<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-15T23:33:19+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழின அழிப்புக்கான சாட்சிகளே செம்மணி எலும்புக்கூடுகள்..! அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-mass-graves-in-srilanka-1786835789"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-mass-graves-in-srilanka-1786835789</id>
            <summary type="text">சாட்சியங்கள் இல்லாமல் அழிக்க வேண்டும் என்பதற்காக குடும்பம் குடும்பமாகத் தமிழர்கள் அழிக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாட்சியங்கள் இல்லாமல் அழிக்க வேண்டும் என்பதற்காக குடும்பம் குடும்பமாகத் தமிழர்கள் அழிக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், இவ்வாறு குடும்பங்கள் ரீதியாக மேற்கொள்ளப்பட்ட அழிப்பே இனவழிப்பு என்பதனை உறுதிப்படுத்துகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>செம்மணிப் புதைகுழி</h2><p>

நேற்றையதினம்(15) அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
குறித்த அறிக்கையில்,
</p><p>

தமிழர்கள் இலங்கையில் 1956ஆம் ஆண்டு முதல் கட்டமைக்கப்பட்ட பேரினவாதத்தால் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ளனர். 

இதனைத் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள், புலம்பெயர்ந்த உறவுகள், தமிழ்ப் புத்திஜீவிகள் ஆகியோர் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உரக்கச் சொல்லி வருகின்றனர்.</p><p>

அதற்கான சாட்சியங்களாக, செம்மணிப் புதைகுழியில் இருந்து கண்கூடான சாட்சியங்களாக எலும்புக்கூடுகள் அகழ அகழ வெளிவந்து கொண்டிருக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4eb218e2-0f0e-45b7-b700-0c2c712c3ac6/26-6a80f5d3cef58.webp' /></p><p> 

இதுவரை 539 எலும்புக்கூடுகள் தமிழின அழிப்பை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 


கருவறைக் கருவில் இருந்து குழந்தை, சிறுவர், குமரர், தாய், தந்தையர், வயோதிபர், அங்கவீனர் என எந்தவிதப் பாகுபாடுமின்றி அனைவரும் செம்மணியில் அரச பயங்கரவாதக் கருவியான இராணுவத்தின் மூலம் அழிக்கப்பட்டுள்ளனர். அதனை எலும்புக்கூடுகள் பேசாமல் பேசுகின்றன.
</p><p>
பால்மணம் மாறாத பச்சிளம் குழந்தைகள் கூட தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இனவழிப்பில் இருந்து தப்ப முடியவில்லை.

இலங்கையில் 1956ஆம் ஆண்டு தமிழின அழிப்பு, இக்கினியாகலையில் பேரினவாதக் குண்டர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

 அதில் 157 அப்பாவித் தமிழர்கள் பேரினவாதக் குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.</p><h2>அப்பாவித் தமிழர்கள்</h2><p> </p><p>அதற்கான நீதி வழங்கப்படாததால், அடுத்து 1958ஆம் ஆண்டு 300க்கும் மேற்பட்ட தமிழர்கள் தென்னிலங்கையில் படுகொலை செய்யப்பட்டனர்.
</p><p>
அதனைத் தொடர்ந்து 1961, 1964, 1974, 1977 மற்றும் 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் தமிழின அழிப்புகள் சர்வசாதாரண நிகழ்வுகளாக இடம்பெற்றன.

அவற்றை பேரினவாத அரசு கண்டுகொள்ளவில்லை. </p><p>1983ஆம் ஆண்டு ஜூலை மாதத்தை தமிழினப் படுகொலைக்கான ‘கறுப்பு ஜூலை’ என தமிழ் மக்கள் பிரகடனப்படுத்தியுள்ளனர். அதில் 3,000 முதல் 5,000 வரையான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df9a7258-9d0f-49c4-9833-18bdc936dabb/26-6a80f5d49dade.webp' /></p><p>

1983ஆம் ஆண்டு முதல் தமிழின அழிப்பு என்பது தொடர்ச்சியான நிகழ்வாகி, 2009 மே 18ஆம் திகதி வரை தீவிரமாக நடைபெற்றது.

அதன் பின்னரும் கலாசார, வரலாற்று மற்றும் உணர்வு ரீதியான அழிப்புகள் தொடர்கின்றன.
</p><p>
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிய தமிழ் மக்களுக்கு முதற்கட்ட பதிலாக செம்மணி சிந்துபாத்தி புதைகுழி கண்களைத் திறக்க வைத்துள்ளது.</p><p> இதேபோல் பல புதைகுழிகளில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும், படுகொலை செய்யப்பட்ட உறவுகளும் எலும்புக்கூடுகளாக எமது இதயக் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கின்றனர்.

சத்துருக்கொண்டான், வந்தாறுமூலைப் பல்கலைக்கழகம், மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மைலந்தனை, வீரமுனை, உடும்பன்குளம், மண்டைத்தீவு, கொக்குத்தொடுவாய், திருகோணமலை போன்ற இடங்களில் பல புதைகுழிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.</p><p>

சட்டம் சமமாகச் செயற்படுமாயின், இப்புதைகுழிகளை அறிவியல் பூர்வமாக இலகுவாகக் கண்டறிய முடியும்.</p><h2>அரச பயங்கரவாதம்</h2><p>
</p><p>
தொல்லியல் அகழ்வுகள் மூலம் கலாசாரத் திரிபுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வரும் நிலையில், மனிதப் புதைகுழிகளைக் கண்டறியும் விடயத்தில் காட்டப்படும் ஆர்வம் மிகமிகக் குறைவாகவே உள்ளது. </p><p>இதனை அரசு முறையாக முன்னெடுத்து, சட்ட சமத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

இதனைச் செய்தால் இனவழிப்பு, அரச பயங்கரவாதம் என்பவற்றுக்கான கோரமான முகங்கள் வெளியில் தெரிந்துவிடும்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, தமது அரசு சகல மக்களுக்கும் சமமானது என்பதை வெளிக்காட்டுவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாகும்.</p><p>செம்மணி போன்ற பல மனிதப் புதைகுழிகளை அகழ்வு செய்து, முந்தைய அரசாங்கங்களின் முகத்திரையைக் கிழிக்க முன்வர வேண்டும்.

அதன் மூலமாகப் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும். மேலும், கடந்த கால அரசாங்கங்களின் கோரமான முகங்களை வெளிக்காட்டவும் முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08285f08-7e1d-42c5-bac3-7293e86d1c20/26-6a80f5d54ea20.webp' /></p><p>

ஜே.வி.பி. முன்னாள் தலைவர் ரோஹண விஜேவீரவின் கொலை தொடர்பாக, அவரது மகன் நீதியைத் தேட முயற்சிப்பதும் வரவேற்கத்தக்கதாகும்.</p><p>

யூகோஸ்லாவியாவை ஆட்சி செய்த ஸ்லோபோடான் மிலோசவிக் என்ற ஜனாதிபதி, தனது இனத்தைச் சேர்ந்த சேர்பியப் படையினரைக் கொண்டு சிறுபான்மை குரோஷியர்களை இனவழிப்புக்கும், பெண்களைப் பாலியல் துர்நடத்தைக்கும் உள்ளாக்கினார்.உள்நாட்டில் நீதி கிடைக்கவில்லை.</p><p>
பின்னர் சர்வதேசத் தலையீட்டின் மூலம் குரோஷியர்களுக்கு நீதியின் பார்வையில் நியாயம் கிடைத்தது. </p><p>குற்றம் செய்த ஜனாதிபதி மற்றும் தளபதிகள் பாரிய தண்டனைகளைப் பெற்றனர்.

இவையெல்லாம் சிந்திக்க வேண்டிய படிப்பினைகளாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T23:32:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் வாகனங்களை நிறுத்தத் தடை ; சாரதிகளுக்கு கடுமையான எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ban-on-parking-private-vehicles-warning-drivers-1786836641"></link>
            <id>https://jvpnews.com/article/ban-on-parking-private-vehicles-warning-drivers-1786836641</id>
            <summary type="text">பேருந்து நிறுத்தங்களை மறைக்கும் வகையிலும், இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேருந்து நிறுத்தங்களை மறைக்கும் வகையிலும், இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>பேருந்து நிறுத்தங்களில் தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பேருந்துகள் வீதியின் நடுவே பயணிகளை ஏற்றவும் இறக்கவும் வேண்டிய நிலை ஏற்படுவதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05cba770-84fa-4a5a-ae0f-92bd32c6baac/26-6a80f6a29ef8e.webp' /></p><p>இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பயணிகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது.
</p><p>
இதனால், பேருந்து நிறுத்தத்திற்கு 30 மீற்றர் முன்னதாகவும், அதன் வெளியேறும் பகுதியிலிருந்து 15 மீற்றர் வரையிலும் தனியார் வாகனங்களை நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த விதியை மீறும் வாகன ஓட்டுநர்களுக்கு எதிராக வீதிப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T23:30:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஞ்சி சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தம் குறையுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/will-eating-ginger-lower-high-blood-pressure-1786835143"></link>
            <id>https://jvpnews.com/article/will-eating-ginger-lower-high-blood-pressure-1786835143</id>
            <summary type="text">அதிகப்படியான எண்ணெய் மற்றும் காரமான உணவுகளை உட்கொள்வது, துரித உணவுகளை உண்பது, போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, நீண்ட நேரம் வெயிலில் இருப்பது...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிகப்படியான எண்ணெய் மற்றும் காரமான உணவுகளை உட்கொள்வது, துரித உணவுகளை உண்பது, போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, நீண்ட நேரம் வெயிலில் இருப்பது, சீரான உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது மற்றும் போதுமான தூக்கம் இல்லாமல் இருப்பது போன்ற பழக்கங்கள் இரத்த அழுத்தத்தைப் பாதிக்கக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b75792c-bb98-4780-b775-4d928a5132fb/26-6a80f0ca5d121.webp' /></p><p>கோடை காலத்தில் அதிகரிக்கும் வெப்பநிலையும் நீரிழப்பும் பல உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். வெப்பம் உடலை அதிகமாக வியர்க்கச் செய்வதால் நீரிழப்பு, சோர்வு மற்றும் இரத்த அழுத்த ஏற்ற இறக்கங்கள் போன்ற பிரச்சனைகளின் அபாயம் அதிகரிக்கக்கூடும். </p><p>குறிப்பாக, ஏற்கனவே உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை உள்ளவர்கள் அல்லது அதிக மன அழுத்தத்தில் இருப்பவர்கள் கோடை காலத்தில் தங்கள் உடல் நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/770cf430-1142-44e3-b65e-1b937a441814/26-6a80f0c9ac851.webp' /></p><p>அதிகப்படியான எண்ணெய் மற்றும் காரமான உணவுகளை உட்கொள்வது, துரித உணவுகளை உண்பது, போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, நீண்ட நேரம் வெயிலில் இருப்பது, சீரான உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது மற்றும் போதுமான தூக்கம் இல்லாமல் இருப்பது போன்ற பழக்கங்கள் இரத்த அழுத்தத்தைப் பாதிக்கக்கூடும். </p><p>இத்தகைய சூழ்நிலையில், உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது, சமச்சீரான உணவை உண்பது மற்றும் உணவில் சில இயற்கையான, சத்தான பொருட்களைச் சேர்ப்பது ஆகியவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும்.</p><p>உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு இஞ்சி மிகவும் நன்மை பயக்கும் ஒரு இயற்கையான உணவாகும். இஞ்சியை உட்கொள்வது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுவதோடு, பல நோய்களைக் குணப்படுத்தவும் உதவுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df48ea54-1d06-4cb1-846d-3937cf6db6f9/26-6a80f0cb0d2a4.webp' /></p><h4>உயர் இரத்த அழுத்தத்தில் இஞ்சி உட்கொள்ளல்</h4><p>உயர் இரத்த அழுத்தத்தை சாதாரணமாக வைத்திருக்க உதவும் பல உயிர்வேதியியல் கலவைகள் இஞ்சியில் உள்ளன. ஜிஞ்சரால் மற்றும் ஷோகோல் போன்ற கலவைகள் இஞ்சியில் காணப்படுகின்றன. </p><p>மேலும் இது ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது, இது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இஞ்சி சாப்பிடுவது இரத்த நாளங்களை தளர்த்தி உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இந்த காரணிகள் அனைத்தும் பிபி நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/181b158f-230d-40d4-b131-9529ee727c88/26-6a80f0cbb3670.webp' /></p><p>இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலின் எந்தப் பகுதியிலும் வீக்கத்தைக் குறைக்கும். இஞ்சி சாப்பிடுவதால் உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கும். மூட்டுகள் மற்றும் தசைகளில் வலி இருந்தால் இஞ்சியை உட்கொள்வது நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. சளி மற்றும் இருமலுக்கு இஞ்சி ஒரு சிறந்த மருந்து.</p><p> நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் இஞ்சியை உட்கொள்வதும் இதற்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது. இஞ்சியை சாப்பிடுவதன் மூலம் வைரஸ் மற்றும் பருவகால நோய்த்தொற்றுகளின் அபாயத்தைத் தவிர்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/645f8b9d-89f3-403c-880f-10e988e362e4/26-6a80f0cc66430.webp' /></p>]]></content>
            <updated>2026-08-15T23:05:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் யுவதியின் செயலால் மனமுடைந்த பிரான்ஸ் மாப்பிள்ளை ; பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-woman-who-married-a-french-man-disappeared-1786833509"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-woman-who-married-a-french-man-disappeared-1786833509</id>
            <summary type="text">யாழ். வலிகாமம் பகுதியில் திருமணமாகி ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில் பட்டதாரி யுவதியொருவர் வீட்டிலிருந்து வெளியேறி வேறு ஒருவருடன் சென்ற சம்பவம் ஒன்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். வலிகாமம் பகுதியில் திருமணமாகி ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில் பட்டதாரி யுவதியொருவர் வீட்டிலிருந்து வெளியேறி வேறு ஒருவருடன் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.</p><p>
</p><p></p><p>26 வயதான குறித்த யுவதி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றபோது, அதே பீடத்தில் கல்வி கற்ற இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், பின்னர் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகளைத் தொடர்ந்து அந்தக் காதல் முடிவுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
</p><p>
இதையடுத்து, பிரான்ஸில் தொழில் புரிந்து வந்த 35 வயது இளைஞருடன் கடந்த மாத தொடக்கத்தில் குறித்த பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdcd20f0-938e-4b28-966b-1bdf675cca8e/26-6a80ea6720ec4.webp' /></p><p> திருமணத்துக்குப் பின்னர் கணவன் யாழ்ப்பாணத்தில் மனைவியுடன் தங்கியிருந்ததாகவும், தனது தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக கொழும்பு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
</p><p>
இந்த நிலையில், பெற்றோருடன் தங்கியிருந்த புதுமணப் பெண் யாழ். நகருக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது. </p><p>தொலைபேசி அணைக்கப்பட்டிருந்ததால் உறவினர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
</p><p>
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், குறித்த பெண் தனது பழைய காதலனுடன் இருப்பதாக தெரியவந்ததாக கூறப்படுகிறது. </p><p>பொலிஸார் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, தான் காதலனுடன் சேர்ந்து வாழ்வதாகவும், தனது விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
இதனிடையே, திருமணத்துக்காக வழங்கப்பட்ட நகைகள், பணம் மற்றும் ஏனைய சொத்துக்கள் தொடர்பாகவும் இருதரப்பினருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> திருமணச் செலவுகள் மற்றும் நகைகள் தொடர்பாக கணவன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T22:38:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொரியா போரை முடிவுக்கு கொண்டுவர தென் கொரிய ஜனாதிபதி அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/south-korea-lee-urges-talks-with-north-1786833461"></link>
            <id>https://news.lankasri.com/article/south-korea-lee-urges-talks-with-north-1786833461</id>
            <summary type="text">South Korea urges talks with North Korea to replace armistice: வட கொரியாவுடன் போர் நிறுத்தத்திற்குப் பதிலாக அமைதியை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>South Korea urges talks with North Korea to replace armistice: வட கொரியாவுடன் போர் நிறுத்தத்திற்குப் பதிலாக அமைதியை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு தென் கொரியா அழைப்பு.
</p><p>அமைதியான சகவாழ்வைத் தொடர்வதற்காக வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் அழைப்பு விடுத்துள்ளார்.</p><h2>இரு கொரிய நாடுகளும்</h2><p>
மேலும், மோதலைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை தென் கொரியா நாடும் என்றும், தீபகற்பத்தின் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பதிலாக ஒரு அமைதி ஆட்சியை நிறுவ வேண்டியதன் அவசியத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50d53997-b726-492c-a5e5-ccfc34300c25/26-6a80ea3829d68.webp' /></p><p> </p><p>ஜப்பானிய காலனி ஆதிக்கத்திலிருந்து கொரியா விடுதலை பெற்ற ஆண்டு நிறைவு விழாவில் ஆற்றிய உரையில், இரு கொரிய நாடுகளும் இணைந்து வாழ்வதற்காக ஒரு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் லீ கூறியுள்ளார். </p><p>சமாதான ஒப்பந்தத்தால் அல்லாமல், போர்நிறுத்தத்தால் நிறுத்தப்பட்ட 1950-53 கொரியப் போரை முடிவுக்குக் கொண்டுவர, வட கொரியாவுக்கும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த அவர் வலியுறுத்தினார்.</p><p></p><p> </p><p>மேலும், வட கொரியாவின் அணுசக்தித் திறன்களைக் கட்டுப்படுத்துவதற்கான பயனுள்ள நடவடிக்கைகளையும் இந்த விவாதங்கள் ஆராயலாம் என்றும் அவர் கூறியுள்ளார். </p><p>அத்துடன், இந்த விவகாரத்தில் பதற்றத்தைத் தணிப்பதற்கும், நிலைமை மோசமடைவதைக் கட்டுப்படுத்த பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்குவதற்கும், தென் கொரியா முன்னெச்சரிக்கை மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் லீ கூறியுள்ளார்.</p><h2>வட கொரியா நிராகரிப்பு</h2><p> </p><p>வட கொரியாவின் அமைப்பை மதித்து, அந்த நாட்டுடன் அமைதியான சகவாழ்வை நாடுவதாக கடந்த ஆண்டு லீ அளித்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே அவரது இந்த அழைப்பு பெரும்பாலும் அமைந்துள்ளது. </p><p>வட மற்றும் தென் கொரியா இடையேயான உறவுகள் முடங்கியுள்ளன. வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், தமது நாட்டின் மறு ஒன்றிணைப்புக் கொள்கையைக் கைவிட்டு, தெற்கை தனது மிகவும் விரோதமான நாடு என்று அறிவித்து, முன்னணிப் பாதுகாப்புகளை வலுப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bcb46b8-7193-468c-b03a-2e659246456c/26-6a80ea377907c.webp' /></p><p> </p><p>லீயின் நல்லிணக்க முன்மொழிவுகளை வட கொரியா நிராகரித்துள்ளது; அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான தென் கொரியாவின் திட்டத்தை விமர்சித்துள்ளது; மேலும், அமெரிக்க-தென் கொரிய கூட்டு ராணுவப் பயிற்சிகளை ஆத்திரமூட்டும் செயல்கள் எனக் கண்டித்துள்ளது. </p><p>இந்த நிலையில், ஜப்பானுடனான உறவுகள் குறித்துப் பேசிய லீ, கடந்த காலத்தை எதிர்கொண்டு அதே வேளையில் எதிர்காலத்திற்கு வழிவிட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். </p><p>மேலும், ஜப்பானை ஒரு நெருங்கிய அண்டை நாடாக கொண்டு, அமைதி மற்றும் செழிப்பின் புதிய 60 ஆண்டுகால சகாப்தத்தைத் தொடங்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-15T22:35:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் ChatGPTயின் கற்பனைக் கதைகளை வைத்து தாய் - தம்பியை கொலை புலம்பெயர் சிறுவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/american-man-kills-mother-and-brother-over-chatgpt-1786831885"></link>
            <id>https://ibctamil.com/article/american-man-kills-mother-and-brother-over-chatgpt-1786831885</id>
            <summary type="text">அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 வயதான சிறுவன் ஒருவர், தனது தாயையும் தம்பியையும் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். மேலும், தனது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 வயதான சிறுவன் ஒருவர், தனது தாயையும் தம்பியையும் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். </p><p>மேலும், தனது குடும்பத்தினரைக் கொல்வது தொடர்பான "கோட்பாட்டு யோசனைகள் அல்லது கற்பனைக் கதைகளை" ஆராய்வதற்காக அவர் இதற்கு முன்பு ChatGPT-ஐப் பயன்படுத்தியதாக அந்நாட்டு அரசுத் தரப்பு சட்டத்தரணி வெளிப்படுத்தியுள்ளனர்.</p><p>

அமெரிக்காவின் மாசசூசெட்ஸின் ஆக்டனில் உள்ள தங்களது வீட்டில், தனது தாயார் சுதா வெங்கடேசன் (45) மற்றும் 14 வயது சகோதரர் சித்தார்த் அரவிந்த் ஆகியோரின் மரணங்களைத் தொடர்ந்து, 17 வயதான அர்ஜுன் அரவிந்த் மீது இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகளும் மேலும் பல குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.</p><p></p><h3>அதிகாரப்பூர்வ காரணங்கள்&nbsp;</h3><p>
</p><p>
தனது குடும்பத்தைக் கொல்வது தொடர்பான கற்பனைக் காட்சிகள் அல்லது கற்பனைக் கதைகள் குறித்த தேடல்களுக்காக இணையத்தையும் ChatGPT-யையும் பயன்படுத்தியது உட்பட, அரவிந்த் சமீபகாலமாக கவலைக்குரிய நடத்தையை வெளிப்படுத்தியதை புலனாய்வாளர்கள் கண்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8bed92e-5aeb-4e54-9b5e-ecd941f7874f/26-6a80e69d889b8.webp' /></p><p>தனது குடும்பத்திற்கு எதிரான அச்சுறுத்தல்களுடன் தொடர்புடையதாகத் தோன்றும் கதாபாத்திரங்கள் மற்றும் சூழ்நிலைகளைக் கொண்ட கற்பனையான, கோதிக் பாணிக் கதைகளை உருவாக்க அந்தப் பதின்வயது சிறுவன் ChatGPT-ஐப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.</p><p>

அரவிந்தின் தந்தையால் தனது குடும்பத்தினரைத் தொடர்புகொள்ள முடியாததால் காவல்துறைக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>அதேவேளையில், மரணத்திற்கான அதிகாரப்பூர்வ காரணங்கள் மருத்துவப் பரிசோதகரின் தீர்மானத்திற்கு உட்பட்டவை என்றும் அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-15T22:22:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பாவில் கடும் வெப்ப அலை ; உயிரிழப்பு 16 ஆயிரத்தை கடந்தது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/severe-heatwave-europe-death-toll-crosses-16-000-1786832330"></link>
            <id>https://canadamirror.com/article/severe-heatwave-europe-death-toll-crosses-16-000-1786832330</id>
            <summary type="text">ஐரோப்பிய நாடுகளை கடுமையாக பாதித்து வரும் கடும் வெப்ப அலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெல்ஜியம்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பிய நாடுகளை கடுமையாக பாதித்து வரும் கடும் வெப்ப அலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இந்த வெப்ப அலையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. </p><p>குறிப்பாக, பொதுவாக குளிரான காலநிலையைக் கொண்ட பெல்ஜியத்திலும் வெப்பத்தின் தாக்கம் தீவிரமாக காணப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f853dfe-a588-4696-a4d2-d366501c4d91/26-6a80e5cc34d5c.webp' /></p><p>பெல்ஜியத்தின் தெற்கு பகுதியான வாலோனியாவில், வழக்கமாக எதிர்பார்க்கப்பட்டதை விட உயிரிழப்பு விகிதம் 77 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடும் வெப்பம் காரணமாக பொதுமக்கள் பல்வேறு உடல்நலப் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள நிலையில், மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
இதனிடையே, காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் எதிர்கால கோடைக்காலங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என காலநிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p> இதுபோன்ற கடும் வெப்ப நிலைகளை எதிர்கொள்ள ஐரோப்பிய நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-15T22:19:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை எங்களுடையது ; அமெரிக்காவுக்கு ஈரான் அதிரடி பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/strait-of-hormuz-is-ours-iran-responds-to-us-1786831696"></link>
            <id>https://canadamirror.com/article/strait-of-hormuz-is-ours-iran-responds-to-us-1786831696</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை ஈரானின் உத்தரவின் பேரிலேயே மூடப்பட்டு திறக்கப்படும் என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அமெரிக்கா–ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை ஈரானின் உத்தரவின் பேரிலேயே மூடப்பட்டு திறக்கப்படும் என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அமெரிக்கா–ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச எரிபொருள் விநியோகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை விவகாரம் மீண்டும் சர்ச்சையாகியுள்ளது.
</p><p>
இந்த நீரிணையை கைப்பற்றி, அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு ஈரான் கடும் பதிலடி கொடுத்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/828fb779-669f-4d29-aa76-3d4d703c11cd/26-6a80e351b6aa7.webp' /></p><p>ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹோர்முஸ் நீரிணை ஈரானுக்கு சொந்தமானது; அது ஈரானிடமே இருக்கும். ஈரானின் உத்தரவின்படியே அது மூடப்பட்டு திறக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், அமெரிக்கா தனது தோல்வியை ஏற்றுக்கொண்டு, தமது திட்டங்களை கைவிடும் வரை ஹோர்முஸ் நீரிணை தொடர்பான முடக்கம் தொடரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.</p><p>

இதனிடையே, ஈரானுடனான மோதலில் அமெரிக்காவின் முக்கிய இலக்குகளில் ஒன்று ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கச்சா எண்ணெய் விலையை குறைப்பது என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்திருந்தார்.
</p><p>
இதனால், உலகின் முக்கிய எரிபொருள் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை தொடர்பான அமெரிக்கா–ஈரான் மோதல் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-15T22:08:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்து கலாசார திணைக்களத்துக்கு 2027 பட்ஜெட்டில் கூடுதல் நிதி கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/additional-fun-requested-hindu-culture-2027-budget-1786830771"></link>
            <id>https://jvpnews.com/article/additional-fun-requested-hindu-culture-2027-budget-1786830771</id>
            <summary type="text">இந்து கலாசார திணைக்களத்தின் பணிகளை மேலும் பலப்படுத்தி, ஆலய வளர்ச்சி மற்றும் மாணவர்களுக்கான பயிற்சிகளைத் தீவிரப்படுத்த 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்து கலாசார திணைக்களத்தின் பணிகளை மேலும் பலப்படுத்தி, ஆலய வளர்ச்சி மற்றும் மாணவர்களுக்கான பயிற்சிகளைத் தீவிரப்படுத்த 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கூடுதல் நிதியை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>ஆண்டுதோறும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இந்து கலாச்சார திணைக்களத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
</p><p>வரும் 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இந்த நிதி ஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்கத் தேவையான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87dd1e8e-44a8-4020-b542-58ac0963aa6d/26-6a80dfb562743.webp' /></p><p>இந்தத் திணைக்களத்தின் ஊடாக ஆலயங்களுக்கான நிதி உதவிகள், பல்வேறு சமயச் செயற்பாடுகள் மற்றும் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
இந்தநிலையில் தமக்குரிய அமைச்சுப் பொறுப்புகளுக்கு அப்பாலும், இந்து கலாசார திணைக்களத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் திறம்படச் செய்யப்பட்டுள்ளன.</p><p>

இந்தச் செயற்பாடுகளை மேலும் உறுதியோடும் பலத்தோடும் முன்னெடுத்துச் செல்வதே முதன்மை நோக்கமாகும்.
</p><p>
எனவே வரவிருக்கும் நிதியொதுக்கீட்டின் மூலம் திணைக்களத்தின் திட்டங்களை விரைவுபடுத்தி, சமய மற்றும் பண்பாட்டுச் செயல்பாடுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T21:52:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் மாணவன் ஒருவருக்கு கிடைத்த 9 மில்லியன் யூரோ மதிப்பிலான தங்க புதையல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/student-finds-gold-treasure-worth-9-million-euros-1786821956"></link>
            <id>https://ibctamil.com/article/student-finds-gold-treasure-worth-9-million-euros-1786821956</id>
            <summary type="text">பெல்ஜியத்தின் - ஃப்ளாண்டர்ஸ் பகுதியில் ஒரு வீட்டைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்கள், வீட்டின் அடித்தளச் சுவர்களுக்குள் மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெல்ஜியத்தின் - ஃப்ளாண்டர்ஸ் பகுதியில் ஒரு வீட்டைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்கள், வீட்டின் அடித்தளச் சுவர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் சுமார் 9 மில்லியன் யூரோ (330 கோடி) மதிப்பிலான தங்கக் கட்டிகள் மற்றும் தங்க நாணயங்களை கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

புதிய கழிவுநீர் குழாய்களை அமைப்பதற்காக வீட்டின் அடித்தளத்தில் துளையிடும் பணியில் ஈடுபட்டிருந்தபோதே இந்தப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p>மேலும், ஃப்ளாண்டர்ஸ், டெண்டர்மாண்டேவில் உள்ள ஒரு முன்னாள் மதுபான ஆலை இருந்த இடத்தில் 18 வயதான கோபி, என்ற சிறுவனே இதனை முதலில் கண்டுப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>உரிமை கோரும் வாய்ப்பு</h2><p>இந்தக் கண்டுபிடிப்பு, தங்கத்தை யார் உரிமை கோர முடியும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16bbd343-045b-4b28-ba73-e692966cafa4/26-6a80bd46d70d7.webp' /></p><p> </p><p>கட்டுமானப் பணியாளர்களுக்கும், அந்தச் சொத்தை வைத்திருக்கும் உள்ளூர் தொண்டு நிறுவனத்திற்கும் உரிமை கோரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.</p><p>இது குறித்து அந்நாட்டு காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், மேலும் புதையலைத் தேடி யாரும் அந்த இடத்திற்குச் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.</p><p>அந்த வீடு முழுமையாகச் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து தங்கமும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-15T21:43:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைது செய்யப்பட்ட ஷிரான் பாசிக்கின் தொலைபேசியில் ஈரான் தாக்குதல் காணொளிகள்..! கிடைக்கப்பெற்றுள்ள பகீர் வாக்குமூலம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drug-kingpin-shiran-basik-brought-sri-lanka-1786829185"></link>
            <id>https://tamilwin.com/article/drug-kingpin-shiran-basik-brought-sri-lanka-1786829185</id>
            <summary type="text">நீண்டகாலமாகத் தேடப்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக், துபாய் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, 48 மணி நேரத்திற்குள் இலங்கைக்கு அழைத்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீண்டகாலமாகத் தேடப்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக், துபாய் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, 48 மணி நேரத்திற்குள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p>

அவர் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>

போதைப்பொருள் கடத்தல், பணமோசடி, பாதாள உலகக் குழுக்களுடனான தொடர்புகள் மற்றும் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடனான தொடர்புகள் தொடர்பில் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>

ஷிரான் பாசிக் தனது ஆரம்பக்கட்ட வாக்குமூலத்தில், துபாயில் இருந்தபோது ஈரானுடன் தொடர்புடைய தாக்குதல்கள் குறித்து அந்நாட்டு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதன் பின்னர் இலங்கைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
துபாயில் உள்ள பிரபலமான, மிகப்பெரிய வர்த்தக வளாகம் ஒன்றில் இருந்தபோது, அந்நாட்டு பொலிஸார் தன்னை சோதனை செய்ததாக பாசிக் முதற்கட்ட விசாரணைகளின்போது தெரிவித்துள்ளார்.
</p><p>
அந்தக் காலப்பகுதியில், ஈரானிலிருந்து துபாய், ஐக்கிய அரபு இராச்சியத்தை நோக்கி தாக்குதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்ததாகவும், அதன் பின்னணியில் தன்னிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், விசாரணை அதிகாரிகளிடம் பல்வேறு தகவல்களை அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
அவரது கையடக்கத் தொலைபேசியை துபாய் பொலிஸார் பரிசோதித்தபோது, ஈரானால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள் தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் அதில் இருந்ததாகவும், அதன் பின்னரே தான் கைது செய்யப்பட்டதாகவும் பாசிக் விசாரணைகளின்போது தெரிவித்துள்ளார்.</p><p>

இதன் பின்னர், இலங்கைக்கு நாடு கடத்தப்படும் வரையிலும், துபாய் பொலிஸார் தன்னிடம் ஈரான் தொடர்புகள் குறித்து தினமும் விசாரணை நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக அலசுகின்றது NewsInsightTamil நிகழ்ச்சி...&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mB0MsAFzV9E" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T21:37:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவை தாக்கிய சுனாமி அலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tsunami-that-hit-indonesia-1786829733"></link>
            <id>https://ibctamil.com/article/tsunami-that-hit-indonesia-1786829733</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் கடலோரப் பகுதியில் சனிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக&amp;nbsp;நாட்டின் பல பகுதிகளில் 1 மீட்டருக்கும் (3 அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் கடலோரப் பகுதியில் சனிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக&nbsp;நாட்டின் பல பகுதிகளில் 1 மீட்டருக்கும் (3 அடி) குறைவான சுனாமி அலைகள் பதிவாகியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>நிலநடுக்கம் ஏற்பட்டு சுமார் மூன்று மணி நேரம் கழித்து எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்படுவதற்கு முன்தாக இந்த குறைவளவான தாக்கத்தை&nbsp;இந்தோனேசியா சந்தித்துள்ளது.</p><p>இந்நிலையில் குறித்த நிலநடுக்கத்தின் விளைவாக குறைந்தது 47 பேர் உயிரிழந்ததாக இந்தோனேசியாவின் தேசிய பேரிடர் தணிப்பு முகமை பிரிவு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>7.7 ஆகப் பதிவான&nbsp;நிலநடுக்கம்</h2><p>ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, புளோரஸ் தீவின் கடற்கரைக்கு அப்பால் 10 கிலோமீட்டர் (6.2 மைல்கள்) ஆழத்தில் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65889f4b-e802-4904-b451-ab0ab0bf72ad/26-6a80dc8ce8102.webp' /></p><p>

ஆழம் குறைந்த நிலநடுக்கங்கள் (70 கிலோமீட்டர் ஆழம் வரை) மிகவும் ஆபத்தானதாகவும், பேரழிவை ஏற்படுத்தக்கூடியதாகவும் கருதப்படுகின்றன.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-15T21:35:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட 73 பேர் மீது அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/action-taken-against-73-people-red-notice-issued-1786829472"></link>
            <id>https://jvpnews.com/article/action-taken-against-73-people-red-notice-issued-1786829472</id>
            <summary type="text">சர்வதேச அளவில் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள 73 திட்டமிட்ட குற்றக் குழு உறுப்பினர்கனள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை விரைவில் இலங்கைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச அளவில் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள 73 திட்டமிட்ட குற்றக் குழு உறுப்பினர்கனள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை விரைவில் இலங்கைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்த அவர், வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ள திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினர்களை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் தற்போது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fdc5a33-0a99-4a28-a728-4dfce3d12bfb/26-6a80daa286c09.webp' /></p><p>சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட 73 பேர் உட்பட சுமார் 100 பேரைக் கைது செய்து நாட்டுக்கு அழைத்து வருவதற்கான சர்வதேச ஆதரவு தங்களது கிடைத்துள்ளதாகக் கூறிய காவல்துறை மா அதிபர், அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் முன்னேற்றத்தை சர்வதேச நாடுகள் மற்றும் வெளிநாட்டுத் தூதரகங்கள் பாராட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
</p><p>
கனடா தூதுவருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
அதேநேரம், போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் தீவிரமாகச் செயற்பட்டு வரும் அதேவேளை, போதைப்பொருளுக்கான தேவையைக் குறைப்பதற்குப் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
அத்துடன், குடும்ப மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T21:31:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா பல்கலைக்கழக வளாகம் அருகே துப்பாக்கி சூடு ; 5 பேர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/shooting-near-american-university-campus-5-injured-1786812765"></link>
            <id>https://canadamirror.com/article/shooting-near-american-university-campus-5-injured-1786812765</id>
            <summary type="text">அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள விர்ஜீனியா ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் விடுதி அருகே இன்று அதிகாலை துப்பாக்கிச்சூடு நடைபெற்றதில் 5 பேர் காயமடைந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள விர்ஜீனியா ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் விடுதி அருகே இன்று அதிகாலை துப்பாக்கிச்சூடு நடைபெற்றதில் 5 பேர் காயமடைந்தனர்.
</p><p>
பல்கலைக்கழகத்தின் Quad Annexes பகுதியில், விடுதிகளுக்கு வெளியே துப்பாக்கிக் காயங்களுடன் 5 பேரை பொலிஸார் கண்டெடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/637f5495-7dab-49b0-88dd-55aed7c26ff7/26-6a80995ed1f89.webp' /></p><p>உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவத்தைத் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மாணவர்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.</p><p> பின்னர் ஊரடங்கு நீக்கப்பட்டாலும், வளாகத்தில் தொடர்ந்து பலத்த பொலிஸார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
</p><p>
இந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. </p><p>துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்களை அடையாளம் காணும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-15T21:20:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாண யூடியூப்பரின் காதல் வாழ்க்கையில் திடீர் திருப்பம் ; சமூக வலைத்தளத்தில் பரவும் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-sudden-turn-in-the-love-life-of-jaffna-youtuber-1786815638"></link>
            <id>https://jvpnews.com/article/a-sudden-turn-in-the-love-life-of-jaffna-youtuber-1786815638</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யூடியூப்பர் ஒருவரின் காதலி மற்றும் அவருக்காக பணியாற்றிய வீடியோ எடிட்டர் தொடர்பில் காதல் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யூடியூப்பர் ஒருவரின் காதலி மற்றும் அவருக்காக பணியாற்றிய வீடியோ எடிட்டர் தொடர்பில் காதல் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளப் பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.</p><p>
</p><p></p><p>யூடியூப்பர் தனது வீடியோ எடிட்டிங் பணிகளுக்காக பாடசாலை நண்பரான ஒருவரை பணியமர்த்தியதாகவும், குறித்த எடிட்டர் கொக்குவில் பகுதியில் நடத்தி வந்த போட்டோ கடை எடிட்டிங் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டதாகவும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9d9cdfd-94a7-4d56-8955-d4d894f23fab/26-6a80a497b44fd.webp' /></p><p>

மேலும், யூடியூப்பரின் காதலி அந்த இடத்திற்கு அடிக்கடி சென்று வந்த நிலையில், அவருக்கும் எடிட்டருக்கும் இடையே நெருக்கமான உறவு ஏற்பட்டதாகவும், இந்த விவகாரம் பின்னர் யூடியூப்பருக்கு தெரியவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதையடுத்து யூடியூப்பர் இருவரிடமிருந்தும் விலகியதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T21:20:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு டுவிட்டர் பதிவால் கைப்பற்ற முடியாது... ட்ரம்பிற்கு பதிலடி கொடுத்த் ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-on-trump-territory-remark-1786828488"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-on-trump-territory-remark-1786828488</id>
            <summary type="text">Tehran&#039;s reaction came after Trump&#039;s Remark: ஹார்முஸ் நீரிணையை அமெரிக்கப் பகுதி என ட்ரம்ப் விரைவில் அறிவிப்பார் என்ற கருத்து குறித்த ஈரானின் எதிர்வினை...</summary>
            <content type="html"><![CDATA[<p>Tehran's reaction came after Trump's Remark: ஹார்முஸ் நீரிணையை அமெரிக்கப் பகுதி என ட்ரம்ப் விரைவில் அறிவிப்பார் என்ற கருத்து குறித்த ஈரானின் எதிர்வினை.
</p><p>ஹார்முஸ் நீரிணை ஈரானுக்குச் சொந்தமானது, ஈரானுக்குச் சொந்தமாகவே உள்ளது, மேலும் ஈரானுக்குச் சொந்தமாகவே இருக்கும் என்று ஈரான் ஜனாதிபதி ட்ரம்பிற்கு பதிலளித்துள்ளது.</p><h2>ஈரானின் கட்டளை</h2><p>
</p><p>ஹார்முஸ் நீரிணையை அமெரிக்கா விரைவில் தனது நாட்டின் ஒரு பகுதியாக அறிவிக்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பு வெளியானது. </p><p>மத்திய கிழக்கு மோதலின் தொடக்கத்தில் ஈரான் நடைமுறையில் மூடியிருந்த அந்த நீரிணை, ஈரானின் கட்டளையின் கீழ் மட்டுமே மூடப்படும் மற்றும் திறக்கப்படும் என்று ஈரானின் வெளிவிவகார துணை அமைச்சர் காசெம் கரிபாபாடி வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b830b284-967c-4856-a302-8fb72b5d3140/26-6a80d6cade708.webp' /></p><p> </p><p>மேலும் தமது சமூக ஊடகப் பதிவில், ஹார்முஸ் நீரிணையை ட்வீட் மூலமாகவோ, விமானம் தாங்கி போர்க்கப்பல் மூலமாகவோ, உத்தரவு பிறப்பிப்பதன் மூலமாகவோ அல்லது தேர்தல் பிரச்சாரப் பேச்சு மூலமாகவோ கைப்பற்றிவிட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>மேலும், ஒருமுறைக்கு ஒருமுறை யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்: இந்த நிமிடம் வரை, நீங்கள் வியூக ரீதியான மற்றும் பெரும் தோல்விகளைச் சந்தித்துள்ளீர்கள்... நீங்கள் தோல்வியின் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு, உங்கள் கற்பனையான பிரமைகளைக் கைவிடாத வரை, ஈரான் முற்றுகையைத் தொடர்ந்து அமுல்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><p>ஈரானை முழுமையாகத் தோற்கடித்து, உலகின் மிக முக்கியமான எரிசக்திப் போக்குவரத்துப் பாதையான அந்த நீரிணையை விரைவில் அமெரிக்கப் பிரதேசத்தின் ஒரு பகுதியாக அறிவிப்பதாக ட்ரம்ப் கூறிய சில மணிநேரங்களுக்குப் பிறகு காசெம் கரிபாபாடியின் எதிர்வினை வெளிவந்தது.</p><h2>நகைச்சுவையாகவே</h2><p> </p><p>ஆனால், ட்ரம்ப் நகைச்சுவையாகவே அவ்வாறு கூறினார் என்று பெயர் குறிப்பிடாத வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் பின்னர் தெளிவுபடுத்தியதாக 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' செய்தி வெளியிட்டுள்ளது.</p><p> பிப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் ஈரான் மீது கூட்டுத் தாக்குதல்களை நடத்தியதை அடுத்து மத்திய கிழக்கில் போர் வெடித்தது; இத்தாக்குதலில், அப்போதைய 86 வயதுடைய உயரிய தலைவர் அலி கமேனி உட்பட அந்நாட்டின் முக்கியத் தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e695b05-7369-4508-a779-b0aa3cfcd582/26-6a80d6cb94242.webp' /></p><p> இதற்குப் பதிலடியாக, ஈரானியப் படைகள் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தின. </p><p>இதனிடையே, ஈரான் மீதான தாக்குதலில் இருந்து இஸ்ரேல் பின்வாங்கவும், அமெரிக்கா தொடர்ந்து தாக்குதலை முன்னெடுத்தது. ஆனால் தற்போது அமெரிக்காவும் தாக்குதலை நிறுத்திவிட்டு, பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-15T21:12:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலித்தீனுக்கு மாற்றுப் பொருட்கள் அறிமுகம் ; அரசாங்கம் தீவிர நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/government-takes-introduce-alternatives-polythene-1786827631"></link>
            <id>https://jvpnews.com/article/government-takes-introduce-alternatives-polythene-1786827631</id>
            <summary type="text">நாட்டில் பொலித்தீன் பயன்பாட்டை 26 மில்லியனிலிருந்து 16 மில்லியன் அலகுகளாகக் குறைக்க முடிந்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

வர்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் பொலித்தீன் பயன்பாட்டை 26 மில்லியனிலிருந்து 16 மில்லியன் அலகுகளாகக் குறைக்க முடிந்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p></p><p>

வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் 2026 ஆம் ஆண்டு பாதீட்டு ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் முன்னேற்றங்களை ஆய்வு செய்வதற்கும், 2027 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பாக கலந்துரையாடுவதற்கும் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21420e04-1bb4-4179-b9d2-d3b75ab48e20/26-6a80d371039d0.webp' /></p><p>இந்தச் சந்திப்பின் போதே நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.
</p><p>
சுற்றாடல் தாக்கத்தை மேலும் குறைக்கும் நோக்கில், பொலித்தீனுக்குப் பதிலாக மாற்றுப் பொருட்களை அறிமுகப்படுத்தும் திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் இதன்போது குறிப்பிட்டனர்.
</p><p>
அத்துடன், உணவு மற்றும் பானங்களின் தரநிலைகள் மற்றும் விலைக் கட்டுப்பாடுகள் தொடர்பான கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்குமாறு பொதுமக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், அதிகாரிகள் விழிப்புடன் செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T21:00:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸாரின் வலையில் சிக்கிய ஸ்பைடர் வுமன்..! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/spider-woman-caught-with-ice-drug-1786824855"></link>
            <id>https://tamilwin.com/article/spider-woman-caught-with-ice-drug-1786824855</id>
            <summary type="text">நீண்டகாலமாக சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில்
ஈடுபட்டு வந்த, பிரதேச மக்களால் &#039;ஸ்பைடர் வுமன்&#039; (சிலந்தி பெண்) என
அழைக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீண்டகாலமாக சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில்
ஈடுபட்டு வந்த, பிரதேச மக்களால் 'ஸ்பைடர் வுமன்' (சிலந்தி பெண்) என
அழைக்கப்படும் பெண், சாய்ந்தமருது பொலிஸாரினால் அதிரடியாகக் கைது
செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய
வேளை, அவரை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில்
வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.</p><h2>போதைப்பொருள் விநியோகம்</h2><p>

அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் ஏ.ஆர். பிர்தௌவ்ஸிற்கு&nbsp; கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கடந்த வியாழக்கிழமை (13) மாலை
சாய்ந்தமருது பொலிஸாரினால் விசேட சோதனை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6ddb0cc-f90f-456a-ba7d-397e4b1a0238/26-6a80cc4b6664c.webp' /></p><p>
</p><p>இதன்போது, கல்முனை புறநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து 2310
மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் 40 வயதுடைய 1 பிள்ளையின் தாயான
இந்த சந்தேகநபர் பொலிஸாரின் சுருக்குப் பொறியில் சிக்கினார்.
</p><p>
கணவனை இழந்த இவர், தனது உறவினர்களின் ஒத்தாசையுடன் நீண்டகாலமாக போதைப்பொருள்
விநியோகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.</p><h2>விளக்கமறியல்</h2><p> </p><p>பொலிஸார் சோதனையிட வரும்
சந்தர்ப்பங்களில், வீடுகளின் மாடிகளில் இருந்து ஏனைய மாடிகளுக்கு லாவகமாகப்
பாய்ந்து தப்பிச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தமையினாலேயே இவருக்கு
மக்கள் 'ஸ்பைடர் வுமன்' எனப் பெயரிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d1feb10-bd22-4ba6-b317-d73c2719d8c7/26-6a80cc4c66f11.webp' /></p><p>
</p><p>
இம்முறை பெண் பொலிஸாரை உள்ளடக்கிய பொலிஸ் குழுவினர் மாறுவேடத்தில் சென்று,
நீண்ட போராட்டத்திற்குப் பின்னரே கால் உடைந்த நிலையிலிருந்த இவரைச் சுற்றி
வளைத்துக் கைது செய்துள்ளனர்.</p><p> இதற்கு முன்னரும் இரு வேறு சந்தர்ப்பங்களில்
கைதான இவர், கல்முனை தலைமையக பொலிஸாருக்குப் பெரும் சவாலாக விளங்கியதாக பொலிஸ்
உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
</p><p>
அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல அவர்களின்
மேற்பார்வையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி
ஆராச்சியின் ஆலோசனையிலும், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்
எம்.கே. இப்னு அசாரின் நெறிப்படுத்தலிலும் இந்தசோதனை நடத்தப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T20:33:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் அதிரடி அறிவிப்பிற்கு ஈரானின் கடுமையான பதிலடி..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-trump-will-soon-declare-hormuz-us-territory-1786810125"></link>
            <id>https://tamilwin.com/article/iran-trump-will-soon-declare-hormuz-us-territory-1786810125</id>
            <summary type="text">ஈரானை தோற்கடித்த பிறகு, ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிரதேசமாக விரைவில் அறிவிப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதற்கு ஈரான் கடும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானை தோற்கடித்த பிறகு, ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிரதேசமாக விரைவில் அறிவிப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதற்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.</p><p>

ஹோர்முஸ் நீரிணை ஈரானுக்குச் சொந்தமானது, அது ஈரானுக்குச் சொந்தமானதாகவே உள்ளது தொடர்ந்து ஈரானுக்கே சொந்தமானதாக இருக்கும் என்று ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரீபாபாதி தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>

ட்ரம்பின் கருத்துக்கு பதிலளித்த அவர், “ஒரு ட்வீட் மூலமாகவோ, விமானந்தாங்கிக் கப்பல் மூலமாகவோ, உத்தரவு பிறப்பிப்பதன் மூலமாகவோ அல்லது தேர்தல் பிரசார உரையின் மூலமாகவோ ஹோர்முஸ் நீரிணையை கைப்பற்ற முடியாது” என்று தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும், ஈரான் சந்தித்துள்ளதாக அமெரிக்கா கூறும் தோல்வியை ஏற்றுக்கொள்ளாத வரை, ஹோர்முஸ் நீரிணை மீதான முற்றுகையை ஈரான் தொடர்ந்து அமல்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3eca50a7-7690-426a-a44b-346781b58de7/26-6a8090721f46a.webp' /></p><p>
</p><p>

இதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், ஹோர்முஸ் நீரிணை மீது அமெரிக்காவுக்கு “முழுமையான கட்டுப்பாடு” இருப்பதாக ட்ரம்ப் கூறியிருந்தார்.

“நாம் இதை தொடர்ந்து வைத்திருப்போம் என்று நினைக்கிறேன்.</p><p> எங்கள் கடற்படை முற்றுகை ‘இரும்புச் சுவர்’ என்று அனைவராலும் அழைக்கப்படுகிறது.

 இதை ஈரான் எதுவும் செய்ய முடியாது” என்று ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருந்தார்.

ஆனால், ஈரான் இராணுவம் ட்ரம்பின் கூற்றை “பொய் மற்றும் கட்டுக்கதைகள்” என்று மறுத்துள்ளது.</p><h2>ட்ரம்பிற்கு பதிலடி</h2><p>

ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து ஈரான் இஸ்லாமிய குடியரசின் முழுமையான நிர்வாகம் மற்றும் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் சோல்பகாரி தெரிவித்துள்ளார்.</p><p>

ஈரான் ஆயுதப்படைகளின் அனுமதி மற்றும் கண்காணிப்பு இல்லாமல் எந்தவொரு வர்த்தகக் கப்பல் அல்லது எண்ணெய் கப்பலும் இந்த நீரிணை வழியாக பாதுகாப்பாக செல்ல முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7315299c-b144-4f58-848a-a9b121f959b0/26-6a809072e693c.webp' /></p><p>
ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியும், ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக அமெரிக்கா “மிகப்பெரிய தவறான கணக்கீட்டை” மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ளார்.
</p><p>
இதற்கிடையில், வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், ட்ரம்பின் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான கருத்து நகைச்சுவையாக கூறப்பட்டது என்று பின்னர் விளக்கம் அளித்ததாக Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
தற்போதைய அமெரிக்கா–ஈரான் மோதலின் முக்கிய பதற்றப் பகுதியாக ஹோர்முஸ் நீரிணை உள்ளது. 

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T20:20:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆறாவது புதிய வெப்ப அலை அபாயத்தில் பிரித்தானியா... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-new-sixth-summer-heatwave-1786822982"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-new-sixth-summer-heatwave-1786822982</id>
            <summary type="text">UK at risk of new sixth summer heatwave: பிரித்தானியா ஆறாவது புதிய கோடை வெப்ப அலையை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளது&amp;nbsp;என வானிலை ஆய்வு மையம்.சராசரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK at risk of new sixth summer heatwave: பிரித்தானியா ஆறாவது புதிய கோடை வெப்ப அலையை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளது&nbsp;என வானிலை ஆய்வு மையம்.</p><p>சராசரிக்கும் அதிகமான வெப்பநிலை மற்றும் கூடுதல் வெப்ப அலைகள் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால், பிரித்தானியா மீண்டும் ஒருமுறை கடும் வெப்பமான வானிலையை எதிர்கொள்ளக்கூடும்.</p><h2>சராசரிக்கும் அதிகமாக</h2><p>
</p><p>பிரித்தானியா வானிலை ரீதியான இலையுதிர் காலத்திற்குள் நுழையும் வேளையில், ஆகஸ்ட் 29, சனிக்கிழமை முதல் செப்டம்பர் 12, சனிக்கிழமை வரையிலான சமீபத்திய வானிலை முன்னறிவிப்பில் இந்தப் புதிய கணிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a73fab8-e7d4-4a3f-80fd-45a09578814e/26-6a80c148dc76a.webp' /></p><p> </p><p>வானிலை நிபுணர்களின் கூற்றுப்படி, துல்லியமான வானிலை நிலவரம் குறித்து தற்போது குறைந்த அளவே உறுதியான தகவல் உள்ளது; இருப்பினும், ஒட்டுமொத்தமாக வெப்பநிலை மீண்டும் சராசரிக்கும் அதிகமாக இருக்கக்கூடும். </p><p>குறிப்பாகத் தெற்குப் பகுதிகளில், பருவத்தின் பிற்பகுதியில் வெப்பமான காலநிலையோ அல்லது வெப்ப அலைகளோ ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. </p><p>மேலும், வானிலை அறிகுறிகள் தற்போது பலவீனமாக உள்ளதாகவும், அதனால் காலநிலை இயல்புக்கு நெருக்கமான ஒரு நிலை நிலவுவதே தற்போதைய விரும்பத்தக்க கணிப்பாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>இருப்பினும், உயர் அழுத்த மண்டலம் மேலும் தெற்கே நகர்வதால், பிரித்தானியாவின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வறண்ட மற்றும் நிலையான வானிலை நிலவ அதிக வாய்ப்புள்ளது. </p><p>தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வறண்ட, நிலையான வானிலை நிலவ சற்றே அதிக வாய்ப்புள்ளது என்றும், அதே சமயம் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் வானிலை மாறி மாறி இருக்கும் என்றும் வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது. </p><p>இதன் பொருள், கோடை வெப்பம் செப்டம்பர் மாதத் தொடக்கம் வரை நீடிக்கக்கூடும். இருப்பினும், வானிலை ஆய்வு மையம் ஒரு திட்டவட்டமான வெப்ப அலையை முன்னறிவிக்கவில்லை.</p><h2>இதுவரை இல்லாத அளவு</h2><p> </p><p>வளிமண்டல நிலைகளில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட பிரித்தானியாவின் வானிலையை கணிசமாகப் பாதிக்கக்கூடும் என்பதால், ஐந்து நாட்களுக்குப் பிறகான கணிப்புகளால் அதே அளவிலான உள்ளூர் விவரங்களை வழங்க முடியாது என்று வானிலை ஆய்வு மையம் வலியுறுத்தியுள்ளது. </p><p>இதுவரை நிலவிய அசாதாரணமான வெப்பமான கோடையைத் தொடர்ந்து இந்த சமீபத்திய முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தக் கோடையின் தொடக்கத்தில், 2026-ஆம் ஆண்டில் ஜூலை மாத நடுப்பகுதிக்குள்ளேயே மூன்று பரவலான வெப்ப அலைகளும், எண்ணற்ற காலநிலை சாதனைகளும் ஏற்கனவே முறியடிக்கப்பட்டுவிட்டன என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. </p><p>2026 ஆம் ஆண்டின் வசந்த காலம் பிரித்தானியா மற்றும் வேல்ஸில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் வெப்பமானதாகப் பதிவானது, அதே நேரத்தில் ஜூன் மாதம் இங்கிலாந்தின் வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான ஜூன் மாதமாகப் பதிவானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d927f40-9a96-4c73-9de2-02fbb26c0f78/26-6a80c1498ffb8.webp' /></p><p> </p><p>இன்றிரவு வடமேற்குப் பகுதிகளில் மேகமூட்டம் அதிகரித்துச் சிறிது மழையோ அல்லது தூறலோ பெய்யக்கூடும் என்றாலும், அதற்கு முன்னதாகச் சூரிய வெளிச்சம் தென்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>தெற்குப் பகுதிகளில் வானம் தெளிவாக இருக்கும்; அதேவேளையில், பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை சற்று குறையும். ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து முழுவதும் ஞாயிற்றுக்கிழமை மேகமூட்டமாக இருக்கும் என்றும், லேசான தூறல் மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. </p><p>மற்ற பகுதிகளில், இதமான, மங்கலான வெயில் இருக்கும் என்றும், லேசான காற்று வீசுவதால் பலருக்குச் சூழல் இனிமையாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-15T19:40:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சந்திப்புக் காணொளிகளை கோருகிறது சட்டத்தரணிகள் சங்கம் ; ஜனாதிபதி ஊடகப் பிரிவு பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bar-association-requests-meeting-videos-1786822742"></link>
            <id>https://jvpnews.com/article/bar-association-requests-meeting-videos-1786822742</id>
            <summary type="text">உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை உயர்த்தும் அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு திருத்தம் தொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை உயர்த்தும் அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான சந்திப்பின் முழுமையான காணொளிப் பதிவுகளை வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி செயலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p>
</p><p></p><p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற இந்தச் சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அந்தச் சங்கம், சந்திப்பின் முழுமையான காணொளிப் பதிவுகள் இதுவரை தமக்கு கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed28343f-cfa3-4dc2-b4b1-65f587261f34/26-6a80c05833d4b.webp' /></p><p>இந்தச் சந்திப்பின் போது, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய, முன்மொழியப்பட்ட திருத்தம் மற்றும் நீதித்துறை சுதந்திரத்தில் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்தும், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் போதிய கலந்தாலோசனை இன்றி இதனை அவசரமாக அமுல்படுத்தக் கூடாது என்றும் தனது கவலைகளை முன்வைத்தார்.</p><p>

மேலும், சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவர் ரியன்சி அர்சகுலரத்ன, பேராசிரியர் சாவித்திரி குணசேகர மற்றும் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் பலரும் இதில் பங்கேற்று கருத்துக்களைத் தெரிவித்தனர். </p><p>இதனைத் தொடர்ந்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி தெளிவுபடுத்தியதுடன், தலைவர் ரஜீவ் அமரசூரிய மேலதிக அவதானிப்புகளையும் முன்மொழிவுகளையும் வழங்கினார்.
</p><p>
எனினும், ஜனாதிபதி செயலகத்தினால் இதுவரை சங்கத் தலைவர் ரஜீவ் அமரசூரியவின் ஆரம்ப உரையின் பதிவு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு பெரிய பகுதி தெளிவற்றதாக இருப்பதாகவும் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>
</p><p></p><p>இதன் காரணமாக, சந்திப்பில் இடம்பெற்ற அனைத்து தலையீடுகள், அவதானிப்புகள் மற்றும் பதில்களை உள்ளடக்கிய திருத்தப்படாத முழுமையான காணொளிப் பதிவை உயர்தர ஒலியமைப்புடன் வழங்குமாறு கோரி ஆகஸ்ட் 14 ஆம் திகதியிடப்பட்ட கடிதம் மூலம் ஜனாதிபதி செயலகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு, சங்கத் தலைவரின் உத்தியோகபூர்வ உரையின் திருத்தப்படாத பதிவு ஆகஸ்ட் 12 ஆம் திகதியன்று வழங்கப்பட்டதாக தெரிவித்ததுடன், ஏனைய பங்கேற்பாளர்களின் உரைகள் அடங்கிய பதிவுகள் தேவையான உத்தியோகபூர்வ நடைமுறைகளுக்குப் பிறகு விரைவில் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
இருப்பினும், பலமுறை கோரிக்கை விடுத்தும் எஞ்சிய பதிவுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T19:39:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவின் விண்வெளி மையம் மீது உக்ரைன் திடீர் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ukraine-attack-on-shay-s-space-center-1786819452"></link>
            <id>https://ibctamil.com/article/ukraine-attack-on-shay-s-space-center-1786819452</id>
            <summary type="text">ரஷ்யாவின் விண்வெளி ஏவுகணைகளின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள, புரோகிரெஸ்&amp;nbsp; விண்வெளி மையத்தின் மீது உக்ரேனியப் படைகள் முக்கிய தாக்குதல...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவின் விண்வெளி ஏவுகணைகளின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள, புரோகிரெஸ்&nbsp; விண்வெளி மையத்தின் மீது உக்ரேனியப் படைகள் முக்கிய தாக்குதலை மேற்கொண்டதாக உக்ரேனிய ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.</p><p>தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், ஜெலென்ஸ்கி இதனை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p>“உக்ரைன் அந்த மையத்தை FP-5 ஃபிளமிங்கோ குரூஸ் ஏவுகணைகள் மூலம் தாக்கியது. மேலும், அதனை ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸின் முக்கிய நிறுவனங்களில் ஒன்று. அது மின்னணு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது” என்றும்&nbsp;ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Today, there are new significant results from our deep strikes. In Russia’s Samara region, one of the key enterprises within Roscosmos – the Progress Center, which was involved, among other things, in electronics production – was hit. Flamingo missiles were used. A good… <a href="https://t.co/1BlZpmvKRN">pic.twitter.com/1BlZpmvKRN</a></p>&mdash; Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) <a href="https://x.com/ZelenskyyUa/status/2088547091471614397?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><h2>தாக்குதல்களின் பின்விளைவு</h2><p>மேலும் உக்ரைன் மீதான ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படும் விமானங்கள் வைக்கப்பட்டிருந்ததாக உக்ரைனியத் தலைவர் கூறிய நிஸ்னி நோவ்கோரோட் பிராந்தியத்தில் உள்ள சவாஸ்லேகா விமானத் தளம் மற்றும் எஸ்டோனியாவுடனான எல்லைக்கு அருகிலுள்ள உஸ்ட்-லுகாவில் உள்ள ஒரு எண்ணெய் நிலையம் ஆகியவற்றின் மீது கூடுதல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஜெலென்ஸ்கி மேலும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa27f627-aa0b-4ee8-9c52-ebe9019c4338/26-6a80b5c2e61b5.webp' /></p><p>
</p><p>இதன்படி சில தாக்குதல்களின் பின்விளைவுகளைக் காட்டுவதாகத் தோன்றும் காணொளிக் காட்சிகளை அவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த நிலையில்,தொலைவில் உள்ள இடங்களில் பெரிய கருப்புப் புகைத்தூண்களையும் தீச்சுவாலைகளையும் காண முடிகிறது” என்றும் விவரித்திருந்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-15T19:34:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை விவகாரம் : ட்ரம்பிற்கு ஈரான் தக்க பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hormuz-irans-response-to-the-united-states-1786817730"></link>
            <id>https://ibctamil.com/article/hormuz-irans-response-to-the-united-states-1786817730</id>
            <summary type="text">&amp;nbsp;ஹோர்முஸ் நீரிணை எங்களின் உத்தரவுக்கு மட்டுமே மூடப்பட்டு, திறக்கப்படும் என்று அமெரிக்காவுக்கு ஈரான் தக்க பதிலடி தந்துள்ளது.


அமெரிக்கா, ஈரான்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஹோர்முஸ் நீரிணை எங்களின் உத்தரவுக்கு மட்டுமே மூடப்பட்டு, திறக்கப்படும் என்று அமெரிக்காவுக்கு ஈரான் தக்க பதிலடி தந்துள்ளது.
</p><p>

அமெரிக்கா, ஈரான் போருக்கு மத்தியில் சர்வதேச கடல்வழி எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும் ஹோர்முஸ் நீரிணையை கைப்பற்ற அமெரிக்கா முயற்சித்து வருகிறது. </p><p>இந்நிலையில் ஹோர்முஸ் பகுதியை விரைவில் கைப்பற்றி, அமெரிக்காவின் பகுதியாக அறிவிக்க இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><h2>தங்களது உத்தரவிற்கே ஹோர்முஸ் கட்டுப்படும்</h2><p>இதன்படி ட்ரம்ப் பேச்சுக்கு ஈரான் பதில் அளித்துள்ளது. இதுகுறித்து ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் கசெம் கரிபாபாதி தெரிவித்துள்ளதாவது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c9729e0-54e4-46e9-be10-8aa047775768/26-6a80af14dbced.webp' /></p><p>“ஹோர்முஸ் நீரிணை ஈரானைச் சேர்ந்தது. அது ஈரானிடமே உள்ளது. ஈரானிடம் தான் என்றும் நிலைத்திருக்கும்.</p><p>ஈரானின் உத்தரவுகளுக்கு மட்டுமே மூடப்படும், திறக்கப்படும். உங்கள்(ட்ரம்ப்) தோல்வியை ஒப்புக் கொள்ளாத வரை முடக்கம் தொடரும்” என்றார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T19:33:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரும் சர்ச்சையாகியுள்ள கல்முனை வைத்தியசாலை விவகாரம்..! களத்தில் குதித்த ஹிஸ்புல்லா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kalmunai-hospital-muslim-nurse-dress-issue-1786821686"></link>
            <id>https://tamilwin.com/article/kalmunai-hospital-muslim-nurse-dress-issue-1786821686</id>
            <summary type="text">கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சார உடையான ஹிஜாப் தொடர்பான விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

இந்த வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சார உடையான ஹிஜாப் தொடர்பான விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
</p><p>
இந்த விவகாரம் ஒரு மதப் பிரச்சினையாக மாற்றப்பட்டு, இனங்களுக்கிடையே குரோதத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>

வைத்தியசாலையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பொதுவான சீருடையையே அணிய வேண்டும் என்பதே விதி எனவும், இது நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை எனவும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ. ஹிஸ்புல்லா இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டுள்ளார்.
</p><p>
வைத்தியசாலை நிர்வாகத்தின் செயற்பாடு இனவாதத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, அவர் கடுமையான கண்டன அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்.
</p><p>
எனினும், இந்த விவகாரத்தை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ. ஹிஸ்புல்லா மற்றும் முஜிபுர் ரஹ்மான் போன்ற அரசியல்வாதிகள் பெரிதுபடுத்துவதாகவும், இதனைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் தேட முற்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
</p><p>
இதனிடையே, வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தினர், ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் எவ்வித முரண்பாடும் இல்லை எனவும், வெளியிலிருந்து சிலர் இந்த விவகாரத்தைத் தூண்டிவிடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.</p><p>

இந்த விடயம் தொடர்பான முழுமையான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் விரிவாகப் பார்க்கலாம்..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/n-YQkEN0IDc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T19:31:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவுக்கு ஆதரவில் இலங்கை முதலிடம் ; பியூ ஆய்வில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-tops-in-support-india-pew-survey-reveals-1786821740"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-tops-in-support-india-pew-survey-reveals-1786821740</id>
            <summary type="text">சர்வதேச ரீதியில் இந்தியா பற்றிய நேர்மறையான கருத்துக்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளதாக &quot;பியூ ஆராய்ச்சி மையம்&quot; (Pew Res...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச ரீதியில் இந்தியா பற்றிய நேர்மறையான கருத்துக்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளதாக "பியூ ஆராய்ச்சி மையம்" (Pew Research Centre) நடத்திய புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.</p><p>
</p><p></p><p>உலகின் 36 நாடுகளில் 42,000க்கும் மேற்பட்ட மக்களிடம் இந்த ஆண்டின் பெப்ரவரி முதல் மே மாதம் வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>
இதன்படி, உலகளவில் சராசரியாக 45 சதவீதமான மக்கள் இந்தியா குறித்து நேர்மறையான எண்ணத்தையும், 41 சதவீதமான மக்கள் எதிர்மறையான எண்ணத்தையும் கொண்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/deeb503f-b91e-4783-97be-cd3f9caafe44/26-6a80bc6dde3bd.webp' /></p><p>இலங்கையின் சாதகமான பதில் ஆய்வில் பங்கேற்ற இலங்கையர்களில் 79 சதவீதமானோர் இந்தியா குறித்து மிகவும் சாதகமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். 11 சதவீதமானோர் மட்டுமே எதிர்மறையான கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.
</p><p>
மேலும், 63 சதவீதமான இலங்கையர்கள் இந்தியாவைத் தங்களின் முக்கியமான நட்பு நாடாகவும் அடையாளம் கண்டுள்ளனர். கடந்த 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் 65 சதவீதமாக இருந்த இந்த சாதகமான பார்வை, தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது.
</p><p>
2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியின் போது, இந்தியா வழங்கிய 7.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான கடன் உதவிகள் மற்றும் நிதியுதவிகளே இந்த இருதரப்பு உறவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாகக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆசிய மற்றும் அண்டை நாடுகளின் நிலைஇந்தியாவின் அண்டை நாடுகளில் கலவையான கருத்துக்கள் பதிவாகியுள்ளன. </p><p>பங்களாதேஷில் 42 சதவீதமானோர் சாதகமாகவும், 51 சதவீதமானோர் பாதகமாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், பாகிஸ்தானில் 91 சதவீதமான மக்கள் இந்தியா குறித்து கடும் எதிர்மறையான பார்வையைக் கொண்டுள்ளனர்.</p><p> 7 சதவீதமானோர் மட்டுமே சாதகமான கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.

2025 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்தியமை போன்ற தீவிரமடைந்த அரசியல் மற்றும் இராணுவ பதற்றங்களே இதற்குக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
மலேசியாவில் 58 சதவீதமானோர் எதிர்மறையான எண்ணத்தைக் கொண்டுள்ள போதிலும், ஜப்பான் (55%), தாய்லாந்து (55%), சிங்கப்பூர் (51%), இந்தோனேசியா (50%) மற்றும் பிலிப்பைன்ஸ் (49%) ஆகிய ஆசிய நாடுகளில் இந்தியா குறித்து சாதகமான நிலையே நீடிக்கிறது.
</p><p>
அமெரிக்காவில் 45 சதவீதமானோர் இந்தியா குறித்து சாதகமான கருத்துக்களையும், 50 சதவீதமானோர் எதிர்மறையான கருத்துக்களையும் கொண்டுள்ளனர். </p><p>2023 ஆம் ஆண்டு 51 சதவீதமாக இருந்த சாதகமான நிலை 2026 ஆம் ஆண்டு 45 சதவீதமாகக் குறைந்துள்ளது.
</p><p>
அங்குள்ள அரசியல் கட்சிகளில், ஜனநாயகக் கட்சியினரில் 50 சதவீதமானோரும், டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சியினரில் 42 சதவீதமானோரும் இந்தியாவுக்கு சாதகமாக வாக்களித்துள்ளனர்.
</p><p>
துருக்கி, மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகிய பகுதிகளில் இந்தியாவுக்கான ஆதரவு முறையே 15% மற்றும் 18% ஆகக் குறைந்துள்ளதுடன், அவுஸ்திரேலியாவில் 55 சதவீதமானோர் எதிர்மறையான பார்வையை வெளிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
இருப்பினும், ஆசியா மற்றும் ஆபிரிக்காவின் பல பகுதிகளில் இந்தியா தொடர்ந்தும் பலமான ஆதரவைப் பெற்று வருவதாக அந்த ஆய்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T19:22:54+00:00</updated>
        </entry>
    </feed>
