<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-12T04:41:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விண்ணில் நிகழும் மிக அரிய சூரிய கிரகணம் இன்று]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/very-rare-solar-eclipse-is-taking-place-sky-today-1786509647"></link>
            <id>https://jvpnews.com/article/very-rare-solar-eclipse-is-taking-place-sky-today-1786509647</id>
            <summary type="text">விண்ணில் நிகழும் மிக அரிய மற்றும் வியப்பூட்டும் வானியல் நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம் இன்று (ஒகஸ்ட் 12) நிகழவுள்ளது.&amp;nbsp;உலகெங்கிலும் உள்ள வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விண்ணில் நிகழும் மிக அரிய மற்றும் வியப்பூட்டும் வானியல் நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம் இன்று (ஒகஸ்ட் 12) நிகழவுள்ளது.&nbsp;</p><p>உலகெங்கிலும் உள்ள வானியல் ஆர்வலர்களாலும் புகைப்படக் கலைஞர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த நிகழ்வை, இலங்கையில் இருந்து பார்க்க முடியாது என்பது அந்நாட்டு மக்களுக்கு ஏமாற்றமளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.</p><p>இரவு நேரத்தில் நிகழ்வதால் இலங்கையில் தெரியாது .சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு ஒரே நேர்கோட்டில் வரும்போது, சூரியனின் ஒளியை நிலவு முழுமையாக மறைப்பதே 'முழு சூரிய கிரகணம்' எனப்படுகிறது.</p><p>இதன்போது, பகல் நேரத்திலேயே வானம் இருண்டு மாலை போன்ற சூழல் உருவாகும். மேலும், சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான ‘கரோனா’ பகுதி மட்டும் பிரகாசமான வெண்வட்டம் போல ஒளிரும் காட்சியே இதன் தனித்துவமான சிறப்பம்சமாகும்.</p><p>இருப்பினும், இலங்கை நேரப்படி இன்று இரவு சுமார் 11:16 மணிக்கு இந்த கிரகணம் நிகழ உள்ளதால், இரவு நேர காரணமாக இலங்கையின் எந்தவொரு பகுதியிலும் இதை நேரடியாகக் காண முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த முழு சூரிய கிரகணத்தின் முதன்மைப் பாதை கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்பெயின், போர்த்துகலின் சில பகுதிகள் மற்றும் வடக்கு ரஷ்யா வழியாகச் செல்கிறது.</p><p>வடக்கு ஸ்பெயினில் சூரிய மறைவு நேரத்திற்கு மிக அருகில் கிரகணம் நிகழு என்பதால், அடிவானத்தில் மறையும் சூரியனோடு இணைந்த அரிய காட்சியை அங்கே காண முடியும்.</p><p>ஐஸ்லாந்தின் பனிப்பாறைகள் மற்றும் எரிமலை நிலப்பரப்புகளிலும், கிரீன்லாந்தின் ஆர்க்டிக் பனிப்பகுதிகளிலும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் காண உலகெங்கிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.</p><p>முழு கிரகணம் தென்படாத ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள், வட அமெரிக்கா, அலாஸ்கா, கனடா மற்றும் வடமேற்கு ஆபிரிக்கா ஆகிய பிராந்தியங்களில் இது 'பகுதி சூரிய கிரகணமாக'க் காட்சியளிக்கும்.</p><p>அடுத்ததாக 2027-ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்திலும் ஒரு முழு சூரிய கிரகணம் நிகழவுள்ளது. ஆனால், அந்த கிரகணமும் இலங்கையில் இருந்து தென்படாது என்றும்; வட அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் யேமன் ஆகிய பகுதிகளில் இருந்தே அதைக் காண முடியும் என்றும் வானியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-12T04:40:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[cristiano ronaldo : 5 குழந்தைகள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்ட ரொனால்டோ–ஜார்ஜினா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/cristiano-ronaldo-georgina-got-married-10-years-1786508538"></link>
            <id>https://manithan.com/article/cristiano-ronaldo-georgina-got-married-10-years-1786508538</id>
            <summary type="text">cristiano ronaldo wedding photo : போர்ச்சுகல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவும், அவரது நீண்டகால காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸும் சுமார் 10 ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>cristiano ronaldo wedding photo : போர்ச்சுகல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவும், அவரது நீண்டகால காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸும் சுமார் 10 ஆண்டுகால லிவ் இன் ரிலேஷன்ஷிப்பிற்கு பிறகு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.</p><p>போர்ச்சுகலின் காஸ்காய்ஸ் நகரில் நடைபெற்ற இந்த திருமணத்தில், தங்களின் 5 குழந்தைகள் முன்னிலையில் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8208b60-40f0-46bc-8b3b-64cb958048d9/26-6a7bf86342fab.webp' /></p><p></p><h2>10 ஆண்டு லிவ் இன் உறவு</h2><p>திருமணத்திற்குப் பிறகு மோதிரம் அணிந்த கைகளின் புகைப்படங்களை இருவரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன.</p><p>
ரொனால்டோவும் ஜார்ஜினாவும் 2016ஆம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணிக்காக ரொனால்டோ விளையாடிய காலத்தில் சந்தித்துக் கொண்டனர். அதன்பின் காதலித்து வந்த இருவரும் 2017ஆம் ஆண்டு தங்களின் உறவை வெளிப்படையாக உறுதி செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1728f9f-2bf3-45ee-851d-715adff2084f/26-6a7bf863e6ea7.webp' /></p><p></p><p> </p><p>நீண்டகாலமாக திருமணம் குறித்த எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், தற்போது அவர்களின் 10 ஆண்டுகால காதல் திருமணத்தில் முடிந்துள்ளது.

ரொனால்டோவின் முந்தைய காதல் உறவுகளை விட ஜார்ஜினாவுடனான உறவே நீண்ட காலம் நீடித்துள்ளது. </p><p>இருவருக்கும் குழந்தைகள் பிறந்த பின்னரும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்ததால், அவர்களின் உறவு ரசிகர்களிடையே தொடர்ந்து ஆர்வத்தை ஏற்படுத்தி வந்தது.

தற்போது திருமணத்தைத் தொடர்ந்து பகிரப்பட்ட மோதிரப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், இணையத்தில் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T04:38:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் சொகுசுப் பேருந்துகளுக்கு எதிராக விரைவில் அதிரடிச் சட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/strict-measures-against-jaffna-luxury-buses-soon-1786509171"></link>
            <id>https://jvpnews.com/article/strict-measures-against-jaffna-luxury-buses-soon-1786509171</id>
            <summary type="text">தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு, குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு, குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு சொகுசுப் பேருந்துச் சேவைகளை இயக்கிவரும் பேருந்துகளுக்கு எதிராக விசேட சட்ட அமுலாக்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக&nbsp; தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனை வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.</p><p>அத்துடன், வடக்கு மாகாணத்தினுள் உரிய பதிவுகள் மற்றும் அனுமதிகளின்றி பணியாளர்களைப் போக்குவரத்து செய்யும் தனியார் பேருந்துச் சேவைகளுக்கு எதிராகவும் இவ்வாறு சட்ட அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையும் பொலிஸாரும் இணைந்து விரைவில் இந்த விசேட சட்ட அமுலாக்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளனர்.</p><p>இது தொடர்பாக வடக்கு மாகாண சிரேஷ;ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பி, பொலிஸாரின் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்த சுற்றிவளைப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு சேவையில் ஈடுபட்டு வரும் மொத்தம் பத்து பேருந்துகள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்டு வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான சட்டவிரோத சேவைகள் ஒழுங்குபடுத்தப்பட்ட பயணிகள் போக்குவரத்து முறைமையை பாதிப்பதுடன், சட்டபூர்வமாக சேவையாற்றும் பேருந்து இயக்குநர்களுக்கும் அநீதி விளைவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>மேலும், வடக்கு மாகாணத்தினுள் அரச திணைக்களங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மற்றும் ஏனைய பணியிடங்களுக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை பதிவு செய்து சட்டபூர்வமாக இயங்குவதற்காக போதுமான கால அவகாசம் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்ததாகவும், அந்த அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையிலும் இதுவரை பதிவு செய்யப்படாமல் சேவையில் ஈடுபட்டு வரும் பேருந்துகளுக்கு எதிராக இனி சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்&nbsp; கூறினார்.</p><p>இந்த விசேட நடவடிக்கையின் போது, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பறக்கும் படை அதிகாரிகளும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகளும், பொலிஸாரும் இணைந்து சம்பந்தப்பட்ட பேருந்துகளை பரிசோதித்து, வழித்தட அனுமதிப்பத்திரங்கள் மற்றும் ஏனைய சட்டபூர்வ ஆவணங்களை ஆய்வு செய்வதுடன், அனுமதியின்றி சேவையில் ஈடுபடுவது உறுதிப்படுத்தப்படும் பேருந்துகளுக்கு எதிராக சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்.&nbsp;</p><p>அனுமதியற்ற பேருந்துகள் சேவையை ஆரம்பிப்பதைத் தடுப்பதற்கும், அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்கள் மற்றும் கால அட்டவணைகளுக்கு அமைவாகவே சேவைகள் இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.</p><p>பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்காக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும், அனுமதியின்றி சேவையில் ஈடுபடும் எந்தவொரு பேருந்திற்கும் இனி சலுகை வழங்கப்படமாட்டாது என்றும்&nbsp; &nbsp;சூ.விமலேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T04:32:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொகுதி மறுசீரமைப்பு மசோதா: சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/pass-a-separate-resolution-in-the-assembly-today-1786508946"></link>
            <id>https://ibctamilnadu.com/article/pass-a-separate-resolution-in-the-assembly-today-1786508946</id>
            <summary type="text">தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித்தீர்மானம் இன்று சட்டப்பேரவையில் கொண்டு வரப்படுகிறது.

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அனைத்து கட்சி எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித்தீர்மானம் இன்று சட்டப்பேரவையில் கொண்டு வரப்படுகிறது.
</p><p>
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அனைத்து கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும் என முடிவு செய்யப்பட்டது.</p><p>

இதன்படி, இன்று சட்டப்பேரவையில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543ஆக நிரந்தரமாக்க வேண்டும் என்றும், பேரவை உறுப்பினர்களின் மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்க உறுதி செய்ய வேண்டும் எனவம் மத்திய அரசை வலியுறுத்தம் தனித்தீர்மானம் கொண்டு வரப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d40d6da2-1c5a-4ef7-9960-28b086541a6c/26-6a7bf6ffa2512.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-12T04:31:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருப்பு நிற குட்டை உடையில் சீரியல் நடிகை ஷோபனா வெளியிட்ட போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/serial-actress-shobana-latest-photoshoot-1786508065"></link>
            <id>https://cineulagam.com/article/serial-actress-shobana-latest-photoshoot-1786508065</id>
            <summary type="text">நடிகை ஷோபனாவிஜய் தொலைக்காட்சியில் அடுத்தடுத்து சீரியல்கள் முடிவுக்கு வந்து புத்தம் புதிய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.அப்படி சமீபத்தில் தொடங்கப்பட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகை ஷோபனா</h2><p>விஜய் தொலைக்காட்சியில் அடுத்தடுத்து சீரியல்கள் முடிவுக்கு வந்து புத்தம் புதிய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.</p><p>அப்படி சமீபத்தில் தொடங்கப்பட்ட புதிய சீரியல் தான் காதல் காதல் காதல். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 அண்ணன்-தம்பிகளின் காதல் கதையை மையப்படுத்தி இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.</p><p>இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்து வருபவர் தான் ஷோபனா.
இவர் அண்மையில் கருப்பு நிற குட்டை உடையில் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்களை காண்போம்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T04:30:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரிய வானியல் நிகழ்வு: 121 ஆண்டுகளுக்குப் பிறகு முழு சூரிய கிரகணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2026-s-only-total-solar-eclipse-happens-today-1786500866"></link>
            <id>https://ibctamil.com/article/2026-s-only-total-solar-eclipse-happens-today-1786500866</id>
            <summary type="text">விண்ணில் நிகழும் வியப்பூட்டும் நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம் இன்று புதன்கிழமை நிகழவுள்ளது.2026 ஆம் ஆண்டின் இரண் டாவது சூரிய கிரகணம் இன்று இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>விண்ணில் நிகழும் வியப்பூட்டும் நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம் இன்று புதன்கிழமை நிகழவுள்ளது.</p><p>2026 ஆம் ஆண்டின் இரண் டாவது சூரிய கிரகணம் இன்று இந்திய நேரப்படி இரவு 9.04 முதல் 13 ஆம் திகதி நள்ளிரவு 1.37 வரை சுமார் நான்கரை மணி நேரம் நீடிக்கும். இதில் முழு மறைப்பு இரவு 11.13 மணி முதல் நள்ளிரவு 12.03 க்குள் நிகழும்.&nbsp;</p><p>இந்த அரிய நிகழ்வை உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து காண முடியும் என்றாலும், இலங்கை மற்றும் இந்தியாவின் எந்த பகுதியிலும் முழு சூரிய கிரகணத்தை காண முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஸ்பெயினில் முழு சூரிய கிரகணம்</h2><p>இலங்கையில் இருந்து இந்த முழு சூரிய கிரகணத்தை காண முடியாததற்கு முக்கிய காரணம், கிரகணம் நிகழும் நேரத்தில் இலங்கையில் இரவு நேரமாக இருப்பதுதான். இலங்கை நேரப்படி இரவு சுமார் 11:16 மணிக்கு இது நிகழ்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93f003fb-7368-445f-a345-cee8553270e0/26-6a7bdd3669c3c.webp' /></p><p>121 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயினில் முழு சூரிய கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>

அந்நிறுவனத்தின் அறிக்கையை மேற்கோள்கட்டி சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி, 1905 ஆம் ஆண்டிற்குப் பிறகு தென்படவுள்ள இந்த சூரிய கிரகணம் எதிர்வரும் 12 ஆம் திகதி ஸ்பெயின், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா மற்றும் போர்ச்சுகலின் ஒரு பகுதியில் காணக் கூடியதாக இருக்கும்.</p><p>சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு நேர்கோட்டில் வரும்போது, சூரியனின் ஒளி முழுமையாக மறைக்கப்படும். இதனால் பகல் நேரத்திலேயே வானம் இருண்டு, மாலை நேரம் போன்ற சூழல் உருவாகும்..</p><p>முழு சூரிய கிரகணத்தின் போது, சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான ‘கரோனா’ மட்டும் பிரகாசமான வெண்வட்டம் போல் காட்சியளிக்கும். இந்த அரிய காட்சியே முழு சூரிய கிரகணத்தின் சிறப்பம்சமாகும்.</p><p></p><h2>நடத்தை மாற்றங்கள்</h2><p>இந்த அரிய நிகழ்வைக் காண உலகம் முழுவதும் இருந்து வானியல் ஆர்வலர்களும், புகைப்படக் கலைஞர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6486cda9-43c0-44c4-8ac8-f2026f8a812a/26-6a7bdd371c203.webp' /></p><p>அத்துடன் கால்நடைகள் மற்றும் வன விலங்குகளின் நடத்தைகளிலும் மாற்றங்கள் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T04:20:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் சிறப்புமிக்க ஆடி அமாவாசை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/aadi-amavasai-religious-observance-today-1786507900"></link>
            <id>https://ibctamil.com/article/aadi-amavasai-religious-observance-today-1786507900</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான ஆடி அமாவாசை இன்று (12) புதன்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது.
12 ஆண்டுகளுக்குப் பின்னர் புதன்கிழமையில் ஆடி அமாவாசை தினம் வருவது, இந்த ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான ஆடி அமாவாசை இன்று (12) புதன்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது.
</p><p>12 ஆண்டுகளுக்குப் பின்னர் புதன்கிழமையில் ஆடி அமாவாசை தினம் வருவது, இந்த ஆண்டின் ஆடி அமாவாசை பக்தர்கள் மத்தியில் சிறப்புக் கவனத்தைப் பெற்றுள்ளது</p><p>இந்த ஆண்டின் ஆடி அமாவாசை தினத்துடன் சூரிய கிரகணமும் இடம்பெறுகிறது. ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம், பிதிர்க்கடன் உள்ளிட்ட சடங்குகளை மேற்கொள்வது இந்து சமய மரபாகக் காணப்படுகிறது.</p><p></p><h2>இன்று ஆடி அமாவாசை</h2><p>
எனினும், இன்றைய சூரிய கிரகணம் இலங்கையில் தென்படாது என்பதால், இலங்கையில் இன்று ஆடி அமாவாசை விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என இந்துக் குருமார் அமைப்பு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12aa31dc-0e64-4167-8c89-f59afb9c01fb/26-6a7bf470a953f.webp' /></p><p>அதேவேளை, ஐரோப்பிய நாடுகளில் குறித்த சூரிய கிரகணம் தென்படுவதால், அங்கு ஆடி அமாவாசை தொடர்பான பிதிர்க்கடன், தர்ப்பணம் உள்ளிட்ட சடங்குகள் நாளை (13) கடைப்பிடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதையொட்டி, நாடு முழுவதும் உள்ள இந்து ஆலயங்கள் மற்றும் புனித நீர்நிலைகளில் முன்னோர்களை நினைவுகூர்ந்து சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.&nbsp;</p><p>கிரகணம் ஏற்பட்டு, அது குறிப்பிட்ட பிரதேசத்தில் தென்படும் பட்சத்திலேயே மறுநாள் தர்ப்பணம் உள்ளிட்ட பிதிர்க்கடன்களை மேற்கொள்ள வேண்டும் என ஆகம மற்றும் சம்பிரதாய அடிப்படையில் கூறப்பட்டுள்ளதாகவும் இந்துக் குருமார் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T04:20:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருவிட்ட சிறைச்சாலையில் வெடித்த கலவரம்! உயிரிழந்த கைதிகளின் பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kuruwita-prison-clash-post-mortem-report-1786503881"></link>
            <id>https://tamilwin.com/article/kuruwita-prison-clash-post-mortem-report-1786503881</id>
            <summary type="text">&amp;nbsp;குருவிட்ட சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கலவரத்தின் போது உயிரிழந்த இரண்டு கைதிகளின் மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.

நேற்று முன்தினம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;குருவிட்ட சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கலவரத்தின் போது உயிரிழந்த இரண்டு கைதிகளின் மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.</p><p>

நேற்று முன்தினம் இரத்தினபுரி பொது மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் போது, இரண்டு கைதிகளும் பலத்த துப்பாக்கிச்சூட்டுக்காயங்களால் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.</p><p>

பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, ஒரு கைதி தலையில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டுக் காயத்தாலும், மற்றொருவர் மார்பில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டு காயத்தாலும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சிறைச்சாலைகளில் வெடித்த மோதல் நிலை</h2><p>

கடந்த வெள்ளிக்கிழமை குருவிட்ட சிறைச்சாலையில் வெடித்த கலவரத்தில் இரண்டு கைதிகள் உயிரிழந்ததுடன் 12 பேர் காயமடைந்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fee3ee9-e9cf-4aac-bde8-e631ab70ed77/26-6a7bf26b0bf07.webp' />&nbsp;</p><p>

கைதிகளுள் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் நிலை தீவிரமடைந்ததாகவும், இதனைக் கட்டுப்படுத்துதவற்காக துப்பாக்கிச்சூடு, கண்ணீர்ப்புகை குண்டுகளும் நடத்தப்பட்டதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார கூறியிருந்தார்.
</p><p>
இதனையடுத்து நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸ், பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை, கலவரக் கட்டுப்பாட்டுப்பிரிவு மற்றும் இராணுவமும் வரவழைக்கப்பட்டன.</p><p>

இதற்கு முன்னர் நீர்கொழும்பு, மஹர, மெகசின் மற்றும் பல்லன்சேன சிறைகளிலும் கலவரம் வெடித்தது.</p><p>இதில், நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 10 சிறை அதிகாரிகளும் 17 கைதிகளும் உயிரிழந்தனர்.</p><p> 

மஹர மற்றும் மெகசின் சிறைகளில் வெடித்த கலவரத்தில் இரண்டு கைதிகள் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T04:11:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் கொலை செய்யப்பட்ட இலங்கை இளைஞன் - பிரதமரின் தலையீட்டால் உண்மை அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-dies-in-abu-dhabi-1786496464"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-dies-in-abu-dhabi-1786496464</id>
            <summary type="text">அபுதாபியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் நேரடி தலையீட்டின் காரணமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அபுதாபியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் நேரடி தலையீட்டின் காரணமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
</p><p>
கம்பளை - அத்கால பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சாமிக இஷான் லியனகே என்ற இளைஞன் சடலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்றையதினம் இறுதிக் கிரியைகள் நடைபெற்றுள்ளன. </p><p>

கடந்த 2 வருடங்கள் 10 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அபுதாபிக்குச் சென்ற இளைஞன் தாக்குதல் ஒன்றினால்&nbsp; கடந்த ஜூலை மாதம் 15ஆம் திகதி உயிரிழந்தார்.</p><p>
</p><h2><b>
 உறவினர்கள் நடவடிக்கை</b></h2><p>இதனையடுத்து, உயிரிழந்த இளைஞரின் மாமா, அந்த இளைஞரை வெளிநாட்டுக்கு அனுப்பிய முகவர் நிலையத்திடம் தகவல்களைக் கோரியபோதிலும், ஒப்பந்தக் காலம் முடிவடைந்துவிட்டதாக கூறி அந்த நிறுவனம் பொறுப்பிலிருந்து நழுவ முயன்றுள்ளது.
</p><p>இதனையடுத்து, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் வெளிவிவகார அமைச்சில் தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e7bf07d-9375-4c9c-96a4-8d534dd0eb7c/26-6a7bf0371d6fb.webp' />&nbsp;&nbsp;</p><p>சிங்கப்பூரிலிருந்து உடனடியாக நாடு திரும்பிய தாயாரும் உறவினர்களும் தேவையான சட்ட ஆவணங்களைத் தயாரித்து அபுதாபி நிறுவன அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முயற்சித்தனர்.

எனினும் அது பலனளிக்கவில்லை. </p><p>இதற்கிடையில் நிர்க்கதிக்குள்ளான குடும்ப உறவினர்கள் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு வாட்ஸ்அப் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளனர்.

இதன் காரணமாக பிரதமரின் பணிப்புரையின் பேரில் பிரதமர் செயலகம் தலையீடு செய்து, சடலத்தை நாட்டுக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன.
</p><h3><b>
பிரதமர் தலையீடு</b></h3><p>பிரதமரின் மற்றும் அமைச்சின் முயற்சியால் கடந்த ஜுலை மாதம் 29 ஆம் திகதி நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சடலம், கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸார் மற்றும் நீர்கொழும்பு வைத்தியசாலை ஊடாகப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5498f0e5-289b-4909-b11b-9c51f125e237/26-6a7bf037d9652.webp' /></p><p>அங்கு இடம்பெற்ற மரணப் பரிசோதனை மற்றும் நீர்கொழும்பு நீதவான் உத்தரவிற்கமைய, தலையில் ஏற்பட்ட பலத்த தாக்கம் காரணமாக இரத்தம் உறைந்தமையும், உடலின் பல இடங்களில் ஏற்பட்ட காயங்களுமே இந்த மரணத்திற்குக் காரணம் என தெரியவந்துள்ளது.
</p><p>
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இலங்கையர் ஒருவர் அபுதாபி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T04:02:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1786505387"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1786505387</id>
            <summary type="text">இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.&amp;nbsp;நாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.&nbsp;</p><p>நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் (12.08.02026) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. </p><p>அதேவேளை மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p> வடமேல் மாகாணத்தில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும், ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cae2eac2-2e68-4528-a957-540fef7bcb3d/26-6a7beec53ed89.webp' /></p><p> </p><p>சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும். தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். </p><p>மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான மற்றும் சிலாபத்திலிருந்து புத்தளம், மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.</p><h2>கொந்தளிப்பான கடற்பரப்பு</h2><p> இதன் காரணமாக குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலோடிகள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86cc484a-08bd-448d-a8c0-e720dfde1db2/26-6a7beec5e9af4.webp' /></p><p> </p><p>மேலும், கொழும்பிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் சுமார் 2.5 முதல் 3 மீற்றர் உயரம் வரை எழும்பக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T03:59:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வசூலில் பட்டய கிளப்பும் லோகேஷ் கனகராஜின் DC திரைப்படம்... 5 நாள் பாக்ஸ் ஆபிஸ் விவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/dc-movie-5-days-box-office-details-1786506333"></link>
            <id>https://cineulagam.com/article/dc-movie-5-days-box-office-details-1786506333</id>
            <summary type="text">DC திரைப்படம்அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் நடிக்க கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி வெளியான திரைப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>DC திரைப்படம்</h2><p>அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் நடிக்க கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி வெளியான திரைப்படம் DC.</p><p> திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் இப்படத்திற்காக அலை மோதுகிறது, அதற்கு முக்கிய காரணம் பட கதை, நடிகர்களை தாண்டி இமாலய வெற்றிக்கு அனிருத்தின் இசை என்பது எல்லோரும் கூறும் முக்கிய விஷயமாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58427f93-19df-4c5c-8a17-aae6f46c2095/26-6a7bec5eee5e1.webp' /></p><h2>
பாக்ஸ் ஆபிஸ்</h2><p>
படம் வெளியாகி 5 நாள் ஆன நிலையில் வசூலும் பட்டய கிளப்பி வருகிறது. </p><p>படங்கள் இயக்கியதன் மூலம் நானும் பாக்ஸ் ஆபிஸ் கிங் தான் என நிரூவித்தவர் இப்போது நாயகனாக நடித்த படத்தின் மூலமாகவும் செம வசூல் செய்கிறார் லோகேஷ் கனகராஜ்.
</p><p>இப்படம் 5 நாள் முடிவில் இதுவரை ரூ. 50 கோடிக்கும் மேலான வசூல் வேட்டை செய்துள்ளது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/lkFiBoPlUQ0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-12T03:50:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலக தலைவன் 'ககனவின் ' நண்பன் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/accomplice-of-underworld-figure-gagana-arrested-1786505339"></link>
            <id>https://ibctamil.com/article/accomplice-of-underworld-figure-gagana-arrested-1786505339</id>
            <summary type="text">வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல் காரரான &#039;ககன&#039; என்பவரின் உள்நாட்டு போதைப்பொருள் விநியோக நடவடிக்கைகளை மேற்கொண்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல் காரரான 'ககன' என்பவரின் உள்நாட்டு போதைப்பொருள் விநியோக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த முக்கிய நபர் பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் காவல்துறையின் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>காவல்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், ஹோமாகம பகுதியிலுள்ள ஹைலெவல் வீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>சந்தேகநபரிடமிருந்து 2 கிலோகிராமிற்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருள் மற்றும் 800 போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><h2>ககனவின் உதவியாளர்</h2><p>
</p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஆவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/928584db-d071-4bad-8895-a841c1947e9e/26-6a7beb632348c.webp' /></p><p>வெளிநாட்டில் தங்கியிருக்கும் 'ககன'வின் நேரடி வழிகாட்டலின் கீழ், இச்சந்தேகநபர் நீண்டகாலமாக மிகவும் இரகசியமான முறையில் இலங்கையில் போதைப்பொருள் விநியோகக் கட்டமைப்பை நடத்தி வந்துள்ளார் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கை மற்றும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக ஹோமாகம காவல்&nbsp; நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T03:50:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[7 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 80 ரன்! the Hundred-யில் சன்ரைசர்ஸை நொறுக்கிய டிம் செய்பெர்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/manchester-super-giants-win-by-10-wickets-1786506267"></link>
            <id>https://news.lankasri.com/article/manchester-super-giants-win-by-10-wickets-1786506267</id>
            <summary type="text">சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிக்கு எதிரான the Hundred போட்டியில், மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

எமிரேட்ஸ் ஓல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிக்கு எதிரான the Hundred போட்டியில், மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. </p><p> 

எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்டில் நடந்த the Hundred போட்டியில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியை வீழ்த்தியது.&nbsp;</p><h2>127 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்</h2><p> 

மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிகளுக்கு இடையிலான the Hundred போட்டி மான்செஸ்டரின் எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்டில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9a019dd-db2c-4166-b57a-b5d6645fbefd/26-6a7bec1dcbc49.webp' />&nbsp;</p><p></p><p>

முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி 127 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. மிட்சேல் மார்ஷ் 32 (23) ஓட்டங்களும், ஜாக் கிராவ்லே 31 (28) ஓட்டங்களும் எடுத்தனர். </p><p>

கஸ் அட்கின்ஸன் 3 விக்கெட்டுகளும், சோனி பேக்கர் 2 விக்கெட்டுகளும், டங், டாவ்ஸன், நூர் அகமது மற்றும் பவுல் வால்டர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
</p><h2>
செய்பெர்ட்&nbsp;ருத்ரதாண்டவம் </h2><p>பின்னர் ஆடிய மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணியில் பவுல் வால்டர் (Paul Walter) மற்றும் டிம் செய்பெர்ட் (Tim Seifert) இருவரும் சிக்ஸர்களை பறக்கவிட்டனர்.
</p><p>
ருத்ரதாண்டவம் ஆடிய செய்பெர்ட் 40 பந்துகளில் 7 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 80 ஓட்டங்கள் விளாசினார். வால்டர் 28 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 44 ஓட்டங்கள் விளாசினார்.
</p><p>
இதன்மூலம் மான்செஸ்டர் அணி 68 பந்துகளில் விக்கெட் இழப்பின்றி 128 ஓட்டங்கள் எடுத்து, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e47f421c-aa84-4441-8c60-d898bb589eec/26-6a7bec7713b74.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T03:42:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து: இளைஞர் பலி - மற்றுமொருவர் அவசர சிகிச்சைப்பிரிவில்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kilinochchi-main-road-young-man-died-1786504125"></link>
            <id>https://tamilwin.com/article/kilinochchi-main-road-young-man-died-1786504125</id>
            <summary type="text">கிளிநொச்சி A9வீதி தொண்டமாநகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.இன்று அதிகாலை (12) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி A9வீதி தொண்டமாநகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.</p><p>இன்று அதிகாலை (12) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களுடன் பயணித்த இரண்டு
பாரஊர்திகள் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p> </p><p>பாரஊர்தியை வீதியில் நிறுத்தி பொருட்களை இறக்க முற்பட்டவேளை பின்னால் வந்த பாரஊர்தி
மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eba1cd10-8331-40b8-a6b4-ca9dce9bbbb8/26-6a7be9e461ef7.webp' />&nbsp;</p><p>இந்த விபத்தில் பாரஊர்தியின் உதவியாளரான 21வயதான
சத்தியராசா சஞ்சயன் என்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளார்.</p><p>மேலும், 28 வயதான சாரதி படுகாயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது
வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>சம்பவம் தொடர்பாக
கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T03:36:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓகஸ்ட் மாதத்தில் சேதம் ஏற்படுத்தும் சந்தைச் சூழலில் வர்த்தகம் செய்தல்: EUR/USD-க்குப் பொறுமை தேவை கணிப்பு அல்ல அது ஏன்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/eur-usd-trading-in-august-why-patience-matters-1786505453"></link>
            <id>https://news.lankasri.com/article/eur-usd-trading-in-august-why-patience-matters-1786505453</id>
            <summary type="text">சவாலான சகல சந்தைகளும் அதிக ஏற்ற இறக்கம் கொண்டவை அல்ல. நிச்சயமற்ற தன்மையானது, சந்தைகளில் தெளிவான போக்குகள் உருவாவதைத் தடுக்கும் சூழல்களே மிகவும் கடினமா...</summary>
            <content type="html"><![CDATA[<p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d753d152-b14c-478c-afa2-79ba5b8e0c90/26-6a7be9ef31e48.webp' /><br></p><p>சவாலான சகல சந்தைகளும் அதிக ஏற்ற இறக்கம் கொண்டவை அல்ல. நிச்சயமற்ற தன்மையானது, சந்தைகளில் தெளிவான போக்குகள் உருவாவதைத் தடுக்கும் சூழல்களே மிகவும் கடினமான வர்த்தகச் சூழல்களில் சிலவாகும்.
</p><p>
ஓகஸ்ட் மாதம் நெருங்கி வரும் நிலையில், பணவீக்கம் மத்திய வங்கியின் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாகவே இருக்கிறது, அதேவேளையில் பல முக்கியப் பொருளாதாரங்களில் விலை மாறும் வேகம் குறைகிறது.
</p><p>
ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் யுஎஸ் ஃபெடரல் ரிசர்வ் ஆகிய இரண்டின் மீதான எதிர்பார்ப்புகளையும் சந்தைகள் தொடர்ந்து மறுமதிப்பீடு செய்து வருவதால், யூரோ/டொலர் பரிமாற்ற வீதமானது, ஒன்றுக்கொன்று முரண்படும் பேரியல் பொருளாதாரக் கண்ணோட்டங்களுக்கு இடையில் சிக்கியுள்ளது.
</p><p>
யூரோ அல்லது யுஎஸ் டொலர் ஆகிய இரண்டுமே தீர்க்கமான பேரியல் சாதகத்தைக் கொண்டிருக்காதபோது​ தற்போதும் வணிகத்தை மேற்கொண்டுவரும் வர்த்தகர்கள் தங்கள் கவனத்தைத் திசைசார் கணிப்பிலிருந்து, ஒழுங்குபடுத்தப்பட்ட செயலாக்கம் மற்றும் புறநிலை இடர் மேலாண்மைக்கு மாற்ற வேண்டும்.</p><h2>சேதம் ஏற்படுத்தும் சந்தைச் சூழலைப் புரிந்துகொள்ளுதல்</h2><p>சேதம் ஏற்படுத்தும் சந்தைச் சூழல்-பாணி நிலைமைகள் நாணயச் சந்தைகளுக்கு ஒரு விரக்தி தரும் பொறியை உருவாக்குகின்றன, கட்டுக்கடங்காத பணவீக்கம் மற்றும் பலவீனமடையும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின் கலவையானது, மத்திய வங்கிகள் கடினமான கொள்கைகளைப் பின்பற்ற வேண்டிய சூழலுக்குத் தள்ளுகிறது. இந்தச் சூழல் ஒவ்வொரு வாரமும் முரண்பாடான பொருளாதாரச் சமிக்ஞைகளை உருவாக்குகிறது.
</p><p>
ஒரு நாள், எதிர்பார்த்ததை விட அதிகமான பணவீக்கக் குறியீடு இருப்பது, உயர் வட்டி வீதங்களைச் சுட்டிக்காட்டி, நாணயத்தின் வலிமையை அதிகரிக்கிறது.
</p><p>
அடுத்த நாள், ஒரு மோசமான உற்பத்தி அறிக்கையானது பொருளாதாரச் சுழற்சி மெதுவாக இருப்பதை உணர்த்தி, உடனடியாக நாணய மதிப்பின் பலவீனத்திற்கு வழிவகுக்கிறது. யூரோ மண்டலத்தின் பொருளாதாரக் கண்ணோட்டம் மறுக்க முடியாதபடி நிலையற்றதாகவே உள்ளது.
</p><p>
சமீபத்திய OECD பகுப்பாய்வானது, பலவீனமான உலகளாவிய வளர்ச்சிச் சூழலைச் சுட்டிக்காட்டியுள்ளதுடன், ஐரோப்பா குறிப்பாக எரிசக்தி விலையின் சடுதியான மாற்றங்கள் மற்றும் மந்தமான தேவை ஆகியவற்றால் பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. அதே சமயத்தில், யுஎஸ் தரவுகளும் இது போன்ற ஒரு சிக்கலான சித்திரத்தை அளிக்கின்றன.
</p><p>
ராய்ட்டர்ஸ் வெளியிட்ட சமீபத்திய தரவு, ஜூன் மாதத்தில் யுஎஸ் நுகர்வோர் பணவீக்கம் 3.5% ஆகக் குறைந்துள்ளதைக் குறிக்கிறது.
</p><p>
ஒருங்கிணைந்த உலகளாவிய வளர்ச்சிக் கண்ணோட்டம் இல்லாததால், EUR/USD இன் பாரம்பரிய உந்தும் காரணிகளைப் புரிந்துகொள்வது கடினமாகிறது. பொதுவாக, ஒரு பிராந்தியத்தில் காணப்படும் வலுவான வளர்ச்சியும் உயரும் வட்டி வீதங்களும் அதன் நாணயத்தின் மதிப்பை உயர்த்துகின்றன.
</p><p>
இன்று, இரு பிராந்தியங்களும் வளர்ச்சி மந்தநிலையையும் குறையாத பணவீக்கத்தையும் எதிர்கொள்கின்றன. மாறிவரும் இந்தச் சூழலால், யுஎஸ் மற்றும் ஐரோப்பா இடையிலான வட்டி வீத வேறுபாடுகள் சந்தையால் தொடர்ந்து மறுமதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன. எண்ணெய் விலையில் மீண்டும் ஏற்பட்டுள்ள அழுத்தத்திற்கு மத்தியிலும், வட்டி வீதங்கள் ஏற்கனவே பொருத்தமான நிலையில் இருப்பதாகக் கொள்கை வகுப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளதால், ஜூலை மாதத்தில் ECB எச்சரிக்கையுடன் செயல்படும் என்று சந்தைகள் பரவலாக எதிர்பார்க்கின்றன. இதனால், EUR/USD ஜோடிக்கு நிலையான போக்குகளை உருவாக்க முடியாமல் சிரமம் ஏற்படுகிறது.
</p><p>
ஒவ்வொரு புதிய பொருளாதார வெளியீடும் சந்தை எதிர்பார்ப்புகளை மாற்றியமைத்து, திட்டவட்டமான ஏற்றங்களுக்குப் பதிலாக அடிக்கடி தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
</p><h2>
நிச்சயமற்ற தன்மையின் உளவியல்
</h2><p>விலைகள் தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் மாறும் போக்குடைய சூழல்களைவிட, இழுபறியான சந்தை நிலவரங்கள் வர்த்தகர்கள்மீது பெரும்பாலும் அதிக உளவியல் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
</p><p>
ஒரு தெளிவான சந்தைப் போக்கு நிலவும்போது, ​​வர்த்தகர்கள் தங்கள் வர்த்தகத்தில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் வழிகாட்டும் ஆதரவையும் எதிர்ப்பு நிலைகளையும் எளிதாக அடையாளம் காண முடியும். ஒரு சேதம் ஏற்படுத்தும் சந்தைச் சூழலில், ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கிய தெளிவான போக்கு இல்லாத நிலை விரக்தியையும், அதிக இழப்பை ஏற்படுத்தக்கூடிய நடத்தை சார்ந்த தவறுகளையும் ஏற்படுத்துகிறது.
</p><p>
விலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மாறிக்கொண்டிருக்கும் சூழலில், அளவுக்கு அதிகமாக வர்த்தகம் செய்வது மிகவும் பொதுவான ஓர் ஆபத்தாகும். அடுத்தப் பெரிய சந்தை நகர்வைப் பிடித்து லாபம் பெறலாம் என்ற நம்பிக்கையில் வர்த்தகர்கள் ஒவ்வொரு மேக்ரோ தலைப்புச் செய்தியையும் அடிக்கடி பின்பற்றிச் செல்கிறார்கள். இந்த உறுதிப்படுத்தும் சார்புநிலை, உண்மையில் சீரற்ற சந்தை ஏற்றத் தாழ்வுகள் மட்டுமே உள்ள இடங்களில் போக்குகளைக் காண அவர்களைத் தூண்டுகிறது.
</p><p>
எதிர்பார்ப்பைவிடச் சிறந்த ஒரு வேலைவாய்ப்பு அறிக்கை, ஒரு தீவிரமான நீண்டகால முதலீட்டு நிலையைத் தூண்டக்கூடும்; ஆனால், சில மணித்தியாலங்களிலேயே ஒரு மோசமான கொள்முதல் முகாமையாளர்கள் குறியீட்டுக் கணக்கெடுப்பு அந்த நகர்வைத் தலைகீழாக மாற்றிவிடக்கூடும். அடுத்த ஏற்றத்தைத் தவறவிட்டுவிடுவோமோ என்ற அச்சம், தொடர்ச்சியான தவறான சமிக்ஞைகள் மூலமாக மூலதனத்தை வற்றச் செய்கிறது.
</p><p>
EUR/USD ஜோடி பல வாரங்களாக ஒரு குறுகிய வரம்பிற்குள் தேக்கமடைந்திருக்கும்போது, ​​கட்டாயப்படுத்தி வர்த்தகம் செய்ய வேண்டும் என்ற உளவியல் உந்துதல் மிகத் தீவிரமாகிறது.
</p><p>
குறுகிய கால வேக மாற்றத்தை ஓர் அடிப்படை மாற்றமாகக் தவறாகக் கருதி, வர்த்தகர்கள் குறைந்த கால அளவுகளுக்கு மாறத் தொடங்குகிறார்கள். நிச்சயமற்ற பேரியல் பொருளாதாரச் சூழல்களில் மூலதனத்தைப் பாதுகாப்பது, பெரிய திசைசார் நகர்வுகளைக் கைப்பற்றுவதைப் போலவே பல நேரங்களில் மதிப்புமிக்கது என்பதை அனுபவமிக்க வர்த்தகர்கள் புரிந்துகொள்கிறார்கள்.
</p><p>
பொறுமையும், தேர்ந்தெடுக்கப்பட்ட வர்த்தக நிறைவேற்றமும் அதயாவசியமானவையாகின்றன. இத்தகைய சூழல்களில், குறைவாக வர்த்தகம் செய்வதே பெரும்பாலும் அதிக லாபம் தரும் மூலோபாயமாக அமைகிறது.
</p><h2>
அமைப்பு தெளிவாக இல்லாதபோது, ​​சூழல் அதிக முக்கியத்துவம் பெறுகிறது
</h2><p>நிலையற்ற பேரியல் சூழல்களில் செயல்படுவதற்குப் பொறுமைக்கு அப்பால் கூடுதல் திறன்கள் தேவைப்படுகின்றன.

&nbsp;</p><p>உண்மையற்ற தொடக்கங்கள், முக்கியச் செய்திகளின் தலைகீழ் மாற்றங்கள், திடீர் விலை மாற்றங்கள் ஆகியவற்றைத் தாங்கக்கூடிய ஒரு வர்த்தகச் செயல்முறை இதற்குத் தேவைப்படுகிறது. பணவீக்கத் தரவுகள், வளர்ச்சிகுறித்த கவலைகள், மத்திய வங்கியின் சமிக்ஞைகள், வட்டி வீதம்குறித்த மாறிவரும் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றிற்கு இடையே EUR/USD ஜோடி இழுபறிக்கு உள்ளாகும்போது, ​​வர்த்தகச் சூழலின் ஒவ்வொரு அம்சமும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.&nbsp;&nbsp;</p><p>இங்குதான், விஷயத்தைத் திணிக்காமல் <a href="https://www.exness.com/" target="_blank">Exness</a>-ஐ அறிமுகப்படுத்த முடியும். EUR/USD போன்ற ஒரு சந்தையில், அடுத்தடுத்த தரவு வெளியீடுகளின் அடிப்படையில் சூழல் மாறக்கூடும் என்பதால், CFD வர்த்தகர்களுக்கு நிதானத்துடன் செயல்பட உதவும் சூழல் தேவைப்படுகிறது.</p><p>ஒரு தரகரால் பேரியல் சித்திரத்தை மேலும் தெளிவுபடுத்த முடியாது, ஆனால் முடிவெடுப்பது தொடர்பான பின்வரும் கவனச்சிதறல்களைக் குறைக்க அவரால் உதவ முடியும்: அதாவது, பிழையின்றி ஓர்டர் செய்யப்பட்டதா, செலவுகள் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றனவா மற்றும் CFD வர்த்தகர் கவனத்தைச் சிதறடிக்காமல் இடர் அபாயத்தை நிர்வகிக்க முடியுமா என்பன.
</p><p>
இது முக்கியமானது, ஏனெனில் வரம்பு-பிணைக்கப்பட்ட நாணயச் சந்தைகள் பெரும்பாலும் தயக்கம் மற்றும் அதிகப்படியான எதிர்வினையைச் சம அளவில் தண்டிக்கின்றன. ஒரு CFD வர்த்தகர் ஏற்கனவே ஓர் உண்மையான கொள்கைச் சமிக்ஞையை மற்றொரு தவறான நகர்விலிருந்து பிரித்தறிய முயற்சிக்கும்போது, ​​அந்த வர்த்தகத்தின் செயல்முறைகள் நிச்சயமற்ற தன்மைக்கு மற்றொரு ஆதாரமாக மாறிவிடக் கூடாது. மிகவும் சீரான செயலாக்கமும் தெளிவான விலை நிர்ணயமும் பின்வருவனவற்றின் மீதான கவனத்தை அது இருக்க வேண்டிய இடத்தில் வைத்திருக்க உதவலாம்:
</p><p>
அமைவு, ஆபத்து மற்றும் வர்த்தகத்தில் இருப்பதற்கான காரணம். EUR/USD ஜோடி உண்மையில் வர்த்தகம் செய்யப்படும் விதத்தின் அடிப்படையில், <a href="https://www.exness.com/exness-terminal/" target="_blank">Exness Terminal </a>கூட இந்த விவாதத்திற்குப் பொருத்தமானதாக அமைகிறது.
</p><p>
அந்த ஜோடி அரிதாகவே ஒரே ஒரு சமிக்ஞையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. CFD வர்த்தகர்கள் ஒரே நேரத்தில் டொலர், யூரோஸோன் தரவுகள், ஃபெட் குறித்த எதிர்பார்ப்புகள், ECB-இன் கருத்துகள், தங்கம், கச்சா எண்ணெய், பங்குச் சந்தை மனநிலை ஆகியவற்றைக் கவனிக்க வேண்டியிருக்கலாம்.

&nbsp;&nbsp;</p><p>வரைபட பகுப்பாய்வு, செயல்படுத்துதல், நிலை முகாமைத்துவம், கணக்குக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்கான ஒற்றைப் பணிச்சூழல், அந்தப் பரந்த பேரியல் கண்ணோட்டத்தை ஒன்றிணைத்து வைத்திருக்க உதவுகிறது.&nbsp;&nbsp;</p><p>குறிப்பாக, EUR/USD கூடிக் குறையாமல், கிடைமட்டமாக நகரும்போதும், ஒவ்வொரு நகர்விற்கும் பின்னால் இருக்கும் காரணங்கள் மாறிக்கொண்டே இருக்கும்போதும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இடர் கட்டுப்பாடானது வகுத்த அதே திட்டத்தின் ஒரு பகுதியாக மாறுகிறது. தெளிவான போக்கு நிலவும் ஒரு சூழலில், CFD வர்த்தகர்கள் பெரும்பாலும் சந்தை அமைப்பையே தங்கள் பணிகளைச் செய்ய அனுமதிக்க முடியும். EUR/USD சந்தையில் ஏற்ற இறக்கங்கள் அதிகமாக இருக்கும்போது, ​​சந்தை அமைப்பு சாதகமான வாய்ப்புகளைக் குறைவாகவே வழங்குகிறது.&nbsp;&nbsp;</p><p>பிரத்தியேகமான விலை நிலைகள் அடிக்கடி சோதிக்கப்படுகின்றன, சந்தைகுறித்த உறுதிப்பாடு விரைவாகக் குறைகிறது; இதனால், வர்த்தகம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே திட்டத்தை மாற்றியமைக்க CFD வர்த்தகர்கள் தூண்டப்படலாம்.&nbsp;&nbsp;</p><p>வெளிப்பாடு, மார்ஜின் மற்றும் கணக்கின் நிலைகுறித்த தெளிவான புலப்படுநிலையானது, வர்த்தகத்தை உணர்ச்சிவசப்பட்ட எதிர்வினைகளின் அடிப்படையில் அல்லாமல், விதிமுறைகளின் அடிப்படையில் மேற்கொள்ள உதவுகிறது. உட்கட்டமைப்பானது நிச்சயமற்ற தன்மையைத் தீர்க்கின்றன என்பது விஷயமல்ல. அது தீர்ப்பதில்லை.&nbsp;&nbsp;</p><p>முக்கியமான விஷயம் என்னவென்றால், நிலையற்ற சந்தைகள் ஏற்கனவே CFD வர்த்தகரிடம் போதும் என்கிற அளவுக்குச் சவால்களை முன்வைக்கின்றன. EUR/USD ஜோடியானது இரண்டு பலவீனமான கண்ணோட்டங்களுக்கு இடையே சிக்கியிருக்கும்போது, ​​கையாள வேண்டிய மற்றொரு காரணியைச் சேர்ப்பதற்குப் பதிலாக, வர்த்தக ஒழுக்கத்தைக் காக்க அந்தத் தளம் உதவ வேண்டும்.&nbsp;&nbsp;</p><h2>முடிவுரை </h2><p>பணவீக்க மந்தநிலையின்போது வெற்றிகரமான EUR/USD வர்த்தகம் என்பது, ஒவ்வொரு பொருளாதார வெளியீட்டையும் கணிப்பதை விட, சந்தைகள் ஒரு வழிகாட்டலைத் தேடும்போது ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதைப் பற்றியதே ஆகும். ஓகஸ்ட் மாதத்தில் சேதம் ஏற்படுத்தும் சந்தைச் சூழலானது, பேரியல் முதலீட்டாளர்கள் மற்றும் சில நாட்கள் அல்லது வாரங்கள் வரை வர்த்தகம் செய்யும் வர்த்தகர்கள் ஆகிய இரு தரப்பினரின் பொறுமையையும் சந்தேகமின்றிச் சோதிக்கும்.&nbsp;&nbsp;</p><p>வர்த்தகர்கள் இத்தகைய நிச்சயமற்ற பேரியல் சூழல்களை ஒரு புறநிலை சார்ந்த பகுப்பாய்வுடனும், கட்டாயப்படுத்தி வர்த்தகம் செய்வதை உறுதியாகத் தவிர்த்தும் அணுக வேண்டும்.</p><p>சீரான நிறைவேற்றலை ஆதரிக்கும் ஒரு வலுவான வர்த்தக உள்கட்டமைப்பைச் சார்ந்திருப்பதன் மூலம், வர்த்தகர்கள் சவாலான, ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் கட்டுண்ட சந்தைகளைச் சமாளித்து, தங்கள் மூலதனத்திற்குப் பாதிப்பின்றி வெளிவர முடியும்.

&nbsp;&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-12T03:35:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரியலில் இருந்து வெளியேறிய சஞ்சீவ் கயல் சீரியலுக்காக வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sun-tv-kayal-serial-fame-sanjeev-salary-details-1786503183"></link>
            <id>https://cineulagam.com/article/sun-tv-kayal-serial-fame-sanjeev-salary-details-1786503183</id>
            <summary type="text">கயல் சீரியல்சன் தொலைக்காட்சியில் கடந்த 2021ம் ஆண்டு புதிய ஜோடி இணைய தொடங்கப்பட்ட சீரியல் தான் கயல். அப்பாவை இழந்த தனது குடும்பத்தை அவரது இடத்தில் இருந...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கயல் சீரியல்</h2><p>சன் தொலைக்காட்சியில் கடந்த 2021ம் ஆண்டு புதிய ஜோடி இணைய தொடங்கப்பட்ட சீரியல் தான் கயல். </p><p>அப்பாவை இழந்த தனது குடும்பத்தை அவரது இடத்தில் இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும் என குடும்பத்தின் சுமையை தனது தோளில் சுமப்பவர் தான் கயல்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b534d69a-0896-4ceb-981a-3e2c40e49e53/26-6a7be194c4a27.webp' /></p><p> </p><p>குடும்ப பாதுகாப்போடு எழில் என்பவரை காதலித்து திருமணம் செய்தவர் அவரையும் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இடையில் ஆனந்தியின் திருமணத்தின் போது எழிலுக்கும்-கயலுக்கும் கொஞ்சம் பிரச்சனை இப்போது கதையே சோகமாக செல்கிறது. </p><p>மண்டபத்தில் இருந்து வெளியேறிய எழிலை பாலுவின் நண்பர்கள் மோசமாக அடிக்க இப்போது மருத்துவமனையில் இருக்கிறார். கயலும் எழிலை எங்கெங்கோ தேடுகிறார், ஆனால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/235ea7b2-093f-48b3-a136-550760a5a78a/26-6a7be1958e6fc.webp' /></p><h2>சம்பளம்</h2><p>
பரபரப்பின் உச்சமாக கதைக்களம் அமைந்து வரும் கயல் சீரியலின் டிஆர்பி டாப்பில் இருக்கிறது. </p><p>இந்த நேரத்தில் கயல் சீரியலில் நாயகனாக நடித்துவரும் சஞ்சீவ் தொடரில் இருந்து விலகிவிட்டார் என தகவல்கள் வலம் வருகின்றன. </p><p>கயல் சீரியலில் இருந்து விலகியுள்ள சஞ்சீவ் இந்த சீரியலுக்காக ஒரு நாளைக்கு இவர் ரூ. 20,000 முதல் ரூ. 25,000 வரை சம்பளம் பெற்றுள்ளார் என கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28e5a353-8654-4335-962f-29aab7336b3a/26-6a7be193bd0e4.webp' /></p>]]></content>
            <updated>2026-08-12T03:10:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசாங்கத்தின் பிரபல அமைச்சரின் தங்கையின் கணவன் கைது - நிதி மோசடி அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ministers-relative-arrested-1786499434"></link>
            <id>https://jvpnews.com/article/ministers-relative-arrested-1786499434</id>
            <summary type="text">சமகால அநுர அரசாங்கத்தின் பிரபலமான அமைச்சு பதவியை வகிக்கும் ஒருவரின் உறவினர் நிதி மோசடியின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 

கேகாலை விசேட குற்ற விசாரண...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமகால அநுர அரசாங்கத்தின் பிரபலமான அமைச்சு பதவியை வகிக்கும் ஒருவரின் உறவினர் நிதி மோசடியின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

கேகாலை விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று மாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கேகாலை - ஹமுதுகல பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் 10 லட்சம் ரூபாய் பணத்தை மோசடியாக பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><h2><b>
நிதி மோசடி</b></h2><p>கடந்த நாட்களில் நடைபெற்ற அரசாங்கத்தின் வாகன ஏலத்தின் மூலம் வாகனம் ஒன்றை வழங்குவதாகக் கூறி, இந்த பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3905c48-8465-4085-a84d-7b4ca20c40a1/26-6a7bdeba6250d.webp' /></p><p>கைது செய்யப்பட்டுள்ளவர் அரசாங்கத்தின் பிரபல அமைச்சரொருவரின் மனைவியின் தங்கையின் கணவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
சந்தேக நபர் பள்ளந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்தவராகும். தான் பெற்றுக் கொண்ட பணமோ அல்லது ஏல வாகனமோ தனக்குக் கிடைக்காமையின் காரணமாக குறித்த வர்த்தகர் கேகாலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
</p><h2><b>
சட்ட நடவடிக்கை
</b></h2><p>இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைவாக அமைச்சரின் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e0a77f7-8bc1-42d1-9ef1-8a78b530279c/26-6a7bde2fa015c.webp' /></p><p>சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><p>விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்தவின் சகோதரியின் கணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அநுர அரசாங்கத்தில் சட்டம் தன் கடமையை பாரபட்சமின்றி செய்து வருவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p>
</p>]]></content>
            <updated>2026-08-12T03:02:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[துறைமுகத்தில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான வாகனங்கள் - எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-import-dispute-heads-toward-settlement-1786501558"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-import-dispute-heads-toward-settlement-1786501558</id>
            <summary type="text">கடனுறுதிக் கடிதங்கள் ஊடாக இறக்குமதி செய்யப்பட்டு இறுதி சுங்கத்தீர்வை வழங்க மறுக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் முக்கிய தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளது.இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடனுறுதிக் கடிதங்கள் ஊடாக இறக்குமதி செய்யப்பட்டு இறுதி சுங்கத்தீர்வை வழங்க மறுக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் முக்கிய தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கு தீர்வொன்றைப் பரிந்துரைப்பதற்காக இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப்பேச்சாளரும் சுங்கப் பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>வாகன இறக்குமதி தொடர்பில் காணப்படும் சிக்கல்கள்</h2><p> 

குறிப்பிட்ட வாகன இறக்குமதி தொடர்பில் காணப்படும் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அவற்றுக்கு பொருத்தமான இணக்கப்பாட்டை எட்டுவதற்குத் தேவையான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதே இக்குழுவின் பிரதான பணி என்றும் கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3eb62aa-77fd-44be-8170-611c2df0f79b/26-6a7be0e87d72f.webp' />&nbsp;</p><p>இதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் உள்ள சுமார் 1,025 இறக்குமதி வாகனங்களை இதுவரை இறக்குமதியாளர்கள் விடுவிக்கவில்லை என இலங்கை சுங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.&nbsp; &nbsp;&nbsp;</p><p>இருப்பினும், நியாயமான காரணங்களால் சம்பந்தப்பட்ட வாகனங்களை விடுவித்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் அறிவித்தால், அவை தொடர்பில் பரிசீலனை செய்யப்படும் என்றும் இலங்கை சுங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா இதனை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T02:58:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் பதற்றம் - அடுத்தடுத்து தாக்கப்பட்ட கப்பல்கள்: ஆட்டம் காட்டும் ஹூதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-blockade-us-military-fires-on-cargo-vessel-1786498956"></link>
            <id>https://ibctamil.com/article/iran-blockade-us-military-fires-on-cargo-vessel-1786498956</id>
            <summary type="text">செங்கடலில் சரக்குக் கப்பல் ஒன்று மீது ஈரான் ஆதரவு ஹூதிகள் நடத்திய தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் ஏமன் அரசாங்கம் தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>செங்கடலில் சரக்குக் கப்பல் ஒன்று மீது ஈரான் ஆதரவு ஹூதிகள் நடத்திய தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் ஏமன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p>மோச்சா துறைமுகத்திற்கு தெற்கே கப்பல் மீது மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்கியதில் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் இதனால் மூன்று பாகிஸ்தானியர்கள் மற்றும் ஒரு இந்தோனேசியர் உட்பட நான்கு மாலுமிகள் உயிரிழந்ததாகவும் சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>சவூதி இராணுவ உபகரணங்களை ஏற்றிச் சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஹூதிகள் கூறியுள்ளனர்.</p><p></p><h2>தனித்தனித் தாக்குதல்</h2><p>இந்நிலையில், அமெரிக்காவும், ஈரானின் ஆதரவு பெற்ற யேமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களும் கப்பல்கள் மீதான தனித்தனித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01978962-de4f-4867-a6ae-26cebb08a98b/26-6a7bd2373ef07.webp' /></p><p>
உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கு முக்கியமாக விளங்கும் ஓமான் வளைகுடா மற்றும் செங்கடலின் நுழைவாயிலில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன. </p><p>அதேநேரம் அமெரிக்கா தமது நிபந்தனைகளை ஏற்கும் வரை ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என்று ஈரான் கூறியுள்ளதால், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் குறைவடைந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். &nbsp;</p><p>மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை குறைந்ததால், எண்ணெய் விலைகள் உயர்ந்து உலகளாவிய பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T02:57:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் தொடர்பில் தென்னிலங்கையில் உண்மைக்கு புறம்பான பரப்புரைகள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tissa-raja-maha-vihara-in-thaiyiddy-1786503071"></link>
            <id>https://jvpnews.com/article/tissa-raja-maha-vihara-in-thaiyiddy-1786503071</id>
            <summary type="text">தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி தொடர்பில் தென்னிலங்கையில் உண்மைக்கு புறம்பான விடங்கள் பரப்பப்படுகின்றன.
பொப்பிலியான சுனேத்ரா த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி தொடர்பில் தென்னிலங்கையில் உண்மைக்கு புறம்பான விடங்கள் பரப்பப்படுகின்றன.
</p><p>பொப்பிலியான சுனேத்ரா தேவி பிரிவெனவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தேசிய உரிமைகளை பாதுகாக்கும் மத்திய நிலையத்தின் தலைவரான கலகம குசலதம்ம தேரர் திரிபுபடுத்தப்பட்ட பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
</p><p></p><h2>பவானி வீதி விடுவிப்பு</h2><p>
தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி விடுவிப்புக்கு எதிராக வலிவடக்கு பிரதேச சபைக்கு எதிராக பொலிசார் தொடர்ந்த வழக்கு மல்லாகம் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான பரப்புரைகள் முன்வைக்கப்படுகின்றன.</p><p>குறித்த ஊடக சந்திப்பில் தேரர் தெரிவித்த கருத்து
திஸ்ஸ விகாரையின் நடுவே வீதியொன்றை அமைக்க வேண்டும் என ஒருவித அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகிறது.</p><p>பலாலி பொலிஸாரினால் பெறப்பட்டிருந்த தடை உத்தரவை மல்லாகம் நீதவான் நீதிமன்றம் முற்றாக இரத்து செய்துள்ளது. இதன்படி, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த வீதி அமைக்கும் பணியை மீண்டும் முன்னெடுக்க வேண்டும் என பிரதேச சபை தீர்மானித்துள்ளது.
</p><p></p><p>சுமார் மூன்று நாட்களுக்கு முன்னர் தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி தேரர் 'இங்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, வீதி அமைக்கப்பட மாட்டாது, யாரும் பதற்றமடைய வேண்டாம்' என அறிக்கை விட்டிருந்தார். </p><p>இருப்பினும், விகாராதிபதி தேரரின் அறிக்கையை விட வலிவடக்கு பிரதேச செயலாளரின் கூற்றே பலமானதாக மாறியுள்ளது. அரசாங்கம் இதுவரை செய்த விடயங்கள், </p><p>கொண்டுவரப்பட்ட சட்டமூலங்கள் மற்றும் பௌத்தத்திற்கு எதிரான செயற்பாடுகளை பார்க்கும்போது, அவர்களின் கடந்தகால செயற்பாடுகளின் அடிப்படையில் இவர்கள் ஏன் இதனைச் செய்கிறார்கள் என்ற நியாயமான சந்தேகமும் பயமும் எங்களுக்கு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T02:51:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சி: மர்மமான ஏவுகணையை ஏவிய வட கொரியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/north-korea-fires-suspected-ballistic-missile-1786492335"></link>
            <id>https://news.lankasri.com/article/north-korea-fires-suspected-ballistic-missile-1786492335</id>
            <summary type="text">வட கொரியா சந்தேகத்திற்குரிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி இருப்பதாக ஜப்பான் குற்றஞ்சாட்டியுள்ளது.கடலில் பாய்ந்த வட கொரிய ஏவுகணைபுதன்கிழமை வடகொரியா ராணுவம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட கொரியா சந்தேகத்திற்குரிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி இருப்பதாக ஜப்பான் குற்றஞ்சாட்டியுள்ளது.</p><h2>கடலில் பாய்ந்த வட கொரிய ஏவுகணை</h2><p>புதன்கிழமை வடகொரியா ராணுவம் சந்தேகத்திற்குரிய பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை கடல் பிராந்தியத்தில் ஏவி இருப்பதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p>ஏவுகணை கடலில் விழுந்து இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ஒரே வாரத்தில் நடத்தப்படும் வட கொரியாவின் இரண்டாவது ஆயுதச் சோதனை இதுவாகும்.</p><p> ஜப்பானை தொடர்ந்து, தென்கொரியாவும் கிழக்கு கடற்கரைப் பகுதிக்கு அப்பால் அடையாளம் தெரியாத ஏவுகணை ஒன்றை வட கொரியா ஏவி இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8838d621-8403-443e-8dd4-1847d253e022/26-6a7bb5b07079b.webp' /></p><p></p><h2> அமெரிக்கா - தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சி</h2><p>அமெரிக்கா - தென்கொரியா இடையே அடுத்த வாரம் வருடாந்திர ராணுவ பயிற்சி தொடங்க உள்ள நிலையில் இது தொடர்பான அறிவிப்பு வந்த இரண்டு நாட்களில் வட கொரியா இந்த ஏவுகணை சோதனையை செய்துள்ளது.</p><p> பிராந்திய மற்றும் தற்காப்பு திறன்களை வலுப்படுத்தும் நோக்கில் Ulchi Freedom Shield என்று அழைக்கப்படும் கூட்டுப் பயிற்சி வட கொரியாவை எரிச்சலடைய செய்துள்ளது.</p><p> ஏனென்றால் இந்த போர் பயிற்சியானது வட கொரியா மீதான படையெடுப்பிற்கான ஒத்திகையாக அது கருகிறது.</p><p> தென் கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய 3 நாடுகளின் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்கு பிறகு வடகொரியாவின் இந்த நடவடிக்கை நிகழ்ந்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-12T02:40:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[டாப் பிராண்ட் வேல்யூ கொண்ட 7 இந்திய பிரபலங்கள் பட்டியல்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/indias-most-valuable-celebrities-by-brand-value-1786454691"></link>
            <id>https://viduppu.com/article/indias-most-valuable-celebrities-by-brand-value-1786454691</id>
            <summary type="text">பிராண்ட் வேல்யூ&amp;nbsp;இந்திய சினிமா பிரபலங்கள் நடிப்பை தாண்டி பல விஷயங்களில் தொழில் தொடர்ங்கி அதன்மூலம் வருமானத்தை ஈட்டி வருகிறார்கள். அந்தவகையில், அதி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிராண்ட் வேல்யூ&nbsp;</h2><p>இந்திய சினிமா பிரபலங்கள் நடிப்பை தாண்டி பல விஷயங்களில் தொழில் தொடர்ங்கி அதன்மூலம் வருமானத்தை ஈட்டி வருகிறார்கள். அந்தவகையில், அதிக பிராண்ட் வேல்யூ கொண்ட பிரபலங்களும் இந்தியாவில் இருக்கிறார்கள். அப்படி அதிக பிராண்ட் வேல்யூ கொண்ட டாப் 7 பிரபலங்கள் யார் யார் என்று பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36cf77ea-623f-48f4-a549-66f61646cfe0/26-6a7b22a52d394.webp' /></p><p>அதிக பிராண்ட் வேல்யூ கொண்ட பிரபலங்களில் டாப் 7 இடத்தில் நடிகை தீபிகா படுகோன் இருக்கிறார். சுமார் ரூ. 851.35 கோடி ரூபாய் பிராண்ட் வேல்யூவாக இருக்கிறது.</p><p>

அவருக்கு அடுத்ததாக 6வது இடத்தில் சுமார் ரூ. 1100.5 கோடியுடன் நடிகை ஆலியா பட் இருக்கிறார்.
</p><p>
அதிக பிராண்ட் வேல்யூவில் 5 வது இடத்தில் எம் எஸ் தோனி ரூ.1100.5 கோடி வைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39d72c13-46e7-4650-854c-7f3616698642/26-6a7b22a5d0451.webp' /></p><p>
</p><p>
சச்சின் டெண்டுல்கர் அதிக பிராண்ட் வேல்யூ கொண்ட பிரபலங்களில் ரூ.1201.1 கோடியுடன் 4வது இடத்தில் உள்ளார்.
</p><p>
விராட் கோலி ரூ. 1512.8 கோடியுடன் 3வது இடத்தில் இருக்கிறார்.
</p><p>
அதிக பிராண்ட் வேல்யூ கொண்ட பிரபலங்கள் பட்டியலில் 2வது இடத்தில் ரூ.1555.8 கோடியுடன் ரன்வீர் சிங் உள்ளார்.
</p><p>
இறுதியாக அதிக பிராண்ட் வேல்யூ கொண்ட இந்திய பிரபலமாக ஷாருக்கான் நம்பர் 1 இடத்தில் இருக்கீறார். அவரின் பிராண்ட் வேல்யூ சுமார் ரூ. 1699 கோடியாம்</p>]]></content>
            <updated>2026-08-12T02:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் அதிகம் வசூல் செய்த டாப் 10 ஹாலிவுட் படங்கள் லிஸ்ட் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/highest-grossing-hollywood-movies-in-india-1786501774"></link>
            <id>https://cineulagam.com/article/highest-grossing-hollywood-movies-in-india-1786501774</id>
            <summary type="text">வசூல் செய்த டாப் 10 ஹாலிவுட் படங்களின் லிஸ்ட்ஹாலிவுட் படங்களுக்கு என இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. இவை இயக்குனர் ஸ்பீல்பெர்க் இந்திய...</summary>
            <content type="html"><![CDATA[<h2>வசூல் செய்த டாப் 10 ஹாலிவுட் படங்களின் லிஸ்ட்</h2><p>ஹாலிவுட் படங்களுக்கு என இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. இவை இயக்குனர் ஸ்பீல்பெர்க் இந்தியாவில் ஜுராஸிக் பார்க் படத்தின் மூலம் ஆரம்பித்து வைத்தது. அவர் போட்ட விதை இன்று மிகப்பெரிய மரமாக வளர்ந்து ஹாலிவுட் படங்களுக்கு இன்று வசூல் அறுவடை இங்கு நடந்து வருகிறது. </p><p>இதில் குறிப்பாக சூப்பர் ஹீரோ படங்களுக்கு இந்தியாவில் நம்ம ஊர் மாஸ் ஹீரோக்களுக்கு நிகராக வசூல் ஓப்பனிங் வருகிறது, அந்த வகையில் சமீபத்தில் வந்த ஸ்பைடர்மேன் படமே ஒரு சான்று, சரி இந்தியாவில் தற்போது வரை அதிகம் வசூல் செய்த டாப் 10 ஹாலிவுட் படங்களின் லிஸ்ட்டை பார்ப்போம்...இதோ..</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0f78d95-5c36-4fe9-9651-13d2211ab951/26-6a7bda905577f.webp' /></p><p>
SpiderManBrandNewDay ₹485Cr* - 11 Days (2026)
</p><p>AvatarTheWayofWater ₹465Cr (2022)
</p><p>AvengersEndgame ₹445Cr (2019)
</p><p>AvengersInfinityWar ₹298Cr (2018)</p><p>
SpiderManNoWayHome ₹264Cr (2021)&nbsp;</p><p> TheJungleBook₹261Cr (2016)</p><p>
AvatarFireandAsh₹225Cr (2025)
</p><p>TheOdyssey₹201.25Cr* - 24 Days (2026)
</p><p>TheLionKing₹189Cr (2019)</p><p>
DoctorStrangeintheMultiverseOfMadness ₹160Cr (2022)&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T02:29:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கமராவை உடைத்தவர்களுக்கு ரூபாய் 80,000 தண்டம்! நல்லூரில் அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nallur-rs-80-000-fine-for-cctv-damage-1786489717"></link>
            <id>https://ibctamil.com/article/nallur-rs-80-000-fine-for-cctv-damage-1786489717</id>
            <summary type="text">நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பல்வேறு பகுதிகள் கண்காணிப்பு கமராக்கள் மூலம்
தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 

இதன் மூலம் சட்டவிரோதமாக வீதிகளில...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பல்வேறு பகுதிகள் கண்காணிப்பு கமராக்கள் மூலம்
தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. </p><p>

இதன் மூலம் சட்டவிரோதமாக வீதிகளில்
கழிவுகளை வீசிச் செல்பவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களிடம் இருந்து
தண்டப்பணம் அறவிடும் நடவடிக்கைகளும் நல்லூர் பிரதேச சபையினால்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
</p><p>
இதன் காரணமாக வீதிகளில் கழிவுகளை வீசிவிட்டுச் செல்வோரின் எண்ணிக்கை வெகுவாகக்
குறைந்துள்ளது.</p><p></p><h2>கண்காணிப்பு கமராக்கள்</h2><p>

இந்நிலையில், நந்தாவில் அம்மன் கோவில் பகுதியில் நல்லூர் பிரதேச சபையினால்
பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமரா ஒன்று அண்மையில் சிலரினால் அடித்து
நாசமாக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7a1eded-7565-4ef1-8df3-5fbc2dd796c2/26-6a7bab78d36db.webp' /></p><p>

இருப்பினும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த ஏனைய கண்காணிப்பு கமராக்களின்
பதிவுகளைப் பயன்படுத்தி குறித்த நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
</p><p>
இதனையடுத்து, சேதப்படுத்தப்பட்ட கண்காணிப்பு கமராவின் பெறுமதியுடன்
தண்டப்பணத்தையும் சேர்த்து ரூபா 80,000 தொகையை குறித்த நபர்களிடமிருந்து
நல்லூர் பிரதேச சபையினால் அறவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T02:29:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடருந்தொன்றில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக்கோளாறு - பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/train-on-coastal-line-suffers-a-technical-fault-1786500493"></link>
            <id>https://tamilwin.com/article/train-on-coastal-line-suffers-a-technical-fault-1786500493</id>
            <summary type="text">ஹிக்கடுவவிலிருந்து மருதானைக்கு செல்லும் தொடருந்தொன்றில் இன்று காலை (12) தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளது.
பெருவளை தொடருந்து நிலையம் மற்றும் மக்கோண த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹிக்கடுவவிலிருந்து மருதானைக்கு செல்லும் தொடருந்தொன்றில் இன்று காலை (12) தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளது.</p><p>
பெருவளை தொடருந்து நிலையம் மற்றும் மக்கோண தொடருந்து நிலையத்திற்கிடையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
</p><p>
இதன் காரணமாக, ஹிக்கடுவவிலிருந்து மருதானைக்கு செல்லும் தொடருந்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T02:19:18+00:00</updated>
        </entry>
    </feed>
