<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-01T12:49:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் நடிகை ரைசா வில்சன்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/raiza-wilson-recent-photos-post-viral-1788264466"></link>
            <id>https://viduppu.com/article/raiza-wilson-recent-photos-post-viral-1788264466</id>
            <summary type="text">ரைசா வில்சன்கன்னட சினிமாவில் மாடலிங் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கியவர் தான் ரைசா வில்சன். அந்த துறையில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதே தமிழ் பக்கம் வந...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரைசா வில்சன்</h2><p>கன்னட சினிமாவில் மாடலிங் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கியவர் தான் ரைசா வில்சன். அந்த துறையில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதே தமிழ் பக்கம் வந்தவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் கவனம் பெற்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c866b6bf-3765-4204-8cb7-a88d6c708708/26-6a96c01b22e3f.webp' /></p><p>
</p><p>
அந்நிகழ்ச்சி முடிந்த கையோடு ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ஒரு காதல் திரைப்படம் நடித்தார். அப்படம் வெற்றி என்றாலும் அதன்பின் ரைசா நடித்த படங்கள் அவ்வளவாக வெற்றிப்பெறவில்லை.
</p><p>
ரைசா வில்சன், தற்போது உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-01T12:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டாவது இன்னிங்ஸிலும் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி: அரையிறுதியில் அபார வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/east-zone-win-by-4-wickets-in-duleep-semi-final-1788266066"></link>
            <id>https://news.lankasri.com/article/east-zone-win-by-4-wickets-in-duleep-semi-final-1788266066</id>
            <summary type="text">East Zone win by 4 wickets in duleep trophy semi final: துலீப் டிராபி தொடரின் முதல் அரையிறுதியில் கிழக்கு மண்டல அணி வெற்றி பெற்றது.

பெங்களுரூவில் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>East Zone win by 4 wickets in duleep trophy semi final: துலீப் டிராபி தொடரின் முதல் அரையிறுதியில் கிழக்கு மண்டல அணி வெற்றி பெற்றது.</p><p>

பெங்களுரூவில் நடந்த துலீப் டிராபி தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில், கிழக்கு மண்டல அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மத்திய மண்டல அணியை வீழ்த்தியது.&nbsp;</p><h2>முதல் அரையிறுதிப் போட்டி</h2><p>
கிழக்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டலம் அணிகளுக்கு இடையிலான துலீப் டிராபி தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி பெங்களூருவில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c78f250e-31c3-4bb7-9f72-4b58399e205a/26-6a96c84f74f6f.webp' />&nbsp;</p><p></p><p>
159 ஓட்டங்கள் வெற்றி இலக்கினை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய கிழக்கு மண்டல அணியில் வைபவ் சூர்யவன்ஷி வழக்கம் போல் அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தார்.</p><p> 


அவர் 43பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 40 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அபிமன்யூ ஈஸ்வரன் 24 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.</p><p> 

பின்னர் விராட் சிங் 12 ஓட்டங்களிலும், குமார் குஷாக்ரா 22 ஓட்டங்களிலும் வெளியேற அனுகுல் ராய் டக்அவுட் ஆனார்.</p><p> 

எனினும், இஷான் கிஷன் ஆட்டமிழக்காமல் 39 (41) ஓட்டங்கள் எடுக்க, கிழக்கு மண்டல அணி 162 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b7a445e-9f50-4e5e-ba93-cd9a76b0749b/26-6a96c84ebbed9.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T12:40:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்கள் பாதுகாப்பு: ஆண்களுக்கும் சிறுவயதிலிருந்தே விழிப்புணர்வு தேவை - நடிகை ரேவதி ஓபக் டாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/actress-revathi-open-talk-about-women-safety-1788263295"></link>
            <id>https://manithan.com/article/actress-revathi-open-talk-about-women-safety-1788263295</id>
            <summary type="text">பெண்களின் முன்னேற்றம், விழிப்புணர்வு குறித்து தொடர்ந்து பேசுவதைவிட, முதலில் ஆண்களுக்கும், ஆண் குழந்தைகளுக்கும் சிறு வயதிலிருந்தே பெண்கள் பாதுகாப்பு கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண்களின் முன்னேற்றம், விழிப்புணர்வு குறித்து தொடர்ந்து பேசுவதைவிட, முதலில் ஆண்களுக்கும், ஆண் குழந்தைகளுக்கும் சிறு வயதிலிருந்தே பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நடிகை ரேவதி தெரிவித்த கருத்து தற்போது இணையத்தில் கவகம் ஈர்த்து வருகின்றது.&nbsp;</p><p>
‘பாரத் சோகா கக்காய்’ அறக்கட்டளை சார்பில், ‘பெண்களின் நூற்றாண்டு என்னிடம் இருந்து தொடங்குகிறது விழிப்புணர்வில் இருந்து செயல்பாட்டுக்கு’ என்ற தலைப்பில் 6-வது மகளிர் கருத்தரங்கம் சென்னை மியூசிக் அகாடமி அரங்கில் நேற்று நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/deaaf04c-b45e-4a63-a687-ccd51d8b7842/26-6a96c0e1da0e6.webp' /></p><p>

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகை ரேவதி, ‘வரசக்தி ஹவுசிங் பைனான்ஸ்’ நிறுவன இயக்குநர் கல்பனா சங்கர், ‘யெய்ன் உடான்’ நிறுவனர் வேதிகா அகர்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p><h2>நடிகை ரேவதியின் கருத்து&nbsp;</h2><p>

நிகழ்ச்சியில் பேசிய நடிகை ரேவதி கூறியதாவது:

“பெண்கள் கல்வி, பொருளாதாரம், விண்வெளி ஆய்வு என பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனைகளைப் படைத்து வருகின்றனர். ஆனால், பெண்களின் பாதுகாப்பு என்பது இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது. </p><p>சமூக வலைதளங்களில் தினமும் பல்வேறு சம்பவங்கள் குறித்துப் பகிர்ந்து கொண்டிருக்கிறோம்.

பெண்களின் முன்னேற்றம் மற்றும் விழிப்புணர்வு குறித்து தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதைவிட, முதலில் ஆண்களுக்கும், ஆண் குழந்தைகளுக்கும் சிறு வயதிலிருந்தே பெண்களை மதிப்பது, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93d326cc-c00b-4f27-ad39-8057456d1925/26-6a96c0e28c268.webp' /></p><p></p><p>
</p><p>
பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வரும் நிலையில், படித்த குடும்பங்களில்கூட குடும்ப வன்முறை தொடர்ந்து கொண்டிருப்பது கவலை அளிக்கிறது.

பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரானது அல்ல. பெண்களை ஆண்களைவிட உயர்வாகக் கருதுவதோ, ஆண்களை வெறுப்பதோ பெண்ணியம் கிடையாது.பாலின வேறுபாடின்றி அனைவருக்கும் பாதுகாப்பான சூழல் அவசியம்” என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><h2>மாற்றம் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e108b79e-3786-44d6-aa2b-167c09dd8ea7/26-6a96c0e347ccb.webp' /></p><p></p><p>அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரேவதி, “சினிமா உட்பட அனைத்து துறைகளிலும் பெண்களுக்கான வாய்ப்புகள் தற்போது அதிகரித்துள்ளன.</p><p> அந்த வாய்ப்புகளைப் பெண்கள் சிறப்பாகப் பயன்படுத்தி, தங்களது திறமையின் மூலம் முன்னேறி வருகின்றனர். ஆனால், சமூகத்தில் பெண்களின் நிலையை உண்மையாக மாற்ற வேண்டுமெனில், அதற்கான மாற்றம் வீடுகளிலிருந்தே தொடங்க வேண்டும். </p><p>வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என பெண்கள் இயங்கும் அனைத்து இடங்களிலும் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://manithan.com/article/which-river-flows-backwards-in-india-1788259700" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T12:38:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பேரிடரில் மாயமான புலம்பெயர் யாழ்ப்பாண குடும்பம்; தவிக்கும் உறவுகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/migrant-jaffna-family-missing-in-nepal-disaster-1788248831"></link>
            <id>https://jvpnews.com/article/migrant-jaffna-family-missing-in-nepal-disaster-1788248831</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாள-திபெத் எல்லைப் பகுதிகளைப் பேரழிவுக்குள்ளாக்கிய வெள்ளப்பெருக்கிற்குப் பின்னர், காணாமல் போன டஜன் கணக்கான அவுஸ்திரேலியர்களில் இலங்கை வம்சாவள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேபாள-திபெத் எல்லைப் பகுதிகளைப் பேரழிவுக்குள்ளாக்கிய வெள்ளப்பெருக்கிற்குப் பின்னர், காணாமல் போன டஜன் கணக்கான அவுஸ்திரேலியர்களில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தம்பதியரும், அவர்களது இரண்டு இளம் மகன்களும் அடங்குவதாக அவுஸ்திரேலிய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. </p><p>SouthAsians &amp; Diaspora

47 வயதான சந்திரசேகரன் முரளிதரன், அவரது மனைவி 42 வயதான ஷைலஜா முரளிதரன் மற்றும் அவர்களது மகன்களான அஸ்வின் (14), ஆருஷ் (11) ஆகியோர் ‘இமயமலை பனிப்பாறை சாகசப் பயணக் குழுவுடன் (Himalayan Glacier Adventures group) சென்றுகொண்டிருந்தபோது அவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/059ce3ae-bd99-4f58-9687-95a3d53691c5/26-6a968300dd4b8.webp' /></p><h2>ஆன்மீக சுற்றுலா சென்ற குடும்பம்...</h2><p>
</p><p>
அனர்த்தம் ஏற்பட்ட நாளன்று (புதன்கிழமை) காலை உணவு அருந்திய சிறிது நேரத்திலேயே அந்தக்குடும்பத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இக்குடும்பத்தினர் சிட்னியின் வடமேற்குப் பகுதியில் வசித்து வந்தனர்.</p><p></p><p>
</p><p>
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய ஊடகங்களின் தகவல்களின்படி, சந்திரசேகரன் பூர்வீகமாக யாழ்ப்பாணத்தின் கோப்பாயைச் சேர்ந்தவர்.

அவரும் அவரது மனைவியும் அவுஸ்திரேலியாவிற்கு இடம்பெயர்ந்த முதல் தலைமுறை இலங்கையர்கள் ஆவர். 

இவர்களது இரு மகன்களும் அவுஸ்திரேலியத் தமிழர் சமூகத்தில் பிறந்தவர்கள்.</p><p></p><p>

ஆகஸ்ட் 26 அன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, ​​அந்தக்குடும்பத்தினர் கைலாச மலைப் பகுதிக்குத் தீர்த்த யாத்திரை மேற்கொண்டிருந்தனர்.

பேரிடர் நிகழ்ந்த நாளன்று காலையில்தான் அக்குடும்பத்தினருடன் கடைசியாகத் தொடர்பு கொள்ள முடிந்ததாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். </p><p>

பாதிக்கப்பட்ட பகுதியின் பெரும் பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் சாலைகள், மின்சார விநியோகம் மற்றும் தகவல் தொடர்புகளை அழித்ததால், அந்த அழைப்பிற்குப் பிறகு அவர்களது குடும்பத்தினரால் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

முரளிதரன் குடும்பத்தினர், 15 அவுஸ்திரேலியர்கள் அடங்கிய ஒரு சுற்றுலாக் குழுவுடன் பயணம் செய்து கொண்டிருந்தனர்.</p><p></p><p> </p><p>
இந்தப் பேரழிவு ஏற்பட்டபோது, ​​அக்குழுவினர் நேபாள-சீன எல்லைக்கு அருகிலுள்ள ரசுவாகதிக்கு அருகே இருந்ததாக நம்பப்படுகிறது.

வெள்ளத்தைத் தொடர்ந்து 43 அவுஸ்திரேலியர்கள் இன்னும் காணாமல் போயுள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T12:36:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரணில் அமைத்த கம்பள பாதையில் வேகமாக நடந்து செல்லும் அனுர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/anura-walks-on-the-carpeted-path-laid-by-ranil-1788264495"></link>
            <id>https://ibctamil.com/article/anura-walks-on-the-carpeted-path-laid-by-ranil-1788264495</id>
            <summary type="text">ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,ரணில் விக்ரமசிங்க அமைத்த கம்பளப் பாதையில் நடந்து செல்கிறார் என்றும், அந்தப் பாதையில் மிக வேகமாக முன்னேறி வருகிறார் என்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,ரணில் விக்ரமசிங்க அமைத்த கம்பளப் பாதையில் நடந்து செல்கிறார் என்றும், அந்தப் பாதையில் மிக வேகமாக முன்னேறி வருகிறார் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனரத்ன தெரிவித்தார்.
</p><p>
தற்போதைய சில நடவடிக்கைகளுக்கு காம்பஸ் செயற்குழு உறுப்பினர் லால் விஜேநாயக்க கூட எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்று சேனரத்ன கூறினார்.</p><p>கூட்டு எதிர்க்கட்சி மாநாட்டில் உரையாற்றியபோது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
</p><p>
</p><h2>ஜே.வி.பி உறுப்பினர்களின் தற்போதைய வாழ்க்கை நிலை</h2><p>முன்பு, ஜேவிபி உறுப்பினர்கள் ரொட்டி, உப்பு, மிளகு சாப்பிட்டு அரசியல் செய்வதாகக் கூறிவந்தாலும், இன்று அவர்களின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e0fb5e1-b634-44ef-b238-cdcb4a675fb5/26-6a96c47d5c504.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக, ஒரு உள்ளாடை கூட வாங்க வழியில்லை என்றும், தங்கள் உள்ளாடைகளில் ஓட்டைகள் இருப்பதால் அதைத் தொங்கவிடக்கூட வெட்கப்படுவதாகவும் கூறும் தற்போதைய அமைச்சர்களின் நிலையை அவர் கேள்விக்குள்ளாக்கினார்.</p><p></p><h2>இங்கிலாந்தில் கல்விகற்கும் அமைச்சரின் மகள்</h2><p>

அத்தகைய அமைச்சர்களில் ஒருவரின் மகள் தற்போது இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து வருவதாகவும், அங்கு தனது நான்கு ஆண்டு கால முழு கட்டணத்தையும் ஒரே தவணையில் செலுத்திவிட்டதாகவும் ராஜித சேனாரத்ன வெளிப்படுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7721f9dc-19f3-40d5-862b-c28ce6e7d265/26-6a96c47e11006.webp' /></p><p>
</p><p>
மேலும், அவர் வசிக்கும் வீட்டின் மாத வாடகை £1,000, அதாவது சுமார் நான்கரை இலட்சம் ரூபாய் என்றும் அவர் கூறினார்.

இது குறித்துக் கேட்டால், அவர்கள், "நான் என் பணத்தில் என் பிள்ளைக்குக் கல்வி கற்பிக்கிறேன், உங்களுக்கு என்ன பிரச்சினை?" என்று பதிலளிப்பார்கள். </p><p>கடந்த காலத்தில் தாங்கள் மிகவும் ஏழைகளாக இருந்ததாகக் கூறியவர்கள் எப்படி இவ்வளவு செல்வம் சேர்த்தார்கள் என்பதுதான் பிரச்சினை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T12:28:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூசாரி வீட்டு குழாய் நீரில் அடித்த துர்நாற்றம்: தெரியவந்த திடுக் உண்மை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/woman-body-found-in-water-tanks-in-salem-house-1788265701"></link>
            <id>https://news.lankasri.com/article/woman-body-found-in-water-tanks-in-salem-house-1788265701</id>
            <summary type="text">Woman’s dismembered body found in overhead tank: தண்ணீர்த்தொட்டி ஒன்றில் பெண்ணொருவரின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>Woman’s dismembered body found in overhead tank: தண்ணீர்த்தொட்டி ஒன்றில் பெண்ணொருவரின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
</p><p>

தமிழ்நாட்டிலுள்ள சேலம் மாவட்டத்தில் வாழ்ந்துவரும் கோயில் பூசாரியான ரமேஷ், வெளியூர் சென்றுவிட்டு திங்கட்கிழமை வீடு திரும்பியுள்ளார்.
</p><p>
குழாய்த் தண்ணீரில் ஏதோ துர்நாற்றம் வீசுவதைக் கவனித்த ரமேஷ், வீட்டின் மொட்டை மாடியில் பொருத்தப்பட்டிருந்த தண்ணீர்த்தொட்டியை சோதனையிட்டுள்ளார்.</p><h3>

தெரியவந்த திடுக் உண்மை</h3><p>

அப்போது தண்ணீர்த்தொட்டிக்குள் ஒரு பிளாஸ்டிக் கவரில் மனித கைகால்கள் வைக்கப்பட்டுள்ளதைக் கண்டுள்ளார் அவர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ff7a5f2-3a0a-41d5-a515-db8bcdd67936/26-6a96c4e6ba514.webp' /></p><p>
அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக பொலிசாருக்கு தகவலளிக்க, பொலிசார் அந்த பிளாஸ்டிக் கவரை கைப்பற்றியதுடன், அருகிலுள்ள வீடுகளின் மாடிகளிலும் சோதனையிட்டுள்ளனர்.
</p><p>
அப்போது, மற்றொரு வீட்டின் மாடியிலும் ஒரு பிளாஸ்டிக் கவரில் உடல் பாகங்கள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
</p><p>
முதல் கட்ட ஆய்வில், அவை 30 முதல் 40 வயது வரையுள்ள ஒரு பெண்ணின் உடல் என்பது தெரியவந்துள்ளது.&nbsp;</p><p></p><p>
அத்துடன், அந்தப் பெண்ணின் உடலிலிருந்த நகைகள் மாயமாகியிருந்ததால், அவரை அவரது நகைகளுக்காக கொலை செய்திருக்கலாம் என்றும், கொலை செய்துவிட்டு, அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் அதிகம் இருந்ததால் அவரது உடலை பிளாஸ்டிக் பைகளில் போட்டு மாடிகளில் மறைத்துவைத்திருக்கலாம் என்றும் பொலிசார் கருதுகிறார்கள்.
</p><p>
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பில் மூன்று பேரை கைது செய்துள்ள பொலிசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T12:28:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் கந்தன் பெருந்திருவிழாவை முன்னிட்டு நீர்க் கண்காட்சி; பக்தர்கள் தவறவிட வேண்டாம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ground-water-exhibition-jaffna-nallur-festival-1788265497"></link>
            <id>https://jvpnews.com/article/ground-water-exhibition-jaffna-nallur-festival-1788265497</id>
            <summary type="text">வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம்&amp;nbsp; &amp;nbsp;நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழாவை முன்னிட்டு நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி எனும் தொனிப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம்&nbsp;<a href="https://jvpnews.com/article/water-exhibition-attracts-attention-nallur-jaffna-1755591735" target="_blank"> &nbsp;நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழாவை முன்னிட்டு நிலத்தடி நீர்</a> எங்கள் உயிர்நாடி எனும் தொனிப்பொருளில்&nbsp;நீர்க் கண்காட்சி இடம்பெறவுள்ளது.</p><p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பல ஆய்வுத் துறைகளின் கூட்டு முயற்சியாக வடமாகாண நீர்வளம் பேணுதற்கான பேராய்வுச் செயற்றிட்டமும் வடக்கின் இளம் நீர்வாண்மையாளர் வட்டமும் இணைந்து வழங்கும் நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக் கண்காட்சியானது மூன்றாவது முறையாக நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில் அமைந்துள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் 02.09.2026 புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cf7b995-5fe9-46b5-ab07-2ff4fdce500d/26-6a96c41abc679.webp' /></p><h2>வடக்கின் நீர்வள பாதுகாவலர்கள் அழைப்பு</h2><p> 

தொடர்ந்து 11.09.2026 வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை இடம்பெறவுள்ள மேற்படி நீர்வளக் கண்காட்சியின் ஒரு கட்டமாக ஊருணி ஆற்றுகைக் களத்தில் மாலை 7 மணி முதல் கருத்துரைகளும் கலை, பண்பாட்டு, பாரம்பரிய நிகழ்வுகளும் அரங்கேற உள்ளன. </p><p>

குறித்த நீர்வளம் பேணும் செயற்திட்டம் தொடர்பில் அதன் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் சிறிஸ்கந்தராஜா அவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட மாநாட்டு மண்டபத்தில் இன்று 01.09.2026 இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்த முக்கியமான விடயங்கள் வருமாறு,</p><p></p><p> </p><p> 

ஆறு வருடங்களாக இடம்பெற்ற நீர் சார்ந்த ஆய்வு செயற்திட்டத்தில் தொடர்ச்சியாக ஒன்றிரண்டு பிரதேசங்களில் செய்யப்பட்ட நீரியல் ஆய்வுகள் தந்த பெறுபேறுகளையும் மக்களோடு இணைந்து செய்வதில் கிடைத்த அனுபவங்களையும் தொகுத்திருக்கிறோம்.

அதன் இறுதிப்பகுதியில் வழுக்கையாற்றை ஒரு பேசு பொருளாக சமூகத்திற்குள் கொண்டுவர எடுத்த முயற்சி ஊரவர்களின் கற்பனையையும் சேர்த்து பிரேதேச சபைகளுடன் இணைந்து எடுத்த முயற்சியுடன் ஆய்வுகள் குறித்து இன்னும் தெளிவு ஏற்பட்டிருக்கிறது.</p><p> 

அந்த அடிப்படையில் கிணறோடு சேர்ந்த வாழ்வியலில் தங்கியிருக்கும் ஒரு சமூகமாக நிலத்தடி நீரைப் பேணுவதற்கு கிணறுகளையும் பராமரித்தல் அவசியமானது என்பதும் அதற்கு அனுகூலமான வகையில் இருக்கின்ற ஊர்க் குளங்களை தூர்வார்ந்து பயனுள்ள வகையில் அவற்றில் நீர் தேக்குவது அவசியமானது. </p><p>

கிராமிய குளமொன்றை கிராம மக்களின் ஈடுபாட்டோடு பல்வேறு சமூகத் தேவைகளையும் உள்ளடக்கிய வகையில் தொழிநுட்ப அறிவையும் கருவிகளையும் பயன்படுத்தி பக்குவமாக தூர்வாருதல் தொடர்பிலும் அதில் கிடைக்கும் பாடங்களையும், மற்றும் பல்வேறு விடயங்களையும் முப்பரிமாண தோற்றங்களாக, செய்தியாக, படங்களாக இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தி உள்ளோம். </p><p>

கடந்த ஆண்டுகளை விட பல முனைகளில் நிலத்தடி நீர் சார்ந்த தெளிவை ஏற்படுத்தக் கூடிய வகையிலான பல்வேறு காட்சிகளையும், நிலத்தடி நீரை மாசுபடுத்துவதால் வரும் இழப்புகள் பற்றியும் மக்கள் கருத்துகளையும் கேட்டு பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல் மக்களின் ஈடுபாட்டோடு முடிவெடுத்தலையும் செய்து வந்திருக்கிறோம் என்றார்.
</p><p>
நீர்வள சபை, நீர்ப்பாசனத் திணைக்களம், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, யாழ் மாநகர சபை, யாழ்ப்பாண பல்கலைக்கழகம், யாழ் இந்துக்கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி மற்றும் தன்னார்வக் குழுக்கள் பலவற்றின் ஒத்துழைப்புகளுடன் நடைபெறும் நீர்க் கண்காட்சியில் கலந்துரையாடல்கள், மாதிரிகள், பதாகைகள், ஆய்வு விபரங்கள், பரிசுப் போட்டிகள், விளையாட்டுகள், பாரம்பரிய நிகழ்சிகள், குலுக்கல் பரிசுகள் ஆகியவை இடம்பெற உள்ளன. </p><p>

நல்லூர் கந்தனை தரிசிக்க வரும் பக்தர்கள் குறித்த நீர் கண்காட்சியில் பங்கேற்று வடமாகாண நீர்வளம் எதிர்நோக்கும் நெருக்கடிகள், அதற்கு மக்கள் கூட்டாக என்ன செய்யலாம்? போன்ற விடயங்களை அறிந்து எங்களது இன்றைய தலைமுறையினதும் எதிர்கால சந்ததியினதும் வாழ்வியலை நிலைபேறாக பாதுகாத்து கரம் கோர்த்துப் பயணிக்க வடக்கின் நீர்வள பாதுகாவலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T12:22:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனக் கப்பல்களில் ரகசிய உளவுச் சாதனங்கள்! அமெரிக்கா அம்பலப்படுத்திய திடுக்கிடும் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-accuses-china-of-using-cargo-ships-for-spying-1788261350"></link>
            <id>https://ibctamil.com/article/us-accuses-china-of-using-cargo-ships-for-spying-1788261350</id>
            <summary type="text">சீனாவின் அரசாங்கத்திற்குச் சொந்தமான கொஸ்கோ (COSCO) கப்பல் போக்குவரத்து நிறுவனம் தனது சரக்குக் கப்பல்களில் மறைமுக
உளவுச் சாதனங்களைப் பயன்படுத்தி வருவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவின் அரசாங்கத்திற்குச் சொந்தமான கொஸ்கோ (COSCO) கப்பல் போக்குவரத்து நிறுவனம் தனது சரக்குக் கப்பல்களில் மறைமுக
உளவுச் சாதனங்களைப் பயன்படுத்தி வருவதாக அமெரிக்க சிரேஷ்ட அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.</p><p>அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளின் கடலோரப் பகுதிகளில் இராணுவத் தொடர்பாடல்களை இடைமறித்துக் கண்காணிப்பதற்காக இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p>
சீனாவின் இத்தகைய நடவடிக்கைகள் வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியப்
பிராந்தியங்களில் இயங்கும் வெளிநாட்டு இராணுவக் கப்பல்கள் மற்றும்
விமானங்களின் நகர்வுகளைக் கண்காணிப்பதற்குப் பயன்படுவதாகக்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p> </p><p></p><h2>பாதுகாப்புத் தரவு</h2><p>குறிப்பாக, அதிநவீன இராணுவத் தொடர்பாடல் நுட்பங்கள் மற்றும் பாதுகாப்புத்
தரவுகளைப் திரட்டுவதையே இலக்காகக் கொண்டு இந்தத் திட்டம் செயற்படுத்தப்பட்டு
வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fe0660f-acee-4b26-9368-00ce8881aa94/26-6a96c2814585a.webp' /></p><p>
அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டுகளை வொஷிங்டனிலுள்ள சீனத் தூதரகம் முற்றிலும்
நிராகரித்துள்ளதுடன் சீன நிறுவனங்கள் எவையும் இவ்வாறான உளவு நடவடிக்கைகளில்
ஈடுபடவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
</p><p>
எவ்வாறெனினும், குறித்த கொஸ்கோ நிறுவனம் சீன இராணுவத்துடன் தொடர்பைக்
கொண்டுள்ளதாகக் கூறி அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் கடந்த 2025 ஆம் ஆண்டு
ஜனவரி மாதத்தில் அதனைத் தடைப்பட்டியலில் சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T12:20:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு மாகாணசபை தேர்தல் நடைபெற்றால் கட்டாயம் போட்டியிடுவேன்..! முன்னாள் எம்.பி தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eastern-provincial-council-elections-i-contest-1788263777"></link>
            <id>https://tamilwin.com/article/eastern-provincial-council-elections-i-contest-1788263777</id>
            <summary type="text">கிழக்கு மாகாணசபை தேர்தல் நடைபெற்றால் நானும் கட்டாயம் போட்டியிடுவேன் என&amp;nbsp; முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்&amp;nbsp;சீ.யோகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.இன்று(...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாணசபை தேர்தல் நடைபெற்றால் நானும் கட்டாயம் போட்டியிடுவேன் என&nbsp; முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்&nbsp;சீ.யோகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.</p><p>இன்று(01.09.2026) வாழைச்சேனையில் அவருடைய அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>தேர்தலில் வேட்பாளராக</h2><p>
</p><p>
பல்வேறு சமகால அரசியல், தொடர்பாக கருத்துக்களை கூறிய அவர் மாகாணசபை தேர்தல் இந்த ஆண்டு நடைபெறுவது கேள்விக்குறியாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14d7bdfc-4796-4033-a906-08ca72b2089a/26-6a96c226b6933.webp' /></p><p>

மாகாணசபை தேர்தல் நடத்தும் திகதி அறிவிப்பு, வேட்புமனு கோரல் அறிவிப்பு வருமானால் கிழக்கு மாகாணசபை தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவதாகவும் அது இந்த ஆண்டில் நடைபெ வாய்புகள் இல்லை என குறிப்பிட்டார். </p><p>

அடுத்த ஆண்டு(2027) நடைபெறலாம் என எதிர்பார்க்கிறேன் </p><p>அப்படி நடந்தால் நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டாயம் கிழக்கு மாகாணசபை தேர்தலில் வேட்பாளராக களம் இறங்குவேன். என்னை எவரும் தடுக்கமுடியாது எனவும் உறுதியுடன் கூறியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T12:16:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[H4 பணி அனுமதியை ரத்து செய்ய அமெரிக்கா திட்டம் - இந்தியர்களுக்கே அதிக பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-plans-to-end-h4-work-permit-will-affect-indians-1788264918"></link>
            <id>https://news.lankasri.com/article/us-plans-to-end-h4-work-permit-will-affect-indians-1788264918</id>
            <summary type="text">us plans to end H4 work permit it will affect indians: அமெரிக்காவில் H1B விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கைதுணை வேலை செய்ய அனுமதி அளிக்கும் H4 பணி அனும...</summary>
            <content type="html"><![CDATA[<p>us plans to end H4 work permit it will affect indians: அமெரிக்காவில் H1B விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கைதுணை வேலை செய்ய அனுமதி அளிக்கும் H4 பணி அனுமதியை ரத்து செய்ய அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. </p><h3>

H4 பணி அனுமதியை ரத்து செய்ய அமெரிக்கா திட்டம்</h3><p>

அமெரிக்காவில் வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கும் நோக்கில், டிரம்ப் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09a69ccd-fa07-41ec-8770-8f595755281f/26-6a96c1d8c29bd.webp' /></p><p>

 முன்னதாக அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான H1B விசாவிற்கான கட்டணத்தை ரூ.1.9 லட்​சத்​தில் இருந்து
ரூ.88 லட்சமாக உயர்த்தினார்.

இதற்கு சில நீதிமன்றங்கள் தடை விதித்த நிலையில், இது தொடர்பான மேல்முறையீடு வழக்கு நடைபெற்று வருகிறது. </p><p>

தற்போது H1B விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கை துணையினர் அமெரிக்காவில் வேலை செய்வதற்கான H4 பணி அனுமதியை ரத்து செய்யும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது.</p><p> 

H1B விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு H-4 விசா அமெரிக்கா வழங்கி வருகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d115b27-ea15-4d87-bae8-4ae32df5379b/26-6a96c1d819261.webp' /></p><p>H-4 தகுதியானது, குடும்ப உறுப்பினர்கள் H-1B வைத்திருப்பவருடன் சென்று அமெரிக்காவில் வசிக்க அனுமதிக்கிறது. ஆனால் வேலைவாய்ப்பு உரிமைகளை வழங்குவதில்லை.
</p><p>
2015 ஆம் ஆண்டில் புதிய விதிகள் மூலம், H-4 விசா வைத்திருப்பவர்கள் வேலை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. </p><p>

தற்போது வேலைவாய்ப்பு அங்கீகாரத்திற்குத் தகுதியுள்ள வெளிநாட்டினர் பிரிவிலிருந்து H-4 சார்ந்த வாழ்க்கைத் துணைவர்களை நீக்குதல்" என்ற தலைப்பிலான முன்மொழிவை அமெரிக்கா உள்நாட்டு பாதுகாப்பு துறை பட்டியலிட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>

 இந்த முன்மொழிவு சட்டமாக மாறி நடைமுறைக்கு வரும் போது, அது அமெரிக்காவில் உள்ள இந்தியர்களையே அதிகளவில் பாதிக்கும். </p><p>

2014 முதல் 2017 வரையிலான தரவுகளின்படி, H-4 வேலை அனுமதி 93% இந்தியக் குடிமக்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. அந்த அனுமதி பெற்றவர்களில் 94% பேர் பெண்கள் ஆவர்.
</p><p>
இந்த முன்மொழிவு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு மக்களின் கருத்துக்களை பெற்ற பிறகே இறுதி முடிவு எடுக்கப்பட்டு சட்டமாக அமுலுக்கு வரும். அதுவரை H 4 வேலை அனுமதி பெற்றுள்ளவர்களுக்கு பாதிப்பில்லை.
</p><p>
இருப்பினும் அமெரிக்காவில் கணவர் மற்றும் மனைவி இருவரின் வருமானத்தையும் சார்ந்துள்ள குடும்பத்தினருக்கு இந்த முன்மொழிவு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T12:15:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கலிபோர்னியாவில் இரு இந்திய இளம் பெண்கள் கொலை; திடீரென வில்லியாக மாறிய நண்பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-young-kerala-women-murdered-in-california-1788240930"></link>
            <id>https://canadamirror.com/article/two-young-kerala-women-murdered-in-california-1788240930</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மில்பிடாஸ் நகரில் இரு இந்திய இளம் பெண்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அமெரிக்க வாழ் புலம்பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மில்பிடாஸ் நகரில் இரு இந்திய இளம் பெண்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அமெரிக்க வாழ் புலம்பெயர் சமூகத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
</p><p>
திருச்சூர் பாணஞ்சேரி, மண்ணுத்தி, முடிக்கோடு தெக்கூட்டு வீட்டைச் சேர்ந்த ஹரிதாஸ் மற்றும் சுஷ்மா தம்பதியரின் மகள் அஞ்சனா மற்றும் கோட்டயம் சிங்கவனம் பகுதியைச் சேர்ந்த ஆன் ஆகிய இருவருமே இந்தக் கொடூர சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65df686a-bb5f-4b14-a14a-4e9c34f9c582/26-6a96642384b51.webp' /></p><h2>திடீரென&nbsp; வில்லியாக மாறிய&nbsp; நண்பி</h2><p>

இவர்கள் இருவருக்கும் நெருங்கிய தோழியும், அதே அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்தவருமான அனிலா என்ற பெண், இந்தக் கொலைகளைச் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தற்போது போலீஸ் காவலில் உள்ளார்.</p><p>

ஒரே அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்த இந்த மூன்று குடும்பங்களுக்கும் இடையே மிகவும் நெருக்கமான நட்பு இருந்ததாக கூறப்படுகிறது. 
ஆசிரியையாக பணியாற்றி வந்த அஞ்சனா கடந்த எட்டு ஆண்டுகளாக கலிபோர்னியாவில் வசித்து வந்தார். மென்பொருள் பொறியாளரான தனது கணவர் விஜீஷ் மற்றும் ஆறு வயது மகள் வாமிகாவுடன் அஞ்சனா வசித்து வந்தார்.
</p><p>
சமீபத்தில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்டங்களிலும், அஞ்சனா உள்ளிட்ட மூவரும் தங்களது நண்பர்களுடன் ஒன்றாகக் கலந்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>

ஆகஸ்ட் 28ஆம் தேதி, வெள்ளிக்கிழமை மதியம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்தக் கொலைச் சம்பவங்கள் அரங்கேறின. 
 
வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அஞ்சனாவின் கணவர் விஜீஷ், சம்பவ இடத்திலிருந்து நிற்காமல் வேகமாகச் சென்ற அனிலாவின் நீல நிற காரைக் கவனித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த விஜீஷ் உடனடியாக ஆனின் கணவர் ஜேக்கப்பை தொலைபேசியில் தொடர்புகொண்டு தகவலை தெரிவித்துள்ளார்.

ஜேக்கப், ஆனுக்கு தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை. </p><p>இதையடுத்து அவர் குடியிருப்புக்குச் சென்று பார்த்தபோது, ஆன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டுள்ளார்.
அதேநேரத்தில், விபத்து குறித்த தகவலை அறிந்து விஜீஷ் சம்பவ இடத்துக்கு வந்து சேரும் முன்பே அஞ்சனாவும் உயிரிழந்திருந்தார்.</p><p>

இந்த சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அஞ்சனா மற்றும் விஜீஷின் ஆறு வயது மகள் வாமிகா வீட்டின் அறைக்குள் இருந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்திற்குப் பிறகு, நீல நிற எஸ்.யு.வி. கார் ஒன்று அதிவேகமாக அங்கிருந்து சென்றதைப் பார்த்ததாக நேரில் பார்த்தவர்களும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
</p><p>
இதையடுத்து போலீசார் நடத்திய தேடுதல் நடவடிக்கையில், அருகிலுள்ள ஒரு பார்க்கிங் பகுதியில் பலத்த சேதமடைந்த நிலையில் அந்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. </p><p>தொடர்ந்து அனிலாவையும் போலீசார் காவலில் எடுத்தனர்.



நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்த இந்த மூவருக்கிடையே திடீரென கொலைச் சம்பவம் நிகழும் அளவுக்கு என்ன காரணம் ஏற்பட்டது என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை.
</p><p>காவலில் உள்ள அனிலாவிடம் அமெரிக்க போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் மூலம் கொலைக்கான உண்மையான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்த கூடுதல் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-01T12:10:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடிய தயாரிப்புகளுக்கு நுகர்வோரிடையே அதிகரிக்கும் வரவேற்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/local-demand-surges-for-canadian-made-food-1788261071"></link>
            <id>https://canadamirror.com/article/local-demand-surges-for-canadian-made-food-1788261071</id>
            <summary type="text">அமெரிக்காவுடனான வர்த்தக மோதல் நீடித்து வரும் நிலையில், கனடாவில் உள்ளூர் உணவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளதாக உற்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடனான வர்த்தக மோதல் நீடித்து வரும் நிலையில், கனடாவில் உள்ளூர் உணவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளதாக உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.</p><p> 
மளிகைக் கடைகளில் பொருட்களின் விலை அதிகரித்துள்ளபோதிலும், கனடா முழுவதும் உள்ள நுகர்வோர்கள் தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கே முன்னுரிமை அளித்துத் தேடிச் சென்று வாங்கி வருகின்றனர்.</p><p> 
அமெரிக்காவின் வர்த்தக வரிகளால் தங்களது நிறுவனம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் ஒன்டாரியோவின் போமன்வில் பகுதியில் பாய்ச்ச்மென்ட் காகிதம் விநியோகிக்கும் 'ஏவென்கோ லிமிடெட்' நிறுவனத்தின் தலைவர் கேத்லீன் சேப்மேன் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b04795de-0631-4945-bd9c-888eac22e040/26-6a96b2d116f8a.webp' /></p><p> 
சுமார் 40 சதவீத வாடிக்கையாளர்களை அமெரிக்காவில் கொண்டுள்ள இந்நிறுவனம், பிரான்ஸிலிருந்து மூலப் பொருட்களை இறக்குமதி செய்வதால் ஆரம்பத்தில் ஐரோப்பிய பொருட்கள் மீதான அமெரிக்க வரிகளால் பாதிக்கப்பட்டது. </p><p>
தற்போது அப்பொருட்கள் கனடாவில் தயாரிக்கப்பட்டு மாற்றியமைக்கப்படுவதால், மேலும் 50 சதவீத கூடுதல் வரியை எதிர்கொண்டுள்ளது. </p><p>
எனினும், கனடிய மக்கள் நேரடியாகத் தங்கள் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு ஆதரவு தெரிவிப்பதுடன், ஆன்லைன் மூலமாக நேரடியாக ஆர்டர்களையும் வழங்கி வருகின்றனர்.</p><p>
இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் வெறும் 20 ஆக இருந்த நேரடி வாடிக்கையாளர் ஆர்டர்களின் எண்ணிக்கை, புதிய அமெரிக்க வரிகள் அமலுக்கு வந்த ஒரே வாரத்தில் நூற்றுக்கணக்கில் உயர்ந்துள்ளது. </p><p>
நுகர்வோர்கள் உள்நாட்டுப் பொருட்களை கொள்வனவு விரைவாக மாறிவரும் நிலையில், சில்லறை விற்பனைக் கடைகள் தங்களது விற்பனை அலமாரிகளில் கனடிய தயாரிப்புகளுக்குப் போதிய இட ஒதுக்கீட்டை வழங்குவதில் இன்னும் தாமதம் காட்டி வருவதாக சேப்மேன் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T12:10:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பாறைகள் சரியும் அபாயம்: மக்கள் விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/risk-of-rockfalls-on-the-hatton-colombo-main-road-1788261062"></link>
            <id>https://tamilwin.com/article/risk-of-rockfalls-on-the-hatton-colombo-main-road-1788261062</id>
            <summary type="text">ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை, ரம்பாதெனிய பகுதியில் வீதிக்கு மேலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள சில பெரிய பாறைகளும் மரங்களும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை, ரம்பாதெனிய பகுதியில் வீதிக்கு மேலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள சில பெரிய பாறைகளும் மரங்களும் பிரதான வீதியில் சரிந்து விழும் கடும் அபாயம் நிலவுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். </p><p>

கடந்த நாட்களில் கினிகத்தேனை பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக, குறித்த இடத்திலிருந்து பிரதான வீதிக்கு மண்ணும் பாறைகளும் சரிந்து விழுந்ததில் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டது.</p><h2>கோரிக்கை</h2><p> 

பின்னர் வீதியில் சரிந்து விழுந்த மண்ணையும் பாறைகளையும் அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த போதிலும், கீழே சரிந்து விழும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஏனைய பெரிய பாறைகளையும் மரங்களையும் அகற்றுவதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d16e5d7-ab00-4565-9000-297cc2aebfc4/26-6a96c08e6ecc7.webp' /></p><p> </p><p>

தினமும் ஏராளமான வாகனங்கள் பயணிக்கும் இந்த பரபரப்பான வீதியில் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக, அச்சுறுத்தலாக உள்ள பாறைகளையும் மரங்களையும் உடனடியாக அகற்றுவதற்கு தலையிடுமாறு சம்பந்தப்பட்ட பொறுப்பான அதிகாரிகளிடம் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T12:10:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சடங்கு என்ற பெயரில் முறையற்ற அறுவை சிகிச்சை; 43 பழங்குடியின சிறுவர்கள் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/43-boys-die-africa-botched-surgeries-circumcision-1788264745"></link>
            <id>https://canadamirror.com/article/43-boys-die-africa-botched-surgeries-circumcision-1788264745</id>
            <summary type="text">&amp;nbsp; தென் ஆப்பிரிக்காவில் பழங்குடியின சிறுவர்கள் சிறுவர் பருவத்திலிருந்து பருவ வயதை எட்டியதைக் குறிக்கும் ‘உல்வாலுகோ’ (Ulwaluko) என்ற பாரம்பரியக் சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தென் ஆப்பிரிக்காவில் பழங்குடியின சிறுவர்கள் சிறுவர் பருவத்திலிருந்து பருவ வயதை எட்டியதைக் குறிக்கும் ‘உல்வாலுகோ’ (Ulwaluko) என்ற பாரம்பரியக் சுன்னத் (Circumcision) சடங்கின் போது, முறையற்ற முறையில் நடத்தப்பட்ட அறுவை சிகிச்சைகளால் 43 பதின்ம வயது சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 மேலும் முறையற்ற அறுவை சிகிச்சைகளால் 75-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் படுகாயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0357abcc-5deb-4844-b97a-8732a7b1b81b/26-6a96c12ab64f5.webp' /></p><h2>சுன்னத் (Circumcision) சடங்கு</h2><p>
</p><p> 
தென் ஆப்பிரிக்காவில் ஆண்டுதோறும் குளிர்காலம் மற்றும் கோடைக்காலத்தில் பழங்குடியின சிறுவர்கள் மலைப்பகுதிகளில் உள்ள சிறப்பு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுப் பாரம்பரியக் கல்வி மற்றும் சுன்னத் செய்யும் சடங்குகள் நடத்தப்படுவது வழக்கம்.
</p><p>
 இருப்பினும், சட்டவிரோதமாகச் செயல்படும் போலிப் பயிற்சிப் பள்ளிகள் மற்றும் தகுதியற்ற நபரால் கத்தரிக்கோல், பழைய பிளேடுகள் மற்றும் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு பாதுகாப்பற்ற முறையில் சுன்னத் செய்யப்படுவதே இந்த உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
முறையான மருத்துவ வசதிகள் இல்லாத சூழலில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சடங்குகளால் சிறுவர்களுக்குக் கடுமையான இரத்தப்போக்கு, காயம் சீழ்பிடித்தல் (Sepsis), கேங்க்ரீன் பாதிப்பு மற்றும் நீரிழப்பு ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. </p><p>

இந்த ஆண்டில் அதிகபட்சமாகம்புமலங்கா (Mpumalanga) மாகாணத்தில் 18 சிறுவர்களும், கிழக்கு கேப் மாகாணத்தில் 14 சிறுவர்களும் உயிரிழந்துள்ளதாக அரசு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>
சம்பவத்தைத் தொடர்ந்து தீவிர அதிரடி நடவடிக்கையில் இறங்கிய தென் ஆப்பிரிக்கக் காவல்துறை மற்றும் பாரம்பரிய விவகாரங்கள் துறை, சட்டவிரோதமாகச் செயல்பட்ட 58 போலிப் பயிற்சிப் முகாம்களைப் பூட்டி சீல் வைத்ததுடன், 40 போலி மருத்துவப் பயிற்சியாளர்களைக் கைது செய்துள்ளது. </p><p>

மேலும் பாரம்பரியம் என்ற பெயரில் அப்பாவிச் சிறுவர்களின் உயிரைப் பறிக்கும் இத்தகைய சட்டவிரோத முகாம்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என தென் ஆப்பிரிக்க அரசு எச்சரித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-01T12:09:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதுடில்லி முன்னெடுப்பில் இலங்கையில் பிம்ஸ்டெக் தொழில்நுட்பப் பரிமாற்ற வசதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-initiative-in-sri-lanka-focusing-on-india-1788263015"></link>
            <id>https://ibctamil.com/article/new-initiative-in-sri-lanka-focusing-on-india-1788263015</id>
            <summary type="text">பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளுக்கிடையிலான தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், இலங்கையில் பிம்ஸ்டெக் தொழில்நுட்பப் பரிமாற்ற வசதியை நிறுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளுக்கிடையிலான தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், இலங்கையில் பிம்ஸ்டெக் தொழில்நுட்பப் பரிமாற்ற வசதியை நிறுவுவதற்கான நடவடிக்கைக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.</p><p> 2008ஆம் ஆண்டு புதுடில்லியில் நடைபெற்ற இரண்டாவது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டிலேயே, உறுப்பு நாடுகளுக்கிடையிலான அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் தொழில்நுட்பப் பரிமாற்ற வசதியை உருவாக்குவதற்கான அடிப்படை உடன்பாடு எட்டப்பட்டது.
</p><p>
அதனைத் தொடர்ந்து, 2022 மார்ச் 20ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஐந்தாவது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் தொழில்நுட்பப் பரிமாற்ற வசதியை நிறுவுவதற்கான ஒத்துழைப்பு ஒப்பந்தம் முறைப்படி கையொப்பமிடப்பட்டது.</p><p></p><h2>புரவலர் நாடான இலங்கை</h2><p>
</p><p>
இந்த வசதி நடைமுறைக்கு வந்தால், பிம்ஸ்டெக் நாடுகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தொழில்நுட்பப் பரிமாற்றம், திறன் மேம்பாடு மற்றும் அறிவுசார் சொத்துக்களை நிர்வகித்தல் உள்ளிட்ட துறைகளில் ஆதரவு வழங்கும் கட்டமைப்பாக செயல்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/746547cb-53f6-4f3e-91ef-bb62b5a4e95a/26-6a96bef1c28a8.webp' /></p><p>ஒத்துழைப்புக் கட்டமைப்பின் கீழ், புரவலர் நாடான இலங்கை, அந்த வசதியை நிறுவுதல், இயக்குதல் மற்றும் நிர்வகித்தல் தொடர்பாக பிம்ஸ்டெக் செயலகத்துடன் ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும்.</p><p>இந்நிலையில் தேவையான நிறுவன ஒப்புதல்கள் மற்றும் சட்ட அனுமதிகளை உள்ளடக்கி, ஒரு வரைவு ஒப்பந்தம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
</p><p>
இந்த முன்னெடுப்பின் பின்னணியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கின்றது.
</p><p>
பிம்ஸ்டெக் அமைப்பில் இந்தியா முக்கிய உறுப்பு நாடாக இருப்பதுடன், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளில் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகிறது.</p><p></p><h2>நிபுணத்துவப் பரிமாற்றம்</h2><p>

இலங்கையில் இந்த வசதி அமைக்கப்படுவது, இந்தியா உள்ளிட்ட பிம்ஸ்டெக் நாடுகளுக்கு இடையிலான தொழில்நுட்ப அறிவு மற்றும் நிபுணத்துவப் பரிமாற்றத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f77c786d-b493-43ff-9ca9-593f3bc361ad/26-6a96bf17c90f5.webp' /></p><p>

குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு புதிய தொழில்நுட்பங்களை அணுகுவதற்கும், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திறன்களை மேம்படுத்துவதற்கும் இந்த வசதி உதவக்கூடும்.
</p><p>
இலங்கை புரவலர் நாடாக செயற்படும் நிலையில், அந்த வசதியை நிறுவுதல், இயக்குதல் மற்றும் நிர்வகித்தல் தொடர்பாக பிம்ஸ்டெக் செயலகத்துடன் தனியான உடன்பாட்டை எட்ட வேண்டியுள்ளது.
</p><p>இந்த முன்னெடுப்பு நடைமுறைக்கு வந்தால், இந்தியாவில் தொடங்கிய பிம்ஸ்டெக் தொழில்நுட்ப ஒத்துழைப்பு முயற்சி, கொழும்பை பிராந்திய தொழில்நுட்பப் பரிமாற்றத்தின் முக்கிய மையங்களில் ஒன்றாக மாற்றும் புதிய கட்டத்தை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T12:03:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேவிபியினரின் ஆயுதக் கலவரங்களால் ஏற்பட்ட பொருளாதாரச் சேதங்களே அதிகம் - துமிந்த திஸாநாயக்க கடும் சாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/duminda-tissanayake-statement-1788260662"></link>
            <id>https://tamilwin.com/article/duminda-tissanayake-statement-1788260662</id>
            <summary type="text">இலங்கையின் 76 ஆண்டுகாலக் கடன்களை விடவும், ஜேவிபி நடத்திய ஆயுதக்
கலவரங்களால் பேருந்து தீக்கிரையாக்கப்பட்டு, பொலிஸ் நிலையங்கள் தாக்கப்பட்டு,
அபிவிருத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் 76 ஆண்டுகாலக் கடன்களை விடவும், ஜேவிபி நடத்திய ஆயுதக்
கலவரங்களால் பேருந்து தீக்கிரையாக்கப்பட்டு, பொலிஸ் நிலையங்கள் தாக்கப்பட்டு,
அபிவிருத்தித் திட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட பொருளாதாரச்
சேதங்களே அதிகம் என முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். </p><p>நாட்டுக்கு அவர்கள் இழைத்த வரலாற்று அழிவுகள் குறித்த
உண்மைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விரைவில் அம்பலப்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (01.09.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய
போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>அரசாங்கத்தின் கடுமையான அடக்குமுறைகள்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கத்தின் கடுமையான அடக்குமுறைகள், வழக்குகள் மற்றும்
அச்சுறுத்தல்கள் காரணமாகவே நாட்டில் வலுவான எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சி இயங்க முடியாத சூழல் நிலவுகின்றது.

அரசியல்வாதிகளுக்கும் குடும்பமும் குழந்தைகளும் இருப்பதால், அவர்கள் பயத்தில்
வெளியே வர முடியாத நிலை காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f053dc88-faf7-442d-8123-0d478a567228/26-6a96be1680610.webp' /></p><p> இருப்பினும் அரசின் இந்த
அழுத்தங்களுக்கு உள்ளாகும் பொதுமக்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் மிக
விரைவில் ஒன்றுதிரண்டு போராட்டங்களில் ஈடுபடுவர்.

1951 இல் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் தோற்றுவிக்கப்பட்ட ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சி, தனது பெருமைமிக்க 75ஆவது ஆண்டு நிறைவை எட்டியுள்ள நிலையில்,
2026 செப்டெம்பர் 2ஆம் திகதி கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா
தலைமையில் பிரம்மாண்ட மாநாடு நடைபெறவுள்ளது.
</p><p>
கடந்த 76 ஆண்டுகளில் நாட்டில் எதுவும் நடக்கவில்லை எனத் தற்போதைய அரசு கூறுவது
முற்றிலும் தவறானது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி அரசுகள்
எட்டிய வரலாற்றுச் சாதனைகள் மற்றும் அபிவிருத்திப் பணிகளை இந்த மாநாட்டின்
மூலம் மக்களிடம் வெளிப்படுத்தவுள்ளோம்.</p><p>

மேலும், தற்போதைய அரசு பெருமையுடன் பேசும் கனிம எண்ணெய் மற்றும் எரிபொருள்
ஆராய்ச்சித் திட்டங்கள், காஸ் கண்டறிதல் மற்றும் மொரட்டுவையிலிருந்து போர்ட்
சிட்டி வரையிலான அதிவேகப் போக்குவரத்துப் பாதை திட்டங்கள் உள்ளிட்ட அனைத்துமே
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக் காலத்தில் தொழில்நுட்பங்கள்
கொண்டுவரப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களின் இறுதிப் கட்டங்களே தவிர, இந்த
அரசால் புதிதாகக் கொண்டுவரப்பட்டவை அல்ல.</p><h2>சர்வாதிகார நிர்வாகத்திற்கு தேவையான சூழல்</h2><p>
</p><p>
அரசால் முன்னெடுக்கப்படும் 22ஆவது அரசமைப்புத் திருத்தம் மற்றும் அது
தொடர்பான செயற்பாடுகள் ஆபத்தானவை. இவை ஒரு சர்வாதிகார நிர்வாகத்துக்குத்
தேவையான சூழலை உருவாக்கவே செய்யப்படுகின்றன. இவை அரசியல்வாதிகளுக்கு
மட்டுமல்லாது ஊடகங்கள், விவசாயிகள் மற்றும் ஒட்டுமொத்தப் பொதுமக்களின்
சுதந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் மிகவும் ஆபத்தானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/872bd9d7-af1f-4fe8-98e0-7605f7625be2/26-6a96be176f4f5.webp' /></p><p>
</p><p>
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் நிதி அமைச்சு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள்
மற்றும் அறிக்கைகள் குறித்துப் பேசும் ஆட்சியாளர்கள், முதலில் தம்மை
நிரபராதிகள் என நிரூபிக்க வேண்டும்.

அத்துடன், முன்னாள் விடுதலைப்புலிகளின் நிதிப் பொறுப்பாளர் கே.பி. (குமரன்
பத்மநாதன்) வசம் கப்பல்களும் பெருமளவு பணமும் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில்,
அவர் எவ்வாறு சுதந்திரமாக நடமாடுகின்றார் என்பது குறித்து உடனடி விசாரணை
நடத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
</p><p>
நாட்டின் 76 ஆண்டுகாலக் கடன்களை விடவும், ஜே.வி.பி நடத்திய ஆயுதக் கலவரங்களால்
பஸ்கள் தீக்கிரையாக்கப்பட்டு, பொலிஸ் நிலையங்கள் தாக்கப்பட்டு, அபிவிருத்தித்
திட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட பொருளாதாரச் சேதங்களே அதிகம்.
நாட்டுக்கு அவர்கள் இழைத்த வரலாற்று அழிவுகள் குறித்த உண்மைகளை ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சி விரைவில் அம்பலப்படுத்தும் என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T12:00:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர் முடிவுக்கு வந்தால் இது நடக்கும்; கடும் பயத்தில் அதிபர் விளாடிமிர் புடின் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/vladimir-putin-is-in-deep-fear-ukraine-war-1788264129"></link>
            <id>https://canadamirror.com/article/vladimir-putin-is-in-deep-fear-ukraine-war-1788264129</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;உக்ரைனுக்கு எதிரான போரில் குறைந்தபட்ச வெற்றியைக்கூடப் பெறாமல் போரை முடிவுக்குக் கொண்டுவந்தால், ரஷ்யாவின் உள்நாட்டு அதிகார வர்க்கமும் எதிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;உக்ரைனுக்கு எதிரான போரில் குறைந்தபட்ச வெற்றியைக்கூடப் பெறாமல் போரை முடிவுக்குக் கொண்டுவந்தால், ரஷ்யாவின் உள்நாட்டு அதிகார வர்க்கமும் எதிர்ப்பாளர்களும் தன் உயிரைப் பறித்து விடுவார்கள் என்ற கடும் அச்சத்தில் அதிபர் விளாடிமிர் புடின் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p> 

“போரில் வெற்றி பெறாமல் திரும்பினால் அவர்கள் என்னைத் தூக்கிலிட்டு விடுவார்கள்” என்று தனது நெருங்கிய வட்டாரங்களிடம் புடின் புலம்பியதாகப் தகவல்கள் கசிந்துள்ளன.
பிரிட்டனின் பிரபல The Economist இதழ் வெளியிட்டுள்ள புலனாய்வு அறிக்கையின்படி,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54dbacd0-a548-4c92-be2c-87a908a52a40/26-6a96bec345657.webp' /></p><h2>ஐந்து ஆண்டாக நீடிக்கும் போர்</h2><p> 

உக்ரைனின் டான்பாஸ் (Donbas) பிராந்தியத்தை முழுமையாகக் கைப்பற்றுவதுதான் ரஷ்யாவின் தற்போதைய குறைந்தபட்ச இலக்காகும். </p><p>ஐந்து ஆண்டுகளை நெருங்கும் இந்தப் போரில் இதுவரை எந்தவொரு தீர்க்கமான முடிவும் எட்டப்படாத நிலையில், உக்ரைனை வெற்றி கொள்ளாமல் பின்வாங்கினால் அது புடினின் அரசியல் வாழ்க்கைக்கு மட்டுமின்றி அவரது உயிருக்கே பேராபத்தாக முடியும் என ரஷ்ய உயரதிகாரிகள் கருதுகின்றனர்.</p><p>

போரினால் ரஷ்யாவின் பொருளாதாரம், சர்வதேச வர்த்தகம் மற்றும் இராணுவ பலம் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் ரஷ்ய உயரடுக்கு (Elite) தலைவர்களிடையே அதிருப்தி அதிகரித்துள்ளது. </p><p>“மன்னன் ஆடைகளின்றி நிற்கிறான்” என்ற உணர்வு ரஷ்ய அதிகாரிகளிடையே மேலோங்கி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 போரை மேலும் தொடர்வது ரஷ்யாவிற்குப் பொருளாதார ரீதியாகப் பின்னடைவு என்ற போதிலும், பலவீனத்தைக் காட்டக் கூடாது என்ற கிரிமினல் மனநிலையிலேயே புடின் இத்தகைய முடிவுகளை எடுத்து வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
தன்னைத் தூக்கிலிட்டு விடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாகவே புடின் உக்ரைன் மீதான தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தவும், கூடுதலாக 4 லட்சம் வீரர்களைப் போர்க்களத்திற்கு அனுப்பவும் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
</p><p>
 உக்ரைனின் ஆற்றல் உள்கட்டமைப்புகள் மீது பிரம்மாண்ட வான்வழித் தாக்குதல்களை நடத்த ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தயாராகி வரும் வேளையில், புடினின் இந்த உயிர் பயம் போரை மேலும் பேரழிவை நோக்கித் தள்ளும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-01T11:59:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றில் முன்னிலையாகாத பிள்ளையான் - சிறைச்சாலைக்கு சென்ற அழைப்பு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3-people-including-pillayan-remanded-until-sep-15-1788255332"></link>
            <id>https://tamilwin.com/article/3-people-including-pillayan-remanded-until-sep-15-1788255332</id>
            <summary type="text">


மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற ஐந்து கொலைக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>


</p><p>மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற ஐந்து கொலைக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட இருவரை எதிர்வரும் செப்டம்பர் 15 திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p>இது தொடர்பான வழக்கு இன்று(01.09.2026)&nbsp; விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>


மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி தர்சினி அன்னாத்துரை முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின் போது, வழக்கின் 3ம் சந்தேக நபரான சி. சந்திரகாந்தன் பிள்ளையான் - முன்னிலைப்படுத்தப்படாத நிலையில் அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ள வெலிசர சிறைச்சாலையில் காணப்படும் இணையத்தடங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையவழி மற்றும் வட்ஸ்அப் ஊடாக இணைக்கமுடியவில்லை என சிறைச்சாலை அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டது. </p><p>

 மேலும் இந்த வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மேலும் இரண்டு சந்தேகநபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்டிருந்தனர்.
</p><p>
இன்றைய தினம் குற்றப்புலனாய்வுப் திணைக்கள அதிகாரிகளினால் குறித்த வழக்கு தொடர்பான தொடர்ச்சியான மேலதிக அறிக்கை மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. </p><h2>
 
 

விசாரணைகள் முன்னெடுக்க நடவடிக்கை</h2><p>
2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58f5fda2-ca4b-426e-ad07-daa53e4a038c/26-6a96bcf6499bd.webp' /></p><p> இந்த வழக்கு கடந்த ஜூன் 15ஆம் திகதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p> 

இவ்வழக்கில் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள சந்திரகாந்தன், ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.</p><p>இது தொடர்பில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர்களை செப்டெம்பர் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><p>
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தகவலின்படி, 2008ஆம் ஆண்டு டி-56 ரக துப்பாக்கிகள் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T11:56:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவலு கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன் 04 இளைஞர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/04-youths-arrested-with-high-powered-motorcycles-1788261549"></link>
            <id>https://tamilwin.com/article/04-youths-arrested-with-high-powered-motorcycles-1788261549</id>
            <summary type="text">நிக்கவரெட்டிய பகுதியில் அதிவலு கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன் 04 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிவேகத்துடன் பயணிக்கும் அதிவலு கொண்ட குறித்த மோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிக்கவரெட்டிய பகுதியில் அதிவலு கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன் 04 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

அதிவேகத்துடன் பயணிக்கும் அதிவலு கொண்ட குறித்த மோட்டார் சைக்கிள்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர்களும் பொருத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

பறிமுதல் செய்யப்பட்ட 04 மோட்டார் சைக்கிள்களிலும் போலியான இலக்கத்தகடுகள் பொருத்தப்பட்டிருந்தமை கண்டறிப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df999720-aa59-4397-9468-1780882c7403/26-6a96bbe28cdcf.webp' /></p><p>
சம்பவம் தொடர்பில் 18, 19, 20 மற்றும் 22 வயதான இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிக்கவெரடிய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T11:51:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் காணாமல் போன மகனைத் தேடி ஒரு குடும்பத்தின் நான்கு நாள் பயணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/family-lost-son-in-nepal-flood-1788257804"></link>
            <id>https://news.lankasri.com/article/family-lost-son-in-nepal-flood-1788257804</id>
            <summary type="text">Nepal&#039;s floods.. A family&#039;s four-day quest for a son: நேபாள வெள்ளத்தில் சிக்கி மாயமான மகனைத் தேடி ஒரு குடும்பம் மேற்கொண்ட நான்கு நாள் பயணம்.
நேபாளத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal's floods.. A family's four-day quest for a son: நேபாள வெள்ளத்தில் சிக்கி மாயமான மகனைத் தேடி ஒரு குடும்பம் மேற்கொண்ட நான்கு நாள் பயணம்.</p><p>
நேபாளத்தில் வெள்ளம் புரட்டிப்போட்டதைத் தொடர்ந்து, 21 வயதான அரசு ஊழியர் ஒருவர் தொடர்பில் அவரது குடும்பத்தினர் நான்கு நாட்களாகத் துயரமும் பதற்றமும் நிறைந்த நிலையில் தேடிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad72a47a-1211-42a6-981e-6b2e4cbd1a93/26-6a96a60e3db4e.webp' /></p><p>
</p><p>நேபாளம் மற்றும் திபெத்தில் நகரங்கள் மற்றும் கிராமங்கள் வழியாகப் பனி, பாறை, சேறு மற்றும் சிதைவுப் பொருட்கள் கலந்த பெருவெள்ளத்தை ஏற்படுத்திய பனிப்பாறை சரிவு காரணமாக ஏற்பட்ட மிக மோசமான சூழலிலும், நம்பிக்கையைத் தளர்த்தாமல் இருந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களில் கட்கா (Khadka) குடும்பத்தினரும் அடங்குவர்.</p><p> 
வெள்ளம் ஏற்படுவதற்கு முந்தைய இரவு 21 வயதான ஆயுஷ் கட்கா தனது உறவினர்களிடம் பேசியிருந்தார்; மறுநாள் காலையிலும் அவரது சமூக ஊடகக் கணக்கு அவர் ஒன்லைனில் இருப்பதைக் காட்டியது. </p><p>அவர் உயிர் பிழைத்திருக்கக்கூடும் என்ற நம்பிக்கையை அவரது குடும்பத்தினருக்கு இந்தச் சிறிய அறிகுறி அளித்தது. ஆகஸ்ட் 26 அன்று பரவலான அழிவு குறித்த தகவல்கள் வெளியானதும், குடும்பத்தினர் உடனடியாக ஒரு தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர்; ஆனால், அது இறுதியில் பயனற்ற முயற்சியாகவே முடிந்துள்ளது.</p><p></p><p> </p><p>வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அருகிலுள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான முக்கிய ஒருங்கிணைப்பு மையங்களில் ஒன்றான நுவாகோட்டில் உள்ள நேபாள ராணுவத்தின் மைதாலி முகாமுக்கு அருகில், அவரது தந்தையின் சகோதரரான கணேஷ் கட்கா இரண்டு நாட்களாகக் காத்திருந்தார். </p><p>இதற்கிடையில், ஆயுஷின் தாய்வழி அத்தை லட்சுமி தாபா, அவரைச் சுமார் 200 கி.மீ தொலைவில் உள்ள சித்வானில் தேடிக்கொண்டிருந்தார்; அங்கு வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட உடல்கள் மீட்கப்பட்டு வந்தன. </p><p>இந்த நிலையில், 1,000 பேரின் உயிரைப் பறித்து, சுமார் 4,000 பேரைக் காணாமல் போகச் செய்த அந்தப் பேரிடர் நிகழ்ந்த நாளன்றே, ஆயுஷுடையது என்று கருதப்படும் ஒரு சடலத்தை அதிகாரிகள் ஏற்கனவே மீட்டிருந்தனர்; ஆனால், அந்த நேரத்தில் குடும்பத்தினர் பலருக்கும் இந்தத் தகவல் தெரிந்திருக்கவில்லை.</p><p> ஆகஸ்ட் 27 அன்று, உறவினர்கள் அடையாளம் காண்பதற்காக மீட்கப்பட்ட உடல்களின் புகைப்படங்கள் தொலைக்காட்சித் திரையில் காட்டப்பட்டுக் கொண்டிருந்த தற்காலிக முகாம் ஒன்றிற்கு லட்சுமி சென்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/158e3675-a761-48f3-b569-716d50be5883/26-6a96a60ee7b2d.webp' /></p><p> </p><p>ஒரு புகைப்படம் உடனடியாக அவரது கவனத்தை ஈர்த்தது. அது அவர்தான் என்று எனக்கு ஏறக்குறைய 70% உறுதியாகத் தெரிந்திருந்தது என்று அவர் கூறியுள்ளார். அவர் அந்தப் புகைப்படத்தை கணேஷ் உள்ளிட்ட பிற உறவினர்களுக்கு அவர்களின் கருத்துக்களை அறிய அனுப்பினார்; ஆனால், ஆயுஷின் தாயார் முனா கட்காவிடம் அதைக் காட்ட வேண்டாம் என்று குடும்பத்தினர் வேண்டுமென்றே முடிவு செய்தனர். </p><p>அந்தக் குடும்பத்தினர் கண்ணுக்குத் தெரிந்த ஒவ்வொரு விவரத்தையும் கூர்ந்து கவனித்தனர்: அவரது தாடியைப் போலவே, அவரது தாடையின் இடது பக்கத்தில் இருந்த மச்சமும் ஆயுஷின் மச்சத்துடன் ஒத்துப்போவது போல் தோன்றியது. </p><p>அவரது இடது கையில் அவர் வழக்கமாக அணிந்திருந்த, ஆனால் மணிக்கட்டுப் பகுதிக்கு நழுவியிருந்த கருப்பு நிற மதரீதியான பாதுகாப்புக் கயிற்றையும் அவர்கள் அடையாளம் கண்டுகொண்டனர். </p><p>இதனிடையே, அடையாளம் காணப்படாத உடல்களைப் பெருமளவில் அடக்கம் செய்ய அதிகாரிகள் தயாரான நிலையில், கட்கா குடும்பத்தினருக்கு அந்த நிச்சயமற்ற நிலை இன்னும் அதிக வேதனையை அளிப்பதாக அமைந்தது. </p><p>தொலைதூர மாவட்டங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சித்வானுக்கு வந்து அவர்களை அடையாளம் காண்பதற்குப் போதுமான நேரம் கிடைப்பதற்கு முன்பே, அவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுவிடக்கூடும் என்று கட்கா குடும்பத்தினர் அஞ்சினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87622089-6747-4e4b-9384-a6f5d6031548/26-6a96a60f9f3fe.webp' /></p><p> </p><p>வெள்ளம் ஏற்பட்டு நான்கு நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 30 அன்றுதான், மகன் இறந்துவிட்டான் என்ற தகவல் ஆயுஷின் தாய்க்கு அவரது குடும்பத்தினரால் தெரிவிக்கப்பட்டது. </p><p>மறுநாள் அதிகாலை சுமார் 1 மணியளவில், நெருங்கிய மற்றும் உறவினர்கள் சல்யானிலிருந்து புறப்பட்டு, இரவு முழுவதும் பயணித்து சித்வானை அடைந்தனர். </p><p>ஆயுஷின் உடல் அடையாளம் காணப்பட்டு, பின்னர் உடலைத் தகனம் செய்வதற்காக, சுமார் 35 உறவினர்கள் நாராயணி ஆற்றங்கரையில் கூடினர். </p><p>அவன் பிறந்தபோது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம், அதேபோல் இவ்வளவு இளம் வயதிலேயே அவன் அரசு ஊழியர் தேர்வில் தேர்ச்சி பெற்றபோதும் மகிழ்ச்சியடைந்தோம், இன்று எங்களைக் கண்ணீரில் விட்டுவிட்டு அவன் சென்றுவிட்டான் என்று லட்சுமி கண்கலங்கியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T11:50:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 ஆம் திகதிக்கு முன்னர் நாமல் ராஜபக்ச கைது : அவரே வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-inside-before-the-12th-1788262543"></link>
            <id>https://ibctamil.com/article/namal-inside-before-the-12th-1788262543</id>
            <summary type="text">எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள மக்கள் பேரணிக்கு முன்னர் தன்னைக் கைது செய்ய அரசாங்கம் முயன்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள மக்கள் பேரணிக்கு முன்னர் தன்னைக் கைது செய்ய அரசாங்கம் முயன்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>
சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
</p><p>
12ஆம் திகதி அனுராதபுரத்திற்கு மக்கள் கூட்டம் வருவதைத் தடுப்பதற்காக, அரசாங்கம் ஒரு பெரும் ஒடுக்குமுறையைத் தொடங்கியுள்ளதாகவும், தன்னைச் சிறையில் அடைக்க அரசாங்கம் தயங்காது என்றும் அவர் கூறினார்.</p><h2>ராஜபக்சக்களின் பாரம்பரிய உடை</h2><p>ஜேவிபி-யின் அரசியல் பாணியை விமர்சித்த அவர், கொலை அல்லது தீவைப்பு மூலம் ஒருபோதும் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்க மாட்டேன் என்று வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/242c0f51-15ba-40c3-8f4e-c982784aa768/26-6a96bbafd9fd5.webp' /></p><p> </p><p>மேலும், ராஜபக்சக்களின் பாரம்பரிய உடையான 'சால்வை' குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தங்கள் ஆடைகளை மாற்றிக்கொள்ளும் அரசியல்வாதிகளைப் போலல்லாமல், தனது அடையாளத்தையோ அல்லது பாரம்பரிய உடையையோ ஒருபோதும் மாற்றிக்கொள்ள மாட்டேன் என்றும் கூறினார்.</p><p></p><p>

</p><h2>கடுமையான மன அழுத்தத்தில்&nbsp;நீதி அமைச்சர்</h2><p>"சிலர் வெற்றிபெறும்போது ஒரு விதமாகவும், தோல்வியடையும்போது மற்றொரு விதமாகவும் நடந்துகொள்கிறார்கள். மக்கள் எதிர்ப்பு இருக்கும்போது, ​​அவர்கள் வேறுவிதமாக நடந்துகொள்கிறார்கள். ஆனால் நாங்கள் எங்கள் அடையாளத்தைப் பாதுகாத்துக்கொண்டு நேர்மையாக அரசியல் செய்கிறோம். எனவே, எங்கள் பாணியைக் களைவது எளிதல்ல," என்று நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/033ab7d3-4023-4a12-853b-c70a6b7e4fb2/26-6a96bbaf3321e.webp' /></p><p>
</p><p>
அரசியலமைப்பின் 22வது திருத்தம் அரசாங்கத்தின் தனிப்பட்ட நலன்களின் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது என்று கூறினார். இதன் காரணமாக நீதி அமைச்சர் கூட கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறார் என்றும், அதனால்தான் அவர் சமீபகாலமாக ஊடகங்களுக்கு முன்னால் தோன்றவில்லை என்றும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T11:49:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[அது நான் கிடையாது.. AI விடியோவால் மன வேதனையில் நடிகை ஷாலினி பாண்டே..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/shalini-pandey-opens-up-about-her-deep-fake-video-1788262250"></link>
            <id>https://viduppu.com/article/shalini-pandey-opens-up-about-her-deep-fake-video-1788262250</id>
            <summary type="text">ஷாலினி பாண்டேஅர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் தான் நடிகை ஷாலினி பாண்டே. இன்ஸ்டாகிராமில் ஆக்டி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஷாலினி பாண்டே</h2><p>அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் தான் நடிகை ஷாலினி பாண்டே. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஷாலினி, கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். சமீபத்தில் மேலாடை இல்லாதபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e01a0ee-ca23-42e5-b1ff-0a065810ee5c/26-6a96b76c54ab1.webp' /></p><p>இதனையடுத்து ஷாலினி பாண்டேவின் மேல் அங்கத்தை மறைத்தபடி வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வைரலானது. அது ஏஐ-ஆ அல்லது அவரே வெளியிட்ட வீடியோவா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.</p><p> இந்நிலையில், அந்த ஆபாச வீடியோ பற்றிய விளக்கத்தை பகிர்ந்துள்ளார். அதில், முழுவதும் போலியாக சித்தரிக்கப்பட்ட AI விடியோவால் நான் ரொம்பவே மனம் பாதிக்கப்பட்டுள்ளேன். </p><p>இப்படியொரு டெக்னாலஜியை இவ்வளவு கேவலமாக பயன்படுத்த முடியுமா? என்பதே அதிர்ச்சியாகவுள்ளது. அந்த வீடியோவில் இருப்பது நான் கிடையாது, அதை யாரும் பார்க்கவோ, டவுன்லோடு செய்யவோ, ஷேர் செய்யவோ வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று விளக்கத்தை அளித்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DcsvwcTPkwK/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DcsvwcTPkwK/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DcsvwcTPkwK/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Shalini Pandey (@shalzp)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-01T11:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணத்தை மீறிய உறவில் மனைவி: வீடியோ மூலம் நிரூபித்த கணவருக்கு சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/taiwan-man-jailed-who-captured-wife-cheating-1788262969"></link>
            <id>https://news.lankasri.com/article/taiwan-man-jailed-who-captured-wife-cheating-1788262969</id>
            <summary type="text">Taiwan man jailed who captured wife cheating with vacuum video: தைவானில் மனைவி ஏமாற்றுவதை படம்பிடித்த கணவர் தனியுரிமையை மீறியதாக சிறையில் அடைக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Taiwan man jailed who captured wife cheating with vacuum video: தைவானில் மனைவி ஏமாற்றுவதை படம்பிடித்த கணவர் தனியுரிமையை மீறியதாக சிறையில் அடைக்கப்பட்டார். </p><p>

தைவானில் ரோபோட் Vacuum Cleaner மூலம் தன் மனைவி ஏமாற்றுவதை படம்பிடித்த நபருக்கு, தனியுரிமையை மீறியதாக சிறை தண்டனை விதிக்கப்பட்டது.&nbsp;</p><h2>கணவருக்கு சந்தேகம்&nbsp;</h2><p>

தைவானைச் சேர்ந்த நபர் ஒருவர், தன் மனைவியின் விடுமுறை இல்லத்தில் தொடர்பில்லாத பல் துலக்கும் தூரிகையை கண்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63d88aa9-d616-4f92-9e51-8d39cf7a559b/26-6a96bb6769d2f.webp' />&nbsp;</p><p></p><p>
இதனால் மனைவி மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட,வெளிப்புறத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். 

அதில், ஒருவர் தனது மனைவியை மீண்டும் மீண்டும் வீட்டில் கொண்டுபோய் விடுவது தெரியவந்தது. </p><p>

அதனைத் தொடர்ந்து, பல மாதங்கள் கழித்து டிசம்பர் 2023-யில் அந்தத் தம்பதியினர் வசித்து வந்த தனது பெற்றோர் வீட்டில் இருந்த செயலி மூலம், அந்த விடுமுறை இல்லத்தில் இருந்த ரிமோட் Vacuum Cleaner-ஐ அவர் இயக்கினார்.
</p><p>
ஆனால், அந்த சாதனத்தின் Audio செயல்பாட்டை இயக்க முயன்றபோது, அதற்கு பதிலாக Live கமெராவை இயக்கியுள்ளார்.</p><p> அதில் அவரது மனைவி தனது காதலருடன் இருப்பது பதிவானதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் பத்திரிக்கை கூறியது.</p><h2>

வீடியோவாக பதிவு</h2><p>குறித்த கணவர், தனது மனைவி மற்றும் அவரின் காதலர் இருவரும் ஆடையை களைந்து, அந்த இல்லத்தை சுற்றி நடமாடுவதை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
</p><p>
பின்னர் தனது விவாகரத்து நடவடிக்கைகளின்போது, அந்த வீடியோ ஆதாரமாக சமர்ப்பித்த அவர், தனது மனைவியிடம் இருந்து 46,600 பவுண்டுகளுக்கும் சற்று அதிகமான தொகையை இழப்பீடாக கோரினார்.
</p><p>
அதனை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம், குறித்த கணவரின் மனைவி 11,600 பவுண்டுகளுக்கும் சற்று அதிகமான (500,000 தைவான் டொலர்கள்) அதிகமான தொகையை செலுத்த உத்தரவிட்டது. </p><p>

என்றாலும், குறித்த பெண் தனது தனியுரிமையை கணவர் மீறிவிட்டதாகக் கூறி, குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். </p><h2>

ஐந்து மாத சிறை</h2><p>பின்னர் அந்த ஆதாரம் ஏற்கனவே உரிமையியல் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கணவர் வாதிட்டார்.&nbsp;</p><p>

ஆனாலும், குற்றவியல் நீதிமன்றம் அவரது வாதத்தை நிராகரித்து, திருமணக் கடமைகள் ஒரு தனிநபரின் தனியுரிமை உரிமையை விட மேலானவை அல்ல என்று நீதிமன்றம் கூறியது.
</p><p>
அத்துடன் கணவருக்கு ஐந்து மாத சிறைத்தண்டனையும், மனைவிக்கு 3,500 பவுண்டுகள் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06aebc86-04b1-4e01-83d2-0c48be8a5cad/26-6a96bb669ed9f.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> </b>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T11:44:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை – சீனா இடையே புதிய குடிவரவு ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-immigration-agreement-sri-lanka-and-china-1788262812"></link>
            <id>https://jvpnews.com/article/new-immigration-agreement-sri-lanka-and-china-1788262812</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கை – சீனா இடையே புதிய குடிவரவு ஒப்பந்தம் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கை – சீனா இடையே புதிய குடிவரவு ஒப்பந்தம் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. </p><p>

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் சீனக் குடியரசின் தேசிய குடிவரவு நிர்வாகத்திற்கும் இடையிலான குடிவரவுக் கட்டுப்பாட்டு ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f71b117-8e51-424a-b7c1-877c5bb0f0ac/26-6a96b99e12a42.webp' /></p><p> </p><p>



இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் சீனக் குடியரசின் தேசிய ; குடிவரவு நிர்வாகத்திற்கும் இடையிலான குடிவரவுக் கட்டுப்பாட்டு ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக இருதரப்பினர்களுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


இரு நாடுகளுக்கிடையிலான நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் மட்டத்தில் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகள் மற்றும் விஜயங்களுக்கான வசதிப்படுத்தல்களை மேற்கொள்ளல்.
</p><p>


அத்துடன், முக்கியமான உத்தியோகபூர்வ தகவல்கள் மற்றும் புலன் தகவல்கள், முனைப்பான மற்றும் சாதகமான அணுகுமுறைகள் ஊடாக இருநாடுகளுக்கிடையிலான வர்த்தகங்கள், முதலீடுகள், சுற்றுலாத்துறை, தொழிநுட்ப, விஞ்ஞானத் துறைகளில் ஈடுபடுகின்ற பிரஜைகள் தொடர்பான விடயதானங்களுக்கான விசாக்கள்,</p><p></p><p> குடிவரவு மற்றும் குடியகல்வு விவகாரங்கள் தொடர்பான வசதிப்படுத்தல்கள், திட்டமிட்ட குற்றச் செயல்களாகக் கருதப்படும் மனித வியாபாரம் மற்றும் மனிதக் கடத்தல்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் அலுவலர்களின் அறிவு, </p><p>திறன் மற்றும் இயலளவுகளை அபிவிருத்தி செய்வதற்கான செயலமர்வுகளை ஒழுங்குபடுத்தல் போன்ற நோக்கங்களை அடைவதற்கு உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p> 



மேலும் இந்த உத்தேச ஒப்பந்த வரைபுக்கு வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் சட்டமா அதிபரின் ஒப்புதல் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T11:37:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணம் செய்ய வற்புறுத்தல் ; கர்ப்பிணிப் பெண்ணின் உடல் பாகங்கள் சூட்கேஸில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pregnant-woman-murdered-after-being-forced-marry-1788262507"></link>
            <id>https://jvpnews.com/article/pregnant-woman-murdered-after-being-forced-marry-1788262507</id>
            <summary type="text">சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாகங்கள் சூட்கேஸில் அடைக்கப்பட்டு ஆக்ராவிற்கு அனுப்பப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாகங்கள் சூட்கேஸில் அடைக்கப்பட்டு ஆக்ராவிற்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>காவல்துறையினரின் விசாரணையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மாணிக் உத்தின் லஸ்கர் மற்றும் அவரது மனைவி பகபதி மாஜி ஆகியோர் இந்தக் கொலையில் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளது.
</p><p>
குறித்த பெண் தங்களைத் திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்தக் கொலை இடம்பெற்றதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ead16e40-e811-4819-ab52-356cad5c6f51/26-6a96b86c86f23.webp' /></p><p>சம்பவத்தன்று குறித்த பெண் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரை மயக்கமடையச் செய்து, பின்னர் கொலை செய்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
கொலையின் பின்னர், உடலை மறைத்து அப்புறப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. </p><p>பின்னர் உடல் பாகங்கள் சூட்கேஸில் அடைக்கப்பட்டு ஆக்ராவிற்கு அனுப்பப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>
சம்பவத்தின் பின்னணி, கொலைக்கான காரணம் மற்றும் உடல் பாகங்கள் ஆக்ராவிற்கு அனுப்பப்பட்டமை தொடர்பில் மேலதிக தகவல்களை காவல்துறையினர் திரட்டி வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T11:35:22+00:00</updated>
        </entry>
    </feed>
