<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-13T07:41:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத மணல் அகழ்வினால் வயல் நிலங்கள் சேதமாக்கப்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/farmers-complain-illegal-sand-mining-1786605218"></link>
            <id>https://tamilwin.com/article/farmers-complain-illegal-sand-mining-1786605218</id>
            <summary type="text">கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை பகுதியில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும்
வயல் நிலங்களில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை பகுதியில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும்
வயல் நிலங்களில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதாக அந்தப் பகுதியிலுள்ள விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
</p><p>
மேலும் மணல் அகழ்விற்காக உழவு இயந்திரங்களை பயன்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><h2>சட்டவிரோத மணல் அகழ்வு</h2><p>

குறித்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள்
தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59f55b79-1ce0-43d6-80f1-3d32bb99b85a/26-6a7d6fa691c6e.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T07:40:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் கணவன் - இலங்கையில் இளம் மனைவியின் மோசமான செயலால் ஏற்பட்டுள்ள விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-arrested-for-threatening-1786596707"></link>
            <id>https://tamilwin.com/article/man-arrested-for-threatening-1786596707</id>
            <summary type="text">இணைய வழிக் கணினி விளையாட்டுகள் மூலம் அறிமுகமான பெண்ணின் தகாத புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹாவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இணைய வழிக் கணினி விளையாட்டுகள் மூலம் அறிமுகமான பெண்ணின் தகாத புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கம்பஹாவின் புறநகர் பகுதியான கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக திக்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
திக்வெல்ல பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணின் கணவர் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளார். </p><p>

இதனை தொடர்ந்து, இளம் மனைவி இணைய விளையாட்டுகள் ஊடாக அறிமுகமான சந்தேகநபருடன் முறையற்ற காதலில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>
</p><h2><b>
இளம் மனைவியின் செயல்</b></h2><p>அத்துடன், அந்த இளைஞருடன் அவர் பயணங்கள் மேற்கொண்ட போது இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a287d2f-7a81-44a6-a467-086dc99c19d1/26-6a7d50496edd5.webp' /></p><p>வெளிநாட்டில் வசிக்கும் தனது கணவர் மீண்டும் இலங்கை திரும்புவார் என்ற தகவலைத் தொடர்ந்து, குறித்த பெண் காதலை கைவிட்டுள்ளார். </p><p>

அதனால் கோபமடைந்த சந்தேகநபர் இவ்வாறு பெண்ணின் தகாத புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
இவ்வாறு புகைப்படங்களை சமூக வலைத்தளத்திற்கு அனுப்புவதற்கு முன்னர், தன்னுடன் மீண்டும் இணையாவிட்டால் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக அச்சுறுத்தியுள்ளார்.
</p><h3><b>
பழி வாங்கும் நடவடிக்கை</b></h3><p>அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகளை விடுத்ததுடன், தேவையான சந்தர்ப்பங்களில் அவரை அழைத்துச்சென்றுள்ளார்.
</p><p>
இளைஞனின் அழைப்புகளுக்கும் குறுஞ்செய்திகளுக்கும் குறித்த பெண் பதிலளிக்காமல் இருந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0a1c6a3-7325-45db-9cd0-432c40e34099/26-6a7d504a21607.webp' /></p><p>இதன் காரணமாக பழி வாங்கும் நோக்கில் சந்தேகநபர் பெண்ணின் புகைப்படத்துடன் “<b>காதலி காணாமல்போயுள்ளார் கண்டுபிடித்து தாருங்கள்</b>” என சமூக வலைத்தளத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
</p><p>
அத்துடன், கணவருக்கும் வட்ஸ்அப் குறுஞ்செய்திகள் ஊடாக மனைவியின் தகாத புகைப்படங்களை அனுப்பியுள்ளதாகவும் பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கண்டறிந்துள்ளனர்.
</p><p>
தனது தகாத புகைப்படங்கள் சமூக வலைத்தளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் திக்வெல்ல பொலிஸில் முறைப்பாடு செய்தார். </p><p>

அதற்கமைய பொலிஸின் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள், சந்தேகநபரை முன்தினம் கைது செய்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T07:33:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவின் முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜி காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/former-chinese-premier-zhu-rongji-dies-aged-97-1786599760"></link>
            <id>https://ibctamil.com/article/former-chinese-premier-zhu-rongji-dies-aged-97-1786599760</id>
            <summary type="text">சீனாவின் அசாதாரண பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்ட அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜூ உடல்நலக்குறைவால் காலமானார்.&amp;nbsp;ஜூ ரோங்ஜி தனது 98 ஆவது வயதில...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவின் அசாதாரண பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்ட அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜூ உடல்நலக்குறைவால் காலமானார்.&nbsp;</p><p>ஜூ ரோங்ஜி தனது 98 ஆவது வயதில் நேற்று (12) 11 மணியளவில்&nbsp;பெய்ஜிங்கில் உயிரிழந்தார்.</p><p>ஜூவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு, தேசிய மக்கள் பேரவையின் நிலைக் குழு, அரச மன்றம் மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் குழு ஆகியவை கூட்டாக வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், </p><p>“ஜூ ஒரு சிறந்த கட்சி உறுப்பினர், காலத்தால் சோதிக்கப்பட்ட மற்றும் விசுவாசமான கம்யூனிஸ்ட் போராளி, ஒரு தலைசிறந்த பாட்டாளி வர்க்கப் புரட்சியாளர், ராஜதந்திரி, கட்சி மற்றும் நாட்டின் சிறந்த தலைவர் ஆவார்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை</h2><p>1998 முதல் 2003 ஆம் ஆண்டு வரை சீனாவின் பிரதமராகப் பதவி வகித்த ஜூ ரோங்ஜி, சீனா உலக வர்த்தக அமைப்பில் இணைவதற்கு முக்கியப் பங்காற்றினார்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c6eb5a5-c4b9-422e-851c-aba51c975a90/26-6a7d72e42277c.webp' /></p><p>


மேலும், ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், சந்தை சார்ந்த பொருளாதாரக் கொள்கைகளை அறிமுகப்படுத்தி பல்வேறு சீர்திருத்தங்களையும் முன்னெடுத்தார்.</p><p>



இதன் மூலம் சீனா சர்வதேச அளவில் பொருளாதார வல்லரசாக உருவெடுப்பதற்கான அடித்தளத்தை அமைத்த முக்கிய தலைவர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார். </p><p>இந்தியா – சீனா இருதரப்பு உறவுகளை மேம்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கில், 2002ஆம் ஆண்டு ஜூ ரோங்ஜி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டார். அப்போது இந்தியாவின் பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாயுடன் அவர் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T07:31:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 மாதங்களின் பின் சொந்த ராசியில் புதன் பெயர்ச்சி : நிதி நிலையில் பலனடைய போகும் 3 ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mercury-transit-in-virgo-who-get-luck-1786603546"></link>
            <id>https://manithan.com/article/mercury-transit-in-virgo-who-get-luck-1786603546</id>
            <summary type="text">வேத ஜோதிடப்படி, நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதன் தாக்கம் மனித வாழ்க்கையில் ஆழமான பிரதிபிப்பை ஏற்படுத்துகின்றன. அவற்றில் புத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத ஜோதிடப்படி, நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதன் தாக்கம் மனித வாழ்க்கையில் ஆழமான பிரதிபிப்பை ஏற்படுத்துகின்றன. </p><p>அவற்றில் புத்திசாலித்தனம், பேச்சு, கல்வி, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படுபவர் புதன்.மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன், சந்திரனுக்கு அடுத்தபடியாக விரைவாக ராசி மாறும் கிரகமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/264609f3-0714-433a-bc92-cbd0d2d08e66/26-6a7d6d8f0d7ab.webp' /></p><p></p><p>புதன் ஆகஸ்ட் 22-ம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைந்து, செப்டம்பர் 7-ம் தேதி தனது சொந்த ராசியான கன்னியில் நுழைகிறார். இதனால் அனைத்து ராசிக்காரர்களும் பலன்களைப் பெறுவர்.</p><p>குறிப்பாக இந்த ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் நிதி நன்மைகளும், தொழிலில் வெற்றிகளும் குவியப் போகின்றன. அப்படி புதன் பெயர்ச்சியால் அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் அந்த&nbsp; ராசிகள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17f9d1c5-f070-4f9c-9b4b-667d8469ccd9/26-6a7d6d8fb70de.webp' /></p><p>மிதுன ராசியின் 5-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் நேர்மறையான பலன்கள் கிடைக்கும். நிதி நிலை மேம்பட்டு, கடன் தொல்லைகளுக்கு முடிவு கட்டுவீர்கள்.&nbsp;</p><p> நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றமும், பணியிடத்தில் புதிய பொறுப்புகளும் கிடைக்கலாம்.</p><h2>

கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23ebac41-3617-4e15-a673-df0f92a712d6/26-6a7d6d906dbc8.webp' /></p><p> கன்னி ராசியின் 2-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் சாதகமான பலன்கள் கிடைக்கும். மனதில் உள்ள ஆசைகள் நிறைவேறும். கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். ஆன்மீக பயணங்களுக்கான வாய்ப்புகளும் கிடைக்கும். </p><p>மாணவர்கள் படிப்பில் சிறந்து, நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பொருள் இன்பங்கள் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவேறும்.</p><h2>
தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/116f8004-1873-483d-8fb9-dfa0cbbc3883/26-6a7d6d9120c77.webp' /></p><p></p><p>தனுசு ராசியின் 11-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைத்து, வாழ்க்கைப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். </p><p>நீண்ட தூரப் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வரும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மனநிலை மேம்பட்டு, நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T07:31:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[எந்நேரம் போன்..கழுத்தில் அறுவை சிகிச்சைக்கு காரணம் இதான்!! நடிகை ஷகீலா வேதனை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/shakila-rs-3-lakh-neck-surgery-due-to-mobile-using-1786606464"></link>
            <id>https://viduppu.com/article/shakila-rs-3-lakh-neck-surgery-due-to-mobile-using-1786606464</id>
            <summary type="text">ஷகீலா&amp;nbsp;90ஸ் கிட்ஸ்களின் கிளாமர் குயினாக திகழ்ந்து, குக் வித் கோமாளி, பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னுடைய பிம்பத்தையே மாற்றியவர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஷகீலா&nbsp;</h2><p>90ஸ் கிட்ஸ்களின் கிளாமர் குயினாக திகழ்ந்து, குக் வித் கோமாளி, பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னுடைய பிம்பத்தையே மாற்றியவர்தான் நடிகை ஷகீலா.
இந்நிலையில். திடீரென ஷகீலாவுக்கு கழுத்தில் அறுவை சிகிச்சை செய்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை கொடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddb3dd67-3a89-45c2-be78-b6af5f1fef72/26-6a7d7382f2467.webp' /></p><p> </p><p>இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், நான் அதிக நேரம் செல்போனை பயன்படுத்துவேன், ஆன்லைன் விளையாட்டுகளை அதிகம் விரும்பி விளையாடுவேன். படுக்கையில் ஒரு பக்கமாய் படுத்துக் கொண்டு, பல மணிநேரம் விளையாடுவேன். </p><p>இதன் விளைவாகத்தான் கழுத்திலுள்ள முக்கிய ரத்தநாளங்கள் பாதிக்கப்பட்டது. இதனால் தற்போது அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5edde11b-050d-4cd2-bd65-0405a4b15e75/26-6a7d7383aa721.webp' /></p><p> </p><p>இந்த சிகிச்சைக்கு ரூ. 3 லட்சம் வரை செலவானதுடன், சாப்பிடுவது, நடப்பது போன்ற அடிப்படை தேவைகளுக்குக் கூட மற்றவர்களின் உதவி தேவைபடுகிறது என்று வேதனையுடன் கூறியுள்ளார். மேலும் குழந்தைகளிடம் செல்போனை பெற்றோர் கொடுக்க வேண்டாம் என்றும் அறிவுரை கூறியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-13T07:30:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[21 நாட்களில் தமிழ்நாட்டில் ஜனநாயகன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. முழு விவரம் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/jananayagan-movie-21-days-tamilnadu-box-office-1786605227"></link>
            <id>https://cineulagam.com/article/jananayagan-movie-21-days-tamilnadu-box-office-1786605227</id>
            <summary type="text">தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஜனநாயகன் திரைப்படம் தமிழ்நாட்டில் 21 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஜனநாயகன் திரைப்படம் தமிழ்நாட்டில் 21 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை பார்க்கலாம் வாங்க.</p><p></p><p>
</p><h2>
ஜனநாயகன்
</h2><p>
2026-ஆம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் ஜனநாயகன். விஜய் அரசியலுக்கு சென்றுவிட்டார், அவருடைய கடைசி படம் இது என்பதால், திருவிழா போல் இப்படத்தை கொண்டாட அனைவரும் காத்திருந்தனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a1f9837-3f0e-4c9c-b470-df11574daf63/26-6a7d6eaf3526b.webp' /></p><p>ஆனால், ஜனவரி மாதம் இப்படம் வெளிவராதது மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்தது.

6 மாதங்களுக்கு பின் பல பிரச்சனைகளையும், தடைகளையும் தாண்டி கடந்த ஜூலை 23-ஆம் தேதி ஜனநாயகன் வெளியானது. எதிர்பார்த்த அளவிற்கு தமிழ்நாட்டில் இப்படம் வசூல் செய்யவில்லை என்றாலும், திருட்டுத்தனமாக லீக் ஆகி 1.2 கோடி பேர் பார்த்த திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பா என அனைவரையும் வியக்க வைத்தது.
</p><h2>
தமிழ்நாடு</h2><p> பாக்ஸ் ஆபிஸ்

முதல் நாளிலிருந்தே ஜனநாயகன் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் குறித்த வசூலை தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்நிலையில், 21 நாட்களில் இப்படம் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34c87195-62ab-4a72-9f70-c65174854fee/26-6a7d6eae7bfad.webp' /></p><p>

அதன்படி, இப்படம் 21 நாட்களில் ரூ. 145 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும், இப்படத்தின் இறுதி வசூல் தமிழ்நாட்டில் எவ்வளவு வரும் என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T07:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் கணவன் தாக்குதலை தடுத்ததால் தூக்கிலிடப்பட்ட 23 வயதான இளம் பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/23-year-old-marzieh-nieri-hanged-in-iran-1786598914"></link>
            <id>https://canadamirror.com/article/23-year-old-marzieh-nieri-hanged-in-iran-1786598914</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரானில் பாலியல் தாக்குதலுக்கு முயன்ற ஒருவரிடமிருந்து தற்காப்புக்காகச் செயல்பட்டதாகக் கூறிய 23 வயதான மர்ஸியே நெய்ரி தூக்கிலிடப்பட்டுள்ளார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரானில் பாலியல் தாக்குதலுக்கு முயன்ற ஒருவரிடமிருந்து தற்காப்புக்காகச் செயல்பட்டதாகக் கூறிய 23 வயதான மர்ஸியே நெய்ரி தூக்கிலிடப்பட்டுள்ளார்.


அந்தத் தண்டனை 2026 ஆகஸ்ட் 8 அதிகாலை கஸ்வின் மத்திய சிறையில் நிறைவேற்றப்பட்டது.
</p><p>
குடும்ப அழுத்தத்தின் காரணமாக தனது 17-வது வயதில் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படும் நெய்ரி, 2021 அக்டோபரில் தனக்கு 18 வயதாக இருந்தபோது, மதுபோதையில் இருந்த தனது கணவரின் தொழில் கூட்டாளி ஒருவர் தன்னை பாலியல் ரீதியாகத் தாக்க முயன்றதாக தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd10c2e8-b983-4edb-83d4-a96bdcbd7c7f/26-6a7d5603f3682.webp' /></p><h2>கணவரின் தொழில் கூட்டாளி&nbsp;&nbsp;பாலியல் துன்புறுத்தல்</h2><p> 

அப்போது தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சமையலறைக் கத்தியைப் பயன்படுத்தியதாகவும், ஏற்பட்ட மோதலில் அந்த நபரும் தனது கணவரும் உயிரிழந்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.</p><p> 

சம்பவத்துக்குப் பின்னர் சில நாட்களில் அதிகாரிகளிடம் சரணடைந்த அவர், தனது செயல் தற்காப்புக்காக மேற்கொள்ளப்பட்டது என வாதிட்டபோதும், ஈரான் நீதிமன்றங்கள் அந்த வாதத்தை ஏற்கவில்லை. </p><p>

இதையடுத்து, ஈரானின் ‘கிசாஸ்’ எனப்படும் பழிக்குப் பழி சட்ட நடைமுறையின் கீழ் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 


 2026ஆம் ஆண்டில் இதுவரை ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண்களின் எண்ணிக்கை குறைந்தது 14 ஆக உயர்ந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. </p><p>

தன்னை பாலியல் ரீதியாகத் தாக்க முயன்ற ஒருவரைக் கொன்றதாகக் கூறப்பட்ட வழக்கில் 2014ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்ட ரெய்ஹானே ஜப்பாரியின் வழக்குடன் நெய்ரியின் வழக்கும் ஒப்பிடப்படுகிறது.
</p><p>
 ஈரானின் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தில் ‘கிசாஸ்’ உள்ளிட்ட நடைமுறைகள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் சட்டப் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.</p><p>

 இருப்பினும், நெய்ரி பாலியல் தாக்குதலுக்கு உள்ளானார் என்பது நீதிமன்றத்தால் நிரூபிக்கப்படவில்லை ஆனால் அவர் முன்வைத்தது தற்காப்பு வாதம் என்று செய்திகள் கூறுகிறது</p>]]></content>
            <updated>2026-08-13T07:26:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்ணுக்குத் தொடர் தொல்லை; இளைஞர்கள் மீது தீவைப்பு; பொலிஸ் விசாரணையில் பகீர் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/following-harassment-of-a-woman-road-bulathsinhala-1786606015"></link>
            <id>https://jvpnews.com/article/following-harassment-of-a-woman-road-bulathsinhala-1786606015</id>
            <summary type="text">&amp;nbsp; புலத்சிங்ஹல&amp;nbsp; &amp;nbsp;பகுதியில் உள்ள அதூரா கெவிமலே வத்த (Athura Kewimale Watta) பகுதியில், ஒரு பெண்ணுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; புலத்சிங்ஹல&nbsp; &nbsp;பகுதியில் உள்ள அதூரா கெவிமலே வத்த (Athura Kewimale Watta) பகுதியில், ஒரு பெண்ணுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த இரு இளைஞர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவத்தில், திருமணமான தம்பதியினர் உட்பட மூவர் புலத்சிங்ஹல காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>கடந்த 10-ஆம் தேதி இரவு நடந்த இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அந்த இரு இளைஞர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

படுகாயமடைந்த அந்த இரு இளைஞர்களும் புலத்சிங்ஹலவின் பஹல வெல்கம&nbsp; (Pahala Welgama) பகுதியைச் சேர்ந்தவர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da40b13d-edb2-4f50-b45c-28e1bf112461/26-6a7d71c10869a.webp' /></p><h2>&nbsp;கணவருடன்&nbsp; சென்று கொண்டிருந்தபோது&nbsp;பெண்ணுக்குத் தொல்லை</h2><p> </p><p>

இச்சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களில் 29 வயதான தம்பதியினரும், அந்தப் பெண்ணின் 19 வயதுடைய சகோதரரும் அடங்குவர்.

காவல்துறை விசாரணையின்படி, கைது செய்யப்பட்ட தம்பதியினரில் உள்ள பெண் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிகிறார். </p><p>

10-ஆம் தேதி இரவு வேலையை முடித்துவிட்டு பேருந்திலிருந்து இறங்கி கணவருடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ​​பாதிக்கப்பட்ட அந்த இரு இளைஞர்களும் அப்பெண்ணுக்குத் தொல்லை கொடுத்துள்ளனர்.</p><p></p><p>

 இதனால் ஆத்திரமடைந்த கணவர் அந்த இளைஞர்களைக் கண்டித்துள்ளார். அதைத் தொடர்ந்து, அந்த இளைஞர்கள் அப்பெண்ணின் வீட்டிற்கு அருகில் வந்துள்ளனர்.

இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, அப்பகுதிவாசிகள் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை அந்த இளைஞர்கள் மீது வீசி தீ வைத்ததாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.</p><p></p><p> </p><p>

தாக்குதலில் படுகாயமடைந்த அந்த இரு இளைஞர்களும் முதலில் ஹொரணை (Horana) ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
</p><p>
 இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், சந்தேக நபர்களின் வீட்டைத் தாக்கிச் சேதப்படுத்தியதும் தெரியவந்துள்ளது.

இன்னிலையில் சமபவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புலத்சிங்ஹல பொலிஸர மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-13T07:24:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெக்ஹோ சமனின் தாயார் கொலையில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/motorcycle-used-in-murder-of-backhoe-samans-1786602822"></link>
            <id>https://ibctamil.com/article/motorcycle-used-in-murder-of-backhoe-samans-1786602822</id>
            <summary type="text">பாதாள உலக தலைவன் &#039;பெக்ஹோ சமன்&#039; என்பவரின் தாயார் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிள்&amp;nbsp; கண்டுபிடிக்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலக தலைவன் 'பெக்ஹோ சமன்' என்பவரின் தாயார் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிள்&nbsp; கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>ஊருபொக்க - மாத்தறை வீதியில் உள்ள தம்பஹால பொல்வத்த பகுதியில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் கைவிடப்பட்ட நிலையில், அந்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டதாக&nbsp; காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>
 

காவல்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>பெக்ஹோ சமன் தாயார் கொலை</h2><p>மித்தெனிய காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட உல்ஹிட்டியாவ பகுதியில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் நேற்று (12.08.2026) துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்றிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0d8dba0-207e-49cb-924d-9ff226ed3e4c/26-6a7d6cc512793.webp' /></p><p>குறித்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பெக்ஹோ சமனின் தாயார் மித்தெனிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்திருந்தது.&nbsp;</p><p>

 

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் கைத்துப்பாக்கி வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. </p><p>எவ்வாறாயினும், கொலைக்கான நோக்கம் இன்னும் கண்டறியப்படவில்லை, இதேவேளையில் காவல்துறை விசாரணைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T07:16:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு 10 இயந்திர படகுகள் வழங்கி வைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/10-boats-donated-to-trincomalee-fishermen-1786601451"></link>
            <id>https://tamilwin.com/article/10-boats-donated-to-trincomalee-fishermen-1786601451</id>
            <summary type="text">டித்வா புயலால் பாதிக்கப்பட்டு, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த,
திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு 10 இயந்திர கடற்றொழில் படகுகள் வழங்கி
வைக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>டித்வா புயலால் பாதிக்கப்பட்டு, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த,
திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு 10 இயந்திர கடற்றொழில் படகுகள் வழங்கி
வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
இதற்கான நிகழ்வு திருகோணமலை மாவட்ட செயலகத்தில், மாவட்ட செயலாளர் W.G.M
ஹேமந்தகுமார தலைமையில் இன்று(13)&nbsp; நடைபெற்றுள்ளது.</p><h2>10 இயந்திர படகுகள்</h2><p>
</p><p>
இதனை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்
சந்திரசேகர், வெளி விவகார வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண்
ஹேமச்சந்திர, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன ஆகியோர்
வழங்கி வைத்துள்ளனர்.</p><p>

</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58dabcce-3f42-4289-b264-5a378e04c645/26-6a7d61e7b2ba4.webp' /></p>]]></content>
            <updated>2026-08-13T07:14:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பான் உரிமைகோரும் குரில் தீவுக்கு ரஷ்ய அதிபர் புடின் பயணம்: டோக்கியோ எதிர்ப்பால் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/putin-visits-kuril-islands-claimed-by-japan-1786605119"></link>
            <id>https://news.lankasri.com/article/putin-visits-kuril-islands-claimed-by-japan-1786605119</id>
            <summary type="text">ஜப்பானின் வடக்கு பிரதேசம் என்று அழைக்கப்படும் குரில்(Kuril) தீவுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். புடின் சர்ச்சைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானின் வடக்கு பிரதேசம் என்று அழைக்கப்படும் குரில்(Kuril) தீவுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.</p><h2> புடின் சர்ச்சைக்குரிய பயணம்</h2><p>ஜப்பானின் வடக்கு பிரதேசம் என அழைக்கப்படும் குரில் தீவுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வரலாற்று சிறப்புமிக்க முதல் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.</p><p> இந்த குரில் தீவுகள் 1945 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் கடைசி நாட்களில் சோவியத் யூனியன் படைகளால் கைப்பற்றப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75ac49ef-40c4-4852-badd-935780e29861/26-6a7d6e4099e88.webp' /></p><p> நீண்ட காலமாக ரஷ்யாவின் தூரக் கிழக்கு பகுதிகளில் அமைந்துள்ள இந்த தீவுக் கூட்டம் ஜப்பான் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான உரசல் புள்ளியாக இருந்து வருகிறது.</p><p> புடின் இந்த தீவு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருப்பதை கிரெம்ளின் வெளியிட்ட வீடியோ காட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன.</p><p></p><p>மேலும் குரில் தீவில் ரஷ்ய ஜனாதிபதி புடின் உள்ளூர் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு சென்றுள்ளார், அங்கு அவருக்கு கேவியர் என்ற மீன் முட்டை உணவு வழங்கப்பட்டது.</p><h2> &nbsp;ஜப்பான் கடும் கண்டனம்</h2><p>புடினின் இந்த சுற்றுப்பயணத்திற்கு ஜப்பானிய அரசாங்கம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/436dc68b-7d7b-464c-ba60-0fcfb4463364/26-6a7d6e414e008.webp' /></p><p> அத்துடன் வடக்கு பிரதேசம் வரலாற்றிலும், சர்வதேச சட்டத்தின் படியும் ஜப்பானிடம் இருந்து பிரிக்க முடியாத ஒரு பகுதி. எனவே ஜப்பானிய அரசு புடினின் இந்த சுற்றுப்பயணத்திற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கிறது என்று ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொட்டெகி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">Whatsapp</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T07:13:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோமியம் லீற்றருக்கு பத்து ரூபாய்; புதிய திட்டம் அறிமுகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ten-rupees-per-litre-of-cow-urine-in-uttar-pradesh-1786604874"></link>
            <id>https://jvpnews.com/article/ten-rupees-per-litre-of-cow-urine-in-uttar-pradesh-1786604874</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஒரு லீற்றர் பசு மாட்டின் கோமியத்தை (Cow Urine) 10 ரூபாய்க்கு வாங்கும் திட்டத்தை உபி அரசு ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஒரு லீற்றர் பசு மாட்டின் கோமியத்தை (Cow Urine) 10 ரூபாய்க்கு வாங்கும் திட்டத்தை உபி அரசு ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.</p><p>இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f425b4a1-1d07-4b64-9fc8-4130b0e7d02e/26-6a7d6d4b90313.webp' /></p><h2>15 கிராமங்களில் சோதனை முறை</h2><p> 

இந்நிலையில் அங்கு, விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரிடம் இருந்து ஒரு லீற்றர் பசு மாட்டின் கோமியத்தை (Cow Urine) 10 ரூபாய்க்கு வாங்கும் திட்டத்தை உபி அரசு ஆரம்பித்துள்ளது.</p><p></p><p> </p><p>

முதற்கட்டமாக, 15 கிராமங்களில் சோதனை முறையில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம், நாளாந்தம் சுமார் 500 லீற்றர் கோமியம் சேகரிக்கப்படுகிறது. 

இந்த கோமியத்தை பயன்படுத்தி, இரசாயன உரங்களுக்கு மாற்றாக இயற்கை விவசாய உரங்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

இந்த சோதனை வெற்றி பெற்றால், மாநிலம் முழுவதும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என உபி அரசு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-13T07:05:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈழத்தின் வரலாறே மாறும்! யாழ். ஆனைக்கோட்டையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archaeological-evidence-of-tamil-culture-in-jaffna-1786598980"></link>
            <id>https://ibctamil.com/article/archaeological-evidence-of-tamil-culture-in-jaffna-1786598980</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - ஆனைக்கோட்டைப் பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழாவாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்பொருட்கள் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - ஆனைக்கோட்டைப் பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழாவாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படவுள்ளன.</p><p>வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்பொருட்கள்
இந்தக் காட்சிப்படுத்தல் நிகழ்வானது இன்று (13.08.2026) மற்றும் நாளை (14.08.2026) ஆகிய இருதினங்கள் இடம்பெறவுள்ளது.
</p><p>
இக் கண்காட்சியில் எமது முன்னோர் பயன்படுத்திய அரிதான பொருட்கள், பண்டைய
பண்பாட்டு எச்சங்கள் மற்றும் வரலாற்றுச் சான்றுகள் பலவும்
காட்சிப்படுத்தப்படுகின்றன.</p><p></p><h2>ஈழத்தின் பண்டைய வரலாறு</h2><p>
</p><p>
இக் கண்காட்சியில் ஈழத்தின் பண்டைய வரலாற்றினையும் ஆனைக்கோட்டைப் பிரதேசத்தின்
தொன்மைச் சிறப்பையும் நேரில் கண்டுகொள்ள முடிகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5df57ab0-1501-4e68-bfe9-35e2a46c0500/26-6a7d5e5838c43.webp' /></p><p>இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மதகுருக்கள், வாழ்நாள்
பேராசிரியர் செல்லையா கிருஷ்ணராசா, தொல்லியல் பேராசிரியர் ராஜ்சேமதேவா, யாழ்.
பல்கலைக்கழக வரலாற்று துறை தலைவர் அனித்தா சசிதரன்.</p><p>மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச
செயலர் பிரபாகரமூர்த்தி, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், களனி பல்கலைக்கழக
மாணவர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், மக்கள் என பலரும் கலந்துகொண்டு தொல்லியல்
சின்னங்களை பார்வையிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3a6705d-64a7-4e30-99ab-be9258821a3a/26-6a7d5e5950d77.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4d779d6-6c36-4741-9e37-b5ad13a62c9e/26-6a7d5e5a26fd2.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da3f6c6a-de34-4a25-8b9e-f31cb358dec8/26-6a7d5e5af04ab.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T07:02:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-notice-to-tax-payers-1786602417"></link>
            <id>https://tamilwin.com/article/special-notice-to-tax-payers-1786602417</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான பெறுமதி சேர் வரியை (VAT) ஓகஸ்ட் 20 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான பெறுமதி சேர் வரியை (VAT) ஓகஸ்ட் 20 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) அறிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதற்கமைய, வரியை செலுத்த தவறினால் அல்லது தாமதமாக செலுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் திணைக்களம் எச்சரித்துள்ளது.</p><h2>ஜூலை மாதத்திற்கான VAT அறிக்கைகள்</h2><p>காசோலைகள், வங்கி வரைவோலைகள் அல்லது கட்டளைப் பத்திரங்கள் மூலம் செய்யப்படும் கட்டணங்கள் உரிய திகதிக்குப் பின்னர் பெறப்பட்டால், அவை தாமதமானதாகவே கருதப்படும் என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ab465bd-2b60-40fa-ba9d-378370117fd3/26-6a7d6bc50873a.webp' /></p><p>மேலும், ஜூலை மாதத்திற்கான VAT அறிக்கைகள் ஆகஸ்ட் 31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் இணையவழியில் சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>இதற்கிடையில், முற்பண வரியை (Withholding Tax) ஓகஸ்ட் 15, 2026 அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறும் வரி செலுத்துவோரை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

</p><p>ஜூலை மாதத்திற்கான சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியை ஆகஸ்ட் 20 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்த வேண்டும் என்றும் அத்துறை அறிவுறுத்தியுள்ளது.&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T07:01:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரண தண்டனை குற்றவாளிகளை வீட்டிற்கு அனுப்பிய மகிந்தவின் சுவாரஸ்யமான அரசியல் முரண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahinda-sends-death-row-convicts-home-1786602798"></link>
            <id>https://ibctamil.com/article/mahinda-sends-death-row-convicts-home-1786602798</id>
            <summary type="text">இலங்கையில் தற்போது மரண தண்டனை சட்டரீதியாக தொடர்ந்தாலும் தூக்குத் தண்டனை நடைமுறையில் நடைமுறைப்படுத்தும் நிலை தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன.

அண்மைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தற்போது மரண தண்டனை சட்டரீதியாக தொடர்ந்தாலும் தூக்குத் தண்டனை நடைமுறையில் நடைமுறைப்படுத்தும் நிலை தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன.
</p><p>
அண்மையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்த முக்கிய தீர்ப்பில் நீதிமன்றினால் வழங்கப்பட்ட மரண தண்டனையின் பின்னரே இவ்வாறான கேள்விகள் எழுந்துள்ளன.</p><p>

இலங்கையில் மரண தண்டனை தொடர்பான விவாதம் மீண்டும் கவனம் பெற்றுள்ள நிலையில், 2014ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐந்து இந்திய கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை மன்னித்து விடுதலை செய்த சம்பவம் குறித்தும் தற்போது பேசப்பட்டு வருகின்றது.</p><p></p><h2>இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்</h2><p>
</p><p>
2011 நவம்பர் 28 அன்று தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த பி. எமர்சன், பி. அகஸ்டஸ், ஆர். வில்சன், கே. பிரசாத் மற்றும் ஜே. லாங்லெட் ஆகிய ஐந்து இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ed3c8d8-43a3-4bc5-915d-52a3002b437d/26-6a7d6ce01115e.webp' /></p><p> </p><p>

2014 அக்டோபர் 30 அன்று உயர் நீதிமன்றம் அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது.

இந்தத் தீர்ப்பு இந்தியாவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. </p><p>இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக முயற்சிகளின் பின்னர், 2014 நவம்பர் 19 அன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஐந்து பேரின் மரண தண்டனையையும் முழுமையாகத் தள்ளுபடி செய்தார். </p><p>

அதன்பின்னர் அவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்திய உயர் ஸ்தானிகராலயம், இந்த மனிதாபிமான நடவடிக்கைக்காக மகிந்தவுக்கு நன்றி தெரிவித்தது.</p><p>

எனவே, மகிந்த ராஜபக்ச தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து பேரை வீட்டிற்கு அனுப்பினார்” என்று பொதுவாகக் கூறுவதைவிட, ஜனாதிபதிக்குரிய மன்னிப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து இந்திய கடற்றொழிலாளர்களின் தண்டனையை முழுமையாகத் தள்ளுபடி செய்து, அவர்களை விடுதலை செய்து இந்தியாவுக்கு அனுப்பினார் என்பதே துல்லியமான வர்ணனையாகும்.</p><p>இதனை இன்றும் சில அரசியல் அவதானிகள் மேற்கண்டவாறு வர்ணிக்கின்றனர்</p><p></p><h2>மரண தண்டனை உத்தரவு</h2><p>
2019ஆம் ஆண்டு மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக விவாதம் தீவிரமடைந்தபோது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த , தான் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் இருந்த காலங்களில் மரண தண்டனை உத்தரவுகளில் கையெழுத்திடவில்லை என்றும், மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8711ed8e-79e1-41f4-8245-aa0992fe487b/26-6a7d6ce0c28ff.webp' /></p><p>
</p><p>
அதனால், 2014ஆம் ஆண்டு ஐந்து இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை அவர் மன்னித்த சம்பவம், இலங்கையின் மரண தண்டனை தொடர்பான அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக உள்ளது.
</p><p>
இலங்கையில் மரண தண்டனை சட்டத்தில் இருந்து நீக்கப்படவில்லை. அதாவது, நீதிமன்றங்கள் இன்னும் சில கடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க முடியும். 

ஆனால் 1976ஆம் ஆண்டிலிருந்து தூக்குத் தண்டனை நடைமுறையில் நிறைவேற்றப்படவில்லை. </p><p>Amnesty International, இலங்கையை “சட்டத்தில் மரண தண்டனையை வைத்திருக்கும் ஆனால் நடைமுறையில் அதை நடைமுறைப்படுத்தாத நாடு” என வகைப்படுத்துகிறது.
</p><p>
இதன் பொருள், ஒருவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தாலும், அந்தத் தீர்ப்பு தானாகவே உடனடியாக தூக்கிலிடப்படுவதாக அர்த்தமல்ல. இலங்கையில் நீண்டகாலமாக ஒரு de facto moratorium அதாவது மரண தண்டனை நிறைவேற்றப்படாத நடைமுறைத் தடை நிலவி வருகிறது. </p><p>

ஐக்கிய நாடுகளிடம் இலங்கை அரசாங்கம் அளித்த தகவல்களும் 1976 முதல் இந்தத் தடை தொடர்வதை உறுதிப்படுத்துகின்றன.

இருப்பினும், 2026ஆம் ஆண்டில் மரண தண்டனை தொடர்பான இரண்டு முக்கிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
</p><p>
முதலாவதாக, ஹெரோயின் கடத்தல் வழக்கில் மரண தண்டனை பெற்ற சமந்த குமார, “வெலே சுதா” தனது தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டை இலங்கை உயர் நீதிமன்றம் 2026 ஜூன் 1 அன்று நிராகரித்தது.</p><p></p><h2>சர்வதேச அளவிலும் கடுமையான எதிர்ப்பு</h2><p>
</p><p>
இரண்டாவதாக, 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகிய இருவருக்கும் 2026 ஜூலை 31 அன்று கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. </p><p>

மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் பெரும்பான்மை தீர்ப்பின் அடிப்படையில் இந்தத் தண்டனை வழங்கப்பட்டது. இருவருக்கும் மேல்முறையீடு செய்யும் உரிமை உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b41c543-6b41-4f18-83dd-d9d8caf6e994/26-6a7d6ce177884.webp' /></p><p>
</p><p>
இங்கு மிக முக்கியமான வேறுபாடு என்னவென்றால், மரண தண்டனை விதிக்கப்படுவது மற்றும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது இரண்டு வெவ்வேறு விடயங்கள்.</p><p>

2026 ஜூலை இறுதி நிலவரப்படி, இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் இருந்தாலும், 1976க்குப் பின்னர் எந்த நீதிமன்ற மரண தண்டனையும் தூக்கிலிட்டு நிறைவேற்றப்படவில்லை.
</p><p>
இந்தக் கேள்விக்கு தற்போதைய நிலையில் உறுதியான “ஆம்” என்று கூற முடியாது.

2019ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்த முயன்றபோதும், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. </p><p>

பின்னர் மரண தண்டனையை நடைமுறைப்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்படவில்லை. </p><p>ஐ.நா. ஆவணங்களிலும் இலங்கை அரசாங்கம் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்து அவ்வப்போது அறிவிப்புகள் வந்தபோதிலும், நடைமுறையில் அதை மீண்டும் தொடங்குவதற்கான இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
அதேவேளை, 2026 ஜூலை 31 அன்று இரண்டு முன்னாள் உயரதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது, சட்டத்தில் மரண தண்டனை இன்னும் உயிருடன் இருப்பதை மீண்டும் நினைவூட்டியுள்ளது. </p><p>

தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மரண தண்டனையை நிறைவேற்றும் நீண்டகால இடைக்காலத் தடையைத் தொடர்வதற்கு ஆதரவாக இருப்பதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
</p><p>
மகிந்த ராஜபக்ச வின் 2014ஆம் ஆண்டு நடவடிக்கையைப் பொறுத்தவரை, நீதிமன்றம் மரண தண்டனை விதித்த ஐந்து இந்தியர்களின் தண்டனையை ஜனாதிபதி மன்னிப்பு அதிகாரத்தின் மூலம் முழுமையாகத் தள்ளுபடி செய்து அவர்களை விடுதலை செய்தது என்பது உறுதிப்படுத்தப்பட்ட வரலாற்றுச் சம்பவமாகும்.
</p><p>
ஆனால், இதை இலங்கையில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது என்று பொருள்படுத்த முடியாது. அது இன்னும் சட்டத்தில் உள்ளது. 2026ஆம் ஆண்டில்கூட புதிய மரண தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. </p><p>எனினும், 1976 முதல் இதுவரை ஒரு மரண தண்டனையும் நடைமுறையில் நிறைவேற்றப்படவில்லை என்பதே இலங்கையின் தற்போதைய சட்ட நடைமுறை நிலையின் முக்கிய அம்சமாகும்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T07:01:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் தயாரிப்பாளருக்கு லாபம் மட்டுமே இத்தனை கோடிகளா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/viswanathan-and-sons-profit-details-1786581157"></link>
            <id>https://cineulagam.com/article/viswanathan-and-sons-profit-details-1786581157</id>
            <summary type="text">&amp;nbsp;சூர்யாசூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நாளை பிரமாண்டமாக வெளிவரவுள்ள படம் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ். இப்படம் பேமிலி ட்ராமாவாக இருந்தாலும்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>&nbsp;சூர்யா</h2><p>சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நாளை பிரமாண்டமாக வெளிவரவுள்ள படம் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ். இப்படம் பேமிலி ட்ராமாவாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் சூர்யா நடிக்கிறார் என்பதற்காவே பெரிய வரவேற்பு உள்ளது, உலகம் முழுவதும் முன்பதிவு மட்டுமே ரூ 7 கோடிகளுக்கு மேல் ஆகியுள்ளது.</p><p> </p><h2>லாபம்</h2><p>இந்த நிலையில் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் பட்ஜெட் ரூ 130 கோடி என்றாலும் இதன் பிஸினஸ் 200 கோடிகளுக்கு மேல் நடக்க தயாரிப்பாளருக்கு தற்போது ரூ 80 கோடிகளுக்கு மேல் லாபம் இருக்கலாம் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணித்துள்ளனர். அதோடு சூர்யாவின் முந்தைய படமான கருப்பு சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் லாபம் கொடுத்த படம், அதனால் ரிலிஸின் பிறகு விஸ்வநாதன் அண்ட் சன்ஸும் ரூ 100 கோடி வரை லாபம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/affac1cf-7004-4a2d-8363-8e1bf7daaa77/26-6a7d10a8dc4d1.webp' /></p><p>இதை தொடர்ந்து தீபாவளிக்கு ஜீது மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படமும் வர கண்டிப்பாக இந்த ஆண்டு சூர்யாவின் ஆண்டு தான் என திரை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-13T07:00:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இந்த ஆண்டு மின்வெட்டு ஏற்படாது : அமைச்சர் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-power-cuts-sri-lanka-secures-boosts-hydropower-1786600614"></link>
            <id>https://ibctamil.com/article/no-power-cuts-sri-lanka-secures-boosts-hydropower-1786600614</id>
            <summary type="text">எதிர்வரும் செப்ட​ம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து புதிய நிலக்கரி தொகைகள் நாட்டை வந்தடையவுள்ளதால், நாட்டில் எவ்வித மின்வெட்டும் மேற்கொள்ளப்பட மாட்டா...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் செப்ட​ம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து புதிய நிலக்கரி தொகைகள் நாட்டை வந்தடையவுள்ளதால், நாட்டில் எவ்வித மின்வெட்டும் மேற்கொள்ளப்பட மாட்டாது என&nbsp;வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.</p><p>அத்துடன் அடுத்த வருடத்திற்கு தேவையான நிலக்கரியை பெற்றுக்கொள்வதற்கான விலைமனு கோரல் நடவடிக்கைகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.</p><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;இதற்கு முன்னர் காணப்பட்ட முறைமையின் கீழ் ஏற்றுமதி துறைமுக அறிக்கைகள், விநியோகத்தர்கள் ஊடாக பெறப்பட்டமையால் நிலக்கரியின் தரம் தொடர்பில் சிக்கலான நிலைமை ஏற்பட்டது.</p><p></p><h2>நீர்மின் உற்பத்தி அதிகரிப்பு&nbsp;</h2><p>
</p><p>
புதிய முறைமையின் கீழ் குறித்த பரிசோதனை அறிக்கைகளை நேரடியாக இலங்கை நிலக்கரி நிறுவனத்திற்கு பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், இடைத்தரகர்கள் மூலம் இடம்பெறும் நிதி மற்றும் தர மோசடிகளை முழுமையாக தடுத்து நிறுத்த முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f862ec0-495d-4023-88b4-d7cd5b09e96a/26-6a7d66183fcb4.webp' /></p><p>ஓகஸ்ட் மாதம் நாடு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக, ரந்தெனிகல நீர்த்தேக்கத்தில் உள்ள நீர்மின் உற்பத்தியைத் தவிர்த்து, மின் உற்பத்திக்குத் தேவையான நீர் இருப்பு நாட்டில் தற்போது போதுமானதாக உள்ளது.</p><p>ஓகஸ்ட் 12 ஆம் திகதிக்குள், 868 ஜிகாவாட் நீர்மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத் தேவையான நீர் பெறப்பட்டுள்ளதுடன் தற்போது, ​​நாட்டின் மின்சாரத் தேவையில் 48 சதவீதம் நீர்மின் உற்பத்தி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.
</p><p>
அதன்படி, மின்சார உற்பத்தியில் ஏற்படும் எந்தவொரு பற்றாக்குறையாலும் இந்த ஆண்டு மின்வெட்டு ஏற்படாது என்று அமைச்சர் பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T06:58:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரி செலுத்துவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vat-must-be-paid-by-august-20th-1786602703"></link>
            <id>https://ibctamil.com/article/vat-must-be-paid-by-august-20th-1786602703</id>
            <summary type="text">

2026 ஜூலை மாதத்திற்கான பெறுமதிசேர் வரியை (VAT) ஓகஸ்ட் 20 ஆம் திகதிக்குள் செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

வரிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>

2026 ஜூலை மாதத்திற்கான பெறுமதிசேர் வரியை (VAT) ஓகஸ்ட் 20 ஆம் திகதிக்குள் செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p>
வரியைச் செலுத்தத் தவறினால் அல்லது தாமதமாகச் செலுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. </p><p>

காசோலை, வங்கி வரைவோலை அல்லது செலுத்துகை ஆணை (Payment Order) மூலம் செலுத்தப்படும் தொகைகள் உரிய திகதிக்கு பிறகு பெறப்பட்டால், அவையும் தாமதமான செலுத்துகையாகவே கருதப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>வற் அறிக்கை&nbsp;</h2><p>

மேலும், ஜூலை மாதத்திற்கான வற்(VAT) அறிக்கைகள் ஓகஸ்ட் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக இணையவழியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b15e6c8e-41c2-4c75-9cfd-4fbe7a3fe9f7/26-6a7d6aae4535c.webp' /></p><p>

இதேவேளை, பிடித்தம் செய்யப்பட்ட வரியை ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முன்னரும், ஜூலை மாதத்திற்கான சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியை (SSCL) ஓகஸ்ட் 20 ஆம் திகதிக்கு முன்னரும் செலுத்துமாறும் வரி செலுத்துவோருக்கு திணைக்களம் நினைவூட்டியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T06:57:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் நோய் - எச்சரிக்கும் வைத்தியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rise-in-intestinal-disorders-among-sl-youth-1786587235"></link>
            <id>https://ibctamil.com/article/rise-in-intestinal-disorders-among-sl-youth-1786587235</id>
            <summary type="text">இளைஞர்கள் மத்தியில் குடல் சார்ந்த நோய்கள் அதிகரித்து வருவதாக இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க தெரிவித்துள்ளார். சுகாதார ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இளைஞர்கள் மத்தியில் குடல் சார்ந்த நோய்கள் அதிகரித்து வருவதாக இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க தெரிவித்துள்ளார். </p><p>சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க இதனைத் தெரிவித்தார்</p><p>அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், "நமது குடலுக்கும் மூளைக்கும் இடையே ஒரு சிக்கலான தொடர்பு உள்ளது.</p><p></p><p> </p><h2>எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி</h2><p>அதை நாம் 'குடல்-மூளை அச்சு' (gut-brain axis) என்று கூறுகிறோம். அதாவது நாம் அதிக மன அழுத்தத்தில் இருந்தாலோ அல்லது பதற்றத்தில் இருந்தாலோ, அது தானாகவே நமது குடலிலும் உணரப்படும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84311fb8-89e4-42f5-b3df-cc0d85cebdfd/26-6a7d6a8f0ecb3.webp' /></p><p>இந்தச் சிக்கலான செயல்முறை மற்றும் நாம் உட்கொள்ளும் உணவுப் பிரச்சனைகள் ஆகியவற்றின் சேர்க்கையால் IBS (Irritable Bowel Syndrome - எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி) நிலை ஏற்படலாம். </p><p>இந்த நிலை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நமது வாழ்க்கை முறை இப்போது மாறியுள்ளது; உணவுப் பழக்கவழக்கங்களும் மாறியுள்ளன. </p><p>காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் மற்றும் தானியங்கள் போன்ற இயற்கை உணவு முறையிலிருந்து பல இளைஞர்கள் விலகி, இலகுவாகக் கிடைப்பதால் செயற்கை உணவுகளை நோக்கிச் செல்வதை நான் காண்கிறேன். இதன் காரணமாக, அவர்களிடம் தற்போது IBS நிலை அதிகமாகக் காணப்படுகிறது என்றார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T06:56:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெக்கோ சமன் தாயார் கொலை விவகாரம் : சிக்கிய மோட்டார் சைக்கிள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/backhoe-saman-s-mother-motorcycle-used-in-murder-1786601707"></link>
            <id>https://tamilwin.com/article/backhoe-saman-s-mother-motorcycle-used-in-murder-1786601707</id>
            <summary type="text">பாதாள உலக தலைவர் &#039;பெக்கோ சமன்&#039; என்பவரின் தாயார் கொலை வழக்கில் தொடர்புடைய சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிள், உருபோக்கா பகுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலக தலைவர் 'பெக்கோ சமன்' என்பவரின் தாயார் கொலை வழக்கில் தொடர்புடைய சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிள், உருபோக்கா பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 

உருபோக்கா - மாத்தறை வீதியில் உள்ள தம்பஹல பொல்வத்த பகுதியில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் கைவிடப்பட்ட நிலையில், ஒரு சிறு பாலத்திற்கு அருகே அந்த மோட்டார் சைக்கிள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
</p><h2>பொலிஸ் விசாரணைகள் முன்னெடுப்பு</h2><p>
 

கிடைத்த தகவலின் அடிப்படையில் உருபோக்கா பொலிஸாரினால் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebbc9684-c83d-4ed8-a177-4d89b19be369/26-6a7d69ae0b3e0.webp' /></p><p>

 

மித்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உல்ஹிதியாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் நேற்று (12) துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.</p><p>

 

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 'பெக்கோ சமன்' என்பவரின் தாயாரான பாதிக்கப்பட்டவர், மித்தெனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
</p><p>
 

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் கைத்துப்பாக்கி வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. </p><p>கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, அதேவேளையில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p><p><b><i>you may like this video&nbsp; &nbsp;</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/rY6s6kUfodg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-13T06:56:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் அச்சுறுத்தலுக்கு அமெரிக்கா பயந்தது எப்படி? பத்திரிக்கையாளர் Sufiyan விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/journalist-sufiyan-about-us-iran-war-1786603937"></link>
            <id>https://news.lankasri.com/article/journalist-sufiyan-about-us-iran-war-1786603937</id>
            <summary type="text">iran - us war : ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே உள்ள தற்போதையை நிலை குறித்து பத்திரிக்கையாளர் Sufiyan விரிவாக பேசியுள்ளார்.  

ஈரான் - அமெரிக்கா போர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>iran - us war : ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே உள்ள தற்போதையை நிலை குறித்து பத்திரிக்கையாளர் Sufiyan விரிவாக பேசியுள்ளார். </p><h3> 

ஈரான் - அமெரிக்கா போர் </h3><p>

கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி, ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44ad573d-2459-4a77-a806-c83471448c98/26-6a7d69a33aa36.webp' /></p><p>

ஈரான் பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, உலகின் முக்கிய உலகின் 20% எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹார்மோஸ் நீரிணையையம் மூடியது. </p><p>

இதன் பின்னர் இரு நாடுகளுக்குமிடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டாலும், மீண்டும் அவ்வப்போது தாக்குதல் நடத்திய நிலையில், அமெரிக்கா தற்போது தாக்குதலை நிறுத்தியுள்ளது.
</p><p>
ஈரான் உச்சத்தலைவர் கொல்லப்பட்ட பின்னர் குர்திஷ் போராளிகளை உள்ளே அனுப்பி ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கு திட்டமிட்ட அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் முயற்சி தோல்வியில் முடிந்தது. </p><p>

ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த தாக்குதல் தற்போது ஈரானுக்கு சாதகமாகியுள்ளது. </p><p>

அமெரிக்காவில் ஆயுத பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் தாக்குதலை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. </p><p>

அமெரிக்கா தாக்குதலை நிறுத்தியது ஏன்?, ஈரானுக்கு இந்த போரினால் ஏற்பட்டுள்ள அனுகூலம் என்ன?, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான உறவு எவ்வாறு உள்ளது என்பது குறித்து பத்திரிக்கையாளர் சூஃபியன் விளக்கமளித்துள்ளார்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/JGaVRzs_l6A" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T06:52:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-anupama-talk-about-her-toxic-relationship-1786603646"></link>
            <id>https://cineulagam.com/article/actress-anupama-talk-about-her-toxic-relationship-1786603646</id>
            <summary type="text">காதல் முறிவு குறித்தும், காதலரால் தான் அனுபவித்த துன்புறுத்தல்கள் குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை அனுபமா பரமேஸ்வரன...</summary>
            <content type="html"><![CDATA[<p>காதல் முறிவு குறித்தும், காதலரால் தான் அனுபவித்த துன்புறுத்தல்கள் குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.</p><p></p><p>
</p><h2>அனுபமா பரமேஸ்வரன்</h2><p>
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுபமா பரமேஸ்வரன் கடந்த சில வாரங்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், நிம்மதியை அடைய பயனற்ற பாதையை கைவிட வேண்டியிருக்கும் எனவும், இனி தனது வாழ்க்கையை தானே தேர்ந்தெடுக்கிறேன் எனவும், வாழ்க்கையை கொண்டாடுவோம் என்றும் பதிவிட்டு இருந்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da73fcef-f9d0-4f3d-b271-fbcf5f415cea/26-6a7d688335350.webp' /></p><p>அந்த பதிவு நடிகை அனுபமா தனது காதல் முறிவை பற்றித்தான் கூறியுள்ளார் என சமூக வலைத்தளங்களில் பல்வேறு விவாதங்கள் ஏற்பட்டன. இந்நிலையில், காதல் முறிவு குறித்து நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். </p><h2>&nbsp;அந்த வழியும், வேதனையும்</h2><p>இன்ஸ்டாகிராம் பதிவு குறித்து பேசிய அவர், "அந்த பதிவிற்கு பின்னால் இரண்டு ஆண்டுகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலியை அனுபவித்தேன்".</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/699e15bc-e106-4a22-afa1-ec37213c91e2/26-6a7d68827b82d.webp' /></p><p> </p><p>

தனது காதலர் குறித்து பேசும்போது, "நான் அனுபவித்தது narcisstic abuse எனப்படும் உளவியல் ரீதியான கடுமையான துன்புறுத்தல். இந்த விஷயங்களை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அந்த வழியும், வேதனையும் தெரியும். ஒரு நாள் ரெமோவாக என்னை காதலிப்பார். அடுத்த நாளே அந்நியன் போன்று கொடூரமாக நடந்து கொள்வார். கடைசியாக அம்பியாக மாறி என்னிடம் இனி தவறு செய்ய மாட்டேன் என மன்னிப்பு கேட்பார். ஆனால், இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே இருந்தது".</p><p>

"ஒரு கட்டத்தில் நான் பயத்தில் வாழ்ந்து கொண்டிருந்தேன். நான் அவரிடம் ஒரு விஷயத்தை கூறினால் எப்படி நடந்து கொள்வாரோ என்ற பயத்தில் ஒத்திகை பார்த்து கொள்வேன். நான் நடித்து வெற்றி படங்களில் ஒன்று டிராகன். அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் நான் கலந்து கொள்ளவில்லை".</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd1dc555-8177-44a9-9a20-0dad85882685/26-6a7d6883df3e3.webp' /></p><p> 

"எனது காதலன் மீது நம்பிக்கை வைத்து எனது தனிப்பட்ட வலிகளை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். ஆனால், அதன்மூலம் என்னிடம் உணர்வுபூர்வமான பிணைப்பை உருவாக்கினார். முதலில் அந்த விஷயங்கள் நம் மீது வைக்கப்படும் அக்கறை போன்று தோன்றும், ஆனால், காலப்போக்கில் ஆதிக்கம் செலுத்த தொடங்குவார்கள்".</p><p>"ஒரு கட்டத்தில் நான் என்னை உடை அணிய வேண்டும் என்பதை கூட அவரே தேர்ந்தெடுத்தார். எனக்கே தெரியாமல் எனது சொந்த முடிவுகளை எடுத்தார். நான் அவரை காதலிக்க தொடங்கிய மூன்று மாதங்களில் அவரது குடும்பத்தினரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அப்போது அவரது குடும்பத்தினர் நிச்சயதார்த்தம் வரை பேச தொடங்கினர். அப்போது நான் நிச்சயதார்த்தத்தை தள்ளிப்போட்டேன்" என கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9400573-b99b-45f8-8042-d3ccc28a5457/26-6a7d68819b9eb.webp' /></p><p> 

நடிகை <a href="https://www.youtube.com/watch?v=ePbAQJMqL0g" target="_blank">அனுபமா </a>பரமேஸ்வரன் இந்த பேட்டி தற்போது ரசிகர்களிடையே படுவைரலாகி வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-13T06:50:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[அறுவடைக்கு ஒரு மாதமே உள்ள நிலையில் நீர் இன்றி கருகிய 25 ஏக்கர் நெற்பயிர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/25-acres-of-rice-crops-wither-amid-water-shortage-1786600260"></link>
            <id>https://tamilwin.com/article/25-acres-of-rice-crops-wither-amid-water-shortage-1786600260</id>
            <summary type="text">அனுராதபுரம் - கஹட்டகஸ்திகிலிய, ஹம்மிலாவ பகுதியில் நிலவும்
கடுமையான நீர் பற்றாக்குறை காரணமாக, சுமார் 25 ஏக்கர் பரப்பளவிலான வயல்
நிலங்கள் நீர் இன்றி ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் - கஹட்டகஸ்திகிலிய, ஹம்மிலாவ பகுதியில் நிலவும்
கடுமையான நீர் பற்றாக்குறை காரணமாக, சுமார் 25 ஏக்கர் பரப்பளவிலான வயல்
நிலங்கள் நீர் இன்றி முற்றாகக் கருகி அழிந்துள்ளதாக விவசாயிகள் பெரும் கவலை
தெரிவித்துள்ளனர்.</p><p>

இன்னும் ஒரு மாத காலத்தில் அறுவடை செய்யப்பட வேண்டிய நிலையில் இருந்த
நெற்பயிர்களே இவ்வாறு அழிந்து போயுள்ளதாக
பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் வேதனைப்படுகின்றனர்.</p><h2>நீர் இன்றி கருகிய 25 ஏக்கர் நெற்பயிர்கள்</h2><p>

இது குறித்து விவசாயிகள் மேலும் தெரிவிக்கையில், "இம்முறை நெற்செய்கைக்காக ஒரு ஏக்கருக்கு சுமார் 100,000 ரூபாய் வரை செலவு
செய்து மிகவும் அர்ப்பணிப்புடன் பயிர்களைப் பராமரித்து வந்தோம். </p><p>

உரம், விதை
நெல், உழவுப் பணிகள் எனப் பெரும் தொகையை முதலீடு செய்திருந்தோம். இன்னும் ஒரு
மாதத்தில் அறுவடையை எதிர்பார்த்திருந்த வேளையிலேயே, இந்த நீர் பற்றாக்குறை
எங்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது.&nbsp;ஒட்டுமொத்தப் பயிர்களும் நீர் இன்றி இற்றுப் போய்விட்டன" என குறிப்பிட்டுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d41d9fd7-484b-422f-a7fb-8b1d9458af57/26-6a7d5edc399dd.webp' /></p><p>விவசாயத்தை மட்டுமே முதன்மை வாழ்வாதாரமாகக் கொண்ட இந்தப் பகுதி மக்கள்,
அறுவடைக்கு கைக்கெட்டிய பயிர் வாய்க்கெட்டாமல் போனதால் தங்களது
வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.</p><p>

எனவே, பாதிக்கப்பட்ட தமக்கு உரிய நட்டஈட்டைப் பெற்றுத்தர அதிகாரிகள் உடனடியாக
நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்தப் பகுதிக்கான விவசாய நீர் விநியோகத்தை
முறையாக மேலாண்மை செய்ய உரிய தரப்பினர் முன்வர வேண்டும் எனவும் ஹம்மிலாவ பகுதி
விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T06:49:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முழுச் சூரிய கிரகணம் ; பகலில் இருளில் மூழ்கிய பல ஐரோப்பிய நாடுகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/solar-eclipse-european-countries-plunged-darkness-1786597206"></link>
            <id>https://jvpnews.com/article/solar-eclipse-european-countries-plunged-darkness-1786597206</id>
            <summary type="text">&amp;nbsp; ஐரோப்பிய கண்டத்தில் பல பகுதிகளில் நேற்று (12) அரிய வகை முழுச் சூரிய கிரகணம் தென்பட்டது. இதன்போது நிலவு சூரியனை முழுமையாக மறைத்ததால், ஐரோப்பிய ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஐரோப்பிய கண்டத்தில் பல பகுதிகளில் நேற்று (12) அரிய வகை முழுச் சூரிய கிரகணம் தென்பட்டது. </p><p>இதன்போது நிலவு சூரியனை முழுமையாக மறைத்ததால், ஐரோப்பிய நாடுகளில் பல பகுதிகள் பகல் வேளையிலேயே இருளில் மூழ்கின.



இந்த அரிய வானியல் நிகழ்வைக் காண ஸ்பெயின் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d1645f8-3419-487d-8371-87af5e5d1432/26-6a7d4f57da715.webp' /></p><h2>அரிய வானியல் நிகழ்வைக் காண குவிந்த&nbsp; கோடிக்கணக்கான மக்கள்&nbsp;&nbsp;</h2><p>
</p><p>


கிரீன்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் வடக்கு ஸ்பெயின் ஆகிய பகுதிகளைக் கடந்து முழுச் சூரிய கிரகணம் தென்பட்டதுடன், ஐரோப்பிய பிரதான நிலப்பரப்பில் 1999ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11ஆம் திகதிக்குப் பின்னர் தென்பட்ட முதல் முழுச் சூரிய கிரகணம் இதுவாகும்.
</p><p>


சூரியன், நிலவு மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது, நிலவு சூரியனை மறைப்பதன் காரணமாக சூரிய கிரகணம் ஏற்படுகிறது.



ஸ்பெயினின் பல நகரங்கள் மற்றும் திறந்தவெளி மைதானங்களில் திரண்ட மக்கள், தெளிவான வானிலைக்கு மத்தியில் சில நிமிடங்கள் நீடித்த முழு இருளை வியப்புடன் கண்டுகளித்தனர்.</p><p></p><p>
</p><p>


அதேவேளை, சுவிட்சர்லாந்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள சாசரல் மலைப்பகுதி உள்ளிட்ட பல இடங்களிலும் பகுதிச் சூரிய கிரகணம் தென்பட்டது.
</p><p>


பிரித்தானியாவில் சூரியனின் 90 சதவீதத்துக்கும் அதிகமான பகுதியை நிலவு மறைத்த நிலையில், பகுதிச் சூரிய கிரகணம் தெளிவாகக் காட்சியளித்தது. லண்டனில் உள்ள பிரபல பிக் பென் மணிக்கூட்டு கோபுரத்தின் பின்னணியிலும் கிரகணம் காட்சியளித்தது.</p><p></p><p>



மேலும், பர்மிங்ஹாமில் நடைபெற்ற ஐரோப்பிய தடகள சம்பியன்ஷிப் போட்டியின்போதும் ரசிகர்கள் இந்த அரிய வானியல் நிகழ்வை ரசித்ததுடன், ஹங்கேரியின் அகாட் பகுதியில் உள்ள அவதானிப்புக் கோபுரத்திலும் வானியல் ஆர்வலர்கள் கிரகணத்தை பார்வையிட்டுள்ளனர்&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T06:47:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு செல்வோருக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fraudulent-job-offer-in-israel-1786602274"></link>
            <id>https://tamilwin.com/article/fraudulent-job-offer-in-israel-1786602274</id>
            <summary type="text">வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக தெரிவித்து மோசடியில் ஈடுபட்டு வந்த இருவர்&amp;nbsp;இன்று (13.08.2026) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக தெரிவித்து மோசடியில் ஈடுபட்டு வந்த இருவர்&nbsp;இன்று (13.08.2026) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.&nbsp;</p><p>இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி போலி வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களை தயாரித்து வந்ததாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.</p><p>
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முதலாவது மாடியில் வைத்து சந்தேகநபர்கள் இருவரும் கைதாகியிருந்தனர்.&nbsp;</p><h2>கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்</h2><p>
இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து 7 கடவுச்சீட்டுகள், இஸ்ரேல் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e211cfe7-d773-42c4-a71d-8a3485938f78/26-6a7d6737be263.webp' /></p><p>
இஸ்ரேலில் வேலை பெற்றுத்தருவதாக கூறி பல்வேறு நபர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அழைத்து வந்து, போலி ஒப்பந்தங்களை தயாரித்ததாக சந்தேகநபர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்ட இருவரும் இன்று கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T06:42:37+00:00</updated>
        </entry>
    </feed>
