<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-07T15:33:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் புனரமைக்கப்படாத பாலம்! உடைந்து விழும் நிலையில் மக்கள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/people-protest-as-bridge-collapses-1786111523"></link>
            <id>https://ibctamil.com/article/people-protest-as-bridge-collapses-1786111523</id>
            <summary type="text">கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பரவிப்பாஞ்சான் பகுதி ஏ-9
வீதியில் இருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த
இரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பரவிப்பாஞ்சான் பகுதி ஏ-9
வீதியில் இருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த
இரும்பு பாலம் சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் குறித்த பாலத்தை திருத்தி
தரும்படி&nbsp;இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>குறித்த போராட்டமானது இன்று (07.08.2026) பாலத்தினுள் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>பாலத்தின் அடித்தளங்கள்</h2><p>

1980 ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட பாலம் 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில்
சேதமடைந்து விடுதலைப் புலிகளால் தற்காலிக பாலமாக அமைத்து நீண்ட காலமாக
பாவனையில் இருந்து 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற பின்னர் இராணுவத்தினரின்
ஆளுமைக்குள் இருந்து குறித்த இடத்தை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து பல
போராட்டங்களை முன்னெடுத்த பின்னர் பகுதி பகுதியாக குறித்த பிரதேசத்தை 2018 ஆம்
ஆண்டு மீட்டேடுத்தார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9dccaef-f9a5-43d6-bc7a-e90bbfaf75a6/26-6a75e624a7afc.webp' /></p><p>அதன் பின்னர் மாவட்டத்துக்கு பல அபிவிருத்திகள்
வந்தபோதும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பரவிப்பாஞ்சான் கிரமத்தின்
வீதிகளை புறம் தள்ளப்பட்டு ஒதுக்கப்பட்டே காணப்பட்டுள்ளது.</p><p>தற்போது பாலத்தின்
அடித்தளங்கள் பலவீனமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில்
உள்ளது.</p><p> இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கைகள்
இடம்பெறாத நிலையில் குறித்த பாலத்தை திருத்தி தரும்படி போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
இந்தப் பாலத்தைப் பயன்படுத்தி வந்த பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உயிர்
பயத்துடனேயே கடக்க வேண்டிய சூழல் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T15:25:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு ஏமனில் மீண்டும் தீவிரமடையும் மோதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/conflict-intensifies-again-in-eastern-yemen-1786115292"></link>
            <id>https://tamilwin.com/article/conflict-intensifies-again-in-eastern-yemen-1786115292</id>
            <summary type="text">ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை இலக்கு
வைத்து இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத்
தாக்குதல்களை நடத்தியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை இலக்கு
வைத்து இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத்
தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சவூதி ஆதரவு இராணுவப் படை அதிகாரி ஒருவர்
தெரிவித்துள்ளார்.</p><p>

சவூதி அரேபிய தலைமையிலான கூட்டுப் படைகளுக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும்
இடையே மீண்டும் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையிலேயே இத்தாக்குதல்
இடம்பெற்றுள்ளது.
</p><p>
ஏமன் தலைநகர் சனாவிற்கு (Sanaa) மேற்கே உள்ள பகுதியிலிருந்தே இந்த ஏவுகணைகள்
ஏவப்பட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்குத்
தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>தாக்குதல்கள்&nbsp;</h2><p>
</p><p>
மாரேப் நகரின் பல பகுதிகளை இலக்கு வைத்து இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும்,
இதில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டிருக்கக் கூடும் எனவும்
அப்பகுதிவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d64ae4d1-6812-4fa4-b1d4-2bd0afcdbb43/26-6a75f733b279a.webp' /></p><p>
</p><p>
இதனிடையே, சவூதி அரேபியாவின் தென்மேற்கு எல்லைப் பகுதியான நஜ்ரான் (Najran)
பிராந்தியத்தின் மீதும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக
சவூதி தலைமையிலான கூட்டுப் படையின் உத்தியோகபூர்வ பேச்சாளர் மேஜர் ஜெனரல்
துர்கி அல்-மால்கி உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p>

பொதுமக்கள் வாழும் பகுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலில் பெண்
மற்றும் குழந்தை உட்பட 11 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள சவூதி
கூட்டுப் படை, ஹூதி அமைப்பினரின் இச்செயலை வன்மையாகக் கண்டித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T15:23:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வறட்சியை சமாளிக்க தமிழக அரசு ரூ.288.97 கோடி நிதி ஒதுக்கீடு - வெளியான அரசாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/tn-gov-allocates-288-97-crore-to-manage-drought-1786114462"></link>
            <id>https://ibctamilnadu.com/article/tn-gov-allocates-288-97-crore-to-manage-drought-1786114462</id>
            <summary type="text">தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால், பல்வேறு பகுதிகளில் நீராதாரங்கள் பாதிக்கப்பட்டு விவசாய பணிகளில் சிரமம் ஏற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால், பல்வேறு பகுதிகளில் நீராதாரங்கள் பாதிக்கப்பட்டு விவசாய பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது.</p><p>குறிப்பாக மழையை நம்பி சாகுபடி செய்யும் விவசாயிகள், வறட்சியின் தாக்கத்தை சமாளிக்க தமிழக அரசு உரிய நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b96cb310-1959-4370-a1d0-1fe4c7ddccda/26-6a75f544be0b8.webp' /></p><h2>ரூ.288.97 கோடி நிதி ஒதுக்கீடு&nbsp;</h2><p> </p><p>இந்நிலையில், வறட்சி நிலையை சமாளிக்கும் வகையில் ரூ.288.97 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.</p><p>இந்த நிதியின் மூலம் வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகளில் நீர் ஆதாரங்களை மேம்படுத்தவும், விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் வசதியை உறுதி செய்யவும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.</p><p>
</p><p>
இதன் ஒரு பகுதியாக, தேவையான இடங்களில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள கிணறுகளை தூர்வாரி நீர்மட்டத்தை அதிகரித்தல், நீர் சேமிப்பு மற்றும் விநியோக வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>

இந்த நடவடிக்கைகள் மூலம் வறட்சியின் தாக்கத்தை குறைத்து, விவசாயிகளுக்கு தேவையான நீர் வசதியை ஏற்படுத்துவதுடன், சாகுபடி பணிகள் தொடர்ந்து நடைபெறுவதற்கும் உதவியாக இருக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-07T15:20:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை விட்டு வெளியேறிய 3791 சிறப்பு மருத்துவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3791-specialist-doctors-have-left-the-country-1786115955"></link>
            <id>https://ibctamil.com/article/3791-specialist-doctors-have-left-the-country-1786115955</id>
            <summary type="text">2020-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 3,791 சிறப்பு மருத்துவர்கள் இலங்கையை விட்டு வெளியேறினர் என்று பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2020-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 3,791 சிறப்பு மருத்துவர்கள் இலங்கையை விட்டு வெளியேறினர் என்று பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர்களில் பெரும்பாலானோர் முதுகலைப் படிப்பைத் தொடர வெளிநாடுகளுக்குச் சென்றிருந்ததாகவும், மற்றவர்கள் வேலைவாய்ப்புக்காகவோ, தங்கள் வாழ்க்கைத் துணையுடன் வெளிநாடு சென்றிருந்ததாகவும், கூறியுள்ளார்.
</p><p>
இந்த ஆண்டு இதுவரை 280 மருத்துவர்கள் வெளிநாடு செல்ல விண்ணப்பித்துள்ளதாக விஜேமுனி தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஊதியமில்லா விடுப்பு&nbsp;</h2><p>

2020-ஆம் ஆண்டு முதல் ஜூன் 2026-ஆம் ஆண்டுக்குள் 1,429 மருத்துவர்களுக்கு வெளிநாடு செல்வதற்காக ஊதியமில்லா விடுப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p>


அதே காலகட்டத்தில், 140 சிறப்பு மருத்துவர்களுக்கும் வெளிநாட்டுப் பயணத்திற்காக ஊதியமில்லா விடுப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.</p><p>

வெளிநாடுகளுக்குக் குடிபெயர்வதற்கு முன்பு பதவி விலகும் அல்லது பணியிலிருந்து விலகும் மருத்துவர்கள் குறித்த தரவுகளை சுகாதார அமைச்சகம் பராமரிப்பதில்லை என்று துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T15:19:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோ மேயர் தேர்தல் கருத்துக் கணிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/olivia-chow-leads-toronto-mayoral-race-1786113237"></link>
            <id>https://canadamirror.com/article/olivia-chow-leads-toronto-mayoral-race-1786113237</id>
            <summary type="text">கனடாவின் டொராண்டோ மேயர் தேர்தலுக்கான ரேஸில் தற்போதைய மேயர் ஒலிவியா சௌ தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
 புதிதாகக் களமிறங்கியுள்ள முன்னாள் மத்திய அமைச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் டொராண்டோ மேயர் தேர்தலுக்கான ரேஸில் தற்போதைய மேயர் ஒலிவியா சௌ தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
</p><p> புதிதாகக் களமிறங்கியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் கிறிஸ் அலெக்ஸாண்டர் 10 சதவீத ஆதரவுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாக புதிய கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது.</p><p> 
லியாசன் ஸ்ட்ராடஜீஸ் நிறுவனம் ஆகஸ்ட் 4 மற்றும் 5-ஆம் திகதிகளுக்கு இடையில் 1,000 டொராண்டோவாசிகளிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56d96f90-6f08-46fa-9f71-e417102f0cd8/26-6a75ecd789724.webp' /></p><p>
</p><p>ஒலிவியா சௌ: 47% , பிராட் பிராட்போர்ட்: 40% , கிறிஸ் அலெக்ஸாண்டர்: 10% மற்றும் மற்ற வேட்பாளர்கள்: 3% வாக்குகள் பெற்றுக்கொள்வார்கள் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
</p><p>கிறிஸ் அலெக்ஸாண்டர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன் நடத்தப்பட்ட முந்தைய ஆய்வில், 'மற்ற வேட்பாளர்களுக்கு' 10% ஆதரவு இருந்தது. </p><p>தற்போது அந்த ஆதரவு அலெக்ஸாண்டரை நோக்கி நகர்ந்துள்ளதாக லியாசன் ஸ்ட்ராடஜீஸ் தலைவர் டேவிட் வலன்டின் தெரிவித்துள்ளார். </p><p>
முடிவெடுக்காத வாக்காளர்கள் உட்பட அனைத்து மக்களிடமும் நடத்தப்பட்ட கணிப்பில், ஒலிவியா சௌ 38%, பிராட்போர்ட் 32%, அலெக்ஸாண்டர் 8% ஆதரவைப் பெற்றுள்ளனர்.
</p><p> இன்னும் 20 சதவீத வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்று முடிவெடுக்காமல் உள்ளனர். தேர்தல் முடிவை தீர்மானிப்பதில் இந்த 20% வாக்காளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T15:18:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வோகான் பூங்காவில் தகாத செயலில் ஈடுபட்ட ஊழியர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/vaughan-amusement-park-ride-operator-charged-1786111302"></link>
            <id>https://canadamirror.com/article/vaughan-amusement-park-ride-operator-charged-1786111302</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் வோகான் பகுதியில் உள்ள பிரபல பொழுதுபோக்கு பூங்காவில், சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டின் கீழ் சவாரி இயங்குனர் ஒருவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் வோகான் பகுதியில் உள்ள பிரபல பொழுதுபோக்கு பூங்காவில், சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டின் கீழ் சவாரி இயங்குனர் ஒருவர் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளார்.
</p><p>இச்சம்பவத்தில் மேலும் பல சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
</p><p>யார்க் பிராந்திய பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த மே 25 அன்று சிறுமி ஒருவர் தனது நண்பர்களுடன் பெயர் குறிப்பிடப்படாத பொழுதுபோக்கு பூங்காவிற்குச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee64b643-6cda-4305-b89d-b6b646cc1aad/26-6a75e54883ee8.webp' /></p><p> </p><p>
அங்கு அவர் சவாரி ஒன்றில் ஏற முயன்றபோது, பாதுகாப்புப் பரிசோதனைகளைச் செய்வதாகக் கூறி, அங்கிருந்த ஊழியர் அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
</p><p>இச்சம்பவம் தொடர்பாக பிராம்ப்டன் நகரைச் சேர்ந்த ஜுகாத் தாமி என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>அவர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.</p><p>
இவரிடம் மேலும் சிலர் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகக் கருதும் பொலிஸார், பொதுமக்கள் அடையாளம் காணும் பொருட்டு சந்தேகநபரான தாமியின் புகைப்படத்தை வெள்ளிக்கிழமை வெளியிட்டனர்.</p><p>
இந்த விசாரணை தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்தால், யார்க் பிராந்திய பொலிஸின் சிறப்புப் பிரிவை 1-866-876-5423 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது Crime Stoppers அமைப்பையோ அநாமதேயமாகத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T15:17:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோவில் இந்த வார இறுதியில் காலைநிலை குறித்த எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/rain-sun-and-possible-thunderstorms-1786112413"></link>
            <id>https://canadamirror.com/article/rain-sun-and-possible-thunderstorms-1786112413</id>
            <summary type="text">&amp;nbsp;இந்த வார இறுதியில் டொராண்டோவில் வெயில், மழை மற்றும் அதிக ஈரப்பதம் கலந்த வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
கனடிய சுற்றுச்சூழல் திணைக்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இந்த வார இறுதியில் டொராண்டோவில் வெயில், மழை மற்றும் அதிக ஈரப்பதம் கலந்த வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>
கனடிய சுற்றுச்சூழல் திணைக்களத்தின் கணிப்பின்படி என இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>வெள்ளிக்கிழமை பிற்பகலில் வெப்பநிலை அதிகபட்சமாக 27 பாகை செல்சியஸாக பதிவாகும். பகுதி மேகமூட்டமான வானிலையுடன் 40 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதுடன், இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியக்கூறும் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ab15b33-7a32-45ca-8433-598cfb1d3ad1/26-6a75e99f70750.webp' /></p><p> </p><p>
ஈரப்பதம் காரணமாக உணரும் வெப்பநிலை 34 ஆக இருக்கும். இரவில் வெப்பநிலை குறைந்தபட்சமாக 21பாகை செல்சியஸாக குறையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.</p><p> 
சனிக்கிழமையன்றும் இதேபோன்ற வானிலையே தொடரும். அதிகபட்ச வெப்பநிலை 29 பாகை செல்சியாக உயரும். 60 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதுடன் இடியுடன் கூடிய மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.</p><p>
 இடையிடையே மேகமூட்டமான சூழல் நிலவுவதுடன், வெப்பநிலை 37 வரை எட்டக்கூடும். இரவில் குறைந்தபட்ச வெப்பநிலை 19 பாகை செல்சியதாக இருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
</p><p>ஞாயிற்றுக்கிழமையன்று வெப்பநிலை அதிகபட்சமாக 28 பாகை செல்சியஸ் வரை இருக்கும். 30 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அன்றைய இரவு நேரத்தில் வெப்பநிலை 18 பாகை செல்சியாககக் குறையக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T15:15:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[190 ஆண்டுகளில் மிக வறட்சியான ஜூலை., இங்கிலாந்தில் பதிவான வானிலை சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/england-faces-record-drought-heatwave-alerts-1786113811"></link>
            <id>https://news.lankasri.com/article/england-faces-record-drought-heatwave-alerts-1786113811</id>
            <summary type="text">இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் நீண்ட காலமாக மழை பெய்யாமல் வறட்சி நிலை தொடர்கிறது.

கடந்த 190 ஆண்டுகளில் பதிவான மிக வறட்சியான ஜூலை மாதமாக இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் நீண்ட காலமாக மழை பெய்யாமல் வறட்சி நிலை தொடர்கிறது.</p><p>

கடந்த 190 ஆண்டுகளில் பதிவான மிக வறட்சியான ஜூலை மாதமாக இந்த 2026 ஜூலை மாதத்தை பிரித்தானிய வானிலை மையம் (Met Office) அறிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/461229bd-ce5d-46c8-a930-19c1a0ff97d9/26-6a75f3a9c8f01.webp' /></p><h2>சாதனை&nbsp;</h2><p>பிரித்தானியாவில் பல வானிலை நிலையங்கள் தங்களது பழைய சாதனைகளை முறியடித்துள்ளன.

சர்ரேயில் உள்ள விஸ்லி பகுதியில் தொடர்ந்து 51 நாட்கள் மழையின்றி வறட்சி நிலவுகிறது. </p><p>லின்கன்ஷையரில் உள்ள கோனிங்ஸ்பி பகுதியில் 42 நாட்கள் மழையின்றி சாதனை படைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், வசந்த காலத்திலிருந்து நிலவும் உயர் அழுத்த மண்டலம். இது மேகங்கள் உருவாகாமல் தடுப்பதால், மழை பெய்யாமல் போயுள்ளது.</p><p></p><p>

சில இடங்களில் சிறிய அளவில் மழை பெய்தாலும், வறட்சி பாதித்த பகுதிகளில் அது போதுமானதாக இல்லை. இதனால் புல்வெளிகள் வாடி, பசுமை நிலங்கள் மஞ்சள் நிறமாக மாறியுள்ளன.
</p><p>
1893-ஆம் ஆண்டு லண்டனின் மைல் எண்ட் பகுதியில் 73 நாட்கள் மழையின்றி இருந்தது மிக நீண்ட சாதனையாகும். அதனைத் தொடர்ந்து 1976-ஆம் ஆண்டு விஸ்லியில் 36 நாட்கள், 2018-ஆம் ஆண்டு கோனிங்ஸ்பியில் 33 நாட்கள் மழையின்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79ed4db2-bdd6-48b0-a2ad-fdaa3127a8d9/26-6a75f3aa821ce.webp' /></p><h2>வானிலை:&nbsp;மழை பெய்யும் வாய்ப்பு இல்லை</h2><p>வரும் வாரங்களில் வானிலை சிறிது மாறுபடும் என கணிக்கப்பட்டாலும், வறட்சியை முடிவுக்கு கொண்டு வரும் அளவுக்கு மழை பெய்யும் வாய்ப்பு இல்லை. வறட்சி முடிவடைய, தொடர்ந்து மற்றும் பரவலாக மழை பெய்ய வேண்டும். ஆறுகள், நீர்த்தேக்கங்கள், நிலத்தடி நீர் ஆகியவை நிரம்பும் அளவுக்கு மழை பெய்யும் போது மட்டுமே வறட்சி முடிவடையும்.
</p><p>
மேலும், அடுத்த வாரங்களில் வெப்பநிலை மீண்டும் 30 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் 35 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் UK Health Security Agency பல இடங்களில் மஞ்சள் நிற வெப்ப எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.
</p><p></p><p>இந்த வெப்ப அலை காரணமாக, முதியவர்கள், குழந்தைகள் மற்றும் உடல் நலக்குறைவுள்ளவர்கள் அதிக பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது. மருத்துவ சேவைகள் மீது அழுத்தம் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T15:00:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாவூறும் சுவையில் பாய் வீட்டு நெய்ச்சோறு.., எப்படி செய்வது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ghee-rice-recipe-in-tamil-1786105810"></link>
            <id>https://news.lankasri.com/article/ghee-rice-recipe-in-tamil-1786105810</id>
            <summary type="text">பொதுவாக பாய் வீட்டு ஸ்பெஷல் உணவுவகைகளில் பிரியாணிக்கு அடுத்த இடத்தில் இருப்பது நெய் சோறுதான்.

நெய்ச்சோறுடன் மிளகு முட்டை கிரேவி, செட்டிநாடு சிக்கன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக பாய் வீட்டு ஸ்பெஷல் உணவுவகைகளில் பிரியாணிக்கு அடுத்த இடத்தில் இருப்பது நெய் சோறுதான்.</p><p>

நெய்ச்சோறுடன் மிளகு முட்டை கிரேவி, செட்டிநாடு சிக்கன், மட்டன் சுக்கா சேர்த்து சாப்பிட்டால் ருசி அருமையாக இருக்கும்.</p><p>

அந்தவகையில், நாவூறும் சுவையில் பாய் வீட்டு ஸ்டைல் நெய்ச்சோறு எப்படி செய்வதென்று பார்ப்போம்.</p><p></p><p>
</p><h2>
தேவையான பொருட்கள்</h2><ul><li> 
 
நெய் - 2 ஸ்பூன்</li><li> 
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன் </li><li>பிரியாணி இலை</li><li> 
பட்டை- 1 துண்டு</li><li> 
கிராம்பு- 3</li><li> ஏலக்காய்- 2</li><li> 
அன்னாசிப்பூ- 1</li><li>
 ஜாவித்ரி- 2 </li><li>
கல்பாசி- 2
</li><li>வெங்காயம் - 2 </li><li>
முந்திரி - 10</li><li> 
பச்சை மிளகாய் - 4 </li><li>
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்</li><li> 
புதினா இலை </li><li>
கொத்தமல்லி இலை</li><li> 
உப்பு - 1 ஸ்பூன்
</li><li>தக்காளி - 1&nbsp;</li><li> தண்ணீர் - 1¾ கப்</li><li> 
பாஸ்மதி - 1 கப்
</li></ul><h2>
செய்முறை</h2><p> 

முதலில் ஒரு பாத்திரத்தில் நெய், தேங்காய் எண்ணெய், பட்டை , கிராம்பு, அன்னாசிபூ, ஏலக்காய், பிரியாணி இலை, ஜாவித்ரி, கல்பாசி சேர்த்து கிளற வேண்டும்.
</p><p>
பின் இதில் வெங்காயம், முந்திரி, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cd8c904-7aba-4539-951f-3d7abd9fc366/26-6a75d03670269.webp' /></p><p>பின்னர் இதில் புதினா, கொத்தமல்லி, தக்காளி மற்றும் உப்பு சேர்த்து கிளற வேண்டும்.</p><p>

அடுத்து இதில் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் 20 நிமிடம் ஊறவைத்த அரிசியை சேர்த்து வேகவைக்கவும்.</p><p>

இதற்கடுத்து தண்ணீர் முழுவதையும் அரிசி உறியும் போது மூடி போட்டு 20 நிமிடம் தம் போட வேண்டும்.
</p><p>
இறுதியாக இதன் மேல் லேசாக நெய், எண்ணெய்யில் பொரித்த வெங்காயம் சேர்த்து கிளறினால் சுவையான நெய்ச்சோறு தயார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T15:00:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[அது நடந்தால் ரஜினி உடனே ரூ.1 கோடி கொடுப்பார்: லதா ரஜினிகாந்த்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/rajinikanth-will-give-1-cr-rivers-connecting-latha-1786114080"></link>
            <id>https://cineulagam.com/article/rajinikanth-will-give-1-cr-rivers-connecting-latha-1786114080</id>
            <summary type="text">நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த் தற்போது அமைப்பு தொடங்கி நடத்தி வருகிறார். அதன் நிகழ்ச்சி இன்று நடந்த நிலையில் அதில் பேசிய லதா ஒரு முக்கிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த் தற்போது அமைப்பு தொடங்கி நடத்தி வருகிறார். அதன் நிகழ்ச்சி இன்று நடந்த நிலையில் அதில் பேசிய லதா ஒரு முக்கிய விஷயத்தை கூறி இருக்கிறார்.</p><p>நீண்ட காலமாக நீடித்து வரும் காவிரி நதிநீர் பிரச்சனை பற்றி செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். '2002லேயே ரஜினி நதிநீர் இணைப்புக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக கூறினார். அதை உங்கள் இயக்கம் மூலம் தர வாய்ப்பு இருக்கிறதா.. அதற்காக உங்கள் இயக்கம் வலியுறுத்துமா?' என கேட்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f119b90f-a595-4219-972e-a72aed7fe54e/26-6a75f0225c1d9.webp' /></p><p>
</p><h2>தொடங்கினால் உடனே தருவார்
</h2><p>நதிகள் இணைப்பு திட்டம் தொடங்கினால் அடுத்த நிமிடமே ரஜினி ஒரு கோடி ரூபாய் கொடுப்பார் என லதா தெரிவித்து உள்ளார்.</p><p>

மேலும் உங்கள் இயக்கத்துக்கு ரஜினி ஆதரவு எவ்வளவு இருக்கிறது என கேட்டதற்கு. "அது குடும்பத்திற்குள் நடக்கும் private விஷயம். அதை எல்லாம் வெளிப்படையாக சொல்ல முடியாது" என பதில் கூறி இருக்கிறார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T14:48:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை மோதல் குறித்து அநுர வெளியிட்ட சிறப்பு அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/anura-issues-special-report-on-prison-conflict-1786113636"></link>
            <id>https://ibctamil.com/article/anura-issues-special-report-on-prison-conflict-1786113636</id>
            <summary type="text">நாட்டிலுள்ள அனைத்து சிறைகளிலும் சிறைப் பாதுகாப்பு மற்றும் கைதிகள் நலன் மற்றும் அவசரகால பதிலளிப்பு ஆகியவற்றை நிவர்த்தி செய்வதற்காக ஒரு கூட்டுப் பொறிமுற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டிலுள்ள அனைத்து சிறைகளிலும் சிறைப் பாதுகாப்பு மற்றும் கைதிகள் நலன் மற்றும் அவசரகால பதிலளிப்பு ஆகியவற்றை நிவர்த்தி செய்வதற்காக ஒரு கூட்டுப் பொறிமுறையை நிறுவுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.</p><p> 

சிறைகளில் நிலவும் தற்போதைய நிலைமை மற்றும் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. </p><p>

முன்மொழியப்பட்ட இந்த செயல்முறையானது, கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆய்வு செய்து, அவர்களின் நலனைக் கண்காணித்து, அவசர காலங்களில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>33 சிறைச்சாலைகள் </h2><p>இந்த செயல்முறையானது அனைத்து 33 சிறைச்சாலைகளையும் உள்ளடக்கி, சிறைச்சாலைகள் திணைக்களம், இலங்கை காவல்துறை, சிறப்பு பணிப்படை (STF) மற்றும் தேவைப்படுமிடங்களில் ஆயுதப்படைகளின் அதிகாரிகளையும் கொண்டிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/821d0f98-6baf-45d3-a3e7-af4a2371e6d2/26-6a75ee65de6cb.webp' /></p><p>
</p><p>
இந்த திட்டம் அடுத்த வாரம் நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T14:40:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைகளை உடைத்து கொண்டு தப்பிக்க முயற்சிக்கும் கைதிகள்! அநுரவை வீழ்த்த நடக்கும் சதியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/magazine-prison-colombo-issues-anura-1786108221"></link>
            <id>https://tamilwin.com/article/magazine-prison-colombo-issues-anura-1786108221</id>
            <summary type="text">இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளிலே அண்மைக் காலங்களாக இடம்பெறும் மோதல்கள் ஒருங்கிணைக்கப்பட்ட குழுவினால் திட்டமிட்ட விதத்திலே இடம்பெறுவதாக&amp;nbsp; சமூக செயற்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளிலே அண்மைக் காலங்களாக இடம்பெறும் மோதல்கள் ஒருங்கிணைக்கப்பட்ட குழுவினால் திட்டமிட்ட விதத்திலே இடம்பெறுவதாக&nbsp; சமூக செயற்பாட்டாளர் ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.</p><p>அத்தோடு, ஊழல்வாதிகள், கடந்த கால அரசாங்கத்திலே குற்றச் செயல்களிலே ஈடுபட்டோர் தாங்கள் போய் சிறைச்சாலைகளில் இருப்பதற்கு சிறைச்சாலைகள் உகந்த நிலையில் இல்லை என்பதை எடுத்துக்காட்டுவதற்கு இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>சிறைச்சாலைக்கு செல்ல இருக்கக்கூடிய ஊழல்வாதிகளும் கடந்த காலத்தில் குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளும் தங்களுக்கு சிறைச்சாலைகள் சரியான விதத்தில் இல்லை, அங்கு பாதுகாப்பு இல்லை என்ற விடயத்தை கூறி சிறைக்கு செல்வதை தடுக்க முயல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>இவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக அரசாங்கம் நிச்சயம் தண்டணை வழங்கும்.சிறைச்சாலைகள் இல்லாவிட்டாலும் புதிய சிறைச்சாலைகள் உருவாக்கப்பட்டு ஊழல்வாதிகள் அடைக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/OdsoL-OTxHs" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T14:37:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியா - இலங்கை டெஸ்ட் போட்டி; ரசிகர்கள் இலவசமாக காண அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/fans-get-free-entry-on-india-vs-srilanka-test-1786113448"></link>
            <id>https://news.lankasri.com/article/fans-get-free-entry-on-india-vs-srilanka-test-1786113448</id>
            <summary type="text">இந்தியா - இலங்கை இடையே நடைபெற்ற உள்ள டெஸ்ட் தொடரை மைதானத்தில் இலவசமாக காண இலங்கை கிரிக்கெட் அனுமதி வழங்கியுள்ளது. 

இந்தியா - இலங்கை டெஸ்ட் போட்டி
...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா - இலங்கை இடையே நடைபெற்ற உள்ள டெஸ்ட் தொடரை மைதானத்தில் இலவசமாக காண இலங்கை கிரிக்கெட் அனுமதி வழங்கியுள்ளது. </p><h3>

இந்தியா - இலங்கை டெஸ்ட் போட்டி
</h3><p>
இந்தியா கிரிக்கெட் அணி, இலங்கை சென்று 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.&nbsp;</p><p> 

முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், 2வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 23 ஆம் திகதி கொழும்பில் உள்ள SSC மைதானத்திலும் தொடங்க உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c2161bb-4792-4c03-a9b8-934197c8d108/26-6a75eda9ae0af.webp' /></p><p> 

இந்த டெஸ்ட் தொடர், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 2025-2027 சுழற்சியின் ஒரு பகுதியாகும்.</p><p>இந்த 2 டெஸ்ட் போட்டிகளையும் இலவசமாக மைதானத்தில் பார்க்கலாம் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p>

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையே நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான பொது அனுமதி இலவசம் என்பதை இலங்கை கிரிக்கெட் (SLC) அறிவிக்கிறது. இதன் மூலம், உலகத் தரம் வாய்ந்த டெஸ்ட் கிரிக்கெட்டைக் காண கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.</p><p> 

இந்த முன்னெடுப்பைப் பயன்படுத்திக்கொண்டு, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் உற்சாகத்தை அனுபவிக்குமாறு, நாடு முழுவதிலுமிருந்து கிரிக்கெட் ஆர்வலர்கள், இளம் கிரிக்கெட் வீரர்கள், குடும்பங்கள் மற்றும் விளையாட்டு ரசிகர்களை இலங்கை கிரிக்கெட் அன்புடன் அழைக்கிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T14:37:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சிறை கலவரங்கள் ; கைதிகளின் நிலை தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rison-riots-brought-under-control-1786109178"></link>
            <id>https://jvpnews.com/article/rison-riots-brought-under-control-1786109178</id>
            <summary type="text">குருவிட்ட மற்றும் பல்லன்சேன ஆகிய இரு சிறைச்சாலைகளின் கட்டுப்பாடும் தற்போது முழுமையாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அத்திணைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருவிட்ட மற்றும் பல்லன்சேன ஆகிய இரு சிறைச்சாலைகளின் கட்டுப்பாடும் தற்போது முழுமையாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
 

இன்று காலை பதற்றமான நிலைமை நிலவிய இவ்விரு சிறைச்சாலைகளின் நிலைமையும் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e18ad013-d173-4c2f-9738-67e771a50db9/26-6a75dcfc09d56.webp' /></p><h2>கண்ணீர்ப்புகைப் பிரயோகம்&nbsp;</h2><p>&nbsp;நீர்கொழும்பு, பல்லன்சேன சிறைச்சாலையிலும் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து, நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப்புகைப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது.</p><p>பல்லன்சேன சிறைச்சாலை கலவரத்தில் காயமடைந்த 28 கைதிகளை வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>


இதற்கமைய, நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார், விசேட அதிரடிப்படை, கலவரத் தடுப்புப் பிரிவு மற்றும் விமானப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>


இதன்போது நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


பின்னர், பாதுகாப்புப் படையினர் சிறைச்சாலையின் கட்டுப்பாட்டை மீண்டும் சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T14:30:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ.900 கோடி லாட்டரி நிறுவனத்திடம் நன்கொடை வாங்கியது ஏன்? உதயநிதி - ஆதவ் விவாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/aadhav-arjuna-udhayanidhi-debat-900cr-lottery-fund-1786111964"></link>
            <id>https://ibctamilnadu.com/article/aadhav-arjuna-udhayanidhi-debat-900cr-lottery-fund-1786111964</id>
            <summary type="text">லாட்டரி நிறுவனத்திடம் திமுக ரூ.900 கோடி நன்கொடை வாங்கியது குறித்து ஆதவ் அர்ஜுனா மற்றும் உதயநிதி ஸ்டாலின் விவாதம் செய்தனர். 

திமுகவினர் நடத்தும் சார...</summary>
            <content type="html"><![CDATA[<p>லாட்டரி நிறுவனத்திடம் திமுக ரூ.900 கோடி நன்கொடை வாங்கியது குறித்து ஆதவ் அர்ஜுனா மற்றும் உதயநிதி ஸ்டாலின் விவாதம் செய்தனர். </p><h3>

திமுகவினர் நடத்தும் சாராய ஆலை</h3><p> 

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் 
நடைபெற்றது.</p><p> 

இதில் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் பேசும் போது, "நாங்கள் மதுவுக்கு எதிரானவர்கள். மதுவில் வருமானம் பெருகுவதை நாங்கள் விரும்ப மாட்டோம். மதுவில் ஊழலை ஒழித்ததால்தான் வருமானம் கூடும் என்கிறோம்" என்று கூறினார்.&nbsp;</p><p></p><p> 
இதற்கு பதிலளித்த திமுக எம்.எல்.ஏ எ.வ.வேலு, "போகிற போக்கில் ஊழல் என்கிறார். மேடையில் பேசுவதைப் போல இங்கே பேசக்கூடாது. ஆதாரத்தோடு பேசவேண்டும்" என்று கூறினார்.&nbsp;</p><p></p><p> 

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "திமுகவின் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்பி ஜெகத்ரட்சகனை சாராய ஆலையை நடத்தி டாஸ்மாக் மூலம் ஆர்டர் பெறுகின்றனர். திமுகவில் இருக்கும் பார்லிமென்ட் எம்பிக்கள் பலரும் சாராய ஆலை நடத்துகின்றனர்" என பேசினார். </p><h3> 

ரூ.900 கோடி நன்கொடை </h3><p>

அவர் பேசும் போது திமுக எம்எல்ஏ க்கள் லாட்டரி , லாட்டரி என குரல் எழுப்ப, லாட்டரி நிறுவனத்திடம் உங்கள் கட்சி ரூ.900 கோடி நன்கொடை பெற்றது ஏன்? தைரியம் இருந்தால் பதில் சொல்லுங்கள். நான் எந்த தொழிலும் இல்லை. எந்த நிறுவனமும் நடத்தவில்லைஎன கேள்வி எழுப்பினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39f59f5d-49f4-48f7-85dc-8eb959cd8fac/26-6a75e7deecefa.webp' /></p><p>

அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "அமைச்சர் திமுக ஏன் லாட்டரி நிறுவனத்திடம் இருந்து பணம் வாங்கினார்கள் என்று கேட்கிறார். அதனை கொடுத்தது அவருடைய மாமனார் தான். ஏன் கொடுத்தீர்கள் என்பதை உங்கள் மாமனாரிடம் கேட்டு விளக்கத்தை பெற்றுக்கொள்ளலாம்" என கூறினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1e2ac1b-68ba-4b66-8559-31d3f0d11dea/26-6a75e7df9d4d5.webp' /></p><p>

அதற்கு, "அது அவர் மற்றும் அவர் அப்பாவுக்கு மட்டும் தான் தெரியும். அது அவர் அப்பாவிடம் தான் கேட்க வேண்டும். எனக்கு அது எதுவும் தெரியாது. அப்பாவை இங்கே காணும்; வீட்டிற்கு போய் உங்கள் அப்பாவிடம் கேளுங்கள்" என்று பதிலளித்தார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T14:13:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்லன்சேன சிறைச்சாலையின் 28 கைதிகள் வெலிக்கடை மருத்துவமனையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pallansena-prison-riot-28-prisoners-in-hospital-1786108726"></link>
            <id>https://tamilwin.com/article/pallansena-prison-riot-28-prisoners-in-hospital-1786108726</id>
            <summary type="text">பல்லன்சேன சிறையில் நடந்த கலவரத்தின் போது காயமடைந்த 28 கைதிகளை வெலிக்கடை சிறை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.நிலைமை கட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்லன்சேன சிறையில் நடந்த கலவரத்தின் போது காயமடைந்த 28 கைதிகளை வெலிக்கடை சிறை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p><h2>நிலைமை கட்டுப்பாட்டில்..&nbsp;</h2><p>
</p><p>
இன்று காலை (07) குறித்த சிறையில் கலவரம் வெடித்ததை அடுத்து, அதனைக் கட்டுப்படுத்த பொலிஸார், பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை, கலவரக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் விமானப்படை என்பன வரவழைக்கப்பட்டன.</p><p>
</p><p>இந்நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டன.&nbsp;</p><p>அதன் பின்னர் பாதுகாப்புப் படைகள் சிறையின் கட்டுப்பாட்டை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் வசம் ஒப்படத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/GUAHSMeQWRE" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T14:08:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் முதியவர் செய்த விபரீத செயலால் வந்த வினை ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-elder-s-drastic-action-causes-shock-1786108104"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-elder-s-drastic-action-causes-shock-1786108104</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், அத்தியடிப் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் இரசாயனப் திரவத்தை அருந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த இரவு குடும்பத்தில் ஏற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், அத்தியடிப் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் இரசாயனப் திரவத்தை அருந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
</p><p>
கடந்த இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான இவர், வீட்டிலிருந்த கல்சியம் நீக்கி திரவத்தைக் குடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25cf6db2-4f2d-4654-bb0b-33b17ee921c0/26-6a75d8c9cecff.webp' /></p><h2>&nbsp;தீவிர சிகிச்சை</h2><p>
</p><p>
இரசாயனத்தை அருந்தியதால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அவர், உடனடியாக மீட்புக் குழுவினரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். </p><p>எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்றைய தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p></p><p>&nbsp;மரணத்திற்கான மேலதிக பின்னணிகள் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T14:00:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வெடித்த கலவரங்கள்.. இந்திய அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/27-indian-fishermen-sri-lankan-prisons-jaishankar-1786101718"></link>
            <id>https://tamilwin.com/article/27-indian-fishermen-sri-lankan-prisons-jaishankar-1786101718</id>
            <summary type="text">2026 ஜூலை மாத இறுதிக்குள் 27 தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கையின் காவலில் இருப்பார்கள் என்று இந்திய உள்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஜூலை மாத இறுதிக்குள் 27 தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கையின் காவலில் இருப்பார்கள் என்று இந்திய உள்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். </p><p>

மக்களவையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p>

தமிழக கடற்றொழிலாளர்களுக்குச் சொந்தமான 249 படகுகள் இலங்கை பாதுகாப்புப் படையினரின் காவலில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><h2>கைதிகளின் பாதுகாப்பு&nbsp;</h2><p> 

இதற்கிடையில், இந்திய கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்குத் தனது அரசு முதன்மை முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a508719-d8d7-4a61-8f03-c71137a9f14e/26-6a75e35e21b5f.webp' /></p><p> </p><p>

கடற்றொழிலாளர்களையும் கடற்றொழில் படகுகளையும் உடனடியாக விடுவிப்பது மற்றும் திருப்பி அனுப்புவது உள்ளிட்ட இந்தப் பிரச்சினைகள் குறித்து, இலங்கை அரசாங்கத்துடன் இருதரப்பு வழிமுறைகள், இராஜதந்திர வழிகள் மற்றும் பல்வேறு உத்தியோகப்பூர்வ மற்றும் உயர் மட்ட கலந்துரையாடல்கள் மூலம் தொடர்ந்து விவாதித்து வருவதாக அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.</p><p> 

மேலும், 2021ஆம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களின் எண்ணிக்கை 1,554 ஆகும். 

இந்த கடற்றொழிலாளர்களில் சுமார் பத்து பேர் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T13:56:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி புதைகுழி அகழ்வில் குறையாத என்புக்கூடுகள் - இன்றும் 7 புதிதாக அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bones-missing-from-chemmani-burial-site-excavation-1786110116"></link>
            <id>https://tamilwin.com/article/bones-missing-from-chemmani-burial-site-excavation-1786110116</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணி 100 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரையில் 507 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணி 100 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரையில் 507 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதற்கமைய இன்றைய தினம்(07.08.2026) 7 என்புக்கூடுகள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p><h2>56ஆவது நாளாக முன்னெடுப்பு</h2><p> </p><p>

இதுவரை அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் சுமாராக 501 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c48a99c-0eaf-4533-b0c9-1538ebce84ab/26-6a75e13bb0a53.webp' /></p><p>

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 46ஆவது நாளாக இன்றைய தினம் பணிகள் இடம்பெற்றுள்ளன.
</p><p>
இதில், புதிதாக 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T13:44:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் வாகனம் - முதற்கட்ட சோதனை முயற்சி வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uttarakhand-man-builds-electric-flying-car-1786109689"></link>
            <id>https://news.lankasri.com/article/uttarakhand-man-builds-electric-flying-car-1786109689</id>
            <summary type="text">இந்தியாவில் மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் வாகனத்தின் முதற்கட்ட சோதனை முயற்சி வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.  

மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் வாகனம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் வாகனத்தின் முதற்கட்ட சோதனை முயற்சி வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. </p><h3> 

மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் வாகனம்
</h3><p>
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம், அல்மோராவில் உள்ள காஃப்லிகான் கிராமத்தைச் சேர்ந்த ரவி தம்டா(Ravi Tamta), ஹபிடா ஸ்கை(HAPIDA SKY) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தினை நடத்தி வருகிறார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fd5e991-06de-4e1e-9494-c51b278bc39a/26-6a75defb0c244.webp' /></p><p>

இவர் தற்போது HAPIDA SKYNeX என்ற ஒற்றை இருக்கை மின்சார பறக்கும் வாகனத்தின் முன்மாதிரியை வெற்றிகரமாக சோதனை ஓட்டம் செய்துள்ளார்.</p><p> 

அல்மோராவில் உள்ள திறந்தவெளியில் நடத்தப்பட்ட இந்த சோதனைப் பறப்பு வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.</p><p> 

ரவி தம்டா அவரது கிராமத்திற்கும் வீட்டிற்கும் இடையிலான சுமார் 40 கிலோமீட்டர் சாலைப் பயணத்திற்கு கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் ஆகும். ஆனால் ஒரு தனிநபர் பறக்கும் வாகனம் மூலம் அதே தூரத்தை சுமார் 10 முதல் 15 நிமிடங்களில் கடந்துவிட முடியும்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="hi" dir="ltr">📍बधाई अल्मोड़ा, उत्तराखंड<br><br>अल्मोड़ा के युवा नवप्रवर्तक रवि टम्टा और उनकी टीम ने HAPIDA SKYNeX के प्रोटोटाइप का सफल प्रारंभिक परीक्षण कर उत्तराखंड का नाम गौरवान्वित किया है।<a href="https://x.com/hashtag/Uttarakhand?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Uttarakhand</a> <a href="https://x.com/hashtag/Almora?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Almora</a> <a href="https://x.com/hashtag/RaviTamta?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#RaviTamta</a> <a href="https://x.com/hashtag/HapidaSkynex?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#HapidaSkynex</a> <a href="https://x.com/hashtag/MadeInIndia?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#MadeInIndia</a> <a href="https://x.com/hashtag/Innovation?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Innovation</a> <a href="https://x.com/hashtag/FutureOfMobility?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#FutureOfMobility</a> <a href="https://x.com/hashtag/StartupIndia?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#StartupIndia</a> <a href="https://t.co/CVsV3tgXen">pic.twitter.com/CVsV3tgXen</a></p>&mdash; Mahipal Singh Rawat (@MahipalRawat18) <a href="https://x.com/MahipalRawat18/status/2085618491625988200?ref_src=twsrc%5Etfw">August 7, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

இந்தியாவில் பாதுகாப்பான, மலிவான மற்றும் நீடித்த தனிநபர் வான்வழிப் போக்குவரத்தை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதே இத்திட்டத்தின் நோக்கம். 

இது ஒருமுறை மட்டும் செய்யப்பட்ட சோதனை அல்ல. பல ஆண்டுகளாகத் தான் துரத்தி வந்த ஒரு கனவின் விளைவு இது என அவர் தெரிவித்துள்ளார். </p><p> 

தனிநபர் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தக்கூடிய ஒரு பாதுகாப்பான, மின்சாரப் பறக்கும் வாகனத்தை உருவாக்குவதே அவருடைய நீண்டகால இலக்காக உள்ளது. </p><p>

இந்த வாகனத்தின் பேட்டரி திறன், பறக்கும் நேரம், வேகம், சுமக்கும் திறன் மற்றும் மின்னேற்றும் நேரம் உள்ளிட்ட தொழில்நுட்பத் தகவல்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. </p><p>

இந்த சோதனை மேம்பட்ட பதிப்பிற்குச் செல்வதற்கு முன்பு, தூக்குவிசை, சமநிலை மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பறத்தல் போன்ற அடிப்படைத் தேவைகளில் கவனம் செலுத்த குழுவிற்கு உதவுகிறது.&nbsp;</p><p></p><p>

இது வழக்கமான போக்குவரத்திற்காக பயன்பாட்டிற்கு வரும் முன்பு, விமானப் போக்குவரத்து அனுமதிகள், பாதுகாப்புச் சான்றிதழ், வான்வெளி விதிகள் மற்றும் இயக்க நடைமுறைகள் ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கும்.
</p><p>
இது பயன்பாட்டிற்கு வரும் போது, தொலைதூர மலைக் கிராமங்களில் இணைப்பை மேம்படுத்தவும், நிலச்சரிவு, வெள்ளம் போன்ற பேரிடர் நிவாரணம் மற்றும் அவசரகால மீட்புப் பணிகளுக்கு உதவவும், சாலை உள்கட்டமைப்பு குறைவாக உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு விரைவான பயணம் மேற்கொள்ளவும் பயன்படும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T13:37:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக முதல்வர் விஜயின் வழக்கில் திடீர் திருப்பம் ; விவகாரத்து மனுவை திரும்பப் பெற்ற சங்கீதா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cm-vijay-s-wife-sangeetha-withdraws-divorce-case-1786098208"></link>
            <id>https://jvpnews.com/article/cm-vijay-s-wife-sangeetha-withdraws-divorce-case-1786098208</id>
            <summary type="text">தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றுள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றுள்ளார்.</p><p style="text-align: justify;">

மனு திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு முடித்து வைக்கப்படுவதாக செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8dcf428-010c-493a-9e87-18083b0c16bb/26-6a75b221aabe7.webp' /></p><h2 style="text-align: justify; ">விசாரணை</h2><p style="text-align: justify; ">

இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் முதலமைச்சர் விஜய் தரப்பில் ஆஜராக விலக்கு கோரப்பட்டது. ஆனால் நீதிமன்றம் சட்டசபை முடிந்தபின்பு ஆஜராக கோரியிருந்தது. </p><p style="text-align: justify;">பின்னர் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மனுவை திரும்பப் பெற்றுள்ளார் சங்கீதா.

விஜய் மற்றும் சங்கீதாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">வழக்கு விசாரணைக்கு வந்தபோது இருவரும் நேரில் ஆஜராகாமல், அவர்களது வழக்கறிஞர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகினர். இருவரும் பிரபலமானவர்கள் என்பதால், வீடியோ மூலம் ஆஜராக அனுமதி வழங்குமாறு தரப்புகள் கோரிக்கை வைத்திருந்தன.
</p><p style="text-align: justify;">
இன்று நடைபெற்ற விசாரணையின்போது, சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்ததால் முதல்-அமைச்சர் விஜய் நேரில் ஆஜராக முடியவில்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify; ">
அதே நேரத்தில், லண்டனில் இருந்த சங்கீதா வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜராகி, விவாகரத்து மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை முடித்து வைத்து கோர்ட்டு உத்தரவிட்டது.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-07T13:32:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவீதியில் தடம்புரண்டன பட்டா ரக வாகனம் - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சாரதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pickup-truck-derailed-in-the-middle-of-the-road-1786109363"></link>
            <id>https://tamilwin.com/article/pickup-truck-derailed-in-the-middle-of-the-road-1786109363</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டியில் இடம்பெற்ற விபத்தில் பட்டா ரக வாகனம் ஒன்று தடம்புரண்டுள்ளது.

இந்த விபத்து இன்று(07.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டியில் இடம்பெற்ற விபத்தில் பட்டா ரக வாகனம் ஒன்று தடம்புரண்டுள்ளது.</p><p>

இந்த விபத்து இன்று(07.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில்
வாகன விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.</p><h2>

உயிர்தப்பிய சாரதி</h2><p>
வர்த்தக நிறுவனம் ஒன்றின் வாகனமானது, ஊர்காவற்துறையில் இருந்து யாழ்ப்பாணம்
நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது, வீதி ஓரத்தில் இருந்த
எல்லைக் கல்லுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c51f55b-d71f-4f7a-acfd-c70addf6750e/26-6a75ddeb15de1.webp' /></p><p> 


சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தினால் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் வாகனத்தில் பயணித்த சாரதி உட்பட இருவரும்
சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T13:30:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலக்கு வைக்கப்பட்ட அரசுப்படையின் ராணுவ முகாம்கள் ; திடீர் தாக்குதல்களால் பறிக்கப்பட்ட உயிர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sudden-attacks-target-cities-many-killed-1786107522"></link>
            <id>https://canadamirror.com/article/sudden-attacks-target-cities-many-killed-1786107522</id>
            <summary type="text">ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. </p><p>இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5379e5cc-9395-452d-8ff7-5f850e9fe9c8/26-6a75d683b4e1e.webp' />&nbsp;</p><p>
</p><p>
ஏமனின் சில பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதம் உள்பட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.</p><p>
ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் ஏமனில் இரு நாடுகளும் மறைமுக மோதலில் ஈடுபட்டு வருகின்றன.</p><p>

அதேவேளை, அமெரிக்கா, ஈரான் மோதலின்போது ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தினர் .</p><p> இந்த தாக்குதலுக்கு சவுதி பதிலடி கொடுத்தது.

இந்நிலையில், ஏமனில் அரசுப்படையினர் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர்.
</p><p>
ஏமனின் ஹட்ரமொட், மரிப் ஆகிய நகரங்களில் அரசுப்படையினரின் ராணுவ முகாம்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். </p><p>இந்த தாக்குதலில் அரசுப்படையினர் 30 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர்.</p>]]></content>
            <updated>2026-08-07T13:27:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் உயர் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/several-senior-police-officers-transferred-1786106829"></link>
            <id>https://tamilwin.com/article/several-senior-police-officers-transferred-1786106829</id>
            <summary type="text">சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக,&amp;nbsp; இடமாற்றங்களை வழங்க பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக,&nbsp; இடமாற்றங்களை வழங்க பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
</p><p>
 

இதற்கமைய, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சம்பத் குமார சிறப்புப் பிரிவில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கும், தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றிய கித்சிறி ஜயலத் சப்ரகமுவ மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அதிபராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும் இடமாற்றங்கள்</h2><p>
 

மேலும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அதிபர் வருண ஜயசுந்தர சிறுவர் மற்றும் மகளிர் பிரிவுக்கு மேலதிகமாக, பயிற்சி மற்றும் உயர் பயிற்சிப் பதவியின் பதில் கடமையாற்றுவதற்காகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/044b9062-eb7e-46a9-bb69-5ea2ad37b831/26-6a75dc7c2146e.webp' /></p><p>அத்துடன், சிறப்புப் பாதுகாப்புப் பதவியில் இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அதிபர் கே.பி. கருணாரத்ன அப்பதவியில் இருந்து வடக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். </p><p>

 

வடக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இருந்த புத்திக சிறிவர்தன தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 

இதைத் தவிர, 6 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

இதன்படி, காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக இருந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நாமல் பெரேரா, பொலிஸ் களப் படைப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T13:27:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்லன்சேன சிறை கலவரம்! 28 கைதிகள் மருத்துவமனையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tense-situation-reported-at-pallansena-prison-1786080461"></link>
            <id>https://ibctamil.com/article/tense-situation-reported-at-pallansena-prison-1786080461</id>
            <summary type="text">🛑 புதிய இணைப்பு&amp;nbsp;பல்லன்சேன சிறையில் நடந்த கலவரத்தின் போது காயமடைந்த 28 கைதிகளை வெலிக்கடை சிறை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப...</summary>
            <content type="html"><![CDATA[<h5><b><u>🛑 புதிய இணைப்பு&nbsp;</u></b></h5><p>பல்லன்சேன சிறையில் நடந்த கலவரத்தின் போது காயமடைந்த 28 கைதிகளை வெலிக்கடை சிறை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
 இன்று காலை (07) குறித்த சிறையில் கலவரம் வெடித்ததை அடுத்து, அதனைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் , காவல்துறையினர் சிறப்பு அதிரடிப் படை, கலவரக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் விமானப்படை என்பன வரவழைக்கப்பட்டன.
</p><p>
 இந்நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1aeb4c60-5885-4c3d-9cc0-4c8869c33923/26-6a75dd9dd39db.webp' /></p><p> </p><p>

அதன் பின்னர் பாதுகாப்புப் படைகள் சிறையின் கட்டுப்பாட்டை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் வசம் ஒப்படத்துள்ளனர்.</p><h4><b>🛑 மூன்றாம் இணைப்பு</b></h4><p>பல்ல சேன சிறையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
</p><p>
சிறைக்கைதிகள் சிலர் சிறைச்சாலையின் கூரை மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இந்தப் பதற்றம் ஆரம்பமாகியுள்ளதுடன், கைதிகள் சிறை அதிகாரிகளை நோக்கிப் கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>

பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையைச் சுற்றிப் பாதுகாப்பைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், நிலமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பின்வரும் பாதுகாப்புப் பிரிவினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.</p><ul><li>
இலங்கைப் காவல்துறையினர்</li><li>

காவல்துறை விசேட அதிரடிப்படை (STF)
</li><li>
கலாபக் கட்டுப்பாட்டுப் பிரிவு (Riot Control Unit)
</li><li>
இலங்கை விமானப்படை
</li></ul><p>
கடந்த மாதம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகள் சிலர் பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><h5><b><u>🛑 இரண்டாம் இணைப்பு</u></b></h5><p>பல்ல சேன சிறையில் கைதிகள் குழுவினர் கூரையின் மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, சிறையைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இப்பணிக்காக காவல்துறை, காவல்துறை சிறப்பு அதிரடிப் படை, கலவரக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் விமானப்படை ஆகியவை வரவழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இன்று காலை (07) கைதிகள் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, கலவரம் வெடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p></p><h5><span style="font-size: 14px;">🛑&nbsp;</span><u><b>முதலாம் இணைப்பு&nbsp;</b></u></h5><p>நீர்கொழும்பு - பல்லசேன சிறைச்சாலையிலும் சற்றுமுன்னர் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.</p><p>இந்தநிலையில் சிறையிலுள்ள கைதிகள் சிறைக்கு வெளியே கற்களை வீசி எறிவதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
மேலும், கைதிகள் குழு ஒன்று கூரையின் மீது ஏறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p></p><h2>சிறையிலும் கலவரம்</h2><p>கடந்த மாதம் நீர்கொழும்பு சிறையில் வெடித்த மோதலைத் தொடர்ந்து, அங்குள்ள கைதிகள் குழுவை பல்லசேன திறந்தவெளி சிறைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது.&nbsp; &nbsp;</p><p>இதற்கிடையில், நேற்று இரவு (06-08-2026) மெகசின் சிறையில் கலவரம் வெடித்த நிலையில், தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe6584e1-854a-422b-84fd-5f478c1c06ed/26-6a75765ad8d34.webp' /></p><p>
இதில் 11 கைதிகள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், இன்று காலை கைதி ஒருவர் உயிரிழந்திருந்தார்.
</p><p>
இதனையடுத்து இன்று காலை முதல் (07-08-2026) குருவிட்ட சிறையிலும் கலவரம் வெடித்துள்ளதுடன், இரண்டு கைதிகள் உயிரிழந்ததாகவும், மற்றொரு குழுவினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/U0H3-u-YnVE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T13:26:58+00:00</updated>
        </entry>
    </feed>
