<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-07T06:10:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் பொலிஸாரின் அதிரடி சோதனை.. 7 சந்தேக நபர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/seven-suspects-arrested-with-drugs-1788760593"></link>
            <id>https://tamilwin.com/article/seven-suspects-arrested-with-drugs-1788760593</id>
            <summary type="text">அம்பாறை பிரதேச குற்ற மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட
சிறப்புச் சோதன நடவடிக்கைகளின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் 7 சந்தேக நபர்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை பிரதேச குற்ற மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட
சிறப்புச் சோதன நடவடிக்கைகளின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் 7 சந்தேக நபர்கள்
கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>&nbsp;உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 8000
மில்லிகிராம் ஹெரோயினுடன் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.</p><p>

திஸ்ஸபுர பாலம் கடௌரா சந்தி அருகில் 2,800 மில்லிகிராம் ஹெரோயினுடன் 21 வயது
இளைஞன் கைது செய்யப்பட்டார்.</p><h2>சோதனை நடவடிக்கை&nbsp;</h2><p>
</p><p>
பாலம் கண்டுவ பகுதி மின்மாற்றி அருகே ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டு வந்த
சமனபெட்டாவைச் சேர்ந்த நபர் 3000 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் கடத்தலுக்குப்
பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ee02fca-8c96-486c-bde4-794c1f679e35/26-6a9e534b62cec.webp' /></p><p>
</p><p>
பிரிட்ஜ் கேம்ப் பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபர் 2,200 மில்லிகிராம்
ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட மூவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உஹன பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p>&nbsp;உஹன சோதனையை முடித்துவிட்டு பொலிஸார் திரும்பியபோது, கரங்கவா கிராமத்தில்
சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நால்வரைச் சோதனையிட்டனர்.</p><p> இதன்போது அவர்களிடம்
இருந்து முறையே 100, 110, 90 மற்றும் 95 மில்லிகிராம் வீதம் மொத்தம் 395
மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.
</p><p>
அம்பாறை நகரைச் சேர்ந்த இந்த நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு,
மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக அம்பாறை தலைமையக பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T06:05:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டசபையில் விளாசிய முதலமைச்சர் விஜய்! எழுந்து ஓடிய திமுகவினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chief-minister-vijay-slams-speech-dmk-assembly-1788759535"></link>
            <id>https://jvpnews.com/article/chief-minister-vijay-slams-speech-dmk-assembly-1788759535</id>
            <summary type="text">&amp;nbsp; இன்று தமிழ் நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையாற்றிய தமிழக முதல்வர் ஜோசப் விஜய் , எதிர்க்கட்சிகளைப் போல அரசியல் செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இன்று தமிழ் நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையாற்றிய தமிழக முதல்வர் ஜோசப் விஜய் , எதிர்க்கட்சிகளைப் போல அரசியல் செய்ய தமக்கு விருப்பமில்லை என தெரிவித்துள்ளார்.
</p><p>


சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையாற்றிய முதலமைச்சர் விஜய், சட்டம் - ஒழுங்கு தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் கருத்துகளில் உள்நோக்கம் இருந்தாலும், அதில் உண்மை உள்ளதா என்பதை அரசு பரிசீலிக்கும் என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e12bb8c3-4c96-4623-9131-ee7e13a1872c/26-6a9e4df0cbe24.webp' /></p><h2>மக்களின் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும்...</h2><p>
</p><p>


தமிழகத்தில் போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், த.வெ.க. ஆட்சி அமைத்ததிலிருந்து 4 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.</p><p></p><p>
</p><p>


இளம் வயதினர் குற்றங்களில் ஈடுபடுவதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய முதல்வர், கடந்த கால ஆட்சிகளின் குற்றங்களை பட்டியலிட்டு அரசியல் செய்ய தாம் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார்.
</p><p>


அரசியல் ரீதியான விமர்சனங்களை முன்வைக்கலாம் என்றாலும், தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
</p><p>


சட்டப்பேரவையில் சில உறுப்பினர்கள் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளையும் சுட்டிக்காட்டிய விஜய், மக்களின் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.</p><p></p><p> இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.



கடந்த காலங்களில் இடம்பெற்ற அரசியல் மோதல்களை மீண்டும் தொடர வேண்டிய அவசியமில்லை என்றும், “துருப்பிடித்த அரசியல்” தமிழகத்திற்கு தேவையில்லை என்றும் முதல்வர் விஜய் தெரிவித்தார்.</p><p>

முதலமைச்சர் விஜய் உரியின்போது கூச்சலிட்டு கத்திய திமுகவினர், சபானாயகர் தமக்கு பேச வாய்ப்பு தரவில்லை என கூறி வெளிநடப்பு செய்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T06:04:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு; கொழும்பு–ஜகார்த்தா விமான சேவைகள் ரத்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/colombo-jakarta-flight-services-cancelled-volcano-1788761111"></link>
            <id>https://jvpnews.com/article/colombo-jakarta-flight-services-cancelled-volcano-1788761111</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தோனேசியாவின் Anak Krakatau எரிமலை வெடித்ததன் காரணமாக கொழும்புக்கும் ஜகார்த்தாவுக்கும் இடையே இன்று திட்டமிடப்பட்டிருந்த UL 364 (கொழும்பு–ஜகார...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தோனேசியாவின் Anak Krakatau எரிமலை வெடித்ததன் காரணமாக கொழும்புக்கும் ஜகார்த்தாவுக்கும் இடையே இன்று திட்டமிடப்பட்டிருந்த UL 364 (கொழும்பு–ஜகார்த்தா) மற்றும் UL 365 (ஜகார்த்தா–கொழும்பு) ஆகிய விமான சேவைகள் இரத்து செய்யப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.</p><p>

இலங்கையை நோக்கிய மேற்கு வான்வழிப் பாதையிலான விமானப் போக்குவரத்தையும் அதிகாரிகள் தடை செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96adab19-b206-487e-b86e-70ab9076e07a/26-6a9e5419c18b5.webp' /></p><h2>மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்ட&nbsp; ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் </h2><p>

பாதிக்கப்பட்ட வான்வெளியைத் தவிர்ப்பதற்காக, சிட்னி மற்றும் மெல்போர்னிலிருந்து வந்த இரண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் நேற்று இரவு மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தடங்கல் ஏற்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
அவுஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா இடையே சேவைகளை வழங்கும் மத்திய கிழக்கு நாடுகளின் பல விமான நிறுவனங்களும் தங்கள் பயணப் பாதைகளை மாற்றிக்கொண்டன.</p><p>

இந்த எரிமலை வெடிப்பு காரணமாக இந்தோனேசியாவின் பல விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-07T06:02:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுடச்சுட மொறு மொறு வெங்காய போண்டா – குழந்தைகளை குஷியாக்கும் எளிய ரெசிபி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/how-to-make-crispy-onion-bonda-at-home-1788758139"></link>
            <id>https://manithan.com/article/how-to-make-crispy-onion-bonda-at-home-1788758139</id>
            <summary type="text">பொதுவாகவே குழந்தைகள் இருக்கும் வீடுகளில் மாலை நேரம் வந்துவிட்டாலே, “ஏதாவது ஸ்நாக்ஸ் வேண்டும்” என்று குழந்தைகள் நச்சரிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

அந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாகவே குழந்தைகள் இருக்கும் வீடுகளில் மாலை நேரம் வந்துவிட்டாலே, “ஏதாவது ஸ்நாக்ஸ் வேண்டும்” என்று குழந்தைகள் நச்சரிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
</p><p>
அந்த நேரத்தில் கடைகளில் வாங்கிக் கொடுப்பதைவிட, வீட்டிலேயே சுவையாகவும், சுத்தமாகவும் ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11fa8056-030b-46a2-9063-40190b97c062/26-6a9e4c8d71a0f.webp' /></p><p></p><p>
</p><p>
அந்த வகையில், வீட்டில் எளிதாகக் கிடைக்கும் பொருட்களை வைத்து, சுவையான மற்றும் மொறு மொறுப்பான வெங்காய போண்டாவை சுலபமாக எப்படி செய்வது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.</p><h2>தேவையான பொருட்கள்</h2><p>
பெரிய வெங்காயம் – 4
</p><p>பச்சை மிளகாய் – 2
</p><p>அரிசி மாவு – ¼ கப்
</p><p>கடலை மாவு – ½ கப்</p><p>மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
</p><p>பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
</p><p>கறிவேப்பிலை – 1 கொத்து</p><p>
கொத்தமல்லி இலை – சிறிதளவு
</p><p>உப்பு – தேவையான அளவு</p><p>
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21ba86b6-840f-4dab-8b8f-cfd120a06d89/26-6a9e4c8e25e4a.webp' /></p><h2>
செய்முறை
</h2><p>முதலில் பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலையை சேர்க்கவும்.
</p><p>
இதனுடன் மிளகாய்த்தூள் சேர்த்து, தண்ணீர் ஊற்றாமல் நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். வெங்காயத்தில் இருந்தே சிறிது தண்ணீர் வெளியேறும் என்பதால், இந்த நிலையில் தண்ணீர் சேர்க்க தேவையில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbf9bed1-7cb0-46c0-b725-4ef0e161cb0a/26-6a9e4c8eccf87.webp' /></p><p>

பின்னர் அரிசி மாவு, கடலை மாவு, பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.&nbsp;</p><p> மாவு கெட்டியாக இருந்தால் மட்டும் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும். மாவு மிகவும் தளர்வாக இல்லாமல், போண்டா பிடிக்கும் பதத்தில் இருக்க வேண்டும்.</p><p>அதனையடுத்து ஒரு பாத்திரத்தில் போண்டா பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடாக்க வேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e83b2a50-5085-49f2-a815-a400301dedd2/26-6a9e4c8f80937.webp' /></p><p></p><p>எண்ணெய் நன்றாக சூடானதும், தயார் செய்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்துக் கொள்ளுங்கள். உருண்டைகளை அதிகமாக அழுத்தி இறுக்கமாக பிடிக்காமல், லேசாக உருட்டி ஒவ்வொன்றாக சூடான எண்ணெயில் போடவும்.&nbsp;</p><p>அடுப்பை மிதமான தீயில் வைத்து, போண்டாக்களை அவ்வப்போது திருப்பி விட்டு எல்லா பக்கமும் பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் வரும் வரையில்&nbsp; பொரித்தெடுத்தால், அவ்வளவு தான் அசத்தல் சுவையில் மொறுமொறுப்பாக வெங்காய போண்டா தயார்.</p><p>மாலை நேரத்தில் ஒரு கப் சூடான டீ அல்லது காபியுடன் இந்த மொறுமொறுப்பான வெங்காய போண்டாவை பரிமாறினால், செமையான காம்பினேஷனாக இருக்கும்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T06:01:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் உள்ள நாமலுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அனுமதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/special-permission-granted-to-namal-in-prison-1788759646"></link>
            <id>https://ibctamil.com/article/special-permission-granted-to-namal-in-prison-1788759646</id>
            <summary type="text">தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, வீட்டிலிருந்து கொண்டுவரப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த விடயத்தை சிறை ஊடகப் பேச்சாளர் செனக பல்லேதென்ன கூறியுள்ளார்.</p><p>
</p><p>மேலும், நாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைப்பிரிவில் சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சிறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>நாளொன்றுக்கு மூன்று பேர்</h2><p>அத்தோடு நாளொன்றுக்கு மூன்று பேர் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70328116-39a1-41ba-a4e7-6fd403cdaddf/26-6a9e52efeb3ba.webp' /></p><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்சவை, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.</p><p>கொழும்பில் உள்ள மெகசின் சிறைச்சாலையில் தற்போது அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.</p><p>சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களைக் கொள்முதல் செய்வது தொடர்பான ஒரு பரிவர்த்தனையில், ரூ. 100 மில்லியன் இலஞ்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுவது குறித்த விசாரணையின் தொடர்பில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T06:00:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் செய்துள்ள வசூல்.. முழு விவரம் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/hi-movie-10-days-box-office-1788760412"></link>
            <id>https://cineulagam.com/article/hi-movie-10-days-box-office-1788760412</id>
            <summary type="text">காதல் கதைக்களத்தில் உருவாகி கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி வெளியான &#039;ஹாய்&#039; திரைப்படத்தின் 10 நாட்கள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. 

&#039;ஹாய்&#039;

அறிம...</summary>
            <content type="html"><![CDATA[<p>காதல் கதைக்களத்தில் உருவாகி கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி வெளியான 'ஹாய்' திரைப்படத்தின் 10 நாட்கள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.</p><p></p><h2> 

'ஹாய்'
</h2><p>
அறிமுக இயக்குநரும், பிரபல பாடலாசிரியருமான விஷ்ணு எடவன் இயக்கத்தில் காதல் கதைக்களத்தில் உருவான திரைப்படம் 'ஹாய்'. இப்படத்தில் கவின் மற்றும் நயன்தாரா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும், ராதிகா சரத்குமார், பிரபு, மறைந்த நடிகர் பாக்யராஜ் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85c9ca10-9f6a-434d-b89c-bba37b246923/26-6a9e515fee4c9.webp' /></p><p>கவின் நடிப்பில் வெளிவந்த கடந்த சில திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆனால், 'ஹாய்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் நாளுக்கு நாள் கலெக்ஷன் அதிகரித்து வருகிறது.
</p><h2>
பாக்ஸ் ஆபிஸ்
</h2><p>
இந்நிலையில், 10 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் 'ஹாய்' திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 10 நாட்களில் உலகளவில் 'ஹாய்' திரைப்படம் ரூ. 15 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f0283b5-ee9f-4f6a-863e-ebc4e2a25adc/26-6a9e515f3fcb9.webp' /></p>]]></content>
            <updated>2026-09-07T06:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமலுக்கு சிறப்பு அனுமதி! சிறைக்கூடத்திற்கு விசேட பாதுகாப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-is-allowed-to-receive-food-from-home-1788759615"></link>
            <id>https://tamilwin.com/article/namal-is-allowed-to-receive-food-from-home-1788759615</id>
            <summary type="text">
கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின்தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு, வீட்டில் இருந்து உணவைப் பெற்றுக் கொள...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின்தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு, வீட்டில் இருந்து உணவைப் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. </p><p>

அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள, சிறைக் கூடத்திற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள ஊடகப் பேச்சாளர் செனக பல்லதென்ன தெரிவித்துள்ளார்.</p><h2>சந்திப்பதற்கு அனுமதி&nbsp;</h2><p> </p><p>

மேலும், ஒரு நாளில் மூன்று பேர் வரையில் நாமல் ராஜபக்சவை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba668078-6957-4260-94ec-893bde825494/26-6a9e52b3ea9cf.webp' /></p><p> 

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கடந்த 4ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்த நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p> 

இதேவேளை, நாளைய தினம்(08.09.2026) இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் நாமல் ராஜபக்ச கலந்து கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p></p><p></p><p> 


</p>]]></content>
            <updated>2026-09-07T05:59:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பெருவெள்ளம்... நூலிழையில் உயிர் தப்பிய சுவிஸ் பெண்ணின் திகில் அனுபவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-woman-escapes-from-nepal-floods-1788760024"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-woman-escapes-from-nepal-floods-1788760024</id>
            <summary type="text">Swiss woman escapes from Nepal floods: சுவிஸ் நாட்டவரான பெண்ணொருவர், நேபாளப் பெருவெள்ளத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.


சுவிஸ் நாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Swiss woman escapes from Nepal floods: சுவிஸ் நாட்டவரான பெண்ணொருவர், நேபாளப் பெருவெள்ளத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.</p><p>


சுவிஸ் நாட்டவரான நட்டாலியா (Natalia Rjumin-Girardet, 70), வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த எட்டு சுற்றுலாப்பயணிகளுடன் கைலாச மலைக்கு புனித யாத்திரை சென்றிருந்தார்.
</p><h3>
நூலிழையில் உயிர் தப்பிய அனுபவம்</h3><p>

அவர்கள் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து திடீரென வழியில் நிற்க, அவர்களுடைய சமையல்காரர் ஜன்னல் வழியாக வெளியே குதித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0be74078-13b4-4f23-b155-b66e60844c21/26-6a9e4fd975e61.webp' /></p><p>
அனைவரும் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்காக வெளியே எட்டிப் பார்க்க, தொலைவில் ஒரு மலையே பெயர்ந்துவருவதை கவனித்துள்ளார் அவர்.</p><p>

அப்போதுதான் நிலச்சரிவு ஏற்படுகிறது என்பது அவர்களுக்குப் புரிந்துள்ளது.
</p><p>
உடனடியாக உடைமைகளைக் கூட எடுக்காமல், வேகவேகமாக அனைவரும் பேருந்திலிருந்து இறங்கியுள்ளார்கள்.
</p><p>
சரியாக அவர்களுடைய பேருந்து நின்ற இடத்தின் அருகில் படிக்கட்டுகள் இருக்க, படிக்கட்டுகளில் ஏறி உயரமான ஒரு இடத்தை அடைந்துள்ளார்கள் அனைவரும்.&nbsp;</p><p></p><p>

அங்கிருந்து கீழே பார்க்கும்போது, வீடுகளும், கார்களும், ஏன் பேருந்துகளும் கூட அடித்துச் செல்லப்படும் பயங்கர காட்சிகளை கண்ணால் கண்டதை திகிலுடன் விவரிக்கும் நட்டாலியா, தாங்கள் உயிர் தப்பியது கடவுள் அனுக்கிரகம்தான் என்கிறார்.
</p><p>
ஆம், அன்றைய நிலவரப்படி, 1,100 உடல்களை மீட்புக் குழுக்கள் மீட்டிருந்தன, மேலும் 4,500 பேர் வரை மாயமாகியிருந்தார்கள்.
</p><p>
மலை உச்சியிலிருந்த சேமிப்புக் கிடங்கொன்றில், மழை, குளிருக்கு நடுவே அனைவரும் இரவைக் கழிக்க, மறுநாள் காலை ராணுவம் ஹெலிகொப்டர் ஒன்றின் உதவியுடன் அவர்களை மீட்டு காட்மாண்டுவுக்குக் கொண்டு சென்றுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47fb8d94-fe2e-4f79-804b-3e60f1069b13/26-6a9e4fda287d4.webp' /></p><p>
நட்டாலியா தனது மொபைலை பேருந்திலேயே தவறவிட்டிருந்ததால், வேறொரு பெண்ணிடம் தனது சகோதரியின் மொபைல் எண் இருக்க, அவரது மொபைல் உதவியுடன் தன் குடும்பத்தைத் தொடர்பு கொண்டு, தான் பாதுகாப்பாக இருப்பதை தெரியப்படுத்த அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.</p><p>

ஆகத்து மாதம் 26ஆம் திகதியை மறக்கமுடியாது, அது நான் மறுஜென்மம் எடுத்த நாள் என்கிறார் நட்டாலியா!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T05:47:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எவரெஸ்ட்டில் பனிப்பாறைகள் உருக மனித சிறுநீரும் காரணம்; ஆய்வில் அதிர்ச்சித்தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/human-urine-melting-glaciers-on-everest-1788760095"></link>
            <id>https://canadamirror.com/article/human-urine-melting-glaciers-on-everest-1788760095</id>
            <summary type="text">&amp;nbsp; எவரெஸ்ட்டில் உள்ள பனிப்பாறைகள் உருக மனித சிறுநீரும் ஒரு காரணம் என நேபாளம் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் செய்த ஆய்வில் தெரியவந்துள்ளமை அதிர்ச்சிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; எவரெஸ்ட்டில் உள்ள பனிப்பாறைகள் உருக மனித சிறுநீரும் ஒரு காரணம் என நேபாளம் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் செய்த ஆய்வில் தெரியவந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
உலகில் அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக பனிப்பாறைகள் உருகுவதாவும், அதன் மூலம் கடல் மட்டம் உயர்ந்து பல நாடுகள் மூழ்கும் வாய்ப்பிருப்பதாக&nbsp; &nbsp;ஆய்வாளர்கள் எச்சரித்து வருகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f992e70e-f247-4935-9cb5-6cb69f44cdee/26-6a9e5024d8195.webp' /></p><h2>&nbsp;தினமும் சராசரியாக 6 ஆயிரம் லிட்டர் சிறுநீர்</h2><p> சமீபத்தில் கூட கடல் மட்டம் உயர்வதால் மும்பை கொல்கத்தா போன்ற நகரங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படும்.. இரண்டு லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என ஒரு ஆய்வில் தெரிய வந்தது.
</p><p>
அதாவது மெல்லின போன்ற காரணங்களால் வெப்பம் அதிகரித்து பனிப்பாறை வருவதால் கடல் மட்டம் உயர்கிறது அப்படி கடல் மட்டம் உயரும்போது அந்த அதிலிருந்து வெளியேறும் போது நகரங்களில் வசிக்கும் மக்களை பாதிக்கும் என சொல்லப்படுகிறது.</p><p>&nbsp;னிப்பாறை உருகி அதிலிருந்து வெளியேறிய வெள்ளத்தால் நேபாளத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போனவர்கள். 200க்கும் மேற்பட்ட இந்தியர்களை காணவில்லை.
</p><p>
எவரெஸ்ட் அடிவாரம் முகாமில் தங்கும் ஆயிரக்கணக்கான மலையேற்ற வீரர்களும்,வழிகாட்டிகளும் தினமும் சராசரியாக 6 ஆயிரம் லிட்டர் சிறுநீரை பனியில் கழிக்கின்றனர்.</p><p> இதனால் ஒரு சீசனில் மட்டும் தோராயமாக 154 டன் பனிப்பாறைகள் உருகுவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் செய்த ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது.</p>]]></content>
            <updated>2026-09-07T05:45:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக வலைத்தளங்களில் பரவும் குற்றச்சாட்டு - விளையாட்டுத்துறை அமைச்சர் மறுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sports-minister-denies-spreading-allegations-1788757688"></link>
            <id>https://tamilwin.com/article/sports-minister-denies-spreading-allegations-1788757688</id>
            <summary type="text">தனக்கு பாதணிகளோ அல்லது ஈட்டியோ இல்லை என்றும் போதிய ஆதரவு கிடைக்கவில்லை
என்றும் தடகள வீரர் ஒருவர் கூறிய குற்றச்சாட்டுகளை விளையாட்டுத்துறை அமைச்சர்
சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனக்கு பாதணிகளோ அல்லது ஈட்டியோ இல்லை என்றும் போதிய ஆதரவு கிடைக்கவில்லை
என்றும் தடகள வீரர் ஒருவர் கூறிய குற்றச்சாட்டுகளை விளையாட்டுத்துறை அமைச்சர்
சுனில் குமார கமகே முற்றாக நிராகரித்துள்ளார்.
</p><p>
குறித்த வீரர் ஏற்கனவே தேசிய அணியில் சேர்க்கப்பட்டு, அவருக்கு தேவையான
அனைத்து விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.</p><h2>அரசாங்கத்தின் உதவி</h2><p>
</p><p>
இதேவேளை 'மிஷன் ஒலிம்பிக் 2028' திட்டத்தின் கீழ் தடகள வீரர்களுக்கு மாதம் ரூ.
110, 000 முதல் ரூ. 210, 000 வரை நிதி உதவித்தொகை வழங்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3807664d-42a1-4016-9602-0fdfdb9f4b6c/26-6a9e4d1c32b7a.webp' /></p><p>
</p><p>
மேலும் சுமார் 370 வீரர்களுக்கு மாதம் ரூ. 60000 ஊட்டச்சத்து உதவித்தொகையும்,
1,500 பாடசாலை மாணவர்களுக்கு மாதம் ரூ. 10,000 உதவித்தொகையும் அரசாங்கத்தால்
வழங்கப்பட்டு வருகின்றது.
</p><p>
இந்த நிலையில் அரசாங்கத்தின் உதவியைப் பெற்றுக்கொண்டு இதுபோன்ற தவறான தகவல்களை
சமூக வலைத்தளங்களிலோ அல்லது ஊடகங்களிலோ பரப்புவது உண்மைக்கு புறம்பானது என
அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T05:35:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென பிக்பாஸ் 10வது சீசனில் என்ட்ரி கொடுத்துள்ள சன் டிவி சீரியல் நடிகை... யார் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sun-tv-serial-actress-entry-in-bigg-boss-10-1788752610"></link>
            <id>https://cineulagam.com/article/sun-tv-serial-actress-entry-in-bigg-boss-10-1788752610</id>
            <summary type="text">பிக்பாஸ் 10தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த அந்த நாளும் வந்துவிட்டது, நிகழ்ச்சியும் பிரம்மாண்டமாக தொடங்கிவிட்டது. கடந்த 7 ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிக்பாஸ் 10</h2><p>தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த அந்த நாளும் வந்துவிட்டது, நிகழ்ச்சியும் பிரம்மாண்டமாக தொடங்கிவிட்டது. </p><p>கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க 8வது சீசன் முதல் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்று (செப்டம்பர் 6) படு மாஸாக பிக்பாஸ் 10வது சீசன் தொடங்கப்பட்டது. </p><p>புதிய கண்டிஷன்கள், எதிர்ப்பாராத திருப்பங்கள், அனல் பறக்கும் மோதல்களோடு இந்த 10வது சீசன் இருக்கும் என்பது நன்றாக தெரிகிறது.
நிகழ்ச்சியில் ரசிகர்கள் அன்றாட வாழ்க்கையில் ரசித்து பார்த்த சீரியல்களின் பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5529cad-9a59-48ed-8906-1a3a58e6699a/26-6a9e41ad18b22.webp' /></p><h2>சீரியல் நடிகை
</h2><p>பிக்பாஸ் 10 தமிழில் அதிகம் விஜய் டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர்கள் உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/214a2662-8361-47fd-9b92-0301c52cb28b/26-6a9e41ab70727.webp' /></p><p> </p><p>தற்போது சன் டிவி சீரியல் நடிகை ஒருவரின் பிக்பாஸ் என்ட்ரி குறித்த தகவலும் வந்துள்ளது.</p><p> </p><p>அதாவது விரைவில் சன் தொலைக்காட்சியில் வரவுள்ள பராசக்தி சீரியலில் டெப்ஜானி மோடக் நாயகியாக கமிட்டாகி நடித்து வந்தார், ஆனால் சீரியல் இன்னும் ஒளிபரப்பாக துவங்கவில்லை. </p><p>இந்த நிலையில் நடிகை டெப்ஜானி மோடக் தெலுங்கு பிக்பாஸ் 10வது சீசனில் என்ட்ரி கொடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fca1d2a-5a5b-4b10-bbec-8a64d458bfec/26-6a9e41ac4f356.webp' /></p>]]></content>
            <updated>2026-09-07T05:30:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் வாடும் தன் மகனை சந்திக்கச் சென்ற ஷிரந்தி ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shirandhi-rajapaksa-visited-namal-welikada-prison-1788758010"></link>
            <id>https://tamilwin.com/article/shirandhi-rajapaksa-visited-namal-welikada-prison-1788758010</id>
            <summary type="text">விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் நலம் விசாரிப்பதற்காக, அவரது தாயார் ஷிரந்தி ராஜபக்ச சிறை வளாகத்திற்கு சென்றுள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் நலம் விசாரிப்பதற்காக, அவரது தாயார் ஷிரந்தி ராஜபக்ச சிறை வளாகத்திற்கு சென்றுள்ளார்.&nbsp;</p><p>கடந்த 4ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிய&nbsp;நாமல் ராஜபக்ச, விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டார்.&nbsp;</p><h2>நலம் விசாரிப்பு&nbsp;</h2><p>இதனை தொடர்ந்து, கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட நிலையில், அவரை 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77cc5796-859f-45f9-a7af-e8a3bfcb8404/26-6a9e4b762d75b.webp' /></p><p>இதற்கமைய, அவர் வெலிக்கடை சிறைச்சாலையில் அதிதீவிர பாதுகாப்பு கொண்ட விசேட அறையில் காவலில் வைக்கப்பட்டார்.&nbsp;</p><p>இந்நிலையில், நேற்று முன்தினம், தனது மகனை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த சிறைச்சாலைக்கு சென்றிருந்த வேளை, இன்று நாமலின் தாயான&nbsp;ஷிரந்தி ராஜபக்ச அவரை சந்தித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T05:30:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலைகளுக்குள் அதிகரித்துள்ள போதைப்பொருள் பரவல்! அரசாங்கத்தின் விசேட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/increased-drug-use-within-schools-1788758553"></link>
            <id>https://ibctamil.com/article/increased-drug-use-within-schools-1788758553</id>
            <summary type="text">போதைப்பொருள் பாவனைகள் மற்றும், அதன் விநியோகம், கொழும்பு உள்ளிட்ட நகர்புர பாடசாலைகளுக்கு மட்டுமல்லாமல், கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் பரவியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் பாவனைகள் மற்றும், அதன் விநியோகம், கொழும்பு உள்ளிட்ட நகர்புர பாடசாலைகளுக்கு மட்டுமல்லாமல், கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் பரவியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜேபால குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதன்படி எதிர்வரும் காலங்களில் பாடசாலைகளில், போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்காக ஒரு சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p>குருநாகலில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அமைச்சர் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.</p><p></p><h2>சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள்</h2><p>அத்தோடு, தற்போது சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் சுமார் 70% பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6cd42f3-ba12-4c5b-ae1a-69a6ed77e68f/26-6a9e4b982c909.webp' /></p><p>இதுபோன்ற போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சுமார் 40,000 கைதிகள் தற்போது சிறையில் உள்ளனர் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T05:29:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடந்த 8 மாதங்களில் வீதி விபத்துகளில் 1600 இற்கும் மேற்பட்டோர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/1600-people-died-in-road-accidents-last-8-months-1788757607"></link>
            <id>https://tamilwin.com/article/1600-people-died-in-road-accidents-last-8-months-1788757607</id>
            <summary type="text">டெங்கு நோயைக் காட்டிலும் வீதி விபத்துகளால் நாட்டில் ஏற்படும்
உயிரிழப்புகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது என்று மருத்துவ மற்றும்
சிவில் உரிமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>டெங்கு நோயைக் காட்டிலும் வீதி விபத்துகளால் நாட்டில் ஏற்படும்
உயிரிழப்புகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது என்று மருத்துவ மற்றும்
சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர்,
விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.</p><p>

ஊடகங்களுக்கு நேற்று(06.09.2026) கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.
</p><h2>குடும்பத்தின் முதன்மை வாழ்வாதாரம்</h2><p>மேலும் தெரிவிக்கையில்,

"கடந்த எட்டு மாதங்களில் டெங்கு நோயினால் நாட்டில் சுமார் 60 உயிரிழப்புகள்
மட்டுமே பதிவாகியுள்ள நிலையில், அதே காலப்பகுதியில் வீதி விபத்துகள் காரணமாக
1,600 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2f41347-9866-4ab9-b2f3-43c611d91b57/26-6a9e4a2cc5e20.webp' /></p><p>இது டெங்கு உயிரிழப்புகளை விட
சுமார் 30 மடங்கு அதிகமாகும். மேலும், சராசரியாகத் தினமும் 4 முதல் 5 பேர் வரை
வீதி விபத்துகளில் உயிரிழக்கின்றனர்.&nbsp;</p><p>இந்த விபத்துகளில் உயிரிழப்போரில் பெரும்பாலானோர் நாட்டின் பொருளாதாரத்துக்கு
நேரடியாகப் பங்களிக்கும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த நடுத்தர மற்றும்
கிராமப்புற மக்களாவர்.</p><p> குறிப்பாக முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், உழவு
இயந்திரங்கள் மற்றும் சைக்கிள்களைப் பயன்படுத்துவோரே அதிகளவில்
பாதிப்புக்குள்ளாகின்றனர்.
</p><p>
குடும்பத்தின் முதன்மை வாழ்வாதாரமாக இருக்கும் தந்தை அல்லது சகோதரன்
உயிரிழக்கின்றமையால், அந்தக் குடும்பங்களின் வாழ்வாதாரமும் குழந்தைகளின்
கல்வியும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றது.
</p><p>
</p><h2>பெருமளவிலான நிதியைச் செலவிட</h2><p>உயிரிழப்புகள் தவிர்த்து விபத்துகளால் நிரந்தர அல்லது தற்காலிக
ஊனத்துக்குள்ளாவோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.
இவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்கு அரசு பெருமளவிலான
நிதியைச் செலவிட வேண்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/352bfbd9-cf98-4e50-92e9-62e83f420fdb/26-6a9e4a2daf61f.webp' /></p><p>தனியார் பேருந்துகளுக்கு இடையே நிலவும் கடுமையான போட்டி, சாரதிகளின் வீதி
ஒழுக்கமின்மை, கவனக்குறைவாகத் திடீரெனத் திரும்பிடும் 'யூ டர்ன்'
செயற்பாடுகள், பாதைகளில் வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளியைப் பேணாமை
மற்றும் முறையான பயிற்சியின்மை ஆகியவையே இத்தகைய விபத்துகளுக்கு முதன்மை
காரணமாக அமைகின்றன.
</p><p>
எனவே, சுகாதார அமைச்சு, பொலிஸ் திணைக்களம் மற்றும் போக்குவரத்து
ஒழுங்குபடுத்தல் அதிகார சபைகள் இணைந்து கூட்டுத் திட்டமொன்றை உடனடியாக
நடைமுறைப்படுத்த வேண்டும்" என்றும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T05:27:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விபத்தில் சிக்கிய இளைஞர்களிடம் போதைப்பொருள்; ஷாக்கான பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/narcotics-found-on-road-accident-victims-1788758965"></link>
            <id>https://jvpnews.com/article/narcotics-found-on-road-accident-victims-1788758965</id>
            <summary type="text">கொட்டதெனியாவை, தொரொவ்வ பகுதியில் பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொட்டதெனியாவை, தொரொவ்வ பகுதியில் பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p>

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவரும், பின்னால் அமர்ந்து பயணித்தவரும் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56f35bed-4030-493e-bea9-63cf5154154b/26-6a9e4bb692a63.webp' /></p><p>
</p><p>
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்தவர்களின் பயணப் பைகளைச் சோதனையிட்ட போது, அதிலிருந்து 350 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது</p><p>.

கைது செய்யப்பட்டவர்கள் கிராண்ட்பாஸ் மற்றும் வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 21 மற்றும் 25 வயதுடைய இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
இந்த சந்தேகநபர்கள் இருவரும் பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் மேலதிக சிகிச்சைகளுக்காகக் குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


மேலும், இச் சம்பவம் தொடர்பில் கொட்டதெனியாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்</p>]]></content>
            <updated>2026-09-07T05:26:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசிடம் சிக்கியுள்ள ராஜபக்சர்களின் மறைக்கப்பட்ட இரகசியங்கள் - கலக்கத்தில் மகிந்த குடும்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nimal-perera-have-rajapaksa-family-secrets-1788745345"></link>
            <id>https://tamilwin.com/article/nimal-perera-have-rajapaksa-family-secrets-1788745345</id>
            <summary type="text">சமகால அரசாங்கத்தின் சார்பான நபராக கோடிஸ்வர வர்த்தகர் நிமல் பெரேரா மாறியுள்ளமை ராஜபக்ச குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமகால அரசாங்கத்தின் சார்பான நபராக கோடிஸ்வர வர்த்தகர் நிமல் பெரேரா மாறியுள்ளமை ராஜபக்ச குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. </p><p>

ராஜபக்சர்கள் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் நன்கு அறிந்த நபர்களில் ஒருவராக நிமல் பெரேரா உள்ளமையே இதற்கு காரணமாகும். </p><p>

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்வதற்கு முக்கிய காரணமாக நிமல் பெரேரா வழங்கிய சாட்சியமே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> </p><h2><b>

அநுர அரசாங்கத்திடம் வாக்குமூலம்</b></h2><p>இந்நிலையில் ராஜபக்சர்கள் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் அநுர அரசாங்கத்திடம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1661bc46-a360-48fd-968b-5b625e6a7a50/26-6a9e20793047c.webp' /></p><p>ஒரு காலத்தில் ராஜபக்ச குடும்பத்தின் மிக நெருங்கிய நண்பராகவும் அவர்களது அனைத்து நிதி நடவடிக்கைகளையும் கையாண்டவராக நிமல் பெரேரா உள்ளார்.
</p><p>
நிமல் பெரேரா என்பவர் ராஜபக்சர்களின் அனைத்து இருண்ட இரகசியங்கள், மறைக்கப்பட்ட கணக்குகள் மற்றும் நிதிப் பரிமாற்றங்கள் குறித்து அனைத்தையும் அறிந்த தனித்துவமான நபராகும்.</p><p> 

அவர் தற்போது அவுஸ்திரேலியாவின் தீவிர பாதுகாப்பின் மத்தியில வசித்து வருவதுடன், நாமலுக்கு எதிராக தீர்க்கமான 2 சாட்சிகளையும் நீதிமன்றத்திற்கு வழங்க ஒப்புக்கொண்டுள்ளார். </p><p>

நிமல் பெரேராவின் இந்தத் தீர்க்கமான நடவடிக்கையுடன் அவரைக் எப்படியாவது மௌனிக்க செய்ய சர்வதேச நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> </p><h3><b>

 சர்வதேச நடவடிக்கை</b></h3><p>நாமல் ராஜபக்சவின் மற்றுமொரு மிக நெருங்கிய நண்பரான தற்போது மெல்பர்னில் வசிக்கும் பிரசித்தி பெற்ற சட்டத்தரணியாக செயற்படும் இந்திக கருணாஜீவ ஊடாக நிமல் பெரேராவுக்கு கடுமையான அழுத்தங்களைக் பிரயோகிக்க முயன்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d13922e2-2fb4-4ed6-9b95-f9d9a4190f03/26-6a9e2358c3d14.webp' /></p><p>ராஜபக்சர்களுக்கு எதிராக எந்தவொரு சாட்சியத்தையும் வழங்க வேண்டாம் என வேண்டிக்கொண்டு நிமல் பெரேராவுக்கு தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் பல அனுப்பப்பட்டுள்ளது.</p><p> 

இந்த நிலையில் நிமல் பெரேராவிடம் இருந்து நீண்ட வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உயர் மட்ட விசேட அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று அவுஸ்திரேலியா சென்றுள்ளதாக தெரிய வருகிறது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T05:26:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு : திருப்பிவிடப்பட்ட சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indonesia-volcanic-srilankan-airlines-flights-1788755879"></link>
            <id>https://ibctamil.com/article/indonesia-volcanic-srilankan-airlines-flights-1788755879</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்பர்ன் நகரங்களில் இருந்து நேற்று (06) இரவு இலங்கை நோக்கிப் புறப்படவிருந்த இரண்டு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் வானூர்திகள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்பர்ன் நகரங்களில் இருந்து நேற்று (06) இரவு இலங்கை நோக்கிப் புறப்படவிருந்த இரண்டு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் வானூர்திகள் மாற்றுப் பாதைகளில் திருப்பிவிடப்பட்டுள்ளன.</p><p>இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள அனக் க்ரக்கடோவா (Anak Krakatau) எரிமலை வெடிப்பு மற்றும் சாம்பல் வெளியேற்றம் காரணமாக குறித்த விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

ஜாவா மற்றும் சுமாத்திரா தீவுகளுக்கு இடையே அமைந்துள்ள அனக் கரக்கடோவா எரிமலை நேற்று தீவிரமாகச் சீற்றமடையத் தொடங்கியுள்ளது.</p><p></p><h2>தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள சேவைகள்&nbsp;&nbsp;</h2><p>இதன் காரணமாகத் தலைநகர் ஜகார்தாவின் சுகர்ணோ-ஹாட்டா சர்வதேச விமான நிலையம் உட்படப் பல விமான நிலையங்களின் சேவைகளை இந்தோனேசிய அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0f87f62-78c5-4143-af0e-b0069cddf1ff/26-6a9e49c405f9b.webp' /></p><p>
</p><p>
எரிமலையிலிருந்து வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளுக்குப் பரவியுள்ள சிலிக்கா துகள்கள் அடங்கிய சாம்பல் மற்றும் பாறைத் துகள்கள், விமானங்களின் இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனையடுத்து, எரிமலைக்கு மேற்கே உள்ள வான்பரப்பு மற்றும் இலங்கைக்குத் தெற்கே உள்ள வான்வெளி உள்ளிட்ட விரிவான பகுதிகளினூடான விமானப் பயணங்களுக்கு இந்தோனேசிய வான் போக்குவரத்து அதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
</p><p>
இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக, அவுஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் இலங்கைக்கு இடையே சேவைகளை முன்னெடுக்கும் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் விமான நிறுவனங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தங்களின் பயணப் பாதைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T05:26:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் மாயமான 5,000 பேர் தொடர்பில் தகவல் இல்லை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/no-information-5-000-people-missing-in-nepal-flood-1788758335"></link>
            <id>https://canadamirror.com/article/no-information-5-000-people-missing-in-nepal-flood-1788758335</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக 11 நாட்கள் கடந்துள்ள நிலையில், சுமார் 5,000 பேரின் நிலைமை குறித்து இதுவரை தகவல் கிடைக்கவில்லை. அவர்களைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக 11 நாட்கள் கடந்துள்ள நிலையில், சுமார் 5,000 பேரின் நிலைமை குறித்து இதுவரை தகவல் கிடைக்கவில்லை. </p><p>அவர்களைத் தேடும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.



கடந்த மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட பெருவெள்ளத்தால் ரசுவா, நுவாகோட், சித்வன் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70564e68-4906-4efc-8574-ee4aaea3b781/26-6a9e4940ee848.webp' /></p><h2>இதுவரை 1,344 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது</h2><p> இதுவரை 1,344 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவர்களில் சுமார் 600 பேர் வெளிநாட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 275 பேர் இந்தியர்களாவார்.
</p><p>


நேபாள இராணுவத்தினர் உள்ளிட்ட 20,000-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சேதமடைந்த நீர்மின் நிலையங்களின் சுரங்கப் பாதைகளிலும் இந்திய நிபுணர்களின் உதவியுடன் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.</p><p>



மீட்கப்பட்ட உடல்களில் 500-க்கும் மேற்பட்டவை உருக்குலைந்த நிலையில் காணப்படுவதால், அவற்றை அடையாளம் காண்பதில் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. இதுவரை 98 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. </p><p>காணாமல் போனவர்களின் உறவினர்களிடமிருந்து மரபணு பரிசோதனைக்கான மாதிரிகளை நேபாள பொலிஸ் சேகரித்து வருகிறது.



இதனிடையே, பெருவெள்ளத்தால் 3 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிவாரண முகாம்களில் போதிய வசதிகள் இல்லாததால் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள் உள்ளிட்டோர் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
</p><p>


மேலும், திபெத் பகுதியில் பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளதுடன், 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் நம்ரங் கோலா ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 4 வீடுகளும் ஒரு தொங்கு பாலமும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இரண்டு சிறிய நீர்மின் நிலையங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது</p>]]></content>
            <updated>2026-09-07T05:15:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[வங்காளதேசத்தை தனியாளாக நொறுக்கிய ஹர்ஷிதா: இலங்கை அணி அபார வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/women-sri-lanka-won-by-4-wickets-asia-cup-2026-1788757813"></link>
            <id>https://news.lankasri.com/article/women-sri-lanka-won-by-4-wickets-asia-cup-2026-1788757813</id>
            <summary type="text">Women sri lanka beat bangladesh by 4 wickets: மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில், இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது....</summary>
            <content type="html"><![CDATA[<p>Women sri lanka beat bangladesh by 4 wickets: மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில், இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது.
</p><p>
துபாயில் நடந்த மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில், வங்காளதேசத்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியது.&nbsp;</p><h2>மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டி&nbsp;</h2><p>

இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டி துபாயில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d237fc9a-5035-414d-a09c-bf31e2dbbc8a/26-6a9e48c060f79.webp' /></p><p></p><p>
 முதலில் துடுப்பாடிய வங்காளதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ஓட்டங்கள் எடுத்தது.
</p><p>
அதிகபட்சமாக சோபனா 34 ஓட்டங்களும், திலரா அக்தர் 26 ஓட்டங்களும் எடுத்தனர். சாமுடி பிரபோதா 3 விக்கெட்டுகளும், சுகந்திகா குமாரி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8761be5-c584-4a44-a67c-b41f8f7f7ca0/26-6a9e48bedb3ea.webp' />&nbsp;</p><h2>ஹர்ஷிதா&nbsp;ஆட்டநாயகி </h2><p>
பின்னர் ஆடிய இலங்கை அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், ஹர்ஷிதா சமரவிக்ரமா (Harshitha Samarawickrama) அதிரடியாக ஆடி 37 பந்துகளில் 48 ஓட்டங்கள் (2 சிக்ஸர், 4 பவுண்டரிகள்) விளாசினார்.</p><p>

இதன்மூலம் இலங்கை அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.&nbsp;</p><p>ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்த ஹர்ஷிதா ஆட்டநாயகி விருது பெற்றார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fd8c98a-e625-478b-a876-5b3b4d27340e/26-6a9e4e9771e28.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa111f5f-d895-4d7b-b060-94ac15dccf2f/26-6a9e4e967e984.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aee6a676-4929-4eab-b33a-476a9be6af5d/26-6a9e48bfaa774.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T05:13:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகன விபத்து: காவல்துறை விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/luxury-car-accident-on-the-southern-expressway-1788756812"></link>
            <id>https://ibctamil.com/article/luxury-car-accident-on-the-southern-expressway-1788756812</id>
            <summary type="text">தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்த சொகுசு காரொன்று வீதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்த சொகுசு காரொன்று வீதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. </p><p>இந்த விபத்து இன்று (07.09.2026) காலை தொடங்கொட 32.4 கிலோமீட்டர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. </p><p>

விபத்தில் காரில் பயணித்த பெண் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><h2>நெடுஞ்சாலை சாலை விபத்து</h2><p> </p><p>

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று மீண்டும் மாத்தறை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது, பராமரிப்புப் பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த வீதித் தடுப்புகளில் மோதி, தொடர்ந்து முன்னோக்கிச் சென்று வீதியின் நடுவிலிருந்த பாதுகாப்பு வேலியுடன் மோதி இந்த விபத்து நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c13abc4-e5c1-4e03-9cb9-75fd245921a7/26-6a9e469a321bb.webp' /></p><p> </p><p>

விபத்தினால் அதிவேக நெடுஞ்சாலையின் நடுவிலுள்ள பாதுகாப்பு வேலிக்கும் வீதித் தடுப்புகளுக்கும் மற்றும் காரிற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. </p><p>

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T05:08:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-to-seize-british-company-1788757646"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-to-seize-british-company-1788757646</id>
            <summary type="text">Ukraine seeks to seize water company owned by British billionaire: பிரித்தானிய கோடீஸ்வரருக்குச் சொந்தமான குடிநீர் நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் முயல்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ukraine seeks to seize water company owned by British billionaire: பிரித்தானிய கோடீஸ்வரருக்குச் சொந்தமான குடிநீர் நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் முயல்கிறது.
</p><p>ரஷ்ய பெரும் கோடீஸ்வரர் ஒருவருடன் இணைந்து தாங்கள் சொந்தமாக வைத்திருக்கும் தண்ணீர் நிறுவனத்தைக் கைப்பற்ற முயலும் உக்ரேனிய அதிகாரிகளுடன், பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பம் கடுமையானப் போராட்டத்தில் சிக்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/830d0ff0-6dda-498d-9c75-5566c30d3865/26-6a9e4690e288a.webp' /></p><p>
</p><p>உக்ரைனின் மிகப்பெரிய போத்தல் குடிநீர் பிராண்டுகளைத் தயாரிக்கும் நிறுவனத்தில் படார்கட்சிஷ்விலி குடும்பத்தினர் (டோபி ஜோன்ஸ் மற்றும் மீரா சியால் ஆகியோருடன் இணைந்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பணியாற்றிய லியானா படார்கட்சிஷ்விலி உட்பட) வைத்துள்ள 34 சதவீத பங்குகள் குறித்த விவகாரமே இந்த மோதலுக்கு மையமாக உள்ளது. </p><p>ரஷ்யாவின் ஆல்ஃபா குழுமப் பெருநிறுவனத்தின் நிறுவனர் மிக்கைல் ஃபிரிட்மேன் உட்பட, ரஷ்ய முதலீட்டாளர்கள் IDS உக்ரைன் நிறுவனத்தில் 49 சதவீதப் பங்குகளை வைத்திருப்பதால், 2022-ஆம் ஆண்டில் உக்ரைனிய அதிகாரிகள் அந்நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கினர். </p><p>விளாடிமிர் புடினின் ஆட்சிக்கு ஆதரவளித்ததற்காக அவர் மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இந்த நிலையில், ஜார்ஜிய அரசாங்கத்தையும் மற்ற சிறுபான்மைப் பங்குதாரர்களாகக் கொண்ட அந்த நிறுவனத்தின் நிர்வாகத்தைப் பொறுப்பேற்குமாறு ஒரு சுதந்திரமான நிர்வாகத்திற்கு அறிவுறுத்தும் பணி, உக்ரைனின் சொத்து மீட்பு மற்றும் மேலாண்மை முகமையான (ஆர்மா) இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>உக்ரேனிய ஆர்மா அமைப்பின் தலைவரான யாரோஸ்லாவா மக்ஸிமென்கோ, தங்கள் சொத்துகளின் மீதான கட்டுப்பாட்டைக் கைவிடப் பங்குதாரர்கள் காட்டிய எதிர்ப்பு உள்ளிட்ட காரணங்களால், தாங்கள் தொடர்ந்து சட்டரீதியான மற்றும் நிர்வாக ரீதியான தடைகளைச் சந்திக்க நேர்ந்ததாகக் கூறினார். </p><p>மேலும், நிறுவனத்திற்கு ஒரு சுயாதீன மேலாளரைத் தேடும் முயற்சியின்போது தாங்கள் இணையவழித் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் அந்த முகமை மேலும் கூறுகிறது; இருப்பினும், இதற்கு யார் காரணம் என்பது குறித்த எந்த ஆதாரமும் இல்லை, மட்டுமின்றி படார்கட்சிஷ்விலி குடும்பத்தினர் மீது இதில் சந்தேகம் ஏதுமில்லை. </p><p>இருப்பினும், ஐடிஎஸ் உக்ரைனில் படார்காட்சிஷ்விலியின் முதலீட்டிற்கான நிறுவனமான நியூ வேர்ல்ட் வேல்யூ ஃபண்ட் லிமிடெட், ஆர்மாவின் அதிகாரிகள் மீது ஆதாரமற்ற ஒரு சட்டவிரோத நடத்தை குற்றச்சாட்டை முன்வைத்ததாகவும், அது தவறான தகவல் என்றும் மாக்சிமென்கோ கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01ce829d-1c09-486c-b870-a8232c06f989/26-6a9e46919aa84.webp' /></p><p> </p><p>அத்தகைய குற்றச்செயல்கள் குறித்து எந்த அதிகாரப்பூர்வ கண்டுபிடிப்புகளும் இல்லை என்றாலும், ஐடிஎஸ் உக்ரைன் நிறுவனம் தற்போதைய நிர்வாகத்தின் கீழ் தொடர்ந்தால், பணமோசடி மற்றும் மதிப்பு சுரண்டல் ஆகியவை நடைபெறக்கூடும் என்று தனது முகமைக்கு கவலைகள் இருப்பதாக மாக்சிமென்கோ கூறியுள்ளார். </p><p>உக்ரைனின் ஊழல் தடுப்பு உயர் நீதிமன்றத்தில் தனிப்பட்ட வழக்கு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன; இதில், போர்க்காலத்தில் அரசாங்கத்தின் சில தரப்பினரால் மிக முக்கியமான உத்திசார் சொத்தாகக் கருதப்படும் 'IDS Ukraine' நிறுவனத்தின் உரிமையின் ஒரு பகுதியையோ அல்லது முழுமையையுமோ அரசுடைமையாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை அதன் பங்குதாரர்கள் எதிர்த்துப் போராடி வருகின்றனர். </p><p>இந்த நிலையில், பிப்ரவரி 2022-ல் ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து தாங்கள் உக்ரைனின் உறுதியான ஆதரவாளர்களாக இருந்து வருவதாகப் படார்கட்சிஷ்விலி (Patarkatsishvili) குடும்பத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்; அத்துடன், தங்கள் குடும்பத்தினர் நியாயமற்ற முறையில் குறிவைக்கப்படுவதாகவும், தேவைப்பட்டால் சர்வதேச நீதிமன்றங்களில் நீதி கோரவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d754a3f-e6b5-4c2e-a167-c4553f87078a/26-6a9e46925c5d6.webp' /></p><p> சோவியத் ஒன்றியத்தின் சிதைவின்போது பெரும் செல்வம் ஈட்டிய தொழிலதிபரான பத்ரி படார்கட்சிஷ்விலியின் மறைவுக்குப் பிறகு, 2008-ஆம் ஆண்டில் 'IDS Ukraine' நிறுவனத்தில் அவருக்கு இருந்த பங்குரிமை, அவரது சகோதரி லியானா, மற்றொரு சகோதரி ஐயா மற்றும் தாயார் இன்னா ஆகியோருக்குச் சொந்தமானது. </p><p>இதனிடையே, IDS Ukraine-இன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கையில், IDS Ukraine குழும நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகள் முழுவதும், வரி மற்றும் நிதிச் சட்டங்கள் உள்ளிட்ட உக்ரேனியச் சட்டங்களின் தேவைகளுக்கு இணங்கவே செயல்பட்டு வந்துள்ளன; தற்போதும் அவ்வாறே செயல்பட்டு வருகின்றன என்றார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T05:04:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியை விரைந்து வழங்கவே அரசமைப்புத் திருத்தங்கள்! கைதுகள் பழிவாங்கல்கள் அல்ல என்றும் ரில்வின் சில்வா விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rilwin-silva-explains-that-arrests-not-retaliation-1788755348"></link>
            <id>https://tamilwin.com/article/rilwin-silva-explains-that-arrests-not-retaliation-1788755348</id>
            <summary type="text">நாட்டின் நீதித்துறையை வலுப்படுத்தி, பொதுமக்கள் எதிர்நோக்கும் நீதிமன்ற
வழக்குகளின் காலதாமதம் மற்றும் செலவினங்களைக் குறைத்து விரைவான நீதியை
வழங்குவதற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் நீதித்துறையை வலுப்படுத்தி, பொதுமக்கள் எதிர்நோக்கும் நீதிமன்ற
வழக்குகளின் காலதாமதம் மற்றும் செலவினங்களைக் குறைத்து விரைவான நீதியை
வழங்குவதற்காகவே அரசமைப்புத் திருத்தங்களை முன்னெடுக்க அரசு நடவடிக்கை
எடுத்து வருகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின்
சில்வா தெரிவித்தார்.
</p><p>
தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சியைப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள்
பூர்த்தியாகும் நிலையில், 'நமது அரசு: ஈராண்டு ஆட்சி - நாட்டுக்கு மாட்சி'
எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதியின் மக்கள் சந்திப்பின் இரண்டாவது கூட்டம்
நேற்று (06.09.2026) களுத்துறை - பேருவளைப் பிரதேசத்தில் நடைபெற்றது.
</p><p>அக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.</p><h2>அரசமைப்புத் திருத்தங்கள்</h2><p>
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நாட்டின் நீதித்துறையை வலுப்படுத்தவும், பொதுமக்கள் எதிர்நோக்கும்
காலதாமதங்களையும் செலவினங்களையும் தவிர்த்து மிக விரைவாக நீதி வழங்கவுமே
தற்போதைய அரசு அரசமைப்புத் திருத்தங்களைக் கொண்டுவர முயற்சிக்கின்றது. மாறாக,
கடந்த காலத்தில் தங்களது அதிகாரத்தை நீடித்துக்கொள்ளவும், ஜனாதிபதியின்
பதவிக்காலத்தை வரம்பின்றி நீடிக்கவும் 18ஆவது திருத்தத்தைக்
கொண்டுவந்தவர்களும், 20ஆவது திருத்தத்தின் மூலம் அதிகாரங்களை மேலும்
அதிகரித்துக்கொண்டவர்களும்தான் இன்று அரசின் மீது சர்வாதிகார முத்திரை குத்த
முற்படுகின்றனர்.
</p><p>
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில்
நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து அவரைப் பதவியிலிருந்து அநியாயமாக
வெளியேற்றியவர்கள் அன்று ஜனநாயகத்தைப் பற்றிப் பேசவில்லை. ஜனநாயகத்தை மீறி
நீதிபதிகளின் வீடுகளுக்கு முன்னால் சென்று கல்லெறிந்து கூச்சலிட்ட வரலாற்றைக்
கொண்டவர்கள்தான் இன்று ஜனநாயகத்தைப் பற்றிப் பாடம் எடுக்கின்றார்கள். </p><p>தேசிய
மக்கள் சக்தியே உரிமைகளையும் ஜனநாயகத்தையும் துயரங்கள் ஊடாகப் புரிந்துகொண்ட
ஓர் இயக்கம் என்பதால், ஆட்சியாளர்களின் விருப்பமல்லாது பொதுமக்களின்
தேவைகளையும் நிவாரணங்களையுமே ஜனநாயகம் என்று கருதுகின்றோம்.

தற்போது மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள்
யாவும் அரசியல் பழிவாங்கல்கள் அல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/544e991e-1180-48f2-9b73-8af68ea28b5d/26-6a9e44e0a3b9c.webp' /></p><h2>தீர்மானம் நீதிமன்றத்திடமே உள்ளது</h2><p> </p><p>மாறாக, குற்றப் புலனாய்வுத் துறை மற்றும்
இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு போன்ற சுயாதீன நிறுவனங்கள் முறையான
விசாரணைகளை நடத்தி, சாட்சியங்களைச் சேகரித்து நீதிமன்றத்தில்
சமர்ப்பிக்கின்றனவே தவிர, அரசு இதில் எங்குமே தலையிடுவதில்லை.

நீதிமன்றமே சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைப்பதையா அல்லது பிணையில்
விடுவிப்பதையா என்பதைத் தீர்மானிக்கின்றது. </p><p>மாறாக, கடந்த காலத்தில் மஹிந்த
ராஜபக்ஷ தரப்பினர் தங்களது அரசியல் எதிரிகளைச் சட்டரீதியாகக்
கையாள்வதைவிட்டுவிட்டு, லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட போன்ற
ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்தும், கடத்தியும், ஊடக நிறுவனங்களுக்குத் தீ
வைத்ததுமே அவர்களது ஜனநாயகமாகக் இருந்தது. அவ்வாறான வரலாற்றைக் கொண்டவர்கள்
யார் என்பது முழு நாட்டுக்கும் தெரியும்.
</p><p>
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஒரு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்
முடிந்த பின்னரும் எந்தவொரு வன்முறைச் சம்பவமும் மனிதப் படுகொலைகளும் இன்றி
அமைதியான முறையில் தேர்தல் வெற்றிகள் கொண்டாடப்பட்ட பெருமை தேசிய மக்கள்
சக்தியையே சாரும்.

தேர்தல் வெற்றிகளின் போது எவரும் பட்டாசுகளைக் கொளுத்தியோ, வன்முறைகளில்
ஈடுப்பட்டோ எவருக்கும் துன்புறுத்துகளை வழங்கவில்லை.</p><h2>சாதாரண மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு</h2><p> </p><p>மாறாக, எதிர்கால
சந்ததியினருக்கு முன்மாதிரியான ஜனநாயக அரசியல் கலாசாரத்தை இந்த அரசு
நாட்டுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போதைய தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது ஒரு கட்சியின் வெற்றிக்காக
மட்டுமல்ல, பல தசாப்தங்களாகத் தாழ்த்தப்பட்டு, மாற்றத்தை எதிர்நோக்கியிருந்த
சாதாரண மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பின் வெளிப்பாடு இது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d62c758c-0239-45d2-b9a9-cc337a4920e8/26-6a9e44e168c87.webp' /></p><p> எனவே, இந்த அரசு
குறிப்பிட்ட ஓர் அரசியல் இயக்கத்துக்கு மட்டுமே சொந்தமானதல்ல, மாறாக,
இந்நாட்டின் ஒட்டுமொத்த குடிமக்களுக்குமானது.

ஆட்சியைத் தேர்ந்தெடுத்ததோடு வாக்காளர்களின் பங்கு முடிந்துவிடுவதில்லை.
</p><p>வழக்கமான அரசியல் கலாசாரத்தில், மக்கள் வாக்களித்து ஆட்சியாளர்களைத்
தேர்ந்தெடுத்துவிட்டு அமைதியாக இருந்துவிடுவார்கள். குறைகளைச்
சுட்டிக்காட்டுவதோடு தங்களது கடமை முடிந்துவிட்டதாக நினைப்பார்கள். ஆனால்,
அதற்கு மாற்றமாக, நாட்டைப் கட்டமைப்பதில் அரசுக்கு நிகரான சம பங்கு
பொதுமக்களுக்கும் உண்டு. </p><p>திட்டங்களைச் செயற்படுத்தும் பொறுப்பு அரசினுடையது
என்றாலும், அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவது மக்களின் பொறுப்பாகும்.

எனவே, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 'க்ளீன் ஸ்ரீ லங்கா' போன்ற
திட்டங்கள் மற்றும் கிராம மட்ட அபிவிருத்திகள் வெற்றிகரமாக
முன்னெடுக்கப்படுவதற்கு அரசின் பொறிமுறைகளுடன் பொதுமக்களும் முழுமையான
பங்களிப்பை வழங்க வேண்டும். நாட்டைத் தூய்மையாகவும் ஒழுக்கமிக்கதாகவும்
மாற்றுவது அரசின் மாத்திரமன்றி, ஒவ்வொருவரின் கடமையாகும் என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T05:03:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று முதல் பாடசாலைகளின் மூன்றாம் தவணை ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/the-third-school-term-begins-today-1788757517"></link>
            <id>https://jvpnews.com/article/the-third-school-term-begins-today-1788757517</id>
            <summary type="text">&amp;nbsp; அனைத்து அரச மற்றும் அரச அனுசரணையில் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று (08) ஆரம்பமாகவுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அனைத்து அரச மற்றும் அரச அனுசரணையில் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று (08) ஆரம்பமாகவுள்ளன.
</p><p>


இதன்படி, ஆரம்பிக்கப்படும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் டிசம்பர் 04ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவடையவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/734a944a-9af8-4b0f-a312-59d0660cdcd9/26-6a9e460ed0a40.webp' /></p><p>



இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 08ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.



குறித்த பரீட்சை டிசம்பர் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-07T05:02:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கயல் சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு தொடர்... ரசிகர்கள் ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/one-more-serial-coming-to-an-end-in-sun-tv-1788749691"></link>
            <id>https://cineulagam.com/article/one-more-serial-coming-to-an-end-in-sun-tv-1788749691</id>
            <summary type="text">சன் டிவிசீரியல்களின் ராஜாவான சன் டிவியில் நிறைய தொடர்கள் 500, 800, 1000 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.அப்படி கடந்த 2021ம் ஆண்டு அ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சன் டிவி</h2><p>சீரியல்களின் ராஜாவான சன் டிவியில் நிறைய தொடர்கள் 500, 800, 1000 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.</p><p>அப்படி கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் சைத்ரா-சஞ்சீவ் என புதிய ஜோடி இணைய தொடங்கப்பட்ட சீரியல் தான் கயல், அப்பாவை இழந்த பெண் தனது குடும்பத்திற்காக போராடும் கதையாக இந்த தொடரின் கதைக்களம் அமைந்தது.</p><p>இப்போது எழிலை தொலைத்து கஷ்டப்படும் கயல் வீட்டில் அடுத்தடுத்து நிறைய பிரச்சனைகள் வந்துகொண்டிருக்கிறது. இப்போது தேவி தனது குழந்தையை பிரிந்து கஷ்டப்பட்டு வருகிறார், இதற்கு இடையில் விக்னேஷ் தனது மனைவியை புரிந்துகொண்ட நல்ல விஷயமும் நடந்தது.</p><p>அடுத்து சிவசங்கரி ஆட்டம் தொடங்கியுள்ளது, இந்த வாரம் அவர் கயலை பழிவாங்கும் காட்சிகள் இடம்பெறுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fad44995-96ec-4ec0-b048-6a238508a544/26-6a9e277d06df1.webp' /></p><h2>கிளைமேக்ஸ்</h2><p>5 வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் விரைவில் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வந்துள்ளது. இந்த தகவலை கேட்டு கயல் சீரியல் ரசிகர்களே கொஞ்சம் வருத்தத்தில் உள்ளனர்.</p><p>இந்த நிலையில் சன் டிவியில் ஒளிபப்பாகும் மேலும் ஒரு தொடர் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வந்துள்ளது.</p><p>அது என்ன தொடர் என்றால், புது வசந்தம் சீரியல் தானாம், விரைவில் இந்த சீரியலும் கிளைமேக்ஸை எட்ட உள்ளதாம்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Dc5-VPLsz2q/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Dc5-VPLsz2q/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Dc5-VPLsz2q/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by SE (@sun_express___)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-07T05:00:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இருந்து இந்தியா சென்ற 13 பேர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/13-people-arrested-traveling-from-jaffna-to-india-1788757249"></link>
            <id>https://jvpnews.com/article/13-people-arrested-traveling-from-jaffna-to-india-1788757249</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பல் மூலம் இந்தியா சென்ற 13 பேர் மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பல் மூலம் இந்தியா சென்ற 13 பேர் மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.</p><p> 

காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து நாகபட்டினம் துறைமுகத்திற்கு கப்பல் மூலம் சென்றவர்களில் குறித்த 13 பேர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள், அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dd8f59d-7274-4b03-8dbb-36536cd16f40/26-6a9e4502b5637.webp' /></p><h2>&nbsp;13 பேர் மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு ...</h2><p> </p><p>

ஒரு பெண் மற்றும் 12 ஆண்கள் உட்பட 13 பேர் இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து அவர்களை மீண்டும் காங்கேசன்துறைக்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.</p><p></p><p> </p><p>

காங்கேசன்துறைக்கு திரும்பி வந்தவர்களை இலங்கை குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.</p><p>&nbsp; &nbsp; கைதானவர்கள் ஹல்துமுல்ல, மாம்பிட்டிய, கருங்கொடித்தீவு, மதவாச்சி, மொனராகலை, மாவடிச்சேனை, பொத்துவில், பலாங்கொடை, பதுளை மற்றும் திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.</p><p></p><p> 

சந்தேகநபர்கள் 13 பேரிடமும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன், இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T04:57:44+00:00</updated>
        </entry>
    </feed>
