<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-27T21:48:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் நற்சான்றிதழ் பெற விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளுக்கு விசேட அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-notice-applicants-for-police-credentials-1787861585"></link>
            <id>https://tamilwin.com/article/special-notice-applicants-for-police-credentials-1787861585</id>
            <summary type="text">பொலிஸ் நற்சான்றிதழ் வழங்கும் இணையத்தள கட்டமைப்பு செயலிழந்த தினத்தில் விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளுக்கு தங்கள் விண்ணப்பங்களை மீண்டும் சமர்ப்பிக்குமாறு வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிஸ் நற்சான்றிதழ் வழங்கும் இணையத்தள கட்டமைப்பு செயலிழந்த தினத்தில் விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளுக்கு தங்கள் விண்ணப்பங்களை மீண்டும் சமர்ப்பிக்குமாறு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
பொலிஸ் ஊடகப்பிரிவினால் இது தொடர்பான விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பொலிஸ் தலைமையகத்தினால் வழங்கப்படுகின்ற பொலிஸ் நற்சான்றிதழ்கள், பத்தரமுல்ல, சுஹூருபாய கட்டிடத்தின் 17ஆம் மாடியில் அமைந்துள்ள நற்சான்றிதழ் பிரிவினால் நிருவகிக்கப்படுகின்றன.
</p><p>
பொலிஸ் நற்சான்றிதழ் சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்கள், அது தொடர்பான அறிக்கைகளைப் பெறுதல் மற்றும் சான்றிதழ்களை அச்சிடுதல் போன்ற செயற்பாடுகள் கணினிமயப்படுத்தப்பட்ட தரவு அமைப்பு ஊடாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த தரவு அமைப்பானது கடந்த 2026 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 20 ஆம் திகதியன்று பிற்பகல் 12.50 மணிக்குச் செயற்பாடற்ற நிலைக்குள்ளானது.</p><h2>ஏற்பட்ட&nbsp;செயலிழப்பு&nbsp;</h2><p> இது குறித்து இலங்கை தகவல் மற்றும் தொழில்நுட்ப முகவர்களுக்கு (ICTA) அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமைப்பை மீள இயங்கச் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cae8e36-398d-414e-9947-9a3828f63a01/26-6a909ae35e88e.webp' /></p><p> அதற்கமைய, விண்ணப்பதாரர்கள் தற்போது வழமை போன்று இணையம் ஊடாகக் பொலிஸ் நற்சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.
</p><p>
இதற்கிடையே கடந்த 2026ஆம் ஆண்டு ஓகஸ்ட் 20ஆம் திகதியன்று தரவு அமைப்பில் ஏற்பட்ட செயலிழப்பைத் தொடர்ந்து, அன்றைய தினம் விண்ணப்பதாரர்களால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் நற்சான்றிதழ் தரவு அமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.</p><p> எனவே, அந்தத் திகதியில் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த விண்ணப்பதாரர்கள், புதிய விண்ணப்பமொன்றினை மீளவும் இணையவழியில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
</p><p>
புதிய விண்ணப்பத்திற்குரிய சம்பந்தப்பட்ட அறிக்கைகள் பெறப்பட்டதன் பின்னர் பொலிஸ் நற்சான்றிதழ் வழங்கப்படும். </p><p>மேலும், முந்தைய விண்ணப்பத்திற்காகச் செலுத்தப்பட்ட 5,100 ரூபாய் கட்டணமானது, விண்ணப்பதாரர் கட்டணம் செலுத்துவதற்குப் பயன்படுத்திய கடன் அட்டைக்கு (Credit Card) மீளச் (Refund) செலுத்தப்படும் என்றும் பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T21:40:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இப்படம் ஓடவில்லை என்றால் கண்டிப்பாக நான் மொட்டை அடித்துக்கொள்கிறேன்... நடிகை பரபரப்பு பேச்சு...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-shocking-statement-about-her-in-stage-1787851415"></link>
            <id>https://cineulagam.com/article/actress-shocking-statement-about-her-in-stage-1787851415</id>
            <summary type="text">ஸ்வேதா லக்ஷ்மணன்பொதுவாக நடிகைகள் தங்களை அழகுப்படுத்த முதலில் அதிக கவனம் செலுத்துவது தலைமுடிக்கு தான். முடிவை அழகாக அடத்தியாக, Shiningஆக காட்ட என்னென்ன...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஸ்வேதா லக்ஷ்மணன்</h2><p>பொதுவாக நடிகைகள் தங்களை அழகுப்படுத்த முதலில் அதிக கவனம் செலுத்துவது தலைமுடிக்கு தான். </p><p>முடிவை அழகாக அடத்தியாக, Shiningஆக காட்ட என்னென்னவோ செய்கிறார்கள். நடிகைகள் முடிக்கு அதிக அக்கறை காட்டி அழகுப்படுத்தும் இந்த காலத்தில் ஒரு நடிகை தனது முடியை எடுக்கிறேன் என கூறியுள்ளார்.
</p><p></p><h2>யார் அவர்</h2><p>
தெலுங்கு சினிமாவிலும் வாரா வாரம் புத்தம் புதிய படங்கள் வெளியாகிறது. </p><p>அப்படி தெலுங்கில் தயாராகி வெளியாக இருக்கும் திரைப்படம் தான் சஹா-லைஃப் ஆப் சஞ்சு என்ற படம். நிஷாந்த் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளவர் தான் ஸ்வேதா லக்ஷ்மணன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdd48532-b30a-4ac5-aa19-65f74f59808a/26-6a9073e4b6d72.webp' /></p><p> </p><p>வரும் செப்டம்பர் 4ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் அண்மையில் படக்குழுவினர் ஒரு நிகழ்ச்சி நடத்தினர். அதில் பேசும்போது நடிகை ஸ்வேதா,</p>]]></content>
            <updated>2026-08-27T21:30:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் இளைய மகனை கொலை செய்ய திட்டம்! ஈரான் வெளியிட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-denies-potential-plot-against-trump-s-son-1787863932"></link>
            <id>https://ibctamil.com/article/iran-denies-potential-plot-against-trump-s-son-1787863932</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இளைய மகனான பெரொன் ட்ரம்பை (Barron Trump) கொலை செய்வதற்குச் சதித்திட்டம் தீட்டப்படுவதாக வெளியான செய்திகள் முற்றிலு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இளைய மகனான பெரொன் ட்ரம்பை (Barron Trump) கொலை செய்வதற்குச் சதித்திட்டம் தீட்டப்படுவதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என
ஈரான் முற்றாக நிராகரித்துள்ளது.
</p><p>
 ஈரானின் பாதுகாப்பு தலைவர் மொஹ்சென் ரெஸாயி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
</p><p>
லெபனான் ஊடகமொன்றுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், இந்த விவகாரம் குறித்து பரப்பப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.</p><p></p><h2>ஈரானின் விளக்கம்</h2><p>
முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதியின் 18 வயதான இளைய மகன் பெரொன் ட்ரம்பைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவது குறித்து ஈரானிய அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காணொளிப்பதிவு தொடர்பாகத் தங்களுக்குத் தெரியவந்துள்ளதாக அமெரிக்க ரகசிய சேவை அமைப்பு தெரிவித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e943b9d0-aee2-4832-85a7-23e72df359f0/26-6a90a6ac65620.webp' /></p><p> </p><p>

இந்த செய்தி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையிலேயே, ஈரானிய தரப்பிலிருந்து இந்த விளக்கமும் மறுப்பும் வெளியாகியுள்ளது.&nbsp; </p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T21:14:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பச்சிளம் குழந்தையின் உயிரை பறித்த சம்பவம்; தாய்க்கும் நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragedy-claims-infant-s-life-mother-also-suffers-1787865181"></link>
            <id>https://jvpnews.com/article/tragedy-claims-infant-s-life-mother-also-suffers-1787865181</id>
            <summary type="text">கெப்பித்திகொல்லாவ பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் நேற்று (27) முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 நாட்களேயான கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழந்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கெப்பித்திகொல்லாவ பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் நேற்று (27) முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 நாட்களேயான கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழந்தனர்.</p><p style="text-align: justify; "> 

பதவிய சிறிபுர பகுதியில் இருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும், அநுராதபுரத்திலிருந்து கெப்பித்திகொல்லாவ நோக்கிப் பயணித்த கெப் வண்டியும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb23d020-f6ba-4725-a536-569305948535/26-6a90a85ed5d2b.webp' /></p><p> </p><p style="text-align: justify; ">

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி, அவரது தாய் மற்றும் 10 நாட்களேயான கைக்குழந்தை ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்த போதே இந்த கோர விபத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p style="text-align: justify; ">

இந்த விபத்து தொடர்பில் கெப்பித்திகொல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-27T21:13:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரம்ப் விதிக்கும் வரிகள்: கனடாவில் 1 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-tariffs-threaten-1-lakh-canadian-jobs-1787865210"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-tariffs-threaten-1-lakh-canadian-jobs-1787865210</id>
            <summary type="text">Trump tariffs threaten 1 lakh Canadian jobs: டிரம்ப்பின் முடிவால் கனடாவில் 1 லட்சம் பேர் வேலை இழக்கவுள்ளனர்.


1,00,000 வேலைகள் அமெரிக்கா - கனடா வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump tariffs threaten 1 lakh Canadian jobs: டிரம்ப்பின் முடிவால் கனடாவில் 1 லட்சம் பேர் வேலை இழக்கவுள்ளனர்.</p><h2>


1,00,000 வேலைகள் </h2><p>அமெரிக்கா - கனடா வர்த்தக உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், கனடா ஏற்றுமதி செய்யும் பல்வேறு பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளார். </p><p>

இதனால், கனடாவில் 90,000 முதல் 1,00,000 வேலைகள் ஆபத்தில் உள்ளன என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d2b3b38-0583-4193-a324-49e36fc93479/26-6a90a87be8949.webp' /></p><p>இந்த புதிய வரிகள், ஏற்கனவே கனடா எஃகு மற்றும் அலுமினியத்திற்கு விதிக்கப்பட்ட 50 சதவீத வரிகளும், கார் உற்பத்திக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத வரிகளும் மேலாக சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், கனடா நிறுவனங்கள் அமெரிக்க சந்தையில் போட்டியிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
</p><p>
வர்த்தக நிபுணர்கள் கூறுவதாவது:

“50 சதவீத வரி என்பது சாதாரண உயர்வு அல்ல. இது பல நிறுவனங்களுக்கு அமெரிக்க சந்தையில் விற்பனை செய்வதை முற்றிலும் சாத்தியமற்றதாக மாற்றுகிறது. லாப விகிதம் குறைவதால், நிறுவனங்கள் விலையை உயர்த்த வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதனால், அமெரிக்க மற்றும் பிற நாடுகளின் போட்டியாளர்களிடம் சந்தையை இழக்க நேரிடும்” என தெரிவித்துள்ளனர்.
</p><p></p><p>கனேடிய பிரதமர் மார்க் கார்னி, 28 பில்லியன் டொலர் மதிப்பிலான உதவித் திட்டத்தை அறிவித்து, அமெரிக்காவிற்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார். </p><p>ஆனால், இந்த “பழிவாங்கும் வரிகள் அமெரிக்காவை பாதிக்கலாம், ஆனால் கனடா பொருளாதாரத்தையே அதிகமாக பாதிக்கும்” என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
</p><p>
மரப்பொருட்கள், இயந்திரங்கள், மின்சாதனங்கள், மரச்சாமான்கள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை அதிகமாக பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக, கனடாவின் வனவளத் துறை கடுமையான அழுத்தத்தில் உள்ளது.
</p><p>
கனடாவின் பொருளாதாரம், அமெரிக்காவுடன் 70 சதவீதம் ஏற்றுமதியுடன் தொடர்புடையது. இதனால், இந்த வர்த்தக போர், கனடாவின் வேலைவாய்ப்பையும், பொருளாதாரத்தையும் தீவிரமாக பாதிக்கும் அபாயம் உள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T21:11:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகளவில் விசா நேர்காணல்களை நிறுத்தியது அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-suspends-visa-interviews-worldwide-1787864587"></link>
            <id>https://canadamirror.com/article/us-suspends-visa-interviews-worldwide-1787864587</id>
            <summary type="text">உலகெங்கிலும் உள்ள அமெரிக்க துாதரகங்களில் விசா நேர்காணல்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

 

இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகெங்கிலும் உள்ள அமெரிக்க துாதரகங்களில் விசா நேர்காணல்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
</p><p>
 

இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், குடியேற்ற கட்டுப்பாடு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94c2a50e-6045-4cff-81f8-2e70ad0ef667/26-6a90a60d91150.webp' /></p><p> </p><p>மாணவர்கள், வேலை பார்ப்போர், வர்த்தகம், சுற்றுலா என பல விசாக்களில் கடும் விதிமுறைகளை கொண்டு வந்துள்ளார்.</p><p>



அந்த வகையில் சுற்றுலா அல்லது வணிகத்திற்காக வந்து, அகதி அந்தஸ்து கோரியுள்ள, 2 இலட்சம் வெளிநாட்டினரின் விசாக்களை ரத்து செய்ய ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.</p><p>



இந்நிலையில், உலகெங்கிலும் உள்ள அமெரிக்க துாதரகங்கள் மற்றும் துாதரக அலுவலகங்களில் விசா நேர்காணல்கள் நேற்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
</p><p>


அமெரிக்க அரசு வழங்கும் நலத்திட்டங்களைச் சார்ந்து வாழும் வாய்ப்புள்ள விண்ணப்பதாரர்களை கண்டறிந்து நிராகரிப்பது மற்றும் விசா விண்ணப்பங்களை மிகவும் தீவிரமாகவும், ஒரே மாதிரியாகவும் ஆய்வு செய்வது குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



நேர்காணல் எப்போது மீண்டும் தொடங்கும் என்ற விபரத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிடவில்லை.</p>]]></content>
            <updated>2026-08-27T21:03:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாநாட்டுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/international-conference-enforced-disappearances-1787860557"></link>
            <id>https://tamilwin.com/article/international-conference-enforced-disappearances-1787860557</id>
            <summary type="text">30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்
தினத்தையொட்டி, வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்
ஏற்பாடு ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்
தினத்தையொட்டி, வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்
ஏற்பாடு செய்துள்ள சர்வதேச மாநாட்டுக்கு அனைத்துத் தரப்பினரும் முழுமையான
ஆதரவை வழங்க வேண்டும் என்று தாயகச் செயலணி அழைப்பு விடுத்துள்ளது.
</p><p>
யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்படி அழைப்பை
தாயகச் செயலணி விடுத்துள்ளது.
</p><p>
எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெறவுள்ள சர்வதேச மாநாட்டில் அனைத்துத்
தரப்பினரும் கலந்துகொண்டு அதனைச் சிறப்பிக்க வேண்டும் என்று தாயகச் செயலணி
கேட்டுக்கொண்டுள்ளது.</p><h2>முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை&nbsp;</h2><p>

தமிழர்களின் இனப்படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி முன்னெடுக்கப்பட்ட “நீதியின்
ஓலம் - இரண்டு” போராட்டத்தின் இறுதி நாளில் வாசிக்கப்பட்ட அறிக்கை, ஐக்கிய
நாடுகள் சபையின் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் தாயகச் செயலணி
தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e200c7e-ec12-423b-9873-624e3ffd6d97/26-6a9097c0dd717.webp' /></p><p> </p><p>இதன் தொடர்ச்சியாக, எதிர்வரும் ஐ.நா. கூட்டத் தொடரில் அந்த
அறிக்கை நேரடியாகச் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்றும் தாயகச் செயலணி
அறிவித்துள்ளது.</p><p>

ஐ.நாவில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையை ஏற்றுக்கொண்டு, அனைத்துத் தமிழ்
நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழ்த் தேசியம் சார்ந்த அமைப்புகளும் முழுமையான
ஆதரவை வழங்குவதுடன், அறிக்கையில் கையொப்பமிட்டுத் தர வேண்டும் என்றும் தாயகச்
செயலணி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>

எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதி முதல் ஒரு மாத காலத்துக்குத் தமிழர் தாயகம்
தழுவிய ரீதியில் விழிப்புணர்வு வீதி நாடகங்கள் மற்றும் தெருக்கூத்துகளை நடத்த
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. </p><p>குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் பாடசாலை
மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும்
வகையில் இந்த நிகழ்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் முழுமையான
ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் தாயகச் செயலணி கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T21:02:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு உக்ரைனில் பயங்கர தாக்குதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/russia-attacks-ukraine-with-missiles-and-drones-1787861384"></link>
            <id>https://ibctamil.com/article/russia-attacks-ukraine-with-missiles-and-drones-1787861384</id>
            <summary type="text">ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு உக்ரைனின் துறைமுகங்கள், தொழிற்பேட்டைகள் மற்றும் வர்த்தக விநியோக மையங்களை இலக்கு வைத்து பல மணிநேரம் தீவிர தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு உக்ரைனின் துறைமுகங்கள், தொழிற்பேட்டைகள் மற்றும் வர்த்தக விநியோக மையங்களை இலக்கு வைத்து பல மணிநேரம் தீவிர தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
தலைநகர் கீவ் மற்றும் பிற நகரங்களை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 258 ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த இரவுநேரத் தாக்குதல்களை உக்ரைனின் வான் பாதுகாப்புப் படையினர் பகுதியளவு முறியடித்துள்ளதாக தெரியவருகிறது.
</p><p>
பாலிஸ்டிக் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளுடன் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் தானியக் கிடங்குகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>சுட்டு வீழ்த்தப்பட்ட ஏவுகணைகள்</h2><p>
</p><p>
அமெரிக்கா வழங்கிய பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளின் உதவியுடன், ஏழு பாலிஸ்டிக் ஏவுகணைகளை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15934b5a-26a4-46e8-9376-053ca6742999/26-6a909c4c331cb.webp' /></p><p><i>Image Credit:&nbsp;kyivpost</i></p><p>

 இருப்பினும், இத்தகைய மேம்பட்ட பாதுகாப்பு ஏவுகணைகளின் பற்றாக்குறை உக்ரைனுக்குப் பெரும் சவாலாகவே உள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை&nbsp;</h2><p>
</p><p>
இந்நிலையில், “ஸ்டார்ம் ஷேடோ” (Storm Shadow) ரக குரூஸ் ஏவுகணைகளை உக்ரைனே சொந்தமாக உற்பத்தி செய்ய தேவையான ரகசிய தொழில்நுட்பங்களை வழங்க பிரித்தானியா ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4477ef80-d20a-4011-a588-2e252fea4445/26-6a909c4cedda2.webp' /></p><p><i>Image Credit: CNN</i></p><p>
</p><p>
 இதற்குப் பதிலடியாக, உக்ரைனுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள பிரித்தானிய ராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T20:30:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர் மின்னழுத்த மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளான இரு மாணவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/students-injured-in-high-voltage-electric-shock-1787861778"></link>
            <id>https://jvpnews.com/article/students-injured-in-high-voltage-electric-shock-1787861778</id>
            <summary type="text">வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை பகுதியில், மரம் ஒன்றில் உலர்ந்த விறகுகளை வெட்டுவதற்காகச் சென்றிருந்த இரண்டு பாடசாலை மாணவர்கள், உயர் மின்னழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை பகுதியில், மரம் ஒன்றில் உலர்ந்த விறகுகளை வெட்டுவதற்காகச் சென்றிருந்த இரண்டு பாடசாலை மாணவர்கள், உயர் மின்னழுத்த மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், வட்டவளை பொலிஸாரின் துரிதத் தலையீட்டினால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

 

இவ்வாறு மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானவர்கள்&nbsp; 7ஆம் மற்றும் 8ஆம் தரங்களில் கல்வி பயிலும் 12 மற்றும் 13 வயதுடைய இரு மாணவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcfbb8c4-97c0-45d6-a6c3-27647a7d9338/26-6a909b1381beb.webp' /></p><h2>&nbsp;மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
 

குறித்த மாணவர்கள் தமது வீட்டிற்கு மேற்புறத்தில் அமைந்துள்ள புதர்க்காட்டுப் பகுதியில் இருந்த மரம் ஒன்றில் உலர்ந்த விறகுகளை வெட்டுவதற்காக ஏறியுள்ளனர்.
</p><p>
 

இதன்போது, அந்த மரத்திற்கு மேலாகச் சென்றிருந்த உயர் மின்னழுத்த மின்சாரக் கம்பிகள் மரத்துடன் உரசிய நிலையில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதன் காரணமாக மரம் முழுவதும் மின்சாரம் கசிந்த நிலையில், மரத்தின் மீது இருந்த இரு மாணவர்களுக்கும் திடீரென மின்சாரத் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.</p><p>

 

சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் வட்டவளை பொலிஸ் அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று, மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களைப் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p></p><p>பின்னர் இரு மாணவர்களும் உடனடியாக வட்டவளை பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>
 

பொலிஸாரின் துரிதமான தலையீட்டினால் மாணவர்கள் இருவரும் சரியான நேரத்தில் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதால், அவர்களின் உயிரைக் காப்பாற்ற முடிந்ததாகப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T20:16:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் வயல் நிலங்களில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/increase-illegal-sand-mining-fields-kilinochchi-1787859112"></link>
            <id>https://tamilwin.com/article/increase-illegal-sand-mining-fields-kilinochchi-1787859112</id>
            <summary type="text">கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை கமநல
சேவை நிலைய பிரிவுவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை கமநல
சேவை நிலைய பிரிவுவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல்
நிலங்களில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>எந்தவித அனுமதியும் இன்றி இரவு வேளைகளில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு குறித்த
பகுதியில் இடம் பெற்று வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.</p><h2>உரிய நடவடிக்கை</h2><p>

இதனால் நெற்செய்கை மேற்கொள்ளும் வயல்கள் பாதிப்படைந்து வருவதாகவும்,
தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில்
பொலிஸாருக்கு தெரியாமல் மணல் அகழ்வில் ஈடுபடுவதாகவும் உரிமையாளர்கள்
தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d34083db-f54c-4550-af43-d58717e15dbe/26-6a90926c3ddf3.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிய திணைக்கள அதிகாரிகள் குறித்த விடயம் தொடர்பாக
உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், குறித்த மணல் அகழ்வைத் தடுத்து
நிறுத்தாது விட்டால் பெரும் போக நெற்செய்கையில் பெரும் பாதிப்பை
விவசாயிகளாகிய நாங்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் எனவும்
தெரிவிக்கின்றனர்.
</p><p>
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து குறித்த பகுதியில் மணல் அகழ்வை தடுத்து
நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T20:10:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புடவை இருக்கட்டும் ஸ்டைலிஷ் உடையில் கலக்கும் நடிகை சினேகாவின் லேட்டஸ்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-sneha-latest-modern-attire-photoshoot-1787848069"></link>
            <id>https://cineulagam.com/article/actress-sneha-latest-modern-attire-photoshoot-1787848069</id>
            <summary type="text">நடிகை சினேகாநடிகை சினேகா, படங்கள் நடிக்கிறார் அதேசமயம் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார்.இன்னொரு Snehalaya என்ற பட்டுப் புடவை கடை திறந்து ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகை சினேகா</h2><p>நடிகை சினேகா, படங்கள் நடிக்கிறார் அதேசமயம் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார்.</p><p>இன்னொரு Snehalaya என்ற பட்டுப் புடவை கடை திறந்து தனது தொழிலையும் பிஸியாக கவனித்து வருகிறார். தனது புடவை கடையை விளம்பரப்படுத்தும் வகையில் விதவிதமான புடவைகள் அணிந்து நிறைய போட்டோ ஷுட் எடுப்பார்.</p><p>தற்போது அவர் புடவைக்கு பதிலாக ஸ்டைலிஷ் உடை அணிந்து ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.</p><p>இதோ அந்த போட்டோஸ்,&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T20:00:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்ராறியோ ஏரியின் பெயரை கையெழுத்திட்டு மாற்றினார் ட்ரம்ப்! மௌனத்தில் கனடா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-announced-changed-name-of-lake-ontario-1787859848"></link>
            <id>https://ibctamil.com/article/trump-announced-changed-name-of-lake-ontario-1787859848</id>
            <summary type="text">கனடாவுடனான பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஒன்ராறியோ ஏரியின் பெயரை &quot;அமெரிக்கா ஏரி&quot; (Lake America) என மாற்றுவதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவுடனான பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஒன்ராறியோ ஏரியின் பெயரை "அமெரிக்கா ஏரி" (Lake America) என மாற்றுவதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
</p><p>
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் அமெரிக்கா ஏரி எனக் குறிப்பிடப்பட்ட வரைபடத்திற்கு அருகே அமர்ந்து பேசிய ட்ரம்ப், கனடாவுடன் கையாள்வது கடினமாக இருப்பதாகவும், அந்நாடு அமெரிக்காவைச் சுரண்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
மூன்று நாட்கள் நடந்த தீவிர வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததற்கு இரு நாடுகளும் ஒன்றையொன்று குற்றம் சாட்டிய அடுத்த வாரத்திலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மௌனம் காக்கும் கனடா</h2><p>
</p><p>
வட அமெரிக்காவின் ஐந்து பெரிய ஏரிகளில் ஒன்றான ஒன்ராறியோ ஏரியின் பரப்பளவில் சுமார் 52% கனடாவிலும், மீதமுள்ள பகுதி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்திலும் அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a319c5a7-8722-4d27-96bb-5ee8af59d686/26-6a909590b9d1e.webp' /></p><p>

இந்நிலையில், குறித்த விவகாரம் தொடர்பில் கனடிய தரப்பில் இருந்து எந்தவொரு தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T19:57:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையிலும் எரிபொருள் விலையைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-steps-reduce-fuel-prices-sri-lanka-1787860324"></link>
            <id>https://tamilwin.com/article/government-steps-reduce-fuel-prices-sri-lanka-1787860324</id>
            <summary type="text">​சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதன் பலனை
இலங்கையிலுள்ள சாதாரண பொதுமக்களுக்கு அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று
திருகோணமல...</summary>
            <content type="html"><![CDATA[<p>​சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதன் பலனை
இலங்கையிலுள்ள சாதாரண பொதுமக்களுக்கு அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கோரிக்கை
விடுத்துள்ளார்.

​</p><p>கிண்ணியாவில் இன்று (27)இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

​</p><p>அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
​"ஈரான் மற்றும் ஓமான் இடையே எட்டப்பட்டுள்ள உடன்பாடுகளின் காரணமாக ஹோர்முஸ்
நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்து சுமுகமடைந்துள்ளது. </p><p>இதன் எதிரொலியாக
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் கணிசமாகக் குறைந்து வருகின்றன.
​சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரிக்கும்போதெல்லாம், அந்தப் சுமையை
மக்கள் மீது சுமத்தி உடனடியாக இங்கு எரிபொருள் விலையை உயர்த்தும் அரசாங்கம்,
உலகச் சந்தையில் விலை குறையும்போது அதன் நன்மையை மக்களுக்கு வழங்கத் தயங்குவது
ஏன்?

​</p><p>தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார சூழ்நிலையில், எரிபொருள் விலை
குறைக்கப்பட்டால் மட்டுமே அத்தியாவசியப் பொருட்களின் விலைகள், போக்குவரத்து
கட்டணங்கள் மற்றும் மீனவர்கள், விவசாயிகளின் உற்பத்திச் செலவுகள் குறையும்.
</p><p>எனவே, உலக சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இலங்கையிலும் எரிபொருள் விலையைக் குறைத்து
மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க
வேண்டும்" என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் மேலும் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-27T19:52:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[500-க்கும் மேற்பட்டவர்களை தூக்கிலிட்ட ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-executes-500-peple-in-2026-rights-groups-warn-1787858412"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-executes-500-peple-in-2026-rights-groups-warn-1787858412</id>
            <summary type="text">Iran executes 500 people in 2026 rights groups warn: ஈரான், 2026-ஆம் ஆண்டில் இதுவரை 500-க்கும் மேற்பட்டவர்களை தூக்கிலிட்டுள்ளதாக Iran Human Rights (IH...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran executes 500 people in 2026 rights groups warn: ஈரான், 2026-ஆம் ஆண்டில் இதுவரை 500-க்கும் மேற்பட்டவர்களை தூக்கிலிட்டுள்ளதாக Iran Human Rights (IHR) அமைப்பு தெரிவித்துள்ளது.
</p><p>
சமீபத்திய நாட்களில் தூக்குத் தண்டனைகள் அதிகரித்துள்ள நிலையில், ஜனவரி மாதத்தில் நடந்த அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட குறைந்தது 29 பேரும் இதில் அடங்குவதாக கூறப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d1185fd-bd79-4888-b308-21b34a3373df/26-6a90913284579.webp' /></p><h2>511 பேர்..</h2><p>அமைப்பின் தகவலின்படி, இதுவரை 511 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். இதில் 16 பெண்களும், தடை செய்யப்பட்ட எதிர்க்கட்சிகளுடன் தொடர்புடைய 13 அரசியல் கைதிகளும் உள்ளனர். </p><p>போராட்டங்களை அடக்குவதற்காகவே ஈரான் அரசு தூக்குத் தண்டனையை பயன்படுத்துகிறது என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><p></p><h2>போராட்டங்களை தடுக்க..</h2><p>IHR இயக்குநர் மக்மூத் அமிரி-மொகாதம் கூறியதாவது: “எல்லா தூக்குத் தண்டனைகளும் மக்களிடையே பயத்தை ஏற்படுத்தி புதிய போராட்டங்களைத் தடுக்கவே நடத்தப்படுகின்றன. இந்த நிலைமை மேலும் மோசமடையக்கூடும்” என எச்சரித்துள்ளார்.</p><p>

2022-இல் தொடங்கிய “பெண். வாழ்க்கை. சுதந்திரம்.” என்ற போராட்டங்களுடன் தொடர்புடையவர்களும் தூக்கிலிடப்பட்டுள்ளனர். </p><p>2026 ஜனவரியில் ஈஸ்பஹான் நகரில் நடந்த போராட்டங்களில் 70-க்கும் மேற்பட்டோர் மரண தண்டனைக்கு ஆளாகக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p></p><h2>2,159&nbsp;பேர்..
</h2><p>அம்னஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்ததாவது: 2025-இல் ஈரான் 2,159 பேரை தூக்கிலிட்டது. ஆனால் 2026-இல் அரசியல் கைதிகள் மற்றும் போராட்டக்காரர்களை குறிவைத்து தூக்குத் தண்டனைகள் அதிகரித்துள்ளன.
</p><p>
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், “ஈரான் அரசு தனது இராணுவத்திற்கு சம்பளம் வழங்காமல், போராட்டக்காரர்களை கொன்று வருவது மனிதாபிமான நெருக்கடி” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
</p><p>
பிரான்ஸ், பிரித்தானியா, கனடா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகள், ஈரான் தூக்குத் தண்டனையை பயன்படுத்தி மக்களின் குரலை அடக்குகிறது எனக் கண்டனம் தெரிவித்துள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T19:31:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு அல்ஜீரியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீ: 12 பேர் உயிரிழப்பு - 54 பேர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/deadly-forest-fire-northern-algeria-12-dead-1787858230"></link>
            <id>https://tamilwin.com/article/deadly-forest-fire-northern-algeria-12-dead-1787858230</id>
            <summary type="text">வடக்கு அல்ஜீரியாவின் கடலோரப் பகுதிகளில் தீவிரமாகப் பரவி வரும் காட்டுத்தீ
காரணமாகக் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 54 பேர் காயமடைந்துள்ளதாக
அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு அல்ஜீரியாவின் கடலோரப் பகுதிகளில் தீவிரமாகப் பரவி வரும் காட்டுத்தீ
காரணமாகக் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 54 பேர் காயமடைந்துள்ளதாக
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
வட ஆபிரிக்கப் பிராந்தியத்தில் நிலவும் கடுமையான வெப்ப அலை காரணமாகவே இந்த
காட்டுத்தீ பரவல் தீவிரமடைந்துள்ளது.</p><h2>உயிர்சேதங்கள்&nbsp;</h2><p>
</p><p>
ஜிஜெல், பெஜாயா மற்றும் திசி ஓசோ ஆகிய மாகாணங்களில் அதிகளவில் உயிர்சேதங்கள்
ஏற்பட்டுள்ளதுடன், பல குடியிருப்புப் பகுதிகளிலிருந்து மக்கள் பாதுகாப்பாக
வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffd548c6-fedd-4f65-ba36-8298428d937b/26-6a908eb6b14ba.webp' /></p><p>
</p><p>
நாடு முழுவதும் 69 இடங்களில் பற்றி எரியும் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புப்
படையினர் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.
</p><p>
பருவநிலை மாற்றத்தின் காரணமாக இந்தப் பகுதியில் தீவிர வெப்ப அலை மற்றும்
காட்டுத்தீ சம்பவங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக உலக வானிலை அமைப்பு
கவலை வெளியிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T19:23:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியா மீது நேரடி தாக்குதல் - ரஷ்யா எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-warns-uk-of-military-strikes-over-ukraine-1787850635"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-warns-uk-of-military-strikes-over-ukraine-1787850635</id>
            <summary type="text">Russia warns UK of military strikes over Ukraine: பிரித்தானியா மீது நேரடி தாக்குதல் நடத்தவுள்ளதாக ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரித்தானியாவிற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russia warns UK of military strikes over Ukraine: பிரித்தானியா மீது நேரடி தாக்குதல் நடத்தவுள்ளதாக ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><h2>
பிரித்தானியாவிற்கு ரஷ்யா எச்சரிக்கை</h2><p>ஐரோப்பாவில் நிலவும் போர் சூழ்நிலை மேலும் தீவிரமடைந்துள்ளது. ரஷ்யா, பிரித்தானியா மீது நேரடி தாக்குதல் நடத்தும் வாய்ப்பு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>

காரணம், உக்ரைன் தனது தாக்குதல்களில் பிரித்தானியா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தியிருப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ade02f59-5b31-4c0e-b507-a87f419028d4/26-6a90728ff0e98.webp' /></p><p>ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்ததாவது: “உக்ரைன், பிரித்தானியா வழங்கிய ஆயுதங்களை பயன்படுத்தி ரஷ்ய நிலப்பரப்பில் தாக்குதல் நடத்தியால், அதற்கான பதிலடி நேரடியாக பிரித்தானிய இராணுவ இலக்குகளை குறிவைத்து நடத்தப்படும்” என எச்சரித்துள்ளது.
</p><p>
இந்த எச்சரிக்கை, ரஷ்யா-உக்ரைன் போரில் புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது.</p><p></p><h2>NATO நாடுகளுக்கு சவால்</h2><p>இதுவரை ரஷ்யா, உக்ரைன் மீது மட்டுமே தாக்குதல் நடத்தி வந்த நிலையில், இப்போது பிரித்தானியா மீது நேரடி தாக்குதல் நடத்தும் வாய்ப்பு குறித்து எச்சரிக்கை விடுத்திருப்பது, NATO நாடுகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.
</p><p>
பிரித்தானியா, உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் பல்வேறு இராணுவ உதவிகளை வழங்கி வருகிறது. இதன் மூலம் உக்ரைன், ரஷ்யாவின் முக்கிய தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ரஷ்யா கடும் அதிருப்தியடைந்துள்ளது.
</p><p></p><p>சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கூறுவதாவது: “ரஷ்யாவின் இந்த எச்சரிக்கை, ஐரோப்பாவில் போர் பரவலாகும் அபாயத்தை அதிகரிக்கிறது. பிரிட்டன் மீது நேரடி தாக்குதல் நடந்தால், NATO முழுமையாக போரில் ஈடுபடும் சூழ்நிலை உருவாகும்” என தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த சூழ்நிலையில், உலக நாடுகள் பெரும் கவலையுடன் நிலைமையை கவனித்து வருகின்றன. ஐரோப்பாவில் பதற்றம் அதிகரித்துள்ளதால், உலக பொருளாதாரத்துக்கும் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T19:17:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்குடன் தொடர்புபடுத்தி போலி பிரசாரம்! சட்ட நடவடிக்கைக்கு விரைந்த திலகரத்ன டில்ஷான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dilshan-complaint-over-defamatory-posts-1787856354"></link>
            <id>https://ibctamil.com/article/dilshan-complaint-over-defamatory-posts-1787856354</id>
            <summary type="text">முன்னாள் தேசிய கிரிக்கெட் வீரர் டி.எம். டில்ஷான், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட பொய்யான மற்றும் அவதூற...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் தேசிய கிரிக்கெட் வீரர் டி.எம். டில்ஷான், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட பொய்யான மற்றும் அவதூறான பதிவுகள் குறித்து கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.</p><p>

நாட்டிற்கு 20 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றித் தான் கட்டியெழுப்பிய நற்பெயருக்கு, இந்தத் தவறான தகவல்கள் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். </p><p>

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை திரும்பிய பின்னர் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ள டில்ஷான், தனது பெயரைத் தூய்மைப்படுத்த நியாயமான மற்றும் விரைவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>&nbsp;</p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>
மேலும், பார்வையாளர்களை ஈர்ப்பதற்காகவோ அல்லது விளம்பரத்திற்காகவோ பொது நபர்களின் பெயர்களைப் பயன்படுத்தித் தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்த்து, சமூக ஊடகப் பயனர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1ae803a-b610-4a93-8e45-30809d3058bd/26-6a908822a05da.webp' /></p><p>
</p><p>
இந்த அவதூறான பதிவுகளுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கத் தனது வழக்கறிஞர்கள் ஆயத்தமாகி வருவதாகவும், இதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்குச் சட்டரீதியான தீர்வுகளைப் பெறவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
துபாயில் இருந்து நாடுகடத்தப்பட்டு தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலக குற்றவாளி, ஷிரான் பாசிக்குடன் டில்ஷானை தொடர்பு படுத்தி சமூக ஊடகங்கள் பரப்பப்பட்ட தகவல்களை அடிப்படையாக கொண்டே மேற்படி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T19:10:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பணம் கொட்ட சிறுமியை நிர்வாணமாக்கி பூஜை; ஆறு மாதகாலம் அரங்கேறிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ritual-involving-girl-incident-continued-1787857589"></link>
            <id>https://jvpnews.com/article/ritual-involving-girl-incident-continued-1787857589</id>
            <summary type="text">ஆந்திராவில் நடந்துள்ள ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூஜை என்ற பெயரில் சிறுமி ஒருவர் ஆறு மாதங்களாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஆந்திராவில் நடந்துள்ள ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூஜை என்ற பெயரில் சிறுமி ஒருவர் ஆறு மாதங்களாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.&nbsp; </p><p style="text-align: justify; ">ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், அனந்தபுரம் நகரத்திற்கு ஓட்டல் வைப்பதற்காக குடிபெயர்ந்துள்ளார். </p><p style="text-align: justify;">அப்போது மகாலட்சுமி என்ற உள்ளூர் பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். மகாலட்சுமி குடும்பத்தினருடன் நன்கு பழகிய நிலையில், அவர்களின் வறுமை நிலையை பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d22fd00-84b7-493d-a6f3-6efa959ae20c/26-6a908ab74750c.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;சிறப்புப் பூஜைகள்</h2><p style="text-align: justify; ">ஓட்டல் தொழிலில் பெரிதாக லாபம் வராது, எளிதாக நீங்கள் செல்வந்தர் ஆவதற்கு என்னிடம் யோசனை உள்ளது என, “உங்கள் மகள் நிர்வாணமாக அமர்ந்து சிறப்புப் பூஜைகள் செய்தால், அளவற்ற செல்வத்தையும், செழிப்பையும் பெறலாம்” என தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify;">ஆரம்பத்தில் பெற்றோர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், பின்பு மகாலட்சுமியின் வற்புறுத்தலின்பேரில் ஒப்புக்கொண்டுள்ளனர்.

</p><p style="text-align: justify;">
மகாலட்சுமியின் பேச்சை நம்பி சிறுமியை பூஜைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு போலி மந்திரவாதி பூஜைக்காக வரவழைக்கப்பட்டு, சிறுமியை ரகசிய இடம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளறனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

அங்கு சிறுமியின் ஆடையை முழுமையாக அகற்றி, தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டு்ள்ளார்.</p><p style="text-align: justify;">இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில்,&nbsp; புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது மற்றும் மாந்திரீக வழிபாடு ஆகிய குற்றங்களுக்காக, மகாலட்சுமி, ஹேமந்த், பாலசுப்ரமணியம் மற்றும் வெங்கடேஷ் யாதவ் ஆகியோர் மீது போக்சோ சட்டம் மற்றும் இன்னும் சில பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.</p><p style="text-align: justify;">

சிறப்புப் படைகள் அமைத்து குற்றவாளிகளை காவல்துறை தேடிவருகிறது. இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-27T19:06:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[Dheena படத்துல Ajith ஓட்டின Bullet என்னோடது | Sampath Ram Interview]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sampath-ram-interview-about-his-cinema-journey-1787842864"></link>
            <id>https://cineulagam.com/article/sampath-ram-interview-about-his-cinema-journey-1787842864</id>
            <summary type="text">சம்பத் ராம்ஒரு ஹீரோவை கொண்டாடும் அளவிற்கு அவருக்கு பின்னால் நடிக்கும் நடிகர்கள், துணை நடிகர்கள், சண்டை காட்சி நடிகர்களை நாம் கொண்டாடுவது இல்லை.
துணை ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சம்பத் ராம்</h2><p>ஒரு ஹீரோவை கொண்டாடும் அளவிற்கு அவருக்கு பின்னால் நடிக்கும் நடிகர்கள், துணை நடிகர்கள், சண்டை காட்சி நடிகர்களை நாம் கொண்டாடுவது இல்லை.
</p><p>துணை கதாபாத்திரங்களில் நடிக்கவே சிலர் கடுமையான உழைப்பு போட்டு நடிக்கிறார்கள். அப்படி பல படங்களில் மிகவும் தரமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் தான் சம்பத் ராம். </p><p>இவர் தான் நடித்த படங்கள் குறித்து நமக்கு தெரியாத பல விஷயங்களை சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அவரது பேட்டி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/K2OrcuzvC2I" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-27T19:00:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது அமெரிக்காவின் மிக நுணுக்கமான உளவியல் தாக்குதல்.. ட்ரம்ப் கையிலெடுத்துள்ள கடுமையான ஆயுதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-united-states-middle-east-economic-d-day-1787849288"></link>
            <id>https://tamilwin.com/article/iran-united-states-middle-east-economic-d-day-1787849288</id>
            <summary type="text">ஈரானின் நிதிப் பின்னணியை முற்றிலும் முடக்கும் வகையில் அமெரிக்கா அதன் வரலாற்றிலேயே மிகக் கடுமையான &quot;Economic D-Day&quot; பொருளாதாரத் தடைகளை அதிகாரப்பூர்வமாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் நிதிப் பின்னணியை முற்றிலும் முடக்கும் வகையில் அமெரிக்கா அதன் வரலாற்றிலேயே மிகக் கடுமையான "Economic D-Day" பொருளாதாரத் தடைகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p> அமெரிக்க கருவூலத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஈரானுடன் எண்ணெய் வணிகம், வங்கிப் பரிவர்த்தனை, டிஜிட்டல் சொத்துக்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து ஆகியவற்றில் தொடர்பில் இருக்கும் எந்தவொரு நாடோ அல்லது நிறுவனமோ அமெரிக்க நிதி அமைப்பிலிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p> ஈரானுக்கு நிதி ஆதாரமாக இருக்கும் அனைத்து பொருளாதாரப் பாதைகளையும் முடக்குவதே இதன் நோக்கம் என அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில், இதற்குப் பதிலடியாகத் தானும் அமெரிக்கா மீது நிதி ரீதியான தாக்குதலை நடத்தத் தயாராக இருப்பதாக ஈரானும் எச்சரித்துள்ளது. </p><p>ஈரான் - அமெரிக்க போர் பதற்றத்தில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் திருப்பம், அமெரிக்கா கையாளும் இந்த மிக நுணுக்கமான யுக்தி சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p>இது குறித்து மிக ஆழமாக ஆராய்கின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/kuwqKWzBX2Q" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T18:56:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-person-injured-in-an-accident-in-kilinochchi-1787856659"></link>
            <id>https://tamilwin.com/article/one-person-injured-in-an-accident-in-kilinochchi-1787856659</id>
            <summary type="text">A9வீதி கிளிநொச்சி 155ஆம் கட்டை இளைஞர் சேவை மன்றத்திற்கு முன்பாக நேற்றிரவு
இடம்பெற்ற விபத்தில் 32வயதுடைய ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.&amp;nbsp;டிப்பர் வாகன...</summary>
            <content type="html"><![CDATA[<p>A9வீதி கிளிநொச்சி 155ஆம் கட்டை இளைஞர் சேவை மன்றத்திற்கு முன்பாக நேற்றிரவு
இடம்பெற்ற விபத்தில் 32வயதுடைய ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.&nbsp;</p><p>டிப்பர் வாகனமும் மோட்டார்
சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p>விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில்
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>விபத்து
தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-27T18:52:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். நல்லூர் ஆலய திருவிழாவின் போது திடீரென வெளியேற்றப்பட்ட பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-suddenly-evicted-nallur-temple-festival-1787854472"></link>
            <id>https://tamilwin.com/article/woman-suddenly-evicted-nallur-temple-festival-1787854472</id>
            <summary type="text">யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, இடம்பெற்று வருகிறது.இந்நிலையில், ஆலயத்தில் திருவிழா இடம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, இடம்பெற்று வருகிறது.</p><p>இந்நிலையில், ஆலயத்தில் திருவிழா இடம்பெற்றுக் கொண்டிருந்த போது பெண்ணொருவர் திடீரென வெளியேற்றப்படும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.&nbsp;</p><p>எதற்காக குறித்த பெண் வெளியேற்றப்பட்டார் என்பதற்கான சரியான காரணம் தெரியாமல் கூட சிலர் முரண்பட்ட கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.</p><p>நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருக்கும் விதிமுறைகளை யாராக இருந்தாலும் பின்பற்ற வேண்டியது அவசியம்.&nbsp;</p><p>அந்தவகையில், ஆலயத்தின் உட்பகுதியில் இருந்து புகைப்படங்கள் எடுக்க அனுமதி இல்லை. எனவே, குறித்த பெண் அதனை மீறியதாகவும் அவரை வெளியில் இருந்து புகைப்படம் எடுக்குமாறு அறிவுறுத்தி வெளியேற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>இது உட்பட சர்வதேசத்தில் மற்றும் நாட்டில் இடம்பெற்ற முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RmNDeKRbHN4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T18:44:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[7 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் சிக்கிய தம்பதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/couple-arrested-with-drugs-1787855126"></link>
            <id>https://ibctamil.com/article/couple-arrested-with-drugs-1787855126</id>
            <summary type="text">மாத்தறையில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வந்த தம்பதியினர், சுமார் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள பெருமளவு போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறையில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வந்த தம்பதியினர், சுமார் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள பெருமளவு போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

மாத்தறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து ஐஸ் எனப்படும் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் மற்றும் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><h2>தீவிர விசாரணை</h2><p> </p><p>

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் சந்தை மதிப்பு சுமார் 7 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3501df0b-e2f6-4c9d-8ada-1112f2742440/26-6a9082a995050.webp' /></p><p>
</p><p>
இந்த போதைப்பொருட்கள் பெறப்பட்ட மூலத்தைக் கண்டறியவும், இதன் பின்னணியில் ஏதேனும் பெரிய போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T18:32:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை சாய்பிரியா தேவா ஓணம் சேலையில் அழகிய போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/saipriya-deva-onam-celebration-stills-1787847920"></link>
            <id>https://cineulagam.com/article/saipriya-deva-onam-celebration-stills-1787847920</id>
            <summary type="text">ஓணம் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை நடிகைகள் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். அவை ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.

அந்த வரிசையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓணம் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை நடிகைகள் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். அவை ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.
</p><p>
அந்த வரிசையில் நடிகை சாய்ப்ரியா தேவா அழகிய கசவு சேலையில் ஓணம் கொண்டாடி இருக்கிறார்.&nbsp;அப்போது எடுத்த போட்டோக்களையும் வெளியிட்டுள்ளார்.</p><p>

இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-27T18:27:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறிய எதிர்ப்புகளுக்காக முடிவுகளை திரும்பப் பெறமாட்டோம்! ஜனாதிபதியின் அதிரடியான பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-government-22nd-amendment-anura-kumara-1787847895"></link>
            <id>https://tamilwin.com/article/npp-government-22nd-amendment-anura-kumara-1787847895</id>
            <summary type="text">சிறிய எதிர்ப்புகளுக்காக முடிவுகளை&amp;nbsp;திரும்பப் பெறமாட்டோம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்றைய தினம் குறிப்பிட்டிருந்தார்.&amp;nbsp;அண்மைய காலமாக,...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிய எதிர்ப்புகளுக்காக முடிவுகளை&nbsp;திரும்பப் பெறமாட்டோம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்றைய தினம் குறிப்பிட்டிருந்தார்.&nbsp;</p><p>அண்மைய காலமாக, தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p>குறிப்பாக, அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து எதிர்க்கட்சிகள் உட்பட பல தரப்பினரால் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது.&nbsp;</p><p>அதேநேரம், இனவாதத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பல மோசமான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p>இந்நிலையில்,&nbsp;ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இது தொடர்பில் எவ்வாறான பதிலை வழங்குவார் என நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையிலேயே நேற்றைய தினம் அவர் நிகழ்த்திய உரை இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/FrbTK1osark" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T18:20:33+00:00</updated>
        </entry>
    </feed>
