<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-10T05:54:31+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு ஹெலிகொப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்ட நோயாளி.. பதிவான வரலாற்றுச் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/400th-helicopter-air-ambulance-mission-1786339411"></link>
            <id>https://tamilwin.com/article/400th-helicopter-air-ambulance-mission-1786339411</id>
            <summary type="text">இலங்கையின் முன்னணி தனியார் விமான சேவை நிறுவனம், தனது 400ஆவது அவசர மருத்துவ ஹெலிகொப்டர் (HEMS) சேவையை வெற்றிகரமாக நிறைவு செய்து வரலாற்று மைல்கல்லை எட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் முன்னணி தனியார் விமான சேவை நிறுவனம், தனது 400ஆவது அவசர மருத்துவ ஹெலிகொப்டர் (HEMS) சேவையை வெற்றிகரமாக நிறைவு செய்து வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. </p><p>மட்டக்களப்பு - வாழைச்சேனை வைத்தியசாலையில் தீவிர இதய நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவரை, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள வைத்தியசாலைக்கு அவசரமாக வான்வழியாகக் கொண்டு செல்லுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவே இச்சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>சாதாரண பயணங்களை விடவும் அவசர மருத்துவ ஹெலிகொப்டர் சேவைகள் மிகவும் துல்லியமான திட்டமிடலைக் கோருபவை. </p><h2>உடனடி வான்வழிப் பயணம்&nbsp;</h2><p>இந்நடவடிக்கையின் போது நோயாளியின் உடல்நிலை மிகவும் சீரற்ற நிலையை எட்டியதால், உடனடி வான்வழிப் பயணத்தை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2dd68c53-3ea2-4bd3-8075-8a893a75986b/26-6a7966e20f997.webp' /></p><p>
நீண்டகால வான்வழி மருத்துவ நிபுணரின் வழிகாட்டலில்,&nbsp; வைத்தியசாலையின் அவசர மருத்துவக் குழுவினர் நோயாளியின் நிலைமையை தீவிரமாக கண்காணித்து நிலைப்படுத்தியுள்ளனர்.
</p><p>
அத்துடன், ஆண்டின் இக்காலப்பகுதியில் நிலவும் பலத்த கச்சான் காற்று மற்றும்&nbsp; சீரற்ற வானிலை போன்ற சவால்களுக்கு மத்தியிலும், சூரிய அஸ்தமனத்திற்கு முன் நோயாளியைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்க வேண்டிய கட்டாயமும் நிலவியுள்ளது.</p><p>நோயாளி நிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பிற்பகல் 2:20 மணிக்கு கொழும்பிலிருந்து அனுபவமிக்க விமானி கெப்டன் அமல் வாகித் தலைமையில் ஹெலிகொப்டர் புறப்பட்டுள்ளது. </p><p>அதனை தொடர்ந்து, நோயாளிளை பாதுகாப்பாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T05:52:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு பொருளாதார அழுத்தம் கொடுக்கும் ட்ரம்ப் - எண்ணெய் தடை நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-to-put-economic-pressure-on-iran-1786341007"></link>
            <id>https://tamilwin.com/article/trump-to-put-economic-pressure-on-iran-1786341007</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிராக மேலும் இராணுவ தாக்குதல் நடத்துவதை விட, பொருளாதார ரீதியில் அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதே சிறந்தது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிராக மேலும் இராணுவ தாக்குதல் நடத்துவதை விட, பொருளாதார ரீதியில் அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதே சிறந்தது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.</p><p> 

ஈரானுடன் நடந்து வரும் மோதலில் அதிக பொறுமையுடன் குறைந்த அழுத்தத்தை பிரயோகித்து வருவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். </p><h2>

எண்ணெய் விலை அதிகரிப்பு</h2><p>
முக்கிய எண்ணெய் கப்பல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால், உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
</p><p>
இதற்கிடையில், அமெரிக்கா மீது விதிக்கப்பட்ட எண்ணெய் தடையை நீக்கும் வரை கடல் வழியை திறக்க மாட்டோம் என்றும் ஈரான் உறுதியாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/491c4ca4-3196-40b0-a587-6d9eb3a6a4c8/26-6a7966be433dd.webp' /></p><p> </p><p>இதேவேளை, ஈரான் போரின் போது ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதால், உற்பத்தியை அதிகரிக்குமாறு அமெரிக்க பாதுகாப்புத் துறையிடம் பென்டகன் கேட்டுக்கொண்டுள்ளது. </p><p>

தெஹ்ரான் மீதான தனது செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்ள ட்ரம்ப் முயன்று வருவதால், இந்த விவகாரம் அவருக்கு விரக்தியை ஏற்படுத்தியுள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T05:52:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சுக்கு மலையேற்றத்துக்குச் சென்ற வெளிநாட்டுப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-woman-dies-while-hiking-mont-blanc-1786340977"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-woman-dies-while-hiking-mont-blanc-1786340977</id>
            <summary type="text">ரஷ்ய நாட்டவரான பெண்ணொருவர் பிரான்சில் மலையேற்றத்துக்குச் சென்ற நிலையில், சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.


ரஷ்ய சுற்றுலாப்பயணி ஒருவர், பிரான்சிலு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்ய நாட்டவரான பெண்ணொருவர் பிரான்சில் மலையேற்றத்துக்குச் சென்ற நிலையில், சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
</p><p>

ரஷ்ய சுற்றுலாப்பயணி ஒருவர், பிரான்சிலுள்ள ஆல்ப்ஸ் மலையில் மலையேற்றத்துக்குச் சென்ற நிலையில், மாயமானார்.
</p><h3>
மாயமான சுற்றுலாப்பயணி
</h3><p>
தனது 60 வயதுகளிலிருக்கும் அந்த ரஷ்யப் பெண், செவ்வாயன்று, ஆல்ப்ஸ் மலையிலுள்ள Mont Blanc என்னும் மலையில் தனியாக மலையேற்றத்துக்குச் சென்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85996d41-8e52-4692-b986-f0dc44074d1f/26-6a7966727b353.webp' /></p><p>
ஆனால், மாலையில் அவர் தான் தங்கியிருந்த ஹொட்டலுக்குத் திரும்பாததால் அதிகாரிகளுக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அவரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்ட நிலையில், வியாழன்று அவரை உயிரற்ற நிலையில்தான் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.
</p><p>
அந்தப் பெண்ணின் மொபைலிலிருந்து வந்த சிக்னலை வைத்து அவரைத் தேடும்போது, அவர் பனிப்பாறை ஒன்றிலிருந்த பிளவுக்குள் விழுந்து உயிரிழந்துகிடந்தது தெரியவந்துள்ளது.&nbsp;</p><p></p><p>
அதாவது, கோடையின்போது பனிப்பாறைகளில் பிளவுகள் உருவாகும். ஆனால், அந்த பிளவுக்கு மேல் ஒரு அடுக்கு பனி படர்வதால், பனிக்கு அடியில் பிளவு ஏற்பட்டுள்ளது வெளியிலிருந்து தெரியாமல் இருக்கக்கூடும்.
</p><p>
அப்படிப்பட்ட ஒரு இடத்தில் நடந்து செல்லும்போது, அந்தப் பெண் அந்த பனிப்பாறை பிளவுக்குள் விழுந்திருக்கலாம் என கருதப்படுகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T05:50:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகருடன் Living In Reationல் உள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை... பிரபலம் ஒபன் டாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/pandianstores2-actress-livingin-relation-anchor-1786339682"></link>
            <id>https://cineulagam.com/article/pandianstores2-actress-livingin-relation-anchor-1786339682</id>
            <summary type="text">பாண்டியன் ஸ்டோர்ஸ் 2பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கடந்த வாரம் ராஜி-கதிர் கர்ப்பமாக இருக்கும் கதைக்களம் ஒளிபரப்பானது. ஒரு சந்தேகத்தில் ராஜி கதிரை Preg...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பாண்டியன் ஸ்டோர்ஸ் 2</h2><p>பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கடந்த வாரம் ராஜி-கதிர் கர்ப்பமாக இருக்கும் கதைக்களம் ஒளிபரப்பானது.</p><p> ஒரு சந்தேகத்தில் ராஜி கதிரை Pregnancy Kit வாங்கி வர சொல்லியுள்ளார். அந்த நேரம் பழனி கதிரை கிட்டுடன் காண அவர்களே கதிர்-ராஜி இருவரும் கர்ப்பமாக இருக்கிறார்கள் என்ற செய்தி இரு வீட்டினருக்கும் கூறிவிட்டார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18aeaf00-9e3a-4dfc-859b-0eaf677e4190/26-6a7965302d7ef.webp' /></p><p> </p><p>அதைக்கேட்டதும் இரு குடும்பமும் செம சந்தோஷப்பட்டார்கள், அதே வேகத்தில் ராஜியை மருத்துவமனை அழைத்து சென்றார்கள். அங்கு மருத்துவர் ராஜி கர்ப்பமாக இல்லை என கூறியதும் அனைவரும் வருத்தப்பட்டார்கள்.
</p><p>இந்த வாரம் கதைக்களம் எப்படி இருக்கும் என பொறுத்திருந்து காண்போம்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ca3fa5e-2a62-40a6-a71f-64b2e9f8d3df/26-6a7965311618d.webp' /></p><h2>சீரியல் நடிகை
</h2><p>இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனின் மூத்த மகள் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹாசினி. இவர் பிரபல நடிகர் ஆதவனுடன் Live In Relationshipல் உள்ளாராம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec1ac381-d8c0-4957-b19d-d8775e334790/26-6a796632de8cf.webp' /></p><p> </p><p>நடிகர் ஆதவன் ஒரு பேட்டியில், எனக்கு திருமணம் ஆகி 2 மகள்கள் இருக்கிறார்கள், என் மனைவியை பிரிந்துவிட்டேன். இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை ஹாசினியுடன் Living Togetherல் இருக்கேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32e75f79-50ed-45d9-aae3-acc8967453ea/26-6a796633b9b5c.webp' /></p><p> </p><p>அதை சொல்ல எனக்கு எந்த வெட்கமும் இல்லை, இது என் பெரிய பொண்ணுக்கும் தெரியும். விரைவில் திருமணம் செய்தால் நிச்சயம் அறிவிப்பேன் என கூறியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-10T05:48:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன் சாகர காரியவசம் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/slpp-general-secretary-sagara-arrives-at-ccib-1786339930"></link>
            <id>https://ibctamil.com/article/slpp-general-secretary-sagara-arrives-at-ccib-1786339930</id>
            <summary type="text">புதிய இணைப்புஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் மற்றும் சட்டத்தரணி சாகர கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை மா அதிபர் (IGP) குறித்து அ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் மற்றும் சட்டத்தரணி சாகர கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

காவல்துறை மா அதிபர் (IGP) குறித்து அவர் அளித்த அறிக்கை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (10) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு அவர் வந்தபோது கைது இடம்பெற்றுள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70dc303d-03b7-41c5-bbaf-94ae5b1e9343/26-6a7964f4be23e.webp' /></p><p>காவல்துறை மா அதிபர் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துகள் குறித்து இடம்பெற்று வரும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை தந்துள்ளார்.</p><p>

வழங்கப்பட்டுள்ள அறிவித்தலுக்கு அமைய, இன்று காலை 10.30 மணிக்கு குறித்த பணியகத்தில் முன்னிலையாகவுள்ளதாக முன்னதாக அவர் தெரிவித்திருந்தார்.</p><p>
இதேவேளை, காவல்துறை மா அதிபர் தொடர்பாக தாம் வெளியிட்ட கருத்து தவறாக வியாக்கியானம் செய்யப்பட்டுள்ளதாக சாகர காரியவசம் மேலும் குறிப்பிட்டார்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T05:43:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட இந்திய இளைஞர்: அதிர்ச்சிப் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-student-kills-gf-in-us-arrested-in-germany-1786340512"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-student-kills-gf-in-us-arrested-in-germany-1786340512</id>
            <summary type="text">தன் காதலியைக் கொலை செய்து விட்டு தப்பியோடிய இந்திய இளைஞர் ஒருவர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.


அமெரிக்காவில் கல்வி கற்கச் சென்ற இந்திய இளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>தன் காதலியைக் கொலை செய்து விட்டு தப்பியோடிய இந்திய இளைஞர் ஒருவர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>

அமெரிக்காவில் கல்வி கற்கச் சென்ற இந்திய இளைஞர் ஒருவர், தன் காதலியைக் கொலை செய்துவிட்டு தப்பிச் செல்லும்போது ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><h3>
ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட இந்திய இளைஞர்
</h3><p>
வியாழக்கிழமை மாலை 4.00 மணியளவில், அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்திலுள்ள Tucson நகரில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றிலிருந்து, தீயணைப்புத்துறையினருக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.
</p><p>
அங்கு யாரோ ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின்பேரில் அவசர உதவிக்குழுவினர் அங்கு விரைய, அந்த வீட்டில் ஜுலிஸ்ஸா ரூபி சலஸார் (Julissa Rubi Salazar, 19) என்னும் இளம்பெண் உயிரிழந்துகிடந்தது தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddaa3e00-95b0-4443-b71c-08aee84063d7/26-6a7964a24ae0a.webp' /></p><p>
பொலிசார் மேற்கொண்ட ஆய்வில் ஜுலிஸ்ஸா கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.
</p><p>
தொடர் விசாரணை ஜுலிஸ்ஸாவின் காதலரான வருண் பச்சிகரி (Varun Batchigari, 20) என்னும் இந்திய இளைஞரை கைகாட்ட, பொலிசார் அவரைத் தேடத் துவங்கியுள்ளனர்.&nbsp;</p><p></p><p>
ஆனால், வருண் இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்காக விமானம் ஏறிவிட்டது தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ba0d461-02a2-460f-9fb8-f785c153e356/26-6a7964a300210.webp' /></p><p>

உடனடியாக, அவரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, Tucson நகர பொலிசார், அங்குள்ள FBI அதிகாரிகள் மற்றும் ஜேர்மன் தலைநகரான பெர்லினிலுள்ள FBI அமைப்பு ஆகியோருடன் மூன்று குழுக்களாக இணைந்து வருணைப் பிடிக்க திட்டமிட்டுள்ளார்கள்.
</p><p>
அதன்படி, இந்தியா செல்வதற்காக ஜேர்மனி சென்ற வருண் ஜேர்மனியில் கால் வைத்ததும், அங்கு தயாராக காத்திருந்த அதிகாரிகள் அவரைக் கைது செய்துள்ளனர்.
</p><p>
ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட வருண், அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட உள்ளார்.
</p><p>
வருண் ஜூலிஸ்ஸாவை தாக்கும் வழக்கம் கொண்டவர் என்பது சாட்சியங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
</p><p>
தன்னை மீண்டும் மீண்டும் தாக்கியதுடன், மோசமாகவும் நடத்தியதால் வருணைப் பிரிய முடிவு செய்துள்ளார் ஜுலிஸ்ஸா.
</p><p>
ஆத்திரமடைந்த வருண் ஜுலிஸ்ஸாவைக் கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டதாக கருதப்படுகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T05:42:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடரும் பலத்த மழை - வான்பாயும் மட்டத்தில் காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/castlereagh-and-moussakallai-reservoirs-1786338928"></link>
            <id>https://tamilwin.com/article/castlereagh-and-moussakallai-reservoirs-1786338928</id>
            <summary type="text">காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்கள் இன்று (10.08.2026) காலை வான்பாயும் மட்டத்தை எட்டியுள்ளதாக அந்நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்கள் இன்று (10.08.2026) காலை வான்பாயும் மட்டத்தை எட்டியுள்ளதாக அந்நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீரேந்து பகுதிகளில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>

காசல்ரீ நீர்த்தேக்கம் வான்பாயும் மட்டத்திற்கு 1.2 அடி வரை எட்டியுள்ளதுடன், அந்நீர்த்தேக்கத்திற்கு கடந்த 24 மணிநேரத்தில் 25 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4e7721d-fe16-41e2-bef4-453e93fac0f1/26-6a79637755dfd.webp' /></p><p> 

அதேபோல் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கம் வான்பாயும் மட்டத்திற்கு 3.4 அடி வரை எட்டியுள்ளதுடன், கடந்த 24 மணிநேரத்தில் 29 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்த்தேக்கப் பொறுப்பதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><h2>உச்ச கொள்ளளவில் மின் உற்பத்தி</h2><p> </p><p>

இந்த இரண்டு நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளதனைத் தொடர்ந்து கென்யோன், லக்சபான, நவலக்சபான, பொல்பிட்டிய மற்றும் விமலாசுரேந்திர மின் உற்பத்தி நிலையங்களில் உச்ச கொள்ளளவில் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6523bb97-0c71-4815-a34c-c5bc139313aa/26-6a7963769ad83.webp' /></p><p> </p><p>

இதற்கிடையில், நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வான் கதவுகள் திறக்கப்படும் சாத்தியக்கூறுகள் நிலவுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இதன் காரணமாக மஸ்கெலியா ஓயா ஆற்றின் இருமருங்கிலும் வசிக்கும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T05:37:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ருத்ரதாண்டவமாடிய லிவிங்ஸ்டன்! 82 பந்துகளில் 166 ஓட்டங்கள் எடுத்து லண்டன் ஸ்பிரிட் வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/livingstone-and-brevis-blast-fifty-helps-ldn-won-1786340348"></link>
            <id>https://news.lankasri.com/article/livingstone-and-brevis-blast-fifty-helps-ldn-won-1786340348</id>
            <summary type="text">London Spirit beat Birmingham Phoenix: The Hundred போட்டியில் லண்டன் ஸ்பிரிட் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பர்மிங்காம் ஃபீனிக்ஸை வீழ்த்தியது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>London Spirit beat Birmingham Phoenix: The Hundred போட்டியில் லண்டன் ஸ்பிரிட் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பர்மிங்காம் ஃபீனிக்ஸை வீழ்த்தியது. </p><p>

லார்ட்'சில் நடந்த The Hundred போட்டியில், லியாம் லிவிங்ஸ்டனின் அதிரடி ஆட்டத்தின் மூலம் லண்டன் ஸ்பிரிட் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பர்மிங்காம் ஃபீனிக்ஸ் அணியை வீழ்த்தியது.&nbsp;</p><h2>கிளார்க்,&nbsp;டிக்சன்&nbsp;விளாசல்</h2><p>

பர்மிங்காம் ஃபீனிக்ஸ் மற்றும் லண்டன் ஸ்பிரிட் அணிகளுக்கு இடையிலான The Hundred போட்டி லார்ட்'ஸ் மைதானத்தில் நடந்தது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7724dc61-ff28-469c-84f6-c2e4747c1413/26-6a7963ff4fea9.webp' /></p><p></p><p>

முதலில் ஆடிய பர்மிங்காம் ஃபீனிக்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ஓட்டங்கள் குவித்தது. </p><p>

ஜோ கிளார்க் (Joe Clarke) 42 பந்துகளில் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 73 ஓட்டங்களும், சீன் டிக்சன் (Sean Dickson) 28 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்களும் விளாசினர்.
</p><p>
பின்னர் ஆடிய லண்டன் ஸ்பிரிட் அணியில் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 16 ஓட்டங்களும், பேர்ஸ்டோவ் 10 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர்.&nbsp;</p><h2>லிவிங்ஸ்டன்,&nbsp;பிரேவிஸ்&nbsp;ருத்ரதாண்டவம்</h2><p>
அடுத்து கைகோர்த்த அணித்தலைவர் லியாம் லிவிங்ஸ்டன், டெவால்ட் பிரேவிஸ் கூட்டணி சிக்ஸர்களை பறக்கவிட்டது.
</p><p>
அரைசதம் விளாசிய லியாம் லிவிங்ஸ்டன் (Liam Livingstone) 30 பந்துகளில் 4 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். </p><p>

எனினும் டெவால்ட் பிரேவிஸ் (Dewald Brevis) ஆட்டமிழக்காமல் 31 பந்துகளில் 55 ஓட்டங்கள் ( 3 சிக்ஸர், 5 பவுண்டரிகள்) விளாச, லண்டன் ஸ்பிரிட் அணி 82 பந்துகளில் 166 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3074c30-f8a1-4878-8501-8467266c7131/26-6a79640002221.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T05:37:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்று முன்னர் அதிரடியாக கைது செய்யப்பட்ட சாகர காரியவசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sagara-kariyawasam-to-appear-before-cid-today-1786338239"></link>
            <id>https://tamilwin.com/article/sagara-kariyawasam-to-appear-before-cid-today-1786338239</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.&amp;nbsp;பொலிஸ்மா அதிபர் க...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>பொலிஸ்மா அதிபர் குறித்து அவர் கூறியதாகக் தெரிவிக்கப்படும் ஒரு அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, அவர் இன்று மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு&nbsp;</span></p><p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இன்று (10.08.2026) காலை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பொலிஸ்மா அதிபர் குறித்து அவர் கூறியதாகக் கூறப்படும் ஒரு அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, அவர் இன்று மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வரவழைக்கப்பட்டார்.&nbsp;</p><h2>வெளியிட்ட கருத்து தவறாக வியாக்கியானம்</h2><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9800c54-49f4-41f5-bc89-631f5f5930b1/26-6a7960114cd7d.webp' /></p><p>

இதேவேளை, பொலிஸ்மா அதிபர் தொடர்பாக தாம் வெளியிட்ட கருத்து தவறாக வியாக்கியானம் செய்யப்பட்டுள்ளதாக சாகர காரியவசம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T05:36:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிர்கதியாக்கப்பட்ட தமிழ் மக்களை கண்டுகொள்ளாத அநுர அரசு - தொடர் போராட்டங்களுக்கு என்ன பதில்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/land-rights-issue-of-the-tamil-people-1786339823"></link>
            <id>https://tamilwin.com/article/land-rights-issue-of-the-tamil-people-1786339823</id>
            <summary type="text">காணிகளை விடுவிப்போம் என கூறியவர்கள் இரண்டு ஆண்டுகள் கடந்தும் காணிகளை
விடுவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின்
ஊடகப்பேச்சாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணிகளை விடுவிப்போம் என கூறியவர்கள் இரண்டு ஆண்டுகள் கடந்தும் காணிகளை
விடுவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின்
ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2> 

தொடர் காணி சுவீகரிப்பு</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
ஒரு வருடத்திற்குள் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என அரசாங்கமும்
ஜனாதிபதியும் உறுதியளித்திருந்த போதிலும், இரண்டு ஆண்டுகள் கடந்தும் தேர்தல்
நடத்தப்படவில்லை. அடுத்த ஆண்டிலாவது தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி
எழுந்துள்ளது.
</p><p>
அதேபோன்று, காணி விடுவிப்பு தொடர்பில் இரண்டு வருடங்களாக, காத்திரமான
நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

ஜனாதிபதியை தமிழ் கட்சிகள் சந்தித்த போதும், காணி விடுவிப்பு தொடர்பில்
முக்கியமாக கூறியிருந்தோம். குறிப்பாக வடக்கு - கிழக்கில் முப்படைகளின்
வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில், மலையக மக்களுக்கு காணி
பகிர்ந்தளித்து தொடர்பிலும் பேசினோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d00c43a-fec6-4610-9898-44180743eed8/26-6a79630a8759f.webp' /></p><p>
</p><p>
யாழ்ப்பாணத்தில், பலாலி, மயிலிட்டி, தையிட்டி போன்ற பிரதேச மக்களும்
முல்லைத்தீவில் கேப்பாப்பிலவு மக்களும் தமது காணிகளை விடுவிக்குமாறு போராடி
வருகின்றனர்.
</p><p>
அத்துடன், மன்னார், கிளிநொச்சி, கிழக்கு மாகாணத்தின்
பல்வேறு பகுதிகளில் மக்கள் தங்கள் வாழ்வாதார நிலங்களை மீட்கத் தொடர்ந்து
போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது தொடர்பில் ஜனாதிபதியிடம் விரிவாக
எடுத்து கூறினோம்.
</p><p>
அதற்கு அவர்கள் முப்படைகளிடம் எந்த எந்த காணிகளை விடுவிக்க முடியும் என
அறிக்கை ஒன்றினை வழங்குமாறு கூறியுள்ளோம் அறிக்கை கிடைக்கப்பெற்றதும் அதன்
அடிப்படையில் காணி விடுவிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என கூறியுள்ளனர்.</p><h2>

மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காத அரசு</h2><p>

மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என்ற எமது நோக்கத்தில் மாற்றமில்லை என
அரசாங்கம் கூறி வந்தாலும் , இரண்டு வருடங்களாக இதையே கூறி வருகின்றனர் இது
ஏற்புடையதில்லை

யாழ்ப்பாணத்தில் குறிப்பிட்டு சொல்ல கூடிய அளவுக்கு காணிகள்
விடுவிக்கப்படவில்லை. </p><p>ஒரு சில வீதிகளை மாத்திரமே விடுவித்துள்ளனர்.

தொடர்ச்சியாக மக்கள் தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டங்களை
முன்னெடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/472793d9-d5f5-4815-b2e9-71fd3cc738f0/26-6a79630b47063.webp' /></p><p> </p><p>அரசாங்கம் மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை

நாங்களும் போராட்ட களத்தில் நின்றவர்கள் என கூறி ஆட்சிக்கு வந்தவர்கள்,
மக்களின் போராட்டங்களை,கண்டு கொள்ளாமல் இருப்பதும், அவர்களின் கோரிக்கைகளை
செவி சாய்க்காது இருக்கின்றமையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
</p><p>
நாங்கள் இனவாதிகள் அல்ல மதவாதிகள் இல்லை என அரசாங்கம் கூறிக்கொண்டாலும் ,
செயலில் அவ்வாறு இல்லை என்றே கூற முடியும் என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T05:35:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலேசியாவில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்படும் ஆபத்தான நபர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/four-to-be-deported-from-malaysia-1786339082"></link>
            <id>https://ibctamil.com/article/four-to-be-deported-from-malaysia-1786339082</id>
            <summary type="text">

மலேசியாவில் கைது செய்யப்பட்ட, பிரபல பாதாள உலக கும்பலைச் சேர்ந்தத மூன்று உறுப்பினர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள், இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>

மலேசியாவில் கைது செய்யப்பட்ட, பிரபல பாதாள உலக கும்பலைச் சேர்ந்தத மூன்று உறுப்பினர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளனர்.</p><p>
குறித்த சந்தேகநபர்கள், இன்று பிற்பகல் (10) நாட்டிற்கு அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் ஒலுகல உள்ளிட்ட ஒரு சிறப்பு காவல்துறை குழு, சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்துவர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>குற்றச்சாட்டுகள் பதிவு</h2><p>
</p><p>
இந்த சந்தேக நபர்களில் ஒருவர், பிரபல பாதாள உலக குற்றவாளியான கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய சகா என்றும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35496e53-2317-43ad-bee8-bf820eada010/26-6a796266ded5f.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், பல கொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக இந்தக் குழு மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T05:32:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் என்றாலே கெத்து - தனித்தீர்மானம் கொண்டு வந்த முதல்வர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tamil-means-swag-cm-vijay-speech-on-resolution-1786339893"></link>
            <id>https://news.lankasri.com/article/tamil-means-swag-cm-vijay-speech-on-resolution-1786339893</id>
            <summary type="text">தமிழக அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்படவேண்டும் என சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்படவேண்டும் என சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
</p><h3>
தமிழ்த்தாய் வாழ்த்து</h3><p> 

தமிழக அரசு நிகழ்வுகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதுதான் நடைமுறையாக இருந்தது.
</p><p>
ஆனால், தவெக அரசு ஆட்சியமைத்த பின்னர், மத்திய அரசின் வழிகாட்டுதல் என்ற பேரில், முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழா, அமைச்சர்கள் பதவியேற்பு விழா ஆகிய நிகழ்வுகளில் வந்தேமாதரம் முதலில் பாடப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து கடைசியாக பாடப்பட்டது சர்ச்சையானது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3db00564-d8b2-485c-b0e9-f3d30426584b/26-6a79623687392.webp' /></p><p>

தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் பாடப்படும் என தவெக அரசு உறுதியளித்தாலும், சமீபத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாடலான "நீராடும் கடலுடுத்த" என்ற பாடலை பாடிய மனோன்மணீயம் சுந்தரனார் பெயரில் அமைந்துள்ள பல்கலைகழகத்திலே தமிழ்தாய் வாழ்த்து கடைசியாக பாடப்பட்டது.
</p><p>
இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக அரசு நிகழ்வுகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் பாடப்பட வேண்டும் என தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h3>

தமிழ் என்றாலே கெத்து
</h3><p>
இந்த தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் விஜய், "மொழி எப்போதும் தொடர்புக்கான ஒன்றே. அதை யாரும் மறுக்க முடியாது. உலகில் உள்ள எல்லா மொழிக்கும் இது பொருந்தும். ஆனால் தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல. பேசினால் வரும் ஓசை மட்டுமல்ல. அது நமது உயிர். நமது உணர்வு.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a458b4a-1940-4562-9601-b0b0d659d44e/26-6a796237dd60e.webp' /></p><p>
நம்மை பெற்ற தாயை அம்மா என்று சொல்லும்போது பாசம் நேசம் எல்லாமும் நமக்குள் உணர்வாக தோன்றுவதுபோல தமிழும் எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. தாய் எப்படியோ அதுபோல தான் தாய் மொழியும்.
</p><p>
நம் தாய் நமக்கு மிகப்பெரிய புனிதம் என்றால் நம் எல்லாருக்குமான தமிழ்த்தாய் பற்றி சொல்லவா வேண்டும். தாயை போற்றுகிற வாழ்த்துகிற சமூகம் தமிழ்த்தாய் வாழ்த்தை எப்படி விடும். விடாது. விடவும் மாட்டோம்.</p><p> 

நமது தமிழ்த்தாய் வாழ்த்தை 1891 இல் எழுதிய மனோன்மணியம் சுந்தரனார் நம் தமிழ் மொழியை தமிழ்த்தாய் என்று உயர்வாக பாடினார்.
</p><p>
இன்று தமிழ் பேசும் மக்கள் இல்லாத நாடுகளே குறைவுதான். தமிழும் தமிழனும் இல்லாத நாடு எது?. தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல அது ஒருசிந்தனை, அது ஒரு அன்பு. தமிழ் என்றால் விருந்தோம்பல். சுருக்கமாக தமிழ் என்றால் கெத்து. தமிழ் என்றால் பவர்.
</p><p>
ஒரு கட்சிக்கு பிரச்சனை என்றால் அந்த கட்சி மட்டுமே போராடும். ஆனால் தமிழுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஒட்டுமொத்த தமிழ்நாடே வந்து நிற்கும். அதனால் தான் தமிழ் என்றால் உயிர், உணர்வு. உலகில் தோன்றிய பல மொழிகள் காலப்போக்கில் மறைந்தன. ஆனால் தமிழ் நீடித்து நிற்கும் ஒன்று.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/067bfcad-0656-4596-b464-b84b27a3c398/26-6a796237389f3.webp' /></p><p>
தமிழ்த்தாய் வாழ்த்தின் கண்ணியத்தையும் தமிழின் தொன்மையையும், தமிழர் பண்பாட்டின் பெருமையையும் பாதுகாக்கும் உயரிய பணியில் பணியில் இந்த பேரவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கட்சி வேறுபாடின்றி ஒன்றிணைத்து, அனைத்து பல்கலைகள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவன நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்று கொண்டுவரப்படும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்." என பேசினார்.</p><p> 

இந்த தீர்மானத்தை திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரித்த நிலையில், தீர்மானம் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T05:31:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட சிறுவன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/boy-arrested-for-flying-a-drone-camera-1786339705"></link>
            <id>https://jvpnews.com/article/boy-arrested-for-flying-a-drone-camera-1786339705</id>
            <summary type="text">&amp;nbsp; பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட 16 வயது சிறுவன் ஒருவர் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட 16 வயது சிறுவன் ஒருவர் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>

விமானப்படை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, மன்னார் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையின் போதே சௌத்பார் - பனங்கட்டுகொட்டு பகுதியில் வைத்து குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02de4a7b-280d-4df9-b28a-f411ab844e6c/26-6a79617ab1b58.webp' /></p><p>
</p><p>
பாதுகாப்பு அமைச்சில் பதிவு செய்யப்படாத ட்ரோன் கேமரா பாதுகாப்பு பிரிவினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>கைது செய்யப்பட்ட சிறுவன் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T05:26:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் வருடாந்த மகோற்சவப் பெருவிழா : சப்பரத் திருவிழா இன்று]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/maviddapuram-kandaswamy-temple-annual-festival-1786334119"></link>
            <id>https://ibctamil.com/article/maviddapuram-kandaswamy-temple-annual-festival-1786334119</id>
            <summary type="text">வரலாற்றுச்சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் வருடாந்த மகோற்சவப் பெருவிழா 19.07.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச்சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் வருடாந்த மகோற்சவப் பெருவிழா 19.07.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறுகின்றது.</p><p>இந்த 25 நாட்களில் சப்பரத் திருவிழா, தேர் திருவிழா, தீர்த்தத் திருவிழா என்பன வெகு விமர்சையாக நடைபெறுவது வழமை.</p><p>மகோற்சவப் பெருவிழாவின் 23ஆம் நாளான இன்று (10.08.2026) இரவு சப்பரத் திருவிழா மிகச் சிறப்பாக இடம்பெறவுள்ளது.</p><p></p><h2>சப்பரத் திருவிழா&nbsp;</h2><p>இன்று காலை 5மணிக்கு உஷத்கால பூசை ஆரம்பமாகி காலை 10.30 மணிக்கு 108 சங்காபிஷேகம் இடம்பெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcaa6448-f900-4a63-8258-053badab579b/26-6a795e23f179d.webp' /></p><p>மாலை நேர பூசைகளைத் தொடர்ந்து இன்று இரவு மாவை கந்தன் (முருகப்பெருமான்) அழகாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளிப்பார்.</p><p>24 ஆம் நாளான நாளை (11.08.2026) செவ்வாய்க்கிழமை மாவைக் கந்தனின் தேர் திருவிழா இடம்பெறவுள்ளது.</p><p></p><h2>தேர் திருவிழா&nbsp;</h2><p>இரதோற்சவப் பெருவிழாவான நாளை அதிகாலை 2 மணிக்கு&nbsp;உஷத்கால பூசையைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு தேர் பவனி ஆரம்பமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d18fc83-48db-4a8f-8fc3-decb8d2312a3/26-6a795e259afa1.webp' /></p><p>25 ஆம் நாளான நாளை மறுதினம் (12.08.2026) புதன்கிழமை தீர்த்தத் திருவிழா இடம்பெறவுள்ளது.</p><h2>தீர்த்தத் திருவிழா&nbsp;</h2><p>ஆடி அமாவாசை நாளான அன்றைய தினத்தில் காலை 06.30 மணிக்கு கீரிமலை கண்டகி தீர்த்தத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7aa5b843-7b5d-4a61-a5c7-367dc051da22/26-6a795e24b8089.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து 13.08.2026 (வியாழக்கிழமை) மாலை 04.30 மணிக்கு மாம்பழத் திருவிழாவும், 14.08.2026 (வெள்ளிக்கிழமை) மாலை 04.30 மணிக்கு காங்கேசன்துறையில் கப்பல் திருவிழாவும், 15.08.2026 (சனிக்கிழமை) மாலை&nbsp;04.30 மணிக்கு பூங்காவனத் திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T05:22:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[டச்சு மண்ணை அதிர வைத்த தமிழர் : நெதர்லாந்து ஊடகம் வியந்த பாஸ்கரன் கந்தையாவின் 5,445 கோடி ரூபாய் சாம்ராஜ்யம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/baskaran-kandiah-in-the-netherlands-quote-500-list-1786265847"></link>
            <id>https://ibctamil.com/article/baskaran-kandiah-in-the-netherlands-quote-500-list-1786265847</id>
            <summary type="text">நெதர்லாந்து நாட்டின் வர்த்தக உலகில் பிரகாசிக்கும் ஈழத்து நட்சத்திரம் : பாஸ்கரன் கந்தையாவின் வரலாற்றுச் சுவடுகள்


ஐரோப்பியப் பெருநிலப்பரப்பில் ஈழ அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெதர்லாந்து நாட்டின் வர்த்தக உலகில் பிரகாசிக்கும் ஈழத்து நட்சத்திரம் : பாஸ்கரன் கந்தையாவின் வரலாற்றுச் சுவடுகள்
</p><p>

ஐரோப்பியப் பெருநிலப்பரப்பில் ஈழ அகதிகளாக தடம் பதித்து, தமது கடின உழைப்பால் வெற்றி மீது வெற்றி குவித்து வாழும் புலம்பெயர் தமிழர்களின் பட்டியலில், பாஸ்கரன் கந்தையா என்ற பெயர் இன்றைக்கு உலகளவில் அதிக கவனத்தை ஈர்த்து நிற்கிறது என நெதர்லாந்தின் முன்னணி பொருளாதார மற்றும் வணிக இதழான 'Quote Net' அண்மையில் வெளியிட்ட சிறப்புக் கட்டுரை ஒன்று, டச்சு மண்ணில் ஒரு ஈழத்தமிழர் உருவாக்கியுள்ள பிரமாண்டமான வணிகச் சாம்ராஜ்யத்தையும், தனது தாய்நிலம் மீதான காதலையும், நன்றியுணர்வையும் வெகுவாக பாராட்டியுள்ளது. </p><p>

நெதர்லாந்து நாட்டின் ஆகப்பெரிய மில்லியனர்களை வரிசைப்படுத்தும் 'Quote 500' பட்டியலில் பாஸ்கரன் கந்தையாவைச் சேர்த்து பெருமைப்படுத்தியிருக்கும் அந்த ஊடகம், அவரது வாழ்க்கைப் பாதையை ஒரு பரபரப்பான நாவலைப் போலவும், திரைப்படக் காட்சிகளைப் போலவும் வர்ணித்துள்ளது.</p><h2>செல்வாக்குமிக்க பணக்காரர்கள் பட்டியல்</h2><p>
</p><p>
அந்த டச்சு ஊடகத்தின் துல்லியமான நிதி மதிப்பீட்டின்படி, திரு. பாஸ்கரன் கந்தையாவின் தற்போதைய நிகர சொத்து மதிப்பானது 165 மில்லியன் யூரோக்கள் ஆகும். அதாவது நமது இலங்கை ரூபாய் மதிப்பில் இதைக் கணக்கிட்டுப் பார்த்தால், அது சுமார் 5,445 கோடி இலங்கை ரூபாயைத் தொடுகிறது (LKR 54.45 Billion).</p><p> 

இந்த பிரமாண்டமான நிதிப் பலம்தான் அவரை நெதர்லாந்தின் மிகச் செல்வாக்குமிக்க பணக்காரர்கள் பட்டியலில் 437வது இடத்தில் கம்பீரமாக அமர்த்தியிருக்கிறது எனவும், இந்த எண்களுக்குப் பின்னால் இருக்கும் உழைப்பும் அசாத்தியமான துணிச்சலும்தான் உண்மையிலேயே வியப்பளிக்கக்கூடியவை எனவும் அவர்கள் வியப்படைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfcf8919-d198-4129-bf5a-bf0fdbd1a49a/26-6a78447338a73.webp' /></p><p> </p><p>

யாழ்ப்பாணத்தின் வடலியடைப்பில் ஒரு சாதாரன வறிய குடும்ப சூழலில் பிறந்து வளர்ந்த பாஸ்கரன், தனது இளமைக் காலத்தில் இலங்கையில் நிலவிய போர் மேகங்களினாலும் பொருளாதார நெருக்கடிகளினாலும் ஐரோப்பாவை நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கினார். </p><p>

நெதர்லாந்து மண்ணில் காலூன்றிய அவர், தன் முன்னாலுள்ள சவால்களைக் கண்டு அஞ்சாமல் தனது முப்பதாவது வயதில் தனது இரண்டு நண்பர்களுடன் இணைந்து 'லெபாரா மொபைல்' (Lebara Mobile) என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.</p><p> தாயகத்தையும், புலம்பெயர்ந்து வாழும் சொந்தங்களையும் குறைந்த செலவில் இணைக்கும் அவரது தொலைநோக்கு வர்த்தக உத்தி, ஐரோப்பா முழுவதும் காட்டுத்தீ போலப் பரவியது. </p><p>

2017இல் அந்த நிறுவனத்தைச் சுவிட்சர்லாந்து முதலீட்டாளர்களுக்கு விற்றதன் மூலம் சர்வதேச அளவில் அறியப்படும் தமிழ் மில்லியனராக உயர்ந்தார்.</p><p> அதோடு லெபாராவோடு நின்றுவிடாது 2014இல் லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் 'IBC தமிழ்' ஊடகக் குழுமத்தைக் கொள்வனவு செய்து, அதனை ஈழத்தமிழர்களுக்கான எல்லை கடந்த ஒரே ஒரு பேரூடகமாக உருவாக்கி இன்றும் அதன் தலைவராகத் தனது பயணத்தை தொடர்கிறார்.</p><h2>சூழலியல் சுற்றுலா மையம்</h2><p>ஐரோப்பிய பொருளாதாரச் சூழலில் வெற்றிகரமான வியாபாரத்தில் ஆயிரக்கணக்கான கோடிகளை ஈட்டிய பிறகும், தான் பிறந்த தாய்நிலத்தின் மீது அவருக்கு இருந்த பற்றின் காரணமாக போரினால் சிதைந்து கிடந்த தாயகப்பகுதிக்கு மீண்டும் பொருளாதார ரீதியாக உயிர் கொடுக்க வேண்டும் என்ற அவரது தணியாத ஆசையின் விளைவாக உருவானதுதான் றீச்ஷா (ReeCha) ஒருங்கிணைந்த பண்ணை சூழலியல் சுற்றுலா மையம் ஆகும்.</p><p>பரந்து விரிந்த அந்த நிலப்பரப்பில் இயற்கை உரங்களைக் கொண்டு பராமரிக்கப்படும் கரிமப் பண்ணைகள், பலவகை மிருகங்கள் மற்றும் பறவைகள் பூங்கா, பிரமாண்டமான நீர் விளையாட்டு வளாகம், தீம் பார்க் என அனைவரையும் கவரும் வகையில் ஒரு சுற்றுலாச் சொர்க்கத்தையே உருவாக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1355657c-3b4f-4115-82f7-080a7d27b1e2/26-6a7844749b3ab.webp' /></p><p>

அத்துடன் பன்னாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் நட்சத்திர விடுதிகள் அறைகள், ஸ்பா, உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் உணவகங்களும் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.</p><p>"முப்பதாண்டு கால கொடூர போருக்குப் பிறகும் நமது வடபிராந்தியத்தில் பெரிய அளவிலான பொருளாதார முதலீட்டு வளர்ச்சிப் பணிகள் எவையும் நடக்கவில்லை.</p><p>எனது சொந்த மண்ணுக்கும், என்னை உருவாக்கிய மக்களுக்கும் என்னால் முடிந்த மறுவாழ்வை அளிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் இந்த பிரமாண்ட திட்டத்தின் பின்னணியில் உள்ளது" என்று Quote இதழிடம் பாஸ்கரன் கந்தையா உருக்கமுடன் குறிப்பிட்டுள்ளார்.</p><p>யுத்தத்திற்குப் பிந்தைய காலத்தில் வட இலங்கையின் பொருளாதாரம் தேக்கமடைந்து கிடந்த சூழலில், றீச்ஷா மையத்தில் பாஸ்கரன் செய்த முதலீடு அந்தப்பகுதியில் ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>&nbsp;3 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்</h2><p> இன்றைக்கு அந்த மையத்தில் மட்டும் சுமார் 400 பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பும், 100 பேருக்குப் பகுதிநேர வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் நேரடியாகப் பயனடைகின்றன. </p><p>

அதுமட்டுமன்றி, 2025ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 3 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்த மையத்தைப் பார்வையிட்டுள்ளனர். இதனால் யாழ்ப்பாணப் பகுதியிலுள்ள சிறு வியாபாரிகள், முச்சக்கரவண்டி மற்றும் வாகன சாரதிகள், உள்ளூர் கைவினைஞர்கள் என பலதரப்பட்ட மக்களின் பொருளாதாரமும் கணிசமாக உயர்ந்துள்ளது எனவும் அந்த இதழ் புகழாரம் சூடியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dc5c108-6358-4d22-a7a1-4ff0f83686d7/26-6a784473e150d.webp' /></p><p> </p><p>

ஈழத்தமிழர்களின் தேச நலன் தொடர்பிலான கருத்தாடல்களில் தேசிய முதலாளிகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை சரியான முறையில் சமூகமயமாக்கப்படாமல், ஒரு தரப்பின் விமர்சனம் இருந்து வந்தாலும், தேவையுடைய ஒரு சமூகத்தின் பொருளாதார தேவையாக பாஸ்கரன் கந்தையா இருந்து வருகிறார்.</p><p> 

ஐரோப்பாவின் முதன்மை வணிக இதழ் ஒன்றில் புகழாரம் சூட்டப்படும் ஒரு ஈழத்தமிழரை எண்ணி நமது 
சமூகமும் பெருமையுறும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.</p><p> 

வடக்கு கிழக்கின் இன்றைய தேவை அதை வளப்படுத்தக்கூடிய பாரம்பரியமான முதலீட்டாளர்களே என்பதை உணர்த்தி 
ஒரு முன்னுதாரனமாக தனது கனவுகளை நோக்கி வெற்றிகரமாக நகர்ந்து வருகிறார் பாஸ்கரன் கந்தையா.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T05:16:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பனை மரத்துடன் மோதி மோட்டார் சைக்கிள் கோர விபத்து - முல்லைத்தீவு இளைஞன் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/4-people-killed-in-road-accidents-across-country-1786338382"></link>
            <id>https://ibctamil.com/article/4-people-killed-in-road-accidents-across-country-1786338382</id>
            <summary type="text">நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் நால்வர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு - புதுக்குடியிரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் நால்வர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. </p><p>முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு வீதியின் 46 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p> 

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனரும் பின்னால் பயணித்தவரும் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னால் பயணித்த சிவநகர் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p></p><h2>வீதி விபத்து</h2><p>போலவத்தை மற்றும் பொரலெஸ்ஸ புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட புகையிரதக் கடவையில் கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் மோதுண்டதில் லுணுவில பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52b1924e-f28a-4254-9c9b-6b859ecb7444/26-6a795eae3db38.webp' /></p><p>அதேநேரம் தங்கொட்டுவ, சுமகீ சந்தை - மெட்டிகொட்டுவ கிளை வீதியில் முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு நபர் உயிரிழந்துள்ளார். </p><p>
அத்துடன் நிகவெரட்டிய - குருநாகல் வீதியின் மாகல்லேகம பகுதியில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வலதுபுறமாக திரும்ப முற்பட்ட போது எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது.</p><p> 

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த 52 வயதுடைய பெண் ஒருவர் நிகவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T05:16:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/priority-for-tamil-thai-vazhthu-special-resolution-1786338783"></link>
            <id>https://ibctamilnadu.com/article/priority-for-tamil-thai-vazhthu-special-resolution-1786338783</id>
            <summary type="text">தமிழக சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைகழகங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் அலுவலகங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைகழகங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் அலுவலகங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்த நிலையில் அதை ஆதரித்தது திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக.
</p><p>

தீர்மானத்தின் போது முதலமைச்சர் விஜய் உரையாற்றுகையில், இந்தியாவின் நெற்றியில் இருக்கும் பொட்டு தான் தமிழ் மொழி.

தமிழும் தமிழனும் இல்லாத நாடு ஏது? தமிழ் ஒரு சிந்தனை, தமிழ் என்றால் அன்பு, தமிழ் தான் நமது நாகரிகம், பண்பாடு ஒட்டுமொத்த உயிர் மூச்சு.
</p><p>
கட்சி வேறுபாடுகளை கடந்து அனைத்து உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
</p><p>
இதனை தொடர்ந்து திமுக, அதிமுக, விசிக, காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தெரிவித்ததால் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/zW0GYKpAVLo" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-10T05:16:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா காட்டுத்தீ... மிக மோசமான சூழலை எதிர்கொள்ளத் தயாராக மக்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-wildfire-residents-warned-1786333732"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-wildfire-residents-warned-1786333732</id>
            <summary type="text">Residents warned to brace for the worst: கனடாவில் காட்டுத்தீ கட்டுப்பாடின்றி எரிந்து வருவதால், மிக மோசமான சூழலை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு மக்களு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Residents warned to brace for the worst: கனடாவில் காட்டுத்தீ கட்டுப்பாடின்றி எரிந்து வருவதால், மிக மோசமான சூழலை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை.
</p><p>மேற்கு கனடாவில் வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்ட காட்டுத்தீ வேகமாகப் பரவி அதன் பரப்பளவு இருமடங்காக அதிகரித்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதையடுத்து அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0efb165c-aca3-42a6-a7b3-07dba2771682/26-6a794a26ca86c.webp' /></p><p>
பிரிட்டிஷ் கொலம்பியா காட்டுத்தீ சேவையின் தகவல்படி, பால்ட் ரேஞ்ச் தீ தற்போது சம்மர்லேண்ட், பீச்லேண்ட் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் பிற பகுதிகளில் 53 சதுர மைல்களுக்கும் அதிகமான பரப்பளவை ஆக்கிரமித்துள்ளது. </p><p>இதனிடையே, தீப்பிழம்புகள் மிகவும் உயரமாக இருந்ததால் அவை தமக்கே உரிய வானிலை அமைப்புகளை உருவாக்கியதாகவும், அதன் விளைவாக மின்னல் உருவானதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் முதல்வர் டேவிட் எபி சனிக்கிழமையன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தீயணைப்பு அதிகாரி ஒருவர் இந்தத் தீ விபத்தை வெடிகுண்டு வெடித்ததற்கு ஒப்பிட்டதாகத் தெரிவித்தார்.</p><p></p><p> </p><p>இந்த நிலையில், அவசரநிலை பிரகடனமானது, பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் விலையேற்றத்தைத் தடுப்பதற்கான விநியோகப் பாதுகாப்புகள் உள்ளிட்ட சிறப்பு அதிகாரங்களையும், மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்கான கூடுதல் வளங்களையும் மாகாண அரசாங்கத்திற்கு வழங்குகிறது.
</p><p>சுமார் 12,000 மக்கள் வசிக்கும் சம்மர்லேண்ட் பகுதி, மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளதுடன், அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. </p><p>சுமார் 6,500 பேர் வசிக்கும் பீச்லேண்ட் பகுதியின் சில பகுதிகளில் இருந்த மக்களுக்கும் இதே நிலை ஏற்பட்டது.
பால்ட் ரேஞ்ச் (Bald Range) காட்டுத்தீ இந்த கோடையில் மிகப்பெரிய அளவிலான வெளியேற்ற நடவடிக்கையைத் தூண்டியுள்ளது; பிரிட்டிஷ் கொலம்பியா முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e7774b5-aa31-419d-8509-03adb36c5382/26-6a794a2779b93.webp' /></p><p>
</p><p>அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின்படி, மத்திய ஒகனகன் மற்றும் ஒகனகன்-சிமில்கமீன் பிராந்திய மாவட்டங்களும், ஸ்ன்பிங்க்டன் இந்திய பூர்வகுடியினக் குழுவும், சம்மர்லேண்ட் மற்றும் பீச்லேண்ட் மாவட்டங்களும் வெளியேற்ற உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன, மேலும் சில பகுதிகளில் வெளியேற்ற எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன. </p><p>ஒகனகனில், ஏராளமான குதிரைகளை வெளியேற்றுவதற்கு அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கோடைக்காலத்தில் கனடா முழுவதும் நூற்றுக்கணக்கான காட்டுத்தீகள் கொழுந்துவிட்டு எரிந்தன; குறிப்பாக ஜூலை மாதத்தில் ஒன்ராறியோவில் மட்டும் சுமார் 200 காட்டுத்தீகள் எரிந்ததால், ரொறன்ரோவின் காற்றுத் தரம் சில நாட்களுக்கு உலகின் மிக மோசமான நிலைகளில் ஒன்றாக மாறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62be0226-e00c-4b65-b6a2-59f5b1964cf1/26-6a794a2829987.webp' /></p><p> </p><p>கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீயிலிருந்து எழுந்த புகை அமெரிக்காவின் மினசோட்டா மற்றும் நியூயார்க் உள்ளிட்ட பகுதிகளுக்குப் பரவியது; இதனால், அமெரிக்காவின் வடக்குப் பக்கத்து நாடான கனடா மீது புதிய வரிகளை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T05:15:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யுத்தத்திற்குப் பின் துணுக்காய் மக்களுக்கு விமோசனம்; மகிழ்ச்சியில் பிரதேசவாசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/post-war-bus-service-from-thunukkai-to-mullaitivu-1786338844"></link>
            <id>https://jvpnews.com/article/post-war-bus-service-from-thunukkai-to-mullaitivu-1786338844</id>
            <summary type="text">யுத்தத்திற்குப் பின்னர் துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரை ஆரம்பிக்கப்பட்டிருந்த அரச பேருந்து சேவை பல ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்டிருந்தது....</summary>
            <content type="html"><![CDATA[<p>யுத்தத்திற்குப் பின்னர் துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரை ஆரம்பிக்கப்பட்டிருந்த அரச பேருந்து சேவை பல ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
</p><p>


இந் நிலையில் துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான அரச பேருந்து சேவை இன்று (10.08.2026) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26f59831-7d2f-4b4d-ab43-87d86661334e/26-6a795e1db6de8.webp' /></p><h2>மக்களின் நீண்டகால கோரிக்கை</h2><p>
</p><p>
 குறித்த பிரதேசத்தில் வசிக்கும் பொதுமக்கள் நீண்டகாலமாக போக்குவரத்து தொடர்பான பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.
</p><p>
பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக துணுக்காய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் மற்றும் மாவட்ட மட்டக் கூட்டங்களில்&nbsp; துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான பேருந்து சேவையை மீண்டும் ஆரம்பிப்பதன் அவசியம் தொடர்பில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
</p><p>
இதன் பயனாக குறித்த பேருந்து சேவை இன்று முதல் மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p><b>
பேருந்து புறப்படும் நேரங்கள்,</b></p><p>
காலை 6.00 மணி – துணுக்காய்

காலை 6.10 மணி – மல்லாவி

காலை 7.00 மணி – மாங்குளம்
ழகாலை 7.10 மணி – மாங்குளத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் புறப்படும்

மேலும் குறித்த பேருந்து முல்லைத்தீவிலிருந்து மாலை 4.15 மணிக்கு மீண்டும் துணுக்காய் நோக்கிப் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இன்று நடைபெற்ற பேருந்து சேவை ஆரம்ப நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் துணுக்காய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான வைத்தியர் செல்லத்தம்பி திலகநாதன் துணுக்காய் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.</p><p>

நீண்டகாலமாக பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு தீர்வாக இப்பேருந்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை துணுக்காய் பிரதேச மக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாகும்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T05:11:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதல் முறிவு; யுவதியின் நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவதாக அச்சுறுத்திய கல்லூரி ஆசிரியர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/breakup-teacher-threatens-young-woman-nude-photos-1786338300"></link>
            <id>https://jvpnews.com/article/breakup-teacher-threatens-young-woman-nude-photos-1786338300</id>
            <summary type="text">&amp;nbsp;இளம் பெண்ணொருவரின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தில் வெளியிடுவதாகக் கூறி அச்சுறுத்தியதாகக் கூறப்படும் காவி உடை அணிந்த நபர் ஒருவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இளம் பெண்ணொருவரின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தில் வெளியிடுவதாகக் கூறி அச்சுறுத்தியதாகக் கூறப்படும் காவி உடை அணிந்த நபர் ஒருவரை உடுகம பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 கைது செய்யப்பட்டவர், கனிஷ்ட கல்லூரி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றும் 33 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/786d6188-977b-42ac-b348-2d66ba1b01f6/26-6a795bfe1183f.webp' /></p><h2>&nbsp;காதல் உறவு&nbsp;&nbsp;முறிவு</h2><p>

குறித்த இளம் பெண்ணுடன் காதல் உறவில் இருந்த காலப்பகுதியில், இருவரும் கையடக்கத் தொலைபேசி ஊடாக நிர்வாண காணொளிகளைப் பரிமாறிக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

எனினும், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இருவருக்கும் இடையிலான காதல் உறவு முடிவடைந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
இதனையடுத்து, தன்னிடம் உள்ள குறித்த பெண்ணின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாகக் கூறி, அவர் தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாக இளம் பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><p>

 பெண்ணின் முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த உடுகம பொலிஸார், சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T05:02:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை உலுக்கும் டெங்கு தொற்று : 09 நாட்களில் 4000இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/4-292-dengue-patients-as-of-august-9-1786335018"></link>
            <id>https://tamilwin.com/article/4-292-dengue-patients-as-of-august-9-1786335018</id>
            <summary type="text">தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இலங்கையில் 2026 ஆம் ஆண்டில் இதுவரை 89,639 டெங்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இலங்கையில் 2026 ஆம் ஆண்டில் இதுவரை 89,639 டெங்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு 65 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 29,973 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

மேலும், ஜூன் மாதத்தில் 21,533 டெங்கு தொற்றாளர்களும், மே மாதத்தில் 8,590 டெங்கு தொற்றாளர்களும், ஜனவரி மாதத்தில் 7,866 டெங்கு தொற்றாளர்களும், மார்ச் மாதத்தில் 6,013 டெங்கு தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.
</p><h2>அதிக அபாயம் உள்ள பிரிவுகள்</h2><p>
 ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் மட்டும் 4,292 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.</p><p> 

நாட்டில் உள்ள மாகாணங்களிலேயே மேல் மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மொத்த பாதிப்புகளில் 52.93 சதவீதம், அதாவது 47,445 நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c66e501c-ecfb-4ba2-a876-eb0384be76cf/26-6a7957f0bbfb4.webp' /></p><p>மாவட்ட அளவில், மொத்த நோயாளர்களில் 21.27 சதவீதத்தினராக கம்பஹா மாவட்டம் திகழ்கிறது. இதுவே அதிகபட்ச நோயாளிகளின் எண்ணிக்கையாகும்.
</p><p>
கொழும்பு மாவட்டத்தில் இருந்து 17,765 நோயாளிகளும், கண்டியிலிருந்து 6,366 நோயாளிகளும், மாத்தறையிலிருந்து 5,953 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர். </p><p> 

தற்போதைய இறப்பு விகிதம் 0.07 சதவீதமாகப் பதிவாகியுள்ளதுடன், நாடு முழுவதும் 119 அதிக அபாயம் உள்ள சுகாதார அலுவலர் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T05:00:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாலத்தீவில் பாடகி ஜோனிடா காந்தியின் டூபீஸ் புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/singer-actress-jonita-gandhi-recent-maldives-photo-1786339014"></link>
            <id>https://viduppu.com/article/singer-actress-jonita-gandhi-recent-maldives-photo-1786339014</id>
            <summary type="text">ஜோனிடா காந்திஇந்திய மொழிகளில் வெளியான பல படங்களின் பாடல்களில் பாடி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வருபவர் தான் பாடகி ஜோனிடா காந்தி. அதிகபட்சமாக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜோனிடா காந்தி</h2><p>இந்திய மொழிகளில் வெளியான பல படங்களின் பாடல்களில் பாடி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வருபவர் தான் பாடகி ஜோனிடா காந்தி. </p><p>அதிகபட்சமாக இந்தி படங்களில் பாடி வரும் ஜோனிடா, அனிருத் இசையில் தமிழில் மிகப்பெரிய வெற்றி பாடல்களை கொடுத்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2147c38-7b62-49c4-98ff-038313e75c71/26-6a795ec8af1ea.webp' /></p><p> </p><p>பாடகியாக மட்டும் இல்லாமல் தற்போது நடிகையாகவும் அறிமுகமாகி நடித்து வருகிறார் ஜோனிடா. சமீபத்தில் இதயம் முரளி படத்தில் கீதா என்ற ரோலில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தார். </p><p>இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஜோனிடா, தற்போது மாலத்தீவுக்கு சென்று Siyam World Maldives இடத்தில் எடுத்த டூபீஸ் உள்ளிட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FJonitaGandhi%2Fposts%2Fpfbid02RKcGe835ZhXn9t9gtSkK8Usqr5oGMwrmFCwtbktgpiaVajWM3ZJ9VceFBJXLYmgxl&show_text=true&width=500" width="500" height="729" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p>]]></content>
            <updated>2026-08-10T05:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத அகழ்வுப்பணியில் ஈடுபட்ட நபர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/person-who-dug-up-ancient-artifacts-was-arrested-1786334329"></link>
            <id>https://ibctamil.com/article/person-who-dug-up-ancient-artifacts-was-arrested-1786334329</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள தமன பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பக்மிதியாவா பகுதியில் சட்டவிரோத தொல்பொருட்களைத் தேடும் நோக்கில் அகழ்வுப் பணிகளில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள தமன பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பக்மிதியாவா பகுதியில் சட்டவிரோத தொல்பொருட்களைத் தேடும் நோக்கில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p>கைது செய்யபட்ட நபர் 42 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>&nbsp;காவல்துறைக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>சட்டவிரோத அகழ்வு பணி&nbsp;</h2><p>கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வேயங்கொட பகுதியைச் சேர்ந்தவர் எனத் காவல்துறை விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b28c1a8-42f0-4cb7-930f-97a44d64af7d/26-6a795a124467c.webp' /></p><p>

சம்பவம் தொடர்பில் தமன காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T04:59:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை; நாளை காலைவரை அவதானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/department-of-meteorology-issues-red-warning-1786337574"></link>
            <id>https://jvpnews.com/article/department-of-meteorology-issues-red-warning-1786337574</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படுவது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படுவது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. </p><p>



இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று(10) மு.ப 07.00 மணி முதல் நாளை (11) மு.ப 07.00 மணி வரையிலான அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a86ac28-2b82-4fa2-b668-d9d31bee8b0f/26-6a795927c92ae.webp' /></p><h2>&nbsp;அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும்&nbsp;எச்சரிக்கை</h2><p> 



இதற்கமைய, மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை, காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக சிலாபம் வரையிலான, அதேபோல் காலியிலிருந்து மாத்தறை வரையிலான ககரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.</p><p>&nbsp;அப்பகுதிகளில் கடல் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.



மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றருக்கும் அதிகமாக அதிகரிக்கக்கூடும் .</p><p>&nbsp;இதன்போது கடல் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



எனவே, மறு அறிவித்தல் வரை இந்த கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்சார் மற்றும் மீனவ சமூகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T04:50:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[11 நாள் முடிவில் இந்தியாவில் ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே படம் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/11-days-spiderman-brand-new-day-india-bo-1786336043"></link>
            <id>https://cineulagam.com/article/11-days-spiderman-brand-new-day-india-bo-1786336043</id>
            <summary type="text">ஸ்பைடர்மேன்&amp;nbsp;ஹாலிவுட் படங்கள் இந்தியாவில் வசூல் செய்யுமா என கேட்கும் சிலருக்கு இதற்கு முன் வெளியான ஹாலிவுட் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனே சாட்சி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஸ்பைடர்மேன்&nbsp;</h2><p>ஹாலிவுட் படங்கள் இந்தியாவில் வசூல் செய்யுமா என கேட்கும் சிலருக்கு இதற்கு முன் வெளியான ஹாலிவுட் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனே சாட்சி.</p><p> அப்படி பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்து வந்த ஹாலிவுட் படமான ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே படம் அண்மையில் வெளியாகி இருந்தது. டெஸ்டின் டேனியல் க்ரெட்டன் இயக்கியுள்ள இப்படம் கடந்த ஜுலை 30ம் தேதி இப்படம் இந்தியாவில் வெளியானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbc94bb9-16f1-4685-981f-b990b39b2798/26-6a79566b43496.webp' /></p><p> </p><p>ரசிகர்களின் பேராதரவில் ஒளிபரப்பாகி வரும் இந்த படத்தில் ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தில் டாம் ஹாலண்ட் நடிக்க, மிஷெல் ஜோன்ஸ் வாட்சன் கதாபாத்திரத்தில் ஜெண்டயாவும் நடித்துள்ளனர். </p><p>மேலும் ஜேக்கப் பாட்டலோன், க்ரோண்டன் மற்றும் சாடி சின்க் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.</p><p></p><h2> 
பாக்ஸ் ஆபிஸ்</h2><p>
படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளியாகி வந்தாலும் வசூலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. </p><p>படம் வெளியாகி 11 நாள் முடிவில் இந்தியாவில் மட்டுமே இப்படம் ரூ. 500 கோடிக்கும் மேலான வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d775cbe-6215-4674-82d8-3197fd719174/26-6a79566c0dba0.webp' /></p>]]></content>
            <updated>2026-08-10T04:50:23+00:00</updated>
        </entry>
    </feed>
