<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-28T12:46:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு படுகொலை வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mandaithivu-murder-case-adjourned-to-september-22-1785241059"></link>
            <id>https://tamilwin.com/article/mandaithivu-murder-case-adjourned-to-september-22-1785241059</id>
            <summary type="text">மண்டைதீவு படுகொலை&amp;nbsp; மற்றும் புதைகுழி வழக்கு&amp;nbsp;மீண்டும் எதிர்வரும் செப்ரெம்பர் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று(28.07.2026) ஊர்காவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மண்டைதீவு படுகொலை&nbsp; மற்றும் புதைகுழி வழக்கு&nbsp;மீண்டும் எதிர்வரும் செப்ரெம்பர் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p> இன்று(28.07.2026) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான்
அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>குறித்த காணியின் உரித்து</h2><p>இதன்போது யாழ் மாவட்ட
குற்றத்தடுப்பு பொலிஸாரால் மேலதிக சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டது.
</p><p>
குறித்த வழக்கின் வழக்காளிகள் சார்பில் சட்டத்தரணி செபமாலைமுத்து
கிருஸ்ரபெலினாவுடன்
காணாமல் போனோர் அலுவலகத்தின் சட்டத்தரணி பூர்ணி மரியநாயகம், அதன் பிராந்திய
இணைப்பாளர் த.செல்வக்குமார், வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக
முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன் மற்றும் பிரதேச
சபையின் உறுப்பினர் அனுஷிய ஜெயகாந்த் ஆகியோர் இன்று குறித்த வழக்கு சார்பில்
நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28d1231b-6355-4975-bbd9-b4f27aaa679b/26-6a68a200df4da.webp' /></p><p>முற்பகல் 10 மணிக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட குறித்த வழக்கு வாதப்
பிரதிவாதங்களின் பின் பிற்பகல் 2.30 மணிவரை ஒத்திவைக்கபட்டது.
</p><p>
பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்காக எடுக்கப்பட்ட குறித்த வழக்கின்
போது வழக்காளிகளின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளால் குறித்த விடயம் தொடர்பில் அடையாளப்படுத்தப்பட்ட இடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அடையாளப்படுத்தப்பட்ட குறித்த காணியின் உரித்து யாருடையது என்பதை உறுதி செய்து
அறிக்கை பெற்றுக் கொள்ளவேண்டும் என்று கிராம சேவகர், பிரதேச செயலர்,
பிரதேசத்தின் தவிசாளர், வழக்கின் சார்பானவர்கள் , சட்ட விசாரணை அதிகாதி,
பொலிசார், பிரதேச முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடல் நடத்த ஆவன செய்யுமாறு
நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்தனர்.&nbsp;</p><h2>நீதிமன்றத்தில் விசாரணை</h2><p>அத்துடன் சட்டவிசாரணை அதிகாரியின் அறிக்கை கிடைத்ததும் அகழ்வுக்கான
நிதிதிரட்டலுக்கு துறைசார் அமைச்சிடம் கோரிக்கை விடுத்து நிதி பெற்றுக்கொள்ள
ஏற்பாடு செய்யப்படும் என்றும் சுட்டிக்காடியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83aac83b-b8cf-41cd-a71d-34d7f2eb66b5/26-6a68a201ca592.webp' /></p><p>

முன்வைக்கப்பட்ட வியாக்கியானங்களை அடுத்து குறித்த வழக்கு வரும் செப்ரெம்பர்
22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.</p><p>

முன்பதாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதியன்று குறித்த
சம்பவத்தில் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா என்பவர் மற்றும்
வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான
சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோரால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டது.</p><p>

இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 17.09.2025 அன்று ஊர்காவற்துறை நீதிவான்
நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T12:42:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/venus-transit-uthiram-nakshatra-who-get-bad-luck-1785221607"></link>
            <id>https://manithan.com/article/venus-transit-uthiram-nakshatra-who-get-bad-luck-1785221607</id>
            <summary type="text">வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக போற்றப்படும் கிரகம் சுக்கிரன். அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு போன்றவற்றின் காரகனாக விளங்கும் சுக்கிரன், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக போற்றப்படும் கிரகம் சுக்கிரன். அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு போன்றவற்றின் காரகனாக விளங்கும் சுக்கிரன், மனிதர்களின் வாழ்க்கையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் கிரகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார்.
</p><p>
ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியான சுக்கிரன், மாதந்தோறும் தனது ராசியை மாற்றுவதோடு மட்டுமல்லாமல், குறிப்பிட்ட கால இடைவெளியில் நட்சத்திரத்தையும் மாற்றுவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e549fe3-0092-465e-ab3e-c3d17ead15cb/26-6a685c50ac3b5.webp' /></p><p> </p><p>தற்போது சூரியனின் ஆட்சி ராசியான சிம்மத்தில் பயணித்து வரும் சுக்கிரன், ஜூலை 29 ஆம் தேதி சூரியனுக்குரிய&nbsp; உத்திரம் நட்சத்திரத்திற்குள் நுழைய உள்ளார்.</p><p> ஜோதிடக் கணிப்புகளின்படி, சூரியனும் சுக்கிரனும் இயல்பில் பகைமை கொண்ட கிரகங்களாகக் கருதப்படுவதால், இந்த நட்சத்திர மாற்றம் குறிப்பிட்ட சில ராசிகளில் வாழ்வில் அதிக சவால்களையும் சிக்கல்களையும் ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p>அந்தவகையில், சுக்கிரன் பெயர்ச்சி காலகட்டத்தில், ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a523731-e234-4cfc-96a9-6378c93179f1/26-6a685c515e70f.webp' /></p><p>

சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்தக் காலத்தில் செலவுகள் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. </p><p>அதனால் பண விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. தேவையில்லாத செலவுகளைக் கட்டுப்படுத்தினால் நிதி நெருக்கடியைத் தவிர்க்க முடியும். </p><p>அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது. மேலும், இந்தக் காலத்தில் பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பது பாதுகாப்பானதாக இருக்கும்.</p><h2>

மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb624315-ab42-4fa0-a206-fc7a4e563d2c/26-6a685c520f13b.webp' /></p><p>

சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் உடல்நலத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டிய காலம் இது. </p><p>குடும்பத்தினருடன் சிறிய விஷயங்களுக்குக் கூட மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், உறவுகளை கவனமாக கையாள வேண்டும்.</p><p> பேசும் வார்த்தைகளில் நிதானம் கடைப்பிடிப்பது பல பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும். புதிய முதலீடுகளை மேற்கொள்ள நினைத்தால், அனுபவமுள்ளவர்களின் ஆலோசனையைப் பெற்ற பிறகே முடிவு எடுப்பது நல்லது.
</p><h2>
சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f95bdea-7141-4ef4-a7ea-42d5dfdb0164/26-6a685c52b484b.webp' /></p><h2>
</h2><p>
சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். குறிப்பாக அகங்காரம் அல்லது அதீத தன்னம்பிக்கை வேலைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.</p><p> பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்ல ஒத்துழைப்பை பேணுவது அவசியம். இல்லையெனில் தேவையற்ற சிரமங்கள் உருவாகலாம். </p><p>காதல் வாழ்க்கையிலும் தவறான புரிதல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் கவனம் செலுத்துவது நல்லது.
</p><h2>
விருச்சிகம்</h2><p>[55PFRN</p><p></p><p>

சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம். </p><p>குறிப்பாக கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். பணப் பரிவர்த்தனைகளில் மிகுந்த கவனம் அவசியம். </p><p>முடிந்தவரை முக்கியமான பரிவர்த்தனைகளை ஒத்திவைப்பது நல்லது. வேலை தொடர்பாக தேவையில்லாத பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகலாம். </p><p>அவை நிதி இழப்பையும் உடல் சோர்வையும் ஏற்படுத்தும் என்பதால், பயணங்களைத் திட்டமிட்டு மேற்கொள்வது சிறந்தது.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T12:36:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆங்கிலக்கால்வாயில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் சந்தித்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-mp-shocks-french-warship-fires-in-channel-1785241996"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-mp-shocks-french-warship-fires-in-channel-1785241996</id>
            <summary type="text">ஆங்கிலக்கால்வாயில் பிபிசி ஊடகத்துக்கு பேட்டியளித்துக்கொண்டிருந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எதிர்பாராத அதிர்ச்சி ஒன்றை சந்திக்க நேர்ந்தத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆங்கிலக்கால்வாயில் பிபிசி ஊடகத்துக்கு பேட்டியளித்துக்கொண்டிருந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எதிர்பாராத அதிர்ச்சி ஒன்றை சந்திக்க நேர்ந்தது.
</p><h3>
நாடாளுமன்ற உறுப்பினர் சந்தித்த அதிர்ச்சி</h3><p>

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரான கிறிஸ் பிலிப், பிரித்தானியாவின் நிழல் உள்துறைச் செயலராகவும் உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e376aca-6203-4f18-8ea5-28c4c43d2609/26-6a68a18d7761e.webp' /></p><p>
இந்நிலையில், புலம்பெயர்வோர் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவது தொடர்பில், ஆங்கிலக்கால்வாயில் படகொன்றில் பயணித்தவண்ணம் பிபிசி ஊடகத்துக்கு பேட்டியளித்துக்கொண்டிருந்திருக்கிறார் பிலிப்.
</p><p>
அப்போது, அவ்வழியாக பிரெஞ்சு கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல் ஒன்று சென்றுள்ளது.
</p><p>
சற்று நேரத்தில், யாரோ துப்பாக்கியால் சுடும் சத்தத்தை பிலிப்பும் அவரை பேட்டி எடுத்துக்கொண்டிருந்த பிபிசி ஊடகவியலாளரான மைக்கேல் கியோஹனும் கேட்டுள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
 17 முறை துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாகவும், அந்த போர்க்கப்பலில் பிரெஞ்சு வீரர் ஒருவர் கடலை நோக்கி துப்பாக்கியை பிடித்துக்கொண்டு நிற்பதை தான் கவனித்ததாகவும், துப்பாக்கி சுடும் சத்தம் அங்கிருந்துதான் வந்ததாக தான் கருதுவதாகவும் கியோஹன் தெரிவித்துள்ளார்.</p><p>

இந்நிலையில், தாங்கள் புலம்பெயர்வோர் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவது தொடர்பில் செய்தி சேகரிப்பதால், அதை நிறுத்துவதற்காக பிரான்ஸ் மேற்கொண்ட ஒரு மிரட்டல் தந்திரமாக அது இருக்கலாம் என்கிறார் பிலிப்.
</p><p>
அந்தப் பகுதியில் போர்ப்பயிற்சி எதுவும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டபின், அது தங்களை மிரட்டுவதற்காக அல்லது எச்சரிப்பதற்காகத்தான் இருக்கக்கூடும் என தான் நம்புவதாக பிலிப் தெரிவித்துள்ள நிலையில், அதையே கியோஹனும் கூறியுள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T12:33:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; வணிக வளாகத்தில் சிக்கிய மக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/earthquake-japan-people-trapped-shopping-complex-1785238647"></link>
            <id>https://canadamirror.com/article/earthquake-japan-people-trapped-shopping-complex-1785238647</id>
            <summary type="text">&amp;nbsp; தென்மேற்கு ஜப்பானில் ஏற்பட்ட 7.1 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, காஷிமா நகரில் உள்ள ஏயோன் மோல் வணிக வளாகத்திற்குள் பலர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தென்மேற்கு ஜப்பானில் ஏற்பட்ட 7.1 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, காஷிமா நகரில் உள்ள ஏயோன் மோல் வணிக வளாகத்திற்குள் பலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>


நிலநடுக்கத்தைத் தொடர்ந்து குமாமோட்டோவில் உள்ள ஏயோன் மோலில் வெடிப்பு ஏற்பட்டதாகச் சில தகவல்கள் கூறுகின்றன.



இந்த நிலநடுக்கம் கியூஷு தீவின் உட்பகுதியில் மாலை 16:27 மணிக்கு ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f6a017e-6e02-4336-8a84-c52676fef1af/26-6a68965bab0ac.webp' /></p><h2>150,000-க்கும் மேற்பட்ட மக்கள்&nbsp; வெளியேற&nbsp; அறிவுறுத்து</h2><p> இதன் மையம் 10 கி.மீட்டர் (6 மைல்) ஆழமற்ற பகுதியில் அமைந்துள்ளது.



இந்நிலையில், 150,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான முகாம்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>


இதேவேளை, ந்நிலநடுக்கத்தைத் தொடர்ந்து விடுக்கப்பட்ட குறுகிய கால சுனாமி எச்சரிக்கை, ஒரு மணி நேரத்திற்குள் திரும்பப் பெறப்பட்டுள்ளது.



ஆழமற்ற மையப்பகுதி என்பதால் மேலும் வலுவான பின்அதிர்வுகள் ஏற்படக்கூடுமென அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.</p><p></p><p>



நாங்கள் இன்னும் காயங்கள் மற்றும் சொத்து சேதங்களின் முழு அளவை மதிப்பிட்டு வருகிறோம். எனினும், ஏற்கனவே பலருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளதென ஜப்பான் பிரதமர் சனே டகாயிச்சி ஊடகங்களுக்ககு கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>



அதேவேளை ஜப்பான், ஆண்டுக்குச் சுமார் 1,500 நிலநடுக்கங்களைச் சந்திக்கும் உலகின் மிக முக்கியமான நிலநடுக்கப் பகுதிகளில் ஒன்றாக உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-28T12:31:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமிந்த விஜேசிறியை கைவிடப்போவதில்லை; சஜித் பிரேமதாச சபதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sajith-premadasa-suprot-chaminda-wijesiri-1785241957"></link>
            <id>https://jvpnews.com/article/sajith-premadasa-suprot-chaminda-wijesiri-1785241957</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;எதிர்க்கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, சிரைதண்டனை விதிக்கப்பட்டுள்ள பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;எதிர்க்கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, சிரைதண்டனை விதிக்கப்பட்டுள்ள பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை கைவிடப்போவதில்லை என்றும், மேன்முறையீட்டு நடைமுறை மூலம் நீதி நிலைநாட்டப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
</p><p>
சமிந்த விஜேசிறிக்கு இறுதியில் நீதி கிடைக்கும் என நம்புவதாக ஊடகவியலாளர்களிடம் எதிர்கட்சி தலைவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8054a06d-0fc6-4443-928e-b64b5184d53e/26-6a68a1668115c.webp' /></p><h2>&nbsp;நீதி வழங்கும் நீதித்துறையை நாங்கள் நம்புகிறோம்</h2><p> 



 சமிந்த விஜேசிறி பதுளை மாவட்டத்திற்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் மட்டுமல்ல, இலங்கை மக்களுக்கும் ஒரு தூணாக திகழ்கிறார். அவர் தனது அரசியல் மற்றும் நாடாளுமன்றப் பணிகள் மூலம் குடிமக்களுக்காக அச்சமின்றி பல தீவிரமான பிரச்சினைகளை எழுப்பியுள்ளார்.</p><p> நாங்கள் அவருடன் நிற்பதுடன், நீதி வழங்கும் நீதித்துறையை நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் கூறினார்.



பதுளை மேல் நீதிமன்றம் இன்று சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததை அடுத்து இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.</p><p> பொலிஸ் அதிகாரிகளைத் தடுத்து நிறுத்துதல், உடல்ரீதியான காயத்தை ஏற்படுத்தியமை மற்றும் குற்றவியல் மிரட்டல் விடுத்தமை ஆகிய குற்றங்களில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.</p><p>



2019 ஆம் ஆண்டு பண்டாரவளை வட்டாரத்திற்கு அருகில், பொலிஸ் ஜீப் ஒன்று நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை முந்திச் சென்றது தொடர்பான சம்பவமே இந்த வழக்கிற்குக் காரணமாகும். </p><p>அப்போது ஏற்பட்ட மோதல் முற்றியதால், பொலிஸ் அதிகாரிகள் தாக்கப்பட்டு மிரட்டப்பட்டதாக அரச தரப்பு வழக்குத் தொடுநர்கள் தெரிவித்தனர்.



நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகளைத் தொடர்ந்து, மேல் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கி, விஜேசிறியைக் குற்றவாளியாக அறிவித்து சிறைத்தண்டனை விதித்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-28T12:30:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிப்பை தாண்டி புதிய தொழில் தொடங்கியுள்ள நடிகை ராய் லட்சுமி....]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-raai-lakshmi-started-her-new-business-1785231821"></link>
            <id>https://cineulagam.com/article/actress-raai-lakshmi-started-her-new-business-1785231821</id>
            <summary type="text">ராய் லட்சுமிநடிகை ராய் லட்சுமி, தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நாயகிகளின் லிஸ்டில் இருந்தவர். தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுத்து வந்தவர் மற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ராய் லட்சுமி</h2><p>நடிகை ராய் லட்சுமி, தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நாயகிகளின் லிஸ்டில் இருந்தவர். </p><p>தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுத்து வந்தவர் மற்ற மொழிகளிலும் படங்கள் நடித்தார், ஆனார் அவரால் சினிமாவில் பெரிய அளவில் சாதனை செய்ய முடியவில்லை. இன்ஸ்டாவில் மட்டும் மிகவும் ஆக்டீவாக இருந்து வந்த ராய் லட்சுமி இப்போது ஒரு குட் நியூஸ் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94693976-cc9b-480e-8933-45aaa53dae26/26-6a688dc906b1f.webp' /></p><h2>
புதிய தொழில்</h2><p>
நடிகைகள் சொந்த தொழில் துவங்குவது ஒன்றும் தமிழ் சினிமாவில் புதியது இல்லை. </p><p>ராய் லட்சுமி ஹவுஸ் பை லாரா நிறுவனத்தின் மூலம் La Ra செயலியைத் தயாரித்துள்ளார். சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற விழாவில் இந்த புதிய டேட்டிங் மற்றும் நெட்வொர்க்கிங் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46e018ba-12f6-4e85-a403-b1a0bab7357f/26-6a688dca09f43.webp' /></p><p> </p><p>தற்போது சோஷியல் மீடியா மற்றும் டேட்டிங் ஆப்-களில் போலி கணக்குகள் அதிகரித்துள்ள நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த 'La Ra' செயலி உருவாக்கப்பட்டுள்ளது. </p><p>உண்மையான அன்பு, காதல், உண்மையான நட்பு மற்றும் நீண்டகால வாழ்க்கைத் துணையைத் தேடுபவர்களுக்கு இந்தச் செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T12:30:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய் - திரிஷா ரெண்டு பேரும் தனியா பேசமாட்டாங்க..குறைவுதான்!! லியோ பட நடிகை ஓபன்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/janani-reveals-what-vijay-and-trisha-talked-about-1785238644"></link>
            <id>https://viduppu.com/article/janani-reveals-what-vijay-and-trisha-talked-about-1785238644</id>
            <summary type="text">விஜய் - திரிஷாநடிகரும் தமிழக முதல்வருமான விஜய் நடிப்பில் கடந்த ஜூலை 23ஆம் தேதி ரிலீஸான படம் தான் ஜனநாயகன். எச் வினோத் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, மமிதா ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>விஜய் - திரிஷா</h2><p>நடிகரும் தமிழக முதல்வருமான விஜய் நடிப்பில் கடந்த ஜூலை 23ஆம் தேதி ரிலீஸான படம் தான் ஜனநாயகன். எச் வினோத் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி 5 நாட்களாகிய நிலையில் உலகளவில் சுமார் ரூ. 222 கோடிக்கும் மேல் வசூலித்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, ஜனநாயகன் படத்தை முதல்நாள் முதல் காட்சியை பார்க்க திரிஷா சென்றிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/687b2b7b-6f6e-45dc-a9c7-152a3a4add58/26-6a6894763fcf9.webp' /></p><p> </p><p>சமீபத்தில் விஜய்யுடன் திருமண நிகழ்ச்சிக்கும் முதலமைச்சரான பின், பாக்யராஜ் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு திரிஷா சென்றது பேசுபொருளானது. </p><p>இந்நிலையில், விஜய் - திரிஷா ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படி இருப்பார்கள்? என்ன பேசுவார்கள் என்று லியோ படத்தில் நடித்த பிக்பாஸ் நடிகை ஜனனி சீக்ரெட் ஒன்றினை பகிர்ந்துள்ளார். </p><h2>நடிகை ஜனனி</h2><p>அதில், விஜய் - திரிஷா இருவரும் ஜாலியாக பேசுவாங்க. பெரும்பாலும் எனக்கு வர சீன்களுக்கு எல்லாம் நான் நோட் பண்ணி இருக்கறதுனால, நான் ஏதாவது சொன்னா சாருக்கு கொஞ்சம் புரிஞ்சிடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28ce2a5f-4826-46a5-b690-a77aec3f8a90/26-6a689476e6580.webp' /></p><p> </p><p>அப்போ திரிஷா மேம்-கு கொஞ்சம் புரியுறது கம்மியா இருக்கும். அப்போ அவங்க, என்ன சொன்னாங்கன்னு விஜய் சார்கிட்ட கேப்பாங்க. கேட்டா அவர் சொல்லுவாரு, அப்புறம் அவரு என்கிட்ட என்ன சொன்னேங்கிறதையும் சும்மா சொல்லுவாங்க. அப்போ ஸ்பாட்ல கொடுக்கிற ரியாக்ஷன் எல்லாம் க்யூட்டா இருக்கும். என்கிட்ட இப்போ கேட்டா, அந்த மாதிரி க்யூட் மொமண்ட்ஸ் தான் நிறைய இருக்கு.</p><p> விஜய் சார் - திரிஷா மேம் ரெண்டு பேரும் எப்போ செட்டுக்கு வந்தாலும் அந்த இடமே வேறமாதிரியான எனர்ஜியா மாறிடும். அவங்க ஹாய் அப்படின்னு சொல்லி பேசினாலே நமக்கு அந்த எனர்ஜி வந்துடும். சில டைம் நல்ல காமெடியாகவும் இருக்கும். விஜய் - திரிஷா ரெண்டு பேரும் தனிப்பட்ட முறையில் பேசி பார்த்தது இல்ல, எல்லாம் ஒன்னா இருக்கும்போது தான் பேசுவாங்க.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e9f860f-1405-4eb1-9f2a-cc913d5f1ec1/26-6a689477a7a21.webp' /></p><p> </p><p>நாங்க செட்டா இருக்கும்போது செட்டாதான் கூட பேசுவாங்க, தனியா பேசுறது குறைவு. பட் ஏதாவது சார் சொன்னா எங்ககிட்ட கேப்பாங்க, இப்போ சார் என்கூட இருந்து பேசி ஏதாவது ஜாலியா பேசிட்டு இருந்தா, என்ன சார் சொன்னாரு, அந்த மாதிரி ஜாலியா கேப்பாங்க. அவங்கன்னு சீன் வரும்போது நடிச்சு, அந்த சீன் ரிலேட்டிவா ஏதாவது பேசுவாங்க.</p><p> கேம் செஷன்ஸ் ஏதாவது சூட்டிங் ஸ்பாட்டில் இருந்துச்சா என்ற கேள்விக்கு, அதுக்கெல்லாம் டைம் கிடைக்கல, ஏன்னா அப்படியே திரில் திரில்லாதான் போயிட்டு இருந்துச்சு என சிரிச்சிட்டே பதிலளித்தார் ஜனனி.</p>]]></content>
            <updated>2026-07-28T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் 40,000 கிலோ நெய்யால் கட்டப்பட்ட அதிசயக் கோவில்! எங்குள்ளது தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/whtch-indian-temple-built-with-40-000-kg-of-ghee-1785039530"></link>
            <id>https://manithan.com/article/whtch-indian-temple-built-with-40-000-kg-of-ghee-1785039530</id>
            <summary type="text">பொதுவாகவே மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா என்பது அதிசயங்களும் மர்மங்களும் நிறைந்த ஒரு தனித்துவமான நாடு. இங்கு இலட்சக்கணக்கான கோவில்கள் உள்ளன. அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாகவே மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா என்பது அதிசயங்களும் மர்மங்களும் நிறைந்த ஒரு தனித்துவமான நாடு.</p><p> இங்கு இலட்சக்கணக்கான கோவில்கள் உள்ளன. அவற்றில் ஆயிரக்கணக்கான கோவில்கள் தங்களின் கட்டிடக்கலை, வரலாறு, மர்மங்கள் மற்றும் நம்ப முடியாத சிறப்புகளுக்கு பெயர்பெற்றவை என்றால் மிகையாகாது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3376286b-e2b3-4fe5-84a4-67da367c0658/26-6a658f3c22600.webp' /></p><p></p><p>அவற்றில் சில கோவில்கள் பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற கதைகளையும் அதிசயங்களையும் தன்னுள் சுமந்தபடி கம்பீரமாக நிற்கின்றன.

அப்படிப்பட்ட ஒரு கோவில் ராஜஸ்தானின் பாலைவன நகரமான பிகானேரில் அமைந்துள்ளது.</p><h2>நெய்யால்&nbsp; கட்டப்பட்டதா?&nbsp;</h2><p> தண்ணீர் பற்றாக்குறை நிலவிய காலத்தில், ஒரு துளி தண்ணீர்கூட பயன்படுத்தாமல், சுமார் 40,000 கிலோ தூய நெய்யைக் கொண்டு கட்டப்பட்ட 550 ஆண்டுகள் பழமையான கோவில் என்று சொன்னால் நம்புவீர்களா? </p><p>அதுவே 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற பண்டசார் சமணக் கோவில். இந்தியாவின் சிறந்த கட்டிடக்கலை அதிசயங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

இந்தக் கோவில் ராஜஸ்தானின் பிகானேரில் அமைந்துள்ள பண்டசார் சமணக் கோவில் ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0648c16-f80e-45b1-9a8c-1da82a0815f7/26-6a658f3cc6470.webp' /></p><p> </p><p>கோவிலைக் கட்டுவதற்கான சுண்ணாம்பு கலவையைத் தயாரிக்கும்போது தண்ணீருக்குப் பதிலாக சுமார் 40,000 கிலோ தூய நெய் பயன்படுத்தப்பட்டதாகப் பல தலைமுறைகளாகக் கூறப்பட்டு வருகிறது. இதுவே இந்தக் கோவிலின் மிகப் பெரிய சிறப்பாகக் கருதப்படுகிறது.</p><p>ஆனால் இதைவிட வியப்பூட்டும் மற்றொரு நம்பிக்கையும் உள்ளது. கோடைக்காலத்தில் வெப்பநிலை மிகவும் அதிகரிக்கும் நாட்களில், இந்தக் கோவிலின் பழமையான கல் தரைப்பகுதிகளில் இருந்து நெய் போன்ற பசை வெளியேறுவதாக அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fefb14e-1722-4212-bcbe-ff7e4a789239/26-6a658f3d741dd.webp' /></p><p></p><p>இதற்கான உறுதியான அறிவியல் ஆதாரம் இதுவரை இல்லை என்றாலும், இந்த நம்பிக்கை இன்று வரை பலரின் ஆச்சரியத்தைத் தூண்டி வருகிறது.

வரலாறு, பொறியியல், நாட்டுப்புறக் கதைகள் என எந்தக் கோணத்தில் பார்த்தாலும், இந்தக் கோவில் ராஜஸ்தானின் முக்கியமான கலாச்சார மற்றும் பாரம்பரியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T12:26:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கதிர்காம பாத யாத்திரையை முடக்கும் நவ சதிகளும்... சவூதி தண்டனை அனோஜனும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/monks-demand-protection-for-ne-sacred-sites-1785237828"></link>
            <id>https://ibctamil.com/article/monks-demand-protection-for-ne-sacred-sites-1785237828</id>
            <summary type="text">கொழும்பில் நேற்று ஆயிரக்கணக்கான பௌத்த பிக்குகள் கூட்டப்பட்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனது பௌத்த தொல்பொருள் உள்ளதாகக் கூறப்படும் நிலங்களை அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் நேற்று ஆயிரக்கணக்கான பௌத்த பிக்குகள் கூட்டப்பட்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனது பௌத்த தொல்பொருள் உள்ளதாகக் கூறப்படும் நிலங்களை அபகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
</p><p>
கடந்த 5 மாத காலத்திற்கு இடையில் நடத்தப்பட்ட காவிகளின் இரண்டாவது திரள்நிலை, வடக்கு கிழக்கில் அடாவடி விகாரைகளை நிறுவிய பிக்குகள் உட்பட ஆயிரக்கணக்கான காவிகள் கலந்துகொண்டனர்.
</p><p>
அரசிலிருந்து பௌத்தத்தைப் பிரிக்க முடியாது, பௌத்த மத நம்பிக்கையற்றவர்கள் இந்த நாட்டை ஆளக்கூடாது, புத்தர் சிலைகளை யாரும் அவமதித்தால் அது குற்றம் எனப் பல விடயங்கள் அடுக்கப்பட்டன.
</p><p>
மாநாட்டில் உரையாற்றிய இந்துரகரே தம்மரத்ன தேரர் போன்றவர்கள், வடக்கு கிழக்கில் பௌத்த தொல்பொருள் தளங்களுக்கு வலுவான சட்டப் பாதுகாப்பு தேவை, தமிழர்கள் என்னதான் நில அபகரிப்பு குறித்துக் கத்தினாலும் வடக்கு கிழக்கில் 1,000 இற்கும் மேற்பட்ட பௌத்த தொல்பொருள் இடங்களுக்குச் சட்டப் பாதுகாப்பு தேவை என அலறினார்.</p><p>

இந்த பௌத்த மாநாடு இடம்பெற்ற சமகாலத்தில், வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரியக் கதிர்காம யாத்திரையால் யால-குமண காடுகள் பாழ்பட்டுப்போவதான குய்யோ முறையோக்கள் வந்துள்ளன.
</p><p>
ஏற்கனவே இந்தப்பாதயாத்திரையுடன் சுப்பிரமணி என்ற நாய் கிழக்கு நகரமான கல்முனை வழியாகச் சென்றபோது உள்ளூர் முஸ்லிம் ஒருவர் நாயை உதைப்பது காணொளியில் பதிவான பின்னர், சவூதி அரேபியாவில் பணிபுரியும் கல்முனைத் தமிழர் அனோஜன் இறைதூதர் நபி குறித்துச் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிந்தனைப் பதிவுக்காக அவர் அங்கு குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்டு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 3 மில்லியன் றியால் அபராதமும் விதிக்கப்பட்டுள்ள நிலையில் இனிவரும் காலங்களில் இந்த யாத்திரையை எப்படியும் தடுத்துவிட வேண்டும் என்ற திட்டங்கள் உள்ள நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்தி வருகின்றது ஐபிசி தமிழின் செய்தி வீச்சு...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/D6--LyfYYxA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T12:25:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[28 ஆண்டுகளுக்கு பிறகு.. 33 வயதில் இந்திய அணியில் இடம் பிடித்த சரன்ஷ் ஜெயின்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/who-is-saransh-jain-indian-test-team-debut-at-33-1785241255"></link>
            <id>https://news.lankasri.com/article/who-is-saransh-jain-indian-test-team-debut-at-33-1785241255</id>
            <summary type="text">இலங்கைக்கு எதிரான டெஸ்ட் அணியில் 33 வயதான சரன்ஷ் ஜெயினுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை சென்று 2 டெஸ்ட் போட்டிகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு எதிரான டெஸ்ட் அணியில் 33 வயதான சரன்ஷ் ஜெயினுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p>இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை சென்று 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. </p><p>

முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15ஆம் திகதியும், 2வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 23 ஆம் திகதியும் தொடங்க உள்ளது. இதற்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. </p><h3>சரன்ஷ் ஜெயின்</h3><p>
</p><p>இதில், சுப்மன் கில் கேப்டனாகவும், கே.எல். ராகுல் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். </p><p>

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த, 33 வயதான சரன்ஷ் ஜெயின், முதல்முறையாக அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8172c0ee-1b2e-4d5c-a450-db3f51dc350d/26-6a689ea90a4ff.webp' /></p><p> 

1998 ஆம் ஆண்டில் ராபின் சிங்குக்குப் பிறகு 33 வயதில் அறிமுகமாகும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சரன்ஷ் ஜெயின் பெற உள்ளார்.&nbsp;</p><p></p><p>

 சரன்ஷ் ஜெயின், முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரர் சுபோத் ஜெயினின் மகன் ஆவார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fd9aef3-993e-47fc-9fe5-2ec266893707/26-6a689eaa5b69b.webp' /></p><p>
ஆல் ரவுண்டரான சரன்ஷ் ஜெயின் 54 முதல் தரப் போட்டிகளில் விளையாடி, 2223 ஓட்டங்களும், 188 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். </p><p> 

2025 - 26 ரஞ்சி கிண்ணத் தொடரில், 57 சராசரியில் 518 ஓட்டங்களும், 20 சராசரியில் 30 விக்கெட்டுகளும் எடுத்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59fd5a80-6c65-4c08-b2b0-ae6ea6a52a10/26-6a689ea9ae02a.webp' /></p><p>
2025 ஆம் ஆண்டு துலிப் கிண்ண தொடரில் மத்திய மண்டல அணிக்காக விளையாடிய அவர், 2போட்டிகளில் 2 அரைசதங்கள் அடித்து 16 விக்கெட்டுகளை வீழ்த்தி, தொடர் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.</p><p>
இந்த தொடரில், 360 ஓட்டங்கள் மற்றும் 35 விக்கெட்டுகளை கைப்பற்றி, தொடரின் சிறந்த ஆல்-ரவுண்டருக்கான 'லாலா அமர்நாத் விருது' வென்றார்.</p><p> 
 
வாஷிங்டன் சுந்தர் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சரன்ஷ் ஜெயினுக்கு அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T12:21:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/one-person-killed-in-a-horrific-accident-in-jaffna-1785240178"></link>
            <id>https://jvpnews.com/article/one-person-killed-in-a-horrific-accident-in-jaffna-1785240178</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் , நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

நாவற்குழி பகுதியை சேர்ந்த கிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் , நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

நாவற்குழி பகுதியை சேர்ந்த கிறிஸ்துராஜா மென்சூலின் (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார். </p><p>யாழ்ப்பாணச் செய்திகள்

நாவற்குழி பகுதியில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றில் , இரவு பேருந்துக்காக வீதியில் காத்திருந்த வேளை , அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயம் அடைந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa083f4a-fe38-4203-9009-cd81fb188e11/26-6a689a749de0d.webp' /></p><p></p><p> </p><p>

படுகாயமடைந்தவரை சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

விபத்து சம்பவம் தொடர்பில் , சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T12:16:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கற்க வாய்ப்பு - பிரதமரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opportunity-to-study-at-foreign-universities-1785237013"></link>
            <id>https://tamilwin.com/article/opportunity-to-study-at-foreign-universities-1785237013</id>
            <summary type="text">2025 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்திற்கமைய கல்விப் பொதுத் தராதர (உயர்தர) பரீட்சையில் திறமைச் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு சர்வதேச தரப்படுத்தலுடன் கூடிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்திற்கமைய கல்விப் பொதுத் தராதர (உயர்தர) பரீட்சையில் திறமைச் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு சர்வதேச தரப்படுத்தலுடன் கூடிய வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமது முதலாவது பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான அரச புலமைப்பரிசில் வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>

அதன்கீழ் ஒரு மாணவருக்கு ஓராண்டுக்கு உயர்ந்தபட்சம் 20 மில்லியன் ரூபாய் வீதம், பட்டப்படிப்பின் முழுமையான நான்கு ஆண்டுகளுக்கும் உயர்ந்தபட்சம் 80 மில்லியன் நிதி அரசால் வழங்கப்படவுள்ளது. </p><p></p><h2>வெளிநாட்டு நாணய கொடுப்பனவு</h2><p>

அதற்கமைய, 2024 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத் தராதர (உயர்தரப்) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் முப்பது மாணவர்கள் இப்புலமைப்பரிசில் வேலைத்திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/518f2b0c-94e9-4f0a-8194-5cb8cde83cd7/26-6a689cdd6596c.webp' /></p><p>

எஞ்சிய மாணவர்கள் வெளிநாட்டுக் கல்விக்கு அனுப்புவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

பிரதானமாக வெளிநாட்டு நாணய அலகுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது இலங்கை ரூபாய் எதிர்பாராத வகையில் பணப்பெறுமதி குறைவடைந்தமையால் மாணவர்கள் வெளிநாட்டு நாணயத்தில் செலுத்த வேண்டிய ஒருசில கொடுப்பனவுகளுக்கு தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை போதியளவாக இல்லாமை கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
 அதனால், செலாவணி விகிதம் உறுதிப்பாட்டை எட்டும் வரைக்கும் புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு மாணவருக்கு ஓராண்டுக்கு 2.5 மில்லியன் ரூபாய்கள் வரை செலாவணி விகிதத்திற்கு சீராக்கல் கொடுப்பனவை வழங்குவதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T12:13:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனித புதைகுழி குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி - நீதி அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/punishment-for-the-perpetrators-chemmani-grave-1785239774"></link>
            <id>https://ibctamil.com/article/punishment-for-the-perpetrators-chemmani-grave-1785239774</id>
            <summary type="text">செம்மணி மனித புதைக்குழி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைக்குழி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார உறுதியளித்துள்ளார்.&nbsp;</p><p>&nbsp;இன்று (28.07.2026) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் அவ்வபறு கருத்து தெரிவித்தார்.&nbsp;</p><p>இந்த ஊடக சந்திப்பில் இது தொடர்பான இன்னும் சில விடயங்களை அவர் கூறி இருந்தார்.</p><p></p><h2>ஹர்ஷண நாணயக்கார உறுதி</h2><p>

இதன்படி கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சர், 

"இந்த பேரவலத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளா, இந்திய அமைதிப்படையினரா அல்லது இலங்கை ஆயுதப்படைகளா காரணம் என்பது தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் இறுதியிலேயே முழுமையாகத் தெரியவரும்" என கூறி இருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89298d41-0853-4d13-aa40-dc905077745a/26-6a689bd13f137.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T12:09:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[A35 பரந்தன் -முல்லைத்தீவு பிரதான வீதியில் பாலம் திறந்து வைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bridge-on-a35-paranthan-mullaitivu-main-road-1785239721"></link>
            <id>https://tamilwin.com/article/bridge-on-a35-paranthan-mullaitivu-main-road-1785239721</id>
            <summary type="text">A- 35 பரந்தன் -முல்லைத்தீவு பிரதான வீதியில் 12ஆவது கிலோமீற்றர் தூரத்தில் உள்ள
முதலாவது பாலம் இன்று(28.7.2026) திறந்து வைக்கப்பட்டது.கடந்த 2020
ஆம் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>A- 35 பரந்தன் -முல்லைத்தீவு பிரதான வீதியில் 12ஆவது கிலோமீற்றர் தூரத்தில் உள்ள
முதலாவது பாலம் இன்று(28.7.2026) திறந்து வைக்கப்பட்டது.</p><p>கடந்த 2020
ஆம் ஆண்டு கடந்த ஆட்சியாளர்களினால் புணரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு கொரோனா
பெருந்தொற்று காரணமாக பொருளாதார நெருக்கடி காரணமாகவும் இடை நடுவே கைவிடப்பட்ட
நிலையில் இருந்த குறித்த பாலம் ஆனது தற்போதைய தேசிய மக்கள் சக்தி
அரசாங்கத்தின் விரைவான நடவடிக்கையின் மூலம் நிறைவடைந்தது.</p><p>நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் இந்தப் பாலம் உத்தியோபூர்வமாக கையளிக்கப்பட்டது.</p><p></p><h2>அபிவிருத்தி பணிகள்</h2><p>குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட
அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர், கிளிநொச்சி
மாவட்ட அபிவிருத்தி குழு இணைப்பாளர் மருங்கன் மோகன் கண்டாவளை பிரதேச செயலாளர்
கிராம சேவையாளர் என பலரும் கலந்து கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8a0c1e4-4ffe-46ed-bdd5-9883aa1e4abf/26-6a689b020c637.webp' /></p><p> குறித்த பாலத்தில் அபிவிருத்தி
நடவடிக்கையின் போது பல்வேறு இன்னல்களும் இரண்டு உயிர்கள் பறி கொடுத்ததுடன்
பலர் வீதி விபத்துகளையும் சந்தித்து வந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியின்
அரசாங்கத்தின் துரித நடவடிக்கையின் மூலம் குறித்த காலத்தில் அபிவிருத்தி
பணிகள் நிறைவடைந்து மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க
விடயமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e107277-ee67-4b9d-b284-03fe39b9df70/26-6a689b02d3d0b.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc13243e-e025-4c25-9563-8a6ad57c1ab7/26-6a689b03a978f.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T12:06:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை ரைசா வில்சனா இது, அவரே வெளியிட்ட எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-raiza-wilson-latest-edit-photos-1785231296"></link>
            <id>https://cineulagam.com/article/actress-raiza-wilson-latest-edit-photos-1785231296</id>
            <summary type="text">ரைசா வில்சன்தமிழ் ரசிகர்களுக்கு பிக்பாஸ் என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி மூலம் அடையாளம் காணப்பட்டவர்.கன்னட சினிமாவில் மாடலிங் துறையில் கலக்கி வந்தவர் தமிழில...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரைசா வில்சன்</h2><p>தமிழ் ரசிகர்களுக்கு பிக்பாஸ் என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி மூலம் அடையாளம் காணப்பட்டவர்.</p><p>கன்னட சினிமாவில் மாடலிங் துறையில் கலக்கி வந்தவர் தமிழில் பிக்பாஸ் மூலம் என்ட்ரி கொடுத்தார். அந்நிகழ்ச்சி முடிந்த பிறகு அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்து வந்தார்.</p><p>ஆனால் சில படங்களுக்கு பிறகு ரைசா வில்சனுக்கு சரியான படங்கள் அமையவில்லை. படங்களை தாண்டி ரைசா எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருப்பார்.</p><p>லேட்டஸ்ட்டாக அவர் தனது சில புகைப்படங்களை எடிட் செய்து புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். அதில் சில இதோ,</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T12:00:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் இலங்கைத் தமிழ் இளைஞனுக்கு சிறைத்தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-jailed-for-89-days-in-australia-1785221608"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-jailed-for-89-days-in-australia-1785221608</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் - பிரிஸ்பேன் தொடருந்தில் அறிமுகமில்லாத ஒருவரின் தலையில் கண்ணாடிப் போத்தலால் தாக்கிய இலங்கையருக்கு 3 மாதங்களுக்கும் குறைவான சிறைத் தண...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் - பிரிஸ்பேன் தொடருந்தில் அறிமுகமில்லாத ஒருவரின் தலையில் கண்ணாடிப் போத்தலால் தாக்கிய இலங்கையருக்கு 3 மாதங்களுக்கும் குறைவான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>குழந்தை பருவத்தில் அவுஸ்திரேலியாவுக்குக் குடியேற அனுமதிக்கப்பட்ட 22 வயதுடைய சரணீஸ் சிவகுமார் மற்றும் பேட்லி மொஹினி என்பவர்கள் கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி Cleveland வழித்தட தொடருந்தில் வைத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். </p><p>இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கமராக்களில் பதிவாகியிருந்தது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்டமைக்காக மொஹினிக்கு 10 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.</p><p></p><p> </p><h2><b>இளைஞனுக்கு சிறைத்தண்டனை</b></h2><p>அத்துடன், குழப்பம் விளைவித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட சிவகுமார் நேற்று தடுப்பு காவலில் இருந்தவாறே கிளிவ்லாண்ட் நீதிமன்றத்தில் வீடியோ ஊடாக முன்னிலைப்படுத்தப்பட்டார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3b6ad47-83ca-48c8-bca8-a936b0735a66/26-6a68908900727.webp' /></p><p>தனியாகப் பயணம் செய்த பாதிக்கப்பட்ட நபரை சிவகுமாரும் மொஹினியும் நெருங்கிப் பேசியுள்ளனர். </p><p>அந்தச் சந்திப்பு விரைவில் வன்முறையாக மாறியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இளைஞர்கள் இருவரும் அந்த நபரின் தலை மற்றும் முகத்தில் பலமுறை குத்தியுள்ளனர். </p><p>மூடப்படும் தொடருந்தின் கதவுகள் ஊடாக அவரை வெளியே இழுத்துச் சென்று அவர் இறங்குவதைத் தடுத்து, பின்னர் மற்றொரு பெட்டிக்கு சென்றுள்ளனர். </p><h3><b>நபர் மீது தாக்குதல்</b></h3><p>எனினும் அவர்கள் விரைவில் திரும்பி வந்து அந்த நபரின் பையை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது சிவகுமார் அந்த நபரின் தலையில் கண்ணாடி போத்தலால் தாக்கியதில் இரத்தம் சிந்தத் தொடங்கியுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f19b075b-8306-45cc-867a-f4e35de17c15/26-6a689089c65a4.webp' /></p><p>இந்தத் தாக்குதலால் கடும் அதிர்ச்சிக்குள்ளான பாதிக்கப்பட்ட நபர், அதன் பின்னர் குயின்ஸ்லாந்திலிருந்து வெளியேறிவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. </p><p>இந்நிலையில், தான் தற்காப்புக்காகவே செயற்பட்டதாக சிவகுமார் நீதிமன்றத்தில் வாதிட்ட போதிலும், நீதிபதி டெபோரா வஸ்தா அவரது வாதத்தை நிராகரித்தார்.</p><p></p><p></p><p><b><i>you may like this video&nbsp; &nbsp;</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/y-Gw6Xt3L4A" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p>]]></content>
            <updated>2026-07-28T11:55:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆன்டி பர்னாமைத் தெரியும், மான்டி பர்னாம் யார் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/woman-dubbed-mandy-burnham-looks-like-new-pm-andy-1785239400"></link>
            <id>https://news.lankasri.com/article/woman-dubbed-mandy-burnham-looks-like-new-pm-andy-1785239400</id>
            <summary type="text">பிரித்தானியாவின் புதிய பிரதமராகியுள்ள ஆன்டி பர்னாமைப் போலவே காட்சியளிக்கும் மற்றொரு பிரித்தானியர் இருக்கிறார். அவரை மான்டி பர்னாம் என்று அழைக்கிறார்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் புதிய பிரதமராகியுள்ள ஆன்டி பர்னாமைப் போலவே காட்சியளிக்கும் மற்றொரு பிரித்தானியர் இருக்கிறார். </p><p>அவரை மான்டி பர்னாம் என்று அழைக்கிறார்களாம் மக்கள்!
</p><h3>
மான்டி பர்னாம் யார் தெரியுமா?</h3><p>

வேல்ஸ் நாட்டிலுள்ள Swansea என்னுமிடத்தைச் சேர்ந்த பெண், எம்மா ராபர்ட்ஸ் (54).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d34d2eb-5820-4285-bd78-398f34ff941d/26-6a689769b326f.webp' /></p><p>
எம்மா, சிற்றாலயம் ஒன்றின் போதகராக உள்ளார். விடயம் என்னவென்றால், எம்மா பார்ப்பதற்கு பிரித்தானிய பிரதமரான ஆன்டி பர்னாமைப் போலவே காட்சியளிக்கிறார். ஆகவே, இணையம் அவரை மான்டி பர்னாம் என்று அழைக்கிறதாம்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DbSw1ihAF5e/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DbSw1ihAF5e/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DbSw1ihAF5e/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by IMJUSTBAIT (@imjustbait)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>

தான் சமீபத்தில் தன் தாயுடன் வீடியோ கால் பேசிக்கொண்டிருக்கும்போது, நான் ஆன்டி பர்னாமைப்போல இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள் என்று கூற, நானும் அப்படித்தான் நினைக்கிறேன் என்று கூறினாராம் எம்மாவின் தாய்.&nbsp;</p><p></p><p>

எம்மாவின் கணவரும் அவரை, ‘எங்கள் மான்டி, மக்களின் பெண்’ என்றே அழைக்கிறாராம்.
</p><p>
ஆன்டி பர்னாமைப்போலவே எம்மாவும் லேபர் கட்சி வாக்காளர், கால்பந்து முதல் பல விடயங்கள் இருவருக்கும் பொதுவான விருப்பம், அத்துடன், பிரித்தானியாவின் எதிர்காலம் சிறப்பாக அமையவேண்டும் என்பதுதான் இருவரின் விருப்பமும் கூட!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T11:50:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓடும் மோட்டார் சைக்கிளில் வீதியில் பல மீற்றர்கள் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட பெண்; சம்பவத்தால் அதிர்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-dragged-road-by-a-moving-motorcycle-bihar-1785228348"></link>
            <id>https://jvpnews.com/article/woman-dragged-road-by-a-moving-motorcycle-bihar-1785228348</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியாவின் பீகார் மாநிலம், நாலந்தா மாவட்டத்தின் ராஜ்கிர் பகுதியில், ஓடும் மோட்டார் சைக்கிளில் இருந்து பெண்ணொருவர் வீதியில் பல மீற்றர்கள் தூரம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியாவின் பீகார் மாநிலம், நாலந்தா மாவட்டத்தின் ராஜ்கிர் பகுதியில், ஓடும் மோட்டார் சைக்கிளில் இருந்து பெண்ணொருவர் வீதியில் பல மீற்றர்கள் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

 இந்தச் சம்பவம் ராஜ்கிரில் உள்ள கிலா மைதானம் மற்றும் வேணுவன் பகுதிக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eeed1c79-d613-4018-abc2-e6a614730c5d/26-6a686c3deda1d.webp' /></p><h2>வீதியில் பல மீற்றர்கள் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட பெண்</h2><p>
</p><p>
மோட்டார் சைக்கிள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், பெண் ஒருவர் வாகனத்தின் கைப்பிடி அல்லது அதன் பின்பகுதியைப் பற்றிக்கொண்டு வீதியில் இழுத்துச் செல்லப்படுவது பதிவாகியுள்ளது.
</p><p>
ஒரு கட்டத்தில் மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்த சாரதி, பெண்ணுடன் சேர்ந்து வீதியில் கீழே விழுந்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இதனை அடுத்து, அங்கு திரண்ட பொதுமக்களில் ஒருவர் ஆத்திரமடைந்து மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரை தாக்க முயன்ற நிலையில் , அங்கிருந்தவர்கள் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
</p><p> 
இந் நிலையில் , பெண்ணின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அபாயகரமாக மோட்டார் சைக்கிளை இயக்கிய நபருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஊடகங்களில் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T11:44:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் ரயிலில் இலங்கை தமிழ் இளைஞர் அட்டகாசம்; கிடைத்த தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lankan-tamil-attacked-train-passenger-australia-1785236812"></link>
            <id>https://jvpnews.com/article/lankan-tamil-attacked-train-passenger-australia-1785236812</id>
            <summary type="text">&amp;nbsp;அவுஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் ரயில் ஒன்றில், தமக்கு அறிமுகமில்லாத ஒருவரின் தலையில் கண்ணாடிப் போத்தால் தாக்கிய இலங்கை தமிழ் இளைஞர் ஒருவருக்கு, மூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அவுஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் ரயில் ஒன்றில், தமக்கு அறிமுகமில்லாத ஒருவரின் தலையில் கண்ணாடிப் போத்தால் தாக்கிய இலங்கை தமிழ் இளைஞர் ஒருவருக்கு, மூன்று மாதங்களுக்கும் குறைவான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
சிறுவயதிலேயே அவுஸ்திரேலியாவுக்குக் குடியேற அனுமதிக்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞர் 22 வயதான சரணீஸ் சிவகுமார் (Saranees Sivakumar) மற்றும் அவருடன் குற்றத்தில் ஈடுபட்ட பாட்லி மாஹ்வினி (Baddeley Mawhinney) ஆகியோர் ஏப்ரல் 25 அன்று கிளீவ்லேண்ட் வழித்தட ரயிலில் கொடூரமான தாக்குதலை நடத்தியது சிசிடிவி (CCTV) கமராவில் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb7c3b30-a2fb-41d8-9ab7-bfcfd5d003ad/26-6a688d4d87e99.webp' /></p><p></p><h2>&nbsp;கொடூரமான தாக்குதலை நடத்திய&nbsp;சரணீஸ் சிவகுமார்</h2><p>
</p><p>
தாக்குதலில் தனது பங்கிற்காக மாவின்னிக்கு ஏற்கனவே 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கலவரத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட சிவகுமார், திங்களன்று காவலில் இருந்து காணொளிக் காட்சி மூலம் கிளீவ்லேண்ட் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
</p><p>
தனியாகப் பயணம் செய்து கொண்டிருந்த பாதிக்கப்பட்ட நபரை சிவகுமாரும் மாஹினியும் அணுகிப் பேசத் தொடங்கியதாகவும், ஆனால் அந்தச் சந்திப்பு விரைவில் வன்முறையாக மாறியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><p>
</p><p>
அவ்விருவரும் அந்த நபரின் தலை மற்றும் முகத்தில் பலமுறை குத்தியதுடன், மூடிக் கொண்டிருந்த ரயில் கதவுகள் வழியாக அவரை இழுத்துச் சென்று அவர் வெளியேறுவதைத் தடுத்த பின்னர் மற்றொரு பெட்டிக்குச் சென்றனர்.
</p><p>

 அவர்கள் விரைவில் திரும்பி வந்து அந்த நபரின் பையைப் பறிக்க முயன்ற போது சிவகுமார் ஒரு கண்ணாடிப் போத்தலால் அந்த நபரின் தலையில் தாக்கியதில் அவருக்கு ரத்தக் கசிவு ஏற்பட்டது.</p><p>

இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நபர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அதனால் அவர் குயின்ஸ்லாந்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><p>
</p><p>
தாக்க முற்பட்டவர்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவே அவ்வாறு செய்ததாக சிவகுமார் நீதிமன்றத்தில் வாதிட்டார். எனினும் இந்தத் தாக்குதலுக்காக சிவகுமாருக்கு எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது,

ஏற்கனவே 89 நாட்கள் சிறைக்காவலில் இருந்ததால், அவர் கண்காணிப்புடன் கூடிய நிபந்தனையில் விடுவிக்கப்பட்டார்.
</p><p>
அதேசமயம் சிவகுமார் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியக் குடிமகனாக மாறியதாகவும், வேலை தேடி மெல்போர்னிலிருந்து பிரிஸ்பேனுக்குச் சென்ற அவர், வீடின்றியும் வேலையின்றியும் இருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T11:44:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chavakachcheri-urban-council-selected-by-lot-1785239077"></link>
            <id>https://jvpnews.com/article/chavakachcheri-urban-council-selected-by-lot-1785239077</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி நகர சபை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உப தவிசாளர் ஞா.கிசோர் , உள்ளூராட்சி ஆணையாளரால் விடப்பட்ட சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து அதனை தூக்கி வீசியமை தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bd1a008-9d20-4507-ab77-0320a474e9e0/26-6a68962736a09.webp' /></p><p> </p><p> வடக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை அதிகாரியின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைக்கு அமைய முன்னாள் உப தவிசாளர் பதவியும் அவரது சபை உறுப்புரிமையும் கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி ஆளுநரால் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வறிதாக்கப்பட்டது.
</p><p>
அதன் அடிப்படையில் இன்றைய தினம் புதிய உப தவிசாளர் தெரிவுக்காக சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்டது.

அதன் போது தமிழரசு கட்சியின் சார்பிலும் ஜனநாயக தமிழ்தேசிய கட்சி சார்பிலும் இருவர் போட்டியிட்டனர்.</p><p></p><p>
</p><p>
அதில் தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட்டவருக்கு தமிழரசு கட்சியின் 6 உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர்.
</p><p>
ஜனநாயக தமிழ்தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டவருக்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 06 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ் தேசிய கட்சியின் ஒரு உறுப்பனரும் வாக்களித்தனர். இலங்கைசுற்றுலா

தேசிய மக்கள் சக்தியின் இரு உறுப்பினர்களும் வாக்களிப்பில் ஈடுபடாமல் நடுநிலை வகித்தனர்&nbsp; &nbsp; .</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T11:42:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியா முழுவதும் அவசர கால எச்சரிக்கை சேவை சோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/emergency-warning-service-test-across-australia-1785235260"></link>
            <id>https://tamilwin.com/article/emergency-warning-service-test-across-australia-1785235260</id>
            <summary type="text">அவுஸ்திரேலியா முழுவதும் அவசர காலங்களில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும்
வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘AusAlert’ எனும் புதிய தேசிய எச்சரிக்கை
அமைப்பின...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியா முழுவதும் அவசர காலங்களில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும்
வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘AusAlert’ எனும் புதிய தேசிய எச்சரிக்கை
அமைப்பின் முதற்கட்டச் சோதனை நேற்று (27) மதியம் 2.00 மணிக்கு
நடைபெற்றது.
</p><p>
இதன் போது நாட்டின் பெரும்பான்மையான தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள்
மற்றும் டெப்ளட்களில் பலத்த சைரன் ஒலியுடன் கூடிய சோதனைச் செய்தி தோன்றியது.
</p><p>
காட்டுத்தீ, வெள்ளப்பெருக்கு, பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அல்லது சுகாதார அவசர
நிலைகளின் போது மக்களுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்க இந்த புதிய
தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சோதனை</h2><p>
</p><p>
தற்போதைய குறுஞ்செய்தி முறையைப் போலன்றி, தொலைபேசி டவர்கள் மூலமாக நேரடியாகச்
சாதனங்களுக்கு இந்த எச்சரிக்கை ஒளிபரப்பப்படும்.
</p><p>
போன் 'Do Not Disturb' அல்லது 'Silent'&nbsp; இல் இருந்தாலும், சுமார் 10
வினாடிகளுக்கு உரத்த சைரன் ஒலிக்கும்.

மாநிலங்களுக்கு ஏற்ப மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை இந்தச் சோதனை
நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7168caae-e3a6-455b-9bf0-758f5bbd3ee6/26-6a6893d19c877.webp' /></p><p>
</p><p>
இது ஒரு சோதனையே என்பதால் பொதுமக்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை,
திரையில் தோன்றும் செய்தியைப் படித்தாலே போதுமானது என அறிவிக்கப்பட்டது.
</p><p>
குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டு இரகசியமாக தொலைபேசிகள் வைத்திருப்பவர்கள், சைரன் ஒலியால் போன் இருப்பது வெளிப்படாமல் இருக்க சோதனை
நேரத்திற்கு முன்னதாகவே போனை அணைத்து வைக்குமாறு அல்லது 'Airplane Mode'-க்கு
மாற்றுமாறு தேசிய அவசர முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T11:35:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரியல் நடிகை சுஜிதாவின் சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-sujitha-latest-photos-1785236026"></link>
            <id>https://cineulagam.com/article/actress-sujitha-latest-photos-1785236026</id>
            <summary type="text">சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் சுஜிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்து வருகிறா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் சுஜிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்து வருகிறார். </p><p>அந்த வகையில் தற்போது சேலையில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளன.</p><p>இதோ அந்த புகைப்படங்கள்:&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T11:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[5 நாட்களில் உலகளவில் ஜனநாயகன் படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? இதோ விவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/jananayagan-worldwide-box-office-collection-1785235579"></link>
            <id>https://viduppu.com/article/jananayagan-worldwide-box-office-collection-1785235579</id>
            <summary type="text">தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக உருவான திரைப்படம் ஜனநாயகன். இயக்குநர் ஹெச். வினோத் இயக்கிய இப்படத்தை கே.வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக உருவான திரைப்படம் ஜனநாயகன். </p><p>இயக்குநர் ஹெச். வினோத் இயக்கிய இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73497612-d057-4bb6-922c-0ea431f0c1f3/26-6a68887e541e9.webp' /></p><p>
</p><p>
ஜனநாயகன் திரைப்படத்தின் வசூல் விவரம் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்த நிலையில், 5 நாட்களில் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. </p><p>

அதன்படி, 5 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 222 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-28T11:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு குறித்து முக்கிய தரப்புக்களுடன் ஈரான் கலந்துரையாடல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-s-foreign-minister-discusses-strait-of-hormuz-1785219576"></link>
            <id>https://ibctamil.com/article/iran-s-foreign-minister-discusses-strait-of-hormuz-1785219576</id>
            <summary type="text">ஹோர்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, சவூதி அரேபியா மற்றும் ஓமான் வெளியுறவு அமைச்சர்களுடன் தனித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, சவூதி அரேபியா மற்றும் ஓமான் வெளியுறவு அமைச்சர்களுடன் தனித்தனியாக தொலைபேசியில் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த பேச்சுவார்தையில் ஹோர்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து அவர் விவரித்தார் என கூறப்பட்டுள்ளது.</p><p> மேற்குறிப்பிட்ட விடயம் இன்று (28.07.2026)&nbsp; அவரது டெலிகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>ஈரானின் வெளியுறவு அமைச்சர்&nbsp;</h2><p>மேலும் அந்த அறிக்கையில்&nbsp;சமீபத்திய இருதரப்பு மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடிய அவர், பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்த ஒத்துழைப்பை வலுப்படுத்தி, கூட்டு இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e264978-f142-4ecc-9c31-016964e2fe71/26-6a68922febf52.webp' /></p><p>
 

இதற்கிடையில், ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களால் சவூதி அரேபியாவை நோக்கி ஏவப்பட்ட ஆளில்லா விமானங்களை சவூதி பாதுகாப்புப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பாஸ் அராக்சியும் சவூதி வெளியுறவு அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹானும் இந்த தொலைபேசி உரையாடலை மேற்கொண்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p>

 </p>]]></content>
            <updated>2026-07-28T11:28:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் Project Bay operation ; இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/project-bay-operation-19-indian-origion-arrested-1785223031"></link>
            <id>https://canadamirror.com/article/project-bay-operation-19-indian-origion-arrested-1785223031</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கனடாவில் &#039;புரஜெக்ட் பே&#039; என்ற பெயரில் பொலிஸார் நடத்திய தீவிர தேடுதல் நடவடிக்கையில் , சுமார் 1,039 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கனடாவில் 'புரஜெக்ட் பே' என்ற பெயரில் பொலிஸார் நடத்திய தீவிர தேடுதல் நடவடிக்கையில் , சுமார் 1,039 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் மற்றும் 17 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
</p><p>


அமெரிக்க எல்லையிலிருந்து கனடாவிற்குள் சரக்கு லொரிகள் மூலமாக கொக்கைன், மெத்தம்பெட்டமைன் மற்றும் ஓப்பியம் உள்ளிட்ட ஆபத்தான போதை மருந்துகள் கடத்தப்படுவதாகக் கனடா பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1782996e-fadb-4765-a93d-00dd7409266a/26-6a68577915acd.webp' /></p><p>
</p><p>


இதனைத் தொடர்ந்து, கனடா பொலிஸார் அமெரிக்கா மற்றும் கனடா எல்லைப் பகுதிகளில் 'புரஜெக்ட் பே' என்ற சிறப்புச் சோதனையைத் ஆரம்பித்துள்ளது.</p><p>



ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள 22 இடங்கள் உட்பட விண்ட்சர், லசலே, கொரூனா, பிராம்ப்டன், மார்க்கம் மற்றும் கலேடன் ஆகிய பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டுள்ளது.</p><p>



இந்தச் சோதனையின் முடிவில் 1.7 தொன் எடையுள்ள போதை மருந்துகள் 17 துப்பாக்கிகள்

ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் சர்வதேச சந்தை மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.1,039 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.



கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-28T11:27:27+00:00</updated>
        </entry>
    </feed>
