<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-08T00:45:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வரும் முக்கியஸ்தர்: கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-traffic-plan-in-colombo-1788827357"></link>
            <id>https://tamilwin.com/article/special-traffic-plan-in-colombo-1788827357</id>
            <summary type="text">&amp;nbsp;இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் உத்தியோகபூர்வ இலங்கை விஜயத்தை முன்னிட்டு, இன்று முதல் வியாழக்கிழமை (செப். 10) வரை கொழும்பு பகுதியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் உத்தியோகபூர்வ இலங்கை விஜயத்தை முன்னிட்டு, இன்று முதல் வியாழக்கிழமை (செப். 10) வரை கொழும்பு பகுதியில் சிறப்பு போக்குவரத்து மேலாண்மைத் திட்டம் அமல்படுத்தப்படும் என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 
பாதுகாப்பு அமைச்சரின் மோட்டார்வாகனப் பேரணி பயணிக்கும் வீதிகளில் தற்காலிக போக்குவரத்து கட்டுப்பாடுகளும், மாற்றுப்பாதை திருப்பங்களும் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தேவைப்படும் இடங்களில் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். </p><p>
இன்று, பிற்பகல் 1:30 மணி: பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து அமைச்சர் தங்கும் ஹோட்டல் வரையிலான வீதி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba7b1a0a-2aae-4848-b1e8-a48dfbc21059/26-6a9f56e205918.webp' /></p><p> </p><p>
இன்று, இரவு 8:00 - 9:00 மணி வரை: தங்கும் ஹோட்டலிலிருந்து இந்திய உயர்ஸ்தானிகராலயம்&nbsp; வரையிலான பயணம் மற்றும் திரும்பும் வழி.
</p><p>புதன்கிழமை (9), காலை 9:50 - 11:25 மணி வரை: தங்கும் ஹோட்டலிலிருந்து ஜனாதிபதி செயலகம் வரையிலான பயணம் மற்றும் திரும்பும் வழி.
</p><p>புதன்கிழமை (9), பிற்பகல் 2:00 மணி முதல்: அமைச்சரின் திட்டமிடப்பட்ட ஏனைய பயணங்களுக்கான போக்குவரத்து கட்டுப்பாடுகள்.</p><p> 
புதன்கிழமை (9), இரவு 7:00 - 7:10 மணி வரை: தங்கும் ஹோட்டலிலிருந்து திட்டமிடப்பட்ட பயணத்திற்கான வீதி. </p><p>
வியாழக்கிழமை (10), காலை 9:00 - 9:10 மணி வரை: அமைச்சரின் புறப்பாட்டின் போது மேற்கொள்ளப்படும் போக்குவரத்து கட்டுப்பாடுகள்.
</p><p>வாகனப் பேரணியின் நகர்வுகளுக்கு ஏற்ப இக்கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும். எனவே, வீதிகளில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு சாரதிகள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். </p><p>
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று முதல் எதிர்வரும் 10 வரை மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தருகிறார்.</p><p> 
இந்த விஜயத்தின் போது, அவர் இலங்கைத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதுடன், கொழும்பிலுள்ள இந்திய சமூகத்தினரையும் சந்திக்கவுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T00:45:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக நாடுகளிடம் ஈரானின் கோரிக்கை ; அமெரிக்காவிற்கு காத்திருக்கும் சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-s-appeal-to-world-nations-1788828274"></link>
            <id>https://canadamirror.com/article/iran-s-appeal-to-world-nations-1788828274</id>
            <summary type="text">அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒற்றுமையாகவும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என ஈரான் கோரியுள்ளது.

ஈரானின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒற்றுமையாகவும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என ஈரான் கோரியுள்ளது.
</p><p>
ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ce44754-f7ea-4444-ad6d-34cd4ed8cb62/26-6a9f5a738d1de.webp' /></p><p>

OIC என்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் புதிய பொதுச் செயலாளரான இஸ்மாயில் உல்ட் ஷெய்க் அகமதுடன் (Ismail Ould Cheikh Ahmed) தொலைபேசியில் உரையாடியபோது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.</p><p>

பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதல்கள் குறித்தும், ஈரானின் இறையாண்மைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்தும் இதன்போது OIC தலைவரிடம் அராக்சி தனது அதிருப்தியை பகிர்ந்து கொண்டார்.
</p><p>
பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய பதற்றமான சூழலை எதிர்கொள்ள இஸ்லாமிய நாடுகள் யாவும் தெளிவான மற்றும் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டியதன் அவசியத்தை அராக்சி இந்த தொலைபேசி உரையாடலின்போது வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-08T00:44:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு எம்.பி கள் மீது ஊழல் மோசடி விசாரணை ; கந்தசாமி பிரபு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/corruption-probe-against-batticaloa-mps-1788827813"></link>
            <id>https://jvpnews.com/article/corruption-probe-against-batticaloa-mps-1788827813</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மீது ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனவே ஊழல் மோசடி தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மீது ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. </p><p style="text-align: justify; ">எனவே ஊழல் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளில் தொடர்புபட்டவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்பட்டார்கள் சட்டம் தன் கடமையை சுயாதீனமாக செய்யும் என நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/210df6db-cff6-41bb-b16d-8b8b3437ab11/26-6a9f58a720c79.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
மட்டக்களப்பில் திங்கட்கிழமை (7) ஊழல் தொடர்பாக ஊடகவியலாளர் கேள்விக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
</p><p style="text-align: justify; ">
குற்றச்சாட்டுகள் தொடர்பாக மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p style="text-align: justify; ">சட்டத்திற்கு மதிப்பளித்து அனைவரும் செயல்பட வேண்டும் என்பதோடு, விசாரணையின் முடிவில் எட்டப்படும் தீர்மானங்கள் எவ்வித தலையீடுமின்றி நடைமுறைப்படுத்தப்படும்.
</p><p style="text-align: justify; ">

சட்ட ஆட்சியை நடைமுறைப்படுத்தும் ஒரு அரசாங்கம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எனவே ஜனாதிபதி வேட்பாளராக இருந்தவர்கள் ஆளுநராக இருந்தவர்கள் இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் அதே சட்டம் பாயும்.</p><p style="text-align: justify; ">
நாமல் ராஜபக்ச தற்போது சிறைவாசம் அனுபவித்து கொண்டிருக்கும் நிலையில் சமூகத்தில் பலவிதமான கருத்துக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது அதே நேரத்தில் முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் எதிர்க்கட்சி ஆளும் கட்சியாக இருந்த காலத்தில் ராஜபக்ச குடும்பத்தினரை 'திருடர்கள்' என பகிரங்கமாக விமர்சித்தார்.
</p><p style="text-align: justify; ">
இவ்வாறு ராஜபக்ஸக்கள் திருடர்கள் என சொன்ன ரணில் கடந்த காலத்தில் அவர்களுடன் சேர்ந்து ஆட்சி பீடம் ஏறிய அவர் இன்று அந்த திருடர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றார்

ரணிலுக்கு அன்று ராஜபக்ஷக்கள் திருடர்களாக தெரிந்தது இன்று அவர்கள் நல்லவர்கள் போல தெரிகின்றது.</p><p style="text-align: justify; "> ஆகவே இந்த திருட்டுக் கும்பலின் மகிந்த ராஜபக்ஷக்களின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க பெறுப்பேற்றுள்ளார்.</p><p style="text-align: justify; "> அவர்களின் செயல்பாடு இன்று மக்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள இந்த நாட்டை வங்குரோத்து அடைய காரணமாக இருந்தவர்களில் இவரும் ஒருவராக இருந்துள்ளதுடன் குற்ற செயல்களுடன் சம்மந்தமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இவா திருட்டு கூட்டங்களுடன் ஒன்று சேர்ந்து அவர்களை காப்பாற்ற முயற்சியில் ஈடுபடுகின்றார்.</p><p style="text-align: justify; ">
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நாட்டின் நீதித்துறை மற்றும் விசாரணை அமைப்புகள் முற்றிலும் சுயாதீனமாக இயங்கி வருகின்றன. சிறியவர்களாக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் குற்றம் நிருபிக்கப்பட்டால் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றார்.</p>]]></content>
            <updated>2026-09-08T00:37:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திய விடுதலைப் புலிகள்! போரின் இறுதிக்கட்டம் குறித்து மனம் திறந்த சவேந்திர சில்வா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-war-shavendra-silva-exclusive-interview-1788826651"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-war-shavendra-silva-exclusive-interview-1788826651</id>
            <summary type="text">நாட்டின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தவறுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை இலங்கையின் முன்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தவறுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் முன்னாள் பிரதானியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, நிராகரித்துள்ளார்.
</p><p>
இந்தியாவை தளமாகக் கொண்ட சமூக ஊடகமொன்றுக்கு&nbsp; வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><h2>&nbsp;பதிலளிக்கத் தயார்</h2><p>2009ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கிய சவேந்திர சில்வா, தமக்கு எதிராக முன்வைக்கப்படும் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும், தமக்கு எதிராக சர்வதேச அளவில் விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கான அடிப்படை என்னவென்று கேள்வி எழுப்பியுள்ளதாகவும் குறி்பிட்டுள்ளார்.</p><p>
அமெரிக்காவினால் தனக்கும் தனது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அண்மையில் பிரித்தானியாவும் தமக்கு எதிராக தடைகளை விதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b58e3908-8738-4ad1-bbab-2c3e352e2a23/26-6a9f568f84636.webp' /></p><p>

“எதற்காக எனக்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன? நான் என்ன தவறு செய்தேன் என்பதை தெரிவிக்குமாறு தொடர்ந்து கேட்டு வருகின்றேன். நான் போர்க்குற்றவாளி அல்ல. எனது நாட்டுக்காகவே போராடினேன்” என அவர் தெரிவித்தார்.</p><p>

இராணுவ சட்டங்களை தாம் மீறியிருந்தால், உரிய விசாரணை நடத்தப்பட்டு சட்டத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>

2020ஆம் ஆண்டு அமெரிக்கா, போரின் இறுதிக்கட்டத்தில் கட்டளைப் பொறுப்பு ஊடாக மனித உரிமைகளின் பாரிய மீறல்களில் சவேந்திர சில்வா ஈடுபட்டதாக நம்பகமான தகவல்கள் இருப்பதாகக் கூறி, அவருக்கும் அவரது நெருங்கிய குடும்பத்தினருக்கும் பயணக் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. </p><p>இதேவேளை, 2025ஆம் ஆண்டு பிரித்தானியாவும் போர்க்கால மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து சவேந்திர சில்வாவுக்கு தடைகளை விதித்திருந்தது.</p><h2>இராணுவத்தின் நோக்கம்</h2><p>
</p><p>
இராணுவம் திட்டமிட்டு பொதுமக்களை இலக்குவைத்ததாக முன்வைக்கப்படும்&nbsp; இந்த குற்றச்சாட்டுகளையும் சவேந்திர சில்வா நிராகரித்தார்.எனினும், மோதல்களின் போது பொதுமக்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்பதை அவர் ஏற்றுக்கொண்டார்.</p><p>
பொதுமக்கள் உயிரிழப்புகளை ஏற்படுத்துவது இராணுவத்தின் நோக்கமாக இருக்கவில்லை என்றும், இராணுவ நடவடிக்கைகளை திட்டமிடும்போது பொதுமக்கள் உயிரிழப்புகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
போரின் இறுதிக்கட்டத்தில் தமது படைப்பிரிவு 123,000க்கும் மேற்பட்ட பொதுமக்களை மீட்டதாகவும், போர் முடிவில் சரணடைந்த சுமார் 12,000 விடுதலைப் புலி உறுப்பினர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் தமது படைப்பிரிவிடம் சரணடைந்ததாகவும் அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c27ed5c-7edc-47d7-88b8-e1fd252b921f/26-6a9f5690795cd.webp' /></p><p>
</p><p>
சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டதாகவும், ஆயுதங்களை கைவிட்டவர்களிடம் இராணுவம் எவ்வாறு அணுகுமுறையை மேற்கொண்டது என்பதற்கு இது எடுத்துக்காட்டாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
</p><p>
அதேவேளை, இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கையின்போது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றையும் அவர் நினைவுகூர்ந்தார். </p><p>அந்த நடவடிக்கையில் பெருமளவான விடுதலைப் புலி உறுப்பினர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாகவும், அவர்களில் விடுதலைப் புலிகளின் வடக்குப் பிராந்தியத்தைச் சேர்ந்த முக்கிய தளபதி ஒருவரும் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
அவர் சிவில் உடையில் ஆயுதத்துடன் காணப்பட்டதாகக் குறிப்பிட்ட சவேந்திர சில்வா, இவ்வாறான சூழ்நிலைகளில் பொதுமக்கள் உயிரிழப்புகள் எனக் குறிப்பிடப்படும் சிலர் உண்மையில் ஆயுதம் தாங்கிய போராளிகளாக இருந்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
</p><p>
இறுதிக்கட்டப் போரின்போது விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதாகவும், அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதைத் தடுத்ததாகவும் சவேந்திர சில்வா குற்றஞ்சாட்டினார்.</p><h2>விடுதலைப் புலிகள்</h2><p>
</p><p>
மேலும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகில் விடுதலைப் புலிகள் இராணுவ வளங்களை நிலைநிறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>

இலங்கை இராணுவம் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு சர்வதேச மட்டத்தில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் போதிய விளக்கங்களை முன்வைக்கத் தவறியுள்ளதாகவும் சவேந்திர சில்வா விமர்சித்தார்.
</p><p>
இலங்கை இராணுவத்துக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுடன் நேரடியாக கலந்துரையாடி, குறிப்பிட்ட சம்பவங்கள் தொடர்பில் விளக்கம் கோர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24de3c96-2b3d-4e94-8b47-0936286705bd/26-6a9f56912f66f.webp' /></p><p>

“குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட சம்பவத்தில் நீங்கள் இதனைச் செய்தீர்கள் எனக் கூறுங்கள். அதற்கு நாங்கள் விளக்கம் அளிப்போம். ஏதேனும் தவறு செய்திருந்தால் அதை ஏற்றுக்கொள்வோம்” என அவர் தெரிவித்தார்.
</p><p>
விடுதலைப் புலிகள் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்திய அமைப்பு என்ற கருத்தையும் சவேந்திர சில்வா நிராகரித்தார்.மக்களின் குறைகளை ஆயுதப் போராட்டத்தின் மூலம் தீர்ப்பதற்கு பதிலாக அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>
விடுதலைப் புலிகளின் படுகொலைகள், தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் கட்டாய ஆட்சேர்ப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><h2>இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கை</h2><p> </p><p>அதேவேளை, ஒரு அமைப்பு அல்லது அதன் ஆதரவாளர்களின் நடவடிக்கைகளுக்காக ஒட்டுமொத்த இன அல்லது மத சமூகத்தையும் குற்றஞ்சாட்டக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
</p><p>
விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதும், அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களை விடுவிப்பதுமே இராணுவத்தின் நோக்கமாக இருந்ததாகவும், பொதுமக்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் திட்டமிட்டு அத்துமீறல்களில் ஈடுபடவில்லை என்றும் சவேந்திர சில்வா மீண்டும் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f51e9a4f-11da-4b06-acbb-3bced42484de/26-6a9f5691d7e61.webp' /></p><p>

இலங்கையின் இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கை தொடர்பில் சர்வதேச அளவில் நீண்டகாலமாக விசாரணைகளும் விமர்சனங்களும் இடம்பெற்று வருகின்றன. </p><p>இறுதிக்கட்ட மோதலின்போது அரச படைகளாலும் விடுதலைப் புலிகளாலும் சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்டங்கள் கடுமையாக மீறப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
</p><p>
எனினும், சவேந்திர சில்வா உள்ளிட்ட இலங்கை இராணுவத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய தலைவர்கள், பொதுமக்களை இலக்கு வைத்து அரச படைகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T00:35:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் 1 கோடி சம்பளம் பெற்ற இந்திய டெக்கி - சிறிய தவறால் பணி நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-techie-fired-over-sauna-towel-mix-up-1788817298"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-techie-fired-over-sauna-towel-mix-up-1788817298</id>
            <summary type="text">Swiss techie fired over sauna towel mix-up: சுவிட்சர்லாந்தில் 1 கோடி சம்பளம் பெற்ற இந்திய டெக்கி, மூத்த நிர்வாகியுடன் ஏற்பட்ட சிறிய சம்பவத்தால் வேலை இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Swiss techie fired over sauna towel mix-up: சுவிட்சர்லாந்தில் 1 கோடி சம்பளம் பெற்ற இந்திய டெக்கி, மூத்த நிர்வாகியுடன் ஏற்பட்ட சிறிய சம்பவத்தால் வேலை இழந்ததாக கூறியுள்ளார்.</p><p>
</p><h2>சுவிட்சர்லாந்தில் ரூ.1 கோடி சம்பளம்</h2><p>சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய மென்பொருள் பொறியாளர், சுமார் ரூ.1 கோடி வருடச்சம்பளம் பெற்றிருந்தார்.
</p><p>
ஆனால், உடற்பயிற்சி மையத்தில் சோனாவில் நடந்த ஒரு சிறிய தவறால் அவர் வேலை இழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab5a3152-7ad1-4a69-a41f-03421ebc9485/26-6a9f2f93d63a4.webp' /></p><h2>தவறுதலாக துண்டை எடுத்ததற்காக</h2><p>அவரது விளக்கத்தின் படி, மே 8 அன்று ஜிம் சோனாவில் பயிற்சி முடிந்தபின் தவறுதலாக ஒரு மூத்த நிர்வாகியின் துண்டை எடுத்துக் கொண்டார். பின்னர் அந்த நிர்வாகி அமைதியாக நடந்துகொண்டாலும், “புதிய வேலை தேடத் தொடங்குங்கள்” என்று எச்சரித்ததாக கூறப்படுகிறது.
</p><p>
ஐந்து நாட்களுக்குப் பிறகு, மே 13 அன்று, HR குழுவினரிடமிருந்து “பொருளாதார காரணங்களால்” பணி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த சோனா சம்பவமே உண்மையான காரணமாக இருக்கலாம் என்று அவர் சந்தேகிக்கிறார்.</p><p></p><h2>வேறு நிறுவனங்களில் வேலை கிடைக்காது..</h2><p>அவர் 2022 முதல் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பல திட்டங்களில் ஈடுபட்டிருந்தபோதும், திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டதால் திட்டங்கள் தாமதமானதாகவும், தான் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் உழைந்திருந்தாலும் அது அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்று அவர் மனவருத்தம் தெரிவித்தார்.
</p><p>
மேலும், “என்னை ‘சமூக விரோத’ (antisocial) பட்டியலில் சேர்த்துள்ளனர், இதனால் எதிர்காலத்தில் வேறு நிறுவனங்களில் வேலை கிடைக்காது” என்று அவர் குற்றம்சாட்டினார்.</p><p> தற்போது மூன்று மாதங்களாக வேலை இழந்த நிலையில், தனியார் வியாபாரம் தொடங்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p></p><p>இந்த சம்பவம், ஊழியர்களின் வாழ்க்கை எந்த அளவிற்கு உயர்நிலை நிர்வாகத்தின் முடிவுகளின் கீழ் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.</p><p>அவர் இந்த சம்பவத்தை Reddit பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T00:34:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரகசியமாக பாலைவன விமான தளத்தை உருவாக்கிவரும் சீனா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chinas-secret-desert-airbase-for-next-gen-jets-1788827854"></link>
            <id>https://news.lankasri.com/article/chinas-secret-desert-airbase-for-next-gen-jets-1788827854</id>
            <summary type="text">China builds secret desert airbase: சீனா ரகசிய பாலைவன விமான தளத்தை உருவாக்கிவருகிறது.

பாலைவனப் பகுதியில் விமான சோதனை&amp;nbsp;தளம்சீனா தனது மேற்கு பாலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>China builds secret desert airbase: சீனா ரகசிய பாலைவன விமான தளத்தை உருவாக்கிவருகிறது.
</p><h2>
பாலைவனப் பகுதியில் விமான சோதனை&nbsp;தளம்</h2><p>சீனா தனது மேற்கு பாலைவனப் பகுதியில் உள்ள லோப் நூர் விமான சோதனைத் தளத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.
</p><p>
செயற்கைக்கோள் படங்களில், அங்கு நான்கு பெரிய ஹேங்கர்கள், புதிய டாக்ஸிவேக்கள், வட்ட வடிவ சோதனை மேடை, எரிபொருள் சேமிப்பு வசதிகள் ஆகியவை கட்டப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e73bd8be-fb14-43fd-95f5-fdfe3e101682/26-6a9f58d005504.webp' /></p><p>இந்த விரிவாக்கம், சீனாவின் அடுத்த தலைமுறை போர் விமான திட்டங்களை வேகமாக முன்னெடுக்க உதவுகிறது. </p><p>2025 ஆகஸ்டில், J-36 எனப்படும் ஆறாம் தலைமுறை போர் விமானம் முதன்முதலில் இங்கு கண்டறியப்பட்டது. அதற்கு 17 நாட்கள் கழித்து, J-XDS அல்லது J-50 எனப்படும் மற்றொரு புதிய விமானமும் இங்கு சோதனைக்காக வந்தது.</p><p>
</p><p></p><p>2026 பிப்ரவரி மாதத்திற்குள், இந்த தளம் 60,000 சதுர அடிகள் ஹேங்கர் இடம் மற்றும் 3,00,000 சதுர அடிகள் கூடுதல் வசதிகள் பெற்றது. இதனால் தளத்தின் அளவு இரட்டிப்பு ஆனது.

லோப் நூர் தளம், 5 கி.மீ நீள ரன்வே கொண்டது. </p><p>பாலைவனப் பகுதியில் மக்கள் தொகை குறைவாக இருப்பதால், இங்கு ரகசிய சோதனைகள் எளிதாக நடத்தப்படுகின்றன. இதனால் சீனாவுக்கு சோதனை வேகத்தை அதிகரிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

மேலும், இந்த விரிவாக்கம் H-20 எனப்படும் ரகசிய ஸ்டெல்த் பாம்பர் திட்டத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற ஊகமும் எழுந்துள்ளது.</p><p> </p><p></p><p>புதிய ஹேங்கர்கள், H-6 பாம்பர் போன்ற பெரிய விமானங்களையும் தாங்கக்கூடிய அளவில் உள்ளன.

சீனா தற்போது ஷென்யாங் பகுதியில் 40 லட்சம் சதுர அடிகள் கொண்ட புதிய உற்பத்தி வளாகம் அமைத்து வருகிறது. </p><p>இது சீனாவின் அடுத்த தலைமுறை வான்படை ஆற்றலை உருவாக்கும் மிகப்பெரிய முயற்சியாகக் கருதப்படுகிறது. அமெரிக்காவுடன் போட்டியிட, சீனா 2035-க்குள் இந்த புதிய போர் விமானங்களை செயல்படுத்தும் திட்டத்தில் உள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T00:34:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் இரு இளைஞர்களின் தகாத செயல் ; சோதனையில் காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-vavuniya-youths-involved-in-illegal-act-1788827136"></link>
            <id>https://jvpnews.com/article/two-vavuniya-youths-involved-in-illegal-act-1788827136</id>
            <summary type="text">போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றவிசாரணை பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.  

வவுனியா மாவட்ட குற்றவிசார...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றவிசாரணை பிரிவு பொலிசார் தெரிவித்தனர். </p><p style="text-align: justify; "> 

வவுனியா மாவட்ட குற்றவிசாரணை பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா கோவில்குளம் மற்றும் சமளங்குளம் பகுதியில் காலை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45a3fff4-f9ce-4952-9d46-ef9c473d8b94/26-6a9f560204a9e.webp' /></p><p style="text-align: justify; ">அவர்களிடம் இருந்து 1700போதை மாத்திரைகள் பொலிசாரால் மீட்கப்பட்டது.</p><p style="text-align: justify; ">

குறித்த கைது நடவடிக்கை வவுனியா மாவட்ட குற்றிவிசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. </p><p style="text-align: justify; ">


கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T00:25:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[காசாவில் இடம்பெறும்'யூத பயங்கரவாதம்': முன்னாள் இஸ்ரேலியப் பிரதமர் காட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jewish-terrorism-ex-israeli-premier-1788826771"></link>
            <id>https://ibctamil.com/article/jewish-terrorism-ex-israeli-premier-1788826771</id>
            <summary type="text">அப்பாவி அராபியர்கள் உள்ளே இருக்கும்போது வீடுகளை எரிப்பது &quot;யூத பயங்கரவாதம்&quot; ஆகும் என்று முன்னாள் இஸ்ரேலியப் பிரதமர் நஃப்தாலி பென்னட் தெரிவித்துள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>அப்பாவி அராபியர்கள் உள்ளே இருக்கும்போது வீடுகளை எரிப்பது "யூத பயங்கரவாதம்" ஆகும் என்று முன்னாள் இஸ்ரேலியப் பிரதமர் நஃப்தாலி பென்னட் தெரிவித்துள்ளார்.
</p><p>
"அப்பாவி அராபியர்களின் வீட்டை, அவர்கள் உள்ளே இருக்கும்போது யாராவது வந்து எரித்தால், நிச்சயமாக அது யூத பயங்கரவாதம்தான்."

"அது தேசியவாதக் காரணங்களுக்காகச் செய்யப்பட்டால், அதுதான் அதன் வரையறை," என்று ஞாயிற்றுக்கிழமை பெஷேவா மாநாட்டில் பென்னட் கூறினார்.</p><h2>குடியேற்ற இயக்கத்திற்கு எவ்வாறு உதவுகிறது&nbsp;</h2><p>&nbsp;இத்தகைய செயல்கள் கண்டிக்கப்பட வேண்டும் என்று கூறிய அவர், "இது குடியேற்ற இயக்கத்திற்கு எவ்வாறு உதவுகிறது என்பது எனக்குப் புரியவில்லை," என்றும் மேலும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fb6fcbb-0d09-4ef1-a6fc-351b95561400/26-6a9f54958625e.webp' /></p><p>

ஒக்டோபர் 27 அன்று நடைபெறவுள்ள இஸ்ரேலின் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பென்னட்டின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.</p><p></p><p> </p><h2>அதிகரித்துள்ள&nbsp;ஆக்கிரமிப்பாளர்களின் தாக்குதல்கள்</h2><p>இந்தத் தேர்தல் நெதன்யாகுவின் லிகுட் கட்சி மற்றும் அவரது முக்கிய சவாலர்களான, குறிப்பாக முன்னாள் இராணுவத் தலைமைத் தளபதி காடி ஐசென்கோட் மற்றும் பென்னட் ஆகியோரை மையமாகக் கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3b3b1ca-943b-4d24-923c-429711f921fe/26-6a9f54963a78b.webp' /></p><p>
</p><p>
சமீபத்திய நாட்களில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள சூழலில் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T00:19:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ.200 கோடி கேட்ட தயாரிப்பாளர், ஆனால் இப்போ.. Toxic ஓடிடி rights விலை கடும் சரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/toxic-ott-rights-price-drops-to-30-cr-from-200-1788826333"></link>
            <id>https://cineulagam.com/article/toxic-ott-rights-price-drops-to-30-cr-from-200-1788826333</id>
            <summary type="text">யாஷ் நடித்த டாக்ஸிக் படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நெகடிவ் விமர்சனங்களை தான் அதிகம் பெற்றது. படம் பார்த்த ரசிகர்கள் கூறிய விமர்சனத்தால் தற்போது ஓடிடி உரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாஷ் நடித்த டாக்ஸிக் படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நெகடிவ் விமர்சனங்களை தான் அதிகம் பெற்றது. படம் பார்த்த ரசிகர்கள் கூறிய விமர்சனத்தால் தற்போது ஓடிடி உரிமையை விற்பதில் தயாரிப்பாளருக்கு பெரிய சிக்கல் எழுந்து இருக்கிறது.</p><p>ஏற்கனவே தியேட்டரில் படம் மிக குறைவான வசூலை பெற்று நஷ்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் புது சிக்கல் வந்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e2df86b-47be-4b30-8af7-969cb169840b/26-6a9f52de6eb1c.webp' /></p><p>
</p><h2>ஓடிடி உரிமை
</h2><p>டாக்ஸிக் ரிலீசுக்கு முன்பு படத்தின் ஓடிடி rightsக்கு சுமார் 150 கோடி ரூபாயை தர ஓடிடி நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாம். 200 கோடி வேண்டும் என தயாரிப்பாளர் உறுதியாக இருந்தாராம்.
&nbsp;</p><p>ஆனால் படத்தின் விமர்சனங்களை பார்த்துவிட்டு தற்போது வெறும் 30 கோடி ரூபாய்க்கு கேட்கிறார்களாம்.இது தயாரிப்பாளருக்கு மேலும் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T00:12:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளைகளை பாடசாலையில் சேர்க்க இலஞ்சம் வாங்கிய அதிபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/school-principal-arrested-for-accepting-bribe-1788819125"></link>
            <id>https://ibctamil.com/article/school-principal-arrested-for-accepting-bribe-1788819125</id>
            <summary type="text">&amp;nbsp;காலி பகுதியில் இரண்டு பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்ப்பதற்காக ரூ. 2.5 லட்சம் லஞ்சம் வாங்கியதற்காக ஒரு பள்ளித் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;காலி பகுதியில் இரண்டு பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்ப்பதற்காக ரூ. 2.5 லட்சம் லஞ்சம் வாங்கியதற்காக ஒரு பள்ளித் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சந்தேகத்திற்குரிய அந்த பாடசாலை அதிபர், பிள்ளைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்காக ஒவ்வொரு பிள்ளைக்கும் ரூ. 3 லட்சமும், இரண்டு பிள்ளைகளுக்கும் சேர்த்து ரூ. 6 லட்சமும் கேட்டதாகவும், பின்னர் அந்தத் தொகையை ரூ. 3 லட்சமாகக் குறைத்ததாகவும் கூறப்படுகிறது.</p><h2>இலஞ்சம் பெற்ற பின்னர் பாடசாலைகளில் இணைப்பு</h2><p>இதில், ரூ. 1.5 லட்சம் லஞ்சமாகப் பெறப்பட்டு, ஒரு பிள்ளையை 2026-ஆம் ஆண்டில் ஒன்றாம் வகுப்பில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

மீதமுள்ள ரூ. 1.5 லட்சத்தில் இருந்து, மற்றொரு பிள்ளையை எட்டாம் வகுப்பில் சேர்ப்பதற்காக ரூ. 50,000 பெறப்பட்டு, அந்தப் பிள்ளையும் பள்ளியில் சேர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/913c0791-09ef-4962-81ab-8755a7ea9568/26-6a9f414236ca2.webp' /></p><p>
</p><p>
பின்னர், இரண்டு பிள்ளைகளையும் பள்ளியில் சேர்ப்பதற்கான தேவையான ஏற்பாடுகளுக்காக மேலும் ரூ. 2.5 லட்சம் கோரப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p></p><p>

</p><h2>இரண்டரை லட்சம் ரூபாய் இலஞ்சம் பெற முயன்றபோது கைது</h2><p>இரண்டரை லட்சம் ரூபாய் இலஞ்சம் பெற முயன்றபோது இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பணம் கொடுக்காவிட்டால், இரு பிள்ளைகளும் பள்ளியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று மிரட்டிப் பணம் பறிக்க முயன்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74452d4b-8507-4465-887e-27213ff97260/26-6a9f414180d8a.webp' /></p><p>
</p><p>
சந்தேக நபர் காலி நீதவான் நீதிமன்றத்தில் முற்ர்படுத்தப்பட உள்ளார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T23:59:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போரால் எரிபொருள் ஏற்றுமதி பாதிக்கப்படாது: ஐக்கிய அரபு இராச்சியம் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fuel-exports-will-not-be-affected-by-iran-conflict-1788824628"></link>
            <id>https://tamilwin.com/article/fuel-exports-will-not-be-affected-by-iran-conflict-1788824628</id>
            <summary type="text">வொஷிங்டன் மற்றும் ஈரானுக்கு இடையே நிலவி வரும் போர் சூழலுக்கு மத்தியில்,
தனது எரிபொருள் ஏற்றுமதியும் பொருளாதார நடவடிக்கைகளும் முடங்கிவிடாத வகையில்
மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வொஷிங்டன் மற்றும் ஈரானுக்கு இடையே நிலவி வரும் போர் சூழலுக்கு மத்தியில்,
தனது எரிபொருள் ஏற்றுமதியும் பொருளாதார நடவடிக்கைகளும் முடங்கிவிடாத வகையில்
மாற்று வழிகளை உருவாக்கி வருவதாக ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவித்துள்ளது.</p><p>

அபூதாபியில் நடைபெற்ற ஹிலி உச்சிமாநாட்டில் உரையாற்றிய ஐக்கிய அரபு இராச்சிய
ஜனாதிபதி ஆலோசகர் அன்வர் கர்காஷ், நாட்டின் கிழக்கரை துறைமுகங்களின் திறனை
அதிகரிப்பதுடன், புதிய குழாய் வழிகள் மற்றும் தொடருந்து போக்குவரத்து மூலம்
மாற்று வர்த்தக பாதைகளை உருவாக்கி வருவதாகக் குறிப்பிட்டார்.</p><h2>எரிபொருள் விநியோகம்</h2><p>
</p><p>
ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகம்
பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்த நீரிணை
சர்வதேச நல்வழிப் பாதையாகவே தொடர வேண்டும் என ஐக்கிய அரபு இராச்சியம்
வலியுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50e8f8a7-ddd9-40d1-8ba3-dfd9c694a63a/26-6a9f4ec3b99a7.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, பாதுகாப்பு விவகாரங்களில் அமெரிக்கா போன்ற நட்பு நாடுகளை மட்டும்
முழுமையாக நம்பியிருக்க முடியாது என அக்கூட்டத்தில் உரையாற்றிய கதார் வெளி
விவகார அமைச்சின் பேச்சாளர் மாஜித் அல்-அன்சாரி தெரிவித்தார்.
</p><p>
பிராந்திய பாதுகாப்புக்கு சொந்த தேசிய வல்லமைகளை கட்டியெழுப்புவதே ஒரே வழி என
அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T23:55:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் நடுவீதியில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 வயது இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/20-year-old-man-shot-dead-in-france-street-1788825131"></link>
            <id>https://canadamirror.com/article/20-year-old-man-shot-dead-in-france-street-1788825131</id>
            <summary type="text">பிரான்சின் எசோன்&amp;nbsp; மாவட்டத்திற்கு உட்பட்ட க்ரினி பகுதியில்&amp;nbsp; இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சின் எசோன்&nbsp; மாவட்டத்திற்கு உட்பட்ட க்ரினி பகுதியில்&nbsp; இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p>

'க்ரினி 2' (Grigny 2) குடியிருப்புப் பகுதியிலுள்ள 'சுர்கூப்' (Square Surcouf) சதுக்கத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91c51b6b-c245-46f3-ae7d-afa5d61b662c/26-6a9f4e2d9abe1.webp' /></p><p> </p><p>போதைப்பொருள் விற்பனை நடைபெறும் இடத்திற்கு அருகாமையிலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>குறைந்தது ஒரு துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் படுகாயமடைந்த குறித்த இளைஞர், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p>

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் அவசர மருத்துவப் பிரிவினர் மீட்பு மற்றும் முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர். </p><p>துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் அல்லது நபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இச்சம்பவம் குறித்த விசாரணைகளை எவ்ரி (Évry) அரச வழக்குத்தொடுனர் அலுவலகம் (Parquet) ஆரம்பித்துள்ளதுடன், ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் விசேட குற்றங்களுக்கு எதிரான காவல் பிரிவினரிடம் (DCOS) மேலதிக விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-07T23:52:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலி லேபிள்கள் கொண்ட தண்ணீர் போத்தல்கள் : நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/order-to-destroy-over-8500-water-bottles-1788822298"></link>
            <id>https://ibctamil.com/article/order-to-destroy-over-8500-water-bottles-1788822298</id>
            <summary type="text">&amp;nbsp;போலி லேபிள்கள் கொண்ட தண்ணீர் பாட்டில்களைத் தயாரித்து விநியோகித்ததற்காக, அவிசாவெல்ல பகுதியில் அமைந்துள்ள ஒரு நிறுவனத்திற்கு ரூ. 40,000 அபராதம் வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;போலி லேபிள்கள் கொண்ட தண்ணீர் பாட்டில்களைத் தயாரித்து விநியோகித்ததற்காக, அவிசாவெல்ல பகுதியில் அமைந்துள்ள ஒரு நிறுவனத்திற்கு ரூ. 40,000 அபராதம் விதித்து அவிசாவெல்ல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதே லேபிள்கள் கொண்ட 8,500 போத்தல்களை அழிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக நுகர்வோர் விவகாரங்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;ஓகஸ்ட் 21 அன்று நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​19 லிட்டர், 5 லிட்டர், 1500, 1000 மற்றும் 500 மில்லிலிட்டர் அளவுகளில் போலி லேபிள்கள் கொண்ட பெருமளவிலான குடிநீர் போத்தல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.</p><h2>&nbsp;பணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கை</h2><p>

அதன்படி, அந்த நிறுவனம் மற்றும் அதன் பணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், அவிசாவெல்ல நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது பிரதிவாதிகள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0278f673-9c69-4c52-bfcf-7181c022a356/26-6a9f4ae05c368.webp' /></p><p>

நீதிமன்றத்தில் சான்றாகச் சமர்ப்பிக்கப்பட்ட 8,500-க்கும் மேற்பட்ட குடிநீர் போத்தல்கள் அடங்கிய முழு இருப்பையும் அழிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, அதன்படி, சம்பந்தப்பட்ட தண்ணீர் போத்தல்கள் நீதிமன்ற வளாகத்திலேயே அழிக்கப்பட்டன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T23:38:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிநவீன ஏவுகணை அழிப்பு கப்பலால் உலகை அச்சத்தில் ஆழ்த்தும் வடகொரியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/north-korea-alarms-with-new-missile-destroyer-1788817250"></link>
            <id>https://canadamirror.com/article/north-korea-alarms-with-new-missile-destroyer-1788817250</id>
            <summary type="text">அணுசக்தி தடுப்பு காவல்படையின் ஒரு பகுதியாக, 5,000 டன் எடைகொண்ட &#039;காங் கோன்&#039; என்ற அதிநவீன வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பு கப்பலை வடகொரியா தனது கடற்படையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அணுசக்தி தடுப்பு காவல்படையின் ஒரு பகுதியாக, 5,000 டன் எடைகொண்ட 'காங் கோன்' என்ற அதிநவீன வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பு கப்பலை வடகொரியா தனது கடற்படையில் அதிகாரப்பூர்வமாக இணைத்துள்ளது.</p><p>வடகொரியா மற்றும் அமெரிக்கா - தென்கொரியா இடையே கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3df5d16d-ecb5-42c3-8914-7a15c2a33c84/26-6a9f2f646ded4.webp' /></p><p> இந்த சூழ்நிலையில், தனது ராணுவ பலத்தை உலகிற்கு நிரூபிக்கும் வகையில் வடகொரியா தொடர்ந்து புதிய ஆயுதங்களையும், போர்க்கப்பல்களையும் அறிமுகம் செய்து வருகிறது.</p><p> இதன் ஒரு பகுதியாக, வடகொரியாவின் கிழக்குக் கடல் கடற்படைப் பிரிவில் 'காங் கோன்' என்ற புதிய போர்க்கப்பல் இணைக்கப்பட்டுள்ளது. </p><p>'சோ ஹியோன்' வகையை சேர்ந்த இரண்டாவது போர்க்கப்பலான இது, பல கட்ட போர் மற்றும் நம்பகத்தன்மை சோதனைகளைக் கடந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p>
இக்கப்பலை கடற்படையில் இணைக்கும் விழாவில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் நேரில் கலந்துகொண்டார். </p><p>அப்போது பேசிய அவர்:"போர் காலங்களில் அணுசக்தி போர் அமைப்புகளை உடனடியாக இயக்கி, எதிரிகளுக்கு பதிலடி தாக்குதல்களை நடத்த வேண்டும்.


உத்தரவு
அதற்கு ஏதுவாக ஒட்டுமொத்த கடற்படையையும் அணுசக்தி ஆயுதம் ஏந்திய படையாக மாற்ற வேண்டும்."என்று ராணுவத்தினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-07T23:30:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாவல் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/benefits-of-eating-jamun-fruit-1788823792"></link>
            <id>https://jvpnews.com/article/benefits-of-eating-jamun-fruit-1788823792</id>
            <summary type="text">நாவல் பழத்தின் கொட்டையை உலர்த்தி பொடியாக்கி பயன்படுத்துவது பல்வேறு உடல்நல நன்மைகளை வழங்கக்கூடும் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 



குறிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாவல் பழத்தின் கொட்டையை உலர்த்தி பொடியாக்கி பயன்படுத்துவது பல்வேறு உடல்நல நன்மைகளை வழங்கக்கூடும் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> 



குறிப்பாக இதில் உள்ள நார்ச்சத்துகள் மற்றும் தாவரச் சேர்மங்கள் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு ஆதரவாக இருக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35e61886-f4c5-4b77-9387-2465ea43c0a7/26-6a9f48f19feb9.webp' /></p><h2>இரத்தச் சர்க்கரை</h2><p>சில ஆய்வுகளின்படி, நாவல் கொட்டையில் உள்ள இயற்கைச் சேர்மங்கள் இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவக்கூடும்.</p><p>



எனினும், நீரிழிவு நோயாளிகள் இதை மருந்துக்கு மாற்றாக பயன்படுத்தாமல், மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.</p><p>



நாவல் கொட்டைப் பொடியில் உள்ள நார்ச்சத்துகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, செரிமானத்தை சீராக்கவும் உதவக்கூடும்.</p><p></p><p> </p><p>



நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உடல் எடையைக் குறைக்கும் முயற்சிக்கும் துணையாக அமையலாம்.
</p><p>


இதய ஆரோக்கியம், குடல் செயல்பாடு மற்றும் உடலின் வளர்சி மாற்றத்தை ஆதரிக்கும் தன்மையும் இதில் இருக்கலாம் என சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. </p><p>



நாவல் கொட்டைப் பொடியை பயன்படுத்த விரும்புபவர்கள், வெதுவெதுப்பான நீரில் சிறிய அளவு கலந்து அருந்தலாம்.</p><p></p><p> </p><p>ஆனால் நீரிழிவு உள்ளிட்ட நீண்டகால நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள், இதை பயன்படுத்துவதற்கு முன் வைத்தியரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.



இவை பொதுவான தகவல் நோக்கங்களுக்காக வழங்கப்பட்டவையே. </p><p>உங்கள் உணவுப்பழக்கம் மற்றும் அன்றாட வாழ்க்கை முறையில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன், தகுந்த வைத்தியரிடம் ஆலோசனை மேற்கொள்ளவும்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T23:30:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[லிமினி ராஜபக்சவை களமிறக்கி அனுதாப வாக்குகளை பெறும் முயற்சியில் ராஜபக்ச குடும்பத்தினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rajapaksa-family-attempting-garner-sympathy-votes-1788817692"></link>
            <id>https://tamilwin.com/article/rajapaksa-family-attempting-garner-sympathy-votes-1788817692</id>
            <summary type="text">நாமல் ராஜபக்சவின் கைதுச் சம்பவத்தை ஒரு அரசியல் பழிவாங்கலாகச் சித்தரித்து, பொதுமக்களிடையே அனுதாபத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வாக்குகளைப் பெற முயற்சிக்கின...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்சவின் கைதுச் சம்பவத்தை ஒரு அரசியல் பழிவாங்கலாகச் சித்தரித்து, பொதுமக்களிடையே அனுதாபத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வாக்குகளைப் பெற முயற்சிக்கின்றனர் என்று தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட தமிழ் ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.
</p><p>
லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
</p><p>
நாமல் ராஜபக்சவால் அநுராதபுரத்தில் 12ஆம் திகதி நடைபெறவிருந்த கூட்டத்தில் கலந்துகொள் முடியாததால் அவரது மனைவி கலந்து கொள்ளுவார் என்று கூறப்படுகின்றது.</p><p>

ஜனநாயக ரீதியாக யாருக்கும் அரசியலில் ஈடுபட உரிமை உண்டு என்பதால், அவர் அரசியலுக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது. 

ராஜபக்ச குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் மீது பல ஊழல் மற்றும் குற்றவியல் வழக்குகள் உள்ளது.
</p><p>
அத்தகைய குற்றச்சாட்டுகள் இதுவரை இல்லாத ஒருவராக லிமினி ராஜபக்ச இருப்பதால், அவரை முன்னிலைப்படுத்த வாய்ப்புகள் இருக்கின்றது.
</p><p>
இது குடும்பத்தின் ஒரு அரசியல் யுக்தியாக இருக்கலாம் என்று குறிப்பிட்டார்.</p><p>

முழுமையான விடயங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jG41FGmsQkI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T23:26:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரோன் தாக்குதல் குற்றச்சாட்டு - ஜேர்மன் தூதரகத்தை மூடிய ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-shuts-german-consulate-over-drone-row-1788822808"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-shuts-german-consulate-over-drone-row-1788822808</id>
            <summary type="text">Russia shuts german consulate: ட்ரோன் தாக்குதல் குற்றச்சாட்டில், ரஷ்யாவில் ஜேர்மன் தூதரகம் மூடப்பட்டது.
ஜேர்மன் தூதரகத்தை மூடிய ரஷ்யாரஷ்ய அரசு, ஜேர்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russia shuts german consulate: ட்ரோன் தாக்குதல் குற்றச்சாட்டில், ரஷ்யாவில் ஜேர்மன் தூதரகம் மூடப்பட்டது.
</p><h2>ஜேர்மன் தூதரகத்தை மூடிய ரஷ்யா</h2><p>ரஷ்ய அரசு, ஜேர்மனியின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் தூதரகம் மூடப்பட வேண்டும் என்றும், செப்டம்பர் 18 திகதிக்குள் அங்கு பணிபுரியும் அனைத்து அதிகாரிகளும் ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.</p><p>ரஷ்யா-ஜேர்மனி உறவுகள் ஏற்கனவே உக்ரைன் போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், இப்போது தூதரகம் மூடப்பட்ட நடவடிக்கை இரு நாடுகளின் உறவை மேலும் மோசமாக்கியுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96c18eb4-1377-4a67-ac9a-508df702f10e/26-6a9f4519c2d5c.webp' /></p><p>
கடந்த வாரம் லீப்சிக் விமான நிலையத்தில் நடந்த ட்ரோன் தாக்குதலை ரஷ்யா திட்டமிட்டதாக ஜேர்மனி குற்றம் சாட்டியது.
</p><p>
அதற்கு பதிலாக, ரஷ்யா ஜேர்மன் தூதரகத்தை மூடுவதோடு, Goethe Institute பணியாளர்களும் செப்டம்பர் 13-க்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
</p><p>
ஜேர்மனி ஏற்கனவே ரஷ்யாவின் பான் தூதரகத்தையும், மாஸ்கோ கலாச்சார மையத்தையும் மூடியிருந்தது.</p><p>
</p><p></p><p>ஐரோப்பிய ஒன்றியம், லீப்சிக் விமான நிலையத்தில் நடந்த ட்ரோன் தாக்குதல் “அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதம்” எனக் கூறியுள்ளது. ஆனால் ரஷ்யா இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது.</p><p>

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ், “ஜேர்மனி மீண்டும் போரை விரும்புகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
</p><p>
இந்த சம்பவம், உக்ரைனுக்கு முக்கிய ஆதரவாளராக இருக்கும் ஜேர்மனி மற்றும் ரஷ்யா இடையேயான உறவை மேலும் கடுமையாக்கி, ஐரோப்பிய பாதுகாப்பு சூழ்நிலைக்கு புதிய சவால்களை உருவாக்கியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T23:10:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[மடோனா செபஸ்டியன் கிளாமர் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/madonna-sebastian-glam-photoshoot-1788821318"></link>
            <id>https://cineulagam.com/article/madonna-sebastian-glam-photoshoot-1788821318</id>
            <summary type="text">ப்ரேமம் படத்தின் மூலமாக பிரபலம் ஆனவர் மடோனா செபாஸ்டியன். அதன் பிறகு அவர் தமிழ், தெலுங்கிலும் நடித்து வருகிறார்.

சமீப காலமாக மடோனா அதிகம் கிளாமராகவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ப்ரேமம் படத்தின் மூலமாக பிரபலம் ஆனவர் மடோனா செபாஸ்டியன். அதன் பிறகு அவர் தமிழ், தெலுங்கிலும் நடித்து வருகிறார்.
</p><p>
சமீப காலமாக மடோனா அதிகம் கிளாமராகவும் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துவருகிறார்.
</p><p>
அப்படி அவர் எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.</p>]]></content>
            <updated>2026-09-07T22:48:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் தர்ஷாக் கௌடா குடும்பத்துடன் அழகிய ஸ்டில்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/serial-actor-darshak-gowda-family-photos-1788820940"></link>
            <id>https://cineulagam.com/article/serial-actor-darshak-gowda-family-photos-1788820940</id>
            <summary type="text">சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருபவர் தர்ஷாக் கௌடா. அந்த சேனலில் முக்கிய சீரியல் ஆக அது இருந்து வருகிறது.

தற்போது தர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருபவர் தர்ஷாக் கௌடா. அந்த சேனலில் முக்கிய சீரியல் ஆக அது இருந்து வருகிறது.
</p><p>
தற்போது தர்ஷாக் கௌடா தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

ரசிகர்களிடம் அதிகம் லைக்குகளை பெற்று வரும் அழகிய புகைப்படங்கள் இதோ பாருங்க.</p>]]></content>
            <updated>2026-09-07T22:42:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாளவிகா மோகனன் அழகிய போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/malavika-mohanan-cute-look-at-an-event-1788820706"></link>
            <id>https://cineulagam.com/article/malavika-mohanan-cute-look-at-an-event-1788820706</id>
            <summary type="text">நடிகை மாளவிகா மோகனன் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அடுத்து அவர் சர்தார் 2 படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை மாளவிகா மோகனன் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். </p><p>அடுத்து அவர் சர்தார் 2 படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

தற்போது மாளவிகா மோகனன் அழகிய உடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட புகைப்படங்கள் இதோ.
</p><p>
இந்த போட்டோக்களுக்கு ரசிகர்களிடம் லைக்குகள் குவிந்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-07T22:38:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை ஈஷா ரெப்பா ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் ஹாட் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/eesha-rebba-sizzling-in-transparent-saree-1788819431"></link>
            <id>https://cineulagam.com/article/eesha-rebba-sizzling-in-transparent-saree-1788819431</id>
            <summary type="text">தெலுங்கில் பிரபல நடிகைகளில் ஒருவர் ஈஷா ரெப்பா. ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும் தமிழிலும் சில படங்கள் நடித்து இருக்கிறார்.இன்ஸ்டாவில் 2.4 மில்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெலுங்கில் பிரபல நடிகைகளில் ஒருவர் ஈஷா ரெப்பா. ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும் தமிழிலும் சில படங்கள் நடித்து இருக்கிறார்.</p><p>இன்ஸ்டாவில் 2.4 மில்லியன் ரசிகர்கள் வைத்திருக்கும் அவர் அடிக்கடி கிளாமராக புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.</p><p>

தற்போது ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் அவர் எடுத்த போட்டோஷூட் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T22:18:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மடக்கி பிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tractor-carrying-illegal-sand-seized-in-jaffna-1788816737"></link>
            <id>https://jvpnews.com/article/tractor-carrying-illegal-sand-seized-in-jaffna-1788816737</id>
            <summary type="text">யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில் மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மருதங்கேணி பொலிசாரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில் மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மருதங்கேணி பொலிசாரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.</p><p style="text-align: justify; ">&nbsp; சம்பவம் குறித்து மெலும் தெரிய வருகையில் ,

கட்டைக்காடு பகுதியில் இரவு நேரத்தில் சில உழவு இயந்திரங்கள் மூலம் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி அருகில் உள்ள கேவில், நித்தியவெட்டை, வெற்றிலைக்கேணி பகுதிகளுக்கு கொண்டு செல்வதாக மருதங்கேணி பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c144353-6cb6-47b6-b674-5f4c208b308b/26-6a9f2d62c9fc2.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;சட்ட நடவடிக்கை</h2><p style="text-align: justify; ">

இதனடிப்படையில் குறித்த பகுதியை&nbsp; இரவு சுற்றிவளைத்த மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி&nbsp; தலைமையிலான பொலிஸ் குழுவினர் மணல் ஏற்றிய உழவு இயந்திரத்தை கைப்பற்றினர்.
</p><p style="text-align: justify; ">
தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
உழவு இயந்திரம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு சொந்தமானதென்று பொலிசார் தெரிவித்துள்ளனர்
</p><p style="text-align: justify; ">
குறித்த பகுதியில் இருந்து மேலும் ஒருவரும், கேவில் பகுதியில் இருந்து இன்னொருவரும் தொடர்ச்சியாக களவாக மணல் ஏற்றிவருவது தொடர்பில் பொலிசார் அவதானம் செலுத்தியுள்ளதுடன்.</p><p style="text-align: justify; ">விரைவில் அவர்களை கைது செய்யும் பணி முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-07T22:15:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்வனவு சர்ச்சை! 2 மில்லியன் டொலர் இழப்பு - 200 மில்லியன் டொலர் இழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srilankan-airlines-bribery-case-namal-arrested-1788810819"></link>
            <id>https://tamilwin.com/article/srilankan-airlines-bribery-case-namal-arrested-1788810819</id>
            <summary type="text">ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்வனவு தொடர்பான லஞ்ச விவகாரத்தில் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சுமார் 16.84 மி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்வனவு தொடர்பான லஞ்ச விவகாரத்தில் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>

சுமார் 16.84 மில்லியன் டொலர் லஞ்சம் பெற முயற்சிக்கப்பட்டதாகவும், அதில் 2 மில்லியன் டொலர் கைமாறியதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
விமானக் கொள்வனவு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால், இலங்கைக்கு சுமார் 200 மில்லியன் டொலர் (65.6 பில்லியன் ரூபா) இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விவகாரத்தில், 16.84 மில்லியன் டொலர் இலஞ்சமாகப் பெற முயற்சிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், இறுதியில் சுமார் 2 மில்லியன் டொலர் மட்டுமே இலஞ்சமாகப் பெறப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

இருப்பினும், கொள்வனவு ஒப்பந்தம் பின்னர் ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட ரத்து கட்டணங்கள் (Cancellation fees), விமான பராமரிப்பு செலவுகள் மற்றும் லீசிங் செலவுகள் போன்றவற்றால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விளக்கப்பட்டுள்ளது.
</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு NewsInsightTamil...&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/AdsYi1CP5b0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T22:14:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[&quot;சந்திரனும் அமெரிக்காவிற்குச் சொந்தமானது&quot; ட்ரம்பின் அடுத்த அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-moon-belongs-to-america-trump-says-1788808579"></link>
            <id>https://ibctamil.com/article/the-moon-belongs-to-america-trump-says-1788808579</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் தனது &#039;ட்ரூத்&#039; சமூக வலைதளக் கணக்கில், சந்திரன் அமெரிக்காவிற்குச் சொந்தமானது என்று கூறி ஒரு புகைப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் தனது 'ட்ரூத்' சமூக வலைதளக் கணக்கில், சந்திரன் அமெரிக்காவிற்குச் சொந்தமானது என்று கூறி ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டார். ஜனாதிபதி ட்ரம்ப் சமீபத்தில் தனது 'ட்ரூத்' சமூக வலைதளக் கணக்கில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சந்திரனின் புகைப்படத்தை, "சந்திரன் நமக்குச் சொந்தமானது" என்ற வாசகத்துடன் பதிவிட்டிருந்தார்.&nbsp;</p><p>அதன் ஓரத்தில் ஒரு அமெரிக்கக் கொடியும் இருந்தது.</p><h2>&nbsp;சமூக வலைதளங்களில் பெரும் விவாதம்&nbsp;</h2><p> </p><p>இருப்பினும், ட்ரம்பின் இந்தப் புகைப்படம் குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் எழுந்ததுடன், அது விமர்சிக்கவும் பட்டது.

ஒரு சமூக வலைதளப் பயனர், ட்ரம்ப் சந்திரனோடு நின்றுவிடாமல், செவ்வாய் மற்றும் சூரியனுக்கும் செல்ல வேண்டும் என்று ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41dd0166-2db7-45c8-a52e-e075f83af397/26-6a9f1d158362c.webp' /></p><p> சமீபத்தில், ஜனாதிபதி ட்ரம்ப் தனது 'ட்ரூத்' சமூக வலைதளக் கணக்கில், ஹோர்மஸ் நீரிணையும் அமெரிக்காவிற்குச் சொந்தமானது என்று கூறியிருந்தார். மேலும், நியூ மெக்ஸிகோவிற்கு 'நியூ அமெரிக்கா' என்று பெயரிடப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி ட்ரம்ப் கூறியிருந்தார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T22:12:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு முன்னாள் - இந்நாள் எம்.பிக்கள் மீது ஊழல் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/corruption-probe-law-will-treat-all-equally-1788815692"></link>
            <id>https://tamilwin.com/article/corruption-probe-law-will-treat-all-equally-1788815692</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தொடர்பில் ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தொடர்பில் ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.</p><p>

மட்டக்களப்பில்&nbsp; இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p><h2>ஊழல் மற்றும் மோசடி&nbsp;</h2><p>
</p><p>
ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள் என்றும், சட்டம் தனது கடமையை சுயாதீனமாக முன்னெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>

மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அனைவரும் சட்டத்திற்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b2cb381-ccb6-4956-a056-80da9170dc42/26-6a9f34620bb13.webp' /></p><p>
</p><p>
விசாரணைகளின் முடிவில் எடுக்கப்படும் தீர்மானங்கள் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கந்தசாமி பிரபு கூறினார்.
</p><p>
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சட்ட ஆட்சியை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், முன்னாள் ஜனாதிபதிகள், ஆளுநர்கள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் என யாராக இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் சமமாகவே நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.</p><p>

இதேவேளை, நாமல் ராஜபக்ச சிறைவாசம் அனுபவித்து வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.</p><h2>&nbsp;ராஜபக்ச குடும்பத்தினர்</h2><p>

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் ராஜபக்ச குடும்பத்தினரை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், தற்போது அவர்களுக்கு ஆதரவாகக் கருத்துகளை வெளியிடுவது குறித்து கந்தசாமி பிரபு விமர்சனம் முன்வைத்தார்.</p><p>

ரணில் விக்ரமசிங்க கடந்த காலங்களில் ராஜபக்ச குடும்பத்தினரை விமர்சித்த போதிலும், பின்னர் அவர்களுடன் இணைந்து ஆட்சி அமைத்ததாகவும், தற்போது அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9378d683-be9d-42d2-9ff5-f6e879190905/26-6a9f34638e8e6.webp' /></p><p>
</p><p>
நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்களில் ரணில் விக்ரமசிங்கவும் ஒருவர் எனக் குறிப்பிட்ட அவர், தற்போது குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை எதிர்கொள்பவர்களை பாதுகாக்க முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
</p><p>
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நீதித்துறை மற்றும் விசாரணை அமைப்புகள் சுயாதீனமாக செயற்பட்டு வருவதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடின்றி சட்டம் தனது கடமையைச் செய்யும் என்றும் கந்தசாமி பிரபு மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T22:06:42+00:00</updated>
        </entry>
    </feed>
