<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-10T10:30:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சுகாதாரத்துக்கு முரணாக தயிர் விற்பனை: இருவருக்கு அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/curd-sold-in-violation-48-000-fine-1789033810"></link>
            <id>https://tamilwin.com/article/curd-sold-in-violation-48-000-fine-1789033810</id>
            <summary type="text">யாழ்ப்பாணம்-அச்சுவேலி பகுதியில் சுகாதாரத்துக்கு முரணான முறையில் தெருவோரத்தில் வைத்து
தயிர் விற்பனை செய்த இருவருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் அப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம்-அச்சுவேலி பகுதியில் சுகாதாரத்துக்கு முரணான முறையில் தெருவோரத்தில் வைத்து
தயிர் விற்பனை செய்த இருவருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>சன்னதி கோவில் உற்சவ காலத்தை முன்னிட்டு, கடந்த 28.08.2026 அன்று அச்சுவேலி
1ஆம் பிரிவு பொதுச் சுகாதார பரிசோதகர் அ. சர்மிலன் மற்றும் பொதுச் சுகாதார
பரிசோதகர்களான உதயபாலா, சால்ஸ் ஆகியோரால் உணவுச் சுகாதாரம் தொடர்பான விசேட
பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
</p><p>இதன்போது, சுகாதாரத்துக்கு முரணான வகையில் தெருவோரத்தில் வைத்து தயிர் விற்பனை
செய்தமை கண்டறியப்பட்டது.</p><h2>வழக்குத் தாக்கல்</h2><p>
இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கு எதிராக அச்சுவேலி 1ஆம்
பிரிவு பொதுச் சுகாதார பரிசோதகரால் மல்லாகம் நீதவான்
நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50875538-0471-4cee-88f0-bd7beac7638f/26-6aa284933a7bd.webp' /></p><p>
</p><p>குறித்த வழக்கு இன்று (10.09.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இரு
எதிரிகளுக்கும் மன்றினால் தலா 24,000
ரூபா வீதம் மொத்தம் 48,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T10:26:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[காஞ்சிபானி இம்ரானின் உறவினர் சுட்டுக்கொன்ற சம்பவம்! சிசிடிவி காட்சியில் சிக்கிய சந்தேகநபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shooting-and-killing-kanjipanis-cousin-in-kotahena-1789033973"></link>
            <id>https://tamilwin.com/article/shooting-and-killing-kanjipanis-cousin-in-kotahena-1789033973</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி என சந்தேகிக்கப்படும் காஞ்சிபானி இம்ரானின் உறவினர் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் போதைப்பொருட்களுடன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி என சந்தேகிக்கப்படும் காஞ்சிபானி இம்ரானின் உறவினர் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு வடக்கு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>இந்த துப்பாக்கிச்சூடு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் ஒரு கடைக்கு முன்பாக ஆகஸ்ட் (10) பிற்பகல் நடைபெற்றுள்ளது.</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர் மட்டக்குளியை சேர்ந்த 23 வயதுடையவர் ஆவார்.</p><h2>பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்</h2><p> </p><p>இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர், கொழும்பு 05, கிருலப்பனையை சேர்ந்த 33 வயதான முகமது அஸ்மின் மொஹிதீன் ஆவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c13b8f37-db31-4c9c-b381-d3594e78f172/26-6aa2857f673e9.webp' />&nbsp;</p><p> 

இவர் காஞ்சிபானி இம்ரானின் மாமா என்று பொலிஸ் விசாரணையில் தற்போது வெளிப்படுத்தியுள்ளது.</p><p>துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்ததை சிசிடிவி காட்சிகள் வெளிப்படுத்தியுள்ளதாக பொலிஸ் கூறுகின்றது.</p><h2>சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலை&nbsp;</h2><p>

சந்தேகநபரை கைது செய்த நேரத்தில், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 12 கிராம் மற்றும் 470 மில்லிகிராம் போதைப்பொருட்களும், குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட இரண்டு கைபேசிகளும் வழக்கு ஆதாரங்களாக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கொழும்பு வடக்கு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவிக்கின்றது. </p><p>

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (10) நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவிருந்தார்.
</p><p>
மேலும், கொட்டாஞ்சேனை பொலிஸ் மற்றும் கொழும்பு வடக்கு பிரதேச குற்றப்புலனாய்வு பிரிவினால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T10:25:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் ; ஜனாதிபதிக்கு டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/douglas-sends-urgent-letter-to-president-1789035252"></link>
            <id>https://jvpnews.com/article/douglas-sends-urgent-letter-to-president-1789035252</id>
            <summary type="text">யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் பயன்பாட்டில் இருந்து இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்துக்குச் சொந்தமான காணி,...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் பயன்பாட்டில் இருந்து இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்துக்குச் சொந்தமான காணி, நிலங்கள் மற்றும் கட்டிடங்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c608a4bf-7a0e-4d21-b05b-20e6e3d0b08c/26-6aa2855a84900.webp' /></p><h2 style="text-align: justify; "><span style="text-align: left;">பொதுமக்களின் காணிகள்</span></h2><p style="text-align: justify; "><span style="text-align: left;"><br></span>யுத்த காலத்தில் பாதுகாப்புத் தேவைகளுக்காக பொதுமக்களின் காணிகள் பயன்படுத்தப்பட்ட நிலையில், யுத்தம் நிறைவடைந்த பின்னரும் சில பகுதிகள் முழுமையாக விடுவிக்கப்படாமல் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p style="text-align: justify; ">தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் 2,030 ஏக்கர் காணிகள் இன்னமும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாகவும், இதனால் பல நூற்றுக்கணக்கான குடும்பங்களின் மீள்குடியேற்றம் தாமதமடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
குறிப்பாக பலாலி வீதியின் கிழக்குப் பகுதியில் சுமார் 290 ஏக்கர் காணி பொன்னாலை–பருத்தித்துறை வீதியில் சுமார் 1,500 மீற்றர் நீளமான மூடப்பட்ட பகுதி வசாவிளான் கிழக்கில் 511 பிரிகேட் முகாம் அமைந்துள்ள பகுதியில் 45 குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார் 17 ஏக்கர் தனியார் காணி; மயிலிட்டித்துறை தெற்கில் சுமார் 130 ஏக்கர் பரப்பில் இதுவரை ஏறக்குறைய 5 ஏக்கர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளமை; மயிலிட்டித்துறை வடக்கில் சுமார் 40 ஏக்கர் காணி;பலாலி வடக்கில் இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கான சுமார் 400 மீற்றர் நீளமான அணுகல் பாதை ஆகியவை தொடர்பில் அவர் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
அத்துடன், மயிலிட்டி றோமன் கத்தோலிக்க பாடசாலையின் மைதானம், மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயம், கிறிஸ்தவ மயானம், பிள்ளையார் ஆலயம், பொதுமக்களின் வழிபாட்டு மற்றும் சமூகப் பயன்பாட்டு இடங்கள், ஐஸ் பெக்டரி உள்ளிட்ட முக்கிய இடங்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p>
</p><p style="text-align: justify; ">
பலாலி தெற்கு பகுதியில் அமைந்திருந்த தோலகட்டி பழச்சாறு தொழிற்சாலை மற்றும் அதனருகிலுள்ள சிறி வேலுப்பிள்ளை வித்தியாலயத்துக்குச் சொந்தமான காணிகளையும் விடுவிக்க வேண்டும் எனவும் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
காணிகளை விடுவிப்பது என்பது வெறுமனே நிலங்களை மீளக் கையளிப்பது மாத்திரமல்ல.

நூற்றுக்கணக்கான குடும்பங்களின் மீள்குடியேற்றம், விவசாய நடவடிக்கைகள், பொதுப் போக்குவரத்து, வழிபாடு மற்றும் சமூக–பொருளாதார நடவடிக்கைகளை மீள இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான முக்கிய நடவடிக்கையாகும்.
</p><p style="text-align: justify; ">
எனவே, ஜனாதிபதி இந்த விடயத்தில் விசேட கவனம் செலுத்தி, சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு, நீண்டகாலமாக விடுவிக்கப்படாமல் உள்ள காணிகளை விரைவாக விடுவிக்க வேண்டும் என கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-10T10:24:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[72 வயதில் 20 வயது இளம்பெண்ணுடன் திருமணம்; வலைதளப் பயனர்களிடையே பெரும் விவாதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/football-legend-datuk-abdah-alif-married-girl-1789036054"></link>
            <id>https://jvpnews.com/article/football-legend-datuk-abdah-alif-married-girl-1789036054</id>
            <summary type="text">&amp;nbsp; மலேசிய தேசிய கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான டத்தோக் அப்தா அலிப் தனது 72 ஆவது வயதில் 20 வயது நிறைந்த இளம்பெண் ஒருவரைத் திருமணம் செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மலேசிய தேசிய கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான டத்தோக் அப்தா அலிப் தனது 72 ஆவது வயதில் 20 வயது நிறைந்த இளம்பெண் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். </p><p>

1970 களின் பிற்பகுதியிலும் 1980 களின் தொடக்கத்திலும் மலேசிய அணியின் முன்னணி வீரராகத் திகழ்ந்த இவர், 1980 ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தேசிய அணியில் இடம்பெற்றிருந்தார் .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1dc78c4f-964f-4680-8c39-340d4e43316d/26-6aa2861759463.webp' /></p><h2>வலைதளப் பயனர்களிடையே பெரும் விவாதம்</h2><p> </p><p>

இவர்களது திருமணம் கடந்த ஆகஸ்ட் 27 ஆம் திகதி கோலா திராங்கானுவில் இரு வீட்டாரின் பூரண சம்மதத்துடனும் ஆசிகளுடனும் எளிமையான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது.</p><p></p><p> திருமணம் முடிந்து தம்பதியினர் தேனிலவு சென்றுள்ளதால், இந்த நிகழ்வு குறித்து அப்தா அலிப்பைத் தொலைபேசியில் உடனடியாகத் தொடர்புகொள்ள இயலவில்லை. 

முன்னாள் தேசிய வீரரும் அப்தா அலிப்பின் தம்பியுமான டத்தோக் யூனுஸ் அலிப் இந்தத் திருமணச் செய்தியை ஊடகங்களிடம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். </p><p>"இரு குடும்பங்களின் ஆசியுடன் திருமணம் இனிதே முடிந்துள்ளது. அவர்கள் இருவரும் தங்களின் வாழ்க்கைப் பயணத்தில் என்றென்றும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p>

இளம் பெண்ணை கரம்பிடித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, 52 ஆண்டுகள் வயது வித்தியாசம் கொண்ட இந்தத் திருமணம் மலேசியக் கால்பந்து ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளப் பயனர்களிடையே பெரும் விவாதத்தையும் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-10T10:24:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/annual-grand-festival-the-vallipura-alwar-temple-1789035490"></link>
            <id>https://ibctamil.com/article/annual-grand-festival-the-vallipura-alwar-temple-1789035490</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா நாளை (11.09.2026) காலை 9.00 மணியளவில் கொடியேற்றத்துடன...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா நாளை (11.09.2026) காலை 9.00 மணியளவில் கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக ஆரம்பமாகவுள்ளது.
</p><p>
இதனை முன்னிட்டு நாளை காலை 7.00 மணியளவில் விசேட யாக பூசைகள் இடம்பெறவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்று, காலை 9.00 மணியளவில் ஆலயத்தின் கொடியேற்ற நிகழ்வு நடைபெறவுள்ளது.
</p><p>
கணபதீசுவரக் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்களால் விசேட பூசை நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p></p><h2>விழா நடவடிக்கைகள்</h2><p> </p><p>பெருந்திருவிழாவின் ஆரம்ப நாட்களில் சக்கரத்து ஆழ்வார் உள்வீதி உலா இடம்பெறுவதுடன், ஏழாம் திருவிழாவிலிருந்து வெளிவீதி உலாவும் இடம்பெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8e7d0e6-7f55-4aa1-959e-e2f0504195b7/26-6aa284f2ae76b.webp' /></p><p>
</p><p>
இம்முறை பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக, 17.09.2026 அன்று எட்டாம் திருவிழாவில் குருக்கட்டு விநாயகர் தரிசனமும், 19.09.2026 அன்று ஒன்பதாம் திருவிழாவான வெண்ணைத் திருவிழாவும், 20.09.2026 அன்று பத்தாம் திருவிழாவான துகிலியுத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.
</p><p>
அத்துடன், 21.09.2026 அன்று பதினொன்றாம் திருவிழாவான கம்சன் போர் திருவிழாவும், 23.09.2026 அன்று பதின்மூன்றாம் திருவிழாவான வேட்டைத் திருவிழாவும், 24.09.2026 அன்று பதினான்காம் திருவிழாவான சப்பரத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.
</p><p>
தொடர்ந்து, 25.09.2026 அன்று பதினைந்தாம் திருவிழாவான தேர்த்திருவிழாவும், 26.09.2026 அன்று பதினாறாம் திருவிழாவான சமுத்திர தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளதுடன், 27.09.2026 அன்று பதினேழாம் திருவிழாவான கேணி/பட்டுத் தீர்த்தத் திருவிழாவுடன் கொடியிறக்கமும் இடம்பெறவுள்ளது.</p><p></p><h2>விசேட ஏற்பாடுகள்&nbsp;</h2><p>
</p><p>
பெருந்திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் நலன் கருதி பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p></p><p> </p><p>சுகாதார வசதிகளை பருத்தித்துறை பிரதேச சபை முன்னெடுத்துள்ளதுடன், பாதுகாப்பு நடவடிக்கைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

அதேவேளை, திருவிழாவுக்கான ஒருங்கிணைப்பு மற்றும் தேவையான வசதிகளை வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் மேற்கொண்டு வருகின்றது.</p><p> பக்தர்களின் போக்குவரத்து தேவைகளை கருத்திற்கொண்டு விசேட போக்குவரத்து ஏற்பாடுகளை பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சாலை மற்றும் தனியார் போக்குவரத்து சேவை சங்கங்கள் மேற்கொள்ளவுள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T10:23:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாமதிக்காமல் உடன் வீட்டிற்குச் செல்லுங்கள் : அமெரிக்க இராணுவத்திற்கு ஈரான் கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-warns-us-military-1789034842"></link>
            <id>https://ibctamil.com/article/iran-warns-us-military-1789034842</id>
            <summary type="text">ஈரானிய அபிலாஷைகளுக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், அதற்கு மிக வேகமான, சக்திவாய்ந்த மற்றும் வேதனையான பதில் கிடைக்கும் என்று ஈரானிய ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய அபிலாஷைகளுக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், அதற்கு மிக வேகமான, சக்திவாய்ந்த மற்றும் வேதனையான பதில் கிடைக்கும் என்று ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகரும், தலைமை பேச்சுவார்த்தையாளருமான மொஹம்மத் பாகர் கலிபாஃப் எச்சரித்துள்ளார்.</p><p> அமெரிக்கப் படைகள் தாமதமாகும் முன் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 'சம விகித பதிலடி' காலம் முடிந்துவிட்டதாகவும், விளையாட்டின் விதிகள் மாறிவிட்டதாகவும் வோஷிங்டன் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.</p><h2>கடுமையான பதிலடி கொடுக்கப்படும்</h2><p>உலகின் எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20% கொண்டு செல்லப்படும் ஹோர்முஸ் நீரிணையில் அதிகாரத்தை நிலைநிறுத்தும் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கப் படைகள் ஈரானிய எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திய மறுநாள் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43829fac-7011-468f-b285-b5f49889f39b/26-6aa2849769ad0.webp' /></p><p>&nbsp;









நாடாளுமன்றத்தில் உரையாற்றியும், ஒரு டெலிகிராம் செய்தியை வெளியிட்டும், ஈரானின் பாதுகாப்பிற்கு எதிரான எந்தவொரு தாக்குதலுக்கும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று கலிபாஃப் கூறினார்.</p><p></p><h2>போர்க்களத்தின் உண்மையான நிலை</h2><p> </p><p>போர்க்களத்தின் உண்மையான நிலையைத் திரிபுபடுத்த அமெரிக்கத் தலைவர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட காணொளிகளை பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcece6b6-7251-476e-b42b-9c83f2643f4c/26-6aa284981be5a.webp' /></p><p> </p><p>மேலும், விதிக்கப்பட்ட தடைகளை எதிர்கொள்ள உள்நாட்டு உற்பத்தி மற்றும் இறக்குமதி கட்டுப்பாடு மிகவும் கடுமையாக நிர்வகிக்கப்பட வேண்டும் என்று ஆறு மாதங்களாக நடைபெற்று வரும் இந்த போரை முடிவுக்கு கொண்டுவரும் பேச்சுவார்த்தைகளில் ஈரானிய தரப்பின் தலைவராக செயல்படும் கலிபாஃப் வலியுறுத்தினார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T10:21:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேயர்களுக்கு அதிகாரம் அளிக்கும் பிரதமர்: விருந்தோம்பல் துறையினர் அச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hospitality-sector-jobs-at-risk-by-burnham-plan-1789035391"></link>
            <id>https://news.lankasri.com/article/hospitality-sector-jobs-at-risk-by-burnham-plan-1789035391</id>
            <summary type="text">Hospitality sector claims thousands at jobs at risk from Burnham&#039;s plan to let mayors levy tourism tax: பிரதமர் மேயர்களுக்கு அளிக்கும் அதிகாரம், ஆயிரக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Hospitality sector claims thousands at jobs at risk from Burnham's plan to let mayors levy tourism tax: பிரதமர் மேயர்களுக்கு அளிக்கும் அதிகாரம், ஆயிரக்கணக்கானோர் வேலையிழக்கக் காரணமாக அமையும் என விருந்தோம்பல் துறையினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.</p><p>



ஆன்டி பர்னாம் பிரதமரானதிலிருந்தே, மேயர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பது தொடர்பில் தொடர்ந்து பேசிவருகிறார்.
</p><p>
இந்நிலையில், இங்கிலாந்து மேயர்கள் விருந்தோம்பல் துறைக்கு கணிசமான வரி விதிக்க இருப்பதாக துறைசார் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.</p><h3>

விருந்தோம்பல் துறையினர் அச்சம்</h3><p>
அதாவது, இங்கிலாந்திலுள்ள ஹொட்டல்களில் தங்குவதற்கு கூடுதல் வரி விதிக்கப்பட உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2cc36ec-7889-4c3c-bf85-0b4235dee479/26-6aa28380cf2b1.webp' /></p><p>
</p><p>
அதை, மேயர்கள் முடிவு செய்ய இருக்கிறார்கள். இவ்வளவுதான் வரி என ஒரு வரை முறையும் இல்லை.&nbsp;</p><p></p><p>
ஆக, உதாரணமாக, ஒருவர் ஒரு நாள் ஒரு ஆடம்பர ஹொட்டலில் தங்குவதற்கு கூடுதலாக 5 சதவிகித வரி விதிக்கப்படுமானால், அதன் காரணமாக, ஹொட்டல்களில் தங்குவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிடும் என்கிறார்கள் விருந்தோம்பல் துறையினர்.</p><p>

அப்படி, ஹொட்டல்களில் தங்குவோர் எண்ணிக்கை குறைந்தால், ஹொட்டல்களுக்கு வருவாய் குறையும். வருவாய் குறைந்தால், அதை ஈடு செய்ய பணியாளர்களை குறைக்கவேண்டிவரும்.
</p><p>
ஆக, கூடுதலாக விதிக்கப்படும் 5 சதவிகித வரியால், நாடு முழுவதும் 33,000 பேர் வேலையிழக்கும் அபாயம் உள்ளது என்கிறார்கள் துறைசார் நிபுணர்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T10:16:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீயில் எரிந்த கல்யாண புடவை.. கவிதாவால் காத்திருந்த கலவரம் - திருமாங்கல்யம் இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/thirumangalyam-serial-in-zee-tamil-sep-10-episode-1789034744"></link>
            <id>https://viduppu.com/article/thirumangalyam-serial-in-zee-tamil-sep-10-episode-1789034744</id>
            <summary type="text">தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் திருமாங்கல்யம். நேற்றைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் திருமாங்கல்யம். நேற்றைய எபிசோடில் கவிதா மஹாவின் கல்யாண புடவையை தீயில் போட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. </p><h2>திருமாங்கல்யம் இன்றைய எபிசோட்</h2><p>

அதாவது தனது கல்யாண புடவை பற்றி எரிவதை பார்த்து மகா அதிர்ச்சி அடைந்து ஓடி வந்து புடவையை அணைக்க முயற்சி செய்ய திவ்யா என்ன பண்ற? வேற புடவை வாங்கிக்கலாம் என தடுக்க முயற்சி செய்ய மகா என்னுடைய கல்யாண புடவை என்று சொல்லி அதை எடுத்து அணைத்து பத்திரப்படுத்த திவ்யா யார் இப்படி செய்தது என கோபப்பட கவிதா நான் தான் அது ரொம்ப அழுக்காக கடந்தது அதனால எடுத்து தீயில் போட்டேன் என்று சொல்கிறாள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c1cc1c9-3825-4cdb-b2ae-4d79e1929978/26-6aa280fad9a4f.webp' /></p><p>
</p><p>
இதைக் கேட்டு அம்பிகா மற்றும் தாத்தா என இருவரும் கவிதாவை பிடித்து திட்டுகின்றனர். மகாவுக்கு தீயை அணைத்ததால் கையில் காயம் ஏற்பட்டிருக்க திவ்யா அவளை அழைத்துச் சென்று கைக்கு மருந்து போட்டுவிட்டு திட்டுகிறாள். மகா தனது திருமணம் பற்றியும் திருமண புடவை பற்றியும் எமோஷனலாக பேச திவ்யா உன் புருஷனுக்கு உன்னோட வாழ கொடுத்து வைக்கல என கோபப்பட பக்கத்திலேயே நிற்கும் திரு குற்ற உணர்ச்சியில் தவிக்கிறான். </p><p>

அதன் பிறகு இரவு மகா கையில் ஏற்பட்ட காயத்தால் சாப்பிட முடியாமல் தவிக்க அப்போது கீழே வந்த திரு அவளுக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறான். கவிதா இதைப் பார்த்து அனைவரையும் கூட்டி பிரச்சனை செய்ய அம்பிகா உன் மனசுல அழுக்கு இருக்கு அதனால தான் உனக்கு பார்க்கிறதெல்லாம் தப்பா தெரியுது.. மகா இடத்தில யாராக இருந்தாலும் என் பையன் இதுதான் செஞ்சிருப்பான் என திருவுக்கு சப்போர்ட் செய்து பேசுகிறாள். 

பிறகு அம்பிகாவே மகாவிற்கு சாப்பாடு ஊட்டி விட மகா எமோஷனல் ஆகிறாள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/631d2f6a-c4e3-4a1c-9504-0c1ee6c44851/26-6aa280fb8b5f5.webp' /></p><p> </p><p>இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய திருமாங்கல்யம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
ராதா கிருஷ்ணனாக மாறிய அர்ஜுன், சாமந்தி.. அரசிக்கு காத்திருந்த அதிர்ச்சி - சாமந்தி இன்றைய எபிசோட் அப்டேட் 

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சாமந்தி. </p><p>இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமந்தி கிருஷ்ண ஜெயந்திக்கான ஏற்பாடுகளை செய்து முடித்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, சாமந்தி மகேந்திரன் இடம் சென்று ஐயா எல்லா ஏற்பாடும் ரெடி போட்டோ மட்டும் வரணும் என்று சொல்ல மகேந்திரன் கோடீஸ்வரனுக்கு போன் செய்து போட்டோ எங்கே என்று கேட்க அவன் காரில் உட்காந்து வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டு எங்கு தேடியும் போட்டோ கிடைக்கவில்லை என்று சொல்கிறான்.</p><p> 

இதனால் மகேந்திரன் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க சாமந்தி நீங்க ஃப்ரீயா விடுங்க நான் பார்த்துக்குறேன் என்று சொல்கிறாள்‌. அதன் பிறகு சாமந்தி அர்ஜுனை சந்தித்து டிரைவர் தம்பி டிரைவர் தம்பி என கெஞ்சி கேட்கிறாள். 

அடுத்ததாக அரசியின் தோழிகள் வீட்டுக்கு வர நடு வீட்டில் ராதாகிருஷ்ணன் பெரிய சிலையாக நிற்க அதைப் பார்த்து வியப்படைகின்றனர். அப்போது மகேந்திரன் அது சிலையில்ல போட்டோ கிடைக்காத காரணத்தினால் அர்ஜுனும் சாமந்தியும் அப்படி வேஷம் போட்டு நிற்பதாக சொல்ல அரசி டென்ஷன் ஆகிறாள். 

ஆனால் எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருக்கிறாள். </p><p>ராதாகிருஷ்ணன் ஆக இதுவரை காதலுடன் ஒருவரை பார்த்துக் கொள்ள இதை வந்தவர்கள் போட்டோ எடுத்து மகிழ்கின்றனர். 

பிறகு அனைவரும் சாப்பிட உட்கார ராதா கிருஷ்ணனையும் அழைக்க இவர்களும் அவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட ஈஸ்வரி இதை வைத்து சாமந்தியை மிரட்ட சாமந்தி அவசரப்பட்டோமோ என பதறுகிறான். 

பிறகு அரசியின் தோழிகள் அர்ஜுன் சாமந்தியுடன் போட்டோ எடுத்துக் கொண்டு கிளம்ப அரசி மிகுந்த கோபத்துடன் வீட்டுக்குள் வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சாமந்தி சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.</p>]]></content>
            <updated>2026-09-10T10:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான்-அமெரிக்க போரால் முக்கியத்துவம் பெற்றுள்ள சிறிய தீவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/perim-island-key-in-iran-conflict-1789034414"></link>
            <id>https://news.lankasri.com/article/perim-island-key-in-iran-conflict-1789034414</id>
            <summary type="text">Perim Island Key in Iran Conflict: ஈரான்-அமெரிக்கா போர் காரணமாக ஏமனின் சிறிய தீவு ஒன்று உலக எண்ணெய் விநியோகத்தின் புதிய மையமாக மாறவுள்ளது.பெரிம் தீவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Perim Island Key in Iran Conflict: ஈரான்-அமெரிக்கா போர் காரணமாக ஏமனின் சிறிய தீவு ஒன்று உலக எண்ணெய் விநியோகத்தின் புதிய மையமாக மாறவுள்ளது.</p><h2>பெரிம் தீவு</h2><p>

பெரிம் தீவு (Perim Island), எமனின் கடற்கரையில் அமைந்துள்ள சிறிய தீவு, தற்போது ஈரான்-அமெரிக்கா மோதல் காரணமாக உலக அரசியல் மற்றும் ஆற்றல் பாதுகாப்பில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfaf5591-8d2e-45c8-8239-a030f24d4f3d/26-6aa283b96922e.webp' /></p><p>

இந்த தீவு Bab-el-Mandeb Strait எனப்படும் குறுகிய கடல் வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது செங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் இடையே செல்லும் கப்பல்களுக்கு முக்கிய நுழைவாயிலாக விளங்குகிறது.
</p><p>
சவுதி அரேபியா, எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில், தனது எண்ணெய் ஏற்றுமதியை ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) இருந்து செங்கடல் வழியாக மாற்றியுள்ளது. இதனால் பெரிம் தீவின் மூலோபாய முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.</p><p></p><h2>கைப்பற்ற முயற்சிக்கும்&nbsp;ஹவுதி </h2><p>
ஆனால் தற்போது ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் (Houthi rebels) பெரிம் தீவை கைப்பற்ற முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் தீவை கட்டுப்பாட்டில் கொண்டால், செங்கடல் வழியாக செல்லும் கப்பல்களை தடுக்க முடியும் என்பதால், இது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
</p><p>
CNN வெளியிட்ட தகவலின்படி, ஹவுதி படைகள் பெரிம் தீவின் வடக்கில் உள்ள மோகா (Mocha) நகரை கைப்பற்ற முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இது பெரிம் தீவிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.</p><p></p><p>
</p><h2>
வரலாற்று தளம்</h2><p>பெரிம் தீவு, பிரித்தானிய கப்பல்கள் இந்தியாவிற்கு செல்லும் போது பயன்படுத்திய வரலாற்று தளம் என்பதால், இப்போது மீண்டும் உலக அரசியல் கவனத்தை ஈர்க்கிறது.</p><p>இந்த தீவு கைப்பற்றப்பட்டால், உலக எண்ணெய் விநியோகத்தில் பெரும் தடைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அமெரிக்கா, சவுதி அரேபியா, ஈரான் ஆகிய நாடுகள் இந்த பகுதியில் தங்கள் ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T10:14:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நேற்றிரவு கொடூர கொலை சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/brutal-murder-in-jaffna-1789017645"></link>
            <id>https://jvpnews.com/article/brutal-murder-in-jaffna-1789017645</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணம் பருத்தித்துறை – துன்னாலையில் நேற்றிரவு கொடூர கொலை சம்பவம் ஊரவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.&amp;nbsp; சம்பவத்தில்&amp;n...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணம் பருத்தித்துறை – துன்னாலையில் நேற்றிரவு கொடூர கொலை சம்பவம் ஊரவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.&nbsp; சம்பவத்தில்&nbsp; மூன்று பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொ ல்லப்பட்டுள்ளார்.
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்

ஒரு ஊரைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே தொடர்ச்சியான பகை இருந்து வந்துள்ளதன் பின்னனியில் இக்கொலை இடம்பெற்றதாக&nbsp; கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/735cef42-18b2-446c-a38a-2886b7fe73f4/26-6aa283ac6c104.webp' /></p><p></p><h2>பின்தொடர்ந்த நால்வர் கொண்ட குழுவினர்</h2><p>

இந்நிலையில் கொல்லப்பட்ட நபரை நேற்றிரவு பின்தொடர்ந்த நால்வர் கொண்ட குழுவினர் ஓராங்கட்டை பகுதியில் வைத்து அவர்மீது கொடூர தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டனர்.</p><p></p><p> </p><p>இதன்போது குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலையை மேற்கொண்ட நால்வரும் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.</p><p> இது குறித்து பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலமானது தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்&nbsp; மேலதிக விசாரணைகாளை பொலிஸார்&nbsp; மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T10:14:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை கோலாகலமாக்கும் Zee தமிழ் - என்னவெல்லாம் ஸ்பெஷல்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/zee-tamil-vinayagar-chathurthi-programs-2026-1789033611"></link>
            <id>https://cineulagam.com/article/zee-tamil-vinayagar-chathurthi-programs-2026-1789033611</id>
            <summary type="text">சென்னை: விநாயகர் சதுர்த்தி பண்டிகையை குடும்பத்துடன் இணைந்து மகிழ்ச்சியாகக் கொண்டாட ரசிகர்களுக்காக Zee தமிழ் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் உலகத் தொலைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னை: விநாயகர் சதுர்த்தி பண்டிகையை குடும்பத்துடன் இணைந்து மகிழ்ச்சியாகக் கொண்டாட ரசிகர்களுக்காக Zee தமிழ் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக ஒளிபரப்பாகும் புத்தம் புதிய திரைப்படங்களுடன் பிரம்மாண்டமான பொழுதுபோக்கு விருந்தை வழங்குகிறது.</p><p>செப்டம்பர் 14 ஆம் தேதி திங்கள்கிழமை, காலை முதல் இரவு வரை விறுவிறுப்பான நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன. </p><p>
காலை 9.30 மணிக்கு பிரபல பேச்சாளரும் எழுத்தாளருமான கலைமாமணி சுகி சிவம் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது. "இன்றைய சூழ்நிலையில் குடும்பத்தில் பிரச்சனைகள் பெருகப் பெரிதும் காரணம் பிள்ளைகளா? பெற்றோர்களா?" என்ற சுவாரஸ்யமான தலைப்பில் நடைபெறும் இந்த பட்டிமன்றம், நகைச்சுவையும் சிந்தனையும் கலந்த கருத்துப் பரிமாற்றங்களால் அனைவரையும் கவரவுள்ளது. </p><p>
அதனைத் தொடர்ந்து, காலை 11 மணிக்கு, சந்தோஷ் ஸ்ரீராம், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்வநாதன், வினோத் கிஷன் மற்றும் விடிவி கணேஷ் நடித்துள்ள Double Occupancy திரைப்படம் உலகத் தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பாக வருகிறது. காதல், நகைச்சுவை, மற்றும் குடும்ப உணர்வுகளுடன் கற்பனை கலந்த இந்தப் படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கவுள்ளது. </p><p>
அதைத் தொடர்ந்து, பிற்பகல் 3.30 மணிக்கு, ஜெயராம், ஊர்வசி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்துள்ள 'பரிமளா &amp; கோ' திரைப்படம் உலகத் தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பாகிறது. கலகலப்பான நகைச்சுவை, குடும்ப பாசம் மற்றும் மனதை நெகிழ வைக்கும் தருணங்கள் நிறைந்த இந்த திரைப்படம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கவுள்ளது. </p><p>
மேலும் நாள்தோறும் ஒளிபரப்பாகும் தொடர்களும் வழக்கம் போல ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது. </p><p>
சிந்திக்க வைக்கும் பட்டிமன்றம், முதல் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இரண்டு புத்தம் புதிய திரைப்படங்கள் மற்றும் ரசிகர்கள் விரும்பும் தொடர்கள் என, முழு நாளும் குடும்பத்துடன் மகிழ்ந்து ரசிக்க வேண்டிய நிகழ்ச்சிகளை Zee தமிழ் வழங்குகிறது. </p><p>
இந்த விநாயகர் சதுர்த்தியை உங்கள் குடும்பத்தோடு இணைந்து Zee தமிழுடன் கொண்டாடத் தவறாதீர்கள்! 
&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T10:10:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றில் இரண்டு நாட்கள் விவாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/parliament-to-debate-22nd-constitutional-amendment-1789032296"></link>
            <id>https://ibctamil.com/article/parliament-to-debate-22nd-constitutional-amendment-1789032296</id>
            <summary type="text">22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் மற்றும் நீதிமன்ற அமைப்பு (திருத்தச்) சட்டமூலம் ஆகியன நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.அதன்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் மற்றும் நீதிமன்ற அமைப்பு (திருத்தச்) சட்டமூலம் ஆகியன நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.</p><p>அதன்படி, எதிர்வரும் செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்களிலும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p> 

இன்று (10) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் குறித்த சட்டமூலங்களின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை அன்றைய தினங்களில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி</h2><p>இதேவேளை&nbsp;உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்காத நிலையில், முன்மொழியப்பட்ட 22வது அரசியலமைப்புத் திருத்தத்தை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என ஜனாதிபதி எவ்வாறு பகிரங்கமாகக் கூற முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5792fa2-3f35-4747-a873-c5e82f406bbc/26-6aa27f0c3fe44.webp' /></p><p>மேலும், பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் கவலைகளை அரசாங்கம் கையாண்ட விதம் குறித்து நீதி அமைச்சர் அந்த சங்கத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T10:02:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக முதலமைச்சர் விஜய் லண்டனுக்கு பயணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-nadu-chief-minister-vijay-visit-to-london-1789034705"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-nadu-chief-minister-vijay-visit-to-london-1789034705</id>
            <summary type="text">&amp;nbsp; புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியை மையப்படுத்தி , தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (10) இரவு லண்டனுக்கு&amp;nbsp; செல்லவுள்ளார்.தமி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியை மையப்படுத்தி , தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (10) இரவு லண்டனுக்கு&nbsp; செல்லவுள்ளார்.</p><p>தமிழக வெற்றிக் கழக (TVK) அரசு பதவியேற்ற பின்னர் மேற்கொள்ளும் தனது முதல் அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணமாக

அதன்படி, முதல்வர் விஜய் இன்று இரவு 10 மணிக்குச் சென்னையிலிருந்து புறப்பட்டு, துபாய் வழியாக லண்டன் செல்லவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aebbab72-a441-4191-88c9-b26bf6dec39b/26-6aa280d3529da.webp' /></p><h2>16 ஆம் திகதி வரை ஐக்கிய இராச்சியத்தில் தங்கியிருப்பார்</h2><p> 

அவர் செப்டம்பர் 16 ஆம் திகதி வரை ஐக்கிய இராச்சியத்தில் தங்கியிருப்பார் என்றும், மீண்டும் துபாய் வழியாக செப்டம்பர் 17 ஆம் திகதி காலை 8 மணிக்குச் சென்னை திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
முதல்வர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர், இந்தப் பயணத்தின்போது முதலீட்டாளர்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்திப்பார்கள்.

லண்டனில் நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் முதல்வர் விஜய் பங்கேற்கவுள்ளார். </p><p>அங்கு உற்பத்தி, தொழில்நுட்பம் மற்றும் பிற வளர்ந்து வரும் தொழில்துறைகளுக்குத் தமிழ்நாட்டை ஒரு சிறந்த இடமாக அவர் முன்னிறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
இத்திட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக மாநிலத் துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் ஏற்கனவே லண்டன் சென்றுள்ளனர். </p><p>

பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பிரிட்டிஷ் தலைநகரைச் சென்றடைந்துள்ள நிலையில், தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவும் இக்குழுவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மாநிலச் சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்த வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T10:01:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/notice-for-students-selected-for-universities-1789032064"></link>
            <id>https://tamilwin.com/article/notice-for-students-selected-for-universities-1789032064</id>
            <summary type="text">2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் (G.C.E. A/L) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், வெற்றிடங்களை நிரப்பும் இரண்டாவது கட்டத்தின் கீழ் அரச பல்கலைக்கழகங்களின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் (G.C.E. A/L) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், வெற்றிடங்களை நிரப்பும் இரண்டாவது கட்டத்தின் கீழ் அரச பல்கலைக்கழகங்களின் இளமானி பட்டப் படிப்புகளுக்காக மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.</p><p> 

இதற்கமைய, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (UGC) குறித்த மாணவர்களின் தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பதிவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.</p><h2>செப்டெம்பர் 17ஆம் திகதிக்கு முன்</h2><p> 

இந்தச் சுற்றின் கீழ் பல்கலைக்கழகப் படிப்புகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் 2026 செப்டெம்பர் 17 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யும் நடவடிக்கைகளை நிறைவு செய்ய வேண்டும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f9b8ee5-7aa0-445b-b45e-60adbcd543a9/26-6aa27ce776c1e.webp' /></p><p>

சம்பந்தப்பட்ட பெறுபேறுகள், பல்கலைக்கழக அனுமதி மற்றும் பதிவு செய்வதற்குத் தேவையான மேலதிக விவரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் <a href="www.ugc.ac.lk" target="_blank">www.ugc.ac.lk</a> ஊடாகப் பெற்றுக் கொள்ளலாம்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T09:50:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[செங்கடலின் முக்கிய கடற்கரை நகரை கைப்பற்றிய ஹவுதிக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/houthis-capture-key-red-sea-coastal-city-1789032834"></link>
            <id>https://ibctamil.com/article/houthis-capture-key-red-sea-coastal-city-1789032834</id>
            <summary type="text">செங்கடல் பகுதியில் அமைந்துள்ள முக்கிய கடற்கரை நகரமான அல்-மோகாவை (Al-Mokha) ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முழுமையாகக் கைப்பற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>செங்கடல் பகுதியில் அமைந்துள்ள முக்கிய கடற்கரை நகரமான அல்-மோகாவை (Al-Mokha) ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முழுமையாகக் கைப்பற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
இந்தக் கைப்பற்றலைத் தொடர்ந்து, உலகின் மிக முக்கியமான கப்பல் மற்றும் வர்த்தகப் பாதையான 'பாப் அல்-மண்டேப்' (Bab al-Mandeb) நீரிணையை நோக்கி ஹவுதி படைகள் மேலும் முன்னேறி வருவதாக அந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
ஏமனின் முழு செங்கடல் கடற்கரைப் பகுதியையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவருவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.</p><p></p><h2>சவூதி ஆதரவுப் படை</h2><p>இதன்மூலம், சவூதி ஆதரவுப் படைகளுடனான சண்டை தீவிரமடைந்து, யேமனின் நீண்டகாலப் போரில் ஒரு முக்கிய முனையை மீண்டும் திறக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/180d5466-2e1f-47f0-9fd9-24f40988d16a/26-6aa27cc2459a5.webp' /></p><p>இந்நிலையில், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பாப் அல்-மண்டேப் ஜலசந்தியின் கட்டுப்பாட்டை அவர்கள் நெருங்கியுள்ளனர் என்று யேமன் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p>இந்த முன்னேற்றம், உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றின் மீது ஹவுதிகளுக்கு அதிக செல்வாக்கைக் கொடுக்கும். </p><p>ஏமனை ஜிபூட்டி மற்றும் எரிட்ரியாவிலிருந்து பிரிக்கும் பாப் அல்-மண்டேப், செங்கடலை ஏடன் வளைகுடாவுடன் இணைக்கிறது. </p><p>மேலும் இது, சூயஸ் கால்வாய் வழியாக ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் செல்லும் எண்ணெய், எரிபொருள் மற்றும் பிற பொருட்களுக்கான ஒரு முக்கியப் பாதையாகவும் திகழ்கிறது.</p><p>அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான ஆறு மாத கால மோதல், மற்றொரு முக்கியமான எரிசக்திப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை சீர்குலைப்பதால், இந்த சண்டை கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T09:49:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளை மாளிகை பெண் உதவியாளர்களுக்கு லட்சக்கணக்கான பணத்தை பரிசாக வழங்கிய ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-gifts-white-house-aides-millions-in-cash-1789033551"></link>
            <id>https://canadamirror.com/article/trump-gifts-white-house-aides-millions-in-cash-1789033551</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் தனது 3 பெண் உதவியாளர்களுக்கு கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பரிசாகப் பெருந்தொகையை வழங்கியுள்ளது தெரியவந...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் தனது 3 பெண் உதவியாளர்களுக்கு கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பரிசாகப் பெருந்தொகையை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது
</p><p>
வெள்ளை மாளிகையில் இருந்து வெளிவந்துள்ள ஆண்டு சொத்து விவர அறிக்கையில் இது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08043e87-27f1-48f3-997c-27ffd9627ccf/26-6aa27c511c4f0.webp' /></p><p>
</p><p>
வெள்ளை மாளிகையின் சிறப்பு மற்றும் நிர்வாக உதவியாளராகப் பணியாற்றும் நட்டாலி ஹார்ப், ஊடக ஆலோசகர் மார்கோ மார்ட்டின் மற்றும் ஓவல் அலுவலக துணை இயக்குனர் சேம்பர் லெய்ன் ஹாரிஸ் ஆகிய மூவருக்கும் இந்திய மதிப்பில் தலா ரூ.45 லட்சத்தை டிரம்ப் ரொக்கமாக வழங்கியுள்ளார்</p><p>

வெள்ளை மாளிகையின் அறிக்கையின்படி இவர்கள் மூவரும் ஆண்டுக்கு தலா ரூ.1.35 கோடி சம்பளமாக பெற்று வருகின்றனர். ரூ.45 லட்சம் பரிசுத்தொகை அவர்களின் ஆண்டுச் சம்பளத்தில் சுமார் 30 சதவீதத்திற்கு சமமாகும்.
</p><p>&nbsp;விளக்கம்
பரிசுகள் குறித்து விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
</p><p>
ட்ரம்ப் தொழில் அதிபராக இருந்த காலத்திலிருந்தே, தன்னுடன் பணிபுரியும் ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் காலத்தில் சொந்தப் பணத்திலிருந்து பரிசுகளை வழங்குவது அவரது வழக்கமான ஒன்றாகும்.</p><p>

இந்தப் பரிசுகள் முழுமையாகவும் அவரது சொந்த நிதியிலிருந்தே வழங்கப்பட்டுள்ளன. அரசுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-10T09:46:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் வழிபாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rajnath-singh-seetha-amman-temple-in-nuwara-eliya-1789032821"></link>
            <id>https://tamilwin.com/article/rajnath-singh-seetha-amman-temple-in-nuwara-eliya-1789032821</id>
            <summary type="text">இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர்
ராஜ்நாத் சிங் இன்று(10.9.2026) நுவரெலியாவிற்கு விஜயம் செய்து வரலாற்றுச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர்
ராஜ்நாத் சிங் இன்று(10.9.2026) நுவரெலியாவிற்கு விஜயம் செய்து வரலாற்றுச் சிறப்புமிக்க
சீதையம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார்.
</p><p>
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக செப்டம்பர் 8ஆம் திகதி இலங்கைக்கு வருகை
தந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அரச தலைவர்களுடன்
இருதரப்பு உறவுகள் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு உள்ளிட்ட
பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.</p><p>இந்நிலையில் அவரது இலங்கை விஜயத்தின் இறுதி நாளான இன்றுஇ நுவரெலியா சீதா எலிய
பகுதியில் அமைந்துள்ள சீதையம்மன் ஆலயத்திற்கு அவர் விஜயம் செய்துள்ளார்.</p><h2>இந்தியா – இலங்கை உறவு</h2><p>

இதன்போது ஆலயத்திற்கு வருகை தந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஆலய
நிர்வாகத்தினரால் வரவேற்கப்பட்டதுடன்இ ஆலயத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வில்
கலந்துகொண்டு சீதையம்மனை தரிசித்து விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cff81d5a-07fc-49d8-9da5-ab66a9d20f28/26-6aa27ba40ba30.webp' /></p><p>முன்னதாக கொழும்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய
உள்ளிட்ட இலங்கை அரசின் முக்கியஸ்தர்களை சந்தித்த ராஜ்நாத் சிங் இந்தியா –
இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளார்.
</p><p>
மேலும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு கடல்சார்
ஒத்துழைப்பு மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்புத் தொடர்புகளை மேலும்
வலுப்படுத்துவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T09:43:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 டொலரை கடந்து செல்லும் மசகு எண்ணெய் விலை! உலக சந்தை ஸ்தம்பிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lubricant-prices-cross-100-1789032774"></link>
            <id>https://tamilwin.com/article/lubricant-prices-cross-100-1789032774</id>
            <summary type="text">ஐரோப்பிய மத்திய வங்கியின் (ECB) வட்டி வீதக் கொள்கை அறிவிப்பு வெளிவரவுள்ள
நிலையில், சர்வதேச நாணயச் சந்தையில் யூரோவின் மதிப்பு கடந்த இரண்டு வாரங்களில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பிய மத்திய வங்கியின் (ECB) வட்டி வீதக் கொள்கை அறிவிப்பு வெளிவரவுள்ள
நிலையில், சர்வதேச நாணயச் சந்தையில் யூரோவின் மதிப்பு கடந்த இரண்டு வாரங்களில்
இல்லாதவாறு உயர்வடைந்து உறுதியான நிலையில் காணப்படுகின்றது.</p><p>

அதேவேளை, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாகவும்
பெரல் ஒன்று 100 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளமையால்
உலகளாவிய பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் பிணைப்பத்திர விளைச்சல்கள்
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.</p><h2>தீவிரமடைந்துள்ள போர்ச்சூழல்</h2><p>

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே
தீவிரமடைந்துள்ள போர்ச்சூழல் காரணமாக வளைகுடாப் பகுதிகளூடான எரிபொருள்
விநியோகம் வெகுவாகக் குறைவடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/633325b2-5a47-4eff-ac93-a7293246c5dd/26-6aa2794863320.webp' /></p><p>
</p><p>
வரவிருக்கும் ஐரோப்பிய குளிர்காலத்தை முன்னிட்டு வெப்பமூட்டும் எண்ணெய்
மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ளதால், பணவீக்கக்
கட்டுப்பாட்டு நடவடிக்கையாக ஐரோப்பிய மத்திய வங்கி வட்டி வீதங்களை மேலும்
உயர்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p>
அமெரிக்காவின் மத்திய வங்கியான 'பெடரல் ரிசர்வ்' இந்த மாத இறுதியில் வட்டி
வீதங்களை அதிகரிக்கும் சாத்தியக்கூறு 60 சதவீதமாக கணிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>எரிபொருள் விலையேற்றம்</h2><p>ஜப்பானிய யென் நாணயத்தின் மதிப்பும் கடந்த ஜூலை மாத தலையீட்டிற்குப் பின்னர் 6
சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவுசெய்து 7 மாத உயர்வை எட்டியுள்ளது.
</p><p>
எரிபொருள் விலையேற்றத்தின் காரணமாகச் சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட
வல்லரசு நாடுகளின் பணவீக்கம் மீண்டும் உயர்வடைந்து வருவதால் உலகளாவிய
நிதிச்சந்தைகளில் கொந்தளிப்பான சூழல் நிலவுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T09:33:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டுக்கு முன் துணி காயப்போட தடை: பிரெஞ்சு நகரமொன்றில் சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/france-town-banned-drying-laundry-infront-of-house-1789032628"></link>
            <id>https://news.lankasri.com/article/france-town-banned-drying-laundry-infront-of-house-1789032628</id>
            <summary type="text">Town in France has banned residents from drying laundry on windows and balconies: பிரெஞ்சு நகரம் ஒன்று, அங்கு வாழும் மக்கள் வீட்டுக்கு முன் துணி காயப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Town in France has banned residents from drying laundry on windows and balconies: பிரெஞ்சு நகரம் ஒன்று, அங்கு வாழும் மக்கள் வீட்டுக்கு முன் துணி காயப்போட தடை விதித்துள்ளது.
</p><p>

உலக அளவில் எவ்வளவு புகழ்பெற்ற நகரமாக இருந்தாலும் சரி, அங்கு பல வீடுகளில், பால்கனியில் துணி காயப்போடப்பட்டிருப்பதை பல நகரங்களில் இன்று காண்பது சகஜமாகிவிட்டது.</p><h3>

வீட்டுக்கு முன் துணி காயப்போட தடை
</h3><p>
இந்நிலையில், தென்மேற்கு பிரான்சிலுள்ள Villeneuve-sur-Lot என்னும் நகரில், வீடுகளின் பால்கனிகளிலும், ஜன்னல்களிலும் துணி காயப் போட தடை விதிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ff508b1-0155-42bd-94d0-4f276df91bcb/26-6aa278b5e189a.webp' /></p><p>
வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த நகரம், வர்த்தக ரீதியில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்ககூடிய ஒரு நகரம் என்பதால், அங்கு வீடுகள் முன் ஜன்னல்களிலும், பால்கனிகளிலும் துணி காயப்போடுவதால், அது பார்ப்பதற்கு நன்றாக இல்லை என்பதால் இந்த தடை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

ஆனால், நகரில் வாழும் ஏழை மக்கள் இந்த தடையை கடுமையாக எதிர்க்கிறார்கள்.&nbsp;</p><p></p><p>நகரின் எந்த பகுதியில் துணி காயப்போடக்கூடாது என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளார்களோ, அந்த பகுதி ஏழைகள் அதிகம் வாழும் பகுதி என்கிறார் எதிர்க்கட்சி கவுன்சிலரான Thomas Bouyssonie என்பவர்.
</p><p>
அங்கு துணி காயவைக்கும் இயந்திரங்களோ, துணி காயப்போட தோட்டங்களோ இல்லை என்று கூறும் அவர், இது உரிமை மீறல் என்கிறார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T09:32:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூர்யா, அஜித் இவங்க எல்லாரையும்விட என் வாழ்க்கை வந்த ஒருத்தன்!! ஆர்த்தி ரவி ஆதங்கம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/he-deserves-an-acting-oscar-aartis-cryptic-post-1789032598"></link>
            <id>https://viduppu.com/article/he-deserves-an-acting-oscar-aartis-cryptic-post-1789032598</id>
            <summary type="text">நடிகர் ரவி மோகன் கடந்த ஆண்டு மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறி வழக்கு தொடர்ந்தார். இதில் தனக்கு விருப்பமில்லை என்று தன் தரப்பு நியாயத்தை கூறினா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் ரவி மோகன் கடந்த ஆண்டு மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறி வழக்கு தொடர்ந்தார். இதில் தனக்கு விருப்பமில்லை என்று தன் தரப்பு நியாயத்தை கூறினார் ஆர்த்தி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd5bdd5c-f956-4c9e-8736-27bc1b064fb7/26-6aa2789995bea.webp' /></p><p> </p><p>இதுதொடர்பான விசாரணை சமீபத்தில் நடந்தநிலையில், ஆர்த்தி - ரவி மோகனுக்கு விவாகரத்து வழங்கியதோடு, மாத ஜீவனாம்சம் தொகை ரவி, ஆர்த்திக்கு கொடுக்க வேண்டும் என்று பிள்ளைகளை ரவியை சந்திக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.</p><p> இதற்கிடையில் ரவி மோகன், கெனிஷா என்ற பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் சம்பவமும் பரவ, கெனிஷா எல்லாத்தில் இருந்து விலகி மீண்டும் ரவி மோகன் பக்கம் வந்தார். ரவி மோகன் இயக்கி வரும் படத்திற்கும் கெனிஷா இசையமைப்பாளராக பணியாற்றியும் வருகிறார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cc21f2f-d509-4615-bec3-6e8fe4a20915/26-6aa2789a49325.webp' /></p><p>
இந்நிலையில் ஆர்த்தி ரவி சமீபத்திய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், சூர்யா, அஜித், விக்ரம், கமல் இவங்க எலலாரையும் விட என் லைஃப்-ல வந்த ஒருத்தன் நடிச்சானே நடிப்பு, ஆஸ்கர் ஆவார்ஸ்-ஏ குதுகலம்டா என்று பதிவிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T09:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[மண்டாடி திரை விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/mandaadi-movie-review-1789030638"></link>
            <id>https://cineulagam.com/article/mandaadi-movie-review-1789030638</id>
            <summary type="text">வெற்றிமாறன் பட்டறையில் இருந்து வந்தவர் மதிமாறன் புகழேந்தி, காமெடியன் டூ ஹீரோ சூரி தொடர் வெற்றி நாயகனாக வருபவர், இவர்கள் இணைந்து கொடுத்த ஸ்போர்ட்ஸ் ட்ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெற்றிமாறன் பட்டறையில் இருந்து வந்தவர் மதிமாறன் புகழேந்தி, காமெடியன் டூ ஹீரோ சூரி தொடர் வெற்றி நாயகனாக வருபவர், இவர்கள் இணைந்து கொடுத்த ஸ்போர்ட்ஸ் ட்ராமா மண்டாடி ரசிகர்களை கவர்ந்ததா? பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e0ab461-fae7-4c04-8a06-41a86390af49/26-6aa270f1f2122.webp' /></p><p></p><h2>கதைக்களம்
</h2><p>
சூரி சென்னையில் ஒரு தீம் பார்க்கில் வேலை பார்த்து வருகிறார். அவரின் சொந்த ஊரான இராமநாதபுரம் மாவட்டத்தில் படகு போட்டி சண்டையால் சாட்டைபுலி(சுஹாஸ்) மகனை, மாரி என்பவர் கொல்ல முயற்சிக்கிறார். இதனால் மாரியை கொல்ல சாட்டைபுலி துணிய, மாரியை சூரியிடம் தஞ்சம் போக சொல்கின்றனர்.</p><p>சூரி அவர் தன் முன்னாள் காதலி மகன் என்பதை தெரிந்துக்கொண்டு பல வருடம் கழித்து தன் ஊருக்கு வந்து மாரி உயிருக்கு எந்த ஆபத்தும் வரகூடாது என பஞ்சாயத்து பேசுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aaa49a6a-f4bf-4f55-9786-fb6a15898a0d/26-6aa2714838164.webp' /></p><p>அப்போது சாட்டைபுலி அப்படியென்றால் நம்ம இரண்டு வகையறாவும் படகு போட்டி வைத்துகொள்வோம், அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ, தோற்றவர்கள் இனி போட்டியில் இறங்ககூடாது என பேசி முடிக்கின்றனர்.
</p><p>இதன் பிறகு சூரி படகு போட்டியில் மாரியை ஜெயிக்க வைத்து, சாட்டைபுலியை வென்றாரா? சூரிக்கும், சாட்டைபுலிக்கும் என்ன பிரச்சனை ஏன் இவ்வளவு கோபத்துடன் ஒருவர் மீது ஒருவர் இருக்கிறார் என்பதே மீதிக்கதை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61d7b5a3-e625-4b57-b3ce-6cfc3520d05d/26-6aa2714909c5d.webp' /></p><p>
</p><h2>படத்தை பற்றிய அலசல்</h2><p>

சூரி இனி ஆக்‌ஷன் ஹீரோ தான் போல, அப்படியே மீனவ குடும்ப நபராக மனதில் நிற்கிறார், அதிலும் போட் போட்டி காட்சிகளுக்கு பயிற்சி கொடுக்கும் இடம், சாட்டைபுலி மகன் செய்த செயலால் தன் ப்ளேயர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் போடு, இறங்கி அடிக்கும் போது அப்படியொரு ஆக்ரோஷன், கண்டிப்பாக சூரி திரைப்பயணத்தில் மற்றொரு மைல்கல் தான் இந்த மண்டாடி.
</p><p>
இவரை தாண்டி சுஹாஸ் தெலுங்கு நடிகராக இருந்தாலும், லிப் சிங்க் எங்கும் மிஸ்டேக் ஆகவில்லை, வெற்றிமாறன் தான் டப்பிங் பேசியிருப்பார் போல, கச்சிதமாக பொருந்தி போகிறது குரல், மிரட்டல் பெர்ப்பாமன்ஸ்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75e6a6e6-7f74-43b4-8f23-13545d5bb408/26-6aa27149b8f7c.webp' /></p><p>இதை தாண்டி மாரி, சாட்டை புல் மகன், மஹிமா, சத்யராஜ் என அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர், படத்தின் முதல் பாதி சூரி திரும்பி வந்து படகு போட்டி கோச்சிங் கொடுப்பது, பிறகு ட்ரெயினிங் மேட்ச் அதை தொடர்ந்து எடுக்கும் சபதம் என செம விறுவிறுப்பாகவே செல்கிறது.
</p><p>
அதிலும் அந்த ட்ரெயினிங் மேட் படகு போட்டி அத்தனை பிரமாண்டம், ரசிகர்களுக்கு சீட் எட்ஜ் காட்சிகளாக கவர்ந்து இழுத்துள்ளனர். கண்டிப்பாக சார்பட்டா பாக்ஸிங், ஆடுகளம் சேவல் சண்டை போல் இந்த மண்டாடி படகு போட்டியும் மனதில் நிற்கும்.</p><p>இரண்டாம் பாதி சத்யராஜ் முனி என்ற கதாபாத்திரத்தில் கோச் ஆக வர, சூரிக்கும், சாட்டைபுலிக்கும் இருந்த உறவு என்ன, இவர்களுக்குள் என்ன பகை, ஏன் இந்தளவு வந்தது, மஹிமாவை ஏன் சூரி கைவிட்டார், சத்யராஜ் என்ன ஆனார் என்ற பல காரணங்களை சொல்ல ப்ளாஷ்பேக் கொஞ்சம் பொறுமையை சில இடங்களில் சோதிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfd167ac-9d6a-45cd-98a8-01465a741e04/26-6aa2714a73897.webp' /></p><p></p><p>ஆனால், அதை தொடர்ந்து வரும் கிளைமேக்ஸ் அரை மணி நேரம் படகு போட்டி வெறித்தனம், கண்டிப்பாக ஸ்போர்ட்ஸ் விரும்பிகளுக்கு செம திரை விருந்து.
</p><p>டெக்னிக்கல் விஷயம் என்று பார்த்தால் படம் முழுவதும் லைவ் லொக்கேஷன், படகு போட்டி என அனைத்தையும் யதார்த்தமாக காட்டிய ஒளிப்பதிவு, ஜிவி பிரகாஷ் இசை பாடல்கள் ஏதும் மனதில் நிற்கவில்ல்லை, பின்னணி இசை அருமை.
</p><p><b><u>க்ளாப்ஸ்
</u></b></p><ul><li>
சூரிஒன் மேன் ஷோ போல் மிரட்டியுள்ளார், சுஹாஸ் தெலுங்கு நடிகர் தமிழுக்கு நல்ல வரவேற்பு.
</li><li>
படகு போட்டி காட்சிகள்
</li><li>
கிளைமேக்ஸ், இடைவேளை
</li><li>
ஒளிப்பதிவு</li></ul><p><b><u>

பல்ப்ஸ்
</u></b></p><ul><li>
ப்ளாஷ்பேக் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் இருந்திருக்கலாம்.</li><li>

படகு போட்டி குறித்து இன்னும் விவரமாக கூறியிருக்கலாம்.
</li></ul><p><b>
மொத்தத்தில் மண்டாடி சூரியின் வெற்றிபயணம் இந்த படகு போட்டியிலும் வென்று தொடர்கிறது.</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a23e0f84-f270-4130-9586-befba99c196e/26-6aa270f136985.webp' /></p><p>
</p>]]></content>
            <updated>2026-09-10T09:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[DC பட பாணியில் VJ அஞ்சனாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்! குவியும் லைக்குகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/vj-anjana-rangan-new-look-like-dc-movie-viral-1789030327"></link>
            <id>https://manithan.com/article/vj-anjana-rangan-new-look-like-dc-movie-viral-1789030327</id>
            <summary type="text">பிரபல தொகுப்பாளினி VJ அஞ்சனா,&amp;nbsp; ட்ரெண்டிங்கான கருப்புநிற சேலையில்&amp;nbsp; &#039;டிசி&#039;&amp;nbsp; பட பாணியில் அசத்தலாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல தொகுப்பாளினி VJ அஞ்சனா,&nbsp; ட்ரெண்டிங்கான கருப்புநிற சேலையில்&nbsp; 'டிசி'&nbsp; பட பாணியில் அசத்தலாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
</p><h2>
 VJ அஞ்சனா</h2><p>தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் பட்டாளமும், மவுசும் இருக்கிறதோ, அதேபோல் தொலைக்காட்சி தொகுப்பாளினிகளுக்கும் தற்போது தனி ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5459e077-6a95-43b3-b632-7943ca9839ac/26-6aa276fd4397a.webp' /></p><p>அந்த வரிசையில், ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட முன்னணி தொகுப்பாளினிகளில் ஒருவராக வலம் வருபவர் VJ அஞ்சனா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc30a5ab-d21f-4f53-bfba-b5a9abdead6b/26-6aa276ff5e5ea.webp' /></p><p>
தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றிய காலத்திலேயே தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய அஞ்சனா, ‘கயல்’ பட நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ae6d4bb-0244-4b39-b808-3f607a270f9b/26-6aa276fdf2844.webp' /></p><p>இந்த தம்பதிக்கு அழகான மகனும் உள்ளார்.

அம்மாவான பின்னரும் குறையாத கவர்ச்சி!

திருமணத்திற்குப் பின்னரும், குறிப்பாக அம்மாவான பிறகும் தனது இளமைத் தோற்றத்தாலும் ஸ்டைலாலும் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார் அஞ்சனா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d30d86a-1d80-48f7-9ac5-23d810d34d65/26-6aa276fea99e3.webp' /></p><p>சமூக வலைத்தளங்களில் அவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.

இந்நிலையில்,&nbsp;ட்ரெண்டிங்கான கருப்புநிற சேலையில் 'டிசி' பட பாணியில் அசத்தலாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DdEXt9yE1Qf/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DdEXt9yE1Qf/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DdEXt9yE1Qf/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Anjana Rangan (@anjana_rangan)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u> </u></b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b><u>FOLLOW NOW</u></b>&nbsp; </a>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T09:24:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[20 வயது பெண்ணை திருமணம் செய்த 72 வயது கால்பந்து ஜாம்பவான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/72-year-old-malaysia-footballer-married-20-yr-old-1789032110"></link>
            <id>https://news.lankasri.com/article/72-year-old-malaysia-footballer-married-20-yr-old-1789032110</id>
            <summary type="text">72 year old malaysia footballer married 20 year old girl: மலேசிய கால்பந்து ஜாம்பவானான 72 வயதான டத்தோ அப்தா அலிஃப், 20 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>72 year old malaysia footballer married 20 year old girl: மலேசிய கால்பந்து ஜாம்பவானான 72 வயதான டத்தோ அப்தா அலிஃப், 20 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார். </p><h3>

72 வயதில் கால்பந்து ஜாம்பவானுக்கு திருமணம்</h3><p> 

மலேசிய கால்பந்து ஜாம்பவனாக கருதப்படுபவர் டத்தோ அப்தா அலிஃப்(Datuk Abdah Alif)
.&nbsp;</p><p>1980 மாஸ்கோ ஒலிம்பிற்கு தகுதி பெற்ற மலேசிய அணியில் டத்தோ அப்தா அலிஃப்பும் இடம் பெற்றிருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/099f6f49-aa9a-4f3e-9737-405816ae6014/26-6aa276b00c21f.webp' /></p><p>

ஆனால், சோவியத் யூனியனின் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மலேசியா ஒலிம்பிக் போட்டிகளைப் புறக்கணித்ததால், அப்தா ஒலிம்பிக்கில் விளையாட முடியவில்லை. </p><p>

இந்நிலையில், தற்போது 72 வயதான அப்தா மீண்டும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.&nbsp;</p><p></p><p>

72 வயதான அப்தா கடந்த ஆகஸ்ட் 27 ஆம் திகதி 20 வயது பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98d480aa-8f11-4cf7-b73a-08ae21fbb781/26-6aa276af56c4b.webp' /></p><p>

இந்த திருமணத்தை அவரது சகோதரரும், முன்னாள் தேசிய அணி வீரருமான யூனுஸ் அலிஃப் உறுதிப்படுத்தியுள்ளார். </p><p>

இந்த திருமணம் குறித்து பேசிய அவர், "அவர்கள் ஆகஸ்ட் 27 அன்றுதான் திருமணம் செய்துகொண்டார்கள். </p><p>இரு குடும்பத்தினரும் சம்மதித்ததால் எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை. 

அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம். </p><p>ஒருவேளை அவர்கள் தற்போது தேனிலவில் இருக்கலாம். அதனால்தான் அவர் அழைப்பை எடுக்கவில்லை.

அவர்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்பது உண்மைதான், அவர்கள் இருவருக்கும் எங்கள் வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>

52 ஆண்டுகள் வயது வித்தியாசத்தில் நடைபெற்றுள்ள இந்த திருமணம் கால்பந்து ரசிகர்கள் மற்றும் சமூக ஊடக பயனர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T09:24:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆன்டி பர்னாமின் தடைகளை வரவேற்றுள்ள ஈரானும் ஹமாஸும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-hamas-hail-andy-burnham-1789032397"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-hamas-hail-andy-burnham-1789032397</id>
            <summary type="text">&amp;nbsp;Iran and Hamas hail Andy Burnham&#039;s sanctions: ஆன்டி பர்னாமின் தடைகளை ஈரானும் ஹமாஸும் வரவேற்கின்றன.
இஸ்ரேல் மீது தடைகளை விதிக்க ஆன்டி பர்னாம் எட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;Iran and Hamas hail Andy Burnham's sanctions: ஆன்டி பர்னாமின் தடைகளை ஈரானும் ஹமாஸும் வரவேற்கின்றன.
</p><p>இஸ்ரேல் மீது தடைகளை விதிக்க ஆன்டி பர்னாம் எடுத்த முடிவை ஈரானிய அரசாங்கமும் ஹமாஸ் படைகளும் வரவேற்றுள்ளன.</p><h2>முஸ்லிம் வாக்காளர்கள்</h2><p>
</p><p>மேற்கு கரை குடியேற்றப் பகுதிகளுடனான வர்த்தகத் தடை விவகாரத்தில், பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் எட் மிலிபான்ட் ஆகியோர் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2f4e67d-5ee0-48e8-b524-aa4103ef5e06/26-6aa277cfc5ed3.webp' /></p><p> </p><p>இஸ்ரேலியக் குடியேறிகளால் மேற்கொள்ளப்பட்ட இனச் சுத்திகரிப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையாக, பிரான்ஸ் மற்றும் கனடாவுடன் ஒருங்கிணைந்து பிரித்தானியா இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. </p><p>இருப்பினும், கிழக்கு ஜெருசலேமில் உள்ள பிரித்தானிய தூதரக அலுவலகத்தை இஸ்ரேல் மூடி வருகிறது; அத்துடன், முஸ்லிம் வாக்காளர்களைக் கவரும் நோக்கிலேயே லேபர் கட்சி அமைச்சர்கள் செயல்படுவதாகக் குற்றம் சாட்டி, 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்நாட்டிற்குள் நுழைவதற்கும் தடை விதித்துள்ளது.</p><p></p><p> </p><p>இந்த நிலையில், இது வெறும் அடையாள அரசியல் சார்ந்த நடவடிக்கை என்றும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் யூதர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை ஆயுதமாகப் பயன்படுத்துவோரை இது மேலும் துணிச்சலடையச் செய்யும் என்றும் பிரித்தானியாவின் தலைமை மத குருவான எஃப்ரைம் மிர்விஸ் கூறியுள்ளார். </p><p>இருப்பினும், பிரித்தானியாவின் இந்த நடவடிக்கையால், இஸ்ரேலிடமிருந்து வரும் முக்கியமான பயங்கரவாத எதிர்ப்பு உளவுத் தகவல்களுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கவலை எழுந்துள்ளது. </p><p>ஆனால், இந்த நடவடிக்கை குறித்து, டொனால்ட் ட்ரம்பிடம் இருந்து இதுவரை எவ்விதக் கருத்தும் வெளியாகவில்லை. இந்த நிலைப்பாட்டு மாற்றம், காஸாவைத் திறம்பட நிர்வகித்து வரும் ஹமாஸ் படைகளுக்கு மகிழ்ச்சியளித்ததாகத் தெரிகிறது. </p><p>அந்த அறிவிப்பை சரியான திசையில் எடுக்கப்பட்ட முக்கியமான நடவடிக்கை, ஆனால் போதுமானவை அல்ல என்று ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் பாசெம் நைம் விவரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>ஈரானும் பிரித்தானியாவின் புதிய அணுகுமுறையைப் பயன்படுத்திக்கொண்டுள்ளது. ஈரானிய அரசு வானொலி தெரிவிக்கையில், இறுதியில், பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேலுக்கு எதிர்காலம் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளன; மேலும், நமது வீரமரணம் அடைந்த தலைவர் கூறியது போல, அடுத்த இரண்டு தசாப்தங்களுக்கு மேல் இஸ்ரேல் நிலைத்திருக்காது என குறிப்பிட்டுள்ளது.</p><h2>அநீதிக்கு எதிராக</h2><p> </p><p>மேலும், இது இஸ்ரேலின் வீழ்ச்சியின் தொடக்கம் என்று பல அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர் எனவும் பதிவு செய்துள்ளது. இதனிடையே, ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக பிரித்தானியா நிற்பதாக பர்னாம் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48f9e3fc-d98b-4431-a92c-88f40060477e/26-6aa277d079c4f.webp' /></p><p> </p><p>உள்ளூர் யூதத் தலைவர்கள் மற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கத்துடன் மோதலை ஏற்படுத்திய மறுநாள் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்த பிரதமர், அநீதிக்கு எதிராக பிரித்தானியா எப்போதும் உறுதியாக நிற்கும் என்று கூறியுள்ளார். </p><p>மேலும், பிரித்தானியா அநீதிக்கு எதிராக நியாயத்திற்காக நிற்க வேண்டும். மக்கள் தங்கள் வீடுகளை விட்டு மிரட்டப்பட்டு வெளியேற்றப்படும்போதும், அச்சுறுத்தப்படும்போதும், நாங்கள் எப்போதும் நலிந்தவர்களுடன் துணை நிற்போம், மேலும் அவர்களுக்கு ஆதரவளிக்க எங்களால் முடிந்த நடவடிக்கைகளை எடுப்போம் என்றார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T09:23:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறிய முன்னாள் அரச ஜோதிடர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-government-astrologer-ciaboc-investigation-1789023747"></link>
            <id>https://tamilwin.com/article/former-government-astrologer-ciaboc-investigation-1789023747</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் அரச ஜோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன&amp;nbsp;சுமார் மூன்று மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குற...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் அரச ஜோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன&nbsp;சுமார் மூன்று மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவிலிருந்து புறப்பட்டுச்சென்றுள்ளார்.</p><p>இவர் இன்று காலை (10) சுமார் 10.15 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>முன்னாள் அரச ஜோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன இன்று (10) இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p> 

சிரிலிய சவிய தொடர்பாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்து வரும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.</p><p>மேலும், தொடர்புடைய விசாரணை சம்பந்தமான சுமனதாஸ அபேகுணவர்தனவிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p><p><b><i>you may like this video&nbsp; &nbsp;</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/K4kYZlRMH8A" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-10T09:22:21+00:00</updated>
        </entry>
    </feed>
