<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-10T05:24:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நேற்றிரவு கொடூர கொலை சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/brutal-murder-in-jaffna-1789017645"></link>
            <id>https://jvpnews.com/article/brutal-murder-in-jaffna-1789017645</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணம் பருத்தித்துறை – துன்னாலையில் நேற்றிரவு கொடூர கொலை சம்பவம் ஊரவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.&amp;nbsp; சம்பவத்தில்&amp;n...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணம் பருத்தித்துறை – துன்னாலையில் நேற்றிரவு கொடூர கொலை சம்பவம் ஊரவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.&nbsp; சம்பவத்தில்&nbsp; மூன்று பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொ ல்லப்பட்டுள்ளார்.
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்

ஒரு ஊரைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே தொடர்ச்சியான பகை இருந்து வந்துள்ளதன் பின்னனியில் இக்கொலை இடம்பெற்றதாக&nbsp; கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4342da14-a953-43b9-9170-2d5560af249d/26-6aa23e2f39995.webp' /></p><h2>பின்தொடர்ந்த நால்வர் கொண்ட குழுவினர்</h2><p>

இந்நிலையில் கொல்லப்பட்ட நபரை நேற்றிரவு பின்தொடர்ந்த நால்வர் கொண்ட குழுவினர் ஓராங்கட்டை பகுதியில் வைத்து அவர்மீது கொடூர தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டனர்.</p><p></p><p> </p><p>இதன்போது குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலையை மேற்கொண்ட நால்வரும் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.</p><p> இது குறித்து பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலமானது தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T05:20:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலை பரபரப்பை ஏற்படுத்திய கொலை - நாற்காலியில் கட்டப்பட்டு மீட்கப்பட்ட சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/brutal-murder-heard-from-ratnapura-1789015894"></link>
            <id>https://tamilwin.com/article/brutal-murder-heard-from-ratnapura-1789015894</id>
            <summary type="text">இரத்தினபுரி - கட்டலியன்பல்ல&amp;nbsp; பகுதியில் உள்ள வீடொன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபரின் மரணம் குறித்து பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.இந்த கொலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரி - கட்டலியன்பல்ல&nbsp; பகுதியில் உள்ள வீடொன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபரின் மரணம் குறித்து பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.</p><p>இந்த கொலை நேற்று (09) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>உயிரிழந்த நபர் நாற்காலியில் கட்டப்பட்டு, தலையில் தாக்கப்பட்டு, கழுத்தை நெரித்துக்கொல்லப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p> இரத்தினபுரி , கஹங்கம, கட்டலியன்பல்லவை சேர்ந்த 61 வயதான ஹல்பவலகே குலரத்னா என்பவரே இவ்வாறு&nbsp; உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3db0cea9-b466-46d3-9ec3-b2946ea35333/26-6aa23d0acc155.webp' /></p><p>கொலை நடந்த வீட்டின் உரிமையாளரின் சகோதரரான 47 வயது நபர், கொலை தொடர்பில் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.</p><p>

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
</p><p>இவ்வாறு கொலை செய்யப்பட்ட நபர், கொலை நடந்த வீட்டை பராமரித்து வந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T05:16:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துதல் தொடர்பில் மேலும் ஒரு நாட்டுடன் ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-deal-with-belgium-to-stop-people-smugglers-1789016839"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-deal-with-belgium-to-stop-people-smugglers-1789016839</id>
            <summary type="text">Britain has struck a deal with Belgium to stop people smugglers: ஆட்கடத்தல்காரர்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில், பெல்ஜியம் நாட்டுடனும் ஒப்பந்தம் ஒன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Britain has struck a deal with Belgium to stop people smugglers: ஆட்கடத்தல்காரர்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில், பெல்ஜியம் நாட்டுடனும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது பிரித்தானியா.
</p><p>

சட்டவிரோத புலம்பெயர்வோர் சிறுபடகுகள் மூலம் ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்துவது இன்னமும் பிரித்தானியாவுக்கு சவாலாகவே உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe940d37-93fa-427f-a7c6-fccdb2f79a07/26-6aa23b0971edc.webp' /></p><p>
அதற்குக் காரணம், இந்த சட்டவிரோத புலம்பெயர்வோர் வெறுமனே பிரான்சை மட்டும் பின்னணியாகக் கொண்டு இயங்கவில்லை. </p><p>அவர்கள் பல நாடுகளிலிருந்து இயங்குகிறார்கள் என நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுண்டு.

அதை நிரூபிப்பதுபோல, சமீபத்தில், ஆட்கடத்தல்காரர்கள், பெல்ஜியம் நாட்டிலிருந்து புலம்பெயர்வோரை படகுகள் மூலம் பிரித்தானியாவுக்கு அனுப்புவது தெரியவந்துள்ளதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.</p><h3>

 பெல்ஜியம் நாட்டுடன் ஒப்பந்தம்
</h3><p>
ஆக, பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் சட்டவிரோத புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துவதற்காக பிரித்தானியா பிரான்சுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள, ஆட்கடத்தல்காரர்கள் பெல்ஜியம் நாட்டுக் கடற்கரைகளிலிருந்து படகுகள் மூலம் புலம்பெயர்வோரை பிரித்தானியாவுக்குள் அனுப்புகிறார்கள்.
</p><p>
ஆகவே, பெல்ஜியம் நாட்டிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் சட்டவிரோத புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்த, பெல்ஜியம் நாட்டுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டுள்ளது பிரித்தானியா.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3220ef22-9db5-4fa4-96da-374959a067c2/26-6aa23b08bf590.webp' /></p><p>
ஆக, சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக, இனி பிரான்ஸ், பிரித்தானிய பொலிசாருடன், பெல்ஜியம் பொலிசாரும் இணைந்துகொள்ள இருக்கிறார்கள்.
</p><p>
அத்துடன், பிரித்தானியாவும் பெல்ஜியமும் உளவுத்துறை தகவல்களையும் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ள இருக்கின்றன.&nbsp;</p><p></p><p>

விடயம் என்னவென்றால், இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நான்கு மாதங்களில் மட்டும், 32 முறை, பெல்ஜியம் நாட்டிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக சட்டவிரோத புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைய முயற்சிப்பதை பெல்ஜியம் பொலிசார் கவனித்துள்ளார்கள்.
</p><p>
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில், வெறும் இரண்டு முறை மட்டுமே இத்தகைய முயற்சிகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதாவது, பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் சட்டவிரோத புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் பொலிசார் நடவடிக்கைகளைத் துவக்கியதால், ஆட்கடத்தல்காரர்கள், பெல்ஜியம் நாட்டுக் கடற்கரைகளிலிருந்து படகுகள் மூலம் புலம்பெயர்வோரை பிரித்தானியாவுக்குள் அனுப்பத் துவங்கியுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T05:12:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம்...! முன்னாள் அமைச்சர் எதிராக குற்றப்பத்திரிகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/duminda-dissanayake-indicted-over-gold-plated-gun-1789016288"></link>
            <id>https://ibctamil.com/article/duminda-dissanayake-indicted-over-gold-plated-gun-1789016288</id>
            <summary type="text">தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் மற்றொரு பெண் ஆகியோருக்கு எதிராக&amp;nbsp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் மற்றொரு பெண் ஆகியோருக்கு எதிராக&nbsp;குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்த குற்றப்பத்திரிகையானது இன்று (10.09.2026) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி&nbsp;</h2><p>
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​இரு குற்றவாளிகளுக்கும் முறைப்படி குற்றப்பத்திரிகைகள் வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfd9c355-5b72-47c5-a1da-c6506c3e1b65/26-6aa23be55b403.webp' /></p><p>குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். </p><p>

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக வழக்கு நடவடிக்கைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T05:11:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர்ச்சியாக சிக்கப்போகும் ராஜபக்சர்கள்! கைது குறித்து தகவல் அறிந்த குடும்பம் - அரசியலுக்கும் அஸ்த்தமனமா..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-rajapaksas-have-no-place-in-sri-lanka-anymore-1789014439"></link>
            <id>https://tamilwin.com/article/the-rajapaksas-have-no-place-in-sri-lanka-anymore-1789014439</id>
            <summary type="text">

ராஜபக்ச குடும்ப அரசியலுக்கு இனி இலங்கையில் ஒருபோதும் இடமில்லை என்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>

ராஜபக்ச குடும்ப அரசியலுக்கு இனி இலங்கையில் ஒருபோதும் இடமில்லை என்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், ''ராஜபக்ச குடும்பத்தில் ஒவ்வொருவரும் தான் செய்த மோசடிகளை நன்கு அறிவர். அதனால்தான்&nbsp; தமது கைது குறித்து பதற்றமடைந்து கருத்துக்களை வெளியிடுகின்றனர்'' எனவும் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.&nbsp;</p><h2>அரசியலில் வாய்ப்பில்லை</h2><p> 

ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். </p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

நாமல் ராஜபக்ச தனது கைது குறித்து தொடர்ச்சியாக கருத்துக்களை வெளியிட்டு வந்தமை, தனது கைது குறித்து அவர் நன்கு அறிந்திருந்தமையே ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfd3f9b5-1079-41f2-9f50-af05b885f74e/26-6aa23b9b54a85.webp' /></p><p> </p><p>

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தான் கைது செய்யப்படுவோம் என்பது நன்றாகவே தெரியும். எனினும், தனது கைது குறித்து பிரசாரம் செய்த நாமல் என்ன காரணத்திற்காக தான் கைது செய்யப்படப் போகின்றோம் என்பதை ஒருபோதும் பகிரங்கப்படுத்தியதில்லை. </p><p>

ஏனைய ராஜபக்சர்களும் தங்களது தவறுகளைத் தாங்களே உணர்ந்திருப்பதால் தான் தங்களுடைய கைதுகளைப் பற்றி பேசுகின்றார்கள். </p><p>

அநுராதபுரத்தில் அல்ல நாட்டில் எந்த இடத்தில் பேரணிகளை நடத்தினாலும், நாட்டு மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0b0c218-5762-4e6d-b340-dcd5bb974049/26-6aa23b9c21ddf.webp' /></p><p> </p><p>

நாமல் ராஜபக்ச வந்ததால் ஆதரவு இரட்டிப்பாகும் என்று கூறுவதெல்லாம் எவ்வித அடிப்படை ஆதாரமும் அற்றது. ராஜபக்சர்களின் குடும்ப அரசியலுக்கு இனி நாட்டில் ஒருபோதும் இடமில்லை.
</p><p>
தங்களுடைய குற்றங்களையும், மோசடிகளையும் மறைப்பதற்காகவே மீண்டும் மக்கள் கூட்டங்களை ராஜபக்சர்கள் நடத்த ஆயத்தமாகி வருகின்றனர்.
செப்டெம்பர் 12 அல்ல 13,14,15 ஆகிய எந்த திகதிகளிலும் கூட்டங்களை நடத்தினாலும் அரசாங்கத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p> 


</p>]]></content>
            <updated>2026-09-10T05:10:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரவி மோகன் குறித்து ஆர்த்தி ரவியின் காட்டமான பதிவு வைரல்! என்ன சொல்லிருக்காங்க தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/arti-ravi-instagram-post-about-ravi-mohan-viral-1789015785"></link>
            <id>https://manithan.com/article/arti-ravi-instagram-post-about-ravi-mohan-viral-1789015785</id>
            <summary type="text">விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் ஆர்த்தி ரவி வெளியிடும் ஒவ்வொரு பதிவும் இணையத்தில் படு வைரலாகி வரும் நிலையில், தற்போது&amp;nbsp;&quot;சூர்யா, அஜித், விக்ரம், கமல...</summary>
            <content type="html"><![CDATA[<p>விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் ஆர்த்தி ரவி வெளியிடும் ஒவ்வொரு பதிவும் இணையத்தில் படு வைரலாகி வரும் நிலையில், தற்போது&nbsp;"சூர்யா, அஜித், விக்ரம், கமல். இவங்க எல்லாரையும் விட என் lifeல வந்த ஒருத்தன் நடிச்சானே நடிப்பு. Oscar awardsஐ கூட கொடுக்கலாம்" என குறி்பிட்டு வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.</p><h2>

ரவி மோகன்- ஆர்த்தி ரவி</h2><p>ரவி மோகன் - ஆர்த்தி ரவி
ஆர்த்தியை பிரிவதாக நடிகர் ரவி மோகன் 2024ஆம்&nbsp; ஆண்டு அறிவித்தார். இரண்டு பேருக்குமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.விரைவில் சட்டப்படி டைவர்ஸ் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01210d24-a6a5-4615-931d-fc65f1b63a22/26-6aa23b4a93c29.webp' /></p><p>தங்களின் திருணம வாழ்க்கையில் பாடகி கெனிஷாவால் தான் பிரிவு நிகழ்ந்ததாக ஆர்த்தி ரவி குறிப்பிடுகின்றார்.ஆனால் ரவி மோன் தனக்கு உண்டான மரியாதையும், சுதந்திரமும் பறிக்கப்பட்டதால் தான் ஆர்த்தியை பிரிந்ததாக குறிப்பிகின்றார்.</p><p>இருப்பினும் ஆர்த்தியை பிரிந்து அவர் தனித்து வாழாமல் பாடகி கெனிஷாவுடன் வாழ்ந்து வந்ததால், ரசிகர்களும் நெட்டிசன்களும் இது குறித்து கருத்து தெரிவித்து வந்தனர். ஆர்த்தி ரவிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5dbd83b0-f630-4b26-b70f-c018004a1f5f/26-6aa23b4b46584.webp' /></p><p></p><p>ரவிமோன் கெனிஷாவுடன் சுற்றிதிரிந்து என்ஜாய் செய்யும் புகைப்படங்களையும், காணொளிகளையும் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.

பாடகி கெனிஷா சமீபத்தில் ஆர்த்தி ரவி குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.</p><p>ரவி மோகனின் பெண் தோழியென அறியப்படும் பாடகி கெனிஷா தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே பதிவிட்டுள்ள கருத்துக்களை நீக்கவேண்டும் என்றும் கோரி ஆர்த்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12b241d3-27fe-4bc2-8a75-60ce6b2657b2/26-6aa23b4bf05b3.webp' /></p><p>அதனை தொடர்ந்து ஆர்த்தி ரவிக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க பாடகி கெனிஷாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. அதன் பின்னர் பாடகி கெனிஷா சமூக வலைத்தளங்களை முடக்குவதாக அறிவித்துவிட்டு சென்னையை விட்டு வெளியேறினார்.</p><p>அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரவி மோகன் தனது திருமண வாழ்க்கையில் நடந்த பல கொடுமைகள் குறித்து பொது வெளியில் கொட்டி தீர்த்தார். விவாகராத்து கிடைக்கும் வரையில் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என அறிவித்தார்.</p><p>இதனை தொடர்ந்து விவாகரத்து நிலுவையில் இருக்கும் நிலையில், இருதரப்பபும் சமூக ஊடகங்களில் தனிப்பட்ட கருத்துக்களை பகிரகூடாது என உயர் நீதிமன்றம் உத்ததவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7eca4791-f710-47f1-9719-02dcdb82908b/26-6aa23b4ca6fda.webp' /></p><p>தற்போது மீண்டும் பாடகி கெனிஷாவுடன் நடிகர் ரவி மோகன் இருக்கும் காணொளிகளும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் ரவி மோகன் இயக்கத்தில் உருவாகிவரும்&nbsp;"ஓடினரி மேன்" திரைப்டத்துக்கு கெனிஷா தான் இசையமைக்கின்றார் என்ற தகவவலும் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cf38263-7412-4f71-9ada-73508158778c/26-6aa23b4d5c483.webp' /></p><p></p><p>இந்நிலையில், ஆர்த்தி ரவி&nbsp;தற்போது&nbsp;"சூர்யா, அஜித், விக்ரம், கமல். இவங்க எல்லாரையும் விட என் lifeல வந்த ஒருத்தன் நடிச்சானே நடிப்பு. Oscar awardsஐ கூட கொடுக்கலாம்" என பதிவிட்டுள்ளமை இணையத்தில் படு&nbsp;்வைரலாகி வருகின்றது.</p><br><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T05:08:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பாவுடனான உறவுகளை வலுப்படுத்தும் கனடா ஐரோப்பிய ஒன்றியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/eu-envoy-says-a-unique-new-partnership-with-canada-1789016829"></link>
            <id>https://canadamirror.com/article/eu-envoy-says-a-unique-new-partnership-with-canada-1789016829</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவுடன் இதுவரை இல்லாத வகையில் மிகவும் வலுவான மற்றும் &#039;தனித்துவமான&#039; புதிய கூட்டாண்மை ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கி வருவதாக கனடாவிற்கான ஐரோப்பிய ஒன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவுடன் இதுவரை இல்லாத வகையில் மிகவும் வலுவான மற்றும் 'தனித்துவமான' புதிய கூட்டாண்மை ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கி வருவதாக கனடாவிற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர் ஜெனிவீவ் டட்ஸ் தெரிவித்துள்ளார். </p><p>
கனடிய பிரதமர் மார்க் கார்னி அடுத்த வாரம் பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.
</p><p>ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத ஒரு நாட்டின் தலைவருக்கு இத்தகைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது ஒரு அரிதான நிகழ்வாகும். இந்த விஜயத்தின் போதே புதிய கூட்டாண்மை குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/411cab85-eccb-4870-b52f-d0a232b35d06/26-6aa23afee7e51.webp' /></p><p> </p><p>
இந்த புதிய கூட்டாண்மையானது சுவிட்சர்லாந்து, நார்வே அல்லது பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுள்ள ஒப்பந்தங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 
பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத் துறைகளில் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான ஐரோப்பிய ஒன்றியத்துடன் மிகவும் ஆழமான உறவை ஏற்படுத்துவதே கனடாவின் முதன்மை நோக்கமாகும். </p><p>
அடுத்த வாரம் நடைபெறும் சந்திப்பில் முழுமையான ஒப்பந்தம் எட்டப்படாது என்றும், ஆரம்பக்கட்ட கருத்துப் பரிமாற்றங்களே நடைபெறும் என்றும் தூதர் குறிப்பிட்டுள்ளார்.</p><p> 
இதைத் தொடர்ந்து, ஐரோப்பிய உறுப்பு நாடுகள் மற்றும் கனடாவின் மாகாணங்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு, அக்டோபர் இறுதியில் கனடாவில் நடைபெறவுள்ள உச்சிமாநாட்டில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.</p><p> 
முக்கியமான கனிம வளங்கள், மாணவர் பரிமாற்றத் திட்டங்கள், டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் கூட்டுப் பாதுகாப்புத் திட்டங்கள் ஆகியவற்றில் இரு தரப்பும் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.</p><p> 
"நாங்கள் வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு மிக நெருக்கமாக இருக்கிறோம்; மேலும் நெருங்குவோம்" என ஐரோப்பிய ஒன்றிய தூதர் ஜெனிவீவ் டட்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T05:06:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் நீர்மின் நிலையத்தில் வெடிவிபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/explosion-at-a-hydroelectric-power-plant-in-swiss-1789016924"></link>
            <id>https://canadamirror.com/article/explosion-at-a-hydroelectric-power-plant-in-swiss-1789016924</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தெற்கு சுவிட்சர்லாந்தின் டிசினோ பகுதியில் அமைந்துள்ள ரிடோம் நீர்மின் நிலையத்தில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து இடம்பெற்ற வெடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தெற்கு சுவிட்சர்லாந்தின் டிசினோ பகுதியில் அமைந்துள்ள ரிடோம் நீர்மின் நிலையத்தில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து இடம்பெற்ற வெடிவிபத்தில் இரு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>

பியோட்டா கிராமத்தில் அமைந்துள்ள இந்த நீர்மின் நிலையத்தில் காலை சுமார் 9.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

தீ விபத்து ஏற்பட்டபோது இரண்டு தொழிலாளர்கள் கட்டிடத்துக்குள் சிக்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b69949a-3a90-4d1a-9be2-bfa9db719fd9/26-6aa23b5e199fe.webp' /></p><p>
</p><p>
 வெடிவிபத்தில் கட்டிடம் கடுமையாக சேதமடைந்ததுடன், அங்கு சிக்கியிருந்த இரு தொழிலாளர்களும் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அவர்கள் சிகிற்சை பலனின்றி உயிரிழந்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

உயிரிழந்தவர்களில் ஒருவர் 55 வயதுடைய சுவிஸ் குடிமகன் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மற்றைய தொழிலாளரின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
</p><p>
சம்பவத்திற்கான காரணம் குறித்து அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தீ விபத்துக்கும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெடிப்புக்கும் வழிவகுத்த காரணிகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
</p><p>
சுவிஸ் இரயில்வே நிறுவனமான SBB-க்கு சொந்தமான இந்த வளாகம், சுமார் 100 ஆண்டுகள் பழமையான நீர்மின் நிலையத்தை மறுசீரமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக தற்போது புனரமைப்புப் பணிகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-09-10T05:05:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதன்முறையாக மடிக்கும் திறன்கொண்ட கைபேசியை அறிமுகப்படுத்தியது Apple]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/apple-iphone-duo-1789014561"></link>
            <id>https://tamilwin.com/article/apple-iphone-duo-1789014561</id>
            <summary type="text">தனது வரலாற்றில் Apple நிறுவனம் முதன்முறையாக iPhone Duo எனும் புதிய மடிக்கும் கைபேசியை அதிகார பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

கலிபோர்னியாவின் குப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது வரலாற்றில் Apple நிறுவனம் முதன்முறையாக iPhone Duo எனும் புதிய மடிக்கும் கைபேசியை அதிகார பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
</p><p>
கலிபோர்னியாவின் குப்பெர்டினோவில் உள்ள ஸ்டீவ் ஜோப்ஸ் அரங்கில் நடைபெற்ற Apple event நிகழ்வில் புதிய பிரதம நிறைவேற்று ஜோன் டெர்னஸ் தலைமையில் இந்த கைபேசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
</p><h2>அக்டோபர் 23 ஆம் திகதி முதல் விற்பனைக்கு&nbsp;</h2><p>
இந்த புதிய மடிக்கும் கைபேசியின் வெளிப்புறத் திரை 5.4 அங்குலமாகவும், விரித்தவுடன் ஐபோன் வரலாற்றிலேயே மிகப்பெரியதான 7.6 அங்குலத் திரையைக் கொண்டதாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">This iPhone duo animation <a href="https://t.co/y7NftWpyXS">pic.twitter.com/y7NftWpyXS</a></p>&mdash; Marques Brownlee (@MKBHD) <a href="https://x.com/MKBHD/status/2097782855141335144?ref_src=twsrc%5Etfw">September 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>மேலும், இதில் iPad சாதனத்தில் பயன்படுத்தப்படும் Apple Pencil ஸ்டைலஸைப் பயன்படுத்தும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இதன் ஆரம்ப விலை 1,999 அமெரிக்க டொலர்களில் தொடங்குகிறது. இதன் முன்பதிவுகள் எதிர்வரும் அக்டோபர் 16ஆம் திகதி தொடங்கி, அக்டோபர் 23 ஆம் திகதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T05:05:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வந்த மூன்று பெண்கள் அதிரடி கைது ; சோதனையில் காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-women-arrested-on-arrival-in-sri-lanka-1789016422"></link>
            <id>https://jvpnews.com/article/three-women-arrested-on-arrival-in-sri-lanka-1789016422</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தில் &#039;கஞ்சா&#039; போதைப்பொருளை கொண்டு வந்த, மூன்று இலங்கை பெண் பயணிகள் நேற்று புதன்கிழமை (09) இரவு விமான நிலைய சுங்க அதிகாரிகளால் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கட்டுநாயக்க விமான நிலையத்தில் 'கஞ்சா' போதைப்பொருளை கொண்டு வந்த, மூன்று இலங்கை பெண் பயணிகள் நேற்று புதன்கிழமை (09) இரவு விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொழும்பு-13, புத்தளம் - கற்பிட்டி மற்றும் கொழும்பு-02 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 34,37 மற்றும் 54 வயதுடைய பெண்கள் என தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e78e70d-c723-465d-9d88-bf2a280155c5/26-6aa2396856ccc.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இவர்கள் நேற்று இரவு 10:50 மணியளவில் தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து 'தாய் ஏயர் ஏசியா' சேவையின் FD-140 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.</p><p style="text-align: justify; ">

இவர்கள் கொண்டு வந்த பயணப் பைகளுக்குள் சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான 803 கிராம் எடையுடைய 'கஞ்சா' போதைப்பொருள் 11 உருண்டைகளாக பொதி செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; "> மேலதிக விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையுடன் கைது செய்யப்பட்ட மூன்று பெண்களும், கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-10T05:01:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[72 வயதில் 20 வயது இளம்பெண்ணுடன் திருமணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/72-year-old-marry-20-year-old-in-malaysia-1789016116"></link>
            <id>https://ibctamilnadu.com/article/72-year-old-marry-20-year-old-in-malaysia-1789016116</id>
            <summary type="text">மலேசிய முன்னாள் தேசிய கால்பந்தாட்ட வீரர் ஒருவர் தனது 72 வது வயதில் 20 வயது இளம்பெண்ணை கரம்பிடித்துள்ளார்.மலேசிய முன்னாள் தேசிய கால்பந்தாட்ட வீரர் டத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலேசிய முன்னாள் தேசிய கால்பந்தாட்ட வீரர் ஒருவர் தனது 72 வது வயதில் 20 வயது இளம்பெண்ணை கரம்பிடித்துள்ளார்.</p><p>மலேசிய முன்னாள் தேசிய கால்பந்தாட்ட வீரர் டத்தோக் அப்தா அலிப்(வயது 72).

சமீபத்தில் இவருக்கும் 20 வயது இளம்பெண்ணுக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
</p><p>
இதை அவரது தம்பி ஊடகங்களில் வெளியிட வைரலாகி வருகிறது.
</p><p>
இதுகுறித்து அவரது தம்பி யூனுஸ், ஆகஸ்ட் 27ம் தேதி இரு குடும்பங்களின் ஒப்புதலுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. தம்பதிகள் சந்தோஷமாக வாழ பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.</p><p>

1970, 80 களில் மலேசியா கால்பந்தாட்ட அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்தவர் டத்தோக் அப்தா அலிப் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1fafa86-8d09-464b-9d5d-4aa9483e9dc3/26-6aa239796d5b6.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-10T05:01:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா ஒப்பந்தம் செய்ய 'துடிக்கிறது': டொனால்ட் டிரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-says-canada-dying-to-make-trade-deal-1789013821"></link>
            <id>https://canadamirror.com/article/trump-says-canada-dying-to-make-trade-deal-1789013821</id>
            <summary type="text">அமெரிக்காவில் டாலஸில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் இடைக்கால மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனடா அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் டாலஸில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் இடைக்கால மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனடா அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.</p><p>
உரையின் போது பேசிய டிரம்ப், "கனடா அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள மிகவும் விரும்புகிறது, அவர்கள் ஒப்பந்தம் செய்யத் துடிக்கிறார்கள்," என்று குறிப்பிட்டார். </p><p>
தனது நிர்வாகத்தின் கீழ் நீர்நிலைகளின் பெயர்களை மாற்றும் முடிவை அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56da101a-9a95-4b87-aa6b-5462d3f0194f/26-6aa22f3e79534.webp' /></p><p> </p><p>அதன்படி:
இனி 'லேக் அமெரிக்கா' என்று அழைக்கப்படும் எனவும், 'அமெரிக்க வளைகுடா' எனவும் மாற்றப்படுவதையும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>ஜனநாயகக் கட்சியினரின் கட்டுப்பாட்டில் உள்ள அமெரிக்க மாநிலமான 'நியூ மெக்சிகோ'வின் பெயரை 'நியூ அமெரிக்கா' என மாற்றலாம் என்ற தனது யோசனையையும் டிரம்ப் இதன்போது முன்வைத்தார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T05:00:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா சீதையம்மன் கோவிலுக்கு பயணம் செய்யும் இந்திய பாதுகாப்பு அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indian-defence-minister-to-seetha-amman-temple-1789016053"></link>
            <id>https://ibctamil.com/article/indian-defence-minister-to-seetha-amman-temple-1789016053</id>
            <summary type="text">இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று மீண்டும் நாடு திரும்பவுள்ளார்.
இந்திய பாதுகாப்பு அமைச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று மீண்டும் நாடு திரும்பவுள்ளார்.</p><p>
இந்திய பாதுகாப்பு அமைச்சர்&nbsp; புறப்படுவதற்கு முன்னர், இன்று காலை நுவரெலியாவில் உள்ள சீதை அம்மன் கோயிலுக்கு செல்லவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஆழமான வரலாற்று உறவுகளை, குறிப்பாக இராமாயணம் போன்ற பண்டைய புராணங்களுடன் உள்ள பொதுவான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதே இந்தப் பயணத்தின் நோக்கம் என்று வெளியுறவு அமைச்சின் சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பொது இராஜதந்திர பணிப்பாளர் நாயகம் துஷாரா ரொட்ரிகோ கூறியுள்ளார்.</p><p></p><h2>இந்திய வம்சாவளி தோட்ட சமூகம்</h2><p>

நுவரெலியா பயணத்தின் போது, ​​இலங்கையின் இந்திய வம்சாவளி தோட்ட சமூகத்தினரையும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a53f37e5-565f-4fac-a0cf-55d4eb46effd/26-6aa237f78f1fd.webp' /></p><p>இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக கடந்த 08 ஆம் திகதி நாட்டை வந்தடைந்தார். </p><p>இந்தப் பயணத்தின்போது, ​​இந்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு சம்பிரதாய அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டு, பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவால் (ஓய்வு) வரவேற்கப்பட்டார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T04:54:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரன் ஜனாதிபதி கனடாவிற்கு அதிகாரப்பூர்வ விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ukraines-zelenskyy-arrives-in-calgary-ahead-1789016063"></link>
            <id>https://canadamirror.com/article/ukraines-zelenskyy-arrives-in-calgary-ahead-1789016063</id>
            <summary type="text">உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, கனடிய பிரதமர் மார்க் கார்னியைச் சந்திப்பதற்காக புதன்கிழமை இரவு கனடாவின் கல்கரி நகரத்தை வந்தடைந்தார். 
வியாழக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, கனடிய பிரதமர் மார்க் கார்னியைச் சந்திப்பதற்காக புதன்கிழமை இரவு கனடாவின் கல்கரி நகரத்தை வந்தடைந்தார்.</p><p> 
வியாழக்கிழமை காலையில் பிரதமர் மார்க் கார்னியைச் சந்திக்கும் ஸெலென்ஸ்கி, பின்னர் அருகிலுள்ள பேன்ஃப் நகரில் நடைபெறும் கனடிய அமைச்சரவைக் கூட்டத்திலும் உரையாற்றவுள்ளார். 
அவருடன் அவரது மனைவி ஒலேனா ஸெலென்ஸ்காவும் வருகை தந்துள்ளார். </p><p>இவர்கள் வெள்ளிக்கிழமை வரை கனடாவில் தங்கியிருந்து ரொறன்ரோ மற்றும் நோர்த் பே ஆகிய பகுதிகளுக்கும் செல்லவுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9d81dd5-fee2-494f-a580-57dfb27b0ef6/26-6aa23800dc34e.webp' /></p><p> </p><p>
பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் எரிசக்தித் துறைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும். </p><p>
ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போரினால் உக்ரைன் சந்திக்கும் மனித இழப்புகள் குறித்தும், இரு நாட்டு மக்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்படும் என பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். </p><p>
2022 முதல் 2029 வரையிலான காலப்பகுதியில் உக்ரைனின் பாதுகாப்பிற்காக கனடா 6.5 பில்லியன் டாலர்களை ராணுவ உதவியாக வழங்க உறுதியளித்துள்ளது. </p><p>உலகளவில் உக்ரைனுக்கு அதிக நிதி மற்றும் ராணுவ உதவி வழங்கும் நாடுகளில் கனடா 4-வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்களைச் சமாளிக்க உக்ரைன் கூடுதல் வான் பாதுகாப்பு உதவிகளைக் கோரி வருகிறது. </p><p>
அதேவேளை, உக்ரைனில் இராணுவச் சட்டத்தின் காரணமாக தேர்தல்கள் நடத்த முடியாத சூழலில், ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் ஜூலை மாதம் பாதுகாப்பு அமைச்சர், ராணுவத் தளபதி பணிநீக்கம் போன்ற உள்நாட்டு அரசியல் அழுத்தங்களையும் ஸெலென்ஸ்கி எதிர்கொண்டு வருகிறார்.</p><p> 
ரஷ்யாவினால் கடத்தப்பட்ட உக்ரைனிய குழந்தைகள் மற்றும் போர்க் கைதிகளை மீட்பது தொடர்பான சர்வதேச மாநாடு ஒன்றை கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த மாத இறுதியில் ரொறன்ரோவில் இணைந்து நடத்தவுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T04:52:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேடிதேடி வேட்டையாடும் ஜனாதிபதி அனுர அரசாங்கம்; கிலியில் முன்னாள் ஆட்சியாளர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-rulers-are-in-state-panic-npp-investigation-1789016146"></link>
            <id>https://jvpnews.com/article/former-rulers-are-in-state-panic-npp-investigation-1789016146</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க , தனது பதவிக்காலத்தின் இரண்டாவது ஆண்டினை பூர்த்தி செய்துள்ள நிலையில் அடுத்துவருங்காலத்தில் எதிர் தரப்பு கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க , தனது பதவிக்காலத்தின் இரண்டாவது ஆண்டினை பூர்த்தி செய்துள்ள நிலையில் அடுத்துவருங்காலத்தில் எதிர் தரப்பு கட்சி தலைவர்களை வேட்டையாட முற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில் முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலேவின் கைதை மையப்படுத்தி அதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின்போது நீதித்துறைக்கெதிராக வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் விசாரணை வளையத்தினுள் மேலும் ஆறு கட்சி தலைவர்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cf0c8da-259e-4b53-8752-c3fcdf5af2f3/26-6aa23853aa579.webp' /></p><h2>அடுத்தக்கட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>
அவர்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு முறைப்பாட்டின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு முறைப்பாடு முன்வைக்கப்படடுள்ளது. </p><p>

அவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு முறைப்பாட்டில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
முறைப்பாட்டில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர, சுகீஸ்வர பண்டார, அசங்க நவரத்ன மற்றும் மகிந்த பதிரண ஆகிய ஆறு பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
ஏற்கனவே நாமல் ராஜபக்ச அண்மையில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-10T04:52:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[சென்னையில் மீண்டும் கொடூர கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/murder-has-taken-place-in-chennai-udhayanidhi-1789015712"></link>
            <id>https://ibctamilnadu.com/article/murder-has-taken-place-in-chennai-udhayanidhi-1789015712</id>
            <summary type="text">தலைநகரில் மீண்டும் ஒரு கொலை நடக்காமல் இருப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.இது தொடர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைநகரில் மீண்டும் ஒரு கொலை நடக்காமல் இருப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.</p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது,<br></p><p>

‘கடன் தொல்லை கொடுக்கிறார்கள்’ என பாதுகாப்பு கேட்ட பிரதீப்ராஜ் எனும் இளைஞரை, ‘உயிரோடு இருக்க மாட்ட பொய் Case போட்டு உள்ள தள்ளுவேன்’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மிரட்டியதாக சம்பந்தப்பட்ட இளைஞரே நேற்று முன் தினம் வீடியோ வெளியிட்ட நிலையில், நேற்று அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.</p><p>

‘சி.எம்.-ட்ட வேணும்னா போய் சொல்லு. என்னைய ஒன்னும் பண்ண முடியாது’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சொன்னதாகவும் கொலையா கொலையாவதற்கு ஒரு நாள் முன்பு பிரதீப்ராஜ் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/298deeb9-b6bb-4ebd-8fa4-f6ee7629c753/26-6aa2370ae51e0.webp' /><br></p><p>

காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சரை காவல்துறையினரே காவல்துறையினரே டம்மி சி.எம். ஆக நினைக்கிறார்களா?
</p><p>
காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்ற புதிய வரலாற்றை இந்த சர்கஸ் ஆட்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.
</p><p>

சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி கேட்டால், ‘1974-இல் என்ன நடந்தது தெரியுமா,, இ.டி. என்ன பண்ணுச்சு தெரியுமா’ என்று டைவர்ட் செய்யும் முதல்-அமைச்சர், இந்த கொலைக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்.</p><p>

இந்த வழக்கில் திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் உட்பட சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்வதோடு, சட்டத்தின் முன் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
</p><p>
தலைநகரில் மீண்டும் ஒரு கொலை நடக்காமல் இருப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-10T04:50:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[சன் டிவியில் வரவிருக்கும் இரண்டு புத்தம் புதிய சூப்பர் சீரியல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/new-serials-upcoming-in-sun-tv-1789004116"></link>
            <id>https://cineulagam.com/article/new-serials-upcoming-in-sun-tv-1789004116</id>
            <summary type="text">சன் டிவிசன் டிவி TRP-ல் இன்று உச்சத்தில் இருக்கும் சேனல். இந்த உச்சத்திற்கு காரணம் சன் டிவியில் வரும் சீரியல்கள் தான். எப்போதும் சன் டிவி சீரியல்களுக்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சன் டிவி</h2><p>சன் டிவி TRP-ல் இன்று உச்சத்தில் இருக்கும் சேனல். இந்த உச்சத்திற்கு காரணம் சன் டிவியில் வரும் சீரியல்கள் தான்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e5ab836-3c49-4c02-9b35-c29e02b1dd60/26-6aa2095866223.webp' /></p><p>எப்போதும் சன் டிவி சீரியல்களுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. மூன்று முடிச்சு, கயல், மருமகள், எதிர்நீச்சல் தொடர்கிறது என இவர்கள் ஒளிபரப்பும் அனைத்து சீரியல்களும் TRP-ல் எப்போதும் மற்ற சேனல்களுக்கு சிம்ம சொப்பனம் தான்.</p><p></p><h2>புதிய சீரியல்கள்</h2><p> 

இந்நிலையில் <a href="https://www.youtube.com/watch?v=FfNXRKZ7mwE" target="_blank">சன் டிவி</a>யில் தற்போது அபிராமி, குறிஞ்சி என்று இரண்டு புதிய சீரியல்கள் வருகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7da79ddf-c47c-4594-a62d-5e4c51f7ee21/26-6aa20957acdc3.webp' /></p><p>கண்டிப்பாக இந்த சீரியல்களும் ரசிகர்கள் கொண்டாடும் சீரியல்களாகவும், TRP-ல் உச்சத்தில் வரும் சீரியல்களாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46715fc8-c829-4bda-9cfe-a557d9e9c724/26-6aa20957006bb.webp' /></p>]]></content>
            <updated>2026-09-10T04:50:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-parliament-session-motor-vehicle-act-1789015102"></link>
            <id>https://ibctamil.com/article/today-parliament-session-motor-vehicle-act-1789015102</id>
            <summary type="text">இன்றைய&amp;nbsp;(10.09.2026)&amp;nbsp;நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில்&amp;nbsp; ஆரம்பமாகியுள்ளன.காலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>இன்றைய<span style="font-size: 14px; color: inherit;">&nbsp;</span>(10.09.2026)<span style="font-size: 14px; color: inherit;">&nbsp;</span><span style="color: inherit;">நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (</span>Jagath Wickramaratne<span style="color: inherit;">) தலைமையில்</span><span style="color: inherit;">&nbsp; ஆரம்பமாகியுள்ளன.</span></p><p>காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வு மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.</p><p>அதன்படி, காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. </p><p>காலை 10.00 மணி முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27 (2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>காலை11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை&nbsp;பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் கீழ் தீர்மானம் அங்கீகரிக்கப்படவுள்ளது.</p><p>இதனைத் தொடர்ந்து மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை அரசாங்கத்தின் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/XOUxhefK0aw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-10T04:49:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இளைஞன் கைது ; சோதனையில் சிக்கிய பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-arrested-at-midnight-on-a-tip-off-1789015297"></link>
            <id>https://jvpnews.com/article/youth-arrested-at-midnight-on-a-tip-off-1789015297</id>
            <summary type="text">கொட்டாஞ்சேனை, சங்கராஜ மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 23 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (09) பொலிஸாரால் கைது செய்யப்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொட்டாஞ்சேனை, சங்கராஜ மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 23 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (09) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">

கடந்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி சங்கராஜ மாவத்தையிலுள்ள கடையொன்றிற்கு முன்பாக நின்று கொண்டிருந்த நபர் ஒருவர், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/feff6b28-d286-4545-b0b0-aafee266595c/26-6aa2350275fa0.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">

கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வு பணியகத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேகநபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.</p><p style="text-align: justify; ">மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">
துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர்களுக்கு மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்று உதவிய குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; "> சந்தேகநபரிடமிருந்து 12 கிராம் 470 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காகக் கொட்டாஞ்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

மேலும், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கொட்டாஞ்சேனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-10T04:49:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் முன்னாள் விமானப்படை தளபதி FCIDயில் முன்னிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/roshan-gunathilaka-summoned-by-fcid-1789013094"></link>
            <id>https://tamilwin.com/article/roshan-gunathilaka-summoned-by-fcid-1789013094</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க சற்றுமுன்னர் நிதி மோசடி விசாரணைப்பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.இன்று காலை 9.30 ம...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க சற்றுமுன்னர் நிதி மோசடி விசாரணைப்பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p>இன்று காலை 9.30 மணிக்கு நிதி மோசடி விசாரணைப்பிரிவில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு இணங்க முன்னிலையாகியுள்ளார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>முன்னாள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்கவை இன்று முன்னிலையாகுமாறு நிதி மோசடி விசாரணைப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>இன்று (10) காலை 9.30 மணிக்கு நிதி மோசடி விசாரணைப் பிரிவின் (FCID) முன் முன்னிலையாகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.&nbsp; </p><p>மிக் விமானக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நடத்தப்பட்டு வரும் விசாரணைகள்&nbsp; தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T04:46:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/mk-stalin-viral-video-to-cm-vijay-1789014931"></link>
            <id>https://ibctamilnadu.com/article/mk-stalin-viral-video-to-cm-vijay-1789014931</id>
            <summary type="text">திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று காலை வெளியிட்டுள்ள வீடியோவில்,

என் அன்பான தமிழ் மக்களுக்கு வணக்கம்!

அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று காலை வெளியிட்டுள்ள வீடியோவில்,
</p><p>
என் அன்பான தமிழ் மக்களுக்கு வணக்கம்!
</p><p>
அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் நடந்த சில சர்ச்சைகள், தமிழ் மக்களுக்கும் நம்முடைய உடன்பிறப்புகளுக்கும் கோபத்தையும் அதிருப்தியையும் உண்டாக்கியிருப்பதை நான் உணர்கிறேன்.
</p><p>
அதுவும், இந்த சர்ச்சையில் முக்கியமாக என்னுடைய சிறை வரலாறும் இருப்பதால், நான் அதைப்பற்றி கொஞ்சம் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.</p><h2>

மிசாவில் கைதானேன்</h2><p>

நீங்கள் சொன்னது உண்மைதான்... பொய் எல்லாம் இல்லை. எமர்ஜென்சி காலத்தில், அதை எதிர்த்து தலைவர் கலைஞர் மெரினா கடற்கரையில் மிகப்பெரிய கூட்டத்தைக் கூட்டி, மிசா சட்டத்தைக் கடுமையாக விமர்சித்ததைத் தொடர்ந்து, அப்போதிருந்த மத்திய அரசு 30.1.1976 இல் திமுக ஆட்சியைக் கலைத்தார்கள்.
</p><p>
ஆட்சியைக் கலைத்த அடுத்த நொடி, மிசா சட்டத்தில் என்னைக் கைது செய்வதற்காகக் கோபாலபுரம் வீட்டிற்குக் காவல் துறையினர் வந்தார்கள்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LuISczBiSoQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p><p>அன்றைக்கு நான் வீட்டில் இல்லை.

"பையன் பிரசாரத்திற்குச் சென்றிருக்கிறான், நாளைக்கு வந்துவிடுவான். வந்ததும் நானே தொலைபேசியில் அழைக்கிறேன், வந்து கைது செய்து கொள்ளுங்கள்" என்று கலைஞர் சொல்லி அனுப்பிவிட்டார்.</p><p> அடுத்த நாள் நான் வந்ததும் அவரே காவல்துறையினரை வரச்சொல்லி, கைது செய்யச் சொல்லிவிட்டார்.</p><h2>

சிறையில் கொடுமைகள்
</h2><p>
சிறையில் எனக்குப் பல கொடுமைகள் நடந்தன. எங்களைக் கொண்டுபோய் அடைத்ததே தொழுநோயாளிகள் இருக்கும் இடத்தில்தான். 10 பேரை ஒரு சிறிய அறைக்குள் அடைத்து வைத்தார்கள். </p><p>அந்த அறைக்குள்ளேயே ஒரு பானையில்தான் அத்தனை பேரும் சிறுநீர் கழிக்க வேண்டும். அந்த இடமே மிகவும் துர்நாற்றமாக இருக்கும். அங்கேதான் நாங்கள் தூங்க வேண்டும்.
</p><p>
இரவில் தூங்க விடாமல் காவல்துறையினர் லத்தியால் அடிப்பார்கள், பூட்ஸ் காலால் மிதிப்பார்கள். இன்னொரு பக்கம் ஆயுள் தண்டனைக் கைதிகளை வைத்து வேறு எங்களைக் கொடூரமாக அடிப்பார்கள். </p><p>அவர்கள் அடித்ததில் என் கூட இருந்த அருமை அண்ணன் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டி பாபு சிறையிலேயே இறந்துபோனார்.

அவர்கள் அடித்ததில் என் தாடை எலும்பெல்லாம் உடைந்தது. நீங்கள் கூட இப்படி கைவைத்துத் தாடையைக் காண்பித்தீர்கள் அல்லவா? அது சரிதான். </p><p>இன்றைக்கும் நான் அடிவாங்கிய தழும்புகள் எனக்கு இருக்கின்றன, நான் இல்லை என்று சொல்லவில்லை.

பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு, முக்கியமாகத் தமிழர்களுக்காகவும் - தமிழ்நாட்டிற்காகவும் போராடுகிறவர்கள் நிறைய பேருக்கு இதுபோன்ற அடக்குமுறைகள் நடந்திருக்கின்றன. </p><p>போராளிகள் எல்லாம் இதைத் தாண்டித்தான் வந்திருக்கிறோம். எதிர்த்துப் போராடுவதும், அதன் விளைவுகளைச் சந்திப்பதும் எங்களுக்கு ஒன்றும் புதிது இல்லை.

நீங்கள் கொள்கைத் தலைவராகச் சொல்லும் அறிஞர் அண்ணா காலத்திலிருந்து திமுகவின் வரலாறே இதுதான். அந்த வரலாற்றில் நானும் இருக்கிறேன் என்பது எனக்குப் பெருமையான ஒரு விஷயம்தான்.</p><h2>

வரலாற்றை மாற்ற முடியாது</h2><p>

யார் என்ன கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது. அது காலத்திற்கும் அப்படியேதான் இருக்கும். சந்தேகம் என்றால் நீங்கள் சட்டப்பேரவையில் ஒரு நூலகம் இருக்கிறது என்று சொன்னீர்கள் அல்லவா? அங்கே அனைத்து ஆவணங்களும் இருக்கும். </p><p>அங்கே சென்று என்னுடைய போராட்ட வரலாற்றை நீங்கள் படித்துப் பாருங்கள்! உண்மை என்னவென்று புரியும்.
</p><h2>
சர்க்காரியா கமிஷன்
</h2><p>
இரண்டாவதாக, சர்க்காரியா கமிஷன் பற்றியும் - எங்கள் தலைவர் கலைஞர் பற்றியும் தவறான தகவலைப் பேசியிருக்கிறீர்கள். ஊழல் குற்றச்சாட்டுகளைச் சொல்லியிருக்கிறீர்கள்.
</p><p>
சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டதற்குப் பிறகு, மத்தியிலும் மாநிலத்திலும் பலமுறை ஆட்சி மாறிவிட்டது. இந்தக் குற்றச்சாட்டுகளில் ஏதாவது உண்மை இருந்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்.</p><p> இத்தனை ஆண்டுகளாக அரசியலுக்காக கலைஞர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் சொன்ன பொய்யான குற்றச்சாட்டையே நீங்களும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.

அதுமட்டுமில்லாமல், அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தை எடுத்துக் கொண்டு, அதில் எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகச் சொல்கிறீர்கள். </p><p>அமலாக்கத்துறை குற்றம்சாட்டிய 95 சதவீத வழக்குகளில், இதுவரைக்கும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல், குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். </p><p>பெரும்பாலும் அரசியல் பழி வாங்கலுக்காகவே அமலாக்கத்துறை ஏவப்படுகிறது என்பது இங்கு இருக்கும் அனைவருக்குமே நன்றாகத் தெரியும்.

உங்களுக்குத் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், உங்கள் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மீது கூட அமலாக்கத்துறை பல வழக்குகளைப் போட்டிருக்கிறது.</p><p> இதெல்லாம் மத்திய அரசைக் கொள்கை எதிரியாகச் சித்தரிக்கும் உங்களுக்கு எப்படித் தெரியாமல் போனது?
</p><h2>
சட்டப்பேரவை மாண்பை காத்திடுக</h2><p>

முதல்வர் தம்பி விஜய், நான் உங்களிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான். தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு என்று ஒரு மாண்பும் மரியாதையும் இருக்கிறது.</p><p> பல பெரும் தலைவர்கள், மாமனிதர்கள் தமிழ்நாட்டைச் செதுக்கிய இடம் அது. அந்தப் பொறுப்பு இப்போது உங்களுக்கும் இருக்கிறது.</p><p>

சட்டப்பேரவையில் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை, மக்கள் நலத் திட்டங்கள், தமிழ்நாட்டை மேலும் மேலும் எப்படி முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்வது, தமிழ்நாட்டின் உரிமைகளை எப்படிப் பாதுகாப்பது என்பதை எல்லாம் விவாதம் செய்யுங்கள்.</p><p> அதுதான் தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் நல்லது. அதை விட்டுவிட்டுத் தேவையில்லாத சர்ச்சைகளைச் சட்டப்பேரவையில் பேச வேண்டாம் என்பதுதான் என்னுடைய கோரிக்கை.</p><h2>

நீங்கள் சொன்னதை மறந்துவிட்டீர்களா?</h2><p>

நீங்கள் முதல்வரானதும் என்னைச் சந்திக்க என் வீட்டிற்கு வந்தீர்கள். அப்போது நான் உங்கள் கரம் பிடித்து வரவேற்றேன். அப்போது நாம் பேசும்போது நீங்கள் என்னிடம்:

"தேர்தல் பிரசாரத்தில் உங்களை மிகவும் விமர்சித்துப் பேசிவிட்டேன், I am sorry Sir" என்று சொன்னீர்கள்.</p><p>

அதற்கு நான்: "பரவாயில்லை Brother,அதையெல்லாம் நான் மனதில் வைத்துக் கொள்ளவில்லை. நீங்கள் இப்போது ஒரு மாநிலத்தின் முதல்வர், இனி யாரைப் பற்றிப் பேசும்போதும் அந்தக் கண்ணியத்தோடு பேசுங்கள்" என்று சொன்னேன். </p><p>அதையெல்லாம் நீங்கள் மறந்துவிட்டீர்கள் போல!

திரும்பவும் சொல்கிறேன்... ஒரு முதல்வருக்கான கண்ணியத்தோடு உங்களுடைய வார்த்தைகளும் உடல்மொழியும் இருக்க வேண்டும்.</p><p> நாம்தான் மக்களுக்கு முன்னுதாரணம், அதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் வகிக்கும் பெரிய பொறுப்பை உணர்ந்து நீங்கள் செயல்பட வேண்டும்.
</p><p>
சட்டப்பேரவையே ரீல்ஸ் எடுக்கும் இடமாக மாற்றியது, நாங்கள் கட்டிய பாலத்தின் மேல் நின்று போட்டோஷூட் செய்வது என்று ஆட்சி நிர்வாகத்தையும் சினிமா ஷூட்டிங் மாதிரியே நடத்துகிறீர்கள். உங்களுடைய திறனற்ற நிர்வாகத்தை மறைக்க இப்படி விதவிதமாக ரீல்ஸ் போட்டு ஒரு தலைமுறையையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.
</p><p>
ஆனால் ரியாலிட்டி என்ன? உண்மை ஊரைத் தாண்டுவதற்குள் பொய் உலகத்தையே சுற்றி வந்துவிடும் என்று ஒரு பழமொழி சொல்வார்கள் அல்லவா... அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
</p><h2>
படுகுழியில் சட்டம்- ஒழுங்கு
</h2><p>
உங்கள் ஆட்சியில் ஒவ்வொரு நாளும் கொலை, திருட்டு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்று சட்டம்-ஒழுங்கு படுகுழியில் இருக்கிறது.
</p><p>
பரந்தூர் ஏர்போர்ட் திட்டத்தை ரத்து செய்து தமிழ்நாட்டின் வளர்ச்சியை 15 ஆண்டுகள் பின்னாடி கொண்டுபோய் இருக்கிறீர்கள்.
</p><p>
விவசாயிகளுக்கு முழுமையான கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி கொடுத்தீர்கள், ஆனால் அதையும் ஒழுங்காகச் செய்யவில்லை.
</p><p>
அனைத்துக் குடும்பங்களுக்கும் ஆண்டிற்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர் என்று சொன்னீர்கள், இப்போது தகுதி உள்ளவர்களுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர் மட்டும் என்று அந்தர்பல்டி அடித்திருக்கிறீர்கள்.
</p><h2>
இது சரியான மாற்றமா?
</h2><p>
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 என்று சொன்னீர்கள், இன்னும் நாங்கள் கொடுத்த அதே ரூ.1,000 -ஐ கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
</p><p>
இன்னும் பல வாக்குறுதிகள் பற்றி வாயே திறக்காமல் இருக்கிறீர்கள். அப்போது சொன்னதெல்லாம் ஒன்று, இப்போது செய்வதெல்லாம் ஒன்று.

மாற்றம் வேண்டும் என்று நினைத்து வாக்களித்த மக்கள், குறிப்பாக நமது இளைஞர்கள், உண்மையிலேயே இப்போது என்ன மாற்றம் வந்திருக்கிறது, இது சரியான மாற்றமா என்பதை கவனியுங்கள். </p><p>எது நிர்வாகத் திறன் வாய்ந்த அரசு, எது திறமையில்லாத அரசு என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
</p><p>
குறிப்பாக, திமுக உடன்பிறப்புகளுக்கு நான் வலியுறுத்த விரும்புவது என்னவென்றால்... மக்கள் நமக்கு முழுமையாக வாக்களிக்கவில்லை, நம்மால் ஆட்சிக்கு வர முடியவில்லை, அதனால் இந்த ஆட்சியில் நடக்கும் தவறுகளால் மக்கள் பாதிக்கப்படும்போது நமக்கென்னவென்று இருக்கக் கூடாது. </p><p>அப்படி ஒரு எண்ணம் நம் சித்தாந்தத்திலேயே கிடையாது.

ஆட்சியை இழப்பதைத் திமுக என்றைக்குமே தோல்வியாக நினைத்தது இல்லை. </p><p>ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் இருப்பது போன்று, இதை மக்கள் பணியின் இன்னொரு முகமாகத்தான் நான் பார்க்கிறேன்.</p><p>

ஆட்சியில் இருக்கிறோமோ இல்லையோ, என்றைக்கும் தமிழ்நாட்டின் உரிமைக்காகவும் - வளர்ச்சிக்காகவும் - மக்களுக்காகவும் நாம் சண்டை செய்துகொண்டே இருக்க வேண்டும்.
</p><p>
அவர்கள் தாத்தாவிற்காகச் சண்டை செய்தோம்...</p><p>

அவர்கள் அப்பாவுக்காகச் சண்டை செய்தோம்...</p><p>

இப்போது அவர்களுக்காகவே சண்டை செய்வோம்...
</p><p>
இதுதான் நம் திமுகவின் வரலாறு. அந்த வரலாறு எப்போதும் மாறாது, மாறவும் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.<br></p>]]></content>
            <updated>2026-09-10T04:41:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் பல கோடி தங்க நகைகளுடன் சொகுசு வாழ்க்கை! அறிவிப்பின்றி அவசரமாக நாடு கடத்தப்பட்ட ஆபத்தான நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/konda-ranji-arrest-in-dubai-cid-investigation-1789008974"></link>
            <id>https://tamilwin.com/article/konda-ranji-arrest-in-dubai-cid-investigation-1789008974</id>
            <summary type="text">டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக்கும்பல் உறுப்பினர் ரஞ்சித் குமார என்ற ‘கொண்ட ரஞ்சி’ தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக்கும்பல் உறுப்பினர் ரஞ்சித் குமார என்ற ‘கொண்ட ரஞ்சி’ தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
</p><p>
டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக்குழு உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற ‘கொண்ட ரஞ்சி’ குற்றப்புலனாய்புத் திணைக்கள அதிகாரிகளால் கட்டுநாயக்க&nbsp; விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டார்.</p><p> </p><p>

'கொண்ட ரஞ்சி', இத்தாலிக்கு தப்பிச்செல்ல முயன்றபோது, ​​ஜனவரி 09 திகதி டுபாயில் கைது செய்யப்பட்டார்.

இதன்போது அவரது மனைவியும் குழந்தைகளும் அந்நாட்டின் பாதுகாப்புப்படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.</p><h2>பொலிஸாரால் தேடப்படும் சந்தேகநபர்&nbsp;</h2><p>
</p><p>
கொண்ட ரஞ்சி', முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச்செயலாளர் கொலை வழக்கில் பொலிஸாரால் தேடப்படும் சந்தேகநபராகவும் உள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/573437c6-0f0e-412a-85e8-ca199e3f7b26/26-6aa22b707e490.webp' /></p><p>

கோல்டன் விசா’ வசதியின் அடிப்படையில் டுபாயில் தங்கியிருந்தபோது, ​​அவர் இலங்கையில் கொலை, மிரட்டிப்பணம் பறித்தல், மற்றும் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல கடுமையான குற்றங்களை செய்துள்ளதுடன், எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்புமின்றி அவர் டுபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
</p><p>
இவர் டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்படுவார் என்பது குறித்து அந்நாட்டின் பொலிஸ் அல்லது அரசாங்கமோ எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் கூறப்படுகின்றது.</p><p>

குடிவரவு மற்றும் குடியகல்வு&nbsp; அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில், நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.</p><h2>டுபாயில் வசிப்பதற்காக தங்க விசா</h2><p>
</p><p>டுபாயில் வசிப்பதற்காக தங்க விசா பெற்றிருந்ததால், கொண்டா ரஞ்சிக்கு நாட்டின் சட்டங்களிலிருந்து ஓரளவு விலக்கு கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21d4e8d9-2cce-4c8b-bbc9-f2ee61dc2c14/26-6aa22b7132042.webp' /></p><p>

டுபாயில் பெரும் தொகையை முதலீடு செய்பவர்களுக்கு வழங்கப்படும் தங்க விசாக்களை, கொண்ட ரஞ்சி பல ஆண்டுகளாக பெற்று வந்துள்ளார்.

 4 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகளை அணிவது கொண்ட ரஞ்சியின் பழக்கமாக இருந்துள்ளது.
</p><p>
 பத்து விரல்களிலும் மோதிரங்கள், பல கிலோ எடை கொண்ட தங்க நெக்லஸ்கள், மற்றும் மணிக்கட்டிலிருந்து முழங்கை வரை வளையல்கள் அணியும் பழக்கம் கொண்ட ரஞ்சிக்கு இருந்துள்ளது.
</p><p>
இவர் தனது தங்க நகைகள், ஆடம்பர வாழ்க்கை காரணமாக, பாதாள உலகக் கும்பல்களிடையே பிரபலமான நபராக இருந்துள்ளார்.

அவருக்கு சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களுடனும் நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளதுடன், அவர் சில காலமாக இலங்கைக்குப் பல்வேறு போதைப்பொருட்களைக் கடத்தும் செயலில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் கூறுகிறது.
</p><p>
இதற்கமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்கள தலைமையகத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட அவரை 72 மணி நேரம் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp; </p><p></p><p>&nbsp; </p><p>&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T04:41:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிலிப்பைன்ஸில் சுற்றுலா கப்பலில் தீ விபத்து - 5 பேர் பலி - 80க்கும் மேற்பட்டோர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fire-on-tourist-ship-in-the-philippines-5-dead-1789012762"></link>
            <id>https://ibctamil.com/article/fire-on-tourist-ship-in-the-philippines-5-dead-1789012762</id>
            <summary type="text">மேற்கு பிலிப்பைன்ஸின் பலவான் தீவுக்கு அப்பால்&amp;nbsp; படகொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 5பேர் உயிரிழந்துள்ளதுடன்&amp;nbsp; 80க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கு பிலிப்பைன்ஸின் பலவான் தீவுக்கு அப்பால்&nbsp; படகொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 5பேர் உயிரிழந்துள்ளதுடன்&nbsp; 80க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p>குறித்த சம்பவம் நேற்று (10.09.2026) இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>
பலவான் அருகிலுள்ள கொரோன் கடற்பகுதியில் MV June Astrea என்ற படகில் தீ ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேற்று இரவு 43 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>பிலிப்பைன்ஸ்</h2><p>
</p><p>
படகில் 117 பயணிகளும் 17 பணியாளர்களும் இருந்ததாக கடலோர காவல்படை பேச்சாளர் கொமடோர் நோமி கயாபியாப் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/764c87e8-6041-40b9-beb6-94bae89bada8/26-6aa2346e0bb09.webp' /></p><p>

எனினும், மீட்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், 80க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இந்த எண்ணிக்கைகளில் மாற்றம் ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T04:39:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்தை அழிக்கக்கூடும்: எச்சரிக்கை குறித்து கனடா அரசு தீவிர கவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ai-minister-says-solutions-exist-after-anthropic-1789011092"></link>
            <id>https://canadamirror.com/article/ai-minister-says-solutions-exist-after-anthropic-1789011092</id>
            <summary type="text">செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதகுலத்தையே அழிக்கக்கூடும் என்று ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் முன்னாள் ஆராய்ச்சியாளர் எச்சரித்ததைத் தொடர்ந்து, அந்நிறுவன...</summary>
            <content type="html"><![CDATA[<p>செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதகுலத்தையே அழிக்கக்கூடும் என்று ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் முன்னாள் ஆராய்ச்சியாளர் எச்சரித்ததைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தில் நிலவும் சூழ்நிலையை அரசு உன்னிப்பாகக் கவனித்து வருவதாக கனடாவின் செயற்கை நுண்ணறிவுத் துறை அமைச்சர் இவான் சாலமன் தெரிவித்துள்ளார். </p><p>
அண்மையில் ஓபன்ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் நிறுவனங்களில் பணியாற்றி விலகிய ஜேக்கப் காக்சன் என்ற ஆராய்ச்சியாளர், AI நிறுவனங்கள் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வதாகவும், சுய-மேம்பாட்டு சூப்பர் இன்டெலிஜென்ஸை நோக்கி வேகமாகச் சென்று மக்களின் உயிரை வைத்துச் சூதாடுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். </p><p>
இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் (2030-க்குள்) AI மனிதகுலத்தையே அழிக்கக்கூடும் என அதை உருவாக்கும் நிபுணர்களே உண்மையாக நம்புவதாகக் காக்சன் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da16131f-f5bd-45df-be2d-16e4ca1b8572/26-6aa2249604ebc.webp' /></p><p> 
ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் AI பாதுகாப்புப் பிரிவுத் தலைவர் இவான் ஹூபிங்கரும் இதை ஒப்புக்கொண்டு, அடுத்த 10 ஆண்டுகளில் AI மனிதர்களை அழிப்பதற்கான சாத்தியக்கூறு 10 சதவீதத்திற்கும் அதிகம் எனக் கூறியுள்ளார்.</p><p> 
எட்மண்டன் நகரில் பேசிய அமைச்சர் இவான் சாலமன், இதுபோன்ற எச்சரிக்கைகள் புதியவை அல்ல என்றும், இதற்குச் சட்டரீதியான மற்றும் தொழில்நுட்ப ரீதியான தீர்வுகள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.</p><p> பெரிய AI நிறுவனங்களைக் கட்டுப்படுத்த புதிய ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p> கனடாவின் AI முன்னோடியான யோஷுவா பெஞ்சியோ போன்றவர்களுடன் இணைந்து AI பாதுகாப்பில் அரசு முதலீடு செய்து வருவதாகவும், சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p>
AI தொழில்நுட்பத்தின் எதிர்மறையான விளைவுகள் குறித்து உண்மையான கவலைகள் இருப்பதாக ஒப்புக்கொண்ட அமைச்சர், பொதுமக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் கனடா அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக உறுதி அளித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T04:30:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[FCID க்கு அழைக்கப்பட்ட முன்னாள் விமானப்படை தளபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-air-force-commander-summoned-to-fcid-1789014481"></link>
            <id>https://jvpnews.com/article/former-air-force-commander-summoned-to-fcid-1789014481</id>
            <summary type="text">முன்னாள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்கவை இன்று முன்னிலையாகுமாறு நிதி மோசடி விசாரணைப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது. 

மிக் விமானக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்கவை இன்று முன்னிலையாகுமாறு நிதி மோசடி விசாரணைப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது. </p><p>

மிக் விமானக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குறித்த விசாரணை பிரிவில் இன்று காலை 9.30 மணிக்கு முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c96f57b-3805-4bb0-90c8-bca21ddb2fe1/26-6aa231d26b984.webp' /></p><p> 

குறித்த கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய, வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காகவே முன்னாள் விமானப்படை தளபதி இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T04:28:10+00:00</updated>
        </entry>
    </feed>
