<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-09T14:42:27+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பியவர் மீது வாள்வெட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/person-hacked-with-a-sword-court-jaffna-1788964149"></link>
            <id>https://tamilwin.com/article/person-hacked-with-a-sword-court-jaffna-1788964149</id>
            <summary type="text">யாழ்ப்பாணம்- ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.க...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம்- ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>குறித்த சம்பவமானது&nbsp; வேலணை அராலிச் சந்தி பகுதியில் இன்று (9) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p>
நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த
பிரச்சினை தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், குறித்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக
பாதிக்கப்பட்ட இளைஞர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>

வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் அவர் வீடு நோக்கி பயணித்துக்
கொண்டிருந்தபோது, வேலணை அராலிச் சந்தி பகுதியில் அவரை வழிமறித்த மற்றைய
தரப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் நபர்கள் வாள்வெட்டு தாக்குதலை
மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
தாக்குதலாளிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், தாக்குதலுடன்
தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சிலர் தற்போது கிளிநொச்சி பகுதியில் வசித்து
வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4ec124a-e608-483e-a976-8f78154bacf4/26-6aa16f37f3e86.webp' /></p><p>
</p><p>
தாக்குதலில் கடும் காயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன்,
சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக
ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T14:37:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அச்சிடுவதற்காக மீண்டும் இலட்சக்கணக்கில் குவிந்துள்ள வாகன இலக்கத்தகடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/300000-more-vehicle-number-plates-piled-up-1788963132"></link>
            <id>https://ibctamil.com/article/300000-more-vehicle-number-plates-piled-up-1788963132</id>
            <summary type="text">சுமார் 3 லட்சம் வாகன இலக்கத் தகடுகள் அச்சிடப்பட வேண்டியுள்ளதாகவும், குவிந்துள்ள இலக்கத் தகடுகளை அச்சிடுவதற்கான புதிய முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுமார் 3 லட்சம் வாகன இலக்கத் தகடுகள் அச்சிடப்பட வேண்டியுள்ளதாகவும், குவிந்துள்ள இலக்கத் தகடுகளை அச்சிடுவதற்கான புதிய முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் துஷாரா இடுனில் பெர்னாண்டோ இன்று (9) தெரிவித்தார்.</p><p>

நாரஹேன்பிட்டாவில் உள்ள மோட்டார் போக்குவரத்து ஆணையர் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று (9) நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் மோட்டார் போக்குவரத்து ஆணையர் நாயகம் இதைத் தெரிவித்தார்.</p><h2>ஆறு மாதங்களுக்குள் அனைவருக்கும் இலக்கத் தகடுகள்</h2><p>மேலும், இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன், இந்த அமைப்பு இரண்டு ஷிப்டுகளாகப் பணியாற்றி, சுமார் ஆறு மாதங்களுக்குள் அனைவருக்கும் இலக்கத் தகடுகளை வழங்கும் என்றும் அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17d101e7-b042-41fe-ba06-316eead8d03d/26-6aa16e73b9f0e.webp' /></p><p>
</p><p>
இந்த ஆண்டு மார்ச் 10-ஆம் திகதிக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட சுமார் 62,000 வாகனங்களின் இலக்கத் தகடுகள் அச்சிடப்பட்டுவிட்டதாகவும், அவற்றை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p></p><p> </p><h2>திணைக்களத்திடம் உள்ள&nbsp;&nbsp;32,000 வாகன இலக்கத் தகடுகள்</h2><p>மேலும், 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான சுமார் 32,000 வாகன இலக்கத் தகடுகள் திணைக்களத்திடம் உள்ளன. அதுமட்டுமின்றி, 2025 ஆம் ஆண்டிற்கான வாகன இலக்கத் தகடுகள் அச்சிடுவதற்கு ஒரு புதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்றும் அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/865bbac6-b24d-4e38-9dee-5cde7aa998a4/26-6aa16e730eb2b.webp' /></p><p> </p><p>அடுத்த ஆறு மாதங்களுக்குள் அனைத்து வாகன இலக்கத்தகடுகள் புதுப்பிக்கப்படும் என்றும், அதன் பிறகு பதிவு செய்யப்படும் எந்தவொரு வாகனத்திற்கும், பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து சுமார் எட்டு நாட்களுக்குள் வாகன இலக்கத் தகடுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T14:35:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொழில் வாழ்க்கையில் அதிக சவால்களை எதிர்கொள்ளும் டாப் 3 ராசிகள்! காரணம் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-zodiac-signs-are-unlucky-in-career-1788961162"></link>
            <id>https://manithan.com/article/which-zodiac-signs-are-unlucky-in-career-1788961162</id>
            <summary type="text">பொதுவாகவே ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, தொழில், கல்வி, திருமணம் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாகவே ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, தொழில், கல்வி, திருமணம் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடியாக ஆதிக்கம் என ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.&nbsp;</p><p>வேத ஜோதிடத்தின் பிலகாரம் பார்க்கும்போது, சில ராசிகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் பணியிலும் தொழிலிலும் முன்னேறுவதற்கு பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/437cec8b-d0a2-4d56-b23c-a994d6d86a29/26-6aa16aac27cf5.webp' /></p><p></p><p>வெற்றியை அடைவதில் தாமதம், எதிர்பாராத தடைகள் அல்லது முடிவெடுப்பதில் குழப்பம் போன்றவை அவர்களின் பயணத்தில் இடம்பெற வாய்ப்புள்ளது.

எனினும், இதனால் அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது என்று பொருளல்ல. மாறாக, தங்களது இலக்கை அடைய அவர்கள் கூடுதல் முயற்சியும் பொறுமையும் காட்ட வேண்டியிருக்கலாம். </p><p>அப்படியானால், தொழில் வாழ்க்கையில் அதிக சவால்களை சந்திக்கக்கூடிய அந்த ராசிக்காரர்கள் யார்? இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.</p><h2>மீனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e337570f-fe12-4212-a3cc-3dccc2e9c725/26-6aa16aaccf548.webp' /></p><p>
மீன ராசிக்காரர்கள் படைப்பாற்றல் மிக்கவர்களாகவும், அன்பானவர்களாகவும், உணர்ச்சிவசப்படுபவர்களாகவும் இருப்பார்கள். </p><p>ஆனால் வேலை என்று வரும்போது, கவனம் செலுத்துவதிலும் நடைமுறைக்கு ஏற்றவாறு செயல்படுவதிலும் சிரமப்படலாம். குறிப்பாக, கட்டுப்பாடும் போட்டியும் நிறைந்த வேலைகளில் முன்னேறுவது கடினமாக இருக்கும்.</p><p> சம்பளத்திற்காக மட்டும் அல்லாமல், மனதிற்குப் பிடித்ததைச் செய்யும் வாய்ப்புள்ள தொழிலே அவர்களுக்கு ஏற்றது. தங்களுக்கு மகிழ்ச்சி தரும் வேலை கிடைக்கும் வரை, தொழில் வாழ்க்கையில் நிலையற்ற தன்மை நீடிக்கலாம்.
</p><h2>
கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc57371c-ae90-47df-b379-4dee87d1fab6/26-6aa16aad85fb4.webp' /></p><p>கடக ராசி சந்திரனால் ஆளப்படுவதால், இவர்களின் மனநிலை விரைவாக மாறக்கூடும். விசுவாசமும் அக்கறையும் கொண்டவர்களாக இருந்தாலும், அதிக அழுத்தம் நிறைந்த வேலைச் சூழல் அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம்.</p><p> விஷயங்களை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வதும், முடிவெடுப்பதில் தயங்குவதும் தொழில் வளர்ச்சியைத் தடுக்கலாம். </p><p>பாதுகாப்பையும் வசதியையும் விரும்புவதால், பிடிக்காத வேலையிலும் தொடர்ந்து இருக்கக்கூடும். மாற்றத்திற்கான பயம் அவர்களின் வெற்றியையும் வளர்ச்சியையும் பாதிக்கலாம்.
</p><h2>
தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19058d97-ffc7-46a0-b05e-c202231a5f1d/26-6aa16aae3cea0.webp' /></p><p></p><p>
தனுசு ராசிக்காரர்கள் வளர்ச்சி மற்றும் சுதந்திரத்தை விரும்புபவர்கள். சாகசங்களிலும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதிலும் ஆர்வம் கொண்ட இவர்களுக்கு, வழக்கமான&nbsp; வேலைகள் விரைவில் சலிப்பை ஏற்படுத்தலாம்.</p><p> இதனால் மாற்றுத் திட்டமின்றி வேலையை விட்டு விலகும் சூழலுக்கு பல முறை தள்ளப்படுவார்கள். இவர்களின் பயணம் மற்றும் சுதந்திரத்தின் மீதான விருப்பம் தொழில் வாழ்க்கையில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தக்கூடும்.</p><p> சிறந்த யோசனைகள் இருந்தாலும், பொறுமை மற்றும் ஒழுக்கக் குறைவு சில நேரங்களில் அவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் ஒரு எதிரியாக மாறலாம்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T14:31:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[AI நிறுவன ஆய்வாளர் திடீர் ராஜினாமா; மனிதகுலத்திற்கு எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jacob-coxon-resigns-anthropic-warning-ai-humans-1788957589"></link>
            <id>https://jvpnews.com/article/jacob-coxon-resigns-anthropic-warning-ai-humans-1788957589</id>
            <summary type="text">&amp;nbsp; செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என Anthropic நிறுவனத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என Anthropic நிறுவனத்தில் பணியாற்றிய ஆய்வாளர் ஜேகப் காக்சன்&nbsp; (Jacob Coxon) எச்சரிக்கை விடுத்துள்ளதாக சவர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
Anthropic மற்றும் OpenAI உள்ளிட்ட முன்னணி AI நிறுவனங்கள், போதிய கட்டுப்பாடுகள் இன்றி அதிக திறன் கொண்ட Superintelligence தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் போட்டியிட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7144d3d4-c624-4678-9498-00c528ef9276/26-6aa153970135e.webp' /></p><h2>&nbsp; AI&nbsp; சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்</h2><p>
</p><p>
எதையும் ஹேக் செய்யும் திறன் மற்றும் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் அளவிலான அதிகாரம் கொண்ட AI அமைப்புகளின் வளர்ச்சியை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இந்த ஆபத்தான போட்டி தொடருமானால், எதிர்காலத்தில் அதன் விளைவுகள் மிகவும் தீவிரமானதாக இருக்கக்கூடும் எனவும் ஜேகப் காக்சன்&nbsp; (Jacob Coxon) எச்சரித்துள்ளார்.</p><p></p><p>

மேலும், AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் 2030-க்குள் மனிதகுலமே அழியும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்துள்ளதாகக் கூறப்படும் தகவல், தற்போது AI பாதுகாப்பு தொடர்பான விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏஐயால் 2030க்குள் மனிதகுலம் அழியும் - ஆந்த்ரோபிக்கிலிருந்து வெளியேறிய வல்லுநர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/anthropic-expert-says-ai-could-kill-humans-2030-1788963875"></link>
            <id>https://news.lankasri.com/article/anthropic-expert-says-ai-could-kill-humans-2030-1788963875</id>
            <summary type="text">anthropic researcher says ai could kill humans before 2030:செயற்கை நுண்ணறிவு எனஅழைக்கப்படும் AIயின் வளர்ச்சி நாளுக்கு நாள் அனைத்து துறைகளிலும் அதிகரித...</summary>
            <content type="html"><![CDATA[<p>anthropic researcher says ai could kill humans before 2030:செயற்கை நுண்ணறிவு எனஅழைக்கப்படும் AIயின் வளர்ச்சி நாளுக்கு நாள் அனைத்து துறைகளிலும் அதிகரித்து வருகிறது. </p><h3>

ஏஐயால் 2030க்குள் மனிதகுலம் அழியும்</h3><p>

AI வளர்ச்சியால் மனிதர்களில் சிலர் வேலை இழப்பை சந்தித்து வரும் சூழலில், எதிர்காலத்தில் AI மனிதர்களின் கட்டுப்பாடின்றி செயல்பட சாத்தியம் உள்ளதாக அச்சம் நிலவி வந்தது. </p><p>

இந்நிலையில், AI தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள Open AI மற்றும் Anthropic ஆகிய 2 நிறுவனங்களில் பணியாற்றியுள்ள ஜேக்கப் காக்சன் என்ற 27 வயது AI ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26c0ed57-1c58-43b9-b421-97de516515b7/26-6aa16c24ade5b.webp' /></p><p> 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நான் இன்று ஆந்த்ரோபிக் நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்துள்ளேன். கடந்த 3 ஆண்டுகளாக நான் ஓப்பன்ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் ஆகிய இரு நிறுவனங்களிலும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தேன்.&nbsp;</p><p>

இந்த இரண்டு நிறுவனங்களுமே பொறுப்புடன் செயல்படவில்லை. அவை தங்களைத் தாங்களே மேம்படுத்திக்கொள்ளும் சூப்பர் இன்டெலிஜென்ட்ஸை உருவாக்குவதில் போட்டியிடுகின்றன.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I resigned from Anthropic today. I spent the last three years doing pretraining research at both OpenAI and Anthropic. Neither company is acting responsibly. They are racing straight to self-improving superintelligence and gambling with our lives. More thoughts below.</p>&mdash; Jacob Coxon (@hilbertspaess) <a href="https://x.com/hilbertspaess/status/2097476196791709843?ref_src=twsrc%5Etfw">September 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>&nbsp;</p><p>

இந்தத் தொழில்நுட்பத்தின் ஆற்றலைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். இவை விரைவில், எதையும் ஊடுருவி அறியக்கூடிய, ஒரே இரவில் எந்தத் துறையிலும் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய, உண்மையான சக்தியையும் வளங்களையும் பெறக்கூடிய மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட அமைப்புகளாக மாறும். </p><p>

இந்த AI ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நாம் அனைவரும் கண்டிருக்கிறோம், மேலும் அந்த முன்னேற்றத்தின் வேகம் குறையவில்லை.&nbsp;</p><p>

இந்த செயற்கை நுண்ணறிவை உருவாக்குபவர்களே, அது இந்த தசாப்தத்தின் முடிவில் நம் அனைவரையும் கொன்றுவிடும் என்று உண்மையாகவே நம்புகிறார்கள். இது ஒரு சந்தைப்படுத்தல் தந்திரம் அல்ல.&nbsp;</p><p></p><p>

சொல்லப்போனால், பல நிர்வாகிகளும் மூத்த ஆராய்ச்சியாளர்களும் பத்திரிகைகளில் தங்கள் வார்த்தைகளை அறிவுப்பூர்வமாகத் தோன்றும் வகையில் பேசுவார்கள். ஆனால் அதே நபர்கள் AI குறித்த பயத்தை வெளிப்படுத்துவதை நான் கேட்டிருக்கிறேன். </p><p>

OpenA Iயில் பலர் இதனால் ஏற்படக்கூடிய அபாயங்களை ஆழமாக உள்வாங்கிக்கொள்ளவில்லை. ஆனால். ஆந்த்ரோபிக்கில், அந்த அபாயங்கள் பற்றி நன்கு அறிந்திருந்தாலும் அதை முதலில் அடைவதற்கான ஒரு போட்டியில் அவர்கள் சிக்கியிருக்கிறார்கள்" என தெரிவித்துள்ளார்.</p><p> 

ஆந்த்ரோபிக்கின் சீரமைப்பு அறிவியல் தலைவரான இவான் ஹூபிங்கர், அடுத்த பத்தாண்டுகளுக்குள் செயற்கை நுண்ணறிவு அனைத்து மனிதர்களையும் கொன்றுவிடுவதற்கான நிகழ்தகவு 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாகத் தனிப்பட்ட முறையில் மதிப்பிடுவதாக தெரிவித்துள்ளார். </p><p>

ஜேக்கப் காக்சன் AI எந்த முறையில் மனித குலத்தை அழிக்கும் என்பதை குறிப்பிடவில்லை. ஆனால், AI தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள 2 நிறுவனங்களின் உள்ளே பணியாற்றியுள்ளவர் கூறியது மனிதர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T14:25:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனாவுக்கு சபையில் கடுமையான எச்சரிக்கை விடுத்த பிரதி சபாநாயகர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ramanadhan-archuna-warned-parliament-live-today-1788955379"></link>
            <id>https://tamilwin.com/article/ramanadhan-archuna-warned-parliament-live-today-1788955379</id>
            <summary type="text">இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது,&amp;nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை பிரதி சபாநாயகர்&amp;nbsp;ஹேமாலி வீரசேகர கடுமையாக எச்சரித்தார்.&amp;nbsp;சபை நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது,&nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை பிரதி சபாநாயகர்&nbsp;ஹேமாலி வீரசேகர கடுமையாக எச்சரித்தார்.&nbsp;</p><p>சபை நடவடிக்கைககளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயற்பட்டால் நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கமைய தண்டனை வழங்க நேரிடும் என அவர் வலியுறுத்தினார்.</p><p>
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பாதுகாப்புப் பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் மீதான விவாதத்தின் போது,&nbsp; அர்ச்சுனா இராமநாதன் அடிக்கடி ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்பி சபை நடவடிக்கைகளுக்கு இடையூறாக செயற்பட்ட நிலையிலேயே சபைக்கு தலைமைதாங்கிய குழுக்களின் பிரதி சபாநாயகர், அவரை இவ்வாறு எச்சரித்தார்.</p><h2>தண்டனை வழங்க நேரிடும்..&nbsp;</h2><p>
</p><p>விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, அடிக்கடி எழுந்து ஒவ்வொரு விடயங்கள் தொடர்பில் நிலையியல் கட்டளை இலக்கங்களை குறிப்பிட்டு அர்ச்சுனா இராமநாதன் ஒழுங்கு பிரச்சினைகளை எழுப்பிக்கொண்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be29657e-7dc7-414b-8d6d-513bd262d376/26-6aa1631adf409.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் விவாதத்தில் உரையாற்றும் போது, ஆளும் கட்சி உறுப்பினர்கள் அவருடன் தர்க்கங்களில் ஈடுபட்டனர். </p><p>இதன்போதும் அர்ச்சுனா ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய போது, அவரை எச்சரித்த பிரதி சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா இராமநாதன் சபை நடவடிக்கைகளுக்கு இடையூறான வகையில் நடந்து கொண்டால் நிலையியல் கட்டளை77, 78 மற்றும் 79 இன் கீழ் தண்டனை வழங்க நேரிடும் என்று தெரிவித்தார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T14:09:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[iPhone 17 Pro விலை குறைப்பு - Cosmic Orange நிறம் விரைவில் நிறுத்தப்படலாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iphone-17-pro-deal-rs-75810-exchange-offer-1788962792"></link>
            <id>https://news.lankasri.com/article/iphone-17-pro-deal-rs-75810-exchange-offer-1788962792</id>
            <summary type="text">Apple நிறுவனத்தின் iPhone 17 Pro (256GB Cosmic Orange) மாடல் தற்போது Flipkart-இல் மிகப்பெரிய தள்ளுபடியில் கிடைக்கிறது.

ரூ.75,810-க்கு iPhone 17 Pro...</summary>
            <content type="html"><![CDATA[<p>Apple நிறுவனத்தின் iPhone 17 Pro (256GB Cosmic Orange) மாடல் தற்போது Flipkart-இல் மிகப்பெரிய தள்ளுபடியில் கிடைக்கிறது.
</p><h2>
ரூ.75,810-க்கு iPhone 17 Pro</h2><p>இந்த மாடல், ஆரம்ப விலை 1,34,900 ரூபாயாக இருந்த நிலையில், பழைய iPhone 16 Pro-வை மாற்றி கொடுத்தால் ரூ.55,100 வரை எக்சேஞ்ச் மதிப்பு கிடைக்கிறது. </p><p>அதற்கு மேலாக, Flipkart Axis Bank Credit Card மூலம் ரூ.3,990 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதனால், iPhone 17 Pro-வின் இறுதி விலை 75,810 ரூபாயாக குறைகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04945e3e-1bd4-421a-a955-72aa3d743aac/26-6aa167e9ec65d.webp' /></p><p> EMI முறையில் வாங்க விரும்புவோருக்கு மாதம் ரூ.3,907 முதல் தவணை வசதி வழங்கப்படுகிறது.
</p><p>
இந்த சலுகை, குறிப்பாக iPhone 16 Pro வைத்திருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், பழைய போனின் நிலைமை (சேதம், செயல்பாடு) அடிப்படையில் எக்சேஞ்ச் மதிப்பு மாறுபடும்.</p><p></p><p>
</p><h2>
இறுதி வாய்ப்பு</h2><p>Apple நிறுவனம், புதிய iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max வெளியீட்டுக்குப் பிறகு, பழைய Pro மாடல்களை நிறுத்தும் பழக்கத்தை பின்பற்றுகிறது. அதனால், Cosmic Orange நிறம் விரைவில் சந்தையில் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது.
</p><p>
இந்த சலுகை, iPhone 17 Pro வாங்க விரும்புவோருக்கு இறுதி வாய்ப்பாகக் கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T14:03:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வருடாந்தம் 1,000 சிறார்களுக்கு புற்றுநோய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/1-000-children-sri-lanka-diagnosed-cancer-annually-1788960226"></link>
            <id>https://jvpnews.com/article/1-000-children-sri-lanka-diagnosed-cancer-annually-1788960226</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டில் பிறந்தது முதல் 19 வயது வரையிலான வயதிற்குட்பட்ட 900 முதல் 1,000 எண்ணிக்கையிலான புற்றுநோயாளிகள் வருடாந்தம் பதிவாவதாக சமூக வைத்திய நிபுணர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டில் பிறந்தது முதல் 19 வயது வரையிலான வயதிற்குட்பட்ட 900 முதல் 1,000 எண்ணிக்கையிலான புற்றுநோயாளிகள் வருடாந்தம் பதிவாவதாக சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.</p><p> 

தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டத்திற்கு அமைவாக இன்று (09) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08219b70-b7bd-4b0d-a201-592cb16bdc53/26-6aa15de3c2fcb.webp' /></p><h2>&nbsp;குணப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள்</h2><p> </p><p>

ரத்தப் புற்றுநோய் (லியுகேமியா), நிணநீர்ச் சுரப்பிப் புற்றுநோய் (லிம்போமா), மூளைப் புற்றுநோய், எலும்புப் புற்றுநோய் மற்றும் கண் புற்றுநோய் ஆகியவையே இங்கு அதிகளவில் கண்டறியப்படுவதாக வைத்தியர் சுட்டிக்காட்டுகிறார்.</p><p> 

எந்தவொரு புற்றுநோயையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கேற்ப உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம் அதைக் குணப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.</p><p></p><p> 

குழந்தைகள் மற்றும் பருவவயதினருக்கு ஏற்படும் புற்றுநோய்கள் மற்றும் அதற்கான சிகிச்சைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உலகம் முழுவதும் செப்டம்பர் மாதம் "குழந்தைப் பருவப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக" பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-09T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஷாரா செவ்வந்தியை இந்தியாவிற்கு அனுப்பிய யாழ்ப்பாண படகோட்டி : நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-boatman-who-sent-ishara-to-india-remanded-1788960011"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-boatman-who-sent-ishara-to-india-remanded-1788960011</id>
            <summary type="text">கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, யாழ்ப்பாணம் அரியாலையிலிருந்து இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல உதவிய படகோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, யாழ்ப்பாணம் அரியாலையிலிருந்து இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல உதவிய படகோட்டியை 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டார்.
</p><p>
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 30 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட, தலைமறைவான சந்தேக நபரான செல்வனேசன் ஜீசஸ் தாசன் என்ற பாலசுவை கொழும்பு குற்றப்பிரிவு முற்படுத்தியபோது சமர்ப்பித்த உண்மைகளைக் கருத்தில் கொண்ட பின்னர் நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.</p><h2>ஜிபிஎஸ் கருவியை அழித்த படகோட்டி</h2><p>கொழும்பு குற்றப்பிரிவு, நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்தபோது, ​​படகோட்டி கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் நாற்பத்தேழாவது சந்தேக நபராகப் பெயரிடப்படுவார் என்று கூறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43947cb6-de52-4d62-aa27-b50a0f41ed31/26-6aa163036a96a.webp' /></p><p>
</p><p>
சந்தேக நபர், படகில் இருந்த நான்கு பேரையும் நன்கு அறிந்து நாடு கடத்த ஏற்பாடு செய்திருந்தார், மேலும் இந்தியாவில் இறங்கிய பின்னர், படகில் சாட்சியமாக இருந்த ஜிபிஎஸ் கருவியை அழித்திருந்தார்.</p><p></p><h2>&nbsp;போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல உதவி</h2><p>

சந்தேக நபர் இவ்வாறு பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டை விட்டு வெளியேற உதவியிருந்தார், மேலும் இந்தியாவுக்குச் செல்வதற்காக ஐம்பதாயிரம் ரூபாய் வசூலித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/397f8287-e29b-457f-8a4d-d77c961d4287/26-6aa163041f12d.webp' /></p><p>
</p><p>
உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதிபதி, சந்தேக நபரை அடுத்த பதினெட்டு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். அந்தத் திகதிக்குள் விசாரணையின் முன்னேற்றத்தைச் சமர்ப்பிக்குமாறு கொழும்பு குற்றப்பிரிவுக்கு அவர் உத்தரவிட்டார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T13:51:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியா மாநகரசபை முதல்வர் விவகாரம்: ஆளுநரின் வர்த்தமானி மீதான தடை நீடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vavuniya-municipal-council-mayor-issue-1788960601"></link>
            <id>https://tamilwin.com/article/vavuniya-municipal-council-mayor-issue-1788960601</id>
            <summary type="text">வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான
இடைக்கால தடைக் கட்டளையினை இந்த மாதம் 23 ஆம் திகதி வரை நீடித்து வவுனியா மேல்
நீத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான
இடைக்கால தடைக் கட்டளையினை இந்த மாதம் 23 ஆம் திகதி வரை நீடித்து வவுனியா மேல்
நீதிமன்றம் இன்று (09.09) உத்தரவிட்டது.
</p><p>
எதிர் மனுதாரர் தரப்பு சட்டத்தரணியால் எழுத்து மூல சமர்ப்பணங்களை வழங்க
அவகாசம் கோரிமையால் இந்த இரண்டு வாரம் கால அவகாசம் மன்றால் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட
எழுத்தாணை விண்ணப்பம் வவுனியா மேல் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.</p><h2>தாக்கல்</h2><p>
</p><p>குறித்த விண்ணப்பத்தில் மாநகர முதல்வர் மீதான இடைக்காலத் தடையை நீடிப்பதா
அல்லது அதனை விலக்குவதா என்பது தொடர்பாக கடந்த தவணையில் நீண்ட விவாதம்
இடம்பெற்றிருந்தது.
</p><p>
அந்த வகையில், இருதரப்பு விவாதங்களையும் எழுத்து மூல சமர்ப்பணமாக வழங்குமாறும்
அதனை கடந்த 28 ஆம் திகதி அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ தாக்கல் செய்ய
வேண்டும் என்றும் கடந்த தவணை வழங்கப்பட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0006461-6d1a-452b-bcc1-85837ecce998/26-6aa16232c554b.webp' /></p><p>
</p><p>
அதன்படி மனுதாரர் சார்பில் எழுத்துமூல சமர்ப்பணங்கள் மன்றுக்கு
சமர்ப்பிக்கப்பட்டது. எனினும் எதிர்மனுதாரர் தரப்பு சட்டத்தரணியால் எழுத்து
மூல சமர்ப்பணங்களை வழங்க அவகாசம் கோரிமையால் இந்த இரண்டு வாரம் கால அவகாசம்
மன்றால் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன் முதல்வரை பதவி நீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்காலத்
தடைக்கட்டளை இம் மாதம் 23ஆம் திகதி வரை மன்றால் நீடிக்கப்பட்டிருக்கிறது.
மனுதாரர் சார்பில் சட்டத்தரணி இ.தயாபரன் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T13:42:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில் :மகிந்தவை தேடிச் சென்று சந்தித்த சீனாவின் புதிய தூதுவர் : வழங்கப்பட்ட அன்பளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-chinese-ambassador-to-visit-mahinda-1788957316"></link>
            <id>https://ibctamil.com/article/new-chinese-ambassador-to-visit-mahinda-1788957316</id>
            <summary type="text">இலங்கைக்கான புதிய சீனத் தூதர் வெய் ஹுவாக்சியாங் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையே இன்று (09) கொழும்பில் ஒரு சந்திப்பு நடைபெற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான புதிய சீனத் தூதர் வெய் ஹுவாக்சியாங் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையே இன்று (09) கொழும்பில் ஒரு சந்திப்பு நடைபெற்றது.
</p><p>
வெய் ஹுவாக்சியாங் ஓகஸ்ட் 25 அன்று தனது நற்சான்றிதழ்களைச் சமர்ப்பித்த பின்னர் இலங்கைக்கான சீனத் தூதராகப் பொறுப்பேற்றார்.&nbsp;</p><h2>வழங்கப்பட்ட அன்பளிப்பு</h2><p>இந்த சந்திப்பின் போது, ​​சீனத் தூதர் பாரம்பரிய சீன ஓவியங்கள் அடங்கிய ஒரு புத்தகத்தையும் மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b78ed452-e842-464e-8eed-cf9e7c57c1a5/26-6aa15aa055814.webp' /></p><p>இந்நிகழ்வில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர கரியவசமும் கலந்துகொண்டார்.</p><h2>ஜனாதிபதி அனுர இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு</h2><p>இதேவேளை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி அனுர குமார உட்பட பலரை சந்தித்து வரும் நிலையில் புதிய சீன தூதுவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை சந்திததுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1747a4cf-9496-4c24-806b-a7534736eecb/26-6aa15ba5caa68.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T13:32:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[800 மில்லியன் ரூபா கொள்ளை: பிரதான சூத்திரதாரி கைது - திடுக்கிடும் பின்னணி தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/800m-thalawathugoda-agency-robbery-arrested-1788955502"></link>
            <id>https://tamilwin.com/article/800m-thalawathugoda-agency-robbery-arrested-1788955502</id>
            <summary type="text">தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தில் இடம்பெற்ற 800 மில்லியன் ரூபா பெறுமதியான கொள்ளைச் சம்பவத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தில் இடம்பெற்ற 800 மில்லியன் ரூபா பெறுமதியான கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியும் வாகன சாரதியுமான நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் நடத்திய விசேட சோதனையில் சந்தேகநபர் முல்லேரியாவ பகுதியில் வைத்து வளைத்துப் பிடிக்கப்பட்டார்.
</p><p>கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 15.5 மில்லியன் ரூபா, குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட சொகுசு வாகனம், திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.</p><h2>அதிர்ச்சி தகவல்கள்&nbsp;</h2><p>
</p><p>கடந்த செப்டம்பர் 1 ஆம் திகதி முகமூடி அணிந்த மூன்று ஆயுதமேந்திய நபர்கள் குறித்த முகவர் நிலையத்திற்குள் புகுந்து, ஊழியர்களை அச்சுறுத்தி, முழங்காலிடச் செய்து தாக்குதல் நடத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/436750de-6c60-42ba-8548-791732847319/26-6aa14b7023c22.webp' /></p><p> </p><p>பின்னர், 650 மில்லியன் ரூபா ரொக்கம் மற்றும் 150 மில்லியன் ரூபா மதிப்புள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அதே முகவர் நிலையத்தில் முன்னர் உதவிப் பிரதிநிதியாகப் பணியாற்றியவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>
அவர் நிறுவன உரிமையாளரிடம் பெற்ற 15 மில்லியன் ரூபா கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் கடன் சுமையில் இருந்துள்ளார்.</p><p>
அண்மையில் முல்லேரியாவ பகுதியில் நடைபெற்ற திருமண வீடொன்றில் தனக்கு ஏற்பட்ட பகிரங்க அவமானமும், கடன் சுமையுமே இந்தக் கொள்ளையைத் திட்டமிடத் தூண்டியதாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><p>
தனியாக இக்குற்றத்தைச் செய்ய முடியாததால், நவகாமுவ பொலிஸ் நிலையத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரின் உதவியை நாடியுள்ளார். </p><p>அவர் மூலம் பொமிரியாவைச் சேர்ந்த மேலும் இருவர் இணைக்கப்பட்டனர்.
கொள்ளைக்கு ஒரு மாதத்திற்கு முன்பாக, பிள்ளியந்தல – சித்தமுல்ல பகுதியிலுள்ள வீடொன்றில் கூடி திட்டமிட்டுள்ளனர்.</p><h2>&nbsp;போலி இலக்கத் தகடுகள்&nbsp;</h2><p>
</p><p>ஹன்வெல்ல நிதி நிறுவனமொன்றில் பெறப்பட்ட வாடகை வாகனத்திற்குப் போலி இலக்கத் தகடுகளைப் பொருத்தி இக்குற்றத்தை அரங்கேற்றியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90ef4c39-dd6a-4af1-9246-4eca3a84e85d/26-6aa158e3e5d2a.webp' /></p><p>
</p><p>கொள்ளைக்குப் பிறகு கும்பல் மீண்டும் சித்தமுல்ல வீட்டிற்குச் சென்று கொள்ளைப் பொருள்களைப் பிரித்துக் கொண்டுள்ளது.</p><p> பிரதான சூத்திரதாரி: 200 மில்லியன் ரூபாவையும், முன்னாள் பொலிஸ் ஊழியர் 150 மில்லியன் ரூபா மற்றும் தங்க நகைகள் என்பனவற்றையும் மற்ற இருவர் தலா 8 மில்லியன் ரூபாவையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.</p><p>
பிரதான சூத்திரதாரி தனது பங்கிலிருந்து 5 மில்லியன் ரூபாவை பொமிரியாவிலுள்ள நண்பரிடம் பாதுகாப்பிற்காகக் கொடுத்துள்ளார். 1.3 மில்லியன் ரூபாயைக் கொண்டு அடகு வைக்கப்பட்ட நிலத்தை மீட்டுள்ளதுடன், முல்லேரியாவ பகுதியில் பல பெண்களிடம் பெற்ற கடன்களையும் அடைத்துள்ளார். </p><p>பொலிஸார் இவரின் பங்கில் 300,000 ரூபாவைத் தவிர மற்ற அனைத்துப் பணத்தையும் மீட்டுள்ளனர்.
ஏனைய சந்தேகநபர்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். </p><p>
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் அடையாள அணிவகுப்பிற்காக கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T13:32:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[85 வயது முதியவருக்கு நேர்ந்த சோகம்: எங்கிருந்தோ வந்த தோட்டாவினால் பலியான முதியவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/innocent-85-year-old-man-killed-in-his-home-1788938694"></link>
            <id>https://canadamirror.com/article/innocent-85-year-old-man-killed-in-his-home-1788938694</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பர்னபி நகரில், தனது வீட்டில் இருந்த 85 வயது முதியவர் ஒருவர், எங்கிருந்தோ பாய்ந்து வந்த தோட்டா பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பர்னபி நகரில், தனது வீட்டில் இருந்த 85 வயது முதியவர் ஒருவர், எங்கிருந்தோ பாய்ந்து வந்த தோட்டா பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
</p><p>கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி அதிகாலை 1:30 மணியளவில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக பர்னபி பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.</p><p>
பொலிஸார் சம்பவ இடத்திற்குச் செல்வதற்குள் சந்தேகத்திற்குரிய வாகனம் தப்பிச் சென்றதுடன், ஆரம்பக்கட்ட சோதனையில் காயமடைந்தவர்கள் எவரும் கண்டறியப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e2b1436-aa71-4c9e-b1f1-6fcaa8fcd58a/26-6aa109c859b50.webp' /></p><p>
எனினும், அன்றைய தினம் மாலை 4:00 மணியளவில், துப்பாக்கிச்சூடு நடந்த இடத்திற்கு அருகே உள்ள குடியிருப்பில் வசிக்கும் முதியவரின் நலன் குறித்து விசாரிக்க பொலிஸார் சென்றுள்ளனர்.</p><p>
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, 85 வயதான சாங் யோங் சோ என்ற முதியவர் துப்பாக்கிக் காயத்துடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
</p><p>அப்பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது தவறுதலாக பாய்ந்து வந்த தோட்டாவே இவரைத் தாக்கியுள்ளது எனவும், இந்தச் சம்பவத்தில் இவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனவும் ஒருங்கிணைந்த கொலை விசாரணைப் படை உறுதி செய்துள்ளது.</p><p>
இச்சம்பவம் கும்பல் மோதலோ அல்லது போதைப்பொருள் தொடர்பானதோ அல்ல என்றும், தனிப்பட்ட தகராறே இதற்குக் காரணம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>இதில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் இளைஞர்கள் குறித்த விவரங்கள் தெரிந்தவர்கள் அல்லது அவர்களின் பெற்றோர்கள், பொலிஸாரைத் தொடர்புகொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p>
ஆகஸ்ட் 30 ஆம் திகதி அதிகாலை 12:30 மணி முதல் 2:00 மணி வரை 18th and Humphries avenues பகுதிகளில் பயணித்தவர்களிடம் டேஷ்கேம் அல்லது பாதுகாப்பு கேமரா பதிவுகள் இருந்தால், 1-877-551-4448 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T13:30:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் நாமல் ராஜபக்ச; அச்சத்தில் தாயும்....தாரமும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-in-prison-wife-in-fear-1788959677"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-in-prison-wife-in-fear-1788959677</id>
            <summary type="text">&amp;nbsp; ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18ஆம் திகதி வரை கொழும்பு விளக்கமறியல் சிறைச்சா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18ஆம் திகதி வரை கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த சிறைச்சாலையின் பாதுகாப்புமிக்க விசேட அறையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/364ae4cf-8f30-4212-b56d-d6e5dcc81690/26-6aa15bbf586b3.webp' /></p><p>
</p><p>
எயார் பஸ் கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்ற ஊழலில் நாமல் ராஜபக்ச கைதாகியுள்ளார். இன்னிலையில் நாமலி கைது அவரது மனைவியை பாதித்துள்ளதாகவும், இதனால் அவர் அச்சத்தில் உள்ளதாகவும் கொழும்பு அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;&nbsp;</p><p>&nbsp;ராஜபக்ச குடும்பத்தின் முக்கிய அரசியல் முகமாகத் திகழும் நாமல் ராஜபக்சவின் இந்தத் திடீர் கைது நடவடிக்கை, இலங்கை அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oxkF3F-rgZc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வைரலாகும் கெனிஷா - ரவி மோகன் வீடியோ? பிரபலம் சொன்ன ரகசியம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/che-guevara-talks-about-ravi-mohan-and-kenisha-1788951759"></link>
            <id>https://viduppu.com/article/che-guevara-talks-about-ravi-mohan-and-kenisha-1788951759</id>
            <summary type="text">ரவி மோகன் - கெனிஷா இருவரும் பிரிந்துவிட்டதாக கூறி வந்த நிலையில் கோவாவில் ஒன்றாக மாறிமாறி சிகரெட் பிடித்த வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரவி மோகன் - கெனிஷா இருவரும் பிரிந்துவிட்டதாக கூறி வந்த நிலையில் கோவாவில் ஒன்றாக மாறிமாறி சிகரெட் பிடித்த வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பலரும் பேசி வரும் நிலையில் பத்திரிக்கையாளர் சே குவேரா யூடியூப் சேனல் ஒன்றில் அளித்த பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். </p><p>அதில் இந்த வீடியோ வெளியானதற்குப்பின் ரவிமோகனுடைய இமேஜே மொத்தமாக காலி ஆகிடுச்சு, ஏன்னா லட்சக்கணக்கான பேர், கோடிக்கணக்கான பேர் இந்த வீடியோவை பார்த்துவிட்டார்கள். </p><p>இதுவரை அவரிடமிருந்து மறுப்பு, விளக்கம் எதுவும் வரவில்லை. ரவிமோகனை டேமேஜ் பண்ணி யாருக்கு என்ன கிடைக்கப்போகுது. எனக்கு தெரிஞ்ச வரைக்கும், நான் சமீபத்தில் பார்த்த விஷயங்களை எடுத்துக்கிட்டா, அடுத்தடுத்து ரவி மோகன் குறித்து சர்ச்சைகள் வந்துக்கிட்டே இருக்கு. </p><p>குறிப்பா இந்த கெனிஷாவுடன் துபாய்க்கு போன விஷயம், அங்க நடந்த பிரச்சனை பற்றி தான். இருவரும் ஒன்றாக இருக்கிறார்களா? என்ற கேள்வியை யாரும் கேட்டுவிடக்கூடாது என்பதற்கு, கெனிஷாவை யோகி பாபு நடிக்கும் படத்திற்கு இசையமைப்பாளராக்கி இருக்கிறார். கெனிஷாவால் இதுமட்டும் பிரச்சனை இல்லை, ரவி மோகன் நடித்துள்ள கராத்தே பாபு படத்திற்கும் பிரச்சனை.</p><p> இப்படத்தில் போலீஸ் உயர் அதிகாரியின் மகள் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தின் ஷூட்டிங், பணிகள் அனைத்தும் முடிவடைந்தப்பின், அந்த கதாநாயகியை மாற்ற வேண்டும் என்று ரவி மோகன் கேட்டிருக்கிறார். இதன் காரணமாகவே கராத்தே பாபு படத்தின் ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று சே குவேரா தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-09T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவெக தலைமையில் உருவான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/tvk-led-secular-social-justice-victory-alliance-1788960110"></link>
            <id>https://ibctamilnadu.com/article/tvk-led-secular-social-justice-victory-alliance-1788960110</id>
            <summary type="text">tvk led alliance named as secular social justice victory alliance: தவெக தலைமையிலான கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி என பெயர் சூட்டப...</summary>
            <content type="html"><![CDATA[<p>tvk led alliance named as secular social justice victory alliance: தவெக தலைமையிலான கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. </p><h3>

மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி</h3><p>

தவெக கூட்டணி கட்சிகளின் 2வது கூட்டம் இன்று மாலை சென்னை பனையூரில் நடைபெற்றது. </p><p>

இந்த கூட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், நிர்மல் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். </p><p>

மேலும், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஐயுஎம்எல், மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c288217-390d-4077-9671-272f2b9da6f0/26-6aa15d702eda3.webp' /></p><p>

இந்நிலையில், தவெக தலைமையிலான இந்த கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. </p><p>

இந்த கூட்டம்திற்கு பின்னர் காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், "மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி தமிழ்நாடு, புதுச்சேரியில் செயல்படும்.</p><p> 

கூட்டணியின் தலைவராக விஜய் இருப்பார். புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்க முயற்சி எடுக்கப்படும்.</p><p>

மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள். அவர்களின் வெற்றிக்காக பாடுபடுவோம்” என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T13:21:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வைரலாகும் சீமானின் புதிய தோற்றம்... ‘சேயோன்’ படத்தில் இப்படியொரு கதாபாத்திரமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/seyon-shooting-spot-actor-seeman-photos-viral-1788958826"></link>
            <id>https://manithan.com/article/seyon-shooting-spot-actor-seeman-photos-viral-1788958826</id>
            <summary type="text">சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட நடிகரும், இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட நடிகரும், இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.</p><h2>சேயோன் திரைப்படம்</h2><p>

‘தாய்க்கிழவி’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சிவகுமார் முருகேசன், அடுத்ததாக ‘சேயோன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12e6fd85-7de6-41b6-863d-d4d5b423c605/26-6aa15c861f9c2.webp' /></p><p> </p><p>இப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாகவும், பாக்யஸ்ரீ போர்ஸே கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர்.இப்படத்தை கமல்ஹாசன் தயாரித்து வருகிறார்.</p><p>
மும்முரமாக நடைபெறும் படப்பிடிப்பு
‘சேயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதுரை மண்ணின் பாரம்பரியம், கிராமத்து வாழ்வியல் மற்றும் அப்பகுதியின் கலாசாரப் பின்னணியை மையமாகக் கொண்டு, பக்கா கிராமத்து கமர்சியல் எண்டர்டெய்னராக இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.</p><p></p><p>

இதற்காக மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரமாண்டமான படப்பிடிப்பு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு முக்கியமான ஆக்சன் காட்சிகள் மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffebf8e3-608d-4430-a6a5-c71baa4b1380/26-6aa15c85695a2.webp' /></p><p></p><p>
</p><p><b>
முக்கிய கதாபாத்திரத்தில் சீமான்
</b></p><p>இந்நிலையில், ‘சேயோன்’ படத்தில் சீமான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அரசியல் பணிகளில் தீவிரமாக இயங்கி வரும் சீமான், அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். </p><p>அந்த வகையில், ‘சேயோன்’ படத்தில் அவரது பங்களிப்பு தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சமீபத்தில் படக்குழு, இப்படத்தில் சீமான் நடிக்கும் கதாபாத்திரத்தின் தோற்றத்தை வெளியிட்டது. அந்த புகைப்படத்தில் அவர் கிராமத்து பின்னணிக்கு ஏற்ற தோற்றத்தில் காணப்பட்டார். </p><p>இந்த தோற்றம் வெளியானதைத் தொடர்ந்து, சீமானின் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7579829-e5bb-4dbb-a171-cec35fe2110b/26-6aa15c86ced3c.webp' /></p><p>
</p><p><b>
வைரலாகும் படப்பிடிப்பு புகைப்படங்கள்</b></p><p>
தற்போது ‘சேயோன்’ படப்பிடிப்புத் தளத்தில் சீமான் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. படப்பிடிப்பில் அவர் இடம்பெற்றுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றதுடன், இணையத்திலும் வேகமாகப் பரவி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8ff44ce-08d5-4b6e-84b7-c664cd5fa0eb/26-6aa15c87888de.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையே, இப்படத்தில் சீமான், சிவகார்த்திகேயனின் தந்தை கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அவரது கதாபாத்திரம் தொடர்பான முழுமையான விவரங்கள் இதுவரை படக்குழுவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> </a><b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T13:18:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[400 கிராம் தேயிலைக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fine-of-200-000-for-400g-of-expired-tea-1788958233"></link>
            <id>https://jvpnews.com/article/fine-of-200-000-for-400g-of-expired-tea-1788958233</id>
            <summary type="text">&amp;nbsp; காலாவதியான தேயிலைப் பொதி ஒன்றை நுகர்வோருக்கு விற்பனை செய்தமை தொடர்பில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; காலாவதியான தேயிலைப் பொதி ஒன்றை நுகர்வோருக்கு விற்பனை செய்தமை தொடர்பில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. </p><p>

காலாவதியான தேயிலைப் பொதியை விற்பனை செய்தமைக்காகத் தனியார் நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், எதிராளி நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து கொழும்பு இலக்கம் 05 நீதவான் நீதிமன்றம், இந்த அபராதத்தை விதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc3d3d6c-8bdd-4182-9072-4ce821f41462/26-6aa1561a951f0.webp' /></p><h2>&nbsp;குற்றத்தை ஒப்புக்கொண்ட&nbsp; நிறுவனம் </h2><p> </p><p>

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 15.07.2026 அன்று காலாவதியானதாகக் குறிப்பிடப்பட்ட 400 கிராம் எடையுள்ள தேயிலைப் பொதி ஒன்று 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. </p><p>

சம்பவம் தொடர்பாக 15.08.2014 திகதியிடப்பட்ட 1875/38 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளை இலக்கம் 52 ஐ மீறியமைக்காக நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.</p><p></p><p> </p><p>

கட்டளை இலக்கம் 52 இன் படி, உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள், வழங்குநர்கள் மற்றும் வர்த்தகர்கள் விற்பனைக்குத் தகுதியற்ற, காலாவதியான அல்லது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்றவை எனக் கண்டறியப்பட்ட பொருட்களை, விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள ஏனைய பொருட்களுடன் சேர்த்தோ, அதற்கு அருகிலோ அல்லது அவற்றுக்கு மத்தியிலோ வைத்திருப்பது, சேமிப்பது அல்லது திரட்டி வைப்பது கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T13:16:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளவத்தை உணவகத்தை இடிக்க இடைகால தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/interim-stay-on-demolition-wellawatte-restaurant-1788956594"></link>
            <id>https://jvpnews.com/article/interim-stay-on-demolition-wellawatte-restaurant-1788956594</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றை இடித்து அகற்றுமாறு தெரிவித்து கடற்கரை பாதுகாப்பு பணிப்பாளரால் பிறப்பிக்கப்பட்ட அற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றை இடித்து அகற்றுமாறு தெரிவித்து கடற்கரை பாதுகாப்பு பணிப்பாளரால் பிறப்பிக்கப்பட்ட அறிவித்தலை, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்துவதைத் தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22314474-3191-4079-b8c8-f34dec547cdf/26-6aa14fb3a177e.webp' /></p><p> </p><p>

குறித்த உணவகத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T13:16:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல் சதமே 150 ஓட்டங்கள் விளாசிய 24 வயது வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jordan-hermann-maiden-century-150-runs-vs-namibia-1788959376"></link>
            <id>https://news.lankasri.com/article/jordan-hermann-maiden-century-150-runs-vs-namibia-1788959376</id>
            <summary type="text">Jordan hermann 150 runs vs namibia: தென் ஆப்பிரிக்காவின் ஜோர்டன் ஹெர்மன் நமீபியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதம் விளாசினார்.

நமீபியா அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Jordan hermann 150 runs vs namibia: தென் ஆப்பிரிக்காவின் ஜோர்டன் ஹெர்மன் நமீபியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதம் விளாசினார்.
</p><p>
நமீபியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், தென் ஆப்பிரிக்க தொடக்க வீரரான ஜோர்டன் ஹெர்மன் 150 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;</p><h2>டோனி டி ஸோர்சி&nbsp;72</h2><p>
தென் ஆப்பிரிக்கா மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி Windhoek-யில் நடந்து வருகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/281f418b-84d3-43ac-889b-175340ad6a2b/26-6aa15c0166218.webp' />&nbsp;</p><p></p><p>நாணய சுழற்சியில் வென்ற நமீபியா அணி பந்துவீச்சை தெரிவு செய்ய, தென் ஆப்பிரிக்க அணி முதலில் துடுப்பாடியது.</p><p>

கோன்னோர் எஸ்டர்ஹுய்ஸன் 10 ஓட்டங்களில் வெளியேற, ஜோர்டன் ஹெர்மன் மற்றும் டோனி டி ஸோர்சி கூட்டணி 190 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p>அரைசதம் அடித்த டோனி 72 ஓட்டங்களில் வெளியேற, டெவால்ட் பிரேவிஸ் 33 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6e32fa0-893e-4438-a190-579e3fe3348a/26-6aa15c007fd7e.webp' />&nbsp;&nbsp;</p><h2>ஜோர்டன் ஹெர்மன்&nbsp;150 </h2><p>மறுமுனையில் அதிரடி மிரட்டிய ஜோர்டன் ஹெர்மன் முதல் சதத்தை பதிவு செய்தார். அணியின் ஸ்கோர் 275 ஓட்டங்களாக உயர்ந்தபோது, ஜோர்டன் ஹெர்மன் 126 பந்துகளில் 150 ஓட்டங்கள் (3 சிக்ஸர், 17 பவுண்டரிகள்) விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p>கார்பின் போஷ் அதிரடியாக 24 பந்துகளில் 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 39 ஓட்டங்கள் விளாச, தென் ஆப்பிரிக்க அணி 348 ஓட்டங்கள் குவித்தது. ரூபென் ட்ரம்பல்மன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d39ca20-34cb-4ac3-b07f-36b1e2c5e460/26-6aa15a93b4f85.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2df839f7-6147-4f60-9448-99cc0bf86a71/26-6aa1625c0e6d6.webp' /></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A Debut For The Books! 📝<br><br>Jordan Hermann’s day just keeps getting better as the debutant brings up an extraordinary 150! 🤯<br><br>A sensational innings of exquisite stroke play as Hermann makes his mark on the international stage. 🇿🇦🙌<a href="https://x.com/hashtag/Unbreakable?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Unbreakable</a> <a href="https://t.co/QdNfetlj9F">pic.twitter.com/QdNfetlj9F</a></p>&mdash; Proteas Men (@ProteasMenCSA) <a href="https://x.com/ProteasMenCSA/status/2097635146153218105?ref_src=twsrc%5Etfw">September 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T13:12:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிஸ் நகரமொன்றில் பாரிய தீவிபத்து: ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/person-dies-in-fire-at-swiss-commercial-building-1788959278"></link>
            <id>https://news.lankasri.com/article/person-dies-in-fire-at-swiss-commercial-building-1788959278</id>
            <summary type="text">Person dies in fire at Swiss fruit and vegetable wholesaler building: சுவிட்சர்லாந்தில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Person dies in fire at Swiss fruit and vegetable wholesaler building: சுவிட்சர்லாந்தில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் பலியானார்.</p><p>


சுவிட்சர்லாந்தின் Solothurn மாகாணத்திலுள்ள Bellach என்னுமிடத்தில், காய்கறிகள், பழங்கள் மொத்த விற்பனை செய்யும் கட்டிடம் ஒன்று உள்ளது.
</p><h3>
ஒருவர் பலி</h3><p>

இந்நிலையில், நேற்று காலை 10.30 மணியளவில் அந்தக் கட்டிடத்தில் திடீரென தீப்பற்றியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6457589-5265-46fa-95b2-c26584fb927c/26-6aa15a2f6510d.webp' /></p><p>
</p><p>
தகவலறிந்து தீயணைப்புக்குழுவினர் அங்கு வரும் முன், தீ கட்டிடத்தை கபளீகரம் செய்துவிட்டிருக்கிறது.&nbsp;</p><p></p><p>
கட்டிடம் தீயில் முழுமையாக சேதமடைந்துவிட, பொலிசார் மேற்கொண்ட ஆய்வில், அந்தக் கட்டிடத்துக்குள் ஒருவர் உயிரிழந்துகிடந்தது தெரியவந்துள்ளது.
</p><p>
அவர் யார், எதனால் தீப்பற்றியது என்பது போன்ற விடயங்கள் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T13:11:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலக்கரி மோசடியில் சிக்கிக் கொண்ட பிரிலோயர்ஸ் அமைப்பின் மைத்திரி குணரத்ன! திறைசேரி நிதி மோசடியை கடுமையாக விமர்சித்தவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/maithri-gunaratne-coal-1788959175"></link>
            <id>https://tamilwin.com/article/maithri-gunaratne-coal-1788959175</id>
            <summary type="text">&amp;nbsp;2015–2016 காலப்பகுதியில் நுரைச்சோலை லக்விஜய அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரி கொள்முதல் செய்வதற்காக லிபர்ட்டி கொமோடிட்டீஸ் Liberty Commodities நிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;2015–2016 காலப்பகுதியில் நுரைச்சோலை லக்விஜய அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரி கொள்முதல் செய்வதற்காக லிபர்ட்டி கொமோடிட்டீஸ் Liberty Commodities நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் நிபந்தனைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டதன் காரணமாக சுமார் 1,575,630 அமெரிக்க டொலர் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிலக்கரி மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் நேற்று (08.09.2026) வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>இந்த ஒப்பந்தத்தில் இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் சார்பில் அன்றைய தலைவராகப் பணியாற்றிய பிரிலோயர் அமைப்பின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன கையொப்பமிட்டிருந்தார்.
</p><p></p><h2>முன்னாள் செயலாளரின் சாட்சியம்</h2><p>இது குறித்த சாட்சியத்தை அன்றைய மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் மேலதிக செயலாளராகப் பணியாற்றிய டி. அமரதுங்க தெரிவித்துள்ளார்.
நேற்று சாட்சியமளித்த அமரதுங்க 2015–2016 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட உடனடி நிலக்கரி கொள்முதல் தொடர்பாகத் தமது குழு விசாரணை நடத்தியதாகக் குறிப்பிட்டார்.
</p><p>அமரதுங்கவின் சாட்சியத்தின்படி லக்விஜய அனல்மின் நிலையத்திற்கு விநியோகிக்க தேவையான நிலக்கரியின் தொழில்நுட்பத் தரம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட தரத்தை விடக் குறையும் பட்சத்தில் விநியோகஸ்தரிடமிருந்து அறவிடப்பட வேண்டிய அபராதம் அல்லது விலை மாற்றியமைத்தல் தொடர்பில் ஏல ஆவணங்களில் இருந்த நிபந்தனைகள் இறுதி ஒப்பந்தத்தில் சேர்க்கப்படும் போது பாரிய மாற்றங்களுக்கு உள்ளாகியிருந்தன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0aee1f1-06e2-42de-b149-22fe10cf5df4/26-6aa159c9557a1.webp' /></p><p>தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் கொள்முதல் குழு ஆகியன சமர்ப்பித்த கருத்துக்களையும் சரியாகப் பின்பற்றாமல் இறுதி ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளதாக அமரதுங்க ஆணைக்குழுவின் முன் தெரிவித்துள்ளார்.
</p><p>இங்கு எளிமையாக கூறுவதானால்இ நிர்ணயிக்கப்பட்ட தரத்தை விடக் குறைந்த தரமுடைய நிலக்கரி பெறப்பட்டால் விநியோகஸ்தருக்குச் செலுத்தப்படும் தொகையிலிருந்து கழிக்கப்பட வேண்டிய பணத்தைக் கணக்கிடும் சூத்திரம் ஏல ஆவணத்தில் இருந்தவாறு அல்லாமல் விநியோகஸ்தருக்குச் சாதகமான முறையில் இறுதி ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டிருந்தமையே பிரச்சினையாகும்.
</p><h2>கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டவை</h2><p>குறித்த ஆணைக்குழு விசாரணையில் வெளிவந்த தகவல்கள்: 2009 முதல் 2016 ஜூன் வரையிலான காலப்பகுதியில் நுரைச்சோலை மின்நிலையத்திற்கு நிலக்கரி கொள்முதல் செய்யப்பட்டமை தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தினால் தயாரிக்கப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கையிலும் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. </p><p>இதில் ஆறு நீண்டகால நிலக்கரி கொள்முதல்களும் ஐந்து உடனடி கொள்முதல்களும் இதில் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.
கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின்படி முதலாவது கொள்முதலுக்காக 'லிபர்ட்டி கொமோடிட்டீஸ்' நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்ததுடன் 165,000 மெட்ரிக் தொன்னுக்கான ஒப்பந்தம் 2015 ஆகஸ்ட் 17 அன்று கையொப்பமிடப்பட்டிருந்தது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bedfee0-c6bb-4171-93b0-dd49be6dbdf1/26-6aa159ca0e74f.webp' /></p><p>இதன்போது ஏல ஆவணத்தில் சேர்க்கப்பட்டிருந்த வரைவு ஒப்பந்தத்தில் (draft agreement) குறிப்பிடப்பட்டிருந்த சல்பர் (Sulphur) மற்றும் சாம்பல் (Ash) ஆகியவற்றிற்கான விலை சரிசெய்தல் சூத்திரங்கள் இறுதி ஒப்பந்தத்தை எட்டும் போது மாற்றப்பட்டிருந்ததாகக் கணக்காய்வாளர் தலைமை அதிபதி நேரடியாகவே குறிப்பிட்டுள்ளார். </p><p>
புதிய ஒப்பந்தங்கள் எதிலும் கையொப்பமிடாமல் அதே ஒப்பந்தமே பின்னர் இரண்டாவது மற்றும் நான்காவது கொள்முதல்களுக்காகவும் சமர்ப்பித்ததால் அவ்விரண்டு கொள்முதல்களையும் பாதித்திருந்ததாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>நேற்று ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த அமரதுங்கஇ தனது தலைமையிலான மூவர் கொண்ட குழு இவ்வொப்பந்தம் தொடர்பாக மைத்திரி குணரத்னவிடமும் விசாரணை நடத்தியதாகக் கூறினார். அவ்விசாரணையின் போதுஇ குறித்த நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதை குணரத்ன ஒப்புக்கொண்டதாக குறிப்பிட்டார்.&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T13:11:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எடை குறைந்த பாண் விற்பனை: எடுக்கப்படவுள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/raids-on-outlets-selling-underweight-bread-1788957301"></link>
            <id>https://tamilwin.com/article/raids-on-outlets-selling-underweight-bread-1788957301</id>
            <summary type="text">நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை மற்றும் விசாரணை நடவடிக்கையின் போது, எடை குறைந்த பாண் மற்றும் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை மற்றும் விசாரணை நடவடிக்கையின் போது, எடை குறைந்த பாண் மற்றும் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. </p><p>

இந்த நடவடிக்கையின் கீழ் நாடு முழுவதிலுமுள்ள சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பேக்கரிகள் உட்பட 118 நிறுவனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.</p><p>அத்துடன், பாணின் சரியான எடை பேணப்படுகிறதா என்பதும், எடை மற்றும் விலை சரியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதா என்பதும் தீவிரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது.</p><h2>வர்த்தக முறைகேடுகள்</h2><p> </p><p>

கிடைக்கப்பெற்றுள்ள ஆரம்பக்கட்ட அறிக்கைகளின்படி, எடைக் தகவல்கள் பெறப்பட்ட விற்பனை நிலையங்கள் மற்றும் பேக்கரிகளின் அடிப்படையில் 54 நிறுவனங்களில் எடை குறைந்த பாண் கண்டறியப்பட்டுள்ளது. </p><p>அதற்கமைய, குறித்த பேக்கரிகளின் உற்பத்தி நடவடிக்கை மற்றும் அவற்றின் மூலம் ஏனைய விற்பனை நிலையங்களுக்கு பாண் விநியோகிக்கப்படும் விதம் குறித்துப் பரிசோதிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a17c36ea-225d-41e4-b36e-f376fc809ea1/26-6aa157b0b4e25.webp' /></p><p>ஒரு முழுப் பாண் 450 கிராமும், அரைப் பாண் 225 கிராமும் கொண்டிருக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.</p><p> 

பாணின் எடை, விலை அல்லது ஏனைய வர்த்தக முறைகேடுகள் தொடர்பாக ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால், அலுவலக நேரங்களில் 1977 என்ற நுகர்வோர் உடனடி அழைப்பு இலக்கத்திற்குத் தெரிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T13:10:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய பாதுகாப்பு விவகாரம்! ராஜ்நாத் சிங்கிடம் அநுர வழங்கிய விசேட செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/srilanka-stance-activity-directagainstindsecurity-1788957705"></link>
            <id>https://ibctamil.com/article/srilanka-stance-activity-directagainstindsecurity-1788957705</id>
            <summary type="text">கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று&amp;nbsp; இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையே நடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று&nbsp; இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையே நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சு ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.
</p><p>
இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையிலான வரலாற்று உறவுகளை மேலும் மேம்படுத்த தலைவர்கள் ஒப்புக்கொண்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கைக்காகவும் இலங்கையின் நிலப்பரப்பு ஒருபோதும் பயன்படுத்தப்படாது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இச்சந்திப்பின்போது ஒரு கருத்தை வெளியிட்டார் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முதல்நிலை மீட்பாளர்</h2><p>
தித்வா புயலின்போது 'சாகர் பந்து நடவடிக்கை'யின் கீழ் இந்தியா வழங்கிய மனிதாபிமான நிவாரணம் மற்றும் மறுவாழ்வு உதவிகளுக்கு இலங்கை ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36431c58-c5d7-47d4-8e21-215f1530bb00/26-6aa15a8b9f3a1.webp' /></p><p> </p><p>இதற்குப் பதிலளித்த இந்திய பாதுகாப்பு அமைச்சர், மிக நெருங்கிய அண்டை நாடாகவும் நண்பராகவும் ஒரு முதல்நிலை மீட்பாளராக ஆதரவளிப்பது தனது பொறுப்பு என்று கருதுவதாகவும், எதிர்காலத்திலும் அவ்வாறே தொடர்ந்து செய்வேன் என்றும் கூறியுள்ளார் என்றும் அறிக்கை கூறியுள்ளது.</p><p>
இரு நாடுகளின் தலைவர்களின் ஆதரவின் கீழ், இந்திய அரசாங்கத்தின் மானியத்தின் கீழ் இலங்கை விமானப்படையின் எல்70 விமான எதிர்ப்புத் துப்பாக்கிகளை நவீனமயமாக்குவதற்கான ஒப்பந்தம் மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரிகள் மற்றும் தேசிய மாணவர் படைக்கு இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாறப்பட்டன.</p><p>

மேலும், இந்திய பாதுகாப்புப் படைகளால் கட்டப்பட்ட மூன்று பெய்லி பாலங்களும் அடையாளப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டன என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T13:09:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையிலுள்ள நாமலை பார்க்க சென்று சர்ச்சையில் சிக்கிய ஷிரந்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-in-struggle-after-visiting-prison-1788919351"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-in-struggle-after-visiting-prison-1788919351</id>
            <summary type="text">விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பார்ப்பதற்காக அவரது தாயார் ஷிராந்தி ராஜபக்ச தனது சொந்த வாகனத்திலேயே சிறைச்சாலைக்குள...</summary>
            <content type="html"><![CDATA[<p>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பார்ப்பதற்காக அவரது தாயார் ஷிராந்தி ராஜபக்ச தனது சொந்த வாகனத்திலேயே சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் விஜித்த ஹேரத்திடம் நேற்று ஊடகவிலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். </p><p>

அதற்கு பதிலளித்தவர், முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மனைவியாக இருப்பதனால் ஷிரந்திக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கலாம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><h2><b>சர்ச்சையில் சிக்கிய ஷிரந்தி</b></h2><p><i>“நாமல் ராஜபக்சவை பார்க்க ஷிராந்தி ராஜபக்ச தனது வாகனத்திலேயே சிறைச்சாலைக்குள் செல்வதை நாங்கள் கண்டோம். அது எப்படி சாத்தியம்? இப்போது ஏனைய கைதிகளையும் அவ்வாறே வாகனத்தில் சென்று பார்க்க முடியுமா..! அல்லது இது நாமலுக்கு மட்டும் கிடைக்கும் விசேட சலுகையா</i>..! என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bc742a5-fa7d-4a50-9aef-2c48b5106ee2/26-6aa0c09b01f70.webp' /></p><p>“<i>சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில் உள்ளனர். அத்தகையவர்களைப் பார்ப்பதற்காக சிறைச்சாலை திணைக்களத்தின் முறையொன்று உள்ளது. அந்த முறையின் அடிப்படையில்தான் அது நடந்திருக்க வேண்டும், எனக்கு அது குறித்து சரியாகத் தெரியாது</i>” என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><i>

வாகனத்தை உள்ளே கொண்டு செல்வது இருக்கட்டும், ஒரு சாதாரண நபர் அங்கு வாகனத்தை நிறுத்தக் கூட அனுமதிக்கப்படுவதில்லையே </i>என ஊடகவிலாளர் கேள்வி எழுப்பியுள்ளார். </p><p>
முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மனைவியாக இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கலாம். சரியான காரணத்தை விசாரித்துவிட்டு தகவல்களை வெளிப்படுத்துகிறேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p><b>YOU MAY LIKE THIS..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Di9SgPrs56M" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-09T13:03:12+00:00</updated>
        </entry>
    </feed>
