<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-03T00:32:41+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ள அனர்த்தம் ; பலி எண்ணிக்கை 1,243-ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nepal-floods-death-toll-rises-to-1-243-1788395024"></link>
            <id>https://canadamirror.com/article/nepal-floods-death-toll-rises-to-1-243-1788395024</id>
            <summary type="text">நேபாளம்-திபெத் எல்லை பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,243-ஆக அதிகரித்துள்ளது. இமயமலை நாடான நேபாளத்தில், போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம்-திபெத் எல்லை பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,243-ஆக அதிகரித்துள்ளது. </p><p>இமயமலை நாடான நேபாளத்தில், போட்டேகோஷி நதிக்கரையோரம் உள்ள சுரங்கப்பாதைகள் மற்றும் நிலத்தடி மின் நிலையங்களில் சிக்கியிருக்கலாம் என கருதப்படுபவர்களை மீட்கும் பணியில், மீட்புக் குழுவினர் மழை மற்றும் இடிபாடுகளுக்கு மத்தியிலும் போராடி வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6aa9a8f0-ae89-4871-8dd9-0d4f8e826bf7/26-6a98be1260647.webp' /></p><h2>மீட்பு பணி</h2><p>டந்த வாரம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் காணாமல் போன உள்ளூர் மக்களின் குடும்பத்தினர் அடையாள ரீதியிலான இறுதிச் சடங்குகளை நடத்திய நிலையில், இந்த பேரிடருக்கும் பருவநிலை மாற்றத்திற்கும் உள்ள தொடர்பை சர்வதேச சமூகத்திடம் வலுவாக எடுத்துரைக்க வேண்டும் என்று பிரதமர் பலேந்திர ஷா வலியுறுத்தினார்.

</p><p>
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எட்டு மாவட்டங்களில் இருந்து மேலும் பல உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 1,222-ஆக உயர்ந்துள்ளது. </p><p>அதேவேளையில், நாட்டின் பல நகரங்கள் மற்றும் கிராமங்களை வெள்ளம் புரட்டிப்போட்ட ஒரு வாரத்திற்குப் பிறகும் 4,875 பேர் காணாமல் போயுள்ளதாக நேபாளக் காவல்துறை தெரிவித்துள்ளது</p><p>.

பாதுகாப்புப் படையினர் சித்வான் மாவட்டத்தில் 348 உடல்களையும், நவல்ப்பராசி கிழக்கில் 218, நவல்ப்பராசி மேற்கில் 208 மற்றும் நுவாகோட்டில் 155 உடல்களையும் மீட்டுள்ளனர். </p><p>இதேபோல், ரசுவாவில் 127, கோர்காவில் 69, தடிங்கில் 60 மற்றும் தனஹுவில் 38 உடல்கள் மீட்கப்பட்டதாக தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-03T00:23:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர் முடிந்து 17 ஆண்டுகளாகியும் தமிழ் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் தொடர்கின்றன- யாழ். ஊடக அமையத் தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-journalists-still-face-issue-17-years-1788392134"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-journalists-still-face-issue-17-years-1788392134</id>
            <summary type="text">போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த போதும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கான
பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே உள்ளன என யாழ். ஊடக அமையத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடக...</summary>
            <content type="html"><![CDATA[<p>போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த போதும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கான
பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே உள்ளன என யாழ். ஊடக அமையத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கு.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
</p><p>
மறைந்த இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாசின் நினைவு தினமானது யாழ். ஊடக
அமையத்தில் நேற்று(02.09.2026) இடம்பெற்ற நிலையில், அதில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>தமிழ் மக்களின் இனப்பிரச்சினை</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் பகுதிகளில் இடம்பெறும் மக்களின் பிரச்சினைகளைத் தமிழ் ஊடகவியலாளர்களே
தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகின்றனர். தென்னிலங்கை ஊடகங்கள் அதனை
வெளிப்படுத்தத் தவறிவிட்டன.</p><p>

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கப்பெற்றிருந்தால், இந்த
அரசைத் தமிழ் மக்கள் தங்களது அரசாகக் கருதியிருப்பார்கள். அரச ஊடகங்களில் நேர்மையாகப் பணியாற்றுபவர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9a0479b-e0b0-4ff1-a02d-ae83489f8b5b/26-6a98b554534ee.webp' /></p><p>செம்மணி
மனிதப் புதைகுழி, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்கள் மற்றும் படுகொலை
செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரும் போராட்டங்களில் செய்தி சேகரித்தமை
போன்ற காரணங்களைக் காட்டி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரபாகரன்
டிலக்சன் அரச ஊடகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளமை இதற்குச் சான்றாகும்.
</p><p>
நடைபெறும் உண்மையான சம்பவங்களை மறைக்காமல் வெளிப்படுத்துவதே ஊடகவியலாளர்களின்
கடமை. தங்களுக்கு எதிரான விடயங்களை மறைக்கும் விதமாகச் செய்திகளைத் தணிக்கை
செய்வதில் அரச ஊடகங்கள் செயற்படுகின்றன.</p><p>

சுதந்திரமாகச் செய்தி அறிக்கையிடுவதற்குத் தடை விதித்து ஊடகவியலாளர்களை மன
உளைச்சலுக்குள்ளாக்கும் போக்கு ஜனநாயக நாட்டுக்கு முரணானது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T00:08:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பை உலுக்கிய மரணம் - அம்பலமான திட்டங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-death-that-shook-colombo-1788391502"></link>
            <id>https://tamilwin.com/article/the-death-that-shook-colombo-1788391502</id>
            <summary type="text">நாட்டில் அண்மை காலமான அரசியல் தரப்பில் பல முக்கிய புள்ளிகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வருகின்ற நிலையில், 
அம்பாந்தோட்டையின் முன்னாள் நகரபிதா எராஜ் பெர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் அண்மை காலமான அரசியல் தரப்பில் பல முக்கிய புள்ளிகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வருகின்ற நிலையில், 
அம்பாந்தோட்டையின் முன்னாள் நகரபிதா எராஜ் பெர்னாண்டோ மர்மமான முறையில் உயிரிழந்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இவர் தவறான முடிவின் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த உயிரிழப்பின் பின்னணி என்ன என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
இவர் சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (UPFA) ஆகியவற்றின் கீழ் அம்பாந்தோட்டை மாநகர சபையின் மேயராக (நகரபிதா) பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>
தற்பொழுது நாட்டில் அரசியல் தரப்பில் பல முக்கிய நபர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படுவதும் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படும் பொழுது இவ்வாறான மரணங்கள் நிகழ்வதும் வழமையான விடயமாக மாறியுள்ளது.</p><p>
இவ்வாறான நிலையில் இவருடைய மரணத்திற்கு பின்னணியிலும் ஏதாவது அரசியல் காரணங்கள் காணப்படலாம் என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் தற்பொழுது எழுந்துள்ளது.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பாக இன்னும் சில அதிர்ச்சி ஊட்டும் தகவல்களை லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சியின் ஊடாக விரிவாகப் பார்க்கலாம்..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/hCXh9BxV9x4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T00:07:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப் வெளியிட்ட நிம்மதி தரும் செய்தி ; முற்றுப் பெறும் நிலையில் மோதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-delivers-reassuring-news-1788391882"></link>
            <id>https://canadamirror.com/article/trump-delivers-reassuring-news-1788391882</id>
            <summary type="text">ஈரானுடன் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள இராணுவ மோதல்கள் மிக நீண்ட காலத்திற்கு நீடிக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
 
அத்துட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடன் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள இராணுவ மோதல்கள் மிக நீண்ட காலத்திற்கு நீடிக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p> 
அத்துடன், ஹோர்முஸ் நீரிணைப் (Strait of Hormuz) பகுதி தற்போது அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e220f50d-7613-4cd2-afbf-5c2cb6e36eeb/26-6a98b1d0d9914.webp' /></p><p>

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே புதன்கிழமை மீண்டும் மோதல்கள் உருவானதை தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தை அமெரிக்கா வெற்றிகரமாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்தார்.</p><p>

தினசரி மில்லியன் கணக்கான பீப்பாய் மசகு எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்படுவதாகவும், எப்போதாவது ஈரான் ஏவும் ஆளில்லா விமானங்களை (Drones) அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்தி வருவதாகவும் அவர் கூறினார்.
</p><p>
பாரசீக வளைகுடாவில் முக்கிய கடல்வழிப் பாதையாகத் திகழும் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கா மிகவும் வலுவான கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், பெரும் தடங்கல்கள் எதுவுமின்றி எண்ணெய் விநியோகப் பாதைகள் சீராக இயங்கி வருவதாக உறுதியளித்துள்ளார்.
</p><p>
இந்தப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் போதிலும், நிலைமை விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என அமெரிக்கா நம்பிக்கை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-03T00:07:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் நீரிணையில் மேலும் சில கப்பல்களை கருப்புப் பட்டியலில் சேர்த்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-blacklists-more-ships-in-hormuz-strait-1788393683"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-blacklists-more-ships-in-hormuz-strait-1788393683</id>
            <summary type="text">Iran blacklists more ships in Hormuz Strait: ஹார்முஸ் நீரிணையில் மேலும் சில கப்பல்களை கருப்புப் பட்டியலில் ஈரான் சேர்த்துள்ளது.

மேலும் 11 கப்பல்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran blacklists more ships in Hormuz Strait: ஹார்முஸ் நீரிணையில் மேலும் சில கப்பல்களை கருப்புப் பட்டியலில் ஈரான் சேர்த்துள்ளது.
</p><h2>
மேலும் 11 கப்பல்கள்</h2><p>ஈரான் அரசு, ஹார்முஸ் நீரிணையில் விதிகளை மீறி பயணம் செய்ய முயன்ற மேலும் 11 கப்பல்களை கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. இதனால் மொத்தம் 56 கப்பல்கள் தற்போது ஈரானின் தடைக்கு உட்பட்டுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7858db1c-7400-4964-86fb-266428b6199e/26-6a98ba3290a9d.webp' /></p><h2>கருப்புப் பட்டியல்</h2><p>ஈரான், ஆகஸ்ட் 24 அன்று 45 எண்ணெய் டாங்கர்களை விதிமீறலுக்காக கருப்புப் பட்டியலில் சேர்த்ததாக அறிவித்தது. </p><p>இப்போது புதிதாக சேர்க்கப்பட்ட கப்பல்களில் மிகப்பெரிய கச்சா எண்ணெய் கப்பல்கள், எல்.என்.ஜி (Liquefied Natural Gas) மற்றும் எல்.பி.ஜி (Liquefied Petroleum Gas) கப்பல்கள், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பொருட்கள் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் ஆகியவை அடங்கும்.
</p><p></p><p>ஈரான் அரசு, “கருப்புப் பட்டியலில் உள்ள கப்பல்களுடன் இணைந்து செயல்படும் எந்தக் கப்பலும் (எ.கா. STS oil transfers, transshipment) தானாகவே பட்டியலில் சேர்க்கப்படும்” என எச்சரித்துள்ளது. </p><p>பட்டியலில் இருந்து நீக்கப்பட விரும்பும் கப்பல்கள், அதிகாரப்பூர்வ விண்ணப்பம் மற்றும் காரணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த நடவடிக்கை, ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் ஏற்றுமதி முயற்சிகளை மேலும் சிரமப்படுத்தும். </p><p></p><p>உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தின் சுமார் 20 சதவீதம் இந்த கடல்சாலையின் வழியாக நடந்தது. ஆனால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களால் தொடங்கிய போரின் பின்னர், போக்குவரத்து பெருமளவில் குறைந்துள்ளது.
</p><p>
ஈரான் அமைத்துள்ள “Persian Gulf Strait Authority (PGSA)” மீது அமெரிக்கா மே மாதத்தில் தடைகள் விதித்துள்ளது. இதனால் அந்த அமைப்புடன் தொடர்பு கொள்ளும் எந்த நிறுவனமும் அமெரிக்க நிதியமைப்பின் சொத்து முடக்கம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
</p><p>
இந்த புதிய நடவடிக்கை, உலக எரிசக்தி சந்தையில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T00:04:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தத்துக்கு எதிராகக் கொழும்பில் இன்று பிரம்மாண்டப் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/massive-protest-colombo-against-22nd-amendment-1788392725"></link>
            <id>https://tamilwin.com/article/massive-protest-colombo-against-22nd-amendment-1788392725</id>
            <summary type="text">அரசு கொண்டுவர முனையும் 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு
எதிராகப் பொதுமக்கள் மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து&amp;nbsp; பிரம்மாண்டப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசு கொண்டுவர முனையும் 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு
எதிராகப் பொதுமக்கள் மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து&nbsp; பிரம்மாண்டப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள்
சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.</p><p>குறித்த போராட்டமானது&nbsp;இன்று(3) பிற்பகல் 2 மணிக்குக் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளது.</p><h2>22ஆவது திருத்தம்</h2><p>

எதுல்கோட்டேயிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்றுப் புதன்கிழமை
நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப்
பதிலளிக்கும்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf72aad0-ceed-4b97-bdce-9836c26c3060/26-6a98b917b76ba.webp' /></p><p>

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு அரசைத் தவிர
நாட்டில் உள்ள ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் முழுமையான
எதிர்ப்பை வெளியிட்டு வருவதாகத் தெரிவித்த அவர், </p><p>நாட்டின் ஜனநாயகத்தைப்
பாதுகாக்க இந்தச் சட்டமூலத்துக்கு மக்களின் கருத்துக்கணிப்பு நடத்தப்படுவது
அத்தியாவசியமானது என்றார்.</p><h2>&nbsp;இறுதித் தீர்ப்பு</h2><p>
</p><p>
இந்த விவகாரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் நீதித்துறையை விமர்சிக்கத்
தயாராக இல்லை என்றும், உயர்நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காகவே தாம்
காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20532401-ea4a-48ac-ba07-263d2d734f29/26-6a98b91710778.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், எவ்வாறாயினும் திருத்தத்தை நிறைவேற்றியே தீருவோம் என நீதி
அமைச்சர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கின்றமை நீதித்துறைக்கு அழுத்தம்
கொடுக்கும் முயற்சியாகவே உள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
</p><p>
நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நடந்து கொள்ளும் நீதி அமைச்சர்
தற்போது ஒரு வேடிக்கையான மனிதராக மாறிவிட்டார் என்றும் ரஞ்சித் மத்தும பண்டார
எம்.பி. கடுமையாகச் சாடினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T00:02:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனைகளா ; நீரிழிவு வரை செல்லும் ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/eating-then-sleeping-causes-health-problems-1788393641"></link>
            <id>https://jvpnews.com/article/eating-then-sleeping-causes-health-problems-1788393641</id>
            <summary type="text">நிறைய பேருக்கு இரவு உணவு உண்டபின் உடனடியாக தூங்கச் செல்லும் பழக்கம் இருக்கிறது. ஆனால் அது மிகவும் தவறானது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.அப்படி பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிறைய பேருக்கு இரவு உணவு உண்டபின் உடனடியாக தூங்கச் செல்லும் பழக்கம் இருக்கிறது. ஆனால் அது மிகவும் தவறானது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.</p><p>அப்படி படுக்கும்போது உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என அவர்கள் எச்சரிக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/689635e0-f8cd-4b6f-9a93-34b2ca945e27/26-6a98b8ac00f2c.webp' /></p><h2>காத்திருக்கும் ஆபத்து&nbsp;</h2><p>

</p><p>சாப்பிட்ட உடனே தூங்கச் செல்லவதால் புவியீர்ப்பு விசையின் காரணமாக வயிற்றுப் பகுதியில் உள்ள அமிலங்கள் தொண்டைப் பகுதியை நோக்கி மேல் நோக்கி வரக்கூடும். இது கடுமையான நெஞ்சு எரிச்சல், உணவு செரிமானம் தாமதமாவதால் வயிறு உப்புசம், அஜீரணம் மற்றும் குடலில் அசௌகரியம் ஏற்படும்.</p><p> உணவில் உள்ள கலோரிகள் சரியாக எரியாமல் கொழுப்பாக மாறவும் வாய்ப்பிருக்கிறது.. இதனால் உடல் எடை மற்றும் தொப்பை அதிகரிக்கும்.</p><p> வயிறு முட்டல் காரணமாக ஆழ்ந்த தூக்கம் பாதிக்கப்படும்.. இப்பழக்கம் நீண்ட நாட்கள் தொடர்ந்தால் நீரிழிவு மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படலாம்.</p><p></p><p>
</p><p>
எனவே இரவு உணவை சாப்பிட்டவுடன் படுக்காமல் சிறிது நேரம் அமர்ந்திருப்பது அல்லது மெதுவாக நடப்பது உடலுக்கு நல்லது.</p><p>முக்கியமாக இரவு உணவிற்கும், தூக்கத்திற்கும் இடையே குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் இடைவெளி இருப்பது மிகவும் நல்லது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T00:00:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க பாஸ்போர்ட் விதிகளில் மாற்றம் - பெற்றோர் குடியுரிமை சான்று காட்ட வேண்டும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-passport-rules-may-change-for-parents-1788379535"></link>
            <id>https://news.lankasri.com/article/us-passport-rules-may-change-for-parents-1788379535</id>
            <summary type="text">US passport rules may change for parents: அமெரிக்காவில் பாஸ்போர்ட் விதிகளில் புதிய மாற்றங்கள் வரவிருக்கின்றன.

பாஸ்போர்ட் விதிகளில் மாற்றம்குழந்தைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>US passport rules may change for parents: அமெரிக்காவில் பாஸ்போர்ட் விதிகளில் புதிய மாற்றங்கள் வரவிருக்கின்றன.
</p><h2>
பாஸ்போர்ட் விதிகளில் மாற்றம்</h2><p>குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது பெற்றோர் தங்களது குடியுரிமை அல்லது குடியேற்ற நிலையை நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம்.</p><p>

அமெரிக்க வெளிவிவகார துறை தயாரித்து வரும் வரைவு வழிகாட்டுதலின் படி, பெற்றோர் தங்கள் குடியுரிமை சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84e8a9eb-feaa-4524-8a17-6879bb64f01f/26-6a9881917ac27.webp' /></p><h2>குடியுரிமையை கட்டுப்படுத்தும் முயற்சி</h2><p>இது, ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆகஸ்ட் 6 அன்று வெளியிட்ட EO 14418 என்ற நிர்வாக உத்தரவின் தொடர்ச்சியாகும்.
</p><p>
இந்த உத்தரவு, “பிறப்புரிமை குடியுரிமை” (Birthright Citizenship) குறைக்கவும், “Birth Tourism” எனப்படும் நடைமுறையை கட்டுப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. </p><p>அதாவது, அமெரிக்காவில் குழந்தை பிறந்தால் தானாகவே குடியுரிமை கிடைக்கும் என்ற நடைமுறையை கட்டுப்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.</p><p></p><p>இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தால், குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது பெற்றோர் தங்கள் குடியுரிமை அல்லது குடியேற்ற நிலையை நிரூபிக்க வேண்டியிருக்கும்.</p><p> இதனால், அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளின் குடியுரிமை தொடர்பான விவகாரங்களில் பெரிய மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இந்த வரைவு வழிகாட்டுதலை ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. </p><p>தற்போது இது ஆலோசனை நிலையில் உள்ளது. நடைமுறைக்கு வந்தால், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளின் குடியுரிமை தொடர்பான சட்டங்களில் முக்கியமான மாற்றம் நிகழும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T23:43:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈராக்கில் உள்ள அமெரிக்க படையினருக்கு காலக்கெடு! உடல்கள் மட்டுமே நாடு திரும்பும் என எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/warning-issued-to-us-troops-in-iraq-1788390495"></link>
            <id>https://ibctamil.com/article/warning-issued-to-us-troops-in-iraq-1788390495</id>
            <summary type="text">





ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற துணை ராணுவக் குழுவான ஹரகாத் ஹிஸ்புல்லா அல்-நுஜாபாவின் தலைவர் அக்ரம் அல்-காபி, அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>





ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற துணை ராணுவக் குழுவான ஹரகாத் ஹிஸ்புல்லா அல்-நுஜாபாவின் தலைவர் அக்ரம் அல்-காபி, அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளுக்கு எச்சரிக்கை விடுத்து, அவர்கள் வெளியேறுவதற்கான காலக்கெடுவை நிர்ணயித்துள்ளார். </p><p>

செப்டம்பர் 30-ஆம் திகதி பிறகும் அமெரிக்க வீரர்கள் ஈராக்கில் தங்கியிருந்தால், அவர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அவர் எச்சரித்துள்ளார்.</p><p>

இதன்படி, தொடர்ந்து அங்கு தங்கியிருந்தால் அவர்களின் உடல்கள் மட்டுமே ஈராக்கிலிருந்து வெளியே கொண்டு செல்லப்படும் என அல்-காபி மிரட்டல் விடுத்துள்ளார்.</p><p></p><h2>ஆயுத இயக்கங்களின் கூட்டணி</h2><p>

12-வது படைப்பிரிவு என்றும் அழைக்கப்படும் இந்த அமைப்பு, ஈரானுக்கு நெருக்கமான ஆயுத இயக்கங்களின் கூட்டணியான, ஈராக்கை தளமாகக் கொண்ட மக்கள் திரட்டல் படைகளின் (PMF) ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a92e87a-b123-456d-acc2-71d83c516e5e/26-6a98b3ffc5215.webp' /></p><p> 

கடந்த 2019-ஆம் ஆண்டில், அமெரிக்க அரசு இந்த அமைப்பையும் இதன் தலைவர் அக்ரம் அல்-காபியையும் பயங்கரவாதிகள் என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T23:40:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் மக்களின் தன்மானத்தின் அடையாளம் தமிழரசுக் கட்சி- சி.வி.கே. சிவஞானம் சிவஞானம் திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-party-founded-on-tamil-self-respect-1788382092"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-party-founded-on-tamil-self-respect-1788382092</id>
            <summary type="text">தமிழ் மக்களின் தன்மானத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தனித்துவமான
பழம்பெரும் அரசியல் கட்சியாக தமிழரசுக் கட்சி விளங்குகிறது என இலங்கை தமிழரசுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் மக்களின் தன்மானத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தனித்துவமான
பழம்பெரும் அரசியல் கட்சியாக தமிழரசுக் கட்சி விளங்குகிறது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
</p><p>நேற்று(02.09.2026) வலிகாமம் தெற்கு பிரதேச சபை வளாகத்தில் நடைபெற்ற அமரர் வி. தர்மலிங்கத்தின் 41ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு
உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>தனித்துவமும் தன்மானமும்</h2><p>
</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் தன்மானத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட
தனித்துவமானதும் பழம்பெருமை மிக்கதுமான அரசியல் கட்சியாகும்.
</p><p>தமிழரசுக் கட்சியின் தனித்துவமும் தன்மானமும் எந்த இடங்களில்
கேள்விக்குள்ளாக்கப்படுகின்றதோ, அந்த இடங்களில் தமிழரசுக் கட்சி
பிரசன்னமாகாது.இது எங்களுடைய உறுதியான நிலைப்பாடாகும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5902f206-9b12-42ad-bf6a-773f9e41a96d/26-6a98a65bb8f21.webp' /></p><p>பழம்பெரும் கட்சியான தமிழரசுக் கட்சியை தனிமைப்படுத்தியோ அல்லது ஓரங்கட்டியோ
தீர்மானங்களை எடுத்துவிட்டு, அதன் பின்னர் பகிரங்கமாக ‘வாருங்கள்’ என அழைப்பு
விடுத்தால் எவ்வாறு நாம் அங்கு செல்ல முடியும்? அவ்வாறு அழைக்கப்படும்
இடங்களுக்கு நாம் செல்லவும் மாட்டோம்.
</p><p>தமிழரசுக் கட்சி யாராவது அழைத்த இடத்தில் சென்று அமருகின்ற கட்சி அல்ல.
அதற்கென ஒரு தனித்துவமும் கௌரவமும் இருக்கின்றது.</p><h2>நிலைப்பாட்டின் உறுதி</h2><p> </p><p>இதனை ஏனைய தமிழ் அரசியல்
கட்சிகளும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழரசுக் கட்சியை கடந்த காலங்களில் வழிநடத்தியவர்கள் முதுகை வளைத்து அரசியல்
செய்தவர்கள் அல்லர். அவர்கள் முதுகை நிமிர்த்தி, தமிழ் மக்களின் உரிமைகளுக்காக
குரல் கொடுத்தவர்கள்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3cfc6f0-d478-4968-baf0-8ee4048da2b1/26-6a98a65b125a3.webp' /></p><p>அந்த வழியில் வந்த நாங்களும் வளைந்து செல்ல முடியாது.
எங்களை மதிப்பவர்களிடம் ஒரு படி கீழிறங்கி சென்று பேசுவதற்கும், இணைந்து
செயல்படுவதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம். ஆனால் எங்களை மதிக்காதவர்களிடம்
எங்களுடைய தன்மானத்தையும் கௌரவத்தையும் விட்டுக்கொடுத்து செயல்பட முடியாது.
</p><p>தேவைப்பட்டால் ஒரு படி மேலே சென்று எங்களுடைய நிலைப்பாட்டை உறுதியாக
வெளிப்படுத்தவும் தயாராக இருக்கின்றோம்.
இதனை நான் ஆணித்தரமாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T23:37:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திக் குழுக் கூட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trincomalee-development-committee-meeting-1788379804"></link>
            <id>https://tamilwin.com/article/trincomalee-development-committee-meeting-1788379804</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திக் குழுக் கூட்டம்,
மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ.ஸ்ரீபதி (காணி) அவர்களின் தலைமையில்
மாவட்ட செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திக் குழுக் கூட்டம்,
மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ.ஸ்ரீபதி (காணி) அவர்களின் தலைமையில்
மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
</p><p>
இந்தக் கூட்டத்தில் சிறுவர்கள் மற்றும் மகளிருடன் தொடர்புடைய துறைசார்
தீர்மானங்களை மேற்கொள்ளும் அரச உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.</p><h2>முக்கிய தீரமானங்கள்</h2><p>

பிரதேச மட்டத்தில் இனங்காணப்பட்டு கலந்துரையாடப்பட்டு, தீர்வு காணப்படாத
நிலையில் மாவட்ட மட்டத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் இந்தக் கூட்டத்தில்
முன்வைக்கப்பட்டு விரிவாக ஆராயப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e389ecc-608a-4643-a0c9-69ddc12b3c8b/26-6a9883cd166a1.webp' /></p><p>குறிப்பாக, சிறுவர்களின் பாதுகாப்பு, பராமரிப்பு, உரிமைகள், உளசமூக நலன்
உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றுக்கான
தீர்வுகளை முன்னெடுப்பதற்கான பல்வேறு தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T23:32:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/batticaloa-coordination-meets-under-mp-prabhu-1788375807"></link>
            <id>https://tamilwin.com/article/batticaloa-coordination-meets-under-mp-prabhu-1788375807</id>
            <summary type="text">மட்டக்களப்பு - மண்முனை தெற்கு, எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச
செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்&amp;nbsp; களுவாஞ்சிகுடி பிரதேச செயலக
மாநாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - மண்முனை தெற்கு, எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச
செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்&nbsp; களுவாஞ்சிகுடி பிரதேச செயலக
மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.</p><p>இந்தக் கூட்டமானது நேற்று(02.09.2026) நாடாளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் இடம்பெற்றுள்ளது.</p><h2>அபிவிருத்திப் பணிகள்</h2><p>
</p><p>
இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், மண்முனை - தெற்கு, எருவில்
பற்று பிரதேசசபையின் தவிசாளர் எம்.வினோராஜ் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.</p><p>அத்துடன் திணைக்களங்களின் தலைவர்கள்,பாதுகாப்பு துறையினர்,பிரதேசசபை
உறுப்பினர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ad05021-3322-45bb-983f-aba57654a264/26-6a9875f80487b.webp' /></p><p>இந்தக் கூட்டத்தின்போது&nbsp; பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்திப்
பணிகள், நிலுவையில் உள்ள திட்டங்கள் மற்றும் பொதுமக்களின் அவசரப் பிரச்சினைகள்
குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டு பல முக்கிய தீர்மானங்கள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.
</p><p>
பிரதேசத்தில் 281 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டில்
மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது 100வீதம்
பூர்த்தியடையும் கட்டத்தை எட்டியுள்ளதாக இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>பொதுமக்களின் பிரச்சினைகள்&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
அதேவேளை, இளைஞர்களை பாதிக்கும் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் அதிக வேகம்
காரணமாக ஏற்படும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்த பொலிஸாருக்குத் தெளிவான
வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன. </p><p>அத்துடன் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களைக்
கைது செய்யவும், விதிமுறைகளை மீறி அதிவேகமாகச் செல்லும் சாரதிகளுக்கு எதிராகத்
தொடர்ச்சியான கண்காணிப்புகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்கவும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f917256-8d15-4a77-a0db-1ceae3cb15af/26-6a9875f6ef25f.webp' /></p><p>

களுவாஞ்சிகடி வைத்தியசாலையின் கழிவகற்றல் 15 நாட்களுக்கும் மேலாக
மேற்கொள்ளப்படவில்லை என்ற முறைப்பாடு தொடர்பில் பிரதேச சபைக்கு உடனடியாக
நடவடிக்கை எடுக்குமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. </p><p>மேலும், வைத்தியசாலையின்
செயற்கை கருத்தரிப்பு மையத்தின் செயல்பாடுகள் மந்தகதியில் இருப்பது
குறித்தும், சேவைக்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்பட்டும் முறையான சேவைகள்
கிடைக்கவில்லை என்பது குறித்தும் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கி விரைவில்
தனிக் கூட்டமொன்றைக் கூட்டித் தீர்வு காணத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T23:31:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் தீவிரமடையும் நிவாரணப் பணிகள்: உயிரிழப்பு 1,100 ஐக் கடந்தது என ஐ.நா அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/46-nepal-hydropower-workers-may-still-be-alive-1788377339"></link>
            <id>https://tamilwin.com/article/46-nepal-hydropower-workers-may-still-be-alive-1788377339</id>
            <summary type="text">நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் இடம்பெற்ற பேரழிவுமிக்க திடீர்
வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, காணாமல் போனவர்களை தேடும் பணிகளும் நிவாரண
நடவடிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் இடம்பெற்ற பேரழிவுமிக்க திடீர்
வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, காணாமல் போனவர்களை தேடும் பணிகளும் நிவாரண
நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
</p><p>
இமயமலை பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பு காரணமாக உருவான இந்த
வெள்ளப்பெருக்கில் நேபாளத்தில் இதுவரை குறைந்தது 1,114 பேர்
உயிரிழந்துள்ளதுடன், சுமார் 4,000 பேர் காணாமல் போயுள்ளனர்.</p><h2>காலநிலை மாற்றத்தினால்&nbsp;ஏற்பட்ட&nbsp;பேரழிவு</h2><p>
</p><p>
திபெத் பகுதியில் 21 பேர் உயிரிழந்திருப்பதுடன், 540க்கும் மேற்பட்டோர்
காணாமல் போயுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

பாதிக்கப்பட்ட பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட பாலங்கள் முற்றாக
அழிவடைந்துள்ளதால், தொலைதூரக் கிராமங்களுக்கு இராணுவ வானூர்திகள் மூலமே
உணவும் அத்தியாவசியப் பொருட்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/065cf357-9634-4b2b-a930-921dd26912c2/26-6a9881f2961e7.webp' /></p><p>வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட 12,000க்கும் மேற்பட்டோர் இதுவரை
மீட்கப்பட்டுள்ள போதிலும், நீர்மின் நிலையச் சுரங்கங்களுக்குள் சிக்கியுள்ள
தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>

இந்தப் பேரழிவு குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நேபாளப் பிரதமர் பாலேந்திர
ஷா, இது காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட கட்டுப்படுத்த முடியாத ஒரு பேரழிவு
எனக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அத்துடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் 3 மாதகால அவசரநிலையை அறிவித்துள்ள நேபாள
அரசு, ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து 4 மாதகால சர்வதேச நிவாரணக்
கோரிக்கையையும் முன்வைத்துள்ளது.&nbsp;</p><h2>46 தொழிலாளர்கள்&nbsp;</h2><p>&nbsp;இந்தநிலையில், நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பு மற்றும் திடீர்
வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, ரசுவாகாதி நீர்மின் நிலையத்தின்
நிலத்தடிச் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள 46 தொழிலாளர்கள் இன்னும் உயிருடன்
இருக்கக் கூடும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.</p><p>

சுரங்கப் பாதையின் பாதுகாப்பான பகுதிக்குள் அவர்கள் சிக்கியிருப்பதாகவும்,
அங்கு உணவும் குடிநீரும் இருப்பதனால் அவர்கள் ஒரு வாரத்தின் பின்னரும்
உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதாகவும் நேபாள மின்சார சபையின் பணிப்பாளர்&nbsp; ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><h2>&nbsp;279 பேர் பாதுகாப்பாக மீட்பு</h2><p>

ரசுவா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த 111 மெகாவோட் மின் உற்பத்தி நிலையத்தின்
சுரங்கங்களுக்குள் நேபாள இராணுவத்தினர் மற்றும் இந்திய, சீன சிறப்பு மீட்புக்
குழுவினர் தேடுதல் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fd895c0-5ce1-4fcf-ae28-8245a3db3dff/26-6a988004ecc86.webp' /></p><p>இதுவரை நீர்மின் திட்டப் பகுதிகளில் இருந்து 279 பேர் பாதுகாப்பாக
மீட்கப்பட்டுள்ளனர்.

மேற்படி இயற்கை பேரழிவினால் நாட்டில் இதுவரை 1,114க்கும் அதிகமானோர்
உயிரிழந்துள்ளதுடன், 600 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.</p><p>
எஞ்சியவர்களை மீட்கும் பணியில் அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சர்வதேச
மீட்புக் குழுக்களின் உதவிகள் தொடர்ந்து பெறப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T23:30:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் இஸ்ரேலின் பணி முடிவடையவில்லை! மீண்டும் போருக்குள் நுழையும் நெதன்யாகு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/netanyahu-said-israel-s-mission-in-iran-1788382012"></link>
            <id>https://ibctamil.com/article/netanyahu-said-israel-s-mission-in-iran-1788382012</id>
            <summary type="text">
ஈரானில் இஸ்ரேலின் பணி இன்னும் முடிவடையவில்லை என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில், &quot;எனது...</summary>
            <content type="html"><![CDATA[<p>
ஈரானில் இஸ்ரேலின் பணி இன்னும் முடிவடையவில்லை என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
</p><p>
ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில், "எனது வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் எங்களது அனைத்து அமைப்புகளும் ஈரானிய ஆட்சியை வீழ்த்துவதற்காகவே செயல்பட்டு வருகின்றன" என்று என அவர் கூறியுள்ளார்.
</p><p>
இதன்போது, ஈரானிய ஆட்சியை வீழ்த்துவதற்கு அதனுடன் நேரடியாக மோதுவதே தனது நோக்கம் என்று நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>ட்ரம்பின் அறிவிப்புக்கு பதில்&nbsp;</h2><p>
</p><p>
ஈரானுடனான போர் மீண்டும் தொடங்குவது குறித்து இஸ்ரேல் கவலைப்படத் தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த சில மணிநேரங்களிலேயே நெதன்யாகுவின் மேற்கொண்டு கருத்து வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/483db2f2-8301-43db-915b-51c8b7289cad/26-6a98b0d622897.webp' /></p><p><i>Image Credit:&nbsp;www.scmp.com</i></p><p>

எவ்வாறாயினும், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில நாட்களாக இடம்பெற்ற மோதல்களில் இஸ்ரேலுக்குப் பங்கிருப்பதாக தகவல்கள் வெளியாகவில்வை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table><p>






</p>]]></content>
            <updated>2026-09-02T23:27:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சிப் பகுதியில் விபத்து - ஒருவர் பலத்த காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-in-kilinochchi-one-seriously-injured-1788380368"></link>
            <id>https://tamilwin.com/article/accident-in-kilinochchi-one-seriously-injured-1788380368</id>
            <summary type="text">கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி - விளாவோடை பகுதியில் இடம்பெற்ற
வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் காயமடைந்த நிலையில் கிளிநொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி - விளாவோடை பகுதியில் இடம்பெற்ற
வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>குறித்த விபத்தானது நேற்று(02.09.2026) இடம்பெற்றுள்ளது.</p><h2>வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர்</h2><p>ஏ9 வீதியால் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த
நபர் மீது, கிளிநொச்சி பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதிவேகமாகச் சென்ற
மகிழுந்து(கார்) மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dac48816-5c1f-4883-b582-21ea6c8c4fc8/26-6a988677f153b.webp' /></p><p>விபத்தில் பலத்த காயமடைந்த துவிச்சக்கர வண்டி ஓட்டுநர் உடனடியாக மீட்புக்
குழுவினரால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில்
சேர்க்கப்பட்டுள்ளார்.
</p><p>விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T23:06:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[Nepal Floods: சுயநலமாக தப்பிய சீன மேற்பார்வையாளர் உயிர் பிழைத்த தொழிலாளி குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-floods-worker-blames-chinese-supervisor-1788382250"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-floods-worker-blames-chinese-supervisor-1788382250</id>
            <summary type="text">Nepal flood survivor claims Chinese supervisor fled: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பேரழிவில் உயிர் பிழைத்த ஒரு தொழிலாளி, சீன மேற்பார்வையாளர் மீதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal flood survivor claims Chinese supervisor fled: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பேரழிவில் உயிர் பிழைத்த ஒரு தொழிலாளி, சீன மேற்பார்வையாளர் மீதான அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.</p><h2>

தப்பிச் சென்ற&nbsp;சீன மேற்பார்வையாளர்</h2><p>Trishuli-3A நீர்மின் திட்டத்தின் சுரங்கத்தில் பணியாற்றிய தொழிலாளி ராஜ் சேத்ரி (Raj Chhetri), வெள்ளம் ஏற்பட்டபோது தன்னையும் பலரையும் சுரங்கத்திலிருந்து வெளியேற்ற உதவி கேட்டு சீன மேற்பார்வையாளரிடம் சென்றதாக கூறினார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a522e207-4983-43ed-939b-24756255208f/26-6a988c2c0825f.webp' /></p><p>ஆனால் அவர் “நான் சென்று பார்த்துவிட்டு வருகிறேன்” என்று சொல்லி சுரங்கத்திலிருந்து தப்பிச் சென்றதாக குற்றம்சாட்டினார்.
</p><p>
இந்த திட்டம் சீனாவின் Power China Corporation நிறுவனத்தால் மேற்பார்வை செய்யப்படுகிறது. வெள்ளத்தால் சுரங்கங்கள் சேறும், குப்பையும் நிரம்பி தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.&nbsp;தற்போது குறைந்தது 40 பேர் காணாமல் போயுள்ளனர்.</p><p></p><h2>காணாமல் போன 900-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்</h2><p>மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீர்மின் திட்டங்களில் 900-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர்.
</p><p>
மீட்பு குழுக்கள் சுரங்கங்களில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்க போராடி வருகின்றன. சுரங்கங்கள் சேறும், குப்பையும் அடைத்ததால் மீட்பு பணிகள் கடினமாகியுள்ளது.
</p><p>
இந்த குற்றச்சாட்டு, சீன மேற்பார்வையாளர்களின் பொறுப்பின்மை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. </p><p>நேபாளத்தில் ஏற்பட்ட இந்த பேரழிவு, அங்குள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் பொறுப்புகள் குறித்து பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T22:51:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[அட்டைப்படத்திற்கு கவர்ச்சி போஸ் கொடுத்த ராகுல் ப்ரீத்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/rakul-preet-sizzling-in-magazing-photoshoot-1788389484"></link>
            <id>https://cineulagam.com/article/rakul-preet-sizzling-in-magazing-photoshoot-1788389484</id>
            <summary type="text">நடிகை ராகுல் ப்ரீத் சிங் தொடர்ந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின்றன.
தற்போது 35 வயதாகும் அவர் பிரபல இதழ் ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை ராகுல் ப்ரீத் சிங் தொடர்ந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின்றன.
</p><p>தற்போது 35 வயதாகும் அவர் பிரபல இதழ் ஒன்றிற்கு அவர் கவர்ச்சியாக போஸ் கொடுத்து இருக்கிறார்.அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.</p><p>மேலும் லைக்குகளும் குவிந்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-02T22:51:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[புது படத்தை தொடங்கிய த்ரிஷா.. இப்படி ஒரு கதையா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/trisha-starts-her-new-film-with-raja-krishna-1788389237"></link>
            <id>https://cineulagam.com/article/trisha-starts-her-new-film-with-raja-krishna-1788389237</id>
            <summary type="text">நடிகை த்ரிஷா ஹீரோயினாக நடிக்கும் புது படம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது . Panorama Studios இந்த படத்தை தயாரிக்கிறது .ராஜா கிருஷ்ணா இயக்கத்தில் உருவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை த்ரிஷா ஹீரோயினாக நடிக்கும் புது படம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது . Panorama Studios இந்த படத்தை தயாரிக்கிறது .</p><p>ராஜா கிருஷ்ணா இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் த்ரிஷா உடன் ராதிகா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.</p><p>சைக்கலாஜிக்கல் திரில்லர் கதை என்றும், அதில் சஸ்பென்ஸ் மற்றும் ஹாரர் கலந்திருக்கும் என்றும் தெரிவித்து இருக்கின்றனர். 

விரைவில் ஷூட்டிங் தொடங்க இருக்கும் நிலையில், த்ரிஷாவின் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b65ed047-9844-4732-a97d-8f3bd3124457/26-6a98ad15b2ae5.webp' /></p><p>
</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T22:47:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுபமா பரமேஸ்வரன் கிளாமர் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/anupama-parameswaran-glam-photoshoot-1788388928"></link>
            <id>https://cineulagam.com/article/anupama-parameswaran-glam-photoshoot-1788388928</id>
            <summary type="text">நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் அளித்த பேட்டி பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தனது முன்னாள் காதலர் கொடுத்த டார்ச்சர் பற்றி அவர் பேசி இரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் அளித்த பேட்டி பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தனது முன்னாள் காதலர் கொடுத்த டார்ச்சர் பற்றி அவர் பேசி இருந்தார்.
</p><p>
அதில் இருந்து மீண்டு வர முயற்சிப்பதாகவும் தெரிவித்து இருந்தார். </p><p>

தற்போது கேரளாவின் பிரபல இதழ் ஒன்றிற்கு கிளாமர் உடையில் ஹாட் ஆக போஸ் கொடுத்த புது புகைப்படங்களை அனுபமா வெளியிட்டுள்ளார். ரசிகர்களை கவரும் ஸ்டில்கள் இதோ பாருங்க.</p>]]></content>
            <updated>2026-09-02T22:42:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் நீண்டகாலமாக கால்நடைகளை திருடி வந்த நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-arrest-thief-in-batticaloa-1788368428"></link>
            <id>https://tamilwin.com/article/police-arrest-thief-in-batticaloa-1788368428</id>
            <summary type="text">மட்டக்களப்பு - இருதயபுரம் பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டுக்
கொண்டிருந்த ஆடு ஒன்றை கடத்திச் சென்ற காத்தான்குடி
பகுதியைச் சேர்ந்த நீண்டகாலமாக கால் நடைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - இருதயபுரம் பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டுக்
கொண்டிருந்த ஆடு ஒன்றை கடத்திச் சென்ற காத்தான்குடி
பகுதியைச் சேர்ந்த நீண்டகாலமாக கால் நடைகளை திருடி வந்த ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த கைது நடவடிக்கையானது நேற்றைய தினம்(01.09.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை&nbsp;</h2><p>

கடந்த மாதம் 18ஆம் திகதி இருதயபுரம் பகுதியில் வீதி ஓரமாக
மேய்ந்து கொண்டிருந்த 5 ஆடுகளில் ஒன்றை குறித்த நபர்&nbsp; சிறிய ரக வான் ஒன்றில் கடத்திச்
சென்றுள்ளார்.</p><p>

இதனையடுத்து ஆட்டின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில்
சிசிடிவி கெமரா மூலம் ஆடு கடத்தப்பட்ட வாகனத்தினை அடையாளம் கண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5e51e54-4a24-4419-91ef-9b447d926886/26-6a985d11d5564.webp' /></p><p>பின்னர் பொலிஸார் சம்பவ தினமான நேற்று ஆட்டை கடத்திச் சென்ற திருடனை
காத்தான்குடியில் வைத்து கைது செய்துள்ளதுடன் ஆட்டை கடத்த பயன்படுத்திய சிறிய ரக வானையும்
மீட்டுள்ளனர்.</p><p>கைது செய்யப்பட்ட திருடன் நீண்ட காலமாக வாகனங்களில் ஆடு மற்றும் மாடுகளை
திருடி வருவதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில்
தெரியவந்துள்ளது.</p><p>

இதன்போது கைது செய்யப்பட்ட நபரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக&nbsp; குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T22:31:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாரிகளை மிரள வைத்த சீன கதவுகள் ; சோதனையில் காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chinese-doors-shock-officials-1788387634"></link>
            <id>https://jvpnews.com/article/chinese-doors-shock-officials-1788387634</id>
            <summary type="text">சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உலோகக் கதவுகளுக்குள் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,00,000-க்கும் அதிகமான சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளை சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உலோகக் கதவுகளுக்குள் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,00,000-க்கும் அதிகமான சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். </p><p>

இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய கொள்கலன் ஒன்றைச் பரிசோதித்த சுங்க வருவாய் பணிப்பாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இந்தச் சட்டவிரோதக் கடத்தலைக் கண்டுபிடித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01bbe79e-c230-4b04-8b1c-c84e534c0a8c/26-6a98a1339d59a.webp' /></p><h2>சந்தைப் பெறுமதி</h2><p>

சுங்கப் பிரிவினரின் சோதனையில் இருந்து தப்பிப்பதற்காகவே இந்தக் சிகரெட்டுகள் கதவுகளுக்குள் மிகவும் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் சந்தைப் பெறுமதி 30 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p> 

</p><p>இச்சம்பவம் தொடர்பில் சுங்க வருவாய் பணிப்பாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T22:30:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணைக்கு ட்ரம்பின் பெயர்? சர்ச்சையை கிளப்பும் அமெரிக்க ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-sparks-controversy-over-strait-of-hormuz-1788386799"></link>
            <id>https://canadamirror.com/article/trump-sparks-controversy-over-strait-of-hormuz-1788386799</id>
            <summary type="text">ஈரானுடனான போருக்கு மத்தியில் முக்கிய நீர்வழிப்பாதை சர்ச்சைக்குரியதாக நீடித்து வரும்போதிலும், அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் ஹார்முஸ் நீரிணைக்கு &#039;டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடனான போருக்கு மத்தியில் முக்கிய நீர்வழிப்பாதை சர்ச்சைக்குரியதாக நீடித்து வரும்போதிலும், அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் ஹார்முஸ் நீரிணைக்கு 'டிரம்ப் நீரிணை' எனப் பெயர் மாற்றுமாறு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p>"இப்போது அது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதால், ஹோர்முஸ் நீரிணையின் பெயரை ட்ரம்ப் நீரிணை என்று மாற்றிவிடலாமா? அமெரிக்காவை போலவே, அதுவும் முன்னெப்போதையும் விட 'சூடாக' இருக்கும்!" என்று ட்ரம்ப் தனது 'ட்ரூத்' சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/767b14d8-da84-46b0-ad46-1ad8cb87b6a2/26-6a989df0c4632.webp' /></p><p>
கனடாவுடனான வர்த்தக போருக்கு மத்தியில், ஒன்டாரியோ ஏரியை 'அமெரிக்கா ஏரி' எனப் பெயர் மாற்றுமாறு ட்ரம்ப் உத்தரவிட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, அவர் முன்மொழிந்த சமீபத்திய புவியியல் பெயர் மாற்றம் இதுவாகும்.</p><p>&nbsp;மேலும், 2025 ஜனவரியில் மீண்டும் பதவியேற்ற தனது முதல் நாளிலேயே, டிரம்ப் மெக்சிகோ வளைகுடாவிற்கு "அமெரிக்கா வளைகுடா" என பெயர் மாற்றினார். </p><p>முந்தைய பல பெயர் மாற்றங்கள், 80 வயதான அமெரிக்க அதிபரின் மேலோட்டமான கேளிக்கையான பேச்சுகளாக தொடங்கி, பின்னர் அவரே அவற்றை நிஜமாக்கி காட்டின.
</p><p>
ட்ரம்ப் சமீப வாரங்களில் ஹார்முஸ் நீரிணையின் மீது இறையாண்மையை கோருவதாக மீண்டும் மீண்டும் அச்சுறுத்தல் விடுத்து வருவதுடன், அந்த நீர்வழியை ஒரு "புதிய அமெரிக்க பிரதேசம்" என காட்டும் வரைபடத்தையும் வெளியிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-02T22:06:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் ஜனாதிபதிகள் செய்த அதே வேலையை தான் அநுரவும் செய்கிறார்! எழுந்துள்ள குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-does-same-former-president-batti-cordinator-1788366846"></link>
            <id>https://tamilwin.com/article/anura-does-same-former-president-batti-cordinator-1788366846</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர் ஜெயவர்தன, சந்திரிக்கா மற்றும் மகிந்த ஆகியோர் செய்த அதே வேலையைத்தான்
இன்று ஜனாதிபதி அநுரவும் செய்கிறார் என முன்னணி சோஷிஸக...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர் ஜெயவர்தன, சந்திரிக்கா மற்றும் மகிந்த ஆகியோர் செய்த அதே வேலையைத்தான்
இன்று ஜனாதிபதி அநுரவும் செய்கிறார் என முன்னணி சோஷிஸக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம்
கிருபாகரன் தெரிவித்துள்ளார்.</p><p>இன்று(02.09.2026) மட்டக்களப்பில் 22வது திருத்தச் சட்டத்துக்கு&nbsp;எதிர்ப்பு தெரிவித்து&nbsp;துண்டு பிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கையை அடுத்து&nbsp;ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>22வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு&nbsp;</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp; உயர் நீதிமன்றத்தில் உள்ள 65 வயதுடைய நீதியரசர்களை 67 வயது வரை நீடிப்பதற்கு
22வது அரசியல் அமைப்பு தொடர்பாக புதிய ஒரு சட்டத்தை ஓகஸ்ட் 18ஆம் திகதிக்கு
முன்னர் கொண்டுவர அரசாங்கம் முயற்சிக்கின்றது.</p><p>

இந்த சட்டம் கொண்டுவருவதற்கு காரணம் 11 இலட்சம் வழக்குகள் நிலுவையில்
இருக்கின்றமைய என தேசிய மக்கள் சக்தி கட்சியினர் தெரிவிக்கின்றனர். ஆனால் மேல் நீதிமன்றத்தில் நீதவான் நீதிமன்றங்களில் தான்
கூடுதலான வழக்குகள் இருக்கிறது என சாதாரண மனிதர்களுக்கும் கூட தெரியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2295d6b-0442-4556-9ff8-aa675e371116/26-6a98545494822.webp' /></p><p> இந்த நிலையில் நீதியரசர்களை 2 வருடம் நீடிப்பதை கொண்டு வரும் செயலைப் போன்று அன்று ஜே.ஆர்.
ஜெயவர்த்தன&nbsp; அவருடைய நண்பரான நெவில் சமரகோன் என்ற சட்டத்தரணியை
நீதியரசராக மாற்றினார்.
</p><p>
அவ்வாறே சந்திரக்கா ஜனாதிபதியாக வந்ததும் சட்ட ஆலோசகராக இருந்த மார்க்
பெர்னாண்டோ நிறுத்திவிட்டு அவரது நண்பரான சரத் டி சில்வா என்ற மிக மோசமான
பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தியவரை நீதியரசராக மாற்றினார்.
</p><p>
நீதியரசராக இருந்த சிரானி பண்டாரநாயக்காவை ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததும் தாங்கள்
சொன்னதை செய்யவில்லை என்று அவரை நீக்கிவிட்டு அவர்களுக்கு சாதகமானவரை
நீதியரசராக கொண்டு வந்தார்கள் அதே வேலையைத்தான் இன்று ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்க செய்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T21:50:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலை உண்ட நிலையில் மீட்கப்பட்ட இளைஞரின் சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-s-body-recovered-after-crocodile-attack-1788384982"></link>
            <id>https://jvpnews.com/article/youth-s-body-recovered-after-crocodile-attack-1788384982</id>
            <summary type="text">கொழும்பு – பிலியந்தலை, கரடியானா குப்பை அகற்றும் நிலையத்திற்கு எதிரில் உள்ள வேரஸ் கங்கையில், முதலைகளால் உண்ணப்பட்ட நிலையில் இளம் ஆண் ஒருவரின் சடலம் கண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு – பிலியந்தலை, கரடியானா குப்பை அகற்றும் நிலையத்திற்கு எதிரில் உள்ள வேரஸ் கங்கையில், முதலைகளால் உண்ணப்பட்ட நிலையில் இளம் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>



சாயுரபுர பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9a9bc61-644f-4956-a5e5-3f06ecc40c98/26-6a9896d86b853.webp' /></p><h2>மேலதிக விசாரணை</h2><p>



கரடியானா குப்பை அகற்றும் நிலையத்தின் ஊழியர்கள், ஆற்றில் மனித சடலம் ஒன்று கிடப்பதையும், அதனை முதலை ஒன்று இழுத்துச் செல்வதையும் அவதானித்துள்ளனர். </p><p>இதையடுத்து சம்பவம் தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.</p><p>



தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸ் அதிகாரிகள், சடலத்தை முதலை ஒன்று உண்டு கொண்டிருந்ததை உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p></p><p>



இதன்பின்னர், அப்பகுதி மக்களின் உதவியுடன் சடலத்தை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், முதலை சடலத்தைப் பிடித்திருந்ததால் மீட்புப் பணிகள் தடைப்பட்டுள்ளன.</p><p>



இதனையடுத்து, சடலத்தை பாதுகாப்பாக மீட்பதற்காக வனவிலங்கு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.



சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T21:45:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக பாலியல் தொழில் ; மீட்கப்பட்ட பெண்கள் ; பங்களாவில் காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/women-rescued-from-sex-trade-promised-film-roles-1788373289"></link>
            <id>https://jvpnews.com/article/women-rescued-from-sex-trade-promised-film-roles-1788373289</id>
            <summary type="text">சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஆட்டோவில் அழைத்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுமி, ‘என்னை காப்பாற்றுங்கள்..’ என கத்தி கூச்சலிட்ட நிலையில், பொதுமக்கள் அந்த ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஆட்டோவில் அழைத்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுமி, ‘என்னை காப்பாற்றுங்கள்..’ என கத்தி கூச்சலிட்ட நிலையில், பொதுமக்கள் அந்த ஆட்டோவை மடக்கிப்பிடித்து சிறுமியை மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
</p><p>
அந்த சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை காட்டி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்களை சென்னைக்கு அழைத்து வந்து ராமாபுரம் பங்களாவில் சிறை வைத்தது தெரிய வந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd203aa5-4559-43d9-bae5-2b2bbe032a44/26-6a98692b065ef.webp' /></p><h2>பாலியல் தொழில்&nbsp;</h2><p> மேலும் அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் சிறுமி பொலிசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


</p><p>இதையடுத்து போலிசார் சம்பந்தப்பட்ட பங்களாவில் அதிரடி சோதனை நடத்தி, அங்கிருந்த சிறுமிகள் உள்ளிட்ட சுமார் 10 பெண்களை மீட்டனர்.</p><p> இவர்களில் வங்கதேசத்தை சேர்ந்த இரண்டு பெண்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>இந்த கும்பலின் தலைவி என சந்தேகிக்கப்படும் பெண் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>மேலும் சென்னையில் அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக கூறப்படும் 5 பேரை பொலிசார் தற்போது கைது செய்துள்ளனர்.&nbsp; </p><p>

</p>]]></content>
            <updated>2026-09-02T21:43:47+00:00</updated>
        </entry>
    </feed>
