<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-29T23:27:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய கப்பல்களை மூன்று நாட்கள் கண்காணித்த ராயல் நேவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/royal-navy-tracks-russian-ships-in-uk-waters-1788045786"></link>
            <id>https://news.lankasri.com/article/royal-navy-tracks-russian-ships-in-uk-waters-1788045786</id>
            <summary type="text">Royal Navy tracks Russian ships in UK waters: பிரித்தானிய கடற்படை ரஷ்ய கப்பல்களை மூன்று நாட்கள் கண்காணித்துள்ளது.

ரஷ்ய கப்பல்களை கண்காணித்த பிரித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Royal Navy tracks Russian ships in UK waters: பிரித்தானிய கடற்படை ரஷ்ய கப்பல்களை மூன்று நாட்கள் கண்காணித்துள்ளது.
</p><h2>
ரஷ்ய கப்பல்களை கண்காணித்த பிரித்தானிய கடற்படை</h2><p>பிரித்தானிய கடற்படையான Royal Navy, கடந்த வாரம் மூன்று நாட்கள் தொடர்ந்து ரஷ்ய கப்பல்களை கண்காணித்தது.
</p><p>
இந்த “தீவிரமான” 72 மணி நேர நடவடிக்கையில், நான்கு ரஷ்ய கப்பல்கள் வடக்குக் கடலிலிருந்து இங்கிலாந்து சேனல் வழியாக பயணித்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/401a00fa-430d-47b6-86a5-35dfbd484cb8/26-6a9369dbb26fa.webp' /></p><p>

இந்த நடவடிக்கையில் HMS Duncan, HMS St Albans, HMS Severn எனும் மூன்று ராயல் நேவி கப்பல்களும், ஒரு Merlin ஹெலிகாப்டரும் பங்கேற்றன.</p><p> 

ரஷ்யாவின் Admiral Levchenko எனும் டெஸ்ட்ராயர், தடை விதிக்கப்பட்ட General Skobelev மற்றும் Sparta எனும் சரக்கு கப்பல்களை டோவர் நோக்கி அழைத்துச் சென்றது.</p><p> இதற்கு பதிலாக, ரஷ்யா தனது Neustrashimy எனும் போர்க்கப்பலை பாதுகாப்பிற்காக அனுப்பியது.
</p><p></p><h2>பிரித்தானிய பாதுகாப்பிறகு அபாயம்</h2><p>பிரித்தானிய கடற்படைத் தளபதி Gen Gwyn Jenkins, “இது நாட்டின் பாதுகாப்பிறகு ஏற்றுக்கொள்ள முடியாத அபாயம். எங்கள் கூட்டாளிகளுடன் இணைந்து, ரஷ்யாவை அதன் முக்கிய பணிகளில் இருந்து விலக்கி வைத்திருக்கிறோம்” எனக் கூறினார்.</p><p>

ராயல் நேவி, கடந்த ஜூலை மாதத்தில் 21 நாட்கள் ரஷ்ய கப்பல்களை கண்காணித்தது. இது கடந்த ஆண்டை விட 25 சதவீதம் அதிகம். </p><p>மேலும், ஜூன் மாதத்தில் பிரித்தானிய ராயல் மரைன்ஸ், Smyrtos எனும் ரஷ்ய எண்ணெய் கப்பலை கைப்பற்றியது. இது தடை விதிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட கப்பல்களில் ஒன்றாகும்.
</p><p></p><p>இந்நிலையில், பிரித்தானிய பிரதமர் ஆன்டி பர்னாம், உக்ரைனுக்கு நீண்ட தூர Scalp ஏவுகணை பாகங்கள் தொடர்பான வரைபடங்களை வழங்குவதாக அறிவித்துள்ளார். இதனால், பிரித்தானியா “தீயுடன் விளையாடுகிறது” என ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
</p><p>
இந்த சம்பவம், ரஷ்யா-பிரித்தானியா உறவுகளில் அதிகரித்து வரும் பதற்றத்தை வெளிப்படுத்துகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T23:20:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவத் துறையில் பிளவை ஏற்படுத்தும் யோசனைக்கு GMOA கடும் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gmoa-strongly-opposes-create-division-medical-sect-1788044964"></link>
            <id>https://jvpnews.com/article/gmoa-strongly-opposes-create-division-medical-sect-1788044964</id>
            <summary type="text">விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட மருத்துவப் பிரிவினரிடையே மோதல்களை உருவாக்கி, நாட்டின் இலவச சுகாதார சேவையை நெருக்கடிக்குள்ளாக்கும் அரசியல் நிகழ்ச்சி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட மருத்துவப் பிரிவினரிடையே மோதல்களை உருவாக்கி, நாட்டின் இலவச சுகாதார சேவையை நெருக்கடிக்குள்ளாக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு எதிராக எதிர்கால நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA)தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>இலவச சுகாதார சேவையை சர்வதேசத் தரத்தில் கொண்டு செல்வதற்கு அனைத்து மருத்துவப் பிரிவினருக்கும் இடையிலான ஒத்துழைப்பும், அமைப்பின் உள் ஸ்திரத்தன்மையும் அத்தியாவசியமானது என அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>

கடந்த காலத்தில் நாட்டில் நிலவிய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை காரணமாக, விசேட வைத்திய நிபுணர்கள் உட்பட மருத்துவர்களை நாட்டிற்குள் தக்கவைத்துக்கொள்வது பெரும் சவாலாக மாறியிருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/951d3aa1-b30f-418b-9a39-a94e2067e3f7/26-6a9366a61b1b2.webp' /></p><p>இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக சுகாதார அமைச்சு மற்றும் மருத்துவ தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட தரப்பினரைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
</p><p>
அதில், அனைத்து மருத்துவப் பிரிவினரையும் நாட்டிற்குள் தக்கவைத்துக்கொள்வதற்காக 'இலங்கை மருத்துவ சேவை' என்ற பெயரில் புதிய சேவைப் பிரிவையும் வேதன அமைப்பையும் நிறுவுவதற்கு உடன்பாடு எட்டப்பட்டதாக அந்தச் ங்கம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
2026 ஆம் ஆண்டிற்கான பாதீட்டின் மூன்றாவது வாசிப்பின் போதும், விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவர்களையும் நாட்டில் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் இவ்வாறானதொரு தனிச் சேவைப் பிரிவு உருவாக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்ததாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
இருப்பினும், தற்போது விசேட வைத்திய நிபுணர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாகத் தனிச் சேவைப் பிரிவை உருவாக்குவதற்கான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மருத்துவப் பிரிவினரிடையே பிளவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அந்தச் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.</p><p>

ஒரு குறிப்பிட்ட மருத்துவப் பிரிவுக்கு மட்டும் தனிச் சேவைப் பிரமாணக் குறிப்பை உருவாக்குவது இலவச சுகாதார சேவைக்கும் நோயாளி பராமரிப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்த யோசனைக்குத் தமது சங்கம் உடன்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பில் வாய்மொழி மற்றும் எழுத்துப்பூர்வமான கருத்துக்கள் உரிய குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவின் அறிக்கையின் பிரதியை வழங்குமாறு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை அது வழங்கப்படவில்லை என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-29T23:09:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீர்வுக்காக இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-for-missing-relatives-in-the-north-1788044765"></link>
            <id>https://ibctamil.com/article/protest-for-missing-relatives-in-the-north-1788044765</id>
            <summary type="text">தமிழர் சுயநிர்ணயம் மற்றும் இறையாண்மை தொடர்பான கேள்வியை சர்வதேச
நீதிமன்றத்தின் முன் கொண்டுசெல்லக்கூடிய சட்ட வழிமுறைகளை பிரித்தானியா ஆராய
வேண்டும் என்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழர் சுயநிர்ணயம் மற்றும் இறையாண்மை தொடர்பான கேள்வியை சர்வதேச
நீதிமன்றத்தின் முன் கொண்டுசெல்லக்கூடிய சட்ட வழிமுறைகளை பிரித்தானியா ஆராய
வேண்டும் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்
வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிய
தமிழ்த் தாய்மார்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்றும்
கேள்வி எழுப்பினர்.</p><p>
இது தொடர்பாக வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும்
கருத்து தெரிவித்த அவர்கள்.</p><p> நாளை சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஸ்டிக்கப்படும் நிலையில் கடந்த 3,478
நாட்களாக, எமது பிள்ளைகளையும் அன்புக்குரியவர்களையும் தேடுவதை கைவிடாமல்
வவுனியாவில் வீதியில் நின்று போராடி வருகிறோம்.</p><p></p><h2>பிரித்தானியவிடம் ஒரு&nbsp; வேண்டுகோள்</h2><p>

இன்று, பிரித்தானிய பிரதமரிடமும் பிரித்தானிய வெளியுறவு அமைச்சரிடமும் நாம்
நேரடியாக ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறோம்.</p><p>தமிழர் இறையாண்மையை மீட்டெடுப்பதற்கான
சர்வதேச சட்ட வழிமுறைக்கு பிரித்தானியா ஆதரவளிக்க வேண்டும்.
</p><p>
இலங்கையில் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கும் தமிழர் தேசியப் பிரச்சினையில்
பிரித்தானியாவுக்கு உள்ள வரலாற்றுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, காலனித்துவ
நீக்கம், சுயநிர்ணய உரிமை மற்றும் தமிழர் இறையாண்மை மீட்பு தொடர்பாக சர்வதேச
சட்ட வழிமுறையை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.</p><p>

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியே பின்னர் சுதந்திர சிலோன் பெற்றுக்கொண்ட
மையப்படுத்தப்பட்ட அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது.</p><p>
1948ஆம் ஆண்டு பிரித்தானியா அதிகாரத்தை ஒப்படைத்தபோது, ஒரே மையப்படுத்தப்பட்ட
அரசைக் கொண்ட அரசியலமைப்பு ஏற்பாடு தொடர்ந்தது.
</p><p>
அந்த அரசியலமைப்பு ஏற்பாடு தமிழர்களின் அரசியல் உரிமைகள், பாதுகாப்பு மற்றும்
அரசியல் எதிர்காலத்திற்கு நிலையான தீர்வை வழங்கத் தவறிவிட்டது.அதன் விளைவுகளை
தமிழர்கள் தலைமுறை தலைமுறையாக அனுபவித்து வருகின்றனர்.</p><p></p><h2>இன வன்முறைகள், இடம்பெயர்வுகள்</h2><p>
</p><p>
பாகுபாடான அரச கொள்கைகள், இன வன்முறைகள், இடம்பெயர்வுகள், நில இழப்புகள்,
இராணுவமயமாக்கல், போர் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் ஆகியவற்றை
தமிழர்கள் எதிர்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b3cc7f4-ca27-455a-938b-11d63ee95c45/26-6a9365df4fb04.webp' /></p><p>இன்றும் ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள்
தங்களது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியாமல்
காத்திருக்கின்றன.
</p><p>
அரசாங்கங்கள் மாறியுள்ளன.ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன,விசாரணைகள்
அறிவிக்கப்பட்டுள்ளன,பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.</p><p>ஆனால் எமது காணாமல்
ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதற்கான நம்பகமான பதில் இன்னும்
எமக்குக் கிடைக்கவில்லை.</p><p>

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நாளின் முன்னைய தினத்தில்,
பிரித்தானியாவிடமும் சர்வதேச சமூகத்திடமும் நாம் கேட்கிறோம்,</p><p> எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிய தமிழ்த் தாய்மார்கள் இன்னும்
எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
</p><p>
சிலோனை ஒன்றிணைத்த காலனித்துவ நிர்வாக நடைமுறையிலும், பின்னர் அதன் காலனித்துவ
நீக்கத்திலும் பிரித்தானியா வகித்த பங்கு குறித்து முறையான வரலாற்று மற்றும்
சட்ட ஆய்வை மேற்கொள்ளுமாறு பிரித்தானிய அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்.
</p><p>
மேலும், தமிழர் சுயநிர்ணயம் மற்றும் இறையாண்மை தொடர்பான கேள்வியை சர்வதேச
நீதிமன்றத்தின் முன் கொண்டுசெல்லக்கூடிய சட்ட வழிமுறைகளை பிரித்தானியா ஆராய
வேண்டும்.</p><p></p><h2>சட்ட அதிகாரம்</h2><p>

நேரடி வழக்கிற்கான சட்ட அதிகாரம் பொருந்தாத பட்சத்தில், ஐக்கிய நாடுகள் பொதுச்
சபையின் மூலம் சர்வதேச நீதிமன்றத்தின் ஆலோசனைக் கருத்தைக் கோரும் முயற்சிக்கு
பிரித்தானியா ஆதரவளிக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5e3b4f7-f276-49c3-b4b3-a34b932166fd/26-6a9365e009b60.webp' /></p><p>
</p><p>
எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு மாற்றங்கள்,
அரசியல் பேச்சுவார்த்தைகள் மற்றும் அதிகாரப் பகிர்வு முயற்சிகள் தமிழர்
தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை வழங்கவில்லை.
</p><p>
எனவே, தமிழர் இறையாண்மையை மீட்டெடுப்பது, அமைதியான மற்றும் ஜனநாயக நடைமுறையின்
மூலம் சுதந்திரமான தமிழ் ஈழத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பையும் உள்ளடக்கி, ஒரு
சர்வதேச அரசியல் தீர்வின் பகுதியாக பரிசீலிக்கப்பட வேண்டும் என்று
பிரித்தானியாவையும் சர்வதேச சமூகத்தையும் கேட்டுக்கொள்கிறோம்.</p><p>

எனவே, தீர்க்கப்படாமல் இருக்கும் இந்தக் கேள்வியை சர்வதேச சட்டத்தின் முன்
கொண்டுசெல்ல பிரித்தானியா உதவ வேண்டும் என்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T23:06:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கான சிறப்புத் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/special-project-address-water-shortage-batticaloa-1788043769"></link>
            <id>https://ibctamil.com/article/special-project-address-water-shortage-batticaloa-1788043769</id>
            <summary type="text">மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் நிலவும் குடிநீர் பற்றாக்குறைக்குத் தீர்வாக, நிலத்தடி நீரைப் பெறும் திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

இத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் நிலவும் குடிநீர் பற்றாக்குறைக்குத் தீர்வாக, நிலத்தடி நீரைப் பெறும் திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
</p><p>
இத்திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் இன்று மொனராகலை மாவட்டத்தில் ஆரம்பமாகியுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>
எல் நினோ வானிலையால் மேலும் மோசமடைந்துள்ள தற்போதைய வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட 75,000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு ஏழு மாவட்டங்களில் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகப் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>வறண்ட வானிலை</h2><p>
</p><p>
மொனராகலை, பதுளை, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுர, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகள் வறண்ட வானிலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1b6091a-3845-4ff0-807e-6ed7cf9b73c5/26-6a9361fad26f4.webp' /></p><p>
</p><p>
இந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் மொத்த எண்ணிக்கை 84,500-ஐத் தாண்டியுள்ளது.
</p><p>
மொனராகலையில், எட்டு பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 75 கிராம அலுவலர் பிரிவுகளில் சுமார் 15,000 குடும்பங்கள் தற்போது வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>

குறிப்பாக சியம்பலாண்டுவ மற்றும் மடகம பிரதேச செயலகப் பிரிவுகள் மாவட்டத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளாகும்.
</p><p>
தற்போது 39 தண்ணீர் டேங்கர்கள் மூலம் குடிநீர் குறித்த பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T22:50:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை ரித்து வர்மா அழகிய போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ritu-varma-cute-in-blue-dress-1788043762"></link>
            <id>https://cineulagam.com/article/ritu-varma-cute-in-blue-dress-1788043762</id>
            <summary type="text">விஐபி 2, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்களில் நடித்திருப்பவர் ரித்து வர்மா. அவர் நடித்த துருவ நட்சத்திரம் படம் நீண்ட காலமாக ரிலீஸ் ஆகாமல் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஐபி 2, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்களில் நடித்திருப்பவர் ரித்து வர்மா. அவர் நடித்த துருவ நட்சத்திரம் படம் நீண்ட காலமாக ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.</p><p>தெலுங்கில் படங்கள், வெப் சீரிஸ் என பிசியாக நடித்து வருகிறார் ரித்து வர்மா.</p><p>அழகிய லுக்கில் அவர் தற்போது எடுத்த போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ பாருங்க.</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-29T22:49:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெற்றிமாறனை அழைத்து வாய்ப்பு கொடுத்த விஜய், ஆனால்.. ஜிவி.பிரகாஷ் போட்டுடைத்த உண்மை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vetrimaaran-sudha-kongara-missed-directing-vijay-1788043643"></link>
            <id>https://cineulagam.com/article/vetrimaaran-sudha-kongara-missed-directing-vijay-1788043643</id>
            <summary type="text">வெற்றிமாறனை அழைத்து வாய்ப்பு கொடுத்த விஜய், ஆனால்.. ஜிவி.பிரகாஷ் போட்டுடைத்த உண்மை...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெற்றிமாறனை அழைத்து வாய்ப்பு கொடுத்த விஜய், ஆனால்.. ஜிவி.பிரகாஷ் போட்டுடைத்த உண்மை</p>]]></content>
            <updated>2026-08-29T22:47:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர உதவி எண்ணும் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-advice-for-sri-lankans-in-nepal-1788043452"></link>
            <id>https://jvpnews.com/article/important-advice-for-sri-lankans-in-nepal-1788043452</id>
            <summary type="text">திபெத் பகுதியில் இருந்து போதே கோஷி நதி ஊடாக நேபாளத்தின் ரசுவா மாவட்டத்துக்குள் புகுந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, திமுரே மற்றும் சியாப்ருபெசி பகு...</summary>
            <content type="html"><![CDATA[<p>திபெத் பகுதியில் இருந்து போதே கோஷி நதி ஊடாக நேபாளத்தின் ரசுவா மாவட்டத்துக்குள் புகுந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, திமுரே மற்றும் சியாப்ருபெசி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகக் காத்மண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>மேலும், போதே கோஷி மற்றும் திரிசூலி நதிகளின் தாழ்நில கரையோரப் பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>இதன் காரணமாக, ரசுவா, நுவகோட், தடிங், கொர்க்கா, சித்வான் அல்லது போதே கோஷி மற்றும் திரிசூலி நதிப் பள்ளத்தாக்குகளை ஒட்டியுள்ள பிற பகுதிகளில் பயணம் செய்யும் அல்லது வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
அத்துடன், உதவி அல்லது ஒருங்கிணைப்புத் தேவை உள்ள இலங்கையர்கள் உடனடியாகக் காத்மண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
</p><p>
24 மணி நேர அவசர உதவி எண்: +9779851048653</p><p>

மின்னஞ்சல்: slemb.kathmandu@mfa.gov.lk
</p><p>
நேபாளத்தில் உள்ள எந்தவொரு இலங்கைப் பிரஜைக்கும் உதவிகளை வழங்குவதற்காகத் தூதரக அதிகாரிகள் எப்போதும் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதேவேளை, இந்த வெள்ளப்பெருக்கினால் நேபாளத்திலுள்ள எந்தவொரு இலங்கை பிரஜைக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87a6c46d-fbb4-48a8-b68f-1eaa589a8481/26-6a9360be360b7.webp' /></p>]]></content>
            <updated>2026-08-29T22:44:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக் பாஸ் வரும் நடிகை ஜனனி அசோக்.. சேலையில் அசத்தலான போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/janani-ashok-kumar-sizzling-in-saree-1788043328"></link>
            <id>https://cineulagam.com/article/janani-ashok-kumar-sizzling-in-saree-1788043328</id>
            <summary type="text">நடிகை ஜனனி அசோக் குமார் விரைவில் தொடங்க இருக்கும் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக வர இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதை அவர் இன்னும் உறுதியாக அறிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை ஜனனி அசோக் குமார் விரைவில் தொடங்க இருக்கும் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக வர இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதை அவர் இன்னும் உறுதியாக அறிவிக்கவில்லை.</p><p>இன்ஸ்டாவில் அடிக்கடி கவர்ச்சியாக போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ஜனனி அசோக்.</p><p> அவர் தற்போது சேலையில் போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ.
&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-29T22:42:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரியல் நடிகை பவித்ரா ஜனனி அழகிய போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/pavithra-janani-new-photoshoot-1788042990"></link>
            <id>https://cineulagam.com/article/pavithra-janani-new-photoshoot-1788042990</id>
            <summary type="text">&amp;nbsp;சீரியல் நடிகை பவித்ரா ஜனனி அழகிய போட்டோஷூட்</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சீரியல் நடிகை பவித்ரா ஜனனி அழகிய போட்டோஷூட்</p>]]></content>
            <updated>2026-08-29T22:37:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசிபிக் பெருங்கடல் வெப்பமயமாதல் ; புவியை பேரழிவை நோக்கித் தள்ளும் மனிதத் தவறுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/human-errors-pushing-the-earth-towards-disaster-1788042942"></link>
            <id>https://jvpnews.com/article/human-errors-pushing-the-earth-towards-disaster-1788042942</id>
            <summary type="text">பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்து வருவதன் காரணமாக, உலகளவில் பல்வேறு வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாக முன்னாள் சிரேஷ்ட புவியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்து வருவதன் காரணமாக, உலகளவில் பல்வேறு வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாக முன்னாள் சிரேஷ்ட புவியியல் துறை பேராசிரியர் கலாநிதி எஸ். அண்டனி நோர்பர்ட் தெரிவித்துள்ளார்</p><p>பசிபிக் பெருங்கடலின் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக, ஜப்பான், சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கடும் மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் சூறாவளி போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7b6cb00-5672-40e6-a75a-4762bc53750b/26-6a935ec0ae2a5.webp' /></p><p>

சர்வதேச மற்றும் உள்நாட்டு வானிலை நிபுணர்களின் கருத்துகளின்படி, கடந்த ஜூன் மாதம் முதல் எல் நினோ தாக்கத்திற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கமான அளவைவிட அதிகரித்து வருவது, எல் நினோ தாக்கம் தீவிரமடைவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், மே முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளிலும் தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை ஓரளவு கிடைக்கக்கூடும் என்றும், செப்டம்பர் மாதத்துடன் அதன் தாக்கம் குறையக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
புவி வெப்பமயமாதல் மற்றும் வளிமண்டல வெப்பநிலை அதிகரிப்பு ஆகியவை எல் நினோ போன்ற காலநிலை நிகழ்வுகளின் தீவிரத்துக்கு பங்களிக்கக்கூடும் எனவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
குறிப்பாக, படிம எரிபொருட்களின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் பசுமைக்குடில் வாயுக்களின் அதிகரித்த உமிழ்வு ஆகியவை வளிமண்டல வெப்பநிலை உயர்வுக்கு முக்கிய காரணிகளாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1d5ad36-6137-4655-ab56-d64f8dd1b6c6/26-6a935ebfee3a7.webp' /></p><p>அதேவேளை, உலகின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் யுத்த நடவடிக்கைகளால் கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட வாயுக்களும் தூசுத் துகள்களும் அதிகளவில் வளிமண்டலத்தில் கலப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
எண்ணெய்க் களஞ்சியங்கள் மற்றும் கப்பல்கள் சேதமடைதல், சுத்திகரிப்பு நிலையங்களில் ஏற்படும் தீ மற்றும் வெடிப்புகள் உள்ளிட்ட சம்பவங்களால் அதிகளவில் புகை மற்றும் மாசுப்பொருட்கள் வளிமண்டலத்தில் கலப்பதும் சுற்றுச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இத்தகைய காரணிகளால் ஏற்படும் வளிமண்டல மாசுபாடு மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு ஆகியவை உலகளாவிய காலநிலை மாற்றங்களை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என பேராசிரியர் எச்சரித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-29T22:35:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு - சஜித் கடும் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-blames-anura-government-1788034982"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-blames-anura-government-1788034982</id>
            <summary type="text">தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம்
அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி
உத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம்
அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி
உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றது என்று எதிர்க்கட்சித்
தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
</p><p>
அரச அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினர் கலந்துகொண்ட சந்திப்பு
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.</p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"சில மாதங்களுக்கு முன்பு ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய கலந்துரையாடலை அடுத்து,
அரசு இந்த இரு தரப்பினரையும் கண்டி 'சஹஸ் உயன' பகுதிக்கு அழைத்து கோரிக்கைகள்
நிறைவேற்றப்படும் என பகிரங்கமாகக் கூறியது.</p><h2>அரசின் வாக்குறுதி&nbsp;</h2><p> </p><p>இருப்பினும், அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
எதிர்பார்க்கும் சேவைப் பிரமாணக் குறிப்புகளை நடைமுறைப்படுத்த அரசு
தவறிவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/677fe9b9-9ce4-412f-a455-70f2f8ec4f4f/26-6a933fa789227.webp' /></p><p>
</p><p>
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பெயரை 'சமூக அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள்' எனப் பெயர் மாற்றுவதை மட்டுமே அரசு செய்துள்ளது. மார்ச்
மாதத்தில் தனிச் சட்டம் ஒன்று கொண்டுவரப்படும் எனக் கூறப்பட்ட போதிலும், அது
இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை.
</p><p>
தேர்தல் சமயங்களில் இவர்களை நெறிப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன
சூரிய ஆரச்சியும் இந்த இரு தரப்பினரையும் ஏமாற்றியுள்ளார்.
</p><p>
அரசு இவர்களை மறந்துவிட்டாலும், ஐக்கிய மக்கள் சக்தி இவர்களை எப்போதுமே
மறக்காது. நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் இவர்களின் உரிமைகளுக்காகத்
தொடர்ந்து குரல் கொடுப்போம்" என்றார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T22:32:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹேர்மூஸில் நீடிக்கும் பதற்றம்! இலங்கை கடல் எல்லையில் 20 ஈரானிய கப்பல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/20-iranian-ships-in-sri-lankan-waters-1788039423"></link>
            <id>https://ibctamil.com/article/20-iranian-ships-in-sri-lankan-waters-1788039423</id>
            <summary type="text"> இலங்கையின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்திற்கு வெளியே 20 ஈரானிய எரிபொருள் கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இ...</summary>
            <content type="html"><![CDATA[<p> இலங்கையின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்திற்கு வெளியே 20 ஈரானிய எரிபொருள் கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இந்தக் கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளதாக வந்த செய்திகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.</p><p>

இந்தக் கப்பல்கள் தொடர்பாக இலங்கைக்கு எந்தக் கடமையோ பொறுப்போ இல்லை என்று வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் துஷாரா ரொட்ரிகோ கூறியுள்ளார்.</p><p></p><h2>சிறப்பு கண்காணிப்பு</h2><p>
</p><p>
மேலும், இந்தக் கப்பல்கள் தொடர்பான நிலைமையை இலங்கை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/293245eb-2a20-4337-b849-d9eaa4043108/26-6a93576373cfa.webp' /></p><p>
</p><p>
ஹோர்மூஸ் நீரிணைக்குள் நுழையும் ஈரானிய கப்பல்கள் மீது அமெரிக்கா தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இலங்கையிடம் பாதுகாப்பு கோரி பல கப்பல்கள் எல்லையில் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
</p><p>

மேலும் பல கப்பல்கள் அந்தப் பகுதியை நோக்கி நகர்ந்து வருவதாக TankerTrackers இணையத்தளத்தின் சர்வதேச கடற்படை புலனாய்வுப் பகுப்பாய்வு வெளிப்படுத்தியதை தொடர்ந்து குறித்த சர்ச்சை கிளம்பியிருந்தது.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களுக்கு அமெரிக்க இராணுவம் தொடர்ந்தும் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த பாதுகாப்பு அச்சுறுத்தல் கண்டறியப்பட்டுள்ளது.</p><p>

குறித்த கப்பல்கள் மீண்டும் ஈரானிய துறைகளுக்கு சென்று எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நம்பிக்கையில் இலங்கையை அண்மித்த பகுதியில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக TankerTrackersஇணை நிறுவனர் சமீர் மதானி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T22:22:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியாவில் ரவி கருணாநாயக்க - பெயரை மாற்றிக்கொண்டு அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூரில்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ravi-karunanayake-arjuna-mahendran-cid-1788027210"></link>
            <id>https://tamilwin.com/article/ravi-karunanayake-arjuna-mahendran-cid-1788027210</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் இல்லத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு திடீர் சோதனை நடத்தியுள்ளது.பல முறை விசாரணைக்கு வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் இல்லத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு திடீர் சோதனை நடத்தியுள்ளது.</p><p>பல முறை விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்தும் அவர் முன்னிலையாகாத காரணத்தினால் அதிகாரிகள் வீட்டிற்கே அவரை தேடிச் சென்றுள்ளனர்.&nbsp;</p><p>
</p><p>
நாடாளுமன்ற வீதியில் அமைந்துள்ள ரவி கருணநாயக்கவின் இல்லத்திற்கு நேற்று (29) அதிகாரிகள் குழுவொன்று சென்றுள்ளது.
</p><p>
இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் முன்னிலையாக தவறியதால், ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு அவரது இல்லத்திற்கு சென்றுள்ளது.</p><p>இதேநேரம், முன்னாள் மத்திய வங்கி ஆளுநரான&nbsp;அர்ஜுன மகேந்திரன்&nbsp;சிங்கப்பூரில் பெயரை மாற்றி தலைமறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>இது குறித்து விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2ez6PO9vbeA" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T22:01:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் முக்கிய விருது பெற்ற ஈராக்கிய முன்னாள் அமைச்சரின் அமெரிக்க விசா இரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-iraqi-minister-us-visa-revoked-1788035257"></link>
            <id>https://tamilwin.com/article/former-iraqi-minister-us-visa-revoked-1788035257</id>
            <summary type="text">ஈராக்கின் முன்னாள் நிதி அமைச்சரான தாயிஃப் சாமி முகமது அல்-ஷகார்ஜியை
அமெரிக்கக் கூட்டாட்சிப் புலனாய்வுப் பணியகம் (FBI) பயங்கரவாதக் கண்காணிப்புப்
பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈராக்கின் முன்னாள் நிதி அமைச்சரான தாயிஃப் சாமி முகமது அல்-ஷகார்ஜியை
அமெரிக்கக் கூட்டாட்சிப் புலனாய்வுப் பணியகம் (FBI) பயங்கரவாதக் கண்காணிப்புப்
பட்டியலில் சேர்த்துள்ளதைத் தொடர்ந்து, அவரது அமெரிக்க விசாவை அமெரிக்க
இராஜாங்கத் திணைக்களம் இரத்து செய்துள்ளது.</p><p>

அவர் தற்போது அமெரிக்காவில் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ள அதிகாரிகள்,
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத்
தெரிவித்துள்ளனர்.</p><h2>முக்கிய விருது..&nbsp;</h2><p>
</p><p>
ஊழலுக்கு எதிரான போராட்டம் மற்றும் பாலின சமத்துவப் பணிகளுக்காக கடந்த நான்கு
ஆண்டுகளுக்கு முன்னர் (2022 இல்) அமெரிக்காவால் 'சர்வதேசத் தைரியமிக்க பெண்'
விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட ஒருவருக்கு, தற்போது விசா இரத்து
செய்யப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a81e9d6-54a1-447d-beb8-b7513d2abf08/26-6a9340bac0047.webp' /></p><p>

ஈராக்கின் நிதியமைச்சராகப் பணியாற்றிய தாயிஃப் சாமி, நாட்டின் வரவு செலவுத்
திட்ட ஊழல்களைத் தடுத்தமைக்காக 'இரும்புப் பெண்மணி' என அழைக்கப்பட்ட போதிலும்,
ஈராக்கிய நிதி அமைப்பின் மூலம் பயங்கரவாத நிதியுதவிகளுக்கு வழிவகுத்ததாக
அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
</p><p>
இருப்பினும், தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ள
முன்னாள் நிதியமைச்சர் தாயிஃப் சாமி, பயங்கரவாதக் கண்காணிப்புப் பட்டியலில்
தனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் ஆதாரமற்றவை எனக்
குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-29T21:50:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூடானில் கால்நடை கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 49 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/49-killed-in-sudan-cattle-rustlers-shooting-spree-1788039134"></link>
            <id>https://canadamirror.com/article/49-killed-in-sudan-cattle-rustlers-shooting-spree-1788039134</id>
            <summary type="text">தெற்கு சூடானில் கால்நடை கொள்ளையர்கள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் 49 பொதுமக்கள் பலியாயினர்.ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள வளரும் நாடுகளில் ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு சூடானில் கால்நடை கொள்ளையர்கள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் 49 பொதுமக்கள் பலியாயினர்.</p><p>ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள வளரும் நாடுகளில் ஒன்றான தெற்கு சூடானில், பெரும்பான்மையான மக்களின் பிரதான தொழிலாகவும், வாழ்வாதாரமாகவும் விளங்குவது கால்நடை வளர்ப்பு ஆகும்.</p><p> அங்கு வாழும் பல்வேறு பழங்குடியின மக்களிடையே, தங்களின் மாடுகளைப் பெருக்குவதிலும், அவற்றுக்கான மேய்ச்சல் நிலங்கள் மற்றும் தண்ணீரைப் பிடிப்பதிலும் பல ஆண்டுகளாகக் கடுமையான போட்டி நிலவி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/062c2b93-7ebb-471c-a45e-ab5780b63888/26-6a934fe081b56.webp' /></p><p>

இந்தப் போட்டி அடிக்கடி பெரும் வன்முறையாக மாறுவது அந்நாட்டின் தீராத பிரச்சினையாக மாறியுள்ளது. </p><p>இந்நிலையில், வடக்குப் பகுதியில் அமைந்துள்ள 'யூனிட்டி' மாகாணத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய கும்பல் அதன் பக்கத்து மாகாணமான 'வரப்' பகுதியில் உள்ள டோஞ்ச் பகுதியைக் குறிவைத்து ஒரு சதித் திட்டத்தைத் தீட்டியது.
</p><p>
அதன்படி அதிகாலையில் கிராம மக்கள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, ஆயிரக்கணக்கான மாடுகளைக் கொள்ளையடிக்கும் நோக்கில் ஆயுதமேந்திய கும்பல் ஒன்று மாட்டுத் தொழுவங்களைச் சுற்றிலும் சூழ்ந்து கொண்டது. </p><p>அப்போது அங்கு காவல் பணியில் இருந்தவர்கள் கொள்ளையர்களைத் தடுக்க முயன்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த கொள்ளைக் கும்பல், தங்களின் நவீன ரகத் துப்பாக்கிகளால் அவர்களை சரமாரியாக சுட்டனர். </p><p>திடீர் துப்பாக்கிச் சத்தம் கேட்டு அலறியடித்துக்கொண்டு ஓடிய அப்பாவி பொதுமக்கள் மீதும் இரக்கமின்றி அந்த கும்பல் சுட்டதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 49 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
</p><p>
மேலும் 33 பேர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளைப் பிடிக்கத் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-29T21:32:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனில் ரஷ்யாவின் பயங்கர தாக்குதல் ; ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியதில் 37 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/37-killed-in-arms-depot-explosion-1788038528"></link>
            <id>https://canadamirror.com/article/37-killed-in-arms-depot-explosion-1788038528</id>
            <summary type="text">உக்ரைன் தலைநகர் கீவ் அருகே அமைந்துள்ள ஆயுதக் கிடங்கு ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தில் குறைந்தது 37 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் தலைநகர் கீவ் அருகே அமைந்துள்ள ஆயுதக் கிடங்கு ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தில் குறைந்தது 37 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கீவ்வின் மேற்குப் புறநகர்ப் பகுதியான மைலா பகுதியில் அமைந்துள்ள குறித்த ஆயுதக் கிடங்கு மீது வெள்ளிக்கிழமை இரவு ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட பாரிய தீ விபத்து மற்றும் வெடிப்பினால் அப்பகுதியில் உள்ள சுமார் 50 குடியிருப்பு வீடுகள் சேதமடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75fcf5bf-095a-4db3-908e-aa157d0b598e/26-6a934d817d077.webp' /></p><p> </p><p>அத்துடன், அப்பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக 400க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p>

உயிரிழந்தவர்களில் டிமிட்ரிவஸ்கா கிராமத்தின் மேயர் தராஸ் டிடிச் என்பவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் ஆபத்தான ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தமையே அதிகளவிலான உயிரிழப்புகளுக்கு காரணமாக இருக்கலாம் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பில் கடுமையான குற்றவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும், பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செயற்பட்ட பொறுப்பற்ற நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்நாட்டு பிரதமர் எச்சரித்துள்ளார்.</p><p>

இதேவேளை, உக்ரைனை இலக்காகக் கொண்டு ரஷ்யா ஒரே இரவில் இரண்டு ஏவுகணைகள் மற்றும் 267 ட்ரோன்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளதாக உக்ரைனிய விமானப்படை தெரிவித்துள்ளது.
</p><p>
இதற்கிடையில், ரஷ்யாவின் எல்லைப் பகுதிகளையும் இலக்காகக் கொண்டு உக்ரைன் பதிலடி தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-29T21:22:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்ரான் கானுக்கு ஆதரவாக மேலும் பல கிரிக்கெட் வீரர்களின் குரல் .]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/many-more-cricketers-voice-support-for-imran-khan-1788038378"></link>
            <id>https://ibctamil.com/article/many-more-cricketers-voice-support-for-imran-khan-1788038378</id>
            <summary type="text">சிறையில் உள்ள, பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமரும், புகழ்பெற்ற கிரிக்கெட் வீரருமான இம்ரான் கானின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறையில் உள்ள, பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமரும், புகழ்பெற்ற கிரிக்கெட் வீரருமான இம்ரான் கானின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து, பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முக்கியப் பிரமுகர்கள் பலர் பகிரங்கமாகப் பேசத் தொடங்கியுள்ளனர்.
</p><p>
1992 உலகக் கோப்பையை வென்ற தலைவரின் சிகிச்சை குறித்து சமீபத்தில் உணர்ச்சிப்பூர்வமான பொது வேண்டுகோளை விடுத்திருந்த அவரது மகனான முன்னாள் சக வீரர் ஜாவேத் மியாந்தாத்துடன் இணைந்து, இந்த குரல்கள் எழுப்பப்பட்டுள்ளன.</p><p>இதன்படி பாகிஸ்தானின் முன்னாள் அணி தலைவர் மொயின் கான் தற்போது இம்ரானுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.</p><p></p><h2>உலகக் கோப்பையை வென்ற&nbsp;தலைவர் </h2><p>

1992-ல் இம்ரானின் தலைமையிலான உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியில் அங்கம் வகித்த மொயின், தனது தலைவரின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்ததோடு, அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d62bcbf-46b8-4de3-a4fa-a44aeac074f3/26-6a934cec77483.webp' /></p><p>

இம்ரானுக்கு என்ன செய்யப்படுகிறது என்று கேள்வி எழுப்பியும், அவரை விடுதலை செய்யக் கோரியும் மியாண்டாத் பகிரங்கமாகக் கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து இவரது தலையீடு அமைந்துள்ளது.</p><p>சுனில் கவாஸ்கர், கபில் தேவ், ஆலன் பார்டர், கிரெக் சேப்பல், இயன் சேப்பல், கிளைவ் லாயிட் மற்றும் இலங்கையின் அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட முன்னாள் சர்வதேச அணித் தலைவர்கள் குழுவும், இம்ரானுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-29T21:19:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் யுவதியை கடத்தியது காதலனா? விசாரணையில் வெளிவந்த தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-open-fire-car-attempted-kidnap-young-woman-1788020340"></link>
            <id>https://jvpnews.com/article/police-open-fire-car-attempted-kidnap-young-woman-1788020340</id>
            <summary type="text">கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட யுவதி ஒருவரைக் கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியைப் பொலிஸார...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட யுவதி ஒருவரைக் கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியைப் பொலிஸார் இன்று (29) முறியடித்துள்ளனர். இந்தக் கடத்தலை யுவதியின் காதலனே முன்னெடுத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> </p><p></p><p>கார் ஒன்றில் யுவதி ஒருவர் கடத்திச் செல்லப்படுவதாக இன்று பிற்பகல் 01:30 மணியளவில் நாரஹேன்பிட்டி பொலிஸாருக்குத் தகவல் கிடைத்திருந்தது. </p><p>

அதற்கமைய உடனடியாகச் செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், நாரஹேன்பிட்டியிலிருந்து நாவல நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்றை நிறுத்த முற்பட்டபோதிலும், அது பொலிஸாரின் கட்டளையை மீறி முன்னோக்கிச் சென்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. </p><p>

பின்னர், நாரஹேன்பிட்டி - நாவல வீதியில் வைத்து காரை நிறுத்துமாறு மீண்டும் சமிக்ஞை செய்தபோதிலும், அது நிறுத்தப்படாமல் முன்னோக்கிச் சென்றமையினால் பொலிஸார் காரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/226cfd0e-d605-4432-9578-7f782d976565/26-6a93067657d74.webp' /></p><p>இதன்போது சாரதி காரைக் கைவிட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், பொலிஸார் நடத்திய சோதனையின் போது, காரினுள் யுவதி ஒருவர் இருந்துள்ளார் என்றும், அவர் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து கடத்தப்பட்ட யுவதி என அடையாளங் காணப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. </p><p>

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், காரைச் செலுத்தியவர் கடத்தப்பட்ட யுவதியின் காதலன் எனத் தெரியவந்துள்ளது. 

இவர்கள் இருவரும் மாத்தறை - வெலிகமை மற்றும் மிதிகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.</p><p> 

கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி பீடத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காகத் தனது குடும்ப உறவினர்களுடன் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு வந்திருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த யுவதி கடத்தலுக்கு உள்ளாகியுள்ளார். </p><p>

தனது காதலனுக்குத் தெரிவிக்காமல் அவர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக வந்துள்ளதுடன், அவர் கடத்தப்படுவதாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியது யுவதியின் தந்தை எனக் கூறப்படுகின்றது. </p><p>

கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், யுவதி இன்று பிற்பகல் கொழும்பு சட்டவைத்திய அதிகாரி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50f60236-258a-455a-94e2-00e3b15c027f/26-6a9312267b524.webp' /></p><p> </p><p>

அதேவேளை, குறித்த கார் கடத்தலை மேற்கொண்ட காதலனுடையது என்றும், அதனை யுவதியின் தந்தையே பட்டமளிப்பு விழாவிற்கு ஓட்டிவந்துள்ளார் என்றும் தற்போது தெரியவந்துள்ளது. </p><p>

அந்த இளைஞர் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனைக் குற்றச்சாட்டுகளைக் கொண்டவர் என்பதும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

தப்பிச் சென்ற சந்தேகநபரை கைதும் செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>

இச்சம்பவம் தொடர்பில் கொழும்பு திசைக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஷாந்த சொய்சாவின் மேற்பார்வையில், கொழும்பு தெற்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் லூஷன் சூரியபண்டார உள்ளிட்ட குழுவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-29T21:00:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனில் ரஷ்யாவின் பயங்கர தாக்குதல்: ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியதில் 37 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/russian-attack-ukraine-37-killed-depot-explosion-1788035554"></link>
            <id>https://tamilwin.com/article/russian-attack-ukraine-37-killed-depot-explosion-1788035554</id>
            <summary type="text">உக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) அருகே அமைந்துள்ள ஆயுதக் கிடங்கு ஒன்றின் மீது
ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலையும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பாரிய
வெடிவிபத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) அருகே அமைந்துள்ள ஆயுதக் கிடங்கு ஒன்றின் மீது
ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலையும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பாரிய
வெடிவிபத்தையும் அடுத்து, குறைந்தது 37 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
</p><p>
கீவ்வின் மேற்குப் புறநகர்ப் பகுதியான மைலா (Myla) எனும் இடத்தில் அமைந்துள்ள
குறித்த கிடங்கு மீது வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதலால் அங்கு பாரிய
தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>
</p><p>
இதன்போது ஏற்பட்ட அதிர்வுகளினால் அப்பகுதியிலுள்ள சுமார் 50 குடியிருப்பு
வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், நிலவிய அசாதாரண சூழல் காரணமாக 400க்கும் மேற்பட்ட
மக்கள் அங்கிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><h2>கடுமையான விசாரணைகள்</h2><p>
</p><p>
உயிரிழந்தவர்களில் டிமிட்ரிவஸ்கா கிராமத்தின் மேயரான தராஸ் டிடிச் என்பவரும்
அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23b65aed-58b1-4d94-bc77-28dd96d908f3/26-6a9341e3ce2b8.webp' /></p><p>

குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகே ஆபத்தான ஆயுதங்கள் சேமித்து
வைக்கப்பட்டிருந்தமையே அதிகளவிலான உயிர்ச்சேதங்களுக்குக் காரணம் எனச்
சுட்டிக்காட்டியுள்ள உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, இது தொடர்பில்
கடுமையான குற்றவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.</p><p>

பாதுகாப்பு விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட பொறுப்பற்ற நபர்களுக்கு எதிராகக்
கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்நாட்டுப் பிரதமரும்
எச்சரித்துள்ளார்.
</p><p>
இதேவேளை, உக்ரைனைக் இலக்கு வைத்து ரஷ்யா ஒரே இரவில் இரண்டு ஏவுகணைகளையும் 267
ட்ரோன்களையும் ஏவித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக உக்ரைனிய விமானப்படை தெரிவித்துள்ளது. அத்துடன் ரஷ்யாவின் எல்லைப் பகுதிகளிலும் உக்ரைன் பதிலடித்
தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T21:00:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பெருவெள்ளம்: 33 பிரித்தானிய குடிமக்களுக்கு உதவ குழுவை அனுப்பிய அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-rapid-team-aids-britons-in-nepal-floods-1788031890"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-rapid-team-aids-britons-in-nepal-floods-1788031890</id>
            <summary type="text">UK Rapid Team aids Britons in Nepal floods: பிரித்தானியாவிலிருந்து விரைவு நடவடிக்கை குழுவொன்று நேபாளத்திற்கு சென்றுள்ளது.

விரைவு நடவடிக்கை குழுநேபா...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK Rapid Team aids Britons in Nepal floods: பிரித்தானியாவிலிருந்து விரைவு நடவடிக்கை குழுவொன்று நேபாளத்திற்கு சென்றுள்ளது.</p><p>
</p><h2>
விரைவு நடவடிக்கை குழு</h2><p>நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 33 பிரித்தானிய குடிமக்களுக்கு உதவுவதற்காக, பிரித்தானிய அரசு விரைவு நடவடிக்கை குழுவை (Rapid Deployment Team) காத்மாண்டுவிற்கு அனுப்பியுள்ளது. </p><p>

இந்த குழு, விமான நிலையத்தில் பிரித்தானிய குடிமக்கள் வருகை மற்றும் புறப்பாட்டில் உதவுவதோடு, நிலைமையை சமாளிக்க நேரடி ஆதரவு வழங்குகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9ae7447-ba0c-45b3-89cf-f81324eb7a42/26-6a9333945346b.webp' /></p><p>பிரித்தானியாவின் வெளிநாட்டு, பொதுநல மற்றும் அபிவிருத்தி அலுவலகம் (FCDO) தெரிவித்ததாவது, இந்த நடவடிக்கை, பிரித்தானியாவின் பரந்த அளவிலான உதவி திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதில் 5 மில்லியன் பவுண்டு மதிப்பிலான மனிதாபிமான உதவியும் அடங்கும்.
</p><p></p><h2>நேபாள பெருவெள்ளம்</h2><p>இந்த வெள்ளம், நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பனிச்சரிவு மற்றும் பாறை இடிபாடுகளால் உருவானது. </p><p>அதனால் நீர், சேறு மற்றும் கற்கள் மத்திய நேபாளம் முழுவதும் பரவி, குடியிருப்புகள் அழிந்தன, முக்கிய அடிப்படை வசதிகள் சேதமடைந்தன, நீர்மின் நிலையங்கள் அழிந்தன.</p><p>

நேபாளத்தில் தற்போது 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 2,400க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. </p><p>பிரித்தானியாவில் உள்ள குடும்பங்கள், தங்கள் அன்புக்குரியவர்களின் நிலை குறித்து தகவல்களை எதிர்பார்த்து கவலையுடன் காத்திருக்கின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-29T20:58:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் டிரம்ப் பெயரில் இருந்த தெருவிற்கு பெயர் மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-renames-trump-avenue-to-taco-avenue-1788037243"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-renames-trump-avenue-to-taco-avenue-1788037243</id>
            <summary type="text">Canada renames Trump Avenue to Taco Avenue: கனடாவில் டிரம்ப் பெயரில் இருந்த தெருவிற்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

டிரம்ப் அவென்யூ&amp;nbsp;டு டாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada renames Trump Avenue to Taco Avenue: கனடாவில் டிரம்ப் பெயரில் இருந்த தெருவிற்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
</p><h2>
டிரம்ப் அவென்யூ&nbsp;டு டாக்கோ அவென்யூ</h2><p>கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் உள்ள "டிரம்ப் அவென்யூ" எனும் தெருவின் பெயரை மாற்ற நகரசபை முடிவு செய்துள்ளது.
</p><p>
ஆகஸ்ட் 26-ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில், ஒட்டாவா நகரசபை உறுப்பினர்கள் ஒருமனதாக அந்த தெருவை "டாக்கோ அவென்யூ" என பெயர் மாற்றம் செய்ய தீர்மானித்தனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/708cb435-9359-40c2-8f2f-0a6b1d0e29f2/26-6a93487d602c8.webp' /></p><p>இந்த தெரு, ஒட்டாவாவின் சென்ட்ரல் பார்க் பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் பெயரால் அழைக்கப்பட்டு வந்தது. </p><p>

ஆனால் சமீபத்தில் டிரம்ப், "Lake Ontario" ஏரியின் பெயரை "Lake America" என மாற்றுவதாக அறிவித்தது கனடா அரசியல்வாதிகளை கடுமையாகப் பாதித்தது. இதன் பின்னணியில், நகரசபை இந்த மாற்றத்தை மேற்கொண்டுள்ளது.
</p><p></p><h2>Taco&nbsp;பெயர் காரணம் </h2><p>சபை உறுப்பினர்கள், "டாக்கோ" என்ற பெயரை தேர்வு செய்ததற்கான காரணம், வால்ஸ்ட்ரீட்டில் டிரம்புக்கு வழங்கப்பட்ட "Trump Always Chickens Out" என்ற சுருக்கப்பெயர். </p><p>அதாவது, கொள்கைகளை அடிக்கடி மாற்றும் பழக்கத்தைக் குறிக்கும் வகையில் "டாக்கோ" என அழைக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
</p><p>
மேலும், "ஒபாமா அவென்யூ" எனும் பெயரும் பரிசீலனையில் உள்ளது. </p><p></p><p>சில உறுப்பினர்கள், டிரம்ப் பெயர் கனடாவில் பல இடங்களில் இருப்பதாகவும், ஆனால் "டிரம்ப் அவென்யூ" மட்டுமே நேரடியாக அவரது பெயரில் அழைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.</p><p>

ஒட்டாவா நகரசபை உறுப்பினர் ரைலி ப்ராக்கிங்டன், அக்டோபர் தேர்தலுக்குப் பிறகு குடியிருப்பாளர்களுடன் இணைந்து பெயர் மாற்றத்தை நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். அவர், "டிரம்ப் அவென்யூ" என்ற பெயர் நகரத்திற்கு அவமானம் எனக் கூறினார்.
</p><p>
இந்த முடிவு, கனடா-அமெரிக்க வர்த்தக மற்றும் அரசியல் உறவுகளில் ஏற்பட்ட பதற்றத்தை வெளிப்படுத்துகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T20:57:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள - சீன பேரழிவு வெள்ளம்: உயிரிழப்புகள் 600 கடந்ததுடன் தேடுதல் பணிகள் மீண்டும் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nepal-china-flood-disaster-death-toll-passes-600-1788034751"></link>
            <id>https://tamilwin.com/article/nepal-china-flood-disaster-death-toll-passes-600-1788034751</id>
            <summary type="text">நேபாளம் மற்றும் சீன எல்லைப் பகுதியில் பனிப்பாறை சரிவினால் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு அசம்பாவிதத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் மற்றும் சீன எல்லைப் பகுதியில் பனிப்பாறை சரிவினால் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு அசம்பாவிதத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 633 ஆக அதிகரித்துள்ள நிலையில், இடைநிறுத்தப்பட்டிருந்த மீட்புப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p>

நேபாளப் பகுதியில் இதுவரை 626 பேர் உயிரிழந்துள்ளதுடன், 517 வெளிநாட்டவர்கள் உட்பட 2,426 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டுப் பேரழிவு மேலாண்மை அதிகாரசபை தெரிவித்துள்ளது.
</p><p>
அதேவேளை, திபெத் எல்லைப் பகுதியில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 554 பேர் காணாமல் போயுள்ளதாகச் சீன அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><h2>இடைநிறுத்தப்பட்டிருந்த மீட்பு பணிகள்..&nbsp;</h2><p>

பனிப்பாறை சரிவைத் தொடர்ந்து உருவான புதிய செயற்கைக் குளம் உடையும் என்ற அச்சத்தினால் இடைநிறுத்தப்பட்டிருந்த தேடுதல் பணிகள், தற்போது ஆபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d042f0f-48f3-4bb6-9fef-dd3cba618eb1/26-6a933ec0e0d5b.webp' /></p><p>
</p><p>
மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து சுரங்கப் பாதை மீட்புக் குழுக்கள் உட்பட சிறப்பு உதவிகளை நேபாள அரசாங்கம் கோரியுள்ளது.
</p><p>
இமயமலைப் பகுதியில் சுமார் 5,200 மீட்டர் உயரத்தில் இருந்த பனிப்பாறை சரிந்து விழுந்ததில் உருவான இந்த வெள்ளப்பெருக்கு, நேபாளத்தின் பல மாவட்டங்களைச் சூறையாடியுள்ளது.</p><p>

சேறு மற்றும் சிதைவுகளுக்கு அடியில் பலர் புதையுண்டுள்ளமையால் உயிரிழப்புகள் மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T20:45:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேசத்துக்கு சவாலாகும் மத்திய கிழக்கு ஒப்பந்தங்கள்! ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/middle-east-agreements-pose-a-challenge-to-the-us-1788019078"></link>
            <id>https://ibctamil.com/article/middle-east-agreements-pose-a-challenge-to-the-us-1788019078</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய அண்டை நாடுகள் வெளிநாட்டு சக்திகளை சார்ந்திருக்காமல் உள்ளக பொறிமுறையை கையாளவேண்டும் என ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய அண்டை நாடுகள் வெளிநாட்டு சக்திகளை சார்ந்திருக்காமல் உள்ளக பொறிமுறையை கையாளவேண்டும் என ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் கூறியுள்ளார்.</p><p>

மேலும், உருவாகி வரும் பிராந்திய ஒப்பந்தங்களும் ஏற்பாடுகளும் ஒரு புதிய கட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
பிராந்தியத்திற்கு நீடித்த பாதுகாப்பை வழங்கும் திறனும் வெளிநாட்டு சக்திகளுக்கு இல்லை என்பதையும் தான் நினைவுபடுத்துவதாக காலிபாஃப் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p></p><h2>பிராந்திய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு</h2><p>அவ்வாறு செய்ய மத்திய கிழக்கு நாடுகள் விரும்பவில்லை என்பதையும் சமீபத்திய ஒப்பந்தங்கள் காட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3c297b2-0c45-400d-895f-73b6631763c4/26-6a9301887510a.webp' /></p><p>
</p><p>
பிராந்தியத்திற்கு வெளியே உள்ள சக்திகளின் இருப்பு மற்றும் தலையீட்டை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பு பலவீனமானது மற்றும் சார்புடையது என்றும், அதே நேரத்தில் பிராந்திய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் பாதுகாப்பு நீடித்திருக்கக்கூடியது என்றும் காலிபாஃப் வாதிட்டுள்ளார்.</p><p>
அத்தோடு, ஈரானில் வாழும் முஸ்லீம் தரப்புக்களுக்கு இடையேயான ஒற்றுமை என்பது ஒரு சடங்கு ரீதியான முழக்கம் அல்ல, மாறாக அது தேசிய சக்தியின் அடித்தளம் என்பதை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T20:37:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிம்பாப்வேயில் ஏற்பட்ட வீதி விபத்தில் 27 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/27-killed-in-zimbabwe-road-accident-1788033329"></link>
            <id>https://tamilwin.com/article/27-killed-in-zimbabwe-road-accident-1788033329</id>
            <summary type="text">சிம்பாப்வேயின் மத்திய பகுதியில் சிறிய ரக பேருந்து ஒன்றும் கனரக லொறி ஒன்றும்
நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தபட்சம் 27 பேர்
உயிரிழந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிம்பாப்வேயின் மத்திய பகுதியில் சிறிய ரக பேருந்து ஒன்றும் கனரக லொறி ஒன்றும்
நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தபட்சம் 27 பேர்
உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

தலைநகர் ஹராரேக்கு தெற்கே அமைந்துள்ள சீவு பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை இந்த
விபத்து இடம்பெற்றுள்ளது.
</p><p>
மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காகப் பயணித்தவர்கள் பயணித்த பேருந்தை, முந்திச்
செல்ல முயன்ற கனரக லொறி மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.</p><h2>வைத்தியசாலையில் அனுமதி&nbsp;</h2><p>
விபத்து இடம்பெற்ற இடத்திலேயே 23 பேர் உயிரிழந்ததுடன், ஏனையோர் உள்ளூர்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி
உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98cd1f31-96c7-4f27-b33c-99f87dec49e6/26-6a93393395a7a.webp' /></p><p>
</p><p>
விபத்துக்குள்ளான பேருந்து முற்றிலும் தீப்பற்றி எரிந்துள்ளதை சமூக வலைத்தளங்களில்
வெளியாகியுள்ள காணொளிகள் காட்டுகின்றன.
</p><p>
முறையான பராமரிப்பின்மை, வீதிகளில் காணப்படும் குழிகள் மற்றும் அதிகளவு
பயணிகளை ஏற்றிச் செல்லுதல் போன்ற காரணங்களால் சிம்பாப்வே வீதிகளில்
தொடர்ச்சியாகப் பாரிய விபத்துகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T19:55:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பகிரங்க சவால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-premadasa-local-government-election-1788031409"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-premadasa-local-government-election-1788031409</id>
            <summary type="text">அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக
மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர்
சஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக
மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.</p><p> இதன் மூலம் அரசின் மீது மக்களுக்குள்ள
செல்வாக்கினை அறிந்துகொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
அம்பாந்தோட்டை திஸ்ஸமகாராம விஜிதபுர பிரதேசத்தில் நடைபெற்ற
விவசாயிகளுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
</p><p>
அவர் மேலும் கூறுகையில்,

"விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் என அனைவரும்
மாகாண சபைத் தேர்தல் வரும் வரை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
</p><p>இந்நாட்டின் புதிய பயணத்தின் புதிய பாதை, ஐக்கிய மக்கள் சக்தி மூலமாகவே
உருவாக்கப்படும்.

நாட்டில் எண்ணற்ற பிரச்சினைகள் காணப்படுகின்ற போதிலும், அரசு உயர்நீதிமன்ற
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்க முயல்கின்றது.</p><h2>மக்கள் தெரிவு&nbsp;</h2><p>

நீதிமன்றத்தின் சுதந்திரத்தை அழித்து, சட்டத்தின் ஆட்சியை பலவீனப்படுத்தி,
நாட்டில் தனிக் கட்சி ஆட்சியை ஸ்தாபிக்கவே அரசு முற்படுகின்றது.

கடந்த மூன்று தேர்தல்களிலும் பெரும்பான்மையான மக்கள் தெரிவு செய்த ஜே.வி.பி.
அரசு தொடர்ச்சியாக வாக்குறுதிகளை மீறி, நாட்டு மக்களை ஏமாற்றி வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3b07c07-b0d3-49ea-917b-7438f9839c57/26-6a9337f56b933.webp' /></p><p>
</p><p>இந்த அரசு கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெறத்தக்க அளவுக்கு விருது
பெற்ற பொய்யாளர்களாக மாறியுள்ளது.

தற்போது கோதுமை மா ஒரு கிலோகிராம் 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால்
பாண், பேக்கரி தயாரிப்புகள் மற்றும் மா சார்ந்த தயாரிப்புகள் பாதிக்கப்பட்டு,
மக்கள் மேலும் துயரத்தின் பாதாளத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
</p><p>
சர்வதேச நிறுவனம் ஒன்று குறைந்தபட்ச ஊதியம் தொடர்பில் 130 நாடுகளை
அடிப்படையாகக் கொண்டு நடத்திய கணக்கெடுப்பில், இலங்கை 120ஆவது இடத்திலுள்ளது.
பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளும் இலங்கைக்கு முன்னிலையில்
உள்ளது.
</p><p>
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின்படி ஒரு நபர் 30 நாள்கள்
வாழ்வதற்கு 17 ஆயிரத்து 315 ரூபா போதும் என்ற தவறான தரவுகளின் அடிப்படையிலேயே
அரசு கொள்கைகளை வகுக்கின்றது.</p><p> நாட்டின் 30 முதல் 40 சதவீதமான மக்கள் ஏழ்மையில்
வாடுவதுடன், அஸ்வெசும திட்டமும் வெட்டப்பட்டு வருகின்றது.

புற்றுநோயாளிகளின் உயிரைக் காப்பாற்றும் 900 ரூபா ஊசி மருந்து கள்ளச்சந்தையில்
25 ஆயிரம் ரூபாவுக்கு விற்கப்படுவதால் சுமார் 75 ஆயிரம் நோயாளர்கள் ஆபத்தான
நிலையில் உள்ளனர்.
</p><p>
மேலும், ரணசிங்க பிரேமதாஸவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகள்
மூடப்பட்டு வருவதால் பல்லாயிரக்கணக்கான இளையோர்கள் வேலைவாய்ப்பின்றி வீதிக்கு
இறங்கி வருகின்றனர்." என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T19:50:22+00:00</updated>
        </entry>
    </feed>
