<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-20T17:20:19+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத மீன்பிடித்தல்: கனடா நபருக்கு 4,500 டொலர் அபராதம்; மீன்பிடிக்கத் தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ont-man-fined-4500-suspended-from-fishing-1789922994"></link>
            <id>https://canadamirror.com/article/ont-man-fined-4500-suspended-from-fishing-1789922994</id>
            <summary type="text">சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக கனடாவின் தண்டர்பே நகரைச் சேர்ந்த பால் ஹர்டில் என்பவருக்கு 4,500 கனடிய டொலர் அபராதம் விதிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக கனடாவின் தண்டர்பே நகரைச் சேர்ந்த பால் ஹர்டில் என்பவருக்கு 4,500 கனடிய டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒன்ராறியோ மாகாணத்தில் மீன்பிடிக்க 5 ஆண்டுகளுக்குத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>
அணைக்கு கீழ்நோக்கிய 23 மீட்டருக்குள் சட்டவிரோதமாக மீன்பிடித்தது, தூண்டில் பயன்படுத்தாமல் வலை மூலம் 'ரெயின்போ டிரவுட்' மீன்களைப் பிடித்தது மற்றும் இயற்கை வள பாதுகாப்பு அதிகாரியிடம் தவறான வாக்குமூலம் அளித்தது ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் இவர் குற்றவாளியாகக் காணப்பட்டார்.
</p><p>இயற்கை வள அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d9902cb-526f-45aa-a26b-0ce742e145f0/26-6ab00eb3ee30f.webp' /></p><p>
</p><p> மே 1, 2025 அன்று சூனியா நகராட்சியில் உள்ள இஷ்கிபிபிள் க்ரீக் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடிக்கப்படுவதாகப் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர்.
</p><p>ஹைவே 11/17 இல் பால் ஹர்டிலின் வாகனத்தை மறித்துச் சோதனையிட்ட அதிகாரிகள், அவர் அணைக்கு கீழ்நோக்கிய 23 மீட்டர் எல்லைக்குள் 'டிப் நெட்' வலையைப் பயன்படுத்தி மீன்களைப் பிடித்ததை உறுதி செய்தனர். 
மேலும், விசாரணையின் போது அவர் அதிகாரிகளுக்குப் பொய் தகவல்களைக் கூறி திசைதிருப்ப முயன்றதும் தெரியவந்தது.
</p><p>தண்டர்பே ஒன்ராறியோ நீதிமன்றத்தில், சமாதான நீதிபதி J. A. பெர்னார்ட் காரோன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
</p><p>இலையுதிர் காலத்தில் சால்மன் மீன்களின் இடப்பெயர்வு காலம் தொடங்கவுள்ள நிலையில், இந்தச் சம்பவம் அனைத்து மீனவர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பாதுகாப்பு அதிகாரி ரொன் ஆர்னல்ட் தெரிவித்துள்ளார்.
</p><p>இயற்கை வளங்கள் தொடர்பான சட்டவிரோதச் செயல்கள் குறித்து தகவல் தெரிவிக்க அமைச்சகத்தின் இலவச உதவி எண்ணான 1-877-847-7667 அல்லது 'க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' அமைப்பைத் தொடர்புகொள்ளலாம்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T17:06:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரை மணி நேரம் அநுர மனோவுடன் கதைத்தது என்ன..! அனோஜனின் தற்போதைய நிலைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussed-with-anura-mano-for-half-an-hour-1789923176"></link>
            <id>https://tamilwin.com/article/discussed-with-anura-mano-for-half-an-hour-1789923176</id>
            <summary type="text">அனோஜனின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் தொலைபேசியில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டதாக ஐக்கிய மக்கள் சக்தி கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனோஜனின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் தொலைபேசியில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.</p><p>

லங்காசிறி ஊடகம் வழங்கும் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
அநுர குமார திஸாநாயக்கவுடன் வழக்கமாக அரை மணி நேரம் உரையாடுவது வழக்கம். அனோஜனின் நிலைப்பாட்டையும் எடுத்துரைத்துள்ளேன்.
</p><p>
விரைவில் சவூதி அரேபிய அரசாங்கத்துடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு, அவரது தண்டனையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் ஜனாதிபதிக்கு வலியுறுத்தினேன்.</p><p>

ஊழல்வாதிகளை அநுர அரசாங்கம் தேடித் தேடி கைது செய்வது பாராட்டுக்குரியது. என்றாலும், அநுர அரசாங்கத்திலும் ஊழல்வாதிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் தகுந்த தண்டனை வழங்கினால் நன்றாக இருக்கும் என்றார்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/BhMshQ0voX8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T17:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனை மீட்க அரசு முழு அளவில் செயற்படும் - பிமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/government-will-act-fully-to-rescue-anojan-bimal-1789922689"></link>
            <id>https://jvpnews.com/article/government-will-act-fully-to-rescue-anojan-bimal-1789922689</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனை மீட்டெடுப்பதற்கு அரசாங்கம் அதிகபட்ச தலையீட்டை செலுத்தியுள்ளதாக போக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனை மீட்டெடுப்பதற்கு அரசாங்கம் அதிகபட்ச தலையீட்டை செலுத்தியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p></p><p> 

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி பதிலளிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் இந்த விடயம் தொடர்பில் அதிகபட்ச தலையீட்டை மேற்கொண்டு வருகிறோம் எனக் குறிப்பிட்டார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afe86027-14f1-42e1-b133-3f011e98238d/26-6ab00d82e7527.webp' /></p><p>வெளிவிவகார அமைச்சரும் வெளிவிவகார அமைச்சும் இதில் தலையிட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. 

அதேபோன்று ஜனாதிபதி செயலகமும் இதில் தலையீடுகளை மேற்கொண்டு வருகிறது. </p><p>

நாங்கள் இதன் ஆரம்பக் கட்டத்திலேயே இருக்கிறோம், இதில் எவ்வித தாமதமும் ஏற்படவில்லை. </p><p>

எனினும், இவ்வாறான விடயங்களைக் கையாளும் போது குறிப்பிட்ட இராஜதந்திர நடைமுறைகளின்படியே செய்ய வேண்டும். </p><p>

ஏனெனில் அந்தந்த நாடுகளுக்கென சட்டதிட்டங்கள் காணப்படுகின்றன. </p><p>

இருப்பினும், அவரை மீட்டெடுப்பதற்கு நாங்கள் அதிகபட்சமாக தலையிட்டு நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T16:44:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பின்தங்கிய நிலையில் ஐரோப்பாவின் AI உள்கட்டமைப்பு - 10 ஆடுகளில் 600 பில்லியன் செலவினம் தேவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/europe-faces-600b-ai-infrastructure-gap-1789922853"></link>
            <id>https://news.lankasri.com/article/europe-faces-600b-ai-infrastructure-gap-1789922853</id>
            <summary type="text">Europe faces 600 billion dollar AI infrastructure gap: ஐரோப்பாவின் AI தொழில்நுட்ப வளர்ச்சிக்கு 600 பில்லியன் யூரோ செலவிடவேண்டியுள்ளது.

600 பில்லியன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Europe faces 600 billion dollar AI infrastructure gap: ஐரோப்பாவின் AI தொழில்நுட்ப வளர்ச்சிக்கு 600 பில்லியன் யூரோ செலவிடவேண்டியுள்ளது.</p><h2>

600 பில்லியன் யூரோ வரை செலவினம் தேவைப்படும்</h2><p>ஐரோப்பாவில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அடுத்த பத்து ஆண்டுகளில் 600 பில்லியன் யூரோ வரை செலவினம் தேவைப்படும் என ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) எச்சரித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e27d438-e3b1-45cd-9088-0fea58fb87fc/26-6ab00e277be24.webp' /></p><p>ECB தலைவர் கிரிஸ்டின் லகார்ட், ஐரோப்பாவில் தற்போதைய தரவு மைய திறன் தேவைக்கு போதவில்லை. 2025-ல் 3 GW-ஆக இருந்த திறன், 2036-ல் 20 GW-ஆக அதிகரிக்கும் என்று கூறயுள்ளார்.
</p><p>
ஐரோப்பிய நிறுவனங்கள் 2026-ல் தங்களின் மொத்த முதலீட்டில் 10 சதவீதத்தை AI-க்கு செலவிட உள்ளன. மேலும், AI தொடர்பான கடன், நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட புதிய கடன்களில் 25 சதவீத வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p>ஐரோப்பிய தொழிலாளர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தற்போது AI பயன்படுத்துகின்றனர். இது இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்த அளவை விட இரட்டிப்பு மடங்காகும். AI பயன்பாடு உற்பத்தித் திறனை அடுத்த பத்து ஆண்டுகளில் 4 சதவீதம் வரை உயர்த்தும் என ECB கணித்துள்ளது.
</p><p>
ஆனால், IMF விடுத்துள்ள எச்சரிக்கையில், AI-யின் நன்மைகள் மற்றும் செலவுகள் நாடுகள், பிராந்தியங்கள், தொழிலாளர்கள் இடையே சமமாகப் பகிரப்படாது என கூறியுள்ளது. தொழிலாளர்கள் சிலர் உற்பத்தி திறனை உயர்த்தினாலும், சிலர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.
</p><p></p><p>ஐரோப்பா, AI திறனில் அமெரிக்கா மற்றும் சீனாவை விட பின்தங்கியுள்ளது. 2025-ல் அமெரிக்கா 59 முக்கிய AI மாதிரிகளை உருவாக்கிய நிலையில், சீனா 35 உருவாக்கியது. ஆனால், பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா தலா ஒன்றையே உருவாக்கின. உலகளாவிய AI கணினி திறனில் அமெரிக்கா 75 சதவீதத்தை வைத்திருக்க, ஐரோப்பா வெறும் 5 சதவீதம் மட்டுமே கொண்டுள்ளது.
</p><p>
இதனை சமாளிக்க, ஐரோப்பிய ஆணையம் 7 AI Gigafactories அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக 10 பில்லியன் யூரோ அரசு நிதி மற்றும் 20 பில்லியன் யூரோ தனியார் முதலீடு ஈர்க்கப்படும்.

AI விரிவாக்கம், மின்சார உள்கட்டமைப்புக்கும் சவாலாக உள்ளது. தற்போது தரவு மையங்கள் ஐரோப்பாவின் மின்சார பயன்பாட்டில் 3 சதவீதம் பங்காற்றுகின்றன. இது விரைவில் அதிகரிக்கும் என IMF எச்சரித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T16:44:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அல் - அக்ஸா பள்ளிவாசலுக்குள் இஸ்ரேலிய அமைச்சர்! ஜோர்தான் கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/israeli-minister-inside-al-aqsa-mosque-1789922420"></link>
            <id>https://ibctamil.com/article/israeli-minister-inside-al-aqsa-mosque-1789922420</id>
            <summary type="text">ஜெரூசலமில் உள்ள&amp;nbsp; அல்-அக்ஸா பள்ளிவாசல் வளாகத்திற்குள் இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென்-க்விர்&amp;nbsp; நுழைந்த சம்பவத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜெரூசலமில் உள்ள&nbsp; அல்-அக்ஸா பள்ளிவாசல் வளாகத்திற்குள் இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென்-க்விர்&nbsp; நுழைந்த சம்பவத்தை ஜோர்தானின் வெளிவிவகார அமைச்சு கடுமையாகக் கண்டித்துள்ளது.</p><p>

இதனை ஏற்றுக்கொள்ள முடியாத ஆத்திரமூட்டல் என சுட்டிக்காட்டிய ஜோர்தான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சுஃப்யான் அல்-மோமானி, இஸ்ரேலிய அமைச்சர்கள் மற்றும் குடியேற்றவாசிகளின் தொடர்ச்சியான அத்துமீறல்கள் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் வெளிப்படையான மீறல்களை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இவ்வாறான ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் தொடர்வதால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்தும் அவர் எச்சரித்துள்ளார்.
</p><p></p><h2>மதத் தல&nbsp;ஆக்கிரமிப்பு</h2><p><span style="font-size: 14px;">ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலேம் நகரத்தின் மீதும், அங்குள்ள இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ புனிதத் தலங்கள் மீதும் இஸ்ரேலுக்கு எந்தவித இறையாண்மையும் இல்லை&nbsp; எனவும் அல்-மோமானி வலியுறுத்தியுள்ளார்.</span></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77f54cec-51d7-4f31-9ab6-f9c4f0d6f4e3/26-6ab00c76f3199.webp' /></p><p>
</p><p>
மேலும், மதத் தலங்களை ஆக்கிரமிப்பதைத் தடுப்பதுடன், அவற்றை வழிபாட்டாளர்கள் அணுகுவதற்கு விதிக்கப்படும் அனைத்து கட்டுப்பாடுகளையும் நிறுத்துவதற்காக சர்வதேச சமூகம் உறுதியான சர்வதேச நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T16:40:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டில் உறங்கிய பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/schoolboy-dies-after-being-struck-by-lightning-1789921104"></link>
            <id>https://ibctamil.com/article/schoolboy-dies-after-being-struck-by-lightning-1789921104</id>
            <summary type="text">அகலவத்தை, டெல்பே, ஹலோவிட்டா பகுதியில் உள்ள வீட்டின் தரையில் உறங்கிக் கொண்டிருந்த பதினைந்து வயது பள்ளி மாணவன், மின்னல் தாக்கியதில் உயிரிழந்ததாக அகலவத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அகலவத்தை, டெல்பே, ஹலோவிட்டா பகுதியில் உள்ள வீட்டின் தரையில் உறங்கிக் கொண்டிருந்த பதினைந்து வயது பள்ளி மாணவன், மின்னல் தாக்கியதில் உயிரிழந்ததாக அகலவத்தை காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
உயிரிழந்தவர், அகலவத்தை, டெல்பே, ஹலோவிட்டா முகவரியில் வசித்து வந்த, அகலவத்தை மிஹிந்து மத்திய மகா வித்யாலயத்தில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவரான ஹசிதா பிரதீப் குமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.&nbsp;</p><h2>வீட்டின் தரையில் உறங்கியவேளை தாக்கிய மின்னல்</h2><p>அறையின் தரையில் உறங்கிக் கொண்டிருந்தபோது மாணவனை மின்னல் தாக்கியது. இதனையடுத்து அகலவத்தை பிம்பூரா பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த மாணவன் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66240643-e851-4de4-b9da-ac57a19e4ebe/26-6ab00a606254f.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T16:34:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிபிராஜ் மகன் செய்த சாதனை.. குவியும் வாழ்த்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sibiraj-son-wins-gold-in-isso-games-2026-27-1789921484"></link>
            <id>https://cineulagam.com/article/sibiraj-son-wins-gold-in-isso-games-2026-27-1789921484</id>
            <summary type="text">நடிகர் சிபிராஜ் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர். சோலோ ஹீரோவாக மட்டுமின்றி மல்டிஸ்டாரர் படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.சிபிராஜ் தீவிரமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் சிபிராஜ் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர். சோலோ ஹீரோவாக மட்டுமின்றி மல்டிஸ்டாரர் படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.</p><p>சிபிராஜ் தீவிரமான விஜய் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது அப்பா சத்யராஜ் மற்றும் சகோதரி இருவரும் திமுக ஆதரவாளர்கள் என்பதால் கடந்த தேர்தல் நேரத்தில் அவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்து பதிவிடும் விஷயங்கள் பரபரப்பாக பேசப்பட்டன. </p><p>
சிபிராஜ் தற்போது அவரது மகன் செய்த சாதனை பற்றி நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e74b2810-67f2-4518-a9dc-25ef979849f1/26-6ab008d2eda74.webp' /></p><p>
</p><h2>தங்க பதக்கம்
</h2><p>சர்வதேச பள்ளிகளுக்கு இடையேயான ISSO Games 2026-27ல் அவரது மகன் டேக்வாண்டோ போட்டியில் தங்க பதக்கம் பெற்று இருக்கிறார்.
</p><p>மும்பையின் Dhirubhai Ambani International Schoolல் இந்த போட்டிகள் நடந்து இருக்கிறது.
</p><p>போட்டோக்களை வெளியிட்டு சிபிராஜ் மகன் வெற்றி பெற பயிற்சி அளித்தவர்களுக்கு நன்றி கூறி இருக்கிறார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T16:29:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாணவர்கள் முகத்தை மூடத் தேவையில்லை..! இத்தாலி அரசாங்கம் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/italian-government-guidelines-on-student-attire-1789921635"></link>
            <id>https://tamilwin.com/article/italian-government-guidelines-on-student-attire-1789921635</id>
            <summary type="text">இத்தாலியிலுள்ள பாடசாலைகளில் புர்க்கா மற்றும் நிகாப் போன்ற முகத்தை மூடும்
ஆடைகளைத் தடை செய்வதற்கும், ஒரு வகுப்பறையில் அனுமதிக்கப்படும் வெளிநாட்டு
மாண...</summary>
            <content type="html"><![CDATA[<p>இத்தாலியிலுள்ள பாடசாலைகளில் புர்க்கா மற்றும் நிகாப் போன்ற முகத்தை மூடும்
ஆடைகளைத் தடை செய்வதற்கும், ஒரு வகுப்பறையில் அனுமதிக்கப்படும் வெளிநாட்டு
மாணவர்களின் எண்ணிக்கைக்கு வரையறை விதிப்பதற்கும் அந்நாட்டு அரசாங்கம் புதிய
சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.</p><p>

இத்தாலி பிரதமரின் “பிரதர்ஸ் ஒஃப் இத்தாலி” கட்சியின் இளைஞர் அணி ஆண்டுக்
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி இந்த அறிவிப்பை
வெளியிட்டுள்ளார்.</p><h2>

பாடசாலைகளில் புதிய நடைமுறை</h2><p>
இதன்படி, பாடசாலைகளில் முகத்தை மூடிக்கொண்டு கல்வி கற்க அனுமதி
அளிக்கப்படமாட்டாது என்றும், இத்தாலியில் கலாச்சாரம் அல்லது பாரம்பரியத்தின்
பெயரால் எந்தவொரு பெண் பிள்ளையும் தனது முகத்தை மறைத்து வாழ வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4317424a-8fd5-47b8-93fa-85e7735c6d4c/26-6ab0099c21a5b.webp' />&nbsp; &nbsp;</p><p>
</p><p>
அத்துடன், வெளிநாட்டு மாணவர்கள் பாடசாலை அமைப்பில் விரைவாக இணைந்து
கொள்வதற்காக ஒரு வகுப்பறையில் அவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தத்
திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>வகுப்பறையில் பெரும்பாலான குழந்தைகளுக்கு மொழி புரியாவிட்டால் அது சமூக
ஒருங்கிணைப்பாக அமையாது மாறாகப் புறக்கணிப்பாகவே அமையும் எனக் குறிப்பிட்ட
பிரதமர், தீவிர மொழிப் பிரச்சினை எதிர்கொள்ளும் வெளிநாட்டு மாணவர்களின்
பெற்றோர்களும் இத்தாலிய மொழியைக் கற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்படும் என்றும்
தெரிவித்துள்ளார்.</p><p>

புதிய முன்மொழிவு விரைவில் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், 
இத்தாலிய பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களில் சுமார் 11.6 சதவீதமானோர்
வெளிநாட்டுப் பிரஜைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T16:28:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு முக்கிய தகவல் ; கல்வி அமைச்சு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-information-students-attending-school-1789921594"></link>
            <id>https://jvpnews.com/article/important-information-students-attending-school-1789921594</id>
            <summary type="text">நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நாளை (21) பாடசாலைகளை நடத்துவது குறித்துத் தீர்மானிக்கும் அதிகாரம் அந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நாளை (21) பாடசாலைகளை நடத்துவது குறித்துத் தீர்மானிக்கும் அதிகாரம் அந்தந்த மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ இதனை உறுதிப்படுத்தினார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aff3b24a-b368-45d9-9d7c-3baa0891f59e/26-6ab0093c32f4e.webp' /></p><p>மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தி நடவடிக்கைகளை எடுக்குமாறும், வெளியிடப்படும் புதிய அறிக்கைகள் குறித்தும் அதிக அவதானம் செலுத்துமாறும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T16:26:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/australia-beat-zimbabwe-by-1-wicket-in-3rd-odi-1789920941"></link>
            <id>https://news.lankasri.com/article/australia-beat-zimbabwe-by-1-wicket-in-3rd-odi-1789920941</id>
            <summary type="text">Australia beat zimbabwe by 1 wicket: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>Australia beat zimbabwe by 1 wicket: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><p>

ஹராரேயில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில், அவுஸ்திரேலிய அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.&nbsp;</p><h2>சிக்கந்தர் ரஸா 81 ஓட்டங்கள் </h2><p>

அவுஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹராரேயில் நடந்தது. முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 271 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06c6b430-6ede-4367-9a0e-f2675f1154ea/26-6ab007b6a7d6f.webp' />&nbsp;</p><p></p><p>அணித்தலைவர் சிக்கந்தர் ரஸா 72 பந்துகளில் 81 ஓட்டங்களும், கிரேக் எர்வின் 59 ஓட்டங்களும் எடுத்தனர். 

நேதன் எல்லிஸ் 3 விக்கெட்டுகளும், ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் ஆடம் ஜம்பா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ca51f0b-e903-48dc-bd29-9ba408353dab/26-6ab009333c8ff.webp' /></p><p>
பின்னர் ஆடிய அவுஸ்திரேலிய அணியில் ஜோஷ் இங்கிலிஸ் (Josh Inglis) நிதானமாக ஆடி 103 ஓட்டங்கள் குவித்தார்.&nbsp;</p><h2>அவுஸ்திரேலியா வெற்றி </h2><p>

ஆனால், ஏனைய வீரர்கள் சொதப்பியதால் 245 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகள் என அவுஸ்திரேலியா தடுமாறியது.</p><p>

அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நேதன் எல்லிஸ் (Nathan Ellis), ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 36 ஓட்டங்கள் எடுத்தார். </p><p>

இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் 272 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இங்கிலிஸ் ஆட்டநாயகன் விருதும், கூப்பர் கோனொலி தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d851c868-594b-43a9-aa29-dbf48dd9f732/26-6ab00a415f0c3.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cce22224-a463-42eb-8673-cc15ff602b09/26-6ab007b77ae42.webp' /></p>]]></content>
            <updated>2026-09-20T16:16:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளையதினம் பாடசாலைகள் நடைபெறுமா..! கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/inclement-weather-decision-regarding-schools-1789916110"></link>
            <id>https://ibctamil.com/article/inclement-weather-decision-regarding-schools-1789916110</id>
            <summary type="text">நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நாளை (21) பாடசாலைகளை நடத்துவது குறித்துத் தீர்மானிக்கும் அதிகாரம் அந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நாளை (21) பாடசாலைகளை நடத்துவது குறித்துத் தீர்மானிக்கும் அதிகாரம் அந்தந்த மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. </p><p>

கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ கொழும்பு ஊடகமொன்றிடம் இதனைத் தெரிவித்தார்.</p><h2>&nbsp;நுவரெலியா பாடசாலைகளுக்கான அறிவிப்பு</h2><p>&nbsp;இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா கல்வி வலயத்தில் நாளை (21) பாடசாலைகளை நடத்துவதில் சிரமம் காணப்படுமாயின், அது குறித்துத் தீர்மானிக்கும் அதிகாரத்தை வலயக் கல்விப் பணிப்பாளர் அதிபர்களுக்கு வழங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e66f367-1470-49d0-a2d8-5dfb00525147/26-6aaff8907b7c8.webp' /></p><p> </p><p>

இதற்கமைய, சம்பந்தப்பட்ட பாடசாலைகளை நடத்துவதா இல்லையா என்பது குறித்த தீர்மானத்தை உரிய பாடசாலை அதிபர்களே மேற்கொள்வர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T16:14:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜன் வழக்கில் வெளியான புதிய தகவல் ; குடும்பத்திடம் வெளியான அதிர்ச்சித் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-penalty-for-anojan-shocking-news-revealed-1789920775"></link>
            <id>https://jvpnews.com/article/death-penalty-for-anojan-shocking-news-revealed-1789920775</id>
            <summary type="text">சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ள அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை அவர் தனது குடும்பத்தினரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ள அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை அவர் தனது குடும்பத்தினரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p></p><p>இன்று (20) காலை 10.30 மணியளவில் அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்தபோது, அவரது தம்பி ஹம்சிதனுக்கு சவுதி அரேபியாவிலிருந்து அனோஜன் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்போது, அனோஜனுடன் சுமார் 10 நிமிடங்கள் உரையாடியதாகவும், ஜூன் 30ஆம் திகதி அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் அவருடன் இறுதியாக உரையாடியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c68fb67f-33e7-4a95-9acb-486efc3c842d/26-6ab0060915506.webp' /></p><p>அனோஜன் மீது முதலில் சைபர் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு தொடரப்பட்டதாகவும், அந்த வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
இதனைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கத்தின் ஊடாக அவரது தண்டனையை குறைப்பதற்கான மேன்முறையீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இந்நிலையில், தமக்கு வழங்கப்பட்ட தண்டனை போதுமானதாக இல்லை எனக் கூறி வழக்குத் தொடர்ந்த சவுதி தரப்பும் மேன்முறையீடு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அதன்போது, நபியை அவமதித்தல் மற்றும் அந்த உள்ளடக்கத்தை பலரிடம் பரப்பியமை உள்ளிட்ட மேலும் சில குற்றச்சாட்டுகள் வழக்கில் இணைக்கப்பட்டு, வழக்கு வேறு கோணத்தில் மீண்டும் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதன் பின்னர் அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும், இந்தத் தீர்ப்பு தொடர்பாக அவருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குடும்பத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05e68323-0f69-4eef-9fee-c866fd324252/26-6ab00609bf886.webp' /></p><p>
</p><p>
மேலும், தனது குடும்பத்தினருடன் தொடர்புகொண்டு நிலைமையைத் தெரிவிக்கும் வாய்ப்பும் அவருக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
தனது தண்டனை தொடர்பிலும், அது தொடர்பாக ஏற்பட்டுள்ள சில தவறான புரிதல்கள் குறித்தும் அனோஜன் விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எதிர்வரும் 7ஆம் திகதி வரை அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறையிலிருந்து தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளும் வாய்ப்பு அவருக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.</p><p>

இந்நிலையில், அனோஜனின் விடுதலைக்காக உரிய சட்ட மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவரை ஆதரிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அனோஜனின் வழக்கு தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் மற்றும் அவரின் விடுதலைக்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகள் குறித்து தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T16:13:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/school-can-close-by-principals-1789915714"></link>
            <id>https://tamilwin.com/article/school-can-close-by-principals-1789915714</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தில் தொடர் சீரற்ற காலநிலைக் காரணமாக பாடசாலைகளின் விடுமுறை தொடர்பிலான தீர்மானங்களை அதிபர்கள் எடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தில் தொடர் சீரற்ற காலநிலைக் காரணமாக பாடசாலைகளின் விடுமுறை தொடர்பிலான தீர்மானங்களை அதிபர்கள் எடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த அறிவிப்பை வலயக் கல்வி பணிப்பாளர் வெளியிட்டுள்ளார். </p><p>

இதற்கமைய, நாளை தினம்(21.09.2026) பாடசாலை விடுமுறை தொடர்பிலான தீர்மானங்களை அதிபர்கள் எடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>பாடசாலை விடுமுறை</h2><p>
சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf92da5e-162f-4c0a-9a3c-3a4c4406d342/26-6aafff3d0732e.webp' /></p><p>இதேவேளை சீரற்ற காலநிலை நிலவும் மாவட்டங்களில் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. </p><p>இதற்கமைய, கடந்த 24 மணித்தியாலயங்களாக நாட்டின் சில பகுதிகளில் கடுமையான மழை பெய்து வரும் நிலையில் கல்வி அமைச்சு இந்த தீாமானத்தை எடுத்துள்ளது.</p><p>குறிப்பாக மத்திய மற்றும் சப்கரகமுவ மாகாணங்கள் கடும் மழையுடனான காலநிலையினால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>கடந்த 24 மணித்தியாலங்களில&nbsp;்கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டியில் 210 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T16:05:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[34 பில்லியன் சொத்து இருந்தும் மகளின் ஸ்டார்ட்அப்புக்கு நிதியளிக்க மறுத்த மெலிண்டா கேட்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/melinda-gates-denies-funding-daughters-startup-1789919559"></link>
            <id>https://news.lankasri.com/article/melinda-gates-denies-funding-daughters-startup-1789919559</id>
            <summary type="text">Melinda Gates denies funding daughter’s startup: 3.30 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருந்தும், சொந்த மகளுக்கு தொழில் தொடங்க பணம் தர மறுத்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Melinda Gates denies funding daughter’s startup: 3.30 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருந்தும், சொந்த மகளுக்கு தொழில் தொடங்க பணம் தர மறுத்துள்ளார் மெலிண்டா கேட்ஸ்.</p><p>
</p><h2>
மெலிண்டா கேட்ஸ்</h2><p>&nbsp;மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸின் முன்னாள் மனைவி மற்றும் உலகின் மிகப்பெரிய பணக்கார பெண்களில் ஒருவரான மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ், 34 பில்லியன் டொலர் ( ரூ.3.30 லட்சம் கோடி) சொத்து இருந்தும், தனது மகளின் ஸ்டார்ட்அப்பிற்கு நிதி வழங்க மறுத்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74cd0447-e958-4f71-8152-32d394dafc63/26-6ab00148bde2d.webp' /></p><p>மெலிண்டா, “இது உண்மையான வியாபாரம் என்றால், பிற முதலீட்டாளர்கள் அதனை ஆதரிக்க வேண்டும். நான் பணம் கொடுக்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.
</p><p>
மேலும், தனது மகள் மறுப்பு மற்றும் சவால்களை எதிர்கொண்டு வளர வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p></p><p>பில் கேட்ஸ், தனது குழந்தைகள் தன்னுடைய செல்வத்தில் 1 சதவீதத்திற்கும் குறைவாக மட்டுமே பெறுவார்கள் என்று முன்பே அறிவித்திருந்தார். இதே கொள்கையை மெலிண்டாவும் பின்பற்றுகிறார்.</p><h2>

இளைய மகளின்&nbsp;ஃபேஷன்-டெக் ஸ்டார்ட்அப்</h2><p>அவர்களின் இளைய மகள் ஃபீபி கேட்ஸ் (Phoebe Gates), தனது ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக நண்பருடன் சேர்ந்து Phia என்ற ஃபேஷன்-டெக் ஸ்டார்ட்அப்பை தொடங்கியுள்ளார். இந்த பிளாட்ஃபார்ம், 40,000-க்கும் மேற்பட்ட வலைத்தளங்களில் உள்ள ஆடைகள் விலைகளை ஒப்பிட்டு, பயனாளர்களுக்கு சிறந்த சலுகைகளை கண்டுபிடிக்க உதவுகிறது.
</p><p></p><p>மெலிண்டா, பெண்கள் தொழில் முனைவோர் நிதி திரட்டுவதில் அதிக சவால்களை சந்திக்கின்றனர் என்றும், தன்னம்பிக்கை மற்றும் பொறுமையுடன் முன்னேற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த முடிவு, கேட்ஸ் குடும்பத்தின் சுயமாக முன்னேற வேண்டும் என்ற கொள்கையை வெளிப்படுத்துகிறது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T15:49:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தக்காளியை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் 7 முக்கிய நன்மைகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/amazing-benefits-of-eating-one-raw-tomato-daily-1789915920"></link>
            <id>https://manithan.com/article/amazing-benefits-of-eating-one-raw-tomato-daily-1789915920</id>
            <summary type="text">குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பும் காய்கறிகளின் பட்டியவில் தக்காளி நிச்சயம் முக்கிய இடம் பிடித்துவிடும். அறிவியலின் பிரகாரம் இது...</summary>
            <content type="html"><![CDATA[<p>குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பும் காய்கறிகளின் பட்டியவில் தக்காளி நிச்சயம் முக்கிய இடம் பிடித்துவிடும். அறிவியலின் பிரகாரம் இது ஒரு பழவகையாகவே அறியப்படுகின்றது.
</p><p>
இது பார்ப்பதற்கு எவ்வளவுக்கு அழகாக இருக்கின்றதோ அதைவிட பல மடங்கு ஆரோக்கிய நன்மைகளையும், மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளமையே இதன் சிறப்பம்சம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf152276-5e86-49fb-b61a-54a14ae8962f/26-6aaffc57844fc.webp' /></p><p>நம் அன்றாட உணவில் எளிதாக சேர்த்துக்கொள்ளக்கூடிய காய்கறிகளில் தக்காளியும் ஒன்று. சாலட், சாண்ட்விச் அல்லது உணவுடன் சேர்த்து தக்காளியை பச்சையாக சாப்பிடுவது பல்வேறு ஊட்டச்சத்துகளைப் பெற உதவும்.</p><p>குறிப்பாக இதில் வைட்டமின் C, பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் லைகோபின் போன்ற முக்கியமான சத்துக்கள் உள்ளன.தக்காளியை வழக்கமாக உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கக்கூடிய முக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பாரக்கலாம்.</p><p></p><p><b>இதய ஆரோக்கியம்</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30b3b91a-a7a9-4dac-bff7-1ed115bfc5b3/26-6aaffc583827a.webp' /><b></b></p><p>

தக்காளியில் உள்ள லைகோபின் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கக்கூடும். குறிப்பாக பொட்டாசியம் உடலில் ரத்த அழுத்தத்தை சீராகப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான உணவுமுறையின் ஒரு பகுதியாக தக்காளியை சேர்த்துக்கொள்வது இதய ஆரோக்கியத்துக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்க்கும்.</p><p><b>சரும ஆரோக்கியம்</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c37056c-681d-48a3-9660-1d0a7e4d24a4/26-6aaffc5995f5c.webp' /></p><p>
தக்காளியில் உள்ள வைட்டமின் C உள்ளிட்ட ஆன்டி-ஆக்சிடன்ட்கள் சரும செல்களைப் பாதுகாக்கவும், சருமத்தின் இயல்பான ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவுகின்றன.&nbsp;</p><p><b>செரிமானம்&nbsp;</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e01ec02-f466-4bf5-91dd-6b86ea1f2e1c/26-6aaffc58dfcd3.webp' /><b></b></p><p>
தக்காளியில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து உள்ளதால், இது சீரான செரிமானத்திற்கு உதவக்கூடும். போதுமான நார்ச்சத்து உட்கொள்வது மலச்சிக்கலைத் தடுப்பதற்கும் குடல் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கும் உதவுகிறது.</p><p><b>நோய் எதிர்ப்பு ஆற்றல்</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d73ea560-d0a1-474d-a7ee-2c8f1229219b/26-6aaffc5a4caa2.webp' /><b></b></p><p>
தக்காளியில் உள்ள வைட்டமின் C, உடலின் இயல்பான நோய் எதிர்ப்பு செயல்பாட்டிற்கு தேவையான முக்கியமான சத்துகளில் ஒன்றாகும். எனவே தக்காளியை உணவில் சேர்த்துக்கொள்வது சமச்சீரான உணவுமுறையின் ஒரு பகுதியாக நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்திற்கும் துணைப்புரியும்.</p><p><b>&nbsp;ஆன்டி-ஆக்சிடன்ட்</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6759a5e5-8798-4a5b-b958-f401bebd5769/26-6aaffc5b031fe.webp' /><b></b></p><p><b> </b></p><p>தக்காளியில் காணப்படும் லைகோபின் போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உடலில் உருவாகும் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்திலிருந்து செல்களைப் பாதுகாக்க உதவுகின்றன. சில ஆய்வுகளில் தக்காளி மற்றும் லைகோபின் உட்கொள்ளுதல் சில வகை புற்றுநோய்களின் அபாயத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.</p><p><b>உடல் எடை கட்டுப்பாடு&nbsp;</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5861323-51d7-477f-8003-7dd1dc953cee/26-6aaffc5bae74c.webp' /><b></b></p><p>

தக்காளியில் கலோரிகள் குறைவாகவும் நீர்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், உடல் எடையை கட்டுப்படுத்த விரும்புபவர்கள் அதை சாலட் அல்லது உணவின் ஒரு பகுதியாக சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் தக்காளியை மட்டும் சாப்பிடுவதால் உடல் எடை குறையும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒட்டுமொத்த உணவுமுறை மற்றும் உடற்பயிற்சியும் இதில் முக்கியம்.</p><p><b>கண் ஆரோக்கியம்</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e965a3fd-6f2a-4800-a615-a8464999bc88/26-6aaffc5c625ef.webp' /></p><p></p><p><b></b></p><p>உதவும்

தக்காளியில் வைட்டமின் A-க்கு தேவையான கரோட்டினாய்டுகள் மற்றும் லூட்டின் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை கண்களின் இயல்பான ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும்.</p><p>மொத்தத்தில், தக்காளி ஒரு சத்தான காய்கறி.அதை தினசரி உணவில் அளவோடு சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமான உணவுமுறைக்கு நல்ல பங்களிப்பாக இருக்கும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T15:45:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் எதிர்ப்பை மீறி புலம்பெயர்ந்தோருக்கு புகலிடம்: குழந்தைளுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/protesters-marched-in-crowborough-for-asylum-camp-1789919083"></link>
            <id>https://news.lankasri.com/article/protesters-marched-in-crowborough-for-asylum-camp-1789919083</id>
            <summary type="text">Protesters marched in crowborough for asylum camp: பிரித்தானியாவில் முன்னாள் இராணுவத் தளம் புலம்பெயர்ந்தோருக்கான புகலிட முகமாக மாற்றப்பட்டதையடுத்து போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Protesters marched in crowborough for asylum camp: பிரித்தானியாவில் முன்னாள் இராணுவத் தளம் புலம்பெயர்ந்தோருக்கான புகலிட முகமாக மாற்றப்பட்டதையடுத்து போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர்.
</p><p>
பிரித்தானியாவில் மக்களின் எதிர்ப்பை மீறி, முன்னாள் இராணுவத் தளம் ஒன்று புலம்பெயர்ந்தோருக்கான முகாமாக மாற்றப்பட்டதால் போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர்.&nbsp;</p><h2>புலம்பெயர்ந்தோருக்கான புகலிட முகாம் </h2><p>

சசெக்ஸின் Crowborough-யில் முன்னாள் இராணுவத் தளம் ஒன்று, ஆண் புலம்பெயர்ந்தோருக்கான புகலிட முகாமாக மாற்றப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb20abd0-93a7-433e-a7a4-6c248a65e775/26-6ab00014c4066.webp' />&nbsp;</p><p></p><p>

ஆனால், அங்கு வசிப்பவர்களின் பாதுகாப்பு, வளங்களின் மீதான அழுத்தம் மற்றும் தளத்தின் அளவு ஆகியவற்றிற்கு எதிராக உள்ளூர் மக்களின் கடும் எதிர்ப்பு எழுந்தது.</p><p> 

அந்த எதிர்ப்பையும் மீறி புகலிட முகாம் செயல்படத் தொடங்கிய நிலையில், அதன் கொள்ளளவை 540 ஆக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2>ஆர்ப்பாட்டத்தில்&nbsp;ஆயிரக்கணக்கானோர் </h2><p> </p><p>

இதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் குடும்பங்கள் மற்றும் சிறு குழந்தைகள் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். </p><p>

'Crowborough வேண்டாம் என்கிறது' என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி மக்கள் திரண்டனர்.

இந்த பேரணி இராணுவத் தளத்தில் தொடங்கி நகர மையத்திற்குள் நகர்ந்தது.
</p><p>
 அதே சமயம், 'புலம்பெயர்ந்தோர் வரவேற்கப்படுகிறார்கள்', 'கருணையே எங்கள் பலம்' மற்றும் 'ஒன்றாக இணைந்தால் வலிமை' என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி எதிர் ஆர்ப்பாட்டக்காரர்களும் வந்திருந்தனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5738972c-62a8-497c-b6d2-96c350805f9d/26-6ab00015b024e.webp' /></p>]]></content>
            <updated>2026-09-20T15:44:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலி வடக்கு காணி விடுவிப்பு : தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கபட நாடகம் :பலாலி மக்கள் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/valikamam-north-land-release-issue-1789917700"></link>
            <id>https://ibctamil.com/article/valikamam-north-land-release-issue-1789917700</id>
            <summary type="text">மக்களின் காணி மக்களுக்கு என வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த அனுர
தலைமையிலான அரசாங்கம் இரண்டு வருடங்கள் கடந்தும் வலி வடக்கு காணிகளை
விடுவிக்காது கபட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்களின் காணி மக்களுக்கு என வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த அனுர
தலைமையிலான அரசாங்கம் இரண்டு வருடங்கள் கடந்தும் வலி வடக்கு காணிகளை
விடுவிக்காது கபட நாடகம் ஆடுவதாக பலாலி காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்து
கொண்ட மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.</p><p>

இன்று ஞாயிற்றுக்கிழமை பலாலி காணி விடுவிப்பு கோரி மக்கள் போராட்டம் 14வது வாரமாக
இடம்பெற்ற நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்
இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்தனர்.</p><h2>எமது வளமான காணிக்குள் விவசாயம் செய்யும் இராணுவம்</h2><p>&nbsp;போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில் யுத்தம் நிறைவடைந்து
17 வருடங்கள் கடக்கின்ற நிலையில் எமது நிலத்தை விட்டு சென்று 35 வருடங்கள்
கடக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d411db9e-9375-400d-a28d-235cbe77bfdf/26-6aaffeb18d839.webp' /></p><p>
</p><p>
இன்றும் நாம் அனாதைகளாக வாடகை வீட்டில் வாழ்ந்து வருகின்ற நிலையில் எங்களின்
வளமான காணிகளுக்குள் இராணுவம் விவசாயம் செய்து மேலதிக வருமானத்தை உழைத்து
வருகிறது.</p><h2>யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தெரிவித்த விடயம்</h2><p>
</p><p>
தற்போது நாட்டின் ஜனாதிபதியாக இருக்கின்ற அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதி
தேர்தலுக்காக யாழ்ப்பாணம் வந்த நிலையில் பாதுகாப்பு தரப்பிடமுள்ள மக்களின்
காணிகள் மக்களுக்கு வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கினார்.

கொடுத்த வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படாமல் இரண்டு வருடங்கள் கடந்து
விட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4da6bf0-d08a-4bf3-af83-6c5c6444dcdc/26-6aaffeb25d296.webp' /></p><p>
</p><p>
அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்த பிரதி பாதுகாப்பு அமைச்சர், வலி வடக்கில்
பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள மக்களின் காணிகளை பார்வையிட்ட பின்னர் மக்களின்
காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என ஊடகங்களுக்கு கூறியிருந்தார்.</p><h2>பிரதி பாதுகாப்பு அமைச்சரின் முரண்பாடான கருத்து</h2><p>
</p><p>
ஆனால் நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையில் இராணுவத்தேவைக்காக 1700 ஏக்கரும்
பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக 700 ஏக்கர் வேண்டும் என கூறுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/992efe7c-ceab-4bc7-a473-ceb0b2c286b3/26-6aaffeb32d329.webp' /></p><p>
</p><p>
யாழ்ப்பாணத்தில் ஒரு கருத்தையும் நாடாளுமன்றத்தில் ஒரு கருத்தையும் கூறும்
அனுரகுமார திசநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை பாதிக்கப்பட்ட மக்கள் எவ்வாறு
நம்புவது</p><h2>கொடுத்த வாக்குறுதி உதாசீனம்&nbsp;</h2><p>

கடந்த ஜனாதிபதி தேர்தலில் அனுர தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்கு தமிழ்
மக்கள் கணிசமான பங்களிப்பை வழங்கிய நிலையில் அவர் கொடுத்த வாக்குறுதிகளை
உதாசீனம் செய்துவருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97e45021-667e-4a52-adf2-e93a8a7f10af/26-6aaffeb402b02.webp' /></p><p>

கடந்த கால அரசாங்கங்களை விட தற்போதைய அனுர தலைமையிலான அரசாங்கம் மிகக் குறைவான
காணிகளை விடுவித்துள்ள நிலையில் வழங்கிய வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற
வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T15:44:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதவி என்பது கதிரையில் இருப்பதற்காகக் கிடைப்பதல்ல.. வடக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/northern-province-governor-s-insistence-1789918386"></link>
            <id>https://tamilwin.com/article/northern-province-governor-s-insistence-1789918386</id>
            <summary type="text">பதவி என்பது கதிரையில் இருப்பதற்காகக் கிடைப்பதல்ல, அது மக்களுக்கு உதவி
செய்வதற்காகவே வழங்கப்படுகின்றது. பதவியில் இருப்பவர்கள் நூறு வீதம்
நேர்மையுடன்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதவி என்பது கதிரையில் இருப்பதற்காகக் கிடைப்பதல்ல, அது மக்களுக்கு உதவி
செய்வதற்காகவே வழங்கப்படுகின்றது. பதவியில் இருப்பவர்கள் நூறு வீதம்
நேர்மையுடன், எந்தவித பாகுபாடும் இன்றி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் 
என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார். </p><p>

2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய மற்றும் வலய
மட்டங்களில் முதலிடம் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று(20.09.2026) 
யாழ்ப்பாணம் செம்மணி வீதியிலுள்ள தொண்டைமானாறு தேசிய
வெளிக்கள நிலையத்தில், அதன் தலைவர் பேராசிரியர் கலாநிதி சிவசாந்தினி குகநாதன்
தலைமையில் இடம்பெற்றுள்ளது.</p><p>

இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2> 

வெறும் படிப்பு மட்டுமே போதாது..</h2><p>
பதவியில் இருப்பது தனக்கான அதிகாரத்தை
வெளிப்படுத்துவதற்காக அல்ல எனக் குறிப்பிட்டதுடன், பதவியில் இருக்கும்போது
கர்வம் கொள்ளக்கூடாது, அந்தப் பதவியைப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு எவ்வாறு
உதவ முடியும் என்பதையே சிந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
</p><p>
தமது தந்தையார் தம்மை வளர்க்கும்போது திருக்குறள் கருத்துகளை எடுத்துக்கூறி
வளர்த்ததாகவும், எதிரியாக இருந்தாலும் ஒருவர் உதவி நாடி வந்தால் அவரை மதித்து
உதவ வேண்டும் என்ற பண்பை அதன்மூலம் கற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66da2114-dda2-4c11-a6e3-f410f8b7daeb/26-6aaffd1a718d1.webp' /></p><p>

மாணவர்கள் புத்தகப் படிப்பில் மாத்திரம் தங்களை மட்டுப்படுத்திக்கொள்ளக்
கூடாது என்று குறிப்பிட்ட ஆளுநர், கல்வியால் மட்டும் உயர்ந்து பதவியைப்
பெற்றுக்கொள்வது போதாது, ஏனையோருக்கு உதவும் மனப்பான்மை, இரக்கம் மற்றும்
சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும்
தெரிவித்தார்.
</p><p>
தனது அருகில் ஒருவர் விழுந்து கிடந்தாலும் அவரைக் கைகொடுத்து தூக்கிவிட
வேண்டும் என்ற எண்ணம் உருவாகாத வகையில் கல்வி அமைந்துவிடக்கூடாது என்று
குறிப்பிட்ட அவர், எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி மற்றவர்களுக்கு உதவ முன்வர
வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0872a38a-24b7-441c-bcce-26f850d5711c/26-6aaffd1b5c17b.webp' /></p><p> 

அவ்வாறு உதவும் மனப்பான்மையுடன்
வாழ்ந்தால், தேவையான நேரத்தில் உதவுவதற்கு பல கரங்கள் தம்மைச் சுற்றி
இருக்கும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.
</p><p>
இணைப்பாடவிதானச் செயற்பாடுகளின் முக்கியத்துவத்தையும் ஆளுநர் வலியுறுத்தினார்.
இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் ஈடுபடாமல் கல்வியில் மாத்திரம் முன்னேறுவதால்
முழுமையான ஆளுமையை உருவாக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர், விளையாட்டு, கலை
உள்ளிட்ட இத்தகைய செயற்பாடுகளே மாணவர்களை ஆளுமையுள்ளவர்களாகவும் சிறந்த
தலைமைத்துவப் பண்புடையவர்களாகவும் வளர்க்கின்றன என்றும் தெரிவித்தார்.
</p><h2>
இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் ஆர்வம்</h2><p>
இணைப்பாடவிதானச் செயற்பாடுகளுக்கு மாணவர்கள் ஈடுபடுவதில் பெற்றோர்களே சில
சந்தர்ப்பங்களில் தடையாக இருப்பதாக முன்னர் உரையாற்றிய முன்னாள் வலயக் கல்விப்
பணிப்பாளர் தெய்வேந்திரராஜா குறிப்பிட்ட விடயத்தையும் ஆளுநர்
சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d89a09d8-304a-4bbf-819b-bd458ca6818a/26-6aaffd1c342a4.webp' /></p><p>

தாம் கல்வி கற்ற காலத்தில் ஆசிரியர் ஒருவர் தண்டித்தால், அதற்கான காரணத்தை
அறிந்துகொண்டு வீட்டிலும் ஒழுக்கப்படுத்தும் நிலை இருந்ததாகக் குறிப்பிட்ட
அவர், இன்று நிலைமை மாறியுள்ளது என்றும் தெரிவித்தார். </p><p>ஆசிரியர் ஒருவர்
மாணவரைத் தண்டிப்பது தனிப்பட்ட பழிவாங்கலுக்காகவோ வன்மத்துக்காகவோ அல்ல, அந்த
மாணவரை ஒழுக்கமுள்ள நல்ல பிள்ளையாக வளர்த்தெடுப்பதற்காகவே என்றும் ஆளுநர்
குறிப்பிட்டார்.</p><p>

மேலும், தொண்டைமானாறு தேசிய வெளிக்கள நிலையத்தை ஏனைய மாகாணங்களைச்
சேர்ந்தவர்கள் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தி வரும் நிலையில், வடக்கு மாகாணத்தைச்
சேர்ந்த பாடசாலைகளும் மாணவர்களும் அதனைப் பயன்படுத்தும் அளவு குறைவாக
இருக்கின்றது என்றும், இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும் என்றும் ஆளுநர்
தெரிவித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f482378-3c66-4be1-839b-68d310a6f3d3/26-6aaffd1d104db.webp' />&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T15:34:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 மணி நேரத்தில் 2 ஏவுகணைகளை சோதனை செய்த வட கொரியா - உலக நாடுகள் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/north-korea-fires-two-missiles-in-3-hours-1789909593"></link>
            <id>https://news.lankasri.com/article/north-korea-fires-two-missiles-in-3-hours-1789909593</id>
            <summary type="text">North Korea fires two missiles in 3 hours: 3 மணி நேரத்தில் 2 ஏவுகணைகளை வட கொரியா சோதனை செய்துள்ளது.  

பாலிஸ்டிக் ஏவுகணைக சோதனைவட கொரியா கிழக்கு கடற...</summary>
            <content type="html"><![CDATA[<p>North Korea fires two missiles in 3 hours: 3 மணி நேரத்தில் 2 ஏவுகணைகளை வட கொரியா சோதனை செய்துள்ளது. </p><h2> 

பாலிஸ்டிக் ஏவுகணைக சோதனை</h2><p>வட கொரியா கிழக்கு கடற்கரையிலிருந்து மூன்று மணி நேர இடைவெளியில் இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது.</p><p> இது கடந்த வாரம் நடந்த சோதனைகளுக்குப் பிறகு மீண்டும் நிகழ்ந்ததால், உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c51480eb-8287-4bb4-8f1e-f77a6360190f/26-6aafda5b478eb.webp' /></p><p>
</p><h2>
3 மணி நேரத்தில் 2 ஏவுகணைகள்</h2><p>முதல் ஏவுகணை வோன்சான் (Wonsan) பகுதியில் இருந்து மதியம் 3 மணிக்கு ஏவப்பட்டது. இது சுமார் 450 கிமீ தூரம் பறந்ததாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. இரண்டாவது ஏவுகணை மாலை 5.50 மணிக்கு அதே பகுதியில் இருந்து ஏவப்பட்டு 600 கிமீ தூரம் பறந்ததாகவும் கூறப்படுகிறது.
</p><p>
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம், இந்த ஏவுகணைகள் பாலிஸ்டிக் வகையைச் சேர்ந்தவை என்றும், அவை ஜப்பானின் Exclusive Economic Zone-க்கு வெளியே விழுந்ததாகவும் தெரிவித்துள்ளது.
</p><p></p><p>தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில், இந்த சோதனைகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை நேரடியாக மீறுகின்றன என்று கண்டனம் தெரிவித்துள்ளது. ஜப்பானும் பீஜிங்கில் உள்ள தூதரக வழியாக அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
</p><p>
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கோயிசுமி, “வட கொரியாவின் இந்த நடவடிக்கைகள் ஜப்பான், பிராந்தியம் மற்றும் உலக அமைதிக்கு நேரடி அச்சுறுத்தல்” என்று தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>இதற்கிடையில், வட கொரியா தனது அணு திட்டத்திற்கு எதிராக ஐ.நா. அணு கண்காணிப்பு அமைப்பு எடுத்த தீர்மானத்தை நிராகரித்துள்ளது. </p><p>மேலும், அமெரிக்கா தலைமையிலான கடற்படை பயிற்சிகள் தான் தீவிர நிலையை உருவாக்குகின்றன என்று கிம் யோ ஜோங் (Kim Yo Jong) குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>

இந்த சோதனைகள், கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன. உலக நாடுகள், வட கொரியா உடனடியாக ஏவுகணை சோதனைகளை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T15:31:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா மாவட்டத்தின் பிரதான வீதிகளில் மண்சரிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/landslides-on-main-roads-in-nuwara-eliya-1789917244"></link>
            <id>https://tamilwin.com/article/landslides-on-main-roads-in-nuwara-eliya-1789917244</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து பல பிரதான
வீதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதனால் பொது போக்குவரத்துக்கு பாதிப்பு
ஏற்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து பல பிரதான
வீதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதனால் பொது போக்குவரத்துக்கு பாதிப்பு
ஏற்பட்டுள்ளது.</p><p>இன்று(20.9.2026) மதியம் பெய்து வரும் கனமழையால் ஹட்டன் மஸ்கெலியா பிரதான சாலையில் வணராஜா
கெந்தகொல்லை கிறிஸ்தவ தேவாலயம் பகுதியில் பாரிய மண் சரிவு காரணமாகப்
போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
</p><p>ஹட்டன் - பொகவந்தலாவை, ஹட்டன் - சாமிமலை, ஹட்டன் - மஸ்கெலியா, ஹட்டன் -
நோர்வூட் பகுதிகளுக்குச் செல்லும் பிரதான சாலையில் போக்குவரத்து தடை ஏற்பட்டு
உள்ளது.</p><h2>மண்சரிவு&nbsp;</h2><p>
</p><p>
இதனை தொடர்ந்து வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து
வீதியில் கொட்டி கிடந்த மண்ணை அகற்றியதனை தொடர்ந்து போக்குவரத்து வழமைக்கு
திரும்பியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dee1a012-e8b2-425c-aee7-ecd8bb220136/26-6aaffb1fd8c88.webp' /></p><p>
</p><p>இதேவேளை கினிகத்தேனை மினுவன் தெனிய பிரதான வீதியில் மண்சரிவு ஏற்பட்டதனால்
பொது போக்குவரத்து சில மணித்தியாலங்கள் முற்றாக தடைப்பட்டது.</p><p>
வீதியில் சரிந்த மண்ணை அகற்றியதனை தொடர்ந்து குறித்த வீதியில் ஒரு வழி
போக்குவரத்து இடம்பெற்று வருகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T15:26:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா முழுவதும் பறந்த தானியங்கி விமானம் - வரலாற்று சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/autonomous-plane-flies-across-america-1789917950"></link>
            <id>https://news.lankasri.com/article/autonomous-plane-flies-across-america-1789917950</id>
            <summary type="text">Autonomous plane flies across America: அமெரிக்காவில் முதல் முறையாக தானியங்கி (Autonomous) விமானம் மனித பைலட் இல்லாமல், நாடு முழுவதும் பறந்துள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>Autonomous plane flies across America: அமெரிக்காவில் முதல் முறையாக தானியங்கி (Autonomous) விமானம் மனித பைலட் இல்லாமல், நாடு முழுவதும் பறந்துள்ளது.</p><p>

Joby Aviation நிறுவனம் உருவாக்கிய Cessna Caravan விமானம், 3,199 மைல்கள் தூரம் பறந்து இந்த வரலாற்று சாதனையை படைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b19c66c-d485-4b3f-8ad7-7fec77873ac6/26-6aaffafff2ef2.webp' /></p><p>இந்த விமானம் செப்டம்பர் 7 அன்று காலிஃபோர்னியாவின் Concord நகரில் இருந்து புறப்பட்டு, பல்வேறு இடங்களில் இடைநிறுத்தங்களுடன் பயணம் செய்தது. </p><p>புறப்படும் தருணம் முதல் தரையிறங்கும் வரை, முழுமையாக கணினி கட்டுப்பாட்டில் இயங்கியது.

விமானம் Phoenix Deer Valley போன்ற மிகப் பிஸியான விமான நிலையங்களில் பாதுகாப்பாக செயல்பட்டதோடு, புயல், இடியுடன் கூடிய மழை போன்ற கடுமையான வானிலை சவால்களையும் தானாக சமாளித்தது.</p><p></p><p>Joby Aviation நிறுவனர் JoeBen Bevirt, “இந்த பயணம் விமானத் துறையின் புதிய யுகத்தை காட்டுகிறது. தானியங்கி விமானங்கள், தொலைதூர பகுதிகளை இணைக்க, அவசர உதவிகளை வழங்க, பேரழிவுகளுக்கு விரைவாக பதிலளிக்க, இராணுவ நடவடிக்கைகளில் பைலட்டுகளை ஆபத்திலிருந்து காப்பாற்ற உதவும்” எனக் கூறினார்.</p><p>

இந்த விமானம் டெக்சாஸ் Fort Worth Alliance Airport மற்றும் South Carolina Shaw Air Force Base ஆகிய இடங்களில் தரையிறங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65b65015-039a-405a-bea4-7d929cde9891/26-6aaffb00bfe08.webp' /></p><p> </p><h2>ரைட் சகோதரர்களுக்கு அஞ்சலி</h2><p>செப்டம்பர் 14 அன்று, North Carolina Kitty Hawk பகுதியில் உள்ள Wright Brothers National Memorial மேல் பறந்து, 1903-ல் முதல் முறையாக விமானத்தில் பிறந்ததற்கு Wilbur மற்றும் Orville Wright சகோதரர்களுக்கு அஞ்சலி செலுத்தியது.
</p><p>
இப்போது, இந்த தானியங்கி விமானம் மீண்டும் California நோக்கி திரும்பும் பயணத்தைத் தொடங்கியுள்ளது.</p><p> இதில் Washington D.C., Kentucky, Kansas, Oklahoma, Utah, Oregon போன்ற இடங்களில் இடைநிறுத்தங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.</p><p>

இந்த சாதனை, விமானத் துறையில் தானியங்கி தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை வெளிப்படுத்தும் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T15:22:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப்பிற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பிரான்ஸ் தீவில் மேக்ரோன் - கார்னி சந்திப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/macron-and-carney-meet-on-a-french-trump-1789915293"></link>
            <id>https://tamilwin.com/article/macron-and-carney-meet-on-a-french-trump-1789915293</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு மறைமுகப் பதிலடி கொடுக்கும்
வகையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் மற்றும் கனடிய பிரதமர்
மார்க் கார...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு மறைமுகப் பதிலடி கொடுக்கும்
வகையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் மற்றும் கனடிய பிரதமர்
மார்க் கார்னி ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.</p><p>குறித்த கலந்துரையாடலானது பிரான்சின் கட்டுப்பாட்டிலுள்ள செயிண்ட் பியர் மற்றும்
மிக்வலோன் தீவில் நடைபெறவுள்ளது.</p><p>

அட்லாண்டிக் கடற்பகுதியில் கனடா எல்லைக்கு அருகில் அமைந்துள்ள குறித்த
தீவானது, வட அமெரிக்காவில் பிரான்சின் இறையாண்மைக்கு உட்பட்ட ஒரேயொரு
பகுதியாகும்.</p><h2>அமெரிக்க ஐக்கிய நாடுகள்</h2><p>

அண்மையில் ஜனாதிபதி ட்ரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், கனடா,
கிரீன்லாந்து மற்றும் பிரான்ஸ் தீவுகள் உட்பட வட அமெரிக்கக் கண்டத்தின் பல
பகுதிகளை அமெரிக்கக் கொடியால் மூடி, 'அமெரிக்க ஐக்கிய நாடுகள்' எனச்
சித்தரிக்கும் புகைப்படமொன்றைப் பகிர்ந்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf3cc91b-9486-4bdd-b8ef-3274387b9d11/26-6aaff2be3fb04.webp' /></p><p>
</p><p>
இதற்கு பிரான்ஸ் தரப்பில் நேரடியாக எந்தவொரு எதிர்ப்பும் தெரிவிக்கப்படாத
நிலையில், தற்போது ஜனாதிபதி மேக்ரோன் அத்தீவுக்கு விஜயம் மேற்கொள்வதுடன்,
அங்கு கனடிய பிரதமரையும் சந்திக்கவுள்ளமை இராஜதந்திர ரீதியில் முக்கியத்துவம்
வாய்ந்த நகர்வாகப் பார்க்கப்படுகின்றது.</p><h2>எரிசக்தி நெருக்கடி&nbsp;</h2><p>
</p><p>
2014ஆம் ஆண்டிற்குப் பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் அத்தீவிற்கு விஜயம்
செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில்
பங்கேற்பதற்காகச் செல்லும் வழியிலேயே பிரான்ஸ் ஜனாதிபதி இவ்விஜயத்தை
மேற்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f634af82-c0b1-4c8b-87f7-a5a1b9b1c4b2/26-6aaff2bee75d0.webp' /></p><p>
</p><p>
இச்சந்திப்பின் போது இரு தலைவர்களும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும்
கனடா - ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான நெருங்கிய பொருளாதார உறவுகள்
குறித்தும் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T15:00:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவறி வீழ்ந்தவர் உயிரிழந்தார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/flood-person-who-fell-accidentally-lost-their-life-1789909648"></link>
            <id>https://jvpnews.com/article/flood-person-who-fell-accidentally-lost-their-life-1789909648</id>
            <summary type="text">அவிசாவளை - புலத்கோஹுபிட்டிய வீதியின் பொல்கட்டுவங்குவ பகுதிக்கு அருகில் பாயும் ரிட்டிகஹ ஓயாவில் தவறி வீழ்ந்த ஒருவர் உயிரிழந்தார்.&amp;nbsp;இன்று (20) காலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவிசாவளை - புலத்கோஹுபிட்டிய வீதியின் பொல்கட்டுவங்குவ பகுதிக்கு அருகில் பாயும் ரிட்டிகஹ ஓயாவில் தவறி வீழ்ந்த ஒருவர் உயிரிழந்தார்.&nbsp;</p><p>இன்று (20) காலை பெய்த பலத்த மழை காரணமாக ரிட்டிகஹ ஓயாவின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்த நிலையில், இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p>பிரதேச மக்களும், ருவன்வெல்ல பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, அவர் விழுந்த இடத்திற்குச் சற்றுக் கீழேயுள்ள நீர்நிலையொன்றிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இவ்வாறு தவறி வீழ்ந்து உயிரிழந்தவர் அம்பாகல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>சம்பவம் தொடர்பில் ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், பிரேதப் பரிசோதனை கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-20T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை அனிகா சுரேந்திரனின் அவுட்டிங் கிளிக்ஸ்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/anikha-surendran-rencent-australia-trip-photos-1789906892"></link>
            <id>https://viduppu.com/article/anikha-surendran-rencent-australia-trip-photos-1789906892</id>
            <summary type="text">மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன்.

என்னை எறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b63aed83-94cf-4f62-a6b5-d533d61550c6/26-6aafcfd4da0d2.webp' /></p><p>
என்னை எறிந்தால், விஸ்வாசம் படங்களில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா, தெலுங்கில் தி கோஸ்ட் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.


அதன்பின் புட்ட மொம்மா, ஓ மை டார்லிங், PT சார், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இந்ரா போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
</p><p>
14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்ற நடிகை அனிகா, வெளிநாட்டுக்கு அவுட்டிங் சென்று எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-20T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனின் விடுதலைக்காக திருகோணமலையிலும் ஒன்றிணைந்த இளைஞர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/youth-in-trinco-also-unite-for-anojan-s-release-1789914761"></link>
            <id>https://ibctamil.com/article/youth-in-trinco-also-unite-for-anojan-s-release-1789914761</id>
            <summary type="text">சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுதலை
செய்யக் கோரி திருகோணமலை மாவட்ட இளைஞர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி இன்று (20)
திருகோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுதலை
செய்யக் கோரி திருகோணமலை மாவட்ட இளைஞர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி இன்று (20)
திருகோணமலை கடற்கரை பகுதியில் உள்ள காந்தி உருவச்சிலைக்கு பின்னால் இளைஞர்கள்
கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>திருகோணமலையில் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு நிகழ்வில் இளைஞர்கள்
மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறும் இரு நிமிட மௌன அஞ்சலியுடன் சிவராசா அனோஜனுக்கு
மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்கி, அவரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை
எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.</p><h2>ராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தை</h2><p>
</p><p>
இலங்கை அரசாங்கம் குறித்த விடயத்தில் தலையிட்டு, சவுதி அரேபிய அரசாங்கத்துடன்
உரிய ராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து சிவராசா அனோஜனின்
உயிரைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள்
வலியுறுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd97ffb1-cbc9-4a76-b251-bea34d5755c6/26-6aaff117941a6.webp' /></p><p>
</p><p>
இந்த கவனயீர்ப்பில் சிவராசா அனோஜனின் குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவிக்கும்
வகையிலும், அவரின் விடுதலைக்காக பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும்
இளைஞர்கள் பங்கேற்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T14:45:16+00:00</updated>
        </entry>
    </feed>
