<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-24T23:49:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல் லொட்டரி டிக்கெட்டிலேயே 3 கோடி வென்ற இளம்பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/gastonia-woman-wins-100k-dollars-lottery-first-try-1784936689"></link>
            <id>https://news.lankasri.com/article/gastonia-woman-wins-100k-dollars-lottery-first-try-1784936689</id>
            <summary type="text">அமெரிக்காவில் இளம் பெண்ணொருவர் வாங்கிய முதல் லொட்டரி டிக்கெட்டிலேயே அவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
 நார்த் கரோலினா மாநிலம் காஸ்டோனியாவில் வசிக்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் இளம் பெண்ணொருவர் வாங்கிய முதல் லொட்டரி டிக்கெட்டிலேயே அவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
</p><p> நார்த் கரோலினா மாநிலம் காஸ்டோனியாவில் வசிக்கும் காலா ஜெஃப்ரிஸ் (Kahla Jeffries) என்ற பெண், தனது வாழ்க்கையில் முதல் முறையாக வாங்கிய லொட்டரி டிக்கெட்டிலேயே 100,000 டொலர் (இலங்கை பணமதிப்பில் 3.36 கோடி ரூபா) வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.</p><p>காலா, ஹிக்கரி க்ரோவ் ரோடில் உள்ள Will’s Food Store-ல் பெட்ரோல் நிரப்பச் சென்றபோது, தனது அதிர்ஷ்டத்தை ஒருமுறை சோதனை செய்து பார்க்கலாம் என “Cash Payday” என்ற ஸ்கிராட்ச்-ஆஃப் டிக்கெட்டை வாங்கினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f780a48d-19e4-4d55-a290-3d39b0dbbb00/26-6a63f8f341836.webp' /></p><p>அதைச் சுரண்டியபோது, அவர் வெற்றி பெற்றிருப்பதை அறிந்தார். “நான் பார்த்தது சரி தானா என்று முதலில் நம்பவே முடியவில்லை,” என்று அவர் கூறியுள்ளார்.
</p><p>
அவர் வெற்றியை உறுதிப்படுத்திய பின், நார்த் கரோலினா எஜுகேஷன் லொட்டரி அலுவலகத்தில் சென்று பரிசை பெற்றார். மாநில மற்றும் கூட்டாட்சி வரிகள் கழிக்கப்பட்ட பின், அவர் 72,018 டொலர் தொகையை வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.
</p><p>
காலா, இந்த வெற்றித் தொகையைப் பயன்படுத்தி ஒரு புதிய கார் வாங்கவும், தனது கல்விக்காக சேமிக்கவும் திட்டமிட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>இந்தச் சம்பவம், Beginner’s Luck என்ற சொல்லை மீண்டும் உண்மையாக்கியுள்ளது. மக்கள் பொறுப்புடன் விளையாட வேண்டும் என்றும், அதிர்ஷ்டம் எப்போது, எங்கு வந்து சேரும் என்பதை யாரும் கணிக்க முடியாது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T23:43:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை அதிகாரிகளை மிரள வைத்த 79 வயது பொறியியலாளர் ; தாமதமாக வந்த பயணபொதியால் அம்பலமான விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/authorities-shocked-by-79-year-old-engineer-1784936553"></link>
            <id>https://jvpnews.com/article/authorities-shocked-by-79-year-old-engineer-1784936553</id>
            <summary type="text">பண்டார நாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் சுங்கத் துறையின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில், சுமார் ரூ. 110 மில்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>பண்டார நாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் சுங்கத் துறையின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில், சுமார் ரூ. 110 மில்லியன் மதிப்புள்ள கொக்கெய்னை இலங்கைக்குள் கடத்த முயன்ற 79 வயதான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த வேளாண் பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சந்தேகநபர் கடந்த ஜூலை 22 ஆம் திகதி அன்று சியெரா லியோனிலிருந்து புறப்பட்டு, அடிஸ் அபாபா மற்றும் தோஹா வழியாக கத்தார் ஏர்வேஸ் (QR654) விமானத்தில் இலங்கையை வந்தடைந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c0e038a-91f8-4c04-95d6-ac46e91aa876/26-6a63f8d1ecb93.webp' />'</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
அவர் வந்தபோது அவரது கைப்பை சோதனையிடப்பட்டு விடுவிக்கப்பட்டார். ஆனால், அவரது முதன்மைப் பயணப்பெட்டி&nbsp; அதே விமானத்தில் வரவில்லை.
</p><p>
நேற்று (ஜூலை 24) மாலை 6:30 மணியளவில் தாமதமாக வந்த தனது பயணப்பெட்டியைப் பெற அவர் வானூர்தி நிலையத்திற்கு வந்தபோது, சுங்க அதிகாரிகள் பயணப்பெட்டியை எக்ஸ்-ரே பரிசோதனைக்கு உட்படுத்தினர் .
</p><p>
இதன்போது பயணப்பெட்டிக்குள் இருந்த 2 கோப்பு வைத்திருப்புகளில் மிக நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கொக்கெய்ன் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.</p><p></p><p>
</p><p>
அவை சுமார் ரூ. 109.9 மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள , 2,198 கிராம், கொக்கெய்ன் என்பது கண்டறியப்பட்டது.
</p><p>
தனிப்பட்ட முறையில் பயணி இல்லாமல் தாமதமாக வந்த பெட்டியாக இருந்தபோதிலும், சுங்க அதிகாரிகளினால் இந்த துல்லியமான கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பறிமுதல் செய்யப்பட்ட கொக்கெய்னுடன் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம்&nbsp; ஒப்படைக்கப்படவுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T23:42:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய் ஆட்சிக்கு பின் அதிகரித்த இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்! சுட்டு வீழ்த்த கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-fishermen-urge-navy-to-stop-indian-boats-1784934717"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-fishermen-urge-navy-to-stop-indian-boats-1784934717</id>
            <summary type="text">எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய
கடற்றொழில் படகுகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டாவது
கட்டுப்படுத்துங்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய
கடற்றொழில் படகுகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டாவது
கட்டுப்படுத்துங்கள் என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின்
சம்மேளனம் கடற்படையிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
</p><p>
யாழ். மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் இடம்பெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்திய கடற்தொழிலாளர்கள் எமது கடற்பரப்புக்குள்
அத்துமீறி நுழைந்து எமது கடற்றொழில் மக்களின் வாழ்வாதாரத்தை முற்று முழுதாக
அழித்துவிட்டு செல்கின்றனர்.</p><p></p><h2>பெறுமதியான வலை</h2><p>
</p><p>இந்திய கடற்றொழிலாளர்களின் இத்தகைய செயற்பாடு பல வருடங்களாக இடம்பெற்றுவரும் நிலையில்
இதனை கட்டுப்படுத்த இந்திய அரசும் தமிழக அரசும் தவறிவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/483f4cd1-82e4-445f-b878-b7de7970ee8a/26-6a63f6c70848f.webp' /></p><p>
இந்திய தமிழக புதிய முதல்வராக விஜய் பொறுப்பேற்றதன் பின் அதிகளவிலான இந்திய
கடற்றொழிலாளர்கள் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
</p><p>
அண்மையில் தீவகக் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட
இந்திய சட்டவிரோத கடற்றொழிலாளர்கள் எமது கடற்றொழிலாளர்கள் கடலில் வீசியிருந்த பல கோடி
பெறுமதியான வலைகளை அறுத்து நாசம் செய்தனர்.</p><p>
</p><p></p><h2>தொடர்ச்சியான வருகை&nbsp;</h2><p>இந்திய கடற்றொழிலாளர்களின் தொடர்ச்சியான வருகை எமது கடற்றொழிலாளர்களை வாழ்வாதார நீதியாக
பாதிப்பது மட்டுமல்லாது கடற்தொழிலில் இருந்து வேறு தொழில்களுக்கு செல்லவும்
நிர்ப்பந்தித்துள்ளது.</p><p>

இலங்கை கடற்படையிடம் வினையமாக கேட்கிறோம் எல்லை தாண்டும் இந்திய கடற்றொழிலாளர்களை
கட்டுப்படுத்துங்கள் இல்லையேல் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டாவது அவர்களின்
வருகையை கட்டுப்படுத்துங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64f8e322-9442-47ba-abe8-9a94cbc181ce/26-6a63f6c650d59.webp' /></p><p>

எங்களால் இனியும் பொறுமை காக்க முடியாது நாட்டின் ஜனாதிபதியையும் துறைசார்
அமைச்சரையும் சந்தித்து எமது கோரிக்கையை தெளிவாக கூற இருக்கிறோம்.
</p><p>
சட்டத்தை நாங்கள் கையில் எடுக்க விரும்பவில்லை ஆகவே இறையுள்ள எமது கடற்
பகுதியை பாதுகாக்கும் அதிகாரமும் கடமையும் கடற்படையிடம் உள்ள நிலையில் எல்லை
தாண்டும் இந்திய கடற்றொழிலாளர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு
கட்டுப்படுத்துங்கள் நாங்கள் பக்க பலமாக இருப்போம்” என தெரிவித்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T23:36:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை உலுக்கிய 100 வழக்குகளின் முழுப் பட்டியல்.. திடீரென ஒன்றுகூடிய எதிர்க்கட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-government-sri-lanka-politics-ranil-sajith-1784922155"></link>
            <id>https://tamilwin.com/article/anura-government-sri-lanka-politics-ranil-sajith-1784922155</id>
            <summary type="text">புதிய ஒரு நாடாளுமன்றக் குழுவை நியமிப்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியிருந்தார். 

நாட்டில் வழக்குகளின் விசாரணையில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய ஒரு நாடாளுமன்றக் குழுவை நியமிப்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியிருந்தார். </p><p>

நாட்டில் வழக்குகளின் விசாரணையில் ஏற்படும் தாமதத்திற்கான சாத்தியமான தீர்வுகளை எடுக்கவே இந்த குழு என தெரிவிக்கப்பட்டது. </p><p>

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில், ஒன்றுகூடிய எதிர்க்கட்சியினருடனான கூட்டத்தில் தனது கருத்துக்களைத் தெரிவித்த போது அவர் இவ்வாறு கூறியிருந்தார்.&nbsp;</p><p>இந்த திடீர் கூட்டம் தொடர்பிலும் அதன்போது முன்வைக்கப்பட்ட தீர்மானம் தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.&nbsp;</p><p>கூட்டத்தின் போது ரணில் விக்ரமசிங்க, "நாடாளுமன்றத்தில் ஒன்றுகூடி ஒரு தீர்மானத்தை முன்வைத்து, அதை அடுத்த சபாநாயகரிடம் ஒப்படைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவரிடம் நான் கூறுகிறேன்.
</p><p>
இந்த நாட்டில் உள்ள இந்த 1.1 மில்லியன் வழக்குகளுக்குத் தீர்வு காண்பது குறித்து ஆராய ஒரு குழுவை நியமிக்கவும்” என எதிர்க்கட்சி தலைவரிடம் குறிப்பிட்டிருந்தார்.&nbsp;</p><p>இது உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/AcM1A-O8k4Y" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T23:24:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினிலிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்ட 1 லட்சம் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/europe-wildfires-force-140-000-evacuations-1784934985"></link>
            <id>https://canadamirror.com/article/europe-wildfires-force-140-000-evacuations-1784934985</id>
            <summary type="text">ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் காட்டுத்தீ அசுர வேகத்தில் பரவி வருவதால், இதுவரை 1 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் காட்டுத்தீ அசுர வேகத்தில் பரவி வருவதால், இதுவரை 1 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். </p><p>ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் அருகே பற்றி எரியும் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் இரவு பகலாகப் போராடி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3b02f73-f3ed-4035-82c3-de57d24e87be/26-6a63f24af372f.webp' /></p><p>


</p><p>&nbsp;ஐரோப்பாவில் நிலவி வரும் கடும் வெப்ப அலை மற்றும் பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ மளமளவென பரவி வருகிறது. ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான காடுகள் முற்றிலும் சாம்பலாகியுள்ளன.</p><p> பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் ராணுவ உதவியுடன் மீட்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 1,40,000-க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

</p><p>நூற்றுக்கணக்கான தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. எனினும், காற்றின் திசை மாறுவதால் தீயைக் கட்டுப்படுத்துவதில் கடும் சவால் நீடித்து வருகிறது.</p><p>
தற்போது நிலைமையைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் அவசர உதவியைக் கோரியுள்ளன. </p><p>அதனைத் தொடர்ந்து குரோஷியா, போர்ச்சுகல், செக் குடியரசு போன்ற அண்டை நாடுகள் தீயணைப்பு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை அனுப்பி உதவி வருகின்றன.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T23:16:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருமகனால் கோட்டாபயவிற்கு காத்திருக்கும் பேரிடி - சகோதரி வெளியிட்ட அதிர்ச்சி காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-may-be-arrested-cid-inquiry-1784914642"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-may-be-arrested-cid-inquiry-1784914642</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.&amp;nbsp;கோட்டாபய ராஜபக்சவின் சகோதரியின் மகன், அவருக்கு எதிராக கொழு...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p>கோட்டாபய ராஜபக்சவின் சகோதரியின் மகன், அவருக்கு எதிராக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><p>

இந்த வாக்குமூலத்தின் படி கோட்டாபய ராஜபக்சவுக்கு பாரிய சிக்கல் ஏற்படுவதோடு சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாத நிலைமை ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>
கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
</p><p>கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, சுகீஸ்வர பண்டார அவருடைய தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றினார். அதற்காக அவர் சம்பளம் பெற்றார்.</p><p>
அதுமட்டுமன்றி, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியான பின்னரும் விசேட ஜனாதிபதித் திட்டத்தை உருவாக்கி அதிலிருந்தும் அவருக்குச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச தனது மருமகன் தொடர்பில் வெளியிட்ட தகவல், அவரின் மருமகன் வழங்கிய வாக்குமூலத்திற்கு முரணாகவுள்ளது. எனவே இதன் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் எழுவதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p><p>இவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RdSZsItywV0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T23:11:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாக்ஷி அகர்வாலை தள்ளி விட்ட கணவர்.. ஆனால் அதன்பின் நடந்ததை பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sakshi-agarwal-husband-pushes-her-reels-video-1784933488"></link>
            <id>https://cineulagam.com/article/sakshi-agarwal-husband-pushes-her-reels-video-1784933488</id>
            <summary type="text">சாக்ஷி அகர்வாலை தள்ளி விட்ட கணவர்.. ஆனால் அதன்பின் நடந்ததை பாருங்க&amp;nbsp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாக்ஷி அகர்வாலை தள்ளி விட்ட கணவர்.. ஆனால் அதன்பின் நடந்ததை பாருங்க&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T22:51:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை ஆஷிகா ரங்கநாதன் வெள்ளை நிற சேலையில் அசத்தல் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ashika-ranganath-white-saree-photoshoot-1784933343"></link>
            <id>https://cineulagam.com/article/ashika-ranganath-white-saree-photoshoot-1784933343</id>
            <summary type="text">தெலுங்கு மற்றும் தமிழில் பிரபல நடிகையாக இருப்பவர் ஆஷிகா ரங்கநாதன். அவர் அடுத்து தமிழில் சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார்.

ஆஷிகாவுக்கு இன்ஸ்டாவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெலுங்கு மற்றும் தமிழில் பிரபல நடிகையாக இருப்பவர் ஆஷிகா ரங்கநாதன். அவர் அடுத்து தமிழில் சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார்.</p><p>

ஆஷிகாவுக்கு இன்ஸ்டாவில் 2.7 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.</p><p>தற்போது வெள்ளை நிற சேலையில் ஆஷிகா அழகிய போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதோ பாருங்க.</p>]]></content>
            <updated>2026-07-24T22:49:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக் பாஸ் ரைசா தாராள கிளாமர் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/raiza-wilson-glamour-photoshoot-1784933174"></link>
            <id>https://cineulagam.com/article/raiza-wilson-glamour-photoshoot-1784933174</id>
            <summary type="text">விஜய் டிவியின் பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் ஆனவர் ரைசா வில்சன். அவர் அதன்பிறகு படங்களில் ஹீரோயினாக நடித்தாலும், சில படங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஜய் டிவியின் பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் ஆனவர் ரைசா வில்சன்.</p><p> அவர் அதன்பிறகு படங்களில் ஹீரோயினாக நடித்தாலும், சில படங்களுக்கு பின் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.</p><p>

ரைசா தற்போது இன்ஸ்டாவில் அடிக்கடி கவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது ரைசா ஹாட் உடையில் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.</p>]]></content>
            <updated>2026-07-24T22:46:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோடியை பதவி விலகச் சொல்லுங்கள் ; மெலோனியின் இன்ஸ்டா பக்கத்தில் குவியும் வேண்டுகோள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/requests-flood-meloni-s-instagram-page-1784932567"></link>
            <id>https://jvpnews.com/article/requests-flood-meloni-s-instagram-page-1784932567</id>
            <summary type="text">உங்கள் நெருங்கிய நண்பர் நரேந்திர மோடியை பதவி விலகச் சொல்லுங்கள் என்று, இன்ஸ்டாகிராம் வாயிலாக இத்தாலிப் பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு வேண்டுகோள் குவிந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>உங்கள் நெருங்கிய நண்பர் நரேந்திர மோடியை பதவி விலகச் சொல்லுங்கள் என்று, இன்ஸ்டாகிராம் வாயிலாக இத்தாலிப் பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு வேண்டுகோள் குவிந்து வருவது, நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் திடீர் திருப்பமாக அமைந்துள்ளது.
</p><p>
நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி கரப்பான்பூச்சி மக்கள் கட்சி சார்பில் நடத்தி வரும் போராட்டம் நாடு முழுவதும் பரவி வரும் நிலையில், திடீர் திருப்பமாக, நாட்டைத் தாண்டி சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் வகையில் மாறியிருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d5530eb-4d51-45c1-9ed4-ed3155da3ceb/26-6a63e8d8cf1d1.webp' /></p><h2>போராட்டம்&nbsp;</h2><p>

இத்தாலிப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். </p><p>அந்த வீடியோவுக்கான கருத்துப் பிரிவில் ஏராளமானோர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ராஜிநாமா செய்யச் சொல்லுங்கள் என்று மெலோனிக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.</p><p></p><p>
</p><p>&nbsp;நாடாளுமன்றம் நோக்கி மாணவர்கள் பேரணியாகச் சென்ற போது, அவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி தாக்குதல்களைத் தொடர்ந்து போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்த நிலையில், இன்ஸ்டாகிராம் வாயிலாக இத்தாலி பிரதமர் வரை சென்றிருக்கிறது.&nbsp;</p><p> மாணவர்களின் மிகப்பெரிய போராட்டத்தின் தாக்கம் இப்போது சர்வதேச அளவிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது "அன்பிற்குரிய நண்பரான" மோடியை பதவி விலகுமாறு அவரிடம் வலியுறுத்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவது பேசுபொருளாகியிருக்கிறது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T22:36:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்டத்தால் அதிரும் டெல்லி....! மத்திய கல்விச் செயலாளர் பணியிட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/delhi-neet-exam-protest-cockroach-janata-party-1784930996"></link>
            <id>https://ibctamil.com/article/delhi-neet-exam-protest-cockroach-janata-party-1784930996</id>
            <summary type="text">மத்திய கல்வித்துறை செயலாளர் வினீத் ஜோஷியை பணியிட மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் நீட் (NEET) வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கல்வித்துறை செயலாளர் வினீத் ஜோஷியை பணியிட மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்தியாவின் நீட் (NEET) வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.</p><p>

இந்தநிலையில், குறித்த உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.</p><p>
</p><p></p><h2>வினாத்தாள் முறைகேடு</h2><p>இதையடுத்து புதிய கல்வி செயலராக நரேஷ் பால் கங்வார் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரியும் மற்றும் கல்வி முறையில் கல்வி முறையில் முழுமையான சீர்திருத்தம் செய்ய வேண்டும் எனக் கோரியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dd72af5-8f41-4351-a9ca-ff2f000d629d/26-6a63e78e46752.webp' /></p><p>

மத்திய கல்வி அமைச்சரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில் மத்திய அரசு நேற்றிரவு திடீரென மத்திய உயர் கல்வித்துறை செயலாளரை மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது.
</p><p>
அதே போல் பிரதமர் மோடியின் வாக்குறுதியின்படி வினாத்தாள் முறைகேடுகளை மட்டும் விசாரிப்பதற்காக ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் விரைவு சிறப்பு நீதிமன்றத்தை டெல்லி உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது. </p><p>

இந்த நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதியாக அனு குரோவர் பலிகா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T22:31:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் ஏற்பட்ட 900-க்கும் மேற்பட்ட காட்டுத்தீ., அர்ஜென்டினாவில் சாதனை வெப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-900-plus-wildfires-argentina-heat-records-1784932165"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-900-plus-wildfires-argentina-heat-records-1784932165</id>
            <summary type="text">கனடாவில் சமீபத்திய வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக 900-க்கும் மேற்பட்ட காட்டுத்தீகள் பரவியுள்ளன.

இதுவரை சுமார் 30 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு தீயில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் சமீபத்திய வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக 900-க்கும் மேற்பட்ட காட்டுத்தீகள் பரவியுள்ளன.
</p><p>
இதுவரை சுமார் 30 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு தீயில் எரிந்துள்ளது. குறிப்பாக நார்த் வெஸ்ட் டெரிட்டரீஸ் மற்றும் ஒன்டாரியோ பகுதிகளில் தீயை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் போராடி வருகின்றனர்.
</p><p>
இந்த தீயின் புகை, காற்றின் வழியாக அமெரிக்காவிலும், வடக்கு ஐரோப்பாவிலும் பரவியதால், பல இடங்களில் காற்றின் தரம் மோசமடைந்தது.</p><p> வட அமெரிக்காவில் தீ பரவல் அதிகரிக்கும் காலம் தொடங்கியுள்ளதால், மேலும் தீ விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec92ea85-8da3-4fab-ad06-7fa99c5255b7/26-6a63e74704fa7.webp' /></p><p>இதே நேரத்தில், அர்ஜென்டினாவின் சால்டா நகரம் வரலாற்றிலேயே அதிகமான இரவு வெப்பநிலையை பதிவு செய்துள்ளது. குளிர்காலத்தில் இருந்தபோதும், வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியஸுக்கு கீழே குறையாமல் இருந்தது.
</p><p>
சாதாரணமாக அந்த பகுதியில் குளிர்கால இரவு வெப்பநிலை 3 டிகிரி செல்ஸியஸ் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த மாற்றம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>இந்த அசாதாரண வெப்பம், சோண்டா காற்று (Zonda Wind) மற்றும் எல் நினோ (El Niño) காரணமாக ஏற்பட்டதாக வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர்.</p><p> எல் நினோ வலுப்பெறுவதால், பசிபிக் பகுதியில் கடும் புயல் செயல்பாடு அதிகரிக்கும் எனவும், பிலிப்பைன்ஸ் அருகே உருவான டிராபிக்கல் ஸ்டார்ம் Noul சீனாவின் தென்கிழக்கு கடற்கரையில் புயலாக மாறும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T22:28:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவு - பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/annual-pongal-festival-chemmalai-pillayar-temple-1784930552"></link>
            <id>https://tamilwin.com/article/annual-pongal-festival-chemmalai-pillayar-temple-1784930552</id>
            <summary type="text">முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச்
சிறப்புமிக்க நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இடம்பெற...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச்
சிறப்புமிக்க நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இடம்பெறவுள்ளது.&nbsp;</p><p>எதிர்வரும் ஆடி மாதம் 17ஆம் நாள் (02.08.2026), சங்கடஹர
சதுர்த்தி திதியை முன்னிட்டு மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளதாக ஆலய பரிபாலன சபை
அறிவித்துள்ளது.</p><p>

திருவிழா நாளான 02ஆம் திகதி காலை 7.00 மணிக்கு விசேட அபிஷேகத்துடன் உற்சவ
நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன.</p><p> </p><p>தொடர்ந்து காலை மற்றும் நண்பகல் நேரங்களில்
விநாயகப் பெருமானுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் விசேட பூஜைகள் நடைபெற்று,
விபூதிப் பிரசாதம் மற்றும் காழாஞ்சிப் பிரசாதம் வழங்கப்படுவதுடன், மதியம்
11.30 மணியளவில் அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படவுள்ளது.
</p><p>
மாலை 3.30 மணிக்கு, நீராவியடிப் பிள்ளையார் ஆலய பிரதம பூசகரால் பாரம்பரிய
முறைப்படி, நீராவியடிப் பிள்ளையாரின் அருளனுமதியுடன் நாயாறு முனியப்பர்
ஆலயத்திலிருந்து மடைப்பண்டம் எடுத்து வரப்படும்.</p><p></p><h2>இடம்பெறவுள்ள பூஜைகள்..&nbsp;</h2><p> </p><p>பின்னர் மாலை 6.00 மணிக்கு
கச்சை நேருதல், இரவு 7.00 மணிக்கு மடை பரவுதல், இரவு 8.00 மணிக்கு வளந்துக்கு
நூல் சுற்றுதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து இரவு 10.00 மணிக்கு வளந்து நேர்ந்து பொங்கல் நிகழ்வு
இடம்பெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16d1292f-1295-45e4-90dc-7879f264cd60/26-6a63e4134e786.webp' /></p><p> </p><p>பின்னர் 03.08.2026 அதிகாலை 12.30 மணிக்கு சிறப்பு பூஜை
வழிபாடுகளும், அதிகாலை 2.00 மணிக்கு பரிகலம் வழிவிடுதல் நிகழ்வும் நடைபெற்று
வருடாந்த பொங்கல் உற்சவம் நிறைவடையவுள்ளது.</p><p>

இவ்வுற்சவத்தில் பிரதம குருவாக "சிவாகம கிரியா கிராமஜோதி" சிவசிறி
திருஞானசுந்தர திருஞானசம்பந்தக் குருக்கள் (ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தானம் –
குழுழமுனை) தலைமையேற்கவுள்ளதுடன், ஆலய பூசகராக சிவபாதம் கணேசபுவன்
(நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் – பழைய செம்மலை) வழிபாடுகளை முன்னின்று
நடத்தவுள்ளார்.
</p><p>பொங்கல் தினத்தன்று ஆலயத்திற்கு வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கும்
அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p>

மேலும், பக்தர்கள் பால், தயிர், இளநீர், பூக்கள், பூமாலைகள் மற்றும் பழவகைகள்
உள்ளிட்ட உபயங்களை வழங்கி இறைபணியில் பங்கேற்று விநாயகப் பெருமானின்
திருவருளைப் பெற்றிடுமாறு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய பரிபாலன
சபை அன்புடன் அழைப்பு விடுத்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T22:15:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒருபக்கம் காதலன், மறுபக்கம் திருமணமானவருடன் பழக்கம்; சடலமாக கிடந்த பெண் பொலிஸ் அதிகாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-probe-death-of-female-officer-1784920487"></link>
            <id>https://jvpnews.com/article/police-probe-death-of-female-officer-1784920487</id>
            <summary type="text">இந்தியாவில் பெண் பொலிஸ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் 24 வயதுடைய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இந்தியாவில் பெண் பொலிஸ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் 24 வயதுடைய பெண் பொலிஸ் அதிகாரி பொலிஸ் குடியிருப்பில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7bf1b03-86d9-46be-aa29-4825733a0b73/26-6a63ba0bc1f63.webp' /></p><h2 style="text-align: justify;">முதற்கட்ட விசாரணை</h2><p>
</p><p style="text-align: justify; ">
காலை நீண்ட நேரமாக அவரது அறை தறக்கப்படாமல் பூட்டியே இருந்தது. இதனால் சந்தேக மடைந்த சக பொலிசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, ரஞ்சனி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
</p><p style="text-align: justify;">

பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில், குறித்த இளம் பெண்ணுக்கு ஆண் பொலிஸ் ஒருவருடன் பழக்கம் இருந்ததாகவும், இவர்களது காதல் தொடர்பு குறித்து இரு தரப்பு குடும்பத்தினருக்கும் தெரிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">&nbsp;திருமணத்திற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்துள்ளன. இந்த நிலையில் திருப்பூரில் பணியாற்றி வரும் திருமணமான பொலிஸ் ஒருவருடன் ரஞ்சினிக்கு பழக்கம் இருந்தாக கூறப்படுகிறது. மேலும் செல்போனில் இருவரும் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது.
</p><p style="text-align: justify;">
இந்த விவகாரம் காதலனுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த காதலன் ரஞ்சனியுடன் பேசி வந்த அந்த திருமணமான பொலிஸ்காரரை நேரில் சென்று மிரட்டியுள்ளார். "எங்களுக்குத் திருமணம் நிச்சயமாகி உள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">இனி ரஞ்சனியுடன் பேசுவதையும் தொடர்புகொள்வதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்" எனக் கண்டிப்புடன் கூறியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, ரஞ்சனிக்கும் அவரது காதலனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">சம்பவத்தன்றும் ரஞ்சனி தனது காதலனுடன் செல்போனில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவ்வாறு காதலனுடன் போனில் சண்டைபோட்டபடியே வீட்டிற்குள் சென்ற ரஞ்சனி,மன உளைச்சலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-24T22:10:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவீதியில் இளைஞனின் உயிரை பறித்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-man-killed-in-mid-street-incident-1784930338"></link>
            <id>https://jvpnews.com/article/young-man-killed-in-mid-street-incident-1784930338</id>
            <summary type="text">பொலன்னறுவை - மஹியங்கனை பிரதான வீதியில் நாமல்பொகுண பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் பலத்த காயமடைந்து வைத்தியசால...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலன்னறுவை - மஹியங்கனை பிரதான வீதியில் நாமல்பொகுண பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54658dbf-4ffb-437f-9978-610bb728a188/26-6a63e0240826e.webp' /></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பொலன்னறுவை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>

உயிரிழந்தவர் திம்புலாகல, மகாஉல்பத பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p>
</p><p>
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மதுபோதையில் அலட்சியமான முறையில் வாகனத்தை செலுத்தியதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>


இந்த விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T22:00:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மழை அங்கியுடன் மீட்கப்பட்ட என்புக்கூடு: ஓகஸ்ட் 4ஆம் திகதிக்குப் பின்பே அகழ்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-grave-raincoat-boy-skeleton-1784929544"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-grave-raincoat-boy-skeleton-1784929544</id>
            <summary type="text">யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம்
காணப்பட்ட, மழை அங்கியுடன் கூடிய சிறுவரின் என்புக்கூடு எதிர்வரும் ஆகஸ்ட்
4ஆம் திகதிக்குப் பின்னரே முற்றாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம்
காணப்பட்ட, மழை அங்கியுடன் கூடிய சிறுவரின் என்புக்கூடு எதிர்வரும் ஆகஸ்ட்
4ஆம் திகதிக்குப் பின்னரே முற்றாக அகழ்ந்து எடுக்கப்படவுள்ளது.</p><p>

இது தொடர்பில் செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர்
சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் ஊடகங்களுக்குக் கருத்துத்
தெரிவிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,</p><p>
</p><p>
"செம்மணி மனிதப் புதைகுழிக்குள் மழை அங்கியுடன் காணப்பட்ட மேற்படி சிறுவரின்
என்புக்கூடு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை உடனடியாக அகழ்ந்து
எடுக்கப்படவில்லை.</p><p></p><h2>அகழ்வதற்கான நடவடிக்கை</h2><p> </p><p>இது தொடர்பாகத் துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்ற
பின்னரே அதனை அகழ்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f38218ea-4216-4323-b9ac-bbc8c5ba0be7/26-6a63df2bb33b0.webp' /></p><p>

இந்த என்புக்கூடு சட்ட ரீதியாகப் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற அனுமானம்
காணப்படுவதால், அது தொடர்பான விவரங்கள் அல்லது தகவல்கள் எவருக்கேனும்
தெரிந்திருந்தால், உடனடியாக நீதிமன்றப் பதிவாளருக்காவோ, சட்டத்தரணி ஊடாக
நீதிமன்றத்துக்கோ அல்லது காணாமல் போனோருக்கான அலுவலகத்துக்கோ அறிவிக்குமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பான உண்மையான தகவல்கள் ஏதேனும் வெளிச்சத்துக்கு வந்தால்,
அது செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பான பல முக்கிய உண்மைகளைக் கண்டறிய உதவும்" என்றார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T21:54:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை ஜப்பானிய தூதரக உயர்மட்ட குழு - ரெலோ தலைமையுடனான சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/high-level-delegation-japanese-embassy-meets-relo-1784928098"></link>
            <id>https://tamilwin.com/article/high-level-delegation-japanese-embassy-meets-relo-1784928098</id>
            <summary type="text">தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ தலைமையுடனான கலந்துரையாடல் ஒன்றை இலங்கை ஜப்பானிய தூதரக உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர்
மேற்கொண்டுள்ளனர்.

மேற்படி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ தலைமையுடனான கலந்துரையாடல் ஒன்றை இலங்கை ஜப்பானிய தூதரக உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர்
மேற்கொண்டுள்ளனர்.
</p><p>
மேற்படி சந்திப்பில் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ தலைவரும் வன்னி மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ரெலோ கட்சியின் தேசிய
அமைப்பாளரும் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.</p><p></p><h2>முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை&nbsp;</h2><p>
</p><p>
நாட்டின் சமகால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாகவும், தமிழ் மக்களின் உரிமை
சார்ந்த விடயங்களில் அரசின் தற்போதைய நிலைப்பாடுகள் தொடர்பாகவும் மற்றும்
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாகவும் பலதரப்பட்ட
கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e6573f4-b0f0-4fb7-840e-826e34494637/26-6a63da41b28bc.webp' /></p><p>

மேலும், இச்சந்திப்பில் சமகாலத்தில் தமிழர் நலன் மற்றும் உரிமை
விடயங்களுக்காக தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் ஒண்றிணைவு தொடர்பாகவும்,
செம்மணி மனித புதைகுழி தொடர்பான மக்களுக்கு நடந்தேறிய அநீதிகளை
முன்னிலைப்படுத்தி அவற்றுக்கான நீதி நிலைநாட்டப்பட கோரிய கலந்துரையாடல்
இடம்பெற்றது.&nbsp;</p><p>அத்துடன், போர்க்காலங்களில் ஐப்பான் அரசு மற்றும் இலங்கைக்கான ஐப்பானிய தூதரகம் எமது
தமிழ் மக்களுக்கு பலதரப்பட்ட உதவிகளை, நிவாரணங்களாக வழங்கியதை
சுட்டிக்காட்டியதுடன், தமிழ் மக்களுக்கு ஐப்பானிய அரசின் உதவி பணிகள் தொடர
வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T21:42:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[EPF சேவைகள் இடைநிறுத்தம் ; வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-notice-on-epf-service-suspension-1784927814"></link>
            <id>https://jvpnews.com/article/important-notice-on-epf-service-suspension-1784927814</id>
            <summary type="text">தொழிலாளர் துறையின் கணினி அமைப்பில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் ஊழியர் சேமநிதி (E...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தொழிலாளர் துறையின் கணினி அமைப்பில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் ஊழியர் சேமநிதி (EPF) தொடர்பான பொதுச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">


தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/451cd42e-5f5b-4719-a99f-2bfdbf3a4408/26-6a63d8384b051.webp' /></p><h2 style="text-align: justify; ">பொதுச் சேவைகள்</h2><p> </p><p style="text-align: justify; ">இந்த பராமரிப்புப் பணிகள் நடைபெறும் காலப்பகுதியில், தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மண்டல, மாவட்ட மற்றும் துணைத் தொழிலாளர் அலுவலகங்களில் உள்ள ஊழியர் சேமநிதி தரவு அமைப்பு&nbsp; மற்றும் டிஜிட்டல் இபிஎஃப் அமைப்பு (Digital EPF System) ஆகியவற்றுடன் தொடர்புடைய சேவைகள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">


இதன் காரணமாக, குறித்த இரண்டு நாட்களிலும் உதவித்தொகை வழங்குதல், பதிவுகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பொதுச் சேவைகளைப் பெற முடியாது என தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


மேலும், இந்நாட்களில் சேவைகளைப் பெறுவதற்காக முன்பதிவு செய்துள்ளவர்கள், ஒரு மாத காலத்திற்குள் ஏதேனும் ஒரு அலுவலக நாளில் தங்களுக்கு உரிய தொழிலாளர் அலுவலகத்திற்கு வருகை தர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-24T21:25:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த வாரம் வொஷிங்டனில் ட்ரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-zelenskyy-meeting-in-washington-white-house-1784927700"></link>
            <id>https://tamilwin.com/article/trump-zelenskyy-meeting-in-washington-white-house-1784927700</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி ஆகியோர் அடுத்த வாரம்&amp;nbsp; நேரில்
சந்தித்துப் பேசவுள்ளதாக வெள்ளை மாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி ஆகியோர் அடுத்த வாரம்&nbsp; நேரில்
சந்தித்துப் பேசவுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p>குறித்த கலந்துரையாடலானது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(28.7.2026) வொஷிங்டனில் இடம்பெறவுள்ளது.</p><p>

அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்வதில் ஜெலன்ஸ்கி ஆர்வமாக உள்ளதாகவும், ஆனால்
வெள்ளை மாளிகையிடமிருந்து ட்ரம்பின் அதிகாரப்பூர்வ நேர அட்டவணை
உறுதிப்படுத்தப்படுவதற்காக அவரது குழு காத்திருப்பதாகவும் உக்ரைன் தரப்பு
தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>சந்திப்பு</h2><p>
</p><p>முன்னதாக, வலதுசாரி ஆர்வலரான லாரா லூமருக்கு அளித்த நேர்காணலில், தான் அடுத்த
வாரம் அமெரிக்கா செல்ல வாய்ப்புள்ளதாகவும், அங்கு ட்ரம்பைச் சந்திப்பேன்
என்றும் ஸெலென்ஸ்கி குறிப்பிட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e93286d-6f89-4a44-885e-a21e7f1d0404/26-6a63d746e0364.webp' /></p><p>

மேலும், சமீபத்தில் காலமான அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாமின் இறுதிச்
சடங்கிலும் ஜெலன்ஸ்கி கலந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது.
</p><p>
ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு 10 முறை உக்ரைனுக்குப் பயணம் மேற்கொண்டு,
உக்ரைனுக்கு அமெரிக்க ஆதரவையும் ரஷ்யா மீதான தடைகளையும் தீவிரமாக வலியுறுத்திய
லிண்ட்சே கிரஹாம், உக்ரைனின் முக்கிய ஆதரவாளராகத் திகழ்ந்தவர் என்பது
குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T21:21:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானில் பயங்கர உயிர்மாய்ப்பு படை தாக்குதல்: 12 இராணுவ வீரர்கள் உட்பட 15 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/deadly-attack-pakistan-15-people-1784927470"></link>
            <id>https://tamilwin.com/article/deadly-attack-pakistan-15-people-1784927470</id>
            <summary type="text">பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப் பகுதியில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து நடத்தப்பட்ட கொடூரமான தற்கொலை
படைத் தாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப் பகுதியில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து நடத்தப்பட்ட கொடூரமான தற்கொலை
படைத் தாக்குதலில் 12 இராணுவ வீரர்கள் உட்பட குறைந்தது 15 பேர்
உயிரிழந்துள்ளனர்.
</p><p>
மேலும் பலர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
பாதுகாப்புப் படையினரின் சோதனைச் சாவடி மற்றும் அவர்கள் பயணித்த வாகனத்தைக்
குறிவைத்துத் தற்கொலைப்படை உறுப்பினர் ஒருவர் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட
வாகனத்தை மோதி இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்.</p><p></p><h2>தீவிரத் தேடுதல் வேட்டை</h2><p> வெடிவிபத்தின் வீரியத்தால் அப்பகுதியில் இருந்த கட்டிடங்களும் பலத்த
சேதமடைந்தன. ஆஃப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள இந்தப் பகுதியில் கடந்த சில மாதங்களாகத்
தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc138eca-7bbe-4131-9eb4-32e0152cabe3/26-6a63d5a55e12b.webp' /></p><p>

இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்கவில்லை
என்றாலும், பாகிஸ்தான் தலிபான் என அழைக்கப்படும் தெஹ்ரீக்-இ-தலிபான்
பாகிஸ்தான் அமைப்பு அல்லது அதன் ஆதரவுப் பிரிவினர் இதில் ஈடுபட்டிருக்கலாம்
எனச் சந்தேகிக்கப்படுகிறது.
</p><p>
ஆஃப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து, எல்லைப்
பகுதிகளில் செயல்படும் தீவிரவாதக் குழுக்கள் தீவிரமடைந்துள்ளதாகக்
கூறப்படுகிறது.

தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதையும் பாதுகாப்புப் படையினர் தங்கள்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
</p><p>
தப்பிச் சென்ற பயங்கரவாதிகளைத் தேடும் நோக்கில் தீவிரத் தேடுதல் வேட்டை
தொடங்கப்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிவு
தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T21:14:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 டொலருக்குக் கீழ் குறைந்த கச்சா எண்ணெய் விலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/crude-oil-price-in-the-international-market-1784921098"></link>
            <id>https://ibctamil.com/article/crude-oil-price-in-the-international-market-1784921098</id>
            <summary type="text">சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மீண்டும் சரிவை சந்தித்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் முதன்முறையாக இந்த வாரத் தொடக்கத்தில் பேரல் ஒன்றுக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மீண்டும் சரிவை சந்தித்துள்ளது.
</p><p>
கடந்த இரண்டு மாதங்களில் முதன்முறையாக இந்த வாரத் தொடக்கத்தில் பேரல் ஒன்றுக்கு 100 டொலர் என்ற மைல்கல்லை சர்வதேசக் கச்சா எண்ணெய் விலை எட்டியிருந்தது.
</p><p>
இந்தநிலையில் தற்போது மீண்டும் 100 டொலருக்குக் கீழ் சிறிதளவு சரிவைச் சந்தித்துள்ளது.</p><p>
</p><p></p><h2>எண்ணெய் விநியோகம்</h2><p>ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டதால் ஏற்கனவே முடங்கியுள்ள சர்வதேசக் கப்பல் போக்குவரத்துக்கு மத்தியிலும், செங்கடலில் பயணித்த சவூதி அரேபியாவின் எண்ணெய் விநியோகக் கப்பல்கள் மீது ஏமனின் ஈரானிய ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.</p><p> 

இது உலகளாவிய எண்ணெய் விநியோகச் சங்கிலியில் மேலதிக நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4510d7d4-4c26-4a28-8447-639dda29a0cc/26-6a63cee2159e9.webp' /></p><p>இந்தநிலையில் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் ஏற்ற இறக்கங்கள் காரணமாக அமெரிக்காவில் சராசரி எரிபொருள் (Gas) விலை தொடர்ந்து ஒரு கேலனுக்கு நான்கு டொலரை விட அதிகமாக நீடித்து வருகின்றது.
</p><p>
மத்திய கிழக்கில் பரவி வரும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச எண்ணெய் சந்தை தொடர்ந்து நிலையற்ற தன்மையுடன் காணப்படுவதாகப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T21:07:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்தக் கறைகளுடன் கிடந்த சடலம் ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/body-found-covered-in-blood-stains-1784925247"></link>
            <id>https://jvpnews.com/article/body-found-covered-in-blood-stains-1784925247</id>
            <summary type="text">கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுகஸ்தர பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுகஸ்தர பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p>&nbsp;வியாழக்கிழமை (23) கம்பஹா பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ecb44f2-07a0-423e-83de-1c949b18b8ac/26-6a63cc4116713.webp' /></p><h2>மேலதிக விசாரணை</h2><p>

உயிரிழந்தவர் கட்டுகஸ்தர பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
சடலத்துக்கு அருகில் இரத்தக் கறைகள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
நீதவான் பரிசோதனைகளின் பின்னர், சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், நபரின் மரணம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T20:45:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நியூயார்க் மேயர் மம்தானி குடும்பத்துக்கு கொலை மிரட்டல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/mayor-mamdani-s-family-faces-death-threats-1784922319"></link>
            <id>https://canadamirror.com/article/mayor-mamdani-s-family-faces-death-threats-1784922319</id>
            <summary type="text">நியூயார்க் நகர மேயர் ஸோரான் மம்தானி மற்றும் அவரது மனைவி ரமா ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், நடந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நியூயார்க் நகர மேயர் ஸோரான் மம்தானி மற்றும் அவரது மனைவி ரமா ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அமெரிக்காவில், நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று முதல்முறையாக நியூயார்க் நகரத்துக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸோரான் மம்தானி மேயராகப் பதவி வகித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f5e2626-3365-4847-98bd-2ebba787d4bb/26-6a63c0d1331ab.webp' /></p><p>




</p><p>பெரும்பான்மையான மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள மேயர் மம்தானி மற்றும் அவரது மனைவி ரமா ஆகியோர் தொடர்ந்து காஸா மீதான இஸ்ரேலின் போருக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
</p><p>
இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் மேயர் மம்தானி வெளியிட்ட விடியோவில் பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கைகள் ஒரு இனப்படுகொலை எனவும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு போர்க்குற்றவாளி அவர் கைது செய்யப்பட வேண்டுமெனவும் கூறியிருந்தார்.</p><p>
இந்த நிலையில், அமெரிக்க செய்திநிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், காஸா மீதான இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பதால் தனக்கும் தனது மனைவிக்கும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக, மம்தானி தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T20:42:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதவியை இராஜினாமா செய்த பங்களாதேஷ் ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bangladesh-president-steps-down-1784925684"></link>
            <id>https://canadamirror.com/article/bangladesh-president-steps-down-1784925684</id>
            <summary type="text">பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் ஷஹாபுதீன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 

பதவியிலிருந்து அகற்றப்பட்ட பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் ஷஹாபுதீன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். </p><p style="text-align: justify;">

பதவியிலிருந்து அகற்றப்பட்ட பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீண்டும் நாட்டிற்கு வர ஆயத்தமாகி வருவதாக வெளியாகும் தகவல்களைத் தொடர்ந்து ஜனாதிபதி இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f112a62a-c818-4317-94b7-55b687998a9f/26-6a63cdf60ae1e.webp' /></p><p style="text-align: justify; "><span style="color: inherit;">2024ஆம் ஆண்டு பங்களாதேஷில் இடம்பெற்ற மாணவர் போராட்டங்களின் போது நபர்களைப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தினால் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.</span></p><p style="text-align: justify; ">

அவ்வழக்குகளை எதிர்கொள்வதற்காகத் தான் மீண்டும் பங்களாதேஷிற்கு வருகை தரவுள்ளதாக ஹசீனா வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்து சில நாட்களுக்குப் பின்னரே ஜனாதிபதியின் இந்த இராஜினாமா தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.</p><p> </p><p style="text-align: justify; ">

மருத்துவ சிகிச்சைக்காக தாய்லாந்து சென்றுள்ள நாடாளுமன்ற சபாநாயகர் ஹபீஸ் உத்தீன் அகமட் திரும்பி வந்த பின்னர், ஜனாதிபதி தனது ராஜினாமாக் கடிதத்தைக் கையளிக்கவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.</p><p style="text-align: justify; "><br></p>]]></content>
            <updated>2026-07-24T20:41:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோவில் துப்பாக்கிச் சூடு: பெண் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/woman-shot-dead-in-etobicoke-toronto-1784900304"></link>
            <id>https://canadamirror.com/article/woman-shot-dead-in-etobicoke-toronto-1784900304</id>
            <summary type="text">கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள எட்டோபிகோக் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள எட்டோபிகோக் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>ஹம்பர்வுட் மற்றும் ரெக்ஸ்டேல் புலிவார்ட்ஸ் சந்திப்புக்கு அருகிலுள்ள குடியிருப்பு வீதியொன்றில் காலை 7:00 மணியளவில் இத்துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
</p><p>தகவலறிந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் காணப்பட்ட பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c057ffe7-db27-4da3-8b46-141d4427b222/26-6a636ad20cd97.webp' /></p><p>உயிரிழந்த பெண்ணின் வயது அல்லது இச்சம்பவத்திற்கு வழிவகுத்த காரணம் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
பொலிஸார் வருவதற்கு முன்னரே சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். </p><p>அவர் குறித்த அடையாளங்களோ அல்லது விவரங்களோ இதுவரை வெளியிடப்படவில்லை.</p><p>
இக்கொலை வழக்கை கொலை வழக்கு விசாரணைப் பிரிவு ஏற்று தீவிரமாக விசாரித்து வருகிறது.
விசாரணைகள் காரணமாக மார்னிங் ஸ்டார் டிரைவ் மற்றும் ரெக்ஸ்டேல் புலிவார்ட் இடையேயான ஹம்பர்வுட் புலிவார்ட் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.</p><p>
இச்சம்பவம் தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்தால், 416-808-2222 என்ற எண்ணில் பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T20:17:45+00:00</updated>
        </entry>
    </feed>
