<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-27T06:21:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vishwanath-and-sons-worldwide-tamilnadu-box-office-1787809109"></link>
            <id>https://cineulagam.com/article/vishwanath-and-sons-worldwide-tamilnadu-box-office-1787809109</id>
            <summary type="text">சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான விஸ்வநாத் &amp;amp; சன்ஸ் திரைப்படம் உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><p>
</p><h2>
விஸ்வநாத் &amp; சன்ஸ்</h2><p>

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் <a href="https://www.youtube.com/watch?v=JTHZCJ8Rhxg&amp;t=2s" target="_blank">சூர்யா</a>. இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான கருப்பு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை நாம் அனைவரும் அறிவோம். சூர்யாவின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படமும் இதுவே ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cca9539e-fafa-4155-a963-ad1e6ce6d317/26-6a8fcd5898ddd.webp' /></p><p> </p><p>கருப்பு வெற்றியை தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியான திரைப்படம் விஸ்வநாத் &amp; சன்ஸ். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு சற்று கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இருந்தும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.</p><h2>

பாக்ஸ் ஆபிஸ்
</h2><p>
இந்நிலையில், விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் இதுவரை உலக அளவிலும், தமிழ்நாட்டிலும் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 192 கோடி வசூல் செய்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் ரூ. 54 கோடி வசூலித்துள்ளது. 

இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92a65152-1b45-46b4-961c-0a0d585502ca/26-6a8fcd5a0a536.webp' /></p>]]></content>
            <updated>2026-08-27T06:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பெரும் சோகம் : கோர விபத்தில் இளம் தாய் - பிறந்த குழந்தை உட்பட மூவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3-dies-in-an-accident-1787805343"></link>
            <id>https://tamilwin.com/article/3-dies-in-an-accident-1787805343</id>
            <summary type="text">அனுராதபுரம் கெபிதிகொல்லாவ - மெதவச்சி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

ஜீப் மற்றும் முச்சக்கர வண்டி மோதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் கெபிதிகொல்லாவ - மெதவச்சி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.</p><p>

ஜீப் மற்றும் முச்சக்கர வண்டி மோதிக்கொண்ட விபத்தில், இவ்வாறு 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>

உயிரிழந்தவர்களில் ஒரு பாட்டி, அவரது மகள் மற்றும் பிறந்து 10 நாட்களான குழந்தை ஆகியோர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2><b>

கோர விபத்து</b></h2><p>சிகிச்சைக்காக அனுராதபுர போதனா மருத்துவமனைக்கு குழந்தை சென்று கொண்டிருந்த போது, ​​இன்று காலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47ae5cb9-afad-407b-9fcf-2f7b6debb289/26-6a8fd6ee63fde.webp' /></p><p>உயிரிழந்தவர்கள் பதவிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.</p><p>

விபத்து தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T06:18:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரிய மின்படலங்களை பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/important-notice-for-users-of-solar-panels-in-sl-1787809225"></link>
            <id>https://ibctamil.com/article/important-notice-for-users-of-solar-panels-in-sl-1787809225</id>
            <summary type="text">இலங்கையில்&amp;nbsp;சூரிய மின்படலங்களை பயன்படுத்துபவர்களுக்கு&amp;nbsp;வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.அதன்படி, இன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில்&nbsp;சூரிய மின்படலங்களை பயன்படுத்துபவர்களுக்கு&nbsp;வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>அதன்படி, இன்று (27) முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (30) வரை, கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள 300 கிலோவோட்டிற்கும் அதிகமான திறன் கொண்ட சூரிய மின்படலங்களை தற்காலிகமாக செயலிழக்கச் செய்யுமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>இந்த நிலையில் குறித்த நாட்களில் காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை சூரிய மின்படலங்களை செயலிழக்கச் செய்யுமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p><h2>தேசிய கட்டமைப்பு செயற்படுத்துநர்</h2><p>இதேவேளை விடுமுறை காலத்தில் மின்சாரத் தேவை குறைவாக இருப்பதால், 300 கிலோவாட்டிற்கும் அதிகமான திறன் கொண்ட சூரிய மின்படலங்களை&nbsp; தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்ய தேசிய கட்டமைப்பு செயற்படுத்துநர் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd6f421b-0640-43f3-b2b8-b85c8e4cb256/26-6a8fd5a8892f8.webp' /></p><p>விடுமுறை காலத்தில் மின்சாரத் தேவை குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாலும், தேசிய மின் அமைப்பின் நிலைத்தன்மையைப் பேணுவதை நோக்கமாகக் கொண்டும் இந்தத் தற்காலிக நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T06:12:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மண்டைதீவு படுகொலையின் 36ஆம் ஆண்டு நினைவு : கண்ணீரில் நனைந்த படுகொலையின் நினைவிடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/36th-anniversary-of-the-mandaitivu-massacre-1787809080"></link>
            <id>https://tamilwin.com/article/36th-anniversary-of-the-mandaitivu-massacre-1787809080</id>
            <summary type="text">1990களில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மண்டைதீவு படுகொலையின் 36ஆவது
ஆண்டு நினைவு நாள் நேற்று(26.08.2026) உறவுகளின் கண்ணீருடன், உணர்வுபூர்வமாக
அனு...</summary>
            <content type="html"><![CDATA[<p>1990களில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மண்டைதீவு படுகொலையின் 36ஆவது
ஆண்டு நினைவு நாள் நேற்று(26.08.2026) உறவுகளின் கண்ணீருடன், உணர்வுபூர்வமாக
அனுஸ்டிக்கப்பட்டது.
</p><p>
36 வருடங்களுக்கு முன்னர் இதே தினத்தன்று இலங்கையின் இராணுவத்தால் மண்டைதீவில்
நடத்தப்பட்ட படுகொலைச் சாட்சி நினைவிடத்திலேயே இன்றையதினம் தீவக மக்கள்
ஒன்றுகூடி தமது உறவுகளை நினைவுகூரி சுடரேற்றி மலர் தூவி அஞ்சலித்தனர்.
</p><h2>படுகொலை செய்யப்பட்ட ஒருவரது தாயார்</h2><p>
தீவக நினைவேந்தல் குழு மற்றும் தீவக முன்னேற்றக்கழகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில்
நடைபெற்ற குறித்த நினைவேந்தல் அனுஸ்டிப்பு நிகழ்வில் இராணுவத்தால் படுகொலை
செய்யப்பட உறவுகளின் வாழும் உறவான ஸ்பன் மற்றில்டா முதன்மைச் சுடரேற்றிவைத்து
நினைவு நினைவு கூரலை ஆரம்பித்து வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a916eab-356c-489f-a95b-055e44256aa5/26-6a8fd364c4ec8.webp' /></p><p>தொடர்ந்து அருட்தந்தை வசந்தன் மற்றும் தீவக முன்னேற்றக் கழக தலைவர் பிரகலாதன்
ஆகியோரால் நினைவிடத்துக்கு மலர்மாலை அணிவித்து நிகழ்விவேந்தல்
நடைபெற்றது.
</p><p>இதேநேரம் குறித்த சம்பவம் குறித்து வாழும் சாட்சியாக இருக்கும்
படுகொலைசெய்யப்பட்ட ஒருவரது தாயாரும் சகோதரியும் அன்றைய நாள் வடுக்களையும்
வேதனைகளையும் சாட்சியாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.</p><h2>புதைக்கப்பட்ட கிணறுகளில் ஒன்று</h2><p>இதன்போது மகன இழந்த தாயார் கூறுகையில், 1990.08.25 மற்றும் 26 ஆம் திகதிகளில்
இந்த படுகொலையும் காணாமலாக்கலும் இராணுவத்தால் அரங்கேற்றப்பட்டது.

இதில் தனது மகன் இராணுவத்தால் என் கண் முன்னே கைது செய்யப்படு எனது உறவினர்
ஒருவரது வீடின் பின் பகுதியில் வைத்து கடும் சித்திரவதைக்கு உள்ளாகினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffad327c-5808-4e15-98ad-aa85d221e926/26-6a8fd365a2b61.webp' /></p><p>
</p><p>
அதன் பின்னர் அவர்களை சுட்டுக் கொன்றனர். இந்த கோர சம்பவத்துக்கு நான்
சாட்சி.

அதேபோன்று சுற்றுவட்டத்தில் இவ்வாறு கொல்லப்பட்ட பல உடலங்களை சிலவற்றை அவ்வூர்
மக்களைக்கொண்டு சேகரித்து கிணறுகளில் போட்டு மூடினர்.</p><p>&nbsp;அவ்வாறு புதைக்கப்பட்ட கிணறுகளில் ஒன்றுதான் இன்று நினைவு கூறப்படும் கிணறு.

இந்த கிணறு போன்று இன்னும் சில கிணறுகள் இன்னும் இருக்கின்றன என கண்ணீர் மல்க
தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T06:04:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி ...தங்கம் விலை அதிரடி சரிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/today-august-27th-gold-and-silver-price-in-chennai-1787809955"></link>
            <id>https://manithan.com/article/today-august-27th-gold-and-silver-price-in-chennai-1787809955</id>
            <summary type="text">ஆகஸ்ட் மாத தொடக்கம் முதலே தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வருகின்றன. இன்றைய (ஆகஸ்ட் 27) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தில் மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆகஸ்ட் மாத தொடக்கம் முதலே தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வருகின்றன. இன்றைய (ஆகஸ்ட் 27) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தில் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.&nbsp;&nbsp;</p><p>கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. இதனால் நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் வகையில் விலை நிலவரம் அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bccc1d4-6ba7-4b93-b204-d5a513522454/26-6a8fd2e61b5b2.webp' /></p><p></p><p>கடந்த செவ்வாய்க்கிழமை தங்கத்தின் விலை குறைந்த நிலையில், நேற்று எந்தவித மாற்றமும் இன்றி அதற்கு முந்தைய நாளின் விலையே தொடர்ந்தது.</p><p>அதன்படி, 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,010-க்கும், ஒரு சவரன் (8 கிராம்) ரூ.1,20,080-க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p><h2>இன்றைய நிலவரம்</h2><p>

இந்நிலையில், இன்று தங்கம் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.14,940-ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,19,520-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4ab1267-f634-47f3-bda4-8c175c0734bf/26-6a8fd2e6c95ba.webp' /></p><p>ஒரு கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.12,710-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,01,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bce49a3c-d3dc-4b63-aa9a-626df4915874/26-6a8fd31491c68.webp' /></p><p></p><p>
</p><p>
மறுபுறம், வெள்ளி விலையில் இன்று எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><u>FOLLOW NOW</u>&nbsp;</a></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T06:03:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது - அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/minister-arunraj-says-swine-flu-control-in-tn-1787810214"></link>
            <id>https://ibctamilnadu.com/article/minister-arunraj-says-swine-flu-control-in-tn-1787810214</id>
            <summary type="text">தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் விளக்கமளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல்

இந்தியாவில் டெல்லி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் விளக்கமளித்துள்ளார்.</p><h3>

தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல்
</h3><p>
இந்தியாவில் டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14f9f27a-7ce3-4881-b474-da4706cf3000/26-6a8fd1a93b692.webp' /></p><p>
டெல்லியில் 2,000க்கும் அதிகமானோர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி முதல்வர் ரேகா குப்தா அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். </p><p>

இதனை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஜனவரி மாதத்தில் 19 பேருக்கு மட்டுமே இருந்த பன்றிக்காய்ச்சல் பாதிப்பு, தற்போது 339 ஆக அதிகரித்துள்ளது. </p><p>

அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.</p><h3> 

அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் </h3><p>

இந்நிலையில், இன்று சட்டமன்றத்தில் பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என திமுக எம்எல்ஏ லட்சுமணன் கேள்வி எழுப்பினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f60738fd-527e-4261-a05a-9dfca4014715/26-6a8fd1a7d04bc.webp' /></p><p> 

இதற்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், "பன்றிக் காய்ச்சல் கட்டுப்பாட்டில் தான் உள்ளது, மக்கள் அச்சப்படத் தேவையில்லை. </p><p>

மே மாதத்துக்கு முன்பு குறைவாக இருந்த காய்ச்சல் தற்போது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சற்று அதிகமாக உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f7deed3-bcf8-4675-904a-5ebddee57b16/26-6a8fd1a8832ef.webp' /></p><p>

தேவைப்பட்டால் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும், முதியவர்களையும், கர்ப்பிணிகளையும் அதிகமாக பாதிக்கும் என்பதால் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T06:02:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் பச்சிளம் குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-people-including-an-infant-killed-accident-1787810609"></link>
            <id>https://jvpnews.com/article/three-people-including-an-infant-killed-accident-1787810609</id>
            <summary type="text">&amp;nbsp;அநுராதபுரம்&amp;nbsp;

கெப்பித்திகொல்லாவ பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் இன்று (27) முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 நாட்களேயான கைக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அநுராதபுரம்&nbsp;

கெப்பித்திகொல்லாவ பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் இன்று (27) முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 நாட்களேயான கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
பதவிய சிறிபுர பகுதியில் இருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும், அநுராதபுரத்திலிருந்து கெப்பித்திகொல்லாவ நோக்கிப் பயணித்த கெப் வண்டியும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11f40fe7-1944-42e7-9bf3-34ad30ea291a/26-6a8fd332b9336.webp' /></p><p> </p><p>

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி, அவரது தாய் மற்றும் 10 நாட்களேயான கைக்குழந்தை ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்த போதே இந்த கோர விபத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p>

 விபத்து தொடர்பில் கெப்பித்திகொல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-27T06:00:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் புதைக்கப்பட்ட குழந்தைகள் : அவுஸ்திரேலிய நாடாளுமன்றில் ஒலித்த குரல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/australian-senator-urges-gov-chemmani-mass-grave-1787805549"></link>
            <id>https://ibctamil.com/article/australian-senator-urges-gov-chemmani-mass-grave-1787805549</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில்&amp;nbsp;அவுஸ்திரேலிய பசுமைக் கட்சியின் செனட்டர் டேவிட் ஷூபிரிட்ஜ் அந்நாட்டு அரசாங்கத்திடம் முக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில்&nbsp;அவுஸ்திரேலிய பசுமைக் கட்சியின் செனட்டர் டேவிட் ஷூபிரிட்ஜ் அந்நாட்டு அரசாங்கத்திடம் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். </p><p>அதன்படி, மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் முறையான மற்றும் சுயாதீனமான விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கை அரசுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p> அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனைக் குறிப்பிட்ட அவர்&nbsp;ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் இந்த விவகாரத்தை தீவிரமாக எழுப்ப வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>முழுமையான மற்றும் வெற்றிகரமான விசாரணைகள்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை நீதி மற்றும் பொறுப்புக்கூறலை அடைவதற்குத் தனது ஆதரவை வழங்கும் என்று அவுஸ்திரேலியா முன்னர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான சரியான நேரம் இது.</p><p> முழுமையான தளம் பாதுகாக்கப்படுவதையும், மனித எச்சங்கள் மற்றும் சாட்சியங்களுக்கான சுயாதீனமான தடயவியல் சங்கிலிப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதையும் அவுஸ்திரேலிய அரசு தூண்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d0f14fb-3cdf-467c-9392-c2b9e9051728/26-6a8fcab39e934.webp' /></p><p>
யாழ்ப்பாணம் செம்மணியில் இடம்பெற்ற மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் கடந்த 19ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், அங்கு மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மொத்த எண்ணிக்கை 583 ஆக உயர்ந்துள்ளது.
</p><p>
எனினும், இவ்வளவு அதிகமான மனித எச்சங்கள் மீட்கப்பட்ட போதிலும் இலங்கை அரசாங்கம் இது குறித்து இதுவரை மௌனம் காத்தே வருகின்றது.</p><p>மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கையில் சுமார் 20 புதைகுழி தளங்களை ஆவணப்படுத்தியுள்ள போதிலும், அவற்றில் எதற்கும் இதுவரை முழுமையான மற்றும் வெற்றிகரமான விசாரணைகள் நடத்தப்படவில்லை.” என தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>&nbsp;சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுத்தல்</h2><p>இதேவேளை நம்பகமான மற்றும் முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதில் தொடர்ந்தும் தவறிழைத்துள்ள இலங்கை அரசாங்கம், உள்ளூர் பொறிமுறைகளில் தமிழ் சமூகம் எத்தகைய நம்பிக்கையையும் வைக்க முடியாது என அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டுள்ள தமிழ் ஏதிலிகள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72fefedf-65c1-4bfe-acf0-e9b80bffec36/26-6a8fcb65da0ac.webp' /></p><p>
</p><p>
எனவே, உடனடியாகச் சுயாதீன விசாரணையொன்றை முன்னெடுப்பதோடு, சாட்சியங்களைப் பாதுகாத்து, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அந்தப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T05:59:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தேங்கியுள்ள 1,000க்கும் அதிகமான வாகனங்கள் ஏலத்தில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hambantota-port-vehicles-will-sale-on-auction-1787809937"></link>
            <id>https://tamilwin.com/article/hambantota-port-vehicles-will-sale-on-auction-1787809937</id>
            <summary type="text">&amp;nbsp;ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் மூன்று மாதங்களுக்கும் மேலாக விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 1,000-க்கும் மேற்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் மூன்று மாதங்களுக்கும் மேலாக விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 1,000-க்கும் மேற்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் அல்லது டெண்டர் முறையில் விற்பனை செய்து, சுங்க வரி மற்றும் களஞ்சியக் கட்டணங்களை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 109 ஆவது பிரிவின் கீழ் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும், இது குறித்து இறக்குமதியாளர்களுக்குத் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா கூறியுள்ளார்.
</p><p>வாகன இறக்குமதி மூலம் கிடைக்கும் சுங்க வரி வருவாயில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சுங்கத் திணைக்களத்தின் மொத்த இலக்கான 190.2 பில்லியன் ரூபாயில் இதுவரை 176.7 பில்லியன் ரூபாய் திரட்டப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய 13 பில்லியன் ரூபாயை வரும் நாட்களில் ஈட்ட முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84501924-0550-4a00-bc08-e38d739972a9/26-6a8fd093681de.webp' /></p><p>
</p><p>வாகன வரி வருவாய் குறைந்ததையடுத்து, கூடுதல் கட்டணத்தை இந்த ஆண்டின் இறுதி வரை நீடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் வாகன இறக்குமதி மீண்டும் இயல்பு நிலைக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>செலாவணி வீத உயர்வு வாகனங்களின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 1,000-க்கும் அதிகமான வாகனங்கள் சுமார் மூன்று மாதங்களாக விடுவிக்கப்படாமல் தேங்கியுள்ளன. சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 109 ஆவது பிரிவின் கீழ், இந்த வாகனங்களை ஏலம் அல்லது டெண்டர் மூலம் விற்பனை செய்து சுங்க வரியை முதன்மையாக வசூலிக்கவும், பின்னர் துறைமுகத்திற்கான களஞ்சியக் கட்டணங்களைச் செலுத்தவும் தீர்மானித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.</p><p>
விற்பனைக்குப் பின்னர் ஏதேனும் பணம் மீதம் இருந்தால், அதை சம்பந்தப்பட்ட இறக்குமதியாளருக்குத் திருப்பி வழங்கவும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இவ்விவகாரம் தொடர்பாக இறக்குமதியாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் பணிகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T05:52:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 14 வயதுச் சிறுமியை கடத்திச் செல்ல முயற்சி ; துரத்திப் பிடித்த பொதுமக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/attempt-to-kidnap-14-year-old-girl-jaffna-public-1787804403"></link>
            <id>https://jvpnews.com/article/attempt-to-kidnap-14-year-old-girl-jaffna-public-1787804403</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 12 வயது சிறுமி ஒருவர்&amp;nbsp; கடந்த 24 ஆம் திகதி&amp;nbsp; பிற்பகல் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 12 வயது சிறுமி ஒருவர்&nbsp; கடந்த 24 ஆம் திகதி&nbsp; பிற்பகல் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக சமூக வலைத்தளப்பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.</p><p></p><p>பொதுமக்களின் துரிதமான முயற்சியினால் குறுகிய நேரத்திற்குள் சிறுமி மீட்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவல்களின்படி, சபாபதிப் பிள்ளை வீதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் நேற்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் கல்வி நிலையம் ஒன்றுக்குச் சென்று கொண்டிருந்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c198b2d5-a02f-4726-842e-8a9aec171d8a/26-6a8fbaf558316.webp' /></p><p>அப்போது சிவப்பு நிற ஓட்டோ ஒன்றில் வந்த சிலர் சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக மேற்கொண்ட முயற்சியின் மூலம் சிறுமி குறுகிய நேரத்திலேயே மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒருவர் மீது ஏற்கனவே போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும், அவர் பாடசாலை மாணவிகளைத் தொந்தரவு செய்து வருவதாக முன்னதாகவே அப்பகுதியில் முறைப்பாடுகள் எழுந்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அதிகாரப்பூர்வ விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளின் முடிவுகளே இறுதியானவை எனக் குறிப்பிடப்படுகிறது.
</p><p>
குறித்த நபர் பாடசாலை முடிவடையும் நேரங்களில் பாடசாலை வளாகத்திற்கு அருகில் நின்று மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துகொள்வதாகவும் சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர். </p><p>இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் உரிய அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
சிறுமி கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதாகவும், சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p> எனினும், இதுகுறித்து பொலிஸாரின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு இதுவரை வெளியாகவில்லை.
</p><p>
சுன்னாகம் பகுதியில் அண்மைக்காலமாக இடம்பெற்று வருவதாகக் கூறப்படும் பல்வேறு குற்றச்செயல்கள் குறித்து மக்கள் மத்தியில் கவலை மற்றும் அச்சம் நிலவி வருவதாகவும், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதுடன், சிறுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T05:51:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தண்டவாளத்தைக் கடக்க முயன்ற நபர் ஒருவர் தொடருந்து மோதி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-dies-being-hit-train-while-trying-cross-tracks-1787809365"></link>
            <id>https://jvpnews.com/article/man-dies-being-hit-train-while-trying-cross-tracks-1787809365</id>
            <summary type="text">புத்தளம் வென்னப்புவ – வைக்கால் தொடருந்து கடவையில் நேற்று (26.08.2026) மாலை இடம்பெற்ற கோர விபத்தில், சைக்கிளைத் தள்ளிக்கொண்டு தண்டவாளத்தைக் கடக்க முயன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>புத்தளம் வென்னப்புவ – வைக்கால் தொடருந்து கடவையில் நேற்று (26.08.2026) மாலை இடம்பெற்ற கோர விபத்தில், சைக்கிளைத் தள்ளிக்கொண்டு தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 55 வயதுடைய நபர் ஒருவர் தொடருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>
</p><p>
கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தொடருந்து கடந்து செல்வதற்காக, குறித்த தொடருந்து கடவையின் பாதுகாப்பு கேட் முழுமையாக மூடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38ad9139-9b8d-4d89-b721-2cd72ee89e51/26-6a8fce56c327e.webp' /></p><p>இந்நிலையில், பாதுகாப்பு கேட் மூடப்பட்டிருந்த போதிலும், குறித்த நபர் தனது சைக்கிளைத் தள்ளிக்கொண்டு தண்டவாளத்தைக் கடக்க முயன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p> இதன்போது வேகமாக வந்த தொடருந்து அவர் மீது மோதியதில், பலத்த காயங்களுக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
</p><p>
உயிரிழந்தவர் குளியாப்பிட்டிய, பஹல கழுகமுவ பகுதியைச் சேர்ந்த ரந்திலக பேடிகே கபில லால் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
விசாரணைகளின்படி, அவர் வைக்கால் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து வர்ணம் பூசும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் என தெரியவந்துள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T05:43:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதை பற்றி பேசும் தகுதி எனக்கு இல்லை; அனுபமா - துருவ் பிரச்சனை குறித்து பிரபல நடிகர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actor-bhagavathi-about-anupama-dhruv-vikram-1787806006"></link>
            <id>https://cineulagam.com/article/actor-bhagavathi-about-anupama-dhruv-vikram-1787806006</id>
            <summary type="text">அனுபமா - துருவ்தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாக வெடித்த மிகப்பெரிய பிரச்சனை அனுபமாவின் காதல் தோல்வி தான்.
அனுபமா தான் மிகப்பெரிய டாக்சிக் உறவில் இ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அனுபமா - துருவ்</h2><p>தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாக வெடித்த மிகப்பெரிய பிரச்சனை அனுபமாவின் காதல் தோல்வி தான்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1fc72e4-eb59-43ff-891a-7b2cc2758a2f/26-6a8fc138e0dcd.webp' /></p><p>அனுபமா தான் மிகப்பெரிய டாக்சிக் உறவில் இருந்ததாகவும், அதனால் பல கஷ்டங்களை அனுபவித்ததாகவும், தன் காதலன் ஒரு நேரம் அம்பி மற்றொரு நேரம் அந்நியன் போலவும் நடந்துகொள்கிறார் என கூறினார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d71de2a0-017c-4ced-8632-ebc6cb88385f/26-6a8fc139996d4.webp' /></p><p>

இதை தொடர்ந்து பலரும் இவர் <a href="https://www.youtube.com/watch?v=MnVAe8iYBH0" target="_blank">துருவ்</a>-வைதான் சொல்கிறார் என சொன்னாலும், அனுபமா வெளிப்படையாக இவர் தான் என கூறவில்லை.</p><p></p><h2>நடிகர் பகவதி&nbsp;</h2><p> </p><p>இந்நிலையில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், துணிவு போன்ற படங்களில் நடித்த பகவதி அவர்களிடம் இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea8fa789-bd29-441e-a5a0-3e79ef86365e/26-6a8fc13a4f9a6.webp' /></p><p> 

அதற்கு பகவதி, "எனக்கு அனுபமா, துருவ் விஷயத்தில் ஏதோ ஒரு பிரச்சனை உள்ளது என தெரிகிறது; ஆனால், அதில் கருத்து சொல்ல எனக்கு தகுதியில்லை" என வெளிப்படையாகவே சொல்லி அந்த கேள்வியை பக்ஸ் கடந்து சென்றுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T05:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்குடன் தொடர்புடைய அரசியல்வாதிகளுக்கு வலை வீச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/investigations-regarding-the-politicians-1787808951"></link>
            <id>https://tamilwin.com/article/investigations-regarding-the-politicians-1787808951</id>
            <summary type="text">முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக்குடன் நெருங்கிய தொடர்பு பேணிய முக்கிய அரசியல்வாதிகள் குறித்த விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக்குடன் நெருங்கிய தொடர்பு பேணிய முக்கிய அரசியல்வாதிகள் குறித்த விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பாசிக் தற்பொழுது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>பாசிக்கிடம், பல கோடி ரூபாய் பணம் மற்றும் பல்வேறு சலுகைகளைப் பெற்றதாகக் கூறப்படும் 10 முக்கிய அரசியல்வாதிகளிடம் விரைவில் விசாரணை நடத்தப்படவுள்ளது.</p><p><br></p><p>
ஷிரான் பாசிக்கிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் போது வெளிவந்த அதிர்ச்சித் தகவல்களின் அடிப்படையில், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் இந்த அரசியல்வாதிகளிடம் விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.</p><p>
இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ள அரசியல்வாதிகளில் இரண்டு முன்னாள் பெண் அமைச்சர்கள், இரண்டு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட பல பிரபல அரசியல்வாதிகள் அடங்குவர் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>குறிப்பிட்ட 10 அரசியல்வாதிகளுக்கும் தேர்தல் பிரசாரப் பணிகளின் போது ஷிரான் பாசிக் அவ்வப்போது பெருந்தொகை பணத்தை வழங்கியுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.</p><p>
மேலும், கடந்த அரசாங்கத்தில் இருந்த சக்திவாய்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், ஷிரான் பாசிக்கு சட்டவிரோதமாக நிலங்களை நிரப்பி அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்களைக் கட்டுவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
</p><p> இந்த உதவிகளுக்காக அந்த முன்னாள் அமைச்சர் ஷிரான் பாசிக்கிடமிருந்து அவ்வப்போது பெருந்தொகை பணத்தைப் பெற்றுள்ளார்.
</p><p>ஷிரான் பாசிக் நீண்டகாலமாகவே இந்த அரசியல்வாதிகளுக்காக தாராளமாகப் பணத்தைச் செலவிட்டுள்ளமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
</p><p>ஷிரான் பாசிக்கிடம் நடத்தப்படும் விசாரணைகளில் வெளிவரும் தகவல்களின் அடிப்படையில், தொடர்பு வைத்துக்கொண்டு பணம் மற்றும் பலதரப்பட்ட சலுகைகளைப் பெற்ற அனைத்து அரசியல்வாதிகளிடமும் விரிவான விசாரணை நடத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய குறிப்பிட்டுள்ளார்.</p><p>
தற்போது தடுப்புக் காவலில் உள்ள ஷிரான் பாசிக்கிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அவருக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் குறித்தும் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T05:36:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் மீண்டும் வெள்ளம்...ஆய்வாளர்கள் எச்சரிக்கை! பீதியில் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/floods-strike-nepal-again-experts-warn-1787809092"></link>
            <id>https://jvpnews.com/article/floods-strike-nepal-again-experts-warn-1787809092</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாளத்தில் ஏற்பட்டிருக்கும் காட்டாறு வெள்ளம் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகம் நிலையில் தற்போது வரை 157 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேபாளத்தில் ஏற்பட்டிருக்கும் காட்டாறு வெள்ளம் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகம் நிலையில் தற்போது வரை 157 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
 மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளமை நேபாள மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/066b13b1-5e17-424d-9b0c-24a65b2bac56/26-6a8fcd466e657.webp' /></p><p> </p><p>

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த திடீர் வெள்ளத்தை தொடர்ந்து, அங்கு மீண்டும் ஒரு பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.</p><h2>&nbsp;நேபாளத்தை புரட்டிப்போட்ட இயற்கை&nbsp; பேரழிவு</h2><p> </p><p>

காத்மாண்டுவில் இயங்கி வரும் சர்வதேச ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டு மையம் (ICIMOD) இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.

நேபாள-சீன எல்லைக்கு அருகே ஆற்றின் மேல் பகுதியில் ஏற்பட்டிருக்கும் அடைப்பு ஒன்று இன்னும் நீங்காமல் இருக்கிறது. பனி மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததில் இந்த அடைப்பு ஏற்பட்டிருக்கிறது. </p><p>இது திடீரென உடைந்தால் ஆற்றில் இரண்டாவது முறையாக பெரும் வெள்ளம் ஏற்படும். 

இதனால் போட் கோசி மற்றும் திரிசூலி ஆற்றுப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.</p><p></p><p> </p><p>

ஏற்கெனவே முதல் வெள்ளத்தில் சிக்கி 150 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், நூற்றுக்கணக்கானோரின் நிலை என்னவென்றே தெரியாமல் இருக்கிறது. 

தற்போது இரண்டாவது வெள்ள அபாயம் இருப்பதால், சீன எல்லையில் உள்ள ஜலாங் துறைமுகப் பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. </p><p>

மேலும் நுவாகோட், தாடிங் போன்ற கீழ் நிலை மாவட்டங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. காலநிலை மாற்றத்தின் காரணமாக இமயமலை பகுதிகளில் இத்தகைய திடீர் வெள்ளப்பெருக்குகள் மற்றும் பனிச்சரிவுகள் அடிக்கடி ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்திருக்கின்றனர்.</p><p></p><p>

 நேபாளம் மற்றும் சீனாவுக்கு இடையே எல்லை தாண்டிய முன்னெச்சரிக்கை அமைப்புகள் இல்லாதது இத்தகைய பேரிடர் காலங்களில் பெரும் சிரமமாக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். </p><p>

இப்போதுதான் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில், இரண்டாவது வெள்ள அபாய எச்சரிக்கை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T05:35:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[10M உயர திடீர் வெள்ளத்தால் உருக்குலைந்த நாடு: நேபாளத்தில் உள்ள இலங்கையர்களின் நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-sri-lankans-reported-affected-by-nepal-floods-1787804841"></link>
            <id>https://ibctamil.com/article/no-sri-lankans-reported-affected-by-nepal-floods-1787804841</id>
            <summary type="text">நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் போட்கோஷி ஆற்றில் ஏற்பட்ட பேரழிவுமிக்க திடீர் வெள்ளப்பெருக்கில் இலங்கையர்கள் எவரும் உயிரிழக்கவோ அல்லது காயமடையவோ இல்லை எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் போட்கோஷி ஆற்றில் ஏற்பட்ட பேரழிவுமிக்க திடீர் வெள்ளப்பெருக்கில் இலங்கையர்கள் எவரும் உயிரிழக்கவோ அல்லது காயமடையவோ இல்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் பனிப்பாறை சரிவு மற்றும் திடீர் நிலச்சரிவு காரணமாகப் போட்கோஷி ஆற்றில் உருவான 8 முதல் 10 மீற்றர் உயரமான பெரும் வெள்ள அலைகள் கடுமையான பேரழிவை ஏற்படுத்தியுள்ளன.</p><p>இந்த திடீர் வெள்ளப் பெருக்கில் ஆற்றங்கரையோரத்திலிருந்த பல்வேறு கட்டிடங்கள், வாகனங்கள், ஆற்றின் குறுக்கே இருந்த பாலங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன.</p><p></p><h2>உலகம் முழுவதும் அதிர்ச்சி</h2><p> இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a32f1fa4-9f40-4cfe-9d27-0064d86f5c9e/26-6a8fc2b38ef62.webp' />&nbsp;&nbsp;</p><p>
</p><p>தற்போது வரை நேபாளைத்தைச் சேர்ந்த 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் 698 பேர் மாயமாகியிருப்பதாகவும் நேபாள அரசு அதிகாரப்பூர்வ தகவலைத் தெரிவித்துள்ளது.</p><p>குறிப்பாக, தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் 100க்கும் மேற்பட்டோர் மாயமாகியிருப்பதாகவும், அமெரிக்கர்கள் 54 பேர் மாயமாகியிருப்பதாகவும், 34 ஆஸ்திரேலியர்கள் மாயமாகியிருப்பதாகவும், 33 பிரிட்டன் நாட்டவர்கள் மாயமாகியிருப்பதாகவும் நேபாள சுற்றுலா துறை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>எவரும் பாதிக்கப்படவில்லை</h2><p>நேபாளத்தில் நிலவும் அவசர நிலைமையைக் கருத்தில் கொண்டு, அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் விழிப்புடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33246c10-efd6-4c56-b9fd-aca7c8d389a5/26-6a8fc2b44ba51.webp' />&nbsp;&nbsp;</p><p>
எனினும் இப்பேரழிவில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>நேபாளத்தில் வசிக்கும் 85 முதல் 100 வரையிலான இலங்கையர்களின் நிலைமையைக் காத்மண்டுவிலுள்ள இலங்கைத் தூதரகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், மேலதிக தகவல்கள் உடனுக்குடன் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அத்துடன்அந்நாட்டில் அவசர உதவி அல்லது ஒருங்கிணைப்பு தேவைப்படும் இலங்கையர்கள் காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தை 24 மணி நேர Hot line +977 9851048653 அல்லது slemk.kathmandu@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாக தொடர்புகொள்ளலாம்&nbsp;என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T05:25:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாடகை சொகுசு காரில் சட்டவிரோத மதுபானம் கடத்தல் ; இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-arreste-smugg-illegal-liquor-rented-luxury-car-1787808034"></link>
            <id>https://jvpnews.com/article/two-arreste-smugg-illegal-liquor-rented-luxury-car-1787808034</id>
            <summary type="text">வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி புத்தளம் வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி புத்தளம் வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><p> 

சந்தேக நபர்கள் இருவருடன், சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான 8 பைகளில் அடைக்கப்பட்ட 27,000 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபான ஸ்பிரிட் மற்றும் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கார் என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. </p><p>

மேல் மாகாண புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, கிந்தெல்பிட்டி பகுதியில் வைத்து இந்த சந்தேகத்திற்குரிய காரை நிறுத்தி சோதனையிட்ட போது, ​​அதன் பின்பக்க இருக்கைகள் அகற்றப்பட்டு மதுபானப் பைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f858b7a-bdc2-4a48-a015-b57fed2a7f84/26-6a8fc9236e8d5.webp' /></p><p> 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இந்த மதுபானம் ஹிரண பொலிஸ் பிரிவைச் சேர்ந்த மதுபான கடத்தல்காரரான 'சலா' என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் பாணந்துறை கல்துடே (Galthude) மற்றும் பாணந்துறை ஹிரண பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். </p><p>

சந்தேக நபர்கள் இருவரையும் பாணந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து, அவர்கள் தம்மை குற்றமற்றவர்கள் எனத் தெரிவித்தமையால், வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.</p><p> 

இச்சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T05:21:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: எந்தெந்த ராசிகளுக்கு பாதிப்பு அதிகம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/chandra-grahan-in-aquarius-on-28-who-get-bad-luck-1787805589"></link>
            <id>https://manithan.com/article/chandra-grahan-in-aquarius-on-28-who-get-bad-luck-1787805589</id>
            <summary type="text">இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் ஆகஸ்ட் 28-ஆம் தேதி நிகழவுள்ளது. இந்திய நேரப்படி, இந்த சந்திர கிரகணம் காலை 6.53 மணிக்குத் தொடங்கி, மதியம் 12.31 மணிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் ஆகஸ்ட் 28-ஆம் தேதி நிகழவுள்ளது. இந்திய நேரப்படி, இந்த சந்திர கிரகணம் காலை 6.53 மணிக்குத் தொடங்கி, மதியம் 12.31 மணிக்கு முடிவடைகிறது. இந்த கிரகணம் பகல் வேளையில் நிகழ்வதால், இந்தியாவில் இருந்து இதனைப் பார்க்க முடியாது.</p><p>இருப்பினும், ஜோதிடத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, கிரகணம் என்பது பொதுவாக ஒரு மோசமான நிகழ்வாகவே கருதப்படுகிறது.அதுவும் இந்த சந்திர கிரகணம் சனி பகவானின் ஆட்சி ராசியான கும்ப ராசியில் நிகழ்வதால், இதன் தாக்கம் கூடுதல் முக்கியத்துவம் பெறுவதாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dff155f9-2953-4293-8934-9d1359e5a2d7/26-6a8fc8f8c2551.webp' /></p><p></p><p>
இதன் காரணமாக, இந்த கிரகணத்தின் எதிர்மறையான விளைவுகள் பலமடங்கு அதிகரிக்கக்கூடும் என்று ஜோதிட நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன.</p><p> இந்த கிரகணத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களிடமும் ஏதேனும் ஒரு வகையில் காணப்படலாம் என்றாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் மட்டும் கூடுதல் கவனத்துடன் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஜோதிட கணிப்புகள் குறிப்பிடுகின்றன.&nbsp;</p><p>
அந்த வகையில், கும்ப ராசியில் நிகழவுள்ள 2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e66b1ed2-1a28-45f0-980a-8a6f01684a27/26-6a8fc8f9737da.webp' /></p><h2>
</h2><p>2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணத்தால் கடக ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிப்பதால் மன அழுத்தமும், ஆரோக்கியப் பிரச்சனைகளும் ஏற்படலாம்.</p><p> எனவே போதிய ஓய்வு எடுத்து, உடல்நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மேலும், இக்காலத்தில் எந்த முடிவையும் அவசரமாக எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.</p><p>குறிப்பாக புதிய சொத்து வாங்குவது அல்லது பெரிய முதலீடுகளை செய்வதை இந்த காலகட்டத்தில் தவிர்ப்பது நல்லது. இல்லையேல் நிதி இழப்பை சந்திக்க நேரிடலாம்.</p><h2>
கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41314c29-55ed-4fbc-b85f-e35d8764f589/26-6a8fc8fa266cb.webp' /></p><p>சந்திர கிரகண காலத்தில் கன்னி ராசிக்காரர்கள் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற வார்த்தைகள் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.</p><p>கடின உழைப்புக்கு ஓரளவு பலன் கிடைத்தாலும், குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பேச்சில் நிதானத்துடன் இருப்பதோடு, தேவையற்ற செலவுகளையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.</p><p>புதிய தொழில் தொடங்குவது தொடர்பில் இந்த காலகட்டத்தில் சற்று எச்சரிக்கையாக முடிவெடுக்க வேண்டியது அவசியம்.</p><p>
</p><h2>
கும்பம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f4c6349-70ac-4f75-8745-f9399bb1e451/26-6a8fc8facf476.webp' /></p><p></p><p>2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணத்தால் கும்ப ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.சிறிய அலட்சியமும் பெரிய இழப்பை ஏற்படுத்தலாம்.</p><p> வியாபாரிகள் லாபம் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். தொழிலில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், புதிய திட்டங்களைத் தொடங்கும்போதும் செயல்படுத்தும்போதும் கூடுதல் கவனம் தேவை.</p><p>பணியிடத்திலும் சரி குடும்ப உறவுகளிடமும் சரி வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். இல்லையேல் சிறிய வாக்குவாதங்களும்&nbsp; மோதலாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது.&nbsp;</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T05:20:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற 19 இந்தியர்கள் மடக்கிப் பிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/19-indians-arrested-to-smuggle-gold-into-india-1787805837"></link>
            <id>https://tamilwin.com/article/19-indians-arrested-to-smuggle-gold-into-india-1787805837</id>
            <summary type="text">இலங்கையிலிருந்து நூதனமான முறையில் இந்தியாவுக்குத் தங்கம் கடத்த முயன்ற
இந்திய நாட்டைச் சேர்ந்த 19 பேர் காங்கேசன்துறை ஊடாகப் பயணம் செய்யத் தயாரான
போது...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையிலிருந்து நூதனமான முறையில் இந்தியாவுக்குத் தங்கம் கடத்த முயன்ற
இந்திய நாட்டைச் சேர்ந்த 19 பேர் காங்கேசன்துறை ஊடாகப் பயணம் செய்யத் தயாரான
போது இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(26.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 சந்தேகநபர்கள்</h2><p>
</p><p>
காங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடாக இந்தியாவின் நாகப்பட்டினத்துக்குப்
புறப்படத் தயாராக இருந்த 19 பயணிகளையும் சுங்க அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில்
தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83715aec-e40e-4633-a8d0-28c37ddb8d9a/26-6a8fc86f634ff.webp' /></p><p>
விசாரணைகளின் அடிப்படையில், இவர்கள் தங்கத்தை நூதனமான முறையில் மறைத்து வைத்து
கடத்த முயன்றது தெரியவந்துள்ளது.</p><p> இதையடுத்து, தடுத்து வைக்கப்பட்டுள்ள 19
சந்தேகநபர்களையும் ஸ்கானிங் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல சுங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்ட அனைவரும் இந்திய நாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>

இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மேலதிக
விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T05:17:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யேர்மனியில் ஊஞ்சல் இராட்டினத்தில் சிக்கிய பார்வையாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/spectators-trapped-swing-ride-in-germany-hamburg-1787807638"></link>
            <id>https://canadamirror.com/article/spectators-trapped-swing-ride-in-germany-hamburg-1787807638</id>
            <summary type="text">&amp;nbsp; யேர்மனியில் ஊஞ்சல் இராட்டினத்தில் சிக்கியிருந்த திருவிழா பார்வையாளர்கள் மீட்கப்பட்டனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, 70 மீட்டர் (230 அடி) நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யேர்மனியில் ஊஞ்சல் இராட்டினத்தில் சிக்கியிருந்த திருவிழா பார்வையாளர்கள் மீட்கப்பட்டனர்.
</p><p>
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, 70 மீட்டர் (230 அடி) நீளமுள்ள அந்த சவாரி வாகனம் பழுதடைந்து நகர்வதை நிறுத்தியதால், 23 பயணிகள் பாதி வழியில் சிக்கிக்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62cbea48-8ccf-4cb6-843f-355919b18e08/26-6a8fc797cb7f9.webp' /></p><p>
மத்திய ஹாம்பர்க்கில் உள்ள ஊஞ்சல் இராட்டினத்தில் 25 மீட்டர் (82 அடி) உயரத்தில் சிக்கிக்கொண்டிருந்த சுமார் இருபதுக்கும் மேற்பட்ட திருவிழா பார்வையாளர்கள், 90 நிமிடப் போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டனர்.
</p><p>
ஹம்பர்கர் டோம் திருவிழா, நகரின் செயிண்ட்-பாலி பகுதியில் ஆண்டுக்கு மூன்று முறை நடத்தப்படுகிறது. இது ஜெர்மனியின் மிக நீண்ட காலமாக நடைபெறும் மற்றும் அதிக பார்வையாளர்களைக் கொண்ட கேளிக்கைச் சந்தைகளில் ஒன்றாகும். ஆண்டுதோறும் சுமார் 10 மில்லியன் விருந்தினர்களை இது ஈர்க்கிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T05:11:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெளிவிவகார அமைச்சருடன் தொலைபேசியில் உரையாடிய விஜித]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vijitha-had-a-telephone-nepalese-foreign-minister-1787807004"></link>
            <id>https://jvpnews.com/article/vijitha-had-a-telephone-nepalese-foreign-minister-1787807004</id>
            <summary type="text">நேபாள வெளிவிவகார அமைச்சர் சிசிர் கனாலுக்கும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திற்கும் இடையில் இன்று (27) தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாள வெளிவிவகார அமைச்சர் சிசிர் கனாலுக்கும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திற்கும் இடையில் இன்று (27) தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04f932fc-0772-4924-9725-426b860df4b5/26-6a8fc51e2d976.webp' /></p><p>இதனை இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார். </p><p>

நேபாளத்தின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், சரியான உதவிகளை வழங்குவதை உறுதிசெய்வதற்காக, தேவைப்படும் எந்தவொரு குறிப்பிட்ட உதவிகள் தொடர்பாகவும் எமது அனர்த்த முகாமைத்துவ நிலையங்கள் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

எமது நெருங்கிய நண்பரும் அண்டை நாடும் ஆகிய நேபாளத்துடனான தமது ஒருமைப்பாட்டிலும் அர்ப்பணிப்பிலும் இலங்கை உறுதியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-27T05:04:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகரித்துள்ள ஷோக்களின் எண்ணிக்கை.. 6 நாட்களில் மொத ராத்திரி திரைப்படம் செய்துள்ள வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/modha-rathiri-movie-6-days-box-office-1787804229"></link>
            <id>https://cineulagam.com/article/modha-rathiri-movie-6-days-box-office-1787804229</id>
            <summary type="text">கடந்த வாரம் திரைக்கு வந்த மொத ராத்திரி திரைப்படத்தின் 6 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மொத ராத்திரி

சிறை திரைப்படத்தின் மூலம் தமிழ் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த வாரம் திரைக்கு வந்த மொத ராத்திரி திரைப்படத்தின் 6 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><h2>
மொத ராத்திரி
</h2><p>
சிறை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை <a href="https://www.youtube.com/watch?v=YaakvqfCUsk" target="_blank">அனிஷ்மா </a>அனில்குமார். இதை தொடர்ந்து யூத் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7f34a36-e907-4589-b8d3-9abe62409e3e/26-6a8fba484f244.webp' /></p><p>இதன்பின், இவர் கதாநாயகியாக நடித்து வெளிவந்துள்ள தமிழ் திரைப்படம் மொத ராத்திரி. அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தில் பிரபல நடிகர் ரிஷிகாந்த் ஹீரோவாக நடித்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11aa9c65-51bc-4f6c-84bd-0789a0bddfa2/26-6a8fba49b520d.webp' /></p><p>
</p><h2>
பாக்ஸ் ஆபிஸ்</h2><p>

இந்நிலையில், மொத ராத்திரி திரைப்படத்திற்கான ஷோக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் 6 நாட்களில் உலகளவில் ரூ. 3 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47a34f65-9dfd-43cf-9d99-c1487ca5c1ad/26-6a8fba49067dc.webp' /></p>]]></content>
            <updated>2026-08-27T05:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு ; மீட்பு பணிகளுக்கு உதவ இலங்கை தயார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/catastrophic-flash-floods-in-nepal-sri-lanka-help-1787806822"></link>
            <id>https://jvpnews.com/article/catastrophic-flash-floods-in-nepal-sri-lanka-help-1787806822</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, அங்கு மேற்கொள்ளப்படும் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளுக்கு உதவி வழங்க இலங்கையானது த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, அங்கு மேற்கொள்ளப்படும் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளுக்கு உதவி வழங்க இலங்கையானது தயார் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது 'நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளப் பெருக்கினால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள செய்தி அறிந்து நான் மிகுந்த மனவேதனை அடைகிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/552e1637-b38e-45fa-beb6-e5e25ce5d67a/26-6a8fc4685dbc4.webp' /></p><p>
</p><p>
வெறும் 10 மாதங்களுக்கு முன்னர் ஒரு கொடிய சூறாவளியில் இருந்து மீண்டு வருமொரு நாடு என்ற வகையில், நேபாள மக்களின் துயரத்தை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம்.
</p><p>
நேபாள ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதில் இலங்கையும் என்னுடன் இணைந்துகொள்கிறது' என்றுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-27T04:57:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெயரை மாற்றிக் கொண்டு சிங்கப்பூரில் வாழும் அர்ஜுன மகேந்திரன் - அமைச்சர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/legal-hurdle-to-extraditing-arjuna-mahendran-1787806168"></link>
            <id>https://tamilwin.com/article/legal-hurdle-to-extraditing-arjuna-mahendran-1787806168</id>
            <summary type="text">சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவதில் சட்டம் சார்ந்த தடைகள் நிலவுவதாக பொதுப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவதில் சட்டம் சார்ந்த தடைகள் நிலவுவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். </p><p>
எனினும், அவரை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வருவதற்கான சாத்தியமான சட்ட வழிகள் குறித்து அதிகாரிகள் விரிவாக ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டார். </p><p>
சிங்கப்பூர் பிரஜையாக அந்நாட்டிலேயே வசித்து வரும் அர்ஜுன மகேந்திரன், தற்போது தனது பெயரை மாற்றிக்கொண்டுள்ளதாக அமைச்சர் விஜேபால தெரிவித்தார்.</p><h2>அரசு விடுத்த நாடு கடத்தல் கோரிக்கை</h2><p>
</p><p>அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு நாடு கடத்துவதில் சட்ட பூர்வமான தடைகள் உள்ளன. ஆனால், சாத்தியமான அனைத்து சட்டபூர்வ வழிகளையும் அதிகாரிகள் தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6903a2d5-9764-4055-9e4c-9bde99259417/26-6a8fc1d93c549.webp' /></p><p>அதேவேளையில், மத்திய வங்கி பிணைமுறி வழக்கு தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.</p><p> 
இலங்கை அரசு விடுத்த நாடு கடத்தல் கோரிக்கையானது, சிங்கப்பூரின் 'நாடுகடத்தல் சட்டத்தின்' கீழ் தேவையான சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி, அர்ஜுன மகேந்திரனை ஒப்படைக்கும் கோரிக்கையை சிங்கப்பூர் அரசு முன்னதாக நிராகரித்திருந்தது. </p><p>
மத்திய வங்கி பிணைமுறி பரிவர்த்தனைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட நடவடிக்கைகளுக்காக அர்ஜுன மகேந்திரன் இலங்கையில் தீவிரமாகத் தேடப்பட்டு வருகிறார். </p><p>
அரசுக்கு 11 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், 2019 ஜூன் மாதம் 'மூவரடங்கிய நிரந்தர மேல் நீதிமன்றத்தில்' இவருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.</p><h2>39பேரின் இருப்பிடங்கள்</h2><p> </p><p>
இதற்கிடையில், பல்வேறு குற்றவியல் வழக்குகளில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்களை இலங்கைக்குக் கொண்டுவந்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக சர்வதேச பொலிஸாரிடமிருந்து மொத்தம் 236 சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல்கள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜேபால தெரிவித்தார். </p><p>
இவற்றில் 110 சிவப்பு எச்சரிக்கைகள் தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற பின்னரே பெறப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b46739b-6c9f-4a3f-8710-8f16a8949e7e/26-6a8fca9351651.webp' /></p><p> </p><p>
தேடப்பட்டு வந்த சந்தேகநபர்களில் 66 பேர் ஏற்கனவே இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், மேலும் 97 பேரிடம் விசாரணைகள் தொடர்வதாகவும் அமைச்சர் கூறினார். </p><p>இதில் 39 பேரின் இருப்பிடங்களை அதிகாரிகள் துல்லியமாகக் கண்டறிந்துள்ளனர்.</p><p> 
அத்துடன், தேடப்பட்டு வரும் மேலும் ஒரு நபர் அடுத்த வாரத்தில் இலங்கைக்கு கொண்டு வரப்படுவார் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T04:50:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்திற்கு உதவ களமிறங்கிய ஐக்கிய நாடுகள் சபை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/united-nations-steps-in-to-help-nepal-1787806112"></link>
            <id>https://canadamirror.com/article/united-nations-steps-in-to-help-nepal-1787806112</id>
            <summary type="text">நேபாளம் மற்றும் சீனாவில் பல உயிர்களைப் காவு கொண்டதுடன், பலரைக் காணாமல் ஆக்கி, பரவலான பேரழிவையும் ஏற்படுத்தியுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு தொடர்பில் தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் மற்றும் சீனாவில் பல உயிர்களைப் காவு கொண்டதுடன், பலரைக் காணாமல் ஆக்கி, பரவலான பேரழிவையும் ஏற்படுத்தியுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு தொடர்பில் தாம் மிகுந்த வேதனையடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6f61fab-e960-4fda-b2ef-c179e808abd7/26-6a8fc1a1ea33c.webp' /></p><p>அதேநேரம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தமது இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையத் தாம் பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

பாதிக்கப்பட்ட அனைவருடனும் நான் துணை நிற்கிறேன் என்று கூறியுள்ள அவர், நேபாள அரசாங்கத்தின் தலைமையிலான மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிக்க ஐ.நா. குழுக்களும் அதன் பங்காளர்களும் தேவையான நிவாரண பொருட்களையும் பணியாளர்களையும் திரட்டி வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-27T04:49:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ள அனர்த்தத்தில் பலி எண்ணிக்கை 160 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nepal-flood-killed-160-1787805506"></link>
            <id>https://canadamirror.com/article/nepal-flood-killed-160-1787805506</id>
            <summary type="text">நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். </p><p>
இமயமலைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட பனி மற்றும் பாறைச் சரிவினால் லெண்டே ஆற்றின் குறுக்கே உருவாகிய தற்காலிக இயற்கை அணை உடைந்ததே இந்த பேரழிவுக்கு முக்கியக் காரணமாகும்.
</p><p>இதனால் போதே கோசி மற்றும் திரிசூலி ஆறுகளில் வெள்ளநீர் பேரிரைச்சலுடன் சீறிப் பாய்ந்து கரையோர கிராமங்களைச் சூறையாடியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54d69449-e621-4bf9-8878-7fa7bed8a700/26-6a8fbf4bbb467.webp' /></p><p>
இந்த எதிர்பாராத வெள்ளப்பெருக்கில் நேபாளத்தின் ரசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. </p><p>கைலாஷ் மானசரோவர் புனிதப் பயணம் மேற்கொண்ட 130-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உட்பட சுமார் 600 பயணிகள் காணாமல் போயுள்ளதாக அஞ்சப்படுகிறது.
</p><p> மேலும், சீனா-நேபாள எல்லையிலுள்ள கியிரோங் வர்த்தகக் கணவாய், முக்கிய சர்வதேசப் பாலங்கள் மற்றும் பல நீர்மின் திட்டங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு அப்பகுதியின் உள்கட்டமைப்பு முற்றிலும் முடங்கியுள்ளது.</p><p>
தொடர் மழை மற்றும் தடிமனான சேறு காரணமாகப் பாதிக்கப்பட்ட மலைப் பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் மற்றும் ஹெலிகாப்டர்கள் செல்வதில் கடும் சிரமம் நிலவி வருகிறது.
</p><p> அதேவேளையில், நேபாள ஆறுகளில் இருந்து பெருக்கெடுக்கும் மேலதிக நீர் காரணமாக இந்தியாவின் பிஹார் மற்றும் உத்தரப் பிரதேச எல்லைப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T04:41:24+00:00</updated>
        </entry>
    </feed>
