<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-11T17:27:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த தலைமையில் அரசாங்கத்திற்கு எதிராக அனுராதபுரத்தில் களமிறங்கும் மொட்டுக்கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anuradhapura-rally-led-by-mahinda-rajapaksa-1789146588"></link>
            <id>https://tamilwin.com/article/anuradhapura-rally-led-by-mahinda-rajapaksa-1789146588</id>
            <summary type="text">இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) கட்சி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நாளை (12) அனுராதபுரத்தில் “ஜனசதன” மக்கள் பேரணியை நடத்தவுள்ளதாக, SLPP தேச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) கட்சி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நாளை (12) அனுராதபுரத்தில் “ஜனசதன” மக்கள் பேரணியை நடத்தவுள்ளதாக, SLPP தேசிய அமைப்பாளர் டி.வி. சாணக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தப் பேரணி நடத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>&nbsp;மகிந்த ராஜபக்ச</h2><p>
</p><p>
மேலும், அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற அழுத்தம் கொடுப்பதும் இந்தப் பேரணியின் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்தப் பேரணி சனிக்கிழமை (12) அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T17:25:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நார்வே இளவரசி ஆஸ்ட்ரிட் காலமானார்: சோகத்தில் ஆழ்ந்த அரச குடும்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/norway-princess-astrid-passed-away-at-94-1789147232"></link>
            <id>https://news.lankasri.com/article/norway-princess-astrid-passed-away-at-94-1789147232</id>
            <summary type="text">நார்வே நாட்டின் இளவரசி ஆஸ்ட்ரிட் தன்னுடைய 94வது வயதில் வெள்ளிக்கிழமை காலமானார். இளவரசி ஆஸ்ட்ரிட் காலமானார்வெள்ளிக்கிழமை நார்வே நாட்டின் இளவரசி ஆஸ்ட்ரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நார்வே நாட்டின் இளவரசி ஆஸ்ட்ரிட் தன்னுடைய 94வது வயதில் வெள்ளிக்கிழமை காலமானார்.</p><h2> இளவரசி ஆஸ்ட்ரிட் காலமானார்</h2><p>வெள்ளிக்கிழமை நார்வே நாட்டின் இளவரசி ஆஸ்ட்ரிட்(Princess Astrid&nbsp;) தனது 94வது வயதில் காலமானார். இதனால் நார்வே அரச குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.</p><p> மறைந்த மன்னர் ஹரால்டின் சகோதரியான ஆஸ்ட்ரிட் தன்னுடைய சகோதரர் உயிரிழந்த சில வாரங்களில் உயிரிழந்துள்ளார்.</p><p> கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் புரிந்து பிறகு கடந்த மாதம் மன்னர் ஹரால்டு(89) உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a13a5a9f-e531-49f0-8866-8e578146b4b3/26-6aa43861e3c0b.webp' /></p><p>மன்னர் ஹரால்டின் இறுதிச் சடங்கு கடந்த புதன்கிழமை ஓஸ்லோ பேராலயத்தில் நடைபெற்ற நிலையில், அதில் இளவரசி ஆஸ்ட்ரிட் தன்னுடைய கடைசி பொது நிகழ்வாக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p> இளவரசியின் மறைவு தொடர்பாக அரண்மனை வெளியிட்ட குறிப்பில், தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இளவரசி ஆஸ்ட்ரிட் தன்னுடைய அரச குடும்பத்தை அன்பாகவும் பொறுப்புடனும் கவனித்து கொண்டதாக தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T17:24:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[செங்கடலின் முழுப் பகுதியையும் கைப்பற்றிய ஹூதி கிளர்ச்சியாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/houthi-rebels-seized-control-entire-red-sea-region-1789147457"></link>
            <id>https://canadamirror.com/article/houthi-rebels-seized-control-entire-red-sea-region-1789147457</id>
            <summary type="text">யேமனின் முக்கிய நகரமான மோகாவைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, உலகின் முக்கிய வர்த்தகக் கடல்வழிகளில் ஒன்றான பாப் அல்-மன்தெப் நீரிணைப் பகுதியில் தங்களது அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யேமனின் முக்கிய நகரமான மோகாவைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, உலகின் முக்கிய வர்த்தகக் கடல்வழிகளில் ஒன்றான பாப் அல்-மன்தெப் நீரிணைப் பகுதியில் தங்களது அதிகாரத்தை ஹூதி கிளர்ச்சியாளர்கள் மேலும் விரிவுபடுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d30a2cc7-16fb-498d-9226-8c09147bfd26/26-6aa4394387a38.webp' /></p><p>இதன் மூலம் யேமனின் ஒட்டுமொத்த செங்கடல் கடலோரப் பகுதியின் கட்டுப்பாட்டையும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இதற்கிடையில், யேமனின் மோகா விமான நிலையத்தை இலக்காகக் கொண்டு சவூதி படைகள் இரண்டு வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஹூதிகளுடன் தொடர்புடைய அல்-மஸீரா (Al-Masirah) தொலைக்காட்சி அலைவரிசை செய்தி வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-09-11T17:24:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டுத் தரப்பினரின் போராட்டம் பயனளிக்காது! அமைச்சர் பிமல் ரத்நாயக்க திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protests-will-not-yield-results-bimal-rathnayake-1789146853"></link>
            <id>https://tamilwin.com/article/protests-will-not-yield-results-bimal-rathnayake-1789146853</id>
            <summary type="text">தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக்
கவிழ்க்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க
தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக்
கவிழ்க்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க
தெரிவித்தார்.
</p><p>
அனுராதபுரத்தில் இன்று(11.9.2026) அநுர அரசுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன
பெரமுன கட்சியின் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் தொடர்பில்
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.</p><p>

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

"நாட்டின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மக்களின் அசைக்க முடியாத ஆதரவு எமது
அரசுக்கு உள்ளது. மக்களின் உண்மையான ஆணை அரசின் பக்கமே முழுமையாகச்
சாய்ந்துள்ளது.</p><h2>போராட்டங்கள்</h2><p>
</p><p>
மொட்டுக் கட்சியினர் அல்லது எதிர்க்கட்சிகள் மக்களை வலுக்கட்டாயமாகத் திரட்டி
முன்னெடுக்கும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் எவ்விதப் பலனையும் தராது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80506689-03c6-456d-b966-6cc5cbcba32e/26-6aa436e83461f.webp' /></p><p>
</p><p>
மக்களின் கவனத்தை திசைதிருப்பும் இத்தகைய வெற்று முயற்சிகள் யாவும்
தோல்வியிலேயே முடியும்.</p><p>

தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக்
கவிழ்க்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாது.

மக்களின் பேராதரவுடன் ஆட்சியமைத்துள்ள இந்த அரசை எந்தச் சக்தியாலும் அசைக்க
முடியாது.</p><h2>முழுமையான ஒத்துழைப்பு</h2><p>
</p><p>
இத்தகைய போராட்டங்கள் யாவும் நாட்டு நலனுக்காக அல்லாமல், அரசியல்
காழ்ப்புணர்ச்சிகளையும் சுயநல அஜண்டாக்களையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a1f7e81-29f3-43e9-abdc-740f3cb41f35/26-6aa436e8dcfd9.webp' /></p><p>

மக்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் அரசாட்சியைக் குலைக்க எதிர்க்கட்சிகள்
மேற்கொள்ளும் தந்திரோபாயங்களை மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர்.
</p><p>
நாட்டு மக்கள் அனைவரும் எதிர்கொண்டுள்ள சவால்களைத் தீர்த்து, நாட்டைப்
பொருளாதார ரீதியாகக் கட்டியெழுப்பும் அரசின் முறையான வேலைத்திட்டங்களுக்குப்
பொதுமக்கள் தொடர்ந்தும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T17:20:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் அயர்லாந்து விஜயம்...! மக்களிடையே எழுந்துள்ள பலத்த எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/69-in-ireland-oppose-trump-visit-amid-protests-1789142023"></link>
            <id>https://ibctamil.com/article/69-in-ireland-oppose-trump-visit-amid-protests-1789142023</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அயர்லாந்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்தநிலையில், அவரது வருகைக்கு அயர்லாந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அயர்லாந்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>இந்தநிலையில், அவரது வருகைக்கு அயர்லாந்து மக்களிடையே பலத்த எதிர்ப்பும் அதிருப்தியும் கிளம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்தநிலையில் சண்டே இண்டிபெண்டன்ட் (Sunday Independent) மற்றும் அயர்லாந்து திங்க்ஸ் (Ireland Thinks) அமைப்புகள் இணைந்து இது தொடர்பில் கருத்து கணிப்பொன்றை நடத்தியுள்ளது.</p><p></p><h2>இனப்படுகொலைக்கு வசதி&nbsp;</h2><p> நடத்திய கருத்துக்கணிப்பில், அயர்லாந்து மக்களில் 69 சதவீதத்தினர் ட்ரம்பின் இந்த வருகைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.</p><p>டப்ளின் டிரினிட்டி கல்லூரியின் (Trinity College Dublin) பொருளாதாரத் துறை மாணவரும், அயர்லாந்தின் BDS (பாய்காட், டைவெஸ்ட்மென்ட், சாங்க்ஷன்ஸ்) இயக்கத்தின் தலைவருமான ஷான் ராட்க்ளிஃப் (Sean Radcliffe) இது குறித்து ஊடகங்களிற்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef2c3963-0091-402e-89a5-ff9b8c05fcbb/26-6aa433bac6cb1.webp' /></p><p>இந்தநிலையில் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருக்கும் ஒருவரை சாதாரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அயர்லாந்து பிரதமர் (Taoiseach) மைக்கேல் மார்ட்டின் (Micheal Martin), அமெரிக்கா இனப்படுகொலைக்கு வசதி செய்து கொடுத்து உதவி வருகிறது என்பதை பகிரங்கமாகவும் உறுதியாகவும் வெளிப்படையாகக் கூற வேண்டும் என்றும் மாணவர் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்காவின் அணுகுமுறை காரணமாகவே அயர்லாந்து மக்களிடையே ட்ரம்பின் இந்த வருகைக்கு எதிரான அதிருப்தி வலுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T17:18:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக வெப்பம் குறித்து இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/early-warning-regarding-extreme-heat-1789146011"></link>
            <id>https://jvpnews.com/article/early-warning-regarding-extreme-heat-1789146011</id>
            <summary type="text">நாளை (12) செல்லுபடியாகும் வகையில் வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை மையம் வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாளை (12) செல்லுபடியாகும் வகையில் வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை மையம் வெளியிட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருணாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான வெப்பச் சுட்டெண் (Heat Index), “அவதானம் செலுத்தப்பட வேண்டிய” மட்டத்தில் காணப்படக்கூடும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edd9925d-2c6c-4f66-bb1a-8075a7562840/26-6aa4339cd8483.webp' /></p><p>எனவே, குறித்த பகுதிகளில் வசிப்பவர்கள் பகல் வேளையில் அதிக வெப்பத்துக்கு நீண்ட நேரம் வெளிப்படுவதைத் தவிர்த்து, போதியளவு நீர் அருந்தி, வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T17:00:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதியால் நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம்: ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-pressure-on-the-judiciary-sjb-1789145384"></link>
            <id>https://tamilwin.com/article/president-pressure-on-the-judiciary-sjb-1789145384</id>
            <summary type="text">அரசமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் வெளிவராத
நிலையில், அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் எனக் கூறி ஜனாதிபதி அநுரகுமார...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் வெளிவராத
நிலையில், அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் எனக் கூறி ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்க நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் கொடுத்து வருகின்றார் என்று
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் சட்ட செயலாளர் ரஜித லக்மால் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

"22ஆவது அரசமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும்
சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படாத நிலையில் உள்ளது.</p><p>நாட்டினுடைய பிரதான நிறைவேற்று
அதிகாரியான ஜனாதிபதி மேடைகளில் ஏறி 'தீர்ப்பு வந்தவுடன் அதனை மூன்றில் இரண்டு
பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவோம்' எனக் கூறுவது நீதிமன்றத்தின் மீது
விடுக்கப்படும் நேரடி அழுத்தமாகும்.</p><h2>அத்தியாவசிய மருந்துகள்&nbsp;</h2><p>

எழுதப்படாத ஒரு தீர்ப்பு குறித்து நாட்டின் ஜனாதிபதி பகிரங்கமாகப் பேசுவது
ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. இன்று நாட்டில் உள்ள பிரதான மருத்துவமனைகளில்
நோயாளிகளுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகள் எதுவும் இல்லை. ஆனால்,
ஜனாதிபதியோ மக்கள் வினோதத்துக்காக மருத்துவமனைக்குச் செல்கின்றார்.</p><p>வீடுகளிலேயே கொத்தமல்லி குடித்துவிட்டு இருக்குமாறும் கூறுகின்றார்.

மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லை என்பதை மறைக்கவே ஜனாதிபதி இவ்வாறு
கூறுகின்றாரா. இதன் காரணமாகவே மக்கள் அவரை இன்று 'கொத்தமல்லி ஜனாதிபதி' என
விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9694d6c-bf9f-454d-b095-5a40ec5c6d3b/26-6aa432ca14b01.webp' /></p><p>
</p><p>
ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், 2025 ஜனவரி மாதம் இடம்பெற்ற
கொள்கலன் விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையைத் தம் வசமிருந்தும் அதனை
வெளிப்படுத்தாமல் பூட்டி வைத்துள்ளனர்.
</p><p>
போலி கலாநிதி பட்டம் தொடர்பான குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் சபாநாயகர்
மீதோ அல்லது நிலக்கரி கொள்முதல் ஊழல்கள் மீதோ இதுவரை எவ்வித முறையான
விசாரணைகளும் நடத்தப்படவில்லை.</p><h2>அரச போலிப் பேரணி</h2><p>ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அரசு
தவறியுள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை
இரத்துச் செய்வதாக வாக்குறுதியளித்தவர்கள், இன்று அப்பாவி மக்களுக்கு எதிராக
அதே சட்டத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffb89da7-330f-4f52-9bf1-a343971e57e7/26-6aa432cabd10d.webp' /></p><p>
</p><p>
மக்களின் அதிருப்தியையும் சரிந்துவரும் செல்வாக்கையும் மறைக்கவே பஸ்கள் மூலம்
ஆட்களைத் திரட்டி அரசு போலிப் பேரணிகளை நடத்தி வருகின்றது.</p><p>

இந்த அரசுக்கு இன்னும் 3 ஆண்டுகள் மட்டுமே அவகாசம் உள்ளது. அதற்குப் பிறகு
மக்களால் இவர்கள் முற்றாக நிராகரிக்கப்படுவார்கள். எதிர்க்கட்சியாக நின்று
மக்களுக்கான ஜனநாயகப் போராட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து
முன்னெடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T16:56:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர்ட்ஸ்மத் அகதிகள் எதிர்ப்பு போராட்டம்: முதல் நபரை கைது செய்த பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/portsmouth-anti-migration-protests-1-man-arrested-1789145354"></link>
            <id>https://news.lankasri.com/article/portsmouth-anti-migration-protests-1-man-arrested-1789145354</id>
            <summary type="text">Portsmouth Anti-Migration Protests 1st man arrested: போர்ட்ஸ்மத் அகதிகள் எதிர்ப்பு போராட்டம் தொடர்பில் முதல் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Portsmouth Anti-Migration Protests 1st man arrested: போர்ட்ஸ்மத் அகதிகள் எதிர்ப்பு போராட்டம் தொடர்பில் முதல் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2> முதல் நபர் கைது</h2><p>பிரித்தானியாவில் கடந்த வாரம் நடந்த அகதிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டது மற்றும் காவல்துறை அதிகாரிகளை தாக்கியது ஆகிய குற்றச்சாட்டின் கீழ் பால்ஸ்ரோவ்(Paulsgrove) பகுதியை சேர்ந்த 42 வயது நபரை வெள்ளிக்கிழமை ஹாம்ப்ஷயர்(Hampshire) காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p>100க்கும் மேற்பட்ட அகதிகளுடன் RNLI படகுகள் துறைமுகத்திற்கு வந்த நிலையில், அதனை எதிர்த்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்கள் பல மணி நேரம் துறைமுக பாதையை முடக்கினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/058321a8-975d-49af-a29e-e9c3a2e37ba4/26-6aa4310c5d69c.webp' /></p><p>மேலும் அப்போது ஏற்பட்ட மோதலின் போது சில காவலர்கள் காயமடைந்தனர். இறுதியில் திங்கட்கிழமை காலை கூட்டம் கலைக்கப்பட்டது.</p><p>இந்த வார சனிக்கிழமை போர்ட்ஸ்மவுத் நகர மையத்தில் சவுத் கோஸ்ட் பேட்ரியாட்ஸ் அமைப்பினர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.</p><p></p><h2>முகமூடி அணிந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை</h2><p>
இந்நிலையில் போராட்டக்காரர்கள் யாரும் முகமூடி அணிந்து கொண்டு ஆர்ப்பாட்ட பகுதிக்குள் வரக்கூடாது என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர்.</p><p> உத்தரவை மீறி முகமூடி அணியும் எவரும் குற்றவாளியாக கருதப்பட்டு உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p> முகமூடி அணிந்த நபர்களால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக காவல்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-11T16:49:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் திகில் சம்பவம்; எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நடந்தது என்ன!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/stabbing-at-kilinochchi-fuel-station-1789133141"></link>
            <id>https://jvpnews.com/article/stabbing-at-kilinochchi-fuel-station-1789133141</id>
            <summary type="text">&amp;nbsp; கிளிநொச்சி நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குள் நேற்றிரவு (10) 8.00 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கிளிநொச்சி நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குள் நேற்றிரவு (10) 8.00 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 இந்த கதாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். 

டிப்பர் வாகனம் ஒன்றிற்கு எரிபொருள் நிரப்பிய பின்னர், அவ்வாகனத்தைச் சற்று முன்னோக்கி நகர்த்துமாறு எரிபொருள் நிரப்பு நிலையப் பணியாளர் கோரியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/365c7b2a-3e9c-44b3-b2de-5148bf95adf6/26-6aa4015723946.webp' /></p><h2>&nbsp;சாரதிக்கும் பணியாளருக்கும் வாய்த்தர்க்கம்</h2><p>

 இதன் காரணமாகச் சாரதிக்கும் பணியாளருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. 

தனியே சென்ற டிப்பர் வாகனச் சாரதி, சிறிது நேரத்தின் பின்னர் மேலும் ஐந்து பேருடன் மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்துள்ளார்.</p><p></p><p> 

அங்கு இருந்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர், முகாமையாளர், பணியாளர் மற்றும் வாடிக்கையாளர் ஒருவர் மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். </p><p>

இத்தாக்குதலில் காயமடைந்த நான்கு பேரும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T16:44:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொக்கட்டிச்சோலை ஆலய குரு சிவஸ்ரீ வ. சோதிலிங்கம் குருக்கள் இறைவனடி சேர்ந்தார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sothilingam-gurukkal-has-attained-the-lord-s-feet-1789145004"></link>
            <id>https://jvpnews.com/article/sothilingam-gurukkal-has-attained-the-lord-s-feet-1789145004</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பெருநிலப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் நீண்டகால ஆலய குரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பெருநிலப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் நீண்டகால ஆலய குருவாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய சிவஸ்ரீ வ. சோதிலிங்கம் குருக்கள் இன்று (11.09.2026) வெள்ளிக்கிழமை சுகவீனம் காரணமாக இறைவனடி சேர்ந்தார்.</p><p></p><p>

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் பூர்வீக கால பாரம்பரிய நடைமுறைகள் தொடர்பில் ஆழ்ந்த அறிவு கொண்டிருந்த அவர், அவற்றை ஆதாரபூர்வமாக மற்றவர்களுக்கு தெளிவுபடுத்தக்கூடிய ஒரு வரலாற்றுப் பொக்கிஷமாகத் திகழ்ந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50edcc04-1929-487f-9661-80582c868762/26-6aa42fae3b8d0.webp' /></p><p>ஆலயத்தின் நீண்டகால வரலாறு மற்றும் பாரம்பரிய நடைமுறைகள் தொடர்பான பல்வேறு அரிய தகவல்களை அவர் அறிந்திருந்ததுடன், அவற்றை அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துரைப்பதில் பெரும் அக்கறை கொண்டிருந்தார்.
</p><p>
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் 1998 முதல் 2004 வரை வண்ணக்கராகவும் செயலாளராகவும் பணியாற்றிய காலப்பகுதியில், ஆலயத்தின் பல்வேறு வரலாற்றுத் தகவல்களை சோதிலிங்கம் குருக்கள் தனக்குத் தெரிவித்திருந்ததாக நெருங்கியவர்கள் நினைவுகூருகின்றனர்.
</p><p>
அடியார்கள் மத்தியில், “கொக்கட்டிச்சோலை சிவன் கோயில் என்றால் சோதிலிங்கம் குருக்கள்; சோதிலிங்கம் குருக்கள் என்றால் கொக்கட்டிச்சோலை சிவன் கோயில்” என்ற எண்ணக்கருத்தே நீண்டகாலமாக நிலவி வந்தது.</p><p>

அன்னாரின் இல்லம் மட்டக்களப்பு கூளாவடியில் அமைந்துள்ளதுடன், அன்னாரின் இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T16:43:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் குறித்து பொலிஸார் வெளியிட்டுள்ள சந்தேகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/six-grenade-attacks-reported-1789144772"></link>
            <id>https://tamilwin.com/article/six-grenade-attacks-reported-1789144772</id>
            <summary type="text">தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் பயன்படுத்துகின்றார்களா என்ற சந்தேகம் எழுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் பயன்படுத்துகின்றார்களா என்ற சந்தேகம் எழுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழுக்களினால் 06 கைக்குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>இதில் 3 தாக்குதல்கள் கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே பதிவாகியுள்ளன. 
யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளிடமிருந்து பெறப்பட்ட கைக்குண்டுகளே இவ்வாறான தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படுவதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.</p><h2>குற்றவியல் பின்னணி</h2><p>
</p><p>இதன்காரணமாக, பாதாள உலகக் குற்றங்களைக் கட்டுப்படுத்த எதிர்காலத்தில் முப்படைகளின் உதவியைப் பெறுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (11) அதிகாலை 3.00 மணியளவில், தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடு ஒன்றின் கதவை அடையாளம் தெரியாத நபர் தட்டியுள்ளார். </p><p>வீட்டார் கதவைத் திறந்ததும் அந்நபர் கைக்குண்டை வீட்டிற்குள் வீசிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 17 வயதுடைய கசுன் ரஷ்மிக மற்றும் அவரது 11 வயதுடைய சகோதரரான துமிந்த கீஹான் ஆகிய இரு சிறுவர்களும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/165ea34e-213d-4db0-905c-cfee39a99058/26-6aa42ec60c3a0.webp' /></p><p>
</p><p>இச்சிறுவர்களின் தந்தையான 55 வயதுடைய நளின் துசாந்த பெரேரா என்பவரின் காலில் காயமேற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>இவர் மீது எவ்வித குற்றவியல் பின்னணியோ குற்றச்சாட்டுகளோ இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>அருகில் உள்ள வீடொன்றில் வசிக்கும் உறவினர்கள் சிலர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் "படவிட்ட அசாங்க" என்ற பாதாள உலகக் கும்பல் தலைவனின் நெருங்கிய சகாக்கள் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.</p><h2>விசாரணைகள்</h2><p> 
நேற்று முன்தினம் களுபோவில பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது படவிட்ட அசாங்கவின் சகாக்களால் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் வகையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p> 
எனினும், தாக்குதல் நடத்தியவர் இலக்கை மாற்றி, தவறுதலாக இச்சிறுவர்களின் வீட்டின் மீது குண்டை வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0203a34-7e85-4344-ba5d-cda7eee17aa3/26-6aa4348c25f6a.webp' /></p><p> </p><p>
இச்சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்பட்டுள்ளதுடன், மூன்று பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p> மேலும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டி பஹல போபே பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T16:39:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவமானப்படும் முத்து, பொங்கியெழுந்த விஜயா.. சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்! ப்ரோமோ இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/siragadikka-aasai-promo-vijaya-supports-muthu-1789144609"></link>
            <id>https://cineulagam.com/article/siragadikka-aasai-promo-vijaya-supports-muthu-1789144609</id>
            <summary type="text">சிறகடிக்க ஆசை சீரியலில் எப்போதும் முத்துவை திட்டிக்கொண்டே தான் இருப்பார் விஜயா. மனோஜ் என்ன தப்பு செய்தாலும் அவருக்கு ஆதரவாக இருக்கும் விஜயா எப்போது இன...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறகடிக்க ஆசை சீரியலில் எப்போதும் முத்துவை திட்டிக்கொண்டே தான் இருப்பார் விஜயா. மனோஜ் என்ன தப்பு செய்தாலும் அவருக்கு ஆதரவாக இருக்கும் விஜயா எப்போது இன்னொரு மகன் முத்து மற்றும் மருமகள் மீனாவை மட்டம் தட்டி பேசிக்கொண்டே இருப்பார்.</p><p>மீனாவின் தம்பி மற்றும் வில்லி சிந்தாமணியின் திருமணம் நடக்கும்போது அங்கு முத்து எல்லோருக்கும் return gift கொடுக்கிறார்.
</p><p>அவர் யார் என கெஸ்ட் ஒருவர் கேட்க, அவர் பெரிய தொழிலதிபர், 50 வண்டிகள் ஓடுகிறது என வில்லி சிந்தாமணி பொய் சொல்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ceb6b92b-5314-4fc3-841a-2fa0ce88bba2/26-6aa42e2360c42.webp' /></p><p>
</p><h2>மகனுக்காக பேசிய விஜயா
</h2><p>அதன்பின் முத்து சில வண்டிகள் தான் வைத்திருக்கிறார், அதுவும் டியூவில் இருக்கிறது என்கிற விஷயம் அறிந்து அவரை அந்த நபர்கள் அசிங்கமாக பேசுகின்றனர்.
</p><p>அப்போது அதை பார்த்து விஜயா கடும் கோபமாக அவர்களிடம் சண்டை போடுகிறார்.
</p><p>
முத்துவுக்காக விஜயா பேசியது எல்லோருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ப்ரோமோவை பாருங்க.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/U5lpT7W85kk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T16:38:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் விரிவுரையாளரின் அநாகரிக பேச்சால் தவறான முடிவெடுக்க முயற்சி செய்த மாணவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trainee-teacher-attempts-wrong-lecturer-s-remarks-1789143031"></link>
            <id>https://tamilwin.com/article/trainee-teacher-attempts-wrong-lecturer-s-remarks-1789143031</id>
            <summary type="text">யாழ்.கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் அங்கு கடமையாற்றும் பெண் விரிவுரையாளர் ஒருவரின் அநாகரிகமான பேச்சினால் தவறான முடிவெட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்.கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் அங்கு கடமையாற்றும் பெண் விரிவுரையாளர் ஒருவரின் அநாகரிகமான பேச்சினால் தவறான முடிவெடுக்க முயன்ற நிலையில் யாழ்ப்பாண வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
 குறித்த சம்பவம் இன்றைய தினம்(11 ) வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.</p><h2>நிர்வாகம் நடவடிக்கை</h2><p> 


சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

குறித்த மாணவி கல்லூரி கழகம் ஒன்றின் செயற்பாட்டிற்காக சென்றிருந்த நிலையில் அந்த விடுதிக்கு பொறுப்பான பெண் விரிவுரையாளர் எங்கு சென்று வருகிறாய்? என மாணவியை கேட்டுள்ளார்.
</p><p>
 அதற்கு தனது கழக செயற்பாட்டுக்கு கழகத் தலைவர் அழைத்ததன் காரணமாக சென்று வருகிறேன் என தெரிவித்திருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07f295d0-63d1-4df4-acb5-a06409b3e3bc/26-6aa42c836e316.webp' /></p><p> </p><p>


உடனே குறித்த விரிவுரையாளர் அநாகரிகமான முறையில் திட்டியுள்ளார்.

அதனைதொடர்ந்து மாணவி எழுத்து மூலம் கல்லூரி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியருக்கிறார். </p><p>

ஆனால் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமை காரணமாக மனவிரக்தி அடைந்து தவறான முடிவெடுக்க முயன்ற நிலையில் சக மாணவிகளால் காப்பாற்றப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T16:30:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் குடும்பங்களின் கடன் விகிதத்தில் ஏற்பட்ட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/statcan-says-debt-to-income-ratio-declined-1789143307"></link>
            <id>https://canadamirror.com/article/statcan-says-debt-to-income-ratio-declined-1789143307</id>
            <summary type="text">கனடாவில் குடும்ப வருமானத்தின் வளர்ச்சி கடனின் வளர்ச்சியை விட அதிகமாக இருந்ததால், இரண்டாவது காலாண்டில் கடன் மற்றும் வருமானத்திற்கு இடையிலான விகிதம் குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் குடும்ப வருமானத்தின் வளர்ச்சி கடனின் வளர்ச்சியை விட அதிகமாக இருந்ததால், இரண்டாவது காலாண்டில் கடன் மற்றும் வருமானத்திற்கு இடையிலான விகிதம் குறைந்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>செலவிடக்கூடிய வருமானத்துடன் ஒப்பிடுகையில், குடும்பக் கடன் சந்தைக் கடன் பருவகால சீரமைப்பின்படி முதல் காலாண்டில் 178.6 சதவீதமாக இருந்தது, இது இரண்டாவது காலாண்டில் 176.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. </p><p>
கனடிய குடும்பங்கள் செலவிடக்கூடிய ஒவ்வொரு 1 டொலர் வருமானத்திற்கும் சராசரியாக 1.76 டொலர் கடன் வைத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c3d84b5-32d7-4b27-8c21-90bc5542e5ae/26-6aa4290cedfec.webp' /></p><p> 
வருமானத்தில் அசல் மற்றும் வட்டி திருப்பிச் செலுத்துவதற்கான வீதம் 14.68 சதவீதத்திலிருந்து 14.52 சதவீதமாகச் சரிந்துள்ளது. </p><p>
நுகர்வோர் கடன், வீட்டு அடமானக் கடன் மற்றும் அடமானம் அல்லாத கடன்கள் அடங்கிய மொத்த குடும்பக் கடன் வாங்கும் அளவு, முதல் காலாண்டில் 34.4 பில்லியன் டொலராக இருந்த நிலையில், இரண்டாவது காலாண்டில் 29.4 பில்லியன் டொலராகக் குறைந்துள்ளது. </p><p>
அடமானக் கடன் வாங்கும் வீதம் 19.4 பில்லியன் டொலராக சரிந்துள்ளது. இது 2024-ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் பின்னர் பதிவான மிகக் குறைந்த அளவாகும். 
நுகர்வோர் கடன் உட்பட அடமானம் அல்லாத கடன்கள் வாங்கும் அளவு 10.0 பில்லியன் டொலராக குறைந்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T16:25:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[47 வயதில் CPL-ல் 5 விக்கெட் - இம்ரான் தாஹிர் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/imran-tahir-47-bags-historic-cpl-five-for-1789143334"></link>
            <id>https://news.lankasri.com/article/imran-tahir-47-bags-historic-cpl-five-for-1789143334</id>
            <summary type="text">Imran Tahir (47) bags historic 5 wickets at CPL: Caribbean Premier League (CPL) போட்டியில், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் லெக் ஸ்பின்னர் இம்ரான் தாஹிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Imran Tahir (47) bags historic 5 wickets at CPL: Caribbean Premier League (CPL) போட்டியில், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் லெக் ஸ்பின்னர் இம்ரான் தாஹிர், 47 வயதிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.</p><p>

அவர் CPL-இல் ஐந்து விக்கெட் எடுத்து, டி20 கிரிக்கெட்டில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய மிக வயதான வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9186e84c-60ec-46fd-b3e4-35f128217eec/26-6aa429279230d.webp' /></p><p>தாஹிர், Guyana Amazon Warriors அணிக்காக விளையாடி, St Lucia Kings அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் எடுத்தார். அவரது அசத்தலான பந்துவீச்சால் எதிரணி அணி குறைந்த ஓட்டங்களில் சுருண்டது.
</p><p>
போட்டிக்குப் பிறகு, தாஹிர், “என் மகன் என்னை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். அவர் தான் என்னை இன்னும் விளையாட தூண்டுகிறார். எனக்கு வயதானாலும், கிரிக்கெட்டில் ஆர்வம் குறையவில்லை” எனக் கூறினார்.
</p><p></p><p>தாஹிர் தனது வாழ்க்கையில் பல்வேறு நாடுகளில் விளையாடியுள்ளார். IPL-இல் Chennai Super Kings அணிக்காகவும், உலகம் முழுவதும் பல T20 லீக்குகளில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
</p><p>
அவரது சாதனை, வயது ஒரு தடையாக இல்லாமல், உற்சாகமும், உடல் ஆரோக்கியமும் இருந்தால் எந்த வயதிலும் விளையாட முடியும் என்பதை நிரூபிக்கிறது.</p><p>
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Imran Tahir picks up his sixth T20 five-fer and registers his best figures in the format - all while 4⃣7⃣ years young 🫡<a href="https://t.co/dyfKFpFitV">pic.twitter.com/dyfKFpFitV</a></p>&mdash; Cricbuzz (@cricbuzz) <a href="https://x.com/cricbuzz/status/2097855827545838039?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>CPL ரசிகர்கள், தாஹிரின் சாதனையை பாராட்டி, சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பை அளித்துள்ளனர். “தாஹிர் இன்னும் இளம் வீரர்களுக்கு சவாலாக இருக்கிறார்” என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த சாதனை, CPL வரலாற்றில் மட்டுமல்லாமல், உலகளாவிய T20 லீக்குகளிலும் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T16:12:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏமனில் பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள் - உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/houthis-capture-perim-island-oil-at-risk-1789140181"></link>
            <id>https://news.lankasri.com/article/houthis-capture-perim-island-oil-at-risk-1789140181</id>
            <summary type="text">Houthis capture Perim island: ஏமனில் பெரிம் தீவை ஹவுதிகள் கைப்பற்றியுள்ளனர்.

பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள்ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி இயக்கம், ஏமனின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Houthis capture Perim island: ஏமனில் பெரிம் தீவை ஹவுதிகள் கைப்பற்றியுள்ளனர்.</p><h2>

பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள்</h2><p>ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி இயக்கம், ஏமனின் மேற்குக் கடற்கரை பகுதியில் முக்கிய முன்னேற்றம் கண்டுள்ளது. அவர்கள் பாப் அல்-மந்தப் நீரிணையின் நடுப்பகுதியில் அமைந்துள்ள பெரிம் (Mayyun) தீவை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p></p><h2>எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்பு</h2><p>இந்த தீவு, செங்கடல் மற்றும் சூயஸ் கால்வாய் வழியாக ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் முக்கியமான வர்த்தக பாதையில் அமைந்துள்ளது. உலகளாவிய பொருட்களின் சுமார் 12 சதவீதம் இந்த நீரிணை வழியாக வர்த்தகம் செய்யப்படுகிறது.</p><p>

சவுதி அரேபியா, ஏமன் அரசுப் படைகளுக்கு ஆதரவளித்து வந்த நிலையில், ஹவுதிகள் மோகா துறைமுக நகரத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

இதனால், சவுதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்பு அதிகரித்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f406672-322b-4f76-bde3-6ff80b707e71/26-6aa41cd80bf0c.webp' /></p><p>ஏற்கனவே, ஹார்முஸ் நீரிணையில் ஈரான் தாக்குதல்களை நடத்தியதால், சவுதி அதிகமாக செங்கடல் பாதையை பயன்படுத்தி வந்தது.

ஹவுதிகள் பெரிம் தீவை கைப்பற்றியதால், உலகளாவிய எரிசக்தி போக்குவரத்துக்கு இரட்டை அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.</p><p></p><h2>ஈரான்&nbsp;வரவேற்பு</h2><p> </p><p>ஹார்முஸ் நீரிணை ஈரான் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், பாப் அல்-மந்தப் ஹவுதிகள் கட்டுப்பாட்டிற்கு சென்றுள்ளது.

இதனால், எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டொலரை தாண்டியுள்ளது. </p><p>

ஈரான், ஹவுதிகளின் முன்னேற்றத்தை வரவேற்று, “இது சவுதி மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான எங்கள் கூட்டணியை வலுப்படுத்தும்” என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T16:08:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயம் இல்லாவிட்டால் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! அரசிடம் சஜித் வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fear-provincial-council-elections-immediately-1789141132"></link>
            <id>https://tamilwin.com/article/fear-provincial-council-elections-immediately-1789141132</id>
            <summary type="text">மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பான குழுவின் கால அவகாசத்தை நீடிப்பது
தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் செயலாகும் எனவும், இது மக்களின் அடிப்படை
உரிமைகளைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பான குழுவின் கால அவகாசத்தை நீடிப்பது
தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் செயலாகும் எனவும், இது மக்களின் அடிப்படை
உரிமைகளைப் பறிப்பதுடன் நாட்டின் இறைமையை மீறும் செயலாகும் எனவும்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.</p><p>

நாடாளுமன்றத்தில் இன்று(11) வெள்ளிக்கிழமை உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.</p><h2>&nbsp;சஜித் வலியுறுத்து</h2><p>

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,</p><p>
"மாகாண சபைத் தேர்தலை நடத்துவதைத் தடுப்பதற்காகவே மாகாண சபைகள் தேர்தல் முறைமை
தொடர்பான குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தக் குழுவின் கால அவகாசத்தை
எந்தக் காரணம் கொண்டும் நீடிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றேன். </p><p>கால
அவகாசத்தை நீடிப்பது என்பது மக்களுக்கு மாகாண சபை தேர்தலை நடத்தும் வாய்ப்பை
முற்றாக இழக்கச் செய்வதாகும்.

இவ்வேளையில் நிகழ வேண்டியது இந்தக் குழுவின் கால அவகாசத்தை நீட்டிப்பதல்ல,
மாறாக மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவதே ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d70e99ca-fdb8-4ba5-861f-baed402e0a62/26-6aa423feee81a.webp' /></p><p> </p><p>அரசுக்கு மக்கள் மத்தியில்
பயம் இல்லாவிட்டால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு
கேட்டுக்கொள்கிறேன். புதிய முறைமை தாமதமானால், குறைந்தபட்சம் பழைய முறையின்
கீழாவது மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்.</p><p>

மாகாண சபை தேர்தலைத் தொடர்ந்து ஒத்திவைப்பதற்காக இந்தக் குழுவின் கால
அவகாசத்தை நீடிப்பது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக அமைந்துள்ளது</p><p>
நாட்டு மக்களின் இறைமையை இது கடுமையாக மீறுவதால், ஜனநாயகத்துக்கு எதிரான இந்த
நடவடிக்கையை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>you may like this</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LVliSlgYppE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T15:53:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[11 வருடங்களுக்கு பின்னர் விதிக்கப்பட்ட மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-sentence-imposed-after-11-years-1789141929"></link>
            <id>https://jvpnews.com/article/death-sentence-imposed-after-11-years-1789141929</id>
            <summary type="text">காலி பிட்டிகல, மிரிஸ்வத்த பகுதியில் கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு, பலபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி பிட்டிகல, மிரிஸ்வத்த பகுதியில் கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு, பலபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி ருசிர வெலிவத்த மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.</p><p> </p><p></p><p>கண்டி பகுதியைச் சேர்ந்த விந்துவ ராஜ் சந்திர மோகன் என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p> 

பிட்டிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிரிஸ்வத்த பகுதியில் கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி மாணிக்கம் மோகன் என்பவரைத் தடியால் தாக்கிப் பலத்த காயங்களை ஏற்படுத்திக் கொலை செய்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7adb20d9-ecd2-497d-a6ac-3058348b3d9c/26-6aa423aa94d79.webp' /></p><p>வடக்கு பிட்டிகல பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் கிருஷ்ணகுமார் என்பவர் பிட்டிகல பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியிருந்தனர். </p><p>

பலபிட்டிய மேல் நீதிமன்றத்தில் 'CRI 2264/2019' எனும் வழக்கு இலக்கத்தின் கீழ் நீண்டகாலமாக விசாரணை செய்யப்பட்டு வந்த இவ்வழக்கின் தீர்ப்பு நேற்று (10) அறிவிக்கப்பட்டது.</p><p> 

இதன்போது, தண்டனைச் சட்டக்கோவையின் 32ஆம் பிரிவுடன் வாசிக்கப்படும் 296ஆம் பிரிவின் கீழ் பிரதிவாதி, கொலைக் குற்றத்திற்கு குற்றவாளியாகக் காணப்பட்டு அவருக்கு இம்மரண தண்டனை விதிக்கப்பட்டது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T15:52:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ.1,470 கோடி லொட்டரி வென்ற பெண் - பாதி தொகையை தானமாக வழங்கினார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/lottery-winner-donates-half-fortune-uk-1789142086"></link>
            <id>https://news.lankasri.com/article/lottery-winner-donates-half-fortune-uk-1789142086</id>
            <summary type="text">Lottery winner donates half fortune: லொட்டரியில் வென்ற ரூ.1,470 கோடியில் பாதியை தானமாக வழங்கிய பெண்ணை பற்றி இங்கே பார்க்கலாம்.

 EuroMillions லொட்டர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Lottery winner donates half fortune: லொட்டரியில் வென்ற ரூ.1,470 கோடியில் பாதியை தானமாக வழங்கிய பெண்ணை பற்றி இங்கே பார்க்கலாம்.</p><h2>

 EuroMillions லொட்டரியில் 115 மில்லியன் பவுண்டு</h2><p>பிரித்தானியாவில் பிரான்சிஸ் கொனொலி (Frances Connolly) என்ற பெண், 2019-இல் தனது கணவர் Paddy Connolly--யுடன் சேர்ந்து EuroMillions லொட்டரியில் 115 மில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ.1,470 கோடி) வென்றார்.</p><p></p><p>ஆனால், அந்த பெரும் செல்வத்தை தனக்காக மட்டும் வைத்துக்கொள்ளாமல், அவர் அதில் பாதியை சமூக நலத்திற்காக தானமாக வழங்கியுள்ளார்.</p><p>

பிரான்சிஸ், சமூகப்பணியாளராகவும் ஆசிரியராகவும் இருந்தவர். “என் குடும்பத்தின் அடிப்படை தேவைகள் பூர்த்தியாகிய பிறகு, செல்வத்தை பகிர்வது மனித இயல்பாகவே தோன்றியது” என அவர் கூறியுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a80d09d-440e-4741-8cf1-af8e9ff3dcc7/26-6aa42447f2287.webp' /></p><h2>ரூ.632.5 கோடி தானம்</h2><p>Dolly Parton-ன் தானதர்ம பணிகள் அவருக்கு ஊக்கமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.</p><p>115 மில்லியன் பவுண்டுகளில், சுமார் ரூ.632.5 கோடி மதிப்புள்ள தொகையை அவர் பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்கு வழங்கியுள்ளார். இதற்காக, PFC Trust என்ற அறக்கட்டளையையும் நிறுவியுள்ளார்.
</p><p>
அவரது வாழ்க்கை முறையில் பெரும் மாற்றம் இல்லை. “நாங்கள் முன்பே வாழ்ந்த வாழ்க்கையை, இப்போது சிறிது பெரிய அளவில் வாழ்கிறோம்” என Frances கூறுகிறார். அவர்கள் இன்னும் பழைய வாட்ச்கள், கார்கள் போன்றவற்றை விரும்பி வாங்குகின்றனர். தேவையற்ற ஆடம்பரத்தை தவிர்க்கின்றனர்.</p><p></p><h2>60-வது பிறந்தநாள்</h2><p>பிரான்சிஸ், “மனிதர்களுக்கு ‘போதும்’ என்ற அளவு வேறுபடும். ஆனால், குழந்தைகள் நிம்மதியாக வாழும் அளவு கிடைத்த பிறகு, மீதியை பகிர்வது சரியானது” எனக் கூறியுள்ளார்.
</p><p>
அவரது 60-வது பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு விளையாட்டு வீரர்கள் PFC Trust-க்கு நிதி திரட்டும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.
</p><p>
வடக்கு அயர்லாந்தில் பிறந்த பிரான்சிஸ், சிறுவயதிலிருந்தே பிறருக்கு உதவியவர். பின்னர் Hartlepool நகரில் குடியேறி, அங்கு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக சேவையில் ஈடுபட்டார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T15:51:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலரும் பவுண்டும் வெவ்வேறு பணவீக்கச் சூழல்களை எதிர்கொள்ளும்போது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dollar-pound-face-different-inflation-environments-1789141099"></link>
            <id>https://jvpnews.com/article/dollar-pound-face-different-inflation-environments-1789141099</id>
            <summary type="text">டொலரும் பவுண்டும் வெவ்வேறு பணவீக்கச் சூழல்களை எதிர்கொள்ளும்போது ஃபெடரல் ரிசர்வ் மற்றும் பாங்க் ஒஃப் இங்லண்ட் ஆகியவை தங்களது செப்ரம்பர் மாத முடிவுகளை அ...</summary>
            <content type="html"><![CDATA[<p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7f903f6-4f25-41c5-ab86-695c7331fd28/26-6aa4206cc5756.webp' /></p><p>டொலரும் பவுண்டும் வெவ்வேறு பணவீக்கச் சூழல்களை எதிர்கொள்ளும்போது ஃபெடரல் ரிசர்வ் மற்றும் பாங்க் ஒஃப் இங்லண்ட் ஆகியவை தங்களது செப்ரம்பர் மாத முடிவுகளை அடுத்தடுத்த நாளில் எடுக்கின்றன.</p><p>எனினும், இவற்றில் எது அதிக கண்டிப்பான கொள்கையைக் கொண்டுள்ளது என்பதன் அடிப்படையில் GBPUSD-இன் விலை நிர்ணயிக்கப்படவில்லை.

ஒவ்வொரு வங்கியும் உண்மையில் மேற்கொள்ள வேண்டிய டிரேட்-ஓஃப் அடிப்படையிலேயே இதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

GBPUSD ஆனது வர்த்தக விலைபோலச் செயல்பட மறுத்து, 2026-ஆம் ஆண்டின் பெரும்பகுதியைச் செலவு செய்தது.</p><p> ஃபெடரல் ரிசர்வ் மற்றும் பாங்க் ஒஃப் இங்லண்ட் (BoE) ஆகியவை ஒரே மாதிரியான கொள்கைப் பரப்பில் செயல்படுவதால், வழக்கமாக இவற்றை ஒரே நோக்கை நோக்கிக் கொண்டுசெல்லும் விளைவு இடைவெளி, தற்போது அவ்வளவு தீர்க்கமானதாக இல்லை.
</p><p>
வித்தியாசம் குறுகும்போது, அந்த ஜோடியானது தமது நிலையைவிட, தமது விலைகளுக்குப் பின்னால் உள்ள காரணங்களின் அடிப்படையில் வர்த்தகமாகிறது.</p><p> ஃபெடரல் ரிசர்வ் செப்டம்பர் 16 அன்று முடிவெடுக்கிறது, அதைத் தொடர்ந்து பாங்க் ஒஃப் இங்லண்ட் செப்டம்பர் 17 அன்று முடிவெடுக்கிறது, இதன்மூலம் ஒரே நாளில் இரண்டு எதிர்வினைச் செயல்பாடுகள் ஒன்றாகவே அமைகின்றன.
</p><p>
ஓர் எதிர்வினைச் செயல்பாடு என்பது ஒரு வங்கி எதைக் காண்கிறது என்பதையும் அது எதைச் செய்கிறது என்பதையும் இணைக்கும் விதியாகும்.

மேலும், இரண்டு வங்கிகளும் பணவீக்கத்தை வளர்ச்சியுடன் வெவ்வேறு தொடக்கப் புள்ளிகளிலிருந்து ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அவை ஒரே மாதிரியான எண்களை வெளியிட்டாலும், எதிர்மாறான செய்திகளை அனுப்பக்கூடும்.</p><h3>US தரப்பு சமன்பாடு</h3><p>US தரப்பைப் பொறுத்தவரை, பணவீக்கம் பரவலாகக் குறைகிறதா அல்லது ஒட்டுமொத்த நிலையில் மட்டுமா என்பதைச் சந்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
</p><p>
முக்கியமாக எரிசக்திச் சந்தைகளால் ஏற்படும் பலவீனமான CPI பதிவை, உள்நாட்டு விலை அழுத்தத்தின் தெளிவான சமிக்ஞைகளில் ஒன்றாகத் திகழும் முக்கியச் சேவைகளில் ஏற்படும் நீடித்தகாலத் தளர்விலிருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் புரிந்துகொள்ளலாம்.

அந்த வேறுபாடு ஃபெடரல் ரிசர்வுக்கு முக்கியமானது. </p><p>ஒட்டுமொத்தப் பணவீக்கம் தணிந்து, அதே சமயம் சேவைத் துறைப் பணவீக்கம் மாற்றமின்றி நீடித்தால், பணவீக்கப் பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டது என்பதற்கு ஒரேயொரு தரவை ஆதாரமாகக் கருதுவதற்கு மத்திய வங்கி தயக்கம் காட்டக்கூடும்.

தலைவர் கெவின் வார்ஷ் வெளியிட்ட தகவல்கள், ஃபெடரல் ரிசர்வின் பரந்த பணவீக்க நிலைப்பாட்டை மாற்றுவதற்கு பலவீனமான பொருளாதாரத் தரவுகள் போதுமானதா என்பதில் சந்தைகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.</p><p>செப்ரம்பர் மாதக் கூட்டத்தில் புதிய பொருளாதாரக் கணிப்புகளின் சுருக்க அறிக்கையும் தாக்கல் செய்யப்பட இருப்பதால், 'டாட் பிளாட்' வரைபடமும் சந்தையின் முக்கியக் கவனத்திற்கு உள்ளாகும்.
</p><p>
USD வர்த்தகர்களுக்கு, வட்டி வீத முடிவைப் போலவே, கணிப்புகளும் உண்மையான விளைவு வீதப் போக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம். உண்மையான விளைவு வீதங்கள் உயர்ந்த நிலையிலேயே நீடித்தால், புதிய வட்டி வீத மாற்றம் இல்லாமலேயே டொலர் ஆதரவைப் பெற முடியும்.</p><h4>UK தரப்பு
</h4><p>GBP வர்த்தகர்களுக்கு UK அதே பிரச்சனையின் வேறொரு வடிவத்தை அளிக்கிறது. பணவீக்கம் முந்தைய அழுத்தத்திலிருந்து தணிந்துள்ளது, ஆனால் சேவைத் துறையின் பணவீக்கமும் ஊதிய வளர்ச்சியும் பாங்க் ஒஃப் இங்லண்ட் உடைய முடிவெடுக்கும் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
</p><p>
தொழிலாளர் சந்தை தளர்வதற்கான அறிகுறிகளைக் காட்டியுள்ளது, ஆனாலும் உள்நாட்டுப் பணவீக்க அழுத்தம் முழுமையாக அதைப் பின்பற்றவில்லை. வாக்குப் பிளவே பல விஷயங்களை எடுத்துரைக்கிறது.</p><p>வட்டி விகித உயர்வை ஆதரிக்கும் சிறுபான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு தற்போதைய நிலையைத் தொடர்வது என்பது, அனைவரும் ஒருமனதாகத் தற்போதைய நிலையைத் தொடர்வதிலிருந்து வித்தியாசமானது.</p><p>

GBP வர்த்தகர்களுக்கு, சமிக்ஞை என்பது வங்கி வீதம் மட்டுமல்ல, MPC உறுப்பினர்களில் அதிகமானோர் நீடித்த பணவீக்கம் குறித்துக் கவலைப்படுகிறார்களா அல்லது வளர்ச்சி அபாயம் குறித்துக் கவலைப்படுகிறார்களா என்பதும்தான்.</p><h4>விலகுதல் அளவீடு
</h4><p>இரு வங்கிகளும் ஏறக்குறைய ஒரே மாதிரியான கொள்கைப் பரப்பில் இருப்பதால், ஒன்றையொன்று பொறுத்து எந்த வங்கியின் எதிர்வினைச் செயல்பாடு இறுக்கமடைகிறதோ, அதைப் பொறுத்தே இந்த ஜோடியின் நகர்வு அமைய வாய்ப்புள்ளது.

நான்கு சேர்க்கைகள் இந்தக் கணிப்பை வடிவமைக்கின்றன, அவற்றில் ஒவ்வொன்றும் ஒரு விலை இலக்கைக் காட்டிலும் உறுதிப்படுத்தும் சமிக்ஞையைக் கொண்டுள்ளது. </p><ul><li>&nbsp;கண்டிப்பான நிலைபாடுடைய ஃபெடரல் ரிசர்வ், மென்மையான அணுகுமுறையுடைய BoE. ஒரு மென்மையான UK சேவைத் துறையின் சரிவுக்கு எதிராகக் காணப்படும் ஓர் உறுதியான புள்ளிவிபரம், டொலருக்குச் சாதகமான மறைமுக இடைவெளியை விரிவுபடுத்துகிறது.உறுதிப்படுத்தல் என்பது ஒட்டுமொத்த வீதத்தில் இல்லை, மாறாக நிலையான பொருளாதாரக் குறியீட்டிலும் (SEP) மற்றும் உண்மையான விளைவு வீதங்கள் நிலைத்திருப்பதிலுமே உள்ளது.</li><li>மென்மையான அணுகுமுறையுடைய ஃபெடரல் ரிசர்வ், கண்டிப்பான நிலைப்பாடுடைய BoE. தொடர்ந்து கண்டிப்பான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும், வட்டி விகிதத்தை அதிகரிக்க விரும்பும் UK சிறுபிரிவினருக்கு எதிராக, US உடைய முக்கியச் சேவைத் துறையின் சந்தை நிலவரம் சற்று தணிந்திருப்பது, ஸ்ரெர்லிங்கிற்குச் சாதகமாகச் சமநிலையைச் சாய்க்கிறது. MPC வாக்குப் பிளவையும் UK சேவைகள் பணவீக்கத்தையும் கவனியுங்கள்.</li><li>இரண்டுமே கண்டிப்பானவை. தொடர்பான செய்தி பெரிதாக மாறாததால், ஏற்ற இறக்கம் அதிகரிக்கும்போது இந்த ஜோடி ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் நிலைத்திருக்கிறது; நிலைப்பாடும் தொனியுமே இந்த ஏற்ற இறக்கங்களை இயக்குகின்றன.</li><li>இரண்டுமே மென்மையான அணுகுமுறையுடையவை. தளர்வை நோக்கிய ஒரு பகிரப்பட்ட சூழல் மையம், குறிப்பிட்ட நாணய இணையை மட்டும் பாதிக்காமல், பரந்த இடர் நாட்டம் மற்றும் DXY வழியாகவே டொலர் தரப்பின் நகர்வைச் செய்ய முனைகிறது.</li></ul><p><a href="https://www.exness.com/" target="_blank">Exness</a> நிறுவனத்தின் நிதிச் சந்தை வியூக நிபுணரான லி சிங் கான் குறிப்பிடுவது போல, “வட்டிவீத இடைவெளி கிட்டத்தட்ட இல்லாத அளவுக்குக் குறையும்போது, சந்தையானது முடிவை வைத்து வர்த்தகம் செய்வதை நிறுத்திவிட்டு, எதிர்வினைச் செயல்பாட்டை வைத்து வர்த்தகம் செய்யத் தொடங்கும்.
</p><p>
இந்த ஜோடி, எந்தக் குழு கடினமான டிரேட்-ஓஃபை எதிர்கொள்கிறது என்பதன் அடிப்படையிலேயே செயல்படுகிறது; எந்தக் குழு அதிக கண்டிப்பான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்பதன் அடிப்படையில் அல்ல.” பணவீக்கம் தொடர்பான ஒரேயொரு எதிர்பாராத நிகழ்வு இந்த ஜோடியை ஓர் அமர்வுக்கு அனுப்புகிறது.
</p><p>
ஆனால் கணிப்புகளில் ஏற்படும் மாற்றம், வாக்குப் பிளவு அல்லது உண்மையான விளைவு வீதப் பாதை ஆகியவை பொதுவாக நிலையாக இருக்கும். சதவீதக் கோட்டைவிட மூன்று சரிபார்ப்புகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை:
</p><ul><li>&nbsp;முடிவை மட்டும் படிக்காமல், முன்கணிப்புகளையும் படியுங்கள். சதவீதம் பெரும்பாலும் முன்கூட்டியே பெருமளவில் மதிப்பிடப்பட்டுவிடுவதால், செப்ரம்பர் மாதப் புள்ளிவிபரமும் உண்மையான-விளைவு வீதப் பாதையும், பிரதான செய்தியில்வரும் ஒட்டுமொத்த நகர்வைவிட டொலர் தரப்பின் போக்கைப் பற்றி அதிகமாகக் கூறுகின்றன. </li><li>&nbsp;வாக்குப் பிளவை எடைபோடுங்கள்.பாங்க் ஒஃப் இங்லண்டில் நீடித்தோ அல்லது விரிவடைந்தோ இருக்கும் வட்டி விகிதத்தை உயர்த்த விரும்பும் சிறு பிரிவினர், வட்டி விகிதம் மாறாமல் இருப்பதைக் காட்டிலும் சந்தைக்கு மிக வலுவான கொள்கை சமிக்ஞையை வழங்குகிறது.</li><li>ஆற்றலைச் சேவைகளிலிருந்து பிரியுங்கள்.எரிபொருள் விலை வீழ்ச்சியால் ஏற்படும், மந்தமான சந்தை நிலவரமும், உள்நாட்டு அழுத்தம் தணிவதும் ஒன்றல்ல. எனவே, சேவைகள் மற்றும் ஊதியக் குறியீடுகள் இருபுறமும் இந்த நீடித்த நிலைத்தன்மைக்கான சமிக்ஞையை அளிக்கின்றன.</li></ul><h4>
ஒரு முழுமையான கொள்கையைக் கருத்தில் கொண்டு நம்பிக்கையுடன் வர்த்தகம் செய்யுங்கள்</h4><p> வர்த்தகர் அந்தப் பகுப்பாய்வின் அடிப்படையில் தெளிவாகச் செயல்பட முடிந்தால் மட்டுமே, அதனால் பலன் கிடைக்கும்.
</p><p>
அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு வெளியீட்டின்போது, காணப்பட்ட விலைக்கும் பூர்த்தி செய்யப்பட்ட விலைக்கும் இடையிலான இடைவெளி அதிகரிக்கக்கூடும், குறிப்பாகப் பணப்புழக்கம் விரைவாக மாறும் சமயங்களில் இது நிகழலாம். </p><p>இறுக்கமான செல்லாத நிலை அளவில் செயல்படும் ஒரு வர்த்தகருக்கு, அந்த இடைவெளியானது, அந்த வர்த்தகம் அதன் அசல் திட்டத்திற்கு இன்னும் பொருந்துகிறதா என்பதைத் தீர்மானிக்கக்கூடும்.</p><p>பரந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்போதுதான், <a href="https://www.exness.com/" target="_blank">Exness</a> முக்கியத்துவம் பெறுகிறது. இரண்டு மத்திய வங்கிகளின் முடிவுகளால் உருவாகும் ஒரு GBPUSD வர்த்தகத்தில், நல்ல வர்த்தகச் சூழல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஏனெனில், வர்த்தகர் ஒரே ஒரு நாணய ஜோடியை மட்டும் கருத்தில் கொள்வதில்லை. </p><p>அவர்கள் டொலர் தரப்பின் போக்கு, ஸ்ரெர்லிங் மீதான அழுத்தம், வட்டிவீத எதிர்பார்ப்புகள், உண்மையானவிளைவு வட்டிவீதங்கள் மற்றும் ஒவ்வொரு கொள்கைச் சமிக்ஞைக்கும் சந்தையின் எதிர்வினை ஆகியவற்றை ஆராய்ந்து வருகின்றனர்.</p><p>

விலை நிர்ணயத்தைப் புரிந்துகொள்வது கடினமாக இருந்தாலோ, செயலாக்கம் சீரற்றதாகத் தோன்றினாலோ, தளக் கருவிகள் சிக்கலை அதிகரித்தாலோ அல்லது இடர் சூழல் தெளிவாக இல்லாவிட்டாலோ, வர்த்தகர் உண்மையான அமைப்பிலிருந்து பிரதிபலிக்காத தேவையற்றவற்றைப் பிரித்தறிய வேண்டியிருக்கும்.

நல்ல சூழ்நிலைகள் இருப்பதே கொள்கை நிலைப்பாட்டைச் சரிசெய்துவிடாது. </p><p>அந்த முடிவு சூழ்நிலைத் திட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதா அல்லது நிகழ்வின் அழுத்தத்தின் காரணமாக எடுக்கப்பட்டதா என்பதை மதிப்பாய்வு செய்வதை அவை எளிதாக்குகின்றன</p><p>Exness ரெர்மினல் இங்கும் ஒரு நடைமுறைப் பங்கைச் செயலாற்றுகிறது, ஏனெனில் GBPUSD-ஐக் கண்காணிக்கும் ஒரு வர்த்தகர், அதே நேரத்தில் DXY, தொடர்புடைய FX ஜோடிகள், தங்கம், குறியீட்டெண்கள் மற்றும் வட்டிவீத உணர்திறன் கொண்ட பிற சொத்துகளையும் கண்காணிக்க வேண்டியிருக்கலாம்.
</p><p>
இதன் மல்ரி- சார்ட்டிங் அம்சம், பல்வேறு கருவிகளை அருகருகே பார்க்க அனுமதிப்பதால், ஒரு நகர்வு ஸ்ரெர்லிங்கிற்கு மட்டுமே உரியதா அல்லது டொலரின் பரந்த எதிர்வினையின் ஒரு பகுதியா என்பதை வர்த்தகர்கள் ஒப்பிட்டுப் பார்க்க இது உதவும்.
</p><p>
அதே பணிச்சூழல் சார்ட்டிங், செயல்படுத்துதல், நிலை மேலாண்மை மற்றும் கணக்குக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை வலைத்தளம் மற்றும் மொபைல் தளங்கள் வாயிலாக ஒன்றிணைத்து, சந்தை வேகமாக நகரும்போது,​​வர்த்தகர்கள் தங்கள் பகுப்பாய்வு மற்றும் இடர் மேலாண்மையை வர்த்தக நடவடிக்கையுடன் நெருக்கமாக வைத்திருக்க உதவுகிறது.
</p><p>
இடர் கட்டுப்பாடு முக்கியமானது, ஏனெனில் ஒரே நாளில் எடுக்கப்படும் இரண்டு மத்திய வங்கி முடிவுகள், தொடர்புடைய வர்த்தக நிலைகளில் இலாப வரம்பு அழுத்தத்தை உருவாக்கக்கூடும்.</p><p>ஒரு வர்த்தகர், தான் ஒரு குறிப்பிட்ட GBPUSD வர்த்தக நிலையை நிர்வகிப்பதாக நினைக்கலாம், ஆனால் நடைமுறையில் அந்த நிலை, டொலரின் பரந்த வலிமை, ஸ்ரெர்லிங்கின் மறுவிலையிடல் மற்றும் யென்னின் உணர்திறன் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கும்.
</p><p>
திறந்த வர்த்தக நிலைகள், இலாபம், கணக்கு நிலை மற்றும் வெளிப்பாடு ஆகியவற்றின் மீதான தெளிவான பார்வை, முடிவெடுப்பதை நிகழ்வின் தீவிரத்தன்மையிலிருந்து வர்த்தகத்தின் தீவிரத்தன்மைக்கு மாற்ற உதவுகிறது.

கான் கூறுவது போல், “லேபிள் என்பது சந்தை ஏற்கனவே விலை நிர்ணயம் செய்த ஒரு பகுதியாகும்.</p><p>” சார்புச் சான்றுகள், கணிப்புகள், வாக்குப் பிளவு மற்றும் சேவைகளின் நிலவரம் ஆகியவற்றில்தான் சாதகம் உள்ளது, ஏனெனில் எந்த எதிர்வினைச் சார்பு நகர்கிறது என்பதை அவை உங்களுக்குச் சொல்லும்.</p><h4>

சார்புச் சான்றுகள் லேபிள்களை வெல்கின்றன </h4><p>ஒரு வங்கியைக் கண்டிப்பானது என்றும் மற்றொன்றை மென்மையான போக்குடையது என்றும் கூறுவது எளிதில் கணிக்கக்கூடிய ஒன்றாகும், மேலும் அது பொதுவாக ஏற்கனவே விலையில் பிரதிபலிக்கப்பட்ட ஒன்றாகவும் இருக்கிறது.</p><p>மற்றொன்றை விட எந்த எதிர்வினைச் செயல்பாடு இறுக்கமடைகிறது என்பதே மிகவும் பயனுள்ள கேள்வியாகும், ஏனெனில் பூச்சியத்திற்கு அருகிலுள்ள வட்டிவீத இடைவெளி, அந்தச் சார்பு நகர்வையே GBPUSD-இன் முக்கிய உந்து சக்தியாக ஆக்குகிறது.
</p><p>
அதே செப்ரம்பர் மாத முடிவு, கணிப்புகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள வாக்குப் பிளவைப் பொறுத்து, அந்த ஜோடிக்கு ஆதரவளிக்கலாம் அல்லது அதன் மீது அழுத்தத்தை ஏற்படுத்தலாம். எனவே, தரவுகள் வெளிவருவதற்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு லேபிளைவிட, சூழல் ஒழுங்குமுறை ஒரு வர்த்தகருக்குச் சிறந்த பலனைத் தருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-11T15:38:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[‘டிசி’ படக்குழுவினருக்கு BMW கார் பரிசளித்த கலாநிதி மாறன்! படுவைரலாகும் வீடியோ!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/kalanithi-maran-gifts-bmw-cars-to-dc-team-1789135223"></link>
            <id>https://manithan.com/article/kalanithi-maran-gifts-bmw-cars-to-dc-team-1789135223</id>
            <summary type="text">சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், ‘டிசி’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன், நடிகர் லோகேஷ் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், ‘டிசி’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன், நடிகர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு விலையுயர்ந்த கார்களை பரிசாக வழங்கியுள்ளார்.&nbsp;</p><h2>‘டிசி’ திரைப்படம்&nbsp;&nbsp;</h2><p>அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவான ‘டிசி’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் வாமிகா கபி மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b596008-e73e-4f84-a994-484c284f1e54/26-6aa4156da1e3d.webp' /></p><p></p><p> </p><p>படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

திரைப்படம் வெளியானது முதல் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக படத்தின் கதை, திரைக்கதை மற்றும் நடிகர்களின் நடிப்புடன், அனிருத்தின் இசையும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.
</p><p>சுமார் ரூ.25 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் ‘டிசி’ திரைப்படம், வெளியான சில நாட்களிலேயே வசூலில் நல்ல முன்னேற்றத்தைப் பதிவு செய்தது. உலகளவில் இப்படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cd34a87-737a-441e-93b8-5e469f4bc77c/26-6aa4156ce6ead.webp' /></p><h2>&nbsp;BMW கார் பரிசளிப்பு&nbsp;</h2><p>இந்நிலையில், ‘டிசி’ திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின்&nbsp; கலாநிதி மாறன், இயக்குநர் அருண் மாதேஸ்வரன், நடிகர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு விலையுயர்ந்த கார்களை பரிசாக வழங்கியுள்ளார்.</p><p>&nbsp;</p><p>

கலாநிதி மாறன் படக்குழுவினருக்கு கார்களை வழங்கும் காட்சிகள் அடங்கிய காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த சிறப்பு பரிசு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Mr. Kalanithi Maran congratulated and presented the keys to brand-new BMW cars to Arun Matheswaran, Lokesh Kanagaraj and Anirudh, for the success of Blockbuster #DC! 💥  @Dir_Lokesh @ArunMatheswaran @anirudhofficial #DCMegaBlockbuster https://t.co/QOgmCA6ZqI</p>&mdash; Sun Pictures (@sunpictures) <a href="https://x.com/sunpictures/status/2098051171965620339?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T15:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[குளத்திற்கு சென்ற வயோதிபர் பரிதாப மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/elderly-man-dies-attacked-by-a-wild-elephant-1789138829"></link>
            <id>https://tamilwin.com/article/elderly-man-dies-attacked-by-a-wild-elephant-1789138829</id>
            <summary type="text">குருநாகல்- ஹுதலியாவ குளத்துக்கு அருகில்
காட்டு யானை தாக்கியதில் பலத்த காயமடைந்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று(9) இடம்பெற...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருநாகல்- ஹுதலியாவ குளத்துக்கு அருகில்
காட்டு யானை தாக்கியதில் பலத்த காயமடைந்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் நேற்று(9) இடம்பெற்றுள்ளதாக கோட்டவெஹெர
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மெல்லகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய வயோதிபரே இந்தத் தாக்குதலில்
உயிரிழந்துள்ளார்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
மேற்படி வயோதிபர் இரவு நேரத்தில் குளத்துப் பகுதிக்குச் சென்ற போது வீதியில்
நின்ற காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3339febb-955d-4b98-88d0-57a5145028ce/26-6aa41e0861027.webp' /></p><p>
</p><p>
அதன் பின்னர் தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக
நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி
உயிரிழந்துள்ளார்.</p><p>

இந்தச் சம்பவம் தொடர்பில் கோட்டவெஹெர பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு
வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T15:28:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் கூரியர் பொதிகள் மூலம் ஆபத்தான நடவடிக்கை - அதிகாரிகளை மிரள வைத்துள்ள செயற்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dangerous-activity-through-postal-service-1789139434"></link>
            <id>https://tamilwin.com/article/dangerous-activity-through-postal-service-1789139434</id>
            <summary type="text">இலங்கையில் கூரியர் பொதிகள் மூலம் ஹஷிஷ் மற்றும் கஞ்சா விதைகளை இறக்குமதி செய்து, அவற்றை உள்நாட்டில் வளர்க்கும் புதிய ஆபத்தான போக்கு ஒன்று அடையாளம் காணப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் கூரியர் பொதிகள் மூலம் ஹஷிஷ் மற்றும் கஞ்சா விதைகளை இறக்குமதி செய்து, அவற்றை உள்நாட்டில் வளர்க்கும் புதிய ஆபத்தான போக்கு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பில் இலங்கைச் சுங்கம் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
</p><p>
கடந்த சில மாதங்களில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டிற்குப் போதைப்பொருட்களைக் கொண்டுவருவதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட வழிகளுக்குப் பதிலாக புதிய வழிகளைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். </p><h2><b> 

விசாரணைகளில் முக்கிய தகவல்கள்</b></h2><p>இந்த கடத்தல் முறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் காணப்படுவதாக சுங்கத்தின் சிரேஷ்ட பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b10a4fed-093a-4864-89d6-37beeb116bf6/26-6aa41d36c785a.webp' /></p><p>சுங்கத் தரவுகளுக்கு அமைய, கடந்த சில மாதங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் முக்கிய தகவல்கள் தெரியவந்ததுள்ளது.
</p><p>
அதற்கமைய, தாய்லாந்தில் அல்லது அவுஸ்திரேலியா ஊடாகச் செல்லும் பயணிகளால் இலங்கைக்குப் போதைப்பொருட்கள் இரகசியமாகக் கொண்டுவரப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனினும், இந்த மாதத்தில் மட்டும் அதிகாரிகள் முற்றிலும் வேறுபட்ட வழிகளால் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் நான்கு போதைப்பொருள் தொகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
ஒரு சந்தர்ப்பத்தில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மடகாஸ்கரிலிருந்து அனுப்பப்பட்டிருந்தது.

அத்துடன், மற்றைய இரண்டு சந்தர்ப்பங்கள் பிரித்தானியாவிற்கும், மற்றொரு சந்தர்ப்பம் இத்தாலிக்கும் தொடர்புடையவை என சந்தன புஞ்சிஹேவா குறிப்பிட்டார்.</p><h3><b> 

கூரியர் பொதிகள்</b></h3><p>இந்த வழிகள் சுங்கத்தினரால் முன்னர் அடையாளம் காணப்பட்ட முறைகளை விட மிகவும் வேறுபட்டவை என்பதுடன், கடத்தல்காரர்கள் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காகப் போக்குவரத்து வழிகளைத் வேண்டுமென்றே மாற்றி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c44bad1b-84f7-4b43-b67a-949880df0027/26-6aa41d377a527.webp' /></p><p>சமீபகாலச் சம்பவங்களுடன் தொடர்புடைய வகையில் அதிகாரிகள் சுமார் நான்கு கிலோகிராம் போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.
</p><p>
கூரியர் பொதிகள் மூலம் ஹஷிஷ் மற்றும் கஞ்சா விதைகளை இறக்குமதி செய்யும் சம்பவங்கள் வெளிவருவது குறிப்பாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும் எனச் சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். </p><p>

இலங்கையின் காலநிலைக்கேற்ப இந்தத் தாவரங்கள் வளரக்கூடும் என்பதால், அந்த விதைகள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக அல்லாமல் உள்நாட்டில் பயிரிடும் நோக்கத்திலேயெ கொண்டு வரப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content>
            <updated>2026-09-11T15:25:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு ஆளுநர் அநுர அரசின் ஆளுநரா ஹிஸ்புல்லாவின் ஆளுநரா..! எழும் சந்தேகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eastern-governor-anura-is-government-s-governor-1789140014"></link>
            <id>https://tamilwin.com/article/eastern-governor-anura-is-government-s-governor-1789140014</id>
            <summary type="text">கிழக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநராக பணியாற்றி வரும் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படவில்லை என பிரதே...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநராக பணியாற்றி வரும் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படவில்லை என பிரதேச சபை உறுப்பினர் கி. வதனகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
லங்காசிறி ஊடகம் வழங்கும் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதில் ஆளுநர் மற்றும் தவிசாளர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை.</p><p>

அவர்களின் செயற்பாடுகளை அவதானிக்கும்போது, அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் நடவடிக்கைகளைப் போன்று அல்லாமல், வேறு சில தலைவர்களின் வழிநடத்தலின் கீழ் செயற்படுகின்றார்களா என்ற சந்தேகம் எழுகின்றது.
</p><p>
அதேபோன்று, மேலதிக கல்வி நடவடிக்கைகளைக்கூட ஆசிரியர்கள் சுதந்திரமாக முன்னெடுக்க முடியாத நிலை தற்போது கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்றது.
</p><p>
இவ்வாறு, கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுகளை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4eZuwiThywg" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T15:21:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் கப்பல் போக்குவரத்து! ஓமானில் நடைபெறவுள்ள இராஜதந்திர நகர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hormuz-shipping-traffic-oman-1789139497"></link>
            <id>https://ibctamil.com/article/hormuz-shipping-traffic-oman-1789139497</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல் போக்குவரத்துக்கான பாதுகாப்பான வழித்தடங்கள் தொடர்பில் விவாதிக்க, ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளின் பங்கேற்புடன் திங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல் போக்குவரத்துக்கான பாதுகாப்பான வழித்தடங்கள் தொடர்பில் விவாதிக்க, ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளின் பங்கேற்புடன் திங்கட்கிழமை ஓமானில் பிராந்தியக் கூட்டமொன்று நடைபெறவுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
</p><p>
ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p>

ஈரான் மற்றும் ஓமான் இடையே ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்கான பாதுகாப்பான வழித்தடங்களை அமைப்பது தொடர்பாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் முடிவுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஈரான் - ஓமான் இடையே புரிந்துணர்வு&nbsp;</h2><p>
</p><p>
மேலும், ஹோர்முஸ் நீரிணையில் தற்காலிக கப்பல் வழித்தடங்களை அமைப்பது தொடர்பாக ஈரான் மற்றும் ஓமான் இடையே புரிந்துணர்வு எட்டப்பட்டுள்ளதாகவும் இஸ்மாயில் பாகாயி குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e42b251-9f87-4c06-8f6d-ea9ec3086886/26-6aa41a2b521ba.webp' /></p><p>
</p><p>
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஈரான் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
உலகின் முக்கியமான கடல் வர்த்தகப் பாதைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணை&nbsp; ஊடாக கணிசமான அளவு எண்ணெய் மற்றும் எரிசக்தி வளங்கள் சர்வதேச சந்தைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
</p><p>
இதனால், இப்பகுதியில் வர்த்தகக் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது பிராந்திய நாடுகளுக்கு மட்டுமன்றி, சர்வதேச எரிசக்தி சந்தைக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
</p><p>
ஓமானில் நடைபெறவுள்ள பிராந்தியக் கூட்டத்தின் மூலம் ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை பாதுகாப்பாகவும் தடையின்றியும் முன்னெடுப்பதற்கான நடைமுறை ஏற்பாடுகள் தொடர்பில் முக்கிய முடிவுகள் எட்டப்படுமா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T15:11:54+00:00</updated>
        </entry>
    </feed>
