<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-02T07:27:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இடிந்து விழும் நிலையில் பாடசாலை கட்டிடம்: கண்டு கொள்ளாத அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/officials-ignore-school-building-verge-of-collapse-1785654239"></link>
            <id>https://tamilwin.com/article/officials-ignore-school-building-verge-of-collapse-1785654239</id>
            <summary type="text">திருகோணமலை வலயக்கல்வி பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம்
தி/ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயத்தில் இடிந்து விழும் நிலையில் வகுப்பறை
கட்டிடம் காணப்படுவதால் மாணவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை வலயக்கல்வி பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம்
தி/ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயத்தில் இடிந்து விழும் நிலையில் வகுப்பறை
கட்டிடம் காணப்படுவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும்
சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். </p><p>இக் கட்டிடத்தின் ஒரு பகுதி ஏற்கனவே
குடைசாய்ந்து காணப்படுகிறது.

இவ்வாறான நிலையில் இது குறித்து உரிய கல்வித்துறை சார் உயரதிகாரிகளுக்கு
அறிவித்தும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை பழைய மாணவர்கள் மற்றும்
பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
</p><p>இந்தக் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பெரும் அச்சத்துடனேயே
அருகாமையில் உள்ள மாணவர்களும் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியுள்ளதாகவும்
தெரிவிக்கின்றனர்.</p><p></p><h2>கோரிக்கை</h2><p>
</p><p>குறித்த பாடசாலையில் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்று வருவதுடன் தரம்
1 தொடக்கம் உயர்தரம் வரை இங்கு காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de8d4bf3-ab2e-4b82-add8-4793af2d4d33/26-6a6eedb76ba62.webp' /></p><p>
</p><p>
எனவே கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பாடசாலை மாணவர்களின் நலனை கொண்டு
குறித்த கட்டிடத்தை திருத்தியமைத்தாவது தருமாறும் உரிய தரப்புக்களுக்கு பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T07:12:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலையில் அதிரடியாக களமிறங்கிய அதிரடிப்படையினர்..! 15 நிமிடங்களில் கட்டுப்பாட்டில் கைதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/stf-security-at-mahara-prison-control-1785648919"></link>
            <id>https://tamilwin.com/article/stf-security-at-mahara-prison-control-1785648919</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினையடுத்து 15 நிமிடங்களுக்குள் கைதிகள் தங்களது அறைகளில் அடைக்கப்பட்டு, பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு, மஹர சிறைச்சாலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினையடுத்து 15 நிமிடங்களுக்குள் கைதிகள் தங்களது அறைகளில் அடைக்கப்பட்டு, பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு, மஹர சிறைச்சாலை அதன் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை தெரிவித்துள்ளது.</p><p>

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினையடுத்து இன்று காலை (2) சிறை வளாகத்திற்கு பொலிஸ்,சிறப்பு அதிரடிப்படை (STF) மற்றும் இராணுவ அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.</p><p>

இந்த நடவடிக்கையில் தங்களது 300 அதிகாரிகள் இணைந்துள்ளதாக பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;</p><h2>மஹர சிறைச்சாலைக்கு வெளியே பலத்த பாதுகாப்பு</h2><p>
</p><p>
இதற்கமைய, மஹர சிறைச்சாலைக்கு வெளியே பாதுகாப்பு வழங்குவதற்காக பொலிஸ், சிறப்பு அதிரடிப்படை (STF) மற்றும் இராணுவ அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரி தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ab85ff0-6ce2-4a43-9479-6dea0de5289b/26-6a6eeb1f7468e.webp' /></p><p>
</p><p>
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் தற்போது முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டுள்ளதாகவும், அனைத்து கைதிகளும் தற்போது அவரவர் சிறைக்கூடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இருப்பினும், சிறையில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், நேற்று மாலை சுமார் 4 மணி முதல் சிறைக்கு வெளியே பாதுகாப்பு வழங்குவதற்காக பொலிஸ், சிறப்பு அதிரடிப்படை (FTF) மற்றும் இராணுவ அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
நேற்று ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பல கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T07:11:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு மோதல் வேறு - மஹர சம்பவம் வேற...! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahara-riot-under-control-minister-says-1785651431"></link>
            <id>https://ibctamil.com/article/mahara-riot-under-control-minister-says-1785651431</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை தற்போது முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு சுமூக நிலை திரும்பியுள்ளதாக நீதி அமைச்சர், சட்டத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை தற்போது முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு சுமூக நிலை திரும்பியுள்ளதாக நீதி அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
</p><p>
இச்சம்பவம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தைக் கொண்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்ட போதிலும், மஹர சிறைச்சாலைச் சம்பவம் <a href="https://ibctamil.com/article/mahara-riot-under-control-curfew-continues-1785642709" target="_blank">சிறைச்சாலை நிர்வாகத்திற்கு </a>எதிராக முன்னெடுக்கப்பட்டது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>கடுமையான நடவடிக்கை</h2><p>

சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருள் நுழைவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள கடுமையான நடவடிக்கைகளால் ஏற்பட்ட அதிருப்தியும் கோபமுமே இந்த அமைதியற்ற சூழ்நிலைக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலும் தெரிவித்த அவர், “அனைத்துச் சிறைச்சாலைகளுக்குள்ளும் போதைப்பொருள் கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்த நாங்கள் சிறப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/282c6ca5-6633-43fd-9528-f8a585890718/26-6a6ee843c24f9.webp' /></p><p> 

அதன்பேரில் உள்ள வெறுப்பும் கோபமுமே இத்தகைய நிலைக்குக் காரணமாக அமைந்திருக்கலாம். </p><p>முதற்கட்ட அறிக்கை கிடைத்த பின்னரே இது குறித்துத் துல்லியமாகக் கூற முடியும்.</p><p></p><h2>மேலதிக விவரங்கள்&nbsp;</h2><p>

சிறைச்சாலையின் பாதுகாப்பிற்காகப் காவல்துறையினரும், காவல்துறை விசேட அதிரடிப் படையினரும் (STF) தொடர்ந்தும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
மோதலின் போது சேதமடைந்த சொத்துக்களைச் சீரமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p>
 <img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46506665-9ca7-4d0a-8b3c-23510579fe2f/26-6a6ee7e7e6ef2.webp' /></p><p>கைதிகள் அனைவரும் மீண்டும் அவர்களது சிறை அறைகளுக்குள் அனுப்பப்பட்டுள்ளதுடன், அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் நீர் வழங்கப்பட்டுச் சிறைச்சாலையின் அன்றாட நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்டு வருகின்றன” என தெரிவித்துள்ளார்.</p><p>

அத்தோடு இச்சம்பவம் குறித்து முதற்கட்ட அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், இக்கலவரத்தின் போது கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதால் அது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
</p><p>
முழுமையான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், இது தொடர்பான மேலதிக விவரங்கள் வெளிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p><a href="https://ibctamil.com/article/mahara-prison-unrest-damage-caused-in-prison-1785643509" target="_blank">https://ibctamil.com/article/mahara-prison-unrest-damage-caused-in-prison-1785643509</a></p>]]></content>
            <updated>2026-08-02T07:06:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வணிகக் கட்டடத்தை சட்டவிரோதமாக குடியிருப்பாக மாற்றியவர்களுக்கு அபராதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/vancouver-landlords-illegally-converted-offices-1785653934"></link>
            <id>https://canadamirror.com/article/vancouver-landlords-illegally-converted-offices-1785653934</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் வான்கூவர் பகுதியில் உள்ள வணிகக் கட்டடத்தின் ஒரு பகுதியை, உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக 11 ஒற்றை அறை குடியிருப்புகளாக மாற்றியமைத்ததற்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் வான்கூவர் பகுதியில் உள்ள வணிகக் கட்டடத்தின் ஒரு பகுதியை, உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக 11 ஒற்றை அறை குடியிருப்புகளாக மாற்றியமைத்ததற்காக இரு நபர்களுக்கும் அவர்களின் நிறுவனத்திற்கும் 57,100 டாலர் நிர்வாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>பிரிட்டிஷ் கொலம்பியாவின் குடியிருப்பு வாடகை அமைப்பின் இணக்கம் மற்றும் அமலாக்கப் பிரிவு (CEU), அக்தர் நவாஸ், சர்வர் கான் மற்றும் அவர்களின் '1460317 B.C. Ltd.' என்ற நிறுவனத்திற்கு ஜூலை 10 அன்று இந்த அபராதத்தை விதித்தது.
</p><p>குறித்த வணிகக் கட்டடத்தின் தரைதளத்தில் கடைகளும் மேல் தளங்களில் அலுவலகங்களும் செயல்பட்டு வந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/122f20dd-60b2-4be9-ba0e-cdac3804b5a1/26-6a6eeab0bdecb.webp' /></p><p> 
இந்நிலையில், 2025-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது, 2-வது மற்றும் 3-வது தளங்கள் அனுமதி பெறப்படாமல் சட்டவிரோதமாகத் தற்காலிகத் தடுப்புச் சுவர்கள் மூலம் குடியிருப்புகளாக மாற்றப்பட்டு ஆட்கள் தங்கியிருந்தது கண்டறியப்பட்டது.</p><p>
நகர நிர்வாகமும் தீயணைப்புப் படையும் ஆய்வு செய்து, கட்டடத்தில் கடும் தீ பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு அபாயங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டி "தங்குவதற்கு பாதுகாப்பற்றது" மற்றும் "தங்கத் தடை" உத்தரவுகளை 2025 ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியில் பலமுறை பிறப்பித்தன.
</p><p>இத்தனை தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட போதிலும், கட்டடத்தில் வாடகைக்கு ஆட்கள் தங்குவது தொடர்ந்தது.</p><p> இதன் காரணமாக, நகர நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க 2025 நவம்பர் 28 அன்று CEU தனது விசாரணையைத் தொடங்கியது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T07:06:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஸ்காட்செவன் ஆற்றில் தவறி விழுந்த பெண் மற்றும் நாய்: தொடரும் மீட்புப் பணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/saskatoon-residents-shocked-and-saddened-1785653432"></link>
            <id>https://canadamirror.com/article/saskatoon-residents-shocked-and-saddened-1785653432</id>
            <summary type="text">&amp;nbsp;தெற்கு சஸ்காட்செவன் ஆற்றில் பெண்ணொருவரும் நாயொன்றும் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தையடுத்து, அவர்களைத் தேடும் பணிகள் இரண்டாவது ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தெற்கு சஸ்காட்செவன் ஆற்றில் பெண்ணொருவரும் நாயொன்றும் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தையடுத்து, அவர்களைத் தேடும் பணிகள் இரண்டாவது நாளாகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><p>
சனிக்கிழமை காலையில், அவர்கள் கடைசியாகக் காணப்பட்ட இடத்தில் மீட்புப் படகு ஒன்று ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.
</p><p>வான்வழி மற்றும் மூழ்கி தேடும் சோதனைகளைத் தொடர்ந்து, தற்போது தேடுதல் பரப்பை விரிவுபடுத்துவதற்காக 'சோனார்' சாதனங்களை மீட்புக் குழுவினர் பயன்படுத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f77d0a16-d529-4eec-b01d-aa99573d96fd/26-6a6ee8ba110b3.webp' /></p><p> </p><p>இத்தேடுதல் நடவடிக்கை தற்போது உடல்களை மீட்கும் பணிக்கான கூர்மையுடன் தொடர்கிறது.
சாஸ்கடூன் நாய்கள் பூங்காவை ஒட்டியுள்ள ஆற்றின் கிழக்குப் பகுதியில் இவர்கள் ஆற்றில் மூழ்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் மற்றும் நாய் பூங்காவிற்கு வந்தவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
</p><p>கனடாவில் ஆண்டுதோறும் சராசரியாக 485 பேர் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர்.</p><p>
இதில் 27 சதவீதமான உயிரிழப்புகள் ஆறுகளிலேயே நிகழ்கின்றன.
மாகாணங்களைப் பொறுத்தவரை நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லேப்ரடார் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து சஸ்காட்செவன் மாகாணமும் அதிக உயிரிழப்புகளைப் பதிவு செய்துள்ளன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T07:05:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழாவிற்கு வந்த இளைஞருக்கு நேர்ந்த கதி..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-killed-in-madu-aavani-festival-1785654082"></link>
            <id>https://tamilwin.com/article/youth-killed-in-madu-aavani-festival-1785654082</id>
            <summary type="text">மன்னார் - மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடு திருத்தல பகுதியில் இடம்பெற்ற கோர
விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று(01.08.2026) இரவு 7.30 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் - மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடு திருத்தல பகுதியில் இடம்பெற்ற கோர
விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>

நேற்று(01.08.2026) இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
</p><p>
எதிர்வரும் 06ஆம் திகதி மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா கொடி ஏற்றத்துடன்
ஆரம்பமாகவுள்ள நிலையில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் தற்போது மடு திருத்தலத்தில்
வந்து தங்கியுள்ளனர்.</p><p></p><h2>

தலைகவசம் அணியாமல் சென்ற இளைஞர்</h2><p>


அந்த வகையில் மடு திருத்தலத்திற்கு வருகை தந்து தங்கியிருந்த
முத்தரிப்புத்துறையை சேர்ந்த 18 வயதுடைய அந்தோனி ஜெரோம் என்ற இளைஞனே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33ca0033-2b16-4a95-8e12-d3034da60f66/26-6a6eebdc0f837.webp' /></p><p>
</p><p>
மடு ரோட் சந்தி - பள்ளமடு சந்தி வீதியில் மடுத்திருத்தல பகுதியில் மோட்டார்
சைக்கிளை தலைக்கவசம் அணியாமல் செலுத்தி சென்று கொண்டிருந்த போது வீதி தடையை
கடக்க முற்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தூக்கி
எறிந்ததில் இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனைத் தொடர்ந்து, சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1685fd9-a733-486b-9b0a-66079fde7245/26-6a6eebdd0527a.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b9a3221-ea7b-4bec-8f51-2315c9f22c91/26-6a6eebddc9186.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T07:05:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியாவில் கடும் மழை ; வெள்ளப்பெருக்கு அபாயம் குறித்து எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heavy-rain-in-nuwara-eliya-warning-of-flood-risk-1785654259"></link>
            <id>https://jvpnews.com/article/heavy-rain-in-nuwara-eliya-warning-of-flood-risk-1785654259</id>
            <summary type="text">மத்திய மலைநாட்டில், குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் காற்றுடன் கூடிய கனமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய மலைநாட்டில், குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் காற்றுடன் கூடிய கனமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதுடன், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>வானிலை மையத்தின் தகவலின்படி, மவுஸ்சாகலை நீர்த்தேக்கப் பகுதியில் நேற்று (01) 117.5 மில்லிமீற்றர் மழையும், லக்சபான நீர்மின் உற்பத்தி நிலையப் பகுதியில் 183.3 மில்லிமீற்றர் மழையும் பதிவாகியுள்ளது.
</p><p>
தொடர்ச்சியான மழை மற்றும் பலத்த காற்று காரணமாக பல பகுதிகளில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சாமிமலை ஓயா, மரே ஓயா, சியத்தலகங்குல ஓயா மற்றும் காட்மோர் ஓயா உள்ளிட்ட சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab1e0548-2683-4c28-a891-b4e5e4725772/26-6a6eebf513f38.webp' /></p><p>மேலும், காட்மோர், மோகினி எல்ல, மரே மற்றும் லக்சபான நீர்வீழ்ச்சிகளில் அதிகளவு நீர் பாய்ந்து வருவதால், அந்தப் பகுதிகளுக்கு பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.</p><p>

இதற்கிடையில், விமலசுரேந்திர நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்பியுள்ளதால் அதன் வான்கதவுகள் வழியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. </p><p>இதன் காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
அதேவேளை, மவுஸ்சாகலை, காசல்ரீ, கென்யோன், புரோட்லேன்ட், லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல மற்றும் மேல் கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக நுவரெலியா மாவட்ட காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
</p><p>
நீர்மட்டம் மேலும் உயர்ந்தால் எந்த நேரத்திலும் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்படக்கூடும் என்பதால், ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
</p><p>
இந்நிலையில், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.</p><p>

சப்ரகமுவ மாகாணத்துடன் கண்டி, நுவரெலியா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edf587d3-4011-40c5-a321-50836696ae41/26-6a6eebf5b8752.webp' /></p><p>ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

மேலும், வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், அலைகளின் உயரம் 2.5 முதல் 3 மீற்றர் வரை உயரக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
எனவே, குறித்த கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T07:04:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 நாட்களில் தமிழ்நாட்டில் ஜனநாயகன் செய்துள்ள வசூல்.. வசூல் கிங் என நிரூபிக்கும் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/jananayagan-tamilnadu-10-days-box-office-1785650469"></link>
            <id>https://cineulagam.com/article/jananayagan-tamilnadu-10-days-box-office-1785650469</id>
            <summary type="text">ஜனநாயகன்&amp;nbsp;தமிழ் சினிமாவில் 33 ஆண்டுகளாக தனக்கென்று தனி இடத்தை உருவாக்கி பல வசூல் சாதனைகளை படைத்த வந்தவர் நடிகர் விஜய். 

இவர் அரசியலில் களமிறங்க...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜனநாயகன்&nbsp;</h2><p>தமிழ் சினிமாவில் 33 ஆண்டுகளாக தனக்கென்று தனி இடத்தை உருவாக்கி பல வசூல் சாதனைகளை படைத்த வந்தவர் நடிகர் விஜய்.</p><p> 

இவர் அரசியலில் களமிறங்கிய காரணத்தினால் ஜனநாயகன் தான் தனது கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் இப்படத்தை மிகப்பெரிய அளவில் கொண்டாட ரசிகர்கள் காத்திருந்தனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8875205a-bbd3-4cf0-9e5d-2c0b8aa962d9/26-6a6edd282b36f.webp' /></p><p>கடந்த ஜூலை 23-ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தும் கூட வசூலில் இவ்வளவு பெரிய வரவேற்பு என்பது அனைவருக்கும் வியப்பை கொடுத்துள்ளது. காரணம், லீக்காகி 1.2 கோடி பேர் பார்த்த திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய ஓப்பனிங்-ஆ என அனைவரும் கேட்டனர்.</p><p></p><h2>தமிழ்நாடு வசூல்</h2><p>
உலகளவில் இப்படம் 10 நாட்களில் ரூ. 275 கோடி வரை வசூலித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் எவ்வளவு <a href="https://www.youtube.com/watch?v=aIF0c2xWOWg" target="_blank">வசூல் </a>செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da045b99-16c6-4dd7-aca2-9e6aff70b769/26-6a6edd28d236e.webp' /></p><p>அதன்படி, 10 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே ஜனநாயகன் ரூ. 122 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 150 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T07:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொடூர தாக்குதல் வரிசையின் பின்னணி அடுத்து கோட்டாபய ராஜபக்ச! சிக்கவுள்ள பல சூத்திரதாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-against-easter-bomp-blast-1785638276"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-against-easter-bomp-blast-1785638276</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற கொடூர தாக்குதலின் பின்னணியில் ஆட்சியை தன்வசப்படுத்திய கோட்டாபய ராஜபக்ச அடுத்த சட்ட நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற கொடூர தாக்குதலின் பின்னணியில் ஆட்சியை தன்வசப்படுத்திய கோட்டாபய ராஜபக்ச அடுத்த சட்ட நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.</p><p>

கொழும்பில் சனிக்கிழமை (01) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,</p><p></p><h2>உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள்&nbsp;</h2><p>
</p><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகள் எவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b471b052-5321-4125-b43d-b5872692edeb/26-6a6ec0bab42e6.webp' /></p><p>
</p><p>
நேற்றிரவு ஆரம்பமான தொடர் கைது நடவடிக்கைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளில் சிக்க இன்னும் பலர் வரிசையில் இருப்பதாகவும், இவர்களுக்கான தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
</p><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் எதிராகத் பாரபட்சமின்றிச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

கடமை தவறியமை மற்றும் சதித்திட்டத்துக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அரச அதிகாரிகள், இராணுவ மற்றும் பொலிஸ் பிரதானிகள் மற்றும் அரசியல் அதிகாரத்தில் இருந்தவர்கள் அத்தனை பேரும் பொறுப்புக்கூற வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பொறுப்பிலிருந்து முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்ச, அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன, பிரதான புலனாய்வு அதிகாரி சுரேஷ் சலே, தேசபந்து தென்னகோன் மற்றும் அசாத் மௌலானா உள்ளிட்ட எந்தவொரு தரப்பும் தப்பிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.</p><h2>கடுமையான சட்ட நடவடிக்கை</h2><p> </p><p>

 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர் ஆட்சியைத் தன்வசப்படுத்திய கோட்டாபய ராஜபக்ச இந்த தாக்குதலின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான சுரேஷ் சலேவை அரச புலனாய்வுப் பிரிவின் தலைவராக்கி, அனைத்து புலனாய்வு அமைப்புகளையும் அவரது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f17ddcbb-c6dd-45f8-bfa0-58241f14dc51/26-6a6ec0bb628bc.webp' /></p><p> </p><p>

இதன் மூலம் ஆதாரங்களை அழிப்பதற்கும், ஷானி அபேசேகர போன்ற நேர்மையான புலனாய்வு அதிகாரிகளைப் பழிவாங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.</p><p>கடந்த வாரம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம், சதித்திட்டம் ஒன்றுக்கு துணையாகச் செயற்படும் எந்தவொரு அரச அதிகாரிக்கும் கிடைக்கும் அதிகபட்ச தண்டனை என்னவென்பது தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பை நாங்கள் கௌரவிக்கின்றோம்.&nbsp;&nbsp;</p><p> </p><p>

இந்த சம்பவங்களின் பின்னணியில் இருந்த இராணுவ மற்றும் அரசியல் சூத்திரதாரிகள் அனைவரும் எதிர்வரும் காலங்களில் சட்டத்தின் முன் தண்டனையைப் பெறுவது உறுதி. அதிலிருந்து எவராலும் தப்ப முடியாது என்றும், அநுர குமார தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார்.</p><p>புலனாய்வு தகவல் கிடைத்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம், கடமையைச் செய்யத் தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்டு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ ஆகியோருக்கு (31) திகதி&nbsp;கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T06:51:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் பாதிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/the-single-biggest-household-bill-draining-1785652961"></link>
            <id>https://canadamirror.com/article/the-single-biggest-household-bill-draining-1785652961</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவில் தொடர்ச்சியாக நிலவி வரும் வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் பணவீக்கம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவில் தொடர்ச்சியாக நிலவி வரும் வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் பணவீக்கம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பெரிதும் பாதித்து வருகிறது. </p><p>
இந்நிலையில், 'நாரடிவ் ரிசர்ச்' அமைப்பினால் நடத்தப்பட்ட புதிய தேசிய அளவிலான ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
</p><p>கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 76 சதவீதத்தினர், உணவு மற்றும் மளிகைப் பொருட்களின் அதிகப்படியான விலையேற்றமே தங்களது குடும்பப் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9489e7a5-b33b-4536-86e4-ff51ee4e5fd6/26-6a6ee6e3618d0.webp' /></p><p>
47 சதவீதத்தினர் எரிபொருள் விலையேற்றத்தை இரண்டாவது பெரிய நிதி நெருக்கடியாகக் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>
33 சதவீத மக்கள் வீடுகளுக்கான அடமானக் கடன் மற்றும் வாடகையைத் தங்களின் முக்கிய நிதிச் சுமையாகக் கருதுகின்றனர்.</p><p>
இது தவிர, மின்சாரக் கட்டணம், வீட்டு பராமரிப்புச் செலவுகள் மற்றும் வெப்பமூட்டும் செலவுகளும் கனடா மக்களுக்கு அதிகளவு நிதி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
</p><p>மளிகைப் பொருட்கள் மற்றும் எரிபொருள் போன்ற அன்றாடச் செலவுகளில் வாழ்க்கைச் செலவு உயர்வு ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிகவும் திடுக்கிட வைப்பதாக உள்ளது, என 'நாரடிவ் ரிசர்ச்' அமைப்பின் முதன்மை செயல்பாட்டு அதிகாரி மார்கரெட் சாப்மேன் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>விலையேற்றம் தொடர்வதால், கனடா மக்கள் தங்களுக்கு எதிர்காலத்தில் நிதி நிவாரணம் கிடைப்பது கடினம் என்றும், இந்த உயர் விலைகளே நிலையாகத் தொடருமோ என்றும் கவலையும் சோர்வும் அடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T06:44:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஞ்சியில் தோனி–ரிஷப் பண்ட் இணைந்து பயிற்சி ; வைரலாகும் புகைப்படம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dhoni-rishabh-training-together-ranchi-photo-viral-1785652989"></link>
            <id>https://jvpnews.com/article/dhoni-rishabh-training-together-ranchi-photo-viral-1785652989</id>
            <summary type="text">இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தயாரிப்புகளை இந்திய கிரிக்கெட் அணி தீவிரப்படுத்தி வரும் நிலையில், அணியின் நட்சத்திர விக்கெட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான தயாரிப்புகளை இந்திய கிரிக்கெட் அணி தீவிரப்படுத்தி வரும் நிலையில், அணியின் நட்சத்திர விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரரான ரிஷப் பண்ட், முன்னாள் இந்திய அணித்தலைவர் மகேந்திர சிங் தோனியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>ராஞ்சியில் உள்ள உடற்பயிற்சிக் கூடமொன்றில் தோனியுடன் இணைந்து ரிஷப் பண்ட் பயிற்சியில் ஈடுபட்டுள்ள புகைப்படத்தை, முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் நதீம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். </p><p>இந்தப் புகைப்படம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68600d83-7fae-4be8-9055-df4e983c6130/26-6a6ee6fe5fcd1.webp' /></p><p>சுப்மன் கில் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியில் ரிஷப் பண்ட் முக்கிய வீரராக இடம்பெற்றுள்ளதுடன், இலங்கைக்கு எதிரான தொடரில் அவரிடமிருந்து சிறப்பான ஆட்டம் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

அண்மையில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தலைவராக செயல்பட்ட ரிஷப் பண்ட், 312 ஓட்டங்களை மட்டுமே பெற்றதால் எதிர்பார்த்த அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினார்.
</p><p>
இதனிடையே, உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் நோக்கில் இந்திய அணி தனது எஞ்சியுள்ள 9 டெஸ்ட் போட்டிகளில் குறைந்தது 7 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.</p><p> இதனால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T06:43:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்து நிலையத்தில் நின்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி..! சோகத்தில் குடும்பத்தினர்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-killed-in-accident-in-vavuniya-1785652794"></link>
            <id>https://tamilwin.com/article/one-killed-in-accident-in-vavuniya-1785652794</id>
            <summary type="text">வவுனியா - ஓமந்தை - ஏ9 வீதியில் ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று(01.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா - ஓமந்தை - ஏ9 வீதியில் ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்த சம்பவம் நேற்று(01.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 


நேற்று(01) அதிகாலை ஓமந்தை, பனிக்கன் நீராவி பகுதியில் அமைந்துள்ள பேருந்து
தரிப்பிடத்தில் நின்றிருந்த நபர் ஒருவர் மீது, வாகனம் ஒன்று
மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p></p><p>
</p><h2>
ஒருவர் உயிரிழப்பு</h2><p>
இந்த விபத்தில், பனிக்கன் நீராவி கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சம்பவ
இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/437ea254-bb43-40eb-8189-5f6aae4b09b6/26-6a6ee67dc7e30.webp' /></p><p>
</p><p>
ஏ9 வீதியில் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வீதி விபத்துக்களும்
உயிரிழப்புகளும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும்
ஏற்படுத்தியுள்ளன.
</p><p>
இந்த நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T06:41:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சியா விதை நீர்: இரண்டு வாரங்களுக்கு குடிச்சா கடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/benefits-of-soaking-chia-seeds-in-water-1785650344"></link>
            <id>https://manithan.com/article/benefits-of-soaking-chia-seeds-in-water-1785650344</id>
            <summary type="text">சமீப காலமாக ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற விரும்புபவர்களிடையே சியா விதைகளை தண்ணீரில் அல்லது தேங்காய் நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமீப காலமாக ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற விரும்புபவர்களிடையே சியா விதைகளை தண்ணீரில் அல்லது தேங்காய் நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் பழக்கம் மிகவும் பிரபலமாகி வருகிறது.
</p><p>
சிறியதாகத் தோன்றும் இந்த விதைகள், உடலுக்குத் தேவையான பல முக்கிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன. நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதம், கால்சியம், மக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் பல்வேறு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த சியா விதைகள், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fad5e22e-a442-4a5d-9900-ee164c36b03f/26-6a6ee475a2d90.webp' /></p><p></p><p> இந்த எளிய பானத்தை தினசரி உணவுப் பழக்கத்தில் சேர்ப்பதன் மூலம் கிடைக்கும் முக்கிய நன்மைகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.</p><h2>ஆரோக்கிய நன்மைகள்&nbsp;</h2><p>
</p><p><b>
1. உடல் எடையைக் குறைக்க உதவுகிறது -&nbsp;</b>உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு சியா விதை தண்ணீர் ஒரு சிறந்த துணையாக இருக்கும். </p><p>சியா விதைகளில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், அவை தண்ணீரை உறிஞ்சி ஜெல்லி போன்ற அமைப்பாக மாறுகின்றன.</p><p> இதனால் வயிறு நீண்ட நேரம் நிறைந்திருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

இதன் காரணமாக அடிக்கடி பசி எடுப்பது குறையும்</p><p> தேவையற்ற சிற்றுண்டிகளைத் தவிர்க்க முடிவதால், தினசரி கலோரி உட்கொள்ளும் அளவும் குறையக்கூடும். இதனால் ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40afa092-438b-4e55-a551-42b8506b6065/26-6a6ee47655484.webp' /></p><p><b>

2. இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது -</b>சியா விதைகள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த தாவர மூலமாகக் கருதப்படுகின்றன. இந்த அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களை உடலால் தானாக உருவாக்க முடியாது.எனவே, உணவின் மூலமாகவே அவற்றைப் பெற வேண்டியுள்ளது.</p><p>
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவுகின்றன. நீண்டகால அழற்சி, இதய நோய் உள்ளிட்ட பல்வேறு நாள்பட்ட நோய்களுக்கு முக்கிய காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
</p><p>
மேலும், இவை டிரைகிளிசரைடு அளவைக் குறைக்கவும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கவும் உதவக்கூடும். </p><p>இதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தி, மாரடைப்பு மற்றும் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2f3c64e-e8f5-4ae9-9612-183b7a3c470b/26-6a6ee4770870b.webp' /></p><p>
</p><p><b>
3. உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது - </b>சியா விதைகளை சாதாரண தண்ணீரில் ஊறவைத்தும் பருகலாம். அதேபோல், தேங்காய் நீரில் ஊறவைத்து அருந்துவதும் சிறந்த தேர்வாகும்.

தேங்காய் நீரில் பொட்டாசியம், மக்னீசியம், சோடியம் போன்ற இயற்கை எலக்ட்ரோலைட்டுகள் அதிகளவில் உள்ளன.</p><p>இவை உடலின் திரவச் சமநிலையைப் பராமரிக்கவும், தசைகளின் இயல்பான செயல்பாட்டை ஆதரிக்கவும், உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கவும் உதவுகின்றன.
</p><p>
குறிப்பாக உடற்பயிற்சிக்குப் பிறகு அல்லது அதிக வெப்பமான காலநிலையில் உடலில் இழக்கும் நீர்ச்சத்தையும் தாதுக்களையும் மீண்டும் நிரப்ப இந்த கலவை பயனுள்ளதாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/227b8f54-ecf7-4a56-bdcb-8256ca9986e3/26-6a6ee477ae31f.webp' /></p><p></p><p><b>

4. இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது -</b> சியா விதைகளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, உணவு செரிமானமாகும் வேகத்தை மெதுவாக்குகிறது. </p><p>இதன் காரணமாக உணவுக்குப் பிறகு இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதை ஓரளவு கட்டுப்படுத்த உதவுகிறது.
</p><p>
இதனால் இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்கள் அல்லது நீரிழிவு நோயாளிகள், மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரின் ஆலோசனையுடன் சியா விதைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது இரத்தச் சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவக்கூடும்.</p><p><b>குறிப்பு - </b>இதனை தொடர்ச்சியாக பயன்படுத்தும் முன்னர் உரிய மருத்துவ ஆலோசனை பெற்றதன் பின்னர் பயன்படுத்துவதே நல்லது.</p><p><iframe width="325" height="578" src="https://www.youtube.com/embed/0HjOIFLUDuY" title="2 வாரம் தொடர்ந்து Chia Seeds குடிச்சா என்ன ஆகும்? 😱 | Chia Seeds Benefits in Tamil" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T06:34:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயகனை பந்தாடிய சின்ன பையன் ஸ்பைடர் மேன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/spiderman-dominating-jananayagan-in-box-office-1785637726"></link>
            <id>https://viduppu.com/article/spiderman-dominating-jananayagan-in-box-office-1785637726</id>
            <summary type="text">ஸ்பைடர் மேன் உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் இருக்கும் சூப்பர் ஹீரோ. அதற்கு உதாரணம் தான் இந்தியாவிலேயே முதல் நாள் ஸ்பைடர் மேன் ப்ராண்ட் நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பைடர் மேன் உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் இருக்கும் சூப்பர் ஹீரோ. அதற்கு உதாரணம் தான் இந்தியாவிலேயே முதல் நாள் ஸ்பைடர் மேன் ப்ராண்ட் நியு டே படம் ரூ. 75 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. </p><p>இந்நிலையில் என்ன ஸ்பைடர் மேன் ஊர் முழுவதும் மாஸ் என்றால் நம்ம ஊரில் தளபதி தானே டாப், அப்படியிருக்க ஸ்பைடர் மேன் வந்தாலும் ஜனநாயகன் தான் டாப் என அனைவரும் சொல்லி வந்த நிலையில், ஸ்பைடர் மேன் தமிழகத்திலேயே ஜனநாயகனை விட அதிக வசூல் வந்துகொண்டு இருக்க விஜய் ரசிகர்கள் தாண்டி ட்ரேட் எல்லோருக்கும் கடும் அதிர்ச்சி தான்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1d87766-92d1-450c-bcba-30c014d65e30/26-6a6eab6142761.webp' /></p><p>அதோடு ஜனநாயகன் திரையரங்கு எண்ணிக்கை அதிகம் என்பதால் ஸ்பைடர் மேன் படத்தை அதிகாலை காட்சிகள் தான் ஓபன் செய்துள்ளனர்.</p><p>அப்படியிருந்தும் அங்கெல்லாம் ஹவுஸ்புல் காட்சிகள் தான், இதை பார்க்கையில் பீஸ்ட் படத்தை எப்படி கே ஜி எப் 2 டப் கொடுத்ததோ அப்படி ஸ்பைடர் மேன் ஜனநாயகனுக்கு டப் கொடுப்பது தெரிகிறது.</p>]]></content>
            <updated>2026-08-02T06:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் சீனப் பிரஜை கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chinese-national-arrested-cigarettes-katunayake-1785652094"></link>
            <id>https://jvpnews.com/article/chinese-national-arrested-cigarettes-katunayake-1785652094</id>
            <summary type="text">சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டுத் தயாரிப்புச் சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டுத் தயாரிப்புச் சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று (1) கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p> 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 40 வயதுடைய சீனாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது. 

கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி 59 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் எனத் குறிப்பிடப்படுகின்றது. </p><p>

சந்தேகநபர் குறித்த சிகரெட்டுக்களை கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின் பசுமைப் பாதை ஊடாக நாட்டுக்குள் கடத்த முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/722da6e8-594b-44aa-b05a-438a95630d0b/26-6a6ee37f68340.webp' /></p><p>இவரது நடத்தை குறித்து சந்தேகமடைந்த சுங்க அதிகாரிகள் அவரைச் சோதனையிட்டபோது, இரண்டு பயணப் பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீனத் தயாரிப்பான 39,400 சிகரெட்டுகள் அடங்கிய 197 சிகரெட் பெட்டிகள் கண்டறியப்பட்டுள்ளன. </p><p>

சந்தேகநபர் சீனாவில் கொள்முதல் செய்த சிகரெட்டுக்களுடன் இந்தியாவின் சென்னையை அடைந்து, அங்கிருந்து இண்டிகோ விமான சேவைக்குச் சொந்தமான விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இவரைத் கைது செய்து, அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T06:28:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கில் சுகாதார துறையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப நேர்முகத்தேர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/interviews-for-300-people-vacancies-health-sector-1785651764"></link>
            <id>https://tamilwin.com/article/interviews-for-300-people-vacancies-health-sector-1785651764</id>
            <summary type="text">வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழுள்ள வைத்தியசாலைகள் மற்றும்
நிறுவனங்களில் வெற்றிடமாக காணப்படும் சுகாதாரப்பணி உதவியாளர் (தரம் III)
பதவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழுள்ள வைத்தியசாலைகள் மற்றும்
நிறுவனங்களில் வெற்றிடமாக காணப்படும் சுகாதாரப்பணி உதவியாளர் (தரம் III)
பதவிக்கான 852 வெற்றிடங்களுக்கான&nbsp;நேர்முகத்தேர்வுகள் இடம்பெறவுள்ளன.</p><p>முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின்
அனுமதிக்கமைவாக 300 வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத்தேர்வுகள் நாளை (03.08.2026) திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார
அமைச்சின் செயலாளர் ப.ஜெயராணி தெரிவித்துள்ளார்.</p><p>
கட்டமைக்கப்பட்ட இந்த நேர்முகத்தேர்வுகள் நாளை திங்கட்கிழமை
(03.08.2026) முதல் 21.08.2026 ஆம் திகதி வரை பண்ணையில் அமைந்துள்ள சுகாதார
கிராமத்தில் நடைபெறவுள்ளன.</p><p>&nbsp;</p><h2>ஆறு விசேட குழுக்கள் நியமனம்</h2><p> </p><p>இதற்கென ஆறு விசேட குழுக்கள்
நியமிக்கப்பட்டுள்ளதுடன், தினமும் மூன்று நேரப்பிரிவுகளாக இந்த மதிப்பீட்டு
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70da6b03-2df6-498a-8c24-47b69db64704/26-6a6ee35a98aa0.webp' />&nbsp;</p><p>
</p><p>
இதுவரை நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதங்கள் கிடைக்கப்பெறாத
விண்ணப்பதாரிகள் எதிர்வரும் 05.08.2026 இன் பின்னர் 021 222 0807 என்ற
தொலைபேசி இலக்கத்தினூடாகத் தொடர்புகொண்டு, தமது தேசிய அடையாள அட்டை
இலக்கத்தை சமர்ப்பித்து உரிய விவரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, இந்த 300 வெற்றிடங்களுக்காக சுமார் 3,548 விண்ணப்பதாரிகள்
அழைக்கப்பட்டுள்ள நிலையில், எவ்வித அழுத்தங்களுக்கும் இடமளிக்காமல் அதியுயர்
நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன் இந்த ஆட்சேர்ப்பு
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர்
நா.வேதநாயகன் நேர்முகத்தேர்வு குழுவினருக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.</p><h2>கடுமையான சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>
இதில் எழுத்துப்பரீட்சை எதுவும் இடம்பெறவில்லை என்பதால், நேர்முகத்தேர்வில்
வழங்கப்படும் ஒவ்வொரு புள்ளிக்கும் நியாயமான மற்றும் ஆதாரபூர்வமான காரணங்கள்
இருக்க வேண்டும் எனவும், நியமிக்கப்பட்டுள்ள ஆறு குழுக்களும் எந்தவிதப்
பாரபட்சமுமின்றி ஒரே மதிப்பீட்டு அளவு கோல்களையே பின்பற்ற வேண்டும் எனவும்
ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். </p><p>நேர்முகத் தேர்வின்போது அரசியல், நிர்வாக அல்லது
வெளிப்புறத் தலையீடுகளுக்குத் துளியளவும் இடமளிக்கக் கூடாது எனவும், முறைகேடு
அல்லது அதிகார துஷ்பிரயோகம் நிரூபிக்கப்பட்டால் பாரபட்சமின்றி கடுமையான சட்ட
நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T06:27:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை திவ்யா பிள்ளையின் கிளாமர் போட்டோஷூட்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-divya-pillai-latest-glamour-photoshoot-1785648191"></link>
            <id>https://cineulagam.com/article/actress-divya-pillai-latest-glamour-photoshoot-1785648191</id>
            <summary type="text">மலையாளத்தில் பிரபலமான நடிகையாக இருக்கும் திவ்யா பிள்ளை தமிழில் கத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதன்பின் Ace திரைப்படத்தில...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலையாளத்தில் பிரபலமான நடிகையாக இருக்கும் திவ்யா பிள்ளை தமிழில் கத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதன்பின் Ace திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். </p><p>தமிழில் இரண்டு திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். </p><p>இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை நடிகை திவ்யா பிள்ளை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளன. இதோ பாருங்க:</p>]]></content>
            <updated>2026-08-02T06:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் பொருளாதாரத்தை குறிவைத்து டிரம்ப் வெளியிட்ட புதிய பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-releases-new-post-targeting-iran-s-economy-1785651420"></link>
            <id>https://canadamirror.com/article/trump-releases-new-post-targeting-iran-s-economy-1785651420</id>
            <summary type="text">ஈரான் தற்போது கடுமையான பணவீக்கத்தை சந்தித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது &#039;டிரூத் சோஷியல்&#039; (Truth Social) சமூக வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் தற்போது கடுமையான பணவீக்கத்தை சந்தித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62803ad8-84d0-46ee-b0e0-9de419151b1f/26-6a6ee0de578cc.webp' /></p><p>தனது 'டிரூத் சோஷியல்' (Truth Social) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், ஈரானிய நாணயமான 'ரியால்' பலவீனமடைந்து வருவதைக் காட்டும் வரைபடத்தைப் பகிர்ந்துள்ளார்.
</p><p>
குறித்த பதிவில், "நான் ஈரானிய நாணயத்தை அழித்துக் கொண்டிருக்கிறேன்" என டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-02T06:17:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீதான தாக்குதல்கள் இடைநிறுத்தம் : ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/donald-trump-holds-off-on-new-strikes-against-iran-1785648369"></link>
            <id>https://ibctamil.com/article/donald-trump-holds-off-on-new-strikes-against-iran-1785648369</id>
            <summary type="text">ஈரானின் அணுசக்தி இலக்குகளைக் கட்டுப்படுத்தி, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்படிக்கை விரைவில் எட்டப்படும் வரை, ஈரான் மீதான புதிய தாக்குதலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் அணுசக்தி இலக்குகளைக் கட்டுப்படுத்தி, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்படிக்கை விரைவில் எட்டப்படும் வரை, ஈரான் மீதான புதிய தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>ஈரானின் எரிசக்தி உட்கட்டமைப்பைத் தாக்குவதற்கு வோஷிங்டனும் இஸ்ரேலும் தயாராகி வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்ட ஒரு நாள் கழித்து, சனிக்கிழமை இரவு தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் ட்ரம்ப் இந்த முடிவை அறிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.</p><p>இது குறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு காணப்படாத இராணுவ பயங்கரவாதம், வலிமை மற்றும் சக்தியின் அளவுகளில், ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கு எதிராகப் போரிட அமெரிக்கா ஆயத்த நிலையில் உள்ளது.</p><p></p><h2>ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவு</h2><p> </p><p>எனினும் நீரிணையை உடனடியாக, முழுமையாக மீண்டும் திறப்பதற்கும், ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் வழிவகுக்கும் உடன்படிக்கை ஒன்றை கொண்டுவர ஈரானும் பிற மத்திய கிழக்கு நாடுகளும் அவகாசம் கோரியுள்ளன.</p><p><iframe src="https://truthsocial.com/@realDonaldTrump/117023461141824050/embed" class="truthsocial-embed" style="max-width: 100%; border: 0" width="600" allowfullscreen="allowfullscreen"></iframe><script src="https://truthsocial.com/embed.js" async="async"></script></p><p>

இந்தக் கோரிக்கையின் அடிப்படையில், உலகின் எதிர்கால நலன் கருதியும், அதேபோன்று வளமான மற்றும் வெற்றிகரமான ஈரானின் இருப்புக்காகவும், விரைவாக உடன்படிக்கை ஒன்றை எட்ட முடியும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு, தாக்குதலை இரத்து செய்ய நான் சம்மதித்துள்ளேன்.</p><p> இந்த உறுதிப்பாட்டில் இஸ்ரேல் நாடும் என்னுடன் இணைகிறது” என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>ஈரான் வெளிவிவகார அமைச்சர்</h2><p>இதேவேளை ஈரானிய இலக்குகள் மீது புதிய தாக்குதல்களை நடத்துவது தொடர்பான ட்ரம்பின் அச்சுறுத்தல்களை அமெரிக்கப் படைகள் முன்னெடுத்தால், அதற்கு தீர்க்கமான முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28ef1c72-0551-462a-a52a-27683724e6eb/26-6a6ede27ea4f5.webp' /></p><p>

பல முக்கிய உட்கட்டமைப்புகள் மீது ஈரானினால் ஏவப்பட்ட ட்ரோன்களை அழித்துள்ளதாக குவைத் இராணுவம் அறிவித்த சில மணித்தியாலங்களிலேயே, துருக்கி, பாகிஸ்தான் மற்றும் சவுதி உயர் அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி நடத்திய தனித்தனி தொலைபேசி உரையாடல்களின் போது இக்கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. </p><p>

எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் ஈரான் தீர்க்கமாக பதிலளிக்கும் எனக் கூறிய அராக்சி, அமெரிக்காவின் பிராந்திய நிலைகுலைவு நடவடிக்கைகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பின்மை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளின் விளைவுகள் குறித்தும் விவாதித்ததாக அராக்சியின் டெலிகிராம் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T06:08:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருவில் சுற்றுலா விமானம் விபத்து ; 13 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tourist-plane-crash-in-peru-13-dead-1785650511"></link>
            <id>https://canadamirror.com/article/tourist-plane-crash-in-peru-13-dead-1785650511</id>
            <summary type="text">பெருவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற Nazca Lines தொல்பொருள் பகுதிக்கு மேல் பறந்து கொண்டிருந்த சிறிய ரக சுற்றுலா விமானம் ஒன்று விபத்துக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெருவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற Nazca Lines தொல்பொருள் பகுதிக்கு மேல் பறந்து கொண்டிருந்த சிறிய ரக சுற்றுலா விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9b4caf4-4c06-472a-8cb0-9289c1c7b269/26-6a6edd50cb76c.webp' /></p><p>இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
மேலும் குறித்த வானூர்தியில் 11 பயணிகளும் 2 விமானிகளும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-02T06:02:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாய்ந்தமருதில் பிரஜாசக்தி திட்டம்: நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் களஆய்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/praja-shakti-project-in-sainthamaruthu-1785648560"></link>
            <id>https://tamilwin.com/article/praja-shakti-project-in-sainthamaruthu-1785648560</id>
            <summary type="text">2026 பிரஜாசக்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் &quot;தனக்கான ஓர் இடம்; அழகான
வாழ்க்கை&quot; எனும் கருப்பொருளில், சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட
17...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 பிரஜாசக்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் "தனக்கான ஓர் இடம்; அழகான
வாழ்க்கை" எனும் கருப்பொருளில், சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட
17 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் தலா 10 இலட்சம் ரூபா மதிப்பீட்டில் 17
பயனாளிகளுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று
வருகின்றன.
</p><p>
இவ்வீட்டு நிர்மாணப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா நேற்றுமுன் தினம் (31.07.2026) நேரடியாகச் சென்று களஆய்வு செய்ததுடன், உரிய பயனாளிகளுடன்
கலந்துரையாடல்களையும் மேற்கொண்டார்.</p><p></p><h2>அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்</h2><p>
</p><p>
பிரஜாசக்தி குழுக்களின் தவிசாளர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த
விஜயத்தின் போது, வீடுகளின் கட்டுமான நிலவரங்களைப் பார்வையிட்ட நாடாளுமன்ற
உறுப்பினர், நிர்மாணப் பணிகளை எவ்வித தாமதமுமின்றி விரைவாகப் பூர்த்தி
செய்வதற்கு தேவையான பொறிமுறைகளையும் நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.</p><p>

இப்பயணத்தின் போது, சாய்ந்தமருது பிரதேசத்தின் 17 கிராம உத்தியோகத்தர்
பிரிவுகளையும் சேர்ந்த பிரஜாசக்தி குழுக்களின் தவிசாளர்கள் மற்றும் சமூக
வலுவூட்டல் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் நாடாளுமன்ற உறுப்பினருடன் கலந்து கொண்டமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T05:59:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சீனப் பிரஜை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chinese-man-arrested-with-fags-at-bia-1785646575"></link>
            <id>https://ibctamil.com/article/chinese-man-arrested-with-fags-at-bia-1785646575</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீன பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீனாவைச் சேர்ந்த 40 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீன பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சீனாவைச் சேர்ந்த 40 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு <a href="https://ibctamil.com/article/mahara-prison-unrest-damage-caused-in-prison-1785643509" target="_blank">கைது செய்யப்பட்டுள்ளார்.</a>
</p><p>
குறித்த கைது நடவடிக்கை நேற்று (01-02-2026) இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p></p><h2>சட்டவிரோதமான முறை</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டுத் தயாரிப்புச் <a href="https://ibctamil.com/article/mahara-riot-under-control-curfew-continues-1785642709" target="_blank">சிகரெட்டுக்களுடன் அவர் கைது</a> செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e797a537-ec4a-4fdc-bd68-4a1a810a3994/26-6a6ed92c2d457.webp' /></p><p>கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி 59 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் எனத் குறிப்பிடப்படுகின்றது. </p><p>

சந்தேகநபர் குறித்த சிகரெட்டுக்களை கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின் பசுமைப் பாதை ஊடாக நாட்டுக்குள் கடத்த முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><p></p><h2>சுங்க அதிகாரிகள்&nbsp;</h2><p>இவரது நடத்தை குறித்து சந்தேகமடைந்த சுங்க அதிகாரிகள் அவரைச் சோதனையிட்டபோது, இரண்டு பயணப் பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீனத் தயாரிப்பான 39,400 சிகரெட்டுகள் அடங்கிய 197 சிகரெட் பெட்டிகள் கண்டறியப்பட்டுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/425c7afb-2213-4746-99d6-cbaf150ba236/26-6a6ed92a8ec5b.webp' /></p><p>சந்தேகநபர் சீனாவில் கொள்முதல் செய்த சிகரெட்டுக்களுடன் இந்தியாவின் சென்னையை அடைந்து, அங்கிருந்து இண்டிகோ விமான சேவைக்குச் சொந்தமான விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இவரைத் கைது செய்து, அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T05:59:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA['இந்த முறை எத்தனை உயிர்கள்': மஹர சிறைக்கலவரம் குறித்து நாமல் ராஜபக்ச கேள்வி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-says-mahara-unrest-not-isolated-event-1785646566"></link>
            <id>https://ibctamil.com/article/namal-says-mahara-unrest-not-isolated-event-1785646566</id>
            <summary type="text">சில வாரங்களுக்குள் இரண்டாவது பெரிய சிறைக் கலவரம் இடம்பெற்றுள்ள நிலையில், சிறை நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சில வாரங்களுக்குள் இரண்டாவது பெரிய சிறைக் கலவரம் இடம்பெற்றுள்ள நிலையில், சிறை நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அறிக்கை வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p>அவர் வெளியிட்ட அறிக்கையில், "இன்னொரு சிறைக் கலவரமா? இம்முறை எத்தனை உயிர்கள்?" எனக் கேள்வி எழுப்பிய அவர், தொடர்ச்சியாக இடம்பெறும் கலவரங்கள் சிறை அமைப்பில் ஆழமான கட்டமைப்புச் சிக்கல்கள் இருப்பதை வெளிப்படுத்கின்றது.&nbsp;</p><p>மோசமான நிர்வாகம், அலட்சியம் மற்றும் கடும் அழுத்தத்தில் இயங்கும் சிறைச்சாலை அமைப்பே இந்த நிலைக்கு காரணம்.</p><p></p><h2>நாமல் ராஜபக்ச அறிக்கை&nbsp;</h2><p> </p><p>அண்மையில் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல மாறாக, நிறுவன ரீதியான தோல்வியின் வெளிப்பாடாகும்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Another prison unrest. how many lives this time?<br><br>This is the second major prison disturbance in a matter of weeks. It is no longer an isolated incident. It is the result of poor management, neglegence, and a prison system that is under immense strain.<br><br>This is no longer about…</p>&mdash; Namal Rajapaksa (@RajapaksaNamal) <a href="https://x.com/RajapaksaNamal/status/2083608646362296478?ref_src=twsrc%5Etfw">August 1, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>&nbsp;சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு இதுவரை நிரந்தர ஆணையாளர் நாயகம் நியமிக்கப்படாதது ஏன்?</p><p> "இந்த முக்கியமான பதவி ஏன் இன்னும் முறையாக நிரப்பப்படவில்லை?" என்று வினவிய அவர், வலுவான தலைமைத்துவம் அவசியம் என வலியுறுள்ளார்.&nbsp;</p><p>கூடுதல் பாதுகாப்புப் படையினரை நியமிப்பது தற்காலிகமாக பதற்றத்தை கட்டுப்படுத்த உதவலாம் என்றாலும், அதனால் அடிப்படைப் பிரச்சினைகள் தீராது என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல், போதிய வசதியின்மை, தரமற்ற சுகாதார சேவைகள் மற்றும் மறுவாழ்வுத் திட்டங்களின் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.&nbsp;</p><p>நீண்டகால சீர்திருத்தங்களே நிலையான தீர்வாகும் என்றும், சிறைவாசம் ஒருவரின் சுதந்திரத்தை மட்டுமே கட்டுப்படுத்த வேண்டும் அவர்களின் கண்ணியத்தை அல்ல என்றும் அவர் தெரிவித்தார். </p><p>மேலும், தற்காலிக நடவடிக்கைகளைத் தாண்டி, சிறை அமைப்பில் நிலவும் நிறுவன ரீதியான குறைபாடுகளைச் சரிசெய்ய அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அறிக்கையில் கூறி உள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T05:55:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசமான வானிலையினால் தலவாக்கலையில் மரம் முறிவு - போக்குவரத்து பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tree-breaks-in-thalawakkala-traffic-affected-1785650118"></link>
            <id>https://tamilwin.com/article/tree-breaks-in-thalawakkala-traffic-affected-1785650118</id>
            <summary type="text">மலையக பகுதிகளில் தொடர் மழை, பலத்த காற்று மற்றும் கடுமையான பனிமூட்டம்
காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மண்சரிவு அபாயமும்
ஏற்பட்டுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலையக பகுதிகளில் தொடர் மழை, பலத்த காற்று மற்றும் கடுமையான பனிமூட்டம்
காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மண்சரிவு அபாயமும்
ஏற்பட்டுள்ளது.</p><p>இன்று (02) காலை முதல் கடும் மழை மற்றும் காற்று காரணமாக நுவரெலியா -
ஹட்டன் பிரதான வீதியின் தலவாக்கலை சென் கிளயர் நீர்வீழ்ச்சி பகுதியில் மரம்
ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளமையினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன் காரணமாக குறித்த வீதியுடனான போக்குவரத்து ஒருவழிப் பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>மண்சரிவு அபாயம்</h2><p>

இந்நிலையில் பிரதேசவாசிகளுடன் இணைந்து முறிந்து வீழ்ந்துள்ள மரத்தினை
அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a38ed075-6f72-4b7b-bf65-58ac406691bd/26-6a6edbcc7c7b0.webp' /></p><p>மேலும் சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் முதல் நுவரெலியா மற்றும் ஹட்டன் -
கொழும்பு வரையிலான பிரதான வீதிகளில் மண் சரிவு அபாயம் காணப்படுவதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அத்துடன் மலைப்பிரதேசங்கள் மற்றும் பிரதான வீதிகளில்
பயணம் செய்யும் போது சாரதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும்
பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T05:55:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-climbs-down-iran-strikes-1785650019"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-climbs-down-iran-strikes-1785650019</id>
            <summary type="text">சனிக்கிழமை இரவு ஈரான் மீது உக்கிரமானத் தாக்குதல் முன்னெடுக்க இருப்பதாக அமெரிக்கா கூறி வந்த நிலையில், திடீரென்று அந்த முடிவை ஜனாதிபதி ட்ரம்ப் மாற்றியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>சனிக்கிழமை இரவு ஈரான் மீது உக்கிரமானத் தாக்குதல் முன்னெடுக்க இருப்பதாக அமெரிக்கா கூறி வந்த நிலையில், திடீரென்று அந்த முடிவை ஜனாதிபதி ட்ரம்ப் மாற்றியுள்ளார்.</p><h2>ட்ரம்பின் முடிவில் மாற்றம்</h2><p>
</p><p>ஜனாதிபதி ட்ரம்பின் இந்த முடிவுக்குப் பின்னால் சவுதி அரேபியாவின் தலையீடும் அண்டை நாடுகள் மீது ஈரான் விடுத்த மிரட்டலும் காரணமாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94bb4c17-e690-430c-85f9-733606f254c6/26-6a6ee7e5b0983.webp' /></p><p> </p><p>சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ட்ரம்ப்பின் தாக்குதல் திட்டங்கள் குறித்து தமது கருத்தைத் தெரிவிப்பதற்காக சனிக்கிழமையன்று அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகத் தகவல் வெளியானது. </p><p>மேலும், அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் தங்கள் அண்டை நாடுகளுக்கு எதிராகத் தீர்க்கமான முறையில் பதிலடி கொடுப்போம் என்று ஈரான் மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்தே ட்ரம்பின் முடிவில் மாற்றம் ஏற்பட்டது என்றும் கூறுகின்றனர். </p><p>சனிக்கிழமையன்று ஈரான் ட்ரோன்களால் தாக்குதலுக்கு உள்ளானதாக குவைத் தெரிவித்தது; அதேவேளையில், ஹார்முஸ் நீரிணையில் ஓமன் அருகே இரண்டு கப்பல்கள் தாக்கப்பட்டன.</p><p></p><p> </p><p>Axios செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், பதற்றத்தைத் தணிக்குமாறும், தாக்குதல்களைத் தவிர்க்குமாறும் சவுதி பட்டத்து இளவரசர் ட்ரம்பை வலியுறுத்தியிருந்தார் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>Associated Press செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், அமெரிக்கா ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பைக் குறிவைத்தாலோ அல்லது பிற முக்கிய உள்கட்டமைப்புகள் மீது பெரும் தாக்குதல்களை நடத்தினாலோ, </p><p>அதற்குப் பதிலடியாக ஈரான் சவுதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகள் மீது இதேபோன்ற தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று சவுதி பட்டத்து இளவரசர் சல்மான் கவலை தெரிவித்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/949b1b7e-4fa8-4717-af21-58f7bd65cda9/26-6a6ee7e34f8ec.webp' /></p><p> </p><p>அத்துடன், சனிக்கிழமை நடைபெற்ற தொலைபேசி உரையாடலின்போது, ​​ஈரானுக்கு எதிராக என்ன புதிய சாத்தியமான நடவடிக்கையை எடுப்பது குறித்து ட்ரம்ப் பரிசீலித்து வருகிறார் என்பது பற்றியும் பட்டத்து இளவரசர் தெளிவுபடுத்தக் கோரியுள்ளார். </p><p>ஈராக்கில் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் பயன்படுத்திய தளவாட மற்றும் ஆயுதக் கிடங்குகள் மீதான தாக்குதலில், அமெரிக்காவுடன் இணைந்து சவுதி அரேபியாவும் இந்த வாரத் தொடக்கத்தில் பங்கேற்றது; இருப்பினும், அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்றே சவுதி வலியுறுத்தி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1a39d9c-907a-4c62-b41d-744d0aeff276/26-6a6ee7e459dc5.webp' /></p><p> </p><p>முன்னதாக CBS செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த தகவலில், ஈரானின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் மின் நிலையங்கள் உள்ளிட்டவற்றை இலக்காகக் கொண்டு, வார இறுதி முழுவதும் அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டுத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டு வந்ததாக குறிப்பிட்டுள்ளது.</p><h2>கத்தார் மற்றும் இஸ்ரேலின்</h2><p> </p><p>இந்த நிலையிலேயே, அமெரிக்காவின் எவ்வித சாகச நடவடிக்கைகளுக்கும் எதிராக ஈரான் எச்சரிக்கை விடுத்ததுடன், அதற்குத் தீர்க்கமான பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறியது.
</p><p>இதனிடையே,&nbsp;பல முக்கிய தளங்கள் மீது ஈரான் ஏவிய ட்ரோன்களை அழித்ததாக குவைத் இராணுவம் அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, சனிக்கிழமையன்று துருக்கி, பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியாவின் மூத்த அதிகாரிகளுடன் ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனித்தனி தொலைபேசி உரையாடல்களில் தங்களின் நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார். </p><p>அத்துடன், அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தும் எந்தவொரு தாக்குதலுக்கும் அல்லது அத்தகைய நடவடிக்கைகளில் பிராந்திய நாடுகள் பங்கேற்பதற்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானின் அராக்சி தனது பிராந்திய சகாக்களிடம் தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6e130c4-fa95-40f2-b979-f1c475b4f978/26-6a6ee7e50b722.webp' /></p><p> </p><p>இதனிடையே, ஈரானின் Nournews செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த தகவலில், ஈரானிய எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான அமெரிக்கத் தாக்குதல்கள், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள எண்ணெய் வயல்கள் மீதும், </p><p>கத்தார் மற்றும் இஸ்ரேலின் எரிவாயு வயல்கள் மீதும் ஈரான் தாக்குதல்களைத் தொடுக்கத் தூண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வுகளே ஈரானுக்கு எதிரான உக்கிரத் தாக்குதல் முடிவில் இருந்து ட்ரம்பை பின்வாங்க வைத்ததாகத் தெரிகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T05:51:44+00:00</updated>
        </entry>
    </feed>
