<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-15T05:27:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுரத்திற்கு வந்து தவழ்ந்த கூட்டம்! பணத்தை பெற்றுக்கொண்டு மனதிலிருந்து வந்த வார்த்தை - ஈரோஸ் கட்சி விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rajanathan-prabakaran-statement-about-mahinda-1789445750"></link>
            <id>https://tamilwin.com/article/rajanathan-prabakaran-statement-about-mahinda-1789445750</id>
            <summary type="text">முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல வடக்கு - கிழக்கு மாகாணங்களில் கொத்துக் கொத்தாக தமிழர்களை கொன்று குவித்த மஹிந்த ராஜபக்ச கூட்டத்தை புகழ் பாடிய பைத்தியத்தை தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல வடக்கு - கிழக்கு மாகாணங்களில் கொத்துக் கொத்தாக தமிழர்களை கொன்று குவித்த மஹிந்த ராஜபக்ச கூட்டத்தை புகழ் பாடிய பைத்தியத்தை தெளிய வைக்க விரைவில் மருந்து கட்டுவேன் என ஈரோஸ் கட்சி தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
அதேவேளை அநுர அரசாங்கம் 20 வருடம் நிலைத்து நின்று ஆட்சி செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மட்டக்களப்பில் நேற்றைய தினம் (14.09.2026) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>அரசாங்கத்திற்கு எதிரான கூட்டம்</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக கொலை, கொள்ளை, குடிகாரர்கள் தான் இருக்கின்றனர் என உலகத்துக்கே தெரிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d397a0c-2acc-4071-b62d-647fe03df947/26-6aa8d668535e4.webp' /></p><p> இருந்தபோதும் அரசாங்கத்துக்கு எதிராக அநுராதபுரத்தில் பெரிய ஒரு கூட்டம் நடந்தது அந்த கூட்டத்திற்கு சென்றவர்கள் அனைவரும் வீதியில் தவழ்ந்ததை முகநூலில் பார்த்திருப்பீர்கள்.
</p><p>
பணத்தையும், மதுபானத்தையும் வாங்குவதற்கு அனுர ஹொரா என சொல்வது கடமை, ஏன் என்றால் பணத்தையும் மதுபானத்தையும் பெற்றுக் கொண்டதற்காக. </p><p>ஆனால் அடிமனதில் இருந்து நாமல் ஹொரா என சொல்லியிருந்தனர்.

இது தான் நிலைமை இலங்கையில் இவ்வளவு பேரும் தான் அனைத்து கட்சிக்கும் ஆதரவாளர்கள் என்பது ஊடகங்கள் மூலம் தெரிகின்றது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/pP30fxl7UZ8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T05:26:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் தீப்பிடித்து எரிந்த கப்பல் - அமெரிக்கா கடும் விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/oil-tanker-on-fire-after-hormuz-attack-1789446320"></link>
            <id>https://ibctamil.com/article/oil-tanker-on-fire-after-hormuz-attack-1789446320</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையின் தெற்கே உள்ள தடை செய்யப்பட்ட பகுதி வழியே செல்ல முயன்ற மிகப்பெரிய எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று, கண்ணிவெடிகளில் தாக்கப்பட்டு தீப்பிடித...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையின் தெற்கே உள்ள தடை செய்யப்பட்ட பகுதி வழியே செல்ல முயன்ற மிகப்பெரிய எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று, கண்ணிவெடிகளில் தாக்கப்பட்டு தீப்பிடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) வெளியிட்டுள்ள அறிக்கையில்,&nbsp;இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மூவர் காயமடைந்ததாகவும் ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><h2>மற்றொரு தாக்குதல்</h2><p>

இருப்பினும், ஈரானின் இந்தக் கூற்றை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு மறுத்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8d0db34-5045-4dd0-9342-e7fcc20d1f56/26-6aa8cbfbc1c7e.webp' /></p><p>அமெரிக்க மத்திய மத்திய கட்டளைப் பிரிவு வெளியிட்டுள்ள விளக்கத்தில், பனாமா கொடியுடன் பயணித்த 'எல் கையா' (EI Gaia) என்ற குறிப்பிட்ட எண்ணெய் தாங்கி கப்பல், கடந்த மாதம் ஈரானின் ஏவுகணைத் தாக்குதலால் ஏற்கனவே செயலிழந்திருந்தது.</p><p> அத்துடன், கடந்த வார இறுதியில் ஓமன் கடலோரப் பகுதியில் மீண்டும் ஈரான் நடத்திய மற்றொரு தாக்குதலுக்கு உள்ளானது என்றும் தெரிவித்துள்ளது.</p><p>"நீர்வழியில் வர்த்தகக் கப்பல்களைத் தடுக்க முயற்சிக்கும் ஐ.ஆர்.ஜி.சி-யின் இந்த பொய்யான கூற்று, அவர்களின் பொய்கள் மற்றும் அச்சுறுத்தல் முயற்சிகளுக்கு மற்றுமொரு உதாரணமாகும்," என்று அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தனது எக்ஸ் பதிவில் எழுதியுள்ளது.</p><p></p><h2>தேடும் பணிகள்</h2><p>இதனைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8792252-1c76-4965-a4b7-c5b7801ea01f/26-6aa8cbfc7cb8a.webp' /></p><p>கப்பலில் இருந்த 14 இந்தியப் பணியாளர்களில் 13 பேர் மீட்கப்பட்டுவிட்டதாகவும், காணாமல் போன நபரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T05:20:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்: பிரதான சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/main-suspect-in-jaffna-sword-attack-surrenders-1789447200"></link>
            <id>https://ibctamil.com/article/main-suspect-in-jaffna-sword-attack-surrenders-1789447200</id>
            <summary type="text">யாழில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

முன் பகை காரணமாக கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

முன் பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டி
படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகி இருந்தார்.
</p><p>
இந்தநிலையில் நேற்றைய தினம் (14-09-2026) அவர் காவல்துறையினரிடம் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>வாள் வெட்டு தாக்குதல் </h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வடமராட்சி கிராமக்கோடு சந்திக்கு அருகாமையில் கடந்த 09 ஆம் திகதி இரவு
இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் துன்னாலை பகுதியை சேர்ந்த ஜெயசீலன்
ஜெனிதன் (வயது 33) என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7a41e67-5136-423f-8973-5576fd21d54d/26-6aa8d30b59dea.webp' /></p><p>துன்னாலை பகுதியை சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையில் நீண்ட காலமாக பகைமை
நீடித்து வந்த நிலையில் , மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் அடங்கிய குழு
ஜெனிதன் என்பவர் மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டனர். </p><p>

அதில் ஜெனிதன்
சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த
நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாக
கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த 11ஆம் திகதி அங்கு விரைந்த காவல்துறையினர் மூவரையும்
கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் மூவரும் விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e80b233-f8f9-4dcb-ab9c-71ed2caf892c/26-6aa8d30c44e07.webp' /></p><p>இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தொடர்ந்து
தலைமறைவாகியிருந்த நிலையில், நேற்றைய தினம் காவல்துறையினரிடம் சரணடைந்ததை அடுத்து
கைது செய்துள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்ட நபரை பருத்தித்துறை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து
காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T05:15:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[முக ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/dmk-mupperum-vizha-adjourn-1789449025"></link>
            <id>https://ibctamilnadu.com/article/dmk-mupperum-vizha-adjourn-1789449025</id>
            <summary type="text">2026ம் ஆண்டுக்கான திமுக முப்பெரும் விழா இன்று கொண்டாடப்பட இருந்த நிலையில் முக ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ம் ஆண்டுக்கான திமுக முப்பெரும் விழா இன்று கொண்டாடப்பட இருந்த நிலையில் முக ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது, பெரியார், அண்ணா பிறந்தநாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றையும் இணைத்து முப்பெரும் விழா நடத்தப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b684a03-e84d-4dd3-8e37-f5c8fb8a1e28/26-6aa8d3d10c4a6.webp' /><br></p><p>
</p><p>
இந்த ஆண்டும் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
</p><p>
இந்நிலையில் விழா ஒத்திவைக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும் திமுக தலைவர் முக ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக விழா ஒத்திவைக்கப்படுவதாகவும் விழாவுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac8314a5-d3e9-4766-a55b-c06b3abbbefd/26-6aa8d3d055cd3.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-15T05:13:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் உடலில் காயங்கள்: பரபரப்பை உருவாக்கியுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/asylum-seekers-came-in-france-with-injure-from-uk-1789448903"></link>
            <id>https://news.lankasri.com/article/asylum-seekers-came-in-france-with-injure-from-uk-1789448903</id>
            <summary type="text">Asylum seekers arriving in France injured after being deported from UK: பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் உடலில் காயங்கள் இருக்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>Asylum seekers arriving in France injured after being deported from UK: பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் உடலில் காயங்கள் இருக்கும் விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
</p><p>

பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட One in, one out என்னும் ஒப்பந்தத்தின்கீழ், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் ஆங்கிலக்கால்வாய் வழியாக நுழைந்த ஒரு புகலிடக்கோரிக்கையாளர், தனக்கு பிரித்தானியாவில் குடும்பம் இருப்பதை நிரூபிக்க இயலாதபட்சத்தில், அவர் பிரான்சுக்கே திருப்பி அனுப்பப்படுவார்.
</p><p>
அப்படி பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கும் பதிலாக, பிரித்தானியாவில் குடும்பம் உள்ளதை நிரூபிக்கக்கூடிய, பிரான்சிலிருந்து வரும் ஒரு புலம்பெயர்வோருக்கு பிரித்தானியா புகலிடம் அளிக்கும்.
</p><h3>
புகலிடக்கோரிக்கையாளர்கள் உடலில் காயங்கள்
</h3><p>
விடயம் என்னவென்றால், அப்படி One in, one out ஒப்பந்தத்தின்கீழ் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள், பிரித்தானியாவிலிருக்கும்போது கடுமையாக தாக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d77d770c-45f0-40f5-9baa-6b86ec62cf0b/26-6aa8d2c98ea43.webp' /></p><p>

ஆம், பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்களை பிரான்ஸ் மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவர்கள் உடலில் காயங்கள் முதல் எலும்பு முறிவு வரை இருப்பது தெரியவந்துள்ளது.
</p><p>
சிலர், பயங்கர மன அழுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு, தான் தங்கியிருக்கும் இடத்தின் அறைக்கதவு எங்குள்ளது என்பதைக் கண்டுபிடிக்கக்கூட முடியாமல் திணறும் அளவுக்கு மோசமான நிலையில் உள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
சிலர் வயிற்றில் பலமாக மிதிக்கப்பட்டதால் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
</p><p>
இந்த விடயங்கள், சமீபத்தில், அதாவது, அவர்கள் பிரித்தானியாவில் தடுப்புக்காவலில் இருக்கும்போது நடந்துள்ளது.
</p><p>
இதற்கிடையில், வழக்கம்போல உள்துறை அலுவலகம், அந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், புகலிடக்கோரிக்கையாளர்களை மரியாதையுடனும், கௌரவத்துடனும் நடத்த அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-15T05:08:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் மெய்சிலிர்க்க வைத்த சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kaluthavalai-pillaiyar-temple-elephant-pray-viral-1789448955"></link>
            <id>https://jvpnews.com/article/kaluthavalai-pillaiyar-temple-elephant-pray-viral-1789448955</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நேற்றையதினம் முழுமுதல் கடவுளாம் விநாயககடவுள் பிறந்ததாக புராணங்கள் கூறுகின்றது. அந்தவகையில் ஆலயங்கள் தோறும் விநாயக பெருமானுக்கு சிறப்பு அப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நேற்றையதினம் முழுமுதல் கடவுளாம் விநாயககடவுள் பிறந்ததாக புராணங்கள் கூறுகின்றது. அந்தவகையில் ஆலயங்கள் தோறும் விநாயக பெருமானுக்கு சிறப்பு அபிசீக ஆராதனைகள் இடம்பெற்றது.
</p><p>

விநாயகர் சதுர்த்தி மற்றும் ஆலயத் திருவிழாக்கள் என்பது இறைவனின் அருளைப் பெற்று மன அமைதி அடையும் ஆன்மீக நன்னாளாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/141febcd-005b-40d6-9c71-e42573fba838/26-6aa8d2fd72357.webp' /></p><p> </p><p>

இன்னிலையில் களுதாவளை கல்லடி பிள்ளையார் ஆலயத்தின் வீதியில், விநாயகப் பெருமானின் திருமுன்னே ஒரு யானை முழந்தாளிட்டுத் தன் தும்பிக்கையை உயர்த்தி வணங்கிய காட்சி, காண்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைப்பதாக அமைந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-15T05:05:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்லாந்தில் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பு: வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/job-opportunities-10-000-sri-lankans-in-thailand-1789446639"></link>
            <id>https://ibctamil.com/article/job-opportunities-10-000-sri-lankans-in-thailand-1789446639</id>
            <summary type="text">தொழிலாளர் ஒத்துழைப்பு மற்றும் இலங்கைத் தொழிலாளர்களை தாய்லாந்தில் வேலைவாய்ப்புக்கு அனுப்புவது தொடர்பாக இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையே பல முக்கிய ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொழிலாளர் ஒத்துழைப்பு மற்றும் இலங்கைத் தொழிலாளர்களை தாய்லாந்தில் வேலைவாய்ப்புக்கு அனுப்புவது தொடர்பாக இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
</p><p>
வெளியுறவு அமைச்சர் விஜய்தா ஹெரத்தின் தாய்லாந்து உத்தியோகப்பூர்வ பயணத்தின் போது, ​​நேற்று (14.09.2026) பாங்காக்கில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக தெரிவிக்கப்பட்டது.
</p><p>
இந்த ஒப்பந்தங்கள் இலங்கைத் தொழிலாளர்களின் உரிமைகள், நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, இரு நாடுகளுக்கும் பாதுகாப்பான, நிலையான மற்றும் ஆக்கப்பூர்வமான வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்கின்றன.</p><p></p><h2>இலங்கைத் தொழிலாளர்களின் உரிமை</h2><p>

தாய்லாந்தில் தற்போதுள்ள தொழிலாளர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், முதல் கட்டமாக 10,000 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு தாய் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc5e7ee1-fd0c-4a5d-b3b6-05361b570fba/26-6aa8d1c7b2644.webp' /></p><p>
</p><p>
மேலும் இது, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் இலங்கை இளைஞர்களுக்கான பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளையும் வழங்கும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T05:04:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[AI-க்கு எதிரான அபத்தமான சதி! செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான ஒழுங்குமுறைக்கு டிரம்ப் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-dismisses-ai-regulation-calls-1789413966"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-dismisses-ai-regulation-calls-1789413966</id>
            <summary type="text">Trump Dismisses AI Regulation Calls as a Sick Conspiracy: செயற்கை நுண்ணறிவுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump Dismisses AI Regulation Calls as a Sick Conspiracy: செயற்கை நுண்ணறிவுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><h2> ஆந்த்ரோபிக் CEO-யின் எச்சரிக்கை</h2><p>செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகத்தை குறைக்க வேண்டும் என பிரபல AI நிறுவனமான ஆந்த்ரோபிக்(Anthropic) தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி(Dario Amodei) சமீபத்தில் வலியுறுத்தி இருந்தார்.</p><p> செயற்கை நுண்ணறிவுத் துறையின் கட்டுப்பாடற்ற தொழில்நுட்ப வளர்ச்சி எதிர்காலத்தில் மனித குலத்தின் கட்டுப்பாட்டை மீறிச் சென்று விடும் அபாயம் இருப்பதாகவும் டாரியோ அமோடி எச்சரித்து இருந்தார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">We Must Pace the Frontier: I’ve written a new essay on why the AI industry should slow down, with a three-part plan for doing so.<br><br>Anthropic is unilaterally committing to the first of these steps. We’ll provide third-party evaluators with permanent, employee-level access to our…</p>&mdash; Dario Amodei (@DarioAmodei) <a href="https://x.com/DarioAmodei/status/2098773920774074715?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> ஆந்த்ரோபிக்-கின் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி முன்வைத்த செயற்கை நுண்ணறிவுக்கான கூடுதல் பாதுகாப்பு தேவைகளை ஓபன் ஏஐ(Open AI) நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேன், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ஆகியோரும் அங்கீகரித்து இருந்தனர்.</p><h2> டிரம்பின் நிலைப்பாடு</h2><p>
இந்நிலையில் செயற்கை நுண்ணறிவுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னுடைய நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p> &nbsp;ஆந்த்ரோபிக் CEO டாரியோ அமோடி முன்வைத்த கடுமையான தடைகள் தொடர்பான தேவைகள் மற்றும் வாதங்களை டிரம்ப் கடுமையாக நிராகரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a780ac8-aa70-4014-ab6c-4826558b588a/26-6aa84a4fa7e4c.webp' /></p><p> இது தொடர்பாக தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்ட கருத்தில், செயற்கை நுண்ணறிவு துறையின் வளர்ச்சியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அனைத்தும் இந்த துறைக்கு எதிரான ஒரு அபத்தமான சதி(Sick Conspiracy) என்று தெரிவித்துள்ளார்.</p><p> மேலும் அந்த பதிவில், ஆந்த்ரோபிக் CEO டாரியோ அமோடி-வை டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p> குறிப்பாக, டாரியோ அமோடியை கிண்டல் செய்யும் வகையில், “அவர் தன்னை பரிசுத்தமான சிறிய தேவதை போல் காட்டிக் கொள்வதாக” குற்றஞ்சாட்டியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-15T05:00:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிரர் செல்ஃபி, அசத்தல் லுக்கில் தொகுப்பாளினி டிடி.. போட்டோஷூட் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/anchor-dhivyadharshini-latest-stunning-photoshoot-1789446566"></link>
            <id>https://cineulagam.com/article/anchor-dhivyadharshini-latest-stunning-photoshoot-1789446566</id>
            <summary type="text">சின்னத்திரையில் டாப் நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் தொகுத்து வழங்கிய காஃபி வித் டிடி நிகழ்ச்சியை நம்மால் கண்டிப்பாக ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சின்னத்திரையில் டாப் நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் தொகுத்து வழங்கிய காஃபி வித் டிடி நிகழ்ச்சியை நம்மால் கண்டிப்பாக மறக்கவே முடியாது. ஆனால், தற்போது உடல்நிலை காரணமாக தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலிருந்து தள்ளியிருக்கிறார். அவ்வப்போது படங்களின் இசை வெளியிட்டு விழா மற்றும் அரசு நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. </p><p>இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் தொகுப்பாளினி டிடி அசத்தல் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:</p>]]></content>
            <updated>2026-09-15T05:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை - காலக்கெடுவுடன் கடுமையாகும் சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-to-those-in-government-service-action-1789441405"></link>
            <id>https://tamilwin.com/article/warning-to-those-in-government-service-action-1789441405</id>
            <summary type="text">அரச பணியில் இணையும் நபர்கள் குறிப்பாக குழந்தைகளுடன் நேரடியாக தொடர்புடைய பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், குழந்தைகள் தொடர்பான குற்றங்களில் குற்றம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச பணியில் இணையும் நபர்கள் குறிப்பாக குழந்தைகளுடன் நேரடியாக தொடர்புடைய பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், குழந்தைகள் தொடர்பான குற்றங்களில் குற்றம்சாட்டப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழை பெற வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் நல அலுவல்கள் அமைச்சு முடிவு செய்துள்ளது.
</p><p>
அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா பவுல்ராஜ் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>

இதற்கான உரிய அமைச்சரவை ஆவணத்தை சமர்ப்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>அரச பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்</h2><p>

இந்த சான்றிதழை பொலிஸ் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ நிறுவனங்கள் மூலம் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a9c9b94-6143-4425-93a1-148633381344/26-6aa8cd2078dea.webp' />&nbsp; &nbsp;</p><p> தற்போது அரச பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், தங்களது பணிக்கால இடைவெளி மற்றும் சம்பள உயர்வுகளை பெறும்போது, ​​குறிப்பிட்ட காலத்திற்குள் குழந்தைகள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடவில்லை என்று கூறும் சான்றிதழை புதுப்பித்து வழங்குவது கட்டாயமாகும் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.</p><p>இந்த சான்றிதழின் அவசியத்தை அமைச்சரவை அறிக்கை மூலம் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, பொலிஸ் அல்லது தொடர்புடைய நிறுவனங்களிடமிருந்து சான்றிதழைப்பெற நாங்கள் பரிசீலித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
 மேலும், அரச பணியில் சேரும்போது, ​​குழந்தைகளுடன் பழகும் வாய்ப்புள்ள பணிகளில் பணியாற்றுபவர்கள், குழந்தைகள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதாகவோ அல்லது குற்றவாளிகள் என்றோ குற்றம் சாட்டப்பட்டிருக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

எனவே, ஒரு நாடாக நாம் முன்னேறிச்செல்வதற்கு இது போன்ற வி்டயங்கள் அவசியமானவை என விளக்கமளித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T04:58:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழைய பகை ...இருவர் கொலை; பொலிஸ் விசாரணையில் வெளிவந்த தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/18-year-old-youth-murdered-in-kotahena-1789448349"></link>
            <id>https://jvpnews.com/article/18-year-old-youth-murdered-in-kotahena-1789448349</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கொழும்பு கொட்டாஞ்சேனை நகரில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த இளைஞர் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கொழும்பு கொட்டாஞ்சேனை நகரில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த இளைஞர் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். </p><p>

நேற்று (14) இரவு இந்தக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/265df11a-b15b-43c7-9a1c-0b480a3c5199/26-6aa8d09eb5044.webp' /></p><h2>தனிப்பட்ட தகராறு</h2><p> 

உயிரிழந்தவர் வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது. 

தனிப்பட்ட தகராறு முற்றியதால் இரண்டு நபர்களால் இக்கொலை செய்யப்பட்டுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்வதற்காகக் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p> 

இதனிடையே, யக்கலமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரகெட்டிய பகுதியில் நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக யக்கலமுல்ல பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p> 

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் யக்கலமுல்ல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவராவார். 

பழைய பகை காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இக்கொலை செய்யப்பட்டுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p> 

27 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், யக்கலமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-15T04:55:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு - கொட்டாஞ்சேனையில் கொடூரம்..! 18 வயது இளைஞன் குத்திக் கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/18-year-old-youth-stabbed-to-death-in-kotahena-1789447365"></link>
            <id>https://ibctamil.com/article/18-year-old-youth-stabbed-to-death-in-kotahena-1789447365</id>
            <summary type="text">கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த இளைஞர் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

இந்தக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த இளைஞர் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். </p><p>

இந்தக்கொலை சம்பவம் நேற்று (14.09.2026) இரவு கொழும்பு - கொட்டாஞ்சேனை நகரில் இடம்பெற்றுள்ளது&nbsp;</p><p>உயிரிழந்தவர் வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.</p><p></p><h2> விசாரணை&nbsp;&nbsp;</h2><p>கொட்டாஞ்சேனை காவல் நிலையத்திற்குக் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/945940c6-3551-445a-9204-76b651fd483f/26-6aa8cf1fbf7c2.webp' /></p><p>தனிப்பட்ட தகராறு முற்றியதால் இரண்டு நபர்களால் இக்கொலை செய்யப்பட்டுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p> 

சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்வதற்காகக் கொட்டாஞ்சேனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T04:52:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/39th-annual-commemoration-of-the-thiyagi-thileepan-1789447661"></link>
            <id>https://jvpnews.com/article/39th-annual-commemoration-of-the-thiyagi-thileepan-1789447661</id>
            <summary type="text">&amp;nbsp; தமிழ் மக்களின் உரிமைக்காக ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தமிழ் மக்களின் உரிமைக்காக ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல், இன்று (15) உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
</p><p>
 முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் இன்று (15) உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/222928db-b87f-44c7-81a9-dc9fff0780b0/26-6aa8cdef56deb.webp' /></p><p>
</p><p>


அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுடரேற்றி நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார்.
</p><p>
தொடர்ந்து, கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் மகாதேவா குணசிங்கராசா, திலீபனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்தார்.



அதன்பின்னர் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றவர்கள் தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.</p><p>&nbsp;நினைவேந்தல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான மகாதேவா குணசிங்கராசா, தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ், சமூக செயற்பாட்டாளர் மணிவண்ணன் நிறோஜன் உள்ளிட்ட பலரும் பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர்.&nbsp;&nbsp;</p><p>&nbsp;அதேவேளை யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரம் காலை 9.45 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது.
</p><p>
மூத்த போராளியும் , மாவீரர்களின் தந்தையுமான பஷீர் காக்கா பொதுச் சுடர் ஏறியதை தொடர்ந்து, நினைவேந்தலில் கலந்து கொண்டவர்கள் மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T04:44:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் 27 இல் அற்புத கிரக சேர்க்கை: இந்த ராசிகளுக்கு பணமும் வெற்றியும் தேடி வரும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/lakshmi-narayan-rajyog-on-27-who-get-huge-luck-1789445832"></link>
            <id>https://manithan.com/article/lakshmi-narayan-rajyog-on-27-who-get-huge-luck-1789445832</id>
            <summary type="text">Lakshmi Narayan Rajyog : ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்களும், அவற்றின் சேர்க்கையால் உருவாகும் யோகங்களும் மனித வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Lakshmi Narayan Rajyog : ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்களும், அவற்றின் சேர்க்கையால் உருவாகும் யோகங்களும் மனித வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. </p><p>அந்த வகையில், செப்டம்பர் மாத இறுதியில் சுக்கிரன் மற்றும் புதன் இணைவதால் மிகவும் மங்களகரமான லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a64fbbb-2873-45b6-aa83-843936435d39/26-6aa8cc69e3b93.webp' /></p><p></p><p>அசுரர்களின் குருவாகவும், அழகு, காதல், செல்வம், செழிப்பின் காரணியாகவும் சுக்கிரன் கருதப்படுகிறார். அதேபோல், கிரகங்களின் இளவரசனாகவும், புத்திசாலித்தனம், பேச்சு, கல்வி, வியாபாரத்தின் காரணியாகவும் புதன் கருதப்படுகிறார். இவ்விரு கிரகங்களும் சுக்கிரனின் சொந்த ராசியான துலாம் ராசியில் இணைவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.</p><p>

வேத நாட்காட்டியின்படி, செப்டம்பர் 27ஆம் தேதி சுக்கிரன் துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். அப்போது அங்கு ஏற்கனவே புதன் இருப்பதால், இரு கிரகங்களின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகும். இதன் தாக்கத்தால் சில ராசிகளின் நிதி நிலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2710e695-3402-41d1-a673-a93b278ccd97/26-6aa8cc6a99b20.webp' /></p><p>இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். செப்டம்பர் இறுதியில் உருவாகும் இந்த யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/101529ed-77d1-40f3-aae6-17dc169ebc60/26-6aa8cc6b512aa.webp' /></p><h2>
</h2><p>மிதுன ராசியின் 5-ஆம் வீட்டில் புதன்–சுக்கிரன் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் நிதி நன்மைகள் கிடைப்பதுடன், ஏற்கனவே செய்த முதலீடுகளில் நல்ல லாபமும் கிடைக்க வாய்ப்புள்ளது.</p><p> நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த பணிகள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பங்குச்சந்தை, ஊடகம், ஐடி துறையினருக்கு காலம் சாதகமாக இருக்கும்.
</p><h2>
துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fc091f0-cdc3-46a9-aa95-dc2dae409b68/26-6aa8cc6c049a9.webp' /></p><p>
துலாம் ராசியின் முதல் வீட்டில் புதன்–சுக்கிரன் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். </p><p>அரசு தொடர்பான பணிகள் வெற்றிகரமாக முடியும். வெளிநாட்டு தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.பணப் பிரச்சனைகள் குறைந்து, மேற்கொள்ளும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.</p><h2>
தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9625bebc-31c0-4285-86e7-c43f04aa533e/26-6aa8cc6cae0e2.webp' /></p><h2>
</h2><p>தனுசு ராசியின் 11-ஆம் வீட்டில் புதன்–சுக்கிரன் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். </p><p>நீண்ட காலமாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஆடம்பரச் செலவுகள் இருந்தாலும் நிதிநிலை சிறப்பாக இருக்கும்.
</p><h2>
கும்பம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63ee189b-b5c7-4fcd-8c31-014ef5a967be/26-6aa8cc6d61d6d.webp' /></p><p></p><h2>
</h2><p>கும்ப ராசியின் 9-ஆம் வீட்டில் புதன்–சுக்கிரன் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். </p><p>ஊடகம், மார்க்கெட்டிங், கலைத் துறையினருக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். சிலருக்கு புதிய வருமான வாய்ப்புகள் உருவாகலாம். தொழிலில் வளர்ச்சி ஏற்படும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வாழ்க்கைத்துணையுடனான உறவில் இனிமையும் அதிகரிக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T04:42:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சையான விஜய் சேதுபதி கருத்து: விஜய் தொலைக்காட்சி விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/vijay-sethupathi-remarks-on-leadership-qualities-1789446614"></link>
            <id>https://ibctamilnadu.com/article/vijay-sethupathi-remarks-on-leadership-qualities-1789446614</id>
            <summary type="text">பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான விஜய்சேதுபதி தலைமைப்பண்பு குறித்து தெரிவித்த கருத்துகள் சர்ச்சையானது.

தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான நிகழ்ச்சி பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான விஜய்சேதுபதி தலைமைப்பண்பு குறித்து தெரிவித்த கருத்துகள் சர்ச்சையானது.
</p><p>
தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ், 10வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது.
</p><p>
கடந்த சீசன்களை போன்று இந்த சீசனையும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d442afe9-7a2f-4c74-a9f0-83b1aae5a802/26-6aa8cae53e446.webp' /><br></p><p>

கடந்த சனியன்று நடந்த நிகழ்ச்சியில் ஷாதிகா தலைவர் பதவி குறித்து பேசிய விஜய் சேதுபதி, தலைவர் என்றால் என்னவென்று தெரியாமல், தலைமையின் பொறுப்பை உணராமல், வாக்குறுதிகளை அள்ளிகொடுத்துவிட்டு, பிரச்னைகள் வரும்போது, எதிரணி மீது பழிபோட்டு ஓடுவது, தலைமைப் பண்புக்கான தகுதி கிடையாது. அது ஏமாற்று வேலை என பேசினார்.</p><p>

இது வைரலான நிலையில் முதலமைச்சர் விஜய்யின் ரசிகர்கள் கடுமையான விமர்சித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95f9985d-d03b-461d-b2dd-eb1e22eaf61c/26-6aa8cae5e628c.webp' /><br></p><p>

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள விஜய் தொலைக்காட்சி, பொழுதுபோக்குக்காக நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வழக்கமான விதிகள், வடிவம், கருப்பொருள்கள் ஆகியவை விளையாட்டு சூழலை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும்.
</p><p>
நிகழ்ச்சியில் நடக்கும் சம்பவங்கள், போட்டியாளர்களின் பேச்சுகள், கருத்துகள் மற்றும் அவர்களுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகள் அனைத்துமே போட்டியின் ஒரு பகுதி தான்.
</p><p>
இதில் கூறப்படும் கருத்துகள் வெளியே இருக்கும் எந்தவொரு தனிநபர் அல்லது அமைப்பை குறித்து கூறப்படுவது அல்ல, பொதுபோக்கு நோக்கத்துடன் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18a6569d-d8de-413e-a677-67c377dfacc4/26-6aa8cae699846.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-15T04:34:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாபெரும் வெற்றியடைந்த மொத ராத்திரி படத்தின் ஓடிடி ரிலீஸ்.. தேதி இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/modha-rathiri-movie-ott-release-date-1789446057"></link>
            <id>https://cineulagam.com/article/modha-rathiri-movie-ott-release-date-1789446057</id>
            <summary type="text">தமிழ் சினிமாவிற்கு இந்த ஆண்டு மாபெரும் வெற்றியை தேடி தந்த திரைப்படங்களில் ஒன்றான &#039;மொத ராத்திரி&#039; படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சினிமாவிற்கு இந்த ஆண்டு மாபெரும் வெற்றியை தேடி தந்த திரைப்படங்களில் ஒன்றான 'மொத ராத்திரி' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><p>
</p><h2>
மொத ராத்திரி
</h2><p>
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் வித்தியசமான கதைக்களத்தில் உருவாகி கடந்த மாதம் திரைக்கு வந்த படம் மொத ராத்திரி. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், அப்துல், வெங்கடேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/339393a1-ce12-40e0-a9c8-603181a89da9/26-6aa8c7adb0e2d.webp' /></p><p>விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் உலகளவில் ரூ. 8.5 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றியடைந்தது. திரையரங்குகளில் எப்படி இப்படம் கொண்டாடப்பட்டதோ, அதைவிட பல மடங்கு ஓடிடியிலும் கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d611bd29-73f5-4bbf-bc04-93ad7c7a89a2/26-6aa8c7ae6c5e4.webp' /></p><p></p><p> </p><h3>

ஓடிடி ரிலீஸ்</h3><p>

இந்த நிலையில், மொத ராத்திரி திரைப்படத்தின் <a href="https://tamil.asianetnews.com/gallery/cinema/modha-rathiri-to-ram-and-leela-this-week-ott-release-movies-and-web-series-list-h7lqzi0" target="_blank">ஓடிடி ரிலீஸ்</a> தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற செப்டம்பர் 18-ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் இப்படம் ஓடிடியில் வெளியாகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5dbf6d7-0338-470b-b8e0-9ed5b5609a3e/26-6aa8c7ad008dd.webp' /></p>]]></content>
            <updated>2026-09-15T04:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கழிவுகளால் நிரம்பும் வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை பிரதேசம்..! தொடரும் அசமந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/urging-action-regarding-garbage-in-keerimalai-area-1789438627"></link>
            <id>https://ibctamil.com/article/urging-action-regarding-garbage-in-keerimalai-area-1789438627</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான
முறையில் கழிவுகளை கொட்டிய, வலி.தெற்கு பிரதேச சபை அவற்றை மீள அள்ள வேண்டும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான
முறையில் கழிவுகளை கொட்டிய, வலி.தெற்கு பிரதேச சபை அவற்றை மீள அள்ள வேண்டும்
என வலி. வடக்கு பிரதேச சபை காலக்கெடு விதித்தும் குப்பைகள் மீள அள்ளப்படாமல்,
தீயிட்டு கொளுத்தப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
</p><p>
வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு கடந்த 20 ஆம் திகதி தவிசாளர்
சோ.சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.
</p><p>
அதன் போது சபை ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் சுண்ணக்கல் அகழப்பட்ட
பாரிய பள்ளங்களுக்குள், வலி. தெற்கு பிரதேச சபையினர், சட்டவிரோதமான முறையில்
இலத்திரனியல் கழிவுகள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகளை
கொட்டியமை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.</p><p></p><p>
</p><h2>மூச்சு விட சிரமப்படும் நிலை&nbsp;&nbsp;</h2><p>
அதனை தொடர்ந்து, கொட்டப்பட்ட கழிவுகளை வலி. தெற்கு பிரதேச சபையினர்
செப்டெம்பர் 13 ஆம் திகதிக்கு முன்னர் மீள அள்ள வேண்டும் எனவும், அது
தொடர்பிலான அறிவித்தலை வலி. தெற்கு பிரதேச சபைக்கு உடனடியாக அனுப்ப வேண்டும்
என சபையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2a709bc-66eb-4690-9f7d-c9d455ff49fe/26-6aa8abc5680b7.webp' /></p><p>அந்நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 13 ஆம் திகதியுடன் குப்பைகளை மீள
அள்ள கொடுத்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் , வலி. வடக்கு பிரதேச சபை
உறுப்பினர்கள் இன்றைய தினம் குப்பைகள் கொட்டப்பட்ட பகுதிக்கு சென்ற வேளை
குப்பைகள் மீள அள்ளப்படாது, தீயிட்டு கொளுத்தப்பட்ட நிலையில், குப்பை
மேட்டில் இருந்து புகை எழுந்த வண்ணம் காணப்பட்டுள்ளது.</p><p>
அது தொடர்பில் அயலில் வசிக்கும் மக்களிடம் உறுப்பினர்கள் வினாவிய போது,
தொடர்ந்து குப்பைகள் அப்பகுதிகளில் கொட்டப்படுவதாகவும், குப்பைகளுக்கு
தினமும் தீ வைப்பதனால் எழும் புகை மண்டலத்தால், வீடுகளில் மூச்சு விட
சிரமப்படும் நிலையிலே வாழ்கின்றோம். </p><p>இதனை நிறுத்துமாறு பல்வேறு தரப்பினரிடமும்
கோரிக்கை விடுத்த போதிலும், தம்மை பற்றி யாரும் கவனத்தில் எடுக்கவில்லை என
கவலை தெரிவித்துள்ளனர்</p><p></p><p>
</p><h2>அடுத்த கட்ட நடவடிக்கை</h2><p>
அதேவேளை அனுமதியின்றி கழிவுகளை கொட்டியமை தொடர்பில் பிரஸ்தாபிப்பதற்கு என
இன்றைய தினம் திங்கட்கிழமை சிறப்பு கூட்டத்தினை நடாத்துவது எனவும் , அதன்
போது, வலி. தெற்கு பிரதேச சபையினர் கழிவுகளை மீள அள்ளாது விடின் அடுத்த கட்ட
நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கூட்டத்தில் தீர்மானிப்பதாக கடந்த 20ஆம் திகதி
நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2218e67a-7d38-4cdc-9801-d4125b1e0776/26-6aa8abc48ea58.webp' /></p><p>அந்நிலையில் குறித்த கூட்டம் இன்றைய தினம் நடைபெறவில்லை. கூட்டம்
நிறுத்தப்பட்டமை தொடர்பில் சபை உறுப்பினர்களுக்கு அறிவிக்கவில்லை எனவும் எதிர்வரும் வியாழக்கிழமை சபையின் வழமையான மாதாந்த கூட்டத்திற்கே கடிதம்
கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளமையும்
குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T04:24:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாவகச்சேரியில் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கேபிள் திருட்டு: இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cable-theft-at-chavakachcheri-two-arrested-1789443681"></link>
            <id>https://ibctamil.com/article/cable-theft-at-chavakachcheri-two-arrested-1789443681</id>
            <summary type="text">நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து&amp;nbsp;கேபிள்கள் திருடப்பட்ட சம்பவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து&nbsp;கேபிள்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>

இந்தத் திருட்டு தொடர்பில் சாவகச்சேரி காவல் நிலையத்துக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
</p><p>
இதனையடுத்து, நேற்று (14.09.2026) நண்பகல் சாவகச்சேரி காவல் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்</h2><p>விசாரணை அடிப்படையில் திருடப்பட்ட கேபிள்கள் 14 இலட்சத்து 2 ஆயிரத்து 997 ரூபாய் பெறுமதியானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2464105-1868-4e4f-9a8c-6885c79b0a8f/26-6aa8c75decb67.webp' /></p><p>
</p><p>
</p><p>கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் குறித்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தராக பணியாற்றியவர் எனவும், மற்றையவர் திருட்டுப் பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த நபர்கள் 23 மற்றும் 43 வயதுடைய சந்தேகநபர்கள் முறையே நீர்வேலி மற்றும் கொட்டகலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T04:19:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாம் ஊழலற்ற தூய்மையான ஆட்சியை வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளோம்! பிரதி அமைச்சர் சுனில் வட்டகல]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-corruption-free-sri-lankan-government-1789444192"></link>
            <id>https://tamilwin.com/article/a-corruption-free-sri-lankan-government-1789444192</id>
            <summary type="text">தேசிய மக்கள் அரசு அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் அளித்த
வாக்குறுதிகளுக்கு அமைவாக, ஆட்சி நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்பை உறுதிசெய்து
ஊழலற்ற ஆட்சியை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் அரசு அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் அளித்த
வாக்குறுதிகளுக்கு அமைவாக, ஆட்சி நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்பை உறுதிசெய்து
ஊழலற்ற ஆட்சியை கடந்த 2 வருட காலத்தில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது.
அத்துடன் அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மீது எவரும் விரல்
சுட்டிக் குற்றம் சுமத்த முடியாத அளவுக்கு முழுமையான வெளிப்படைத்தன்மையுடன்
கூடிய புதிய அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி
அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
</p><p>
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>
"தற்போதைய அரசு அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் மக்களுக்கு அளித்த தேர்தல்
வாக்குறுதிகளுக்கு அமைவாக, ஆட்சி நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்பை முழுமையாக
உறுதிசெய்து ஊழலற்ற தூய்மையான ஆட்சியை கடந்த 2 வருட காலத்தில்
நிலைநிறுத்தியுள்ளது.</p><h2>மக்கள் ஆட்சி&nbsp;</h2><p>
</p><p>
கடந்த கால ஆட்சி முறைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, நாட்டின் சாதாரண
மக்களையும் நிர்வாகக் கட்டமைப்போடு நேரடியாக இணைக்கும் வகையில் மக்கள்
பங்கேற்புடனான ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
</p><p>
பொதுமக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் குறைகளைக்
கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வுகளை வழங்குவதற்காக அரசியல் தலைமைத்துவம்
நேரடியாகவே மக்களிடம் செல்லும் புதிய நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29962b70-266d-4d93-a5f3-f3b78aa88dcc/26-6aa8c6499b001.webp' /></p><p> </p><p>இதன்
முதற்கட்டமாக, ஜனாதிபதி நேரடியாகப் புலத்சிங்கள, பேருவளை, பொலன்னறுவை மற்றும்
அனுராதபுரம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் விஜயம் செய்து மக்களின் நிலைமைகளைக்
கேட்டறிந்துள்ளார்.</p><p> </p><p>இதேபோன்று, ஜனாதிபதி மாவட்ட மட்டத்திலும், அமைச்சர்கள்
தொகுதி மட்டத்திலும், நகர சபைத் தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள்,
கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் வரையிலும் நேரடியாகச் சென்று மக்களையும் அரச
அதிகாரிகளையும் சந்தித்துப் பணியாற்றி வருகின்றனர். </p><p>இது ஒரு சங்கிலித் தொடர்
போன்ற கட்டமைக்கப்பட்ட அமைப்பாகச் செயற்பட்டு வருகின்றது.

கடந்த ஆட்சிக் காலங்களில் கொடிகட்டிப் பறந்த ஊழல், இலஞ்சம் மற்றும் நிர்வாக
முறைகேடுகளை முழுமையாக ஒழிக்கவே இந்த அரசை மக்கள் தோற்றுவித்ததன் முதன்மை
நோக்கமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3e30d0e-97db-4654-a6fe-8b1ea8a9643e/26-6aa8c648e2f0c.webp' /></p><p> </p><p>அந்த மக்கள் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில், தற்போதுள்ள 159
நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது நாடு முழுவதும் உள்ள 3 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளோ எவ்வித ஊழல் நடவடிக்கைகளிலும்
ஈடுபடவில்லை. </p><p>மக்கள் பிரதிநிதிகள் மீது எவரும் விரல் சுட்டிக் குற்றம் சுமத்த
முடியாத அளவுக்கு வெளிப்படைத்தன்மையுடன் கூடிய புதிய அரசியல் கலாசாரம்
உருவாக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், அரசியல்வாதிகள் எவரும் இனி ஊழல் சார்ந்த செயல்களுக்கு அரச
அதிகாரிகளையோ அல்லது பொதுமக்களையோ தூண்டப்போவதில்லை. </p><p>இதனால் அரச அதிகாரிகள்
எவ்வித அரசியல் அழுத்தங்களுக்கும் அஞ்சாமல், சுதந்திரமாகவும் தைரியமாகவும்
நாட்டின் வளர்ச்சிக்காகப் பணியாற்ற முடியும். மக்கள் பிரதிநிதிகளும் அரச
அதிகாரிகளும் கைகோர்த்து நாட்டுக்காகப் பணியாற்றுவதற்கு இதுவொரு பொன்னான
வாய்ப்பாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T04:15:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கர்ப்பமாக இருக்கும் நடிகை சமந்தாவிற்கு நடைபெற்ற வளைகாப்பு.. புகைப்படங்கள் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/samantha-baby-shower-function-1789445391"></link>
            <id>https://viduppu.com/article/samantha-baby-shower-function-1789445391</id>
            <summary type="text">இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவராக சமந்தா உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் சினிமாவிலிருந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவராக சமந்தா உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் சினிமாவிலிருந்து சிறிது காலம் மெட்டர்னிட்டி பிரேக் (Maternity Break) எடுக்கப்போவதாகவும் சமந்தா கூறினார். </p><p>தாயாகப்போகும் சமந்தாவிற்கு ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மேலும், கர்ப்ப காலத்தில் உள்ள சமந்தா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் போட்டோஷூட்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9e9fed9-aff3-498d-b3d5-b763732d9e79/26-6aa8c51a8742d.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், தற்போது நடிகை சமந்தாவிற்கு வளைகாப்பு நடைபெற்றுள்ளது. அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரே அதை பாரம்பரிய முறைப்படி நடத்தி இருக்கின்றனர். சமந்தா அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியான பதிவோடு வெளியிட்டுள்ளார்.
</p><p>
இதில் "நம் பாரம்பரியம் மீது எனக்கு அதிக மரியாதை இருக்கிறது. ஒவ்வொரு சடங்கின் பின்னால் இருக்கும் அர்த்தம் எனக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் இருக்கிறது" என சமந்தா கூறியுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:</p>]]></content>
            <updated>2026-09-15T04:10:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெறிக்கும் வசூல் வேட்டை செய்துள்ள ரவி தேஜாவின் இருமுடி... மொத்த கலெக்ஷன் விவரம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ravi-teja-irumudi-movie-final-bo-1789444076"></link>
            <id>https://cineulagam.com/article/ravi-teja-irumudi-movie-final-bo-1789444076</id>
            <summary type="text">இருமுடிதெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் தான் நடிகர் ரவி தேஜா. இவர் சிவ நிர்வாணா இயக்கத்தில் இருமுடி என்ற படத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>இருமுடி</h2><p>தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் தான் நடிகர் ரவி தேஜா.</p><p> இவர் சிவ நிர்வாணா இயக்கத்தில் இருமுடி என்ற படத்தில் நடித்துள்ளார், இப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. </p><p>இதில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்க அவருடன் சாய் குமார், பேபி நக்சத்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3044547-bf28-4057-9c69-c44956cd20d6/26-6aa8bfee3adaf.webp' /></p><p> </p><p>ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பில் வெளியான இப்படம் தமிழில் இருமுடி கட்டு என்ற பெயரில் வெளியானது.
குடும்ப உறவுகள் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தில் ரவிதேஜா தந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். </p><p>தனது மகளின் விருப்பத்திற்காக அய்யப்ப தீட்சை மேற்கொள்ளும் தந்தையை மையமாக வைத்து கதை நகர்ந்துள்ளது. இப்படத்தில் ரவி தேஜாவின் நடிப்பு ரசிகர்களால் அதிகம் பாராட்டப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bb72f50-5bde-4398-8a46-c239d221eaca/26-6aa8bfeee519e.webp' /></p><h2>பாக்ஸ் ஆபிஸ்</h2><p>
சுமார் ரூ. 40 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வெளியான நாள் முதல் செம வசூல் வேட்டை செய்துள்ளது. ரசிகர்களின் பேராதரவில் ஒளிபரப்பாகி வரும் இப்படம் இதுவரை ரூ. 240 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளதாம். </p><p>திரையரங்கில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய இப்படம் வரும் செப்டம்பர் 18ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பல மொழிகளில் வெளியாக உள்ளதாம்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T04:00:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் 17 முதல் தொழிலில் அசுர வளர்ச்சி காணப்போகும் ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sun-transit-in-virgo-who-get-carrier-growth-1789374853"></link>
            <id>https://manithan.com/article/sun-transit-in-virgo-who-get-carrier-growth-1789374853</id>
            <summary type="text">ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படும் சூரியன், தலைமைத்துவம், தன்னம்பிக்கை, அந்தஸ்து ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறார். சிம்ம ராசியின் அதிபதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படும் சூரியன், தலைமைத்துவம், தன்னம்பிக்கை, அந்தஸ்து ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறார். சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுகிறார். </p><p>அவரது நிலை மாறும்போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.

தற்போது சூரியன் தனது சொந்த ராசியான சிம்மத்தில், ஏற்கனவே அங்கு இருக்கும் கேதுவுடன் இணைந்து பயணித்து வருகிறார்.இதனால் சில ராசிக்காரர்கள் பணியில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்திருக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27c1f94e-f239-48ff-bfd4-e2ccf8df7241/26-6aa7be70826cf.webp' /></p><p></p><p>இந்நிலையில், செப்டம்பர் 17ஆம் தேதி சூரியன் புதனின் ஆளுகைக்குட்பட்ட கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார்.இதன் மூலம் சூரியன் கேதுவின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு, தொழிலில் சந்தித்து வந்த சிக்கல்களில் இருந்து சில ராசிக்காரர்கள் மீளப்போகின்றது.</p><p>சூரியனின் இந்த ராசி மாற்றத்தால் தொழில் ரீதியாக அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் என்பதைப் பார்ப்போம்.</p><h2>விருச்சிகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d72bce64-3579-4de4-b907-ea97d7a6dd56/26-6aa7be7136079.webp' /></p><p>
விருச்சிக ராசியின் 11-ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இது வருமானம், லாபம் மற்றும் ஆசைகள் நிறைவேறுவதற்கு வழிவகுக்கும்.</p><p>எனவே, தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வணிகத் தொடர்புகள் மூலம் நிதி ஆதாயங்களும் கிடைக்கலாம்.

நீண்ட காலமாக புதிய தொழில் தொடங்க திட்டமிட்டிருந்தால், இக்காலம் அதற்கு ஏற்றதாக இருக்கும். </p><p>பணிபுரிபவர்கள் அலுவலகப் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, வருமான உயர்வைப் பெறலாம். இதனால் பணப் பிரச்சனைகள் குறையும். நீண்ட காலமாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை தானாக அமையும்.</p><h2>
தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/425a325b-e868-4b82-a27a-b4e02e097839/26-6aa7be71e86f2.webp' /></p><p></p><p>
தனுசு ராசியின் 10-ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இது வேலை, தொழில், நற்பெயர் மற்றும் பணியிடத்தைக் குறிக்கும் வீடாகும். </p><p>இதனால் தொழில் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம். நீண்ட கால கடின உழைப்புக்குப் பலன் கிடைப்பதுடன், பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.</p><p>
போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுபவர்களுக்கு இக்காலம் சிறப்பாக அமையும். வேலை மாற்றத்தை எதிர்பார்ப்பவர்கள் நல்ல வாய்ப்புகளைப் பெறலாம். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கும் சாதகமான செய்திகள் கிடைக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T03:59:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசுக்கு எதிராக உரிய தருணத்தில் ஒரே தளத்தில் களமிறங்கும் எதிர்க்கட்சிகள்! வெளியாகவுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opposition-parties-taking-field-against-government-1789443172"></link>
            <id>https://tamilwin.com/article/opposition-parties-taking-field-against-government-1789443172</id>
            <summary type="text">இலங்கையில் தற்போது அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும்
சூழலில், எதிர்க்கட்சிகள் தனித்தனியாக செயற்படுவது கட்சிகளுக்கு இடையிலான
பிளவு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தற்போது அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும்
சூழலில், எதிர்க்கட்சிகள் தனித்தனியாக செயற்படுவது கட்சிகளுக்கு இடையிலான
பிளவு அல்ல என்றும், உரிய தருணத்தில் அரசுக்கு எதிராக அனைத்து
எதிர்க்கட்சிகளும் ஒரே தளத்தில் ஒன்றிணைந்து களமிறங்கும் என்றும் ஐக்கிய
மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியுடனான உத்தியோகபூர்வ கூட்டணி குறித்த இறுதித்
தீர்மானம் அடுத்த தேசிய தேர்தலின் போது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்
என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,</p><h2>&nbsp;அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட அனுராதபுரம் பேரணி</h2><p> "ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட அனுராதபுரம்
பேரணியானது, தற்போதைய அரசின் தோல்விகள் மற்றும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை
நாட்டு மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்கும் வகையில் அமைந்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c85f3ac0-3cc9-4994-a7f0-a9fb5f0dae10/26-6aa8c151a69fb.webp' /></p><p>
</p><p>உறங்கிக்கொண்டிருந்த மக்களை மீண்டும் விழிப்படையச் செய்து, அவர்களின்
போராட்டக் குணத்தை வெளிப்படுத்திய ஒரு முக்கியமான பேரணியாகவே அதனைப் பார்க்க
முடிகின்றது.
</p><p>
இதன் தொடர்ச்சியாக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சார்பில்
அரசுக்கு எதிராகத் தனியாகப் பல போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>குறிப்பாக, இம்மாத இறுதியில் கொழும்பில் பிரம்மாண்டமான
முறையில் ஒன்றுகூடி, முக்கிய கலந்துரையாடல்களையும் பேரணிகளையும் நடத்த
ஏற்பாடுகள் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகின்றன.
</p><p>
நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் உள்ள பல்வேறு அரசியல் இயக்கங்கள்
இணைந்து தற்போது கூட்டு எதிர்க்கட்சியாகச் செயற்பட்டு வருகின்றன.</p><h2>பிளவுபட்டுள்ள எதிர்க்கட்சிகள் </h2><p>
</p><p>
எதிர்க்கட்சிகள் தனித்தனியாக மக்கள் சந்திப்புகளை நடத்துவதைப் பார்த்து அவை
பிளவுபட்டுள்ளதாகச் சிலர் நினைக்கலாம். ஆனால் அது உண்மையல்ல. ஒவ்வொரு
கட்சியும் தத்தமது பலத்துக்கு ஏற்ப மக்களைத் திரட்டுவது அரசியல் ரீதியாக
இயல்பான ஒரு விடயமாகும்.</p><p> எனினும், அரசுக்கு எதிராக இறுதிச் சந்தர்ப்பம்
வரும்போது அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாகவே கைகோர்த்து களமிறங்கும்.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்படுவது
குறித்து நீண்டகாலமாகப் பேச்சுகள் நடத்தப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/149081de-d98c-4704-bbd1-c69a01c768f6/26-6aa8c1525bdf2.webp' /></p><p> இரு கட்சிகளின்
தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் மற்றும் முக்கிய குழுவினர் பலமுறை நேரில்
சந்தித்துப் பேசியுள்ளனர். </p><p>ஏற்கனவே உள்ளூராட்சி மன்ற அமைப்புகளின்
தேர்தல்களின்போது இரு கட்சிகளும் அடிமட்ட அளவில் இணைந்து செயற்பட்டது போல்,
தற்போதும் ஆதரவாளர்கள் மத்தியில் எந்தவிதப் பிரச்சினையும் இன்றி நல்லிணக்கம்
தொடர்கின்றது.

இரு கட்சிகளும் எப்போது உத்தியோகபூர்வமாக இணைந்து பயணிக்கப் போகின்றன என்பதை
இரு கட்சித் தலைவர்களுமே உரிய நேரத்தில் தீர்மானிப்பார்கள்.</p><p>

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணத்திலோ அல்லது அடுத்த தேசிய தேர்தல்
வரவிருக்கும் சந்தர்ப்பத்திலோ இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு
வெளிப்படுத்தப்படும்.
</p><p>
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் மற்றும் ஆன்மீகத் தலைவராக
இன்னமும் மஹிந்த ராஜபக்சவே தொடர்ந்தும் திகழ்கின்றார்.</p><p> இத்தகைய சிரமங்களுக்கு
மத்தியிலும் கூட அவரைப் பேரணிகளுக்கு அழைத்து வருகின்றமை, பொதுமக்களுக்கும்
அவருக்குமான பலமான பிணைப்பையே மீண்டும் காட்டுகின்றது என்பதை நாம்
ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் என்றார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T03:54:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஜித்துடன் காரில் பயணம் செய்த முதலமைச்சர் விஜய்.. வீடியோ இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ajith-vijay-rides-in-race-car-in-silverstone-1789442743"></link>
            <id>https://cineulagam.com/article/ajith-vijay-rides-in-race-car-in-silverstone-1789442743</id>
            <summary type="text">அஜித் - விஜய் இருவரும் சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற கார் மந்தையதில் சந்தித்து நட்பு பாராட்டியது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், அங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அஜித் - விஜய் இருவரும் சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற கார் மந்தையதில் சந்தித்து நட்பு பாராட்டியது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், அங்கு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை விஜய் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p></p><p> </p><h2>

லண்டனில் விஜய் - அஜித்</h2><p>

நடிகரும் ரேசருமான <a href="https://x.com/actorvijay/status/2099507978005037268" target="_blank">அஜித் </a>சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற கார் பந்தயத்தில் கலந்துகொண்டார். அங்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் சென்று போட்டியை தொடங்கி வைத்தது மட்டுமின்றி, அஜித்தை சந்தித்தது அதன்பின் இருவரும் நட்பு பாராட்டியது, இருவரும் பரிசுகளை பகிர்ந்துகொண்டது என பல விஷயங்கள் நடைபெற்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f04fd571-17a6-42c0-a5ed-86152b899de6/26-6aa8babae9c29.webp' /></p><p> </p><p>

மேலும், முதலமைச்சர் <a href="https://www.dinamani.com/tamilnadu/2026/Sep/14/11000-crore-investment-agreement-signed-in-london-in-the-presence-of-chief-minister-vijay" target="_blank">விஜய்க்கு </a>கார் ரேஸிங் உடை ஒன்றை அஜித் பரிசளித்திருந்தார். இருவரும் கார் ரேஸிங் உடையில் இந்திய கொடியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளிவந்து இணையத்தில் வைரலானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba7a9482-f721-40ee-87b5-a01639c3c32c/26-6aa8baba3faa4.webp' /></p><p></p><p>
</p><h3>
விஜய் வெளியிட்ட வீடியோ
</h3><p>
இந்த நிலையில், லண்டனில் சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற இந்த கார் பந்தயத்தில் விஜய் கலந்துகொண்ட வீடியோ தற்போது முழுமையாக வெளியாகியுள்ளது. இதில் அஜித்தை சந்தித்தது, கார் ரேஸை தொடங்கி வைத்தது, அஜித்துடன் சேர்ந்து காரில் பயணித்தது என அனைத்தும் இடம்பெற்றுள்ளன.</p><p>

இதோ அந்த வீடியோ:</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="zxx" dir="ltr"><a href="https://t.co/M55AP6JJg2">pic.twitter.com/M55AP6JJg2</a></p>&mdash; Vijay (@actorvijay) <a href="https://x.com/actorvijay/status/2099507978005037268?ref_src=twsrc%5Etfw">September 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-09-15T03:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் அரச கடன் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/information-released-sri-lanka-government-debt-1789436012"></link>
            <id>https://tamilwin.com/article/information-released-sri-lanka-government-debt-1789436012</id>
            <summary type="text">
இந்த ஆண்டில் (2026) இரண்டாம் காலாண்டில் இலங்கையின் மொத்த அரச கடன் 744 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. பொதுக்கடன் மேலாண்மை அலுவலகம் வெளியிட்டுள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
இந்த ஆண்டில் (2026) இரண்டாம் காலாண்டில் இலங்கையின் மொத்த அரச கடன் 744 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. </p><p>பொதுக்கடன் மேலாண்மை அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.</p><h2>கடன் தொகை&nbsp;</h2><p> 

அதன்படி, இவ்வாண்டின் முதல் காலாண்டின் இறுதியில் 32,233 பில்லியன்&nbsp;ரூபாயாக கடன் இருந்துள்ளது.</p><p>

இவை இரண்டாம் காலாண்டின் (ஜூன் மாத இறுதியில்) இறுதியில் 32,977 பில்லியனாக அதிகரித்துள்ளது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T03:15:20+00:00</updated>
        </entry>
    </feed>
