<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-28T06:34:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த சடலங்களில் நகைகளை திருடிய இளைஞர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-arrested-for-steal-earring-nepal-flood-victims-1787898734"></link>
            <id>https://news.lankasri.com/article/2-arrested-for-steal-earring-nepal-flood-victims-1787898734</id>
            <summary type="text">man stealing ear rings from dead nepal flood victims: நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த சடலத்தில் இருந்து நகைகளை திருடிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p>man stealing ear rings from dead nepal flood victims: நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த சடலத்தில் இருந்து நகைகளை திருடிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><h3>
வெள்ளத்தில் உயிரிழந்த சடலங்களில் நகை திருட்டு</h3><p> 

நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 469 ஆக அதிகரித்துள்ளது. 1,468 பேர் மாயமாகியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/127fc839-3324-424f-b52f-4f50e5b362ae/26-6a912b70eecbd.webp' /></p><p>

நேபாள காவல்துறை மற்றும் ராணுவம் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. உள்நாட்டு மக்கள் மற்றும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் மாயமாகியுள்ளனர். </p><p>

இந்நிலையில் வெள்ளத்தில் உயிரிழந்து நாராயணி ஆற்றில் கரை ஒதுங்கிய சடலத்தின் காதுகளில் இருந்த தங்க காதணிகளை 2 இளைஞர்கள் அகற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.&nbsp;&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ne" dir="ltr">मृतकको कानको मुन्द्रा चोरी गर्ने व्यक्तिहरु नियन्त्रणमा लिएको सम्बन्धमा । <a href="https://t.co/pnPlnQPn9j">pic.twitter.com/pnPlnQPn9j</a></p>&mdash; Nepal Police (@NepalPoliceHQ) <a href="https://x.com/NepalPoliceHQ/status/2092950217138339990?ref_src=twsrc%5Etfw">August 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

இதனைத்தொடர்ந்து, பரத்பூர் மாநகராட்சி-1 இல் உள்ள பொக்காரா பேருந்து நிலையம் அருகே அந்த வீடியோவில் இருந்த நபர்களான 25 வயதான மதன் குருங் மற்றும் 38 வயதான உமேஷ் சௌத்ரி ஆகியோரை நேபாள காவல்துறை அடையாளம் கண்டு கைது செய்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e69a3e1-1365-4587-b719-ed8887bc672d/26-6a912b7048858.webp' /></p><p>
இந்த மாதிரியான இக்கட்டான நேரத்தில் உயிரிழந்தவர்களை குறிவைத்து நடைபெறும் கொள்ளை அல்லது வேறு எந்த மனிதாபிமானமற்ற செயலையும் பொறுத்துக்கொள்ள முடியாது என காவல்துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p>
நேபாளம் சந்தித்த மிக மோசமான வெள்ளப் பேரழிவுகளில் ஒன்றாக இது கருதப்படும் நிலையில், சேதமடைந்த சாலைகள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலங்கள், மலைபோல் குவிந்துள்ள மண் மற்றும் இடிபாடுகளுக்கு இடையே மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. </p><p>

மேலும், நேபாளத்தின் எல்லை அருகே சோசென் கோலா - புரேபு சாங்போ ஆறுகள் இணையுமிடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு, இயற்கையான தடுப்பு ஏரி உருவாகியுள்ளது. இது உடைந்தால் 2ஆம் கட்ட வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக சீன அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T06:32:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த ஒன்றரை மாதங்களில் சிறைச்சாலை நெரிசல் குறையும் - நீதி அமைச்சர் நம்பிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prison-overcrowding-will-decrease-in-next-months-1787897609"></link>
            <id>https://tamilwin.com/article/prison-overcrowding-will-decrease-in-next-months-1787897609</id>
            <summary type="text">அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை
விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது
ஒன்றரை மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை
விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது
ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் முற்றாகக் குறைக்கப்படும்
என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
தெரிவித்துள்ளார்.</p><p>

அநுராதபுரம் சிறைச்சாலையை நேற்று(27.08.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு
செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு
குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>மூன்று புதிய பகுப்பாய்வு இயந்திரங்கள்</h2><p>மேலும் கூறுகையில்,

"அரச பகுப்பாய்வாளரின் அறிக்கைகள் கிடைப்பதில் நீண்டகாலமாக ஏற்பட்டுவந்த
தாமதம் காரணமாகவே, போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சுமார் 23
ஆயிரம் கைதிகள் விசாரணைகள் முடிக்கப்படாமல் தொடர்ந்தும் விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4511c554-5d29-42a6-b7db-3c8bdc32e383/26-6a912b4b84d59.webp' /></p><p>இந்த நிலைமையை மாற்றியமைக்கும் பொருட்டு, அரச பகுப்பாய்வாளர்
திணைக்களத்துக்குப் புதிதாக 70 அதிகாரிகள் ஆள்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
மூன்று புதிய பகுப்பாய்வு இயந்திரங்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதன்
மூலம் தற்போது நாளொன்றுக்கு சுமார் 400 முதல் 500 அறிக்கைகள் வரை துரிதமாக
வழங்கப்பட்டு வருகின்றன.
</p><p>
கைதிகளின் அடிப்படைப் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் அவர்களின் உயிர் மற்றும்
உடைமைகளைப் பாதுகாப்பதை முழுமையாக உறுதிப்படுத்துவதற்காக அனைத்துச்
சிறைச்சாலைகளிலும் பிரத்தியேகமான கூட்டுப் பொறிமுறை ஒன்றையும் அரசு தற்போது
நிறுவியுள்ளது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T06:31:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்குடன் தொடர்பு ; 10 முக்கிய அரசியல்வாதிகளிடம் விசாரணை; கிலியில் பலர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/links-to-shiran-basik-10-politicians-questioned-1787892149"></link>
            <id>https://jvpnews.com/article/links-to-shiran-basik-10-politicians-questioned-1787892149</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;துபாயில் கைதாகி நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல் ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;துபாயில் கைதாகி நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல் ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி, கோடிக்கணக்கான பணம் மற்றும் பல்வேறு சலுகைகளைப் பெற்றதாகக் கூறப்படும் 10 முக்கிய அரசியல்வாதிகளிடம் எதிர்வரும் காலங்களில் விசாரணை நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>



போதைப்பொருள் வியாபாரியான ஷிரான் பாசிக் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது வெளிப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இந்த முக்கிய அரசியல்வாதிகளிடம் விசாரணை நடத்த மத்திய குற்ற புலனாய்வுப் பணியகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17bcf82c-2ef4-40ad-9a5b-e9b90289bd2f/26-6a9111b6d7f89.webp' /></p><h2>&nbsp;அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்</h2><p>



 விசாரணைக்குட்படுத்தப்படவுள்ள அரசியல்வாதிகளில் இரு முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள், இரு அமைச்சர்கள், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட பல பிரபல அரசியல்வாதிகளும் இருப்பதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>


 10 அரசியல்வாதிகளுக்கும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது அவ்வப்போது ஷிரான் பாசிக் பெருமளவு பணத்தை வழங்கியிருந்தமை தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>


மேலும், கடந்த அரசாங்கத்தில் பதவி வகித்த முக்கிய அமைச்சரொருவர், ஷிரான் பாசிக்குக்கு அனுமதியற்ற முறையில் காணிகளை நிரப்பி, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்களை நிர்மாணிப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>


அந்த நடவடிக்கைகளுக்காக முன்னாள் அமைச்சர், ஷிரான் பாசிக்கிடமிருந்து அவ்வப்போது பெருமளவு பணத்தைப் பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.



ஷிரான் பாசிக் நீண்ட காலமாக இந்த அரசியல்வாதிகளுக்காக தாராளமாக பணத்தை செலவிட்டு வந்துள்ளமை தற்போது தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p></p><p>
</p><p>


இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவிக்கையில், ஷிரான் பாசிக்கிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின்போது வெளிவரும் தகவல்களின் அடிப்படையில், அவருடன் தொடர்புகளைப் பேணி பணம் மற்றும் பல்வேறு சலுகைகளைப் பெற்ற அனைத்து அரசியல்வாதிகளிடமும் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.</p><p>



தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஷிரான் பாசிக்கிடம் நீண்ட நேரமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவருக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொத்துகள் தொடர்பிலும் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. </p><p>இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-28T06:30:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் மீட்கப்பட்ட இரட்டைக் குழந்தைகள்! வைரலாகும் காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/twin-babies-rescued-from-nepal-floods-1787896496"></link>
            <id>https://jvpnews.com/article/twin-babies-rescued-from-nepal-floods-1787896496</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கினால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரட்டைக் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட சம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கினால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரட்டைக் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>

பெருவெள்ளத்தால் ஏற்பட்ட ஆபத்தான சூழ்நிலைக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையின் போது குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0208df1c-b0b2-40aa-a8e6-631b96873c7e/26-6a9122b2b788e.webp' /></p><h2>நெகிழ்ச்சியான வீடியோ காட்சிகள்</h2><p>

இந்த சம்பவம், பேரழிவு காலங்களில் துரிதமாக முன்னெடுக்கப்படும் மீட்புப் பணிகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.</p><p></p><p>

இரட்டைக் குழந்தைகளை நேபாள ராணுவ வீரர்கள் அரவணைத்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">VIDEO | Nepal floods: Rescued twin children comforted by Nepal Army personnel amid ongoing relief operations. <a href="https://t.co/12fLMnjS0f">pic.twitter.com/12fLMnjS0f</a></p>&mdash; Press Trust of India (@PTI_News) <a href="https://x.com/PTI_News/status/2092969173265924324?ref_src=twsrc%5Etfw">August 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
அதேவேளை நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 469 ஆக அதிகரித்துள்ளது.</p><p>

 

இந்தச் இயற்கைச் சீற்றத்தினால் 1,400-க்கும் மேற்பட்டோர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-28T06:29:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூஜை விளக்கில் ஊதுபத்தி ஏற்றுபவரா நீங்க... இனி அந்த தவறை செய்யாதிங்க!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/not-light-an-incense-stick-from-the-puja-lamp-1787898730"></link>
            <id>https://jvpnews.com/article/not-light-an-incense-stick-from-the-puja-lamp-1787898730</id>
            <summary type="text">&amp;nbsp;பூஜை விளக்கில் இருந்து நேரடியாக ஊதுபத்தி ஏற்றுவதனால் வீட்டின் செழிப்பு மற்றும் நேர்மறை ஆற்றல் பாதிக்கப்படலாம் என்பது பாரம்பரிய நம்பிக்கையாக உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பூஜை விளக்கில் இருந்து நேரடியாக ஊதுபத்தி ஏற்றுவதனால் வீட்டின் செழிப்பு மற்றும் நேர்மறை ஆற்றல் பாதிக்கப்படலாம் என்பது பாரம்பரிய நம்பிக்கையாக உள்ளது. </p><p>எனவே ஊதுபத்தியை ஏற்ற தனியாக தீக்குச்சி அல்லது கற்பூரத்தை பயன்படுத்தலாம்

இந்து மரபில் பூஜையின்போது ஏற்றப்படும் விளக்கு தெய்வீக ஒளி மற்றும் செழிப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b124417-92ff-446c-b5b0-d39574bea4f1/26-6a912b6c5297e.webp' /></p><h2>வீட்டின் நேர்மறை ஆற்றல் பாதிக்கப்படலாம்</h2><p> </p><p>பூஜை விளக்கில் இருந்து நேரடியாக ஊதுபத்தியை ஏற்றுவது சில ஆன்மிக நம்பிக்கைகளின்படி தவிர்க்க வேண்டிய செயலாகக் கூறப்படுகிறது. 

இதனால் வீட்டின் நேர்மறை ஆற்றல் பாதிக்கப்படலாம் என்ற நம்பிக்கையும் உள்ளது. </p><p>குறிப்பாக மகாலட்சுமியின் அருள் குறைந்து பொருளாதார பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே&nbsp; &nbsp;ஊதுபத்தியை ஏற்றுவதற்கு தனியாக தீக்குச்சி அல்லது கற்பூரத்தை பயன்படுத்துவது பாரம்பரியமாக பரிந்துரைக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e584b1e8-e0fb-4079-910d-e20e9609d33d/26-6a912b6d09849.webp' /></p><h3>&nbsp;இருளை அகற்றி நல்ல எண்ணங்களை உருவாக்கும்&nbsp;பூஜை விளக்கு</h3><p> பூஜையில் பயன்படுத்தப்படும் பொருட்களை சுத்தமாகவும் முறையாகவும் பயன்படுத்துவது முக்கியமாகக் கருதப்படுகிறது

பூஜை விளக்கின் முக்கியத்துவம்
இந்து மரபில் தினசரி பூஜையின்போது விளக்கேற்றுவது முக்கியமான ஆன்மிக நடைமுறையாகக் கருதப்படுகிறது. </p><p>விளக்கின் ஒளி தெய்வீக சக்தியின் அடையாளமாகவும், இருளை அகற்றி நல்ல எண்ணங்களை உருவாக்கும் குறியீடாகவும் பக்தர்களால் பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/450abe61-d631-4200-b2d4-38a61e3f3f91/26-6a912b6e73283.webp' /></p><p>

ஏனவே எரிந்து கொண்டிருக்கும் பூஜை விளக்கிலிருந்து ஊதுபத்தியை பற்றவைப்பது சில சாஸ்திர மற்றும் ஆன்மிக நம்பிக்கைகளில் தவிர்க்க வேண்டிய செயலாகக் கூறப்படுகிறது.</p><p>செழிப்புடன் தொடர்புடைய நம்பிக்கை
சாஸ்திர நம்பிக்கைகளின்படி, பூஜைக்காக ஏற்றப்படும் விளக்கு வீட்டின் செழிப்பு மற்றும் தெய்வீக அருளைக் குறிக்கும் அடையாளமாக பார்க்கப்படுகிறது.</p><p> அந்த விளக்குச் சுடரிலிருந்து வேறு பொருளை பற்றவைப்பது நல்லதல்ல என்றும், இதனால் குடும்பத்தில் பொருளாதார சிக்கல்கள் அல்லது தேவையற்ற செலவுகள் அதிகரிக்கலாம் .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2731d205-bf34-49e2-a26b-f052431bb4cc/26-6a912b6db88dc.webp' /></p><p> </p><p>

 இந்த நடைமுறை வீட்டில் மகாலட்சுமியின் அருள் குறைவதற்கான காரணமாக அமையலாம் என்ற ஆன்மிக கருத்தும் உள்ளது. 

 பூஜை விளக்கின் ஒளி வீட்டில் நேர்மறையான சூழலை உருவாக்கும் என்று கருதப்படுகிறது.</p><p> அதே சுடரில் இருந்து ஊதுபத்தி அல்லது சாம்பிராணியை பற்றவைப்பது விளக்கின் புனிதத்தன்மையை பாதிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. 

இதனால் வீட்டின் ஆன்மிக சூழலில் எதிர்மறையான தாக்கம் ஏற்படலாம் . </p><p>எனவே, பூஜையில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய முறையில் தனித்தனியாக பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-28T06:29:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள IMF பிரதிநிதிகள் குழு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/imf-delegation-to-visit-sri-lanka-next-month-1787896083"></link>
            <id>https://ibctamil.com/article/imf-delegation-to-visit-sri-lanka-next-month-1787896083</id>
            <summary type="text">சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்&amp;nbsp;

விரிவுபடுத்தப்பட்ட நிதியுதவி வசதியின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்&nbsp;</p><p>

விரிவுபடுத்தப்பட்ட நிதியுதவி வசதியின் கீழ் செயற்படுத்தப்படும் அடுத்த கட்ட மீளாய்வுக்காகவே இந்த விஜயம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

குறித்த விஜயத்தின் போது அவர்கள் ஏழாவது மீளாய்வை மேற்கொள்ளவுள்ளதுடன், எட்டாவது கடன் தவணையை விடுவிப்பது குறித்தும் பரிசீலிக்கவுள்ளனர்.</p><p></p><h2>330 மில்லியன் அமெரிக்க டொலர்</h2><p>

இந்த மீளாய்வு வெற்றிகரமாக நிறைவடைந்தால், சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி இலங்கைக்கு கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0562eef9-73d8-4ce2-9344-e6adb12958b8/26-6a91293ba01bb.webp' /></p><p>சர்வதேச நாணய நிதிய கடன் திட்டத்தின் கீழ், 695 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான 6வது மற்றும் 7வது கடன் தவணைகள் கடந்த ஜூலை மாதம் நாட்டிற்கு விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T06:26:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியை பிரிந்துவிட்டாரா நாஞ்சில் விஜயன், திருநங்கை சாபமா?... அவரே போட்ட பரபரப்பு பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/nanjil-vijayan-wife-seperation-rumours-1787896946"></link>
            <id>https://cineulagam.com/article/nanjil-vijayan-wife-seperation-rumours-1787896946</id>
            <summary type="text">நாஞ்சில் விஜயன்தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் தான் நாஞ்சில் விஜயன். இவர் கடந்த சில மாதங்களாக சொந்த தொழிலை மனைவியுடன் சேர்ந்து ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நாஞ்சில் விஜயன்</h2><p>தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் தான் நாஞ்சில் விஜயன். </p><p>இவர் கடந்த சில மாதங்களாக சொந்த தொழிலை மனைவியுடன் சேர்ந்து கவனித்து வந்தார். திருமணம், குழந்தை, வீடு, கார் என தங்களது உழைப்பின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினார்கள்.
</p><p>ஆனால் இப்போது என்ன ஆனது என தெரியவில்லை, நாஞ்சில் விஜயன் தனது மனைவியை பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் இதுகுறித்து ஒரு பரபரப்பான செய்தி வலம் வருகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bfd08bc-74ab-480f-a33e-d1cba13504f5/26-6a91290e67561.webp' /></p><h2>பிரபலம் பதிவு
</h2><p>நாஞ்சில் விஜயன், திருநங்கை சகோதரி வைஷ்ணவியிடம் நான் தோற்றுவிட்டேன் என பதிவு வைரலாகிறது. </p><p>அதில், என் திருநங்கை சகோதரரிடம் நான் தோற்றுவிட்டேன் என்றும், சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக தங்களுடன் இருந்த நல்ல நட்பை கொச்சைப்படுத்தி தன்னை பற்றி பல அவதூறுகளை தொடர்ந்து பரப்பி வந்தீங்க.
</p><p>இந்த பிரச்சனையின் போது என்னுடைய மனைவி என் மீது நம்பிக்கையாக இருந்தார். ஆனால் வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய சண்டையின் போது மனைவியின் தாயார் நீ ஒரு திருநங்கையை ஏமாற்றிவிட்டு தானே என் பெண்ணை திருமணம் செய்துகொண்டாய் என சொல்லிவிட்டார். </p><p>என் மனைவியை பிரிந்து தனிமையில் வந்துவிட்டேன். இந்த செய்தி நிச்சயமாக உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும் என நம்புகிறேன் என நீண்ட பதிவு போட்டுள்ளார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T06:22:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது! சுட்டிக்காட்டும் சமன் ரத்னப்பிரிய]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/saman-ratnapriya-statement-1787897371"></link>
            <id>https://tamilwin.com/article/saman-ratnapriya-statement-1787897371</id>
            <summary type="text">முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை
ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசாங்கம் கூறிவரும் கருத்துக்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை
ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசாங்கம் கூறிவரும் கருத்துக்கள்
முற்றிலும் பொய் என்பது இதன் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும்
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய
சுட்டிக்காட்டினார்.
</p><p>
கொழும்பில் நேற்று (27.08.2026) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே
அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>வழக்கு விசாரணை</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், ஊழல்வாதிகளுக்கு எதிரான வழக்குகள் எந்த நீதிமன்றங்களில் விசாரிக்கப்படுகின்றன
என்பது கூட இந்த அரசாங்கத்திற்கு தெரியவில்லை. இவ்வாறான வழக்குகள் அனைத்தும்
நீதவான் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் மேல் நீதிமன்றங்களிலேயே
நிலுவையில் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6a1e903-6070-4e62-a01b-b4475e384058/26-6a9128f434585.webp' /></p><p>

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் யோசனை ஆரம்பத்தில் உயர்
நீதிமன்றத்துக்கே கொண்டுவரப்பட்டது. அதற்கு எழுந்த கடுமையான எதிர்ப்புகள்
காரணமாகவே, பின்னர் அது மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கும் அதன் கீழ் உள்ள
நீதிமன்றங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

நாட்டில் தற்போது சுமார் 11 இலட்சம் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன.</p><h2>நிலுவையில் உள்ள வழக்குகள்</h2><p> </p><p>இதில் 10,000 வரையிலான வழக்குகள் மட்டுமே உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு
நீதிமன்றங்களில் உள்ளன. எஞ்சிய 10 இலட்சத்து 90 ஆயிரம் வழக்குகள் அனைத்தும்
கீழ் நீதிமன்றங்களிலேயே நிலுவையில் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c210e1b-e09d-4013-b88a-680e028fdc6b/26-6a9128f5275cf.webp' /></p><p>
</p><p>
கீழ் நீதிமன்றங்களிலேயே அதிகளவிலான நீதிபதி வெற்றிடங்கள் காணப்படுகின்ற
போதிலும், கடந்த எட்டு மாதங்களாக அரசு அந்த வெற்றிடங்களை நிரப்பாமல்
வைத்துள்ளது.</p><p> </p><p>அதை முறைப்படி நிரப்பாமல், வெறும் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதன்
மூலம் நீதிமன்றப் பிரச்சினைகளுக்கோ அல்லது மோசடிக்காரர்களைச் சட்டத்தின் முன்
நிறுத்துவதற்கோ எந்தவொரு தீர்வும் கிடைக்காது என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T06:21:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[6000 மின்சார கையுறைகளை வாங்கும் ICE: 16.7 மில்லியன் டொலர் ஒதுக்கிய அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ice-did-contract-for-6000-shock-delivering-gloves-1787897876"></link>
            <id>https://news.lankasri.com/article/ice-did-contract-for-6000-shock-delivering-gloves-1787897876</id>
            <summary type="text">ICE Executed contract for 6000 shock-delivering gloves: மின்சார கையுறைகளை வாங்க அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ICE Executed contract for 6000 shock-delivering gloves: மின்சார கையுறைகளை வாங்க அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> மின்சார கையுறைகள்</h2><p>
சுமார் 16.7 மில்லியன் டொலர் மதிப்பில் மின் அதிர்ச்சி ஏற்படுத்தக்கூடிய 6000 கையுறைகளை வாங்க அமெரிக்க குடிநுழைவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை(ICE) ஒப்பந்தம் மேற்கொண்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p> மின்சார கையுறைகளை உள்நாட்டு பாதுகாப்புத் துறை பயன்படுத்த போவதாக அறிவித்ததில் இருந்து எதிர்க்கட்சிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.</p><p></p><p> குடியேற்ற பாதுகாப்பு கொள்கையின் கீழ் ஏற்கனவே ICE கடுமையான விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> சமீபத்திய காலங்களில் கடுமையான குடியேற்ற கொள்கையின் கீழ் அதிகாரிகளுக்கும் புலம்பெயர்ந்தோர் மற்றும் போராட்டகாரர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதல்களில் பலர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d57b60b8-3fe1-4b6d-8045-7349204177d1/26-6a9128163ca96.webp' /></p><h2>மின்சார கையுறையின் செயல்பாடுகள்</h2><p>இந்த மின்சார கையுறைகள் வழக்கமான&nbsp; ரோந்து பணியில் பயன்படுத்தப்படும் கையுறைகளை போன்றே இருக்கும்.</p><p> ஆனால் அதில் உள்ள பொத்தானை அழுத்துவதன் மூலம் மின்சார கையுறை வாயிலாக தொடும் நபருக்கு கடுமையான மின்சார அதிர்ச்சிகள் ஏற்படும்.</p><p> இந்த கையுறைகள் கைது நடவடிக்கை, கலவரம் மற்றும் கைதிகளை அழைத்து செல்லும் போது பயன்படுத்தப்படும்.</p><p> அதிகாரிகளுக்கு ஏற்படும் காயங்களை தவிர்க்கவும், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரவும் இந்த கையுறைகள் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T06:18:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சடுதியாக குறைந்த தங்க விலை: வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/good-news-for-gold-buyers-price-reduced-today-1787897295"></link>
            <id>https://ibctamil.com/article/good-news-for-gold-buyers-price-reduced-today-1787897295</id>
            <summary type="text">இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (28-08-2026) நிலவரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
</p><p>
இதனடிப்படையில், இன்றைய (28-08-2026) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,390,975 ரூபாவாக காணப்படுகின்றது.
</p><p>
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 49,070 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
</p><p></p><h2>தங்க விலை</h2><p>அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 392,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.
</p><p>
அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 44,990 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c47d6ac5-ccd4-4d21-a8a2-9eefb8ef2b43/26-6a91268fa7269.webp' /></p><p>22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 359,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.
</p><p>
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 42,940 ரூபாவாக பதிவாகியுள்ளது.
</p><p>
மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 343,500 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-28T06:11:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரசீக வளைகுடாவில் அமெரிக்காவின் கெடுபிடி! ஈரானுக்கு மேலும் பொருளாதார நெருக்கடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-blockade-zeroes-iranian-oil-exports-1787895876"></link>
            <id>https://ibctamil.com/article/us-blockade-zeroes-iranian-oil-exports-1787895876</id>
            <summary type="text">ஈரானியத் துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடற்படைத் தடை மற்றும் புதிய பொருளாதாரத் தடைகள் ஈரானின் நலிவடைந்த பொருளாதாரத்தை மேலும் சீர்குலைக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானியத் துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடற்படைத் தடை மற்றும் புதிய பொருளாதாரத் தடைகள் ஈரானின் நலிவடைந்த பொருளாதாரத்தை மேலும் சீர்குலைக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>அமெரிக்க நிதிச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) இதனை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
கடந்த 14 நாட்களில் பாரசீக வளைகுடா வழியாக 130 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயைப் பாதுகாப்பாக வெளியேற்ற அமெரிக்கா வழிவகுத்துள்ளதாகவும் ஆனால் ஈரானால் ஒரு பீப்பாய் எண்ணெயைக் கூட ஏற்றுமதி செய்ய முடியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
</p><p></p><h2>ஈரானியத் துறைமுகங்கள்</h2><p>ஈரானியத் துறைமுகங்களை நோக்கிய மற்றும் அங்கிருந்து செல்லும் எண்ணெய்க் கப்பல் போக்குவரத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த அமெரிக்கக் கடற்படை முகாமிட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13b21a15-b65b-4672-9969-57a972ff7f34/26-6a9123999021d.webp' /></p><p>இந்தநிலையில் ஈரானின் எஞ்சிய பொருளாதார வளங்களையும் சர்வதேச நிதியமைப்பில் இருந்து துண்டித்து அந்நாட்டை முற்றிலும் தனிமைப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.</p><p>கடந்த 14 நாட்களில் அமெரிக்கா 130 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயைப் பாதுகாப்பாகக் கடத்த உதவியுள்ள வேளையில், ஈரானின் ஏற்றுமதி பூஜ்ஜியமாக வீழ்ச்சியடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T06:07:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா ஏரியின் பெயரை மாற்றிய டிரம்ப்; சுட சுட பிரதமர் மார்க் கார்னி பதிலடி !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-renames-canadian-lake-mark-carney-retort-1787897383"></link>
            <id>https://canadamirror.com/article/trump-renames-canadian-lake-mark-carney-retort-1787897383</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவுடனான வர்த்தக மோதலுக்கு மத்தியில், வட அமெரிக்காவின் முக்கியமான ஐந்து பெரிய ஏரிகளில் ஒன்றான Lake Ontario-வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவுடனான வர்த்தக மோதலுக்கு மத்தியில், வட அமெரிக்காவின் முக்கியமான ஐந்து பெரிய ஏரிகளில் ஒன்றான Lake Ontario-வின் பெயரை அமெரிக்க அரசு பயன்பாட்டில் “Lake America” என மாற்ற உத்தரவிட்டுள்ளார்.</p><p> 
 
 இந்த பெயர் மாற்றம் அமெரிக்க மத்திய அரசின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டுக்கு மட்டுமே பொருந்தும். கனடா, சர்வதேச அமைப்புகள் அல்லது பிற நிறுவனங்கள் பழைய பெயரான Lake Ontario-வை தொடர்ந்து பயன்படுத்தலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5a3c4f3-b361-40c5-bf49-e174d2709d92/26-6a912628d8e21.webp' /></p><h2>நியூயார்க் இதை அந்த பெயரில் அழைக்காது</h2><p>
</p><p> 
இந்த அறிவிப்புக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 
400 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றை கொண்ட இந்த ஏரியின் பெயர், கனடா மற்றும் அமெரிக்கா நாடுகளாக உருவாவதற்கு முன்பே பயன்பாட்டில் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

அத்துடன் நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுலும் “நியூயார்க் இதை அந்த பெயரில் அழைக்காது” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
</p><p> 
Lake Ontario-வின் நீர்ப்பரப்பில் சுமார் 52 சதவீதம் கனடாவிலும், மீதமுள்ள பகுதி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்திலும் அமைந்துள்ளது.</p><p>

 இதனால் பெயர் மாற்றம் கனடாவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஏற்கனவே கனடாவுடன் பல பில்லியன் டாலர் வர்த்தக வரிகள் தொடர்பாக மோதல் நீடித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை அமெரிக்கா - கனடா உறவை மேலும் பதற்றமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-28T06:07:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனிம எண்ணெய் மற்றும் எரிவாயு பரிசீலனைக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது - சுனில் ஹந்துன்னெத்தி எம் பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mannar-national-salt-co-new-building-inaugurated-1787893101"></link>
            <id>https://tamilwin.com/article/mannar-national-salt-co-new-building-inaugurated-1787893101</id>
            <summary type="text">கனிம வளங்கள் நிறைந்த மன்னார் மாவட்டத்தில் கனிம எண்ணெய் மற்றும் எரிவாயு பரிசீலனைக்கு அரசு தற்போது நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது என தொழில்துறை மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனிம வளங்கள் நிறைந்த மன்னார் மாவட்டத்தில் கனிம எண்ணெய் மற்றும் எரிவாயு பரிசீலனைக்கு அரசு தற்போது நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது என தொழில்துறை மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.</p><p> 

நேற்று(27.08.2026) நடைபெற்ற மன்னார் தேசிய உப்பு நிறுவனம் புதிய நிர்வாகத் தொகுதி மற்றும் களஞ்சியசாலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>2 கோடியே 58 இலட்சம்&nbsp;ரூபா&nbsp;ஒதுக்கீடு</h2><p>
</p><p>மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்திற்கு காலடி எடுத்து வைக்கும் பொழுது, நடப்பு அரசாங்கத்தின் ஒரு அமைச்சராக நான் வருகைத்தந்திருந்தேன். </p><p>இன்று பல பேரையும் இங்கு காணக்கூடியதாக இருக்கிறது. 

அதே நேரத்திலே, நான் இந்த இடத்தில் பழைய மன்னார் உப்பு கூட்டுத்தாபனத்தின் கட்டிடத் தொகுதியின் ஒரு புகைப்படத்தை பார்த்தேன்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/145a2ea6-8e91-4283-bb45-6eb2f5f01c1b/26-6a911f29965fa.webp' /></p><p>இதனையடுத்து இந்த உப்பளத்தின் 4,000 ஏக்கர் நிலப்பரப்பையும் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற தேவைப்பாடு எங்களுக்கு இருந்தது. 

இதற்காக நாங்கள் 2 கோடியே 58 இலட்சம் ரூபாவை திரைசேரியிலிருந்து ஒதுக்கீடு செய்து இந்தக் கட்டிடத்தொகுதியை நாம் அமைத்திருக்கிறோம்.</p><p>
இந்த உப்பு நிறுவனத்திற்காக நாம் ஒதுக்கிய இந்தப் பணம், உங்களது வியர்வையினால் பெறப்பட்ட பணமாகும். அதாவது, நீங்கள் உற்பத்தி செய்த உப்பினை விற்று பெற்ற இலாபத்தினால் திரைசேரிக்கு வழங்கப்பட்ட பணத்திலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது.</p><h2>தேசிய உப்பு உற்பத்தி</h2><p> </p><p>

ஆகவே, இது உங்களுடைய சொத்து.உங்களது உழைப்பினால் இந்தப் பணம் சம்பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதை நான் இந்த சந்தர்ப்பத்தில் சந்தோஷத்துடன் தெரிவிக்க வேண்டும்.
</p><p>
அதுமட்டுமல்லாமல், உங்களுக்குத் தெரியும், உப்பு இல்லாமல் உணவு இல்லை. ஆகவே, எல்லோருக்கும் உப்பு அத்தியாவசியமான ஒரு பொருள். ஆனால், எல்லோராலும் இந்த உப்பு உற்பத்தி செய்ய முடியாது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c963eb4-ea81-4f9c-97a1-105bb7475178/26-6a911f2a865d2.webp' /></p><p>உப்பு உற்பத்தி செய்வதற்கு ஒரு காலம் தேவை. அதே நேரத்தில், சிறந்த சூரிய ஒளி, கடல் நீர் மற்றும் நல்ல காற்று கிடைக்கப் பெற வேண்டும். இதன் ஊடாகவே தூய்மையான உப்பை உற்பத்தி செய்ய முடியும்.
</p><p>
உங்களுக்குத் தெரியும், 788 மில்லியன் ரூபாய் நாங்கள் இந்த உப்பு உற்பத்திக்கு முதலீடு செய்து, அதில் 2 கோடியே 58 மில்லியன் ரூபாய்கள் எங்களுக்கு வருமானமாகக் கிடைக்க பெற்றிருக்கின்றது.
</p><p>
அதே நேரத்தில், இந்த தேசிய உப்பு உற்பத்தியில் 100க்கு 30 சதவீதமான உப்பு மன்னார் உப்பளத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது என்பதையும் இந்த இடத்திலே ஞாபகமூட்டல் வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T06:05:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாபா வங்காவின் கணிப்பு: 2026 செப்டம்பரில் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/baba-vanga-prediction-for-september-who-get-luck-1787892016"></link>
            <id>https://manithan.com/article/baba-vanga-prediction-for-september-who-get-luck-1787892016</id>
            <summary type="text">Baba Vanga Prediction For September 2026: எதிர்காலத்தை கணிக்கும் தீர்க்கதரிசிகள் என்று வரும்போது, உலகப் புகழ்பெற்ற பாபா வங்கா முக்கியமானவராகக் கருதப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>Baba Vanga Prediction For September 2026: எதிர்காலத்தை கணிக்கும் தீர்க்கதரிசிகள் என்று வரும்போது, உலகப் புகழ்பெற்ற பாபா வங்கா முக்கியமானவராகக் கருதப்படுகிறார். உலக வரலாற்றில் நிகழ்ந்த பல முக்கிய சம்பவங்களை அவர் முன்கூட்டியே கணித்ததாகக் கூறப்படுகிறது.</p><p> இதனால், அவரது கணிப்புகள் இன்றும் அதிக ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. அந்தவகையில்,&nbsp; 2026-ஆம் ஆண்டின் கடைசி மாதங்கள் சில ராசிக்காரர்களுக்கு திருப்புமுனையாக அமையும் என்ற கணிப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e173997f-7575-4699-8709-38ed8235a2af/26-6a911b3c0d2d6.webp' /></p><p></p><p> </p><p>குறிப்பாக, செப்டம்பர் 2026-ல் கிரகங்களின் அமைப்பு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும் எனக் கூறப்படுகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f0a8c7e-3827-48fe-8eca-57d50590d4c9/26-6a911b3cb3dab.webp' /></p><h2>
</h2><p>பாபா வங்காவின் வைரலாகும் கணிப்பின்படி, செப்டம்பர் 2026 ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பான மாதமாக இருக்கும். முதலீடுகள் மற்றும் சொத்து பரிவர்த்தனைகளில் லாபம் கிடைக்கலாம்.</p><p> கடின உழைப்பிற்கான பலன்களைப் பெறுவதுடன், வேலையில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும், வியாபாரிகளுக்கு புதிய வாய்ப்புகளும் கிடைக்கக்கூடும். இதனால் வாழ்க்கையில் திருப்தியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
</p><h2>
சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14da28c2-c334-4e20-89c3-af0403665771/26-6a911b3d68eaf.webp' /></p><p>பாபா வங்காவின் கணிப்பின்படி, செப்டம்பர் 2026 சிம்ம ராசியினருக்கு பணமும் புகழும் தேடிவரும் காலமாக அமையும். அவர்களின் தலைமைத்துவப் பண்புகள் முன்னேற்றத்திற்கு உதவும்.</p><p>பதவி உயர்வு, புதிய தொழில் முயற்சி அல்லது பெரிய ப்ராஜெக்ட் மூலம் வருமானம் அதிகரிக்கக்கும் சோம்பேறித்தனத்தைத் தவிர்த்து சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்தால், இந்த காலகட்டத்தில் நிதி நிலையில் உயர்வு உறுதி.&nbsp;</p><h2>
விருச்சிகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9acaa81-68ce-4381-ac88-276ff2791c0b/26-6a911b3e2146a.webp' /></p><h2>
</h2><p>பாபா வங்காவின் வைரலாகும் கணிப்பின்படி, செப்டம்பர் 2026-ல் விருச்சிக ராசியினர் எடுக்கும் துணிச்சலான முடிவுகள் நல்ல பலனை கொடுக்கும்.</p><p>முதலீடுகளில் கணிசமான லாபம் கிடைத்து, நிதி நிலை வலுப்பெறலாம். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பும், எதிர்காலத்திற்கு உதவும் முக்கியமான நபரின் நட்பும் கிடைக்கலாம். </p><p>குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறுவதுடன், புதிய வியாபாரம் தொடங்க விரும்புவோருக்கும் இந்த மாதம் சாதகமாக இருக்கும்.
</p><h2>
கும்பம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2e8f27a-c51f-46e2-879c-4059e2924c09/26-6a911b3eca56a.webp' /></p><p></p><h2>
</h2><p>பாபா வங்காவின் கணிப்புப்படி, செப்டம்பர் 2026 கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான மாதமாக இருக்கலாம். தொழில் வாழ்க்கையில் சிறப்பான மாற்றங்கள் ஏற்படும்.</p><p>வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கவும், பணியில் இருப்பவர்களுக்கு மரியாதை மற்றும் புதிய பொறுப்புகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.</p><p>அவர்களின் தலைமைத்துவம் மற்றும் நிர்வாகத் திறன்கள் வலுப்பெற்று, வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp;</b></p><p></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b style="text-decoration-line: underline;"> </b><u><b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></b></u><b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">&nbsp;</a></b></td></tr></tbody></table><p><br></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T06:05:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[Gold Price : தொடர்ந்து சரியும் தங்க விலை: இன்று சவரன் எவ்வளவு?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/today-august-28th-2026-gold-and-silver-price-1787896451"></link>
            <id>https://manithan.com/article/today-august-28th-2026-gold-and-silver-price-1787896451</id>
            <summary type="text">இன்றைய ஆகஸ்ட் 28ஆம் தேதி தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. விலை விபரம் குறித்து விரிவாக இந்த பதிவில் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய ஆகஸ்ட் 28ஆம் தேதி தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. விலை விபரம் குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p>ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக விலை குறையும் போக்கு காணப்படுகிறது.குறிப்பாக, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வரை தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e34a5c1-5d1b-4c37-89be-2b4c04d5820c/26-6a9124c2b3a69.webp' /></p><p></p><p> ஆனால், நேற்று ஒரே நாளில் இரண்டு முறை தங்கம் விலை அதிரடியாகக் குறைந்தது. இதன் காரணமாக தங்கம் வாங்க காத்திருப்பவர்களிடையே விலை நிலவரம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
</p><p>
நேற்று காலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.14,940 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,19,520 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
</p><p>
இதையடுத்து, நேற்று மாலை மீண்டும் தங்கம் விலை சரிந்தது. மாலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.215 குறைந்து ரூ.14,725 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.1,720 குறைந்து ரூ.1,17,800 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce9d2fc1-43eb-4466-9978-f481ba5d6163/26-6a9124c36607c.webp' /></p><h2>இன்றைய நிலவரம்</h2><p>

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை மேலும் சரிந்துள்ளது. அதன்படி, 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.75 குறைந்து ரூ.14,650 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ.1,17,200 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
</p><p>
இதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது. 18 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.75 குறைந்து ரூ.12,420 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ.99,360 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc7e45c5-7400-4ef2-b397-ac96bec7975f/26-6a9124c4198e4.webp' /></p><p></p><p>
</p><p>தங்கத்தைப் போலவே வெள்ளி விலையிலும் இன்று சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.260 ஆகவும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ரூ.2,60,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T06:04:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சக்களுக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் கிடையாது! பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க விளாசல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-jayasinghe-explanation-regard-government-1787895821"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-jayasinghe-explanation-regard-government-1787895821</id>
            <summary type="text">அரசாங்கம் சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு
எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த
ஜய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கம் சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு
எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த
ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம் மற்றும் பொருளாதார மீட்சி தொடர்பில் கருத்து
தெரிவிப்பதற்கு ராஜபக்சக்களுக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் கிடையாது
என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
மஹரகம பகுதியில் நேற்று (27.08.2026) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p><h2>அரசமைப்பின் 22ஆவது திருத்தம்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சியினரே மக்கள் மத்தியில்
தவறான நிலைப்பாட்டைத் தோற்றுவித்துள்ளனர். இந்தத் திருத்தம் நாட்டுக்கும்
நாட்டு மக்களுக்கும் முற்றிலும் சாதகமானதே தவிர எவ்விதத்திலும் பாதகமானதல்ல.
</p><p>
எதிர்க்கட்சியில் உள்ள பெரும்பாலானோர் ஊழல், மோசடிகளுடன் தொடர்புடையவர்கள்,
பலர் பிணையில் உள்ளவர்களுமாவர். கிடப்பில் போடப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பான
விசாரணைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டு வருவதனாலேயே இவர்கள்
கலக்கமடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c551454-1735-4071-9c35-5ef04227d07f/26-6a91249d1243c.webp' /></p><p> ஊழல்வாதிகள் சிறைக்குச் செல்வது அவர்களின் தனிப்பட்ட
பிரச்சினையே தவிர, அது மக்களின் பிரச்சினையல்ல என்றார்.</p><h2>நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை</h2><p>

இந்த நாட்டில் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை ராஜபக்சக்களின்
காலத்தில் தான் முழுமையாக இல்லாமல் போனது. முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி
பண்டாரநாயக்கவை அவர்கள் முறையற்ற வகையிலேயே பதவி நீக்கம் செய்தனர். </p><p>அதற்காக
அவர்கள் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் பிரதி
அமைச்சர் மஹிந்த ஜயசிங்க கடுமையாகச் சாடியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T06:03:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐ.நா. மனித உரிமை பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்குமாறு வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/un-the-semmani-issue-at-the-human-rights-council-1787896255"></link>
            <id>https://tamilwin.com/article/un-the-semmani-issue-at-the-human-rights-council-1787896255</id>
            <summary type="text">செம்மணி மனிதப்புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி
செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய
நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனிதப்புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி
செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய
நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இந்த விவகாரம் குறித்து அழுத்தம் பிரயோகிக்க
வேண்டும் என்று அவுஸ்திரேலிய செனெட் சபை உறுப்பினர் டேவிட் ஷுபிரிட்ஜ் அந்நாட்டு
அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போதே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை
விடுத்துள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில்,


</p><h2>செம்மணியில் தடயவியல் அகழ்வாய்வுகள்</h2><p>
இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதற்கு அவுஸ்திரேலிய ஏற்கனவே உறுதியளித்திருந்த நிலையில், அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய சரியான
தருணம் இது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6272753d-362d-4772-b12f-422e828fb522/26-6a9123efafd85.webp' /></p><p>
</p><p>"இலங்கையில் யாழ். செம்மணியில் இடம்பெற்று வரும் தடயவியல் அகழ்வாய்வுகளில் 500
இற்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. </p><p>சில
எலும்புக்கூடுகளின் அளவை வைத்துப் பார்க்கும்போது, அவை குழந்தைகள் மற்றும்
சிறுவர்களுக்குச் சொந்தமானவையாக இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.</p><p>

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தரவுகளின்படி இலங்கையில் நாடளாவிய ரீதியில்
சுமார் 20 மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், அவற்றுள்
குறைந்தபட்சம் ஒரு புதைகுழி தொடர்பில் கூட முழுமையான விசாரணைகள்
நடத்தப்படவில்லை.</p><h2>சர்வதேச மன்னிப்புச்சபை ஆதரவு</h2><p>
</p><p>
மேலும், 1998ஆம் ஆண்டு முதன்முறையாகச் சர்வதேச மன்னிப்புச் சபை சர்வதேச
ஆதரவுடனான சுயாதீன விசாரணைக்கு அழைப்பு விடுத்ததிலிருந்து செம்மணி விவகாரம்
ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b62a5ded-8532-4030-94d1-ed7af539628a/26-6a9123f061a0b.webp' /></p><p>
</p><p>
அண்மையில் செம்மணி மனிதப் புதைகுழியை நேரில் பார்வையிட்ட ஐக்கிய நாடுகள் மனித
உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், தடயவியல் நிபுணர்களின் பங்கேற்புடன்
சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்
தொடரில் இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை
உறுதிப்படுத்த ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலியா உறுதியளித்திருந்தது.
</p><p>அந்த வாக்குறுதியை இப்போது நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கமைய, செம்மணி
தளத்தைப் பாதுகாத்தல், மனித எச்சங்களைப் பாதுகாத்தல் மற்றும் சுயாதீன
விசாரணைகளை உறுதிப்படுத்த இலங்கை அரசுடன் இணைந்து செயற்படுதல் போன்ற
நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய அரசு உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்று டேவிட்
ஷுபிரிட்ஜ் வலியுறுத்தினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T06:00:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகில் குறைந்த ஊதியம் பெறும் நாடுகளில் இலங்கை பெற்றுள்ள இடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sl-ranks-120th-among-130-countries-1787894581"></link>
            <id>https://tamilwin.com/article/sl-ranks-120th-among-130-countries-1787894581</id>
            <summary type="text"> உலகளாவிய குறைந்தபட்ச ஊதிய ஒப்பீட்டில், கணக்கெடுக்கப்பட்ட 130 நாடுகளில் இலங்கை 120ஆவது இடத்தில் உள்ளது

வாழ்க்கைச் செலவு மற்றும் தொழிலாளர்களின் கொள்...</summary>
            <content type="html"><![CDATA[<p> உலகளாவிய குறைந்தபட்ச ஊதிய ஒப்பீட்டில், கணக்கெடுக்கப்பட்ட 130 நாடுகளில் இலங்கை 120ஆவது இடத்தில் உள்ளது
</p><p>
வாழ்க்கைச் செலவு மற்றும் தொழிலாளர்களின் கொள்வனவு திறனைக் கருத்திற்கொண்டு கணக்கிடப்பட்ட இந்தத் தரவு அடிப்படையில், இலங்கையின் குறைந்தபட்ச ஊதியத்தின் கொள்வனவுத் திறன் 200 அமெரிக்க டொலர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது</h2><p>சுவிட்சர்லாந்து (3,804 டொலர்), ஜெர்மனி (2,928 டொலர்), ஐக்கிய இராச்சியம் (2,902 டொலர்) மற்றும் நெதர்லாந்து (2,876 டொலர்) ஆகிய நாடுகள் முதல் இடங்களிலும் உள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bace784-b396-489c-a0ce-eb78a7ecfc1d/26-6a9123d97afb9.webp' /></p><p>
ஆசியாவில் தென் கொரியா (2,362 டொலர்) 11ஆவது இடத்தையும், ஜப்பான் (1,839 டொலர்) 16ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
</p><p>
தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தான் (68 வது இடம் - 570 டொலர்), நேபாளம் (78 வது இடம் - 490 டொலர்), பங்களாதேஷ் (89 வது இடம் - 379 டொலர்) மற்றும் இந்தியா (111 வது இடம் - 233 டொலர்) ஆகிய நாடுகள் இலங்கையை விட முன்னிலையில் உள்ளன.</p><p>

இலங்கைக்குக் கீழே நைஜர், பூட்டான், கானா போன்ற வெறும் 10 நாடுகள் மட்டுமே உள்ளன.

இந்த மதிப்பீடுகள் நேரடி அமெரிக்க டொலர் வருமானத்தின் அடிப்படையில் அல்லாமல், அந்தந்த நாடுகளின் உள்நாட்டு கொள்வனவு திறனின் அடிப்படையில் (வரி மற்றும் பிற கொடுப்பனவுகள் இல்லாமல்) கணக்கிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T06:00:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[டாக்சிக் 100 கோடி வசூலா..பெண்களுக்கு மரியாதை கொடுக்கல!! கொட்டித்தீர்த்த அண்ணாமலை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/annamalai-raises-concerns-regarding-the-toxic-1787897740"></link>
            <id>https://viduppu.com/article/annamalai-raises-concerns-regarding-the-toxic-1787897740</id>
            <summary type="text">அண்ணாமலைவி தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் டாக்சிக் படத்தினை மறைமுகமாக தாக்கி பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அண்ணாமலை</h2><p>வி தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் டாக்சிக் படத்தினை மறைமுகமாக தாக்கி பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில், ஒரு படத்தை பற்றி கேள்விப்பட்டேன். இரண்டு விதமான கருத்து. அந்த படத்தை நான் சொன்னால் என்மீது வழக்கு போட்டுவிடுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c451dc3-7a31-486c-99a7-2e467841ece1/26-6a91278f3df6b.webp' /></p><p> </p><p>ஏற்கனவே என்மீது ஏகப்பட்ட வழக்குகள் இருக்கிறது. எனவே படத்தின் பெயரை சொல்லாமலே சொல்கிறேன். அப்படம் நேற்று தான் ரிலீஸாச்சு. என் டி டிவியில் பார்த்தேன் முதல் நாளிலேயே ரூ. 104 கோடி வசூலித்துள்ளதாம். ஒரு பெரிய நடிகர் நடித்த படம் அது.</p><p> அப்படம் முதல் நாளிலேயே ரூ. 104 கோடி வசூல். அப்படத்திற்கு பெயரையே நீங்க பார்த்தீர்கள் என்றால், டாக்சிக்கா நாம் பல விஷயங்களில் பேசுகிறோம், அதையே அவர்கள் பெயராக வைத்துள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d26f0955-cd13-4842-923c-65a4ddb28ea0/26-6a91278e8d379.webp' /></p><h2>பெண்களுக்கு மரியாதை</h2><p> அப்போதுதான் நான் பார்த்தேன், படத்தில் நீங்க பெண்களை சித்தரிக்கின்ற விஷயத்தினை சொல்லி, அதை முதல் நாளில் ரூ. 104 கோடி வசூல் செய்ய வைத்து, அதை வந்து ஒரு, ஒரு நாளும் நம் குழந்தைகளை, நம் மாணவர்களை பார்க்க வைத்தால், நம் நாட்டில் பெண்கள் பாதுகாப்பு எங்க நடக்கும்? </p><p>நாம் எல்லாம் ஊர் ஊராக கல்லூரியாக சென்று தொண்டைத்தண்ணி வத்த நாம் பேசுகிறோம். ஆனால் ஒரு படத்தை எடுக்கிறார்கள், சென்சாரிலும் கிளியர் பண்றாங்க, தியேட்டருக்கும் கொண்டு வர்றாங்க. அப்படத்தில் பெண்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று கேட்டால் உரிமை மரியாதை கொடுக்கப்படவில்லை என்று பேசியிருக்கிறார் அண்ணாமலை.</p>]]></content>
            <updated>2026-08-28T06:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் அரிய வகை மலேரியா பாதிப்பு ; இரு ஊழியர்கள் பலி; தீவிர விசாரணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/malaria-at-frankfurt-airport-two-employees-dead-1787896882"></link>
            <id>https://canadamirror.com/article/malaria-at-frankfurt-airport-two-employees-dead-1787896882</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஜெர்மனியின் பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள அரிய வகை மலேரியா பாதிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையத்தில் பணியாற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஜெர்மனியின் பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள அரிய வகை மலேரியா பாதிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையத்தில் பணியாற்றிய ஆறு ஆண் ஊழியர்களுக்கு “மலேரியா டிராபிகா” எனப்படும் தீவிரமான மலேரியா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p> இவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

மற்ற நான்கு பேரும் தற்போது சிகிச்சை பெற்று குணமடைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0e796b9-1805-4111-9d62-d3ec77261754/26-6a912433ee341.webp' /></p><h2>விமானம் மூலம்&nbsp; &nbsp;கொசுக்கள் ஜெர்மனிக்குள் வந்திருக்கலாம்&nbsp;</h2><p>&nbsp;பாதிக்கப்பட்ட எந்த ஊழியரும் சமீபத்தில் மலேரியா அதிகமாக காணப்படும் நாடுகளுக்கு பயணம் செய்யவில்லை. இதனால் விமானம் மூலம் பாதிக்கப்பட்ட கொசுக்கள் ஜெர்மனிக்குள் வந்திருக்கலாம் என சுகாதார அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.</p><p> விமானத்தில் வந்த கொசுக்கள் விமான நிலைய ஊழியர்களை கடித்ததன் மூலம் தொற்று ஏற்பட்டிருக்கலாம். இதுபோன்ற சம்பவம் “Airport Malaria” என அழைக்கப்படுகிறது.
</p><p> 
ஜெர்மனியில் கடந்த பல ஆண்டுகளாக உள்ளூரிலேயே மலேரியா பரவுவது மிகவும் அரிதானதாக உள்ளது. எனவே பயண வரலாறு இல்லாதவர்களுக்கு மலேரியா இருக்கலாம் என்பதை மருத்துவர்கள் உடனடியாக சந்தேகிக்காமல் போகும் அபாயம் உள்ளது.</p><p> இதனால் நோய் கண்டறிதலில் தாமதம் ஏற்பட்டு, தீவிர பாதிப்புக்கான வாய்ப்பு அதிகரிக்கலாம் என ராபர்ட் கோச் நிறுவனம் எச்சரித்துள்ளது.
</p><p> 
பிராங்க்பர்ட் விமான நிலையத்தைச் சுற்றிலும் தற்போது கொசுப் பொறிகள் அமைக்கப்பட்டுள்ளன. பிடிபடும் கொசுக்கள் பெல்ஜியத்தில் உள்ள வெப்பமண்டல மருத்துவ நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு மரபணு பரிசோதனை செய்யப்பட உள்ளன.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T05:58:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட குடும்பப் பெண் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/woman-dies-after-alleged-assault-by-husband-friend-1787889759"></link>
            <id>https://ibctamil.com/article/woman-dies-after-alleged-assault-by-husband-friend-1787889759</id>
            <summary type="text">கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட குடும்பப் பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.கூர்மையான ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு வைத்தியசால...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட குடும்பப் பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.</p><p>கூர்மையான ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.</p><p>மட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட மஞ்சந்தொடுவாய் பகுதியில் வசிக்கும் 68 வயதான ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>குறித்த குறித்த மரணமான பெண் தனது வீட்டில் கணவருடன் தங்கி இருந்த நிலையில்
கணவரின் நண்பரான சந்தேக நபருடன் ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தின் போது கூரிய
ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில்
சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர் .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c414c39e-e2b4-4682-8b51-9c0319d07ba3/26-6a91237b88f3e.webp' /></p><p>குறித்த சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் ஏ எல் முனாஸ் நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டார்&nbsp;&nbsp;</p><p>
சந்தேக நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பாக காத்தான்குடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T05:58:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளப் பெருவெள்ளம்... பிரித்தானியா, அமெரிக்கா உட்பட 35 நாடுகளின் பயணிகள் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-floods-35-countries-citizens-1787896553"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-floods-35-countries-citizens-1787896553</id>
            <summary type="text">35 Countries Citizens Are Missing After Nepal Floods: நேபாள வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு காணாமல் போன 35 நாடுகளின் பயணிகள்.
நேபாளம்-திபெத் எல்லைப் பகுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>35 Countries Citizens Are Missing After Nepal Floods: நேபாள வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு காணாமல் போன 35 நாடுகளின் பயணிகள்.
</p><p>நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, 1,400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதுடன், 469 பேர்கள் மரணமடைந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டது.</p><h2>பேரிடர் மேலாண்மை</h2><p>
</p><p>இந்த எண்ணிக்கைகள் அடுத்த சில மணி நேரங்களில் மாறுபடக்கூடும்; ஒரு பெரும் பேரிடருக்குப் பிறகு இது இயல்பான ஒன்று என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். </p><p>இரட்டை குடியுரிமை கொண்டவர்களை இருமுறை கணக்கில் சேர்ப்பது, கண்டெடுக்கப்பட்ட உடல்களைக் காணாமல் போனவர்களின் பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது மற்றும் பேரிடர் காலச் சூழலில் நிலவும் குழப்பம் ஆகியவை புள்ளிவிவரங்களில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6416a3a-6acc-4e87-a429-22acbd8d47bf/26-6a9122ebda4fd.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், குறைந்தது 517 வெளிநாட்டினர் உட்பட 910 பேர் காணாமல் போயுள்ளதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை அமைப்பு வியாழக்கிழமை தெரிவித்தது. </p><p>திபெத்துடனான எல்லைப் பகுதியில், 260 வெளிநாட்டினர் உட்பட 558 பேர் காணாமல் போயுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இவ்விரு எல்லைப் பகுதிகளிலும் காணாமல் போனவர்களின் மொத்த எண்ணிக்கை 1,468 எனக் கூறப்படுகிறது.</p><p></p><p> </p><p>நேபாள சுற்றுலா வாரியம் வியாழக்கிழமையன்று, காணாமல் போன நேபாள மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பயணிகளின் மொத்த எண்ணிக்கையை 667 என்று தெரிவித்தது. </p><p>நேபாளத்தில் காணாமல் போனவர்களில் சுமார் 100 சீனர்களும் அடங்குவர் என்று சீனாவின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 24 சீனர்கள் குறித்த தகவல் ஏதும் இல்லை என்று நேபாள சுற்றுலா வாரியம் கூறியுள்ளது. </p><p>நேபாளத்தின் சுற்றுலா வாரியத்தின் புதிய புள்ளிவிவரங்களில், இந்தியாவில் இருந்து வந்தவர்களில் 290 பேர் காணாமல் போனதைக் காட்டின; மேலும் 84 பேர் மீட்கப்பட்டுள்ளனர். </p><p>அமெரிக்கக் குடிமக்கள் 90 பேர்கள் காணாமல் போயுள்ளதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது; அவர்களில் மூவர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்கர்கள் யாரும் உயிரிழந்ததாகத் தகவல் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>நேபாள சுற்றுலா வாரியம்</h2><p> </p><p>முன்னதாக வியாழக்கிழமையன்று, காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 65 என்று நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்திருந்தது. உக்ரைன் தரப்பில் 56 பயணிகளை இதுவரை தொடர்பு கொள்ள முடியாமல் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். </p><p>இதனிடையே, நேபாளத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலேசியர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் வியாழக்கிழமை தெரிவித்தார். வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து காணாமல் போன அவுஸ்திரேலியக் குடிமக்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளதாக அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். </p><p>பிரித்தானியாவைச் சேர்ந்த 33 பேர் காணாமல் போயுள்ளதாக நேபாள சுற்றுலா வாரியத்தின் புள்ளிவிவரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன. கனேடியர்கள் 25 பேர் மாயமாகியுள்ளதாக நேபாளம் தரப்பில் தெரிவித்துள்ள நிலையில், </p><p>நேபாளம் மற்றும் திபெத்தில் உள்ள 30 கனேடியர்கள் மற்றும் நிரந்தர வசிப்பாளர்கள் தொடர்பில் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை அரசாங்கம் அறிந்திருக்கிறது என்று கனடாவின் வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் கூறியுள்ளார். </p><p>இதனிடையே, தென் கொரியா, சிங்கப்பூர், ஜேர்மனி, ரஷ்யா உட்பட 35 நாடுகளின் பயணிகள் இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T05:53:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளப் பெருவெள்ளம்... மாயமான பிரித்தானியரின் பெற்றோர்: சீனாவிடம் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/briton-ask-china-for-help-missing-parents-in-flood-1787895262"></link>
            <id>https://news.lankasri.com/article/briton-ask-china-for-help-missing-parents-in-flood-1787895262</id>
            <summary type="text">Briton whose parents are missing in Nepal flash floods appeals to China for help: நேபாளப் பெருவெள்ளத்தின்போது மாயமான தன் பெற்றோரை மீட்க உதவுமாறு பிரித...</summary>
            <content type="html"><![CDATA[<p>Briton whose parents are missing in Nepal flash floods appeals to China for help: நேபாளப் பெருவெள்ளத்தின்போது மாயமான தன் பெற்றோரை மீட்க உதவுமாறு பிரித்தானியர் ஒருவர் சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
நேபாள - திபெத் பெருவெள்ளம் 400க்கும் மேற்பட்டவர்களை பலிவாங்கியுள்ள விடயம் உலகை உலுக்கியுள்ள நிலையில், 1,400க்கு மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளார்கள், அவர்களுடைய நிலை தெரியவில்லை!
</p><h3>
மாயமான பிரித்தானியரின் பெற்றோர்
</h3><p>
அப்படி மாயமானவர்களில் 33 பிரித்தானியர்களும் அடங்குவர். இந்நிலையில், பிரித்தானியக் குடிமகனான ஆனந்த் பட்டேல் என்பவர், நேபாள பெருவெள்ளத்தின்போது மாயமான தன் பெற்றோர் குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82e2ebaf-e34f-4cb7-9e80-39415fe6cdd0/26-6a911ddf5defc.webp' /></p><p>

அதாவது, நேபாளத்துக்கு புனித யாத்திரை சென்ற தன் பெற்றோரான பிபின் பட்டேல் மற்றும் மாலா பட்டேல் ஆகியோர், பெருவெள்ளம் தாக்கும் முன்பே நேபாள சீன எல்லையைக் கடந்து திபெத்துக்குள் நுழைந்திருக்கக்கூடும் என்பது, எல்லை ஆவணங்களின்படி தெரியவந்துள்ளதாக ஆனந்த் தெரிவித்துள்ளார்.
</p><h3>
சீனாவிடம் கோரிக்கை
</h3><p>
ஆகவே, தனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தன் பெற்றோரைக் கண்டுபிடிக்க உதவுமாறு சீன அதிகாரிகளிடம் நேரடியாக கோரிக்கை விடுத்துள்ளார் ஆனந்த்.&nbsp;</p><p></p><p>
தன் பெற்றோரைக் காணவில்லை என்னும் விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மட்டுமின்றி, அவர்களுடைய நிலைமை என்ன என்பது தெரியாத விடயம், மேலும் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதற்கிடையில், மற்றும் ஒரு பிரித்தானியக் குடிமகனான சுனில் அமின் என்பவர், தன் மனைவியாகிய ஹேமா அமினும் அவரது சகோதரியும் நேபாள பெருவெள்ளத்தின்போது காணாமல் போய்விட்டதாகவும், அவர்களைத் தொடர்புகொள்ள முயன்றுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T05:39:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 நிமிடங்கள் முன்னதாக பேருந்து சேவை இடம்பெறுவது தொடர்பாக பருத்தித்துறை சாலை முகாமை விளக்கம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pedro-road-camp-explains-bus-service-1787893795"></link>
            <id>https://tamilwin.com/article/pedro-road-camp-explains-bus-service-1787893795</id>
            <summary type="text">கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து
பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான
விளக்கத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 24/8/2026 அன்று இலங்கை போக்குவரத்து சபையின் கேவிலிலிருந்து
பருத்தித்துறை வரையான போக்குவரத்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக சென்றதற்கான
விளக்கத்தினை பருத்தித்துறை சாலை முகாமையாளர் வழங்கியுள்ளனர்.&nbsp;</p><p> கடந்த 24/08/2026 திங்கட்கிழமை 15 நிமிடங்கள் இலங்கை
போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்து கேவிலிலிருந்து மருதங்கேணி ஊடாக
பருத்தித்துறைக்கு தனது முதலாவது சேவையை 15 நிமிடங்கள் முன்னதாக
மேற்கொண்ருந்தது.</p><h2>மிகுந்த சிரமம்</h2><p> இதனால் வழமையாக செல்கின்ற உத்தியோகத்தர்கள், வடமராட்சி
கிழக்கின் பல கிராமங்களிலிருந்தும் க.பொ.த. உயர்தர பரீட்சைக்காக அம்பன்
அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் பருத்தித்துறை நகரின் பல
பாடசாலைகளில் பரீட்சை எழுதுகின்ற மாணவர்கள் பேருந்தை தவற விட்டிருந்த
நிலையில் மிக மிக சிரமங்களுக்கு மத்தியில் அவசர அவசரமாக உரிய நேரத்திற்கு
வாகனங்களிலும், நடந்தும் சென்றிருந்தார்கள். </p><p> </p><p>இது
தொடர்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்த நிலையில் பருத்தித்துறை சாலை முகாமையாளர் எம்மை தொடர்பு கொண்டு விளக்கம்
ஒன்றை அனுப்பியிருக்கின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3691b3c1-ccaf-4ed3-b79d-9ab55a6b0564/26-6a911de61bcd5.webp' /></p><p> </p><p>விளக்கத்தில் மேலும், எமது முதலாவது பேருந்து சேவை கேவிலிலிருந்து மருதங்கேணியூடாக 5:45 மணிக்கு
புறப்படுவது வழமை. ஆனால் தனியார் போக்குவரத்து சேவையினர் தங்களது
சேவையினை குழப்பும் வகையில் அன்றைய தினத்ததிலிருந்து 5:45 மணிக்கு கேவிலிலிருந்து சேவையை ஆரம்பிக்க வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை
அனுமதியளித்திருந்தார்.</p><h2>குழப்பும் செயற்பாடு</h2><p> இதனால் நாம் அன்றிலிருந்து காலை 5:30 மணிக்கு
சேவையை ஆரம்பித்திருந்தோம். ஆனால் அத்தனையும் குழப்பம் வகையில் தனியார்
போக்குவரத்து சங்கம் நாங்கள் புறப்பட தயாரான நேரமான 5:30 மணிக்கு
புறப்பட்டனர். </p><p>இதனால் தான் குறித்த நாள் பரீட்சை எழுத செல்லவிருந்த
மாணவர்கள் உட்பட பலரும் பாதிக்கப்பட்டதாகவும், இந்த நிலைமைக்கு வீதிப் பயணிகள்
போக்குவரத்து அதிகாரசபை தான் காரணம் என்றும் பருத்தித்துறை இலங்கை
போக்குவரத்து சபை முகாமையாளர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T05:36:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொந்தக் காணிகளை உடனடியாகத் திரும்பத் தாருங்கள்! தையிட்டியில் தொடர்ந்த போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/thaiyitti-landowners-demand-their-property-back-1787893691"></link>
            <id>https://ibctamil.com/article/thaiyitti-landowners-demand-their-property-back-1787893691</id>
            <summary type="text">யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.காண...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.</p><p>காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாக குறித்த போராட்டத்தை நேற்று (27-08-2026) முன்னெடுத்திருந்தனர்.</p><p>குறித்த விகாரை அமைந்துள்ள பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள தனியார் காணிகளை எந்தவித தாமதமுமின்றி உரிய காணி உரிமையாளர்களிடம் உடனடியாக மீள வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p></p><h2>காணி உரிமையாளர்கள்</h2><p>காணி உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் தொடர்ச்சியாக இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29784e07-4354-4b1d-99b0-203b6a3f728e/26-6a911ce3f08b1.webp' /></p><p>

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை வேளையில் ஆரம்பித்த இந்தப் போராட்டம், நேற்று மாலை வரை இரண்டு நாள்களாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>மேலும் தமக்குரிய சொந்தக் காணிகளை முழுமையாக மீளப் பெறும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்றும் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-28T05:32:47+00:00</updated>
        </entry>
    </feed>
