<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-13T08:25:05+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயகன் வெளிநாட்டில் ஹிட்-ஆ, ப்ளாப்-ஆ, இறுதி வசூல் விவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/jananayagan-overseas-final-box-office-1789283991"></link>
            <id>https://cineulagam.com/article/jananayagan-overseas-final-box-office-1789283991</id>
            <summary type="text">ஜனநாயகன்தளபதி விஜய் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு எமோஷன். அவர் தீவிர அரசியலில் இறங்கி முதலமைச்சர் ஆகிய நிலையில் இனி சினிமாவிலேயே நடிக்க மாட்டேன் என ம...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜனநாயகன்</h2><p>தளபதி விஜய் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு எமோஷன். அவர் தீவிர அரசியலில் இறங்கி முதலமைச்சர் ஆகிய நிலையில் இனி சினிமாவிலேயே நடிக்க மாட்டேன் என முடிவெடுத்துவிட்டார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffb4f2be-0550-4644-8b39-e90a2112e6a3/26-6aa64e99e833a.webp' /></p><p></p><p>அந்த வகையில் அவரின் கடைசி படமாக, ஹெச். வினோத் இயக்க பகவத் கேசரி ரீமேக் ஆக 'ஜனநாயகன்' சில மாற்றங்களுடன் உருவானது. இந்த படம் தியேட்டர் ரிலிஸுக்கு முன்பே இணையத்தில் படம் லீக் ஆகி, பெரும் அதிர்ச்சியை ரசிகர்களுக்கு கொடுத்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f99c908e-eed6-4a06-912f-bcf16d72e6c9/26-6aa64e9aa1c4a.webp' /></p><p>இதனால், இந்த படம் ரூ. 200 கோடி வசூல் வந்தாலே பெரிது என்று இருந்த நிலையில், எல்லோர் பேச்சையும் அடைத்து, உலகம் முழுவதும் ரூ. 320 கோடிகளுக்கும் மேல் இப்படம் வசூல் செய்தது. அதே நேரத்தில் அதிக தொகைக்கு இப்படத்தை விற்றதால் பல இடங்களில் இப்படம் தோல்வி அடைந்தது. 

ஆனாலும், லீக் ஆன படத்திற்கு இவ்வளவு பெரிய வசூல் என்பது தளபதி ஒருத்தரால் மட்டுமே சாத்தியம்.</p><p></p><h3>இறுதி வசூல் விவரம்</h3><p> </p><p>இந்நிலையில் தற்போது வெளிநாட்டில் இந்த படம் முழுவதும் ஓடி முடிந்து எந்த நாட்டில் எவ்வளவு <a href="https://www.youtube.com/watch?v=0fDZmAUweyQ" target="_blank">வசூல் </a>குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்ப்போம்...</p><ul><li>

Malaysia $2.82M</li><li>
UK Europe $1.84M</li><li>North America $1.58M
</li><li>Middle East $1.45M
</li><li>Singapore $825K
</li><li>Australia $555K
</li><li>Newzealand $54K</li><li>
Srilanka&amp;Rest $480K</li></ul><p><b>

Total Overseas $9.61M - இந்திய மதிப்பில் ரூ. 92.05 கோடி</b></p>]]></content>
            <updated>2026-09-13T08:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்கலைக்கழக பணியிட வெற்றிடங்களை விரைவாக நிரப்ப நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/action-taken-to-fill-university-vacancies-quickly-1789287543"></link>
            <id>https://jvpnews.com/article/action-taken-to-fill-university-vacancies-quickly-1789287543</id>
            <summary type="text">நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் வெற்றிடமாக உள்ள கல்விசார் மற்றும் கல்விசாரா பணியிடங்களை விரைவாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழகங்களின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் வெற்றிடமாக உள்ள கல்விசார் மற்றும் கல்விசாரா பணியிடங்களை விரைவாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
உயர் கல்வி ஆலோசனைக் குழுவின் முன்னிலையில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7478c07-9f1c-49e2-bde8-97bd0b4c931b/26-6aa65c793a427.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் வெற்றிடமாக உள்ள கல்விசார் மற்றும் கல்விசாரா பணியிடங்களை நிரப்புவதற்கான அனுமதி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

எனினும், சில பல்கலைக்கழகங்களில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள பிரதி அமைச்சர், குறித்த நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு துணைவேந்தர்களிடம் கோரியுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
தற்போது இலங்கையில் மொத்தம் 19 அரச பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-13T08:19:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிக்ஸ் அமைப்பில் இணைய காத்திருக்கும் பாகிஸ்தான் - முட்டுக்கட்டை போடும் இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-blocks-pakistan-to-join-in-brics-1789287447"></link>
            <id>https://news.lankasri.com/article/india-blocks-pakistan-to-join-in-brics-1789287447</id>
            <summary type="text">india blocks pakistan to join in brics: பிரிக்ஸ் அமைப்பில் இணைய 3 ஆண்டுகளாக காத்திருக்கும் பாகிஸ்தானின் முயற்சிக்கு இந்தியாவின் எதிர்ப்பு தடையாக உள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>india blocks pakistan to join in brics: பிரிக்ஸ் அமைப்பில் இணைய 3 ஆண்டுகளாக காத்திருக்கும் பாகிஸ்தானின் முயற்சிக்கு இந்தியாவின் எதிர்ப்பு தடையாக உள்ளது. </p><h3> 

பிரிக்ஸ் மாநாடு </h3><p>

18வது பிரிக்ஸ் மாநாடு இந்தியாவின் டெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் நடைபெற்றது.&nbsp;</p><p>

இதில் ரஷ்ய ஜனாதிபதி புடின், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/058c365b-64a4-4f6b-8621-db2781e5fd30/26-6aa65c18e4693.webp' /></p><p> 

2009 ஆம் ஆண்டில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய 4 நாடுகள் இணைந்து BRIC அமைப்பை உருவாக்கியது.</p><p> 

2010 ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவும் இந்த அமைப்பில் இணைய BRICS என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. </p><p>

அதன் பின்னர், ஈரான், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா என 7 நாடுகள் இணைய தற்போது 11 நாடுகளுடன் இந்த அமைப்பு BRICS+ என உள்ளது.</p><h3> 

பாகிஸ்தான் இணைய இந்தியா எதிர்ப்பு</h3><p> 

இந்த அமைப்பில் இணைய மேலும் 23 நாடுகள் விண்ணப்பித்துள்ளன. இதில், 2023 ஆம் ஆண்டிலே பாகிஸ்தான் விண்ணப்பித்துள்ள நிலையில், தற்போது வரை BRICS அமைப்பில் அதனால் இணைய முடியவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1892568e-df5a-4dbc-8422-b7bbdda550f4/26-6aa65c1a66663.webp' /></p><p> 

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பிரிக்ஸ் ஆதரவு பெற்ற புதிய மேம்​பாட்டு வங்​கி​யில் 580 மில்​லியன் டொலர் பங்​கு​களை பாகிஸ்​தான் வாங்​கி​ இருந்தது. </p><p>

நிதி நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தான் BRICS அமைப்பில் இணைந்தால், உலக வங்கி போன்ற மேற்​கத்​திய நாடு​கள் தலை​மையி​லான நிறு​வனங்​களின் நிதி சார்பை தவிர்த்​து, பிரிக்ஸ் ஆதரவு பெற்ற புதிய மேம்​பாட்டு வங்கி (NDB) வாயி​லாக கடன்​கள் மற்​றும் உள்​கட்​டமைப்பு நிதி​யுத​வியை பெற முடி​யும். </p><p>

பாகிஸ்தான் BRICS அமைப்பில் இணைய சீனா மற்றும் ரஷ்யா ஆதரவு தெரிவித்தாலும், இந்தியா தனது வீடோ அதிகாரம் மூலம் பாகிஸ்தான் அமைப்பில் இணைய தடையாக உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1892568e-df5a-4dbc-8422-b7bbdda550f4/26-6aa65c1a66663.webp' /></p><p> 

பிரிக்ஸ் கூட்​டமைப்​பின் சேர்க்கை விதி​களின்​படி, உறுப்பு நாடு​களின் ஒரு​மித்த ஆதரவு இருந்​தால் மட்​டுமே புதிய உறுப்​பினர்​களை கூட்​டமைப்​பில்​ சேர்க்​க முடி​யும்​.</p>]]></content>
            <updated>2026-09-13T08:17:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாரவில கடல் பகுதியில் நேர்ந்த பெரும் சோகம் - 5 பேரை இழுத்துச்சென்ற இராட்சத அலைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tragedy-in-the-marawila-sea-giant-waves-5-people-1789285636"></link>
            <id>https://tamilwin.com/article/tragedy-in-the-marawila-sea-giant-waves-5-people-1789285636</id>
            <summary type="text">மாரவில கடல் பகுதியில் நேர்ந்த விபத்துகளில் 5 பேர் கடல் அலைகளால் இழுத்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (12) பிற்பகல் அதே பகுதியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாரவில கடல் பகுதியில் நேர்ந்த விபத்துகளில் 5 பேர் கடல் அலைகளால் இழுத்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
நேற்று (12) பிற்பகல் அதே பகுதியில் அலைகளால் 3 பெண்கள், 2 இளைஞர்கள் உட்பட 5 பேர் அலைகளால் இழுத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
</p><p>
இவ்வாறு இழுத்துச்செல்லப்பட்ட 3 பெண்களை பிரதேசவாசிகள் உடனடியாக செயற்பட்டு மீட்டுள்ளனர்.</p><h2>இளைஞர் மாயம்&nbsp;</h2><p>
</p><p>
இதில் உயர்தர கணிதப் பிரிவில் பயின்று பல்கலைக்கழகத்திற்குத் தகுதி பெற்ற குளியாபிட்டிய, அனுக்கனையைச் சேர்ந்த வித்தானகே ஷாலித தனுர்தர மதுஷான் என்ற 21 வயது இளைஞர் காணாமல்போயுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/414b4560-f2fc-408b-9cda-d2e06b413763/26-6aa65c0b2921e.webp' /></p><p>
</p><p>
இவர் உட்பட 7 பேர் கொண்ட குழுவினர் குளியாபிட்டியவிலிருந்து மாரவில கடற்கரைக்குச் சுற்றுலா சென்றுள்ளனர்.
</p><p>
கடற்கரையில் பாறைகள் அமைக்கப்பட்ட பகுதியில் மணல் திட்டில் நின்றிருந்தபோது, சீறிப்பாய்ந்த இராட்சத அலை ஒன்றில் சிக்கி இவர்கள் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டுள்ளனர்.</p><h2>கடற்படை மற்றும் பொலிஸாரால் விசேட தேடுதல் நடவடிக்கை</h2><p>

பிரதேசவாசிகள் இணைந்து இவரை காப்பாற்ற முயன்றபோதிலும், அவர் கடலில் மாயமாகியுள்ளார். இவரை காப்பாற்றச்சென்ற மற்றொரு இளைஞர் உயிர்தப்பியுள்ளார்.
</p><p>
காணாமல்போன இளைஞரை தேடி கடற்படை மற்றும் பொலிஸாரால் விசேட தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. </p><p>

இப்பகுதியில் கடலில் இறங்குவதையோ, நீராடுவதையோ தவிர்க்குமாறு மாரவில பொலிஸாரால் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T08:17:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் நிறுவனங்களின் எரிபொருள் விலைகள்! வெளியாகியுள்ள முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/revising-fuel-prices-for-private-fuel-companies-1789286389"></link>
            <id>https://ibctamil.com/article/revising-fuel-prices-for-private-fuel-companies-1789286389</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக எரிபொருள் இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ள நிலையில், தனியார் எரிபொருள் நிறுவனங்களுக்கான எரிபொருள் விலையை த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக எரிபொருள் இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ள நிலையில், தனியார் எரிபொருள் நிறுவனங்களுக்கான எரிபொருள் விலையை திருத்தியமைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கக்கூடும் என்று எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
</p><p>
தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் எட்டப்பட்டுள்ள ஒப்பந்தங்களின்படி, இவ்வாறு எரிபொருள் விலையை திருத்தியமைப்பதில் எந்தவித சட்டத் தடைகளும் இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இதற்கிடையில், மத்திய கிழக்கு மோதல்களால் கடல்வழிப் பாதைகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் காரணமாக இறக்குமதிச் செலவு கணிசமாக உயர்ந்துள்ளதால், தற்போதைய விலையில் எரிபொருளை விற்பனை செய்வது கடினமாக உள்ளதாகத் தனியார் எரிபொருள் நிறுவனங்கள் அரசாங்கத்திற்குத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p></p><h2>தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்கள்</h2><p>
</p><p>
அதன்படி, IOC, Sinopec மற்றும் RM Parks உள்ளிட்ட தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்கள் இந்த விவகாரத்தை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19299843-6648-4fce-8330-d2d92f37163a/26-6aa65b09b138a.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில் இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் (CPC) மூலம் விற்பனை செய்யப்படும் எரிபொருளுக்கான அதிகரித்த செலவை முழுமையாக நுகர்வோர் மீது சுமத்த அரசாங்கம் உத்தேசிக்கவில்லை என்றும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T08:13:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நடுவீதியில் இளைஞனுக்கு நடத்தப்பட்ட கொடூரம்; வசமாக பிடிபட்ட சந்தேகநபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/brutal-attack-on-youth-in-jaffna-street-1789275311"></link>
            <id>https://jvpnews.com/article/brutal-attack-on-youth-in-jaffna-street-1789275311</id>
            <summary type="text">ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச் சந்தியில் வைத்து நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச் சந்தியில் வைத்து நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல் விவகாரத்தில், நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">

நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த பிரச்சினை தொடர்பான வழக்கு, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் கடந்த 9 ஆம் திகதி விசாரணைக்காக எடுக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2724bcef-0b19-4f20-9419-6322d79805d3/26-6aa62cf3b0bdd.webp' /></p><h2 style="text-align: justify; ">வாள்வெட்டுத் தாக்குதல்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இந்த வழக்கில் சாட்சியமளித்துவிட்டுத் திரும்பும்போதே, குறித்த இளைஞர் மீது இந்த வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
</p><p style="text-align: justify; ">
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் தலைமறைவாகியிருந்த நிலையில், வவுனியா - நெடுங்கேணி பகுதியில் வைத்து யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">

இக்குற்றச் செயலில் நேரடியாக ஈடுபட்ட மூவர் மற்றும் அச்செயலுக்குத் திட்டமிட்ட ஒருவர் என மொத்தம் நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்ட நபர்களிடம் தற்போது மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவர்களை நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.
</p><p style="text-align: justify; ">
அதேவேளை, சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு வாள்கள், ஒரு கத்தி, ஓர் உள்ளூர்க் கைக்குண்டு மற்றும் இரண்டு மோட்டார்சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-13T08:11:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுர பேரணி குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியிட்ட முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/important-announcement-issued-by-mahinda-1789277615"></link>
            <id>https://tamilwin.com/article/important-announcement-issued-by-mahinda-1789277615</id>
            <summary type="text">
பொதுஜன பெரமுன கட்சியின் நேற்றைய அநுராதபுர போராட்டத்திற்கு வலுச் சேர்த்த நாட்டு மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>
பொதுஜன பெரமுன கட்சியின் நேற்றைய அநுராதபுர போராட்டத்திற்கு வலுச் சேர்த்த நாட்டு மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.
</p><p>
நேற்றைய(12.09.2026) அநுராதபுர மக்கள் பேரணி குறித்து, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து தனது முகநூல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
</p><p>
குறித்த பதிவில், </p><p>

அநுராதபுர இராச்சியத்தில் நிகழ்ந்த கடந்த கால வரலாறு, தற்போதைய சூழலுக்கும் பொருந்தும் என்று நினைக்கின்றேன்.</p><h2>இலங்கையர்களுக்கு எனது நன்றி..&nbsp;</h2><p> 

படையெடுப்புக்கள், எதிர்ப்புக்கள், துரோகங்கள் மட்டுமின்றி வீழ்ச்சிகளுக்குப் பின்னர் மீண்டும் எழுச்சி பெற்ற ஒரு சரித்திரமாக அது இருந்தது. </p><p>

இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தான் பிறந்த மண்ணின் மீது அன்பு இருக்க வேண்டும். நமது நாடு என்ற உணர்வு இருக்க வேண்டும். </p><p>

ஒரு நாடு என்ற வகையில், நாட்டின் வெளிப்புற எதிரியை விட நாட்டுக்குள் இருக்கும் எதிரியே மிகவும் ஆபத்தானவன் என்பது எனது நம்பிக்கை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f068c60-35ac-46ff-8570-7f51a4884b20/26-6aa654cdcd9a9.webp' /></p><p>
</p><p> 
இலங்கை மக்கள் அனைவரது பலத்துடனும், நான் எமது தாய் நாட்டைப் பாதுகாத்து கட்டியெழுப்பினேன்.
</p><p>
எமது மக்கள் மகிழ்ச்சியுடனும் பாதுகாப்புடனும் வாழக்கூடிய ஒரு காலகட்டத்தை மீண்டும் உருவாக்குவதே எமது நோக்கம். </p><p>

கடந்த காலத்தைப் போன்று, எமது கலாசாரம், அடையாளம் மற்றும் தனித்துவத்தைப் பாதுகாத்துக் கொண்டு, அபிவிருத்தியடைந்த தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு உங்கள் அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FPresidentRajapaksa%2Fposts%2Fpfbid0ep7tV3PyYS3j3uxSmcmxFumTkSWN7o7Lm4G8zAZSPK19BgjKSNrc7xAWtBxgEAwDl&show_text=true&width=500" width="500" height="250" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p> </p><p>

அத்துடன், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த, என்னுடைய நீண்ட கால அரசியல் சகாக்கள், மகா சங்கத்தினர், பொதுமக்கள் என அனைவருக்கும் எனது நன்றி.</p><p> 

எப்போதும் எமக்கு பலமாக இருந்த அனைத்து இலங்கையர்களுக்கும் எனது நன்றி என மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p> 
</p>]]></content>
            <updated>2026-09-13T08:07:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான நிலையத்தில் இரு வர்த்தகர்கள் கைது; சோதனையில் சிக்கிய பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/people-arrested-illegal-cigarettes-katunayake-1789286397"></link>
            <id>https://jvpnews.com/article/people-arrested-illegal-cigarettes-katunayake-1789286397</id>
            <summary type="text">கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் கொண்டுவந்த வெளிநாட்டுச் சிகரெட் தொகுதியுடன் இரண்டு இலங்கை பயணிகள் நேற்றைய தினம் சனிக்கிழமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் கொண்டுவந்த வெளிநாட்டுச் சிகரெட் தொகுதியுடன் இரண்டு இலங்கை பயணிகள் நேற்றைய தினம் சனிக்கிழமை (12) இரவில் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய வர்த்தகர்கள் ஆவார்.

சந்தேகநபர்கள் இருவரும் நேற்றைய தினம் மாலை 06.00 மணியளவில் டுபாயிலிருந்து 'எமிரேட்ஸ்' விமானச் சேவைக்குச் சொந்தமான EK-654 எனும் விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecf6f317-b461-45f1-a036-6dd1b3bce86b/26-6aa657fff01de.webp' /></p><p>
</p><p>
அவர்கள் கொண்டு வந்த 4 பயணப் பைகளைச் சோதனையிட்ட போது, அவற்றுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 01 கோடியே 59 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா பெறுமதியான 'டொப் கன்' மற்றும் 'பிளாட்டினம் 07' வகையைச் சேர்ந்த 1,06,600 சிகரெட்டுகளைக் கொண்ட 533 சிகரெட் கார்ட்டூன்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

</p><p>மேலும், கைது செய்யப்பட்ட இரு வர்த்தகர்களையும் சுங்கப் பிரிவினர் தடுத்து வைத்துள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-13T08:00:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வாதிகாரியாக செயற்படுகிறாரா அநுர..! சுமந்திரன் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sumanthiran-levels-allegations-against-anura-1789286144"></link>
            <id>https://tamilwin.com/article/sumanthiran-levels-allegations-against-anura-1789286144</id>
            <summary type="text">ஊழல் மற்றும் முறைகேடு விவகாரங்களில் கடந்த அரசுகளை விட மும்முரமாகச்
செயற்படும் தேசிய மக்கள் சக்தி அரசு, தமிழ் மக்களுக்குரிய எந்தவொரு
பிரச்சினையையும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் மற்றும் முறைகேடு விவகாரங்களில் கடந்த அரசுகளை விட மும்முரமாகச்
செயற்படும் தேசிய மக்கள் சக்தி அரசு, தமிழ் மக்களுக்குரிய எந்தவொரு
பிரச்சினையையும் தீர்க்கத் துளியளவும் முன்வரவில்லை என இலங்கை தமிழரசுக்
கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்
கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p>

சாவகச்சேரியில் நேற்று(12.09.2026) நடைபெற்ற அநுர அரசுக்கு எதிரான உணவு தவிர்ப்புப்
போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>

சர்வாதிகாரியாக செயற்படுகிறாரா அநுர</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

நாட்டை ஆட்சி செய்பவர்கள் அதிகாரங்கள் பகிரப்பட்டதாகக் கூறினாலும், மாகாண
சபைகள் அற்ப சொற்ப அதிகாரங்களோடு இயங்காமல் கிடக்கின்றன. </p><p>மத்திய அரசுக்கு
இல்லாத அதிகாரங்களையும் தன் முகவர்கள் மூலம் ஒன்பது மாகாணங்களிலும்
நிறைவேற்றும் முழுச் சர்வாதிகார நிறைவேற்று அதிகாரியாகவே தற்போதைய ஜனாதிபதி
செயற்படுகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/552a85f1-aefe-427d-a6db-ab31c9569b95/26-6aa6574961eec.webp' /></p><p>
</p><p>
இந்த அரசு ஊழல், இலஞ்சம், பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள்
வியாபாரிகளுக்கு எதிராகத் துணிச்சலாக நடவடிக்கை எடுப்பதை நாங்கள்
வரவேற்கின்றோம்.</p><p> இதற்கு முன்னர் மாறி மாறி ஆட்சி செய்த கட்சிகளைப் போலன்றி,
இரு தரப்புக்கும் எதிராக அவர்கள் எந்தவித சமரசமுமின்றி நடவடிக்கை எடுத்து
வருவது பாராட்டத்தக்கது.

ஊழல்வாதிகளுக்கு எதிராக அவ்வளவு மும்முரமாகச் செயற்படும் இந்த அரசு, தமிழ்
மக்களுக்குரிய எந்தவொரு விடயத்தையும் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை. </p><p>

எங்களது
வாழ்வாதாரத்துக்கு அத்திவாரமான நிலங்களை விடுவிப்பதாகக் கூறிவிட்டு, ஏற்கனவே
2024ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட 700 ஏக்கர் காணிகளையும், ஏற்கனவே திறக்கப்பட்ட
பலாலி வீதியையுமே மீளவும் காட்டி மக்களை ஏமாற்றுகின்றனர். வடக்கில் இதுவரை ஓர்
அங்குல நிலம் கூட புதிதாக விடுவிக்கப்படவில்லை.
</p><h2>

காணி விடுவிப்பு கோரிக்கை</h2><p>

எதிர்க்கட்சியில் இருந்தபோது எங்களுடன் இணைந்து தனியார் காணிகள் விடுவிக்கப்பட
வேண்டும் என்று வாய் கிழியக் கத்தியவர்கள், இப்போது ஜனாதிபதியாகிவிட்டு
இராணுவத்திடம் அறிக்கை கேட்டுள்ளோம் என்று கூறுகின்றார்கள்.</p><p>

அரசின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள முதலாவது வாக்குறுதியான புதிய அரசமைப்பு
உருவாக்கம் தொடர்பில் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71cddb2c-d668-4b9f-aedd-a3fd78dd59ef/26-6aa6574a779e3.webp' /></p><p>
</p><p>
பௌத்த மதபீடங்களின் எதிர்ப்பையும் மீறி அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தைக்
கொண்டுவரும் துணிவைக் காட்டும் அரசு, அதிகாரப் பகிர்வு குறித்துச்
சிந்திப்பதில்லை. </p><p>

எல்லாவற்றையும் தங்களுடைய கைக்குள்ளே கொண்டு வந்து ஒரு கட்சி
ஆட்சியாக மாற்றும் நடவடிக்கைகள்தான் நடக்கின்றன. எனவே, இவற்றை எதிர்த்துத்
தொடர் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றார்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T07:57:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா குடியுரிமைச் சான்றிதழ் விண்ணப்பங்கள் தேக்கம்: காத்திருப்பு காலம் 33 மாதங்களாக அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/proof-of-citizenship-applications-surge-estimated-1789263996"></link>
            <id>https://canadamirror.com/article/proof-of-citizenship-applications-surge-estimated-1789263996</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவில் புதிய சி-3 சட்டத் திருத்தம் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, பரம்பரை வழியிலான குடியுரிமைச் சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவில் புதிய சி-3 சட்டத் திருத்தம் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, பரம்பரை வழியிலான குடியுரிமைச் சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையும், அவற்றுக்கான காத்திருப்பு காலமும் மிகக் கடுமையாக அதிகரித்துள்ளன.</p><p>
கனடா குடியேற்ற, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.</p><p>
தற்போது 1,36,000க்கும் அதிகமானோர் குடியுரிமைச் சான்றிதழ் முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2ef4fb4-606e-4aae-84d3-b7c9754c385b/26-6aa6007e164fd.webp' /></p><p> </p><p>ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 14,000 விண்ணப்பங்கள் அதிகம் ஆகும்.
விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கான காலம் 33 மாதங்களுக்கும் மேலாக அதிகரித்துள்ளது. </p><p>ஆகஸ்ட் மாத நிலவரப்படி 25 மாதங்களாக இருந்த இக்காலம், ஒரே மாதத்தில் மேலும் 8 மாதங்கள் உயர்ந்துள்ளது.
பிற நாடுகளிலிருந்து பெறப்படும் விண்ணப்பங்களுக்கு மேலதிகமாக 3 முதல் 4 மாதங்கள் வரை தேவைப்படும்.</p><p>
மே 31 நிலவரப்படி, புதிய விதிகளின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 51 சதவீதம் அமெரிக்காவில் பிறந்தவர்களுடையதாகும். </p><p>அமெரிக்காவின் தற்போதைய அரசியல் சூழலே இந்த திடீர் அதிகரிப்புக்கு முக்கியக் காரணம் எனப்படுகிறது.
</p><p>அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக மெக்சிகோ, பொலிவியா, ஐக்கிய ராஜ்யம், சீனா, இந்தியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்தும் அதிகளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.&nbsp;</p><p>சிக்கலான விண்ணப்பங்களுக்கு மேலதிக ஆவணப் பரிசீலனைகளும் தீவிர சரிபார்ப்புகளும் தேவைப்படுவதாலேயே காலதாமதம் ஏற்படுவதாகவும், இதர பல காரணிகளும் இந்த அதிகரிப்புக்குக் காரணம் எனவம் அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T07:51:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடைசி பந்தில் பார்படோஸ் அணி த்ரில் வெற்றி: மோட்டி ஆட்டநாயகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/gudakesh-motie-took-last-ball-run-barbados-won-1789285517"></link>
            <id>https://news.lankasri.com/article/gudakesh-motie-took-last-ball-run-barbados-won-1789285517</id>
            <summary type="text">Barbados Tridents qualified for playoff: CPL டி20 போட்டியில் பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜமைக்கா கிங்ஸ்மெனை வீழ்த்தியது...</summary>
            <content type="html"><![CDATA[<p>Barbados Tridents qualified for playoff: CPL டி20 போட்டியில் பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜமைக்கா கிங்ஸ்மெனை வீழ்த்தியது.</p><p>

கென்சிங்டன் ஓவலில் நடந்த கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில், ஜமைக்கா கிங்ஸ்மெனை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் வீழ்த்தியது.&nbsp;</p><h2>மாஸ் சதாகத்&nbsp;47 ஓட்டங்கள் </h2><p>
பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் மற்றும் ஜமைக்கா கிங்ஸ்மென் அணிகளுக்கு இடையிலான CPL டி20 போட்டி கென்சிங்டன் ஓவலில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/050b425a-f7b6-4f11-9617-1020fe87aa79/26-6aa65657b080e.webp' />&nbsp;</p><p></p><p>

முதலில் ஆடிய ஜமைக்கா கிங்ஸ்மென் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ஓட்டங்கள் எடுத்தது. 

மாஸ் சதாகத் 34 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 47 ஓட்டங்கள் விளாசினார். </p><p>ஜஹீம் பொல்லார்ட் 3 விக்கெட்டுகளும், குடாகேஷ் மோட்டி மற்றும் டேனியல் சாம்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.&nbsp;</p><h2>மோட்டி ஆட்டநாயகன்&nbsp;</h2><p>
பின்னர் ஆடிய பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழக்க, சாட்ரக் டெஸ்கார்ட் 42 பந்துகளில் 56 ஓட்டங்கள் விளாசினார்.
</p><p>
கடைசி பந்தில் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட, குடாகேஷ் மோட்டி (Gudakesh Motie) அணியை வெற்றி பெற வைத்தார். </p><p>

8 பந்துகளில் 17 ஓட்டங்கள் (1 சிக்ஸர், 2 பவுண்டரிகள்) மற்றும் 2 விக்கெட்டுகள் வீழ்த்திய குடாகேஷ் மோட்டி ஆட்டநாயகன் விருது பெற்றார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1526364-13fd-4e1e-ac17-bb5f6bff01e3/26-6aa65656e7554.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T07:49:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலுவையில் உள்ள வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/speed-up-vehicle-number-plate-issuance-1789282995"></link>
            <id>https://ibctamil.com/article/speed-up-vehicle-number-plate-issuance-1789282995</id>
            <summary type="text">
வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை விரைவாக வழங்குவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>
வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை விரைவாக வழங்குவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
</p><p>
வாகன இலக்கத் தகடுகளைத் தயாரிக்கும் பொறுப்பைக் கொண்ட நிறுவனத்திற்கு, மற்றொரு இடத்திலும் உற்பத்தியைத் தொடங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

ஆணையாளர் நாயகத்தின் கூற்றுப்படி, இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள் புதிய ஒப்பந்தத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><h2>அடுத்த மாதத்திற்குள் விநியோகம்</h2><p> </p><p>

அதன்படி, இந்த ஆண்டு ஜூன் முதல் ஓகஸ்ட் மாதத்திற்குள் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள் அடுத்த மாதத்திற்குள் விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b86b1a4-5d5e-4075-83cc-66bafadad3f6/26-6aa6540b5fcbc.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, 2025-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான இலக்கத் தகடு தயாரிப்புப் பணி வேறொரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அந்த நிறுவனத்திற்கும் மற்றொரு இடத்தில் உற்பத்தியைத் தொடங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

இந்த வாகனங்களுக்கான நிலுவையில் உள்ள இலக்கத் தகடுகளை முழுமையாகத் தயாரித்து முடிப்பதற்கு அந்த நிறுவனத்திற்கு ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T07:44:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடுமையான மின்னல் தாக்கம் குறித்து வெளியான எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/warning-issued-over-severe-lightning-strikes-1789285007"></link>
            <id>https://jvpnews.com/article/warning-issued-over-severe-lightning-strikes-1789285007</id>
            <summary type="text">கிழக்கு, ஊவா, வட-மத்திய, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்கள் மற்றும் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, குருநாகல் மாவட்டங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கிழக்கு, ஊவா, வட-மத்திய, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்கள் மற்றும் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, குருநாகல் மாவட்டங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">


குறித்த பகுதிகளுக்கு மின்னல் தாக்கம் தொடர்பில் 'அம்பர்' எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7ce52da-d982-4d49-a52c-edba9250d9f6/26-6aa653030646c.webp' /></p><h2 style="text-align: justify; ">முன்னெச்சரிக்கை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இன்று (13) காலை 10.00 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, இரவு 11.30 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
</p><p style="text-align: justify; ">


இதன்படி, கிழக்கு, ஊவா, வட-மத்திய, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்கள் மற்றும் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, குருநாகல் மாவட்டங்களின் சில பகுதிகளில் கடுமையான மின்னல் தாக்கம், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">


மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-13T07:42:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ. 250 கோடி வசூல் செய்து மெகா ஹிட் ஆன இருமுடி OTT ரிலீஸ் தேதி இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/irumudi-movie-ott-release-date-1789282273"></link>
            <id>https://cineulagam.com/article/irumudi-movie-ott-release-date-1789282273</id>
            <summary type="text">இருமுடி&amp;nbsp;ரவி தேஜா பல வருடங்களாக ஒரு கம்பேக் கொடுக்க போராடி வந்தார்; அப்படியிருக்க, இருமுடி ரவி தேஜாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>இருமுடி&nbsp;</h2><p>ரவி தேஜா பல வருடங்களாக ஒரு கம்பேக் கொடுக்க போராடி வந்தார்; அப்படியிருக்க, இருமுடி ரவி தேஜாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1afc0a4-17cf-4b55-a953-eea4ee996e03/26-6aa647e5e61c6.webp' /></p><p>அதுவும் சாதாரண கம்பேக் இல்லை; அவருடைய படங்கள் ரூ. 50 கோடி கூட வசூல் வராத நிலையில், இந்த இருமுடி ரூ. 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.</p><p></p><h2>OTT</h2><p> </p><p>மேலும், தெலுங்கு சினிமா உலகில் மிகப்பெரிய லாபம் கொடுத்த படமாகவும் இருமுடி உள்ளது; கண்டிப்பாக இந்த படம் ரவி தேஜா தாண்டி தெலுங்கு சினிமாவிற்கும் மிக முக்கியமான படமாக அமைந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b58a2085-5e8b-437a-ab8c-fa13204d0330/26-6aa647e6a2eb9.webp' /></p><p>தற்போது எல்லோரும் எதிர்பார்க்கும் ஒரு விஷயம் இருமுடி எப்போது OTT-ல் வரும்?' என்பதுதான் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்க, நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் செப்டம்பர் 18-ம் தேதி இப்படத்தை தங்கள் தளத்தில் வெளியிட உள்ளார்களாம், தியேட்டர் தாண்டி தற்போது OTT-யிலும் இப்படம் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-13T07:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 பில்லியன் டொலர் முதலீட்டில் உருவாக்கப்பட்ட நகரம் - இன்று பேய் நகரம் என அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/forest-city-ghost-city-tech-dream-collapses-1789285145"></link>
            <id>https://news.lankasri.com/article/forest-city-ghost-city-tech-dream-collapses-1789285145</id>
            <summary type="text">Ghost City Tech Dream Collapses: டெக் தொழில்முனைவோரின் கனவு நகரமாக கட்டப்பட்ட Forest City இப்போது Ghost City-யாக மாறியுள்ளது.

Forest City-Ghost Cit...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ghost City Tech Dream Collapses: டெக் தொழில்முனைவோரின் கனவு நகரமாக கட்டப்பட்ட Forest City இப்போது Ghost City-யாக மாறியுள்ளது.</p><h2>

Forest City-Ghost City-யாக மாறியது</h2><p>மலேசியாவின் ஜோகூர் பகுதியில், சிங்கப்பூர் எல்லைக்கு அருகில் உருவாக்கப்பட்ட Forest City உலகின் மிகப்பெரிய நகரத் திட்டங்களில் ஒன்றாகும். </p><p>சுமார் 100 பில்லியன் டொலர் முதலீட்டில் கட்டப்பட்ட இந்த நகரம், உயரமான குடியிருப்புகள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு மையங்கள் என அனைத்தையும் கொண்டிருந்தது.
</p><p>
ஆனால் மக்கள் வசிப்பதற்கான ஆர்வம் குறைவதால், இது “கோஸ்ட் சிட்டி” என அழைக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6f91f07-cca4-4768-98a8-17c60f752b89/26-6aa6531b33701.webp' /></p><p>2024-இல், Balaji Srinivasan உருவாக்கிய Network School என்ற தொழில்நுட்ப சமூக முயற்சி இங்கு தொடங்கப்பட்டது. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், டிஜிட்டல் நோமேட்கள், இளம் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் ஒன்றாக வாழ்ந்து, வேலை செய்து, கற்றுக்கொள்ளும் புதிய வாழ்க்கை முறையை சோதிக்க முயன்றனர்.

பங்கேற்பாளர்கள் மாதம் சுமார் 1,500 டொலர் செலுத்தி, தங்குமிடம், உணவு, வகுப்புகள், உடற்பயிற்சி மற்றும் தொழில்முனைவு வாய்ப்புகளை பெற்றனர். </p><p></p><h2>சிக்கல்கள்&nbsp;</h2><p>ஆனால், ஈரப்பதமான காலநிலை காரணமாக வீடுகளில் பூஞ்சை, உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் குறைவு, பெண்கள்-ஆண்கள் பங்கேற்பில் சமநிலை இல்லாமை போன்ற சிக்கல்கள் எழுந்தன.

மேலும், மலேசிய அதிகாரிகளின் அனுமதி பிரச்சினைகள், சட்ட சிக்கல்கள் காரணமாக, இரண்டு ஆண்டுகளுக்குள் Network School மூடப்பட்டது.
</p><p>
Forest City-யின் வெறிச்சோடிய கட்டிடங்கள், தொழில்நுட்ப சமூகத்துக்கு ஒரு பெரிய சோதனை மேடையாக இருந்தாலும், அது முழுமையான நகரமாக மாற முடியவில்லை. சில நூற்றுக்கணக்கான பங்கேற்பாளர்கள் இருந்தாலும், நூற்றுக்கணக்கான மக்களை தங்க வைக்கும் அளவுக்கு கட்டப்பட்ட நகரம் வெறிச்சோடியே இருந்தது.</p><p>
</p><p></p><p>இந்த முயற்சி, தொழில்நுட்ப சமூகங்கள் எவ்வாறு ஒன்றாக வாழ்ந்து, வேலை செய்து, புதிய சமூக வடிவங்களை உருவாக்க முடியும் என்பதை சோதித்தது.</p><p> ஆனால், நடைமுறை சிக்கல்கள் மற்றும் அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக, Forest City-யின் கனவு குறுகிய காலத்திலேயே முறிந்தது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T07:35:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரெண்டே போட்டோஸ் தான்!! ரசிகர்களை ஈர்க்கும் நடிகை தர்ஷா குப்தா..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/dharsha-gupta-recent-2-photos-post-1789284560"></link>
            <id>https://viduppu.com/article/dharsha-gupta-recent-2-photos-post-1789284560</id>
            <summary type="text">தர்ஷா குப்தாதர்ஷா குப்தா சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர். இதை விட குக் வித் கோமாளி தான் இவருக்கு பெரிய மேடையை போட்டு கொடுத்தது. சமீப காலமாக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>தர்ஷா குப்தா</h2><p>தர்ஷா குப்தா சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர். இதை விட குக் வித் கோமாளி தான் இவருக்கு பெரிய மேடையை போட்டு கொடுத்தது. சமீப காலமாக இன்ஸ்டாவில் Subscribers ஆப்ஷன் வைத்தே இவர் பல லட்சம் சம்பாதித்துவிட்டார் என்று கிளாமரில் எல்லைமீறுவதாகவும் விமர்சனங்கள் எழுந்தது. </p><p></p><p>என் அம்மா எனக்கு கற்றுக்கொடுத்த மதிப்புகளுடன்தான் நான் வாழ்ந்து வருகிறேன். நான் கவர்ச்சியான புகைப்படங்களைப் பகிரலாம், ஆனால் எனக்கென்று சில எல்லைகள் உள்ளன. எந்த அளவிலான பணமோ அல்லது புகழோ வந்தாலும், அந்த எல்லைகளை நான் ஒருபோதும் கடக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். </p><p>தற்போது, ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் 2 புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-13T07:29:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய்; தமிழர் பகுதியில் பொலிஸாரிடம் சிக்கிய தனியார் பேருந்துகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kerosene-used-instead-of-diesel-1789284388"></link>
            <id>https://jvpnews.com/article/kerosene-used-instead-of-diesel-1789284388</id>
            <summary type="text">கந்தளாய் பொலிஸார் நடத்திய சோதனையில், டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயில் சட்டவிரோதமாக இயக்கப்பட்ட இரண்டு தனியார் பேருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.



...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கந்தளாய் பொலிஸார் நடத்திய சோதனையில், டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயில் சட்டவிரோதமாக இயக்கப்பட்ட இரண்டு தனியார் பேருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify; ">


நேற்று (12) மாலை நடத்தப்பட்ட சோதனையில், சம்பந்தப்பட்ட இரண்டு பேருந்துகளின் இரண்டு சாரதிகளும் கைது செய்யப்பட்டு, பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11d64293-fdd7-4a59-a1da-d3bed8c25c12/26-6aa65025bb162.webp' /></p><h2 style="text-align: justify; ">சாரதிகளும் கைது&nbsp;</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


கண்டியிலிருந்து திருகோணமலைக்கு உள்ளூர் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற இந்தப் பேருந்துகள், கந்தளாய் - போட்டான்காட்டு சந்திப்பில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டன.</p><p style="text-align: justify; ">



பேருந்துகள் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயை எரிபொருளாகப் பயன்படுத்தி இயக்கப்படுவது உறுதி செய்யப்பட்ட பின்னர், பேருந்துகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு, சாரதிகளும் கைது செய்யப்பட்டனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



கைது செய்யப்பட்ட சாரதிகள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும், மேலதிக விசாரணைகளுக்குப் பிறகு அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-13T07:28:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூதூர் மஹாவலி கங்கை பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/illegal-sand-mining-in-the-mahaweli-river-1789282574"></link>
            <id>https://tamilwin.com/article/illegal-sand-mining-in-the-mahaweli-river-1789282574</id>
            <summary type="text">திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாவலி கங்கைப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

திருகோண...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாவலி கங்கைப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p> 

திருகோணமலை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்று (12.09.2026) இரவு விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்டிருந்தனர்.</p><h2>தப்பிச் சென்ற வாகனச் சாரதிகள்</h2><p> </p><p>

இதன்போது, அனுமதிப்பத்திரமின்றி கங்கையில் இறங்கி மணல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களும், ஒரு டிப்பர் வாகனமும் கைப்பற்றப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fafc77cd-2f09-4d2c-994f-705cb17c906e/26-6aa64fda8a906.webp' /></p><p> </p><p>

இதன்போது வாகனச் சாரதிகள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p>

கைப்பற்றப்பட்ட வாகனங்கள் மூதூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை மூதூர் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64c81a66-5162-4447-b830-d2706db2f9f8/26-6aa64fdb6ef5f.webp' /></p>]]></content>
            <updated>2026-09-13T07:26:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசமான வானிலையில் சிக்கிய இந்தோனேசியப் படகு... 140 பேர்களைத் தேடும் மீட்புக் குழு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indonesian-ferry-searching-140-people-1789284194"></link>
            <id>https://news.lankasri.com/article/indonesian-ferry-searching-140-people-1789284194</id>
            <summary type="text">Indonesian rescue crews searching for 140 people: 140 பேரைத் தேடும் இந்தோனேசிய மீட்புக் குழுவினர்.
ஜாவா கடலில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட பயணிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indonesian rescue crews searching for 140 people: 140 பேரைத் தேடும் இந்தோனேசிய மீட்புக் குழுவினர்.
</p><p>ஜாவா கடலில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட பயணிகள் படகில் இருந்த 140 பேரைத் தேடும் பணியில் இந்தோனேசிய மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/195aabbf-595f-4e3d-b50f-cfdaf95897fe/26-6aa64f64b3ea3.webp' /></p><p> தொடர்புடையக் கப்பலில் இருந்த மற்ற 103 பேர் மீட்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் மரணமடைந்ததாகத் தேடல் மற்றும் மீட்புப் பணி முகமையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். </p><p>ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 240 க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற பயணிகள் படகு ஒன்று ஜாவா கடலில் மோசமான வானிலையில் சிக்கி தொடர்பை இழந்து காணாமல் போனதாக அந்நாட்டின் தேடல் மற்றும் மீட்பு முகமை தெரிவித்திருந்தது. </p><p>விர்கோ டிரான்ஸ்போர்ட் 8 (Virgo Transport 8) கப்பல் சனிக்கிழமையன்று கிழக்கு ஜாவாவின் சுரபாயா நகரிலிருந்து தெற்கு கலிமந்தானின் பன்ஜார்மாசின் நகருக்குப் புறப்பட்ட நிலையில், அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. </p><p>இந்த நிலையில் தற்போது பல்வேறு கப்பல்களைப் பயன்படுத்தி 103 பேர் மீட்கப்பட்டதாகவும்; அவர்களில் சிலர் கிழக்கு ஜாவாவில் உள்ள ஒரு துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானதும், அதிகாரிகள் தரப்பு ஒரு மீட்புக் குழுவினர் குழு, கப்பல்கள் மற்றும் ஒரு ஹெலிகொப்டரை அப்பயணிகள் கப்பல் கடைசியாக இருந்த இடத்திற்கு அனுப்பி தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். </p><p>போர்னியோ தீவில் அமைந்துள்ள தெற்கு கலிமந்தானின் பன்ஜார்மாசின் நகரில் உள்ள தேடல் மற்றும் மீட்புப் பிரிவு அலுவலகம், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 2 மணியளவில் 'விர்கோ டிரான்ஸ்போர்ட் 8' (Virgo Transport 8) உடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு இது குறித்த தகவலைப் பெற்றதாகத் தெரிவித்தது. தற்போது எஞ்சிய 140 பேர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றே தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-13T07:20:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் 19 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டாயமக்கப்படும் நடைமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/seat-belts-mandatory-on-toll-ways-from-sept-19-1789280151"></link>
            <id>https://ibctamil.com/article/seat-belts-mandatory-on-toll-ways-from-sept-19-1789280151</id>
            <summary type="text">அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பொதுப் போக்குவரத்து பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களின் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது தொடர்பில் அறிவிப்பொன்று வெளியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பொதுப் போக்குவரத்து பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களின் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.</p><p>அதன்படி, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பொதுப்பேருந்துகளில் ஆசனப்பட்டியின் பயன்பாடு செப்டம்பர் 19 முதல் கட்டாயமாக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
</p><p>
ஆசனப்பட்டி வசதிகள் இல்லாத பேருந்துகள், ஆசனப்பட்டி அணியத் தவறும் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>தேசிய போக்குவரத்து ஆணைக்குழு&nbsp;</h2><p>இந்த புதிய விதிமுறை குறித்து பேருந்து பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேலியகொட அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகளால் விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18bafe9a-853a-45f2-9045-df91a0fb592e/26-6aa64e3a9097d.webp' /></p><p>
</p><p>
பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த நடவடிக்கை செப்டம்பர் 19 முதல் உறுதியாக நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.கே. சந்திரபால உறுதிப்படுத்தியுள்ளார்.
</p><p>
விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக அபராதம் அல்லது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், நடைமுறைத்திகதிக்கு முன்னர் மேலதிக விழிப்புணர்வு திட்டங்கள் நடத்தப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T07:16:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சச்சினின் டெஸ்ட் சாதனையை முறியடித்துள்ள ஜோ ரூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/joe-root-breaks-sachin-test-half-century-record-1789283172"></link>
            <id>https://news.lankasri.com/article/joe-root-breaks-sachin-test-half-century-record-1789283172</id>
            <summary type="text">joe root breaks sachin test half century record: சச்சினின் டெஸ்ட் அரை சத சாதனையை ஜோ ரூட் முறியடித்துள்ளார்.

சச்சினின் டெஸ்ட் சாதனையை முறியடித்த ஜோ ...</summary>
            <content type="html"><![CDATA[<p>joe root breaks sachin test half century record: சச்சினின் டெஸ்ட் அரை சத சாதனையை ஜோ ரூட் முறியடித்துள்ளார்.
</p><h3>
சச்சினின் டெஸ்ட் சாதனையை முறியடித்த ஜோ ரூட்
</h3><p>
எட்ஜ்பாஸ்டனில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.</p><p> 

இந்த போட்டியில் 69 பந்துகளில் 62 ஓட்டங்கள் குவித்த இங்கிலாந்தின் ஜோ ரூட் (Joe Root), சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் சாதனையை முறியடித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47363730-5c10-49a6-9345-3abcefdb3631/26-6aa64b65664b6.webp' /></p><p> 

நேற்று அடித்த அரைசதம் மூலம், ஜோ ரூட்டின் டெஸ்ட் அரைசதங்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.</p><p> 

இதன் மூலம், டெஸ்ட் வரலாற்றில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார்.&nbsp;</p><p></p><p>

முன்னதாக சச்சின் டெண்டுல்கர் 68 அரைசதங்களுடன் இந்த சாதனை பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். தற்போது ஜோ ரூட் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.</p><p>

மேற்கிந்தியத் தீவுகளின்ஷிவ்நரைன் சந்தர்பால் 66 அரைசதங்களுடன் 3வது இடத்திலும், அவுஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர், இந்தியாவின் ராகுல் டிராவிட் தலா 63 அரைசதங்களுடன் அடுத்தத இடங்களில் உள்ளனர். </p><p>

இதே போல், டெஸ்ட் போட்டிகளில் 15,921 ஓட்டங்களுடன் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட்டில் அதிகபட்ச ஓட்டங்கள் வைத்துள்ள வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
</p><p>
தற்போது 14,278 ஓட்டங்களை குவித்துள்ள ஜோ ரூட்டிற்கு இந்த சாதனையை முறியடிக்க 1,643 ஓட்டங்களே தேவைப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T07:11:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் : அசத்தலான அம்மிணி கார கொழுக்கட்டை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/ganesh-chaturthi-special-ammini-kozhukattai-recipe-1789280901"></link>
            <id>https://manithan.com/article/ganesh-chaturthi-special-ammini-kozhukattai-recipe-1789280901</id>
            <summary type="text">விநாயகரின் பிறந்த தினமான சதுர்த்தி தினத்தில் விநாயகருக்கு விரும்பமான கொழுக்கட்டை செய்து படைத்து சிறப்பு பூஜை செய்வது வழக்கம். 

அப்படி ஒவ்வொரு வருடம...</summary>
            <content type="html"><![CDATA[<p>விநாயகரின் பிறந்த தினமான சதுர்த்தி தினத்தில் விநாயகருக்கு விரும்பமான கொழுக்கட்டை செய்து படைத்து சிறப்பு பூஜை செய்வது வழக்கம். </p><p>

அப்படி ஒவ்வொரு வருடமும் ஒரே மாதிரியாக கொழுக்கட்டை செய்யாமல் இந்த தடவை சற்று வித்தியாசமாக வீட்டில் உள்ள சர்க்கரை நோயாளிகளும் தாராளமாக சாப்பிடும் வகையில், கார கொழுக்கட்டையையும் சேர்த்து செய்யுங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c3c951d-07af-4d63-b16c-cd6a66f16c55/26-6aa64ba357d10.webp' /></p><p></p><p> அதுவும் அம்மிணி கார கொழுக்கட்டையை செய்யுங்கள்.

இந்த அம்மிணி கார கொழுக்கட்டையை எளிமையான முறையில் பஞ்சுபோல் மெது மெதுவென எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். </p><h2>

தேவையான பொருட்கள்
</h2><p>கொழுக்கட்டை மாவு / பச்சரிசி மாவு – 1 கப்<br></p><p>&nbsp;உப்பு– ½ டீஸ்பூன்
</p><p>நெய் – 1–2 டீஸ்பூன்
</p><p>சுடுநீர் – தேவையான அளவு
அரைக்க</p><p>பச்சை மிளகாய் – 3
</p><p>தேங்காய் – ½ கப்
</p><p>கறிவேப்பிலை – 1 கொத்து</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebe3f36d-dd49-434b-925e-0a83b2ccb2cc/26-6aa64ba40c7fe.webp' /></p><p>
</p><p><b>தாளிக்க தேவையானவை</b></p><p>
எண்ணெய் – 2 டீஸ்பூன்</p><p>
கடுகு – ½ டீஸ்பூன்
</p><p>உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்</p><p>
கறிவேப்பிலை – 1 கொத்து</p><p>
வரமிளகாய் – 1–2
</p><p>பெருங்காயத் தூள் – ¼ டீஸ்பூன்</p><p>
உப்பு – ¼ டீஸ்பூன்
</p><p>வேக வைத்த கொழுக்கட்டை – தேவையான அளவு</p><p>
அரைத்த தேங்காய் விழுது – தேவையான அளவு
</p><p>கொத்தமல்லி – சிறிதளவு</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89527a03-7406-4681-8e7d-f3e7beaba50e/26-6aa64ba4b4cd7.webp' /></p><p>
</p><h2>செய்முறை</h2><p>
முதலில் ஒரு பாத்திரத்தில் கொழுக்கட்டை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உப்பு மற்றும் நெய் சேர்த்து, சுடுநீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மென்மையாக பிசைந்து கொள்ளுங்கள். மாவை மூடி வைத்து சுமார் 15 நிமிடங்கள் ஊற விடுங்கள்.
</p><p>
இதற்கிடையில், மிக்சர் ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7c3bf78-0e3f-41d7-ac1b-fd2cd0a2dced/26-6aa64ba566f44.webp' /></p><p></p><p>
</p><p>
பின்னர் ஊற வைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள். அவற்றை இட்லித் தட்டில் வைத்து, இட்லி பாத்திரத்தில் சுமார் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுத்து வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.</p><p>அதனையடுத்து,&nbsp; ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றுங்கள். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.&nbsp;</p><p>

பிறகு வேக வைத்த கொழுக்கட்டையைச் சேர்த்து ஒரு நிமிடம் மெதுவாக கிளறுங்கள். அதனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதையும் சேர்த்து நன்றாகக் கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து இறுதியாக கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான அம்மிணி கொழுக்கட்டை தயார்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T07:07:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் அசத்திய தமிழக முதலமைச்சர் விஜய் ; இணையத்தை கலக்கும் ட்ரெண்டிங் காட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-nadu-cm-vijay-impresses-in-london-1789282542"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-nadu-cm-vijay-impresses-in-london-1789282542</id>
            <summary type="text">லண்டனில் நடிகர் அஜித் பங்கேற்ற சிற்றூந்து பந்தய நிகழ்வில், முதலமைச்சர் விஜய் ரேசர் உடையில் திடீரென வருகை தந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">லண்டனில் நடிகர் அஜித் பங்கேற்ற சிற்றூந்து பந்தய நிகழ்வில், முதலமைச்சர் விஜய் ரேசர் உடையில் திடீரென வருகை தந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
</p><p style="text-align: justify; ">
ரேசிங் களத்தில் விஜய் மற்றும் அஜித் இருவரும் ரேசர் உடையில், இந்திய தேசியக் கொடியை ஏந்தியவாறு ஒன்றாக நிற்கும் நிழற்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2dea059b-dfec-4659-8bc5-ded42400a6ad/26-6aa64d35ca4cd.webp' /></p><p style="text-align: justify; ">இருவரும் ஒரே இடத்தில் இணைந்து தேசியக் கொடியை ஏந்தியுள்ள இந்த அரிய காட்சி, விஜய் மற்றும் அஜித் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; ">
கோர்ப்பரேட் பந்தய உடையில் அங்கு சென்றிருந்த விஜய், ரசிகர்களைப் பார்த்து கை அசைத்து வாழ்த்து தெரிவித்ததுடன், நடிகர் அஜித்திற்கு தனது ஆதரவையும் வாழ்த்துக்களையும் நேரில் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

இதனைத் தொடர்ந்து, இருவரும் இணைந்து காணப்படும் நிழற்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-13T07:02:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு ; சொகுசு வேனுக்குள் அரங்கேறிய தகாத செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-shooting-at-midnight-1789273765"></link>
            <id>https://jvpnews.com/article/police-shooting-at-midnight-1789273765</id>
            <summary type="text">கம்பஹா, அஸ்கிரிய பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது பொலிஸாரால் நேற்று (12) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

 

மேல் மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா, அஸ்கிரிய பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது பொலிஸாரால் நேற்று (12) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
 

மேல் மாகாணப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வேன் ஒன்றின் மூலம் கம்பஹா பிரதேசத்திற்கு போதைப்பொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக முற்கூட்டியே கிடைத்த தகவலுக்கு அமைவாக வெலிவேரிய பொலிஸ் நிலையத்தின் உத்தியோகத்தர்கள் குழுவொன்று நேற்றைய தினம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99c2670f-bf64-40a1-a98d-5dbbd240e160/26-6aa626a6a7253.webp' /></p><h2>துப்பாக்கிச் சூடு&nbsp;</h2><p>
 

அதற்கமைய, குறித்த வேன் கம்பஹா உடுகம்பொல நோக்கிப் பயணம் செய்வதை உறுதிப்படுத்திக் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஜீப் வண்டி மூலம் குறித்த வேனை நுணுக்கமாகப் பின்தொடர்ந்துள்ளனர்.</p><p>

 

இதன்போது, பொலிஸ் உத்தியோகத்தர்கள் தன்னைத் பின்தொடர்வதை அறியாத வேனின் சாரதி, உடுகம்பொல வீதியின் மல்வத்த சந்தைப் பகுதியில் வேனை வீதியோரமாக நிறுத்தியுள்ள நிலையில், பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஜீப்பிலிருந்து இறங்கி வேனைப் பரிசோதிக்க முற்பட்டுள்ளனர்.
</p><p>
 

இதன்போது வேனின் சாரதி, வீதியில் சென்ற பல வாகனங்களை விபத்துக்குள்ளாக்கியவாறு வேனைப் பல தடவைகள் உடனடியாக முன்னும் பின்னுமாக இயக்கியதுடன், பொலிஸ் ஜீப் மீதும் மோதி உத்தியோகத்தர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தித் தப்பியோட முயன்றுள்ளார்.
</p><p>
 

இதனையடுத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் வேன் நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வேனின் சாரதியும் காயமடைந்துள்ளார்.
</p><p>
 

காயமடைந்த சாரதியைப் பொலிஸ் பாதுகாப்புடன் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, வேனுக்குள் இருந்து 15 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் 9 கிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T07:02:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[Toronto Film Festival-லில் கீர்த்தி சுரேஷ்.. Stunning லுக்கில் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/toronto-film-festival-keerthy-suresh-photoshoot-1789280933"></link>
            <id>https://cineulagam.com/article/toronto-film-festival-keerthy-suresh-photoshoot-1789280933</id>
            <summary type="text">தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் &#039;டோரதி&#039; எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'டோரதி' எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் 25-ஆம் தேதி வெளியாகிறது. ஆனால், அதற்கு முன் டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் (Toronto International Film Festival) இப்படம் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது. </p><p>இந்த திரைப்பட விழாவில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷ், தன்னுடைய Stunning லுக்கில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. </p><p>இதோ அந்த போட்டோஷூட்:</p>]]></content>
            <updated>2026-09-13T07:00:00+00:00</updated>
        </entry>
    </feed>
