<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-03T02:30:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருந்தொகை பணமோசடி வழக்கில் சிக்கிய பெண் தொழிலதிபர்! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/money-laundering-court-order-thilini-priyamali-1788401924"></link>
            <id>https://tamilwin.com/article/money-laundering-court-order-thilini-priyamali-1788401924</id>
            <summary type="text">கோடீஸ்வர தொழிலதிபர்களின் தொழில்களில் முதலீடு செய்வதாக வாக்குறுதியளித்து அவர்களை ஏமாற்றி பணமோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, பிணையில் வெளிவந்துள்ள தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோடீஸ்வர தொழிலதிபர்களின் தொழில்களில் முதலீடு செய்வதாக வாக்குறுதியளித்து அவர்களை ஏமாற்றி பணமோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, பிணையில் வெளிவந்துள்ள திலினி பிரியமாலியை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p> கோட்டை நீதிபதி பாசன் அமரசேன நேற்று (02) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.</p><h2>பிடியாணை உத்தரவு&nbsp;</h2><p>சந்தேகநபருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால், அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/813bcb13-50de-4212-866c-eca94ca71e3b/26-6a98db4d69107.webp' />&nbsp;</p><p>மேலும் சந்தேகநபர் இல்லாமல் 192-வது பிரிவின் கீழ் வழக்கை நடத்துமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p>

சந்தேகநபரின் பிணைதாரர்கள் மறுநாள் முன்னிலையாகுமாறு நீதிபதி அறிவிப்புகளையும் பிறப்பித்துள்ளார்.
</p><p>இதன்படி, வழக்கின் விசாரணை நவம்பர் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>இதேவேளை, கொழும்பு கோட்டையில் உள்ள உலக வர்த்தக நிலையத்தின் 34வது மாடியில் திட்ட முதலீட்டிற்காக குறித்த பெண் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த நிலையில், அரசாங்கத்தின்பல்வேறு மட்டங்களில் உள்ளவர்களிடம் இருந்து பல கோடி ரூபாவிற்கும் அதிகமாக நிதி மோசடி செய்தமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய திலினி பிரியமாலி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T02:28:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/water-cut-in-many-areas-of-colombo-today-1788400628"></link>
            <id>https://ibctamil.com/article/water-cut-in-many-areas-of-colombo-today-1788400628</id>
            <summary type="text">கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் 24 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தடைப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் 24 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தடைப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த நீர்விநியோக தடை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp;</p><p>இதனால் இன்று இரவு 8.00 மணி முதல் நாளை (04) இரவு 8.00 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>நீர்வெட்டு</h2><p>

இதற்கமைய நுகேகொடை, கொஹுவலை, தெஹிவளை, கல்கிசை, ரத்மலானை, மொறட்டுவை, ராவதாவத்தை, சொய்சாபுரம், அங்குலானை, இதிபெத்த, கடுபெத்த, கல்தெமுல்ல, மோதறை, கொரளவெல்ல, எகொடவுயன மற்றும் கட்டுக்குருந்த ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7036650-2528-407a-a175-637a5bddec70/26-6a98d5c3db9ff.webp' /></p><p>அத்துடன், செத்சிறிபாய, ஹிம்புடான, உடுமுல்ல வீதி, மாளிகாகொடெல்ல, வங்கிச் சந்தி வீதி, டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தை, ஹவ்லொக் வீதி, கல்யாணி வீதி, கொழும்பு 06, வைத்தியசாலை வீதி, ஜெயந்தி மாவத்தை மற்றும் சாந்தி மாவத்தை ஆகிய பகுதிகளுக்கும் இந்த நீர்வெட்டு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

நீர் விநியோகம் இடை நிறுத்தப்படுவதால் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, குறிப்பிட்ட காலப்பகுதியில் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T02:05:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆயிரக்கணக்கானோரின் வங்கி கணக்குகளில் இன்று வைப்பிலிடப்படவுள்ள பணம் - வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/september-month-aswesuma-money-today-credit-bank-1788399827"></link>
            <id>https://tamilwin.com/article/september-month-aswesuma-money-today-credit-bank-1788399827</id>
            <summary type="text">2026 ஒகஸ்ட் மாதத்திற்குரிய 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான &#039;அஸ்வெசும&#039; முதியோர் கொடுப்பனவு இன்று (03) உரிய பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஒகஸ்ட் மாதத்திற்குரிய 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான 'அஸ்வெசும' முதியோர் கொடுப்பனவு இன்று (03) உரிய பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.</p><p>நலன்புரி நன்மைகள் சபை இதனை அறிவித்துள்ளது.</p><h2>வங்கிக் கணக்குகளில் பெற்றுக்கொள்ளலாம்&nbsp; &nbsp;</h2><p> </p><p>

இதற்கமைய, அஸ்வெசும நலன்புரிப் நன்மைகள் செலுத்தும் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 618,352 முதியோர்களுக்காக 3,091,760,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cb454a9-b5b0-4a38-aed7-75ca1beea003/26-6a98d54bbafbe.webp' />&nbsp;</p><p> </p><p>இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 78,260 முதியோர்களுக்காக 391,300,000 ரூபாய் நிதி வைப்பிலிடப்படவுள்ளது. </p><p>

உரிய பயனாளிகள் இன்று (3) முதல் தங்களுக்கான முதியோர் கொடுப்பனவை அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>&nbsp;</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T02:02:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/aswesuma-allowance-credit-bank-accounts-today-1788399572"></link>
            <id>https://ibctamil.com/article/aswesuma-allowance-credit-bank-accounts-today-1788399572</id>
            <summary type="text">2026 ஆகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.அந்தவகையில்&amp;nbsp;70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.</p><p>அந்தவகையில்&nbsp;70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான 'அஸ்வெசும' முதியோர் கொடுப்பனவு இன்று (03) உரிய பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.</p><h2>அஸ்வெசும வங்கிக் கணக்குகள்&nbsp;</h2><p>இதற்கமைய, அஸ்வெசும நலன்புரிப் நன்மைகள் செலுத்தும் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 618,352 முதியோர்களுக்காக 3,091,760,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ce13d96-6701-4ece-8e95-bda474cf0ed8/26-6a98d38c5b601.webp' /></p><p>

மேலும், இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 78,260 முதியோர்களுக்காக 391,300,000 ரூபாய் நிதி வைப்பிலிடப்படவுள்ளது.</p><p> 

உரிய பயனாளிகள் இன்று (3) முதல் தங்களுக்கான முதியோர் கொடுப்பனவை அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T01:55:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் இல்லாமல் பல மாதங்கள் பறக்கும் விமானம் - பெங்களூரு ஸ்டார்ட்அப் Alteon புதிய சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/alteons-fuel-free-aircraft-stays-airborne-months-1788400275"></link>
            <id>https://news.lankasri.com/article/alteons-fuel-free-aircraft-stays-airborne-months-1788400275</id>
            <summary type="text">Alteons fuel-free aircraft stays airborne for months: எரிபொருள் இல்லாமல் பல மாதங்கள் பறக்கும் விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Alteon ஸ்டார்ட்அப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Alteons fuel-free aircraft stays airborne for months: எரிபொருள் இல்லாமல் பல மாதங்கள் பறக்கும் விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
Alteon ஸ்டார்ட்அப் நிறுவனம்</h2><p>பெங்களூருவைச் சேர்ந்த இளம் தொழில்முனைவோர் சமய் சங்க்வி (20 வயது) நிறுவிய Alteon என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், உலகளாவிய விமானத் துறையில் புரட்சிகரமான முயற்சியை மேற்கொண்டுள்ளது.</p><p>

எரிபொருள் இல்லாமல், பல மாதங்கள் வானில் பறக்கக்கூடிய autonomous விமானம் உருவாக்கும் பணியில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/848f2be3-bf28-420f-a23e-28b39d3fae72/26-6a98d2957fa15.webp' /></p><h2>அல்பட்ராஸ் பறவை பறக்கும் முறை</h2><p>இந்த விமானம், அல்பட்ராஸ் பறவை பறக்கும் முறையைப் பின்பற்றுகிறது. அல்பட்ராஸ் தினமும் 800-1000 கிலோமீட்டர் தூரம், இறக்கைகள் அசைக்காமல், Dynamic Soaring எனப்படும் தொழில்நுட்பத்தின் மூலம் பறக்கிறது.</p><p> இதே முறையை பயன்படுத்தி, Alteon விமானம் கடலின் மேல் காற்றின் வேக வேறுபாடுகளை (wind gradients) பயன்படுத்தி, எரிபொருள் தேவையின்றி பறக்கிறது.</p><p></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">At Alteon, we are building planes that fly for more than a year without landing. Ones that would take off in 2026 and land in 2027.<br><br>We’ve raised a $2.5M pre-seed, led by <a href="https://x.com/lachygroom?ref_src=twsrc%5Etfw">@lachygroom</a>, with participation from <a href="https://x.com/shubg?ref_src=twsrc%5Etfw">@shubg</a> at <a href="https://x.com/scaletogether?ref_src=twsrc%5Etfw">@scaletogether</a>.<br><br>We do this using a flight technique called… <a href="https://t.co/OdcT9VV9Gs">pic.twitter.com/OdcT9VV9Gs</a></p>&mdash; Samay Sanghvi (@samaysanghvi) <a href="https://x.com/samaysanghvi/status/2094785133173973171?ref_src=twsrc%5Etfw">September 1, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><h2>
சாதனை</h2><p>2026 ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற சோதனையில், Alteon விமானம் கடலின் மேற்பரப்பில் ஒரு மீட்டர் உயரத்தில், autonomous முறையில் பல முறை சுற்றி பறந்தது. </p><p>இந்த சாதனை, நிறுவனத்திற்கு 2.5 மில்லியன் டொலர் முதலீட்டை ஈட்டித் தந்தது.

இந்த விமானம், கடல்களை தொடர்ந்து கண்காணிப்பதற்கான மிகச் சிறந்த தீர்வாகக் கருதப்படுகிறது. </p><p>கப்பல்கள் அல்லது செயற்கைக்கோள்களை விட மிகக் குறைந்த செலவில், நீண்ட காலம் கடலின் நிலையைப் பதிவு செய்யும் திறன் இதற்கு உள்ளது.
</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a48d16f-6250-4163-83fd-e4693d9cd7f1/26-6a98d294c86bc.webp' /></p><p>Alteon நிறுவனம், எதிர்காலத்தில் இந்த விமானங்களை கடல் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் ஆய்வு, மீன்பிடி கண்காணிப்பு, மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான ஆராய்ச்சிகளில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
</p><p>
சமய் சங்க்வி கூறியதாவது: “விமானங்கள் எப்போதும் தரையிறங்க வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால், எங்கள் தொழில்நுட்பம் அதை மாற்றுகிறது. எரிபொருள் இல்லாமல், மாதக்கணக்கில் பறக்கும் விமானம் உலகளாவிய கண்காணிப்பில் புதிய யுகத்தைத் தொடங்கும்.” என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T01:48:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப் வெளியிட்ட நிம்மதி தரும் செய்தி ; முற்றுப் பெறும் நிலையில் மோதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-delivers-reassuring-news-1788391882"></link>
            <id>https://canadamirror.com/article/trump-delivers-reassuring-news-1788391882</id>
            <summary type="text">ஈரானுடன் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள இராணுவ மோதல்கள் மிக நீண்ட காலத்திற்கு நீடிக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
 
அத்துட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடன் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள இராணுவ மோதல்கள் மிக நீண்ட காலத்திற்கு நீடிக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p> 
அத்துடன், ஹோர்முஸ் நீரிணைப் (Strait of Hormuz) பகுதி தற்போது அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e220f50d-7613-4cd2-afbf-5c2cb6e36eeb/26-6a98b1d0d9914.webp' /></p><p>

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே புதன்கிழமை மீண்டும் மோதல்கள் உருவானதை தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தை அமெரிக்கா வெற்றிகரமாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்தார்.</p><p>

தினசரி மில்லியன் கணக்கான பீப்பாய் மசகு எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்படுவதாகவும், எப்போதாவது ஈரான் ஏவும் ஆளில்லா விமானங்களை (Drones) அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்தி வருவதாகவும் அவர் கூறினார்.
</p><p>
பாரசீக வளைகுடாவில் முக்கிய கடல்வழிப் பாதையாகத் திகழும் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கா மிகவும் வலுவான கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், பெரும் தடங்கல்கள் எதுவுமின்றி எண்ணெய் விநியோகப் பாதைகள் சீராக இயங்கி வருவதாக உறுதியளித்துள்ளார்.
</p><p>
இந்தப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் போதிலும், நிலைமை விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என அமெரிக்கா நம்பிக்கை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-03T01:17:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிருஷ்ண ஜெயந்தியில் நிகழும் அரிய கிரக நிலைகள் ; அதிரஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rare-planetary-alignments-on-krishna-jayanti-1788397913"></link>
            <id>https://jvpnews.com/article/rare-planetary-alignments-on-krishna-jayanti-1788397913</id>
            <summary type="text">இந்த ஆண்டின் கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 04 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. ஜோதிடத்தின் படி இந்த ஆண்டிற்கான கிருஷ்ண ஜெயந்தி நாளானது மிகவும் சிறப்பானதாக கர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இந்த ஆண்டின் கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 04 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. ஜோதிடத்தின் படி இந்த ஆண்டிற்கான கிருஷ்ண ஜெயந்தி நாளானது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்நாளில் பல முக்கியமான கிரகங்கள் மிகவும் சிறப்பான நிலையில் இருக்கும்.&nbsp;</p><p style="text-align: justify; ">குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசியிலும்,&nbsp; சந்திரன் தனது உச்ச ராசியான ரிஷப ராசியில் இருப்பர். சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசியிலும் இருப்பர். இப்படியான கிரகங்களின் நிலைகள் கிருஷ்ண ஜெயந்தி நாளில் அமைந்திருப்பது மிகவும் மங்களகரமானதாக கூறப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35fa267d-31e3-4296-9303-4f9335cd5737/26-6a98c95ab28ed.webp' /></p><h2 style="text-align: justify; ">அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்&nbsp;</h2><p style="text-align: justify; ">இப்போது கிருஷ்ண ஜெயந்தி நாளில் உள்ள கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.&nbsp;</p><p style="text-align: justify; "><b> ரிஷபம் :</b> தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகலாம். சிலருக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கலாம். தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

</p><p style="text-align: justify; "><b>கடகம் :&nbsp;</b>தொழிலில் முன்னேறுவதற்கான நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலைமை வலுவடைவதற்கான வாய்ப்புள்ளது. மேலும் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். நிறைய பணத்தை சேமிக்கவும் முடியும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



</p><p style="text-align: justify; "><b>
கன்னி :</b>&nbsp;குருவின் அருளால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதோடு, தொழிலதிபர்களுக்கு நிறைய லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் சிறப்பாக முடிவடைந்து மன திருப்தியைத் தரும்.

</p><p style="text-align: justify; "><b>தனுசு : </b>&nbsp;தொழிலதிபர்கள் தங்களின் புதிய திட்டங்களால் நல்ல பலனைப் பெறுவார்கள். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் இக்காலத்தில் கிடைக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பல வழிகளில் இருந்து நல்ல செய்திகளைப் பெறக்கூடும்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-03T01:16:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் வேனுடன் பிடிபட்ட நபர் ; சிசிரிவி காணொளிகளால் நீண்டகாலம் அரங்கேறிய செயல் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-arrested-with-van-in-tamil-area-1788396924"></link>
            <id>https://jvpnews.com/article/man-arrested-with-van-in-tamil-area-1788396924</id>
            <summary type="text">மட்டக்களப்பு, இருதயபுரம் பகுதியில் வீதியோரத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த ஆடொன்றைப் பிடித்து வேனில் கடத்திச் சென்ற காத்தான்குடியைச் சேர்ந்த நபரொருவரை...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பு, இருதயபுரம் பகுதியில் வீதியோரத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த ஆடொன்றைப் பிடித்து வேனில் கடத்திச் சென்ற காத்தான்குடியைச் சேர்ந்த நபரொருவரை செவ்வாய்கிழமை (01) பொலிஸார் கைது செய்துள்ளதுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் மீட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">

கடந்த ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி இருதயபுரம் பகுதியில் வீதியோரத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த 5 ஆடுகளில் ஒன்றை, சிறிய ரக வேனில் வந்த நபரொருவர் பிடித்து ஏற்றிச் சென்றுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8314c581-16f9-4ce6-bdee-ed086e1086e8/26-6a98c57f33c2b.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இது குறித்து ஆட்டின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
</p><p style="text-align: justify; ">
முறைப்பாட்டின் அடிப்படையில், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பெருங்குற்றத் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்&nbsp; தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

</p><p style="text-align: justify; ">இதன்போது, சிசிரிவி காணொளிகளின் உதவியுடன் ஆடு கடத்தப்பட்ட வாகனம் அடையாளம் காணப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

இதனைத் தொடர்ந்து, செவ்வாய்கிழமை (01) காத்தான்குடி பகுதியில் வைத்துச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சிறிய ரக வேனும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.</p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்ட நபர் நீண்டகாலமாக வாகனங்களைப் பயன்படுத்தி ஆடு, மாடுகளைத் திருடிச் செல்லும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

சந்தேகநபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-03T01:16:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனைகளா ; நீரிழிவு வரை செல்லும் ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/eating-then-sleeping-causes-health-problems-1788393641"></link>
            <id>https://jvpnews.com/article/eating-then-sleeping-causes-health-problems-1788393641</id>
            <summary type="text">நிறைய பேருக்கு இரவு உணவு உண்டபின் உடனடியாக தூங்கச் செல்லும் பழக்கம் இருக்கிறது. ஆனால் அது மிகவும் தவறானது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.அப்படி பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிறைய பேருக்கு இரவு உணவு உண்டபின் உடனடியாக தூங்கச் செல்லும் பழக்கம் இருக்கிறது. ஆனால் அது மிகவும் தவறானது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.</p><p>அப்படி படுக்கும்போது உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என அவர்கள் எச்சரிக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/689635e0-f8cd-4b6f-9a93-34b2ca945e27/26-6a98b8ac00f2c.webp' /></p><h2>காத்திருக்கும் ஆபத்து&nbsp;</h2><p>

</p><p>சாப்பிட்ட உடனே தூங்கச் செல்லவதால் புவியீர்ப்பு விசையின் காரணமாக வயிற்றுப் பகுதியில் உள்ள அமிலங்கள் தொண்டைப் பகுதியை நோக்கி மேல் நோக்கி வரக்கூடும். இது கடுமையான நெஞ்சு எரிச்சல், உணவு செரிமானம் தாமதமாவதால் வயிறு உப்புசம், அஜீரணம் மற்றும் குடலில் அசௌகரியம் ஏற்படும்.</p><p> உணவில் உள்ள கலோரிகள் சரியாக எரியாமல் கொழுப்பாக மாறவும் வாய்ப்பிருக்கிறது.. இதனால் உடல் எடை மற்றும் தொப்பை அதிகரிக்கும்.</p><p> வயிறு முட்டல் காரணமாக ஆழ்ந்த தூக்கம் பாதிக்கப்படும்.. இப்பழக்கம் நீண்ட நாட்கள் தொடர்ந்தால் நீரிழிவு மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படலாம்.</p><p></p><p>
</p><p>
எனவே இரவு உணவை சாப்பிட்டவுடன் படுக்காமல் சிறிது நேரம் அமர்ந்திருப்பது அல்லது மெதுவாக நடப்பது உடலுக்கு நல்லது.</p><p>முக்கியமாக இரவு உணவிற்கும், தூக்கத்திற்கும் இடையே குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் இடைவெளி இருப்பது மிகவும் நல்லது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T01:15:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாரிகளை மிரள வைத்த சீன கதவுகள் ; சோதனையில் காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chinese-doors-shock-officials-1788387634"></link>
            <id>https://jvpnews.com/article/chinese-doors-shock-officials-1788387634</id>
            <summary type="text">சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உலோகக் கதவுகளுக்குள் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,00,000-க்கும் அதிகமான சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளை சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உலோகக் கதவுகளுக்குள் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,00,000-க்கும் அதிகமான சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். </p><p>

இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய கொள்கலன் ஒன்றைச் பரிசோதித்த சுங்க வருவாய் பணிப்பாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இந்தச் சட்டவிரோதக் கடத்தலைக் கண்டுபிடித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01bbe79e-c230-4b04-8b1c-c84e534c0a8c/26-6a98a1339d59a.webp' /></p><h2>சந்தைப் பெறுமதி</h2><p>

சுங்கப் பிரிவினரின் சோதனையில் இருந்து தப்பிப்பதற்காகவே இந்தக் சிகரெட்டுகள் கதவுகளுக்குள் மிகவும் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் சந்தைப் பெறுமதி 30 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p> 

</p><p>இச்சம்பவம் தொடர்பில் சுங்க வருவாய் பணிப்பாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T01:15:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்; அகில இலங்கையில் முதலிடம் பெற்ற யாழ் மாணவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-student-tops-sri-lanka-scholarship-exam-1788395616"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-student-tops-sri-lanka-scholarship-exam-1788395616</id>
            <summary type="text">நேற்று வெளியான பெறுபேறகளின் படி புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நேற்று வெளியான பெறுபேறகளின் படி புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த மாணவன் சு. சபின் சாதனை படைத்துள்ளார்.</p><p style="text-align: justify;">குறித்த மாணவன்&nbsp;புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளைப் பெற்று தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/094d239a-2d57-4e64-b656-444943d10528/26-6a98c06188b97.webp' /></p><p style="text-align: justify; ">

யாழ். மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

மாணவனின் இந்தச் சிறப்பான சாதனை, அவரது குடும்பத்தினருக்கும் பாடசாலைக்கும் மட்டுமன்றி, யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக&nbsp; மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">அதேநேரம் சிங்கள மொழி மூலம் பெற்றுக்கொண்ட அதிகூடிய புள்ளியாக 193 குருநாகல் மாவட்டத்தில் பதிவாகியது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T01:15:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நொடியில் மாறிய வாழ்க்கை ; குடும்பத்தையும் இழந்து, பல கோடிகளையும் இழந்த தொழிலதிபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/businessman-loses-family-and-multi-million-fortune-1788375302"></link>
            <id>https://jvpnews.com/article/businessman-loses-family-and-multi-million-fortune-1788375302</id>
            <summary type="text">இமயமலையில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக திபெத், சீன எல்லையில் ஒரு செயற்கையாக ஒரு ஏரி உருவாகி, அந்த ஏரி உடைந்து அதிலிருந்து நீர் வெளியேறி வடக்கு நேபாளத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இமயமலையில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக திபெத், சீன எல்லையில் ஒரு செயற்கையாக ஒரு ஏரி உருவாகி, அந்த ஏரி உடைந்து அதிலிருந்து நீர் வெளியேறி வடக்கு நேபாளத்தில் உள்ள ஆறுகளில் பாய்ந்ததால் அந்த நாட்டில் உள்ள நான்கு ஊர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.</p><p style="text-align: justify; ">வெள்ளத்தில் சிக்கிய இதுவரை 1000-த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தவிட்டனர்.&nbsp;</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6aefc306-c1d3-4ca0-bb42-f76d9f6ece68/26-6a987107f36be.webp' /></p><h2 style="text-align: justify; ">ஆடை வியாபாரம்&nbsp;</h2><p style="text-align: justify; "> இந்நிலையில்தான் நேபாள வெள்ளத்தால் அங்கு ஆடை வியாபாரம் செய்து கொண்டிருந்த உத்தரப்பிரதேச சேர்ந்த இந்திய தொழிலதிபர் ஒரே நாளில் நடுத்தெருவுக்கு வந்திருக்கிறார்.</p><p style="text-align: justify; "> வெள்ளப்பெருக்கில் சிக்கி அவரின் மூன்றடுக்கு வீடு, 4 கடைகள் மற்றும் 4 குடோன்களை அசோக்குமார் இழந்துவிட்டார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இதனால் 45 கோடி மதிப்பிலான தொழிலை அவர் முற்றிலுமாக இழந்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.. அதோடு வெள்ளத்தில் அவரின் குடும்ப உறுப்பினர்கள் இரண்டு பேரையும் அவர் இழந்துவிட்டார். </p><p style="text-align: justify; ">தற்போது அணிவதற்கு சட்டை கூட இல்லாமல் மற்றவர்களிடம் வாங்கி அணியும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருக்கிறார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-03T01:14:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக பாலியல் தொழில் ; மீட்கப்பட்ட பெண்கள் ; பங்களாவில் காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/women-rescued-from-sex-trade-promised-film-roles-1788373289"></link>
            <id>https://jvpnews.com/article/women-rescued-from-sex-trade-promised-film-roles-1788373289</id>
            <summary type="text">சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஆட்டோவில் அழைத்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுமி, ‘என்னை காப்பாற்றுங்கள்..’ என கத்தி கூச்சலிட்ட நிலையில், பொதுமக்கள் அந்த ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஆட்டோவில் அழைத்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுமி, ‘என்னை காப்பாற்றுங்கள்..’ என கத்தி கூச்சலிட்ட நிலையில், பொதுமக்கள் அந்த ஆட்டோவை மடக்கிப்பிடித்து சிறுமியை மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
</p><p>
அந்த சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை காட்டி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்களை சென்னைக்கு அழைத்து வந்து ராமாபுரம் பங்களாவில் சிறை வைத்தது தெரிய வந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd203aa5-4559-43d9-bae5-2b2bbe032a44/26-6a98692b065ef.webp' /></p><h2>பாலியல் தொழில்&nbsp;</h2><p> மேலும் அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் சிறுமி பொலிசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


</p><p>இதையடுத்து போலிசார் சம்பந்தப்பட்ட பங்களாவில் அதிரடி சோதனை நடத்தி, அங்கிருந்த சிறுமிகள் உள்ளிட்ட சுமார் 10 பெண்களை மீட்டனர்.</p><p> இவர்களில் வங்கதேசத்தை சேர்ந்த இரண்டு பெண்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>இந்த கும்பலின் தலைவி என சந்தேகிக்கப்படும் பெண் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>மேலும் சென்னையில் அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக கூறப்படும் 5 பேரை பொலிசார் தற்போது கைது செய்துள்ளனர்.&nbsp; </p><p>

</p>]]></content>
            <updated>2026-09-03T01:13:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலமைப்பரிசில் பெறுபேறு ; தேசிய ரீதியில் யாழ் மாவட்டத்தில் படைக்கப்பட்ட சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/scholarship-results-jaffna-sets-national-record-1788369376"></link>
            <id>https://jvpnews.com/article/scholarship-results-jaffna-sets-national-record-1788369376</id>
            <summary type="text">2026 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, சிங்கள மொழி மூலம் பெற்றுக்கொண்ட அதிகூடிய புள்ளியாக 193 (குருநாகல்) மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2026 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, சிங்கள மொழி மூலம் பெற்றுக்கொண்ட அதிகூடிய புள்ளியாக 193 (குருநாகல்) மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. </p><p style="text-align: justify; ">

இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாக இன்று (02) பிற்பகல் பரீட்சைத் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே இதனைத் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ca6bf7e-c120-4da4-b678-4ef547b230b6/26-6a9859e1ed5da.webp' /></p><h2 style="text-align: justify; ">வெட்டுப்புள்ளி</h2><p> </p><p style="text-align: justify; ">

அத்துடன் தமிழ் மொழி மூலமாக அதிகூடிய புள்ளியாக 188 பதிவாகியுள்ளதுடன், யாழ்ப்பாண மாவட்டத்திலேயே இந்த புள்ளி பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். </p><p style="text-align: justify; ">

இம்முறை பரீட்சையில் விசேட தேவையுடைய 1,018 மாணவர்கள் தோற்றினர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அதேபோல், இம்முறை அதிகூடிய வெட்டுப்புள்ளியாக 139 அமைந்துள்ளதுடன், பேறுகளுக்கு அமைய 56,000 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை விட அதிக புள்ளிகளைப் பெற முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். </p><p style="text-align: justify; ">

கடந்த ஒகஸ்ட் 09ஆம் திகதி நடைபெற்ற இந்த பரீட்சைக்காக 294,132 விண்ணப்பதாரர்கள் பதிவாகியிருந்த நிலையில், அவர்களில் 289,867 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-03T01:13:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[86 டன் தங்கத்தை பிரித்தானியாவிற்கு மாற்றிய நெதர்லாந்து மத்திய வங்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/netherlands-shifts-86-tons-of-gold-to-london-1788398165"></link>
            <id>https://news.lankasri.com/article/netherlands-shifts-86-tons-of-gold-to-london-1788398165</id>
            <summary type="text">Netherlands shifts 86 tons of gold to London: அரசியல் பதற்றம் காரணமாக நெதர்லாந்து தங்கக் கையிருப்பு லண்டனுக்கு மாற்றபட்டது.

 86 டன் தங்கம்நெதர்லாந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Netherlands shifts 86 tons of gold to London: அரசியல் பதற்றம் காரணமாக நெதர்லாந்து தங்கக் கையிருப்பு லண்டனுக்கு மாற்றபட்டது.
</p><h2>
 86 டன் தங்கம்</h2><p>நெதர்லாந்து மத்திய வங்கி (De Nederlandsche Bank – DNB) உலகளாவிய அரசியல் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தனது தங்கக் கையிருப்பில் பெரும் மாற்றத்தை மேற்கொண்டுள்ளது.</p><p>

2026 மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரை, அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் கனடாவின் ஒட்டாவாவில் இருந்த 86 டன் தங்கம் லண்டனுக்கு மாற்றப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5a5a7f7-3d89-4c4a-ae2d-a5e2eec0c6cf/26-6a98ca56ed59d.webp' /></p><p>இந்த நடவடிக்கை, அவசரத் தயாரிப்பு (crisis preparedness) என வங்கி விளக்கமளித்துள்ளது. தங்கம் உலகளாவிய நம்பிக்கையின் அடையாளமாகவும், கடுமையான நெருக்கடிகளில் பாதுகாப்பான கையிருப்பாகவும் கருதப்படுகிறது. </p><p>

லண்டனில் உள்ள Bank of England தங்கம் சர்வதேச வர்த்தக தரநிலைகளுக்கு ஏற்ப இருப்பதால், அவசர சூழ்நிலையில் விரைவாக பயன்படுத்தக்கூடியதாக உள்ளது.
</p><p></p><p>முன்பு, நியூயார்க் 31.3 சதவீதம் மற்றும் ஒட்டாவா 19.7 சதவீதம் தங்கக் கையிருப்பை வைத்திருந்தது. மாற்றத்திற்குப் பிறகு, இரண்டிலும் 18.5 சதவீதம் மட்டுமே உள்ளது.</p><p> தற்போது, லண்டனில் 32.1 சதவீதம், Zeist (நெதர்லாந்து) 30.8 சதவீதம், நியூயார்க் 18.5 சதவீதம், ஒட்டாவா 18.5 சதவீதம் என தங்கக் கையிருப்பு சமமாகப் பகுக்கப்பட்டுள்ளது.
</p><p>
மொத்தமாக, நெதர்லாந்து 612.4 டன் தங்கம் வைத்துள்ளது. 2025 இறுதியில் இதன் மதிப்பு 72.2 பில்லியன் யூரோ (சுமார் $83.6 பில்லியன்) ஆகும். </p><p></p><p>இதில், 27 டன் தங்கம் நேரடியாக அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்து நெதர்லாந்தின் Zeist நகரில் உள்ள பாதுகாப்பான களஞ்சியத்துக்கு கொண்டு வரப்பட்டது. அதே அளவு தங்கம் Zeist-இல் இருந்து லண்டனுக்கு மாற்றப்பட்டது. </p><p>மேலும், நியூயார்க்-இல் இருந்த 59 டன் தங்கம் விற்கப்பட்டு, அதே அளவு லண்டனில் வாங்கப்பட்டது.
</p><p>
இந்த நடவடிக்கை, உலகளாவிய அரசியல் பதற்றம் மற்றும் பொருளாதார அசாதாரண நிலைகளுக்கு எதிராக நெதர்லாந்து எடுத்த முக்கியமான பாதுகாப்பு முயற்சியாகக் கருதப்படுகிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T01:13:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மழையுடனான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/afternoon-thunderstorms-for-the-next-few-days-1788396969"></link>
            <id>https://ibctamil.com/article/afternoon-thunderstorms-for-the-next-few-days-1788396969</id>
            <summary type="text">

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண...</summary>
            <content type="html"><![CDATA[<p>

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
</p><p>
சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று இன்று மதியம் சுமார் 12.09 மணியளவில் மாதம்ப, தோரயாய, தொட்டகமுவ, ரத்தோட்ட மற்றும் களுவாஞ்சிக்குடி போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்தோடு, வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டத்திலும் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.</p><p></p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p>

இதேவேளை, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a11fb8d-159f-45b5-8ec9-9bb8013cbba3/26-6a98c8cf00217.webp' /></p><p>
</p><p>
மேலும், மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் பொலனறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
</p><p>
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T01:09:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு – இன்று இரவு முதல் பல பகுதிகளில் நீர்வெட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/24-hour-water-cut-in-colombo-areas-1788396341"></link>
            <id>https://tamilwin.com/article/24-hour-water-cut-in-colombo-areas-1788396341</id>
            <summary type="text">கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் இன்று (03) இரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் இன்று (03) இரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
</p><p>
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, இன்று இரவு 8.00 மணி முதல் நாளை (04) இரவு 8.00 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.</p><h2>நீர்வெட்டு</h2><p>
</p><p>
இதன்படி, நுகேகொடை, கொஹுவலை, தெஹிவளை, கல்கிசை, ரத்மலானை, மொறட்டுவை, ராவதாவத்தை, சொய்சாபுரம், அங்குலானை, இதிபெத்த, கடுபெத்த, கல்தெமுல்ல, மோதறை, கொரளவெல்ல, எகொடஉயன மற்றும் கட்டுக்குருந்த ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdd77081-7d53-48bb-a89a-2f809253e2bd/26-6a98c54835c0a.webp' /></p><p>
</p><p>
மேலும், செத்சிறிபாய, ஹிம்புடான, உடுமுல்ல வீதி, மாளிகாகொடெல்ல, வங்கிச் சந்தி வீதி, டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தை, ஹவ்லொக் வீதி, கல்யாணி வீதி, கொழும்பு 06, வைத்தியசாலை வீதி, ஜெயந்தி மாவத்தை மற்றும் சாந்தி மாவத்தை ஆகிய பகுதிகளிலும் நீர்வெட்டு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

நீர் விநியோகம் தடைப்படுவதால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, நீர்வெட்டு நடைமுறையில் இருக்கும் காலப்பகுதியில் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T00:54:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர தாண்டவமாடும் எபோலா தொற்று ; 3000த்தை கடந்த பலி எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ebola-outbreak-death-toll-surpasses-3-000-1788396542"></link>
            <id>https://canadamirror.com/article/ebola-outbreak-death-toll-surpasses-3-000-1788396542</id>
            <summary type="text">காங்கோவில் எபோலா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை விட, நோய் பரவும் வேகம் மிக அதிகமாக உள்ளது. சமீபத்திய அரசுத் தரவுகளின்படி, 6,100-க்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காங்கோவில் எபோலா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை விட, நோய் பரவும் வேகம் மிக அதிகமாக உள்ளது.</p><p> சமீபத்திய அரசுத் தரவுகளின்படி, 6,100-க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளில் 3,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d6103fa-210d-4209-9522-fe92f6d7a506/26-6a98c3ffb6245.webp' /></p><p>
</p><p>
காங்கோ சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, மே மாத மத்தியில் இது உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டதில் இருந்து, 6,186 உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளும், 3,007 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. </p><p>வரலாற்றிலேயே மிக வேகமாக பரவும் எபோலா பாதிப்பாக இது நீடிக்கிறது. நோய்த்தொற்றின் பரவல் வேகம் மக்களின் வாழ்க்கையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.&nbsp;</p><p>வைரஸை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் "நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டவில்லை" என்றும், பல சுகாதார மண்டலங்களில் நோய் வேகமாகப் பரவுவது "நோய்த்தொற்றின் கட்டுப்பாடற்ற பரவலை" குறிக்கிறது என்றும் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் (CDC) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-03T00:49:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் முக்கியஸ்தர் வீடு ஒன்றிற்கு உதவி தேடிச் சென்ற 3 தாய்மார்களுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/major-party-boycotts-jaffna-global-conference-1788382296"></link>
            <id>https://tamilwin.com/article/major-party-boycotts-jaffna-global-conference-1788382296</id>
            <summary type="text">சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தன்று &quot;நீதிக்கான நீள்பயணம்&quot; எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தன்று "நீதிக்கான நீள்பயணம்" எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு நடைபெற்றது.
</p><p>

இந்தநிலையில் குறித்த மாநாட்டிற்கு வடக்கிலுள்ள முக்கிய கட்சியொன்று கலந்துகொள்ள மாட்டோம் என்று அறிக்கை வெளியிட்டது.</p><p>

இதனால் இந்த விடயம் தமிழர்கள் மத்தியில் பேசுபொருளான நிலையில், 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் உப தலைவி அ. அமலநாயகி இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் தெளிவுப்படுத்தினார்.
</p><p>


அதாவது குறித்த கட்சியை நேரில் சென்று அழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முற்று முழுவதாக மறுப்பதாக அமலநாயகி குறிப்பிட்டார்.</p><p>

கட்சியின் முக்கியஸ்தர் வீட்டிற்கு இரண்டு நாட்களாக தொடர்ந்து சென்ற நிலையில் அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது.மீண்டும் ஒகஸ்ட் மாதமளவில்&nbsp; சென்று நீண்ட நேரமாக காத்திருந்த நிலையில் குறித்த முக்கியஸ்தர் வெளியில் சென்றுள்ளார் என்ற பதிலே கிடைத்தது.</p><p>

எனவே அழைப்பிதழை மட்டுமே கொடுத்து விட்டு வந்ததாக குறிப்பிட்டார்.
</p><p>
இந்த விடயம் தொடர்பான முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/1VkU2Km2zbg" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T00:47:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் கோர விபத்து! ஒருவர் பலி மற்றுமொருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vavuniya-accident-one-dead-one-seriously-injured-1788394811"></link>
            <id>https://ibctamil.com/article/vavuniya-accident-one-dead-one-seriously-injured-1788394811</id>
            <summary type="text">

வவுனியா பல்கலைக்கழக விடுதிக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், பிறிதொருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு தீவிர சிகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>

வவுனியா பல்கலைக்கழக விடுதிக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், பிறிதொருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக பூவரசங்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். </p><p> 

விபத்து தொடர்பாக தெரியவருவதாவது, வீதியோரத்தில் அமர்ந்து சோளம் விற்பனை செய்து கொண்டிருந்த நபரிடம், பிறிதொருவர் சோளம் வாங்கிக் கொண்டிருந்த வேளையில் மன்னாரில் இருந்து வந்த டிப்பர் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இவ்விபத்தில் படுகாயமடைந்த இருவரையும் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி
சோளம் வாங்கிய நபர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fb297d1-afb5-4e85-b92d-46816912ddbd/26-6a98c0e49aced.webp' /></p><p>

சம்பவத்தில் சாளம்பைக்குளம் பகுதியை சேர்ந்த ரகீம் மஜீத் ( வயது 31) என்பவரே பலியாகியுள்ளார்.
</p><p>
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைப் பூவரசங்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T00:39:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் அறிமுகமான Simple Wave மின்சார ஸ்கூட்டர் - 243 கிமீ ரேஞ்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/simple-wave-ev-scooter-india-launch-1788395264"></link>
            <id>https://news.lankasri.com/article/simple-wave-ev-scooter-india-launch-1788395264</id>
            <summary type="text">Simple Wave EV scooter India launch: இந்தியாவில் Simple Energy நிறுவனம் தனது புதிய Simple Wave மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதன் ஆரம்...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>Simple Wave EV scooter India launch: </b>இந்தியாவில் Simple Energy நிறுவனம் தனது புதிய Simple Wave மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. </p><p>

இதன் ஆரம்ப விலை ரூ.1.10 லட்சம் (ex-showroom) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. </p><p>குடும்பங்களை குறிவைத்து வடிவமைக்கப்பட்ட இந்த மாடல், நிறுவனத்தின் முதல் family-focused ஸ்கூட்டராகும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f90257f-0b9d-44e1-845b-e9599310affa/26-6a98c13a4a245.webp' /></p><h2>முன்பதிவு&nbsp;செய்யலாம்</h2><p>இந்த ஸ்கூட்டரின் விநியோகம் செப்டம்பர் மாத இறுதி வாரத்தில் தொடங்கும் என நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது டீலர்ஷிப் வழியாக முன்பதிவு செய்யலாம்.</p><p></p><h3>

வேரியண்ட்கள் மற்றும் ரேஞ்ச்: </h3><p>
Simple Wave மாடல் மூன்று வகைகளில் கிடைக்கிறது - Wave S, Wave, Wave+.
</p><p>
Wave+ மாடல் அதிகபட்சமாக 243 கிமீ வரை பயணிக்கக்கூடிய திறன் (Range) கொண்டது.

இதில் 5kWh பேட்டரி, 6.4kW PMSM மோட்டார், மணிக்கு 90 கிமீ உச்ச வேகம், 179Nm டார்க் ஆகியவை வழங்கப்படுகின்றன.
</p><p>
மற்ற மாடல்களில் 3.7kWh, 2.7kWh மற்றும் 2.2kWh பேட்டரி விருப்பங்கள் உள்ளன. அவை 171 கிமீ, 132 கிமீ மற்றும் 110 கிமீ ரேஞ்சு வழங்குகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b50c44ca-84f5-499c-802d-b332eaac679f/26-6a98c13b07acf.webp' /></p><p>
</p><h3>
சார்ஜிங் வசதி: </h3><p>
Wave+ மாடல் fast charging ஆதரவு கொண்டது. 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 2 மணி 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.</p><p> அனைத்து மாடல்களும் Ride, Eco, ECOX மோடுகளை வழங்குகின்றன, மேம்பட்ட மாடல்களில் Sport மோடும் உள்ளது.
</p><p>
இந்த புதிய மின்சார ஸ்கூட்டர், இந்திய EV சந்தையில் குடும்பங்களுக்கு ஏற்ற விலை மற்றும் அதிக பயண திறன் கொண்டதாக இருப்பதால், போட்டியை மேலும் அதிகரிக்கும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T00:34:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல சர்ச்சைகளில் சிக்கிய முன்னாள் மேயர் - திடீர் மரணத்தில் பின்னணியில் எழுந்துள்ள சந்தேகம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-mayor-embroiled-in-multiple-controversies-1788395093"></link>
            <id>https://tamilwin.com/article/former-mayor-embroiled-in-multiple-controversies-1788395093</id>
            <summary type="text">அம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்றையதினம்(2) சடலமாக மீட்கபட்டுள்ளமையா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்றையதினம்(2) சடலமாக மீட்கபட்டுள்ளமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
முதற்கட்ட விசாரணைகளில் இவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துகொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டாலும், பொலிஸார் இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>இந்தநிலையில், எராஜ் பெர்னாண்டோ மீது பல சர்ச்சைக்குரிய வழக்குகள் மற்றும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

அம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்து, பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் ஒருவரைத் தாக்க மற்றும் கடத்த முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p>&nbsp;2014 ஜனாதிபதித் தேர்தலின் போது, மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக வீதி நாடகம் நடத்திய குழுவைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 2014 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போலித் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகப் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த வழக்கில் 2019-ஆம் ஆண்டு அவருக்கு ஐந்து ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
</p><p>
பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு தனியார் காணிக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
இவ்வாறான பல குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், இவரின் மரணத்தில் அரசியல் தாக்கம் உள்ளதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது லங்காசிறியின் 
NewsInsightTamil நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/MrLQGVaVBrk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T00:33:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ள அனர்த்தம் ; பலி எண்ணிக்கை 1,243-ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nepal-floods-death-toll-rises-to-1-243-1788395024"></link>
            <id>https://canadamirror.com/article/nepal-floods-death-toll-rises-to-1-243-1788395024</id>
            <summary type="text">நேபாளம்-திபெத் எல்லை பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,243-ஆக அதிகரித்துள்ளது. இமயமலை நாடான நேபாளத்தில், போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம்-திபெத் எல்லை பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,243-ஆக அதிகரித்துள்ளது. </p><p>இமயமலை நாடான நேபாளத்தில், போட்டேகோஷி நதிக்கரையோரம் உள்ள சுரங்கப்பாதைகள் மற்றும் நிலத்தடி மின் நிலையங்களில் சிக்கியிருக்கலாம் என கருதப்படுபவர்களை மீட்கும் பணியில், மீட்புக் குழுவினர் மழை மற்றும் இடிபாடுகளுக்கு மத்தியிலும் போராடி வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6aa9a8f0-ae89-4871-8dd9-0d4f8e826bf7/26-6a98be1260647.webp' /></p><h2>மீட்பு பணி</h2><p>டந்த வாரம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் காணாமல் போன உள்ளூர் மக்களின் குடும்பத்தினர் அடையாள ரீதியிலான இறுதிச் சடங்குகளை நடத்திய நிலையில், இந்த பேரிடருக்கும் பருவநிலை மாற்றத்திற்கும் உள்ள தொடர்பை சர்வதேச சமூகத்திடம் வலுவாக எடுத்துரைக்க வேண்டும் என்று பிரதமர் பலேந்திர ஷா வலியுறுத்தினார்.

</p><p>
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எட்டு மாவட்டங்களில் இருந்து மேலும் பல உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 1,222-ஆக உயர்ந்துள்ளது. </p><p>அதேவேளையில், நாட்டின் பல நகரங்கள் மற்றும் கிராமங்களை வெள்ளம் புரட்டிப்போட்ட ஒரு வாரத்திற்குப் பிறகும் 4,875 பேர் காணாமல் போயுள்ளதாக நேபாளக் காவல்துறை தெரிவித்துள்ளது</p><p>.

பாதுகாப்புப் படையினர் சித்வான் மாவட்டத்தில் 348 உடல்களையும், நவல்ப்பராசி கிழக்கில் 218, நவல்ப்பராசி மேற்கில் 208 மற்றும் நுவாகோட்டில் 155 உடல்களையும் மீட்டுள்ளனர். </p><p>இதேபோல், ரசுவாவில் 127, கோர்காவில் 69, தடிங்கில் 60 மற்றும் தனஹுவில் 38 உடல்கள் மீட்கப்பட்டதாக தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-03T00:23:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர் முடிந்து 17 ஆண்டுகளாகியும் தமிழ் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் தொடர்கின்றன- யாழ். ஊடக அமையத் தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-journalists-still-face-issue-17-years-1788392134"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-journalists-still-face-issue-17-years-1788392134</id>
            <summary type="text">போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த போதும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கான
பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே உள்ளன என யாழ். ஊடக அமையத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடக...</summary>
            <content type="html"><![CDATA[<p>போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த போதும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கான
பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே உள்ளன என யாழ். ஊடக அமையத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கு.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
</p><p>
மறைந்த இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாசின் நினைவு தினமானது யாழ். ஊடக
அமையத்தில் நேற்று(02.09.2026) இடம்பெற்ற நிலையில், அதில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>தமிழ் மக்களின் இனப்பிரச்சினை</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் பகுதிகளில் இடம்பெறும் மக்களின் பிரச்சினைகளைத் தமிழ் ஊடகவியலாளர்களே
தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகின்றனர். தென்னிலங்கை ஊடகங்கள் அதனை
வெளிப்படுத்தத் தவறிவிட்டன.</p><p>

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கப்பெற்றிருந்தால், இந்த
அரசைத் தமிழ் மக்கள் தங்களது அரசாகக் கருதியிருப்பார்கள். அரச ஊடகங்களில் நேர்மையாகப் பணியாற்றுபவர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9a0479b-e0b0-4ff1-a02d-ae83489f8b5b/26-6a98b554534ee.webp' /></p><p>செம்மணி
மனிதப் புதைகுழி, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்கள் மற்றும் படுகொலை
செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரும் போராட்டங்களில் செய்தி சேகரித்தமை
போன்ற காரணங்களைக் காட்டி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரபாகரன்
டிலக்சன் அரச ஊடகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளமை இதற்குச் சான்றாகும்.
</p><p>
நடைபெறும் உண்மையான சம்பவங்களை மறைக்காமல் வெளிப்படுத்துவதே ஊடகவியலாளர்களின்
கடமை. தங்களுக்கு எதிரான விடயங்களை மறைக்கும் விதமாகச் செய்திகளைத் தணிக்கை
செய்வதில் அரச ஊடகங்கள் செயற்படுகின்றன.</p><p>

சுதந்திரமாகச் செய்தி அறிக்கையிடுவதற்குத் தடை விதித்து ஊடகவியலாளர்களை மன
உளைச்சலுக்குள்ளாக்கும் போக்கு ஜனநாயக நாட்டுக்கு முரணானது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T00:08:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பை உலுக்கிய மரணம் - அம்பலமான திட்டங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-death-that-shook-colombo-1788391502"></link>
            <id>https://tamilwin.com/article/the-death-that-shook-colombo-1788391502</id>
            <summary type="text">நாட்டில் அண்மை காலமான அரசியல் தரப்பில் பல முக்கிய புள்ளிகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வருகின்ற நிலையில், 
அம்பாந்தோட்டையின் முன்னாள் நகரபிதா எராஜ் பெர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் அண்மை காலமான அரசியல் தரப்பில் பல முக்கிய புள்ளிகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வருகின்ற நிலையில், 
அம்பாந்தோட்டையின் முன்னாள் நகரபிதா எராஜ் பெர்னாண்டோ மர்மமான முறையில் உயிரிழந்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இவர் தவறான முடிவின் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த உயிரிழப்பின் பின்னணி என்ன என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
இவர் சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (UPFA) ஆகியவற்றின் கீழ் அம்பாந்தோட்டை மாநகர சபையின் மேயராக (நகரபிதா) பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>
தற்பொழுது நாட்டில் அரசியல் தரப்பில் பல முக்கிய நபர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படுவதும் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படும் பொழுது இவ்வாறான மரணங்கள் நிகழ்வதும் வழமையான விடயமாக மாறியுள்ளது.</p><p>
இவ்வாறான நிலையில் இவருடைய மரணத்திற்கு பின்னணியிலும் ஏதாவது அரசியல் காரணங்கள் காணப்படலாம் என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் தற்பொழுது எழுந்துள்ளது.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பாக இன்னும் சில அதிர்ச்சி ஊட்டும் தகவல்களை லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சியின் ஊடாக விரிவாகப் பார்க்கலாம்..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/hCXh9BxV9x4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T00:07:37+00:00</updated>
        </entry>
    </feed>
