<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-12T08:19:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/aadi-amavasya-theerthotsavam-at-mamangeswarar-1786521072"></link>
            <id>https://tamilwin.com/article/aadi-amavasya-theerthotsavam-at-mamangeswarar-1786521072</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர்
ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சிகர நிகழ்வான ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்
இன்று (...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர்
ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சிகர நிகழ்வான ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்
இன்று (12.08.2026) மதியம் 12 மணிக்கு ஆலயத் தீர்த்தக் கேணியில்
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகு விமர்சையாக நடைபெற்றது.
</p><p>
கடந்த 03ஆம் திகதி திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இப்பெருவிழாவின் 10ஆம்
நாளான இன்று, ஆடி அமாவாசை தினத்தில் தீர்த்தோற்சவம் இனிதே இடம்பெற்றது.</p><h2>மாமாங்கேஸ்வரர் தீர்த்தக் கேணியில் தீர்த்தோற்சவம்</h2><p>
</p><p>ஆலயத்தில் இடம்பெற்ற விசேட அபிஷேக, பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து, வசந்த
மண்டப பூஜை நடைபெற்று, சுவாமி வெளிவீதி உலா வந்து வேத பாராயணங்கள் முழங்க,
பக்தர்களின் 'அரோகரா' கோஷத்திற்கு மத்தியில் மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்
கேணியில் தீர்த்தோற்சவம் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53dd21bf-e710-4035-8f04-6d7cf96ba96f/26-6a7c2a0d71690.webp' /></p><p>

தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிதத் தீர்த்தத்தில் நீராடி இறைவழிபாடு
செய்தனர்.</p><h2>ஆத்ம சாந்தி பிரார்த்தனை</h2><p>
</p><p>
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்று, ஸ்ரீ இராம
பிரானால் வழிபடப்பட்டதாக வரலாற்றுத் தொன்மையும் புகழும் மிக்க இப் புண்ணிய
தலத்தில், ஆடி அமாவாசை தினத்தில் தந்தையை இழந்தவர்கள் பிதிர்கடன் செலுத்தி
ஆத்ம சாந்தி பிரார்த்தனைகளில் ஈடுபடுவதும் இவ்வாலயத்தின் தனிச்சிறப்பாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/609ea8f0-9beb-4f5c-a7d2-2baab9d75b91/26-6a7c2a0e575af.webp' /></p><p>
</p><p>
இத்தீர்த்தோற்சவ நிகழ்வில் நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வருகை தந்த
பல்லாயிரக்கணக்கான ஆன்மீக அன்பர்களும் பக்தர்களும் கலந்து கொண்டு
மாமாங்கேஸ்வரரின் அருளைப் பெற்றுச் சென்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cccdf5a9-dc60-467a-89f4-3c3f8f7e6d31/26-6a7c2a0f3ee36.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46ca2bcf-8c98-4714-98aa-9045d34330b3/26-6a7c2a101002a.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f835bf74-2fb7-4aee-9110-e0d9fb283679/26-6a7c2a10dd3ef.webp' />
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b23219f-b8e5-455c-87f8-942bed8b4b17/26-6a7c2a11b41b4.webp' /></p><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef9e0921-e1ce-4ee6-88bc-f373eb69e59e/26-6a7c2a1286e26.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T08:12:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[22வது அரசியலமைப்பு திருத்தம் வேண்டாம் : மகாநாயக்கர்களை வைத்து சுஜீவ பகிரங்கப்படுத்திய அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sujeewa-makes-public-chief-prelates-letter-1786519409"></link>
            <id>https://ibctamil.com/article/sujeewa-makes-public-chief-prelates-letter-1786519409</id>
            <summary type="text">மூன்று பௌத்த பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தமது நிலைப்பாட்டைத் தெரிவித்து ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை ஐ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மூன்று பௌத்த பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தமது நிலைப்பாட்டைத் தெரிவித்து ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற&nbsp; உறுப்பினர் சுஜீவ சேனசிங்க வெளியிட்டுள்ளார். </p><p>இன்று (12.08.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை ஊடகங்கள் முன் பகிரங்கப்படுத்தியிருந்தார்.&nbsp;</p><p>

இந்தக் கடிதத்தின் மூலம் குறித்த அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ள வேண்டாம் என மூன்று பௌத்த பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாக அவர் கூறி இருந்தார்.</p><p></p><h2>ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம்</h2><p>இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் “இந்தக் கடிதத்தைக் தேடிக் கண்டுபிடிக்கக் கூட முடியாமல் இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8d48389-5584-4e5b-bae1-bf1936434084/26-6a7c285f8549f.webp' /></p><p> 

எப்படியோ இந்தக் கடிதம் எனக்குக் கிடைத்தது. </p><p>நாடு எங்கு செல்கிறது என்பதை மகாநாயக்க தேரர்களே புரிந்து கொண்டுள்ளார்கள். </p><p>

தற்போதைய நிலையில், அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது முறையே 63 மற்றும் 65 ஆகக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

அந்த வயது எல்லையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் இவ்வாறு செயற்படுவது பொருத்தமானதல்ல என்பதே எமது நிலைப்பாடாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T08:06:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைமாற்றப்பட்ட தங்காலை கால்டன் இல்லம்: மகிந்தவால் வழங்கப்பட்ட உறுதிப்பத்திரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tangalle-carlton-house-namal-rajapaksa-1786499235"></link>
            <id>https://tamilwin.com/article/tangalle-carlton-house-namal-rajapaksa-1786499235</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சொந்தமான கால்டன் இல்லம்
கைமாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.வளையொளி தளமொன்றில் நடந்த அரசியல்
கலந்துரையாடலில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சொந்தமான கால்டன் இல்லம்
கைமாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>வளையொளி தளமொன்றில் நடந்த அரசியல்
கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ச எம்.பி
இதனை தெரிவித்துள்ளார். அதில் தொடருந்து கருத்து தெரிவித்த அவர்,</p><p>
எனக்கு 23 வயது முடிந்து 24 வயதாகும் போது நான்&nbsp; நாடாளுமன்றத்திற்கு வந்துவிட்டேன்.அன்று முதல் இன்று வரை நேர்த்தியாக சொத்து விபரங்களை சமர்ப்பித்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் நானும் ஒருவன். </p><h2>

</h2><p><span style="color: inherit; font-size: 1.75rem;">ராஜபக்சக்களின் பரம்பரை சொத்து</span></p><p>அதாவது இந்தச் சட்டங்கள் வருவதற்கு முன்பே சமர்ப்பித்துள்ளேன்.எனக்கு சொந்தமான பெரும்பான்மையான காணிகள் பெற்றோர் மற்றும் குடும்பத்தாரிடமிருந்து கிடைத்தவை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/117ff23c-0c4a-41cd-a780-d0f378af5dfc/26-6a7bd0a5159b5.webp' />&nbsp;&nbsp;</p><p>
</p><p>ஏனெனில் சிலர் ராஜபக்சக்கள் காணிகள் எதுவும் இல்லாத ஏழைகள் என்கின்றனர்.நாங்கள் ஒரு அரசியல் குடும்பத்திலிருந்து வந்த பரம்பரை.
எனவே பெற்றோரிடமிருந்து கிடைத்த சில சொத்துக்கள் உள்ளன. </p><p>அதேபோல் நான் ஒரு
காலத்தில் ஒரு ஆலோசனைக் நிறுவனம் ஒன்றை (Consultancy firm) நடத்தினேன். அதைத்
தொடங்கிய விதம் மற்றும் அதற்கு வருமானம் ஈட்டிய விதம்- வரிக் கணக்குகள் (Tax reports) உட்பட
அனைத்தையும் நான் ஒவ்வொரு வருடமும் சொத்து விபரப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
</p><p>மேலும் அது குறித்து இப்போது இரண்டு அரசாங்கங்களால் சுமார் 7 முதல் 10 வருடங்களாக
அதாவது நல்லாட்சி அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கம் என 2015 முதல் 2020
வரை. மீண்டும் 2025 முதல் இன்று வரையிலும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.</p><p>எனவே அந்த அனைத்து விடயங்கள் குறித்தும் நான் குறிப்பிட்டுள்ளேன்.
மேலும் அந்த வருமானம் கிடைத்த விதம் குறித்தும்&nbsp; சுட்டிக்காட்டியுள்ளேன். அத்தோடு நான் பெரும் வர்த்தக குடும்பத்திலே திருமணம் செய்து கொண்டேன்.
</p><h2> கால்டன் இல்லம் கைமாற்றப்பட்ட விதம்</h2><p>மனைவியின் சொத்துக்கள் நான் சம்பாதித்தவை அல்ல. மனைவியின் குடும்பத்திலிருந்து
அவருக்குக் கிடைத்தவை. மேலும் அவர்கள் இலங்கையில் சுற்றுலாத் துறையில் இன்றும் முதல்
ஐந்து இடங்களுக்குள் இருக்கிறார்கள்.</p><p>இப்போது அடுத்த சொத்து விபரங்கள் அறிக்கையில் நிச்சயமாகத் தங்காலை வீடும் அதில் சேர்க்கப்படும்.ஏனென்றால் அப்பா
அதை எனக்குக் கொடுத்து விட்டார்.கடந்த வாரமே எழுதப்பட்டது.
</p><p>அரசியல் இல்லம் என்பதால் அதை எனக்கு முன்பே தர முயன்றபோது நான் வேண்டாம்
அப்பாவிடமே இருக்கட்டும் என்று கூறினேன். ஏனென்றால் ஆயுட்கால
உரிமையை வைத்துக்கொண்டு பிள்ளைகளுக்குச் சொத்துக்களை எழுத வேண்டும் என்று நம்பும்
ஒருவன் நான்.</p><p>ஆனால் அப்பா மறுபடியும் வலியுறுத்தி இது அரசியல் இல்லம்
என்பதாலும் தொடர்ந்து அரசியலுக்காகப் பயன்படுத்தப்படுவதாலும்&nbsp; நிச்சயமாகத் உனக்கு தரப்பட வேண்டும் என்று கூறினார். அதனாலே தங்காலை கால்டன் இல்லம் எனக்கு வழங்கப்பட்டமைக்கான காரணமாகும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p>&nbsp;&nbsp;</p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T08:04:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பிற்கு பின்னால் வயிற்றை தடவிக்கொண்டிருந்த இளம்பெண்- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pregnant-woman-goes-viral-at-trump-vaccine-event-1786521571"></link>
            <id>https://news.lankasri.com/article/pregnant-woman-goes-viral-at-trump-vaccine-event-1786521571</id>
            <summary type="text">Pregnant Woman Goes Viral at Trump Event: ட்ரம்பிற்கு பின்னால் வயிற்றில் கையை வைத்துக்கொண்டு நின்ற இளம்பெண் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளார்.

ட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Pregnant Woman Goes Viral at Trump Event: ட்ரம்பிற்கு பின்னால் வயிற்றில் கையை வைத்துக்கொண்டு நின்ற இளம்பெண் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளார்.
</p><h2>
ட்ரம்ப்&nbsp;தடுப்பூசி&nbsp;கையெழுத்து&nbsp;நிகழ்ச்சி</h2><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிந்துரைகளை மாற்றும் புதிய நிர்வாக உத்தரவை அவரது அலுவலகத்தில் கையெழுத்திட்டார். அந்த காணொளி இணையத்தில் வெளியானது. </p><p>

அதில், அவருக்கு பின்னால் நின்ற இளம் பெண் ஒருவர் சமூக வலைதளங்களில் பெரும் கவனம் பெற்றார்.</p><p> </p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Claims she has a button fitted on her belly, and when she gets the nod that he’s asleep she moves her hand and presses a button that wakes him. They’re calling her The Zapper. No idea if it’s true but it *appears* to line up. <a href="https://t.co/hgx4x6iQp6">pic.twitter.com/hgx4x6iQp6</a></p>&mdash; Tim Brannigan (@tim_brannigan) <a href="https://x.com/tim_brannigan/status/2087083698193682450?ref_src=twsrc%5Etfw">August 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>அந்த பெண்ணின் பெயர் ஜெய்மி லீக் பிராங்க்ளின் (Jayme Leagh Franklin).

அவர் “The Conservateur” என்ற கன்சர்வேட்டிவ் மீடியா மற்றும் லைஃப்ஸ்டைல் பிராண்டின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.
</p><h2>
வயிற்றின் மீது கை வைத்துக் கொண்டிருந்த&nbsp;பிராங்க்ளின்</h2><p>நிகழ்ச்சியில் ட்ரம்ப் மற்றும் சுகாதார செயலாளர் ராபர்ட் எப். கென்னடி ஜூனியர் அருகில் நின்றிருந்த பிராங்க்ளின், தனது வயிற்றின் மீது கை வைத்துக் கொண்டிருந்த காட்சி வைரலானது. </p><p>சிலர், அவர் ட்ரம்புக்கு மின்சார ஷாக் கொடுத்ததாகவும், ரகசியமாக தனது வயிற்றில் ஒரு பொத்தானை அழுத்தியதாகவும் வதந்திகளை பரப்பினர்.
</p><p></p><p>இதற்கு பதிலளித்த பிராங்க்ளின், சமூக வலைதளமான X-இல், “I’m just pregnant you weirdos” என்று பதிவிட்டு, அவர் கர்ப்பமாக இருந்ததால் தான் வயிற்றில் கையை வைத்து பார்த்துக்கொண்டு இருந்ததாக வெளிப்படையாக தெரிவித்தார்.
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I’m just pregnant you weirdos 😂😭 <a href="https://t.co/NG3tYyJmXy">https://t.co/NG3tYyJmXy</a></p>&mdash; Jayme Leagh Franklin (@jaymefranklin16) <a href="https://x.com/jaymefranklin16/status/2087396416670912601?ref_src=twsrc%5Etfw">August 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56ae0120-954e-4f53-bb0e-1d911ca8dd6d/26-6a7c27e587f0b.webp' /></p><h2>ஜெய்மி லீக் பிராங்க்ளின்</h2><p>பிராங்க்ளின், 2020-இல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். அவர் 2019-இல் அமெரிக்க செனட்டில் சட்டமன்ற இன்டர்னாக பணியாற்றினார். பின்னர் ட்ரம்ப் 2020 தேர்தல் பிரசாரத்தில் coalitions coordinator ஆகவும், வெள்ளை மாளிகையில் correspondence director-ஆகவும் பணியாற்றியுள்ளார்.
</p><p>
அவரது நிறுவனம் “The Conservateur”, அரசியல், கலாசாரம், மதம், அழகு, பெண்மை போன்ற துறைகளில் கன்சர்வேட்டிவ் கிறிஸ்தவ இளைஞர்களுக்கான செய்தி மற்றும் கருத்துரைகளை வழங்குகிறது.</p><p>
</p><p>
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது தனக்கு பெருமை என பிராங்க்ளின் தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T07:57:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஷாரா செவ்வந்திக்கு முகப் பரிசோதனை...! பறந்த கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-rejects-ccd-request-forensic-facial-examin-1786502615"></link>
            <id>https://ibctamil.com/article/court-rejects-ccd-request-forensic-facial-examin-1786502615</id>
            <summary type="text">இஷாரா செவ்வந்தியை, முகப் பரிசோதனைக்காக அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் அனுப்ப அனுமதிக்குமாறு கொழும்பு குற்றப் பிரிவு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஷாரா செவ்வந்தியை, முகப் பரிசோதனைக்காக அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் அனுப்ப அனுமதிக்குமாறு கொழும்பு குற்றப் பிரிவு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
குறித்த வழக்கு&nbsp; நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருஷ விதான உத்தரவிட்டுள்ளார்.</p><p>
சுமார் ஒன்பது மாதங்களாக கொழும்பு குற்றப் பிரிவினரால் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், காவல்துறையினர் சமர்ப்பித்த விடயங்களைப் பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.</p><p></p><p>
</p><h2>விசாரணை</h2><p>
நேபாளத்திற்குத் தப்பிச் சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குறித்த சந்தேகநபரிடம், கடந்த 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பெறப்பட்ட தகவல்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்றையும் காவல்துறையினர் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ea12b39-2fa0-4eb3-ba00-c61cf1333f44/26-6a7c21abc1fa4.webp' /></p><p>மேலும், குறித்த சம்பவம் திட்டமிடப்பட்ட விதம், அதனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஏனைய சந்தேகநபர்களுடன் மேற்கொள்ளப்பட்ட தொடர்புகள் மற்றும் பணப் பரிமாற்றங்கள் தொடர்பான மேலதிக அறிக்கையும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் திட்டமிடப்பட்ட காலப்பகுதி, பணம் பரிமாறப்பட்ட விதம் மற்றும் ஏனைய சந்தேகநபர்கள் ஆயுதங்களை வழங்கியதாகக் கூறப்படும் விதம் தொடர்பான தகவல்களையும் காவல்துறையினர் நீதிமன்றின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.</p><p></p><h2>சிறப்பு முகப் பரிசோதனை</h2><p>மேலும் விசாரணைகள் தொடர வேண்டியுள்ளதாகத் தெரிவித்த கொழும்பு குற்றப் பிரிவு, சந்தேகநபரின் முகத்தை CCTV காட்சிகளுடன் ஒப்பிடும் நோக்கில் சிறப்பு முகப் பரிசோதனையை மேற்கொள்வதற்காக, அவரை அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் அனுப்ப அனுமதிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55695de3-5b87-46dd-9088-defccd0f078d/26-6a7c21ab15fb6.webp' /></p><p>
இதற்கமைய, எதிர்வரும் 17ஆம் திகதி சந்தேகநபரை அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் முன்னிலைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T07:56:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா முன்பதிவில் வெளுத்து வாங்கும் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/viswanathan-and-sons-north-america-box-office-1786511271"></link>
            <id>https://cineulagam.com/article/viswanathan-and-sons-north-america-box-office-1786511271</id>
            <summary type="text">&amp;nbsp;விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் பாக்ஸ் ஆபிஸ்அமெரிக்கா தற்போது இந்தியாவின் பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்கு மிக முக்கியமான இடமாக உள்ளது. அதிலும் தெலுங்கு படங்களுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<h2>&nbsp;விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் பாக்ஸ் ஆபிஸ்</h2><p>அமெரிக்கா தற்போது இந்தியாவின் பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்கு மிக முக்கியமான இடமாக உள்ளது. அதிலும் தெலுங்கு படங்களுக்கு அமெரிக்காவிலும் தமிழ் படங்களுக்கு கனடாவிலும் மிகப்பெரிய மார்கெட் உருவாகி உள்ளது. </p><p>இந்த இரண்டு நாடுகளை சேர்ந்து நார்த் அமெரிக்கா வசூல் என கூறுவார்கள். அந்த வகையில் சூர்யாவின் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் படத்தை இயக்கியது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி, அதனால் தெலுங்கு பக்கமும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ab4f822-7a5e-4b0b-a020-355f20d545df/26-6a7bffaa18f2b.webp' /></p><p>அதனால் நார்த் அமெரிக்காவில் இந்த படம் ரூ 1.5 கோடி முன்பதிவு ஆகியுள்ளதாக கூறப்படுகிறது, படம் நன்றாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக வார இறுதியில் 1 மில்லியன் டாலர் வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-12T07:50:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவுக்கான அமெரிக்க தூதரை வெளியேற்றக் கோரிக்கை: 29,000 கனேடியர்கள் ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/29000-canadians-calls-to-expell-us-ambassador-1786520020"></link>
            <id>https://canadamirror.com/article/29000-canadians-calls-to-expell-us-ambassador-1786520020</id>
            <summary type="text">கனடாவுக்கான அமெரிக்க தூதரை வெளியேற்றக் கோரும் புகார் மனுவில் சுமார் 30,000 கனேடியர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.


தற்போது கனடாவுக்கான அமெரிக்க தூதராக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவுக்கான அமெரிக்க தூதரை வெளியேற்றக் கோரும் புகார் மனுவில் சுமார் 30,000 கனேடியர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.</p><p>


தற்போது கனடாவுக்கான அமெரிக்க தூதராக பொறுப்பு வகிப்பவர், பீற் ஹோக்ஸ்ட்ரா ( Pete Hoekstra).
</p><p>
இந்நிலையில், பீற் ஹோக்ஸ்ட்ராவை விரும்பத்தகாத நபராக அறிவிக்கவேண்டும் (Persona non grata declaration) என்றும், கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் பதவியிலிருந்து அவரை நீக்கவேண்டும் என்றும் கோரும் புகார் மனு ஒன்று கனடாவில் முன்வைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a12e73b6-e7eb-4f71-aab0-ff0a89d01f76/26-6a7c21d59fad0.webp' /></p><p>
அந்த புகார் மனுவில், 29,000க்கும் அதிகமான கனேடியர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
</p><p>
கனடா - அமெரிக்கா தூதரக உறவைச் சீர்குலைக்கும் கருத்துக்களை வெளியிட்டதாகவும், தூதரக நெறிமுறைகளுக்கு முரணாகக் கனேடிய அரசியல் விடயங்களில் மீண்டும் மீண்டும் தலையிட்டதாகவும் ஹோக்ஸ்ட்ரா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், கனடா விவகாரங்களில் அமெரிக்காவின் தூதரகத் தலையீட்டை மறுஆய்வு செய்ய, ஒரு நாடாளுமன்றக் குழுவை அமைக்க லிபரல் அரசாங்கம் உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
</p><p>
கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைத்துக்கொள்வது குறித்த டிரம்ப் நிர்வாகத்தின் அச்சுறுத்தல்களை ஹோக்ஸ்ட்ரா இயல்பான விடயமாக எடுத்துக்கொண்டுள்ளதாகவும் அந்த மனு கூறுகிறது.
</p><p>
அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ள Persona non grata declaration என்பது என்னவென்றால், 1961ஆம் ஆண்டு அறிமுகமான தூதரக உறவுகள் தொடர்பிலான வியன்னா ஒப்பந்தத்தின் பிரிவு 9இன்படி, தனது நாட்டுக்கான மற்றொரு நாட்டின் தூதரையோ அல்லது ஒரு வெளிநாட்டவரையோ, ஒரு நாடு, அவருக்கு இங்கு வரவேற்பில்லை என பிரகடனம் செய்யலாம்.
</p><p>
அப்படி பிரகடனம் செய்யப்பட்டவருக்கு அதற்குப் பின் ஒரு தூதருக்கான பாதுகாப்பு வழங்கப்படாது என்பதுடன், அவரை, அந்த நபரின் சொந்த நாடு திரும்பப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T07:43:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று வானில் நிகழப் போகும் அதிசயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/meteor-shower-from-midnight-tomorrow-morning-1786518458"></link>
            <id>https://tamilwin.com/article/meteor-shower-from-midnight-tomorrow-morning-1786518458</id>
            <summary type="text">இன்று (12.08.2026) இரவு சுமார் 133 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அரிய விண்கல் மழை எனக் கூறப்படும் ‘பெர்சீட்’ (Perseid) விண்கல் மழை, வானில் உச்சத்தை அடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று (12.08.2026) இரவு சுமார் 133 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அரிய விண்கல் மழை எனக் கூறப்படும் ‘பெர்சீட்’ (Perseid) விண்கல் மழை, வானில் உச்சத்தை அடையவுள்ளதாக விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>
பெர்சீட் விண்கல் மழையானது, 109P/Swift-Tuttle என்ற வால்நட்சத்திரம் விட்டுச் சென்ற தூசித் துகள்கள் வழியாக பூமி பயணிக்கும் போது உருவாகிறது.</p><h2>ஒளி மாசு குறைந்த பகுதிகளில்</h2><p>

இந்தச் சிறிய விண்கற்கள் பூமியின் வளிமண்டலத்துக்குள் மிக வேகமாக நுழையும்போது, வளிமண்டலத்துடனான உராய்வினால் வெப்பமடைந்து ஒளிர்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b48a1e5b-dc2a-4b5b-9c58-80fa4d69b71b/26-6a7c237f1d78b.webp' /></p><p>இரவு வானில் காணப்படும் இந்த ஒளிரும் தடங்களே பொதுவாக ‘விண்கல் மழை’ என அழைக்கப்படுகின்றன.
</p><p>
இன்றைய பெர்சீட் விண்கல் மழையின் போது, வானிலை மற்றும் வானத்தை மறைக்கும் நிலைமைகள் சாதகமாக இருந்தால், ஒரு மணி நேரத்தில் 50 முதல் 100 வரையிலான விண்கற்களைக் காணக்கூடிய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

விண்வெளி ஆர்வலர்கள் மற்றும் வானியல் பிரியர்களுக்கு இது வானில் காணக்கூடிய குறிப்பிடத்தக்க இயற்கைக் காட்சியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

ஒளி மாசு குறைந்த பகுதிகளிலிருந்து, நகர்ப்புற விளக்குகளிலிருந்து விலகி, திறந்த வானத்தை நோக்கிப் பார்ப்பதன் மூலம் இந்த விண்கல் மழையை அவதானிக்க முடியும்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T07:41:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் சீரமைக்கப்படவுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையின் சேதமடைந்த சொத்துக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/repairs-to-damaged-negombo-prison-begin-next-week-1786514865"></link>
            <id>https://tamilwin.com/article/repairs-to-damaged-negombo-prison-begin-next-week-1786514865</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையின் சொத்துக்களை, இலங்கை விமானப்படையின் ஆதரவுடன் சிறைச்சாலைகள் திணைக்களம் சீரமைக்கத் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&amp;n...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையின் சொத்துக்களை, இலங்கை விமானப்படையின் ஆதரவுடன் சிறைச்சாலைகள் திணைக்களம் சீரமைக்கத் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p>கைதிகளிடையே ஏற்பட்ட கலவரத்தின் போது சேதமடைந்த சொத்துக்களே இவ்வாறு சீரமைக்கப்படவுள்ளன.&nbsp;</p><p>

சிறைச்சாலையின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணி தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளதாக&nbsp;சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><h2>புனரமைப்புப் பணிகள்</h2><p>
</p><p>
இதற்கிடையில், வர்த்தமானி அறிவிப்பின் மூலம் மீண்டும் அதிகாரபூர்வமாக சிறைச்சாலையாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் போகம்பரா சிறைச்சாலையில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66339987-57fb-45c9-bd80-990d5ca6b4ee/26-6a7c1286af238.webp' /></p><p>
</p><p>
அடுத்த வார தொடக்கத்திலேயே கைதிகளை இவ்விடத்திற்கு மாற்றும் பணியைத் திணைக்களம் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக தெரியவருகிறது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T07:40:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் வறட்சி - வனவிலங்குகளுக்கு பௌவுசர்கள் மூலம் நீர் விநியோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/water-supply-to-wildlife-in-national-parks-1786519382"></link>
            <id>https://tamilwin.com/article/water-supply-to-wildlife-in-national-parks-1786519382</id>
            <summary type="text">வனவிலங்குகளுக்கு பௌசர்கள் மூலம் நீரைக் கொண்டு சென்று விநியோகிக்கும் விசேட திட்டத்தை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. 

நாட்டில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வனவிலங்குகளுக்கு பௌசர்கள் மூலம் நீரைக் கொண்டு சென்று விநியோகிக்கும் விசேட திட்டத்தை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. </p><p>

நாட்டில் நிலவிவரும் கடும் வறட்சியான வானிலையால் தேசிய பூங்காக்களிலுள்ள நீர்நிலைகள் வற்றி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>வறட்சியால் கடுமையான பாதிப்பு</h2><p> </p><p>

யால, வில்பத்து, குமண மற்றும் புந்தல ஆகிய தேசிய பூங்காக்களில் உள்ள குளம் மற்றும் நீர்நிலைகள் வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p> 

பிரதான தேசிய பூங்காக்களில் சூரிய சக்தியால் இயங்கும் நீர் மற்றும் குழாய் அமைப்புகள் மூலம் தொடர்ந்து நீர் நிலைகளுக்கு நீர் நிரப்பப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4964705c-b399-4f82-b64d-579d350b0510/26-6a7c23118435b.webp' /></p><h2>பௌசர்கள் மூலம் கொண்டு செல்லப்படும் நீர்</h2><p> 

குழாய் அமைப்புகள் சென்றடைய முடியாத பகுதிகளுக்குப் பௌசர்கள் மூலம் நேரடியாக நீர் கொண்டு செல்லப்பட்டு விலங்குகளின் தாகம் தீர்க்கப்பட்டு வருகிறது. </p><p>

வானிலை மாற்றத்திற்கு ஏற்ப நீர் விநியோகத்தின் அளவை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T07:39:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் கடலில் மூழ்கி பலியான இலங்கை இளைஞன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-man-with-british-citizenship-drowned-1786518640"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-man-with-british-citizenship-drowned-1786518640</id>
            <summary type="text">

பிரித்தானியாவின் - கிழக்கு சசெக்ஸில் உள்ள கேம்பர் செண்ட்ஸ் கடற்கரையில் நீராடச்சென்ற பிரித்தானிய குடியுரிமை பெற்ற இலங்கை இளைஞர் ஒருவர் கடலில் மூழ்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>

பிரித்தானியாவின் - கிழக்கு சசெக்ஸில் உள்ள கேம்பர் செண்ட்ஸ் கடற்கரையில் நீராடச்சென்ற பிரித்தானிய குடியுரிமை பெற்ற இலங்கை இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
</p><p>
குறித்த சம்பவமானது, கடந்த ஞாயிற்றுக்கிழமை(09) ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
</p><p>
சம்பவ தினத்தன்று நீரில் சிக்கித் தவித்த மூன்று பேருக்கு உதவுவதற்காக அவசர சேவைகள் அழைக்கப்பட்டதாகவும் சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் ஒருவர் கடலில் இருந்து மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>உயிரிழப்பு</h2><p>

ஆனால், மருத்துவக் குழுவினரின் தீவிர முயற்சிகளையும் மீறி, சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abc55105-dba2-47a4-933d-cb50fddb6914/26-6a7c21241e021.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, அவருடன் வந்த 16 வயதுச் சிறுவன் மற்றும் 24 வயதுடைய மற்றொரு நபர் ஆகிய இருவரும் பாதுகாப்பாக கரைக்கு திரும்பியிருந்ததாக கூறப்படுகிறது.</p><p>

ஒருவருக்கொருவர் அறிமுகமான இந்த மூன்று நபர்களும் லண்டனிலிருந்து இந்த கடற்கரைக்கு வந்திருந்தாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>மரண விசாரணை</h2><p>
</p><p>
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அப்பகுதியில் அவசர காலப் பணியாளர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சசெக்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdb520ac-e90c-46be-a5ac-2fe3771eeee8/26-6a7c2124d8d68.webp' /></p><p>
</p><p>
எவ்வாறாயினும், இந்த மரணத்தில் எந்தவித சந்தேகத்திற்குரிய பின்னணியும் இல்லை என்றும், இது குறித்து மரண விசாரணை அதிகாரி ஆராய்வார் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T07:37:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்! பிணையில் சென்ற சந்தேகநபர் மீண்டும் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-suspect-released-on-bail-1786516904"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-suspect-released-on-bail-1786516904</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் 32 பேர் உயிரிழந்த வழக்கில் மற்றொரு சந்தேகநபரின் பெயரை வெளியிட குற்றப்புலனாய்வுத்துறை (சிஐடி) நீதிமன்றத்திடம் அனுமதி கோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் 32 பேர் உயிரிழந்த வழக்கில் மற்றொரு சந்தேகநபரின் பெயரை வெளியிட குற்றப்புலனாய்வுத்துறை (சிஐடி) நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளது.</p><p>

இது தொடர்பான வழக்கு நேற்று (11) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அனுமதி கோரப்பட்டுள்ளது.</p><p>

அதன்படி, சம்பவம் தொடர்பில் மற்றொரு சந்தேகநபரின் பெயரும் வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல்</h2><p>
</p><p>
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது அவர் சிறையில் இருந்துள்ளதுடன், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52a9cf0a-3bde-4c8e-b197-d87fbc903e52/26-6a7c21e1c101a.webp' /></p><p>
</p><p>
எனவே, சந்தேகநபர் தலைமறைவாகி இருந்த நிலையில் விசாரிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும் சிஐடி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p> 

இதனையடுத்து வழக்கில் 32 ஆவது சந்தேகநபராக பெயரிடப்பட்ட நபர் நேற்று (11) நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.</p><p>இதற்கமைய, அடையாள அணிவகுப்பிற்காக அவரை 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><p>
அதன்படி, இவ்வழக்கில் இதுவரை 62 சந்தேகநபர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன, அவர்களில் 38 பேர் 7 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளனர்.</p><h2>பெயர்ப் பட்டியல் மற்றும் 'பி' அறிக்கை&nbsp;</h2><p>
பாதுகாப்பு காரணங்களுக்காக சந்தேகநபர்களின் பெயர்கள் பகிரங்கமாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்படவில்லை என்றும், மேலும் பெயர்ப் பட்டியல் மற்றும் 'பி' அறிக்கை ஆகியவை குற்றப் புலனாய்வுத் துறையால் நீதிபதி அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dddc9846-c9bb-4682-a432-ecb97e6fbc44/26-6a7c22be8c971.webp' />&nbsp;</p><p>

அதன்படி, சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சந்தேகநபர்களாக பெயரிடப்பட்ட 62 கைதிகளும் ஆகஸ்ட் 21 திகதி நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளனர்.</p><p> 

கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் நீர்கொழும்பு சிறையில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 10 சிறை அதிகாரிகளும் 22 கைதிகளும் உயிரிழந்ததுடன், மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.&nbsp; &nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T07:34:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம் - அதிமுக எதிர்ப்பு, திமுக ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/admk-oppose-cm-vijay-delimitation-resolution-1786513821"></link>
            <id>https://news.lankasri.com/article/admk-oppose-cm-vijay-delimitation-resolution-1786513821</id>
            <summary type="text">resolution against delimitation in TN assembly : தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்திற்கு திமுக, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>resolution against delimitation in TN assembly : தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்திற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
</p><h3>
தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம்</h3><p> 

தமிழ்நாடு சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது. </p><p>

இன்று நடைபெற்று வரும் 5 ஆம் நாள் விவாதத்தில், தொகுதி மறுவரையறை மசோதா குறித்த தனித்தீர்மானத்தை முதல்வர் விஜய் கொண்டு வந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80fe01a4-5005-4df1-9d8d-76b01fa3ce13/26-6a7c099ecad69.webp' /></p><p> 

 தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் விஜய், "நம்முடைய குடும்பத்தில், நம்முடைய வீட்டில் இருக்கிற பாட்டி, அம்மா, அக்கா, தங்கச்சி என பெண்களைப் பற்றிய ஒரு தீர்மானம் இது. அவர்களுக்காகவும், அவர்களைப் பற்றியும் என் மனதிலிருந்தும், இதயத்திலிருந்தும் பேசுகிறேன்.</p><p> 

இதற்கு முன்பு கிடைத்த வெற்றிக்கும், இன்று இந்த இடத்திற்கும் மிகப்பெரிய காரணமாக இருந்தவர்கள் பெண்கள்தான்.
</p><p>
சங்ககாலம் தொடங்கி இன்றுவரை அடையாளமாக விளங்குகிற பெண் ஆளுமைகள் குறித்து பேசினார்.

நம்முடைய தமிழ்நாட்டு மண்ணில் சங்ககாலம் தொடங்கி இன்று வரை மிகப்பெரிய அடையாளமாக விளங்கிய பெண் ஆளுமைகள் ஏராளம். சங்ககாலத்தில் அவ்வையார், இலக்கியத்தில் கண்ணகி, மணிமேகலை, குண்டலகேசி போன்றோர் நிலைத்து நிற்பவர்கள்.&nbsp;</p><p></p><p>
ஆண்டாள், காரைக்கால் அம்மையார் போன்றவர்கள் ஆன்மிகத்திலும் இலக்கியத்திலும் உயர்ந்த இடத்தைப் பெற்றவர்கள். ராணி வேலுநாச்சியார், குயிலி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, அஞ்சலையம்மாள் உள்ளிட்டோர் நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியவர்கள்.</p><p>

இவ்வாறு நம்முடைய தமிழ்நாட்டுப் பெண்கள் சுதந்திரப் போராட்டம் தொடங்கி சமூகநீதிப் போராட்டம் வரை பல்வேறு தளங்களில் பங்களித்துள்ளனர். </p><p>

அதுமட்டுமல்லாமல், கல்வி, அறிவியல், அரசியல், நீதி, நிர்வாகம், தொழில்நுட்பம் என அனைத்து துறைகளிலும் இன்று தமிழ்நாட்டுப் பெண்களின் பங்களிப்பு மிகப்பெரிய அளவில் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9319e255-b4d4-481f-9fbd-2836037e218d/26-6a7c099f7d781.webp' /></p><p> 

தமிழ்நாட்டில் ஆண்களை விட பெண்களை அதிக வாக்காளர்களாக உள்ளனர். பெண்களுக்கான அரசியல் இடம் என்பது சலுகை அல்ல அது உரிமை.</p><p> பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தப்படுகிறது. 

பெண்களுக்கான அரசியல் அதிகாரம் வழங்குவதில் முன்னோடி மாநிலமாக தவெக அரசு உள்ளது. பேரவையில் 4 பெண் அமைச்சர்கள் உள்ளனர்.
</p><p>
பெண்களுக்கான பாதுகாப்பிலும் அவர்களுக்கான முக்கியத்துவத்திலும் தவெக அரசு கவனமாக தான் உள்ளது. உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை கொடுத்ததால் ஆயிரக்கணக்கான பெண்கள் மக்கள் பிரதிநிதிகளாக அமர்ந்துள்ளனர். </p><p>

பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை இனியும் தாமதிக்காமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம். இது பெண்களுக்கான சலுகை அல்ல, அவர்களுக்கான ஜனநாயக உரிமை. </p><p>

தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக நடத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் 6 கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டிலிமிட்டேஷன் காரணமாக தென் மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசப்பட்டது.&nbsp;</p><p></p><p>
ஒவ்வொரு மாநிலத்திலும் 50 சதவிகித மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்தாலும், புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பிறகு அதன் அடிப்படையில் தொகுதி மறு சீரமைக்கப்படும். இவ்வாறு செய்தால் தென் மாநிலங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கை நாடாளுமன்றத்தில் குறையும்.</p><p>

தொகுதி மறு சீரமைப்பு சட்டத்தை நிறைவேற்றினால் மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய தென்மாநிலங்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவ அநீதி ஏற்படும். எனவே 543 என்ற மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையை நிரந்தரமாக நிலைநிறுத்த வேண்டும்" என பேசினார். </p><h3>

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
</h3><p>
இந்த தீர்மானம் குறித்து கட்சிகளின் சார்பில் அதன் உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63f3365c-ab5c-4d29-b597-81bbd473e803/26-6a7c09a030302.webp' /></p><p>

இந்த தீர்மானம் குறித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், பாமக எம்எல்ஏ கணேஷ் குமார், பாஜக எம்எல்ஏ போஜராஜன், உள்ளிட்டோர் மகளிர் இடஒதுக்கீட்டை வரவேற்றாலும், தனித்தீர்மானத்தை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><p>தீர்மானம் மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தீர்மானத்தை ஆதரித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T07:30:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது சட்டத்திருத்த விவகாரத்தில் அரசாங்கத்திற்கு தொடர் நெருக்கடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amendment-letter-by-mahanayaka-theros-anura-1786518077"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amendment-letter-by-mahanayaka-theros-anura-1786518077</id>
            <summary type="text">மகா நாயக்க தேரர்கள்,&amp;nbsp;அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை நடைமுறைபடுத்த வேண்டாம் என ஜனாதிபதியிடம் முன்னதாவே கோரியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகா நாயக்க தேரர்கள்,&nbsp;அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை நடைமுறைபடுத்த வேண்டாம் என ஜனாதிபதியிடம் முன்னதாவே கோரியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் குறித்த தமது கருத்துக்கள் தொடர்பாக மகா தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க இன்று(12) ஒரு செய்தியாளர் சந்திப்பில் பகிரங்கப்படுத்தியுள்ளார்.&nbsp;</p><h2>ஜனாதிபதியிடம் கோரிக்கை..&nbsp;</h2><p>
அந்தக் கடிதத்தின் மூலம், மூன்று பீடங்களை சேர்ந்த மகா நாயக்க தேரர்கள், இந்த அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைபடுத்த வேண்டாம் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03f32b35-2429-45be-8f18-ed84e2c5281f/26-6a7c2025975ee.webp' /></p><p>இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில், ”இந்தக் கடிதத்தை என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. எப்படியோ எனக்கு தற்போது கிடைத்துவிட்டது. இதில், நீதியரசர்கள், நாடு எந்தப் பாதையில் செல்கிறது என்பதை நேரடியாகப் புரிந்துகொண்டுள்ளனர்.</p><p> தற்போது, ​​அரசியலமைப்புச் சட்ட விதிமுறைகளின்படி, மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது முறையே 63 மற்றும் 65 ஆண்டுகள் ஆகும்.
</p><p>
அந்த வயது வரம்பை உயர்த்துவதற்கு அரசாங்கம் இந்த வழியில் செயல்படுவது பொருத்தமானது அல்ல என்று நாங்கள் நம்புகிறோம்” என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T07:30:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[அந்த படம் பார்த்து வாந்தியே எடுத்துட்டேன்!! நடிகை ஸ்ருதிகா ஓபன் டாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/shrutika-open-about-watch-blue-shade-movie-experi-1786521800"></link>
            <id>https://viduppu.com/article/shrutika-open-about-watch-blue-shade-movie-experi-1786521800</id>
            <summary type="text">ஸ்ருதிகா அர்ஜுன்நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2002ல் வெளியான ஸ்ரீ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்ருதிகா அர்ஜுன். 14 வயதில் நடிக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஸ்ருதிகா அர்ஜுன்</h2><p>நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2002ல் வெளியான ஸ்ரீ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்ருதிகா அர்ஜுன். 14 வயதில் நடிக்க ஆரம்பித்த ஸ்ருதிகாவுக்கு ஸ்ரீ படம் பெரியளவில் ஹைப் கொடுக்கவில்லை.

அதன்பின் ஆல்பம் படத்திலும் தித்திக்குதே படத்திலும் நடித்த ஸ்ருதிகா சினிமாவில் இருந்து விலகினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b67d38a-5b4f-4941-be01-da8660114af3/26-6a7c28ca198ae.webp' /></p><p> </p><p>தொழிலதிபரை திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தையை பெற்ற ஸ்ருதிகா, குக் வித் கோமாளி 3 சீசனில் பங்கேற்று டைட்டிலை கைப்பற்றினார்.</p><p>
</p><p>
அதன்பின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்த ஸ்ருதிகா, பிக்பாஸ் இந்தி 18வது சீசனில் கலந்து கொண்டு கிட்டத்தட்ட 96 நாட்கள் வீட்டில் இருந்து எவிக்ட்டாகி வெளியேறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1019a7d2-4a18-4039-98b4-8cf5805fb69e/26-6a7c28cabf31d.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் பேட்டியொன்றில் பேசிய ஸ்ருதிகா, நான் திருமணம் செய்யும் வரை ஆபாச படங்களை பார்த்தது இல்லை.

ஆனால் திருமணம் முடிந்த பிறகு என் கணவர் அர்ஜுன் நீ ஆபாச படம் பார்க்க வேண்டும் என கூறிவிட்டு அதை போட்டு காண்பித்தார். </p><p>அதை பார்த்தவுடன் எனக்கு வாந்தி வந்துவிட்டது, இருக்க எதிர்பார்ப்பு எல்லாம் போய்விடு, அதோடு நிறுத்திவிட்டேன். நான் யாரையும் பார்க்கவும் விடமாட்டேன் என்று கூறியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-12T07:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவிடம் இருந்து நாமலிடம் கை மாறிய ராஜபக்சர்களின் அரசியல் சொத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tangalle-carlton-house-namal-rajapaksa-1786519730"></link>
            <id>https://jvpnews.com/article/tangalle-carlton-house-namal-rajapaksa-1786519730</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சொந்தமான கால்டன் இல்லம்
கைமாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.வளையொளி தளமொன்றில் நடந்த அரசியல்
கலந்துரையாடலில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சொந்தமான கால்டன் இல்லம்
கைமாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>வளையொளி தளமொன்றில் நடந்த அரசியல்
கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ச எம்.பி
இதனை தெரிவித்துள்ளார். </p><p>அதில் தொடருந்து கருத்து தெரிவித்த அவர்,</p><p>
எனக்கு 23 வயது முடிந்து 24 வயதாகும் போது நான்&nbsp; நாடாளுமன்றத்திற்கு வந்துவிட்டேன்.அன்று முதல் இன்று வரை நேர்த்தியாக சொத்து விபரங்களை சமர்ப்பித்து பாராளுமன்ற உறுப்பினர்களில் நானும் ஒருவன். </p><h2>

</h2><p><span style="color: inherit; font-size: 1.75rem;">ராஜபக்சக்களின் பரம்பரை சொத்து</span></p><p>அதாவது இந்தச் சட்டங்கள் வருவதற்கு முன்பே சமர்ப்பித்துள்ளேன்.எனக்கு சொந்தமான பெரும்பான்மையான காணிகள் பெற்றோர் மற்றும் குடும்பத்தாரிடமிருந்து கிடைத்தவை.
</p><p>ஏனெனில் சிலர் ராஜபக்சக்கள் காணிகள் எதுவும் இல்லாத ஏழைகள் என்கின்றனர்.நாங்கள் ஒரு அரசியல் குடும்பத்திலிருந்து வந்த பரம்பரை.
எனவே பெற்றோரிடமிருந்து கிடைத்த சில சொத்துக்கள் உள்ளன. </p><p>அதேபோல் நான் ஒரு
காலத்தில் ஒரு ஆலோசனைக் நிறுவனம் ஒன்றை (Consultancy firm) நடத்தினேன். அதைத்
தொடங்கிய விதம் மற்றும் அதற்கு வருமானம் ஈட்டிய விதம்- வரிக் கணக்குகள் (Tax reports) உட்பட
அனைத்தையும் நான் ஒவ்வொரு வருடமும் சொத்து விபரப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e8b4527-6b57-4721-8754-6d453d699249/26-6a7c20b42fd65.webp' /></p><p>மேலும் அது குறித்து இப்போது இரண்டு அரசாங்கங்களால் சுமார் 7 முதல் 10 வருடங்களாக
அதாவது நல்லாட்சி அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கம் என 2015 முதல் 2020
வரை. மீண்டும் 2025 முதல் இன்று வரையிலும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
</p><p>எனவே அந்த அனைத்து விடயங்கள் குறித்தும் நான் குறிப்பிட்டுள்ளேன்.
மேலும் அந்த வருமானம் கிடைத்த விதம் குறித்தும்&nbsp; சுட்டிக்காட்டியுள்ளேன். அத்தோடு நான் பெரும் வர்த்தக குடும்பத்திலே திருமணம் செய்து கொண்டேன்.
</p><h2> கால்டன் இல்லம் கைமாற்றப்பட்ட விதம்</h2><p>மனைவியின் சொத்துக்கள் நான் சம்பாதித்தவை அல்ல. மனைவியின் குடும்பத்திலிருந்து
அவருக்குக் கிடைத்தவை. மேலும் அவர்கள் இலங்கையில் சுற்றுலாத் துறையில் இன்றும் முதல்
ஐந்து இடங்களுக்குள் இருக்கிறார்கள்.</p><p>இப்போது அடுத்த சொத்து விபரங்கள் அறிக்கையில் நிச்சயமாகத் தங்காலை வீடும் அதில் சேர்க்கப்படும்.ஏனென்றால் அப்பா
அதை எனக்குக் கொடுத்து விட்டார்.கடந்த வாரமே எழுதப்பட்டது.
</p><p></p><p>அரசியல் இல்லம் என்பதால் அதை எனக்கு முன்பே தர முயன்றபோது நான் வேண்டாம்
அப்பாவிடமே இருக்கட்டும் என்று கூறினேன். ஏனென்றால் ஆயுட்கால
உரிமையை வைத்துக்கொண்டு பிள்ளைகளுக்குச் சொத்துக்களை எழுத வேண்டும் என்று நம்பும்
ஒருவன் நான். </p><p>ஆனால் அப்பா மறுபடியும் வலியுறுத்தி இது அரசியல் இல்லம்
என்பதாலும் தொடர்ந்து அரசியலுக்காகப் பயன்படுத்தப்படுவதாலும்&nbsp; நிச்சயமாகத் உனக்கு தரப்பட வேண்டும் என்று கூறினார். அதனாலே தங்காலை கால்டன் இல்லம் எனக்கு வழங்கப்பட்டமைக்கான காரணமாகும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T07:29:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க தூதரை வெளியேற்ற கோரிக்கை: புகார் மனுவில் 29,000 கனேடியர்கள் கையெழுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/29000-canadians-signed-for-expell-us-ambassador-1786519541"></link>
            <id>https://news.lankasri.com/article/29000-canadians-signed-for-expell-us-ambassador-1786519541</id>
            <summary type="text">கனடாவுக்கான அமெரிக்க தூதரை வெளியேற்றக் கோரும் புகார் மனுவில் சுமார் 30,000 கனேடியர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.


தற்போது கனடாவுக்கான அமெரிக்க தூதராக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவுக்கான அமெரிக்க தூதரை வெளியேற்றக் கோரும் புகார் மனுவில் சுமார் 30,000 கனேடியர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
</p><p>

தற்போது கனடாவுக்கான அமெரிக்க தூதராக பொறுப்பு வகிப்பவர், பீற் ஹோக்ஸ்ட்ரா ( Pete Hoekstra).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc741e98-2050-41d7-92c6-13d5ad719fcb/26-6a7c1ff6bed83.webp' /></p><p>
இந்நிலையில், பீற் ஹோக்ஸ்ட்ராவை விரும்பத்தகாத நபராக அறிவிக்கவேண்டும் (Persona non grata declaration) என்றும், கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் பதவியிலிருந்து அவரை நீக்கவேண்டும் என்றும் கோரும் புகார் மனு ஒன்று கனடாவில் முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><h3>
சுமார் 30,000 கனேடியர்கள்
</h3><p>
அந்த புகார் மனுவில், 29,000க்கும் அதிகமான கனேடியர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
</p><p>
கனடா - அமெரிக்கா தூதரக உறவைச் சீர்குலைக்கும் கருத்துக்களை வெளியிட்டதாகவும், தூதரக நெறிமுறைகளுக்கு முரணாகக் கனேடிய அரசியல் விடயங்களில் மீண்டும் மீண்டும் தலையிட்டதாகவும் ஹோக்ஸ்ட்ரா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54297631-6edb-4141-b942-3331cdd7be78/26-6a7c1ff770f3d.webp' /></p><p>
மேலும், கனடா விவகாரங்களில் அமெரிக்காவின் தூதரகத் தலையீட்டை மறுஆய்வு செய்ய, ஒரு நாடாளுமன்றக் குழுவை அமைக்க லிபரல் அரசாங்கம் உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>
கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைத்துக்கொள்வது குறித்த டிரம்ப் நிர்வாகத்தின் அச்சுறுத்தல்களை ஹோக்ஸ்ட்ரா இயல்பான விடயமாக எடுத்துக்கொண்டுள்ளதாகவும் அந்த மனு கூறுகிறது.&nbsp;</p><p>
அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ள Persona non grata declaration என்பது என்னவென்றால், 1961ஆம் ஆண்டு அறிமுகமான தூதரக உறவுகள் தொடர்பிலான வியன்னா ஒப்பந்தத்தின் பிரிவு 9இன்படி, தனது நாட்டுக்கான மற்றொரு நாட்டின் தூதரையோ அல்லது ஒரு வெளிநாட்டவரையோ, ஒரு நாடு, அவருக்கு இங்கு வரவேற்பில்லை என பிரகடனம் செய்யலாம்.
</p><p>
அப்படி பிரகடனம் செய்யப்பட்டவருக்கு அதற்குப் பின் ஒரு தூதருக்கான பாதுகாப்பு வழங்கப்படாது என்பதுடன், அவரை, அந்த நபரின் சொந்த நாடு திரும்பப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T07:25:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தல்: இரகசிய விமானத்தில் ஏறி ஐக்கிய இராச்சியத்திற்கு பறந்த ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/donald-trump-confirms-catering-secret-service-1786514382"></link>
            <id>https://ibctamil.com/article/donald-trump-confirms-catering-secret-service-1786514382</id>
            <summary type="text">ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக துருக்கியில் இருந்து இரகசிய விமானம் மூலம் வெளியேறியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக துருக்கியில் இருந்து இரகசிய விமானம் மூலம் வெளியேறியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
கடந்த ஜூலை மாதம் துருக்கியிலிருந்து திரும்பும் பயணத்தின்போதே இந்த இரகசிய பயணம் இடம்பெற்றதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p> 


இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்&nbsp;</p><p></p><h2>இரகசிய பயணத்தில்&nbsp;டொனால்ட் டிரம்ப்</h2><p>'அமெரிக்காவின் இரகசிய சேவை மற்றும் இராணுவம் தான் இந்த முடிவை எடுத்தார்கள். அவர்கள் என்னை வேறு விமானத்தில் செல்லச் சொன்னார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67a7bacc-4392-44fa-8b5e-d00c967d2f11/26-6a7c10d263e0a.webp' /></p><p> </p><p>வெளியே ஏதோ அச்சுறுத்தல் இருந்ததாக நான் நினைக்கிறேன். உண்மையில் நான் பயணம் செய்த விமானத்திற்குத்தான் அதிக ஆபத்து இருந்தது என்று நான் நினைக்கிறேன்.</p><p> </p><p>ஏனென்றால், அவர்கள் குறிவைக்க அதிக வாய்ப்புள்ள விமானம் அதுவாகத்தான் இருக்கும் என நான் கருதுகிறேன்' என தெரிவித்துள்ளார்.</p><p>இது குறித்து அமெரிக்கா பத்திரிக்கைகளில் பின்வருமாறு செய்தி வெளியாகியிருந்தன.</p><p>ஜூலை 8ஆம் திகதி ஊடகங்கள் முன்னிலையில் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஏறிய ட்ரம்ப், பின்னர் உணவு விநியோக வாகனம் ஒன்றைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத தனியார் ஜெட் விமானத்திற்குச் சென்று, அதில் இரகசியமாகப் புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்நிலையில்&nbsp; செய்தியாளர்களும் வெள்ளை மாளிகை ஊழியர்களும் ட்ரம்ப் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திலேயே இருப்பதாக நம்பியிருந்த நிலையில், அவர் அந்த ஜெட் விமானத்தில் அங்காராவிலிருந்து ஐக்கிய இராச்சியத்தில் உள்ள விமானப்படைத் தளம் ஒன்றுக்குப் பறந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p> 

</p>]]></content>
            <updated>2026-08-12T07:19:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாவின் முன்னாள் செயலாளருக்கு மீண்டும் விளக்கமறியலில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sugeeswara-bandara-appears-in-court-1786513612"></link>
            <id>https://ibctamil.com/article/sugeeswara-bandara-appears-in-court-1786513612</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>

சந்தேகநபர் இன்று (12) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>
</p><p>
 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரான சுகீஸ்வர பண்டார நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>சுகீஸ்வர பண்டார சற்று முன்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><h2>வழக்கு விசாரணை</h2><p>கடந்த ஜூலை மாதம் 18 ஆம் திகதி முதல் இன்று (12) வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, வழக்கு விசாரணைக்காக மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/666b4e3b-0ef8-4a2c-b4bf-0bc9d2f06dc4/26-6a7c0b721ac95.webp' /></p><p>இந்நிலையில், இன்று இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.</p><p>கோட்டாபய ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து சம்பளம் பெற்றுக்கொண்டமை தொடர்பான விசாரணைக்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T07:19:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூட்டு வலி நீங்க சத்தான முருங்கை கீரை கொள்ளு சூப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/how-to-make-murungai-keerai-kollu-soup-for-legpain-1786516264"></link>
            <id>https://news.lankasri.com/article/how-to-make-murungai-keerai-kollu-soup-for-legpain-1786516264</id>
            <summary type="text">Murungai Keerai- Kollu Soup: முருங்கை கீரையும் கொள்ளு பருப்பு இருந்தால் அவற்றைக் கொண்டு சூப் செய்து கொடுக்கின்ற பொழுது நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Murungai Keerai- Kollu Soup: முருங்கை கீரையும் கொள்ளு பருப்பு இருந்தால் அவற்றைக் கொண்டு சூப் செய்து கொடுக்கின்ற பொழுது நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு சளி மூட்டு வலி விலகுகிறது. அதை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cfa23b7-0777-4f29-ba20-ba4d8567306a/26-6a7c132a813de.webp' /><br></p><p>
</p><h3>
 
தேவையான பொருட்கள்: </h3><p>&nbsp;கொள்ளு - 1 1/2 டேபிள் ஸ்பூன்&nbsp;</p><p> தண்ணீர் - 1 1/4 கப் * பூண்டு - 2 பல் </p><p>இஞ்சி - 1/2 இன்ச்&nbsp;</p><p> சின்ன வெங்காயம் - 10 * கொத்தமல்லி - சிறிது </p><p>முருங்கைக்கீரை - 1 கைப்பிடி </p><p>சீரகம் - 1 டீஸ்பூன் * மிளகு - 1/2 டீஸ்பூன்&nbsp;</p><p> மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்&nbsp;</p><p> தண்ணீர் - 1/2 லிட்டர்.
 தாளிப்பதற்கு...&nbsp;</p><p>தேங்காய் எண்ணெய் - 1/2 டீஸ்பூன் </p><p>கிராம்பு - 2&nbsp;</p><p> பட்டை - 1 துண்டு&nbsp;</p><p> இடிச்ச சின்ன வெங்காயம் - 5 </p><p>முருங்கைக்கீரை - 10 இலைகள்&nbsp; சூப்&nbsp;</p><p> உப்பு - சுவைக்கேற்ப </p><p>மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்&nbsp;</p><p> எலுமிச்சை - பாதி&nbsp;</p><p> கொத்தமல்லி - சிறிது</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.5rem;">செய்முறை:</span><br></p><p> முதலில் அடுப்பில் குக்கரை வைத்து அதனுடன் கொள்ளு சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அதை ஒரு முறை கழுவிக்கொண்டு மீண்டும் குக்கர் அடுப்பில் வைத்து அதில் ஒன்றரை கப் நீர் ஊற்றி குக்கர் மூடி 3 முதல் 4 வசூல் விட்டு இறக்க வேண்டும். </p><p>பிறகு விசில் இறங்கியதும் குக்கரை திறந்து அதில் பூண்டு, இஞ்சி, சின்ன வெங்காயம், கொத்தமல்லி, முருங்கைக்கீரை, சீரகம், மிளகு மஞ்சள் தூள் ஆகியவை சேர்த்து அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில் வைத்து இறக்க வேண்டும்.</p><p>&nbsp; &nbsp;<br></p><p> </p><p>விசில் இறங்கியதும் குக்கரில் உள்ளதை ஒரு பாத்திரத்தில் வடி கட்டிக்கொள்ள வேண்டும். பின்பு மிக்ஸரில் சாறு வடிகட்டிய பொருட்களை சேர்த்து அதனுடன் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அரைத்ததையும் வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.</p><p> அடுத்து அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கிராம்பு பட்டையை சேர்த்து தாளிக்க வேண்டும். அதன் பின்பு அதில் இடிச்ச சின்ன வெங்காயத்தை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும். </p><p>பிறகு பத்து முருங்கை இலைகளை சேர்த்து வதக்கி வடிகட்டி வைத்துள்ள சூப்பை சேர்த்து தேவைக்கேற்ப உப்பு கலந்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து பிறகு இறக்கிக் கொள்ள வேண்டும். </p><p>இறக்கிய சூப்பில் மிளகுத்தூள் எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லியை தூவி கிளறினால் சுவையான முருங்கைக்கீரை கொள்ளு சூப் ரெடி. இதை நாம் எடுத்துக் கொள்ளும் பொழுது மூட்டு வலி சளி பிரச்சனை போன்றவை நீங்குவதோடு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சத்துக்கள் நிறைந்ததாக உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d66be45-0f37-474e-a554-51ede27a594f/26-6a7c1329c6efa.webp' />&nbsp;&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-12T07:17:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு பவுண்டரி இல்லாமல் 9 சிக்ஸர் விளாசிய ரஸல்! 38 பந்தில் 68 ஓட்டங்கள் விளாசியும் வீண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/andre-russell-blast-68-runs-with-9-sixer-1786518912"></link>
            <id>https://news.lankasri.com/article/andre-russell-blast-68-runs-with-9-sixer-1786518912</id>
            <summary type="text">கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜமைக்கா கிங்ஸ்மெனை வீழ்த்தியது.

சபீனா பார்க் மைதானத்தில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜமைக்கா கிங்ஸ்மெனை வீழ்த்தியது.</p><p>

சபீனா பார்க் மைதானத்தில் நடந்த ஜமைக்கா கிங்ஸ்மென் அணிக்கு எதிரான கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில், பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>பிரண்டன் கிங், ஷெர்பானே ரூதர்போர்டு</h2><p>
பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் மற்றும் ஜமைக்கா கிங்ஸ்மென் அணிகளுக்கு இடையிலான கரீபியன் பிரீமியர் லீக் டி20 போட்டி சபீனா பார்க்கில் நடந்தது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a654f633-9e76-482f-9551-a8f22083118d/26-6a7c204d638f9.webp' /></p><p></p><p>
முதலில் ஆடிய பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணியில் கார்ட்டர் 27 (15) ஓட்டங்கள் விளாசி வெளியேற, சரவெடி காட்டிய குயின்டன் டி காக் 25 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 42 ஓட்டங்கள் விளாசினார். </p><p>

பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த பிரண்டன் கிங், ஷெர்பானே ரூதர்போர்டு கூட்டணி அதிரடியில் மிரட்ட, பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணி 206 ஓட்டங்கள் குவித்தது.</p><p>

பிரண்டன் கிங் (Brandon King) 51 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 73 ஓட்டங்களும், ஷெர்பானே ரூதர்போர்டு (Sherfane Rutherford) 28 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்களும் விளாசினர். </p><p>

அடுத்து களமிறங்கிய ஜமைக்கா கிங்ஸ்மென் அணியில் ஹென்ரிக்ஸ் (2), ஜஹான்ஹிர் (0) சொதப்ப, மெக்கென்ஸியும் டக்அவுட் ஆனார். 

அப்போது களமிறங்கிய அணித்தலைவர் ரோவ்மன் பௌல், கேசி கார்ட்டியுடன் இணைந்து சிக்ஸர்களை பறக்கவிட்டார். </p><h2>

ஆந்த்ரே ரஸல் வாணவேடிக்கை </h2><p>(பௌல் (Powell) 24 பந்துகளில் 38 ஓட்டங்கள் (4 சிக்ஸர்) விளாச, ஹஸ்ஸன் கான் டக்அவுட் ஆனார். கார்ட்டி 27 பந்துகளில் 45 ஓட்டங்கள் (4 சிக்ஸர், ஒரு பவுண்டரி) எடுத்த நிலையில் சாம்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02c75477-d7ef-49b4-9582-65f76adfc499/26-6a7c2051b0865.webp' /></p><p>

அணி 132 ஓட்டங்களுக்கு 7 விக்கெட் என தடுமாற, ஆந்த்ரே ரஸல் (Andre Russell) தனியாளாக வாணவேடிக்கை காட்டினார்.</p><p> 

அவர் கடைசி ஓவரில் 38 பந்துகளில் 68 ஓட்டங்கள் (9 சிக்ஸர்) விளாசி ஆட்டமிழக்க, ஜமைக்கா அணி 20 ஓவர்களில் 201 ஓட்டங்களே எடுத்ததால் பார்படோஸ் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><p>

விட்டல் லாவ்ஸ் 20 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 32 ஓட்டங்கள் விளாசினார். மிரட்டலாக பந்துவீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய டேனியல் சாம்ஸ் (Daniel Sams) ஆட்டநாயகன் விருது பெற்றார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fca675b-d161-4263-aab8-cffca808404e/26-6a7c205260615.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T07:12:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விபத்தில் சிக்கிய கார்.. பள்ளத்தில் விழுந்த திவ்யா.. உயிருக்கு போராடும் நாயகி! திருமாங்கல்யம் இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/zee-tamizh-thirumangalyam-serial-latest-episode-1786515975"></link>
            <id>https://cineulagam.com/article/zee-tamizh-thirumangalyam-serial-latest-episode-1786515975</id>
            <summary type="text">திருமாங்கல்யம்&amp;nbsp;தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனதை கவர்ந்து வரும் &#039;திருமாங்கல்யம்&#039; சீரியல், Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>திருமாங்கல்யம்&nbsp;</h2><p>தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனதை கவர்ந்து வரும் 'திருமாங்கல்யம்' சீரியல், Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. </p><p>விறுவிறுப்பும் அதிரடியும் கலந்த இந்த தொடரில், நேற்றைய எபிசோடில் திரு, திவ்யா மற்றும் மகா பயணம் செய்த கார் பிரேக் செயலிழந்து கட்டுப்பாட்டை இழந்த நிலையில், இன்று உயிரைப் பதறவைக்கும் சம்பவங்கள் அரங்கேற உள்ளன.

காரின் பிரேக் வேலை செய்யாததால் நிலைமை மோசமாக இருப்பதை உணர்ந்த திரு, திவ்யாவையும் மகாவையும் உடனே காரில் இருந்து குதிக்கச் சொல்கிறான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e07e0705-f251-4152-b271-5170786c2661/26-6a7c126e9f5b7.webp' /></p><p> </p><p>ஆனால் மகா, "அக்காவை விட்டுட்டு நான் வர மாட்டேன்" என்று உறுதியாக மறுக்கிறாள். அதேபோல் திவ்யாவும், "உன்னை விட்டுட்டு நானும் போக மாட்டேன்" என்று சொல்ல, என்ன செய்வது என்று தெரியாமல் திரு தவிக்கிறான். பரபரப்பான அந்த தருணத்தில், வேகமாக சென்ற கார் ஒரு பெரிய மரத்தில் மோதி நின்றுவிடுகிறது.

சில நிமிடங்களுக்கு பிறகு மயக்கத்தில் இருந்த திருவும் மகாவும் கண் விழிக்கின்றனர். </p><p>ஆனால் காருக்குள் திவ்யா இல்லாததை பார்த்ததும் இருவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். பதறிப்போன அவர்கள் அருகிலிருந்த பள்ளத்தாக்கு பகுதியில் இறங்கி, இரண்டு திசைகளில் திவ்யாவை தேட ஆரம்பிக்கின்றனர்.

நெஞ்சை பதறவைக்கும் தேடலுக்கு பிறகு, பள்ளத்தின் கீழே சுயநினைவின்றி கிடக்கும் திவ்யாவை கண்டுபிடிக்கின்றனர். </p><p>திவ்யாவின் நிலையை பார்த்து திருவும் மகாவும் கலங்கிப் போகின்றனர். அந்த நேரத்தில் அங்கு விறகு சுமந்து வந்த ஒரு பாட்டி உதவிக்கரம் நீட்டுகிறார். திவ்யாவின் நாடித்துடிப்பை பரிசோதித்த அவர், இன்னும் உயிருடன் இருப்பதாகவும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் காப்பாற்ற முடியும் என்றும் கூறுகிறார்.
</p><p>
இதையடுத்து அனைவரும் சேர்ந்து போராடி திவ்யாவை பள்ளத்திலிருந்து மேலே தூக்கி வருகின்றனர். அப்போது அருகில் கிடைத்த தள்ளுவண்டியில் திவ்யாவை படுக்க வைத்து, மிகுந்த சிரமத்துடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். </p><p>அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் திவ்யா அனுமதிக்கப்பட, மருத்துவர்கள் தீவிர சிகிச்சையை தொடங்குகின்றனர்.

மருத்துவமனை வாசலில் கண்ணீர் மல்க நின்ற திரு, "எப்படியாவது திவ்யாவை காப்பாத்திடுங்க" என்று மருத்துவர்களிடம் கெஞ்சுகிறான். </p><p>தனது காதலியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதை நினைத்து அவன் கதறி அழும் காட்சிகள் ரசிகர்களை உருக்க வைக்க உள்ளன.</p><p>

திவ்யா உயிர் பிழைப்பாரா? இந்த விபத்துக்கு பின்னால் இருக்கும் சதியை அறிவார்களா? திவ்யாவின் நிலை திருவின் வாழ்க்கையை எப்படி மாற்றப் போகிறது? என்ற பல பரபரப்பான கேள்விகளுக்கு பதில் கிடைக்க, திருமாங்கல்யம் தொடரின் இன்றைய எபிசோடை தவறாமல் காணுங்கள்!&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T07:10:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடகத்தில் உதயமாகும் குரு: இந்த ராசிக்காரர்கள் நிதி விடயத்தில் ஜாக்கிரதை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/jupiter-rise-in-cancer-who-get-bad-luck-1786517437"></link>
            <id>https://manithan.com/article/jupiter-rise-in-cancer-who-get-bad-luck-1786517437</id>
            <summary type="text">வேத ஜோதிடத்தின்படி, தேவர்களின் குருவாகக் கருதப்படும் குரு பகவான் தற்போது தனது உச்ச ராசியான கடகத்தில் பயணித்து வருகிறார். இதுவரை அஸ்தமன நிலையில் இருந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத ஜோதிடத்தின்படி, தேவர்களின் குருவாகக் கருதப்படும் குரு பகவான் தற்போது தனது உச்ச ராசியான கடகத்தில் பயணித்து வருகிறார். இதுவரை அஸ்தமன நிலையில் இருந்த குரு பகவான், ஆகஸ்ட் 12ஆம் தேதி உதயமாகிறார்.</p><p>

குரு உதயமாவது பொதுவாக மங்களகரமானதாகக் கருதப்பட்டாலும், அதன் பலன் அனைத்து ராசிக்காரர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்காது.சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கலாம்; சிலர் பொறுமையுடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டியிருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e189f57a-259f-4515-a062-8055fbc285de/26-6a7c1b8072f36.webp' /></p><p></p><p>தற்போது கடக ராசியில் குரு உதயமாவதால் எந்த ராசிக்காரர்கள் சவால்களையும், தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்யைில்&nbsp; அதிகளவில் பாதக பலன்களை அனுபவிக்கப்போகின்றார்கள் என இந்த பதிவி்ல பார்க்கலாம்.</p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e85df090-f894-4f63-91db-cadf8365bf65/26-6a7c1b812695a.webp' /></p><p>
மேஷ ராசிக்காரர்களின் 4-ஆவது வீட்டில் குரு பகவான் உதயமாகிறார். இதன் காரணமாக குடும்பம், வீடு, சொத்து மற்றும் மன அமைதி தொடர்பான விஷயங்களில் சற்று கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.</p><p> குறிப்பாக குடும்பத்தில் முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது அவசரப்படாமல், நிதானமாக ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.
</p><p>
இந்த காலகட்டத்தில் குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வீட்டில் ஏற்படும் சில கூடுதல் செலவுகள் அல்லது எதிர்பாராத பொறுப்புகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். எனவே, எதையும் பதற்றத்துடன் அணுகாமல் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம்.</p><h2>மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/797e3a5b-b55c-40ad-9452-67e22cdfb373/26-6a7c1b81ccaf2.webp' /></p><h2>
</h2><p>மிதுன ராசியின் 2-ஆவது வீட்டில் குரு பகவான் உதயமாகிறார். இதனால் பணவரவு மற்றும் குடும்ப நிதிநிலை தொடர்பாக சில சாதகமான வாய்ப்புகள் உருவாகலாம். </p><p>அதே நேரத்தில், வருமானம் அதிகரிப்பதைப் போலவே தேவையில்லாத செலவுகளும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால் பணத்தை திட்டமிட்டு நிர்வகிப்பது மிகவும் அவசியம்.
</p><p>
குறிப்பாக, அவசரப்பட்டு பெரிய அளவில் முதலீடுகளை செய்வதையோ, முழுமையாக ஆராயாமல் பணத்தை செலவு செய்வதையோ தவிர்க்க வேண்டும்.எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.</p><h2>

சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/576b0fd1-060b-45ce-839d-7790e33a679e/26-6a7c1b827e48e.webp' /></p><p></p><h2>
</h2><p>சிம்ம ராசிக்காரர்களின் 12-ஆவது வீட்டில் குரு பகவான் உதயமாகிறார். இதனால் இனிவரும் காலத்தில் நிதி விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.</p><p>தேவையில்லாத செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், வருமானத்திற்கு ஏற்ற வகையில் செலவுகளை திட்டமிடுவது அவசியம்.

குறிப்பாக ஆடம்பரச் செலவுகள் மற்றும் அவசியமில்லாத வாங்குதல்களை குறைத்துக் கொள்வது நல்லது.</p><p> அதேபோல், தேவையற்ற கடன்களை வாங்குவதையோ, அதிக ஆபத்து கொண்ட முதலீடுகளில் அவசரமாக பணத்தை செலுத்துவதையோ தவிர்க்க வேண்டும். </p><p>பண விஷயங்களில் மற்றவர்களின் வார்த்தைகளை மட்டும் நம்பி முடிவெடுக்காமல், நன்கு ஆராய்ந்து செயல்படுவது இழப்புகளை தவிர்க்க உதவும். உடலில் ஏற்படும் சிறிய அறிகுறிகளையும் அலட்சியப்படுத்தாமல் கவனித்துக் கொள்வது அவசியம்.&nbsp;</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b> <u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u>&nbsp;</b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T07:06:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷித ராஜபக்சவிடம் CID இரண்டு மணிநேர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/yoshitha-rajapaksa-arrives-at-cid-1786510116"></link>
            <id>https://ibctamil.com/article/yoshitha-rajapaksa-arrives-at-cid-1786510116</id>
            <summary type="text">புதிய இணைப்புவாக்குமூலம் வழங்கியதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து சற்று...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து சற்றுமுன்னர் வெளியேறியுள்ளார்.</p><p> 

அவர் விசாரணைக்காக&nbsp;குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (12.08.2026) முற்பகல் சுமார் 10 மணியளவில் முன்னிலையானார். </p><p>

இந்நிலையில் 2 மணித்தியாலயங்களுக்கும் அதிக நேரம் இடம்பெற்ற விசாரணைகளின் பின் அவர் வெளியேறியுள்ளார்.&nbsp;</p><p></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்‌ஷ சற்று முன்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e4760d3-406a-4dc4-8eed-fb3449319dbb/26-6a7c00c11a9d0.webp' /></p><p>இடம்பெற்று வரும் விசாரணை ஒன்றுக்கு தொடர்புடையதாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே குற்றப் புலனாய்வுதிணைக்களத்திற்கு இன்று இவர் (12.08.2026) வருகை தந்துள்ளார்.&nbsp;</p><p><b>தொடர்புடைய செய்திகள்&nbsp;</b></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T07:06:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கலிஃபோர்னியாவில் கிளாமர் ஆடையில் புகைப்படத்தை வெளியிட்ட மம்தா மோகன்தாஸ்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/41-age-actress-mamta-mohandas-california-photos-1786518619"></link>
            <id>https://viduppu.com/article/41-age-actress-mamta-mohandas-california-photos-1786518619</id>
            <summary type="text">மம்தா மோகன்தாஸ்நடிகை மம்தா மோகன்தாஸ் தன்னை ஒரு பிரபலமான நடிகர் டேட்டிங் செல்ல அழைத்ததாகவும் அவர்மீது புகாரும் அளித்துள்ளார். சிவப்பதிகாரம், குரு என் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மம்தா மோகன்தாஸ்</h2><p>நடிகை மம்தா மோகன்தாஸ் தன்னை ஒரு பிரபலமான நடிகர் டேட்டிங் செல்ல அழைத்ததாகவும் அவர்மீது புகாரும் அளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59b4284a-4c8f-476d-ad56-47385ed02306/26-6a7c1c607985f.webp' /></p><p> </p><p>சிவப்பதிகாரம், குரு என் ஆளு, தடையறத்தாக்க, எனிமி, மகாராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தான் நடிகை மம்தா மோகந்தாஸ். இருமுறை புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்ட மம்தா, அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். </p><p>தற்போது கலிஃபோர்னியாவுக்கு சென்று எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் மம்தா மோகன்.</p>]]></content>
            <updated>2026-08-12T07:00:00+00:00</updated>
        </entry>
    </feed>
