<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-05T15:34:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் சூர்யாவை விட 3 மடங்கு அதிகம் சம்பாதித்தேன்- நடிகை ஜோதிகா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/i-earned-3-times-more-than-suriya-actress-jyothika-1785934989"></link>
            <id>https://manithan.com/article/i-earned-3-times-more-than-suriya-actress-jyothika-1785934989</id>
            <summary type="text">தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான சூர்யா - ஜோதிகா, திருமணத்திற்குப் பிறகும் சினிமாவில் வெற்றிகரமாக பயணித்து வருகின்றனர். 

ஒருவரின் வளர்ச்சிக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான சூர்யா - ஜோதிகா, திருமணத்திற்குப் பிறகும் சினிமாவில் வெற்றிகரமாக பயணித்து வருகின்றனர். </p><p>

ஒருவரின் வளர்ச்சிக்கு மற்றொருவர் உறுதுணையாக இருப்பதை பலமுறை வெளிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
2003ஆம் ஆண்டு வெளியான காக்க காக்க படத்தின் போது, ஜோதிகா முன்னணி நடிகையாக இருந்தார்.</p><p> 

அப்போது சூர்யாவை அந்தப் படத்தில் நடிக்க பரிந்துரைத்தது ஜோதிகாதான் என அவர் முன்பே தெரிவித்திருந்தார்.</p><p> </p><p>

</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/894f91ef-698c-4dee-bfa3-82dd18795f8a/26-6a73348f680cb.webp' /></p><p>இந்நிலையில், சூர்யா - ஜோதிகா அண்மையில் ஆங்கில யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p><p> 

அதில் "என் சினிமா வாழ்க்கையின் தொடக்கத்தில் சூர்யாவை விட நான் மூன்று மடங்கு அதிக சம்பளம் வாங்கினேன். தற்போது நான் அவரைவிட சுமார் 30 மடங்கு குறைவாக சம்பளம் வாங்குகிறேன்" என்று ஜோதிகா நகைச்சுவையாக கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f07aaa2c-7c25-4a5d-84b0-9d78fea425bc/26-6a73576fdc90b.webp' /><br></p><p> </p><p>

மேலும், "சூர்யா ஒரு நல்ல மனிதர், நல்ல கணவர். வீட்டில் எப்போதும் சமத்துவத்தையே கடைப்பிடிப்பார். நான் சமையல் செய்தால் அவரும் வந்து உதவுவார், குழந்தைகளை வளர்ப்பது முதல் விடுமுறைக்குச் செல்வது வரை எல்லா முடிவுகளையும் இருவரும் சேர்ந்து எடுப்போம். ஒருவரின் வளர்ச்சியை மற்றொருவர் மனதார மகிழ்ச்சியுடன் பார்க்கிறோம்" என்று ஜோதிகா பகிர்ந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2224243-a61f-481e-9a4f-8651b2d50682/26-6a735770bcc7c.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-05T15:32:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் மல்மூரில் இடம்பெற்ற வீதி விபத்து: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/motorcyclist-dead-following-collision-in-mulmur-1785937545"></link>
            <id>https://canadamirror.com/article/motorcyclist-dead-following-collision-in-mulmur-1785937545</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள மல்மூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள மல்மூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>
ஹைவே 89 மற்றும் 3ஆவது வீதி சந்திப்பில் இரு வாகனங்கள் மோதிக்கொண்டதாகப் பிற்பகல் 2:30 மணியளவில் அவசர உதவிப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. </p><p>
குறித்த சந்திப்பில் மோட்டார் சைக்கிள் ஒன்று பயணிகள் காரொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/618588ac-fa12-4f6b-8f40-4f9ad1ac6631/26-6a733e8af09fd.webp' /></p><p> 
வெலிங்டன் நோர்த் பகுதியைச் சேர்ந்த 63 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். </p><p>
காரில் பயணித்த ஓட்டுநரும் பயணியும் லேசான காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.</p><p>
தற்போது வரை விபத்துக்கான காரணம் குறித்தோ அல்லது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்தோ பொலிஸார் எந்தத் தகவலும் வெளியிடவில்லை. </p><p>சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T15:27:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026-27 தமிழ்நாடு பட்ஜெட்.., மாணவர்களுக்காக வெளியான முக்கிய அறிவிப்புகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/tamil-nadu-budget-2026-for-education-departments-1785926412"></link>
            <id>https://manithan.com/article/tamil-nadu-budget-2026-for-education-departments-1785926412</id>
            <summary type="text">2026-27ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

59 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026-27ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
</p><p>
59 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக, அதிமுக அல்லாத கட்சியாக தவெக அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.
</p><p>
இந்த பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,527 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறைக்கு ரூ.8,393 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. </p><p>

மேலும், மாணவர்கள் மற்றும் கல்வித்துறைக்கான பல முக்கிய அறிவிப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/6dIwL7m8fsw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">மாணவர்களுக்கான அறிவிப்புகள்</span><br></p><p>சூப்பர் க்ளீன் - சூப்பர் கேம்பஸ் திட்டம் 10,000 பள்ளிகளில் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.139 கோடி ஒதுக்கீடு.
</p><p>
3,734 அரசு பள்ளிகள் ரூ.2,132 கோடியில் நவீனப்படுத்தப்படும்.</p><p>

காமராஜர் பெயரில் நவீன உண்டு, உறைவிட வசதியுடன் சிறப்பு பள்ளிகள் தொடங்கப்படும்.
</p><p>
9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சீருடை, புத்தகங்கள் வழங்க ரூ.122 கோடி ஒதுக்கீடு.
</p><p>
5 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் சைக்கிள் வழங்க ரூ.277 கோடி ஒதுக்கீடு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14579f91-ed8d-43b7-bdbd-43c739487225/26-6a73133f1eb9c.webp' />&nbsp;&nbsp;<br></p><p>கல்லூரி மாணவர்களுக்கான வெற்றி மடிக்கணினி திட்டத்திற்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு.</p><p>

மாணவர் விடுதி வசதிகளை மேம்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு.
</p><p>
காமராசர் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.இதற்காக ரூ.710 கோடி ஒதுக்கீடு.</p><p>

2031க்குள் 5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) திறன் பயிற்சி வழங்கப்படும்.
</p><p>
அரசு நூலகங்கள் டிஜிட்டல் நூலகங்களாக மாற்ற ரூ.10 கோடி ஒதுக்கீடு.
</p><p>
SSC, RRB, IBPS போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையங்கள் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மையங்களிலும் அமைக்கப்படும். இதற்காக ரூ.3.38 கோடி ஒதுக்கீடு.
</p><p>
10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு.
</p><p>
5 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் ரூ.90 கோடியில் தொடங்கப்படும்.
</p><p>
பள்ளிப் பாடத்திட்டம் மறுசீரமைப்பு பணிகளுக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/AEQtNahUvog" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-05T15:27:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த இலக்கு மைத்திரி! அரசாங்கத்தை உசுப்பேற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/maithri-gets-caught-in-easter-attack-case-1785907068"></link>
            <id>https://tamilwin.com/article/maithri-gets-caught-in-easter-attack-case-1785907068</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் அரங்கேறியபோது, பாதுகாப்பு அமைச்சராகவும், முப்படைகளுக்கு பொறுப்பானவராகவும் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் அரங்கேறியபோது, பாதுகாப்பு அமைச்சராகவும், முப்படைகளுக்கு பொறுப்பானவராகவும் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருந்த நிலையில், தாக்குதல் தொடர்பான பொறுப்புக்களில் இருந்து அவர் எப்படி விலக முடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p><p> 

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தைத் தடுக்கத் தவறியதாகத் தெரிவித்துள் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.</p><h2>வழக்குத் தொடர பரிந்துரை</h2><p>2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட விஜித மலல்கொட அறிக்கைக்கு அமைவாகவே இவர்கள் இருவருக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

எனினும், அந்த அறிக்கையில் 14 பேருக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது. </p><p>

மேலும், 2019ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்று, 2022இல் நிறைவடைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd226b0d-82ef-44a8-bdb1-9ccb1e69b84b/26-6a72db6349d17.webp' /></p><p> </p><p> அந்த வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரச புலனாய்வு பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன, பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் பிரதிவாதிகளாக இருந்தனர். </p><p>

இந்த வழக்குத் தொடர்பான விசாரணைகள் முடிவுற்றப் போது, பூஜித் மற்றும் மைத்திரி ஆகிய இருவருக்கு நட்டஈடு செலுத்துமாறு தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. </p><p>

ஆனால் அப்போது உயர்நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களில் இருவரான மைத்திரிபால சிறிசேன மற்றும் நிலந்த ஜயவர்தன ஆகியோரை சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மூவரடங்கிய மேல்நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கில் இணைக்கவில்லை.</p><p> 

இதன்படி சட்டமா அதிபர் திணைக்களம் வேண்டுமென்றே தனது கடமையை மீறியுள்ளது. தண்டனை வழங்கப்பட வேண்டிய இருவரை சட்டமா அதிபர் திணைக்களம் விடுவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/010a33fa-478c-4295-9cfa-57f818b09e22/26-6a72db64037a2.webp' /></p><p> </p><p>அவ்வாறு எப்படி நடக்க முடியும்.

ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் நிலந்த ஜயவர்தன மற்றும் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக வழக்கு தொடுக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. </p><p>

தாக்குதல் சம்பவம் நடக்கும் போது பாதுகாப்பு அமைச்சு, முப்படைகளும் மைத்திரிபால சிறிசேனவிடமே இருந்தது. அவர் எப்படி பொறுப்பில் இருந்து விலக முடியும். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க வேண்டும்.</p><p> அந்த விசாரணைகள் நடக்கும் போதே 2022இல் தொடரப்பட்ட வழக்கில் இவர்கள் இருவரும் எப்படி விடுவிக்கப்பட்டனர். சட்டமா அதிபர் திணைக்களம் தெளிவாக தனது கடமைகளை மீறியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T15:25:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆகஸ்ட் மாத ராசிபலன்.., 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/august-month-rasi-palan-in-tamil-1785929905"></link>
            <id>https://manithan.com/article/august-month-rasi-palan-in-tamil-1785929905</id>
            <summary type="text">டாரட் என்பது எதிர்காலத்தைக் கணிக்கவும், மனதிற்கு வழிகாட்டவும் பயன்படுத்தப்படும் 78 சிறப்பு அட்டைகள் அடங்கிய தொகுப்பாகும். 

இதில் உள்ள குறியீடுகள் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>டாரட் என்பது எதிர்காலத்தைக் கணிக்கவும், மனதிற்கு வழிகாட்டவும் பயன்படுத்தப்படும் 78 சிறப்பு அட்டைகள் அடங்கிய தொகுப்பாகும்.</p><p> 

இதில் உள்ள குறியீடுகள் மற்றும் படங்களின் மூலம் ஒருவரின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றி விளக்கப்படுகிறது.</p><p>

பாரம்பரிய ஜோதிடம் போல இது கிரக நிலைகளை அடிப்படையாகக் கொண்டது அல்ல, இது உள்ளுணர்வு மற்றும் குறியீட்டு விளக்கங்களை நம்பியுள்ளது.
</p><p>
இது மேஜர் அர்கானா (22 அட்டைகள்) மற்றும் மைனர் அர்கானா (56 அட்டைகள்) என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp; மேஜர் அர்கானா அட்டைகள் வாழ்க்கையின் முக்கிய மாற்றங்கள் மற்றும் ஆன்மீக பாடங்களைக் குறிக்கும் என்று சொல்லப்படுகிறது.</p><p>

மைனர் அர்கானா அட்டைகள் அன்றாட நிகழ்வுகள் மற்றும் சூழ்நிலைகளைக் குறிக்கும் என்று சொல்லப்படுகிறது.
</p><p>
அந்தவகையில், ஆகஸ்ட் மாதம் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என்று டாரட் வாசிப்பாளர் சாரா இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/H9RuW6V1kuA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-05T15:25:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் சிக்கி வங்கி முகாமையாளர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bank-manager-dies-accident-1785942314"></link>
            <id>https://ibctamil.com/article/bank-manager-dies-accident-1785942314</id>
            <summary type="text">அனுராதபுரம் - பாதெனிய ஏ-28 பிரதான சாலையில் உள்ள ஆலங்குளம் பகுதியில் இன்று(05) காலை ஒரு மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதிக்கொண்டதில் ஏற்பட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் - பாதெனிய ஏ-28 பிரதான சாலையில் உள்ள ஆலங்குளம் பகுதியில் இன்று(05) காலை ஒரு மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதிக்கொண்டதில் ஏற்பட்ட கோரமான விபத்தில், எப்பாவளாவில் உள்ள ஒரு அரச வங்கியின் முகாமையாளர் உயிரிழந்தார்.
</p><p>
உயிரிழந்தவர், 43 வயதான திருமணமாகாத ரோகன் ஜயந்த பண்டார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><h2>அரச வங்கியில்&nbsp;முகாமையாளர்&nbsp;</h2><p>அவர் உயிரிழந்த நேரத்தில் எப்பாவளவில் உள்ள ஒரு அரச வங்கியில் முகாமையாளராகப் பணியாற்றி வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5aefdd0e-e50a-4ebc-8de6-c91e63cec85c/26-6a7355ad1550b.webp' /></p><p>
</p><p>
உயிரிழந்தவர், அனுராதபுரத்திலிருந்து எப்பாவளவை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ​​காலை சுமார் 7.10 மணியளவில், ஏ-28 சாலையில் இரு கம்பங்களுக்கு இடையே 79-80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆலங்குளம் பகுதியில், அலியாகலாவிலிருந்து அனுராதபுரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T15:24:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆன்லைன் மூலம் டாஸ்மாக்கில் மது முன்பதிவு - அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/anbumani-ramadoss-oppose-online-booking-in-tasmac-1785942697"></link>
            <id>https://ibctamilnadu.com/article/anbumani-ramadoss-oppose-online-booking-in-tasmac-1785942697</id>
            <summary type="text">ஆன்லைன் மூலம் டாஸ்மாக்கில் மது வாங்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

ஆன்லைன் மூலம் டாஸ்மாக்கில் மது...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆன்லைன் மூலம் டாஸ்மாக்கில் மது வாங்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். </p><h3>

ஆன்லைன் மூலம் டாஸ்மாக்கில் மது முன்பதிவு</h3><p> 

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்க நீண்ட நேரம் வரிசையில் நிற்பதைத் தவிர்க்கும் வகையில், வீட்டிலிருந்தபடியே மதுபானங்களை முன்பதிவு செய்து கடைகளில் நேரில் பெற்றுக்கொள்ள புதிய இணையதள சேவையை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/806c0b8d-3659-4827-b510-bf5005aacfc4/26-6a7352aa65d48.webp' /></p><p>
இந்த இணையத்தளத்தில், அருகே எந்த இடத்தில் டாஸ்மாக் கடை உள்ளது, மற்றும் தமிழ்நாட்டில் உள்ள 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் தற்போது எந்தெந்த மதுபான பிராண்டுகளின் இருப்பு உள்ளது என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ள முடியும்.</p><p> 

இந்த இணையதளத்தில் நுழைந்ததும் வயது கேட்கப்படும். 21 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கே மதுபானங்கள் விற்கப்படும்.&nbsp;</p><p>
விரும்பிய மதுவை தேர்வு செய்து ஆன்லைனிலேயே பணத்தை செலுத்தி ஆர்டர் செய்யலாம். அதன் பின்னர் உருவாகும் QR codeஐ சம்மந்தப்பட்ட கடையில் காட்டி மதுபானத்தை பெற்றுக் கொள்ளலாம்.
</p><h3>
அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு </h3><p>

அரசின் இந்த முடிவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f8006da-a267-41e7-843d-927a06aa8e2c/26-6a7352ab15bb7.webp' /></p><p>

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுவகைகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் முறை நாளை முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாகவும், அதற்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.</p><p> 

மதுவை ஒழிப்பதற்கு பதிலாக மது வாங்குவதை மிகவும் எளிதானதாக மாற்றும் முயற்சி மிகவும் பிற்போக்கானது ஆகும். மதுவகைகளை முன்பதிவு செய்வதற்காக டாஸ்மாக் நிறுவனத்தின் சார்பில் https://tasmace2e.in/ என்ற இணையதளம் நாளை முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. </p><p>

இந்த இணையதளத்தின் வாயிலாக தமிழ்நாட்டின் எந்த மூலையிலிருந்தும் மொத்தமுள்ள 4048 மதுக்கடைகளிலும் என்னென்ன மதுவகைகள் உள்ளன? அவற்றின் விலை எவ்வளவு என்பதைக் கண்டறிந்து முன்பதிவு செய்ய முடியும். </p><p>

அவ்வாறு முன்பதிவு செய்து பணம் செலுத்தியவர்களுக்கு கியூ.ஆர் கோடுடன் கூடிய கூடிய ரசீது வழங்கப்படும். எந்தக் கடையில் மது வாங்க முன்பதிவு செய்தார்களோ, அந்த கடைக்கு செல்வதற்கான வழிகாட்டும் வரைபடமும் அவர்களுக்கு வழங்கப்படும். </p><p>

அதன்பின் அந்தக் கடைக்கு சென்று கியூ.ஆர் கோடுடன் கூடிய கூடிய ரசீதைக் காட்டி மது பாட்டிலை பெற்றுக்கொள்ள முடியும். மதுக்கடைகளில் வாடிக்கையாளர்கள் அதிக நேரம் வரிசையில் நிற்பதைத் தவிர்க்கும் வகையிலும், சில்லறை விற்பனைக் கடைகளில் அதிகபட்ச விற்பனை விலைக்கும் கூடுதலாக மது விற்கப்படுவதைத் தடுக்கும் வகையிலும் இந்த புதிய முறை அறிமுகம் செய்யப்படுவதாக டாஸ்மாக் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.</p><p> 

எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஓசையின்றி நாளை முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டம் மிகவும் ஆபத்தானது ஆகும். இது மது வணிகத்தையும், மதுப் புழக்கத்தையும் அதிகரிக்கச் செய்யும்.
</p><p>
தமிழ்நாட்டில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டிய துறைகள் ஏராளமான உள்ளன. கல்வி, மருத்துவம், வேளாண்மை, உணவுப் பொருள் வழங்கல், மின்சாரம் போன்ற துறைகள் சீர்திருத்தத்திற்காக ஏங்குகின்றன. ஆனால், அவற்றில் அக்கறை காட்டுவதற்கு பதிலாக மது வணிகத்தில் மட்டும் சீர்திருத்தம் என்ற பெயரில் சீரழிவுகளை செய்யத் துடிப்பது சரியல்ல.
</p><p>
மது மனிதனுக்கு அடிப்படைத் தேவை அல்ல. மது வாங்குவதற்கு எளிதானதாக இருக்கக் கூடாது. அப்போது தான் மது வணிகம் குறையும். ஆனால், மதுவை ஆன்லைனில் முன்பதிவு செய்து மதுக்கடைகளுக்கு சென்று வரிசையில் நிற்காமல் வாங்க வசதி செய்து கொடுப்பது மது வணிகம் அதிகரிப்பதற்கு தான் வழிவகுக்கும். </p><p>

தமிழ்நாட்டில் உள்ள 35,039 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அந்தக் கடைகள் ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு நாளும் ஏராளமான மக்கள், குறிப்பாக பெண்கள் உணவுப் பொருள்களை வாங்குவதற்காக நீண்ட வரிசைகளில் நிற்கிறார்கள். 

அவர்களின் வாட்டத்தைப் போக்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, மது குடிப்பவர்களின் வசதிக்காக இத்தகைய திட்டங்களை செயல்படுத்துவது சமூகச் சீரழிவுக்கு தான் வகை செய்யும்.
</p><p>
டாஸ்மாக் இணையதளத்தில் பதிவு செய்வதற்கு 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் என்பதால், அதற்கும் குறைவான வயதுப் பிரிவினர் மது வாங்குவது தடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் தரப்பில் கூறப்படுகிறது. இதுவும் ஏற்க முடியாத வாதம். 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்கக் கூடாது என்பது விதி. இது குறித்த அறிவிப்பு பலகைகளும் மதுக்கடைகளில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அதையும் மீறி அவர்களுக்கு மது விற்கப்படுகிறது.</p><p> இப்போது ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறை நடைமுறைக்கு வந்தால் ஒருவரின் கணக்கில் முன்பதிவு செய்து பலரும் மது வாங்கிச் செல்லும் நிலை உருவாகும்.</p><p>

மாணவர்கள், இளம்பெண்கள் உள்ளிட்ட பலரும் குடிப்பழக்கத்திற்கு ஆளாவதை தடுத்து வருவது மதுக்கடைகளில் வரிசையில் நின்று மது வாங்கினால் பார்ப்பவர்கள் தவறாக நினைப்பார்கள் என்ற அச்சம் தான். அது தான் அவர்களை மதுக்கடைகளுக்கு செல்வதைத் தடுக்கிறது.</p><p> 

இப்போது ஆன்லைனில் மதுவை முன்பதிவு செய்து மதுக்கடைகளில் சில வினாடிகள் மட்டுமே நின்று மதுவை வாங்கிச் செல்லலாம் என்ற நிலை உருவானால் அவர்கள் மதுப்பழக்கத்திற்கு எளிதில் அடிமையாகி விடுவார்கள்.
</p><p>
மதுக்கடைகளில் அதிக விலைக்கு மது விற்கப்படுவதைத் தடுக்கவே இந்தத் திட்டம் என்பதும் தவறான வாதம் ஆகும். மதுக்கடைகளில் ஊழலை ஒழிக்க முடியவில்லை என்ற அரசின் தோல்வியையே இது காட்டுகிறது. </p><p>

கள்ளச்சாராய வணிகத்தைத் தடுப்பதற்காகத் தான் மதுக்கடைகளை நடத்துகிறோம் என்று ஆட்சியாளர்கள் கூறுவது எந்த அளவுக்கு அபத்தமானதோ, அதே அளவுக்கு இந்த வாதமும் அபத்தமானது.
</p><p>
தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் அவர்கள் பொறுப்பேற்ற சில நாள்களிலேயே தமிழ்நாட்டில் 717 மதுக்கடைகளை மூடுவதற்கு ஆணையிட்டார். அது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. </p><p>

ஆனால், அதை சிதைக்கும் வகையில் மதுக்கடைகளை தனியார் மயமாக்குதல், ரெஸ்டோ பார்களை அனுமதித்தல் போன்ற செய்திகள் வெளிவருவதும், ஆன்லைனில் மதுவை முன்பதிவு செய்வதை அனுமதிப்பதும் அரசுக்கு பெருமை சேர்க்காது. எனவே, மதுப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும் மது முன்பதிவு திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-05T15:12:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளுக்கு விசேட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/special-announcement-for-hatton-schools-1785936423"></link>
            <id>https://jvpnews.com/article/special-announcement-for-hatton-schools-1785936423</id>
            <summary type="text">&amp;nbsp; சீரற்ற வானிலை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்த ஹட்டன் கல்வி வலயத்தின் அனைத்துப் பாடசாலைகளும் நாளை (06) மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சீரற்ற வானிலை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்த ஹட்டன் கல்வி வலயத்தின் அனைத்துப் பாடசாலைகளும் நாளை (06) மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

அதன்படி குறித்த பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் நாளை வழமை போல் இடம்பெறும் என ஹட்டன் வலயக் கல்வி காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f8b78a1-c75e-4d4b-91c7-2f7a8e7ad0bf/26-6a733a2885dfb.webp' /></p><p> </p><p>

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் குறித்த வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படத்தில் நடிக்க சூர்யா வாங்கியுள்ள சம்பளம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/suriya-salary-for-vishwanath-and-sons-movie-1785927451"></link>
            <id>https://viduppu.com/article/suriya-salary-for-vishwanath-and-sons-movie-1785927451</id>
            <summary type="text">இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் விஸ்வநாத் &amp;amp; சன்ஸ். இப்படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ளார். 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் விஸ்வநாத் &amp; சன்ஸ். இப்படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ளார். </p><p>

இவர்களுடன் இணைந்து ராதிகா சரத்குமார், பாலிவுட் நடிகை ரவினா டாண்டன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd080d3f-de52-40e8-b13f-88938ea40992/26-6a73171e28563.webp' /></p><p>
</p><p>
கருப்பு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளிவரும் திரைப்படம் விஸ்வநாத் &amp; சன்ஸ் என்பதால், எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது. இப்படமும் பிளாக்பாஸ்டராக அமைகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
</p><p>
இந்நிலையில், விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க நடிகர் சூர்யா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரூ. 60 கோடி முதல் ரூ. 70 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3e514e6-6c89-4fdd-ad40-e8c97f15b509/26-6a73171ed7c7f.webp' /></p><p>ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல. இணையத்தில் கூறப்படும் தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-05T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்த இந்திய வெளியுறவுச் செயலாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-foreign-secretary-vikram-misri-sri-lanka-1785938996"></link>
            <id>https://tamilwin.com/article/indian-foreign-secretary-vikram-misri-sri-lanka-1785938996</id>
            <summary type="text">மாகாண
சபை தேர்தல்களை விரைவில் நடத்துமாறு அரசை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும் என்று, பிற்பகல் தன்னைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கட்சிகளின்
தலைவர்களிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண
சபை தேர்தல்களை விரைவில் நடத்துமாறு அரசை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும் என்று, பிற்பகல் தன்னைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கட்சிகளின்
தலைவர்களிடம் இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>இதன்போது, தமிழர் தாயகப் பிரதேசத்தில் இன்னமும் கைவிடப்படாமல் படையினரின் ஆக்கிரமிப்பில்
இருக்கும் நிலங்கள் பற்றிய விபரங்களை அவர் தமிழ்த் தேசியக் கட்சிகளின்
தலைவர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.
</p><p>
இன்று பிற்பகல் 2 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
</p><p>
இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் பதில் பொதுச்செயலாளர்
எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்றக் குழுத் தலைவர் மற்றும்
நாடாளுமன்ற உறுப்பினர்களான மருத்துவர் ப.சத்தியலிங்கம், கவீந்திரன் கோடீஸ்வரன்
ஆகியோர் பங்குபற்றினர்.</p><h2>தமிழ்க் கட்சிகள்&nbsp;</h2><p>
</p><p>
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
எம்.பியும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் செல்வம் அடைக்கலநாதன்
எம்.பி., தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் பங்குபற்றினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a6c3ba6-3940-47c8-96d6-69f456c9873f/26-6a734d610dd7e.webp' /></p><p>

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்திய வெளியுறவுச்
செயலாளர் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.</p><p>
</p><p>
தேர்தலை இப்போதைக்கு நடத்தும் எண்ணம் அரசுக்கோ அரசு தலைவருக்கோ இல்லை என்பதைத்
தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் எடுத்துரைத்தனர்.

இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் மக்களால் கைவிடப்பட்டவை என்ற
சாரப்பட கருத்துக் கூறப்படுவது குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளர் தமிழ்த்
தலைவர்களிடம் கேட்டார்.</p><p>

"ஜனாதிபதியினாலும் பிற தென்னிலங்கைத் தலைவர்களாலும் அத்தகைய கருத்து
கூறப்படுவதாக அறிகின்றோம். ஆனால் அது தப்பு. சம்பந்தப்பட்ட காணிகளை இராணுவம்
ஆக்கிரமித்து நீண்ட காலமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் அந்த மக்கள்
வேறு இடமில்லாமல் இடம்பெயர்ந்து இருக்கின்றார்கள்.</p><h2>காணி விடுவிப்பு&nbsp;</h2><p> </p><p>சில சமயங்களில்
வெளிநாட்டில் இருக்கின்றார்கள். அதன் காரணமாக அவை கைவிடப்பட்ட காணிகள் என்று
கூறுவது அர்த்தமற்றது." என்று தமிழ்த் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c67e78a-bb1e-4a3f-b8e0-62f173484adf/26-6a734d61beb4f.webp' /></p><p>
</p><p>
மக்கள் குடியிருக்காத தமிழர் தாயக நிலங்களைக் கபளீகரம் செய்ய கொழும்பு
ஆட்சிப்பீடம் முனைகின்றது என்று சுட்டிக் காட்டிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
எம்.பி., ஏற்கனவே அரசு அப்படி ஒரு முயற்சியை எடுத்தது, அதை மேற்கொள்ள மாட்டோம்
என்று பிரதமர் கூட எமக்கு வாக்குறுதி தந்தார், ஆனால் அதையும் மீறி அப்படி
நிலத்தை சுவீகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது, சந்தர்ப்பவசமாக
சுமந்திரன் வழக்குப் போட்டு அந்த முயற்சியை முறியடித்தார் என்று மேலும்
சுட்டிக்காட்டினார்.</p><p>

"மக்களின் காணிகளை அவர்களிடமே விடுவிக்க வேண்டும் என்பது தங்களுடைய அரசின்
தேசிய கொள்கை என்று அறிவிக்கின்றார் ஜனாதிபதி. ஆனால் மறுநாள் நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பிரதிப் பாதுகாப்பு
அமைச்சர் அந்தக் காணிகளை விடுவிக்க மாட்டோம் என்று பிரகடனப்படுத்துகின்றார்." என்று சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
</p><p>
இன்றைய கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், போன்றோரும் கருத்துக்களை வெளியிட்டனர்.

கொழும்புக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜாவும் இந்தச் சந்திப்பில்
பங்குபற்றினார்.</p>]]></content>
            <updated>2026-08-05T14:56:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசியாவில் தங்கம் மீது அதிகரிக்கும் முதலீடு- வங்கிகளில் புதிய சேவைகள் அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/asia-banks-boost-gold-amid-wealth-shift-1785940898"></link>
            <id>https://news.lankasri.com/article/asia-banks-boost-gold-amid-wealth-shift-1785940898</id>
            <summary type="text">ஆசியாவில் தங்கம் மீதான முதலீடு பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. இதனால் HSBC, DBS, Standard Chartered போன்ற முக்கிய வங்கிகள் தங்கம் தொடர்பான சேவைகளை வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆசியாவில் தங்கம் மீதான முதலீடு பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. இதனால் HSBC, DBS, Standard Chartered போன்ற முக்கிய வங்கிகள் தங்கம் தொடர்பான சேவைகளை விரிவுபடுத்தி வருகின்றன.
</p><h2>
Fractional trading வசதி
</h2><p>
சிங்கப்பூரின் DBS வங்கி, தனது Retail App மூலம் ஒரு கிராம் தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட fractional trading வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சாதாரண வாடிக்கையாளர்களும் தங்கத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf758535-d2b5-43ae-887e-a9d1412c42f3/26-6a734edee5a63.webp' /></p><p>மேலும், Monetary Authority of Singapore இந்த ஆண்டு அக்டோபரில் Central Bank Gold Vaulting சேவையை தொடங்க உள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு மத்திய வங்கிகள் தங்கள் தங்கத்தை பாதுகாப்பாக சிங்கப்பூரில் சேமிக்க முடியும்.
</p><p>
அதேபோல், Singapore Exchange ஆண்டு இறுதிக்குள் தங்க வர்த்தகத்தை தொடங்க உள்ளது.
</p><p>
ஹொங்ஹொங் பகுதியில், ஜூலை மாதம் புதிய தங்க clearing trial தொடங்கப்பட்டது. இதில் HAU என்ற புதிய தங்க விலை குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது. HSBC வங்கி, ஹொங்ஹொங் பகுதியில் 200 டன் தங்க சேமிப்பு வசதி அமைக்க திட்டமிட்டுள்ளது. Standard Chartered வங்கியும் இதேபோன்ற சேமிப்பு திட்டங்களை ஆராய்ந்துவருகிறது.</p><p></p><h2>தங்கத்தின் விலை 6,300 டொலர் வரை உயரும்</h2><p>உலகளாவிய கடன் நிலை 353 டிரில்லியன் டொலராக உயர்ந்துள்ள நிலையில், தங்கம் “fiat hedge” ஆக பார்க்கப்படுகிறது. JPMorgan Global Research, தங்கத்தின் விலை 2026 இறுதிக்குள் 6,000 டொலரை தாண்டும் என்றும், 2027-இல் 6,300 டொலர் வரை உயரும் என்றும் கணித்துள்ளது.</p><p>

உலக தங்க கவுன்சிலின் தகவலின்படி, ஆசியா உலகளாவிய தங்க நுகர்வில் 60 சதவீதம் பங்கைக் கொண்டுள்ளது. ETF-கள் மற்றும் fractional trading போன்ற புதிய சேவைகள், தங்கத்தை பெரிய அளவில் முதலீட்டு திட்டங்களில் இணைக்க உதவுகின்றன.</p><p>

“இது வெறும் குறுகிய கால விலை உயர்வை பயன்படுத்தும் முயற்சி அல்ல, பல தசாப்தங்களுக்கு நீடிக்கும் மூலதன மாற்றம்” எனக் கருதப்படுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T14:53:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரணவீட்டிற்கு சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/van-overturns-three-hospitalized-1785940077"></link>
            <id>https://ibctamil.com/article/van-overturns-three-hospitalized-1785940077</id>
            <summary type="text">&amp;nbsp;மரணவீடொன்றுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவர்கள் பயணித்த வான் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

பொலன்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மரணவீடொன்றுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவர்கள் பயணித்த வான் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
</p><p>
பொலன்னறுவ-அரலகன்வில பிரதான சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது.</p><h2>வான் கவிழ்ந்து விபத்து</h2><p>

சிறிபுரவிலிருந்து மெதிரிகிரியா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, மனம்பிட்டிய 2வது தூண் பகுதியில் சாலையிலிருந்து விலகி ஒரு சிறு பாலத்தில் இந்த வான் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c07fedc-cd37-4724-a0de-81898ad69f1c/26-6a73486ec9f1c.webp' /></p><p>&nbsp; காயமடைந்தவர்கள் பொலன்னறுவ மற்றும் மனம்பிட்டிய மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டதாக மனம்பிட்டிய காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p>



ஓட்டுநர் உறங்கியதே இந்த விபத்திற்கு காரணம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T14:42:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ.1.73 லட்சம் கோடி கடன் வாங்க உள்ள தவெக அரசு - பட்ஜெட்டில் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/vijay-tvk-govt-to-borrow-1-73-lakh-crore-as-debt-1785940367"></link>
            <id>https://news.lankasri.com/article/vijay-tvk-govt-to-borrow-1-73-lakh-crore-as-debt-1785940367</id>
            <summary type="text">முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, ரூ.1.73 லட்சம் கோடி கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1.73 லட்சம் கோடி கடன...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, ரூ.1.73 லட்சம் கோடி கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h3>
ரூ.1.73 லட்சம் கோடி கடன் வாங்கும் தவெக அரசு
</h3><p>
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதலாவது பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d8852b6-f847-4a9a-aa5e-03eedb501542/26-6a73499092731.webp' /></p><p> 

இதில், பள்ளிக்கல்வி துறை, போக்குவரத்து துறை, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>

இதில், தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாய் ரூ.2,54,575 கோடியாக உள்ளது எனவும், தமிழ்நாட்டின் நிதி நிர்வாகத்தை சீரமைக்க குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p> 

மேலும், பொதுக்கடன்களை பொறுத்தவரையில் 2026 - 2027 ஆம் ஆண்டில் மொத்தமாக ரூ.1,73,445 கோடி கடன் பெறவும், ரூ.51,971 கோடிதிருப்பி செலுத்தவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. </p><p> 

அதன்படி 2027 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி நிலவரப்படி, தமிழக அரசின் கடன் 10 லடசத்து 98 ஆயிரத்து 768 கோடி ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T14:32:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bar-association-president-rejects-allegations-1785936069"></link>
            <id>https://jvpnews.com/article/bar-association-president-rejects-allegations-1785936069</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தன்மீது முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை மற்றும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டவையென இலங்கை சட்டத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தன்மீது முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை மற்றும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டவையென இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
</p><p>


இது குறித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்க்கட்சித் தலைவருடன் இரகசிய உடன்படிக்கை செய்ததாகவும், பின்னர் தமக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் பரப்பப்படும் தகவல்களை அவர் நிராகரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6833cff8-fd9c-4d2c-8c66-72ec3d2401f6/26-6a7338c71086d.webp' /></p><p>



தான் ஒரு மோட்டார் வாகன நிறுவனத்தின் சார்பில், சட்டத்தரணியாக தனது தொழில்முறை கடமையின் அடிப்படையிலேயே நீதிமன்றங்களில் ஆஜராகியதாகவும், அதில் எந்தவித தவறும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>


மேலும், அறிந்தே பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றும், அவ்வாறான முறைப்பாடுகளுக்கு சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p>
</p><p>


தனிப்பட்ட தாக்குதல்கள் தம்மை அச்சுறுத்தாது என்றும், உண்மை மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கும் பணியில் தொடர்ந்து உறுதியாக இருப்பேன் என்றும் ரஜீவ் அமரசூரிய தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் Mrs Canada World 2026 பட்டம் வென்ற இந்திய வம்சாவளி பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pallavi-mukhija-wins-mrs-canada-world-2026-1785938375"></link>
            <id>https://news.lankasri.com/article/pallavi-mukhija-wins-mrs-canada-world-2026-1785938375</id>
            <summary type="text">Mrs Canada World 2026: இந்திய வாசவளியைச் சேர்ந்த பல்லவி முகீஜா கனடாவின் தேசிய அழகிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

பல்லவி முகீஜாஇந்தியாவின் பஞ்சா...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>Mrs Canada World 2026:</b> இந்திய வாசவளியைச் சேர்ந்த பல்லவி முகீஜா கனடாவின் தேசிய அழகிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
</p><h2>
பல்லவி முகீஜா</h2><p>இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டம் கோராயா பகுதியில் பிறந்த பல்லவி முகீஜா, தற்போது கனடாவில் வசித்து வருகிறார்.
</p><p>
அவர், Mrs Canada World 2026 என்ற தேசிய அழகிப்போட்டியில் வெற்றி பெற்று, பட்டம் சூட்டப்பட்டுள்ளார்.
</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbPvD6oyBsA/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbPvD6oyBsA/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DbPvD6oyBsA/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by The Official Mrs. World Page (@mrsworldpageant)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>இந்தப் போட்டி, ஜூலை 25, 2026 அன்று பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே நகரில் உள்ள Bell Performing Arts Centre-இல் நடைபெற்றது. </p><p>கனடா முழுவதும் இருந்து வந்த 60-க்கும் மேற்பட்ட போட்டியாளர்களில், பல்லவி தனது நம்பிக்கை, தனித்துவம், மேடை நடிப்பு மற்றும் அழகிய தன்மையால் அனைவரையும் கவர்ந்தார்.
</p><p>
முன்னாள் Mrs Canada World ஃபாலன் சிலாந்தி பல்லவிக்கு பட்டம் சூட்டினார். மேலும், சமூக சேவையில் புகழ்பெற்ற சாம்மி (Sammy) அவருக்கு வெற்றிக் கச்சையை அணிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c05e6fe5-4567-4ba4-a986-d22f471704a6/26-6a7346de16035.webp' /></p><h2>நர்ஸ்&nbsp;</h2><p>
பல்லவி, கனடாவில் நீண்டகால பராமரிப்பு மையத்தில் பதிவு செய்யப்பட்ட நர்ஸ் ஆக பணியாற்றுகிறார். அவர், மூத்த குடிமக்களின் மனநலம் மற்றும் உணர்ச்சி நலனுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் சமூக சேவையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
</p><p>
பட்டம் வென்ற பின் பல்லவி கூறியதாவது:
“இந்தக் கிரீடம் வெறும் சாதனை அல்ல, இது ஒரு சமூக நோக்கத்திற்கான மேடை. மூத்த குடிமக்கள் மதிப்பு பெற வேண்டும், அவர்களின் குரல் கேட்கப்பட வேண்டும் என்பதற்காக நான் தொடர்ந்து பாடுபடுவேன்” என தெரிவித்தார்.
</p><p></p><p>அவர், Mrs Canada World 2026 பட்டம் பெற்றவராக, கனடாவை உலகளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் போது, சமூக சேவையிலும், கருணை மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்படுவேன் என உறுதியளித்துள்ளார்.
</p><p>
இந்த வெற்றி, பஞ்சாப் மாநிலத்திற்கும், இந்திய வம்சாவளியினருக்கும் பெருமை சேர்த்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T14:19:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[Philippines : 10 ஆண்டுகள் படுக்கைக்கு அடியில் இருந்த பல கோடி மதிப்புள்ள அரிய முத்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/fisherman-found-giant-100-million-pearl-1785934636"></link>
            <id>https://manithan.com/article/fisherman-found-giant-100-million-pearl-1785934636</id>
            <summary type="text"> Philippines : பிலிப்பைன்ஸின் பளவான் தீவைச் சேர்ந்த ஒரு மீனவர், 2006ஆம் ஆண்டு கடலில் கண்டெடுத்த 34 கிலோ எடையுள்ள மிகப்பெரிய இயற்கை முத்தை அதன் உண்மையா...</summary>
            <content type="html"><![CDATA[<p> Philippines : பிலிப்பைன்ஸின் பளவான் தீவைச் சேர்ந்த ஒரு மீனவர், 2006ஆம் ஆண்டு கடலில் கண்டெடுத்த 34 கிலோ எடையுள்ள மிகப்பெரிய இயற்கை முத்தை அதன் உண்மையான மதிப்பு தெரியாமல் சுமார் 10 ஆண்டுகள் தனது வீட்டில் படுக்கைக்கு அடியில் அதிர்ஷ்டப் பொருளாக வைத்திருந்தார்&nbsp; என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?&nbsp;</p><p>கடந்த 2006ஆம் ஆண்டு, பளவான் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கடல் சிப்பிக்குள் சிக்கியிருந்த இந்தப் பிரம்மாண்ட முத்தை அந்த மீனவர் கண்டெடுத்ததாக கூறப்படுகிறது. அதன் அரிய தன்மையை அறியாத அவர், அதை தனக்கு அதிர்ஷ்டத்தைத் தரும் பொருளாக நம்பி, தனது வீட்டில் படுக்கைக்கு அடியில் பாதுகாப்பாக வைத்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3572addc-1867-4eb6-aca0-cf0a3d431c36/26-6a7336ed2bc34.webp' /></p><h2>உலகின் மிகப்பெரிய இயற்கை முத்து</h2><p>

இந்த அரிய முத்து சுமார் 2.2 அடி (67 செ.மீ) நீளம், 1 அடி (30 செ.மீ) அகலம் மற்றும் 34 கிலோ எடை கொண்டதாகும். இதன் அளவும் எடையும் உலகின் மிகப்பெரிய இயற்கை முத்துகளில் ஒன்றாக இதைத் தனித்துவமாக்குகின்றன.
</p><p>
இந்நிலையில், மீனவரின் வீடு தீ விபத்தில் சேதமடைந்ததைத் தொடர்ந்து, அந்தப் பொருளை அவர் பாதுகாப்பு கருதி உள்ளூர் சுற்றுலா அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அப்போது அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், அது மிகவும் அரிய மற்றும் விலைமதிப்பற்ற இயற்கை முத்து என்பது தெரியவந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf21c009-7f00-4115-9622-866a750accb8/26-6a7336edd34f9.webp' /></p><p>

இந்த முத்தின் மதிப்பு சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது தோராயமாக 950 கோடி மதிப்புள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறிப்பட்ட இந்த விடயம் தற்போது சமூக ஊடகங்களில் மீண்டும் வைரலாகி வருகின்றது.</p><p><iframe width="315" height="576" src="https://www.youtube.com/embed/5mKZ30fioco" title="10 ஆண்டுகள் படுக்கையறையில் புதைந்து கிடந்த புதையல்..!😱 | உலகையே வியக்க வைத்த கதை!" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T14:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் மின்சாரம் தடைப்பட்ட நேரத்தில் துணிகரக் கொள்ளை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/robbery-during-power-outage-in-jaffna-1785930406"></link>
            <id>https://ibctamil.com/article/robbery-during-power-outage-in-jaffna-1785930406</id>
            <summary type="text">அராலி வடக்கு பகுதியில் மின்சாரம் தடைப்பட்ட நேரத்தில் துணிகரக் கொள்ளைச்
சம்பவம் ஒன்று நேற்றிரவு(04) இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அராலி வடக்கு பகுதியில் மின்சாரம் தடைப்பட்ட நேரத்தில் துணிகரக் கொள்ளைச்
சம்பவம் ஒன்று நேற்றிரவு(04) இடம்பெற்றுள்ளது.
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்றிரவு மின்சாரம் தடைப்பட்டபோது நால்வர் கொண்ட கும்பல் ஒன்று அராலி வடக்கு
பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்கள் மீது
தாக்குதல் நடாத்தியுள்ளது. </p><p>பின்னர் அந்த வீட்டில் இருந்த 10 பவுண் தங்க
ஆபரணங்களை அந்த கும்பலானது கொள்ளையடித்துச் சென்றுள்ளது.</p><h2>முகங்களை மூடி கட்டியவாறு வந்த கும்பல்</h2><p>
</p><p>
குறித்த கும்பலானது முகங்களை மூடி கட்டியவாறு வந்ததால் அடையாளம் காண
முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19139e34-ba6a-44bb-9c83-8100f3e67dea/26-6a732679e95aa.webp' /></p><p>

இந்தச் சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு
செய்யப்பட்டது. வட்டுக்கோட்டை காவல்துறையினர் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T14:09:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனது இறந்த குட்டியின் மீது தாய் டொல்பினின் அளவு கடந்த அன்பு : வைரலாகும் காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dolphin-mothers-love-for-her-child-1785938142"></link>
            <id>https://ibctamil.com/article/dolphin-mothers-love-for-her-child-1785938142</id>
            <summary type="text">&amp;nbsp;மேற்கு அவுஸ்திரேலியாவில் தனது குட்டி இறந்த பிறகு, அதைத் தன் கைகளில் ஏந்தியபடி ஆறு நாட்கள் நீந்தும் ஒரு தாய் டொல்பினின் காணொளி சமூக ஊடகங்களில் பர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மேற்கு அவுஸ்திரேலியாவில் தனது குட்டி இறந்த பிறகு, அதைத் தன் கைகளில் ஏந்தியபடி ஆறு நாட்கள் நீந்தும் ஒரு தாய் டொல்பினின் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.</p><p>

திமிங்கலங்கள் மற்றும் டொல்பின்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள புவியியல் கடல் ஆராய்ச்சி (Geographic Marine Research) அமைப்பு, ஃபிராகிள் (Fraggle) என்ற அந்தத் தாய் டொல்பின், இறந்த தன் குட்டியைத் தன் கைகளில் ஏந்தியபடி நீந்தும் காணொளியை பதிவேற்றியுள்ளது.</p><h2>நான்காவது குட்டியின் இழப்பால் தாளாத துயரம்</h2><p>&nbsp;அதற்கு முன்பு அதன் மூன்று குட்டிகள் இறந்துவிட்டதாகவும், தனது நான்காவது குட்டியின் இழப்பினால் ஏற்பட்ட துக்கத்தை வெளிப்படுத்தவே அது ஆறு நாட்கள் நீந்தியதாகவும் புவியியல் கடல் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fweb.facebook.com%2Freel%2F2103350090562619%2F&show_text=false&width=267&t=0" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>

இறந்த குட்டிக்கு இரண்டு வாரங்கள் ஆகியிருந்தன. ஃபிராகிள் இதற்கு முன்பு மூன்று முறை இறந்திருப்பதால், அது மீன் உலகில் நன்கு அறியப்பட்ட ஒரு உருவம் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.</p><p> கடும் குளிரின் மத்தியில் பிறந்த டொல்பின் குட்டி, நிமோனியாவால் உயிரிழந்தது. இந்த முறை அந்தக் குட்டி உயிர் பிழைத்திருக்கும் என்று பல விலங்கியல் வல்லுநர்கள் நம்பியதாக புவியியல் கடல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T14:06:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய மாகாண புதிய ஆளுநர் பதவிப் பிரமாணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/swearing-in-new-governor-of-the-central-province-1785934453"></link>
            <id>https://jvpnews.com/article/swearing-in-new-governor-of-the-central-province-1785934453</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற சமூக விசேட வைத்திய நிபுணர் ஹர்ஷ சுரங்க பெர்ணான்டோ, இன்று (05) பிற்பகல் ஜனாதிபத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற சமூக விசேட வைத்திய நிபுணர் ஹர்ஷ சுரங்க பெர்ணான்டோ, இன்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
</p><p>


உலக சுகாதார அமைப்பின் நோய்த்தடுப்பு தொடர்பான விசேட வைத்திய நிபுணராக பல நாடுகளிலும் பணியாற்றியுள்ள அவர், கண்டி மாவட்டத்தின் சமூக விசேட வைத்திய நிபுணராகவும் சேவையாற்றியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76d7b1c0-8dda-464b-9a48-2424143a1a5e/26-6a733276d15b6.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்த குடும்பப் பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-arrested-for-selling-drugs-1785938237"></link>
            <id>https://tamilwin.com/article/woman-arrested-for-selling-drugs-1785938237</id>
            <summary type="text">அம்பாறை - இங்ஹினியாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த கைது நடவடிக்கை நேற்று(04....</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை - இங்ஹினியாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

இந்த கைது நடவடிக்கை நேற்று(04.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><h2>

 
28 வயது குடும்ப பெண் கைது</h2><p>
குறித்த பெண், இங்ஹினியாகல பகுதியை சுற்றியுள்ள கிராமங்களுக்குப் பெருமளவில் போதைப்பொருட்களை விநியோகித்து வருவதாக கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் 
அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் மற்றும் இங்ஹினியாகல பொலிஸார் இணைந்து விசேட சோதனை நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளனர்.</p><p>இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 10,000 மில்லிகிராம் (10 கிராம்) ஐஸ் போதைப்பொருளும்,
10,000 மில்லிகிராம் (10 கிராம்) ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால்
கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c5d1989-3188-400d-88d1-0eabad18be15/26-6a73419e56cdd.webp' />&nbsp;&nbsp;</p><p>
இந்த சந்தேக நபர் நீண்டகாலமாக கொழும்பிலிருந்து அம்பாறை பகுதிக்குப்
போதைப்பொருட்களைக் கடத்தி வந்து விநியோகித்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில்
தெரியவந்துள்ளது. </p><h2>


கணவர் விளக்கமறியலில்..</h2><p>
அத்துடன், இவரின் கணவரும் போதைப்பொருள் கடத்தல் வழக்கின்
கீழ் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p> 

பொல்வத்தை பகுதியைச் சேர்ந்த எம். மதுஷானி திசாநாயக்க என்ற 28
வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக இங்ஹினியாகல பொலிஸ்
நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p>

இதனைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T13:59:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[20,000 இலவச விமான டிக்கெட்களை வழங்கும் இண்டிகோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indigo-gives-20000-free-tickets-for-its-20th-year-1785937666"></link>
            <id>https://news.lankasri.com/article/indigo-gives-20000-free-tickets-for-its-20th-year-1785937666</id>
            <summary type="text">இண்டிகோ விமான நிறுவனம், தனது 20 ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் வகையில், 20,000 இலவச விமான டிக்கெட்களை வழங்குகிறது.

20,000 இலவச விமான டிக்கெட்

இண...</summary>
            <content type="html"><![CDATA[<p>இண்டிகோ விமான நிறுவனம், தனது 20 ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் வகையில், 20,000 இலவச விமான டிக்கெட்களை வழங்குகிறது.
</p><h3>
20,000 இலவச விமான டிக்கெட்
</h3><p>
இண்டிகோ விமான நிறுவனம் தனது முதல் சேவையை இந்தியாவில் 4 ஆகஸ்ட் 2006 அன்று துவங்கியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91405602-5068-4959-8a3a-8c3d65ef96f0/26-6a733f036b3bd.webp' /></p><p>

தற்போது 430-க்கும் மேற்பட்ட விமானங்களைக் கொண்டு, தினமும் சுமார் 2,200 விமானப் பயணங்களை இயக்குகிறது.</p><p> 

மேலும், இந்தியாவின் உள்நாட்டு விமான சந்தையில், 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட பங்கைக் கொண்டுள்ளது.&nbsp;</p><p>

இந்தியாவில் விமான சேவையை தொடங்கி 20 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் தனது வாடிக்கையாளர்களுக்கு பயண கட்டணத்தை திருப்பி வழங்குவதன் மூலம், 20,000 இலவச டிக்கெட்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">We&#39;ve turned 20, and 20,000* free tickets are up for grabs.<br>Read the instructions, follow the steps, and book your domestic flight. ✈️<br>Book now: <a href="https://t.co/N3KCNK6JOK">https://t.co/N3KCNK6JOK</a>. *T&amp;C Apply. <a href="https://t.co/KmLLu4nHEx">pic.twitter.com/KmLLu4nHEx</a></p>&mdash; IndiGo (@IndiGo6E) <a href="https://x.com/IndiGo6E/status/2084971009862500753?ref_src=twsrc%5Etfw">August 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

இந்தச் சலுகை, 04 ஆகஸ்ட் 2026 மற்றும் 06 ஆகஸ்ட் 2026 ஆகிய தேதிகளுக்கு இடையில் செய்யப்படும் முன்பதிவுகளுக்குச் செல்லுபடியாகும்.</p><p> 

முன்பதிவிற்கான தொகையில் அதிகபட்சமாக ரூ.10,000 வரை திருப்பி வழங்கப்படும். 

தேர்ந்தெடுக்கப்பட்ட 3-5 நாட்களுக்குள், இந்தப் பணம் திரும்ப வழங்கப்படும்.&nbsp;</p><p></p><p>
அந்த பயணச்சீட்டில் எந்த மாற்றமும் அனுமதிக்கப்படாது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளரால் பயணச்சீட்டு ரத்து செய்யப்படும் பட்சத்தில், மீதமுள்ள தொகை இருப்பின், அது திரும்ப வழங்கப்பட மாட்டாது.
</p><p>
ஆனால், 1979 ஆம் ஆண்டு தமிழ்நாடு பரிசுத் திட்டங்கள்(தடை) சட்டத்தின்படி, தமிழ்நாடு மாநிலத்தைத் தவிர, இந்தியா முழுவதும்&nbsp;இது செல்லுபடியாகும். தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் இதில் பங்கேற்கக் கூடாது.
</p><p>
இந்தச் சலுகையானது, இண்டிகோவின் இணையதளம், மொபைல் செயலி மற்றும் 6Eskai எனப்படும் AI மெய்நிகர் உதவியாளர் ஆகியவற்றில் செய்யப்படும் முன்பபதிவுகளுக்கு மட்டுமே பொருந்தும். </p><p> 

ஒருவழிப் பயணம், இருவழிப் பயணம், நேரடிப் பயணம், இணைப்பு விமானங்கள் மற்றும் பல நகரப் பயணங்கள் உட்பட எகானமி மற்றும் ஸ்ட்ரெட்ச் வகுப்புகளில் உள்நாட்டு முன்பதிவுகளுக்கு மட்டுமே பொருந்தும்.&nbsp;</p><p></p><p> 

பங்கேற்பாளர்கள், கணினி அமைப்பு மூலம் உருவாக்கப்படும் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு பங்கேற்பாளரும் இண்டிகோ தொடர்பான ஒரு கேள்விக்கு பதிலளிக்க வேண்டும்.</p><p> 

அந்த கேள்வி, முன்பதிவின் போது வழங்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணுக்கு, மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் வழியாக அனுப்பப்படும்.</p><p> 

ஒரு கேள்விக்குச் சரியாகப் பதிலளிக்க 3 வாய்ப்புகள் வழங்கப்படும். கேள்விக்குச் சரியாகப் பதிலளிக்கும் பங்கேற்பாளர், பணத்தைத் திரும்பப் பெறத் தகுதி பெறுவார்.</p><p>

கேள்வி அனுப்பப்பட்ட 48 மணி நேரத்திற்குள் அதற்குப் பதிலளிக்கத் தவறினால், அல்லது கேள்விக்குத் தவறாகப் பதிலளித்தால், அவர் தகுதி பெறமாட்டார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T13:47:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளைய தினத்திலிருந்து காற்று மழை தீவிரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wind-and-rain-to-intensify-from-tomorrow-1785935018"></link>
            <id>https://jvpnews.com/article/wind-and-rain-to-intensify-from-tomorrow-1785935018</id>
            <summary type="text">நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழை மற்றும் காற்று நிலைமை நாளைய தினத்திலிருந்து எதிர்வரும் சில நாட்களுக்கு அதிகரிக்கும் என எதிர்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழை மற்றும் காற்று நிலைமை நாளைய தினத்திலிருந்து எதிர்வரும் சில நாட்களுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. </p><p>

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e19cf93-97e9-46b7-9dc1-4e29cf232eef/26-6a7334ab745e8.webp' /></p><p> </p><p>

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். </p><p>

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு ஒருசில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.</p><p></p><p> 

வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். </p><p>

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T13:32:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[34 ஆண்டுகள் அயராத அர்ப்பணிப்பு; ஓய்வு பெறும் யாழ்ப்பாண சிரேஷ்ட மருத்துவர் ஸ்ரீஸ்கந்தராஜா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-hospital-senior-dr-sriskandarajah-retires-1785922577"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-hospital-senior-dr-sriskandarajah-retires-1785922577</id>
            <summary type="text">&amp;nbsp; 34 ஆண்டுகள் மக்காளுக்கு மருத்துவ பணியாற்றிய யாழ்ப்பாண சிரேஷ்ட மருத்துவர் ஸ்ரீஸ்கந்தராஜா இன்று ஓய்வு பெறுகின்றார்.

இன்னிலையில் ஓய்வு பெற்று ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 34 ஆண்டுகள் மக்காளுக்கு மருத்துவ பணியாற்றிய யாழ்ப்பாண சிரேஷ்ட மருத்துவர் ஸ்ரீஸ்கந்தராஜா இன்று ஓய்வு பெறுகின்றார்.

இன்னிலையில் ஓய்வு பெற்று செல்லும் மருத்துவர் ஸ்ரீஸ்கந்தராஜா தொடர்பில் , யாழ் போதனா வைத்தியசாலை பணைப்பாளர், மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி முகநூலில் பதிவிட்டுள்ளதாவது,</p><h2>34 ஆண்டுகள் அர்ப்பணிப்பின் அடையாளம் டாக்டர் ஸ்ரீஸ்கந்தராஜா</h2><p> </p><p>

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை என்பது வடக்கு மக்களின் நம்பிக்கையின் சின்னம் மட்டுமல்ல; எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றிய மனிதநேயத்தின் ஆலயமாகவும் திகழ்கிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53d510cc-3ee2-42aa-b997-ee0d7857f9e0/26-6a730414cc5d0.webp' /></p><p>குறிப்பாக யுத்தம் நிலவிய காலங்களில், குண்டுவெடிப்புகள், இடம்பெயர்வுகள், மருந்து மற்றும் உபகரணப் பற்றாக்குறைகள், மின்சாரத் தட்டுப்பாடுகள் போன்ற எண்ணற்ற சவால்களுக்கு மத்தியில் கூட, இந்த வைத்தியசாலை தனது சேவையை ஒருபோதும் நிறுத்தவில்லை.</p><p></p><p> </p><p>அந்த மகத்தான சேவையின் பின்னணியில், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கடமையாற்றிய மருத்துவர்கள், தாதியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களின் அர்ப்பணிப்பே இருந்தது.</p><p>உண்மையில், இவ்வாறான ஒவ்வொரு சேவையாளரும் சமூகத்தின் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவர்களே.
அவ்வாறான அர்ப்பணிப்புமிக்க சேவையாளர்களில் ஒருவர் தான் டாக்டர் ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள்.
யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவரான அவர், கடந்த 34 ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் சிரேஷ்ட மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றி, அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/813b6323-6590-4cf8-8077-b0bf07bacd00/26-6a730414202a5.webp' /></p><p>
தனது பணிக்காலம் முழுவதும், குறிப்பாக யுத்தம் நிலவிய காலங்களிலும் அதன் பின்னரும், சத்திர சிகிச்சைக் கூடத்தில் சிரேஷ்ட மருத்துவ அதிகாரியாகவும், மயக்கமருந்தியல் பிரிவிலும் மிகுந்த பொறுப்புணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றினார். </p><p>
உயிருக்கும் மரணத்துக்கும் இடையில் போராடிய ஆயிரக்கணக்கான நோயாளிகளின் சிகிச்சையில் அவரது பங்களிப்பு அளப்பரியது.
அதுமட்டுமல்லாமல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மருத்துவப் பயிற்சி பெற்ற காலங்களில், அவர்களில் பலருக்கு வழிகாட்டியாகவும், மருத்துவமனை நடைமுறைகள், ஒழுக்கம் மற்றும் தொழில்முறைப் பண்புகளை பொறுமையுடனும் அன்புடனும் கற்பித்த சிறந்த மூத்த மருத்துவ அதிகாரியாகவும் திகழ்ந்தார்.</p><p></p><p>இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் சேவையாற்றும் பல வைத்தியர்களின் நினைவில் அவர் ஒரு சிறந்த ஆசிரியராகவும் வழிகாட்டியாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d6f0775-095e-41fc-942d-2b55648bb3d3/26-6a73041364f76.webp' /></p><p>
</p><p>இன்று நடைபெற்ற அவரது ஓய்வுபெறும் பாராட்டு விழாவில், அவருடன் பணியாற்றிய வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் பலரும் அவரது தொழில்முறைத் திறமை, அமைதியான குணம், அன்பான அணுகுமுறை, மனிதநேயம் மற்றும் பொறுப்புணர்வை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்து பாராட்டினர்.
அவருடைய பாடசாலை நண்பர்கள் அவரை அன்புடன் "குட்டி" என்று அழைப்பார்கள். </p><p> செல்லப்பெயரிலேயே அவரது எளிமை, நட்புணர்வு மற்றும் பாசம் பிரதிபலிக்கின்றன.
அதேபோல், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அவருடன் கடமையாற்றிய பல மருத்துவர்கள் அவரை அன்போடும் மரியாதையோடும் "ஸ்ரீ அண்ணன்" என்று அழைப்பது, அவர் அனைவரிடமும் ஏற்படுத்திய நம்பிக்கை, பாசம் மற்றும் சகோதரத்துவ உறவிற்கு ஒரு சிறந்த சான்றாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/daf37792-6a02-4f52-8d65-c4ed80cca8c1/26-6a73041582106.webp' /></p><p> </p><p>பதவியால் மட்டுமல்ல, தனது பணிவு, வழிகாட்டுதல் மற்றும் அன்பான அணுகுமுறையால் இளைய மருத்துவர்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கும் ஒரு மூத்த சகோதரராகவே அவர் விளங்கினார்.
உண்மையில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பெருமை அதன் கட்டிடங்களிலோ அல்லது மருத்துவ உபகரணங்களிலோ மட்டுமல்ல; அதன் ஒவ்வொரு சேவையாளரின் அர்ப்பணிப்பிலும் இருக்கிறது. </p><p>இவ்வாறான அமைதியாகவும் ஆரவாரமின்றியும் கடமையாற்றிய மருத்துவ அதிகாரிகளே ஒரு நிறுவனத்தின் உண்மையான பலம். அவர்கள் உருவாக்கிய சேவை மரபும் மனிதநேயமும் எதிர்கால தலைமுறைகளுக்கு என்றும் வழிகாட்டும் ஒளியாக இருக்கும்.</p><p></p><p>அன்பிற்குரிய டாக்டர் ஸ்ரீஸ்கந்தராஜா !
தங்களின் 34 ஆண்டுகால அர்ப்பணிப்பான சேவைக்கு வடக்கு மக்களின் சார்பிலும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக் குடும்பத்தின் சார்பிலும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
</p><p>தங்களுக்கு நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், குடும்ப மகிழ்ச்சி, மனநிறைவு மற்றும் இறைவனின் அருள் என்றும் கிட்ட வாழ்த்துகிறோம்.
"ஒரு நல்ல மருத்துவர் நோயாளிகளை மட்டும் குணப்படுத்துவதில்லை; மனிதர்களின் இதயங்களையும் வென்று விடுகிறார். </p><p>அந்த அரிய பெருமைக்குரியவர் டாக்டர் ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் என , யாழ் போதனா வைத்தியசாலை பணைப்பாளர், மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி பதிவிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-05T13:30:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபைகளின் கீழுள்ள பாடசாலைகளை கல்வியமைச்சு சுவீகரிக்க சட்டமில்லை : கிடைத்தது வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/provincial-councils-schools-issue-1785935617"></link>
            <id>https://ibctamil.com/article/provincial-councils-schools-issue-1785935617</id>
            <summary type="text">மாகாணசபைகளின் அதிகார வரம்புக்குட்பட்ட பாடசாலைகளைத் &#039;தேசிய பாடசாலைகள் என்ற
பெயரில் மத்திய கல்வி அமைச்சு சுவீகரிப்பதற்குச் சட்ட ரீதியான ஏற்பாடுகள்
எது...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாணசபைகளின் அதிகார வரம்புக்குட்பட்ட பாடசாலைகளைத் 'தேசிய பாடசாலைகள் என்ற
பெயரில் மத்திய கல்வி அமைச்சு சுவீகரிப்பதற்குச் சட்ட ரீதியான ஏற்பாடுகள்
எதுவும் இல்லை என சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர்
ஜெனரல் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.</p><p>அரசியல் யாப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் கல்வி என்பது மாகாண
சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட விடயமாகும். எனினும், யுத்தகாலத்தில் மத்திய கல்வி
அமைச்சு அரசியல் யாப்புக்கு முரணாக நாடு முழுவதிலும் ஏறத்தாழ 350
பாடசாலைகளையும் (வடக்கில் 20 பாடசாலைகள்) நிர்வாக வழிகளினூடாகத் தேசிய
பாடசாலைகளாகத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்தது.
</p><p>
</p><h2>டலஸ் அழகப்பெருமவின் ஆயிரம் தேசிய பாடசாலைகள் திட்டம்</h2><p>அன்றைய கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும மேலும் 650 பாடசாலைகளைச் சேர்த்து
'ஆயிரம் தேசிய பாடசாலைகள் திட்டத்தை அறிவித்தார். ஜி.எல்.பீரிஸ், தினேஷ்
குணவர்த்தன ஆகியோரும் இதனைத் தீவிரமாக முன்னெடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcdfa1fa-caec-41d3-be99-45eb34839ace/26-6a733930832a2.webp' /></p><p>
</p><p>
மாகாண அதிகாரங்களைப் பறிக்கும் இந்தச் சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக
கலாநிதி க. சர்வேஸ்வரன் 2022 மே மாதத்தில் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில்
வழக்குத் தாக்கல் செய்தார்.</p><h2>கல்வியமைச்சின் உத்தரவு</h2><p> </p><p>வழக்கின் தொடர்ச்சியாக, 18.08.2023 மற்றும்
20.02.2024 திகதியிடப்பட்ட சுற்றறிக்கைகள் மூலம், புதிதாகத் தேசிய பாடசாலைகளாக
அறிவிக்கப்பட்ட பாடசாலைகளின் பெயர்ப்பலகைகளை அகற்றுமாறும், அதிபர்கள் தேசிய
பாடசாலை முத்திரையைப் பயன்படுத்தக்கூடாது என்றும் மத்திய கல்வி அமைச்சு
உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eeaaa332-2b66-46de-8471-fb813258fc86/26-6a73392ef334c.webp' /></p><p>
</p><p>
2025 மே 23 அன்று மன்றில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல், "குறிப்பிட்ட
அமைச்சரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தற்போது சட்டம் இல்லை” எனச் சட்டமா
அதிபர் தெரிவித்துள்ளதாக ஒப்புக்கொண்டார்.
</p><p>
</p><h2>சர்வேஸ்வரனால் தாக்கல் செய்யப்பட்ட சட்டப் போராட்டம் வெற்றி&nbsp;</h2><p>ஏற்கனவே சுவீகரிக்கப்பட்ட பாடசாலைகள் தவிர வேறு எதனையும் சுவீகரிக்கும்
உத்தேசம் மத்திய அரசுக்கு இல்லை என்ற எழுத்துமூல உறுதிப்பாட்டையும் சட்டமா
அதிபர் நீதிமன்றத்துக்குச் சமர்ப்பித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a1064a5-cc93-41e6-8029-27af7ac38dcb/26-6a73392fcf84b.webp' /></p><p> </p><p>அதற்கமைய வடக்கு மாகாண முன்னாள்
கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரனால் தாக்கல் செய்யப்பட்ட சட்டப்
போராட்டம் வெற்றி பெற்று முடிவுக்கு வந்ததுடன் நாடு தழுவியரீதியில்
கையகப்படுத்தப்படவிருந்த 650 பாடசாலைகளும் (வடக்கில் 48 பாடசாலைகள்) மத்திய
அரசால் பறிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.&nbsp; &nbsp; &nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T13:30:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலைகள் சுவீகரிப்பு தொடர்பில் மாகாண சபைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/school-acquisition-1785936476"></link>
            <id>https://tamilwin.com/article/school-acquisition-1785936476</id>
            <summary type="text">மாகாண சபைகளின் அதிகார வரம்புக்குட்பட்ட பாடசாலைகளை “தேசிய பாட சாலைகள்” என்ற
பெயரில் மத்திய கல்வி அமைச்சு சுவீகரிப்பதற்குச் சட்ட ரீதியான ஏற்பாடுகள் எது...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபைகளின் அதிகார வரம்புக்குட்பட்ட பாடசாலைகளை “தேசிய பாட சாலைகள்” என்ற
பெயரில் மத்திய கல்வி அமைச்சு சுவீகரிப்பதற்குச் சட்ட ரீதியான ஏற்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை என சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
</p><p>
அரசியல் யாப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் படி, கல்வி என்பது மாகாண
சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட விடயமாகும். எனினும், யுத்தகாலத்தில் மத்திய கல்வி
அமைச்சு அரசியல் யாப்புக்கு முரணாக நாடு முழுவதிலும் ஏறத்தாழ 350
பாடசாலைகளையும் (வடக்கில் 20 பாடசாலைகள்) நிர்வாக வழிகளினூடாகத் தேசிய
பாடசாலைகளாகத் தன் கட்டுப் பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்தது.</p><p>

அன்றைய கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெருமா சுமாராக 650 பாடசாலைகளைச் சேர்த்து
1000 தேசிய பாடசாலைகள் திட்டத்தை அறிவித்தார். 

இந்த திட்டத்தை ஜி.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்த்தன ஆகியோரும் தீவிரமாக முன்னெடுத்தனர்.
</p><h2>
மேல் முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல்</h2><p>
மாகாண அதிகாரங்களைப் பறிக்கும் இந்தச் சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராகக்
க. சர்வேஸ்வரன் 2022 மே மாதத்தில் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில்
வழக்குத் தாக்கல் செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e7b7d8a-5adf-4bd0-84f9-ace2fede15cd/26-6a733ac686342.webp' /></p><p> 

இதனைத் தொடர்ந்து, வழக்கின் தொடர்ச்சியாக கடந்த 18.08.2023 மற்றும்
20.02.2024 திகதியிடப்பட்ட சுற்றறிக்கைகள் மூலம், புதிதாகத் தேசிய பாடசாலைகளாக
அறிவிக்கப்பட்ட பாடசாலைகளின் பெயர்ப்பலகைகளை அகற்றுமாறும், அதிபர்கள் தேசிய
பாடசாலை முத்திரையைப் பயன்படுத்தக்கூடாது என்றும் மத்திய கல்வி அமைச்சு
உத்தரவிட்டது.</p><h2>

தடுத்து நிறுத்தப்பட்ட 650 பாடசாலைகளிள் சுவீகரிப்பு</h2><p>
2025 மே 23 அன்று நீதிமன்றத்தில் முன்னிலையான பிரதி சொலி சிட்டர் ஜெனரல், 

"குறிப்பிட்ட அமைச்சரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தத் தற்போது சட்டம் இல்லை” எனச் சட்டமா
அதிபர் தெரிவித்துள்ளதாக ஒப்புக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13a15261-4e90-410d-870d-a2e03e02a68e/26-6a733ac754349.webp' /></p><p>
</p><p>
ஏற்கனவே சுவீகரிக்கப்பட்ட பாடசாலைகள் தவிர வேறு எதனையும் சுவீகரிக்கும்
உத்தேசம் மத்திய அரசுக்கு இல்லை என்ற எழுத்து மூல உறுதிப்பாட்டையும் சட்டமா
அதிபர் நீதி மன்றத்துக்குச் சமர்ப்பித்தார். </p><p>

இதற்கமைய, வடக்கு மாகாண முன்னாள்
கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரனால் தாக்கல் செய்யப்பட்ட சட்டப்
போராட்டம் வெற்றி பெற்று முடிவுக்கு வந்துள்ளதுடன், நாடு தழுவிய ரீதியில்
கையகப்படுத்தப்படவிருந்த 650 பாடசாலைகளும் (வடக்கில் 48 பாடசாலைகள்) மத்திய
அரசால் பறிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T13:29:55+00:00</updated>
        </entry>
    </feed>
