<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-09T16:44:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[டச்சு மண்ணை அதிரவைத்த ஈழத்தமிழர்: பாஸ்கரன் கந்தையாவின் 5,445 கோடி ரூபாய் சாம்ராஜ்யம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bhaskaran-kandiah-sri-lankan-tamil-ealam-1786271325"></link>
            <id>https://tamilwin.com/article/bhaskaran-kandiah-sri-lankan-tamil-ealam-1786271325</id>
            <summary type="text">நெதர்லாந்து நாட்டின் முன்னணி பொருளாதார மற்றும் வணிக இதழான Quote Net, ஐரோப்பாவில் தொழிலதிபராய் பரிணமித்துள்ள ஈழத்தமிழரான பாஸ்கரன் கந்தையாவின் வணிகச் சா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெதர்லாந்து நாட்டின் முன்னணி பொருளாதார மற்றும் வணிக இதழான Quote Net, ஐரோப்பாவில் தொழிலதிபராய் பரிணமித்துள்ள ஈழத்தமிழரான பாஸ்கரன் கந்தையாவின் வணிகச் சாம்ராஜ்யத்தையும், தாய்நிலம் மீதான அவரது நன்றியுணர்வையும் பாராட்டி சிறப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><p>நெதர்லாந்தின் முன்னணி பணக்காரர்களை வரிசைப்படுத்தும் Quote 500 பட்டியலில் பாஸ்கரன் கந்தையாவைச் சேர்த்துப் பெருமைப்படுத்தியுள்ள அந்த ஊடகம், அவரது வாழ்க்கைப் பாதையை ஒரு திரைப்படம் போல வர்ணித்துள்ளது. </p><p>டச்சு ஊடகத்தின் நிதி மதிப்பீட்டின்படி, அவரது தற்போதைய நிகர சொத்து மதிப்பு 165 மில்லியன் யூரோக்கள் (சுமார் 5,445 கோடி இலங்கை ரூபாய்) ஆகும். இதன் மூலம் அவர் நெதர்லாந்தின் மிகச் செல்வாக்குமிக்க பணக்காரர்கள் பட்டியலில் 437ஆவது இடத்தில் உள்ளார்.</p><h2>கிடைத்துள்ள அங்கீகாரம்..&nbsp;</h2><p> </p><p> யாழ்ப்பாணத்தின் வடலியடைப்பில் எளிய குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்த பாஸ்கரன், இலங்கையில் நிலவிய போர்ச் சூழல் காரணமாக ஐரோப்பாவிற்கு புலம்பெயர்ந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43633a6f-b70c-4e51-b02e-6e5c3ef497c5/26-6a785cb3675a1.webp' /></p><p> </p><p>தனது 30ஆவது வயதில் இரண்டு நண்பர்களுடன் இணைந்து லெபாரா மொபைல் (Lebara Mobile) தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடங்கினார். புலம்பெயர் மக்களை குறைந்த செலவில் தாய்நாட்டோடு இணைத்த இவரது வணிக உத்தி ஐரோப்பா முழுவதும் வரவேற்பைப் பெற்றது.</p><p> 2017இல் இந்நிறுவனத்தை சுவிட்சர்லாந்து முதலீட்டாளர்களுக்கு விற்ற பிறகு, 2014இல் IBC தமிழ் ஊடகக் குழுமத்தைக் கொள்வனவு செய்து, எல்லை கடந்த பேரூடகமாக அதை இயக்கி வருகிறார்.</p><p>தொழிலில் ஈட்டிய பிரமாண்ட வெற்றியின் பின்னரும், போரினால் பாதிக்கப்பட்ட தாய்நிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் வட இலங்கையில் ரீக்சா (ReeCha) ஒருங்கிணைந்த பண்ணை சூழலியல் சுற்றுலா மையத்தை உருவாக்கியுள்ளார்.</p><h2>பல்வேறு வணிகங்கள்&nbsp;</h2><p> </p><p>இயற்கை உரம் கொண்ட கரிமப் பண்ணைகள், மிருகங்கள் மற்றும் பறவைகள் பூங்கா, நீர் விளையாட்டு வளாகம், தீம் பார்க், நட்சத்திர விடுதிகள், உணவகங்கள் மற்றும் ஸ்பா உள்ளிட்ட பல அம்சங்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13146808-1296-46ae-8068-16ffe8c5abf3/26-6a785cb4518a6.webp' /></p><p>"முப்பதாண்டு கால போருக்குப் பிறகு நமது வடபிராந்தியத்தில் பெரிய அளவிலான பொருளாதார முதலீடுகள் நடக்கவில்லை. என் மண்ணுக்கும் மக்களுக்கும் மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்ற எண்ணமே இத்திட்டத்தின் பின்னணி" என பாஸ்கரன் கந்தையா Quote இதழிடம் குறிப்பிட்டுள்ளார். </p><p> இந்த ரீக்சா மையத்தின் மூலம் சுமார் 400 பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பும், 100 பேருக்குப் பகுதி நேர வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளன. மேலும் 2025ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 3 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்த மையத்தைப் பார்வையிட்டதால், உள்ளூர் சிறு வியாபாரிகள், வாகன ஓட்டுநர்கள் மற்றும் கைவினைஞர்களின் பொருளாதாரமும் கணிசமாக உயர்ந்துள்ளதாக அந்த இதழ் புகழாரம் சூட்டியுள்ளது.</p><p>வடக்கு கிழக்கின் இன்றைய தேவை அதை வளப்படுத்தக்கூடிய பாரம்பரியமான முதலீட்டாளர்களே என்பதை உணர்த்தி, பாஸ்கரன் கந்தையா சமூகத்தின் பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.</p><p><b>News link..&nbsp;</b></p><p><b><a href="https://www.quotenet.nl/lifestyle/reizen/a73375336/quote-500-lid-baskaran-kandiah-resort-sri-lanka/" target="_blank">https://www.quotenet.nl/lifestyle/reizen/a73375336/quote-500-lid-baskaran-kandiah-resort-sri-lanka/</a></b></p>]]></content>
            <updated>2026-08-09T16:43:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[காப்பி அடித்து தான் மூக்குத்தி அம்மன் எடுத்தேன்: ஆர்ஜே பாலாஜி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/mookuthi-amman-is-copy-of-this-film-rj-balaji-1786293536"></link>
            <id>https://cineulagam.com/article/mookuthi-amman-is-copy-of-this-film-rj-balaji-1786293536</id>
            <summary type="text">காமெடியனாக இருந்து அதன் பின் நடிகராகவும் தற்போது இயக்குநராகவும் கலக்கி வருபவர் ஆர்ஜே பாலாஜி. சமீபத்தில் அவர் இயக்கிய கருப்பு படம் மிகப்பெரிய வசூலை குவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காமெடியனாக இருந்து அதன் பின் நடிகராகவும் தற்போது இயக்குநராகவும் கலக்கி வருபவர் ஆர்ஜே பாலாஜி. சமீபத்தில் அவர் இயக்கிய கருப்பு படம் மிகப்பெரிய வசூலை குவித்து ஹிட் ஆனது.</p><p>ஆர் ஜே பாலாஜி நயன்தாராவுடன் கூட்டணி சேர்ந்து எடுத்த மூக்குத்தி அம்மன் படம் பற்றிய ஒரு உண்மையை அவர் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7e0e813-1781-4d7e-a613-f8587c0743b4/26-6a78ad21d2ad8.webp' /></p><p> </p><h2>
காப்பி அடித்து தான் எடுத்தேன் </h2><p>மூக்குத்தி அம்மன் படம் காவியம் எல்லாம் இல்லை. ஹிந்தியில் பிகே படத்தை காப்பி அடித்து தான் தமிழில் நான் மூக்குத்தி அம்மன் படத்தை எடுத்தேன். ஏலியனை அம்மன் ஆக மாற்றி விட்டேன். அதில் வரும் ரிப்போர்ட்டர் கதாபாத்திரத்தில் நானே நடித்தேன். என் குடும்பத்தில் இருப்பது போல மூன்று தங்கைகள் கதையில் சேர்த்து விட்டேன். இப்படித்தான் மூக்குத்தி அம்மன் படத்தை எடுத்து முடித்தேன் என ஆர் ஜே பாலாஜி தெரிவித்திருக்கிறார்.&nbsp;&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T16:39:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போரை முடிவிற்கு கொண்டுவர ட்ரம்ப் வகுக்கும் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/if-iran-opens-hormuz-trump-drop-nuclear-deal-plan-1786289003"></link>
            <id>https://ibctamil.com/article/if-iran-opens-hormuz-trump-drop-nuclear-deal-plan-1786289003</id>
            <summary type="text">சர்வதேச கப்பல் போக்குவரத்துக்காக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முழுமையாக மீண்டும் திறந்தால்,அணுசக்தி ஒப்பந்தம் எதுவும் இல்லாமலேயே ஈரானுக்கு எதிரான போரில் அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச கப்பல் போக்குவரத்துக்காக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முழுமையாக மீண்டும் திறந்தால்,அணுசக்தி ஒப்பந்தம் எதுவும் இல்லாமலேயே ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா வெற்றி பெற்றதாக அறிவித்து, போரை முடிவுக்குக் கொண்டுவர ட்ரம்ப் தனது அதிகாரிகளுடன் ஆலோசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டதால், ஈரான் மீண்டும் அணுஆயுதத் திட்டத்தைத் தொடங்குவது கடினம் என்றும், அமெரிக்காவின் இராணுவ அச்சுறுத்தல் காரணமாக ஈரான் பின்வாங்கியுள்ளதாகவும் ட்ரம்ப் கருதுகிறார்.</p><h2>ட்ரம்பின் திட்டம்</h2><p>ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து சீரானால், அமெரிக்கா ஈரானுக்கு எதிராக விதித்துள்ள கடற்படை முற்றுகையை நீக்கி, தற்போதைய போர் நிறுத்தத்தை நீடிக்க ட்ரம்ப் தயாராக இருப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/908c1c63-29cc-4c53-a6c5-badff38e54b2/26-6a78a9352a58d.webp' /></p><p> இருப்பினும், ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறந்துவிட ஈரான் விதித்துள்ள புதிய நிபந்தனைகள் இந்த ஒப்பந்தச் செயல்பாட்டை முடக்கியுள்ளன.</p><h2>ஈரான் விதித்துள்ள புதிய நிபந்தனைகள்</h2><p>
</p><p>


அமெரிக்காவின் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களுக்குப் பில்லியன் கணக்கான டொலர்களை அமெரிக்கா இழப்பீடாக வழங்க வேண்டும். ஈரான் மீதான அனைத்துப் பொருளாதாரத் தடைகளையும் முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be430547-d114-4e35-9363-586c74420565/26-6a78a935cf42b.webp' /></p><p> </p><p>மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள அமெரிக்க இராணுவப் படைகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும். ஈரானிய கடற்பரப்பில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் கடற்படை முற்றுகையை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
</p><p>

உலகளவில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு (20%) ஹோர்முஸ் நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.</p><p></p><h2>உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை&nbsp;</h2><p> </p><p>இந்த வழித்தடம் மூடப்பட்டதால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து பணவீக்கம் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3011e6d-50eb-4897-a87e-2c9792498948/26-6a78a93689ea2.webp' /></p><p>
</p><p>

போரை மேலும் விரிவுபடுத்துவது உலகப் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும் என்பதால், நிலைமையைச் சீராக்கச் சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்ட பிராந்திய தலைவர்கள் ட்ரம்புடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T16:22:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/opening-of-the-floodgates-of-the-kotmale-reservoir-1786292061"></link>
            <id>https://jvpnews.com/article/opening-of-the-floodgates-of-the-kotmale-reservoir-1786292061</id>
            <summary type="text">நுவரெலியா கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை எட்டியுள்ளதை அடுத்து, இன்று (09) மாலை 7.00 மணிக்கு நீர்த்தேக்கத்தின் வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை எட்டியுள்ளதை அடுத்து, இன்று (09) மாலை 7.00 மணிக்கு நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் சிறிதளவு திறக்கப்பட்டுள்ளன.</p><p> </p><p></p><p>இந்த வான்கதவுகள் ஊடாக வினாடிக்கு சுமார் 20 கனமீற்றர் வேகத்தில் மேலதிக நீர் கொத்மலை ஓயாவிற்கு திறந்துவிடப்படுவதாக இலங்கை மகாவலி அதிகாரசபையின் பிரதான அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் செயல்பாட்டுப் பிரிவு (கொத்மலை) அறிவித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be2e9bf8-7019-45e1-b6f1-ba5554bff9f2/26-6a78a75f11eb2.webp' /></p><p>இதன்காரணமாக நீர்த்தேக்கத்திற்கு கீழ் பகுதியிலுள்ள கொத்மலை ஓயா மற்றும் மகாவலி கங்கையின் நீர்மட்டம் மிகச்சிறிய அளவில் உயரக்கூடும் என்பதால், இதுகுறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், சம்பந்தப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு இது குறித்து உடனடியாக விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T16:14:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[டால்பின் புயல் தாக்கம்: சீனாவில் 1,300 விமானங்கள் ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/shanghai-cancels-flights-amid-typhoon-dolphin-1786291112"></link>
            <id>https://news.lankasri.com/article/shanghai-cancels-flights-amid-typhoon-dolphin-1786291112</id>
            <summary type="text">Shanghai Cancels 1300 Flights: டால்பின் புயல் காரணமாக சீனாவில் 1,300 விமானங்கள் ரத்து செய்யபட்டது.

60 சதவீத&amp;nbsp;விமானங்கள் ரத்துசீனாவின் கிழக்கு க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Shanghai Cancels 1300 Flights: டால்பின் புயல் காரணமாக சீனாவில் 1,300 விமானங்கள் ரத்து செய்யபட்டது.
</p><h2>
60 சதவீத&nbsp;விமானங்கள் ரத்து</h2><p>சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளை நோக்கி நகரும் டால்பின் புயல் காரணமாக, ஷாங்காய் நகரின் ஹொங்கியாவோ மற்றும் புதோங் விமான நிலையங்களில் 1,300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது ஞாயிற்றுக்கிழமை திட்டமிடப்பட்ட விமானங்களில் சுமார் 60 சதவீதம் ஆகும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63707d84-ffb7-4249-9fc0-7f8b2f588a4f/26-6a78a3a961351.webp' /></p><h2>தைவானில் கடும் மழை</h2><p>புயல் 162 கிமீ வேகத்தில் காற்றுடன் நகர்ந்து, வட தைவானில் கடும் மழையை ஏற்படுத்தியுள்ளது. தைவானின் தலைநகர் தைப்பேயில் மழை பெய்ததால், சில தைவான் விமான நிறுவனங்கள் சீனாவுக்கான விமானங்களையும் ரத்து செய்துள்ளன.
</p><p>
சீன வானிலை ஆய்வாளர்கள், ஜெஜியாங் மற்றும் ஃபுஜியான் மாகாணங்களில் 200-400 மில்லிமீட்டர் மழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளனர். இதனால் நிலச்சரிவு அபாயம் அதிகரித்துள்ளது.
</p><p>
ஜெஜியாங் மாகாணத்தின் தைஷோ நகரில் 3,90,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஷாங்காயில் 30,000-க்கும் மேற்பட்டோர் அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். </p><p></p><h2>பாதுகாப்பாக இருக்க&nbsp;அறிவுறுத்தல்</h2><p>மேலும், படகு சேவைகள், கப்பல் சுற்றுலா போன்ற அனைத்து நீர்வழி நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

அதிகாரிகள், மக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கவும், தேவையான பொருட்களை சேமித்து கொள்ளவும், தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.
</p><p>
டால்பின் புயல் சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் காரணமாக, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T15:56:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்ட 3,234 இந்தியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-deports-3234-indians-in-2026-1786265403"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-deports-3234-indians-in-2026-1786265403</id>
            <summary type="text">Canada Deports Indians: கனடாவிலிருந்து இந்தியர்கள் அதிகளவில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.3,234 இந்தியர்கள் 2026-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், 3,234 இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada Deports Indians: கனடாவிலிருந்து இந்தியர்கள் அதிகளவில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><h2>3,234 இந்தியர்கள் </h2><p>2026-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், 3,234 இந்திய குடிமக்கள் கனடாவில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கனடா எல்லை சேவை நிறுவனம் வெளியிட்ட தரவுகளை PTI தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dadbf9c-d275-4bba-aae3-3bd4938059f9/26-6a78408814c75.webp' /></p><p>
2025-ஆம் ஆண்டில், 3,779 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர். </p><p>ஆனால், 2026-இன் முதல் பாதியிலேயே, இந்தியர்கள் அதிக அளவில் வெளியேற்றப்பட்டவர்களாக இருக்கின்றனர். இந்தியர்களுக்கு அடுத்ததாக 1,573 மெக்சிகோ குடிமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>இந்தியர்கள் முதலிடம்</h2><p>கடந்த ஐந்து ஆண்டுகளாக மெக்சிகோ குடிமக்களே அதிகமாக வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இந்தியர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
</p><p>
2020-ஆம் ஆண்டில் 1,424 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டனர். 2021-இல் 603, 2022-இல் 786, 2023-இல் 1,132, 2024-இல் 2,004 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
</p><p>
கனடா எல்லை சேவை நிறுவனம், வெளியேற்றப்பட்டவர்களின் காரணங்களை நாடு வாரியாக வெளியிடவில்லை. பொதுவாக, விசா விதிமுறைகளை மீறுதல், அகதி அல்லது தஞ்சம் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டது, விசா காலாவதியான பின்னும் தங்கியிருத்தல், விசா மோசடி போன்ற காரணங்களால் இந்தியர்கள் திருப்பி அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது.</p><p></p><h2>இன்னும்&nbsp;7,669 இந்தியர்கள்..,</h2><p>2026-இல், இந்தியர்கள் கனடாவின் “வெளியேற்றப்பட உள்ளவர்களின் பட்டியலில்” அதிகமாக இடம்பெற்றுள்ளனர். அதில் 7,669 இந்தியர்கள் இன்னும் வெளியேற்றப்படுவதற்காக காத்திருக்கின்றனர்.
</p><p>
இந்த தரவுகள், கனடாவில் இந்திய குடிமக்கள் எதிர்கொள்ளும் குடியேற்ற சவால்களை வெளிப்படுத்துகின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T15:51:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓடுபாதையில் விமானத்தை துரத்திச் சென்ற இரண்டு பெண்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/women-chase-plane-in-moscow-airport-scare-1786290107"></link>
            <id>https://news.lankasri.com/article/women-chase-plane-in-moscow-airport-scare-1786290107</id>
            <summary type="text">Women Chase Plane in Moscow Airport: மாஸ்கோ விமான நிலையத்தில் இரண்டு பெண்கள் விமானத்தை துரத்திச் சென்ற வீடியோ வைரலாகிவருகிறது.

ஓடுபாதையில் இரண்டு ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Women Chase Plane in Moscow Airport: மாஸ்கோ விமான நிலையத்தில் இரண்டு பெண்கள் விமானத்தை துரத்திச் சென்ற வீடியோ வைரலாகிவருகிறது.</p><h2>

ஓடுபாதையில் இரண்டு பெண்கள்</h2><p>ஜூலை 25-ஆம் திகதி, ரஷ்யாவின் ஷெரெமேட்யேவோ சர்வதேச விமான நிலையத்தில் நடந்த விசித்திரமான சம்பவம் தற்போது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>
இரண்டு பெண்கள் தங்கள் Aeroflot விமானத்தை தவறவிட்டதால், விமானம் புறப்படும் தருணத்தில் ஓடுபாதையில் துரத்திச் சென்றனர்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Meanwhile at Moscow&#39;s Sheremetyevo International Airport two passengers who had missed their flight ran onto the tarmac on July 25 and walked directly toward an Aeroflot aircraft in an attempt to board, with one woman dragging a suitcase behind her. <a href="https://t.co/1vmHOeBrhg">pic.twitter.com/1vmHOeBrhg</a></p>&mdash; Breaking Aviation News &amp; Videos (@aviationbrk) <a href="https://x.com/aviationbrk/status/2086052750802952490?ref_src=twsrc%5Etfw">August 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>அவர்கள் ஏற்கனவே பாதுகாப்பு சோதனையை கடந்திருந்தாலும், விமானத்தில் ஏற வேண்டிய நேரத்தை தவறவிட்டனர்.

மீண்டும் டிக்கெட் பதிவு செய்யாமல், நேரடியாக விமானம் நிறுத்தப்பட்டிருந்த apron பகுதியில் நுழைந்தனர். அப்போது விமானம் கேட்டில் இருந்து நகர்த்தப்பட்டு கொண்டிருந்தது.</p><p>

வீடியோ காட்சிகளில், பெண்களில் ஒருவர் தனது சூட் கேஸை இழுத்துக்கொண்டு விமானத்தை நோக்கி ஓடிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. மற்றொருவர் விமானத்தை நோக்கி கைகளை அசைத்து பைலட் கவனத்தை ஈர்க்க முயன்றார்.</p><p>
</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b27100d9-1f99-4417-8c06-ce0c5795bf09/26-6a78a07c654fb.webp' /></p><h2>விமான இயக்கம் நிறுத்தப்பட்டது</h2><p>இந்த சம்பவம் பெரும் பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தியது. apron பகுதி மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட இடமாகும். அங்கு விமானங்கள் நகர்த்தப்படுவதோடு, பல்வேறு வாகனங்கள் மற்றும் பணியாளர்கள் இயங்குகின்றனர்.</p><p>பெண்கள் அங்கு நுழைந்ததால், விமான இயக்கம் உடனடியாக நிறுத்தப்பட்டது.

பின்னர், பணியாளர்கள் அவர்களை தடுத்து, மீண்டும் டெர்மினலுக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் ரஷ்யாவின் Federal Security Service (FSB)-க்கு ஒப்படைக்கப்பட்டனர்.
</p><p>
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு, பயணிகள் விமானத்தை தவறவிட்டால் எவ்வளவு ஆபத்தான முடிவுகளை எடுக்கக்கூடும் என்பதை வெளிப்படுத்தியது.</p><p></p><p>
</p><h2>
மற்றொரு சம்பவம்- 30 பவுண்டுகள் அபராதம்</h2><p>இதேபோன்ற சம்பவம் கடந்த மே மாதத்திலும் நடந்தது. அப்போது, ஒரு பயணி விமான நிலையக் கழிப்பறையில் சிக்கி, விமானத்தை தவறவிட்டார். பின்னர் அவர் ஓடுபாதையில் பாய்ந்து விமானத்தை நிறுத்த முயன்றார். ஆனால், விமானம் புறப்பட்டுவிட்டது. அந்த பயணிக்கு சுமார் 30 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T15:42:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹமில்டனில் கத்திக்குத்து: 21 வயது இளைஞா பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/21-year-old-man-dead-after-stabbing-in-hamilton-1786288518"></link>
            <id>https://canadamirror.com/article/21-year-old-man-dead-after-stabbing-in-hamilton-1786288518</id>
            <summary type="text">கனடாவின் ஒன்டாரியோ மாநிலத்தில் உள்ள ஹமில்டன் நகரில் இன்று அதிகாலை கத்திக் குத்து காயங்களுடன் மீட்கப்பட்ட 21 வயது இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்டாரியோ மாநிலத்தில் உள்ள ஹமில்டன் நகரில் இன்று அதிகாலை கத்திக் குத்து காயங்களுடன் மீட்கப்பட்ட 21 வயது இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.</p><p>
ஹமில்டன் காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அதிகாலை 2:30 மணியளவில் மெயின் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் ஃபிரிட் ஸ்ட்ரீட் சந்திப்பிற்கு அருகே டாக்ஸி ஓட்டுநர் ஒருவரால் இந்த இளைஞர் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
டாக்ஸி ஓட்டுநர் தகவலளித்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர் படுகாயமடைந்த இளைஞரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/973a6cf4-738d-4848-af00-3a84330bb065/26-6a789987f1138.webp' /></p><p> எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த இளைஞர், மெயின் ஸ்ட்ரீட்டில் மீட்கப்படுவதற்கு முன்பு 'கிங் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் பாரடைஸ் ரோடு நார்த்' பகுதிக்கு அருகே மற்றொரு தரப்புடன் தகராறில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p>
இச்சம்பவம் அல்லது அதற்கு முன்பாக நடந்த தகராறைக் கண்ட சாட்சிகள் யாரேனும் இருந்தால், உடனடியாக புலனாய்வு அதிகாரி அலேக்ஸ் பக்கை (905-546-4123) தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p>
மேலும், இன்று அதிகாலை 2:00 மணி முதல் 2:45 மணிக்குள் அப்பகுதியில் பயணித்த வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் 'டாஷ்கேம்' அல்லது பிற வீடியோ பதிவுகளை ஆய்வு செய்து, அது தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருந்தால் பொலிஸாரிடம் வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T15:38:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில், தவறான தகவல்களை சமர்ப்பித்த அடைமானத் தரகருக்கு வாழ்நாள் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/lifetime-ban-for-former-bc-mortgage-broker-1786288188"></link>
            <id>https://canadamirror.com/article/lifetime-ban-for-former-bc-mortgage-broker-1786288188</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், வாடிக்கையாளர்களின் அடமானக் கடன் விண்ணப்பங்களில் போலியான மற்றும் தவறான தகவல்களைச் சமர்ப்பித்த குற்றத்திற்காக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், வாடிக்கையாளர்களின் அடமானக் கடன் விண்ணப்பங்களில் போலியான மற்றும் தவறான தகவல்களைச் சமர்ப்பித்த குற்றத்திற்காக, முன்னாள் அடமானத் தரகர் கூர்ஷெர் சிங் பெயின்ஸ் தொழிலில் ஈடுபட ஆயுட்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>பிரிட்டிஷ் கொலம்பியா நிதிச் சேவைகள் ஆணையம் நடத்திய தீவிர விசாரணையில், அவர் கையாண்ட அனைத்து விண்ணப்பங்களிலுமே முறைகேடுகள் செய்தது அம்பலமாகியுள்ளது.
</p><p>வாடிக்கையாளர் வாங்க முயன்ற வீடு என்ற தகவலைக் கடன் வழங்கும் வங்கிக்குத் தெரிவிக்காமல் பெயின்ஸ் மறைத்துள்ளார்.
வங்கி ஆய்வில் இது தெரியவந்ததும் கடன் நிராகரிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/384b3b1f-40d8-4316-8ca6-6d6ee50d6a6d/26-6a78983e1e30d.webp' /></p><p> இதனால், ஒப்பந்தக் காலத்தை நீட்டிக்க வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணமாக 5,000 டொலா் வழங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.</p><p>
வாடிக்கையாளர்களை நேரடியாகத் தொடர்புகொள்ளாமல், மூன்றாம் நபர் கொடுத்த தகவல்களை அப்படியே சரிபார்க்காமல் வங்கிக்கு அனுப்பியதை பெயின்ஸ் ஒப்புக்கொண்டார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, 2022 மே முதல் 2024 ஏப்ரல் வரை அவர் கையாண்ட 8 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.</p><p>
அவை அனைத்திலும் போலியான தகவல்கள் இருந்தது கண்டறியப்பட்டது:
5 கோப்புகளில் வாடிக்கையாளர்களின் வருமானம் மற்றும் சொத்து மதிப்பை உயர்த்திக் காட்டுவதற்காகப் போலி வரி ஆவணங்கள் இணைக்கப்பட்டிருந்தன.</p><p>
சர்ரே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அடமான விண்ணப்பத்தில் இணைக்கப்பட்ட வரி ஆவணங்கள் பற்றி அந்த வாடிக்கையாளரிடம் கேட்டபோது, "எனக்கு இந்த ஆவணங்கள் பற்றி எதுவுமே தெரியாது; பெயின்ஸை நான் நேரில் சந்தித்ததே இல்லை" எனக் கூறி அதிர்ச்சியளித்தார்.
</p><p>ஒரு சொத்தின் மீது ஏற்கனவே முதல் அடமானக் கடன் இருப்பதை மறைத்து, இரண்டாவது கடனுக்கு விண்ணப்பித்தது உட்பட பல தவறான தகவல்களை வங்கிகளுக்கு அளித்திருந்தார்.
</p><p>பொதுமக்களின் நலனுக்கு எதிராகச் செயல்பட்டது, அடமானத் தரகர்கள் சட்டத்தை மீறியது போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றங்களை ஒப்புக்கொண்ட பெயின்ஸ், டிசம்பர் 2, 2025 அன்று தனது உரிமத்தை ரத்து செய்தார்.
</p><p>இனிமேல் அவர் பி.சி. மாநிலத்தில் அடமானத் தரகராகப் பணியாற்றவோ, உரிமத்திற்கு விண்ணப்பிக்கவோ முடியாது.
25,000 டொலர் நிர்வாக அபராதம் மற்றும் 5,000 டெலார் விசாரணைச் செலவு என மொத்தம் 30,000 டொலர் தொகையை அடுத்த மூன்று மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T15:38:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரொறன்ரோவின் நார்த் யார்க் பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் படுகாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/one-person-rushed-to-hospital-after-two-groups-1786287683"></link>
            <id>https://canadamirror.com/article/one-person-rushed-to-hospital-after-two-groups-1786287683</id>
            <summary type="text">கனடாவின் ரொறன்ரோவில் உள்ள நார்த் யார்க் பகுதியில் வெள்ளி இரவு இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் படுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ரொறன்ரோவில் உள்ள நார்த் யார்க் பகுதியில் வெள்ளி இரவு இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.</p><p>
ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் ஷோர்ஹாம் டிரைவ் சந்திப்பிற்கு அருகே இரவு 11 மணியளவில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகக் கிடைத்த தகவலை அடுத்து, ரொறன்ரோ பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
</p><p>சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவரைக் கண்டறிந்து உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fb48086-9f13-4e26-9f9d-62355edc8a51/26-6a78964547295.webp' /></p><p> </p><p>அவருக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், உயிர் ஆபத்து எதுவுமில்லை எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு குழுக்கள் பரஸ்பர துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்கள் அனைவரும் சம்பவ இடத்திலிருந்து கால்நடையாகத் தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் நடந்த சுற்றுவட்டாரப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததற்கான பல்வேறு ஆதாரங்களைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.</p><p>
இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இச்சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்த பொதுமக்கள் யாரேனும் இருந்தால் உடனடியாகத் தங்களைத் தொடர்புகொள்ளுமாறு ரொறன்ரோ பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T15:37:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெய்லர் ஸ்விஃப்ட் கச்சேரி டிக்கெட் மோசடி: 2.65 லட்சம் டொலர் திருடிய ஒன்டாரியோ தம்பதிக்கு தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ontario-couple-to-be-sentenced-in-265k-taylor-1786287328"></link>
            <id>https://canadamirror.com/article/ontario-couple-to-be-sentenced-in-265k-taylor-1786287328</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்டாரியோவைச் சேர்ந்த தம்பதியொன்று, பிரபல பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டின் இசைக்கச்சேரி டிக்கெட்டுகளைத் தருவதாகக் கூறி பலரிடம் சுமார் 265,00...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்டாரியோவைச் சேர்ந்த தம்பதியொன்று, பிரபல பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டின் இசைக்கச்சேரி டிக்கெட்டுகளைத் தருவதாகக் கூறி பலரிடம் சுமார் 265,000 கனடிய டாலர்கள் மோசடி செய்த வழக்கில், அவர்களுக்கு வரும் அக்டோபர் 6-ஆம் திகதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவுள்ளன.
</p><p>டெனிஸ் டிசோர் மற்றும் அவரது வாழ்க்கைத் துணை டேவிட் பிளேக் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளனர்.</p><p>
டிசோர் பொதுமக்கள் மீது மோசடி செய்த குற்றத்தையும், பிளேக் குற்றவியல் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை வைத்திருந்த குற்றத்தையும் ஏற்றுக்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/026842df-cd36-42a6-b022-486923f2acc6/26-6a7894e23f5d4.webp' /></p><p>
</p><p>ரொறன்ரோவில் 2024 நவம்பரில் நடைபெற்ற டெய்லர் ஸ்விஃப்ட்டின் 6 கச்சேரிகளுக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்காக 107 பேர் டிசோரிடம் பணம் கொடுத்துள்ளனர்.
</p><p>சிலர் 2023 ஆகஸ்ட் மாதத்திலேயே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, அந்த ஆண்டின் கிறிஸ்மஸ் பண்டிகைக்குத் தங்கள் குழந்தைகளுக்குப் பரிசளிக்கத் திட்டமிட்டிருந்ததாகத் தெரிவித்தனர்.</p><p>
கச்சேரி தொடங்குவதற்குச் சில நாட்களுக்கு முன்புதான் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என டிசோர் உறுதியளித்திருந்தார். </p><p>ஆனால், கச்சேரி நாளில் டிக்கெட்டுகளைப் பெற முயன்றபோதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை மக்கள் உணர்ந்தனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் பணத்தைத் திரும்பக் கேட்டபோது, மூன்றாம் தரப்பினர் யாரோ பணத்தைத் திருடிவிட்டதாக டிசோர் பொய் கூறியுள்ளார்.</p><p> ஆனால், இதில் வேறு எந்த நபரும் சம்பந்தப்படவில்லை என்பதும், திட்டமிட்டே இவர்கள் ஏமாற்றியுள்ளனர் என்பதும் விசாரணையில் அம்பலமானது.
மேலும், இவர்கள் மோசடி செய்த தொகையைக் கொண்டு 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் பல்வேறு ஆன்லைன் சூதாட்டத் தளங்களில் பந்தயம் கட்டியது தெரியவந்துள்ளது.
</p><p> இதே காலகட்டத்தில், இவர்கள் ஏடிஎம் மூலம் சுமார் 297,000 டொலர் ரொக்கப் பணத்தை 350 முறைகளாக எடுத்துப் பயன்படுத்தியுள்ளனர்.
</p><p>இணையதளங்களில் "பிளாக்ஹாக் டெனிஸ்" என்ற பெயரில் வலம் வந்த டிசோர், நீதிமன்றத்தில் தனது செயலுக்கு மன்னிப்பு கோரியதுடன், அந்தச் சமயத்தில் தான் தீவிர ஆன்லைன் சூதாட்டப் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்ததாகத் தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T15:37:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் காலநிலை சீற்றத்தினால் பெரு நட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-day-prairie-storm-cost-840-million-1786285766"></link>
            <id>https://canadamirror.com/article/two-day-prairie-storm-cost-840-million-1786285766</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் மேனிடோபா மற்றும் சாஸ்காட்செவான் ஆகிய மாகாணங்களில் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 840 மில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் மேனிடோபா மற்றும் சாஸ்காட்செவான் ஆகிய மாகாணங்களில் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 840 மில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>கனமழை, புயல், ஆலங்கட்டி மழை மற்றும் காட்டுத்தீ போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் காரணமாக பில்லியன் கணக்கில் காப்பீட்டு இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>டொராண்டோவை மையமாகக் கொண்ட வானிலை பகுப்பாய்வு நிறுவனமொன்றும்கனடாவின் காப்பீட்டுப் பணியகமும் வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b98a34f-c25d-4774-8106-fa051e2f5131/26-6a788ec899034.webp' /></p><p>
</p><p>கடந்த ஜூன் மாதம் மேனிடோபா மற்றும் சாஸ்காட்செவான் ஆகிய மாநிலங்களில் இரு நாட்கள் நீடித்த கடுமையான காற்று, ஆலங்கட்டி மழை மற்றும் கனமழை காரணமாகப் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
</p><p>2025-இல் இவ்விரு மாநிலங்களிலும் காப்பீடு செய்யப்பட்ட மொத்த இழப்பு சுமார் $760 மில்லியன் ஆகும். இதில் $430 மில்லியன் காட்டுத்தீயால் ஏற்பட்ட சேதங்கள் மட்டுமே.
</p><p>2021-ஆம் ஆண்டு முதல் இவ்விரு பிராந்தியங்களிலும் 30 பேரிடர் நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. இதனால் ஏற்பட்ட மொத்த இழப்பு $2.5 பில்லியனுக்கும் அதிகமானது.</p><p>
கடந்த 5 ஆண்டுகளில் இப்பகுதியில் வாழும் ஒவ்வொரு நபருக்கும் சராசரியாக $1,000 காப்பீட்டு இழப்பு ஏற்பட்டுள்ளது. இது முந்தைய ஐந்து ஆண்டு காலக்கட்டத்தை விட 140 சதவீதம் அதிகம் ஆகும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T15:36:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் சட்பரி பகுதியில் கடும் கரப்பான் பூச்சித் தொல்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sudbury-woman-says-her-building-is-chronically-1786286404"></link>
            <id>https://canadamirror.com/article/sudbury-woman-says-her-building-is-chronically-1786286404</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாநிலத்தில் உள்ள சட்பரி நகரில் அமைந்துள்ள பான் தெரு அடுக்குமாடி குடியிருப்பில், கடுமையான கரப்பான் பூச்சித் தொல்லை காரணமாக மக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாநிலத்தில் உள்ள சட்பரி நகரில் அமைந்துள்ள பான் தெரு அடுக்குமாடி குடியிருப்பில், கடுமையான கரப்பான் பூச்சித் தொல்லை காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
</p><p>ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக மருந்து தெளிப்பதற்குப் பதிலாக, கட்டடம் முழுமைக்கும் ஒரே நேரத்தில் பூச்சிக்கொல்லி தெளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் திரண்டு நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.</p><p>
குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பில் தன் மகனுடன் வசித்து வரும் மிராண்டா தார்ன்டன் என்பவர், பூச்சிப் பொறிகளில் சிக்கிய கரப்பான் பூச்சிகளின் படங்களையும், கொசு வலைக்கூடாரத்திற்குள் உறங்கும் தன் மகனின் படங்களையும் பகிர்ந்து தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b898f996-2a90-479f-b5a4-129723c9389d/26-6a789146273a1.webp' /></p><p>
</p><p>கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு கரப்பான் பூச்சித் தொல்லை உள்ளது.</p><p> ஆனால், கடந்த இரண்டு மாதங்களில் நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விட்டது என தெரிவித்துள்ளார்.
</p><p>கடந்த ஜூலை மாதம் எனது வீட்டிற்கு மட்டும் வந்து மருந்து தெளித்தார்கள். </p><p>ஆனால், முழு கட்டடத்திற்கும் தெளிக்காத வரை பூச்சிகள் மீண்டும் வந்துகொண்டே தான் இருக்கும் என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T15:36:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளை திறக்க நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opening-of-kotmale-airlocks-1786287465"></link>
            <id>https://tamilwin.com/article/opening-of-kotmale-airlocks-1786287465</id>
            <summary type="text">கொத்மலையில் உள்ள காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் சிறிதளவு திறக்கப்பட்டுள்ளன.குறித்த வான...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொத்மலையில் உள்ள காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் சிறிதளவு திறக்கப்பட்டுள்ளன.</p><p>குறித்த வான்கதவுகள் இன்று (09.08.2026) மாலை 7.00 மணி அளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>வான் கதவுகள் திறப்பு</h2><p>
</p><p>
இந்த வான்கதவுகளின் ஊடாக வினாடிக்கு சுமார் 20 கன மீட்டர் என்ற விகிதத்தில் கொத்மலை ஓயாவின் உபரி நீர் வெளியேற்றப்படும் என இலங்கை மகாவலி அதிகார சபையின் பிரதான அணைகள் மற்றும் நீர்த்தேக்க செயல்பாடுகள் பிரிவு அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dac085d9-1aa3-488e-a1c0-32d2e5bf04d3/26-6a7898885c77b.webp' />&nbsp;</p><p>

இந்த சூழ்நிலையின் விளைவாக, கொத்மலை ஓயா மற்றும் நீர்த்தேக்கத்திற்குக் கீழ் உள்ள மகாவலி ஆற்றின் நீர்மட்டம் சிறிதளவு அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>இது குறித்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உடனடியாகத் தெரிவிக்குமாறு அதிகார சபைகள் கேட்டுக்கொண்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T15:35:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உணவகத்தில் கோடாரியுடன் மிரட்டல் விடுத்த நபர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/axe-wielding-man-arrested-outside-vancouver-1786286796"></link>
            <id>https://canadamirror.com/article/axe-wielding-man-arrested-outside-vancouver-1786286796</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள உணவகம் ஒன்றிற்கு வெளியே கோடாரியைக் காட்டி மக்களை மிரட்டிய 29 வயது இளைஞரை வியாழக்கிழமை அன்று பொலிஸார் கைது செய்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள உணவகம் ஒன்றிற்கு வெளியே கோடாரியைக் காட்டி மக்களை மிரட்டிய 29 வயது இளைஞரை வியாழக்கிழமை அன்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>
மெயின் ஸ்ட்ரீட் மற்றும் 24-வது அவென்யூ பகுதிக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
</p><p>சந்தேக நபரான அந்த இளைஞர், உணவகத்தின் வெளிப்புறப் பகுதியில் அமர்ந்திருந்த மனிதர்களை நோக்கிச் சாப்பிடும் கரண்டிகள் மற்றும் கத்திகளை வீசியும், தட்டுகளை உடைத்தும் கடுமையான அச்சுறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0911a59a-c9a4-4289-b092-9381f739543a/26-6a7892cdee4cc.webp' /></p><p>
கையில் கோடாரியை வைத்துக்கொண்டு அங்கு இருந்த மக்களை வெட்டிவிடுவதாக மிரட்டியுள்ளார்.
</p><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வான்கூவர் பொலிஸார், தங்கள் காவல் துறை நாய் பிரிவின் உதவியுடன் அந்த நபரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.</p><p>
கைது செய்யப்பட்ட நபர் காயமடைந்திருந்ததால், முதலில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>
பின்னர், குறிப்பிட்ட தேதியில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற பிணை நிபந்தனையின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். 
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வான்கூவர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T15:35:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேல் படைகள் திரும்பப் பெறாது: ட்ரம்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/netanyahu-rejects-trump-s-peace-plan-of-gaza-1786282839"></link>
            <id>https://news.lankasri.com/article/netanyahu-rejects-trump-s-peace-plan-of-gaza-1786282839</id>
            <summary type="text">ஹமாஸ் ஆயுதங்கள் களையப்படும் வரை தங்கள் படைகளை விலக்கிக்கொள்ள முடியாது என நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் ஆயு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹமாஸ் ஆயுதங்கள் களையப்படும் வரை தங்கள் படைகளை விலக்கிக்கொள்ள முடியாது என நெதன்யாகு தெரிவித்துள்ளார்.</p><p>

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் ஆயுதங்கள் களையப்படும் வரை தங்கள் படைகளை விலக்கிக்கொள்ள முடியாது என டொனால்ட் ட்ரம்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்துள்ளார்.
</p><p>
</p><h2>அமைதித் திட்டம்</h2><p>காஸாவுக்கான அமைதித் திட்டத்தை இஸ்ரேலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் (Donald Trump) அமைதிக் குழு முன்மொழிந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d693950-762e-4cac-824b-a21e574da61e/26-6a78835a7fe05.webp' /></p><p></p><p>
ஆனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) ஹமாஸ் ஆயுதங்கள் களையப்படும் வரை தங்கள் படைகளை விலக்கிக்கொள்ள முடியாது எனக் கூறி அதனை நிராகரித்துள்ளார்.</p><p>

இதுகுறித்து தனது அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அவர், "இதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்: 15 அம்சங்களைக் கொண்ட அந்த ஆவணத்தை இஸ்ரேல் நிராகரிக்கிறது.</p><p><b> நீங்கள் அதை சொல்லவில்லை</b> என்று சிலர் கூறுவதை நான் கேட்டேன். எனவே அதை நான் மீண்டும் இங்கே கூறுகிறேன். 

ஹமாஸ் ஆயுதங்கள் களையப்படும் வரை இஸ்ரேலியப் படைகள் எந்தவொரு படைகளையும் திரும்பப் பெறும் நடவடிக்கையை மேற்கொள்ளாது" என்றார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T15:34:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனவுத்திட்டங்களை கல்லால் அடிப்பது BK போன்ற எதிர்கால கனவாளர்களையும் அடிக்கும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/reeshas-food-festival-issue-1786277201"></link>
            <id>https://ibctamil.com/article/reeshas-food-festival-issue-1786277201</id>
            <summary type="text">ஹெய்னாஸ் எனப்படும் கழுதைப்புலிகளின் மோசமான சந்தர்ப்பவாத வேட்டையாடித்தனத்தில் அல்லது திரைத்துறையில் ரஜினி நடித்த சிவாஜி என்ற படத்தில் நீ அமெரிக்காவுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹெய்னாஸ் எனப்படும் கழுதைப்புலிகளின் மோசமான சந்தர்ப்பவாத வேட்டையாடித்தனத்தில் அல்லது திரைத்துறையில் ரஜினி நடித்த சிவாஜி என்ற படத்தில் நீ அமெரிக்காவுக்குப் போய்விடு சிவாஜி என்ற கருத்தில் எல்லாம் பலருக்கு பெரிதும் நம்பிக்கை இருப்பதில்லை. </p><p>

எனினும் அவ்வாறான நம்பிக்கையில்லாதவர்களைக் கூட சலிப்படையவும் விரக்தியையும் கொள்ள வைக்கும் வகையில் சமூக வலைத்தள வேட்டையாடிகளின் ஹெய்னாஸ் ரக வடக்கின் ஒரு நிகழ்வை மையப்படுத்திய பதிவுகளாக வருகின்றன.</p><p> அதிலும் விமர்சனங்கள் என்ற பெயரில் கிட்டியதே வாய்ப்பு என திட்டமிட்ட அவதூறுகள் வருகின்றன
</p><p>
போரால் பாதிக்கப்பட்ட வடபுலத்தில் தனது மக்களுக்காக ஒரு மனிதன் களத்தில் இறங்கி சில திட்டங்களை வகுத்து தனது நேரத்தையும் உழைப்பையும் செலவிடும் போது சமூக ஊடகத்தின் சில பக்கங்கள் அந்த மனிதரை ஹெய்னாஸ்கள் போலத் தாக்கி பிரபலமடைகின்றன
</p><p>
ஒருவருக்கு அவரது திறமைக்கும் உழைப்புக்கும் அவரது சொந்த மண்ணில் மதிப்பு கிடைப்பதற்கு ஒரு சமூகமும் அமைப்பும் வேண்டும். </p><p>ஒருகாலத்தில் அங்கு அந்த சமுகஅமைப்பு சரியாக இருந்தாலும் இப்போது அதற்குள் வேட்டையாடிகள் புகுந்து சிந்தனையோட்ட வறுமையை வெளிப்படுத்தி ....யாரிவர்? இவரால் என்ன செய்ய முடியும்….என ஒரு மனிதரை குறிவைக்கும் வெளிப்படுத்தல்களை செய்கின்றார்கள். </p><p>


இவ்வாறான சமுகத்தள வேட்டையாடிகள் சொற்ப நாட்களில் துண்டைக்காணோம் துணியை காணோம் என அகன்றுவிடக்கூடும். ஆனால் மாற்றங்களை உருவாக்கத்தலைப்படுவர்களில் பலர் கரவொலிகளை எதிர்பார்க்காமல் எதிர்ப்புகளைக் கடந்து முன்னேறும் முகங்களாக தொடரககூடும். </p><p>இந்த முகங்களில் றீச்சா BK யும் ஒருவராக இருக்கவேண்டும்.

ஒரு தலைமுறையின் வாழ்க்கையையே மாற்றிவிடும் சில திட்டங்கள் காயப்படக்கூடாதென்பதால் இயக்கச்சியில் இருப்பதற்கு பதிலாக நெதர்லாந்துக்கு சென்று உங்கள் திறமையைப் பயன்படுத்திக்கொளளுங்கள்; என சிவாஜி பட விவேக் பாணியில் விரக்தி ஆலோசனைக்கு இங்கு பரிந்துரைகள் கூடாது.
</p><p>
பல வருடங்களுக்கு முன்னர் இலங்கையை மாற்ற முடியவில்லை என்பதால் அந்த நாட்டை விட்டு வெளியேறிய ஏதிலிகளின் அடுத்தகட்டம் இப்போது அதே நாட்டுக்கு திரும்பி அங்கு ஒரு மாற்றத்துக்கு முயற்சி செய்யும் போது அவ்வாறான முயற்சிகளை நோக்கமும் தரமும் அறமும் அற்ற கீழ்நிலையில் விமர்சனங்களால் அடிப்பது அபத்தம் </p><p>

உணவுத்திருவிழாவில் நடந்த சம்பவங்கள் போல இனிமேல் இடம்பெறக்கூடாதென கரிசனை கொள்வது இயல்பானது. திடீர் நெருக்கடிகள் தான் புதிய பாடங்களை தருவது.</p><p> ஆனால் இந்த நெருக்கடிகளுக்குரிய பொறுப்புக்கூறல் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவற்றை கேலி செய்வது அவதூறு செய்வது தனிப்பட்ட தாக்குதலை நடத்தும் கலவைகள் தான் இங்கு நாசகாரம்.</p><p> 

ஒரு திட்டத்தை விமர்சிப்பதற்கு உரிமை உள்ளதுபோலவே ஒரு திட்டத்தை உருவாக்கியவருக்கும் அதுகுறித்த சில கனவுகளை கண்டு அதனை நடைமுறைப்படுத்துவது குறித்த காணும் உரிமையும் இருக்கிறது. </p><p>ஆனால் கனவுத்திட்டங்களை கொண்டிருப்பவர்களை ஒவ்வொரு முறையும் கல்லால் அடித்துக்கொண்டிருந்தால் நாளை றீச்சா போல கனவு காண முன்வருபவர்கள் குறைந்து விடுவார்கள். </p><p>இது நல்ல முயற்சிகளையும் நிராகரித்து ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு ஆபத்தான குழியையும் பறித்துவிடும். </p><p>

BK இன் உணவுத்திருவிழாவை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் அதற்காக அவர் எடுத்த முயற்சியை நேர்மையாக மதிப்பிடாமல் கொச்சைப்படுத்த முடியாது. அதற்கான பொறுப்பு சமூகவலைத்தள வேட்டையாடிகளுக்கும் உள்ளது&nbsp; &nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T15:24:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் காட்டுத்தீ தீவிரம்: அனைத்து சுற்றுலா வழிகளும் முடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wildfires-in-indonesia-all-tourist-routes-closed-1786286070"></link>
            <id>https://tamilwin.com/article/wildfires-in-indonesia-all-tourist-routes-closed-1786286070</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பிராந்தியத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற புரோமோ
எரிமலை தேசிய பூங்காவில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து,
அப்பக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பிராந்தியத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற புரோமோ
எரிமலை தேசிய பூங்காவில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து,
அப்பகுதிக்கான அனைத்து சுற்றுலா நடவடிக்கைகளும் தற்காலிகமாக
இடைநிறுத்தப்பட்டுள்ளன.
</p><p>
கடந்த திங்கட்கிழமை முதல் பரவி வரும் இந்தக் காட்டுத்தீ, எரிமலையின் பள்ளப்
பகுதியைச் சுற்றி இதுவரை சுமார் 176 ஹெக்டேயர் (434 ஏக்கர்) நிலப்பரப்பை
எரித்து சாம்பலாக்கியுள்ளது.
</p><p>
வியாழக்கிழமை வரை 60 ஹெக்டேயராக இருந்த தீப்பரவல், தற்போது மிகவும் வேகமாகவும்
விரிவடைந்துள்ளது.</p><p></p><h2>தீ விபத்து</h2><p>
</p><p>
பார்வையாளர்கள், பணியாளர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் பாதுகாப்பைக்
கருத்திற்கொண்டு சனிக்கிழமை மாலை முதல் இந்த மூடல் நடவடிக்கை
அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
</p><p>
ஏற்கனவே நுழைவுச்சீட்டுகளைக் கொள்வனவு செய்தவர்கள் பயண திகதியை மாற்றிக்கொள்ள
அல்லது பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/187eb181-753b-4b98-97e6-47940bc599bd/26-6a789414beed2.webp' /></p><p>

தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஹெலிகொப்டர்கள் மற்றும் நீர் தெளிக்கும்
ட்ரோன் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் கிழக்கு ஜாவா பேரிடர் மேலாண்மை
முகவரகம் தெரிவித்துள்ளது.
</p><p>
மலைச்சரிவுகளில் தீ கட்டுக்கடங்காமல் பரவி வரும் போதிலும், இதுவரை எவ்வித
உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ பதிவாகவில்லை என அதிகாரிகள்
உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை உத்தியோகபூர்வமாக எதுவும்
தெரிவிக்கப்படவில்லை.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T15:15:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு புதிய ஊடகப்பேச்சாளர் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-media-spokesperson-prisons-department-1786287045"></link>
            <id>https://ibctamil.com/article/new-media-spokesperson-prisons-department-1786287045</id>
            <summary type="text">&amp;nbsp; சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக்க பல்லேதென்ன நியமிக்கப்பட்டுள்ளார். 

இன்று (09) முதல் நடைமுற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக்க பல்லேதென்ன நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p> 

இன்று (09) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

இவர் இதற்கு முன்னர் மஹர சிறைச்சாலை அத்தியட்சகராகவும், பயிற்சிப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.</p><h2>&nbsp;போதைப்பொருள் துஷ்பிரயோகம் பற்றிய கல்வியியல் டிப்ளோமா</h2><p> </p><p>

சேனக்க பல்லேதென்ன காலி ரிச்மண்ட் கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன், கொழும்பு பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் பற்றிய கல்வியியல் டிப்ளோமா படிப்பையும் பூர்த்தி செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cb56e96-1296-447d-8a7f-d546e139c94b/26-6a7897f16ba3c.webp' /></p><p> </p><p>

மேலும், இந்தியாவின் கேரளாவில் மறுவாழ்வு மற்றும் சீர்திருத்த முகாமை தொடர்பான டிப்ளோமா படிப்பையும் கற்றுள்ள இவர், போதைப்பொருள் துஷ்பிரயோகம் தொடர்பாக இந்தியா, தாய்லாந்து, மலேசியா, மாலைதீவு, துருக்கி ஆகிய நாடுகளில் பல டிப்ளோமா படிப்புகளையும் பயின்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T15:08:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலி பணத்தாள் அச்சிட்டவருக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/the-fate-that-befell-the-counterfeiter-1786276479"></link>
            <id>https://jvpnews.com/article/the-fate-that-befell-the-counterfeiter-1786276479</id>
            <summary type="text">போலி பணத்தாள்களை அச்சிட்டதாகக் கூறப்படும் 53 வயதுடைய நபரொருவர் மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.மிரிஹானை கோட்டை வீதி பகுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>போலி பணத்தாள்களை அச்சிட்டதாகக் கூறப்படும் 53 வயதுடைய நபரொருவர் மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>மிரிஹானை கோட்டை வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>இதன்போது, 5,000 ரூபாய் பெறுமதியான ஏழு போலி பணத்தாள்கள், 1,000 ரூபாய் பெறுமதியான ஆறு போலி பணத்தாள்கள் மற்றும் 500 ரூபாய் பெறுமதியான ஒரு போலி பணத்தாள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>மேலும், ஒரு கணினி, ஸ்கேனர் மற்றும் போலி பணத்தாள்களை அச்சிடப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பல்வேறு உபகரணங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-09T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[குரு உதயம் 2026: ஆகஸ்ட் 10 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், பதவி, புகழ் தேடி வரும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/jupiter-rises-in-cancer-on-august-who-get-luck-1786285914"></link>
            <id>https://manithan.com/article/jupiter-rises-in-cancer-on-august-who-get-luck-1786285914</id>
            <summary type="text">நவகிரகங்களில் குருபகவான் மிகவும் மங்களகரமான கிரகமாகவும், தேவர்களின் குருவாகவும் கருதப்படுகிறார். குருபகவானின் பெயர்ச்சி, அஸ்தமனம், உதயம் போன்ற இயக்க ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களில் குருபகவான் மிகவும் மங்களகரமான கிரகமாகவும், தேவர்களின் குருவாகவும் கருதப்படுகிறார். குருபகவானின் பெயர்ச்சி, அஸ்தமனம், உதயம் போன்ற இயக்க மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் சாதகமான மற்றும் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும்.</p><p>

தற்போது, குருபகவான் தனது உச்ச ராசியான கடகத்தில் அஸ்தமன நிலையில் இருப்பதால், ஜோதிட ரீதியாக அவரது பலம் குறைந்துள்ளது.இந்நிலையில், 2026 ஆகஸ்ட் 10-ஆம் தேதி கடக ராசியில் குருபகவான் உதயமாகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc76bea6-0aae-43aa-a74b-3397816f56de/26-6a7895809552a.webp' /></p><p>ஏற்கனவே குருபகவான் ‘ஹம்ஸ மகாபுருஷ ராஜயோகத்தை’ உருவாக்கியுள்ள நிலையில், அவரது உதயம் மேலும் குருவின் பலத்தை அதிகரிக்கும். இந்த பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் பிரதிபலித்தாலும் அதிகளவில் சாதக நன்மைகளை பெறப்போகும் ராசிகள் யார் யார் என விரிவாக பார்க்கலாம்.</p><p></p><h2>கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/706c9572-d019-48e6-8d21-845abdb66ac0/26-6a7895814a172.webp' /></p><p>
கடக ராசியில் குருபகவான் முதல் வீட்டில் உதயமாவதால் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக நிறைவடையும். </p><p>வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும்.</p><p> எதிர்காலத்தில் நன்மை தரக்கூடிய புதிய தொடர்புகள் கிடைக்கும். உங்கள் ஆளுமைக்கு அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்கும்.நிதிநிலை நீண்ட காலத்திற்கு நிலையாக இருப்பதுடன், ஆரோக்கியமும் சாதகமாக இருக்கும். </p><p>தொழிலில் திருப்தி ஏற்படுவதுடன், வியாபாரிகளுக்கு ஒப்பந்தங்கள் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். போட்டியாளர்களை சமாளிக்கும் திறன் அதிகரிக்கும்.&nbsp;</p><h2>
கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71800a91-1cfa-4ecd-8c5b-c655cc71d671/26-6a78958201298.webp' /></p><h2>
</h2><p>கன்னி ராசிக்கு லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் குருபகவான் உதயமாகிறார். ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குப் பிறகு எதிர்பாராத நன்மைகள் கிடைக்கலாம். </p><p>வருமானம் கணிசமாக அதிகரிக்கும் வியாபாரிகள் நல்ல லாபம் ஈட்டுவார்கள். இந்த காலகட்டத்தில் சுறுசுறுப்பும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். </p><p>இதனால் நீண்ட நாட்களாக இருந்து வந்த பல்வேறு பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குருவின் இந்த மாற்றம் கன்னி ராசிக்காரர்களுக்கு பல சிக்கல்களில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்பை வழங்கும்.
</p><h2>
தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4932eba2-8074-4e53-b42a-8bcb9d49a4f8/26-6a789582aa073.webp' /></p><p></p><p>தனுசு ராசிக்காரர்களுக்கு ஆயுள் மற்றும் திடீர் லாபத்தின் 8ஆம் வீட்டில் குருபகவான் உதயமாகிறார். இந்த காலகட்டத்தில் செல்வம் பெருகும் வாய்ப்புள்ளது.</p><p> முதலீடுகளும் நல்ல பலனைத் தரும். இலக்குகளை அடைவதில் வேகம் அதிகரிக்கும். செல்வாக்கு மிக்கவர்களுடன் ஏற்படும் தொடர்புகள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை கொண்டு வரலாம்.</p><p>

அங்கீகாரமும் புகழும் தேடி வரும். குருபகவானின் உதயம் உறவுகளில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும். இதன் மூலம் வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T14:58:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் திட்டத்தை அதிரடியாக நிராகரித்த நெதன்யாகு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/israel-rejects-donald-trump-15-point-proposal-1786285227"></link>
            <id>https://tamilwin.com/article/israel-rejects-donald-trump-15-point-proposal-1786285227</id>
            <summary type="text">​அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் முன்வைக்கப்பட்ட காசாவுக்கான 15 அம்ச
அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>​அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் முன்வைக்கப்பட்ட காசாவுக்கான 15 அம்ச
அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின்
நெதன்யாகு அறிவித்துள்ளார்.

​</p><h2>படைகளை திரும்பப் பெறல்..&nbsp;&nbsp;</h2><p>ஹமாஸ் அமைப்பு முழுமையாகத் தனது ஆயுதங்களைக் கீழே போட்டுப் பணியாத வரை காசா
முனையிலிருந்து இஸ்ரேலியப் படைகள் திரும்பப் பெறப்பட மாட்டாது என அவர்
திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da1d312c-d0f4-4127-baa9-59c873127d9c/26-6a7894077c8a2.webp' /></p><p>போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் தயாரிக்கப்பட்ட இந்த திட்டத்திற்குத்
திருப்புமுனை எட்டப்பட்டுள்ளதாகவும், ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களைக் கையளிக்கச்
சம்மதித்துள்ளதாகவும் ட்ரம்ப் கடந்த மாதம் அறிவித்திருந்தார்.

​</p><p>எனினும், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் போர்நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்ட
போதிலும், காசா பகுதிகள் மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை
நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T14:51:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறை சம்பவங்கள்;அரசாங்கத்துக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/prison-incidents-human-rights-commission-warns-1786277021"></link>
            <id>https://jvpnews.com/article/prison-incidents-human-rights-commission-warns-1786277021</id>
            <summary type="text">கடந்த நாட்களில் நாட்டின் சில சிறைச்சாலைகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, அது தொடர்பான அனைத்து நிறுவனப் பிரதானிகளுக்கும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த நாட்களில் நாட்டின் சில சிறைச்சாலைகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, அது தொடர்பான அனைத்து நிறுவனப் பிரதானிகளுக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளதாக அந்த ஆணைக்குழுவின் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>சிறைச்சாலைகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்த கலந்துரையாடல் நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.&nbsp;</p><p>இதற்கமைய, குறித்த கலந்துரையாடலுக்காக சிறைச்சாலைகள் திணைக்களப் பிரதானிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் செயலாளர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>சிறைக் கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முறையான பொறிமுறையொன்றைச் செயற்படுத்த அரசாங்கம் தவறினால், இது தொடர்பில் எதிர்காலத்தில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என நிமல் ஜி.புஞ்சிஹேவா எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-09T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[எழிலை கண்டுபிடித்த கயல்.. சன் டிவி கயல் சீரியல் அடுத்த வார ப்ரோமோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/kayal-serial-next-week-promo-kayal-finds-ezhil-1786284935"></link>
            <id>https://cineulagam.com/article/kayal-serial-next-week-promo-kayal-finds-ezhil-1786284935</id>
            <summary type="text">சன் டிவியில் மிகவும் பரபரப்பாக ஓடி கொண்டு இருக்கும் முக்கிய சீரியல்களில் ஒன்று கயல். அதில் கணவர் எழிலை கண்டுபிடிக்க முடியாமல் கயல் திணறி வரும் நிலையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>சன் டிவியில் மிகவும் பரபரப்பாக ஓடி கொண்டு இருக்கும் முக்கிய சீரியல்களில் ஒன்று கயல். அதில் கணவர் எழிலை கண்டுபிடிக்க முடியாமல் கயல் திணறி வரும் நிலையில் தற்போது ஒரு வழியாக ஒரு துப்பு கிடைக்கிறது.</p><p>தற்போது வெளியாகியிருக்கும் அடுத்த வார ப்ரோமோ வீடியோவில் அது காட்டப்பட்டிருக்கிறது. எழில் அடிபட்டு கிடந்ததாக கூறப்படும் குப்பை மேட்டிற்கு சென்று விசாரித்தால் ஏதாவது தகவல் கிடைக்கும் என தர்மலிங்கம் கூறுகிறார்.
</p><p>அதைக் கேட்டு கயலும் உடனே அங்கே சென்று துப்புரவு வேலை செய்பவர்களிடம் விசாரிக்கிறார். அவர்கள் எழில் அடிபட்டு கிடந்ததையும், அவரை தூக்கி சென்று மருத்துவமனையில் நாங்கள் தான் சேர்த்தோம் என்பதையும் கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82a8f15d-29f7-4581-98b3-6660be45e4a9/26-6a788b88dbd7b.webp' /></p><p>
</p><p>அதை கேட்டு கயல் பதற்றத்துடன் அந்த மருத்துவமனைக்கு ஓடி செல்கிறார். ஆனால் அங்கே போனால் மருத்துவமனை ரெஜிஸ்டரில் எழில் பெயர் இல்லை என்பதை பார்த்து அதிர்ச்சி ஆகிறார். மருத்துவமனை நிர்வாகம் சொல்வதைக் கேட்டால் கண்டுபிடிக்க முடியாது, அதனால் அவரே எல்லா அறைக்கும் சென்று பார்க்க தொடங்கி விடுகிறார்.
</p><p>அப்போது எழில் அங்கு இருப்பதை அவர் பார்த்து விடுவாரா? ப்ரோமோ வீடியோவில் நீங்களே பாருங்கள்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/qvwUSfvQFwU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-09T14:27:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிக்ஸர்களை பறக்கவிட்ட சிராஜ்: பயிற்சி டெஸ்டில் இலங்கையை வீழ்த்திய இந்திய அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/siraj-smashing-sixers-india-beat-sri-lanka-xi-test-1786285267"></link>
            <id>https://news.lankasri.com/article/siraj-smashing-sixers-india-beat-sri-lanka-xi-test-1786285267</id>
            <summary type="text">இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்டில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இலங்கை கிரிக்கெட் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி டெஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்டில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
</p><p>

இலங்கை கிரிக்கெட் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
</p><p>

</p><h2>பயிற்சி டெஸ்ட்&nbsp;</h2><p>இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் லெவன் அணிகளுக்கு இடையிலான பயிற்சி டெஸ்ட் கொழும்பில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18d1cd61-2e21-4e36-bb37-3a056079c972/26-6a788cd694185.webp' />&nbsp;</p><p></p><p>
முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 363 ஓட்டங்களும், இந்தியா அணி 357 ஓட்டங்களும் குவித்தன. இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 200 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.</p><p>

பின்னர் ஆடிய இந்திய அணி ஜெய்ஸ்வால் 61 ஓட்டங்களும், கில் 44 ஓட்டங்களும் எடுத்தனர்.</p><p>

மொஹம்மது சிராஜ் (Mohammed Siraj) சிக்ஸர்களை பறக்கவிட்டு 15 பந்துகளில் 32 ஓட்டங்கள் (4 சிக்ஸர், 1 பவுண்டரி) விளாச, இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&nbsp; &nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c2277e8-ff26-443c-bb84-180cd66bf6ca/26-6a788cd5d81f5.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T14:19:08+00:00</updated>
        </entry>
    </feed>
