<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-29T14:40:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் வீடு நிர்மாணத்தின்போது நிகழ்ந்த அனர்த்தம் : சம்பவ இடத்தில் பலியான இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/youth-dies-after-pillar-collapses-in-batticaloa-1785335197"></link>
            <id>https://ibctamil.com/article/youth-dies-after-pillar-collapses-in-batticaloa-1785335197</id>
            <summary type="text">மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்று நிர்மாண பணியின்போது தூண் இடிந்து
வீழ்ந்ததில் கட்டிடத் தொழிலாளியான இளைஞன் இன்று புதன்கிழமை (29) பிற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்று நிர்மாண பணியின்போது தூண் இடிந்து
வீழ்ந்ததில் கட்டிடத் தொழிலாளியான இளைஞன் இன்று புதன்கிழமை (29) பிற்பகல் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி
காவல்துறையினர் தெரிவித்தனர்.
</p><p>
மட்டக்களப்பு ஜெயந்திபுரம், யாட் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.</p><h2>தூண் இடிந்து வீழ்ந்து உயிரிழப்பு&nbsp;</h2><p>காத்தான்குடி நூரானியா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு
வரும் புதிய வீடொன்றில் சம்பவ தினமான இன்று பிற்பகல் குறித்த இளைஞன்
கட்டுமானப் பணியினை மேற்கொண்டு வந்த போது தூண் இடிந்து அவர் மீது
விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9a814db-9305-43c3-82c0-51ac4d0ad87e/26-6a6a108adf5c4.webp' /></p><p>

</p><h2>காத்தான்குடி காவல்துறையினர்&nbsp;மேலதிக விசாரணை</h2><p>இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத
பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான
நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b136a29-c0f7-4002-bba6-d374020b9473/26-6a6a108b9ea23.webp' /></p><p>
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T14:39:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/british-ex-police-woman-again-jailed-for-lied-1785335557"></link>
            <id>https://news.lankasri.com/article/british-ex-police-woman-again-jailed-for-lied-1785335557</id>
            <summary type="text">பிரித்தானியாவில் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக பொய் கூறிய பெண் காவலர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு 

கென்ட் மாகாணத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக பொய் கூறிய பெண் காவலர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். </p><h2>பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு </h2><p>

கென்ட் மாகாணத்தின் மெய்ட்ஸ்டோனைச் சேர்ந்த 35 வயது லாரென் எவன்ஸ். முன்னாள் காவலரான இவர், ப்ரோம்லி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5c74a02-a168-4f40-8a0b-f44228acd731/26-6a6a0f904ee45.webp' />&nbsp;</p><p></p><p>
கடந்த 2023-யில் தனது பணிக்கு தாமதமாக சென்ற எவன்ஸ், சக ஊழியர்களிடம் தான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கூறியிருக்கிறார். </p><p>

காரில் வந்த காவலர் அலெக்ஸ் வாட்ஸன், தன்னை தடுத்து நிறுத்தி தனது உடலை அந்தரங்கமாக சோதனையிட்டதாக உணர்ச்சிப்பூர்வமாக எவன்ஸ் விவரித்துள்ளார்.
</p><p>
அதன் அடிப்படையில் காவலர் அலெக்ஸ் வாட்ஸன், சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டு வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். 

மேலும் 23 மணிநேரம் காவலில் வைக்கப்பட்டு, விசாரணைக்கு பின் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். </p><p>

ஆனால், பின்னர் மேற்கொள்ளப்பட்ட CCTV மற்றும் ANPR பகுப்பாய்வுகளில் எந்தத் தடையும் ஏற்படவில்லை என்பதும், அவரது வாகனம் நெடுஞ்சாலையை விட்டு வெளியேறவில்லை என்பதும் நிரூபிக்கப்பட்டதால், அவர் விடுவிக்கப்பட்டார். </p><h2>

சிறை தண்டனை</h2><p>அதே சமயம் லாரென் எவன்ஸ் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதி நடவடிக்கையைத் திசை திருப்பிய குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டார். </p><p>

பணிக்கு தாமதமாக வந்ததை மறைக்க அவர் இவ்வாறு பொய் குற்றச்சாட்டு கூறியது தெரிய வந்ததைத் தொடர்ந்து, லாரென் எவன்ஸுக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
</p><p>

இந்த நிலையில், லாரென் எவன்ஸின் தண்டனை காலம் இரண்டு ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. </p><p>முன்னதாக சிறையில் இருந்து வெளியே வந்த அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

'அளவுக்கு மீறிய மென்மையான தண்டனை' திட்டத்தின் கீழ் மறுஆய்வு செய்யப்பட்ட பிறகு, மேல்முறையீட்டு நீதிமன்றம் தற்போது அவரது தண்டனையை அதிகரித்தது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><i><b>WHATSAPP CHANNEL </b></i></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T14:33:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குவாண்டஸ் புதிய சாதனை ; 24 மணி 24 நிமிடங்கள் தொடர்ச்சியாக பயணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/record-qantas-continuous-fly-24-hours-24-minutes-1785330451"></link>
            <id>https://jvpnews.com/article/record-qantas-continuous-fly-24-hours-24-minutes-1785330451</id>
            <summary type="text">&amp;nbsp; அவுஸ்திரேலியாவின் குவாண்டஸ் நிறுவனம் , உலகின் நீண்ட தூர விமான சேவை வழங்கும் முயற்சியாக, தொடர்ந்து 24 மணிநேரம் 24 நிமிடங்கள் எயார்பஸ் விமானத்தை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அவுஸ்திரேலியாவின் குவாண்டஸ் நிறுவனம் , உலகின் நீண்ட தூர விமான சேவை வழங்கும் முயற்சியாக, தொடர்ந்து 24 மணிநேரம் 24 நிமிடங்கள் எயார்பஸ் விமானத்தை பறக்க விட்டு சாதனை படைத்துள்ளது.</p><p>



பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வணீக ரீதியிலான இந்த எயார்பஸ் ஏ350 ரக விமானம், கடந்த கடந்த 27ஆம் திகதி மாலை 5.27 மணிக்கு மெல்போர்னில் இருந்து புறப்பட்டு, நேற்று (28) மாலை பிரான்சின் டுலூஸ் நகருக்கு சென்றடைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d48095cd-d9a3-4423-a768-14e4c07ded70/26-6a69fb14e42cc.webp' /></p><h2>&nbsp;மெல்போர்னில் இருந்து பிரான்சின் டுலூஸ் நகருக்கு ....</h2><p> </p><p>



மெல்போர்னில் இருந்து புறப்பட்டு, பசிபிக் பெருங்கடல், அமெரிக்கா, கனடா மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து 23,075 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்தது. சுமார் 24 மணிநேரம் 24 நிமிடங்கள் தொடர்ந்து வானில் பறந்துள்ளது.

 இதன்மூலம், அதிக தூரம் வானத்தில் பறந்து சாதனையை அது படைத்துள்ளது.</p><p></p><p>
</p><p>


அதேவேளை 2005ஆம் ஆண்டு ஹொங்கொங் - லண்டன் சோதனைப் பயணத்தின்போது, போயிங் 777-200எல்ஆர் விமானம் படைத்த 22 மணி நேரம் 42 நிமிடங்கள் என்ற முந்தைய சாதனையை இது முறியடித்துள்ளது.
</p><p>


அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரையிலிருந்து லண்டன் மற்றும் நியூயோர்க் நகரங்களுக்கு 2027ஆம் ஆண்டு முதல் நீண்ட விமான சேவையைத் தொடங்குவதை நோக்கமாகக் கொண்ட குவாண்டஸ் நிறுவனத்தின் 'புராஜெக்ட் சன்ரைஸ்' திட்டத்திற்கு இச்சாதனைப் பயணம் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>


 எயார்பஸ் ஏ350-1000 யுஎல்ஆர் (Ultra Long Range) என்ற பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த விமானத்தில், தொலைதூர பயணங்களை சாத்தியப்படுத்தும் விதமாக, கூடுதலாக 20,000 லிட்டர் எரிபொருள் டேங்க் பொருத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-29T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆபரேஷன் நல்லபடியாக நடக்க முத்து செய்த காரியம், கண்ணீரில் மீனா... சிறகடிக்க ஆசை சீரியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/siragadikka-aasai-serial-july-30-episode-promo-1785311557"></link>
            <id>https://cineulagam.com/article/siragadikka-aasai-serial-july-30-episode-promo-1785311557</id>
            <summary type="text">சிறகடிக்க ஆசைவிஜய் தொலைக்காட்சியில் குடும்ப கதையாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை. இப்போது கதையில் 3 ஜோடியின் பிரச்சனைகள் தான் ஓட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சிறகடிக்க ஆசை</h2><p>விஜய் தொலைக்காட்சியில் குடும்ப கதையாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை. இப்போது கதையில் 3 ஜோடியின் பிரச்சனைகள் தான் ஓடிக் கொண்டிருக்கிறது.</p><p>முத்து-மீனா, சிந்தாமணியால் வயிற்றில் கத்தி குத்து வாங்கியதால் மீனாவிற்கு குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது, இதனால் மருத்துவர் அவருக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்கிறார். அப்படி ஆபரேஷன் செய்தால் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளதாக கூற இருவரும் ஆபரேஷன் செய்ய ஒப்புக் கொள்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/356a3ae3-3ebf-4ef8-82e2-cdca326348c8/26-6a69b40c7a5a7.webp' /></p><p>அடுத்து அருண்-சீதா, அருண் சீதா என்னை தேடி வருவார் என இருக்க, முத்துவோ சீதாவிடம் அவர் வந்து மன்னிப்பு கேட்கும் வரை அனுப்ப மாட்டேன் என ஒரு முடிவோடு இருக்கிறார்.</p><p>கடைசியாக மனோஜ், இவரது பிரச்சனை தீராப் பிரச்சனையாக உள்ளது. ரோஹினியிடம் இப்போதைக்கு அது என் குழந்தை தான் என யாரிடமும் கூற வேண்டாம் என கூறியுள்ளார். அதேபோல் கனகா வீட்டிலும் இப்போதைக்கு என்னால் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட முடியாது என்று கூறிவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4b30987-4f87-49d7-812f-968d176dc49d/26-6a69b40d3f949.webp' /></p><p>மனோஜ் கல்யாணம் எப்போது குடும்பத்திற்கு தெரிய வரும், மனோஜ் குழந்தை தான் என எப்போது உறுதியாகும் என தெரியவில்லை.</p><p>இதற்கு இடையில், மனோஜ் மீது சந்தேகம் கொண்ட விஜயா, ரோஹினி வயிற்றில் இருக்கும் கருவை அழிக்க பிளான் போடுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b3d649c-0c63-406b-9ff9-b90ff56b3c92/26-6a69b40e1733a.webp' /></p><h2>புரொமோ</h2><p>சீரியல் கதைக்களம் ஒரே பிரச்சனையாக செல்ல நாளை எமோஷ்னல் காட்சிகள் இடம்பெற இருக்கின்றன. அதாவது மீனாவிற்கு உடல்நிலை சரியாக வேண்டும் என முத்து சில தினங்களாக&nbsp;அங்கப்பிரதட்சணம் செய்கிறாராம்.</p><p>அவர் இந்த பரிகாரம் செய்யும் போது மீனா பார்த்து கண்ணீர்விட்டு அழுதுகொண்டே நிற்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63511857-c4e0-43ad-838b-b7567ab67924/26-6a69b40b77ded.webp' /></p>]]></content>
            <updated>2026-07-29T14:20:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடகங்களில் பேசுபொருளான கோட்டாபய ராஜபக்சவின் புதிய தொலைபேசி ஒலிப்பதிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-telephone-call-1785331643"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-telephone-call-1785331643</id>
            <summary type="text">&amp;nbsp;சமூக செயற்பாட்டாளரான ஒருவர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் தொலைபேசியில் உரையாடிய ஒலிப்பதிவு ஒன்று வெளிவந்துள்ளது.குறித்த ஒலிப்பதிவு இன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சமூக செயற்பாட்டாளரான ஒருவர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் தொலைபேசியில் உரையாடிய ஒலிப்பதிவு ஒன்று வெளிவந்துள்ளது.குறித்த ஒலிப்பதிவு இன்று சமூக ஊடகங்களில் பேசு பொருளாக்கப்பட்டுள்ளது.</p><p>அந்த உரையாடலில் கோட்டாபய ராஜபக்ச இரு ஓய்வூதியங்கள் பெற்றுக் கொள்வதாக தெரியவந்துள்ளது.மேலும் இராணுவத்தில் 20 வருடங்கள் சேவை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். </p><p>குறித்த கலந்துரையாடலை சான் கனேகொட என்பவரே&nbsp; நடத்தியுள்ளார்.குறித்த தொலைபேசி உரையாடலில் பேசப்பட்ட விடயங்கள்...</p><h2>



</h2><p></p><h2>தொலைபேசி உரையாடலிலுள்ள விடயங்கள்</h2><p>நபர்:ஹலோ ஹலோ கோட்டாபய சேரா? உங்களுடைய பென்ஷன் எந்தக் காலத்தில் இருந்து கிடைக்கிறது என்று நாட்டிற்குச் சொல்லுங்கள்.
</p><p>
கோட்டா: என்னுடைய பென்ஷன் எந்தக் காலத்தில் இருந்தா? 90-லிருந்து. </p><p>


நபர்: 91 ஆம் ஆண்டு நீங்கள் விலகிப் போனீர்கள் அல்லவா மெடிக்கல் லீவ் போட்டு?
</p><p>
கோட்டா: என்ன பைத்தியக்காரத்தனம் இது? நான் மெடிக்கல் எதுவும் போடவில்லை. நான் 20 ஆண்டுகள் வேலை செய்தே ஓய்வு பெற்றேன். இராணுவத்திலிருந்து மெடிக்கல் போனது தவறான தகவல்கள்....அப்படியென்றால் யார் மெடிக்கல் போட்டது என்று நீங்கள் சொல்கிறீர்கள்? நான் மெடிக்கல் போடவில்லை. வேண்டுமானால் போய் ஆர்மி ஹெட் குவாட்டஸில் இதை கேட்டுப் பாருங்கள். </p><p>

</p><p>நபர்: அப்படியென்றால் ஓய்வுபெற்ற ஜனாதிபதிக்கான சம்பளத்தை நீங்கள் பெற்றுக்கொள்வதில்லையா?</p><p>
கோட்ட:ஓய்வு பெற்ற ஜனாதிபதிக்கான சம்பளமும் தருகிறார்கள். அதுவல்ல விடயம். என்னுடைய பெரிய சம்பளம் இராணுவத்தில் தான் இருக்கிறது. </p><p>

நபர்: லெப்டினன்ட் கர்னல் தரத்தின் கீழான ஓய்வூதியம்.</p><p>

</p><p>கோட்டா:ஆமாம்.</p><p>நபர்: அப்படியென்றால் ஜனாதிபதி என்ற முறையிலும் பென்ஷன் எடுக்குறீர்கள் தானே? </p><p>

கோட்டா: ஆமாம்.நான் பாட்டுக்கு என் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்...
</p><p>
நபர்: அது சரி ,சரி. நாட்டின் மக்களின் வரிப்பணத்தில் தானே உங்களுடைய பென்ஷனும் வழங்கப்படுகிறது? ஜனாதிபதி பென்ஷனை எடுப்பதற்கு நீங்கள் தகுதியானவரா? நாட்டிற்கு நீங்கள் என்ன சேவை செய்தீர்கள்?
</p><p>

</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/314d27cd-2a85-4cb4-9957-4eb92db66982/26-6a69ffbe02cfa.webp' /></p><p>கோட்டா:அது எனக்குத் தெரியாது. அதை நீங்கள் தீர்மானியுங்கள்.
</p><p>
நபர்: நாட்டை வக்குரோத்து நிலைமைக்கு கொண்டு சென்றதற்காகவா பென்ஷன் கொடுக்கிறார்கள்?
</p><p>
கோட்டா: நான் வக்குரோத்து நிலைமைக்கு தள்ளவில்லை. அரகலய போராட்ட காரர்களே அவ்வாறு செய்தனர்..
</p><p>
நபர்: போராட்டக்காரர்கள் இல்லையே முழு நாடுமே வீதிக்கு இறங்கியது.
</p><p>
கோட்டா:சரி அது வேறொரு கதை. நீங்கள் இராணுவத்தில் வேலை செய்திருக்கிறீர்களா?
</p><p>
நபர்:நான் இராணுவத்தில் வேலை செய்யவில்லை.
</p><p>
கோட்டா: 20 ஆண்டுகள் இராணுவத்தில் வேலை செய்வது என்பது இலேசான காரியமா?
</p><p>
நபர்:எந்த வருடத்திலிருந்து எந்த வருடம் வரை நீங்கள் இராணுவத்தில் இருந்தீர்கள்? 91லா?
</p><p>
கோட்டா: 20 ஆண்டுகள் 90களில் அல்ல 70 ஆம் ஆண்டிலிருந்து. அது உங்களுக்கு தெரியாதா?
</p><p>
நபர்: முதலில் ரைபிள் அணிக்கு சென்று அதற்குப் பிறகு சிங்க ரெஜிமென்ட்டிற்குச் சென்று அதற்குப் பின்னர் ஜீஆருக்கு வந்தீர்கள்.
</p><p>
கோட்டா:ஆமாம் அதை மட்டும் கேட்காதீர்கள் நான் என்ன செய்திருக்கிறேன் என்று போய் பாருங்கள். குறைந்தபட்சம் அதற்காவது ஒரு மரியாதை இல்லையா?
</p><p>
நபர்: மரியாதை இருக்கிறது.
</p><p>
கோட்டா:எனக்குத் தொந்தரவு செய்யாதீர்கள் என்றுதான் நான் கேட்கிறேன் தயவுசெய்து என்னிடம் பேசாதீர்கள்...
</p><p>
நபர்:இல்லை நீங்கள் பொதுமக்களின் வரிப்பணத்தில் தானே பென்ஷன் எடுக்கிறீர்கள்? நீங்கள் மக்களுக்குப் பதில் சொல்லுங்கள்.
</p><p>
கோட்ட: அது என் வேலை இல்லை.நான் 20 வருடங்கள் இராணுவத்தில் கடுமையாக கஷ்டப்பட்டு எடுத்த பென்ஷன்.சும்மா நீங்கள் வரிகள் பற்றி கதைக்க வேண்டாம்.&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T14:17:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோர்டான் தாக்குதலுக்கு பதிலடி : ஈரான் மீது கடுமையான தாக்குதல் : ட்ரம்ப் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-says-us-will-be-hitting-iran-hard-1785333732"></link>
            <id>https://ibctamil.com/article/trump-says-us-will-be-hitting-iran-hard-1785333732</id>
            <summary type="text">&amp;nbsp;ஜோர்டானில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது தெஹ்ரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்கா, ஈரான் மீது &quot;கடுமையாக&quot; தாக்குதல் நடத்தும் என்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஜோர்டானில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது தெஹ்ரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்கா, ஈரான் மீது "கடுமையாக" தாக்குதல் நடத்தும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்&nbsp;இன்று புதன்கிழமை தெரிவித்தார்.</p><p>ஃபாக்ஸ் நியூஸுடனான ஒரு தொலைபேசி உரையாடலில், ஈராக்கில் ஈரான் ஆதரவு பெற்ற போராளிக் குழுக்கள் மீது இரவோடு இரவாக அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் ஈராக் அரசாங்கத்துடன் "ஒருங்கிணைந்தவை" என்று ட்டிரம்ப் கூறினார்.</p><h2>&nbsp;"அவர்கள் அடி வாங்கப் போகிறார்கள்"</h2><p>ஜோர்டான் மீதான ஈரானின் தாக்குதலைத் தொடர்ந்து, "நாங்கள் அவர்களை (ஈரானியர்களை) கடுமையாகத் தாக்குவோம்," என்றும், "அவர்கள் அடி வாங்கப் போகிறார்கள்" என்றும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b1f0a29-2344-4938-b702-b5b814bf795d/26-6a6a0a596be69.webp' /></p><p>&nbsp;ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் குறித்து, ட்ரம்ப், "அவர்கள் தொடர்ந்து பேச நாங்கள் அனுமதிப்போம்," என்று கூறினார்.</p><p>

இந்த வாரத் தொடக்கத்தில், அமெரிக்கா ஈரானுடன் "நல்ல பேச்சுவார்த்தைகளை" நடத்தி வருவதாகவும், ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு "நல்ல வாய்ப்பு" இருப்பதாகவும் ட்ரம்ப் கூறியிருந்தார், ஆனால் பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் இராணுவ நடவடிக்கை மீண்டும் தொடங்கப்படலாம் என்றும் எச்சரித்திருந்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T14:12:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவராசா அனோஜனை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்குமாறு கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/batti-religious-union-punishment-in-saudi-youth-1785333222"></link>
            <id>https://tamilwin.com/article/batti-religious-union-punishment-in-saudi-youth-1785333222</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம், சவூதி அரேபியாவில் தண்டனை
விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் தொடர்பான நிலைமையை ஆழ்ந்த
கவலையுடன் அவதானி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம், சவூதி அரேபியாவில் தண்டனை
விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் தொடர்பான நிலைமையை ஆழ்ந்த
கவலையுடன் அவதானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
</p><p>
அந்த அமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எந்தவொரு மதத்தையும், அதன் புனித ஆளுமைகளையும், மத நம்பிக்கைகளையும்
அவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்பதை எமது ஒன்றியம் தெளிவாக
ஏற்றுக்கொள்கின்றது.</p><p></p><h2>ஆதரவு</h2><p>அத்துடன் அனைத்து மதங்களும் பரஸ்பர மரியாதை, மனித கண்ணியம்,
சகிப்புத்தன்மை மற்றும் சமாதானத்தை போதிக்கின்றன என்பதனையும் இங்கு
வலியுறுத்துகிறோம்.
</p><p>
எனவே மத வெறுப்பைத் தூண்டும் வகையிலான கருத்துகளுக்கும் செயல்களுக்கும் எமது
ஒன்றியம் என்றுமே ஆதரவு வழங்குவதில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9517da91-f159-4e98-9c60-7126eaddfebc/26-6a6a06caeb272.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, குறித்த சம்பவத்தில் சிவராசா அனோஜன் தனது பதிவை குறுகிய நேரத்திலேயே
நீக்கி, தனது தவறினை ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கோரியிருந்ததாக
அறியமுடிகின்றது.
</p><p>
இந்நிலையிலும், அவரது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் மனவேதனையையும் அவர்களது
எதிர்கால வாழ்வாதாரப் பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு, மனிதாபிமான
அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்துகிறோம்.</p><p></p><h2>கோரிக்கை</h2><p>
</p><p>
எனவே, இலங்கை அரசாங்கமானது தனது இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக சவூதி அரேபிய
அரசாங்கத்துடன் கலந்துரையாடி, சிவராசா அனோஜனுக்கு வழங்கப்பட்டுள்ள
தண்டனையிலிருந்து விலக்களிக்க கூடிய வகையில் ஆகக்கக்கூடிய நிவாரணம் ஏதேனும்
வழங்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு தயவுடன்
கேட்டுக்கொள்கிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21283100-531e-451a-a962-618843e1f475/26-6a6a06ca2fb5a.webp' /></p><p>

அதேவேளை, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அனைவரும் தாம் வசிக்கும்
நாடுகளின் சட்டங்கள், கலாசாரங்கள்,பண்பாடுகள்,நம்பிக்கைகள் மற்றும் மத
உணர்வுகளுக்கு முழுமையான மதிப்பினைச் செலுத்தி, குறிப்பாக சமூக வலைத்தளங்களை
மிகுந்த பொறுப்புடனும் விழிப்புணர்வுடனும் பயன்படுத்த வேண்டும் என்பதையும்
வலியுறுத்துகிறோம்.</p><p>

மேற்படி சம்பவம் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும்
மேலும் வலுப்படுத்தும் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும்
பிரார்த்தனையுமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T14:10:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆந்திராவிலும் பாமக, ஐயா வாழும் காலத்திலே ஆட்சி - அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/anbumani-ramadoss-says-pmk-to-expand-to-andhra-1785333558"></link>
            <id>https://ibctamilnadu.com/article/anbumani-ramadoss-says-pmk-to-expand-to-andhra-1785333558</id>
            <summary type="text">ஆந்திராவிலும் பாமக தொடங்கப்பட உள்ளதாக அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.பாமக பொதுக்குழு கூட்டம் 

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் பாமக தலைவர் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆந்திராவிலும் பாமக தொடங்கப்பட உள்ளதாக அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.</p><h3>பாமக பொதுக்குழு கூட்டம்</h3><p> 

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கடந்த ஒரு ஆண்டாக நிலவி வந்த கருத்து வேறுபாடு சமீபத்தில் முடிவுக்கு வந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5034d1a3-78a8-4629-b038-4ed018f262a4/26-6a6a07380ea68.webp' /></p><p>
தனது 88வது பிறந்த நாள் நிகழ்வில் பேசிய ராமதாஸ், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், இனி அரசியலை அன்புமணி கவனித்துக்கொள்வார் எனவும் அறிவித்தார். </p><p>

இந்நிலையில், இன்று மாமல்லப்புரத்தில் பாமகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக வடிவேல் ராவணனும், பாமக தலைவராக அன்புமணி ராமதாஸும், பொருளாளராக திலகபாமாவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p><h3>ஆந்திராவில் பாமக</h3><p>
இந்த கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், "தமிழ்நாட்டில் இந்த ஆண்டு சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிப்பு சட்டமன்றத்திலே ஆளுநர் உரையில் வந்திருக்கிறது என்றால், அதற்கு முழு காரணம் ராமதாஸும், பாட்டாளி மக்கள் கட்சியும் தான்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd235b74-02e8-4a8a-ae03-8587653bf6e9/26-6a6a0738b6a15.webp' /></p><p>பாமகவில் நிரந்தர தலைவர் என யாரும் இல்லை. நம்முடைய கட்சி ஜனநாயகக் கட்சி. இனி பேசும்போது என்னை நிரந்தர தலைவர் என யாரும் குறிப்பிட வேண்டாம். </p><p>

மருத்துவர் ஐயா வாழும் காலத்திலேயே பாமக தமிழ்நாட்டை ஆள வேண்டும். 2031-ல் பாமக ஆட்சி அமைக்கும் வகையில் நிர்வாகிகள் செயல்பட வேண்டும்.</p><p> 

இன்னும் ஒரு சில மாதங்களில் ஆந்திராவில் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்படும். 3 மாதங்களாக இதற்கான வேலை நடந்துக்கொண்டிருக்கிறது. வருகின்ற சனிக்கிழமை பனையூரில் ஆந்திராவிலிருந்து முக்கிய நபர்கள் வந்து சந்திக்க இருக்கிறார்கள்" என பேசியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-29T14:01:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[13 இலட்சத்தைக் கடந்தது சுற்றுலாப் பயணிகளின் வருகை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tourist-arrivals-cross-the-1-3-million-mark-1785328631"></link>
            <id>https://jvpnews.com/article/tourist-arrivals-cross-the-1-3-million-mark-1785328631</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இலங்கைக்கு வருகை தரும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டில் இதுவரை 13 இலட்சத்தைக் கடந்துள்ளதாக சுற்றுலா வளர்ச்சி அதிகார சப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இலங்கைக்கு வருகை தரும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டில் இதுவரை 13 இலட்சத்தைக் கடந்துள்ளதாக சுற்றுலா வளர்ச்சி அதிகார சபை தெரிவித்துள்ளது.</p><p> 

இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் மொத்தம் 1,313,974 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். ஜூலை மாதத்தின் முதல் 26 நாட்களில் மட்டும் 167,401 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d093161-5e8d-447c-ab1c-5cbcf5652774/26-6a69f3f8dbb3b.webp' /></p><p>

ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக இந்தியாவிலிருந்து 38,785 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து, முதன்மைச் சந்தையாகத் திகழ்கிறது. 

இந்த ஆண்டில் இதுவரை ஒட்டுமொத்தமாக 310,000க்கும் அதிகமான இந்தியச் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-29T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[90களில் கொடிக்கட்டி பறந்த நடிகை வினீதாவை நியாபம் இருக்கா? சமீபத்திய புகைப்படம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/90s-actress-vineetha-recent-photos-viral-1785326234"></link>
            <id>https://viduppu.com/article/90s-actress-vineetha-recent-photos-viral-1785326234</id>
            <summary type="text">90களில் தமிழ் சினிமாவில் பல நடிகைகளை நாம் பார்த்திருப்போம். நக்மா, ரம்பா, சிம்ரன், ரோஜா என பல நடிகைகள் இன்றும் பலரும் அதே இளமையுடன் இருக்கின்றனர்.வினீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>90களில் தமிழ் சினிமாவில் பல நடிகைகளை நாம் பார்த்திருப்போம். நக்மா, ரம்பா, சிம்ரன், ரோஜா என பல நடிகைகள் இன்றும் பலரும் அதே இளமையுடன் இருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85e45b6d-7525-4ea1-b418-1d9167449a4d/26-6a69ea9d317fe.webp' /></p><h2>வினீதா</h2><p>
</p><p>
ஆனால், ஒரு சில நடிகைகள் எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அந்த வகையில் 90களில் வினீதா என்ற நடிகையை நாம் மறந்திருக்க முடியாது. கட்டபொம்மன், வியட்நாம் காலனி ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றார்.</p><p>இவர் தற்போது எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்ல்லை, அவரின் ரீசண்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர், </p><p>இதோ...&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Nillanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு பூப்புனித நீராட்டு விழாவும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/puberty-ceremony-coordination-committee-meeting-1785331193"></link>
            <id>https://tamilwin.com/article/puberty-ceremony-coordination-committee-meeting-1785331193</id>
            <summary type="text">சங்கானையில் ஒரு புலம்பெயர்ந்த தமிழர் தனது மகளுடைய பூப்புனித நீராட்டு விழாவை விமர்சையாக,பகட்டாகக் கொண்டாடினார்.ஊருக்கும் விருந்து கொடுத்தார்.விழா நாயகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சங்கானையில் ஒரு புலம்பெயர்ந்த தமிழர் தனது மகளுடைய பூப்புனித நீராட்டு விழாவை விமர்சையாக,பகட்டாகக் கொண்டாடினார்.ஊருக்கும் விருந்து கொடுத்தார்.விழா நாயகியாகிய பெண்ணை குதிரை தேரில் அழைத்துக் கொண்டு வந்தார்கள்.</p><p> அந்த ஊர்வலத்தில் யானை வந்தது, மாட்டு வண்டி ஊர்வலம் வந்தது, இன்னியம் என்று அழைக்கப்படுகின்ற நடை பவனி அணி வந்தது. ஒரு யூடியூப்பரை வேலைக்கு அமர்த்தி அந்த நிகழ்வுக்கு டிஜிட்டல் ப்ரோமோஷன் செய்யப்பட்டது.
</p><p>
புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகத்தில் தமது தனிப்பட்ட நிகழ்வுகளுக்கு யானையை,குதிரையை,ஹெலிகாப்டரை,பல்லக்கை வாடகைக்கு அமர்த்துவது புதியதல்ல.தேவையான காசு இருக்கிறது.சினிமாப் பாணியில்,சினிமாத் தனமாக நிகழ்வை ஒழுங்கமைத்து படம்பிடித்து படங்காட்டி மகிழ்கிறார்கள்.</p><p></p><h2>தமிழர்களின் நிதி&nbsp;</h2><p>
</p><p>
புலம்பெயர்ந்த தமிழர்களின் காசு தனிப்பட்ட வைபவங்களில் மட்டுமல்ல பொது வைபவங்களில்,அரசியலில்,குறிப்பாக சமய நம்பிக்கைகளில் அதிகமாக முதலீடு செய்யப்படுகிறது.</p><p>2009க்குப் பின்னரான பெரும்பாலான ஆலயப் புனரமைப்பு வேலைகளில் புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி உதவி உண்டு. ஆயிரங்களில் தொடங்கி கோடிகள் வரையிலும் அந்த உதவி கிடைக்கிறது. </p><p>வடக்கு-கிழக்கு ஊடாகப் பயணம் செய்த ஓர் அமெரிக்கப் புலமையாளர் என்னிடம் கேட்டார் “வழியெல்லாம் காணப்படும் சிறிய மற்றும் பெரிய கோயில்களைப் புனமைக்கும் நிதி புலம்பெயர்ந்த தமிழர்களுடையதா என்று


தாம் பிறந்து வளர்ந்த அல்லது திருமணம் புரிந்த கிராமங்களில்,திருவிழாக்களில் புலம்பெயர்ந்த தமிழர்களின் காசு தாராளமாக செலவழிக்கப்படுகிறது.</p><p>ஊர்க் கோவில்களின் திருவிழாக் காலங்களில் புலம்பெயர்ந்த தமிழர்களோடு தொடர்புடைய உபயகாரர்கள் தமது திருவிழாவை நமது பண பலத்தைக் காட்டும் ஒரு நிகழ்வாக ஒழுங்கமைக்கிறார்கள்.அதனால் இந்தியாவில் இருந்து கலைஞர்கள் அழைத்துவரப்படுகிறார்கள்.</p><p>தென்னிந்தியாவை நோக்கி பலாலியில் இருந்து திறந்து விடப்பட்டிருக்கும் வான்வழியூடாக இந்திய சினிமாப் பண்பாடு வேகமாகப் பரவி வருகிறது.ஏற்கனவே அது புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பரவி விட்டது.</p><p></p><h2>புலம்பெயர்ந்த தமிழர்கள்</h2><p>கோவில் திருவிழாக்களில் மயிலாட்டம் முதல் கொண்டு பெயர் தெரியாத பலவிதமான ஆட்டங்களும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.அவற்றில் சில போருக்கு முந்திய தசாப்தங்களில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட சின்ன மேளக் கச்சேரிகளை நினைவூட்டுகின்றன.</p><p>தமிழகத்திலிருந்து கலைஞர்களைக் கொண்டு வந்து தனிப்பட்ட வைபவங்களையும் திருவிழாக்களையும் கொண்டாடுவது என்பது புலப்பெயர்ச்சிக்குப் பின்னரான புதிய போக்கு அல்ல.அது ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரே இருந்தது.தமிழகத்திலிருந்து நடனக் கலைஞர்கள், சின்னமேளக் கச்சேரிகள்,பிரபல சினிமாப் பாடகர்கள் இங்கு அழைத்து வரப்பட்டார்கள்.எனவே அது புலம்பெயர்ச்சியின் விளைவு அல்ல. புலப்பெயர்ச்சியால் மேலும் தூண்டப்பட்ட ஒரு விளைவு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c3aa08d-5288-4230-b5f1-0d83479dc0ff/26-6a6a023a84838.webp' /></p><p>அதேசமயம்,புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது தனிப்பட்ட வைபவங்களை சினிமாத்தனமாக ஒழுங்கமைப்பதிலும் சமயச் செயற்பாடுகளிலும் அரசியலிலும் மட்டும் தமது செல்வத்தை முதலீடு செய்கிறார்கள் என்பதல்ல. </p><p>மேற்சொன்ன அனைத்தையும் விட முக்கியமாக,தமிழ்ப் பகுதிகளில் தேசத்தை நிர்மாணிக்கத்தக்க செயல் திட்டத்தின் பகுதிகள் என்று வருணிக்கத்தக்க விதத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் பொது நிறுவனங்களுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் தாராளமாகக் காசு கொடுக்கிறார்கள்.தாயகத்தில் இயங்கும் கணிசமான தொகை தன்னார்வ நிறுவனங்களின் பின்பலமாக புலம்பெயர்ந்த தமிழ் வள்ளல்களை உண்டு.</p><p>கடந்த மே மாதம் 20ஆம் திகதி நீர்வேலியில்,”கருவி” நிறுவனத்தின் தலைமைக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. “கருவி” என்று அழைக்கப்படுவது விழிப்புலன் மற்றும் செவிப்புலன் இழந்தவர்களுக்கான ஒரு கட்டமைப்பு ஆகும்.இக்கட்டமைப்பின் தலைமையகத்தை நிர்மாணிக்கத் தேவையான 60விகிதமான நிதியை புலம்பெயர்ந்த தமிழர்களே வழங்கினார்கள்.</p><p></p><h2>தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை</h2><p>அதுபோலவே இம்மாதம் 14 ஆம் திகதி,தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில், “அரவணை” என்று பெயரிடப்பட்ட நோய்த் தடுப்புச் சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.நோயாளிகள் தமது இறுதிக் காலத்தை கண்ணியமாகவும் அமைதியாகவும் ஒப்பீட்டளவில் குறைந்த வலியோடும் கழிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளைக் கொண்ட ஒரு கட்டமைப்பு அதுவாகும்.</p><p>அவுஸ்திரேலியாவை மையமாகக் கொண்டு இயங்கும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளான “பாலம்”, “வன்னி ஹோப்” ஆகிய இரண்டு அமைப்புகளும் இந்தக் கட்டமைப்பை உருவாக்குவதற்குத் தேவையான நிதி உதவிகளை வழங்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b022ece-a4ca-4b54-ae76-b7df97bf3387/26-6a6a023c00bf6.webp' /></p><p>எனவே தொகுத்துப் பார்த்தால் தாயகத்தில் புலம்பெயர்ந்த தமிழ் நிதியானது ஒருபுறம் தேசத்தைக் கட்டியெழுப்பும் நிர்மாணப் பணிகளுக்கு உதவுகிறது. ஆயுத மோதல்களுக்கு பின்னரான ஒரு சிறிய மக்கள் கூட்டத்தின் நிதிப் பலத்தையும் உளவியல் உறுதியையும் கட்டியெழுப்ப உதவுகிறது.</p><p>இன்னொருபுறம், தமது பண பலத்தைக் காட்ட விரும்பும் புலம்பெயர்ந்த தமிழர்கள் காசை அள்ளி வீசுகிறார்கள்.தனிப்பட்ட வைபவங்களையும் திருவிழாக்களையும் தங்களுடைய செல்வாக்கை காட்டும் குறிகாட்டிகளாக மாற்றுகிறார்கள்.ஆலய திருவிழாக்களில், பழைய மாணவர் சங்கங்களில், சன சமூக நிலையங்களில், சமூகத்தின் சிறிய மற்றும் பெரிய நிறுவனங்களில் செல்வாக்கு செலுத்தும் நிதி அதிகாரமுடைய உபயகாரர்களாக காணப்படுகிறார்கள்.</p><p>சில ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு சிறிய பாடசாலைக்கு புலம்பெயர்ந்து வாழும் பழைய மாணவர் ஒருவர் சிசிடிவி கமராக்களை பொருத்துவதற்கு நிதி உதவி செய்தார்.ஆனால் அந்தக் கண்காணிப்புக் கமராக்களை இயக்குவதற்கு தேவையான கடவுச் சொல் அவரிடந்தான் இருந்தது.</p><p></p><h2>ஒருங்கிணைப்பு</h2><p>பாடசாலை அபிவிருத்திக் குழுக்களுக்குள்,பழைய மாணவர் சங்கங்களுக்குள், ஆலய அறக்கட்டளைகளுக்குள்,அரசியல் கட்சிகளுக்குள்,சிவில் சமூகங்களுக்குள்,தங்களால் ரிமோட் செய்யப்படக்கூடிய குழுக்களை,நபர்களை உருவாக்கி மேற்படி அமைப்புகளை கட்டுப்படுத்த முயற்சிக்கும் புலம்பெயர்ந்த தொலை இயக்கி உபயகாரர்களும் உண்டு.</p><p>தாயகத்தில் உள்ள தமிழ் மக்களின் சமூகப் பொருளாதார அரசியல் வாழ்வைத் தீர்மானிக்கும் பிரதான விடயங்களில் ஒன்றாக புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f09170b6-9b1d-4734-91de-4c0472dddb06/26-6a6a023cb2458.webp' /></p><p>ஆயுதப் போராட்டத்தின் காசு காய்க்கும் மரமாக அது இருந்தது.ஆனால் 2009க்கு முன்புவரை தாயகத்தை மையமாகக் கொண்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.தாயகத்தில் இருந்து எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி உதவிகளும் ஏனைய உதவிகளும் ஒருங்கமைக்கப்பட்டன.</p><p>ஆனால் இப்பொழுது தாயகத்தில் அவ்வாறான ஒன்றிணைந்த மையம் எதுவும் கிடையாது.புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் சிதறிப்போய்க் கிடக்கிறார்கள்.அங்கேயும் ஒன்றிணைந்த செயல்பாடுகள் இல்லை. வள்ளல்களுக்கிடையிலும் ஒருங்கிணைப்பு இல்லை.</p><p>உபயகாரர்களுக்கிடையிலும் ஒருங்கிணைப்பு இல்லை.இந்தப் பாரதூரமான வெற்றிடம் உள்ளவரை ஈழத் தமிழர்களின் சமூகப் பொருளாதார பண்பாட்டு அரசியல் வாழ்வெனப்படுவது,சினிமாப் பண்பாட்டின் வீச்செல்லைக்கு வெளியே வராது, உருப்படாது.</p><p>இந்த நிலை தொடரும்வரை,தமிழ் மக்கள் ஒரே கட்சிக்குள் ஒருவர் மற்றவருக்கு எதிராக வழக்குப் போடும் சட்ட லீலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கலாம்.அல்லது மயிலாட்டத்தை,சின்ன மேளக் கச்சேரிகளை,டிஜே கும்மிகளைப் பார்த்துப் ரசிக்கலாம்.அல்லது,ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடக்கும் சண்டைக்கு காட்சிகளை அல்லது நகைச்சுவைக் காட்சிகளைப் பார்த்துச் சிரிக்கலாம் அல்லது குருதி அழுத்தத்தை உயர்த்திக் கொள்ளலாம்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T13:47:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொன்றியல் விமான நிலையத்தில் துர்நாற்றம்: விமானங்கள் ரத்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/flights-to-us-cancelled-odour-at-montreal-airport-1785332206"></link>
            <id>https://canadamirror.com/article/flights-to-us-cancelled-odour-at-montreal-airport-1785332206</id>
            <summary type="text">கனடாவின் மொன்றியல்-பியர் எலியட் ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கச் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவின் பகுதியில் வீசிய விசித்திரமான துர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் மொன்றியல்-பியர் எலியட் ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கச் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவின் பகுதியில் வீசிய விசித்திரமான துர்நாற்றம் காரணமாக, புதன்கிழமை காலை அமெரிக்காவிற்கான அனைத்து விமான சேவைகளும் திடீரென ரத்து செய்யப்பட்டன.
</p><p>கட்டட வேலைகளுக்கானப் பொருட்களில் இருந்து இந்த துர்நாற்றம் வீசியதை அடுத்து, அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் பிரிவு தனது பரிசோதனைப் பணிகளைத் தற்காலிகமாகப் நிறுத்தி வைத்தது.</p><p>
இதேவேளை, துர்நாற்றம் வீசியதற்கான காரணம் கண்டறியப்பட்டு விட்டதாக மொன்றியல் விமான நிலைய ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be630a77-8508-4e2b-8a1c-f2962515a882/26-6a6a01f092917.webp' /></p><p>
</p><p> எனினும், எல்லைப் பாதுகாப்புப் பணிகள் சீரடையும் வரை பயணிகள் தங்களது விமானங்களின் நிலவரத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் உறுதிசெய்த பின்னரே விமான நிலையத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
</p><p>அமெரிக்கச் சுங்கப் பரிசோதனை தொடர்பான கூடுதல் சந்தேகங்களுக்கு பயணிகள், அமெரிக்கச் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளைத் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T13:37:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டிடம் விழுந்து காத்தான்குடி இளைஞர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kattankudy-youth-dies-after-building-collapses-1785332305"></link>
            <id>https://jvpnews.com/article/kattankudy-youth-dies-after-building-collapses-1785332305</id>
            <summary type="text">&amp;nbsp;காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப் பணியின்போது தூண் இடிந்து விழுந்ததில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
</p><p>

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் மட்டக்களப்பு ஜெயந்திபுரம், யாட் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/207d761d-5162-4ac1-8fef-5286caae9030/26-6a6a0252bd875.webp' /></p><p>

உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T13:36:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரல் சொடக்கு மூலம் ஒரு இன்னிங்ஸில் 8 விக்கெட் - கிரிக்கெட்டில் வினோத மோசடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/clicky-ponting-finger-clicking-cricket-cheating-1785332156"></link>
            <id>https://news.lankasri.com/article/clicky-ponting-finger-clicking-cricket-cheating-1785332156</id>
            <summary type="text">விரல் சொடக்கு மூலம் நடுவரை ஏமாற்றிய சர்ச்சை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 


கிளிக்கி பாண்டிங் சர்ச்சை 

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், ஐ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விரல் சொடக்கு மூலம் நடுவரை ஏமாற்றிய சர்ச்சை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. </p><h3>


கிளிக்கி பாண்டிங் சர்ச்சை</h3><h3> </h3><p>

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், ஐபிஎல் போன்ற தொடர்களில் பந்து மட்டையில் பட்டதா என்பதை உறுதிப்படுத்த டிஆர்எஸ், ஸ்னிக்கோமீட்டர் போன்ற தொழில்நுட்பங்கள் இருக்கும். </p><p>

ஆனால் இங்கிலாந்தின் கிளப் கிரிக்கெட் லீக்குகளில் இது போன்ற தொழில்நுட்பங்கள் இல்லாமல், நடுவர் கண்ணால் பார்ப்பது, காதால் கேட்பதன் அடிப்படையிலே முடிவுகளை வழங்குகின்றனர்.&nbsp;</p><p>

இந்நிலையில், இங்கிலாந்து கிளப் கிரிக்கெட்டில் வினோத மோசடி நடைபெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0468db03-2ce8-4ea4-855b-74068543d6ca/26-6a6a01bdf2e1e.webp' /></p><p> 

வைரலாக இணையத்தில் பரவி வரும் காணொளியில், ஸ்லிப் அல்லது சில்லி பாயிண்ட் பகுதியில் நின்றிருந்த சால்ட்பர்ன் கிரிக்கெட் கிளப் வீரர் பிரையன் டிவைன், பந்தை விக்கெட் கீப்பர் பிடிக்கும் முன்னர், பேட்டை கடக்கும் போது பந்து பேட்டில் பட்டது போன்ற ஒலியை உருவாக்க தனது கை விரல்களால் பலமாக சொடக்கு போட்டு ஒலி எழுப்பியுள்ளார். </p><p></p><p>

இந்த போலி சத்தத்தை நிஜமான என கருதிய நடுவர்கள் பலமுறை அவுட் வழங்கியுள்ளனர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/Saltburncc?ref_src=twsrc%5Etfw">@Saltburncc</a> First slip clicks his fingers to imitate an edge, bat nowhere near it and given out.<br>This is about the worst case of cheating I’ve ever seen in cricket.<br>Apparently, their keeper has a huge amount of catches this season.<a href="https://x.com/talkSPORT?ref_src=twsrc%5Etfw">@talkSPORT</a> <a href="https://x.com/bbctms?ref_src=twsrc%5Etfw">@bbctms</a> <a href="https://x.com/SkyCricket?ref_src=twsrc%5Etfw">@SkyCricket</a> <a href="https://x.com/TailendersPod?ref_src=twsrc%5Etfw">@TailendersPod</a> <a href="https://t.co/iM7lZfKF5q">pic.twitter.com/iM7lZfKF5q</a></p>&mdash; Ben Mummery (@ben_mummery) <a href="https://x.com/ben_mummery/status/2081666886089965943?ref_src=twsrc%5Etfw">July 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

இது குறித்து வடக்கு யார்க்ஷயர் மற்றும் தெற்கு டர்ஹாம் கிரிக்கெட் லீக் ஒரு விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.&nbsp;</p><p>

இந்த சர்ச்சைக்கு பின்னர் நடத்தப்பட்ட ஆய்வில், சால்ட்பர்ன் அணியின் விக்கெட் கீப்பர் ஜோஷ் போவ்ஸ் தனது கடைசி 8 போட்டிகளில் 31 கேட்சுகளைப் பிடித்துள்ளார். இதில் ஒரே இன்னிங்ஸில் 8 கேட்சுகளை பிடித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக விக்கெட் கீப்பிங் ஆட்டமிழப்புகளுக்கான சாதனையே 7 ஆகும்.&nbsp;</p><p>

இந்த சர்ச்சைக்கு பின்னர் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் பெயரை நக்கலாகச் சேர்த்து, அந்த வீரருக்கு ‘க்ளிக்கி பாண்டிங்’ என இணையவாசிகள் செல்லப்பெயர் சூட்டியுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T13:36:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாக்குதலைத் தொடர்ந்து சவூதி அரேபியாவுக்கான பயணத்தை ஒத்திவைத்த ஈராக் பிரதமர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iraqi-prime-minister-postpones-to-saudi-arabia-1785331531"></link>
            <id>https://tamilwin.com/article/iraqi-prime-minister-postpones-to-saudi-arabia-1785331531</id>
            <summary type="text">ஈராக்கில் நடத்தப்பட்ட கொடிய தாக்குதலைத் தொடர்ந்து, ஈராக் பிரதமர் அலி
அல்-ஜைதியின் சவூதி அரேபியாவுக்கான அதிகார பூர்வ விஜயம்
ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஈ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈராக்கில் நடத்தப்பட்ட கொடிய தாக்குதலைத் தொடர்ந்து, ஈராக் பிரதமர் அலி
அல்-ஜைதியின் சவூதி அரேபியாவுக்கான அதிகார பூர்வ விஜயம்
ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஈராக் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
பாதுகாப்பு ஒருங்கிணைப்பு, பிராந்திய வளர்ச்சி மற்றும் பல்வேறு துறைகள்
சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoUs) கையெழுத்திடுவதற்காக பிரதமர்
அல்-ஜைதி வியாழக்கிழமையன்று சவூதி அரேபியாவுக்குச் செல்லத்
திட்டமிட்டிருந்தார்.
</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac7e806d-c575-4bc6-a183-d3f62d0a8526/26-6a6a01903ec60.webp' /></p><p>
இன்று(29) காலை அமெரிக்கா மற்றும் சவூதி படைகள் இணைந்து நடத்திய வான்வழித்
தாக்குதலில் குறைந்தது 20 ஈராக் போராளிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தப்
பயணம் இடைநிறுத்தப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T13:35:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[எட்மண்டனில் பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/shooting-death-at-west-end-business-investigation-1785331696"></link>
            <id>https://canadamirror.com/article/shooting-death-at-west-end-business-investigation-1785331696</id>
            <summary type="text">கனடாவின் எட்மண்டன் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் அருகே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், 39 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் எட்மண்டன் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் அருகே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், 39 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>செவ்வாய்க்கிழமை காலை 11:35 மணியளவில் 11230 149 St. பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கிடைத்த தகவலின் பேரில், எட்மண்டன் காவல்துறையினர் விரைந்து சென்றனர்.</p><p> 
அங்கு படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட 39 வயது நபர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bed11541-7ad5-4bb5-a206-910561e4d506/26-6a69fff232b3a.webp' /></p><p>
</p><p>அவரது உடற்கூறாய்வு பரிசோதனை புதன்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
துப்பாக்கிச் சூடு நடைபெற்ற சமயத்தில், அந்த வணிக வளாகத்திலிருந்து நபர் ஒருவர் ஓடித் தப்பிச் செல்வதைப் பார்த்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>சம்பவம் இடம்பெற்ற தினம் காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அப்பகுதியில் பயணித்தவர்கள், சாட்சிகள் அல்லது தங்களது வாகனத்தின் 'டேஷ்கேம்' காட்சிகளை வைத்திருப்பவர்கள் உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு கொலை வழக்கு விசாரணை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
</p><p>இச்சம்பவம் குறித்த தகவல் தெரிந்தவர்கள் 780-423-4567 என்ற எண்ணிலோ அல்லது 'கிரைம் ஸ்டாப்பர்ஸ்' மூலமாகவோ ரகசியமாகத் தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T13:32:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடைபெறும் சீனத் தூதுவருடன் கொஞ்சி குலாவிய ராஜபக்ஸாக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rajapaksas-dinner-departing-chinese-ambassador-1785332017"></link>
            <id>https://jvpnews.com/article/rajapaksas-dinner-departing-chinese-ambassador-1785332017</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தமக்கான பதவிக் காலத்தை நிறைவு செய்து விடைபெற்றுச் செல்லும் நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தமக்கான பதவிக் காலத்தை நிறைவு செய்து விடைபெற்றுச் செல்லும் நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை இராப்போசன விருந்துபசாரத்தில் சந்தித்து உரையாடியுள்ளார்.
</p><p>
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் அவரது பாரியார் ஆகியோருக்கு விடைபெறும் முகமாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதில் பெரும் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3ce0831-2d20-4bd1-a05b-b0674cae8d40/26-6a6a01333a24f.webp' /></p><p>

அத்துடன், தூதுவரின் பதவிக் காலத்தில் இலங்கைக்கு அவர் வழங்கிய அர்ப்பணிப்புமிக்க சேவைக்கும் மற்றும் அவர்களின் நட்புறவுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>.

 தூதுவர் கீ சென்ஹொங்கின் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையத் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ, , இலங்கை மற்றும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கான தனது அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-29T13:31:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் ஆலயத்தில் வாள்வெட்டுத்தாக்குதல் : பெண்கள் உட்பட நால்வர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/four-people-injured-in-sword-attack-batti-temple-1785330250"></link>
            <id>https://ibctamil.com/article/four-people-injured-in-sword-attack-batti-temple-1785330250</id>
            <summary type="text">மட்டக்களப்பு ஏறாவூர் காவல்துறை பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன்
ஆலயத்தில் அன்னதானம் வழங்கியவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல்
நடாத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு ஏறாவூர் காவல்துறை பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன்
ஆலயத்தில் அன்னதானம் வழங்கியவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல்
நடாத்தியதில் பெண்கள்; உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று புதன்கிழமை (29) பிற்பகல்
இடம்பெற்றுள்ளது.
</p><p>
குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்றுவரும் நிலையில் சம்பவ தினமான
இன்று பகல் ஆலயத்தில் அன்னாதனம் வழங்கப்பட்டது</p><h2>அன்னதான சாப்பட்டால் ஏற்பட்ட தகராறு</h2><p>&nbsp;அதனை வாங்கி சாப்பிட்ட
இளைஞன் ஒருவர் சாப்பாடு சரி இல்லை என தெரிவித்தபோது அன்னதானம்
வழங்கியவர்களுக்கும் அருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb134c52-d46c-4fbd-a82b-225f7087b0d4/26-6a6a00191f2e9.webp' /></p><p>&nbsp;இதனையடுத்து 7 பேர் கொண்ட வாள்வெட்டுக்குழு அன்னதானம் வழங்கியவர்கள்
மீது வாள்வெட்டு தாக்குதலை நடாத்தியதில் பெண்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.வாள்வெட்டு தாக்குதலை
நடாத்தியவர்களை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிபிடிக்க முயன்றபோது ஒருவரை
மடக்கிபிடித்ததுடன் ஏனையவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.</p><p></p><h2>&nbsp;ஒருவர் மடக்கிப்பிடிப்பு</h2><p>&nbsp; இந்த நிலையில் மடக்கி பிடித்த வாள்வெட்டு குழுவைச் சேர்ந்தவரை காவல்துறையிடம்
ஒப்படைத்ததுடன். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் ஏறாவூர்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தப்பி ஓடியவர்களை
கைது செய்ய நடவடிக்கை எடுத்துவருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df7b7679-7488-4839-9f0f-369989b4784b/26-6a6a0019c93c7.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T13:29:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீரிமலை குப்பை மேட்டில் அத்துமீறி வைக்கப்பட்ட தீ!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fire-at-keerimalai-garbage-dump-causes-hassle-1785327139"></link>
            <id>https://ibctamil.com/article/fire-at-keerimalai-garbage-dump-causes-hassle-1785327139</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் இரண்டு நாட்களாக நெருப்பு எரிந்து
வருகிறது. 

அதனால் ஏற்பட்டுள்ள புகையால் அப்பகுதி மக்கள் சிரமங்களுக்கு
உள்ளாகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் இரண்டு நாட்களாக நெருப்பு எரிந்து
வருகிறது.</p><p> 

அதனால் ஏற்பட்டுள்ள புகையால் அப்பகுதி மக்கள் சிரமங்களுக்கு
உள்ளாகியுள்ளனர்.
</p><p>
வலி. வடக்கு பிரதேசத்தில் மாவிட்டபுரம் - கீரிமலை வீதியில் 1990 ஆம்
ஆண்டுகளுக்கு முன்னர் சுண்ணக்கற்கள் அகழ்ந்த பகுதிகளில் பாரிய குழிகள்
காணப்படுகின்றன.
</p><p>
அவற்றுக்குள் குப்பைகளை கொட்டி சுகாதார நில நிரவுகை திட்டம் என குழிகளை
மூடும் நடவடிக்கை 2019ஆம் ஆண்டு கால பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.</p><p> 

அதற்கு
பலத்த எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அது கைவிடப்பட்டது.
</p><p>
இந்நிலையில் மீண்டும் அந்த குழிகளுக்குள் வலி. தெற்கு பிரதேச சபையினர் மற்றும்
கடற்படையினர் டிப்பர் வாகனங்களில் கழிவுகளை கொண்டு வந்து கொட்டி வருகின்றனர்.</p><p>

இது தொடர்பில் கடந்த 16ஆம் திகதி வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த
கூட்டத்தில் உறுப்பினர்கள் அது தொடர்பில் பிரஸ்தாபித்து அந்த குழிகளுக்குள்
குப்பைகளை கொட்ட அனுமதிப்பதில்லை எனவும் கொட்டப்பட்ட குப்பைகளை மீள
அள்ளுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.</p><p>

இந்நிலையில் தமது சபை தீர்மானத்தையும் மீறி வலி. தெற்கில் இருந்து குப்பைகளை
கொண்டு வந்து கொட்டுவதாக வலி.வடக்கு பிரதேச சபையின் சுகாதார குழுவினருக்கு
தகவல் கிடைத்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை அப்பகுதி சென்ற போது அங்கு
கடற்படையினர் டிப்பர் வாகனத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு வந்த வேளை திருப்பி
அனுப்பப்பட்டனர்.
</p><p>
அந்நிலையில் குப்பைகள் கொட்டப்பட்டு இருந்த பகுதிக்கு நேற்றைய தினம் (28-07-2026)
செவ்வாய்க்கிழமை காலை அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று தீ வைத்துள்ளது.
</p><p>
குறித்த தீ இரண்டு நாட்களாக தொடர்ந்து எரிந்து வருவதனால் அப்பகுதி மக்கள்
சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T13:25:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் மாணவியின் விபரீத முடிவால் துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/suicide-of-a-kilinochchi-schoolgirl-1785325324"></link>
            <id>https://jvpnews.com/article/suicide-of-a-kilinochchi-schoolgirl-1785325324</id>
            <summary type="text">&amp;nbsp; கிளிநொச்சி ஐயனார்புரம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் தரம்- 09 இல் கல்வி பயின்று வந்த மாணவி நேற்றுச் செவ்வாய்க்கிழமை (28. ) தவறான முடிவெடுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கிளிநொச்சி ஐயனார்புரம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் தரம்- 09 இல் கல்வி பயின்று வந்த மாணவி நேற்றுச் செவ்வாய்க்கிழமை (28. ) தவறான முடிவெடுத்துத் தனது உயிரை மாய்த்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

பாடசாலையில் கற்றல் அடைவுகளில் முதன்மை மாணவியாகத் திகழ்ந்ந்து வந்த குறித்த மாணவியின் திடீர் மரணம் பாடசாலைச் சமூகத்தையும், கிராம மக்களையும் துயரில் ஆழ்த்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfb97562-87a0-444d-98a1-db5c9d795e64/26-6a69e70e61073.webp' /></p><p></p><p>
</p><p>

 உயிரிழந்த மாணவி கடந்த சில காலமாகவே தீவிரமான உடல் உபாதையாலும், உள்-உறுப்புச் சார்ந்த நோய் பாதிப்பினாலும் அவதியுற்று வந்துள்ளதாக தெரிய வருகின்றது.</p><p></p><p>
</p><p>
 இதற்காக வைத்தியசாலையினால் அறுவைச் சிகிச்சைக்கான திகதியும் வழங்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந் நிலையில் மாணவி மன உளைச்சலால் இத்தகைய முடிவை எடுத்திருக்கலாம் என நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்</p>]]></content>
            <updated>2026-07-29T13:22:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாத்தறையில் வர்த்தக நிலையம் ஒன்றில் திடீர் தீப்பரவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-breaks-out-at-a-commercial-center-in-matara-1785330486"></link>
            <id>https://tamilwin.com/article/fire-breaks-out-at-a-commercial-center-in-matara-1785330486</id>
            <summary type="text">மாத்தறை - காலி பிரதான வீதியில், பெட்ரோல் நிலையத்திற்கு எதிரே உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் (2...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை - காலி பிரதான வீதியில், பெட்ரோல் நிலையத்திற்கு எதிரே உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
</p><p>
இன்று பிற்பகல் (29.07.2026) ஏற்பட்ட தீ விபத்தில் கடை முற்றிலுமாக எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>தீ விபத்தில் உயிரிழப்பு</h2><p>

மின்சாரக் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F874848755394494%2F&show_text=false&width=267&t=0" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>

மாத்தறை தீயணைப்புப் படை, மாத்தறை பொலிஸ் மற்றும் உள்ளூர் மக்கள் தற்போது தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.</p><p>

இதற்கிடையில், தீ விபத்தில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T13:22:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் நிறுவனங்களுக்கு இழப்பை ஏற்படுத்தும் தரவு கசிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/average-canadian-data-breach-costs-and-detection-1785330819"></link>
            <id>https://canadamirror.com/article/average-canadian-data-breach-costs-and-detection-1785330819</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவில் இயங்கி வரும் நிறுவனங்களில் &#039;தரவு கசிவு&#039; சம்பவங்களால் ஏற்படும் நிதி இழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவில் இயங்கி வரும் நிறுவனங்களில் 'தரவு கசிவு' சம்பவங்களால் ஏற்படும் நிதி இழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
கனடாவில் ஒரு தரவு கசிவு சம்பவத்திற்கு நிறுவனங்கள் சராசரியாக 7.11 மில்லியன் கனடிய டொலர் செலவிட வேண்டியுள்ளது. </p><p>
இது கடந்த 2025-ஆம் ஆண்டில் 6.98 மில்லியன் டொலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு தரவு கசிவின் மூலம் சராசரியாக 28,500 நபர்களின் தரவுகள் களவாடப்பட்டுள்ளன.
</p><p>ஒரு கசிவைக் கண்டறிந்து சரி செய்ய சராசரியாக 205 நாட்கள் ஆகின்றன.
ரொஜர்ஸ் (Rogers), ஃபைடோ (Fido), டெலஸ் டிஜிட்டல் (Telus Digital), லோப்லா (Loblaw), கனடா கம்ப்யூட்டர்ஸ் மற்றும் ஆர்டீன் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்த ஆண்டில் தரவு கசிவால் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>
மிச்சிகனைச் சேர்ந்த 'பொனெமன் இன்ஸ்டிடியூட்' என்ற சுயாதீன ஆராய்ச்சி நிறுவனம் மூலம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், உலகளவில் மார்ச் 2025 முதல் பெப்ரவரி 2026 வரை தரவு கசிவை எதிர்கொண்ட 602 நிறுவனங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T13:22:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்சர்வேடிவ் கட்சியின் முன்னாள் அமைச்சர் டொராண்டோ மேயர் தேர்தலில் போட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/former-conservative-mp-chris-alexander-1785331258"></link>
            <id>https://canadamirror.com/article/former-conservative-mp-chris-alexander-1785331258</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் கன்சர்வேடிவ் கட்சி முன்னாள் அமைச்சரான கிறிஸ் அலெக்ஸாண்டர், டொராண்டோ நகர மேயர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் கன்சர்வேடிவ் கட்சி முன்னாள் அமைச்சரான கிறிஸ் அலெக்ஸாண்டர், டொராண்டோ நகர மேயர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
</p><p>புதன்கிழமை காலை டொராண்டோ சிட்டி ஹாலில் இதற்கான வேட்புமனுவை அவர் முறைப்படி தாக்கல் அறிவித்துள்ளார்.
</p><p>57 வயதான கிறிஸ் அலெக்ஸாண்டர் இதுகுறித்து தனது இணையதளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9b33b57-18ad-478d-aa46-4d583257b6af/26-6a69fe3c109d7.webp' /></p><p>
கடந்த மூன்றாண்டுகளாக டொராண்டோ நகரம் எந்தவித வளர்ச்சியும் இன்றி தேங்கிக் கிடக்கிறது. </p><p>இவ்வளவு திறமையும் ஆற்றலும் கொண்ட ஒரு நகரம் பின்தங்கி இருக்கக் கூடாது. டொராண்டோவைச் சிறந்த நகரமாக மாற்ற நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இவர் 2013 முதல் 2015 வரை கனடாவின் குடியுரிமை மற்றும் குடிவரவுத் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இவர், 2003 முதல் 2005 வரை ஆப்கானிஸ்தானுக்கான கனடியத் தூதராகவும் பணியாற்றியுள்ளார்.
</p><p>எதிர்வரும் அக்டோபர் 26 அன்று நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில், தற்போதைய மேயர் ஒலிவியா சௌ மற்றும் நகரமன்ற உறுப்பினர் பிராட் பிராட்போர்ட் ஆகியோருக்கு எதிராகக் கிறிஸ் அலெக்ஸாண்டர் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>தற்போதைய நிலவரப்படி, டொராண்டோவின் மேயர் பதவியைப் பிடிக்க மொத்தம் 32 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T13:21:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சக்தியை முடித்துக்கட்ட ராவணன் போட்ட பிளான், உஷாரான ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ethirneechal-thodargiradhu-serials-special-promo-1785317957"></link>
            <id>https://cineulagam.com/article/ethirneechal-thodargiradhu-serials-special-promo-1785317957</id>
            <summary type="text">எதிர்நீச்சல் தொடர்கிறதுசன் தொலைக்காட்சியில் அடுத்தடுத்து பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது. கதையில் இப்போது க...</summary>
            <content type="html"><![CDATA[<h2>எதிர்நீச்சல் தொடர்கிறது</h2><p>சன் தொலைக்காட்சியில் அடுத்தடுத்து பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது. </p><p>கதையில் இப்போது கதிர் தொழில் தொடங்க பூஜை போடப்போடுவதற்கான கதைக்களம் செல்கிறது. முதல் நாள் விழாவில் உங்கள் அம்மாவை கூப்பிடுங்கள் என ராவணன், குணசேகரன் மற்றும் கதிரிடம் கூற அவர்கள் முதலில் யோசிக்கிறார்கள். </p><p>பின் கதிர் அவர் அம்மாவை அழைக்க விசாலாட்சி வர மறுக்கிறார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc78ffd3-5378-4b23-b836-676d6711fbe9/26-6a69cd7c2ede6.webp' /></p><h2>புரொமோ
</h2><p>இதற்கு இடையில் Vk உடல்நிலை சரியாகிவிட்டதாக மருத்துவர் சக்தியிடம் கூற அவர் விஷயம் ராவணனுக்கும் தெரிந்துவிடுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76442baf-93f6-4b71-bc59-2a49dbc69aa2/26-6a69cd7b45f33.webp' /></p><p> </p><p>இதனால் ராவணன் மீண்டும் சக்தியை டிராக் செய்யுங்கள், அவனை இந்த முறை விட கூடாது என லக்ஷ்மனிடம் கூறுகிறார். </p><p>ராவணன் போனில் கூறியதை ஜனனி கேட்டுவிட சக்தியை அலர்ட் செய்கிறார். ஆனால் சக்தியை தனியாக அனுப்ப கூடாது என ஜனனியும் செல்கிறார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tCVODA04XHM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-29T13:20:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் கீரிமலை குப்பை மேட்டில் இரு நாட்களாக பற்றி எரியும் தீ!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fire-at-jaffna-keerimalai-garbage-dump-1785331272"></link>
            <id>https://jvpnews.com/article/fire-at-jaffna-keerimalai-garbage-dump-1785331272</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் இரண்டு நாட்களுக்கும் மேலாக தீ எரிந்துகொண்டிருப்பதனால் அப்பகுதி மக்கள் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

வலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் இரண்டு நாட்களுக்கும் மேலாக தீ எரிந்துகொண்டிருப்பதனால் அப்பகுதி மக்கள் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
</p><p>
வலி. வடக்கு பிரதேசத்தில் , மாவிட்டபுரம் – கீரிமலை வீதியில் , 1990ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் சுண்ணக்கற்கள் அகழ்ந்த பகுதிகளில் பாரிய குழிகள் காணப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71629517-3998-422d-aa4d-b5ed78e6d8e1/26-6a69fe49b8bc4.webp' /></p><h2>அத்துமீறி நுழைந்த கும்பல்&nbsp; தீ வைப்பு</h2><p>

அவற்றுக்குள் குப்பைகளை கொட்டி , ” சுகாதார நில நிரவுகை திட்டம்” என குழிகளை மூடும் நடவடிக்கை 2019ஆம் ஆண்டு கால பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பலத்த எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் , அது கைவிடப்பட்டது.</p><p></p><p>
</p><p>
இந்நிலையில் மீண்டும் அந்த குழிகளுக்குள் வலி. தெற்கு பிரதேச சபையினர் மற்றும் கடற்படையினர் டிப்பர் வாகனங்களில் கழிவுகளை கொண்டு வந்து கொட்டி வருகின்றனர்.</p><p>

இது தொடர்பில் கடந்த 16ஆம் திகதி வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் அது தொடர்பில் பிரஸ்தாபித்து , குழிகளுக்குள் குப்பைகளை கொட்ட அனுமதிப்பதில்லை எனவும் , கொட்டப்பட்ட குப்பைகளை மீள அள்ளுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.</p><p></p><p>


இந்நிலையில் தமது சபை தீர்மானத்தையும் மீறி , வலி. தெற்கில் இருந்து குப்பைகளை கொண்டு வந்து கொட்டுவதாக வலி.வடக்கு பிரதேச சபையின் சுகாதார குழுவினருக்கு தகவல் கிடைத்து நேற்று முன்தினம் அப்பகுதி சென்ற போது அங்கு கடற்படையினர் டிப்பர் வாகனத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு வந்த வேளை திருப்பி அனுப்பப்பட்டனர்.</p><p>

இந்நிலையில் , குப்பைகள் கொட்டப்பட்டு இருந்த பகுதிக்கு நேற்றைய தினம் காலை அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று தீ வைத்துள்ளது.

குறித்த தீ இரண்டு நாட்களாக தொடர்ந்து எரிந்து வருவதனால் , அப்பகுதியில் புகைமூட்டம் காணப்படுவதனால் தாம் சிரமங்களை எதிர்கோவதாக பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T13:19:19+00:00</updated>
        </entry>
    </feed>
