொல்லுங்கள் .நல்லதைக் கேட்டுக்கொள்கிறோம். கேட்டதை மாற்றிக் கொள்கிறோம். நன்றி'' என்றார்.
</p><p>கதை நாயகன் சித்து பேசும்போது,
</p><p>"இதே சாலிகிராமத்தில் பல்வேறு சினிமா கம்பெனி அலுவலகங்களுக்கு நான் சென்றிருக்கிறேன்.இதே பிரசாத் லேபில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நான் வந்திருக்கிறேன். நான் சினிமாவில் சின்னச் சின்ன வேடங்களில் தோன்றியிருந்தாலும் இது எனக்கு முதல் படம். இதையே நான் ஒரு சாதனையாகப் பார்க்கிறேன் .அதுவும் காவல்துறை கதாபாத்திரத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி.முதல் படத்திலேயே காவல்துறை கதாபாத்திரம் என்பது அனைவருக்கும் கிடைத்து விடாது; எனக்குக் கிடைத்திருக்கிறது. இதற்காக இயக்குநர் பாலாஜிக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.அவர் என்னை அழைத்து இந்தக் கதையைச் சொல்லி நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டார் .அது ஒரு த்ரில்லர் கதையாக இருந்தது.எல்லா கதாநாயக நடிகர்களுக்கும் காவல்துறை சம்பந்தப்பட்ட ’காப் ஸ்டோரி ’ என்று ஒன்று கிடைப்பது அரிதாக இருக்கும் .எனக்கு முதல் படத்திற்கு அப்படிப்பட்ட ஒரு கதையாகக் கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது .அதுவும் காவல் துறை சம்பந்தப்பட்ட திரில்லர் கதை என்று அமைந்திருப்பது எனக்கு ஒரு அதிர்ஷ்டம் என்று சொல்ல வேண்டும் .நான் கதாநாயகனாக நடிக்கும்போது அதுவும் த்ரில்லர் படத்தில் நடிப்பது பல பரிமாணங்களைக் காட்டுவதற்கு வாய்ப்பாக இருக்கும் .அப்படிப்பட்ட படம் முதல் படமாக வந்திருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. அதனால் அப்போது நான் கண்டிப்பாக நான் செய்கிறேன் என்றேன். அவர் அப்பொழுது சொன்னார், இது முன்பாக ஆரம்பிக்கப்பட்ட கதை என்றெல்லாம் சொன்னார். நான் அதைப் பற்றி எதுவுமே கவலைப்படவில்லை. ஏனென்றால் இந்தப் படத்தை எப்படி மேலே கொண்டு செல்வது என்பதில்தான் நம் கவனம் இருக்க வேண்டும் என்று நினைக்கிற அவர் மீது எனக்குப் பெரிய நம்பிக்கை இருந்தது .ஒரு முடிந்து போன முடிவைப் பற்றி நான் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. எனக்கு வந்திருக்கும் வாய்ப்பை எப்படி நான் பயன்படுத்திக் கொண்டு மேலே முன்னேற வேண்டும் என்பதில் தான் என் கவனமும் இருந்தது. எனவே முடிவைப் பற்றி நான் பேசவில்லை. தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. அவர் மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருந்தது.
</p><p>அவரது படக்குழுவினரைப் பார்த்த பிறகு இந்தப் படம் மிக நன்றாக வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. சுலபமாகப் படப்பிடிப்பு இடங்களில் படம் எடுப்பதற்கும் காடு, மலை என்று அலைந்து சிரமமான இடங்களில் எடுப்பதற்கும் வித்தியாசம் உண்டு. இவர்கள் அப்படி சிரமப்பட்டு எடுத்தார்கள்.அந்த இடங்களில் மற்றவர்கள் அவ்வளவு சுலபமாக எடுத்து விட முடியாது.படக் குழுவினர் நான் நினைத்தது போலவே கடினமாக உழைத்தார்கள்.இந்தப் படத்தில் நிறைய நல்ல நல்ல நடிப்புக் கலைஞர்கள் இருக்கிறார்கள். ரித்விகா, தர்ஷிகா மட்டுமல்ல அனுபவமுள்ள மதிப்பிற்குரிய வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார் போன்றவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்.படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் கற்றுக் கொள்ளும் அனுபவமாக இருந்தது. </p><p>
வருகிற 18-ஆம் தேதி அனைவரும் திரையரங்கு சென்று இந்தப் படத்தைப் பாருங்கள் ஆதரியுங்கள்"என்றார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T00:09:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹரி-மேகன் தம்பதியினர் அதிரடி: குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பில் எடுத்த முக்கிய முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/harry-meghan-relocates-children-to-new-school-1789428309"></link>
            <id>https://news.lankasri.com/article/harry-meghan-relocates-children-to-new-school-1789428309</id>
            <summary type="text">Harry Meghan Relocates children to new School: பாதுகாப்பு காரணங்களால் ஹரி-மேகன் தம்பதி தங்களது பிள்ளைகளை வேறு பள்ளிக்கு மாற்றியுள்ளனர்.இங்கிலாந்துக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Harry Meghan Relocates children to new School: பாதுகாப்பு காரணங்களால் ஹரி-மேகன் தம்பதி தங்களது பிள்ளைகளை வேறு பள்ளிக்கு மாற்றியுள்ளனர்.</p><h2>இங்கிலாந்துக்கு திரும்பிய ஹரி-மேகன் தம்பதி</h2><p>முக்கிய ராஜ கடமைகளில் இருந்து விலகிய சசெக்ஸ் இளவரசரான ஹரி மற்றும் இளவரசி மேகன் தம்பதி 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரித்தானியாவில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறினர்.</p><p> பெரும்பாலும் தனியாகவும், மிகவும் அரிதாகவே பிரித்தானியாவுக்கு வந்து சென்ற சசெக்ஸ் தம்பதி, தற்போது திரும்பவும் முழுமையாக பிரித்தானியாவில் குடியேறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4d80c80-ebcb-4d7e-9ed7-ce12e9146228/26-6aa88256f103f.webp' /></p><p> இந்த நீண்ட கால திட்டம் தொடர்பாக பொது அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு மன்னர் சார்லஸுக்கு இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டது.</p><p> ராஜாங்க குடியிருப்புகளில் இருந்து வெளியே தங்கியிருக்கும் இந்த தம்பதி, தற்போது அரசு சார்பிலான பொறுப்புகளில் எதிலும் இல்லாத ராஜ குடும்ப உறுப்பினர்களாக உள்ளனர்.</p><p></p><p> சசெக்ஸ் தம்பதி கடந்த வாரம் தங்களது குழந்தைகளான 7 வயது ஆர்ச்சி மற்றும் 5 வயது லிலிபெட் இருவரையும் புதிய கல்வி நிலையத்தில் சேர்த்தனர்.</p><h2> குழந்தைகளை வேறு பள்ளிக்கு மாற்றிய சசெக்ஸ் தம்பதி</h2><p>
இந்நிலையில் பாதுகாப்பு மதிப்பீடுகள் மற்றும் பள்ளிக்கு செல்வதற்கான நீண்ட தூரம் மற்றும் போக்குவரத்து சவால்கள் காரணமாக சசெக்ஸ் தம்பதி தங்களது குழந்தைகளை புதிய கல்வி நிலையத்திற்கு மாற்றியுள்ளனர்.</p><p> சசெக்ஸ் தம்பதியினரின் தற்போதைய இருப்பிடம் மற்றும் பள்ளிகளின் விவரங்கள் ஆகியவை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.</p><p> தினசரி நடைமுறை சிக்கல்களை மனதில் கொண்டு மட்டுமே இந்த மாற்றம் மேற்கொண்டு இருப்பதாகவும், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் அர்ப்பணிக்கு சசெக்ஸ் தம்பதி நன்றி தெரிவித்து இருப்பதாக மேகனின் செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e03e743a-6a27-49c1-9020-2da03b201761/26-6aa88257ac3dc.webp' /></p><p> இந்த இடமாற்றம் முந்தைய பள்ளியின் தரத்தையோ அல்லது கவனிப்பு குறையையோ மதிப்பிடுவதற்கானது இல்லை என்பதையும் தம்பதி தெளிவுபடுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-15T00:00:40+00:00</updated>
        </entry>
    </feed>
