<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-31T06:32:31+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் டெங்கு - உயிரிழப்பு 62 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-deaths-rise-to-62-1785475057"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-deaths-rise-to-62-1785475057</id>
            <summary type="text">நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. 

அந்தப் பிரிவு வெளியிட்ட அற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. </p><p>

அந்தப் பிரிவு வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 84,724 ஆக அதிகரித்துள்ளது.
</p><p></p><h2>கம்பஹாவில் அதிகளவான நோயாளர்கள்&nbsp;&nbsp;</h2><p>
அதன்படி, ஜூலை மாதத்தில் நேற்று (30) நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,350 ஆகப் பதிவாகியுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/549f2bf4-02a2-41ec-9ede-005420bfd827/26-6a6c3d3b32f7d.webp' /></p><p>

இந்த ஆண்டு இதுவரை கம்பஹா மாவட்டத்தில் இருந்து 17,971 நோயாளிகளும், கொழும்பு மாவட்டத்தில் இருந்து 16,814 நோயாளிகளும், கண்டி மாவட்டத்தில் இருந்து 5,873 நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். </p><p>

மேல் மாகாணத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,829 ஆக கண்டறியப்பட்டுள்ளது. </p><p>

தெற்கு மாகாணத்தில் 12,738 நோயாளிகளும், மத்திய மாகாணத்தில் 7,370 நோயாளிகளும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T06:31:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/new-actress-entry-in-heart-beat-season-3-1785470952"></link>
            <id>https://cineulagam.com/article/new-actress-entry-in-heart-beat-season-3-1785470952</id>
            <summary type="text">ஹார்ட் பீட் 3திரையரங்கிற்கு சென்று படங்கள் பார்க்க தனி கூட்டம் இருக்கிறது என்றால் ஒடிடியில் படங்கள், வெப் தொடர்கள் பார்க்கும் ரசிகர்கள் கூட்டமும் அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஹார்ட் பீட் 3</h2><p>திரையரங்கிற்கு சென்று படங்கள் பார்க்க தனி கூட்டம் இருக்கிறது என்றால் ஒடிடியில் படங்கள், வெப் தொடர்கள் பார்க்கும் ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்துள்ளது. </p><p>எனவே நிறைய வித்தியாசமான கதைக்களம் கொண்ட வெப் தொடர்கள் அதிகம் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் பெரும்பாலான பார்வையாளர்களின் பேராதரவை பெற்றது ஹார்ட் பீட் வெப் தொடர். நேற்று ஜுலை 30 முதல் ஹார்ட் பீட் 3வது சீசன் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fc02191-acc5-4061-afd7-8e884ccef6d8/26-6a6c25189cad5.webp' /></p><p>
</p><p>கடந்த 2024ம் ஆண்டு முதல் சீசன் ஒளிபரப்பானது, 2வது சீசன் 2025ம் ஆண்டு தொடங்கப்பட்டு நவம்பர் மாதம் முடிவுக்கு வந்தது.
</p><p>விஜய் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பான இந்த தொடர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9a0c189-e406-49f9-a44a-09ab295f36f8/26-6a6c2517d241e.webp' /></p><h2>புதிய என்ட்ரி</h2><p>
தீபக் சுந்தர்ராஜன் கதை, திரைக்கதை எழுதி இயக்க தீபா பாலு, அனுமோல், கார்த்திக் குமார், சாருகேஷ் எம், அஸ்வதி அக்னிஹோத்ரி, சபரீஷ், அமித் பார்கவ், யோகலட்சுமி, மோகன்ராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். </p><p>ஆனால் இந்த 3வது சீசனில் இருந்து ஏகப்பட்ட நடிகர்கள் வெளியேறியுள்ளனர். தற்போது என்ன தகவல் என்றால் ஹார்ட் பீட் 3ல் அனு கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகை காயத்ரி கமிட்டாகியுள்ளாராம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8162715-b8c6-4ed7-acc2-818e8efb225d/26-6a6c2516f2551.webp' /></p>]]></content>
            <updated>2026-07-31T06:31:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிறரின் பயணப் பைகளை எடுத்துச் செல்லாதீர்கள் : சுங்கத் திணைக்களம் எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/don-t-carry-other-people-s-luggage-during-travel-1785476679"></link>
            <id>https://ibctamil.com/article/don-t-carry-other-people-s-luggage-during-travel-1785476679</id>
            <summary type="text">விமான நிலைய பயணிகள் மற்றும் பொதுமக்களிடம்&amp;nbsp;இலங்கை சுங்கத் திணைக்களம் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, விமான பய...</summary>
            <content type="html"><![CDATA[<p>விமான நிலைய பயணிகள் மற்றும் பொதுமக்களிடம்&nbsp;இலங்கை சுங்கத் திணைக்களம் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>அதன்படி, விமான பயணம் உள்ளிட்ட எந்தவொரு பயணத்தின்போதும், பிறருக்குச் சொந்தமான பொதிகள் அல்லது பயணப் பைகளை பெற்றுச் செல்வதைத் தவிர்க்குமாறு சுங்கத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>
பயணிகளுக்குத் தெரியாமலேயே போதைப்பொருட்கள் உள்ளிட்ட சட்டவிரோதப் பொருட்களைக் கடத்துவதற்காக சில குற்றக் குழுக்கள் அவர்களை பயன்படுத்தும் அபாயம் நிலவுவதால் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மறைத்து வைக்கும் நுட்பங்கள்</h2><p>

இது தொடர்பாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா கருத்துத் தெரிவிக்கையில், தாம் எடுத்துச் செல்லும் பொருள் என்ன என்பது கூட தெரியாமல் பொதுமக்கள் கடுமையான குற்றச் செயல்களில் சிக்கிக்கொள்ளும் அபாயம் இருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dccfd8b5-723f-4915-a0cd-0b3cd3ba38ba/26-6a6c3c148fd95.webp' /></p><p>
மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள்கூட அறியாமலேயே போதைப்பொருள் கடத்தல் குழுக்களால் பயன்படுத்தப்படுகின்றனர், அண்மையில் 19 வயதுடைய இளைஞர் ஒருவரின் பெயரில் பெருந்தொகையான போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.</p><p>பயணப் பையை நாமே பரிசோதித்தாலும் எளிதில் கண்டறிய முடியாத வகையில் போதைப்பொருட்களை மறைத்து வைக்கும் நுட்பங்களை கடத்தல்காரர்கள் பயன்படுத்துகின்றனர்.</p><p></p><h2>விமான பயணச் சீட்டு&nbsp;</h2><p> அத்துடன், இலவச விமான பயணச் சீட்டை வழங்கி வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்வதாக யாரேனும் முன்வந்தால், அதன் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கம் குறித்து மிகுந்த அவதானத்துடன் சிந்திக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3817a7e-82c3-4839-9607-def1fb58a1e5/26-6a6c3c1558e05.webp' /></p><p>
</p><p>
உலகின் பல நாடுகளில் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவதால், எந்தச் சூழலிலும் தமக்குச் சொந்தமில்லாத பொதிகள் அல்லது பொருட்களை எடுத்துச் செல்ல சம்மதிக்க வேண்டாம்“ என தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T06:29:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் சரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/crude-oil-prices-fall-in-the-world-market-1785478875"></link>
            <id>https://canadamirror.com/article/crude-oil-prices-fall-in-the-world-market-1785478875</id>
            <summary type="text">உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் இன்று (31) சற்று சரிவடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

அதன்படி, WTI கச்சா எண்ணெய் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் இன்று (31) சற்று சரிவடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

 

அதன்படி, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.71% குறைந்து 82.16 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
</p><p>
 

ப்ரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் 1.16% குறைந்து 88 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
</p><p>
 

அத்துடன், முர்பான் (Murban) ரக கச்சா எண்ணெய் விலையும் 2.60% சரிவடைந்துள்ளதுடன், அதன்படி அவ்வகையான கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.71 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be458f06-66c9-42ba-aa39-fce18230e66f/26-6a6c3edcbd9b6.webp' /></p><p>இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலை சூத்திரத்திற்கு அமைவாக மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தம் இன்று (31) பெரும்பாலும் மேற்கொள்ளப்படவுள்ளது.</p><p>

 

அக்கூட்டுத்தாபனம் தற்போது பெற்றுள்ள இலாபத்தைக் கருத்திற்கொண்டு எரிபொருள் விலை திருத்தத்தை மேற்கொள்வதற்கான ஆயத்தங்கள் எதுவும் இல்லை என அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
</p><p>
 

அரசாங்க நிதி பற்றிய குழுவில் கருத்து தெரிவித்த அவர், எதிர்காலத்தில் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் நிச்சயமற்ற தன்மை காரணமாக எரிபொருள் விலையைக் குறைக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-31T06:21:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[170 படங்களில் நடித்த பிரபல நடிகர்... இன்று முதியோர் இல்லத்தில் கண்ணீருடன் மோகன் சர்மா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/why-actor-mohan-sharma-is-staying-in-old-age-home-1785476712"></link>
            <id>https://manithan.com/article/why-actor-mohan-sharma-is-staying-in-old-age-home-1785476712</id>
            <summary type="text">ஒருகாலத்தில் தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராகவும், தயாரிப்பாளராகவும், திரைப்படத் துறையின் முக்கிய நிர்வாகியாகவும் வலம் வந்தவர் மோகன் சர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒருகாலத்தில் தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராகவும், தயாரிப்பாளராகவும், திரைப்படத் துறையின் முக்கிய நிர்வாகியாகவும் வலம் வந்தவர் மோகன் சர்மா. </p><p>இன்று, 80 வயதில் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad1a5e2a-592b-4aa4-883c-04e6f0f61328/26-6a6c3be947cea.webp' /></p><h2>பிரபல நடிகர்&nbsp;மோகன் சர்மா</h2><p>
</p><p>
புனே திரைப்படக் கல்லூரியில் பயின்ற தென்னிந்திய கலைஞர்களில் குறிப்பிடத்தக்கவரான மோகன் சர்மா, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சுமார் 170 திரைப்படங்களில் நடித்துள்ளார்.</p><p> அதுமட்டுமல்லாமல், 20 திரைப்படங்களை தயாரித்து, திரைத்துறையில் தனக்கென ஒரு முத்திரையையும் பதித்தார்.

தமிழ் ரசிகர்களுக்கு அவர் மிகவும் பரிச்சயமான முகம். விஜய் நடித்த சச்சின் திரைப்படத்தில் ஜெனிலியாவின் தந்தையாக நடித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95801c2d-7acf-4d08-b6ab-e25662288cc4/26-6a6c3be9ed8be.webp' /></p><p> </p><p>மேலும் சலங்கை ஒலி, ஏணிப்படிகள், நாடகமே உலகம், தூண்டில் மீன் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். </p><p>சிறிய திரையிலும் தனது முத்திரையை பதித்த அவர், நடிகை தேவயானி நடித்த கோலங்கள் தொடரில் முக்கிய வேடத்தில் தோன்றியிருந்தார்.
</p><p>
நடிகராக மட்டுமல்லாமல், திரைப்படத் துறையின் நிர்வாகத்திலும் முக்கிய பங்காற்றியவர் மோகன் சர்மா. 2002ஆம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவராகவும்&nbsp; பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95801c2d-7acf-4d08-b6ab-e25662288cc4/26-6a6c3be9ed8be.webp' /></p><p>தேசிய திரைப்பட விருது தேர்வுக் குழுவிலும், சர்வதேச திரைப்பட விழாவுக்கான இந்திய பனோரமா படங்கள் தேர்வுக் குழுவிலும் உறுப்பினராக இருந்துள்ளார். </p><p>மேலும், தாதா சாகேப் பால்கே சாதனை விருதில் தென்னிந்தியாவுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக போராடி அதை பெற்றுத்தந்தவர்களில் ஒருவராகவும் அவர் அறியப்படுகிறார்.</p><p>

2012ஆம் ஆண்டு அவர் இயக்கிய நம்ம கிராமம் திரைப்படம், ஜாதி அடக்குமுறையும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த படம் தமிழக அரசும் கேரள அரசும் வழங்கிய விருதுகளை வென்றது.3</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa8ba309-b546-49d6-9724-9f9ea8a68eda/26-6a6c3eabac64d.webp' /></p><p>முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் இந்தப் படத்தைப் பாராட்டி, தாம் மிகவும் விரும்பும் திரைப்படங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டதாக மோகன் சர்மா பின்னர் தெரிவித்துள்ளார்.</p><h2>மோகன் சர்மாவுக்கு ஏன் இந்த நிலை?</h2><p>ஆனால் மோகன் சர்மாவின் தனிப்பட்ட வாழ்க்கை தற்போது சோகமான நிலையில் உள்ளது.

நடிகை லட்சுமியை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்ற அவர், சாந்தி என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார். </p><p>தற்போது 80 வயதாகும் மோகன் சர்மா, கும்மிடிப்பூண்டியில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார்.

அங்கு உணவும் தங்குமிடமும் கிடைத்தாலும், வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கு மருந்து வாங்க கூட பணமின்றி அவர் சிரமப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bc06dec-8522-4459-a8de-8b68a745522d/26-6a6c3ead23347.webp' /></p><p>இதனை அறிந்த நடிகர் ரஜினிகாந்த், அவரை தொடர்புகொண்டு வங்கி விவரங்களை பெற்று ரூ.1 லட்சம் உதவி செய்துள்ளார்.</p><p>இது குறித்து மோகன் சர்மா கூறுகையில், தனது ‘நம்ம கிராமம்’ படத்தை தயாரிக்க வங்கிக் கடன் பெற்றும், சொத்துகளை விற்றும் பணம் செலவிட்டதாகவும், அந்தப் படத்தை ஜெயலலிதா மிகவும் பாராட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p> </p><p>அந்த கடனை அடைக்க உதவுவதாக ஜெயலலிதா கூறியிருந்த நிலையில், அவர் மறைந்துவிட்டதால் அது நிறைவேறவில்லை என்றும் கூறியுள்ளார்.

“கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் முதியோர் இல்லத்திற்கு வந்தேன். உடல்நலக் குறைபாடுகளால் மருந்து வாங்க முடியாமல் தவித்தேன். அந்த நேரத்தில் ரஜினிகாந்த் கடவுள் போல உதவினார்”.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0bebae7-7caf-4247-96da-586f622cea88/26-6a6c3eac6834c.webp' />&nbsp;&nbsp;</p><p>மேலும், சினிமாவில் முதலீடு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும், தனது ‘நம்ம கிராமம்’ படத்தின் சேட்டிலைட் உரிமையை யாராவது வாங்கினால், தனது மருத்துவச் செலவுகளுக்கு உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஃபிலிம் சேம்பரில் இருந்தபோது, வயதான கலைஞர்களுக்கு உதவி வழங்கும் தீர்மானம் கொண்டுவந்ததாகவும், ஆனால் தற்போது அந்த விதிமுறை மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.</p><p>

தனது மகன் ஜெர்மனியில் இருப்பதாகவும், அவனது எதிர்காலத்திற்காக அவனை அங்கு அனுப்பியதாகவும் கூறிய மோகன் சர்மா, தற்போது தனிமையில் இருப்பது வேதனையாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தமிழக முதல்வர் விஜயை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T06:21:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருதங்கேணியில் அதிகாரத்திலுள்ளவர்களுடன் மக்கள் நேரடி சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-s-direct-meeting-power-in-maruthankerni-1785478752"></link>
            <id>https://tamilwin.com/article/people-s-direct-meeting-power-in-maruthankerni-1785478752</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் ஏற்பாட்டில் &quot;மக்கள் சந்திப்பு&quot; நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. 

இந்த நிகழ்வு, மருதங்கேணி கலாசார மத்திய நிலையத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் ஏற்பாட்டில் "மக்கள் சந்திப்பு" நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.</p><p> 

இந்த நிகழ்வு, மருதங்கேணி கலாசார மத்திய நிலையத்தில் இன்று(31.07.2026) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.</p><h2> 

அபிவிருத்தி திட்டங்கள்&nbsp;</h2><p>
இதன்போது, அப்பகுதி மக்களின் அன்றாடப் பிரச்சினைகள், அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் எதிர்கால
நடவடிக்கை குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9019d0e-4ede-40c4-9819-54b1ad6ce8b3/26-6a6c3e8167498.webp' /></p><p>
</p><p>
இந்த நிகழ்வில், அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அமைச்சர் பிரசன்ன குணசேன மற்றும் 
பொதுமக்கள் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
</p><p>
“வளமான நாடு - அழகான வாழ்க்கை” எனும் நோக்கோடும், மக்களின் பங்களிப்போடும்
முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வு, பிரதேச மக்களுக்குத் தங்கள் கருத்துக்களை
அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் நேரடியாகத் தெரிவிப்பதற்கான
சிறந்ததொரு தளமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e567170-077b-452b-97bc-d856c8de5dc2/26-6a6c3e8240363.webp' /></p>]]></content>
            <updated>2026-07-31T06:19:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாரிடமும் வாங்க வேண்டாம் ; விமான பயணிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/baggage-belonging-to-others-warning-air-passengers-1785477428"></link>
            <id>https://jvpnews.com/article/baggage-belonging-to-others-warning-air-passengers-1785477428</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; விமானம் பயணம் உள்ளிட்ட எந்தவொரு பயணத்தின்போதும், பிறருக்குச் சொந்தமான பொதிகள் அல்லது பயணப் பைகளை பெற்றுச் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; விமானம் பயணம் உள்ளிட்ட எந்தவொரு பயணத்தின்போதும், பிறருக்குச் சொந்தமான பொதிகள் அல்லது பயணப் பைகளை பெற்றுச் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கை சுங்கத் திணைக்களம், பொதுமக்களிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
பயணிகளுக்குத் தெரியாமலேயே போதைப்பொருட்கள் உள்ளிட்ட சட்டவிரோதப் பொருட்களைக் கடத்துவதற்காக சில குற்றக் குழுக்கள் அவர்களை பயன்படுத்தும் அபாயம் நிலவுவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0c6ec80-e515-4d1a-9424-d2902c4c0b0c/26-6a6c3935c1d04.webp' /></p><h2>&nbsp;கடுமையான குற்றச் செயல்களில் சிக்கும் அபாயம்&nbsp;</h2><p>
</p><p>
இது தொடர்பாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவிக்கையில், தாம் எடுத்துச் செல்லும் பொருள் என்ன என்பது கூட தெரியாமல் பொதுமக்கள் கடுமையான குற்றச் செயல்களில் சிக்கிக்கொள்ளும் அபாயம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>
மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள்கூட அறியாமலேயே போதைப்பொருள் கடத்தல் குழுக்களால் பயன்படுத்தப்படுவதாகவும், அண்மையில் 19 வயதுடைய இளைஞர் ஒருவரின் பெயரில் பெருந்தொகையான போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கப்பட்ட சம்பவமும் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

 பயணப் பையை தாமே பரிசோதித்தாலும் எளிதில் கண்டறிய முடியாத வகையில் போதைப்பொருட்களை மறைத்து வைக்கும் நுட்பங்களை கடத்தல்காரர்கள் பயன்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><p>
</p><p>
 இலவச வானூர்தி பயணச் சீட்டை வழங்கி வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்வதாக யாரேனும் முன்வந்தால், அதன் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கம் குறித்து மிகுந்த அவதானத்துடன் சிந்திக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
உலகின் பல நாடுகளில் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவதால், எந்தச் சூழலிலும் தமக்குச் சொந்தமில்லாத பொதிகள் அல்லது பொருட்களை எடுத்துச் செல்ல சம்மதிக்க வேண்டாம் எனவும் இலங்கை சுங்கத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது</p>]]></content>
            <updated>2026-07-31T06:18:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை கடற்பரப்பில் கேரள கப்பலின் கழிவுகள்; யாழ்ப்பாணத்தில் இருந்து காலி வரை பிளாஸ்டிக் துகள்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/waste-kerala-msc-elsa-3-vessel-sri-lankan-waters-1785478781"></link>
            <id>https://jvpnews.com/article/waste-kerala-msc-elsa-3-vessel-sri-lankan-waters-1785478781</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியாவின் கேரளக் கடற்கரைப் பகுதியில் மூழ்கிய &#039;எம்எஸ்சி எல்சா 3&#039; கப்பலிலிருந்து இலங்க்கை கடற்கரைக்கு அடித்து வரப்பட்ட 43க்கும் மேற்பட்ட பிளாஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியாவின் கேரளக் கடற்கரைப் பகுதியில் மூழ்கிய 'எம்எஸ்சி எல்சா 3' கப்பலிலிருந்து இலங்க்கை கடற்கரைக்கு அடித்து வரப்பட்ட 43க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் துகள்கள் அடங்கிய கொள்கலன்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
</p><p>


யாழ்ப்பாணத்தில் இருந்து காலி வரை உள்ள கடற்கரைப் பகுதிக்கு இந்தப் பிளாஸ்டிக் துகள்கள் தொடர்ச்சியாக ஒதுக்கப்பட்டு வருவதுடன், பருவமழை காரணமாக இந்த நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சமந்த குணசேகர தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aba91de2-5002-48de-8620-b0d7b1650d02/26-6a6c3e7e71f3b.webp' /></p><h2>யாழில் இருந்து காலி வரை....</h2><p>



இந்தப் பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணிகளுக்காக சுமார் 1,800 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கான செலவுகளை சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனமே ஏற்கும் என்றும் அவர் கூறினார்.
</p><p>


இதற்கிடையில், கப்பல் மூழ்கியதால் இலங்கையின் கடல்சார் சூழலியல் அமைப்புக்கு ஏற்பட்ட சேதத்திற்காக அறவிடப்பட வேண்டிய நஷ்டஈட்டுத் தொகையை மதிப்பிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p></p><p> அதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு நேற்று கூடியது என்றும் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.



லைபீரியக் கொடியின் கீழ் இயங்கிய ‘MSC Elsa 3’ என்ற இந்த கொள்கலன் கப்பல், இந்தியாவின் கேரளக் கடற்கரைக்கு அப்பால் சுமார் 38 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் நீர் கசிவுக்கு உள்ளானதைத் தொடர்ந்து கடந்த மே 25 ஆம் திகதி மூழ்கியது.



விபத்து இடம்பெற்றபோது கப்பலில் 643 கொள்கலன்கள் ஏற்றிச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T06:17:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பில் கோர விபத்தில் பலியான இளைஞர்கள்..! மூன்று பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3-youths-arrested-accident-in-negombo-1785474865"></link>
            <id>https://tamilwin.com/article/3-youths-arrested-accident-in-negombo-1785474865</id>
            <summary type="text">நீர்கொழும்பு – கட்டானா பகுதியில் தனியார் பல்கலைக்கழகம் அருகில் (30) திகதி அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து சம்பவம் தொடர்பில்&amp;nbsp;மூன்று பேர் கைது செய்யப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு – கட்டானா பகுதியில் தனியார் பல்கலைக்கழகம் அருகில் (30) திகதி அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து சம்பவம் தொடர்பில்&nbsp;மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>அதிகாலை 1.45 மணியளவில் அலுமினியம் ஏற்றிச்சென்ற கண்டெய்னர் லொறியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில்&nbsp;மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர்.</p><p>இந்த விபத்தில் நீர்கொழும்பு, தாகொன்ன வீதியைச் சேர்ந்த 18 வயதான சிரிவர்தன ஆராச்சிலாகே தலிஷ் நிம்நெத் சிரிவர்தன மற்றும் 19 வயதான விஜேசுந்தர அப்புஹாமிலாகே கவிந்து ஹஷான் சோமதிலக ஆகிய இளைஞர்கள்&nbsp;உயிரிழந்திருந்தனர்.</p><p></p><h2>லொறிக்கு தீ வைப்பு</h2><p>இந்த விபத்தைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், விபத்துக்கு காரணமானதாக கூறப்படும் கண்டெய்னர் லொறிக்கு தீ வைத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b776553f-e28c-4d8d-aac4-12105a9c873e/26-6a6c3db42a3e2.webp' /></p><p>இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணை மற்றும் விபத்து நடந்த பகுதியின் சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட தகவல்களின் அடிப்படையில், கொள்கலன் லொறிக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில்&nbsp;மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>நீர்கொழும்பு மற்றும் கிம்புலபிட்டிய பகுதிகளைச் சேர்ந்த 20, 25 மற்றும் 26 வயதுடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் இன்று (31) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளனர்.&nbsp;&nbsp;</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>இதனுடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e27b5de5-3d99-4d42-af11-c4f5c60280b9/26-6a6c3db3788c6.webp' /></p><p>இதேவேளை, விபத்துடன் தொடர்புடைய கண்டெய்னர் லொறியின் சாரதியான பன்னில – தென்ன பகுதியை சேர்ந்தவரை கட்டான பொலிஸார் கைது செய்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>அதே பகுதியில் கைவிடப்பட்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் கண்டெடுக்கப்பட்டு பொலிஸாரின் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.</p><p></p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T06:16:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காசாவில் போர் முடிவு வருவதாக ட்ரம்ப் அறிவிப்பு; ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்குமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-announces-an-end-to-the-war-in-gaza-1785478341"></link>
            <id>https://canadamirror.com/article/trump-announces-an-end-to-the-war-in-gaza-1785478341</id>
            <summary type="text">&amp;nbsp; நீண்டகாலமாக நீடித்து வந்த காசா போரை முடிவுக்குக் கொண்டுவர &#039;காசா அமைதித் திணைக்களம் &#039; ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வரைவு ஒப்பந்தத்தை எட்டியுள்ளதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நீண்டகாலமாக நீடித்து வந்த காசா போரை முடிவுக்குக் கொண்டுவர 'காசா அமைதித் திணைக்களம் ' ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வரைவு ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>


எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தில் கெய்ரோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பு தனது ஆயுதங்களைப் படிப்படியாக ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f46ac9f6-008e-4350-a084-c59a88aa4480/26-6a6c3cc6d6409.webp' /></p><p>



காசாவின் நிர்வாகம் புதிய பாலஸ்தீன இடைக்கால நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். மேலும், இஸ்ரேலியப் படைகள் காசாவிலிருந்து வெளியேறிய பின், சர்வதேச அமைதிப்படை மற்றும் புதிய பாலஸ்தீன பொலிஸார் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்கும் என தெரியவந்துள்ளது.</p><p>



இஸ்ரேல் தனது படைகளை முழுமையாக திரும்பப் பெற்ற பிறகே ஆயுதங்கள் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதே வேளையில், ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்குமா என்பதில் இஸ்ரேலுக்குச் சந்தேகம் உள்ளது.</p><p>



இந் நிலையில் மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்த இந்த ஒப்பந்தம் ஒரு முக்கிய முயற்சியாகப் பார்க்கப்பட்டாலும், இதன் முழுமையான அமுலாக்கம் இரு தரப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பொறுத்தே அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-31T06:10:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் உதவி ; ஆசிய அபிவிருத்தி வங்கியின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/adb-s-key-announcement-200-million-aid-sri-lanka-1785478180"></link>
            <id>https://jvpnews.com/article/adb-s-key-announcement-200-million-aid-sri-lanka-1785478180</id>
            <summary type="text">மத்திய கிழக்கு மோதலால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்களுக்கு மத்தியில், இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில் 200 மில...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கு மோதலால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்களுக்கு மத்தியில், இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில் 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தீர்மானித்துள்ளது.</p><p>
</p><p></p><p>இந்நிதியுதவி, இலங்கையின் வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தியை மேம்படுத்தும் கொள்கைக் கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது.
</p><p>
இதில், 100 மில்லியன் அமெரிக்க டொலர் மத்திய கிழக்கு நெருக்கடியினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்தங்களை குறைப்பதற்கான மேலதிக நிதியுதவியாக ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8ca28fa-94ef-4493-a57f-765b83efb331/26-6a6c3c2577b8a.webp' /></p><p>தொலைதூரத்தில் இடம்பெறும் மோதல்களின் தாக்கத்தினால் எந்தவொரு குடும்பமும் மீண்டும் வறுமை நிலைக்குள் தள்ளப்படக் கூடாது என ADB தலைவர் மசாடோ காண்டா (Masato Kanda) தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், இலங்கையில் வேலைவாய்ப்புகளை அதிகரித்தல், புதிய முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்தல் ஆகியவை இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்தத் திட்டத்தின் கீழ், வர்த்தக அமைப்புகளை நவீனமயமாக்குதல், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் போட்டித்தன்மையை அதிகரித்தல், பொருளாதார வலயங்களுக்கு முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சியை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
</p><p>
இச்சீர்திருத்தங்கள் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வெளிப்புற பொருளாதார அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் இலங்கையின் திறன் மேலும் வலுப்பெறும் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.
</p><p>
இதேவேளை, மத்திய கிழக்கு மோதலினால் அதிகரித்து வரும் செலவினங்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளை சமாளிக்கும் வகையில், இலங்கை மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு மொத்தமாக 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கவும் ADB தீர்மானித்துள்ளது.
</p><p>
இதன்படி, கம்போடியாவிற்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T06:09:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆபத்தாக மாறிய டெங்கு; பலி எண்ணிக்கை அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-turns-dangerous-death-toll-rises-srilanka-1785477881"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-turns-dangerous-death-toll-rises-srilanka-1785477881</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

அத்துடன் இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
 

அத்துடன் இந்த ஆண்டின் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 84,724 ஆக உயர்ந்துள்ளதாக அப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83980919-4b49-4a29-9be6-6a3c1557de9f/26-6a6c3afb726e7.webp' /></p><p>

 

அதன்படி, ஜூலை மாதத்தில் நேற்று (30) வரை பதிவாகியுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 29,350 ஆகும்.

 

இவ்வாண்டின் இதுவரை கம்பஹா மாவட்டத்தில் 17,971 நோயாளிகளும், கொழும்பு மாவட்டத்தில் 16,814 நோயாளிகளும், கண்டி மாவட்டத்தில் 5,873 நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
 

மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 44,829 ஆகும்.

 

மேலும் தென் மாகாணத்தில் 12,738 நோயாளிகளும், மத்திய மாகாணத்தில் 7,370 நோயாளிகளும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-31T06:02:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்ஃபான்டினோவின் திட்டம்... சர்வதேச கிளர்ச்சிக்கு ஃபிஃபா பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/international-revolt-fifa-hits-back-1785477804"></link>
            <id>https://news.lankasri.com/article/international-revolt-fifa-hits-back-1785477804</id>
            <summary type="text">உலகக் கிண்ணம் பங்குகளை தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்கும் சர்ச்சைக்குரிய திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் FIFA ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக் கிண்ணம் பங்குகளை தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்கும் சர்ச்சைக்குரிய திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் FIFA ஊடகங்கள் மீது அதிரடியான தாக்குதலை நடத்தியுள்ளது.</p><h2>வாக்கெடுப்பை நடத்த ஃபிஃபா</h2><p>
FIFA நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அத்திட்டம் குறித்த தவறான செய்திகள், திட்டமிடப்பட்டிருந்த கலந்தாலோசனைச் செயல்முறையைப் பாதித்ததாக குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9906026f-6243-4049-8bd2-b3dc7d28c747/26-6a6c3c9203ed7.webp' /></p><p> </p><p>FIFA தலைவர்&nbsp;இன்ஃபான்டினோவின் திட்டம் தொடர்பில் கடும் 
எதிர்ப்புகள் இருந்தபோதிலும், விளையாட்டுத் துறையைச் சேர்ந்த டசின் கணக்கான சர்வதேச அமைப்புகளால் ஏற்கனவே கண்டிக்கப்பட்டுள்ள 'ஃபிஃபா ஃபார்வர்ட் என்டர்பிரைஸ்' (FFE) திட்டம் குறித்த வாக்கெடுப்பை நடத்த ஃபிஃபா (FIFA) தொடர்ந்து திட்டமிட்டு வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது. </p><p>ஊடகங்களால் திட்டமிட்டு வெளியிடப்பட்டத் தவறானத் தகவல்களால் நாங்கள் திட்டமிட்டிருந்த கலந்தாலோசனை செயல்முறைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது என்றே FIFA நிர்வாகம் தெரிவித்துள்ளது. </p><p>மேலும், கால்பந்து தொடரை எவரும் விற்பனைக்கு வைக்கப்போவதில்லை என்றும், இதை ஃபிஃபா (FIFA) ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாத ஒன்று என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவின் திட்டத்தின் காரணமாக, எதிர்கால உலகக் கிண்ணம் போட்டிகளைப் புறக்கணிக்க ஐரோப்பிய நாடுகள் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து ஃபிஃபாவின் இந்த எதிர்வினை வந்துள்ளது. </p><p>FIFA ஃபார்வர்ட் எண்டர்பிரைஸ் (FFE) அமைப்பை நிறுவுவது தொடர்பான முன்மொழியப்பட்ட திட்டம் குறித்து அந்தந்த கூட்டமைப்புகள் வழங்கிய கருத்துக்களை நாங்கள் கேட்டறிந்தோம். மேலும், செவ்வாய்க்கிழமை வெளியான ஆரம்பகட்ட ஊடக அறிக்கைகளுக்குப் பிறகு எழுந்துள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காண விரும்புகிறோம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f13a69e9-dcb0-4ac8-9f37-00543bca3da3/26-6a6c3c930c561.webp' /></p><p>
</p><p>சுவிட்சர்லாந்தில் உள்ள தலைமையகத்தில் இருந்து, வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஃபிஃபாவின் (FIFA) அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எதிர்கால உலகக் கிண்ணம் போட்டிகளைப் புறக்கணிப்பதில் இங்கிலாந்தும் மற்ற 89 நாடுகளுடன் இணைந்ததால், பரவலாகக் கண்டிக்கப்பட்ட அந்த திட்டமானது உடனடியாகவே சீர்குலைந்தது.</p><p> FIFA போட்டிகளுக்காக 4 பில்லியன் டொலர் முதலீட்டைத் திரட்டும் நோக்கம் கொண்ட முன்மொழிவுக்கு, இங்கிலாந்தும் மற்ற 54 UEFA நாடுகளும் ஒருமனதாக ஒப்புக்கொண்டன.</p><h2>106 உறுப்புச் சங்கங்களின் ஆதரவு</h2><p> </p><p>இந்த விவகாரத்தில் வட, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பான CONCACAF-இல் உள்ள, FIFA-வில் பதிவுசெய்யப்பட்ட 35 நாடுகள் UEFA-விற்கு ஆதரவளித்தன. ஆனால், உலகக் கிண்ணம் தொடரைப் புறக்கணிப்பதாக மட்டும் அவர்கள் எச்சரிக்கை விடுக்கவில்லை. </p><p>மேலும், பெரும்பாலான உறுப்புச் சங்கங்கள் இன்ஃபான்டினோ தலைமையின் மீதான நம்பிக்கையை ஏற்கனவே இழந்துவிட்டன. இந்த முன்மொழிவை நிறைவேற்ற, இன்ஃபான்டினோவுக்கு 106 உறுப்புச் சங்கங்களின் ஆதரவு தேவைப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7ef06f4-1a9a-49a7-a54d-bed34917935e/26-6a6c3c93b61a2.webp' /></p><p> </p><p>தற்போது, ​​ஃபிஃபாவின் (FIFA) 90 உறுப்பு அமைப்புகள் இத்திட்டங்களை வெளிப்படையாக எதிர்க்கின்றன. மேலும் 16 அமைப்புகள் எதிர்ப்புக் குரல் கொடுத்தால், இன்ஃபான்டினோவால் தனது திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போய்விடும். </p><p>FFE திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தால், அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு உறுதியளிக்கப்பட்ட 10 மில்லியன் டொலர் அடிப்படை நிதியுதவி இரட்டிப்பாகி 20 மில்லியன் டொலராக உயரும் என்று இன்ஃபான்டினோ செவ்வாய்க்கிழமையன்று 211 உறுப்பினர் அமைப்புகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார். </p><p>இதனிடையே, மொராக்கோவின் ரபாத் நகரில் அடுத்த மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் 211 உறுப்பு நாடுகளின் தலைவர் தேர்தலுக்கான சாத்தியமான வேட்பாளர்களை அறிவிப்பதற்கு, ஃபிஃபா நவம்பர் 18-ஐ காலக்கெடுவாக நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T06:01:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவனாண்டிக்கு தயாராகும் ஸ்கெட்ச்.. கார்த்திக்காக சமையலில் அசத்தும் ரேவதி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/zee-tamizh-karthigai-deepam-serial-july-31-episode-1785474104"></link>
            <id>https://cineulagam.com/article/zee-tamizh-karthigai-deepam-serial-july-31-episode-1785474104</id>
            <summary type="text">கார்த்திகை தீபம்தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கார்த்திகை தீபம்</h2><p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். </p><p>நேற்றைய எபிசோடில் ரேவதி, கார்த்திக் கொடுத்த சர்ப்ரைஸை நினைத்து மகிழ்ச்சியில் இருந்த நிலையில், இன்று பல பரபரப்பான சம்பவங்கள் அரங்கேற உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97892c41-9ce4-4a06-a805-766c8d93a835/26-6a6c2c39ae78c.webp' /></p><p>
</p><p>
கார்த்திக்காக விதவிதமாக சமைத்து கொடுக்க முடிவு செய்யும் ரேவதி, கீழே கிச்சனுக்கு வந்து அங்கிருந்த ரோகிணி மற்றும் சுவாதியை நைசாக அனுப்பிவிட்டு சமையல் வேலையில் இறங்குகிறாள். </p><p>கார்த்திக்குப் பிடித்த சிக்கன், மட்டன், மீன் உள்ளிட்ட பல்வேறு உணவுகளை அன்புடன் சமைக்கிறாள்.

பின்னர், தனது தோழிக்காக உணவு எடுத்துச் செல்வதாக சாமுண்டீஸ்வரியிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு கிளம்புகிறாள். அதன்பிறகு சந்திரகலாவை சந்தித்து, இந்த உணவுகள் அனைத்தும் கார்த்திக்காகத்தான் என்று உண்மையை கூறுகிறாள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f794a57-9922-47d4-9f3f-b4bb47ad55b9/26-6a6c2c3b0f058.webp' /></p><p>
</p><p>
இதையடுத்து சந்திரகலா, சாமுண்டீஸ்வரியிடம் இந்த விஷயத்தை போட்டுக் கொடுக்க, சாமுண்டீஸ்வரி சந்திரகலாவை நம்பாமல் கடும் எரிச்சலை வெளிப்படுத்துகிறாள்.

மறுபக்கம், மயில்வாகனம் சிங் என்ற வேடத்தில் முத்துவேலை சந்தித்து, வெளிநாட்டில் இருந்து வந்த தொழிலதிபர் என அறிமுகப்படுத்திக் கொள்கிறான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c515608-9e73-43e0-9142-d4d05aad212e/26-6a6c2c3a5d253.webp' /></p><p> </p><p>தனக்கு சிவனாண்டியின் தொடர்பு வேண்டும், அவருடன் தொழில் செய்ய விருப்பம் இருப்பதாக கூறுகிறான். முத்துவேலும் அவனை சிவனாண்டியிடம் அறிமுகப்படுத்துகிறான்.

அப்போது கோவில் நகைகளை கைப்பற்றித் தந்தால் ரூ.5 கோடி தருவதாக ஆசை வார்த்தை கூறி, சிவனாண்டியை தனது வலையில் சிக்க வைக்க முயல்கிறான் மயில்வாகனம். </p><p>இந்த தகவலை கார்த்திக்குத் தெரிவிக்க, அவர் அடுத்த கட்ட திட்டத்தை தீட்டத் தொடங்குகிறார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், கார்த்திக்காக சமைத்த உணவுகளுடன் ரேவதி அவரை சந்திக்க வருகிறாள்.
</p><p>
சிவனாண்டி மயில்வாகனத்தின் திட்டத்தில் சிக்குவாரா? கார்த்திக்கின் அடுத்த பிளான் என்ன? ரேவதி - கார்த்திக் சந்திப்பில் என்ன நடக்கப் போகிறது? என்பதைக் காண கார்த்திகை தீபம் சீரியலை இன்று இரவு 9 மணிக்கு Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T06:00:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-announces-attack-on-us-bases-1785477449"></link>
            <id>https://canadamirror.com/article/iran-announces-attack-on-us-bases-1785477449</id>
            <summary type="text">குவைத் மற்றும் ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.

ஈரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>குவைத் மற்றும் ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.</p><p>

ஈரானின் கெஷ்ம் தீவில் அமெரிக்கா மேற்கொண்ட குண்டுவீச்சுக்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக புரட்சிகர காவல் படை அறிவித்துள்ளது.</p><p>

கெஷ்ம் தீவில் அமைந்திருந்த கட்டிடம் ஒன்றின் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய குண்டுவீச்சில், கணவன், மனைவி மற்றும் அவர்களது இரண்டு வயது குழந்தை உயிரிழந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/013be207-e5b4-4bec-b229-5385ca177168/26-6a6c394a7cd9f.webp' /></p><p>மேலும், ஜஞ்சான் மாகாணத்தில் அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக ஈரானிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
அத்துடன், ஈரானின் பல பகுதிகளில் அமெரிக்கத் தாக்குதல்களைத் தொடர்ந்து குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, வடக்கு குவைத்தில் அமைந்துள்ள சீன நிறுவனமொன்றின் கட்டடம் மீது ஈரான் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குவைத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இச்சம்பவங்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்புகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சர்வதேச அளவில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.</p>]]></content>
            <updated>2026-07-31T05:57:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான் - மு.க.ஸ்டாலின் விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/mk-stalin-says-electricity-issue-in-tvk-govt-1785477279"></link>
            <id>https://ibctamilnadu.com/article/mk-stalin-says-electricity-issue-in-tvk-govt-1785477279</id>
            <summary type="text">தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே மினசாரத்தில் தடங்கல் உள்ளதாக மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மின்கட்டண பிரச்சினை 

திமுக ஐடி விங் எக்ஸ் பக்கத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே மினசாரத்தில் தடங்கல் உள்ளதாக மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.</p><h3>

மின்கட்டண பிரச்சினை</h3><p> 

திமுக ஐடி விங் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "3.70 லட்சம் குடும்பங்களுக்குக் கூடுதல் மின்கட்டணம் வசூலிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டு, தன் நிர்வாகத் திறமையின்மையை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது தவெக அரசு.
</p><p>
ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே மக்கள் தலையில் அநியாயப் பொருளாதாரச் சுமையைச் சுமத்தியுள்ள இந்த மக்கள் விரோத அரசு இனியாவது திருந்தட்டும்" என குறிப்பிட்டுள்ளது. </p><p>

இதனை பகிர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1dd90a02-01bb-45b4-80cb-a967251386ef/26-6a6c38a17f9bf.webp' /></p><p>
3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. </p><p>

சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது.
</p><p>
இந்தக் குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்...<br><br>முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை.<br><br>3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில்… <a href="https://t.co/6FubNiIFPa">https://t.co/6FubNiIFPa</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2083002205204852971?ref_src=twsrc%5Etfw">July 31, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

இனி வரும் காலங்களில், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் reading சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.</p><h3>சி.டி.ஆர் நிர்மல்குமார் விளக்கம் </h3><p>

இந்த விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், "மின் கட்டணம் தொடர்பாக 3.70 லட்சம் புகார்கள் வந்திருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறுவது தவறு.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc7c2154-bc33-4498-a489-4a787037d655/26-6a6c38a0ccb50.webp' /></p><p>

சமூக வலைத்தளங்கள் மற்றும் வாட்ஸ்அப்பில் வரும் ஆதாரமற்ற தகவல்களை வைத்து மக்களை அவர் குழப்பக் கூடாது.மின் பயன்பாடு அதிகரிக்கும் போது மின்கட்டணமும் அதிகரிக்கும்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T05:54:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதித்துறையைச் சொந்தப் பைகளுக்குள் போட்டுக்கொள்ள என்.பி.பி அரசு முயற்சி! எழும் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-government-trying-take-control-of-judiciary-1785474423"></link>
            <id>https://tamilwin.com/article/npp-government-trying-take-control-of-judiciary-1785474423</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது மற்றும் நீதித்துறை சுதந்திரத்தில்
அரசு தலையிடுவது தொடர்பாக &#039;ஜனநாயகத்துக்கான சமூக ஊடகவியலாளர்கள் சங்கம்&#039; தனத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது மற்றும் நீதித்துறை சுதந்திரத்தில்
அரசு தலையிடுவது தொடர்பாக 'ஜனநாயகத்துக்கான சமூக ஊடகவியலாளர்கள் சங்கம்' தனது
பலத்த கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
</p><p>
கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று(30.07.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய
அச்சங்கத்தின் இயக்குனர் அபீத எதிரிசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>நீதிமன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கை</h2><p>மேலும் தெரிவிக்கையில்,

"நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் அரசின் இந்தத் தீர்மானத்துக்கு
'நீதிபதிகள் சேவை சங்கம்' மற்றும் 'இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்' ஆகிய
நாட்டின் பிரதான நீதித்துறை சார்ந்த இரு அமைப்புகளும் மிகத் தெளிவாக
எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8b5c13d-c096-400b-8155-bfc543e353c3/26-6a6c32701f44c.webp' /></p><p>சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரேரணையில் நீதித்துறை
சுதந்திரத்தையும் அரசமைப்பையும் பாதுகாக்குமாறு கோரப்பட்டுள்ளதோடு, நீதிபதிகள்
சேவை சங்கத்தின் கூட்டத்தில் பங்கேற்ற 65 உறுப்பினர்களும் ஒருமனதாக இந்தத்
திட்டத்துக்கு எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.</p><p>நீதிபதிகளும் சட்டத்தரணிகளும் ஏகோபித்த குரலில் எதிர்த்த போதிலும், அரசு தனது
அமைச்சரவையில் இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் பெற்றுத் தன்னிச்சையாக நிறைவேற்ற
முயல்வது எதேச்சதிகாரமான போக்காகும்.</p><p>

நீதிமன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகளவில் நிலுவையில் உள்ளமையால்தான்
ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதாக அரசு கூறுவது முற்றிலும் ஏமாற்று வேலையாகும்.</p><h2>அரசியல் மற்றும் பொருளாதார&nbsp;சூழ்நிலை</h2><p>
ஏனெனில் அதிகளவிலான வழக்குகள் மேல் நீதிமன்றங்கள் மற்றும் நீதிவான்
நீதிமன்றங்களிலேயே தேங்கியுள்ளன. </p><p>மாறாக, அரசியல்வாதிகள் தொடர்புடைய
வழக்குகளைப் பாதுகாக்கவும், நீதித்துறையைத் தங்கள் அரசியல் அதிகாரத்தின் கீழ்
கொண்டுவரவுமே அரசு இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61f8ae81-1a6d-4875-83a2-cb272cd91cb4/26-6a6c32710d9ab.webp' /></p><p>நாடு எத்தகைய அரசியல் மற்றும் பொருளாதார இக்கட்டான சூழ்நிலைகளில்
இருந்தபோதிலும், நீதித்துறை மற்றும் உச்சநீதிமன்றமே எப்போதும் நாட்டைப்
பாதுகாத்து நின்றன. </p><p>ஆனால், தற்போது அரசு தனது மக்கள் ஆணையைக் தவறாகப்
பயன்படுத்தி, நீதிபதிகளையும் சட்டத்தரணிகளையும் ஒடுக்கி, நீதிமன்றத்தைச்
சொந்தப் பைகளுக்குள் போட்டுக்கொள்ள முயல்கின்றது.
</p><p>
நீதிமன்றத்தின் நிலைமை இதே போக்கில் தொடர்ந்து, அரசின் இந்தத் தீர்மானங்கள்
நடைமுறைப்படுத்தப்பட்டால், எதிர்காலத்தில் நாட்டின் நீதித்துறைக்கு நினைவஞ்சலி
செலுத்தி எள்ளும் தண்ணீரும் இறைக்க வேண்டிய பரிதாப நிலைமையே ஏற்படும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T05:53:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்துக்குள் இளைஞனின் விபரீத முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/katunayake-garment-factory-bus-bizarre-decision-1785476502"></link>
            <id>https://canadamirror.com/article/katunayake-garment-factory-bus-bizarre-decision-1785476502</id>
            <summary type="text">கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த நபர் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க பொலிஸா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த நபர் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>

மாஸ்பொத, போகொட பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய திருமணமான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
</p><p>
உயிரிழந்தவர் குறித்த ஆடைத் தொழிற்சாலையில் வான் சாரதியாகப் பணியாற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b85f85d8-f64b-4e6d-a078-2d7f5221777f/26-6a6c3598468b0.webp' /></p><p>நேற்று நண்பகல் வேளையில், தொழிற்சாலைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றிற்குள் அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
எவரும் இல்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, குறித்த பேருந்துக்குள் சென்று அவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் என கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கட்டுநாயக்க பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் குலதுங்கவின் பணிப்புரையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் சுரவீரவின் மேற்பார்வையில் பொலிஸ் கான்ஸ்டபிள் திசாநாயக்க விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T05:50:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு கிடைத்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/adb-extends-usd-200-million-to-help-sri-lanka-1785473252"></link>
            <id>https://ibctamil.com/article/adb-extends-usd-200-million-to-help-sri-lanka-1785473252</id>
            <summary type="text">இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தீர்மானித்துள்ளதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>நாட்டின் வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட கொள்கைக் கடன் திட்டத்தின் கீழ் இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
</p><p>
 

அதில் 100 மில்லியன் அமெரிக்க டொலர், மத்திய கிழக்கு நெருக்கடியினால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்தத்தைக் குறைப்பதற்கான மேலதிக நிதியுதவியாக ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>வேலைவாய்ப்புகளை விரிவாக்குதல்</h2><p>
</p><p>
 

தொலைதூர மோதல் ஒன்றின் தாக்கம் காரணமாக எந்தவொரு குடும்பமும் மேலும் வறுமைக்குள் தள்ளப்படக் கூடாது என ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மாசாடோ காண்டா சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>மேலும், இலங்கையில் வேலைவாய்ப்புகளை விரிவாக்குதல், புதிய முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் வர்த்தகத்தை ஊக்குவித்தல் என்பன இத்திட்டத்தின் பிரதான நோக்கங்களில் அடங்குகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90d1d954-4124-478a-977e-e4b2b5be00f4/26-6a6c3245e12a2.webp' /></p><p>இதன் கீழ் வர்த்தக அமைப்புகளை நவீனமயமாக்குதல், சிறு,நடுத்தர அளவிலான தொழில்துறைகளின் போட்டித்தன்மையை உயர்த்துதல், பொருளாதார வலயங்களுக்கு முதலீடுகளைக் கொண்டுவருதல் மற்றும் ஏற்றுமதியை அதிகரித்தல் ஆகியவற்றுக்காகப் பல சீர்திருத்தங்கள் மேற்கொளளப்படவுள்ளன.
</p><p>
 

இச்சீர்திருத்தங்கள் ஊடாக, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாஹிய பொருளாதார அதிர்ச்சிகளுக்கு இலங்கை பொருளாதாரம் சிறப்பாக முகங்கொடுக்கும் திறன் வலுவடையும் என ADB சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
 

இதேவேளை கம்போடியாவிற்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T05:36:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேர்வின் சில்வா தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்! சிக்கப்போகும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mervin-silva-s-money-fraud-revealed-1785463057"></link>
            <id>https://tamilwin.com/article/mervin-silva-s-money-fraud-revealed-1785463057</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான முறையற்ற சொத்துக்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான முறையற்ற சொத்துக்கள் தொடர்பான வழக்கு மூலம் பல அரசியல்வாதிகளுக்கு சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>
இந்த வழக்கு கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்திச் சேர்த்த பல சொத்துக்கள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
</p><p>
இந்த வழக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் முன்னிலையில் அடுத்த மாதம் 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.</p><p></p><p>
</p><h2><b>
சட்டவிரோத சொத்துக்கள்</b></h2><p>இதன்போது பல வங்கிகளின் முகாமையாளர்கள் பல கணக்குகள் குறித்த தகவல்களை வெளிப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/143d78e5-88d6-45bd-9471-d863297d6d43/26-6a6c0d438c6e6.webp' /></p><p>மேர்வின் சில்வா 2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி முதல் 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தொழில் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சராக பதவியேற்றிருந்தார்.
</p><p>
2 வருடங்கள் வரையிலான மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் தனது சட்டப்பூர்வமான வருமான வழிகளால் பெருமளவிலான சொத்துகு்களை சேர்த்தமை தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
பான் ஏசியா வங்கியின் கொழும்பு கிளையில் மாத்திரமன்றி, 10 நிலையான வைப்புகளில் 1823 லட்சத்துக்கும் அதிகமான ரூபாவை வைப்பிலிட்டுள்ளார். 

இதில் உள்ள ஒரு வைப்பு மாத்திரம் 6 கோடி ரூபா பெறுமதியைக் கொண்டுள்ளது. </p><p>அத்துடன், 366, 365 மற்றும் 225 லட்சம் ரூபாவைத் தாண்டிய மேலும் 3 பெரிய வைப்புகளும் அங்கு காணப்பட்டுள்ளன.
</p><p>
இது தவிர அவர் பான் ஏசியா வங்கியில் 33 லட்சம் ரூபாவைத் தாண்டிய மேலும் 5 நிலையான வைப்புக் கணக்குகளைப் பராமரித்து வந்துள்ளமையும் நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.
</p><p>
தனது மனைவியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.ஏ. மேரி லூசிடா சில்வா மற்றும் மகன் மாலக மனோஜித் சில்வா ஆகியோருடன் இணைந்து பல கூட்டு கணக்குகளையும் அவர் பராமரித்து வந்துள்ளார்.</p><p></p><h2>கூட்டுக்கணக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பணம்</h2><p>
</p><p>
பான் ஏசியா வங்கியில் மனைவியுடன் இணைந்து முன்னெடுத்த கூட்டுக்கணக்கு ஒன்றில் 2,140,199.36 ரூபாயும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும் ஹற்றன் நேஷனல் வங்கியுடன் மகனின் பெயரில் பேணப்பட்ட கணக்கில் 2,687,852.25 ரூபாயும் 2010ஆம் ஆண்டளவில் காணப்பட்டுள்ளது.
</p><p>
இது தவிர, மாலக சில்வாவின் பெயரில் மாத்திரம் வெலிபல் பைனான்ஸ் நிறுவனத்தில் 15 மற்றும் 35 மில்லியன் ரூபா வீதம் இரண்டு கணக்குகள் காணப்பட்டன.

அத்துடன், மகள் சந்தீபனி மல்லிகா சில்வா மற்றும் மருமகன் பெயரில் தலா 15 மில்லியன் ரூபா வைப்புகளும் அதே நிறுவனத்தில் பராமரித்து வரப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c23952f3-616a-4450-b5c7-6ee4bb0581b1/26-6a6c33aeaec15.webp' /></p><p>
</p><p>
மேர்வின் சில்வாவின் பெயரிலும் குறித்த நிறுவனத்தில் 14 மில்லியன் ரூபா வைப்புகள் இருந்தன.
</p><p>
மூன்று வங்கிகளில் பராமரித்து வந்த நடப்புக் கணக்குகளில் 2012ஆம் ஆண்டளவில் 47 லட்சத்திற்கும் அதிகமான பணம் மீதியாக இருந்தது.

ஹட்டன் நேஷனல் வங்கியில் 32.5 மில்லியன் ரூபாவும், DFCC வர்த்தன வங்கியில் 6.8 மில்லியன் ரூபா வைப்புகளும் அவரிடம் இருந்தன.</p><p>

மேர்வின் சில்வா கொள்வனவு செய்துள்ள பல அசையா சொத்துக்கள் தொடர்பிலும் பல தகவல்கள் இந்த வழக்கில் தெரியவந்துள்ளது.
</p><p>
முன்னாள் அமைச்சர் கொழும்பின் உச்ச பெறுமதியைக் கொண்ட பிரதேசங்களில் சொத்துக்களைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். </p><p>

அதற்கமைய, கொழும்பு 07, குரும்பட்டியின் எர்னஸ்ட் டி சில்வா மாவத்தையில் 71.3 மில்லியன் ரூபாய் பெறுமதியான காணியொன்றும், ராஜகிரிய, நாவல வீதியிலிருந்து 39.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான காணியொன்றும் அவரால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. </p><p>

இது தவிர தலுபிட்டிய பிரதேசத்திலிருந்து 13 மில்லியன் ரூபாய் பெறுமதியான காணியொன்றும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.</p><p>

மேலும் விக்டோரியா திட்டத்திற்குச் சொந்தமான குண்டசாலை நிலகம பிரதேசத்தில் அமைந்துள்ள அரசாங்கக் காணியை 1994ஆம் ஆண்டு முதல் 1,600 ரூபா போன்ற மிகக் குறைந்த குத்தகைக்கு அவர் கையகப்படுத்தியுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><h3><b>

நிதி மோசடி</b></h3><p>அமைச்சராக இருந்த இரண்டு வருட காலப்பகுதிக்குள் 7 வாகனங்களைக் கொள்வனவு செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dba2a2b-1a8f-48e5-a1e3-4e24e729a04e/26-6a6c0d4467c6c.webp' /></p><p>இந்த வாகனங்கள் மிக குறுகிய காலத்தில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

அவர் 2010ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் திகதி போர்ஷே ரக மோட்டார் வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்துள்ளார். அதிலிருந்து 3 மாதங்களுக்கு பின்னர் ஜூலை மாதத்தில் தனது மகன் மாலக சில்வாவுக்கு 28.8 மில்லியன் ரூபா பெறுமதியான ரேஞ்ச் ரோவர் வாகனத்தைக் கொள்வனவு செய்து கொடுத்துள்ளார்.</p><p> 

அதிலிருந்து மூன்று மாதங்களுக்கு பின்னர் தனது பயன்பாட்டிற்காக 32.3 மில்லியன் ரூபா பெறுமதியான பென்ஸ் வாகனத்தை கொள்வனவு செய்துள்ளார். இந்த வாகனங்களுக்கு மேலதிகமாக 20 லட்சம் ரூபா பெறுமதியான லேன்ட் ரோவர் வாகனம், 9 மில்லியன் ரூபா பெறுமதியான ஹையுன்டாய் ஜீப் வாகனம் மற்றும் 58 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு லொறி வாகனங்களும் இரண்டு வருடங்களுக்குள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
</p><p>
அவரது நாளாந்த செலவு முறையும் மிக உயர்ந்த மட்டத்தில் இருந்தமை வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சிகள் மூலம் தெளிவாகும் மற்றொரு விடயமாகும். </p><p>

மேலும் அவர் சம்பத் மற்றும் செலான் வங்கிகளின் இரண்டு கிரெடிட் அட்டைகளைப் பயன்படுத்தி இரண்டு வருடங்களுக்குள் 42 லட்சத்திற்கும் அதிகமான பெறுமதியான பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுள்ளார்.
</p><p>
அதேபோல் மூலங்கள் வெளிப்படுத்தப்படாத 34.7 மில்லியன் ரூபா அளவிலான பிரம்மாண்டமான கடன் தொகையொன்றையும் செலுத்தி முடித்துள்ளார்.
</p><p>
இதற்கு மேலதிகமாக ரித்து ஆகர்ஷா எனும் நபருக்காக 240,000 ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகைக்கு இணங்க தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அவர் தனக்காக எந்தவொரு உயிர் காப்பீட்டு ஒப்பந்தத்தையும் பெற்றுக்கொள்ளாவிட்டாலும், தனது மனைவி மற்றும் பிள்ளைகளுக்காக 6 காப்பீட்டு ஒப்பந்தங்களைப் பராமரித்து வந்துள்ளார்.
</p><p>
இதற்காக வருடாந்தம் 13 லட்சம் வரையிலான பணம் தவணையாகச் செலுத்தப்பட்டுள்ளதுடன், அதில் 4 காப்பீட்டு ஒப்பந்தங்களும் மாலக சில்வாவிற்காகவே பராமரித்து வரப்பட்டுள்ளன.</p><p>

2 வருடங்கள் போன்ற குறுகிய காலப்பகுதிக்குள் 485 மில்லியன் ரூபாவுடனான பிரம்மாண்டமான சொத்துக்களை எவ்வாறு சம்பாதித்தார் என்பது குறித்து எதிர்கால வழக்கு விசாரணைகளின் போது மேலதிக தகவல்களை வெளிப்படுத்துவதற்காக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p>
</p>]]></content>
            <updated>2026-07-31T05:33:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்டன்னிங் லுக்கில் நடிகை சோபிதா துலிபாலா!! ரீசெண்ட் போட்டோஸ்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/sobhita-dhulipala-recent-photoshoot-post-1785476618"></link>
            <id>https://viduppu.com/article/sobhita-dhulipala-recent-photoshoot-post-1785476618</id>
            <summary type="text">சோபிதா துலிபாலாஇந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சோபிதா துலிபாலா. இவர் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

மேலும் தற்போத...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சோபிதா துலிபாலா</h2><p>இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சோபிதா துலிபாலா. இவர் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38078cc8-8e45-492d-8d8d-09e10fddee9d/26-6a6c36138d5eb.webp' /></p><p>

மேலும் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டுவம் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார்.
</p><p>
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சோபிதா அவ்வப்போது தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவிடுவார்.

அந்த வகையில் தற்போது Stunning லுக்கில் சோபிதா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. </p><p>அதேபோல் சமீபத்தில் நடந்த பேஷன் ஷோவில் கலந்து கொண்டு முரட்டுதனமான நடந்து வரும் வீடியோவையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbaQVJWTvem/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbaQVJWTvem/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DbaQVJWTvem/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Rahul Mishra (@rahulmishra_7)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-07-31T05:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏதிலிகளை தடுக்க தேசிய அவசரநிலையை அறிவித்த ஸ்பெயின்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/spain-declares-national-emergency-to-halt-migrants-1785475617"></link>
            <id>https://canadamirror.com/article/spain-declares-national-emergency-to-halt-migrants-1785475617</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஆப்பிரிக்காவின் வடமேற்கு முனையில் அமைந்துள்ள ஸ்பெயின் சியூட்டா (Ceuta) பகுதியின் அதிகாரிகள், மொரோக்கோ எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஆப்பிரிக்காவின் வடமேற்கு முனையில் அமைந்துள்ள ஸ்பெயின் சியூட்டா (Ceuta) பகுதியின் அதிகாரிகள், மொரோக்கோ எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக தேசிய அவசரநிலையை அறிவித்தனர்.
</p><p>
 எல்லையைப் பாதுகாக்க இராணுவத்தை அனுப்புமாறு வியாழக்கிழமை (31) மாட்ரிட் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44e0e401-93cf-48d8-8756-cd786d4bcd77/26-6a6c322357a8c.webp' /></p><p>
</p><p>
மொரோக்கோ மற்றும் ஸ்பெயின் பிரதேசங்களைப் பிரிக்கும் கடல்தடுப்புச் சுவர்களைச் சுற்றி நடந்து செல்லவும், எல்லை வேலியை ஏறிக் கடக்கவும் மக்கள் கூட்டம் முயற்சிக்கும் காட்சிகள் காணொளிகளில் வெளியாகியுள்ளது.
</p><p>
இதனையடுத்து, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sánchez), நிலைமையை சமாளிக்க “உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்துள்ளார்.

எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவளிப்பதற்காக, தங்கள் ஆயுதப் படைகளைச் சேர்ந்த பணியாளர்களைச் சியூட்டாவிற்கு (Ceuta) அனுப்பவுள்ளதாக ஸ்பெயினின் உள்துறை அமைச்சு வியாழக்கிழமை பிற்பகுதியில் தெரிவித்தது.
</p><p>
வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மற்றொரு ஸ்பானியத் தன்னாட்சி நகரமான மெலில்லாவுடன் (Melilla) சேர்த்து, சியூட்டா (Ceuta) நகரமும் ஆப்பிரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரே நில எல்லையாகத் திகழ்கிறது.

இந் நிலையில் ஐரோப்பாவை அடைய முற்படும் புலம்பெயர்ந்தோர் எல்லை வழியாக நுழைய முயற்சிக்கும் நிகழ்வுகள், அவ்வப்போது இவ்விரு நகரங்களிலும் அதிகரிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-31T05:24:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆகஸ்ட் 12-ல் உதயமாகும் குரு: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/jupiter-rise-in-cancer-on-12-august-who-get-luck-1785472425"></link>
            <id>https://manithan.com/article/jupiter-rise-in-cancer-on-12-august-who-get-luck-1785472425</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரப்படி, நவகிரகங்களில் தேவர்களின் குருவாகக் கருதப்படுபவர் குரு பகவான். அறிவு, செல்வம், அதிர்ஷ்டம், வளர்ச்சி ஆகியவற்றின் காரகரான இவரின் அருள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரப்படி, நவகிரகங்களில் தேவர்களின் குருவாகக் கருதப்படுபவர் குரு பகவான். அறிவு, செல்வம், அதிர்ஷ்டம், வளர்ச்சி ஆகியவற்றின் காரகரான இவரின் அருள் அல்லது ஜாதகத்தில் நல்ல நிலை இருந்தால், கல்வி, தொழில், திருமணம், பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.</p><p>

தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியான குரு பகவான் ஆண்டுக்கு ஒருமுறை ராசி மாறுவார். அதன்படி, ஜூன் 2 முதல் தனது உச்ச ராசியான கடகத்தில் பயணித்து வரும் அவர், ஜூலை 14 அன்று அஸ்தமனமானார்.தற்போது, ஆகஸ்ட் 12 அன்று குரு பகவான் உதயமாகவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6a6f682-0f13-46fc-ad16-cb3eedbcba67/26-6a6c2d0581600.webp' /></p><p>
குருவின் உதயத்தால் அனைத்து 12 ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும், இந்த 4 ராசிக்காரர்கள் தொழில் மற்றும் நிதி நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் அதிர்ஷ்டத்தையும் பெறவுள்ளனர். அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae150049-5454-4f4a-b5fc-25be0ff3bddd/26-6a6c2d064f2fd.webp' /></p><p>

தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பகவான் 8-வது வீட்டில் உதயமாகிறார். இதன் தாக்கத்தால், நீண்ட நாட்களாக செய்த கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கத் தொடங்கும். </p><p>நிதி நிலை சீராகி, வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. மன அமைதியும் தன்னம்பிக்கையும் மேம்படும். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கக்கூடும்.</p><p> பணியிடத்தில் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றி, மேலதிகாரிகளின் பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெறுவீர்கள். </p><p>தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். இதுவரை தடைபட்டு வந்த முக்கிய வேலைகளும் வெற்றிகரமாக நிறைவேறும்.
</p><h2>
மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/662fdddb-0098-4a78-99f4-3e035c8b5fa8/26-6a6c2d0702b30.webp' /></p><p></p><h2>
</h2><p>
மகர ராசிக்காரர்களுக்கு குரு பகவான் 7-வது வீட்டில் உதயமாகிறார். இதனால் நிதி நிலையில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படலாம். நீண்ட காலமாக வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும் வாய்ப்பு உள்ளது. </p><p>ரியல் எஸ்டேட், ஃபேஷன் மற்றும் கூட்டுத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் நல்ல லாபம் பெறக்கூடும். அலுவலகத்தில் தலைமைத்துவ திறன் வெளிப்பட்டு, பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.</p><p>அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கலாம். மொத்த்தில் குருவின் ஆசியால் பொன் பொருள் குவியும்.</p><h2>

மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfa968a9-bffd-4163-bc13-36150060ba08/26-6a6c2d07aefde.webp' /></p><h2>
</h2><p>
மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பகவான் 2-வது வீட்டில் உதயமாகிறார். இதனால் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும்.</p><p> நீண்ட நாட்களாக திட்டமிட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். </p><p>பணியிடத்தில் உங்கள் திறமையை உயர் அதிகாரிகள் பாராட்டுவார்கள். சிலருக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. </p><p>வருமானத்தில் இருந்த தடைகள் விலகி, பொருளாதார நிலை வலுப்பெறும். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றினால், எதிர்காலத்தில் மேலும் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும்.</p><h2>மீனம்
</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/804fdb61-c506-49cb-babc-f53df8d84d0e/26-6a6c2d086592a.webp' /></p><p></p><p>
மீன ராசிக்காரர்களுக்கு குரு பகவான் 5-வது வீட்டில் உதயமாகியுள்ளார். இதன் தாக்கத்தால் அதிர்ஷ்டம் முழுமையாக கைகொடுக்கும்.</p><p> எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். அதேபோல், நிதி ரீதியாகவும் நல்ல முன்னேற்றம் காணப்படும்.</p><p>புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேலும் வலுவடையும். எதிர்பாராத பண வரவு கிடைக்கக்கூடும். </p><p>முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. வேலை தொடர்பான பயணங்கள் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். வெளிநாடு தொடர்பான முயற்சிகளிலும் சாதகமான பலன்கள் கிடைக்கலாம்.&nbsp;</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T05:24:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சுக்கு இனி பணம் கொடுக்கக்கூடாது: பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-mps-urge-to-stop-paid-to-france-stop-migrants-1785475159"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-mps-urge-to-stop-paid-to-france-stop-migrants-1785475159</id>
            <summary type="text">புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக பிரான்சுக்கு பெரும் தொகை கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இனி பிரான்சுக்கு பணம் கொடுக்கக்கூடாது என பிரித்தானிய நாடாளு...</summary>
            <content type="html"><![CDATA[<p>புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக பிரான்சுக்கு பெரும் தொகை கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இனி பிரான்சுக்கு பணம் கொடுக்கக்கூடாது என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.</p><h3>

பிரான்சுக்கு கொடுக்கப்படும் பெரும் தொகை
</h3><p>
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்டவிரோத புலம்பெயர்வோரை பிரான்சிலேயே தடுத்து நிறுத்துவதற்காக பிரான்சுக்கு பிரித்தானியா பெரும் தொகை ஒன்றைக் கொடுத்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c875aa4-f620-4f1d-8304-b7a0c50fb54f/26-6a6c305921880.webp' /></p><p>
இருந்தாலும் பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோர் எண்ணிக்கை குறைந்ததாகத் தெரியவில்லை.
</p><p>
புதன்கிழமை மட்டுமே, 752 புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைந்ததாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p>
சமீபத்தில், இப்படி சட்டவிரோத புலம்பெயர்வோர் பிரான்சிலிருந்து சிறுபடகுகள் மூலம் புறப்படுவதைத் தடுக்காமல், பிரான்ஸ் பொலிசார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததை பிரித்தானிய ஊடகவியலாளர்கள் கண்ணால் பார்த்துள்ளார்கள்.
</p><h3>
நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்</h3><p>

இந்நிலையில், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக பிரான்சுக்கு இனி பணம் கொடுக்கக்கூடாது என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/828668da-ba56-4ba9-bc2d-27be0fd91a94/26-6a6c3059c772b.webp' /></p><p>
ரீஃபார்ம் கட்சி கருவூல செய்தித்தொடர்பாளரான ராபர்ட் ஜென்ரிக், பிரான்ஸ் பொலிசார், சட்டவிரோத புலம்பெயர்வோர் பிரான்சிலிருந்து சிறுபடகுகள் மூலம் புறப்படுவதைத் தடுக்காமல் அவர்களை கையசைத்து அனுப்பி வைக்கிறார்கள்.</p><p>

பொறுத்தது போதும், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக பிரான்சுக்கு இனி பணம் கொடுக்கக்கூடாது, சொல்லப்போனால், இதுவரை கொடுத்த பணத்தை பிரான்சிடம் திருப்பிக் கேட்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
</p><p>
அதேபோல, நிழல் உள்துறைச் செயலரான கிறிஸ் பிலிப்பும், பெல்ஜியம் நாட்டு அதிகாரிகள் வெற்றிகரமாக சட்டவிரோத புலம்பெயர்வோரை தடுத்து நிறுத்துகிறார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69c6a4fd-c731-4439-9720-f005b660f21b/26-6a6c305a76b0f.webp' /></p><p>
அதேபோல் பிரான்ஸ் அதிகாரிகளும் செய்யவேண்டும் என்று கூறியுள்ள பிலிப், அப்படிச் செய்ய பிரான்ஸ் மறுத்தால், நம் பிரதமர் ஆன்டி பர்னாம், பிரான்சுக்கு பணம் கொடுப்பதை நிறுத்தவேண்டும் என்றும் கூறியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9ef1f1a-248e-474e-beeb-8f6616358a02/26-6a6c305b24d84.webp' /></p><p>

பிரான்சுக்கு பிரித்தானியா புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக மேலும் 160 மில்லியன் பவுண்டுகள் கொடுப்பதாக உறுதியளித்துள்ள நிலையில், பிரான்சிலிருந்து சிறுபடகுகள் மூலம் பிரித்தானியா வரும் புலம்பெயர்வோர் எண்ணிக்கை குறைந்தால் மட்டுமே அந்த 160 மில்லியன் பவுண்டுகள் கொடுக்கப்படும் என உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T05:22:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகையை தாண்டி தொழிலதிபராக களமிறங்கியுள்ள நடிகை ராய் லட்சுமி போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-businesswoman-raai-lakshmi-photoshoot-1785473373"></link>
            <id>https://cineulagam.com/article/actress-businesswoman-raai-lakshmi-photoshoot-1785473373</id>
            <summary type="text">ராய் லட்சுமிநடிகை லட்சுமி ராயாக சினிமாவில் களமிறங்கி நிறைய வெற்றிப் படங்கள் நடித்து வந்தார், டாப் நாயகியாகவும் முன்னேறி இருந்தார்.பின் இடையில் தன் பெய...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ராய் லட்சுமி</h2><p>நடிகை லட்சுமி ராயாக சினிமாவில் களமிறங்கி நிறைய வெற்றிப் படங்கள் நடித்து வந்தார், டாப் நாயகியாகவும் முன்னேறி இருந்தார்.</p><p>பின் இடையில் தன் பெயரை ராய் லட்சுமி என மாற்றினார், அதன்பிறகு அவர் நடித்த படங்கள் அனைத்தும் சுமாராக தான் ஓடியது. படங்கள் க்ளிக் ஆகவில்லை என்றதும் போட்டோ ஷுட்களில் இறங்கியவர் அதில் பிஸியாக இருக்கிறார்.</p><p>தற்போது நடிகை என்பதை தாண்டி இப்போது தொழிலதிபராகவும் களமிறங்கியுள்ளார். சமீபத்தில் தான் ஒரு டேட்டிங் ஆப் தொழிலை துவங்கினார் ராய் லட்சுமி.&nbsp;</p><p>இந்த நிலையில் ராய் லட்சுமி மிகவும் ஸ்டைலிஷ்ஷான உடையில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார், இதோ அந்த போட்டோஸ்,</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T05:20:25+00:00</updated>
        </entry>
    </feed>
