<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-28T08:21:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவை : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/solution-to-the-unsafe-railway-crossing-in-jaffna-1787901386"></link>
            <id>https://ibctamil.com/article/solution-to-the-unsafe-railway-crossing-in-jaffna-1787901386</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - கந்தர்மடம் அன்னைசத்திர வீதியில் அண்மையில் மூடப்பட்ட பாதுகாப்பற்ற மற்றும் அனுமதியளிக்கப்படாத தொடருந்து கடவையை மீண்டும் திறக்குமாறு பொதுமக...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - கந்தர்மடம் அன்னைசத்திர வீதியில் அண்மையில் மூடப்பட்ட பாதுகாப்பற்ற மற்றும் அனுமதியளிக்கப்படாத தொடருந்து கடவையை மீண்டும் திறக்குமாறு பொதுமக்கள் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர்.</p><p>இந்தநிலையில் குறித்த கோரிக்கையை பரிசீலிப்பதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் உள்ளிட்டோர் குறித்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.</p><p>இதன்போது, பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், பொதுமக்களுக்கு ஏற்படும் போக்குவரத்து சிரமங்களுக்கும் தீர்வு காணும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.</p><p></p><h2>&nbsp;தண்டவாளங்களைச் செப்பனிடும் பணிகள்</h2><p>

வட மாகாணத்தில் தொடருந்து தண்டவாளங்களைச் செப்பனிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பற்ற மற்றும் அனுமதியளிக்கப்படாத&nbsp;தொடருந்து கடவைகளை மூடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p> </p><p>இதன் ஒரு பகுதியாகவே கந்தர்மடம் அன்னைசத்திர வீதியில் நீண்டகாலமாக பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த குறித்த தொடருந்து கடவையும் மூடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9c362eb-72ba-4d3c-8fec-5507f802532d/26-6a914448eb1b8.webp' /></p><p>
</p><p>
எனினும், குறித்த பாதையை தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வந்த பொதுமக்கள், தமது அன்றாடப் போக்குவரத்துக்கு ஏற்படும் சிரமங்களை கருத்திற்கொண்டு, தொடருந்து கடவையை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.</p><p>

குறித்த இடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்திற்குள் மாற்றுப் பாதைகளும் சட்டபூர்வமான தொடருந்து கடவைகளும் காணப்படுகின்ற போதிலும், நீண்டகாலமாக மக்கள் பயன்படுத்தி வந்த பாதை மூடப்பட்டுள்ளதால் தமக்கு நடைமுறை ரீதியான சிரமங்கள் ஏற்படுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டினர்.</p><p></p><h2>நேரில் சென்று ஆராய்வு&nbsp;</h2><p>

பொதுமக்களின் கோரிக்கையை கருத்திற்கொண்டு, இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனால் நல்லூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு மற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றின் ஊடாக தொடர்ச்சியாக கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/910098cf-58c4-4c10-b350-a232bcee5803/26-6a914129d3dd8.webp' /></p><p>

இதன் தொடர்ச்சியாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க, குறித்த விடயம் தொடர்பில் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி, பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் தேவைகள் ஆகிய இரு தரப்பையும் கருத்திற்கொண்டு பொருத்தமான தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
</p><p>
இந்நிலையில், அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன் ஆகியோர் குறித்த பகுதிக்கு நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டு, பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் அப்பகுதியின் போக்குவரத்து நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.
</p><p>
பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், பொதுமக்களுக்கு ஏற்படும் போக்குவரத்து சிரமங்களுக்கும் தீர்வு காணும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன்போது தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T08:17:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் திடீர் வெள்ளம் - சுரங்கப்பாதையில் சிக்கியள்ள 100 தொழிலாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nepal-army-trying-to-save-100-trapped-in-tunnel-1787895923"></link>
            <id>https://ibctamil.com/article/nepal-army-trying-to-save-100-trapped-in-tunnel-1787895923</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 469 ஆக அதிகரித்துள்ளது.இந்தச் இயற்கைச் சீற்றத்தினால் 1,...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 469 ஆக அதிகரித்துள்ளது.</p><p>இந்தச் இயற்கைச் சீற்றத்தினால் 1,400-க்கும் மேற்பட்டோர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அந்நாட்டுப் காவல்துறையினர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கினால், நீரில் மூழ்கிய நேபாளத்தின் திரிசூலி 3A நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள சுமார் 100 பேரை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><p>
</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை</span></p><p>
</p><p>
 

சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருந்த 350 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 100 க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக கடுமையான சீரற்ற வானிலைக்கு மத்தியிலும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நேபாள இராணுவம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d60f4e6-a7a0-4bd0-be86-b12b12f57045/26-6a9141cd1e215.webp' /></p><p>இதேவேளை, நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 469 ஆக அதிகரித்துள்ளதுடன், மேலும் பெருமளவிலானோர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p>வெள்ளப்பெருக்கினால் வீதிகள், பாலங்கள் மற்றும் மின்சாரத் திட்டங்கள் உள்ளிட்ட பல உட்கட்டமைப்புகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதால், மீட்பு நடவடிக்கைகளுக்கும் கடும் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T08:07:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை விஜயலட்சுமி எடுத்த முடிவால் சீமான் மகிழ்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/seeman-happy-by-actress-vijayalakshmi-twist-video-1787900306"></link>
            <id>https://jvpnews.com/article/seeman-happy-by-actress-vijayalakshmi-twist-video-1787900306</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள புதிய காணொளியில், சிலர் தன்னையும் சீமானையும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள புதிய காணொளியில், சிலர் தன்னையும் சீமானையும் தொடர்ந்து அவதூறாகப் பேசி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>

தவறை உணர்ந்து ஒருவர் மன்னிப்பு கேட்கும்போது, அவரைத் தொடர்ந்து விமர்சிக்காமல் வாழவிடுவதுதான் மனிதநேயம் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cc6ce03-12c3-4161-a971-3f28027d397c/26-6a91319400afe.webp' /></p><h2>&nbsp;சீமானுக்கு ஆதரவாக உறுதியாக நிற்பேன்</h2><p>
</p><p>
மேலும், தன்னைப் பற்றியும் சீமான் குறித்தும் தொடர்ந்து அவதூறாகப் பேசினால், இனி சீமானுக்கு ஆதரவாக உறுதியாக நிற்பேன் என்றும் விஜயலட்சுமி கூறியுள்ளார்.
</p><p>
நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாகப் பேசுவதற்காக தனக்கு பணம் வழங்கப்பட்டதாக கூறப்படும் விமர்சனங்களை மறுத்துள்ள அவர்,பணத்தைக் கொடுத்து தன்னை யாராலும் வாங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இதுவரை சீமானுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டு வந்த விஜயலட்சுமி, தற்போது அவருக்கு ஆதரவாக பேசியிருப்பது அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>
முன்னதாக, சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்திருந்த முறைப்பாடு தொடர்பான வழக்கில், இருதரப்புக்கும் இடையே உச்சநீதிமன்றத்தில் சமரசம் எட்டப்பட்டது.</p><p></p><p>

 அதேசமயம் இந்த காணொளி மூலம் தமிழக வெற்றிக் கழகத்தினரை அவர் மறைமுகமாக விமர்சித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் வெளியாகி வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-28T08:06:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் மீட்கப்பட்ட இரட்டைக் குழந்தைகள்! வைரலாகும் காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/twin-babies-rescued-from-nepal-floods-1787896496"></link>
            <id>https://jvpnews.com/article/twin-babies-rescued-from-nepal-floods-1787896496</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கினால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரட்டைக் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட சம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கினால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரட்டைக் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>

பெருவெள்ளத்தால் ஏற்பட்ட ஆபத்தான சூழ்நிலைக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையின் போது குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0208df1c-b0b2-40aa-a8e6-631b96873c7e/26-6a9122b2b788e.webp' /></p><h2>நெகிழ்ச்சியான வீடியோ காட்சிகள்</h2><p>

இந்த சம்பவம், பேரழிவு காலங்களில் துரிதமாக முன்னெடுக்கப்படும் மீட்புப் பணிகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.</p><p></p><p>

இரட்டைக் குழந்தைகளை நேபாள ராணுவ வீரர்கள் அரவணைத்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">VIDEO | Nepal floods: Rescued twin children comforted by Nepal Army personnel amid ongoing relief operations. <a href="https://t.co/12fLMnjS0f">pic.twitter.com/12fLMnjS0f</a></p>&mdash; Press Trust of India (@PTI_News) <a href="https://x.com/PTI_News/status/2092969173265924324?ref_src=twsrc%5Etfw">August 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
அதேவேளை நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 469 ஆக அதிகரித்துள்ளது.</p><p>

 

இந்தச் இயற்கைச் சீற்றத்தினால் 1,400-க்கும் மேற்பட்டோர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T08:02:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்வே மன்னர் ஹரால்ட் V காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/king-harald-v-of-norway-has-passed-away-1787904194"></link>
            <id>https://canadamirror.com/article/king-harald-v-of-norway-has-passed-away-1787904194</id>
            <summary type="text">&amp;nbsp; நோர்வேயின் மன்னர் ஹரால்ட் V (King Harald V ), அரிதான ரத்தக் கோளாறுக்கான சிகிச்சைக்காக கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தனத...</summary>
            <content type="html"><![CDATA[<p><a href="https://canadamirror.com/article/norway-king-in-critical-condition-1787831104" target="_blank">&nbsp; நோர்வேயின் மன்னர் ஹரால்ட் V</a> (King Harald V ), அரிதான ரத்தக் கோளாறுக்கான சிகிச்சைக்காக கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தனது 89-வது வயதில் காலமானார்.
</p><p>
ஓஸ்லோவில் உள்ள தேசிய மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 06:35 மணிக்கு (04:35 GMT) அவர் அமைதியாக உயிர்நீத்ததாக ஓஸ்லோவில் உள்ள அரச மாளிகை அறிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e8c3a1b-6c52-415a-bb99-4d52ba87ad59/26-6a9140c429662.webp' /></p><h2>புகழ்பெற்ற மற்றும் சீர்திருத்தவாதி</h2><p>

மன்னர் மறைவை அடுத்து அரச மாளிகையின் கூரையில் உள்ள அரசக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
</p><p> 

14-ம் நூற்றாண்டுக்குப் பிறகு நார்வேயில் பிறந்த முதல் நார்வே மன்னர் ஹரால்ட்&nbsp; (King Harald V ) ஆவார். அவருக்குப் பிறகு அவரது மகன் ஹாகோன் (வயது 53) மன்னராகப் பொறுப்பேற்கிறார்.
</p><p> 
35 ஆண்டுகள் அரியணையில் இருந்த ஹரால்ட் (King Harald V ), முடியாட்சியை நவீனப்படுத்தியவர், சாதாரணக் குடிமகளைத் திருமணம் செய்துகொண்டு மரபுகளை உடைத்தவர்.</p><p> மற்றும் நார்வேயின் மிகக் கடினமான தருணங்களில் மக்களை ஒன்றிணைத்தவர் எனப் புகழ்பெற்ற மற்றும் சீர்திருத்தவாதியான ஒரு தலைவராக&nbsp; (King Harald V ) நினைவுகூரப்படுவார்.
</p><p>
அரச குடும்ப நிகழ்வுகளைக் கவனிப்பவர்கள் அவரை எளிமையானவர், மரியாதைக்குரியவர் மற்றும் அன்புக்குரியவர் என்று குறிப்பிடுகின்றனர்&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T08:00:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியை பிரிந்துவிட்டாரா நாஞ்சில் விஜயன், திருநங்கை சாபமா?... அவரே போட்ட பரபரப்பு பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/nanjil-vijayan-wife-seperation-rumours-1787896946"></link>
            <id>https://cineulagam.com/article/nanjil-vijayan-wife-seperation-rumours-1787896946</id>
            <summary type="text">நாஞ்சில் விஜயன்தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் தான் நாஞ்சில் விஜயன். இவர் கடந்த சில மாதங்களாக சொந்த தொழிலை மனைவியுடன் சேர்ந்து ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நாஞ்சில் விஜயன்</h2><p>தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் தான் நாஞ்சில் விஜயன். </p><p>இவர் கடந்த சில மாதங்களாக சொந்த தொழிலை மனைவியுடன் சேர்ந்து கவனித்து வந்தார். திருமணம், குழந்தை, வீடு, கார் என தங்களது உழைப்பின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினார்கள்.
</p><p>ஆனால் இப்போது என்ன ஆனது என தெரியவில்லை, நாஞ்சில் விஜயன் தனது மனைவியை பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் இதுகுறித்து ஒரு பரபரப்பான செய்தி வலம் வருகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bfd08bc-74ab-480f-a33e-d1cba13504f5/26-6a91290e67561.webp' /></p><h2>பிரபலம் பதிவு
</h2><p>நாஞ்சில் விஜயன், திருநங்கை சகோதரி வைஷ்ணவியிடம் நான் தோற்றுவிட்டேன் என பதிவு வைரலாகிறது. </p><p>அதில், என் திருநங்கை சகோதரரிடம் நான் தோற்றுவிட்டேன் என்றும், சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக தங்களுடன் இருந்த நல்ல நட்பை கொச்சைப்படுத்தி தன்னை பற்றி பல அவதூறுகளை தொடர்ந்து பரப்பி வந்தீங்க.
</p><p>இந்த பிரச்சனையின் போது என்னுடைய மனைவி என் மீது நம்பிக்கையாக இருந்தார். ஆனால் வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய சண்டையின் போது மனைவியின் தாயார் நீ ஒரு திருநங்கையை ஏமாற்றிவிட்டு தானே என் பெண்ணை திருமணம் செய்துகொண்டாய் என சொல்லிவிட்டார்.</p><p> </p><p>என் மனைவியை பிரிந்து தனிமையில் வந்துவிட்டேன். இந்த செய்தி நிச்சயமாக உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும் என நம்புகிறேன் என நீண்ட பதிவு போட்டுள்ளார்.</p><p>You May Like This Video</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/W6UVIIuLACA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-28T07:58:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளப் பெருவெள்ளத்தில் மாயமான கனேடிய தம்பதியரைக் காணாமல் தவிக்கும் உறவினர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-couple-missed-in-nepal-floods-1787903660"></link>
            <id>https://canadamirror.com/article/canada-couple-missed-in-nepal-floods-1787903660</id>
            <summary type="text">Canadian couple missing after flash flooding on Nepal Tibet border: நேபாளப் பெருவெள்ளத்தில் மாயமான கனேடிய தம்பதியரைக் காணாமல் அவர்களுடைய உறவினர்கள் சோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canadian couple missing after flash flooding on Nepal Tibet border: நேபாளப் பெருவெள்ளத்தில் மாயமான கனேடிய தம்பதியரைக் காணாமல் அவர்களுடைய உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.
</p><p>
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த, தவல், மேகா ஷா தம்பதியர், நேபாளத்துக்கு சுற்றுலா சென்றிருந்தார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2ae8ece-560a-4dff-a789-31f31cb63a91/26-6a913eadcb6e7.webp' /></p><p>
புதன்கிழமையன்று நேபாள திபெத் எல்லையில், திடீரென பனிப்பாறைச் சரிவு ஏற்பட, பனி, சேறு மற்றும் பாறைகள் பெயர்ந்து நதியாக உருமாற, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.</p><p>

பெருவெள்ளத்தில் சிக்கி 400க்கும் மேற்பட்டவர்கள் பலியாக, 1,400க்கும் அதிகமானோர் மாயமாகிவிட்டார்கள்.</p><p>

அப்படி மாயமானவர்களில், தவல், மேகா ஷா தம்பதியரும் அடங்குவர். இந்நிலையில், தம்பதியரைக் காணாமல் அவர்களுடைய உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.</p><p>

தவலின் சகோதரி உறவு முறையினரான நிகிதா ஷா இது குறித்துக் கூறும்போது, தங்கள் உறவினர்கள் ஹொட்டல் கைலாஷ் என்னும் ஹொட்டலில் தங்கியிருந்ததாகவும், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
</p><p>
அத்துடன், தாங்கள் கனடா அரசின் உதவியை நாடியதாகவும், அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், ஏதாவது தகவல் கிடைத்தால் தெரிவிப்பதாகவும் கூறிவிட்டதாகவும் தெரிவிக்கிறார் நிகிதா.
</p><p>
அவர்களைப் பொருத்தவரை, எதுவும் தெரியவில்லை என்று கூறுவது மிகவும் எளிது என்றும், ஆனால், ஏதாவது உறுதியான தகவல் கிடைத்தால் தங்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் கூறுகிறார் நிகிதா.
</p><p>
இதற்கிடையில், நேபாளப் பெருவெள்ளத்தில் காணாமல் போன கனேடியர்களின் எண்ணிக்கை 25இலிருந்து 30ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T07:56:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலவாக்கலை பேருந்து நிலையத்தில் பாரிய குளவிக்கூடு - அச்சத்தில் பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wasp-nest-at-thalawakkala-busstand-passengers-fear-1787900198"></link>
            <id>https://tamilwin.com/article/wasp-nest-at-thalawakkala-busstand-passengers-fear-1787900198</id>
            <summary type="text">நுவரெலியா - தலவாக்கலை
பேருந்து நிலையத்தில் பாரிய
குளவிக்கூடு ஒன்று நீண்டகாலமாக காணப்படுவது தொடர்பில் அவதானம்
செலுத்தப்பட்டுள்ளது.

நாளாந்தம் பல்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா - தலவாக்கலை
பேருந்து நிலையத்தில் பாரிய
குளவிக்கூடு ஒன்று நீண்டகாலமாக காணப்படுவது தொடர்பில் அவதானம்
செலுத்தப்பட்டுள்ளது.
</p><p>
நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் பேருந்து நிலையக்
கட்டடத்தின் நாவலப்பிட்டி பேருந்து தரிப்பிடத்தின் மேற்பகுதியில் இந்த பாரிய குளவிக்கூடு அமைந்துள்ளது.</p><h2>பாதுகாப்பு அச்சுறுத்தல்</h2><p>
</p><p>
குறித்த குளவிக் கூடு கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக இந்தப் பகுதியில்
காணப்படுவதாகவும், இதுவரை பொதுமக்களுக்கு குளவிக் கொட்டு சம்பவங்கள்
இடம்பெறவில்லை எனவும் அங்கு கடமையாற்றும் பேருந்து சாரதிகள் மற்றும்
நடத்துநர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>அவர்கள் மேலும் தெரிவிக்கையில், குளவிக் கூட்டுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், ஒரே
நேரத்தில் அதிகளவான குளவிகள் வெளியேறி பொதுமக்களை தாக்கக்கூடிய அபாயம்
காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a629f59-e67c-4125-99bb-c38c9afa3b70/26-6a913a17b98e7.webp' /></p><p>
குறிப்பாக, பேருந்துகளின் தொடர்ச்சியான இயக்கம், அதிர்வுகள் மற்றும் அதிகளவான
மக்கள் நடமாட்டம் காணப்படும் இந்த இடத்தில், குளவிக்கூடு அமைந்திருப்பது
எதிர்காலத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும்.</p><p>

குளவிகள் தமது கூட்டை பாதுகாக்கும் இயல்பைக் கொண்டுள்ளதால், கூட்டை நேரடியாக
கலைப்பது அல்லது அதற்கு இடையூறு ஏற்படுத்துவது குளவிகளின் தாக்குதலைத்
தூண்டக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.</p><h2>குளவிக்கூட்டை அகற்றல்</h2><p>
</p><p>
மலையகத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக குளவிக் கொட்டுக்கு இலக்காகி பலர்
வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் அதிகளவில்
ஒன்றுகூடும் தலவாக்கலை பேருந்து நிலையத்தில் காணப்படும் இந்த குளவிக் கூட்டை
அதிகாரிகள் உடனடியாக அவதானத்தில் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e7d5d20-180f-4510-9f6c-962c620b6397/26-6a913a188e2b2.webp' /></p><p>அதேவேளை உரிய நிபுணர்களின் ஆலோசனை மற்றும் பாதுகாப்பு
நடவடிக்கைகளுடன், குளவிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>தற்போது ஆபத்து ஏற்படவில்லை என்பதால் எதிர்காலத்திலும் ஆபத்து ஏற்படாது என
அலட்சியப்படுத்தாமல், மக்கள் அதிகம் கூடும் பொது இடம் என்பதால்
முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம் என&nbsp; சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T07:56:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலவருட சுழலில் சிக்கிய நேபாளதின் ஒரு நாள் பொருளாதார பேரழிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/flash-floods-have-caused-significant-damage-1787896200"></link>
            <id>https://ibctamil.com/article/flash-floods-have-caused-significant-damage-1787896200</id>
            <summary type="text">நேபாளத்தைத் தாக்கிய திடீர் வெள்ளத்தால்&amp;nbsp;நேபாளம் - சீனா இடையிலான முக்கிய வீதிகளும் சேதமடைந்துள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தைத் தாக்கிய திடீர் வெள்ளத்தால்&nbsp;நேபாளம் - சீனா இடையிலான முக்கிய வீதிகளும் சேதமடைந்துள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>நேபாளத்தின் பொருளாதார விடயம் தொடர்பில் விளக்கம் வழங்குகையில் அந்நாட்டு பிரதமர் பலேந்திர ஷா மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில் ''பெரும் உயிர் மற்றும் சொத்து இழப்புகளை ஏற்படுத்தியதுடன், நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்பை இந்த வெள்ளம் ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><h2>பொருளாதார சிக்கல்</h2><p>நேபாளத்தில் கடந்த புதன்கிழமை (26) ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று (27) 469 ஆக அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04286cc7-a5bb-4d48-a9b7-39b167a22807/26-6a913076a4e42.webp' /></p><p> </p><p>மேலும், 1,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் எட்டு மாவட்டங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்களுடன் 80 பாலங்கள் மற்றும் பல வீதிகளும் அழிக்கப்பட்டுள்ளன.</p><p>
மின்சார விநியோகம் உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்புகளும் பாரியளவில் சேதமடைந்துள்ளதால், இந்த அனர்த்தம் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் உள்ள நேபாளத்திற்கு மேலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது" என நேபாள பிரதமர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><h2> சீனாவுடனான முக்கிய எல்லை </h2><p>சமீபத்திய பேரழிவு ரசுவாவைச் சுற்றியுள்ள இமயமலை எல்லைப் பகுதியில் தொடங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cff5f8b0-f7d3-4242-a2aa-007e2d63f313/26-6a91307765921.webp' /></p><p>
</p><p>
அழிவு வீடுகளோடு நின்றுவிடவில்லை. 19 வாகனங்கள் செல்லும் பாலங்களும், சுமார் 40 கி.மீ. சாலையும் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p> நீர்மின் திட்டங்கள் பாதிக்கப்பட்டதோடு, சீனாவுடனான முக்கிய எல்லை வர்த்தகப் பாதையும் தடைபட்டது.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட செயற்கைக்கோள் பகுப்பாய்வு, உயரமான இமயமலைப் பகுதியில் ஒரு பனிப்பாறைச் சரிவு ஏற்பட்டதைச் சுட்டிக்காட்டியது. </p><p>இதுவே இந்தப் பேரழிவை மேலும் பேரழிவுமிக்கதாக ஆக்குகிறது. திடீரென உயரமான இடத்தில் ஏற்படும் வெள்ளம்பாறைகளையும் இடிபாடுகளையும் சுமந்து செல்வது, சாலைகள், பாலங்கள் மற்றும் மின்சார உள்கட்டமைப்புகளை நிமிடங்களிலேயே அழித்துவிடும்.</p><p>

2025 ஜூலை மாதத்தில் இப்பகுதி ஏற்கனவே ஒரு பெரிய பனிப்பாறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. அந்தப் பேரழிவு ரசுவாகதி எல்லைக் கடக்கும் இடம், நேபாள-சீன நட்புறவுப் பாலம், சாலைகள், உலர் துறைமுகம் மற்றும் பல நீர்மின் திட்டங்களைச் சேதப்படுத்தியது.</p><h2>46.7 பில்லியன் நேபாள ரூபாய்</h2><p> சியாஃப்ருபேசிக்கும் ரசுவாகதிக்கும் இடையிலான சுமார் 16 கி.மீ. சாலை பயணிக்க முடியாததாக ஆனது. கடுமையாகப் பாதிக்கப்பட்ட திட்டங்களில் 111 மெகாவாட் ரசுவாகதி நீர்மின் திட்டமும் ஒன்றாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ebab957-8e9a-4a60-9871-aca637cca510/26-6a9130781a7b1.webp' /></p><p>
</p><p>
தற்போது, ​​அதே பரந்த பிராந்தியம் மற்றொரு பேரழிவைச் சந்தித்துள்ளது. இங்குதான் நேபாளத்தின் பேரிடர் பிரச்சினை ஒரு பொருளாதாரப் பிரச்சினையாக மாறுகிறது. </p><p>அந்த நாடு பேரிடர்களுக்குப் பிறகு வெறுமனே புனரமைக்கவில்லை. அது, தனது முழுமையான பொருளாதார வருவாயை ஈட்டுவதற்கு முன்பே மீண்டும் சேதமடையக்கூடிய உள்கட்டமைப்பைப் புனரமைத்துக் கொண்டிருக்கிறது.</p><p>2024 செப்டம்பரில் ஏற்பட்ட வெள்ளமும் நிலச்சரிவுகளும் இதற்கு ஒரு தெளிவான உதாரணத்தை அளிக்கின்றன. இந்தப் பேரழிவினால் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பை உலக வங்கி 46.7 பில்லியன் நேபாள ரூபாய் என மதிப்பிட்டுள்ளது. </p><p>இது, 2025 நிதியாண்டின் நேபாள மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 0.8 சதவீதத்திற்குச் சமமாகும்.

உள்கட்டமைப்பில் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு 38.9 பில்லியன் நேபாள ரூபாய் ஆகும். சாலைகளில் மட்டும் சுமார் 28 பில்லியன் நேபாள ரூபாய் இழப்பு ஏற்பட்டது.</p><h2>சுமார் 80 சதவிகித நிலம் வெள்ளத்தில் மூழ்கியது</h2><p> </p><p>நீர்மின்சக்தித் துறையில் ஏற்பட்ட சேதம் 3 பில்லியன் நேபாள ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது, அதே சமயம் குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் துறைகளில் 5.9 பில்லியன் நேபாள ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa3d209f-e035-4457-b56c-8df09a6469e6/26-6a913078c6824.webp' /></p><p>
</p><p>
விவசாயத் துறைக்கு மேலும் 7.2 பில்லியன் நேபாள ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் 249 பேர் உயிரிழந்தனர், 177 பேர் காயமடைந்தனர் மற்றும் 10,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்தன. </p><p>ஏறக்குறைய 6,000 வீடுகள் முற்றிலுமாக அழிந்தன, மேலும் 13,000 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தன.

2017-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம், பொருளாதார ரீதியாகப் பார்க்கும்போது இன்னும் அதிக சேதத்தை ஏற்படுத்தியது. </p><p>இந்த வெள்ளம் நேபாளத்தின் 77 மாவட்டங்களில் 35 மாவட்டங்களைப் பாதித்தது. தெராய் பகுதியின் கணிசமான பகுதிகளில், சுமார் 80 சதவிகித நிலம் வெள்ளத்தில் மூழ்கியது.
</p><p>
நேபாளத்தின் வெள்ளப்பெருக்குக்குப் பிந்தைய மீட்புத் தேவைகள் மதிப்பீடு, மொத்த சேதங்களையும் இழப்புகளையும் 60.7 பில்லியன் நேபாள ரூபாய் (NPR) அல்லது அக்காலத்தில் சுமார் 584.7 மில்லியன் டொலர் என மதிப்பிட்டது. </p><p>இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 3 சதவீதமாகும். மீட்புத் தேவைகள் 73.2 பில்லியன் நேபாள ரூபாய் (NPR) அல்லது தோராயமாக 705 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டது.</p><p>

வீட்டுவசதித் துறைக்கு 187.9 மில்லியன் டொலர் என்ற மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது. நீர்ப்பாசனத் துறை சேதம் 168.1 மில்லியன் டொலராகவும், கால்நடை இழப்பு 102.7 மில்லியன் டொலராகவும், விவசாயத் துறை இழப்பு 69.5 மில்லியன் டொலராகவும் இருந்ததாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T07:52:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொகுசுக் காரில் சட்டவிரோத மதுபானம் கடத்தல்! இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-arrested-smuggling-illegal-liquor-luxury-car-1787900918"></link>
            <id>https://tamilwin.com/article/two-arrested-smuggling-illegal-liquor-luxury-car-1787900918</id>
            <summary type="text">வென்னப்புவையில் இருந்து பாணந்துறை வரை சொகுசுக் கார் ஒன்றில் சட்டவிரோத மதுபானம் கடத்திய குற்றச்சாட்டில் இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாடகைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வென்னப்புவையில் இருந்து பாணந்துறை வரை சொகுசுக் கார் ஒன்றில் சட்டவிரோத மதுபானம் கடத்திய குற்றச்சாட்டில் இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
வாடகைக்கு பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி வென்னப்புவவில் இருந்து பாணந்துறை பகுதிக்கு சட்டவிரோத மதுபானம் கடத்தப்படுவதாக மேல் மாகாண குற்றத் தடுப்புபிரிவுக்கு இரகசியத்தகவல் கிடைத்திருந்தது.&nbsp;</p><h2>பொலிஸாரால் கைப்பற்றல்</h2><p>அதனடிப்படையில் ஹொரணை அருகே கிந்தெல்பிட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பயணித்த காரை பொலிஸார் சோதனையிட்டபோது, அதன் பின்பக்க இருக்கைகள் அகற்றப்பட்டு சட்டவிரோத மதுபானப் பைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41ef187d-9af8-4eba-9d8e-7c5d15550fd8/26-6a913de57e458.webp' /></p><p>
இதன்போது 27,000 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபான ஸ்பிரிட் 8 பைகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. </p><p>அதன் சந்தைப் பெறுமதி சுமார் 10 இலட்சம் ரூபாய் என்று கூறப்படுகின்றது. </p><p>அதனையடுத்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சொகுசு காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T07:51:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[Elegant லுக்கில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷுட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-rakul-preet-singh-latest-photoshoot-1787902982"></link>
            <id>https://cineulagam.com/article/actress-rakul-preet-singh-latest-photoshoot-1787902982</id>
            <summary type="text">ரகுல் ப்ரீத் சிங்இந்திய சினிமா ரசிகர்கள் ஒரு பிரம்மாண்ட படத்திற்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.அது என்ன படம் என்றால் பாலிவுட்டில் தயாராகியுள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரகுல் ப்ரீத் சிங்</h2><p>இந்திய சினிமா ரசிகர்கள் ஒரு பிரம்மாண்ட படத்திற்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.</p><p>அது என்ன படம் என்றால் பாலிவுட்டில் தயாராகியுள்ள ராமாயணா படம் தான், ரன்பீர் கபூர் ராமராக நடிக்க சாய் பல்லவி சீதாவாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி இருந்தது.</p><p>இதில் சூர்பநகையாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார், அவரின் நடிப்பை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்த நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் Elegant லுக்கில் வெளியிட்ட போட்டோஸ் இதோ,</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T07:43:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளப் பெருவெள்ளம்: மாயமான கனேடிய தம்பதியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canadian-couple-missing-in-nepal-flood-1787902799"></link>
            <id>https://news.lankasri.com/article/canadian-couple-missing-in-nepal-flood-1787902799</id>
            <summary type="text">Canadian couple missing after flash flooding on Nepal Tibet border: நேபாளப் பெருவெள்ளத்தில் மாயமான கனேடிய தம்பதியரைக் காணாமல் அவர்களுடைய உறவினர்கள் சோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canadian couple missing after flash flooding on Nepal Tibet border: நேபாளப் பெருவெள்ளத்தில் மாயமான கனேடிய தம்பதியரைக் காணாமல் அவர்களுடைய உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.
</p><p>
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த, தவல், மேகா ஷா தம்பதியர், நேபாளத்துக்கு சுற்றுலா சென்றிருந்தார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4caeb8b6-36ad-4f04-b4fe-24ae6d3136b7/26-6a913b5245d1b.webp' /></p><p>

புதன்கிழமை காலை உள்ளூர் நேரப்படி சுமார் 8.37 மணியளவில், நேபாள திபெத் எல்லையில், திடீரென பனிப்பாறைச் சரிவு ஏற்பட, பனி, சேறு மற்றும் பாறைகள் பெயர்ந்து நதியாக உருமாற, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
</p><p>
பெருவெள்ளத்தில் சிக்கி 400க்கும் மேற்பட்டவர்கள் பலியாக, 1,400க்கும் அதிகமானோர் மாயமாகிவிட்டார்கள்.</p><h3>

மாயமான கனேடிய தம்பதியர்
</h3><p>
அப்படி மாயமானவர்களில், தவல், மேகா ஷா தம்பதியரும் அடங்குவர். இந்நிலையில், தம்பதியரைக் காணாமல் அவர்களுடைய உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc0f4131-2a9e-4169-8b13-55c198b3dfea/26-6a913b5183c66.webp' /></p><p>
தவலின் சகோதரி உறவு முறையினரான நிகிதா ஷா இது குறித்துக் கூறும்போது, தங்கள் உறவினர்கள் ஹொட்டல் கைலாஷ் என்னும் ஹொட்டலில் தங்கியிருந்ததாகவும், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.&nbsp;</p><p></p><p>
அத்துடன், தாங்கள் கனடா அரசின் உதவியை நாடியதாகவும், அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், ஏதாவது தகவல் கிடைத்தால் தெரிவிப்பதாகவும் கூறிவிட்டதாகவும் தெரிவிக்கிறார் நிகிதா.
</p><p>
அவர்களைப் பொருத்தவரை, எதுவும் தெரியவில்லை என்று கூறுவது மிகவும் எளிது என்றும், ஆனால், ஏதாவது உறுதியான தகவல் கிடைத்தால் தங்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் கூறுகிறார் நிகிதா.&nbsp;</p><p>
இதற்கிடையில், நேபாளப் பெருவெள்ளத்தில் காணாமல் போன கனேடியர்களின் எண்ணிக்கை 25இலிருந்து 30ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T07:40:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நார்வே மன்னர் 5ம் ஹரால்டு காலமானார்: அரச அரண்மனை அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/norway-king-harald-v-passes-away-1787902741"></link>
            <id>https://news.lankasri.com/article/norway-king-harald-v-passes-away-1787902741</id>
            <summary type="text">Norway King Harald V Passes Away: நார்வே நாட்டு மன்னர் 5ம் ஹரால்டு தன்னுடைய 89 வது வயதில் காலமானார். &amp;nbsp;நார்வே நாட்டு மன்னர் காலமானார்நார்வே நாட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Norway King Harald V Passes Away: நார்வே நாட்டு மன்னர் 5ம் ஹரால்டு தன்னுடைய 89 வது வயதில் காலமானார்.</p><h2> &nbsp;நார்வே நாட்டு மன்னர் காலமானார்</h2><p>நார்வே நாட்டு மன்னர் 5ம் ஹரால்டு தன்னுடைய 89 வது வயதில் காலமானதாக அதிகாரப்பூர்வமாக ஆஸ்லோவில் உள்ள அரச அரண்மனை அறிவித்துள்ளது.</p><p>அரிய வகை இரத்தக் கோளாறுடன் போராடி வந்த மன்னர் ஹரால்டு காலை 6.35 மணிக்கு அமைதியான முறையில் இயற்கை அடைந்தார்.</p><p> மன்னர் ஹரால்டு உயிரிழந்த இறுதி நேரங்களில் அவரது குடும்பத்தினர் படுக்கைக்கு அருகில் கூடி முறையான இறுதி மரியாதையை செலுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f4c9464-8517-438f-a05b-d6ccb8f9398e/26-6a913b1718ff3.webp' /></p><p></p><p> 14ம் நூற்றாண்டுக்கு பிறகு நார்வே மண்ணில் பிறந்த முதல் நார்வே மன்னர் பெருமையை 5ம் ஹரால்டு கொண்டுள்ளார்.</p><p> தன்னுடைய 35 ஆண்டுகால ஆட்சியை நவீன உலகத்திற்கு ஏற்ப தன்னுடைய ஆட்சியை அமைத்தவர் என்ற பெருமையும் மன்னர் ஹரால்டு பெற்றுள்ளார்.</p><p> பல்வேறு மரபுகளை மீறி சாதாரண குடிமகளை திருமணம் செய்து கொண்டதோடு எளிதில் அணுக கூடியவராக மன்னர் ஹரால்டு திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T07:39:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[8 சிக்ஸர், 6 பவுண்டரிகள்..58 பந்தில் 102 விளாசிய பாகிஸ்தான் வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/saim-ayub-blast-century-in-cpl-2026-1787902902"></link>
            <id>https://news.lankasri.com/article/saim-ayub-blast-century-in-cpl-2026-1787902902</id>
            <summary type="text">Saim ayub blast century in cpl 2026: கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் பாகிஸ்தானின் சைம் அயூப் சதம் விளாசினார்.

செயின்ட் கிட்ஸ் அணிக்கு எதிரான கரீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Saim ayub blast century in cpl 2026: கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் பாகிஸ்தானின் சைம் அயூப் சதம் விளாசினார்.
</p><p>
செயின்ட் கிட்ஸ் அணிக்கு எதிரான கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில்ஜமைக்கா கிங்ஸ்மென் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&nbsp;&nbsp;</p><h2>சைம் அயூப்&nbsp;</h2><p>
வார்னர் பார்க் மைதானத்தில் நடந்த கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில், ஜமைக்கா கிங்ஸ்மென் மற்றும் செயின்ட் கிட்ஸ் அன்ட் நெவிஸ் பேட்ரியோட்ஸ் அணிகள் மோதின.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">6 fours, 8 sixes and a maiden T20 hundred for Saim Ayub in the CPL 🔥<a href="https://t.co/rK8cPAnLAz">pic.twitter.com/rK8cPAnLAz</a></p>&mdash; Cricbuzz (@cricbuzz) <a href="https://x.com/cricbuzz/status/2093160388258824507?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
முதலில் ஆடிய ஜமைக்கா கிங்ஸ்மென் கார்ட்டி டக்அவுட் ஆக, மாஸ் சதாகத் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். </p><p>

அதன் பின்னர் வந்த வீரர்களும் சொதப்ப, சைம் அயூப் (Saim Ayub) சிக்ஸர்களை பறக்கவிட்டு ருத்ரதாண்டவம் ஆடினார்.</p><p>

58 பந்துகளில் எதிர்கொண்ட அயூப் 8 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 102 ஓட்டங்கள் விளாசினார். </p><p>கீமோ பவுல் 13 பந்துகளில் 25 ஓட்டங்கள் விளாச, ஜமைக்கா கிங்ஸ்மென் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ஓட்டங்கள் குவித்தது.
</p><p>
நஸீம் ஷா, வணிந்து ஹசரங்கா மற்றும் ஒபேத் மெக்கோய் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.</p><p>

பின்னர் ஆடிய செயின்ட் கிட்ஸ் அன்ட் நேவிஸ் பேட்ரியோட்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது.</p><p>

ஆந்த்ரே ஃப்ளெட்ஸர் 38 பந்துகளில் 55 ஓட்டங்களும் (3 சிக்ஸர், 4 பவுண்டரிகள்), தசுன் ஷானகா 18 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 35 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp; &nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T07:38:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை புரட்டிப்போட்ட வெள்ளம் : பாதுகாப்பாக மீட்கப்பட்ட இரட்டைக் குழந்தைகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nepal-flood-twin-babies-rescued-by-nepal-army-1787898651"></link>
            <id>https://ibctamil.com/article/nepal-flood-twin-babies-rescued-by-nepal-army-1787898651</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட் பேரழிவுக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணியின் போது இரட்டை பச்சிளம் குழந்தைகள் ஆபத்தான நிலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட் பேரழிவுக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணியின் போது இரட்டை பச்சிளம் குழந்தைகள் ஆபத்தான நிலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். </p><p>அவர்களை நேபாள இராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.</p><p>நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கினால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரட்டைக் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட சம்பவம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.</p><p>வெளியான காணொளியில் ஒரு பெண் இராணுவ வீராங்கனை இரு குழந்தைகளையும் தனது மார்போடு அணைத்தபடி பாதுகாப்பாக வைத்திருப்பது காணப்படுகிறது.</p><p></p><h2>இரட்டைக் குழந்தைகள் மீட்பு</h2><p>வெள்ளப் பேரழிவின் நடுவே குழந்தைகளை மீட்டதுடன், அவர்களை ஆறுதல்படுத்திய அந்தக் காட்சி சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த வெள்ளம் சாதாரண பருவமழை வெள்ளம் மட்டுமல்ல.</p><p> நேபாள–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை, மலை பாறைச் சரிவு சம்பவம் மிகப்பெரிய நீர்ப்பெருக்கை உருவாக்கியதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be65ac05-331c-4ad7-8b16-fdb803944023/26-6a913a36ea8c5.webp' /></p><p> நிலைமை இன்னும் ஆபத்தானதாக உள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன வெள்ளத்தால் உருவான ஒரு தடுப்பு ஏரி நிரம்பி வழியும் அபாயம் இருப்பதால், இன்று 28 அன்று சில மீட்பு நடவடிக்கைகள், குறிப்பாக ஹெலிகாப்டர் மீட்புகள், தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
இந்த வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 1,300க்கும் மேற்பட்டோரைத் தீவிரமாகத் தேடும் பணி நடைபெற்று வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இதேவேளை&nbsp;நீரில் மூழ்கிய நேபாளத்தின் திரிசூலி 3A நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள சுமார் 100 பேரை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக&nbsp;நேபாள இராணுவம் தெரிவித்துள்ளது.</p><p>

 

சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருந்த 350 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 100க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக கடுமையான சீரற்ற வானிலைக்கு மத்தியிலும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T07:38:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புற்றுநோய் தடுப்பூசிகள் தேக்கம் - அரச நிறுவனங்களின் அலட்சியத்தால் தாறுமாறாக உயரும் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cancer-vaccines-in-a-backlog-1787902615"></link>
            <id>https://tamilwin.com/article/cancer-vaccines-in-a-backlog-1787902615</id>
            <summary type="text">சுகாதார அமைச்சின் கீழுள்ள இரண்டு அரச நிறுவனங்களின் அசமந்தப் போக்கு காரணமாக அட்டவணைப்படுத்தல் செயற்பாட்டில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக சுமார் 1,60,000 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுகாதார அமைச்சின் கீழுள்ள இரண்டு அரச நிறுவனங்களின் அசமந்தப் போக்கு காரணமாக அட்டவணைப்படுத்தல் செயற்பாட்டில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக சுமார் 1,60,000 புற்றுநோய் தடுப்பூசிகள் களஞ்சியசாலைகளில் தேங்கியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. </p><p>

அட்டவணைப்படுத்தல் செயற்பாட்டில் ஏற்பட்ட நிர்வாகப் பிரச்சனை காரணமாகவே, குறித்த 1,60,000 அளவிலான புற்றுநோய் தடுப்பூசி மருந்துகள், மருத்துவ விநியோகப் பிரிவின் சேமிப்புக் களஞ்சியங்களில் தேங்கியுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><h2>

கள்ளச் சந்தையில் 25,000 ரூபாய்க்கு விற்பனை</h2><p>

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் மருத்துவ விநியோகப் பிரிவுக்கும் இடையே ஏற்பட்ட ஒருங்கிணைப்புப் பிழையே இந்த நிலைமைக்கு வழிவகுத்துள்ளது என்று குறித்த மருத்துவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e6f605b-329e-43bf-8523-e90d9beed329/26-6a913b0013689.webp' /></p><p>

புற்றுநோய் தடுப்பூசி அடங்கிய பெட்டியில் தேவையான அனைத்து தகவல்களும், சிலிண்டரின் முன்புறத்தில் உள்ள சரியான விலைச்சீட்டிலும், அதாவது உற்பத்தி செய்யப்பட்ட திகதி, காலாவதி திகதி மற்றும் பொருளின் தரம் ஆகியவை சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p>

இருப்பினும், சிலிண்டரின் பின்புறத்தில் உள்ள விலைச்சீட்டில் ஏற்பட்ட நிர்வாகப் பிரச்சனை காரணமாக, மருத்துவ விநியோகப் பிரிவு இந்த இருப்பை ஏற்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.</p><p> 

சுமார் 900 ரூபா விலையுள்ள இந்தத் தடுப்பூசி, தற்போது கள்ளச் சந்தையில் 25,000 ரூபாவுக்கும் அதிகமான விலைக்கு விற்கப்படுவதாகவும், அந்த விலையில் கூட இதனைக் கொள்வனவு செய்வது கடினம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T07:38:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டே நாட்களில் கோடிக்கணக்கில் வருமானம்: அதிவேக நெடுஞ்சாலையில் குவிந்த வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/expressways-generate-over-rs-124-million-1787893587"></link>
            <id>https://tamilwin.com/article/expressways-generate-over-rs-124-million-1787893587</id>
            <summary type="text">கடந்த ஓகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய இரு விடுமுறை நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைக் கட்டமைப்பைப் பயன்படுத்திய வாகனங்கள் மூலம் 124,574,925 ரூபா வருமானம் ஈட்டப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த ஓகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய இரு விடுமுறை நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைக் கட்டமைப்பைப் பயன்படுத்திய வாகனங்கள் மூலம் 124,574,925 ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. </p><p>இந்த இரு நாட்களிலும் மொத்தம் 325,316 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளன.&nbsp;</p><h2>120 மில்லியன் ரூபா வருமானம்</h2><p>

ஓகஸ்ட் 27ஆம் திகதி 161,553 வாகனங்கள் பயணித்துள்ளதுடன், 64,164,930 ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/337fbe5f-0ca5-4636-8236-6042c542366f/26-6a9117554188a.webp' /></p><p>
இந்தக் காலப்பகுதியில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை (E01) மற்றும் வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலை (E02) ஆகியவற்றிலேயே அதிகளவிலான வாகனப் போக்குவரத்து பதிவாகியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.&nbsp;</p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/GbmpCCFkr_w" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T07:33:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசேட மருத்துவர்களுக்கான புதிய சேவைப் பிரிவு - அமைச்சரவை ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-service-unit-for-specialist-doctors-1787902075"></link>
            <id>https://tamilwin.com/article/new-service-unit-for-specialist-doctors-1787902075</id>
            <summary type="text">விசேட மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்த விசேட ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>விசேட மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
</p><p>
இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்த விசேட மருத்துவர் ஆர்.ஞானசேகரம், சுமார் 15 முதல் 20 ஆண்டுகளாக இருந்து வந்த ஒரு நீண்டகாலத் தேவை நிறைவேற்றப்பட்டதில் தாம் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்த நடவடிக்கை, பொதுமக்கள் மேலும் தரமான மற்றும் பொறுப்பான விசேட மருத்துவ சேவைகளைப் பெற வழிவகுக்கும் என்று விசேட மருத்துவர் ஆர்.ஞானசேகரம் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>இலங்கையின் மருத்துவ சேவை</h2><p>

மேலும், இந்தப் புதிய சேவைப் பிரிவு இலங்கையின் மருத்துவ சேவையை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5badc3ad-87ed-42d3-84bb-7c1242422ae6/26-6a9139696e0bf.webp' /></p><p>
</p><p>
இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டு, அதற்கான தேவையான தலைமைத்துவத்தை வழங்கிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கும், அதை நனவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்த சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிற்கும் விசேட மருத்துவர்கள் சங்கம் நன்றி தெரிவிப்பதாகவும் மருத்துவர் ஞானசேகரம் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T07:32:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கவின் - நயன்தாரா கெமிஸ்ட்ரியில் கலக்கும் ‘ஹாய்’ - படத்தின் முழு விமர்சனம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/kavin-and-nayanthara-s-hi-movie-review-in-tamil-1787900866"></link>
            <id>https://manithan.com/article/kavin-and-nayanthara-s-hi-movie-review-in-tamil-1787900866</id>
            <summary type="text">லலித் குமார், நயன்தாரா இணைந்து தயாரித்துள்ள ஹாய் படத்தை பாடலாசிரியர் விஷ்ணு எடவன் எழுதி இயக்கியுள்ளார். டாக்ஸிக் படத்தைத் தொடர்ந்துநயன்தாரா நடிப்பில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>லலித் குமார், நயன்தாரா இணைந்து தயாரித்துள்ள ஹாய் படத்தை பாடலாசிரியர் விஷ்ணு எடவன் எழுதி இயக்கியுள்ளார். </p><p>டாக்ஸிக் படத்தைத் தொடர்ந்துநயன்தாரா நடிப்பில் ஹாய் படம் ஆகஸ்ட் 28ம் தேதியான இன்று வெளியாகியுள்ளது.&nbsp;Hi திரைப்படத்தின் திரை விமர்சனம் இதோ!</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3dc879ec-278c-4b6c-81b1-c75d59b137ee/26-6a9139216ec16.webp' />&nbsp;</p><h2>Hi திரைப்படம் எப்படி உள்ளது?&nbsp;&nbsp;</h2><p>இந்த படமும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் போல வயது வித்தியாச காதல் படம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படியெல்லாம் இல்லை என்பது படத்தை பார்த்தவுடனே தெரிந்துக் கொள்ளும் அளவுக்கு நயன்தாராவும் கவினும் கெமிஸ்ட்ரியை செமையாக மேட்ச் செய்து நடித்துள்ளனர்.
</p><p>
ஸ்டார் படத்திற்கு பிறகு கவின் நடித்த கிஸ் மற்றும் மாஸ்க் படங்கள் பெரிதாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெறாத நிலையில், நயன்தாராவுடன் இணைந்து அவர் நடித்துள்ள 'ஹாய்' திரைப்படம் டைட்டிலை போலவே ஃபீல் குட்டாக இருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5730eaee-f002-4a36-ab83-2b1084a26d5a/26-6a913922237ee.webp' /></p><p><b>

ஹாய் கதைகளம்</b></p><p> காதலிக்கவும் திருமணம் செய்யவும் பெண்களே கிடைக்கவில்லை என்பதால் சூசைட் செய்யும் அளவுக்கு செல்லும் மயில்சாமி கேரக்டரில் கவின் பக்காவாக பொருந்தி நடித்துள்ளார். </p><p>கடன் பிரச்னையால் பிடிக்காத அதுவும் பெண்களை அடித்து துன்புறுத்தும் நபரை திருமணம் செய்துக் கொள்ள மாட்டேன் என ஊரை விட்டு ஓடி வரும் தேவயானியாக நயன்தாரா அழகில் ரசகுல்லாவாகவே அசத்துகிறார்.</p><p>

தேவயானியிடம் தனது காதலை சொல்ல வர, அவர் ஒரு மோசமான விஷயத்தை சொல்லி ஆண்களே இப்படித்தான் பார்த்த உடனே ஒரு பெண்ணிடம் லவ் சொல்றாங்க என நெத்தியடி பதில் சொல்ல, அப்புறம் கையில் வைத்திருந்த ரோஜாப்பூவை தூக்கிப் போட்டு விட்டு, அவரிடம் தோழனாகவே பழகுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a714c9fb-e842-4364-8f1b-49baaac9dc52/26-6a913922ca23b.webp' /></p><p>
</p><p>
ஒரு கட்டத்தில் தேவயானியை காப்பாற்ற, நாங்கள் இருவரும் காதலிக்கிறோம், அவர் வயிற்றில் என் குழந்தை வளருது என சொல்லி தேவயானியுடன் ஒட்டுமொத்த குடும்பத்தையும் ஏமாற்றும் மயில்சாமி கடைசி வரை தனது காதலை தேவயானியிடம் சொன்னாரா? திருமணத்தை நிறுத்த போட்ட டிராமாக்கள் என்ன ஆனது? என்பதை பார்க்கள் ஆவலாக உள்ள வகையில் கதை நகர்த்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>கோவை தமிழில் உருளை கண்ணாடியை அணிந்துக் கொண்டு முதல் பாதி முழுவதும் கவின் பேசுவதும் நடிப்பதும் பக்காவாக பொருந்தி போய் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது.</p><p>ட்ரூத் ஆர் டேர் சவாலுக்காக நயன்தாராவும் கவினும் ரெட் லைட் ஏரியாவுக்குச் செல்லும் இடமெல்லாம் காமெடி செமையாக ஒர்க்கவுட் ஆகியுள்ளது. முதல் பாதி முழுக்க இருவருக்கும் இடையேயான நட்பு எந்த நொடியில் காதலாக மாறுகிறது என்கிற தருணம் அருமை.</p><p> 2வது பாதியில் படம் அப்படியே தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் ஸ்டைலில் சேஞ்ச் ஓவர் ஆகிறது. இந்த படத்திலும் பாக்யராஜ் ஹீரோவோட அப்பாவாக நடித்து செம ஸ்கோர் செய்கிறார்.</p><p> "என்ன மட்டும் இல்லை, எனக்கு ஒன்னுன்னா எங்க அப்பா எல்லாரையும் அடிப்பார்" என வசனம் பேசிவிட்டு பாக்யராஜ் சாரை ஸ்கோர் செய்ய விட்ட இடம் சூப்பராக அமைந்துள்ளது.</p><p>பெயர் மட்டுமில்லை, ஆளே பரிசுத்தம் என தப்பாக நினைக்கும் நயன்தாராவுக்கு ஃபெப்சி விஜயன் சொல்லும் இடமெல்லாம் விசில் பறபக்கிறது.&nbsp;</p><p>சண்முகி டாக்டராக வந்து விட்டு விடிவி சொல்லும் சந்திரமுகி காமெடி, துருவ் விக்ரம் குரலில் கிளைமேக்ஸுக்கு முன்னதாக வரும் "குடிகார நெஞ்சு" பாடல் என ஏகப்பட்ட விஷயங்கள் படத்தை ஜாலியாகவும் ஃபீல் குட்டாகவும் கொண்டு செல்கிறது.
</p><p>கவின், நயன்தாரா, ராதிகா சரத்குமார், பாக்யராஜ், பிரபு என நடிகர்களின் தேர்வே இந்த படத்தை கச்சிதமாக காப்பாற்றியுள்ளது. கணபதி இல்லை தளபதி, உயிருள்ளவரை உஷா என ஏகப்பட்ட சினிமா ரெஃபரன்ஸுகளும் கதைக்கு பிளஸ் ஆக அமைந்துள்ளன. </p><p>ஜென் மார்ட்டின் இசையில் ரசகுல்லா பாடலும் குடிகார நெஞ்சு பாடலும் இமிடியேட் ஹிட்டாக மாறிவிடுகிறது. பின்னணி இசை காமெடி காட்சிகளில் சிரிக்கவும், எமோஷனல் காட்சியில் ஃபீல் பண்ணவும் வைத்துள்ள விதம் சிறப்பு. </p><p>ரஜினி, கமல் எல்லாம் தேவையில்லை மயில்சாமி போதும் என சொல்லும் இடம் ஒருத்தன் உண்மையாக அன்பு செலுத்தினாலே பெண்களுக்கு பிடிக்கும் என்கிற விஷயத்தை கடத்த இயக்குநர் பண்ண விஷயம் பாராட்டுக்குரியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51a28f8b-c74b-4ae9-a4ed-62d005efa017/26-6a9139237bc55.webp' /></p><p>
</p><p><b>
மைனஸ் என்ன?&nbsp;</b></p><p> முதல் பாதியில் சில இடங்களில் இடம் பெற்ற டிராமாக்கள் பெரிதாக ஒட்டவில்லை என்றாலும், ஃபிரெஷ்ஷாக இருந்தது. படத்தின் பலமே 2வது பாதி தான். </p><p>ஆனால், முதல் பாதியில் வந்த மயில்சாமி 2வது பாதியில் பல இடங்களில் கவினாகவே வந்து செல்வது போன்ற உணர்வு ஏற்படுவதும் நயன்தாரா வெள்ளந்தியாக இருக்க பிரபு தான் காரணம் என்று சிம்பிளாக கடந்து செல்வது பெரிதாக கனெக்ட் ஆகவில்லை.கிளைமேக்ஸ் காட்சியில் சுஹாசினி வரும் இடங்களும் இன்னமும் பெட்டராக ஸ்டேஜிங் செய்திருக்கலாம்.</p><p>மொத்த்த்தில்&nbsp; இந்த வாரம் வெளியான டாக்ஸிக் படத்தில் கங்காவா இந்த நயன்தாரா என வாயை பிளக்க வைக்கும் அளவுக்கு செம அழகாக நடித்துள்ளார். </p><p>யாரடி நீ மோகினி படத்தில் அவருக்கு ரெட் சாரி தான் அழகா சூட் ஆகும் என தனுஷ் சொல்வது போல இங்கே ஒயிட் சுடிதார் குறித்து கவின் சொல்லும் இடமெல்லாம் க்யூட்டாக உள்ளது. சுருக்கமாக சொன்னால் ஒரு ஃபீல் குட் படமாகவே இந்த ஹாய் படம் அழகாக உருவாகியுள்ளது. தாராளமாக தியேட்டரில் சென்று பார்க்கலாம்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T07:31:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் மரத்துப்போன மனிதம்; உயிரிழந்த பெண்ணின் நகைகளை திருடிய இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/stole-the-jewelry-of-a-woman-who-died-nepal-floods-1787902215"></link>
            <id>https://jvpnews.com/article/stole-the-jewelry-of-a-woman-who-died-nepal-floods-1787902215</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து தங்கக் காதணிகளை திருடிய குற்றச்சாட்டில் 2 பேர் கைது செய்யப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து தங்கக் காதணிகளை திருடிய குற்றச்சாட்டில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.
</p><p>

சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து பொலிஸார் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3febe628-d183-43c4-aa29-d1936b8225bd/26-6a913909889e9.webp' /></p><h2>பொலிஸார் கைது நடவடிக்கை</h2><p>



விசாரணையின் அடிப்படையில், 25 வயதான மதன் குருங் மற்றும் 38 வயதான உமேஷ் சவுத்ரி ஆகியோரே நகை திருடியதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>


குறித்த காணொளியில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணின் உடல் நாராயணி ஆற்றில் கிடந்துள்ளது. அப்போது அங்கு சென்ற 2 பேர், மரப்பலகை மற்றும் பெண்ணின் தலைமுடியைப் பிடித்து உடலை கரைக்கு இழுத்துள்ளனர்</p><p>. 



பின்னர், பெண்ணின் இரு காதுகளிலும் இருந்த காதணிகளை அகற்றி எடுத்துச் சென்றதை அங்கு கூடியிருந்த சிலர் இந்தச் சம்பவத்தை காணொளியாக பதிவு செய்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>


இந்த மனிதாபிமானமற்ற செயலை நேபாள பொலிஸார் மற்றும் பொதுமக்கள் வன்மையாக கண்டித்துள்ளனர்.
</p><p>


நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் பேரிடரில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை 500 ஐ நெருங்க்கியுள்ள நிலையில் மீட்புப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T07:28:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[திபெத்தில் உடைந்த அணை - மீட்பு பணிகளை நிறுத்திய சீனா, நேபாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dam-burst-in-tibet-rescue-operations-halted-1787902009"></link>
            <id>https://news.lankasri.com/article/dam-burst-in-tibet-rescue-operations-halted-1787902009</id>
            <summary type="text">dam burst in tibet rescue operations halted for fresh flood warns: திபெத்தில் அணை உடைந்துள்ளதால் மீண்டும் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ள நிலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>dam burst in tibet rescue operations halted for fresh flood warns: திபெத்தில் அணை உடைந்துள்ளதால் மீண்டும் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ள நிலையில் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>திபெத்தில் உடைந்த அணை

</p><p>

சீனா - நேபாள எல்லையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 469 ஆக அதிகரித்துள்ளது. 1,468 பேர் மாயமாகியுள்ளனர். </p><p>

நேபாள மற்றும் காவல்துறை, ராணுவம் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. உள்நாட்டு மக்கள் மற்றும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் மாயமாகியுள்ளனர்.</p><p> 

இந்நிலையில், திபெத் பக்கத்தில் உள்ள கியிராங் எல்லைத் துறைமுகத்திற்கு மேலே உள்ள ஒரு நீர்த்தேக்க அணை ஒன்று உடைந்துஉள்ளதாக நேபாள காவல்துறை அறிவித்துள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="no" dir="ltr">Alert !! <a href="https://t.co/grYxhc5N7Q">pic.twitter.com/grYxhc5N7Q</a></p>&mdash; Nepal Police (@NepalPoliceHQ) <a href="https://x.com/NepalPoliceHQ/status/2093216702121325051?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

மேலும், "மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அனைத்துப் பாதுகாப்புப் பணியாளர்கள், மீட்புப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும், உடனடியாகப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளது. </p><p>

இதே போல், சீனாவும் மீண்டும் பாரிய வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் மீட்பு பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.&nbsp;</p><p>வெள்ள அச்சம் காரணமாக உள்ளூர் மக்கள் மலை மீது விரைந்து ஏறி வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T07:27:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்த விவகாரம்: நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட தயாராகும் அரசாங்கம்! சம்பிக்க சாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/champika-ranawaka-statement-about-constitution-1787900551"></link>
            <id>https://tamilwin.com/article/champika-ranawaka-statement-about-constitution-1787900551</id>
            <summary type="text">அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய
தரப்பினரது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய
தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீள பெறப் போவதில்லை என அவர்
குறிப்பிடுவது நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்டுச் செயற்படத் தயாராக இருப்பதையே
மறைமுகமாகக் காட்டுகின்றது என்றும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்
முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.</p><p>
கொழும்பில் நேற்று (27.08.2026) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர்
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p><h2>சர்வதேச மட்டங்களில் கடுமையான எதிர்ப்பு</h2><p>

அவர் மேலும் கூறுகையில், எவ்விதமான விரிவான கலந்துரையாடல்களும் இல்லாமல் நீதிபதிகளின் பதவிக்காலத்தை
இரண்டு ஆண்டுகளுக்கு அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்குத் தேசிய மற்றும்
சர்வதேச மட்டங்களில் கடுமையான எதிர்ப்புகள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d083510-940a-44d9-8add-495be15e5d7c/26-6a91361f4ac7b.webp' /></p><p>

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதோடு, இந்த தீர்மானத்தை மீள் பரிசீலிக்குமாறு மகாநாயக்க தேரர்களும் வலியுறுத்தியுள்ளனர்.</p><h2>நீதிபதிகளின் பதவிக்காலம்</h2><p>
இந்த சட்டமூலம் தற்போது உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ள
பின்னணியில், எவருக்காகவும் அதனை மீளப்பெறப் போவதில்லை என ஜனாதிபதி கூறுவது,
நீதிமன்றத்துக்கு அப்பாற்பட்டு செயற்பட அரசாங்கம் தயாராகின்றது என்பதையே
வெளிப்படுத்துகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa7eb7d0-00d7-467e-a373-2fa05aad436d/26-6a91362007777.webp' /></p><p>

நீதிபதிகளின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு அதிகரிப்பது அரசாங்கத்திற்கு மட்டுமே
சாதகமாக அமையுமே தவிர, நாட்டு மக்களுக்கு அதனால் எந்தவிதப் பயனும் கிடைக்கப்
போவதில்லை. அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நீதித்துறையை
மாற்றியமைக்கும் இவ்வாறான முயற்சிகள் முற்றிலும் தவறானவை என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T07:22:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் பேருந்து நிறுத்தத்தில் கூட்டம் மீது மோதியகார்; இருவர் உயிரிழப்பு 9 பேர் காயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/car-crashes-into-crowd-at-french-bus-stop-two-dead-1787893423"></link>
            <id>https://canadamirror.com/article/car-crashes-into-crowd-at-french-bus-stop-two-dead-1787893423</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வடமேற்கு பிரெஞ்சு நகரமான கேனில், புதன்கிழமை (26) மக்கள் கூட்டத்தின் மீது கார் ஒன்று புகுந்ததில், குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்ததுடன் ஒன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வடமேற்கு பிரெஞ்சு நகரமான கேனில், புதன்கிழமை (26) மக்கள் கூட்டத்தின் மீது கார் ஒன்று புகுந்ததில், குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்ததுடன் ஒன்பது பேர் காயமடைந்த&nbsp; நிலையில் அவர்களில் ஆறு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அன்னாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p> 

 விபத்து குரித்த விசாரணை இப்போதுதான் தொடங்கியுள்ளது என்று துணை அரசு வழக்கறிஞர் பிலிப் லியோனார்டோ வியாழக்கிழமை அதிகாலையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adfec840-8ec6-433e-b23c-9945e5a6f99c/26-6a9116b15d011.webp' /></p><h2>விபத்தை ஏற்படுத்திய ரஷ்ய வம்சாவளியைச் சேர்ந்தவர்&nbsp;</h2><p>

விபத்தை ஏற்படுத்திய ரஷ்ய வம்சாவளியைச் சேர்ந்தவர் என விவரிக்கப்பட்ட 26 வயது நபர் ஒருவர், புதன்கிழமை இரவு நகரின் பிரதான ரயில் நிலையம் அருகே மக்கள் கூட்டத்தின் மீது காரை ஓட்டிச் சென்றதாகக் கூறப்பட்டதை அடுத்து, காவலில் வைக்கப்பட்டார்.
</p><p>
சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாகவும், விபத்தில் ஏற்பட்ட காயங்களால் மற்றொருவர் பின்னர் உயிரிழந்ததாகவும் பிரெஞ்சு காவல்துறை தெரிவித்துள்ளது. </p><p>

விபத்தை அடுத்து ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில் சம்பவ இடத்திலிருந்து 20 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவில் கைது செய்யப்பட்டார் என்று பிரெஞ்சு ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திற்கு ஒரு தகவல் மூலம் தெரிவிக்கப்பட்டது.
</p><p>
அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. 

தாக்குதலுக்குப் பிறகு, சந்தேக நபர் உளவுத்துறைக்கு அறிமுகமானவர் அல்ல என்றும், ஆனால் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக அவருக்கு முன்பு காவல்துறையுடன் தொடர்பு இருந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-28T07:16:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா ஏரியின் பெயரை மாற்றிய டிரம்ப்; சுட சுட பிரதமர் மார்க் கார்னி பதிலடி !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-renames-canadian-lake-mark-carney-retort-1787897383"></link>
            <id>https://canadamirror.com/article/trump-renames-canadian-lake-mark-carney-retort-1787897383</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவுடனான வர்த்தக மோதலுக்கு மத்தியில், வட அமெரிக்காவின் முக்கியமான ஐந்து பெரிய ஏரிகளில் ஒன்றான Lake Ontario-வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவுடனான வர்த்தக மோதலுக்கு மத்தியில், வட அமெரிக்காவின் முக்கியமான ஐந்து பெரிய ஏரிகளில் ஒன்றான Lake Ontario-வின் பெயரை அமெரிக்க அரசு பயன்பாட்டில் “Lake America” என மாற்ற உத்தரவிட்டுள்ளார்.</p><p> 
 
 இந்த பெயர் மாற்றம் அமெரிக்க மத்திய அரசின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டுக்கு மட்டுமே பொருந்தும். கனடா, சர்வதேச அமைப்புகள் அல்லது பிற நிறுவனங்கள் பழைய பெயரான Lake Ontario-வை தொடர்ந்து பயன்படுத்தலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5a3c4f3-b361-40c5-bf49-e174d2709d92/26-6a912628d8e21.webp' /></p><h2>நியூயார்க் இதை அந்த பெயரில் அழைக்காது</h2><p>
</p><p> 
இந்த அறிவிப்புக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 
400 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றை கொண்ட இந்த ஏரியின் பெயர், கனடா மற்றும் அமெரிக்கா நாடுகளாக உருவாவதற்கு முன்பே பயன்பாட்டில் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

அத்துடன் நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுலும் “நியூயார்க் இதை அந்த பெயரில் அழைக்காது” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
</p><p> 
Lake Ontario-வின் நீர்ப்பரப்பில் சுமார் 52 சதவீதம் கனடாவிலும், மீதமுள்ள பகுதி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்திலும் அமைந்துள்ளது.</p><p>

 இதனால் பெயர் மாற்றம் கனடாவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஏற்கனவே கனடாவுடன் பல பில்லியன் டாலர் வர்த்தக வரிகள் தொடர்பாக மோதல் நீடித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை அமெரிக்கா - கனடா உறவை மேலும் பதற்றமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-28T07:16:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொத்த கடனையும் 10 ஆண்டுகளுக்குள் இலங்கை செலுத்தும்! நந்தலால் வீரசிங்க உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-to-pay-off-debt-within-10-years-1787898814"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-to-pay-off-debt-within-10-years-1787898814</id>
            <summary type="text">இதுவரைகாலமும் தாம் பெற்றுள்ள கடன் தொகையை செலுத்தும் முழுத் திறனையும் இலங்கை கொண்டுள்ளது என தெரிவித்த மத்தியவங்கி ஆளுநர், அடுத்த 10 ஆண்டுகளில் எவ்வித இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இதுவரைகாலமும் தாம் பெற்றுள்ள கடன் தொகையை செலுத்தும் முழுத் திறனையும் இலங்கை கொண்டுள்ளது என தெரிவித்த மத்தியவங்கி ஆளுநர், அடுத்த 10 ஆண்டுகளில் எவ்வித இடையூறும் இன்றி கடமைகளை நாடு நிறைவேற்றும் எனவும் உறுதியளித்துள்ளார்.
</p><p>
கொழும்பில் நடைபெற்ற இலங்கை வெளிநாட்டுத் தூதர்கள் கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இந்த விடயத்தை வெளிப்படுத்தினர். </p><p>

மேலும் கடன் மறுசீரமைப்புச் செயல்முறையின் வெற்றியே இதற்குக் காரணம் என்றும், நாடு கடன் செலுத்தத் தவறுதல் அல்லது முன்னர் சந்தித்ததைப் போன்ற மற்றொரு கடன் நெருக்கடியை எதிர்கொள்ளாது எனவும் அவர் உறுதியளித்தார். </p><p></p><h2>தனிநபர் வருமானம்</h2><p>

நாட்டின் கடன் மறுசீரமைப்பு நிறைவடைந்த நிலையில், அடுத்த பத்தாண்டுகளில் நாட்டின் ஆண்டு வெளிநாட்டுக் கடன் கடமைகள் 4 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் குறைவாக இருக்கும் என கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7858d721-0d3e-4296-b8f8-a87e48b6672b/26-6a912ed11ae79.webp' /></p><p>
</p><p>
அந்தக் கடன் கடமைகளைச் செலுத்துவதற்குத் தேவையான உத்தியோகப்பூர்வ கையிருப்பு வலுவாக அதிகரித்து வருகிறது எனவும் கூறியுள்ளார்.
</p><p>
மேலும் தற்போது 6.8 பில்லியன் அமெரிக்க டொலராக உள்ள மத்திய வங்கியின் மொத்த உத்தியோகப்பூர்வ கையிருப்பு, இந்த ஆண்டின் இறுதியில் 8 பில்லியன் அமெரிக்க டொலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
வரும் ஆண்டுகளில், சுற்றுலா வருவாய், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடமிருந்து வரும் பணப் பரிமாற்றங்கள், மற்றும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் நிதி உதவி ஆகியவை கணிசமாகப் பங்களிப்பதன் மூலம், இந்தக் கையிருப்பு 10 பில்லியன் அமெரிக்க டொலர் என்ற அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தனிநபர் வருமானம் ஆகியவை நெருக்கடிக்கு முந்தைய நிலைகளை வெற்றிகரமாக எட்டியுள்ளதால், நாடு தனது நெருக்கடிக்கு முந்தைய வலிமைக்குத் திரும்பி வருகிறது.</p><p></p><h2>உலகளாவிய எரிபொருள் விலை</h2><p>

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, இந்த ஆண்டும் இலங்கை 4 முதல் 5 சதவிகிதம் வரை வளர்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41d72fc8-c6e9-4276-b10e-6d47da049b9a/26-6a912ed1c87de.webp' /></p><p> </p><p>

மேலும், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 5 சதவிகித வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.</p><p> </p><p>

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய பதட்டமான சூழலுக்கு மத்தியில், உலகளாவிய எரிபொருள் விலைகள் மற்றும் பருவநிலை மாற்றத்தில் உள்ள நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியிலும், இந்தப் பொருளாதார இலக்குகளை அடைந்ததற்காக இலங்கை சர்வதேச அளவில் பாராட்டப்பட்டுள்ளது.
</p><p>
எரிபொருள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்ததன் காரணமாக பணவீக்கம் தற்காலிகமாக 7 சதவிகிதம் உயர்ந்தபோதிலும், மத்திய வங்கியின் பணவியல் கொள்கை நடவடிக்கைகளால் அடுத்த ஆண்டின் முதல் பாதியில் அது 5 சதவிகிதம் என்ற ஒற்றை இலக்க நிலைக்குக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> 

மேலும், இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் நடப்புக் கணக்கு உபரி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடப்புக் கணக்கு உபரியுடன் இந்த ஆண்டை நிறைவு செய்யும் பாதையில் இலங்கை உள்ளது.</p><p> 

அரசாங்க வருவாய், 2021-2023-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவிகிதமாக இருந்ததிலிருந்து, இன்று 16 சதவிகிதமாக இருமடங்காகியுள்ளது.

மேலும், நாட்டின் முதன்மைக் கணக்கு உபரியானது, சர்வதேச நாணய நிதியத்தால் நிர்ணயிக்கப்பட்ட 2.3 சதவீத இலக்கை விட அதிகமாக உள்ளது. </p><p>

தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக நிலவும் நடப்புக் கணக்கு உபரி, அதிகரித்து வரும் சுற்றுலா வருவாய் மற்றும் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், இலங்கை தனது இறையாண்மைக் கடன் மதிப்பீட்டை தற்போதைய 'CCC' நிலையிலிருந்து, நெருக்கடிக்கு முந்தைய 'B' நிலைக்கு உயர்த்துவதற்காக சர்வதேச மதிப்பீட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T07:12:27+00:00</updated>
        </entry>
    </feed>
