<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-18T21:37:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலிய கடற்கரையில் நீச்சல் வீரருக்கு நடந்த கொடூரம்: அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/shark-attack-at-perth-beach-1-swimmer-dead-1789765360"></link>
            <id>https://news.lankasri.com/article/shark-attack-at-perth-beach-1-swimmer-dead-1789765360</id>
            <summary type="text">Shark Attack at Perth Beach 1 Swimmer Dead: அவுஸ்திரேலிய கடற்கரையில் நடந்த சுறா தாக்குதலில் நீச்சல் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவுஸ்திரேலிய கடற்கர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Shark Attack at Perth Beach 1 Swimmer Dead: அவுஸ்திரேலிய கடற்கரையில் நடந்த சுறா தாக்குதலில் நீச்சல் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><h2> அவுஸ்திரேலிய கடற்கரையில் சுறா தாக்குதல்</h2><p>
மேற்கு அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உள்ள சோரென்டோ கடற்கரையில்(Sorrento Beach) வெள்ளிக்கிழமை காலை 10.15 மணிக்கு சுறா மீன் தாக்குதல் நடந்து இருப்பதாக அவசர கால உதவி படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இதையடுத்து ரோந்து படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டையானது முன்னெடுக்கப்பட்டது.</p><p> இந்த சுறா தாக்குதலில் நீச்சல் வீரர் ஒருவரின் உயிரிழந்து இருப்பதாக கூறப்படும் நிலையில், அவரது உடல் மீட்கப்பட்டுள்ளதா என்பது குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் தெரிவிக்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c253ef0-fc2b-47b9-8963-2bd7c2cfcd25/26-6aada6f1a32b0.webp' /></p><p> கடற்கரைக்கு வெறும் 50 மீட்டர் தொலைவில் நடந்த இந்த சுறா தாக்குதல் சம்பவத்தை கரையில் இருந்த பலர் நேரில் பார்த்ததாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.</p><p> சுறா தாக்குதலை தொடர்ந்து சோரென்டோ கடற்கரை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மூடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் யாரும் அப்பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-18T21:30:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீரிமலையில் கொட்டப்பட்ட வைத்தியசாலையின் ஆபத்தான மருத்துவ கழிவுகள் ; பிரதேச சபை உறுப்பினர்கள் கடும் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hazardous-medical-waste-hospital-dumped-keerimalai-1789766465"></link>
            <id>https://jvpnews.com/article/hazardous-medical-waste-hospital-dumped-keerimalai-1789766465</id>
            <summary type="text">பல தரப்பினரின் எதிர்ப்புகளையும் மீறி யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் தொடர்ச்சியாக கழிவுகள் கொட்டப்பட்டு வரும் நிலையில், குறித்த பகுதியில் தெல்லிப்பழை பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல தரப்பினரின் எதிர்ப்புகளையும் மீறி யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் தொடர்ச்சியாக கழிவுகள் கொட்டப்பட்டு வரும் நிலையில், குறித்த பகுதியில் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையைச் சேர்ந்ததாக கூறப்படும் பெருமளவிலான ஆபத்தான மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>இன்று (வெள்ளிக்கிழமை) மாலை குறித்த பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
கீரிமலை பகுதியில் கட்டுப்பாடின்றியும், உரிய அனுமதிகள் இன்றியும் சுமார் 300 டிப்பர் வாகனங்களில் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. </p><p>இதற்கு கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afa896a7-7645-4ffd-b4b3-dc987301c9ca/26-6aadab4315d1a.webp' /></p><p>இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.</p><p>

இதன்போது, ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ச. சிறிபவானந்தராசா, கீரிமலை பகுதியில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை மாத இறுதிக்குள் மீள அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளருக்கு பணிப்புரை விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

மேலும், வலி. வடக்கு பிரதேச சபை பகுதிகளில் கழிவுகளை கொட்டக்கூடாது எனவும் குறித்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
</p><p>
இதனிடையே, நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தை சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர்.</p><p>

கீரிமலையில் ஏற்கனவே கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தியே உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

அதேவேளை, உள்ளூராட்சி ஆணையாளர், மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகள் மற்றும் வலி. தெற்கு பிரதேச சபையின் சுகாதார பரிசோதகர் உள்ளிட்ட அதிகாரிகள், வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களுடன் இணைந்து நேற்று கீரிமலையில் கழிவுகள் கொட்டப்பட்டுள்ள பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
</p><p>
இதன்போது, குறித்த கழிவுகளை உடனடியாக அகற்றுமாறு வலி. தெற்கு பிரதேச சபைக்கு உத்தரவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/760cbfde-4bcd-4f70-b300-5ddb90ba0ff2/26-6aadab43c1610.webp' /></p><p>இவ்வாறான நிலையில், வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான உழவு இயந்திரம் மூலம் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையைச் சேர்ந்ததாக கூறப்படும் பெருமளவிலான ஆபத்தான மருத்துவக் கழிவுகள் கீரிமலை பகுதியில் கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பிரதேச சபை உறுப்பினர்கள், பொதி செய்யப்பட்ட நிலையில் பெருமளவிலான மருத்துவக் கழிவுகள் அப்பகுதியில் கொட்டப்பட்டிருந்ததை அவதானித்ததாக தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பில் புகைப்படங்கள் மற்றும் காணொளி ஆதாரங்களுடன் உரிய அதிகாரிகளிடம் முறையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

கடந்த இரண்டு மாதங்களாக கீரிமலை பகுதியில் கழிவுகளை கொட்டக்கூடாது என தாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கழிவுகளை அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், உள்ளூராட்சி ஆணையாளரும் அவற்றை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ள நிலையில், அவற்றை மீறி ஆபத்தான மருத்துவக் கழிவுகள் அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ளதாகவும் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p>

இந்த சம்பவம் தொடர்பில் உரிய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T21:21:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிராக அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு தயாராகும் அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-prepares-for-next-phase-of-action-against-iran-1789753256"></link>
            <id>https://ibctamil.com/article/us-prepares-for-next-phase-of-action-against-iran-1789753256</id>
            <summary type="text">ஈரான் மீது கூடுதல் இராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வரும் நிலையில், அந்நாடு அமெரிக்காவுடன் ஒரு உடன்பாட்டை நாடுவதாக அமெரிக்க ஜனாதிபதி தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது கூடுதல் இராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வரும் நிலையில், அந்நாடு அமெரிக்காவுடன் ஒரு உடன்பாட்டை நாடுவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
</p><p>தொலைபேசி நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்ட அவரிடம், ஈரானை முற்றிலுமாக அழிப்பதா என்பது குறித்து பரிசீலித்து வருவதாக சமீபத்தில் கூறிய கருத்துக்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில் இதற்கு பதில் வழங்கிய அவர், "என்ன நடக்கிறது என்று பொருத்திருந்துபார்ப்போம்," என கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>இருதரப்பு&nbsp;உடன்பாடு</h2><p>அத்தோடு, இருதரப்பும் ஒரு உடன்பாட்டை எட்டுவதில் ஆர்வமாக உள்ளது என ட்ரம்ப் மேலும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97609579-c9e6-4986-97b9-4d3590bd5fd3/26-6aad77a9734d3.webp' /></p><p>“ஈரான் நிதி ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் எல்லா வகையிலும் இழந்து வருகிறது. </p><p>அந்த ஒப்பந்தம் சரியானதாக இல்லையென்றால், நான் அதைப் பற்றி யோசிக்கக் கூட மாட்டேன்.ஆனால் தற்சமயம், அவர்கள் எல்லா வகையிலும் இழந்து கொண்டிருப்பதால், ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள்.” என கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-18T21:07:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதியில் அனோஜனிற்கு இறுதி நிமிடங்களில் நடந்த மறைக்கப்பட்ட உண்மைகள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/final-moments-for-anojan-in-saudi-arabia-1789750970"></link>
            <id>https://tamilwin.com/article/final-moments-for-anojan-in-saudi-arabia-1789750970</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் உயிருக்கு போராடும் அனோஜனின் தாய் மற்றும் தந்தை, “எப்படியாவது எங்களுடைய மகனை மீட்டுத் தாருங்கள்” என இலங்கை அரசாங்கத்திடமும் மக்களிடமு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் உயிருக்கு போராடும் அனோஜனின் தாய் மற்றும் தந்தை, “எப்படியாவது எங்களுடைய மகனை மீட்டுத் தாருங்கள்” என இலங்கை அரசாங்கத்திடமும் மக்களிடமும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>

முகநூலில் பதிவிட்ட ஒரு பதிவுக்காக அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சிலர் தெரிவித்து வருகின்றனர். எனினும், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படவில்லை என்றும், மாறாக 5 வருட சிறைத்தண்டனையும் 3,000 சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.
</p><p>
இவ்வாறு இருவேறு தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், உண்மை என்ன என்பது தொடர்பில் பலரும் குழப்பத்தில் உள்ளனர்.</p><p>

இந்நிலையில், அனோஜன் தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கோரி முகநூலில் காணொளியொன்றையும் வெளியிட்டுள்ளார்.</p><p>

அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை என்ன? அவரை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா? இந்த விடயம் தொடர்பில் மேலும் பல தகவல்களுடன், செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி ஆராய்கின்றது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jPMCFUTKFaI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T21:06:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[டயானா விபத்து செய்தி கேட்டு எரிச்சலடைந்த ராணி எலிசபெத்! ஸ்பென்சர் அதிர்ச்சி கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/elizabeth-upon-hearing-the-news-diana-s-accident-1789765188"></link>
            <id>https://ibctamil.com/article/elizabeth-upon-hearing-the-news-diana-s-accident-1789765188</id>
            <summary type="text">மறைந்த இளவரசி டயானாவின் பாரிஸ் கார் விபத்துச் செய்தி முதன்முதலில் கிடைத்தபோது, மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் அதற்கு மிகவும் எரிச்சலுடன் எதிர்வினையாற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மறைந்த இளவரசி டயானாவின் பாரிஸ் கார் விபத்துச் செய்தி முதன்முதலில் கிடைத்தபோது, மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் அதற்கு மிகவும் எரிச்சலுடன் எதிர்வினையாற்றினார் என்று டயானாவின் சகோதரர் ஏர்ல் ஸ்பென்சர் தனது புதிய சுயசரிதை புத்தகத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்.</p><p> இங்கிலாந்தின் ஊடகம் ஒன்றில், தொடராக வெளியாகி வரும் அவரது நினைவுக்குறிப்புகளின் புதிய பகுதியில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.</p><p>விபத்தின் பாரதூரமான தன்மை மற்றும் டயானாவின் உயிருக்கு ஏற்பட்ட ஆபத்து குறித்து முழுமையாகத் தெரியவருவதற்கு முன்பாகவே ராணி இந்த அதிருப்தியை வெளியிட்டதாக ஸ்பென்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>எரிச்சலடைந்த தொனியில் பதில்</h2><p>டயானா விபத்தில் சிக்கிய ஆரம்பக்கட்ட செய்தியைக் கேட்டவுடன், ராணி எலிசபெத் மிகவும் எரிச்சலடைந்த தொனியில், "இப்போது அவள் என்ன புதுப் பிரச்சனை செய்கிறாள்?" (What is she up to now?) என்று கேட்டதாக ஏர்ல் ஸ்பென்சர் தனது நூலில் எழுதியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab65b8ba-ddf7-40d4-acb9-72a0a0b31c2e/26-6aada7319ea4b.webp' /></p><p>இருப்பினும், டயானா மரணமடைந்த பின்னர், அவரது 'HRH' (Her Royal Highness) என்ற அரச கௌரவப் பட்டத்தை மீண்டும் டயானாவிற்கு வழங்குவதற்கு ராணி எலிசபெத் முன்வந்ததாகவும், அதற்கான செய்தியைத் தனது தனிப்பட்ட செயலாளர் மூலம் அனுப்பியதாகவும் ஸ்பென்சர் அந்தப் புத்தகத்தில் விவரித்துள்ளார். </p><p>கடந்த 1997 ஆகஸ்ட் 31 அன்று பாரிஸில் நடந்த கார் விபத்தில் டயானா உயிரிழந்த ஐந்து நாட்களுக்குப் பிறகு, ராணி எலிசபெத் தொலைக்காட்சியில் நேரடியாகத் தோன்றி டயானாவிற்கு நெகிழ்ச்சியான அஞ்சலி செலுத்தியிருந்தார்.</p><p>இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்தத் தகவல்கள் பிரித்தானிய அரச வட்டாரத்தில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-18T21:00:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அத்துமீறி நுழைந்து ஒலிபெருக்கி சாதனங்களை பிடுங்கி சென்ற பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-seized-loudspeaker-equipment-thyaga-deepam-1789764394"></link>
            <id>https://jvpnews.com/article/police-seized-loudspeaker-equipment-thyaga-deepam-1789764394</id>
            <summary type="text">தியாக தீபத்தின் நினைவிடத்தில் அனுமதியின்றி ஒலிபெருக்கி சாதனங்களை பயன்படுத்தியதாக பொலிஸார் அவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
தியாக தீபத்தின் 4ஆம் ஆண்டு நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தியாக தீபத்தின் நினைவிடத்தில் அனுமதியின்றி ஒலிபெருக்கி சாதனங்களை பயன்படுத்தியதாக பொலிஸார் அவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>தியாக தீபத்தின் 4ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது நினைவிடத்திற்கு வந்த யாழ்ப்பாண பொலிஸார் அனுமதியின்றி ஒலி பெருக்கி சாதனங்களை பயன்படுத்தியதாக கூறி அவற்றை பறிமுதல் செய்து பொலிஸ் நிலையம் எடுத்து சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/247fb1f8-9fcb-47ec-983d-b3de0a61520a/26-6aada32e802df.webp' /></p><p>
</p><p>
பொலிஸார் ஒலிபெருக்கி சாதனங்களை பறிமுதல் செய்யும் போது பொலிஸாரின் வாகனத்தினுள் சிவில் உடையில் இருந்த பெண்ணொருவர் அவற்றை தனது கையடக்க தொலைபேசியில் காணொளி பதிவு செய்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. </p><p>

அதேவேளை வேலணை பகுதியில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நடைபெற்ற இடத்திற்கு சென்ற ஊர்காவற்துறை பொலிஸார் ஒலிபெருக்கி சாதனத்தை பறிமுதல் செய்துள்ளதுடன் , உடுவில் பகுதியில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்விடத்திற்கு சென்ற சுன்னாகம் பொலிஸாரும் ஒலிபெருக்கி சாதனங்களை பறிமுதல் செய்துள்ளனர்&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ed53ff3-1f52-4967-b61a-5e84e5fb1cc6/26-6aada32bb1cd8.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffc8afbd-e25e-4504-9830-6ef1dea11c6d/26-6aada32c6718d.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23c24bdc-8ee2-4ed7-bffd-f8159f0fe151/26-6aada32d1c13a.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b548af1-68db-4c95-abbe-276439cb91b7/26-6aada32dc5b7a.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/247fb1f8-9fcb-47ec-983d-b3de0a61520a/26-6aada32e802df.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T20:49:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலி நாடகங்களால் நாட்டு மக்களை பெலவத்தையின் சிறைக் கைதிகளாக்க அரசு முயற்சி - சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-allegations-against-the-anura-government-1789764224"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-allegations-against-the-anura-government-1789764224</id>
            <summary type="text">அரசமைப்பின் 22 ஆவது திருத்தத்தின் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும்
பெலவத்தையின் சிறைக்கைதிகளாக மாற்ற அரசு முயற்சிக்கின்றது என்று
எதிர்க்கட்சித் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22 ஆவது திருத்தத்தின் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும்
பெலவத்தையின் சிறைக்கைதிகளாக மாற்ற அரசு முயற்சிக்கின்றது என்று
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டினார்.</p><p>

ஐக்கிய மக்கள் சக்தியின் சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களுடன் எதிர்க்கட்சித்
தலைவர் அலுவலகத்தில் நேற்று(18.09.2026) நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்
தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
</p><h2>

22 ஆவது திருத்தம்</h2><p>
நாட்டின் ஜனநாயக முறையானது சட்டவாக்கம், நிர்வாகம், நீதித்துறை ஆகிய பிரதான
மூன்று தூண்களையும், சுதந்திர ஊடகங்கள் மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றையும்
அடிப்படையாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,
நடைமுறையில் காணப்படும் ஜனநாயக முறையையும் அதன் பிரதான தூண்களையும் அழிப்பதே
தற்போதைய அரசின் நோக்கம் என்றார்.
</p><p>
தடைகள் மற்றும் சமன்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இந்தத் தூண்களின்
அதிகாரங்கள், 22 ஆவது திருத்தம் மூலம் நீக்கப்படுகின்றன என்றும்,
நீதித்துறையின் சுதந்திரம் இல்லாமல் செய்யப்பட்டு நிர்வாகத்துறையின்
கைபொம்மையாக அது மாற்றப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afe8d910-979f-4a08-b0cb-b3d951218ac7/26-6aada2d4c5d74.webp' /></p><p>
</p><p>
 இதன் மூலம் தனிக் கட்சி ஆட்சியை ஏற்படுத்தி நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரமும்
பெலவத்தை கட்சித் தலைமையகத்தின் கீழ் கொண்டுவரப்படுகின்றது என்றும் அவர்
தெரிவித்தார்.
</p><p>
22 ஆவது திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சி தொடர்ந்தும் குரல் கொடுத்து
வருகின்றது என்று குறிப்பிட்ட சஜித் பிரேமதாஸ, தூக்கத்திலிருந்த தரப்புகளை
விழித்தெழச் செய்து நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அதற்கு எதிராகக்
குரல் எழுப்பியுள்ளதாகவும், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் குறித்து சர்வதேச
தரப்பினரையும் தூதுக்குழுக்களையும் சந்தித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
</p><h2>


சமூகத்தை பெலவத்தை மயமாக்க அரசு நடவடிக்கை</h2><p>

அரசுக்குத் தெளிவான மக்கள் ஆணை உள்ளது என்று கூறிக்கொண்டு, அந்த ஆணையைத்
தவறாகப் பயன்படுத்தி ஜனநாயகத்தை அழிக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு
வருகின்றது என்றும், இது குறித்து பொதுமக்களுக்குத் தாம் விழிப்புணர்வை
ஏற்படுத்தி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a47c00d-9da7-425a-b97e-69d4ee8d64f7/26-6aada2d599b05.webp' /></p><p>

இளைஞர் கழகத் தேர்தல்கள் நடைபெற்ற வேளை பெலவத்தையின் பட்டியலின் பெயரில்
நியமனங்கள் வழங்கப்பட்டதை ஐக்கிய மக்கள் சக்தியினரே எதிர்த்தது என்று
தெரிவித்த அவர், தற்சமயம் கிராமத்திலுள்ள சுயாதீனமாக இயங்கும் தொண்டு
நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் என்பவற்றைப் பெலவத்தை மயமாக்கி, தனிக் கட்சி
ஆட்சிக்குக் கொண்டு செல்ல அரசு முயற்சிக்கின்றது என்றும் சுட்டிக்காட்டினார்,

மக்களைப் பணிய வைத்து முழு நாட்டையும் அடிபணியச் செய்யும் திருத்தமாகவே இந்த
22 ஆவது திருத்தம் காணப்படுகின்றது என்று அவர் குற்றஞ்சாட்டினார்.
</p><p>
நாட்டில் தற்போதும் பொய்யும் புரட்டுமே காணப்படுகின்றது என்று தெரிவித்த
எதிர்க்கட்சித் தலைவர், கடந்த கால ஏமாற்று வேலைகளினாலேயே நாடு
வங்குரோத்தடைந்தது என்றும், இதனால் விவசாயிகள் உட்பட 220 இலட்சம் மக்களும்
அநாதரவான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
</p><p>
மேலும், கடந்த கால அரசமைப்புத் திருத்தங்களுக்குக் கையை உயர்த்தியவர்கள்
தற்போதைய ஆளும் தரப்பிலேயே இருக்கின்றனர் என்றும், ஐக்கிய மக்கள் சக்தி
அத்தகைய காரியங்களைச் செய்யாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T20:45:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்ணின் குடும்பத்திற்கு 40 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க Uber நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uber-ordered-to-pay-40-million-after-highway-incid-1789764066"></link>
            <id>https://news.lankasri.com/article/uber-ordered-to-pay-40-million-after-highway-incid-1789764066</id>
            <summary type="text">Uber Ordered to Pay $40 Million after Emily Parker Died in HIghway: சாலை விபத்தில் உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்திற்கு 40 மில்லியன் டொலர் இழப்பீடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Uber Ordered to Pay $40 Million after Emily Parker Died in HIghway: சாலை விபத்தில் உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்திற்கு 40 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க உபர்(Uber) நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><h2> நடுவழியில் இறக்கிவிடப்பட்ட பெண்கள்</h2><p>கலிபோர்னியாவில் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் திகதி 23 வயது இளம் பெண்ணான எமிலி நார்மின்-பார்கர்(Emily Normandin-Parker) மற்றும் அவரது 2 தோழிகள் வீடு திரும்புவதற்காக உபர் செயலியை பயன்படுத்தி டாக்ஸியை புக் செய்துள்ளனர்.</p><p>இந்த பயணத்தின் போது எமிலியின் தோழி உடல்நலக்குறைவு காரணமாக காரில் வாந்தி எடுத்துள்ளார்.</p><p> இதையடுத்து அந்த டாக்ஸியின் ஓட்டுநரான வூ ட்ரான்(Vu Tran) என்பவர் காரை நெடுஞ்சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு, போதையில்(intoxicated) இருந்த அந்த பெண்களை வலுக்கட்டாயமாக நடுவழியில் இறக்கி விட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e30b2b0a-f6c2-4fd0-9d4e-bf480f4e664a/26-6aada1e3826d8.webp' /></p><p> அவர்கள் இறக்கிவிடப்பட்ட சிறிது நேரத்தில், அவர்களுக்கு பின்னால் வந்த வாகனம் மோதி எமிலி பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p></p><h2> 40 மில்லியன் டொலர் இழப்பீடு</h2><p>
இந்த சம்பவம் தொடர்பாக எமிலியின் பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், எமிலி உபர் நிறுவனம் கூறிய அனைத்து வழிகாட்டுதல்களையும் முறையாக பின்பற்றியதாக தெரிவித்துள்ளனர்.</p><p> மேலும் அவளை உபர் நிறுவனம் பாதுகாப்பாக வீடு சேர்ப்பார்கள் என்று நினைத்தோம், ஆனால் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் உடனடியாக உபர் நிறுவனத்தை தொடர்பு கொண்டு காரை சுத்தம் செய்வதற்கான கட்டணத்தை கோரியதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> இந்நிலையில் நடுவழியில் இறக்கிவிடப்பட்டு உயிரிழந்த எமிலியின் குடும்பத்தினருக்கு உபர் நிறுவனம் 40 மில்லியன் டொலர் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று மத்தியஸ்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T20:41:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுவயதிலேயே போதைப்பொருள் பாவனை - 11 வயது சிறுவனின் வீட்டிற்கே சென்ற பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/11-year-old-boy-went-viral-on-social-media-1789763455"></link>
            <id>https://tamilwin.com/article/11-year-old-boy-went-viral-on-social-media-1789763455</id>
            <summary type="text">11 வயது சிறுவன் ஒருவன் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்று சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளி தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பொலிஸார...</summary>
            <content type="html"><![CDATA[<p>11 வயது சிறுவன் ஒருவன் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்று சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளி தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

இந்த விடயம் தொடர்பில் இலங்கை பொலிஸாரின் முகநூல் பக்கத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு, பதிவொன்று பகிரப்பட்டுள்ளது.</p><p> </p><p>

மேற்படி பதிவில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
</p><p>
11 வயது சிறுவன் ஒருவன் போதைப்பொருள் பயன்படுத்தும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.</p><h2>பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை</h2><p> இந்த விடயம் தொடர்பில் இலங்கை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் விசாரணை ஆரம்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb33cb7c-d4d1-44f3-acd5-ed647687d5a4/26-6aada0366e84f.webp' /></p><p> 

பொலிஸ் பிரதித் தலைவர் தர்ஷிக குமாரியின் அறிவுறுத்தல்களின் பேரில், தலைமை ஆய்வாளர் நிமாலி பொன்சேகா மற்றும் ஆய்வாளர் கந்தீபன் தலைமையிலான அதிகாரிகள், நேற்று(18.09.2026) 
 கணேமுல்லாவில் உள்ள சுமேத மாவத்தையில் குறித்த சிறுவன் இருப்பதை கண்டறிந்துள்ளனர். </p><p>

மேலும், குறித்த சிறுவன், பாதுகாப்பற்ற சூழலில் வளர்வதை அவதானித்த பொலிஸார், பொலிஸ் பாதுகாப்புப் பொறுப்பில் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

அதன் பின்னர், குறித்த சிறுவனும், அவனது தாயாரும் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். </p><p>

இந்த நிலையில், சிறுவனின் நலனையும் பாதுகாப்பையும் உறுதி செய்த பின்னர், மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T20:34:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரயில் நிலைய அதிபர்களின் 48 மணி நேர போராட்டம் இன்று நள்ளிரவுடன் நிறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/railway-station-masters-strike-end-midnight-today-1789763253"></link>
            <id>https://jvpnews.com/article/railway-station-masters-strike-end-midnight-today-1789763253</id>
            <summary type="text">ரயில் பொது முகாமையாளரை பதவியில் இருந்து நீக்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 48 மணிந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரயில் பொது முகாமையாளரை பதவியில் இருந்து நீக்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>இந்த தகவலை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e173b8e-71d2-49bd-9442-ee162df847ca/26-6aad9eb6dc910.webp' /></p><p>
</p><p>
குறித்த வேலைநிறுத்தப் போராட்டம் வெற்றியளித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
எனினும், கடந்த காலங்களில் சில தொழிற்சங்கங்கள் முன்னெடுத்ததைப் போன்று பொதுமக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வகையில் அல்லது சதி நோக்கத்துடன் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பது தமது சங்கத்தின் நோக்கம் அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தொழிற்சங்கத்தின் கோரிக்கைகள் தொடர்பில் உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே இந்த அடையாள வேலைநிறுத்தத்தின் பிரதான நோக்கம் எனவும் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்நிலையில், வேலைநிறுத்தம் நிறைவடைந்த பின்னர் ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T20:27:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 ஆவது திருத்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/opposition-parties-protest-against-22nd-amendment-1789762893"></link>
            <id>https://jvpnews.com/article/opposition-parties-protest-against-22nd-amendment-1789762893</id>
            <summary type="text">தற்போதைய அரசாங்கம் ஒரு கட்சி முறைமையை நோக்கி நாட்டைக் கொண்டு செல்லத் தயாராகும் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக, எதிர்வரும் 24 ஆம் திகதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசாங்கம் ஒரு கட்சி முறைமையை நோக்கி நாட்டைக் கொண்டு செல்லத் தயாராகும் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக, எதிர்வரும் 24 ஆம் திகதி எதிர்க்கட்சியின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் நாடாளுமன்ற சந்திப்புக்கு அருகில் ஒன்று கூடவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.</p><p> 

சுதந்திர செயல்பாட்டு மத்திய நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அதன் பிரதிநிதிகள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9e160bc-ef45-42f3-8e2f-76044f2389e0/26-6aad9d4e6a5e7.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T20:21:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் குடியேற்றத்தை கட்டுப்படுத்த புதிய விசா நடைமுறைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/australian-migration-reforms-1789760940"></link>
            <id>https://tamilwin.com/article/australian-migration-reforms-1789760940</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு நபர்களின் பணி&amp;nbsp;பணி விடுமுறை விசா விதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு நபர்களின் பணி&nbsp;பணி விடுமுறை விசா விதிகளை கடுமையாக்க உள்ளதாக அவுஸ்திரேலிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p>அஸ்திரேலியாவில் பெரும்பாலான சர்வதேச மாணவர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் தங்கி படித்தும் பகுதி நேரமாக வேலை செய்தும் வருகின்றனர்.
</p><h2>மாணவர் விசாக்களை புதுப்பிக்க</h2><p>
கடந்த 2023ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவில் உச்சபட்சமாக 5,18,000 வெளிநாட்டவர்கள் தங்கி வருவதாக அறிக்கை ஒன்று வெளியானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a146456-fd3c-4a97-a5a3-b8261a2288b0/26-6aad9bb450914.webp' /></p><p>இதையடுத்து அவுஸ்திரேலியாவின் தீவிர வலதுசாரி கட்சியான ஒன் நேஷன் கட்சி, அந்நாட்டு மக்களிடையே தீவிரமாக எழுச்சி பெற்று&nbsp;வரும் நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் தற்காலிகமாக புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை&nbsp;7,50,000 ஆக குறைக்கப்போவதாக கடந்த வாரம் அறிவித்தது.</p><p>இதைத்தொடர்ந்து அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி பர்க், விசா காலம் முடிந்தும் இங்கு தங்கியிருப்பவர்கள்&nbsp;மீதான நடவடிக்கைகள் தீவிரமாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் சர்வதேச மாணவர்கள் தகுதி அளவில் முன்னேறினால் மட்டுமே, தங்களது மாணவர் விசாக்களை புதுப்பிக்க&nbsp;அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>[BYVHUNC</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T20:15:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொந்த அத்தையைக் கழுத்தறுத்துக் கொன்ற 7 வயது சிறுவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/7-year-old-boy-slits-own-aunt-throat-and-kills-her-1789747083"></link>
            <id>https://canadamirror.com/article/7-year-old-boy-slits-own-aunt-throat-and-kills-her-1789747083</id>
            <summary type="text">பிரான்ஸின் வால்-து-மார்ன் (Val-de-Marne) பகுதியில், 7 வயது சிறுவன் ஒருவன் தனது சொந்த அத்தையை கத்தியால் குத்தியதில், அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸின் வால்-து-மார்ன் (Val-de-Marne) பகுதியில், 7 வயது சிறுவன் ஒருவன் தனது சொந்த அத்தையை கத்தியால் குத்தியதில், அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>சென்-மோர்-டெ-போஸ் (Saint-Maur-des-Fossés) நகரில் இன்று வெள்ளிக்கிழமை (செப்டெம்பர் 18) அதிகாலை சுமார் 4.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். </p><p>அப்போது, வீதியில் பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்ததையும், மற்றொரு பெண் துணியொன்றைப் பயன்படுத்தி அவரது கழுத்துப் பகுதியில் ஏற்பட்டிருந்த காயத்தில் இருந்து வெளியேறிய இரத்தத்தை கட்டுப்படுத்த முயன்றுகொண்டிருந்ததையும் காவல்துறையினர் அவதானித்துள்ளனர்.
</p><p>
அவர்களுக்கு அருகில் சிறுவன் ஒருவனும் நின்றுகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07d1c20f-cd37-4965-af6c-daec0b1c07e3/26-6aad5f8ce5041.webp' /></p><p>பலத்த காயமடைந்திருந்த பெண்ணுக்கு அவசரகால மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்ற முயன்ற போதிலும், அதிகளவான இரத்தப்போக்கு காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
</p><p>
உயிரிழந்தவர் நதியா எஸ். (Nadia S.) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த நதியாவுக்கு உதவி செய்ய முயன்ற பெண் அவரது சொந்த சகோதரியான யாஸ்மினா எஸ். (Yasmina S.) என்பதும், அவருக்கு அருகில் நின்றுகொண்டிருந்தது யாஸ்மினாவின் 7 வயது மகன் என்பதும் தெரியவந்துள்ளது.</p><p>விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி, வியாழக்கிழமை இரவு யாஸ்மினாவின் வீட்டிற்கு நதியா தங்குவதற்காக சென்றுள்ளார்.
</p><p>
இதன்போது, நள்ளிரவு வேளையில் தலைமுடியை நேராக்குவது (Hair straightening) தொடர்பாக இரு சகோதரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
வாக்குவாதம் பின்னர் கடும் சண்டையாக மாறியதுடன், நதியா தனது சகோதரியான யாஸ்மினாவை தாக்கியதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

இந்தச் சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்த யாஸ்மினாவின் 7 வயது மகன், திடீரென வீட்டின் குளியலறைக்குச் சென்று அங்கிருந்த கத்தியை எடுத்துக்கொண்டு வந்து நதியாவின் கழுத்துப் பகுதியில் குத்தியதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கத்திக்குத்துக்கு உள்ளான நதியா, உதவி கோரி வீட்டிலிருந்து வெளியேறி வீதியை நோக்கி ஓடியுள்ளார். </p><p>எனினும், சிறிது தூரம் சென்ற நிலையில் அவர் இரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்ததாகவும், பின்னர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c97667ea-1e17-479b-b57e-3e128d426a6c/26-6aad5f8da14eb.webp' /></p><p>சம்பவத்தின் போது யாஸ்மினாவின் இடது மணிக்கட்டிலும் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கும் அவசரகால மருத்துவக் குழுவினர் சிகிச்சை வழங்கியுள்ளனர்.
</p><p>
அதேவேளை, 7 வயது சிறுவனின் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>எனினும், சம்பவத்தைத் தொடர்ந்து சிறுவன் மருத்துவப் பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் பிரான்ஸ் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>

ஒரு குடும்பத்திற்குள் ஏற்பட்டதாகக் கூறப்படும் தகராறு, எதிர்பாராத வகையில் வன்முறையாக மாறி, இறுதியில் 7 வயது சிறுவனின் கைகளால் அவரது சொந்த அத்தை உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-18T20:11:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு நொடியில் மாறிய ஹனிமூன் கனவு ; புதுமணப்பெண்ணுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/horror-befalls-a-newlywed-bride-on-her-honeymoon-1789762277"></link>
            <id>https://jvpnews.com/article/horror-befalls-a-newlywed-bride-on-her-honeymoon-1789762277</id>
            <summary type="text">இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் உத்தர் தினாஜ்பூர் பகுதியைச் சேர்ந்த சவுவிக் தாஸ் என்பவருக்கும் நிகிதா சாஹா என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் உத்தர் தினாஜ்பூர் பகுதியைச் சேர்ந்த சவுவிக் தாஸ் என்பவருக்கும் நிகிதா சாஹா என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
</p><p>
திருமணத்திற்குப் பின்னர் ஹனிமூனை கொண்டாடுவதற்காக புதுமணத் தம்பதி டார்ஜிலிங் பகுதியில் உள்ள சிட்டாங் மலைவாசஸ்தலத்திற்கு சென்றுள்ளனர்.</p><p> </p><p></p><p>அங்கு உள்ள சொகுசு விடுதி ஒன்றில் அவர்கள் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
குறித்த விடுதியில் விருந்தினர்களுக்காக பார்பிக்யூ (Barbecue) செய்து கொடுக்கும் வசதி இருந்துள்ளது.</p><p> இதையடுத்து சவுவிக் தாஸ் மற்றும் நிகிதா சாஹா ஆகியோர் பார்பிக்யூ தயாரிக்கும் பகுதிக்குச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57fb5682-7210-4039-b2e6-bc269a869924/26-6aad9ae759c00.webp' /></p><p>

அங்கு விடுதி ஊழியர் ஒருவர் அடுப்பில் பார்பிக்யூ தயாரித்துக் கொண்டிருந்த நிலையில், புதுமணத் தம்பதி அந்த அடுப்பிற்கு மிக அருகில் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது.</p><p>

இதன்போது, அடுப்பை எரியூட்டுவதற்காக பிளாஸ்டிக் கேனில் இருந்த திரவத்தை ஊழியர் ஒருவர் அடுப்பில் ஊற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>அப்போது எதிர்பாராத விதமாக அடுப்பிலிருந்து திடீரென தீப்பிழம்பு எழுந்துள்ளது.
</p><p>
அருகில் அமர்ந்திருந்த நிகிதா சாஹாவின் உடலில் அந்த தீ பற்றியதுடன், சில நொடிகளிலேயே அவரது உடல் முழுவதும் தீ பரவியதாக கூறப்படுகிறது.
</p><p>
இதனைக் கண்ட அவரது கணவர் சவுவிக் தாஸ், தனது மனைவியின் உடலில் பற்றிய தீயை அணைக்க உடனடியாக முயன்றுள்ளார். </p><p>அதேவேளை, அங்கிருந்த விடுதி ஊழியரும் தனது சட்டையை கழற்றி தீயை அணைக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இந்த சம்பவத்தில் நிகிதா சாஹாவுக்கு பாரிய தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
</p><p>
சம்பவம் தொடர்பாக சவுவிக் தாஸ் முன்வைத்துள்ள குற்றச்சாட்டின்படி, விடுதியில் தீயை அணைப்பதற்கான உரிய உபகரணங்கள் தயார் நிலையில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. </p><p>மேலும், தீக்காயமடைந்த தனது மனைவியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கும் விடுதி நிர்வாகத்தினர் போதிய உதவி வழங்கவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a80d55f-efb3-4e77-b7c4-890f66dcf16a/26-6aad9ae80ffa4.webp' /></p><p>
</p><p>
சுமார் ஒரு மணி நேரம் அங்கேயே காத்திருந்த பின்னரே மருத்துவமனைக்கு செல்வதற்கான வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
இதனையடுத்து, நிகிதாவை சிலிகுரி நோக்கி அழைத்துச் சென்றுள்ளனர். </p><p>சுமார் மூன்று மணி நேரம் நீடித்த அந்த பயணத்தின்போது, தீக்காயங்களால் ஏற்பட்ட கடுமையான வலியில் அவர் துடித்துக் கொண்டிருந்ததாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
பின்னர் நிகிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனைகளில் அவரது உடலில் சுமார் 60 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>
விடுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டிருந்தனவா, தீயை ஏற்படுத்தியதாக கூறப்படும் திரவம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது, விபத்துக்குப் பின்னர் அவசர மருத்துவ உதவி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T20:11:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகனின் உயிரை காப்பாற்ற போராடும் இலங்கை தாய் - சவூதி மன்னர்களிடம் விடுக்கப்படவுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anojan-s-mother-s-request-1789761902"></link>
            <id>https://tamilwin.com/article/anojan-s-mother-s-request-1789761902</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு மரண
தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களைத் தொடர்ந்து, அகில இலங்கை
ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு மரண
தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களைத் தொடர்ந்து, அகில இலங்கை
மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், நற்பிட்டிமுனையில் உள்ள அனோஜன் சிவராசாவின் இல்லத்திற்கு சென்று நிலைமை குறித்து கேட்டறிந்து கொண்டுள்ளார்.
</p><p>
இந்த விஜயம் நேற்று(18.09.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 


இதன்போது, அனோஜனின் தாயார் மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட குடும்ப
உறுப்பினர்களைச் சந்தித்த ரிஷாட் பதியுதீன், அவர்களுக்கு ஆறுதல்
தெரிவித்ததுடன், அனோஜனின் நிலைமை தொடர்பில் உரிய தரப்பினருடன்
கலந்துரையாடுவதாகவும் நம்பிக்கையளித்துள்ளார்.
</p><p>
இதன்போது கருத்து வெளியிட்ட ரிஷாட் பதியுதீன்,
</p><p>
அனோஜன் சிவராசாவுக்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக
வெளியாகியுள்ள செய்தி இலங்கை முஸ்லிம் சமூகத்தினரிடையேயும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
</p><h2>

சவூதி அரேபியா மன்னர்களிடம் விடுக்கப்படவுள்ள கோரிக்கை.</h2><p>

மேலும், இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற
உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து, அனோஜன் சிவராசா தொடர்பில் ஜனாதிபதியிடமும்
சவூதி அரேபிய மன்னரிடமும் அவசர வேண்டுகோளை முன்வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bca5976e-1be5-49a7-8e1f-66a7bda0d99d/26-6aad9a1856c9c.webp' /></p><p> </p><p>

அதேவேளை, முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா சபையிடமும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, அனோஜனின் விடுதலை
தொடர்பில் சவூதி அரேபிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்க நடவடிக்கை
எடுக்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளோம்.</p><p> 

இதன்போது, அனோஜனின் குடும்பத்தினர் முஸ்லிம் சமூகம் இந்த விடயத்தில்
தங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
</p><p>
இதேவேளை, அனோஜனின் மற்றும் பெற்றோர் குடும்பத்தினர் அனுஜனின் விடுதலை
தொடர்பில் கொண்டிருக்கின்ற அதே உணர்வுடன் தாங்களும் முஸ்லிம் சமூகமும் செயற்படுவோம் என்றார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfc610cb-f8f6-45b4-948b-80331e8bc287/26-6aad9a19695f1.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T20:08:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேர்த்திக்கடன் செலுத்த சென்ற தாய்க்கு நேர்ந்த கதி - நேரில் பார்த்த 16 வயது மகள் கொடுத்த வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/train-accident-in-anuradhapura-1789760907"></link>
            <id>https://tamilwin.com/article/train-accident-in-anuradhapura-1789760907</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் உள்ள ஒரு புனிதத் தலத்தில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்கான சென்ற இரண்டு இரண்டு பெண் சிவில் பாதுகாப்புப் படை அதிகாரிகளின் மரணத்திற்கான கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் உள்ள ஒரு புனிதத் தலத்தில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்கான சென்ற இரண்டு இரண்டு பெண் சிவில் பாதுகாப்புப் படை அதிகாரிகளின் மரணத்திற்கான காரணம் வெளியிடப்பட்டுள்ளதுடன், 16 வயது மகளிடம் இருந்து வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது.&nbsp;</p><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p><p>


அனுராதபுரத்தில் உள்ள ஒரு புனிதத் தலத்தில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்கான சென்ற இரு அதிகாரிகளும் தொடருந்து மோதி உயிரிழந்துள்ளனர்.</p><h2>

இறப்புக்கான காரணம்</h2><p>
இவர்களின் இறப்பிற்கு விபத்தின் பொழுது ஏற்பட்ட பலத்த காயங்களே காரணம் என்றும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.</p><p> 

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை களுத்துறை - தோட்டமுன மரண விசாரணை அதிகாரி நிரோஷா நிலுக்ஷினி முன்னெடுத்துள்ளதுடன், களுத்துறை நாகோடா போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/900d876d-f318-4151-aa0e-cb0014aaaf86/26-6aad964410218.webp' /></p><p> </p><p>

அத்துடன், சிறப்பு நீதித்துறை மருத்துவ அதிகாரி கே.எம்.டி.பி. குணதிலகா சமர்ப்பித்த பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகளின் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டது.</p><p>

 மாதுகம - மகா களுபஹானவைச் சேர்ந்த 58 வயதான விதான கமகே ரேணுகா தமயந்தி மற்றும் அகலவத்தை - உடவெலவைச் சேர்ந்த 53 வயதான தேவனி குருகே ஸ்ரீயானி ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். </p><p>

 இருவரும் செருப்பிட்ட சிவில் பாதுகாப்புப் படை முகாமில் பணியாற்றிய அதிகாரிகள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. </p><h2>

16 வயது மகள் பார்த்த சம்பவம்</h2><p>

சம்பவம் நடந்த தினத்தில், ஸ்ரீயானியின் 16 வயது மகள் சித்துமினி ஜெயநெத்தி, அதிகாலையில் தனது தாயார் மற்றும் தோழியுடன் அனுராதபுரம் செல்வதற்காக பேருந்தில் களுத்துறைக்கு வந்ததாக கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2971e0e8-b6b0-4187-a6fa-d43acb65aa03/26-6aad9644f0b1c.webp' /></p><p>

அதன் பின்னர் அவர் மைதானத்தின் பக்கத்திலிருந்து தொடருந்து தண்டவாளத்தில் நுழைந்து தொடருந்து நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​எதிர்பாராதவிதமாக ஒரு தொடருந்து வந்தது.

தொடருந்து வருவதைக் கண்டவுடன், தான் சுமந்து வந்த இரண்டு பைகளையும் தொடருந்து மேடையில், வீசிவிட்டு உடனடியாக மேடையில் இருந்து மேலே ஏறுவதற்கு முயற்சித்துள்ளனர்.</p><p>

மேலும், தனது தாயாரையும் மற்ற பெண்ணையும் தூக்க முயன்றதாகவும், ஆனால் அதற்குப் போதுமான நேரம் இல்லாத காரணத்தினால், அப்போது, ​​அவர்கள் இருவரும் தொடருந்து மேடையை பிடிக்க முயன்றபோது, ​​திடீரென வந்த தொடருந்து மோதி தூக்கி வீசப்பட்டதாக மகள் வாக்குமூலம் வழங்கியுள்ளார். </p><h2>

பயணத்தில் கலந்துக் கொள்ளாத கணவர்</h2><p>

இவர்களின் பிரேதப் பரிசோதனையின்போது சாட்சியமளித்த, உயிரிழந்த ஸ்ரீயானியின் கணவர் செனரத் ஜெயநெத்தி, “தனக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்ததால் இந்தப் பயணத்தில் கலந்துகொள்ளவில்லை” என்றார். </p><p> 

 இதனைத் தொடர்ந்து, ரேணுகா தமயந்தியின் மகளான லக்ஷிகா மதுஷானி, தனது தாய் அதிகாலையில் அனுராதபுரம் செல்வதற்காக வீட்டை விட்டுப் புறப்பட்டதாகவும், அவரை மத்துகம பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்ட பின்னரே இவ்வாறு விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T19:51:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[1952-ல் அணிவகுத்த பறக்கும் தட்டுகள்: வீடியோ ஆவணங்களை வெளியிட்ட அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-release-1952-historic-ufo-archive-1789760679"></link>
            <id>https://news.lankasri.com/article/us-release-1952-historic-ufo-archive-1789760679</id>
            <summary type="text">US Release 1952 Historic UFO Archive: பென்டகனின் நிர்வாக உத்தரவின் கீழ் 1952ம் ஆம் ஆண்டை சேர்ந்த UFO ஆவணங்களின் ஆறாவது தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>US Release 1952 Historic UFO Archive: பென்டகனின் நிர்வாக உத்தரவின் கீழ் 1952ம் ஆம் ஆண்டை சேர்ந்த UFO ஆவணங்களின் ஆறாவது தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.</p><h2> டிரம்பின் அதிரடி உத்தரவு</h2><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அரசிடம் உள்ள UFO தொடர்பான கோப்புகளை&nbsp; வெளியிடுமாறு நிர்வாக உத்தரவை இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.</p><p> இந்த உத்தரவின் கீழ் அமெரிக்க ராணுவத்தின் கட்டளை மையமான பென்டகன், UFO தொடர்பான வரலாற்று ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டு வருகிறது.</p><p>இதுவரை 6 தொகுப்புகளாக நூற்றுக்கும் மேற்பட்ட கோப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.</p><p> இதன் ஒரு பகுதியாக 6 தொகுப்பில் 1952ம் ஆண்டை சேர்ந்த பழமையான காட்சிகள் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04203ba8-6d55-47ba-a9b0-ffec2f6060e4/26-6aad94a8e4059.webp' /></p><p></p><h2> அணிவகுத்த பறக்கும் தட்டுகள்</h2><p>
1952 ம் ஆண்டை சேர்ந்த மேல் குறிப்பிட்ட காணொளி காட்சியை அமெரிக்க கடற்படை தலைமை வாரண்ட் அதிகாரி டெல்பெர்ட் சி. நியூஹவுஸ்(Delbert C. Newhouse) என்பவர் உட்டா(Utah) மாகாணத்தில் உள்ள ட்ரெமாண்டன்(Tremonton) அருகே பதிவு செய்துள்ளார்.</p><p>அதில் &nbsp;ஒளிரும் பறக்கும் தட்டுகள்(UFO) அணிவகுத்து செல்வது பதிவு செய்யப்பட்டிருந்தது.</p><p>இந்த சம்பவம் பதிவு செய்யப்பட்ட சிறிது காலத்திற்குள் அந்த காட்சிகளானது 'ப்ராஜெக்ட் ப்ளூ புக்’(Project Blue Book) என்ற திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டு விமானப்படையின் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ஆய்வு திட்ட குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.</p><p> இந்த திட்டமானது 1952 முதல் 1969 வயது இயங்கி வந்த நிலையில், எடுக்கப்பட்ட வீடியோவின் தரம் மிகவும் மோசமானதாக இருந்ததாலும், அவற்றில் நிலையான அடையாள புள்ளிகள் இல்லாத காரணத்தினாலும் சம்பந்தப்பட்ட பொருளின் தன்மையை ஆய்வாளர்களால் உறுதி செய்ய. முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.<br></p>]]></content>
            <updated>2026-09-18T19:44:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீனக் கப்பல் மோதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chinese-ship-collided-with-a-philippine-ship-1789755913"></link>
            <id>https://tamilwin.com/article/chinese-ship-collided-with-a-philippine-ship-1789755913</id>
            <summary type="text">தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் அரசாங்கத்திற்குச் சொந்தமான கப்பலொன்றின் மீது
சீனக் கடலோரப் பாதுகாப்புக் குழுவின் கப்பல் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் அரசாங்கத்திற்குச் சொந்தமான கப்பலொன்றின் மீது
சீனக் கடலோரப் பாதுகாப்புக் குழுவின் கப்பல் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக
மணிலா குற்றம் சாட்டியுள்ளது.
</p><p>
பஜாவான் மாகாணக் கரைக்கு அப்பால் உள்ள சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் பயணித்த
‘பி.ஆர்.பி டட்டு மகத் சலமத்’ என்ற பிலிப்பைன்ஸ் மீன்பிடி மற்றும் நீர்வாழ்
வளங்கள் திணைக்களத்தின் கப்பல் மீது, சீனக் கப்பல் அபாயகரமான முறையில் இராணுவ
நடவடிக்கைகளை மேற்கொண்டு மோதியதாக பிலிப்பைன்ஸ் கடற்கரை பாதுகாப்புப் படை
தெரிவித்துள்ளது.</p><h2>தொடர்ச்சியான மோதல் சம்பவங்கள்</h2><p>உள்ளூர் கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கச் சென்ற வேளையிலேயே இச் சம்பவம்
இடம்பெற்றுள்ளதுடன், மோதலினால் பிலிப்பைன்ஸ் கப்பலின் ஒரு பகுதி பலத்த
சேதமடைந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d349b569-a299-46fc-8b61-cec5d300f912/26-6aad8dc5e1915.webp' /></p><p>
எனினும் இச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனக்
தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
அதேவேளை, இக் குற்றச்சாட்டை சீனா முற்றாக மறுத்துள்ளது. பிலிப்பைன்ஸ் கப்பலே
எச்சரிக்கைகளைப் புறக்கணித்து, திடீரெனத் தனது பயணப் பாதையை மாற்றிச் சீனக்
கப்பலுக்கு முன்பாக அதிவேகமாக வந்தமையினாலேயே இச்சேதம் ஏற்பட்டதாகச் சீன
வெளியுறவு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>தென் சீனக் கடல் பகுதி முழுவதற்கும் உரிமை கோரிவரும் சீனாவிற்கும், அப்
பகுதியைத் தனது எல்லைக்குட்பட்டதாகக் கருதும் பிலிப்பைன்ஸிற்கும் இடையே கடந்த
சில மாதங்களாக இவ்வாறான தொடர்ச்சியான மோதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T19:20:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்ப்புகளை மீறி கீரிமலையில் கொட்டப்பட்ட புற்றுநோய் மருத்துவக் கழிவுகள் - நிர்வாகத்திற்கு எதிராக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cancer-medical-waste-dumped-at-rimalai-1789758843"></link>
            <id>https://tamilwin.com/article/cancer-medical-waste-dumped-at-rimalai-1789758843</id>
            <summary type="text">பல எதிர்ப்புக்களையும் மீறி கீரிமலை பகுதியில் தொடர்ச்சியாக குப்பைகள்
கொட்டப்பட்டு வரும் நிலையில், தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் பெருமளவான ஆபத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல எதிர்ப்புக்களையும் மீறி கீரிமலை பகுதியில் தொடர்ச்சியாக குப்பைகள்
கொட்டப்பட்டு வரும் நிலையில், தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் பெருமளவான ஆபத்தான மருத்துவ கழிவுகளும் அங்கு கொட்டப்பட்டுள்ளதாக வலி.
வடக்கு பிரதேச உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். </p><p>

இந்த சம்பவம் நேற்று(18.09.2026) அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><h2> 


கீரிமலை பகுதியில் கொட்டப்படும் குப்பைகள்</h2><p>


இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

கீரிமலை பகுதியில் கட்டுப்பாடின்றி , எவ்வித அனுமதிகளும் இன்றி சுமார் 300
டிப்பர் கழிவுகள் கொட்டப்பட்டுள்ள நிலையில், கடந்த இரண்டு மாத காலத்திற்கு
மேலாக வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து
வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/509fe807-1704-446e-89aa-75876b866e18/26-6aad8e21458fd.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு
கூட்டத்தில் குறித்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்ட போது, ஒருங்கிணைப்பு குழு
தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ச. சிறிபவானந்தராசா , வலி. வடக்கு பிரதேச சபை
தவிசாளருக்கு கொட்டப்பட்ட கழிவுகளை மாத இறுதிக்குள் மீள அள்ள நடவடிக்கை எடுக்க
வேண்டும் என பணித்திருந்தார்.</p><h2>

கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்</h2><p>
அத்துடன் வலி. வடக்கு பிரதேச சபையினரும் அப்பகுதிகளில் கழிவுகளை கொட்டக்கூடாது
என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.</p><p>

அவ்வாறான நிலையில், கடந்த வியாழக்கிழமை சபையின் மாதாந்த
கூட்டத்தை சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் புறக்கணித்து, கீரிமலையில்
கொட்டப்பட்ட குப்பைகள் மீள அள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/459be478-0545-4530-a492-19c3af6703d9/26-6aad8e2235c2f.webp' /></p><p>அதேவேளை,&nbsp; உள்ளூராட்சி ஆணையாளர், மத்திய சுற்றாடல் அதிகார சபை
அதிகாரிகள் , வலி.தெற்கு பிரதேச சபை சுகாதார பரிசோதகர் உள்ளிட்டவர்கள், வலி.
வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர்களுடன் இணைந்து குப்பைகள் கொட்டப்பட்ட
இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, அவற்றை உடனடியாக வலி. தெற்கு பிரதேச
சபையினர் மீள அள்ள வேண்டும் என உத்தரவிட்டனர்.</p><p>

இந்நிலையில் , வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான உழவு இயந்திரத்தில்
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் ஆபத்தான வைத்திய கழிவுகள் பெருமளவில்
கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ளன.</p><p>இது தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அப்பகுதி மக்கள் அறிவித்ததை
அடுத்து, சம்பவ இடத்திற்கு உறுப்பினர்கள் சென்று பார்வையிட்ட போது பெருமளவான
மருத்துவ கழிவுகள் பொதி செய்யப்பட்ட நிலையில் அங்கு
கொட்டப்பட்டுள்ளதனை அவதானித்துள்ளனர்.
</p><h2>
மருத்துவ கழிவுகள் அடையாளம்</h2><p>
இது தொடர்பில் உரிய தரப்பினருக்கு புகைப்பட மற்றும் ஒளிப்பட ஆதாரங்களுடன்
முறையிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22cfc59a-e23e-485b-b907-fd655815342f/26-6aad8e230ade4.webp' /></p><p>

கழிவுகளை இப்பகுதியில் கொட்ட வேண்டாம் என கடந்த இரு மாதங்களாக தாம் குரல்
கொடுத்து வரும் நிலையிலும், பிரதேச ஒருங்கிணைப்பு குழுவில் கழிவுகள் அள்ள பட
வேண்டும் என தீர்மானிக்கப்பட்டு, உள்ளூராட்சி ஆணையாளர் கழிவுகளை அள்ள
உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>

இந்த நிலையில் , அவற்றையெல்லாம் மீறி வலி. வடக்கு பிரதேச சபையினர்
ஆபத்தான மருத்துவ கழிவுகளை கொட்டி சென்றுள்ளமை படுமோசமான செயற்பாடு என வலி.
வடக்கு பிரதேச உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T19:16:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவை குறிவைக்கும் ரஷ்யா: ஜனாதிபதி மக்ரோன் விடுத்த எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/macron-sounds-alarm-over-russian-attacks-on-eu-1789758649"></link>
            <id>https://news.lankasri.com/article/macron-sounds-alarm-over-russian-attacks-on-eu-1789758649</id>
            <summary type="text">பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா மீதான ரஷ்யாவின் கலப்பின தாக்குதல் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மக்ரோன் எச்சரிக்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா மீதான ரஷ்யாவின் கலப்பின தாக்குதல் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><h2>மக்ரோன் எச்சரிக்கை</h2><p>
ரஷ்யாவின் விரோத போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ரஷ்யா நடத்தி வரும் கலப்பினப் போர் ஆபத்து அதிகரித்து இருப்பதாகவும் பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p> எலிசி அரண்மனையில் செய்தியாளர்களை சந்தித்த பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ரஷ்யாவின் இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தேவையான அனைத்து பாதுகாப்பு வியூகங்களை ஏற்படுத்தவும், விரிவான உள்கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் பாதுகாப்பு திட்டத்திற்கான உத்தரவையும் வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21e56dee-44c7-460a-88fa-db3f5d0ffe7a/26-6aad8cbb295c7.webp' /></p><p> சமீபத்திய காலத்தில் ரஷ்யா முன்னெடுத்து வரும் அத்துமீறிய தாக்குதல்களை சுட்டிக்காட்டிய மக்ரோன் , இதற்கான பதிலடிகள் நிச்சயமாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.</p><p> &nbsp;எங்களை அச்சுறுத்துவதும், உக்ரைனுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிப்பதை முடக்குவதுமே ரஷ்யாவின் நோக்கம் என்றும், ஆனால் அதற்கு நேர்மாறான பலன்கள் மட்டுமே ரஷ்யாவிற்கு கிடைக்கும் என்றும் மக்ரோன் தெரிவித்துள்ளார்.</p><p></p><p> இன்று நம்முடைய பாதுகாப்பும், நாளை நம்முடைய பாதுகாப்பும் உக்ரைனிடம் தான் அடங்கியுள்ளது நாம் நன்கு அறிவோம் என்பதால் எதற்கும் அஞ்ச மாட்டோம் என்று மக்ரோன் தெரிவித்துள்ளார்.</p><p>உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பதை தடுப்பதற்காக ரஷ்யா இத்தகைய அத்துமீறிய தாக்குதலில் ஈடுபடுவதாக பல்வேறு ஐரோப்பிய நாடுகள் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், தற்போது பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனின் இந்த கருத்தும் அதனுடன் ஒத்துப் போகிறது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T19:11:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் 7 வருடங்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்ட பெண் - 20000 டொலரை வெகுமதியாக அறிவித்த பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-dead-in-a-foreign-country-after-7-years-1789754294"></link>
            <id>https://tamilwin.com/article/woman-dead-in-a-foreign-country-after-7-years-1789754294</id>
            <summary type="text">2019ஆம் ஆண்டு பிரிட்டனில் காணாமல் போயிருந்த மூன்று பிள்ளைகளின் தாயின் உடல் எச்சங்கள், காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதியில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019ஆம் ஆண்டு பிரிட்டனில் காணாமல் போயிருந்த மூன்று பிள்ளைகளின் தாயின் உடல் எச்சங்கள், காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதியில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொலைச் சதி செய்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

 கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாகக் காணாமல் போயிருந்த 44 வயதான ஜோன் ஷீனின் உடல் எச்சங்கள், அவர் காணாமல் போன இடத்திலிருந்து 60 மைல்களுக்கும் அதிகமான தொலைவில் உள்ள தென்மேற்கு லண்டனின் ஃபெல்தாம் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீக்குப் பின்னர் கண்டெடுக்கப்பட்டுள்ளன. </p><p>

இந்தச் சம்பவம் தொடர்பாக, இங்கிலாந்து நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கிய துறைமுக நகரமான சவுத்தாம்ப்டனைச் சேர்ந்த 56 வயதான ஹாம்ப்ஷயர் என்பவரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><h2>


தீ விபத்தில் சிக்கிய உடல் எச்சங்கள்</h2><p>
குறித்த பெண், கடைசியாக டிசம்பர் 5, 2019 அன்று, ஃபேர்ஹாமிலிருந்து தனது சொந்த ஊரான சவுத்தாம்ப்டனுக்கு ஒரு தோழியுடன் சென்ற பொழுது காணாமல் போயுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebae6b93-1c9e-477e-9828-2163c68b9551/26-6aad7c33e071d.webp' />&nbsp;&nbsp;</p><p> </p><p>

அதன் பின்னர், பல மாதங்களாக அவரிடமிருந்து எந்தத் தகவலும் வராததால், குடும்ப உறுப்பினர்கள் பெப்ரவரி 2020ஆம் ஆண்டு பொலிஸாரிடம் முறைப்பாடளித்துள்ளனர்.</p><p>“லிட்டில் ஜோ” என்றும் அறியப்பட்ட, ஐந்து அடி உயரமுள்ள அந்தப் பெண் காணாமல் போனது குறித்து பொலிஸார் ஒரு விரிவான விசாரணையை ஆரம்பித்தனர்.</p><p>

இதன்போது, 4,000-க்கும் மேற்பட்ட தகவல்களும், 300-க்கும் மேற்பட்ட வாக்குமூலங்களும் பெறப்பட்டன. அவர் இருந்த பன்னிரண்டுக்கும் மேற்பட்ட முகவரிகளிலும், பல படகுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
</p><p>
பெட்பான்ட் லேக்ஸ் கண்ட்ரி பார்க் அருகே இரண்டு ஹெக்டேர் பரப்பளவில் தீ விபத்து ஏற்பட்ட சில நாட்களுக்குப் பின்னர், ஆகஸ்ட் 12 அன்று அந்த வழியே சென்ற ஒருவர் அந்த எலும்புக்கூடு எச்சங்களை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதனைத் தொடர்ந்து, டிஎன்ஏ மற்றும் தடயவியல் சோதனைகள் மூலம் அந்த உடல் ஷீனுடையது என்பதை பொலிஸார் உறுதி செய்துள்ளனர். </p><h2>

20,000 டொலர்கள் வெகுமதி</h2><p>
அவருக்கு நிலையான முகவரி, வங்கிக் கணக்கு அல்லது கார் எதுவும் இல்லாததால், பொலிஸாரின் விசாரணை கடுமையாகத் தடைபட்டது. </p><p>இந்தச் சம்பவம் தொடர்பாக 2020ஆம் ஆண்டு, ஐந்து ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/557e3821-fe4d-4279-86de-01757290ac4d/26-6aad7c34ae13c.webp' /></p><p>
</p><p>
அவரது இரண்டு மகள்களான லெய்லா மற்றும் ஹெய்லி, தங்கள் தாயை மிகவும் இனிமையான மற்றும் நட்பான பெண் என்று விவரித்தனர்.

 இருப்பினும், அவர் ஒரு பாலியல் தொழிலாளியாகவும் பணியாற்றியதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர். </p><p>

எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டது விசாரணைக்கு புதிய வழிகளைத் திறந்துள்ளது என்று துப்பறியும் தலைமை ஆய்வாளர் டோபி எல்காக் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதற்கிடையில், இந்த விசாரணைக்கு உதவும் துல்லியமான தகவல்களை வழங்குபவர்களுக்கு 20,000 டொலர்கள் வெகுமதி வழங்க கிரைம்ஸ்டாப்பர்ஸ் மீண்டும் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T19:10:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இருந்து அகற்றப்பட்ட ஒலிபெருக்கி - பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/loudspeaker-removed-from-thileepan-s-memorial-1789757743"></link>
            <id>https://tamilwin.com/article/loudspeaker-removed-from-thileepan-s-memorial-1789757743</id>
            <summary type="text">தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அனுமதியின்றி ஒலிபெருக்கி
பயன்படுத்தப்பட்டது எனக் குற்றஞ்சாட்டி, அங்கிருந்த ஒலிபெருக்கிச் சாதனங்களை
யாழ்ப்பாணம் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அனுமதியின்றி ஒலிபெருக்கி
பயன்படுத்தப்பட்டது எனக் குற்றஞ்சாட்டி, அங்கிருந்த ஒலிபெருக்கிச் சாதனங்களை
யாழ்ப்பாணம் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
</p><p>
இந்த சம்பவம் நேற்று(18.09.2026) இடம்பெற்றுள்ளது. </p><p>

நல்லூரில் அமைந்துள்ள பிரதான நினைவுத் தூபிப் பகுதியில் திலீபனின் நினைவேந்தல்
வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், நினைவேந்தல் பாடல்கள் ஒலிபரப்பப்பட்ட
போதே பொலிஸார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
</p><h2>
ஒலிபெருக்கிகள் பறிமுதல்</h2><p>

தமக்குக் கிடைத்த முறைப்பாட்டுக்கமையவே இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாகத்
தெரிவித்த பொலிஸார், அங்கு பயன்படுத்தப்பட்ட ஒலிபெருக்கி சாதனங்களைப் பறிமுதல்
செய்து பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1c08f24-3f55-4a45-a1b4-b309503fd1fb/26-6aad898106ef0.webp' /></p><p>

ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதற்குச் சான்று பகிர்வது போலப்
பொலிஸாரின் இந்தச் செயற்பாடு அமைந்திருக்கின்றது என்று அந்த இடத்தில் இருந்தவர்கள் விசனத்தைத் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d91a2df2-cf25-4039-b2a8-d24b4dd76752/26-6aad89821484e.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T18:57:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி விமான தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்: சேதமடைந்த இத்தாலிய போர் விமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/italian-fighter-jet-get-attacked-in-saudi-1789750272"></link>
            <id>https://news.lankasri.com/article/italian-fighter-jet-get-attacked-in-saudi-1789750272</id>
            <summary type="text"> Italian Fighter Jet get attacked in Saudi: சவுதி விமான தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இத்தாலிய போர் விமானம் சேதமடைந்து இருப்பது உறுதி செய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p> Italian Fighter Jet get attacked in Saudi: சவுதி விமான தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இத்தாலிய போர் விமானம் சேதமடைந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><h2> இத்தாலிய போர் விமானம் சேதம்</h2><p>ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படைக்கும் சவுதி அரேபியாவின் ராணுவத்திற்கும் இடையே மோதலானது தீவிரமடைந்து வருகிறது.</p><p> இந்த சூழ்நிலையில் வியாழக்கிழமை மேற்கு சவுதி அரேபியாவின் தைஃப் பகுதியில் அமைந்துள்ள கிங் பஹ்த் விமான தளத்தின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.</p><p> இந்த தாக்குதலில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இத்தாலிய ராணுவத்திற்கு சொந்தமான போர் விமானம் ஒன்று பலத்த சேதமடைந்துள்ளது.</p><p></p><p> இந்த தகவலை வெள்ளிக்கிழமை இத்தாலிய பாதுகாப்பு அமைச்சர் குவிடோ குரோசெட்டோ உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27bf1d00-880a-4463-8fa7-010bbe0631ac/26-6aad6c022e425.webp' /></p><p> தாக்குதலுக்கு உள்ளான போர் விமானம், ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிரான கூட்டுப்படைக்காக இத்தாலியின் தரப்பாக வழங்கப்பட்ட போர் விமானம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இதில் இத்தாலிய வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், வேறு எந்தவொரு உபகரணங்களும் சேதம் அடைய வில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p> மேலும் பதற்றமான இந்த பகுதியில் இத்தாலிய வீரர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நிலைமையை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T18:55:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் இருக்கும் நாமல் ராஜபக்சவுக்கு வந்த அழைப்பு - பிணை கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/call-received-by-namal-who-is-in-prison-1789757186"></link>
            <id>https://tamilwin.com/article/call-received-by-namal-who-is-in-prison-1789757186</id>
            <summary type="text">எதிர்க்கட்சி தலைவர் நாமல் ராஜபக்சவை தொடர்ந்து எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பிணை ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சி தலைவர் நாமல் ராஜபக்சவை தொடர்ந்து எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், பிணை பெறுவதற்காக நாமல் ராஜபக்ச தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கைகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளன.
</p><p>
சிறையில் இருக்கும் நாமல் ராஜபக்சவிற்கு எசல பெரஹெரவில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், அவர் சமூகமளிக்காவிட்டால் அது அழைப்பை அவமதிப்பதாக அமையும் என அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
இதனை ஒரு காரணமாக முன்வைத்து நாமல் ராஜபக்சவிற்கு பிணை கோரப்பட்டுள்ள போதிலும், நீதிமன்றம் அந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

அத்துடன், நிமல் பெரேரா அளித்த வாக்குமூலம் தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, நிமல் பெரேராவின் வங்கிக் கணக்கிற்கு மேலும் பல கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் புதிய குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
நாமல் ராஜபக்ச வழக்கின் பின்னணியில் இடம்பெறும் பரபரப்பான விடயங்கள் என்ன? பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டதன் பின்னணி என்ன? உள்ளிட்ட பல தகவல்களை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகின்றது “நியூஸ் இன்சைட்” நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/0e_uB3G-kPs" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T18:47:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிலாபம் - குருநாகல் பிரதான வீதியில் போக்குவரத்து கட்டுப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/traffic-restrictions-chilaw-kurunegala-main-road-1789756354"></link>
            <id>https://jvpnews.com/article/traffic-restrictions-chilaw-kurunegala-main-road-1789756354</id>
            <summary type="text">சிலாபம் - குருநாகல் பிரதான வீதியில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். பிங்கிரிய ஸ்ரீ தேவகிரி ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிலாபம் - குருநாகல் பிரதான வீதியில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.</p><p> </p><p></p><p>பிங்கிரிய ஸ்ரீ தேவகிரி ரஜமஹா விகாரையின் பினர மகா பெரஹரா நாளை (19) ஆம் திகதி இரவு 7.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை வீதி உலா வரவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0509e816-eb29-4e8b-b2f0-6f1a20680602/26-6aad83c3da204.webp' /></p><p>அதற்கமைய, பெரஹரா சிலாபம் - குருநாகல் வீதியில் பயணிக்கவுள்ளதால், அக்காலப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்துக்கொள்ளும் பொருட்டு மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T18:33:00+00:00</updated>
        </entry>
    </feed>
