<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-24T08:47:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்பவர்களுக்கான செய்தி! இன்று பதிவாகியுள்ள பெறுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1784881209"></link>
            <id>https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1784881209</id>
            <summary type="text">இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (24.07.2026) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் 24 கர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (24.07.2026) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>நேற்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 377,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டிருந்தது.</p><p>இந்த நிலையில், இன்று (24) அதன் விலை 3000 ரூபா குறைந்து 374 ,000 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>ஆபரண தங்கத்தின் பெறுமதி</h2><p>
</p><p>
இதேவேளை 22 கரட் தங்கம் ஒரு பவுண் 346,800 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை 2800&nbsp;ரூபா குறைந்து 344,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8efdc614-79b4-4342-bf14-0cc785fe88d7/26-6a6325bede985.webp' /></p><p>
</p><p>அத்துடன் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.46,750 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.43,000 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T08:44:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் பலியான 5 பேர் வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொண்ட பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/woman-pleads-guilty-in-5-death-while-enter-us-1784882144"></link>
            <id>https://canadamirror.com/article/woman-pleads-guilty-in-5-death-while-enter-us-1784882144</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் ரொமேனியாவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று ஆற்றில் மூழ்கி பலியான விடயம் நினைவிருக்கலாம்.

அமெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் ரொமேனியாவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று ஆற்றில் மூழ்கி பலியான விடயம் நினைவிருக்கலாம்.</p><h3>

அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில்...
</h3><p>
 2023ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 29ஆம் திகதி, கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில், ரொமேனியாவைச் சேர்ந்த ஒரு இளம் தம்பதியரும் அவர்களுடைய இரண்டு குழந்தைகளும் பலியானார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dce0d43-7b99-4f05-9fe8-76a8aeb79549/26-6a6323e16eac2.webp' /></p><p>மோசமான வானிலை காரணமாக அந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அந்த பயணிகளுடன் படகின் சாரதியான கேஸி ஓக்ஸ் என்பவரும் உயிரிழந்தார்.</p><h3>

குற்றத்தை ஒப்புக்கொண்ட பெண்
</h3><p>
இந்நிலையில், ரொமேனியாவைச் சேர்ந்த இளம் தம்பதியர் மற்றும் அவர்களுடைய இரண்டு குழந்தைகளும், படகு சாரதியும் பலியான வழக்கில் ஸ்டெஃபனி ஸ்க்வேர் (Stephanie Square, 53) என்னும் பெண், தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c7e72a8-e6d4-49fb-822c-80a3c23e6ed5/26-6a6323e21f0e2.webp' /></p><p>இந்த ஸ்டெஃபனி, கனேடிய அமெரிக்க இரட்டைக் குடியுரிமை கொண்டவர் ஆவார்.

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் ஆட்கடத்தல் கும்பலின் தலைவிதான் இந்த ஸ்டெஃபனி என அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.</p><p>

அமெரிக்காவின் கோரிக்கையின் பேரில் கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட அவர், அமெரிக்காவில் வழக்கை எதிர்கொள்கிறார்.
</p><p>
இந்நிலையில், அந்த ரொமேனியக் குடும்பம் மற்றும் படகு சாரதி உயிரிழந்த வழக்கில், தான் குற்றவாளி என ஸ்டெஃபனி ஒப்புக்கொண்டுள்ளார்.
</p><p>
அதாவது, சம்பவம் நடந்த அன்று மோசமான வானிலை நிலவியுள்ளது. பலத்த காற்று, கடும் குளிர் மற்றும் படகை செலுத்த போதுமான வெளிச்சம் இல்லாத நிலையிலும், பணத்துக்கு ஆசைப்பட்டு, தனக்கு பணம் கிடைத்தால் போதும் என முடிவு செய்து, அவர் அந்த ரொமேனியக் குடும்பத்தை படகில் பயணிக்க வலியுறுத்தியுள்ளார் ஸ்டெஃபனி.
</p><p>
ஆனால், மோசமான வானிலை காரணமாக படகு கவிழ்ந்து, அந்த ரொமேனியக் குடும்பமும் படகின் சாரதியும் உயிரிழந்துவிட்டார்கள்.</p><p>

இந்த வழக்கில் நவம்பர் மாதம் 25ஆம் திகதி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஸ்டெஃபனிக்கு குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை வழங்கப்படலாம்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T08:35:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்க விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gold-price-reduce-in-sri-lanka-gold-buyers-1784881113"></link>
            <id>https://ibctamil.com/article/gold-price-reduce-in-sri-lanka-gold-buyers-1784881113</id>
            <summary type="text">இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (24.07.2026) வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி நேற்று (23) 24 கர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (24.07.2026) வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
அதன்படி நேற்று (23) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 377,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று (24) 3,000 ரூபாயால் குறைந்து புதிய விலை 374 ,000 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
</p><p>&nbsp;22 கரட் தங்கம் ஒரு பவுண் 346,800 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை 2,800 ரூபாயால் குறைந்து 344 ,000 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>இன்றைய நிலவரம்&nbsp;</h2><p>
</p><p>இந்தநிலையில், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 46,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 43,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1096e26-12c1-4a54-8e4d-8b10790f9ecf/26-6a632373a05d6.webp' /></p><p>
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலைகளிலும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T08:33:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை பவானி ஸ்ரீயின் லேட்டஸ்ட் கியூட் போட்டோ ஷுட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-bhavani-sri-latest-cute-photoshoot-1784881791"></link>
            <id>https://cineulagam.com/article/actress-bhavani-sri-latest-cute-photoshoot-1784881791</id>
            <summary type="text">பவானி ஸ்ரீதமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி நடிக்க க/பெ. ரணசிங்கம் படத்தில் அவருக்கு சகோதரியாக நடித்ததன் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பவானி ஸ்ரீ.
ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பவானி ஸ்ரீ</h2><p>தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி நடிக்க க/பெ. ரணசிங்கம் படத்தில் அவருக்கு சகோதரியாக நடித்ததன் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பவானி ஸ்ரீ.</p><p>
பிறகு சூரியின் விடுதலை 1, 2 படங்களில் நடித்தவர் கடைசியாக பரத் நடிப்பில் வெளியான காளிதாஸ் 2 படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். பவானி ஸ்ரீயும் எல்லா நடிகைகளை போல போட்டோ ஷுட்களில் அதிகம் பிஸியாக உள்ளார். </p><p>அண்மையில் பச்சை நிற கிளாமர் உடையில்&nbsp;பபுள் கம் போட்டுக் கொண்டு முட்டை விடுவது போல் போஸ் கொடுத்த போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.</p><p>இதோ அந்த போட்டோஸ்,</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T08:31:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் பலியான இந்தியர்கள் உட்பட 9 பேர்: சமீபத்திய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/woman-pleads-guilty-in-indians-dies-while-enter-us-1784881791"></link>
            <id>https://news.lankasri.com/article/woman-pleads-guilty-in-indians-dies-while-enter-us-1784881791</id>
            <summary type="text">கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் இந்தியக் குடும்பம் ஒன்றும், ரொமேனியாவைச் சேர்ந்த குடும்பம் ஒன்றும் ஆற்றில் மூழ்கி பலியான விடயம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் இந்தியக் குடும்பம் ஒன்றும், ரொமேனியாவைச் சேர்ந்த குடும்பம் ஒன்றும் ஆற்றில் மூழ்கி பலியான விடயம் நினைவிருக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79fb08f5-7033-4ce8-aef9-d061a86837f8/26-6a632280966fb.webp' /></p><h3>அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில்...
</h3><p>
 2023ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 29ஆம் திகதி, கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில், இந்தியர்களான பிரவீன்பாய் சௌத்ரி (49), அவரது மனைவியான தக்‌ஷாபென் (45), தம்பதியரின் மகளான விதிபென் (23) மற்றும் மகன் மித்குமார் (20) ஆகியோர் அடங்கிய குடும்பம் ஒன்றும், ரொமேனியாவைச் சேர்ந்த ஒரு இளம் தம்பதியர் மற்றும் அவர்களுடைய இரண்டு குழந்தைகளும் பலியானார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0490b34-50e2-48d3-bc62-adcc526f1acb/26-6a6322821be6b.webp' /></p><p>மோசமான வானிலை காரணமாக அந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அந்த எட்டு பயணிகளுடன் படகின் சாரதியான கேஸி ஓக்ஸ் என்பவரும் உயிரிழந்தார்.
</p><h3>
குற்றத்தை ஒப்புக்கொண்ட பெண்</h3><p>

அந்த இரண்டு குடும்பங்களும் உயிரிழந்த விடயம் தொடர்பான வழக்குகள் தனித்தனியே கையாளப்படும் நிலையில், ரொமேனியாவைச் சேர்ந்த ஒரு இளம் தம்பதியர் மற்றும் அவர்களுடைய இரண்டு குழந்தைகளும், படகு சாரதியும் பலியான வழக்கில் ஸ்டெஃபனி ஸ்க்வேர் (Stephanie Square, 53) என்னும் பெண், தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8aada9bd-e300-47c2-91d1-6e0f5918341e/26-6a63228156029.webp' /></p><p>இந்த ஸ்டெஃபனி, கனேடிய அமெரிக்க இரட்டைக் குடியுரிமை கொண்டவர் ஆவார்.</p><p>

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் ஆட்கடத்தல் கும்பலின் தலைவிதான் இந்த ஸ்டெஃபனி என அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7e9fbe8-8a7c-463e-b405-7c75339f5e5e/26-6a632282daef7.webp' /></p><p>அமெரிக்காவின் கோரிக்கையின் பேரில் கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட அவர், அமெரிக்காவில் வழக்கை எதிர்கொள்கிறார்.
</p><p>
இந்நிலையில், அந்த ரொமேனியக் குடும்பம் மற்றும் படகு சாரதி உயிரிழந்த வழக்கில், தான் குற்றவாளி என ஸ்டெஃபனி ஒப்புக்கொண்டுள்ளார்.&nbsp;</p><p></p><p>
அதாவது, சம்பவம் நடந்த அன்று மோசமான வானிலை நிலவியுள்ளது. பலத்த காற்று, கடும் குளிர் மற்றும் படகை செலுத்த போதுமான வெளிச்சம் இல்லாத நிலையிலும், பணத்துக்கு ஆசைப்பட்டு, தனக்கு பணம் கிடைத்தால் போதும் என முடிவு செய்து, அவர் அந்த ரொமேனியக் குடும்பத்தை படகில் பயணிக்க வலியுறுத்தியுள்ளார் ஸ்டெஃபனி.
</p><p>
ஆனால், மோசமான வானிலை காரணமாக படகு கவிழ்ந்து, அந்த ரொமேனியக் குடும்பமும் படகின் சாரதியும் உயிரிழந்துவிட்டார்கள்.
</p><p>
இந்த வழக்கில் நவம்பர் மாதம் 25ஆம் திகதி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஸ்டெஃபனிக்கு குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை வழங்கப்படலாம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T08:29:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே இளைஞரை திருமணம் செய்த மூன்று சகோதரிகள் ; நெட்டிசன்கள் ஷாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-sisters-married-the-same-young-man-1784881646"></link>
            <id>https://jvpnews.com/article/three-sisters-married-the-same-young-man-1784881646</id>
            <summary type="text">இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரே இளைஞரை மூன்று சகோதரிகள் திருமணம் செய்துகொண்டதாக வெளியான தகவல், சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரே இளைஞரை மூன்று சகோதரிகள் திருமணம் செய்துகொண்டதாக வெளியான தகவல், சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
</p><p>
அம்ரோகா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள்களான சரோஜ், சாவித்ரி மற்றும் சந்தோஷி ஆகிய மூவரும் ஒரே இளைஞரைத் திருமணம் செய்ய முடிவுசெய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7839559-8e26-48f3-a2ec-a058adffd97a/26-6a6322975572e.webp' /></p><h2>சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ள&nbsp;&nbsp;திருமணம்</h2><p>
</p><p>
அதன்படி, அந்த பகுதியில் உள்ள சாமுண்டா கோயிலில் நடைபெற்ற நிகழ்வில் மூன்று சகோதரிகளும் அந்த இளைஞரைத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.</p><p></p><p>

திருமணச் சடங்குகளின்போது அவர்கள் அக்னியை வலம்வந்ததோடு, ஒருவருக்கொருவர் குங்குமம் வைத்து, பெரியவர்களிடம் ஆசீர்வாதமும் பெற்றுக்கொண்டனர்.

இந்தத் திருமண நிகழ்வின் காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகப் பரவின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02f66994-f86e-4875-842d-ecec7a31db9f/26-6a63229836f8d.webp' /></p><p>
</p><p>
ஆரம்பத்தில் இது சமூக வலைதளப் பதிவிற்காக உருவாக்கப்பட்ட காணொளி எனப் பலர் கருதிய நிலையில், பின்னர் அந்த திருமணம் உண்மையில் நடைபெற்றதுதான் எனச் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>&nbsp;இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்துச் சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களும் காரசார விவாதங்களும் எழுந்துள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T08:28:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக குடும்ப உறுப்பினர் ஒருவரின் வாக்குமூலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-sugeeshwara-bandara-1784865380"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-sugeeshwara-bandara-1784865380</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சகோதரியின் மகன், கோட்டாபயவுக்கு எதிராக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் அளித்துள்ளார். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சகோதரியின் மகன், கோட்டாபயவுக்கு எதிராக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் அளித்துள்ளார். </p><p>
இந்த வாக்குமூலத்தில் அடங்கியுள்ள தகவல்களின் படி கோட்டாபய ராஜபக்சவுக்கு பாரிய சிக்கல் ஏற்படுவதோடு சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாத நிலைமை ஏற்படும் என தெரியவந்துள்ளது.
</p><p>கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. </p><p>
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, சுகீஸ்வர பண்டார அவருடைய தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றினார். அதற்காக அவர் சம்பளம் பெற்றார். </p><p>அதுமட்டுமன்றி, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியான பின்னரும் விசேட ஜனாதிபதித் திட்டத்தை உருவாக்கி அதிலிருந்தும் அவருக்குச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
</p><h2>

</h2><p></p><h2>கோட்டாபயவின் இரு வாக்குமூலங்கள்</h2><p>இந்தச் சம்பவம் தொடர்பிலும் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு கோட்டாபய ராஜபக்சவிடமும் வாக்குமூலம் பெற்றிருந்தது. </p><p>தற்போது சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 
இது தொடர்பில் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு கோட்டாபய ராஜபக்சவிடம் இரண்டு வாக்குமூலங்களைப் பெற்றுள்ளது. </p><p>முதல் வாக்குமூலத்தில், சுகீஸ்வர பண்டாரவிற்குத் தனிப்பட்ட செயலாளர் என்ற முறையில் இந்தச் சம்பளம் வழங்கப்பட்டது என்று அவர் கூறியுள்ளார். </p><p>ஆனால், இரண்டாவது வாக்குமூலத்தில், அந்தச் சம்பளம் சுகீஸ்வரவிற்கு வழங்கப்படவில்லை என்றும், தவறுதலாக வேறு ஒரு செயலாளருக்கு வழங்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df624e24-2ddf-4df3-9a16-2bd553354c65/26-6a62e26654f56.webp' /></p><p>அவர் குறிப்பிட்ட அந்த செயலாளர் நந்தசேன மற்றும் மஹிந்த ஆகியோரின் இளைய சகோதரியான பிரீதி ராஜபக்சவின் மூத்த மகன், முன்னாள் கடற்படை அதிகாரியான மாலக சந்திரதாச. அவருடைய தந்தை வைத்தியர் லலித் பிரியலால் சந்திரதாச.</p><p> மாலக சந்திரதாச, கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது செயலாளராகப் பணியாற்றியதாகவும், அந்தச் சம்பளம் அவருக்குத்தான் கொடுக்கப்பட்டது என்றும் இரண்டாவது வாக்குமூலத்தில் கோட்டாபய தெரிவித்துள்ளார்.
</p><p>முதலில் சுகீஸ்வர பண்டாரவிற்கு சம்பளம் கொடுத்ததாகச் சொல்கிறார், இரண்டாவது வாக்குமூலத்தில் "இல்லை, அவருக்குக் கொடுக்கவில்லை, தவறுதலாக எனது செயலாளராக இருந்த மாலக சந்திரதாசவிற்குத்தான் கொடுத்தேன்" என்கிறார்.
</p><h2>மாலக சந்திரதாச வழங்கிய வாக்குமூலம்</h2><p>இதனைத் தொடர்ந்து, கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு மாலக சந்திரதாசவை அழைத்து விசாரணை நடத்தியுள்ளது. கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக தெரியவருகிறது. </p><p>ஆனால் மாலக சந்திரதாச வாக்குமூலத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
"நான் ஒரு சதம் கூட வாங்கவில்லை. கோட்டாபய ராஜபக்ச மாமா சொல்வது அப்பட்டமான பொய்!" என்று தெளிவாகக் கூறியுள்ளார்.
</p><p>"நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கோட்டாபய ராஜபக்சவின் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. வேறு எந்தவொரு பதவியிலோ பணியாற்றவில்லை. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a7f3e78-60ea-45e3-b5a6-3c55e9c862e3/26-6a62e26704bfc.webp' /></p><p>எந்தவொரு சம்பளமோ, பணமோ, கொடுப்பனவோ, வாகனமோ அல்லது வேறு எதுவும் நான் பெறவில்லை. அப்படி ஏதேனும் சொல்லியிருந்தால், கோட்டாபய ராஜபக்ச மாமா சொல்வது அப்பட்டமான பொய்" என்று தெளிவாகத் தெரிவித்துள்ளார்.</p><p>அதனால் இது குறித்துத் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
எனவே, 1982 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தான் இந்த விசாரணைகள் நடைபெறுகின்றன. </p><p>இதன் அடிப்படையில், சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டது போலவே கோட்டாபய ராஜபக்சவையும் கைது செய்ய வாய்ப்புள்ளது.</p><p></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T08:25:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வத்தளை காவல் நிலைய காவல்துறை உப பரிசோதகர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/si-arrested-for-extorting-80-000-from-suspect-1784880731"></link>
            <id>https://ibctamil.com/article/si-arrested-for-extorting-80-000-from-suspect-1784880731</id>
            <summary type="text">திருட்டு சம்பவமொன்றுடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபரை மிரட்டி அவரிடமிருந்து 80,000 ரூபாயைப் பறித்த குற்றச்சாட்டின் பேரில் காவல்துறை உப பரிசோதகர் ஒருவர் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருட்டு சம்பவமொன்றுடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபரை மிரட்டி அவரிடமிருந்து 80,000 ரூபாயைப் பறித்த குற்றச்சாட்டின் பேரில் காவல்துறை உப பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த கைது நடவடிக்கையானது, களனி குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்டவர் வத்தளை காவல்நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உப பரிசோதகர் என தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>நீதிமன்ற நடவடிக்கை</h2><p>

இதேவேளை, கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே சம்பந்தப்பட்ட திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5afa4d1-920c-443f-b5bd-822d82838e7c/26-6a63217409151.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், திருடப்பட்ட பொருட்களைத் தேடுவதாகக் கூறி, குறித்த உப பரிசோதகர் அடங்கிய குழுவினர் அந்நபரை முறைப்படி கைது செய்யாமல் வத்தளை பகுதிக்கு அழைத்துச் சென்று அவரை அச்சுறுத்தி, மிரட்டிப் பணத்தைப் பறித்துள்ளதாக விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன்படி, கைது செய்யப்பட்டுள்ள காவல்துறை உப பரிசோதகரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p></p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table></h5>]]></content>
            <updated>2026-07-24T08:25:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கர்நாடகாவில் முதல் நாளில் மட்டுமே விஜய்யின் ஜனநாயகன் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vijay-jananayagan-first-day-bo-in-karnataka-1784879356"></link>
            <id>https://cineulagam.com/article/vijay-jananayagan-first-day-bo-in-karnataka-1784879356</id>
            <summary type="text">ஜனநாயகன்
ஜுலை 23 எப்போது வரும் என காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அந்த நாளும் வந்தது, கொண்டாட்டங்களும் அமர்க்களமாக இருந்தது. விஜய்யின் படம் என்பதை...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜனநாயகன்
</h2><p>ஜுலை 23 எப்போது வரும் என காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அந்த நாளும் வந்தது, கொண்டாட்டங்களும் அமர்க்களமாக இருந்தது. </p><p>விஜய்யின் படம் என்பதை தாண்டி அவரது கடைசிப்படம் என்பதாலேயே ரசிகர்கள் படத்தை காண தனி ஆர்வம் காட்டினர். </p><p>ரசிகர்கள் பலரும் படம் பார்த்து முடித்துவிட்டு இது தளபதியின் கடைசிப்படம் என கண்ணீர் விட்டு எமோஷ்னல் ஆகி அழுதனர்.
விஜய்யும் ஜனநாயகன் படத்தை தனது அப்பா, அம்மாவுடன் இணைந்து தனது கடைசிப் படத்தை பார்த்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/def3c983-612c-4a23-8103-ffd5cdf55417/26-6a6318fe2b31a.webp' /></p><h2>பாக்ஸ் ஆபிஸ்
</h2><p>காலை முதல் ஜனநாயகன் படத்தின் முதல் நாள் கலெக்ஷன் விவரங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. சென்னையில் ரூ. 6 கோடிக்கு மேலும் தமிழகத்தில் ரூ. 29 முதல் ரூ. 30 கோடி வரையிலும் வசூலித்துள்ளது. </p><p>ஜனநாயகன் உலகம் முழுவதும் ரூ. 90 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படும் நிலையில் கர்நாடகாவில் எவ்வளவு வசூல் என்ற விவரம் வெளியாகியுள்ளது. </p><p>கர்நாடகாவில் முதல் நாளில் ரூ. 11.57 கோடி வரை வசூலித்துள்ள அங்கு அதிகம் வசூலித்த படங்களின் லிஸ்டில் 4வது இடத்தை பிடித்துள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/kQX9tb129Ss" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-24T08:22:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் சீன நாட்டவர்களின் மோதல்! அம்பலமான கொலை - விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/investigation-update-on-chinese-nationals-clash-1784876235"></link>
            <id>https://ibctamil.com/article/investigation-update-on-chinese-nationals-clash-1784876235</id>
            <summary type="text">கொழும்பு துறைமுக நகரத்தில் இரு சீனக் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வன்முறை மோதல் சம்பவம் தொடர்பாக கொழும்பு துறைமுக காவல்துறையினரும் எஹெலியகொட காவல்துறைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுக நகரத்தில் இரு சீனக் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வன்முறை மோதல் சம்பவம் தொடர்பாக கொழும்பு துறைமுக காவல்துறையினரும் எஹெலியகொட காவல்துறையினரும் இணைந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>
அந்த வகையில், குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் பல்வேறு உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>
காவல்துறையினரின் தகவலின்படி, மூன்று சீனக் குடிமக்கள் இரவு சுமார் 11 மணியளவில் வாடகைக் கார் ஒன்றில் வந்து கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள தொங்கு பாலத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர்.</p><p></p><h2>கடத்தல் சம்பவம்</h2><p>

அதன்போது, அதிகாலை 2 மணிக்கும் 3 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், சுமார் 20 சீன நாட்டினர் ஒரு கருப்பு வானில் வந்து இறங்கி, அங்கு இருந்த மூன்று பேரையும் தாக்கி, அவர்களின் கைகளையும் கால்களையும் கட்டி, கண்களைக் கட்டி, இரண்டு கைத்துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e3fcb9d-1761-4bcf-a3ef-834a26061a60/26-6a6310503a2b4.webp' /></p><p>
</p><p>
பாதிக்கப்பட்டவர்களில் இருவர் வானுக்குள் கட்டப்பட்ட நிலையில் விடப்பட்டதாகவும், ஹாவோ சோங் என அடையாளம் காணப்பட்ட மூன்றாவது நபர் மற்றொரு வாகனத்தில் கடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
பின்னர், பாதிக்கப்பட்ட இருவரும் தங்களைத் தாங்களே விடுவித்துக் கொண்டு, தங்கள் நண்பர்களுக்குத் தகவல் தெரிவித்து. அவர்கள் இந்தச் சம்பவத்தை கொழும்பு துறைமுகக் காவல்துறையினருக்கு கூறியுள்ளனர்.
</p><p>
இவ்வாறானதொரு பின்னணியில், நேற்று மாலை, எஹெலியகொட, கரதானாவில் உள்ள ஒரு வனப்பகுதியில் சீன நாட்டவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.</p><h2>கொலை</h2><p>
</p><p>
பாதிக்கப்பட்டவரின் கைகளும் கால்களும் கட்டப்பட்டிருந்ததாகவும், அவரது கண்கள் கட்டப்பட்டிருந்ததாகவும், அவர் பலத்த காயங்களுடன் இருந்ததாகவும், அவரது உடல் கற்களால் மூடப்பட்டிருந்ததாகவும் காவல்துறை தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87ee4966-f4af-49c7-9925-2d36b66f5559/26-6a631050ea8f6.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்த இரண்டு சீன நாட்டினரும், சடலமாக மீட்கப்பட்டவர் ஹாவோ சோங் என அடையாளம் காட்டியுள்ளனர்.
</p><p>
இதன்படி, அவரைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு வாகனத்தையும் புலனாய்வாளர்கள் மீட்டுள்ளனர்.</p><h2>ஆயுதங்கள் மீட்பு</h2><p>
இதேவேளை, பாதிக்கப்பட்ட இருவரும் கைவிடப்பட்டதாகக் கூறப்படும் வானுக்குள், காவல்துயைினர் ஒரு க்ளாக் 44 அரை-தானியங்கி கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஒரு VVK வாக்கி-டாக்கி ஆகியவற்றை மீட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a887cf53-7e37-4b31-951f-a81c8986b8db/26-6a631051a024a.webp' /></p><p>
</p><p>
மேலும், அந்த வான் அம்பலந்தொட்டாவைச் சேர்ந்த ஒரு தனிநபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், வாடகைக்கு எடுக்கப்பட்ட வாடகைக் கார் கொழும்பு 5-ஐத் தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்திற்குச் சொந்தமானது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதற்கிடையில், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு சீன நாட்டினர், கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாக நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T08:20:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் 11 பேருடன் பயணித்த விமானம் விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/kenmore-seaplane-crashes-near-sucia-island-1784881208"></link>
            <id>https://canadamirror.com/article/kenmore-seaplane-crashes-near-sucia-island-1784881208</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவில் 11 பேருடன் பயணித்த சிறிய ரக விமானம் ஒன்று, அவசரமாக நீரிலிறக்க முயன்றபோது விபத்துக்குள்ளாகித் தீப்பிழம்பாக வெடித்துச் சிதறியதில் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவில் 11 பேருடன் பயணித்த சிறிய ரக விமானம் ஒன்று, அவசரமாக நீரிலிறக்க முயன்றபோது விபத்துக்குள்ளாகித் தீப்பிழம்பாக வெடித்துச் சிதறியதில் பயணிகள் பலர் காயமடைந்ததுடன், ஒருவர் உயிருக்குப் போராடி வருகின்றதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
 
வாஷிங்டனில் உள்ள சுசியா தீவுக்கு (Sucia Island) அருகே உள்ள 'ஷாலோ பே' (Shallow Bay) பகுதியில், உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை மாலை 5:15 மணியளவில் விபத்துக்குள்ளானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e06cebed-0afe-4786-96d2-02007a6a70c6/26-6a63203a64943.webp' /></p><h2>&nbsp;புறப்பட்ட 45 நிமிடங்களில்&nbsp;விமானம் விபத்து</h2><p> </p><p>இது சீயட்டில் (Seattle) நகரிலிருந்து புறப்பட்ட 45 நிமிடங்களில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

 

'கென்மோர் எயார்' (Kenmore Air) நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த விமானம், 'ரோச் ஹார்பர்' (Roche Harbor) நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, அதன் விமானி அவசரமாகத் தரையிறக்க முயன்றதாகவும், அதன்பின்னரே விமானம் தீப்பிடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

 

 

 விமானம் எரிந்து சாம்பலான போதிலும், அதிர்ஷ்டவசமாக, விமானி உட்பட பயணித்த 11 பேரும் ஆல்ஃபா (உயிருடன்) மீட்கப்பட்டுள்ளனர்.

 

 

விமான விபத்து தொடர்பில் அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்: "விபத்தில் ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார்.</p><p> மற்றவர்களுக்குத் தலைக்காயம், எலும்பு முறிவுகள் மற்றும் வெட்டுக் காயங்கள் உள்ளிட்ட பல்வேறு காயங்கள் ஏற்பட்டுள்ளன" என்று தெரிவித்தனர்.

 

 

காயமடைந்த பயணிகளில் இருவர் அமெரிக்கக் கடலோரக் காவல்படையின் ஹெலிகாப்டர் மூலம் 'பெல்லிங்ஹாம்' (Bellingham) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.</p><p> மேலும் இருவர் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக அருகில் உள்ள 'ஒர்காஸ் தீவுக்கு' (Orcas Island) அழைத்துச் செல்லப்பட்டனர்.
</p><p>
 

அமெரிக்கக் கடலோரக் காவல்படை மற்றும் 'சான் ஜுவான் கவுண்டி' ஷெரிப் அலுவலகம் உள்ளிட்ட பல அவசர கால மீட்பு முகமைகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக 'ஒர்காஸ் தீவு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை' தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T08:18:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடவுச்சொல்லை மறந்தாலும் கூகுள் கணக்கை மீட்டெடுக்கலாம் : அறிமுகமான புதிய வசதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/google-new-selfie-video-sign-in-feature-1784879478"></link>
            <id>https://tamilwin.com/article/google-new-selfie-video-sign-in-feature-1784879478</id>
            <summary type="text">கூகுள் ஜூலை 23 அன்று ஒரு புதிய செல்ஃபி வீடியோ உள்நுழைவு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இது, பயனர்கள் தங்கள் கணக்குகளில் உள்நுழைய அல்லது மறந்த கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கூகுள் ஜூலை 23 அன்று ஒரு புதிய செல்ஃபி வீடியோ உள்நுழைவு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p> 

இது, பயனர்கள் தங்கள் கணக்குகளில் உள்நுழைய அல்லது மறந்த கடவுச்சொற்கள் அல்லது தங்களுக்கு விருப்பமான சாதனங்களை அணுக முடியாமல் கணக்கு முடக்கப்பட்டால், அவற்றை மீட்டெடுக்க மற்றொரு வழியை வழங்குகிறது.</p><p>

ஆல்ஃபபெட் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த நிறுவனம், பயனர்கள் பல கோணங்களைப் படம்பிடிக்கும் வகையில், வழிகாட்டப்பட்ட தலை அசைவுகளைச் செய்யும் ஒரு சிறிய வீடியோவைப் பதிவு செய்வதன் மூலம் சரிபார்ப்பை அமைக்க அனுமதிக்கும். </p><p></p><h2>தொலைந்து போன அல்லது திருடப்பட்ட சமயங்களில்</h2><p>கூகுள் அந்தப் பதிவைச் சேமித்து, பயனர்கள் பின்னர் உள்நுழைய முயற்சிக்கும்போது பதிவேற்றும் நேரடி வீடியோக்களை அங்கீகரிக்க அதைப் பயன்படுத்தும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/228eefc7-a7e1-4aeb-8814-2cc82a9beb4a/26-6a631d511b358.webp' /></p><p>
இந்த புதிய அம்சம், குறிப்பாக சாதனங்கள் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட சமயங்களில், மோசடிக்கு எதிராக வலுவான பாதுகாப்பையும், பயனர்களுக்கு சிறந்த கணக்கு மீட்பு விருப்பங்களையும் வழங்கக்கூடும் என்றாலும், இது தனியுரிமை மற்றும் பயோமெட்ரிக் தரவு சேகரிப்பு குறித்து சில கவலைகளையும் எழுப்பியுள்ளது.</p><p>இருப்பினும், இந்தச் செல்ஃபி வீடியோ பயனரின் சம்மதத்துடன் மட்டுமே சேமிக்கப்படுவதாகவும், பயனர்கள் தங்களின் கூகுள் கணக்கிலிருந்து இதை எப்போது வேண்டுமானாலும் நீக்கிக்கொள்ளலாம் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது. </p><p>மேலும், பயனர் பிற தேவைகளுக்காகப் பகிர விருப்பம் தெரிவித்தால் தவிர, இந்த வீடியோ உள்நுழைவு நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.
</p><h2>தரவுப் பாதுகாப்பு</h2><p>
புதிய பதிவை சேமிக்கப்பட்ட வீடியோவுடன் ஒப்பிடுவதுடன், வீடியோ நேரலையானதுதானா என்பதை உறுதிப்படுத்த பயனர்களைச் சில அசைவுகளைச் செய்யக் கோருவதன் மூலம், ‘டீப்ஃபேக்’ (Deepfakes) உட்பட ஆள்மாறாட்ட முயற்சிகளைக் கண்டறிய பல பாதுகாப்புச் சோதனைகளைப் பயன்படுத்துவதாகக் கூகுள் மேலும் கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fad0b0ea-9c61-4cae-94c6-00ff62ce58ae/26-6a631d51d5465.webp' /></p><p>

தகுதியுள்ள கூகுள் கணக்குப் பயனர்களுக்கு இந்த வசதி ஜூலை 23 முதல் கிடைக்கிறது.

தற்போது நிறுவனங்கள் கணக்கு மீட்பு நடைமுறைகளுக்கு நம்பகமான சாதனங்கள், பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி எண்கள், மீட்புத் தொடர்புகள் மற்றும் இருபடிச் சரிபார்ப்பு (Two-factor authentication) ஆகியவற்றையே நம்பியுள்ளன. </p><p>உயிரியல் அளவீடு மற்றும் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பங்கள் (Facial Recognition) நீண்டகாலமாகவே தரவுப் பாதுகாப்பு குறித்த கவலைகளுக்குரிய தலைப்பாக இருந்து வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T08:17:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கறுப்பு ஜூலை கொடூரர்களின் பின்புலத்தை போதையில் உளறித் தள்ளிய ஒரு தமிழர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-tamil-who-exposed-the-background-of-black-july-1784876421"></link>
            <id>https://ibctamil.com/article/the-tamil-who-exposed-the-background-of-black-july-1784876421</id>
            <summary type="text">1983 ஜூலை மாதம் இலங்கையில் அரங்கேறிய கறுப்பு ஜூலை வன்முறை, உலக வரலாற்றில் மிகக் கொடூரமான இனப்படுகொலைகளில் ஒன்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இது தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>1983 ஜூலை மாதம் இலங்கையில் அரங்கேறிய கறுப்பு ஜூலை வன்முறை, உலக வரலாற்றில் மிகக் கொடூரமான இனப்படுகொலைகளில் ஒன்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p> 

இது திடீரென வெகுண்டெழுந்த சிங்களப் பொதுமக்களின் தன்னிச்சையான கோபம் அல்ல.

மாறாக, அன்றைய ஆளுங்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) உயர் மட்ட அரசியல் தலைமைகளாலும் அரசு இயந்திரத்தாலும் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஓர் இனவழிப்புப் போராகும்.</p><p>

இது காலத்தால் மறைக்கப்பட்டு திரிபுபடுத்தப்பட்டாலும் நேற்றைய(23.07.2026) நாடாளுமன்ற அமர்வில் இடம்பெற்ற சிறப்பு விவாதத்தில் அனுர தரப்பு எம்.பி க்களால் இந்த குற்றச்சாட்டு பகிரங்கமாக முன்வைக்கப்பட்டிருந்தன.</p><p></p><h2>களு ஜூலையே செகவாது துமராய</h2><p>
</p><p>
குறிப்பாக கொழும்பில் தமிழ் மக்கள் எவ்வாறு திட்டமிட்டு கொலை செய்யப்பட்டனர், அந்த கொலைகளுக்கான உதவிகள் எவ்வாறெல்லாம் வழங்கப்பட்டது, இந்த அரசியல் பின்புலத்தில் இருந்த கொடூரர்கள், அதன் பின் இது எப்படி தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளுக்கு பரப்பப்பட்டது என்பதெல்லாம் குறித்து அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்கள் முன்னெடுக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac3ba8b2-8104-4a41-9312-ecf146a53ed1/26-6a63171199b24.webp' /></p><p>

இந்த விடயம் அப்போது இலங்கையின் உள்நாட்டு போரை காரணம் காட்டி வெளிவராமல் சிங்கள மக்கள் மத்தியில் மறைக்கப்பட்டாலும், அந்த கொடூரத்தின் மறுபக்கம் 10 ஆண்டுகளுக்கு பின்னர், இலங்கையின் மூத்த பத்திரிகையாளரான விக்டர் ஐவனால் உலகத்திற்கு வெளிச்சமிடப்பட்டது.
</p><p>
இலங்கையின் மூத்த பத்திரிகையாளரான விக்டர் ஐவன் (Victor Ivan), தனது புகழ்பெற்ற ‘ராவய’ (Ravaya) பத்திரிகையில் எழுதிய "களு ஜூலையே செகவாது துமராய" (கறுப்பு ஜூலையின் மறைக்கப்பட்ட மறுபக்கம்) என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுக் கட்டுரையின் வழியே, இதன் பின்னணியில் இருந்த பேரினவாத அரசியலையும், தமிழர்கள் சந்தித்துக் குருதி சிந்திய அவலங்களையும் ஆதாரங்களுடன் தோலுரித்துக் காட்டியுள்ளார்.</p><p>இக்கட்டுரையின் மிக முக்கியமான திருப்புமுனை, அன்றைய கொழும்பு மேயரும், ஆளும் UNP கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான கே. கணேசலிங்கம் (K. Ganeshalingam) வழங்கிய அதிர்ச்சியூட்டும் சாட்சியமாகும்.
</p><p>
விக்டர் ஐவன் நடத்திய தீவிர தேடலின் போது, "அரசாங்கம் ஏன் இந்த இனக் கலவரத்தை அனுமதித்தது? 
இதன் பின்னணியில் என்ன அரசியல் கணக்கு உள்ளது? என்று கேட்கப்பட்டபோது, கணேசலிங்கம் அந்த மறைக்கப்பட்ட உண்மையை வெளிப்படையாகப் உடைத்துள்ளார்.
</p><p>
' கறுப்பு ஜூலை என்பது நிறுத்த முடியாத ஒன்று. சிங்கள மக்கள் மத்தியில் உருவான இந்த நிலையை எப்படி மடை மாற்றுவது என்று எமக்கு தெரியவில்லை.
</p><p>
இந்த கலவரத்தில் என் பங்கு மட்டும் அல்ல ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து அங்கத்தவர்களினதும் பங்கு அமைந்திருக்கிறது.</p><p>இந்த காலத்தில் அவர் ஐக்கிய தேசியக்கட்சியின் பொருளாளராகவும், அக்கட்சியின் கொழும்பு மாநகரசபை மேயராகவும் இருந்தவர் கணேசலிங்கம்.

இதன்போது பத்திரிகையாளர் ஐவன் பொறுமையிழந்து தமிழனாக நீர் எவ்வாறு இதற்கு துணைபோகலாம் என கேட்டுள்ளார்.</p><p>''ஒரு வெளிநாட்டு உயர்ஸ்தானிகரின் (High Commissioner) இல்லத்தில் நடந்த உத்தியோகபூர்வ இரவு விருந்து ஒன்றில் விக்டர் ஐவனும், கே. கணேசலிங்கமும் பங்கேற்றுள்ளனர்.

அங்கு மது பரிமாறப்பட்டிருந்த நிலையில், கணேசலிங்கம் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு முழுமையான மதுபோதைநிலையில் இருந்துள்ளார்.
</p><p>
அப்போது விக்டர் ஐவன் அவரிடம், 1981 இல் யாழ் நூலகத்தை எரிப்பதற்கு நீங்களும் (அமைச்சர்) சிறில் மத்தியூ போன்றோருடன் உடந்தையாக இருந்தீர்கள் தானே?" என்று நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>
</p><p>
மதுபோதையில் இருந்த கே. கணேசலிங்கம் எவ்வித தயக்கமும் இன்றி, "அந்த நேரம் கள்ள வாக்குகளைப் போடுவதற்காகத்தான் நாங்கள் (கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு) போயிருந்தோம் என்பது உண்மை..." என்று உளறி ஒப்புக்கொண்டுள்ளார்.
</p><p>
அரசின் உயர்மட்டத்தினரே திட்டமிட்டு கள்ள ஓட்டுப் போடவும், வன்முறையை ஏவவும் கொழும்பில் இருந்து குண்டர்களையும் அமைச்சர்களையும் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பியிருந்தனர் என்ற கசப்பான உண்மையை ஒரு தமிழ் அரசியல்வாதியே போதையில் உறுதிப்படுத்திய நிகழ்வு இதுவாகும்.</p><p></p><h2>யாழ் நூலக எரிப்பு</h2><p>
</p><p>கணேசலிங்கம் போதையில் பேசியது 1981 யாழ் நூலக எரிப்புப் பற்றி என்றாலும், 1983 கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் பின்னணியிலும் இதே கே. கணேசலிங்கம், ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன, அமைச்சர்களான சிறில் மத்தியூ, காமினி திசாநாயக்க ஆகியோருடன் இணைந்து வன்முறையாளர்களுக்குச் சூத்திரதாரியாகச் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டையும் விக்டர் ஐவன் தனது பத்தி எழுத்துக்களில் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2789cdc1-8fd3-4cbc-959a-a5b92327eaa2/26-6a6317124ca16.webp' /></p><p>
இந்த காலத்தில் அவர் ஐக்கிய தேசியக்கட்சியின் பொருளாளராகவும், அக்கட்சியின் கொழும்பு மாநகரசபை மேயராகவும் இருந்தவர் கணேசலிங்கம்.
</p><p>
இதன்போது பத்திரிகையாளர் ஐவன் பொறுமையிழந்து தமிழனாக நீர் எவ்வாறு இதற்கு துணைபோகலாம் என கேட்டுள்ளார்.
</p><p>
இதன்போது சூதாகரித்துக்கொண்ட அவர் அமைதியாக இருந்ததாகவும், ஐக்கியதேசிய கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்த ஒருவர் உளறிக்கொட்டிய சந்தர்ப்பமாக இது அமைந்திருந்ததாக கூறப்படுகிறது.
</p><p>
இதுபற்றி எக்காலமும் வாய் தீர்க்க கூடாது என பத்திரிகையாளர் விக்டருக்கு அழுத்தம் மிகு கருத்துக்கள் வழங்கப்பட்டுள்ளன.

எனினும் இந்த சந்திப்பு நடந்து இரண்டு ஆண்டுகள் கழித்து அதாவது 10ஆவது கருப்பு ஜூலை நினைவு நாளில் இந்த உண்மைகள் அனைத்தையும் விக்டர் ஐவன் பத்திரிகையில் இந்த விடயங்கள் அனைத்தையும் 'களு ஜூலையே செகவாது துமராய'' என்ற கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ளார்.
</p><p>
அன்றைய காலகட்டத்தில் ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான UNP அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளாலும், அரசியல் அடக்குமுறைகளாலும் சிங்கள மக்கள் மத்தியில் அரசு மீது கடும் அதிருப்தியும் கொந்தளிப்பும் நிலவியது. </p><p>

இந்த மக்கள் கோபம் எந்த நேரத்திலும் அரசுக்கு எதிரான ஒரு பெரிய உள்நாட்டுக் கிளர்ச்சியாக வெடிக்கலாம் என UNP தலைமை அஞ்சியது. </p><p>

எனவே, தங்கள் ஆட்சிக்கு வரவிருந்த பேராபத்தைத் தடுப்பதற்காகவும், சிங்கள மக்களின் கோபத்தை திசைதிருப்புவதற்காகவும், தமிழர்களைப் பலிகடாவாக்கி இந்த வன்முறையை UNP அரசாங்கமே திட்டமிட்டுத் தூண்டிவிட்டது.
</p><p>
இந்த வாக்குமூலத்தின் மூலம், 'களு ஜூலை' என்பது ஒரு சமூகக் கலவரம் அல்ல, UNP அரசு தன் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள நடத்திய திட்டமிடப்பட்ட அரசியல் சதி என்பது வெளிச்சத்திற்கு வந்தது.</p><p></p><p>
</p><h2>தயார் செய்யப்பட்ட படுகொலைச் சதி</h2><p>வன்முறையாளர்கள் வீதிக்கு வருவதற்கு முன்பே, தாக்குதலுக்கான தயாரிப்புகள் அரசிடமிருந்து துல்லியமாகச் செய்யப்பட்டிருந்தன என்பதை விக்டர் ஐவன் தனது கட்டுரையில் அம்பலப்படுத்தினார்:</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59fd2e6c-d9a5-415f-8f88-acf2fe759579/26-6a631712f40ce.webp' /></p><p>
</p><p><b>
1. வாக்காளர் பட்டியல்களின் துஷ்பிரயோகம்</b></p><p>
கலவரக்காரர்கள் கைகளில் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வாக்காளர் பட்டியல்கள் (Voters' List) இருந்தன. 

எந்த வீடுகளில் தமிழர்கள் வசிக்கிறார்கள், எந்த வர்த்தக நிறுவனங்கள் தமிழர்களுக்குச் சொந்தமானவை என்பதை அரச அதிகாரிகளின் உதவியோடு பட்டியலிட்டு, துல்லியமாகத் தாக்கி அழித்தனர்.</p><p><b>

2. அரச பேருந்துகளும் எரிபொருளும்
</b></p><p>தாக்குதல் நடத்தும் கும்பல்கள் நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் விரைந்து செல்ல அரசப் போக்குவரத்துச் சபையின் (CTB) பேருந்துகள் வழங்கப்பட்டன. 

வீடுகளையும் கடைகளையும் எரிக்கத் தேவையான எரிபொருட்கள் அரசாங்கக் கிடங்குகளில் இருந்தே விநியோகிக்கப்பட்டன.
</p><p><b>
3. தமிழர் பொருளாதாரத்தை வேரறுத்தல்:
</b></p><p>கொழும்பு, கண்டி, மாத்தறை, இரத்தினபுரி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்த தமிழர்களின் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள், ஆடை உற்பத்தியகங்கள், மற்றும் மொத்த வியாபாரக் கடைகள் எரிக்கப்பட்டு, தமிழர்களின் பல தசாப்த காலப் பொருளாதார பலம் ஒரே வாரத்தில் சாம்பலாக்கப்பட்டது.</p><p></p><h2>எப்படியெல்லாம் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்</h2><p>1983 ஜூலை 24 இரவு தொடங்கி ஒரு வாரத்திற்கும் மேலாக தென்னிலங்கை முழுவதிலும் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடூரங்கள், மனிதநேயத்தின் மீதான மாறாத வடுக்களாகும்:

வீதிகளிலும் சந்திப்புகளிலும் வாகனங்கள் மறிக்கப்பட்டன. உள்ளே இருப்பவர்கள் தமிழர்களா என்பதைக் கண்டறிய வன்முறையாளர்கள் கொடூரமான நுட்பங்களைக் கையாண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/128076e4-0ad9-4a38-a923-2c0aaae5619d/26-6a631713a64ce.webp' /></p><p>

 'சிங்களப் பத்திரிகைகளை வாசிக்கச் சொல்வது', சிங்கள மொழியில் சில கடினமான வார்த்தைகளை (எ.கா: ‘பாளம’ - பாலத்தைக் குறிக்கும் சொல்) உச்சரிக்கச் சொல்வது போன்ற சோதனைகள் நடத்தப்பட்டன.
</p><p>
உச்சரிப்பில் தமிழ் அடையாளம் தெரிந்த கணமே, அவர்கள் பயணித்த பேருந்துகள், கார்களோடு சேர்த்தே பெட்ரோல் ஊற்றி உயிரோடு கொளுத்தப்பட்டனர்.

சொந்த வீடுகளுக்குள் புகுந்த கும்பல்கள், வீடுகளைச் சூறையாடி தீயிட்டன. </p><p>தாய்மார்களின் கண்முன்னே கைக்குழந்தைகள் தீயில் தூக்கி வீசப்பட்ட கொடூரங்களும், பெண்கள் வீதிகளில் வைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்களும் அரங்கேறின.

மேலும் அரசின் பாதுகாப்பில் இருக்க வேண்டிய அதிபாதுகாப்பு வெலிக்கடைச் சிறைச்சாலை, குருதி சிந்தும் கசாப்புக் கடையாக மாறியது. </p><p>

சிறையிலிருந்த சிங்களக் கைதிகள் ஆயுதங்களோடு ஏவிவிடப்பட்டு, தமிழ் அரசியல் கைதிகள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது.

தங்கத்துரை, குட்டாமணி, ஜெகநாதன் உள்ளிட்ட 53 தமிழ் அரசியல் கைதிகள் இரும்புத் தடிகளாலும், கூர்மையான ஆயுதங்களாலும் குத்திக் கொடூரமாகக் படுகொலை செய்யப்பட்டனர்.</p><p>

குட்டாமணி சிறையிலும்கூட "தமிழீழம் அமையும் வரை என் கண்களைத் தமிழ் மக்களுக்குத் தானமாகக் கொடுங்கள்" என்று கூறியிருந்தார். 

அதற்காகவே வன்முறையாளர்கள் அவரின் கண்களைத் தோண்டி எடுத்து கொடூரமாக விளையாடியதாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.</p><p></p><h2>அரசு இயந்திரத்தின் அமைதி</h2><p> வன்முறை கொழுந்துவிட்டு எரிந்தபோது, அதைத் தடுக்க வேண்டிய காவல்துறையும் இராணுவமும் வேடிக்கை பார்த்தன.

பல இடங்களில் வன்முறையாளர்களுக்கு வழிகாட்டியாகவும் செயல்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/510095be-a0ed-4df6-bda2-6c5e450ff19e/26-6a63171457f3e.webp' /></p><p>

ஜூலை 28 அன்று, வன்முறை உச்சத்திலிருந்தபோது அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன தொலைக்காட்சியில் தோன்றினார். 

ஆனால், அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவோ, வன்முறையைக் கண்டிக்கவோ இல்லை. </p><p>மாறாக, "சிங்கள மக்களின் தேசிய உணர்வுகளுக்குத் தமிழர்கள் சவால் விட்டதால் வந்த விளைவே இது" என்று கூறி, வன்முறையை நியாயப்படுத்தும் வகையில் பேசினார்.</p><p>

 இது வன்முறையாளர்களுக்கு மேலும் ஊக்கமளிப்பதாக அமைந்தது.

3,000-க்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். (அரசின் அதிகாரப்பூர்வமற்ற கணக்குகள் இதைவிட அதிகம்).
</p><p>
ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் தங்கள் உடைமைகளை இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டனர்.

கொழும்புத் துறைமுகத்திலிருந்து சரக்குக் கப்பல்கள் மூலம் தமிழர்கள் கால்நடைகளைப் போல ஏற்றப்பட்டு, வடக்கு - கிழக்கு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
</p><p>
ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் தங்களின் உயிர் பாதுகாப்புக்காகவும் உரிமைக்காகவும் ஆயுதப் போராட்டப் பாதையைத் தேர்ந்தெடுக்க இக்கறுப்பு ஜூலையே பிரதான காரணியாக அமைந்தது.
</p><p>
இந்த பல கொடூரங்களை உள்ளடக்கி விக்டர் ஐவன் தனது "களு ஜூலையே செகவாது துமராய" கட்டுரையின் வழியே வெளிக்கொணர்ந்த உண்மைகளும், UNP தலைவர் கே. கணேசலிங்கத்தின் அதிர்ச்சி வாக்குமூலமும், 'கறுப்பு ஜூலை' என்பது தன்னிச்சையான இனக் கலவரம் அல்ல.</p><p>

மாறாக, அரசாங்கத்தால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு பேரினவாத இனப்படுகொலை என்பதை நிரூபிக்கின்றன.
</p><p>
தமிழ் இனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட இந்த வரலாற்றுத் துயரமும், அதன் பின்னணியில் இருந்த அரசியல் சூழ்ச்சிகளும், நீதிக்கான போராட்டத்தில் என்றும் மறக்க முடியாத, மறைக்க முடியாத வரலாற்றுச் சாட்சியங்களாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T08:14:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[130 விண்ணப்பங்களில் 2க்கு மட்டுமே ஒப்புதல்: கனடாவால் நிராகரிக்கப்படும் காசா மாணவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/gaza-student-applicant-permit-rejected-in-canada-1784880817"></link>
            <id>https://news.lankasri.com/article/gaza-student-applicant-permit-rejected-in-canada-1784880817</id>
            <summary type="text">காசா மாணவர்களுக்கான கல்வி அனுமதி கனடாவில் பெருமளவில் நிராகரிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் நிராகரிக்கப்படும் காசா மாணவர்கள்
கனடாவில் கல...</summary>
            <content type="html"><![CDATA[<p>காசா மாணவர்களுக்கான கல்வி அனுமதி கனடாவில் பெருமளவில் நிராகரிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2> கனடாவில் நிராகரிக்கப்படும் காசா மாணவர்கள்</h2><p>
கனடாவில் கல்வி கற்பதற்காக விரும்பும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த மாணவர்களின் விண்ணப்பங்கள் பெரும்பாலானவை அந்நாட்டு மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டு இருப்பதாக ப்ளாக்லாக்ஸ் ரிப்போர்ட்டர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> காசா மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4b33d64-ed6f-4585-ace2-80b9085a67a0/26-6a631eb346054.webp' /></p><p> ஆனால் ஜூன் 17ம் திகதி வெளியான காசாவின் சூழல் தொடர்பாக கனடாவின் பதில் என்ற அரசாங்க குறிப்பில், விண்ணப்பிக்கும் மாணவர்களின் கைரேகை மற்றும் புகைப்படம் எடுத்தல் ஆகிய கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p> இந்த மேம்பட்ட பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் விண்ணப்பிக்கும் மாணவர்கள் காசாவில் இருக்கும் போதே அவர்கள் தொடர்பான ஆரம்பகட்ட சோதனைகளை கனடாவால் நடத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அத்துடன் காசாவை விட்டு வெளியே வர முடிந்தவர்கள் மூன்றாவது நாட்டிலும் இந்த பயோமெட்ரிக் பதிவுகளை செய்து முடிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.</p><p></p><h2> 2 பேருக்கு மட்டுமே ஒப்புதல்</h2><p>
பாலஸ்தீன மாணவர்கள் மற்றும் ஆபத்தில் உள்ள அறிஞர்கள் வலையமைப்பு தகவல்படி, கனடாவில் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக விண்ணப்பித்த 130 மாணவர்களில் 2 பேரின் விண்ணப்பங்களுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.</p><p> ஆனால் அமைச்சகத்தின் தகவல்படி, மொத்த விண்ணப்பங்கள் 37, அதில் ஒப்புதல் அளிக்கப்பட்டவை 2, நிராகரிக்கப்பட்டவை 14, திரும்ப பெறப்பட்டவை 4 மீதமுள்ளவை நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T08:13:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று வக்ர நிவர்த்தியடையும் புதன்.., பணத்தை எண்ணப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-budhan-vakra-nivarthi-1784880271"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-budhan-vakra-nivarthi-1784880271</id>
            <summary type="text">நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
</p><p>
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
</p><p>
இந்நிலையில், புதன் ஜூலை 24ஆம் திகதியான இன்று புதன் மிதுன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிக்கவுள்ளார்.
</p><p>
அந்தவகையில், இன்று வக்ர நிவர்த்தியடையும் புதனால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.</p><p></p><h2>மிதுனம் </h2><ul><li>பல நன்மைகளைப் பெறுவார்கள். </li><li>நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். </li><li>தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்பு கிடைக்கும். </li><li>பணியிடத்தில் செயல்திறனுக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். </li><li>குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். </li><li>ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். </li><li>மந்தமாக இருந்த மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b52efebd-ef08-4710-b591-2e795af35136/26-6a631e539ceb4.webp' /></p><h2>கன்னி </h2><ul><li>வாழ்வில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். </li><li>பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். </li><li>வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். </li><li>வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். </li><li>தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும்.</li><li>புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். </li><li>பண விஷயங்களில் அவசரப்பட்டு முடிவெடுப்பதைத் தவிர்க்க வேண்டும். </li><li>ஆரோக்கிய பிரச்சனைகளைப் புறக்கணிக்காதீர்கள்.
</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d43f74d0-cf4f-4cdd-b122-a52552257921/26-6a631e547172a.webp' /></p><h2>கும்பம்</h2><ul><li>புதிய நட்புகளைப் பெறுவார்கள். </li><li>தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.</li><li>முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். </li><li>சொத்து தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். </li><li>பண வரவு அதிகரிக்கும். </li><li>தேவையில்லாத செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். </li><li>குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f50b8952-b1fd-4ce1-81d0-b1cf50831ccd/26-6a631e5526add.webp' />&nbsp;</p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T08:12:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்தக்கறைகளுடன் வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு ; பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-s-body-recovered-from-a-house-in-tamil-area-1784880745"></link>
            <id>https://jvpnews.com/article/man-s-body-recovered-from-a-house-in-tamil-area-1784880745</id>
            <summary type="text">கம்பஹா, கட்டுகஸ்தர பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.பொலிஸார் மேலதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா, கட்டுகஸ்தர பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p></p><h3>பொலிஸார் மேலதிக விசாரணை</h3><p>



நேற்று (23) வியாழக்கிழமை கம்பஹா பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/427b3219-da06-49c5-abf6-aaed5c37b828/26-6a631e6ad570e.webp' /></p><p>உயிரிழந்தவர் கட்டுகஸ்தர பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>



சடலத்திற்கு அருகில் இரத்தக் கறைகள் காணப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>


நீதவான் பரிசோதனைகளின் பின்னர், சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
</p><p>


குறித்த நபரின் மரணம் தொடர்பான காரணத்தை கண்டறியும் நோக்கில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T08:12:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/penalty-imposed-on-bus-has-route-permit-from-ntc-1784878032"></link>
            <id>https://ibctamil.com/article/penalty-imposed-on-bus-has-route-permit-from-ntc-1784878032</id>
            <summary type="text">தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் (NTC) வழித்தட அனுமதி வழங்கப்பட்டு, வடக்கு
மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்குச் சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்துக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் (NTC) வழித்தட அனுமதி வழங்கப்பட்டு, வடக்கு
மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்குச் சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்துகளில் ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால், வடக்கு மாகாண வீதிப் பயணிகள்
போக்குவரத்து அதிகார சபைக்கு பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும் என
அதிகார சபையின் தலைவர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.</p><p> அத்துடன்,
அதிகார சபையின் சோதனையின் அடிப்படையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின்
அனுமதி பெற்ற பேருந்து ஒன்றுக்கு 20,000 ரூபாய் தண்டப்பணம்
விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் அனுமதி வழங்கப்பட்ட பேருந்துகளிலும் சோதனை
நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து
அதிகார சபையின் திடீர் பரிசோதகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;பயணச்சீட்டு&nbsp;வழங்கப்பட்டிருக்கவில்லை</h2><p>இதற்கமைவாக, மன்னார் - கற்பிட்டி வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்ட
பேருந்தில் அதிகார சபையின் திடீர் பரிசோதகர்கள் சோதனைகளை மேற்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38e70e87-b5c5-4771-9318-f167bd2c74e6/26-6a631dbe89fb4.webp' /></p><p>இதன்போது குறித்த பேருந்து செல்லுபடியான வழித்தட அனுமதிப்பத்திரத்தைக்
கொண்டிருக்கவில்லை என்பதுடன், பயணிகளுக்குப் பயணச்சீட்டுகளும்
வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது. </p><p>இக்குற்றச்சாட்டுகள்
தொடர்பில் அதிகார சபையால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலம்
அறிவிக்கப்பட்டது. </p><p>இந்த முறைப்பாட்டுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்
முடிவில், உரிய அனுமதி நிபந்தனைகளை மீறியமைக்காக குறித்த பேருந்துக்கு 20,000
ரூபா நிர்வாகத் தண்டப்பணமாக விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து
ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.</p><p></p><h2>கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள்&nbsp;</h2><p>
</p><p>
எதிர்காலத்தில் இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் வடக்கு மாகாணம் முழுவதும் மேலும்
தீவிரப்படுத்தப்படும். </p><p>அண்மைக் காலமாகச் சில சொகுசுப் பேருந்துகளின் சேவைகள்
தொடர்பில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு முறைப்பாடுகள் அதிகார சபைக்குக்
கிடைக்கப்பெற்றுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36dfc97c-b59d-4641-b9bc-029873fb4f09/26-6a631dbdd068b.webp' /></p><p> </p><p>குறிப்பாக, பேருந்தின் ஆசனங்களைச் சரிப்படுத்த முடியாத
நிலை காணப்படுதல், ஆசனங்களில் மூட்டைப்பூச்சிக் கடிக்கு உள்ளான சம்பவங்கள்
மற்றும் குளிரூட்டி (A/C) முறையாகச் செயற்படாமை போன்ற பல குறைபாடுகள்
தொடர்பில் பயணிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
</p><p>
எனவே, பயணிகள் இத்தகைய சொகுசுப் பேருந்துகளில் பயணம் செய்யும்போது
மேற்கண்டவாறான குறைபாடுகளையோ அல்லது முறைகேடுகளையோ எதிர்கொண்டால், அதற்கான
தகுந்த ஆதாரங்களுடன் 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்குத் தமது
முறைப்பாடுகளைத் தாமதமின்றி அனுப்பி வைக்க முடியும்'' என அவர் மேலும்
தெரிவித்துள்ளார்.</p><p></p><p><b><i></i></b></p><p><b><i>செய்தி&nbsp; - பு.கஜிந்தன், த.பிரதீபன்</i></b>&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T08:09:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[60 நாடுகளுக்கு அமெரிக்கா புதிய சுங்க வரி; பல நாடுகள் அதிருப்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-imposes-new-tariffs-on-60-countries-1784880519"></link>
            <id>https://canadamirror.com/article/us-imposes-new-tariffs-on-60-countries-1784880519</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கை உள்ளிட்ட 60 நாடுகளுக்கு அமெரிக்கா புதிய சுங்க வரிகளை விதித்துள்ளமை உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜப்பான் மற்றும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கை உள்ளிட்ட 60 நாடுகளுக்கு அமெரிக்கா புதிய சுங்க வரிகளை விதித்துள்ளமை உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் , அமெரிக்காவின் இந்த வரி விதிப்புக்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன.
</p><p>
ஜப்பானின் தலைமை அமைச்சரவை செயலாளர், அமெரிக்காவின் புதிய சுங்க வரி நடவடிக்கை குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb476aef-aebb-46fe-8173-d7a0a60b3e9a/26-6a631d8914aab.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, அவுஸ்திரேலியாவின் வர்த்தக அமைச்சர், தமது நாட்டிற்கு 12.5 சதவீத சுங்க வரி விதிக்கப்பட்டிருப்பது முற்றிலும் நியாயமற்றது என விமர்சித்துள்ளார்.
</p><p>
60 நாடுகளுக்கு புதிய சுங்க வரிகளை அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், இலங்கை உள்ளிட்ட 18 நாடுகளுக்கு 10 சதவீத சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இலங்கையுடன் இணைந்து 10 சதவீத சுங்க வரி விதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, கனடா மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளும் அடங்குகின்றன.

அமெரிக்காவின் இந்த புதிய சுங்க வரிகள் தொடர்பாக பாதிக்கப்பட்ட நாடுகள் தொடர்ந்து தங்களது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-07-24T08:06:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கர்நாடகா செல்ல உள்ள முதல்வர் விஜய் - 14 ஆண்டுகளுக்கு பின் நேரடி பேச்சுவார்த்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cm-vijay-to-visit-karnatka-on-3-aug-meet-cm-1784880108"></link>
            <id>https://news.lankasri.com/article/cm-vijay-to-visit-karnatka-on-3-aug-meet-cm-1784880108</id>
            <summary type="text">தமிழக முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3 ஆம் திகதி செல்ல உள்ளார். 

கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதில் கர்நாடகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3 ஆம் திகதி செல்ல உள்ளார். </p><h3>

கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்
</h3><p>
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதில் கர்நாடகா அரசு உறுதியாக உள்ள நிலையில், அதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c0bd557-3544-437e-a201-2620d16b74a6/26-6a631bed80cba.webp' /></p><p>

மேலும், மேகதூது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய்யால் கொண்டுவரப்பட்ட தீர்மானம், அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. </p><p>

ஜூலை 22 ஆம் திகதி நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 52 வது கூட்டத்தில், ஜூன் மாதத்திற்கான தமிழகத்தின் பங்கான 9.91 டி.எம்.சி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.&nbsp;</p><p></p><p>

ஆனால், கர்நாடக அணைகளில் குடிநீருக்கு மட்டுமே தண்ணீர் இருப்பதாகவும், போதிய மழை இல்லாததால் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க இயலாது என்றும் கர்நாடக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c09efed9-b8da-4a04-ad2f-0c8e14bfd6cb/26-6a631bee31523.webp' /></p><p>
இந்நிலையில், இந்த விவகாரங்கள் குறித்து கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாருடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு முதல்வர் விஜய் கடிதம் எழுதியதாகவும், அதனை ஏற்று ஆகஸ்ட் 3 ஆம் திகதி கர்நாடகாவிற்கு வர விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.</p><p> 

இந்நிலையில், ஆகஸ்ட் 3 ஆம் திகதி முதல்வர் விஜய் கர்நாடகா செல்வதை வேளாண்துறை அமைச்சர் வினோத் உறுதிப்படுத்தியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66646004-7746-4614-95e4-410a968ab92e/26-6a631beed2746.webp' /></p><p>

இது குறித்து பேசிய அவர், "ஆகஸ்ட் 3 ஆம் திகதி முதல்வர் கர்நாடகா செல்கிறார். அவர்கள் மேகதாதுவில் அணை கட்ட முயற்சித்தாலும் தமிழக அரசு அதனை ஒருபோதும் அனுமதிக்காது. </p><p>அது எங்களுடைய உரிமை. 

அது சம்மந்தமான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள முதல்வர் செல்கிறார்" என தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p>முன்னதாக,&nbsp; 2012 ஆம் ஆண்டில் காவேரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா முதல்வர்கள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்றது.</p><p>

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பெங்களூருவில் அன்றைய கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் சுமூகதீர்வு ஏற்படவில்லை.
</p><p>
தற்போது 14 ஆண்டுகளுக்கு பின்னர், காவேரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா முதல்வர்கள் நேரடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T08:01:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழகத்தில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் மாவட்டம்.., எது தெரியுமா ?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/trichy-top-in-tn-district-new-history-in-tourism-1784876663"></link>
            <id>https://ibctamilnadu.com/article/trichy-top-in-tn-district-new-history-in-tourism-1784876663</id>
            <summary type="text">தமிழகத்தில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் மாவட்டம் எது என்பது குறித்து பார்க்கலாம்.

இந்திய சுற்றுலாத்துறை 

இந்தியாவின் சுற்றுலாத்துறை நாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகத்தில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் மாவட்டம் எது என்பது குறித்து பார்க்கலாம்.
</p><h3>
இந்திய சுற்றுலாத்துறை </h3><p>

இந்தியாவின் சுற்றுலாத்துறை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) சுமார் 5.22 சதவீத பங்களிப்பை வழங்குகிறது.</p><p> 

ஆன்மிகம், மருத்துவம், கலாசாரம், சூழலியல் என பல்வேறு வகையான சுற்றுலாக்கள் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகின்றன.</p><p> 

உலக அளவில் சுற்றுலா பொருளாதாரத்தில் இந்தியா 8வது இடத்தில் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a293346-0fc0-4f3b-9a0b-1ca72f1af6e4/26-6a630ff1ed91d.webp' /></p><p>

இந்தியாவில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் உத்தர பிரதேசம் முதலிடத்திலும், தமிழ்நாடு 2வது இடத்திலும் உள்ளது.</p><p> 

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையிலும் தமிழ்நாடு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
</p><p>
தமிழகத்தின் 38 மாவட்டங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் மாவட்டமாக திருச்சி முதலிடத்தில் உள்ளது.</p><h2> 

திருச்சி முதலிடம் </h2><p>

திருச்சிக்கு மாதத்திற்கு சுமார் 23 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவதாக கூறப்படுகிறது.
</p><p>
</p><p>

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் பல ரயில்கள் திருச்சி வழியாக செல்கின்றன. மேலும், சர்வதேச விமான நிலையமும் திருச்சியில் உள்ளது.</p><p>
</p><p>இதுதவிர, என்.ஐ.டி., மத்திய சட்டப் பல்கலைக்கழகம், ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.எம். உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும், பெல், துப்பாக்கி தொழிற்சாலை உள்ளிட்ட முக்கிய தொழில் நிறுவனங்களும் திருச்சியில் அமைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2a90d67-8980-4757-82e2-8be8af88262a/26-6a630ff2ad848.webp' />&nbsp;&nbsp;</p><p>
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், மலைக்கோட்டை, சமயபுரம் மாரியம்மன் கோவில், புனித லூர்து அன்னை ஆலயம், நத்தர்வலி தர்கா உள்ளிட்ட முக்கிய வழிபாட்டுத் தலங்களும் திருச்சியில் உள்ளன.
</p><p>
மேலும், முக்கொம்பு மேலணை, புளியஞ்சோலை, பச்சமலை, வண்ணத்துப்பூச்சி பூங்கா, பறவைகள் பூங்கா, ரயில் அருங்காட்சியகம், அரசு அருங்காட்சியகம், அண்ணா அறிவியல் மைய கோளரங்கம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களும் இங்கு அமைந்துள்ளன.</p><p>ரயில், விமானம் மற்றும் சாலை போக்குவரத்து வசதிகள் சிறப்பாக இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் எளிதாக திருச்சிக்கு வந்து செல்ல முடிகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T07:58:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவில் வெந்நீர் குடித்தால் உடலில் நிகழும் மாற்றங்கள்... என்னென்னனு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/benefits-of-drinking-hot-water-daily-at-night-1784821018"></link>
            <id>https://manithan.com/article/benefits-of-drinking-hot-water-daily-at-night-1784821018</id>
            <summary type="text">தினமும் இரவில் வெந்நீர் குடித்து வந்தால் உடம்பில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.வெந்நீர் அருந்துவதுபொதுவாக வெந்நீர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தினமும் இரவில் வெந்நீர் குடித்து வந்தால் உடம்பில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.</p><h2>வெந்நீர் அருந்துவது</h2><p>பொதுவாக வெந்நீர் அருந்துவது உடம்பில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகின்றது. இவை உடல் நலத்திற்கு மிகவும் சிறந்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.</p><p>ஆனால் காலையில் எழுந்ததும் இல்லாமல், இரவில் தூங்கும் முன்பு வெந்நீர் குடிப்பது பல நன்மையினை அளிக்கின்றதாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88a3672f-87ba-44a8-a95f-ec9e03da7fcd/26-6a623c87876be.webp' /></p><p>இரவில் வெந்நீர் அருந்துவது அனைத்து செரிமானப்பிரச்சனையையும் குணப்படுத்துவதுடன், நாம் உட்கொண்ட உணவு நன்றாக செரிமானம் ஆகி வயிறு முழுவதும் சுத்தமாகிவிடுமாம்.</p><p><br></p><p>இரவில் அளவிற்கு சற்று அதிகமாக உணவு எடுத்துக் கொண்டால், ஒரு குவளை வெந்நீர் அருந்துவது சிறந்ததாகும். வயிறு உப்புசம், வயிறு வலி போன்ற பிரச்சனைகள் குறையுமாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b86385c3-1089-4651-b3a7-023ae2f922c3/26-6a623c883484b.webp' /><br></p><p>மேலும் உடலின் நரம்பு மண்டலத்தை தளர்த்துவதுடன், மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற பிரச்சனையையும் குறைக்கின்றது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் வெந்நீர் குடித்து தூங்கினால் நிம்மதியான தூக்கத்தை பெற முடியும்.</p><p>பெண்கள் வெந்நீரை பருகுவதால் மாதவிடாயின் போது ஏற்படும் வலி குறைவதுடன், வலியிலிருந்து நிவாரணத்தையும் அளிக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8e9ff5b-85f1-4478-91dd-85cd678ab2c7/26-6a623de94adea.webp' /><br></p><p>மேலும் சளி மற்றும் இருமல், மூக்கடைப்பு, தொண்டை வலி போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இரவில் வெந்நீர் குடித்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12185537-9bf0-433d-aa9f-23af93ad7b8d/26-6a623de8921c4.webp' /><br></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;<br></i></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T07:57:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பிறந்தநாள் விழாவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு - சிசிடிவி கமராக்களில் சிக்கிய சந்தேகநபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-shoot-in-mattakkuliya-birthday-party-1784861727"></link>
            <id>https://tamilwin.com/article/gun-shoot-in-mattakkuliya-birthday-party-1784861727</id>
            <summary type="text">புதிய இணைப்புவத்தளை, பள்ளியாவத்தையில் பிறந்தநாள் விழாவில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக பொலிஸார் தற்போது பல விபரங்களை வெளியிட்டுள்ளனர்.நேற்று இரவு ச...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>வத்தளை, பள்ளியாவத்தையில் பிறந்தநாள் விழாவில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக பொலிஸார் தற்போது பல விபரங்களை வெளியிட்டுள்ளனர்.</p><p>நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டை, மட்டக்குளியாவை சேர்ந்த மனோஜ் என்ற நபர் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் கூறுகின்றனர்.</p><p>போதைப்பொருள் கடத்தல்காரர் என்று கூறப்படும் குடு ரோஷன் என்ற நபரை குறிவைத்து இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p></p><h2>சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ள காட்சி</h2><p>கொலை நடந்த இடத்திற்கு வந்த துப்பாக்கித்தாரி நடனமாடியபடியே வந்து பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளமை&nbsp;மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf20b4f3-95e3-4185-99ff-6c62e141ffd9/26-6a63194e2ed44.webp' /></p><p>இருப்பினும், குடு ரொஷன் அணிந்திருந்ததை போன்ற உடையை அணிந்திருந்தமையினால் உயிரிழந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது</p><p>இதன்போது பொரள்ளை, வானத்தமுல்லை பகுதியை சேர்ந்த வானத்தே சுமேத என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
இதற்கிடையில், தாக்குதலுக்கு பிறகு துப்பாக்கிதாரி தப்பியோடும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.</p><p>இச்சம்பவம் குறித்து&nbsp;5 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></p><p>வத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பள்ளியாவத்தை, மட்டக்குளி பாலத்திற்கு அருகில் நேற்றிரவு (23) இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கருப்பு நிற கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>ஜா-எல பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இரண்டு குழுக்களுக்கிடையே நீண்டகாலமாக நிலவி வரும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான முரண்பாடே இந்த சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>வத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பள்ளியாவத்தை, மட்டக்குளி பாலத்திற்கு அருகில் நேற்றிரவு (23) இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு&nbsp;சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர். </p><p>குழந்தையொன்றின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டிருந்த ஒருவரை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார்.</p><p></p><h2>விசாரணையில் வெளியான தகவல்</h2><p>இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், கொலைக்குற்றச்சாட்டுக்கு உள்ளான 'மட்டக்குளிய குடு ரொஷன்' என்ற போதைப்பொருள் கடத்தல்காரரை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e836449-438e-4cdb-9f75-1fce1e8c67c6/26-6a62d844db0e8.webp' /></p><p>

ரொஷனின் சகோதரர்களில் ஒருவரின் குழந்தையின் பிறந்த நாள் விழாவின்போதே ​​நேற்று இரவு சுமார் 9.40 மணியளவில் தலையில் முக்காடு அணிந்த ஒருவர் காரில் வந்து மண்டபத்திற்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.</p><p>இருப்பினும், குறி தவறியதால் ரொஷனுக்கு அருகில் இருந்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>போதைப்பொருள் கடத்தல்</h2><p>இதன்போது துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த பொரள்ளையை சேர்ந்த 39 வயதுடைய நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58ff3d35-e313-4f6c-85f3-a9e154de2e22/26-6a62d9a86af72.webp' /></p><p>கைத்துப்பாக்கி ரக துப்பாக்கியை கொண்டு இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இரண்டு போதைப்பொருள் கடத்தல் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறின் விளைவாக இந்த கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p>
</p><p>இச்சம்பவம் குறித்து வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T07:55:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே நபரை மணந்த 3 சகோதரிகள்: பிரிந்து வாழ்வதை நினைத்து பார்க்கமுடியாது என உருக்கம் (வீடியோ)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/three-up-sister-marry-same-cameraman-in-amroha-1784879433"></link>
            <id>https://news.lankasri.com/article/three-up-sister-marry-same-cameraman-in-amroha-1784879433</id>
            <summary type="text">இந்திய மாநிலம் உத்தரப்பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் மூன்று பெண்களை திருமணம் செய்துகொண்டது வைரலாகியுள்ளது.

சகோதரிகள் உத்தரப்பிரதேசத்தின் அம்ரோஹாவின் ஹச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய மாநிலம் உத்தரப்பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் மூன்று பெண்களை திருமணம் செய்துகொண்டது வைரலாகியுள்ளது.</p><h2>

சகோதரிகள் </h2><p>உத்தரப்பிரதேசத்தின் அம்ரோஹாவின் ஹசன்பூரைச் சேர்ந்த சகோதரிகள் சரோஜ் (20), சாவித்திரி (19) மற்றும் சன்டோஷ் (18).&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">🚨 Three Biological Sisters Tie Knot with Same Cameraman at Chamunda Mata Temple😁 <br><br>In a shocking incident from Hasanpur in Amroha, three biological sisters have married their own cameraman. 💍 <br><br>Local leaders and community members have strongly condemned the marriage, calling… <a href="https://t.co/Gy8ggAA92I">pic.twitter.com/Gy8ggAA92I</a></p>&mdash; Perman (@Perman3310) <a href="https://x.com/Perman3310/status/2080157300623626331?ref_src=twsrc%5Etfw">July 23, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>&nbsp;</p><p></p><p>

இவர்கள் மூவரும் சமூக வலைத்தளங்களில் Content Creators ஆக உள்ளனர். இவர்களுக்கு கமெரா வேலை செய்யும் ஒளிப்பதிவாளர் விகாஸ்.
</p><p>
கடந்த 17ஆம் திகதி விகாஸை சகோதரிகள் மூன்று பேரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணம் சாமுண்டா மாதா கோவிலில் நடந்துள்ளது.
</p><h2>
உயிரை மாய்த்துக்கொள்ளக்கூட நினைத்தோம்</h2><p>இந்தத் திருமண நிகழ்வின் காணொளிகள் இணையத்தில் வெளியாகின. இது பரவலான விவாதத்தையும், விமர்சனங்களையும் தூண்டியது.
</p><p>
 விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்த மூத்த சகோதரி சரோஜ், "நாங்கள் சிறுவயது முதலே ஒன்றாக வாழ்ந்து வருகிறோம்; பிரிந்து வாழ்வதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. </p><p>திருமணம் எங்களைப் பிரித்துவிடும் என்பதை உணர்ந்தபோது, உயிரை மாய்த்துக்கொள்ளக்கூட நினைத்தோம். 

பின்னர் இறப்பதற்குப் பதிலாக, நாங்கள் ஒன்றாகவே இருந்து ஒரே நபரைத் திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவு செய்தோம். நாங்கள் அனைவரும் வயது வந்தவர்கள்; இந்த முடிவை விருப்பத்துடனேயே எடுத்தோம்" எனக் கூறினார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22a01a66-51a7-4ded-b333-526cc2bd64ea/26-6a631a341f61a.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T07:52:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/illegal-leaky-production-plant-blockaded-1784879232"></link>
            <id>https://jvpnews.com/article/illegal-leaky-production-plant-blockaded-1784879232</id>
            <summary type="text">மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு பகுதியில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டு வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு பகுதியில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டு வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.</p><p></p><p>



வவுணதீவு பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் வவுணதீவு பொலிஸார் இணைந்து மேற்கொண்ட இந்த சுற்றிவளைப்பில், கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட பெருமளவான பொருட்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட கசிப்பு போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d20a0487-d85d-4bfd-8a58-9ce18e764b92/26-6a631881a971e.webp' /></p><p>வவுணதீவு பொலிஸ் பிரிவில் அதிகரித்து வரும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியை கட்டுப்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>



இதற்கமைய, வவுணதீவு பிரதேசசபையின் பிரதி தவிசாளர் த. டிசாந்த் தலைமையில் பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் இணைந்து கரையாக்கன்தீவு வாவிக்கரையோரப் பகுதியில் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
</p><p>


இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த மூவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> மேலும், அங்கிருந்த கசிப்பு போத்தல்கள் மற்றும் கசிப்பு தயாரிப்பதற்கான கோடா உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>



கைப்பற்றப்பட்ட பொருட்களை வவுணதீவு பொலிஸார் பொறுப்பேற்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T07:47:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெருங்கி வரும் எல்நினோ தாக்கம்..! விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/use-water-sparingly-intensity-the-el-nino-impact-1784878399"></link>
            <id>https://tamilwin.com/article/use-water-sparingly-intensity-the-el-nino-impact-1784878399</id>
            <summary type="text">இந்து சமுத்திரப் பிராந்தியத்தை எல்நினோ நெருங்கி வருவதால் பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என ழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறை ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்து சமுத்திரப் பிராந்தியத்தை எல்நினோ நெருங்கி வருவதால் பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என ழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறை பேராசிரியரும் கலைப் பீடாதிபதியுமான நாகமுத்து பிரதீபராஜா&nbsp;கேட்டுக்கொண்டார்.</p><p>பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் ஏற்பாட்டில் எல்நினோ (El Niño) காலநிலை
மாற்றம் தொடர்பான விசேட விழிப்புணர்வுச் செயலமர்வு, யாழ்ப்பாணம் வடமராட்சி
கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று(24) காலை 10.00 மணியளவில்
நடைபெற்றது.</p><p>




இந்த செயலமர்வில் முதன்மை வளவாளராகக் கலந்துகொண்டு உரையாற்றிய&nbsp;போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><h2>எல்நினோ தாக்கம்</h2><p>
</p><p>



செய<b>லமர்வில் பேராசிரியர் சுட்டிக்காட்டிய முக்கிய அம்சங்கள் ஒன்றான வெப்பத்
தாக்கத்தின் காலப்பகுதி தொடர்பாக அவர் கூறுகையில் ம</b>த்திய பசுபிக் பிராந்தியக்
கடற்பகுதிகளில் இருந்து இந்து சமுத்திரக் கடல் பிராந்தியத்திற்கு ஊடுருவியுள்ள
எல்நினோ, ஜூலை மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரை அதிக வெப்பத் தாக்கத்தை
ஏற்படுத்தும்.</p><p>


மற்றும் வேகமாகப் பரவும் கடல் வெப்பம் நிலத்தின் ஊடாக வெப்பம் கடத்தப்படுவதை
விட 16 மடங்கு வேகமாக நீரின் ஊடாக வெப்பம் கடத்தப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afcb3efa-5da1-437b-9a75-a014c20ed2f7/26-6a63184845784.webp' /></p><p> </p><p>இதனால் இந்து
சமுத்திரக் கடற்பரப்பில் ஏற்படும் வெப்ப ஏற்றம் ஏனைய பகுதிகளுக்கும் மிக
வேகமாகப் பரவி வருகிறது.


அத்துடன் இலங்கை மற்றும் வட மாகாணத்திற்கான பாதிப்புகள் இந்தக் கடல் வெப்ப
ஏற்றம் இலங்கை மற்றும் மாலைதீவுகளில் அதிக தாக்கத்தைச் செலுத்த வாய்ப்புள்ளது.</p><p>
இலங்கையைப் பொறுத்தவரை, குறிப்பாக வட மாகாணத்தின் முல்லைத்தீவு, மன்னார்
மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கடுமையான நீர் தட்டுப்பாட்டை இது
உருவாக்கும்.
</p><h2>பிரதீபராஜா கோரிக்கை</h2><p>

மற்றும் வறட்சியும் மழைவீழ்ச்சியும் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான
காலப்பகுதியில் கடுமையான வறட்சியை ஏற்படுத்தும் எல்நினோ, ஒக்டோபர் மற்றும்
நவம்பர் மாதங்களில் பாரிய மழைவீழ்ச்சியையும் தோற்றுவிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2679771f-0f41-488b-8d51-72649595d570/26-6a631848ed7e1.webp' /></p><p>ஒக்டோபர் மாதத்திற்குப் பின்னரே காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் உருவாவதற்கான
சாத்தியக்கூறுகள் இருப்பதால், அதுவரை அதிக வறட்சியான காலநிலையே நிலவும்.</p><p>


"எல்நினோ இந்து சமுத்திரத்தை அண்மித்துள்ள நிலையில், பொதுமக்கள் சரியான நீர்
முகாமைத்துவத்தைப் பின்பற்றி, அதிக வெப்பத்தினால் ஏற்படக்கூடிய
நீர்த்தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட முன்வர வேண்டும் என
பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா கலந்து கொண்டோரை கேட்டுக்கொண்டார்.</p><p>இந்தநிகழ்வில் பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் இணைப்பாளர் வாசுகி, அமைப்பின்
முக்கியஸ்தர்கள், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட
கிராமங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும்
இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-07-24T07:46:25+00:00</updated>
        </entry>
    </feed>
