<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-11T05:33:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஸ்வநாத் &amp; சன்ஸ் வெளிநாட்டு மொத்த வசூல், முழு விவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vishwanath-and-sons-overseas-total-box-office-1789101295"></link>
            <id>https://cineulagam.com/article/vishwanath-and-sons-overseas-total-box-office-1789101295</id>
            <summary type="text">சூர்யா நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் பிரம்மாண்ட எதிர்பார்ப்புடன் வெளிவந்த படம் விஸ்வநாத் &amp;amp; சன்ஸ். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூர்யா நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் பிரம்மாண்ட எதிர்பார்ப்புடன் வெளிவந்த படம் விஸ்வநாத் &amp; சன்ஸ். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதை தொடர்ந்து உலகம் முழுவதும் இப்படம் ரூ 220 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9675a452-bcab-47bc-93c8-42f49956fcb7/26-6aa384f3064d4.webp' /></p><p></p><p>இந்நிலையில் <a href="https://www.nakkheeran.in/cinema/viswanath-and-sons-ott-release-update-12506276" target="_blank">விஸ்வநாத் &amp; சன்ஸ்</a> படத்தின் இறுதி வெளிநாட்டு வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன் விவரங்கள் இதோ...</p><p><b><u>

27 Days</u></b></p><ul><li> 

North America $2.94M </li><li>
UK Europe $1.3M
</li><li>Malaysia $1.15M</li><li>
Middle East $920K
</li><li>Singapore $294K
</li><li>Australia $292K</li><li>
New Zealand $24K
</li><li>Lanka/Rest $190K
</li></ul><p><b>
Total Overseas - $7.11M - இந்திய மதிப்பில் ரூ. 67.9 கோடி.
</b></p><p>
இதன் மூலம் வெளிநாடுகளில் விஸ்வநாத் &amp; சன்ஸ் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது; மேலும் நார்த் அமெரிக்காவில் மெகா பிளாக்பஸ்டர் படமாக அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f227638-f83d-4bcd-88d2-e5fdd1cc1810/26-6aa384f24afb1.webp' /></p><p></p><p> </p><p>

கருப்பு படம் வெளிநாடுகளில் 10 மில்லியன் டாலர் வசூல் செய்ய, விஸ்வநாத் &amp; சன்ஸ் 7 மில்லியன் டாலரை தொட, Scene திரைப்படம் குறைந்தது 15 மில்லியன் டாலர் வசூலிக்கும் என்பதே எல்லோர் எதிர்பார்ப்பும்.</p>]]></content>
            <updated>2026-09-11T05:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு குறித்து மனம் திறந்த மைத்திரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/i-dont-know-about-gnasara-thero-case-1789104336"></link>
            <id>https://tamilwin.com/article/i-dont-know-about-gnasara-thero-case-1789104336</id>
            <summary type="text">அரசியல் அமைப்பின் பிரகாரமே, பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியல் அமைப்பின் பிரகாரமே, பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
</p><p>கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் ஆட்சிக்காலத்தில், பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.
</p><p>இந்த பொது மன்னிப்பானது உரிய விதிகளை பின்பற்றி வழங்கப்படவில்லை என தற்பொழுது நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/783ed966-dc23-4713-90da-83397dec9d75/26-6aa390d21c412.webp' /></p><p>
</p><p>இந்த நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரி&nbsp; இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p>
ஞானசார தேரர் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பற்றி தமக்கு எதுவும் தெரியாது என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>எவ்வாறு எனினும் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பிலான தனது தீர்மானம் அரசியல் அமைப்பிற்கு உட்பட்ட வகையில் அந்தக் காலத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்&nbsp; என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>19ஆம் திருத்த சட்டத்தை சட்டத்தின் பிரகாரம் காணப்பட்ட அதிகாரங்களை குறைத்ததாகவும் பதவி காலத்தை குறைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
தனக்கு பின்னர் வந்த அரசாங்கம் 19ஆம் திருத்தச் சட்டத்தில் தம்மால் அகற்றப்பட்ட அதிகாரங்களை மாற்றியமைதத்தாகவும், அதன் பின்னர் மீண்டும் ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>எனவே இந்த நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் தமக்கு எவ்வித கருத்தையும் வெளியிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T05:28:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்; அடுத்தடுத்து சகோதரிகள் மரணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/batticaloa-tiktok-young-woman-suicide-1789104702"></link>
            <id>https://jvpnews.com/article/batticaloa-tiktok-young-woman-suicide-1789104702</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டக்களப்பில் TikTok இல் வலம்வந்த 18 வயது யுவதி விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த யுவதி தாய் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மட்டக்களப்பில் TikTok இல் வலம்வந்த 18 வயது யுவதி விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
உயிரிழந்த யுவதி தாய் அற்ற நிலையில் தந்தையுடன் வாழ்ந்து வந்த மட்டக்களப்பு ஒந்தாட்சிபடத்தைச் சேர்ந்த குறித்த யுவதி ஏன் இந்த முடிவு எடுத்தார் எனத் தெரியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08a4d0c4-0d3e-4397-9ca3-995ca5d14042/26-6aa3923f9c008.webp' /></p><p>
</p><p> 
அதேவேளை உயிரிழந்த யுவதியின் சகோதரியும் ஏற்கனவே இவ்வாறே தற்கொலை செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.&nbsp; &nbsp;யுவதியின் மரணத்திற்கான&nbsp; காரணம் வெளியாகாத&nbsp; நிலையில் மேலதிக விசாரணைகாள் இடம்பெற்று வருவதாக&nbsp; கூறப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-09-11T05:28:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்கின் மற்றுமொரு ஆடம்பர வீடு - தந்தையிடம் CCIB வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ccib-questions-shiran-basik-s-father-1789101993"></link>
            <id>https://tamilwin.com/article/ccib-questions-shiran-basik-s-father-1789101993</id>
            <summary type="text">டுபாயிலிருந்து நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம் மத்திய குற்றப்புலனாய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயிலிருந்து நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம் மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவு தற்போது விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கம்பாஹா பகுதியில் உள்ள ஒரு ஆடம்பர குடியிருப்பு வளாகத்தில், ஷிரான் பாசிக் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு வீட்டை வாங்கியுள்ளார்.</p><h2>குற்றப்புலனாய்வுப்பிரிவில் முன்னிலை&nbsp;</h2><p> </p><p>மேலும், அந்த வீடு அவரது தந்தையின் பெயரில் வாங்கப்பட்டதும் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>
</p><p>
அதன்படி, இது தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக, ஷிரான் பாசிக்கின் தந்தை இன்று (11) மத்திய குற்றப்புலனாய்வுப்பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T05:26:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் ஜனாதிபதி மகிந்த தலைமையிலான அநுராதபுரப் பேரணியில் பங்கேற்பது குறித்து விமலின் தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anuradhapura-peoples-rally-1789103812"></link>
            <id>https://tamilwin.com/article/anuradhapura-peoples-rally-1789103812</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அநுராதபுரத்தில் நடத்தப்படவுள்ள கூட்டத்தில்
கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பு தொடர்பில், கட்சியின் அரசியல்
குழுவுட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அநுராதபுரத்தில் நடத்தப்படவுள்ள கூட்டத்தில்
கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பு தொடர்பில், கட்சியின் அரசியல்
குழுவுடன் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்று தேசிய சுதந்திர
முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
</p><p>
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் மற்றும் தேசிய
சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச ஆகியோருக்கு இடையில் நேற்று
வியாழக்கிழமை தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் விசேட சந்திப்பு
நடைபெற்றது. </p><p>இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத்
தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு&nbsp;</h2><p>
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,</p><p>

"அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில்
பங்கேற்குமாறு எமது கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து
கட்சியின் அரசியல் குழு கூடி ஆராய்ந்து, பெரும்பாலும் வெள்ளிக்கிழமை காலை எமது
உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அறிவிப்போம்.
</p><p>
இது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் மீண்டும் அரசியல் ரீதியாக
ஒன்றிணைவதற்கான நடவடிக்கை அல்ல. மாறாக, அரசின் அடக்குமுறைக்கு எதிராகவும்,
ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவும், மக்களின் பொருளாதார நெருக்கடிகளுக்குத்
தீர்வு காண்பது தொடர்பிலும் ஒருமித்த கருத்துகளின் அடிப்படையில்
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவது குறித்தே தற்போது
கலந்துரையாடப்படுகின்றது.
</p><p>
கடந்த கால நல்ல விடயங்களை முன்னெடுத்துச் செல்லும்போது, கடந்த காலத் தவறுகளை
மீண்டும் தொடரக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bb2df9c-7909-4679-9b67-06b838be1980/26-6aa390d479665.webp' /></p><p> </p><p>அரசியல் கூட்டணி அமைப்பது
குறித்த பேச்சுவார்த்தைகள் எதுவும் இதுவரை இடம்பெறவில்லை.

தேர்தலொன்றுக்கான அறிகுறியே இல்லாத நிலையில் அரசியல் கூட்டங்கள்
நடத்தப்படுவதாக விமர்சிப்பவர்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடமே கேள்வி
எழுப்ப வேண்டும். மக்கள் ஜனாதிபதியைத் தெரிவு செய்வது கூட்டங்களை
நடத்துவதற்காகவன்றி, நாட்டை முன்னேற்றுவதற்காகவே ஆகும்" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>
அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்,
நீதித்துறையின் சுயாதீனம் மிக முக்கியமானது எனவும், ஒரு நீதிபதி தனது
மனச்சுதந்திரத்துடன் சுயாதீனமாகத் தீர்ப்பளிக்கும் உரிமை பாதுகாக்கப்பட
வேண்டும் எனவும் தெரிவித்தார்.</p><p> இது அரசியல்வாதிகளுக்கு மாத்திரமன்றி அனைத்து
நாட்டு மக்களுக்கும் முக்கியமான பிரச்சினை என்றும் அவர் மேலும் கூறினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T05:26:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அரசியல்வாதிகள் , மக்கள் போராட்டம்; செவி சாய்க்குமா அனுர அரசாங்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/people-in-jaffna-demanding-the-release-of-lands-1789104293"></link>
            <id>https://jvpnews.com/article/people-in-jaffna-demanding-the-release-of-lands-1789104293</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் - வடமராட்சி, பருத்துத்துறை பகுதியில இராணுவம் மற்றும் கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று வெள்ளிக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் - வடமராட்சி, பருத்துத்துறை பகுதியில இராணுவம் மற்றும் கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று வெள்ளிக்கிழமை (11) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p>


தபாலகத்திற்கு சொந்தமான காணி, நீதிமன்றத்திற்கு சொந்தமான காணி, பருத்தித்துறை நகர சபைக்கு சொந்தமான காணி மற்றும் கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை விடுவிக்குமாறுகோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc6fefab-9cba-43e6-a583-591b900abb13/26-6aa390a67e426.webp' /></p><p>
</p><p>
இராணுவம் மற்றும் கடற்கரை வெளியேற வேண்டும் என்று கோரி நகர சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் பருத்தித்துறை துறைமுக பகுதியில் இருந்து ஆரம்பமாகி வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் வரை சென்றது.
</p><p>
அங்கு, மேற்குறித்த காணிகளை விடுவிக்குமாறு பிரதேச செயலர் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. </p><p>

குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், </p><p>நகர சபையை தவிசாளர் வின்சன் டி போல் டக்லஸ் போல், பருத்துத்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஷ், அரசியல், செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பருத்தித்துறை வர்த்தகர்கள், பிரதேச மக்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T05:21:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிள் திருடி பிடிபட்ட இரு இளைஞர்கள் ; விசாரணையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-youths-caught-stealing-a-motorcycle-1789103882"></link>
            <id>https://jvpnews.com/article/two-youths-caught-stealing-a-motorcycle-1789103882</id>
            <summary type="text">மோட்டார் சைக்கிள்கள், செப்புக் கம்பிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இரு சந்தேகந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மோட்டார் சைக்கிள்கள், செப்புக் கம்பிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இரு சந்தேகநபர்களை கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


கிடைத்த தகவலின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட பொலிஸ் குழுவினர், ஆடியம்பலம பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிளொன்றை பாகங்களாக கழற்றிக் கொண்டிருந்த நபர் ஒருவரை சோதனையிட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29d1e987-df9b-4538-b1df-4c86dad7ac71/26-6aa38f0b33a96.webp' /></p><h2 style="text-align: justify; ">திருட்டுச் சம்பவங்கள்</h2><p style="text-align: justify; ">



இதன்போது, அவரிடமிருந்து 11 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">


கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவர் பாகங்களாக கழற்றிக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் கடந்த செப்டெம்பர் 08ஆம் திகதி வேயங்கொடை பகுதியில் இருந்து திருடப்பட்டமை தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; ">



குறித்த திருட்டுச் சம்பவத்திற்கு உதவி மற்றும் ஆதரவு வழங்கிய மற்றைய சந்தேகநபரும் பின்னர் சீதுவ பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22 மற்றும் 25 வயதுடையவர்கள் என்பதுடன், அவர்கள் ஆடியம்பலம மற்றும் சீதுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">


மேலும், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கட்டுநாயக்க பகுதியில் இடம்பெற்ற இரண்டு செப்புக் கம்பி திருட்டுச் சம்பவங்கள், ஒரு கையடக்கத் தொலைபேசி திருட்டுச் சம்பவம் மற்றும் சீதுவ பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளன.</p><p style="text-align: justify; ">



சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-11T05:20:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[எண்ணெய் ஆய்வுக்காக மன்னார் தீவைச் சுற்றியுள்ள நிலப்பரப்பில் துளையிடும் நடவடிக்கை! இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் வெளியிட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/statement-catholic-bishops-conference-of-sri-lanka-1789101799"></link>
            <id>https://tamilwin.com/article/statement-catholic-bishops-conference-of-sri-lanka-1789101799</id>
            <summary type="text">இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் நடைபெற்ற தனது முழுமையான அமர்வின் போது நாட்டின் நீதி, அமைதி மற்றும் நல்லிணக்கத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் சில முக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் நடைபெற்ற தனது முழுமையான அமர்வின் போது நாட்டின் நீதி, அமைதி மற்றும் நல்லிணக்கத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் சில முக்கியமான பிரச்சினைகள் குறித்து தனது கவனத்தை செலுத்தி உள்ளது.</p><p>எண்ணெய் மற்றும் எரிபொருள் ஆய்வுக்காக மன்னார் தீவைச் சுற்றியுள்ள நிலப்பரப்பில் துளையிடுவது பற்றிய தகவல்களும் இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றத்திற்கு கிடைத்துள்ளன, இவை பொருளாதார வளர்ச்சியை நோக்கிய நேர்மறையான முயற்சிகளாக இருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
</p><p>
குறித்த விடயங்கள் குறித்து இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு அறிக்கை ஒன்றை நேற்றைய தினம் (10.09.2026) வெளியிட்டுள்ளனர்.
</p><p>
குறித்த அறிக்கையில் மேலும், இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம், 2026 ஆகஸ்ட் 18 முதல் 20 வரை நடைபெற்ற தனது முழுமையான அமர்வின் போது, நாட்டின் நீதி, அமைதி மற்றும் நல்லிணக்கத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் சில முக்கியமான பிரச்சினைகள் குறித்து தனது கவனத்தைச் செலுத்தி உள்ளது.

சமூகத்தில் சமத்துவத்தையும் நீதியையும் ஊக்குவிக்கும் நோக்கில் அரசாங்கம் அண்மையில் எடுத்த சில நடவடிக்கைகளை ஆயர்கள் பாராட்டியுள்ளனர்.</p><h2>காற்று மின் நிலையங்கள் குறித்து சிறப்பு கவனம்</h2><p> </p><p>இத்தகைய முயற்சிகளில், மன்னாரில் முன்மொழியப்பட்ட காற்று மின் நிலையங்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. 14 காற்றாலை கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

மேலும் வாக்குறுதி அளித்தபடி, இதுபோன்ற மின் நிலையங்களை மேலும் விரிவாக்கம் செய்யக்கூடாது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக அரசாங்கத்திற்கு இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82815b3a-08d6-47b9-9211-c64197553034/26-6aa38d16db7ad.webp' /></p><p>

இந்த கோரிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் இலங்கையின் மேன்மை தங்கிய அதிபர் அவர்களிடம் முன்வைக்கப்பட்டது. இது ஒரு நீண்ட கால தேவையாக இருந்ததுடன், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் பெரிதும் பங்கு வகிக்கும் சமூகத்தின் இந்தப் பிரிவுக்கான சம்பள உயர்வை இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் பாராட்டுகிறது.

அதேவேளை, யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள் குறித்த பிரச்சினை தொடர்பாக நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகிறது.</p><p> ஏற்கனவே நீண்டு கொண்டே செல்லும் செம்மணி அகழ்வாராய்ச்சிகள் நிறைவு செய்யப்பட வேண்டும். செம்மணியுடன் தொடர்புடையதாக கூறப்படும் குற்றங்களுக்கான உண்மையையும் பொறுப்புக் கூறலையும் உறுதிப்படுத்த இந்த முயற்சி தேவைப்படுகிறது.

அதேபோல், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டுப் போரின் போது நடந்த பயங்கரவாதம் மற்றும் பெருந்திரளான கொலைகள் தொடர்பான பிற சம்பவங்களும், இந்தக் காலகட்டத்திற்கு முந்தைய காலத்தில் அனுபவித்த பயங்கரவாதச் செயல்களும் உள்ளன.</p><p> மன்னார் தீவில் மணல் அகழ்வு நடவடிக்கைகள் பாரிய சுற்றுச்சூழல் சேதத்தை ஏற்படுத்துவது குறித்தும் இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் கவலை கொண்டுள்ளது.

சுற்றுச்சூழலை பாதிக்கும் இந்த நடவடிக்கையால் மக்கள் நிம்மதி இழந்துள்ள நிலையில், எண்ணெய் மற்றும் எரிபொருள் ஆய்வுக்காக மன்னார் தீவைச் சுற்றியுள்ள நிலப்பரப்பில் துளையிடுவது பற்றிய தகவல்களும் இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றத்திற்கு கிடைத்துள்ளன. இவை பொருளாதார வளர்ச்சியை நோக்கிய நேர்மறையான முயற்சிகளாக இருக்கலாம்.</p><h2>முறையான கலந்தாய்வு</h2><p>
</p><p>
இருப்பினும், முறையான சுற்றுச்சூழல் மதிப்பீடுகளை வெளிப்படையான முறையில் நடத்துவதும், இதுபோன்ற திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் பொறுப்புள்ளவர்களின் கடமையாகும். இதுபோன்ற எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கைக்கும் முன்னர் உள்ளூர் பொது மக்களின் கருத்தை கண்டறிவதற்கான முறையான கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். மன்னார் தீவில் உள்ள மீனவ சமூகத்தின் வாழ்வாதாரமும் நீர் வளங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.

இத்தகைய நடவடிக்கைகளால் அவை பாதிக்கப்படக்கூடாது, இதன் மூலம் மக்களின் உரிமைகளும் கண்ணியமும் பாதுகாக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b0edc9a-8886-4fb4-a688-68334e4c2e08/26-6aa38d17a0eae.webp' /></p><p> </p><p>எக்ஸ்பிரஸ் பேர்ல் (Express Pearl) கப்பலினால் ஏற்பட்ட விரிவான சுற்றுச்சூழல் சேதம் குறித்தும், விதிக்கப்பட்ட இழப்பீட்டை கோருவதற்கு நீதிமன்றத்தின் தீர்மானத்தை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் கவலை கொண்டுள்ளது.

மேலும், முத்துராஜவெல சதுப்பு நிலத்தை நிரப்புவதன் மூலம் தற்போதைய நில மீட்பு நடவடிக்கைகளால் ஏற்படும் அபாயங்கள் கவனிக்கப்பட வேண்டும். மேலும் அபாயகரமான அபிவிருத்தி திட்டங்களுக்கு எதிராக முத்துராஜவெல சதுப்பு நிலத்தை பாதுகாப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த அறிக்கையில், இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றத்தின் தலைவர் குருநாகல் ஆயர் கலாநிதி ஹரோல்ட் அந்தோனி பெரேரா ஆண்டகை, இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றத்தின் பொதுச் செயலாளர் யாழ்ப்பாண ஆயர் P. அந்தோனி ரஞ்சித் ஆண்டகை, கொழும்பு பேராயர் அதிமேதகு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, திருகோணமலை ஆயர் கலாநிதி நோயல் இமானுவேல் ஆண்டகை, கண்டி ஆயர் கலாநிதி வலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை, காலி ஆயர் கலாநிதி ரெய்மண்ட் விக்கிரமசிங்க ஆண்டகை, பதுளை ஆயர் கலாநிதி ஜூட் நிஷாந்த சில்வா ஆண்டகை, சிலாபம் ஆயர் கலாநிதி விமல் சிறி ஜெயசூரிய ஆண்டகை, இரத்தினபுரி ஆயர். கலாநிதி அந்தோனி வைமன் குரூஸ் ஆண்டகை, மன்னார் ஆயர் அதிவண. கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை, அனுராதபுரம் ஆயர். கலாநிதி சகாய ஜெயமான்ன ஆண்டகை, கொழும்பு துணை ஆயர் கலாநிதி மெக்ஸ்வெல் G. சில்வா ஆண்டகை, கொழும்பு துணை ஆயர் கலாநிதி J. D. அந்தோனி ஜெயக்கொடி ஆண்டகை ஆகியோர் கையொப்படமிட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T05:18:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[லாட்டரியில் 20 ஆண்டுகளாக ஒரே இலக்கங்கள் ; அமெரிக்காவில் பெண்ணுக்கு அடித்த ஜாக்பொட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/woman-wins-us-jackpot-with-same-numbers-1789097837"></link>
            <id>https://canadamirror.com/article/woman-wins-us-jackpot-with-same-numbers-1789097837</id>
            <summary type="text">அமெரிக்காவில் மேரிலாண்டின் ஒயிட் பிளைன்ஸ் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 20 வருடங்களாக &#039;போனஸ் மேட்ச் 5&#039; என்ற லாட்டரி விளையாட்டில் தனக்கென சில கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் மேரிலாண்டின் ஒயிட் பிளைன்ஸ் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 20 வருடங்களாக 'போனஸ் மேட்ச் 5' என்ற லாட்டரி விளையாட்டில் தனக்கென சில குறிப்பிட்ட எண்களைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து அதே எண்களையே பயன்படுத்தி வந்துள்ளார்.</p><p>

சமீபத்தில் அங்குள்ள உள்ளூர் மதுபானக் கடையில் அதே எண்களைப் பயன்படுத்தி, ஒரே குலுக்கலுக்காக மூன்று வெவ்வேறு டிக்கெட்டுகளை அவர் வாங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32ed6d1f-9bbb-4767-93f6-8dadb8030b8e/26-6aa3776f21654.webp' /></p><p>


</p><p>&nbsp;குலுக்கல் முடிவுகள் வெளியானபோது, அந்தப் பெண் தேர்ந்தெடுத்த எண்கள் அப்படியே பொருந்திப் பரிசு விழுந்திருந்தது. ஆனால், தனுக்குத்தான் பரிசு விழுந்துள்ளதா என்பதை அவரால் உடனடியாக நம்ப முடியவில்லை.</p><p>

இதுகுறித்து அவர் கூறுகையில், "எனக்கு லாட்டரி எண்களைப் பார்த்ததும் முதலில் அதிர்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியவில்லை.


உடனே லாட்டரி விளையாடும் பழக்கமுள்ள என் சகோதரியை அழைத்து, எண்களைச் சரியாகப் படிக்குமாறு கூறினேன்" என்றார்.
</p><p>
அவரது சகோதரி சரிபார்த்துவிட்டு, அவர் வாங்கிய மூன்று டிக்கெட்டுகளுக்குமே தலா ரூ. 45 லட்சத்திற்கும் மேல் மொத்தம் ரூ.1.30 கோடி ஜாக்பாட் அடித்துள்ளதை உறுதிப்படுத்தினார்.</p>]]></content>
            <updated>2026-09-11T05:14:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் சுற்றுலா பேருந்து விபத்து; பலர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tourist-bus-accident-in-switzerland-many-dead-1789103854"></link>
            <id>https://canadamirror.com/article/tourist-bus-accident-in-switzerland-many-dead-1789103854</id>
            <summary type="text">&amp;nbsp; சுவிட்சர்லாந்தின் கிராபுண்டன் மாகாணத்தில் உள்ள சுஷ் மலைக்கிராமத்திற்கு அருகே சுற்றுலாப் பயணிகள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சுவிட்சர்லாந்தின் கிராபுண்டன் மாகாணத்தில் உள்ள சுஷ் மலைக்கிராமத்திற்கு அருகே சுற்றுலாப் பயணிகள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>

இந்தப் பேருந்தில் நெதர்லாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்ததாக டச்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டச்சு சுற்றுலா நிறுவனமான OAD ஏற்பாடு செய்த பயணத்தில் அவர்கள் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2578c44-41dc-4718-a23e-13e1441df77e/26-6aa38eefe5070.webp' /></p><h2>&nbsp;நெதர்லாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள்</h2><p>

பேருந்தில் மொத்தம் 48 பேர் இருந்ததாக ‘De Telegraaf’ செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இந்த எண்ணிக்கையை சுவிஸ் காவல்துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
</p><p>
சுஷ் மற்றும் அருகிலுள்ள ஜெர்னெஸ் கிராமத்திற்கு இடையேயான சாலையில், உள்ளூர் நேரப்படி மாலை 4.45 மணியளவில் பேருந்து தடுப்பு வேலியில் மோதியதாக சுவிஸ் ஒளிபரப்பு நிறுவனமான SRF தெரிவித்துள்ளது.

விபத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளில் பல ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் SRF தெரிவித்துள்ளது.</p><p>
 
இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சுவிட்சர்லாந்து அதிபர் கை பார்மெலின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

கிராபுண்டனில் இன்று ஒரு டச்சுப் பேருந்துக்கு ஏற்பட்ட துயரமான விபத்தால் நான் மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளேன்.</p><p> 

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

விபத்துக்கான காரணம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து சூழ்நிலைகளையும் கண்டறிய சுவிஸ் அதிகாரிகள் விரிவான விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T05:14:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[சத்துருக்கொண்டான் படுகொலை : இராணுவ முகாமில் அகழ்வாய்வு நடத்த மாநகரசபை தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/army-camp-linked-to-the-sathurukondan-massacre-1789102523"></link>
            <id>https://tamilwin.com/article/army-camp-linked-to-the-sathurukondan-massacre-1789102523</id>
            <summary type="text">சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் குறித்த பகுதியில் இருந்த இராணுவம்
முகாம் அகழ்வாய்வு செய்யப்படவேண்டும் என்பதுடன் சர்வதேசத்தின் கண்காணிப்பில்
அதனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் குறித்த பகுதியில் இருந்த இராணுவம்
முகாம் அகழ்வாய்வு செய்யப்படவேண்டும் என்பதுடன் சர்வதேசத்தின் கண்காணிப்பில்
அதனை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையில்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
</p><p>மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு நேற்று(0.09.2026) மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர்
சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது.
</p><h2>முன்மொழிவுகளும் வாசிக்கப்பட்டு&nbsp;</h2><p>மட்டக்களப்பு மாநகரசபையின் வழமையான சம்பிரதாயங்களுக்கு அமைவாக சபை
நடவடிக்கைகள் ஆரம்பமாகி நடைபெற்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe2963e6-9bf7-4ef0-8588-074a6f01547b/26-6aa38ceeeda24.webp' /></p><p>இதன்போது சத்துருக்கொண்டான் படுகொலையில் உயிர்நீர்த்தவர்களுக்காக மாநகரசபை
உறுப்பினர்களினால் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.</p><p>மாநகரசபை
உறுப்பினர் தயாளகௌரியினால் இந்த சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாநகரசபை முதல்வரின் தலைமையுரையினை தொடர்ந்து மாநகரசபையின் கடந்த கூட்டறிக்கை
வாசிக்கப்பட்டு சபையின் அனுமதி பெறப்பட்டது.</p><p>அதனை தொடர்ந்து மாநகரசபையின் முன்மொழிவுகள் வாசிக்கப்பட்டு சபையின்
அனுமதி பெறப்பட்டதுடன் மாநகரசபையின் நிலையியல் கட்டளைக்குழுக்களின்
முன்மொழிவுகளும் வாசிக்கப்பட்டு வாதப்பிரதிவாதங்களுடன் அனுமதிகள் வழங்கப்பட்டன.&nbsp;</p><p> </p><h2>பிரேரணைக்கு ஆதரவு</h2><p>இதன்போது பல்வேறு விவாதங்கள் நடைபெற்றதுடன் மாநகரசபையின் செயற்பாடுகள்
குறித்தும் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7677f661-163d-4a56-ac3d-073d4ca5cb95/26-6aa38cefda770.webp' /></p><p>
இன்றைய அமர்வின்போது சத்துருக்கொண்டான் படுகொலையின் பிரதான பங்கினைக்கொண்ட
சத்துருக்கொண்டான் பொய்ஸ் கார்டன் படைமுகாமில் அகழ்வுப்பணிகளை முன்னெடுக்கவும்
குறித்த படுகொலையின் பிரதான சூத்திரதாரிகளான படை பொறுப்பதிகாரி உட்பட
இனங்காணப்பட்ட படையினர் மீது நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தும் விசேட
பிரேரணையொன்று மாநகரசபை உறுப்பினர் தயாளகௌரியினால் கொண்டுவரப்பட்டு
நிறைவேற்றப்பட்டது.</p><p>இதன்போது குறித்த பிரேரணைக்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு வழங்கிய நிலையில்
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர் ஒருவர் பிரேரணை
கொண்டு வந்தவர் முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்ததாகவும் ஏன்
அக்காலப்பகுதியில் இந்த பிரேரணை கொண்டுவரப்படவில்லையென தெரிவித்தபோது அதற்கு
எதிரான பல்வேறு கருத்துகள் இதன்போது தெரிவிக்கப்பட்ட நிலையில் பிரேரணை
நிறைவேற்றப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T05:14:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்ற உணவகத்திற்கு அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/selling-bottled-water-at-high-prices-fine-1789098189"></link>
            <id>https://ibctamil.com/article/selling-bottled-water-at-high-prices-fine-1789098189</id>
            <summary type="text">உணவகம் ஒன்று அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்பனை செய்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
மட்டக்களப்பு - வாழைச்சேனை உணவகம் ஒன்றுக்கு, அதிகபட்ச சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உணவகம் ஒன்று அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்பனை செய்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. </p><p>
மட்டக்களப்பு - வாழைச்சேனை உணவகம் ஒன்றுக்கு, அதிகபட்ச சில்லறை விலையை மீறி குடிநீர்ப் போத்தல்களைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 750,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>வாழைச்சேனை நீதவான் நீதிமன்றதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>நீதிமன்றத்தில் விசாரணை</h2><p>
வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட உணவக உரிமையாளர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதிமன்றம் 750,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c160fa73-0bda-47f2-bff2-9ffe4e367dbb/26-6aa38da3b47dd.webp' /></p><p>நுகர்வோர் விவகார அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரிகளால் கடந்த ஜூன் 4 ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே இந்த அத்துமீறல் கண்டறியப்பட்டது.
</p><p>
இதன்போது அதிகபட்ச சில்லறை விலை 100 ரூபாயாக குறிப்பிடப்பட்டிருந்த ஒரு லிட்டர் குடிநீர்ப் போத்தலை, உணவகத்தில் 130 ரூபாய்க்கு விற்பனை செய்தமை கண்டறியப்பட்டது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T05:13:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரண பீதியில் மகிந்தவின் மனைவி - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-has-undergone-heart-surgery-1789049033"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-has-undergone-heart-surgery-1789049033</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

அவர் தற்போத...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.
</p><p>
அவர் தற்போது கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>

அவரது உடல் நிலை சற்று அசௌகரியமான நிலையில் இருப்பதாகக் குடும்ப வட்டாரங்களும் தெரிவித்துள்ளன.</p><h2><b>
வைத்தியசாலையில் அனுமதி</b></h2><p>ஷிரந்தி ராஜபக்சவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்ததாக பல்வேறு செய்திகள் பரவியிருந்தன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3a4ef75-a76e-4511-a3af-ed9d27496d2d/26-6aa2c25592000.webp' /></p><p>எப்படியிருப்பினும், கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய, அவ்வாறான எந்தவொரு அறிவித்தலும் எழுத்துமூலமாகவோ அல்லது வாய்மொழி மூலமாகவோ இலஞ்ச ஆணைக்குழுவினால் ஷிரந்தி ராஜபக்சவிற்கு விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

</p><p>
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச இதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T05:08:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[படு வெற்றியடைந்த டிசி படம், அனிருத், லோகேஷிற்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/kalanithi-maran-gifts-bmw-car-for-dc-team-1789099255"></link>
            <id>https://cineulagam.com/article/kalanithi-maran-gifts-bmw-car-for-dc-team-1789099255</id>
            <summary type="text">டிசி திரைப்படம்அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி வெளியான திரைப்படம் டிசி. இதில் வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>டிசி திரைப்படம்</h2><p>அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி வெளியான திரைப்படம் டிசி. </p><p>இதில் வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நாயகிகளாக நடிக்க அனிருத் இசையமைத்திருந்தார். 
படத்தின் கதை, நடிகர்களை தாண்டி டிசி வெற்றிப் பெற முக்கிய பங்கு வகித்தது அனிருத்தின் இசை தான் என படம் பார்த்தவர்கள் கூறி வந்தனர்.
</p><p>ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் ரூ. 25 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருக்கிறது, போட்ட பணத்தை விட பல மடங்கு படம் வசூல் செய்துள்ளது. அதாவது உலகளவில் டிசி திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் மேலான வசூல் வேட்டை செய்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/636340d6-0534-4660-b3af-e4be4fe4a15d/26-6aa381851516d.webp' /></p><h2>
புதிய கார்</h2><p>
படம் பெரிய அளவில் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ள நிலையில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் டிசி பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு விலையுயர்ந்த காரை பரிசாக அளித்துள்ளார். </p><p>இதோ அந்த வீடியோ,&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Mr. Kalanithi Maran congratulated and presented the keys to brand-new BMW cars to Arun Matheswaran, Lokesh Kanagaraj and Anirudh, for the success of Blockbuster <a href="https://x.com/hashtag/DC?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#DC</a>! 💥<a href="https://x.com/Dir_Lokesh?ref_src=twsrc%5Etfw">@Dir_Lokesh</a> <a href="https://x.com/ArunMatheswaran?ref_src=twsrc%5Etfw">@ArunMatheswaran</a> <a href="https://x.com/anirudhofficial?ref_src=twsrc%5Etfw">@anirudhofficial</a> <a href="https://x.com/hashtag/DCMegaBlockbuster?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#DCMegaBlockbuster</a> <a href="https://t.co/QOgmCA6ZqI">pic.twitter.com/QOgmCA6ZqI</a></p>&mdash; Sun Pictures (@sunpictures) <a href="https://x.com/sunpictures/status/2098051171965620339?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-09-11T05:00:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்டாரியோ ஏரியின் பெயரை மாற்ற மறுப்பு!: பிரபல நிறுவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/mapquest-posts-billboard-in-chicago-1789099316"></link>
            <id>https://canadamirror.com/article/mapquest-posts-billboard-in-chicago-1789099316</id>
            <summary type="text">&#039;ஒன்டாரியோ ஏரி&#039; என்ற பெயரைத் தனது இணைய வரைபடத்தில் தொடர்ந்து வைத்திருக்கப்போவதாக &#039;மேப்க்வெஸ்ட்&#039; நிறுவனம் உறுதியளித்துள்ளது.
தனது முடிவை மீண்டும் வலிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>'ஒன்டாரியோ ஏரி' என்ற பெயரைத் தனது இணைய வரைபடத்தில் தொடர்ந்து வைத்திருக்கப்போவதாக 'மேப்க்வெஸ்ட்' நிறுவனம் உறுதியளித்துள்ளது.
</p><hr><p>தனது முடிவை மீண்டும் வலியுறுத்தும் வகையில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் 6 அடி உயரப் பிரம்மாண்ட விளம்பரப் பலகை ஒன்றை அந்நிறுவனம் நிறுவியுள்ளது.
</p><hr><p>சிகாகோவின் ஸ்டேட் மற்றும் ஹப்பார்ட் தெருக்களின் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த விளம்பரப் பலகையில், அங்கிருந்து ஒன்டாரியோ ஏரிக்குச் செல்வதற்கான வழிமுறைகளுடன், "இது இன்னமும் ஒன்டாரியோ ஏரிதான். நாங்களும் இன்னமும் இங்கேயே இருக்கிறோம்" என்ற பிரச்சார வாசகம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8a2864a-308a-471f-a03a-14ed2ce63db1/26-6aa37d3589a4a.webp' /></p><hr><p>
கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஒன்டாரியோ ஏரியின் பெயரை 'அமெரிக்கா ஏரி' என பெயர் மாற்றம் செய்வதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.</p><hr><p> 
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே மேப்க்வெஸ்ட் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.</p><p></p><p>இது குறித்துப் பேசிய பிரதமர் மார்க் கார்னி, ஒன்டாரியோ ஏரி என்பது அமெரிக்கச் சுதந்திரப் பிரகடனத்தை விடவும் மிகவும் பழைமையானது என்றும், "யதார்த்தத்தை அதன் பெயரால் அழைப்பது என்பது அதை ஒன்டாரியோ ஏரி என்று அழைப்பதே ஆகும்" என்றும் குறிப்பிட்டார்.</p><hr><p>
ஒன்டாரியோ ஏரியின் பெயரை மாற்ற மறுத்ததைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் மேப்க்வெஸ்ட் வரைபடச் செயலியின் பயன்பாடும் பிரபலமும் மீண்டும் பெருமளவில் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T05:00:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வக்ர நிலையில் உத்திரட்டாதிக்குள் நுழையும் சனி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் 2027 வரை ஏற்றம் தான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/saturn-transit-in-uthirattathi-who-get-huge-luck-1789100576"></link>
            <id>https://manithan.com/article/saturn-transit-in-uthirattathi-who-get-huge-luck-1789100576</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்களி்ன் நிலையில் ஏற்படும் மாற்றங்களானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க சாதக, பாதக மாற்றங்களை ஏற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்களி்ன் நிலையில் ஏற்படும் மாற்றங்களானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க சாதக, பாதக மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகின்றது.&nbsp;</p><p>குறிப்பாக நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரும் கிரகம் சனிபகவானின் பெயர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15fa5b1f-d98c-48b6-8997-783a74cfc3c8/26-6aa38ac37da08.webp' /></p><p> </p><p>ஜோதிடத்தில் ஒழுக்கம், கடின உழைப்பு, நீதி ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்படும் சனிபகவான் அக்டோபர் 9 அன்று வக்ர நிலையில் ‘உத்திரட்டாதி’ நட்சத்திரத்திற்குள் நுழைந்து, பிப்ரவரி 8, 2027 வரை அங்கேயே சஞ்சரிக்க உள்ளார். </p><p>சனிபகவானின் சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதியில் அவர் நுழைவது சில ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் நிதி ரீதியாக சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><p></p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12bc5e6f-8a82-4dd2-9cd6-c2969fb830ce/26-6aa38ac433fc4.webp' /></p><h2>
</h2><p>ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் தொழில் மற்றும் நிதி விஷயங்களில் சாதகமான மாற்றங்களைத் தரும். நீண்ட காலமாக தடைப்பட்ட பணிகள் வெற்றிகரமாக நிறைவடையும்.</p><p>வேலையில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள், பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.</p><p>முயற்சிகளில் வெற்றி கிடைப்பதுடன், வாழ்க்கையின் பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் ஏற்படும்.&nbsp; உடல்நலப் பிரச்சினைகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்ப்பும் கிடைக்கும்.
</p><h2>
துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/019ec1ee-a79d-4ddc-8490-01a80b16b214/26-6aa38ac4dc1d2.webp' /></p><h2>
</h2><p>துலாம் ராசிக்காரர்களுக்கு சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைவது நிதி ரீதியாகச் சாதகமாக இருக்கும். நீண்ட காலமாக இருந்த நிதிச் சிக்கல்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.</p><p> வருமானம் அதிகரிப்பதுடன், கடந்த கால முதலீடுகளிலிருந்தும் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.

வேலை மாற்றம் செய்ய விரும்புபவர்களுக்கு இது சாதகமான காலமாக இருக்கும்.</p><p> பணியாளர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கலாம்.மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சிகரமாக அமையும்.
</p><h2>
மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3958370-e9a0-48e0-b125-affeae765bef/26-6aa38ac5963f6.webp' /></p><h2>
</h2><p>மகர ராசியின் அதிபதியாக சனிபகவான் இருப்பதால், இந்த காலகட்டம் அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும். தொழிலில் ஸ்திரத்தன்மை அதிகரிப்பதுடன், பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வாய்ப்புகளும் கிடைக்கும்.</p><p> நிதிநிலை எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். நீண்ட கால முதலீடுகளுக்கு இது ஏற்ற நேரமாக அமையும்.

புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும்.</p><p> ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம்.
</p><h2>
கும்பம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a869779-ceb2-4a18-a624-164ac9cce675/26-6aa38ac649202.webp' /></p><p></p><p>
கும்ப ராசிக்காரர்களுக்கு சனிபகவான் நட்சத்திரம் மாறுவது தொழில் மற்றும் நிதி ரீதியாக முக்கியமான மாற்றங்களைத் தரும். தங்கள் துறையில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.&nbsp;</p><p>திடீர் பணவரவால் நிதிநிலை மேம்படும். கடின உழைப்புக்கு அங்கீகாரமும், முயற்சிகளுக்கு பாராட்டும் கிடைக்கும்.

திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். </p><p>துணையுடன் தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். கடந்த கால பணப்பிரச்சினைகளும் படிப்படியாக முடிவுக்கு வரம்.மொத்தத்தில் 2027 பெப்ரவரி வரையில் இந்த ராசிகளுக்கு பொற்காலமாக இருக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T05:00:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய் லண்டன் பயணம்: தமிழக அரசின் செய்திக்குறிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/chief-minister-vijays-london-trip-1789102367"></link>
            <id>https://ibctamilnadu.com/article/chief-minister-vijays-london-trip-1789102367</id>
            <summary type="text">தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பி்ன்னர் முதலமைச்சர் ஜோசப் விஜய் லண்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.இதுதொடர்பான தமிழக அரசின் செய்திக்குறிப்பு,“தமிழ்நாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பி்ன்னர் முதலமைச்சர் ஜோசப் விஜய் லண்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.</p><p>இதுதொடர்பான தமிழக அரசின் செய்திக்குறிப்பு,</p><p>“தமிழ்நாட்டை ஆசியாவிலேயே முதலீட்டுக்கு உகந்த முதன்மை மையமாக உருவாக்குவதை தமிழ்நாடு அரசு தனது முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.


முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 100 நாட்களுக்குள், வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026ன் வாயிலாக ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
</p><p>
பல்வேறு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் சுமார் 8,491 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களை முன்வைத்துள்ளதுடன், அவற்றின்மூலம் சுமார் 5,690 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1399a1b8-409d-499a-995d-40c593604ca5/26-6aa389ed297c2.webp' /><br></p><p>
</p><p>
இது, முதலீட்டுச் சந்தைகளில், தமிழ்நாட்டின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வமும், நம்பிக்கையும் அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுகிறது.
</p><p>
15.07.2026 அன்று நடைமுறைக்கு வந்த இந்தியா-பிரிட்டன் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம், இந்த முன்னெடுப்புகளுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. </p><p>

இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த முதல் நாளிலேயே, சென்னையிலிருந்து ஏற்றுமதிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதன் வாயிலாக, இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்திய முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ்கிறது.
</p><p>பல்வேறு உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் தமிழ்நாடு வலுவான தொழில்துறைத் திறன்களைக் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இத்துறைகளில் பல்வேறு புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
</p><p>


குறிப்பாக, ஜவுளி மற்றும் ஆடைகள், தோல் மற்றும் காலணிகள், வாகன உதிரிபாகங்கன், பொறியியல் பொருட்கள் மற்றும் மின்னணுவியல் ஆகிய துறைகள், , பிரிட்டன் சந்தையில் அதிகரித்துவரும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சிறப்பான நிலையில் உள்ளன. </p><p>

மேலும், கூட்டு நிறுவன பங்குதாரர்களைப் பெறுவதற்கும். தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் முதலீடுகளுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.... </p><p>

 
பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனங்கள் நீண்டகாலமாகவே தமிழ்நாட்டில் பொறியியல், நிதிச் சேவைகள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலைகளையும்.</p><p> உலகளாவிய திறன் மையங்களையும் நிறுவி செயல்பட்டு வருகின்றன.



இத்தகைய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதும், ஏற்கனவே உள்ள நிறுவனங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதும், , மேம்பட்ட உற்பத்தி, வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்கள், மின்னணுவியல் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் ஆகிய துறைகளில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதும் முதலமைச்சர் விஜய் தற்போது மேற்கொள்ளும் இங்கிலாந்து பயணத்தின் பயணத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
</p><p>
இதன்மூலம் தமிழ்நாட்டில் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்புகள் ஏற்படும். மேலும், தமிழ்நாட்டில் ஏற்கெனவே வலுவாக நிலைபெற்றுள்ள வாகன மற்றும் மின்சார வாகன உற்பத்திச் சூழலை அடிப்படையாகக் கொண்டு உலகத்தரம் வாய்ந்த ஒரு மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்' மாநிலத்தில் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவை விதி எண்.110 கீழ் அறிவித்துள்ளார்.
</p><p>
இந்த அறிவிப்பை முன்னெடுத்துச் செல்லும் வகையில், உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டு, அவற்றின் சிறந்த நடைமுறைகளை அறிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும்.
</p><p>
இதன் ஒரு பகுதியாக புகழ்பெற்ற 'சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்'-ஐ பார்வையிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
</p><p>


இதன்மூலம், அங்குள்ள சுற்றுப்பாதை வடிவமைப்பு, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் இத்தகைய வளாகங்களைச் சிறப்பாகவும் வணிக ரீதியாகவும் செயல்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் குறித்து விரிவாக அறிந்துகொள்வதுடன் மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு.</p><p> விளையாட்டுச் சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய சிறப்பு வாகனத் தொழில்கள் ஆகியவைகளில் உள்ள வாய்ப்புகளையும் அறிந்து கொள்ள இயலும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Wid-MtO9y74" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-11T04:56:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் குடிநீர் போத்தல் விற்றவருக்கு 750,000 ரூபாய் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-fine-of-750-000-rupees-imposed-water-bottle-1789102720"></link>
            <id>https://jvpnews.com/article/a-fine-of-750-000-rupees-imposed-water-bottle-1789102720</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அதிகபட்ச சில்லறை விலையை மீறி குடிநீர்ப் போத்தல்களைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்த மட்டக்களப்பு வாழைச்சேனை உணவகம் ஒன்றுக்கு 750,000 ரூபா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அதிகபட்ச சில்லறை விலையை மீறி குடிநீர்ப் போத்தல்களைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்த மட்டக்களப்பு வாழைச்சேனை உணவகம் ஒன்றுக்கு 750,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட உணவக உரிமையாளர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதிமன்றம் 750,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9737f30f-4a21-4db9-889c-0f5a47f56c70/26-6aa38a8157eda.webp' /></p><p>
</p><p>
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரிகளால் கடந்த ஜூன் 4ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே இந்த அத்துமீறல் கண்டறியப்பட்டது.
</p><p>
இதன்போது அதிகபட்ச சில்லறை விலை 100 ரூபாயாகக் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு லிட்டர் குடிநீர்ப் போத்தலை, உணவகத்தில் 130 ரூபாய்க்கு விற்பனை செய்தமை கண்டறியப்பட்டது.</p>]]></content>
            <updated>2026-09-11T04:55:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களைக் கவர்ந்த கனடிய பூனைகளின் நெகிழ்ச்சிக் கதை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/outdoor-loving-northern-ontario-cats-take-1789102216"></link>
            <id>https://canadamirror.com/article/outdoor-loving-northern-ontario-cats-take-1789102216</id>
            <summary type="text">கனடாவின் டெமிஸ்காமிங் பகுதியைச் சேர்ந்த ஹெய்டி கோர்டே என்பவரால் வளர்க்கப்படும் &#039;பிளாடி&#039; மற்றும் &#039;ஃபிட்ஸ்&#039; ஆகிய இரு பூனைகளும், வீடுகளுக்குள் அடைந்துகிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் டெமிஸ்காமிங் பகுதியைச் சேர்ந்த ஹெய்டி கோர்டே என்பவரால் வளர்க்கப்படும் 'பிளாடி' மற்றும் 'ஃபிட்ஸ்' ஆகிய இரு பூனைகளும், வீடுகளுக்குள் அடைந்துகிடைக்கும் வழக்கமான வாழ்க்கையைத் துறந்து, காயாக்கிங் படகுச் சாகசம், மலைப் பாதைகளில் நடைப்பயணம் என வெளிக்களச் சாகசங்களில் ஈடுபட்டு 10 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்களின் இதயங்களை வென்றுள்ளன.
</p><p>சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பாடகியாக வேண்டும் என்ற தனது கனவை ஒத்திவைத்துவிட்டு, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தந்தையைக் கவனித்துக் கொள்வதற்காக ஹெய்டி தனது சொந்த ஊருக்குத் திரும்பினார்.</p><p> 
அப்போது ஒரு துணையாக இருக்க வேண்டும் என்பதற்காக, உள்ளூர் விலங்குகள் காப்பகத்திலிருந்து 'ஃபிட்ஸ்' என்ற 8 வாரக் குட்டிப் பூனையைத் தத்தெடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0cca6c6-6562-4f6d-8cb1-eb5926a0703a/26-6aa38889d499c.webp' /></p><p>
தந்தையின் நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும்போது, குளிர்காற்றில் பூனையின் காதுகள் உறைந்துவிடக் கூடாது என்பதற்காக ஃபிட்ஸைச் சிறிய பையினுள் வைத்து எடுத்துச் சென்றார். 3 மாதங்களுக்குள், அந்தப் பூனை நாயுடன் தானாகவே பக்கவாட்டில் நடக்கத் தொடங்கியது.
</p><p>இதன்பின்னர், யாராலும் தத்தெடுக்க முடியாது என ஒதுக்கப்பட்ட 'பிளாடி' என்ற மற்றொரு மீட்புப் பூனையையும் ஹெய்டி தத்தெடுத்தார்.</p><p> 
வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு மீட்புக் காப்பகத்திற்குக் கொண்டுவரப்பட்ட பிளாடி, அங்கிருந்த ஊழியர்களைத் தாக்கும் அளவுக்குக் கடுமையான கோபமும் முரட்டுத்தனமும் கொண்டிருந்தது. </p><p>
ஆனால், சரியான பராமரிப்பும் அன்பும் கிடைத்தால் அது மாறும் என்ற நம்பிக்கையில் ஹெய்டி அதைத் தனது பராமரிப்பில் ஏற்றுக்கொண்டார்.
</p><p>தற்போது இந்த இரு பூனைகளுக்கும் பிரத்யேக மழைக் கோட்டுகள் மற்றும் இத்தாலிய வடிவமைப்பாளர் ஒருவரால் உருவாக்கப்பட்ட உலகின் முதல் "பூனைகளுக்கான பனி உடை" ஆகியவை உள்ளன.
</p><p>இவற்றின் சாகச வீடியோக்கள் உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும் அளித்து வருகின்றன. </p><p>கடந்த மே மாதம் ஹெய்டியின் தாயாருக்குத் தோள்பட்டை முறிவு ஏற்பட்டபோது, உலகெங்கிலும் உள்ள முன்பின் தெரியாத ரசிகர்கள் கையால் பின்னப்பட்ட கையுறைகள், சாக்லேட்டுகள் மற்றும் வாழ்த்து அட்டைகளை அனுப்பி ஆதரவு தெரிவித்தனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T04:51:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[H-1B விசாவுக்கான 60 நாள் சலுகைக் காலத்தை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/to-end-60-day-grace-period-1789102380"></link>
            <id>https://news.lankasri.com/article/to-end-60-day-grace-period-1789102380</id>
            <summary type="text">To End 60-Day Grace Period For H-1B: H-1B விசாவுக்கான 60 நாள் சலுகைக் காலத்தை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா திட்டம்.
H-1B விசா பெற்ற திறன்மிக்க பணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>To End 60-Day Grace Period For H-1B: H-1B விசாவுக்கான 60 நாள் சலுகைக் காலத்தை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா திட்டம்.
</p><p>H-1B விசா பெற்ற திறன்மிக்க பணியாளர்கள் உட்பட குறிப்பிட்ட சில குடியேறிகள், வேலையை இழந்த பிறகு அமெரிக்காவில் தங்கி புதிய ஸ்பான்சரைத் (sponsor) தேடிக்கொள்ள அனுமதிக்கும் 60 நாள் கால அவகாசத்தை ரத்து செய்ய ட்ரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ளது.</p><h2>நாட்டை விட்டு வெளியேற</h2><p>
</p><p>குறித்த நகர்வு தொடர்பில் வியாழக்கிழமையன்று ட்ரம்ப் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/908c751e-abff-48f5-9aeb-3b3f2e084a54/26-6aa3892e4316e.webp' /></p><p> </p><p>அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையால் 'ஃபெடரல் ரெஜிஸ்டர்' (Federal Register) இதழில் வெளியிடப்பட்ட விதிமுறை மாற்றத் திட்டத்தின்படி, H-1B மற்றும் பிற குறிப்பிட்ட தற்காலிகப் பணி விசாக்களைக் கொண்டவர்கள் தங்கள் வேலை முடிந்த உடனேயே நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்; வெளிநாட்டு ஊழியர்களைப் பெருமளவில் சார்ந்திருக்கும் முன்னணி அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இது ஒரு பெரும் பின்னடைவாக அமையக்கூடும். </p><p>ஜனவரி 2025-இல் மீண்டும் பதவியேற்ற பிறகு, சட்டப்பூர்வமான குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்துள்ள மிகச் சமீபத்திய நடவடிக்கை இதுவாகும். </p><p>ட்ரம்ப் நிர்வாகம், திறமையான தொழிலாளர்களுக்கான விசா கட்டணங்களை உயர்த்தியுள்ளதுடன், ஒரு புதிய பயிற்சித் திட்டத்தைச் செயல்படுத்தும் பொருட்டு, சமீபத்தில் உலகெங்கிலும் உள்ள அமெரிக்கத் தூதரகங்களில் குடியேற்ற விசா சந்திப்புகளையும் இடைநிறுத்தியுள்ளது.</p><p></p><p> இந்த மாற்றத்தால் பாதிக்கப்படும் நிறுவனங்கள் சில இடையூறுகளைச் சந்திக்க நேரிடலாம் என்று தனது முன்மொழிவில் குறிப்பிட்டுள்ள உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS), அதேவேளையில் அந்த வேலைவாய்ப்புகள் அமெரிக்கத் தொழிலாளர்களுக்குச் செல்லக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. </p><p>சில சூழ்நிலைகளில், வெளியேறும் குடியேறிய தொழிலாளர்கள் தங்கள் ஸ்பான்சர் அவர்களுக்காக விண்ணப்பித்தால், மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது என்றும் அது மேலும் தெரிவித்தது. </p><p>2017-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள 60 நாள் அவகாசக் காலமானது, வெளிநாட்டு ஊழியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் முன், அமெரிக்காவில் வேறொரு வேலையைத் தேடிக்கொள்ளவோ ​​அல்லது தங்கள் விவகாரங்களைச் சரிசெய்துகொள்ளவோ ​​(வீட்டை விற்பது அல்லது குழந்தைகளைப் பள்ளியிலிருந்து மாற்றுவது போன்றவை) வாய்ப்பளிக்கிறது.</p><h2>தொழில்முறைப் பணியாளர்கள்</h2><p> 1990-இல் அமெரிக்க நாடாளுமன்றத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட H-1B விசாக்கள், இந்தியா மற்றும் சீனாவிலிருந்து திறமையாளர்களை ஈர்க்க விரும்பும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மிகவும் முக்கியமானவை; தகுதியுள்ள அமெரிக்கப் பணியாளர்கள் சில சமயங்களில் கிடைக்காத நிலையில், அந்தப் பணிகளை நிரப்ப இவை உதவுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15044c88-027f-4298-8c2f-0c48c900b3c1/26-6aa3892eebc64.webp' /></p><p> </p><p>இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டால், E-1 சர்வதேச வர்த்தக விசா வைத்திருப்பவர்கள்; E-2 வணிக வாகன சாரதி விசா வைத்திருப்பவர்கள்; சர்வதேச நிறுவனங்களில் பணிபுரியும் நிர்வாகிகள் அல்லது மேலாளர்களுக்கான L-1 குறுகிய காலப் பணி விசா; அறிவியல், விளையாட்டு அல்லது கலைத் துறைகளில் திறன் கொண்டவர்களுக்கான O-1 விசா; மற்றும் TN தொழில்முறைப் பணியாளர்கள் ஆகியோருக்கும் இது பொருந்தும். </p><p>இது சிங்கப்பூர் மற்றும் சிலியைச் சேர்ந்த H-1B1 திறன்மிக்க பணியாளர் விசா வைத்திருப்பவர்கள் மற்றும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த E-3 சிறப்புப் பணி விசா வைத்திருப்பவர்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T04:49:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ. 100 கோடி வசூலை தாண்டிய DC படக்குழுவினருக்கு சன் பிக்சர்ஸ் கொடுத்த பிரம்மாண்ட பரிசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/kalanithi-maran-bmw-car-gift-to-dc-team-1789102129"></link>
            <id>https://viduppu.com/article/kalanithi-maran-bmw-car-gift-to-dc-team-1789102129</id>
            <summary type="text">அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் அனிருத் இசையில் வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் டிசி. இப்படம் முழுவதும் ஆக்‌ஷன் காட்சிகள் பொறி பறக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் அனிருத் இசையில் வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் டிசி. இப்படம் முழுவதும் ஆக்‌ஷன் காட்சிகள் பொறி பறக்கும், அதே வேளையில் அனிருத் இசையில் படம் முழுவதும் பட்டாசாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a679d79d-710d-4a10-8b03-ab6eb707f57b/26-6aa388355327e.webp' /></p><p> 

அதன் காரணமாகவே இளைஞர்கள், முக்கியமாக ஜென் சி கூட்டம் இந்த படத்தை தலையில் தூக்கி கொண்டாட, உலகம் முழுவதும் இப்படம் ரூ. 100 கோடி வசூலை கடந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75e4fb88-23ec-4950-b79d-748b7683abfa/26-6aa388349ea6c.webp' /></p><p>அதில் குறிப்பாக கேரளா மற்றும் தெலுங்கில் இந்த படம் ரூ. 20 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இத்தகைய பிரம்மாண்ட வெற்றியை கொடுத்த அருண் மாதேஸ்வரன், அனிருத், லோகேஷ் கனகராஜுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்ட BMW கார்களை பரிசாக வழங்கியுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d49bf35d-756c-4c4c-87c2-7f09083b5f16/26-6aa38833e7b84.webp' /></p><p>கண்டிப்பாக இதனால் இதே டீம் வேறு ஒரு படத்திலும் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DdHBOGeAmoe/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DdHBOGeAmoe/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DdHBOGeAmoe/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Sun Pictures (@sunpictures)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-11T04:49:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் இராணுவத்தின் பயன்பாட்டிலிருந்த காணி விடுவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/army-liberates-land-in-mullaitivu-1789101887"></link>
            <id>https://tamilwin.com/article/army-liberates-land-in-mullaitivu-1789101887</id>
            <summary type="text">முல்லைத்தீவு மாவட்டத்தின் வற்றாப்பளை சந்திப் பகுதியில் இலங்கை
இராணுவத்தின் பயன்பாட்டிலிருந்த 41.8 பேர்ச் அரச மற்றும் தனியார் காணி,
பொதுமக்களின் தேவை...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்டத்தின் வற்றாப்பளை சந்திப் பகுதியில் இலங்கை
இராணுவத்தின் பயன்பாட்டிலிருந்த 41.8 பேர்ச் அரச மற்றும் தனியார் காணி,
பொதுமக்களின் தேவைகளுக்காக விடுவிக்கப்பட்டுள்ளது.</p><p>

59 ஆவது படைப்பிரிவினரால் விடுவிக்கப்பட்ட குறித்த காணி, முல்லைத்தீவு மாவட்ட
அரசாங்க அதிபர் முன்னிலையில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரிடம்
உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.</p><h2>&nbsp;தனியார் காணியின் உரிமை தொடர்பான உறுதிப்படுத்தல் </h2><p>
</p><p>
மேலும் இராணுவப் பயன்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள தனியார் காணியின்
உரிமை தொடர்பான உறுதிப்படுத்தல் நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், குறித்த
காணி அதன் சட்டபூர்வ உரிமையாளரிடம் முறையாகக் கையளிக்கப்படும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41fab59b-7b67-4ce9-981d-fcb010e0270b/26-6aa3882bf1358.webp' /></p><p>

இக்காணி விடுவிப்பு நடவடிக்கையானது, பொதுமக்களின் காணி உரிமைகளை
உறுதிப்படுத்துவதற்கும், மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேலும்
வலுப்படுத்துவதற்குமான முக்கிய முன்னேற்றமாக அமைந்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T04:48:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் ஒரு பாரிய விபத்து: சுற்றுலா பேருந்து கவிழ்ந்து பலர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/switzerland-tourist-bus-crash-deaths-1789101529"></link>
            <id>https://news.lankasri.com/article/switzerland-tourist-bus-crash-deaths-1789101529</id>
            <summary type="text">Tourist bus overturns in Swiss Alps with multiple dead and injured: சுவிட்சர்லாந்தில் சுற்றுலா பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலர் பலிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Tourist bus overturns in Swiss Alps with multiple dead and injured: சுவிட்சர்லாந்தில் சுற்றுலா பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலர் பலியாகியுள்ளார்கள், பலர் காயமடைந்துள்ளார்கள்.
</p><p>

திங்கட்கிழமையன்று, நெதர்லாந்து நாட்டிலிருந்து 48 சுற்றுலாப்பயணிகளுடன் பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது.
</p><p>
சுற்றுலா பேருந்து கவிழ்ந்து பலர் பலி

ஆஸ்திரியா நாட்டை அடைந்து, அங்கிருந்து சுவிட்சர்லாந்தை அடைந்து பயணித்துக்கொண்டிருந்தபோது, இரவு 8.10 மணியளவில் அந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/558ff96b-9654-44b4-a5be-85ea5b5e2a3c/26-6aa386bd26f39.webp' /><br></p><p>
</p><p>
சுவிட்சர்லாந்தின் Graubuenden மாகாணத்திலுள்ள Susch மற்றும் Zernez கிராமங்களுக்கு இடையில் பயணித்துக்கொண்டிருந்தபோது அந்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><p>
இந்த துயர விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். </p><p>என்றாலும், பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை உறுதியாகத் தெரியவில்லை.
</p><p>
எதனால் இந்த விபத்து நிகழ்ந்தது என்பது உறுதியாகத் தெரியாத நிலையில், சாலையோரமாக இருந்த தடுப்பில் மோதி பேருந்து கவிழ்ந்ததாக பொலிசார் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13be4932-9e5c-49b3-865c-101ece65b1c9/26-6aa386bdcd721.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-11T04:43:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய ஒப்பந்தங்களை இரகசியமாக மேற்கொள்ளவே கூடாது : சரத் வீரசேகர விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sarath-weerasekera-s-concern-the-government-1789101556"></link>
            <id>https://tamilwin.com/article/sarath-weerasekera-s-concern-the-government-1789101556</id>
            <summary type="text">இலங்கையின் இறையாண்மை, சுயாதீனம், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய
பாதுகாப்புடன் தொடர்புடைய எந்தவொரு ஒப்பந்தத்தையும் இரகசியமாக மேற்கொள்ளாது,
அதன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் இறையாண்மை, சுயாதீனம், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய
பாதுகாப்புடன் தொடர்புடைய எந்தவொரு ஒப்பந்தத்தையும் இரகசியமாக மேற்கொள்ளாது,
அதன் முழுமையான விவரங்களை நாடாளுமன்றத்துக்கும் நாட்டு மக்களுக்கும்
வெளிப்படுத்த வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும்
முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இந்தியப் பாதுகாப்பு அமைச்சரின் 38 வருடங்களுக்குப் பின்னரான இலங்கை விஜயம்
தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டுள்ளார்.</p><h2>ஜனாதிபதியுடனான சந்திப்பில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம்&nbsp;</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>

"38 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு வந்துள்ள
நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடனான சந்திப்பில் மாணவர் பரிமாற்றம்
மற்றும் பாதுகாப்புத் கல்வி நிறுவனங்கள் தொடர்பில் ஒப்பந்தங்கள்
கைச்சாத்திடப்பட்டுள்ளன.</p><p> எனினும், கடந்த 2025 ஏப்ரல் 5ஆம் திகதி இந்தியாவுடன்
கைச்சாத்திடப்பட்ட பாதுகாப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில்
சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும் இதுவரை
சமர்ப்பிக்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/530e2161-8b23-4482-8367-70cc63194a0a/26-6aa385f5f10c0.webp' /></p><p>
</p><p>
இது குறித்து வினவியபோது, இந்தியாவின் அனுமதியின்றி அதனை வெளிப்படுத்த
முடியாது என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளமை கண்டிக்கத்தக்கது.
</p><p>இலங்கை மக்களுக்கு ஒப்பந்தங்களை வெளிப்படுத்த வெளிநாட்டின் அனுமதி ஏன்
தேவைப்படுகின்றது?

இந்தியா நட்பு நாடாக இருப்பினும், இலங்கையின் அரசமைப்பு விடயத்தில் 13ஆவது
அரசமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தவும் வடக்குக்கு அதிகாரங்களைப்
பகிரவும் வெளிநாட்டு அரசு அழுத்தம் கொடுப்பது நாட்டின்
இறையாண்மைக்குப்பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.</p><p>

கொழும்பு துறைமுகக் கப்பல் தளத்தின் 51 சதவீத பங்குகள் இந்திய அரசுக்குச்
சொந்தமான நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில்,
காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமான நிலையம், டிஜிட்டல் அடையாள அட்டை
மற்றும் இந்தியா - இலங்கை பாலம் தொடர்பான விடயங்கள் தேசிய பாதுகாப்பின்
அடிப்படையில் கவனமாக ஆராயப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3a1d477-ab09-41ab-b338-58d1d9fbcdcf/26-6aa385f6a5291.webp' /></p><p>
</p><p>
வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர்கள் தொடர்ந்தும்
எதிர்கொள்ளும் வாழ்வாதார மற்றும் எல்லைப் பிரச்சினைகளும் இந்தியப் பாதுகாப்பு
அமைச்சருடனான சந்திப்பின்போது உரிய முறையில் கலந்துரையாடப்பட்டிருக்க வேண்டும்.</p><p>

நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்புக்குத் தாக்கத்தை
ஏற்படுத்தக்கூடிய அனைத்து உடன்படிக்கைகளையும் வெளிப்படைத்தன்மையுடன்
நாடாளுமன்றத்துக்கும் மக்களுக்கும் வெளிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T04:39:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாரத்துக்கு ஒரு தற்காலிக பரபரப்பு கைது - அநுர அரசாங்கம் மீது பகிரங்க குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-arrest-per-week-against-anura-government-1789099870"></link>
            <id>https://tamilwin.com/article/one-arrest-per-week-against-anura-government-1789099870</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி அரசு தனது பொருளாதார மற்றும் நிர்வாகத் தோல்விகளை
மறைப்பதற்காக, வாரத்துக்கு ஓர் எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்து மக்கள்
மத்தியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசு தனது பொருளாதார மற்றும் நிர்வாகத் தோல்விகளை
மறைப்பதற்காக, வாரத்துக்கு ஓர் எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்து மக்கள்
மத்தியில் தற்காலிக பரபரப்பை உருவாக்கும் மலிவான கண்காட்சியாக இதனை நடத்தி
வருகின்றது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில்
தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,</p><h2>எதிர்க்கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து கைது&nbsp;</h2><p>
</p><p>
"அரசு தனது அரசியல் தோல்விகளையும் நிர்வாகக் குறைபாடுகளையும் மறைக்கவே
எதிர்க்கட்சித் தலைவர்களை அடுத்தடுத்து கைது செய்து அரசியல் நாடகங்களை
அரங்கேற்றி வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87247526-264c-425e-b652-b293c2e0125b/26-6aa385af00723.webp' /></p><p> குறிப்பாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்
ராஜபக்சவின் கைது நடவடிக்கையும் தற்காலிகப் பரபரப்பை ஏற்படுத்துவதற்காக
மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>இன்னும் ஓரிரு வாரங்களில் அவர்
விடுவிக்கப்படுவார்.

தங்களது ஆதரவாளர்களுக்கு ஏதோ சாதனை செய்துவிட்டதாகக் காட்டுவதற்காகவே வாரம்
ஓர் எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்து பின்னர் விடுவிக்கும் உத்தியை அரசு
கையாள்கின்றது.
</p><p>
தேர்தல் காலத்தில் மக்களுக்குப் பல போலி வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு
வந்தவர்கள், தற்போது தங்களின் கறைபடிந்த பிம்பத்தை மறைக்க மீண்டும் பழைய
தந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர்.</p><h2>மாகாண சபை தேர்தலை ஒத்திவைப்பு</h2><p> </p><p>மக்கள் தற்போது தெளிவடைந்துவிட்டதால்
இதுபோன்ற போலி நாடகங்களை நம்பமாட்டார்கள்.

அரசுக்கு மக்கள் மத்தியில் உண்மையான செல்வாக்கு இருக்குமானால், நீதிமன்ற
வழக்குகளைக் காரணம் காட்டி மாகாண சபை தேர்தலை ஒத்திவைக்காமல், தைரியமாகத்
தேர்தலைச் சந்தித்து மக்கள் தீர்ப்பைப் பெற வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d39abe25-f5cc-4148-a7e8-d65a00423e2a/26-6aa385afa941d.webp' />&nbsp;</p><p>
</p><p>
ராஜபக்சர்களின் ஊழல்களுக்கு எதிராகவும், நாட்டின் பொருளாதாரத்தைச்
சீரழித்தவர்களுக்கு எதிராகவும் தொடர்ச்சியாகச் சட்டப் போராட்டங்களை
முன்னெடுத்தது தங்களது தரப்பு தான். </p><p>தவறு செய்தவர்கள் நீதிமன்றத்தின் மூலம்
முறையாகத் தண்டிக்கப்பட வேண்டுமே தவிர, அதை ஒரு மலிவான ஊடகக் காட்சியாக
மாற்றுவது சட்டத்தையும் நீதியையும் கேலிக்கூத்தாக்கும் செயாலாகும் என்றார்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T04:38:19+00:00</updated>
        </entry>
    </feed>
