<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-28T10:24:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[வறண்ட வானிலை - தொடர்ந்து குறையும் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/water-levels-in-reservoirs-continue-to-drop-1787910041"></link>
            <id>https://tamilwin.com/article/water-levels-in-reservoirs-continue-to-drop-1787910041</id>
            <summary type="text">தற்போது நிலவும் வறண்ட வானிலை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

அதன்படி, சேனநாயக்க சமுத்திரத்தின் நீர் கொள்ளளவு 18 சதவீதமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது நிலவும் வறண்ட வானிலை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
</p><p>
அதன்படி, சேனநாயக்க சமுத்திரத்தின் நீர் கொள்ளளவு 18 சதவீதமாகக் குறைந்துள்ளது.</p><p> அதேநேரத்தில் ஹுருலு வேவாவின் நீர்மட்டம் 24 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.</p><h2>குறைந்துள்ள நீர் கொள்ளளவு</h2><p>
</p><p>
மேலும், அதிமலை வேவாவின் நீர் கொள்ளளவு 5 சதவீதமும், மோரா வேவாவின் நீர் கொள்ளளவு 9 சதவீதமும், வெஹரகல நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 15 சதவீதமும், கௌடுல்ல வேவாவின் நீர் கொள்ளளவு 20 சதவீதமும், பதாவியா வேவாவின் நீர் கொள்ளளவு 22 சதவீதமும், தப்போவ வேவாவின் நீர் கொள்ளளவு 28 சதவீதமும் குறைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffd01269-6fd7-4b5a-b532-2096b9f1b50b/26-6a9160b615137.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், இலங்கையின் பல மாவட்டங்களில் மனித உடல் உணரும் வெப்பம் இன்று கவனம் தேவைப்படும் அளவில் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>
இதன்படி, கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வெப்பநிலை 39 முதல் 45 செல்சியஸ் பாகையாக பதிவாகும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T10:22:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க புதிய அதிகாரசபை: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hill-country-authority-bill-to-pass-soon-akd-1787910567"></link>
            <id>https://ibctamil.com/article/hill-country-authority-bill-to-pass-soon-akd-1787910567</id>
            <summary type="text">மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை சட்டமூலம் நடப்பாண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை சட்டமூலம் நடப்பாண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
பண்டாரவளை நவோதயா புரம் வீட்டுத் திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>சில தியாகங்கள்</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) நிதியுதவியுடன் இந்த புதிய அதிகாரசபையை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a0a4ce3-a63f-4be7-a2c9-c90e4fa55ac6/26-6a915f7c387bc.webp' /></p><p>இலங்கையின் இதயம் போன்ற மத்திய மலைநாட்டின் அழிவுகளைத் தடுக்கவும் சூழலைப் பாதுகாக்கவும் இந்த அதிகாரசபைக்கு முழு அதிகாரங்களும் வழங்கப்படும்.
</p><p>
இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் இந்த வேலைத்திட்டத்திற்காக சில தியாகங்களைச் செய்ய வேண்டி வந்தாலும் அது நாட்டின் எதிர்காலத்திற்கு அத்தியாவசியமானது.</p><p></p><h2>குத்தகை ஒப்பந்தங்கள்</h2><p>
தோட்ட நிறுவனங்களின் குத்தகை ஒப்பந்தங்கள் 2042 இல் முடிவடையும் போது மலையக மக்களின் காணி மற்றும் வாழ்வுரிமைகளைப் பாதுகாக்கும் புதிய சரத்துகள் சேர்க்கப்படும்.
</p><p>
யுத்த காலத்தில் இந்தியாவிற்கு சென்ற இலங்கை மக்கள் மீண்டும் தாயகம் திரும்புவதற்காக இருந்த தடைகளை அமைச்சரவை நீக்கியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/828f38cf-5745-4e0f-9c59-25e6a0cb6529/26-6a915f7ce53cb.webp' /></p><p>வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் மலையக மக்களின் வீடமைப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.</p><p>
மலையக மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த ஏற்கனவே முதற்கட்ட சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதுடன் மலையகச் சமூகம் தலைமுறை தலைமுறையாக எதிர்கொள்ளும் வறுமை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கி, கல்வியின் மூலம் அவர்களை முன்னேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-28T10:18:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை விஜயலட்சுமி எடுத்த முடிவால் சீமான் மகிழ்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/seeman-happy-by-actress-vijayalakshmi-twist-video-1787900306"></link>
            <id>https://jvpnews.com/article/seeman-happy-by-actress-vijayalakshmi-twist-video-1787900306</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள புதிய காணொளியில், சிலர் தன்னையும் சீமானையும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள புதிய காணொளியில், சிலர் தன்னையும் சீமானையும் தொடர்ந்து அவதூறாகப் பேசி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>

தவறை உணர்ந்து ஒருவர் மன்னிப்பு கேட்கும்போது, அவரைத் தொடர்ந்து விமர்சிக்காமல் வாழவிடுவதுதான் மனிதநேயம் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cc6ce03-12c3-4161-a971-3f28027d397c/26-6a91319400afe.webp' /></p><h2>&nbsp;சீமானுக்கு ஆதரவாக உறுதியாக நிற்பேன்</h2><p>
</p><p>
மேலும், தன்னைப் பற்றியும் சீமான் குறித்தும் தொடர்ந்து அவதூறாகப் பேசினால், இனி சீமானுக்கு ஆதரவாக உறுதியாக நிற்பேன் என்றும் விஜயலட்சுமி கூறியுள்ளார்.</p><p></p><p>
</p><p>
நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாகப் பேசுவதற்காக தனக்கு பணம் வழங்கப்பட்டதாக கூறப்படும் விமர்சனங்களை மறுத்துள்ள அவர்,பணத்தைக் கொடுத்து தன்னை யாராலும் வாங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இதுவரை சீமானுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டு வந்த விஜயலட்சுமி, தற்போது அவருக்கு ஆதரவாக பேசியிருப்பது அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>
முன்னதாக, சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்திருந்த முறைப்பாடு தொடர்பான வழக்கில், இருதரப்புக்கும் இடையே உச்சநீதிமன்றத்தில் சமரசம் எட்டப்பட்டது.</p><p></p><p>

 அதேசமயம் இந்த காணொளி மூலம் தமிழக வெற்றிக் கழகத்தினரை அவர் மறைமுகமாக விமர்சித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் வெளியாகி வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-28T10:17:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸை புவியியல் அணு குண்டாக பயன்படுத்தும் ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-using-hormuz-as-a-geological-nuclear-bomb-1787912102"></link>
            <id>https://ibctamil.com/article/iran-using-hormuz-as-a-geological-nuclear-bomb-1787912102</id>
            <summary type="text">அமெரிக்காவுடனான முந்தைய பதட்டங்களின்போது ஹோர்முஸ் நீரிணையை ஒரு பேரம் பேசும் கருவியாக ஈரான் பயன்படுத்தியுள்ளதாக மத்தியகிழக்கு ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடனான முந்தைய பதட்டங்களின்போது ஹோர்முஸ் நீரிணையை ஒரு பேரம் பேசும் கருவியாக ஈரான் பயன்படுத்தியுள்ளதாக மத்தியகிழக்கு ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>

இது இரு தரப்பையும் கடந்து ஒரு உலகளாவிய பிரச்சனையாக மாறியுள்ளது என்றும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
</p><p>
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போர் தொடங்கியபோது அணுசக்தி விவகாரம், ஏவுகணைத் திட்டம், பிராந்தியத்தில் உள்ள ஈரானின் சக்திகள் அல்லது கூட்டாளிகள் எனப் பல விடயங்கள் பேசப்பட்டன.
</p><p></p><h2>மோதல் அடுத்த கட்டத்திற்கு</h2><p>
ஆனால் இப்போது அனைவரும் சுற்றிச் சுற்றி வரும் முக்கிய விடயம் நீரிணையை திறப்பதுதான் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6ad38ab-86ad-42f9-b3f4-42c003ecc557/26-6a915fa8d3396.webp' /></p><p>
</p><p>
போருக்கு முன்பு நிலைமை எப்படி இருந்ததோ, போருக்குப் பிறகு அப்படி இருக்காது என்று கூறிய அவர்கள் இந்த மோதல் அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளது என்றும் எச்சரித்துள்ளனர்.</p><p> 

ஹோர்முஸ் நீரிணையின் மூலம், ஈரான் ஒரு சாதகமான நிலையைக் கண்டறிந்துள்ளது என்பது தெளிவாகிறது.
</p><p>
 மேலும், சில ஆய்வாளர்கள் இதை ஈரானின் புவியியல் அணு குண்டு என்று கூட வர்ணிக்கின்றனர். 

ஏனெனில், அதைச் செயல்படுத்திப் பயன்படுத்துவதன் மூலம், அதைக் கருத்தில் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்பதே காரணமாகவும் எனவும் கூறியுள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T10:15:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே நாளில் 7,492 விமானங்கள்: பிரித்தானியர்களுக்கு கடும் நெரிசல், குழப்பம் ஏற்பட வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/29592-flights-scheduled-across-spain-airports-1787912044"></link>
            <id>https://news.lankasri.com/article/29592-flights-scheduled-across-spain-airports-1787912044</id>
            <summary type="text">29592 Flights Scheduled Across Spain Airports: ஸ்பெயினில் சாதனை அளவிலான விமானங்கள் இயக்கப்பட உள்ளதால், கடும் பயண நெரிசல் மற்றும் குழப்பம் ஏற்பட வாய்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>29592 Flights Scheduled Across Spain Airports: ஸ்பெயினில் சாதனை அளவிலான விமானங்கள் இயக்கப்பட உள்ளதால், கடும் பயண நெரிசல் மற்றும் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.
</p><p>
ஸ்பெயின் நாட்டில் விமான நிலையங்களில் சாதனை அளவிலான விமானங்கள் இயக்கப்பட உள்ளதால், பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் வழக்கத்தை விட அதிக நெரிசலான பயண சூழலை எதிர்கொள்ள நேரிடலாம்.&nbsp;</p><h2>விமானப் பயணங்களின் எண்ணிக்கை&nbsp;</h2><p>
ஸ்பெயின் நாட்டில் 29-ஆம் திகதி முதல் 31-ஆம் திகதி வரை, விமானப் பயணங்களின் எண்ணிக்கை சாதனை அளவை எட்டவுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b458168-66f7-4f31-aaef-25c7dff7a203/26-6a916052a5412.webp' />&nbsp;</p><p></p><p>
கோடை விடுமுறையின் கடைசி வார இறுதி என்பதாலும், அதே வேளையில் பிரித்தானியாவில் பொது விடுமுறை என்பதாலும், பலர் தங்கள் விடுமுறையின் ஒரு பகுதியாக வெளிநாட்டிற்கு செல்லவோ அல்லது அங்கிருந்து திரும்பவோ இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார்கள். </p><p>

ஸ்பெயின் விமான நிலையங்களை நிர்வகிக்கும் நிறுவனமான AENA-வின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையங்களில், இக்காலகட்டத்தில் மொத்தம் 29,592 விமானங்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக Majorca Daily Bulletin செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;</p><h2>7,492 விமானங்கள்</h2><p>
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்த 28,826 விமானங்களுடன் ஒப்பிடுகையில் 2.6 சதவீத அதிகரிப்பாகும். </p><p>

மேலும், ஞாயிற்றுக்கிழமை மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; அன்று மட்டும் 7,492 விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

இதனால் ஸ்பெயின் நாட்டு விமான நிலையங்கள் கடும் பயண நெரிசலை சந்திக்க தயாராகி வருகின்றன.</p><p> 

அந்த விமான நிலையங்களுக்கு செல்லும் மற்றும் திரும்பும் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள், வழக்கத்தை விட அதிக நெரிசலான பயண சூழலை எதிர்கொள்ள நேரிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2faf546-c100-47a5-945a-69c6fd6b8b99/26-6a9160536232b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T10:15:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜாலியாக வெளிநாட்டிற்கு டூர் சென்றுள்ள சீரியல் நடிகை ஹரிப்பிரியா... கலக்கல் போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/serial-actress-haripriya-vacation-photos-1787911821"></link>
            <id>https://cineulagam.com/article/serial-actress-haripriya-vacation-photos-1787911821</id>
            <summary type="text">நடிகை ஹரிப்பிரியாசன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது. இந்த தொடரில் எல்லா கதாபாத்திரத்திற்கும் ஒர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகை ஹரிப்பிரியா</h2><p>சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது. </p><p>இந்த தொடரில் எல்லா கதாபாத்திரத்திற்கும் ஒரு ரசிகர்கள் கூட்டம் இருந்தாலும் நந்தினி வேடத்தில் நடிக்கும் ஹரிப்பிரியாவிற்கு தனி ரசிகர்கள் உள்ளார்கள் என கூறலாம். </p><p>சீரியஸான காட்சிகளை விட நந்தினி செய்யும் காமெடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. </p><p>அண்மையில் நடிகை ஹரிப்பிரியா மலேசியாவிற்கு டூர் சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களை அவர் வெளியிட லைக்ஸ் குவிந்து வருகிறது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T10:11:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளப் பேரிடர்... 5 மாதங்களுக்கு முன்னரே விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-disaster-5-months-before-1787911956"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-disaster-5-months-before-1787911956</id>
            <summary type="text">Two Reports Indicated What Lay Ahead: நேபாள மக்களுக்கு என்ன காத்திருக்கிறது என்பதை இரண்டு அறிக்கைகள் சுட்டிக்காட்டின.
இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Two Reports Indicated What Lay Ahead: நேபாள மக்களுக்கு என்ன காத்திருக்கிறது என்பதை இரண்டு அறிக்கைகள் சுட்டிக்காட்டின.
</p><p>இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து பனி இழப்பு விகிதம் இரட்டிப்பாகியுள்ளதால், இந்து குஷ் இமயமலை முழுவதும் உள்ள பனியாறுகள் மிக வேகமாக உருகி வருவதாக ஐந்து மாதங்களுக்கு முன்பு இரண்டு அறிக்கைகள் எச்சரித்துள்ளது.</p><h2>இரண்டு பில்லியன்</h2><p>
</p><p>குறித்த ஆய்வறிக்கையை இந்து குஷ் இமயமலை (HKH) பகுதி மக்களின் நலனுக்காகச் செயல்படும், அரசுகளுக்கு இடையிலான ஓர் அறிவு மற்றும் கற்றல் மையம் முன்னெடுத்துள்ளது. </p><p>
காத்மாண்டுவை மையமாகக் கொண்டு செயல்படும் 'ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டிற்கான சர்வதேச மையம்' (ICIMOD) தனது இரண்டு அறிக்கைகளில், 1975-ஆம் ஆண்டு முதல் பனிப்பாறைகளின் தடிமன் 27 மீற்றர் வரை குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d60f06fb-243e-4dad-9a33-1876ddc2f470/26-6a915f16b7b9f.webp' /></p><p> </p><p>இந்த மையத்தின் பிராந்திய உறுப்பினர்களாக இந்தியா, நேபாளம், பூட்டான் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் உள்ளன.
இந்து குஷ்-இமயமலைப் பகுதி மற்றும் திபெத்திய பீடபூமியில் இருந்து உருகும் நீரைச் சார்ந்து வாழும், கீழ்நிலையில் உள்ள சுமார் இரண்டு பில்லியன் மக்களுக்கு எதிர்காலத்தில் ஒரு கவலைக்குரிய சூழல் நிலவக்கூடும் என அந்த அறிக்கைகள் சுட்டிக்காட்டின. </p><p>இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு 489 பேரின் உயிரைப் பறித்த நேபாளத்தின் திடீர் வெள்ளப்பெருக்கிற்கான துல்லியமான காரணம் குறித்து விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>இருப்பினும், அவர்களில் பலர் பல்வேறு காரணிகளின் கலவையையே கருத்தில் கொள்கின்றனர்; அவற்றில் மிகவும் கவலைக்குரிய ஒரு விடயம் என்னவென்றால், 4,000 மீற்றர் மற்றும் அதற்கு மேற்பட்ட உயரத்தில் பனிப்பொழிவுக்குப் பதிலாக மழை பெய்திருக்கிறது. </p><p></p><p>இந்த நிலையில், ஒரு காலத்தில் பனிப்பொழிவு இருந்த உயரங்களில் தற்போது மழை பெய்வதற்கும், பனியாறுகள் மிக வேகமாகப் பின்வாங்குவதற்கும் வெப்பமயமாதலே காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>இதனிடையே, தனித்தனியாக, இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட இரண்டு ICIMOD அறிக்கைகளில், 1990 மற்றும் 2020-க்கு இடைப்பட்ட காலத்தில், இந்து குஷ்-இமயமலைப் பகுதியில் பனிப்பாறைகள் தங்கள் மொத்தப் பரப்பளவில் சுமார் 12 சதவீதத்தையும், மதிப்பிடப்பட்ட பனிக்கட்டி இருப்பில் 9 சதவீதத்தையும் இழந்தன என்று குறிப்பிட்டிருந்தன. </p><p>ICIMOD-இன் இரண்டு அறிக்கைகளில் ஒன்றான 'HKH Glacier Outlook 2026' (கண்காணிக்கப்பட்ட 38 பனிப்பாறைகளின் தரவுகளை இது ஆய்வு செய்தது), 2000-ஆம் ஆண்டிலிருந்து பனிப்பாறை இழப்பு இருமடங்காக அதிகரித்துள்ளதைக் கண்டறிந்துள்ளது; </p><p>இது, இமயமலையின் பனி மண்டலத்தின் (cryosphere) சில பகுதிகள், மீளமுடியாத வகையில் பின்வாங்கும் நிலையை நோக்கிய முக்கியமான திருப்புமுனைகளை நெருங்கிக்கொண்டிருக்கலாம் என்பதற்கான வலுவான அறிகுறியாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98c339b1-dcec-408e-9b44-f0b0a8c61812/26-6a915f176d6c9.webp' /></p><p> </p><p>அதிக உயரத்தில் உள்ள ஒரு இடத்திலிருந்து உருவான பனி மற்றும் பாறைச் சரிவு இந்தப் பெருவெள்ளத்தைத் தூண்டியிருக்கக்கூடுமா என்பது குறித்து ICIMOD ஆராய்ச்சியாளர்கள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். </p><p>போட்டே கோஷி ஆற்றின் துணை ஆறான லெண்டே கோலாவிற்குள் பெருமளவிலான பனிக்கட்டியும் பாறைச் சிதைவுகளும் நுழைந்திருக்கலாம்; இது நீர், வண்டல் மற்றும் பெரிய பாறைகளை அடித்துக்கொண்டு கீழ்நோக்கிச் செல்லும் வகையிலான திடீர் நீரோட்டப் பெருக்கை ஏற்படுத்தியிருக்கலாம். </p><p>சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், பனியாறுகள் பின்வாங்குவதாலும் நிரந்தர உறைபனி சிதைவடைவதாலும் பனிப்பொழிவு குறைந்து வருவதையே இது அதிகமாகச் சுட்டிக்காட்டுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T10:09:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகாலட்சுமி ராஜயோகம் தரும் அதிர்ஷ்டம்: செப்டம்பரில் பணமழை இந்த ராசிகளுக்கு தான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mahalakshmi-rajyog-in-september-who-get-wealth-1787908446"></link>
            <id>https://manithan.com/article/mahalakshmi-rajyog-in-september-who-get-wealth-1787908446</id>
            <summary type="text">ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் ராசி மாற்றங்கள் மற்றும் கிரக சேர்க்கைகளால் உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தொன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் ராசி மாற்றங்கள் மற்றும் கிரக சேர்க்கைகளால் உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தொன்று தொட்டு நம்ப்பட்டு வருகின்றது.&nbsp;</p><p> ஒவ்வொரு மாதமும் கிரக நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதால், மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் தாக்கம் காணப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/823620bd-46b5-46a4-8693-bcf1eba721b2/26-6a9159a8af291.webp' /></p><p>
</p><p>
அந்த வகையில், 2026ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது. ஏனெனில் இம்மாதத்தில் பல யோகங்கள் உருவாகின்றன. </p><p>குறிப்பாக, செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் மிகவும் மங்களகரமான மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது.
</p><p>
தற்போது கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் மிதுன ராசியில் பயணித்து வருகிறார்.இந்நிலையில், செப்டம்பர் 05ஆம் தேதி மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் மிதுன ராசிக்குள் நுழைந்து செவ்வாயுடன் சேர்ந்து மகாலட்சுமி ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார்.இந்த ராஜயோகம் செப்டம்பர் 07ஆம் தேதி வரை நீடிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/baf0b951-d82a-4c67-bd1f-a156b3cedb38/26-6a9159a9667ff.webp' /></p><p>

இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் நிதி நிலையில் உயர்வு, தொழிலில் முன்னேற்றம் மற்றும் எதிர்பாராத நல்ல மாற்றங்களை ஏற்படுத்தப்போகின்றது. அப்படி அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50e95e37-62f1-4d07-8c6e-2f1099c2bd93/26-6a9159aa267cf.webp' /></p><p></p><p>
மேஷ ராசியின் 3-வது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.&nbsp;</p><p>தொழிலில் முன்னேற்றமும், வணிகத்தில் நல்ல லாபம் தரும் புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும். வருமானம் மற்றும் நிதி நிலை உயரும்.முக்கியமாக, அதிக பணத்தை சேமிக்க முடியும்.</p><h2>
கும்பம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2a5afc9-0d11-4f76-8261-dc8e4c8099c8/26-6a9159aae1d6e.webp' /></p><p>
கும்ப ராசியின் 5-வது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இதனால் பணப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். </p><p>வருமானத்தை அதிகரிக்க புதிய வழிகள் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், தம்பதிகளிடையே பிணைப்பும் அதிகரிக்கும்.
</p><h2>
துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4f82cea-9516-4fa8-a9eb-6d0e77bdf275/26-6a9159ab95dc0.webp' /></p><p>
துலாம் ராசியின் 9-வது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பண விஷயங்களில் எதிர்பாராத நல்ல பலன்கள் கிடைக்கும்.</p><p>ஏற்கனவே செய்த முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும். பரம்பரை சொத்து மற்றும் குடும்பப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வேலை மாற்ற நினைப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.</p><h2>

கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2e0b831-0756-408f-9437-71949a9ae517/26-6a9159ac4bfa9.webp' /></p><h2>
</h2><p>கன்னி ராசியின் 10-வது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும்.</p><p> புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் கனவு நனவாகலாம். தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதுடன், மனக் குழப்பங்களும் நீங்கி தெளிவு பிறக்கும்.</p><h2>
மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/280d9274-509b-40af-a1d7-1e4fc3ef5f9d/26-6a9159acf1ffe.webp' /></p><p></p><h2>
</h2><p>மிதுன ராசியின் முதல் வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். </p><p>பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட காலப் பிரச்சனைகள் தீரும். பண வரவு அதிகரித்து, பல வழிகளில் இருந்து பணம் சேரும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T10:04:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 கிழமையில் புதிதாகப் பிறந்த 60 குழந்தைகள் மரணம்! சம்பவத்தால் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/deaths-of-60-newborns-at-the-hospital-west-bengal-1787911595"></link>
            <id>https://jvpnews.com/article/deaths-of-60-newborns-at-the-hospital-west-bengal-1787911595</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியாவின் மேற்கு வங்க அரச வைத்தியக் கல்லூரி வைத்தியசாலையில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் கவலைக்குரிய நிலையை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியாவின் மேற்கு வங்க அரச வைத்தியக் கல்லூரி வைத்தியசாலையில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் கவலைக்குரிய நிலையை உருவாக்கியுள்ளது.</p><p> 

மேற்கு வங்க மாநிலம் மால்டா அரச வைத்தியக் கல்லூரி வைத்தியசாலையில் ஒரே வாரத்தில் புதிதாகப் பிறந்த 60 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50de2861-1c12-49ce-b96b-413b271ca677/26-6a915dad24aaa.webp' /></p><p> 

இதில் ஒரே நாளில் 10 குழந்தைகள் இறந்துள்ளதாக கூறப்படுகின்றது. 

மஞ்சள் காமாலை, சுவாசக் கோளாறு மற்றும் இதய நோய்கள் காரணமாகவே உயிரிழப்புகள் நேரிட்டதாக வைத்தியசாலை தரப்பில் கூறப்பட்டதாக&nbsp; இந்திய&nbsp; ஊடகங்க்கள்&nbsp; தெரிவித்துள்ளன.</p><p></p><p>இன்னிலையில் ,&nbsp; இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு&nbsp; மேற்கு வங்க மாநில சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-28T10:03:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்நீச்சல் குடும்பமே அழியபோகுது..உங்களுக்கு டூர்-ஆ!! நந்தினியை வம்பிழுத்த நெட்டிசன்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/ethirneechal-actress-haripriya-vacation-photos-1787912035"></link>
            <id>https://viduppu.com/article/ethirneechal-actress-haripriya-vacation-photos-1787912035</id>
            <summary type="text">எதிர்நீச்சல் தொடர்கிறதுசன் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல் தொடர்கிறது. இந்த சீர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>எதிர்நீச்சல் தொடர்கிறது</h2><p>சன் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல் தொடர்கிறது. இந்த சீரியலில் முக்கிய ரோலான நந்தினியாக நடித்து வருபவர் தான் நடிகை ஹரிப்பிரியா. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61a2604f-5436-4dd3-b0d5-ba1f2305c5f5/26-6a915f6b3e387.webp' /></p><p>தற்போது ஜாலியாக டூர் சென்றதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். தற்போது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் குடும்பத்திற்குள் குணசேகரன் இதுவரை வில்லனாக இருந்து வந்த நிலையில் தற்போது ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழிப்பதற்காக ராவணன் களமிறங்கியிருக்கிறார்.</p><p> ராவணன், குடும்பத்தை அழிக்க நினைப்பது ஜனனி, சக்தி இருவருக்கும் தெரியவர, அந்த குடும்பத்தையே அழித்துவிடுவேன் என்று ராவணன் சவால் விட்டுள்ளதால், அவரிடமிருந்து குடும்பத்தை இருவரும் எப்படி காப்பாற்றப் போகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8563a491-2a88-4225-8fca-a9e48281bdcf/26-6a915f6be7173.webp' /></p><p> இனி குடும்பத்திற்குள் என்ன நடக்கப்போகிறது? என்ற ஆவல் எழுந்துள்ளது. இந்நிலையில், நந்தினியாக நடித்து வரும் ஹரிப்பிரியா, சீரியலை மறந்து ஜாலியான டூர் சென்றுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், இங்க உங்க குடும்பத்தில் என்ன நடக்குது உங்களுக்கு வெளிநாட்டு டூர் கேக்குதா என்று வம்பிழுத்தபடி கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.</p>]]></content>
            <updated>2026-08-28T10:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பாவின் வயதான அரசர் காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/king-harald-v-of-norway-europe-s-oldest-monarch-1787908832"></link>
            <id>https://tamilwin.com/article/king-harald-v-of-norway-europe-s-oldest-monarch-1787908832</id>
            <summary type="text">நோர்வேயின் மன்னர் ஐந்தாம் ஹெரால்ட் தனது 89 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

ஒஸ்லோவிலுள்ள தேசிய வைத்தியசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வேயின் மன்னர் ஐந்தாம் ஹெரால்ட் தனது 89 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
 

ஒஸ்லோவிலுள்ள தேசிய வைத்தியசாலையில் இன்று(28.08.2026) காலை 6:35 மணியளவில் அவர் காலமானதாக நோர்வே அரச மாளிகை அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><h2>மன்னரின் மறைவு காரணமாக&nbsp;</h2><p>
 

ஐரோப்பாவின் மிகவும் வயதான நாட்டின் தலைவராக இருந்த ஐந்தாம் ஹெரால்ட், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நோர்வே நாட்டின் அரசராகப் பணியாற்றியுள்ளார்.

 

இ</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e83960bf-d68d-40b4-9459-a29ae6709fc4/26-6a9158b8d66eb.webp' /></p><p>1945 இல் மீண்டும் நோர்வே திரும்பிய ஹெரால்ட், நோர்வே அரச பாடசாலைகள், இராணுவக் கல்லூரி மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார்.
</p><p>
 

1991 ஜனவரி 21 ஆம் திகதி தனது தந்தையான ஐந்தாம் ஓலாஃப் மன்னரின் மறைவுக்குப் பிறகு அரியணை ஏறிய ஹெரால்ட், நோர்வே முடியாட்சியை நவீனமயமாக்க நடவடிக்கை எடுத்தார்.
</p><p>
 

2011 ஆம் ஆண்டு நோர்வேயில் 77 பேரைக் கொன்ற தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு அவர் நிகழ்த்திய உணர்வுபூர்வமான உரை மற்றும் 2016 ஆம் ஆண்டு LGBTQ+ உரிமைகள், அகதிகள் மற்றும் மத நல்லிணக்கத்திற்காக அவர் ஆற்றிய உரை சர்வதேச கவனத்தைப் பெற்றது.
</p><p>
 

மன்னரின் மறைவு காரணமாக முழு நாடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளதாக நோர்வே பிரதமர் தெரிவித்துள்ளார்.
</p><p>
 

ஐந்தாம் ஹெரால்ட் மன்னரின் மறைவைத் தொடர்ந்து, அவரது மகனான இளவரசர் ஹாகன் (Haakon), நோர்வேயின் புதிய அரசராக அரியணை ஏறவுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T09:55:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெயில் கொளுத்தும் நிலையில் வயல்களுக்கு தீ வைப்பு: சட்ட நடவடிக்கை எடுக்க கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/arson-in-the-kandalai-area-1787906178"></link>
            <id>https://tamilwin.com/article/arson-in-the-kandalai-area-1787906178</id>
            <summary type="text">கந்தளாய் பகுதியில் அறுவடைக்குப் பின்னர் வயல்களில் எஞ்சியுள்ள பயிர்க் கழிவுகளுக்கு தீ வைக்கும் நடைமுறை தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாய் பகுதியில் அறுவடைக்குப் பின்னர் வயல்களில் எஞ்சியுள்ள பயிர்க் கழிவுகளுக்கு தீ வைக்கும் நடைமுறை தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>


தற்போது அதிகளவான வெப்பநிலை நிலவி வரும் நிலையில், வயல்களில் தீ வைப்பதால் தீ கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு பரவும் அபாயம் காணப்படுகிறது.</p><h2>விவசாய நிலங்களுக்கும் தீ பரவும் வாய்ப்பு</h2><p>


அத்துடன், வயல் பகுதிகளில் தீ வைப்பதால் கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதுடன், அதிகளவு புகை வெளியேறுவதன் காரணமாக சுற்றுச்சூழலும் பாதிக்கப்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e170c79f-ab0e-44d3-97f3-21de0dd1741a/26-6a91594ec1a5b.webp' /></p><p> </p><p> 

அறுவடைக்குப் பின்னர் பயிர்க் கழிவுகளை முறையாக அகற்றுவது தொடர்பில் விவசாயிகளுக்கு உரிய விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டும் என்றும், அதிக வெப்பநிலை நிலவும் காலங்களில் வயல்களுக்கு தீ வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். </p><p> 

மேலும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வயல்களுக்கு தீ வைப்பவர்களுக்கு எதிராக பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-08-28T09:48:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[அறுவடைக்குப் பின் வயல்களுக்கு தீ வைப்பு - கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/post-harvest-field-fires-threaten-livestock-1787907692"></link>
            <id>https://tamilwin.com/article/post-harvest-field-fires-threaten-livestock-1787907692</id>
            <summary type="text">தற்போது அதிகளவான வெப்பநிலை நிலவி வரும் நிலையில், வயல்களில் தீ வைப்பதால் தீ கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது அதிகளவான வெப்பநிலை நிலவி வரும் நிலையில், வயல்களில் தீ வைப்பதால் தீ கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு பரவும் அபாயம் காணப்படுவதாக கந்தளாய் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>அத்துடன், வயல் பகுதிகளில் தீ வைப்பதால் கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதுடன், அதிகளவு புகை வெளியேறுவதன் காரணமாக சுற்றுச்சூழலும் பாதிக்கப்படக்கூடிய நிலை காணப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.</p><h2>தீ வைப்பதை தவிர்த்தல்</h2><p>அவர்கள் மேலும் தெரிவிக்கையில், அறுவடைக்குப் பின்னர் பயிர்க் கழிவுகளை முறையாக அகற்றுவது தொடர்பில்
விவசாயிகளுக்கு உரிய விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75c4b931-c93c-4f89-9d20-724927ef60fe/26-6a9152f8f0a02.webp' /></p><p>அதிக வெப்பநிலை
நிலவும் காலங்களில் வயல்களுக்கு தீ வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.</p><p>
மேலும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில்
வயல்களுக்கு தீ வைப்பவர்களுக்கு எதிராக பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T09:44:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியா - அமெரிக்கா உறவில் நெருக்கம்: ஜவாலின் ஏவுகணைகளை வாங்கும் இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-procure-javelin-anti-tank-system-from-us-1787910093"></link>
            <id>https://news.lankasri.com/article/india-procure-javelin-anti-tank-system-from-us-1787910093</id>
            <summary type="text">பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவிடம் இருந்து ஜாவலின் ஏவுகணைகளை இந்தியா வாங்க திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவிடம் ஆயுதங்கள் வாங்கும் இந்தியாஇந...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவிடம் இருந்து ஜாவலின் ஏவுகணைகளை இந்தியா வாங்க திட்டமிட்டுள்ளது.</p><h2> அமெரிக்காவிடம் ஆயுதங்கள் வாங்கும் இந்தியா</h2><p>இந்தியா - அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் புதிய முன்னேற்றமாக பல்வேறு போர்களில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட ஜாவலின் ஏவுகணைகளை வாங்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.</p><p> இந்த ஜவாலின் ஏவுகணையானது மனிதர்களால் எளிதில் தூக்கிச் செல்லக்கூடிய நடுத்தர தூர பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை ஆகும்.</p><p>இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் செர்கோ கோர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c14b8c3c-0f21-4970-94c1-42bb9f00b4d2/26-6a9157ce65638.webp' /></p><p></p><p> இந்தியா - அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதமே FGM-148 Javelin ஆயுத விற்பனைக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை ஒப்புதல் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><h2> அமெரிக்க தூதர் செர்கோ கோர் தகவல்</h2><p>
ஒப்பந்தம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்த அமெரிக்க தூதர் செர்கோ கோர், பெரிய செய்தி! பல்வேறு போர்களில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட ஜாவலின் ஏவுகணைகளை இந்தியா வாங்க திட்டமிட்டுள்ளது.</p><p>இது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் மிகப்பெரிய முன்னேற்றமாகும். அத்துடன் இந்த ஒப்பந்தமானது எதிர்காலத்தில் கூட்டு தயாரிப்புக்கான கதவுகளையும் திறப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">BIG news! India plans to buy the battle-tested Javelin anti-tank system. Just as <a href="https://x.com/SecWar?ref_src=twsrc%5Etfw">@secwar</a> highlighted at the May 2026 Shangri-La Dialogue, this is a great step forward in the U.S.-India defense relationship and opens the door to co-production possibilities. The engagement between…</p>&mdash; Ambassador Sergio Gor (@USAmbIndia) <a href="https://x.com/USAmbIndia/status/2093238732472369659?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> ஆனால் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த புரிந்துணர்வின் கீழ் எத்தனை ஜாவலின் ஏவுகணைகளை இந்தியா வாங்க திட்டமிட்டுள்ளது அல்லது இதற்காக எவ்வளவு செலவு செய்ய திட்டமிட்டுள்ளது என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T09:41:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டமன்ற மரபை மீறி அமைச்சர்களுடன் அமர்ந்த முதலமைச்சர் விஜய்; பலரும் ஆச்சரியம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cm-vijay-seated-with-ministers-assembly-1787909888"></link>
            <id>https://jvpnews.com/article/cm-vijay-seated-with-ministers-assembly-1787909888</id>
            <summary type="text">&amp;nbsp; தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், வியாழக்கிழமை (27) நடைபெற்ற மாநிலச் சட்டமன்றத்தின் பிற்பகல் கூட்டத்தின்போது, ​​தமக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், வியாழக்கிழமை (27) நடைபெற்ற மாநிலச் சட்டமன்றத்தின் பிற்பகல் கூட்டத்தின்போது, ​​தமக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையிலிருந்து விலகிச் சென்று முன்வரிசையில் இருந்த அமைச்சர்களுக்கு அருகில் அமர்ந்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. </p><p>


வழக்கமாக முதலமைச்சர்கள் சபாநாயகரின் இருக்கைக்கு அருகிலேயே தனி இருக்கையில் அமர்வது வழக்கம் என்பதால், முதலமைச்சர் விஜய்யின் இந்த நடவடிக்கை கவனத்தை ஈர்த்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb237e3f-1875-41df-9297-ace74a5df372/26-6a91570250adb.webp' /></p><h2>கவனம் ஈர்த்த&nbsp; செயல்</h2><p> </p><p>

அமைச்சர்கள் முதலமைச்சருடன் இணைந்து முதல் வரிசையில் தனித்தனியாக அமர்வார்கள்.&nbsp; இவர்களது இருக்கைகள் பொதுவாக மூப்பு அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.</p><p></p><p>
</p><p>
ஆளும் தரப்பு உறுப்பினர்கள் அமரும் இடங்களுக்கு நேர் எதிரே உள்ள வரிசையில் எதிர்க்கட்சியினர் அமர்கின்றனர்.

234 உறுப்பினர்களைக் கொண்ட அவையில், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பல்வேறு சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சிகளின் பலத்திற்கு ஏற்ப அமர்த்தப்படுகின்றனர்.</p><p></p><p>

அவர்களுக்குப் பின்னால் கட்சி உறுப்பினர்கள் அமர்கின்றனர்.

இன்னிலையில் வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்ற நடவடிக்கைகளின்போது, ​​சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகருக்கு வலதுபுறம் தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையிலிருந்து சாதாரணமாக எழுந்த விஜய், அவையின் முன்னவரான அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு இடையே உள்ள இருக்கையில் அமர்ந்தார்.</p><p></p><p>
</p><p>
அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் சக உறுப்பினர்களுடன் சுருக்கமாகப் பேசுவதற்காக அவ்வப்போது இருக்கைகளை மாற்றுவதுண்டு என்றாலும், முதலமைச்சர் ஒருவர் இத்தகைய செயலில் ஈடுபட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T09:35:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு மாகாணம் முதலீடுகள் தொடர்பில் ஆளுநரின் விசேட கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/challenges-encountered-during-the-implementation-1787907830"></link>
            <id>https://ibctamil.com/article/challenges-encountered-during-the-implementation-1787907830</id>
            <summary type="text">முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும்
மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில்
(One...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும்
மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில்
(One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில்
செயற்படுத்தப்பட வேண்டும். </p><p>அதன் நடைமுறைப்படுத்தலில் காணப்படும் சவால்கள்
மற்றும் தாமதங்களை அடையாளம் கண்டு அவற்றைத் தீர்ப்பதுடன், தொடர்புடைய
அதிகாரிகளின் திறன்களை மேலும் மேம்படுத்துவதற்குத் தேவையான பயிற்சிகளையும்
வழங்கி இப்பொறிமுறையை வலுப்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர்
நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.</p><p>

வடக்கு மாகாணத்தில் முதலீடுகளை இலகுபடுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள
ஒருவழி முதலீட்டு நுழைவாயிலின் முன்னேற்றம், அதன் நடைமுறைப்படுத்தலில்
எதிர்நோக்கப்படும் சவால்கள் மற்றும் தாமதங்களை நிவர்த்தி செய்வதற்கான
வழிமுறைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (27.08.2026) வியாழக்கிழமை
மாலை யாழ்ப்பாணம் நகரில் உள்ள ஜெட்விங் ஹோட்டலில் நடைபெற்றது.</p><p></p><h2>வவுனியாப் பல்கலைக்கழகம்</h2><p>
</p><p>
வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் நீண்டகால நிர்வாகத்
தடைகளுக்குத் தீர்வு காணும் வகையில், கடந்த மே மாதம் 'வடக்கு முதலீட்டு
உச்சிமாநாடு – 2026' நிகழ்வின் தொலைநோக்குப் பார்வையை அடிப்படையாகக் கொண்டு
ஒருவழி முதலீட்டு நுழைவாயில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2274b730-8501-4095-8f84-7971d8670063/26-6a915233d59f6.webp' /></p><p>
முதலீட்டாளர்கள் பல்வேறு திணைக்களங்களுக்கு தனித்தனியாகச் சென்று அனுமதிகளைப்
பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையைத் தவிர்த்து, ஒரே இடத்தின் ஊடாக தேவையான அரச
சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இப்பொறிமுறை உருவாக்கப்பட்டது.
</p><p>
இன்றைய கலந்துரையாடலில், இப்பொறிமுறையின் செயற்பாட்டு முன்னேற்றம், முதலீட்டு
முன்மொழிவுகளைச் செயல்படுத்துவதில் ஏற்படும் தடைகள், திணைக்களங்களுக்கு
இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் முதலீட்டாளர்களுக்கு விரைவான சேவையை
வழங்குவதற்குத் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
</p><p>
அத்துடன், முதலீட்டு வாய்ப்புகள், அனுமதி நடைமுறைகள் மற்றும் தொடர்புடைய அரச
நிறுவனங்களின் சேவைகள் குறித்த தகவல்கள் தெளிவாகவும் இலகுவாகவும்
முதலீட்டாளர்களைச் சென்றடையும் வகையில் நுழைவாயிலை மேலும்
பயனுள்ளதாக்குவதற்கான வழிமுறைகளும் ஆராயப்பட்டன.</p><p>

முகாமைத்துவக் கழகம் மற்றும் வவுனியாப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் உதவியுடன்
இந்த ஒருவழி முதலீட்டு நுழைவாயில் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
</p><p>
கலந்துரையாடலில் வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் அ.அற்புதராஜா,
வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடல், வடக்கு மாகாணத்தின் ஐந்து
மாவட்டங்களினதும் திட்டமிடல் பணிப்பாளர்கள் ஆகியோருடன் வடக்கு முதலீட்டு
மாநாட்டின் திட்டத் தலைவர் இந்திர கௌசல் ராஜபக்ச, முகாமைத்துவக் கழகத்தின்
நிர்வாகப் பிரிவுத் துணைத் தலைவர் சாந்தி பகீரதன் மற்றும் முகாமைத்துவக்
கழகத்தின் யாழ்ப்பாணக் கிளைத் தலைவர் அநுராகவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T09:35:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dollar-rate-in-sri-lanka-banks-today-usd-to-lkr-1787909000"></link>
            <id>https://ibctamil.com/article/dollar-rate-in-sri-lanka-banks-today-usd-to-lkr-1787909000</id>
            <summary type="text">இன்றைய நாளுக்கான (28.08.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய நாளுக்கான (28.08.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.
</p><p>
அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 323.51 ஆகவும் விற்பனைப் பெறுமதி 332.66 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>

ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	438.60 ஆகவும் விற்பனைப் பெறுமதி 453.25 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>நாணயமாற்று விகிதம்</h2><p>யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 		375.58 ஆகவும் விற்பனைப் பெறுமதி 388.88 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232.44 ஆகவும் விற்பனைப் பெறுமதி 241.20 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d48a5b39-8925-4f1e-aeee-5d1cde68956c/26-6a915657d3de9.webp' /></p><p>அவுஸ்திரேலிய&nbsp;(Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 		231.01 ஆகவும் விற்பனைப் பெறுமதி 241.64 ஆகவும் பதிவாகியுள்ளது.&nbsp; &nbsp;</p><p>சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	252.92 ஆகவும் விற்பனைப் பெறுமதி 263.44 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T09:34:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோலாகலமாக நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் புகழ் DJ Black திருமணம்... போட்டோஸ் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/super-singer-fame-dj-black-marriage-1787905536"></link>
            <id>https://cineulagam.com/article/super-singer-fame-dj-black-marriage-1787905536</id>
            <summary type="text">DJ Blackவிஜய் டிவியில் செம ஹிட்டாக பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர்கள், போட்டியாள...</summary>
            <content type="html"><![CDATA[<h2>DJ Black</h2><p>விஜய் டிவியில் செம ஹிட்டாக பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். </p><p>இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர்கள், போட்டியாளர்கள், நடுவர்களை தாண்டி முக்கிய பங்கு வகித்து வருபவர் தான் DJ பிளாக். டைமிங்கில் காமெடி கமெண்ட் செய்து ரசிகர்களை சிரிக்க வைப்பவர்.</p><p> பிளாக் என அனைவரும் அழைத்தாலும் இவரது நிஜப் பெயர் சுதன் குமார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தாண்டி இசையமைப்பாளர்கள் பலரின் இசைக் கச்சேரிகளிலும் பங்குபெற்றுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03b3f314-9ba4-49e5-95fc-c45ece952fdc/26-6a9147ae64611.webp' /></p><h2>திருமணம்</h2><p> 
கடந்த சில வாரங்களுக்கு முன் தனது திருமணம் ஆகப்போவதாக ஒரு புகைப்படம் வெளியிட்டார் பிளாக்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6af02049-0ca9-4751-8baf-d9ef14767dc6/26-6a9147ad74f29.webp' /></p><p> </p><p>இந்த நிலையில் சுதன்குமாருக்கும் ரம்யா என்பவருக்கும் இன்று ஆகஸ்ட் 28, கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. புதிய ஜோடியின் போட்டோ வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97989126-5ae3-4a6e-9c1a-2d4efa7501a5/26-6a9148333585a.webp' /></p>]]></content>
            <updated>2026-08-28T09:30:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் நுகர்வு குற்றச்சாட்டு அறிவியல் பூர்வமற்றது! NPP அரசாங்கத்தை சாடிய மகிந்த யாப்பா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahinda-yapa-slams-npp-government-1787907248"></link>
            <id>https://ibctamil.com/article/mahinda-yapa-slams-npp-government-1787907248</id>
            <summary type="text">
வாகனப் பயன்பாடு மற்றும் எரிபொருள் நுகர்வு தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, வன்மையாக மறுத்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>
வாகனப் பயன்பாடு மற்றும் எரிபொருள் நுகர்வு தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, வன்மையாக மறுத்துள்ளார்.</p><p>

மேலும், தணிக்கை அறிக்கையின் தரவுகள் சில குழுக்களால் அரசியல் நோக்கங்களுக்காகத் திரிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>
2015 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் நாடாளுமன்ற அதிகாரிகளின் வாகனப் பயன்பாடு குறித்த அவதானிப்புகள் தொடர்பாக பொதுமக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அபேவர்தன அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்ட வாகனங்கள்</h2><p> </p><p>

சபாநாயகராகப் பணியாற்றியபோது ஒன்பது வாகனங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை முற்றிலும் பொய்யானவை என நிராகரித்த அவர், நாடாளுமன்றத்தால் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்ட வாகனங்களை மட்டுமே தாம் பயன்படுத்தியதை தணிக்கை அறிக்கையே உறுதி செய்வதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1ac4666-4186-4107-b9ee-00079b14127e/26-6a9153facea56.webp' /></p><p>
</p><p>
ஜனாதிபதி செயலக சுற்றறிக்கைகள் மற்றும் அரசு விதிமுறைகளுக்கு இணங்க, குறிப்பாக பாதுகாப்புத் தேவைகளுக்காக அனைத்து வாகனங்களும் ஒதுக்கப்பட்டதாக அவர் அந்த அறிக்கையில் விளக்கியுள்ளார்.</p><p>

''ஜூலை 2022-க்குப் பிறகு நாட்டில் நிலவிய சிறப்புப் பாதுகாப்புச் சூழ்நிலையைத் தொடர்ந்து, அவரது பாதுகாப்பிற்காகக் கூடுதல் பணியாளர்களும் வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டன.</p><p></p><h2>அதிக எரிபொருள் நுகர்வு&nbsp;</h2><p> </p><p>

பாதுகாப்பு அமைச்சகத்தின் பரிந்துரைகளின் பேரில், ஜனாதிபதி செயலகம் அதிக எரிபொருள் நுகர்வு கொண்ட குண்டு துளைக்காத வாகனத்தை வழங்கியது.</p><p> 

இதுவே எரிபொருள் விலை உயர்வுக்கு முக்கிய காரணம். நாட்டின் மூன்றாவது குடிமகனான சபாநாயகர் மேற்கொள்ளும் உத்தியோகப்பூர்வ வாகன அணிவகுப்புகள் மற்றும் நாடு தழுவிய சுற்றுப்பயணங்களின் எரிபொருள் நுகர்வை, ஒரு சாதாரண தனிநபரின் சொந்த வாகனப் பயன்பாட்டுடன் ஒப்பிடுவது அறிவியல் பூர்வமற்றது.
</p><p>
சபாநாயகர் என்ற முறையில் நாடு முழுவதும் விரிவாகப் பயணிக்க வேண்டியிருந்தது. அத்தகைய கடமைகளுக்கு இயல்பாகவே அதிக எரிபொருள் தேவைப்படும்" என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T09:25:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள மக்களுக்கு அவுஸ்திரேலியா 3.6 மில்லியன் டொலர் நிதியுதவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/australia-provides-3-6-million-financial-aid-nepal-1787909162"></link>
            <id>https://canadamirror.com/article/australia-provides-3-6-million-financial-aid-nepal-1787909162</id>
            <summary type="text">&amp;nbsp; இயற்கை பேரிடரால் எற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நேபாள மக்களுக்கு 3.6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்குவதற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இயற்கை பேரிடரால் எற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நேபாள மக்களுக்கு 3.6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது.
</p><p>
ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் மற்றும் அவுஸ்திரேலியாவின் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக இந்த உதவிகள் வழங்கப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வொங் அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/876d10ca-3198-48f6-bf75-338ff171868a/26-6a91542c130d6.webp' /></p><p>நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 469 ஆக அதிகரித்துள்ளது.
</p><p>
 

இந்தச் இயற்கைச் சீற்றத்தினால் 1,400-க்கும் மேற்பட்டோர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.</p><p>


காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக நேபாள இராணுவத்தினரும் மீட்புக் குழுவினரும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-28T09:23:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லா சார்ல்டனின் ஷார்ட் டிரெஸ் போட்டோஸ்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/gabriella-charlton-recent-short-dress-photos-1787908345"></link>
            <id>https://viduppu.com/article/gabriella-charlton-recent-short-dress-photos-1787908345</id>
            <summary type="text">கேப்ரியல்லா சார்ல்டன்விஜய் தொலைக்காட்சியில் 2009ல் ஒளிப்பரப்பான ஜோடி நம்பர் ஒன் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை கைப்பற்றி பிரபலமானவர் தான...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கேப்ரியல்லா சார்ல்டன்</h2><p>விஜய் தொலைக்காட்சியில் 2009ல் ஒளிப்பரப்பான ஜோடி நம்பர் ஒன் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை கைப்பற்றி பிரபலமானவர் தான் கேப்ரியல்லா சார்ல்டன். இதனையடுத்து தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடித்த 3 படத்தில் ஹீரோயினின் தங்கை ரோலில் நடித்தார் கேப்ரியல்லா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bc5a0b1-d08f-473d-9be3-2328e1353bef/26-6a9150ff0040d.webp' /></p><p>
</p><p>
இதையடுத்து ஜோடி நம்பர் ஒன் சீசன் 6ல் கலந்து கொண்டு டைட்டிலையும் கைப்பற்றினார். பின் ஒருசில படங்களில் நடித்து வந்தவர் பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு 102 நாட்கள் இருந்தார்.

பின் 5 லட்சம் பணப்பெட்டியை எடுத்து வெளியேறி மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தார்.</p><p> ஈரமான ரோஜாவே 2 சீரியலில் முக்கிய ரோலில் நடித்திருந்த கேப்ரியல்லா, தற்போது மருமகள் சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கேப்ரியல்லா, ஷார்ட்டான ஆடையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-28T09:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தூதரகங்களாகும் அரச அமைச்சர் பங்களாக்கள்! இறுதிக்கட்டத்தில் ஒதுக்கீடு பணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ministerial-bungalows-embassy-offices-soon-1787894594"></link>
            <id>https://tamilwin.com/article/ministerial-bungalows-embassy-offices-soon-1787894594</id>
            <summary type="text">கொழும்பில் உள்ள ஒன்பது அமைச்சர் பங்களாக்களை தூதரகங்களுக்காக ஒதுக்கீடு செய்யும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் உள்ள ஒன்பது அமைச்சர் பங்களாக்களை தூதரகங்களுக்காக ஒதுக்கீடு செய்யும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், ஒன்பது தூதரகங்கள் சில காலமாக அமைச்சர் பங்களாக்களை கோரி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதனைத்தவிர, வர்த்தக நடவடிக்கைகளுக்காக மேலும் ஆறு அமைச்சர் பங்களாக்களை ஒதுக்கீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2>அரசாங்கத்தின் பிரதான நோக்கம்&nbsp;</h2><p>
</p><p>
இதன்படி, நீதிமன்றங்களை நிறுவுவதற்கான தேவைகளுக்கு ஏற்ப கூடுதல் அமைச்சர் பங்களாக்களை ஒதுக்கீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86a24b66-7948-42c1-b5e0-a599a3f65edb/26-6a9150e00a2c5.webp' /></p><p>
</p><p>
அமைச்சர்களுக்காக எந்த அமைச்சர் பங்களாக்களையும் பயன்படுத்தக்கூடாது என்று அரசாங்கம் கொள்கை முடிவு எடுக்காததால், அவற்றிலிருந்து வருவாய் ஈட்டுவதும், பொருளாதார ரீதியாகப் பயனுள்ள திட்டங்களுக்கு அவற்றை பயன்படுத்துவதுமே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்று சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.</p><p>

சமீபத்தில் மூன்று அமைச்சர் பங்களாக்களில் சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளதுடன், மற்றொரு அமைச்சர் பங்களாக்கள், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T09:14:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[செங்கொடி வரலாற்றில் மறக்க முடியாத ஒரு தியாகப் பெருந்தீ...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sengodi-the-flame-that-fought-for-justice-1787905456"></link>
            <id>https://ibctamil.com/article/sengodi-the-flame-that-fought-for-justice-1787905456</id>
            <summary type="text">ஒரு சில பெயர்கள் காலத்தால் ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை. அவை ஒரு காலகட்டத்தின் அரசியல் சூழலையும், மக்களின் உணர்வுகளையும், அதிகார வர்க்கத்தை நோக்கி எழு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரு சில பெயர்கள் காலத்தால் ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை. அவை ஒரு காலகட்டத்தின் அரசியல் சூழலையும், மக்களின் உணர்வுகளையும், அதிகார வர்க்கத்தை நோக்கி எழுப்பப்பட்ட கூர்மையான கேள்விகளையும் நமக்கு எப்போதும் நினைவூட்டிக்கொண்டே இருக்கும். </p><p>அப்படியான ஒரு பெயர் தோழர் செங்கொடி...</p><p>
கடந்த 2011ஆம் ஆண்டு, பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகிய மூவரின் மரண தண்டனைக்கு எதிராகத் தமிழகமே கொதித்தெழுந்த காலம். </p><p>அந்தப் போராட்டத்தின் உச்சக்கட்டமாக ஆகஸ்ட் 28 அன்று காஞ்சிபுரத்தில் தன் இன்னுயிரை ஈகம் செய்தார் 21 வயதே நிரம்பிய தோழர் செங்கொடி.
</p><p>
அவர் தீயிட்டுக் கொளுத்தியது தன் தேகத்தை ஆனால் அது அந்த மூவரின் தூக்குக் கயிற்றைத்தான் எரித்தது.
</p><p>
அவரது ஈகம் தமிழகத்தின் கூட்டு மனசாட்சியை உலுக்கியது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை வீதிக்கு வந்தனர். </p><p>அதன் விளைவாகவே சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பின்னாட்களில் மூவரின் மரண தண்டனையும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு விடுதலையிலும் முடிந்தது.</p><p>

காலங்கள் உருண்டோடினாலும் செங்கொடி என்ற பெயர் நீதிக்கான போராட்டங்களில் ஒரு தணியாத நெருப்பாகச் சுடர்ந்துகொண்டே இருக்கும்.
</p><p>
இன்றைய நாளில் ஒரு இனமான பெரும் நெருப்பாக எரிந்த அந்த உன்னதமான ஆத்மாவை தியாகப் பெருந்தீயினை, ஈழத்தமிழர்களின் வரலாற்று வலிகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் IBC தமிழ், கனதியான வலிகளோடு நினைவேந்துகிறது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-28T09:12:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை நேரடியாக மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை - மன்னார் மறைமாவட்ட ஆயர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mannar-government-hospital-1787907535"></link>
            <id>https://tamilwin.com/article/mannar-government-hospital-1787907535</id>
            <summary type="text">மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி
செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி
செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்
நிற்க வேண்டும் என&nbsp;மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.</p><p>மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை நேரடியாக மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p>
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக
பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் (28.08.2026)
வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த பயிற்சி மருத்துவ அதிகாரிகளை
வரவேற்கும் நிகழ்வு காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட
பொது வைத்தியசாலையில் இடம்பெற்றது.</p><p>

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>நல்ல சேவை செய்வது தான் நோக்கம்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் நல்ல உறவுகளை ஏற்படுத்துவதும், எங்களுடைய மாவட்டம், இந்த வைத்தியசாலை
நல்ல முறையில் இன்னும் உயர்வது எங்களுடைய கையில் தான் இருக்கிறது. ஒற்றுமை
வேண்டும். தேவையற்ற பிரிவினைகள் இருக்கக் கூடாது. எங்களுக்கு நல்ல சேவை
செய்வதுதான் ஒரே நோக்கமாக இருக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80d40f9c-8824-4eda-bbe4-141e1fff2fce/26-6a91508c34bc5.webp' /></p><p> வருகின்ற புதியவர்களோடு இணைந்து
நல்ல முறையில் செயல்படுகின்ற நல்ல மனப்பான்மை எங்களுக்கு இருக்க வேண்டும்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மேலும் வைத்தியர்கள் நியமிக்கப்பட்ட
உள்ளதாகவும், அவர்கள் வெகு விரைவில் வருகை தர உள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது. </p><p>மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை நேரடியாக மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வர
வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்காக நான் எல்லா
முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

மாவட்டத்தில் உள்ள ஒரு வைத்தியசாலை மத்திய அரசின் கீழ் செயல்பட முடியும்.</p><p>ஆகவே,
இந்த வேளையிலே அரசியல் ரீதியான ஆதரவையும், அரச ரீதியான ஆதரவையும் நாங்கள்
கேட்டு நிற்கின்றோம்.

மன்னார் மக்களுக்கு தேவையான விடயம். இதில் இரண்டாவது கருத்து இருக்கக்
கூடாது. தேவையற்ற குழப்பங்களும் இருக்கக் கூடாது.ஆகவே, அந்த குழப்பங்களையும்
நாங்கள் அறிவோம்.</p><h2>மறுக்கும் வைத்தியர்கள்</h2><p> </p><p>இதனுடைய பின்னணியையும் நாங்கள் அறிவோம்.

இருந்தும் சற்று அமைதியாக நாங்கள் இந்த முன்னெடுப்புகளை செய்கின்றோம். அதை விட
அமைதியாக வைத்தியசாலை பணிப்பாளர் தனது வேலைகளை செய்து கொண்டிருப்பது மிகவும்
போற்றத்தக்கது. எங்களுடைய மண்ணிலே அதாவது மன்னார் மாவட்டத்தில் நிறைய
வைத்தியர்கள் இருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e83dfa3f-4656-4f3c-a6a3-2062df8ad74e/26-6a91508d35c56.webp' /></p><p> </p><p>அனைவரும் மாவட்டத்தில் கடமையாற்ற வர வேண்டும்.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நிறைய வைத்தியர்கள் உள்ள போதும் தமது மண்ணில்
கடமையாற்ற இங்கு வருவதற்கு மறுக்கிறார்கள் என்று இங்குள்ள அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.</p><p> எனவே அவர்கள் இங்கே வந்து சேவை செய்ய வேண்டும்.

மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற வைத்தியர்கள் கூடியளவு எங்களுக்கு
நிறைய உதவி செய்கிறார்கள். இங்குள்ள வைத்தியர்களிடம் நல்ல முறையில் அணுகி
அவர்களுடைய அர்ப்பணத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அவர் மேலும்
தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T09:11:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்துள்ள எதிர்கட்சிகள்...! அம்பலப்படுத்திய அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rajapaksas-cannot-talk-about-justice-jayasinghe-1787897761"></link>
            <id>https://ibctamil.com/article/rajapaksas-cannot-talk-about-justice-jayasinghe-1787897761</id>
            <summary type="text">அரசாங்கம் சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கம் சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>அத்தோடு நீதித்துறை சுதந்திரம் மற்றும் பொருளாதார மீட்சி தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்கு ராஜபக்சக்களுக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மஹரகம பகுதியில் நேற்று (27-08-2026) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஊழல் மோசடி</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சியினரே மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டைத் தோற்றுவித்துள்ளனர். </p><p>இந்தத் திருத்தம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் முற்றிலும் சாதகமானதே தவிர எவ்விதத்திலும் பாதகமானதல்ல.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0ad1f9c-c701-4a6b-bd2f-68fce06caae7/26-6a91455510572.webp' /></p><p>எதிர்க்கட்சியில் உள்ள பெரும்பாலானோர் ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் மற்றும் பலர் பிணையில் உள்ளவர்களுமாவர்.</p><p> கிடப்பில் போடப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பான விசாரணைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டு வருவதனாலேயே இவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.</p><p></p><h2>தனிப்பட்ட பிரச்சினை</h2><p>

ஊழல்வாதிகள் சிறைக்குச் செல்வது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினையே தவிர அது மக்களின் பிரச்சினையல்ல.
</p><p>

இந்த நாட்டில் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை ராஜபக்சக்களின் காலத்தில் தான் முழுமையாக இல்லாமல் போனது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76819307-6d87-4146-a8c1-305f7875a7f1/26-6a91455451647.webp' /></p><p>முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை அவர்கள் முறையற்ற வகையிலேயே பதவி நீக்கம் செய்தனர்.
</p><p>
அதற்காக அவர்கள் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்" என தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-28T09:11:12+00:00</updated>
        </entry>
    </feed>
