<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-12T09:37:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம்: கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-regarding-strong-winds-and-rough-seas-1789204321"></link>
            <id>https://tamilwin.com/article/warning-regarding-strong-winds-and-rough-seas-1789204321</id>
            <summary type="text">பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்த எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு இன்று (12.9.2...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்த எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.</p><p>

இந்த அறிவிப்பு இன்று (12.9.2026) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், இது நாளை (13) முற்பகல் 11.00 மணி வரை செல்லுபடியாகும். </p><p>

குறித்த அறிவிப்பின்படி, அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையை ஒட்டியுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அப்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.</p><h2>எச்சரிக்கை</h2><p> </p><p>

அதேபோல், சிலாபத்திலிருந்து காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையை ஒட்டியுள்ள கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரமானது 2.0 முதல் 3.0 மீற்றர் வரை உயர்வடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d69b2df4-f3bd-443a-bb48-b008b7732b7d/26-6aa51b186b124.webp' /></p><p> </p><p>

இதன் காரணமாக, பேருவளையிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான பகுதிகளில் கடல் அலைகள் கரையை நோக்கி வரக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

எனவே, குறித்த கடற்பரப்புகளில் கடற்றொழில் மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் மீன்பிடி மற்றும் கடற்சார் சமூகத்தினர் இது குறித்து மிகுந்த விழிப்புடன் செயல்படுமாறு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T09:31:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்நினோ தாக்கம்! முள்ளிப்பொத்தானையில் கடும் வறட்சி - முற்றாக வற்றிய கிணறுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-in-sri-lanka-1789202092"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-in-sri-lanka-1789202092</id>
            <summary type="text">எல்நினோ காலநிலைத் தாக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால், திருகோணமலை
மாவட்டத்தின் முள்ளிப்பொத்தானை பகுதியில் கிணறுகளில் நீர் வற்றி வரண்ட நிலையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல்நினோ காலநிலைத் தாக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால், திருகோணமலை
மாவட்டத்தின் முள்ளிப்பொத்தானை பகுதியில் கிணறுகளில் நீர் வற்றி வரண்ட நிலையில் காணப்படுவதா எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
</p><p>நீண்ட காலமாக போதிய மழைவீழ்ச்சி இல்லாததன் காரணமாக அப்பகுதியில் உள்ள பல
கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.</p><p>இதன் காரணமாக சில கிணறுகள் முற்றாக வற்றிய
நிலையில் காணப்படுகின்றன.</p><h2>குழாய் நீர் விநியோகம்</h2><p>
</p><p>
அதேவேளை, குழாய் நீர் விநியோகமும் தொடர்ச்சியாக இடம்பெறாமல், குறிப்பிட்ட
நேரங்களில் மாத்திரமே விநியோகிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96b5a894-0318-4cb6-9017-a2870d96150b/26-6aa51bafb7c04.webp' /></p><p>இதன் காரணமாக மக்கள் குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டிய நிலை
ஏற்பட்டுள்ளது.
</p><p>
குறிப்பாக, குடிநீர் தேவைக்காக கிணறுகளை நம்பியுள்ள குடும்பங்கள் வறட்சியால்
பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் நாட்களிலும் மழை பெய்யாத
பட்சத்தில் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T09:30:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நடுவீதியில் வெட்டிக்கொல்லப்பட்ட இளம் குடும்பஸ்தர் ; பொலிஸார் காட்டிய அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-father-hacked-to-death-on-jaffna-street-1789196456"></link>
            <id>https://jvpnews.com/article/young-father-hacked-to-death-on-jaffna-street-1789196456</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்ப்பாணம் வடமராட்சி, கிராமக்கோடு சந்திக்கு அருகில் முன்பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;யாழ்ப்பாணம் வடமராட்சி, கிராமக்கோடு சந்திக்கு அருகில் முன்பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "> எனினும், சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f6a6e37-199a-44b3-83d1-2e49a7352dcc/26-6aa4f8a9e9d87.webp' /></p><h2 style="text-align: justify; ">முன்பகைமை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், துன்னாலை பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஜெயசீலன் ஜெனிதன் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">


துன்னாலை பகுதியைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த பகைமை காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p style="text-align: justify; ">

மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் அடங்கிய குழுவினர், ஜெனிதனை வழிமறித்து சரமாரியாக வெட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், சந்தேகநபர்கள் மூவர் முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் அவர்களைக் கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">



கைது செய்யப்பட்ட மூவரும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். </p><p style="text-align: justify; ">அதேவேளை, தலைமறைவாகியுள்ள பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்கான தொடர் விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-12T09:28:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/university-vacancies-chancellars-edu-ministry-1789204352"></link>
            <id>https://tamilwin.com/article/university-vacancies-chancellars-edu-ministry-1789204352</id>
            <summary type="text">பல்கலைக்கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகளை விரைவுபடுத்துமாறு துணைவேந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்கலைக்கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகளை விரைவுபடுத்துமாறு துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>பல வெற்றிடங்கள்..&nbsp;</h2><p>
</p><p>உயர்கல்வி தொடர்பான ஆலோசனைக் குழுவின் முன், துணைவேந்தர்கள் அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாகக் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebf8c250-bbf8-428e-9d4f-788720598821/26-6aa519e0bc431.webp' /></p><p>
</p><p>அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உள்ள கல்விசார் மற்றும் கல்விசாரா காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
</p><p>இருப்பினும், சில பல்கலைக்கழகங்களில் ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.</p><p>தற்போது நாட்டில் 19 பல்கலைக்கழகங்கள் உள்ளமை இதன்போது சுட்டிக்காட்டத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T09:28:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் நல்லூரில் தாலிக்கொடி அறுத்த கொழும்பு பெண்ணுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/colombo-woman-who-stole-chain-faces-arrest-1789204320"></link>
            <id>https://jvpnews.com/article/colombo-woman-who-stole-chain-faces-arrest-1789204320</id>
            <summary type="text">வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆலய தேர் திருவிழாவின் போது தாலிக்கொடி அறுத்த குற்றச்சாட்டில் கைதான கொழும்பை சேர்ந்த பெண்ணொருவர் கைது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆலய தேர் திருவிழாவின் போது தாலிக்கொடி அறுத்த குற்றச்சாட்டில் கைதான கொழும்பை சேர்ந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் </p><p>

தேர் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பெண்ணொருவரின் தாலிக்கொடி அறுக்கப்பட்டமை தொடர்பில் , ஆலய சூழலில் கடமையில் இருந்த பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17068f16-31b6-4ac3-b470-32ab5babe4c7/26-6aa5176285ad4.webp' /></p><p> துரிதமாக செயற்பட்ட பொலிஸார் , ஆலய சூழலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவின் உதவியுடன் தாலிக்கொடி அறுத்த பெண்ணை அடையாளம் கண்டு கைது செய்தனர்</p><p></p><p> </p><p>

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ,பெண்ணிடம் இருந்து அறுக்கப்பட்ட தாலிக்கொடி மீட்கப்பட்டது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T09:28:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவுக்கு அணுசக்தி தொழில்நுட்பங்களை வழங்க முன்வந்த ரஷ்ய நிறுவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rosatom-india-nuclear-technologies-1789205382"></link>
            <id>https://news.lankasri.com/article/rosatom-india-nuclear-technologies-1789205382</id>
            <summary type="text">Russia&#039;s Rosatom offers nuclear, critical-mineral technologies: ரஷ்யாவின் Rosatom நிறுவனம் அணுசக்தி, முக்கிய கனிமங்களுக்கான தொழில்நுட்பங்களை வழங்க முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russia's Rosatom offers nuclear, critical-mineral technologies: ரஷ்யாவின் Rosatom நிறுவனம் அணுசக்தி, முக்கிய கனிமங்களுக்கான தொழில்நுட்பங்களை வழங்க முன்வந்துள்ளது.
</p><p>ரஷ்ய அரசுக்குச் சொந்தமான முன்னணி அணுசக்தி நிறுவனமான ரோசாட்டம் (Rosatom), அதிக திறன் கொண்ட அணு உலைகள் மற்றும் சிறிய மட்டுநிலை அணு உலைகள் (SMRs) உள்ளிட்ட பல்வேறு வகையான அணுசக்தி தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்க முன்வந்துள்ளது.</p><h2>இருதரப்பு ஒத்துழைப்பு</h2><p>
</p><p>அத்துடன், டைட்டானியம், சிர்கோனியம் மற்றும் அரிய வகை கனிமங்கள் போன்ற முக்கிய கனிமங்கள் சார்ந்த ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் அந்த நிறுவனம் தீவிரம் காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a44f1c5a-611e-40b3-b8d4-c316fd471f75/26-6aa51b886bd97.webp' /></p><p>
</p><p>18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக நிறுவனத்தின் உயர்மட்டத் தலைவர்கள் இதை தெரிவித்துள்ளனர். பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, டெல்லியில் செப்டம்பர் 11 அன்று பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைச் சந்தித்ததைத் தொடர்ந்து இந்த நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. </p><p>இரு தலைவர்களும் எரிசக்தித் துறை உள்ளிட்ட இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றத்தை ஆய்வு செய்ததுடன், 2030-ஆம் ஆண்டிற்குள் இருதரப்பு வர்த்தகத்தை 100 பில்லியன் டொலராக உயர்த்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே தொழில்துறை ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் விவாதித்துள்ளனர். </p><p>இந்தியா தனது அணுசக்தித் துறையைத் தொடர்ந்து மேம்படுத்தி வருவதுடன், 2047-ஆம் ஆண்டிற்குள் தனது அணுசக்தி உற்பத்தித் திறனை 100 ஜிகாவாட்டாக (GW) உயர்த்தும் லட்சிய இலக்கையும் நிர்ணயித்துள்ளது.</p><p></p><p> </p><p>இந்த இலக்கை அடைவதற்கு ரோசாட்டம் நிறுவனம் ஏற்கனவே ஒரு நடைமுறைப் பங்களிப்பைச் செய்து வருகிறது: இந்தியாவில் அணுமின் நிலையத்தை அமைக்கும் ஒரே வெளிநாட்டு நிறுவனம் நாங்கள்தான் என ரோசாட்டம் (Rosatom) நிறுவனத்தின் பெருநிறுவன மேம்பாடு மற்றும் சர்வதேச வணிகத்திற்கான முதல் துணைப் பொது இயக்குநர் கிரில் கொமரோவ் தெரிவித்துள்ளார். </p><p>மேலும், இந்தியாவின் இலக்கின் அளவைக் கருத்தில் கொண்டு, பெரிய திறன் கொண்ட மின் உற்பத்தி அலகுகள் முதல் சிறிய மட்டு அணு உலைகள் (SMRs) வரை பல்வேறு வகையான நவீன அணுசக்தித் தீர்வுகளை எங்கள் கூட்டாளர்களுக்கு வழங்க நாங்கள் தயாராக உள்ளோம் என்று கொமரோவ் கூறியுள்ளார்.</p><h2>அரிய-பூமி காந்தங்கள்</h2><p> இந்தியாவில் ரோசாட்டம் (Rosatom) நிறுவனம் ஒரு அணுமின் நிலையத்தை அமைத்து வருகிறது; இதில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரண்டு அலகுகள் செயல்பாட்டில் உள்ளன, மேலும் நான்கு அலகுகள் செயல்படுத்தலின் பல்வேறு கட்டங்களில் உள்ளன. </p><p>தற்போது, ​​ஏற்கனவே உள்ள கூடங்குளம் திட்டத்தைத் தாண்டி அணுசக்தித் துறையிலான கூட்டுறவை விரிவுபடுத்த முற்படும் நிலையில், அந்த ரஷ்ய நிறுவனம் தனது VVER-1200 உலை தொழில்நுட்பத்தையும் இந்தியாவுக்கு வழங்க முன்வந்துள்ளது. </p><p>VVER-1000 ரக அணு உலைகளைக் கொண்ட குடன்குளம் அலகுகள் 1 மற்றும் 2 ஆகியவை, முறையே 2013 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் தேசிய மின் தொகுப்புடன் இணைக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12cb67c8-6e3c-491e-8288-80aae926b908/26-6aa51b8939e77.webp' /></p><p> </p><p>ஏப்ரல் 2026 நிலவரப்படி, அந்த இரண்டு அலகுகளும் செயல்பாட்டிற்கு வந்ததிலிருந்து 132 பில்லியன் கிலோவாட்-மணிநேரத்திற்கும் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளதாக ரோசாட்டம் (Rosatom) நிறுவனம் தெரிவித்துள்ளது. </p><p>அணுசக்தித் துறையுடன் சேர்த்து, ரோசாட்டம் (Rosatom) நிறுவனம் முக்கியமான கனிமங்கள் மற்றும் மூலப்பொருட்கள் சார்ந்த வாய்ப்புகளையும் தேடி வருகிறது. </p><p>அதன் உலோகவியல் வணிகங்கள் டைட்டேனியம், சிர்கோனியம், ஹாஃப்னியம் மற்றும் கால்சியம் ஆகியவற்றை ஒத்துழைப்புக்கான துறைகளாக அடையாளம் கண்டுள்ள நிலையில், ரோசாட்டம் மெட்டல்டெக் நிறுவனம் அரிய-பூமி காந்தங்கள், அரிய-பூமி பொருட்களுக்கான ஒருங்கிணைந்த தேவை மற்றும் புதிய உற்பத்தித் திறன்களில் முதலீடு செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-12T09:26:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 கண்களுடன் அதிசய தேங்காய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/coconut-found-with-4-eyes-1789205120"></link>
            <id>https://manithan.com/article/coconut-found-with-4-eyes-1789205120</id>
            <summary type="text">கேரளாவின் பாலக்காட்டில் 4 கண்களுடன் காணப்பட்ட தேங்காயை பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்து சென்றனர்.

பாலக்காடு மாவட்டம் மண்ணம்பட்டா பகுதியை சேர்ந்தவர் ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேரளாவின் பாலக்காட்டில் 4 கண்களுடன் காணப்பட்ட தேங்காயை பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்து சென்றனர்.
</p><p>
பாலக்காடு மாவட்டம் மண்ணம்பட்டா பகுதியை சேர்ந்தவர் ஜெயராம், ராணுவ அதிகாரியாக இருக்கிறார்.
</p><p>
இவரது வீட்டில் உள்ள தேங்காய் மரத்தில் பறிக்கப்பட்ட காய் ஒன்று மற்றதை விட வித்தியாசமாக இருந்துள்ளது.</p><p>

வெளிப்புறத்தில் நான்கு கண்களுடன் உள்புறத்தில் 2 சிறிய தேங்காய் காணப்பட்டது, வித்தியாசமாக இருந்த தேங்காயை பார்க்க அப்பகுதி மக்கள் குவிந்ததால் பரபரப்பானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8667f0d0-064c-4b7c-ab68-7795d38ec3f0/26-6aa51a819236e.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-12T09:25:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேஸ்புக் விருந்து என்ற பெயரில் இளைஞர், யுவதிகளின் வெறியாட்டம் - பின்னணியில் ஆபத்தான மர்மநபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cids-search-operations-on-facebook-party-1789203627"></link>
            <id>https://tamilwin.com/article/cids-search-operations-on-facebook-party-1789203627</id>
            <summary type="text">பேஸ்புக் ஊடாக ஒழுங்கமைக்கப்படும் விருந்துகளை சுற்றிவளைக்க புலனாய்வு பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பேஸ்புக் விருந்துகள் மற்றும் அவை நடைபெறும் இட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேஸ்புக் ஊடாக ஒழுங்கமைக்கப்படும் விருந்துகளை சுற்றிவளைக்க புலனாய்வு பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
</p><p>
பேஸ்புக் விருந்துகள் மற்றும் அவை நடைபெறும் இடங்கள் தொடர்பில் புலனாய்வுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான விசேட வேலைத்திட்டம் பொலிஸ் மா அதிபரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான வுட்லர் தெரிவித்துள்ளார்.
</p><p>
பேஸ்புக் விருந்துகள் என்ற போர்வையில் இளைஞர், யுவதிகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பிடியில் சிக்குவதற்கான அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2><b>பொலிஸாரின் கவனம்</b></h2><p>

இது தொடர்பில் பொலிஸாரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a9d4d8a-fbe6-4315-9bf1-a1c33ff7a876/26-6aa519f58eb59.webp' /></p><p>இந்த வேலைத்திட்டத்தின் பலனாக தெல்தெனிய பொலிஸ் பிரிவில் நடைபெற்ற பேஸ்புக் விருந்து ஒன்றில் கலந்துகொண்ட 41 இளைஞர், யுவதிகளைக் கைது செய்ய முடிந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
எதிர்காலத்திலும் இது போன்ற இடங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக புலனாய்வுத் தகவல்களை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இதுபோன்ற விருந்துகள் சில சந்தர்ப்பங்களில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய நபர்களால் ஏற்பாடு செய்யப்படுகின்றது. </p><p>அவை வலையமைப்புக் குற்றங்கள் மற்றும் பணத்தை இலக்காகக் கொண்ட வணிகங்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-12T09:23:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[30 மில்லியன் ரூபாய்க்கு சொகுசு பங்களா - ஷிரான் பாசிக்கின் தந்தைக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-order-issued-to-shiran-basik-s-father-1789204698"></link>
            <id>https://tamilwin.com/article/court-order-issued-to-shiran-basik-s-father-1789204698</id>
            <summary type="text">ரூ. 30 மில்லியன் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு, சொகுசு வீடு வாங்கிய ஷிரான் பாசிக்கின் தந்தையை விளக்கமறியலில் வைக்குமாறு மத்திய கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரூ. 30 மில்லியன் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு, சொகுசு வீடு வாங்கிய ஷிரான் பாசிக்கின் தந்தையை விளக்கமறியலில் வைக்குமாறு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பா வழக்கு இன்று(12.09.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><h2> 


விளக்கமறியல் உத்தரவு</h2><p>
ஷிரான் பாசிக்போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த , ரூ. 30 மில்லியன் பணத்தைக் கொண்டு, கம்பஹாவில் உள்ள பிரைம் ரெசிடென்சியில் தனது தந்தை அப்துல் ரசாக் ஹென்றி பாசிக் பெயரில் ஒரு சொகுசு வீட்டை வாங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8de6a06-33ba-4bd8-b637-6befccb36d52/26-6aa5191b277c2.webp' /></p><p> </p><p>

இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற நிலையில், பணச்சலவைச் சட்டத்தின் கீழ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) அப்துல் ரசாக் ஹென்றி பாசிக் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

இதனைத் தொடர்ந்து, இன்று(12) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய வேளையில், விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T09:19:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூரில் 45 பவுண் நகைகள் திருட்டு: பெண்ணொருவர் விளக்கமறியலில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jewelry-stolen-in-nallur-woman-remande-1789203747"></link>
            <id>https://tamilwin.com/article/jewelry-stolen-in-nallur-woman-remande-1789203747</id>
            <summary type="text">வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆலய தேர் திருவிழாவின் போது
தாலிக்கொடி அறுத்த குற்றச்சாட்டில் கைதான கொழும்பை சேர்ந்த பெண்ணொருவர் நீதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆலய தேர் திருவிழாவின் போது
தாலிக்கொடி அறுத்த குற்றச்சாட்டில் கைதான கொழும்பை சேர்ந்த பெண்ணொருவர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>&nbsp;தேர் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பெண்ணொருவரின் தாலிக்கொடி
அறுக்கப்பட்டமை தொடர்பில் , ஆலய சூழலில் கடமையில் இருந்த பொலிஸாருக்கு
முறைப்பாடு வழங்கப்பட்டது.</p><p>இதனையடுத்து , துரிதமாக செயற்பட்ட பொலிஸார் , ஆலய
சூழலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவின் உதவியுடன் தாலிக்கொடி
அறுத்த பெண்ணை அடையாளம் கண்டு கைது செய்தனர்.</p><h2>கைது</h2><p>&nbsp;கைது செய்யப்பட்ட பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்
,பெண்ணிடம் இருந்து அறுக்கப்பட்ட தாலிக்கொடி மீட்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd9ca202-dc0a-45aa-ad31-cec49db667c5/26-6aa51673ba807.webp' /></p><p>
</p><p>
அதனை அடுத்து குறித்த பெண்ணை யாழ்,நீதவான் நீதிமன்றில் பொலிஸார்
முற்படுத்திய நிலையில் ,அப்பெண்ணை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில்
வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.
</p><p>
அதேவேளை நல்லூர் ஆலய தேர் மற்றும் தீர்த்த திருவிழாவின் போது, சுமார் 45
பவுண் தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளன.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>இந்தநிலையில் , ஆலய சூழலில் பொருத்தப்பட்டுள்ள
கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள
நிலையில் , சில சந்தேக நபர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21323d9a-0990-49a2-93f7-9e26e74247fe/26-6aa5167470ec5.webp' /></p><p>அத்தோடு, அவர்களை கைது
செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T09:08:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன எரிபொருள் விலை தொடர்பில் கனேடியர்களுக்கு ஆறுதலளிக்கும் ஒரு செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/gas-prices-canada-1789200045"></link>
            <id>https://news.lankasri.com/article/gas-prices-canada-1789200045</id>
            <summary type="text">&amp;nbsp;Gas prices are expected to drop soon in Canada: கனடாவில் வாகன எரிபொருள் விலைகள் விரைவில் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


அமெரிக்காவும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;Gas prices are expected to drop soon in Canada: கனடாவில் வாகன எரிபொருள் விலைகள் விரைவில் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>


அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தத் துவங்கியதைத் தொடர்ந்து, பிப்ரவரி மாத இறுதியிலிருந்தே, பெட்ரோல், டீசல் போன்ற வாகன எரிபொருட்கள் விலை உலகமெங்கும் உயர்ந்துவருகிறது.
</p><p>
இந்நிலையில், கனடாவில் வாகன எரிபொருள் விலைகள் விரைவில் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><h2>
என்ன காரணம்?
</h2><p>
முதலாவதாக, குளிர் காலத்தில் கனேடியர்களும் அமெரிக்கர்களும் பயணம் செய்வதை வெகுவாகக் குறைத்துவிடுகிறார்கள்.
</p><p>
ஆகவே, வாகன பயன்பாடு குறைவதால், எரிபொருள் நிரப்புவதற்கான தேவையும் குறைகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/beab7243-9da1-48c0-a108-ca542edb65ea/26-6aa5071a7dd7a.webp' /><br></p><p>

இரண்டாவதாக, கனடாவைப் பொருத்தவரை, குளிர்காலம் துவங்கியதும் வாகன எரிபொருளில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்படும்.</p><p>

குளிர்காலத்தில் வாகன செயல்பாடு நன்றாக இருப்பதற்காக, எரிபொருளுடன் பியூட்டேன் போன்ற உட்பொருட்கள் கலக்கப்படுகின்றன.</p><p>

இந்த பியூட்டேன் போன்றவை கலக்கப்படும் எரிபொருள் விலை, வழக்கமாகவே குறைவாகத்தான் இருக்கும்.
</p><p>
ஆக, இந்த இரண்டு காரணங்களாலும், எரிபொருள் விலைகள் குறைய உள்ளன.
</p><p>
இந்த விலை குறைவு, இம்மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் அமுலுக்கு வர அமுலுக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.<br></p>]]></content>
            <updated>2026-09-12T09:05:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த ஆண்டில் இதுவரை 6 குண்டுத் தாக்குதல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/six-bomb-attacks-reported-so-far-this-year-1789203516"></link>
            <id>https://jvpnews.com/article/six-bomb-attacks-reported-so-far-this-year-1789203516</id>
            <summary type="text">வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட்ட குற்றக் கும்பல்களினால் 6 குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 

அவற்றில் மூன்று தாக்குதல்கள் கல்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட்ட குற்றக் கும்பல்களினால் 6 குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify; ">

அவற்றில் மூன்று தாக்குதல்கள் கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5f9b0cd-b620-4020-818e-4dea5bb8e7a5/26-6aa5143e540f7.webp' /></p><h2 style="text-align: justify; ">பாதாள உலகக் குழுக்கள்</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இவ்வாறாக அண்மைக்காலமாக மேல் மாகாணத்தில் பாதாள உலகக் குழுக்கள் கைக்குண்டுகளைப் பயன்படுத்துவது தொடர்பாக பொலிஸார் தீவிர கவனம் செலுத்தியுள்ளனர்.</p><p style="text-align: justify; "> 

யுத்த காலத்தில் பெறப்பட்ட கைக்குண்டுகளையே இவர்கள் இவ்வாறு பயன்படுத்துவதாக சந்தேகம் எழுந்துள்ளதுடன், அதற்கமைய எதிர்காலத்தில் குற்றங்களை அடக்குவதற்கான நடவடிக்கைகளில் முப்படையினரையும் இணைத்துக்கொள்வது குறித்து பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதற்கிடையில், தெஹிவளை சிரிசங்கபோ மாவத்தையிலுள்ள வீடொன்றின் மீது நேற்று (11) அதிகாலை நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் உயிரிழந்ததுடன் அவர்களின் தந்தை காயமடைந்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T09:01:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈழத்துப் படைப்பான போராட்டம் திரைப்படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா இன்று!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/audio-launch-ceremony-of-the-movie-porattam-1789202975"></link>
            <id>https://ibctamil.com/article/audio-launch-ceremony-of-the-movie-porattam-1789202975</id>
            <summary type="text">ஈழத் திரையுலகில் புதியதோர் அத்தியாயத்தைப் படைக்கவிருக்கும் “போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று யாழில் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத் திரையுலகில் புதியதோர் அத்தியாயத்தைப் படைக்கவிருக்கும் “போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று யாழில் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.</p><p>

அதன்படி, குறித்த நிகழ்வானது, இன்று(12) மாலை 5 மணிக்கு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
</p><p>
ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி திரைக்கு வரவுள்ள நிலையில், இன்றைய இசை வெளியீட்டு விழாவில் ஏராளமான பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.</p><p>

ஈழத்து சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் இந்நிகழ்வில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு, “போராட்டம்” திரைப்படக் குழுவினருக்கு தங்களின் பேராதரவை வழங்கி விழாவை சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.</p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T08:59:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் AfD கட்சியின் வெற்றி... பயத்தில் ஒரு நாட்டு மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/turks-in-germany-anxious-after-afd-wins-1789203418"></link>
            <id>https://news.lankasri.com/article/turks-in-germany-anxious-after-afd-wins-1789203418</id>
            <summary type="text">Turks in Germany anxious after AfD wins in Saxony-Anhalt: AfD கட்சியின் வெற்றி, ஜேர்மனியில் வாழும் துருக்கி பின்னணி கொண்ட மக்களை அச்சத்திலாழ்த்தியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>Turks in Germany anxious after AfD wins in Saxony-Anhalt: AfD கட்சியின் வெற்றி, ஜேர்மனியில் வாழும் துருக்கி பின்னணி கொண்ட மக்களை அச்சத்திலாழ்த்தியுள்ளது.
</p><p>

ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத்தில் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி, தேர்தல் நடைபெற்றது.</p><p>

தேர்தலில், 43.8 சதவிகித வாக்குகள் பெற்று தீவிர வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி வெற்றி பெற்றுள்ளது.
</p><h2>
பயத்தில் ஒரு நாட்டு மக்கள்</h2><p>

 Saxony-Anhalt மாகாணத்தில் AfD கட்சி பெற்றுள்ள வெற்றி, நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fce2a441-7f80-47d5-90af-137f8fd4f0fd/26-6aa514562b71b.webp' /><br></p><p>

இந்நிலையில், AfD கட்சி தீவிர புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கைகள் கொண்ட கட்சி என்பதால், அம்மாகாணத்தில் வாழும் புலம்பெயர்தல் பின்னணி கொண்ட மக்களுக்கு அச்சம் உருவாகிவருகிறது.
</p><p>
குறிப்பாக, துருக்கி பின்னணி கொண்ட மக்கள், அடுத்து என்ன செய்வதென தீவிர யோசனையில் ஆழ்ந்துள்ளார்கள்.
</p><p>
Turkish Community in Germany (TGD) என்னும் அமைப்பைச் சேர்ந்த Gökay Sofuoglu என்பவர் கூறும்போது, Saxony-Anhalt மாகாணத்தில் தொழில் செய்துவரும் துருக்கி பின்னணி கொண்டவர்கள், தங்கள் தொழில்களை மூடிவிட்டு, முதலில் மாகாணத்தை விட்டும், பிறகு ஜேர்மனியை விட்டும் வெளியேறும் திட்டத்திலிருப்பதாக தெரிவிக்கிறார்.
</p><p> 
இன்னொருபக்கம், AfD கட்சியின் வெற்றியால் ஜேர்மனியின் ஜனநாயக நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தல் என்றும் கூறுகிறார் Sofuoglu.
</p><p>
மேலும், AfD கட்சியின் வெற்றியால், நாடுமுழுவதும் தேசியவாத வன்முறை அதிகரிக்கலாம் என்ற அச்சமும் பரவத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42aaeb1c-cbcc-4daa-a67a-cf84c6f64c84/26-6aa51456d3d2b.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-12T08:59:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நடுவீதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்.. மூவர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-killed-in-jafnna-three-arrested-by-police-1789202908"></link>
            <id>https://tamilwin.com/article/man-killed-in-jafnna-three-arrested-by-police-1789202908</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் முன் பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வெட்டி
படுகொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில்
சம்பவத்துட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் முன் பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வெட்டி
படுகொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில்
சம்பவத்துடன் நொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
வடமராட்சி - கிராமக்கோடு சந்திக்கு அருகாமையில் கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற
குறித்த சம்பவத்தில், துன்னாலை பகுதியை சேர்ந்த ஜெயசீலன் ஜெனிதன் என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.</p><h2>பொலிஸ் விசாரணை&nbsp;</h2><p> </p><p>துன்னாலை பகுதியை சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையில் நீண்ட காலமாக பகைமை
நீடித்து வந்த நிலையில், நபர் ஒருவரை, மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர்
அடங்கிய குழு சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c08c1965-06d3-4dea-b770-969ea59a0636/26-6aa5133f3f236.webp' /></p><p>


சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாக
கிடைத்த இரகசிய தகவலினடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் மூவரையும் கைது செய்தனர்.</p><p>சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தொடர்ந்து தலைமறைவாகியுள்ள
நிலையில், அவரை கைது செய்வதற்காக தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில்,
கைது செய்யப்பட்ட மூவரையும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து
விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T08:56:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய வரலாறு படைக்க வரும் போராட்டம் திரைப்படம் - யாழில் இன்று இசை வெளியீட்டு விழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/audio-launch-of-porattam-movie-today-1789203056"></link>
            <id>https://tamilwin.com/article/audio-launch-of-porattam-movie-today-1789203056</id>
            <summary type="text">ஈழத்தமிழர்களின் ஆதரவுடன் திரையுலகில் தடம் பதிக்க வரும் “போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக இடம்பெறவுள்ளது. 

இந்த நிகழ்வு, இன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத்தமிழர்களின் ஆதரவுடன் திரையுலகில் தடம் பதிக்க வரும் “போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக இடம்பெறவுள்ளது. </p><p>

இந்த நிகழ்வு, இன்று(12.09.2026) யாழ்ப்பாணம் - திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>இசை வெளியீட்டு விழா</h2><p>

இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ள மண்டபத்தில் இருக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளோர் 070 341 4565 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முன்கூட்டியே தங்கள் வருகையை பதிவுச் செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a03754d7-ee3e-493a-85e7-43abd9f3eda2/26-6aa5128d83584.webp' /></p><p> </p><p>

யாழ்ப்பாணத்தில் கோலாகலமாக இடம்பெறவுள்ள இந்த இசை வெளியீட்டு விழாவில் ஏராளமான பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ள நிலையில், தாங்களும் கலந்து கொண்டு “போராட்டம்” திரைப்படக் குழுவினரை உற்சாகப்படுத்தி, விழாவை சிறப்பிக்க முடியும் என்றும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதேவேளை, ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள போராட்டம் திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T08:51:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோ திரைப்பட விழா!! கிளாமரில் மின்னும் நடிகை கீர்த்தி சுரேஷ்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/keerthy-suresh-toronto-international-film-festival-1789200768"></link>
            <id>https://viduppu.com/article/keerthy-suresh-toronto-international-film-festival-1789200768</id>
            <summary type="text">கீர்த்தி சுரேஷ் -&amp;nbsp;டோரதிதென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் நடிகையாக மின்னும் நடிகை கீர்த்தி சுரேஷ், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இச...</summary>
            <content type="html"><![CDATA[<h3>கீர்த்தி சுரேஷ் -&nbsp;டோரதி</h3><p>தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் நடிகையாக மின்னும் நடிகை கீர்த்தி சுரேஷ், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள டோரதி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce27e116-23c5-4913-b9ff-2906941e3a3b/26-6aa50986a0d87.webp' /></p><p> </p><p>இப்படத்தின் டொராண்டோ திரைப்பட விழாவிற்கு விமான நிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்ட போது, லண்டனுக்கு செல்கிறீர்களா என்று கேட்டுள்ளனர்.</p><h2>டொராண்டோ பிலிம் festival</h2><p> </p><p>அதற்கு கீர்த்தி, 
ஆமா கரெக்ட். லண்டனில் தானே டொராண்டோ பிலிம் festival நடக்குது" என அவர் பதிலளித்தார். அஜித் கார் ரேஸை சந்திக்க முதலமைச்சர் விஜய் சென்றுள்ளதால் இப்படியான கேள்வி எழுந்தது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f59faa8-a213-414f-86ae-df4201e6dd8f/26-6aa50987546a6.webp' /></p><p> இந்நிலையில் டோரதி படக்குழுவுடன் இணைந்து கிளாமர் ஆடையில் டொராண்டோ திரைப்பட விழாவிற்கு சென்ற புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-12T08:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[Epic (தெலுங்கு): திரை விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/epic-telugu-movie-review-1789201103"></link>
            <id>https://cineulagam.com/article/epic-telugu-movie-review-1789201103</id>
            <summary type="text">Epic (தெலுங்கு)ஆனந்த் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகியுள்ள Epic தெலுங்கு திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க. 

கதைக்களம் 

திரைப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>Epic (தெலுங்கு)</h2><p>ஆனந்த் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகியுள்ள Epic தெலுங்கு திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/403ddbd2-2a68-493f-bc23-e4eea323abf7/26-6aa50ad0eadf3.webp' /></p><p> </p><h2>

கதைக்களம்</h2><p> 

திரைப்பட இயக்குநராக வேண்டும் என நண்பர்களுடன் சேர்ந்து குறும்படம் எடுக்கிறார் ஆதித்யா (ஆனந்த் தேவரகொண்டா). 

அதனை தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி இயக்குநராக ஆதித்யா முயற்சிக்க, அரசு பள்ளி ஆசிரியரான அவரது அப்பா மகனை வேலைக்கு செல்ல வேண்டும் என்று கூறுகிறார்.
</p><p>
இந்த சூழலில் இங்கிலாந்து சென்று ஒரு வருட கோர்ஸ் படித்தால், நல்ல வேலை கிடைக்கும் என்று தெரிய வர, ஆதித்யாவின் அப்பா லோன் வாங்குகிறார்.

பெற்றோரின் வற்புறுத்தலால் ஆதித்யாவும் லண்டன் செல்கிறார். </p><p>அதே சமயம் நண்பர்கள் அவரிடம் அங்கிருந்தே கதை எழுது; உன் குறும்படம் மூலம் இங்கே வாய்ப்பு கிடைத்தவுடன் வந்துவிடு என்று ஆலோசனை கூறி அனுப்பி வைக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8f6eadd-2d4e-41c0-acc8-8e831416d5b2/26-6aa50be72b633.webp' /></p><p>
</p><p>
லண்டன் சென்ற ஆதித்யா, தான் தங்கவிருக்கும் இடம் பிடிக்காததால் முதல் நாளே அறிமுகமான ஒருவரிடம் தனியாக இருக்க இடம் கேட்கிறார்.

அவரும் தனது பிளாட்டை காலி செய்ய இருப்பதாகவும், இப்போது பார்க்கும் கேஷியர் வேலையையும் ஆதித்யாவிற்கு கொடுக்கிறார்.
</p><p>
இந்த நிலையில் கடலி என்ற பெண்ணை கோர்ஸ் படிக்கும் சென்டரில் சந்திக்கும் ஆதித்யா அவருடன் நெருக்கமாகிறார். 

அதன் விளைவாக இருவரும் ஒரே பிளாட்டில் தங்க முடிவெடுக்க, காதல் மட்டும் வேண்டாம் தீர்மானிக்கிறார்கள்.
</p><p>
அதன் பின்னர் அவர்கள் வாழ்க்கையில் காதல் எப்படி வந்தது? என்னவெல்லாம் அவர்கள் சந்தித்தார்கள்? என்பதே மீதிக்கதை.</p><h2>

படம் பற்றிய அலசல்</h2><p> 

பேபி படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, அதே படத்தில் ஜோடியாக நடித்த ஆனந்த் தேவரகொண்டா, வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் நடித்திருக்கும் படம் இது.
</p><p>
An Unfinished Story என்ற டேக்லைன் உடன் வெளியான இப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.

2018-யில் நடக்கும்படியாக இந்த கதையை ஓ காதல் கண்மணி பாணியில் இயக்குநர் கையாண்டுள்ளார். </p><p>

ஆனந்த், வைஷ்ணவியின் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்அவுட் ஆகியுள்ளது. இருவருக்குமான காதல் காட்சிகள் நன்றாக உள்ளன.

வெகுளியாக ஆனந்த் பேசுவதிலும், நடந்துகொள்வதில் நல்ல நடிப்பை தந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bf53e46-bdc8-4623-bfaa-16a72a8a1dd4/26-6aa50be8140a3.webp' /></p><p> </p><p>அதேபோல் வைஷ்ணவியும் மெச்சூரான பெண்ணாக நடிப்பை வெளிப்படுத்த முதல் பாதி சுவாரஸ்யமாக நகர்கிறது.

ஆனால், இரண்டாம் பாதி ஒரே இடத்தில் சுற்றிச் சுற்றி வருவது சலிப்பை ஏற்படுத்துகிறது. ஒரு சில இடங்களில் காமெடி நன்றாக சிரிக்க வைக்கிறது.
</p><p>
சிவாஜி, வாசுகி பெற்றோராக ஆங்காங்கே வந்தாலும் நேர்த்தியான நடிப்பை தந்துள்ளனர். அவர்களைத் தாண்டி வேறு கதாபத்திரங்களுக்கு பெரிய ஸ்கோர் இல்லை.

ஹெஷம் அப்துல் வாஹப்பின் பாடல்கள் மற்றும் இசை படத்திற்கு பலம். அஸீம் மொஹம்மதின் கேமராஒர்க் சிறப்பு. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01eaba7b-f341-4a7c-adef-4e03714205f9/26-6aa50be8d8a0d.webp' /></p><h2> 

க்ளாப்ஸ்</h2><p> 

ஆனந்த், வைஷ்ணவி 

இசை 

ரொமான்ஸ் காட்சிகள்</p><h2> 

பல்ப்ஸ்</h2><p> 

சுவாரஸ்யம் குறைவான இரண்டாம் பாதி </p><p><b>

மொத்தத்தில் இந்த Epic பெயருக்கு தகுந்தாற்போல் இல்லை; காதலர்கள் ரசிக்கலாம்.</b></p><h3>

ரேட்டிங்: 2.5/5</h3>]]></content>
            <updated>2026-09-12T08:40:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓய்வுபெற்ற சுங்க அதிகாரிக்கு அரச உயர் பதவி - சூடுபிடிக்கும் 323 கொள்கலன்கள் விடுவிப்பு விவகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/323-containers-released-without-inspection-1789200886"></link>
            <id>https://tamilwin.com/article/323-containers-released-without-inspection-1789200886</id>
            <summary type="text">கொழும்புத் துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் நேரடிப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட சம்பவத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட சுங்க அதிகாரி ஒருவர், ஓய்வுபெற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்புத் துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் நேரடிப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட சம்பவத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட சுங்க அதிகாரி ஒருவர், ஓய்வுபெற்ற பின்னர் அரசாங்கத்தில் உயர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
அரசாங்கம் நல்லாட்சி கொள்கையின் அடிப்படையில் செயற்பட்டிருந்தால், இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றிருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><h2>
நேரடிப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள்</h2><p>
இதற்கிடையில், கொழும்புத் துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் நேரடிப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை இரண்டு மாதங்களுக்கும் மேலாக தாமதப்படுத்தப்பட்ட நிலையில், விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21c0a94f-9f71-4386-b7a8-0154c27e4312/26-6aa50eaf247fe.webp' /></p><p>
</p><p>
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அஜித் பி. பெரேரா, “தாமதமாவது சிக்கலானது” எனத் தெரிவித்துள்ளார்.</p><p>

இதேவேளை, கொழும்புத் துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் நேரடிப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நியமிக்கப்பட்டிருந்தார்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, தனது இறுதி அறிக்கையில் கொள்கலன்கள் நேரடிப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தக் கொள்கலன்களை அரசாங்கம் விடுவித்ததாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T08:36:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறை அதிகாரிகளை மிரள வைத்த பெண் ; நீண்ட காலம் அரங்கேறிய செயல் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-who-terrified-prison-officers-1789202081"></link>
            <id>https://jvpnews.com/article/woman-who-terrified-prison-officers-1789202081</id>
            <summary type="text">மொனராகலை சிறைச்சாலையில் தடுப்புக்காவல் சிறைக் கைதி ஒருவரைப் பார்வையிடுவதற்காக வருகை தந்த பெண் போதைப் பொருளுடன் சிறைச்சாலை அதிகாரிகளினால் கைது செய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மொனராகலை சிறைச்சாலையில் தடுப்புக்காவல் சிறைக் கைதி ஒருவரைப் பார்வையிடுவதற்காக வருகை தந்த பெண் போதைப் பொருளுடன் சிறைச்சாலை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
குறித்த பெண் சிறைச்சாலை உணவகத்திற்குச் சென்று தான் கொண்டு வந்த உணவுப் பொதியையும் வேஸ்லின் போத்தலையும் கைதியிடம் ஒப்படைக்க முயன்ற வேளையில் அவரின் நடவடிக்ககைளில் சந்தேகமடைந்த சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த பெண்ணின் உணவுப் பொதியையும் வேஸ்லின் போத்தலையும் பரிசோதித்த போது குறித்த போத்தலில் மிகவும் நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1db72bac-1fbd-4a3a-8856-356c64856e97/26-6aa50ea2b43b2.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப் பொருள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
உடனடியாக மொனராகலை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து பொலிஸார் நடத்திய பரிசோதனையில் 4660 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">கைது செய்யப்பட்டவர் மொனராகலை வெலவத்தை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் என அடையாளங் காணப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
இவர் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர் என ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.</p><p style="text-align: justify; ">

சந்தேகநபரை மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மொனராகலை பதில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்&nbsp; ஆலோசனையின் பேரில் தலைமைப் பரிசோதகர் செனவிரத்ன தலைலையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-12T08:34:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட மாகாணத்திலுள்ள மிகப்பெரும் பிரச்சினைக்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை - அமைச்சரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minister-chandhana-abayarathna-statement-1789201098"></link>
            <id>https://tamilwin.com/article/minister-chandhana-abayarathna-statement-1789201098</id>
            <summary type="text">வடக்கு மாகாணத்தில் அபிவிருத்திப் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு தேவையான ஆளணி மற்றும் நிதி வளங்களை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்தும் கவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாணத்தில் அபிவிருத்திப் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு தேவையான ஆளணி மற்றும் நிதி வளங்களை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்தும் கவனம் செலுத்தும் என அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளார். </p><p>

குறிப்பாக, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் காணப்படும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, யாழ்ப்பாண மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றி வரும் உத்தியோகத்தர்களை குறுகிய காலத்துக்கு குறித்த மாவட்டங்களுக்கு இணைத்து சேவையாற்றச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>விசேட கலந்துரையாடல்</h2><p> </p><p>

வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல், வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று (12.09.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc5cbf10-57d6-4f81-b732-071b6339bf04/26-6aa50d950f292.webp' /></p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,

வட மாகாணத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளின் அளவுக்கு ஏற்ப பொறியியலாளர்கள், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோரின் பற்றாக்குறை காணப்படுவது எமக்குத் தெரியும்.</p><h2>ஆட்சேர்ப்பு நடவடிக்கை</h2><p>
</p><p>
இதனை நிவர்த்தி செய்வதற்காக ஆட்சேர்ப்புகளுக்கு தேவையான அனுமதிகள் வழங்கப்பட்டு வருவதுடன், அரசாங்கமும் தேவையான ஆட்சேர்ப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72a33dd9-00aa-491e-8541-5be27c8d121f/26-6aa50d9619cc9.webp' /></p><p>
</p><p>
ஆளணி பற்றாக்குறை காணப்படுகின்றது என்பதற்காக வட மாகாணத்துக்கு ஒதுக்கப்படும் அபிவிருத்தி நிதியை குறைக்க முடியாது.

கடந்த காலங்களில் 'வடக்கின் வசந்தம்' போன்ற திட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை விடவும் அதிகளவான நிதி தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p> 

எதிர்வரும் காலங்களிலும் வடக்கு மாகாணத்துக்கு அதிகளவான நிதி வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T08:30:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென அதிகரித்த தங்கத்தின் விலை.. வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-price-sri-lanka-today-1789200376"></link>
            <id>https://tamilwin.com/article/gold-price-sri-lanka-today-1789200376</id>
            <summary type="text">நேற்றைய தினத்துடன் (11) ஒப்பிடுகையில் இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, கொழும்பு செட்டித்தெரு தங்க ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேற்றைய தினத்துடன் (11) ஒப்பிடுகையில் இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.</p><p> இதற்கமைய, கொழும்பு செட்டித்தெரு தங்க சந்தையில் இன்று (12) காலை ஒரு பவுண்&nbsp;தங்கத்தின் விலை 345,000 ரூபாவாக உயர்ந்துள்ளது.</p><h2>சந்தை நிலவரம்..&nbsp;</h2><p>நேற்றைய தினம் இதன் விலை 343,200 ரூபாவாகக் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/991ac672-0dc8-4e39-9d4b-1e188fc80650/26-6aa50af8145f5.webp' /></p><p> </p><p>மேலும், கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தை வட்டாரங்களின்படி, 24 கரட் தங்கத்தின் விலை நேற்றைய தினம் 373,000 ரூபாவாக இருந்த நிலையில், இன்று 375,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. </p><p>இருப்பினும், இந்த விலைகள் அடிக்கடி மாறுபடக்கூடியவை என்பதால், கொள்முதல் செய்வதற்கு முன்னர் தற்போதைய சந்தை விலைகளை சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T08:21:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த காற்று ; பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/strong-winds-public-warning-issued-1789201123"></link>
            <id>https://jvpnews.com/article/strong-winds-public-warning-issued-1789201123</id>
            <summary type="text">ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்த எச்சரிக்கை அறிவிப்பொன்று விடுக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்த எச்சரிக்கை அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

இந்த அறிவிப்பு இன்று (12) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், இது நாளை (13) முற்பகல் 11.00 மணி வரை செல்லுபடியாகும்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2162483e-04ba-44ec-8e76-5635bd01aa87/26-6aa50ae536b95.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;கடற்போக்குவரத்து நடவடிக்கை</h2><p> </p><p style="text-align: justify;">

குறித்த அறிவிப்பின்படி, அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையை ஒட்டியுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அப்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். </p><p style="text-align: justify;">

அதேபோல், சிலாபத்திலிருந்து காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையை ஒட்டியுள்ள கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரமானது 2.0 முதல் 3.0 மீற்றர் வரை உயர்வடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify; ">

இதன் காரணமாக, பேருவளையிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான பகுதிகளில் கடல் அலைகள் கரையை நோக்கி வரக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"> 

எனவே, குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் மீன்பிடி மற்றும் கடற்சார் சமூகத்தினர் இது குறித்து மிகுந்த விழிப்புடன் செயல்படுமாறு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-12T08:21:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[323 கொள்கலன்கள் விவகாரம்! குற்றஞ்சாட்டப்பட்டவர் அரசாங்கத்தின் உயர் பதவியில் - எதிர்க்கட்சிகள் ஆவேசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/323-container-release-issue-mujibur-s-allegation-1789198066"></link>
            <id>https://ibctamil.com/article/323-container-release-issue-mujibur-s-allegation-1789198066</id>
            <summary type="text">


கொழும்பு துறைமுகத்தில் பெளதீகப் பரிசோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சுங்கத் திணைக்களத்தின் சிரேஷ...</summary>
            <content type="html"><![CDATA[<p>


கொழும்பு துறைமுகத்தில் பெளதீகப் பரிசோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சுங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், பணி ஓய்வுக்குப் பின்னர் அரசாங்கத்தின் உயர் பதவியொன்றில் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
</p><p>
நல்லாட்சிக் கொள்கையின் அடிப்படையில் அரசாங்கம் செயற்படுமாயின் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.
</p><p>
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ள போதிலும், அதன் இறுதி அறிக்கை வெளியாவது இரண்டு மாதங்களுக்கும் மேலாகத் தாமதப்படுத்தப்பட்டு வருவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>அறிக்கை வெளியீட்டில்&nbsp;தாமதம் </h2><p>

அதன்படி, இந்த அறிக்கை வெளியீட்டில் ஏற்பட்டுள்ள தாமதம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகக் களுத்துறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அஜித் பி. பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/298a3bd3-0c7d-4976-bf44-f395291b4454/26-6aa507cbbab1d.webp' />&nbsp;</p><p>

இந்நிலையில், கொள்கலன்கள் விடுவிப்புத் தொடர்பாக விசாரணை நடத்தும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவராக நீதியமைச்சரும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சருமான ஹர்ஷன நாணயக்கார செயற்படுகின்றார்.</p><h2>அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டு</h2><p>
</p><p>
அத்துடன், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவும் தனது இறுதி அறிக்கையில், கொள்கலன்கள் பெளதீகப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டமையை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80fe2cfc-9db8-409b-8215-d34a927cdf88/26-6aa507cca7f93.webp' /></p><p>
</p><p>
இவ்வாறானதொரு பின்னணியில், குறித்த விவகாரத்தில் அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T08:13:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பென் ஸ்டோக்ஸின் இமாலய சாதனையை எட்டிப்பிடித்த பாகிஸ்தான் வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/razaullah-hit-9-sixers-and-equal-stokes-1789200519"></link>
            <id>https://news.lankasri.com/article/razaullah-hit-9-sixers-and-equal-stokes-1789200519</id>
            <summary type="text">இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தானின் ரஸாவுல்லா மாஷ்வானி அரைசதம் விளாசி சாதனை படைத்தார்.

எட்ஜ்பஸ்டனில் நடந்து வரும் டெஸ்டில், பாகிஸ்தானி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தானின் ரஸாவுல்லா மாஷ்வானி அரைசதம் விளாசி சாதனை படைத்தார்.</p><p>

எட்ஜ்பஸ்டனில் நடந்து வரும் டெஸ்டில், பாகிஸ்தானின் ரஸாவுல்லா மாஷ்வானி 9 சிக்ஸர்கள் விளாசி பென் ஸ்டோக்ஸ் சாதனையை சமன் செய்தார். </p><h2>ரஸாவுல்லா மாஷ்வானி</h2><p> 

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் எட்ஜ்பஸ்டனில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af30cc1d-e527-4160-a9c8-b639239d6976/26-6aa50952e76d7.webp' /></p><p></p><p>

பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 449 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. </p><p>

இளம் வீரர் ரஸாவுல்லா மாஷ்வானி 9 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 63 பந்துகளில் 81 ஓட்டங்கள் விளாசினார். </p><p>

இதன்மூலம் ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த பென் ஸ்டோக்ஸின் (Ben Stokes) சாதனையை ரஸாவுல்லா சமன் செய்தார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73f3fde1-7c87-4114-9b98-14de00c170c8/26-6aa509523092b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-12T08:08:49+00:00</updated>
        </entry>
    </feed>
