<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-20T00:37:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தம்புள்ளை அதிபரின் உயிரைப் பறித்த விபத்து ; பேருந்து சாரதி குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/accident-life-dambulla-principal-detail-bus-driver-1789862435"></link>
            <id>https://jvpnews.com/article/accident-life-dambulla-principal-detail-bus-driver-1789862435</id>
            <summary type="text">தம்புள்ளை தேசிய பாடசாலையின் அதிபர் பயணித்த சிற்றூந்துடன் மோதிய பேருந்தின் சாரதி, விபத்து இடம்பெற்ற வேளையில் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை தெரியவந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தம்புள்ளை தேசிய பாடசாலையின் அதிபர் பயணித்த சிற்றூந்துடன் மோதிய பேருந்தின் சாரதி, விபத்து இடம்பெற்ற வேளையில் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>மேலும், குறித்த பேருந்துக்கு முறையான சேவை அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை என்பதும் காவல்துறையினரால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d748790a-9513-4355-b5f3-c65a095b18da/26-6aaf2225befab.webp' /></p><p>தம்புள்ளை - ஹபரணை பிரதான வீதியின் தம்புள்ளை, பெல்வெஹெர பகுதியில் நேற்று (18) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p>

விபத்தில் சிற்றூந்தை ஓட்டிச் சென்ற தம்புள்ளை தேசிய பாடசாலையின் அதிபராக கடமையாற்றிய, இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜானக விஜேசிங்க (38) என்பவரே உயிரிழந்துள்ளார்.
</p><p>
அத்துடன், இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
விபத்து தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பேருந்து சாரதியை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T00:34:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவப் பரிசோதனை கட்டணப் பட்டியல் போலியானது ; நுகர்வோர் அதிகாரசபை எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/medical-test-fee-lis-fake-consumer-authority-alert-1789864462"></link>
            <id>https://jvpnews.com/article/medical-test-fee-lis-fake-consumer-authority-alert-1789864462</id>
            <summary type="text">பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கான கட்டணங்கள் அடங்கிய பட்டியல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், அது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கான கட்டணங்கள் அடங்கிய பட்டியல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், அது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை முக்கிய தெளிவுபடுத்தலை வெளியிட்டுள்ளது.</p><p></p><p>

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் குறித்த அறிவித்தல் அதிகாரப்பூர்வமானது அல்ல எனத் தெரிவித்துள்ள அதிகாரசபை, அதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கட்டணங்களும் வர்த்தமானி அறிவித்தல் மூலம் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணங்கள் என பொதுமக்கள் கருத வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3605d829-56e0-4fd5-b15b-5bf6936a0050/26-6aaf2a0f98332.webp' /></p><p>நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தகவலின்படி, குறிப்பிட்ட சில மருத்துவப் பரிசோதனைகளுக்கே வர்த்தமானி அறிவித்தல் மூலம் அதிகபட்சக் கட்டணங்கள் அதிகாரப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
</p><p>
அதன்படி,
</p><p>
முழுமையான இரத்தப் பரிசோதனை (FBC) – ரூ.400
</p><p>
டெங்கு NS1 என்டிஜென் பரிசோதனை – ரூ.1,200
</p><p>
கொவிட்-19 PCR பரிசோதனை – ரூ.6,500
</p><p>
கொவிட்-19 விரைவு என்டிஜென் (RAT) பரிசோதனை – ரூ.2,000
</p><p>
மேற்கண்ட கட்டணங்கள் பரிசோதனை மற்றும் அறிக்கை ஆகியவற்றுக்கான அதிகபட்சக் கட்டணங்களாகும்.
</p><p>
இதற்கு மேலதிகமாக, சமூக ஊடகங்களில் பரவி வரும் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள FBS, RBS, HbA1C, Lipid Profile, LFT, RFT, UFR, CRP, CT, MRI, Ultrasound, Mammogram மற்றும் DEXA உள்ளிட்ட பரிசோதனைகளுக்கான கட்டணங்கள், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் உத்தரவுகளின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணங்கள் அல்ல எனவும் அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.
</p><p>
எனவே, சமூக ஊடகங்களில் பரவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பாமல், மருத்துவப் பரிசோதனை கட்டணங்கள் தொடர்பில் அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.
</p><p>
இது தொடர்பில் மேலதிக தெளிவுபடுத்தல்களைப் பெற 1977 என்ற உடனடி அழைப்பு இலக்கத்தைத் தொடர்புகொள்ளுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T00:34:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜன் விவகாரத்தில் இராஜதந்திர அழுத்தம் அவசியம்! ஜனாதிபதியிடம் சிறீதரம் எம்.பி வேண்டுகோள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/diplomatic-pressure-is-essential-the-anon-affair-1789864288"></link>
            <id>https://ibctamil.com/article/diplomatic-pressure-is-essential-the-anon-affair-1789864288</id>
            <summary type="text">பல தசாப்தங்களாக நீடித்த கொடூரமான போரினால் சமூக, பொருளாதார மற்றும் உளவியல் ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களில்அனோஜனின் குடும்பமும் ஒன்றாகும...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல தசாப்தங்களாக நீடித்த கொடூரமான போரினால் சமூக, பொருளாதார மற்றும் உளவியல் ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களில்அனோஜனின் குடும்பமும் ஒன்றாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.</p><p>சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின்&nbsp;சிவராசா தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுதிய விசேட கடிதத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.</p><p>இது குறித்து கடிதத்தில் பின்வரும் விடயங்களை சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>&nbsp;அனோஜனின் குடும்பப் பின்னணி</h2><p>“இஸ்லாமியப் போதனைகள் கருணை, மன்னிப்பு, நீதி மற்றும் மனிதாபிமானம் ஆகிய உயரிய விழுமியங்களை உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0433f48d-605e-4a71-ae08-8502853e0c8f/26-6aaf2962bb761.webp' /></p><p>அந்த உயரிய அறவிழுமியங்களின் அடிப்படையில் அனோஜனின் குடும்பப் பின்னணி, வயது, சமூக மற்றும் பொருளாதாரச்சூழல் என்பவற்றைக் கருத்திற்கொண்டு தர்மம் மற்றும் அறத்தின் அடிப்படையில் இவ்விடயத்துக்கு சாதகமான தீர்வொன்றை வழங்குவதற்கான இராஜதந்திர ரீதியான அழுத்தங்களை வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.</p><p>

மதநிந்தனைக் குற்றச்சாட்டில் கடந்த மாதத் தொடக்கத்தில் சவுதி அரேபிய நீதிமன்றத்தினால் 5 வருடகால சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்ட இலங்கையரான சிவராசா அனோஜனின் மேன்முறையீட்டை அடுத்து, தற்போது அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசா தொழில் வாய்ப்புக்காக சவுதி அரேபியாவுக்குச் சென்று அங்கு வசித்துவந்த நிலையில், நபிகள் நாயகம் தொடர்பாக சமூக ஊடகத்தில் தவறான பதிவு ஒன்றை வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பான விடயங்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.</p><p>இதுகுறித்து சவுதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவருக்கு கடந்த மாதம் 3 ஆம் திகதி கடிதமொன்றையும் அனுப்பியிருந்தேன்.
</p><p>
குடும்பத்தின் கடுமையான பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு அனோஜன் சவுதி அரேபியாவில் டைனமிக் அன்ட் எக்ஸலன்ஸ் அரேபியா கம்பனி என்ற நிறுவனத்தில் தொழிலாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.</p><p></p><h2>குடும்பத்தின் அன்றாட வாழ்வாதாரம்</h2><p>சவுதி அரேபியா தனது மதப் பாரம்பரியம், இஸ்லாமிய விழுமியங்கள் மற்றும் சட்ட ஆட்சியை மிக உயர்ந்த முறையில் பேணிவரும் ஒரு நாடாகும் என்பதை நான் முழுமையான மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b43b8ca8-3cda-4dd6-b6a6-84092211de86/26-6aaf296374497.webp' /></p><p> </p><p>ஒவ்வொரு நாட்டுக்கும் தனது சட்டங்களை நடைமுறைப்படுத்தும் இறைமையுரிமை இருப்பதையும் மதிக்கிறேன்.
</p><p>

அனோஜன் சிவராசா குற்ற நோக்கத்துடன் சவுதி அரேபியாவுக்குச் செல்லவில்லை. அவரது தந்தை சிவராசா மற்றும் தாய் யோகேஸ்வரி ஆகியோரின் குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைப் பகிர்ந்து, அவர்களது வாழ்க்கையை முன்னேற்றும் நோக்கத்துடனேயே வெளிநாட்டு வேலைவாய்ப்பை அணுகியுள்ளார். </p><p>அவரது உழைப்பே குடும்பத்தின் அன்றாட வாழ்வாதாரத்தின் பிரதான ஆதாரமாக இருந்து வருகின்றது.
</p><p>
இந்நிலையில் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனை அவரை மாத்திரமன்றி, அவரைச் சார்ந்த முழுக்குடும்பத்தின் வாழ்வையும் முற்றாக முடக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.
</p><p>
அன்றாட வாழ்க்கைச் செலவுகளையே மிகுந்த சிரமத்துடன் எதிர்கொள்ளும் ஒரு குடும்பத்தின் எதிர்கால வாழ்வை ஒட்டுமொத்தமாகச் சீர்குலைக்கும் விளைவையே இது ஏற்படுத்தும்.</p><p> இஸ்லாமியப் போதனைகள் கருணை, மன்னிப்பு, நீதி மற்றும் மனிதாபிமானம் ஆகிய உயரிய விழுமியங்களை உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றன” என தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T00:31:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[லட்சணமாக பாவாடை தாவணியில் பாடகி சிவாங்கி வெளியிட்ட போட்டோஸ்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/singer-sivaangi-latest-photoshoot-1789819402"></link>
            <id>https://cineulagam.com/article/singer-sivaangi-latest-photoshoot-1789819402</id>
            <summary type="text">சிவாங்கிவிஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் எத்தனையோ பாடகர்கள் தமிழ் சினிமாவில் களமிறங்கியுள்ளனர்.தென்னிந்திய சினிமாவை தாண்டி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சிவாங்கி</h2><p>விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் எத்தனையோ பாடகர்கள் தமிழ் சினிமாவில் களமிறங்கியுள்ளனர்.</p><p>தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் சினிமாவிலும் கலக்குகிறார்கள். அப்படி சூப்பர் சிங்கர் நிகழச்சி மூலம் களமிறங்கி பிரபலமான சிவாங்கி குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார்.</p><p>கோமாளியாக சில சீசன்கள் இருந்தவர் கடைசியாக தன்னை போட்டியாளராகவும் நிரூபித்துள்ளார்.</p><p>அண்மையில் லட்சணமாக சிவாங்கி பாவாடை தாவணியில் வெளியிட்ட புகைப்படத்தை காண்போம்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T00:30:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிரிக்கெட் தெரிவுக்குழு முன்னாள் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க ரூ. 75 மில்லியன் நட்டஈடு கோரி வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-cricket-selection-75-milion-in-compensation-1789863705"></link>
            <id>https://jvpnews.com/article/former-cricket-selection-75-milion-in-compensation-1789863705</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவர் பதவியிலிருந்து, தனது 2 வருடப் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரே நியாயமற்ற வகையில் தாம் நீக்கப்பட்டமைக்கு எத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவர் பதவியிலிருந்து, தனது 2 வருடப் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரே நியாயமற்ற வகையில் தாம் நீக்கப்பட்டமைக்கு எதிராக முன்னாள் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க, 75 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.</p><p>
</p><p></p><p>விளையாட்டுத் துறை அமைச்சரின் அனுமதியுடன், 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் திகதி முதல் இரண்டு வருட காலத்துக்கு தான் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
எனினும், ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு, எவ்வித முன்னறிவிப்போ அல்லது உரிய நடைமுறையோ இன்றி தனது நியமனம் திடீரென முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41aaf117-8fb1-4108-8dde-6aec5ff4c42f/26-6aaf271a58328.webp' /></p><p>தனது ஏனைய வணிக மற்றும் தொழில்முறை நடவடிக்கைகளை ஒதுக்கிவைத்துவிட்டு, நாட்டில் கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சிக்காகத் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த தீடீர் நீக்கம் காரணமாகத் தனக்குக் கிடைக்க வேண்டிய ஊதியம் இழக்கப்பட்டுப் பாரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தனது தொழில்முறை நற்பெயருக்கும் நம்பகத்தன்மைக்கும் கடுமையாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
இதற்கமைய, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் மற்றும் கிரிக்கெட் இடைக்கால குழுவிடமிருந்து 75 மில்லியன் ரூபாயை அவர் நட்டஈடாகக் கோரியுள்ளார்.
</p><p>
இந்த வழக்கில், அந்த குழுவின் தலைவர் எரான் விக்ரமரத்ன உள்ளிட்ட கிரிக்கெட் இடைக்கால குழுவின் 9 உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் ஆகிய தரப்பினர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T00:22:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை: 7 நிபந்தனைகளை முன்வைத்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-communicated-7-conditions-for-u-s-1789860945"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-communicated-7-conditions-for-u-s-1789860945</id>
            <summary type="text"> Iran Communicated 7 Conditions for U.S: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது. 7 நிபந்தனைகளை முன்வைத்த ஈரான்அமெரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p> Iran Communicated 7 Conditions for U.S: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது.</p><h2> 7 நிபந்தனைகளை முன்வைத்த ஈரான்</h2><p>அமெரிக்காவுடன்&nbsp; போர் நிறுத்த பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குவதற்கான முக்கிய நிபந்தனைகளை ஈரான் அதிகாரப்பூர்வமாக அனுப்பி வைத்துள்ளது.</p><p> பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்னதாக கத்தாரின் ராஜதந்திர வழிகள் மூலமாக ஈரான் தங்களது முக்கிய நிபந்தனைகளை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துள்ளது என ஈரான் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாயின் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/812c4e0d-03bc-4b32-bfca-08f824359a1c/26-6aaf1c531ac79.webp' /></p><p> ஈரான் அனுப்பிய நிபந்தனைகளை அமெரிக்கா தவறாக புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு இல்லை என்றும் ரெசாய் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அமெரிக்கா தற்போது எதிர்கொண்டு வரும் மூலோபாய சிக்கல்களில் இருந்து விடுபட வேண்டும் என்றால் ஈரான் முன்வைத்துள்ள நிபந்தனைகளையும், ஈரானின் இறையாண்மையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.</p><h2>அமெரிக்காவின் பார்வை</h2><p>ஈரானுக்கு எதிரான விவகாரத்தில் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததை அடுத்து இந்த முன்னேற்றமானது நடந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63978084-80bd-48be-ad86-e4eebe12bf2a/26-6aaf1c53c7751.webp' /></p><p>அதில், நீண்ட கால போரை முடிவுக்கு கொண்டு வர ராஜந்திர வழிகளை பின்பற்றுவதா அல்லது கடுமையான ராணுவ நடவடிக்கைகளை பின்பற்றுவதா என்று இறுதி முடிவு செய்யப்படும் என டிரம்ப் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T00:21:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் சிறுவனை துன்புறுத்திய இலங்கையர்: பொலிஸார் எடுத்த அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sri-lankan-old-man-arrested-in-canada-1789863659"></link>
            <id>https://news.lankasri.com/article/sri-lankan-old-man-arrested-in-canada-1789863659</id>
            <summary type="text">Sri Lankan Old Man Arrested in Canada: கனடாவில் சிறுவன் ஒருவனை துன்புறுத்திய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சிறுவனை துன்புறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Sri Lankan Old Man Arrested in Canada: கனடாவில் சிறுவன் ஒருவனை துன்புறுத்திய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>சிறுவனை துன்புறுத்திய இலங்கையர்</h2><p>
கனடாவின் விட்பி பகுதியில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றில் பணியாற்றி வந்த 62 வயது சம்பத் பெரேரா என்ற இலங்கையர், மோசமான செயல் காரணமாக கனேடிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> இவர் அந்த மருந்தகத்தில் பணியாற்றி வந்த சிறுவன் ஒருவனை தகாத முறையில் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p> பாதிக்கப்பட்ட சிறுவன் அளித்த புகாரின் பேரில் டர்ஹாம் பிராந்திய பொலிஸார் சந்தேக நபரான சம்பத் பெரேரா-வை கைது செய்தனர்</p><p>சம்பத் பெரேரா மீது தகாத முறையில் செயல்பட்டதாக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1fa249c-287c-4dc4-acda-2555d499c8c1/26-6aaf26ecc18b3.webp' /></p><p></p><p>ஆனால் இது தொடர்பாக நீதிமன்றம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>மேலும் குறித்த இந்த நபரால் வேறு யாரேனும் பாதிக்கப்பட்டு இருந்தாலும் உடனடியாக முன்வந்து புகார் அளிக்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T00:21:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜன் விவகாரத்தில் நரேந்திர மோடியின் உதவி! அரசாங்கத்துக்கு மனோ எடுத்துரைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/narendra-modi-s-assistance-in-the-anojan-matter-1789863067"></link>
            <id>https://ibctamil.com/article/narendra-modi-s-assistance-in-the-anojan-matter-1789863067</id>
            <summary type="text">அனோஜன் விவகாரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனோஜன் விவகாரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

அனோஜன் சிவராசா எதிர்கொள்ளும் நிலை குறித்து பிரதமர் மோடியின் அவசர கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் அவர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சவூதி அரேபிய பிரதமரும் பட்டத்து இளவரசருமான மொஹம்மத் பின் சல்மானுக்கும் இடையில் நெருக்கமான உறவு காணப்படுவதால், அந்த உறவைப் பயன்படுத்தி அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையிலான தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க முடியும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மோடியிடம் கோரிக்கை</h2><p>

எனவே, சவூதி இளவரசர் மொஹம்மத் பின் சல்மானுடன் தனிப்பட்ட முறையில் பேசி அனோஜன் விவகாரத்தில் தலையிடுமாறு மோடியிடம் கோரிக்கை விடுக்குமாறும் அவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22b6f523-f80c-40c1-b6c0-4fabfd49786e/26-6aaf2503a9803.webp' /></p><p>

மேலும், இலங்கையின் உயரிய விருதான “ஸ்ரீலங்கா ரத்னா” விருதை ஏற்றுக்கொண்டதன் மூலம் பிரதமர் மோடி இலங்கையுடனான தனது நெருக்கமான உறவை வெளிப்படுத்தியுள்ளதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T00:11:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவ்வாய் பெயர்ச்சியால் பணமும், சொத்துக்களும் குவிய போகும் ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sevvai-peyarchiyal-panam-soththu-kuvium-rasi-1789863029"></link>
            <id>https://jvpnews.com/article/sevvai-peyarchiyal-panam-soththu-kuvium-rasi-1789863029</id>
            <summary type="text">ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். மேஷம் மற்றும் விருச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியான செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.&nbsp;இருப்பினும் இந்த பெயர்ச்சியின் போது குரு பகவான் இந்த ராசியில் இருப்பதால், செவ்வாயுடன் சேர்க்கை நிகழ்கிறது. இப்படியான நிகழ்வின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9082e7b9-070b-4c9d-bde6-e054cf2d78b4/26-6aaf2477c9863.webp' /></p><p>முக்கியமாக இப்பெயர்ச்சி அனைவருக்கும் சிறப்பான பலனை தந்துவிடாது, சில ராசிக்காரர்களுக்கு மோசமாகவும் இருக்கலாம். குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் இந்த பெயர்ச்சியால் சொந்த வீடு, கார் வாங்கும் கனவு நனவாகும் வாய்ப்புள்ளது. இப்போது செவ்வாய் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் சொத்துக்களை வாங்கி குவிக்கும் யோகத்தை பெறுகிறார்கள் என பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c8adf65-85d8-4d1f-a950-f59136c52481/26-6aaf24771fd24.webp' /></p><h4>மேஷம்
</h4><p>மேஷ ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல ஆதாயங்களைப் பெறுவார்கள். மேலும் புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்களும் கிடைக்கலாம். அதுமட்டுமின்றி பல புதிய வழிகளில் இருந்து பணம் வந்து குவியும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd39cfb4-3c9c-4be0-be7c-3c1bdc5fd6a3/26-6aaf247881180.webp' /></p><h4>விருச்சிகம்</h4><p>
விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இதன் மூலம் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கலாம். பரம்பரை சொத்து தொடர்பான விஷயங்களில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அது முடிவுக்கு வருவதோடு, அதன் மூலம் நல்ல ஆதாயங்களும் கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56e6facc-2b01-43f8-8681-2c803e846460/26-6aaf247933887.webp' /></p><h4>தனுசு
</h4><p>தனுசு ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்வில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். பரம்பரை சொத்து விஷயங்களில் உள்ள பிரச்சனைகள் தீரும். சொல்லப்போனால் மூதாதையர் சொத்து கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது. ஆனால் எந்த ஒரு பெரிய முதலீடுகளை செய்வதாக இருந்தாலும், ஆவணங்களை நன்கு படித்து பார்த்து, பின் முடிவெடுக்க அறிவுறுத்தப்படுகிறது. புதிய வழிகளில் இருந்த பணம் தேடி வரும். இதன் மூலம் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5c57dee-3727-48be-96f8-5afbac7eb261/26-6aaf2479dbc0c.webp' /></p>]]></content>
            <updated>2026-09-20T00:10:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய அரசமைப்பை உருவாக்கும் வாக்குறுதியில் மாற்றமே இல்லை! நீதி அமைச்சர் ஹர்ஷன உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-change-in-promise-to-draft-a-new-constitution-1789862065"></link>
            <id>https://tamilwin.com/article/no-change-in-promise-to-draft-a-new-constitution-1789862065</id>
            <summary type="text">நாட்டுக்குப் பொருத்தமான வகையில் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான
நடவடிக்கைகள் குறித்து 2027 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் விசேட கவனம்
செலுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டுக்குப் பொருத்தமான வகையில் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான
நடவடிக்கைகள் குறித்து 2027 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் விசேட கவனம்
செலுத்தப்படும் எனவும், கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டம் இந்த ஆண்டுக்குள்
முழுமையாக இரத்துச் செய்யப்படும் எனவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள்
அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
</p><p>
புதிய அரசமைப்பு உருவாக்கம் குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><h2>பயங்கரவாதத் தடைச் சட்டம் இந்த ஆண்டுக்குள்</h2><p>மேலும் தெரிவிக்கையில்,

"நாட்டுக்குப் பொருத்தமான முரண்பாடற்ற வகையில் புதிய அரசமைப்பு ஒன்று
உருவாக்கப்படும் என நாம் அளித்த வாக்குறுதியில் எவ்வித மாற்றமும் கிடையாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2349c0c-e3c0-4be4-ae9d-02e868feb9eb/26-6aaf23d244c70.webp' /></p><p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்து செப்டெம்பர் 21 ஆம் திகதியுடன்
இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. </p><p>இந்த இரண்டாண்டு காலப்பகுதியில் பல்வேறு
வெளியகத் தாக்கங்களுக்கு மத்தியிலும் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளதுடன், அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>

புதிய யாப்பு உருவாக்க நடவடிக்கைகளில் மக்கள் பங்குபற்றுவதற்கான மனநிலை இருக்க
வேண்டும். அதற்கு நாட்டின் தற்போதைய பொருளாதார ஸ்திரத்தன்மை
அத்தியாவசியமானதாகும்.</p><p>

பலராலும் எதிர்க்கப்பட்டு வந்த பயங்கரவாதத் தடைச் சட்டம் இந்த ஆண்டுக்குள்
முழுமையாக இரத்துச் செய்யப்படும்.

அதற்குப் பதிலாக தேசிய பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்துவதற்கான, மனித
உரிமைகள் மற்றும் ஜனநாயகக் கொள்கைகளுக்கு அமையப் புதிய சட்டம் ஒன்று
உருவாக்கப்படும்.</p><h2>தனிப்பட்ட பிரச்சினையே தவிர&nbsp;</h2><p>நாட்டில் தற்போது சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஊழலுக்கு
எதிராகக் கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23afcc31-b380-4759-950d-4963f7934e85/26-6aaf23d2f1dfd.webp' /></p><p>கடந்த காலங்களில்
சட்டத்துக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்பட்டவர்கள் இன்று
சட்டத்துக்குட்படுத்தப்பட்டுள்ளமை பாரியதொரு மாற்றமாகும்.
</p><p>
அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சியினர்தான் மக்கள்
மத்தியில் போலியான நிலைப்பாட்டைத் தோற்றுவித்துள்ளனர். </p><p>நீதிபதிகளின் பதவிக்
காலத்தை அதிகரிப்பதால் சட்டத்தின் ஆட்சிக்கும் நீதித்துறையின்
சுயாதீனத்துக்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது.

நீதிமன்றக் கட்டமைப்பு மறுசீரமைக்கப்படும் போது நிலுவையில் உள்ள வழக்குகள்
துரிதமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.</p><p> இதனால் எதிர்க்கட்சியில் உள்ள
ஊழல்வாதிகள் பாதிக்கப்படலாம். அது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினையே தவிர
பொதுப் பிரச்சினையல்ல.
</p><p>
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடந்த காலங்களில் மக்களுக்காக எப்போதுமே
ஒன்றுபட்டதில்லை. மாறாக, தாங்கள் செய்த குற்றங்கள் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு
எதிராகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது, தங்களைப்
பாதுகாத்துக்கொள்வதற்காகவே தற்போது அவர்கள் ஒன்றுபட்டுள்ளார்கள்" என்றும் குறிப்பட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T00:08:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதலுக்கு முன் சஹ்ரானின் சகோதரருடன் ஒரு தேநீர் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-tea-meeting-with-zahran-s-brother-1789861758"></link>
            <id>https://ibctamil.com/article/a-tea-meeting-with-zahran-s-brother-1789861758</id>
            <summary type="text">ஈஸ்டர் தாக்குதலுக்கு முன் சஹ்ரானின் சகோதரருடன் ஒரு தேநீர் சந்திப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னதாக கிடைத்ததாகக் கூறப்படும் உளவுத் தகவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் தாக்குதலுக்கு முன் சஹ்ரானின் சகோதரருடன் ஒரு தேநீர் சந்திப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னதாக கிடைத்ததாகக் கூறப்படும் உளவுத் தகவல்கள் எவ்வாறு கையாளப்பட்டன என்பது தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அண்மையில் முக்கிய தகவல்கள் முன்வைக்கப்பட்டன.
</p><p>
 அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான வழக்கு செப்டம்பர் 15ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்னர் சில உளவுத் தகவல்கள் கிடைத்திருந்தபோதும் அவை உரிய முறையில் பகிரப்பட்டனவா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். </p><p> 

CID தரப்பில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தகவல்களின்படி, இராணுவப் புலனாய்வுடன் தொடர்புடைய தகவல் அளிப்பவர் ஒருவரிடமிருந்து சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களின் நடவடிக்கைகள் குறித்து தகவல்கள் கிடைத்திருந்ததாகக் கூறப்பட்டது.</p><p></p><h2>தற்போது கவனம் பெற்றுள்ள விடயம்</h2><p>
</p><p>
மேலும், தாக்குதலுக்கு முன்னதாகவே சில எச்சரிக்கைகள் கிடைத்திருந்ததாகவும், அவை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு வழிவகுத்தனவா என்பது குறித்து விசாரணைகள் நடைபெறுவதாகவும் அரசுத் தரப்பு தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49505cdc-913e-4fc5-8ed8-b84153fe86e8/26-6aaf223b075f2.webp' /></p><p>


இந்த விசாரணையில் தற்போது கவனம் பெற்றுள்ள மற்றொரு விடயம், அரச புலனாய்வு சேவையுடன் தொடர்புடையதாகக் குறிப்பிடப்படும் காவல்துறை அதிகாரி ரஞ்சன் செனரத் பண்டார.
</p><p>
அதாவது அவர் சஹ்ரான் ஹாஷிமின் சகோதரரை சந்தித்ததாகக் கூறப்படும் சம்பவமாகும்.</p><p>

 CID தரப்பில் முன்வைக்கப்பட்ட தகவலின்படி, வெளிநாட்டு புலனாய்வுத் தகவல் கிடைத்த பின்னர் அந்த அதிகாரி கிழக்கு மாகாணத்திற்குச் சென்று சஹ்ரானின் சகோதரரை சந்தித்ததாகவும், அங்கு தேநீர் அருந்திய பின்னர் திரும்பியதாகவும் கூறப்பட்டுள்ளது.
</p><p>
தாக்குதல்களுக்கு முன்னரே சஹ்ரான் குழுவினர் தொடர்பான உளவுத் தகவல்கள் கிடைத்திருந்த நிலையில், அவருடைய நெருங்கிய உறவினரை அதிகாரி ஒருவர் சந்தித்ததன் நோக்கம் என்ன? அந்தச் சந்திப்புக்குப் பின்னர் ஏன் உடனடி கைது அல்லது தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

 இவ்வாறான கேள்விகள் அன்று முன்வைக்கப்பட்டன.</p><p></p><h2>குற்றப்புலனாய்வு அறிக்கை</h2><p>
</p><p>
இவை சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றப்புலனாய்வு அறிக்கைகளை மையப்படுத்தி எழுப்பப்பட்ட கேள்விகளாகும்.
</p><p>
இந்த விவகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ரஞ்சன் செனரத் பண்டார விசாரணைக்கு முக்கியமான நபராக இருப்பதாகவும், அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>இங்கு குறிப்பாக பல வழக்குகளில் மையப்படுத்திய விடயம் என்பது உளவுத்தகவலில் பின்னணி.அப்படியானால் 2019 ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்னர் உளவுத் தகவல்கள் எந்த அளவில் கிடைத்தன?அவை எந்த அதிகாரிகளுக்கு சரியாக அனுப்பப்பட்டன? 

தகவல்கள் கிடைத்த பின்னர் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? சஹ்ரானின் சகோதரரை சந்தித்த அதிகாரி ஏன் கைது நடவடிக்கை எடுக்கவில்லை?</p><p>
 இவ்வாறான கேள்விகளுக்கான பதில்களே, தற்போதைய விசாரணைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T23:56:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ.2,684 கோடி மோசடி குற்றச்சாட்டு ; அனில் அம்பானி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/2684crorefraud-allegation-cbi-registers-anilambani-1789861709"></link>
            <id>https://canadamirror.com/article/2684crorefraud-allegation-cbi-registers-anilambani-1789861709</id>
            <summary type="text">போலியான தகவல்களை வழங்கி இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்.ஐ.சி.யிடம் இருந்து ரூ.2,684.57 கோடி முதலீட்டை பெற்று மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>போலியான தகவல்களை வழங்கி இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்.ஐ.சி.யிடம் இருந்து ரூ.2,684.57 கோடி முதலீட்டை பெற்று மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அனில் அம்பானி உள்ளிட்டோர் மீது மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ.) வழக்குப்பதிவு செய்துள்ளது.</p><p>

ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம் 2012 முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஐந்து கடன் பத்திரங்களை வெளியிட்டிருந்தது. </p><p>அவற்றில் எல்.ஐ.சி. சுமார் ரூ.3,900 கோடியை முதலீடு செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிறுவனத்தின் பொது நிதித் தேவைகள், வர்த்தகத் தேவைகள் மற்றும் ஏற்கனவே இருந்த கடன்களை குறைப்பது உள்ளிட்ட நோக்கங்களுக்காக இந்த முதலீடுகள் திரட்டப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5724bf1d-6949-46f3-b64c-b8f47b584634/26-6aaf1f4f830fc.webp' /></p><p>எனினும், தவறான தகவல்களை வழங்கி எல்.ஐ.சி.யை முதலீடு செய்யத் தூண்டியதாகவும், பின்னர் அந்த நிதி முறைகேடான வழிகளில் வேறு நோக்கங்களுக்காகத் திருப்பி விடப்பட்டதாகவும் எல்.ஐ.சி. தனது புகாரில் குற்றஞ்சாட்டியுள்ளது.
</p><p>
இதன் காரணமாக எல்.ஐ.சி.க்கு ரூ.2,684.57 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், அதே அளவுக்கு குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு சட்டவிரோத ஆதாயம் கிடைத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தப் புகாரைத் தொடர்ந்து அனில் அம்பானி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட தொடர்புடைய அனைவரின் பங்கு குறித்தும் விசாரணை நடத்தப்படும் என சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.</p><p>

இதற்கு முன்னதாக, எஸ்.பி.ஐ. உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள், வருங்கால வைப்பு நிதி அமைப்பு மற்றும் எல்.ஐ.சி. ஆகியவை அளித்த புகார்களின் அடிப்படையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் கேப்பிடல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எதிராக சி.பி.ஐ. எட்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அவற்றில் ஆறு வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. </p><p>இந்த வழக்குகள் தொடர்ந்து விசாரணையில் உள்ளதுடன், உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பிலும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-19T23:48:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலை வழக்கில் சிக்கப் போகும் ஷிரந்தி - இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள விசாரணைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/thajudeen-murder-shiranthi-in-struggle-1789787626"></link>
            <id>https://tamilwin.com/article/thajudeen-murder-shiranthi-in-struggle-1789787626</id>
            <summary type="text">முன்னாள் ஆட்சியாளர்களான ராஜபக்ச குடும்பத்தினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் சமகால அரசாங்கம் இறுக்கமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது....</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஆட்சியாளர்களான ராஜபக்ச குடும்பத்தினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் சமகால அரசாங்கம் இறுக்கமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. </p><p>

தற்போதைய நிலவரத்தில் ராஜபக்ச குடும்பத்தில் அனைவரும் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் விசாரணைக்காக முன்னிலையாகி உள்ளனர். </p><p> 

இந்நிலையில் ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை மற்றும் பல நிதி மோசடிகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2><b>குற்றங்கள் தொடர்பில் வாக்குமூலம்</b></h2><p>

இந்தக் குற்றங்கள் தொடர்பில் ஷிரந்தி ராஜபக்சவிடமிருந்து எதிர்வரும் நாட்களில் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>முதற்கட்டமாக எதிர்வரும் 24 ஆம் திகதி அவர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.</p><p>

CT ஸ்கேனருக்காக நிதி திரட்டியமை, தாஜுதீன் கொலை, நீலப் படையணி வழக்கு மற்றும் சிரலிய சவிய தொடர்பில் ஷிரந்தியிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4228bcd-dd2d-4186-a00b-78128c47672f/26-6aaeb3279e021.webp' />&nbsp;&nbsp;</p><p> </p><p>

அதற்கமைய, இந்த வழக்குகள் தொடர்பான அறிக்கைகள் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க விசாரணைக் குழுக்கள் தயாராகி வருகின்றன. </p><p>

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மருத்துவ பரிசோதனைக்காக ஷிரந்தி ராஜபக்ச, சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். 

அங்கு பிரபலமான மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> எனினும் உல்லாசமாக சிங்கப்பூரில் சுற்றித்திரிந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p> 
</p>]]></content>
            <updated>2026-09-19T23:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நியூயார்க்கில் நிறுவப்பட்ட இலவச பொது கழிப்பறைகள் ; 10 நிமிடத்திற்கு மேல் உள்ளே இருந்தால் கதவு திறந்துவிடும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/free-public-toilets-installed-in-new-york-1789844490"></link>
            <id>https://canadamirror.com/article/free-public-toilets-installed-in-new-york-1789844490</id>
            <summary type="text">அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பொதுமக்களின் தேவைக்காக, நகரின் 5 முக்கிய பகுதிகளில் மொத்தம் 17 இலவச பொது கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த கழிப்பறைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பொதுமக்களின் தேவைக்காக, நகரின் 5 முக்கிய பகுதிகளில் மொத்தம் 17 இலவச பொது கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. </p><p>இந்த கழிப்பறைகளை யார் வேண்டுமானாலும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த கழிப்பறைகள் திறந்திருக்கும்.</p><p>இந்த கழிப்பறைகள் இருக்கும் இடத்தை கண்டறிய பிரத்யேக மொபைல் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பல வசதிகள் இருந்தாலும், இந்த கழிப்பறைகளை பயன்படுத்துவதற்கு ஒரு முக்கியமான விதி உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b50bc855-abe8-4d3b-89f4-a81c584c7d64/26-6aaedc0ca9f45.webp' /></p><p>அதாவது, கழிவறைக்கு உள்ளே சென்றுவிட்டால் 10 நிமிடத்திற்குள் வேலையை முடித்துவிட்டு வெளியே வந்துவிட வேண்டும். </p><p>கழிவறையை பயன்படுத்த தொடங்கியதில் இருந்து கவுண்ட் டவுன் ஓடத் தொடங்கிவிடும். 5 நிமிடங்கள் ஆனவுடன் ஒரு ஆடியோ எச்சரிக்கை வரும். தொடர்ந்து 8-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு எச்சரிக்கை வரும்.</p><p>இதைத் தொடர்ந்து 10-வது நிமிடத்தில் கடைசியாக ஒரு எச்சரிக்கை ஒலிக்கும். அதன் பிறகு சில வினாடிகளில் கழிப்பறையின் கதவு தானாக திறந்துவிடும். </p><p>இத்தகைய நவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த கழிப்பறையை நியூயார்க் நகரில் நிறுவுவது தொடர்பான அறிவிப்பை நியூயார்க் மேயர் சோஹ்ரான் மம்தானி வெளியிட்டார்.
</p><p>
இது குறித்து அவர் கூறுகையில், “கழிப்பறைகள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளோம். கழிப்பறை என்பது செல்போனில் ஸ்கோரல் செய்து கொண்டிருக்கும் இடமாக இருக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13fd3acc-a29a-4d68-af3f-0931088c64df/26-6aaedc0bf1e78.webp' /></p><p>இந்த நவீன கழிப்பறை திட்டத்திற்காக நியூயார்க் நகர நிர்வாகம் சுமார் 4 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.38 கோடி) செலவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
</p><p>
இத்தகைய கழிப்பறைகளை நிறுவுவதற்கு முன்னதாக, இது குறித்து ஆய்வுகளும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. </p><p>அதாவது சராசரியாக ஒரு நபர் மூன்றரை நிமிடங்கள் கழிப்பறையை பயன்படுத்துகிறார் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும், எனவே 10 நிமிடங்கள் என்பது பெரும்பாலான நபர்களுக்கு போதுமான நேரமாகவே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T23:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதலருடன் 2 மாதம் உல்லாசம் ; வீட்டுக்கு திரும்பி வந்து கணவரின் அந்தரங்க உறுப்பில் கடித்து வைத்த மனைவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/illicit-romance-lover-wife-husband-private-part-1789842438"></link>
            <id>https://jvpnews.com/article/illicit-romance-lover-wife-husband-private-part-1789842438</id>
            <summary type="text">காதலருடன் 2 மாத உல்லாசம் அனுபவித்து விட்டு, வீட்டுக்கு திரும்பி வந்த மனைவி, கணவரின் அந்தரங்க உறுப்பில் கடித்து வைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>காதலருடன் 2 மாத உல்லாசம் அனுபவித்து விட்டு, வீட்டுக்கு திரும்பி வந்த மனைவி, கணவரின் அந்தரங்க உறுப்பில் கடித்து வைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.</p><p></p><p>

உத்தர பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் வசித்து வருபவர் சாதனா. இவருடைய கணவர் தீபக். இந்த தம்பதிக்கு, 3 வயது பெண் குழந்தை உள்பட 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.</p><h3>குடும்பத் தகராறு</h3><p> </p><p>இந்த நிலையில், தீபக்கின் நண்பருடன் சாதனாவுக்கு நட்பு ஏற்பட்டது.

இதன்பின்னர் அவருடனான உறவு நெருக்கமடைந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc6f1d97-7c00-48f3-9ac9-ef69c907b07d/26-6aaed407b589f.webp' /></p><p>ஒரு நாள் யாரிடமும் எதுவும் கூறாமல் அவருடன் சாதனா ஓடி விட்டார். 2 மாதங்களாக அவருடனேயே தங்கி, உல்லாசம் அனுபவித்து வந்த சாதனா, நேற்று முன்தினம் கணவரின் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.</p><p>அப்போது, சாதனாவுடன் தீபக் வாக்குவாதம் செய்துள்ளார். இதில், இருவருக்கும் மோதல் ஏற்பட்டு வன்முறையில் முடிந்தது. விசயம் பொலிஸ் வரை சென்றது. இந்த சம்பவம் பற்றி பொலிஸார் கூறும்போது, சாதனாவின் மூக்கை தீபக் கடித்து விட்டார் என புகார் பதிவானது. </p><p>இதனால், தீபக் கைது செய்யப்பட்டு உள்ளார் என்றனர்.

தீபக், சாதனாவின் தலையில் தாக்கியதுடன், அவருடைய மூக்கை கடித்து, சாக்கடையில் வீசி விட்டார். </p><p>இந்த சண்டையின்போது மாமனாரும், மாமியாரும் சாதனாவின் கைகளை பிடித்து கொண்டனர் என சாதனா குற்றச்சாட்டாக கூறியுள்ளார். </p><p>இதனால் பலத்த காயமடைந்த மீட்ட பொலிஸார் அவரை சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.</p><p>எனினும், தீபக்கின் தாய் கூறும்போது, தீபக்கின் நண்பருடன் சாதனா ஓடி விட்டார். இதுபற்றி பொலிசிடம் கூறினோம். அவர்கள் சமரசம் செய்து வைத்தனர். ஆனால், யாரும் எதிர்பாராமல் பக்கத்து வீட்டு மாடியில் இருந்து எங்களுடைய வீட்டுக்குள் சாதனா குதித்து விட்டார். </p><p>குழந்தைகளை அழைத்து செல்ல முற்பட்டார்.

இந்த தகராறில், தீபக்கின் அந்தரங்க உறுப்புகளை சாதனா கடித்து வைத்து விட்டார். </p><p>பின்னர், அவராகவே தரையில் தலையைக்கொண்டு மோதி காயம் ஏற்படுத்தி கொண்டார் என கூறினார். இதுதொடர்பாக சாதனாவுக்கு எதிராக முறைபாடு அளித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T23:29:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி அரேபியாவின் முக்கிய நகரங்களை தாக்கிய ஹவுதிகள்: பதிலடிகள் தொடரும் என எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/houthi-attacks-riyadh-and-yanbu-in-saudi-1789854301"></link>
            <id>https://news.lankasri.com/article/houthi-attacks-riyadh-and-yanbu-in-saudi-1789854301</id>
            <summary type="text">சவுதி அரேபியாவின் முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தி இருப்பதாக அதன் இராணுவ பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். சவுதியின...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவின் முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தி இருப்பதாக அதன் இராணுவ பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><h3> சவுதியின் முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்த ஹவுதி</h3><p>
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் மற்றும் யான்பு நகரில் உள்ள சவுதி அராம்கோ நிறுவனத்தின் முக்கிய உள்கட்டமைப்பு வசதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக ஹவுதி படையினர் இராணுவ பேச்சாளர் யஹ்ஹா சரீ தகவல் தெரிவித்துள்ளார்.</p><p> இந்த தாக்குதலில் பாலிஸ்டிக் ஏவுகணைகள், குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஏராளமான ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஏமன் தலைநகர் சனா மீது சவுதி ராணுவத்தினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக யஹ்ஹா சரீ குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5087c42e-cc0d-4463-8812-278cae157840/26-6aaf025ea6350.webp' /></p><p> பொதுமக்களை குறிவைத்து ஹவுதி படையினர் தாக்குதல் நடத்துவதாக சவுதி குற்றஞ்சாட்டிய நிலையில், அதனை மறுத்த யஹ்ஹா சரீ, குறிவைக்கப்பட்ட ராணுவ இலக்குகளை ஏவுகணைகள் வெற்றிகரமாக அடைந்ததாக தெரிவித்துள்ளார்.</p><p> அத்துடன் சவுதிக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர போவதாகவும் சரீ குறிப்பிட்டுள்ளார்.</p><p> இதற்கிடையில் ஹவுதி படையினர் நடத்திய தாக்குதல் பதற்றம் காரணமாக தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக விமான சேவைகளை இடை நிறுத்தியுள்ளது.<br></p>]]></content>
            <updated>2026-09-19T23:14:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்‌ச காலத்தில் உருப்பெற்ற பாதாள உலகத் தலைவர்கள் : பொன்சேகா சுட்டிக்காட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/all-underworld-leaders-emerged-rajapaksa-regime-1789854370"></link>
            <id>https://tamilwin.com/article/all-underworld-leaders-emerged-rajapaksa-regime-1789854370</id>
            <summary type="text">தற்போது பாதாள உலகில் ஆதிக்கம் செலுத்தும் தலைவர்கள் அனைவரும் ராஜபக்‌ச ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டவர்கள் எனவும், நாளுக்கு நாள் அதிகரித்து
வரும் பாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது பாதாள உலகில் ஆதிக்கம் செலுத்தும் தலைவர்கள் அனைவரும் ராஜபக்‌ச ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டவர்கள் எனவும், நாளுக்கு நாள் அதிகரித்து
வரும் பாதாள உலகச் செயற்பாடுகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக
அமைந்துள்ளதால் அவை நிச்சயமாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் முன்னாள் இராணுவத்
தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.
</p><p>
கொழும்பில் நேற்று(1.0.202) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள்
எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
</p><h2>புலம்பெயர் அமைப்புகள் தொடர்பான கூற்றுகள்</h2><p>
நாளுக்கு நாள் பாதாள உலகச் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன எனவும், இவை
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் இவ்வாறான செயற்பாடுகள்
நிச்சயமாகக் கட்டுப்படுத்தப்பட்டு நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர்
வலியுறுத்தினார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7994a73f-10a1-470a-bb68-18b0b6256ced/26-6aaf0da2e1947.webp' /></p><p>
அழுத்தம் அதிகரிக்கும் போது இவர்களின் செயற்பாடுகளும் மேலும் அதிகரிக்கின்றன
எனவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>"உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போதைய அரசு ஆர்வத்துடன்
செயற்படுகின்றது என்று நான் கருதுகின்றேன். அது குறித்து நாம் மகிழ்ச்சியடைய
முடியும். சில நபர்கள் குறித்து நான் முன்னரே சுட்டிக்காட்டியிருந்தேன்.
தற்போது மீண்டும் அதே நபர்கள் தொடர்பில் பேசப்பட்டு வருகின்றன. </p><p>இந்த
விசாரணைகளில் விரைவில் நல்ல முடிவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன் எனவும் அவர் கூறினார்.
</p><p>
இந்த நடவடிக்கைகள் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் தேவைக்கேற்ப அல்லது
தமிழ் புலம்பெயர் அமைப்புகளின் தேவைக்கேற்ப மேற்கொள்ளப்படுகின்றன என்று சிலர்
கூறுவது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், புலம்பெயர் அமைப்புகள் தொடர்பான
கூற்றுகள் வெறும் பேச்சுக்காகப் பேசப்படும் விடயங்களே என்றார்.
</p><p>
மேலும், பேராயர் மல்கம் ரஞ்சித் தனது மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக்
கோருவதற்கு முழுமையான உரிமை உள்ளது என்றும், அரசு இதுவரையில் சரியான
பாதையிலேயே செல்கின்றது எனத் தான் கருதுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><h2>மக்களால் தெரிவு செய்யப்பட்ட இந்த அரசு</h2><p>ராஜபக்‌ச குடும்பத்தினர் தொடர்பான விடயங்கள் தற்போது வெளிவந்து
கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், ஷிராந்தி ராஜபக்‌ச வெளிநாட்டுக்குச்
சென்றிருப்பது தொடர்பிலும் பேசப்படுவதைச் சுட்டிக்காட்டினார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99919d69-2772-4f51-b64e-7cb68a2b896a/26-6aaf0da399716.webp' /></p><p>
ராஜபக்‌ச குடும்பத்தின் ஒட்டுமொத்த பரம்பரையும், தந்தைகள், மாமன்மார்கள்,
மூத்தவர்கள், மருமகன்கள் மற்றும் மகன்கள் உள்ளிட்ட பலரும் நாட்டைச்
சூறையாடியதாகத் தான் முன்னர் கூறியுள்ளதை நினைவுபடுத்திய அவர், அவர்கள் செய்த
செயல்கள் தொடர்பில் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.
</p><p>
ஷிராந்தி ராஜபக்‌ச தொடர்பிலும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட
வேண்டும் எனவும், சட்டவிரோதமாகப் பணம் தொடர்பான நடவடிக்கைகள்
இடம்பெற்றிருந்தால் அதற்கும் அவர்கள் சட்டத்தின் முன் பதிலளிக்க வேண்டும்
எனவும் அவர் வலியுறுத்தினார்.&nbsp;</p><p>2029 ஆம் ஆண்டு நாட்டை நாமல் ராஜபக்ஷவிடம் ஒப்படைக்க வேண்டும் என யாராவது
நினைத்தால், அது நாட்டில் எவரும் விரும்பக்கூடாத முட்டாள்தனமான செயலாகும் எனக்
குறிப்பிட்ட சரத் பொன்சேகா, அவர் செல்ல வேண்டிய பாதை அவருக்குத் திறந்தே
இருக்கின்றது எனவும், அவர் விரைவாக அந்தப் பாதையில் செல்வார் எனவும்
விமர்சித்தார்.
</p><p>
தற்போதைய அரசுக்கு இன்னும் மூன்று வருடங்களுக்கும் அதிகமான காலம் உள்ளது
எனவும், நீண்டகாலமாக வீழ்ச்சியடைந்த நாட்டை ஓரிரு வருடங்களில் எந்த அரசாலும்
முழுமையாகக் கட்டியெழுப்ப முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
எனவே, மக்களால் தெரிவு செய்யப்பட்ட இந்த அரசுக்கு அதன் ஐந்து வருட கால
முழுமையான அவகாசத்தை வழங்க வேண்டும் எனவும், அந்தக் காலப்பகுதியில் மக்களுக்கு
வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது அவர்களின் பொறுப்பாகும் எனவும்
அவர் மேலும் குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T22:50:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவானில் ஏற்பட்ட தீப்பரவல் ; கே.எல்.எம் விமானம் அவசரமாக தரையிறக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/fire-breaks-out-mid-air-flight-emergency-landing-1789858192"></link>
            <id>https://canadamirror.com/article/fire-breaks-out-mid-air-flight-emergency-landing-1789858192</id>
            <summary type="text">நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து கரீபியன் தீவான குராசாவோ நோக்கிப் புறப்பட்ட கே.எல்.எம். விமானத்தில் பயணியொருவரின் கையடக்க மின்னேற்றி (Power Ban...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து கரீபியன் தீவான குராசாவோ நோக்கிப் புறப்பட்ட கே.எல்.எம். விமானத்தில் பயணியொருவரின் கையடக்க மின்னேற்றி (Power Bank) நடுவானில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
</p><p>
கடந்த வியாழக்கிழமை (செப்டெம்பர் 17) அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேலாக விமானம் பறந்துகொண்டிருந்தபோது, வணிக வகுப்புப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4be1cb54-a510-464b-a6a7-178ce72ef5e1/26-6aaf1192e556c.webp' /></p><p>கையடக்க மின்னேற்றி தீப்பிடித்ததைத் தொடர்ந்து விமானப் பணியாளர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். </p><p>இதனால் பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என டச்சு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு விமானி, விமானத்தை குராசாவோ நோக்கிய பயணத்தைத் தொடராமல் மீண்டும் ஆம்ஸ்டர்டாமை நோக்கித் திருப்பியுள்ளார்.
</p><p>
ஆம்ஸ்டர்டாமில் இருந்து புறப்பட்ட சுமார் 5 மணி 30 நிமிடங்களுக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>மொத்தமாக சுமார் 11 மணி நேரம் வானில் பயணித்த விமானம், குராசாவோவை சென்றடையாமல் இரவு 8.40 மணியளவில் மீண்டும் ஆம்ஸ்டர்டாமின் ஸ்கிபோல் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.</p><p>

இதனிடையே, தீப்பிடித்த கையடக்க மின்னேற்றி கே.எல்.எம். நிறுவனத்தின் முன்னாள் முதன்மைச் செயல் அதிகாரி கமியல் யூர்லிங்ஸுக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என சில டச்சு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும், இதுகுறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.</p><p>இந்தச் சம்பவம் விமானப் பயணங்களின்போது லித்தியம்-அயன் மின்கலங்களைக் கொண்ட சாதனங்களை எடுத்துச் செல்வது தொடர்பான பாதுகாப்பு விதிகளை மீண்டும் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e3a54d7-6c24-4022-bdc5-0180ee4c3720/26-6aaf119233db7.webp' /></p><p>

கே.எல்.எம். நிறுவனத்தின் விதிகளின்படி, ஒரு பயணி அதிகபட்சம் இரண்டு கையடக்க மின்னேற்றிகளை எடுத்துச் செல்ல முடியும். அவற்றை பதிவு செய்யப்பட்ட பயணப் பொதிகளில் வைக்கக் கூடாது; கைப்பையில் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும்.
</p><p>
மேலும், விமானப் பயணத்தின்போது கையடக்க மின்னேற்றிகளைப் பயன்படுத்துவதற்கும் அல்லது அவற்றின் மூலம் சாதனங்களை மின்னேற்றுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த விதிமுறைகள் பயணத்தின் தொடக்கத்திலேயே பயணிகளுக்கு அறிவிக்கப்படுவதாகவும், விதிமுறைகளை மீறுபவர்களுக்கு தற்போதைய நிலையில் அபராதம் விதிக்கும் நடைமுறை இல்லை என்றும் கே.எல்.எம். தெரிவித்துள்ளது.
</p><p>
கையடக்க மின்னேற்றிகளில் பயன்படுத்தப்படும் லித்தியம் மின்கலங்கள் சேதமடைந்தாலோ அல்லது அதிக வெப்பமடைந்தாலோ தீப்பற்றும் அபாயம் இருப்பதால், விமானப் பயணங்களில் அவற்றை முறையாகக் கையாள்வது முக்கியத்துவம் பெறுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-19T22:50:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப் புலிகளின் தலைவருக்கு உருவச்சிலை அமைக்க அனுமதிப்பீர்களா.. அநுர தரப்பிடம் சரத் வீரசேக கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/statue-of-prabhakaran-in-the-north-1789847402"></link>
            <id>https://tamilwin.com/article/statue-of-prabhakaran-in-the-north-1789847402</id>
            <summary type="text">
வடக்கில் தற்போது திலீபனுக்கு உருவச்சிலை வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் எதிர்காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் உருவச்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>
வடக்கில் தற்போது திலீபனுக்கு உருவச்சிலை வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் எதிர்காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் உருவச்சிலை அமைக்க இந்த அரசாங்கம் அனுமதியளிக்குமா என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கேள்வி தொடுத்திருந்தார்.</p><p>
</p><p>
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,</p><p> 

வடக்கில் திலீபனுக்கு உருவச்சிலை அமைக்கப்பட்டு, நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளமை இலங்கை இராணுவத்தை அவமதிக்கும் ஒரு செயற்பாடாகும்.</p><h2>நல்லாட்சி அரசாங்கத்தின் தவறு&nbsp;</h2><p>
</p><p>
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தற்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் கொள்கைகள் தற்போது வெளிப்படையாகவே வெளிப்படுத்தப்படுகின்றன.
</p><p> 
வடக்கில் திலீபனுக்கு உருவச்சிலை அமைக்கப்பட்டு, அதனை திறக்கும் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் சீருடைகளுடன் கலந்து கொண்டுள்ளார்கள். கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி இதனை ஏற்றுக் கொள்வாரா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1a17b1a-6988-4b5d-b05d-e29ff60986bf/26-6aaeef5d7881e.webp' /></p><p>
</p><p>
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசியல் ரீதியாக பிரபல்யமடைய வேண்டும்&nbsp; என்பதற்காக அரசாங்கம் பாதுகாப்புசார்ந்த விடயங்களை அலட்சியப்படுத்துகின்றது.</p><p> 

நல்லாட்சி அரசாங்கமும் இதே தவறை இழைத்தது. அதன் விளைவு தான் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளியது. </p><p>

எனவே, அரசியல் வெற்றிக்காக பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்களை அலட்சியப்டுத்த வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-19T22:35:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜீ தமிழில் முடிவுக்கு வந்த வீரா சீரியல்... கடைசிநாள் படப்பிடிப்பு புகைப்படங்கள் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/zee-tamizh-veera-serial-last-day-shooting-photos-1789837435"></link>
            <id>https://cineulagam.com/article/zee-tamizh-veera-serial-last-day-shooting-photos-1789837435</id>
            <summary type="text">வீரா சீரியல்ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று வீரா. கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வைஷ்ணவி மற்றும் அருண் என்ற புதிய ஜோடி ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>வீரா சீரியல்</h2><p>ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று வீரா. </p><p>கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வைஷ்ணவி மற்றும் அருண் என்ற புதிய ஜோடி இணைய சீரியல் துவங்கப்பட்டது. ஒரு விபத்தால் தங்களது சகோதரரை இழக்கிறார்கள் வீரா மற்றும் கண்மணி சகோதரிகள். </p><p>சகோதரரின் இறப்பிற்கு காரணமானவரையே சூழ்நிலையால் திருமணம் செய்கிறார் வீரா. அதன்பின் சகோதரிகள் அவரை மன்னித்தார்களா இல்லையா என்பதை நோக்கிய கதையாக வீரா சீரியல் இருந்தது.</p><p> இந்த தொடர் முதல் பாகம் முடிவடைந்து இரண்டாவது பாகமாக ஒளிபரப்பாகி வந்தது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2789aabe-a8e4-4c50-9e8b-da34b5ed661c/26-6aaec132c5fd8.webp' /></p><h2>போட்டோஸ்</h2><p> 
2 வருடங்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த இந்த வீரா சீரியல் விரைவில் கிளைமேக்ஸ் எட்ட இருப்பதாக ஏற்கெனவே தகவல் வந்தது. </p><p>தற்போது வீரா சீரியலின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துவிட்டதாம், சீரியலின் கிளைமேக்ஸ் நாளை ஞாயிறு (செப் 20) மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம். இதோ கடைசி நாள் சீரியல் குழுவினர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்,</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DdeVBSqkh3_/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DdeVBSqkh3_/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DdeVBSqkh3_/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Hemalatha V (@tamilserialexpress)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-19T22:30:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொருளாதார வளர்ச்சி விகிதம் மீண்டும் வீழ்ச்சி! விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/economic-growth-rate-falls-again-1789852296"></link>
            <id>https://tamilwin.com/article/economic-growth-rate-falls-again-1789852296</id>
            <summary type="text">இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் கணிசமான அளவில் மீண்டும் வீழ்ச்சியுற்றிருப்பதை சுட்டிக் காட்டும் பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ, சீர்திருத்தங...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் கணிசமான அளவில் மீண்டும் வீழ்ச்சியுற்றிருப்பதை சுட்டிக் காட்டும் பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ, சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமல் போனால் பாரிய நெருக்கடி ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.</p><p>

அட்வகேட்டா நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியும் பொருளாதார ஆய்வாளருமான தனநாத் பெர்னாண்டோ, அண்மையில் வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வுக் கட்டுரையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><h2>நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம்</h2><p>
அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் மீண்டும் கணிசமான அளவில் குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42f274d0-e68f-490c-914e-ca33019829e6/26-6aaefd7d23238.webp' /></p><p>தற்போதைய பொருளாதாரம் 2018ஆம் ஆண்டில் இருந்த நிலையைக்கூட எட்டவில்லை.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் சமீபத்திய தரவுகளை ஆய்வு செய்யுயும்போது, ஆண்டின் முதல் காலாண்டில் 5.1 சதவீதமாகப் பதிவான பொருளாதார வளர்ச்சி விகிதம், இரண்டாவது காலாண்டில் கிட்டத்தட்ட ஒரு சதவீதப் புள்ளி குறைந்து 4.2 சதவீதமாகச் சரிந்துள்ளது.</p><p>பொருளாதாரம் வளர்ந்து வந்தாலும், வளர்ச்சி விகிதத்தில் ஏற்பட்டுள்ள இந்த மந்தநிலை நாட்டின் எதிர்காலத்திற்கு சாதகமற்ற போக்கு எனலாம்.

குறிப்பாக, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ​​இரண்டாவது காலாண்டில் பதிவுசெய்யப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி (சுமார் 3,029.8 பில்லியன் ரூபா), 2018 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பதிவுசெய்யப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியை (3,121.5 பில்லியன் ரூபா) விட கிட்டத்தட்ட 2 சதவீதம் குறைவாகவே உள்ளது.</p><p>
பொருளாதார நெருக்கடியின் காரணமாக இந்த நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் 8 முதல் 10 ஆண்டுகள் வரை பின்னோக்கிச் சென்றுள்ளது என்பதை இது உணர்த்துகிறது.
</p><p>
இரண்டாவது காலாண்டில் துறைரீதியாக பொருளாதார வளர்ச்சியை ஆய்வு செய்யும்போது, ​​விவசாயத் துறை 2.3 சதவீதம் சுருங்கியுள்ளது. அதே நேரத்தில் நெல் உற்பத்தி 15.1 சதவீதமும், பெட்ரோலியம் சார்ந்த பொருட்கள் கிட்டத்தட்ட 15 சதவீதமும் குறைந்துள்ளன.</p><h2>நாடு இன்னும் பல ஆண்டுகளுக்குப் பின்னோக்கி</h2><p>தொழில்துறை 7.3 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது முதன்மையாக கட்டிட கட்டுமானத் துறை (13.9மூ) மற்றும் சுரங்கம் மற்றும் கல் குவாரித் துறை (17.4மூ) ஆகியவற்றின் வளர்ச்சியால் ஏற்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e5f468f-425c-4cf1-94c9-a489caa508e8/26-6aaefd7dd0547.webp' /></p><p>
சேவைத் துறை சராசரியாக 2.7 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இருப்பினும், பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் ஏற்படும் மந்தநிலை, சாமானிய மக்களின் வருமான ஆதாரங்களையும் ஊதியங்களையும் நேரடியாகப் பாதிக்கிறது. </p><p>இது வறுமையின் அபாயத்தை அதிகரிப்பதோடு, கடன் மறுசீரமைப்பிற்குப் பிறகு நாடு மீண்டும் கடன் நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயத்தையும் ஏற்படுத்தும்.
</p><p>
மேலும், இது சர்வதேச கடன் மதிப்பீடுகளில் முன்னேறுவதற்கு ஒரு தடையாக அமையும்.

நாடு எதிர்கொள்ளும் இந்த அபாயத்தைக் கடக்க, பொருளாதார வளர்ச்சி விகிதத்தை நீண்ட காலத்திற்கு 6 முதல் 7 சதவிகித அளவில் பராமரிக்க வேண்டும் என்பதுடன், இதற்காக, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதையும் தாண்டிய விரிவான பொருளாதார சீர்திருத்தங்களை அவசரமாக மேற்கொள்ள வேண்டும்.
</p><p>
மேலும், சீர்திருத்தங்கள், குறிப்பாக காணிச் சீர்திருத்தங்கள், தொழிலாளர் சந்தை சீர்திருத்தங்கள் மற்றும் பொதுத்துறையில் செயல்திறன் மேம்பாடுகள் ஆகியவை உடனடியாகச் செயல்படுத்தப்படாவிட்டால், நாடு இன்னும் பல ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் செல்ல நேரிடும் என்றும் தனநாத் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T21:34:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாலத்தீவில் கிளாமரான நீச்சல் உடையில் சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ் வெளியிட்ட போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/serial-actress-aarthi-subash-beach-photoshoot-1789818557"></link>
            <id>https://cineulagam.com/article/serial-actress-aarthi-subash-beach-photoshoot-1789818557</id>
            <summary type="text">ஆர்த்தி சுபாஷ்யூடியூபில் குறும்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆர்த்தி சுபாஷ். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் மூலம் சின்னத்திரையி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஆர்த்தி சுபாஷ்</h2><p>யூடியூபில் குறும்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆர்த்தி சுபாஷ். </p><p>சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி ஆனார்.
மல்லிகா கதாபாத்திரத்தில் தனக்கே உரிய நகைச்சுவை கலந்த துணிச்சலான பாணியில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
</p><p>அந்த சீரியலை தொடர்ந்து விஜய் டிவி பக்கம் வந்தவர் வீட்டுக்கு வீடு வாசப்படி, சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம் தொடர்களில் நடித்தார். </p><p>இவர் சன் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி சீரியல் நாயகன் பவன் ரவீந்திரனை காதலித்துள்ளார், இருவருக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்தது. </p><p>தற்போது நடிகை ஆர்த்தி சுபாஷ் கடற்கரையில் கிளாமரான நீச்சல் உடையில் வெளியிட்ட புகைப்படங்களை காண்போம்.&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T21:30:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவீடன் நாட்டு எம்.பி.யாக இந்திய வம்சாவளி பெண் தேர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indian-origin-woman-elected-as-swedish-mp-1789851374"></link>
            <id>https://canadamirror.com/article/indian-origin-woman-elected-as-swedish-mp-1789851374</id>
            <summary type="text">சுவீடனில் நடைபெற்ற பொதுத்தேர்தலில், ஸ்டாக்ஹோம் சிட்டி தொகுதியில் பசுமைக்கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிலா விகே பாட்டீல் (41)...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவீடனில் நடைபெற்ற பொதுத்தேர்தலில், ஸ்டாக்ஹோம் சிட்டி தொகுதியில் பசுமைக்கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிலா விகே பாட்டீல் (41) வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
</p><p>
மராட்டியத்தைச் சேர்ந்த பிரபல கல்வியாளர் அசோக் விகே பாட்டீலின் மகளான நிலா விகே பாட்டீல், மராட்டியத்தின் முக்கிய அரசியல் மற்றும் கூட்டுறவுத் துறை குடும்பத்தைச் சேர்ந்தவர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96169be7-aa33-4baf-87b3-a7603148f5a1/26-6aaef6ef7b543.webp' /></p><p>ஆசியாவின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையை நிறுவிய விதல்ராவ் விகே பாட்டீலின் கொள்ளுப் பேத்தியும், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் பாலசாகேப் விகே பாட்டீலின் பேத்தியும் ஆவார். மேலும், தற்போதைய பா.ஜனதா அமைச்சர் ராதாகிருஷ்ண விகே பாட்டீலின் அண்ணன் மகளும் ஆவார்.
</p><p>
சுவீடனில் பிறந்த நிலா, தனது குழந்தைப் பருவத்தின் ஒரு பகுதியை மராட்டிய மாநிலம் அகமதுநகரில் கழித்துள்ளார். சுவீடனில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றுள்ள அவர், கடந்த 25 ஆண்டுகளாக அந்நாட்டின் பசுமைக்கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்துள்ளார்.
</p><p>
இதற்கு முன்னர், முன்னாள் சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோஃப்வென் தலைமையிலான அரசில் நிதி மற்றும் வீட்டுவசதி துறைகளுக்கான அரசியல் ஆலோசகராகவும் நிலா விகே பாட்டீல் பணியாற்றியுள்ளார்.
</p><p>
தனது வெற்றி குறித்து கருத்து தெரிவித்த நிலா, 349 உறுப்பினர்களைக் கொண்ட சுவீடன் நாடாளுமன்றத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார்.</p><p> மேலும், தனது 15 வயதில் மராட்டிய மாநில பட்ஜெட்டை படிக்கச் செய்த தனது தாத்தா பாலசாகேப் விகே பாட்டீல் உயிருடன் இருந்திருந்தால், தனது வெற்றியைப் பார்த்து பெருமைப்பட்டிருப்பார் என்றும் கூறினார்.
</p><p>
“இந்தியாவை எனக்கு மிகவும் பிடிக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
சுவீடன் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி 176 இடங்களைப் பெற்று பெரும்பான்மையைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மராட்டிய மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-19T20:56:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருடப்பட்ட மாடுகளை ஏற்றிச் சென்ற சொகுசு கார் கைப்பற்றல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/luxury-car-used-to-transport-stolen-cattle-seized-1789849494"></link>
            <id>https://tamilwin.com/article/luxury-car-used-to-transport-stolen-cattle-seized-1789849494</id>
            <summary type="text">திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வநகர் பகுதியில்,
திருடப்பட்டதாகக் கூறப்படும் மாடுகளை ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படும்
சொகுசு கார...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வநகர் பகுதியில்,
திருடப்பட்டதாகக் கூறப்படும் மாடுகளை ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படும்
சொகுசு கார் ஒன்றை சேருநுவர பொலிஸார்&nbsp;கைப்பற்றியுள்ளனர்</p><p>குறித்த நடவடிக்கையானது நேற்று (19.09.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><h2>கைப்பற்றப்பட்ட சொகுசு கார்</h2><p>
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது குறித்த கார்
கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எனக்
கூறப்படும் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18411d26-57ff-4a2b-a94a-951ac300baad/26-6aaef56a71607.webp' /></p><p>

கைப்பற்றப்பட்ட சொகுசு காரை அடிப்படையாகக் கொண்டு, மாடுகள் திருட்டுச்
சம்பவத்துடன் குறித்த வாகனத்துக்கு தொடர்பு உள்ளதா என்பது தொடர்பிலும்
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>
தப்பிச் சென்றதாகக் கூறப்படும் சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும்
முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T20:50:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் ஊழல் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/full-support-government-anti-corruption-anti-drug-1789850659"></link>
            <id>https://jvpnews.com/article/full-support-government-anti-corruption-anti-drug-1789850659</id>
            <summary type="text">அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்குத் தாம் முழுமையான ஆதரவை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்குத் தாம் முழுமையான ஆதரவை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
</p><p>
 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்:

 

"நாட்டிற்கு எதிராகச் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c272ba3-9d8c-46dc-b980-8e6e89c1dc2a/26-6aaef42504730.webp' /></p><p>என் மீது சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு சாமர சம்பத் அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் சவால் விடுத்திருந்தேன். </p><p>ஆனால், இதுவரை அவர்களால் எந்தவொரு குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியவில்லை. </p><p>ஊழல் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு, நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் நேர்மறையான நடவடிக்கைகளுக்கு இலங்கைத் தமிழரசுத் கட்சி தொடர்ந்து ஆதரவளிக்கும். </p><p>போதைப்பொருள் மற்றும் மதுப் பயன்பாட்டினால் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழ் இளைஞர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வன்முறைகளும் அதிகரித்துள்ளன.</p><p>எனவே, போதைப்பொருள் ஒழிப்புக்கும் மதுபானசாலைகளை மூடும் நடவடிக்கைகளுக்கும் நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவோம். </p><p>மேலும், இந்த ஆண்டில் மாகாண சபைத் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை. அடுத்த ஆண்டு அதற்கான அறிவிப்பு வரும்போதே முதலமைச்சர் வேட்பாளர் குறித்த முடிவுகள் பரிசீலிக்கப்படும்" என்று தெரிவித்தார்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T20:44:41+00:00</updated>
        </entry>
    </feed>
