<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-03T17:38:27+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிட்லேண்டில் துப்பாக்கிச் சூடு: 18 வயது இளைஞர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/midland-shooting-death-deemed-homicide-1785775606"></link>
            <id>https://canadamirror.com/article/midland-shooting-death-deemed-homicide-1785775606</id>
            <summary type="text">&amp;nbsp;மிட்லேண்ட் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைக் கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகக் ஒன்டாரியோ மாகாணக் காவல்துற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மிட்லேண்ட் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைக் கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகக் ஒன்டாரியோ மாகாணக் காவல்துறை அறிவித்துள்ளது.</p><p>
இத்தீவிரச் சம்பவத்தில் உயிரிழந்தவர் எடோபிகோக் பகுதியைச் சேர்ந்த டிரைஸ் ஜேம்ஸ் என்ற இளைஞர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
</p><p>வெள்ளிக்கிழமை இரவு சுமார் 8 மணி அளவில், 'கிங் ஸ்ட்ரீட்' பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7218a929-b25c-49a2-b0a1-768722ec3629/26-6a70c5f839cb1.webp' /></p><p>
</p><p>சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், துப்பாக்கிக் காயங்களுடன் இருந்த ஒருவரைக் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். </p><p>
எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
</p><p>இச்சம்பவம் ஒரு தனிப்பட்ட தாக்குதலாகக் கருதப்படுவதால், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எந்தவொரு பெரிய அச்சுறுத்தலும் இல்லை என விசாரணை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
</p><p>விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், அப்பகுதியில் காவல் துறையினரின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
சந்தேக நபர்கள் குறித்தோ அல்லது அவர்கள் ஆயுதம் ஏந்தியிருக்கிறார்களா என்பது குறித்தோ காவல்துறை இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறது.
</p><p>இச்சம்பவம் தொடர்பான ஏதேனும் தகவல்களோ, வீடியோ பதிவுகளோ அல்லது டேஷ்கேம் காட்சிகளோ வைத்திருப்போர் உடனடியாக தெற்கு ஜார்ஜியன் பே காவல் பிரிவைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T17:30:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மண்சரிவில் காணாமல் போன நான்கு பேரின் உடல்களும் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bodies-of-people-missing-in-landslide-recovered-1785777409"></link>
            <id>https://ibctamil.com/article/bodies-of-people-missing-in-landslide-recovered-1785777409</id>
            <summary type="text">




ஹட்டன், கினிகத்ஹேன, பொல்பிட்டிய பகுதியில் ஒரு வீட்டின் மீது ஏற்பட்ட நிலச்சரிவில் காணாமல் போன நான்கு பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக காவல...</summary>
            <content type="html"><![CDATA[<p>




ஹட்டன், கினிகத்ஹேன, பொல்பிட்டிய பகுதியில் ஒரு வீட்டின் மீது ஏற்பட்ட நிலச்சரிவில் காணாமல் போன நான்கு பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p>

காணாமல் போனவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் நடவடிக்கைகளின் போது, ​​முதலில் ஒரு பெண்ணின் உடல் மீட்கப்பட்டிருந்தது.</p><p></p><h2>மீட்கப்பட்ட உடல்கள்</h2><p>
</p><p>
அதனைதொடர்ந்து, மேலும் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆணின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொல்பிட்டிய காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2aac549-ec17-42ea-8de5-a7ac279183ce/26-6a70cf3d7b8f0.webp' /></p><p>
</p><p>
எவ்வாறாயினும், தற்போதைய மழை நிலைமை நாளை (04) பிற்பகலுக்குள் தணியும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T17:26:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானிய அதிகாரிகள் இரட்டை வேடம்: அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஹார்முஸ்: டிரம்ப் விடுத்த எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-control-strait-of-hormuz-trump-warns-iran-1785776458"></link>
            <id>https://news.lankasri.com/article/us-control-strait-of-hormuz-trump-warns-iran-1785776458</id>
            <summary type="text">ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் கட்டுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><h2>அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி</h2><p>
திங்கட்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்த தகவலில், அமெரிக்காவின் அனுமதியின்றி ஈரானுக்குள் எதுவும் நுழைய முடியாது. ஏனென்றால் தற்போதைய கடல்சார் முற்றுகை நடவடிக்கை இதனை உறுதிப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.</p><p> இது தொடர்பாக ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5eb54eb6-3b0a-4be8-9683-86f59e42bab8/26-6a70c94d0f567.webp' /></p><p> அமெரிக்காவுடன் முறையான ஒப்பந்தம் அல்லது முழுமையான சரணடைதல் எட்டப்படாமல் இந்த முற்றுகை நிலைப்பாடு தொடரும் என்று வலியுறுத்தியுள்ளார்.</p><p> அத்துடன் ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானுக்கு தற்போது எந்தவொரு அதிகாரமும், கட்டுப்பாடும் இல்லை என்று மீண்டும் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p></p><h2>ஈரானிய அதிகாரிகளின் நடத்தையை விமர்சித்த ட்ரம்ப்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e6ea4ab-3dbd-4f7a-b2ec-1547d6320d66/26-6a70c94c58bd1.webp' /></p><p>பேச்சுவார்த்தை தொடர்பான விஷயங்களில் ஈரானிய அதிகாரிகள் இரட்டை வேடம் போடுவதாக டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p> அதில் ஈரானிய அதிகாரிகள் தாங்களே முன்வந்து பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்த போது அவர்களின் முயற்சி கெஞ்சுவது போல் இருந்தது.</p><p> ஆனால் மறுபுறம் நாங்கள் ஓமன் வழியாக மட்டுமே பேச்சுவார்த்தைக்கு தொடர்பு கொள்வதாக வெளிப்படையாக பொய் கூறுகின்றனர் என்றும் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T17:15:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை: ஈரான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-says-no-talks-are-under-way-1785777226"></link>
            <id>https://tamilwin.com/article/iran-says-no-talks-are-under-way-1785777226</id>
            <summary type="text">அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் தற்போது நடைபெறவில்லை என ஈரான் திங்கள்கிழமை அதிரடியாக அறிவித்துள்ளது.
அத்தகைய சந்திப்புகளுக்கு எவ்விதத் திட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் தற்போது நடைபெறவில்லை என ஈரான் திங்கள்கிழமை அதிரடியாக அறிவித்துள்ளது.
</p><p>அத்தகைய சந்திப்புகளுக்கு எவ்விதத் திட்டமும் இல்லை என மேலும் தெரிவித்துள்ளது.
தாக்குதல்களைத் ஒத்தி வைப்பதற்கு இருதரப்பு பேச்சுவார்த்தையே காரணம் எனக் கூறிவந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கூற்றுக்கு முற்றிலும் மாறாக ஈரானின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
</p><p>கடந்த ஐந்து மாதங்களாகத் தொடர்ந்து வரும் போக்கைப் போலவே, ஈரானின் மீது "மிகப்பெரிய தாக்குதல்களை" நடத்தத் திட்டமிடுவதாக அறிவிப்பதும், பின்னர் கடைசி நிமிடத்தில் அதை ரத்து செய்வதும் ஜனாதிபதி ட்ரம்ப்பின் வாடிக்கையாக மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fde1b28-ef8a-44ed-95cf-7a0889a25bd3/26-6a70cc4c51289.webp' /></p><p>
நான் மக்களைக் கொல்வதை விரும்பவில்லை; மாறாக ஒப்பந்தம் செய்வதையே விரும்புகிறேன். தற்போது நாங்கள இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்.</p><p> திங்கள்கிழமை பிற்பகல் பேச்சுவார்த்தை தொடங்கும்" என டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
ட்ரம்ப்பின் இந்த அறிக்கையை ஈரானிய வெளியுறவு அமைச்சு பேச்சாளர் இஸ்மாயில் பாகேய் திட்டவட்டமாக நிராகரித்தார்.
</p><p>அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், எந்தச் சந்திப்புகளும் அட்டவணைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்திக்கவோ அல்லது தூதுவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பவோ ஈரானுக்கு எவ்விதத் திட்டமும் இல்லை.
ஈரானியப் பிரதிநிதிகள் அனைவரும் நாட்டிற்குள்ளேயே உள்ளனர்; </p><p>வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி மட்டும் ஈராக்கிற்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தற்போதைய நிலையில், ஹோர்முஸ் நீரிணை மேலாண்மை குறித்து 'ஓமன்' நாட்டுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று பாகேய் தெளிவுபடுத்தினார்.
</p><p>ஈரானின் மறுப்பைத் தொடர்ந்து, தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட ட்ரம்ப், ஈரானியத் தலைமையை "நம்பமுடியாத வஞ்சகம் நிறைந்தது" என்று கடுமையாகச் சாடினார். 
ஈரான் தரப்பிலிருந்து தான் சந்திப்பு கேட்கப்பட்டதாகவும், மிக விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என அவர் மீண்டும் தெரிவித்துள்ளார்.</p><p>
மேலும், உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு செல்லும் முக்கியப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கக் கடற்படை முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக ட்ரம்ப் கூறினார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T17:14:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்து: பெண் சம்பவ இடத்திலேயே பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-woman-died-in-the-kilinochchi-area-1785770016"></link>
            <id>https://tamilwin.com/article/a-woman-died-in-the-kilinochchi-area-1785770016</id>
            <summary type="text">கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த பெண் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த பெண் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
</p><p>
குறித்த விபத்துச் சம்பவமானது இன்று(03.08.2026) காலை இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>விபத்தில்&nbsp;உயிரிழந்தவர்</h2><p>
</p><p>

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி - பளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/284edddd-e1b8-4a5c-8917-f5145ae0d432/26-6a70b147297ad.webp' /></p><p>உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது
வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T17:14:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் மீண்டும் கனமழை..! மண் சரிந்து விழுந்ததில் பலியான 4 உயிர்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bodies-4-people-trapped-buried-in-the-landslide-1785776127"></link>
            <id>https://tamilwin.com/article/bodies-4-people-trapped-buried-in-the-landslide-1785776127</id>
            <summary type="text">ஹட்டன், கினிகத்தேனை - பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் விபத்துக்குள்ளாகி காணாமல் போயிருந்த நால்வரினதும் சடலங்கள் மீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன், கினிகத்தேனை - பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் விபத்துக்குள்ளாகி காணாமல் போயிருந்த நால்வரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு நிலைமையினாலேயே இந்த அசம்பாவிதம் சம்பவித்துள்ளது.</p><p></p><h2>சீரற்ற காலநிலை</h2><p> </p><p>

அனர்த்தத்தில் காணாமல் போனவர்களைத் தேடும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் போது, முதற்கட்டமாக பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b402435-31a9-4eb6-9b37-41ed5ae708fe/26-6a70cae9de4d2.webp' /></p><p> </p><p>

அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு பெண்களினதும் ஒரு ஆணினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொல்பிட்டிய பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T17:08:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்கரியில் கோர வீதி விபத்து: சிறுவர் உட்பட 4 பேர் பரிதாப மரணம!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/4-dead-including-at-least-1-child-in-late-night-1785775902"></link>
            <id>https://canadamirror.com/article/4-dead-including-at-least-1-child-in-late-night-1785775902</id>
            <summary type="text">கல்கரியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள &#039;ஸ்டோனி டிரெயில்&#039; சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த கோர முக்கோண வாகன விபத்தில் ஒரு குழந்தை உட்பட நான்கு பே...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்கரியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள 'ஸ்டோனி டிரெயில்' சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த கோர முக்கோண வாகன விபத்தில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் '90 அவென்யூ S.W.' பகுதிக்கு சற்று வடக்கே இந்த விபத்து நடந்துள்ளது.</p><p>
வடக்கு நோக்கிச் செல்லும் பாதையில், தவறான திசையில் (தெற்கு நோக்கி) அதிவேகமாக வந்த வாகனம் ஒன்று, எதிரே சரியாக வந்த இரண்டு வாகனங்கள் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/845e7b7f-e6b7-4de1-af71-19a91deaebfc/26-6a70c72081e5d.webp' /></p><p>
</p><p>விபத்தின் தீவிரத்தில் சிறுவர் ஒருவர் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
</p><p>மேலும் நால்வர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் இருவர் சிறுவர்கள் ஆவர்.
</p><p>இச்சம்பவம் குறித்து கல்கரி காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.</p><p> விபத்து காரணமாகப் பல மணி நேரம் மூடப்பட்டிருந்த அப்பாதை, திங்கள்கிழமை காலை 9:45 மணியளவில் மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T17:04:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை தாக்கவுள்ள டைபூன் சூறாவளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rainy-weather-to-ease-by-tomorrow-afternoon-1785765094"></link>
            <id>https://ibctamil.com/article/rainy-weather-to-ease-by-tomorrow-afternoon-1785765094</id>
            <summary type="text">இலங்கையில் மீண்டும் கொட்டித்தீர்த்து வெள்ளப்பெருக்கின்மூலம் பல அழிவுகளை ஏற்படுத்தி வரும் தற்போதைய மழை நாளை (04) பிற்பகலுக்குள் தணியும் என வளிமண்டலவியல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் மீண்டும் கொட்டித்தீர்த்து வெள்ளப்பெருக்கின்மூலம் பல அழிவுகளை ஏற்படுத்தி வரும் தற்போதைய மழை நாளை (04) பிற்பகலுக்குள் தணியும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று(03) நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் உரையாற்றிய அஜித் விஜேமன்ன, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும், சபரகமுவ மாகாணத்திலும் இன்று இரவும் நாளை காலையும் மழை தொடரும் என்று கூறினார்.</p><h2>&nbsp;நாளை பிற்பகலுக்குப் பிறகு மழை தணியும்&nbsp;</h2><p>இருப்பினும், நாளை பிற்பகலுக்குப் பிறகு மழை தணியும் என்றும் அவர் தெரிவித்தார்.
</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/uWzoUHpazEk?start=211" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><h2>ஓகஸ்ட் 06 ஆம் திகதிக்கு பின்னர் மீண்டும் மழை</h2><p>
இதேவேளை,&nbsp; ஜப்பானுக்குத் தெற்கே பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள டைபூன் சூறாவளி தீவிரமடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f5b4d9e-b662-4d3d-899f-c98fef67a8d4/26-6a70a4de776e8.webp' /></p><p>
</p><p>
இதன் விளைவாக, ஓகஸ்ட் 06-ஆம் திகதிக்குப் பிறகு மேற்கு, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில நாட்களுக்கு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T17:03:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டின் மீது சரிந்து விழுந்த மண்மேடு ; பலி எண்ணிக்கை உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-toll-rises-after-landslide-hits-home-1785776510"></link>
            <id>https://jvpnews.com/article/death-toll-rises-after-landslide-hits-home-1785776510</id>
            <summary type="text">ஹெட்டன், கினிகத்தேனை - பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் விபத்துக்குள்ளாகி காணாமல் போயிருந்த நால்வரினதும் சடலங்கள் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஹெட்டன், கினிகத்தேனை - பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் விபத்துக்குள்ளாகி காணாமல் போயிருந்த நால்வரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify;"> 

தற்போது நிலவும் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு நிலைமையினாலேயே இந்த அசம்பாவிதம் சம்பவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b517f5f-fbb5-415e-a679-975e725a3601/26-6a70c980991a6.webp' /></p><p style="text-align: justify;"> 

அனர்த்தத்தில் காணாமல் போனவர்களைத் தேடும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் போது, முதற்கட்டமாக பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">

அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு பெண்களினதும் ஒரு ஆணினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொல்பிட்டிய பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-03T17:01:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் திரும்பப் பெறப்படும் சாக்லேட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/this-popular-chocolate-was-recalled-1785775189"></link>
            <id>https://canadamirror.com/article/this-popular-chocolate-was-recalled-1785775189</id>
            <summary type="text">பிரபல சாக்லேட் நிறுவனமான &#039;ஹெர்ஷிஸ்&#039;, கனடாவில் விற்பனை செய்யப்பட்ட தனது &#039;ஹெர்ஷிஸ் கிஸஸ்&#039; சாக்லேட்களின் சில குறிப்பிட்ட தொகுப்புகளை சந்தையில் இருந்து அவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல சாக்லேட் நிறுவனமான 'ஹெர்ஷிஸ்', கனடாவில் விற்பனை செய்யப்பட்ட தனது 'ஹெர்ஷிஸ் கிஸஸ்' சாக்லேட்களின் சில குறிப்பிட்ட தொகுப்புகளை சந்தையில் இருந்து அவசரமாகத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.</p><p>
சாக்லேட்டின் மூலப்பொருள் விபரப் பட்டியலில் குறிப்பிடப்படாமல், அவற்றில் பாதாம் பருப்பு கலந்திருக்கக்கூடும் என்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>கனடா உணவு ஆய்வு முகமை சனிக்கிழமை வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், பாதாம் பருப்பு அலர்ஜி அல்லது ஒவ்வாமை உள்ளவர்கள் இந்தச் சாக்லேட்களை எக்காரணம் கொண்டும் உட்கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6367424-a193-47be-9d54-c5b9ae55a254/26-6a70c457ad0d7.webp' /></p><p>
மீறி உட்கொண்டால், அது கடுமையான அல்லது உயிருக்கே ஆபத்தான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ளது.</p><p>
திரும்பப் பெறப்படும் சாக்லேட்களை வாடிக்கையாளர்கள் உடனடியாகக் குப்பையில் வீசிவிட வேண்டும் அல்லது வாங்கிய கடைகளிலேயே கொடுத்து முழுத் தொகையையும் ரீஃபண்ட் பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p> 
மேலும், ஹெர்ஷிஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகியும் பணத்தைத் திரும்பப் பெற முடியும்.
இச்சாக்லேட்கள் 2026 மே 6 முதல் ஜூலை 28 வரை கனடாவிற்குள் மட்டுமே விநியோகிக்கப்பட்டதாக ஹெர்ஷிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. </p><p>இதற்கான லார்ட் எண்கள் மற்றும் காலாவதி திகதிகள் தொடர்பான முழு விபரங்களை ஹெர்ஷிஸ் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.</p><p>
முன்னதாக, கடந்த ஜூலை மாதம் 'காட்பரி' நிறுவனமும் தனது 'டெய்ரி மில்க் ஓரியோ' சாக்லேட்டில், பட்டியலில் குறிப்பிடப்படாத பிஸ்தா பருப்புகள் கலந்திருந்ததால் அதனைச் சந்தையிலிருந்து திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T17:00:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வொஷிங்டன் காட்டுத்தீ: 60,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/washington-wildfires-600-buildings-damaged-1785775530"></link>
            <id>https://tamilwin.com/article/washington-wildfires-600-buildings-damaged-1785775530</id>
            <summary type="text">அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில் உள்ள ஸ்போக்கேன் மற்றும் அதனைச்
சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுத்தீ தீவிரமாகப் பரவி வருகிறது. இதன்காரணமாக
இதுவரை 60...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில் உள்ள ஸ்போக்கேன் மற்றும் அதனைச்
சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுத்தீ தீவிரமாகப் பரவி வருகிறது.</p><p> இதன்காரணமாக
இதுவரை 60,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>வொஷிங்டன் காட்டுத்தீ</h2><p>
</p><p>
மேலும் 600-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட
கட்டிடங்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9cc0b05-9d2c-4b1e-964a-58c68140752c/26-6a70c77132d74.webp' /></p><p>

வொஷிங்டன் மாநிலம் முழுவதும் சுமார் 1,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தீ
பரவியுள்ள நிலையில், ஸ்போக்கேன் பகுதியில் மட்டுமே 21 சதுர கிலோமீட்டர் பரப்பு
பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>

காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில மற்றும் உள்ளூர் நிறுவனங்கள்
தீவிரமாகப் போராடி வருகின்றன.</p><p></p><h2>&nbsp;600 கட்டிடங்கள் சேதம்</h2><p> </p><p>இருப்பினும் சில இடங்களில் தீ இன்னும்
கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை.

இதுவரை உயிரிழப்போ அல்லது காயங்களோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை என அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர். </p><p>எனினும், வரும் நாட்களில் வறண்ட காலநிலை நீடிக்கும் என
எதிர்பார்க்கப்படுவதால் ஆபத்து இன்னும் குறையவில்லை என்று செனட்டர் மரியா
கேன்ட்வெல் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d9207cb-6975-4666-b8ce-7a39c3023797/26-6a70c771d83a6.webp' /></p><p>
</p><p>
காட்டுத்தீ ஏற்பட்டதற்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
</p><p>
இதேபோல், இடாஹோ, ஓரிகான் மற்றும் உடா ஆகிய பிற மாநிலங்களிலும் காட்டுத்தீ
வேகமாகப் பரவி, பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T16:53:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் முழுவதும் கடும் வெப்பம்; 20 மாவட்டங்களுக்கு &quot;செம்மஞ்சள்&quot; எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/severe-heat-across-france-orange-alert-1785763859"></link>
            <id>https://canadamirror.com/article/severe-heat-across-france-orange-alert-1785763859</id>
            <summary type="text">பிரான்ஸ் முழுவதும் கடும் வெப்பம் தொடர்ந்து நிலவி வரும் நிலையில், இன்று ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி திங்கட்கிழமை 20 மாவட்டங்களுக்கு Météo-France &quot;செம்மஞ்சள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் முழுவதும் கடும் வெப்பம் தொடர்ந்து நிலவி வரும் நிலையில், இன்று ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி திங்கட்கிழமை 20 மாவட்டங்களுக்கு Météo-France "செம்மஞ்சள்' நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. </p><p>குறிப்பாக நாட்டின் கிழக்குப் பகுதிகளில் வசிப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb1e64d5-82a6-4c91-b36d-ecf894b4b15a/26-6a709815748e3.webp' /></p><p> Ain, Alpes-de-Haute-Provence, Hautes-Alpes, Alpes-Maritimes, Ardèche, Corse-du-Sud, Haute-Corse, Doubs, Drôme, Gard, Isère, Jura, Loire, Rhône, Saône-et-Loire, Savoie, Haute-Savoie, Var, Vaucluse மற்றும் Territoire de Belfort ஆகியவை எச்சரிக்கை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
</p><p>
சில பகுதிகளில், குறிப்பாக Hautes-Alpes மற்றும் Alpes-de-Haute-Provence ஆகிய இடங்களில் வெப்பநிலை சற்று குறையத் தொடங்கியுள்ள போதிலும், தென்கிழக்கு பகுதியில் இன்னும் சில நாட்களுக்கு கடும் வெப்பம் நீடிக்கும் என Météo-France எச்சரித்துள்ளது. </p><p>இதேவேளை, நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இடியுடன் கூடிய மழை காரணமாக வெப்பநிலை குறையத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் Ariège, Haute-Garonne, Tarn, Tarn-et-Garonne, Lot, Corrèze மற்றும் Dordogne ஆகிய 7 மாவட்டங்களுக்கு கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயம் காரணமாக ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த எச்சரிக்கை மாலை 4 மணிமுதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை கிழக்கு பிரான்ஸ் மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் கடும் வெப்பம் நிலவியதுடன், ஞாயிறு இரவு முதல் திங்கட்கிழமை அதிகாலை வரை பல பகுதிகளில் வெப்பநிலை 20°C-க்கும் அதிகமாக பதிவானது; Méditerranée கடற்கரை மற்றும் Rhône பள்ளத்தாக்கில் சில இடங்களில் 25°C வரை வெப்பநிலை காணப்பட்டது.</p>]]></content>
            <updated>2026-08-03T16:47:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளத்தில் சிக்கிய அரச பேருந்து ; பெரும் ஆபத்திலிருந்து மீட்கப்பட்ட பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/passengers-rescued-after-bus-trapped-in-flood-1785773799"></link>
            <id>https://jvpnews.com/article/passengers-rescued-after-bus-trapped-in-flood-1785773799</id>
            <summary type="text">நாவலப்பிட்டி, பாலந்தொட்ட பகுதியில் பெய்த கனமழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக, அதிகரித்த வெள்ளநீருக்கு நடுவே சிக்கித் தவித்த இலங்கை போக்குவரத்து சபைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாவலப்பிட்டி, பாலந்தொட்ட பகுதியில் பெய்த கனமழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக, அதிகரித்த வெள்ளநீருக்கு நடுவே சிக்கித் தவித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்திலிருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p>குறித்த பகுதியில் பயணித்து கொண்டிருந்த அரச பேருந்தொன்று வெள்ள நீரில் சிக்கியிருந்த&nbsp; காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b960743-cfe6-466a-8b29-73bebbbc4b8e/26-6a70bee9aed1a.webp' /></p><h3>&nbsp;சீரற்ற காலநிலை</h3><p>
</p><p>இதனையடுத்து, நாவலப்பிட்டி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் குழுவினர் உடனடியாகச் செயற்பட்டு, லொறி ஒன்றின் உதவியுடன் பயணிகளைப் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.</p><p>பேருந்தைச் சுற்றி வெள்ள நீர் சூழ்ந்திருந்த நிலையில், பயணிகள் ஜன்னல்கள் வழியாக வெளியேற்றப்படும் காட்சிகளும் குறித்த&nbsp; காணொளியில் பதிவாகியுள்ளன.</p><p></p><p>
</p><p>மோசமடைந்து வரும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில், அந்த இளைஞர்களின் விரைவான செயல்பாடும் தைரியமும் ஒரு பெரிய அசம்பாவிதத்தைத் தவிர்க்க உதவியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T16:45:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புத்தளம் முதல் பொத்துவில் வரை கடலுக்குச் செல்ல தடை ; வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sea-travel-banned-from-puttalam-to-pottuvil-1785775369"></link>
            <id>https://jvpnews.com/article/sea-travel-banned-from-puttalam-to-pottuvil-1785775369</id>
            <summary type="text">பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலவுவதால், புத்தளம் முதல் பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் மீனவர்கள் பயணம் செய்யக் கூடாது என விதிக்கப்பட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலவுவதால், புத்தளம் முதல் பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் மீனவர்கள் பயணம் செய்யக் கூடாது என விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து அமல்படுத்தப்படும் என்று மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>


தீவைச் சுற்றியுள்ள மோசமான வானிலை ஓரளவு தணிந்துள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a7df0d5-611b-4413-92ef-9573e1f9c16f/26-6a70c50b7bf36.webp' /></p><h2>மறு அறிவிப்பு&nbsp;</h2><p>

இருப்பினும், புத்தளம் முதல் பொத்துவில் வரையிலான கடல் பகுதியில் பலத்த காற்றும் கொந்தளிப்பான கடல் நிலவுவதும் தொடர்ந்து நிலவுவதாக அவர் வலியுறுத்தினார்.</p><p>

புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஆகிய கடலோரப் பகுதிகளில் இயங்கும் சிறிய மற்றும் ஒருநாள் மீன்பிடிப் படகுகளுக்கு விதிக்கப்பட்ட தடை மறு அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும்.</p><p>
அதன்படி, வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் தரவுகளின்படி கடல் நிலவரம் சீரடைந்தவுடன் இந்தத் தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.</p><p></p><p>

கடந்த சில நாட்களாக வானிலை எச்சரிக்கைகளைப் புறக்கணித்து கடலுக்குச் சென்ற மன்னார், கல்பிட்டியா, சிலாபம் மற்றும் நீர்கொழும்புப் பகுதிகளில் ஐந்து மீனவர்கள் உயிரிழந்தது குறித்தும் பணிப்பாளர் நாயகம் தனது வருத்தத்தைத் தெரிவித்தார்.</p><p>எனவே, மீனவர்களின் பாதுகாப்பிற்காக வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றும், எந்தவொரு பகுதியிலும் பணிபுரியும்போது உயிர் காப்புச் சட்டைகளை அணிய வேண்டும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T16:42:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற காலநிலை ; பாதுகாப்பு அமைச்சு விடுத்த அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/urgent-announcement-issued-ministry-of-defence-1785763235"></link>
            <id>https://jvpnews.com/article/urgent-announcement-issued-ministry-of-defence-1785763235</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு சம்பந்தப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. </p><p>

இதற்கமைய, மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்காக பொருத்தமான திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்டச் செயலாளர்களிடமும் அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9acd1045-8541-4fe7-b81f-f4cc963ff84c/26-6a7095a4c629b.webp' /></p><p> </p><p>

மேலும், தேவையான சந்தர்ப்பங்களில் மக்களை விரைவாக அடையாளம் கண்டு, அவர்களைப் பாதுகாப்பான மையங்களுக்கு அனுப்பி உயிர்களைப் பாதுகாக்குமாறு உரிய பிரதேசச் செயலாளர்களுக்கு அறிவுறுத்துமாறு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.</p><p> 

 இவ்வாறு பாதுகாப்பு மையங்கள் அல்லது உறவினர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் மக்களுக்கு தேவையான உணவு மற்றும் ஏனைய வசதிகளை வழங்குவதற்கு தேவையான நிதியைப் கோர முடியும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T16:36:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெட்டாவின் திட்டத்திற்கு ஆல்பர்ட்டாவில் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/dozens-protest-metas-plan-for-massive-data-1785774732"></link>
            <id>https://canadamirror.com/article/dozens-protest-metas-plan-for-massive-data-1785774732</id>
            <summary type="text">&amp;nbsp;உலகின் முதனிலை தொழில்நுட்ப நிறுவனமான &#039;மெட்டா&#039; நிறுவனம் ஆல்பர்ட்டா மாகாணத்தில் பிரம்மாண்ட டேட்டா சென்டர் ஒன்றை அமைக்கவுள்ள திட்டத்திற்கு எதிர்ப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உலகின் முதனிலை தொழில்நுட்ப நிறுவனமான 'மெட்டா' நிறுவனம் ஆல்பர்ட்டா மாகாணத்தில் பிரம்மாண்ட டேட்டா சென்டர் ஒன்றை அமைக்கவுள்ள திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கணக்கான மக்கள் ஸ்டர்ஜன் கவுண்டி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>முகநூலின் தாய் நிறுவனமான மெட்டா, கடந்த மாதம் ஸ்டர்ஜன் கவுண்டியில் உள்ள மொரின்வில் நகரில் ஒரு ஜிகாவாட் திறன் கொண்ட பிரம்மாண்ட டேட்டா சென்டரை அமைக்கவுள்ளதாக அறிவித்தது. </p><p>
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் "நிறுவனங்களை ஒழிப்போம்" என முழக்கங்களை எழுப்பினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3453674-2dc1-4dc5-8d80-f2a24600551d/26-6a70c28e8a2ba.webp' /></p><p> மேலும், மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கின் படத்துடன் "பில்லியனரின் சொத்துக்களை அரவணைத்துடக்குங்கள்" என்ற வாசகம் அடங்கிய பதாகைகளையும் ஏந்திச் சென்றனர். வாகன ஓட்டிகள் ஹார்ன் அடித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
</p><p>டேட்டா சென்டர்கள் அதிகளவு மின்சாரத்தையும் நீரையும் உறிஞ்சும் தன்மை கொண்டவை என்பதால், தனது தண்ணீர் மற்றும் மின்சாரக் கட்டணம் மேலும் உயரும் என்று உள்ளூர்வாசி ஜெசிகா தோமாஷிரோ கவலை தெரிவித்தார்.
</p><p>செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சிக்காகக் கட்டப்படும் இத்தகைய மையங்கள் அதிகளவு இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்துவதால் காலநிலை நெருக்கடி தீவிரமடையும் எனப் போராட்டக்காரர்கள் வாதிடுகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T16:36:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவை தண்டிக்கப் போவதாக எச்சரித்த ட்ரம்ப்., காட்டுத்தீ விவகாரம் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-threatens-canada-over-wildfires-1785772146"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-threatens-canada-over-wildfires-1785772146</id>
            <summary type="text">Canada Wildfires: காட்டுத்தீ விவகாரத்தில் கனடாவை தண்டிக்கப் போவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

தண்டனை கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக, அமெரிக்காவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada Wildfires: காட்டுத்தீ விவகாரத்தில் கனடாவை தண்டிக்கப் போவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.</p><h2>

தண்டனை </h2><p>கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக, அமெரிக்காவின் வடக்கு பகுதிகள் புகை மூட்டத்தில் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், கனடாவிற்கு எதிராக “தண்டனை நடவடிக்கை” எடுக்கப் போவதாக மீண்டும் எச்சரித்துள்ளார்.
</p><p>
Air Force One விமானத்தில் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், “நான் முடிவு செய்துவிட்டேன். நீங்கள் விரைவில் தெரிந்து கொள்வீர்கள். கனடா கட்டாயம் விலை செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd9150e6-5b1b-4f50-8f67-6c42001f2bab/26-6a70b874535f8.webp' /></p><p>ட்ரம்ப், கடந்த மாதம் TruthSocial-ல், கனடா தனது காடுகள் மற்றும் புதர்களை சரியாக பராமரிக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். “அமெரிக்கா தேவையில்லாமல் மாசான, ஆரோக்கியமற்ற காற்றால் தாக்கப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார். இதற்காக, கனடாவிற்கு புதிய சுங்க வரிகள் (tariffs) விதிக்கலாம் என எச்சரித்தார்.
</p><p>
இதற்கிடையில், கனடாவின் சர்வதேச வர்த்தக அமைச்சர் மனிந்தர் சிது, “நாட்டின் வணிக நிறுவனங்களுக்கு வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெற உதவும் Strategic Exports Office ஒன்றை தொடங்குகிறோம்” என்று அறிவித்தார்.
</p><p>
இந்த அலுவலகம், அரசாங்க ஆதரவு, நிதி உதவி மற்றும் தூதரக ஆதரவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, கனடா நிறுவனங்களுக்கு உலக சந்தையில் போட்டியிட உதவும்.
</p><p></p><p>ட்ரம்ப் எவ்வாறு கனடாவை தண்டிக்கப் போகிறார் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால், அவரது தொடர்ச்சியான எச்சரிக்கைகள், அமெரிக்கா-கனடா உறவுகளில் பதற்றத்தை அதிகரித்துள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T16:34:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா அனர்த்த நிலைமை : காணாமற்போனவர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bad-weather-6-people-missing-in-nuwara-eliya-1785772984"></link>
            <id>https://ibctamil.com/article/bad-weather-6-people-missing-in-nuwara-eliya-1785772984</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நுவரெலியா மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் அதனுடன் தொடர்புடைய அனர்த்த நிலைமைகள் காரணமாக ஆறு பேர் காணாமல் போயுள்ளதுடன், மாவட்டம் முழுவதும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நுவரெலியா மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் அதனுடன் தொடர்புடைய அனர்த்த நிலைமைகள் காரணமாக ஆறு பேர் காணாமல் போயுள்ளதுடன், மாவட்டம் முழுவதும் 2,331 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>





தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக 581 குடும்பங்களைச் சேர்ந்த 2,331 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் உறுதிப்படுத்தியுள்ளார்.&nbsp;</p><h2>மண்சரிவால் காணாமற்போன நால்வர்</h2><p>பாதிக்கப்பட்டவர்களில் 1,734 பேர் தற்போது நிறுவப்பட்டுள்ள ஏழு நலன்புரி மையங்களில் பாதுகாப்பாக தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1482f03c-b895-45da-8df5-91e809e2042d/26-6a70c1937ad6a.webp' /></p><p>

காணாமல் போனவர்களில் இருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படும் அதேவேளை, மற்ற நான்கு பேரும் ஏற்பட்ட மண்சரிவு காரணமாகவே காணாமல் போயுள்ளனர் என மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார். </p><p>மேலும், இந்த காலநிலை அனர்த்தங்கள் காரணமாக மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T16:28:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய் மகன் ஜேசன் சஞ்சய் அனுப்பிய கிப்ட்.. கண்கலங்கிய டிடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/jason-sanjay-gift-to-dd-see-her-emotional-post-1785773939"></link>
            <id>https://cineulagam.com/article/jason-sanjay-gift-to-dd-see-her-emotional-post-1785773939</id>
            <summary type="text">நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். அவர் இயக்கிய சிக்மா என்ற படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். அவர் இயக்கிய சிக்மா என்ற படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.</p><p>இந்நிலையில் ஜேசன் சஞ்சய் பிரபல தொகுப்பாளர் டிடி-க்கு பேட்டி கொடுத்து இருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51556334-647f-4173-b470-e8dd6881d3f4/26-6a70bf76e554a.webp' /></p><p> </p><h2>
கிப்ட்.. கண்கலங்கிய டிடி
</h2><p>இந்நிலையில் டிடி-க்கு ஜேசன் சஞ்சய் மலர்கொத்துக்கள் அனுப்பி வாழ்த்தி இருக்கிறார். மேலும் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரனும் டிடிக்கு வாழ்த்து செய்தி அனுப்பி இருக்கிறார்.</p><p>

அதை எமோஷ்னலாக பதிவிட்டு கண்கலங்கி இருக்கிறார் டிடி. அவரது பதிவை பாருங்க.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T16:26:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொன்றியலில் மசூதிக்கு அருகில் தீப்பிடித்த வாகனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/montreal-mosque-damaged-by-vehicle-fire-1785774081"></link>
            <id>https://canadamirror.com/article/montreal-mosque-damaged-by-vehicle-fire-1785774081</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் மொன்றியல் நகரிலுள்ள &#039;கோட்-டெஸ்-நைஜஸ்–நோட்டர்-டேம்-டி-கிராஸ்&#039; பகுதியில் உள்ள மசூதி ஒன்றின் வெளிப்புறப் பகுதி, அருகில் நிறுத்தப்பட்டிருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் மொன்றியல் நகரிலுள்ள 'கோட்-டெஸ்-நைஜஸ்–நோட்டர்-டேம்-டி-கிராஸ்' பகுதியில் உள்ள மசூதி ஒன்றின் வெளிப்புறப் பகுதி, அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் தீப்பற்றி எரிந்ததால் சேதமடைந்துள்ளது.</p><p>
இச்சம்பவம் குறித்து மொன்றியல் தீயணைப்புத் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
</p><p>வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில், 'அவென்யூ டி கோர்ட்ரை' பகுதியில் அமைந்துள்ள இரண்டு கட்டிடங்களுக்கு இடையே நிறுத்தப்பட்டிருந்த டிரக் ஒன்று தீப்பற்றி எரிவதாகத் தீயணைப்புத் துறைக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32dbd062-9482-40b2-bf85-4469ea2ac91e/26-6a70c003563fd.webp' /></p><p>
தீ விபத்து ஏற்பட்ட பகுதியிலிருந்த இரண்டு கட்டிடங்களில் ஒன்று 'பைத்துல் முகர்ரம்' மசூதி ஆகும்.
சுமார் 50 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தினர்.
</p><p>வாகனத்தில் பற்றிய தீ, மசூதிக்கு அருகில் இருந்த ஒரு கொள்கலனுக்கும் பரவியது. இதனால் அந்த கொள்கலனும், மசூதியின் வெளிப்புறச் சுவரும் சேதமடைந்தன.
</p><p>இத்தீவிபத்துக்கான காரணத்தைக் கண்டறியத் தீயணைப்புத் துறை விசாரணை நடத்தி வருகிறது.</p><p> 
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் இத்தீவிபத்து சந்தேகத்திற்குரிய ஒன்றாகத் தெரியவில்லை என்று தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T16:24:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருப்பு கலர் ஆடையில் வியக்க வைக்கும் லுக்!! நடிகை ரவீனா தாஹா போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/raveena-daha-recent-photoshoot-black-dress-1785764404"></link>
            <id>https://viduppu.com/article/raveena-daha-recent-photoshoot-black-dress-1785764404</id>
            <summary type="text">ரவீனா தாஹாபூஜை, ஜில்லா, புலி, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை ரவீனா தாஹா. இதனையடுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<h3>ரவீனா தாஹா</h3><p>பூஜை, ஜில்லா, புலி, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை ரவீனா தாஹா. இதனையடுத்து தங்கம், பூவே பூச்சூடவா, மெளன ராகம் 2 உள்ளிட்ட சிரீயல்களில் நடித்து நடிகையாக மாறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdb3df5b-e0c9-4995-b760-ee561d413c61/26-6a709a4139858.webp' /></p><p>
</p><p>
டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து குக் வித் கோமாளி சீசன் 4ல் கோமாளியாக பங்கேற்றார். அதன்பின், பிக்பாஸ் சீசன் 7ல் பங்கேற்று 91 நாட்களுக்கு பின் எவிட்டாகி வெளியேறினார்.
</p><p>
தற்போது ஒருசில படங்களில் நடித்து இணையத்தில் ஆக்டிவாக இருந்து நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்தும் வருகிறார். தற்போது, கருப்புநிற ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-03T16:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிஸ் ஏரிகளில் பாசி நச்சுகளை கண்டறியும் புதிய சென்சார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-sensor-detects-algae-toxins-in-lakes-1785773013"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-sensor-detects-algae-toxins-in-lakes-1785773013</id>
            <summary type="text">Switzerland: ஏரிகளில் பரவும் நீல-பச்சை பாசி நச்சுகளை கண்டறியக்கூடிய புதிய சென்சார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் Lausanne EPFL தொழில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Switzerland: ஏரிகளில் பரவும் நீல-பச்சை பாசி நச்சுகளை கண்டறியக்கூடிய புதிய சென்சார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சுவிட்சர்லாந்தின் Lausanne EPFL தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கிய புதிய சென்சார், ஏரிகளில் பரவும் நீல-பச்சை பாசி (Blue-Green Algae) நச்சுகளை மிகத் துல்லியமாக கண்டறியக்கூடியதாக உள்ளது.
</p><p>
கோடை காலத்தில் நீரின் வெப்பநிலை அதிகரிக்கும்போது, இந்த பாசிகள் வேகமாக பரவி Microcystins எனப்படும் ஆபத்தான நச்சுகளை வெளியிடுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c98fac38-99ca-44b0-8acc-1cfea6794ee3/26-6a70bbd7b6dd0.webp' /></p><p>இது மனிதர்களுக்கு, செல்லப்பிராணிகளுக்கு, குடிநீர் விநியோகத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.

முன்பு, துரிதமான பரிசோதனைகள் விரைவான முடிவுகளை அளித்தாலும், 300-க்கும் மேற்பட்ட நச்சு வகைகளை வேறுபடுத்த முடியவில்லை. ஆய்வக பரிசோதனைகள் மிகத் துல்லியமானவை என்றாலும், பெரிய கருவிகள், நிபுணர்கள், மற்றும் பல நாட்கள் தேவைப்பட்டன.
</p><p>
இந்த சிக்கலை தீர்க்க, EPFL ஆராய்ச்சியாளர்கள் Nanopore Sensor ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது Aerolysin Protein மூலம் உருவாக்கப்பட்ட மிகச் சிறிய சேனல். மின்சாரம் செலுத்தப்படும் போது, ஒவ்வொரு நச்சு மூலக்கூறும் தனித்துவமான மின்சார தடம் (Electrical Fingerprint) உருவாக்குகிறது. இதன் மூலம், நச்சு வகைகளை வேறுபடுத்த முடிகிறது.
</p><p></p><p>ஆய்வகத்தில், இந்த முறையைப் பயன்படுத்தி 7 வகையான Microcystins-ஐ தெளிவாக அடையாளம் காண முடிந்தது. மேலும், இது WHO குடிநீர் வழிகாட்டுதலின் அளவுக்கு 40 மடங்கு குறைவான செறிவுகளிலும் செயல்படுகிறது.
</p><p>
தற்போது, நீர் மாதிரிகளை கையால் வடிகட்டி தயாரிக்க வேண்டும். ஆனால், ஆராய்ச்சியாளர்களின் நீண்டகால இலக்கு, கைக்கேற்ற சாதனம் ஒன்றை உருவாக்குவது. இதை ஏரிக்கரையில் அல்லது படகில் நேரடியாக பயன்படுத்தலாம்.
</p><p>
இந்த கண்டுபிடிப்பு, சுவிட்சர்லாந்தின் ஏரிகள் மற்றும் குடிநீர் பாதுகாப்பு துறையில் மிகப்பெரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T16:01:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறை மோதல் ; கைதியின் மரணத்திற்கான காரணம் வௌியானது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mahara-prison-inmate-death-cause-revealed-1785772408"></link>
            <id>https://jvpnews.com/article/mahara-prison-inmate-death-cause-revealed-1785772408</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை இன்று (03) பிற்பகல் விசேட சட்ட வைத்தியக் குழுவினால் ராகம வைத்தியசாலையின் பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை இன்று (03) பிற்பகல் விசேட சட்ட வைத்தியக் குழுவினால் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் இடம்பெற்றது. </p><p style="text-align: justify; ">

இதன்போது, அதிகளவில் இரத்தம் வெளியேறியமையே மரணத்திற்கான காரணம் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c0b2e32-ea0e-4f0c-928f-a827e6bf2c13/26-6a70b9799bcb3.webp' /></p><h2 style="text-align: justify; ">உடற்கூற்று பரிசோதனை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

உடற்கூற்று பரிசோதனையின் பின்னர், குறித்த கைதியின் சடலம் இன்று (03) மாலை வத்தளைப் பகுதியில் உள்ள அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">நேற்று முன்தினம்&nbsp; (01)&nbsp; கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மஹர சிறைச்சாலையினுள் பதற்றநிலை ஏற்பட்டது. </p><p style="text-align: justify; ">

இதில் 7 கைதிகள் காயமடைந்து ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் கைதி ஒருவர் உயிரிழந்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். </p><p style="text-align: justify; ">

அத்துடன், ஏற்பட்ட பதற்றநிலையைக் கண்காணிப்பதற்காக விமானப்படையினால் பெல் 412 ரக ஹெலிகொப்டர் மற்றும் ட்ரோன் என்பனவும் ஈடுபடுத்தப்பட்டன. 

</p><p style="text-align: justify; "> 

இதற்கமைய, உறவினர்கள் மஹர சிறைச்சாலைக்கு முன்பாக ஒன்றுகூடியதுடன், அங்கு அவர்களுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் சில பதற்றமான சூழலும் உருவானது. 

எனினும், பொலிஸார் நிலைமையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

சிறைச்சாலையினுளிருந்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களை ஒத்த சில சத்தங்கள் கேட்டதையடுத்து, கைதிகளைப் பார்வையிட வந்திருந்த உறவினர்களும் அப்பகுதி மக்களும் பொலிஸ் தடைகளை உடைத்துக் கொண்டு செல்ல முற்பட்டதுடன், அங்கு அமைதியின்மை ஏற்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரால் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது. </p><p style="text-align: justify; ">இதனிடையே, நிலவும் சூழ்நிலைக்கு மத்தியில் மஹர பிரதேசத்தின் சில பொலிஸ் பிரிவுகளுக்கு மறுஅறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-03T15:53:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வானிலையில் ஏற்பட்ட மாற்றம்: மாவட்டச் செயலர்களுக்கு பறந்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/announcement-ministry-of-defense-bad-weather-1785770550"></link>
            <id>https://ibctamil.com/article/announcement-ministry-of-defense-bad-weather-1785770550</id>
            <summary type="text">தற்போது நிலவும் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு அமைச்சகம் அற...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது நிலவும் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
</p><p>
 பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தனிநபர்களின் உயிர்களைப் பாதுகாக்க உரிய திட்டங்களைச் செயல்படுத்துமாறு அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><h2>பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி</h2><p>மேலும், பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக அடையாளம் கண்டு, தேவைப்படும் சமயங்களில் அவர்களைப் பாதுகாப்பான மையங்களுக்கு அனுப்பி, அவர்களின் உயிர்களைப் பாதுகாக்குமாறு சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27af0b78-6f04-4bf1-9514-15a0ea5b40aa/26-6a70b7f467a13.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T15:47:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[இடுப்பில் காயம், கால் அசைக்க முடியாத நிலை! நடிகை ராஷ்மிகா வருத்தமாக சொன்ன விஷயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/rashmika-mandanna-update-about-her-hip-injury-1785771089"></link>
            <id>https://cineulagam.com/article/rashmika-mandanna-update-about-her-hip-injury-1785771089</id>
            <summary type="text">நடிகை ராஷ்மிகா சமீபத்தில் ஷூட்டிங்கில் இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை பெற்று ஓய்வில் இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.என்ன நடந்தது என காயம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை ராஷ்மிகா சமீபத்தில் ஷூட்டிங்கில் இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை பெற்று ஓய்வில் இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.</p><p>என்ன நடந்தது என காயம் பற்றி தற்போது அவரே விளக்கம் கொடுத்து இருக்கிறார்.</p><h2>காலை தூக்க முடியாத நிலை</h2><p>காயங்கள் மோசமானவை. இது யாருக்கும் தெரியாமல் தான் இருக்கும் என நினைத்தேன். ஆனால் பரவாயில்லை.. மன்னித்துவிடுங்கள், உங்களுக்கு எதுவும் பதில் அளிக்காமல் இருந்தேன், இப்போது மீண்டும் வந்துவிட்டேன்.
</p><p>இது கொஞ்ச நாள் முன்பு நடந்தது. இது எனக்கு அடுத்தடுத்து மூன்றாவது காயம். என் உடலை இனி நிச்சயமாக மனித உடல் போல தான் நான் நடத்த வேண்டும், ஒரு மெஷின் போல இல்லை.
</p><p>இந்த காயம்.. அதை எப்படி சொல்வது.. நமது இடுப்பை கால்கள் உடன் இணைக்க ஒவ்வொரு பக்கமும் 4 Tendon என்ற தசைநாண் இருக்கும். எனது வலது இடுப்பில் ஒரு tendon கிழிந்துவிட்டது. அது தற்போது மீண்டும் ஒன்று சேர வேண்டும். அப்போது தான் நான் காலை தூக்கவே முடியும்.
</p><p>Mysaa படத்தின் ஷூட்டிங்கில் தான் அது நடந்தது. நான் நடித்ததிலேயே இதுதான் மிகவும் aggressive ஆன படம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5ff9bf8-f474-49ec-a86e-5bf603016bd0/26-6a70b454ab00b.webp' /></p><p>
</p><h2>வலிக்கிறது, ஆனால்..
</h2><p>வருத்தப்படதீங்க. வலிக்கிறது, ஆனால் இது தாங்க முடியாத அளவுக்கு எல்லாம் இல்லை. நீயாக பிரேக் எடுக்க மாட்டாய், அதனால் நானே பிரேக் கொடுக்கிறேன் என கடவுள் சொல்வது போல இருக்கிறது.
</p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T15:41:57+00:00</updated>
        </entry>
    </feed>
