<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-22T08:30:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்லேகம ஹேமரத்ன தேரரின் DNA பரிசோதனையில் புதிய திருப்பம்! அறையில் கிடைக்கப்பெற்ற பொருட்களால் அதிர்ச்சி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dna-evidence-emerges-in-anuradhapura-monk-case-1787384597"></link>
            <id>https://tamilwin.com/article/dna-evidence-emerges-in-anuradhapura-monk-case-1787384597</id>
            <summary type="text">அனுராதபுர முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள சிறுமி ஒருவரை துர்நடத்தைக்குட்படுத்தியதாக கூறப்படும் குற்றச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுர முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள சிறுமி ஒருவரை துர்நடத்தைக்குட்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், முக்கியமான விஞ்ஞான ஆதாரம் ஒன்று வெளியாகியுள்ளதாக தனியார் வலையொளியொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் இடத்தில் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பாயில் காணப்பட்ட உயிரியல் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவை பல்லேகம ஹேமரத்ன தேரரின் DNA மாதிரியுடன் பொருந்துவதாகத் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>சந்தேகநபரின் அறிக்கை</h2><p>
</p><p>
பாதிக்கப்பட்ட சிறுமி தனது முன்னைய வாக்குமூலத்தில், கூறப்பட்ட சில விடயங்களை குறித்த DNA பரிசோதனை முடிவு&nbsp; விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfb4a874-ddce-4722-b86b-a9f6c97dfff0/26-6a895d3005683.webp' /></p><p>
மேலும், சந்தேகநபரான தேரர் தங்கியிருந்த அறையின் குளியலறையில் இருந்து பெண்களுடையதாக சந்தேகிக்கப்படும் நீண்ட தலைமுடிகள் சிலவற்றையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்திருந்தனர்.
</p><p>
எனினும், அந்த தலைமுடிகள் பாதிக்கப்பட்ட சிறுமியுடையவை அல்ல என்பது DNA பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனால், பாதிக்கப்பட்ட சிறுமியைத் தவிர வேறு பெண்களும் அந்த இடத்திற்கு வந்திருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக குறித்த மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;DNA அறிக்கை</h2><p>

இந்த வழக்கு தொடர்பான முன்னைய அறிக்கைகளில், சிறுமியின் ஆடைகளில் எந்தவிதமான உயிரியல் மாதிரிகளும் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், தற்போது வெளியாகியுள்ளதாகக் கூறப்படும் இந்த DNA அறிக்கை வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் முக்கிய ஆதாரமாக அமையக்கூடும் என சட்டத்துறை நிபுணர்கள் கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d18fe0b-6832-4e61-a939-854198b9587e/26-6a895d30eccbc.webp' /></p><p>
</p><p>
இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களமும் தற்போது விசேட கவனம் செலுத்தி வருவதாகவும், வழக்கு எதிர்வரும் ஜனவரி 08ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், சந்தேகநபரான தேரர் நீதிமன்றத்திற்கு வரும் சந்தர்ப்பங்களில் கறுப்பு நிற கண்ணாடிகள் பொருத்தப்பட்ட வாகனங்களில் இரகசியமாக வருவது தொடர்பிலும் விசாரணை அறிக்கையொன்றை கோருமாறு அனுராதபுரம் நீதவான் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T08:29:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டிற்கு வந்த சிந்தாமணியுடன் விஜயாவிற்கு ஏற்பட்ட பயங்கர மோதல், பதற்றத்தில் குடும்பம்... சிறகடிக்க ஆசை புரொமோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/siragadikka-aasai-serial-august-23-promo-1787385232"></link>
            <id>https://cineulagam.com/article/siragadikka-aasai-serial-august-23-promo-1787385232</id>
            <summary type="text">சிறகடிக்க ஆசைசிறகடிக்க ஆசை சீரியலில் இப்போது கொண்டாட்டமான கதைக்களம் தான் செல்கிறது. அழுகையும், சண்டையும், பிரச்சனையுமாக முத்து-மீனா திருமணம் நடந்தது, ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சிறகடிக்க ஆசை</h2><p>சிறகடிக்க ஆசை சீரியலில் இப்போது கொண்டாட்டமான கதைக்களம் தான் செல்கிறது. </p><p>அழுகையும், சண்டையும், பிரச்சனையுமாக முத்து-மீனா திருமணம் நடந்தது, அதேபோல் ரவி-ஸ்ருதி திருமணம் ஒரு பதற்றத்துடன் யாருக்கும் தெரியாமல் கோவிலில் நடந்தது. </p><p>தற்போது ரசிகர்கள் கொண்டாடும் இந்த இரண்டு ஜோடிக்கு பெற்றோர்கள், உறவினர்கள் முன்னிலையில் படு ஜாலியாக திருமணம் நடக்க உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d519d08-a417-4682-a539-ead462f3a60b/26-6a895cf087dc6.webp' /></p><p> </p><p>அதற்கான கொண்டாட்டங்கள் கடந்த நேற்றில் இருந்தே எபிசோடில் காட்டப்பட்டு வருகிறது.
இன்றைய எபிசோடில், ஆட்டம்-பாட்டம் கொண்டாட்டம் என அனைவரும் இருக்க அதனை கெடுக்கும் வகையில் ஒருவர் என்ட்ரி கொடுக்கிறார். </p><p>வேறுயாரு சிந்தாமணி தான், அவர் தனது மகள்-மருமகனுடன் விஜயா வீட்டிற்கு வருகிறார். சிந்தாமணியை தனது வீட்டில் பார்த்ததும் விஜயா செம கோபப்படுகிறார், மீனாவையும் அவளை ஏன் அழைத்தாய் என திட்டுகிறார்.
பின் எபிசோட் ஜாலி மூடில் செல்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c36a42ff-6fb1-45cb-8a6e-ef6a5b493a5c/26-6a895cf168593.webp' /></p><h2>புரொமோ</h2><p>நாளைய எபிசோடின் புரொமோவில், ஸ்ருதி விஜயாவுடன் ஒருவர் நடனத்தில் போட்டிபோட இருக்கிறார் என கூறி சிந்தாமணியை காட்டுகிறார். </p><p>சிந்தாமணி Vs விஜயா நடன போட்டி நடக்கிறது, இதில் யார் ஜெயிக்கப்போகிறார், அடுத்து என்ன நடக்கும் என்பதை நாளைய எபிசோடில் காண்போம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ce3925d-b836-4098-83af-67f33a39be86/26-6a895cf234fb4.webp' /></p>]]></content>
            <updated>2026-08-22T08:25:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலையில் காயங்களுடன் மூதாட்டி சடலமாக மீட்பு; நடந்தது என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/elderly-woman-found-dead-with-head-injuries-1787387142"></link>
            <id>https://jvpnews.com/article/elderly-woman-found-dead-with-head-injuries-1787387142</id>
            <summary type="text">&amp;nbsp;இரத்தினபுரி - இறக்குவானை, கலஹிட்டிய பகுதியில் வீடொன்றிற்குள் மூதாட்டி ஒருவர் தலையில் காயங்களுடன் சலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இரத்தினபுரி - இறக்குவானை, கலஹிட்டிய பகுதியில் வீடொன்றிற்குள் மூதாட்டி ஒருவர் தலையில் காயங்களுடன் சலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணயை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>

பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துக் கிடப்பதாக இறக்குவானை பொலிஸ் நிலையத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை (21) கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bd1067e-dafb-404f-a174-da9f709a7e42/26-6a895d07c5bc8.webp' /></p><h2>&nbsp;கொலையாக இருக்கக்கூடும் எனச் சந்தேகம்</h2><p> 

உயிரிழந்தவர் கலஹிட்டிய பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய பெண் ஆவார்.

இப் பெண் தனது மகனுடன் கலஹிட்டிய பகுதியிலுள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார்.
</p><p>
இன்னிலையில் சம்பவ தினத்தன்று வேலைக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிய மகன், தாய் தலையில் பலத்த இரத்தக் காயங்களுடன் வீட்டின் உள்ளே இறந்துகிடப்பதைக் கண்டுள்ளார்.</p><p></p><p>

இச் சம்பவம் கொலையாக இருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்படுவதால், இது தொடர்பான நீதவான் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.</p><p>

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக இறக்குவானை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T08:23:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புஜி மலையில் 7 வயது மகனை தனியாக விட்டுச் சென்ற தந்தைக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/japan-dad-leaves-son-alone-on-mount-fuji-outrage-1787386381"></link>
            <id>https://news.lankasri.com/article/japan-dad-leaves-son-alone-on-mount-fuji-outrage-1787386381</id>
            <summary type="text">Japan dad leaves son alone on Mount Fuji outrage: ஜப்பானின் புகழ்பெற்ற ஃபுஜி மலையில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு மகன்களுடன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Japan dad leaves son alone on Mount Fuji outrage: ஜப்பானின் புகழ்பெற்ற ஃபுஜி மலையில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>

இரண்டு மகன்களுடன்</h2><p>48 வயதான ஒரு தந்தை, தனது இரண்டு மகன்களுடன் மவுண்ட் ஃபூஜி மலையை ஏறிச் சென்றார்.</p><p>

நடுவழியில், 7 வயது சிறுவன் சோர்வடைந்ததாக கூறியபோது, தந்தை அவரை மலையின் 2,490 மீட்டர் உயரத்தில் உள்ள ஆறாவது நிலையத்தில் தனியாக விட்டுவிட்டு, மூத்த மகனுடன் உச்சியை நோக்கி ஏறிச் சென்றார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24c81b56-9a06-4e27-a0b3-7bcf1536199f/26-6a895ba3ba0e1.webp' /></p><p>இந்த சம்பவம் காலை 7.30 மணியளவில் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுவன் தனியாக அமர்ந்திருந்ததை ஒரு மலை குடிசை பணியாளர் கவனித்துள்ளார். </p><p>மழை பெய்யத் தொடங்கியதால் சிறுவனை உள்ளே அழைத்து பாதுகாப்பாக பார்த்துக்கொண்டார். பின்னர், பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.</p><p></p><h2>தவறை ஒப்புக்கொண்ட&nbsp;தந்தை</h2><p>அதிகாரிகள் தந்தையை தொடர்புகொண்டு, குழந்தையை தனியாக விடுவது “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று எச்சரிக்கை வழங்கினர். </p><p>

தந்தை தனது செயலை “அவசர முடிவு” எனக் கூறி, தனது தவறை ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த சம்பவம் ஜப்பானிய சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பலர் தந்தையின் செயலை பொறுப்பற்ற செயல் என்றும் அதிர்ச்சிகரமான செயல் என்றும் விமர்சித்துள்ளனர்.
</p><p></p><p>அதிகாரிகள், மலையேற்றம் செய்யும் போது குழுவில் உள்ளவர்களின் உடல் நிலை மற்றும் சக்தியை கருத்தில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக, குழந்தைகள் உடன் இருப்பின், அவர்களின் திறனைப் பொருத்து பயணத்தை திட்டமிட வேண்டும் என்றும், ஒருவரையும் தனியாக விடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மவுண்ட் ஃபூஜி மலையில் வானிலை திடீரென மாறக்கூடியது. மழை, பனி, பனிமூட்டம் போன்றவை பார்வையை குறைத்து ஆபத்துகளை அதிகரிக்கக்கூடும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-22T08:17:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[CID காவலில் வேண்டாம்; ஜனாதிபதி அனுரவிடம் கெஞ்சும் சுரேஷ் சல்லே மனைவி !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cid-custody-suresh-salley-wife-request-president-1787386294"></link>
            <id>https://jvpnews.com/article/cid-custody-suresh-salley-wife-request-president-1787386294</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லேவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லேவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்பு காவலில் வைக்காமல் விளக்கமறியலில் வைக்குமாறு கோரி அவரது மனைவியான மனோரி சலே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். </p><p>

ஆகஸ்ட் 20ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தில், சல்லேவை நீதிமன்றக் கண்காணிப்பில் விளக்கமறியல் காவலுக்கு மாற்றி, அவருக்குத் தேவையான சிறப்பு மருத்துவ சிகிச்சையைத் தொடர்ந்து வழங்குமாறு அவரது மனைவி கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/caaa6003-f1b6-4159-94d4-0908ed96f2e7/26-6a8959b8018cd.webp' /></p><h2>&nbsp;விளக்கமறியலில் வைக்குமாறு கோரி&nbsp; கடிதம்</h2><p>

முன்னதாக, உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்த பின்னர், சல்லேவின் உடல்நிலை மோசமடைந்ததாகவும், ஜூன் 7ஆம் திகதி அவர் இலங்கை தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

பின்னர் ஜூன் 27ஆம் திகதியன்று இருதய சிகிச்சைப்பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார்.

தொடர்ந்த இருதயப் பிரச்சினைகள் காரணமாக அவருக்கு ஐஊனு எனப்படும் இதயக் கருவி பொருத்தப்பட்டதாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

இந்த சிகிச்சைக்குப் பின்னர் சல்லேவுக்கு தொடர்ச்சியான சிறப்பு மருத்துவக் கண்காணிப்பு அவசியம் என்றும், தேசிய மருத்துவமனையில் இருந்து மீண்டும் காவலுக்கு மாற்றுவது அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
</p><p>
எனவே, தற்போதைய தடுப்புக் காவல் உத்தரவை மாற்றி, விளக்கமறியல் காவலுக்கு அனுமதிக்குமாறும் சல்லேயின் மனைவி, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கோரியுள்ளார்.</p><p></p><p>
</p><p>
அத்துடன், சல்லே அல்லது அவரது குடும்பத்தினர் விசாரணைக்கு இடையூறு செய்யவோ தலையிடவோ மாட்டார்கள் என்றும், அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T08:08:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலி வாகனப் பதிவு ஆவணங்கள் தயாரித்து விற்பனை: 3 பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/arrest-selling-fake-documents-vehicle-registration-1787382513"></link>
            <id>https://ibctamil.com/article/arrest-selling-fake-documents-vehicle-registration-1787382513</id>
            <summary type="text">நாரஹேன்பிட்ட பகுதியில் வாகனப் பதிவிற்கான ஆவணங்களைப் போலியாகத் தயாரித்து விற்பனை செய்த குற்றத்தின் பேரில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p>நாரஹேன்பிட்ட பகுதியில் வாகனப் பதிவிற்கான ஆவணங்களைப் போலியாகத் தயாரித்து விற்பனை செய்த குற்றத்தின் பேரில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு அருகில் வாகனப் பதிவு தொடர்பான ஆவணங்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

கைது செய்யப்பட்டவர்கள் 39, 52 மற்றும் 56 வயதுடைய நாரஹேன்பிட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மூன்று நபர்கள் கைது</h2><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் லெட்டர்ஹெட்களைக் கொண்ட 2 வருமான உரிம விண்ணப்பப் படிவங்கள், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பெயரைக் கொண்ட போலி ரப்பர் முத்திரை மற்றும் அமைதி நீதியரசர் (JP) ஒருவரின் பெயரைக் கொண்ட போலி ரப்பர் முத்திரை போன்றவை காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0588fc82-28cc-4cf8-b7d6-dcc8fc215268/26-6a89567435fbb.webp' /></p><p>

மேலும், போலி சான்றிதழ்களைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட அடையாள அட்டையின் நிழற்படப் பிரதி , போலித் தயாரிப்பிற்காகப் பயன்படுத்தப்பட்ட லொறி ஒன்றின் வாகனப் பதிவுச் சான்றிதழ் பிரதி, சட்டத்தரணி ஒருவரின் விவரங்களைக் கொண்ட போலி ரப்பர் முத்திரை மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களக் கடிதப் பரிமாற்றங்களுக்குப் பயன்படுத்தப்படும் கோப்புத் தாள்கள் ஆகியவற்றையும் காவல்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.</p><p>சம்பவம் தொடர்பில் காவல்துறை அதிகாரிகள்&nbsp; மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T08:08:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கெஸ்பேவ பொலிஸாரால் சித்திரவதை செய்யப்பட்ட இளம் தம்பதியினர்!பெண்ணில் உடலில் போடப்பட்ட கரப்பான் பூச்சி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-lodges-complaint-with-hrcsl-against-police-1787385468"></link>
            <id>https://tamilwin.com/article/man-lodges-complaint-with-hrcsl-against-police-1787385468</id>
            <summary type="text">கெஸ்பேவ பொலிஸாரால் இளம் தம்பதியினருக்கு செய்த சித்திரவதை மற்றும் கொடுமைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 46 பக்கங்களை கொண்ட தீர்ப்பை வழங்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கெஸ்பேவ பொலிஸாரால் இளம் தம்பதியினருக்கு செய்த சித்திரவதை மற்றும் கொடுமைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 46 பக்கங்களை கொண்ட தீர்ப்பை வழங்கியுள்ளது.
</p><p>இவர்களை சட்டவிரோதமாகக் கைது செய்து சித்திரவதைக்கு உள்ளாக்கிய சம்பவம். 2023 ஆம் ஆண்டிலேயே நடந்துள்ளது.
சட்டத்தரணி தருஷ திஷாரா பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><p>தற்போது மனித உரிமைகள் ஆணைக்குழு அந்த முறைப்பாடு குறித்து விசாரணை நடத்தி தீர்ப்பை வழங்கியுள்ளது. அது 46 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பாகும்.குறித்த சம்பவத்தின் பின்னணி...</p><p></p><h2>கடைக்கு சென்ற போது நடந்த சம்பவம்</h2><p>களுபோவிலையில் வசிக்கும் குறித்த தம்பதியினர் கெஸ்பேவையில் உள்ள நண்பர்கள் வீட்டுக்கு சென்றிருந்த சமயத்தில் அதிகாலை வேளையில் இவர்களுக்குப் பசி ஏற்பட்டதால், இரவு கடைக்கு உணவு வாங்குவதற்காக இளைஞர் மட்டும் ஒரு சிறிய ஸ்கூட்டி மோட்டார் சைக்கிளில் செல்கின்றார்.</p><p>செல்லும்போது ஒரு பொலிஸ் ஜீப் வண்டி நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கின்றார். அந்த உணவகத்திற்கு அருகில் ஜீப்பில் இருந்தவர்கள் இவரை நிறுத்துகின்றனர். </p><p> "எங்கே செல்கிறீர்கள், எதற்காகச் செல்கிறீர்கள்?" என்று கேட்கின்றனர்.முதலில் அடையாள அட்டையைக் கேட்கின்றனர், இவர் அடையாள அட்டையைக் காட்டுகிறார். </p><p>அடையாள அட்டையில் தெஹிவளை முகவரி உள்ளது.
"இங்கு என்ன செய்கிறாய்?" எனக் கேட்க, இவர் விவரங்களைக் கூறுகிறார். </p><p>கூறிய பிறகு ஜீப்பில் ஏறுமாறு கூறி இவரை இழுக்க முயற்சித்த போது உணவகத்தில் சிசிடிவி (CCTV) கேமராக்கள் இருப்பதால் இவர் கடைக்குள் செல்கிறார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a479cf1-9130-437c-ad25-cfd5da35cbe9/26-6a89567e89bfe.webp' /></p><p>அதற்குப் பிறகு பொலிஸார் இவரைத் தாக்குகின்றனர்.
கழுத்தைப் பிடித்துத் தள்ளுகின்றனர்,பின்னர் வழுகட்டாயமாக கைவிலங்கிடுகின்றனர். </p><p>மேலும் ஜீப் வண்டியில் வைத்தும் இவரைத் தாக்குகின்றனர். தாக்கிவிட்டு ஒரு விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.
மைதானத்திற்கு அழைத்துச் சென்று அங்கும் தாக்குகின்றனர். </p><p>முகத்தில் அடிக்கின்றனர், மண்டியிட வைக்கின்றனர். மிகக் கொடூரமாக சித்திரவதை செய்கின்றனர். "நீ 'ஐஸ்' போதைப்பொருள் பயன்படுத்துகிறாய் அல்லவா?" எனக் கூறிப் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் சுமத்துகின்றனர்.
</p><h2>சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டு</h2><p>அதன் பிறகு இவரை வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர்.வீட்டிற்கு அழைத்துச் சென்று வீட்டில் உள்ளவர்களையும் மிரட்டி, சுற்றிலும் கிடந்த டொபி தாள்கள் மற்றும் அங்கிருந்த அட்டைப் பெட்டித் துண்டுகளைச் சேகரித்து, அவற்றை புகைப்படங்கள் எடுத்து, போதைப்பொருள் இருந்தது எனப் பொய் வழக்குப் போட்டு இவர்களைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.
</p><p>பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிறையில் அடைக்கின்றனர். பெண்ணை சிறையில் போடவில்லை.
பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பிறகு, இந்த இளைஞரின் சட்டையைக் கழற்றச் சொல்லித் தாக்கினர். </p><p>தாக்கிவிட்டு பொலிஸ் சிறையில் அடைத்தனர்.
மற்றவர்களை வெளியே உட்கார வைத்திருந்தனர். சிறிது நேரத்தின் பிறகு மனைவியின் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.அதன் பிறகு இரு அதிகாரிகள் இருந்த அறைக்கு அந்தப் பெண்ணை தனியாக வருமாறு கூறினர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bccc87c-9ed7-4d36-82ca-b2b2ccda1fd4/26-6a89567f3b080.webp' /></p><p>சிறிது நேரத்தில் அறையிலிருந்து அலறல் சத்தம் கேட்டது. அதைக் கேட்ட இளைஞர் கூண்டிற்குள்ளிருந்து, "பெண் பொலிஸ் அதிகாரிகள் யாரும் இல்லாமல், பொலிஸ் நிலையத்திற்குள் பெண்களை தனியறைக்கு அழைத்துச் சென்று என்ன செய்கிறீர்கள்?" என்று கத்திக் கேட்டுள்ளார். </p><p>ஏனெனில் அந்த நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் பெண் அதிகாரிகள் எவரும் இருக்கவில்லை.பின்னர் மனைவி அறையிலிருந்து வெளியே வந்ததும் "என்ன நடந்தது?" என்று கேட்டபோது, பொலிஸார் தன் உடலில் கரப்பான் பூச்சிகளை (Cockroach) போட்டதாக கூறினார்.</p><p>காலை வரை வைத்திருக்கிறார்கள், பிறகு 'ஐஸ்' போதைப்பொருள் வைத்திருந்ததாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிணை வழங்குகின்றனர்.அதன் பின்னரே இவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்கின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T07:59:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் கோடிக்கணக்கான தங்கம் மற்றும் பணம் கொள்ளை - ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபட்ட இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/massive-robbery-at-a-house-in-mount-lavinia-1787365110"></link>
            <id>https://tamilwin.com/article/massive-robbery-at-a-house-in-mount-lavinia-1787365110</id>
            <summary type="text">கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் பெருந்தொகை தங்கம் மற்றும் பணம் கொள்ளையிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பீரிஸ் வீதி பகுதியில் உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் பெருந்தொகை தங்கம் மற்றும் பணம் கொள்ளையிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

பீரிஸ் வீதி பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து, 2 கோடி 40 லட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பணம் மற்றும் தங்க நகைகளை திருடியதாக கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கடந்த 20ஆம் திகதி ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்க நகைகளின் ஒரு பகுதி மற்றும் 15,000 மில்லிகிராம் ஹெரோயினுடன் கல்கிஸ்ஸ தர்மபால வீதியில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><h2><b>

தங்கம், பணம் கொள்ளை</b></h2><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெஹிவளை, ஓபன் பகுதியில் வசிக்கும் 29 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>இவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2038685-6c18-4206-8504-74bcf123333c/26-6a890e72b315d.webp' />&nbsp;&nbsp;</p><p>சந்தேகநபர் திருடிய பணத்தில் சுமார் ஒரு கோடி ரூபாவை செலவிட்டு, 18 லட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான மோட்டார் சைக்கிள் ஒன்றையும், அப்பிள் ரக 3 கையடக்கத் தொலைபேசிகளையும், மற்றுமொரு கையடக்கத் தொலைபேசியையும் கொள்வனவு செய்துள்ளார்.</p><p>

மேலும், எஞ்சிய பணத்தில் ஒரு பகுதியை இரவு நேர கேளிக்கை விடுதிகளில் செலவிட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>கடந்த 18 ஆம் திகதி வீட்டில் வசிப்பவர்கள் தமது உறவினர் ஒருவரின் நெதிமால பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்குச்சென்றுள்ளனர்.</p><h3><b> பொலிஸில் முறைப்பாடு</b></h3><p>மறுநாள், 19ஆம் திகதி பீரிஸ் வீதியில் உள்ள தமது வீட்டிற்கு திரும்பி வந்தபோது, வீட்டிலிருந்த பொருட்கள் கலைக்கப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc7cc24b-6b42-46fc-bda3-4e1c948388a8/26-6a890e736b093.webp' /></p><p>இதனையடுத்து வீட்டை சோதனையிட்டபோது, மேல் மாடியில் அமைந்திருந்த ஜன்னல் ஒன்றை உடைத்து வீட்டுக்குள் திருடன் நுழைந்துள்ளார். ஒரு கோடி ரூபா பணத்தையும், ஒரு கோடி 40 லட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான அனைத்து தங்க நகைகளையும் திருடிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p> திருட்டில் ஈடுபட்ட நபர் அதே ஜன்னல் வழியாக தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, வீட்டின் உரிமையாளர்கள் உடனடியாக கல்கிஸ்ஸ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். </p><p>இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சுற்றுப்புறங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பிச்சென்ற சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளனர்.</p><p></p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T07:54:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவீடன் பாடசாலையில் பரபரப்பு சம்பவம்; ஒருவர் பலி மூவர் படுகாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/swedish-school-sword-attack-1787375495"></link>
            <id>https://canadamirror.com/article/swedish-school-sword-attack-1787375495</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மத்திய சுவீடனில் உள்ள பாடசாலை ஒன்றில் வாளுடன் புகுந்த 18 வயது இளைஞர் ஒருவர் நடத்திய வாள்வீச்சு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மத்திய சுவீடனில் உள்ள பாடசாலை ஒன்றில் வாளுடன் புகுந்த 18 வயது இளைஞர் ஒருவர் நடத்திய வாள்வீச்சு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>

ஃபேகர்ஸ்டா (Fagersta) நகரில் உள்ள பிரினெல் (Brinell High School) மேல்நிலைப் பாடசாலையில் வெள்ளிக்கிழமை (21) மதியம் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. 

 தாக்குதல் நடத்திய சந்தேக நபரைக் அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d7a2932-e1c0-498d-a819-477968f5ff12/26-6a892f88a1162.webp' /></p><h2>ஒருவர் பலி மூவர் படுகாயம்</h2><p> 

கோடைக்கால விடுமுறைக்குப் பிறகு பாடசாலை மீண்டும் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.

16 முதல் 20 வயதுடைய சுமார் 450 மாணவர்கள் பயிலும் அந்தப் படசாலைக்குள் புகுந்த 18 வயது இளைஞரை அந்நாட்டு பொலிஸார் துப்பாக்கியால் சுட்டுக் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
</p><p>
இந்தத் தாக்குதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 12 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

தாக்குதல் நடத்திய நபர் அப்பாடசாலையின் முன்னாள் மாணவர் என்றும், ஹெல்மெட் அணிந்து வாளுடன் பாடசாலைக்குள் நுழைந்த அவர் மீது ஏற்கனவே தாக்குதல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>

தாக்குதலுக்கான துல்லியமான காரணம் என்னவென்று அந்நாட்டு பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-22T07:54:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் தடைகள் ; பேரழிவுகரமாக இருக்கும் ; ஈரான் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-sanctions-would-be-catastrophic-iran-warns-1787379771"></link>
            <id>https://canadamirror.com/article/us-sanctions-would-be-catastrophic-iran-warns-1787379771</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரான் மீது வரலாற்றில் மிகக் கடுமையான நிதித் தடைகளை விதிக்கப்போவதாக வொஷிங்டன் உறுதியளித்துள்ள நிலையில், புதிய அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு அளிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரான் மீது வரலாற்றில் மிகக் கடுமையான நிதித் தடைகளை விதிக்கப்போவதாக வொஷிங்டன் உறுதியளித்துள்ள நிலையில், புதிய அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு அளிக்கப்படும் பதில் "பேரழிவுகரமாக" இருக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.</p><p>&nbsp; ஈரானுக்கு "எந்தவிதமான உயிர்நாடியையும்" வழங்கும் எந்தவொரு நாடும் பொருளாதார விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என டொனால்ட் டிரம்ப் எச்சரித்ததைத் தொடர்ந்து, திங்கட்கிழமை திட்டமிடப்பட்ட தடைகள் குறித்த விபரங்களை வெளியிடவுள்ளதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f5a771a-35c8-42f7-a8a1-fef3bd9249a1/26-6a89403cf062f.webp' /></p><h2>ஆயுதப் படைகள்&nbsp;பேரழிவுகரமான பதில்களை வழங்கும்</h2><p> 

ஈரானின் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அலி அப்தொல்லாஹி, இஸ்லாமியக் குடியரசின் எதிர்வினை விரிவானதாகவும் தீர்க்கமானதாகவும் இருக்கும் என்று கூறினார். </p><p>

"நிலம், கடல், வான், வான் பாதுகாப்பு மற்றும் இணையவெளி முழுவதும் தயார் நிலையில் உள்ள ஈரானின் ஆயுதப் படைகள், எதிரியின் புதிய அச்சுறுத்தல்களுக்கு நசுக்கும், தண்டிக்கும் மற்றும் பேரழிவுகரமான பதில்களை வழங்கும்" என்று அப்தொல்லாஹியை மேற்கோள் காட்டி ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>

அமெரிக்காவும் இஸ்ரேலும் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்பு தொடங்கிய போரில் இரு தரப்பினரும் இன்னும் வெற்றிபெறவில்லை என்றாலும், ஈரானியத் தலைவர்களும் டிரம்பும் வெற்றிகரமான மற்றும் அச்சுறுத்தலான அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். </p><p>

இந்தப் போர் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றதுடன், பிற வளைகுடா நாடுகளையும் ஈர்த்து உலகளாவிய எரிபொருள் விலையை உயர்த்தி வருகிறது.</p><p> 

அமெரிக்கத் தாக்குதல்கள் ஈரானின் பொருளாதாரத்தையும் அதன் வழக்கமான படைகளையும் கடுமையாகக் குறைத்துள்ளன, ஆயினும் ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் தாங்கி கப்பல் போக்குவரத்தைத் தடையின்றித் தடுக்கவும் பிராந்திய எதிரிகளைத் தாக்க ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் திறன்களைத் தெஹ்ரான் தொடர்ந்து தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-22T07:54:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமாக சன் டிவி சீரியல்களை பார்க்கும் ரசிகர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்... என்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/good-news-for-sun-tv-serial-fans-1787381679"></link>
            <id>https://cineulagam.com/article/good-news-for-sun-tv-serial-fans-1787381679</id>
            <summary type="text">சன் டிவிசன் டிவிக்கு ரசிகர்கள் வட்டாரம் பெரிதானதே சீரியல்கள் மூலமாக தான். தொலைக்காட்சி தொடங்கிய நாள் முதல் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது,...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சன் டிவி</h2><p>சன் டிவிக்கு ரசிகர்கள் வட்டாரம் பெரிதானதே சீரியல்கள் மூலமாக தான். </p><p>தொலைக்காட்சி தொடங்கிய நாள் முதல் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது, நிறைய சீரியல்கள் 1500 எபிசோடுகளை எல்லாம் தாண்டியுள்ளது. சில தொடர்கள் புதிய ரெக்கார்ட் எல்லாம் செய்துள்ளது. </p><p>அப்படி சீரியல்களுக்கு பெயர் போன சன் டிவி இப்போது புதிய விஷயங்த்தை துவங்கியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/508ac16c-4e8e-41d4-9689-065e0a252932/26-6a894d265479e.webp' /></p><h2>நியூ ஸ்டார்ட்</h2><p>
சன் டிவி நெட்வொர்க், சன் நெக்ஸ்ட் ஷார்ட்ஸ் என்ற புதிய மைக்ரோ-டிராமா சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. </p><p>இந்த சேவை, ஏற்கனவே உள்ள சன் நெக்ஸ்ட் செயலிக்குள்ளேயே ஒரு புதிய அம்சமாகச் செயல்படும். </p><p>இதன் மூலம், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்ப சின்ன சின்ன சுவாரஸ்யமான கதைகளை வழங்க முடிவு செய்துள்ளார்களாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8ae5abf-3546-48fe-9df0-4a229803691b/26-6a894d27343da.webp' /></p><p>
</p><p>குறுகிய நேரத்தில் பார்க்கக்கூடிய, விறுவிறுப்பான கதைகளை மையமாக வைத்து 'சன் நெக்ஸ்ட் ஷார்ட்ஸ்' உருவாக்கப்பட்டுள்ளது. </p><p>ஒரிஜினல் தொடர்கள், சர்வதேச மொழிகளிலிருந்து டப் செய்யப்பட்ட ஷார்ட்ஸ், பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் மற்றும் சன் டிவி-யின் பிரபலமான சீரியல்கள் எனப் பலவும் இடம்பெற்றுள்ளதாம்.</p>]]></content>
            <updated>2026-08-22T07:50:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கமில் பூரன் ருத்ரதாண்டவம்: நொறுங்கிய ஆந்த்ரே ரஸல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kamil-pooran-blast-81-runs-in-49-balls-cpl-t20-1787384897"></link>
            <id>https://news.lankasri.com/article/kamil-pooran-blast-81-runs-in-49-balls-cpl-t20-1787384897</id>
            <summary type="text">கரீபியன் டி20 போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி, ஜமைக்கா கிங்ஸ்மென் அணியை வீழ்த்தியது.

செயின்ட் லூசியாவில் நடந்த கரீபியன் பிரீமியர் லீக் போட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கரீபியன் டி20 போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி, ஜமைக்கா கிங்ஸ்மென் அணியை வீழ்த்தியது.
</p><p>
செயின்ட் லூசியாவில் நடந்த கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில், செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜமைக்கா கிங்ஸ்மெனை வீழ்த்தியது.&nbsp;</p><h2>கார்ட்டி 50 ஓட்டங்கள்</h2><p>
ஜமைக்கா கிங்ஸ்மென் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான கரீபியன் டி20 போட்டி நேற்று நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6307118-ff7d-48c0-9c69-6f751bbb8dae/26-6a8954432c68d.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய ஜமைக்கா கிங்ஸ்மென் 169 ஓட்டங்கள் குவித்தது. கேசி கார்ட்டி 50 ஓட்டங்கள் எடுத்தார். மேத்யூ ஃபோர்டே 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.&nbsp;</p><h2>கமில் பூரன்&nbsp;ருத்ரதாண்டவம்</h2><p>

பின்னர் ஆடிய செயின்ட் லூசியா கிங்ஸ் அணியில் கமில் பூரன் (Kamil Pooran) சிக்ஸர்களை பறக்கவிட்டார். </p><p>

பியனார் மற்றும் பூரனின் அதிரடி ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் 18.2 ஓவர்களில் 171 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.</p><p>

இறுதிவரை களத்தில் கமில் பூரன் 49 பந்துகளில் 81 ஓட்டங்கள் (5 சிக்ஸர், 6 பவுண்டரிகள்) விளாசினார். பியனார் 14 பந்துகளில் 34 ஓட்டங்கள் எடுத்தார்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35641432-0823-4fa3-9adf-496c1c6279ad/26-6a895443d1892.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T07:50:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எட்மண்டன் நகரில் குருத்வாராவில் தாக்குதல் நடத்திய நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/man-attacks-in-edmonton-gurdwara-2-injured-1787384860"></link>
            <id>https://canadamirror.com/article/man-attacks-in-edmonton-gurdwara-2-injured-1787384860</id>
            <summary type="text">Two injured in stabbing at Canada&#039;s Edmonton gurdwara: கனடாவில் குருத்வாராவுக்குள் ஒருவர் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

கனடாவின...</summary>
            <content type="html"><![CDATA[<p>Two injured in stabbing at Canada's Edmonton gurdwara: கனடாவில் குருத்வாராவுக்குள் ஒருவர் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.</p><p>

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாண தலைநகரான எட்மண்டன் நகரில் அமைந்துள்ள குருத்வாரா ஒன்றிற்குள் நுழைந்த ஒருவர் நடத்திய தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.
</p><p>
நேற்று அதிகாலை 5.00 மணியளவில், எட்மண்டன் நகரில் அமைந்துள்ள குருத்வாரா ஒன்றிற்குள் நுழைந்த ஒருவர் பிரார்த்தனை செய்யும் அறைக்குள் நுழைய முயன்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd036b62-ee72-465b-bc62-3b0581781f28/26-6a89541e20651.webp' /></p><p>
அவரை இரண்டு பேர் தடுக்க முயல, அவர் தன் கையில் வைத்திருந்த ஸ்குரூ டிரைவரால் அவர்களை தாக்கியுள்ளார்.
</p><p>
உடனடியாக மற்றவர்கள் அவர் மீது பாய்ந்து அவரைப் பிடித்து பொலிசார் வரும்வரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்திருக்கிறார்கள்.
</p><p>
காயமடைந்த 75 மற்றும் 51 வயதுடைய இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
</p><p>
இந்நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் அந்த நபரைக் கைது செய்துள்ளார்கள்.
</p><p>
விடயம் என்னவென்றால், ஏற்கனவே தாக்குதல் தொடர்பில் சிறையிலடைக்கப்பட்டிருந்த அந்த 27 வயது நபர், முன் தினம்தான், அதாவது, வியாழக்கிழமைதான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
அவர் எதற்காக அந்த குருத்வாராவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினார், இது இனவெறுப்புத் தாக்குதலா என்பது தெரியவில்லை.
</p><p>
பொலிசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், இந்த சம்பவம் சீக்கியர்களிடையே அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The attack at the Nanaksar Gurdwara in Edmonton this morning is appalling. My thoughts are with the two people who were injured and the wider community that is shaken by this terrible event.<br><br>No one should ever feel unsafe in their place of worship. I want to thank the Edmonton…</p>&mdash; Mark Carney (@MarkJCarney) <a href="https://x.com/MarkJCarney/status/2090932007358652484?ref_src=twsrc%5Etfw">August 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இந்நிலையில், அந்த குருத்வாரா தாக்குதல் குறித்து அறிந்த பிரதமர் மார்க் கார்னி, காயமடைந்தவர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T07:47:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டுபாயில் சுற்றித்திரியும் ஷிரான் பாசிக்கின் தொடர்புடைய நெருக்கமான பெண்..! அழைப்பினால் அடுத்தடுத்து சிக்கவுள்ள பலர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiran-basik-support-activities-arrest-4-people-1787369055"></link>
            <id>https://tamilwin.com/article/shiran-basik-support-activities-arrest-4-people-1787369055</id>
            <summary type="text">டுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு&amp;nbsp;கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பிரிவின் காவலில் உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு&nbsp;கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பிரிவின் காவலில் உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் அம்பலமாகியுள்ளன.</p><p>

கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பிரிவின் காவலில் தற்போது உள்ள ஷிரான் பாசிக் வெளிப்படுத்திய தகவலின்படி, அவரது போதைப்பொருள் கடத்தல் வணிக நடவடிக்கைகளுக்கு உதவிவரும் நான்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சந்தேகநபர்களும் அடுத்த சில நாட்களில் பொலிஸ் காவலில் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>டுபாய் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவல்</h2><p>
</p><p>
இந்த சந்தேகநபர்களில் தற்போது டுபாயில் உள்ள ஒரு பெண்ணும் அடங்குவதாக&nbsp;கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0be7a6bd-5742-4319-aeb3-299ea79089e8/26-6a893cc424f5c.webp' /></p><p>

குறித்த பெண் போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் நெருங்கிய தோழி என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
இந்த பெண் குறித்து டுபாய் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
</p><p>
இதற்கிடையில், பாசிக்கின் சொத்துக்களுக்கு பொறுப்பாளராக உள்ள அவருக்கு நெருக்கமான ஒருவரையும் கைது செய்ய பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும், அவர் தனது வசிப்பிடத்தை விட்டு வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.</p><p>

இதற்கிடையில், பாசிக் பயன்படுத்திய தொலைப்பேசி எண்களின் அடிப்படையில், அவருடன் தொடர்புடைய பல நபர்கள் குறித்த தகவல்களை பொலிஸ் புலனாய்வுக்குழுக்கள் பெற்று வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T07:47:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிட சர்வதேச இராஜதந்திரிகளுக்கு அனுமதி மறுப்பு : சிறீதரன் எம்.பி குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/permission-international-diplomats-visit-chemmani-1787381654"></link>
            <id>https://ibctamil.com/article/permission-international-diplomats-visit-chemmani-1787381654</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழி பகுதிக்கு செல்வதற்கு சர்வதேச இராஜதந்திரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் இது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழி பகுதிக்கு செல்வதற்கு சர்வதேச இராஜதந்திரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் இது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.</p><p>செம்மணி மனிதப்புதைகுழிக்கு செல்வதற்கு ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவுக்கு அனுமதியளித்த அரசாங்கம் கனடா உயர்ஸ்தானிகருக்கும், அவரது குழுவினருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் அவுஸ்ரேலியா நாட்டுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.</p><p>நாடாளுமன்றத்தில் நேற்று (21) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>சோமரத்ன ராஜபக்ச தெரிவிப்பு&nbsp;</h2><p>அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணியை அண்மித்த பகுதியிலும் ஆட்கள் அடித்து கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்டுள்ளார்கள் என்று மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ee79933-faea-4f5e-81cd-497ed9294a0e/26-6a894ffc22ffd.webp' /></p><p>சோமரத்ன ராஜபக்சவை செம்மணிக்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்கு எவ்வித நடவடிக்கைகளும் இதுவரையில் முன்னெடுக்கவில்லை. அரசாங்கம் இந்த விடயத்தில் பின்வாங்குகிறது.&nbsp;</p><p>செம்மணியில் மனித பேரவலம் நடந்துள்ளது. பலர் அடித்து கொல்லப்பட்டுள்ளார்கள். கூட்டாக புதைக்கப்பட்டுள்ளார்கள். சிறுவர்களின் எலும்புகூடுகளும் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் 12 வயதுக்குட்பட்டவர்கள் என்று அறியப்படுகிறது. இவர்கள் என்ன செய்தார்கள். ஆயுதம் ஏந்திப் போராடினார்களா, ஏன் அவர்கள் மோசமாக அடித்துக் கொல்லப்பட்டார்கள்.</p><p></p><h2>அகழ்வுப் பணிகள்</h2><p>செம்மணி மனிதப் புதைக்குழியின் அகழ்வுப் பணிகள் 110 நாட்களுடன் நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் காணப்பட்டால் அரசாங்கம் நீதிமன்ற உத்தரவுடன் நிதி ஒதுக்க வேண்டும். </p><p>அரசாங்கத்திடம் நிதி இல்லையாயின் இந்தியா, அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளுடன கலந்துரையாடி அரசாங்கம் நிதி கோர வேண்டும். தென்னாபிரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் ஒத்துழைப்பை பெற்று, பணிகளை தொடர்ந்து அரசாங்கம் உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcab0c2a-4194-407e-b048-fc6e59daa422/26-6a89504f1d017.webp' /></p><p>செம்மணி மனிதப்புதை குழி விவகாரத்தில் அரசாங்கம் இதயச்சுத்தியுடன் வெளிப்படையாக செயற்பட வேண்டும். அரசாங்கம் மந்தகரமாகவே செயற்படுகிறது. செம்மணி மனித புதைகுழியின் மதிலை தாண்டிய பகுதிகளிலும் மனித எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியம் காணப்படுகிறது. </p><p>நீதிமன்ற உத்தரவுடன் சோமரத்ன ராஜபக்சவை செம்மணிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு அவர் காண்பிக்கும் இடங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். உண்மையை வெளிக்கொண்டு வர அரசாங்கம் நீதியுடன் அணுக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்“ என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T07:40:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் குருத்வாராவுக்குள் தாக்குதல் நடத்திய நபர் கைது: அதிர்ச்சிப் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-arrested-in-edmonton-gurdwara-attack-1787384382"></link>
            <id>https://news.lankasri.com/article/man-arrested-in-edmonton-gurdwara-attack-1787384382</id>
            <summary type="text">Two injured in stabbing at Canada&#039;s Edmonton gurdwara: கனடாவில் குருத்வாராவுக்குள் ஒருவர் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

கனடாவின...</summary>
            <content type="html"><![CDATA[<p>Two injured in stabbing at Canada's Edmonton gurdwara: கனடாவில் குருத்வாராவுக்குள் ஒருவர் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.</p><p>

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாண தலைநகரான எட்மண்டன் நகரில் அமைந்துள்ள குருத்வாரா ஒன்றிற்குள் நுழைந்த ஒருவர் நடத்திய தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.
</p><h3>
அதிர்ச்சிப் பின்னணி
</h3><p>
நேற்று அதிகாலை 5.00 மணியளவில், எட்மண்டன் நகரில் அமைந்துள்ள குருத்வாரா ஒன்றிற்குள் நுழைந்த ஒருவர் பிரார்த்தனை செய்யும் அறைக்குள் நுழைய முயன்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2257b669-c920-4b1d-9011-c0d1466db3fc/26-6a89523fe4ad2.webp' /></p><p>
அவரை இரண்டு பேர் தடுக்க முயல, அவர் தன் கையில் வைத்திருந்த ஸ்குரூ டிரைவரால் அவர்களை தாக்கியுள்ளார்.
</p><p>
உடனடியாக மற்றவர்கள் அவர் மீது பாய்ந்து அவரைப் பிடித்து பொலிசார் வரும்வரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்திருக்கிறார்கள்.
</p><p>
காயமடைந்த 75 மற்றும் 51 வயதுடைய இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் அந்த நபரைக் கைது செய்துள்ளார்கள்.
</p><p>
விடயம் என்னவென்றால், ஏற்கனவே தாக்குதல் தொடர்பில் சிறையிலடைக்கப்பட்டிருந்த அந்த 27 வயது நபர், முன் தினம்தான், அதாவது, வியாழக்கிழமைதான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
அவர் எதற்காக அந்த குருத்வாராவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினார், இது இனவெறுப்புத் தாக்குதலா என்பது தெரியவில்லை.
</p><p>
பொலிசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், இந்த சம்பவம் சீக்கியர்களிடையே அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The attack at the Nanaksar Gurdwara in Edmonton this morning is appalling. My thoughts are with the two people who were injured and the wider community that is shaken by this terrible event.<br><br>No one should ever feel unsafe in their place of worship. I want to thank the Edmonton…</p>&mdash; Mark Carney (@MarkJCarney) <a href="https://x.com/MarkJCarney/status/2090932007358652484?ref_src=twsrc%5Etfw">August 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
இந்நிலையில், அந்த குருத்வாரா தாக்குதல் குறித்து அறிந்த பிரதமர் மார்க் கார்னி, காயமடைந்தவர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T07:40:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[41 வயதிலும் இளமை மாறாத நயன்தாரா.. வெள்ளை சேலையில் அசத்தல் லுக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/nayanthara-new-trendy-look-in-white-saree-viral-1787382894"></link>
            <id>https://manithan.com/article/nayanthara-new-trendy-look-in-white-saree-viral-1787382894</id>
            <summary type="text">nayanthara new look: நடிகை நயன்தாரா வெள்ளை நிற சேலையில் செம கியூட் போஸ் கொடுத்து அதற்போது வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>nayanthara new look: நடிகை நயன்தாரா வெள்ளை நிற சேலையில் செம கியூட் போஸ் கொடுத்து அதற்போது வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. </p><p>வழக்கம்போல் தனது அழகாலும் ஸ்டைலாலும் ரசிகர்களை கவர்ந்துள்ள நயன்தாராவின் இந்த புகைப்படங்கள் வெளியான வேகத்திலேயே லைக்குகளை அள்ளி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3ca6231-fdca-41c0-9e08-08434b60e7f2/26-6a8951aa6f165.webp' /></p><h2> நயன்தாரா</h2><p>
‘லேடி சூப்பர்ஸ்டார்’ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நயன்தாரா, இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக தொடர்ந்து தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருகிறார். </p><p>திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாக வெற்றிகரமாக பயணித்து வரும் அவர், இன்றும் இளம் நடிகைகளுக்கு இணையாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/462ea189-83d9-4761-b9fb-ad805d31db96/26-6a8951abdcc27.webp' /></p><p>
</p><p>
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் தனது நடிப்புத் திறமையை நிரூபித்த நயன்தாரா, தற்போது பாலிவுட்டிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
</p><p>
இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ திரைப்படம் மூலம் ஹிந்தி சினிமாவில் அறிமுகமான நயன்தாரா, முதல் படத்திலேயே பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/732f560e-3057-47b3-aa1b-b83c6a9a42ba/26-6a8951ac8fd67.webp' /></p><p></p><p> </p><p>உலகளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்த அந்த திரைப்படம், நயன்தாராவின் பாலிவுட் பயணத்திற்கும் வலுவான தொடக்கமாக அமைந்தது.
</p><p>தனது நீண்டகால காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட நயன்தாரா, தற்போது குடும்ப வாழ்க்கையையும் திரைப்பயணத்தையும் அழகாக சமநிலைப்படுத்தி வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0efd4bad-7688-4cd3-ba34-de95c4e628fd/26-6a8951ad438db.webp' /></p><p>
</p><p>
வாடகைத் தாய் முறையின் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்களான இந்த தம்பதியினர், அவ்வப்போது தங்களது குடும்ப புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
</p><p>
திரைப்படப் பணிகளில் பிஸியாக இருந்தாலும், தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் செலவிடும் நேரத்திற்கு நயன்தாரா எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aed102a3-83c6-41b1-acea-548499d72504/26-6a8951adebb91.webp' /></p><p>இந்த நிலையில், 41 வயதிலும் தனது இளமைத் தோற்றத்தையும் அழகையும் கம்பீரமான ஸ்டைலையும் தக்கவைத்துள்ள நயன்தாரா, சமீபத்திய புரமோஷன் நிகழ்வில் அணிந்திருந்த வெள்ளை நிற சேலையில் அசத்தலான போட்டோஷூட் நடத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cfaa16d-9507-4ee7-994d-9dc4fbe4aa69/26-6a8951ab2f882.webp' /></p><p></p><p>குறித்த புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில வெளியிட்டுள்ள நிலையில், நயன்தாராவின் எளிமையான அதே நேரத்தில் கவர்ச்சியான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.நயன்தாரா&nbsp; மற்றும் கவின் நடிப்பில்&nbsp; Hi ஆகஸ்ட் 28, 2026 அன்று வெளியாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DcUN5oPk74D/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DcUN5oPk74D/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DcUN5oPk74D/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by N A Y A N T H A R A (@nayanthara)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T07:37:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வறட்சியால் சடுதியாகக் குறையும் வவுனிக்குள நீர்மட்டம் – அடுத்த போக நெற்செய்கைக்கு நெருக்கடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drought-causes-vavunikulam-water-level-drop-1787382889"></link>
            <id>https://tamilwin.com/article/drought-causes-vavunikulam-water-level-drop-1787382889</id>
            <summary type="text">நிலவும் கடுமையான வறட்சி மற்றும் மழையின்மை காரணமாக வவுனிக்குளத்தின் நீர்மட்டம் சடுதியாகக் குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

26 அடி கொள்ளளவைக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலவும் கடுமையான வறட்சி மற்றும் மழையின்மை காரணமாக வவுனிக்குளத்தின் நீர்மட்டம் சடுதியாகக் குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
26 அடி கொள்ளளவைக் கொண்ட வவுனிக்குளத்தின் நீர்மட்டம், தற்போதைய வறட்சி மற்றும் அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக தொடர்ச்சியாகக் குறைந்து வருகிறது.</p><h2>விவசாயிகள் கவலை</h2><p>

சிறுபோக நெற்செய்கை நடவடிக்கைகள் நிறைவடையும் தருவாயில் உள்ள போதிலும், இன்னும் சில பகுதிகளில் அறுவடை நடவடிக்கைகள் நிறைவடையவில்லை.
</p><p>
இதேவேளை, மழையின்மை மற்றும் அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக அடுத்த போக நெற்செய்கையையும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படக்கூடும் என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7245554e-12fd-40a4-8c6a-8a883c63f3a7/26-6a89502a9b7e8.webp' /></p><p>
</p><p>
கடந்த வருடம் ஏற்பட்ட டிட்வா புயலின் தாக்கத்தால் பெய்த கனமழை காரணமாக வவுனிக்குளத்தின் நீர்மட்டம் அதன் முழுக் கொள்ளளவையும் எட்டியிருந்தது.</p><p>

இதனடிப்படையில், இந்த வருட சிறுபோக பயிர்ச்செய்கைக்காக 5,500 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தது.
</p><p>
வழமையாக கடந்த வருடங்களில் 4,000 முதல் 4,500 ஏக்கர் வரையிலான நிலப்பரப்பிலேயே நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்த வருடம் ஆரம்பத்தில் 5,060 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது.</p><h2>நெற்செய்கை</h2><p>
</p><p>
சிறுபோக விதைப்பு காலத்தில் வவுனிக்குளத்தின் நீர்க் கொள்ளளவு மேலும் அதிகரித்ததையடுத்து, மேலதிகமாக 460 ஏக்கர் நிலப்பரப்பிலும் நெற்செய்கை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
</p><p>
இதனடிப்படையில், வவுனிக்குளத்தின் முழு விதைப்பு இலக்கான 6,600 ஏக்கர் நிலப்பரப்பிலும் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b79f74f8-b6e0-4afe-8e54-c4e920f62c1e/26-6a89502b7246b.webp' /></p><p>
</p><p>
தற்போது சிறுபோக அறுவடை நடவடிக்கைகள் நிறைவடையும் நிலையில், குளத்தின் நீர்மட்டம் வழமையாக 10 முதல் 12 அடியாகக் காணப்பட வேண்டும்.

எனினும், தற்போதைய வறட்சி மற்றும் அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக, வவுனிக்குளத்தின் நீர்மட்டம் தற்போது 7 அடியாகக் குறைந்துள்ளது.</p><p>

சிறுபோக அறுவடை நடவடிக்கைகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்குள் நிலவும் வெப்பநிலை மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக வவுனிக்குளத்தின் நீர்மட்டம் சுமார் 5 அடி 5 அங்குலமாகக் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வவுனிக்குளத்தின் நீர்ப்பாசன பொறியியலாளர் இந்திரமோகன் சுனோஜ் தெரிவித்துள்ளார்.</p><p>

இதனால், அடுத்த போக நெற்செய்கையை மேற்கொள்வது தொடர்பில் விவசாயிகள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T07:31:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தை பிறந்தப்பின் எல்லாமே தெரிந்தது!! முன்னாள் கணவர் பற்றி நடிகை கங்கனா ஓபன்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/kangna-sharma-reveals-marriage-secret-husband-past-1787384533"></link>
            <id>https://viduppu.com/article/kangna-sharma-reveals-marriage-secret-husband-past-1787384533</id>
            <summary type="text">கங்கனா சர்மாபாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கங்கனா சர்மா, தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்து பேட்டியொன்றில் பகிர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கங்கனா சர்மா</h2><p>பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கங்கனா சர்மா, தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்து பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். குறிப்பாக தான் திருமணம் செய்துகொண்ட நபர் குறித்து உண்மையான ரூபத்தை தாமதமாக தெரிந்துகொண்டது குறித்தும் பேசியுளளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f5a9649-a947-4369-9ca4-94701338f7c3/26-6a8952d7603db.webp' /></p><p>அதில், கடந்த 2019ல் யோகேஷ் என்பவரை சந்தித்தபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. யோகேஷ் வெளிநாடுகளிலுள்ள ஆன்மீகத் தலங்களுக்கு தன்னை அழைத்துச் சென்றார். ஆரம்பத்தில் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் தனக்கு இல்லை. ஒரு தீவில் வைத்து யோகேஷ் என்னிடம் காதலை வெளிப்படுத்தியப்பின் அவரை திருமணம் செய்துகொண்டேன். </p><p>திருமண வாழ்க்கை தொடங்கிய சில மாதங்களில் ஒரு அதிர்ச்சியை தான் சந்தித்தேன். திருமணமாகி சுமார் இரண்டரை மாதங்களில் தான் கர்ப்பமானதாகவும், அந்த காலக்கட்டத்தில் யோகேஷ் தன்னை தன்னுடைய தாயார் வீட்டில் கொண்டு சென்றுவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac609ada-0caf-40c0-81fd-8013f858792d/26-6a8952d814cf2.webp' /></p><p> </p><p>பின் கங்கனாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தை பிறந்தப்பின் தான் தன்னுடைய கணவர் குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் தெரிந்தது. தனக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டபோது யோகேஷுக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்தது என்று பிரசவத்திற்கு பின் தான் தெரிந்து கொண்டேன்.</p><h2>முதல் மனைவி</h2><p> அதன்பின் அவர் தன் முதல் மனைவியை விவாகரத்து செய்தார் அதுமட்டுமில்லாமல், யோகேஷுக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு இருந்ததது, அதன்பின் தான் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து இறுதியில் யோகேஷிடமிருந்து விவாகரத்து பெற்றதாகவும் கங்கனா தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1082c76-6fee-48e1-806a-1c0c21a75a42/26-6a8952d8ba954.webp' /></p><p> </p><p>மேலும், திருமணமும், கர்ப்பமும் தன்னுடைய வாழ்க்கையின் மிகவும் மோசமான காலகட்டமாக இருந்தாலும் அதுவே தன்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்ததாக கங்கனா சர்மா தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-22T07:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[64 ஓட்டங்களில் சுருண்ட வங்கதேசம் - தடுமாறும் அவுஸ்திரேலியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bangladesh-all-out-in-64-runs-vs-aus-in-2nd-test-1787383330"></link>
            <id>https://news.lankasri.com/article/bangladesh-all-out-in-64-runs-vs-aus-in-2nd-test-1787383330</id>
            <summary type="text">2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேசத்தை 64 ஓட்டங்களில் அவுஸ்திரேலியா சுருட்டியுள்ளது. 

64 ஓட்டங்களில் சுருண்ட வங்கதேசம்

அவுஸ்திரேலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேசத்தை 64 ஓட்டங்களில் அவுஸ்திரேலியா சுருட்டியுள்ளது. </p><h3>

64 ஓட்டங்களில் சுருண்ட வங்கதேசம்</h3><p>

அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ள வங்கதேச அணி 2 போட்டிகளில் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. </p><p>

முதல் டெஸ்ட்டில் வங்கதேச அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அதிர்ச்சி அளித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90d39e8f-bf1d-42ea-85a1-747d02b3e8ba/26-6a894e249b43c.webp' /></p><p>
2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸை ஆட தொடங்கிய வங்கதேசம், 64 ஓட்டங்களில் ஆல் அவுட்.ஆனது.&nbsp;</p><p></p><p>

வங்கதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஷோரிஃபுல் இஸ்லாம் 14 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91294ce5-b157-4400-be85-53f5cb6efbee/26-6a894e23ecf47.webp' /></p><p>

அவுஸ்திரேலியா தரப்பில் மிச்சேல் ஸ்டார்க், 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். </p><p>

இதனை தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை ஆட தொடங்கிய அவுஸ்திரேலியா 151 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட்களை இழந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3caa8825-d4a3-4ec2-a421-caa036abe921/26-6a894e254c876.webp' /></p><p>
வங்கதேசம் தரப்பில் ஷோரிஃபுல் இஸ்லாம் 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T07:22:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை முறிவு: வரிவிதிப்பு மூலம் பதிலடி கொடுக்க திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-halts-us-trade-talks-1787380532"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-halts-us-trade-talks-1787380532</id>
            <summary type="text">Canada halts us trade talks: அமெரிக்கா - கனடா இடையே வர்த்தக பேச்சுவார்த்தைகள் முறிவை சந்தித்துள்ளன.அமெரிக்கா- கனடா பேச்சுவார்த்தை முறிவு
அமெரிக்காவுட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada halts us trade talks: அமெரிக்கா - கனடா இடையே வர்த்தக பேச்சுவார்த்தைகள் முறிவை சந்தித்துள்ளன.</p><h2>அமெரிக்கா- கனடா பேச்சுவார்த்தை முறிவு</h2><p>
அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கனேடிய பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.</p><p>கடுமையான வரி விதிப்பு கெடு முடிவடைவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த முடிவை கனடா அரசு எடுத்துள்ளது.</p><p> அமெரிக்காவின் தரப்பில் கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட சில திருத்தங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்று கனடா தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/737e3fa5-2256-423d-ae96-95996d48b1b2/26-6a8943367f941.webp' /></p><p> அமெரிக்காவின் தரப்பில் இருந்து மாற்றப்பட்ட இந்த நிபந்தனைகள் பொருளாதார ரீதியில் சாத்தியமற்றது மற்றும் நியாயமற்றது என்றும் எந்தவொரு ஒப்பந்தத்தின் மீதான நம்பகத்தன்மையையும் இது கேள்விக்குள்ளாக்கும் என்று கனடா பிரதமர் கார்னி கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p> ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றங்கள் கனடாவின் நோக்கங்களை நிறைவேற்ற முடியாததாக மாற்றிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.</p><h2> 50% வரி விதிப்பு</h2><p>
அமெரிக்கா - கனடா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் முடங்கியதை தொடர்ந்து கிட்டத்தட்ட 28 பில்லியன் டொலர் மதிப்பிலான கனேடிய பொருட்கள் மீது 50% வரி விதிப்பை அமெரிக்கா விதித்துள்ளது.</p><p> உள்ளூர் வணிகங்கள் மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்கும் நோக்கில் அமெரிக்கா விதித்த வரிகளுக்கு சமமான வரியானது விதிக்கப்பட்டு பதிலடி கொடுக்கப்படும் என்று கனேடிய பிரதமர் மார்க் கார்னி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T07:21:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெலென்ஸ்கியின் சொந்த ஊர் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்: 16 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/deadly-drone-strike-in-central-ukraine-16-dead-1787383269"></link>
            <id>https://news.lankasri.com/article/deadly-drone-strike-in-central-ukraine-16-dead-1787383269</id>
            <summary type="text">Deadly drone strike in central ukraine 16 dead: உக்ரைனின் மையப்பகுதியில் ஷாப்பிங் வளாகத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 16 பேர் வரை கொல்லப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Deadly drone strike in central ukraine 16 dead: உக்ரைனின் மையப்பகுதியில் ஷாப்பிங் வளாகத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 16 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதல்</h2><p>
வெள்ளிக்கிழமை உக்ரைனின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஷாப்பிங் வளாகத்தின் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 16 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 130 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.</p><p> உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரான க்ரிவி ரிஹ்(Kryvyi Rih) நகரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதை உக்ரைனிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49421645-bfe1-4dd4-aa0d-8b180debd820/26-6a894de6cd154.webp' /></p><p> இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களில் 22 பேர் குழந்தைகள் என அப்பகுதி ஆளுநர் ஒலெக்சாண்டர் ஹன்ஷா தகவல் தெரிவித்துள்ளார்.</p><p> மேலும் காயமடைந்தவர்களில் 5 குழந்தைகள் உட்பட 29 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 2 குழந்தைகள் உட்பட 9 பேர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை மீட்கும் பணியில் அவசர கால மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-22T07:21:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்று பிரசித்தி பெற்ற செல்வச்சந்நிதி ஆலயத்தில் வெற்றிலை மென்றவர்களுக்கு நடந்த சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fines-chewing-betel-leaves-selvachannithi-temple-1787373655"></link>
            <id>https://jvpnews.com/article/fines-chewing-betel-leaves-selvachannithi-temple-1787373655</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தடையை மீறி வெற்றிலை மென்றவாறு நடமாடிய ஐவருக்கு ஐம்பதாயிரம் ரூபா தண்டப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தடையை மீறி வெற்றிலை மென்றவாறு நடமாடிய ஐவருக்கு ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p> 

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் வருடாந்த மகோற்சவம் நடைபெற்றுவரும் சூழ்நிலையில், ஆலயத்தின் சுற்றுப்புறச்சூழலை வல்வெட்டித்துறை நகரசபையினர் சுகாதாரமாகப் பேணிவருவதுடன், ஆலய சுற்றுப்புறமானது புகையிலை அற்ற மண்டலமாகச் சுகாதாரத் தரப்பினரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/396ff764-1cbe-4f3c-a2f7-1a3e8b22f528/26-6a892d7679156.webp' /></p><h2>&nbsp;50,000 ரூபா தண்டப்பணம்</h2><p> 

குறித்த மண்டலத்தில் புகையிலை சார் பொருட்கள் விற்பனை செய்வதும் பயன்படுத்துவதும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. </p><p>

இந்நிலையில், குறித்த பகுதியில் வெற்றிலை மென்ற வண்ணம் ஆலய சுற்றுப்புறத்தில் காணப்பட்ட ஐந்து பேருக்கு எதிராக, கடந்த 2026.08.20 வியாழக்கிழமை அன்று வல்வெட்டித்துறை நகரசபையின் பொதுச்சுகாதாரப் பரிசோதகரான ப. தினேஸினால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.</p><p></p><p> 

குறித்த வழக்கானது அன்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சம்பந்தப்பட்டவர்கள் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில், தலா 10,000 ரூபா வீதம் மொத்தம் 50,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T07:20:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்ஸிடியஸ்: அவுட் ஆஃப் தி ஃபர்தர் - திரை விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/insidious-out-of-the-further-movie-review-1787382623"></link>
            <id>https://cineulagam.com/article/insidious-out-of-the-further-movie-review-1787382623</id>
            <summary type="text">ஹாலிவுட் ஹாரர் படங்களில் மிரள வைக்கும் இன்ஸிடியஸ் சீரிஸின் அடுத்த படமான &#039;இன்ஸிடியஸ்: அவுட் ஆப் தி ஃபர்தர்&#039; எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.கத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹாலிவுட் ஹாரர் படங்களில் மிரள வைக்கும் இன்ஸிடியஸ் சீரிஸின் அடுத்த படமான 'இன்ஸிடியஸ்: அவுட் ஆப் தி ஃபர்தர்' எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/415c8086-0ecf-48ed-af41-3d8cd4332b71/26-6a894b627fd47.webp' /></p><h2>கதைக்களம் </h2><p>

தனது தாய் தன் கண்ணே முன்னேயே தற்கொலை செய்துகொண்டதைப் பார்த்த ஜெம்மா, அவரது நினைவுகளை சுமக்கும் வகையில் பொருட்களை சேகரித்து வைத்துள்ளார். 

பல் மருத்துவரான ஜெம்மா, தனது மகள் மாயாவுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். </p><p>சல்லிவன்ஸ் என்ற வயதான அண்டை வீட்டு தம்பதியினர் ஜெம்மாவுடன் நட்பு ரீதியில் உள்ளனர். 

தன் பாட்டியைப் பற்றி மாயா மேலும் தெரிந்துகொள்ளக் கூடாது என்று ஜெம்மா முற்பட, ஒருநாள் அவருக்கு தாய் உதவி கேட்பது போல் கனவு வருகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21bb9455-adf6-4233-bffa-afbda566c63b/26-6a894bf3bf4db.webp' /></p><p>அதே சமயம் வயதான மூன்று பேர் காலை வேளையில் விசித்திரமாக பெட்டிகளுடன் நடந்து செல்வதை ஜெம்மா காண்கிறார்.

அவர்கள் ஜெம்மாவின் கனவில் வந்து பயமுறுத்த, அவருக்கு நிஜ உலகில் ஒரு பொருள் கிடைக்கிறது. 

பின்னர் அந்த மூவரில் ஒரு முதியவர் ஜெம்மாவின் மருத்துவமனைக்கு அவரிடமே சிகிச்சைக்காக வருகிறார். </p><p>

அவரை பரிசோதிக்கும்போது திகிலான ஒரு நிகழ்வு நடக்க ஜெம்மா பயத்தில் உறைந்துபோகிறார். 

பிறகு ஒரு ஆன்மா மூலம் அவருக்கு தன்னைப் பற்றிய ஒரு விஷயம் தெரிய வருகிறது.

அதன் பின்னர் அந்த மூவர் யார்? தன்னை கனவில் தொந்தரவு செய்யும் நபருக்கு என்ன வேண்டும்? அதனை எப்படி ஜெம்மா முறியடித்தார்? என்பதே மீதிக்கதை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df78cf58-10fd-41bf-879f-189e05fe177b/26-6a894bf4af964.webp' /></p><h2>படம் பற்றிய அலசல்</h2><p> 

இன்ஸிடியஸ்: தி ரெட் டோர் படத்தின் தொடர்ச்சியாக இந்த இன்ஸிடியஸ்: அவுட் ஆப் தி ஃபர்தர் திரைப்படத்தை ஜேக்கப் சேஸ் என்பவர் இயக்கியுள்ளார்.

இன்ஸிடியஸ் திரைப்படங்களுக்கே உரித்தான திகிலான காட்சிகள் ஆங்காங்கே நம்மை பயமுறுத்த முதல்பாதி நகர்கிறது.
</p><p>
ஒரு கட்டத்தில் ஹீரோயினுக்கு ஒரு சக்தி இருக்கிறது என்று தெரிந்த பின்னர் திரைக்கதை வேகமெடுக்கிறது.

சில முடிச்சுகள் அவிழும் காட்சிகள் சுவாரஸ்யமாக உள்ளது. குறிப்பாக எதற்காக இதெல்லாம் நடக்கின்றன என்ற விஷயம் தெரிய வரும் காட்சி மிரள வைக்கிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0117c2b-233c-463f-89f5-ca99255d1084/26-6a894bf564fd9.webp' /></p><p></p><p>கிளைமேக்ஸில் ஹீரோயின் செய்யும் ஒரு விஷயம் அட என்று வியக்க வைக்கிறது. முதல் பாதியில் ஹீரோயின் பயமுறுத்தப்படும் காட்சிகள் அடுத்தடுத்து வருவது பொறுமையை சோதிக்கின்றன.
</p><p>
ஜெம்மாவாக எமிலியா ஈவ் அட்டகாசமாக நடித்துள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் நேர்த்தியான நடிப்பதை தந்துள்ளார். 

அவரது மகளாக நடித்திருக்கும் ஐலேண்ட் ஆஸ்டினும் சிறப்பான நடித்துள்ளார். ஏனைய நடிகர்கள் தங்கள் பங்களிப்பை சரியான முறையில் தந்துள்ளனர். 

படத்தின் திரைக்கதை வலுசேர்ப்பது பின்னணி இசைதான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0480bd7-b62e-4d55-b8f8-75d0689c9dc8/26-6a894bf617e73.webp' /></p><p> அந்த பணியை ஜோஸப் பிஷாரா மிகச்சிறப்பாக செய்துள்ளார். 

படத்தொகுப்பாளர் கிரேகோரி, முதல் பாதியில் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். டேவ் கார்பெட்டின் ஒளிப்பதிவு அருமை.</p><p><b><u>க்ளாப்ஸ் </u></b></p><p>
 
எமிலியா ஈவின் நடிப்பு </p><p>

முடிச்சுகள் அவிழும் காட்சிகள்</p><p> 

கிளைமேக்ஸ் </p><p>

திகில் மொமெண்ட்ஸ்</p><p><b><u> 

பல்ப்ஸ்</u></b></p><p> 

முதல் பாதியின் கனவு காட்சிகள் திரும்ப திரும்ப வருவது</p><h5><b>

மொத்தத்தில் திகில் பட விரும்பிகளை ஈர்க்கும் வகையில் இன்ஸிடியஸ்: அவுட் ஆப் தி ஃபர்தர் அமைந்துள்ளது. திரையரங்கில் ரசிக்கலாம்.</b></h5><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fc12f13-a06b-4cc2-920c-afcab9feba67/26-6a894b61c82e9.webp' /></p>]]></content>
            <updated>2026-08-22T07:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சென்னையை உலுக்கிய பயங்கரம் ; பெண்ணை துண்டாக்கி பிரியாணி சமைத்த கொடுமை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-couple-chennai-woman-brutal-murder-cooked-1787381322"></link>
            <id>https://jvpnews.com/article/young-couple-chennai-woman-brutal-murder-cooked-1787381322</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சென்னையில் பெண்ணை துண்டாக்கி பிரியாணி சமைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொடூர கொலைகார ஜோடியை போலீசார் தேடி வருவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;சென்னையில் பெண்ணை துண்டாக்கி பிரியாணி சமைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொடூர கொலைகார ஜோடியை போலீசார் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, 

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன் இருந்த ஒரு சிவப்பு நிற சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a8e23e5-05b9-41c3-8c16-33af23cf7690/26-6a89464b9aec3.webp' /></p><h2> சிவப்பு நிற சூட்கேஸ் - பெண்ணின்&nbsp; &nbsp;உடல் பாகங்கள்</h2><p> </p><p>அதனுள் ஒரு பெண்ணின் தலை மற்றும் கை கால்கள் மற்றும் உடல் பாகங்கள் கிடந்தன.

 
இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது கண்ணாடி அணிந்த ஒரு இளம் பெண்ணும், குறுந்தாடி வைத்திருந்த ஒரு வாலிபரும் அந்த சிவப்பு நிற சூட்கேசை எடுத்து வந்தது பதிவாகியிருந்தது.</p><p></p><p> </p><p>

அந்த ஜோடி சென்ட்ரல் ஸ்டேசனுக்கு வந்து ஆக்ராவுக்கு செல்லும் ரயில் ஏறி அந்த பெட்டியை வைத்துவிட்டு உடனே இறங்கிவிட்டனர்.</p><p> அதன்பின் கூடுவாஞ்சேரி நோக்கி சென்ற மின்சார ரயில் பயணித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது

300க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ததில் அவர்கள் இருவரும் ஆட்டோவில் கூடுவாஞ்சேரி மசூதி பகுதிக்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவழியாக
அவர்களின் வீட்டை போலீசார் கண்டறிந்து சென்று பார்த்தபோது வெளியே பூட்டப்பட்டிருந்தது</p><p></p><p>.

பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போதுதான் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ஒரு பெண் கொலை செய்யப்பட்டு உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு தடங்களை மறைப்பதற்காக பிரியாணி செய்யும் பெரிய பாத்திரத்தில் போட்டு மைதா மாவு, காய்கறிளை சேர்த்து சமைக்கவும் முயற்சி செய்திருக்கிறார்கள். </p><p>

எஞ்சிய உடல் பாகத்தைத்தான் அவர்கள் சூட்கேசில் வைத்து ரயிலில் வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு அந்த பெண்ணின் தலை இதுவரை கிடைக்கவில்லை.

போலீசாரின் விசாரனையில், கண்ணாடி அணிந்த அந்த பெண்ணின் பெயர் பகவதி பாஜி எனவும், அந்த இளைஞரின் பெயர் மாணிக் லஸ்கர் என்பது தெரியவந்தது.</p><p></p><p> அதோடு, கடந்த 10 நாட்களாக அவர்களுடன் அதே வீட்டில் ஹைதுல் நிஷா என்கிற பெண்ணும் தங்கியிருந்தது தெரிய வந்தது. அவருடன் சண்டை வந்ததால் பகவதி பாஜி மற்றும் மாணிக் லஷ்கர் இருவரும் சேர்ந்து ஹைதுல் நிஷாவை கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.
 

இந்த அளவுக்கு கொடூரமாக கண்டதுண்டமாக வெட்டி பிரியாணி சமைத்த இருவரையும் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். </p><p>தற்போது அவர்கள் ஒடிசாவில் இருப்பதாக தகவல் கிடைத்தநிலையில் இருவரையும் தேடி தனிப்படை போலீசார் ஒடிசா சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-22T07:18:45+00:00</updated>
        </entry>
    </feed>
