<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-30T06:04:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்திற்கு நிவாரணக் குழுக்களை அனுப்ப இலங்கை திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-plans-to-send-relief-team-1788069820"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-plans-to-send-relief-team-1788069820</id>
            <summary type="text">&amp;nbsp;பாரிய வெள்ளப் பெருக்கினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு உதவும் வகையில், எதிர்வரும் நாட்களில் அவசரகால நிவாரணக் குழுக்களை அனுப்ப இலங...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பாரிய வெள்ளப் பெருக்கினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு உதவும் வகையில், எதிர்வரும் நாட்களில் அவசரகால நிவாரணக் குழுக்களை அனுப்ப இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.</p><p>
நேபாளத்திற்கு அனுப்பப்படும் நிவாரணக் குழுக்களில் இலங்கை பாதுகாப்புப் படையினரின் உறுப்பினர்கள் உள்ளடங்குவர் என அனுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போது அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
நேபாளத்தின் தற்போதைய தேவைகளின் அடிப்படையில் நிவாரணக் குழுக்களின் எண்ணிக்கை மற்றும் எந்த வகையான குழுக்களை அனுப்புவது என்பது குறித்துத் தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், இன்னும் சில நாட்களில் இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee80a01c-0394-4fcc-a456-9314723f8d46/26-6a93c7bd8f496.webp' /></p><p>.
நிவாரணக் குழுக்களுடன் சேர்த்து, பேரழிவைச் சந்தித்துள்ள நேபாளத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்க இலங்கை அரசாங்கம் பூர்வாங்க ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T06:03:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[லேக் ஒன்றாரியோ புதிய பெயர் பலகையை திறந்து வைத்து டிரம்பிற்கு அதிர்ச்சி கொடுத்த கனடா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/well-never-ever-back-down-doug-ford-1788068254"></link>
            <id>https://canadamirror.com/article/well-never-ever-back-down-doug-ford-1788068254</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வட அமெரிக்காவின் புகழ்பெற்ற &#039;லேக் ஒன்ராறியோ&#039; ஏரியின் பெயரை &#039;லேக் அமெரிக்கா&#039; என மாற்றியதற்கு கனடா அரசு மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வட அமெரிக்காவின் புகழ்பெற்ற 'லேக் ஒன்ராறியோ' ஏரியின் பெயரை 'லேக் அமெரிக்கா' என மாற்றியதற்கு கனடா அரசு மற்றும் ஒன்ராறியோ மாகாண அரசு ஆகியவை மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளன.
</p><p>டிரம்பிற்கு பதிலடி வழங்கும் நோக்கில் ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் புதிய 'லேக் ஒன்ராறியோ' பெயர்ப்பலகையைத் திறந்து வைத்துள்ளார்.</p><p>
அதிபர் டிரம்ப் இதை என்ன பெயர் வேண்டுமானாலும் அழைக்கலாம், ஆனால் உலகம் முழுவதும் இதனை எப்போதும் 'லேக் ஒன்ராறியோ' என்றுதான் அழைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6146e12-bd08-402e-aec8-d45877a25c50/26-6a93c19fb253f.webp' /></p><p>
</p><p>கனடா தனது இறையாண்மையை எப்போதும் பாதுகாக்கும். மிரட்டல்களுக்கு நாங்கள் ஒருபோதும் பணியமாட்டோம் என டிரம்பிற்கு நேரடியாகவே பதிலடி கொடுத்துள்ளார்.
</p><p>கனேடிய பிரதமர் மார்க் கார்னி, டிரம்பின் இந்த அறிவிப்பை முற்றாக நிராகரித்துள்ளார்.
 'ஒன்ராறியோ' என்ற பெயர் 'வெண்டாட்' பழங்குடியின மொழியிலிருந்து வந்த 'ஒன்டாரியோ' (Ontari'io - அதாவது 'அழகான, பெரிய ஏரி') என்ற சொல்லாகும். இது கனடா கூட்டமைப்பு மற்றும் அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்திற்கு முன்பே, 400 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் வரலாற்றுப் பெயர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வரைபடங்கள் மற்றும் தரவுத்தளங்களில் இந்த ஏரியின் பெயரை 'லேக் அமெரிக்கா' என மாற்றுமாறு டிரம்ப் நிறைவேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். </p><p>
முன்னதாக 'மெக்சிகோ வளைகுடா'வை 'கல்ஃப் ஆஃப் அமெரிக்கா' என மாற்ற முயன்றதன் தொடர்ச்சியாகவே இச்செயல் பார்க்கப்படுகிறது.</p><p>
அமெரிக்காவுடனான வர்த்தகப் பதற்றங்கள் குறித்துப் பேசிய டக் ஃபோர்ட், கனடிய தொழிலாளர்களின் நலன்களைப் பாதிக்கும் மோசமான ஒப்பந்தத்தை விட ஒப்பந்தமே இல்லாமல் இருப்பது மேல் எனக் குறிப்பிட்டதுடன், உருக்கு மற்றும் வாகன உற்பத்தித் துறைகளைப் பாதுகாக்க கனடா அனைத்து முடிவுகளையும் எடுக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T06:02:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனர்த்த நிவாரண சேவைகளுக்காக நேபாளம் செல்லும் இலங்கை பாதுகாப்புப் படையினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/troops-prepare-for-nepal-disaster-relief-1788069679"></link>
            <id>https://jvpnews.com/article/troops-prepare-for-nepal-disaster-relief-1788069679</id>
            <summary type="text">அனர்த்த நிவாரண சேவைகளுக்காக அனுப்பி வைக்கப்படும் இலங்கை குழுக்களை எதிர்வரும் சில நாட்களுக்குள் நேபாளத்திற்கு அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதிப் பா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அனர்த்த நிவாரண சேவைகளுக்காக அனுப்பி வைக்கப்படும் இலங்கை குழுக்களை எதிர்வரும் சில நாட்களுக்குள் நேபாளத்திற்கு அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "> 

நேபாளத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்காக இந்நாட்டு பாதுகாப்புப் படையினரைக் கொண்ட நிவாரணக் குழுக்களை அனுப்பத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10f2f919-8b49-49a4-9f95-246e8568a769/26-6a93c730a303e.webp' /></p><p style="text-align: justify; "> 

அநுராதபுரம் பகுதியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">

நேபாளத்தில் நடந்த சம்பவம் ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவமாகும். ஜனாதிபதி தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். </p><p style="text-align: justify; ">அத்துடன், அரசாங்கம் என்ற வகையில் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதி ரீதியாக நிவாரணமாக வழங்குவதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p style="text-align: justify; ">

அதேபோன்று, பாதுகாப்பு அமைச்சின் நிவாரணக் குழுக்கள் மற்றும் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிவாரண நிலையம் என்பன உள்ளன.</p><p style="text-align: justify; "> 

அங்குள்ள தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு எவ்வாறான நிவாரணக் குழுக்களை அனுப்புவது என்பது குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது. </p><p style="text-align: justify; ">

இன்னமும் திட்டமிடப்பட்டு வருகிறதே தவிர, அனுப்பப்படும் படையினரின் எண்ணிக்கை அல்லது எவ்வாறான நிவாரணக் குழுக்கள் என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை. </p><p style="text-align: justify; ">

ஓரிரு நாட்களில் அதற்கான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யவே அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். எனவே, அருகிலுள்ள ஒரு தெற்காசிய நாடாக நாம் மிகவும் உணர்வுபூர்வமாகச் செயற்படுகின்றோம்.</p>]]></content>
            <updated>2026-08-30T06:01:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் யாழில் ஆரம்பமான நீதிக்கான நீள் பயண கவனயீர்ப்பு பேரணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/long-journey-for-justice-awareness-rally-in-jaffna-1788069111"></link>
            <id>https://tamilwin.com/article/long-journey-for-justice-awareness-rally-in-jaffna-1788069111</id>
            <summary type="text">சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, &quot;நீதிக்கான நீள்
பயணம்&quot; எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி
நடைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, "நீதிக்கான நீள்
பயணம்" எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி
நடைபெற்று வருகின்றது.
</p><p>
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட
குடும்பங்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த பேரணி, யாழ்ப்பாணம் உலகத்
தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில்
சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து ஆரம்பமானது.</p><p>இந்த பேரணி தற்போது யாழ்ப்பாணம் தந்தை
செல்வா கலையரங்கில் நடைபெற்று வருகின்றது.</p><p>
</p><p>
காணாமல் ஆக்கப்பட்டோரின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட விசேட வாகனம் பேரணியின்
முன்னிலையில் சென்றதுடன், உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களின் புகைப்படங்களை
ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்றனர்.</p><h2>உண்மை மற்றும் நீதியை வலியுறுத்தி பேரணி</h2><p>
</p><p>
பல ஆண்டுகளாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி வரும் குடும்பங்கள்,
உண்மை மற்றும் நீதியை வலியுறுத்தி பேரணியில் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/197f43f3-3b8c-4f3c-83ae-34df0549769a/26-6a93c66a82665.webp' /></p><p>

உலகளவில் அதிகளவான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சம்பவங்கள்
பதிவாகியுள்ள நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதாகக் கூறப்படும்
நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் நீதி கோரிக்கை இதுவரை
நிறைவேற்றப்படவில்லை.
</p><p>
யாழ்ப்பாண நகரின் ஊடாக முன்னேறிய பேரணி, தந்தை செல்வா கலையரங்கைச்
சென்றடைந்தது. அங்கு சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை
முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மாநாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.</p><p>

காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலை தொடர்பில் உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்
என்றும், அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் பேரணியில் பங்கேற்ற
குடும்பங்கள் கோரிக்கை விடுத்தனர்.</p><p>வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின்
ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் குறித்த மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள் என பலர்
கலந்துகொண்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T05:58:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[களுத்துறை சிறைச்சாலையில் கைதியின் காதை வெட்டிய மற்றொரு கைதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fellow-inmate-cuts-off-prisoner-s-ear-at-kalutara-1788066475"></link>
            <id>https://ibctamil.com/article/fellow-inmate-cuts-off-prisoner-s-ear-at-kalutara-1788066475</id>
            <summary type="text">பதுளை சிறைச்சாலையிலிருந்து களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவரின் காதுப் பகுதியை, அங்கிருந்த மற்றொரு கைதி கூர்மையான ஆயுதத்தால் வெட்டியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதுளை சிறைச்சாலையிலிருந்து களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவரின் காதுப் பகுதியை, அங்கிருந்த மற்றொரு கைதி கூர்மையான ஆயுதத்தால் வெட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>சக கைதியால் தாக்கப்பட்ட கைதி உடனடியாகக் களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
வைத்தியசாலையில் பாதிக்கபட்ட கைதிக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2>காதை வெட்டிய சக கைதி</h2><p>
</p><p>குறித்த கைதி தற்போது காவல்துறையினர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e095ec9-ed1c-4703-8408-0b596d6d28f8/26-6a93c2d8a49a5.webp' /></p><p>மேலும் காயமடைந்த கைதி இன்று ஞாயிற்றுக்கிழமை (30.08.2026) காலை சட்ட வைத்திய அதிகாரி முன் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.&nbsp;</p><p>
</p><p>
அதன் பின்னரே அவர் வைத்தியசாலையிலிருந்து மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுவது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>எனினும் கைதிகளுக்கிடையில் இந்த பிரச்சனை வந்ததது தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T05:52:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள-திபெத் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு... இன்னொரு பெருவெள்ள அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-tibet-new-flood-fears-1788069004"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-tibet-new-flood-fears-1788069004</id>
            <summary type="text">Nepal-Tibet death toll rises amid new flood fears: இன்னொரு வெள்ளப்பெருக்கு அச்சங்களுக்கு மத்தியில் நேபாளம்-திபெத்தில் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு.
நே...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal-Tibet death toll rises amid new flood fears: இன்னொரு வெள்ளப்பெருக்கு அச்சங்களுக்கு மத்தியில் நேபாளம்-திபெத்தில் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு.
</p><p>நேபாளம் மற்றும் திபெத்தில் பேரழிவுகரமான திடீர் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 700 கடந்துள்ள நிலையில், காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 கடந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a8bc801-c37f-4fec-90d9-6820ce3359b4/26-6a93c4907c25d.webp' /></p><p>
</p><p>வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில், நேபாளம் மற்றும் திபெத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 750 ஆக உயர்ந்துள்ளதுடன், 3,000-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. </p><p>ஞாயிற்றுக்கிழமையன்று சீன அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில் 16 பேர் மரணமடைந்ததாகவும், 546 பேர் (அவர்களில் 261 பேர் வெளிநாட்டினர்) காணாமல் போனதாகவும் தெரிவித்தனர்; அதேவேளையில், நேபாள அதிகாரிகள் 734 பேர் மரணமடைந்ததையும், 2,498 பேர் காணாமல் போனதையும் உறுதிப்படுத்தியுள்ளனர். </p><p>சீனா வெளியிட்ட சமீபத்திய தகவலில், காணாமல் போன வெளிநாட்டினரில் நேபாளத்தைச் சேர்ந்த 104 பேர், இந்தியாவைச் சேர்ந்த 49 பேர், லாட்வியாவைச் சேர்ந்த 33 பேர், அமெரிக்காவைச் சேர்ந்த 18 பேர் மற்றும் 15 பிரித்தானியர்கள் அடங்குவர்.</p><p></p><p> </p><p>இந்த நிலையில், நம்பிக்கை அளிக்கும் வகையில் நேபாளத்தில் இதுவரை 3,700-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமை இரவு ஏற்பட்ட ஒரு முக்கிய முன்னேற்றமாக, தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாகக் கருதப்படும் திரிசூலி 3A நீர்மின் நிலையத்தின் சுரங்கப்பாதைக்குள் நேபாள ராணுவத்தால் ஒரு குழாயைச் செலுத்த முடிந்தது. </p><p>இந்த விவகாரம் தொடர்பில் உள்விவகார அமைச்சர் சுதான் குருங் தெரிவிக்கையில், நாங்கள் ஏற்கனவே அந்தச் சிறிய துளை வழியாகக் காற்றைச் செலுத்தத் தொடங்கிவிட்டோம்; இனி அகழ்வுப் பணிகளைத் தொடங்கி, மீட்புக் குழுவினரை உள்ளே அனுப்பவுள்ளோம்என்றார். </p><p>திரிசூலி 3A மற்றும் 3B ஆகிய இடங்களில் மீட்புப் பணிகள் கவனம் செலுத்தி வரும் நிலையில், 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அத்தகைய சுரங்கங்களுக்குள் இன்னும் உயிருடன் சிக்கியிருக்கக்கூடும் என்றே நம்பப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/213d7e78-c57d-4a2c-9c78-f9084b85911d/26-6a93c48fc85bb.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், வெள்ள நீர் மட்டம் உயர்ந்து வருவதாக நேபாள அதிகாரிகள் தரப்பு ஞாயிற்றுக்கிழமை எச்சரித்ததுடன், மீட்புக் குழுவினர் எச்சரிக்கையுடன் செயல்படுமாறும் வலியுறுத்தியுள்ளது. </p><p>பகல் 7.20 மணிக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையில், ரசுவாவில் உள்ள போதேகோஷி ஆற்றில் வெள்ளப் பெருக்கு மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். </p><p>பிரமாண்டமான எரிசக்தி உள்கட்டமைப்புத் திட்டங்கள் அமைந்துள்ள ஒரு பகுதியில், திபெத்தின் புனித கைலாஷ் மலைக்குச் சென்ற மலையேறுபவர்கள் மற்றும் இந்து யாத்ரீகர்கள் உட்பட 933 நீர்மின்சக்தித் தொழிலாளர்கள் காணாமல் போனதாக நேபாளத்தின் பேரிடர் ஆணையம் பட்டியலிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39408051-c851-465f-80a4-e90558f55990/26-6a93c48f21018.webp' /></p><p> இதனிடையே, காணாமல் போன தங்கள் உறவினர்களின் நிலை என்ன என்பதை அறியப் பேரவலத்துடன் காத்திருக்கும் அதே வேளையில், முற்றிலும் இல்லாத நிலையிலிருந்து தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்க வேண்டிய சவாலையும் உயிர் தப்பியவர்கள் எதிர்கொள்கின்றனர். </p><p>இன்னொரு பெருவெள்ளம் ஏற்படக்கூடும் என்ற அச்சம், காணாமல் போனவர்களைத் தேடும் பணியைச் சிக்கலாக்கியுள்ளது. பனிப்பாறை மற்றும் சேற்றின் பெருக்கினால் மாபெரும் ஏரிகள் உருவாயின, மேலும் இந்த ஏரி அமைப்புகளில் ஒன்று கூடுதல் வெள்ளப்பெருக்கு அபாயமாக மாறியுள்ளது. </p><p>கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதியில் 500-க்கும் மேற்பட்டோர் உட்பட, கியிராங் பகுதிக்கு அருகில் மொத்தம் 2,141 மீட்புப் பணியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக சீனாவின் சின்ஹுவா அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T05:47:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாக்ஸ் ஆபிஸ்: ஹாய் திரைப்படம் 2 நாட்களில் செய்துள்ள வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/hi-movie-2-days-box-office-collection-1788068073"></link>
            <id>https://cineulagam.com/article/hi-movie-2-days-box-office-collection-1788068073</id>
            <summary type="text">கவின், நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ஹாய் திரைப்படத்தின் 2 நாட்கள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

ஹாய்

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கவின், நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ஹாய் திரைப்படத்தின் 2 நாட்கள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.</p><p></p><p>
</p><h2>
ஹாய்</h2><p>

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் மற்றும் நயன்தாரா முதல்முறையாக இணைந்து நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஹாய். இப்படத்தில் மறைந்த நடிகர் பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், பிரபு என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/281d2e3f-2406-4742-9934-20990418460a/26-6a93c0ec2b7ce.webp' /></p><p>ஜென் மார்ட்டின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.</p><h2> 

பாக்ஸ் ஆபிஸ்</h2><p>

இந்நிலையில், ஹாய் திரைப்படம் 2 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 2 நாட்களில் இப்படம் ரூ. 5 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7ef4caf-9507-47b5-8ed7-745445ac8908/26-6a93c0ecd5193.webp' /></p>]]></content>
            <updated>2026-08-30T05:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் உயரதிகாரியின் மீது தாக்குதல் ; சிக்கிய சந்தேகநபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/arrested-for-attacking-senior-police-officer-1788068280"></link>
            <id>https://jvpnews.com/article/arrested-for-attacking-senior-police-officer-1788068280</id>
            <summary type="text">கேகாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேகாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>&nbsp;இச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணைகளின் அடிப்படையில், சனிக்கிழமை (29) இக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db17ef1b-269f-4722-b030-cc911296d0a3/26-6a93c1b982630.webp' /></p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக, பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் தாக்குதல் நடத்தல் ஆகிய சட்ட விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.</p><p>

மேலும், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கேகாலை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-30T05:38:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக ஆளுநராக கிரண்குமார் ரெட்டி?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/kiran-kumar-reddy-tn-governor-1788067840"></link>
            <id>https://ibctamilnadu.com/article/kiran-kumar-reddy-tn-governor-1788067840</id>
            <summary type="text">ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த ஆர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி மேற்குவங்க ஆளுநராக நியமிக்கப்பட்ட பின்னர் பொறுப்பு ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்.
</p><p>
இந்நிலையில் ஆந்திரா முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான கிரண்குமார் ரெட்டி தமிழக ஆளுநராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aca9f1db-0553-4fa1-9ded-8d12fb5c2136/26-6a93c0cd516e0.webp' /><br></p><p>

பிரதமர் மோடியின் உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளின் பயணம் முடிந்த பின்னர் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகலாம்.</p><p>

மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யும் போது தமிழக ஆளுநர் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.
</p><p>
2010 முதல் 2014 வரை ஆந்திராவின் முதலமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.<br></p>]]></content>
            <updated>2026-08-30T05:34:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்..! தமிழர் தாயக காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/disappeared-relatives-association-question-1788066094"></link>
            <id>https://tamilwin.com/article/disappeared-relatives-association-question-1788066094</id>
            <summary type="text">தமிழர் சுயநிர்ணயம் மற்றும் இறையாண்மை தொடர்பான கேள்வியை சர்வதேச
நீதிமன்றத்தின் முன் கொண்டு செல்லக் கூடிய சட்ட வழிமுறைகளை பிரித்தானியா ஆராய
வேண்டும் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழர் சுயநிர்ணயம் மற்றும் இறையாண்மை தொடர்பான கேள்வியை சர்வதேச
நீதிமன்றத்தின் முன் கொண்டு செல்லக் கூடிய சட்ட வழிமுறைகளை பிரித்தானியா ஆராய
வேண்டும் என தமிழர் தாயக காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்
வேண்டுகோள் விடுத்துள்ளது.</p><p>அத்துடன், எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிய
தமிழ் தாய்மார்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்றும்
கேள்வி எழுப்பியுள்ளன.</p><p>வவுனியாவில் நேற்றைய தினம் (29.08.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இந்த விடயத்தை கூறியுள்ளனர்.&nbsp;</p><p>மேலும்,

சர்வதேச காணாமலாக்கப்பட்டேர் தினம் அனுஸ்டிக்கப்படும் நிலையில் கடந்த
3478 நாட்களாக, எமது பிள்ளைகளையும் அன்புக்குரியவர்களையும் தேடுவதை கைவிடாமல்
வவுனியாவில் வீதியில் நின்று போராடி வருகிறோம்.</p><h2>வேண்டுகோள் முன்வைப்பு</h2><p>
</p><p>
இன்று, பிரித்தானிய பிரதமரிடமும் பிரித்தானிய வெளியுறவு அமைச்சரிடமும் நாம்
நேரடியாக ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறோம். தமிழர் இறையாண்மையை
மீட்டெடுப்பதற்கான சர்வதேச சட்ட வழிமுறைக்கு பிரித்தானியா ஆதரவளிக்க வேண்டும்.
</p><p>
இலங்கையில் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கும் தமிழர் தேசியப் பிரச்சினையில்
பிரித்தானியாவுக்கு உள்ள வரலாற்றுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, காலனித்துவ
நீக்கம், சுயநிர்ணய உரிமை மற்றும் தமிழர் இறையாண்மை மீட்பு தொடர்பாக சர்வதேச
சட்ட வழிமுறையை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.</p><p>

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியே பின்னர் சுதந்திர சிலோன் பெற்றுக்கொண்ட
மையப்படுத்தப்பட்ட அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது.
1948ஆம் ஆண்டு பிரித்தானியா அதிகாரத்தை ஒப்படைத்த போது, ஒரே மையப்படுத்தப்பட்ட
அரசைக் கொண்ட அரசியலமைப்பு ஏற்பாடு தொடர்ந்தது.
</p><p>
அந்த அரசியலமைப்பு ஏற்பாடு தமிழர்களின் அரசியல் உரிமைகள், பாதுகாப்பு மற்றும்
அரசியல் எதிர்காலத்திற்கு நிலையான தீர்வை வழங்க தவறிவிட்டது. அதன் விளைவுகளை
தமிழர்கள் தலைமுறை தலைமுறையாக அனுபவித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/367c51cd-8792-4465-8b74-f41fc47db22d/26-6a93c00033c03.webp' /></p><p>
</p><p>
பாகுபாடான அரச கொள்கைகள், இன வன்முறைகள், இடம்பெயர்வுகள், நில இழப்புகள்,
இராணுவமயமாக்கல், போர் மற்றும் வலிந்து காணாமலாக்கப்படுதல் ஆகியவற்றை
தமிழர்கள் எதிர் கொண்டுள்ளனர். இன்றும் ஆயிரக்கணக்கான தமிழ் குடும்பங்கள்
தங்களது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியாமல்
காத்திருக்கின்றன.

அரசாங்கங்கள் மாறியுள்ளன.</p><h2>நம்பகமான பதில் கிடைக்கவில்லை</h2><p> </p><p>ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விசாரணைகள்
அறிவிக்கப்பட்டுள்ளன. பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் எமது காணாமலாக்கப்பட்ட பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதற்கான நம்பகமான பதில் இன்னும்
எமக்குக் கிடைக்கவில்லை.

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச நாளின் முன்னைய தினத்தில்,
பிரித்தானியாவிடமும் சர்வதேச சமூகத்திடமும் நாம் கேட்கிறோம்.</p><p> எமது
பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிய தமிழ்த் தாய்மார்கள் இன்னும் எத்தனை
ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

சிலோனை ஒன்றிணைத்த காலனித்துவ நிர்வாக நடைமுறையிலும், பின்னர் அதன் காலனித்துவ
நீக்கத்திலும் பிரித்தானியா வகித்த பங்கு குறித்து முறையான வரலாற்று மற்றும்
சட்ட ஆய்வை மேற்கொள்ளுமாறு பிரித்தானிய அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்.</p><p>

மேலும், தமிழர் சுயநிர்ணயம் மற்றும் இறையாண்மை தொடர்பான கேள்வியை சர்வதேச
நீதிமன்றத்தின் முன் கொண்டுசெல்லக்கூடிய சட்ட வழிமுறைகளை பிரித்தானியா ஆராய
வேண்டும்.

நேரடி வழக்கிற்கான சட்ட அதிகாரம் பொருந்தாத பட்சத்தில், ஐக்கிய நாடுகள் பொதுச்
சபையின் மூலம் சர்வதேச நீதிமன்றத்தின் ஆலோசனைக் கருத்தைக் கோரும் முயற்சிக்கு
பிரித்தானியா ஆதரவளிக்க வேண்டும்.</p><p>

எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு மாற்றங்கள்,
அரசியல் பேச்சுவார்த்தைகள் மற்றும் அதிகாரப் பகிர்வு முயற்சிகள் தமிழர்
தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை வழங்கவில்லை.</p><p>

எனவே, தமிழர் இறையாண்மையை மீட்டெடுப்பது, அமைதியான மற்றும் ஜனநாயக நடைமுறையின்
மூலம் சுதந்திரமான தமிழ் ஈழத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பையும் உள்ளடக்கி, ஒரு
சர்வதேச அரசியல் தீர்வின் பகுதியாக பரிசீலிக்கப்பட வேண்டும் என்று
பிரித்தானியாவையும் சர்வதேச சமூகத்தையும் கேட்டுக்கொள்கிறோம்.

எனவே, தீர்க்கப்படாமல் இருக்கும் இந்தக் கேள்வியை சர்வதேச சட்டத்தின் முன்
கொண்டுசெல்ல பிரித்தானியா உதவ வேண்டும் என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T05:31:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்லீவ்லஸ் சேலையில் மின்னும் நடிகை சினேகா..புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/sneha-actress-sleevless-saree-photos-post-viral-1788016418"></link>
            <id>https://viduppu.com/article/sneha-actress-sleevless-saree-photos-post-viral-1788016418</id>
            <summary type="text">சினேகாரசிகர்களால் புன்னகை அரசி என செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை சினேகா. இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடிய திரை பிரபலங்களில் ஒருவர். தொடர்ந்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சினேகா</h2><p>ரசிகர்களால் புன்னகை அரசி என செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை சினேகா. இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடிய திரை பிரபலங்களில் ஒருவர். </p><p>தொடர்ந்து தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94b76d4d-dbc8-463f-b186-b57dd651d7b2/26-6a92f72ae86de.webp' /></p><p>அந்த வகையில் சில நாட்களுக்கு முன் நடிகை சினேகா, தன்னுடைய கணவரும் நடிகருமான பிரசன்னாவின் பர்த்டேவை கொண்டாடியுள்ளார்.
தற்போது ஸ்லீவ்லஸ் சேலையில் மின்னும் அழகிய புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் சினேகா.</p>]]></content>
            <updated>2026-08-30T05:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-arrested-in-connection-with-murder-1788067544"></link>
            <id>https://jvpnews.com/article/three-arrested-in-connection-with-murder-1788067544</id>
            <summary type="text">கடந்த 28 ஆம் திகதி கட்டான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நபர் ஒருவரைத் தாக்கிக் கொலை செய்த சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 28 ஆம் திகதி கட்டான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நபர் ஒருவரைத் தாக்கிக் கொலை செய்த சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

இந்தக் கொலை தொடர்பில் நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21ce3899-57b9-47f3-898c-84ea91050ab2/26-6a93beda21c96.webp' /></p><h2>&nbsp;மேலதிக விசாரணை</h2><p> 

இதன்போது, விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த கொலையைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேக நபர் மற்றும் அக்குற்றத்திற்கு உடந்தையாக இருந்த ஏனைய இரு சந்தேக நபர்களும் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 23, 47 மற்றும் 49 வயதுடைய கதிரான, ஏத்துகால மற்றும் கொச்சிக்கடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p> 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கட்டான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-30T05:25:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹரக் கட்டாவின் பரபரப்பு வாக்குமூலம்! சிக்கிய முன்னாள் அமைச்சரின் 5 கோடி ரூபாய் மோசடி - வெளிச்சத்திற்கு வரவுள்ள சம்பவங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nandun-chinthaka-also-known-as-harak-kata-crime-1788056112"></link>
            <id>https://tamilwin.com/article/nandun-chinthaka-also-known-as-harak-kata-crime-1788056112</id>
            <summary type="text">&amp;nbsp;பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான நதுன் சிந்தக என்றழைக்கப்படும் ஹரக் கட்டாவிடமிருந்து முன்னாள் அமைச்சரின் செயலாளர் 5 கோடி பெறப்பட்டுள்ளதாக குற்றப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான நதுன் சிந்தக என்றழைக்கப்படும் ஹரக் கட்டாவிடமிருந்து முன்னாள் அமைச்சரின் செயலாளர் 5 கோடி பெறப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் துறையினர் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதால் முன்னாள் அமைச்சரோ அல்லது அவரது செயலாளரோ கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>டுபாயிலிருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஹரக் கட்டாவின் நெருங்கிய நண்பரான மிதிகம ருவன் அளித்த வாக்குமூலத்திலேயே இது வெளிவந்துள்ளது. </p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">பணம் கைமாறப்பட்ட விதம்</span></p><p>
"அமைச்சரிடம் சொல்லி இந்த வேலையை முடித்துக்கொள்ளலாம், அவர் ஜனாதிபதியிடம் பேசி நடவடிக்கை எடுப்பார்" எனக்கூறி இந்த பணம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a0a7ab5-1e91-4a39-bfc0-d9c2ebdf9289/26-6a9392327fb09.webp' /></p><p>ஆனால், பணம் பெற்றபோது அந்த நபர் அமைச்சராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவோ இருக்கவில்லை என்றும், ஜனாதிபதியுடன் தனக்குள்ள நெருங்கிய தொடர்பை பயன்படுத்தி இந்த வேலையை செய்வதாக கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>எனினும், இது முன்னாள் அமைச்சருக்கு தெரிந்தே நடந்ததா அல்லது அவருக்கு தெரியாமல் நடந்ததா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.</p><p>மிதிகம ருவன் மற்றும் ஹரக் கட்டாவின் மனைவி ஆகியோரிடம்&nbsp;தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள "பணம் கேட்கிறார்கள், பணத்தைக் கொடுங்கள்" என்று கூறியவர் ஹரக் கட்டா என்பதும் தெரியவந்துள்ளது.</p><h2>பின்னணியில் நடந்த&nbsp;உண்மைகள்</h2><p> குற்றப்புலனாய்வுத்துறையின் காவலில் இருந்தபோது, அங்கிருந்த தொலைபேசியை பயன்படுத்த ஒரு அழைப்பிற்கு 5 லட்சம் ரூபாய் வீதம் இலஞ்சம் கொடுக்கப்பட்டதாக முறைப்பாடுகளும் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26701233-523e-4902-bf48-5327ba511d1e/26-6a93a1017cfc2.webp' /></p><p> </p><p>இந்த வழக்கில் நதுன் சிந்தகவே முக்கிய சாட்சி என்றும், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இதுவரை நதுன் சிந்தகவிடம் வாக்குமூலம் எதுவும் பெறவில்லை என்றும் கூறப்படுகின்றது.</p><p>எனவே, ஹரக் கட்டாவிடமிருந்து பெறப்படும் வாக்குமூலம் இலங்கை வரலாற்றையே மாற்றியமைக்கக்கூடிய ஒன்றாக இருக்கும் என்றும், பின்னணியில் நடந்த உண்மைகள், இதில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள், தொலைபேசி அழைப்புகள் என அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும் என்றும்&nbsp;தெரிவிக்கப்படுகிறது</p><p></p><p></p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T05:24:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருநங்கையாக மாறிய இந்திய கிரிக்கெட் வீரரின் மகன் : அவுஸ்திரேலியாவில் விளையாட அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/australia-approve-transgender-anaya-bangar-to-play-1788065858"></link>
            <id>https://manithan.com/article/australia-approve-transgender-anaya-bangar-to-play-1788065858</id>
            <summary type="text">trans cricketer anaya bangar to play in australia: திருநங்கையாக மாறிய அனயா பங்கர் கிரிக்கெட் விளையாட அவுஸ்திரேலியா&amp;nbsp; அனுமதி வழங்கியுள்ளது.அனயா பங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>trans cricketer anaya bangar to play in australia: திருநங்கையாக மாறிய அனயா பங்கர் கிரிக்கெட் விளையாட அவுஸ்திரேலியா&nbsp; அனுமதி வழங்கியுள்ளது.</p><h2>அனயா பங்கர்</h2><p>இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் பங்கர், தற்போது அனயா பங்கர் என்ற பெயரில் திருநங்கை பெண்ணாக மகளிர் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான புதிய பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5654ddb1-a21d-492f-aa2b-adc3cda1b15f/26-6a93bd8717103.webp' /></p><p></p><p>
</p><p>
மகளிர் கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (BCCI) அனுமதி கோரியிருந்த நிலையில், அங்கிருந்து பதில் கிடைக்காததால் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பை அவர் அணுகியுள்ளார்.</p><p> இதையடுத்து, அவுஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அனயாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd1066d8-3c5a-47a7-959c-be9ae8609830/26-6a93bd87bd400.webp' /></p><p>

கிரிக்கெட்டில் இருந்து பாலின மாற்றப் பயணம்
2001 முதல் 2004ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய சஞ்சய் பங்கரின் மகனான ஆர்யன், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மும்பை மற்றும் புதுச்சேரி அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
</p><p>
2023ஆம் ஆண்டு, தான் பெண்ணாக மாற விரும்புவதாக வெளிப்படையாக தெரிவித்த அவர், அதற்கான ஹார்மோன் சிகிச்சையை மேற்கொண்டார். தொடர்ந்து பாலின மாற்ற சிகிச்சைகளை மேற்கொண்டு, தனது பெயரையும் அனயா பங்கர் என மாற்றிக்கொண்டார்.</p><p>

இதையடுத்து மகளிர் கிரிக்கெட்டில் தனது கிரிக்கெட் பயணத்தைத் தொடரும் நோக்கில் அவர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20800c02-f590-4eea-b149-d3c957776424/26-6a93bd886e244.webp' /></p><p>

அவுஸ்திரேலியாவில் புதிய வாய்ப்பு
மகளிர் கிரிக்கெட்டில், குறிப்பாக அவுஸ்திரேலியாவின் பிரீமியர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு அனயா விருப்பம் தெரிவித்திருந்தார். </p><p>இதற்கான அனுமதியை அவுஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு தற்போது வழங்கியுள்ளது.

எனினும், சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான தகுதி தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) விதிமுறைகள் தொடர்ந்து அமலில் உள்ளன.
</p><p>
ஆண் பருவமடைதலை அடைந்த திருநங்கை பெண்கள், உயர்மட்ட மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்பதைத் தடுக்கும் விதிமுறைகளை ஐசிசி 2023ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bedfbd37-9168-4dbe-96fc-f40609ebb5f4/26-6a93bd891fb77.webp' /></p><p></p><p>
</p><p>
டெஸ்டோஸ்டிரோன் அளவு முக்கியம்
ஐசிசி விதிமுறைகளின்படி, உயர்மட்ட மகளிர் கிரிக்கெட்டில் விளையாடுவதற்குத் தகுதி பெற, சம்பந்தப்பட்ட வீராங்கனையின் இரத்தத்தில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைந்தது 12 மாதங்களுக்கு 10 nmol/L-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
</p><p>
அனயாவின் உயர்மட்ட கிரிக்கெட் தகுதி தொடர்பான முடிவு, அவரது டெஸ்டோஸ்டிரோன் பரிசோதனை முடிவுகளைப் பொறுத்தே அமையும்.

இதுகுறித்து கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் நேர்மை பிரிவுத் தலைவர் ஜாக்கி பார்ட்ரிட்ஜ் கூறுகையில், 2027 மார்ச் மாதத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் டெஸ்டோஸ்டிரோன் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே அனயாவின் உயர்மட்ட கிரிக்கெட் தகுதி தீர்மானிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
</p><p>
அதேவேளை, 2027 மார்ச் மாதம் வரை அவுஸ்திரேலியாவின் மாநிலங்கள் அல்லது பிராந்தியங்களில் நடைபெறும் பிரீமியர் கிரிக்கெட் போட்டிகளில் அனயா தொடர்ந்து பங்கேற்கத் தகுதியுடையவராக இருப்பார்.
</p><p>
இதன் மூலம், இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடிய ஆர்யன் பங்கர், அனயா பங்கர் என்ற புதிய அடையாளத்துடன் மகளிர் கிரிக்கெட்டில் தனது அடுத்த அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T05:20:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[DJ பிளாக் திருமணம்; குவிந்த விஜய் டிவி பிரபலங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vijay-tv-celebrities-in-dj-black-marriage-1788065526"></link>
            <id>https://cineulagam.com/article/vijay-tv-celebrities-in-dj-black-marriage-1788065526</id>
            <summary type="text">விஜய் டிவி பல திறமையானவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. 

அந்த வகையில் யாருமே எதிர்பார்க்காதபடி திரைக்கு பின்னால் இருக்கும் ஒருவரையும் விஜய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஜய் டிவி பல திறமையானவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. </p><p>

அந்த வகையில் யாருமே எதிர்பார்க்காதபடி திரைக்கு பின்னால் இருக்கும் ஒருவரையும் விஜய் டிவி வளர்த்து விட்டது. </p><p>

அவர் வேறு யாருமில்லை, டிஜே பிளாக் அவர்கள் தான், அவர் போடும் கவுண்டர் பாடல்களுக்கு என பல ரசிகர்கள் உள்ளனர், இந்நிலையில் சமீபத்தில் தான் இவரின் திருமணம் நடந்து முடிந்தது.
</p><p>
இந்த திருமண நிகழ்வில் பல விஜய் டிவி பிரபலங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர், அதில் முக்கியமாக டிடி, பிரியங்கா போன்ற தொகுப்பாளர்களும் வந்து டிஜே பிளாக்கை வாழ்த்தி சென்றனர்.

இதோ..</p>]]></content>
            <updated>2026-08-30T05:16:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[Meal Maker Biriyani: மட்டன் பிரியாணியை மிஞ்சும் மீல்மேக்கர் பிரியாணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/how-to-prepare-easy-recipe-meal-maker-1787915668"></link>
            <id>https://news.lankasri.com/article/how-to-prepare-easy-recipe-meal-maker-1787915668</id>
            <summary type="text">Meal Maker Biriyani: சைவ உணவு பிரியருக்கு மட்டன் சிக்கன் பிரியாணி அளவிற்கு சுவையை தரக்கூடிய ஒரு பிரியாணி இருக்கிறது. அதுதான் மீல்மேக்கர் பிரியாணி.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>Meal Maker Biriyani: சைவ உணவு பிரியருக்கு மட்டன் சிக்கன் பிரியாணி அளவிற்கு சுவையை தரக்கூடிய ஒரு பிரியாணி இருக்கிறது. அதுதான் மீல்மேக்கர் பிரியாணி.</p><p>

 இன்னும் சொல்லப்போனால் மட்டன் சிக்கன் விரும்பி சாப்பிடுபவர்கள் கூட இந்த பிரியாணியை விரும்பி சாப்பிடுவார்கள். அதை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம். இந்த பிரியாணியை நம் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கும் பொழுது அவர்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b77b2e7-0c16-4b52-96ed-411068104281/26-6a916d9697ea7.webp' /></p><p></p><p> </p><h3>

தேவையான பொருட்கள் :
</h3><p>மீல்மேக்கர் - 1 கப்
</p><p>பாஸ்மதி அரிசி - 1 கப்</p><p>
பெரிய வெங்காயம் - 1
</p><p>தக்காளி - 1</p><p>
பச்சை மிளகாய் - 2</p><p>
இஞ்சி பூண்டு விழுது - 1/2 </p><p>டீஸ்பூன்
நெய் - 2 </p><p>டேபிஸ்பூன்
எண்ணெய் - 2</p><p> டேபிஸ்பூன்
பிரிஞ்சி இலை - 2</p><p>
சீரக தூள் - 1/4</p><p> டீஸ்பூன்
சோம்பு தூள் - 1/4</p><p> டீஸ்பூன்
கருப்பு மிளகு தூள் - 1/4 </p><p>டீஸ்பூன்
கிராம்பு தூள் - 1/4</p><p> டீஸ்பூன்
பட்டை தூள் - 1/4 </p><p>டீஸ்பூன்
புதினா - 1 </p><p>கைப்பிடி
கொத்தமல்லி இலை - 1</p><p> கைப்பிடி
உப்பு - தேவையான அளவு</p><h3>
செய்முறை:
</h3><p> இந்த பிரியாணி செய்வதற்கு பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி கொதித்ததும் மீல்மேக்கர் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும். </p><p>மீல்மேக்கர் நன்கு ஊறிய பிறகு நார்மல் தண்ணீரில் போட்டு அலசி பிழிந்து எடுத்து தனியே வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக, அடுப்பில் பிரஷர் குக்கர் வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1aa7169e-ede2-4d84-b51a-d7a56cab8f16/26-6a916d975390c.webp' /></p><p></p><p> </p><p>வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் கலந்து வதக்கி அதன் பச்சை வாசனை போனவுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்துக் கொள்ள வேண்டும். தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும் நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லி இலையை போட்டு கலந்து பிறகு அதில் பட்டை தூள், சீரகத்தூள், சோம்பு தூள் மிளகுத்தூள் மற்றும் கிராம்புத்தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். </p><p>மசாலாக்களின் பச்சை வாசனை போன பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து பாஸ்மதி அரிசி மீல்மேக்கர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவைக்க விட வேண்டும். பின்னர் பிரஷர் குக்கரை மூடி ஒரு விசில் வரும் வரை விட்டு அடுப்பை அணைத்துக்கொள்ள வேண்டும். </p><p>குக்கரில் பிரஷர் தானாக அடங்கியதும் மூடியை திறந்து பார்த்தால் சுவையான மீல் மேக்கர் தயார். இந்த மீல் மேக்கர் பிரியாணியுடன் சேர்ந்து வெங்காயம் தயிர் பச்சடியுடன் சாப்பிட்டால் மட்டன் பிரியாணி விட சுவை அசத்தலாக இருக்கும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T05:15:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் சட்டவிரோத மீன்பிடி: இருவருக்கு அபராதம்; ஒருவருக்கு ஆயுட்காலத் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/lifetime-ont-fishing-ban-4k-in-fines-1788065878"></link>
            <id>https://canadamirror.com/article/lifetime-ont-fishing-ban-4k-in-fines-1788065878</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக ஆண்டுமுழுவதும் மீன்பிடிக்கத் தடைசெய்யப்பட்ட ஆற்றில் சட்டவிரோதமாக மீன்பிடித்த இருவரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக ஆண்டுமுழுவதும் மீன்பிடிக்கத் தடைசெய்யப்பட்ட ஆற்றில் சட்டவிரோதமாக மீன்பிடித்த இருவருக்கு 4,000 கனடிய டொலர்களுக்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>
2025 செப்டம்பர் 18 அன்று 'பிளாக் ஸ்டர்ஜன்' ஆற்றுப்பகுதியில் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டபோது, ஸ்கார்பரோவைச் சேர்ந்த சுன்யாங் லியூ மற்றும் ஈஸ்ட் க்வில்லிம்பரியைச் சேர்ந்த மிஃபெங் லீ ஆகியோர் சட்டவிரோதமாக 'வாலி' ரக மீன்களைப் பிடித்துக்கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.</p><p>
சோதனையின் போது மிஃபெங் லீ அங்கிருந்து தப்பியோடிய போதிலும், பொலிஸாரின் உதவியுடன் பின்னர் கைது செய்யப்பட்டார். 
தடைசெய்யப்பட்ட காலத்தில் மீன்பிடித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட லியூவுக்கு 1,050 டொலர் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அவர் பிடித்த மீன்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் நிரந்தரமாக அரசுடமையாக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d38dbab-8b1d-4e56-9615-ee3744735a3e/26-6a93b857acd65.webp' /></p><p> </p><p>
அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடித்தல், அதிகாரிக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் தப்பியோடிய குற்றங்களுக்காக லீக்கு 2,990 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.</p><p> 
மேலும், 2 ஆண்டுகள் கண்காணிப்பு உத்தரவுடன், ஒன்ராறியோ மாநிலத்தில் மீன்பிடிப்பதற்கு அவருக்கு ஆயுட்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p> 
'லேக் சுப்பீரியர்' ஏரிப் பகுதியில் வாலி மீன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவற்றைப் பாதுகாக்கவும் 'பிளாக் ஸ்டர்ஜன்' ஆற்றில் ஆண்டுமுழுவதும் மீன்பிடிக்க முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T05:11:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bc-premier-calls-byelection-in-riding-1788066414"></link>
            <id>https://canadamirror.com/article/bc-premier-calls-byelection-in-riding-1788066414</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் &#039;அபோட்ஸ்போர்ட்-மிஷன்&#039; தொகுதிக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அம்மாநில முதல்வர் டேவிட் ஈப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 'அபோட்ஸ்போர்ட்-மிஷன்' தொகுதிக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அம்மாநில முதல்வர் டேவிட் ஈபி அறிவித்துள்ளார். </p><p>
எதிர்வரும் செப்டம்பர் 26 ஆம் திகதி வாக்களிப்பு நடைபெறவுள்ள இந்த இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்னாள் விவசாயத்துறை அமைச்சரும் முன்னாள் மேயருமான பாம் அலெக்சிஸ் போட்டியிடுகிறார்.</p><p> 
கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரான கெர்ரி-லின் ஃபின்ட்லே சட்டமன்றத்தில் உறுப்பினராவதற்காக இத்தொகுதியில் போட்டியிடுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63ac6fc6-44d7-46d0-8388-60a0f06baf3d/26-6a93ba6fdf43b.webp' /></p><p> ஃபின்ட்லே போட்டியிடுவதற்கு வழிவிடும் வகையில், அத்தொகுதியின் கன்சர்வேடிவ் சட்டமன்ற உறுப்பினர் ரியான் காஸ்பர் தனது பதவியை ராஜினாமா செய்தார். 
கடந்த மே மாதம் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபின்ட்லேவின் தலைமையின் கீழ் கட்சியில் கடும் குழப்ப நிலை நிலவி வருகிறது.</p><p> இந்த மாதத்தில் மட்டும் 6 சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகி சுயேச்சையாக மாறியுள்ளனர்.</p><p>
 அத்துடன் கட்சியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் போன்ற முக்கிய அதிகாரிகளும் விலகியுள்ளனர். 
கட்சியிலிருந்து விலகிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான பீட்டர் மிலோபார் மற்றும் ஐயன் பேட்டன் ஆகியோர் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டு வருகின்றனர்.</p><p> 
எனினும், இடைத்தேர்தல் விரைவாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இத்தேர்தலில் தங்களால் வேட்பாளரை நிறுத்த முடியாது என மிலோபார் தெரிவித்துள்ளார்.</p><p> 
இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 5 ஆம் திகதியுடன் நிறைவடையும் எனவும், முன்கூட்டிய வாக்களிப்பு செப்டம்பர் 18 முதல் 23 வரை நடைபெறும் எனவும் 'எலக்சன்ஸ் பி.சி' அறிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T05:11:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதியின் காதை வெட்டிய சக கைதி ; களுத்துறை சிறைச்சாலையில் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fellow-inmate-cuts-fellow-prisoner-s-ear-1788066655"></link>
            <id>https://jvpnews.com/article/fellow-inmate-cuts-fellow-prisoner-s-ear-1788066655</id>
            <summary type="text">பதுளை சிறைச்சாலையிலிருந்து களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவரின் காதுப் பகுதியை, அங்கிருந்த மற்றொரு கைதி கூர்மையான ஆயுதத்தால் வெட்டியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பதுளை சிறைச்சாலையிலிருந்து களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவரின் காதுப் பகுதியை, அங்கிருந்த மற்றொரு கைதி கூர்மையான ஆயுதத்தால் வெட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p style="text-align: justify; ">

தாக்குதலுக்கு இலக்காகிக் காயமடைந்த கைதி உடனடியாகக் களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05c289e6-8bc6-42d3-92b9-b7b8841cdd32/26-6a93bb60cc038.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;அறுவை சிகிச்சை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அங்கு அவருக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தற்போது பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
</p><p style="text-align: justify; ">
காயமடைந்த கைதி இன்று ஞாயிற்றுக்கிழமை (30) காலை சட்ட வைத்திய அதிகாரி முன் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

</p><p style="text-align: justify; ">அதன் பின்னரே அவர் வைத்தியசாலையிலிருந்து மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுவது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-30T05:11:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு மாகாண கல்வித்துறை சவால்கள்: ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/education-probes-face-challenges-due-to-delays-1788063255"></link>
            <id>https://tamilwin.com/article/education-probes-face-challenges-due-to-delays-1788063255</id>
            <summary type="text">கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும்
சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்துதல் தொடர்பில்&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும்
சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்துதல் தொடர்பில்&nbsp; கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.</p><p>
</p><p>இந்தக் கலந்துரையாடலானது நேற்று(29.08.2026) வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.</p><h2>கல்வித்துறை விசாரணைகள்</h2><p>

இதன்போது, கடந்த கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட
நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து முதலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
</p><p>
குறிப்பாக, கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம்
அடைவதால் ஏற்படும் சவால்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.</p><p>கடந்த
காலங்களுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றம் காணப்பட்டாலும், எதிர்பார்க்கப்பட்ட
அளவுக்கு முன்னேற்றத்தை எட்ட முடியாத நிலை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டதுடன், இதற்குத் தீர்வாக தனியான விசாரணைக் குழு உறுப்பினர்களை உருவாக்கும்
யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1546ec6f-2303-44da-98dd-d976498c7986/26-6a93b3175f833.webp' /></p><p>ஆசிரியர் மற்றும் அதிபர் இடமாற்றக் கொள்கை தொடர்பிலும் விரிவாக
கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் மாகாணங்களுக்கு இடையிலான இடமாற்றங்கள் மற்றும் பாட
மாற்றங்கள் தொடர்பாக ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
</p><p>
அதேவேளை, வலயங்களுக்கு இடையிலான இடமாற்றங்கள் வெளிப்படைத்தன்மையுடனும்
நியாயமான நடைமுறையுடனும் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
உரிய காலத்தில் ஓய்வூதியங்கள் வழங்குவதற்கு ஏதுவாக, ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு
அமைவாக நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின்
செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>பாடசாலை அபிவிருத்தி</h2><p>
</p><p>
மேலும், ஆசிரியர்களுக்கு ஆபத்துக் கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றமை , கஷ்ட
மற்றும் அதி கஷ்ட பிரதேசங்களிலிருந்து சில பாடசாலைகள் நீக்கப்பட்டமை தொடர்பாக
கடிதம் அனுப்பப்பட்டுள்ளமை குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
</p><p>
ஆசிரியர்களின் சம்பள உயர்வுடன் தொடர்புடைய மேலதிக கோரிக்கைகள் குறித்தும்
கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளதுடன் வட மாகாணத்தில் 19 பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் தொடர்பில்
வலயக் கல்விப் பணிப்பாளர்களிடம் யோசனைகள் கோரப்பட்டுள்ளமை குறித்தும்
ஆராயப்பட்டுள்ளது.</p><p>

மேலும், கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்ததைப் போன்று வலய மற்றும் மாகாண
மட்டங்களில் வருடாந்த நாட்காட்டியை தயாரிப்பது தொடர்பிலும்
கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96a381ce-96af-4fd2-afcf-3efac5a595cb/26-6a93b31646fae.webp' /></p><p>அத்துடன் பரீட்சைகள் மற்றும் போட்டிகள் ஒரே நாளில் அமையாத வகையில் கல்வி நடவடிக்கைகளை
முறையாக திட்டமிடுவதற்கு இந்த நாட்காட்டி உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>மேலும் வட மாகாணத்தின் கல்வி துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு நடைமுறை தீர்வுகளை வழங்குவதற்காக அனைத்து தரப்பினரும் தொடர்ச்சியான கலந்துரையாடல்களின் ஊடாக இணைந்து செயற்பட வேண்டும் எனவும், ஆசிரியர்கள் மற்றும்
அதிபர்களின் சேவை நலன்களுடன் மாணவர்களின் கல்வி நலனும் சம அளவில் கவனத்தில்
கொள்ளப்பட வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p>

இந்தக் கலந்துரையாடலில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளரும்
பிரதியமைச்சருமான மகிந்த ஜயசிங்க, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப
தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ம.ஜெகதீஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநரின்
செயலாளர் எஸ்.சத்தியசீலன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக்
டிறஞ்சன், வடக்கு மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளர் கந்தையா பிரட்லி ஜேனட்
மற்றும் வடக்கு மாகாணத்தின் அனைத்து கல்வி வலயங்களினதும் கல்விப்
பணிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T05:08:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/husband-kills-wife-by-attacking-with-sharp-weapon-1788064696"></link>
            <id>https://tamilwin.com/article/husband-kills-wife-by-attacking-with-sharp-weapon-1788064696</id>
            <summary type="text">நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொரலாந்த, விநாயகபுரம் பகுதியில்&amp;nbsp;கூரிய ஆயுதத்தால் தனது மனைவியை தாக்கி கணவர் கொலை செய்துள்ளார்.இதனையடுத்து கணவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொரலாந்த, விநாயகபுரம் பகுதியில்&nbsp;கூரிய ஆயுதத்தால் தனது மனைவியை தாக்கி கணவர் கொலை செய்துள்ளார்.</p><p>இதனையடுத்து கணவர் நேற்று மாலை (29) பிற்பகல் நுவரெலியா பொலிஸில் சரணடைந்துள்ளார்.

</p><p>குடும்ப தகராறை தொடர்ந்து, 43 வயதுடைய சித்ரா தேவி என்ற
பெண், அவரது கணவரால் கோடரியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் அவரை
மீட்டு சிகிச்சை பெறுவதற்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.</p><h2>கணவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைவு</h2><p>இந்த சம்பவத்தையடுத்து, குறித்த பெண்ணின் 32 வயதுடைய கணவர், தான் மனைவி மீது கூரிய
ஆயுதத்தால் கடுமையாக தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்து நுவரெலியா பொலிஸ்
நிலையத்தில் தானாகவே சரணடைந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78cce7d1-e774-4aae-8a6f-985912192838/26-6a93b86f658b6.webp' /></p><p>
</p><p>தனிப்பட்ட குடும்பத்தகராறு காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு
இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p>
சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் குற்றப்புலனாய்வுப்பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>இந்த தாக்குதலை மேற்கொண்டதாக ஒப்புக்கொண்டு நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் தானாகவே
சரணடைந்த சந்தேகநபரை இன்று (30) நுவரெலியா மாவட்ட நீதிவான்
நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
</p><p>இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிணவறையில்
வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T04:59:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் இளம் உத்தியோகத்தரின் உயிரை பறித்த சம்பவம் ; துயரில் கதறும் உறவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incident-claims-the-life-of-a-young-officer-1788065772"></link>
            <id>https://jvpnews.com/article/incident-claims-the-life-of-a-young-officer-1788065772</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (29) சனிக்கிழமை சீமெந்து குழைக்கும் கனரக வாகனத்துடன், மோட்டார் சைக்கிள் மோதியதில...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (29) சனிக்கிழமை சீமெந்து குழைக்கும் கனரக வாகனத்துடன், மோட்டார் சைக்கிள் மோதியதில் அதில் பயணித்த இளைஞர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">

குறித்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது,</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17a06cfc-3c34-47dd-88f7-05142e5f6f77/26-6a93b7edeabe6.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">வ்வாறு உயிரிழந்த இளைஞர் தம்பலாகாமம், பட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் எனவும், தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரிபவர் எனவும் விசாரணையில் தெரியவருகிறது.</p><p style="text-align: justify; ">

உயிரிழந்தவரின் சடலம் தற்போது கந்தளாய் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் தம்பலகாமம் பொலிஸார் ஈடுப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-30T04:56:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிகிரியா அருகே இரவு நேரத்தில் சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3-men-arrested-illegal-excavation-near-sigiriya-1788063934"></link>
            <id>https://ibctamil.com/article/3-men-arrested-illegal-excavation-near-sigiriya-1788063934</id>
            <summary type="text">சிகிரியா பாறைக்கு அருகிலுள்ள&amp;nbsp; பாதுகாப்புப் பகுதியில், இரவு நேரத்தில் ஹேமர் இயந்திரத்தைப் பயன்படுத்தி நிலத்தைத் தோண்டிக்கொண்டிருந்த மூவர் சிகிரியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிகிரியா பாறைக்கு அருகிலுள்ள&nbsp; பாதுகாப்புப் பகுதியில், இரவு நேரத்தில் ஹேமர் இயந்திரத்தைப் பயன்படுத்தி நிலத்தைத் தோண்டிக்கொண்டிருந்த மூவர் சிகிரியா வனவிலங்கு அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
இவர்களில் இருவர் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஊழியர்கள் எனவும், மற்றையவர் குறித்த காணியின் உரிமையாளர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, நீர் வழங்கல் சபையின் அரச இலட்சினை பொருத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மூவர் கைது</h2><p> </p><p>விசாரணையின்போது சந்தேகநபர்கள் தாம் அருகிலுள்ள வீடொன்றுக்கு நீர் இணைப்பு வழங்குவதற்காக நிலத்தைத் தோண்டியதாக தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c6c2552-db00-4b88-ab74-64efb4a76b59/26-6a93b5827d82b.webp' /></p><p>

எனினும், நள்ளிரவு வேளையில் அதி உணர்திறன் கொண்ட பகுதியில் இவ்வாறு அகழ்வுப் பணியில் ஈடுபட்டமை தொடர்பில் திருப்திகரமான விளக்கம் வழங்கப்படாததால், அவர்களிடமிருந்த அகழ்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் ஹேமர் இயந்திரமும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
கைது செய்யப்பட்ட மூவரையும், முச்சக்கர வண்டி மற்றும் கைப்பற்றப்பட்ட உபகரணங்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T04:53:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் மதுபான விற்பனை நிலையத்தை மாற்றுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/public-opposit-relocation-liquor-outlet-vavuniya-1788061589"></link>
            <id>https://tamilwin.com/article/public-opposit-relocation-liquor-outlet-vavuniya-1788061589</id>
            <summary type="text">வவுனியா தொடருந்து நிலைய வீதியில் தற்போது அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையம்
ஒன்றை, அதே வீதியில் குட்செட் வீதி சந்திப் பகுதியில் மாற்றுவதற்கு அந்தப் பக...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா தொடருந்து நிலைய வீதியில் தற்போது அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையம்
ஒன்றை, அதே வீதியில் குட்செட் வீதி சந்திப் பகுதியில் மாற்றுவதற்கு அந்தப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை
தெரிவித்துள்ளனர். </p><p>குறித்த பகுதி பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ஒரு இடமாக
உள்ளதுடன் வாகனப் போக்குவரத்து அதிகம் காணப்படும் முக்கிய பகுதியாக காணப்படுவதனாலேயே அவர்கள் இந்த மாற்றுத் திட்டத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.</p><h2>மக்கள் எதிர்ப்பு</h2><p>

எனவே, அங்கு மதுபான விற்பனை நிலையம் அமைக்கப்பட்டால் பல்வேறு சமூகப்
பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.</p><p>அத்துடன் போக்குவரத்து நெரிசல், பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் பாதுகாப்பு தொடர்பான
பிரச்சினைகள் ஏற்படக்கூடும் எனவும் பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/282c419a-f664-409a-b4d6-ad3c7d51a55c/26-6a93ac7002330.webp' /></p><p> இது
தொடர்பாக வைரவபுளியங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தில் ஒரு கலந்துரையாடல்
இடம்பெற்ற நிலையில் அதிகமான பொதுமக்கள் இந்த நடவடிக்கைக்கு எதிரான
நிலைப்பாட்டில் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
</p><p>
எனவே, பொதுமக்களின் நலன் கருதி, குறித்த இடத்தில் மதுபான விற்பனை நிலையத்தை
மாற்றுவதற்கான நடவடிக்கையை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்
பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T04:53:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவின் ஆயுத நிறுவனங்களுக்கு ரஷ்ய உளவு அமைப்புகளால் அச்சுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/defence-firms-russian-spy-threat-1788065608"></link>
            <id>https://news.lankasri.com/article/defence-firms-russian-spy-threat-1788065608</id>
            <summary type="text">Britain&#039;s defence firms are warned of Russian spy threat: பிரித்தானியாவின் ஆயுத நிறுவனங்களுக்கு ரஷ்ய உளவு அமைப்புகளால் அச்சுறுத்தல்.
உக்ரைனுக்கு ஆயுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Britain's defence firms are warned of Russian spy threat: பிரித்தானியாவின் ஆயுத நிறுவனங்களுக்கு ரஷ்ய உளவு அமைப்புகளால் அச்சுறுத்தல்.
</p><p>உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் பிரித்தானியாவின் ஆயுத நிறுவனங்களின் தலைவர்கள், ரஷ்ய உளவாளிகளின் இலக்காக மாறும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>உக்ரைனுக்காக ட்ரோன்</h2><p>
</p><p>கோடையின் தொடக்கத்தில் மூத்த அரசு அதிகாரிகளுக்கும் தலைமைச் செயல் அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற வட்டமேசை சந்திப்பின்போது, ​​ரஷ்யாவிடமிருந்து தாங்களும் தங்கள் ஊழியர்களும் எதிர்கொள்ளும் அதிகரித்த அச்சுறுத்தல்கள் குறித்து நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54cb2d10-669a-45d9-9ad6-dfbc3428915d/26-6a93b74a8dbe3.webp' /></p><p> </p><p>குறிப்பிட்ட எந்தெந்த நிறுவனத் தலைவர்கள் அங்கு இருந்தனர் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை; இருப்பினும், உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் ட்ரோன்களை வழங்கும் நிறுவனங்களின் தலைவர்களே அவர்கள் என்று கருதப்படுகிறது. </p><p>பல ஆயுத நிறுவனங்கள் தங்களின் ஆயுத விற்பனையின் காரணமாக ஏற்கனவே முக்கியத்துவம் பெற்றுள்ளன. மேற்கு சஃபோக்கில் உள்ள RAF மில்டன்ஹாலுக்கு அருகில் அமைந்துள்ள, உக்ரைனுக்காக ட்ரோன்களைத் தயாரிக்கும் உக்ர்ஸ்பெக் சிஸ்டம்ஸ் நிறுவனமும், </p><p>ரஷ்யாவின் உட்பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்க சமீபத்தில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன்களை வழங்கிய BAE சிஸ்டம்ஸின் துணை நிறுவனமான காலன்-லென்ஸும் அவற்றில் அடங்கும்.</p><p></p><p> மட்டுமின்றி, ரஷ்யாவைத் தாக்க
 உக்ரைன் பயன்படுத்தும் ஸ்டார்ம் ஷேடோ ஏவுகணைகளைத் தயாரிக்கும் MBDA நிறுவனமும் முக்கியத்துவம் வாய்ந்தது.</p><p> இதனிடையே, இரண்டு ஜேர்மானிய ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்களின் தலைவர்களைக் கொல்ல ரஷ்யா தீட்டிய சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 'ஃபாரின், காமன்வெல்த் அண்ட் டெவலப்மென்ட் ஆபீஸ்' (Foreign, Commonwealth &amp; Development Office) கூட்டம் நடைபெற்றது.
</p><p>அவர்களில் ஒருவர், உக்ரேனியப் படைகளுக்கு பீரங்கி குண்டுகளை வழங்குவதற்கான 4.2 பில்லியன் பவுண்டு மதிப்புள்ள ஒப்பந்தத்தைக் கொண்டிருந்த பாதுகாப்புத் துறை நிறுவனமான 'ரைன்மெட்டல்' (Rheinmetall)-இன் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்மின் பாப்பர்கர் ஆவார். </p><p>இந்த நிலையில், பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பாதுகாப்புத் துறை நிறுவனங்களின் தலைவர்கள், தங்கள் சொந்தப் பாதுகாப்பு மற்றும் தங்கள் நிறுவனங்களின் கட்டமைப்புகளின் பாதுகாப்பு குறித்துச் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர் என்றே தகவல் கசிந்துள்ளது. </p><p>மேலும், பாதுகாப்புத் துறையில் ஈடுபட்டுள்ள அனைவரும் தற்போது ரஷ்யர்களின் முறையான இலக்காகக் கருதப்படுகிறார்கள் என்பதை ரஷ்யா உணர்த்துகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T04:50:46+00:00</updated>
        </entry>
    </feed>
