<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-19T05:30:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சர்வதேச பிடியாணை பிறப்பிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/interpol-notice-issued-for-basil-rajapaksa-1789789756"></link>
            <id>https://tamilwin.com/article/interpol-notice-issued-for-basil-rajapaksa-1789789756</id>
            <summary type="text">மாத்தறையில் உள்ள 1.5 ஏக்கர் காணியை 60 மில்லியன் ரூபாவிற்கு கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கில் தொடர்ச்சியாக நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதால், முன்னா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறையில் உள்ள 1.5 ஏக்கர் காணியை 60 மில்லியன் ரூபாவிற்கு கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கில் தொடர்ச்சியாக நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதால், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைய அவருக்கு எதிராக இன்டர்போல் நீல நிற அறிவித்தல் (Blue Notice) பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.&nbsp;</p><h2>கைது உத்தரவு..&nbsp;</h2><p>இதனை&nbsp;பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3694b67-624d-4f00-9dfd-066cacec12ba/26-6aae0ac91dd09.webp' /></p><p> </p><p>வெளிநாடுகளில் வசிக்கும் முன்னாள் அரசியல்வாதிகள் உட்பட தேடப்படும் நபர்களின் அடையாளம், இருப்பிடம் மற்றும் செயல்பாடுகளைக் கண்டறிந்து அவர்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக சர்வதேச சட்ட அமலாக்க வழிமுறைகளை அரசாங்கம் பயன்படுத்தி வருகின்றது.</p><p>சந்தேகநபர் ஒருவர் இருக்கும் நாடு அல்லது முகவரி தொடர்பில் தகவல்கள் அறியப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில், அவரைப் பற்றிய மேலதிக தகவல்களைப் திரட்டுவதற்காகவே இந்த நீல நிற அறிவித்தல் வெளியிடப்படுவதாகவும், எவ்வித அரசியல் தராதரமும் பாராது குற்றங்கள் மற்றும் ஊழல் வழக்குகளுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T05:28:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சென்னை விமான நிலையம் - தனியார் மயமாக்க முதல்வர் விஜய் கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cm-vijay-letters-modi-to-privatise-chennai-airport-1789795179"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cm-vijay-letters-modi-to-privatise-chennai-airport-1789795179</id>
            <summary type="text">cm vijay letters modi to privatise chennai airport: சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்க முதல்வர் விஜய் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>cm vijay letters modi to privatise chennai airport: சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்க முதல்வர் விஜய் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். </p><h3>

 தனியார் மயமாகும் சென்னை விமான நிலையம்?</h3><p>
சமீபத்தில், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் அறிவித்தார். இதனால், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும் என எதிர்ப்பு கிளம்பியது.&nbsp;</p><p>

சென்னை விமான நிலைய நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்குமாறு முதல்வர் விஜய், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65292453-3dd4-47d2-ad6c-5f3f14a6004d/26-6aae1b6d5aa31.webp' /></p><p> 

இந்த கடிதத்தில், “தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு தொடர்ந்து முதன்மை மாநிலமாக இருந்து வருகிறது. தொழில் மற்றும் முதலீட்டு வளர்ச்சிக்கு சர்வதேச அளவிலான விமான நிலைய உள்கட்டமைப்பும் நிர்வாகமும் முக்கியமானவை.&nbsp;</p><p>

பயணிகள் எண்ணிக்கை, விமானங்களின் இயக்கம், சரக்கு கையாளும் திறன் ஆகிய மூன்று அம்சங்களிலும் சென்னை விமான நிலையம் மேம்பட வேண்டும்.&nbsp;</p><p> 

தொழில் முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்கும் தமிழ்நாட்டுக்கு அதற்கேற்ற சிறப்பான விமான நிலையம் அவசியம் என்பதால், தற்போதைய ஆபரேட்டர் நிர்வாகமான Airports Authority of India – AAIஐ மாற்றிவிட்டு வேறு ஆபரேட்டர் நிர்வாகத்தை கொண்டு வர வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h3>

சிபிஎம் எதிர்ப்பு </h3><p>

தவெக அரசின் இந்த முடிவுக்கு அரசுக்கு வெளியே இருந்து ஆதரவு தரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. </p><p>

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிபிஎம் மூத்த தலைவர் கனகராஜ், "சென்னை விமான நிலையத்தின் சேவையில் குறைபாடு இருக்கிறது என்பதற்காக அதைத் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது எப்படி சரியான தீர்வாக இருக்க முடியும்? </p><p>

நாளை அரசாங்கத்தால் ஒரு பணியைச் சரியாகச் செய்ய முடியவில்லை என்றால், அரசாங்கத்தையே தனியார் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வீர்களா?
</p><p>
தமிழ்நாட்டின் வரலாற்றில் மட்டுமல்ல, இந்தியாவின் வரலாற்றிலேயே ஒரு பொதுத்துறை நிறுவனத்தை, “தனியார் எடுத்துக்கொள்ளுங்கள்” என்று ஒரு மாநில அரசே கேட்பது புரிந்துகொள்ள முடியாததாக இருக்கிறது. </p><p>

சென்னை விமான நிலையம் தொடர்பான செய்தியைப் பார்த்ததும், “இது தமிழ்நாடுதானா? தமிழ்நாட்டின் முதலமைச்சர்தான் இப்படியொரு கடிதத்தை எழுதியிருக்கிறாரா?” என்ற கேள்வி எழுகிறது.
</p><p>
விமான நிலையத்தில் ஏதாவது பிரச்சினை இருந்தால், அதன் சேவையை எப்படி மேம்படுத்துவது என்று பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு முழுமையாகத் தனியாரிடம் ஒப்படைப்பது தீர்வாக இருக்க முடியாது" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T05:19:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் அதிரடி நடவடிக்கை : ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-signs-russia-sanctions-bill-100-pt-tariff-1789791092"></link>
            <id>https://ibctamil.com/article/trump-signs-russia-sanctions-bill-100-pt-tariff-1789791092</id>
            <summary type="text">அமெரிக்க காங்கிரஸின் அங்கீகாரத்தை பெற்ற புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கும் அவசரச் சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க காங்கிரஸின் அங்கீகாரத்தை பெற்ற புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கும் அவசரச் சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>உக்ரைன் மீதான போரைக் கருத்திற் கொண்டு ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தில் ட்ரம்ப்&nbsp;நேற்று (18) கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 

இந்தச் சட்டமானது ரஷ்யாவின் வலுசக்தி மற்றும் பாதுகாப்புத் துறைகளை இலக்கு வைப்பதுடன், ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் மூத்த அதிகாரிகளையும் குறிவைப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>நிறைவேற்றப்பட்ட சட்டமூலம்&nbsp;</h2><p>

மேற்கத்திய நாடுகளின் தடைகளில் இருந்து தப்பிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ரஷ்யாவின் 'நிழற்படைக் கப்பல்களை' இலக்கு வைக்கும் இச்சட்டம், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை பெருமளவில் வாங்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை தீர்வை வரிகளை விதிக்கும் அதிகாரத்தை ட்ரம்பிற்கு வழங்குகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/290ead18-06b1-429b-8c66-aceeb7d7ae3b/26-6aae18b8158aa.webp' /></p><p>

இது ரஷ்யாவின் போர் வருமானத்தைத் துண்டிக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்துவதோடு, சீனா மற்றும் இந்தியாவையும் பாதிக்கக்கூடும் என கூறப்படுகின்றது.</p><p> 

குடியரசுத் கட்சி ஆதிக்கம் செலுத்தும் பிரதிநிதிகள் சபை புதன்கிழமை இச்சட்டமூலத்தை 262-159 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றியது.</p><p></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">நன்றி தெரிவித்த உக்ரைன் ஜனாதிபதி</span></h2><p> </p><p>

ரஷ்ய இராணுவத்திற்கு ஆதரவளிக்கும் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நபர்களை இலக்கு வைப்பதுடன், ஈரானுடன் தொடர்புடைய பொருளாதாரத் தடைகளையும் இச்சட்டம் விரிவுபடுத்துகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c62da39-2387-4203-8cfc-106018a1d251/26-6aae174e1047a.webp' /></p><p> </p><p>எனினும், வரிகளை விதிக்கும் வரம்பற்ற அதிகாரம் ட்ரம்பிற்கு வழங்கப்படுவதை எதிர்த்து சில ஜனநாயகக் கட்சியினர் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இவர்கள் உக்ரைனை ஆதரித்தாலும், வர்த்தக ரீதியான முழு அதிகாரத்தையும் ட்ரம்பிற்கு வழங்குவதை எதிர்க்கின்றனர்.</p><p> 

அமெரிக்க காங்கிரஸின் இந்நடவடிக்கை ஒரு நல்ல குறியீடு எனக் குறிப்பிட்ட உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி, அமெரிக்க சட்டமியற்றுபவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T05:18:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு முழுவதும் ஆபத்தான 712 இடங்கள் அடயாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/712-dangerous-locations-identified-nationwide-1789794562"></link>
            <id>https://jvpnews.com/article/712-dangerous-locations-identified-nationwide-1789794562</id>
            <summary type="text">நாடு முழுவதும் விபத்துகள் அதிகம் நடக்கக்கூடிய மற்றும் ஆபத்தான 712 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சட்டத்தரணியும் பொலிஸ் மா அதிபருமான பிரியந்த வீரசூரிய தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாடு முழுவதும் விபத்துகள் அதிகம் நடக்கக்கூடிய மற்றும் ஆபத்தான 712 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சட்டத்தரணியும் பொலிஸ் மா அதிபருமான பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify;">

பொலிஸ் மா அதிபரின் கூற்றுப்படி, வீதி விபத்துகள் அடிக்கடி நிகழும் இடங்களைக் கண்டறிவதற்காக நாடு தழுவிய அளவில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/953de351-f65c-421e-be09-3a5300e64b0a/26-6aae19037f992.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;712 இடங்கள்</h2><p>
</p><p style="text-align: justify; ">
நாடு முழுவதும் விபத்து ஏற்படக்கூடிய 712 இடங்கள் கண்டறியப்பட்டு, அது தொடர்பான தரவுகள் தொகுக்கப்பட்டு உரிய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.</p><p style="text-align: justify;">

இது தொடர்பில் பிரியந்த வீரசூரிய மேலும் தெரிவிக்கையில், 

மேலும், 2026 ஆம் ஆண்டில் இதுவரை 1,849 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும், இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் எட்டு விபத்துகள் அதிகம்.</p><p style="text-align: justify;"> 

கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 16 ஆக அதிகரித்துள்ளன.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> 

</p><p style="text-align: justify;">மேலும் , வீதி விபத்துகளால் பாதசாரிகளும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுமே மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படும் குழுக்களாகத் தொடர்கின்றனர்.
</p><p style="text-align: justify;">
பாதசாரி உயிரிழப்புகளில் பெரும்பாலானவை, வீதியோரமாக நடந்து செல்பவர்கள் அல்லது நின்று கொண்டிருப்பவர்களுக்கே நேரிடுகின்றன.
</p><p style="text-align: justify;">
மோட்டார் சைக்கிள் தொடர்பான உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், இத்தகைய விபத்துகள் பிற வாகனங்களுடன் மோதுவதை விட, வீதியோர நிலையான தடைகள் அல்லது பிற பொருட்கள் மீது மோதும்போதே அடிக்கடி நிகழ்கின்றன என்று வலியுறுத்தினார்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-19T05:09:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்ட அனோஜன்! அரசாங்க தரப்பிலிருந்து வெளியான விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-is-seriously-concerned-anojan-issue-1789793038"></link>
            <id>https://tamilwin.com/article/government-is-seriously-concerned-anojan-issue-1789793038</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சிவராஜா அனோஜனின் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் தீவிர கரிசனை கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சிவராஜா அனோஜனின் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் தீவிர கரிசனை கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறித்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சவூதி அரேபியாவில் உள்ள அனோஜன் சிவராசாவின் விவகாரத்தை வெளிவிவகார அமைச்சு உன்னிப்பாக கவனித்து வருகின்றது.</p><h2>சவூதி அரேபிய இராச்சியத்தில் சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>
சவூதி அரேபிய இராச்சியத்தில் தற்போது சட்ட நடவடிக்கைகளுக்கு முகங்கொடுத்து வரும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவின் விவகாரத்தை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு உன்னிப்பாக கவனித்து வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b87d3dbc-0179-4fe6-9d58-ea0d4ad04adb/26-6aae185565628.webp' /></p><p>

ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மூலமாகவும், கொழும்பில் உள்ள சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதரகத்துடனான ஒருங்கிணைப்புடனும் இவ்விவகாரம் தொடர்பான முன்னேற்றங்களை அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருகின்றது.
</p><p>இராஜதந்திர வழிமுறைகள் ஊடாக சவுதி அரேபியாவின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அமைச்சு தொடர்ந்து தொடர்பில் இருப்பதோடு, அனோஜன் சிவராசாவின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் அவருக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
</p><p>வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T05:06:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எயார்பஸ் கொடுக்கல் வாங்கலை புரட்டி போட்ட மேலுமொரு பாரிய பண மோசடி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/united-states-fraud-1789794096"></link>
            <id>https://tamilwin.com/article/united-states-fraud-1789794096</id>
            <summary type="text">&amp;nbsp;எயார் பஸ் கொடுக்கல் வாங்கலை புரட்டி போட்ட மேலுமொரு பாரிய பண மோசடி தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளது. சுவீடன் நாட்டிலிருந்தே குறித்த தகவல்கள் கசிந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;எயார் பஸ் கொடுக்கல் வாங்கலை புரட்டி போட்ட மேலுமொரு பாரிய பண மோசடி தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளது. சுவீடன் நாட்டிலிருந்தே குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.</p><p>எயார்பஸ் (Airbus) மோசடியில் அமெரிக்க டொலர் இரண்டு மில்லியன். ஆனால் இதன் மதிப்பு அமெரிக்க டொலர் 54 மில்லியன்.</p><p>இலங்கை ரூபாவில் சொல்ல முடியாத தொகையாகும்.இந்த மோசடி தொடர்பில் அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
</p><p></p><h2>ஆரம்பிக்கப்பட்ட காலம்</h2><p>இந்த மோசடியின் ஆரம்பம் 2008 இலிருந்து என்று தான் அறிக்கைகளில் உள்ளது. ஆனால் 2013 இலிருந்து இலங்கையில் உள்ள கணக்குகளுக்கு (Accounts) மில்லியன் கணக்கில் அமெரிக்கப் பணம் அனுப்பப்பட்டுள்ளது .
</p><p>2013ல் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலகட்டமாகும். அக்காலத்தில் இலங்கைக்கு வந்த CPCU என்னும் திட்டத்துடன் தொடர்புடைய பணம் என்று தான் சொல்லப்படுகிறது.</p><p>ஆனால் அப்போது இலங்கையில் உள்ளவர்களுக்கு இது குறித்துப் பெரிய அறிவு இருக்கவில்லை.
இது தொடர்பில் 2019-இல் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஒரு முறைப்பாட்டை B-அறிக்கையாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறது, </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d1f0bae-19e2-48c1-8be2-4f6490e28946/26-6aae17322158a.webp' /></p><p>அதாவது FCID-இல் இருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்கார பாரிய அளவிலான ஊழல் ஒன்றைச் செய்துள்ளார் என்று. </p><p>ஆனால் இது தொடர்பாக முதன்முதலில் இலங்கை ஊடகங்களில் வெளிவந்த பெயர் தான் ரியன்ஷி எட்வர்ட் (Rienzie Edwards,).
இந்த ரியன்ஷி எட்வர்ட் என்பவர் நுவரெலியா ரேஸ்கோர்ஸ் மைதானம், ரோயல் டர்ஃப் கிளப் (Royal Turf Club) 2012-இல் ஐந்து ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுத்துள்ளார்.</p><p>அப்போது நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு (UDA) கோட்டாபய ராஜபக்சவே பொறுப்பாக இருந்தார்.
அதாவது அமெரிக்காவிலிருந்து அவ்வப்போது 2013-14 காலப்பகுதியில் வந்த இந்தப் பணம், இலங்கையில் உள்ள பலரின் கணக்குகளுக்கு வந்துள்ளது.</p><p>Ascension என்ற கணக்கும், ரெயான் எட்வர்ட்டின் மனைவி புண்யாவின் கணக்கும், அதைத் தொடர்ந்து மேகான்ஃபீல்ட் (Magonfield Construction) என்ற கணக்கும் மற்றும் மேலும் சில கணக்குகளும் வந்துள்ளது.</p><p> இந்தச் சம்பவத்தை அமெரிக்கா இலங்கைக்கு 2016 டிசம்பர் மாதத்தில் அறிவிக்கிறது. ஏன் இந்த ரியன்ஷி எட்வர்ட் (Rienzie Edwards பற்றிய விசாரணைகள் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை.
</p><h2>
</h2><h2>மோசடி மூடிமறைக்கப்பட்ட விதம்</h2><p>ரவி வைத்தியலங்கார என்ற ஊழல் அதிகாரி கோடிக்கணக்கான பணத்தைப் பெற்றுக்கொண்டு, தனியாகக் கம்பனி ஒன்றை ஆரம்பித்து, FCID-இல் இருந்த கொண்டே அதை பணம் சம்பாதிக்கும் ஒரு இடமாக மாற்றியுள்ளார். </p><p>FCID-க்கு இவரை யார் கொண்டுவந்து போட்டது? இவருக்கு இங்கு வர யார் அனுமதி அளித்தது?
அதாவது 54 மில்லியன் அமெரிக்க டொலர் சம்பவம் எப்படி மூடிமறைக்கப்பட்டது? இவர் பணத்தைப் பெற்றுக்கொண்டு, மூடி மறைத்துள்ளார். </p><p>ஏனெனில் இது ரவி வைத்தியலங்காரவால் மட்டும் செய்யக்கூடிய விடயமல்ல. 
நல்லாட்சி அரசாங்கத்தில் ரியன்ஷி எட்வர்ட் (Rienzie Edwards- ரவி வைத்தியலங்காவைக் காப்பாற்றியது நவீன் திசாநாயக்க.
</p><p>ஏனெனில் இந்த CPCU திட்டத்திற்காக 2016-இல் ரெயான் எட்வர்ட்டுடன் நவீன் திசாநாயக்க ஆகியோர் ஜப்பானுக்குச் சென்றுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72123656-8074-4e2e-abce-a3e6a460023d/26-6aae1732cd8cc.webp' /></p><p>ஏனெனில் 2016-இல் ரியன்ஷி எட்வர்ட்டிற்கு (Rienzie Edwards 30 வருடங்களுக்கு நுவரெலியா ரேஸ்கோர்ஸ் (Racecourse) மைதானத்தைக் குத்தகைக்கு விட திட்டமிட்டதே நவீன் திஸாநாயக்கா தான். </p><p>மேலும் நவீன் திசாநாயக்கதான் இந்த ரியன்ஷி எட்வர்ட்டின் பின்னணியில் இருந்து இவரை அரசியல் ரீதியாகப் பாதுகாத்த நபர்.
இப்போது அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி. மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.</p><p>இந்த வழக்குகளுக்கு அடிப்படையாக அமைந்த முக்கிய காரணங்கள்- 
CPCU திட்டத்திற்கு முதலீட்டாளர்களிடம் (Investors) அதாவது அமெரிக்கக் குடிமக்களிடம் இருந்து எனக் கூறப்படுகிறது. </p><p>
உலகத்தில் இல்லாத ஒரு திட்டத்தைக் காட்டி, இதில் முதலீடு செய்யுமாறு அமெரிக்கக் குடிமக்களிடம் பெறப்பட்ட பணம் என்றுதான் அமெரிக்க நீதிமன்றம் கூறுகிறது.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) நிச்சயமாக இதன் தகவல்கள் இருக்க வேண்டும்.</p><p></p><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T05:04:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சென்சேஷனல் நடிகை கயாடு லோஹரின் கிளாமர் கிளிக்ஸ்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/kayadu-lohar-recent-phootshoot-post-paradise-1789794081"></link>
            <id>https://viduppu.com/article/kayadu-lohar-recent-phootshoot-post-paradise-1789794081</id>
            <summary type="text">கயாடு லோஹர்முன்னணி ஹீரோக்களின் படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மனம் கவர்ந்த இளம் நடிகைகளில் ஒருவர் கயாடு லோஹர். இவர் டிராகன் திரைப்படத்தின் மூலம்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கயாடு லோஹர்</h2><p>முன்னணி ஹீரோக்களின் படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மனம் கவர்ந்த இளம் நடிகைகளில் ஒருவர் கயாடு லோஹர். இவர் டிராகன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4ddaf4b-573c-4ddd-b1c3-4ffdebf3e9f4/26-6aae17291a163.webp' /></p><p>சமீபத்தில் அவர் நடிப்பில் I'm Game, இம்மோர்டல் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து நானியுடன் தி பாரடைஸ் படத்தில் நடித்துள்ளார். மேலும் தாரம், மஞ்சணத்தி, சூர்யா 48 உள்ளிட்ட படங்களில் நடித்தும் வருகிறார்.</p><p>


இன்ஸ்டாகிராமில் 3.5 M followers கொண்டுள்ள நடிகை கயாடு லோஹர் அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவிடுவார். தற்போது க்யூட் லுக்க்ல் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-19T05:01:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[அய்யனார் துணை சீரியல் நடிகர் வீட்டில் விசேஷம், குவியும் வாழ்த்துகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ayyanar-thunai-serial-arun-shares-good-news-1789792250"></link>
            <id>https://cineulagam.com/article/ayyanar-thunai-serial-arun-shares-good-news-1789792250</id>
            <summary type="text">அய்யனார் துணைஅய்யனார் துணை சீரியல் விஜய் டிவியின் டாப் டிஆர்பி பெறும் சீரியல். இந்த சீரியலுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. 

ஏனெனில் இந்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அய்யனார் துணை</h2><p>அய்யனார் துணை சீரியல் விஜய் டிவியின் டாப் டிஆர்பி பெறும் சீரியல். இந்த சீரியலுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a421dc58-becb-47b4-be5f-fb46059a69c4/26-6aae0ffd607d6.webp' /></p><p></p><p> 

ஏனெனில் இந்த சீரியலில் வரும் அண்ணன்-தம்பி பாசம் பலருக்கும் ஃபேவரைட்; அதோடு எதிர்நீச்சல் சீரியல் நடித்த போதே அந்த சீரியலில் நாயகி மதுமிதாவுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் இருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc3892fe-cf09-4136-8aa6-b2d0206890f3/26-6aae0ffe1ae43.webp' /></p><p></p><p>அவர் அய்யனார் துணை சீரியலில் நடிக்கிறார் என்ற போதே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது; அந்த எதிர்பார்ப்பு போலவே சீரியலும் பட்டையை கிளப்புகிறது.</p><h3>வீட்டில் விசேஷம்</h3><p> </p><p>

இந்த நிலையில் <a href="https://www.dinamani.com/cinema/cinema-news/2026/Sep/04/actress-from-the-serial-ayyanar-thunai-joins-a-new-series" target="_blank">அய்யனார் துணை</a>யில் தம்பிகளில் ஒருவராக வருபவர் விஜே அருண் கார்த்திக்; இவர் தன் இன்ஸ்டா பக்கத்தில் செம சந்தோஷமான விஷயம் ஒன்றை கூறியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cb49d2d-5404-45dd-be3c-a4e4bf83a926/26-6aae0ffed0bcd.webp' /></p><p></p><p>தாங்கள் விரைவில் அப்பா-அம்மா ஆகவுள்ளதாக ஒரு சந்தோஷமான செய்தியை இணையத்தில் சொல்ல, சீரியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இவர்களுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DdbcJm5hfWh/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DdbcJm5hfWh/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DdbcJm5hfWh/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Arun Karthi (@vj_arun_karthi)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-19T05:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய 15 உணவுகள்.., என்னென்ன உணவுகள்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/15-best-foods-to-eat-on-an-empty-stomach-1789793445"></link>
            <id>https://news.lankasri.com/article/15-best-foods-to-eat-on-an-empty-stomach-1789793445</id>
            <summary type="text">15 best foods to eat on an empty stomach-&amp;nbsp;காலையில் எழுந்ததும் சாப்பிடும் உணவுகள் நமது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

ஆரோக்கிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>15 best foods to eat on an empty stomach-&nbsp;காலையில் எழுந்ததும் சாப்பிடும் உணவுகள் நமது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.</p><p> </p><p>

ஆரோக்கியமான மற்றும் ஆற்றல் தரும் உணவுகளைக் காலை உணவாகச் சாப்பிட வேண்டும். </p><p>சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.</p><p>இந்நிலையில், காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடிய 15 உணவுகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1465ca4-6d4b-4796-ae21-a2a6fe5b768e/26-6aae157a072d0.webp' /></p><h2>என்னென்ன உணவுகள்?
</h2><p><b>
1. வெதுவெதுப்பான நீர்- </b>காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரை குடிப்பது உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்க உதவும். மேலும், இது செரிமானத்தை சீராக வைத்திருக்க உதவக்கூடும்.</p><p><b> 

2. துளசி- </b>காலையில் துளசி இலைகளை மென்று சாப்பிடலாம் அல்லது நீரில் கலந்து குடிக்கலாம். துளசியில் உள்ள சில சேர்மங்கள் இரத்த சர்க்கரை மற்றும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவக்கூடும்.</p><p><b>

3. கறிவேப்பிலை-</b> காலையில் 5 கறிவேப்பிலைகளை மென்று சாப்பிடலாம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. </p><p><b>

4. சீரக நீர்- </b>இரவு ஒரு டீஸ்பூன் சீரகத்தை ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, காலையில் வடிகட்டி குடிக்கலாம். இது வாயு மற்றும் வயிற்று உப்புசம் போன்ற செரிமானப் பிரச்சனைகளுக்கு உதவக்கூடும். </p><p><b>

5. இஞ்சி நீர்- </b>ஒரு சிறிய துண்டு இஞ்சியை வெந்நீரில் கலந்து குடிப்பது குமட்டல் போன்ற அறிகுறிகளை குறைக்க உதவக்கூடும். </p><p><b>

6. மோர்-</b> தயிர், இஞ்சி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தயாரிக்கப்படும் மோரில் குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் நன்மை தரும் பாக்டீரியாக்கள் உள்ளது. </p><p><b>

7. பச்சைப்பயறு</b>- முளைக்கட்டிய பச்சைப்பயறில் புரதம், நார்ச்சத்து மற்றும் சில வைட்டமின்கள் உள்ளன.</p><p></p><p> </p><p><b>

8. கொண்டைக்கடலை- </b>இரவு முழுவதும் ஊற வைத்த கொண்டைக்கடலையில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன. இது நீண்ட நேரம் வயிறு நிறைவாக இருக்க உதவும். </p><p><b>

9. பேரிச்சம்பழம்-</b> இரவு 3 பேரிச்சம்பழங்களை நீரில் ஊற வைத்து காலையில் சாப்பிடலாம். இதில் நார்ச்சத்து மற்றும் சில தாதுச்சத்துக்கள் உள்ளன. </p><p><b>

10. கருப்பு உலர் திராட்சை- </b>கருப்பு உலர் திராட்சையில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இதை சாப்பிடுவது மலச்சிக்கலை கட்டுப்படுத்த உதவக்கூடும். </p><p><b>11. பப்பாளி- </b>காலையில் ஒரு கப் பப்பாளி சாப்பிடலாம். இதில் நார்ச்சத்து மற்றும் பப்பாயின் என்ற நொதி உள்ளது. இது செரிமானத்திற்கு உதவக்கூடும்.</p><p><b>

12. முருங்கை இலை சூப்- </b>முருங்கை இலை சூப்பில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதை காலையில் சாப்பிட்டு வருவதால் உடலிற்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்.
</p><p><b>
13. நெல்லிக்காய்- </b>நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இது உடல் ஆரோக்கியத்திற்கு உதவக்கூடும். </p><p><b>

14. வெந்தய நீர்-</b> ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து, காலையில் நீருடன் சாப்பிடலாம். வெந்தயம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவக்கூடும்.
</p><p><b>
15. பாதாம்- </b>இரவு 6 பாதாமை நீரில் ஊற வைத்து காலையில் சாப்பிடலாம். பாதாமில் புரதம், நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்புகள் உள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T04:57:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் பதற்றம்: டோகோ எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தி சிறைபிடித்தது ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-us-deal-about-war-1789792209"></link>
            <id>https://tamilwin.com/article/iran-us-deal-about-war-1789792209</id>
            <summary type="text">உலகளாவிய கடல்சார் வர்த்தகத்திற்கு மிக முக்கியமான வழித்தடமான ஹோர்முஸ்
நீரிணையில் சட்டவிரோதமாக பயணிக்க முயன்றதாக கூறி டோகோ (Togo) நாட்டு
கொடியுடன் சென...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளாவிய கடல்சார் வர்த்தகத்திற்கு மிக முக்கியமான வழித்தடமான ஹோர்முஸ்
நீரிணையில் சட்டவிரோதமாக பயணிக்க முயன்றதாக கூறி டோகோ (Togo) நாட்டு
கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பல் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை
(IRGC) தாக்குதல் நடத்தியுள்ளது.</p><p>
மேற்கு ஆப்பிரிக்க நாடான டோகோவின் கொடியுடன் பயணித்த 'ட்ரெண்ட்' (Trend) என்ற
எண்ணெய் கப்பல், ஈரானின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் ஹோர்முஸ் நீரிணையைக்
கடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.</p><h2>தாக்குதல்</h2><p>
</p><p>
இதன் போது, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஈரானிய புரட்சிகர காவல்
படையின் கடற்படை, அந்தப் பிராந்தியத்திற்குள் கப்பல் "சட்டவிரோதமாக
நுழைந்ததாக" குற்றம்சாட்டி தாக்குதல் நடத்தியுள்ளது.
</p><p>
தாக்குதலின் காரணமாகக் கப்பலில் தீப்பற்றியதையடுத்து கப்பல் உடனடியாக
இயக்கத்தை நிறுத்தியதைத் தொடர்ந்து, ஈரானிய கடற்படையினர் கப்பலைக்
கைப்பற்றியுள்ளனர்.

இது குறித்து பிரிட்டனின் கடல்சார் வர்த்தக செயல்பாட்டு அமைப்பான UKMTO,
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><p>

ஓமன் நாட்டின் கசாப் (Khasab) பகுதிக்கு வடகிழக்கே சுமார் 16 நவாடிகல் மைல்
தொலைவில், அடையாளம் தெரியாத எறிபொருள் (Projectile) தாக்கி ஒரு வணிகக்
கப்பலில் பாதுகாப்பு சம்பவம் நிகழ்ந்ததை அந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9792588-a778-43e8-bc9a-ef746f184ee6/26-6aae13cb411b9.webp' /></p><h2>பாதுகாப்பாக உள்ள மாலுமிகள்</h2><p>
</p><p>
கப்பலில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டு விட்டதாகவும், மாலுமிகள் பாதுகாப்பாக
உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து ஈரானிய கடற்படை தளபதி கூறுகையில் "அமெரிக்க
இராணுவத்தின் தூண்டுதலின் பேரிலேயே இந்தக் கப்பல் தங்களது கடல் எல்லை விதிகளை
மீற முயன்றதாகவும், அனுமதியின்றி ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயலும் எந்தவொரு
கப்பலும் அழிவையே சந்திக்கும்" எனக் கூறினார்.
</p><p>
பிராந்திய மோதல்களுக்கு மத்தியிலும், ஈரானின் கட்டுப்பாடுகளை மீறிச் செல்லும்
கப்பல்களை ஈரான் தொடர்ந்து இலக்கு வைத்து வருகிறது.
</p><p>
தற்போது நடந்துள்ள இந்தத் தாக்குதல் சம்பவத்தால், சர்வதேசச் சந்தையில் மசகு
எண்ணெய் விநியோகத்தில் மீண்டும் தட்டுப்பாடு ஏற்படும் சூழலும், கப்பல்
போக்குவரத்துக்கான காப்பீட்டுச் செலவுகள் உயரும் அபாயமும் உருவாகியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T04:47:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இன்று முதல் அதிகரிக்கப்போகும் மழை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rainfall-in-sri-lanka-set-to-increase-from-today-1789791529"></link>
            <id>https://ibctamil.com/article/rainfall-in-sri-lanka-set-to-increase-from-today-1789791529</id>
            <summary type="text">நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் இன்று (19) முதல் அடுத்து வரும் சில நாட்களில் மழை நிலைமையில் உயர்வு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் இன்று (19) முதல் அடுத்து வரும் சில நாட்களில் மழை நிலைமையில் உயர்வு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>அந்த திணைக்களம் இன்று&nbsp; வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">மின்னல் தாக்கங்கள்</span></p><p>சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.</p><p></p><p> </p><p>

ஊவா மாகாணத்திலும் முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.</p><p> 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T04:42:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்திய வெளிநாட்டவர்: 15ஆண்டுகள் சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-attacker-jailed-15-years-for-stab-children-1789792505"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-attacker-jailed-15-years-for-stab-children-1789792505</id>
            <summary type="text">Swiss knife attacker jailed for 15 years for stabbing children: சுவிட்சர்லாந்தில் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்திய வெளிநாட்டவருக்கு 15ஆண்டுகள் சிறைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Swiss knife attacker jailed for 15 years for stabbing children: சுவிட்சர்லாந்தில் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்திய வெளிநாட்டவருக்கு 15ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>


2024ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 1ஆம் திகதி, சீன நாட்டவர் ஒருவர், சுவிட்சர்லாந்தின் சூரிக் நகரில், நர்சரி பள்ளிப் பிள்ளைகள் சிலரை கத்தியால் குத்தினார்.</p><h3>

15ஆண்டுகள் சிறை</h3><p>

அந்த நபர் தாக்கியதில், ஐந்து வயது சிறுவர்கள் மூன்று பேர் காயமடைந்தனர். சிலருக்கு பயங்கர காயங்கள் ஏற்பட்டதால், அவர்கள் தப்பிப் பிழைத்ததே பெரிய விடயம் என அப்போது கூறப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e60105ed-647d-4d6a-ab3e-ca56772190d2/26-6aae10fad53ba.webp' /></p><p>
திடீரென பிள்ளைகள் மீது ஒருவர் தாக்குதல் நடத்துவதை கவனித்த பிள்ளைகளை கவனித்துக்கொள்ளும் பணியாளர் ஒருவர், ஓடோடிச் சென்று அந்த நபரைத் தடுத்துள்ளார்.</p><p>

இந்நிலையில், தற்போது 25 வயதாகும் அந்த நபருக்கு, சூரிக் நீதிமன்றம் ஒன்று 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.&nbsp;</p><p></p><p>
அத்துடன், அவர் கட்டாய மன நல ஆலோசனை பெறவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதுடன், தண்டனைக்காலத்துக்குப் பின், சுவிட்சர்லாந்துக்குள் நுழைய அவருக்கு 15 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-19T04:38:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம் ; இன்று முதல் கட்டாயமாக்கப்படும் நடைமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/seat-belts-mandatory-rear-seat-passengers-1789792475"></link>
            <id>https://jvpnews.com/article/seat-belts-mandatory-rear-seat-passengers-1789792475</id>
            <summary type="text">அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் இன்று (19) முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் இன்று (19) முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

இது சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் வெளியிடப்பட்ட விதிகளின்படியாகும்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c969efee-c335-4fe1-90b4-0a24bed944f9/26-6aae10dd39a88.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;ஆசனப்பட்டி</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் ஆசனப்பட்டி அணிய வேண்டும் என்ற விதிகள் ஒரு வருடத்திற்கு முன்னர் வெளியிடப்பட்ட போதிலும், சில வாகனங்களில் பின் இருக்கைகளில் பயணிப்பவர்களுக்கான ஆசனப்பட்டிகள் இல்லாத காரணத்தினால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

இதற்கமைய, பின் இருக்கைகளிலும் ஆசனப்பட்டிகளை பொறுத்திக் கொள்வதற்காக வழங்கப்பட்ட ஒரு வருட கால அவகாசம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நேற்று (18) நள்ளிரவு முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-19T04:34:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/women-dies-in-an-accident-1789792014"></link>
            <id>https://tamilwin.com/article/women-dies-in-an-accident-1789792014</id>
            <summary type="text">குருநாகல் - நீர்கொழும்பு வீதியில் மெட்டியகான, தும்மலெவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளும் சிறிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருநாகல் - நீர்கொழும்பு வீதியில் மெட்டியகான, தும்மலெவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>

மோட்டார் சைக்கிளும் சிறிய பாரவூர்தியும் மோதி ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p>

நேற்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><h2><b>
பெண் உயிரிழப்பு</b></h2><p>உயிரிழந்தவர் தம்பதெனிய மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து கரப்பந்து விளையாட்டுத் துறையை சேர்ந்த சாகரிகா லக்மாலி ஹேவகே என்பவராகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1aa9e00d-699b-461a-ab94-d6dae5ba1585/26-6aae105b25a87.webp' /></p><p>

மேலும் அவர் வடமேல் மாகாண விளையாட்டு அதிகாரியும், தேசிய கரப்பந்து மற்றும் கடற்கரை கரப்பந்து நடுவராகவும் செயற்பட்டு வந்துள்ளார். </p><p> 

இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-19T04:32:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்மாத இறுதிக்குள் வெளியாகவுள்ள முக்கிய பரீட்சை பெறுபேறுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/plans-to-recruit-23-000-graduate-teachers-1789789872"></link>
            <id>https://tamilwin.com/article/plans-to-recruit-23-000-graduate-teachers-1789789872</id>
            <summary type="text">பட்டதாரி ஆசிரியர் சேவை போட்டி பரீட்சையின் முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.&amp;nbsp;&amp;nbsp;அதன் முடிவுகளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பட்டதாரி ஆசிரியர் சேவை போட்டி பரீட்சையின் முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>அதன் முடிவுகளின் அடிப்படையில், 23,000 பட்டதாரிகள் ஆசிரியர் சேவைக்கு நியமிக்கப்பட உள்ளனர் என்று கல்வி அமைச்சு கூறியுள்ளது.</p><h2>ஆட்சேர்ப்பு நடத்த&nbsp;திட்டம்</h2><p>

அதன்படி, ஆசிரியர் தேர்வு பரீட்சையில் பங்கேற்ற 15,000 பட்டதாரிகளும், பொதுத் தேர்வில் பங்கேற்ற 8,000 பேரும் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/977d06b8-56f9-4f04-9fe0-bd5742f51b8f/26-6aae0e4aa8a01.webp' /></p><p>
</p><p>
அக்டோபர் மாதத்தில் நேர்காணல்கள் நடத்தப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>

மேலும், டிசம்பர் மாதத்திலும் ஆட்சேர்ப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக&nbsp; கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p><p> </p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T04:23:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாக்ஸ் ஆபிஸ்: 9 நாட்களில் உலகளவில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/mandaadi-movie-9-days-box-office-1789791380"></link>
            <id>https://cineulagam.com/article/mandaadi-movie-9-days-box-office-1789791380</id>
            <summary type="text">Mandaadi movie 9 days worldwide box office collection: சூரி நடிப்பில் வெளிவந்த மண்டாடி திரைப்படத்தின் 9 நாட்கள் உலகளாவிய வசூல் விவரம் வெளியாகியுள்ளது;...</summary>
            <content type="html"><![CDATA[<p>Mandaadi movie 9 days worldwide box office collection: சூரி நடிப்பில் வெளிவந்த மண்டாடி திரைப்படத்தின் 9 நாட்கள் உலகளாவிய வசூல் விவரம் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><p></p><p>
</p><h2>
மண்டாடி
</h2><p>
2026-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு மற்றொரு மாபெரும் வெற்றியை மண்டாடி திரைப்படம் தேடி தந்துள்ளது. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க, அவருடன் இணைந்து சுஹாஸ், மஹிமா நம்பியார் மற்றும் புரட்சி தமிழன் சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86a775df-405b-44df-8362-ac14a79c369e/26-6aae0c98c4c50.webp' /></p><p></p><p> </p><h3>

சுஹாஸ்
</h3><p>
தெலுங்கில் நடிகராக வலம் வந்த சுஹாஸ் தனது முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். அதுவும் சாட்டா புலி என்கிற கதாபாத்திரத்தில் வில்லத்தனமான நடிப்பில் மிரட்டியிருந்தார். கண்டிப்பாக இனி அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்களில் அவரை பார்க்கலாம், அதில் எந்த சந்தேகமும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60fc5775-917b-4763-9f53-c4b02e41b63e/26-6aae0c9987aee.webp' /></p><p></p><h2>

பாக்ஸ் ஆபிஸ்
</h2><p>
மண்டாடி திரைப்படத்தின் வசூல் விவரங்களை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். நேற்றைய வசூலை இன்றைய வசூல் முந்தி செல்லும் அளவிற்கு மண்டாடி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/094563ba-a69b-4ad4-807f-ee9d8b75abfc/26-6aae0c9807d89.webp' /></p><p></p><p>இந்த நிலையில், 9 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள <a href="https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/director-mathimaran-pugazhendhi-explanation-his-mandaadi-function-speech" target="_blank">மண்டாடி </a>இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 9 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 82 கோடி வசூல் செய்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-19T04:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிரீன்லாந்து மீது வரம்பற்றக் கட்டுப்பாடு: டென்மார்க் - அமெரிக்க ஒப்பந்தம் தொடர்பில் ட்ரம்ப் பெருமிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/permanent-control-over-greenland-1789791549"></link>
            <id>https://news.lankasri.com/article/permanent-control-over-greenland-1789791549</id>
            <summary type="text">US and Denmark reach deal over Greenland: கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவும் டென்மார்க்கும் ஒப்பந்தம் செய்துகொண்டன.
கிரீன்லாந்தை வலுக்கட்டாயமாகக...</summary>
            <content type="html"><![CDATA[<p>US and Denmark reach deal over Greenland: கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவும் டென்மார்க்கும் ஒப்பந்தம் செய்துகொண்டன.
</p><p>கிரீன்லாந்தை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தல்களால் எழுந்த கடும் குழப்பத்திற்குத் தீர்வு காணும் வகையில், கிரீன்லாந்தின் பாதுகாப்பு குறித்த ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்காவும் டென்மார்க்கும் அறிவித்துள்ளன.</p><h2>பல மாத அச்சுறுத்தல்</h2><p>
</p><p>கிரீன்லாந்தின் பாதுகாப்பு மற்றும் பிற அனைத்துத் தேவைகள் மீதும் அமெரிக்காவிற்கு நிரந்தரக் கட்டுப்பாட்டை இந்த ஒப்பந்தம் வழங்கும் என்று ட்ரம்ப் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b08e7385-2781-47be-b9da-d57fc8af3786/26-6aae0d3fa6f1c.webp' /></p><p> </p><p>இந்த ஒப்பந்தம் ஆர்க்டிக் மற்றும் வட அட்லாண்டிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை வலுப்படுத்துவதாக டென்மார்க் பிரதமர் கூறினார்; ஆனால், சமூக ஊடகப் பதிவு ஒன்றில் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்த ஒப்பந்தத்தின் விவரங்கள் குறித்து அவர் விளக்கமளிக்கவில்லை. </p><p>பாதுகாப்பு நோக்கங்களுக்கான அதன் முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் மற்றும் கனிம வளங்களைச் சுட்டிக்காட்டி, கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவது குறித்து ட்ரம்ப் பல மாதங்களாக விடுத்த அச்சுறுத்தல்களுக்குப் பின்னரே இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
</p><p>ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், இந்த ஒப்பந்தத்தால் அமெரிக்காவிற்கு எந்தச் செலவும் இல்லை என்றும், கிரீன்லாந்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அதைப் பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஆற்றலை இது அமெரிக்காவிற்கு வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p>மேலும், அமெரிக்காவின் வெளிப்படையான எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, தங்களின் எந்தவொரு எதிரி நாடும் கிரீன்லாந்தில் ராணுவ இருப்பைப் பராமரிக்கவோ அல்லது அங்கு முக்கியத்துவம் வாய்ந்த முதலீடுகளை மேற்கொள்ளவோ ​​கூடாது என்ற விதி இதில் அடங்கும் என்று அவர் கூறியுள்ளார்.</p><p> இதனிடையே, அடுத்த வாரம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் உறுதிப்படுத்தினார். </p><p>மேலும், இந்த ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் தேவை என்றும்; இது நடைமுறைக்கு வருவதற்குத் தேவையான நாடாளுமன்ற நடைமுறைகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட எதிரிகளிடமிருந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய நிலையில் அப்பகுதி இருப்பதாகக் கூறி, கனிம வளம் மிக்க அந்த டேனிஷ் பிரதேசத்தை விலைக்கு வாங்கவோ அல்லது வலுக்கட்டாயமாக இணைத்துக்கொள்ளவோ ​​ட்ரம்ப் பல மாதங்களாக முயன்று வந்துள்ளார். </p><p>கிரீன்லாந்தில் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் அவர் மிரட்டினார்; இது டென்மார்க் மக்களிடமிருந்தும் பிற நேட்டோ நாடுகளிடமிருந்தும் கடும் எதிர்ப்பை வரவழைத்தது.</p><h2>ஒருதலைப்பட்சமான அதிகாரம்</h2><p> </p><p>ஒப்புக்கொள்ளப்பட்ட விதிகளுள், எதிர்காலத்தில் கிரீன்லாந்து ஒரு சுதந்திர நாடாக மாறினாலும் இந்த ஒப்பந்தம் காலாவதியாகாது என்று கூறும் விதியும் உட்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fc8cb8d-f0e4-42d1-a04a-6822e984b191/26-6aae0d405a533.webp' /></p><p> </p><p>இந்த ஒப்பந்தத்தின் கீழ், கிரீன்லாந்து அல்லது டென்மார்க்கின் ஒப்புதல் ஏதுமின்றி கூடுதல் ராணுவக் கட்டமைப்புகளை அமைப்பதற்கான ஒருதலைப்பட்சமான அதிகாரம் அமெரிக்காவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. </p><p>ரஷ்யா மற்றும் சீனாவிலிருந்து ஏவப்படும் ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து அமெரிக்காவைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட 'கோல்டன் டோம்' (Golden Dome) பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் தனது திட்டத்திற்கு கிரீன்லாந்து அவசியமானது என்றும், இம்முயற்சியில் ஐரோப்பிய நட்பு நாடுகள் ஒத்துழைக்க முடியும் என்றும் ட்ரம்ப் கூறுகிறார்.</p>]]></content>
            <updated>2026-09-19T04:15:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடிவுக்கு வந்த ரயில் வேலைநிறுத்தம் ; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/railway-strike-ends-warning-issued-1789791166"></link>
            <id>https://jvpnews.com/article/railway-strike-ends-warning-issued-1789791166</id>
            <summary type="text">ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் தற்போது நிறைவடைந்துள்ளது. 

நேற்று (18) நள்ளிரவுட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் தற்போது நிறைவடைந்துள்ளது. </p><p>

நேற்று (18) நள்ளிரவுடன் வேலைநிறுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de3e6600-36c4-4286-ba80-1ac7712b9255/26-6aae0bc03b82f.webp' /></p><p>ரயில்வே பொது முகாமையாளரை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுமேத சோமரத்ன மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T04:12:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆரம்பத்தில் NPPக்கு ஆதரவாக செயற்பட்ட அர்ச்சுனா எம்.பி : விமல் வீரவன்ச பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archchuna-mp-initially-acted-in-support-of-the-npp-1789789091"></link>
            <id>https://ibctamil.com/article/archchuna-mp-initially-acted-in-support-of-the-npp-1789789091</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ஆரம்ப காலத்தில் தேசிய மக்கள் சக்திக்கு சார்பாகவே செயற்பட்டதாகவும் தற்போது அவர் யார்த்தத்தை விளங்கிக் கொண்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ஆரம்ப காலத்தில் தேசிய மக்கள் சக்திக்கு சார்பாகவே செயற்பட்டதாகவும் தற்போது அவர் யார்த்தத்தை விளங்கிக் கொண்டுள்ளதாகவும்&nbsp;தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.</p><p>தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர்&nbsp; இதனைக் குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு அரச அனுசரணையுடன் இடம்பெறுகிறது. வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் இனவாதிகளும், அடிப்படைவாதிகளும் சுதந்திரமாக செயற்படுகிறார்கள்.</p><p></p><h2>சிறந்த இலங்கையராக செயற்படுகிறார்&nbsp;</h2><p> </p><p>யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி இறையான்மையை பாதுகாத்த முப்படையின் தளபதிகளும், அவர்களின் குடும்பத்தாரும், முன்னாள் அரச தலைவர்களின் குடும்பத்தாரையும் அரசாங்கம் இன்று நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbf8e183-7939-4c6f-b529-e5db9067faaa/26-6aae08e6ddb43.webp' /></p><p>வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிங்களவர்களின் உரிமை திட்டமிட்ட வகையில் மறுக்கப்படுகிறது.

சிங்களவர்களின் உரிமைகளை இல்லாதொழிக்கும் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் ஆதரவு வழங்குவதை அவதானிக்க முடிகிறது. </p><p>நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ஆரம்ப காலத்தில் தேசிய மக்கள் சக்திக்கு சார்பாகவே செயற்பட்டார். தற்போது அவர் யார்த்தத்தை விளங்கிக் கொண்டு நாட்டை பிளவுப்படுத்துமாறு கோரப் போவதில்லை.</p><p>ஆகவே அவர் தற்போது சிறந்த இலங்கையராகவே செயற்படுகிறார் அது எமக்கு பிரச்சினையல்ல“ என்று தெரிவித்தார்.</p><p></p><p></p><p><br></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/GkPITxDmgG8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T04:04:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் இந்தியருக்கு நடத்தப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சி ; 17 இடங்களில் கத்திக்குத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indian-in-us-shocked-by-incident-1789790355"></link>
            <id>https://canadamirror.com/article/indian-in-us-shocked-by-incident-1789790355</id>
            <summary type="text">அமெரிக்காவில் இந்தியாவைச் சோ்ந்த சீக்கியா் மீது வெள்ளை இனத்தைச் சோ்ந்த ஒருவா் 17 முறை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினாா். இதில் படுகாயமடைந்த அவா்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் இந்தியாவைச் சோ்ந்த சீக்கியா் மீது வெள்ளை இனத்தைச் சோ்ந்த ஒருவா் 17 முறை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினாா்.</p><p> இதில் படுகாயமடைந்த அவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e765c029-49d5-4690-a429-b8a24355a08f/26-6aae0895413c2.webp' /></p><p>

அமெரிக்காவில் வெள்ளை இனத்தவா் ஆப்பிரிக்க மற்றும் தெற்காசிய பிராந்தியத்தைச் சோ்ந்தவா்கள் மீது இனரீதியாகவும், நிறரீதியாகவும் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
</p><p>

பென்சில்வேனியா மாகாணத்தில நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து அங்குள்ள ஊடகங்களில் வெளியான செய்தியில் பென்சில்வேனியாவின் தெற்கு வியோமிங் பகுதியில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.</p><p> தாக்குதலுக்கு உள்ளானவா் இந்தியாவைச் சோ்ந்த சீக்கியா். லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்த அவரை வழிமறித்த ஆண்ட்ரூ கிரிஸ் பஸ்டாக் என்ற நபா் கத்தியால் 17 இடங்களில் அவரைக் குத்தியுள்ளாா். </p><p>&nbsp;இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார் அங்கு விரைந்து தாக்குதலுக்கு உள்ளானரை மீட்டு விமான ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
</p><p>
தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய ஆண்ட்ரூ கிரிஸ், அப்பகுதி மக்கள் உதவியுடன் கைது செய்யப்பட்டாா். அவா் மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யபபட்டுள்ளன.</p><p>தெற்காசியாவைச் சோ்ந்தவா்கள் மீதான இனரீதியான வெறுப்புணா்வு அடிப்படையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.</p>]]></content>
            <updated>2026-09-19T03:59:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் நடிகை சமந்தா சென்னை வந்தது ஏன்? இதுதான் காரணமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/samantha-begins-master-chef-shooting-1789790261"></link>
            <id>https://viduppu.com/article/samantha-begins-master-chef-shooting-1789790261</id>
            <summary type="text">பான் இந்தியன் ஸ்டாராக வலம் வரும் சமந்தா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதனால் சினிமாவிலிருந்து மெட்டர்னிட்டி பிரேக் (Maternity Break) எடுத்துள்ளதாகவும...</summary>
            <content type="html"><![CDATA[<p>பான் இந்தியன் ஸ்டாராக வலம் வரும் சமந்தா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதனால் சினிமாவிலிருந்து மெட்டர்னிட்டி பிரேக் (Maternity Break) எடுத்துள்ளதாகவும் கூறினார்.</p><p>

சினிமாவில் பிரேக் எடுத்துள்ள சமந்தா தற்போது டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகிறார். தமிழில் சோனி விழா சேனல் நடத்தும் 'செலிபிரிட்டி மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சியின் தொகுப்பாளராகத்தான் சமந்தா வருகிறார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e2191d5-425f-4cdc-8708-b55c10490f7e/26-6aae08391c68b.webp' /></p><p>இதற்கான ப்ரோமோ சமீபத்தில் வெளியானது.

இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியிருக்கும் நிலையில், அதில் பங்கேற்பதற்காக சமந்தா விமானத்தில் சென்னைக்கு வந்திருக்கிறார். அந்த ஏர்போர்ட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
</p><p>
செலிபிரிட்டி மாஸ்டர் செப் நிகழ்ச்சியில் பல முக்கிய பிரபலங்கள் போட்டியாளர்களாக வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. அது யார் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddaa643c-b001-407c-8ad7-67a5d0c1dda5/26-6aae0839cfc7d.webp' /></p>]]></content>
            <updated>2026-09-19T03:57:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் தமிழர் பகுதியை அதிர வைத்த துப்பாக்கிசூடு ; மதுபானக் கடை அரங்கேறிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/night-incident-at-a-trincomalee-liquor-shop-1789789334"></link>
            <id>https://jvpnews.com/article/night-incident-at-a-trincomalee-liquor-shop-1789789334</id>
            <summary type="text">திருகோணமலை - அநுராதபுரம் சந்தியில் அமைந்துள்ள மதுபானக் கடை ஒன்றில் இருவரால் மேற்கொள்ளப்பட்ட கொள்ளை முயற்சியை அதன் ஊழியர்கள் முறியடித்துள்ளனர்.

நேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">திருகோணமலை - அநுராதபுரம் சந்தியில் அமைந்துள்ள மதுபானக் கடை ஒன்றில் இருவரால் மேற்கொள்ளப்பட்ட கொள்ளை முயற்சியை அதன் ஊழியர்கள் முறியடித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
நேற்று (18) இரவு 9:45 அளவில் உந்துருளியில் வந்த இரு கொள்ளையர்கள், பணத்தைத் திருடித் தப்பிச் செல்ல முயன்றனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/812fb664-349e-496e-b451-dc60b9a2cf9d/26-6aae05f769636.webp' /></p><h2 style="text-align: justify; ">துப்பாக்கிச் சூடு</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இருப்பினும், ஊழியர்களின் கடும் போராட்டத்திற்குப் பின்னர் பணப் பையுடன் கொள்ளையர்களில் ஒருவரைப் பிடிக்க முற்பட்டனர்.</p><p style="text-align: justify; ">

அந்தச் சமயத்தில், துப்பாக்கி வைத்திருந்த மற்றைய நபர் ஊழியர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற போதிலும் இலக்கு தவறியது.
</p><p style="text-align: justify; ">
அதனைத் தொடர்ந்து, இரு கொள்ளையர்களும் உந்துருளியில் அனுராதபுரம் வீதி வழியாகத் தப்பிச் சென்றனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

எனினும், இந்த சம்பவம் குறித்து உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார், திடீர் தேடுதல் நடவடிக்கையை நடத்தி மிஹிந்துபுர பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து இரண்டு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-19T03:42:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவை இரண்டாக பிரிக்க ரஜினியிடம் பேசிய NTR]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ntr-united-states-of-india-idea-rajini-response-1789788195"></link>
            <id>https://cineulagam.com/article/ntr-united-states-of-india-idea-rajini-response-1789788195</id>
            <summary type="text">ரஜினிரஜினிகாந்த் இன்று இந்தியாவின் மிகப்பெரிய சக்திவாய்ந்த நபர்களில் ஒருவர். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் 2 படத்தில் நடித்துள்ளார்; இப்படம...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரஜினி</h2><p>ரஜினிகாந்த் இன்று இந்தியாவின் மிகப்பெரிய சக்திவாய்ந்த நபர்களில் ஒருவர். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் 2 படத்தில் நடித்துள்ளார்; இப்படம் அக்டோபர் மாதம் 15-ம் தேதி பிரம்மாண்டமாக வரவுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b322e424-11e3-4786-89dc-d48e73e4c561/26-6aae0026deefe.webp' /></p><p></p><p>இந்நிலையில் ரஜினிகாந்த் குறித்து நடிகர் இளவரசு ஒரு பேட்டியில் செம சுவாரஸ்யமான தகவல் ஒன்றை கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c416d00-760a-469a-9f6a-c59ef5b8a332/26-6aae00284db4e.webp' /></p><p></p><h3>ரஜினியிடம் பேசிய NTR</h3><p> </p><p>

அதில், ஆந்திரா முதல்வராக இருந்த NTR அவர்கள் <a href="https://www.youtube.com/watch?v=_1jWQbp2A1c" target="_blank">ரஜினி </a>சாரிடம், United Nation Of India என தென்னிந்தியாவை பிரிப்போம், மத்திய பிரதேசத்தை தலைநகரம் ஆக கொண்டு ஆளலாம், சுழற்சி முறையில் பிரதமர் இருக்கலாம், தமிழகத்தை நீ பார்த்துக்கொள் என NTR சொன்னாராம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b49bb3a-0736-4b85-a5c4-e99dfbf63d8f/26-6aae002797ca9.webp' /></p><p></p><p>அதற்கு ரஜினி, "இல்லை சார், எனக்கு இதில் விருப்பம் இல்லை" என சொன்னதாக ரஜினி ஒரு தகவலை தன்னிடம் பகிர்ந்ததாக இளவரசு கூறியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-19T03:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாந்தோட்டத்திற்குள் சிக்கிய ஆடம்பர மாளிகை - விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் - அடுத்தடுத்து பல வீடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiran-basik-s-more-property-found-1789786698"></link>
            <id>https://tamilwin.com/article/shiran-basik-s-more-property-found-1789786698</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக், தனது சட்டவிரோத வர்த்தகத்தின் மூலம் ஈட்டிய பணத்தில் கொள்வனவு செய்த 250 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக், தனது சட்டவிரோத வர்த்தகத்தின் மூலம் ஈட்டிய பணத்தில் கொள்வனவு செய்த 250 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள மற்றுமொரு மாந்தோப்பு மற்றும் ஆடம்பர வீடு ஒன்றை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்துள்ளது. </p><p>

இந்த சொத்துக்கள் பிரபலமான தனியார் கல்வி ஆசிரியர் மற்றும் மற்றொரு நபரின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
 இந்த சொத்துக்கள் தம்புள்ளை நகருக்கு அருகில் மாந்தோட்டம் அடங்கிய மூன்று காணிப்பகுதிகளில் உள்ளது.</p><h2><b> 

பினாமி பெயரில் கொள்வனவு </b></h2><p>இவற்றில் ஒரு காணிப்பகுதியில் ஆடம்பர வீடு ஒன்றும் அமைந்துள்ளது. இந்த சொத்துக்களுக்காக 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை ஷிரான் பாசிக் செலவிட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0871032-92f8-4b6c-8c0f-4f64fcdd5803/26-6aae017a78504.webp' /></p><p>பினாமி பெயரில் கொள்வனவு செய்யப்பட்ட தோட்டம் மற்றும் காணிகளை விசாரணை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டுள்ளனர்.</p><p> 

அத்துடன், அந்த காணிகளை பராமரித்து வரும் நபரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

மேலும், போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு ஷிரான் பாசிக் கொள்வனவு செய்த 150 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள மற்றொரு ஆடம்பர வீட்டையும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு மாவரமண்டிய பகுதியில் கண்டுபிடித்துள்ளனர். </p><p>

இந்த ஆடம்பர வீடு தனியார் கல்வி ஆசிரியரின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. 

தற்போது அந்த வீட்டில் ஆசிரியரின் தாயார் வசித்து வருவதாகத் தெரியவந்துள்ளது.</p><p> </p><h3><b>போதைப்பொருள் கடத்தல்காரர் </b></h3><p>ஷிரான் பாசிக்கும் அந்தத் தனியார் கல்வி ஆசிரியருக்கும் இடையே மிக நெருங்கிய தொடர்பு இருந்ததைக் கண்டறிந்துள்ள பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு, இது தொடர்பான வேறு பல சொத்துக்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78a1401d-930e-4f55-a585-93ab83425fd8/26-6aae017b2dadd.webp' /></p><p>அந்த ஆசிரியர் தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், அவர் இலங்கை திரும்பியவுடன் விசாரணைக்காக உடனடியாக அழைக்கப்படுவார் எனவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>

டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர் இலங்கை திரும்பிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக், தற்போது பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. .</p>]]></content>
            <updated>2026-09-19T03:29:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொத்தம் 1,399 நிலநடுக்கங்களுக்கு காரணமான வட கொரியாவின் அணு ஆயுதச் சோதனைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/north-korea-triggered-earthquakes-1789788501"></link>
            <id>https://news.lankasri.com/article/north-korea-triggered-earthquakes-1789788501</id>
            <summary type="text">Nuclear Tests May Have Triggered 1,399 Earthquakes: அணு ஆயுதச் சோதனைகள் 1,399 நிலநடுக்கங்களைத் தூண்டியிருக்கலாம்.
வட கொரியாவின் அணு ஆயுதச் சோதனைகள், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nuclear Tests May Have Triggered 1,399 Earthquakes: அணு ஆயுதச் சோதனைகள் 1,399 நிலநடுக்கங்களைத் தூண்டியிருக்கலாம்.
</p><p>வட கொரியாவின் அணு ஆயுதச் சோதனைகள், அதன் முக்கிய அணு ஆயுதச் சோதனைத் தளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கங்களின் அதிகரிப்பைத் தூண்டியிருக்கலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.</p><h2>1,399 நிலநடுக்கங்கள்</h2><p>
</p><p>2017-இல் வட கொரியா நடத்திய கடைசிச் சோதனைக்குப் பிறகும் இந்தச் செயல்பாடுகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்துள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be7a77a4-fbf2-4263-85ca-5fd74358863b/26-6aae0157e67fc.webp' /></p><p> மேலும், இந்த நிலநடுக்கங்களின் நிகழ்வெண்ணும் தீவிரமும் காலப்போக்கில் அதிகரித்து வருவதாகவும் புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. </p><p>கடந்த 2,000 ஆண்டுகளாக வட கொரியாவின் மந்தாப் மலையும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியும் அமைதியாக இருந்து, எந்த நிலநடுக்கங்களும் அப்பகுதியில் பதிவு செய்யப்பட்டதில்லை. </p><p>இந்த நிலையில், விஞ்ஞானிகள் 2008 முதல் 2025 வரையிலான நில அதிர்வுத் தரவுகளை ஆய்வுசெய்து, அந்த மலையைச் சுற்றி 1,399 நிலநடுக்கங்களைக் கண்டறிந்துள்ளனர்.</p><p></p><p> </p><p>இந்த மலையில்தான் வட கொரியா 2006 முதல் 2017 வரை ஆறு நிலத்தடி அணு சோதனைகளை நடத்தியது. இந்தக் கண்டுபிடிப்புகள் வழக்கத்திற்கு மாறானவை; ஏனெனில், அணுசக்தி வெடிப்புகளுடன் தொடர்புடைய நிலநடுக்கங்கள் பொதுவாக ஒரு சோதனைக்குப் பிறகு பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து அதிகரிப்பதில்லை. </p><p>வட கொரியாவின் மூன்றாவது அணு ஆயுதச் சோதனைக்குப் பிறகு, 2013-ல் அப்பகுதியில் முதல் நிலநடுக்கம் பதிவானது. ஆனால், அதனைத் தொடர்ந்த ஆண்டுகளில் மிகக் குறைவான நிலநடுக்கங்களே ஏற்பட்டன. </p><p>2017-இல் வட கொரியா தனது ஆறாவது மற்றும் மிகப்பெரிய அணு ஆயுதச் சோதனையை மேற்கொண்ட பிறகு நிலைமை மாறியது. </p><p>நிலநடுக்கங்களின் அதிர்வெண் மற்றும் தீவிரத்தைக் குறிக்கும் நிலநடுக்கச் செயல்பாடு 2017-ஆம் ஆண்டு வரை குறைவாகவே இருந்ததாகவும், ஆனால் ஆறாவதும் மிகப்பெரியதுமான அணு ஆயுதச் சோதனையை மேற்கொண்ட பிறகு அச்செயல்பாடு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்ததாகவும் ஆய்வின் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.</p><h2>அதன் முந்தைய நிலை</h2><p> </p><p>2017-இல் நடத்தப்பட்ட சோதனையானது 6.3 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கத்தை ஏற்படுத்தியது. இது சுரங்கப்பாதை இடிந்து விழுவதற்கும், மலை உச்சியின் வடிவத்தை சுமார் 3 மீற்றர் அளவிற்கு மாற்றுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b729fc45-c3fe-42df-aaaa-cb2477e1f3ce/26-6aae0158abcee.webp' /></p><p> </p><p>சோதனைகளுக்குப் பிறகு பதிவான நிலநடுக்கங்கள் குறிப்பிடத்தக்க அளவு வலிமையானவையாக இருக்கவில்லை. வட கொரியா தனது அணு சோதனைகளைத் தொடங்குவதற்கு முன்பு, அப்பகுதியில் நில அதிர்வு செயல்பாடு மிகக் குறைவாகவே இருந்தது என்பதும் அறியப்பட்டிருந்தது. </p><p>2017-ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட சோதனைக்குப் பிறகு, மந்தாப் மலைக்குக் கீழே உள்ள தரை அதன் முந்தைய நிலைக்குத் திரும்பவில்லை என்பதையே நிலநடுக்கங்களின் அதிகரிப்பு உணர்த்தக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e953950-7734-42c7-a876-5aca270ffea7/26-6aae01596982e.webp' /></p><p> </p><p>இந்த வெடிப்பு, மலைக்குள் இருந்த பழைய மற்றும் செயலற்ற நிலையில் இருந்த விரிசல்களை மீண்டும் செயல்பட வைத்துள்ளது. மேலும், வெடிப்பினால் பாறைகளில் உருவான புதிய விரிசல்கள் நீரால் நிரம்பியுள்ளன. </p><p>இந்த நுண்துளை அழுத்தத்தால் பாறைகள் ஒன்றோடொன்று சரியும், இதன் விளைவாகத் தொடர்ச்சியாகச் சிறிய நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன என்றே பூசான் தேசியப் பல்கலைக்கழகத்தின் புவியியல் அறிவியல் துறையின் பேராசிரியரான கிம் விளக்கமளிக்கிறார்.</p>]]></content>
            <updated>2026-09-19T03:25:24+00:00</updated>
        </entry>
    </feed>
