<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-30T02:25:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹரக்கட்டா வாய்திறந்தால் இலங்கை அரசியல் வரலாறே தலைகீழாக மாறும்!முன்னாள் அமைச்சர் பெற்றுக் கொண்ட 5 கோடி...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nandun-chinthaka-also-known-as-harak-kata-crime-1788056112"></link>
            <id>https://tamilwin.com/article/nandun-chinthaka-also-known-as-harak-kata-crime-1788056112</id>
            <summary type="text">&amp;nbsp;பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான நதுன் சிந்தக என்றழைக்கப்படும் ஹரக் கட்டாவிடமிருந்து முன்னாள் அமைச்சரின் செயலாளர் 5 கோடி பெறப்பட்டுள்ளதாக குற்றப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான நதுன் சிந்தக என்றழைக்கப்படும் ஹரக் கட்டாவிடமிருந்து முன்னாள் அமைச்சரின் செயலாளர் 5 கோடி பெறப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் துறையினர் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>இந்த விவகாரம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இப்போது அது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதால் முன்னாள் அமைச்சரோ அல்லது அவரது செயலாளரோ கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
</p><p>டுபாயிலிருந்து கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டுவரப்பட்ட மிதிகம ருவன் அளித்த வாக்குமூலத்திலேயே இது வெளிவந்துள்ளது. மிதிகம ருவன் ஹரக் கட்டாவின் நெருங்கிய நண்பராவார்.
</p><p></p><h2>பணம் கைமாறப்பட்ட விதம்</h2><p>
"அமைச்சரிடம் சொல்லி இந்த வேலையை முடித்துக் கொள்ளலாம், அவர் ஜனாதிபதியிடம் பேசி நடவடிக்கை எடுப்பார்" எனக் கூறி இந்தப் பணம் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>ஆனால், பணம் பெற்றபோது அந்த நபர் அமைச்சராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவோ இருக்கவில்லை. ஜனாதிபதியுடன் தனக்குள்ள நெருங்கிய தொடர்பைப் பயன்படுத்தி இந்த வேலையைச் செய்வதாகக் கூறியுள்ளார்.
</p><p>எனினும், இது முன்னாள் அமைச்சருக்குத் தெரிந்தே நடந்ததா அல்லது அவருக்குத் தெரியாமல் நடந்ததா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகளின் வேகம் இன்னும் போதியளவில் இல்லை என்ற கேள்வி எழுகிறது.</p><p>மிதிகம ருவன் மற்றும் ஹரக் கட்டாவின் மனைவி ஆகியோருக்கு "பணம் கேட்கிறார்கள், பணத்தைக் கொடுங்கள்" என்று கூறியவர் ஹரக் கட்டா தான்.</p><p> குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் இருந்தபோது, அங்கிருந்த தொலைபேசியைப் பயன்படுத்த ஒரு அழைப்பிற்கு 5 லட்சம் ரூபாய் வீதம் இலஞ்சம் கொடுக்கப்பட்டதாகப் முறைப்பாடுகளும் உள்ளன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a0a7ab5-1e91-4a39-bfc0-d9c2ebdf9289/26-6a9392327fb09.webp' /></p><p>எனவே, இந்த வழக்கில் நதுன் சிந்தகவே முக்கிய சாட்சியாவார்.
ஆனால்,இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இதுவரை நதுன் சிந்தகவிடம் வாக்குமூலம் எதுவும் பெறவில்லை. </p><p>விசாரணை சரியாக நடப்பதாக இருந்தால் அவரது வாக்குமூலம் கட்டாயம் பெறப்பட வேண்டும். தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பணத்தைக் கொடுக்குமாறு அவரே கோரியுள்ளார். </p><p>எனவே, ஹரக் கட்டாவிடமிருந்து பெறப்படும் வாக்குமூலம் இலங்கை வரலாற்றையே மாற்றியமைக்கக்கூடிய ஒன்றாக இருக்கும். பின்னணியில் நடந்த உண்மைகள், இதில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள், தொலைபேசி அழைப்புகள் என அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T02:17:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பட்டப்பகலில் பட்டமளிப்பு விழாவுக்கு சென்ற யுவதியை கடத்திய காதலன்! பொலிஸார் துப்பாக்கிச்சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/university-students-kidnapped-the-colombo-1788054603"></link>
            <id>https://tamilwin.com/article/university-students-kidnapped-the-colombo-1788054603</id>
            <summary type="text">கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்ற 26 வயதான யுவதியொருவரை அவரது காதலன...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்ற 26 வயதான யுவதியொருவரை அவரது காதலன் கடத்திச்சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.</p><p>இதன்போது யுவதியை கடத்திச்சென்ற காதலனின் காரை நாரஹேன்பிட்டி பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி நிறுத்தியுள்ளனர்.</p><p>இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அந்த இளம் யுவதியை கடத்த முயன்றவர், அப்பெண்ணின் காதலரே என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>பொலிஸ் அவசர அழைப்பு</h2><p>இன்று சனிக்கிழமை (29) பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் யுவதி ஒருவர் காரில் கடத்திச் செல்லப்படுவதாக பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38a6f085-9f02-4328-8995-52d3484801be/26-6a9391783fcd0.webp' /></p><p> இந்த தகவலின் அடிப்படையில் நாரஹேன்பிட்டி பொலிஸார் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.</p><p>நாரஹேன்பிட்டியிலிருந்து நாவல நோக்கிப் பயணித்த காரை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்ட போதிலும், சாரதி அதனை நிறுத்தாமல் தொடர்ந்து செலுத்திச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>எனினும், உத்தரவையும் மீறி கார் தொடர்ந்து சென்றதால், பொலிஸார் காரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி அதனை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

&nbsp;&nbsp;</p><p>இதன்போது காரை செலுத்திய நபர் வாகனத்தை கைவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்ற நிழலயில், பொலிஸார் மேற்கொண்ட சோதனையில், காருக்குள் 26 வயதான யுவதி ஒருவர் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><h2>கடத்தப்பட்டமைக்கான காரணம்</h2><p>அதன்படி முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போது, குறித்த யுவதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் வைத்து கடத்தப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29b89631-0285-42e8-83be-f6c5e15df985/26-6a939178e5051.webp' /></p><p>அவர்கள் இருவரும் காதலர்கள் என்றும், மாத்தறையில் உள்ள வெலிகம மற்றும் மிடிகம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் கூறுகின்றனர்.</p><p>கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி பீடத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக யுவதி தனது குடும்பத்தினருடன் மாநாட்டு மண்டபத்திற்கு வந்திருந்தபோதே சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>யுவதி தனது காதலனுக்குத் தெரிவிக்காமல் பட்டமளிப்பு விழாவிற்கு வந்திருந்த நிலையில், அவர் கடத்தப்படுவதாக யுவதியின் தந்தை பொலிஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.</p><p>யுவதியை கடத்த பயன்படுத்தப்பட்ட கார் கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட யுவதி கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.</p><p>


குறித்த கார் கடத்தலை மேற்கொண்டதாக கூறப்படும் இளைஞருக்கு சொந்தமானது எனவும், அந்த காரை யுவதியின் தந்தையே பட்டமளிப்பு விழாவுக்கு ஓட்டிச்சென்றதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>மேலும், தப்பிச்சென்ற சந்தேகநபர் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர் எனவும், தப்பிச்சென்ற சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T02:12:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1788055258"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1788055258</id>
            <summary type="text">சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (30-0...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (30-08-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனடிப்படையில் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.







</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று இன்று மதியம் சுமார் 12.11 மணியளவில் மன்னார் , பெரியமடு, புளியங்குளம், வெலிஓய மற்றும் புல்மோட்டை போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f14c80e4-1f78-4f4a-8416-8d7a887bee25/26-6a938edbc81ab.webp' />&nbsp;&nbsp;</p><p>கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் பொலனறுவை, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் காரணமாக அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும்.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T02:02:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் இளைஞனின் உயிரை காவு வாங்கிய மோட்டார் சைக்கிள் விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trinco-bike-accident-1788049007"></link>
            <id>https://ibctamil.com/article/trinco-bike-accident-1788049007</id>
            <summary type="text">திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்&amp;nbsp;இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.சீமெந்து குழைக்கும்
கன...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்&nbsp;இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>சீமெந்து குழைக்கும்
கனரக வாகனத்துடன், குறித்த இளைஞன் பயணித்த&nbsp;மோட்டார் சைக்கிளில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p>குறித்த சம்பவம் நேற்று (29.08.2026) மாலை இடம் பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த இளைஞன் (24)&nbsp;தம்பலாகாமம், பட்டிமேடு பகுதியை சேர்ந்தவர்
எனவும் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரிபவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>குறித்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிள் மூலம்
திருகோணமலை நோக்கி சென்ற இளைஞனே இவ்வாறு கனரக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி
விபத்துக்குள்ளக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92046001-75d9-4ba3-80e6-5594a878f809/26-6a93767204cd8.webp' /></p><p>
</p><p>இந்த விபத்து சம்பவம் திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் தம்பலகாம
பிரதேசத்துக்குட்பட்ட ஜெயபுர என்னும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.</p><p>
உயிரிழந்தவரின் சடலம் தற்போது கந்தளாய் வைத்தியசாலையின் பிரேத அறையில்
வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T01:55:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! இளைஞர் பரிதாபமாக பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-tragically-dies-motorcycle-on-collision-1788050913"></link>
            <id>https://tamilwin.com/article/youth-tragically-dies-motorcycle-on-collision-1788050913</id>
            <summary type="text">திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து
குழைக்கும் கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் அதில்
பயணித...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து
குழைக்கும் கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் அதில்
பயணித்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் தம்பலகாமம், பட்டிமேடு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய
இளைஞர் ஆவார்.</p><h2>பொலிஸ் விசாரணை&nbsp;&nbsp;</h2><p> </p><p>இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவர் என்பது
குறிப்பிடத்தக்கது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d17fd2c-fb70-4275-aaf2-e21f327395db/26-6a937eacc4739.webp' /></p><p>
தம்பலகாமம் பிரதேசத்துக்குட்பட்ட ஜெயபுரம் என்னுமிடத்தில் அமைந்துள்ள
திருகோணமலை - கண்டி பிரதான வீதியிலேயே இந்தக் கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
</p><p>
மேற்படி இளைஞர் மோட்டார் சைக்கிளில் திருகோணமலை நோக்கிச்
சென்றுகொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
</p><p>
விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலையின் பிரேத அறையில்
வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தம்பலகாமம் பொலிஸார்
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T01:45:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாமரை மலரை பறிக்கச் சென்ற தந்தை முதலைத் தாக்குதலில் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/father-dies-in-crocodile-attack-1788052834"></link>
            <id>https://ibctamil.com/article/father-dies-in-crocodile-attack-1788052834</id>
            <summary type="text">கொழும்பு, பெல்லன்வில வாவியில் தாமரை மலர்களைப் பறிப்பதற்காகச் சென்ற நபர் ஒருவர், முதலைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, பெல்லன்வில வாவியில் தாமரை மலர்களைப் பறிப்பதற்காகச் சென்ற நபர் ஒருவர், முதலைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p>இது குறித்து தெரியவருகையில்,&nbsp; கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் இருந்து மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முதலை தாக்கியதற்கான காயங்கள்</h2><p>தாமரை மலர் பறிப்பதற்காக கடந்த வியாழக்கிழமை பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக்
கால்வாயில் இறங்கியபோதே ஹொரணை, கணன்வில பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய இரண்டு
பிள்ளைகளின் தந்தை முதலைத் தாக்குதலுக்கு இலக்காகிக் காணாமல்போயிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96f1f20e-ed2a-482e-a920-97ca0d90cc88/26-6a9385647678a.webp' /></p><p>
</p><p>
பிரதேச மக்கள் அளித்த தகவலின் பேரில் அன்று தேடுதல் நடத்தப்பட்ட போதிலும்
தகவல்கள் கிடைக்காத நிலையில், நேற்று பிற்பகல் அவர் காணாமல்போன இடத்திலிருந்து
சுமார் 100 மீற்றர் தொலைவில் உள்ள கால்வாயில் சடலம் மிதப்பதாகக் கிடைத்த தகவலை
அடுத்துப் காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர்.</p><p>

மீட்கப்பட்ட சடலத்தின் தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் முதலை தாக்கியதற்கான
காயங்கள் காணப்படுவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>
நுகேகொடை குற்றவியல் ஆய்வக அதிகாரிகள் சம்பவ இடத்தில் சோதனைகளை
மேற்கொண்டதுடன், பொரலஸ்கமுவ பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T01:20:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனில் ரஷ்யாவின் பயங்கர தாக்குதல் ; ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியதில் 37 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/37-killed-in-arms-depot-explosion-1788038528"></link>
            <id>https://canadamirror.com/article/37-killed-in-arms-depot-explosion-1788038528</id>
            <summary type="text">உக்ரைன் தலைநகர் கீவ் அருகே அமைந்துள்ள ஆயுதக் கிடங்கு ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தில் குறைந்தது 37 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் தலைநகர் கீவ் அருகே அமைந்துள்ள ஆயுதக் கிடங்கு ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தில் குறைந்தது 37 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கீவ்வின் மேற்குப் புறநகர்ப் பகுதியான மைலா பகுதியில் அமைந்துள்ள குறித்த ஆயுதக் கிடங்கு மீது வெள்ளிக்கிழமை இரவு ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட பாரிய தீ விபத்து மற்றும் வெடிப்பினால் அப்பகுதியில் உள்ள சுமார் 50 குடியிருப்பு வீடுகள் சேதமடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75fcf5bf-095a-4db3-908e-aa157d0b598e/26-6a934d817d077.webp' /></p><p> </p><p>அத்துடன், அப்பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக 400க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p>

உயிரிழந்தவர்களில் டிமிட்ரிவஸ்கா கிராமத்தின் மேயர் தராஸ் டிடிச் என்பவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் ஆபத்தான ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தமையே அதிகளவிலான உயிரிழப்புகளுக்கு காரணமாக இருக்கலாம் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பில் கடுமையான குற்றவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும், பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செயற்பட்ட பொறுப்பற்ற நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்நாட்டு பிரதமர் எச்சரித்துள்ளார்.</p><p>

இதேவேளை, உக்ரைனை இலக்காகக் கொண்டு ரஷ்யா ஒரே இரவில் இரண்டு ஏவுகணைகள் மற்றும் 267 ட்ரோன்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளதாக உக்ரைனிய விமானப்படை தெரிவித்துள்ளது.
</p><p>
இதற்கிடையில், ரஷ்யாவின் எல்லைப் பகுதிகளையும் இலக்காகக் கொண்டு உக்ரைன் பதிலடி தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-30T01:19:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பால் மா, யோகட் விலை உயர்ந்ததாகப் பரவும் செய்தி முற்றிலும் பொய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/palm-oil-and-yogurt-are-expensive-completely-false-1788052685"></link>
            <id>https://jvpnews.com/article/palm-oil-and-yogurt-are-expensive-completely-false-1788052685</id>
            <summary type="text">பால் மா யோகட் மற்றும் பால் பானங்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை திட்டவட்டமாக மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பால் மா யோகட் மற்றும் பால் பானங்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை திட்டவட்டமாக மறுத்துள்ளது.</p><p></p><p>
ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 260 ரூபாயினாலும் யோகட் ஒன்றின் விலை 20 ரூபாயினாலும் பண்படுத்தப்பட்ட பால் பானம் ஒன்றின் விலை 40 ரூபாயினாலும் உயர்த்தப்பட்டுள்ளதாக "Breaking News" என்ற பெயரில் போலித் தகவல் ஒன்று பகிரப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93bafc0b-7976-4ad1-97ff-00044d7e4b18/26-6a9384cf030c2.webp' /></p><p>

எனினும் இந்த விலை அதிகரிப்பு தொடர்பான செய்திகள் முற்றிலும் பொய் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p>

"முக்கிய செய்தி (Breaking News) என்று குறிப்பிடப்படுவதனாலேயே ஒரு தகவல் உண்மையாகிவிடாது" என்றும் அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
இந்தநிலையில், உத்தியோகபூர்வ மூலங்கள் மூலம் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைச் சமூக வலைத்தளங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p>

இத்தகைய போலிச் செய்திகள் நுகர்வோர் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் சந்தையில் குழப்பத்தையும் ஏற்படுத்துவதாக அதிகாரசபை எச்சரித்துள்ளது.
</p><p>
அத்துடன் சந்தையில் சந்தேகத்திற்குரிய விலை மாற்றங்கள் அல்லது முறைகேடுகள் இடம்பெற்றால் அலுவலக நேரங்களில் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்யுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T01:18:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுக்கிர பெயர்ச்சியால் தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போகும் ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/venus-transit-for-business-people-1788052357"></link>
            <id>https://jvpnews.com/article/venus-transit-for-business-people-1788052357</id>
            <summary type="text">வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் தங்களின் நிலையில் குறிப்பிட்ட காலஇடைவெளியில் மாற்றங்களை ஏற்படுத்தி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் தங்களின் நிலையில் குறிப்பிட்ட காலஇடைவெளியில் மாற்றங்களை ஏற்படுத்தி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் அசுரர்களின் குருவாக கருதப்படும் மற்றும் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cef3ec11-3653-47fa-be49-b15a42e59234/26-6a938386b7458.webp' /></p><p>இந்த சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார் மற்றும் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியும் கூட. இப்படிப்பட்ட சுக்கிரன் செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே ராசியை மாற்றவுள்ளார். அதுவும் செப்டம்பர் 02 ஆம் திகதி சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழைகிறார். இதனால் பஞ்சமகா புருஷ ராஜயோகங்களில் ஒன்றான மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.</p><p>இந்த சுக்கிர பெயர்ச்சியின் தாக்கத்தினால் சில ராசிக்காரர்கள் தங்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தையும், தொழிலில் நல்ல உச்சத்தை அடையப் போகிறார்கள். மேலும் ஆடம்பரமான வாழ்க்கையையும் வாழ்வார்கள். இப்போது செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சியால் தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebb04b92-8a47-462a-a716-3cb1b56bb323/26-6a93838768a9a.webp' /></p><h4>மேஷம்
</h4><p>மேஷ ராசியின் 7 மற்றும் 2 ஆவது வீட்டின் அதிபதியான சுக்கிரன், 7 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவீர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87ba1306-b2bc-47be-8244-5945212ed1c2/26-6a9383881ae59.webp' /></p><h4>மிதுனம்
</h4><p>மிதுன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இக்காலம் அற்புதமாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முதலீடுகளில் இருந்து எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும். எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றத்துடன், இரட்டிப்பு லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. மேலும் ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37ad1011-573d-489f-b7db-8c944f11d669/26-6a938388bf116.webp' /></p><h4>விருச்சிகம்</h4><p>
விருச்சிக ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. போட்டிகள் மற்றும் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும் வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2217d05c-3d75-40be-8a49-2dc8cbc9a035/26-6a9383896f350.webp' /></p><h4>சிம்மம்
</h4><p>சிம்ம ராசியின் 10 மற்றும் 3 ஆவது வீட்டின் அதிபதியான சுக்கிரன் 3 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். முக்கியமாக இக்காலத்தில் சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ள புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். அதை திறம்பட பயன்படுத்திக் கொண்டால், நல்ல உச்சத்தைத் தொடலாம். முக்கியமாக வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f816993-2d2b-42a0-ae12-c83d4b37b184/26-6a93838a243db.webp' /></p>]]></content>
            <updated>2026-08-30T01:12:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் மோசடிகளை தடுக்க Amazon புதிய பிரிவு அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/amazon-launches-anti-scam-unit-in-india-1788052450"></link>
            <id>https://news.lankasri.com/article/amazon-launches-anti-scam-unit-in-india-1788052450</id>
            <summary type="text">Amazon launches anti-scam unit in India: இந்தியாவில் மோசடிகளை தடுக்க Amazon புதிய பிரிவை அறிமுகப்படுத்துகிறது.

Counterfeit Crimes Unitஇந்தியாவில் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Amazon launches anti-scam unit in India: இந்தியாவில் மோசடிகளை தடுக்க Amazon புதிய பிரிவை அறிமுகப்படுத்துகிறது.
</p><h2>
Counterfeit Crimes Unit</h2><p>இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்துள்ள நிலையில், போலியான பொருட்கள் மற்றும் மோசடிகள் பெரும் சவாலாக மாறியுள்ளன. </p><p>இதை சமாளிக்க Amazon நிறுவனம் Counterfeit Crimes Unit (CCU) எனும் சிறப்பு பிரிவை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a32e18e-4819-4a11-a34e-122e66f7c10c/26-6a9383e4280f1.webp' /></p><p>இந்த பிரிவு, Amazon தளத்தில் போலியான பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளை கண்டறிந்து, அவர்களின் சப்ளைச் செயினை முறியடிக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது. </p><p>

CCU குழுவில் வழக்கறிஞர்கள், விசாரணையாளர்கள், தரவு விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் உள்ளனர்.
</p><p></p><p>Amazon CCU உலகளவில் 2020-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த ஆறு ஆண்டுகளில், 32,000க்கும் மேற்பட்ட மோசடி வியாபாரிகளுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. </p><p>15 மில்லியனுக்கும் மேற்பட்ட போலியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. மேலும், 300 மில்லியன் டொலர் மதிப்பிலான அபராதம் விதிக்கப்பட்டு, 290-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><h2>
இந்தியாவில்...</h2><p>இந்தியாவில் CCU ஏப்ரல் 2026 முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. தற்போது, Amazon இந்தியா, CBI மற்றும் மாநில பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை நடத்தி வருகிறது. </p><p>“Mission Grahak” மற்றும் “ScamSmartIndia” போன்ற விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடத்தப்படுகின்றன.</p><p>

Amazon, விற்பனையாளர்களை தளத்தில் சேர்க்கும் முன்பே AI அடிப்படையிலான ஆவணச் சரிபார்ப்பு, வீடியோ அடையாளச் சோதனை போன்ற முறைகளை கடுமையாகப் பின்பற்றுகிறது. </p><p>இதனால், வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக வாங்கும் சூழல் உருவாகும் என நிறுவனம் நம்புகிறது.</p><p>
</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T01:11:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுரம் பெண் வைத்தியர் வழக்கில் புதிய திருப்பம் ; நீதிமன்றில் முக்கிய சாட்சியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-twist-in-anuradhapura-female-doctor-case-1788051448"></link>
            <id>https://jvpnews.com/article/new-twist-in-anuradhapura-female-doctor-case-1788051448</id>
            <summary type="text">அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் மற்றும் பாலியல் துர்நடத்தை தொடர்பான வழக்கில் புதிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் மற்றும் பாலியல் துர்நடத்தை தொடர்பான வழக்கில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
</p><p>
வடமத்திய மாகாண உயர்நீதிமன்றத்தில் நீதிபதி இந்திக்க அத்தநாயக்க முன்னிலையில் இடம்பெற்ற மூடிய நீதிமன்ற அமர்வில், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் வைத்தியர் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக தனது சாட்சியத்தை வழங்கியுள்ளார்.</p><p>
</p><p></p><p>2025 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் திகதி, குறித்த பெண் வைத்தியர் தனது விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, சந்தேகநபரால் மிரட்டப்பட்டு பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரால் தண்டனைச் சட்டக்கோவையின் 345 மற்றும் 364 ஆகிய பிரிவுகளின் கீழ் சந்தேகநபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த வழக்கில் மொத்தம் 42 சாட்சிகள் பெயரிடப்பட்டுள்ளதுடன், சிசிரிவி காணொளிகள், வைத்திய அறிக்கைகள் உள்ளிட்ட அறிவியல் மற்றும் தடயவியல் ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனிடையே, சந்தேகநபர் கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் பொலிஸாரால் தாம் தாக்கப்பட்டதாகவும், குறித்த பெண் வைத்தியருடனான உறவு இருவரின் சம்மதத்துடனேயே இடம்பெற்றதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நிலையில், வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிவியல் ரீதியான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை நீதிமன்றம் தற்போது பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

வழக்கு விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மேலும் இந்த காணொளியில் காணலாம்......&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/73hmixIp9p0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T00:57:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச கடன் மதிப்பீட்டு தொடர்பில் ஹர்ஷ வெளிப்படுத்திய திட்டமிடல் பொறிமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/international-credit-rating-sri-lanka-1788051262"></link>
            <id>https://ibctamil.com/article/international-credit-rating-sri-lanka-1788051262</id>
            <summary type="text">சர்வதேச சந்தையிலிருந்து பிணைமுறி மூலம் 1.5 பில்லியன் டொலர்களைத் திரட்ட வேண்டுமாயின், சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனங்கள் நாட்டின் தரவரிசையை &#039;CCC&#039; நில...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சந்தையிலிருந்து பிணைமுறி மூலம் 1.5 பில்லியன் டொலர்களைத் திரட்ட வேண்டுமாயின், சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனங்கள் நாட்டின் தரவரிசையை 'CCC' நிலையிலிருந்து 'B' அல்லது 'B+' நிலைக்கு உயர்த்த வேண்டும் என எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்&nbsp;ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.</p><p>2028 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆண்டிற்குச் செலுத்த வேண்டிய கடன் தொகை 4 பில்லியன் டொலர்களாகவும், 2029 - 2031 காலப்பகுதியில் 5 முதல் 6 பில்லியன் டொலர்களாகவும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>இது குறித்து&nbsp; மேலும் கருத்துத் தெரிவித்த&nbsp; அவர்,&nbsp;</p><p></p><h2>நாட்டின் கடன் செலுத்தும் திறன்</h2><p>“நாட்டின் கடன் செலுத்தும் திறனை வெறும் மொத்த வெளிநாட்டு கையிருப்பை வைத்து மட்டும் கணக்கிட முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4c621c7-313d-4d46-a7a1-45fd468749c8/26-6a937fd05e0b8.webp' /></p><p> சர்வதேச நாணய நிதியத்தின் 'கையிருப்பு போதுமான அளவு மதிப்பீடு' அளவுகோலின் படி, கடன் செலுத்தும் திறனில் பாதுகாப்பான நிலையை அடைய நாட்டின் கையிருப்பு 12 பில்லியன் டொலர்களாக உயர வேண்டும்.</p><p>ஆனால் தற்போது 6.5 பில்லியன் டொலர்கள் மட்டுமே கையிருப்பில் உள்ள நிலையில், அடுத்த ஆண்டிற்குள் அதனை 12 பில்லியனாக உயர்த்துவது சாத்தியமற்ற ஒன்றாகும்.&nbsp;&nbsp;</p><p>தற்போது நாட்டில் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி என்பது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காத ஒரு வளர்ச்சியாகவே காணப்படுகிறது.</p><p>விவசாயம், கணக்காய்வு மற்றும் மென்பொருள் பொறியியல் போன்ற முக்கிய துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை. </p><p>அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு ஏற்ப மக்களின் உண்மையான ஊதியம் உயரவில்லை என்பதால், நாட்டின் வறுமை வீதம் 26 சதவீதம் முதல் 27 சதவீதம் வரை அதிகரித்துள்ளது” என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T00:54:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: யாழில் இன்று மாபெரும் சர்வதேச மாநாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/international-day-of-enforced-disappeared-1788049949"></link>
            <id>https://tamilwin.com/article/international-day-of-enforced-disappeared-1788049949</id>
            <summary type="text">சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படும்
நிலையில், &quot;நீதிக்கான நீள்பயணம்&quot; எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா
கலையரங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படும்
நிலையில், "நீதிக்கான நீள்பயணம்" எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா
கலையரங்கத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது.
</p><p>
மாநாட்டுக்கு முன்னதாக இன்று காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம்
மண்டபத்துக்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை
நினைவுத் தூபி இடத்தில் வைத்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரது உறவினரின்
நினைவுபடுத்தலோடு கவனவீர்ப்புப் பேரணி ஆரம்பிக்கப்பட்டு, தந்தை செல்வா
கலையரங்கைச் சென்றடையவுள்ளது.</p><h2>முக்கிய நிகழ்வுகள்..&nbsp;</h2><p>
</p><p>
இந்த மாநாட்டில் சர்வதேச இராஜதந்திரிகள் கலந்துகொள்ளவுள்ளதுடன், காணாமல் போனோர்
விவகாரம் தொடர்பான புத்தகங்களும் வெளியிடப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22a204ea-5f66-4452-ba35-3df80ff64581/26-6a937b41b6aac.webp' /></p><p>

வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின்
ஏற்பாட்டில் நடைபெறும் இந்த மாநாட்டுக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல்
கட்சிகள், பொது அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவைத்
தெரிவித்துள்ளனர்.</p><p>

இலங்கை அரசிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தைக் கையாளுவதற்கோ
அல்லது நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கோ எவ்வித நம்பிக்கைமிகு பொறிமுறைகளும்
இல்லை என்பதால், சர்வதேச விசாரணையே தமக்குத் தேவை என்பதை மாநாட்டில் வலுவாக
வலியுறுத்தவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T00:41:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியரசர்கள் நியமனமும் பேரணித் திட்டமும் ; ஜனாதிபதியின் நகர்வுகள் குறித்து தயாசிறி கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/appointment-judges-rally-plan-dayasiri-questions-1788050365"></link>
            <id>https://jvpnews.com/article/appointment-judges-rally-plan-dayasiri-questions-1788050365</id>
            <summary type="text">செப்டம்பர் 5 ஆம் திகதி முதல் தொடர் மக்கள் பேரணிகளை நடத்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க எடுத்துள்ள தீர்மானம் குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பின...</summary>
            <content type="html"><![CDATA[<p>செப்டம்பர் 5 ஆம் திகதி முதல் தொடர் மக்கள் பேரணிகளை நடத்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க எடுத்துள்ள தீர்மானம் குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>
</p><p></p><p>இதன் மூலம் 22-வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக பொதுவாக்கெடுப்பு (Referendum) நடத்தப்படக்கூடுமா என்ற பலத்த சந்தேகம் எழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee2fffb3-1a74-4712-b100-c0c7ef766ec2/26-6a937bbf36e67.webp' /></p><p>

இதேவேளை, உயர்நீதிமன்றத்தில் தற்போது வெற்றிடங்களாக உள்ள நீதியரசர்களின்பணியிடங்களை நிரப்புவதற்குப் பல நீதியரசர்களை நியமிப்பது குறித்து ஜனாதிபதி பரிசீலிக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T00:39:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தின் நம்பிக்கை சின்னமாக உயிர் பிழைத்த 97 வயது பாட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/97-year-old-survivor-becomes-nepal-flood-symbol-1788047474"></link>
            <id>https://news.lankasri.com/article/97-year-old-survivor-becomes-nepal-flood-symbol-1788047474</id>
            <summary type="text">97-year-old survivor becomes Nepal flood symbol: நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி 97 வயது பாட்டி உயிர் பிழைத்தது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

குனா மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>97-year-old survivor becomes Nepal flood symbol: நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி 97 வயது பாட்டி உயிர் பிழைத்தது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>

குனா மாயா போஹாரா</h2><p>நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில், 97 வயதான குனா மாயா போஹாரா (Guna Maya Bohara) எனும் பாட்டி உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/616e9661-40b2-4173-a9ef-b1aeea7aa7e2/26-6a93743d69972.webp' /></p><p>வெள்ளத்தால் இடிந்து விழுந்த பராமரிப்பு இல்லத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த போஹாராவை மீட்க, நேபாள பொலிஸ் மற்றும் இராணுவம் நான்கு மணி நேரம் போராடினர்.
</p><p>
இறுதியில், எக்ஸ்கவேட்டர் இயந்திரத்தின் பக்கெட் மூலம் அவரை வெளியே கொண்டு வந்தனர். சேற்றில் மூழ்கிய உடைகள், சோர்வான முகம், அனைத்தும் வெள்ளத்தின் தாக்கத்தை வெளிப்படுத்தின.
</p><p></p><h2>வீராங்கனை போல..</h2><p>அவரது பேரன் தீபக் போஹாரா, “அவர் போரில் வெற்றி பெற்று திரும்பும் வீராங்கனை போல இருந்தார்” என்று BBC Nepali-க்கு தெரிவித்தார்.</p><p> இந்த காட்சி, சமூக ஊடகங்களில் வைரலாகி, நேபாள வெள்ளத்தின் அடையாள முகமாக மாறியுள்ளது.
</p><p></p><p>நேபாளத்தில் தற்போது 676 பேர் உயிரிழந்துள்ளனர், 3,000 பேர் காணாமல் போயுள்ளனர். இதில் 300க்கும் மேற்பட்டோர் இந்தியர்கள். மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. </p><p>நேபாள நிதி அமைச்சர், நாட்டை மீண்டும் கட்டமைக்க 4-5 பில்லியன் டொலர் தேவைப்படும் என தெரிவித்துள்ளார்.
</p><p>
போஹாராவின் உயிர் பிழைத்த கதை, பேரழிவின் நடுவே நம்பிக்கையின் சின்னமாக மாறியுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T00:37:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கும் அபாயம் குறித்து எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/warning-over-rising-risk-of-malnutrition-sri-lanka-1788048768"></link>
            <id>https://jvpnews.com/article/warning-over-rising-risk-of-malnutrition-sri-lanka-1788048768</id>
            <summary type="text">எல் நினோ (El Niño) காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாக, இலங்கையின் சுமார் 10 மாவட்டங்களில் சிறுவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ (El Niño) காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாக, இலங்கையின் சுமார் 10 மாவட்டங்களில் சிறுவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள பெரியவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு தீவிரமாக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h3>கடும் உணவுப் பற்றாக்குறை</h3><p>மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் நிபுணர் சமல் சஞ்சீவ,இது குறித்து எச்சரித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53eb4250-e8e6-4b16-b56f-99c47ae3e5a8/26-6a937581bae13.webp' /></p><p>நீண்டகால வறட்சியினால் விவசாய உற்பத்தி குறைவு, தரமான உணவுகள் கிடைக்காமை, விவசாயிகளின் வருமான வீழ்ச்சி மற்றும் குடும்பச் செலவுகள் அதிகரிப்பு ஆகியவற்றால் கிராமப்புற மற்றும் அரை-நகர்ப்புற குடும்பங்கள் சத்தான உணவைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றன.
</p><p>
5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் 5 முதல் 17 வயது வரையிலான சிறுவர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படலாம்.
</p><p>
5 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கான 'திரிபோஷ' விநியோகத் திட்டம் நாட்டின் பல பகுதிகளில் ஏற்கனவே உரிய வகையில் செயற்படவில்லை எனக் சுட்டிக்காட்டியுள்ள அவர், வறட்சி நீடித்தால் நிலைமை மேலும் மோசமடையும் எனத் தெரிவித்துள்ளார்.</p><p>

எனவே, கடும் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதற்கு முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது இன்றியமையாதது" என விசேட மருத்துவ நிபுணர் சமல் சஞ்சீவ வலியுறுத்தியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T00:12:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை தேயிலைத் தொழிலை நெருக்கடிக்குள் தள்ளும் ஈரான் போர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-war-puts-sri-lankan-tea-industry-in-crisis-1788047398"></link>
            <id>https://ibctamil.com/article/iran-war-puts-sri-lankan-tea-industry-in-crisis-1788047398</id>
            <summary type="text">உயர்ந்து வரும் எரிசக்தி விலைகள், கடுமையான ஏற்றுமதி சரிவுகள் மற்றும் சீர்குலைந்த விநியோகச் சங்கிலிகள் ஆகியவை இலங்கையின் தேயிலைத் தொழிலைக் கடுமையான அழுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர்ந்து வரும் எரிசக்தி விலைகள், கடுமையான ஏற்றுமதி சரிவுகள் மற்றும் சீர்குலைந்த விநியோகச் சங்கிலிகள் ஆகியவை இலங்கையின் தேயிலைத் தொழிலைக் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாக்குவதாக கூறப்படுகிறது.</p><p>இந்த மோதல், நிறுவனங்களுக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்துவதாக சில சர்வதேச ஏற்றுமதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.</p><p>இலங்கை மக்கள் தொகையில் தேயிலை பறிக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை&nbsp;ஏறத்தாழ 10% ஆகும்.</p><p></p><h2>உலக வங்கியின் வறுமைக் கோடு</h2><p>குறிப்பாக தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு சுமார் 1,500 இலங்கை ரூபாய் சம்பளத்தை பெறுகிறார்கள். இது தோராயமாக 4.50டொலர் / 3.90யூரோவுக்கு சமமானதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2288740-8814-4262-b72f-6cb8b1103b17/26-6a93728029ffd.webp' /></p><p>
தோட்டத் தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் நாள் ஒன்றுக்கு 3.65 டொலருக்கும் குறைவான வருமானத்தில் தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர்.</p><p>இது அவர்களை உலக வங்கியின் வறுமைக் கோட்டிற்குக் கீழே வைக்கிறது. இது தோட்டத் தொழிலாளர்கள் ஒன்றன்பின் ஒன்றாக நெருக்கடிகளைச் சந்தித்து வருவதினை வெளிப்படுத்துகிறது.</p><p>சமீப காலம் வரை மிக முக்கியமான இலக்குச் சந்தையாக இருந்த ஈராக்கிற்கான ஏற்றுமதி கடுமையாகக் குறைந்ததால், இலங்கையின் தேயிலை ஏற்றுமதி வருவாய் மார்ச் மாதத்தில் ஆண்டுக்கு ஆண்டு 17.3% சரிந்து 114.75 டொலர் மில்லியனாகக் குறைந்தது.</p><p></p><h2>மத்திய கிழக்கு ஏற்றுமதி</h2><p> </p><p>மற்றொரு முக்கிய சந்தையான ஐக்கிய அரபு அமீரகத்திற்கான ஏற்றுமதி 93% சரிந்தது. இலங்கைத் தேயிலையின் முக்கிய வாங்குபவர்களில் ஒன்றான ஈரானுக்கான ஏற்றுமதியும் குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72ab792e-2ff4-4ab4-9ce9-3ffa2eaee255/26-6a93728241bd1.webp' /></p><p>அதிகரித்து வரும் உலகளாவிய விலைகளும் தேவையைப் பாதிக்கின்றன.

தேயிலைத் தொழில் நெருக்கடியானது, ஏற்கனவே பலவீனமாக உள்ள இலங்கையின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தை மேலும் பலவீனப்படுத்தும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. </p><p>ஈரான் போரைத் தொடர்ந்து, எரிசக்தி நுகர்வைக் குறைப்பதற்காக அரசாங்கம் எரிபொருள் விலையை 40% உயர்த்தியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T00:01:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொனால்ட் ட்ரம்ப் முக வடிவில் போதை மாத்திரை ; நெதர்லாந்து தீவிர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/drug-pill-in-shape-donald-trump-face-netherlands-1788047185"></link>
            <id>https://canadamirror.com/article/drug-pill-in-shape-donald-trump-face-netherlands-1788047185</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முக வடிவிலான, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய எக்ஸ்டசி (Ecstasy) போதை மாத்திரைகள் குறித்து நெதர்லாந்தைச் சேர்ந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முக வடிவிலான, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய எக்ஸ்டசி (Ecstasy) போதை மாத்திரைகள் குறித்து நெதர்லாந்தைச் சேர்ந்த போதைப்பொருள் தடுப்பு மற்றும் மனநல நிறுவனமான 'டிரிம்போஸ் இன்ஸ்டிடியூட்' இந்த சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
</p><p>
நெதர்லாந்தில் உள்ள போதைப்பொருள் பரிசோதனை மையங்களில் ஆகஸ்ட் மாதத்தில் ஒப்படைக்கப்பட்ட சில மாத்திரைகளை ஆய்வு செய்தபோது, அவற்றில் 'பி.எம்.எம்.ஏ' (PMMA - para-methoxymethamfetamine) என்ற அபாயகரமான வேதிப்பொருள் மிக அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ee29413-8a5a-4d7c-a2ee-9e9937f9cdd8/26-6a936f52787cc.webp' /></p><p>

இந்த மாத்திரைகளின் ஒரு புறத்தில் டொனால்ட் ட்ரம்பின் முக அமைப்பும், மறுபுறத்தில் "Trump" மற்றும் "NL" என்ற வார்த்தைகளும் பொறிக்கப்பட்டுள்ளன.</p><p>

"எந்தச் சூழ்நிலையிலும் இந்த மாத்திரையைப் பயன்படுத்த வேண்டாம்" என எச்சரித்துள்ள 'டிரிம்போஸ் இன்ஸ்டிடியூட்' நிறுவனம், இது உடலின் வெப்பநிலையை அளவுக்கு அதிகமாக உயர்த்தி, உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறியுள்ளது.
</p><p>
இந்த மாத்திரையை உட்கொண்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு குமட்டல், வேகமான இதயத் துடிப்பு மற்றும் வலிப்பு போன்ற தீவிர பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நெதர்லாந்தில் எக்ஸ்டசி மாத்திரைகளை தயாரிப்பது, விற்பனை செய்வது மற்றும் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்றாலும், அங்குள்ள கழகங்கள் மற்றும் இசை விழாக்களில் இது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.</p><p>

2024 ஆம் ஆண்டு வெளிவந்த அந்த நாட்டின் அரசு அறிக்கையின்படி, 2022 இல் மட்டும் சுமார் 5,50,000 பேர் இந்த போதைப்பொருளைப் பயன்படுத்தியுள்ளனர் என தெரியவந்துள்ளது.
</p><p>
முன்னதாக 2017 ஆம் ஆண்டும், ஜெர்மனி காவல்துறையினர் ட்ரம்பின் உருவம் பொறிக்கப்பட்ட சுமார் 5,000 எக்ஸ்டசி மாத்திரைகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-29T23:46:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் பேச்சை வைத்து கோடிகளில் பந்தயம் ; 172,000 டொலருக்கும் அதிகமான அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bet-on-trump-s-speech-in-crores-fine-over-172-000-1788046164"></link>
            <id>https://canadamirror.com/article/bet-on-trump-s-speech-in-crores-fine-over-172-000-1788046164</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உரைகள் குறித்து ரகசியத் தகவல்களைப் பயன்படுத்தி பந்தயம் (Insider Trading) கட்டிய வெள்ளை மாளிகையின் முன்னாள் டெலிபி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உரைகள் குறித்து ரகசியத் தகவல்களைப் பயன்படுத்தி பந்தயம் (Insider Trading) கட்டிய வெள்ளை மாளிகையின் முன்னாள் டெலிபிராம்ப்டர் (Teleprompter) இயக்குநருக்கு 172,000 டொலருக்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
காஷி (Kalshi) என்ற கணிப்பு சந்தைத் தளத்தில் (Prediction Market Platform), ட்ரம்ப் தனது உரைகளில் என்ன வார்த்தைகளைப் பயன்படுத்துவார் என்பது குறித்து முன்கூட்டியே கசிந்த தகவல்களை வைத்து கேப்ரியல் பெரெஸ் (Gabriel Perez) என்ற வெள்ளை மாளிகையின் முன்னாள் ஊழியர் முறையற்ற வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a403f5a-ea01-4d87-b649-42eb8ee38c61/26-6a936b55e7744.webp' /></p><p>இந்தநிலையில், பெரெஸ் தான் ஈட்டிய இலாபத் தொகையான $107,539.02-ஐத் திருப்பிக் கொடுக்க வேண்டும். அத்துடன், சிவில் அபராதமாக $65,000 செலுத்த வேண்டும் என்று அமெரிக்க வர்த்தக ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p>

இதேவேளை, விசாரணையின் போது அவர் முழுமையாக ஒத்துழைப்பு அளித்த காரணத்தினால் அபராதம் சற்று குறைக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு 3 ஆண்டுகள் வர்த்தகத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தச் செயல் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, அவர் ஏற்கனவே வெள்ளை மாளிகை பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு ஊதியமில்லா விடுப்பில் வைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-29T23:29:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய கப்பல்களை மூன்று நாட்கள் கண்காணித்த ராயல் நேவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/royal-navy-tracks-russian-ships-in-uk-waters-1788045786"></link>
            <id>https://news.lankasri.com/article/royal-navy-tracks-russian-ships-in-uk-waters-1788045786</id>
            <summary type="text">Royal Navy tracks Russian ships in UK waters: பிரித்தானிய கடற்படை ரஷ்ய கப்பல்களை மூன்று நாட்கள் கண்காணித்துள்ளது.

ரஷ்ய கப்பல்களை கண்காணித்த பிரித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Royal Navy tracks Russian ships in UK waters: பிரித்தானிய கடற்படை ரஷ்ய கப்பல்களை மூன்று நாட்கள் கண்காணித்துள்ளது.
</p><h2>
ரஷ்ய கப்பல்களை கண்காணித்த பிரித்தானிய கடற்படை</h2><p>பிரித்தானிய கடற்படையான Royal Navy, கடந்த வாரம் மூன்று நாட்கள் தொடர்ந்து ரஷ்ய கப்பல்களை கண்காணித்தது.
</p><p>
இந்த “தீவிரமான” 72 மணி நேர நடவடிக்கையில், நான்கு ரஷ்ய கப்பல்கள் வடக்குக் கடலிலிருந்து இங்கிலாந்து சேனல் வழியாக பயணித்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/401a00fa-430d-47b6-86a5-35dfbd484cb8/26-6a9369dbb26fa.webp' /></p><p>

இந்த நடவடிக்கையில் HMS Duncan, HMS St Albans, HMS Severn எனும் மூன்று ராயல் நேவி கப்பல்களும், ஒரு Merlin ஹெலிகாப்டரும் பங்கேற்றன.</p><p> 

ரஷ்யாவின் Admiral Levchenko எனும் டெஸ்ட்ராயர், தடை விதிக்கப்பட்ட General Skobelev மற்றும் Sparta எனும் சரக்கு கப்பல்களை டோவர் நோக்கி அழைத்துச் சென்றது.</p><p> இதற்கு பதிலாக, ரஷ்யா தனது Neustrashimy எனும் போர்க்கப்பலை பாதுகாப்பிற்காக அனுப்பியது.
</p><p></p><h2>பிரித்தானிய பாதுகாப்பிறகு அபாயம்</h2><p>பிரித்தானிய கடற்படைத் தளபதி Gen Gwyn Jenkins, “இது நாட்டின் பாதுகாப்பிறகு ஏற்றுக்கொள்ள முடியாத அபாயம். எங்கள் கூட்டாளிகளுடன் இணைந்து, ரஷ்யாவை அதன் முக்கிய பணிகளில் இருந்து விலக்கி வைத்திருக்கிறோம்” எனக் கூறினார்.</p><p>

ராயல் நேவி, கடந்த ஜூலை மாதத்தில் 21 நாட்கள் ரஷ்ய கப்பல்களை கண்காணித்தது. இது கடந்த ஆண்டை விட 25 சதவீதம் அதிகம். </p><p>மேலும், ஜூன் மாதத்தில் பிரித்தானிய ராயல் மரைன்ஸ், Smyrtos எனும் ரஷ்ய எண்ணெய் கப்பலை கைப்பற்றியது. இது தடை விதிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட கப்பல்களில் ஒன்றாகும்.
</p><p></p><p>இந்நிலையில், பிரித்தானிய பிரதமர் ஆன்டி பர்னாம், உக்ரைனுக்கு நீண்ட தூர Scalp ஏவுகணை பாகங்கள் தொடர்பான வரைபடங்களை வழங்குவதாக அறிவித்துள்ளார். இதனால், பிரித்தானியா “தீயுடன் விளையாடுகிறது” என ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
</p><p>
இந்த சம்பவம், ரஷ்யா-பிரித்தானியா உறவுகளில் அதிகரித்து வரும் பதற்றத்தை வெளிப்படுத்துகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T23:20:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவத் துறையில் பிளவை ஏற்படுத்தும் யோசனைக்கு GMOA கடும் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gmoa-strongly-opposes-create-division-medical-sect-1788044964"></link>
            <id>https://jvpnews.com/article/gmoa-strongly-opposes-create-division-medical-sect-1788044964</id>
            <summary type="text">விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட மருத்துவப் பிரிவினரிடையே மோதல்களை உருவாக்கி, நாட்டின் இலவச சுகாதார சேவையை நெருக்கடிக்குள்ளாக்கும் அரசியல் நிகழ்ச்சி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட மருத்துவப் பிரிவினரிடையே மோதல்களை உருவாக்கி, நாட்டின் இலவச சுகாதார சேவையை நெருக்கடிக்குள்ளாக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு எதிராக எதிர்கால நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA)தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>இலவச சுகாதார சேவையை சர்வதேசத் தரத்தில் கொண்டு செல்வதற்கு அனைத்து மருத்துவப் பிரிவினருக்கும் இடையிலான ஒத்துழைப்பும், அமைப்பின் உள் ஸ்திரத்தன்மையும் அத்தியாவசியமானது என அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>

கடந்த காலத்தில் நாட்டில் நிலவிய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை காரணமாக, விசேட வைத்திய நிபுணர்கள் உட்பட மருத்துவர்களை நாட்டிற்குள் தக்கவைத்துக்கொள்வது பெரும் சவாலாக மாறியிருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/951d3aa1-b30f-418b-9a39-a94e2067e3f7/26-6a9366a61b1b2.webp' /></p><p>இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக சுகாதார அமைச்சு மற்றும் மருத்துவ தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட தரப்பினரைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
</p><p>
அதில், அனைத்து மருத்துவப் பிரிவினரையும் நாட்டிற்குள் தக்கவைத்துக்கொள்வதற்காக 'இலங்கை மருத்துவ சேவை' என்ற பெயரில் புதிய சேவைப் பிரிவையும் வேதன அமைப்பையும் நிறுவுவதற்கு உடன்பாடு எட்டப்பட்டதாக அந்தச் ங்கம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
2026 ஆம் ஆண்டிற்கான பாதீட்டின் மூன்றாவது வாசிப்பின் போதும், விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவர்களையும் நாட்டில் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் இவ்வாறானதொரு தனிச் சேவைப் பிரிவு உருவாக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்ததாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
இருப்பினும், தற்போது விசேட வைத்திய நிபுணர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாகத் தனிச் சேவைப் பிரிவை உருவாக்குவதற்கான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மருத்துவப் பிரிவினரிடையே பிளவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அந்தச் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.</p><p>

ஒரு குறிப்பிட்ட மருத்துவப் பிரிவுக்கு மட்டும் தனிச் சேவைப் பிரமாணக் குறிப்பை உருவாக்குவது இலவச சுகாதார சேவைக்கும் நோயாளி பராமரிப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்த யோசனைக்குத் தமது சங்கம் உடன்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பில் வாய்மொழி மற்றும் எழுத்துப்பூர்வமான கருத்துக்கள் உரிய குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவின் அறிக்கையின் பிரதியை வழங்குமாறு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை அது வழங்கப்படவில்லை என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-29T23:09:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீர்வுக்காக இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-for-missing-relatives-in-the-north-1788044765"></link>
            <id>https://ibctamil.com/article/protest-for-missing-relatives-in-the-north-1788044765</id>
            <summary type="text">தமிழர் சுயநிர்ணயம் மற்றும் இறையாண்மை தொடர்பான கேள்வியை சர்வதேச
நீதிமன்றத்தின் முன் கொண்டுசெல்லக்கூடிய சட்ட வழிமுறைகளை பிரித்தானியா ஆராய
வேண்டும் என்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழர் சுயநிர்ணயம் மற்றும் இறையாண்மை தொடர்பான கேள்வியை சர்வதேச
நீதிமன்றத்தின் முன் கொண்டுசெல்லக்கூடிய சட்ட வழிமுறைகளை பிரித்தானியா ஆராய
வேண்டும் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்
வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிய
தமிழ்த் தாய்மார்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்றும்
கேள்வி எழுப்பினர்.</p><p>
இது தொடர்பாக வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும்
கருத்து தெரிவித்த அவர்கள்.</p><p> நாளை சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஸ்டிக்கப்படும் நிலையில் கடந்த 3,478
நாட்களாக, எமது பிள்ளைகளையும் அன்புக்குரியவர்களையும் தேடுவதை கைவிடாமல்
வவுனியாவில் வீதியில் நின்று போராடி வருகிறோம்.</p><p></p><h2>பிரித்தானியவிடம் ஒரு&nbsp; வேண்டுகோள்</h2><p>

இன்று, பிரித்தானிய பிரதமரிடமும் பிரித்தானிய வெளியுறவு அமைச்சரிடமும் நாம்
நேரடியாக ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறோம்.</p><p>தமிழர் இறையாண்மையை மீட்டெடுப்பதற்கான
சர்வதேச சட்ட வழிமுறைக்கு பிரித்தானியா ஆதரவளிக்க வேண்டும்.
</p><p>
இலங்கையில் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கும் தமிழர் தேசியப் பிரச்சினையில்
பிரித்தானியாவுக்கு உள்ள வரலாற்றுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, காலனித்துவ
நீக்கம், சுயநிர்ணய உரிமை மற்றும் தமிழர் இறையாண்மை மீட்பு தொடர்பாக சர்வதேச
சட்ட வழிமுறையை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.</p><p>

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியே பின்னர் சுதந்திர சிலோன் பெற்றுக்கொண்ட
மையப்படுத்தப்பட்ட அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது.</p><p>
1948ஆம் ஆண்டு பிரித்தானியா அதிகாரத்தை ஒப்படைத்தபோது, ஒரே மையப்படுத்தப்பட்ட
அரசைக் கொண்ட அரசியலமைப்பு ஏற்பாடு தொடர்ந்தது.
</p><p>
அந்த அரசியலமைப்பு ஏற்பாடு தமிழர்களின் அரசியல் உரிமைகள், பாதுகாப்பு மற்றும்
அரசியல் எதிர்காலத்திற்கு நிலையான தீர்வை வழங்கத் தவறிவிட்டது.அதன் விளைவுகளை
தமிழர்கள் தலைமுறை தலைமுறையாக அனுபவித்து வருகின்றனர்.</p><p></p><h2>இன வன்முறைகள், இடம்பெயர்வுகள்</h2><p>
</p><p>
பாகுபாடான அரச கொள்கைகள், இன வன்முறைகள், இடம்பெயர்வுகள், நில இழப்புகள்,
இராணுவமயமாக்கல், போர் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் ஆகியவற்றை
தமிழர்கள் எதிர்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b3cc7f4-ca27-455a-938b-11d63ee95c45/26-6a9365df4fb04.webp' /></p><p>இன்றும் ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள்
தங்களது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியாமல்
காத்திருக்கின்றன.
</p><p>
அரசாங்கங்கள் மாறியுள்ளன.ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன,விசாரணைகள்
அறிவிக்கப்பட்டுள்ளன,பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.</p><p>ஆனால் எமது காணாமல்
ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதற்கான நம்பகமான பதில் இன்னும்
எமக்குக் கிடைக்கவில்லை.</p><p>

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நாளின் முன்னைய தினத்தில்,
பிரித்தானியாவிடமும் சர்வதேச சமூகத்திடமும் நாம் கேட்கிறோம்,</p><p> எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிய தமிழ்த் தாய்மார்கள் இன்னும்
எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
</p><p>
சிலோனை ஒன்றிணைத்த காலனித்துவ நிர்வாக நடைமுறையிலும், பின்னர் அதன் காலனித்துவ
நீக்கத்திலும் பிரித்தானியா வகித்த பங்கு குறித்து முறையான வரலாற்று மற்றும்
சட்ட ஆய்வை மேற்கொள்ளுமாறு பிரித்தானிய அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்.
</p><p>
மேலும், தமிழர் சுயநிர்ணயம் மற்றும் இறையாண்மை தொடர்பான கேள்வியை சர்வதேச
நீதிமன்றத்தின் முன் கொண்டுசெல்லக்கூடிய சட்ட வழிமுறைகளை பிரித்தானியா ஆராய
வேண்டும்.</p><p></p><h2>சட்ட அதிகாரம்</h2><p>

நேரடி வழக்கிற்கான சட்ட அதிகாரம் பொருந்தாத பட்சத்தில், ஐக்கிய நாடுகள் பொதுச்
சபையின் மூலம் சர்வதேச நீதிமன்றத்தின் ஆலோசனைக் கருத்தைக் கோரும் முயற்சிக்கு
பிரித்தானியா ஆதரவளிக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5e3b4f7-f276-49c3-b4b3-a34b932166fd/26-6a9365e009b60.webp' /></p><p>
</p><p>
எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு மாற்றங்கள்,
அரசியல் பேச்சுவார்த்தைகள் மற்றும் அதிகாரப் பகிர்வு முயற்சிகள் தமிழர்
தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை வழங்கவில்லை.
</p><p>
எனவே, தமிழர் இறையாண்மையை மீட்டெடுப்பது, அமைதியான மற்றும் ஜனநாயக நடைமுறையின்
மூலம் சுதந்திரமான தமிழ் ஈழத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பையும் உள்ளடக்கி, ஒரு
சர்வதேச அரசியல் தீர்வின் பகுதியாக பரிசீலிக்கப்பட வேண்டும் என்று
பிரித்தானியாவையும் சர்வதேச சமூகத்தையும் கேட்டுக்கொள்கிறோம்.</p><p>

எனவே, தீர்க்கப்படாமல் இருக்கும் இந்தக் கேள்வியை சர்வதேச சட்டத்தின் முன்
கொண்டுசெல்ல பிரித்தானியா உதவ வேண்டும் என்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T23:06:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர் அழுத்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான வான்! ஏழு பேர் வைத்தியசாலையில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/van-crashes-into-high-voltage-power-pole-1788030279"></link>
            <id>https://ibctamil.com/article/van-crashes-into-high-voltage-power-pole-1788030279</id>
            <summary type="text">கொழும்பில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

பிலியந்தலை–கொட்டாவ வீதியில் பயணித்த வானே இன...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
</p><p>
பிலியந்தலை–கொட்டாவ வீதியில் பயணித்த வானே இன்று இரவு இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><p>
குறித்த வான் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த உயர் அழுத்த மின் கம்பத்தில் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p></p><h2>மருத்துவமனையில் அனுமதி</h2><p>
 இந்நிலையில் வானில் பயணித்த ஏழு பயணிகள் விபத்தில் காயமடைந்து, சிகிச்சைக்காகக் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/439afe7e-4741-4b8f-a869-a247c4a28786/26-6a932d496d8b1.webp' /></p><p>

 சாரதியின் தூக்க கலக்கமே விபத்துக்கு காரணம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். </p><p>

மேலும், மோதலைத் தொடர்ந்து, அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T22:57:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கான சிறப்புத் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/special-project-address-water-shortage-batticaloa-1788043769"></link>
            <id>https://ibctamil.com/article/special-project-address-water-shortage-batticaloa-1788043769</id>
            <summary type="text">மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் நிலவும் குடிநீர் பற்றாக்குறைக்குத் தீர்வாக, நிலத்தடி நீரைப் பெறும் திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

இத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் நிலவும் குடிநீர் பற்றாக்குறைக்குத் தீர்வாக, நிலத்தடி நீரைப் பெறும் திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
</p><p>
இத்திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் இன்று மொனராகலை மாவட்டத்தில் ஆரம்பமாகியுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>
எல் நினோ வானிலையால் மேலும் மோசமடைந்துள்ள தற்போதைய வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட 75,000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு ஏழு மாவட்டங்களில் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகப் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>வறண்ட வானிலை</h2><p>
</p><p>
மொனராகலை, பதுளை, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுர, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகள் வறண்ட வானிலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1b6091a-3845-4ff0-807e-6ed7cf9b73c5/26-6a9361fad26f4.webp' /></p><p>
</p><p>
இந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் மொத்த எண்ணிக்கை 84,500-ஐத் தாண்டியுள்ளது.
</p><p>
மொனராகலையில், எட்டு பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 75 கிராம அலுவலர் பிரிவுகளில் சுமார் 15,000 குடும்பங்கள் தற்போது வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>

குறிப்பாக சியம்பலாண்டுவ மற்றும் மடகம பிரதேச செயலகப் பிரிவுகள் மாவட்டத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளாகும்.
</p><p>
தற்போது 39 தண்ணீர் டேங்கர்கள் மூலம் குடிநீர் குறித்த பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T22:50:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை ரித்து வர்மா அழகிய போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ritu-varma-cute-in-blue-dress-1788043762"></link>
            <id>https://cineulagam.com/article/ritu-varma-cute-in-blue-dress-1788043762</id>
            <summary type="text">விஐபி 2, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்களில் நடித்திருப்பவர் ரித்து வர்மா. அவர் நடித்த துருவ நட்சத்திரம் படம் நீண்ட காலமாக ரிலீஸ் ஆகாமல் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஐபி 2, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்களில் நடித்திருப்பவர் ரித்து வர்மா. அவர் நடித்த துருவ நட்சத்திரம் படம் நீண்ட காலமாக ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.</p><p>தெலுங்கில் படங்கள், வெப் சீரிஸ் என பிசியாக நடித்து வருகிறார் ரித்து வர்மா.</p><p>அழகிய லுக்கில் அவர் தற்போது எடுத்த போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ பாருங்க.</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-29T22:49:30+00:00</updated>
        </entry>
    </feed>
