<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-02T03:51:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வசமாக சிக்கிய கௌதம்.. கவிதாவுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி - திருமாங்கல்யம் இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/thirumangalyam-serial-today-episode-1788320999"></link>
            <id>https://viduppu.com/article/thirumangalyam-serial-today-episode-1788320999</id>
            <summary type="text">தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் திருமாங்கல்யம். இது சீர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் திருமாங்கல்யம். இது சீரியலின் நேற்றைய எபிசோடில் கௌதம் மீது மகாவிற்கு சந்தேகம் வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.</p><p>அதாவது மகா சந்தேகத்துடன் இரவோடு இரவாக ஆபீஸ்க்கு வந்து எரிந்த ஆதாரங்களை தேடி எடுக்க கௌதம் தான் அத்தனையும் செய்தது என்பதை உறுதி செய்து கொள்கிறாள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f83c1a32-32c9-4758-bc68-6d6ca55fff4d/26-6a979cead6094.webp' /></p><p>உடனே திவ்யாவுக்கு போன் போட்டு வர வைத்து அவளிடம் விஷயங்கள் அனைத்தையும் சொல்கிறாள். அடுத்த நாள் காலையில் கௌதம் மற்றும் கவிதா என இருவரும் ஆஃபீஸ்க்கு சீக்கிரமாக வந்து மகாவும் திருவும் ஒன்றாக இருக்கும் வீடியோவை பரப்ப திட்டமிடுகின்றனர். </p><p>
மகா ஆபீஸ்க்கு வர கவிதா இவ எதுக்கு இவ்வளவு சீக்கிரம் வந்து இருக்கா என சந்தேகம் கொள்கிறாள். பின்னாடியே கொஞ்ச நேரத்தில் திரும்பவும் ஆபீஸ் வர கவிதாவின் சந்தேகம் மேலும் அதிகமாகிறது. பின்னாடியே திவ்யாவும் வருகிறாள்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfd70307-cb25-4a57-8dbb-ae3c77568d3b/26-6a979ceb9087c.webp' /></p><p>திருவை சந்தித்த திவ்யா எல்லாத்தையும் செய்தது இந்த ஆபீஸில் வேலை செய்யும் வினோத் ( கௌதம் ) என்ற விஷயங்களை ஆதாரத்துடன் சொல்ல திரு கெளதம் இருக்கும் இடத்திற்கு வந்து லேப்டாப்பை கொடு என்று சொல்ல கௌதம் கொடுக்க மறுக்கிறான். திவ்யா அவனை மரியாதை இல்லாமல் பேசி லேப்டாப்பை பிடுங்கி கொடுக்க இது அதில் இருக்கும் வீடியோக்களை பார்த்து அதிர்ச்சி அடைந்து இவன்தான் எல்லாவற்றையும் செய்தது என்பதை உறுதி செய்கிறான். </p><p>
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய திருமாங்கல்யம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T03:50:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 வயது மாணவியை தடுத்து வைத்து பாலியல் வன்கொடுமை ; இரண்டு பிள்ளைகளின் தந்தை கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/15-year-old-student-detained-sexually-assaulted-1788320888"></link>
            <id>https://jvpnews.com/article/15-year-old-student-detained-sexually-assaulted-1788320888</id>
            <summary type="text">காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் 29 வயதுடைய இரண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>

தலவாக்கலை பகுதியில் உள்ள தமிழ் பாடசாலையில் 10ஆம் தரத்தில் கல்வி பயிலும் குறித்த சிறுமியின் தாய் வெளிநாட்டில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பொலிஸ் விசாரணைகளின்படி, சிறுமி தனது பாட்டியுடன் கதிர்காமத்திற்கு பயணம் செய்துகொண்டிருந்தபோது பேருந்தில் சந்தேகநபரை சந்தித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c178b16-832d-48fb-b26e-19bbb9f00c0c/26-6a979c79a2cfc.webp' /></p><p> இதனையடுத்து இருவருக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
</p><p>
பின்னர், சந்தேகநபர் சிறுமியை தலவாக்கலை நகரத்திற்கு அழைத்துச் சென்று, திம்புல பகுதியில் உள்ள குயிங்கிரி தோட்டத்தில் தனக்குச் சொந்தமான பாழடைந்த வீடொன்றிற்கு அழைத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
</p><p>
அங்கு சிறுமியை இரண்டு நாட்கள் தடுத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், தனது மகள் வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளதாக சிறுமியின் தந்தை தலவாக்கலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
</p><p>
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், தலைமறைவாக இருந்ததாகக் கூறப்படும் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
</p><p>
இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுமி நன்னடத்தையின் அடிப்படையில் அவரது அத்தையின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். </p><p>சந்தேகநபர் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T03:48:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[Hi படம் 5 நாட்களில் உலகம் முழுவதும் செய்துள்ள வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/hi-movie-5-days-box-office-collection-1788318779"></link>
            <id>https://cineulagam.com/article/hi-movie-5-days-box-office-collection-1788318779</id>
            <summary type="text">ஹாய்&amp;nbsp;ஹாய் நயன்தாரா, கவின் நடிப்பில் விஷ்ணு இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம். இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

இதை தொ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஹாய்&nbsp;</h2><p>ஹாய் நயன்தாரா, கவின் நடிப்பில் விஷ்ணு இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம். இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39a7d1f5-8f01-40c3-817f-2c8c7ab56c53/26-6a97943e9b8dd.webp' /></p><p> 

இதை தொடர்ந்து இப்படம் முதல் 3 நாட்கள் நல்ல வசூல் வர வார நாட்களிலும் டீசண்டான வசூல் வந்துகொண்டு தான் உள்ளதாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad7ebe4c-d007-4d64-96c4-856998d1b82d/26-6a97943f58d8b.webp' /></p><p></p><h2>வசூல்&nbsp;</h2><p> 

இந்நிலையில் ஹாய் படம் வெளிவந்த 5 நாட்களில் ரூ. 9 கோடி வரை <a href="https://www.youtube.com/watch?v=yf7OvE6Vi1w" target="_blank">வசூல் </a>செய்துள்ளதாக கூறப்படுகிறது. கண்டிப்பாக இந்த படம் கவின், நயன்தாராவுக்கு வெற்றி படமாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e38b931-918c-45bf-bef8-fe9d9eec9ea1/26-6a97944012bcb.webp' /></p><p>மேலும் கவின், நயன்தாரா இருவருமே இப்படத்திற்காக மிகப்பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்தனர்; அந்த ப்ரோமோஷன் வீண்போகவில்லை என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-02T03:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவிய சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/suspect-arrested-aiding-abetting-shooting-incident-1788319501"></link>
            <id>https://jvpnews.com/article/suspect-arrested-aiding-abetting-shooting-incident-1788319501</id>
            <summary type="text">துப்பாக்கிச் சூடு நடத்தி, கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவின...</summary>
            <content type="html"><![CDATA[<p>துப்பாக்கிச் சூடு நடத்தி, கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><p></p><p>கங்கொடவில பகுதியில் வைத்து குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் சந்தேகநபர் நேற்று (01) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கங்கொடவில, நுகேகொட பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவராவார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49d43669-935e-46ed-80fa-fc697f6a2509/26-6a97970eb0ff6.webp' /></p><p>கடந்த ஆகஸ்ட் 17 ஆம் திகதி அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மலவியாகந்த வீதிப் பகுதியில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பலத்த காயத்தை ஏற்படுத்திய சம்பவத்திற்கு இச்சந்தேகநபர் உதவி புரிந்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p>

சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம் கிடைத்த தகவலுக்கு அமைய, குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று சந்தேகநபரின் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

வெளிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரால் இக்குற்றச்செயல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

குறித்த மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த போலி இலக்கத் தகடுகள், கடந்த ஜூலை 19ஆம் திகதி தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள மயானத்தில் வைத்து நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்ய முயன்ற சம்பவத்திற்கும், ஜூலை 21ஆம் திகதி கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவின் விகாரை வீதியில் உள்ள வீடொன்றிற்குச் சென்று துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தித் தாக்கிய சம்பவத்திற்கும் சந்தேகநபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்களில் பொருத்தப்பட்டிருந்தவை என்பதும் தெரியவந்துள்ளது.</p><p> 

சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T03:25:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கு பதற்றம் ; உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/middle-east-tensions-crude-oil-prices-rise-again-1788318858"></link>
            <id>https://canadamirror.com/article/middle-east-tensions-crude-oil-prices-rise-again-1788318858</id>
            <summary type="text">2026 ஜூன் 8 ஆம் திகதிக்குப் பின்னர் முதன்முறையாக பிரென்ட் கச்சா எண்ணெய் பெரல் ஒன்றுக்கு 96 அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது.இன்று காலை நிலவரப்படி பிரென்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஜூன் 8 ஆம் திகதிக்குப் பின்னர் முதன்முறையாக பிரென்ட் கச்சா எண்ணெய் பெரல் ஒன்றுக்கு 96 அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது.</p><p>இன்று காலை நிலவரப்படி பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 2.19% உயர்ந்து, பெரல் ஒன்றுக்கு $ 96.13 டொலரை எட்டியுள்ளது. </p><p>

இது முந்தைய விலை விட 1.96% அதிகமாகும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a774c17d-b6ad-4237-9f68-ba0131a8dba8/26-6a97948bb5b5c.webp' /></p><p>மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் பதற்றம், ஹோர்முஸ் ஜலசந்தி வழியிலான கப்பல் போக்குவரத்தில் ஏற்படும் தடைகள் மற்றும் பாரசீக வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் விநியோகம் குறைதல் ஆகியவற்றின் காரணமாக, நடப்பு ஆண்டின் நான்காவது காலாண்டில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பெரல் ஒன்றுக்கு 120 டொலரைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> 

அதேவேளை, உக்ரைன் மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகளில் நிலவும் மோதல்கள், உலகளாவிய பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருள் சந்தையில் பேரழிவு அபாயத்தை அதிகரித்து வருவதாக ரொய்ட்டர் செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-02T03:14:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் தொழிலதிபரின் வீட்டில் திடீரென உயிரிழந்த அழகுக்கலை பயிற்றுவிப்பாளர்! பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspicious-death-of-famous-model-sula-pathmendra-1788312817"></link>
            <id>https://tamilwin.com/article/suspicious-death-of-famous-model-sula-pathmendra-1788312817</id>
            <summary type="text">&amp;nbsp;கொழும்பு - பிலியந்தல பகுதியில் உள்ள தொழிலதிபருக்கு சொந்தமான வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பிரபல அழகுக்கலை பயிற்றுவிப்பாளர் சூலா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கொழும்பு - பிலியந்தல பகுதியில் உள்ள தொழிலதிபருக்கு சொந்தமான வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பிரபல அழகுக்கலை பயிற்றுவிப்பாளர் சூலாபத்மேந்திர குமாரபத்திரனவின் பிரேத பரிசோதனையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

சூலாபத்மேந்திரவின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>உடல் பாகங்களை அரசாங்க ஆய்வாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை&nbsp;</h2><p>
</p><p>
பிரேத பரிசோதனையின் போது அவரது உடலில் வெளிப்புற அல்லது உள் காயங்கள் எதுவும் காணப்படவில்லை என்று பொலிஸ் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c721d6c-d400-4d7e-a2f9-4e9cf9c7c71f/26-6a9793974ba40.webp' />&nbsp;</p><p>

இந்நிலையில், மேலதிக விசாரணைக்காக உடல் பாகங்களை அரசாங்க ஆய்வாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
45 வயதான சூலாபத்மேந்திர பிலியந்தல, தும்போவிலவில் உள்ள ஒரு தொழிலதிபருக்கு சொந்தமான வீட்டில், 31 ஆம் திகதியன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த தொழிலதிபருடன் அவர் காதல் உறவில் இருந்ததாகவும், 30 ஆம் திகதி பத்தரமுல்லையில் அவர் ஏற்பாடு செய்திருந்த விருந்தை தொடர்ந்து, 31 ஆம் திகதி அதிகாலை பிலியந்தலவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
இதன்பின்னர் அங்கு அறையில் உறங்கச்சென்ற நிலையில், மதியம் சுமார் 12.45 மணியளவில் அவரை எழுப்ப முயன்றபோதும், அவர் பதிலளிக்காததால் 1990 ஆம்புலன்ஸ் அவசர சேவை வரவழைக்கப்பட்டுள்ளது.</p><h2>மரணம் தொடர்பாக இரண்டு முறைப்பாடுகள்&nbsp;</h2><p>
</p><p>
இதன்போது மேற்கொண்ட பரிசோதனையில் அவர் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>
இதற்கிடையில், சம்பந்தப்பட்ட தொழிலதிபர் மற்றும் உயிரிழந்தவரின் தாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
</p><p>
அதன்படி, மரணம் தொடர்பாக இரண்டு முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bc1f987-f062-44f4-856c-2d58d0b6c5cc/26-6a97939803488.webp' /></p><p>
</p><p>
கேஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் விபரங்களை தெரிவித்த பின்னர், பதில் நீதவான் சம்பவ இடத்தையும் உடலையும் ஆய்வு செய்துள்ளார்.
</p><p>
இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில், களுபோவில போதனா வைத்தியசாலையில் நீதித்துறை மருத்துவ அதிகாரியினால் பிரேதப்பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
பிலியந்தல பொலிஸ் பொறுப்பாசிரியர் பிரதம ஆய்வாளர் சமிந்த குலசிங்கவின் அறிவுறுத்தல்களின் பேரில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.&nbsp; </p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T03:10:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் மற்றும் தங்க நகைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/four-men-robbed-about-6-crore-rupees-1788318414"></link>
            <id>https://jvpnews.com/article/four-men-robbed-about-6-crore-rupees-1788318414</id>
            <summary type="text">கொழும்பு தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள ஒரு பயண முகவர் நிலையத்திற்கு வந்த 4 பேர், அங்கிருந்த பணம் மற்றும் தங்கப் பொருட்களைக் கொள்ளை அடித்து தப்பிச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள ஒரு பயண முகவர் நிலையத்திற்கு வந்த 4 பேர், அங்கிருந்த பணம் மற்றும் தங்கப் பொருட்களைக் கொள்ளை அடித்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> </p><h3>

முதற்கட்ட விசாரணை</h3><p>கொள்ளையர்கள் அங்கிருந்த சுமார் 6 கோடி பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46b4eec2-727c-4d83-903f-6c6e0659b422/26-6a9792d07067a.webp' /></p><p> 

தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள இந்த முகவர் நிலையத்திற்கு கொள்ளையர்கள் நேற்று (01) பிற்பகல் மோட்டார் வாகனத்தில் வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p>

சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் ஆரம்பித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T03:07:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கழிவறைக்குள் பிறந்த குழந்தை - தப்பியோட முயன்ற இளம் தாய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/baby-found-in-a-toilet-1788315544"></link>
            <id>https://tamilwin.com/article/baby-found-in-a-toilet-1788315544</id>
            <summary type="text">
கேகாலை, கரவனெல்ல பொதுப் பேருந்து நிலையத்தின் பெண்கள் கழிவறையில், குழந்தை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தையை கைவிட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கேகாலை, கரவனெல்ல பொதுப் பேருந்து நிலையத்தின் பெண்கள் கழிவறையில், குழந்தை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>

புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தையை கைவிட்டுச் செல்ல முயற்சித்ததாக கூறப்படும் 30 வயதுடைய பெண் நேற்று நண்பகல் பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த பெண்ணினால் அந்த குழந்தை நேற்றைய தினம் பிரசவிக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது.</p><h2><b>கழிவறைக்குள் பிறந்த குழந்தை</b></h2><p>

பிரசவித்த பச்சிளம் குழந்தையை கழிவறையிலிருந்த நீர்த் தொட்டிக்குள் வைத்துவிட்டு செல்ல அந்த பெண் முயன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eef86d06-4d73-4b7c-a549-785aa107dead/26-6a978c2aa3c5c.webp' /></p><p>சம்பவத்தை கண்ட பொதுமக்கள் அந்தப் பெண்ணைப் பிடித்து, பின்னர் அவரையும் குழந்தையும் கரவனெல்ல ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
குழந்தை நல்ல உடல் நலத்தில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-09-02T03:04:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தந்தை செல்வாவின் தூபியை இடித்த விசமிகள் - சி்.வி.கே.சிவஞானம் கடும் சீற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cvk-condemns-demolition-of-father-selva-monument-1788312917"></link>
            <id>https://ibctamil.com/article/cvk-condemns-demolition-of-father-selva-monument-1788312917</id>
            <summary type="text">யாழ். தெல்லிப்பளையில், வல்லை - அராலி வீதியில் இருக்கும் தென் இந்தியத் திருச்சபை இடுகாட்டில் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் நினைவுத் தூபியை அடையாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். தெல்லிப்பளையில், வல்லை - அராலி வீதியில் இருக்கும் தென் இந்தியத் திருச்சபை இடுகாட்டில் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் நினைவுத் தூபியை அடையாளந்தெரியாதோர் இடித்துச் சேதமாக்கியுள்ளனர்.</p><p>இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் தூபி உடைப்பைத் தாம் வன்மையாகக் கண்டிக்கின்றார் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் சி்.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.</p><p>ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">கைது செய்ய நடவடிக்கை</span></p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், "தெல்லிப்பளைப் பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் நினைவுத் தூபி அடையாளந் தெரியாத விஷமிகளால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது.&nbsp; தமிழரசுக் கட்சியைத் தற்போது விமர்சிப்பவர்கள் கூட பெரியவரின் செயலை விமர்சிப்பது கிடையாது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f869bf7a-89e7-415b-ada0-bbf61c9c3617/26-6a978730db372.webp' /></p><p>அத்தகையவரின் தூபியை உடைக்கும் இந்த வன்மச் செயலை மேற்கொண்டமையைத் தமிழரசுக் கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது.</p><p>அரசியல் வேறுபாடுகள் அல்லது முரண்பாடுகள் அரசியலில் இயல்பானவை. இருந்தபோதும் ஒரு நினைவுத் தூபியை இடிக்கும் அளவுக்கு அது இட்டுச் செல்வது ஏற்றுக்கொள்ள முடியாத காரியம் என்பதோடு இந்தச் செயல் அனைவர் நெஞ்சிலும் மற்றுமோர் இடியாகவே அமைகின்றது.
</p><p>
எனவே, இது தொடர்பில் எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கின்றோம். இந்தச் செயலைப் புரிந்த விஷமிகளைக் கைது செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T03:01:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் மற்றும் நகைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rs-65-million-gold-stolen-travel-agency-robbery-1788315727"></link>
            <id>https://ibctamil.com/article/rs-65-million-gold-stolen-travel-agency-robbery-1788315727</id>
            <summary type="text">பயண முகவர் நிலையத்திற்கு வந்த 4 பேர் அங்கிருந்த பணம் மற்றும் தங்கப் பொருட்களைக் கொள்ளை அடித்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த சம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயண முகவர் நிலையத்திற்கு வந்த 4 பேர் அங்கிருந்த பணம் மற்றும் தங்கப் பொருட்களைக் கொள்ளை அடித்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>குறித்த சம்பவம்&nbsp;நேற்று (01) பிற்பகல் கொழும்பு தலவத்துகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

கொள்ளையர்கள் அங்கிருந்த சுமார் 6 கோடி பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7e47a9f-d006-4519-b09b-d635dd010c96/26-6a97917924cea.webp' /></p><p>தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள இந்த முகவர் நிலையத்திற்கு கொள்ளையர்கள் நேற்று (01) பிற்பகல் மோட்டார் வாகனத்தில் வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p> 

சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக தலங்கம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T03:01:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் டாக்சிக் திரைப்படம் செய்துள்ள வசூல்.. முழு விவரம் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/toxic-movie-7days-worldwide-box-office-collection-1788317888"></link>
            <id>https://cineulagam.com/article/toxic-movie-7days-worldwide-box-office-collection-1788317888</id>
            <summary type="text">யஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான டாக்சிக் திரைப்படம் 7 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>யஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான டாக்சிக் திரைப்படம் 7 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><p>
</p><h2>
நடிகர் யஷ்
</h2><p>
கன்னட திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த நடிகர் <a href="https://www.youtube.com/watch?v=8k-Kqg5UUq8" target="_blank">யஷ்</a>, கே.ஜி.எப் திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். இதன்பின், வெளியான கே.ஜி.எப் 2 திரைப்படம் யஷை பான்-இந்தியன் ஸ்டாராக மாற்றியது. கன்னட திரையுலகில் இருந்து ரூ. 1000 கோடி வசூல் செய்த முதல் ஹீரோ என்கிற சாதனையையும் யஷ் படைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51766018-fa50-4429-8b62-22f5b99998c8/26-6a9790c434a40.webp' /></p><p> </p><h2>

டாக்சிக்
</h2><p>
கே.ஜி.எப் 2 வெற்றியை தொடர்ந்து யஷ் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி கடந்த வாரம் வெளியான திரைப்படம் டாக்சிக். கே.வி.என் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க, இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். ருக்மிணி வசந்த், கியாரா அத்வானி, நயன்தாரா, தாரா சுதாரியா மற்றும் ஹுமா குரேஷி என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bd870f9-f0c0-4bfc-ae28-9d686bc8f5c0/26-6a9790c4e398e.webp' /></p><p>இப்படத்தின் டீசர் வெளிவந்த நாளிலிருந்தே பல சர்ச்சைகள் எழுந்தன. டிரைலர் வெளியான பிறகு பெண்களை மிகவும் மோசமாக இப்படம் காட்டியுள்ளது என பலரும் இப்படத்திற்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர். சர்ச்சைகளும் கண்டனங்களும் ஒரு பக்கம் இருந்தாலும், இப்படத்தை திரையரங்கில் காண வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbdf32c7-c02e-4cb4-9214-9cd4e5f53cf0/26-6a9790c379057.webp' /></p><p>அப்படி எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் முழுமையாக பூர்த்தி செய்யாமல் ஏமாற்றியது டாக்சிக். கடந்த வாரம் வெளியான இப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தன. இதனால் பாக்ஸ் ஆபிஸில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. </p><h2>

பாக்ஸ் ஆபிஸ்</h2><p>

இந்நிலையில், டாக்சிக் திரைப்படம் 7 நாட்களை கடந்துவிட்டது. இதுவரை உலகளவில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 7 நாட்களில் உலகளவில் யஷின் டாக்சிக் திரைப்படம் ரூ. 300 கோடி வசூல் செய்துள்ளது. முதல் நாள் உலகளவில் ரூ. 150 கோடி வசூலித்த நிலையில், அடுத்த 6 நாட்களில் மொத்தமாக ரூ. 150 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் ஏற்பட்டுள்ள சரிவை தெளிவாக காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b043f9d-c478-4a07-a618-ad9cfca32400/26-6a9790c2c3c14.webp' /></p>]]></content>
            <updated>2026-09-02T03:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் பிரபல பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேரா காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/popular-singer-actor-priyankara-perera-passes-away-1788317857"></link>
            <id>https://jvpnews.com/article/popular-singer-actor-priyankara-perera-passes-away-1788317857</id>
            <summary type="text">இலங்கையின் பிரபல பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேரா தனது 64ஆவது வயதில் காலமானார்.

நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொழும்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பிரபல பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேரா தனது 64ஆவது வயதில் காலமானார்.</p><p>

நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (01) இரவு உயிரிழந்ததாக அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>இலங்கை இசைத்துறையில் தனக்கென தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்த பிரியங்கர பெரேரா, பல பிரபலமான பாடல்களைப் பாடி ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்திருந்தார்.</p><p>

மறைந்த பிரபல பாடகர் மில்டன் பெரேராவின் மகனான பிரியங்கர பெரேரா, தந்தையின் இசைப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து இலங்கை இசைத்துறையில் தனது திறமையை வெளிப்படுத்தினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e2aeefe-785c-40f9-af56-144626865b33/26-6a9790a2ca85b.webp' /></p><p>அவரது குரலில் வெளியான ‘சுபுன் சந்தக்’, ‘சந்துன் கசே சமன் வலக்’, ‘சிக்குருலியா’, ‘அகாத சகராரே’ உள்ளிட்ட பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.
</p><p>
பாடகராக மட்டுமன்றி, பிரியங்கர பெரேரா ஒரு திறமையான நடிகராகவும் கலைத்துறையில் தன்னை நிலைநிறுத்தியிருந்தார். </p><p>இசை மற்றும் நடிப்பு ஆகிய இரு துறைகளிலும் தனது பங்களிப்பை வழங்கிய அவர், பல ஆண்டுகளாக கலைத்துறையுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தார்.
</p><p>
அவரது மறைவு இலங்கை கலைத்துறையினருக்கும், அவரது இசையை நேசித்த ரசிகர்களுக்கும் பெரும் இழப்பாக அமைந்துள்ளது.
</p><p>
அன்னாரின் மறைவுக்கு கலைத்துறையினர், சக பாடகர்கள், நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-02T02:57:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் நாய்களைக் கட்டுப்பாடின்றி உலாவ விட்ட நபர் விதிக்கப்பட்ட தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bc-man-ordered-to-pay-a-woman-1788314747"></link>
            <id>https://canadamirror.com/article/bc-man-ordered-to-pay-a-woman-1788314747</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், தனது நாய்களை சங்கிலியால் பிணைக்காமல் அழைத்துச் சென்று பெண் ஒருவரைக் கடிக்கக் காரணமான உரிமையாளருக்கு, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், தனது நாய்களை சங்கிலியால் பிணைக்காமல் அழைத்துச் சென்று பெண் ஒருவரைக் கடிக்கக் காரணமான உரிமையாளருக்கு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 1,139 டொலர்களை நஷ்டஈடாக வழங்குமாறு சிவில் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. </p><p>
கடந்த 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் யூசிஃப் தக்லா என்பவர் தனது இரு நாய்களையும் சங்கிலியால் பிணைக்காமல் அழைத்துச் சென்றபோது, வீட்டின் கேட் அருகே நின்றிருந்த வெய்ஷென் வாங் என்ற பெண்ணை அந்த நாய்கள் தாக்கி கடித்தன.</p><p> 
இச்சம்பவத்தினால் காயமடைந்த பெண், ஆம்புலன்ஸ் சேவைக்கட்டணம், வருமான இழப்பு, வடு நீக்கும் சிகிச்சை மற்றும் மன உளைச்சல் என்பவற்றுக்காக மொத்தம் 3,148 டொலர்கள் இழப்பீடு கோரி தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d5bd2c4-2aff-4f11-b406-0275283e04e0/26-6a97847d45d05.webp' /></p><p> </p><p>
நாய்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தவறிய உரிமையாளரின் அலட்சியமே இச்சம்பவத்திற்குக் காரணம் எனத் தீர்ப்பாய உறுப்பினர் ஜெப்ரி ட்ரோஸ்டியாக் டிக்காட்டினார். </p><p>
பாதிக்கப்பட்ட பெண் கோரிய சில தொகைகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாத நிலையில், ஆம்புலன்ஸ் சேவைக்காக 848 டொலர்கள் மற்றும் மன உளைச்சலுக்காக 150 டொலர்கள் உட்பட, தீர்ப்பாயக் கட்டணங்களுடன் சேர்த்து மொத்தம் 1,139 டொலர்களை வழங்குமாறு நாய் உரிமையாளருக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T02:49:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த தரப்பை பழிவாங்கிய அநுர அரசு - ஏமாற்றத்தில் நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-party-s-meeting-in-struggle-1788313085"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-party-s-meeting-in-struggle-1788313085</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணிக்கு மிகப்பெரிய இரண்டு விளையாட்டு மைதானங்களையும் வழங்க அந்தப் பகுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணிக்கு மிகப்பெரிய இரண்டு விளையாட்டு மைதானங்களையும் வழங்க அந்தப் பகுதி ம் மாநகர சபை மறுத்துள்ளது. </p><p>

குறித்த நாட்களில் வேறு தரப்பினரால் வாலிசிங்க ஹரிஸ்சந்திர விளையாட்டு மைதானமும் சல்காது விளையாட்டு மைதானமும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக அன்றையதினம் அவற்றை வழங்க முடியாது என அனுராதபுரம் மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளார். </p><p>

அத்துடன், இதற்கு பொருத்தமான வேறொரு தினத்தை ஒதுக்கிக் கொள்வது தொடர்பில் பரிசீலிக்குமாறும் அறிவித்துள்ளார்.</p><h2><b> 

கோரிக்கை நிராகரிப்பு</b></h2><p>எனினும், சல்காது மைதானத்தை பெறுவதற்காக தங்களால் முன்னரே விண்ணப்பிக்கப்பட்டிருந்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a3e577e-5756-494a-8e88-687ff48045fa/26-6a978e800dd2c.webp' /></p><p>இருந்த போதிலும், விண்ணப்பித்த வேறு ஒரு தரப்பினருக்கு குறித்த மைதானத்தை வழங்குவதற்கு மாநகர சபை செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன் வாலிசிங்க ஹரிஸ்சந்திர விளையாட்டு மைதானமும் மூன்றாவது தரப்பினரால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி தங்களுக்கு வழங்குவது மறுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் குற்றம் சுமத்துகின்றனர். </p><p>

இது தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் மேயரின் அறிவுறுத்தலுக்கமையவே மேற்கொள்ளப்பட்டதாகவும் மொட்டுக் கட்சியின் பிரதிநிதிகள் குற்றம் சுமத்துகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-02T02:48:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srilanka-vehicle-import-current-update-1788315269"></link>
            <id>https://tamilwin.com/article/srilanka-vehicle-import-current-update-1788315269</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான செலவு 241 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான செலவு 241 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;தனிநபர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான வாகனங்களை உள்ளடக்கிய இந்த இறக்குமதி செலவினம், 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பதிவான 182 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடும்போது, ​​ஒரு மாதத்தில் சுமார் 32 சதவீதம் அதிகரித்துள்ளது.</p><h2>வாகன இறக்குமதி&nbsp;செலவு </h2><p>

இதேவேளை, 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான ஒட்டுமொத்த செலவு 1,495 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் இருந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c9a294e-9b5d-4fb2-bd50-6f158cdb650b/26-6a978a80a78fa.webp' />&nbsp;</p><p>
</p><p>
மேலும், மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, ​​2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இறக்குமதி செலவு 19.6 சதவீதம் அதிகரித்து, 2,251 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
</p><p>
இந்த தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டு முழுவதும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான மொத்த செலவு 2.04 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-02T02:31:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[துண்டோடு அலையவிட்டார்கள்...காயப்படுத்திய சம்பவத்தை உடைத்த சூரி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/struggle-painful-incident-actor-soori-mandaadi-1788273295"></link>
            <id>https://viduppu.com/article/struggle-painful-incident-actor-soori-mandaadi-1788273295</id>
            <summary type="text">சூரிகாமெடி நடிகராக திகழ்ந்து தற்போது மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் தான் நடிகர் சூரி. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள மண்டாடி படத்தில் சூரி நடி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சூரி</h2><p>காமெடி நடிகராக திகழ்ந்து தற்போது மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் தான் நடிகர் சூரி. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள மண்டாடி படத்தில் சூரி நடித்துள்ளார். மண்டாடி படம் செப்டம்பர் 4 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e42e85f-bd3e-4c8a-bbeb-1fb158a75059/26-6a96e29165e3a.webp' /></p><p> அதில், ஒரு படத்திற்கு என்னை நடிக்க அழைத்தார்கள், ஒரு பெரிய நகைச்சுவை நடிகருடன் எனக்கு சீன் இருந்தது. ஷாட் எடுத்து முடித்தவுடன் இயக்குநரும், அந்த நடிகரும் சேர்ந்து மானிட்டார் பார்த்து ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தார்கள். பின் அந்த நகைச்சுவை நடிகர் பரிந்துரைத்த ஒருவரை எனக்கு பதிலாக நடிக்க வைத்தார்கள்.</p><p>நான் போட்டு வந்த சட்டையை கழற்றச்சொல்லி, அந்த நடிகருக்கு கொடுத்தார்கள். சட்டை அவருக்கு சேராததால் அதனை காஸ்டியும் குழுவினர் தூக்கி எங்கோ எறிந்துவிட்டார்கள் துண்டை வைத்து உடம்பை மறைத்துக் கொண்டு என் சட்டையை நான் தேடிக் கொண்டிருந்தேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a455a10-3379-4ee4-b82a-4f00b92a3042/26-6a96e292230fe.webp' /></p><p> அப்போது நான் நடிக்க வேண்டிய காட்சியை இன்னொருவர் நடிப்பதை பார்த்து என்னை மிகவும் காயப்படுத்தியது. அந்த அனுபவங்களை கடந்து தொடர்ந்து சினிமாவில் பயணித்ததே இன்று தன்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்ததாக சூரி பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-02T02:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[45 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் கரீனா கபூர்.. Stunning போட்டோஷூட்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/kareena-kapoor-khan-olive-green-pant-suit-photos-1788244855"></link>
            <id>https://cineulagam.com/article/kareena-kapoor-khan-olive-green-pant-suit-photos-1788244855</id>
            <summary type="text">பாலிவுட் திரையுலகில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர் நடிகை கரீனா கபூர் கான். இவர் நடிப்பில் அடுத்ததாக Daayra திரைப்படம் வரும் 18-ஆம் தேதி வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாலிவுட் திரையுலகில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர் நடிகை கரீனா கபூர் கான். இவர் நடிப்பில் அடுத்ததாக Daayra திரைப்படம் வரும் 18-ஆம் தேதி வெளியாகிறது. </p><p>நேற்று இப்படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கரீனா கபூர் கலந்துகொண்ட நிலையில், அவர் அணிந்திருந்த Olive green pant suit உடை அனைவரின் கவனத்தை ஈர்த்தது. இந்த உடையில் Stunning லுக்கில் ரசிகர்களை கவர்ந்த கரீனா கபூர், அந்த போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். </p><p>இதோ அந்த புகைப்படங்கள்:</p>]]></content>
            <updated>2026-09-02T02:07:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-rupee-fallen-against-dollar-1788313975"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-rupee-fallen-against-dollar-1788313975</id>
            <summary type="text">அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி 5.5 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் ஒகஸ்ட் மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி 5.5 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த ஆண்டின் ஒகஸ்ட் மாதம் இறுதி வரையிலான காலகட்டத்தில், இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது.</p><p>

எனினும் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பணவியல், நிதி மற்றும் முன்னெச்சரிக்கை கொள்கை நடவடிக்கைகளின் தாக்கத்தின் காரணமாக, கடந்த சில வாரங்களில் இலங்கை ரூபாயில் ஓரளவு மதிப்பு உயர்வு காணப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.</p><h2><b>

இலங்கை ரூபாவின் பெறுமதி</b></h2><p>இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணயக் கொள்வனவுகள் காரணமாக, சீன மக்கள் வங்கியுடனான வெளிநாட்டு நாணய பரிமாற்ற வசதியும் உள்ளடங்கலாக, மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு தொகையானது 6.6 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்வடைந்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e94c21b0-aa63-481d-b23a-7e7c5cec3cea/26-6a9784693c170.webp' /></p><p>கடந்த ஜுலை மாதம் முடிவடைந்த நிலவரத்திற்கமைய, இந்த தொகை பதிவாகியுள்ளது.
</p><p>
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமைகளின் தாக்கத்தை பிரதிபலிக்கும் வகையில், ஜூலை மாதத்தில் வெளிநாட்டு நடப்புக் கணக்கானது 142 மில்லியன் அமெரிக்க டொலர் பற்றாக்குறையைப் பதிவு செய்துள்ளது.
</p><p>
கடந்த ஜுலை மாதத்திற்காக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட வெளிநாட்டுத் துறைசார் செயற்பாடுகள் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
நடப்புக் கணக்கு தொடர்ச்சியாக இவ்வாறான பற்றாக்குறையைப் பதிவு செய்யும் நான்காவது மாதம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
</p>]]></content>
            <updated>2026-09-02T02:05:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் மற்றும் தங்க நகைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/four-men-robbed-about-6-crore-rupees-1788313110"></link>
            <id>https://tamilwin.com/article/four-men-robbed-about-6-crore-rupees-1788313110</id>
            <summary type="text">கொழும்பு&amp;nbsp; - தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள பயண முகவர் நிலையத்தில்&amp;nbsp;சுமார் 6 கோடி பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடித்து செல்லப்பட்டுள்ளதாக த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு&nbsp; - தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள பயண முகவர் நிலையத்தில்&nbsp;சுமார் 6 கோடி பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடித்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>நேற்று (01) பிற்பகல் மோட்டார் வாகனத்தில் வந்தவர்களே இவ்வாறு கொள்ளையடித்து சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.&nbsp;&nbsp;</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>குறித்த&nbsp;முகவர் நிலையத்திற்கு 4 பேர் வந்திருந்த நிலையில் பின்னர் அங்கிருந்த பணம் மற்றும் தங்கப் பொருட்களைக் கொள்ளை அடித்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1721cacd-d25b-4765-b29f-9c9701cdfdd0/26-6a97817496446.webp' /></p><p>சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T02:02:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 அரசியல் நயவஞ்சகத்தினால் எதிர்க்கட்சிகள் 22ம் திருத்தச் சட்டத்தை எதிர்க்கின்றன]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opposition-afraid-of-22nd-amendmend-1788314363"></link>
            <id>https://tamilwin.com/article/opposition-afraid-of-22nd-amendmend-1788314363</id>
            <summary type="text">&amp;nbsp;அரசியல் நவஞ்சகம் காரணமாக எதிர்க்கட்சிகள் 22ம் திருத்தச் சட்டமூலத்தை எதிர்ப்பதாக ஸ்ரீலங்கா தொழிலாளர் மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
22 ஆவது அரச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அரசியல் நவஞ்சகம் காரணமாக எதிர்க்கட்சிகள் 22ம் திருத்தச் சட்டமூலத்தை எதிர்ப்பதாக ஸ்ரீலங்கா தொழிலாளர் மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
</p><p>22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக நீதிமன்றில் மனுக்களைத் தாக்கல் செய்வது ஜனநாயகத்தையோ அல்லது நீதிமன்றத்தின் சுயாதீனத்தையோ பாதுகாப்பதற்காக அல்ல என முன்னணியின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.</p><p> மாறாக எதிர்க்கட்சியின் சட்டத்தின் முன் சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வரும் என்ற அச்சத்தினாலேயே இந்த சட்ட மூலத்தை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5441d28-04ee-4fbe-8f8a-74d8e3a33ac1/26-6a9782fcefc3a.webp' /></p><p>
</p><p>ஹட்டன் நகரில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அந்த முன்னணியின் இதனைத் தெரிவித்தனர்.</p><p>
ராஜபக்ச குடும்பத்தினர் நிரந்தரமாக ஆட்சியில் இருப்பதற்கு வழியமைத்த 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்ட போது மௌனம் காத்தவர்கள், (01) ஆம் திகதி 22 ஆவது திருத்தத்திற்கு எதிராக ஜனநாயகத்தின் ‘சூப்பர்மேன்களாக’ தோற்றமளிக்க முயல்கின்றனர் எனக் குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>அன்று முழு நாடும் குடும்ப ஆட்சிக்கு உட்படுத்தப்பட்ட போது எந்தவொரு மனுவையும் தாக்கல் செய்யாத ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட தரப்பினர், இன்று நீதிமன்றத்தை நாடுவது மக்களின் சுதந்திரத்திற்காக அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>
ஜனநாயகம் அல்லது மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, தற்போதைய எதிர்க்கட்சியின் சில அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவே செயற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>எதிர்வரும் சில மாதங்களுக்குள் இடம்பெறக்கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறை தண்டனைகளிலிருந்து தப்பிப்பதற்காகவே இத்தரப்பினர் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக இவ்வாறு செயற்படுவதாக சமீர பெரேரா குற்றஞ்சாட்டியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T02:00:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்திற்கு வரி செலுத்த தவறியவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-case-against-those-who-fail-to-pay-taxes-1788313377"></link>
            <id>https://tamilwin.com/article/court-case-against-those-who-fail-to-pay-taxes-1788313377</id>
            <summary type="text">அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்த தவறியவர்களுக்கு எதிராக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்படடுள்ளது. 

அதற்கம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்த தவறியவர்களுக்கு எதிராக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்படடுள்ளது. </p><p>

அதற்கமைய 57 நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராகக் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
</p><p>
உள்நாட்டு இறைவரி ஆணையாளர் 57 வழக்குகளையும் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்திற்குத் தனித்தனியாகக் அனுப்பி வைத்துள்ளார்.
</p><h2><b>
வழக்கு தாக்கல்</b></h2><p>கொழும்பில் உள்ள தொழிலதிபர்கள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் முக்கிய வணிக நிறுவனங்களின் குழுவிற்கு எதிராகவே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/640065d8-b40a-444c-90c4-45efff97df12/26-6a978059f0512.webp' /></p>]]></content>
            <updated>2026-09-02T01:48:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல பாடகர் பிரியங்கர பெரேரா காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/veteran-singer-priyankara-perera-dies-at-64-1788312969"></link>
            <id>https://tamilwin.com/article/veteran-singer-priyankara-perera-dies-at-64-1788312969</id>
            <summary type="text">பிரபல பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேரா தனது 64ஆவது வயதில் காலமானார்.
நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேரா தனது 64ஆவது வயதில் காலமானார்.</p><p>
நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (01) இரவு காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>திரைப்பட நடிகராகவும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இவர், பிரபல பாடகர் மில்டன் பெரேராவின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6af2b6d0-18eb-4f02-af3c-8becbe2f1361/26-6a977d8a8d840.webp' /></p><p>
'சுபுன் சதக்', 'சந்துன் கஸே சமன் வெலக்', 'சிகுருலியா', 'அகாத சாகரயே' போன்ற பல காலத்தால் அழியாத பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம்பெற்றிருந்தார்.
</p><p>திரைப்படங்கள், தொலைக்காட்சி நாகடகங்கள், பாடல்கள் என பல்துறைகளில் திறமைகளை வெளிப்படுத்தியுள்ள பிரியங்கர பெரேரா பல விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>அன்னாரது இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T01:36:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் இரண்டு வயது குழந்தைக்கு நேர்ந்த துயரம்! தொடரும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2-year-old-child-dies-in-batticaloa-1788311032"></link>
            <id>https://ibctamil.com/article/2-year-old-child-dies-in-batticaloa-1788311032</id>
            <summary type="text">மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் இரண்டு வயது குழந்தையொன்று நீர் நிரப்பப்பட்டிருந்த வாளிக்குள் விழுந்து உயிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் இரண்டு வயது குழந்தையொன்று நீர் நிரப்பப்பட்டிருந்த வாளிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளது.</p><p>

நேற்று செவ்வாய்க்கிழமை (01) ஆம் திகதி காலை 10.30 மணியளவில், வீட்டின் வாசலில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பெரிய வாளியின் அருகே குழந்தை விளையாடிக் கொண்டிருந்துள்ளது.</p><p>

இதன்போது, எதிர்பாராதவிதமாக சிறுவன் தலைகீழாக வாளிக்குள் விழுந்ததில் நீரில் மூழ்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.</p><p></p><h2>உயிரிழப்பு</h2><p>
உடனடியாக உறவினர்கள் குழந்தை மீட்டு பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், வழியிலேயே சிறுவன் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a796199e-e206-4f77-8d24-32ad8e2ffa47/26-6a9775fa04832.webp' /></p><p>
</p><p>
சம்பவத்தில் கற்சேனை, முல்லை வீதியைச் சேர்ந்த 2 வயதும் 8 மாதங்களுமான நந்தகோபன் கிசோத் என்ற குழந்தையே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.</p><h2>உறவினர்களிடமும் விசாரணை</h2><p>

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாக திடீர் மரண விசாரணை அதிகாரி வீ.ஆர். மகேந்திரன், பழுகாமம் வைத்தியசாலைக்கு வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்டதுடன், உறவினர்களிடமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30cbd17a-ae0c-49cd-b674-198dec802589/26-6a9778220a7cb.webp' /></p><p>
</p><p>
அதனைதொடர்ந்து, உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக சிறுவனின் சடலம் நேற்று(01) மாலை 6.00 மணியளவில் பழுகாமம் வைத்தியசாலையிலிருந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இச்சம்பவம் குறித்து கொக்கட்டிச்சோலை காவல்துறையினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T01:26:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[முறைகேடாக செயற்பட்ட உயர் அதிகாரியை பணியிலிருந்து அதிரடியாக நீக்கிய அநுர அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/port-managing-director-removed-from-post-1788311394"></link>
            <id>https://tamilwin.com/article/port-managing-director-removed-from-post-1788311394</id>
            <summary type="text">இலங்கை துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் கணக ஹேமச்சந்திர உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் கணக ஹேமச்சந்திர உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.</p><p>

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலகவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. </p><p>

சமகால அநுர அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், துறைமுகங்கள் அமைச்சராகப் பதவியேற்ற விஜித்த ஹேரத், துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளராக கணக ஹேமச்சந்திரவை நியமித்தார். </p><h2><b>பல குற்றச்சாட்டுகள்</b></h2><p>எனினும், திருகோணமலை துறைமுகத்திலிருந்த வழிகாட்டிப் படகை தவறாகப் பயன்படுத்தி 20 கோடி ரூபாய்க்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியமை உட்பட பல குற்றச்சாட்டுகள் துறைமுக தொழிற்சங்கங்களால் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbc508ba-0c9b-434f-819c-d23da84fd9ef/26-6a977a9c48085.webp' /></p><p>இந்நிலையில் கணக ஹேமசந்திர பதிவியில் இருந்து நீக்க எடுத்த முடிவுக்கு துறைமுக கூட்டுத் தொழிற்சங்க கூட்டமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. </p><p>

இத்தீர்மானம் நாட்டின் பொருளாதாரத்திற்கு எடுக்கப்பட்ட நல்லதொரு தீர்மானம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p>]]></content>
            <updated>2026-09-02T01:25:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[கயாடு லோஹர் சேலையில் அழகிய போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/kayadu-lohar-new-cute-photos-in-saree-1788311669"></link>
            <id>https://cineulagam.com/article/kayadu-lohar-new-cute-photos-in-saree-1788311669</id>
            <summary type="text">நடிகை கயாடு லோஹர் சேலையில் அழகிய போட்டோஷூட். ஒரே படத்தில் சென்சேஷன் நடிகையாக மாறிய அவர் பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கு, மலையாளம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை கயாடு லோஹர் சேலையில் அழகிய போட்டோஷூட். ஒரே படத்தில் சென்சேஷன் நடிகையாக மாறிய அவர் பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார்.</p><p>

தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழிகளிலும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
</p><p>
Kayadu Lohar தற்போது செம அழகாக சேலையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T01:14:40+00:00</updated>
        </entry>
    </feed>
