<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-12T14:33:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகளை மேலதிக வகுப்பில் விட்டுவிட்டு காணாமல் போன பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-goes-missing-after-dropping-daughter-1786540291"></link>
            <id>https://jvpnews.com/article/woman-goes-missing-after-dropping-daughter-1786540291</id>
            <summary type="text">மாத்தறை - அக்குரெஸ்ஸ, திகனஹேன பகுதியைச் சேர்ந்த 52 வயதான பெண் ஒருவர் கடந்த மூன்று நாட்களாகக் காணாமல் போயிருந்த நிலையில், நில்வள கங்கையில் தீவிர தேடுதல...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை - அக்குரெஸ்ஸ, திகனஹேன பகுதியைச் சேர்ந்த 52 வயதான பெண் ஒருவர் கடந்த மூன்று நாட்களாகக் காணாமல் போயிருந்த நிலையில், நில்வள கங்கையில் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p>கடந்த 9ஆம் திகதி தனது மகளை மேலதிக வகுப்பில் விட்டுவிட்டு வீடு திரும்பாத நிலையில், குறித்த பெண் காணாமல் போயுள்ளார்.</p><p>இந்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து, அக்குரெஸ்ஸ பகுதியில் உள்ள கடையொன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) காணொளிகளை ஆய்வு செய்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p>விசாரணைகளின் அடிப்படையில், நில்வள கங்கையில் இருந்து பை மற்றும் காலணி என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>இதனைத் தொடர்ந்து, மாத்தறை மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் இணைந்து நில்வள கங்கையில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-12T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் இதுவரை 530 என்புக்கூடுகள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1786543354"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1786543354</id>
            <summary type="text">செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 50 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(12) நடைபெற்றது. 

இதன்போது 05 மனித எலும்புக்கூடுகள் இன்று அடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 50 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(12) நடைபெற்றது.</p><p> 

இதன்போது 05 மனித எலும்புக்கூடுகள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளன. </p><p>அதேவேளை அடையாளம் காணப்பட்டதில் 06 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><h2>530 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுப்பு</h2><p> </p><p>

அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம்
கட்டம் என இதுவரையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 544 என்பு
கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 530 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adbf6f9c-b345-4f34-b68f-91465474a7eb/26-6a7c82dd61f57.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T14:27:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த வயதிலும் நாடகமாடுவது வெட்க கேடு : த்ரிஷா போட்ட பதிவால் கிளம்பிய புதிய சர்ச்சை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/drama-at-this-age-trisha-insta-post-goes-viral-1786531950"></link>
            <id>https://manithan.com/article/drama-at-this-age-trisha-insta-post-goes-viral-1786531950</id>
            <summary type="text">Trisha new post viral:நடிகை த்ரிஷா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு, தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.“இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trisha new post viral:நடிகை த்ரிஷா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு, தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.</p><p>“இந்த வயதில் நாடகம் போடுவது சங்கடமாக இருக்கிறது.. போய் கொஞ்சம் பணம் சம்பாதித்து நிம்மதியாக இருங்கள்” என அவர் பதிவிட்டிருப்பது, அது யாரை நோக்கி கூறப்பட்டது என்ற விவாதத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/133ee0f8-5dc2-441f-8e04-c5d4adae5ad1/26-6a7c570ccc0ab.webp' /></p><p></p><p>
</p><h2>நடிகை த்ரிஷா </h2><p>த்ரிஷா அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கங்களில் நேரடியாக யாருடைய பெயரையும் குறிப்பிடாமல், கருத்தை மட்டும் வெளிப்படுத்தும் வகையிலான பதிவுகளை வெளியிடுவது வழக்கம்.</p><p>நடிகரும் முதலமைச்சருமான விஜய்யுடனான த்ரிஷாவின் நட்பு குறித்த சர்ச்சைகள் இணையத்தில் பேசுபொருளாக இருக்கும் நிலையி்ல், விஜயின் மனைவி சங்கீதா சமீபத்தில் விவாகரத்து வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்து இருந்தார். இதை தொடர்ந்து த்ரிஷா வெளியிடும் பதிவுகள் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் கவனம் பெற்று வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3b8649a-2ff8-4236-bae3-fb58f8092b09/26-6a7c570d87204.webp' /></p><p>சமீபத்தில் நடிகை குட்டி பத்மினி, நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா குறித்து பேசியிருந்தார். குறிப்பாக, விஜய்–த்ரிஷா இடையேயான உறவு குறித்து அவர் தெரிவித்ததாக கூறப்பட்ட கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டன.

இதன் பின்னணியில் த்ரிஷா தற்போது வெளியிட்டுள்ள “இந்த வயதில்...” என்ற பதிவையும் சிலர் இணைத்துப் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.</p><p>குறிப்பாக, பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளை வைத்து, அவர் வயதான ஒருவரை விமர்சித்திருக்கலாம் என்றும் சில நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதனால், இந்தப் பதிவு குட்டி பத்மினியின் சமீபத்திய பேச்சுக்கு த்ரிஷா அளித்த மறைமுக பதிலாக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/568207d1-6949-493f-94ae-220b30fcb758/26-6a7c570e37e15.webp' /></p><p></p><p>இதற்கிடையில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சமீபத்தில் த்ரிஷா குறித்து பேசியிருந்ததும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அவரது பேச்சும் பல்வேறு தரப்பினரால் விவாதிக்கப்பட்ட நிலையில், த்ரிஷாவின் புதிய பதிவு அதற்கு பதிலாக இருக்குமா என்ற யூகமும் உருவாகியுள்ளது.</p><p>

குறிப்பாக, த்ரிஷா தனது பதிவில் குறிப்பிட்டுள்ள “இந்த வயதில்” என்ற வார்த்தையை வைத்து, சமீபத்தில் தன்னைப் பற்றி கருத்து தெரிவித்த வயதில் மூத்தவர்களில் யாரையாவது அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டிருக்கலாம் என சிலர் கூறுகின்றனர். த்ரிஷாவின் இந்த&nbsp; பதிவு யாரை நோக்கி வெளியிடப்பட்டது என்பது குறித்து நெட்டிசன்கள் பல கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<u> <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></b></u></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T14:24:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் பணக்கார பெண்ணுக்கு ஏற்பட்ட பெரும் இழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-drone-strike-hits-russias-richest-woman-1786544680"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-drone-strike-hits-russias-richest-woman-1786544680</id>
            <summary type="text">Ukraine Drone Strike Hits Russias Richest Woman: உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் பணக்கார பெண்ணுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவின் மிக...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>Ukraine Drone Strike Hits Russias Richest Woman: உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் பணக்கார பெண்ணுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.</b></p><p>

ரஷ்யாவின் மிகப்பெரிய ஓன்லைன் வணிக நிறுவனமான Wildberries மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>

ரஷ்யாவின் அமேசான்</h2><p>இந்த நிறுவனம் 2004-ஆம் ஆண்டு தத்யானா கிம் (Tatyana Kim) என்பவரால் தொடங்கப்பட்டது.</p><p> தற்போது ரஷ்யாவின் “அமேசான்” என அழைக்கப்படும் Wildberries, நாட்டின் ஓன்லைன் சந்தையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5fc08c1-963d-4038-aeca-30279d93d522/26-6a7c822a4fcfe.webp' /></p><p>சமீபத்தில் நடந்த தாக்குதல்களில் பல கிடங்குகள் சேதமடைந்துள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான விற்பனையாளர்கள் தங்கள் பொருட்களை இழந்துள்ளனர். வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் கிடைக்க தாமதம் ஏற்பட்டுள்ளது.</p><p>

சிறு வியாபாரிகள் தங்கள் பங்குகளை இழந்ததால், எதிர்கால விற்பனை மற்றும் இழப்பீடு குறித்து பெரும் குழப்பம் நிலவுகிறது.
</p><p></p><h2>உக்ரைன்&nbsp;குற்றச்சாட்டு</h2><p>உக்ரைன், இந்த கிடங்குகள் ரஷ்யாவின் போர் முயற்சிக்கு உதவுகின்றன என்று கூறுகிறது. ஆனால் ரஷ்ய அதிகாரிகள், இவை சாதாரண குடிமக்கள் பயன்பாட்டிற்கான வசதிகள் என தெரிவித்துள்ளது.
</p><p>
தத்யானா கிம், தாக்குதல்களை கண்டித்து, பாதிக்கப்பட்ட விற்பனையாளர்களுக்கு உதவ நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். </p><p>இருப்பினும், விற்பனை குறைந்து, பல விற்பனையாளர்கள் மாற்று தளங்களை தேடத் தொடங்கியுள்ளனர்.
</p><p></p><h2>புதிய யுத்தி</h2><p>ஆய்வாளர்கள், உக்ரைன் இத்தகைய தாக்குதல்களை ரஷ்யாவின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் புதிய யுத்தத் திட்டமாக பார்க்கின்றனர். இது ரஷ்யாவின் அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கிறது.
</p><p>
தத்யானா கிம், ரஷ்யாவின் தொழில் வெற்றியின் மிகப்பெரிய அடையாளமாக இருந்தாலும், தற்போது தனது நிறுவனத்தை மீண்டும் எழுப்பி, வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவது மிகப்பெரிய சவாலாக உள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T14:22:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கயல் சீரியல் ரசிகர்களுக்கு ஷாக்... ஹீரோ சஞ்சீவ் விலகியதாக தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/kayal-serial-lead-role-actor-sanjeev-relieve-1786543149"></link>
            <id>https://manithan.com/article/kayal-serial-lead-role-actor-sanjeev-relieve-1786543149</id>
            <summary type="text">kayal serial : சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான கயல் சீரியலில் இருந்து அதன் நாயகன் சஞ்சீவ் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>kayal serial : சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான கயல் சீரியலில் இருந்து அதன் நாயகன் சஞ்சீவ் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p> சமீபத்திய எபிசோடுகளில் சஞ்சீவ் கோமா நிலையில் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்று வந்த நிலையில், அதன் பின்னணி காரணம் குறித்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ba5c380-fab3-48f5-b468-547518e23b77/26-6a7c812481370.webp' /></p><h2>கயல் சீரியல்&nbsp;</h2><p>

சன் டிவியின் பிரைம் டைம் தொடராக ஒளிபரப்பாகி வரும் கயல், கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. சஞ்சீவ் ஹீரோவாகவும், சைத்ரா ரெட்டி கதாநாயகியாகவும் நடித்து வரும் இந்தத் தொடருக்கு ஆரம்பம் முதலே தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.
</p><p>
1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக பயணித்து வரும் கயல், தொடர்ந்து டிஆர்பியிலும் முக்கிய இடங்களை பிடித்து வருகிறது. தற்போது திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடரின் கதைக்களமும் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5392b3f3-71e3-4799-abbc-e4f90050a71a/26-6a7c812536e32.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், கடந்த சில எபிசோடுகளாக சஞ்சீவ் கோமா நிலையில் இருப்பது போன்ற காட்சிகள் காட்டப்பட்டு வருகின்றன. இதனை வெறும் கதையின் திருப்பம் என்றே ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>

சஞ்சீவ் இனி கயலில் நடிக்கமாட்டாரா?
</h2><p>
கயல் சீரியலில் இருந்து சஞ்சீவ் விலகியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்டதாக கூறப்படும் ஒரு பிரச்சனைக்குப் பிறகு, சஞ்சீவ் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என சீரியலில் பணியாற்றும் சிலர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p></p><p>ஆனால், உண்மையில் என்ன பிரச்சனை ஏற்பட்டது என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல் வெளியாகவில்லை. அதேநேரத்தில், சஞ்சீவ் இனி தொடரில் தோன்ற மாட்டார் என்ற தகவல் மட்டும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45842cac-bf30-48b3-b94c-fa23fbae0217/26-6a7c8125e024d.webp' /></p><p>இதன் காரணமாகவே கதையில் அவரது கதாபாத்திரத்தை கோமா நிலையில் வைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>இதேபோன்ற சூழல் ஏற்கனவே சன் டிவியின் எதிர்நீச்சல் தொடரிலும் ஏற்பட்டது. அந்தத் தொடரில் நாயகியாக நடித்த கனிகா விலகிய பிறகும், அவரது கதாபாத்திரம் கோமாவில் இருப்பதாகக் கூறி பல மாதங்கள் கதைக்களம் நகர்த்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c8b80ba-84b3-40c2-b3de-c3cb2aa02519/26-6a7c812690d94.webp' /></p><p></p><p>
</p><p>
தற்போது அதே பாணியை கயல் சீரியலிலும் பின்பற்றுகிறார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இனி சஞ்சீவின் கதாபாத்திரத்தை கோமா நிலையிலேயே வைத்துக் கதையை நகர்த்தப் போகிறார்களா? அல்லது அவருக்கு பதிலாக புதிய ஹீரோவை களமிறக்கப் போகிறார்களா? இல்லை, சஞ்சீவின் விலகலால் கயல் சீரியலையே முடிவுக்கு கொண்டு வரப் போகிறார்களா? என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T14:20:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாயகத்தின் மண்வாசனையை உலகுக்கு எடுத்துச் சென்ற IBC தமிழின் அம்மான் காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ibc-tamil-amman-s-golden-iswaran-passed-away-1786544171"></link>
            <id>https://ibctamil.com/article/ibc-tamil-amman-s-golden-iswaran-passed-away-1786544171</id>
            <summary type="text">IBC தமிழின் ‘Tea கடை’ நிகழ்ச்சியின் மறக்க முடியாத கலைஞருக்கு தமிழர் மத்தியில் அஞ்சலி...

தாயகத்தின் குச்சுக்கிராமங்களுக்குள் சென்று அங்குள்ள மக்களின...</summary>
            <content type="html"><![CDATA[<p>IBC தமிழின் ‘Tea கடை’ நிகழ்ச்சியின் மறக்க முடியாத கலைஞருக்கு தமிழர் மத்தியில் அஞ்சலி...
</p><p>
தாயகத்தின் குச்சுக்கிராமங்களுக்குள் சென்று அங்குள்ள மக்களின் வாழ்வியலையும், கிராமிய மொழிநடையையும், மண்ணின் மண்வாசனையையும் உலகத் தமிழர்களிடம் கொண்டு சேர்த்த IBC தமிழின் ‘Tea கடை’ நிகழ்ச்சியின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவரான ‘அம்மான்’ பொன். ஈஸ்வரன் காலமானார்.</p><p>

‘அம்மான்’ என்பது அவருக்கு வழங்கப்பட்ட ஒரு சாதாரண அழைப்புப் பெயர் அல்ல. 

தாயகத்தின் கிராமிய சமூகத்தில், பெரும் விவசாயிகளாகவும், வயது முதிர்ந்த பின்னரும் சமூகத்தில் ஆளுமையுடன் மதிப்புடன் திகழ்ந்தவர்களையும் அன்புடனும் மரியாதையுடனும் அழைத்த பாரம்பரியப் பெயராக ‘அம்மான்’ விளங்கியது.</p><p></p><h2>தனித்த அடையாளம்</h2><p>
அந்தப் பெயருக்கே ஐரோப்பியத் தமிழர் மத்தியில் தனித்த அடையாளத்தை ஏற்படுத்தியவர் பொன். ஈஸ்வரன்.

கலையோடு பிறந்த அற்புதமான கலைஞராகத் திகழ்ந்த அம்மான், தனது இளமைக்காலங்களில் பெண்வேடம் ஏற்று மேடைகளில் சிறப்பாக நடித்ததுடன், வில்லிசை, குறும்படங்கள், மேடை நாடகங்கள் என பல்வேறு கலைத் தளங்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96f1105e-8a0d-4839-989f-71d802f4ad9b/26-6a7c802f269af.webp' /></p><p>
</p><p>
தாயகத்தின் மீதும், தாயக மக்களின் மீதும், தலைவன் மீதும் ஆழ்ந்த பற்றும் பக்தியும் கொண்டிருந்த அவர், தனது கலைப் படைப்புகளிலும் பேச்சிலும் அந்த உணர்வுகளை வெளிப்படுத்தி வந்தார்.
</p><p>
குறிப்பாக IBC தமிழின் ‘Tea கடை’ நிகழ்ச்சியில் அவரது இயல்பான நடைமுறைப் பேச்சும், கிராமிய நகைச்சுவையும், தாயகத்து மக்களின் வாழ்வியலை பிரதிபலித்த உரையாடல்களும் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.</p><p>

அவரது பேச்சு நடையை ரசித்த இளைய தலைமுறையினர், வீட்டில் தமது பெற்றோருடன்கூட அம்மானின் பாணியில் பேசும் அளவுக்கு அவரது பாத்திரமும் பேச்சுவழக்கும் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

காலப்போக்கில் மறைந்து வரும் பழம்பெரும் கிராமியச் சொற்களைத் தேடிப்பிடித்து, அவற்றை தனது நிகழ்ச்சிகளில் இயல்பாகப் பயன்படுத்தியதில் அம்மான் பொன். ஈஸ்வரன் தனித்துவமானவர்.</p><p></p><p> </p><h2>‘அம்மான்’ பொன். ஈஸ்வரன்</h2><p>

தாயகத்தின் குச்சுக்கிராமங்களின் பேச்சுமொழி, மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் மண்ணின் மண்வாசனையை உலகத் தமிழர்களிடம் கொண்டு சென்ற அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
</p><p>
வில்லிசை முதல் மேடை நாடகங்கள் வரை நீண்ட அவரது கலைப்பயணம், இறுதியில் IBC தமிழின் ‘Tea கடை’ நிகழ்ச்சியின் ஊடாக புதிய தலைமுறையினரிடமும் சென்றடைந்தது.</p><p>

IBC தமிழை இறுதிவரை ஆத்மார்த்தமாக நேசித்த அம்மான் பொன். ஈஸ்வரனின் மறைவு, தாயகக் கலைத்துறைக்கும், கிராமியக் கலை மரபுக்கும், அவரை நேசித்த தமிழர்களுக்கும் பேரிழப்பாக அமைந்துள்ளது.
</p><p>
தனது பேச்சால் சிரிக்க வைத்தும், தனது கலை மூலம் தாயகத்தை நினைவூட்டியும், மறைந்து வரும் கிராமியச் சொற்களையும் வாழ்வியலையும் தனது குரலால் பதிவு செய்தும் சென்ற ‘அம்மான்’ பொன். ஈஸ்வரன், இனி நினைவுகளில் மட்டுமே வாழும் ஒரு அழியாத கலைக் குரலாக இருப்பார்.
</p><p>
அவரது மறைவுக்கு IBC தமிழ் குடும்பமும், உலகத் தமிழர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T14:16:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலகக் குழு கும்பலுடன் தொடர்புடைய நபரின் தாயார் துப்பாக்கிச் சூட்டில் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-shooting-at-peko-saman-s-mother-mitheniya-1786542777"></link>
            <id>https://tamilwin.com/article/gun-shooting-at-peko-saman-s-mother-mitheniya-1786542777</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான &#039;பெக்கோ சமன்&#039; என்பவரின் தாயார் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

மித்தெனிய, உல்ஹிட்டியாவ பகுதியில் இன்று (12.8...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான 'பெக்கோ சமன்' என்பவரின் தாயார் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.</p><p>

மித்தெனிய, உல்ஹிட்டியாவ பகுதியில் இன்று (12.8.2026) மாலை இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p>துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>துப்பாக்கிச் சூடு&nbsp;</h2><p>மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e4cd45d-559a-4438-89d9-b556e587d15c/26-6a7c7fed2b8bb.webp' /></p><p>கேஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், பெக்கோ சமன் என்ற நெதுன்கொட நிர்மல பிரசன்ன என்பவரும் அக்குழுவில் இருந்தார்.</p><p>பாதாள உலக குற்றவாளி பெக்கோ சமன் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>இதேவேளை, பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்சானியும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T14:07:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழகத்தின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதல்ல - தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/bjp-condemns-opposing-delimitation-not-good-for-tn-1786543381"></link>
            <id>https://ibctamilnadu.com/article/bjp-condemns-opposing-delimitation-not-good-for-tn-1786543381</id>
            <summary type="text">nainar nagendran condemns resolution against delimitation : தொகுதி மறுவரையறைக்கு எதிரான தவெக அரசின் தீர்மானம் தமிழக நலனுக்கு எதிரானது என தமிழ்நாடு பாஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>nainar nagendran condemns resolution against delimitation : தொகுதி மறுவரையறைக்கு எதிரான தவெக அரசின் தீர்மானம் தமிழக நலனுக்கு எதிரானது என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். </p><h3> 

தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் </h3><p>

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை கொண்டு வரும் முயற்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதல்வர் விஜய், இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a85b47ae-3424-4ed8-99d7-96efd3dc4f80/26-6a7c7d170d0a7.webp' /></p><p>
இந்த தீர்மானத்திற்கு அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. </p><h3>

தமிழகத்தின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதல்ல</h3><p>இந்நிலையில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தவெக அரசின் தீர்மானம் தமிழக நலனுக்கு எதிரானது என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4a0941b-b4cb-469d-9fb3-cabe6e9f8426/26-6a7c7d17b4574.webp' /></p><p>
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழக சட்டமன்றத்தில் இன்று தொகுதி மறுவரையறைக்கு (Delimitation) எதிராகத் தீர்மானம் கொண்டு வந்துள்ள அரசின் செயல், ஜனநாயகத்தின் மாண்பினைச் சிதைக்கும் முயற்சியாகும்.&nbsp;</p><p>
"ஒரு ஓட்டுக்கு ஒரு மதிப்பு" என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை.மக்கள்தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப தொகுதிகள் பிரிக்கப்படும்போது தான், ஒவ்வொரு குடிமகனின் குரலும் நாடாளுமன்றத்தில் சமமான வலிமையுடன் ஒலிக்கும்.</p><p> 

இது வெறும் எல்லைகளைப் பிரிப்பது அல்ல; மக்களின் சரியான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாகும்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தொகுதி மறுவரையறைக்கு எதிரான தவெக அரசின் தீர்மானம் – தமிழக நலனுக்கு எதிரானது!<br><br>தமிழக சட்டமன்றத்தில் இன்று தொகுதி மறுவரையறைக்கு (Delimitation) எதிராகத் தீர்மானம் கொண்டு வந்துள்ள <a href="https://x.com/TVKPartyHQ?ref_src=twsrc%5Etfw">@TVKPartyHQ</a> அரசின் செயல், ஜனநாயகத்தின் மாண்பினைச் சிதைக்கும் முயற்சியாகும். &quot;ஒரு ஓட்டுக்கு ஒரு மதிப்பு&quot;…</p>&mdash; Nainar Nagenthran (@NainarBJP) <a href="https://x.com/NainarBJP/status/2087477690853122412?ref_src=twsrc%5Etfw">August 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு, எந்த மாநிலத்திற்கும், குறிப்பாகத் தென் மாநிலங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ள நிலையில், தவெக அரசின் இந்த எதிர்ப்பு தமிழகத்தின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதல்ல.
</p><p>
 கண்மூடித்தனமாக இத்தகைய சீர்திருத்தங்களை எதிர்ப்பதைத் தவிர்த்து, முதல்வர் திரு. விஜய் அவர்களின் அரசு தனது முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T14:05:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 ஆவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு இல்லை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/no-maternity-leave-for-fourth-child-child-india-1786541498"></link>
            <id>https://jvpnews.com/article/no-maternity-leave-for-fourth-child-child-india-1786541498</id>
            <summary type="text">இந்தியாவில், 4 ஆவது குழந்தை பிறக்கவுள்ள நிலையில், சட்ட விதிகளின்படி தனக்கு மகப்பேறு விடுப்பு வழங்குமாறு கோரி இந்திய அரச பெண் ஊழியர் ஒருவர் தாக்கல் செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில், 4 ஆவது குழந்தை பிறக்கவுள்ள நிலையில், சட்ட விதிகளின்படி தனக்கு மகப்பேறு விடுப்பு வழங்குமாறு கோரி இந்திய அரச பெண் ஊழியர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை&nbsp; நீதிமன்றம் நிராகரித்துள்ளது.&nbsp;</p><p>சசி குமாரி என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த&nbsp; உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சு ராணி சவுகான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.&nbsp;</p><p>தனது 4 ஆவது குழந்தைக்கான மகப்பேறு விடுப்பு கோரிக்கையை நிராகரித்து, சம்பல் பிராந்தியக் கல்வி அதிகாரி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகவே குறித்த பெண் மேல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.&nbsp;</p><p>சட்டப்படி தனக்கு 6 மாத மகப்பேறு விடுப்பை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு அவர் கோரியிருந்தார்.&nbsp;</p><p>விசாரணையின் போது, நடைமுறையிலுள்ள விதிகளின்படி மனுதாரருக்கு 4 ஆவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு பெற உரிமை இல்லை என்பதால், மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசாங்கத் தரப்பு சட்டத்தரணி வாதிட்டார்.&nbsp;</p><p>எனினும், தனது முந்தைய 3 குழந்தைகள் பிறப்பின் போதும் தான் எந்தவொரு மகப்பேறு விடுப்பையும் பெறவில்லை என்றும், தற்போதே முதன்முறையாக விடுப்பு கோருவதாகவும் மனுதாரர் தரப்பு சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.&nbsp;</p><p>இரு தரப்பு வாதங்களையும் பதிசெய்து கொண்ட நீதிபதி, மனுதாரர் ஏற்கனவே மகப்பேறு விடுப்பு பெற்றுள்ளமை தொடர்பான சான்றுகளை அரசாங்கத் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளதால், இந்த விடயத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியமில்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.</p>]]></content>
            <updated>2026-08-12T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தல்: இரகசியமாக விமானம் மாற்றப்பட்டதை ஒப்புக்கொண்டார் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-says-planes-were-switched-1786542046"></link>
            <id>https://ibctamil.com/article/trump-says-planes-were-switched-1786542046</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த மாதம் துருக்கியில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டிலிருந்து வெளியேறியபோது, ​​இரகசியமாக விமானம் மாற்றப்பட்டதை உறுதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த மாதம் துருக்கியில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டிலிருந்து வெளியேறியபோது, ​​இரகசியமாக விமானம் மாற்றப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார். அச்சுறுத்தல்கள் காரணமாக அவ்வாறு செய்ய வேண்டியிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

"நான் இரகசிய சேவை மற்றும் இராணுவத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றினேன்.
 அவர்கள் என்னை வேறு விமானத்தில் பயணிக்க வைக்க விரும்பினர்,""அவர்கள் சொல்வதை நான் செய்ய வேண்டும்." என்று ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.</p><h2>விமானம் மாற்றப்பட்ட தகவல்</h2><p>&nbsp;ஜூலை 8 அன்று, தொலைக்காட்சி கமராக்களைப் பார்த்தபடி ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் டிரம்ப் ஏறியதாகவும், பின்னர் ஒரு இராணுவ விமானத்தில் ஏறுவதற்காக உணவு வண்டியில் ஒளிந்துகொண்டதாகவும் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df74dffb-14c5-4c9b-aff4-3a38bb0439dd/26-6a7c7b8fd41ec.webp' /></p><p>

விமானத்தின் மீது ஏவுகணை வீசப்போவதாக ஈரான் விடுத்த நம்பகமான அச்சுறுத்தலை அமெரிக்கா கண்டறிந்ததாக அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்தனர்.
</p><p>
ஈரானிய அச்சுறுத்தலுக்குப் பதிலளிக்கும் ஒரு விரிவான தந்திரத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க ஜனாதிபதி இரகசியமாக வெளியேற்றப்பட்டார் என்பது, விமானத்தில் இருந்த பத்திரிகையாளர்களுக்கும் சில வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கும் தெரியாமல் இருந்தது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-08-12T13:56:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நூற்றாண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட பிரித்தானிய போர்க்கப்பலின் சிதைவுகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wreckage-of-a-british-warship-discovered-1786541666"></link>
            <id>https://tamilwin.com/article/wreckage-of-a-british-warship-discovered-1786541666</id>
            <summary type="text">கடந்த 1908-ஆம் ஆண்டு ஆங்கிலக் கால்வாயில் மூழ்கிய அரச கடற்படைக்குச் சொந்தமான
&#039;ஹெச்.எம்.எஸ் டைகர்&#039; என்ற போர்க்கப்பலின் சிதைந்த பகுதிகளை சுழியோடிகள் குழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 1908-ஆம் ஆண்டு ஆங்கிலக் கால்வாயில் மூழ்கிய அரச கடற்படைக்குச் சொந்தமான
'ஹெச்.எம்.எஸ் டைகர்' என்ற போர்க்கப்பலின் சிதைந்த பகுதிகளை சுழியோடிகள் குழு
கண்டுபிடித்துள்ளது.
</p><p>
1908-ஆம் ஆண்டு கடற்படைப் பயிற்சியின் போது, மற்றொரு போர்க்கப்பல் மீது
தற்செயலாக மோதியதில் 'ஹெச்.எம்.எஸ் டைகர்' இரண்டாகப் பிளந்து கடலில்
மூழ்கியது.

இதில் 57 பணியாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.</p><p></p><h2>சிதைவுகள்&nbsp;</h2><p>

'புரோஜெக்ட் எக்ஸ்ப்ளோர்' என்ற ஆய்வுக் குழுவைச் சேர்ந்த லியோ ஃபீல்டிங்
மற்றும் டான் மெக்முலன் ஆகியோர் ஐந்து ஆண்டுகள் வரலாற்று ஆவணங்களை ஆய்வு
செய்து, வைட் தீவுக்கு அருகே கடலுக்கு அடியில் இந்த போர்க்கப்பலின்
எச்சங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/701ffd79-4e0d-4689-88d6-bb364ba6064d/26-6a7c7968ca0e1.webp' /></p><p>

தற்போது இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பரிசீலனையில் உள்ள 'ஆயுதப் படைகள்
சட்டத்தின்' கீழ், இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க போர்க்கப்பல் சிதைவுகள்
சேதப்படுத்தப்படாமல் 'பாதுகாக்கப்பட்ட பகுதியாக' அறிவிக்கப்பட்டு
பராமரிக்கப்படவுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T13:47:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம் - அதிமுக எதிர்ப்பு, திமுக ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/admk-oppose-cm-vijay-delimitation-resolution-1786513821"></link>
            <id>https://ibctamilnadu.com/article/admk-oppose-cm-vijay-delimitation-resolution-1786513821</id>
            <summary type="text">resolution against delimitation in TN assembly : தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்திற்கு திமுக, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>resolution against delimitation in TN assembly : தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்திற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
</p><h3>
தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம்</h3><p> 

தமிழ்நாடு சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது. </p><p>

இன்று நடைபெற்று வரும் 5 ஆம் நாள் விவாதத்தில், தொகுதி மறுவரையறை மசோதா குறித்த தனித்தீர்மானத்தை முதல்வர் விஜய் கொண்டு வந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80fe01a4-5005-4df1-9d8d-76b01fa3ce13/26-6a7c099ecad69.webp' /></p><p> 

 தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் விஜய், "நம்முடைய குடும்பத்தில், நம்முடைய வீட்டில் இருக்கிற பாட்டி, அம்மா, அக்கா, தங்கச்சி என பெண்களைப் பற்றிய ஒரு தீர்மானம் இது. அவர்களுக்காகவும், அவர்களைப் பற்றியும் என் மனதிலிருந்தும், இதயத்திலிருந்தும் பேசுகிறேன்.</p><p> 

இதற்கு முன்பு கிடைத்த வெற்றிக்கும், இன்று இந்த இடத்திற்கும் மிகப்பெரிய காரணமாக இருந்தவர்கள் பெண்கள்தான்.
</p><p>
சங்ககாலம் தொடங்கி இன்றுவரை அடையாளமாக விளங்குகிற பெண் ஆளுமைகள் குறித்து பேசினார்.

நம்முடைய தமிழ்நாட்டு மண்ணில் சங்ககாலம் தொடங்கி இன்று வரை மிகப்பெரிய அடையாளமாக விளங்கிய பெண் ஆளுமைகள் ஏராளம். சங்ககாலத்தில் அவ்வையார், இலக்கியத்தில் கண்ணகி, மணிமேகலை, குண்டலகேசி போன்றோர் நிலைத்து நிற்பவர்கள்.&nbsp;</p><p></p><p>
ஆண்டாள், காரைக்கால் அம்மையார் போன்றவர்கள் ஆன்மிகத்திலும் இலக்கியத்திலும் உயர்ந்த இடத்தைப் பெற்றவர்கள். ராணி வேலுநாச்சியார், குயிலி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, அஞ்சலையம்மாள் உள்ளிட்டோர் நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியவர்கள்.</p><p>

இவ்வாறு நம்முடைய தமிழ்நாட்டுப் பெண்கள் சுதந்திரப் போராட்டம் தொடங்கி சமூகநீதிப் போராட்டம் வரை பல்வேறு தளங்களில் பங்களித்துள்ளனர். </p><p>

அதுமட்டுமல்லாமல், கல்வி, அறிவியல், அரசியல், நீதி, நிர்வாகம், தொழில்நுட்பம் என அனைத்து துறைகளிலும் இன்று தமிழ்நாட்டுப் பெண்களின் பங்களிப்பு மிகப்பெரிய அளவில் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9319e255-b4d4-481f-9fbd-2836037e218d/26-6a7c099f7d781.webp' /></p><p> 

தமிழ்நாட்டில் ஆண்களை விட பெண்களை அதிக வாக்காளர்களாக உள்ளனர். பெண்களுக்கான அரசியல் இடம் என்பது சலுகை அல்ல அது உரிமை.</p><p> பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தப்படுகிறது. 

பெண்களுக்கான அரசியல் அதிகாரம் வழங்குவதில் முன்னோடி மாநிலமாக தவெக அரசு உள்ளது. பேரவையில் 4 பெண் அமைச்சர்கள் உள்ளனர்.
</p><p>
பெண்களுக்கான பாதுகாப்பிலும் அவர்களுக்கான முக்கியத்துவத்திலும் தவெக அரசு கவனமாக தான் உள்ளது. உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை கொடுத்ததால் ஆயிரக்கணக்கான பெண்கள் மக்கள் பிரதிநிதிகளாக அமர்ந்துள்ளனர். </p><p>

பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை இனியும் தாமதிக்காமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம். இது பெண்களுக்கான சலுகை அல்ல, அவர்களுக்கான ஜனநாயக உரிமை. </p><p>

தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக நடத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் 6 கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டிலிமிட்டேஷன் காரணமாக தென் மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசப்பட்டது.&nbsp;</p><p></p><p>
ஒவ்வொரு மாநிலத்திலும் 50 சதவிகித மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்தாலும், புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பிறகு அதன் அடிப்படையில் தொகுதி மறு சீரமைக்கப்படும். இவ்வாறு செய்தால் தென் மாநிலங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கை நாடாளுமன்றத்தில் குறையும்.</p><p>

தொகுதி மறு சீரமைப்பு சட்டத்தை நிறைவேற்றினால் மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய தென்மாநிலங்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவ அநீதி ஏற்படும். எனவே 543 என்ற மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையை நிரந்தரமாக நிலைநிறுத்த வேண்டும்" என பேசினார். </p><h3>

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
</h3><p>
இந்த தீர்மானம் குறித்து கட்சிகளின் சார்பில் அதன் உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63f3365c-ab5c-4d29-b597-81bbd473e803/26-6a7c09a030302.webp' /></p><p>

இந்த தீர்மானம் குறித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், பாமக எம்எல்ஏ கணேஷ் குமார், பாஜக எம்எல்ஏ போஜராஜன், உள்ளிட்டோர் மகளிர் இடஒதுக்கீட்டை வரவேற்றாலும், தனித்தீர்மானத்தை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><p>தீர்மானம் மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தீர்மானத்தை ஆதரித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T13:47:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின் கட்டணம் உயர்வு சர்ச்சை: நடிகை வைஷாலி குற்றச்சாட்டுக்கு TANGEDCO விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/tn-eb-hike-vaishali-s-video-viraltangedco-reply-1786522235"></link>
            <id>https://ibctamilnadu.com/article/tn-eb-hike-vaishali-s-video-viraltangedco-reply-1786522235</id>
            <summary type="text">கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக தமிழ்நாட்டில் மின் கட்டணம் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியும், குழப்பமும் அதிகரித்து வருகிறது.வழக்கமாக செலுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக தமிழ்நாட்டில் மின் கட்டணம் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியும், குழப்பமும் அதிகரித்து வருகிறது.</p><p>வழக்கமாக செலுத்தி வந்த தொகையைவிட, தற்போது பல மடங்கு அதிகமாக மின் கட்டணம் வருவதாக பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95fb2cc6-e5d3-4396-9fba-d7fa8e1d251f/26-6a7c2ec1b9f84.webp' /></p><p> </p><p>குறிப்பாக, சில வீடுகளில் வழக்கத்தைவிட நான்கு மடங்கு வரை மின் கட்டணம் அதிகரித்துள்ளதாக கூறப்படும் புகார்கள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நடிகை வைஷாலி வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது.</p><h2>நடிகை வைஷாலி வைரல் வீடியோ</h2><p>அந்த வீடியோவில், மின் கட்டணம் தொடர்பாக தான் முன்பு வெளியிட்ட கருத்துக்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டதுடன், தற்போதைய மின் கட்டண உயர்வு குறித்து தனது ஆதங்கத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.</p><p>

நடிகை வைஷாலி தனது வீடியோவில், 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானபோது தான் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும், இதுகுறித்து முன்பு வீடியோ வெளியிட்டதாகவும் குறிப்பிட்டார்.</p><p></p><p>ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக சாதாரண மக்களுக்கு வழக்கத்தைவிட அதிகமான மின் கட்டணங்கள் வருவதாகவும், இதனால் குடும்பங்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.</p><p>

மேலும், 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தை செயல்படுத்துவதற்குப் பதிலாக, முந்தைய முறையைப் போலவே நியாயமான கட்டணத்தை வசூலித்தால்கூட பொதுமக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்றும் அவர் தனது கருத்தை தெரிவித்தார். தற்போதைய நிலை தொடர்ந்தால், அரசின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை பாதிக்கப்படலாம் என்றும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
</p><p>
நடிகையின் இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவிய நிலையில், மின் கட்டணம் தொடர்பான குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) விளக்கம் கொடுத்துள்ளது.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Db5oSt3ygdF/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Db5oSt3ygdF/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Db5oSt3ygdF/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Vaishali Thaniga (@_vaishalithaniga)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><h2>மின்சார வாரியம் விளக்கம்&nbsp;</h2><p>

மின் கட்டணத்தில் மாற்றம் இல்லை
மின்சார வாரியத்தின் விளக்கத்தின்படி, நடப்பாண்டில் வீடுகளுக்கான மின் கட்டணத்தில் எந்தவிதமான கட்டண உயர்வும் செய்யப்படவில்லை. அதாவது, மின் கட்டண விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டதால்தான் தற்போது பொதுமக்களுக்கு அதிக கட்டணம் வந்துள்ளது என்ற குற்றச்சாட்டை வாரியம் மறுத்துள்ளது.
</p><p>
கோடை காலத்தில் அதிகரித்த மின் பயன்பாடு
மின் கட்டணம் அதிகமாக வருவதற்கான முக்கிய காரணமாக, கோடை காலத்தில் ஏற்பட்ட அதிகப்படியான மின் பயன்பாட்டை மின்சார வாரியம் சுட்டிக்காட்டியுள்ளது.

கோடை வெயில் நீண்ட நாட்கள் நீடித்ததன் காரணமாக, வீடுகளில் மின்விசிறி, ஏர் கண்டிஷனர், குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட மின்சாதனங்களின் பயன்பாடு அதிகரித்திருக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f87e081-8e18-43b7-8fcf-6a9200c7bf05/26-6a7c2ec269aa1.webp' /></p><p></p><p>இதன் காரணமாக மொத்த மின் நுகர்வு அதிகரித்து, அதற்கேற்ப சில நுகர்வோரின் கட்டணத் தொகையும் உயர்ந்திருக்கலாம் என மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

எனவே, மின் கட்டண விகிதம் உயர்த்தப்படவில்லை; மாறாக, பயன்படுத்தப்பட்ட மின்சாரத்தின் அளவு அதிகரித்ததே சில நுகர்வோருக்கு அதிக கட்டணம் வருவதற்கான காரணம் என வாரியம் தெரிவித்துள்ளது.</p><p>இதற்கிடையில், மின் கட்டணம் தொடர்பாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் மின் இணைப்புகளில் சிறப்பு ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.</p><p>

மொத்தம் 3.43 லட்சம் மின் இணைப்புகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு ஆய்வில், வெறும் 0.75 சதவீத இணைப்புகளில் மட்டுமே வேறுபாடுகள் கண்டறியப்பட்டதாக வாரியம் கூறியுள்ளது.
</p><p>
இதன் மூலம், மாநிலம் முழுவதும் மின் கட்டணக் கணக்கீட்டில் மிகப்பெரிய அளவில் தவறு நடைபெற்றுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T13:46:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/aadhav-arjuna-says-need-pm-from-tamilnadu-1786523839"></link>
            <id>https://ibctamilnadu.com/article/aadhav-arjuna-says-need-pm-from-tamilnadu-1786523839</id>
            <summary type="text">aadhav arjuna needs pm from tamil nadu : தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும் என சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார். 

த...</summary>
            <content type="html"><![CDATA[<p>aadhav arjuna needs pm from tamil nadu : தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும் என சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார். </p><h3>

தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம்</h3><p> 

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை கொண்டு வரும் முயற்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. </p><p>

இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதல்வர் விஜய், இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48b8fdea-6942-46a5-bb2a-83b781e3f6de/26-6a7c30c0d5283.webp' /></p><p> 

இந்த தீர்மானத்திற்கு அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.&nbsp;</p><p></p><h3> 

தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர்
</h3><p>
இந்த தீர்மானத்தை ஆதரித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "தென் மாநிலங்களுக்கு தொகுதிகளை 50 சதவிகிதம் உயர்த்தினாலும் பாதிப்பு ஏற்படக்கூடும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17f06545-1a41-4ef3-9ad1-11eb678dfbd0/26-6a7c30c23a011.webp' /></p><p>

தமிழ்நாடு வளர்ச்சியடைந்த மாநிலமாக உள்ளது. ஆனால், அது அரசியலில் பிரதிபலிக்கவில்லை. தற்போது 5 முதல் 6 வட இந்திய மாநிலங்கள் சேர்ந்தாலே பிரதமரை உருவாக்க முடியும் என்ற நிலை தற்போது வரை உள்ளது. அது மாற்றப்பட வேண்டும். </p><p>

தென் இந்தியாவிலிருந்து ஏன் தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும். அதிகாரம் உத்தரப்பிரதேசத்திற்கோ, பீகாருக்கோ, குஜராத்திற்கோ மட்டும் அல்ல. நம்முடைய குரல் சட்டமன்றத்தில் ஒலித்தது போல், பாராளுமன்றத்தில் ஒரு பிரதமராக ஒலிக்கப்பட வேண்டும்" என பேசியுள்ளார்.</p><h3> 

ஆர்.பி.உதயகுமார்
</h3><p>
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இது குறித்து பேசிய அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், முதல்வர் விஜய் தமிழ்நாட்டில் செய்யாததை எல்லாம் செய்ததாக கூறி இன்ஃப்ளூயன்சர்களை வைத்துக்கொண்டு, பிற மொழிகளில் போலி செய்திகள் மூலம் மாயபிம்பம் உருவாக்கப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d520d469-13d7-47c9-91e6-e39d183d4d61/26-6a7c30c187cd0.webp' /></p><p>
இந்த மாயபிம்பத்தை வைத்து, 2029 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நம்ம முதல்வர் விஜய்யை முன்னிருந்த தவெக கட்சி முன்னெடுப்பு எடுத்து வருகிறது" என பேசியிருந்தார்.</p><p>&nbsp;&nbsp;<iframe frameborder="0" src="//www.youtube.com/embed/wN25U-NxuJM" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T13:46:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும்: சீமான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/maria-wilson-must-apologize-in-the-assembly-1786541937"></link>
            <id>https://ibctamilnadu.com/article/maria-wilson-must-apologize-in-the-assembly-1786541937</id>
            <summary type="text">Seeman Statement to Minister Maria Wilson உலகுக்கு அன்பை முதன்முதலில் போதித்த ஒரே மொழி, தமிழ் மொழிதான் என்பது உங்களுக்கு தெரியாதா?. &#039;அன்பிற்கும் உண்டோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Seeman Statement to Minister Maria Wilson உலகுக்கு அன்பை முதன்முதலில் போதித்த ஒரே மொழி, தமிழ் மொழிதான் என்பது உங்களுக்கு தெரியாதா?. 'அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்' என்றும், 'அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு' என்றும் அன்பின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொன்ன தமிழ்க் குறள்களை அமைச்சர் படித்ததில்லையா? என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.&nbsp;&nbsp;<br></p><p>இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழகச் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மரிய வில்சன் நிதிநிலை அறிக்கையை வாசிக்கும்போது தமிழைத் தெளிவாக உச்சரிக்க தடுமாறியதையும், பார்த்து படிக்கும்போதே எண்களைப் பிழையாகக் கூறியதையும் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் சுட்டிக்காட்டி, அதனை திருத்திக் கொள்ளக் கோரிய சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரனுக்கு, நிதியமைச்சர் மரிய வில்சன் கொடுத்த பதிலும், வெளிப்படுத்திய உடல்மொழியும் ஆணவத்தின் உச்சம்.</p><p>தன்னிடம் உள்ள பிழையை ஏற்றுக்கொண்டு, அதனைத் திருத்திக் கொள்ள முனைவதே அரசியல் முதிர்ச்சியாகும். அப்பண்பு துளியுமற்று, தன்னை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள முடியாதென அமைச்சர் மரிய வில்சன் அதிகாரத் திமிரில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
</p><p>
தமிழ்ச் சான்றோர்கள் பலர் செந்தமிழால் சொற்போர் நடத்திய சட்டப்பேரவையில், இன்றைக்கு ஓர் அமைச்சர் பார்த்து வாசிக்கும்போதே திணறுவது அப்பேரவைக்கு இழுக்காகாதா? உலகெங்கும் வாழும் தமிழ் மக்களும், பிற மாநிலத்தவரும் நேரலையில் உற்று நோக்கும் ஓர் அவையில், உங்களை வாக்களித்துத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்தத் தமிழ் இனத்திற்கே இது மாபெரும் அவமதிப்பல்லவா?</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/YD6EHHj-urE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
</p><p>
அப்பிழையை ஒருவர் சுட்டிக் காட்டும்போது, நீங்கள் கோபம்கொள்வது ஏன்? சங்கம் வைத்து தமிழ் வளர்த்த திருநாட்டில், தமிழைப் பிழையற உச்சரிக்கவே ஒரு அமைச்சர் தடுமாறுவதா? என நியாயமாக மக்கள்தான் உங்கள் மீது கோபம்கொள்ள வேண்டும். நாங்கள் குற்றம் சொல்வதில் ஓர் அறம் உள்ளது. நீங்கள் கோபப்படுவதில் என்ன அர்த்தம் உள்ளது?
</p><p>
'சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’. தமிழைப் பிழையின்றிப் பேச நீங்கள் பயிற்சியும், முயற்சியும் எடுத்தால், அது எளிதில் வசப்படும். அதைவிடுத்து நான் பிறப்பால் கிறிஸ்தவன்; அதுவே எனக்கு அன்பைப் போதித்தது. எவ்வளவு தமிழ் படித்தாலும் அன்பைப் போதிக்காது" என்பது என்ன மாதிரியான அணுகுமுறை?.
</p><p>
நீங்கள் கிறித்துவராக பிறந்திருக்கலாம்; பைபிள் உங்களுக்கு அன்பை போதித்திருக்கலாம். அதைச் சொல்வது உங்கள் உரிமை; உங்கள் உணர்வு; அதை நாங்கள் மதிக்கிறோம். நீங்கள் சார்ந்துள்ள மதம் அன்பைப் போதிக்கிறது என்று சொல்ல உங்களுக்கு முழு உரிமை உண்டு. ஆனால், எங்கள் அன்னை தமிழ்மொழி அன்பைப் போதிக்காது, பெறமுடியாது என்று சொல்ல நீங்கள் யார்? உடன்பிறந்த தம்பி குடும்பத்தை, உருட்டுக் கட்டையால் தாக்கிய உங்கள் அன்பையும், இரக்கத்தையும்தான் உலகமே கண்டதே.
</p><p>
உலகுக்கு அன்பை முதன்முதலில் போதித்த ஒரே மொழி, தமிழ் மொழிதான் என்பது உங்களுக்கு தெரியாதா?. 'அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்' என்றும், 'அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு' என்றும் அன்பின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொன்ன தமிழ்க் குறள்களை அமைச்சர் படித்ததில்லையா?
</p><p>
உங்கள் கட்சியின் முகப்பில் உள்ள "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று உயிர்களின் சமத்துவத்தைப் போதித்தது எங்கள் தமிழ் இல்லையா? "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்" என்று பகிர்ந்துண்ணும் உயரிய பண்பினை கற்பித்தது எங்கள் தமிழ் இல்லையா?

&nbsp;&nbsp;</p><p>"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்றும், ஆதிபகவன் முதற்றே உலகு என்றும், உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் என்றும், உலகம் யாவையும் தாமுளவாக்கலும் என்றும், பாரடா உன் மானுடப் பரப்பை; மானுட சமுத்திரம் நானென்று கூவு! என்றும், புதியதோர் உலகம் செய்வோம்; கெட்டப்போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்! என்றும், "உலகு, உலகு" என்று உலக மாந்தர் அனைவரையும் உறவாகக் கருதி நேசித்தது, எங்கள் தமிழ் இல்லையா?&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3c1530b-42fc-493c-89d9-7709c7cefae3/26-6a7c78a88130a.webp' /><br></p><p>காக்கைக் குருவி எங்கள் சாதி; நீள் கடலும் வானும் எங்கள் கூட்டம் என்று பேரன்பு கொண்டு பாடியது எங்கள் தமிழ் இல்லையா?. தன் தவறுக்கு மதத்தை உள்ளிழுத்து தப்பிக்க முயலும் மலிவான அரசியல் செய்யும் மரியவில்சன். எல்லா சமயங்களும், எல்லா வேதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.&nbsp;&nbsp;</p><p>இறைமகன் இயேசு "அண்டை அயலானிடமும் அன்பு காட்டு" என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "பக்கத்து வீட்டுக்காரன் பசியோடு இருக்கும் பொழுது நீ உணவருந்தாதே" என்றார். தமிழ்ச்சைவ திருமுறையோ "அன்பே சிவம்" என்கிறது. பெரும்பாவலர் பாட்டன் பாரதியோ "பகைவனுக்கும் அருள்வாய் நன்னஞ்சே" என்று பாடினார்.&nbsp;&nbsp;</p><p>'வாடியப் பயிரை கண்டு வாடிய' வள்ளலாரும், 'அன்புவழி' என்றே சமயநெறி வகுத்த வைகுந்தரும் வாழ்ந்து, வளர்த்த தமிழ் மொழியில் அன்பே இல்லை என்று கூறி, இழிவுபடுத்துவதை எப்படி ஏற்க முடியும்?. உலகுக்கு மானுடத்தையும், கருணையையும் போதித்த பேரன்பின் தாய் எங்கள் தமிழ். "தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே; தமிழைப் பழித்தவனைத் தாயே தடுத்தாலும் விடாதே!" என்றார் பாவேந்தர் தாத்தா பாரதிதாசன்.&nbsp;&nbsp;</p><p>அதே அவையில் தமிழக முதல்வர் "தமிழ் நம் உயிருக்கு நேர்; தமிழ் நம் தாய்" என்று பேசும்போது, தாங்களோ "என் சமயம் மட்டுமே அன்பைப் போதித்தது, தமிழ் போதிக்கவில்லை" என்று பேசுவது ஏற்புடையதன்று. தமிழின் பேரன்பை நீங்கள் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். உங்கள் பிழைக்கு வருந்தித் திருந்துவதை விடுத்து கோபப்படக் கூடாது.&nbsp;&nbsp;</p><p>கிறித்துவ சமயப்போதகராக தமிழ்நாட்டுக்கு வந்த ஜி.யு.போப், தமிழ்த்தொண்டராகி, தனது கல்லறையில் தமிழ் மாணவனெனப் பொறிக்கச் சொன்ன வரலாறு தெரியுமா அமைச்சர் மரிய வில்சனுக்கு?.&nbsp;&nbsp;</p><p>இத்தாலியிலிருந்து வந்து தமிழ் இலக்கியங்களை இலத்தீனில் மொழிபெயர்த்து, ஜோசப் பெஸ்கி என்ற தனது பெயரை வீரமாமுனிவராக மாற்றிக் கொண்ட மகத்தான மாமனிதர் குறித்து தெரியுமா அமைச்சர் மரியவில்சனுக்கு? கிறித்துவ மதத்தைப் பரப்ப வந்த மதப்போதகர்களே இங்கு தமிழுக்குத் தொண்டாற்றித்தான் மறைந்தார்கள்.&nbsp;&nbsp;</p><p>நீங்கள் பிறந்த மதம் கிஸ்த்தவம் என்கிறீர்கள்! அது சரிதான். ஆனால் எத்தனை தலைமுறையாக நீங்கள் கிறிஸ்தவர்கள்? அதற்கு முன்பு? ஆனால், ஐம்பதனாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நாம் தமிழர்கள். கிறிஸ்துவம் என்பது நீங்கள் ஏற்றுக்கொண்டுள்ள சமயம். ஆனால், உங்களின் மொழி என்ன? உங்களின் இனம் என்ன? உங்கள் இனத்திற்கான அடையாளம் என்ன? உங்கள் தாய்மொழி தமிழா? இல்லையா? என்பதை அதே அவையில் நீங்கள் விளக்க வேண்டும். கல்வி நிறுவனம் வைத்து நடத்துகிறேன் என்கிறீர்கள். அந்த கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களை நினைத்து நாங்கள் கவலைப்படுகிறோம்.&nbsp;&nbsp;</p><p>ஐரோப்பா முழுவதும் கிறிஸ்துவர்கள்தான். பிறகு ஏன் இத்தனை நாடுகள்? ஏனென்றால், மொழி வழியேதான் தேசிய இனங்களும், நிலங்களும். ஒரே கிறிஸ்தவ மதம்தான், ஆனாலும் இங்கிலாந்திலிருந்து அயர்லாந்து பிரிந்தது ஏன்? காரணம் மொழி. அவர்கள் இங்கிலிஷ், இவர்கள் ஐரிஷ். இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்ததற்கு காரணம் மதம். ஆனால், பாகிஸ்தானிலிருந்து, பங்களாதேஷ் பிரிந்ததற்கு காரணம் மதமல்ல, மொழி. தாய்மொழிதான் அடையாளம். அதனால்தான் I am English, I am French, I am Spanish, I am Irish என்று தாய்மொழியை வைத்து அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.&nbsp;&nbsp;</p><p>எனவே, ஒரு மனிதனின் அடையாளம் என்பது அவருடைய தாய்மொழிதானே ஒழிய, ஏற்றிருக்கும் மதமல்ல; மதம் என்பது மாறிக்கொள்ள கூடியது. மொழியும், இனமும் மாறிக்கொள்ள முடியாதது என்ற அடிப்படை உண்மையை உணராது, தமிழைப் பிழையாக உச்சரிப்பதும், அதனை நியாயப்படுத்தி, தமிழை அவமதிக்கும் வகையில் பேசுவதும், கிறிஸ்தவச் சமயத்தை உள்ளிழுத்து, தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது.&nbsp;&nbsp;</p><p>தமிழென்பது பேரன்பின் தாய்; அன்பின் உயிர்நிலை. எனவே, எங்களின் உயிர்மொழியான தமிழ் அன்பைப் போதிக்காது என்று இழித்துரைப்பது, தமிழையும், தமிழ்த்தேசிய இனத்தையும் அவமதிக்கும் செயலாகும். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அன்னைத்தமிழை அவமதிக்கும் வகையிலே, பேசிய அமைச்சர் மரிய வில்சன் தன்னுடையப் பேச்சுக்கு, அதே அவையில் மனம்வருந்தி மன்னிப்புக் கோர வேண்டும்’ என்று சீமான் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-12T13:44:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக் பாஸ் 10ல் போட்டியாளராக வரும் பிரபல டான்ஸ் மாஸ்டர்! லேட்டஸ்ட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/bigg-boss-10-tamil-dance-master-sridhar-as-contest-1786542173"></link>
            <id>https://cineulagam.com/article/bigg-boss-10-tamil-dance-master-sridhar-as-contest-1786542173</id>
            <summary type="text">பிக் பாஸ் ஷோ என்றால் அதில் ஒவ்வொரு சீசனம் ஒரு டான்ஸ் மாஸ்டர் நிச்சயம் போட்டியாளராக வருவார். ஷோவில் நடன டாஸ்குகள் அதிகம் இருக்கும் என்பதால் இப்படி ஒரு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக் பாஸ் ஷோ என்றால் அதில் ஒவ்வொரு சீசனம் ஒரு டான்ஸ் மாஸ்டர் நிச்சயம் போட்டியாளராக வருவார். ஷோவில் நடன டாஸ்குகள் அதிகம் இருக்கும் என்பதால் இப்படி ஒரு விஷயத்தை செய்கிறார்கள்.</p><p>சாண்டி மாஸ்டர், ராபர்ட் மாஸ்டர், மணிசந்திரா, அமீர் என லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. அந்த வரிசையில் இந்த வருடம் பிக் பாஸ் பத்தாவது சீசனில் போட்டியாளராக யார் வரப் போகிறார்கள் என்கிற லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாக இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30b285bd-cb7a-48fb-b15f-43f7ac92f60a/26-6a7c785fe245d.webp' /></p><p>
</p><h2>ஸ்ரீதர் மாஸ்டர்
</h2><p>இந்த வருடம் ஸ்ரீதர் மாஸ்டர் போட்டியாளராக வர இருப்பதாக தகவல் வந்திருப்பதால் ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள்.
</p><p>அவர் தமிழ் சினிமாவில் பல முக்கிய நடிகர்களுடன் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T13:43:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் போர் நிறுத்தம்…!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-iran-agree-to-extend-60-day-ceasefire-1786538899"></link>
            <id>https://ibctamil.com/article/us-iran-agree-to-extend-60-day-ceasefire-1786538899</id>
            <summary type="text">இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஓகஸ்ட் 17 அன்று காலாவதியாக உள்ள நிலையில், அதன் கீழ் 60 நாள் போர் நிறுத்தத்தை நீடிக்க அமெரிக்காவும் ஈரானும் &quot;ஒப்புக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஓகஸ்ட் 17 அன்று காலாவதியாக உள்ள நிலையில், அதன் கீழ் 60 நாள் போர் நிறுத்தத்தை நீடிக்க அமெரிக்காவும் ஈரானும் "ஒப்புக்கொண்டுள்ளன" என பாகிஸ்தான் அரசு வட்டாரங்கள் புதன்கிழமை சர்வதேச ஊடகமொன்றிடம் தெரிவித்தன.
</p><p>
"காலக்கெடுவை நீடிப்பதற்கு இரு தரப்பினரும் மத்தியஸ்தர்களிடம் தங்கள் சம்மதத்தைத் தெரிவித்துள்ளனர்," என மத்தியஸ்த செயல்முறைக்கு நெருக்கமான ஓர் வட்டாரம் கூறியது.</p><h2>&nbsp;போர் நிறுத்தத்தை நீடிக்க செய்தி பரிமாற்றம்</h2><p>"இருப்பினும், போர் நிறுத்த நீடிப்புக் காலம் குறித்து முடிவு செய்ய இரு தரப்பினரும் செய்திகளைப் பரிமாறி வருகின்றனர்," என்றும் அந்த வட்டாரம் மேலும் கூறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30781d6f-42bc-4b41-a60f-b57cf561f375/26-6a7c6f1947f9f.webp' /></p><p>
</p><p>
ஏப்ரல் மாதம் பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் அமெரிக்காவும் ஈரானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. பின்னர், ஜூன் 17 அன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, இறுதி ஒப்பந்தத்தை நோக்கிய பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின.</p><p></p><h2>பல்வேறு காரணங்களால் தடைப்பட்ட பேச்சு</h2><p> இருப்பினும், பாதுகாப்பு உத்தரவாதங்கள் மற்றும் உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் வர்த்தகத்திற்கான உலகின் மிக முக்கியமான பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரம் குறித்த கருத்து வேறுபாடுகள் காரணமாக பேச்சுவார்த்தைகள் பின்னர் தடைப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/731a8fa3-6b46-43c8-85f0-76b7497aa894/26-6a7c6f1a09f26.webp' /></p><p>

ஜூலை 8 முதல் ஜூலை 24 வரை, அமெரிக்காவும் ஈரானும் இராணுவத் தாக்குதல்களைப் பரிமாறிக்கொண்டன. இதில், வோஷிங்டன் ஈரானுக்குள் உள்ள இலக்குகள் மீது தாக்குதல்களைத் தொடுத்தது. </p><p>இதற்குப் பதிலடியாக, தெஹ்ரான் ஜோர்டான், பஹ்ரைன் மற்றும் குவைத் உள்ளிட்ட பல அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் உபகரணங்கள் எனத் தான் கருதியவற்றின் மீது தாக்குதல் நடத்தியது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T13:41:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பெக்கோ சமனின் தாய் மீது துப்பாக்கிச் சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/backo-saman-s-mother-shot-1786540458"></link>
            <id>https://ibctamil.com/article/backo-saman-s-mother-shot-1786540458</id>
            <summary type="text">இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக குற்றவாளி பெக்கோ சமனின் தாய் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக குற்றவாளி பெக்கோ சமனின் தாய் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
மித்தெனிய - உல்ஹிடியாவ பிரதேசத்தில் இன்று துப்பாக்கிச் சூடு பதிவாகியுள்ளது.</p><p></p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p>
</p><p>
இதன்போது, காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb841c5b-7491-4bd3-93c3-185d574457f9/26-6a7c744e4265e.webp' /></p><p>
</p><p>அத்தோடு, இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T13:39:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப் புதைகுழியில் 05 மனித எலும்புக்கூடுகள் இன்று அடையாளம் காணப்பட்டது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/day-50-third-phase-of-semmani-mass-grave-1786540493"></link>
            <id>https://tamilwin.com/article/day-50-third-phase-of-semmani-mass-grave-1786540493</id>
            <summary type="text">செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 50ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்றையதினம்(12.08.2026) நடைபெற்றுள்ளது.

இதன்போது 05 மனித எலும்புக்கூடு இன...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 50ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்றையதினம்(12.08.2026) நடைபெற்றுள்ளது.
</p><p>
இதன்போது 05 மனித எலும்புக்கூடு இன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
</p><h2>அகழ்வு பணிகள் முன்னெடுப்பு</h2><p>
அதேவேளை அடையாளம் காணப்பட்டதில் 06 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/007248ea-719e-4e6a-ab86-e8f4346417c2/26-6a7c74eb9693c.webp' /></p><p>
அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம்
கட்டம் என இதுவரையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், 544 என்பு
கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 530 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b13de944-ebe8-47f2-bd59-5c7ac3866e9a/26-6a7c74ec73893.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d946238e-7dbd-4ec9-a514-1d05471703d3/26-6a7c74ed536d6.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T13:36:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் பணக்கார குடும்ப பட்டியல் - முதல் 10 இடத்தில் 2 தமிழ் குடும்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-tn-familes-in-top-10-india-most-valuable-family-1786541705"></link>
            <id>https://news.lankasri.com/article/2-tn-familes-in-top-10-india-most-valuable-family-1786541705</id>
            <summary type="text">2026 India Most Valuable Family Businesses List : 2026 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பணக்கார வணிக குடும்பங்களின் பட்டியலில் 2 தமிழ்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 India Most Valuable Family Businesses List : 2026 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பணக்கார வணிக குடும்பங்களின் பட்டியலில் 2 தமிழ்நாடு குடும்பங்கள் முதல் 10 இடங்களுக்குள் உள்ளது. </p><h3>

இந்தியாவின் மதிப்புமிக்க பணக்கார வணிக குடும்பங்கள்</h3><p>

பார்க்லேஸ் பிரைவேட் கிளைன்ட்ஸ் ஹுருன் நிறுவனம் 2026 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பணக்கார வணிக குடும்பங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. </p><p>

இந்த பட்டியலில் உள்ள 300 குடும்ப வணிகங்களின் கூட்டு மதிப்பு தற்போது 1.46 டிரில்லியன் டொலராக (இந்திய மதிப்பில் ரூ.138 லட்சம் கோடி) உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/395fa4d1-09ca-4adb-b6e5-4a6456dd8d68/26-6a7c768b17c35.webp' /></p><p>

2024 ஆம் ஆண்டு வெளியான பட்டியலில் இருந்து இந்த வணிகங்களின் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. </p><p>அதாவது கடந்த 2 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் சுமார் ரூ. 4,076 கோடி மதிப்பு உயர்விற்குச் சமமாகும்.&nbsp;</p><p></p><p>

இதில் ரிலையன்ஸ் குழும முகேஷ் அம்பானியின் குடும்பம் ரூ. 25.83 லட்சம் கோடி மதிப்புடன் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது. </p><p>ஆதித்யா பிர்லா குழும குமார் மங்கலம் பிர்லா குடும்பம் ரூ. 8.14 லட்சம் கோடி மதிப்புடன் 3வது இடத்தில் உள்ளது. </p><p> 

ஜிண்டால் குடும்பம் ரூ. 8.01 லட்சம் கோடி மதிப்புடன் 4வது இடத்தில் உள்ளது. </p><p> 

இந்த பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த வெள்ளையன் சுப்பையா தலைமையிலான முருகப்பா குடும்பம், ரூ. 3.06 லட்சம் கோடி மதிப்புடன் 8வது இடத்தில் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46c00b73-1f57-4c45-85be-dc35349f1ca9/26-6a7c768bbe123.webp' /></p><p> 

இதே போல், தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட ஷிவ் நாடார் குடும்பம் ரூ. 2.91 லட்சம் கோடி மதிப்புடன் 9வது இடத்தில் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a79b494b-778a-4481-a1f7-0adda816ef42/26-6a7c768c703cb.webp' /></p><p>

கௌதம் அதானி குடும்பம் ரூ.19.6 லட்சம் கோடி மதிப்புடன், முதல் தலைமுறை தொழில்முனைவோர் குடும்பங்களில் மிகவும் செல்வந்தர்களாக உள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T13:35:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவ துறைசார் கற்கைநெறிகளுக்கான கல்வி நிறுவனம் ஏறாவூரில் திறந்து வைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/educational-institute-medical-courses-in-eravur-1786535944"></link>
            <id>https://tamilwin.com/article/educational-institute-medical-courses-in-eravur-1786535944</id>
            <summary type="text">தாதிய உதவியாளர் கல்வி நிலையம், திறந்து வைக்கப்படுவது சேவை
செய்யத் துடிக்கும் இளைஞர், யுவதிகளுக்கு நல்வாய்ப்பாய் அமையும் என
மட்டக்களப்பு போதனா வைத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாதிய உதவியாளர் கல்வி நிலையம், திறந்து வைக்கப்படுவது சேவை
செய்யத் துடிக்கும் இளைஞர், யுவதிகளுக்கு நல்வாய்ப்பாய் அமையும் என
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்&nbsp; எஸ்.எல்.
தாஹிறா சபியுதீன் தெரிவித்துள்ளார்.
</p><p>
மட்டக்களப்பு – ஏறாவூர், சவுக்கடி பிரதேசத்தில் அமைந்துள்ள கிழக்கு 
புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தில் மருத்துவ துறைசார் பயிற்சி நெறிகள் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>தாதியர் பயிற்சி நெறி</h2><p>
</p><p>
கிழக்கு புற்று நோயாளர் பராமரிப்பு நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள தேசிய தொழிற் தகைமை சான்றிதழ் தராதரத்துடன் கூடிய இந்தப் பயிற்சி நெறிக்கு
நாடெங்கிலுமிருந்தும் 35 தாதிய உதவியாளர் பயிலுநர்கள் தெரிவு
செய்யப்பட்டுள்ளார்கள்.
</p><p>
நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றிய மட்டக்களப்பு
போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தாஹிறா,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb79388c-c93b-4afd-9500-c2b762cd72e6/26-6a7c69e7b510b.webp' /></p><p> </p><p>மூன்றாம் நிலைக் கல்வி
தொழில்சார் கல்விச் சான்றிதழுடன் கூடிய இந்த தாதிய உதவியாளர் பயிற்சியைப்
பூர்த்தி செய்வதற்குரிய பணியிடப் பயிற்சிகளுக்கு சகல உதவிகளையும் வழங்க
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதியளித்துள்ளார்.
</p><p>
இந்தப்
பயிற்சி நெறி அரச, தனியார் வைத்தியசாலைகளிலோ
அல்லது வெளிநாடுகளிலுள்ள வைத்தியசாலைகளிலோ பணியாற்றுவதற்கும், உங்கள்
வாழ்க்கையை பொருளாதார ரீதியில் வளப்படுத்திக் கொள்வதற்கும் 
உங்களுக்கு உதவும் என தெரிவித்துள்ளார்.</p><h2>மனித நேயம் மிக்க கற்கை</h2><p>

சூம் தொழிநுட்பத்தின் வாயிலாக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு
புற்று நோயாளர் பராமரிப்பு நிலையத்தின் தவிசாளர் அல்ஹாஜ். எஸ்.எல்.எம். பௌஸ், 

தாதிய சேவை என்பது வெறும்
சம்பளத்திற்காக மட்டும் பணியாற்றுவதல்ல. </p><p>அது அன்பு, மனித நேயம் ஆகியவற்றின்
ஊற்றாக இருக்கும்.

நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அன்பு, பண்பு, கருணை, கனிவு,
மனித நேயம், சேவை மனப்பான்மை ஆகியவற்றுடன் பராமரிப்பு செய்யக்கூடியதாக
இருந்தால் அது பெரும் பாக்கியமாக இருக்கும். அதனாலேயே நாம் இந்தக் கல்வி
நிலையத்தை ஏறாவூரில் ஆரம்பிக்கிறோம்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b6cab31-21dd-4fb3-b51f-34aae50e60a3/26-6a7c69e8892d9.webp' /></p><p>எதிர்காலத்தில் இந்தக்
கல்வி நிலையம் மனித நேயத்தின் கலங்கரை விளக்காகத் மிளிர்ந்து முழு
நாட்டிற்கும் முன்னுதாரணமாகத் திகழும் என்ற நம்பிக்கை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இந்த நிகழ்வில், ஏறாவூர் ஆயுள்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர்
வானதி கிரிதரன், கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலைய முகாமையாளர் யூ.எல்.
நூகுலெப்பை, திட்ட ஆலோசகர் யூ. முஜிபுர்றஹ்மான், கற்கை நெறிகளுக்கான
இணைப்பாளர் இஸ்ஸத் முஸ்தபா, காதி நீதிவான் அலிமுஹம்மத், முன்னாள் அதிபர்
எம்.எம்.ஜலால்தீன் உட்பட இன்னும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T13:33:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[36 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட வீரமுனைப் படுகொலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/36-years-of-the-veeramuna-massacre-1786541548"></link>
            <id>https://ibctamil.com/article/36-years-of-the-veeramuna-massacre-1786541548</id>
            <summary type="text">அம்பாறை வீரமுனை கிராமத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட வீரமுனைப் படுகொலையின் 36 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.வரலாற்றுக்கு முந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை வீரமுனை கிராமத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட வீரமுனைப் படுகொலையின் 36 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.</p><p>வரலாற்றுக்கு முந்திய நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டிருந்த வீரமுனை எனும் தமிழ்கிராமம் இன்று அந்த மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது.</p><p>

1945ஆம் ஆண்டிலிருந்து 1991ஆம் ஆண்டுவரை தொடர் தாக்குதலுக்குள்ளாகி ஆக்கிரமித்து அழிக்கப்பட்டுவிட்டதன் நினைவே வீரமுனை படுகொலை நினைவேந்தல் தினமாகும்.&nbsp;</p><p></p><h2>வீரமுனை எனும் தமிழ் கிராமம்&nbsp;</h2><p>வரலாற்றுப் பாரம்பரியமிக்க வீரமுனை எனும் தமிழ் கிராமமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் 1945 முதல் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளாகி அழிக்கப்பட்டு வந்த நிலையில், 1990 ஆம் ஆண்டு ஆனி முதல் ஆவணி வரையிலான காலத்தில் மிகக்கொடூரமான இன அழிப்பைச் சந்தித்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cabbf9d-5eb5-4e6a-b47e-cdccf4b90f3c/26-6a7c75ede8964.webp' /></p><p> </p><p>கொண்டவெட்டுவான் இராணுவ முகாம் படையினரும் ஆயுதமேந்திய முஸ்லீம் குழுக்களும் இணைந்து வீரமுனை கோயிலில் தஞ்சமடைந்த மக்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களைப் பிரித்தெடுத்து, சுட்டும் உயிருடனும் தீயிலிட்டுக் கொன்றனர். </p><p>இதிலிருந்து தப்பியோடி காரைத்தீவு பாடசாலை அகதி முகாமில் தஞ்சம் புகுந்த தமிழர்களையும் விசேட அதிரடிப் படையினர் விட்டுவைக்காமல், அங்கு புகுந்து இரு கட்டங்களாக 23 இளைஞர்களைக் கைது செய்து கொன்றொழித்தனர்.
</p><p>அகதி முகாமிலிருந்து விரக்தியுடன் சொந்த ஊர் திரும்பிய பெண்கள் மீது மல்வத்தை பகுதியில் மிருகத்தனமான பாலியல் வல்லுறவுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.</p><p></p><h2>ஊர்காவற்படையினரின் தாக்குதல்</h2><p> ஆவணி மாதத்தில் சிங்கள மற்றும் முஸ்லீம் ஊர்காவற்படையினரின் தாக்குதல்கள் உச்சமடைந்து, தமிழ் மக்கள் வெட்டிக்கொல்லப்பட்டு கிணறுகளிலும், சவளைக்கடை இராணுவ முகாமிற்கு முன்னாலும் வீசப்பட்டனர்.</p><p></p><p> </p><p>மேலும், கிராமங்கள் முழுமையாக தீயிடப்பட்டு 25 பேர் எரியும் நெருப்பில் தூக்கி வீசப்பட்டதோடு, அம்பாறை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 30 காயமடைந்த தமிழர்களும் தூக்கிச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டனர். </p><p>நீதியற்ற முறையில் தொடர்ச்சியாக நடந்த இத்தகைய இன அழிப்புச் சம்பவங்கள் மனித மனங்களை ரணங்களாக்கின.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T13:33:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப்பிற்கு எதிராக நெதன்யாகு எடுத்துள்ள அதிரடி முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/netanyahu-s-bold-move-against-trump-for-gaza-1786512036"></link>
            <id>https://canadamirror.com/article/netanyahu-s-bold-move-against-trump-for-gaza-1786512036</id>
            <summary type="text">இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது உள்நாட்டு அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்க்கத் தயாராக இருப்பதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது உள்நாட்டு அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்க்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளமை உகல நாடுகளில் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இத் தகவலை சவூதி அரேபியாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதரும் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தின் சார்ஜ் டி அஃபேர்ஸாகப் பணியாற்றியவருமான மைக்கேல் ராட்னி தெரிவித்துள்ளார்.</p><p>ட்ரம்ப்பிடமிருந்து எத்தகைய எதிர்வினை வந்தாலும் அதை எதிர்கொள்வதை விட, அத்திட்டத்தைப் பகிரங்கமாக நிராகரிப்பதே தனக்கு நல்லது என்று அவர் கணக்கிடுகிறார் என நான் நினைக்கிறேன் என்று ராட்னி தெரிவித்துள்ளார்.</p><p>இது முதன்மையாக அடுத்த சில மாதங்களில் வரவுள்ள நெதன்யாகுவின் தேர்தல் வாய்ப்புகள் பற்றியது என்று அவர் மேலும் கூறினார்.</p><p>ட்ரம்ப்புடன் அவருக்குள்ள உறவு எப்படியிருந்தது அல்லது இந்தத் திட்டத்தின் சில அம்சங்களை அவர் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்வார் என்பதெல்லாம் இரண்டாம் பட்சமான விடயங்கள் என்றும் தனது வாக்காளர்களுக்கு அவர் பொதுவெளியில் என்ன சொல்கிறார் என்பதுதான் அவருக்கு இப்போது முக்கியம் என்றும் ராட்னி தெரிவித்துள்ளார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T13:33:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சையை ஏற்படுத்திய 22ஆவது சட்டமூலத் திருத்தம்.. ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amendment-president-anura-kumara-1786540023"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amendment-president-anura-kumara-1786540023</id>
            <summary type="text">நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிக்கும் முடிவு, ஒரு தனிநபருக்காகவோ அல்லது ஒரு குழுவுக்காகவோ எடுக்கப்பட்ட முடிவு அல்ல, மாறாக நாட்டின் பொது நலனுக்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிக்கும் முடிவு, ஒரு தனிநபருக்காகவோ அல்லது ஒரு குழுவுக்காகவோ எடுக்கப்பட்ட முடிவு அல்ல, மாறாக நாட்டின் பொது நலனுக்காகவே எடுக்கப்பட்டது என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>
முழு அமைப்பின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் விரிவான சீர்திருத்தங்களில் இந்தத் திருத்தம் ஒரு அங்கம் மட்டுமே என்றும், இது தனது தனிப்பட்ட கருத்தோ அல்லது அரசாங்கத்தின் ஒரே கருத்தோ அல்ல என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p>

இன்று பிற்பகல் (12) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இலங்கை சட்டத்தரணி சங்கத்துடனான சந்திப்பின்போது ஜனாதிபதி இதைத் தெரிவித்துள்ளார்.</p><h2>வயது நீடிப்பு&nbsp;</h2><p> </p><p>

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த கலந்துரையாடலின் போது, ​​நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பது தொடர்பான அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தின் மீது கவனம் ஈர்க்கப்பட்டதோடு, இது தொடர்பாக இலங்கை சட்டசபையினரின் கருத்துக்களும் ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6bb1eb7-a1d9-4194-98ae-1cee7a914fbd/26-6a7c74a057fc6.webp' /></p><p>இங்கு முன்வைக்கப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் கவனம் செலுத்திய ஜனாதிபதி, அவ்விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டையும், நீதித்துறையை மேம்படுத்துவதற்காக அரசு திட்டமிட்டுள்ள நடவடிக்கைகளையும் விளக்கினார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
நீதி வழங்கும் செயல்முறையானது நீதிமன்றங்களால் மட்டுமே மேற்கொள்ளப்படுவதில்லை, மாறாக அது புலனாய்வு, வழக்குத் தொடர்தல் மற்றும் நீதித்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய ஒரு கூட்டுச் செயல்முறையாகும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T13:32:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரிய கிரகணம் உயிர் பலி வாங்கும் எனக்கூறும் வதந்திகள்: அறிவியலாளர்கள் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/scientist-debunked-solar-eclipse-conspiracy-theory-1786538062"></link>
            <id>https://news.lankasri.com/article/scientist-debunked-solar-eclipse-conspiracy-theory-1786538062</id>
            <summary type="text">இன்று சூரிய கிரகணம் நிகழ இருக்கும் நிலையில், அது தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு வதந்திகள் பரவத் துவங்கியுள்ளன.


சூரிய கிரகணத்தின்போது பல மில்லி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று சூரிய கிரகணம் நிகழ இருக்கும் நிலையில், அது தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு வதந்திகள் பரவத் துவங்கியுள்ளன.</p><p>


சூரிய கிரகணத்தின்போது பல மில்லியன் மக்கள் உயிரிழப்பார்கள் என்றும், உலகமே இருளில் மூழ்கிவிடும் என்றும் பல வதந்திகள் இணையத்தில் பரவிவரும் நிலையில், அவை குறித்து அறிவியலாளர்கள் விளக்கமளித்துள்ளார்கள்.</p><h3>

உலாவரும் வதந்திகள்
</h3><p>
நாசாவிலிருந்து ’Project Anchor’ என்னும் ஒரு ஆவணம் லீக் ஆகியுள்ளதாகவும், அது, சூரிய கிரகணத்தின்போது பூமி 7 விநாடிகளுக்கு புவியீர்ப்பு விசையை இழக்கும் என்று கூறுவதாகவும் ஒரு வதந்தி பரவிவருகிறதாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e348be31-2e54-440a-9611-083115b80224/26-6a7c6850c6f26.webp' /></p><p>
அப்படி பூமிக்கு புவியீர்ப்பு விசை இல்லால் போவதால், 40 மில்லியன் மக்கள் கீழே விழுந்து உயிரிழப்பார்கள், உள் கட்டமைப்பு நாசமாகும், அதனால் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சி 10 ஆண்டுகள் வரை நீடிக்கும் என பயமுறுத்துகிறது அந்த வதந்தி.
</p><p>
இந்த வதந்தி தொடர்பில் விளக்கமளித்துள்ள நாசா, 2026ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் 12ஆம் திகதி, பூமி தனது ஈர்ப்பு விசையை இழக்காது என்றும், பூமியின் ஈர்ப்பு விசை, அதன் நிறையால் தீர்மானிக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளது.&nbsp;</p><p></p><p>
அதாவது, பூமியின் அமைப்பில், அதன் மையப்பகுதி, வெளிப்புறம், நடுப்பகுதி, பெருங்கடல்கள் மற்றும் வளிமண்டலம் ஆகிய அனைத்தும் தங்கள் நிறையை இழந்தால்தான் பூமி அதன் ஈர்ப்பு விசையை இழக்கும் என்றும், அதற்கு வாய்ப்பே இல்லை என்றும் நாசா தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b17affc-baad-47d8-b737-994d17b9c7c2/26-6a7c68501f0d2.webp' /></p><p>

இதுபோக, பல நாட்கள் மின்தடை, தொலைபேசி சேவை பாதிப்பு ஏற்படும் என்றும் சில வதந்திகள் கூறுகின்றன.
</p><p>
ஆனால், சூரிய கிரகணம் என்பது முன்கூட்டியே கணிக்கக்கூடிய ஒரு அறிவியல் நிகழ்வு, அது ஆயுதமோ, தீய சடங்கோ அல்ல என்கிறார்கள் அறிவியலாளர்கள்.</p><p>

உண்மையில், ஒரே நேரத்தில் பலர் சூரிய கிரகணம் தொடர்பான காணொளிகளைப் பார்க்க முயல்வதால், சில இடங்களில் இணைய சேவையின் வேகம் வேண்டுமானால் குறையலாம்.
</p><p>
ஆக, சூரியனும், சந்திரனும், பூமியும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் சந்திரன் வருவதால், பூமி மீது சந்திரனின் நிழல் விழுகிறது. இந்த நிகழ்வே சூரிய கிரகணம் என்கிறார்கள் அறிவியலாளர்கள்!</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T13:30:38+00:00</updated>
        </entry>
    </feed>
