<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-24T05:36:27+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதியிடம் சுரேஷ் சலேவின் தாயார் உருக்கமான கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/saleh-s-mother-makes-heartfelt-request-president-1787549493"></link>
            <id>https://jvpnews.com/article/saleh-s-mother-makes-heartfelt-request-president-1787549493</id>
            <summary type="text">அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலேவின் தடுப்புக் காவலை மேலும் நீடிக்க வேண்டாம் எனக் கோரி அவரது தாயா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலேவின் தடுப்புக் காவலை மேலும் நீடிக்க வேண்டாம் எனக் கோரி அவரது தாயார் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.</p><p> </p><p></p><p>நேற்று (24) ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், தனது மகன் 37 வருடங்களாக இலங்கை இராணுவத்தில் சேவையாற்றி, நாட்டுக்காக தனது இளமைக் காலத்தையும் குடும்பத்துடன் கழிக்கக்கூடிய பெறுமதியான வருடங்களையும் தியாகம் செய்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea06009f-1f9e-4770-9668-035909e22870/26-6a8bd73703362.webp' /></p><p>வயதான தாயாக தனது மகன் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் இருப்பதைக் காண்பது மிகுந்த வேதனையளிப்பதாக அவர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>

எவ்வாறாயினும், எந்தவொரு விசாரணையையும் நிறுத்துமாறு தான் கோரவில்லை எனவும், குற்றச்சாட்டுகள் இருப்பின் அவற்றை பரிசீலித்து, சாட்சிகள் இருப்பின் அவற்றை விசாரித்து உண்மையைக் கண்டறியுமாறும் அவர் கோரியுள்ளார். </p><p>

விசாரணைகள் நடைபெறும் அதேவேளை, தனது மகனின் தடுப்புக் காவலை மேலும் நீடிக்க வேண்டாம் என ஒரு தாயாக கருணையுடன் கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

அனைத்து விசாரணைகளும் சாட்சிகளின் அடிப்படையில் இடம்பெற வேண்டும் எனவும், தடுப்புக் காவலானது சாட்சிகளுக்கு மாற்றீடாக அமையக் கூடாது எனவும் அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். </p><p>

அத்துடன், தனக்கு ஜனாதிபதியைச் சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறும் கோரியுள்ள சுரேஷ் சலேவின் தாயார், தான் விசேட சலுகைகளை எதிர்பார்க்கவில்லை எனவும் நீதி,மனிதநேயம் மற்றும் நியாயமான ஒரு சந்தர்ப்பத்தையே எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p> 

இறுதியாக, தனது மகன் சுதந்திரமாக சட்டத்தின் முன் முகம்கொடுப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T05:31:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 நாள் முடிவில் மொத ராத்திரி திரைப்படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/motha-rathiri-movie-3-days-bo-1787546466"></link>
            <id>https://cineulagam.com/article/motha-rathiri-movie-3-days-bo-1787546466</id>
            <summary type="text">மொத ராத்திரிமைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் அனிஷ்மா அனில்குமார், ரிஷிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மொத ராத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மொத ராத்திரி</h2><p>மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் அனிஷ்மா அனில்குமார், ரிஷிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மொத ராத்திரி. </p><p>புதியதாகத் திருமணமான ஜோடியின் முதலிரவில் நடக்கும் குடும்ப-நகைச்சுவைத் தொடர்பான கதைக்களத்தில் இப்படம் உருவாகி கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி இருந்தது.</p><p> ஒரே இரவில் நடக்கும் கதையாக அமைந்த இப்படத்திற்கு செம ரெஸ்பான்ஸ். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdc1eb74-e91f-43fd-a27b-a708688e1a6a/26-6a8bcf041e537.webp' /></p><h2>
பாக்ஸ் ஆபிஸ்</h2><p> 
கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி வெளியான மொத ராத்திரி படம் வெளியாகி 3 நாட்கள் ஓடியுள்ளது. இப்படம் 3 நாட்களில் ரூ. 1.8 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/aII4XMEdlM4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-24T05:30:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[40°Cஐ நெருங்கும் வெப்பம் - இலங்கையில் வரலாற்று உச்சத்தை பதிவு செய்யவுள்ள மாற்றம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-hit-40-c-in-2027-heat-record-threat-1787546845"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-hit-40-c-in-2027-heat-record-threat-1787546845</id>
            <summary type="text">இலங்கையில் சமீபத்தில் வரலாற்று உச்சத்தை நெருங்கும் வெப்பநிலை நிலவி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை ஆய்வாளர் மாலித் பெர்னாண்டோ தெரிவித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் சமீபத்தில் வரலாற்று உச்சத்தை நெருங்கும் வெப்பநிலை நிலவி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை ஆய்வாளர் மாலித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். </p><p>

அத்துடன் சில பகுதிகளில் வெப்பநிலை 40°C அளவை நெருங்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலை 40.1°C ஆகும். இது 1983ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வவுனியாவில் பதிவானது. பொத்துவிலில் சமீபத்தில் 39.9°C வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இது அந்த சாதனையை விட 0.2°C மட்டுமே குறைவு.</p><h2>எதிர்கால வெப்பநிலைகள்</h2><p> </p><p>அதேநேரத்தில் பொலன்னறுவையில் வெப்பநிலை 37°Cஐத் தாண்டியுள்ளது. இந்த அளவுகள் 40°Cஐ நெருங்கி வருகின்றன. எதிர்கால வெப்பநிலைகள் நீண்டகாலமாக நிலைத்திருக்கும் 1983ஆம் ஆண்டு சாதனையை மிஞ்சக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10fc32e6-5072-4e5a-bce6-61d81be52f7f/26-6a8bd68121b25.webp' /></p><p> </p><p>

மழைப்பொழிவு கணிப்புகளைக் குறிப்பிடுகையில், நாட்டின் பல பகுதிகளில் ஆகஸ்ட் மாதத்தில் இயல்பை விடக் குறைவான மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்குப் பகுதிகளில் ஏறக்குறைய இயல்பான மழைப்பொழிவு இருக்கலாம், அதே நேரத்தில் மற்ற பகுதிகளில் இயல்பை விடக் குறைவான மழைப்பொழிவு நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>வறட்சியை சந்திக்குமா அல்லது வெள்ளப்பெருக்கை சந்திக்குமா</h2><p>
</p><p>
இருப்பினும், இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிக மழைப்பொழிவு இருக்கும் என முன்னறிவிப்புகள் குறிப்பிடுவதால், அக்டோபர் மாதத்திற்குள் இந்த நிலைமை மாறக்கூடும். எனவே, இலங்கை வறட்சியை சந்திக்குமா அல்லது வெள்ளப்பெருக்கை சந்திக்குமா என்பது குறித்து நேரடியான பதிலை அளிப்பது கடினம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac07f286-0085-4afa-8f24-1453ba3c0ac9/26-6a8bd681cfe73.webp' /></p><p>

ஏனெனில் மாறிவரும் காலநிலை சில காலகட்டங்களில் வறட்சி ஏற்படுவதற்கான வாய்ப்பையும், மற்ற காலகட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கக்கூடும். மேலும், இலங்கை எல் நினோ நிலைமைகளைத் தன்னிச்சையாக முன்னறிவிப்பதோ அல்லது கண்காணிப்பதோ இல்லை என்றுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T05:28:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென காணாமல்போன வைத்திய நிபுணர் சடலமாக மீட்பு - தீவிரமடையும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/doctor-from-badulla-teaching-hospital-missing-1787540561"></link>
            <id>https://tamilwin.com/article/doctor-from-badulla-teaching-hospital-missing-1787540561</id>
            <summary type="text">புதிய இணைப்புகாணாமல்போனதாக கூறப்பட்ட பதுளை போதனா வைத்தியசாலையில் மயக்கவியல் வைத்திய நிபுணர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மஹியங்கனை, மாபகடாவெவ பகுதியில் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>காணாமல்போனதாக கூறப்பட்ட பதுளை போதனா வைத்தியசாலையில் மயக்கவியல் வைத்திய நிபுணர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p> மஹியங்கனை, மாபகடாவெவ பகுதியில் உள்ள பாறையொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>அதன்படி, காணாமல்போன வைத்தியரை தேடுவதற்காக இன்று (24) அப்பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவம் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>பதுளை போதனா வைத்தியசாலையில் மயக்கவியல் வைத்திய நிபுணர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

குறித்த வைத்திய நிபுணர் நேற்று (23) காலை பணியில் இருந்ததன் பின்னர் காணாமல்போயுள்ளார்.
</p><p>
 பதுளை போதனா வைத்தியசாலையில் மயக்கவியல் வைத்திய நிபுணராக பணிபுரியும் கண்டியை சேர்ந்த திருமணமான வைத்தியரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.</p><h2> கார் கண்டுபிடிப்பு</h2><p>

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், ​​மீகஹகிவுல பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில், அந்த வைத்தியரின் கார் மஹியங்கனை நோக்கிச்செல்வது பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5948d344-4c37-49aa-b39a-77298e4fc3ac/26-6a8bbbe80dfd9.webp' /></p><p>
</p><p>
இதற்கமைய, நடத்தப்பட்ட விசாரணையில், பதுளை - மஹியங்கனை கால்வாய் வீதியில் உள்ள 17வது தூண் பகுதியில் நேற்றிரவு கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>

அதன்படி, காணாமல்போன வைத்தியரை தேடுவதற்காக, பொலிஸார், குற்ற நிகழ்வு அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இன்று அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.</p><p>வைத்தியரின் கார் கண்டெடுக்கப்பட்ட இடம் யானைகள் நிறைந்த காடு என்றும், வனவிலங்கு அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T05:26:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர் அறிவித்த முதல்வர் விஜய் - யாருக்கெல்லாம் கிடைக்கும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cm-vijay-announce-3-free-lpg-cylinders-eligiblity-1787549011"></link>
            <id>https://news.lankasri.com/article/cm-vijay-announce-3-free-lpg-cylinders-eligiblity-1787549011</id>
            <summary type="text">cm vijay announce 3 free lpg cylinders: ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்

...</summary>
            <content type="html"><![CDATA[<p>cm vijay announce 3 free lpg cylinders: ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
</p><h3>
ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்
</h3><p>
தமிழ்நாடு சட்டமன்றம் தொடங்கியதும் முதல்வர் விஜய், 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
</p><p>
இதில் பேசிய அவர், முதற்கட்டமாக அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் ஆண்டிற்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78f52705-64d6-4284-be81-8c7686ef05bf/26-6a8bd55495e73.webp' /></p><p>

எரிவாயு சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இத்திட்டத்தினால் சுமார் 1 கோடியே 30 இலட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள்.&nbsp;</p><p></p><p>இத்திட்டம், வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை முதல் செயலாக்கத்திற்கு கொண்டுவரப்படும். 

இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் சுமார் 4000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
</p><p>
ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பத்தினர், சிறு, குறு விவசாய குடும்பத்தினர், மாற்றுத் திறனாளி குடும்பத்தினர், போன்ற சமூகத்தில் உள்ள நலிந்த குடும்பத்தினர் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T05:24:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் போனோர் அலுவலகத்தில் 20000இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் - வழக்குகளின் விசாரணைகள் நிறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/more-than-20000-complaints-filed-missing-persons-1787547967"></link>
            <id>https://tamilwin.com/article/more-than-20000-complaints-filed-missing-persons-1787547967</id>
            <summary type="text">யாழ்ப்பாணம்: காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்திற்கு இதுவரை 23,352
விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அவற்றில் 16,966 விண்ணப்பங்கள்
பர...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம்: காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்திற்கு இதுவரை 23,352
விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அவற்றில் 16,966 விண்ணப்பங்கள்
பரிசீலிக்கப்பட்டு, 9,819 முறைப்பாடுகளுக்கான பூர்வாங்க விசாரணைகள்
நிறைவடைந்துள்ளதாக காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் தலைவர், ஓய்வுபெற்ற
நீதிபதி மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.</p><p>
யாழ்ப்பாணத்தில் நேற்று(23.08.2026) ஊடகவியலாளர்களை சந்தித்தபோது எழுப்பப்பட்ட
கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>31 பேர் கண்டுபிடிப்பு&nbsp;</h2><p>மேலும் தெரிவிக்கையில், பூர்வாங்க விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில்,
2,000இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் மேலதிக தகவல்கள் மற்றும்
ஆவணங்கள் கோரப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f571df62-7e60-4ea1-a12c-840c3bf67029/26-6a8bd58ad4c4e.webp' /></p><p>மேலும், விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் பாதுகாப்புத் தரப்பினர் உள்ளிட்ட 800
பேருக்கு விளக்கக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், 7,726 பேருக்கு
அவர்களது சம்மதத்துடன் இடைக்கால கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு அனுமதி
வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>இதுவரை காணாமல் போனோர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 31 பேர்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>அவர்களில் வெளிநாடுகளில் இருந்து 3 பேரும், யாழ்ப்பாணத்தில் 4 பேரும்,
மட்டக்களப்பில் 3 பேரும், கம்பஹாவில் 2 பேரும், திருகோணமலையில் ஒருவரும்,
அனுராதபுரத்தில் ஒருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>மேலும் களுத்துறை, அம்பாந்தோட்டை, வவுனியா, குருநாகல், மாத்தறை மற்றும்
புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் சிலர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>செம்மணி மனிதப் புதைகுழி — 584 மனித எச்சங்கள்</h2><p>எனினும், இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக அல்லது இராணுவத்தினரால் அழைத்துச்
செல்லப்பட்டதாகக் கூறப்படும் காணாமல் போனவர்களில் இதுவரை எவரும்
கண்டுபிடிக்கப்படவில்லை என அலுவலகத் தலைவர் தெரிவித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0975be24-008e-4909-8eff-120eb4c00a0e/26-6a8bd58bb1b39.webp' /></p><p>இதனிடையே, யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்று கட்டங்களாக சுமார்
110 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 5 கோடியே
79 இலட்சத்து 68 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>அகழ்வுப் பணிகளின் போது இதுவரை 584 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
</p><p>மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் அவர்களது உறவினர்களிடமிருந்து இரத்த
மாதிரிகளைச் சேகரித்து மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு விசேட
கவனம் செலுத்தி, அவற்றை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என காணாமல்
போனோர் பற்றிய அலுவலகத்தின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி மகேஷ் கட்டுலந்த
தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T05:24:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணி அறிவழகனின் கதி கலங்கும் காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/charles-anthony-special-forces-tragic-video-1787544132"></link>
            <id>https://tamilwin.com/article/charles-anthony-special-forces-tragic-video-1787544132</id>
            <summary type="text">அண்மையில் சாள்ஸ் அன்ரனி என்றழைக்கப்படுகின்ற அறிவழகன் என்பவரின் உணர்ச்சிகரமான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.சாள்ஸ் அன்ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில் சாள்ஸ் அன்ரனி என்றழைக்கப்படுகின்ற அறிவழகன் என்பவரின் உணர்ச்சிகரமான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.</p><p>சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியில் 19 ஆண்டுகள் போராடிய முன்னாள் போராளியான&nbsp;அறிவழகன் தனது ஆதங்கத்தை&nbsp;சமூக வலைத்தள காகொணி ஊடாக வெளியிப்படுத்தியிருந்தார்.</p><p>அவர் அந்த காணொளியில் , நான் தற்பொழுது மதுபான டின்களை சேகரித்து வாழ்கிறேன். தாங்க முடியாத மன வேதனையின் காரணமாக நான் குடிகாரனாக மாறியுள்ளேன். தலைவர் எங்களை இப்படி வளர்க்கவில்லை. மதுபான டின்களை சேகரித்தா நாங்கள் வாழ வேண்டும். நான் குடிகாரனாக மாறியதற்குக் காரணம் இந்த போராளிகள் தான்.</p><p>

ஒவ்வொரு போராளிகளும் என்னிடம் நேரில் வந்து பேசட்டும். அப்போது நான் அவர்களிடம் கதைக்கிறேன். நீங்கள் யாருக்காக பணம் அனுப்புகின்றீர்கள்? எங்களுடைய இனத்திற்காகவா? இல்லை என்றும் பல கருத்துக்களை ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.
</p><p>
இது தொடர்பான மேலதிக விடயங்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியின் ஊடாக விரிவாகப் பார்க்கலாம்..&nbsp; &nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mct6xPzpV8A" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T05:22:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூனைக்கு CFO பதவி! பலரது கவனத்தை ஈர்த்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/ginger-cat-gets-a-job-title-cfo-mumbai-metro-1787548725"></link>
            <id>https://manithan.com/article/ginger-cat-gets-a-job-title-cfo-mumbai-metro-1787548725</id>
            <summary type="text">Chief Feline Officer Cat Mumbai Metro: மும்பை மெட்ரோவின் 7வது வழிதடத்தில் குண்டவாலி மெட்ரோ நிலைய நுழைவாயிலில் பூனைக்கு CFO கௌரவ பதவி வழங்கப்பட்டுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>Chief Feline Officer Cat Mumbai Metro: மும்பை மெட்ரோவின் 7வது வழிதடத்தில் குண்டவாலி மெட்ரோ நிலைய நுழைவாயிலில் பூனைக்கு CFO கௌரவ பதவி வழங்கப்பட்டுள்ளது.</p><p>
</p><h2>
 பூனைக்கு CFO கௌரவ பதவி</h2><p>கடந்த பல மாதங்களாக நுழைவாயிலில் அமர்ந்துள்ள பூனை பலருக்கும் பரீட்சியமாகிவிட்டன.

இதன் அமைதியான தோற்றம் காரணமாக பலரும் அதை புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட வைரலானது.
</p><p>
இந்நிலையில் சந்தேஷ் சாமந்த் என்பவர் பூனையை படமெடுத்து மெட்ரோ நிர்வாகத்திடம், ”அன்பான உயிருக்கு பதவியை வழங்குங்கள் என்றும் ஊதியம் இல்லாமல் பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும்” குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a39502c7-354c-4802-8e03-9c2c7ed4c939/26-6a8bd4c2b63fa.webp' /><br></p><h2>மெட்ரோ நிர்வாகம் பதிவு</h2><p>
</p><p>
இதனை ஏற்றுக்கொண்ட மும்பை மெட்ரோ நிர்வாகம் பூனைக்கு CFO பதவியை வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.

மேலும் நிலையத்தை ஆய்வு செய்வது, பயணிகளை கண்காணிப்பது போன்ற பொறுப்புகள் அளிக்கப்படுவதாகவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f81b3fa5-fb34-4fa0-99b2-e604f7fe4cda/26-6a8bd4c367a93.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-24T05:21:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். காணி விடுவிப்புக்கான போராட்டத்தில் சுமந்திரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sumanthiran-jaffna-north-land-liberation-struggle-1787548560"></link>
            <id>https://jvpnews.com/article/sumanthiran-jaffna-north-land-liberation-struggle-1787548560</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி மயிலிட்டி, வசாவிளான் மற்றும் பலா...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி மயிலிட்டி, வசாவிளான் மற்றும் பலாலி சந்தி பகுதிகளில் பொதுமக்களின் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p>
</p><p></p><p>இதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பலாலி சந்தி மற்றும் வசாவிளான் பகுதிகளில் போராட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் , நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் நேரில் கலந்து கொண்டு, போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு தமது முழுமையான ஆதரவை தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ebf1408-3f7b-4b8f-a401-4731a1aa2124/26-6a8bd392391ed.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc017983-68f7-4d11-9f40-023337253b89/26-6a8bd392e1cfd.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/083245f5-caf2-4880-9dab-b69ea2f9f585/26-6a8bd39393fb7.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86ed545f-0cc9-4707-bb59-23d55320ec5c/26-6a8bd39446c96.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5163798-0abf-4ffc-9130-08a6fdbc1336/26-6a8bd395014b4.webp' /></p>]]></content>
            <updated>2026-08-24T05:17:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அது நான் இல்லை ....இருந்தாலும் தவறு இல்லை; அமைச்சர் கீர்த்தனா பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/social-media-video-retorted-minister-keerthana-1787548572"></link>
            <id>https://jvpnews.com/article/social-media-video-retorted-minister-keerthana-1787548572</id>
            <summary type="text">&amp;nbsp; முதலமைச்சர் விஜய் தலமையிலான தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா என கூறி , சமூக வலைத்தளங்களில் வைரலான பெண்ணின் காணொளி ஒன்று தொடர்பாக அமைச்சர் கீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முதலமைச்சர் விஜய் தலமையிலான தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா என கூறி , சமூக வலைத்தளங்களில் வைரலான பெண்ணின் காணொளி ஒன்று தொடர்பாக அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளித்துள்ளார்.
</p><p>
சிற்றுந்து இருந்து நவீன உடையில் பெண் ஒருவர் இறங்கிச் செல்லும் காணொளி ஒன்று அதிகமாக இணையங்களில் பகிரப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b122ff0a-0fcf-42f2-9459-19d3404a2507/26-6a8bd39e46e46.webp' /></p><h2>பெண்களின் உடை, தோற்றம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை</h2><p>

இந்தநிலையில் சிற்றுந்தில் இருந்து இறங்கிச் செல்லும் அந்த பெண் தோற்றத்தில் அமைச்சர் கீர்த்தனாவை போன்று இருப்பதால், அது அமைச்சர் கீர்த்தனா என சமூக வலைத்தளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.
</p><p>
இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் கீர்த்தனா, “அந்த காணொளியில் இருப்பது தாம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை அது தாமாக இருந்தாலும்கூட, அதில் என்ன பிரச்சனை?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>

பெண்களின் உடை, தோற்றம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பொது விவாதமாக்குவது பிற்போக்குத்தனமான மனநிலையை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும், தனது நிர்வாகம் மற்றும் கொள்கைகளை விமர்சிக்க முடியாதவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக வதந்திகளை பரப்புவதாகவும் அமைச்சர் கீர்த்தனா விசனம் வெளியிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-24T05:14:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள சடலம் - விசாரணை தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/unidentified-body-found-on-karainagar-beach-1787547330"></link>
            <id>https://tamilwin.com/article/unidentified-body-found-on-karainagar-beach-1787547330</id>
            <summary type="text">யாழ். காரைநகர் - வேரப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலமொன்று கரையொதுங்கியுள்ளது.

இந்த சம்பவம் இன்றைய தினம் (24.08.2026) பதிவாகியுள்ளது. 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். காரைநகர் - வேரப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலமொன்று கரையொதுங்கியுள்ளது.
</p><p>
இந்த சம்பவம் இன்றைய தினம் (24.08.2026) பதிவாகியுள்ளது. </p><p>

கடற்கரைக்கு சென்றவர்கள் சடலத்தை அவதானித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.</p><h2>அடையாளம் காணப்படாத சடலம்</h2><p> </p><p>

எனினும் சடலம் யாருடையது என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa2450db-434d-4f7d-9b19-8ba67e314781/26-6a8bd275635cf.webp' /></p><p> 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சடலம் எவ்வாறு கடலில் அடித்துவரப்பட்டது என்பது தொடர்பிலும் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T05:13:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோதக் கூடாரமாகிய பசில் ராஜபக்சவின் சர்ச்சைக்குரிய வீடு...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/abandoned-matara-building-linked-to-basil-misused-1787544405"></link>
            <id>https://ibctamil.com/article/abandoned-matara-building-linked-to-basil-misused-1787544405</id>
            <summary type="text">மாத்தறை பிரௌன்ஸில் பகுதியில் உள்ள ஒன்றரை ஏக்கர் தென்னந்தோட்டத்தில் அரைவாசி கட்டப்பட்டு கைவிடப்பட்டுள்ள கட்டடம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை பிரௌன்ஸில் பகுதியில் உள்ள ஒன்றரை ஏக்கர் தென்னந்தோட்டத்தில் அரைவாசி கட்டப்பட்டு கைவிடப்பட்டுள்ள கட்டடம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களின் கூடாரமாக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
அந்த கட்டடம் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவினால் முறையற்ற விதத்தில் ஈட்டப்பட்ட பணத்தை பயன்படுத்தி கொள்வனவு செய்ததாக சந்தேகிக்கப்படுகின்றது.</p><p>

இந்தக் காணியை கொள்வனவு செய்தது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.</p><p></p><h2>திமன்றத்தில் முன்னிலை</h2><p>

விசாரணையில் இருக்கும் போதே, வழக்கறிஞரின் தலையீட்டுடன் இக்கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குறித்த காணியை கொள்வனவு செய்தது தொடர்பில் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்குக்கு பல சந்தர்ப்பங்களில் பசில் ராஜபக்ச முன்னிலையாக தவறியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76e5e0f2-7c5d-4bfe-bc3a-31b1c99479f6/26-6a8bc9b8409bc.webp' /></p><p>இதன் காரணமாக, பசில் ராஜபக்சவின் பிணைப் பணத்தை பறிமுதல் செய்யவும் மற்றும் அவரது பிணைதாரிகளிடம் இருந்து பிணைப் பணத்தை அறவிட்டுக்கொள்ளவும் மாத்தறை பிரதான நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
</p><p>
அத்துடன், பசில் ராஜபக்சவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி வரை நீடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>நிர்மாணப் பணிகள்</h2><p>நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்குக்கு தொடர்புடைய காணியில் கட்டப்பட்டுள்ள வீடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அதற்குள் சட்டவிரோதச் செயல்கள் இடம்பெற்று வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அங்கு வெற்று மதுபானப் போத்தல்கள், தீப்பெட்டிகள், லைட்டர்கள், படுக்கை விரிப்புகள், ஊசிகள் மற்றும் ஊசி செலுத்தும் உபகரணங்களும் ஆங்காங்கே காணக்கூடியதாக இருந்தன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff406f39-98d7-4d39-ab0b-3565fd2ead06/26-6a8bc9b76f6bc.webp' /></p><p>சட்டவிரோத நடவடிக்கை
இந்தக் கட்டடத்தைப் பல்வேறு குழுக்கள் அல்லது நபர்கள் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதாக சந்தேகிக்கப்படுகின்றது.
</p><p>

ஆரம்பக் கட்டத்தில் 2 அல்லது 3 மாடிக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக பாரிய தடிமன்கொண்ட கம்பிகளையிட்ட தூண்களின் மீது நிர்மாணப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கட்டடப் பொருட்கள்&nbsp;</h2><p>

பின்னர் அவசரமாக அதன் மீது சுவர்கள் எழுப்பப்பட்டு பூச்சு பூசப்பட்டு கூரை ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>ஒன்பது கொள்கலன் பெட்டிகளில் கட்டடப் பொருட்கள் இவற்றுக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் அவ்வப்போது நிர்மாணப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4645a494-9dba-4541-8bd6-e96efa1a7ab6/26-6a8bc9b900543.webp' /></p><p>இந்த காணி ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஹெர்பெட் கெல்லர் என்பவருக்குச் சொந்தமாக இருந்ததுடன் இதன்போது அவருக்கு 60 மில்லியன் ரூபா பணத்தைச் செலுத்தி அந்த காணி கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
காணியைக் கொள்வனவு செய்வதற்காக செலுத்தப்பட்ட பணம் முறையற்ற விதத்தில் ஈட்டப்பட்டுள்ளதுடன் இதனால், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
பசில் இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T05:08:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[75 நாடுகளுக்கு விசா தடை செய்த டிரம்ப்; திருப்பி அடித்த நீதிமன்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/trump-imposed-visa-ban-on-75-countries-court-order-1787547901"></link>
            <id>https://jvpnews.com/article/trump-imposed-visa-ban-on-75-countries-court-order-1787547901</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவில் குடியேற விரும்பும் 75 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு குடியேற்ற விசா வழங்குவதை நிறுத்தி வைத்திருந்த டிரம்ப் அரசின் உத்தரவுக்கு எதிராக அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவில் குடியேற விரும்பும் 75 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு குடியேற்ற விசா வழங்குவதை நிறுத்தி வைத்திருந்த டிரம்ப் அரசின் உத்தரவுக்கு எதிராக அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. </p><p>இந்த உத்தரவு சட்டத்திற்கு புறம்பானது என கூறி, விசா தடையை ரத்து செய்ய நீதிபதி ஜீனெட் வர்காஸ் உத்தரவிட்டுள்ளார்.

 இந்த தீர்ப்பு அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான குடியேற்ற கொள்கைக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36bbfbb0-eabe-4902-bbf3-94b8dd001ec1/26-6a8bd0ff4a2e7.webp' /></p><h2>&nbsp;விசா தடையை ரத்து செய்ய நீதிபதி&nbsp; உத்தரவு</h2><p>
 
2026 ஜனவரி முதல் அமல்படுத்தப்பட்ட இந்தக் கொள்கையின் கீழ் ஆப்கானிஸ்தான், பிரேசில், எகிப்து, ஈராக், நைஜீரியா, சோமாலியா, தாய்லாந்து, ஏமன் உள்ளிட்ட 75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு குடியேற்ற விசா வழங்குவது நிறுத்தப்பட்டது. </p><p>

அதிக ஆபத்து கொண்ட நாடுகளில் இருந்து வருபவர்கள் அமெரிக்காவுக்கு பொருளாதார சுமையாக மாறுவதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத் துறை விளக்கம் அளித்திருந்தது.
</p><p> 
ஆனால், விசா விண்ணப்பதாரரின் தனிப்பட்ட சூழ்நிலையைப் பரிசீலிக்காமல், அவர்களின் பூர்வீக நாட்டை மட்டும் அடிப்படையாக வைத்து விசா மறுக்குமாறு உத்தரவிடப்பட்டதாக நீதிபதி குற்றம் சாட்டியுள்ளார். </p><p>மேலும், இந்த உத்தரவை பிறப்பித்த வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தனது சட்டப்பூர்வ அதிகார வரம்பை மீறியுள்ளதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
</p><p> 
இந்தத் தீர்ப்பின் மூலம், குறிப்பிட்ட கொள்கையை மட்டும் காரணமாகக் கொண்டு செய்யப்பட்ட விசா மறுப்புகள் ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், டிரம்ப் அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T05:02:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரமாண்ட பட்ஜெட், பேன் இந்தியா படத்தில் முதன் முறையாக அஜித், இயக்குனர் இவரா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ajith-next-movie-update-1787536581"></link>
            <id>https://cineulagam.com/article/ajith-next-movie-update-1787536581</id>
            <summary type="text">அஜித்&amp;nbsp;தமிழ் சினிமாவின் தல என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அஜித் தற்போது தன் முழு கவனத்தையும் கார் ரேஸில் தான் காட்டி வருகிறார். ஆம்,...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அஜித்</h2><p>&nbsp;தமிழ் சினிமாவின் தல என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அஜித் தற்போது தன் முழு கவனத்தையும் கார் ரேஸில் தான் காட்டி வருகிறார். </p><p>ஆம், அஜித் நேற்று கூட கார் ரேஸில் தான் பிஸியாக இருந்தார். இந்நிலையில் இவர் அடுத்து ஆதிக் இயக்கத்தில் டேர் டெவில் படத்தில் நடிக்கவுள்ளார். </p><p>இந்த படத்தின் படபிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இது முடிந்த கையோடு அடுத்து உடனே வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82229b79-f8b8-471a-bd19-54300f8b5a32/26-6a8ba4c88b6ce.webp' /></p><p>இதெல்லாம் முடிந்த பிறகு பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி உதவியாளர் ஒருவர் சொன்ன கதை பிடித்து போய், அதில் நடிக்கவும் அஜித் சம்மதிக்க, இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பேன் இந்தியா படமாக பிரமாண்டமாக எடுக்கவுள்ளார்களாம்.</p>]]></content>
            <updated>2026-08-24T05:00:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாயமான வைத்தியர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/missing-doctor-found-dead-body-recovered-1787547462"></link>
            <id>https://jvpnews.com/article/missing-doctor-found-dead-body-recovered-1787547462</id>
            <summary type="text">காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை க...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p> </p><p></p><p>குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன் பின்னர் காணாமல் போயிருந்தார். </p><p>

இது தொடர்பில் ஆராய்ந்த போது, வைத்தியரின் கார் மஹியங்கனை திசையை நோக்கிப் பயணிப்பது மீகஹகிவுல பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காணொளியில் பதிவாகியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcf74ad4-32ae-462c-aa4a-4646628a949b/26-6a8bcf47dd5ea.webp' /></p><p>இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, பதுளை - மஹியங்கனை வீதியின் 17ஆம் கட்டை, மாப்பாக்கடவெவ பகுதியில் வைத்து வைத்தியரின் கார் நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> 

இதற்கமைவாக, காணாமல் போன வைத்தியரைத் பொலிஸார், குற்றச் சம்பவ இடங்களை ஆராயும் தடயவியல் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து கூட்டுத் தேடுதல் நடவடிக்கையொன்றை முன்னெடுத்திருந்தனர். </p><p>

இந்நிலையில் அவரது சடலம் மஹியங்கனை - மாப்பாக்கடவெவ பகுதிக்கு அருகிலுள்ள பாறையொன்றில் வைத்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T04:58:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு ஐபோனால் ஒரு குடும்பமே பலியான விவகாரம்: சமீபத்திய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/maharashtra-family-fell-from-hill-in-iphone-issue-1787547247"></link>
            <id>https://news.lankasri.com/article/maharashtra-family-fell-from-hill-in-iphone-issue-1787547247</id>
            <summary type="text">A family who fell to their deaths after an alleged argument over a an iPhone have been pictured: ஐபோனுக்கு தவணை கட்டும் விடயம் தொடர்பில் எழுந்த வாக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>A family who fell to their deaths after an alleged argument over a an iPhone have been pictured: ஐபோனுக்கு தவணை கட்டும் விடயம் தொடர்பில் எழுந்த வாக்குவாதத்தால் பலியான குடும்பத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.</p><p>


இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள சத்ரபதி சாம்பாஜிநகர் என்னுமிடத்தில் தன் பெற்றோருடன் வாழ்ந்துவந்த குணால் (Kunal Chandgude, 18) என்னும் இளைஞர் ஐபோன் ஒன்றை வாங்கியுள்ளார்.
</p><h3>
ஒரு குடும்பமே மாண்ட பயங்கரம்</h3><p>

தன்னால் அதற்கு பணம் கொடுக்கமுடியாததால், தான் வாங்கிய ஐபோனுக்கு மாதந்தோறும் தவணை செலுத்த பணம் கொடுக்குமாறு தன் குடும்பத்தினரை கேட்டுள்ளார் குணால்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/766aed68-a3b0-4604-bca1-057ec41d197b/26-6a8bce71cdde6.webp' /></p><p>
அதனால் சமீபத்தில் வீட்டில் வாக்குவாதம் உருவாகியுள்ளது. கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய குணால், அருகிலுள்ள மலை ஒன்றின் உச்சியில் ஏறியுள்ளார்.
</p><p>
அவரைப் பின்தொடர்ந்த அவரது தந்தையான முரளிதரும் (48), தாய் சங்கீதாவும், கிராம மக்களும், மலையிலிருந்து கீழே இறங்கி வருமாறு குணாலை கெஞ்சியுள்ளனர்.
</p><p>
அவரோ, வரமாட்டேன் என அடம்பிடித்ததுடன், தான் சாகவிரும்புவதாகக் கூறியுள்ளார்.&nbsp;</p><p></p><p>

சுமார் மூன்று மணி நேரமாக பலர் அவரிடம் பல விதத்தில் கீழே இறங்குமாறு கோரியும் காலை 10.00 மணிக்கு மலையில் ஏறியவர் மதியம் 1.00 மணி வரை அடம்பிடித்துக்கொண்டிருக்க, அவரது தந்தை அவரைக் கீழே வருமாறு கையைப் பிடித்து இழுத்துள்ளார்.</p><p>

ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை, குணாலும் அவரது தந்தையான முரளிதரும் மலை உச்சியின் மறுபக்கம் இருந்த பள்ளத்தில் விழுந்துவிட்டார்கள்.
</p><p>
தன் தந்தை தன் கையைப் பிடித்திருக்கும்போதே குணால் பள்ளத்தில் குதித்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00307302-5133-46ea-83d7-9f80cfbc1c45/26-6a8bce711fabd.webp' /></p><p>

அதேபோல, கணவரும் மகனும் பள்ளத்தில் விழுந்ததைக் கண்ட சங்கீதாவும் பள்ளத்தில் குதித்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவர் குதித்தாரா அல்லது விழுந்தாரா என்பது தெரியவில்லை என தற்போது ஊடகங்கள் சந்தேகம் எழுப்பியுள்ளன.
</p><p>
சுமார் 250 அடி உயரத்திலிருந்து விழுந்த அந்த மூன்று பேருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்கள்.
</p><p>
இந்நிலையில், உயிரிழந்த குணால் மற்றும் அவரது பெற்றோரின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
</p><p>
இதற்கிடையில், இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஏராளமான மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள நிலையில், இந்த பயங்கர சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T04:57:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென காணமல் போன வைத்தியர் சடலமாக மீட்பு: தீவிரப்படுத்தப்பட்ட விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/doctor-attached-badulla-hospital-reported-missing-1787542650"></link>
            <id>https://ibctamil.com/article/doctor-attached-badulla-hospital-reported-missing-1787542650</id>
            <summary type="text">புதிய இணைப்புகாணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் நிபுணர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.அவரின் சடலம்&amp;nbsp; மஹி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் நிபுணர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p>அவரின் சடலம்&nbsp; மஹியங்கனையில் உள்ள பகடாவேவ பகுதிக்கு அருகிலுள்ள ஒரு பாறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p>இது குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.&nbsp;</p><p>

</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;&nbsp;</h2><p>பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் விசேட வைத்திய நிபுணர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். </p><p>குறித்த வைத்தியர் நேற்று (23.08.2026) வழமை போன்று பணியில் இருந்ததாகவும், அதன் பின்னர் அவரைத் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவருகையில்,</p><p></p><h2>மருத்துவர் மாயம்</h2><p> </p><p>வைத்தியர் மஹியங்கனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அவரது கார், மீகஹகியுல பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களில் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/693b1d16-4121-4789-882d-88c8c86fb364/26-6a8bc44aa7ba1.webp' /></p><p>
</p><p>
மேலும், பதுளை - மஹியங்கனை கால்வாய் வீதியில் 17ஆம் மைல் கல் அருகிலுள்ள மப்பக்கடை வேவப் பகுதியில், வைத்தியரின் கார் நேற்று இரவு கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதனையடுத்து, காணாமல் போன வைத்தியரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
அதன்படி, காவல்துறையினரும் இலங்கை இராணுவத்தினரும் இணைந்து இன்று (24.08.2026) குறித்த பகுதிகளில் விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T04:51:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கினியாவில் ஏற்பட்ட பாரிய அனர்த்தம் ; குப்பைக் கிடங்கு சரிந்ததில் 30 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/30-killed-in-guinea-garbage-dump-collapse-1787546897"></link>
            <id>https://canadamirror.com/article/30-killed-in-guinea-garbage-dump-collapse-1787546897</id>
            <summary type="text">மேற்கு ஆபிரிக்க நாடான கினியாவில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் கொனாக்ரியில் அமைந்துள்ள மிகப்பெரிய குப்பைக் கிடங்கின...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கு ஆபிரிக்க நாடான கினியாவில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
தலைநகர் கொனாக்ரியில் அமைந்துள்ள மிகப்பெரிய குப்பைக் கிடங்கின் ஒரு பகுதி, கனமழை காரணமாக சரிந்ததில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/814b706b-040e-4e12-a953-42bd855b6b1b/26-6a8bcd126d09e.webp' /></p><p>ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட இந்தச் சரிவில், குப்பைக் கிடங்குக்கு அருகிலிருந்த குடிசைகள் மற்றும் தற்காலிக குடியிருப்புகள் புதையுண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த அனர்த்தத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், மேலும் 16 பேர் லேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
</p><p>
இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கக்கூடியவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
சம்பவ இடத்துக்கு பிரதமர் அமடூ ஓரி பா நேரில் சென்று நிலைமையை பார்வையிட்டதுடன், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளையும் மேற்பார்வையிட்டார்.
</p><p>
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்</p>]]></content>
            <updated>2026-08-24T04:48:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அச்சுறுத்தும் எல்நினோ - யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/amber-heat-advisory-issued-for-several-areas-1787539506"></link>
            <id>https://ibctamil.com/article/amber-heat-advisory-issued-for-several-areas-1787539506</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் மாவட்டங்களில் வாழும் பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.இன்று பிற்பகல் 4.00 மணி முதல் நாளை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் மாவட்டங்களில் வாழும் பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>இன்று பிற்பகல் 4.00 மணி முதல் நாளை பிற்பகல் 4.00 மணி வரை கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மொனராகலை மாவட்டங்களில் பகல் நேரத்தில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு இயல்பை விட அதிகரித்து, எச்சரிக்கை மட்டத்தை எட்டக்கூடும்&nbsp;என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (24-08-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கடுமையான வெயில் </h2><p>இதனால் போதுமான அளவு நீர் மற்றும் திரவ உணவுகளை அருந்துமாரும் கடுமையான வெயில் வேளையில் வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்ளுமாறும்&nbsp;வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5265269-2c08-4dc0-872f-9d3414e7c9d4/26-6a8bcd0469f17.webp' /></p><p>குறிப்பாக முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் நோயாளிகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்துமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, தற்போது 81,000க்கும் அதிகமான மக்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர்.</p><p></p><h2>குடிநீர் தட்டுப்பாடு</h2><p>

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு நீர் தாங்கிகள் (Bowsers) மூலம் நீர் விநியோகிக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/753fc69b-e2e2-4bc9-a837-e419fafdc9a6/26-6a8bcd03b59f7.webp' /></p><p>இந்த வறட்சியான காலநிலையினால் மொனராகலை மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

அந்த மாவட்டத்தில் 33,023 பேர் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
</p><p>
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 28,523 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 8,783 பேரும் மற்றும் பதுளை மாவட்டத்தில் 7,876 பேர் உட்பட மொத்தம் 81,865 பேர் இந்த குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T04:48:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பல பகுதிகளில் வறட்சி வறட்சியான காலநிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drought-and-dry-weather-conditions-in-many-parts-1787546620"></link>
            <id>https://jvpnews.com/article/drought-and-dry-weather-conditions-in-many-parts-1787546620</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, தற்போது 81,000க்கும் அதிகமான மக்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, தற்போது 81,000க்கும் அதிகமான மக்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர்.
</p><p>
இந் நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு நீர் தாங்கிகள் (Bowsers) மூலம் நீர் விநியோகிக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de7339f2-4746-4a87-92c0-dc6d963c5b1d/26-6a8bcbfdbe98f.webp' /></p><p>
</p><p>
இந்த வறட்சியான காலநிலையினால் மொனராகலை மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

அந்த மாவட்டத்தில் 33,023 பேர் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.</p><p>

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 28,523 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 8,783 பேரும் மற்றும் பதுளை மாவட்டத்தில் 7,876 பேர் உட்பட மொத்தம் 81,865 பேர் இந்த குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-24T04:41:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[குப்பை கிடங்கில் ஏற்பட்ட பயங்கர சரிவு: குப்பைக்குள் புதைந்த 30 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/landslide-at-landfill-in-guinea-30-people-dead-1787546444"></link>
            <id>https://news.lankasri.com/article/landslide-at-landfill-in-guinea-30-people-dead-1787546444</id>
            <summary type="text">Landslide at landfill in guinea 30 people dead: கினியா நாட்டில் குப்பை கிடங்கில் ஏற்பட்ட சரிவில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். குப்பை கிடங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Landslide at landfill in guinea 30 people dead: கினியா நாட்டில் குப்பை கிடங்கில் ஏற்பட்ட சரிவில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><h2> குப்பை கிடங்கில் சரிவு</h2><p>
கினியா நாட்டின் தலைநகர் கோனாக்ரியில் உள்ள மிகப்பெரிய குப்பை கிடங்கில் ஏற்பட்ட சரிவில் 30 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.</p><p> அதிகாலை 2 மணியளவில் பெய்த கனமழையால் தார் எஸ் சலாம்(Dar Es Salam) என்ற பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகள் அடித்து செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் குப்பை சரிந்து&nbsp; அருகில் இருந்த குடிசைகளை அதில் புதையுண்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6fc60fd-f312-44db-8ddb-9197ce852019/26-6a8bcb4e428f2.webp' /></p><p>இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் பல வீடுகள் சேதமடைந்து இருப்பதுடன் இதுவரை 6 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.</p><p> இதற்கிடையில் ராணுவ பொறியியல் பிரிவின் சுகாதார அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் பால்டே மாமடூ பைலோ, நகரின் மிகப்பெரிய குப்பை கிடங்கான இந்த இடத்தை ஞாயிற்றுக்கிழமை மூட திட்டமிட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.</p><p></p><p> குப்பை கிடங்கை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.</p><p> இதனால் பலர் அப்பகுதியை விட்டு வெளியேறி இருந்தனர். இருப்பினும் விபத்து நடந்த போது இன்னும் பலர் அப்பகுதியில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p> &nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-24T04:40:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் பல பகுதிகளுக்கு இன்று ‘Amber’ வெப்ப எச்சரிக்கை ; மக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/amber-heat-warning-in-place-many-parts-sri-lanka-1787546386"></link>
            <id>https://jvpnews.com/article/amber-heat-warning-in-place-many-parts-sri-lanka-1787546386</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று(24) பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் &#039; எச்சரிக்கை&#039; (Caution) மட்டத்தை எட்டக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இயற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று(24) பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் ' எச்சரிக்கை' (Caution) மட்டத்தை எட்டக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>இதன்படி, இயற்கை அபாயங்கள் பற்றிய முன்னெச்சரிக்கை மையம் செம்மஞ்சள் நிற (Amber) வெப்ப வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
</p><p>
நேற்று(23) மாலை 4:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், இன்று மாலை 4:00 மணி வரை செல்லுபடியாகும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb1ec59f-b44f-40f2-bf44-0aa7bb73e15c/26-6a8bcb13a3627.webp' /></p><p>கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு இந்த எச்சரிக்கை பொருந்தும்.
</p><p>
குறிப்பிடப்பட்ட சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பமானது பகல் நேரத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
எனவே வெப்பமான வானிலையின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p>
போதுமான அளவு நீரைக் குடிக்க வேண்டும்; முடிந்தவரை நிழலான இடங்களில் அடிக்கடி ஓய்வு எடுக்க வேண்டும்.
</p><p>
வெப்பத்தினால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய முதியவர்கள் மற்றும் நோயாளிகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும்.</p><p>

வாகனங்களில் சிறுவர்களைத் தனியாக வாகனங்களுக்குள் விட்டுச் செல்லக் கூடாது.</p><p>
வெளியில் கடினமான உடற்பயிற்சிகள் அல்லது வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைத்து, நிழலான இடங்களில் தங்குவதுடன் அதிகளவில் திரவ ஆகாரங்களை அருந்த வேண்டும்.</p><p>

இலகுரக, வெள்ளை அல்லது லேசான நிறமுடைய ஆடைகளை அணிய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T04:39:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/public-health-inspectors-to-launch-trade-union-1787543556"></link>
            <id>https://ibctamil.com/article/public-health-inspectors-to-launch-trade-union-1787543556</id>
            <summary type="text">நாடளாவிய ரீதியில் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அல...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் இடம்பெற்ற முறைகேடு மற்றும் ஊழல்களை வெளிக் கொணர்ந்த தமது சங்க அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (24) காலை 08 மணி முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.</p><p>இந்தச் சிக்கல் குறித்து ஏற்கனவே அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்ட போதிலும், சுகாதார அமைச்சு இதுவரை எவ்வித தீர்வையும் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><h2>செயற்குழு கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானம்</h2><p>
இதற்கமைய, இன்று முதல் அனைத்து சுகாதார பரிசோதகர்களும் நிர்வாக பொது சுகாதார பரிசோதகர்களும் நிர்வாகத்தினருக்கு வழங்கும் தரவு மற்றும் அறிக்கை விநியோகத்தை தவிர்க்கவுள்ளதாக அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c79b3b9-a16f-47d2-a7cd-839fff33242b/26-6a8bc8d54e704.webp' /></p><p>அத்துடன் அனைத்து வகையான தரவு அமைப்புகளையும் புதுப்பிப்பதை இடைநிறுத்துதல் மற்றும் இக்காலப்பகுதியில் கிடைக்கப்பெறாத எந்தவொரு தரவும் மீண்டும் ஒருபோதும் தரவு அமைப்புகளில் புதுப்பிக்கப்பட மாட்டாது எனவும் அந்த சங்கம் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளது. 
</p><p>
</p><p>
இலங்கை பொது சுகாதார பரிசோதர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானத்திற்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் சமில் முத்துகுட குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம்</h2><p>இதேவேளை கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகம் ஆகியவற்றின் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க மேற்கொள்ளப்படும் முயற்சியையும் தாம் கடுமையாகக் கண்டிப்பதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29712c6f-c539-43e3-b6d0-da580f101277/26-6a8bc8d473eca.webp' /></p><p> 

எனினும், இந்த விடயங்கள் தொடர்பாக நியாயமான விசாரணைக்குத் தாம் பூரண ஒத்துழைப்பு வழங்கவும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார் நிலையில் இருப்பதாகவும் அச்சங்கம் மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T04:35:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதியதாக வெப் தொடரில் நடிக்கப்போகும் நடிகை த்ரிஷா... வெளிவந்த தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-trisha-going-to-act-in-web-series-1787545601"></link>
            <id>https://cineulagam.com/article/actress-trisha-going-to-act-in-web-series-1787545601</id>
            <summary type="text">நடிகை த்ரிஷாதமிழ் சினிமாவில் என்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் தான் நடிகை த்ரிஷா.மாடலிங் துறையில் தனது சினிமா பயணத்தை துவங்கியவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகை த்ரிஷா</h2><p>தமிழ் சினிமாவில் என்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் தான் நடிகை த்ரிஷா.</p><p>மாடலிங் துறையில் தனது சினிமா பயணத்தை துவங்கியவர் இப்போது கோடிக்கணக்கான மக்களின் மனதை வென்று முன்னணி நாயகியாக தென்னிந்தியாவில் வலம் வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு திரைப்படம் வெளியாகி இருந்தது.</p><p>படத்தின் கதையை தாண்டி த்ரிஷா கதாபாத்திரத்திற்கும் நல்ல பாராட்டு தெரிவித்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49c84689-df83-44a0-801b-da74b45e4669/26-6a8bc89f16f1f.webp' /></p><h2>வெப் தொடர்
</h2><p>அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு என படங்களில் நடித்துள்ளவர் தற்போது வெப் தொடர்களில் நடிக்க உள்ளாராம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e2a68fe-7a72-417d-ae22-3eabca265472/26-6a8bc93f36e45.webp' /></p><p> </p><p>நந்தினி ரெட்டி இயக்கவிருக்கும் புதிய வெப் தொடரில் த்ரிஷா நடிக்க உள்ளதாகவும் முழுக்க முழுக்க சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இந்த தொடர் முற்றிலும் நாயகியைப் மையப்படுத்தி உருவாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-24T04:30:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றத்தை அவமதிப்பு ; விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/action-against-6-people-including-wimal-weerawansa-1787545704"></link>
            <id>https://jvpnews.com/article/action-against-6-people-including-wimal-weerawansa-1787545704</id>
            <summary type="text">நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் ஆறு அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் (Court of Appeal) தகவல்கள் சமர்ப்பிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் ஆறு அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் (Court of Appeal) தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p></p><p>கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சுகீஸ்வர பண்டார, திலித் ஜயவீர, அசங்க நவரத்ன மற்றும் மஹிந்த பத்திரண ஆகியோருக்கு எதிராகவே இந்த நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் தகவல்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/366c0c7e-5e31-48bb-8352-27eb2fd3ec45/26-6a8bc8694bfd7.webp' /></p><p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளின் கீழ் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சல்லே கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூலை 7 முதல் ஜூலை 15 வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாகிரகப் போராட்டத்தின் போதுஇ இவர்கள் நீதிமன்ற நடைமுறைகளை விமர்சித்து பகிரங்கமாக கருத்து வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p>இது தொடர்பான விசாரணையின் அடிப்படையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) ஆகஸ்ட் 5 ஆம் திகதி கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் தகவல்களைச் சமர்ப்பித்தது.
</p><p>
முன்வைக்கப்பட்ட தகவல்களை ஆராய்ந்த நீதவான் நீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்கள் வெளியிட்ட கருத்துக்கள் முதற்கட்ட அவதானிப்பில் நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையில் அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டது.
</p><p>
அதற்கமைய குறித்த நபர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்காக வழக்கை பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T04:28:32+00:00</updated>
        </entry>
    </feed>
