<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-01T21:52:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் மீது தொடர் வான்வழித் தாக்குதல் ; ஜெலென்ஸ்கி வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ongoing-airstrikes-on-ukraine-1788289381"></link>
            <id>https://canadamirror.com/article/ongoing-airstrikes-on-ukraine-1788289381</id>
            <summary type="text">உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள தொடர் வான்வழித் தாக்குதல்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று (01) தெரிவித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள தொடர் வான்வழித் தாக்குதல்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று (01) தெரிவித்துள்ளார்.</p><p>



ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி ஆரம்பமான நிலையில், உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f10947f-c440-4aa3-ade9-66d01569483f/26-6a972166b7335.webp' /></p><p>



நேற்று (31) நள்ளிரவு முதல் இன்று செவ்வாய்க்கிழமை காலை வரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
</p><p>இந்தத் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>


ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மக்களுக்கு அழிவை ஏற்படுத்தும் வகையிலான கடுமையான தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
</p><p>


இந்நிலையில், தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், 300க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T21:45:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே வீட்டிற்குள் 23 சடலங்கள் ; நொடியில் முடிந்துபோன வாழ்க்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/23-bodies-found-in-one-house-1788287300"></link>
            <id>https://jvpnews.com/article/23-bodies-found-in-one-house-1788287300</id>
            <summary type="text">இமயமலை பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக பனிப்பாறைகள் உடைந்து ஒரு செயற்கை ஏரி உருவாகி. ஒரு கட்டத்தில் அழுத்தம் தாங்காமல் அந்த ஏரியும் உடைந்து அதிலி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இமயமலை பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக பனிப்பாறைகள் உடைந்து ஒரு செயற்கை ஏரி உருவாகி. ஒரு கட்டத்தில் அழுத்தம் தாங்காமல் அந்த ஏரியும் உடைந்து அதிலிருந்து நீர் வெளியேறி நேபாளத்தில் உள்ள ஆறுகளின் பாய்ந்ததால் வடக்கு நேபாளத்தில் உள்ள 4 ஊர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியது.</p><p style="text-align: justify;">அந்த ஊரிலிருந்த வீடுகள், கட்டிடங்கள், கார் மற்றும் கனரக வாகங்கள் என எல்லாமே நீரில் அடித்து செல்லப்பட்டன. பெரு வெள்ளத்தில் பல மனிதர்களும் சிக்கினார்கள்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/614c5e8e-d503-4c27-93e7-d2323ead08f5/26-6a97194ae5359.webp' /></p><h2 style="text-align: justify;">மீட்பு பணிகள்</h2><p style="text-align: justify;">அவர்களில் ஏராளமான இந்தியர்களும் அடக்கம். அதேபோல், 300க்கும் மேற்பட்ட தமிழர்களும் நேபாளத்திற்கு சுற்றுலா சென்றிருந்தனர். </p><p style="text-align: justify;">அவர்களில் 50 பேர் மீட்கப்பட்டு சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
தற்போது அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று ஒரே வீட்டில் 23 சடலங்கள் மீட்கப்பட்டிருக்கிறது.</p><p style="text-align: justify;"> இதையடுத்து நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. </p><p style="text-align: justify;">மேலும் 4 ஆயிரம் பேரை காணவில்லை எனவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-01T21:44:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுக்கு வருந்தத்தக்க பதிலடி! ஈரான் புரட்சிகர காவல் படையின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-s-response-to-america-1788292543"></link>
            <id>https://ibctamil.com/article/iran-s-response-to-america-1788292543</id>
            <summary type="text">தெற்கு ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக வருந்தத்தக்க பதிலடியை ஈரானிய புரட்சிகர காவல் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக வருந்தத்தக்க பதிலடியை ஈரானிய புரட்சிகர காவல் படை (IRGC) தொடங்கியுள்ளதாக ஈரானிய அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB தெரிவித்துள்ளது.</p><p>

பொதுமக்கள் வாழும் பகுதிகள் உட்பட பல இடங்கள் மீது அமெரிக்கா கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியுள்ளதாக IRGC தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.</p><p>

இதன்போது, சிரிக் மலைப்பகுதியில் நடந்த ஒரு திருமண விழாவில் மேற்கொள்ப்பட்டுள்ள அமெரிக்கத் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>&nbsp;</p><h2>ஹோர்முஸ் நீரிணையின் முற்றுகை</h2><p>
</p><p>
இந்நிலையில், குறித்த தாக்குதல்கள் ஹோர்முஸ் நீரிணையின் முற்றுகையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாகவும், அங்கு தலையிடும் வெளிநாட்டுப் படைகளை ஒடுக்குவதற்கான உறுதியை வலுப்படுத்தியுள்ளதாகவும் ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7315a616-cf9e-4824-ba8a-dc9a9e958778/26-6a972dc0c2b28.webp' /></p><p><i>Image Credit:&nbsp;thenewregion</i></p><p>
</p><p>
இதன்படி, இந்த பதிலடி நடவடிக்கையின் முதல் கட்டமாக, புதிய விண்வெளி பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தி அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான 50-வது மேம்பட்ட MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் IRGC தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T21:25:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தை செல்வாவின் நினைவுத் தூபியை குறிவைத்த மர்ம நபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/damaged-the-memorial-obelisk-of-father-selva-1788297482"></link>
            <id>https://tamilwin.com/article/damaged-the-memorial-obelisk-of-father-selva-1788297482</id>
            <summary type="text">யாழ். தெல்லிப்பளையில், வல்லை - அராலி வீதியில் இருக்கும் தென் இந்தியத்
திருச்சபை இடுகாட்டில் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் நினைவுத் தூபியை அடையா...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். தெல்லிப்பளையில், வல்லை - அராலி வீதியில் இருக்கும் தென் இந்தியத்
திருச்சபை இடுகாட்டில் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் நினைவுத் தூபியை அடையாளந் தெரியாதோர் இடித்துச் சேதமாக்கியுள்ளனர்.</p><p>

தந்தை செல்வா குடும்பத்தவரது பரம்பரை இடுகாட்டில் இருந்த தூபியின் மேல்
பகுதியே சூறையாடப்பட்டுள்ளது.</p><h2>தந்தை செல்வா</h2><p>
</p><p>
போரின் பின்னர் தெல்லிப்பளை பிரதேசம் விடுவிக்கப்பட்டபோது அங்கு போரின்
முன்னர் இருந்த தூபியை ஒத்த தூபி ஒன்று 2012 ஆம் ஆண்டு மீண்டும்
புதுப்பிக்கப்பட்டு அமைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb2ceac6-a80e-4068-9ced-9d9a3caf67db/26-6a97424093a3d.webp' /></p><p>
</p><p>
இவ்வாறு புனரமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த தந்தை செல்வாவின் தூபியே
நேற்றுமுன்தினம் மாலை இனந்தெரியாதோரால் இடித்து அழிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பில் அயலவர்களால் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் கவனத்துக்குக்
கொண்டு செல்லப்பட்டுள்ளது.
</p><p>
தூபியின் மேற்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த பெறுமதிமிக்க அலங்கார வடிவப்
பொருள்களை அபகரிக்கும் நோக்கில் இந்தச் சூறையாடல் நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T21:24:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.பல்கலையில் அலுவலக உதவியாளர் நியமனத்தில் முறைகேடு – பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-uni-office-assistant-appointments-alleged-1788287449"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-uni-office-assistant-appointments-alleged-1788287449</id>
            <summary type="text">யாழ். பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் அலுவலக உதவியாளர்களாக பணியாற்றி வரும் ஊழியர்கள் தற்போது வழங்கப்பட்டுள்ள நிரந்தர
நியமனத்திற்குள் உள்வாங்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் அலுவலக உதவியாளர்களாக பணியாற்றி வரும் ஊழியர்கள் தற்போது வழங்கப்பட்டுள்ள நிரந்தர
நியமனத்திற்குள் உள்வாங்கப்படவில்லை எனவும் புதிதாக பலர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டோர்
குற்றம் சாட்டியுள்ளனர்.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் யாழ். ஊடக அமையத்தில் இன்று(01.09.2026) இடம்பெற்ற ஊடக
சந்திப்பிலேயே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.</p><h2>அலுவலக உதவியாளர் பதவி</h2><p>
யாழ் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் பதவிகளுக்காக அங்கு
தற்காலிகமாக பணியாற்றிவந்த தாம் உள்ளிட்ட 400ற்கும் மேற்பட்டோர் போட்டிப்
பரீட்சை உள்ளிட்ட தெரிவு நடவடிக்கைகளில் பங்கேற்றிருந்த நிலையில், 71 பேருக்கு
மாத்திரம் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a216fa14-f5c6-486c-b65a-08e9915c3699/26-6a971f29e6e6e.webp' /></p><p>எனினும், பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் அலுவலக
உதவியாளர்களாக பணியாற்றி வந்த தங்களை நிரந்தர நியமனத்திற்கான உள்வாங்கலில்
உரிய முறையில் கருத்திற்கொள்ளவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p>

பல்கலைக்கழகத்தில் நீண்டகாலமாக பணியாற்றிய தங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
என்ற எதிர்பார்ப்பில் இருந்த போதிலும், தற்போது புதிதாக பலர்
நியமிக்கப்பட்டுள்ளமை தங்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும்
ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><h2>சாதகமான பதில் கிடைக்காமை</h2><p>
</p><p>
இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தமது நிலைமை
குறித்து எடுத்துரைத்தபோதிலும், சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என
பாதிக்கப்பட்டோர் கூறியுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a4efb2a-b961-4d35-bf30-5a33342cffc5/26-6a971f2aae750.webp' /></p><p>தமது சேவை, அனுபவம் மற்றும் நீண்டகால பணிக்காலம் ஆகியவற்றையும் தமது வாழ்வாதார பொருளாதார ஈட்டலையும் கருத்திற் கொண்டு, நியாயமான தீர்வொன்றை
வழங்குவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் முன்வர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.</p><p>

அத்துடன், அலுவலக உதவியாளர் நியமன நடைமுறை தொடர்பில் வெளிப்படைத்தன்மையுடன்
விசாரணை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட தங்களுக்கு உரிய நியாயத்தை பெற்றுத்தர
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள்
வலியுறுத்தியுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T21:17:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிரான வழக்கு; உயர்நீதிமன்றம் எடுத்த முக்கிய முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-reject-petition-against-22nd-amendment-1788276373"></link>
            <id>https://tamilwin.com/article/court-reject-petition-against-22nd-amendment-1788276373</id>
            <summary type="text">அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல்
செய்யப்பட்டுள்ள மனுக்களை உயர்நீதிமன்றத்தின் 13 நீதியரசர்களை கொண்ட
முமையான ஆயத்தின் முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல்
செய்யப்பட்டுள்ள மனுக்களை உயர்நீதிமன்றத்தின் 13 நீதியரசர்களை கொண்ட
முமையான ஆயத்தின் முன்னிலையில் விசாரணை செய்ய வேண்டும் என முன்வைக்கப்பட்ட
கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.</p><p>இந்த உத்தரவானது இன்று(01.09.2026) பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2>மனுக்கள் விசாரணை&nbsp;</h2><p>
</p><p>
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட
அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பிரதம நீதியரசருக்கு மேலதிகமாக நீதியரசர்கள் அச்சல வெங்கப்புலி, அர்ஜுன
ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய நீதியரசர்கள்
முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரிக்கப்படுகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3925e4fb-a8fa-4168-90fa-b54063027a51/26-6a97035583ad8.webp' /></p><p>இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி
எம்.ஏ.சுமந்திரன், உயர்நீதிமன்றத்தின் 13 நீதியரசர்களையும் கொண்ட முழுமையான
ஆயத்தின் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணை செய்யப்பட வேண்டும் என்ற
கோரிக்கையை முன்வைத்துள்ளார்.</p><p> அவருடன் ஜனாதிபதி சட்டத்தரணிகளான சாலிய பீரிஸ், அலி
சப்ரி, ஜெப்ரி அழகரத்னம், எராஜ் டி சில்வா, ஸ்ரீநாத் பெரேரா, அநுர மெத்தேகொட
மற்றும் மைத்ரி குணரத்ன ஆகியோரும் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.</p><h2>22ஆவது அரசமைப்பு திருத்தம்</h2><p>
</p><p>
சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, அரசமைப்பின்
132 (3) உறுப்புரையின்படி, உயர்நீதிமன்ற அமர்வின் நீதியரசர்களின் எண்ணிக்கை
மற்றும் கட்டமைப்பைத் தீர்மானிக்கும் முழு அதிகாரம் பிரதம நீதியரசருக்கே
உரித்தானது என வாதிட்டுள்ளார்.
</p><p>
அனைத்துத் தரப்புச் சமர்ப்பணங்களையும் பரிசீலிப்பதற்காக 15 நிமிடங்கள்
விசாரணையை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம், பின்னர் மனுதாரர்களின் கோரிக்கையை
நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/909ca085-5310-4072-b674-8c0f9d1f398d/26-6a9703fe1e12c.webp' /></p><p>
</p><p>
அதனையடுத்து, தற்போதைய ஐந்து நீதியரசர்கள் கொண்ட அமர்விலேயே மனுக்கள் மீதான
விசாரணைகள் தொடரும் என்று பிரதம நீதியரசர் அறிவித்துள்ளார்.</p><p>

22 ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக மொத்தம் 67 மனுக்களும்,
நீதித்துறைச் சட்டமூலத்துக்கு எதிராக 5 மனுக்களும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T20:46:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனில் ரஷ்யா பயங்கர தாக்குதல்! இந்தியர் உட்பட 12 பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/12-killed-in-russian-attack-in-ukraine-1788294891"></link>
            <id>https://ibctamil.com/article/12-killed-in-russian-attack-in-ukraine-1788294891</id>
            <summary type="text">உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழழை ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர காயமட...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழழை ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இது கீவ் நகரின் மீது தொடர்ச்சியாக ஆறாவது நாளாக நடத்தப்படும் கடுமையான தாக்குதல் என கூறப்படுகிறது.
</p><p>
போர்க்களத்தில் முன்னேற்றம் மந்தமடைந்துள்ள நிலையில், உக்ரைன் மீதான வான்வழித் தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.</p><p></p><h2>ரஷ்யாவின் ட்ரோன்கள்</h2><p>
</p><p>
கடந்த வாரம் முதல் ஒரு புதிய தந்திரமாக, இரவும் பகலும் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யா ஏராளமான ட்ரோன்களை அனுப்பி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f47d3fe-bd4e-45c3-b4a6-960431d3532f/26-6a97394ff1433.webp' /></p><p><i>Image Credit:&nbsp;abcnews</i></p><p> 

அவற்றில் பல ட்ரோன்கள் இடைமறிப்பதற்கு கடினமான மற்றும் வேகமாகப் பறக்கக் கூடிய புதிய ஜெட்-இயந்திர மாதிரிகளை கொண்டுள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
</p><p>
இரவு நேரத் தாக்குதல்களில் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் தொடருந்து உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><h2>இந்தியர் ஒருவரும் உயிரிழப்பு</h2><p>

இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்ட 8 பேரில் பெரும்பாலானோர் தொடருந்து தொழிலாளர்கள் என்றும் தலைநகருக்கு வெளியே உள்ள போரிஸ்பில் நகரில், குடியிருப்பு கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மற்றைய 4 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93dca545-e853-40e8-b8d3-4e66fd0a2250/26-6a973950a7aff.webp' /></p><p><i>Image Credit:&nbsp;nytimes</i></p><p>

உயிரிழந்தவர்களில் ஒருவர் இந்தியக் குடிமகன் அடங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<i><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></i>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T20:45:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த கட்ட ஆட்டத்தை ஆரம்பித்த அமெரிக்கா - ஈரானை அதிரவைத்த ட்ரம்பின் மிரட்டல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-begins-strikes-iran-attacks-on-american-bases-1788290142"></link>
            <id>https://tamilwin.com/article/us-begins-strikes-iran-attacks-on-american-bases-1788290142</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீதும், மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படையினர் மீதும் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீதும், மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படையினர் மீதும் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) மேற்கொண்ட தாக்குதல் முயற்சிகளுக்குப் பின்னர், ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
</p><p>
இந்திய நேரப்படி இரவு 9.30 மணியளவில் ஈரானில் உள்ள இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதலை ஆரம்பித்ததாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) தெரிவித்துள்ளது.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>
</p><p>

இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கே அமைந்துள்ள நகரங்களில் நான்கு ஏவுகணைகள் தாக்கியுள்ளதாக ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
</p><p>
சாபஹார் மற்றும் கொனாரக் மாவட்டங்களில் நான்கு ஏவுகணைகள் தாக்கியதாக ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான IRNA, மாகாண அதிகாரி அலி கலீலாபாதியை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12bfca67-0596-4bc3-b85a-e02b87c36ed5/26-6a972766a61c3.webp' /></p><p>
</p><p>
எனினும், இந்தத் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.


ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலையில்,
, ஈரானிய துறைமுகங்களுக்கு எதிரான தனது கடற்படை முற்றுகையை அமெரிக்கா தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
</p><p>
கடந்த ஞாயிற்றுக்கிழமை, பல வாரங்களுக்குப் பின்னர் ஈரான் மீது அமெரிக்கா தனது முதல் தாக்குதலை நடத்தியது. ஈரானுக்குச் சொந்தமான லாரக் தீவில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.</p><h2>&nbsp;ட்ரம்ப் எச்சரிக்கை</h2><p>
</p><p>
கப்பல் போக்குவரத்து பாதையில் ஈரான் தொடர்ந்து கண்ணிவெடிகளைப் பதிப்பதைத் தடுக்கும் நோக்கில், லாரக் தீவில் இருந்த ஈரானிய ரொக்கெட் ஏவுதளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.</p><p>

இதற்குப் பதிலடியாக ஈரான், ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை நோக்கி ஏவுகணைகளை ஏவியதாகவும், அவை வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, தனது கடற்பரப்புக்கு மேலாக பறந்த ஈரானிய ஆளில்லா விமானம் ஒன்றை இடைமறித்ததாக ஐக்கிய அரபு அமீரகமும் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/260ec7a1-29bd-4cc4-969b-f7b1e55e9dc1/26-6a97276849708.webp' /></p><p>


அமெரிக்காவின் சமீபத்திய தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுக்க வேண்டாம் என ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.</p><p>

“இந்த மிகவும் நியாயமான தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், அது இன்னும் கடுமையான மற்றும் அதிகளவிலான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும். 

ஆனால், அதுவே மிகப்பெரிய தாக்குதலாக இருக்காது.</p><p> மிகப்பெரிய தாக்குதல் இன்னும் காத்திருக்கிறது. அது முடிவடைந்த பின்னர், இஸ்லாமியக் குடியரசு ஈரானில் மிகக் குறைவான பகுதிகளே எஞ்சியிருக்கும்” என ட்ரம்ப் தனது Truth Social பதிவில் தெரிவித்துள்ளார்.</p><h2>அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்&nbsp;</h2><p>
</p><p>

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட குண்டுவீச்சுத் தாக்குதல்கள் ஈரானை தோல்வியடைந்த நாடாக மாற்றியுள்ளதாக ட்ரம்ப் திங்கட்கிழமை தெரிவித்திருந்தார்.
</p><p>
ஈரானின் தலைமை அழிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் இராணுவம் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், பொருளாதாரம் சீரழிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.</p><p>

எனினும், மேலும் தாக்குதல்கள் தேவைப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09236870-c7c6-4578-8357-39b0b8a48c7c/26-6a97276794173.webp' /></p><p>
</p><p>
“நாங்கள் அவர்களைத் தாக்க மாட்டோம் என்று அதற்கு அர்த்தமல்ல.என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்” என ட்ரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதற்கிடையில், கடந்த மாதம் ஈரானுக்கு எதிராக பொருளாதார ரீதியான அழுத்தங்களை அதிகரிப்பதில் ட்ரம்ப் நிர்வாகம் கவனம் செலுத்தத் தொடங்கியது.</p><p>

பல தசாப்தங்களாக அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டு வரும் ஈரானுக்கு எதிராக “பொருளாதார டி-டே” நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ட்ரம்ப் உறுதியளித்திருந்தார்.</p><p>

ஈரானின் பொருளாதாரத்தில் சரியான இலக்கைத் தாக்கினால், தெஹ்ரானை முறியடையும் நிலைக்குக் கொண்டு வருவது காலத்தின் கேள்வி மட்டுமே என ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்திருந்தது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T20:42:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும பயனாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/good-news-for-aswesuma-beneficiaries-1788292450"></link>
            <id>https://jvpnews.com/article/good-news-for-aswesuma-beneficiaries-1788292450</id>
            <summary type="text">அஸ்வெசும திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் இம்மாதம் முதல் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை உத்தியோகபூர்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அஸ்வெசும திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் இம்மாதம் முதல் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">


அஸ்வெசும திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கான பயனாளர்களைத் தெரிவு செய்யும் பணிகள் கடந்த மாதம் நிறைவடைந்தன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d7697f7-c731-492b-9d26-7c08df04f9f9/26-6a972d644957b.webp' /></p><h2 style="text-align: justify; ">புதிய பயனாளர்கள்</h2><p style="text-align: justify; "> இதில் தெரிவு செய்யப்பட்ட தகுதியுடைய புதிய பயனாளர்களுக்கே இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.
</p><p style="text-align: justify; ">


அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் புதுப்பிக்கப்பட்ட பயனாளர் பெயர் பட்டியல் அடுத்த மாதம் முதல் வாரத்தில் காட்சிப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


பயனாளர்கள் தங்களுடைய பெயர், பட்டியலில் உள்ளதா என்பதை உங்கள் பிரதேச செயலகங்களில் அல்லது உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் ஊடாகச் சரிபார்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">


மேலும், பெயர் பட்டியலில் ஏதேனும் தவறுகள் அல்லது விடுபடல்கள் இருந்தால், அதற்கான மேன்முறையீடுகளைச் செய்வதற்குரிய கால அவகாசம் மற்றும் வழிமுறைகள் குறித்துத் தொடர்ந்து அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-01T20:30:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் புதிய தாக்குதல் - ஈரான் கடுமையான பதில் தருவதாக எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-launches-strikes-iran-vows-retaliation-1788294467"></link>
            <id>https://news.lankasri.com/article/us-launches-strikes-iran-vows-retaliation-1788294467</id>
            <summary type="text">US launches strikes Iran vows retaliation: அமெரிக்காவின் புதிய தாக்குதலுக்கு, ஈரான் கடுமையான பதிலடி தருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் மீது&amp;nb...</summary>
            <content type="html"><![CDATA[<p>US launches strikes Iran vows retaliation: அமெரிக்காவின் புதிய தாக்குதலுக்கு, ஈரான் கடுமையான பதிலடி தருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><h2>
ஈரான் மீது&nbsp;அமெரிக்கா தாக்குதல்</h2><p>மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா-ஈரான் மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
</p><p>
சென்ட்காம் (CENTCOM) அறிவிப்பின்படி, அமெரிக்க இராணுவம் ஈரானின் IRGC இலக்குகளை தாக்கியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5409eda2-15c6-4480-9e20-c5dabccea788/26-6a973545589a8.webp' /></p><p>இந்த தாக்குதல், ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களுக்கு எதிராக நடந்த முயற்சிகள் மற்றும் அமெரிக்க வீரர்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு பதிலாக நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
</p><h2>
ஈரான் பதில்</h2><p>இதற்கு ஈரான் உடனடியாக பதிலளித்துள்ளது. “அமெரிக்கா புதிய தாக்குதலுக்காக கடுமையான தண்டனை அனுபவிக்கும்” என IRGC பேச்சாளர் ஹொசெயின் மொஹெப்பி எச்சரித்துள்ளார்.
</p><p>
ஈரானின் தெற்கு பகுதிகளில், குறிப்பாக கோனராக், பந்தர் அப்பாஸ் மற்றும் கிஷம் தீவு ஆகிய இடங்களில் வெடிப்புகள் நிகழ்ந்ததாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p></p><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், “இந்த தாக்குதல் பெரியது என்றும், சக்திவாய்ந்தது என்றும்” கூறி, ஈரான் பதிலடி கொடுத்தால் “மிகவும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகும்” என எச்சரித்துள்ளார்.
</p><p>
அவர், “இது மிகப்பெரிய தாக்குதல் அல்ல, ஆனால் அப்படியொரு தாக்குதல் காத்திருக்கிறது. அது நடந்துவிட்டால், ஈரானின் கொஞ்ச நஞ்ச பகுதி தன மிஞ்சும்” எனக் கூறியுள்ளார்.
</p><p>
இந்த தாக்குதலுக்குப் பிறகு, Brent crude எண்ணெய் விலை 4 சதவீதம் உயர்ந்து பீப்பாய்க்கு 92 டொலர் என்ற அளவுக்கு சென்றுள்ளது. அமெரிக்காவில் பெட்ரோல் விலை கேலன் 4 டொலராக (3.8 லிட்டர்) உயர்ந்துள்ளது.
</p><p></p><p>அமெரிக்க வெளிவிவகார அமைச்சகம், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்களுக்கு&nbsp;பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
இந்த தாக்குதல், கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா லாரக் தீவை தாக்கியதற்குப் பிறகு, ஈரான் ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளத்தை ஏவுகணைகளால் தாக்கிய சம்பவத்தின் தொடர்ச்சியாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T20:25:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சையை கிளப்பியுள்ள அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் செயல் - இணையத்தில் பரவும் காணொளி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ampitiya-sumanaratana-thero-viral-video-1788293216"></link>
            <id>https://tamilwin.com/article/ampitiya-sumanaratana-thero-viral-video-1788293216</id>
            <summary type="text">மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர், புவிச்சரித்திரவியல் அளவைகள் மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் (GSMB) மட்டக்களப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர், புவிச்சரித்திரவியல் அளவைகள் மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் (GSMB) மட்டக்களப்பு அலுவலகத்திற்குச் சென்று, அங்கே பணியாற்றும் தமிழ் அதிகாரி ஒருவரை மிரட்டியுள்ளார்.</p><p>

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத மண் அகழ்வைத் தடுக்கும் நோக்கில், மாவட்ட அபிவிருத்தி குழுவின் முடிவிற்கமைய நூற்றுக்கணக்கான மண் அகழ்வு அனுமதிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.</p><p>

இந்த அனுமதிகளைக் கோரி அலுவலகத்திற்குச் சென்ற தேரர், பணியகத்தின் பணிப்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அதிகாரியை மிரட்டிய காட்சி பதிவாகியுள்ளது.

இந்தச் செயலுக்கு சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.</p><p>

 சட்டத்தை நிலைநாட்ட முயலும் அதிகாரியை அச்சுறுத்துவதை அவர்கள் கண்டித்துள்ளனர்.</p><p>

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் இவ்வாறான சர்ச்சைக்குரிய மற்றும் இனவாதப் போக்குடைய கருத்துகளை இதற்கு முன்னரும் வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_taHX-CZ18s" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T20:11:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்த இளைஞனால் அதிர்ந்த பொலிஸார் ; விதம் விதமாக மீட்கப்பட்ட பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-shocked-by-youth-dangerous-items-recovered-1788291476"></link>
            <id>https://jvpnews.com/article/police-shocked-by-youth-dangerous-items-recovered-1788291476</id>
            <summary type="text">அஹுங்கல்ல, எலதொட்ட சந்தை வீதித் தடையின் போது &#039;ஐஸ்&#039;, ஹெரோயின் மற்றும் குஷ் ஆகிய போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அஹுங்கல்ல, எலதொட்ட சந்தை வீதித் தடையின் போது 'ஐஸ்', ஹெரோயின் மற்றும் குஷ் ஆகிய போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 

அஹுங்கல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளால் சந்தேகத்திற்குரிய மோட்டார் சைக்கிள் ஒன்றை மறித்துச் சோதனையிட்ட போதே இந்தப் போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6944b3a-10eb-4ece-8235-80edb5c57427/26-6a9729959280d.webp' /></p><h2>போதைப்பொருட்கள்</h2><p>
</p><p>
 

அவரிடமிருந்து 01 கிலோகிராம் 194 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள், 217 கிராம் ஹெரோயின் மற்றும் 101 கிராம் 270 மில்லிகிராம் குஷ் ஆகிய போதைப்பொருட்களைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், அவரது மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர்.</p><p>

 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வத்துகெதர பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p>
</p><p>
 

சம்பவம் தொடர்பில் அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T20:00:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானை மீண்டும் தாக்கத் தொடங்கிய அமெரிக்கா! தீவிரமடையும் மோதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-launches-new-airstrikes-on-iranian-targets-1788290762"></link>
            <id>https://ibctamil.com/article/us-launches-new-airstrikes-on-iranian-targets-1788290762</id>
            <summary type="text">அமெரிக்கா ஈரானிய இலக்குகள் மீது புதிய வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹோர்முஸ் நீரிணையில், வணிகக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா ஈரானிய இலக்குகள் மீது புதிய வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையில், வணிகக் கப்பல்கள் மீதும், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் படையினர் மீதும் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) நடத்திய தாக்குதல் முயற்சிகளுக்குப் பதிலடியாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது. </p><p>

இந்நிலையில், ஈரானின் கெஷ்ம் தீவு, பண்டார் அப்பாஸ், சபாஹார், ஜாஸ்க் மற்றும் சிரித் ஆகிய பகுதிகளில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஈரான் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.</p><p></p><h2>ஈரானின் பதிலடி&nbsp;</h2><p>

இதேவேளை, ஈரான் மீண்டும் பதிலடி கொடுத்தால், இதனைக் காட்டிலும் மிகக் கடுமையான முறையில் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99476f86-d703-4d86-84c3-e8ef77a30edb/26-6a9728d8e899c.webp' /></p><p> </p><p>

எவ்வாறாயினும், அமெரிக்கா தனது புதிய தாக்குதல்களுக்காக வருந்தும் என்றும், இராஜதந்திர ரீதியிலோ அல்லது போர்க்களத்திலோ ஈரான் தனது முழுத் திறனையும் பயன்படுத்திப் போராடும் என்றும் ஈரானிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதன்படி, இப்போரினால் பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் விமானச் சேவைகள் ரத்து செய்யப்படலாம் என்பதால் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கக் குடிமக்கள் தீவிர விழிப்புடன் இருக்குமாறு கட்டாரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T19:34:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/decision-quarantine-and-prevention-of-diseases-law-1788290667"></link>
            <id>https://jvpnews.com/article/decision-quarantine-and-prevention-of-diseases-law-1788290667</id>
            <summary type="text">1897 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்காக மீளாய்வுக் குழுவொ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">1897 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்காக மீளாய்வுக் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. </p><p style="text-align: justify; ">



1897 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு கட்டளைச் சட்டம், தொற்று நோய்கள் பரவுவதைத் தடுத்தல் மற்றும் தனிமைப்படுத்தல் படிமுறைகள் அமுல்படுத்தப்படுவதை நிர்வகிக்கின்ற இலங்கையிலுள்ள முக்கிய சட்டமாகும்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8bfa6d0-1949-4bf7-b079-68a317020117/26-6a97266d08ef5.webp' /></p><h2 style="text-align: justify; ">திருத்தச் சட்டமூலம்&nbsp;</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">



இருப்பினும், உலகளாவிய ரீதியிலும், உள்நாட்டிலும் தற்போது ஆட்களின், பண்டங்களின் மற்றும் சேவைகளின் தொழிற்பாடுகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளமையால், தொடர்ந்து இயங்கிவரும் உலகளாவிய விஜயங்கள் மற்றும் உலகளாவிய வர்த்தகத்தால் தொற்று நோய்கள் நாடுகளுக்கிடையே வேகமாகப் பரவி வருகின்றமையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.</p><p style="text-align: justify; "> 



அதற்கமைய, 1897 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2016 ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">ஆயினும், குறித்த திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.
</p><p style="text-align: justify; ">


அதனால், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கமைய, கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ள தொற்றுநோய் நிலைமைகளின் போது பெற்றுக்கொண்ட அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, தற்போது தயாரிக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலத்தை ஆராய்ந்து, சமகால சுகாதார சவால்களுக்கும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்களுக்கும் முகங்கொடுக்கக் கூடிய வகையில் பொருத்தமான திருத்தங்களை முன்மொழிவதற்கான மீளாய்வுக் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-01T19:24:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட பெண் உத்தியோகத்தர்! அக்கரைப்பற்று முன்னாள் மேயருக்கு விளக்கமறியல் நீடிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/remand-of-ex-akkaraipattu-mayor-extended-1788289592"></link>
            <id>https://ibctamil.com/article/remand-of-ex-akkaraipattu-mayor-extended-1788289592</id>
            <summary type="text">பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் மேயர் அகமது...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் மேயர் அகமது செய்யது சக்கி அதாஉல்லாவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 09 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.</p><p>
கடந்த 19 ஆம் திகதி சந்தேகநபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, அவரை செப்டம்பர் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.</p><p>

 இந்நிலையிலேயே, அவரின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>வைத்தியசாலையில் அனுமதி</h2><p>

தற்போது சந்தேகநபரான சக்கி அதாஉல்லா சுகயீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருவதனால், அவர் இன்று நீதிமன்றத்தில் நேரடியாக முற்படுத்தப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/957a31c2-c580-4955-8aa2-f66545668699/26-6a972447d0ebc.webp' /></p><p>

இந்நிலையிலேயே, சிறைச்சாலை அதிகாரிகளின் அறிக்கைகளை பரிசீலித்த நீதிவான், சந்தேகநபரை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளையிட்டுள்ளார்.</p><h2>

வழக்கின் பின்னணி</h2><p>
அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வராகச் சக்கி அதாஉல்லா பதவி வகித்த காலத்தில், அங்கு கடமையாற்றிய பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த பெண் அரச உத்தியோகத்தர் ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவரைப் பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83a284d7-3dbd-432d-a658-2fa333791360/26-6a9724488ba07.webp' /></p><p>
குறித்த பெண் சமூக வலைத்தள நேரலையினூடாக இக் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தியதை அடுத்து, அம்பாறை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். இதனிடையே, வாக்குமூலம் வழங்குவதற்காக காவல்நிலையத்திற்கு வருகை தந்த வேளையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.</p><p>

இதனைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினரால் கடந்த மாதம் 18 ஆம் திகதி அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அதன்போது சந்தேகநபரை ஓகஸ்ட் 19 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.&nbsp;</p><p>

பின்னர் ஓகஸ்ட் 19 ஆம் திகதி மீண்டும் முற்படுத்தப்பட்ட போது, விளக்கமறியல் செப்டம்பர் 01 வரை நீடிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 3ஆவது முறையாகச் செப்டம்பர் 09 வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T19:15:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் நீரிணையில் சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/saudi-oil-tankers-attacked-in-hormuz-strait-1788289530"></link>
            <id>https://news.lankasri.com/article/saudi-oil-tankers-attacked-in-hormuz-strait-1788289530</id>
            <summary type="text">Saudi oil tankers attacked in Hormuz Strait: ஹார்முஸ் நீரிணையில் சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எண்ணெய் கப்பல்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Saudi oil tankers attacked in Hormuz Strait: ஹார்முஸ் நீரிணையில் சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
</p><h2>
எண்ணெய் கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல்</h2><p>மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. </p><p>ஹார்முஸ் நீரிணையில் சவுதி எண்ணெய் ஏற்றிச் சென்ற இரண்டு பெரிய கப்பல்கள் தாக்கப்பட்டதாக சர்வதேச கடல் பாதுகாப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa22ec08-0ca9-40da-8186-ee6c0954aa30/26-6a9721fbb521c.webp' /></p><p>திங்கட்கிழமை இரவு, சவுதி அரேபியக் கொடியுடன் சென்ற “Sidr” என்ற எண்ணெய் கப்பலும், லைபீரியா கொடியுடன் சென்ற “Senegal Prosperity” என்ற எண்ணெய் கப்பலும், ஓமன் கடற்கரைக்கு அருகில் சில நிமிட இடைவெளியில் தாக்கப்பட்டன.
</p><p>
மூன்று ஏவுகணைகள் தாக்கியதாகவும், கப்பலின் இயந்திர அறை மற்றும் பக்கவாட்டில் சேதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
</p><p></p><p>இரண்டு கப்பல்களும் கடந்த வாரம் சவுதி அரேபியாவின் Juaymah terminal-இல் இருந்து சுமார் 20 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்றிருந்தன.</p><p> தாக்குதலுக்குப் பிறகு, கப்பல் குழுவினர் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் அல்லது சுற்றுச்சூழல் பாதிப்புகள் எதுவும் இல்லை.
</p><h2>
தாக்குதல்&nbsp;பின்னணி</h2><p>இந்த தாக்குதல், அமெரிக்கா-இரான் இடையேயான பதற்றத்தின் பின்னணியில் நடந்துள்ளது. கடந்த சில மாதங்களாக ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா மற்றும் ஈரான் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த முயற்சித்து வருகின்றன. </p><p>ஈரான், “கட்டணம் செலுத்தாமல் செல்லும் கப்பல்களை” தடுத்து நிறுத்துவதாக எச்சரித்துள்ளது.</p><p></p><p> </p><h2>எண்ணெய் விலைவு</h2><p>அதே சமயம், அமெரிக்கா ஈரான் துறைமுகங்களை முற்றுகையிட்டு வருகிறது.

இந்த தாக்குதலுக்குப் பிறகு, உலகளாவிய எண்ணெய் விலை 1.7 சதவீதம் உயர்ந்து, Brent crude பீப்பாய்க்கு 92 டொலர் என்ற அளவுக்கு சென்றுள்ளது.
</p><p>
ஹார்முஸ் நீரிணை உலகின் எண்ணெய் போக்குவரத்து பாதையில் மிக முக்கியமானது. உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் சுமார் 20 சதவீதம் இந்த கடல்பாதையின் வழியாக செல்கிறது. எனவே, இந்த தாக்குதல் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T19:02:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[துறைமுக கொள்கலனில் மீட்கப்பட்ட போதைப்பொருள் தொடர்பில் புதிய தகவல் ; சிக்கிய தமிழ் வர்த்தகர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drugs-recovered-from-a-port-container-1788286052"></link>
            <id>https://jvpnews.com/article/drugs-recovered-from-a-port-container-1788286052</id>
            <summary type="text">கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் தொகையை, டுபாயிலிருந்து பாகிஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் தொகையை, டுபாயிலிருந்து பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான 'பரேவி சுதா' என்பவரே இலங்கைக்கு அனுப்பியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். </p><p style="text-align: justify; ">

மேலும், அங்கொட பிரியந்த மற்றும் ரூபன் ஆகியோரும் இதனுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் தற்போது சந்தேகிக்கப்பதுடன், அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab2c50f2-20b7-476d-a18a-af454c255e2f/26-6a9714659f432.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருள் கொள்கலன்</h2><p style="text-align: justify; "> 

போதைப்பொருள் அடங்கிய கொள்கலன் மொராக்கோவிற்கு மீள்ஏற்றுமதி செய்யத் தயார் நிலையில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தபோதிலும், இந்த போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவருவதற்கே திட்டமிடப்பட்டிருந்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p style="text-align: justify; "> 

ஐஸ் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் அடங்கிய கொள்கலன் ஒன்று கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தில் இருப்பதாக வெளிநாட்டிலுள்ள தனிப்பட்ட உளவாளி ஒருவரிடமிருந்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மால் கொடித்துவக்குவிற்கு தகவல் கிடைத்திருந்தது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அதன்படி செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள், சந்தேகத்திற்குரிய கொள்கலனை பரிசோதிப்பதற்காக கடந்த 28ஆம் திகதி நீதிமன்ற உத்தரவொன்றைப் பெற்றுக் கொண்டதுடன், அதற்கமைய நேற்று (31) அந்த கொள்கலன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. </p><p style="text-align: justify; ">

இதற்கு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் சுங்க அதிகாரிகளின் உதவியும் கிடைத்தது. 

கொள்கலனுக்குள் இருந்த பகுதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே சுமார் 472 கிலோகிராம் எடையுடைய ஐஸ் போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டது. </p><p style="text-align: justify; ">

மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், இந்த போதைப்பொருள் தொகை உள்நாட்டு வர்த்தகர் ஒருவரின் பெயரில் அனுப்பப்பட்டுள்ளமை தெரியவந்தது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அதன்படி, தெமட்டகொடையைச் சேர்ந்த 44 வயதான ஆறுமுகன் சஷிதரன் என்ற வர்த்தகர் கைது செய்யப்பட்டிருந்தார். 

</p><p style="text-align: justify; ">மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இதனுடன் தொடர்புடைய இரண்டு பாகிஸ்தானியர்கள் பற்றிய விபரங்கள் தெரியவந்ததுடன், அவர்கள் ஜம்பட்டா வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் தங்கியிருந்தபோது அவர்களைக் கைது செய்ய மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர். </p><p style="text-align: justify; ">

தெமட்டகொடை வர்த்தகரின் நிறுவனத்தின் ஊடாகவே குறித்த போதைப்பொருள் தொகையை இலங்கைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததாகக் கைது செய்யப்பட்ட இரு பாகிஸ்தானியர்களும் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-01T19:00:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பல்கலையில் நியமனத்தின் போது புறக்கணிக்கப்பட்ட அலுவலக உதவியாளர்கள்! முன்வைத்துள்ள குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/office-assistants-at-university-of-jaffna-issue-1788287696"></link>
            <id>https://ibctamil.com/article/office-assistants-at-university-of-jaffna-issue-1788287696</id>
            <summary type="text">


யாழ். பல்கலைக் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் அலுவலக உதவியாளர்களாக நீண்டகாலமாக பணியாற்றி வரும் ஊழியர்கள் தற்போது வழங்கப்பட்டுள்ள நிரந்தர நியமனத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>


யாழ். பல்கலைக் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் அலுவலக உதவியாளர்களாக நீண்டகாலமாக பணியாற்றி வரும் ஊழியர்கள் தற்போது வழங்கப்பட்டுள்ள நிரந்தர நியமனத்திற்கான உள்வாங்கலில் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு பதிலாக புதிதாக பலர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் இன்று (1) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட ஊழியர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் அலுவலக உதவியாளர் பதவிகளுக்காக அங்கு தற்காலிகமாக பணியாற்றிவந்த தாம் உள்ளிட்ட 400 க்கும் மேற்பட்டோர் போட்டிப் பரீட்சை உள்ளிட்ட தெரிவு நடவடிக்கைகளில் பங்கேற்றிருந்த நிலையில், 71 பேருக்கு மாத்திரம் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.</p><p>

எனினும், பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் அலுவலக உதவியாளர்களாக பணியாற்றி வந்த தங்களை நிரந்தர நியமனத்திற்கான உள்வாங்கலில் உரிய முறையில் கருத்திற்கொள்ளவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p></p><h2>பல்கலை நிர்வாகத்திடம் கோரிக்கை</h2><p>
</p><p>
பல்கலைக்கழகத்தில் நீண்டகாலமாக பணியாற்றிய தங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த போதிலும், தற்போது புதிதாக பலர்
நியமிக்கப்பட்டுள்ளமை தங்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/897899c5-2cae-4d70-aa0f-592dda8811ce/26-6a971f71eaae3.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தமது நிலைமை குறித்து எடுத்துரைத்தபோதிலும், சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்டோர் கூறியுள்ளனர்.
</p><p>
தமது சேவை, அனுபவம் மற்றும் நீண்டகால பணிக்காலம் ஆகியவற்றை கருத்திற் கொண்டும் தமது வாழ்வாதார பொருளாதார ஈட்டலையும் கருத்திற் கொண்டு, நியாயமான தீர்வொன்றை வழங்குவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் முன்வர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
அத்துடன், அலுவலக உதவியாளர் நியமன நடைமுறை தொடர்பில் வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட தங்களுக்கு உரிய நியாயத்தை பெற்றுத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-09-01T18:58:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் தொழிலதிபரின் பெயருக்கு வந்த பெரும் போதைப்பொருள் கையிருப்பு! அம்பலமான புதிய தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/drugs-found-at-colombo-port-new-updates-1788285238"></link>
            <id>https://ibctamil.com/article/drugs-found-at-colombo-port-new-updates-1788285238</id>
            <summary type="text">கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட 472 கிலோகிராம் எடையுள்ள &#039;ஐஸ்&#039; போதைப்பொருள் துபாயில் இருந்து பாகிஸ்தானுக்கு தப்பிச் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட 472 கிலோகிராம் எடையுள்ள 'ஐஸ்' போதைப்பொருள் துபாயில் இருந்து பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்ற “பறவி சுதா” என்ற போதைப்பொருள் கடத்தல்காரரால் நாட்டிற்குள் அனுப்பப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
</p><p>
அத்தோடு, அதில் அங்கொட பிரியந்த மற்றும் ரூபன் என்ற போதைப்பொருள் கடத்தல் காரர்களளுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.</p><p>

சம்பந்தப்பட்ட கொள்கலன் மொராக்கோவிற்கு மறுஏற்றுமதி செய்யத் தயாராக இருந்ததாக அறிக்கைகள் கூறினாலும், போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவரவே திட்டமிட்டதாக காவல்துறையினர் கருதுகின்றனர்.</p><p></p><h2>தொழிலதிபர் கைது&nbsp;</h2><p> </p><p>

வெளிநாட்டிலுள்ள ஒரு தனியார் தகவல் வழங்குநர் அளித்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரன்மல் கொடிதுவக்கவின் வழிகாட்டலில் காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவைப் பெற்று இச்சோதனையை மேற்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66b3b8da-7b95-43c3-a6ab-279bf3ce0368/26-6a97130982d6b.webp' /></p><p> 

மேலதிக விசாரணைகளின் போது, இப்போதைப்பொருள் இருப்பு ஒரு உள்ளூர் தொழிலதிபரின் பெயரில் அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனடிப்படையில் தெமட்டகொடையைச் சேர்ந்த 44 வயதான ஆறுமுகன் சசிதரன் என்ற தொழிலதிபர் கைது செய்யப்பட்டிருந்தார்.</p><h2>பின்னணியில் பாகிஸ்தான் நாட்டவர்கள்</h2><p>
</p><p>
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இரு பாகிஸ்தானியர்களுக்கு இதில் தொடர்பிருப்பது தெரியவரவே, ஜம்பாட்டா வீதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் தங்கியிருந்த அவ்விரு பாகிஸ்தான் நாட்டவர்களும் கைது செய்யப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ac04ff8-9f00-4d5e-960b-7bae587386a9/26-6a97130a6b98c.webp' /></p><p> 

அதனைதொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தெமட்டகொட தொழிலதிபரின் நிறுவனம் மூலமாகவே மேற்படி போதைப்பொருளை நாட்டிற்குள் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்ததாகக் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானியர்கள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T18:47:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்புப் பகுதியில் 2 வயது குழந்தைக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-2-year-old-child-in-batticaloa-area-1788286839"></link>
            <id>https://tamilwin.com/article/death-2-year-old-child-in-batticaloa-area-1788286839</id>
            <summary type="text">மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில்
இரண்டு வயது குழந்தையொன்று நீர்த்தொட்டியில் வீழ்ந்த நிலையில் பழுகாமம்
வைத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில்
இரண்டு வயது குழந்தையொன்று நீர்த்தொட்டியில் வீழ்ந்த நிலையில் பழுகாமம்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளது.</p><p>இந்த சம்பவமானது இன்று(01.09.2026) இடம்பெற்றுள்ளது.</p><h2>குழந்தை உயிரிழப்பு</h2><p>
</p><p>கற்சேனை - முல்லை வீதியைச் சேர்ந்த 2 வயதும் 8 மாதங்களுமான நந்தகோபன் கிசோத்
என்ற குழந்தையே வாளி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
</p><p>இன்று(01) காலை 10.30 மணியளவில், வீட்டின் வாசலில் நீர்
நிரப்பி வைக்கப்பட்டிருந்த பெரிய வாளியின் அருகே சிறுவன் விளையாடிக்
கொண்டிருந்துள்ளான். இதன்போது, எதிர்பாராதவிதமாக சிறுவன் தலைகீழாக வாளிக்குள் விழுந்ததில் நீரில்
மூழ்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f763826a-8fcd-4e22-8ac5-5a49e0e0e005/26-6a9718b15c1ad.webp' /></p><p>இதனையடுத்து உடனடியாக உறவினர்கள் சிறுவனை மீட்டு பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு
சென்ற போதிலும், வழியிலேயே சிறுவன் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள்
தெரிவித்துள்ளனர்.
</p><p>மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாக திடீர் மரண விசாரணை
அதிகாரி வீ.ஆர். மகேந்திரன், பழுகாமம் வைத்தியசாலைக்கு வருகை தந்து சடலத்தைப்
பார்வையிட்டதுடன், உறவினர்களிடமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.</p><p>
உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக சிறுவனின் சடலம் இன்று (01) மாலை 6.00
மணியளவில் பழுகாமம் வைத்தியசாலையிலிருந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் மேலதிக விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T18:35:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்டத்திற்கு தயாராகும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/federation-of-university-teachers-prepares-protest-1788284807"></link>
            <id>https://jvpnews.com/article/federation-of-university-teachers-prepares-protest-1788284807</id>
            <summary type="text">பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்க அரசு தவறியுள்ளதன் காரணமாக நாளை போராட்டம் ஒன்றை நடத்த தயார் என பல்கலைக்கழக ஆசிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்க அரசு தவறியுள்ளதன் காரணமாக நாளை போராட்டம் ஒன்றை நடத்த தயார் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"> 

நாளை (02) மதிய உணவு வேளையின் போது அனைத்து அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இணைந்து இப்போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அச்சம்மேளனத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d3cc16c-f928-4511-b07f-fbc749d6d573/26-6a97100c77705.webp' /></p><h2 style="text-align: justify; ">தீவிரப்படுத்த நடவடிக்கை</h2><p> </p><p style="text-align: justify; ">

இதற்கு தீர்வு காணத் தவறினால், வரும் வாரத்தில் இப்போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். </p><p style="text-align: justify; ">

அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் அரசுப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனமாக அரசுப் பல்கலைக்கழக அமைப்பில் உள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதாகவும், அதற்கான யோசனைத் திட்ட மொன்றை அரசாங்கத்திற்கு வழங்கியதாகவும் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "> 

எனினும், அந்த யோசனைகளையோ அல்லது கலந்துரையாடல்களின் போது எட்டப்பட்ட உடன்பாடுகளையோ அரசாங்கம் நடைமுறைப்படுத்தாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

மேலும், இப்பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமும் கலந்துரையாடியதாகக் கூறிய அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அரசுப் பல்கலைக்கழக அமைப்பில் உள்ள பிரச்சினைகள் குறித்து எழுத்து மூலமும் அறியப்படுத்தியதாகத் தெரிவித்தார்.</p><p style="text-align: justify;"> 

இருப்பினும், இதுவரை அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் தவறியுள்ளதாகத் தெரிவித்த அவர், தற்போது பல்கலைக்கழக அமைப்பிலிருந்து பல விரிவுரையாளர்கள் சேவையை விட்டு விலகியுள்ளதாகவும் குறிப்பிட்டார.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">

2015ஆம் ஆண்டளவில் அரசுப் பல்கலைக்கழக அமைப்பிற்கு ஒரு வருடத்திற்கு 25,000 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டதாகவும், தற்போது அது ஒரு வருடத்திற்கு 45,000 மாணவர்கள் வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். </p><p style="text-align: justify;">

எனினும், 2015இல் அரசுப் பல்கலைக்கழக அமைப்பில் 5,800 விரிவுரையாளர்கள் இருந்த போதிலும், தற்போது அவர்களில் 1,000க்கும் மேற்பட்டோர் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறியுள்ளதாகக் கூறினார்.&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-01T18:10:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு வருடங்களில் மதிப்பை இழக்கப்போகும் ஹோர்முஸ் நீரிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hormuz-worthless-piece-of-water-in-2-years-1788277252"></link>
            <id>https://ibctamil.com/article/hormuz-worthless-piece-of-water-in-2-years-1788277252</id>
            <summary type="text">மாற்று எண்ணெய் வழித்தடங்கள் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை தவிர்த்துச் செல்வதால், இரண்டு ஆண்டுகளுக்குள் ஹோர்முஸ் நீரிணை அதன் மதிப்பை இழந்துவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாற்று எண்ணெய் வழித்தடங்கள் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை தவிர்த்துச் செல்வதால், இரண்டு ஆண்டுகளுக்குள் ஹோர்முஸ் நீரிணை அதன் மதிப்பை இழந்துவிடும் என்று அமெரிக்க திறைசேரிச் செயலாளர் ஸ்கொட் பெசென்ட் இன்று(01) தெரிவித்துள்ளார்.
</p><p>
"உலகெங்கிலும் நாம் இடர்களைக் குறைக்க வேண்டும். ஈரானியர்கள் ஹோர்முஸ் நீரிணையை ஒரு நெருக்கடிப் புள்ளியாகப் பயன்படுத்த முயற்சிப்பதை நம்மால் காண முடிகிறது," என்று வடக்கு கரோலினாவின் ஆஷ்வில்லில் அளித்த பேட்டி ஒன்றின்போது பெசென்ட் குறிப்பிட்டார்.</p><h2>&nbsp;இரண்டு வருடங்களில் இழக்கப்போகும் மதிப்பு</h2><p>"இது அமெரிக்காவிற்கு ஒரு நெருக்கடிப் புள்ளி அல்ல, ஆனால் இது பல, பல பிற நாடுகளுக்கு ஒரு நெருக்கடிப் புள்ளியாகும்," என்று ஜி20 நாடுகளின் அமைச்சர்களுடனான சந்திப்புகளின்போது அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0f95b7f-fa07-4192-958b-c395ec757c2f/26-6a96f7c2b7ec7.webp' /></p><p>

"இரண்டு ஆண்டுகளில் இந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழி தவிர்க்கப்பட்டுவிடும்" என்று அவர் தெரிவித்தார்.</p><p>

"இரண்டு ஆண்டுகளில், ஹோர்முஸ் நீரிணை ஒரு மதிப்பற்ற நீர்நிலையைப் போல ஆகிவிடும்," என்று அவர் கூறினார்.

"எண்ணெய் தரைவழியாகக் குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படும்," என்றும் அவர் மேலும்தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T18:02:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் பதற்றம் : அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-war-live-trump-vows-to-hit-iran-1788284765"></link>
            <id>https://tamilwin.com/article/iran-war-live-trump-vows-to-hit-iran-1788284765</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க குடிமக்கள் விழிப்புடன் இருக்குமாறு, அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

 விமான ரத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க குடிமக்கள் விழிப்புடன் இருக்குமாறு, அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.</p><p>

 விமான ரத்துகள், வான்வெளி மூடல்கள் மற்றும் பயண இடையூறுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் குறிப்பிட்டுள்ளது.</p><h2>எச்சரிக்கை</h2><p>
</p><p>
குறித்த அறிக்கையில்,
</p><p>மத்திய கிழக்கில் நிலவும் பதட்டங்கள் காரணமாக, பாதுகாப்புச் சூழல் சிக்கலானதாகவே உள்ளதுடன், எதிர்பாராத விதமாக நிலைமை மோசமடைவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன. </p><p>

தற்போது மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்கள் மிகுந்த விழிப்புடன் இருப்பதுடன், சாத்தியமான விமான ரத்துகள், வான்வெளி மூடல்கள் மற்றும் பயண இடையூறுகள் குறித்து அறிந்திருக்க வேண்டும்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Middle East: Due to tensions in the Middle East, the security environment remains complex with the potential for unforeseen escalation. Americans currently in the Middle East should exercise heightened vigilance and be aware of potential flight cancellations, airspace closures,… <a href="https://t.co/hiM5RtXNOh">pic.twitter.com/hiM5RtXNOh</a></p>&mdash; TravelGov (@TravelGov) <a href="https://x.com/TravelGov/status/2094837820120772963?ref_src=twsrc%5Etfw">September 1, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> </p><p>

இப்பகுதிக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் அமெரிக்கர்கள், விமான நிலையம் மற்றும் விமான நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களைக் கண்காணிக்க வேண்டும்.</p><p> 

ஈரான் மற்றும் ஈரானுக்கு ஆதரவான குழுக்கள், வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க நலன்களையோ அல்லது அமெரிக்க வணிகங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் உட்பட, உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கா மற்றும் அமெரிக்கர்களுடன் தொடர்புடைய இடங்களையோ குறிவைக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T18:01:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு மன்னிப்பே கிடையாது ; நீதி அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/no-pardon-for-drug-traffickers-in-sri-lanka-1788283324"></link>
            <id>https://jvpnews.com/article/no-pardon-for-drug-traffickers-in-sri-lanka-1788283324</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
மஹர சிறைச்சாலை வளாகத்தில் இன்று காலை (1) நடைபெற்ற, சிறைச்சாலைகளுக்குள் அவசரகால மோதல் சூழல் ஏற்படும் பட்சத்தில் விரைவாகப் பதிலளிப்பதையும், கைதிகளின் நலனைச் சீரமைப்பதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்ட கூட்டுச் செயல்முறை குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றபோது அமைச்சர் இதனை தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76d91948-410d-4e24-9412-177e8cf113b6/26-6a9709bdc9cab.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருள் கடத்தல்காரர்கள்&nbsp;</h2><p style="text-align: justify; ">

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பில் அரசாங்கம் எந்த வித சமரசத்துக்கும் இடமளிக்காது எனவும், இவர்கள் எவருக்கும் எந்தச் சூழ்நிலையிலும் மன்னிப்பு வழங்கப்படாது எனவும் அவர் உறுதியளித்தார்.</p><p style="text-align: justify; ">கடந்த காலங்களில் பாரிய பிரச்சினையாக இருந்த அரச பகுப்பாய்வாளர் அறிக்கைத் தாமதத்துக்குத் தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

புதிய ஆட்சேர்ப்புகள் மூலம் இரவு 10 மணி வரை அதிகாரிகள் பணியில் ஈடுபட்டு வருவதுடன், கடந்த ஒகஸ்ட் மாதத்தில் மட்டும் 9,081 அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் நிலுவையில் உள்ள அனைத்து அறிக்கைகளையும் வழங்குவதே அரசாங்கத்தின் இலக்காகும்.</p><p style="text-align: justify; ">

இதேவேளை, அவசர சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையிலும், கைதிகளின் நலன்புரிச் சேவைகளை மேம்படுத்தும் நோக்கிலும் முப்படை, காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பங்களிப்புடன் தற்போது 15 சிறைச்சாலைகளில் பலமான கூட்டுப் பொறிமுறை செயற்படுத்தப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
சிறையில் உள்ள அனைவரும் குற்றவாளிகள் அல்ல எனவும், ஒரு கண நேரத் தவறால் அங்குள்ள கைதிகளுக்குச் சமூகத்தில் இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர், விடுதலையாகிச் செல்வோரைச் சிறந்த குடிமக்களாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றார்.</p><p style="text-align: justify; ">

இதனிடையே, கடந்த நாட்களில் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் நிலைமையால் தீயிட்டு அழிக்கப்பட்ட பிரதான சிறைக்காவலர் அலுவலகம், புனர்வாழ்வு பிரிவு மற்றும் ஏனைய பகுதிகளை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டதுடன், விளக்கமறியல் கைதிகளின் குறைகளையும் கேட்டறிந்தார்.</p>]]></content>
            <updated>2026-09-01T17:45:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாங்கொடையில் காணாமல் போன மாணவிகள் திருகோணமலையில் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-missing-schoolgirls-found-in-trincomalee-1788283223"></link>
            <id>https://ibctamil.com/article/three-missing-schoolgirls-found-in-trincomalee-1788283223</id>
            <summary type="text">







பலாங்கொட, பின்னவல-எல்லராவ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மூன்று பாடசாலை மாணவிகள் காணாமல் போயிருந்த நிலையில், அவர்கள் திருகோணமலையில் கண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>







பலாங்கொட, பின்னவல-எல்லராவ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மூன்று பாடசாலை மாணவிகள் காணாமல் போயிருந்த நிலையில், அவர்கள் திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
பலாங்கொடையில் உள்ள பாடசாலை ஒன்றில் பயிலும் இம்மூன்று மாணவிகளும், மேலதிக வகுப்பிற்குச் செல்வதற்காக வீட்டை விட்டுச் சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.</p><p>
</p><p>
இதனால் பதற்றமடைந்த பெற்றோர் பலாங்கொட காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.</p><p></p><h2>திருகோணமலையில் அடையாளம்&nbsp;</h2><p>
 
அதன்போது, காணாமல் போன மாணவிகள் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு பலாங்கொடை காவல்துறையினரும் மாணவிகளின் பெற்றோரும் பொதுமக்களிடமும் கோரிக்கை விடுத்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efd9b4bc-1ca1-483f-b9ff-0554889b39ca/26-6a970d8a70891.webp' /></p><p>
</p><p>
இவ்வாறானதொரு பின்னணியில், குறித்த மாணவிகள் மூவரும் திருகோணமலையில் நின்ற போது அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து, அவர்களை நபர் ஒருவர் காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T17:38:22+00:00</updated>
        </entry>
    </feed>
