<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-10T10:07:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[eKYC Update செய்வது எப்படி? எளிமையான விளக்கங்களுடன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/lpg-gas-cylinder-ekyc-update-details-1786354647"></link>
            <id>https://manithan.com/article/lpg-gas-cylinder-ekyc-update-details-1786354647</id>
            <summary type="text">Gas Cylinder eKYC Update Details: சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவோர் கண்டிப்பாக eKYC நிறைவு செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சமையல் எர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Gas Cylinder eKYC Update Details: சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவோர் கண்டிப்பாக eKYC நிறைவு செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.</p><p>

சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்கள் ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் eKYC நிறைவு செய்யாவிட்டால், அவர்களுக்கு சிலிண்டர் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>சமையல் எரிவாயு சிலிண்டர்</h2><p>
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.957.50-க்கும், வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.2906-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88c373cd-b451-47be-982a-3bd6df9a810f/26-6a799bdabc6c6.webp' /></p><p>

இந்த நிலையில், வீட்டு உபயோக சிலிண்டருக்கு எரிவாயு நிரப்புதல், மானியம் மற்றும் பிற சேவைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யபொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், நுகர்வோரை ஆதார் அடிப்படையிலான eKYC சரிபார்ப்பை முடிக்க மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
</p><p>
எனவே, சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்கள் ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள், எரிவாயு சிலிண்டருக்கான eKYC-ஐ முடிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.</p><p>

அதே நேரத்தில், முன்னதாக eKYC சரிபார்ப்பை முடித்தவர்கள் மீண்டும் செய்யத் தேவையில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><h2>
எப்படி செய்வது?
</h2><p>
சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்கள், அந்ததந்த கேஸ் நிறுவனங்களின் (இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்) செயலி அல்லது இணையதளம் வாயிலாக eKYC சரிபார்ப்பை முடிக்கலாம்.
</p><p>
Indane சிலிண்டர் பயன்படுத்துவோர் indianoil one செயலியையும், பாரத் கேஸ் பயன்படுத்துவோர் hello bpcl செயலியையும், HP கேஸ் பயன்படுத்துவோர் hp pay என்ற செயலியையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.</p><ul><li>

செயலியை பதிவிறக்கம் செய்த பின், செல்போன் எண் மற்றும் நுகர்வோர் எண் ஆகியவற்றை உள்ளிடவும்.

பின்னர் Update eKYC என்பதை Click செய்து, உங்கள் 12 இலக்கு எண் கொண்ட ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். </li><li>

அடுத்து Play Store-யில் இருந்து AadhaarFaceRD செயலியை உங்கள் செல்போனில் Install செய்துகொள்ளுங்கள்.
</li><li>
உங்கள் முகத்தை Scan செய்து ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடிக்க வேண்டும்.
</li><li>
Online-யில் முடிக்க தெரியாதவர்கள், சிலிண்டர் விநியோகம் செய்யும் நபர்கள் மூலமே அல்லது எரிவாயு நிறுவனத்திற்கு நேரடியாக சென்றும் eKYC-ஐ முடிக்கலாம்.</li></ul><p> 

இந்த பணியை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் முடிக்காவிட்டால், உங்களுக்கு சிலிண்டர் முன்பதிவு செய்வதிலும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் மானிய விலையில் சிலிண்டர் பெறுவதிலும் சிக்கல் ஏற்படலாம்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32260539-431a-4bfc-b119-b28b9968a1b1/26-6a799bdb6e1cf.webp' /></p>]]></content>
            <updated>2026-08-10T10:00:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு முழுவதும் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grama-niladhari-sick-leave-campaign-from-today-1786326805"></link>
            <id>https://tamilwin.com/article/grama-niladhari-sick-leave-campaign-from-today-1786326805</id>
            <summary type="text">புதிய இணைப்புபயணக் கொடுப்பனவு அதிகரிப்பு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை
முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்று (10) நாடளாவிய ரீதியில் முன...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>பயணக் கொடுப்பனவு அதிகரிப்பு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை
முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்று (10) நாடளாவிய ரீதியில் முன்னெடுத்த
சுகயீன விடுமுறைப் போராட்டம் காரணமாக, கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு
சேவைகளைப் பெற்றுக்கொள்ள வந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.</p><p>

இன்று பொதுமக்கள் தினமாக இருப்பதால், கிராம உத்தியோகத்தர்களின்
சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு 10 முதல் 15
கிலோமீற்றர் தொலைவிலுள்ள பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வருகை தந்திருந்தனர்.
</p><p>
எனினும், கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில்
ஈடுபட்டிருந்ததால், அவர்களுடன் தொடர்புடைய எந்தவொரு சேவையும் இடம்பெறவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a812a8d-5fd8-4d7f-9697-c217e10c34f8/26-6a79a05f7028e.webp' /></p><p>
</p><p>இதனால், தூரப் பகுதிகளில் இருந்து அதிகளவு பணம் செலவிட்டு போக்குவரத்து
வசதிகளைப் பெற்றுக்கொண்டு வந்த பொதுமக்கள், ஏமாற்றத்துடனும் அதிருப்தியுடனும்
வீடு திரும்பினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5553729f-1480-40b1-880f-2741eb5b1aea/26-6a79a0604f36e.webp' /></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் (10) நாளையும் (11) நோய் விடுப்புப் பதிவு செய்து சேவையில் ஈடுபடாதிருக்க தீர்மானித்துள்ளனர்.</p><p> 

கொழும்பில் நேற்று (09.08.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். </p><h2>எரிபொருளுக்குச் சமமான கொடுப்பனவு</h2><p>கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 600 ரூபாய் பயணக் கொடுப்பனவு கடந்த 8 வருடங்களாக உயர்த்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/747f02ad-a45f-4d2f-9929-b5a307fb7dc1/26-6a79334733501.webp' /></p><p>

2024ஆம் ஆண்டில் குறித்த கொடுப்பனவுக்குப் பதிலாக 20 லீட்டர் எரிபொருளுக்குச் சமமான கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருந்தது. </p><p>

இருப்பினும் இதுவரை அது வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் (10) நாளையும் (11) நோய் விடுப்புப் பதிவு செய்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.</p><p> 

இதற்கமைய இந்த தொழிற்சங்க நடவடிக்கை நாடு முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5553729f-1480-40b1-880f-2741eb5b1aea/26-6a79a0604f36e.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85392ddc-afff-49a6-8b6f-1b42ba3ad31d/26-6a79a061263e2.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd78784e-c712-4e7a-bc8f-ca4af3364e82/26-6a79a0620241b.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T09:59:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆன்டி பர்னாம் தலைமையின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவு எப்படி இருக்கும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hamish-falconer-about-uk-eu-relation-1786355922"></link>
            <id>https://news.lankasri.com/article/hamish-falconer-about-uk-eu-relation-1786355922</id>
            <summary type="text">ஆன்டி பர்னாம் தலைமையின் கீழான அரசும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் நல்லுறவுகளையே நாட உள்ளதாக துறைசார் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் பிரதமரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆன்டி பர்னாம் தலைமையின் கீழான அரசும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் நல்லுறவுகளையே நாட உள்ளதாக துறைசார் அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p>

பிரித்தானியாவின் பிரதமராக இருந்த சர் கெய்ர் ஸ்டார்மர், ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கம் காட்டிவந்தது அனைவரும் அறிந்ததே.
</p><p>
இந்நிலையில், ஜூலை மாதம் 22ஆம் திகதி, பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு ஒன்று நடைபெற இருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ceee7ca-2688-4c83-a0e5-cb40f18143b5/26-6a79a0d476176.webp' /></p><p>

ஆனால், ஸ்டார்மர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததால், அந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.
</p><p>
ஆக, பிரித்தானியாவின் புதிய பிரதமராக ஆன்டி பர்னாம் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரது தலைமையின் கீழ் பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய உறவுகளின் நிலைப்பாடு என்ன என்னும் கேள்வி எழுந்தது.&nbsp;</p><p></p><h3>

ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவு</h3><p>

ஆன்டி பர்னாம், தனது அரசின் பிரெக்சிட்டுக்கு பிந்தைய பேச்சுவார்த்தைகளுக்கான அமைச்சராக ஹாமிஷ் ஃபால்கோனர் (Hamish Falconer) என்பவரை நியமித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99906c69-26f8-48b6-b5a7-2f3dfc2db450/26-6a79a0d3c66aa.webp' /></p><p>
இந்நிலையில், ஆன்டி பர்னாம் தலைமையின் கீழான அரசும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் நல்லுறவுகளையே நாட உள்ளதாக, ஃபால்கோனர் தெரிவித்துள்ளார்.</p><p>

தான் தன் மனைவியுடன் தேனிலவுக்காக சென்றிருந்த நிலையில், ஆன்டி பர்னாம் தன்னை அழைத்து தனக்கு இந்த பொறுப்பைக் கொடுத்ததாக தெரிவித்துள்ள ஃபால்கோனர், முன்பு தான் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியவன் என்றும், ஆகவே ஐரோப்பிய ஒன்றியத்தைப் பொருத்தவரை ஒத்த கருத்துக்கள் கொண்ட நம் நண்பர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவே தான் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T09:58:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் புதிய பீடாதிபதி நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/appointment-of-new-dean-of-management-studies-1786355724"></link>
            <id>https://tamilwin.com/article/appointment-of-new-dean-of-management-studies-1786355724</id>
            <summary type="text">யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின்
பீடாதிபதியாகப் பேராசிரியர் பி. பிரதீப்காந் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின்
பீடாதிபதியாகப் பேராசிரியர் பி. பிரதீப்காந் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.</p><p>

இந்த நிகழ்வு இன்று(10.08.2026) காலை இடம்பெற்றுள்ளது.</p><p> 


முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக
பீடச்சபைக் கூட்டத்தில் நடத்தப்பட்ட பீடாதிபதி தெரிவின் போது 15 வாக்குகளால்
முன்னிலை பெற்றுப் பேராசிரியர் பி. பிரதீப்காந் பீடாதிபதியாகத் தெரிவு
செய்யப்பட்டுள்ளார்.
</p><h2>

பதவிக் காலம் நிறைவு</h2><p>
தற்போதைய பீடாதிபதி பேராசிரியர் ந.கெங்காதரனின் பதவிக்காலம் எதிர்வரும் 14 ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க,
பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் (திருத்தப்பட்ட) படி புதிய பீடாதிபதியைத் தெரிவு
செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85b699b0-c358-428f-bf0b-03a8075caeab/26-6a79a05c9cb02.webp' /></p><p> 

இந்த நிலையில், இன்று(10) காலை இடம்பெற்ற தெரிவுக் கூட்டத்தில் பேராசிரியர்
பி. பிரதீப்காந் எதிர்வரும் 15.08.2026 முதல் செயற்படும் வகையில்
பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T09:57:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளை மயில் உட்பட 5 மயில்களை ஐ.நா.விற்கு பரிசளித்த இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-gifts-rare-white-peacock-to-un-1786355722"></link>
            <id>https://news.lankasri.com/article/india-gifts-rare-white-peacock-to-un-1786355722</id>
            <summary type="text">India Gifts Rare White Peacock to UN: இந்திய அரசு வெள்ளை மயில் உட்பட 5 மயில்களை ஐ.நா.விற்கு பரிசாக அளித்துள்ளது.
5 மயில்கள் -&amp;nbsp;பாரம்பரியம் இந்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>India Gifts Rare White Peacock to UN: இந்திய அரசு வெள்ளை மயில் உட்பட 5 மயில்களை ஐ.நா.விற்கு பரிசாக அளித்துள்ளது.
</p><h2>5 மயில்கள் -&nbsp;பாரம்பரியம் </h2><p>இந்தியா, ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் (UN) அலுவலகத்திற்கு 5 மயில்களை பரிசளித்துள்ளது.

இதில், மிகவும் அரிய வெள்ளை மயிலும் அடங்கும். </p><p>45 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முதன்முதலாக மயில்களை பரிசளித்தது. இப்போது அந்த பாரம்பரியம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசளிப்பு, இந்தியாவின் கலாச்சார அடையாளத்தையும், இயற்கைச் செல்வத்தையும் உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b295afdc-2d34-4f02-99bd-3d6c9c8ab8e5/26-6a79a00bc9202.webp' /></p><p>மயில், இந்தியாவின் தேசியப் பறவையாகும். அதன் அழகு, பெருமை, மற்றும் ஆன்மீகச் சின்னம் காரணமாக, உலகளாவிய அளவில் மதிப்புமிக்கதாக கருதப்படுகிறது.
</p><p>
ஜெனீவா ஐ.நா. வளாகத்தில் ஏற்கனவே இந்தியா வழங்கிய மயில்கள் வாழ்ந்து வருகின்றன. புதிய மயில்கள் சேர்க்கப்படுவதால், அந்த வளாகம் மேலும் அழகுபெறும்.
</p><p>
“இந்த பரிசு, இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தையும், இயற்கை வளங்களையும் உலகிற்கு பகிர்ந்து கொள்ளும் முயற்சியாகும்” என்று இந்தியாவின் வெளிநாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>இந்த நிகழ்வு, இந்தியா-ஐ.நா. உறவுகளை வலுப்படுத்தும் முக்கியமான அடையாளமாகக் கருதப்படுகிறது. </p><p>உலக அமைதி, கலாச்சார பரிமாற்றம், மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியாவின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த பரிசளிப்பு நடந்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T09:56:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி ரீச்சா கேளிக்கை பூங்காவில் என்ன தவறு நடந்தது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kilinochchi-reecha-food-festival-what-went-wrong-1786355875"></link>
            <id>https://jvpnews.com/article/kilinochchi-reecha-food-festival-what-went-wrong-1786355875</id>
            <summary type="text">&amp;nbsp; கிளிநொச்சி ரீச்சாவில் இடம்பெற்ற உணவு திருவிழா இடை நடுவில் நிறுத்தப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. 

குறித்த சம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கிளிநொச்சி <a href="https://jvpnews.com/article/reecha-food-festival-suspended-1786270923" target="_blank">ரீச்சாவில் இடம்பெற்ற உணவு திருவிழா</a> இடை நடுவில் நிறுத்தப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் சர்வதேச மனித உரிமை ஆர்வலர் முஹீத் ஜீரன் தனது முக நூலில் பதிவிட்டுள்ளதாவது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e21cb00-9f80-49b9-8b6c-6ff7b62331bf/26-6a79a0a4b4956.webp' /></p><p><b> 

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பி.கே.யின் ரீச்சா கேளிக்கை பூங்காவில் என்ன தவறு நடந்தது?
</b></p><p>&nbsp;ரீச்சா கேளிக்கை பூங்கா மற்றும் உல்லாச விடுதி (ரீச்சா இயற்கை பண்ணை) என்பது இலங்கையின் கிளிநொச்சியில் அமைந்துள்ள 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு சூழல் சுற்றுலா மற்றும் இயற்கை வேளாண் திட்டமாகும்.
</p><p>
 டிஸ்னிலேண்ட் பாணியிலான இந்தப் பூங்காவை, பி.கே. என அறியப்படும் பாஸ்கரன் கந்தையா என்ற இலங்கை-டச்சு தொழிலதிபர் 2018-ல் நிறுவினார். பி.கே., ஆறு நாடுகளில் செயல்படும் ஒரு ஐரோப்பிய தொலைத்தொடர்பு நிறுவனமான லெபாரா குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் இயக்குனர் ஆவார். </p><p>மேலும், லண்டனைத் தளமாகக் கொண்ட பிரபலமான தமிழ் தொலைக்காட்சி அலைவரிசையான ஐபிசி தமிழின் தாய் நிறுவனமான லண்டன் தமிழ் மீடியாவின் தலைவராகவும் அவர் உள்ளார். </p><p>அண்மையில் அவர் தமிழ்வின், லங்காஸ்ரீ, சினியுலகம், மனிதன், ஐபிசி தமிழ், எல்பிசி தமிழ், விடுதலை, கனடாமிரர் மற்றும் ஜேவிபி நியூஸ் ஆகிய இணையதளங்களையும் வாங்கியதோடு, தமிழ் ஊடக சாம்ராஜ்யத்தில் கணிசமான பங்கையும் சொந்தமாகக் கொண்டுள்ளார்.
வட இலங்கையில் இந்த கேளிக்கை பூங்காவைக் கட்டுவதற்காக பி.கே. 1000 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்துள்ளார். </p><p>சமீபத்தில் அவர் தனது கேளிக்கை பூங்காவில் நான்கு நாள் உணவுத் திருவிழாவை ஏற்பாடு செய்தார், அங்கு உணவுடன் கூடிய ஒவ்வொரு பொழுதுபோக்குக்கான நுழைவுச்சீட்டும் 3000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. </p><p>இருப்பினும், நேற்று அந்த கேளிக்கை பூங்காவிற்குள் பெரிய உணவு நெருக்கடி கலவரங்கள் ஏற்பட்டன, அங்கு வாடிக்கையாளர்கள் உணவுத் திருவிழாவில் உணவுப் பற்றாக்குறை குறித்து புகார் அளித்தனர். </p><p>நுழைவுச்சீட்டு வாங்கியவர்கள் உணவுத் திருவிழாவில் உணவு உண்ணாமலேயே திரும்பிச் சென்றனர். இத்தகைய பெரிய அவமானத்தையும் ஏமாற்றத்தையும் சந்தித்த பிறகு, எதிர்காலத்தில் இந்த கேளிக்கை பூங்காவிற்கு வருவதைப் புறக்கணிக்குமாறு வாடிக்கையாளர்கள் மற்றவர்களை வலியுறுத்தினர்.</p><p> வாடிக்கையாளர்களின் அதிருப்தி குறித்த பல சமூக ஊடக காணொளிகள் பரப்பப்பட்டு, அவை வைரலாகவும் பரவின.
உண்மையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு நல்லெண்ணப் பயணமாக இந்த கேளிக்கை பூங்காவிற்குச் செல்லவிருந்தேன், ஆனால் அவ்வளவு நீண்ட பயணத்திற்கு என் நேரம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை.</p><p>
ஒரு நாளைக்கு 2500 வாடிக்கையாளர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் 4 நாள் உணவுத் திருவிழா நிகழ்ச்சியை அவர்கள் ஏற்பாடு செய்திருந்ததாகவும், அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப உணவையும் ஏற்பாடு செய்திருந்ததாகவும் பி.கே. தரப்பிலிருந்து எனக்குக் கிடைத்தது. அவர்கள் 100 வகையான உணவுகளையும் 100 விதமான பொழுதுபோக்கு நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்திருந்தனர். </p><p>முதல் நாளில் 10,000 பேரும், இரண்டாம் நாளில் 30,000-க்கும் மேற்பட்டோரும் வருகை தந்தனர். இது ஒரு எதிர்பாராத கூட்டமாக இருந்தது. உதாரணமாக, அவர்களிடம் 5 ஹாப்பர்ஸ் நிலையங்கள் இருந்தன, ஆனால் இரண்டு மணி நேரத்தில் 5,000 பேர் சாப்பிடுவதற்காகக் காத்திருந்தனர். </p><p>BK தரப்பின்படி, இதை நிர்வகிப்பது அவர்களுக்கு எளிதான காரியமல்ல. இருப்பினும், ஆன்லைன் முன்பதிவைத் தவிர, கவுண்டரில் நேரடியாக டிக்கெட் வாங்கியவர்களையும் அனுமதித்ததே BK தரப்பிலிருந்து நடந்த தவறு. அதுதான் மிகப்பெரிய தவறு. </p><p>அவர்கள் பணத்தைத் திருப்பிக் கொடுத்து, ஏற்பட்ட சிரமத்திற்காக மன்னிப்பும் கோரியுள்ளனர். அவர்களின் கூற்றுப்படி, BK-யின் எதிரிக் கும்பல் ஒன்று, யூடியூபர்களைப் பயன்படுத்தி அவரைத் தாக்கி, ஒரு பெரிய பிரச்சனையை உருவாக்கியுள்ளது.
</p><p>எப்படியிருந்தாலும், ஒரு வணிகத்தின் நிலைத்தன்மைக்கு நுகர்வோர் திருப்தி இன்றியமையாதது என்பதால், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க இது அமைப்பாளர்களுக்கு ஒரு பாடம் என்று நான் நினைக்கிறேன். </p><p>இதற்கிடையில், தனது தொழிலை அழிப்பதற்கான எதிரியின் சதித்திட்டத்தின் எல்லைக்குள் செல்லாமல், எதிர்காலத்தில் இது மீண்டும் நிகழக்கூடாது என்று எச்சரிக்கை விடுப்பதன் மூலம் மக்கள் பி.கே-யின் பொழுதுபோக்கு பூங்காவிற்கு ஆதரவளிக்க வேண்டும்.</p><p>
முஹீத் ஜீரன் 
சர்வதேச மனித உரிமை ஆர்வலர்&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T09:55:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் வாடும் கடற்றொழிலாளர்கள் தொடர்பில் தமிழக முதலமைச்சர் விஜய்யிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fishermen-languishing-in-prison-1786355164"></link>
            <id>https://tamilwin.com/article/fishermen-languishing-in-prison-1786355164</id>
            <summary type="text">இலங்கை சிறைச்சாலைகளில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இலங்கை சிறையில் உள்ள தமிழக கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவிக்கமாறு வட மாகாண மீனவ பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சிறைச்சாலைகளில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இலங்கை சிறையில் உள்ள தமிழக கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவிக்கமாறு வட மாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணாகுலசிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>


இந்த விடயம் தொடர்பில், தமிழக முதலமைச்சர் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2> 

கைதியாக இருக்கும் 38 தமிழக கடற்றொழிலாளர்கள்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> 


38 தமிழக கடற்றொழிலாளர்கள் வெலிக்கடை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு இலங்கை சிறைகளில் உள்ளனர். அதில் 16 விசாரணை கைதிகளும், 21 தண்டனை கைகளும் அடங்குகிறார்கள்.
</p><p>
இலங்கையின் பல்வேறு சிறைச்சாலையில் நடந்த கலவரங்களில் 33 பேருக்கு மேல்
கொல்லப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e070edf-b8b4-4463-83e8-a692f5365fc0/26-6a799e3e03a27.webp' /></p><p>



நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த கலவரத்தில் சிறைச்சாலையில் இருந்த
உன்னிகிருஷ்ணன் என்ற இந்திய கைதி ஒருவர் கொல்லப்பட்டார்.</p><h2>

தமிழக முதல்வரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை</h2><p>
இந்த நிலையில் பல்வேறு சிறைச்சாலையில் இருந்த 600 க்கு மேற்பட்ட சிங்கள கைதிகள்,
யாழ்ப்பாணம் சிறைச்சாலை உள்ளிட்ட வடகிழக்கு தமிழ் மாகாண சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/045b30ee-fe58-468e-97b8-8194dc1bc0e1/26-6a799e3ee37a0.webp' /></p><p>
</p><p>
மேலும் இலங்கை சிறைச்சாலைகளில் வெளியில் இருந்து சதிசெய்து, திட்டமிட்டு
கலவரம் நடத்தப்படுவதாக இலங்கை அரசு கூறுகிறது. இதனால் தமிழக கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தவும் வாய்ப்பு உள்ளது.


இதனால் யாழ்ப்பாணம் உள்ளிட்ட சிறைச்சாலைகள் உள்ள தமிழக கடற்றொழிலாளர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
</p><p>

எனவே இந்த விடயத்தில் தமிழக முதல்வர் மற்றும் இந்திய வெளியுறவு துறை
அமைச்சர் தலையிட்டு உடனடியாக தமிழக கடற்றொழிலாளர்களை மீட்டு அவர்கள் குடும்பங்களிடம்
சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T09:47:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க அச்சுறுத்தல் ஒருபக்கம்... ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைத் தொடர இந்தியா முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-russian-crude-purchases-1786355392"></link>
            <id>https://news.lankasri.com/article/india-russian-crude-purchases-1786355392</id>
            <summary type="text">India unlikely to cut Russian crude: அமெரிக்க செனட்டின் பொருளாதாரத் தடைகள் மசோதா இருந்தபோதிலும், ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா குறைக்க வாய்ப்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>India unlikely to cut Russian crude: அமெரிக்க செனட்டின் பொருளாதாரத் தடைகள் மசோதா இருந்தபோதிலும், ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா குறைக்க வாய்ப்பில்லை.
</p><p>அமெரிக்க செனட் சபை ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் தொடர்பான மசோதாவை நிறைவேற்றியுள்ள நிலையில், இந்தியா தனது கச்சா எண்ணெய் கொள்முதலை ரஷ்யாவிடமிருந்து சமீப காலத்தில் குறைப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றே தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>நெருக்கடிக்கு உள்ளாக்கும்</h2><p> </p><p>
குறித்த மசோதாவானது, ரஷ்ய எரிபொருளைத் தொடர்ந்து இறக்குமதி செய்யும் நாடுகளை இது குறிவைப்பதாகத் தொழில் துறை வட்டாரங்களும் ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75717449-47a3-41ec-b68a-f23295c4e9f7/26-6a799ec289dbe.webp' /></p><p> </p><p>இருப்பினும், இந்த நிகழ்வு ரஷ்ய கச்சா எண்ணெய் விநியோகம் தொடர்பான கொள்கை ரீதியான அபாயத்தை அதிகரிக்கிறது. இந்த நடவடிக்கைகள் இன்னும் கூடுதல் சட்ட மற்றும் நிர்வாகத் தடைகளை எதிர்கொள்கின்றன. </p><p>இதன் இறுதித் தாக்கம், விலக்குகள் அல்லது தள்ளுபடிகளைப் பயன்படுத்துவது உட்பட, அமெரிக்க நிர்வாகம் அவற்றை எவ்வளவு தீவிரமாகச் செயல்படுத்தத் தேர்வு செய்கிறது என்பதைப் பெருமளவில் சார்ந்துள்ளது. </p><p>ரஷ்ய எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் எந்தவொரு இடையூறும், மாற்று கச்சா எண்ணெய் ஆதாரங்கள் மூலம் ஈடுசெய்யப்படாவிட்டால், இறுதியில் உலகளாவிய எண்ணெய் கிடைப்புத்தன்மையையும் சந்தைகளையும் மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும். </p><p>
ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகளின் மீது ஆரம்பத்தில் 500 சதவீதம் வரையிலான வரிகளை விதிக்க முன்மொழிந்திருந்த இந்த மசோதா, 100 சதவீதம் வரையிலான இரண்டாம் நிலை வரி கட்டமைப்பை அமுல்படுத்தும் வகையில் திருத்தப்பட்டுள்ளது.</p><p></p><p> ரஷ்யா மற்றும் ஈரான் மீது தடைகளை விதிப்பதற்கான இருகட்சி ஆதரவுடைய 'லிண்ட்சே கிரஹாம் சட்டம் - 2026'-ஐ, செனட் சபை ஆகஸ்ட் 7 அன்று 86-க்கு 11 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றியது. </p><p>இந்த மசோதா தற்போது பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது; ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சென்றடைவதற்கு முன் இதுவே அடுத்த கட்ட நகர்வாகும். </p><p>ஆகஸ்ட் 31 அன்று பிரதிநிதிகள் சபை மீண்டும் கூடும்போது, ​​செனட் சபையின் வடிவிலான மசோதாவை அது பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> இந்தியாவைப் பொறுத்தவரை, ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் ஒரு முக்கியமான விநியோகப் பாதையாகவும், மேற்கு ஆசியப் போரினால் மத்திய கிழக்கின் விநியோகத்தில் ஏற்படும் தடைகளுக்கு எதிரான ஒரு முக்கியப் பாதுகாப்பு அரணாகவும் மாறியுள்ளது.</p><h2>தற்காலிகத் தடைகளில்</h2><p> </p><p>இந்தியா தனது எண்ணெய் தேவையில் 88 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது; இதில் ரஷ்யாவின் பங்கு ஏறக்குறைய பாதியளவாக உள்ளது. </p><p>ஜூன்-ஜூலை மாதங்களில் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி நாளொன்றுக்கு சுமார் 2.7 மில்லியன் பீப்பாய்களாக உயர்ந்ததாகவும், இது இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டிருந்ததாகவும் Kpler தரவுகள் தெரிவிக்கின்றன.
</p><p>ரஷ்ய கச்சா எண்ணெய், இந்திய சுத்திகரிப்பு ஆலைகளுக்கு ஒரு முக்கியமான விநியோகப் பாதுகாப்பாக மாறியுள்ளது. இது, மத்திய கிழக்கின் பாரம்பரிய விநியோகப் பாதைகளில் ஏற்படும் தடங்கல்களால் அவை பாதிக்கப்படுவதைக் குறைக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8886547e-96e9-4332-8ee8-6dd22036434a/26-6a799ec33fed4.webp' /></p><p> </p><p>சமீபத்தில் மத்திய கிழக்கில் விநியோக அபாயங்கள் அதிகரித்த காலகட்டத்தில் இது குறிப்பாகத் தெளிவாகத் தெரிந்தது. தற்போது, ​​ரஷ்ய கச்சா எண்ணெய் தொடர்ந்து இந்தியாவிற்கு வருவதை அனுமதிக்கும் வகையில், அமெரிக்கா தற்காலிகத் தடைகளில் நெகிழ்வுத்தன்மையை வழங்கியுள்ளது.
</p><p>மத்திய கிழக்கிலிருந்து கச்சா எண்ணெய் விநியோகம் குறித்த நிச்சயமற்ற தன்மை நிலவும் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் இருப்பு நிலைமை இறுக்கமாக உள்ள ஒரு சூழலில் இந்த மசோதா முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>குறிப்பாக, மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல், மாற்று விநியோகங்களின் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது. எனவே, இந்தக் கட்டத்தில் ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு விதிக்கப்படும் ஒரு குறிப்பிடத்தக்க கட்டுப்பாடு, தற்போதுள்ள வர்த்தகப் பரிமாற்றங்களை வெறுமனே மாற்றி அமைப்பதற்குப் பதிலாக, பரந்த சந்தையை மேலும் இறுக்கமாக்கக்கூடும். </p><p>தற்போதைய அளவுகளில் ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு மாற்றீடு செய்வது சவாலானதாக அல்லது சாத்தியமற்றதாக இருக்கும் என்றே ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T09:47:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சா உணவுத் திருவிழாவில் பெண் ஊழியருக்கு நடந்த அசம்பாவிதம்! கவலையில் பாஸ்கரன் கந்தையா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bhaskaran-expresses-concern-over-reecha-issue-1786347116"></link>
            <id>https://ibctamil.com/article/bhaskaran-expresses-concern-over-reecha-issue-1786347116</id>
            <summary type="text">கிளிநொச்சியில் நடைபெற்ற றீச்சா உணவுத் திருவிழாவில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்து பாஸ்கரன் கந்தையா தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சியில் நடைபெற்ற றீச்சா உணவுத் திருவிழாவில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்து பாஸ்கரன் கந்தையா தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார்.</p><p>

நிகழ்வின் போது ஏற்பட்ட எதிர்பாராத சிரமங்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்ட அவர், பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஊழியர் மீது சிலர் குப்பைகளைக் கொட்டியது மற்றும் ஊழியர்களை துன்புறுத்தியது போன்ற அருவருப்பான சம்பவங்களுக்கு கடுமையான கவலைகளையும் வெளியிட்டுள்ளார்.
</p><p>
இந்த நிகழ்வைச் சீர்குலைக்க வேண்டுமென்றே சில குழுக்கள் திட்டமிட்டுச் செயல்பட்டதாக சுட்டிக்காட்டிய பாஸ்கரன், ஒரு கிராமத்தின் வளர்ச்சியை தனது சொந்த சகோதரர்கள் போன்றோரே ஏன் எதிர்க்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p>
அத்தோடு, சமூக வலைதளங்களில் வன்மத்தைப் பரப்புவதையும், போதை மற்றும் வன்முறையைத் தவிர்த்து, சக மனிதர்களை மதித்து நடக்குமாறும் இளைய தலைமுறைக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
</p><p>
எவ்வாறாயினும், தனக்கு ஆதரவாக இருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்த அவர், சமூக வளர்ச்சிக்காகத் தொடர்ந்தும் பணியாற்றுவேன் என்று உறுதியளித்துள்ளார்.
</p><p>
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7ZhC4P7s_AA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T09:47:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடிய அமைதிப்படை வீரர்களுக்கு ஒட்டாவாவில் கௌரவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadian-peacekeepers-honoured-1786354410"></link>
            <id>https://canadamirror.com/article/canadian-peacekeepers-honoured-1786354410</id>
            <summary type="text">&amp;nbsp;உலக நாடுகளின் அமைதியைக் காக்கும் சர்வதேசப் பணிகளில் ஈடுபட்டுச் சேவையாற்றிய கனடிய அமைதிப்படை வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், ஒட்டாவாவில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உலக நாடுகளின் அமைதியைக் காக்கும் சர்வதேசப் பணிகளில் ஈடுபட்டுச் சேவையாற்றிய கனடிய அமைதிப்படை வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், ஒட்டாவாவில் உள்ள 'நல்லிணக்க அமைதிப்படை நினைவுச் சின்னத்தில்' சிறப்பு நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. </p><p>
தேசிய அமைதிப்படை வீரர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்கள், தற்போதைய இராணுவ வீரர்கள், கனடிய அரச பொலிஸார், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். </p><p>
1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் திகதி, ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் பணியில் ஈடுபட்டிருந்த 9 கனடியப் படை வீரர்கள் பயணித்த 'பஃப்பலோ' விமானம் சிரியாவில் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அனைவரும் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b15f66b6-82ca-4402-bc71-35fc8d3820a3/26-6a799aec85b51.webp' /></p><p> கனடிய அமைதிப்படை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிக மோசமான உயிரிழப்பு இதுவாகும். </p><p>
இந்தத் தியாகத்தை நினைவு கூரும் வகையில், கனடாவில் 2008 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி 'தேசிய அமைதிப்படை வீரர்கள் தினமாக' அதிகாரப்பூர்வமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.</p><p> 
1948 ஆம் ஆண்டு முதல், 1,25,000-க்கும் மேற்பட்ட கனடிய ஆயுதப்படை வீரர்களும் 4,000-க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகளும் உலகின் 35-க்கும் மேற்பட்ட நாடுகளில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>சர்வதேச அமைதிப் பணிகளின் போது இதுவரை மொத்தம் 130 கனடியப் படை வீரர்கள் தங்களது உயிரைத் தியாகம் செய்துள்ளனர்.</p><p> 
மேலும், அடுத்த தலைமுறை இளைஞர்களும் நாட்டின் அமைதிப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது நம்பிக்கையளிப்பதாக நிகழ்வில் பங்கேற்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T09:44:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறும் அதிசய மீன்! அரிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/barramundi-fish-change-sex-from-male-to-female-1786354606"></link>
            <id>https://jvpnews.com/article/barramundi-fish-change-sex-from-male-to-female-1786354606</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறும் அதிசய மீன் தொடர்பில் வியக்க வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

கொடுவா மீன்களே இவ்வாறு ஆணாகப் பிறந்து பெண்ணா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறும் அதிசய மீன் தொடர்பில் வியக்க வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

கொடுவா மீன்களே இவ்வாறு ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறும் தன்மையை கொண்டுள்ளதாம்.
</p><p>
 மீன் வகைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இனப்பெருக்க முறையைக் கொண்ட கொடுவா மீன்கள் என அழைக்கப்படும் ‘பாராமுண்டி’ (Barramundi) மீன்களின் அதிசயம் குறித்து அறிவோம்.

பாராமுண்டி மீன்கள் ஆரம்பகால வாழ்க்கையில் ஆண்களாகவே காணப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3fcd6f7-085b-4c5f-b5c1-c95f7c5f7954/26-6a799bafaef90.webp' /></p><h2>இனப்பெருக்க காலத்தில் மில்லியன் கணக்கான முட்டை&nbsp;இடும் திறன்</h2><p> </p><p>பொதுவாக இவை 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் இனப்பெருக்கத்திற்குத் தயாராகின்றன.

உடல் வளர்ச்சி மற்றும் வயது அதிகரிக்கும் நிலையில், இவற்றில் சில மீன்கள் இயற்கையாகவே பெண் மீன்களாக மாறுகின்றன.</p><p> இந்த பாலின மாற்ற நிகழ்வு அறிவியல் ரீதியாக “புரோட்டாண்ட்ரி” (Protandry) என அழைக்கப்படுகிறது.

இவ்வாறு பெண்ணாக மாறும் பெரிய அளவிலான பாராமுண்டி மீன்கள், இனப்பெருக்க காலத்தில் மில்லியன் கணக்கான முட்டைகளை இடும் திறன் கொண்டவை.</p><p> சில சமயங்களில் ஒரு மீன் 3 கோடிக்கும் அதிகமான முட்டைகளை இடக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 அதேசமயம் , அனைத்து ஆண் பாராமுண்டி மீன்களும் பெண் மீன்களாக மாறுவதில்லை. அவற்றில் சில வாழ்நாள் முழுவதும் ஆண் மீன்களாகவே வாழும் என்று ம் கூறப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-08-10T09:44:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் பிகில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு பொறுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/producer-archana-kalpathi-in-tn-govt-committee-1786354858"></link>
            <id>https://news.lankasri.com/article/producer-archana-kalpathi-in-tn-govt-committee-1786354858</id>
            <summary type="text">கோயில்களுக்கான அறங்காவலர்களை தேர்வு செய்ய தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் பிகில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோயில்களுக்கான அறங்காவலர்களை தேர்வு செய்ய தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் பிகில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
</p><h3> 
அரசு பொறுப்பு சர்ச்சை</h3><p> 

முதலமைச்சர் விஜய்யின் தவெக ஆட்சியில், விஜய்க்கு நெருக்கமானவர்களுக்கு முக்கிய அரசு பொறுப்பு வழங்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. </p><p>

முன்னதாக அவருடைய ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் முதல்வர் விஜயின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு அரசாணை வெளியானது. 

பின்னர் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த நியமனம் திரும்பபெறப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db472ece-23db-4821-aa90-fd8878ae355e/26-6a799cab8eb85.webp' /></p><p>

அதனையடுத்து, லியோ, மாஸ்டர் போன்ற படங்களின் இணைத் தயாரிப்பாளரும் தனது மேலாளருமான ஜெகதீஷ் பழனிசாமி முதலமைச்சரின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். </p><p>

மேலும், ஜனநாயகன் படத்தயாரிப்பாளரான கர்நாடகாவை சேர்ந்த கே.வெங்கட நாராயணா தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்ற அரசு பதவியில் நியமிக்கப்பட்டார்.&nbsp;</p><p></p><h3> 

அரசு அமைத்துள்ள குழுவில் அர்ச்சனா கல்பாத்தி</h3><p> 

தற்போது, பிகில் பட தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு அமைத்துள்ள குழுவில் இடம் அளிக்கப்பட்டுளளது.</p><p> 

இந்து சமய அறநிலையத் துறை ஆளுகைக்குட்பட்ட திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71662dbc-4e90-47ad-ac4a-b11798a7b3fd/26-6a799cac5a50d.webp' /></p><p> 

திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட, விண்ணப்பதாரர்களை தெரிவு செய்து உரிய பெயர்ப் பட்டியல் தயாரித்து அரசுக்கு அளித்திட மாநிலக்குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டது.

இந்த குழுவின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும்.</p><p> 

இந்த குழுவின் தலைவராக தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள். பொம்மபுரம் ஆதினம், மயிலம் நியமிக்கப்பட்டுள்ளார். </p><p>

குழுவின் துணைத் தலைவராக ஓய்வ பெற்ற மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி டாக்டர். K.ராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். </p><p>

மேலும், தயாரிப்பாளர் திருமதி அர்ச்சனா கல்பாத்தி அகோரம், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திரு. பராசம்பத் இ.ஆ.ப. (ஓய்வு), திருமதி. மாசுமதி (எ) சுமதிஸ்ரீ, டாக்டர் த.வேல்முருகன் ஆகியோர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர். </p><p>

மேலும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதவி வழி உறுப்பினர்/செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.&nbsp; &nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T09:41:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-man-died-accident-in-the-mullivaikkal-area-1786353158"></link>
            <id>https://tamilwin.com/article/young-man-died-accident-in-the-mullivaikkal-area-1786353158</id>
            <summary type="text">முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் வீதியில் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில்
09.08.2026 அன்று இரவு இடம்பெற்ற வித்தில் மோட்டார்சைக்கிலில் பயணித்த இளைஞன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் வீதியில் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில்
09.08.2026 அன்று இரவு இடம்பெற்ற வித்தில் மோட்டார்சைக்கிலில் பயணித்த இளைஞன்
ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
</p><p>குறித்த விபத்தானது நேற்று(09.08.2026) இடம்பெற்றுள்ளது.</p><h2>பொாலிஸார் விசாரணை</h2><p>இந்த விபத்தில் 6ஆம் வட்டாரம் ஆனந்தபுரம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த 18 வயதுடைய மதிமாறன் பிறைசுடர் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4a344ea-9f10-4e6a-a48d-132bd7962edc/26-6a799c480c540.webp' /></p><p>காயமடைந்த மற்றைய நபர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த விபத்து தொடர்பில் முல்லைத்தீவு பொாலிஸார் விசாரணைகளை
முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T09:40:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணத்தை பதிவுசெய்ய வந்த மனோஜிற்கு முத்து கொடுக்கப்போகும் ஷாக்... சிறகடிக்க ஆசை எபிசோட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/siragadikka-aasai-10th-to-16th-august-2026-promo-1786352080"></link>
            <id>https://cineulagam.com/article/siragadikka-aasai-10th-to-16th-august-2026-promo-1786352080</id>
            <summary type="text">சிறகடிக்க ஆசை
அண்ணாமலை, எந்த விஷயம் செய்தாலும் நேர்மையாக செய்ய வேண்டும், நியாயமாக இருக்க வேண்டும் என எண்ணம் கொண்டவர். ஆனால் அவரது மனைவி அப்படியே வேறு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சிறகடிக்க ஆசை</h2><p>
அண்ணாமலை, எந்த விஷயம் செய்தாலும் நேர்மையாக செய்ய வேண்டும், நியாயமாக இருக்க வேண்டும் என எண்ணம் கொண்டவர். </p><p>ஆனால் அவரது மனைவி அப்படியே வேறு மாதிரி, பணம் தான் முக்கியம், தகுதியில் குறைவாக இருப்பவர்களை மதிக்கவே மாட்டார், ஒரு விஷயம் நடக்க வேண்டும் என்றாலும் எந்த கிரிமினல் வேலையும் செய்யலாம் என்று நினைப்பவர். </p><p>இவர்களின் குடும்பத்தில் நல்ல விஷயங்கள் அதிகம் நடந்ததோ இல்லையோ பிரச்சனைகள் தான் அதிகம் வந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ca58577-1e5b-400d-91de-bff451ec62d2/26-6a7991d1f2402.webp' /></p><h2>புரொமோ
</h2><p>ரோஹினியை விவாகரத்து செய்ய நினைக்கும் மனோஜ் அவரை கர்ப்பமாகிவிட்டு இப்போது கனகாவை திருமணம் செய்துகொண்டார். மனோஜ் மறுமணம் செய்துகொண்ட விஷயம் எப்போது வெடிக்கும் என தெரியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eed61285-0180-4a88-8f3a-4d2171a670fd/26-6a7991d2a43d0.webp' /></p><p> </p><p>தற்போது சிறகடிக்க ஆசை சீரியலின் புதிய புரொமோவில், மனோஜ்-கனகா தங்களது திருமணத்தை பதிவு செய்ய அலுவலகம் வருகின்றனர். அதே இடத்திற்கு முத்து-மீனா வீட்டின் வேலைக்காக வருகிறார்கள். </p><p>அப்போது மனோஜை மீனா பார்க்க முத்துவிடமும் கூறுகிறார். அநேகமாக அடுத்த எபிசோடில் மனோஜிற்கு முத்து ஷாக் கொடுப்பார் என தெரிகிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/3EGh7Xz5gEc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-10T09:30:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்று முன்னர் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா.. சிசிடிவியில் கிக்கிய நபர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-shoot-in-maligawatte-police-report-1786350613"></link>
            <id>https://tamilwin.com/article/gun-shoot-in-maligawatte-police-report-1786350613</id>
            <summary type="text">புதிய இணைப்புமாளிகாவத்தையில் சற்று முன்னர் படகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்...</summary>
            <content type="html"><![CDATA[<h3><span style="color: inherit; font-size: 1.5rem;">புதிய இணைப்பு</span></h3><p>மாளிகாவத்தையில் சற்று முன்னர் படகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p>மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியமை காணொளியில் பதிவாகியுள்ளது.&nbsp;</p><p>குறித்த நபர், தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7191c44-ce23-4281-9a96-4245e11f00cc/26-6a79985c41cdf.webp' /></p><h3>மூன்றாம் இணைப்பு&nbsp; &nbsp;</h3><p>மாளிகாவத்தையில் உள்ள பிசிசி பாலம் அருகே சற்று முன்பு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர், கஞ்சிபானி இம்ரானின் மாமா என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cef8f80-3cc3-4741-8d77-82d56d392378/26-6a799a30ab5f9.webp' /></p><h3><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு&nbsp;</span></h3><p>மாளிகாவத்தையில் உள்ள பி.சி.சி பாலம் அருகே சற்று முன்பு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாதாள உலகத் தலைவர் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><h3>முதலாம் இணைப்பு&nbsp;</h3><p>கொழும்பு - மாளிகாவத்தை பிசிசி பாலம் அருகே துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.&nbsp;</p><p>குறித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p>துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் உயிரிழந்தவர் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.&nbsp;</p><p></p><p></p><p><b style="">YOU MAY LIKE THIS..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9TZ74vr3KG8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p>]]></content>
            <updated>2026-08-10T09:30:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 3 வயது சிறுமியைத் தாக்கிய கரடி: அதிர்ச்சி சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/shock-bc-mom-describes-bear-attack-on-toddler-1786348616"></link>
            <id>https://canadamirror.com/article/shock-bc-mom-describes-bear-attack-on-toddler-1786348616</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், மேப்பிள் ரிட்ஜ் பகுதியில் உள்ள வீட்டின் பின்புறக் கொல்லைப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், மேப்பிள் ரிட்ஜ் பகுதியில் உள்ள வீட்டின் பின்புறக் கொல்லைப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியைப் பாக்கரடி ஒன்று கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர், கரடி சிறுமியின் கழுத்தைக் கவ்வ முயன்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். </p><p>உடனடியாகச் செயல்பட்ட தந்தை, வில் மற்றும் அம்பைப் பயன்படுத்தி கரடியின் தலையில் எய்து அதைத் தாக்கி விரட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6b22b8e-f638-400e-a747-29b174259aa2/26-6a79844a6c312.webp' /></p><p> </p><p>
கரடி கடித்ததில் சிறுமியின் கழுத்து, தலை மற்றும் முதுகுப் பகுதியில் ஆழமான காயங்களும் வெட்டுக் காயங்களும் ஏற்பட்டுள்ளன.</p><p> உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் வான்கூவரில் உள்ள சிறுவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அச்சிறுமி, தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உயிராபத்திலிருந்து தப்பியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. </p><p>
சம்பவ இடத்திற்குப் பொலிஸார் வந்தபோதும், அந்த இடத்தில் மிகுந்த ஆர்வம் காட்டிய கரடி மீண்டும் மீண்டும் அவ்வீட்டுப் பகுதிக்கு வந்துள்ளது. </p><p>பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி அதிகாரிகள் கரடியை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினர். </p><p>
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கரடி அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குள் தப்பி ஓடியது. வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் அப்பகுதியில் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன், அதைக் கண்டுபிடித்தவுடன் அழிக்க முடிவு செய்துள்ளனர்.</p><p> 
அப்பகுதி மக்கள் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறும், வனவிலங்குகள் நடமாட்டம் தென்பட்டால் உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T09:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேயின் மனு தொடர்பான இடையீட்டு மனுக்கள் : நீதிமன்றத்தின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/appeals-court-postpones-suresh-sallay-petition-1786351227"></link>
            <id>https://ibctamil.com/article/appeals-court-postpones-suresh-sallay-petition-1786351227</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள நீதிப் பேராணை மனு தொடர்பான இடையீட்டு மனுக்கள்&nbsp; தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.</p><p>மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்&nbsp;இன்று (10) திங்கட்கிழமை குறித்த மனுக்கள் மீதான விசாரணை இடம்பெற்றது.</p><p>

இதன்போது இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தமது விடயங்களை முன்வைத்தனர்.</p><p></p><h2>நீதிமன்ற உத்தரவு</h2><p>
</p><p>
அதனைத் தொடர்ந்து, இது தொடர்பான மேலதிக பரிசீலனைகளை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/374bbd4f-45cf-4a28-bd58-a8aa7b222bba/26-6a799848e65ee.webp' /></p><p>இதேவேளை&nbsp;சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள மனுவை விசாரணைக்கு ஏற்காது நிராகரிக்க வேண்டும் எனக் கோரி, கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த இடையீட்டு மனு மற்றும் ஒரு சில தரப்பினரால் சலேவுக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனு ஆகியன இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T09:24:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் கஞ்சிபானியின் மாமா சுட்டுக்காலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kanchipani-s-uncle-was-killed-in-a-shooting-1786352908"></link>
            <id>https://ibctamil.com/article/kanchipani-s-uncle-was-killed-in-a-shooting-1786352908</id>
            <summary type="text">மாளிகாவத்தையில் உள்ள பீ.சி.சி பாலத்திற்கு அருகில் சில மணி நேரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாளிகாவத்தையில் உள்ள பீ.சி.சி பாலத்திற்கு அருகில் சில மணி நேரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p> 

மோட்டார் சைக்கிளில் வந்த நபரினால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட நபர் தப்பிச் சென்றதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர், கஞ்சிபானி இம்ரான் எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயல்களுடன் தொடர்புடையவரின் நெருங்கிய உறவினர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p></p><h2>கஞ்சிப்பாணி</h2><p>சங்கராஜ மாவத்தையில் உந்துருளியில் பிரவேசித்த இருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் காயமடைந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7faed839-c8b6-465a-b407-8567d05a2a9a/26-6a799747e0f4e.webp' /></p><p>உயிரிழந்தவர் கட்டுமானப் பொருள் விற்பனை நிலையமொன்றின் உரிமையாளர் எனவும், திட்டமிட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் கஞ்சிபானி இம்ரானின் உறவினர் எனவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>இந்தநிலையில், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச்சென்ற சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக தீவிர விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T09:18:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[விவசாயிகளின் பொற்கால ஆட்சி: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/aadhav-arjuna-speech-in-tn-assembly-1786352648"></link>
            <id>https://ibctamilnadu.com/article/aadhav-arjuna-speech-in-tn-assembly-1786352648</id>
            <summary type="text">முதலில் 5 ஆண்டுகால ஆட்சியை 3 மாதத்துடன் ஒப்பிடலாமா? என சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.

சட்டப்பேரவையில் இன்று நடந்த விவாதத...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதலில் 5 ஆண்டுகால ஆட்சியை 3 மாதத்துடன் ஒப்பிடலாமா? என சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.
</p><p>
சட்டப்பேரவையில் இன்று நடந்த விவாதத்தின் போது திமுக ஆட்சியில் ரேஷன் கடையில் அரிசி சரியில்லை, கருப்பாக இருக்கிறது என மக்கள் கூறினார்கள்.
</p><p>
எங்கள் ஆட்சியில் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் பொருட்கள் அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
</p><p>
தொடர்ந்து பேசிய ஆதவ் அர்ஜுனா, முதலில் 5 ஆண்டுகால ஆட்சியை 3 மாதத்துடன் ஒப்பிடலாமா? இந்த ஒப்பீடு நியாயமானதா?</p><p>

எங்களது முதல்வர், விவசாயி என பதிவு செய்தார், விவசாயிகளுக்காக குரல் கொடுத்தார், விவசாய கடன் 5932 கோடியை தள்ளுபடி செய்துள்ளார், எங்கள் முதல்வர் சொன்னதை செய்வார்.</p><p>

தற்போது நெல், கரும்புக்கான விலையை உயர்த்தினார், ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டுருப்போமா?
</p><p>
எங்கள் ஆட்சியில் ரேஷன் பொருட்கள் தரமானதாக வழங்கப்படும், விவசாயிகளின் பொற்கால ஆட்சியாக எங்கள் ஆட்சி இருக்கும் என தெரிவித்தார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/zW0GYKpAVLo" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-10T09:10:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வருட இறுதிக்குள் 2026 ஆம் ஆண்டு A/L பரீட்சை பெறுபேறுகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2026-a-l-exam-results-by-the-end-of-the-year-1786352901"></link>
            <id>https://jvpnews.com/article/2026-a-l-exam-results-by-the-end-of-the-year-1786352901</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;இன்று (10) ஆரம்பமாகிய 2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;இன்று (10) ஆரம்பமாகிய 2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். </p><p>



இன்று காலை (10) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய போதே அவர் இதனை தெரிவித்தார்.



இதன்போது, 2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்றிலிருந்து (10) ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39329099-7d7f-42b4-80b0-cc113f6bde52/26-6a7995065eb31.webp' /></p><p> 



2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் 372,310 விண்ணப்பதாரர்கள் தோற்றுகின்றனர்.
</p><p>


இன்று ஆரம்பமாகிய உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடுகள் செப்டம்பர் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது என தெரிவித்தார்.</p><p></p><p>



மேலும், பரீட்சை மண்டபங்களுக்குள் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களுக்கு அனுமதி இல்லை எனவும், பரீட்சை விதிகளுக்கு எதிராக செயற்படுபவர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T09:06:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[திரைக்கு பின் போராட்டம்...அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட தென்னிந்திய நடிகர், நடிகைகள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/south-celebrities-battles-with-rare-illnesses-1786352852"></link>
            <id>https://viduppu.com/article/south-celebrities-battles-with-rare-illnesses-1786352852</id>
            <summary type="text">சினிமாத்துறையில் நடித்த நடிகைகள் தனிப்பட்ட விதத்தில் பல கஷ்டங்களை சந்திப்பதுண்டு. அப்படி நடிகைகள் சில அறியவகை நோயால் பாதிக்கப்பட்டு அவதியுறுவதும் உண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சினிமாத்துறையில் நடித்த நடிகைகள் தனிப்பட்ட விதத்தில் பல கஷ்டங்களை சந்திப்பதுண்டு. அப்படி நடிகைகள் சில அறியவகை நோயால் பாதிக்கப்பட்டு அவதியுறுவதும் உண்டு. அப்படி தென்னிந்திய சினிமாவில் 5 டாப் நடிகர், நடிகைகள் சந்தித்த அரியவகை நோய் பாதிப்புகள் குறித்து வெளிப்படையாக பகிர்ந்து கொண்டனர்.</p><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba173241-65ee-47bb-8397-f447215ed304/26-6a7994d67e123.webp' /></p><h2>சமந்தா</h2><p>அந்தவகையில் நடிகை சமந்தா, தனக்கு மயோசிடிஸ் என்கிற அரியவகை நோயால் பாதிப்புக்குள்ளாகியிருப்பதை அறிவித்தார். இந்த நோய் உடலின் தசைப்பகுதிகளில் தீவிர வீக்கத்தையும் பலவீனத்தையும் ஏற்படுத்தக்கூடியதுதான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/661b1a9f-bd26-4acb-a87c-7edba7d2af18/26-6a7994d882693.webp' /></p><p>
</p><h2>காஜல் அகர்வால்,&nbsp;அனுஷ்கா</h2><p>
நடிகை காஜல் அகர்வால், தனக்கு ஒரு தற்காப்பு நோய் பாதிப்பு ஏற்பட்டது. 5 வயது முதலே மூச்சுக்குழாய் ஆஸ்துமா பாதிப்புடன் வாழ்ந்து வருவதாகவும், இதற்கான நீண்டகால உணவு, வாழ்க்கைமுறை கட்டுப்பாடுகளை பின்பற்றியதாக கூறியிருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b96e6755-9903-4f9d-a3a9-548526c89b91/26-6a7994d7d2bb4.webp' /></p><p>
</p><p>
நடிகை அனுஷ்கா, சூடோபுல்டா எஃபெக்ட் என்ற அரியவகை நரம்பியல் குறைபாட்டால் பாதிப்படைந்ததாகவும் சிரிப்பு நோய் என்று அழைக்கப்படும் இந்த பாதிப்பு, உணர்ச்சிகளோடு சம்பந்தமின்றி கட்டுப்படுத்த முடியாது. திடீர் சிரிப்பு, அழுகை ஏற்படும் என்றும் கூறியிருக்கிறார்.</p><h2>விஷ்ணு விஷால், மம்தா</h2><p>

நடிகர் விஷ்ணு விஷால், கடந்த 3, 4 ஆண்டுகளாக ஒருநாள்பட்ட நோய் எதிர்ப்பு பிரச்சனையுடன் வாழ்ந்து வருவதாக தெரிவித்திருந்தார். இதற்காக தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவுகளால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் வெளிப்படையாக கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/456e1be4-1be2-4f14-98bf-5af42dacb764/26-6a7994d72e755.webp' /></p><p>
நடிகை மம்தா, இருமுறை ஹாட்ஜ்கின்ஸ் லிம்போமா என்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தபோது தோலின் நிறமிகளை இழக்கக்கூடிய விட்டிலிகோ என்ற வெண்புள்ளி பாதிப்பினை சந்தித்தேன் என்று கூறியிருந்தார்.</p>]]></content>
            <updated>2026-08-10T09:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dollar-rate-in-sri-lanka-banks-today-usd-to-lkr-1786347951"></link>
            <id>https://ibctamil.com/article/dollar-rate-in-sri-lanka-banks-today-usd-to-lkr-1786347951</id>
            <summary type="text">இன்றைய நாளுக்கான (10.08.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய நாளுக்கான (10.08.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.
</p><p>
அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 330.88 ஆகவும் விற்பனைப் பெறுமதி 339.94 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>

ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	444.97 ஆகவும் விற்பனைப் பெறுமதி 459.74 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>நாணயமாற்று விகிதம்</h2><p>யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	380.79 ஆகவும் விற்பனைப் பெறுமதி 394.17 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 235.79 ஆகவும் விற்பனைப் பெறுமதி 244.73 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6ad7259-e229-4de2-94a8-ac5ba7d23b4a/26-6a79932d54202.webp' /></p><p>அவுஸ்திரேலிய&nbsp;(Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 		231.41 ஆகவும் விற்பனைப் பெறுமதி 242.36 ஆகவும் பதிவாகியுள்ளது.&nbsp; &nbsp;</p><p>சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	256.89 ஆகவும் விற்பனைப் பெறுமதி 267.46 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T08:59:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா: புதிய திட்டத்தை அறிவித்த UAE]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/abu-dhabi-free-visa-for-indians-2026-1786352456"></link>
            <id>https://news.lankasri.com/article/abu-dhabi-free-visa-for-indians-2026-1786352456</id>
            <summary type="text">UAE launches free visa for Indians 2026: இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா திட்டத்தை ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.
அபுதாபி சுற்றுலா துறை,...</summary>
            <content type="html"><![CDATA[<p>UAE launches free visa for Indians 2026: இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா திட்டத்தை ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.
</p><p>அபுதாபி சுற்றுலா துறை, இந்திய சுற்றுலாப் பயணிகளுக்காக சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.</p><h2>
இலவச விசா திட்டம்
</h2><p>
2026 ஆகஸ்ட் 1 முதல் அக்டோபர் 31 வரை, அபுதாபியில் குறைந்தது மூன்று இரவுகள் தங்கும் ஹோட்டல் முன்பதிவு மற்றும் இந்தியாவிலிருந்து வருவான விமான டிக்கெட் கொண்ட பயணிகளுக்கு, இலவச UAE நுழைவு விசா வழங்கப்படும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70ec3e8a-3093-4efb-8590-d332d914f00d/26-6a7993494bf49.webp' /></p><p>அபுதாபி கலாச்சாரம் மற்றும் சுற்றுலா துறை (DCT Abu Dhabi) மூலம் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப கட்டத்தில் 20,000 விசாக்கள் வரை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p> விசா செலவினை முழுமையாக அபுதாபி அரசு ஏற்கிறது.</p><p></p><p>
</p><h2>
தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்க முடியாது</h2><p>இந்திய சுற்றுலாப் பயணிகள், பங்கேற்கும் டிராவல் பார்ட்னர்கள் அல்லது ஓன்லைன் டிராவல் ஏஜென்சிகள் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்க முடியாது.</p><p>

பங்கேற்கும் டிராவல் நிறுவனங்கள், DCT-இன் நியமிக்கப்பட்ட Destination Management Company (DMC) மூலம் நேரடியாக விசா பெறலாம் அல்லது தங்களது DMC வழியாக செயல்பட்டால், ஒவ்வொரு விசாவுக்கும் 285 திர்ஹாம் வரை அபுதாபி அரசு திருப்பிச் செலுத்தும்.</p><p></p><p>

அப்துல்லா யூசுப், DCT அபுதாபியின் சர்வதேச செயல்பாடுகள் இயக்குநர், “இந்தியா எங்களின் முக்கியமான சர்வதேச சந்தைகளில் ஒன்றாகும். விசா செலவினை ஏற்ற இந்திய சுற்றுலாப் பயணிகள் அபுதாபியை எளிதாகத் தேர்வு செய்ய முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த திட்டம், அபுதாபியின் கலாச்சாரம், பொழுதுபோக்கு, விருந்தோம்பல் மற்றும் இயற்கை அழகுகளை அனுபவிக்க இந்திய சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T08:58:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாளிகாவத்தையில் துப்பாகிச்சூடு ; சம்பவத்தால் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gunfire-maligawatta-kanjipani-imran-relative-death-1786352429"></link>
            <id>https://jvpnews.com/article/gunfire-maligawatta-kanjipani-imran-relative-death-1786352429</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு மாளிகாவத்தையில் உள்ள பீ.சி.சி பாலத்திற்கு அருகில் சில மணி நேரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு மாளிகாவத்தையில் உள்ள பீ.சி.சி பாலத்திற்கு அருகில் சில மணி நேரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
மோட்டார் சைக்கிளில் வந்த நபரினால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட நபர் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7e8d726-9645-4729-983d-338d39818f18/26-6a79932f61a3b.webp' /></p><p> 

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர், கஞ்சிபானி இம்ரான் எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயல்களுடன் தொடர்புடையவரின் நெருங்கிய உறவினர் என பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T08:58:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே இரவில் பேய்களால் கட்டப்பட்ட மர்ம கோவில்.. 6 மணிக்கு மேல் இங்கு அனுமதியில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/madhyapradesh-kakanmath-temple-mystery-and-history-1786350773"></link>
            <id>https://manithan.com/article/madhyapradesh-kakanmath-temple-mystery-and-history-1786350773</id>
            <summary type="text">இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு சிவாலயம் பெய்களால் கட்டப்பட்டு இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அதை பற்றி இப்பொழுது நாம் விரிவாக பார்க்கலாம். நம்முடைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு சிவாலயம் பெய்களால் கட்டப்பட்டு இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அதை பற்றி இப்பொழுது நாம் விரிவாக பார்க்கலாம். நம்முடைய இந்தியா கோவில்கள் நிறைந்த ஆன்மிக பூமியாக பார்க்கப்படுகிறது. </p><p>அதாவது குக் கிராமங்கள் துவங்கி பெரிய பெரிய நகரங்கள் வரை சிறப்புமிக்க பல்வேறு ஆலயங்களும் அதற்கு பின்னால் மிகப்பெரிய அளவில் வரலாறுகளும் உள்ளது. அந்த வகையில், பல அதிசயங்களையும் அற்புதங்களையும் கொண்டுள்ளது தான் கக்கன்மாத் சிவன் கோவில்.இந்த கோவில் பேய்களால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. </p><p>கக்கன் மாத் என்கின்ற கோவில் மத்திய பிரதேசத்தில் குவாலியர் நகரத்திலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சிகோனியாவில் அமைந்திருக்கும் கோவிலாகும். சிவபெருமானுக்காக கட்டப்பட்ட இந்த ஆலயம் மத்திய பிரதேசத்திற்கு வருகின்ற சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்க கூடிய ஒரு முக்கியமான ஆலயங்களில் ஒன்று.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1da38077-85c2-4db7-9461-122c4a019cad/26-6a798cb68a9db.webp' /></p><p></p><p> </p><p>இந்த கோயில் சுமார் 115 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலை புனித ஆலயம் என்று அழைப்பதை விட மர்ம கோவை என்று பலரும் கூறுகின்றனர். காரணம், அறிஞர்களே குழம்பும் வகையில் இந்த கோவிலில் சில விஷயங்கள் நடக்குமாம்.</p><p> பொதுவாக, எந்த கோவிலாக இருந்தாலும் கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி அதில் இருக்கும் சந்துக்கள் பூசி தான் கட்டப்படும். ஆனால், இந்த கோவிலில் கற்களால் மட்டும் கட்டப்பட்டிருக்கிறது. இதில் சுண்ணாம்பு சிமெண்ட் என எதுவும் பயன்படுத்தவில்லை. </p><p>பலருக்கும் அது எப்படி கலவைகள் எதுவும் இல்லாமல் பெரும் கற்களால் ஆலயம் கட்டப்பட்டு இருக்கும் என்று கேள்விகள் குழப்பங்கள் வருகிறது. இதற்கான விடையை ஆராய்ச்சியாளர்கள் இன்னும் கண்டுபிடித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். </p><p>அதாவது, எந்த பசையும் போட்டு கட்டப்படவில்லை என்றாலும் பல நூறு ஆண்டுகளைக் கடந்து பல வெள்ளம், புயல், காற்று, நிலநடுக்கம் எல்லாம் பார்த்து அருகில் இருக்கக்கூடிய கட்டிடங்கள் அழிந்தும் அவையெல்லாம் கடந்து இன்று கம்பீரமாக நிற்கக்கூடிய ஆலயமாக இது விளங்குகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b06dd6b9-1f57-48d9-b199-8b7a25dc0683/26-6a798cb74148e.webp' /></p><p></p><p> </p><p>இந்த கோவிலை பற்றி பல்வேறு முக்கிய கதைகள் சொல்லப்படுகிறது. அந்த வகையில், 11 ஆம் நூற்றாண்டில் கச்சபகத&nbsp;வம்சத்தை சேர்ந்த மன்னன் கீர்த்திராஜாவின் மனைவி ககன்வதி, தீவிர சிவபக்தையாக இருந்துள்ளார். இவருடைய வேண்டுகோளின் படி பதினோராம் நூற்றாண்டில் இந்த பிரம்மாண்ட சிவன் கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. </p><p>இப்படி இருக்க, மறுபுறம் இந்த கோவிலை தனக்காக கட்ட சொல்லி பேய்களுக்கு சிவபெருமான் கட்டளை இட்டதாகவும் இவற்றை பூதங்கள் சேர்ந்து கட்டியதாகவும் இந்த பகுதி மக்களால் நம்பப்படுகிறது.</p><p> இதில் வரும் கதைகளின் அடிப்படையில் ஒரே இரவில் கட்டி முடிக்க வேண்டும் என்பதால் பேய்கள் இந்த கோவிலை அசுர பலம் கொண்டு கட்டியதாகவும், விடியற்காலை நேரங்களில் பேய்களுக்கு சக்தி குறைந்துவிடும் என்பதால் அவர்கள் அவைகள் அப்படியே கோவிலின் பணிகளை அரைகுறையாக விட்டுவிட்டு மறைந்து இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. </p><p>இந்த கோயில் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 6 மணிக்கு மூடப்படுகிறது. அதற்குமேல் கோவிலுக்குள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும், இந்த ஆலயம் சுற்றி பார்ப்பதற்கு ஒரு மணி நேரமாவது தேவைப்படும் என்று சொல்கின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T08:56:29+00:00</updated>
        </entry>
    </feed>
