<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-22T13:40:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போர் செலவு 37.5 பில்லியன் டொலராக உயர்வு..! அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/war-related-costs-increase-for-america-1784727345"></link>
            <id>https://tamilwin.com/article/war-related-costs-increase-for-america-1784727345</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்தி வரும் போருக்கான செலவு இதுவரை 37.5
பில்லியன் டொலர் வரை அதிகரித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்தி வரும் போருக்கான செலவு இதுவரை 37.5
பில்லியன் டொலர் வரை அதிகரித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
</p><p>
அமெரிக்க நாடாளுமன்ற மேலவையின் நிதிக்கழு முன் முன்னிலையாகி சாட்சியமளித்த அவர், பாதுகாப்புத் துறைக்காகக் கோரப்பட்டுள்ள 1.5 டிரில்லியன் டொலர் பட்ஜெட்டில்,
ஈரான் போருக்காக மட்டும் கிட்டத்தட்ட 70 பில்லியன் டொலர் நிதி தேவைப்படுவதாகக்
குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><p>

கடந்த மே மாதம் அமெரிக்க நிர்வாகம் அறிவித்த 29 பில்லியன் டொலரை விட தற்போதைய செலவு கணக்கீடு 8 பில்லியன் டொலர் அதிகமாகும்.
</p><p>
இதேவேளையில், ஆற்றல் விலை உயர்வு உள்ளிட்ட காரணிகளால் அமெரிக்காவிற்கு
ஏற்படும் மறைமுக செலவு 150 பில்லியன் டொலர் வரை செல்லக்கூடும் என மூடிஸ்
அனலிடிக்ஸ் கணித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3bb5092-8972-45c9-a35f-86d626ce29c7/26-6a60c7bb7471b.webp' /></p><p>
போரினால் அமெரிக்காவின் ஏவுகணைகள் மற்றும் ஆயுத இருப்புகளில் பற்றாக்குறை
ஏற்பட்டுள்ளதாகவும், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு
அமைப்புகளின் உற்பத்தியை விரைவுப்படுத்த கூடுதல் நிதி தேவை என்றும் ஹெக்செத்
வலியுறுத்தியுள்ளார்.
</p><h2>
தொடர் தாக்குதலுக்கான இருப்பு பற்றாக்குறை</h2><p>

கடந்த வாரம் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் முறிந்ததைத் தொடர்ந்து, ஈரான்
மீது அமெரிக்கா தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. 

அமெரிக்க வீரர்கள் இருவர் கொல்லப்பட்ட நிலையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்
மற்றும் அணுசக்தி தொடர்பான “பிகேக்ஸ் மவுண்டன்” பகுதி மீது கடும் தாக்குதல்
நடத்தப்படும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0adce2bb-7bf4-4f20-b70f-2743a5b8d5d4/26-6a60c7bc3a42b.webp' /></p><p>
</p><p>
மேலும், அமெரிக்க பாதுகாப்புத் துறையின் இந்த பிரம்மாண்டமான நிதி
கோரிக்கை தெளிவற்றதாக இருப்பதாக ஜனநாயகக் கட்சி எம்பிக்கள் கேள்விகளை
எழுப்பியுள்ளனர்.</p><p>

ஈரானும் வளைகுடா பிராந்தியத்திலுள்ள அமெரிக்க தளங்கள் மீது தொடர்ந்து பதிலடித்
தாக்குதல்களை நடத்தி வருவதால் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T13:38:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[துணிந்து காரியத்தில் இறங்கும் தைரியசாலி ராசிகள் யார் யார்னு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/these-zodiac-signs-very-brave-for-astrology-1784710033"></link>
            <id>https://manithan.com/article/these-zodiac-signs-very-brave-for-astrology-1784710033</id>
            <summary type="text">ஜோதிடத்தில் எந்தவொரு காரியத்திற்கும் பயப்படாமல் துணிந்து நிற்கும் ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.பொதுவாக வாழ்க்கையில் சவால்கள் மற்றும் ஆபத்துக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் எந்தவொரு காரியத்திற்கும் பயப்படாமல் துணிந்து நிற்கும் ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.</p><p>பொதுவாக வாழ்க்கையில் சவால்கள் மற்றும் ஆபத்துகள் அதிகமாக காணப்படுவதுண்டு. எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அஞ்சாமல் எதிர்த்து நிற்கும் குணம் அனைவருக்கும் இருப்பதில்லை.</p><p></p><p>ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவரது ஜாதகத்தில் அக்னி தத்துவமும், தைரியத்திற்கு காரகனான செவ்வாயின் ஆதிக்கமும் மேலோங்கியிருக்கும் போது, இயல்பாகவே துணிச்சலுடன் காணப்படுவார்கள்.</p><p>எந்தவொரு தடைகளைக் கண்டு பின்வாங்காமல் கம்பீரமாக நின்று வெற்றி பெறும் துணிச்சல் சில ராசியினருக்கு உண்டு. அந்த வகையில் எந்தெந்த ராசியினர் இவ்வாறு காணப்படுவார்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4802155-53d6-4521-a1c1-42c0ff419054/26-6a60be561a65e.webp' /></p><h2>மேஷம்</h2><p>செவ்வாயை அதிபதியாக கொண்ட மேஷ ராசியினர் எந்தவொரு ஆபத்தான காரியமாக இருந்தாலும் அஞ்சாமல் முதலில் களமிறங்குவார்கள்.</p><p>தோல்வியை பற்றி பயம் இவர்களுக்கு சிறிதும் இருப்பதில்லை. ஆபத்து என்று தெரிந்தாலும் அசால்ட்டாக அடியெடுத்து முன்னேறி செல்வார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fc42bfe-248c-4e15-8d11-3046406e7aca/26-6a60be56be5d7.webp' /></p><h2>சிம்மம்</h2><p>சூரியனின் ஆதிக்கம் பெற்ற சிம்ம ராசியினர் இயல்பாகவே பயம் என்றால் என்ன என்று அறியாதவர்கள். தங்களுக்கு ஏற்படும் அவமானங்கள், தோல்விகள் இவற்றினை கண்டு அஞ்சுவதே கிடையாது.</p><p>எதிரிகளை நேருக்கு நேர் சந்திக்கும் கம்பீரமும், தன்மானத்தை காக்க எதையும் துணிச்சலுடன் செயல்படும் குணம் கொண்டவர்கள் ஆவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d46a2bff-043d-4f3e-a6a9-0ddac93368fb/26-6a60be576dae7.webp' /></p><h2>விருச்சிகம்</h2><p>செவ்வாய் மற்றும் புளூட்டோவின் ஆதிக்கம் கொண்ட விருச்சிக ராசியினரின் துணிச்சல் சற்று வித்தியாசமானது ஆகும். மனதளவில் அதிக வலிமை படைத்தவராக இருப்பார்கள்.</p><p>எந்தவொரு பெரிய நெருக்கடியையும் அமைதியாக நின்று எதிர்கொள்வதுடன், இழப்புகளைக் கண்டு அஞ்சாமல் ஃபீனிக்ஸ் பறவை போன்று மீண்டும் மீண்டும் எழும்புவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c38cd46c-7178-4c7a-8368-93b609e9341b/26-6a60be5829efc.webp' /></p><h2>தனுசு</h2><p>அக்னி தத்துவத்தைக் கொண்ட தனுசு ராசியினர் புதிய பாதைகளில் பயணிப்பதற்கு ஒருபோதும் தயங்காதவர்கள். அறியாத ஆபத்தினைக் கண்டு அஞ்சாமல், அதனை சுவாரசியமாக எதிர்த்து நிற்பார்கள்.</p><p>துணிச்சலுடன் செயல்படும் இவர்கள் மற்றவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் இருப்பார்கள். சுதந்திரத்திற்காக எந்தவொரு எதிர்ப்பினையும் தைரியமாக எதிர்கொள்வார்களாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0870eec-7156-4889-a38a-ee9b397ccdbe/26-6a60be58d8e52.webp' /></p><h2>மகரம்</h2><p>சனியின் ஆதிக்கம் பெற்ற மகர ராசியினர் மன உறுதியாக இருப்பவர்கள். வாழ்வில் எவ்வளவு பெரிய புயல் அடித்தாலும் நிதானத்தை மட்டும் இழக்கவே மாட்டார்கள்.</p><p>காலதாமதமோ அல்லது தடைகளோ இவர்களை கொஞ்சம் கூட பயமுறுத்த முடியாது. தனது இலக்கை அடையும் வரை இவர்கள் பின்வாங்கவே மாட்டார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f05c833a-8c63-47f2-a727-631522122ea3/26-6a60be598d942.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T13:37:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவின் முன்னாள் செயலாளருக்கு நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-order-against-gotabayas-former-secretary-1784726104"></link>
            <id>https://ibctamil.com/article/court-order-against-gotabayas-former-secretary-1784726104</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p> 

ஜனாதிபதியின் செலவுத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்</p><h2>கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில்&nbsp;வழக்கு</h2><p>இது தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (22) எடுத்துக் கொள்ளப்பட்ட போதே,மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c166c0fd-da40-453b-ae7b-b2b620b42752/26-6a60c710d3dfd.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T13:35:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொட்டம்மானின் புலனாய்வு பிரிவை உசுப்பியதும் இரகசியமாக பாதுகாக்கப்பட்டதுமான விசேட நகர்வு...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pottamman-intelligence-division-moves-1784723254"></link>
            <id>https://ibctamil.com/article/pottamman-intelligence-division-moves-1784723254</id>
            <summary type="text">கருணா விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வெளியேற வகுத்த திட்டம் என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கியஸ்தராக இருந்த றெஜினோல்ட்டை முன்னிலைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கருணா விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வெளியேற வகுத்த திட்டம் என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கியஸ்தராக இருந்த றெஜினோல்ட்டை முன்னிலைப்படுத்தித்தான்.
</p><p>
வடக்கு - கிழக்கை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் காலத்தில் கிழக்கில் இடம்பெறும் அனைத்தும் தனக்கூடாகவே இடம்பெறவேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்த கருணா, புலனாய்வு நகர்வுகளுக்கு தன்னூடகத்தான் செல்லவேண்டும் என்ற நிலைப்பாட்டையும் சேர்த்து வைத்திருந்தார்.</p><p>

இந்த திட்டங்களின் முதல் படித்தான் கருணா பிரிவிற்க்கு முன்னதாக றெஜினோல்ட் வெளியிட்டதாக கூறப்படும் ஒரு முக்கிய அறிவிப்பு.
</p><p>
இந்த அறிவிப்பின் பின்னணி மற்றும் தாக்கம் விடுதலைப்புலிகள் அமைப்பின் திட்டங்களுக்கு பாரதூரமாக அமைந்திருக்கும் என கூறப்படுகிறது.
</p><p>
இவ்வாறு விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிளவுபட முன்னர் நடந்தது என்ன? றெஜினோல்ட் வெளிப்படுத்திய நிலைப்பாடு என்ன/ இதனால் பிற்காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பில் ஏற்பட்ட தாக்கங்கள் என்ன? என்பது குறித்து ஆராய்கிறது டொடரும் ஒளியாவனம்...&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oK5W5uhPSqM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T13:33:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்டாலினைச் சந்தித்தார் சுமந்திரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sumanthiran-met-mk-stalin-1784726321"></link>
            <id>https://tamilwin.com/article/sumanthiran-met-mk-stalin-1784726321</id>
            <summary type="text">தமிழகம் சென்றிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி
சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாட்டின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகம் சென்றிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி
சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாட்டின்
முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினைச் சந்தித்துக்
கலந்துரையாடினார்.
</p><p>
ஸ்டாலினின் ஆட்சிக் காலத்தில் விசேடமாக தமிழகத்தில் ஏதிலிகளாக இருக்கும்
இலங்கைத் தமிழ் மக்களின் நலனுக்காக செய்த பல திட்டங்களையும், டித்வா புயல்
சமயத்தில் இலங்கை மக்களுக்குத் தமிழக மக்கள் சார்பில் அனுப்பிய உதவிகளையும்
இந்தச் சந்திப்பின்போது சுமந்திரன் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T13:31:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெல்லி போராட்டத்தை ஹைஜாக் செய்ய முயற்சி - மாணவர்களுக்கு அண்ணாமலை எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/annamalai-alert-students-over-hijack-delhi-protest-1784727050"></link>
            <id>https://ibctamilnadu.com/article/annamalai-alert-students-over-hijack-delhi-protest-1784727050</id>
            <summary type="text">போராட்டத்தை ஹைஜாக் செய்ய முயற்சி நடைபெறும் என டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லி நீட் எதிர்ப்பு போராட்டம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>போராட்டத்தை ஹைஜாக் செய்ய முயற்சி நடைபெறும் என டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><h3>

டெல்லி நீட் எதிர்ப்பு போராட்டம்</h3><p>

நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தை காவல்துறை நடத்தி கலைத்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a15968d-1ffa-4f29-bb32-56563a3a91dd/26-6a60c60c00a8a.webp' /></p><p>

போராட்டம் வன்முறையாக மாற்றப்பட்ட நிலையில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் போராட்டக்குழுவினரை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
</p><p>
 நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் வீதிகளில் இறங்கி போராட துவங்கியுள்ளனர். </p><h3>

அண்ணாமலை</h3><p> 

இந்நிலையில், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்க மத்திய அரசு தாமதப்படுத்துவது ஏன் எனவும், இதனால் போரட்டம் ஹைஜாக் செய்ய வாய்ப்புள்ளது எனவும் வீ த லீடர்ஸ் அமைப்பின் அண்ணாமலை கூறியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4498140-b066-487d-ba08-6e0d17505950/26-6a60c60ca5fa4.webp' /></p><p>
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த பல ஆண்டுகளாக, நான் நீட் தேர்வுக்கு ஆதரவாகத் தனிப்பட்ட முறையில் ஒரு நிலைப்பாட்டை எடுத்து வருகிறேன். </p><p>

அது நாடு முழுவதும் மாணவர் தேர்வில் ஒரு சீரான தன்மையைக் கொண்டுவந்தது என்றும், நலிந்த பின்னணியில் இருந்து வரும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி கற்கும் தங்கள் கனவைத் தொடர ஒரு உண்மையான வாய்ப்பை வழங்கியது என்றும் நான் வாதிட்டு வருகிறேன்.</p><p> 

கடந்த 5 ஆண்டுகளில், நீட் இளங்கலைத் தேர்வு வினாத்தாள் மூன்று முறை கசிந்துள்ளது. 

சீரான தன்மையைக் கொண்டுவர வேண்டிய அமைப்பு தோல்வியடைந்து கொண்டிருந்தபோது, ​​மீண்டும் ஒருமுறை தேர்வை எதிர்கொள்ள வேண்டியிருந்த மாணவர்கள் மீது அது எவ்வளவு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்று கற்பனை செய்து பாருங்கள்.</p><p> 

ஆனாலும், எந்தப் பொறுப்புக்கூறலும் இல்லை. அந்தத் தருணம்தான், மாணவர்கள் தங்கள் மனக்குமுறலை கதறி அழுவதற்காக வீதிகளில் இறங்குவதற்கு அவர்களின் மனங்களில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தது என்று நான் உறுதியாக நம்புகிறேன். </p><p>

ஒரு ஜனநாயகத்தில் போராட்டம் என்பது ஒரு அடிப்படை உரிமை. இருப்பினும், பொருத்தமான கேள்வி இதுதான்: 

பாஜக தலைமையிலான மத்திய அரசு, போராட்டக்காரர்களுடன் ஒரு உரையாடலைத் தொடங்க ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது? 

போராட்டம் ஒரு உச்சகட்டத்தை அடையும் வரை அர்த்தமுள்ள கலந்துரையாடல் ஏன் தாமதப்படுத்தப்பட்டது? உங்களைக் காத்திருக்க வைத்தது எது?</p><p> 

மாணவர்களுக்கும், அவர்களை வழிநடத்தும் மக்களுக்கும் இதில் ஒரு பொறுப்பு இருக்கிறது. 

ஒரு போராட்டம் வாரக்கணக்கில் நீடிக்கும்போது, ​​சுயநலவாதிகள் மேடையேறி, போராட்டத்தின் ஆரம்பக் கோரிக்கைகளுக்கு முற்றிலும் தொடர்பில்லாத கருத்துக்களைப் பரப்புவதோ அல்லது தங்கள் சொந்த நோக்கங்களுக்காகப் போராட்டத்தை முழுமையாகத் திசைதிருப்ப முயற்சிப்பதோ இயல்பானதுதான். </p><p>

நீங்கள் மௌனமாக இருந்து, இந்த சுயநலவாதிகள் தங்கள் நோக்கங்களை முன்னெடுத்துச் செல்ல அனுமதித்தால், உங்கள் அடிப்படைக் குறிக்கோள்களிலிருந்து நீங்கள் விலகிச் செல்கிறீர்கள். தயவுசெய்து அதை நடக்க விடாதீர்கள்! </p><p>

பாஜக தலைமையிலான மத்திய அரசு, அர்த்தமுள்ள உரையாடலில் ஈடுபடவும், வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்கவும், தற்போதைய கவலைகளை நிவர்த்தி செய்ய விரைவான, பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கவும்கேட்டுக்கொள்கிறேன்.&nbsp;</p><p>['</p><p>

எந்தவொரு தேசத்தின் வலிமையும், அதன் இளைஞர்கள் அதன் கல்வி நிறுவனங்கள் மீது வைக்கும் நம்பிக்கையில்தான் உள்ளது. நமது மாணவர்கள் நமது கல்வி முறையின் நேர்மை மற்றும் நம்பகத்தன்மை மீது நம்பிக்கையை இழந்தால், நாம் நமது தேசத்தின் எதிர்காலத்தையே ஆபத்தில் ஆழ்த்துகிறோம்" என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T13:30:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் இன்று 04 என்புக் கூடுகள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/04-skeletons-identified-in-semmani-today-1784726135"></link>
            <id>https://tamilwin.com/article/04-skeletons-identified-in-semmani-today-1784726135</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 40ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்றையதினம்(22.07.2026) நடைபெற்றது.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 40ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்றையதினம்(22.07.2026) நடைபெற்றது.
</p><p>
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 40ஆவது நாளான இன்றைய தினம் 04 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
</p><p>
அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 11 என்புக்கூடுகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர்</h2><p>அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம்
கட்டம் என இதுவரையில் 94 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ,
471 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,&nbsp; 455 என்பு கூடுகள் முற்றாக
அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8e3eb22-41fc-4de9-bf15-3a10e9eb1759/26-6a60c41ea25cf.webp' /></p><p>
அதேவேளை இன்றைய தினம் ஐரோப்பிய ஒன்றியத்தின் 08பேர் கொண்ட
குழுவினர் அகழ்வு பணியை நேரில் பார்வையிட்டதுடன், அகழ்வு பணிகளில் ஈடுபட்ட
நிபுணர் குழுவினருடன் அகழ்வுப்பணிகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர் என
சட்டத்தரணி ஞா.ரனித்தா தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/caf303aa-6c82-493d-978d-ff854bbab53b/26-6a60c41fc16de.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d6a92b7-91e7-434f-b988-b20f122a7076/26-6a60c420a1a14.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/348805be-7b85-4686-87a0-105c24d623d1/26-6a60c4217f65b.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T13:29:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வயதோ 22 .... ஆனால் 14 திருமணங்கள்; கல்யாண ராணியால் அதிர்ந்த பொலிஸார் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/22-age-woman-accused-2-years-marriage-14-men-india-1784723992"></link>
            <id>https://jvpnews.com/article/22-age-woman-accused-2-years-marriage-14-men-india-1784723992</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியா தெலுங்கானா மாநிலத்தில் ஒரு 22 வயது பெண் இரண்டு ஆண்டுகளில் மட்டும் 14 திருமணங்கள் செய்து, மொத்தம் சுமார் 350 சவரன் தங்க நகைகளை கொள்ளை அட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியா தெலுங்கானா மாநிலத்தில் ஒரு 22 வயது பெண் இரண்டு ஆண்டுகளில் மட்டும் 14 திருமணங்கள் செய்து, மொத்தம் சுமார் 350 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. </p><p>

இது தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளதாவது, தெலுங்கானாவில் 22 வயதுடைய ஸ்வேதா என்ற பெண் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதலனை திருமணம் செய்தார். 

சில மாதங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரைப் பிரிந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6bda548-fe67-46f0-a47b-1c16e81d376c/26-6a60ba1aec411.webp' /></p><p></p><h2>முதல்&nbsp; திருமணம் முறிந்ததால்&nbsp; தொடர் திருமணம்</h2><p>அதன் பிறகு பெற்றோரும் உறவினர்களும் அவரை ஏற்க மறுத்தனர். தனியாக விடப்பட்ட ஸ்வேதா, ஒரு விடுதியில் தங்கி சூப்பர் மார்க்கெட் பில்லிங் கவுண்டரில் வேலைக்குச் சேர்ந்தார்.</p><p></p><p> </p><p>

அப்போது ஒரு இளைஞருடன் காதல் வயப்பட்டு இரண்டாவது திருமணம் செய்தார். திருமணத்தின் போது 15 சவரன் நகைகள் அணிவிக்கப்பட்டன. “எனக்கு பெற்றோர் இல்லை. அனாதை. விடுதியில் தனியாக இருக்கிறேன்” என்று பல பொய்களை கூறி திருமணம் செய்தார். </p><p>

திருமணம் முடிந்து இரண்டு நாட்களிலேயே அந்த 15 சவரன் நகைகளையும் வீட்டில் இருந்த 30,000 ரூபாய் பணத்தையும் எடுத்துக்கொண்டு காணாமல் போனார் ஸ்வேதா . புகார் கொடுக்கப்பட்டாலும் எந்த முன்னேற்றமும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35a066d2-a33b-41ef-aa13-61db62ee5c04/26-6a60ba1ba0ee8.webp' /></p><p> 

இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் ஸ்வேதா இதை ஒரு “தொழில்” ஆக்கிக்கொண்டார். கொள்ளையடித்த நகைகளையும் பணத்தையும் வைத்துக்கொண்டு அருகில் உள்ள வெவ்வேறு ஊர்களுக்குச் சென்றார். </p><p>

அங்கெல்லாம் “நான் அனாதை. சிறுவயதிலேயே பெற்றோர் விபத்தில் இறந்துவிட்டார்கள். ஆசிரமத்தில் வளர்ந்தேன்” என்ற பொய்களைச் சொல்லி ஆண்களை வசப்படுத்தினார். 

திருமணம் செய்து ஒன்று அல்லது இரண்டு நாட்களில் நகைகளையும் பணத்தையும் சுருட்டி மீண்டும் மறைந்துவிடுவது அவரது வழக்கமாக மாறியது.</p><p></p><p> 

 ஸ்வேதாவால் ஏமாற்றப்பட்ட பெரும்பாலான ஆண்கள் இரண்டாம் திருமணம் செய்ய விரும்பியவர்களாக இருந்தனர்.</p><p>மேட்ரிமோனி தளங்களைப் பயன்படுத்தி புகைப்படம் இல்லாமல் வெவ்வேறு பெயர்களில் விளம்பரம் போட்டார். 

ஏன் புகைப்படத்தை பதிவு செய்யவில்லை என கேட்பவர்களிடம், “யாராவது புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்திவிடுவார்களோ என்ற பயம்” என்று பேசி ஆண்களைக் கவர்ந்தார்.</p><p>இப்படி 14 திருமணங்கள் செய்துள்ளார் ஸ்வேதா . மொத்தம் சுமார் 350 சவரன் தங்க நகைகள். 

கடந்த மார்ச் மாதம் தெலுங்கானாவைச் சேர்ந்த வைத்தியர் ராஜேஷ் குமார் (35). முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்திருந்த அவர், இரண்டாம் திருமணத்திற்காக மேட்ரிமோனி தளத்தில் விவரங்களைப் பதிவு செய்திருந்தார்.</p><p></p><h3>வெப் சீரியஸ்களைப் பார்த்து வந்த யோசனை</h3><p> </p><p>

ஸ்வேதா அவரைத் தொடர்புகொண்டு வழக்கம்போல தனது “அனாதைக் கதையை” சொல்லி திருமணம் வரை கொண்டுவந்தார். திருமணத்தின்போது 60 சவரன் நகைகள் அணிவிக்கப்பட்டன. </p><p>

இரண்டு நாட்கள் மட்டும் வைத்தியர் ராஜேஷுடன் தங்கினார். பிறகு கிட்டத்தட்ட 80 சவரன் நகைகளையும் 3 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் எடுத்துக்கொண்டு மறைந்துவிட்டார். 

வைத்தியர் ராஜேஷின் தாய் மாமா இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாஸ் ஒரு பொலிஸ் அதிகாரி.</p><p></p><p> </p><p>திருமணத்திற்கு முன்பே ஏதாவது பிரச்சனை வரலாம் என்ற சந்தேகத்தில் ஸ்வேதாவின் தொலைபேசியில் எதற்கும் இருக்கட்டும் நம் பாதுகாப்பு முக்கியம் என மறைமுகமாக டிராக்கிங் ஆப் ஒன்றை இன்ஸ்டால் செய்திருந்தார். </p><p>

நகைகளுடன் தப்பிய ஸ்வேதா அடுத்ததாக கோவாவுக்குச் சென்று தங்கியிருப்பது அந்த ஆப் மூலம் தெரியவந்தது. 

உடனடியாக புகார் கொடுக்கப்பட்டது. கோவாவில் அந்த தொலைபேசி சிக்னல் காட்டிய இடத்தில் ஸ்வேதாவைக் கைது செய்தனர். </p><p>விசாரணையில் அவர் அதிர்ச்சியான ஒன்றைச் சொன்னார், 

“வெப் சீரியஸ்களைப் பார்த்து இந்த யோசனை வந்தது. இப்படி கொள்ளை அடித்து வாழலாம் என்று முடிவு செய்தேன்." தற்போது ஸ்வேதாவிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T13:28:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிகினி ஆடையில் இலங்கையின் பிரபல பெண்கள் பாடசாலை ஆசிரியை; சமூகவலைத்தள சர்ச்சைக்கு முடிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lanka-teacher-fashion-competition-bikini-is-fake-1784710505"></link>
            <id>https://jvpnews.com/article/lanka-teacher-fashion-competition-bikini-is-fake-1784710505</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பிகினி ஆடையில் இலங்கையின் பிரபல பெண்கள் பாடசாலை ஆசிரியை தொன்றியதாக சமூகவலைத்தளங்களில் பரவிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளிவைக்கப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பிகினி ஆடையில் இலங்கையின் பிரபல பெண்கள் பாடசாலை ஆசிரியை தொன்றியதாக சமூகவலைத்தளங்களில் பரவிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளிவைக்கப்பட்டுள்ளது.</p><p>

அதாவது பிகினி ஆடையில் தோன்றியவர் சமூகவலைத்தளங்களில் வெளியானது போல இலங்கை பெண்ணோ அல்லது இலங்கை ஆசிரியையோ அல்ல என்றும், அவர் அமெரிக்காவை சேர்ந்த&nbsp; &nbsp;பெண் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76392451-15c0-4069-9ae1-179e8a5a9d37/26-6a60856b7c687.webp' /></p><p></p><h2>இந்தச் செய்தி முற்றிலும் பொய்யானது</h2><p>
</p><p>


 இலங்கையின் முன்னணி பெண்கள் பாடசாலை ஒன்றில் பணியாற்றும் ஆங்கில ஆசிரியை ஒருவர் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அழகிப் போட்டியில் பிகினி அணிந்து பங்கேற்றதாகவும், அதையடுத்து அதே பாடசாலையின் ஒரு குழு அதிபரிடம் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கோரியதாகவும் கூறும் செய்தி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.</p><p></p><p>
</p><p>
ஆசிரியர் தொழிலுக்கு இவ்வாறான நடத்தை பொருத்தமற்றது எனக் கூறி பலரும் அந்தப் பதிவுகளைப் பகிர்ந்ததுடன், பல்வேறு கருத்துக்களையும் வெளியிட்டனர்.

 அது தொடர்பில் மெற்கொள்ளப்பட்ட உண்மைச் சரி பார்ப்பில், இந்தச் செய்தி முற்றிலும் பொய்யானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>
புகைப்படங்களில் இடம்பெற்றுள்ள பெண் ர் மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவைச் சேர்ந்த ஜெய்மே ஸ்டெஃபனி (Jeyme Stefany) ஆவார். அவர் குவாத்தமாலாவில் நடைபெற்ற “Monja Blanca” அழகிப் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
எந்தவித ஆதாரச் சரிபார்ப்பும் இன்றி, உள்ளூர் சமூக ஊடகப் பக்கங்கள் பலவும், இந்தத் தவறான தகவலைப் பகிர்ந்துள்ளனர். அத்துடன் இந்தப் போலிச் செய்தியை உண்மையென நம்பி அதனை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு கருத்துக்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T13:27:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு 9 மாதங்கள் சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/cricketer-david-warner-faces-9-months-in-prison-1784726905"></link>
            <id>https://canadamirror.com/article/cricketer-david-warner-faces-9-months-in-prison-1784726905</id>
            <summary type="text">&amp;nbsp; அவுஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு 9 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

சர்வதேச கிரிக்கெட்டில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அவுஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு 9 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. </p><p>

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டேவிட் வார்னர், பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்கு அணி தலைவராக செயல்பட்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bce6201-0ed5-43cc-bf5a-94c7c6472f06/26-6a60c57b520eb.webp' /></p><p> </p><p>&nbsp;கடந்த ஏப்ரல் மாதம், ஈஸ்டர் பண்டிகை அன்று, சிட்னியில் 3 கிளாஸ் வைன் குடித்து விட்டு டேவிட் வார்னர் காரை ஓட்டிச் சென்றார். 

போக்குவரத்து பொலிஸாரின் வழக்கமான சோதனையில் டேவிட் வார்னர், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகம் மது அருந்தியது உறுதியானது. </p><p>இது தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, டேவிட் வார்னர் மது அருந்தியதை ஒப்புக் கொண்டதாக அவரது வழக்கறிஞர் ஹில் குறிப்பிட்டார். 

மேலும் தனது செயல் முட்டாள்தனமானது என்றும், மது அருந்தி விட்டு வாடகை காரில் செல்லாமல் தானே வாகனத்தை ஓட்டிச் சென்றது தவறு எனவும் டேவிட் வார்னர் ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> 

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஆகஸ்ட் 18 ஆம் திகதி தண்டனை விவரங்களை அறிவிப்பதாக குறிப்பிட்டுள்ளனர். </p><p>

எனவே, டேவிட் வார்னருக்கு 9 மாதங்கள் சிறைத்தண்டனையும், 6 மாதங்கள் வாகனங்களை ஓட்டுவதற்கு தடையும், இந்திய ரூபாய் மதிப்பில் 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-22T13:26:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய ஒன்றியத்தின் வார்த்தைகளில் திருப்தி இல்லை..! காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eu-word-unsatisfactory-says-missing-persons-leader-1784721537"></link>
            <id>https://tamilwin.com/article/eu-word-unsatisfactory-says-missing-persons-leader-1784721537</id>
            <summary type="text">ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளின் வார்த்தைகளில் திருப்தி இல்லை என
காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சனி தெரிவித்துள்ளார்.

இன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளின் வார்த்தைகளில் திருப்தி இல்லை என
காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சனி தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்றையதினம்(22.07.2026) ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் சித்துப்பாத்தி இந்து
மயானத்தில் அமைந்துள்ள மனிதக் புதைகுழியை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு
கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>பிரச்சினைகளுக்கான தீர்வு&nbsp;</h2><p>அவர் மேலும்
தெரிவிக்கையில்,
</p><p>
எங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க தங்களால் முடியுமா என்று கூற
முடியாது. தங்களால் இயன்றவரை எங்களுக்காக வேலை
செய்ய முடியும் என்று கூறியுள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cce9dca9-af60-4d51-a809-e78fca185c5c/26-6a60b8af3c48f.webp' /></p><p>இங்கே நடந்தது
இனப்படுகொலைதான் என்று சர்வதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும், சர்வதேசத்தின் ஊடான
நீதி விசாரணை தான் எங்களுக்கும் வேண்டும். </p><p>உள்ளகப் பொறிமுறைகளையோ, உள்ளக
விசாரணைகளையோ, OMP அலுவலகங்களையோ நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.</p><p></p><h2>சர்வதேச விசாரணை</h2><p>
</p><p>
நாங்கள் எத்தனையோ ஆணை குழுக்களை சந்தித்துள்ளோம், எத்தனையோ ஆட்சியாளர்களை
சந்தித்துள்ளோம். இவை எல்லாவற்றையும் கடந்து தான் நாங்கள் சர்வதேச
விசாரணையை கோரியுள்ளோம். </p><p>சர்வதேசம் மீது உள்ள நம்பிக்கையில் தான் நாங்கள் கோரிக்கையை முன்வைத்து வருகிறோம். காணாமல் ஆக்கப்பட்ட எங்களது உறவுகளில் 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc9d29a7-4f82-4e61-bcd8-406731917ba8/26-6a60b8afe2523.webp' /></p><p> </p><p>அவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டும். கொடூர
யுத்தத்தின் பின்னர் கையளிக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை
சர்வதேசம்தான் விசாரணை செய்ய வேண்டும். </p><p>கொலையாளிகள் ஒருபோதும் எமக்குத்
தீர்வினை தர மாட்டார்கள். அவர்கள் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்
நிறுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T13:24:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காட்டுத்தீயில் பிரெஞ்சு தீயணைப்பு வீரர்கள் இருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-french-firefighters-killed-in-wildfire-1784726702"></link>
            <id>https://canadamirror.com/article/two-french-firefighters-killed-in-wildfire-1784726702</id>
            <summary type="text">&amp;nbsp; தென்மேற்கு பிரான்சில் உள்ள போர்டோ விமான நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட ஒரு பெரிய காட்டுத்தீயை அணைக்க முயன்றபோது இரண்டு பிரெஞ்சு தீயணைப்பு வீரர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தென்மேற்கு பிரான்சில் உள்ள போர்டோ விமான நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட ஒரு பெரிய காட்டுத்தீயை அணைக்க முயன்றபோது இரண்டு பிரெஞ்சு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.
</p><p>
விமான நிலைய வாகன நிறுத்துமிடத்திற்கு அருகிலுள்ள ஒரு புதரில் தொடங்கிய இந்தத் தீ, பின்னர் அருகிலுள்ள ஒரு கட்டிடத்திற்கும் பரவியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcb6e380-28ff-4659-a8e0-858f318993c7/26-6a60c4b07c914.webp' /></p><p>
</p><p>
இந்தத் தீயினால் ஏற்பட்ட பெரும் புகை மண்டலத்துடன், போர்டோ விமான நிலையத்திற்கு வரும் பல விமானங்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-22T13:23:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[கேள்வி கேட்டால் லத்தியால் பதில் சொல்லாதீங்க.. கொந்தளித்த பிரதீப் ரங்கநாதன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/don-t-answer-questions-with-lathis-pradeep-rangana-1784726484"></link>
            <id>https://cineulagam.com/article/don-t-answer-questions-with-lathis-pradeep-rangana-1784726484</id>
            <summary type="text">நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி மற்றும் தாக்குதல் சர்ச்சையை ஏற்படுத்தி, அதற்கு எதிராக பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி மற்றும் தாக்குதல் சர்ச்சையை ஏற்படுத்தி, அதற்கு எதிராக பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p><p>மாணவர்களுக்கு ஆதரவாக பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தற்போது நடிகர் பிரதீப் ரங்கநாதனும் குரல் கொடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80441622-35e3-4d24-ba78-a0b88d97fc9a/26-6a60c3d57a6d9.webp' /></p><h2>லத்தியால் பதில்
</h2><p>"கேள்வி கேட்டால் லத்தியால் பதில் சொல்லாதீங்க" என அவர் கடும் ஆவேசத்துடன் பேசி இருக்கிறார்.
</p><p>அந்த பதிவு வைரல் ஆகி வருகிறது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Don’t answer questions with lathis.<a href="https://x.com/hashtag/Neet?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Neet</a></p>&mdash; Pradeep Ranganathan (@pradeeponelife) <a href="https://x.com/pradeeponelife/status/2079899979804807383?ref_src=twsrc%5Etfw">July 22, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-07-22T13:21:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக்கிண்ண கோப்பை ஷாப்பிங் பையில் ; சமூக வலைத்தளங்களில் பரவும் காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/world-cup-shopping-bag-video-viral-social-media-1784704778"></link>
            <id>https://canadamirror.com/article/world-cup-shopping-bag-video-viral-social-media-1784704778</id>
            <summary type="text">ஸ்பெயின் அணி உலகக்கிண்ணத்தை வென்றதைத் தொடர்ந்து, வீரர் Marc Cucurella FIFA உலகக்கிண்ணத்தை ஒரு சாதாரண ஷாப்பிங் பைக்குள் வைத்தபடி எடுத்துச் செல்லும் காட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயின் அணி உலகக்கிண்ணத்தை வென்றதைத் தொடர்ந்து, வீரர் Marc Cucurella FIFA உலகக்கிண்ணத்தை ஒரு சாதாரண ஷாப்பிங் பைக்குள் வைத்தபடி எடுத்துச் செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
</p><p>
இந்தக் காட்சியை பார்த்த பலருக்கும் முதலில் எழுந்த கேள்வி, “உலகின் மிக மதிப்புமிக்க விளையாட்டு சின்னங்களில் ஒன்றான FIFA உலகக்கிண்ணத்தை இவ்வளவு சாதாரணமாக எடுத்துச் செல்ல முடியுமா?” என்பதாகும்.</p><p>

FIFA உலகக்கிண்ணம் சாதாரணமாக தயாரிக்கப்பட்ட ஒரு கோப்பை அல்ல. இதன் உயரம் 36.8 சென்டிமீற்றர் ஆகும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12409645-74f2-4f8b-bb97-4ab112664c3c/26-6a606f0cd9ec0.webp' /></p><p>மேலும் இதன் எடை 6.175 கிலோகிராம். 6 கிலோகிராமுக்கும் அதிகமான எடையைக் கொண்ட ஒரு பொருளை, எந்தவித சிரமமும் இல்லாமல் ஒரு சாதாரண பையில் எடுத்துச் செல்வது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
</p><p>
Cucurella அந்தக் கிண்ணத்தை எடுத்துச் செல்லும் விதம், அதிக எடை கொண்ட பொருளை கையாளும் ஒருவரின் உடல் மொழியாக தெரியவில்லை. மாறாக, மிகவும் இலகுவான பொருளை எடுத்துச் செல்வது போன்ற இயல்பான தோற்றத்தை அது வழங்குகிறது.</p><p>

இதனுடன் தொடர்புடைய மற்றொரு முக்கிய விடயம், FIFA உலகக்கிண்ணத்தின் பாதுகாப்பு நடைமுறைகளாகும். </p><p>அசல் உலகக்கிண்ணம், சாம்பியன் அணி வீரர்கள் கொண்டாட்டத்தின் போது கையில் ஏந்த அனுமதிக்கப்பட்டாலும், அதன் பின்னர் அது எப்போதும் FIFA அதிகாரிகளின் கண்காணிப்பிலேயே இருக்கும்.
</p><p>
அசல் கிண்ணத்தை வீரர்கள் தங்களது விருப்பப்படி மைதானம், உடைமாற்றும் அறை அல்லது பிற இடங்களுக்கு எடுத்துச் செல்வது வழக்கமான நடைமுறை அல்ல.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd2ca693-3f04-47de-b7db-4245bb50671e/26-6a606f0c37424.webp' /></p><p>இதன் காரணமாக, வெற்றிக் கொண்டாட்டங்கள், புகைப்பட நிகழ்ச்சிகள் மற்றும் ஊடக நிகழ்வுகளுக்காக FIFA தரப்பில் Replica Trophy எனப்படும் மாதிரி கிண்ணங்களும் பயன்படுத்தப்படுகின்றன.</p><p> அவை தோற்றத்தில் அசல் கிண்ணத்தைப் போன்றே இருந்தாலும், வேறு பொருட்களால் தயாரிக்கப்படுவதால் எடை குறைவாக இருக்கும்.
</p><p>
எனவே, Marc Cucurella எடுத்துச் சென்றது உண்மையான FIFA உலகக்கிண்ணம் அல்லாமல், கொண்டாட்டங்களுக்காக பயன்படுத்தப்படும் Replica Trophy ஆக இருக்கலாம் என்ற கருத்து சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனினும், அந்தக் கிண்ணம் Replica Trophy என அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இதுவரை வெளியாகவில்லை. </p><p>காட்சியில் தெரியும் விதம், கிண்ணத்தின் எடை மற்றும் FIFA-வின் பாதுகாப்பு நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த ஊகம் முன்வைக்கப்படுகிறது.
</p><p>
வைரலாகியுள்ள இந்தக் காட்சி, உலகக்கிண்ணம் தொடர்பான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அதன் உண்மையான மதிப்பு குறித்து மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-22T13:20:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் நடத்திய போரில் இறந்த ராணுவீரர்கள் மிகவும் குறைவு ; டிரம்ப் ஷாக் தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/very-few-soldiers-died-in-the-war-is-waged-trump-1784716347"></link>
            <id>https://canadamirror.com/article/very-few-soldiers-died-in-the-war-is-waged-trump-1784716347</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தான் நடத்திய போரில் இறந்த ராணுவீரர்கள் மிகவும் குறைவு என டிரம்ப் கூறியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா கடந்த 50 வருடங்களு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தான் நடத்திய போரில் இறந்த ராணுவீரர்கள் மிகவும் குறைவு என டிரம்ப் கூறியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா கடந்த 50 வருடங்களுக்கு மேலாகவே பல நாடுகளிலும் போர் தொடுத்து வருகின்றன. </p><p>அந்த போர்களில் எதிரி நாடுகள் தாக்கியதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலரும் உயிரிழந்திருக்கிறார்கள். 

அமெரிக்கா இதுவரை ஆப்கானிஸ்தான், ஈராக், வியட்நாம், கொரியா, வெனிசுலா, ஈரான் போன்ற நாடுகளின் போரை நடத்தி இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b2df269-5f74-4864-9ecf-a7c9a2b9d124/26-6a609c3d681f6.webp' /></p><p> </p><p>அதில் பல ஆயிரம் ராணுவ வீரர்கள் இறந்து போயிருக்கிறார்கள்.

நான்கு மாதங்களுக்கு முன்பு ஈரான் அணு ஆயுதம் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கூறி அமெரிக்காவும், இஸ்ரலும் சேர்ந்து அந்த நாட்டின் மீது போரை துவங்கியது.&nbsp;</p><p>
இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடத்திய போரால் பல்லாயிரம் வீரர்கள் இறந்து போய்விட்டதாக அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்ட துவங்கியிருக்கிறார்கள். </p><p>அதோடு அமெரிக்காவுக்கு பல கோடி மில்லியன்கள் செலவாகிவிட்டதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக தனது சமூக வலைதளத்தள பக்கத்தில் டொனால்ட் டிரம்ப் ,</p><p>

20 வருடங்கள் நடந்த ஆப்கானிஸ்தான் போரில் 2 ஆயிரம் வீரர்களும், 8 வருடங்கள் நடந்த ஈராக் போரில் 4,800 வீரர்களும், 19 வருடம் நடந்த வியட்நாம் போரில் 56,220 பேரும், 3 வருடங்கள் நடந்த கொரியன் போரில் 36,575 வீரர்களும், ஒரு நாள் நடந்த வெனிசுலா போரில் யாரும் இறக்கவில்லை, ஈரானுடான 4 மாத போரில் 18 அமெரிக்கா ராணுவ வீரர்கள் மட்டுமே இறந்துள்ளனர் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்</p>]]></content>
            <updated>2026-07-22T13:19:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[புடின் படைகளுக்கு எதிராக உக்ரைனின் இரகசிய ஆயுதம்: அச்சத்தில் ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-s-secret-weapon-striking-fear-to-russia-1784726187"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-s-secret-weapon-striking-fear-to-russia-1784726187</id>
            <summary type="text">உக்ரைனின் Flamingo ஏவுகணைகள் ரஷ்யாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.மலிவு விலை&amp;nbsp;ஏவுகணை 
ரஷ்யா தலைவர் விளாடிமிர் புடினின் படைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் Flamingo ஏவுகணைகள் ரஷ்யாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.</p><h2>மலிவு விலை&nbsp;ஏவுகணை </h2><p>
ரஷ்யா தலைவர் விளாடிமிர் புடினின் படைகளை சமாளிக்க உக்ரைன் புதிய ஆயுதத்தை இறக்கியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afbd30fb-0b31-469a-a706-2bcc4f858b4d/26-6a60c391f194a.webp' />&nbsp;</p><p></p><p>
அது குப்பைக் கிடங்குகளில் இருந்து வாங்கப்பட்ட இயந்திரங்களைக் கொண்ட 'Flamingo' என்ற ஏவுகணை ஆகும். </p><p>

மலிவு விலையில் கிடைக்கும் இந்த ஏவுகணை புடினின் படைகளுக்கு எதிரான உக்ரைனின் போரில் சமநிலையை ஏற்படுத்த அச்சுறுத்துவதாக கூறப்படுகிறது.
</p><p>
வெளிநாட்டு செய்தியாளர் கிறிஸ் ப்ளீசன்ஸ் இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் விளக்குகையில், 

FP-5 Flamingo ஏவுகணைகள் ஜெலென்ஸ்கியின் ஆட்களை முதல் முறையாக ரஷ்யப் பிரதேசத்தின் ஆழத்தில் உள்ள இலக்குகளைத் தாக்க அனுமதிக்கின்றன என்றார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5458fea6-dc4f-46b1-8054-47bafccdd083/26-6a60c392b2990.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T13:19:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் நடைப்பெறுகின்ற குற்றச்செயல்களில் அரசுக்கும் தொடர்புள்ளது! சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-involved-ongoing-crimes-alleges-premachandran-1784719528"></link>
            <id>https://tamilwin.com/article/govt-involved-ongoing-crimes-alleges-premachandran-1784719528</id>
            <summary type="text">நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மற்றும் செம்மணிப் படுகொலை ஆகிய விடயங்கள் வெளிச்சத்திற்கு வரக்கூடிய ஒரு நிலையில் அதனைத்
திசை திரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மற்றும் செம்மணிப் படுகொலை ஆகிய விடயங்கள் வெளிச்சத்திற்கு வரக்கூடிய ஒரு நிலையில் அதனைத்
திசை திருப்புவதற்காகவே புத்தர் கோயிலைக் கட்டுகிறார்களோ என சந்தேகம் எழுவதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
மட்டக்களப்பு - வாவிக்கரை வீதியில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை
முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2> நம்பிக்கையில்லாத் தீர்மானம்</h2><p>
</p><p>
அவர் மேலும் குறிப்பிடுகையில்,</p><p>
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தைத் தொடர்ந்து, நேற்று முன்தினம்(20.07.2026) நீதி
அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் பேரவைத்தலைவரிடம்
கையளிக்கப்பட்டது. </p><p>அது ஒருபக்கம் இருக்க, கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தினுடைய தூதுவர்கள் இன்று(22.07.2026) செம்மணிப் புதைகுழியை பார்வையிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ea092b9-2018-4153-bd05-9081d38471f8/26-6a60aef79c1bb.webp' /></p><p>
</p><p>
அங்கு 450ற்கும் மேற்பட்ட
உடலங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது இவ்வாறிருக்க நேற்றைய தினம் திருகோணமலை - கன்னியா, வெந்நீரூற்றில் ஒரு
புத்தர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.</p><p>

இவற்றையெல்லாம் பார்க்கின்ற பொழுது உண்மை வெளிப்படுகின்ற சந்தர்ப்பத்தில் அரசாங்கம் அதனை மூடிமறைப்பதற்கான ஒரு செயலை செய்வதாகவே தோன்றுகிறது.
</p><p>
ஏற்கனவே
கன்னியா விடயத்தைப் பொறுத்தவரையில், 
அங்கு கட்டுமானங்கள் எதுவும் செய்யக்கூடாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p></p><h2>புத்தர் கோயில்&nbsp;</h2><p>
</p><p>அங்கு ஒரு புத்தர் கோயில் கட்டுவதற்காக நேற்றைய தினம்(21) அடிக்கல் நாட்டும்
நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.&nbsp;&nbsp;</p><p>இதனை பார்க்கின்ற பொழுது ஏற்கனவே
இருந்த நீதிமன்ற ஆணைகளுக்கு அப்பாற்பட்டுச் சென்று, இராணுவமோ அல்லது புத்த
பிக்குகளோ இதனை தங்களுடைய விருப்பத்திற்குச் செய்கிறார்களா, இல்லை அரசாங்கத்தினுடைய
வழிகாட்டுதலின்படி இவை நடைபெறுகிறதா என்றொரு கேள்வி
எழுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbd3195c-8ed9-4aaf-881b-33793666897f/26-6a60aef84bff0.webp' /></p><p>
</p><p>
இவ்வளவு நாளும் இல்லாமல் திடீரென்று நேற்றைய தினம்(21) அதைக் கட்ட
வேண்டிய ஒரு தேவை ஏன் ஏற்பட்டது? 

அத்துடன் செம்மணிப் புதைகுழி தொடர்பாகவும் ஒரு பன்னாட்டு நீதி
கோரப்படுகிறது. </p><p>அரசாங்கம் நிச்சயமாக அதற்கு ஒரு தீர்வைக் கொண்டுவர மாட்டாது.
ஏனென்றால் இந்த அரசாங்கத்திற்கும் அதில் ஒரு பங்கு இருக்கிறது என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T13:16:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் மோசடி வழக்குகளில் சிக்கியுள்ள மகிந்தவின் புதல்வர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-import-fraud-case-yoshitha-rohitha-1784694503"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-import-fraud-case-yoshitha-rohitha-1784694503</id>
            <summary type="text">வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறையை பயன்படுத்தி மோசடியான முறையில் வாகன இறக்குமதி செய்த கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறையை பயன்படுத்தி மோசடியான முறையில் வாகன இறக்குமதி செய்த குற்றச்சாட்டொன்றை முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் புதல்வர்கள் எதிர்கொண்டுள்ளனர்.
</p><p>
வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறை மூலம் அரசாங்கத்திற்கு 2.4 பில்லியன் ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ருவன்திலக ஜயகொடி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பாரியளவிலான முறைகேடுகள்</h2><p>

குறித்த பாரிய அளவிலான முறைகேடுகள் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பதவிக்காலத்தில் நிகழ்ந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/519db4b7-f595-4db2-8995-cbf8183fe716/26-6a6051d1a9cbc.webp' /></p><p>
</p><p>
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட இந்ருவன்திலக ஜயகொடிதத் திட்டத்தின் கீழ், 640 வாகனங்களை இறக்குமதி செய்ய இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே சிறப்புரிமைகள் வழங்கப்பட்டதாக, பிரதம கணக்காய்வாளரின் அறிக்கைகளை மேற்கோள் காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம்சாட்டியுள்ளார். </p><p>இந்த செயல்முறை தொடர்பான சரியான தகவல்கள் பிரதம கணக்காய்வாளருக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

வெளிநாடு செல்லாத நான்கு நபர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டது, விண்ணப்பத்தில் தொழில் குறிப்பிடப்படாத 60 நபர்களுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டது, சிலருக்கு இரண்டு வீதம் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டது மற்றும் 4 மாதங்கள் போன்ற மிக குறுகிய காலத்திற்கு வெளிநாடு சென்று திரும்பிய நபர்களுக்கும் இந்த சலுகை வழங்கப்பட்டது போன்ற பல ஊழல்களை நாடாளுமன்ற உறுப்பினர் சபையின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தார்.
</p><p>
எந்தவொரு அறிவியல் அடிப்படையுமின்றி சொகுசு வாகனங்களுக்கான 6 மில்லியனிலிருந்து 12 மில்லியன் ரூபாவாக வரி வரம்பு உயர்த்தப்பட்டதால், அரசாங்கத்திற்கு 2.4 பில்லியன் ரூபா வரி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ருவன்திலக ஜயகொடி குற்றம்சாட்டிள்ளார்.</p><h2>சொகுசு வாகனங்கள் இறக்குமதி</h2><p>இது இந்த நாட்டின் வரி செலுத்தும் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டதற்கு சமம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03021692-38f3-49f4-a5c0-5f9b08956d59/26-6a6051d273187.webp' /></p><p>
இந்த அனுமதிப்பத்திர முறையைத் தவறாகப் பயன்படுத்தி, ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த யோஷித ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச ஆகியோரும் இரண்டு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
CAB 7373 மற்றும் CAB 7171 ஆகிய எண்களைக் கொண்ட வாகனங்கள் இந்த முறையில் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், அவ்வாறாக பாரிய அளவிலான நிதி மோசடியில் ஈடுபட்ட அனைவர் மீதும் உடனடியாக சட்டம் நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><p><br></p><hr><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Mp0jpPJOagE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-22T13:12:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுமார் 25 நாட்கள் கடலில் மிதந்த புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு: 140க்கும் மேற்பட்டோர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tragedy-mauritania-140-dead-refugee-boat-sinks-1784724826"></link>
            <id>https://tamilwin.com/article/tragedy-mauritania-140-dead-refugee-boat-sinks-1784724826</id>
            <summary type="text">ஆபிரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பாவை நோக்கி அகதிகள் மற்றும்
புலம்பெயர்ந்தோரை ஏற்றிச்சென்ற படகு ஒன்று கடலில் தத்தளித்ததில், 140க்கும்
மேற்பட்டோர் உயிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆபிரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பாவை நோக்கி அகதிகள் மற்றும்
புலம்பெயர்ந்தோரை ஏற்றிச்சென்ற படகு ஒன்று கடலில் தத்தளித்ததில், 140க்கும்
மேற்பட்டோர் உயிரிழந்தும் மாயமாகியும் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் அகதிகள்
முகமை தெரிவித்துள்ளது.
</p><p>
தி கம்பியாவின் பாஃபுலோட்டோ பகுதியிலிருந்து புறப்பட்ட இந்த நடுக்கடல் படகு,
எரிபொருள் தீர்ந்ததால் சுமார் 25 நாட்கள் கடலிலேயே மிதந்து தத்தளித்துள்ளது.</p><p></p><h2>&nbsp;கடற்பகுதியில் சோகம்</h2><p>
</p><p>
ஜூலை 18 அன்று மவுரித்தேனியாவின் நௌதிபூ துறைமுகத்தை வந்தடைந்த போது, அதில் 38
பேர் மட்டுமே உயிருடனும் பலரது சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.</p><p>

உயிர்தப்பியவர்களில் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இழந்து
தவிக்கும் இரண்டு குழந்தைகளும் அடங்குவர்.

அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e60d0f59-0717-4169-b72a-c7da61b928d8/26-6a60c1a340bd1.webp' /></p><p>
</p><p>உயிரிழந்தவர்கள் அனைவரும் சஹாரா ஆபிரிக்கப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மவுரித்தேனியக் கடலோரக் காவல் படையின் தகவலின்படி, 160 பயணிகளுடன் புறப்பட்ட
இந்த படகில் 122 பேரைக் காணவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
ஜூலை 14 முதல் 18 வரை மவுரித்தேனியா கடலோரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மூன்று
வெவ்வேறு மீட்பு நடவடிக்கைகளில் 387 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட போதிலும்,
இந்த பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது.</p><p></p><h2>140க்கும் மேற்பட்டோர் பலி</h2><p>
</p><p>
ஸ்பெயின் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள கேனரி தீவுகளை அடையும் இந்த
அட்லாண்டிக் கடல் பாதை, உலகிலேயே மிகவும் அபாயகரமான புலம்பெயர்வுப் பாதைகளில்
ஒன்றாகக் கருதப்படுகிறது.
</p><p>
தகுதியற்ற மற்றும் அதிக கூட்ட நெரிசல் கொண்ட படகுகளில் நீண்ட தூரம் பயணிப்பதே
அதிக அளவிலான உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb81fae3-96e1-48df-89d0-3a1cc768530f/26-6a60c1a3e5c82.webp' /></p><p>
</p><p>
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் மவுரித்தேனிய அரசு எடுத்து வரும் கடுமையான
நடவடிக்கை காரணமாக, பெரும்பாலான அகதிகள் நீண்ட மற்றும் அதிக ஆபத்தான
கடல்பாதைகளைத் தேர்ந்தெடுக்க நிர்பந்திக்கப்படுகின்றனர்.
</p><p>
இளைஞர்கள் இத்தகைய ஆபத்தான பயணங்களை மேற்கொள்வதைத் தடுக்க கல்வி மற்றும்
வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T13:12:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு துண்டு பூசணிக்காய் போதும்.., சுவையான அல்வா செய்யலாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/halwa-recipe-in-tamil-1784725801"></link>
            <id>https://news.lankasri.com/article/halwa-recipe-in-tamil-1784725801</id>
            <summary type="text">அல்வா என்றாலே வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடித்தமான ஒரு இனிப்பு.

அந்தவகையில், தித்திக்கும் பூசணி அல்வா எப்படி செய்வது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அல்வா என்றாலே வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடித்தமான ஒரு இனிப்பு.
</p><p>
அந்தவகையில், தித்திக்கும் பூசணி அல்வா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.</p><p></p><p>
</p><h2>
தேவையான பொருட்கள்</h2><ul><li>

வெண் பூசணி- 1துண்டு</li><li> 
நெய்- 3 ஸ்பூன்
</li><li>முந்திரி- 10
</li><li>சர்க்கரை- 1 கப்
</li><li>குங்குமப்பூ- 3 இதழ்
</li></ul><h2>
செய்முறை
</h2><p>
முதலில் சிறிதளவு பாலில் குங்குமப்பூ சேர்த்து ஊறவைத்துக்கொள்ளவும்.
</p><p>
பின் வெண் பூசணியை நன்கு துருவி பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.
</p><p>
அடுத்து ஒரு வாணலில் நெய் சேர்த்து முந்திரி பருப்பை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/020ffa52-3273-4334-95ee-839c1dca28e8/26-6a60c12b555da.webp' /></p><p>இதற்கடுத்து அதே நெய்யில் துருவிய வெண் பூசணியை சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
</p><p>
பின்னர் இதில்பூசணியை பிழிந்து எடுத்த தண்ணீரை அரை கப் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.
</p><p>
இதனைத்தொடர்ந்து இதில் சர்க்கரை சேர்த்து வதக்கி குங்குமப்பூ பால் சேர்த்து கிளறிக்கொள்ளவும்.
</p><p>
இதில் அவ்வப்போது நெய் சேர்த்து கிளறி கெட்டியாக வந்ததும் வறுத்த முந்திரி சேர்த்தால் சுவையான பூசணி அல்வா தயார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T13:10:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கழுத்தை அறுத்துக் கொலை செய்த சுகாதாரப் பணியாளருக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/death-sentence-for-healthcare-worker-1784721601"></link>
            <id>https://ibctamil.com/article/death-sentence-for-healthcare-worker-1784721601</id>
            <summary type="text">நபரொருவரை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாக அனுராதபுர உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அரசாங்க மருத்துவமனை சுகாதாரப் பணியாளர் ஒரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நபரொருவரை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாக அனுராதபுர உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அரசாங்க மருத்துவமனை சுகாதாரப் பணியாளர் ஒருவருக்கு, வட மத்திய மாகாண உயர் நீதிமன்ற நீதிபதி இந்திகா அத்தநாயக்க இன்று (22) மரண தண்டனை விதித்தார்.
</p><p>
தீர்ப்பை அறிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான கொலைக் குற்றச்சாட்டை அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது என்று கூறினார்.</p><h2>சுகாதார உதவியாளருக்கே&nbsp; மரண தண்டனை</h2><p>அதன்படி, ஜனாதிபதியால் நிர்ணயிக்கப்படும் ஒரு திகதி மற்றும் நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் சுயநினைவு திரும்பும் வரை தூக்கில் இடப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9c74305-f650-445a-87e6-446f0d96b3f9/26-6a60c07964777.webp' /></p><p>
</p><p>
சுகாதாரத் துறையில் பணிபுரியும், எப்பாவல பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.டி. தேவானந்தா என்ற சுகாதார உதவியாளருக்கே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டது.</p><p></p><h2>அனுராதபுர உயர் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் வழக்கு</h2><p>
</p><p>
எப்பாவலவில் உள்ள 20 ஏக்கர் நிலத்தில் வசித்துவந்த பி. மஹிந்த குமார என்ற 'பெலிகலா' என்பவரைக் கொலை செய்ததற்காக, இலங்கை தண்டனைச் சட்டத்தின் 296-வது பிரிவின் கீழ், அனுராதபுர உயர் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் வழக்குத் தொடுத்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a064cc26-0c5b-438b-93b5-aa78cd784393/26-6a60c07a14c06.webp' /></p><p>
</p><p>
தம்புட்டெகம நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற பூர்வாங்க விசாரணையைத் தொடர்ந்து, இவ்வழக்கு மேலதிக விசாரணைக்காக அனுராதபுர உயர் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டது.
</p><p>
இவ்வழக்கில் சட்டமா அதிபர் சார்பில் அரச சட்ட ஆலோசகர் யோமாலி நாகொட விதானவும், குற்றவாளி சார்பில் ஜனாதிபதி சட்ட ஆலோசகர் ஸ்ரீநாத் பெரேராவும் முன்“னிலையானார்கள்.



அப்போதைய அனுராதபுர போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி எச். ஏ. கருணாதிலக மற்றும் ஒரு குழுவினர் இந்த வழக்கில் சாட்சிகளாகப் பெயரிடப்பட்டனர்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T13:07:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் உறவுகளை ஆரத்தழுவிக் கண்கலங்கிய ஐரோப்பிய ஒன்றியத் தூதர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eu-ambassador-strained-relations-in-semmani-1784724570"></link>
            <id>https://tamilwin.com/article/eu-ambassador-strained-relations-in-semmani-1784724570</id>
            <summary type="text">ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி,
நெதர்லாந்து நாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர்,
வலிந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி,
நெதர்லாந்து நாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர்,
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதிகளை நேரில்
சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டுறிந்து மனுவையும் பெற்றுக்கொண்டனர்.
</p><p>இதன்போது&nbsp;ஐரோப்பிய ஒன்றியத் தூதர்&nbsp;செம்மணியில் உறவுகளை ஆரத்தழுவிக் கண்கலங்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>தூதுவர்களிடம் கோரிக்கை மனு</h2><p>
யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேற்கொள்ளப்பட்டு
வரும் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளைப் பார்வையிடுவதற்காக, இன்று புதன்கிழமை
முற்பகல் 9 மணியளவில் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கார்மென் மொரேனோ, ஜேர்மனி,
பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ஐரோப்பிய
ஒன்றியத்தின் உயர் அதிகாரிகள் என 8 உறுப்பினர்கள் வருகை தந்திருந்தனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/m8woVZt9kng" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>தூதுவர்களின் வருகையையொட்டி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின்
சங்கத்தினரும் சிவில் அமைப்புக்களும் இணைந்து செம்மணி - சித்துப்பாத்தி
மயானத்துக்கு முன்னால் ஏ - 9 வீதியோரமாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
</p><p>
இதன்போது, போராட்டம் நடைபெற்ற பகுதிக்குச் சென்ற தூதுவர்கள் குழுவினர்,
செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயான வாயிலில் வைத்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் உறவுகளைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
</p><p>ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ உறவினர்களை
ஆரத்தழுவிக் கண்கலங்கியமையுடன், அவர்களின் கோரிக்கைகளையும் கவனமாகக்
செவிமடுத்தார்.</p><p> தொடர்ந்து, பாதிக்கப்பட்ட உறவினர்களின் சங்கம் சார்பில்
தூதுவர்களிடம் கோரிக்கை மனுவும் கையளிக்கப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T13:05:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச ரீதியில் முன்னேறியுள்ள இலங்கையின் கடவுச்சீட்டு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-passport-ranked-94-place-henley-passport-1784722453"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-passport-ranked-94-place-henley-passport-1784722453</id>
            <summary type="text">
2026 ஆம் ஆண்டுக்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கையின் கடவுச்சீட்டு 94-வது இடத்திற்கு முன்னேறி, சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத மிக உயர்ந்த தரவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
2026 ஆம் ஆண்டுக்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கையின் கடவுச்சீட்டு 94-வது இடத்திற்கு முன்னேறி, சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத மிக உயர்ந்த தரவரிசையைப் பதிவு செய்துள்ளது.</p><p>

சமீபத்திய தரவரிசையின்படி, 2024 மற்றும் 2025 ஆகிய இரு ஆண்டுகளிலும் 96-வது இடத்தில் இருந்த இலங்கை, தற்போது இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளது. </p><p>

இதற்கு முன்னர் இலங்கையின் கடவுச்சீட்டு 2021-ல் 107-வது இடத்திலும், 2022-ல் 102-வது இடத்திலும், 2023-ல் 100-வது இடத்திலும் தரவரிசைப்படுத்தப்பட்டிருந்தது.</p><p></p><h2>மிகச் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு</h2><p>
</p><p> 
கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் முன்-விசா பெறாமல் எத்தனை நாடுகளுக்குப் பயணிக்க முடியும் என்பதன் அடிப்படையில் இந்த ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு தரவரிசையை நிர்ணயிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aca465a7-cea0-45af-be75-90b92aa165f1/26-6a60c012a362c.webp' /></p><p>
</p><p>
2026-ஆம் ஆண்டின் இப்பட்டியலில் சிங்கப்பூர் கடவுச்சீட்டு உலகின் மிகச் சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.</p><p> 

இதேவேளையில், ஆப்கானிஸ்தான் 104-வது இடத்தைப் பிடித்துப் பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது.</p><p>

இந்தக் குறியீடு மொத்தம் 199 நாடுகளின் கடவுச்சீட்டுகளையும் 227 பயண இடங்களையும் உள்ளடக்கி, விசா இல்லாத பயண அணுகலின் அடிப்படையில் உலகளாவிய ஒப்பீட்டை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T13:05:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசாவிற்காக விண்ணப்பிப்பவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்! நிரந்தரத் தடை விதிக்கப்படலாமென எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/important-notice-for-visa-applicants-1784724005"></link>
            <id>https://tamilwin.com/article/important-notice-for-visa-applicants-1784724005</id>
            <summary type="text">அமெரிக்க விசா விண்ணப்பதாரர்கள் குற்றப் பின்னணிகள் தொடர்பில் தவறான தகவல்களை வழங்கினால், எதிர்காலத்தில் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு நிரந்தரத் தடை விதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க விசா விண்ணப்பதாரர்கள் குற்றப் பின்னணிகள் தொடர்பில் தவறான தகவல்களை வழங்கினால், எதிர்காலத்தில் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு நிரந்தரத் தடை விதிக்கப்படலாம் என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது.&nbsp;</p><p>இது தொடர்பில் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அறிவிப்பில் மேலும்,</p><p>
சிறிய குற்றச் செயல்களாக இருந்தாலும் அவை விசா மறுப்புக்கு வழிவகுக்கும். தூதரக அதிகாரிகளிடம் விண்ணப்பதாரர்களின் குற்றப் பின்னணி விபரங்கள் இருப்பதாகவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5be2417d-a7c4-43a1-8ec2-d92bf9ae5cee/26-6a60bf5068866.webp' /></p><h2>உண்மையை மட்டுமே வழங்க வேண்டும்</h2><p>
</p><p>
அத்துடன் விண்ணப்பங்களின் போதும் நேர்காணல்களின் போதும் முழுமையான உண்மையை மட்டுமே வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
பொய்யான தகவல்களை அளித்தால் எதிர்காலப் பயணங்கள் நிரந்தரமாகத் தடை செய்யப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Criminal convictions can permanently bar you from entering the United States. Even minor offenses can trigger visa denials. Consular officers have access to your criminal background and will discover past violations or arrests. Tell the truth on your application and in your… <a href="https://t.co/wpDQdIFLEn">pic.twitter.com/wpDQdIFLEn</a></p>&mdash; U.S. Embassy in Sri Lanka (@USEmbSL) <a href="https://x.com/USEmbSL/status/2079819083093053869?ref_src=twsrc%5Etfw">July 22, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T13:04:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்னியா வெந்நீரூற்று அருகே புதிய கட்டுமானம் - விமர்சனங்களுக்கு பதிலடிக் கொடுத்த தொல்பொருள் அதிகாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-construction-near-kaniya-hot-spring-1784725247"></link>
            <id>https://tamilwin.com/article/new-construction-near-kaniya-hot-spring-1784725247</id>
            <summary type="text">திருகோணமலை - கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள 136 ஆவது
தொல்பொருள் நிறைவு ஆண்டை முன்னிட்டு, அந்த இடத்தை சிதைவடையாது பாதுகாக்கும் நோக்கில...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள 136 ஆவது
தொல்பொருள் நிறைவு ஆண்டை முன்னிட்டு, அந்த இடத்தை சிதைவடையாது பாதுகாக்கும் நோக்கில் புதிய கட்டுமானத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்றுள்ளது.
</p><p>
இந்த நிகழ்வுகள் இன்று(22.07.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p> 

திருகோணமலை மாவட்ட அரச அதிபர் டபிள்யு.எம்.ஹேமந்தகுமார இதில் முதன்மை
விருந்தினராகக் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டு வைத்துள்ளார்.</p><p></p><p> 

அத்துடன், வில்கம் விஹாரையின் நாயக்க தேரர் அம்பிட்டியே சீலவண்ஸ திஸ்ஸ தேரர் அனுஷ்டானம் வழங்கி வைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f565a5c9-6cbe-4085-adb2-ed615576aef3/26-6a60bf841db02.webp' /></p><p> 

இதனைத் தொடர்ந்து, திருகோணமலை மாவட்ட தொல்பொருள் திணைக்கள உதவிப்பணிப்பாளர், பிரதேச கிராம
சேவகர், இஸ்லாமிய மத குரு மற்றும் துறைசார் அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். </p><h2>

வரலாற்றுப் பின்னணியும் காணி உரிமையாளரின் வாதமும்</h2><p>
சோழர் ஆட்சிக்காலத்தில் தமிழ்மொழி மூலம், தமிழர்களான பௌத்தர்களுக்குப் பௌத்த
கல்வி கற்பிக்கும் சைத்தியம் ஒன்று அங்கு காணப்பட்டது என்று வரலாறுகள்
கூறுகின்றன. </p><p>

அதன் பின்னர் அந்த இடத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர்
பிள்ளையார் கோயில் ஒன்று அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தப்பட்டுள்ளன.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1005437725610145%2F&show_text=true&width=476&t=0" width="476" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>இந்தக் காணி மடத்தடி முத்துமாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமானது எனக்
குறிப்பிடும் உரிமையாளரான கோகிலவதனி கணேஷ் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,</p><p> 


கடந்த 2002 ஆம் ஆண்டு சிதிலமடைந்த கோயிலைப் புனர்நிர்மாணம் செய்ய நாம் முயன்றபோது
அது தொல்பொருள் திணைக்களத்தால் தடுக்கப்பட்டது. 

இது தொடர்பில் நான் தொல்பொருள்
திணைக்களத்துக்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்
செய்தேன்.</p><p> 

இந்த நிலையில், 2022ஆம் ஆண்டில் அந்த இடத்தில் எந்தக் கட்டுமானங்களும்
அமைக்கக் கூடாது என்று மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டார் என்றார். 

எனினும், தற்போது நீதிமன்ற உத்தரவையும் மீறி குறித்த இடத்தில் கட்டுமான
வேலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. </p><h2>



தொல்பொருள் திணைக்களத்தின் விளக்கம்</h2><p>
அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் உள்ள புராதன அழிவடைந்த சிதிலங்களை ஒன்றிணைத்து, அந்தப் புராதன
கட்டுமானத்தைப் பாதுகாப்பதற்காகவே இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுகின்றது
என திருகோணமலை மாவட்ட தொல்பொருள்
திணைக்கள உதவிப் பணிப்பாளர் டபிள்யு.யு.சுரங்க பெரேரா தெரிவித்தார்.</p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> 

கன்னியாவில் இன்று நடைபெறும் நிகழ்வு எந்த மதமும் சார்ந்தது அல்ல. இலங்கையின்
புராதன தொல்பொருள் இடமொன்றை பாதுகாக்கும் முயற்சியே இதுவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86dbfc07-bbc9-4397-95a6-f4b37827f555/26-6a60bf8608363.webp' /></p><p> </p><p>இதற்குச் சிலர்
இன, மத சாயங்களைப்பூச நினைக்கின்றனர். அது அவ்வாறான ஒன்றல்ல.

தற்போது நடைமுறைப்படுத்தப்படும் இலங்கையின் 1,000 தொல்லியல் பகுதிகளைப்
பாதுகாக்கும் திட்டத்தின் கீழ், இன்னும் சில தினங்களில் சேருநுவர பிரதேச
செயலகப் பிரிவின் சோமாவதி பாதுகாப்பு அரண் பகுதியில் அமைந்துள்ள
சோழர்காலத்தைச் சேர்ந்த ஸ்ரீ மங்களபுரம் சிவன் ஆலயத்தைப் பாதுகாக்கும்
வகையிலான கட்டுமானமும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
</p><p>
 எனவே, தொல்லியல் திணைக்களம் மத,
இனவாத நோக்குடன் செயற்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன் என்றார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd895a6b-9a3a-46be-b3ca-8f8252e47c87/26-6a60bf853645c.webp' />&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T13:03:07+00:00</updated>
        </entry>
    </feed>
