<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-09T01:28:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலைத் தொடர்ந்து யோஷித மற்றும் ரோஹித தீவிர விசாரணை வலையில்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/acquisition-of-tea-estate-by-yoshitha-and-rohitha-1788917275"></link>
            <id>https://tamilwin.com/article/acquisition-of-tea-estate-by-yoshitha-and-rohitha-1788917275</id>
            <summary type="text">&amp;nbsp;முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களான யோஷித ராஜபக்ஷ மற்றும் ரோஹித ராஜபக்ஷ ஆகியோர், மூன்று நபர்களைப் பயன்படுத்தி 135 ஏக்கர் பரப்பளவு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களான யோஷித ராஜபக்ஷ மற்றும் ரோஹித ராஜபக்ஷ ஆகியோர், மூன்று நபர்களைப் பயன்படுத்தி 135 ஏக்கர் பரப்பளவு கொண்ட தேயிலைத் தோட்டமொன்றைச் சொந்தமாக்கிக் கொண்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்பட உள்ளது.
</p><p>குற்றத்தால் ஈட்டப்பட்ட சொத்துக்கள் பற்றிய விசாரணைப் பிரிவு இவ்வாறு தீர்மானித்துள்ளது.</p><p>
'லஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான பிரஜைகள் சக்தி' அமைப்பினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d271e30-98b8-45f8-b3b5-99bb9a3e220c/26-6aa0b61c624a3.webp' /></p><p> </p><p>
அவ்வமைப்பின் தலைவர் காமந்த துஷார என்பவரால் கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இம்முறைப்பாடு குற்றத்தால் ஈட்டப்பட்ட சொத்துக்கள் பற்றிய விசாரணைப் பிரிவின் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.</p><p>
குறித்த முறைப்பாடு தொடர்பில் முறையான விசாரணையை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகக் குற்றத்தால் ஈட்டப்பட்ட சொத்துக்கள் பற்றிய விசாரணைப் பிரிவு முறைப்பாட்டாளருக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.</p><p>
முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து விடயங்களுக்கும் உரிய ஆவணச் சான்றுகளுடன் வாக்குமூலமொன்றைப் பதிவு செய்வதற்காக, எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு பொலிஸ் தலைமையகத்திற்குச் சமூகமளிக்குமாறு முறைப்பாட்டாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T01:28:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருந்தொகை தேயிலைத் தோட்டங்களை சொந்தமாக முயற்சித்த முன்னாள் ஜனாதிபதியின் பிள்ளைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-president-s-sons-in-risk-1788916471"></link>
            <id>https://tamilwin.com/article/former-president-s-sons-in-risk-1788916471</id>
            <summary type="text">தேயிலைத் தோட்டத்தை தமக்கு சொந்தமாக்கிக் கொள்ள நடவடிக்கை எடுத்த முன்னாள் ஜனாதிபதியின் இரண்டு மகன்களுக்கு எதிராக விசாரணையை ஆரம்பிக்க, குற்றப் புலனாய்வு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேயிலைத் தோட்டத்தை தமக்கு சொந்தமாக்கிக் கொள்ள நடவடிக்கை எடுத்த முன்னாள் ஜனாதிபதியின் இரண்டு மகன்களுக்கு எதிராக விசாரணையை ஆரம்பிக்க, குற்றப் புலனாய்வு தீர்மானித்துள்ளது. </p><p>

குறித்த இருவரும் மூன்று வர்த்தகர்களை பயன்படுத்தி 135 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தை சொந்தமாக்கிக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். </p><p>

இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கமைய, விசாரணைகள் ஆரம்பிக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p> </p><h2><b>

 ஊழல், மோசடி</b></h2><p>இந்த மோசடி தொடர்பில் ஊழல், மோசடி மற்றும் வீண்விரையத்திற்கு எதிரான பிரஜைகள் சக்தி அமைப்பின் தலைவர் ஜாமுனி சமந்த துஷார என்பவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4ce03ee-f5b5-4aa1-b6d8-09df23d45259/26-6aa0b586b8501.webp' /></p><p> 

முறைப்பாட்டிற்கு அமைவாகவே இந்தப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் இது தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக எதிர்வரும் 14 ஆம் திகதி முன்னிலையாகுமாறு ஜாமுனி சமந்த துஷாரவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
</p>]]></content>
            <updated>2026-09-09T01:25:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு - கிழக்கில் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு வெளியான எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-weather-sri-lanka-1788915943"></link>
            <id>https://ibctamil.com/article/today-weather-sri-lanka-1788915943</id>
            <summary type="text">கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வெப்பச் சுட்டெண் காரணமாக இன்று பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் என வளிமண்டலவியல்&nbsp; திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>இதேவேளை, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பலத்த காற்றும் மின்னல் தாக்கம்</h2><p> </p><p>

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்றும் திணைக்களம் கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/702c2a2c-bca4-43b0-bb64-5c8bd270f12e/26-6aa0b400d9795.webp' /></p><p> 

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும்.</p><p>இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T01:19:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sukran-natchathira-peyarchi-athirstam-perum-rasi-1788916474"></link>
            <id>https://jvpnews.com/article/sukran-natchathira-peyarchi-athirstam-perum-rasi-1788916474</id>
            <summary type="text">ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன்.&amp;nbsp;ராசிகளின் அதிபதியான சுக்கிரன், 30 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது நட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன்.&nbsp;ராசிகளின் அதிபதியான சுக்கிரன், 30 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e80780a1-398d-4c3a-9c26-6a5e3216bfd0/26-6aa0b2fccfd5c.webp' /></p><p>சுக்கிரனின் இந்த பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சியால் நல்ல பலன்களைப் பெறவுள்ளனர்.&nbsp;இப்போது சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ae87b4b-25f9-4efe-96ab-120c7382ea3e/26-6aa0b2fe37aca.webp' /></p><h4>ரிஷபம்
</h4><p>சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு கடின உழைப்புக்கான முழு பலன்கள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பல வழிகளில் இருந்து பணம் சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணியிடத்தில் செயல்திறன் பாராட்டப்படும். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdcfc042-4944-4f89-ae32-48909351c002/26-6aa0b2fedf63f.webp' /></p><h4>மிதுனம்
</h4><p>சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். அதுவும் திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். தடைபட்ட திட்டங்கள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்க நினைத்தால், இக்காலம் உகந்ததாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48749e39-12d6-494a-b57f-d053c777efac/26-6aa0b2ff94457.webp' /></p><h4>துலாம்
</h4><p>சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். கடனால் சிரமப்பட்டு வந்தால், கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். கலை, ஊடகம், ஃபேஷன் துறையில் இருப்பவர்கள் பெரிய அளவில் பெற்றியைக் காண்பார்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய திட்டங்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e224651d-861a-497b-9490-adfc0db1f186/26-6aa0b300472ce.webp' /></p><h4>கும்பம்
</h4><p>சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஒவ்வொரு செயலிலும் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறக்கூடும். தொழில் ரீதியான பயணங்கள் நல்ல லாபத்தைத் தரும். வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டுமென்ற கனவு நனவாகும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கவாம். பணியிடத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe76160b-e764-4339-b6c6-306a43925c45/26-6aa0b300efe55.webp' /></p>]]></content>
            <updated>2026-09-09T01:15:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கம் டொலர் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-not-planning-to-get-dollar-1788916460"></link>
            <id>https://tamilwin.com/article/govt-not-planning-to-get-dollar-1788916460</id>
            <summary type="text">அரசாங்கம் டொலர் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்க எடுக்கத் தவறியுள்ளதாக &#039;சர்வஜன பலய&#039; கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கம் டொலர் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்க எடுக்கத் தவறியுள்ளதாக 'சர்வஜன பலய' கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
</p><p>நாட்டின் டாலர் வருமானத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் அரசாங்கம் பேரணிகளை நடத்துவதால் மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>மக்களின் கருத்தை அறிந்துகொள்வதற்குப் பேரணிகளை நடத்த வேண்டிய அவசியமில்லை என குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66b3ed18-a99b-4c83-ac83-35cb07580736/26-6aa0b2ed679b3.webp' /></p><p>
நாடாளுமன்றத்தின் 1,500 ஊழியர்களிடையே ஒரு கருத்துக் கணிப்பை நடத்தினாலே நாட்டின் பொதுமக்களின் அபிப்பிராயத்தை தெளிவாக அறிந்துகொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>பேரணிகளுக்கு யாரைக் கொண்டு வந்தாலும் அதில் எந்தப் பயனும் இல்லை எனவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு நீண்டகால, நடுத்தரகால மற்றும் குறுகியகால முறையான வேலைத்திட்டங்களே அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>நாட்டின் டொலர்களைச் செலவழித்துப் பேருந்துகள் மூலம் ஆட்களைத் திரட்டி அரசாங்கம் பேரணிகளை நடத்தி வருகின்ற போதிலும், பொதுமக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பட்டினியால் தவித்து வருவதாக திலித் ஜயவீர மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T01:14:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு–லண்டன் விமானத்துக்கு ஏற்பட்ட திடீர் மாற்றம் ; ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sudden-change-to-the-colombo-london-flight-1788911939"></link>
            <id>https://jvpnews.com/article/sudden-change-to-the-colombo-london-flight-1788911939</id>
            <summary type="text">பிரித்தானியாவின் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சேவை மையத்தில் (NATS) ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக, செப்டம்பர் 8 அன்று அந்த நாட்டின் 1,...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சேவை மையத்தில் (NATS) ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக, செப்டம்பர் 8 அன்று அந்த நாட்டின் 1,000-க்கும் மேற்பட்ட வானூர்தி சேவைகள் பாதிக்கப்பட்டு பெரும் தாமதத்தையும் ரத்து நடவடிக்கைகளையும் சந்தித்தன.</p><p>
</p><p></p><p>இந்தநிலையில் கொழும்பில் இருந்து லண்டன் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் UL503 வானூர்தி, இந்தத் தடங்கல் காரணமாக ஜெர்மனியின் பிராங்பர்ட் (Frankfurt) வானூர்தி நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/675a8480-d500-4035-9510-2efec0c23232/26-6aa0a1458e23d.webp' /></p><p>வானூர்திப் போக்குவரத்து செயலாக்க அமைப்பில் ஏற்பட்ட இந்தத் தவறு உள்ளூர் நேரப்படி மாலை 16:40 மணிக்குச் சரிசெய்யப்பட்டதாக, பிரித்தானிய NATS தெரிவித்துள்ளது.</p><p>

பிரச்சினை சரிசெய்யப்பட்ட போதிலும், வானூர்திகள் மற்றும் ஊழியர்கள் உரிய இடங்களில் இல்லாததால் மேலும் தாமதங்கள் தொடரும் என வானூர்தி நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

இந்த நிலையில், குறித்த தடங்களுக்கு NATS மீது கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன்,இந்தத்தவறு குறித்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரித்தானிய சிவில் வானூர்திப் போக்குவரத்து அதிகாரசபை (UK CAA) உத்தரவிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T01:05:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பாரிய விபத்து: 4 இளைஞர்கள் பரிதாப பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/four-dead-after-two-vehicle-crash-near-1788886271"></link>
            <id>https://canadamirror.com/article/four-dead-after-two-vehicle-crash-near-1788886271</id>
            <summary type="text">கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் உள்ள வின்னிபெக் பீச் பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட கொடூர விபத்தில் 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் உள்ள வின்னிபெக் பீச் பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட கொடூர விபத்தில் 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கிம்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 
நெடுஞ்சாலை 229-ல் மேற்காகப் பயணித்த கார் ஒன்று, நெடுஞ்சாலை 8-ஐக் கடக்க முயன்றபோது, தெற்கு நோக்கி வந்த வேன் ஒன்றுடன் பலமாக மோதியது. </p><p>
இந்தச் சந்திப்பில் கிழக்கு மற்றும் மேற்கு நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு 'நிற்குமாறு' எச்சரிக்கைப் பலகைகள் அமைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ca2f6d9-f1b1-4749-b10f-db90748128a8/26-6aa03d0187a1d.webp' /></p><p> 
மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் வீதியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டன. </p><p>அதில் ஒரு வாகனம் தலைகீழாகக் கவிழ்ந்தது. 
மேற்கு நோக்கிச் சென்ற காரில் பயணித்த 4 பேருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். </p><p>
காரை ஓட்டிவந்த வின்னிபெக்கைச் சேர்ந்த 18 வயது பெண், கிம்லியைச் சேர்ந்த 18 வயது இளைஞர், சேண்டி ஹூக்கைச் சேர்ந்த 18 வயது பெண் மற்றும் ஒன்டாரியோவின் இயர் ஃபால்ஸைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
</p><p>வேனில் பயணித்த வின்னிபெக்கைச் சேர்ந்த 49 வயது ஓட்டுநர், ஒரு பெண் மற்றும் இரு குழந்தைகள் என 4 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் அனைவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் வின்னிபெக் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர்.
</p><p>இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார், விபத்துக்கான முழுமையான காரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T01:05:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சர்களை காப்பாற்ற துடிக்கும் ரணில்! நல்லாட்சி அரசாங்கத்தில் ராஜபக்சர்களுடன் நடந்துள்ள டீல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-ranil-support-ranil-mahinda-deal-1788892577"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-ranil-support-ranil-mahinda-deal-1788892577</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைதினை தொடர்ந்து நாட்டில் அரசியல் களம் சூடிபிடித்துள்ளது.பல முக்கிய தகவல்களும் கடந்த காலங்களில் இடம்பெற்ற திரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைதினை தொடர்ந்து நாட்டில் அரசியல் களம் சூடிபிடித்துள்ளது.பல முக்கிய தகவல்களும் கடந்த காலங்களில் இடம்பெற்ற திரைமறைவு அரசியல் நகரவுகளும் அம்பலமாகின்றன.</p><p>
அந்தவகையில், ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவு வழங்குவதாகவும், அவர்களைப் பாதுகாப்பதாகவும் தற்போது கருத்துக்கள் வெளியாகின்றன.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாவதற்கு ராஜபக்ச குடும்பத்தின் ஆதரவு ஒரு காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.</p><p> 

இந்தநிலையில்,அனுராதபுரத்தில் நடைபெறவிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் மக்கள் கூட்டத்திற்கு, ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரப்பூர்வமாக வாழ்த்துத் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளது. </p><p>

நாமல் ராஜபக்சவின் கைது அரசியல் பழிவாங்கல் என்று கூறி, ஐக்கிய தேசியக் கட்சி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
</p><p>
இதேவேளை,
ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்புடைய 22 மில்லியன் அமெரிக்க டொலர் ஹொங்காங் வங்கி கணக்கு விவகாரத்தை, ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க அம்பலப்டுத்தியுள்ளார்</p><p>.

 நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், 2015ஆம் ஆண்டில் இந்த ஹாங்காங் வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

 இந்த விவகாரம் தொடர்பாக ஆரம்பகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், அப்போதைய அரசாங்கத்தில் இருந்த சிலர் தலையிட்டு அந்த நடவடிக்கைகளைத் தடுத்ததாக ஆசு மாரசிங்க பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>

 இந்தத் தகவல்கள் மூலம், முன்னாள் ஆட்சியாளர்களுக்கும் அப்போதைய நல்லாட்சி அரசாங்கத்திற்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் 'டீலிங்' (Deal) குறித்த விடயங்களை ஆசு மாரசிங்க வெளிப்படுத்தியுள்ளார் .</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக எடுத்து வருகின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/twa6VY8TL_U" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T01:02:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூரான் தேர் திருவிழா ; கந்தனை தரிசிக்க அலைமோதும் பக்தர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nallur-chariot-festival-devotees-throng-worship-1788915692"></link>
            <id>https://jvpnews.com/article/nallur-chariot-festival-devotees-throng-worship-1788915692</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா இன்று புதன்கிழமை காலை வெகு விமரிசையாக நடைபெறவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா இன்று புதன்கிழமை காலை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.</p><p>
</p><p></p><p>கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலய மகோற்சவம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை 6.15 மணிக்கு வசந்தமண்டப பூஜை ஆரம்பமாகவுள்ளது.</p><p>இதனைத் தொடர்ந்து ஆறுமுக சுவாமி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளிக்கவுள்ளார்.</p><p>

தேர்த்திருவிழாவை முன்னிட்டு இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழ் மக்களிடமிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் நல்லூரை நோக்கி வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df876040-379a-417c-9c27-8bf4cdb06ba6/26-6aa0afeeceae1.webp' /></p><p>ஆறுமுக சுவாமியின் அருட்காட்சியை தரிசிப்பதற்காக பெருந்திரளான பக்தர்கள் ஒன்று கூடவுள்ளதுடன், காவடி எடுத்தல், அங்கப்பிரதட்சணம், கற்பூரச்சட்டி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களையும் பக்தர்கள் நிறைவேற்றவுள்ளனர்.
</p><p>
இதனையொட்டி நல்லூர் ஆலயச் சுற்றுப்புறங்களில் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேர்த்திருவிழா, இன்று காலை ஆயிரக்கணக்கான பக்தர்களின் பக்தி பரவசத்துக்கு மத்தியில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b85a669-ebcb-4b03-b85b-7d53f95c8f51/26-6aa0afee25f13.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df876040-379a-417c-9c27-8bf4cdb06ba6/26-6aa0afeeceae1.webp' /></p>]]></content>
            <updated>2026-09-09T01:01:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தொடரும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தின் அட்டகாசம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sltb-bus-issue-jaffna-1788913276"></link>
            <id>https://ibctamil.com/article/sltb-bus-issue-jaffna-1788913276</id>
            <summary type="text">கட்டைக்காட்டிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவை சரியான நேரத்தில் இயக்கப்படாததால், தினமும் வேலைக்குச் செல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டைக்காட்டிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவை சரியான நேரத்தில் இயக்கப்படாததால், தினமும் வேலைக்குச் செல்லும் பயணிகள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
கட்டைக்காட்டிலிருந்து காலை வேளையில் யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் பேருந்து, வழமையான நேரத்திற்கு முன்னதாகவே புறப்பட்டுச் சென்றுவிடுவதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.</p><p></p><h2>முறையீட்டுக் கடிதம்</h2><p> </p><p>

இதனால், பணி நிமித்தமாக யாழ்ப்பாணம் செல்லும் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் தினமும் உரிய நேரத்தில் சேவை பெற முடியாமல் பல சிரமங்களுக்கு மத்தியில் தாமதமாகவே தங்களது பணிமனைகளைச் சென்றடைவதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d10a8a2-6cb6-4832-bee2-fc57c53e4254/26-6aa0adfe09857.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், பேருந்து புறப்படும் சரியான நேரத்தை பயணிகளுக்குத் தெளிவுபடுத்துவதுடன், இந்தத் தாமத நிலைமையைத் தவிர்க்கத் தேவையான தகுந்த நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு கோரி, யாழ்ப்பாணம் சாலை முகாமையாளருக்குப் பயணிகள் முறையீட்டுக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T00:53:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் பொருளாதார தடையால் கியூபாவுக்கு ரூ.68 ஆயிரம் கோடி இழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/cuba-suffers-loss-68-000-crore-due-us-economic-1788915004"></link>
            <id>https://canadamirror.com/article/cuba-suffers-loss-68-000-crore-due-us-economic-1788915004</id>
            <summary type="text">அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது எந்தவொரு சமாதானப் பேச்சுவார்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது எந்தவொரு சமாதானப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என கியூபா வெளியுறவு அமைச்சர் புருனோ ரொட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.</p><p>

அமெரிக்காவின் தொடர்ச்சியான பொருளாதார மற்றும் வர்த்தகத் தடைகள் கியூபாவின் பொருளாதார நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>

குறிப்பாக, அமெரிக்கத் தடைகள் காரணமாக 2025ஆம் ஆண்டில் மட்டும் கியூபாவுக்கு 8.1 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரொட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cab9fc7e-880d-4144-a603-65a4f11580cd/26-6aa0ad3dbd304.webp' /></p><p> </p><p>இது முந்தைய ஆண்டை விட சுமார் 7 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>மேலும், 2026ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அமெரிக்க நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்ட எண்ணெய் தடைகள் காரணமாக கியூபாவின் எரிபொருள் விநியோகமும் மின்சார உற்பத்தியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

இதன் விளைவாக நாடு முழுவதும் அடிக்கடி மின்வெட்டுகள் இடம்பெறுவதுடன், உணவுப் பொருட்களைப் பாதுகாப்பாக சேமிப்பது உள்ளிட்ட அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கியூபா அரசாங்கம் தெரிவித்து வருகிறது.&nbsp;</p><p>கியூபா மக்கள் நீண்ட நேர மின்வெட்டுகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும், இதனால் குடும்பங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் ரொட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.</p><p>

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் கியூபா மக்களையே அதிகம் பாதிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அமெரிக்க நிர்வாகம் அந்தத் தடைகள் கியூபா அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதற்காகவே விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது.</p><p>இதேவேளை, கியூபா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான இராஜதந்திர முன்னேற்றம் தற்போது முடங்கியுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T00:50:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளில் 5.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/powerful-5-3-magnitude-earthquake-in-nepal-1788914322"></link>
            <id>https://canadamirror.com/article/powerful-5-3-magnitude-earthquake-in-nepal-1788914322</id>
            <summary type="text">ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த பெருவெள்ளம் ஏற்பட்டதாகக் கூறப்படும் நேபாளத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள முஸ்தாங் மாவட்டத்தில் சக்திவாய்ந்த நிலந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த பெருவெள்ளம் ஏற்பட்டதாகக் கூறப்படும் நேபாளத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள முஸ்தாங் மாவட்டத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
</p><p>
நேற்று இரவு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாக நேபாளத்தின் தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d84ad7f-5863-4ac1-85d4-d7554d88f514/26-6aa0aa93e7aeb.webp' /></p><p>தலைநகர் காத்மாண்டுவிலிருந்து வடமேற்கே சுமார் 375 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள லோமன்தாங் பகுதியை மையமாகக் கொண்டு, இரவு 9.53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நிலநடுக்கத்தின் அதிர்வுகள் முஸ்தாங் மாவட்டத்தைத் தவிர, அண்டை மாவட்டங்களான மனாங், டோல்பா மற்றும் மியாக்டி ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனினும், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சொத்துச் சேதங்கள் தொடர்பில் இதுவரை உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.</p><p>

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதிகளில் நிலைமைகளை கண்காணிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-09T00:38:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[2028 இல் இலங்கைக்கு ஆபத்தா.. நாமலை காப்பாற்ற புது வியூகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-economy-crisis-namal-arrest-1788913753"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-economy-crisis-namal-arrest-1788913753</id>
            <summary type="text">2022 ஆம் ஆண்டில் நாடு எதிர்கொண்ட கடுமையான பொருளாதார நெருக்கடி நிலையில் (பொதுக்கடன், அந்நியச் செலாவணி பற்றாக்குறை) தற்போது நாடு இல்லை. இலங்கை ஒரு மீட்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>2022 ஆம் ஆண்டில் நாடு எதிர்கொண்ட கடுமையான பொருளாதார நெருக்கடி நிலையில் (பொதுக்கடன், அந்நியச் செலாவணி பற்றாக்குறை) தற்போது நாடு இல்லை. இலங்கை ஒரு மீட்சிப் பாதையில் நகர்வதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எம். கணேசமூர்த்தி தெரிவித்தார்.
</p><p>
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
</p><p>
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த 2028 ஆம் ஆண்டுக்கான எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இலங்கையின் பொருளாதார நிலை என்பது சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளை முறையாகப் பூர்த்தி செய்வதிலும், சட்டப்பூர்வமாக டொலர் வருமானத்தை ஈட்டுவதிலும், அந்நியச் செலாவணியைக் கட்டுப்படுத்துவதிலும் தங்கியுள்ளது.</p><p>

2027-2028 காலகட்டத்திற்குப் பிறகு, பழையபடி மானியங்களை வழங்குதல் அல்லது வரி வருமானத்தைக் குறைத்தல் போன்ற தவறான பொருளாதாரக் கொள்கைகளுக்கு அரசு திரும்புவது மட்டுமே ஆபத்தை ஏற்படுத்தும்.
</p><p>
மேலும், நாமல் ராஜபக்சவின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல, மாறாக சட்ட ரீதியான நடைமுறையாகும்.
</p><p>
எதிர்க்கட்சிகள் இதனை 'அரசியல் பழிவாங்கல்' என்று கூறுவது மக்கள் மத்தியில் செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ளும் ஒரு இலகுவான முயற்சியே தவிர, அது சட்ட ரீதியான குற்றச்சாட்டு அல்ல என்று தெரிவித்தார்.</p><p>

இந்தவிடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UpUevpnIwz4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T00:34:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரியல் நடிகை நக்ஷத்திரா மாலத்தீவில் நீச்சல் உடையில் கவர்ச்சி போட்டோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/nakshathra-nagesh-swimsuit-photos-from-maldives-1788913957"></link>
            <id>https://cineulagam.com/article/nakshathra-nagesh-swimsuit-photos-from-maldives-1788913957</id>
            <summary type="text">சின்னத்திரையில் பிரபல நடிகைகளில் ஒருவர் நக்ஷத்திரா நாகேஷ். அவர் தற்போது அழகே அழகு என்ற சீரியலில் நடித்து வருகிறார்.விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் அந்த சீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சின்னத்திரையில் பிரபல நடிகைகளில் ஒருவர் நக்ஷத்திரா நாகேஷ். அவர் தற்போது அழகே அழகு என்ற சீரியலில் நடித்து வருகிறார்.</p><p>விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் அந்த சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bec39134-e0b1-4fc0-ab65-7111862adbde/26-6aa0a928e16ce.webp' /></p><p>
</p><h2>
நீச்சல் உடை
</h2><p>
தற்போது நக்ஷத்திரா தனது கணவர் உடன் மாலத்தீவுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார்.

அங்கே நீச்சல் உடையில் குளித்த போட்டோக்களை தற்போது அவர் வெளியிட்டு இருக்கிறார். </p><p>அது வைரல் ஆகி இருக்கிறது.</p>]]></content>
            <updated>2026-09-09T00:33:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிக்கு இலஞ்சம் கொடுத்த நீதிமன்ற ஊழியர்! சரண குணவர்தன வழக்கில் ஏற்பட்ட திருப்பம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sarana-gunawardena-bribery-and-corruption-1788913857"></link>
            <id>https://tamilwin.com/article/sarana-gunawardena-bribery-and-corruption-1788913857</id>
            <summary type="text">முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இலஞ்ச -ஊழல் வழக்கில்,ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இலஞ்ச -ஊழல் வழக்கில்,ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு உதவி செய்வதாக கூறி ரூ. 750,000 இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் கொழும்பு மேல் நீதிமன்ற அலுவலக உதவியாளர் ஒருவர், இலஞ்ச - ஊழல் ஆணைக்குழுவினால் நேற்று (08.09.2026) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;"></span></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">எவ்வாறு இலஞ்சம் கொடுக்கப்பட்டது</span></p><p>மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><p>
முன்னாள் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான சரண குணவர்தனவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில் தற்போது மீண்டும் விசாரிக்கப்பட்டு வரும் "மாதிவெல வீடுகள்" ஊழல் வழக்கே இந்த இலஞ்சக் கொடுக்கல் வாங்கலுக்குப் பின்னணியாக அமைந்துள்ளது. </p><p>

இந்த பணப் பரிவர்த்தனை தொடர்பான முக்கியமான டிஜிட்டல் சான்றுகளும் புலனாய்வாளர்களிடம் உள்ளதாக தெரியவந்துள்ளது. வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் பரிமாறப்பட்ட செய்திகள் மற்றும் பணச் செலுத்தல்களை உறுதிப்படுத்தும் ரசீதுகளும் அடங்குவதாக கூறுகின்றனர்.
</p><p>
இங்கு மிக முக்கியமான விடயம் என்னவெனில், வழக்கினை விசாரணை செய்யும் மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல இந்த இலஞ்சக் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புப் பட்டுள்ளாரா என்பதில் இதுவரை எந்தவொரு சான்றும் வெளிவரவில்லை. இச்சம்பவம் குறித்து நீதிபதியே முறைப்பாடு செய்துள்ளார்.
</p><h2>
வழக்கின் பின்னணி
</h2><p>
2006-2007 காலப்பகுதியில் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றியபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் கொடுக்கல் வாங்கல் தொடர்பானது.
</p><p>
மாதிவெலவில் அமைந்துள்ள வீடு ஒன்றை அபிவிருத்தி லொத்தர் சபைக்கு வாடகைக்கு எடுக்கும் போது, அதன் உரிமையாளருக்கு ரூ. 1,980,000 (19.8 இலட்சம்) குத்தகை முன்பணத்தை சட்டவிரோதமாக விடுவிக்க சபையின் அதிகாரிகளைத் தூண்டியதன் மூலம் சரண குணவர்தன இலஞ்ச சட்டத்தின் 70வது பிரிவின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 2022 இல் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
</p><p>
முறைப்பாட்டாளரின் சாட்சியங்களின்படி, அந்த வீடு சரண குணவர்தனவின் முன்னாள் மனைவியான குமாரி அபேவிக்ரம என்பவருக்குச் சொந்தமானது என்றும், பின்னர் அது வேறொருவருக்கு மாற்றப்பட்டு, அவரிடமிருந்து அபிவிருத்தி லொத்தரை் சபைக்கு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>

</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3124f060-49c8-4eeb-a987-807ced4533bd/26-6aa0a8c35aafe.webp' /></p><p>2026 ஜூன் 9 அன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால், நான்கு தனித்தனி வழக்குகளில் சரண குணவர்தனவைக் குற்றவாளியாகத் தீர்ப்பளித்தார். </p><p>18 குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட அவருக்குப் பெயரளவில் 72 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், அவை ஒவ்வொரு வழக்கிற்குள்ளும் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தண்டனை 16 ஆண்டுகளாக மாறியது. </p><p>ரூ. 1.8 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டது.

அந்தத் தீர்ப்பிற்கு எதிராக சரண குணவர்தன 2026 ஜூலை 1 அன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நான்கு தனித்தனி மேன்முறையீடுகளைத் தாக்கல் செய்துள்ளார்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T00:32:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானிய கப்பல்கள் தொடர்பில் அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்கு பறந்த செய்தி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iranian-vessels-anchored-in-international-waters-1788913598"></link>
            <id>https://tamilwin.com/article/iranian-vessels-anchored-in-international-waters-1788913598</id>
            <summary type="text">சர்வதேச கடற்பரப்பில் பல ஈரானியக் கப்பல்கள் நடமாடி வருவதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச கடற்பரப்பில் பல ஈரானியக் கப்பல்கள் நடமாடி வருவதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.</p><p> 
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக்கூறியுள்ளார்.
</p><p>அமெரிக்க தூதரகத்தின் இந்த அறிவிப்பையடுத்து, இது குறித்து பாதுகாப்பு மற்றும் துறைமுக அமைச்சுக்களுக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52da0fcc-1b9d-42a2-b5c3-1a0d39845b6b/26-6aa0a7bfc34a4.webp' /></p><p>
</p><p>குறிப்பிட்ட கப்பல்கள் பயணிக்கக்கூடிய பாதைகள் குறித்து இலங்கை கடற்படை தற்போது தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.</p><p>
அந்தக் கப்பல்கள் எவையும் இலங்கையின் பிராந்திய கடற்பரப்பிற்குள் நுழையவில்லை என அமைச்சர் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான இராணுவ பதற்ற நிலைமைகளுக்கு மத்தியில், இலங்கையின் பிராந்திய கடற்பரப்பில் இருந்து 24 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள சர்வதேச கடற்பரப்பில் சுமார் 47 கப்பல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
</p><p>இவற்றில் ஈரானியக் கொடி ஏந்திய கப்பல்களும், பிற வணிக மற்றும் சரக்குக் கப்பல்களும் அடங்கும். எனினும், அவை எவையும் இலங்கையின் உள்நாட்டு கடற்பரப்பிற்குள் வரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>இக்கப்பல்கள் இலங்கை அரசாங்கத்திடம் எந்தவித வசதிகளையோ அல்லது உதவிகளையோ கோரவில்லை; அரசாங்கமும் அத்தகைய வசதிகள் எதையும் வழங்கவில்லை என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>பொதுவாக வணிக மற்றும் சரக்குக் கப்பல்கள் தமது அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை, தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு அப்பால் உள்ள சர்வதேச கடற்பரப்பில் தங்கியிருப்பது சாதாரணமான ஒரு விடயமாகும்.
</p><p>குறித்த கப்பல்கள் குறித்துத் தொடர்ந்து அவதானம் செலுத்துவதைத் தவிர, அவை தொடர்பில் இலங்கை அரசாங்கம் வேறு எந்தவித தலையீடுகளையோ அல்லது நடவடிக்கைகளையோ மேற்கொள்ளவில்லை என அமைச்சர் விஜித ஹேரத் மீண்டும் தெளிவுபடுத்தினார்.&nbsp;&nbsp;</p><p>கடந்த மார்ச் மாதம் இலங்கையின் தென் கடற் பரப்பில் ஈரானிய கப்பல் மீது அமெரிக்க கடற்படை மேற்கொண்ட தாக்குதல்களில் பல ஈரானிய படையினர் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-09T00:26:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளாமர் உடையில் ருக்மிணி வசந்த்.. ஹாட் ஸ்டில்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/rukmini-vasanth-glamour-photoshoot-1788913071"></link>
            <id>https://cineulagam.com/article/rukmini-vasanth-glamour-photoshoot-1788913071</id>
            <summary type="text">நடிகை ருக்மிணி வசந்த் தற்போது சென்சேஷன் நடிகையாக வலம் வருபவர். அவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்களும் கிடைத்து இருக்கிறார்கள்.

ஹோம்லி லுக் மட்டுமின...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை ருக்மிணி வசந்த் தற்போது சென்சேஷன் நடிகையாக வலம் வருபவர். அவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்களும் கிடைத்து இருக்கிறார்கள்.</p><p>

ஹோம்லி லுக் மட்டுமின்றி கிளாமர் ஆன ரோலிலும் அவர் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது ருக்மிணி கிளாமர் உடையில் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.</p>]]></content>
            <updated>2026-09-09T00:24:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவிப்புலன் வலுவிழந்தோருக்கு 119 அவசர சேவையில் புதிய வட்ஸ்அப் காணொளி வசதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/119-emergency-service-for-the-hearing-impaired-1788913300"></link>
            <id>https://jvpnews.com/article/119-emergency-service-for-the-hearing-impaired-1788913300</id>
            <summary type="text">செவிப்புலன் வலுவிழந்த சமூகத்தினர் 119 அவசர அழைப்புப் பிரிவுக்கு வாட்ஸ்அப் (WhatsApp) காணொளி அழைப்பு மூலம் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கும் புதிய சேவையை,...</summary>
            <content type="html"><![CDATA[<p>செவிப்புலன் வலுவிழந்த சமூகத்தினர் 119 அவசர அழைப்புப் பிரிவுக்கு வாட்ஸ்அப் (WhatsApp) காணொளி அழைப்பு மூலம் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கும் புதிய சேவையை, இலங்கை காவல்துறை அறிமுகப்படுத்துகிறது.</p><p></p><p>

எதிர்வரும் வியாழக்கிழமை (செப்டெம்பர் 10) முதல், இந்த வசதியை காவல்துறையினர் அறிமுகப்படுத்துகின்றனர்.
</p><p>
இலங்கை காவல்துறையின் 160 ஆவது வருடக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47f7b9fc-0116-46f6-95ad-0a5f763e6dcf/26-6aa0a69673fc3.webp' /></p><p>செவிப்புலன் வலுவிழந்தோரின் பாதுகாப்பு மற்றும் வசதியை மேம்படுத்தும் நோக்கில் இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
</p><p>முறைப்பாடு அளிக்கும் வழிமுறைகள்: </p><p>இந்த சேவைக்காக பிரத்யேக குறுஞ்செய்தி இலக்கம் (Short-code number) அறிமுகப்படுத்தப்படும் வரை, பயனாளிகள் பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளனர்.
</p><p>
1. இலக்கத்தைச் சேமித்தல்: முதலில் **011-2809980** என்ற தொலைபேசி இலக்கத்தை உங்களது கைபேசியில் சேமித்துக் கொள்ள வேண்டும்.</p><p>

2. அழைப்பு மேற்கொள்ளல்: பின்னர், அந்த இலக்கத்திற்கு வாட்ஸ்அப் மூலம் ஒரு குரல் அழைப்பை (Audio call) மேற்கொள்ள வேண்டும்.</p><p>

3. இணைப்பைப் பெறுதல்: அந்த அழைப்பு தானாகவே துண்டிக்கப்பட்ட பின்னர், உங்களது கைபேசிக்கு ஒரு இணைய இணைப்பு (Link) குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.
</p><p>
4. காணொளி அழைப்பில் இணைதல்: அந்த இணைப்பைத் திறந்து, **“Join Browser”** மற்றும் அதன் பின்னர் **“Join Meeting”** ஆகிய தெரிவுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
</p><p>
இதன் மூலம் காவல்துறையினருடன் நேரடி காணொளி அழைப்பில் இணைந்து செவிப்புலன் வலுவிழந்தோர் தமது முறைப்பாடுகளை எளிதாகத் தெரிவிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T00:22:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை விடுவிக்க சர்வதேசத்தின் அழுத்தமா..! ஜெனிவாவில் நாமலுக்காக ஒலித்த குரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-issue-discuss-in-geneva-un-1788912168"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-issue-discuss-in-geneva-un-1788912168</id>
            <summary type="text">நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை விடுவிப்பது குறித்து சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்கின்றதா என்ற கேள்வி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை விடுவிப்பது குறித்து சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்கின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
</p><p>
மேலும், ராஜபக்ச ஆதரவாளரான மிலிந்த ராஜபக்ச என்பவர் நாமல் ராஜபக்சவின் விவகாரத்திற்காக ஐநா சபைக்கு சென்று உரையாற்றியுள்ளார்.
</p><p>
கடந்த காலங்களில், ஈழத் தமிழர் விவகாரங்கள் தொடர்பாக சர்வதேச அமைப்புகள் (ஐநா சபை) இலங்கையை விமர்சித்தபோது, ராஜபக்ச குடும்பத்தினர் அந்த அமைப்புகளைத் தாழ்வாகப் பேசி வந்தனர். </p><p>

ஆனால் தற்போது, நாமல் ராஜபக்சவின் விவகாரத்திற்காக அதே ஐநா சபையை அவர்கள் நாடியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.</p><p>

ஒரு அரசியல்வாதியின் கைதுக்காக சர்வதேச மட்டத்தில் இவ்வளவு தூரம் சென்று குரல் கொடுப்பது, பொதுவான நீதிக்காக இல்லாமல் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் நலனுக்காக மட்டுமே நடப்பதாக விமர்சிக்கப்படுகிறது.
</p><p>
ஜெனீவாவில் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையானது, வெறும் ஒரு நிமிடத்திற்கும் குறைவான காலமே பேசும் வாய்ப்பைப் பெற்றதாகவும் அல்லது பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தாத ஒரு மேலோட்டமான செயலாக பார்க்கப்படுகின்றது.</p><p>

இந்தவிடயங்கள் பற்றி கலந்துரையாடுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/sNebaLlHbak" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T00:09:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாக்கி அழிக்கப்பட்ட ஈரானின் கப்பல்கள்! அமெரிக்க இராணுவம் வெளியிட்ட காணொளிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iranian-oil-tankers-destroyed-in-us-attacks-1788911546"></link>
            <id>https://ibctamil.com/article/iranian-oil-tankers-destroyed-in-us-attacks-1788911546</id>
            <summary type="text">ஈரானின் ஐந்து கச்சா எண்ணெய் கப்பல்களை தங்களது படைகள் அழித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் அமெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் ஐந்து கச்சா எண்ணெய் கப்பல்களை தங்களது படைகள் அழித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) தெரிவித்துள்ளது.
</p><p>
கடந்த இரண்டு நாட்களில் அமெரிக்க கடற்படைக் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல்படை(IRGC) இரண்டு முறை பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்த முயன்றதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

மேற்படி இரு தாக்குதல் முயற்சிகளிலிருந்தும் அமெரிக்கப் போர்க்கப்பல் தப்பித்து, பிராந்திய கடற்பகுதியில் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், அமெரிக்க வீரர்கள் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் சென்ட்காம் (CENTCOM) தனது எக்ஸ் (X) தளத்தில் குறிப்பிட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>தாக்கப்பட்ட கப்பல்கள்</h2><p>

இந்நிலையில் பதிலடியாக, ஓமன் வளைகுடாவில் 'எம்/டி காவிஸ்' (M/T Kaviz), 'எம்/டி சர்மினார்' (M/T Charminar), 'எம்/டி ஹரைசன் 1' (M/T Horizon 1) மற்றும் 'எம்/டி ரீஸ்கோ' (M/T Riesco) ஆகிய எண்ணெய் கப்பல்களையும், கார்க் தீவுக்கு அருகே 'எம்/டி தர்யா' (M/T Derya) ஆகிய கப்பலையும் அமெரிக்கப் படைகள் தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">CENTCOM forces destroyed five Iranian crude oil carriers, Sept. 8, after the Islamic Revolutionary Guard Corps (IRGC) targeted a U.S. Navy warship with ballistic missiles twice over the past two days. The U.S. warship successfully evaded the attempted Iranian attacks and… <a href="https://t.co/Gi8a2tloN1">pic.twitter.com/Gi8a2tloN1</a></p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2097448820099711412?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

இதேவேளை, IRGC மற்றும் அதன் பிராந்தியப் படைகளுக்கு நிதி வழங்கும் பல பில்லியன் டொலர் மதிப்புள்ள நிழல் வலையமைப்பின் ஒரு பகுதியாகவே இந்தக் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய சென்ட்காம், இந்தக் கப்பல்களைப் பாதுகாப்பதற்கு ஈரானிடம் எந்த வழியும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
</p><p>
முன்னதாக, செப்டம்பர் 5 அன்றும் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் மற்றும் வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பல் மீது தாக்குதல் நடத்த IRGC முயன்றது. அந்தத் தாக்குதல் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரானின் மூன்று எண்ணெய் கப்பல்களை சென்ட்காம் தாக்கி அழித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T00:08:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[லஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் சட்டங்களை பின்பற்ற வேண்டும் – நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ciaboc-must-follow-the-laws-says-court-1788912438"></link>
            <id>https://tamilwin.com/article/ciaboc-must-follow-the-laws-says-court-1788912438</id>
            <summary type="text">லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவும் சட்டங்களை பின்பற்ற வேண்டியது அவசியமானது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் முன்னிலையில் ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவும் சட்டங்களை பின்பற்ற வேண்டியது அவசியமானது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
</p><p>
நீதிமன்றத்தின் முன்னிலையில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு என தனியான சட்டம் எதுவும் இருக்க முடியாது என தெரிவித்துள்ளது.
</p><p>நீதித்துறை நடைமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டிய பொறுப்பு ஆணைக்குழுவிற்கு உள்ளது என கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரமக சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb7344f7-cb96-4f3e-9076-82e41e282693/26-6aa0a337b48b2.webp' /></p><p>லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்குத் துல்லியமாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதைத் தவிர்த்து, "மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன" என்று மட்டும் வெறுமனே குறிப்பிடுவதைத் தவிர்க்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p>
விசாரணைகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கைகள் அல்லது சாட்சியங்களின் சுருக்க அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தவறியமை தொடர்பாக ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும்போதே தலைமை நீதவான் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p>லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் இரு அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகும்போது, அவர்கள் முழு ஆணைக்குழுவையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவே நீதிமன்றம் கருதுகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வழக்குகள் தொடர்பாகத் தேவையான சரியான தகவல்களையும் சான்றுகளையும் சமர்ப்பிக்க அதிகாரிகள் கடமைப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
</p><p>அவ்வாறு தகவல்கள் சாட்சியங்களை சமர்ப்பிக்காமல் இருக்கக் கூடாது என நீதவான் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T00:07:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக் பாஸ் 10ல் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்! ஷாக் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/bigg-boss-10-tamil-black-pandi-quits-show-1788911691"></link>
            <id>https://cineulagam.com/article/bigg-boss-10-tamil-black-pandi-quits-show-1788911691</id>
            <summary type="text">பிக் பாஸ் 10ம் சீசன் தற்போது தமிழில் தொடங்கி இருக்கிறது. ஷோவின் தொடக்க விழாவிலேயே பல முக்கிய போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக் பாஸ் 10ம் சீசன் தற்போது தமிழில் தொடங்கி இருக்கிறது. ஷோவின் தொடக்க விழாவிலேயே பல முக்கிய போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.</p><p>இந்நிலையில் ஷோ தொடங்கி சில தினங்கள் மட்டுமே ஆகும் நிலையில், தற்போது ஒரு முக்கிய போட்டியாளர் வெளியில் சென்றுவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8a1d308-1139-4cfa-90fd-83d4f342a9fe/26-6aa0a04d1f4a1.webp' /></p><h2>பிளாக் பாண்டி
</h2><p>நடிகர் பிளாக் பாண்டி உடல்நிலை மோசமான காரணமாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் சென்று இருக்கிறார்.

இந்த செய்தி பிக் பாஸ் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a02154d-5316-49e2-93fc-160e6ca18819/26-6aa0a04e8b45a.webp' /></p>]]></content>
            <updated>2026-09-09T00:01:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வரைபடம்: அமெரிக்க தூதரை அழைத்து கண்டித்த ஐஸ்லாந்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-post-a-controversial-map-include-iceland-1788909662"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-post-a-controversial-map-include-iceland-1788909662</id>
            <summary type="text">Trump Post a Controversial Map include Iceland: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய புகைப்படத்திற்கு ஐஸ்லாந்து கண்டனம் தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump Post a Controversial Map include Iceland: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய புகைப்படத்திற்கு ஐஸ்லாந்து கண்டனம் தெரிவித்துள்ளது.</p><h2>அமெரிக்க கொடியால் மூடப்பட்ட வரைபடம்</h2><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னுடைய சமூக வலைதளப்&nbsp;பக்கமான ட்ரூத் சோஷியலில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.</p><p> டிரம்ப் வெளியிட்ட அந்த வரைபடத்தில் கனடா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, மெக்சிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் ஆகிய பகுதிகள் அமெரிக்க கொடியால் போர்த்தப்பட்டு இருப்பது போன்று சித்தரிக்கப்பட்டிருந்தது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">🚨 LMFAO! Iceland has reportedly summoned the US Ambassador after Donald Trump posted a map of the United States laying claim to the entire continent of North America — and Iceland<br><br>Are they fearing an invasion 😂<br><br>Trump is a master troll. There is nobody else like him. <a href="https://t.co/pLGI7RRep9">pic.twitter.com/pLGI7RRep9</a></p>&mdash; Eric Daugherty (@EricLDaugh) <a href="https://x.com/EricLDaugh/status/2097309831900156297?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> மேலும் அதில் &nbsp;அமெரிக்க ஐக்கிய நாடுகள் என பெயரிடப்பட்டிருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> ஐஸ்லாந்து கண்டனம்</h2><p>
இந்நிலையில், டிரம்ப் வெளியிட்ட வரைபடம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என ஐஸ்லாந்து வெளியுறவு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p> அத்துடன் ஐஸ்லாந்திற்கான அமெரிக்க தூதரை நேரில் அழைத்து ஐஸ்லாந்து வெளியுறவு அமைச்சகம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.</p><h2> அமெரிக்கா - டென்மார்க் இடையிலான இராஜதந்திர பதற்றம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee8e3089-1c3c-47bc-abac-c707da7fb358/26-6aa0986002183.webp' /></p><p></p><p>ஏற்கனவே கிரீன்லாந்தை அமெரிக்காவின் ஒருப்பகுதியாக சித்தரித்து வரும் அமெரிக்காவின் நடவடிக்கைகள் காரணமாக டென்மார்க் இடையே ராஜதந்திர பதற்றங்களை ஏற்படுத்தியிருந்தன.</p><p> கிரீன்லாந்து மக்கள் அமெரிக்காவின் அங்கமாக இருக்க எப்போதும் விரும்பவில்லை என்று டென்மார்க் பிரதமரும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.</p><p> ஐரோப்பிய ஒன்றியம் கிரீன்லாந்தில் 200 மில்லியன் யூரோ முதலீட்டை அறிவித்த சில மணி நேரங்களிலேயே ட்ரம்பின் இந்தப் பதிவு வெளியாகியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T00:00:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[16 மணி நேரம் பணயக்கைதி ; உயிர் தப்பிய சிறுமியின் வாழ்க்கைப் போராட்டம் 40 ஆண்டுகளுக்குப் பின் வைரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/life-struggle-girl-who-survived-viral-40-years-1788911108"></link>
            <id>https://canadamirror.com/article/life-struggle-girl-who-survived-viral-40-years-1788911108</id>
            <summary type="text">1986ஆம் ஆண்டு செப்டெம்பர் 5ஆம் திகதி, விடுமுறைக்காக இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு தனியாகப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, தாம் பயணித்த Pan Am 73 வான...</summary>
            <content type="html"><![CDATA[<p>1986ஆம் ஆண்டு செப்டெம்பர் 5ஆம் திகதி, விடுமுறைக்காக இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு தனியாகப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, தாம் பயணித்த Pan Am 73 வானூர்தி கடத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>கடத்தலுக்குப் பின்னர் பயணிகள் சுமார் 16 மணி நேரம் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர்.
</p><p>
இந்தச் சம்பவத்தின்போது பயணிகள் வானூர்தியின் நடுப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பின்னர் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b389c2d3-f37d-4be9-aee0-d2a6ba9eeaab/26-6aa09e05809c6.webp' /></p><p>

இந்த கொடூரமான சம்பவத்தில் 21 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
வானூர்தி கடத்தப்பட்டிருந்த நிலையில், அவசரகால வெளியேறும் கதவு வழியாக தாம் தப்பியதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.</p><p> வானூர்தியின் இறக்கையில் நின்றிருந்த தமக்கு பணிப்பெண் ஒருவர் உதவி செய்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கு வழிவகுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
எனினும், அந்தப் பயங்கரமான அனுபவம் தனது வாழ்க்கையை முடக்குவதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதன் ஒரு பகுதியாக, கரீபியன் கடலில் ஆழ்கடல் நீச்சல், சுவிஸ் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் பனிச்சறுக்கு உள்ளிட்ட பல்வேறு சாகசப் பயணங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக தனது Instagram பக்கத்தில் காணொளி ஒன்றின் மூலம் பகிர்ந்துள்ளார்.</p><p>

“குணமடைதல் என்பது நடந்ததை மறந்துவிடுவது அல்ல. நாம் வாழத் தொடங்குவதற்கு முன்பே குணமடைய வேண்டும் என்ற அவசியம் இல்லை; நாம் வாழ்வதன் மூலமே குணமடைதல் இடம்பெறுகிறது” என்ற கருத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.</p><p>

அவரது இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>
கடுமையான அனுபவத்தை எதிர்கொண்ட போதிலும், வாழ்க்கையை தைரியத்துடனும் மனவலிமையுடனும் தொடர்ந்து முன்னெடுத்து வரும் அவரது முயற்சிக்கு சமூக வலைத்தளப் பயனர்கள் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T23:45:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகளை சுட்டிக்காட்டிய ஐ.நா. அறிக்கையை வரவேற்ற சுமந்திரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sumanthiran-criticizes-government-tamil-issues-1788910653"></link>
            <id>https://tamilwin.com/article/sumanthiran-criticizes-government-tamil-issues-1788910653</id>
            <summary type="text">ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்ப அமர்வில் இலங்கையில் யுத்த காலத்தில் இடம்பெற்ற குற்றங்களுக்கு பொறுப்புக்கூறல் தொடர்பில் எந்தவித முன்னே...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்ப அமர்வில் இலங்கையில் யுத்த காலத்தில் இடம்பெற்ற குற்றங்களுக்கு பொறுப்புக்கூறல் தொடர்பில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதை வரவேற்பதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மா.ஆ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.</p><p>

இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவித்தல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி உள்ளிட்ட தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பிலும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை வரவேற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>சுமந்திரன் வரவேற்பு</h2><p>
</p><p>
அத்துடன், மாகாண சபைத் தேர்தல்கள் நீண்ட காலமாக நடத்தப்படாமல் இருப்பது தொடர்பில் ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளதையும் அவதானித்துள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3035f94-87be-4290-ac38-6721d652fa63/26-6aa09e059d281.webp' /></p><p>

இலஞ்சம், ஊழல் மற்றும் போதைப்பொருள் தொடர்புடைய பாதாள உலகக் குழுக்களுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை வரவேற்பதாக கூறிய அவர், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான புதிய அரசியலமைப்பு உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படாதது குறித்து கடும் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T23:45:20+00:00</updated>
        </entry>
    </feed>
