<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-01T06:29:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விவாகரத்து பெற்ற காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா - 17 ஆண்டு கால போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sc-grants-divorce-to-kashmir-cm-omar-abdullah-1785565404"></link>
            <id>https://news.lankasri.com/article/sc-grants-divorce-to-kashmir-cm-omar-abdullah-1785565404</id>
            <summary type="text">17 ஆண்டு கால சட்ட போராட்டத்திற்கு பின்னர் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா விவாகரத்து பெற்றுள்ளார். 

விவாகரத்து பெற்ற காஷ்மீர் முதல்வர் 

ஜம்மு ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>17 ஆண்டு கால சட்ட போராட்டத்திற்கு பின்னர் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா விவாகரத்து பெற்றுள்ளார்.</p><h3> 

விவாகரத்து பெற்ற காஷ்மீர் முதல்வர்</h3><p> 

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சராக இருப்பவர் உமர் அப்துல்லா. இவர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் மகன் ஆவார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cde29918-b421-4561-97d6-79dc609b3c7b/26-6a6d90dd9d92b.webp' /></p><p> 

இவருக்கு கடந்த 1994 ஆம் ஆண்டு பாயல்நாத் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cff73b05-d7f3-4071-b03e-6f8a0fd3943b/26-6a6d90de4f2ef.webp' /></p><p>

கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
</p><p>
பாயல் தன்னை நியாயமற்ற முறையில் நடத்தியதாக உமர் அப்துல்லா தொடர்ந்த விவாகரத்து வழக்கை போதிய ஆதாரமில்லை எனக்கூறி குடும்ப நல நீதிமன்றம் கடந்த 2016 ஆம் ஆண்டு நிராகரித்தது.&nbsp;</p><p></p><p>

கடந்த 2023 ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றமும் அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், பாயலுக்கு மாதந்தோறும் பராமரிப்பு தொகையாக 1.5 லட்சம் ரூபாய், மகன்களில் ஒருவரின் கல்விச் செலவுக்காக மாதந்தோறும் 60,000 ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c07b901-c9b1-4971-a560-8ff12fa08295/26-6a6d90df04c0b.webp' /></p><p>
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஒமர் அப்துல்லா மேல் முறையீடு செய்திருந்தார். நீதிபதிகள் நரசிம்மா, அலோக் அராதே அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.</p><p>

உமர் அப்துல்லா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "அவர்கள் சுதந்திரமாக வாழவும் முடிவு செய்துள்ளனர்.&nbsp; எனவே அரசியல் சட்டப்பிரிவு 142-ன் கீழ் அவர்களின் திருமணத்தை ரத்து செய்து விவாகரத்து வழங்கலாம் என தெரிவித்தார். </p><p>

இதனை ஏற்ற நீதிபதிகள் நீதிபதிகள், உமர் அப்துல்லா - பாயல் தம்பதிக்கு விவாகரத்து வழங்கி வழக்கை முடித்து வைத்தனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T06:24:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் மிதக்கும் 17 கொள்கலன்கள் ; மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/17-contai-floating-sea-emergency-warning-fishermen-1785565402"></link>
            <id>https://jvpnews.com/article/17-contai-floating-sea-emergency-warning-fishermen-1785565402</id>
            <summary type="text">கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல்மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில், வர்த்தகக் கப்பலொன்றிலிருந்து 17 காலியான கொள்கலன்கள் (Containers) கடலில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல்மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில், வர்த்தகக் கப்பலொன்றிலிருந்து 17 காலியான கொள்கலன்கள் (Containers) கடலில் விழுந்து மிதந்து கொண்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>இவ்விபத்து வட அட்சரேகை 06 54' மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 079 32' அருகிலுள்ள கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e037cd4-29aa-42b0-a231-cee4ee9611bc/26-6a6d90dc12ba7.webp' /></p><p>தற்போதுள்ள கடல் நீரோட்டத்தின் தன்மைக்கு ஏற்ப, இந்த காலியான கொள்கலன்கள் பேருவலையிலிருந்து நீர்கொழும்பு ஊடாக புத்தளம் வரையிலான கடலோரப் பகுதிகளை நோக்கி, கரைக்கு மிதந்து வருவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>எனவே, குறிப்பிட்ட கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மற்றும் பயணிக்கும் அனைத்துப் நெடுநாள் மற்றும் சிறிய மீன்பிடிப் படகுகளும் இது குறித்து மிகுந்த அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். </p><p>

ஒருவேளை மிதந்து வரும் இந்த கொள்கலன்கள் தென்பட்டால், உடனடியாக அது குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் வானொலி செய்தி மையத்திற்கோ அல்லது அருகிலுள்ள மீன்பிடித் துறைமுக அதிகாரிகளுக்கோ அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T06:23:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தை விஜய் தொடர்பில் சஞ்சய் நெகிழ்ச்சி; வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jason-sanjay-emotional-about-his-father-cm-vijay-1785559667"></link>
            <id>https://jvpnews.com/article/jason-sanjay-emotional-about-his-father-cm-vijay-1785559667</id>
            <summary type="text">&amp;nbsp;தமிழ் நாட்டின் முதலமைச்சரான தனது தந்தை விஜய் குறித்து இயக்குநர் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக மனம் திறந்து பேட்டியளித்துள்ளமை பல்வேரு வதந்திகளுக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தமிழ் நாட்டின் முதலமைச்சரான தனது <a href="https://jvpnews.com/article/jason-sanjay-film-industry-reveals-vijay-sangeetha-1784207047" target="_blank">தந்தை விஜய் குறித்து </a>இயக்குநர் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக மனம் திறந்து பேட்டியளித்துள்ளமை பல்வேரு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளமை தவெக உறுப்பினர்களுக்கு&nbsp; &nbsp;மட்டுமல்லாது தளபதி விஜய் ரசிகர்களும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.</p><p>

 ஹாலிவுட் வாய்ப்பு கிடைத்தால் தனது தந்தையை அழைத்துச் செல்வேன் என்றும், பெற்றோரின் முழு ஆதரவு தனக்கு உண்டு என்றும் முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1deda9d0-9b30-4fbc-8497-4a7e686cc876/26-6a6d7a7556061.webp' /></p><h2>வாய்ப்பு கிடைத்தால் தந்தையை அழைத்துச் செல்வேன்....</h2><p>
</p><p>
ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம் அழைத்தால், இந்தியாவிலிருந்து யாரை அழைத்துச் செல்வீர்கள் என்ற கேள்விக்கு அப்பா விஜயின் பெயரை முதலில் குறிப்பிட்டார்.

சிறுவயதில் தந்தையுடன் இணைந்து கிரிக்கெட் பார்த்த நினைவுகள் மற்றும் படப்பிடிப்பு தளங்களுக்குச் சென்ற அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.</p><p></p><p>சினிமாத்துறைக்கு வருவது குறித்து தனது அம்மா மற்றும் அப்பாவிடம் பேசியபோது அவர்கள் ஆதரவு அளித்ததாகவும் இயக்குநர் ஜேசன் சஞ்சய் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந் நிலையில் முதலமைச்சர் விஜய் இன் குடும்ப வாழ்க்கை தொடர்பில் பரவி வந்த சர்ச்சைகளுக்கு மகன் சஞ்சை அளித்த பேட்டி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதோடு இயக்குனர் சஞ்சையின் பேட்டி சமூக வலைத்தளங்க்களில் அதிகம் கவனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-01T06:22:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய நிறுவனம் உள்ளிட்ட 6 நிறுவனங்கள், தனி நபர்களுக்கு அமெரிக்கா தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-bans-six-entities-including-an-indian-company-1785565338"></link>
            <id>https://canadamirror.com/article/us-bans-six-entities-including-an-indian-company-1785565338</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஈரானின் மகான் எயார் விமான நிறுவனத்துக்கு விற்பனை முகவர்களாகச் செயல்பட்டு வரும் இந்திய நிறுவனம் உள்ளிட்ட 6 நிறுவனங்கள், தனி நபர்களுக்கு அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஈரானின் மகான் எயார் விமான நிறுவனத்துக்கு விற்பனை முகவர்களாகச் செயல்பட்டு வரும் இந்திய நிறுவனம் உள்ளிட்ட 6 நிறுவனங்கள், தனி நபர்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>


ஈரானைச் சோ்ந்த மகான் எயார் விமான நிறுவனம், போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் தனது விமானங்களில் அந்த நாட்டின் புரட்சிகர பாதுகாப்புப் படைக்கு வீரர்களை ஏற்றிச் செல்லுதல், ஆயுதங்களைக் கொண்டு செல்லுதல் உள்ளிட்ட உதவிகளைச் செய்வதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2652a3c5-e222-4b31-aa55-ccc50dec3a67/26-6a6d909c7c999.webp' /></p><h2>மகான் எயார் நிறுவனத்துக்கு நிதி</h2><p> </p><p>



இதையடுத்து, அந்த விமான நிறுவனத்துக்கு உதவி செய்ததாகக் கூறி, இந்தியாவின் அதன் விற்பனை முகவராகச் செயல்படும் ஸ்கீஸ் ட்ராவல்ஸ் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.</p><p> 



இதேபோல், சீனாவைச் சோ்ந்த ஷாங்காய் விங்ஸ் நிறுவனம், ரஷ்யாவை சோ்ந்த எயார் கார்கோ நிறுவனம், ஷாங்காய் எலைட் இன்டர்நேஷனல் நிறுவனம், சீனாவை சோ்ந்த தாங் ஷின் (ஷாங்காய் விங்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர்) உள்ளிட்டோருக்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளது.
</p><p>


இதுகுறித்து அமெரிக்க நிதித் துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ஈரானின் ஐ.ஆா்.ஜி.சி. அல்லது மகான் எயார் நிறுவனத்துக்கு நிதி ரீதியாகவும், தளவாட ரீதியாகவும் அல்லது வா்த்தக ரீதியாகவும் உதவி செய்வோர், பயங்கரவாத அமைப்பை தக்கவைப்பவராக கருதப்படுவர் எனக் கூறப்பட்டுள்ளது.
</p><p>


ஸ்கீஸ் ட்ராவல்ஸ் நிறுவனமானது, டில்லி மற்றும் ஸ்ரீநகரில் அலுவலகங்களைக் கொண்டு செயல்படுகின்றது. அந்நிறுவனம் தனது வலைதளத்தில், கடந்த 2020ஆம் ஆண்டு முதல் ஈரானின் மகான் எயார் நிறுவன முகவராகச் செயல்படத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
</p><p>


ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் மேற்காசியாவில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக போர் நடைபெறுகின்றது. இந்தச் சூழ்நிலையில் ஈரானின் விமான நிறுவனத்துக்கு உதவி செய்வதாகக் கூறி இந்திய நிறுவனம் உள்ளிட்டவற்றுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-01T06:20:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவுக்கு மனைவியுடன் தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதியின் மகன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-president-s-son-flees-sl-to-australia-1785557485"></link>
            <id>https://ibctamil.com/article/ex-president-s-son-flees-sl-to-australia-1785557485</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் புதல்வர் தனது மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

குறித்த இருவரும் அவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் புதல்வர் தனது மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p> 

குறித்த இருவரும் அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

குறித்த ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் அவரது புதல்வருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><h2>அரசாங்கம் விசாரணைகள்</h2><p>

இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதியின் மகனுக்கு எதிராக சமகாலத்திலும் தற்போதைய அரசாங்கமும் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fa01c4d-28fd-4d17-a776-a34b17c8ec93/26-6a6d7a47b603b.webp' /></p><p>

இவ்வாறான நிலையில் நாட்டிலிருந்து அவர் தப்பிச் சென்றுள்ளதாக குறித்த ஊடகங்கள் கோடிட்டுக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T06:17:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரான்ஸ்பரன்ஸ் சேலையில் மயக்கும் நடிகை திவ்யபாரதி!! புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/actress-divya-bharathi-recent-photoshoot-post-1785564941"></link>
            <id>https://viduppu.com/article/actress-divya-bharathi-recent-photoshoot-post-1785564941</id>
            <summary type="text">திவ்ய பாரதிமாடலிங் துறையில் இருந்து சினிமாத்துறைக்கு அறிமுகமாகி பிரபலமானவர்களில் ஒருவர் தான் நடிகை திவ்ய பாரதி. முப்பரிமாணம் படத்தில் ஹீரோயினுக்கு தோழ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>திவ்ய பாரதி</h2><p>மாடலிங் துறையில் இருந்து சினிமாத்துறைக்கு அறிமுகமாகி பிரபலமானவர்களில் ஒருவர் தான் நடிகை திவ்ய பாரதி. முப்பரிமாணம் படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்த திவ்ய பாரதி, பேச்சுலர், மகாராஜா, கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2ba82ef-7749-423e-88a4-4a72758196cc/26-6a6d8f140431f.webp' /></p><p>
</p><p>
ஒருசில வெப் தொடர்களில் நடித்தும் வரும் திவ்ய பாரதி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.
</p><p>
தற்போது, கோல்டன் சேலையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-01T06:15:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/easter-attack-case-focus-turns-to-maithripala-1785560900"></link>
            <id>https://ibctamil.com/article/easter-attack-case-focus-turns-to-maithripala-1785560900</id>
            <summary type="text">2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு கடந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு கடந்த ஜூலை 31ஆம் திகதி கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததை அடுத்து இந்த தேசிய சோகத்தின் விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. </p><p>

அனைத்து சாட்சியங்களும் வாக்குமூலங்களும் தற்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நோக்கியே திரும்பியுள்ளன.
</p><p>
268 அப்பாவி உயிர்களை பலிகொண்ட அந்த தாக்குதல் நடந்து 7 ஆண்டுகளுக்குப் பின், இறுதி பொறுப்பாளி யார் ? என்ற கேள்விக்கு விடை காணும் நிலைக்கு நீதித்துறை வந்துள்ளது.</p><p></p><p> </p><p><u><b>

2019 முதல் 2026 வரை நடந்த விசாரணைகளில் மைத்திரி மீது முன்வைக்கப்பட்ட முக்கிய குற்றச்சாட்டுகள் வருமாறு:
</b></u></p><p>
2021 ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் படி, 2018 ஒக்டோபர் முதல் தாக்குதல் நடந்த 2019 ஏப்ரல் வரை ஜனாதிபதி மைத்திரி தேசிய பாதுகாப்பு சபை கூட்டங்களை முறையாக கூட்டவில்லை. </p><p>

இதனால் இந்திய புலனாய்வு அமைப்பு வழங்கிய முக்கிய எச்சரிக்கைகள் கூட்டாக ஆராயப்படவில்லை. அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பாதுகாப்பு கூட்டங்களுக்கு அழைக்காமல் தவிர்த்தமையும் நிர்வாகக் கோளாறு என ஆணைக்குழு கண்டித்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce3509b6-3dd5-47ef-b577-e7e0bc103567/26-6a6d896944e05.webp' /></p><p>தாக்குதலுக்கு 5 நாட்களுக்கு முன்னர் ஏப்ரல் 16ஆம் திகதி மைத்திரி தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூர் சென்றார். </p><p>பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்த அவர், நாட்டை விட்டு வெளியேறும் போது பதில் அமைச்சரை நியமிக்கவில்லை. 

இது அரசியலமைப்புக்கு விரோதமான தேசிய பாதுகாப்பை அபாயத்தில் ஆழ்த்திய நிர்வாகப் பொறுப்பற்ற செயல் என 2021 ஆணைக்குழு அறிக்கை குறிப்பிடுகிறது.&nbsp;</p><p></p><p><b><u>2023 ஜனவரி 12 உயர் நீதிமன்ற அடிப்படை உரிமை வழக்கு தீர்ப்பில் முக்கிய திருப்பம் ஏற்பட்டது. ஹேமசிறி பெர்னாண்டோவின் வாக்குமூலம்:
</u></b></p><p>“ஏப்ரல் 20 மாலை 5:30 மணிக்கு நிலந்த ஜயவர்தன, ஏப்ரல் 21 தேவாலயங்கள் மீது தாக்குதல் நடக்கலாம் என தகவல் வழங்கினார்.</p><p> உடனடியாக சிங்கப்பூரில் இருந்த ஜனாதிபதி மைத்திரிக்கு வட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பினேன். பதில் வரவில்லை.
</p><p>இதையடுத்து உயர் நீதிமன்றம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்குதலை தடுக்கத் தவறி மக்களின் அடிப்படை உரிமையை மீறிவிட்டார் என தீர்ப்பளித்து அவருக்கு ரூபாய் 100 மில்லியன் நட்டஈடு விதித்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b29d0a60-2744-44e9-8de9-abb9f42c84a3/26-6a6d8967a834d.webp' /></p><p>மரண தண்டனை தீர்ப்புக்கு முன்னர் 2026 ஜூலையில் ஹேமசிறி பெர்னாண்டோ நீதிமன்றில் அளித்த வாக்குமூலம் மைத்திரி மீதான குற்றச்சாட்டை உச்சத்துக்கு கொண்டு சென்றது. </p><p>

தாக்குதலின் பின்னர் மேலும் சிலரைக் கைது செய்ய சட்டமா அதிபர் பரிந்துரைத்தபோது மைத்திரி என்னிடம், பூஜித் ஜயசுந்தரவையும் உன்னையும் மட்டும் கைது செய்தால் போதும். மற்றவர்கள் வேண்டாம் என நேரடியாக உத்தரவிட்டார்.”</p><p>
அதே வாக்குமூலத்தில் நிலந்த ஜயவர்தன உயிர்த்த தாக்குதலின் சதிகாரர்களில் ஒருவர். அவர் நேரடியாக ஜனாதிபதியின் கீழ் செயல்பட்டவர் எனவும் ஹேமசிறி குற்றம் சாட்டினார்.</p><p>
</p><p></p><h2>புதிய விசாரணை</h2><p>மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் தமது தீர்ப்பில் இந்த வாக்குமூலங்கள் புதிய விசாரணைக்கு வழிவகுக்கும் என பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>
சட்டத்தரணி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், "உயர் நீதிமன்றம் ஏற்கனவே சிவில் பொறுப்பை நிரூபித்துள்ளது. கடமை தவறுதல், நிர்வாக முறைகேடு, நீதிக்கு இடையூறு என குற்றவியல் விசாரணைக்கான அனைத்து அடிப்படைகளும் தற்போது தயாராக உள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8688d3fe-3dd9-4922-a2f4-1be6bc5f8e67/26-6a6d89686f546.webp' /></p><p>ஹேமசிறி, நிலந்த, CID என அனைத்து சாட்சியங்களும் ஜனாதிபதியின் முடிவு என்ற ஒரே புள்ளியில் குவிகின்றன" என தெரிவித்துள்ளார்.</p><p>
268 உயிர்களின் இறுதி பொறுப்பாளி யார் என்ற கேள்விக்கு அரசியல் தலைமையின் பங்கு விசாரிக்கப்படாமல் நீதி முழுமையடையாது என்பதே பாதிக்கப்பட்ட குடும்பங்களினதும், சட்ட சமூகத்தினதும் ஒருமித்த குரலாக உள்ளது.</p><p>

இந்தநிலையில் அடுத்த விசாரணை மைத்திரிபால சிறிசேனவை மையப்படுத்தியே இருக்கும் என்பது தெளிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T06:14:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு கடற்பரப்பில் விபத்தில் சிக்கிய கடற்றொழில் படகு : மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-air-force-rescues-fishing-boat-distress-1785563053"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-air-force-rescues-fishing-boat-distress-1785563053</id>
            <summary type="text">நீர்கொழும்பு அருகே கடற்பகுதியில் பல கடற்றொழில் படகுகள் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அங்கு இருந்த கடற்றொழிலாளர்களை மீட்க, இலங்கை கடற்படையும் விமானப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு அருகே கடற்பகுதியில் பல கடற்றொழில் படகுகள் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அங்கு இருந்த கடற்றொழிலாளர்களை மீட்க, இலங்கை கடற்படையும் விமானப்படையும் இணைந்து ஒரு கூட்டு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளன.
</p><p>
இந்த விபத்தில் சிக்கிய கடற்றொழிலாளர்களை தேடுவதற்கு, விமானப்படைக்குச் சொந்தமான பெல் 412 ரக உலங்கு வானூர்தி பயன்படுத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>விபத்தில் சிக்கிய படகுகளில் ஒன்று</h2><p>
மற்றொரு கடற்றொழில் படகில் இருந்தவர்கள்&nbsp; அளித்த தகவலின் அடிப்படையில், நேற்று பிற்பகல் (31) கடற்றொழிலுக்குச் சென்ற ஒரு சிறு படகு விபத்தில் சிக்கியது முதலில் தெரியவந்தது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15567338-84bf-4f0d-b098-db66fac66108/26-6a6d8db3dbdfa.webp' /></p><p>
இருப்பினும், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், கடற்றொழில் நடவடிக்கைகளுக்காகச் சென்ற மேலும் 3 கடற்றொழில் படகுகள் காணாமல் போனமை தெரியவந்துள்ளது.
</p><p>
தற்போது, ​​விபத்தில் சிக்கிய படகுகளில் ஒன்றில் இருந்த ஒரு கடற்றொழிலாளரின் சடலம் நீர்கொழும்பு கரைக்கு ஒதுங்கியுள்ளது,</p><p> அதே சமயம் அதே படகில் பயணித்த மேலும் இரண்டு கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அதன்படி, காணாமல்போன கடற்றொழிலாளர்களையும் படகுகளையும் தேடுவதற்காக, கடற்படைக்குச் சொந்தமான கப்பலும் சிறப்பு நீர்மூழ்கி குழுவும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் விமானப்படை மற்றும் கடற்படைப் பிரிவுகளுடன் இணைந்து தேடுதல் நடவடிக்கைகள் தொடர்கின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T06:12:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடிப்பெருக்கு நாளில் செல்வம் பல மடங்கு பெருக செய்ய வேண்டிய வழிபாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/aadi-perukku-day-increase-wealth-many-times-over-1785563698"></link>
            <id>https://jvpnews.com/article/aadi-perukku-day-increase-wealth-many-times-over-1785563698</id>
            <summary type="text">ஆடி மாதத்தின் 18ஆம் நாளான ஆடிப்பெருக்கு திருநாள், வளமும் பெருக்கமும் தரும் புனித நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. நீர்நிலைகளுக்கு நன்றி செலுத்தி, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆடி மாதத்தின் 18ஆம் நாளான ஆடிப்பெருக்கு திருநாள், வளமும் பெருக்கமும் தரும் புனித நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. நீர்நிலைகளுக்கு நன்றி செலுத்தி, அவற்றை வழிபடும் சிறப்புமிக்க நாளாக இந்த நாள் கருதப்படுகிறது.</p><p></p><p>

ஆடிப்பெருக்கு நாளில் ஆற்றங்கரை, குளக்கரை உள்ளிட்ட நீர்நிலைகளின் அருகே விளக்கேற்றி மகாலட்சுமியை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. </p><p>நீர்நிலைகளை காவிரி அன்னையாகக் கருதி மஞ்சள், குங்குமம், பூக்கள், வெற்றிலை, பாக்கு போன்ற மங்களப் பொருட்களை படைத்து வழிபடுவதன் மூலம் வாழ்வில் மங்களங்கள் பெருகும் என நம்பப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/449058b5-87f7-4385-87fb-64ca1b53e968/26-6a6d8a349d6b1.webp' /></p><p>

இந்த நாளில் புனித நதிகள், குளங்கள் மற்றும் கடல் போன்ற நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கான தர்ப்பணம் உள்ளிட்ட சடங்குகளை மேற்கொள்வதும் சிறப்பாகக் கருதப்படுகிறது. </p><p>முன்னோர் வழிபாட்டின் மூலம் குடும்பத்தில் நன்மைகளும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

மேலும், திருமணமான சுமங்கலிப் பெண்கள் ஆடிப்பெருக்கு நாளில் தாலிக்கயிறு மாற்றிக் கொள்வது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. </p><p>இந்த ஆண்டில் தாலிக்கயிறு மாற்றுவதற்கு காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரையிலான நேரம் சிறந்த நேரமாகக் குறிப்பிடப்படுகிறது.

ஆடிப்பெருக்கு நாளில் மற்ற சுமங்கலிப் பெண்களுக்கு தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம், ரவிக்கை, வளையல் போன்ற மங்களப் பொருட்களை வழங்குவதும் சிறப்பாகக் கருதப்படுகிறது. </p><p>அன்னதானம் வழங்குதல், கோவில்கள் மற்றும் கோசாலைகளுக்கு தேவையான பொருட்களை தானமாக வழங்குதல் போன்றவை புண்ணியத்தைத் தரும் என்ற நம்பிக்கையும் உள்ளது.</p><p>

இந்த நாளில் மஞ்சளில் விநாயகர் உருவம் செய்து வழிபடுவதும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. மஞ்சளுடன் தண்ணீர் அல்லது பசும்பால் சேர்த்து பிடித்து, வெற்றிலை அல்லது வாழை இலையில் வைத்து விநாயகரை வழிபடுவதன் மூலம் தடைகள் நீங்கி சுப காரியங்கள் நடைபெறும் என பக்தர்கள் நம்புகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82510d3e-d6d5-4627-8a54-9546a24bcb6f/26-6a6d8a3558681.webp' /></p><p>மேலும், பசு மாட்டிற்கு பூஜைகள் செய்து உணவளிப்பது, வீட்டில் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கி நிரப்பி வைப்பது ஆகியவையும் ஆடிப்பெருக்கு நாளின் முக்கிய வழிபாட்டு முறைகளாகக் கருதப்படுகின்றன.
</p><p>
செல்வ வளம் பெருக வேண்டும் என விரும்புவோர், தங்க நகை வாங்க முடியாத நிலையில் கல் உப்பு, மஞ்சள் போன்ற மங்களப் பொருட்களை வாங்கி வைக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. </p><p>குபேர வழிபாடு, நவதானியங்கள் வைத்து வழிபடுதல் போன்றவையும் இந்த நாளில் மேற்கொள்ளப்படுகின்றன.
</p><p>
"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்
லக்ஷ்மி குபேராய நமஹ"

என்ற மந்திரத்தை 108 முறை ஜபித்து குபேர பூஜை செய்வது செல்வ வளத்தை அதிகரிக்கும் என்ற ஆன்மிக நம்பிக்கையும் நிலவுகிறது.
</p><p>
இவ்வாறு, ஆடிப்பெருக்கு திருநாள் இயற்கைக்கும் நீர்நிலைகளுக்கும் நன்றி செலுத்தி, குடும்ப வளம், நன்மை மற்றும் மங்கள வாழ்வை வேண்டி கொண்டாடப்படும் முக்கியமான ஆன்மிக நாளாக விளங்குகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T06:07:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் மின்னல் தாக்கியதில் வீடு முற்றாக எரிந்து சேதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/house-completely-burned-down-lightning-strikes-1785564432"></link>
            <id>https://jvpnews.com/article/house-completely-burned-down-lightning-strikes-1785564432</id>
            <summary type="text">அம்பாறை, இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில் மின்னல் தாக்கியதில் வீடொன்று தீப்பிடித்து முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை, இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில் மின்னல் தாக்கியதில் வீடொன்று தீப்பிடித்து முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>நேற்று (31) மாலை பெய்த பலத்த மழையின்போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. </p><p>மின்னல் தாக்கியதைத் தொடர்ந்து வீட்டின் உள்ளே பரவிய தீயினால் வீடு முழுமையாக சேதமடைந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1fb4a00-3122-4490-9b49-11504383d3f4/26-6a6d8d11e1344.webp' /></p><p>சம்பவம் இடம்பெற்ற வேளையில் வீட்டில் எவரும் இருக்கவில்லை என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். </p><p>குடும்பத்தின் தந்தை கொழும்புக்குச் சென்றிருந்த நிலையில், தாய் அருகிலுள்ள தையல் நிலையமொன்றில் பணிபுரிந்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், மழை ஆரம்பித்த போது வீட்டிலிருந்த இரு பிள்ளைகளும் அருகிலுள்ள வீட்டுக்குச் சென்றிருந்த நிலையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
</p><p>
தீ பரவியதைத் தொடர்ந்து பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போதிலும், வீட்டில் இருந்த அனைத்து பொருட்கள் மற்றும் உபகரணங்களும் தீயில் எரிந்து அழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இகினியகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T06:07:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு கடத்தவிருந்த பாரியளவான போதைப்பொருளுடன் இந்தியாவில் வசமாக சிக்கிய மூவர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-arrested-with-a-large-quantity-of-drugs-1785561378"></link>
            <id>https://ibctamil.com/article/three-arrested-with-a-large-quantity-of-drugs-1785561378</id>
            <summary type="text">இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 292 கிலோ கஞ்சாவை இந்திய காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.&amp;nbsp;தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 292 கிலோ கஞ்சாவை இந்திய காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.&nbsp;</p><p>தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள புதுமடம் கடற்கரையில் இருந்து இந்த போதைபொருளை கடத்த முற்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>குறித்த சம்பவம் நேற்று (31.07.2026) இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p></p><h2>இரகசிய தகவல்</h2><p>

</p><p>குறித்த சம்பவத்தில் காவல்துறையினர் ராமநாதபுரம் பெருங்குளத்தைச் சோ்ந்த செந்தில்வேலன், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ், சேகா் ஆகிய மூவரைக் கைது செய்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c6d2ae5-3be6-4582-9ca9-1c562736ace4/26-6a6d8a7229815.webp' /></p><p>காவல்துறைக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் புதுமடம் கடற்கரைப் பகுதியில் கண்காணிப்பு மேற்கொண்டபோது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த சிறிய லொறி ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர்.</p><p>சோதனையின் போது, 146 மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 292 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.&nbsp;</p><p>இதன் மதிப்பு சுமார் 30 இலட்சம் இந்திய ரூபாய் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது இது இலங்கைக்கு கடத்தத் திட்டமிடப்பட்டிருந்த போதைப்பொருள் என தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T06:04:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பெரும் தொகை போதைப்பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/large-narcotics-thailand-to-sri-lanka-flight-1785564243"></link>
            <id>https://jvpnews.com/article/large-narcotics-thailand-to-sri-lanka-flight-1785564243</id>
            <summary type="text">&amp;nbsp; தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து சரக்கு வானூர்தி மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட, சுமார் 10 கோடியே 6 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கஞ்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து சரக்கு வானூர்தி மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட, சுமார் 10 கோடியே 6 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கஞ்சா வகை போதைப்பொருள் சுங்கத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த ஜூலை 24 ஆம் திகதி தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து UL405 வானூர்தியின் மூலம் பரிசுப் பொதியாக இது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bc045b8-7d9b-40a0-83d7-ce2d06faf4af/26-6a6d8c54b1abc.webp' /></p><p></p><p>
</p><p>
கைப்பற்றப்பட்ட சரக்கு கடந்த ஜூலை 31 ஆம் திகதி TRICO UPB களஞ்சியசாலையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

உலோகக் கொள்கலன்களுக்குள் பொலித்தீன் பொதிகளுக்குள் மறைத்து இந்த போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T06:02:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[புளூட்டோ (மலையாளம்): திரை விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/pluto-malayalam-movie-review-1785562510"></link>
            <id>https://cineulagam.com/article/pluto-malayalam-movie-review-1785562510</id>
            <summary type="text">மலையாளத்தில் காமெடி சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக வெளியாகியுள்ள புளூட்டோ எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.கதைக்களம்

விக்னேஷ் (நீரஜ் மாதவ்) வீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலையாளத்தில் காமெடி சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக வெளியாகியுள்ள புளூட்டோ எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb1fa8d9-335a-45fe-9173-deb35e6992af/26-6a6d85927fe62.webp' /></p><h2>கதைக்களம்</h2><p>

விக்னேஷ் (நீரஜ் மாதவ்) வீட்டில் தயார் செய்யும் குளிர்பானத்தை விற்பனை செய்யத் தொடங்குகிறார். அதற்காக தொழிலதிபர் ஒருவரிடம் முன்பணமாக 5 லட்சம் ரூபாய் பெறுகிறார்.
</p><p>
விற்பனை சூடுபிடிக்க விக்னேஷ் மகிழ்ச்சியில் திளைக்க, திடீரென அவரது குளிர்பானத்தை அருந்துவதால் உடல்நல பிரச்சனை ஏற்படுவதாக குற்றம்சாட்டப்பட்டப்படுகிறது.

இது விக்னேஷ் பேரதிர்ச்சியைக் கொடுக்க, விரக்தியடைந்த அவர் மதுபோதையில் கடற்கரையில் படுத்திருக்கும்போது வானில் இருந்து ஒரு விண்கலம் கடலில் விழுகிறது.
</p><p>
அதில் இருந்து எழுந்து வரும் மனித உருவில் இருக்கும் ஏலியனிடம் (அல்தாப் சலீம்), போதையில் என்னைவிட்டு போகாதே என்று விக்னேஷ் கூறுகிறார்.

அந்த ஏலியன் விக்னேஷ் வைத்திருக்கும் மதுவை குடித்தும் உற்சாகமாக, அவரது வீட்டிற்கு வந்துவிடுகிறார்.</p><p> மறுநாள், தனது அறையில் ஏலியனை கண்டு அதிர்ச்சியடைகிறார் விக்னேஷ்.

பின்னர் அதற்கு புளூட்டோ என்று பெயர் வைத்து மலையாள மொழியை கற்றுக் கொடுக்கிறார். அதனுடைய சூப்பர் பவர்களை பயன்படுத்தி வாழ்க்கையில் சாதிக்கலாம் என்று நினைக்கும் விக்னேஷிற்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. </p><p> 

ஒரு சூப்பர் பவர் கூட இல்லாத ஏலியனை வைத்துக்கொண்டு விக்னேஷ் என்ன செய்தார்? அந்த ஏலியன் தனது கிரகத்திற்கு சென்றதா? என்பதே மீதிக்கதை.
&nbsp;</p><h2>படம் பற்றிய அலசல்
</h2><p>
இந்திய சினிமாவில் பூமிக்கு வரும் ஏலியனின் சக்திகளைக் கொண்டு, ஹீரோ தனக்கான விஷயங்களை சாதித்துக்கொண்டு இறுதியில் அந்த ஏலியனை அதன் கிரகத்திற்கு அனுப்பி வைப்பதுதான் வழக்கம்.
</p><p>
ஆனால், அதிலிருந்து மாறுபட்டு எந்த சக்தியும் இல்லாத ஒரு ஏலியனை வைத்துக்கொண்டு ஹீரோ என்ன செய்கிறார் என சற்று மாறுபட்டு காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர் ஆதித்யா சந்திரசேகர்.

என்னதான் புது ஐடியாவாக இருந்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் இந்த ஏலியன் ஏதவாது பண்ணுமா பண்ணாதா? என்று நாமே கேட்கும் அளவிற்குதான் படத்தில் உள்ளது.
</p><p>
அதேபோல் அந்த ஏலியனால் ஹீரோவுக்கு பெரிதாக எந்த நன்மையையும் ஏற்பட்டுவிடவில்லை. மாறாக பிரச்சனையான வாழ்வில் இன்னும் பிரச்சனைதான் வந்து சேர்க்கிறது.

இதனாலேயே பெரிதாக சுவாரசியம் இல்லாமலேயே திரைக்கதை நகர்கிறது. </p><p>என்றாலும் ஒரு சிறுது எதிர்பார்ப்பும், ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டும் காமெடிகளும் படத்தை பார்க்க வைக்கின்றன.

அதற்கு மேலாக, ஏலியனாக வரும் அல்தாப் சலீம் ஒவ்வொரு காட்சியிலும் தனது நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கிறார்.</p><p>

RDX படத்தில் ஆக்ஷனில் மிரட்டிய நீரஜ் மாதவ் இப்படத்தில் விக்னேஷாக சிறப்பாக நடித்துள்ளார். சண்டைக்காட்சியில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

டைகர் தம்பி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் அஜூ வர்கீஸ் ஓரளவு கவனம் ஈர்க்க, ஆர்ஷா சாந்தினி பெயரளவுக்கு மட்டுமே ஹீரோயினாக வந்து போகிறார்.
</p><p>
கிளைமேக்சில் காண்பிக்கப்படும் ஒரு சூப்பர் பவரை படம் முழுக்க பயன்படுத்தியிருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். படம் முடியும் தருவாயில் கொடுத்த லீட்-ஐ வைத்து அடுத்த பாகம் எடுத்தால் சிறப்பாக கொண்டுவர முடியும்.
</p><p>
ஆர்க்காடோவின் இசை, விஷ்ணு சர்மாவின் கேமரா, சனத்தின் படத்தொகுப்பு என டெக்னிக்கலாக படம் மிளிர்கிறது. திரைக்கதையில் நியாஸ், நித்திராஜ், அனந்து ஆகியோர் இன்னும் வேலை பார்த்திருக்கலாம்.</p><p><b><u>க்ளாப்ஸ்
</u></b></p><p>
சூப்பர் பவர் இல்லாத ஏலியன் என்ற புது ஐடியா
</p><p>
நீரஜ் மாதவ்
</p><p>
கிளைமேக்ஸ்
</p><p><b><u>
பல்ப்ஸ்
</u></b></p><p>
பெரிதாக சுவாரசியம் இல்லாத திரைக்கதை
</p><h5><b>

மொத்தத்தில் இந்த புளூட்டோ பார்வையாளர்களை சோதிக்கவில்லை என்றாலும், பெரிதாக ரசிக்க வைக்கவும் இல்லை.</b></h5><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e243c22-e5ff-441d-8c2a-e451cd49f66c/26-6a6d8591c7f12.webp' /></p>]]></content>
            <updated>2026-08-01T06:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரம்யா is Back!! மொட்டைமாடியில் ரீல்ஸ் வீடியோவை எடுத்த நடிகை ரம்யா பாண்டியன்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/ramya-pandian-mottai-maadi-reels-video-1785563517"></link>
            <id>https://viduppu.com/article/ramya-pandian-mottai-maadi-reels-video-1785563517</id>
            <summary type="text">ரம்யா பாண்டியன்சோசியல் மீடியாவில் கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன், டம்மி பட்டாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரம்யா பாண்டியன்</h2><p>சோசியல் மீடியாவில் கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன், டம்மி பட்டாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். குக் வித் கோமாளி சீசன் 1ல் கலந்து கொண்டு 2வது ரன்னர் அப் இடத்தை பிடித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c936135f-8706-456a-b3a6-2d94df15e636/26-6a6d897f3082b.webp' /></p><p>

அதன்பின் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு 3வது ரன்னர் அப்பும், பிக்பாஸ் அல்டிமேட் 1ல் கலந்து கொண்டு 2வது ரன்னர் அப் இடத்தையும் பிடித்தார். கடந்த 2024ல் யோகா பயிற்சியாளர் லோவல் தவான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.</p><p>

தற்போது கருப்புநிற டிரான்ஸ்பெரன் சேலையணிந்து மொட்டைமாடியில் எடுத்த க்யூட் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbfB6UZPQyV/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbfB6UZPQyV/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DbfB6UZPQyV/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by SriRamya Paandiyan (@actress_ramyapandian)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-01T05:52:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-order-to-case-against-ven-gnanasara-thero-1785561315"></link>
            <id>https://ibctamil.com/article/court-order-to-case-against-ven-gnanasara-thero-1785561315</id>
            <summary type="text">இஸ்லாமிய மார்க்கத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாகக் குற்றஞ்சாட்டில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராகத் தாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்லாமிய மார்க்கத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாகக் குற்றஞ்சாட்டில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.</p><p>அதன்படி, குறித்த வழக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி விசாணைக்கு எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>இவ்வழக்கு நேற்று (31) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>&nbsp;</p><h2>நீதிபதியின் உத்தரவு&nbsp;</h2><p>

இதன்போது பிரதிவாதியான ஞானசார தேரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அசோக வீரசூரிய நீதிமன்றில் விடயங்களை முன்வைக்கையில், இவ்வழக்கின் சாட்சியமாக பெயரிடப்பட்டுள்ள இறுவட்டு ஒன்றை முறைப்பாட்டாளர்கள் இதுவரை தமக்கு வழங்வில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c3caf15-3d31-4677-820a-3e1d2fc33241/26-6a6d888956d69.webp' /></p><p>

அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபருடன் கலந்துரையாடி இதனை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும், அதற்கமைய சட்டமா அதிபருடன் கலந்துரையாடலை மேற்கொண்டு அதன் முன்னேற்றத்தை அறிவிப்பதற்குத் திகதியொன்றை வழங்குமாறும் சட்டத்தரணி நீதிமன்றைக் கேட்டுக்கொண்டார்.</p><p>
</p><p>

முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த மேல் நீதிமன்ற நீதிபதி, இவ்வழக்குடன் தொடர்புடைய இறுவட்டை அடுத்த வழக்குத் திகதிக்கு முன்னதாக பிரதிவாதிகள் தரப்பிற்கு நிச்சயமாக வழங்கி வைக்குமாறு அரச சட்டத்தரணிக்கு உத்தரவிட்டார்.</p><p>

அதனைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை ஆராய்வதற்காக வழக்கினை செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T05:47:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏற்கனவே பற்றியெரியும் பூமியில்... தீவிரமடையும் எல் நினோ தொடர்பில் எச்சரித்த ஐ.நா. தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/strengthening-el-nino-un-chief-1785563356"></link>
            <id>https://news.lankasri.com/article/strengthening-el-nino-un-chief-1785563356</id>
            <summary type="text">சாதனைகள் அனைத்தையும் முறியடிக்கும் வகையில், தீவிரமடைந்து வரும் எல் நினோ நிகழ்வு, ஏற்கனவே வெப்பத்தில் தகித்துக்கொண்டிருக்கும் பூமிக்கு மேலும் வலுசேர்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாதனைகள் அனைத்தையும் முறியடிக்கும் வகையில், தீவிரமடைந்து வரும் எல் நினோ நிகழ்வு, ஏற்கனவே வெப்பத்தில் தகித்துக்கொண்டிருக்கும் பூமிக்கு மேலும் வலுசேர்ப்பதாக ஐ.நா. தலைவர் எச்சரித்துள்ளார்.</p><h2>அதிகரிக்கக்கூடும்</h2><p>
</p><p>மட்டுமின்றி, உலகை இதுவரை கண்டிராத ஒரு புதிய சூழலை நோக்கித் தள்ளிக்கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு, எல் நினோ நம் வீட்டு வாசலை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்று நான் எச்சரித்திருந்தேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25c373a6-eddd-4d7f-b9fd-750b93b5b8cb/26-6a6d8b651cb19.webp' /></p><p> </p><p>தற்போது அது வீட்டிற்குள் வந்து, வெப்பத்தை அதிகரித்துக்கொண்டிருக்கிறது என்று குட்டெரெஸ் உலக அமைப்பிடம் கூறினார். எல் நினோ வானிலை நிகழ்வானது, மத்திய மற்றும் கிழக்கு பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடலில் மேற்பரப்பு வெப்பநிலையை அதிகரித்து, </p><p>உலகளாவிய அளவில் காற்று, வளிமண்டல அழுத்தம் மற்றும் மழைப்பொழிவு முறைகளில் மாற்றங்களைத் தூண்டி, ஒட்டுமொத்த உலகளாவிய வெப்பநிலையை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.</p><p></p><p> </p><p>மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பருவநிலை மாற்றம் எல் நினோவின் தாக்கங்களை அதிகரிக்கக்கூடும்; ஏனெனில், வெப்பமடைந்த பெருங்கடல் மற்றும் வளிமண்டலம் ஆகியவை வெப்ப அலைகள் மற்றும் கனமழை போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளுக்குத் தேவையான ஆற்றலையும் ஈரப்பதத்தையும் அதிகரிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00758814-1693-4b01-87e4-d405ca9e6e1a/26-6a6d8b63ab777.webp' /></p><h2>வேறு சில ஆபத்துகளும்</h2><p> </p><p>இந்த நிலையில், சாதனை அளவிலான வெப்பம், ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் கொழுந்துவிட்டு எரியும் மிக மோசமான காட்டுத்தீ, கடும் வெப்பத்தால் ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்தது எனத் தீவிரமான சூழல் நிலவிய ஒரு கோடைக்காலத்தை நாம் ஏற்கனவே கடந்து வந்துள்ளோம் என்று குறிப்பிட்ட குட்டெரெஸ், ஆனால், சமீபத்திய அறிவியல் தரவுகளின்படி, இது வெறும் ஆரம்பக்கட்டம்தான் எனவும் குறிப்பிட்டுள்ளார். </p><p>எல் நினோவை உருவாக்கும் பசிபிக் கடற்பரப்பு, இவ்வளவு முன்கூட்டியே இவ்வளவு வெப்பமடைந்ததில்லை என குறிப்பிட்டுள்ள அவர், தற்போது சராசரியை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cf3f8fd-f54a-4c11-9655-b0c4f8953190/26-6a6d8b646aa57.webp' /></p><p> </p><p>வெப்பம் சார்ந்த அபாயங்களைத் தாண்டி வேறு சில ஆபத்துகளும் உள்ளன என்று குறிப்பிட்ட அவர், இந்தியாவில் பருவமழை சராசரிக்கும் மிகக் குறைவாகவே பெய்து வருகிறது; அதேவேளையில், மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகள் முதல் தென் அமெரிக்கா, தெற்காசியா, தென்மேற்கு பசிபிக், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகள் வரை வெப்பமான மற்றும் வறண்ட வானிலை நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்றார். </p><p>எல் நினோவின் தாக்கமும் மனிதனால் தூண்டப்பட்ட பருவநிலை மாற்றமும் ஒன்றிணையும் சூழலில், பருவநிலை தொடர்பான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு நாடுகளைக் குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-01T05:47:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் பூஜித் ஜயசுந்தரவின் குடும்ப நிலைமை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-igp-pujith-jayasundara-sentenced-to-death-1785562785"></link>
            <id>https://tamilwin.com/article/former-igp-pujith-jayasundara-sentenced-to-death-1785562785</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்க தவறிய குற்றச்சாட்டிற்காக நேற்று (31.07.2026)முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்க தவறிய குற்றச்சாட்டிற்காக நேற்று (31.07.2026)முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.</p><p>குறித்த வழக்கில் பூஜித் ஜயசுந்தர சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ரோஷன் தெஹிவள மற்றும் பூஜித் ஜயசுந்தர தெரிவித்த கருத்துக்கள் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><p>பூஜித் ஜயசுந்தர வாடகை வீட்டிலே மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.</p><p>35 வருடங்கள் பொலிஸ் சேவையில் பணியாற்றியதோடு இந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு எதிராகப் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. </p><h2>

</h2><p></p><h2>வறுமையில் வாடும் குடும்பம்</h2><p>290 வழக்குகளில் அடிப்படை உரிமை மீறல் வழக்குகளுக்காக பல இலட்சம் ரூபாய்களை அவர் நஷ்ட ஈடாகச் செலுத்தியுள்ளார் என்று சட்டத்தரணி ரோஷன் தெஹிவள சுட்டிக்காட்டினார். </p><p>
பூஜித் ஜயசுந்தர சோகத்துடனும் விரக்தியுடனும் உரையாற்றிபோது,&nbsp;</p><p>“ நான் ஒருபோதும் எந்தவொரு மனிதனையும் கொன்றதில்லை. மனிதர்களைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் கூட எனக்கு எழுந்ததில்லை. </p><p>நான் நம்பும் மதத்தின் நம்பிக்கைகளின்படி இது எனது பூர்வ ஜென்ம கர்ம காரணமாகவே நிகழ்ந்தது. நான் பொலிஸ் சேவையில் இணைந்த நாள் முதல் பொதுமக்களுக்காகவும் பொலிஸ் திணைக்களத்திற்காகவுமே அர்ப்பணித்து சேவையாற்றினேன்.
</p><p>இந்தச் சம்பவத்துடன் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தேன். பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து என்னைச் சட்டப்பூர்வமாக நீக்கவில்லை. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5688373-7aaa-47ce-bc52-81de16d0cabe/26-6a6d86a32a014.webp' /></p><p>அதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைக்கு நான்கு ஆண்டுகள் எடுத்ததாகவும் கூறினார். இறுதியில் சட்டத்தரணியின் ஆலோசனையின் பேரில் வழக்கை விலக்கிக் கொண்டதாக குறிப்பிட்டார்.
</p><p>இதனால் தான் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் FR (அடிப்படை உரிமை) வழக்குகளுக்கு அமைவாக நஷ்டஈடு செலுத்த வேண்டியிருந்தது. பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார். </p><p>எக்காலத்திலும் எவருக்கும் எந்தவொரு தவறையும் செய்யாத தனக்கு, இவ்வாறு நேர்ந்துள்ளதாகவும் தனது வயதையும் தற்போதைய ஆதரவற்ற நிலையையும் கருத்தில் கொண்டு பொருத்தமான தீர்ப்பை வழங்குமாறும் அவர் மன்றாடிக் கேட்டுக் கொண்டார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T05:42:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீன்பிடிக்கச் சென்றவர் காட்டு யானை தாக்கி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-killed-by-wild-elephant-while-fishing-1785562698"></link>
            <id>https://jvpnews.com/article/man-killed-by-wild-elephant-while-fishing-1785562698</id>
            <summary type="text">மொணராகலை தம்பகல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாஓயா பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொணராகலை தம்பகல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாஓயா பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><h3>ஆரம்பகட்ட விசாரணை</h3><p>நேற்று வெள்ளிக்கிழமை (31) காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், பதுளுவெல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2732711c-65b1-4030-a2fe-651da5fcd75a/26-6a6d864b8c2c4.webp' /></p><p>உயிரிழந்த நபர் மேலும் சிலருடன் இணைந்து இங்கினியாகல குளத்தில் மீன்பிடிக்கச் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக காட்டு யானை தாக்கியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பகல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T05:38:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வசந்த கரண்ணாகொட மற்றும் மகன் யோஷித ராஜபக்ச விவகாரம் - 25 சாட்சிகளுடன் குற்றப்பத்திரிகை தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indictments-against-karannagoda-and-yoshitha-1785561388"></link>
            <id>https://tamilwin.com/article/indictments-against-karannagoda-and-yoshitha-1785561388</id>
            <summary type="text">முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரண்ணாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரண்ணாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.</p><p> 

முறையான கல்வித்தகுதிகள் இன்றி யோஷித ராஜபக்சவை கடற்படையில் சேர்த்தல் மற்றும் அவருக்கு பிரிட்டிஷ் அரச இராணுவ கல்லுரியில் பயிற்சி அளித்தல் ஆகியவற்றின் மூலம் அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தி, யோஷித ராஜபக்சவிற்குப் பயனளித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.</p><p></p><h2>25 சாட்சிகள் பெயரிடல்</h2><p>இந்த வழக்கில் வசந்த குமார ஜெயதேவ கரண்ணாகொட முதல் பிரதிவாதியாகவும், யோஷித கனிஷ்க ராஜபக்ச இரண்டாவது பிரதிவாதியாகவும் பெயரிடப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2504369f-6648-47c6-8957-c9511531d2b7/26-6a6d861ba0949.webp' /></p><p>
இவ்வழக்கிற்காக 25 சாட்சிகளின் பெயர்களையும், 47 ஆதார ஆவணங்களின் பட்டியலையும் இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T05:37:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் பொலிஸ் மா அதிபர்களுக்கு அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் : பின்னணி என்ன...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mysteries-behind-igp-s-of-sri-lanka-1785553806"></link>
            <id>https://tamilwin.com/article/mysteries-behind-igp-s-of-sri-lanka-1785553806</id>
            <summary type="text">இலங்கையில் அதிமுக்கிய பதவிகளில் வகித்த நீதித்துறை சார்ந்த அதிகாரிகள் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்பது நீதித்துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் அதிமுக்கிய பதவிகளில் வகித்த நீதித்துறை சார்ந்த அதிகாரிகள் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்பது நீதித்துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. </p><p>

கடந்த ஆட்சியாளர்களின் கீழ் பணியாற்றிய மூன்று பொலிஸ் மா அதிபர்கள் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் நீதித்துறை மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. </p><p>

அதற்கமைய முன்னாள் பொலிஸ் மா அதிபர்களான பூஜித் ஜயசுந்தர, சி.டி. விக்கிரமரத்ன, தேசபந்து தென்னகோன் ஆகியோர் அடுத்தடுத்து பொறிக்குள் சிக்கியுள்ளனர்.</p><p></p><p> </p><h2><b>

மரண தண்டனை</b></h2><p>34ஆவது பொலிஸ் மா அதிபராக இருந்த பூஜித் ஜயசுந்தரவிற்கு நேற்றையதினம் மரண தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dbe544b-adbc-474a-9e18-e98ee25a80a3/26-6a6d68cc9068f.webp' /></p><p>2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்கத் தவறிய குற்றத்திற்காக பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>

35 ஆவது பொலிஸ் மா அதிபராக பதவி வகித்த சி.டி. விக்கிரமரத்ன கடந்த வாரம் அவரின் வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டார்.</p><p> தனது மெய்பாதுகாவலரின் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. </p><p>

கோட்டாபய ஆட்சிக்காலத்தில் பல்வேறு அடக்குமுறைகளை மேற்கொண்டு ராஜபக்சர்களுக்கு விசுவசமாக செயற்பட்டவர்களில் இவரும் ஒருவர் ஆவார். </p><p>உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் இவருக்கும் தொடர்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.</p><p></p><p> </p><h3><b>

கடும் அழுத்தம் </b></h3><p>அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சத்தில், மூன்றாம் தரப்பினால் கொடுக்கப்பட்ட கடும் அழுத்தம் காரணமாக இவ்வாறு உயிரை மாய்த்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0757b634-3fb3-4c5a-a2a5-0ead195a554e/26-6a6d68cd5db16.webp' /></p><p>36ஆவது பொலிஸ் மா அதிபரான தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டு வலுகட்டாயமாக அவரின் பதறி பறிக்கப்பட்டது.</p><p>நாடாளுமன்றக் குழுவின் விசாரணையின் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டதுடன் தற்போது பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>

கடந்த ராஜபக்சக்களின் ஆட்சியின் போது போதைப்பொருள் உட்பட பல்வேறு குற்றச்செயல்களுக்கு உடந்தையாக இவர் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பூஜித் ஜயசுந்தர அடிப்படையில் நல்ல மனிதர் என்ற போதிலும், ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக செயற்பட்டு இன்று சிறைக் கைதியாக மாறியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. </p><p>பொம்மைகளாக செயற்பட்டவர்கள் இன்று தண்டிக்கப்பட்டுள்ளனர். எனினும் பொம்மைகளை ஆட்டுவித்த வித்தைக்காரர்கள் எப்போது தண்டிக்கப்படுவார்கள் என நாட்டு மக்கள் காத்திருக்கின்றனர்.&nbsp;</p><p></p><p></p><p> 
 </p>]]></content>
            <updated>2026-08-01T05:31:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சைக்குள்ளாகும் ராகுல் காந்தியின் தமிழக பயணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/rahul-gandhi-come-to-tamilnadu-today-1785561280"></link>
            <id>https://ibctamilnadu.com/article/rahul-gandhi-come-to-tamilnadu-today-1785561280</id>
            <summary type="text">தமிழகம் வருகை தரும் ராகுல் காந்தி, முதலமைச்சர் விஜய்யை சந்திக்காதது பேசுபொருளாகியுள்ளது.

தமிழகம் வரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகம் வருகை தரும் ராகுல் காந்தி, முதலமைச்சர் விஜய்யை சந்திக்காதது பேசுபொருளாகியுள்ளது.</p><p>

தமிழகம் வரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, மாமல்லபுரத்தில் இன்று நடைபெறும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுக்கான முகாமில் கலந்து கொள்கிறார்.</p><p>

இதன் பின்னர் முன்னாள் மாநில தலைவர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்ளுடன் தமிழகத்தில் அரசியல் களநிலவரம் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LJPNSCEnhM4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>

2029ம் ஆண்டு நாடாளுமன்ற பணிகள் குறித்தும் உள்ளாட்சி தேர்தல் குறித்தும் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடைபெறும் என கூறப்படுகிறது.
</p><p>
ஆனால் தமிழக முதலமைச்சர் விஜய்யை சந்திக்காமல் செல்வது பேசுபொருளாகியுள்ளது.
</p><p>
கர்நாடகா காவிரி பிரச்சனைக்கு நடுவே இருவரின் சந்திப்பு நிகழாமல் இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e456c9a2-f350-4e35-944e-374e9f9abaae/26-6a6d8476b971a.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-01T05:31:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள சுந்தரி சீரியல் புகழ் கேப்ரியல்லா... நாயகன் இவர்தானா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/serial-actress-gabrella-sellus-new-project-1785560571"></link>
            <id>https://cineulagam.com/article/serial-actress-gabrella-sellus-new-project-1785560571</id>
            <summary type="text">நடிகை கேப்ரியல்லாசன் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் சுந்தரி. 2021ம் ஆண்டு தொடங்கிய இந்த சீரியல் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகை கேப்ரியல்லா</h2><p>சன் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் சுந்தரி. </p><p>2021ம் ஆண்டு தொடங்கிய இந்த சீரியல் தொடர்ந்து இரண்டு பாகமாக ஒளிபரப்பாகி முடிவடைந்தது. சுந்தரி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார் கேப்ரியல்லா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae91d459-54eb-4722-851d-dc9e43a13b2e/26-6a6d81ef1ae29.webp' /></p><p> </p><p>சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே ஒளிப்பதிவாளர் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.
</p><p>கடந்த சில நாட்களுக்கு முன் கேப்ரியல்லா மருத்துவமனையில் இருந்து ஒரு புகைப்படம் வெளியிட்டார், ஆனால் என்ன ஆனது என்பது தெரியவில்லை. ரசிகர்கள் மட்டும் அவருக்கு நீங்கள் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று பதிவுகள் போட்டு வந்தனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63a43dd1-2321-4ead-b858-5661c8b43ed8/26-6a6d81f011e27.webp' /></p><h2>புதிய சீரியல்</h2><p>
சுந்தரி சீரியல் தொடர்ந்து சீரியலோ, படங்களோ கமிட்டாகாமல் இருந்த கேப்ரியல்லா குறித்து ஒரு சந்தோஷ செய்தி வந்துள்ளது. </p><p>அதாவது அவர் சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் தொடரில் கமிட்டாகியுள்ளாராம். செல்லமே செல்லமே தொடரை இயக்கிய Mediamogul தயாரிப்பு நிறுவனம் தான் இந்த சீரியலை தயாரிக்கிறார்களாம். </p><p>கேப்ரியல்லா நாயகியாக நடிக்க ஷ்யாம் நாயகனாக நடிக்க உள்ளாராம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f5c6db1-bc3c-4f3d-9721-fbb217ff128e/26-6a6d82d9e0333.webp' /></p>]]></content>
            <updated>2026-08-01T05:30:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த பன்னீர் கிரேவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/tasty-paneer-gravy-recipe-in-tamil-1785560925"></link>
            <id>https://manithan.com/article/tasty-paneer-gravy-recipe-in-tamil-1785560925</id>
            <summary type="text">உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்களுக்கு பன்னீர் ஒரு சிறந்த உணவுத் தேர்வாக கருதப்படுகிறது. சுவையுடன் ஆரோக்கியத்தையும் வழங்கும் இந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்களுக்கு பன்னீர் ஒரு சிறந்த உணவுத் தேர்வாக கருதப்படுகிறது. சுவையுடன் ஆரோக்கியத்தையும் வழங்கும் இந்த உணவு, பல்வேறு ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷமாக விளங்குகிறது.</p><p>

பன்னீரில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகளவில் இருப்பதால், எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாக வளரவும், அவற்றின் ஆரோக்கியத்தை நீண்ட காலம் பராமரிக்கவும் பெரிதும் உதவுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0aa5abb-aac5-412d-b19c-315a24a04020/26-6a6d83c09761d.webp' /></p><p>குறிப்பாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் அளவோடு பன்னீரை உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல பலன்களைத் தரும்.

அதேபோல், பன்னீர் உயர்தர புரதத்தின் சிறந்த மூலமாகும். இது தசைகளின் வளர்ச்சி, பழுதுபார்ப்பு மற்றும் உடலின் வலிமையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.</p><p>உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவர்களுக்கு பன்னீர் மிகவும் ஏற்ற உணவாகும்.

பன்னீரில் கார்போஹைட்ரேட் குறைவாகவும், புரதம் அதிகமாகவும் இருப்பதால், நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்த உதவுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0fb996d-9f41-4066-add5-1629d1b1912a/26-6a6d83c148d82.webp' /></p><p> </p><p>இதன் காரணமாக உடல் எடையை குறைக்க அல்லது கட்டுக்குள் வைத்திருக்க முயற்சிப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக அமைகிறது.

மேலும், பன்னீரில் ஜிங்க் (Zinc) சத்து கணிசமாக இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. </p><p>இதன் மூலம் சளி, காய்ச்சல் போன்ற பொதுவான தொற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

பன்னீரில் உள்ள பொட்டாசியம், இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவுவதோடு, இதய ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/054791f0-4808-462b-a606-099b2eb211d7/26-6a6d83c20d7ee.webp' /></p><p> </p><p>மேலும், பக்கவாதம் போன்ற தீவிர உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தையும் குறைக்க உதவுவதாகக் கருதப்படுகிறது.

அதுமட்டுமின்றி, பன்னீரில் காணப்படும் லினோலிக் அமிலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை எரிக்க உதவுவதோடு, சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி, பொலிவுடன் வைத்திருக்கவும் துணைபுரிகிறது.</p><p>

இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த பன்னீரை வைத்து, வீட்டிலேயே உணவக சுவையில் காரசாரமான பன்னீர் கிரேவி எப்படி எளிதாக செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>
தேவையான பொருட்கள்
</h2><p>பொடிப்பதற்கு:

சீரகம் – 1/2 டீஸ்பூன்
</p><p>சோம்பு – 1/2 டீஸ்பூன்</p><p>
மிளகு – 1 டீஸ்பூன்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86ef806d-4afd-4016-aaf5-a7c53e7cbc76/26-6a6d83c2d3437.webp' /></p><p>WK4UXGL&nbsp;</p><p><b>தாளிப்பதற்கு தேவையானவை&nbsp;</b></p><p>எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
</p><p>பட்டை – 1 துண்டு
</p><p>பிரியாணி இலை – 2</p><p>
ஏலக்காய் – 3
</p><p>கிராம்பு – 3
</p><p>வரமிளகாய் – 1
</p><p>கறிவேப்பிலை – 1 கொத்து
</p><p>வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கியது)
</p><p>இஞ்சி-பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
</p><p>உப்பு – தேவையான அளவு
</p><p>மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
</p><p>மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
</p><p>மல்லித்தூள் – 2 டீஸ்பூன்
</p><p>கரம் மசாலா – 1 டீஸ்பூன்
</p><p>தக்காளி – 2 (அரைத்தது)
</p><p>தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
</p><p>தண்ணீர் – தேவையான அளவு</p><p>
அரைத்த மிளகு</p><p>சீரகப் பொடி
</p><p>பன்னீர் – 200 கிராம் (துண்டுகளாக்கியது)</p><p>
கொத்தமல்லி – சிறிதளவு (அலங்கரிக்க)</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3389761d-1d81-4cd8-9b66-3f813419ba02/26-6a6d83c3837fc.webp' /></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">செய்முறை</span></p><p>முதலில் மிக்சர் ஜாரில் மிளகு, சீரகம் மற்றும் சோம்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
</p><p>
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து நறுமணம் வரும் வரை தாளிக்கவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8334b2ad-9d8d-4d9c-bbd8-9d4f47c4cb2d/26-6a6d83c43ef19.webp' /></p><p>
அதன்பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும். பிறகு இஞ்சி-பூண்டு பேஸ்டை சேர்த்து அதன் பச்சை வாசனை முழுவதுமாக நீங்கும் வரை வதக்க வேண்டும்.
</p><p>
இப்போது மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் மற்றும் கரம் மசாலாவை சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் வரை நன்கு கிளறி வதக்கவும்.
</p><p>
பிறகு அரைத்த தக்காளியை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து, மூடி வைத்து 10 முதல் 12 நிமிடங்கள் வரை எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக விடவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eed241a8-ca7d-491f-baa3-97082d61b9c6/26-6a6d83c4f0e80.webp' /></p><p></p><p>
</p><p>
அதன்பின் தயிரை சேர்த்து நன்றாக கலந்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிரேவியின் பதத்தை சரிசெய்யவும். உப்பு சுவை பார்த்து தேவைப்பட்டால் மேலும் சிறிதளவு சேர்க்கலாம்.</p><p>

பின்னர் அரைத்து வைத்துள்ள மிளகு-சீரகப் பொடியை சேர்த்து நன்றாக கிளறவும். அதன் பிறகு பன்னீர் துண்டுகளை சேர்த்து மெதுவாக கலந்து, 5 நிமிடங்கள் வரை வேக விட வேண்டும்.
</p><p>
இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், மணமும் சுவையும் நிறைந்த,&nbsp; &nbsp;ஸ்டைலில் அசத்தலான பன்னீர் கிரேவி தயார்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T05:29:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 292 கிலோ கஞ்சா பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/292-kg-of-cannabis-seized-tamil-nadu-sri-lanka-1785562155"></link>
            <id>https://jvpnews.com/article/292-kg-of-cannabis-seized-tamil-nadu-sri-lanka-1785562155</id>
            <summary type="text">இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள புதுமடம் கடற்கரையிலிருந்து தமிழகம் புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 292 கிலோ கஞ்சாவை ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள புதுமடம் கடற்கரையிலிருந்து தமிழகம் புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 292 கிலோ கஞ்சாவை பொலிஸார் நேற்று (31) பறிமுதல் செய்துள்ளனர்.</p><p> </p><p></p><p>சம்பவம் தொடர்பில் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். </p><p>

இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தவிருப்பதாக பொலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d1b1782-b0e5-4e4a-860c-d5fbc807f223/26-6a6d842ce59fd.webp' /></p><p> இதையடுத்து, புதுமடம் கடற்கரைப் பகுதியில் பொலிஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.</p><p> 

அப்போது, அந்தப் பகுதியில் வந்த சிறிய லொறி ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனா். </p><p>அதில்146 மூட்டையில் 30 இலட்சம் இந்தியா ரூபா மதிப்பிலான 292 கிலோ கஞ்சா இருந்ததும், இவற்றை இலங்கைக்கு கடத்தவிருந்ததும் தெரியவந்தது. </p><p>

இதையடுத்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்த பொலிஸார், அந்த லொறியில் பயணித்த ராமநாதபுரம் பெருங்குளத்தைச் சோ்ந்த செந்தில்வேலன், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ், சேகா் ஆகிய மூவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T05:29:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயினிற்குள் நுழைந்த 60,000 ஏதிலிகள்; திரும்பி சென்ற 50,000 பேர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/60-000-refugees-entered-spain-50-000-returned-1785562207"></link>
            <id>https://canadamirror.com/article/60-000-refugees-entered-spain-50-000-returned-1785562207</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் சியூட்டா (Ceuta) பகுதிக்குள் நுழைந்த சுமார் 60,000 ஏதிலிகளில், 50,000 பேர் தன்னார்வமாக மீண்டும் மொராக்கோவுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் சியூட்டா (Ceuta) பகுதிக்குள் நுழைந்த சுமார் 60,000 ஏதிலிகளில், 50,000 பேர் தன்னார்வமாக மீண்டும் மொராக்கோவுக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
ஸ்பெயினுக்குள் நுழைய முயன்றபோது ஏற்பட்ட நெரிசல் மற்றும் கடலைக் கடந்து நீந்திச் செல்லும் முயற்சியின் போது, மூழ்கி மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 57 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a5545f1-ddcd-4033-a18f-00f905547841/26-6a6d84617c993.webp' /></p><p>
</p><p>
மனிதக் கடத்தல் கும்பல்கள் இந்த நிலைமையைப் பயன்படுத்தி மக்களை சட்டவிரோதமாக எல்லை தாண்டத் தூண்டியதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்சஸ் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், மனிதக் கடத்தல் வலையமைப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T05:29:16+00:00</updated>
        </entry>
    </feed>
