<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-08T17:27:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேத்தியை வளர்க்க ரூ.45 லட்சம் இழப்பீடு கேட்ட தாய்: மகன் மீது நீதிமன்றத்தில் வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mother-demands-45-lakhs-for-raising-granddaughter-1788888277"></link>
            <id>https://news.lankasri.com/article/mother-demands-45-lakhs-for-raising-granddaughter-1788888277</id>
            <summary type="text">Mother demands 45 lakhs for raising granddaughter in China: சீனாவில் 15 ஆண்டுகள் பேத்தியை வளர்த்தற்காக மகனிடம் ரூ.45 லட்சம் கேட்டு தாய் ஒருவர் வழக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Mother demands 45 lakhs for raising granddaughter in China: சீனாவில் 15 ஆண்டுகள் பேத்தியை வளர்த்தற்காக மகனிடம் ரூ.45 லட்சம் கேட்டு தாய் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.</p><h2> பேத்தியை வளர்த்ததற்கு ஊதியம் கேட்ட பாட்டி</h2><p>சீனாவின் கிழக்கு பகுதியில் வாழும் 60 வயது மதிக்கத்தக்க “சு”(Xu) என்ற பெண், தன்னுடைய மகன் லியாங் என்பவர் மீது ஷாங்காய் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.</p><p> அதில், கடந்த 2014ம் ஆண்டு தன்னுடைய மகன் லியாங் அவருடைய மனைவியை பிரிந்தார். இதையடுத்து மகன் லியானும், அவரது 4 வயது மகளையும் சேர்த்து கவனித்து வந்தேன்.</p><p>லியாங் அவனுடைய மகளை பராமரிக்கும் மொத்த கடமையையும் என்னிடமே ஒப்படைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92058509-e602-4dc1-906b-9e2bfe9940b3/26-6aa044d6e16aa.webp' /></p><p> நானும் கடந்த 15 ஆண்டுகளாக தன்னுடைய பேத்தியின் அன்றாட செலவுகள், மருத்துவ மற்றும் கல்வி கட்டணங்கள் என அனைத்தையும் என்னுடைய சொந்த பணத்தில் கவனித்து வந்தேன்.</p><p> </p><p></p><p>ஆனால் லியாங் சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அவனுடைய மனைவியுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.</p><p> மகளை மட்டும் தன்னிடமே விட்டு விட்டுச் சென்றுவிட்டார். இப்போது நான் பொருளாதார நெருக்கடியினாலும், முதுமையாலும் பாதிக்கப்பட்டுள்ளேன்.</p><p> என்னுடைய மகனுக்கு குடும்ப பொறுப்பு என்பது கொஞ்சம் கூட இல்லை. ஒரு தந்தையாக அவனது கடமையை செய்ய தவறி விட்டான்.</p><p> இனிமேலும் என்னால் அவனுடைய பண உதவி இல்லாமல் பேத்தியை கவனித்து கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.</p><p> அத்துடன் 15 ஆண்டுகளாக பேத்தியை பராமரித்ததற்காக 3,60,000 யுவான் தொகையை கட்டணமாக என்னுடைய மகன் வழங்க வேண்டும் என்றும் தாய் “சு” நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;தாயின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த இருந்த மகன் லியாங், அப்போது தனக்கு மாதம் வெறும் ரூ.37000 மட்டுமே ஊதியமாக இருந்ததாகவும், தன்னுடைய சக்தி உட்பட்டு அனைத்து உதவிகளையும் தன்னுடைய மகளுக்கு செய்ததாக தெரிவித்தார்.</p><h2> சட்ட நிபுணர்களின் கருத்து</h2><p>தாய் “சு” தொடர்ந்த வழக்கு தொடர்பாக ஷாங்காய் சட்ட வல்லுநகர்கள் வழங்கிய தகவலில், இது குடும்ப உறவுகளை வியாபாரமாக்குவது அல்ல, மாறாக குடும்ப பொறுப்புகளை தெளிவுபடுத்தும் ஒன்று என தெரிவித்துள்ளனர்.</p><p> குழந்தையை வளர்க்கும் பொறுப்பு முதலில் பெற்றோர்களுடையது, பின்னர் அவர்களால் முடியவில்லை என்றால் தான் தாத்தா-பாட்டிகள் தங்களது உதவிகளை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T17:26:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொனால் ட்ரம்ப் வெளியிட்ட வரைபடப் பதிவால் சர்ச்சை: ஐஸ்லாந்து கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/controversy-over-map-post-by-donald-trump-1788886635"></link>
            <id>https://tamilwin.com/article/controversy-over-map-post-by-donald-trump-1788886635</id>
            <summary type="text">அமெரிக்கக் கொடியால் மூடப்பட்ட வரைபடம் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்
ட்ரம்ப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து, ஐஸ்லாந்துக்கான
அமெரிக்கத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கக் கொடியால் மூடப்பட்ட வரைபடம் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்
ட்ரம்ப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து, ஐஸ்லாந்துக்கான
அமெரிக்கத் தூதுவரை அழைத்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சு தனது அதிருப்தியைத்
தெரிவித்துள்ளது.
</p><p>
டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்ட
வரைபடத்தில் அமெரிக்கா, கனடா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, மெக்சிகோ, மத்திய
அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகள் அனைத்தும் அமெரிக்கக் கொடியால்
மூடப்பட்டு 'அமெரிக்க ஐக்கிய நாடுகள்' என பெயரிடப்பட்டிருந்தது.
</p><p>
இந்த வரைபடப் பதிவு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என ஐஸ்லாந்து
வெளியுறவு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கிரீன்லாந்தை அமெரிக்கா கையகப்படுத்த வேண்டும் என ட்ரம்ப் தெரிவித்து வரும்
கருத்துக்கள் ஏற்கனவே வாஷிங்டன் மற்றும் டென்மார்க் இடையே ராஜதந்திர
பதற்றங்களை ஏற்படுத்தியிருந்தன.</p><h2>கண்டனம்</h2><p>
</p><p>
கிரீன்லாந்து மக்கள் ஒருபோதும் அமெரிக்காவின் அங்கமாக மாற விரும்பவில்லை என
டென்மார்க் பிரதமரும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7ffe90c-4b3c-4080-8f17-442eb62384fb/26-6aa0422149055.webp' /></p><p>

ஐரோப்பிய ஒன்றியம் கிரீன்லாந்தில் 200 மில்லியன் யூரோ முதலீட்டை அறிவித்த சில
மணிநேரங்களிலேயே ட்ரம்பின் இந்தப் பதிவு வெளியாகியுள்ளது.</p><p>

எனினும், இந்த சம்பவம் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறையோ அல்லது தூதரகங்களோ
உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T17:22:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா யாருக்கும் பணிந்து போகாது - கனடியப் பிரதமர் எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-hits-back-with-counter-tariffs-1788887540"></link>
            <id>https://canadamirror.com/article/canada-hits-back-with-counter-tariffs-1788887540</id>
            <summary type="text">&amp;nbsp;கனடா யாருக்கும் பணிந்து போகாது என கனடியப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் மற்றும் கனடாவின் பதிலடி வரிகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடா யாருக்கும் பணிந்து போகாது என கனடியப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் மற்றும் கனடாவின் பதிலடி வரிகள் குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
</p><p>அமெரிக்கா முன்வைத்த ஒப்பந்தத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை; அதேபோல் அவர்கள் கேட்டதையும் எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. </p><p>இதன் விளைவாக, எங்களைப் பாதிக்கவும், பிரிக்கவும் திட்டமிட்டு அமெரிக்கா இந்தப் புதிய வரிகளை விதித்துள்ளது என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65acff90-1d1b-4c84-83a6-963cad1218a5/26-6aa041f9dec51.webp' /></p><p>
</p><p>அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் நிலையிலிருந்து கனடா விலகுவதற்கு நிச்சயமாகச் சில விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். </p><p>ஆனால், அமெரிக்காவின் கோரிக்கைகளுக்குப் பணிந்து போவது அதைவிட மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கனடிய மக்களுக்குப் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>
இந்தச் சவால்களில் இருந்து மீண்டு, கனடா மேலும் வலுவான மற்றும் உறுதியான நாடாக உருவெடுப்பதே இதன் முதன்மை நோக்கம் என தெரிவித்துள்ளார். </p><p>
அமெரிக்காவின் வர்த்தகப் போருக்குப் பதிலடி கொடுக்கும் கனடாவின் நடவடிக்கைகள் குறித்துப் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p>
 இதன் மூலம் எந்தவொரு நாடும் இனி கனடாவைப் பிணைக்கைதியாகப் பிடித்து வைக்க முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T17:13:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியப் பெருங்கடலில் மூழ்கிய படகு: கனடா சுற்றுலாப் பயணியை உயிருடன் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tourist-rescued-after-yacht-found-submerged-1788887059"></link>
            <id>https://canadamirror.com/article/tourist-rescued-after-yacht-found-submerged-1788887059</id>
            <summary type="text">இந்தியப் பெருங்கடலின் தொலைதூரப் பகுதியில் தனது படகு பகுதியளவு நீரில் மூழ்கிய நிலையில், சிறிய ரப்பர் படகில் தத்தளித்துக் கொண்டிருந்த கனடாவைச் சேர்ந்த ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியப் பெருங்கடலின் தொலைதூரப் பகுதியில் தனது படகு பகுதியளவு நீரில் மூழ்கிய நிலையில், சிறிய ரப்பர் படகில் தத்தளித்துக் கொண்டிருந்த கனடாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியை அவுஸ்திரேலிய மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
</p><p> அவர் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>
அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரிலிருந்து இந்தோனேசியாவின் ஜகார்த்தாவுக்குத் தெற்கே உள்ள அவுஸ்திரேலிய பிராந்தியமான 'கிறிஸ்மஸ் தீவு' நோக்கி அவர் தனது கேடமரான் வகை படகில் பயணித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d3df428-eff9-4beb-b76f-05b581c2784b/26-6aa04014d7b5e.webp' /></p><p>
ஞாயிற்றுக்கிழமையன்று கனடாவிலுள்ள தனது குடும்பத்தினருடன் அவர் இரண்டு முறை தொடர்பு கொள்ளத் தவறியுள்ளார். </p><p>இதனால் சந்தேகமடைந்த அவரது சகோதரர் உடனடியாக அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளார்.</p><p>
தகவல் கிடைத்ததும் அவுஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்பு ஆணையம் தேடுதல் பணியைத் தொடங்கியது.</p><p> 
கிறிஸ்மஸ் தீவுக்குக் கிழக்கு-தென்கிழக்கே சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில், பகுதியளவு நீரில் மூழ்கிய நிலையில் அவரது படகை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்தனர்.
</p><p>மாலுமி தனது படகின் சிறிய துணைப் படகில் தஞ்சமடைந்திருந்தது தெரியவந்தது.
மீட்பு ஹெலிகாப்டர் மூலம் அவருக்கு உயிர் காக்கும் 'லைஃப் ராஃப்ட்', அவசர தகவல் கருவி, உணவு மற்றும் நீர் ஆகியவை வான்வழியாக வீசப்பட்டன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T17:06:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரயில் பயணிகளுக்கு இலகுவான சேவை ; தனியார் துறைக்கும் ஆன்லைன் பருவச்சீட்டு வசதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/convenient-service-train-passengers-online-ticket-1788887154"></link>
            <id>https://jvpnews.com/article/convenient-service-train-passengers-online-ticket-1788887154</id>
            <summary type="text">தனியார் துறை ஊழியர்கள் ரயில் மாதாந்த பருவச்சீட்டுக்களை இணையவழி மூலம் பெற்றுக்கொள்வதற்கான வசதியை எதிர்வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனியார் துறை ஊழியர்கள் ரயில் மாதாந்த பருவச்சீட்டுக்களை இணையவழி மூலம் பெற்றுக்கொள்வதற்கான வசதியை எதிர்வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த இலங்கைத் ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>
</p><p></p><p>இதற்கமைய, ரயில்வே திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள seatreservation.railway.gov.lk இணையத்தளத்தின் ஊடாகத் தேவைக்கேற்ப மாதாந்த பருவச்சீட்டுகளை இணையவழியில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு தனியார் துறை ஊழியர்களுக்குக் கிடைக்கும்.</p><p>

 

இதுவரை அரச துறைக்கு மட்டுமே நடைமுறையிலிருந்த இந்த வசதியைத் தனியார் துறைக்கும் வழங்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று (08) பத்தரமுல்லைப் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1b9e86e-ef13-478a-8cd9-40a7893e05ab/26-6aa04074448a7.webp' /></p><p>போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதார விவகாரங்கள் பற்றிய பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்னவும் கலந்துகொண்டார்.
</p><p>
 

மாதாந்த பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும்போது இதுவரை பயணிகள் எதிர்கொண்ட சிரமங்களைக் குறைப்பதே இந்த புதிய முறையின் நோக்கமாகும். </p><p>இதற்கு முன்னர் பருவச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பப் படிவம், புகைப்படம், வதிவிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டையின் பிரதி சமர்ப்பிக்கப்பட வேண்டியிருந்ததுடன், குறிப்பிட்ட வரம்பிற்குட்பட்ட நேரத்திற்குள்ளேயே அந்தச் சேவையைப் பெற வேண்டியிருந்தது.
</p><p>
 

புதிய முறையின் கீழ், பயணிகளின் அடையாளமும் பயனர் கணக்கும் (User account) சரிபார்க்கப்பட்ட பின்னர், வீட்டில் இருந்தபடியே இணையவழியில் பருவச்சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும்.
</p><p>
 

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு, இலங்கைத் ரயில்வே திணைக்களம் மற்றும் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.
</p><p>
 

ரயில் சேவையை டிஜிட்டல் மயமாக்கும் பரந்த திட்டத்தின் கீழ், பயணிகளுக்கு மிகவும் திறமையான மற்றும் இலகுவான சேவையை வழங்குவதற்கான மற்றொரு கட்டமாகவே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
 

தற்போது களனிவெலி ரயில் பாதையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில ரயில் நிலையங்களை மையப்படுத்தி ஸ்மார்ட் டிக்கெட் (Smart ticket) முன்னோடித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், ரயில் ஆசனங்களை இணையவழியில் முன்பதிவு செய்யும் வசதிகளும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T17:06:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சரண குணவர்தனவின் தண்டனையை குறைப்பதாக இலஞ்சம் பெற்ற நீதிமன்ற உதவியாளருக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-assistant-remanded-over-bribe-1788885887"></link>
            <id>https://ibctamil.com/article/court-assistant-remanded-over-bribe-1788885887</id>
            <summary type="text">முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு விதிக்கப்பட்டதண்டனையை குறைப்பதாக வாக்குறுதியளித்து, அவரின் மனைவியிடமிருந்து ரூ. 750,000 இலஞ்சம் பெற்றதாகக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு விதிக்கப்பட்டதண்டனையை குறைப்பதாக வாக்குறுதியளித்து, அவரின் மனைவியிடமிருந்து ரூ. 750,000 இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில், ஒரு நீதிமன்ற உதவியாளர் செப்டம்பர் 22 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழு (CIABOC) சமர்ப்பித்த உண்மைகளைக் கருத்தில் கொண்ட பின்னர், கொழும்பு பிரதான நீதிபதி அசங்க பொதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.</p><h2>சந்தேக நபர் கைது</h2><p>கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் அளித்த புகாரின் பேரில் தொடங்கப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, ஜி.ஏ. சரித் குமார என அடையாளம் காணப்பட்ட அந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cc919d2-abdf-4ad2-b6a8-7484ed1ba5ca/26-6aa03eeee4d36.webp' /></p><p>

சந்தேக நபர் தொலைபேசி மூலம் நீதிபதியைத் தொடர்புகொண்டு ஒரு வழக்கு குறித்து கலந்துரையாட முயன்றதாக CIABOC நீதிமன்றத்தில் தெரிவித்தது.</p><p></p><h2>உரையாடலில் ஈடுபட மறுத்த&nbsp;நீதிபதி </h2><p> நீதிமன்ற வழக்குகள் குறித்து கலந்துரையாடும் அவரது அதிகாரத்தை நீதிபதி கேள்விக்குட்படுத்தி, அத்தகைய உரையாடலில் ஈடுபட மறுத்துவிட்டார்.

சந்தேக நபர், இவ்விஷயத்தை நீதிமன்றத்தில் கலந்துரையாட முடியாது என்றும், இதுகுறித்து தனியாக சந்தித்து கலந்துரையாடலாம் என்றும் நீதிபதியிடம் கூறியதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a2e62ec-3577-49d0-8a6e-69740427255d/26-6aa03eee39f21.webp' /></p><p>

இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், அத்தனகல்ல நீதிமன்றத்தைச் சேர்ந்த ஓர் அதிகாரி மற்றும் கொழும்பு உயர் நீதிமன்றப் புத்தகக் கட்டுநர் மீதும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக சிஐஏபிஓசி (CIABOC) தெரிவித்துள்ளது.
</p><p>
முன்னாள் பிரதி அமைச்சரும், அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவருமான குணவர்தன, சபைக்குச் சொந்தமான வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான 18 குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜூன் மாதம் தண்டனை விதிக்கப்பட்டார்.</p><p> இந்தத் தண்டனையை 16 ஆண்டுகளில் அனுபவிக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T16:59:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[50க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்து ஆடம்பர கார்களைத் திருடிய கும்பல்: 4 சிறுவர்கள் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/4-teens-charged-in-connection-with-50-break-ins-1788885456"></link>
            <id>https://canadamirror.com/article/4-teens-charged-in-connection-with-50-break-ins-1788885456</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் டொரண்டோ பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த ஆடம்பர கார்களின் சாவிகளைத் திருடிச் சென்ற வலையமைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் டொரண்டோ பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த ஆடம்பர கார்களின் சாவிகளைத் திருடிச் சென்ற வலையமைப்பைச் சேர்ந்த 4 சிறுவர்களை யோர்க் பிராந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p> 
வீடுகளின் கேரேஜ்கள் மற்றும் வீதிமுற்றங்களில் நிறுத்தப்பட்டிருந்த உயர்ரக ஆடம்பர வாகனங்களின் சாவிகளைத் திருடும் சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, பொலிஸார் ‘புராஜெக்ட் ஹவ்லர்’ என்ற பெயரில் சிறப்பு விசாரணையைத் தொடங்கினர். </p><p>
பல வாரங்கள் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில், இந்தத் தொடர் திருட்டுகளுக்குப் பின்னால் ஒரு சிறுவர் கும்பல் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bb45a68-3131-4369-8efd-bce4c4d6c436/26-6aa039d23ff71.webp' /></p><p> </p><p>
சில சம்பவங்களின் போது, இவர்கள் துப்பாக்கி உள்ளிட்ட ஆபத்தான ஆயுதங்களைக் காட்டி வீட்டின் உரிமையாளர்களை மிரட்டியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> 
ரிச்மண்ட் ஹில் பகுதியில் முந்தைய நாள் திருடப்பட்ட வாகனத்தில் சந்தேக நபர்கள் பயணிப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். 
டொரண்டோவின் 'தார்ன்க்ளிஃப் பார்க் டிரைவ்' மற்றும் 'ஓவர்லியா பூலேவார்ட்' பகுதியில் வைத்து பொலிஸார் அவ்வாகனத்தைச் சுற்றி வளைத்தனர். </p><p>
தப்பி ஓட முயன்ற 3 சிறுவர்களைத் துரத்திச் சென்று பொலிஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட 7 ஆடம்பர வாகனங்கள் மீட்கப்பட்டன.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய 4வது சிறுவனையும் பொலிஸார் கைது செய்தனர். </p><p>
கைது செய்யப்பட்டவர்கள் டொரண்டோவைச் சேர்ந்த 13, 14 மற்றும் இரண்டு 17 வயதுடைய சிறுவர்கள் ஆவர்.</p><p> 
கனடாவின் ‘இளையோர் குற்றவியல் நீதிச் சட்டத்தின்’ விதிகளின்படி, கைது செய்யப்பட்ட சிறுவர்களின் பெயர்களையோ அல்லது அடையாளங்களையோ வெளியிட பொலிஸாருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>
இவ்வழக்கில் மேலும் பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T16:54:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆல்ப்ஸ் மலையில் மாயமான கனடா வீராங்கனை: ஒரு வார தேடுதலுக்குப் பின் மீட்புப் பணிகள் நிறுத்தம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/italy-suspends-search-for-canadian-skyrunner-1788885885"></link>
            <id>https://canadamirror.com/article/italy-suspends-search-for-canadian-skyrunner-1788885885</id>
            <summary type="text">&amp;nbsp;ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் மாயமான கனடாவைச் சேர்ந்த &#039;ஸ்கைரன்னர்&#039; கெய்லி மெக்கிரிஸ்டலைத் தேடும் பணியை இத்தாலிய அதிகாரிகள் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் மாயமான கனடாவைச் சேர்ந்த 'ஸ்கைரன்னர்' கெய்லி மெக்கிரிஸ்டலைத் தேடும் பணியை இத்தாலிய அதிகாரிகள் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளனர். </p><p>
4,478 மீட்டர் உயரமுள்ள மேட்டர்ஹார்ன் சிகரத்தின் இத்தாலி பகுதியில், திங்கள்கிழமை வரை ஹெலிகாப்டர் மூலம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளதாக இத்தாலி மலை மீட்புப் படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். </p><p>
தேடுதல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போதிலும், கெய்லி மெக்கிரிஸ்டல் பயன்படுத்திய மின்னணு சாதனங்களில் இருந்து ஏதேனும் சிக்னல்கள் வருகின்றதா என்பதை 'வால் டி ஆஸ்டா' பிராந்தியத்தைச் சேர்ந்த மலை மீட்புப் பொலிஸார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da6da693-1d77-4d63-b107-335858181bb7/26-6aa03b7f60878.webp' /></p><p>38 வயதான கெய்லி மெக்கிரிஸ்டல், கடினமான மற்றும் அதிக உயரமான மலைப்பகுதிகளில் ஓடிப் பழகிய பல ஆண்டுகால அனுபவம் கொண்டவர் என்று 'அத்லெடிக்ஸ் கனடா' அமைப்பு தெரிவித்துள்ளது.</p><p> 
மேட்டர்ஹார்ன் சிகரத்தை 5 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் ஏறி இறங்கி புதிய உலக சாதனை படைப்பதற்காக அவர் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>கடந்த செப்டம்பர் 1 அன்று, சுமார் 3,800 மீட்டர் உயரத்தில் உள்ள மலை தங்குமிடத்திற்கு அருகில் செல்ஃபீ ஒன்றை எடுத்த பிறகு, சுமார் 4,250 மீட்டர் உயரத்தில் போலந்து நாட்டைச் சேர்ந்த மலை ஏறுபவர்களால் அவர் கடைசியாகப் பார்க்கப்பட்டார். அதன்பின்னர் அவர் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T16:54:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பாரிய விபத்து: 4 இளைஞர்கள் பரிதாப பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/four-dead-after-two-vehicle-crash-near-1788886271"></link>
            <id>https://canadamirror.com/article/four-dead-after-two-vehicle-crash-near-1788886271</id>
            <summary type="text">கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் உள்ள வின்னிபெக் பீச் பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட கொடூர விபத்தில் 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் உள்ள வின்னிபெக் பீச் பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட கொடூர விபத்தில் 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கிம்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 
நெடுஞ்சாலை 229-ல் மேற்காகப் பயணித்த கார் ஒன்று, நெடுஞ்சாலை 8-ஐக் கடக்க முயன்றபோது, தெற்கு நோக்கி வந்த வேன் ஒன்றுடன் பலமாக மோதியது. </p><p>
இந்தச் சந்திப்பில் கிழக்கு மற்றும் மேற்கு நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு 'நிற்குமாறு' எச்சரிக்கைப் பலகைகள் அமைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ca2f6d9-f1b1-4749-b10f-db90748128a8/26-6aa03d0187a1d.webp' /></p><p> 
மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் வீதியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டன. </p><p>அதில் ஒரு வாகனம் தலைகீழாகக் கவிழ்ந்தது. 
மேற்கு நோக்கிச் சென்ற காரில் பயணித்த 4 பேருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். </p><p>
காரை ஓட்டிவந்த வின்னிபெக்கைச் சேர்ந்த 18 வயது பெண், கிம்லியைச் சேர்ந்த 18 வயது இளைஞர், சேண்டி ஹூக்கைச் சேர்ந்த 18 வயது பெண் மற்றும் ஒன்டாரியோவின் இயர் ஃபால்ஸைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
</p><p>வேனில் பயணித்த வின்னிபெக்கைச் சேர்ந்த 49 வயது ஓட்டுநர், ஒரு பெண் மற்றும் இரு குழந்தைகள் என 4 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் அனைவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் வின்னிபெக் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர்.
</p><p>இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார், விபத்துக்கான முழுமையான காரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T16:54:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதிப்போர் குறித்து சவேந்திர சில்வா அதிரடி விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shavendra-silva-explains-the-final-phase-of-war-1788886428"></link>
            <id>https://jvpnews.com/article/shavendra-silva-explains-the-final-phase-of-war-1788886428</id>
            <summary type="text">இறுதிப்போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகத் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா திட்டவட்டமாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இறுதிப்போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகத் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.</p><p></p><p>

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், தன் மீதான குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும், சர்வதேச அளவில் தன் மீது விதிக்கப்பட்ட தடைகளுக்கான அடிப்படை குறித்து கேள்வி எழுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

இலங்கைப் பாதுகாப்பு படையினர் புலிகளுக்கு எதிராகத் தொழில்முறை ரீதியிலேயே போரிட்டனர் என்றும், இறுதி இராணுவ நடவடிக்கையின் போது பொதுமக்கள் உயிரிழப்புகளைக் குறைக்கப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be71e49c-4e5d-4a5b-b01b-eab88e704612/26-6aa03d9de3626.webp' /></p><p>

2020 ஆம் ஆண்டு அமெரிக்காவும், 2025 ஆம் ஆண்டில் பிரித்தானியாவும் தன் மீது விதித்துள்ள தடைகளுக்கான காரணங்களை தொடர்ந்து கேட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், தான் ஒரு போர்க் குற்றவாளி அல்ல என்றும் தாய்நாட்டுக்காகவே போரிட்டதாகவும் தெரிவித்தார்.
</p><p>
இராணுவத்தினர் வேண்டுமென்றே பொதுமக்களை இலக்கு வைக்கவில்லை எனக் கூறிய சவேந்திர சில்வா, போரின் போது பொதுமக்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும், ஆனால் அவை திட்டமிட்டுச் செய்யப்பட்டவை அல்ல என்றும் விளக்கமளித்தார்.
</p><p>
2009 ஆம் ஆண்டு போரின் இறுதிக் கட்டத்தில் தனது 58 ஆவது படைப்பிரிவு 123,000 க்கும் அதிகமான பொதுமக்களை மீட்டதாகவும், சரணடைந்த சுமார் 12,000 புலிகள் உறுப்பினர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் தனது படைப்பிரிவிடமே சரணடைந்ததாகவும் குறிப்பிட்டார்.

அவ்வாறு சரணடைந்தவர்கள் பின்னர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
</p><p>
புலிகளின் வட பிராந்திய சிரேஷ்ட தளபதி ஒருவர் சிவில் உடையில் ஆயுதத்துடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், சீருடை அணியாத போராளிகள் கொல்லப்படும் போது அவர்கள் பொதுமக்களாகக் கணக்கிடப்படும் சூழல் நிலவுவதாகக் கூறினார்.
</p><p>
மேலும், புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதாகவும் சாடினார்.
</p><p>
அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்கள் சர்வதேச ரீதியில் இராணுவத்தின் பக்க நியாயங்களை சரியாக முன்வைக்கத் தவறியதே தன் மீதான குற்றச்சாட்டுகள் சர்வதேச அளவில் வலுப்பெறக் காரணம் என அவர் விமர்சித்தார்.
</p><p>
குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்துடன் கூடிய ஆதாரங்களுடன் நேரடியாக விவாதத்துக்கு வருமாறு சர்வதேச அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்த அவர், தவறு நடந்திருந்தால் அதை ஏற்றுக்கொள்ளத் தயார் என்றும் தெரிவித்தார்.
</p><p>
மேலும், புலிகள் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும், தமிழ் மக்களின் குறைகளுக்கு அரசியல் ரீதியாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T16:53:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோம்லியாக இருந்த சீரியல் நடிகை ரேஷ்மா-வா இப்படி.. வேற லெவல் கவர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/reshma-muralidharan-glam-photoshoot-1788885371"></link>
            <id>https://cineulagam.com/article/reshma-muralidharan-glam-photoshoot-1788885371</id>
            <summary type="text">பிரபல சீரியல் நடிகை ரேஷ்மா முரளிதரன் ஹோம்லியாக மட்டுமே சீரியல்களில் நடித்து வந்தார்.

ஆனால் அவர் கிளாமர் காட்ட தொடங்கி இருப்பது ரசிகர்களுக்கு ஷாக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல சீரியல் நடிகை ரேஷ்மா முரளிதரன் ஹோம்லியாக மட்டுமே சீரியல்களில் நடித்து வந்தார்.
</p><p>
ஆனால் அவர் கிளாமர் காட்ட தொடங்கி இருப்பது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது.

தற்போது செம ஹாட் உடையில் அவர் போஸ் கொடுத்த போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.</p><p>இதற்கு அவரது ரசிகர்களிடம் லைக்குகள் குவிந்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-08T16:36:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைமுடி நிறத்தை மாற்றிய ட்ரம்ப் ; சமூக வலைதளங்களில் வைரலாகும் புதிய தோற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-changes-hair-color-new-look-goes-viral-1788885332"></link>
            <id>https://canadamirror.com/article/trump-changes-hair-color-new-look-goes-viral-1788885332</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது வழக்கமான தலைமுடி தோற்றத்தை மாற்றி புதிய வண்ணத்தில் காட்சியளிப்பது இணையவாசிகளிடையேயும் சமூக ஊடகங்களிலும் பெரும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது வழக்கமான தலைமுடி தோற்றத்தை மாற்றி புதிய வண்ணத்தில் காட்சியளிப்பது இணையவாசிகளிடையேயும் சமூக ஊடகங்களிலும் பெரும் விவாதத்தைக் ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
அவர் காலம் காலமாகப் பராமரித்து வந்த வழக்கமான பொன்னிறம் (Blonde) நிற தலைமுடியை மாற்றி, திடீரென கருப்பு மற்றும் பழுப்பு கலந்த (Brunette) நிற முடிக்கு மாறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/007c6205-08b4-45df-9998-7ab7b9a56f46/26-6aa03955df571.webp' /></p><p>

செய்தி நிறுவனங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் ட்ரம்பின் இந்தப் புதிய தோற்றம் குறித்த நிழற்படங்கள் வைரலாகப் பரவி வருகின்றன.
</p><p>
முன்னதாக, பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த ட்ரம்ப், "நான் செயற்கை தலைமுடி (Wick) எதுவும் அணிவதில்லை" என்று வெளிப்படையாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
</p><p>
இந்த நிலையில், அவரது இந்த திடீர் நிற மாற்றம் மீண்டும் அவர் மீதான கவனத்தை ஈர்த்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-08T16:35:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் நாமல் ராஜபக்சவுக்கு ஆசீர்வாதம் வேண்டி விசேட பூஜை வழிபாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-prayers-namal-blessings-for-namal-1788883446"></link>
            <id>https://tamilwin.com/article/special-prayers-namal-blessings-for-namal-1788883446</id>
            <summary type="text">கைது செய்யப்பட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும்
நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி மட்டக்களப்பில் விசேட பூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைது செய்யப்பட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும்
நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி மட்டக்களப்பில் விசேட பூஜை வழிபாடு நடைபெற்றது.</p><p>
இன்று (8.9.2026) புன்னைச்சோலை காளி கோயில் மாவட்ட அமைப்பாளர்
சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் ஏற்பாட்டில் இடம்பெற்றது.</p><h2>விசேட ஆசீர்வாத பூஜை</h2><p>
</p><p>இது தொடர்பில் மாவட்ட அமைப்பாளர் கருத்து தெரிவிக்கையில், கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ மக்களின் அரசியலுக்காக வெகுவிரைவில் பயணிக்க
உள்ள அவருக்கு நல்லாசி வேண்டி மட்டக்களப்பு பூராகவும் அனைத்து மத
தலங்களுக்கும் சென்று ஆசீர்வாதத்தை பெறுவதற்காக திட்டமிட்டுள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ef6e7f1-9ce9-4b4c-a34d-a0a4b41f2718/26-6aa038d8c2f24.webp' /></p><p> அதன்
பிரகாரம் இன்று மட்டு புன்னைச்சோலை காளி கோயில் இந்த விசேட ஆசீர்வாத பூஜையை
இன்று ஆரம்பித்துள்ளதாக மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன்
தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T16:33:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் : நாளை கையெழுத்தாகும் மூன்று ஒப்பந்தங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-agreements-with-indian-defense-minister-1788879793"></link>
            <id>https://ibctamil.com/article/three-agreements-with-indian-defense-minister-1788879793</id>
            <summary type="text">இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் நாளை (09) மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் நாளை (09) மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று (08) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.</p><h2>மூன்று ஒப்பந்தங்கள்</h2><p>இதற்கமைய இலங்கை மற்றும் இந்திய மாணவர் படைப் பிரிவுகளுக்கு இடையிலான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம், தேசிய பாதுகாப்புக்கல்லூரி மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு பீடத்திற்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் இந்திய அரசாங்கத்தினால் கடந்த காலத்தில் இலங்கைக்கு வழங்கப்பட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களை இலவசமாக பராமரித்து தருவதற்கான ஒப்பந்தம் ஆகிய மூன்று ஒப்பந்தங்களிலேயே நாளை கையெழுத்திடப்படவுள்ளதாக அமைச்சர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/701fc252-3e76-4aed-9323-1ed9e7e5d813/26-6aa039e3b76fd.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T16:31:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் எயார்பஸ் ஊழலில் தொடர்புப்பட்ட இருவரின் மர்ம மரணங்கள்! நான்கு மரணங்களில் ஏற்பட்டுள்ள பாரிய சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airbus-deal-thusith-mudalige-rajiva-jayaweera-1788870141"></link>
            <id>https://tamilwin.com/article/airbus-deal-thusith-mudalige-rajiva-jayaweera-1788870141</id>
            <summary type="text">எயார்பஸ் ஊழல் கொடுக்கல் வாங்கலில் சம்பந்தப்பட்டவர்களில் நால்வர் மரணமடைந்துள்ளனர்.அவர்களின் மரணங்கள் அனைத்தும் இன்று வரை மரம்மமாகவே உள்ளது.அதில் இருவரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>எயார்பஸ் ஊழல் கொடுக்கல் வாங்கலில் சம்பந்தப்பட்டவர்களில் நால்வர் மரணமடைந்துள்ளனர்.அவர்களின் மரணங்கள் அனைத்தும் இன்று வரை மரம்மமாகவே உள்ளது.அதில் இருவரின் விபரங்கள் இன்றைய நிலையில் வெளிவந்துள்ளது.
</p><p>எயார்பஸ் ஊழல் தொடர்பில் முதன் முதலில் தகவலை வெளியிட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிராந்திய முகாமையாளரும் ஊடகவியலாளருமான ரஜீவ பிரகாஷ் ஜயவீரவின் மரணம்.
</p><p>இந்த எயார்பஸ் கொடுக்கல் வாங்கலில் ராஜபக்சர்கள் எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பதை முதன்முதலில் வெளிப்படுத்தியவர் தான் ரஜீவ பிரகாஷ் ஜயவீர. அவர் எவ்வாறு இறந்தார் என்ற பதிவுகள் இல்லை. </p><h2>
</h2><p></p><h2>முதன் முதலில் இதை வெளிப்படுத்தியவர்</h2><p>பின்னர் கணினியில் தட்டச்சு செய்யப்பட்ட ஒரு கடிதத்தில் 'நான் தற்கொலை செய்துகொள்கிறேன்' என்று எழுதப்பட்ட ஒரு கடிதம் இருந்தது என வழக்கு முடிக்கப்பட்டது.மற்றையது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம். </p><p>இவர்கள் இருவரின் மரணம் தொடர்பில் அநேகர் அறிவர்.ஆனால் நாடே அறியாமல் மேலும் இருவர் மரணமடைந்துள்ளனர்.
அடுத்த நபர்இ இந்த எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் மற்றும் ராஜபக்சர்களின் ஊழல் மற்றும் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக செயற்பட்ட சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் துசித் முதலிகே.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1476e2e-2420-4e81-912a-ecbc47f9d61a/26-6aa03b84a5daa.webp' /></p><p> </p><p>இவர் சிரந்தி ராஜபக்சவிற்கு எதிரான 'சிரிலிய' வழக்கு 'சில் ரெதி' (தானம் வழங்கும் வெள்ளை புடவை) நிதி மோசடி வழக்குகளில் அரசு சார்பில் முன்னிலையானவர். இவர்தான். மேலும் லிட்ரோ எரிவாயு வழக்கு - மிக் விமான கொள்வனவு வழக்குகள் போன்றவற்றை சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து 
வாதாடியவர்.
</p><p>2019 இல் ராஜபக்சர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு இவரைச் சிறையில் அடைக்கக்கூடிய அனைத்து வழிகளிலிருந்தும் நெருக்கடிகளைக் கொடுத்தனர். அலரிமாளிகையில் அமைக்கப்பட்டிருந்த ஊழல் எதிர்ப்புப் பிரிவிலிருந்து இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து கொண்டே சம்பளம் பெற்றார் என்று பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. </p><h2>
அறிப்படாத இரு மரணங்கள்</h2><p>ஊடகங்களில் அதைப் பரப்பி இவரன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினர். மறுபுறம் ராஜபக்சர்களின் ஆதரவாளர்களுக்கு நடந்த அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஆணைக்குழுவிற்கு இவரை ஒரு பிரதிவாதியாக அனுப்பி முடக்கக்கூடிய அனைத்து வழிகளிலும் முடக்கினர்.
</p><p>அதன் பின்னர் 2022 ஆம் ஆண்டில் இவர் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்தார். திடீரென உயிரிழப்பது நடக்கக்கூடிய ஒன்றுதான் ஆனால் இக்காலத்தில் திடீரென இறப்பது என்பது படுகொலை செய்யப்படுவதற்கான ஒரு விசேட அறிகுறியாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8f41c91-cf8f-4880-b5ec-8213f7a76535/26-6aa03b8644647.webp' /></p><p> </p><p>
கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா விஜயநாயக்கவின் நிறுவனத்திற்கு 2.5 பில்லியன் டொலர்கள் அனுப்பப்பட்டது அனைவரும் அறிந்த விடயம்.அந்தக் கணக்கிலிருந்து மூன்று இடங்களுக்குப் பணம் அனுப்பப்பட்டுள்ளது. </p><p>
சேபிள் விஷன் (Sable Vision) - அது நிமால் பெரேராவிற்குச் சொந்தமான சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனம். அடுத்து எஸ்.எல். எக்ரோ (SL Agro) - அதுவும் சிங்கப்பூரில் உள்ள ஒரு கணக்கு.</p><h2>உயிரிழப்பு</h2><p>மற்றொன்று நேரடியாகக் கபில சந்திரசேனவின் அவுஸ்திரேலிய கணக்குகளுக்குச் சென்றுள்ளது. இவ்வாறு மூன்று இடங்களுக்குப் பணம் சென்றுள்ளது.
எஸ்.எல். எக்ரோ நிறுவனத்தின் உரிமையாளர் யோஹன் விஜயநாயக்க.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a9987a4-97e0-4de3-8f69-d4af650aa248/26-6aa03b8592877.webp' /></p><p> </p><p>இந்த நபரை யாருக்கும் தெரியாது.ஆனால் ராஜபக்ச குடும்பத்துடன் நெருங்கி பழகியவர்.
இந்த நபரும் மர்மமான முறையில் உயிரிழக்கிறார். கொரோனா தொற்றினால் இறந்ததாக முத்திரைக் குத்தப்பட்டு பிரேதப் பரிசோதனை கூட நடத்தப்படவில்லை.
</p><p>இவர் 27 வயது இளைஞர். எனவே 27 வயது நபர் திடீரென உயிரிழப்பது சந்தேகத்திற்குரியது அங்கும் ஒரு மர்மம் உள்ளது.</p><p></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T16:28:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கிணறுகள் திடீரென பெருக்கெடுத்ததால் பரபரப்பு; பிரதேசவாசிகள் அச்சம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wells-in-araly-jaffna-suddenly-overflowed-1788872260"></link>
            <id>https://jvpnews.com/article/wells-in-araly-jaffna-suddenly-overflowed-1788872260</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் அராலி கிழக்கு, மலையாளங்காடு ஐயனார் ஆலயத்தின் காணியில் உள்ள கிணறு மற்றும் அதனை அண்டியுள்ள மேலும் சில கிணறுகள் வழக்கத்துக்கு மாறாக பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் அராலி கிழக்கு, மலையாளங்காடு ஐயனார் ஆலயத்தின் காணியில் உள்ள கிணறு மற்றும் அதனை அண்டியுள்ள மேலும் சில கிணறுகள் வழக்கத்துக்கு மாறாக பெருக்கெடுத்துள்ளதாக தெரியவருகின்றது. </p><p> 



குறித்த பகுதியில் உள்ள ஐயனார் ஆலய காணியில் உள்ள கிணறானது நில மட்டத்திற்கு மேலே தண்ணீர் வந்த நிலையில் கிணற்றில் இருந்து வெளியேறிய வண்ணம் உள்ளதாகவும்&nbsp; தெரிவிக்கபப்டுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16fdee48-96f7-4444-b9cb-a25d2b3ea31a/26-6aa0064604f7d.webp' /></p><h2>&nbsp;நில மட்டத்திற்கு மேலே தண்ணீர்&nbsp;</h2><p>



அத்துடன் அதனை அண்டிய மேலும் ஒரு கிணறானது நில மட்டத்திற்கு தண்ணீர் மட்டம் வந்துள்ளதையும், ஏனைய இரண்டு கிணறுகள் வழமைக்கு மாறாக நீர் மட்டம் உயர்ந்து உள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.</p><p></p><p>
</p><p>
நீர்மட்டம் உயர்ந்து கிணறுகளின் தண்ணீரானது நன்னீராக மாறியுள்ளதுடன், ஒரு கிணற்றின் தண்ணீர் மிதமான சூட்டுடன் இருப்பதை உணர முடிகிறது.



இது குறித்து பிரதேசவாசிகள் தெரிவிக்கையில்,</p><p></p><p>



குறித்த கிணறுகளில் இந்த மாதங்களில் நீர்மட்டம் மிகவும் குறைவாகவே காணப்படும். குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காது. மூன்று அல்லது நான்கு பேர் குளித்தாலேயே கிணற்றில் உள்ள தண்ணீர் முடிந்து விடும். </p><p>



இவ்வாறான சூழ்நிலையில் வழமைக்கு மாறாக நீர்மட்டம் உயர்ந்துள்ளமை ஐயனாரின் புதுமை என்றே நாங்கள் பார்க்கின்றோம். எமது கிராமத்திற்கு எந்தவிதமான தீங்கும் வராமல் காக்க வேண்டும் என்றும் அவர்கள்&nbsp; கூறியுள்ளனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T16:27:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஷ்மிகாவை திருமணம் செய்தபின் புது தொழில் தொடங்கும் விஜய் தேவரகொண்டா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vijay-devarakonda-build-second-multiplex-reports-1788879685"></link>
            <id>https://cineulagam.com/article/vijay-devarakonda-build-second-multiplex-reports-1788879685</id>
            <summary type="text">நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரது திருமணம் கடந்த பிப்ரவரி 26ம் தேதி நடைபெற்றது.திருமணத்திற்கு பிறகும் ராஷ்மிகா பிசியாக படங்களில...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரது திருமணம் கடந்த பிப்ரவரி 26ம் தேதி நடைபெற்றது.</p><p>திருமணத்திற்கு பிறகும் ராஷ்மிகா பிசியாக படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் இடுப்பில் காயம் ஏற்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பெற்று ஓய்வில் இருக்கிறார்.
</p><p>விஜய் தேவரகொண்டா நடிப்பு ஒருபக்கம் இருந்தாலும் தற்போது மற்ற தொழில்களிலும் கவனம் செலுத்துகிறார். அவர் ஏற்கனவே துணி பிஸ்னஸ், ஹோட்டல் பிஸ்னஸ், ஒரு மல்டிப்ளக்ஸ் தியேட்டர் கட்டி இருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6c92a1e-ed50-4895-ba2e-b2d9d3bfb674/26-6aa02347d5042.webp' /></p><p>
</p><h2>மற்றொரு மல்டிப்ளெக்ஸ்?</h2><p>இந்நிலையில் விஜய் தேவரகொண்டா அடுத்து இன்னொரு மல்டிப்ளெக்ஸ் தியேட்டர் தொடங்கும் முயற்சியில் இருப்பதாக தெலுங்கு மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.
</p><p>Medchal அல்லது Malkajgiri என்ற இடத்தில் அந்த தியேட்டரை கட்ட போகிறார் என கூறப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T16:27:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அருள்காட்சி வழங்கிய வேல் பெருமான் – நல்லூரில் சிறப்பாக நடைபெற்ற சப்பரத் திருவிழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nallur-kandasamy-temple-festival-2026-today-1788884143"></link>
            <id>https://tamilwin.com/article/nallur-kandasamy-temple-festival-2026-today-1788884143</id>
            <summary type="text">வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா
நாளைய தினம் புதன்கிழமை காலை மிக சிறப்பாக இடம்பெறவுள்ள நிலையில்,
இன்றைய தினம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா
நாளைய தினம் புதன்கிழமை காலை மிக சிறப்பாக இடம்பெறவுள்ள நிலையில்,
இன்றைய தினம்(8) செவ்வாய்க்கிழமை மாலை சப்பர திருவிழா நடைபெற்றது.
</p><p>
கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா தொடர்ந்து நடைபெற்று
வருகின்றது.</p><h2>சப்பரத் திருவிழா</h2><p> இன்றைய தினம் மாலை 5 மணிக்கு வசந்தமண்டப பூஜை நடைபெற்று ,
தொடர்ந்து வேல் பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் சப்பரத்தில் எழுந்தருளி ,
சப்பர திருவிழா இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50b3f504-dd53-467b-8fe5-62ca1c0a5c6e/26-6aa036b8ed0bd.webp' /></p><p>
</p><p>
நாளைய தினம்(9) புதன்கிழமை காலை 06.15 மணிக்கு வசந்தமண்டப பூஜை ஆரம்பமாகி
,தொடர்ந்து ஆறுமுக சுவாமி காலை 07 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு
அருட்காட்சியளிப்பார்.
</p><p>
தேர் திருவிழாவின் போது, நாட்டின் பல பாகங்களில் இருந்தும், புலம்பெயர்
தேசங்களிலும் இருந்தும் இலட்ச கணக்கான பக்தர்கள் ஆறுமுக சுவாமியின்
அருட்காட்சியினை கண்டு களிக்க ஒன்று கூடுவார்கள்.

காவடிகள் , பிரதட்டைகள் , கற்பூர சட்டி என பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமது
நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவார்கள்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T16:24:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பிற்கு பதிலடி : அமெரிக்கப்பொருட்கள் மீது அதிரடியாக வரியை விதித்தது கனடா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/canadas-retaliatory-tariffs-on-us-goods-1788874533"></link>
            <id>https://ibctamil.com/article/canadas-retaliatory-tariffs-on-us-goods-1788874533</id>
            <summary type="text">அண்டை நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போரைத் தீவிரப்படுத்தும் விதமாக, கனடா செவ்வாய்க்கிழமை அதிகாலையில் 27.6 பில்லியன் கனடியnடாலர் (20 பில்லியன் அமெரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்டை நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போரைத் தீவிரப்படுத்தும் விதமாக, கனடா செவ்வாய்க்கிழமை அதிகாலையில் 27.6 பில்லியன் கனடியnடாலர் (20 பில்லியன் அமெரிக்க டொலர்) மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்கள் மீது பதிலடி வரிகளை விதித்தது.
</p><p>
உள்ளூர் நேரப்படி அதிகாலை 12.01 மணிக்கு (0401GMT) நடைமுறைக்கு வந்த இந்த எதிர் நடவடிக்கைகள், அமெரிக்காவின் பிரிவு 338 வரிகளுக்கு "டொலருக்கு டொலர்" என்ற விகிதத்தில் இணையாக உள்ளன.&nbsp;</p><h2>அமெரிக்க இறக்குமதிகள் மீது&nbsp;வரி</h2><p>ஒட்டாவா, எஃகு, பால் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், விவசாய உபகரணங்கள், காகிதக்கூழ் மற்றும் காகிதம், மின்னணுவியல் உள்ளிட்ட முக்கிய துறைகளை இலக்காகக் கொண்டு, அமெரிக்க இறக்குமதிகள் மீது 15%, 25% மற்றும் 50% வரிகளை விதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d5a41f6-50a7-4098-8cc0-9b8c340786d5/26-6aa01321453ea.webp' /></p><p>
</p><p>
ஓகஸ்ட் மாத இறுதியில் இருதரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், முக்கிய கனடியப் பொருட்கள் மீது 50% வரிகளை விதித்தது.</p><p> அமெரிக்க வர்த்தக விதியான பிரிவு 338-இன் கீழ், எஃகு, அலுமினியம், மரக்கட்டைகள் மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் மீது அமெரிக்க நடவடிக்கைகள் குறிவைக்கப்பட்டன.</p><p></p><h2>ஜனாதிபதிக்கு அதிகாரம்</h2><p> இந்த விதி, பதிலடி வர்த்தகத் தடைகளை விதிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கிறது.

இந்த எதிர் வரிகள் அமெரிக்காவிலிருந்து வரும் பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், அமல்படுத்தப்படும் நாளில் ஏற்கனவே போக்குவரத்தில் உள்ள சரக்குகளைப் பாதிக்காது என்றும் கனடா தெளிவுபடுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5eef1f13-ec94-4ff4-a470-34a8a9ac78f1/26-6aa0132093deb.webp' /></p><p>

ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ், தொடர்ச்சியான இறக்குமதி வரிகள் மற்றும் பதிலடி நடவடிக்கைகளால் இந்த வர்த்தகப் பிரச்சினை வியத்தகு முறையில் தீவிரமடைந்துள்ளது.</p><p>

ட்ரம்ப், கனடா-அமெரிக்க வர்த்தக இடைவெளியை மீண்டும் மீண்டும் விமர்சித்து வருகிறார். வரிகளை விதிப்பதற்கான முக்கிய காரணமாக அதைச் சுட்டிக்காட்டி, ஒட்டாவா அமெரிக்காவை "ஏமாற்றுகிறது" என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T16:17:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்துக் கோயில்களுக்கு அருகில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதுதான் கிளீன் சிறிலங்கா திட்டமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/meat-waste-near-hindu-temples-1788874992"></link>
            <id>https://ibctamil.com/article/meat-waste-near-hindu-temples-1788874992</id>
            <summary type="text">இந்துக் கோயில்கள், பாடசாலைகள், நூலகங்கள் மற்றும் நீதிமன்றம் போன்ற பொது முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு அருகில், இறைச்சிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்துக் கோயில்கள், பாடசாலைகள், நூலகங்கள் மற்றும் நீதிமன்றம் போன்ற பொது முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு அருகில், இறைச்சிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்படுவது தொடர்பாக ஏறாவூர் நகர சபையின் பிரதி தவிசாளர் ஞா. கஜேந்திரன் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
</p><p>
ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி பகுதியில் ஏற்பட்டுள்ள கழிவுப் பிரச்சினை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாட்டைத் தூய்மைப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் முன்னெடுக்கும் ‘கிளீன் சிறிலங்கா’ திட்டத்தின் கீழ் கழிவுகள் முறையாக முகாமைத்துவம் செய்யப்படுகின்றனவா அல்லது மக்கள் குடியிருப்புகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் கொட்டப்படுகின்றனவா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
கடந்த செப்டெம்பர் 3ஆம் திகதி நடைபெற்ற செங்கலடி - ஏறாவூர்ப்பற்று அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், ஐந்தாம் குறிச்சி பகுதியில் நகர சபையினால் கொட்டப்படும் கழிவுகளில் இறைச்சிக் கழிவுகள் இல்லை என தவிசாளர் நளீம் தெரிவித்ததாகக் கூறிய கஜேந்திரன், அதனை நேரில் ஆய்வு செய்து ஆதாரங்களைச் சேகரிப்பதற்காக குறித்த பகுதிக்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மக்களின் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல்&nbsp;</h2><p>
</p><p>
அங்கு தான் தாக்கப்பட்டதாகவும், பின்னர் நகர சபை ஊழியர்கள் கழிவுகளை அகற்ற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தச் சம்பவத்தையடுத்து மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு அங்கு சென்றதாகவும், ஆனால் சம்பவத்தில் தமது தரப்பு கருத்துகள் உரிய முறையில் கேட்கப்படவில்லை என்றும் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், குப்பை மேட்டை நேரில் பார்வையிட்டு நிலைமையை மதிப்பிடாமல், ஒரு தரப்பின் கருத்துகளை மாத்திரம் கேட்பது நடுநிலையான அணுகுமுறையா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>குப்பைகள் ஆலயங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு அருகில் கொட்டப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது இனவாதம் அல்லது மதவாதம் எனக் கூறப்படுவதை கஜேந்திரன் நிராகரித்துள்ளார்.</p><p>

குப்பைகளால் மக்களின் சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் புனிதத்தன்மை பாதிக்கப்படுவதாகக் கூறுவது இன, மத வேறுபாட்டைத் தூண்டும் செயல் அல்ல என அவர் வாதிட்டுள்ளார்.
</p><p>
குப்பைகள் கொட்டப்படும் பகுதியில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களும் வசிப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், இந்தப் பிரச்சினையை இன அல்லது மதக் கண்ணோட்டத்தில் அணுகாமல், மக்களின் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினையாகவே அணுக வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஏறாவூர் நகர சபையின் பத்து வட்டாரங்களில் சேகரிக்கப்படும் கழிவுகளை முறையாக வகைப்படுத்தி, ஏறாவூர்ப்பற்று கொடுவாமடுவில் இயங்கும் திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்திடம் கையளிக்க முடியும் என கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், அரசாங்கத்துடன் கலந்துரையாடி, ஏறாவூருக்கு பொருத்தமான இடமொன்றில் முறையான திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தை அமைப்பதன் மூலம் கழிவுப் பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வை வழங்குவதுடன், வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>சட்டவிரோதமாக நில நிரப்புதல்</h2><p>இதனிடையே, ஆற்றங்கரைப் பகுதிகள், சதுப்பு நிலங்கள் மற்றும் வயல் காணிகளில் குப்பைகளைப் பயன்படுத்தி நிலங்களை நிரப்பும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், அதன் மூலம் தனியார் காணிகளை உருவாக்கும் முயற்சிகள் நடைபெறுவதாகவும் கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
</p><p>
ஏற்கனவே பல ஏக்கர் காணிகள் இவ்வாறு நிரப்பப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ள போதிலும், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கான சுயாதீனமான ஆதாரங்கள் அல்லது அதிகாரப்பூர்வ விசாரணை முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
</p><p>
எனவே, ஆற்றங்கரை, சதுப்பு நிலம் மற்றும் வயல் நிலங்களில் கழிவுகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக நில நிரப்புதல் இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
சட்டவிரோத நில நிரப்புதல் உறுதிப்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட காணிகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவை அரச கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>குப்பைக் கழிவு விவகாரம் தற்போது வெறுமனே உள்ளூராட்சி சபையின் நிர்வாகப் பிரச்சினையாக இல்லாமல், சுகாதாரம், சுற்றுச்சூழல், நிலப் பாதுகாப்பு மற்றும் பொது நிர்வாகப் பொறுப்புடன் தொடர்புடைய விவகாரமாக மாறியுள்ளதாக கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
தமக்கு எதிராக இனவாதம் அல்லது மதவாதம் போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதன் மூலம் அடிப்படை சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் கேள்விகளைத் திசைதிருப்பக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
இதேவேளை, இந்த விவகாரத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் நகர சபையின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கிறதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

எவ்வாறாயினும், முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் நகர சபை, மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் மற்றும் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு வெளியாகிய பின்னரே விவகாரத்தின் முழுமையான உண்மை நிலையைத் தீர்மானிக்க முடியும்.
</p><p>
இதனால், குற்றச்சாட்டுகளையும் அரசியல் விமர்சனங்களையும் தாண்டி, குறித்த குப்பைக் கொட்டும் இடம், கழிவுகளின் தன்மை, நில நிரப்புதல் நடவடிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பில் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகப் பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T16:15:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டமன்றத்தில் உடல்மொழி சர்ச்சை ; முதலமைச்சர் விஜய் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/body-language-controver-legislative-assembly-vijay-1788883929"></link>
            <id>https://jvpnews.com/article/body-language-controver-legislative-assembly-vijay-1788883929</id>
            <summary type="text">தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது தனது பதிலுரையின் இடையே உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதாகவும், அதில் எவ்வித உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது தனது பதிலுரையின் இடையே உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதாகவும், அதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை என்றும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51a2d5de-d03a-4a30-82b5-72c55df1d78d/26-6aa033dac7157.webp' /></p><p>

அவரது பதிலுரையில் தி.மு.க. தொடர்பான விமர்சனங்கள் இடம்பெற்றதாகவும், குறிப்பாக மிசா சட்டத்தின் கீழான கைது நடவடிக்கைகள் மற்றும் சர்க்காரியா ஆணைய அறிக்கை உள்ளிட்ட விடயங்களை அவர் சுட்டிக்காட்டி பேசியிருந்தார்.
</p><p>
இதன்போது முதலமைச்சரின் சில உடல்மொழி தொடர்பில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர்.
</p><p>
உருவ கேலி செய்யும் வகையில் யார் பேசினாலும் அது கண்டனத்திற்குரியது என்றும், சட்டமன்றம் மக்கள் நலன் சார்ந்த விவாதங்களுக்கான இடமாக இருக்க வேண்டும் என்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.</p><p>

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தளப் பதிவின் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
</p><p>
அதில், சட்டமன்றத்தில் என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எந்தவொரு உள்நோக்கமும் கொண்டதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், “தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம்” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T16:12:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையர்களுக்கு தாய்லாந்தின் இலவச விசா வசதி இரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/thailand-revokes-visa-free-facility-for-sri-lankan-1788883344"></link>
            <id>https://jvpnews.com/article/thailand-revokes-visa-free-facility-for-sri-lankan-1788883344</id>
            <summary type="text">இலங்கைப் பிரஜைகளுக்கு தாய்லாந்து வழங்கி வந்த இலவச விசா வசதி எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் இரத்து செய்யப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைப் பிரஜைகளுக்கு தாய்லாந்து வழங்கி வந்த இலவச விசா வசதி எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் இரத்து செய்யப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

தாய்லாந்துக்குச் சென்ற சில இலங்கையர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவங்களே இந்த முடிவுக்கான பிரதான காரணம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbb641cc-7cd5-4044-952a-87bab990a63a/26-6aa0319218255.webp' /></p><p>குறிப்பாக, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் அண்மைக்காலத்தில் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p>

தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருட்கள் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலும், தாய்லாந்தில் இருந்து இலங்கை வந்த சில பிக்குகள் குஷ் எனப்படும் போதைப்பொருளை கொண்டு வந்ததாகக் கூறப்படும் சம்பவமும் பதிவாகியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p>

இவ்வாறான சம்பவங்களை கருத்திற்கொண்டே இலங்கையர்களுக்கான இலவச விசா வசதியை இரத்து செய்ய தாய்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.</p><p>

இதன்படி, செப்டெம்பர் 15ஆம் திகதிக்குப் பின்னர் தாய்லாந்துக்குப் பயணம் செய்யும் இலங்கைப் பிரஜைகள், பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் விசா பெற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
</p><p>
எவ்வாறாயினும், இந்த முடிவு தொடர்பில் தாய்லாந்து அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.</p><p>

இரு நாடுகளுக்கும் இடையில் விசா வசதிகள் தொடர்பான இருதரப்பு ஒப்பந்தமொன்றை ஏற்படுத்துவதற்கான முன்மொழிவு தாய்லாந்து தரப்பினால் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
எதிர்காலத்தில் தாய்லாந்துடன் குறித்த இருதரப்பு ஒப்பந்தத்தை கைச்சாத்திட இலங்கை அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும், அதன் மூலம் இலங்கையர்களுக்கு மீண்டும் விசா இல்லா பயண வசதியை பெற்றுக்கொள்ள முடியும் என நம்புவதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T16:02:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்பு கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-discussion-fighters-welfare-association-1788882814"></link>
            <id>https://tamilwin.com/article/special-discussion-fighters-welfare-association-1788882814</id>
            <summary type="text">போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் “போராளிகளின் வாழ்வியலும் ஜனநாயக அரசியலும்” என்ற தொனிப்பொருளில் வடக்கு–கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த முன்னாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் “போராளிகளின் வாழ்வியலும் ஜனநாயக அரசியலும்” என்ற தொனிப்பொருளில் வடக்கு–கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த முன்னாள் போராளிகளுக்கிடையிலான சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.</p><p>குறித்த கலந்துரையாடலானது (6.9.2026) இடம்பெற்றது.</p><p>
இந்நிகழ்வில் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த போராளிகள் நலன்புரிச் சங்க நிர்வாகிகள் மற்றும் போராளிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.</p><h2>கருத்துப் பரிமாற்றங்கள்</h2><p>குறிப்பாக, எமது மக்களின் வாழ்வாதாரம், மருத்துவம், கல்வி மற்றும் ஜனநாயக அரசியல் தொடர்பான முக்கியமான விடயங்கள் குறித்து ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd4c07b2-095f-40ae-bc1b-44942feec3d2/26-6aa02f89db5f3.webp' /></p><p>
</p><p>முன்னாள் போராளிகளும் மக்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, ஒற்றுமையுடனும் ஜனநாயக வழியிலும் எதிர்காலத்தில் செயற்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
</p><p>போராளிகளின் நலனையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் முன்னிறுத்திய இந்த நிகழ்வு மிகவும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் நடைபெற்றது.</p>]]></content>
            <updated>2026-09-08T15:54:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் இளைஞரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு ; சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shooting-targeting-a-young-man-in-colombo-1788882187"></link>
            <id>https://jvpnews.com/article/shooting-targeting-a-young-man-in-colombo-1788882187</id>
            <summary type="text">கொழும்பு அத்துருகிரிய, வளேகடே பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு அத்துருகிரிய, வளேகடே பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று (08) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08b8aadd-9522-4044-ae8f-773fedb54912/26-6aa02d0d83853.webp' /></p><p>மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் குறித்த இளைஞரை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
துப்பாக்கிச் சூட்டில் இளைஞரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், சம்பவத்தைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சந்தேகநபர்கள் சம்பவ இடத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். </p><p>துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T15:43:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் மிகக் குறுகலான வீடு - வெறும் 72 செ.மீ இடத்தில் இவ்வளவு வசதிகளா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/worlds-skinniest-house-warsaws-tiny-keret-house-1788879786"></link>
            <id>https://manithan.com/article/worlds-skinniest-house-warsaws-tiny-keret-house-1788879786</id>
            <summary type="text">போலந்து நாட்டின் வார்சா நகரில் அமைந்துள்ள கெரெட் ஹவுஸ் (Keret House), அதன் அதீத குறுகிய அமைப்பால் உலகின் மிகக் குறுகலான வீடுகளில் ஒன்றாகப் பார்க்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>போலந்து நாட்டின் வார்சா நகரில் அமைந்துள்ள கெரெட் ஹவுஸ் (Keret House), அதன் அதீத குறுகிய அமைப்பால் உலகின் மிகக் குறுகலான வீடுகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
</p><p>
இரண்டு கட்டிடங்களுக்கு இடையே இருந்த வெறும் 72 செ.மீ அகலமுள்ள இடத்தைப் பயன்படுத்தி இந்த வீடு கட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa3c9492-ee92-4e06-9e53-5697429997c6/26-6aa028b2868f1.webp' /></p><p></p><p> இதன் அதிகபட்ச அகலம் 122 செ.மீ. வரை இருக்கும். போலந்து கட்டிடக் கலைஞர் ஜாகுப் ஷெஸ்னி, பயன்படுத்தப்படாமல் இருந்த இந்தக் குறுகிய இடத்தைப் பார்த்து, அதை பயனுள்ள வசிப்பிடமாக மாற்றும் யோசனையில் இவ்வீட்டை வடிவமைத்தார்.</p><h2>வியக்க வைக்கும் வசதிகள்</h2><p> </p><p>சுமார் 150 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த வீடு, கிடைக்கும் ஒவ்வொரு செ.மீ இடத்தையும் திறமையாகப் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
</p><p>
மூன்று நிலைகளைக் கொண்ட இந்த வீட்டில் நுழைவுப் பகுதி, சிறிய சமையலறை, அமரும் மற்றும் சாப்பிடும் இடம், குளியலறை, வேலை செய்யும் பகுதி மற்றும் தூங்கும் இடம் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14584b40-4022-466b-b20e-e111bb740951/26-6aa028b339e0c.webp' /></p><p> </p><p>இவ்வளவு குறுகிய இடத்திலும் ஷவர், கழிப்பறை, சேமிப்பிடம் போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளன. மேற்கூரையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்கைலைட் மூலம் இயற்கை வெளிச்சமும் வீட்டுக்குள் கிடைக்கிறது.
</p><p>
முக்கிய சாலையிலிருந்து நேரடியாக நுழைய முடியாத வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த வீட்டை, குறுகிய சந்துப் பாதை மற்றும் படிக்கட்டுகள் வழியாகச் சென்றே அடைய முடியும்.

இந்த வீடு இஸ்ரேலிய எழுத்தாளர் எட்கர் கெரெட்டுக்காக உருவாக்கப்பட்டது.</p><p></p><p> </p><p>அவர் இதை வேலை செய்யும் இடமாகவும், அவ்வப்போது தங்கும் இடமாகவும் பயன்படுத்துகிறார். சுமார் மூன்று ஆண்டுகால கட்டுமானப் பணிகளுக்குப் பின்னர் 2012 அக்டோபரில் வீடு நிறைவடைந்தது.

இன்று, கெரெட் ஹவுஸ் வார்சாவின் தனித்துவமான கட்டிடக்கலை அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. </p><p>பயன்பாடற்றதாகத் தோன்றும் மிகச் சிறிய இடத்தைக்கூடச் சிறந்த வடிவமைப்பின் மூலம் பயனுள்ள இடமாக மாற்ற முடியும் என்பதற்கு&nbsp; இந்த வீடு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Dc1OVLnAIu5/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Dc1OVLnAIu5/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Dc1OVLnAIu5/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Rishabh Wadhwa (@blessedarch)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T15:31:07+00:00</updated>
        </entry>
    </feed>
