<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-06T03:59:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை சின்னங்களைப் பயன்படுத்தும் நிகழ்வுகளில் கல்வி அமைச்சு விதித்துள்ள தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/alcohol-ban-on-events-using-school-symbols-moe-1788664958"></link>
            <id>https://ibctamil.com/article/alcohol-ban-on-events-using-school-symbols-moe-1788664958</id>
            <summary type="text">பாடசாலை ஒன்றின் சின்னத்தைப் பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகள் தொடர்பில்&amp;nbsp;கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பொன...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாடசாலை ஒன்றின் சின்னத்தைப் பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகள் தொடர்பில்&nbsp;கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.</p><p>அதன்படி, பாடசாலை சின்னத்தைப் பயன்படுத்தும் எந்தவொரு நிகழ்விலும் மது மற்றும் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதற்கும் விளம்பரப்படுத்துவதற்கும் அமைச்சு முழுமையான தடையை விதித்துள்ளது.</p><p>
அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 2026/10 இலக்க புதிய சுற்றறிக்கையின் ஊடாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>கல்வி அமைச்சின் செயலாளருக்கு அதிகாரம்&nbsp;</h2><p> </p><p>இத்தகைய விதிகளை மீறி மதுபானம் அல்லது போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படும் நிகழ்வுகள் ஏதேனும் ஏற்பாடு செய்யப்பட்டால், அந்த நிகழ்வை உடனடியாகத் தடை செய்வதற்கான முழுமையான அதிகாரம் குறித்த சுற்றறிக்கையின் மூலம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c756cbf3-f736-4d1d-be51-0e7f81efb3cf/26-6a9ce32d990ba.webp' /></p><p>

‘ரடம எகட’ (Rata Ma Ekata) தேசிய செயற்திட்டத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, கல்வி அமைச்சின் இணைப் பாடவிதான வழிகாட்டல் மற்றும் ஆலோசனைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் மகேஷ் ரத்நாயக்க இந்தத் தகவலை வெளியிட்டார்.
</p><p>
நாட்டின் முன்னணிப் பாடசாலைகளுக்கு இடையே நடாத்தப்படும் 'கிரிக்கெட் சமர்' தொடர்பில் மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாவது குறித்துப் பெற்றோர்களிடமிருந்தும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
எனவே, பாடசாலையின் சின்னம் பயன்படுத்தப்பட்டு நடத்தப்படும் எந்தவொரு நிகழ்ச்சியும் பாடசாலை நிகழ்வாகவே கருதப்படும் என்றும், அத்தகைய நிகழ்வுகளில் மது அல்லது போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது இனி முழுமையாகத் தடை செய்யப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T03:55:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[குட்டி ஸ்ரீலீலாவின் பரதநாட்டிய வீடியோ.. 9 வயதில் எப்படி நடனமாடியுள்ளார் பாருங்க.. வீடியோ இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-sreeleela-9-year-old-bharatanatyam-video-1788666013"></link>
            <id>https://cineulagam.com/article/actress-sreeleela-9-year-old-bharatanatyam-video-1788666013</id>
            <summary type="text">நடிகை ஸ்ரீலீலா தனது 9 வயதில் ஆடிய பரதநாட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்ரீலீலா

தனது நடிப்பாலும், நடனத்தாலும் ரசிகர்களை கவர்ந்தவர் நடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை ஸ்ரீலீலா தனது 9 வயதில் ஆடிய பரதநாட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><p></p><p>
</p><h2>
ஸ்ரீலீலா</h2><p>

தனது நடிப்பாலும், நடனத்தாலும் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஸ்ரீலீலா. இதில், நடிப்பை தாண்டி இவருடைய நடனத்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உண்டு. 'புஷ்பா 2' திரைப்படத்தில் 'கிஸிக்' என்கிற பாடலுக்கு இவர் ஆடிய நடனம் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5dcefa85-e291-40e0-a95b-76d730113e63/26-6a9ce0a0a6fcb.webp' /></p><p>தெலுங்கில் தொடர்ந்து படங்கள் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்துள்ள ஸ்ரீலீலா, தமிழில் 'பராசக்தி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், இதுவரை இவருடைய நடனத்தை பார்த்து வியந்த ரசிகர்கள், முதல் முறையாக இப்படத்தில் ஸ்ரீலீலாவின் நடிப்பை பாராட்டினார்கள்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42471c70-8b9e-46e6-aba9-bff99d34a6d0/26-6a9ce0a15d9cf.webp' /></p><p>இதனை தொடர்ந்து, தற்போது தனுஷுடன் இணைந்து 'ஓம்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், ஹிந்தியில் கார்த்திக் ஆர்யனுடன் இணைந்து இவர் நடித்து வரும் படமும் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
</p><h2>
பரதநாட்டிய வீடியோ</h2><p>

இந்நிலையில், நடிகை <a href="https://www.instagram.com/p/Dc38gceqBFs/" target="_blank">ஸ்ரீலீலா </a>தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது 9-வது வயதில் ஆடிய பரதநாட்டிய வீடியோவை வெளியிட்டுள்ளார். கடந்த 4-ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்ட நிலையில், அதற்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து இந்த வீடியோவை ஸ்ரீலீலா வெளியிட்டுள்ளார். குட்டி ஸ்ரீலீலாவின் இந்த பரதநாட்டிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Dc38gceqBFs/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Dc38gceqBFs/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Dc38gceqBFs/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by SREELEELA (@sreeleela14)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-06T03:44:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 உயர்தர பரீட்சை பெறுபேறுகள் - பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2026-a-l-results-to-be-released-before-year-end-1788664680"></link>
            <id>https://ibctamil.com/article/2026-a-l-results-to-be-released-before-year-end-1788664680</id>
            <summary type="text">2026 ஆண்டின் இறுதிப் பகுதிக்குள் உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.அதற்கமைய, உயர...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆண்டின் இறுதிப் பகுதிக்குள் உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.</p><p>அதற்கமைய, உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த விடயத்தை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><h2>மதிப்பீட்டுப் பணிகள்</h2><p>இந்த மதிப்பீட்டுச் செயற்பாடுகள் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளதுடன், எதிர்வரும் அக்டோபர் மாதம் 25 ஆம் திகதிக்குள் மதிப்பீட்டுப் பணிகளை முழுமையாக நிறைவுசெய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e71bc350-7634-44bc-8002-5b919c758757/26-6a9cdd93aac50.webp' /></p><p>அத்துடன், உயர்தரப் பரீட்சைக்கான செய்முறைப் பரீட்சைகள் செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நேற்றைய தினத்துடன் (05) நிறைவடைந்தன.</p><p>

இந்தமுறை நடைபெற்ற பரீட்சையில் மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
</p><p>
பரீட்சை மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நடப்பு ஆண்டின் இறுதிப் பகுதிக்குள் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T03:32:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. ஒரே மேடையில் நடனமும் நடிப்பும்! டான்ஸ் ஜோடி டான்ஸ் - மகா நடிகை மகா சங்கமம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/dance-jodi-dance-mahanadigai-mahasangamam-1788664790"></link>
            <id>https://viduppu.com/article/dance-jodi-dance-mahanadigai-mahasangamam-1788664790</id>
            <summary type="text">தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனதை கவர்ந்து வரும் Zee தமிழ் தொலைக்காட்சியின் இரண்டு பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சிகளான ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ மற்றும் ‘மகா ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனதை கவர்ந்து வரும் Zee தமிழ் தொலைக்காட்சியின் இரண்டு பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சிகளான ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ மற்றும் ‘மகா நடிகை’ இந்த வாரம் சிறப்பு மகா சங்கமம் நிகழ்ச்சியாக ஒன்றிணைய உள்ளன.</p><p>‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியை மணிமேகலை மற்றும் அசார் இணைந்து உற்சாகமாக தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் சினேகா, சிம்ரன் மற்றும் நடிகர் பிரசாந்த் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று போட்டியாளர்களை ஊக்குவித்து வருகிறார்கள். திறமையான நடனக் கலைஞர்களின் அசத்தலான ஆட்டங்களால் இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
</p><p>அதேபோல், நடிப்பு திறமைகளை வெளிப்படுத்தும் ‘மகா நடிகை’ நிகழ்ச்சியில் நடிகைகள் ராதிகா மற்றும் சங்கீதா நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சி, இந்த வாரம் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ குழுவினருடன் இணைந்து பிரம்மாண்டமான மகா சங்கமமாக ஒளிபரப்பாக உள்ளது.
</p><p>நடனமும் நடிப்பும் ஒரே மேடையில் சங்கமிக்கும் இந்த சிறப்பு எபிசோட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த வாரம் ஒளிபரப்பாகும் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ் - மகா நடிகை மகா சங்கமம்’ நிகழ்ச்சியை Zee தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T03:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள சகதிக்குள் அதிசயம் - 10 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட தொழிலாளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-more-rescued-after-nepal-floods-1788661727"></link>
            <id>https://ibctamil.com/article/two-more-rescued-after-nepal-floods-1788661727</id>
            <summary type="text">நேபாள வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 10 நாட்களுக்குப் பிறகு நீர்மின் நிலையத்தின் சுரங்கப்பாதையிலிருந்து ஒரு சீன ஆண் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாள வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 10 நாட்களுக்குப் பிறகு நீர்மின் நிலையத்தின் சுரங்கப்பாதையிலிருந்து ஒரு சீன ஆண் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>திரிஷூலி நீர்மின் திட்டத்தில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டுப் பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p>நேபாளத்தில் மற்றொரு நீர்மின் சுரங்கப்பாதையிலிருந்து இரண்டு பேர் அதிசயமாக உயிருடன் மீட்கப்பட்ட ஒரு நாள் கழித்து இந்த மீட்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">மீண்டும் மீண்டும் கத்திய</span></p><p>225 மீட்டர் ஆழமுள்ள சுரங்கப்பாதையில் இருந்து நேபாள இராணுவத்தினர் மற்றும் தென் கொரிய பேரிடர் நிபுணர்கள் அடங்கிய கூட்டு மீட்புக் குழு அந்த நபரை மீட்டதாகவும், அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் நேபாள இராணுவம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e703f11-b164-467c-a587-e404a3bdb9fb/26-6a9cd27841741.webp' /></p><p>உலங்கு வானூர்தி மூலம் அவர் மீட்கப்படுவதும், பயணத்தின் போது இராணுவ மருத்துவ உதவியாளர் ஒருவர் அவரைப் பரிசோதிப்பதும் புகைப்படங்களில் காணப்பட்டன.</p><p>மீட்புக் குழுவினரின் விளக்குகளைப் பார்க்கும் போதெல்லாம் தான் மீண்டும் மீண்டும் கத்தியதாகவும், ஆனால் அவர்களால் தன் குரலைக் கேட்க முடியவில்லை என்றும் லூ ஒரு அதிகாரியிடம் பேசும் ஓடியோவை சிசிடிவி பகிர்ந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>எனினும் இன்று அவர்கள் என்னைக் காப்பாற்றிய போது, ​​என் கண்களுக்கு முன்பாக அந்த ஒளியைப் பாய்ச்சிய போது ​​என்னால் அதை நம்பவே முடியவில்லை என அவர் தெரிவித்தாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது</p><p></p><h2>தேடும் பணிகள்&nbsp;</h2><p>ஒகஸ்ட் 26 அன்று நேபாள - திபெத் பிராந்தியத்தைத் தாக்கிய வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு, 5,000க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d73e2df1-58e0-443c-8040-3575c2e2ecb8/26-6a9cd2778840e.webp' /></p><p>காணாமல் போன ஆயிரக்கணக்கானோரைத் தேடும் பணிகள் மீட்புக் குழுக்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.&nbsp;</p><p>நேபாள மற்றும் சீன அதிகாரிகள் வெளியிட்ட புள்ளிவிவரங்களை சிஎன்என் ஊடக தரவுகளின் படி, கடந்த வாரம் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,350-ஐத் தாண்டியுள்ளது .&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T03:28:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பத்து கைதிகளுடன் காவலில் மகிழ்ச்சியாக நாமல்..! உடல்நிலை தொடர்பில் வெளியான அறிக்கையினால் மீண்டும் சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-remand-valikada-prisons-1788660520"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-remand-valikada-prisons-1788660520</id>
            <summary type="text">சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சிறைச்சாலை வைத்தியரால் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
</p><p>
அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினரின் உடல்நலத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. </p><p>

அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கொழும்பு காவல் சிறைச்சாலையில் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><h2>சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல்&nbsp;</h2><p>
</p><p>
சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்த பின்னர் (04) திகதி கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/255c5a9e-4b1f-4075-8e8a-a95a01216689/26-6a9cd748660f0.webp' /></p><p>

இதனையடுத்து எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p>

இதற்கமைய, கொழும்பு காவல் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச ஒரு சிறப்புப்பிரிவில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இது அவரது பாதுகாப்பை கருத்தில்கொண்டு செய்யப்பட்டுள்ளது.</p><h2>கைதிகள் தொடர்பில் வெளியான தகவல்</h2><p>

இத்தகைய சூழலில், சுமார் பத்து கைதிகள் வைக்கப்பட்டுள்ள காவலில் நாடாளுமன்ற உறுப்பினர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.&nbsp;&nbsp;</p><p>நாமல் &nbsp;ராஜபக்ச சிறையில் தனது நேரத்தை மகிழ்ச்சியாக கழித்து வருவதாகவும் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c1458bc-2d42-4eb4-b53d-c9b3624876a1/26-6a9ce2e702955.webp' /></p><p>மேலும் அவருடன் உள்ள ஏனைய 10 கைதிகள், பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அரசாங்க ஊழியர்கள் என்றும், அவர்களில் பாதுகாப்புப் படையினரும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எந்தவொரு சிறப்புரிமைகளையும் கோரவில்லை என்றும், சிறை அதிகாரிகளுடன் நல்லுறவில் இருப்பதாகவும் சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>இதற்கிடையில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறையில் உள்ள எந்தவொரு கைதியையும் வெளியிலிருந்து யாரும் சந்திக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சிறைத்துறை தெரிவித்துள்ளது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T03:28:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போரில் அமெரிக்காவின் உண்மை நிலை... கசியவிட்ட அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-war-data-leaker-1788665161"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-war-data-leaker-1788665161</id>
            <summary type="text">Polygraph Tests Of Top Army Officials: ஈரான் போர் விவகாரத்தில் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை.
நவீன வரலாற்றிலேயே முதன்முறையாக, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Polygraph Tests Of Top Army Officials: ஈரான் போர் விவகாரத்தில் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை.
</p><p>நவீன வரலாற்றிலேயே முதன்முறையாக, அமெரிக்க அரசாங்கத்தின் விசாரணை அதிகாரிகள், 50 உயர்மட்ட அமெரிக்க இராணுவ அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனைகளை (polygraph tests) நடத்தியுள்ளனர்.</p><h2>கசியவிட்டார்களா</h2><p>
</p><p>ஈரான் போரின் காரணமாக அமெரிக்காவில் முக்கிய ஆயுதங்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை குறித்த தகவல்கள் உட்பட, ரகசியத் தரவுகள் பத்திரிகையாளர்களுக்குக் கசிந்தது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6c8289d-4959-4f2e-b1d8-605c4a1421a2/26-6a9cdd4b2dd6a.webp' /></p><p> </p><p>அமெரிக்க இராணுவத்தின் கூட்டுப் படைப் பிரிவின் இராணுவ அதிகாரிகள் மற்றும் குடிமைப் பணியாளர்களிடம், அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு இரகசியத் தகவல்களைக் கசியவிட்டார்களா என்று விசாரிக்கப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனைகளின் நோக்கம், இரகசியத் தகவல்களை வெளியிட்ட நபர்களைக் கண்டறிவதும், எதிர்காலத்தில் அவ்வாறு செய்திருக்கக்கூடிய மற்றவர்களை அச்சுறுத்துவதுமாகும்.</p><p></p><p> </p><p>ஈரான் போரால் நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகள் போன்றவற்றின் எண்ணிக்கைப் பெருமளவில் குறைந்துவிட்டதாக வெளியான தொடர்ச்சியான செய்திகளுக்குப் பிறகு இந்த உண்மை கண்டறியும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. </p><p>இந்த நிலையில், பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், உள் பணியாளர்கள் அல்லது விசாரணை விவகாரங்கள் குறித்துத் துறை கருத்துத் தெரிவிக்காது என்றும், ஆனால் வகைப்படுத்தப்பட்ட தேசியப் பாதுகாப்புத் தகவல்கள் கசிவதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு அதற்கேற்ப விசாரிக்கும் என்றும் கூறினார். </p><p>மேலும், அமெரிக்காவின் பாதுகாப்பையும், உலகம் முழுவதும் களமிறக்கப்பட்டுள்ள நமது படைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு, ரகசியத் தகவல்களைப் பாதுகாப்பது மிக அவசியமாகும் என்றார்.</p><h2>மோசமடைந்து வரும் சூழல்</h2><p> </p><p>மே 5-ஆம் திகதி முதல், ஈரான் போர் குறித்த செய்தியாளர் சந்திப்பு எதையும் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் நடத்தவில்லை; அத்துடன் பென்டகனில் செய்தியாளர்களின் அணுகலையும் அவர் மட்டுப்படுத்தியுள்ளார். </p><p>ஈரான் போரில் அமெரிக்கா பெரும் சாதனைப் படைத்து வருவதாக திரைப்பட பாணியில் நாளும் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தவர் இந்த பீட் ஹெக்செத்.</p><p> USS ஆபிரகாம் லிங்கன் கப்பலில் மோசமடைந்து வரும் சூழல் குறித்து 'ஸ்டார்ஸ் அண்ட் ஸ்ட்ரைப்ஸ்' (Stars and Stripes) இதழ் வெளியிட்ட விமர்சன ரீதியான செய்திகள் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, கடந்த மாதம் பென்டகன் அதன் தலைமை ஆசிரியர் எரிக் ஸ்லாவின், வெளியீட்டாளர் மேக்ஸ் லெடெரர் மற்றும் மத்திய கிழக்கு செய்தியாளர் லாரா கோர்டே ஆகியோரை உத்தியோகப்பூர்வமாகப் பணிநீக்கம் செய்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e85f3747-c33e-448f-a062-33dda2c7df61/26-6a9cdd4bd3498.webp' /></p><p>
</p><p>வியாழக்கிழமை அன்று, ஜனாதிபதி ட்ரம்ப் பெயர் குறிப்பிடப்படாத நபர்களையும் அமைப்புகளையும் தேசத்துரோக இழிபிறவிகள் என்று கடுமையாகச் சாடியதோடு, ஈரானுடனான போருக்கு மத்தியில் அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.</p><p> அத்துடன், அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத அளவிலான ஆயுதத் தளவாடங்களை உற்பத்தி செய்து வருவதாகவும் ட்ரம்ப் வியாழக்கிழமை மீண்டும் வலியுறுத்தினார். </p><p>மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு ஆயுத விற்பனைகள் தற்போது முன்னெடுக்கப்படாது என்றும், நேச நாடுகளுக்கு மட்டும் ஆயுத விற்பனைத் தொடரும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T03:24:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸாருக்கு வந்த இரகசிய தகவல்! இளம் பெண்கள் உட்பட 41 பேர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/facebook-party-bust-41-people-arrested-1788663997"></link>
            <id>https://tamilwin.com/article/facebook-party-bust-41-people-arrested-1788663997</id>
            <summary type="text">தெல்தெனிய - விக்டோரியா பகுதியில் நடத்தப்பட்ட பேஸ்பு விருந்துபசாரம் ஒன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது 36 ஆண் சந்தேகநபர்களையும் 5 பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெல்தெனிய - விக்டோரியா பகுதியில் நடத்தப்பட்ட பேஸ்பு விருந்துபசாரம் ஒன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
</p><p>
இதன்போது 36 ஆண் சந்தேகநபர்களையும் 5 பெண் சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p>
தெல்தெனிய பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>விசாரணையில் வெளியான தகவல்</h2><p> 

இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 947 மில்லிகிராம் கஞ்சா, 3 கிராம் 657 மில்லிகிராம் ஹேஷ் போதைப்பொருள், 1 கிராம் 276 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 18 போதை மாத்திரைகள், 21 சட்டவிரோத சிகரெட்டுகள், 500 மில்லி லீட்டர் கொள்ளளவு கொண்ட 35 பியர் கேன்கள் மற்றும் 750 மில்லி லீட்டர் கொள்ளளவு கொண்ட 13 மதுபான போத்தல்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c6d3d95-31da-4fb1-9ca9-aeaa70a1829a/26-6a9cdbc66213b.webp' /></p><p>
</p><p>
இவ்வாறு கைது செய்யப்பட்ட ஆண் சந்தேகநபர்கள் 21 முதல் 40 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
</p><p>
அவர்கள் கெலியோய, அலுத்வத்தை, வரகாபொல, பேராதனை, அம்பிட்டிய, கண்டி மற்றும் ஹங்குரன்கெத்த ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
</p><p>
 அத்துடன், கைது செய்யப்பட்ட பெண் சந்தேகநபர்கள் 22 முதல் 43 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன், அவர்கள் பல்லேகல, பேராதனை, ஹங்குரன்கெத்த, தெஹிவளை மற்றும் கட்டுக்கஸ்தோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T03:19:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாக்ஸ் ஆபிஸ்: இம்மார்ட்டல் திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/immortal-movie-2-days-box-office-1788663146"></link>
            <id>https://cineulagam.com/article/immortal-movie-2-days-box-office-1788663146</id>
            <summary type="text">ஜி.வி. பிரகாஷ் மற்றும் கயாடு லோஹர் நடிப்பில் இந்த வாரம் வெளியான இம்மார்ட்டல் திரைப்படத்தின் 2 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இம்மார்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜி.வி. பிரகாஷ் மற்றும் கயாடு லோஹர் நடிப்பில் இந்த வாரம் வெளியான இம்மார்ட்டல் திரைப்படத்தின் 2 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><p>
</p><h2>
இம்மார்ட்டல்
</h2><p>
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் இந்த ஆண்டு ஹாப்பி ராஜ் திரைப்படம் வெளியானது. இப்படம் மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகியுள்ள அடுத்த திரைப்படம்தான் இம்மார்ட்டல். இப்படத்தில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d720f86-1b92-4b3e-a0c5-1e86b943ab19/26-6a9cd56e7d039.webp' /></p><p>அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இப்படம் கடந்த 4-ஆம் தேதி திரைக்கு வந்தது. ரசிகர்களிடையே இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. </p><h2>

பாக்ஸ் ஆபிஸ்</h2><p>

இந்நிலையில், விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்று வரும் <a href="https://www.youtube.com/watch?v=9kuLqERF4Y0" target="_blank">இம்மார்ட்டல் </a>திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1575d83d-74df-4cea-9fb7-ccc39c6af79c/26-6a9cd56db5c00.webp' /></p><p>அதன்படி, இப்படம் 2 நாட்களில் உலகளவில் ரூ. 3.5 கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள சிறந்த ஓப்பனிங் ஆகும். இனி வரும் நாட்களில் இம்மார்ட்டல் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
</p>]]></content>
            <updated>2026-09-06T03:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடுகளில் சிக்கிய முக்கிய சாட்சியங்களின் வாக்குமூலங்கள்! நாமலின் கைதி பின்னணியில் ஏமாற்றப்படும் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-ground-provided-in-anuradhapuranamal-prisoner-1788662118"></link>
            <id>https://tamilwin.com/article/no-ground-provided-in-anuradhapuranamal-prisoner-1788662118</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் கூட்டமொன்றை நடத்துவதற்கு மைதானம் வழங்கப்படவில்லை எனக் கூறி
நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் முற்றிலும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் கூட்டமொன்றை நடத்துவதற்கு மைதானம் வழங்கப்படவில்லை எனக் கூறி
நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் முற்றிலும்
அடிப்படையற்றவை என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு
அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
அனுராதபுரம் - நாச்சாதூவ பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில்
கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,</p><h2>மைதானம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு&nbsp;</h2><p>

"நகர சபைக்குச் சொந்தமான மைதானங்களில் ஒன்று பொலிஸ் அணிவகுப்புப்
பயிற்சிக்காகவும், மற்றொன்று வேறு ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால் முன்னரே பதிவு
செய்யப்பட்டிருந்ததாலுமே நாமல் தரப்புக்கு உடனடியாக வழங்க முடியாமல்போனது.</p><p></p><p>
முன் அனுமதி இன்றி மைதானங்களை ஒதுக்க முடியாது என்ற போதிலும், வெறுமையாக
இருக்கும் வேறு எந்தவொரு மைதானத்தையும் வழங்குவதற்கு நகர சபை தயாராகவே உள்ளது. எனவே, மைதானம் வழங்கப்படவில்லை எனக் கூறி மக்களை ஏமாற்ற முயல்கின்றனர்.</p><p>

நாமல் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 18ஆம் திகதி வரை சிறையில்
அடைக்கப்பட்டுள்ளார். சட்டம் அனைவருக்கும் சமம். நாமல் உள்ளிட்டோர்
எதிர்நோக்கும் சட்ட நடவடிக்கைகள் அரசியல் பழிவாங்கல் அல்ல.</p><p>நீதிமன்றத்தில்
சாட்சியங்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு
வருகின்றன. </p><p>முன்பு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்படும் போது
பாம்பு கடித்துவிட்டதாகக் கூறித் தப்பித்த கதைகள் இனி செல்லுபடியாகாது.</p><h2>சட்டவிரோத&nbsp; சொத்துகள் அரசுடைமை&nbsp;</h2><p>

கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல்களுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி,
சட்டவிரோதமாகச் சேர்த்த சொத்துகளை அரசுடைமையாக்குமாறு மக்கள் வழங்கிய
அதிகாரத்தின் அடிப்படையில், இதுவரை 4 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான
சொத்துகள் அரசுக்குக் கையகப்படுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ca03ec4-89e8-4f55-9244-d0b832497884/26-6a9cd168d18fa.webp' /></p><p>

2011, 2012ஆம் ஆண்டுகளின் பழைய முறைப்பாடுகள் குறித்துக் குற்றப் புலனாய்வுத்
திணைக்களம் வெளிநாடுகளுக்குச் சென்று சாட்சியங்களைப் பதிவு செய்து,
நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கைகளின் அடிப்படையிலேயே நடவடிக்கைகள்
எடுக்கப்படுகின்றன.</p><p>

22ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலம் நீதிபதிகளின் சேவைக் காலத்தை இரண்டு
ஆண்டுகள் நீடித்து, நீதித்துறையின் சுயாதீனத்தையும் திறனையும் உறுதிப்படுத்தவே
அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என்றார்.</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T02:36:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் உச்சக்கட்ட சோகம் - தாத்தா இயக்கிய வாகனத்தில் நசியுண்டு பெண் குழந்தை பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/18-month-old-girl-killed-in-kilinochchi-1788659056"></link>
            <id>https://ibctamil.com/article/18-month-old-girl-killed-in-kilinochchi-1788659056</id>
            <summary type="text">வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப் ரக வாகனத்தைத் தாத்தா இயக்கிய போது பெண் குழந்தை ஒன்று சக்கரத்தில் நசியுண்டு உயிரிழந்துள்ளது.இந்த துயர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப் ரக வாகனத்தைத் தாத்தா இயக்கிய போது பெண் குழந்தை ஒன்று சக்கரத்தில் நசியுண்டு உயிரிழந்துள்ளது.</p><p>இந்த துயர சம்பவம் நேற்று (05.09.2026) முற்பகல் 11 மணியளவில் கிளிநொச்சி - உருத்திரபுரம் - சிவநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது&nbsp;&nbsp;</p><p>சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
கப் ரக வாகனத்தின் சாரதியான குழந்தையின் தாத்தா அதனை இயக்கியுள்ளார்.</p><p></p><p>
</p><h2>குழந்தையின் சடலம்</h2><p>
அப்போது எதிர்பாராதவிதமாக வாகனத்தின் அருகே ஓடிச் சென்ற குழந்தை அதன்
சக்கரத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7dcc529-928e-41c3-bd92-318665e1ca0a/26-6a9ccac25ee6e.webp' /></p><p>

இந்தச் சம்பவத்தில் ரூபன் அனாமிகா என்ற ஒன்றரை வயதுடைய பெண் குழந்தையே
பரிதாபமாக உயிரிழந்துள்ளது.</p><p>

உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காகக் கிளிநொச்சி மாவட்ட பொது
வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவ இடத்துக்கு வருகை தந்த கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றப் பதில் நீதிவான்
எஸ். சிவபாலசுப்பிரமணியம் மரண விசாரணை மற்றும் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T02:30:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2.00 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-strong-winds-across-parts-today-1788660781"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-strong-winds-across-parts-today-1788660781</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்&amp;nbsp; தெரிவித்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்&nbsp; தெரிவித்துள்ளது.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (06.09.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.</p><p>ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் வௌியிட்டுள்ள முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>இடியுடன் கூடிய மழை&nbsp;</h2><p>ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6a96366-8681-463b-836e-12e97f5799e9/26-6a9ccc304877a.webp' /></p><p>மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும். </p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.</p><p>

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஓகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. </p><p>

அதற்கமைய இன்றைய தினம் (06) நண்பகல் 12:08 மணிக்கு பெந்தோட்டை, தினியாவல, இத்தக்கந்த, உடவலவை மற்றும் கதிர்காமம் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T02:14:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசிபிக் பெருங்கடலில் ஒரே நேரத்தில் தீவிரமடைந்த மூன்று சூறாவளிகள் - இலங்கைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/three-cyclones-pacific-ocean-danger-to-sri-lanka-1788660029"></link>
            <id>https://tamilwin.com/article/three-cyclones-pacific-ocean-danger-to-sri-lanka-1788660029</id>
            <summary type="text">உலக நாடுகள் பலவற்றை எல் நினோ தாக்கம் பாதித்துள்ள பின்னணியில் பசிபிக் பெருங்கடலில் 11 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நேரத்தில் உருவான மூன்று சூறாவளிகள் தீவிரமட...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக நாடுகள் பலவற்றை எல் நினோ தாக்கம் பாதித்துள்ள பின்னணியில் பசிபிக் பெருங்கடலில் 11 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நேரத்தில் உருவான மூன்று சூறாவளிகள் தீவிரமடைந்துள்ளன.&nbsp;&nbsp;</p><p>இந்த சூறாவளி நிலைமை காரணமாக ஏற்பட்ட கனமழை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக ஹவாய் தீவுகளுக்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p>இது நேரடியாக நிலப்பரப்பை தாக்காமல், முக்கியமாக ஹவாய் தீவுகளுக்கு மேற்கே நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இது பல நாடுகளையும் பாதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதுடன், இது மணிக்கு 150 மைல் வேகத்தில் நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.</p><h2>இலங்கையின்&nbsp;&nbsp;பல மாவட்டங்களில் வறட்சி</h2><p>இந்த எல் நினோ நிலைமை, இலங்கையின் பல மாவட்டங்களில் கடுமையான வறட்சியை ஏற்படுத்தி கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74700723-50b0-41ca-ae79-17d318b004ba/26-6a9cc9402b86e.webp' />&nbsp; &nbsp;</p><p>இதன் காரணமாக, நாட்டின் 7 மாவட்டங்களில் கடுமையான வறட்சியான வானிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்த தாக்கம் காரணமாக குடிநீரைப் பெற்றுக்கொள்ள முடியாமல் 35,000க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 115,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><h2>சூரியனின் நகர்வு</h2><p>இதேவேளை, சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஓகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1ba7e76-a73a-430f-9384-73f3dfc342a8/26-6a9cc93f76a24.webp' />&nbsp;</p><p> 

அதற்கமைய இன்றைய தினம் (06) நண்பகல் 12:08 மணிக்கு பெந்தோட்டை, தினியாவல, இத்தக்கந்த, உடவலவை மற்றும் கதிர்காமம் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.&nbsp;</p><p>எனவே ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T02:00:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை நிகழ்வுகளில் நடைமுறைக்கு வரும் தடை: அரசாங்கம் வெளியிட்ட சுற்றறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/alcohol-to-be-banned-from-school-big-matches-1788659817"></link>
            <id>https://tamilwin.com/article/alcohol-to-be-banned-from-school-big-matches-1788659817</id>
            <summary type="text">பாடசாலையின் பெயர் அல்லது சின்னத்தைப் பயன்படுத்தி நடத்தப்படும் எந்தவொரு நிகழ்விலும் மது மற்றும் போதைப்பொருட்களின் பயன்பாடு மற்றும் விளம்பரங்களுக்கு அரச...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாடசாலையின் பெயர் அல்லது சின்னத்தைப் பயன்படுத்தி நடத்தப்படும் எந்தவொரு நிகழ்விலும் மது மற்றும் போதைப்பொருட்களின் பயன்பாடு மற்றும் விளம்பரங்களுக்கு அரசாங்கம் முழுமையான தடை விதித்துள்ளது.</p><p>
பாடசாலையின் பெயர் அல்லது சின்னத்தைப் பயன்படுத்தி நடத்தப்படும் அனைத்து நிகழ்வுகளும் அதிகாரப்பூர்வ பாடசாலை நிகழ்வாகவே கருதப்பட்டு இத்தடைக்கு உட்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;உடனடியாக தடை&nbsp;</h2><p>
இந்த விதியை மீறும் நிகழ்வுகளை உடனடியாகத் தடை செய்வதற்கு கல்வி அமைச்சின் செயலாளருக்கு '2026/10' இலக்க சுற்றறிக்கை மூலம் முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b9673ee-cdb8-41e4-a88b-2ed823ffd72a/26-6a9cc86b54f3e.webp' /></p><p>
</p><p>முன்னணி பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளின் ('பிக் மெட்ச்') போது மாணவர்கள் மது மற்றும் போதைப்பொருட்களுக்கு பயன்படுத்துவதாக பெற்றோர் தெரிவித்த தொடர் முறைப்பாடுகளைத் தொடர்ந்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>பாடசாலைகளுக்கு இடையிலான முக்கிய கிரிக்கெட் போட்டிகள் உட்பட பாடசாலை தொடர்பான அனைத்து நிகழ்வுகளும் கல்வி அமைச்சினால் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
பாடசாலையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அல்லது அதன் சின்னத்தைப் பயன்படுத்தும் எந்தவொரு நிகழ்விலும் போதைப்பொருட்களை விளம்பரப்படுத்தவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது என கல்வி அமைச்சின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் மஹேஸ் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T01:57:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதன் பகவானால் நல்ல மாற்றங்களை சந்திக்கக்கூடிய 5 ராசிகள் யார் யார் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/puthan-zodiac-signs-experience-positive-change-1788657217"></link>
            <id>https://jvpnews.com/article/puthan-zodiac-signs-experience-positive-change-1788657217</id>
            <summary type="text">புதன் பகவான் செப்டம்பர் 7ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை, தனது சொந்த ராசியான கன்னி ராசியில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ளார். அவருடைய வலிமையான அமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதன் பகவான் செப்டம்பர் 7ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை, தனது சொந்த ராசியான கன்னி ராசியில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ளார். அவருடைய வலிமையான அமைப்பு, அவர் ஆட்சி பெறுவதால் ஏற்படும் பத்ர யோகம், காரணமாக இந்த காலத்தில் பல ராசிகள் முன்னேற்றத்தையும், நல்ல வாய்ப்புகள், மகிழ்ச்சியை பெறக்கூடிய நபர்களாக இருப்பார்கள். எந்தெந்த நபர்களின் அதிக நன்மையை பெறுவார்கள் என நாம் இங்கு பார்ப்போம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/433d0e59-0282-427c-b9a2-98aedaaf206c/26-6a9cbe429d23a.webp' /></p><h3>ரிஷப ராசி&nbsp;</h3><p>ரிஷப ராசி சேர்ந்த நண்பர்களுக்கு புதன் பகவான் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளார். அது மட்டும் இல்லாமல், உங்களுடைய ராசி அதிபதி சுக்கிரனும் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்து வரக்கூடிய காரணத்தால் உங்களுக்கு வேலை மற்றும் தொழில் தொடர்பான நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். பணியிடத்தில் அனுபவசாலிகளின் ஆதரவை பெறுவீர்கள். அதுமட்டுமல்லாமல் உங்களுடைய சிறப்பான திட்டமிடல், ஆலோசனைகள் மூலம் வேலையை நகர்த்த முடியும். உங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தின் வருடம் இனிய சுற்றுலா செவ்வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய முயற்சிகளுக்கு சரியான பாதை அமையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f8db758-f2d1-4aaa-8166-ad14ca553d25/26-6a9cbe43529fa.webp' /></p><h3>மிதுன ராசி</h3><p>மிதுன ராசி அதிபதியான புதன் பகவான், உங்களுடைய சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ள காரணத்தால், பலவிதத்தை நன்மைகளை பெறுபவர்கள். குறிப்பாக உங்களுடைய எதிர்காலம் மனதில் வைத்து நீங்கள் எடுக்கும் முயற்சிகள் மற்றும் முதலீடு மூலம் நன்மைகள் தெரிவீர்கள். மேலும் கணிசமான லாபம் தரக்கூடிய திட்டங்கள் அல்லது ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. நீண்ட நாட்களாக நீங்கள் செய்து வரக்கூடிய கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். பல புதிய வருமான வரிகள் உருவாகும். அதன் மூலம் உங்களுடைய நிதிநிலைமை மேம்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5199232-5177-4d72-bc20-13a122f11bf2/26-6a9cbe440b572.webp' /></p><h3>சிம்ம ராசி</h3><p>சூரிய பகவானை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு, இந்த புதனின் பெயர்ச்சி நல்ல பலன்களை தரக்கூடியதாக இருக்கும். உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்தில் புதன் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ள காரணத்தால், நிதிநிலை தொடர்பான முன்னேற்றங்களை பெறுவீர்கள். உங்களுக்கு மன மகிழ்ச்சி தரக்கூடிய விதத்தில் சில நல்ல நிகழ்வுகள் நடக்கும். மேலும் திட்டமிட்டபடி எல்லா விஷயங்களும் சரியாக நடக்கும் என்பதால் உங்களுடைய முயற்சிகள் மற்றும் திட்டமிடலை அதிகரிப்பதன் மூலம் நன்மை பெறலாம். உங்களுடைய மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நிதி விவாகங்களில் வலுவாக இருப்பீர்கள். நீங்கள் எந்த வித சிக்கலில் இருந்தாலும் அதிலிருந்து விடுபடுவீர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86055002-ff25-47e3-8eff-890a944dd475/26-6a9cbe44b2e96.webp' /></p><h3>கன்னி ராசி</h3><p>கன்னி ராசிக்கு உங்கள் ராசி அதிபதி புதன் பெயர்ச்சியாகி ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ள காரணத்தாலும், தன ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்றுச் சஞ்சரிப்பதாலும், உங்களுடைய முன்னேற்றத்திற்கான பல சாதகமான சூழல்கள் உருவாகும். நீங்கள் செய்யக்கூடிய தொழில், வியாபாரம் தொடர்பாக நன்மைகள் பெறுவீர்கள். உங்களுடைய முக்கிய வேலைகளை முடிக்க நீங்கள் இருக்கும் கடின உழைப்பு நல்ல பலனைத் தரும். நம்பிக்கை அதிகரிக்க கூடிய காலம். உங்கள் நல்ல செயல்பாடுகளால் குடும்பத்திலும், பணியிடத்தில் மரியாதை பெறுவீர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80714478-9177-48bc-821a-ef9b9770d9ca/26-6a9cbe45657b1.webp' /></p><h3>விருச்சிக ராசி&nbsp;</h3><p>விருச்சிக ராசி அன்பர்களுக்கு லாப ஸ்தானத்தில் புதன் ஆட்சி பெற்று, சஞ்சாரம் செய்ய உள்ள காரணத்தால், உங்களுக்கு பணம் விதத்தில் நம்மை ஏற்படும். குறிப்பாக புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான பயணங்கள் செல்லவும், நிதி திட்டமிடலில் ஈடுபடவும் செய்வீர்கள். உங்கள் வாழ்க்கை துணையுடன் இணக்கம் அதிகரிக்கும். உங்கள் தந்தையின் ஆதரவு, ஆலோசனை கிடைக்கும். உங்கள் வீட்டில் சில சுப நிகழ்ச்சிகள் அல்லது ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். உங்களுடைய மனதிற்கு அமைதியை தரக்கூடிய செயல்களை செய்து மகிழ்வீர்கள்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3f112f3-9318-4731-8219-3f3a58e6030e/26-6a9cbe461837c.webp' /></p>]]></content>
            <updated>2026-09-06T01:47:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹொர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் அதிரடித் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-launches-surprise-attack-ships-strait-hormuz-1788655698"></link>
            <id>https://canadamirror.com/article/iran-launches-surprise-attack-ships-strait-hormuz-1788655698</id>
            <summary type="text">ஹொர்முஸ் நீரிணை வழியே விதிமுறைகளை மீறிச் சென்ற 2 முதல் 5 கப்பல்கள் வரை தினமும் இரவு நேரத்தில் &quot;தண்டிக்கப்பட்டதாக&quot; ஈரானிய புரட்சிகர காவல் படையின் கடற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹொர்முஸ் நீரிணை வழியே விதிமுறைகளை மீறிச் சென்ற 2 முதல் 5 கப்பல்கள் வரை தினமும் இரவு நேரத்தில் "தண்டிக்கப்பட்டதாக" ஈரானிய புரட்சிகர காவல் படையின் கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

2026 ஆகஸ்ட் 30-ஆம் திகதி வரையிலான 10 நாட்களில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
</p><p>
இந்த தாக்குதல்களின் பின்னரும் கூட விதிமுறைகளை மீறும் கப்பல்கள் மீது தேவையான நேரங்களில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஈரானிய புரட்சிக்கர காவல்படை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84aeccc2-db4f-43b4-8b4c-19e67b48c22f/26-6a9cb85407a41.webp' /></p><p>

இந்தநிலையில், ஈரானின் மூன்று எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலை ஈரான் வெளியுறவு அமைச்சகம் "போர்க்குற்றம்" என கடுமையாகக் கண்டித்துள்ளது.
</p><p>
அத்துடன், பிராந்திய கடற்பகுதியில் அமெரிக்காவின் முற்றுகை மற்றும் தாக்குதல்கள் தொடர்ந்தால் அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது பதிலடித் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும் என ஈரானிய ஆயுதப்படைகள் எச்சரித்துள்ளன.
</p><p>
எனினும், பிராந்திய கடற்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இரண்டு அமெரிக்க போர்க்கப்பல்களை இலக்கு வைத்து ஈரானிய புரட்சிகர காவல் படை பெலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்கியதைத் தொடர்ந்தே ஈரானிய எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்க மத்திய கட்டளையகம் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.
</p><p>
இதேவேளை, ஈரானின் நதான்ஸ் (Natanz) அணுசக்தி மையத்திற்கு அருகே அமைந்துள்ள 'பிக்அக்ஸ்' (Pickaxe Mountain) நிலத்தடி அணுசக்தி வளாகத்தின் மீது மிக விரைவில் (very soon) தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார்.
</p><p>
கடந்த ஜூலை மாதத்திற்குப் பிறகு இத்தகைய எச்சரிக்கையை அவர் மீண்டும் விடுத்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-06T01:47:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் அடைக்கப்பட்ட நாமலுக்கு எதிராக கிறிஷ் மோசடி வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fraud-case-against-imprisoned-namal-1788659168"></link>
            <id>https://jvpnews.com/article/fraud-case-against-imprisoned-namal-1788659168</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் முன்னாள் நெருங்கிய சகாவும் தொழிலதிபருமான நிமல் பெரேரா, அவருக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு தனித்தனி வழக்குக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் முன்னாள் நெருங்கிய சகாவும் தொழிலதிபருமான நிமல் பெரேரா, அவருக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு தனித்தனி வழக்குகளில் முக்கிய சாட்சியாக சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p> </p><p></p><p>குறிப்பாக, Krrish Lanka நிறுவனத்தால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் ரூ.70 மில்லியன் நிதி, நிமல் பெரேராவுடன் தொடர்புடைய கணக்குகள் ஊடாக நாமல் ராஜபக்சவுக்கு சென்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலும் அவர் முக்கிய சாட்சியாகக் கருதப்படுகிறார்.</p><p>

நாமல் ராஜபக்சவுக்கு எதிராக இடம்பெற்று வரும் விசாரணைகளில், நிமல் பெரேராவின் சாட்சியம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என விசாரணைத் தரப்புகளுக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fafefd79-6887-4fea-9116-59d7cb9e296d/26-6a9cc5e274911.webp' /></p><p>இதனிடையே, நாமல் ராஜபக்சவுக்கு எதிரான ஏர்பஸ் கொள்வனவு தொடர்பான ஊழல் விசாரணையிலும் நிமல் பெரேரா முக்கிய சாட்சியாகக் கருதப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்த வழக்குடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சில முக்கிய ஆவணங்கள் மற்றும் வாக்குமூலங்கள் விசாரணைகளில் கவனம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள சட்டத்தரணி இந்திக கருணாஜீவ, நிமல் பெரேராவைத் தொடர்புகொண்டு, ராஜபக்சவுக்கு எதிராக எந்தவொரு வாக்குமூலத்தையும் வழங்க வேண்டாம் எனக் கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p> எனினும், அவரைத் தொடர்புகொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு நிமல் பெரேரா பதிலளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகள் அவுஸ்திரேலியாவுக்குச் சென்று நிமல் பெரேராவிடம் சத்தியப்பிரமாண வாக்குமூலம் பதிவு செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அத்துடன், நிமல் பெரேராவுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் அவுஸ்திரேலிய அதிகாரிகளுடன் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தேவையான சந்தர்ப்பத்தில் அவர் காணொளி தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கக்கூடும் எனவும் சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
ஏர்பஸ் விவகாரம் தொடர்பாக அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிடமிருந்து பரஸ்பர சட்ட உதவி மூலம் சில தகவல்கள் மற்றும் ஆவணங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbb2438d-f181-4a89-9824-d83561bacf5e/26-6a9cc5e1b90ac.webp' /></p><p>இதேவேளை, ரூ.70 மில்லியன் நிதி முறைகேடு தொடர்பான மற்றொரு வழக்கிலும் நிமல் பெரேரா முக்கிய சாட்சியாகக் கருதப்படுகிறார். இந்தத் தொகை Krrish Lanka (Pvt) Ltd நிறுவனத்தால் வழங்கப்பட்டதாகவும், பின்னர் நிமல் பெரேராவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாகவும் விசாரணைகளில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>

அதன் பின்னர் குறித்த பணம் நாமல் ராஜபக்சவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கணக்குகளுக்கு சென்றதாகவும் விசாரணைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணத்தின் பரிமாற்றம் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துவதில் நிமல் பெரேராவின் சாட்சியம் முக்கியமானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

இந்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகவும், வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு மேல் நீதிமன்ற அமர்வை கோருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும், நாமல் ராஜபக்சவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் வரை அவை குற்றச்சாட்டுகளாகவே கருதப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T01:47:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் நேட்டோவுடனான உறவுகள் தொடர்பில் கம்யூனிஸ்ட் கட்சி அதிருப்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/comunist-party-agaist-nato-1788658367"></link>
            <id>https://tamilwin.com/article/comunist-party-agaist-nato-1788658367</id>
            <summary type="text">இலங்கை இராணுவம் நேட்டோ அமைப்புடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடத் தயாராகி வருவதாகவும், அதற்கு கடும் கண்டனத்தை வெளியிடுவதகாவும் இலங்கை கம்யூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை இராணுவம் நேட்டோ அமைப்புடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடத் தயாராகி வருவதாகவும், அதற்கு கடும் கண்டனத்தை வெளியிடுவதகாவும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.</p><p>
நேட்டோ அமைப்புடன் இலங்கை இராணுவம் பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான முயற்சிகளை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது.
</p><p>நேட்டோ என்பது காலணித்துவ நோக்கங்களைக் கொண்ட ஒரு அமைப்பு என்றும், இத்தகைய ஒப்பந்தங்கள் மூலம் தற்போதைய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை உலகிற்கு அம்பலமாகிவிட்டதாகவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b14a918e-a2b3-4c46-a64e-00d1a4e3337b/26-6a9cc2c20c4db.webp' /></p><p>
</p><p>பாதுகாப்பு அமைச்சு நேட்டோவுடன் மேற்கொள்ளவுள்ள ஒப்பந்தம் குறித்த விவரங்களை உடனடியாக நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
இலங்கையுடன் இணைந்து பணியாற்றுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துயகொந்த, நேட்டோ அமைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக, செப்டம்பர் 01 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T01:34:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறு ; டெல்லி விமான நிலையத்தில் தொழிலதிபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/airport-businessman-arrested-for-defaming-vijay-1788658376"></link>
            <id>https://jvpnews.com/article/airport-businessman-arrested-for-defaming-vijay-1788658376</id>
            <summary type="text">தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் கூறப்படும் வழக்கில் தொழிலதிபர் பிரவீன் கணேசன் என்பவரை சென்னை இணையக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் கூறப்படும் வழக்கில் தொழிலதிபர் பிரவீன் கணேசன் என்பவரை சென்னை இணையக் குற்றங்களுக்கான காவல்துறையினர் டெல்லி வானூர்தி நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.</p><p></p><p>

கடந்த ஜூன் மாதம் தொழிலதிபர் பிரவீன் கணேசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் முதல்வர் விஜய் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து பதிவிட்டு பின்னர் அதனை நீக்கியதாகக் கூறப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e2e62f4-5e7a-460b-93e3-b060de19af6d/26-6a9cc2c9c95ee.webp' /></p><p>எனினும் அந்தப் பதிவு வைரலானதை அடுத்து காவல்துறையினர் அவர் மீது வழக்கை பதிவு செய்தனர்.
</p><p>
இதனையடுத்து அவருக்கு எதிராக கண்காணிப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச வானூர்தி நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற பிரவீன் கணேசனை காவல்துறையினர் கைது செய்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T01:33:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[டக்ளஸ் காலத்தில் மீன் ஏற்றுவதற்காக அனுப்பப்பட்ட பேருந்தே இப்போது பயணிகள் சேவையில்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bus-sent-to-load-fish-is-in-passenger-service-1788657944"></link>
            <id>https://ibctamil.com/article/bus-sent-to-load-fish-is-in-passenger-service-1788657944</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராகவிருந்த காலப்பகுதியில் மீன்
ஏற்றுவதற்காக அனுப்பப்பட்ட பேருந்துகளே இப்போதும் வடமராட்சி கிழக்கில்
சேவையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராகவிருந்த காலப்பகுதியில் மீன்
ஏற்றுவதற்காக அனுப்பப்பட்ட பேருந்துகளே இப்போதும் வடமராட்சி கிழக்கில்
சேவையில் ஈடுபடுவதாக பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர் பி.அலஸ்ரன்
தெரிவித்துள்ளார்.
</p><p>
அரச பேருந்துகள் தொடர்சியாக பழுதடைவதால் பயணிகள் பாதிக்கப்படுவது தொடர்பாக
கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.</p><p>
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மக்கள் அரச பேருந்தை நாளாந்தம்
தள்ளித்திரிந்து இயக்கி பயணம் மேற்கொள்கின்றனர்.</p><p></p><h2>கட்டி இழுக்கப்படும்&nbsp;பேருந்து</h2><p>காலை 06.00 கட்டைக்காட்டில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் அரச
பேருந்தை பழுது காரணமாக சில நாட்களாக மாணவர்கள், மக்கள் சேர்ந்து
தள்ளித்திரிந்து ஸ்ராட் பண்ணும் சம்பவம் இடம்பெறுகின்றது.</p><p>மக்கள் தள்ளியும் பேருந்து இயங்காது போனால் சமநேரத்தில் பருத்தித்துறைக்கு
பயணிக்கும் அரச பேருந்தால் குறித்த பேருந்து கட்டி இழுக்கப்பட்டு ஸ்ராட்
செய்யப்படுகின்றது.</p><p> கடந்த வெள்ளிக் கிழமை காலை 06.00 மணிக்கு வழமை போன்று பாடசாலை மாணவர்களோடு
பொதுமக்கள் குறித்த பேருந்தை தள்ளி இயக்க முயன்றபோது பேருந்து இயங்கவில்லை.</p><p></p><h2>ரஜீவன் எம்.பி</h2><p>
</p><p>பின்பு பருத்தித்துறை நோக்கி பயணிக்கவிருந்த அரச பேருந்து மூலம் கட்டி இழுத்து
இயக்க முயன்ற வேளையும் பேருந்து இயங்கவில்லை
இதனால் காலை 06.00 மணிக்கு கட்டைக்காட்டில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி
பயணிக்கும் அரச பேருந்து பயணிக்காததால் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் என
பலரும் பாதிப்படைந்தனர்.
</p><p>
வடமராட்சி கிழக்கில் சேவையிலீடுபடும் அரச பேருந்துகள் மிக பழமையானது, முன்னாள்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த காலத்தில் மீனை ஏற்றி செல்வதற்காக
விடப்பட்ட பேருந்துகள் இவை. </p><p>தரமற்ற பேருந்துகளால் வடமராட்சி கிழக்கு மக்கள்
தொடர்ந்தும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். </p><p>இவ்வாறான அடிப்படை தேவைகளை
பூர்த்தி செய்யுமாறுதான் நாம் கேட்கின்றோம்
அதனைவிடுத்து மக்கள் விரும்பாத மசாஜ் நிலையங்களை கொண்டுவர துடிக்கிறார்கள்.</p><p>
சமூகத்தை சீரழிக்கும் மசாஜ் நிலையம் போன்ற அபிவிருத்திகளை செய்வதற்கு ஆர்வம்
காட்டுவதை விடுத்து ரஜீவன் எம்.பி போன்றவர்கள் மக்கள் கேட்கும் தரமான பேருந்து
சேவையை வளங்க வழி செய்ய வேண்டுமென தெரிவித்தார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T01:26:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழல் நபர்களைப் பாதுகாக்க முயல்கிறது ஐக்கிய தேசியக் கட்சி ; நலிந்த ஜயதிஸ்ஸ கடும் விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/attempts-protect-corrupt-individuals-downtrodden-1788657773"></link>
            <id>https://jvpnews.com/article/attempts-protect-corrupt-individuals-downtrodden-1788657773</id>
            <summary type="text">ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளவர்களை பாதுகாக்க ஐக்கிய தேசியக்கட்சி முயற்சிப்பதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கடுமையாக விமர்சித்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளவர்களை பாதுகாக்க ஐக்கிய தேசியக்கட்சி முயற்சிப்பதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்ட அறிக்கையைக் சுட்டிக்காட்டி இந்த விமர்சனத்தை அவர் வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a385d47-72e7-40b9-b47b-e237979a864c/26-6a9cc06ebde61.webp' /></p><p>

நாமல் ராஜபக்ஷ மீது குற்றஞ்சாட்டப்படுவதோ அல்லது அவர் விளக்கமறியலில் வைக்கப்படுவதோ புதிதல்ல

ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்திலேயே அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
ஏர்பஸ் வானூர்திக் கொள்முதல் விவகாரத்தில் 100 மில்லியன் ரூபாய் கையூட்டல் பெறப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளின் அடிப்படையிலேயே, நீதிமன்றமே நாமல் ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
</p><p>
இந்தநிலையில், நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டதை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்ட அறிக்கை அந்தக் கட்சியின் தற்போதைய நிலையைத் தெளிவுபடுத்துகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

ஐக்கிய தேசியக்கட்சியை உண்மையாக நேசிப்பவர்களும் அந்தக் கட்சிக்காக நீண்டகாலம் உழைத்தவர்களும் கூட இந்த அறிக்கையைப் பார்த்து அதிர்ச்சியடைவார்கள்" என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T01:23:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் முக்கிய வழக்குகளை இலக்குவைக்கும் பிரதம நீதியரசர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chief-justice-target-key-cases-before-end-of-term-1788656535"></link>
            <id>https://ibctamil.com/article/chief-justice-target-key-cases-before-end-of-term-1788656535</id>
            <summary type="text">பிரதம நீதியரசர் தனது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் தொடர்புடைய வழக்குகளை திறம்பட முன்னெடுத்து வருவதாக&amp;nbsp;அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதம நீதியரசர் தனது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் தொடர்புடைய வழக்குகளை திறம்பட முன்னெடுத்து வருவதாக&nbsp;அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>மக்கள் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.</p><p>மேலும் கருத்து வெளியிட்ட அவர்,&nbsp;</p><p></p><h2>சட்டவிரோத சொத்துகள்</h2><p>“பொதுச் சொத்துகளைத் தவறாகப் பயன்படுத்திய மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களுக்கு சட்டத்தின் மூலம் தண்டனை வழங்குவதுடன், அவர்கள் சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துகள் மற்றும் பணத்தை மீண்டும் அரசிடம் பெற்றுக்கொள்வதற்கும் அரசு கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/742c3aeb-e00e-40f7-9073-1fda1a11334f/26-6a9cbb99cc948.webp' /></p><p>திருட்டைத் தடுப்பது மட்டுமல்லாமல், முறைகேடாகப் பெற்ற சொத்துகளை மீண்டும் அரசிடம் கொண்டுவருவதற்கான சட்ட சீர்திருத்தங்களும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>
இதற்கமைய, குற்றச் செயல்கள் மூலம் சேர்க்கப்பட்ட சொத்துகளை மீளப் பெறுவதற்கான சட்டத்தின் கீழ், இதுவரை ரூ.4,000 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியுடைய சொத்துகளை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், நீதிபதிகள் தங்களது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றி வருகின்றனர்.</p><p>[PGYK7RB
]</p><h2>நீதியரசரின் பணி</h2><p>
குறிப்பாக பிரதம நீதியரசரின் பணியைப் பாராட்டிய அவர், தனது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் தொடர்புடைய வழக்குகளை திறம்பட முன்னெடுத்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8555f0a-3899-4347-82d2-750de3658435/26-6a9cbb99207bd.webp' /></p><p>நீதித்துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.</p><p>நீதிபதிகளின் சேவைக்காலத்தை நீடிப்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களின் மூலம், மக்களுக்கு மேலும் நெருக்கமானதும் திறமையானதுமான நீதித்துறை அமைப்பை உருவாக்குவதே அரசின் நோக்கம்” என அவர் கூறியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...! </td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T01:10:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆகஸ்டில் அதிகம் விற்பனையான Top 10 மின்சார இருசக்கர வாகனங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/top-10-electric-two-wheeler-brands-august-2026-1788657178"></link>
            <id>https://news.lankasri.com/article/top-10-electric-two-wheeler-brands-august-2026-1788657178</id>
            <summary type="text">இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனை ஆகஸ்ட் 2026-இல் 1.83 லட்சம் யூனிட்கள் என பதிவாகியுள்ளது.

இது ஜூலை மாத விற்பனையை (2.05 லட்சம்) விட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனை ஆகஸ்ட் 2026-இல் 1.83 லட்சம் யூனிட்கள் என பதிவாகியுள்ளது.
</p><p>
இது ஜூலை மாத விற்பனையை (2.05 லட்சம்) விட 11 சதவீதம் குறைவாக இருந்தாலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2025 (1.10 லட்சம்) விற்பனைக்கு ஒப்பிடும்போது 67 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5fdda99-0f58-4329-95cd-4376d4811a06/26-6a9cbe1b97afe.webp' /></p><p>
</p><h2>
முக்கிய பிராண்டுகள் மற்றும் விற்பனை விவரங்கள்:
</h2><ul><li>
TVS Motor Company - 48,873 யூனிட்கள் (91 சதவீதம் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி (YoY) வளர்ச்சி). மார்க்கெட் ஷேர் 27 சதவீதம்.
</li><li>
Bajaj Auto - 41,019 யூனிட்கள் (235 சதவீதம் YoY வளர்ச்சி). 2026-இல் 3 லட்சம் யூனிட்களை கடந்த இரண்டாவது நிறுவனம்.
</li><li>
Ather Energy - 28,708 யூனிட்கள் (16 சதவீதம் மார்க்கெட் ஷேர்).
</li><li>
Hero MotoCorp (Vida) - 18,978 யூனிட்கள் (10 சதவீதம் மார்க்கெட் ஷேர்).
</li><li>
Ola Electric - 13,849 யூனிட்கள் (29 சதவீதம் YoY குறைவு). மார்க்கெட் ஷேர் 18-8 சதவீதமாக குறைந்தது.
</li><li>
Greaves Electric Mobility (Ampere) - 8,612 யூனிட்கள் (89 சதவீதம் YoY வளர்ச்சி).
</li><li>
River Mobility - 5,134 யூனிட்கள் (170 சதவீதம் YoY வளர்ச்சி).
</li><li>
BGauss Auto - 4,844 யூனிட்கள்.
</li><li>
Simple Energy - 1,635 யூனிட்கள்.
</li><li>
Motovolt Mobility - 1,365 யூனிட்கள்.</li></ul><p></p><p>
</p><h2>
சந்தை நிலை:
</h2><p>TVS மற்றும் Bajaj முன்னணி இடங்களை பிடித்துள்ளன. Ather மற்றும் Hero Vida தொடர்ந்து வளர்ச்சி கண்டுள்ளன. ஆனால் Ola Electric மட்டும் YoY விற்பனையில் வீழ்ச்சி கண்டுள்ளது.
</p><p>
இந்த தரவுகள், இந்தியாவில் மின்சார இருசக்கர வாகன சந்தை வேகமாக வளர்ந்து வருவதை காட்டுகின்றன. புதிய பிராண்டுகள் (River, BGauss, Simple Energy) கூட Top 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T01:09:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போருக்குப் பிறகு மத்திய கிழக்கில் டிரம்ப் போட்டுள்ள மிகப்பெரிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-plans-bigger-strategy-post-iran-war-1788655453"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-plans-bigger-strategy-post-iran-war-1788655453</id>
            <summary type="text">Trump plans bigger middle east strategy after Iran war:


அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஈரானுடன் நடைபெற்று வரும் போருக்குப் பிறகு மத்திய கிழக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump plans bigger middle east strategy after Iran war:


அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஈரானுடன் நடைபெற்று வரும் போருக்குப் பிறகு மத்திய கிழக்கில் “மிகப் பெரிய திட்டம்” ஒன்றை செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக Axios வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது.
</p><p>
இந்த புதிய திட்டம் இன்னும் வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcaa1678-9782-454e-bd1d-0d3eb99d03f0/26-6a9cb75f55394.webp' /></p><p>இதன் முக்கிய நோக்கம், ஈரானை கட்டுப்படுத்த பிராந்திய கூட்டணியை உருவாக்குவது மற்றும் இஸ்ரேலை அதன் அண்டை நாடுகளுடன் ஆழமான உறவுகளுக்கு அழைத்துச் செல்வது ஆகும்.
</p><p>
டிரம்ப் தனது நெருங்கிய ஆலோசகர்களிடம், “ஈரான் போருக்குப் பிறகு மத்திய கிழக்கில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறேன்” என்று கூறியுள்ளார்.
</p><p></p><h2>திட்டத்தின் மூன்று முக்கிய அம்சங்கள்:
</h2><p><b>ஈரானுக்கு எதிரான பிராந்திய கூட்டணி:</b> அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கும் வகையில், தனது கூட்டாளிகளை ஒருங்கிணைக்க முயற்சி.</p><p><b>
பிராந்திய மோதல்களை குறைத்தல்:</b> காசா திட்டத்தின் அடுத்த கட்டம், இஸ்ரேல்-சிரியா பாதுகாப்பு ஒப்பந்தம், இஸ்ரேல்-லெபனான் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துதல்.</p><p><b>

Abraham Accords விரிவாக்கம்:</b> இஸ்ரேல்-சவுதி அரேபியா இடையே உறவை சாதாரணப்படுத்தும் ஒப்பந்தம். இது டிரம்ப் நிர்வாகத்துக்கு மிகப்பெரிய சாதனையாக இருக்கும்.</p><p>
</p><p></p><p>இஸ்ரேல் தேர்தல் அக்டோபர் 27 அன்று நடைபெற உள்ளது. அதற்குப் பிறகு உருவாகும் அரசாங்கம் அமெரிக்காவின் புதிய திட்டத்துடன் இணைந்து செயல்படுமா என்பது கேள்வியாக உள்ளது. ஆனால், டிரம்ப் நிர்வாகம் தேர்தல் முடிவுகளை காத்திருக்காமல் திட்டத்தை முன்னெடுக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T00:59:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு எதிராக புதிய வழக்கு! சாட்சியமளிக்கத் தயாராகும் நெருங்கிய சகா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-case-against-namal-who-went-to-prison-1788630600"></link>
            <id>https://ibctamil.com/article/new-case-against-namal-who-went-to-prison-1788630600</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் முன்னாள் நெருங்கிய சகாவும், தொழிலதிபருமான நிமல் பெரேரா, அவருக்கு எதிராக இரண்டு தனித்தனி வழக்குகளில் சாட்சியம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் முன்னாள் நெருங்கிய சகாவும், தொழிலதிபருமான நிமல் பெரேரா, அவருக்கு எதிராக இரண்டு தனித்தனி வழக்குகளில் சாட்சியம் அளிக்கத் தயாராக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>விசாரணைக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவின் ஏர்பஸ் ஊழல் வழக்கில் முக்கிய சாட்சியாக&nbsp;நிமல் பெரேரா குறித்து முன்வைக்கப்பட்ட பிரமாண பத்திரம் முக்கியத்துவம் பெற்றிருந்தது.</p><p></p><p>
</p><h2>வழக்கு ஒன்று: ஏர்பஸ் ஊழல்</h2><p><u><b>நிமல் பெரேராவைத் தொடர்புகொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சி</b></u></p><p> நாமல் ராஜபக்சவின் சகாவான, விக்டோரியா மாநிலம் மெல்போர்னில் வசிக்கும் சட்டத்தரணி இந்திக கருணாஜீவா, தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ராஜபக்சவின் நீண்டகால நண்பரான நிமல் பெரேராவைத் தொடர்புகொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f352e2f1-f75e-4a01-9029-a6b6e791f1af/26-6a9c564bbc750.webp' /></p><p> ராஜபகசவுக்கு எதிராக எந்தவொரு வாக்குமூலமும் அளிக்க வேண்டாம் என அவரிடம் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
கருணாஜீவா, Narre Warren, VIC 3805, 66 Victor Crescent, Level 2, Suite 319 என்ற முகவரியில் இயங்கும் ISK Law நிறுவனத்தின் பிரதான சட்டத்தரணியாக உள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.</p><h2>தோல்வியடைந்த முயற்சி </h2><p>நன்கு அறிந்த வட்டாரங்களின் தகவலின்படி, கருணாஜீவாவால் நிமல் பெரேராவைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் செய்த தொலைபேசி அழைப்புகளுக்கு பெரேரா பதிலளிக்கவில்லை என்றும், குறுஞ்செய்திகளுக்கும் பதில் அளிப்பதைத் தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f1b1555-5e93-4876-b0c0-dc129ed0ac3c/26-6a9c564b0ee8a.webp' /></p><p>

இதனால் அவரைத் தொடர்புகொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்ததாகக் கூறப்படுகிறது. </p><p>இந்தச் சம்பவம் நாமல் ராஜபக்சவை மிகவும் அதிருப்தியடையச் செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>CID அதிகாரிகள் அவுதிரேலியா பயணம்</h2><p>இந்த விவகாரம் தெரியவந்ததைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் துறை (CID) மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவுதிரேலியாவுக்குச் சென்று நிமல் பெரேராவிடமிருந்து சத்தியப்பிரமாண வாக்குமூலம் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.</p><p>சட்டமா அதிபர் திணைக்களத்தின் மூத்த சட்டத்தரணி ஒருவரின் கூற்றுப்படி, நிமல் பெரேராவுக்கு சாட்சி பாதுகாப்பும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் வழங்க அவுதிரேலிய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
அவர் அவுதிரேலியாவில் இருந்தபடியே Zoom வழியாக சாட்சியம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>சர்வதேச பரஸ்பர சட்ட உதவி</h2><p>அவுதிரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிடமிருந்து பரஸ்பர சட்ட உதவி மூலம் விசாரணைக்கு ஆதரவு கிடைத்துள்ளதாகவும், விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4c92a64-f88c-4b89-a08d-fa4e768bc4b5/26-6a9c564c72257.webp' /></p><p>

இந்த வழக்கின் முக்கிய அம்சமாக Airbus நிறுவனத்திடமிருந்து ஆவணங்களைப் பெறுவதற்கான நடவடிக்கை அமைந்துள்ளது.
</p><p>
சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒரு தகவல் வட்டாரம் இந்த வழக்கு வலுவான நிலையில் இருப்பதாகவும், நாமல் ராஜபக்சவுக்கு எதிரான மேலும் பல ஆதாரங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.</p><p></p><p>
</p><h2>வழக்கு இரண்டு: கிரிஷ் விவகாரம்
நிதி முறைகேடு</h2><p><b><u>கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை</u></b></p><h2> </h2><p>இரண்டாவது வழக்கு, ரக்பி விளையாட்டு மேம்பாட்டிற்காக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் ரூ.70 மில்லியன் தொடர்பானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6ded7ec-8a2f-4214-8f44-72f7bab52c63/26-6a9c564d2a0bd.webp' /></p><p>
</p><p>
இந்தப் பணம் Krrish Lanka (Pvt) Ltd நிறுவனத்தால் செலுத்தப்பட்டதாகவும், பின்னர் நிமல் பெரேராவுடன் தொடர்புடைய வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர் அந்த நிதி நாமல் ராஜபக்சவுக்கு மாற்றப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>இந்த நிதி தொடர்பாக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்தப் பணப் பரிவர்த்தனையின் ஓட்டம் தொடர்பான முக்கிய அரசுத் தரப்பு சாட்சியாக நிமல் பெரேரா பெயரிடப்பட்டுள்ளார்.
</p><p>இந்த வழக்கை விசாரிப்பதற்காக மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வை நியமிக்குமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T00:59:18+00:00</updated>
        </entry>
    </feed>
