<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-18T15:16:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொரீஷியஸுக்கு பறந்த நடிகை மாளவிகா மோகனன்!!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/malavika-mohanan-33-birthday-trip-mauritius-photos-1787055870"></link>
            <id>https://viduppu.com/article/malavika-mohanan-33-birthday-trip-mauritius-photos-1787055870</id>
            <summary type="text">மாளவிகா மோகனன்பட்டம் போலே என்ற மலையாள படத்தில் நடிகையாக அறிமுகமாகி கன்னடம், இந்தி மொழிகளில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மாளவிகா மோகனன். இதனையடுத்து...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மாளவிகா மோகனன்</h2><p>பட்டம் போலே என்ற மலையாள படத்தில் நடிகையாக அறிமுகமாகி கன்னடம், இந்தி மொழிகளில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மாளவிகா மோகனன். </p><p>இதனையடுத்து தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட, விஜய்யின் பேட்ட, தனுஷின் மாறன் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை ஈர்த்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9600d552-4610-4c2b-b4a3-5b5eb2a4c355/26-6a844f0814a3f.webp' /></p><p> </p><p>அதன்பின் தங்கலான், யுத்ரா, தி ராஜா சாப் போன்ற படங்களில் நடித்து வந்தார். தற்போது சர்தார் 2, பாக்கெட் நாவல் போன்ற படங்களிலும் தற்போது நடித்து வருகிறார்.</p><p>வீக்கெண்ட் என்றாலே மாளவிகா அவுட்டிங் சென்று அங்கு எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்வார். ஆனால், தற்போது செவ்வாய் கிழமையன்றே வெளிநாட்டுக்கு பறந்துள்ளார்.</p><p> கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். பர்த்டேவை கொண்டாட மொரீஷியஸுக்கு பறந்த மாளவிகா, அங்கு எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-18T15:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் இன்றும் புதிதாக அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1787064612"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1787064612</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியின் 109 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(18)
செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டன.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியின் 109 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(18)
செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டன.
</p><p>
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 55ஆவது நாளான இன்றைய தினம்
செவ்வாய்க்கிழமை 10 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 08 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>573 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுப்பு</h2><p>
</p><p>
அதன் அடிப்படையில் செம்மணியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 109 நாள் அகழ்வு
பணிகளின் போது, 582 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 573 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6eea0a01-4d52-4a7e-965d-de1f4310fced/26-6a8473cf10cfb.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T15:01:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வந்த பலசரக்குக் கடை பூட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grocery-store-sealed-due-to-unhygienic-conditions-1787063772"></link>
            <id>https://tamilwin.com/article/grocery-store-sealed-due-to-unhygienic-conditions-1787063772</id>
            <summary type="text">மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட
பகுதியில் தீவிர சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிவந்த மொத்த விற்பனை பலசரக்குக்
கடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட
பகுதியில் தீவிர சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிவந்த மொத்த விற்பனை பலசரக்குக்
கடை ஒன்று பூட்டப்பட்டுள்ளது.</p><p>களுவாஞ்சிகுடி நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இன்று (18.08.2026 ) அதிரடியாகப் பூட்டப்பட்டுள்ளது.</p><p>
மேற்பார்வை பொது சுகாதாரப் பரிசோதகர் மற்றும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள்
இணைந்து மேற்கொண்ட களப் பரிசோதனையின் போது, குறித்த பலசரக்குக் கடையில்
கடுமையான சுகாதாரக் குறைபாடுகள் நிலவுவது கண்டறியப்பட்டது.</p><h2>வழக்குத் தாக்கல்</h2><p>

அதனைத் தொடர்ந்து, பொது சுகாதாரப் பரிசோதகரால் இன்று களுவாஞ்சிகுடி
நீதிமன்றத்தில் உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/711c8a69-d935-4c31-8623-aa7a8c7babcc/26-6a84733b5041f.webp' /></p><p>
</p><p>
வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், கடை உரிமையாளரை 03 இலட்சம் ரூபாய்
சரீரப் பிணையில் செல்ல அனுமதித்ததுடன், இனங்காணப்பட்ட அனைத்து சுகாதாரக்
குறைபாடுகளும் முழுமையாக நிவர்த்தி செய்யப்படும் வரை கடையை உடனடி நடைமுறைக்கு
வரும் வகையில் பூட்டி வைக்குமாறு உத்தரவிட்டது.
</p><p>
பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் சுகாதாரப் பிரிவினரால்
முன்னெடுக்கப்படும் இத்தகைய தொடர் நடவடிக்கைகள், அப்பகுதி வியாபாரிகள்
மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T15:00:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் குண்டும் குழியுமான வீதிகளால் விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/accidents-due-to-potholes-roads-in-jaffna-1787059912"></link>
            <id>https://jvpnews.com/article/accidents-due-to-potholes-roads-in-jaffna-1787059912</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் மானிப்பாய் – எழுமுள்ளி பகுதியில் சேதமடைந்துள்ள பிரதான வீதியில் இதுவரை எட்டு விபத்துகள் இடம்பெற்றுள்ள போதிலும், வீதி அபிவிருத்தி அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் மானிப்பாய் – எழுமுள்ளி பகுதியில் சேதமடைந்துள்ள பிரதான வீதியில் இதுவரை எட்டு விபத்துகள் இடம்பெற்றுள்ள போதிலும், வீதி அபிவிருத்தி அதிகாரசபை இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
</p><p>


782ஆம் வழித்தடமான யாழ்ப்பாணம் – காரைநகர் வீதியின் மானிப்பாய் – எழுமுள்ளி பகுதியில் சுமார் 15 அடி நீளத்திற்கு வீதியின் முழு அகலமும் சேதமடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92585248-920e-4e84-9f1c-28b8e21c80bc/26-6a845ec9c3581.webp' /></p><h2>விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள்&nbsp;</h2><p>
</p><p>


வீதியின் கீழ் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் சேதமடைந்து, சில மாதங்களுக்கு முன்னர் நீர் வீதியை ஊடறுத்து பாய்ந்துள்ளது. பின்னர் குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்ட போதிலும், வீதி இதுவரை புனரமைக்கப்படாமல் காப்பெற் உடைந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>



குறித்த வீதியூடாக மூன்று பேருந்து வழித்தடங்களில் பேருந்துகள் சேவையில் ஈடுபடுவதுடன், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர்.</p><p>



இந்நிலையில், சேதமடைந்துள்ள குறித்த பகுதியில் இதுவரை எட்டு விபத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>


வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான இந்த வீதி உடனடியாக சீரமைக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் மக்கள் எச்சரித்துள்ளனர்.
</p><p>


எனவே, மேலும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன்னர் குறித்த வீதியை உடனடியாக புனரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த அரசு சாரா தொண்டு நிறுவனம் ஊழியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/non-governmental-organization-employees-protest-1787064583"></link>
            <id>https://tamilwin.com/article/non-governmental-organization-employees-protest-1787064583</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டு அரசாங்கம் கொண்டுவரவுள்ள அரசு சாரா தொண்டு நிறுவனம் (பதிவு மற்றும் மேற்பார்வை) சட்ட வரைவு (L.D.-0.6/2026) தற்போதைய வடிவில்
நிறைவேற்றப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டு அரசாங்கம் கொண்டுவரவுள்ள அரசு சாரா தொண்டு நிறுவனம் (பதிவு மற்றும் மேற்பார்வை) சட்ட வரைவு (L.D.-0.6/2026) தற்போதைய வடிவில்
நிறைவேற்றப்படக்கூடாது என வலியுறுத்தி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த போராட்டமானது, நேற்று(17.08.2026) முல்லைத்தீவு மாவட்ட
செயலகம் முன்பாக இடம்பெற்றுள்ளது.
</p><p>

அத்துடன், முல்லைத்தீவு மாவட்ட சமூக
அமைப்புக்களின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-18T14:53:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் - ராஜபக்சர்களுக்கு நெருக்கடியாகும் இரகசிய விசாரணைகள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-investigation-1787064282"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-investigation-1787064282</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது அவசியமற்றது என்றும், அதற்குப் பதிலாக நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், அவர்களுக்குத் தரமான பயிற்சியை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது அவசியமற்றது என்றும், அதற்குப் பதிலாக நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், அவர்களுக்குத் தரமான பயிற்சியை வழங்குவதுமே தற்போதைய காலத்தின் தேவை என்று மூத்த சட்டத்தரணி அருண் கணநாதன் தெரிவித்தார்.</p><p>

லங்காசிறியின் ஊடறுப்பு நிழகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>
மேலும் தெரிவித்த அவர்,
</p><p>
தற்போதைய இலங்கை அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளைத் தீவிரமாக கையாள்கின்றது.
</p><p>
உயிர்த்தஞாயிறு தாக்குதல் வழக்கில் ராஜபக்சர்கள் சம்மந்தப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதால் இந்த அரசாங்கம் அதில் கவனம் செலுத்துகின்றது.
</p><p>
ஆனால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை அல்லது காணாமல் போனோர் விவகாரங்களில் மௌனம் காக்கின்றது.
</p><p> 
இலங்கையின் இனவாதக் கட்டமைப்பிலிருந்து அரசு விடுபடத் தயாராக இல்லை. </p><p>

எனவே, தமிழர்களுக்கு நீதிகிடைக்க உள்ளக விசாரணைகளை விட சர்வதேச பொறிமுறை மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலையீடு மட்டுமே சிறந்த வழியாகும் என்று குறிப்பிட்டார்.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/68d9IKM59Us" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T14:50:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்புக்கூடுகளின் எண்ணிக்கை - இன்றும் புதிதாக 10 கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/number-of-skeletons-is-increasing-day-by-day-1787061346"></link>
            <id>https://tamilwin.com/article/number-of-skeletons-is-increasing-day-by-day-1787061346</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியின் 109 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று(18.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ள.

இந்த நடவடிக்கை மூன்றாம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியின் 109 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று(18.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ள.
</p><p>
இந்த நடவடிக்கை மூன்றாம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 55ஆவது நாளாக இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>

8 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு</h2><p>
இதன்போது, 10 என்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதில், 08 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a39cb163-7828-4611-87ab-6be19f52a704/26-6a84653c61b72.webp' /></p><p>
</p><p>

இதுவரையில், செம்மணியில் மேற்கொள்ளப்பட்ட 109 நாள் அகழ்வு
பணிகளின் போது, 582 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 573 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f649ce0-4527-4e43-8772-8c6f2e669268/26-6a84653d75115.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39902bf3-6c00-40a3-933c-dd9c535b08b5/26-6a84653e4ef5d.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fa555fa-5e78-47dd-b45c-49e9edb4f1b8/26-6a84653f266a6.webp' /></p>]]></content>
            <updated>2026-08-18T14:35:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை மருத்துவமனை சம்பவம்; உலக சாதனையாகப் பதிவாக வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/trincomalee-hospital-3kg-kidney-stone-record-world-1787057064"></link>
            <id>https://jvpnews.com/article/trincomalee-hospital-3kg-kidney-stone-record-world-1787057064</id>
            <summary type="text">&amp;nbsp; திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் ஊடாக 3.1 கிலோகிராம் எடையுள்ள சிறுநீர்ப்பை கல் அகற்றப்பட்ட ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; <a href="https://jvpnews.com/article/trincomalee-hospital-3-kg-kidney-stone-removed-1786770809" target="_blank">திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையில் </a>அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் ஊடாக 3.1 கிலோகிராம் எடையுள்ள சிறுநீர்ப்பை கல் அகற்றப்பட்ட சம்பவம் உலக சாதனையாகப் பதிவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கு முன்னர், கடந்த 2003 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் நோயாளி ஒருவரிடமிருந்து 1.9 கிலோகிராம் எடையுள்ள கல் அகற்றப்பட்டதே உலக சாதனையாக பதிவாகியிருந்தது

சத்திரசிகிச்சையை மேற்கொண்ட மருத்துவ குழாம் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0840977-4db6-4e13-8008-76018bf9b98b/26-6a8453aa6a794.webp' /></p><h2>பிரேசில் நாட்டில் நோயாளியின் 1.9 கிலோகிராம்&nbsp; கல்</h2><p>

இந்த விடயம் தொடர்பான சாதனைப் புத்தக அங்கீகாரம் குறித்து அதிகாரப்பூர்வ சரிபார்ப்பு மற்றும் ஆவணப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என மருத்துவத் தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
முன்னதாக பிரேசிலில் அகற்றப்பட்ட சிறுநீரகக் கல் தொடர்பான பதிவுகள் குறிப்பிடப்பட்டாலும், திருகோணமலை மருத்துவமனையில் அகற்றப்பட்ட கல்லை உலக சாதனையாக உறுதிப்படுத்துவதற்கு உரிய சர்வதேச பதிவுகள் மற்றும் மருத்துவ ஆவணங்களுடன் ஒப்பீடு செய்யப்பட வேண்டியது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

முன்னதாக, திருகோணமலை மருத்துவமனையில் 52 வயதான ஆண் ஒருவரின் சிறுநீரகப் பையில் இருந்து 3.1 கிலோகிராம் நிறையுடைய பாரிய கல் கடந்த வெள்ளிக் கிழமை வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
</p><p>
சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினரால் இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.</p><p></p><p>
</p><p>
சுமார் 21 சென்றிமீற்றர் நீளமும் 3 கிலோ 100 கிராம் நிறையும் கொண்ட இந்தக் கல், நோயாளி நீண்டகாலமாக சிறுநீர் கழிப்பதில் சிரமத்தை எதிர்கொண்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளின் போது கண்டறியப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
பரிசோதனைகளின் அடிப்படையில் நோயாளிக்கு உடனடியாக சத்திர சிகிச்சை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதுடன், சிக்கலான இந்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-18T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல்: ஒருவர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/missile-attack-on-ship-in-strait-of-hormuz-1787061756"></link>
            <id>https://tamilwin.com/article/missile-attack-on-ship-in-strait-of-hormuz-1787061756</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணைப் பகுதி ஊடாகப் பயணித்துக்கொண்டிருந்த வணிகக் கப்பலொன்று
இனந்தெரியாத ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

இந்தத் தாக்குதலில் கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணைப் பகுதி ஊடாகப் பயணித்துக்கொண்டிருந்த வணிகக் கப்பலொன்று
இனந்தெரியாத ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
</p><p>
இந்தத் தாக்குதலில் கப்பலின் இயந்திரப் பகுதி பலத்த சேதமடைந்துள்ளதுடன்,
ஊழியர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இன்று(18) அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் கப்பலின்
பாதுகாப்பு அதிகாரி UKMTO அமைப்புக்குத் தகவல் வழங்கியுள்ளார்.</p><h2>தீவிர விசாரணை</h2><p> அதனையடுத்து,
எஞ்சிய மாலுமிகளை மீட்கும் நடவடிக்கைகளில் ஓமான் கடலோரப் பாதுகாப்புப்
படையினர் உதவிகளை வழங்கி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91c9a932-211a-467e-8313-15f2fc154cce/26-6a8467270a4d9.webp' /></p><p>
</p><p>
இந்தத் தாக்குதலினால் இதுவரை எவ்வித சுற்றுச்சூழல் பாதிப்புகளும் ஏற்படவில்லை
எனக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பது
குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>
அத்துடன், அப்பகுதியினூடாகப் பயணிக்கும் ஏனைய கப்பல்கள் மிகுந்த அவதானத்துடன்
செயல்படுமாறும், சந்தேகத்திற்கிடமான நகர்வுகள் தென்படின் உடனடியாகத்
தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T14:29:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரத்தில் இருந்து வீழ்ந்து குடும்பஸ்தர் மரணம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/family-member-dies-after-falling-from-tree-1787062479"></link>
            <id>https://ibctamil.com/article/family-member-dies-after-falling-from-tree-1787062479</id>
            <summary type="text">வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் மரத்தில் இருந்து வீழ்ந்த நிலையில்
குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று(18) மதியம் இடம்பெற்றத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் மரத்தில் இருந்து வீழ்ந்த நிலையில்
குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று(18) மதியம் இடம்பெற்றது.</p><p> சம்பவம் தொடர்பாக மேலும்
தெரியவருகையில்</p><p>
மரம்வெட்டும் தொழிலை மேற்கொள்கின்ற குறித்த நபர் இன்றையதினம் நொச்சிமோட்டை
பகுதியில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது தவறுதலாக மரத்தில் இருந்து கீழே
வீழ்ந்துள்ளார்.</p><h2>ஓமந்தை காவல்துறையினர் விசாரணை</h2><p>படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் அவர் முன்னரே மரணமடைந்துள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c6baff2-33ff-45a8-8e9d-13fe681bed7d/26-6a846ac7665f5.webp' /></p><p>

சம்பவத்தில் ஓமந்தை பகுதியை சேர்ந்த குமார் (வயது 45) என்ற குடும்பஸ்தரே
மரணமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக ஓமந்தை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T14:23:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[குப்பையையே டன் கணக்கில் இறக்குமதி செய்யும் ஸ்வீடன் - காரணம் என்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/how-much-waste-does-sweden-recycle-1787060662"></link>
            <id>https://manithan.com/article/how-much-waste-does-sweden-recycle-1787060662</id>
            <summary type="text">குப்பை மேலாண்மையில் இந்தியா கடந்த காலங்களை விட முன்னேற்றம் கண்டிருந்தாலும், இன்னும் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. உலகின் சுத்தமான நாடுகளின் பட்டிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>குப்பை மேலாண்மையில் இந்தியா கடந்த காலங்களை விட முன்னேற்றம் கண்டிருந்தாலும், இன்னும் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. உலகின் சுத்தமான நாடுகளின் பட்டியலில் எஸ்டோனியா முதலிடத்தில் இருக்கும் நிலையில், இந்தியா 177 நாடுகளில் 176வது இடத்தில் இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p>
ஆனால், இதற்கு முற்றிலும் மாறுபட்ட நாடாக ஸ்வீடன் உள்ளது. உலகின் மிகவும் சுத்தமான நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் ஸ்வீடன், மற்ற நாடுகளிடமிருந்து குப்பையையே இறக்குமதி செய்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbd4c617-8218-4069-b6c3-7fbdd6f1a4ea/26-6a84678b8867d.webp' /></p><p></p><p>மிகவும் சுத்தமான நாடுகளின் பட்டியலில் முக்கிய இடம் பிடிக்கும்&nbsp;ஸ்வீடன் ஏன் குப்பைகளை மற்ற நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்கின்றது என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.&nbsp;</p><h2> ஏன் தெரியுமா?
</h2><p>
ஸ்வீடனில் குப்பை வெறும் கழிவாகப் பார்க்கப்படுவதில்லை. மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகளை நவீன ‘கழிவிலிருந்து ஆற்றல்’ (Waste-to-Energy) ஆலைகளில் அதிக வெப்பநிலையில் எரித்து, அதிலிருந்து வெப்பமும் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது.</p><p>

குறிப்பாக, கழிவுகளை எரிப்பதால் உருவாகும் வெப்பத்தைப் பயன்படுத்தி தண்ணீர் சூடாக்கப்படுகிறது. பின்னர் நிலத்தடிக் குழாய்கள் மூலம் இந்த வெப்பம் வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c20dd0e-9aea-4fc4-a414-15e899da6967/26-6a84678c3c944.webp' /></p><p> கடுமையான குளிர்காலத்திலும் வீடுகளை வெப்பமாக வைத்திருக்க இந்த அமைப்பு உதவுகிறது.

அதேபோல், உருவாகும் வெப்பத்தின் மூலம் நீராவி தயாரிக்கப்பட்டு டர்பைன்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுகிறது.
</p><p>
கழிவுகளை எரித்த பிறகு கிடைக்கும் சாம்பல் உள்ளிட்ட சில எஞ்சிய பொருட்களும் பிரித்தெடுக்கப்பட்டு, சாலை கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd4edce0-a75e-456a-af68-8f71f68ad8b2/26-6a84678ce872a.webp' /></p><p>

இதனால், குப்பையை அனுப்பும் நாடுகளுக்கு குப்பைக் கிடங்குகளின் சுமை குறைகிறது. அதே நேரத்தில், ஸ்வீடனுக்கு தனது ஆற்றல் உற்பத்தி நிலையங்களை இயக்குவதற்குத் தேவையான கழிவுகள் கிடைக்கின்றன. </p><p>சில சந்தர்ப்பங்களில், கழிவுகளை எடுத்துக்கொள்வதற்காக ஸ்வீடனுக்கு பணமும் வழங்கப்படுகிறது.

எனினும், ஸ்வீடனின் வெற்றிக்கு குப்பையை எரிப்பது மட்டுமே காரணமல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cb7d328-42cc-484c-b2e3-7494b9130fa2/26-6a84678d9a164.webp' /></p><p></p><p> </p><p>கழிவுகளைக் குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி, கழிவுகளைப் பிரித்தல் மற்றும் இறுதியாகப் பயன்படுத்த முடியாத கழிவுகளிலிருந்து ஆற்றலை மீட்டெடுத்தல் ஆகியவை அதன் கழிவு மேலாண்மை முறையின் முக்கிய அம்சங்களாகும்.</p><p>

குப்பையை ஒரு சுமையாகப் பார்க்காமல், சரியான தொழில்நுட்பத்துடன் வளமாக மாற்ற முடியும் என்பதற்கு ஸ்வீடன் ஒரு சிறந்த உதாரணமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T14:10:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றத்தில் முன்னிலையாகாத பசில் – நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/order-issued-forfeit-bail-money-fails-appear-court-1787061515"></link>
            <id>https://tamilwin.com/article/order-issued-forfeit-bail-money-fails-appear-court-1787061515</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தொடர்பான வழக்கு இன்று(18) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

மாத்தறை ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தொடர்பான வழக்கு இன்று(18) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
மாத்தறை பிரவுன்ஸ் ஹில் பகுதியில் சுமார் ஒன்றரை ஏக்கர் காணியை, சட்டவிரோதமாக ஈட்டியதாகக் கூறப்படும் பணத்தை பயன்படுத்தி கொள்வனவு செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;அரசுடைமையாக்க உத்தரவு&nbsp;</h2><p>
</p><p>
வழக்கில் பசில் ராஜபக்ச மூன்றாவது சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ளார். </p><p>அவரது சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் டி சில்வா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
</p><p>
எனினும், நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்காமல் பசில் ராஜபக்ச தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3a9779c-bc35-4748-96dd-e7aac0727add/26-6a846786d3e0f.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து, மாத்தறை நீதவான் சதுர திசாநாயக்க, பசில் ராஜபக்ச செலுத்தியிருந்த பிணைத் தொகையை அரசுடைமையாக்க உத்தரவிட்டார்.

மேலும், அவருக்காக சரீரப் பிணையில் கையெழுத்திட்ட மூவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. </p><p>அந்த அபராதத்தை செலுத்தத் தவறினால் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், பசில் ராஜபக்சவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த கைது பிடியாணையை ஒக்டோபர் 27ஆம் திகதி வரை நீடிக்கவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p><br><br><b><i>you may like this..<br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/bfow4ehrrOI" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b><br><br></p>]]></content>
            <updated>2026-08-18T14:09:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம்; தமிழ்நாடு தலையிட கூடாது - டி.கே.சிவகுமார் பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/dk-shivakumar-warns-tamilnadu-in-3-tamils-death-1787062072"></link>
            <id>https://ibctamilnadu.com/article/dk-shivakumar-warns-tamilnadu-in-3-tamils-death-1787062072</id>
            <summary type="text">dk shivakumar warns tamilnadu : 3 தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு தலையிட கூடாது என கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பேசியுள்ளார். 

கர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>dk shivakumar warns tamilnadu : 3 தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு தலையிட கூடாது என கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பேசியுள்ளார். </p><h3>

கர்நாடகாவில் கொல்லப்பட்ட 3 தமிழர்கள்
</h3><p>
கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் 3 பேர் கர்நாடகா வனத்துறையால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f705abd-aa11-436f-8cbc-173247832eac/26-6a84673a32e10.webp' /></p><p>
இந்தச் சம்பவம் தொடர்பாகக் கர்நாடக வனத்துறை கொடுத்த விளக்கம் ஏற்புடையதல்ல என தெரிவித்த தமிழ்நாடு முதல்வர் விஜய், இந்த படுகொலையை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39c66567-7ddc-4e4a-a077-82b406d1abbf/26-6a84673ae1285.webp' /></p><p>

இந்த சம்பவத்திற்கு இன்று சட்டமன்றத்தில் திமுக, அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த உறுப்பினர்களும் கண்டனம் தெரிவித்தனர்.</p><h3> 

தமிழ்நாடு தலையிட கூடாது</h3><p> 

இது குறித்த கேள்விக்கு பதிலளித்த கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார், "இந்த விவகாரத்தில் தமிழகம் தலையிட கூடாது. எந்த மாநிலமும், மற்ற மாநில விவகாரத்தில் தலையிட கூடாது என அவர்கள் தெரிந்து கொள்ளட்டும். மற்ற மாநில விவகாரத்தில் நான் தலையிட விரும்பவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab4012a1-315d-443b-910a-c66d80ff37a1/26-6a84673b93f52.webp' /></p><p>
நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள். எங்கள் வேலையை நாங்கள் பார்க்கிறோம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் தங்களுக்கென்று சில சிக்கல்கள் உண்டு. தமிழக தலைவர்கள் யாரும் பிற மாநில விவகாரத்தில் தலையிட முடியாது.
</p><p>
தமிழக சட்டம் - ஒழுங்கு விவகாரத்தில் நாங்கள் தலையிடுவது இல்லை. இதேபோல் எங்களுடைய சட்டம் - ஒழுங்கு விவகாரத்தில் பிற மாநிலங்களும் தலையிட கூடாது. கர்நாடகாவை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்" என தெரிவித்துள்ளார்.</p><h3> 

சென்னை வரும் கர்நாடக முதல்வர் </h3><p> 

ஏற்கனவே தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிற்கு இடையே காவேரி விவகாரத்தில் சிக்கல் உள்ள நிலையில், தற்போது 3 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.</p><p>இன்று சட்டமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்த அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், "3 தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையில் உரிய விசாரணை நடத்தப்படும் என கர்நாடக அரசு உறுதி அளித்தது.

தமிழர்கள் கொலை தொடர்பாக கர்நாடக அரசின் விளக்கம் ஏற்கத்தக்கதல்ல, விசாரணை தேவை என முதலமைச்சர் கூறியுள்ளார்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acce8f72-c611-446d-afad-d98b551fb4bd/26-6a84673c4724a.webp' /></p><p>

ஆனால், தற்போது இதில் தமிழ்நாடு தலையிட கூடாது உங்கள் வேலையை பாருங்கள் என கர்நாடக முதல்வர் கூறியுள்ள நிலையில், சென்னையில் ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆம் தேதி தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வரும் டி.கே.சிவகுமாரிடம் இது குறித்து பேசுவாரா என கேள்வி எழுந்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-18T14:08:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[PTA க்கு பதிலாக புதிய சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cabinet-approves-new-bill-to-replace-the-pta-1787058946"></link>
            <id>https://jvpnews.com/article/cabinet-approves-new-bill-to-replace-the-pta-1787058946</id>
            <summary type="text">&amp;nbsp; 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய சட்டத்தை அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட 'பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை' பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
</p><p>
 

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed15f78b-17c4-4e73-aeac-dcd328eb7f18/26-6a845b038150e.webp' /></p><h2>சட்டமா அதிபரின் அனுமதி</h2><p>
</p><p>
 

தற்போதுள்ள சட்டத்தின் குறைபாடுகளை நீக்குவதற்காக ஆரம்ப வரைவொன்றைத் தயாரிப்பதற்குத் தொழில்நுட்ப நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.</p><p></p><p> 

 

அந்த ஆரம்ப வரைவின் அடிப்படையில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு 2026 ஓகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.</p><p>

 

சட்ட வரைஞரினால் தயாரிக்கப்பட்ட குறித்த சட்டமூலத்திற்கு தற்போது சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது.

 

இச்சட்டமூலம் விரைவில் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதுடன், அதன்பின்னர் ஒப்புதலுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[என் திருமணம் நிற்க இதுதான் காரணம்!! நடிகை திரிஷா எடுத்த அதிரடி முடிவு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/why-did-trisha-wedding-stop-throwback-interview-1787055586"></link>
            <id>https://viduppu.com/article/why-did-trisha-wedding-stop-throwback-interview-1787055586</id>
            <summary type="text">திரிஷாஇந்தியாவின் 80-வது சுதந்திர நாள் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தேசிய கொடியை ஏற்றி தன்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>திரிஷா</h2><p>இந்தியாவின் 80-வது சுதந்திர நாள் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தேசிய கொடியை ஏற்றி தன்னுடைய உரையை பேசியிருந்தார்.

இந்நிகழ்ச்சியில் நடிகை திரிஷாவும் அவரது அம்மாவும் கலந்து கொண்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f83d2e3b-a25d-47a5-992b-f12d1d9191c2/26-6a844de498d69.webp' /></p><p> </p><p>முதலமைச்சர் விஜய்யின் பதவி ஏற்பு விழா முதல் சுதந்திர தின நிகழ்ச்சி வரை திரிஷா கலந்து கொண்டது பெரியளவில் பேசப்பட்டது.</p><p>இந்நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு வருண் மணியன் என்ற தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் நடந்து, திருமணம் நின்று போன காரணத்தை திரிஷா கூறியது தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. </p><h2>திருமணம் நிற்க</h2><p>அதில் நடிகை திரிஷா, நான் திருமணம் செய்து கொள்ளவிருந்த நபர், என்னிடம் சினிமாவில் நடிப்பதை நிறுத்தும்படி கூறினார். நடிப்பதை கைவிடுவதற்கு பதிலாக திருமணத்தை கைவிட்டுவிட்டேன், அதனால் தான் திருமணம் நின்று போனது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20cbeea5-870b-4f92-9408-8ca7c9d21e34/26-6a844de548c57.webp' /></p><p> </p><p>நான் கர்ப்பமானால் மட்டுமே சினிமாவில் நடிப்பதை நிறுத்துவேன், எனக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பில் கிடைக்கவில்லை என்றாலும், எனக்கு பொருந்தும் ரோல்களில் நடிப்பேன். ஆனால், எந்த காரணம் கொண்டும் சினிமாவில் இருந்து விலகமாட்டேன். </p><p>என் கடைசி மூச்சுவரை சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பேன் என்று திரிஷா தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு விவாகரத்தில் நம்பிக்கை என்றும் எப்படி மற்றொருவரை காயப்படுத்தி வாழும் மகிழ்ச்சியற்ற வாழ்க்கை வேண்டாம். திருமணத்திற்கு முன் 100 முறை யோசிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் திரிஷா.</p>]]></content>
            <updated>2026-08-18T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறை பணியிலிருந்து விலகியவரின் போதை கடத்தல் அம்பலம் : மீட்கப்பட்ட ஆபத்தான பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-arrested-for-transporting-drugs-expressway-1787059456"></link>
            <id>https://ibctamil.com/article/two-arrested-for-transporting-drugs-expressway-1787059456</id>
            <summary type="text">தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் போதைப்பொருள் கடத்தியதற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்த நுழைவாயில் வழியாக போதைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் போதைப்பொருள் கடத்தியதற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்த நுழைவாயில் வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக கடவத்த காவல் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து, நேற்று (17) கடவத்த வெளியேறும் வழியில், ஒரு காரில் 'குஷ்' மற்றும் 'காளான்' போதைப்பொருட்களைக் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.</p><h2>காவல்துறை அடையாள அட்டை</h2><p>மேற்கொண்டு விசாரணை செய்தபோது, ​​காரின் ஓட்டுநர் தன்னை ஒரு காவல்துறை அதிகாரி என்று கூறி, தான் ஒரு காவல் ஆய்வாளர் என்பதைக் குறிக்கும் வகையில் காவல்துறை அடையாள அட்டையைக் காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48546cd2-3f96-4b71-adb9-b617818a0c80/26-6a8464c0976b6.webp' /></p><p>எனினும், கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பயகலா, நாகஹா துவாவைச் சேர்ந்த ஒரு காவல் உதவி ஆய்வாளர் என்பதும், தங்க மோசடியில் ஈடுபட்டு 2024-ல் காவல் பணியிலிருந்து விலகியவர் என்பதும் தெரியவந்தது.</p><p></p><h2>வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய பொருட்கள்</h2><p>&nbsp;அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​ஒரு டசின் காவல் சீருடைகள், அறுபத்தெட்டு 9மிமீ தோட்டாக்கள், பன்னிரண்டு T56 தோட்டாக்கள், ஆறு இதர தோட்டாக்கள், அறுநூறு வெளிநாட்டு சிகரெட்டுகள், ஐந்து கைவிலங்குப் பொட்டலங்கள், இரண்டு காவல் பைக்கெட்நோட்டுப் புத்தகங்கள், இரண்டு தற்காலிக ஓட்டுநர் உரிமங்கள், எட்டு கைபேசிகள், இரண்டு போதைப்பொருள் எடை போடும் தராசுகள், ஐந்து கைவிலங்குகள், ஒரு பெரிய சுத்தியல், நான்கு கைத்துப்பாக்கி உறைகள் மற்றும் ஒரு ஏர் ரிவோல்வர் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fda57e0-e0b7-466e-ab33-3ee71c1f39a1/26-6a8464c148ba7.webp' /></p><p>சந்தேக நபர், போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய 30 வயதுடைய நபர் ஆவார். அவர் இன்டர்போல் அடையாள அட்டையையும் வைத்துள்ளார். போதைப்பொருள் வலையமைப்புடன் அவருக்குள்ள தொடர்பை வெளிப்படுத்துவதற்கான தடுப்புக் காவல் உத்தரவைப் பெறுவதற்காக, அவர் இன்று (18) மகர நீதவான் முன் முற்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T13:57:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விகாராதிபதி ஒருவரின் இரட்டை வேடம் அம்பலம்: மனைவிக்கு சொகுசு காரும் இருமாடி வீடும்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-buddhist-monk-crime-1787060778"></link>
            <id>https://tamilwin.com/article/a-buddhist-monk-crime-1787060778</id>
            <summary type="text">&amp;nbsp;கொழும்பு - குருநாகல் பிரதான வீதிக்கு அருகில் அமைந்துள்ள புராதன விகாரையின் விகாராதிபதி ஒருவர் திருமணம் செய்து கொண்டு விகாராதிபதியாகவும் நல்ல கணவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கொழும்பு - குருநாகல் பிரதான வீதிக்கு அருகில் அமைந்துள்ள புராதன விகாரையின் விகாராதிபதி ஒருவர் திருமணம் செய்து கொண்டு விகாராதிபதியாகவும் நல்ல கணவராகவும் இரு வேறுவாழ்க்கை வாழ்ந்துள்ளமை தெரியவந்துள்ளது. </p><p>விகாரையின் அறங்காவல் சபையினர் தேரரின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் தேடிப்பார்த்ததில் இவரின் மோசடி முகம் தெரியவந்துள்ளது.
ஒருபுறம் அறங்காவல் சபையை ஏமாற்றி மறுபுறம் நல்ல கணவராகவும் இருந்துள்ளார். </p><p>தனது மனைவிக்கு ஆடம்பரக் கார் ஒன்றையும் வாங்கிக் கொடுத்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வாறு விசித்திரமான இரட்டை வேடம் தரித்துள்ளார்.
</p><h2>
</h2><p></p><h2>விகாராதிபதி போட்ட இரட்டை வேடம்</h2><p>சுமார் இரண்டு வருடங்களாக இவர் விகாராதிபதி பதவியில் இருந்துள்ளார். இவர் தனியார் பாடசாலை ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி வந்த இந்த இளம் பெண்ணுடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் போலியான பொதுப்பெயரில் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
</p><p>குருநாகலையில் அமைந்துள்ள மணமகளின் வீட்டிலேயே இந்தத் திருமணம் நடந்துள்ளது. 
தான் திருமணம் செய்தது ஒரு பௌத்த துறவியை என்பது மணமகளுக்கும் அவரது பெற்றோருக்கும் தெரிந்தே இருந்துள்ளது. </p><p>அனைத்தும் தெரிந்தே இந்த காரியத்தை செய்துள்ளனர். பின்னர் குருநாகலை பகுதியில் உள்ள ஆடம்பர இரண்டு மாடி வீட்டில் அப்பெண்ணை அவரது பெற்றோருடனும் தனது குழந்தையுடன் குடியமர்த்தியுள்ளார்.
</p><p>ஊர் மக்களுக்குச் சந்தேகம் வராதிருக்க விக் அணிந்து கொண்டு பிரதேச செயலகத்தின் அதிகாரி அல்லது சர்வதேச பாடசாலை ஆசிரியர் என்று அப்பெண்ணின் வீட்டாரிடமும் ஊர் மக்களிடமும் கூறியுள்ளார்.
</p><p>மாதம் ஒருமுறை சொந்த ஊருக்குச் செல்வதாகக் கூறி விகாரையிலிருந்தும் தான தர்மங்கள் மூலம் கிடைக்கும் உணவுகளை எடுத்துக் கொண்டு அந்த வீட்டிற்குச் சென்று 5-6 நாட்கள் தங்கியிருந்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3e41492-7c28-489d-84c5-afa2a08b0104/26-6a84622c6f69d.webp' /></p><p>பின்னர் விகாரையிலிருந்து கொண்டு வந்த உணவை ஊர் மக்களுக்குப் பகிர்ந்து கொடுத்து சந்தேகம் வராதவாறு நடந்து கொண்டுள்ளார்.
வெளிநாட்டில் இருக்கும் பரோபகாரிகளிடம் விகாரையை அபிவிருத்தி செய்வதாகக் கூறி 2-3 இலட்சம் ரூபாய்களை நன்கொடையாகப் பெற்றுள்ளார். </p><p>அந்தப் பணத்தையே இந்தப் பெண்ணுக்குச் செலவிட்டுள்ளார். அதுமட்டுமன்றி விகாரைக்குச் சொந்தமான 10 ஏக்கர் காணியை 35 இலட்சம் ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டுள்ளார். </p><p>இவை தெரியவந்ததை அடுத்து குறித்த தேரர் விகாரைக்கு வந்து நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களுடன் தலைமறைவாகியுள்ளதாக விகாரையின் அறங்காவல் சபையினர் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T13:56:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவிற்கு ரஷ்யா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/russia-issues-a-stern-warning-to-britain-ukraine-1787059946"></link>
            <id>https://tamilwin.com/article/russia-issues-a-stern-warning-to-britain-ukraine-1787059946</id>
            <summary type="text">உக்ரைனுக்கு ட்ரோன்களை வழங்கி, ரஷ்ய எல்லைக்குள் தாக்குதல்களை நடத்த
உதவுவதற்கு எதிராக பிரித்தானியா கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என
ரஷ்யா எச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனுக்கு ட்ரோன்களை வழங்கி, ரஷ்ய எல்லைக்குள் தாக்குதல்களை நடத்த
உதவுவதற்கு எதிராக பிரித்தானியா கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என
ரஷ்யா எச்சரித்துள்ளது.</p><p>

பிரித்தானிய தயாரிப்பு ட்ரோன்கள் முதன்முறையாக ரஷ்ய எல்லைக்குள் நீண்டதூரத்
தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
</p><p>
இந்த செய்தி குறித்து லண்டனிலுள்ள ரஷ்ய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில்,
உக்ரேனின் தீவிரவாத இயந்திரத்திற்குப் பிரித்தானியா வழங்கும் ஆதரவு அதிகரிக்க
அதிகரிக்க, அதற்காக அது செலுத்தும் விலையும் அதிகமாக இருக்கும் எனத்
தெரிவித்துள்ளது.</p><h2>தாக்குதல்</h2><p>

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் தளபாடங்கள் சேமிப்பு மையங்களைக்
குறிவைத்து உக்ரைன் நீண்டதூரம் பாயும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
</p><p>
பிரித்தானிய தயாரிப்பு ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து
அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு நேரடியாக உறுதிப்படுத்தவில்லை.</p><p>

இருப்பினும், புடினின் சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்
கொள்ள உக்ரைனுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி தோளோடு தோள் நிற்பதாக
பிரித்தானியா அறிவித்துள்ளது.
</p><p>
ஏற்கனவே, 752 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான நிதி உதவித் திட்டத்தின் கீழ்,
2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் 150,000 ட்ரோன்களை உக்ரைனுக்கு வழங்க
பிரித்தானியா உறுதியளித்துள்ளது.</p><p>
</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T13:54:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சைக்குரிய தீவுக்கு புடின் முதல் பயணம்: எதிர்ப்பைத் தொடர்ந்து..ஜப்பானியத் தூதர் வரவழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/japan-ambassador-summons-by-russia-1787061027"></link>
            <id>https://news.lankasri.com/article/japan-ambassador-summons-by-russia-1787061027</id>
            <summary type="text">Japan ambassador summons by russia: குரில் தீவுகள் தொடர்பிலான சர்ச்சையைத் தொடர்ந்து, ஜப்பானியத் தூதர் ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Japan ambassador summons by russia: குரில் தீவுகள் தொடர்பிலான சர்ச்சையைத் தொடர்ந்து, ஜப்பானியத் தூதர் ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டார்.</p><p> 

விளாடிமிர் புடினின் சர்ச்சைக்குரிய குரில் தீவுகள் பயணத்திற்கு எழுந்த கண்டனத்தைத் தொடர்ந்து, ஜப்பானியத் தூதர் ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டார்.&nbsp;</p><h2>குரில் தீவுகளுக்கு&nbsp;பயணம் </h2><p>

 

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) சர்ச்சைக்குரிய குரில் தீவுகளுக்கு முதன்முறையாக பயணம் மேற்கொண்டார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b51271d-5ad0-439d-a8fd-01fdad0c279e/26-6a84638bcb059.webp' /></p><p></p><p>
இந்தப் பயணத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜப்பானிய பிரதமர் சனாயே டகாயிச்சி கண்டித்தார். </p><p>

மேலும், தலைநகர் டோக்கியோவில் உள்ள ரஷ்யத் தூதரை வரவழைத்தார்.

அதன் விளைவாக, ஜப்பானுக்கு பதிலளிக்கும் விதமாக தனது எதிர்ப்பின் மூலம் மரியாதைக்குரிய வரம்பை மீறிவிட்டதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குற்றம்சாட்டினார்.&nbsp;</p><h2>ஜப்பானியத் தூதர்&nbsp;</h2><p>

இந்த நிலையில், மாஸ்கோவில் உள்ள ஜப்பானியத் தூதர் அகிரா முட்டோவை வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைத்துள்ளார் செர்ஜி லாவ்ரோவ்.</p><p>

 Interfax செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, செவ்வாய்க்கிழமையன்று மாஸ்கோவில் உள்ள வெளியுறவு அமைச்சகக் கட்டிடத்திற்குள் சுமார் 20 நிமிடங்கள் இருந்த முட்டோ, அங்கிருந்து வெளியேறும்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார். </p><p>

அதே சமயம், தகாய்ச்சி வெளியிட்ட ரஷ்ய-எதிர்ப்பு கருத்துகள் தொடர்பாக முட்டோ வரவழைக்கப்பட்டதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca4c8c36-fbf6-45e5-a99f-af722d14f8c0/26-6a84638cbaab0.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T13:49:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கையில் பெரும் சோகம் - திருமணத்திற்கு 2 நாட்கள் - கோர விபத்தில் இளைஞன் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/boy-dies-in-an-accident-1787059366"></link>
            <id>https://tamilwin.com/article/boy-dies-in-an-accident-1787059366</id>
            <summary type="text">மாத்தறை, அக்குரஸ்ஸ பகுதியில் சம்பவித்த கோர விபத்தில் இளைஞன் ஸ்தலத்திலேயே பலியாகி உள்ளது. 

இரண்டு தினங்களில் திருமணத்திற்கு தயாராக இருந்த 25 வயதான ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை, அக்குரஸ்ஸ பகுதியில் சம்பவித்த கோர விபத்தில் இளைஞன் ஸ்தலத்திலேயே பலியாகி உள்ளது. </p><p>

இரண்டு தினங்களில் திருமணத்திற்கு தயாராக இருந்த 25 வயதான லக்மால் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.</p><p> 

தனது பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த கோர விபத்து சம்பவித்துள்ளது.</p><p> 

இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் லக்மால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p> </p><h2><b>

இளைஞன் பலி</b></h2><p>தனது மகனின் திருமணப் பதிவுக்காக இரண்டு நாட்களும், வேலைக்காக இஸ்ரேல் செல்வதற்கு மூன்று நாட்களும் மட்டுமே இருந்த நிலையில் இந்த துயரம் இடம்பெற்றுள்ளதாக லக்மாலின் தந்தை தெரிவித்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35c99afa-98dc-4b31-957c-887884e7a93b/26-6a8460d2e73af.webp' /></p><p>மகனின் மரணச் செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாயாரின் இதயத்தில் இரத்தம் உறைந்ததன் காரணமாக தற்போது அவர் கவலைக்கிடமான நிலையில் மாத்தறை பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த நிலையில் லக்மாலின் உடல் சொந்த ஊருக்குக் கொண்டு செல்வதற்கு முன்னரே கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பேருந்து ஓட்டுநர் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டதாக உறவினர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
</p><p>
எனினும், சட்ட நடைமுறைகளின்படி சந்தேக நபர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். </p><p>அவரது சாரதி உரிமத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இரத்துச் செய்து நீதிமன்றக் காவலில் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-18T13:42:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுவர்களை அடிமைப்படுத்தும் மெட்டா நிறுவனம் - எழுந்த பரபரப்பு குற்றச்சாட்டு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/parents-sue-meta-company-1787060100"></link>
            <id>https://tamilwin.com/article/parents-sue-meta-company-1787060100</id>
            <summary type="text">ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா (Meta) மீது, சிறார்களின் மனநலத்தைப் பாதிக்கும் வகையில் தளங்களை வடிவமைத்ததாகக் கூறி
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா (Meta) மீது, சிறார்களின் மனநலத்தைப் பாதிக்கும் வகையில் தளங்களை வடிவமைத்ததாகக் கூறி
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் தொடரப்பட்ட வழக்கின் ஆரம்பக்கட்ட
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>இது தொடர்பான விசாரணைகள் இன்று(18.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><h2>
பெற்றோர்களின் கோரிக்கை</h2><p>
அமெரிக்காவின் 29 மாநிலங்கள் இணைந்து இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளன.

மெட்டா நிறுவனம் தனது சமூக ஊடகத் தளங்களில் தொடர்ச்சியான ஸ்க்ரோலிங் மற்றும் அல்காரிதம் தூண்டுதல்கள் போன்ற அம்சங்கள் மூலம் சிறுவர்களை அடிமையாக்கும்
வகையில் வடிவமைத்துள்ளதாகவும், பெற்றோரின் அனுமதியின்றி அவர்களின் தரவுகளைச் சேகரிப்பதாகவும் மாநில சட்டவாதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3570fc8-3cbb-4f03-8eab-236ecbe5e7a6/26-6a846033bb182.webp' /></p><p>
</p><h2>
ட்ரில்லியன் கணக்கில் அபராதம் விதிக்க வாய்ப்பு</h2><p>
இந்த வழக்கில் மெட்டா நிறுவனத்திற்கு 1.4 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை
அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
</p><p>
பெற்றோரின் கட்டுப்பாடுகளை உறுதி செய்தல், மனநலத்தைப் பாதிக்கும்
அல்காரிதம்களை மாற்றுதல் மற்றும் தானாக மறையும் செய்திகளைத் தடைசெய்தல்
உள்ளிட்ட பல்வேறு கட்டாய மாற்றங்களை மெட்டா நிறுவனத்தில் கொண்டுவர வேண்டும் என மனுதாரர்கள் கோரியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/964b0c1b-de7c-41b5-a85b-ed710aafde11/26-6a8460348d08c.webp' /></p><p>

இந்த வழக்கின் போது மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க்
சாட்சியமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அமெரிக்கா மட்டுமன்றி, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, அவுஸ்திரேலியா,
பிரேசில் மற்றும் கென்யா ஆகிய நாடுகளிலும் மெட்டா நிறுவனம் இவ்வாறான சட்ட
மற்றும் ஒழுங்குமுறை சவால்களை எதிர்கொண்டு வருகின்றது.</p><p>

இந்த சட்ட நடவடிக்கைகள் எதிர்காலத்தில் சமூக ஊடகங்களின் செயல்பாட்டு முறையில்
பெரிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என தொழில்நுட்ப வல்லுநர்கள்
சுட்டிக்காட்டுகின்றனர்.&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-18T13:38:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் எட்டு விபத்துக்களை ஏற்படுத்திய பிரதான வீதி.. அச்சுறுத்தலை அதிகரிக்கும் தொடர் மௌனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/main-road-causing-eight-accidents-in-jaffna-1787060016"></link>
            <id>https://ibctamil.com/article/main-road-causing-eight-accidents-in-jaffna-1787060016</id>
            <summary type="text">யாழில் சேதமடைந்த வீதி ஒன்றில் எட்டு விபத்துகள் இடம்பெற்றும் வீதி
அபிவிருத்தி அதிகாரசபையானது இதுவரை நடவடிக்கை எடுக்காத விடயம் மக்கள்
மத்தியில் விசனத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் சேதமடைந்த வீதி ஒன்றில் எட்டு விபத்துகள் இடம்பெற்றும் வீதி
அபிவிருத்தி அதிகாரசபையானது இதுவரை நடவடிக்கை எடுக்காத விடயம் மக்கள்
மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்,

782 வழித்தட யாழ் - காரைநகர் வீதியானது மானிப்பாய் - எழுமுள்ளி பகுதியில்
சேதமடைந்துள்ளது. </p><p>வீதியின் முழு அகலமும் சுமார் 15 அடிகள் நீளத்திற்கு
சேதமடைந்துள்ளது.</p><p>

வீதியில் நிலத்தின் கீழுள்ள குடிநீர் வழங்கல் குழாயானது சேதமடைந்ததால் தண்ணீர்
வீதியை பிரித்துக்கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாய்ந்தது.
</p><p>இந்நிலையில் அந்த தண்ணீர் குழாயானது சீர் செய்யப்பட்டது இருப்பினும் அந்த
வீதியானது சீர் செய்யப்பட்டாமல் காப்பெற் உடைந்த நிலையிலேயே காணப்படுகிறது.

குறித்த வீதியால் மூன்று வழித்தடங்களில் பயணிக்கும் பேருந்துகள் பயணிக்கின்றன
அத்துடன் தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் அந்த வீதியை பயன்படுத்துகின்றனர்.</p><p>

அத்துடன் அந்த இடத்தில் இதுவரை எட்டு விபத்துகள் ஏற்பட்டதாகவும், அந்த எட்டு
விபத்துக்களில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உட்பட பலர் காயமடைந்துள்ளாக
தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
குறித்த வீதியானது வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான வீதியாக
காணப்படுகிறது. அந்த வீதியானது திருத்தம் செய்யப்படாமல் தொடர்ச்சியாக இவ்வாறே
காணப்பட்டால் மரணங்கள் கூட ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. </p><p>அவ்வாறு இடம்பெறும்
உயிரிழப்புகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபையே பொறுப்பு கூறவேண்டிய தேவை
காணப்படுகிறது.

எனவே மேலும் விபத்துகள் அல்லது அசம்பாவிதங்கள் எவையும் ஏற்பட முன்னர் அந்த
வீதியை சீர் செய்ய வேண்டும் என்பதே மக்களது கோரிக்கையாக உள்ளது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-18T13:35:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் அங்கீகரிக்கப்படாத எடைக் குறைப்பு மருந்து: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/drugmaker-warns-canadians-about-unapproved-1787045403"></link>
            <id>https://canadamirror.com/article/drugmaker-warns-canadians-about-unapproved-1787045403</id>
            <summary type="text">&amp;nbsp;அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோதமான எடைக் குறைப்பு மருந்து கருப்புச் சந்தையில் விற்கப்படுவது குறித்து முன்னணி மருந்து உற்பத்தியாளரான &#039;லில்லி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோதமான எடைக் குறைப்பு மருந்து கருப்புச் சந்தையில் விற்கப்படுவது குறித்து முன்னணி மருந்து உற்பத்தியாளரான 'லில்லி கனடா' கனேடிய மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>
அந்நிறுவனம் சோதனைக் கட்டத்தில் வைத்துள்ள 'ரெடாட்ரூடைட்' என்ற மருந்து, இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
ரெடாட்ரூடைட் மருந்து, ஹெல்த் கனடா அமைப்பாலோ அல்லது உலகளவில் வேறு எந்த ஒழுங்குமுறை ஆணையத்தாலோ மனித பயன்பாட்டிற்காக இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/deaefffe-6170-4b9f-9edc-f7e3bd099468/26-6a84261d6d580.webp' /></p><p> </p><p>
எனவே, இதை கனடாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ சட்டப்பூர்வமாக விற்க முடியாது. எனினும், சர்வதேச அளவில் இதற்கான கருப்புச் சந்தை இயங்கி வருகிறது என லில்லி கனடா தெரிவித்துள்ளது.
</p><p>அமெரிக்க மருந்து நிறுவனமான எலி லில்லி தயாரிக்கும் இந்த மருந்து, உடல் பருமன், டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் அது தொடர்பான பாதிப்புகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக உருவாக்கப்பட்டு வருகிறது. </p><p>
தற்போது 3-ஆம் கட்ட மருத்துவப் பரிசோதனையில் உள்ள இம்மருந்து, உடல் எடையைக் குறைப்பதில் ஒரு "புரட்சிகரமான முன்னேற்றத்தை" வெளிப்படுத்தியுள்ளதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
</p><p>80 வாரங்கள் நடத்தப்பட்ட மருத்துவ சோதனைகளில், டைப் 2 நீரிழிவு மற்றும் அதிக உடல் எடை கொண்ட நபர்கள் சராசரியாக 22.5 கிலோ (49.6 பவுண்ட்) வரை எடையைக் குறைத்துள்ளனர்.</p><p>
 மற்றொரு ஆய்வில், தீவிர உடல் பருமன் கொண்ட பெரியவர்கள் சராசரியாக 25.3 கிலோ (55.8 பவுண்ட்) எடையைக் குறைத்துள்ளது தெரியவந்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-18T13:34:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கழிவகற்றல் பணியில் ஈடுபட்ட ஷிரான் பாசிக் எவ்வாறு கோடீஸ்வரரானார்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drug-trafficker-shiran-basik-1787054724"></link>
            <id>https://tamilwin.com/article/drug-trafficker-shiran-basik-1787054724</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல்காரரான&amp;nbsp;ஷிரான் பாசிக் தொடர்பில் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.தெஹிவளை - கல்கிஸ்ஸ மாநகர சபையின் கழிவகற்றல் பணியில் ஈடுபட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல்காரரான&nbsp;ஷிரான் பாசிக் தொடர்பில் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.</p><p>தெஹிவளை - கல்கிஸ்ஸ மாநகர சபையின் கழிவகற்றல் பணியில் ஈடுபட்டிருந்த ஷிரான் பாசிக் இளமை காலத்தில் மிக வறுமையில் வாடியவர்.</p><p>1978 ஒக்டோபர் 24 ஆம் திகதி தெஹிவளையில் பிறந்த இவர் பல பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்கு உரிமையாளராக மாறியுள்ளார். </p><p>ஆரம்பத்தில் தெஹிவளைப் பகுதியில் இருந்த "கசிப்பு ஆனந்தா" என்பவருடன் இணைந்து சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டுள்ளார்.</p><p> அப்பகுதியின் அரசியல்வாதியாக இருந்த தனசிறி அமரதுங்கவுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>தனசிற தெஹிவளை - கல்கிஸ்ஸ மாநகர சபையின் மேயராகவும் பணியாற்றினார். அவருடனும் நெருங்கிய தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.</p><h2>சட்டவிரோத மதுபான விற்பனை</h2><p>பின்னர் இந்தச் சட்டவிரோத மதுபான விற்பனையில் இருந்து போதைப்பொருள் வியாபாரத்திற்கு மாறியுள்ளார். அப்போது "பொட்ட நௌபர்" என்பவரிடமிருந்து மொத்தமாகப் போதைப் பொருட்களைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
</p><p>அத்துடன் தெஹிவளை களுபோவில வைத்தியசாலை பகுதியில் ஏற்பட்ட பிரதேச ரீதியான அதிகாரப் போட்டியின் விளைவாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பித்து அவர் துபாய்க்குச் செல்கிறார். </p><p>சுமார் நான்கு ஆண்டுகள் துபாயில் தங்கியிருந்து பின்னர் மீண்டும் இலங்கைக்கு வந்து தனது வலையமைப்பைப் பலப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.</p><p>
தெஹிவளை - கல்கிஸ்ஸை நகர சபையில் பணியாற்றிய காலத்தில் அடையாளம் கண்டுகொண்ட நண்பர்களான நாஜின் மொஹமட் சித்தீக் ஆகியோரையும் இணைத்துக் கொண்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f6121b2-26a8-467f-a40e-58a7e2026bc6/26-6a844a8723b9c.webp' /></p><p>நாஜின் என்பவரே ஷிரான் பாசிக்குக்கு மொஹமட் சித்தீக்கை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த அறிமுகத்தின் ஊடாக சித்தீக் பிரதான விநியோகஸ்தராகச் செயற்பட்டுள்ளார். பாசிக்கே இந்த போதைப்பொருள் விநியோக வலையமைப்பை இயக்கியுள்ளார்.
</p><p>போதை பொருளை கடத்துவதற்காக தெற்குக் கடலோர மீன்பிடிச் சமூகத்துடனும் சிலாபம் பிரதேச மீன்பிடிச் சமூகத்துடனும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். தெற்கில் இயங்கிய பிரதான போதைப்பொருள் மாபியாவான 'தெஹிபாலே' என்பவர் இவருக்கு எதிராக செயற்பட்டுள்ளார். </p><p>அவருடமிருந்து வந்த அச்சுறுத்தல்கள் காரணமாக துபாய் நாட்டிற்குச் சென்று அங்கிருந்து நிரந்தரச் செயல்பாட்டு மையம் ஒன்றை அமைத்து இந்த போதை வலையமைப்பை இயக்கியதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><h2>சர்வதேச போதைப்பொருள் கடத்தல்</h2><p>அதன் பின்னர் போதைப்பொருள் வலையமைப்பின் மற்றொரு பிரதான நபராகக் கருதப்படும் மொஹமட் சித்தீக்குடன் இணைந்து ஆப்கானிஸ்தான் விநியோகப் பாதைகள் ஊடாக ஹெரோயின் மற்றும் ஐஸ் போன்ற செயற்கைப் போதைப்பொருட்களை இலங்கைக்குக் கொண்டு வர இவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
</p><p>இவரின் உண்மையான பெயர் ஷிரான் பாசிக், இவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல கடவுச்சீட்டுகளைப் பெற்றுள்ளார். இதில் ஒரு கடவுச்சீட்டைப் பெற்ற விதம் பெரும் சர்ச்சைக்குரியதாக மாறியது.
</p><p>தெஹிவளையிலுள்ள குறைந்த வருமானம் பெறும் மக்கள் வாழும் 68- 34 வத்த பகுதிகளில் நலன்புரித் திட்டங்களை இவர் முன்னெடுத்துள்ளார்.</p><p> இதற்குப் பயன்படுத்தப்பட்ட பணம் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்ட பணமாக இருக்கலாம் என தற்போது சந்தேகிக்கப்படுகிறது.
</p><p>இவ்வாறு அரசியல்வாதிகளுக்கும் கட்சிகளுக்கும் பணம் செலவிட்டுள்ளார். இது தவிர தமக்கு வரக்கூடிய அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்துவதற்காகச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் நட்புறவைப் பேணி பணப் பரிமாற்றம் மற்றும் உதவிகளைச் செய்து வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.</p><p></p><p></p><p></p><hr><p><br></p><p><b><i>You may like this..</i></b></p><hr><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/P8LCpaKjXQg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><hr><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T13:34:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கள்ள காதலுக்கு இடையூறு; TV பார்த்த கணவன் மற்றும் மகன் கொலை !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/illicit-affair-bigg-boss-then-a-murder-plan-1787055538"></link>
            <id>https://jvpnews.com/article/illicit-affair-bigg-boss-then-a-murder-plan-1787055538</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பிக்பாஸ் பார்த்து கொண்டிருந்த போது கணவன் மற்றும் 5 வயது மகனை, மனைவியும் அவரது காதலனும் சேர்ந்து படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பிக்பாஸ் பார்த்து கொண்டிருந்த போது கணவன் மற்றும் 5 வயது மகனை, மனைவியும் அவரது காதலனும் சேர்ந்து படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p> 

 கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவனையும் , மகனையும் கொடூரமாக கொன்றமை பொலிஸ் விசாரணையில் வெளிவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/753a4b00-a14d-46d2-9f86-253bc3f0a33b/26-6a844db3e2c77.webp' /></p><h2>&nbsp;ஸ்னாப்சாட் மூலம்&nbsp; பழக்கம்</h2><p> 
 பெங்களூருவில் அபிநந்தன் என்பவருடன் 2021-ல் திருமணம் நடந்த ஹரிணிக்கு, ஸ்னாப்சாட் மூலம் வினய் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

 இந்த தொடர்பு நாளடைவில் காதலாக மாறியதால், கணவனை பிரிய ஹரிணி விரும்பியுள்ளார்.</p><p></p><p> 
 
ஆனால் அபிநந்தன் இதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியின் செல்போன் அழைப்பு விவரங்களை கேட்டு புகார் அளித்துள்ளார்.</p><p> 

இதனால் ஏற்பட்ட தகராறில் காதலன் வினய்யுடன் சேர்ந்து கொடூர திட்டத்தைத் தீட்டியுள்ளார் ஹரிணி.
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் கணவனும் மகனும் பிக்பாஸ் பார்த்து கொண்டிருந்த போது, திட்டமிட்டபடி நைட்டுக்கு மேல் வீட்டிற்குள் நுழைந்த வினய் மற்றும் ஹரிணி இருவரும் சேர்ந்து, அபிநந்தனை கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர்.</p><p></p><p> </p><p>இந்த கொடூரத்தை பார்த்த ஐந்து வயது மகனையும் விட்டுவைக்காமல் அவனையும் கொலை செய்துள்ளனர். 

மறுநாள் காலை இருவரும் சடலமாக கிடப்பதாகக் காவல்துறையினருக்கு நாடகமாடி போன் செய்துள்ளார் ஹரிணி.</p><p> எனினும், உடலில் இருந்த காயங்களை கண்டு சந்தேகமடைந்த போலீசார், ஹரிணியின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்ததில் கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இதனையடுத்து ஹரிணியும் வினய்யும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T13:30:02+00:00</updated>
        </entry>
    </feed>
