<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-10T18:45:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனித புதைகுழியின் 102 ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/semmani-mass-grave-excavation-continues-on-day-102-1786377290"></link>
            <id>https://tamilwin.com/article/semmani-mass-grave-excavation-continues-on-day-102-1786377290</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியின் 102 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(10.08.2026) முன்னெடுப்பட்டுள்ளன.

இதுவரையிலான 102 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியின் 102 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(10.08.2026) முன்னெடுப்பட்டுள்ளன.</p><p>

இதுவரையிலான 102 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 524 என்புக்கூடுகள்
அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 513 என்புக்கூடுகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>செம்மணி மனித புதைகுழி</h2><p>
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.</p><p> 48ஆவது நாளான இன்றைய தினம்
திங்கட்கிழமை 09 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df1e7adc-d3ad-4a17-bd45-2208acd5b94c/26-6a79f84915978.webp' /></p><p>இந்த நிலையில்,
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன் மாட்டின் காலில் அடிக்கப்படும் லாடம் ஒன்றும், கை வளையல் ஒன்றும்
சான்று பொருளாக மீட்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T18:43:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் டொராண்டோ திரைப்பட விழா ; உலகத் தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/toronto-film-canada-invit-global-tamil-film-artist-1786387214"></link>
            <id>https://jvpnews.com/article/toronto-film-canada-invit-global-tamil-film-artist-1786387214</id>
            <summary type="text">கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெறவுள்ள 7வது டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா (TTIFF) செப்டம்பர் 25 முதல் 27 வரை நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் உள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெறவுள்ள 7வது டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா (TTIFF) செப்டம்பர் 25 முதல் 27 வரை நடைபெற உள்ளது. </p><p>உலகம் முழுவதும் உள்ள சுயாதீன மற்றும் வளர்ந்து வரும் திரைப்பட இயக்குநர்களுக்கு தங்களது படைப்புகளை சர்வதேச அரங்கில் அறிமுகப்படுத்தும் வாய்ப்பை இந்த விழா வழங்குகிறது.

இவ்விழாவிற்கான திரைப்பட சமர்ப்பிப்புகளின் இறுதித் திகதி ஆகஸ்ட் 11 என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குறும்படங்கள், முழுநீள திரைப்படங்கள், ஆவணப்படங்கள், சமூக மற்றும் இசை சார்ந்த படைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் படங்கள் ஏற்கப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8575465-c025-46fb-9ca6-e34321b0c232/26-6a7a1b0fc4848.webp' /></p><p>

தமிழ் திரைப்படங்களையும் உலகளாவிய சுயாதீன சினிமாவையும் ஊக்குவிக்கும் நோக்கில் நடைபெறும் இந்த விழா, தமிழ் மற்றும் பிற நாடுகளின் கலை, கலாசாரம், சமூக வாழ்வு மற்றும் பாரம்பரியங்களை பரிமாறிக் கொள்ளும் முக்கிய மேடையாக விளங்குகிறது. </p><p>கனடா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த திரைப்பட கலைஞர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
</p><p>
சுமார் ஐந்து இலட்சம் கனேடியத் தமிழர்களை சென்றடையும் இந்த விழா, இந்திய துணைக்கண்டத்திற்கு வெளியே நடைபெறும் முக்கிய தமிழ் திரைப்பட விழாக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.</p><p> புதிய திரைப்பட இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் பெறுவதற்கான சிறந்த வாய்ப்பாகவும் இது அமைகிறது.
</p><p>
எனவே, www.ttff.ca என்ற இணையதளத்தின் ஊடாக உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ஆக்குனர்கள் தங்களது படைப்புகளை ஆகஸ்ட் 11-ம் திகதிக்குள் சமர்ப்பித்து, இந்த சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T18:40:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலம்பியாவில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கம்! 72 பேர் பலி - நூற்றுக்கணக்கானோர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/7-4-magnitude-earthquake-hits-colombia-72-dead-1786384514"></link>
            <id>https://ibctamil.com/article/7-4-magnitude-earthquake-hits-colombia-72-dead-1786384514</id>
            <summary type="text">கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
அத்தோடு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
ரிக்டர் அளவில் 7.4 ஆகப் பதிவான இந்த அதிநவீன நிலநடுக்கம் காரணமாக காளி (Cali), பெரேரா (Pereira) மற்றும் மணிசாலேஸ் (Manizales) ஆகிய முக்கிய நகரங்களில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்து பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><h2>பெரிய சேதங்கள்</h2><p>அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவல்படி, கொலம்பியத் தலைநகர் பொகோடாவிற்கு மேற்கே சுமார் 400 கி.மீ தொலைவில் உள்ள சொகோ (Chocó) பிராந்தியத்தின் சான் ஜோஸ் டெல் பால்மர் (San Jose Del Palmar) பகுதியில் 107 கி.மீ ஆழத்தில் இந்நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d0ca725-84be-47a6-a3fb-d8211a3f1d2d/26-6a7a13c876b0b.webp' /></p><p>

இந்நிலநடுக்கத்தின் அதிர்வுகள் ஈக்வடார், வெனிசுலா மற்றும் பனாமா ஆகிய அண்டை நாடுகளிலும் உணரப்பட்டபோதிலும், அங்கு பெரிய அளவிலான சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை.
</p><p>
ரிசாரால்டா (Risaralda) மாகாணத்தில் 40 பேரும், வாலே டெல் காவுக்கா (Valle del Cauca) மாகாணத்தில் 27 பேரும், மணிசாலேஸ் நகரில் 2 பேரும் பலியாகியுள்ளனர்.</p><p> </p><p></p><h2>அவசரகால நிவாரணம்&nbsp;</h2><p>பலியானவர்களில் மூன்று சிறுவர்களும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மணிசாலேஸ் நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நோஸ்ட்ரா செனோரா டெல் ரொசாரியோ (Nuestra Senora del Rosario) பேராலயத்தின் ஒரு கோபுரம் இடிந்து விழுந்து பலத்த சேதமடைந்துள்ளது.
</p><p>
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிசாலேஸ், பெரேரா, குய்ப்டோ, அர்மேனியா, கார்டாகோ மற்றும் புவேனவென்டுரா ஆகிய 6 முக்கிய நகரங்களின் விமான நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f95f60d0-da03-4633-9e5b-c7f70071a77a/26-6a7a13c929fd8.webp' /></p><p>

கட்டடங்களின் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதால், உள்ளூர் மக்களும் அவசரகால மீட்புக் குழுவினரும் இணைந்து மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>

புதிதாகப் பதவியேற்ற கொலம்பிய ஜனாதிபதி அபெலார்டோ டி லா எஸ்ப்ரிலா (Abelardo de la Espriella), நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று அவசரகால நிவாரண மற்றும் மீட்புப் பணிகளை நேரடியாக மேற்பார்வையிட உள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T18:34:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானிடம் நஷ்டஈடு கோரும் ட்ரம்ப்...! சர்வதேசப் பேச்சுவார்த்தையில் புதிய திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-demands-reparations-from-iran-1786381157"></link>
            <id>https://ibctamil.com/article/trump-demands-reparations-from-iran-1786381157</id>
            <summary type="text">அமெரிக்கா ஈரானிடம் இருந்து இழப்பீடு கோரும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

பல மாதங்களாக நீடித்த போரின் போது அமெரிக்கா மற்றும் இஸ்ரே...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா ஈரானிடம் இருந்து இழப்பீடு கோரும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். </p><p>

பல மாதங்களாக நீடித்த போரின் போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால்<a href="https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1786368112" target="_blank"> ஏற்பட்ட சேதங்களுக்கு </a>ஈரான் இழப்பீடு கோரியிருந்த நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.</p><p>

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ஈரான் தற்போது இழப்பீடு கோருவதாகவும் ஆனால் இதற்கு முந்தைய <a href="https://ibctamil.com/article/iran-supreme-leader-appoints-6-top-commanders-1786378325" target="_blank">எந்தவொரு பேச்சுவார்த்தைகளிலோ</a> அல்லது கூட்டங்களிலோ ஈரான் இதனைப் பற்றிக் குறிப்பிடவே இல்லை என்றும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>வெடிகுண்டுகள்&nbsp;</h2><p>

ஈரானின் சாலைப்பக்க வெடிகுண்டுகள் மற்றும் பல்வேறு மோதல்களால் கொல்லப்பட்ட மற்றும் படுகாயமடைந்த அனைத்து நபர்களுக்காகவும், குறிப்பாக யூ.எஸ்.எஸ் கோல் (USS Cole) தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் போரில் உயிரிழந்த ஆயிரக்கணக்கானோரின் குடும்பங்களுக்காகவும் ஈரானிடம் இருந்து தானும் இழப்பீடு கோருவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d834bdf-e7a7-404e-ba19-25acbf09ed21/26-6a7a0fe8580b1.webp' /></p><p> 

அத்துடன், கடந்த 50 ஆண்டுகளில் ஈரானில் கொல்லப்பட்ட போராட்டக்காரர்களின் குடும்பங்களுக்கும், கடந்த ஐந்து மாதங்களில் கொல்லப்பட்ட 52,000 பேரின் குடும்பங்களுக்கும் ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும் ட்ரம்ப், எதிர்காலத்தில் நடைபெறும் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் இந்தக் கோரிக்கையைச் சேர்க்குமாறு தனது பிரதிநிதிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T18:34:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[IRGC மற்றும் முப்படைகளுக்குப் புதிய தலைமைகள்! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-supreme-leader-appoints-6-top-commanders-1786378325"></link>
            <id>https://ibctamil.com/article/iran-supreme-leader-appoints-6-top-commanders-1786378325</id>
            <summary type="text">ஈரானின் முப்படைகளின் தலைமை அலுவலகம், இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) மற்றும் பசீஜ் (Basij) அமைப்புகளுக்கு ஆறு மூத்த இராணுவத் தளபதிகள் நியமிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் முப்படைகளின் தலைமை அலுவலகம், இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) மற்றும் பசீஜ் (Basij) அமைப்புகளுக்கு ஆறு மூத்த <a href="https://ibctamil.com/article/mq-9a-reaper-goes-down-near-chabelley-air-base-1786370094" target="_blank">இராணுவத் தளபதிகள்</a> நியமிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
ஈரானின் உச்சத் தலைவரும், ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியுமான மொஜ்தாபா ஹொசைனி காமேனி இந்த நியமன உத்தரவை பிறப்பித்துள்ளார்.
</p><p>
இதன்படி, நாட்டின் <a href="https://ibctamil.com/article/ukraine-drone-strikes-in-russia-1786365929" target="_blank">ஆயுதப் படைகளின்</a> தலைமைத் தளபதியாக மேஜர் ஜெனரல் அலி அப்தொல்லாஹியும், அவரது துணைத் தளபதியாக பிரிகேடியர் ஜெனரல் கியூமர்ஸ் ஹைதரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p> </p><p></p><h2>புரட்சிகர காவல் படை</h2><p>அதேபோல, மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்றுள்ள அஹ்மத் வாஹிதி இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) தலைமைத் தளபதியாகவும், மொஸ்டாஃபா இசாதி அதன் துணைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/449b005d-601f-424f-9ffe-731bb0fee888/26-6a79fc7aa6c39.webp' /></p><p>மேலும், ஐ.ஆர்.ஜி.சி கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் அலி ஒஸ்மையும், பசீஜ் அமைப்பின் தலைவராக ஹொசைன் தாயெப்பும் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T18:34:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலம்பியாவை உலுக்கிய மிகப்பெரிய நிலநடுக்கம்..! இதுவரையில் 77 பலி பேர் என தகவல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/earthquake-pacific-coast-shakes-colombian-capital-1786385057"></link>
            <id>https://tamilwin.com/article/earthquake-pacific-coast-shakes-colombian-capital-1786385057</id>
            <summary type="text">கொலம்பியாவில் இன்று(10) 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

இது கடந்த பத்தாண்டுகளில் அந்நாட்டில் பதிவா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொலம்பியாவில் இன்று(10) 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

இது கடந்த பத்தாண்டுகளில் அந்நாட்டில் பதிவான மிகப்பெரிய நிலநடுக்கம் என கூறப்பட்டுள்ளது.</p><p>


உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை காலை 7:34 மணிக்கு இந்த நிலநடுக்கம் நாட்டை உலுக்கியுள்ளது.</p><p></p><h2>5,000 மக்கள்</h2><p> </p><p>

இதன் மையப்புள்ளி, மேற்கு கொலம்பியாவில் சுமார் 5,000 மக்கள் வசிக்கும் நகரமான சான் ஜோஸ் டெல் பால்மருக்கு வெளியே சுமார் மூன்று மைல் தொலைவில் பதிவானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2dd78dfe-5e41-4bff-aac2-b0b3bec99740/26-6a7a144eb19b3.webp' /></p><p>
</p><p>
 பொகோட்டா மற்றும் காலி உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.

2.8 மற்றும் 4.8 ரிக்டர் அளவிலான பின் அதிர்வுகள் பதிவாகியுள்ளன.</p><p>

 இந்த தொடர் நிலநடுக்கங்களால், கட்டிடங்கள் உடனடியாக இடிந்து விழுந்து, இடிபாடுகளுக்கு அடியில் மக்கள் நசுக்கப்பட்டதால், ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.</p><h2>நிலநடுக்கம்&nbsp;</h2><p> </p><p>

அதிகாலையில் மேற்கு கொலம்பியாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 77 பேர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கம் பல நகரங்களில் கட்டிடங்களைத் தரைமட்டமாக்கியதுடன், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.</p><p>

அபெலார்டோ டி லா எஸ்பிரியெல்லா ஜனாதிபதியாகப் பதவியேற்ற சில நாட்களிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/707cd0a6-383c-4921-a44e-48b636436ac6/26-6a7a144f6b89f.webp' /></p><p>


டஜன் கணக்கான கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுவதால், மேலும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>

கட்டிடங்கள் அதிர்ந்தபோது, ​​மக்கள் இடிபாடுகளிலிருந்து தப்பித்து பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்ததாக தேசிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.</p><h2>பேரழிவு</h2><p> </p><p>

கொலம்பிய புவியியல் சேவை, இந்த நிலநடுக்கம் 107 கிலோமீட்டர் (66 மைல்கள்) ஆழத்தில் ஏற்பட்டதாகவும், எல் கெய்ரோ மற்றும் எல் அகுய்லா போன்ற அண்டை நகரங்களைப் பாதித்ததாகவும் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6532d6bd-337b-4bb3-8eab-0e5f561f1a38/26-6a7a14501cfd5.webp' /></p><p>

நிலநடுக்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கணிசமான பகுதி நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாயத்தில் இருப்பதாக USGS தெரிவித்துள்ளது. </p><p>

இந்த பேரழிவிற்கு வெறும் ஏழு மணி நேரத்திற்கு முன்பு பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், கொலம்பியாவின் அண்டை நாடான ஈக்வடாரில் உள்ள மூன்று நகரங்களைப் பாதித்தது. </p><p>

பெருவின் ஸ்டிபோவில், கிட்டத்தட்ட ஒரு நாள் முன்பு 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-10T18:11:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலம்பியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம் ; 69 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/powerful-earthquake-hits-colombia-1786376506"></link>
            <id>https://canadamirror.com/article/powerful-earthquake-hits-colombia-1786376506</id>
            <summary type="text">கொலம்பியாவின் மேற்கு பகுதிகளில் திங்கட்கிழமை ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 69 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொலம்பியாவின் மேற்கு பகுதிகளில் திங்கட்கிழமை ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 69 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
நிலநடுக்கத்தின் தாக்கத்தினால் பல நகரங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. </p><p>இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.</p><p>கொலம்பியாவின் சோகோ (Chocó) பிராந்தியத்தில் அமைந்துள்ள சான் ஜோசே டெல் பால்மர் (San José del Palmar) நகராட்சிக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) மற்றும் கொலம்பிய புவியியல் சேவை தெரிவித்துள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b9a70e3-e9fb-4027-a173-7dd8b68631d6/26-6a79f13c53941.webp' /></p><p>கொலம்பிய தலைநகர் பொகோட்டாவிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஆரம்பத்தில் இந்த நிலநடுக்கத்தின் அளவு 6.6 ரிக்டர் என கொலம்பிய அதிகாரிகளால் மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், பின்னர் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அதன் அளவு 7.4 என அறிவித்துள்ளது.
</p><p>
நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 107 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக USGS தெரிவித்துள்ளது.</p><p>நிலநடுக்கத்தின் தாக்கத்தினால் சோகோ பிராந்தியத்தின் தலைநகரான கிப்டோ (Quibdó) உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததுடன், இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கியுள்ளதாகவும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சோகோ மாகாண ஆளுநர் நுபியா கரோலினா கோர்டோபா-குரி, நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அதிர்வுகள் ஏற்படக்கூடும் என எச்சரித்துள்ளார்.</p><p>

நிலநடுக்கத்தின் மையப்பகுதி சான் ஜோசே டெல் பால்மர் அருகில் இருந்த போதிலும், கிப்டோ நகரிலும் கட்டடங்களுக்கு குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
தற்போது சேத மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், முதலாவது உத்தியோகபூர்வ அறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தலைநகர் பொகோட்டா வரையிலும் உணரப்பட்டுள்ளன.

பொகோட்டாவில் வாகனங்கள் மற்றும் கட்டடங்களில் பொருத்தப்பட்டிருந்த எச்சரிக்கை அலாரங்கள் செயல்பட்டதுடன், அச்சமடைந்த மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
பொகோட்டா மேயர் கார்லோஸ் பெர்னாண்டோ கலான், நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே வெளியிட்ட தகவலில், நகரில் உயிரிழப்புகள் அல்லது காயமடைந்தவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a862451c-bc1f-48cd-b3b9-052b290ab309/26-6a7a1362d4efd.webp' /></p><p>

எனினும், சில கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கொலம்பியா மற்றும் அண்டை நாடான ஈக்வடார் ஆகிய நாடுகளின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
</p><p>
நிலநடுக்கத்திற்குப் பின்னர் ஏற்படக்கூடிய அதிர்வுகள் தொடர்பில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
</p><p>
இதனிடையே, அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு, இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.</p><p>நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசரகால மீட்புக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதுடன், சேதமடைந்த கட்டடங்கள் மற்றும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ள நிலையில், பலர் காயமடைந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.</p><p>

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தொடர்பில் அதிகாரிகள் தொடர்ந்தும் மதிப்பீடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>
கொலம்பியா அண்மைய காலங்களில் எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய நில அதிர்வுகளில் ஒன்றாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-10T18:07:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாகர காரியவசம் பிணையில் விடுவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sagara-kariyawasam-released-on-bail-1786384768"></link>
            <id>https://jvpnews.com/article/sagara-kariyawasam-released-on-bail-1786384768</id>
            <summary type="text">கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான் அருண ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான் அருண புத்ததாச உத்தரவிட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>இவ்வழக்கின் சட்ட நடவடிக்கைகளின் போது இரு தரப்பினதும் சமர்ப்பணங்கள் இன்று பிற்பகல் 4.30 மணிக்கு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பிணை உத்தரவைப் பிரகடனப்படுத்துவதை நீதவான் ஒத்திவைத்தார்.</p><p>இதற்கமைய, சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பின்னர் இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்கள் ஆராயப்பட்டு, 17 பக்கங்களைக் கொண்ட பிணை உத்தரவு பிரகடனப்படுத்தப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4292787-45be-4906-b6c1-ce5df50cafc8/26-6a7a1182e0477.webp' /></p><p>இதன்போது, தலா 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும், வெளிநாட்டுப் பயணத் தடையுடனும் சாகர காரியவசத்தைப் பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.
</p><p>

பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்த பின்னர், சாகர காரியவசத்தை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
</p><p>

கடந்த ஓகஸ்ட் 03ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்பாகச் சாகர காரியவசம் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் விசாரணைகளைத் தொடங்கியிருந்தது.
</p><p>

குறித்த விசாரணை தொடர்பான செய்திகள் கடுவலை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை செய்யப்பட்டிருந்த நிலையில், வாக்குமூலம் அளிப்பதற்காகச் சாகர காரியவசத்தை இன்று (10) முற்பகல் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு வருமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
</p><p>

இதற்கமைய, இன்று முற்பகல் அப்பணியகத்திற்கு வருகை தந்த சாகர காரியவசமிடம் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.</p><p>


பின்னர் அவர் இன்று பிற்பகல் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
</p><p>

இதன்போது, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உட்படப் பலர் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T18:02:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூட்கேஸில் இருந்து மனித சடலம் அல்ல: உயர் ரக செக்ஸ் பொம்மை: அவுஸ்திரேலிய பொலிஸார் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/high-end-sex-doll-found-in-suitcase-in-australia-1786384813"></link>
            <id>https://news.lankasri.com/article/high-end-sex-doll-found-in-suitcase-in-australia-1786384813</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் கைவிடப்பட்ட சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட சடலம் உயர் ரக செக்ஸ் பொம்மை(Sex Toy) என்பது தெரியவந்துள்ளது. கைவிடப்பட்ட சூட்கேஸினால் பரபரப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் கைவிடப்பட்ட சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட சடலம் உயர் ரக செக்ஸ் பொம்மை(Sex Toy) என்பது தெரியவந்துள்ளது.</p><h2> கைவிடப்பட்ட சூட்கேஸினால் பரபரப்பு</h2><p>ஞாயிற்றுக்கிழமை மாலை அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் கிராமப் பகுதியில் கிடந்த கைவிடப்பட்ட சூட்கேஸில் மனித சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.</p><p> ஓலன்(Oallen) பகுதியில் மண் பாதைக்கு அருகே சந்தேகத்திற்கு உரிய வகையில் கிடந்த சூட்கேஸை கொடூரமான குற்றப் புள்ளி என்று நம்பி சந்தேகத்தின் பேரில் வோல்கான் சாலையை சுற்றி வளைத்து உள்ளூர் அதிகாரிகள் தடயங்களை பாதுகாத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24c82192-0d86-4c59-b68a-2751f18df8f5/26-6a7a11af573ed.webp' /></p><h2> 20 மணி நேர தடயவியல் விசாரணையில் தெரியவந்த உண்மை</h2><p>சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் அதிகாரிகள், 20 மணி நேரத்திற்கு மேலாக ஆராய்ந்த பிறகு திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளிப்படுத்தினர்.</p><p> அதில், சூட்கேஸில் இருந்தது மனித எச்சங்கள் என்று நம்பப்பட்ட நிலையில், அது உண்மையில் மிகவும் தத்ரூபமாக உயர் ரக செக்ஸ் பொம்மை என்பது தெரியவந்துள்ளது.</p><p> ஆரம்பத்தில் அந்த பொருள் மனிதனைப் போலவே தத்ரூபமாக இருந்ததால் ஆய்வகத்திற்கு எடுத்து சென்று சோதனை செய்வதற்கு முன்பு வரை நிபுணர்களுமே அதனை மனித சடலம் என்று நம்பி ஏமாந்ததாக ஹியூம் காவல்துறை மாவட்டத்தின் தளபதி சூப்பிரண்டு லிண்டா பிராட்பரி(Superintent linda bradbury) தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc19b18c-4198-4209-8acc-5cf779ddaade/26-6a7a11b00b7fc.webp' /></p><p> நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையின் கூற்றுப்படி, சடலம் என்று நம்பப்பட்ட அந்த பொம்மைக்கு ஆடைகள் அணிவிக்கப்பட்டு இருந்ததோடு, அவற்றில் முடி, மூக்குத்தி மற்றும் உடல் காயங்கள் ஆகியவை துல்லியமாக மனித உருவத்துடன் ஒத்திருக்கும் வகையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான பொதுமக்களுக்கு காவல்துறையினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T18:00:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரத்மலானே சைமா குறித்து விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ratmalana-saima-investigation-startling-emerge-1786383949"></link>
            <id>https://jvpnews.com/article/ratmalana-saima-investigation-startling-emerge-1786383949</id>
            <summary type="text">மலேசியாவில் கைது செய்யப்பட்டு இன்று (10) இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட “ரத்மலானே சைமா” என அழைக்கப்படும் தனுஷ்க கௌசல்ய என்ற சந்தேகநபர் தொடர்பில் பொலிஸார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலேசியாவில் கைது செய்யப்பட்டு இன்று (10) இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட “ரத்மலானே சைமா” என அழைக்கப்படும் தனுஷ்க கௌசல்ய என்ற சந்தேகநபர் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த குறித்த சந்தேகநபர், வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மலேசிய பொலிஸ் மற்றும் சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்டர்போலின் உதவியுடன் மேற்கொண்ட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
41 வயதான குறித்த சந்தேகநபர் ரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், பேராதனை மற்றும் திஸ்ஸமஹாராம ஆகிய பகுதிகளிலும் அவர் தற்காலிகமாக வசித்து வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><h3>இரண்டு முக்கிய வழக்குகளில் பிரதிவாதி
</h3><p>
பொலிஸாரின் தகவல்களின்படி, 2014ஆம் ஆண்டு பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் துப்பாக்கியைக் காட்டி ஒருவரைக் கடத்திச் சென்று தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பிலும், 2016ஆம் ஆண்டு அதே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பிலும் அவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b586683-c7fd-4d7a-8871-f2d6a4f147b9/26-6a7a0e5015a74.webp' /></p><p>குறித்த இரண்டு வழக்குகளும் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், அவற்றில் அவர் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தால் அவருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதற்கு மேலதிகமாக, 2003ஆம் ஆண்டு கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அத்துடன், 2007ஆம் ஆண்டு கைக்குண்டு ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கல்கிஸ்ஸ பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>குறித்த சந்தேகநபர் மலேசியாவில் கைது செய்யப்பட்டபோது அவருடன் இருந்த ரத்மலானையைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரும், கல்கிஸ்ஸையைச் சேர்ந்த 31 வயதுடைய மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
அவர்களும் மேலதிக விசாரணைகளுக்காக இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>இதனிடையே, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் “ரத்மலானே சைமா” என அழைக்கப்படும் தனுஷ்க கௌசல்ய, திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் “கஞ்சிபானி இம்ரான்” என்பவரின் நிதி நடவடிக்கைகளை கையாண்டு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
மேலும், கஞ்சிபானி இம்ரானின் சமூக வலைத்தள நடவடிக்கைகளையும் குறித்த சந்தேகநபர் நிர்வகித்து வந்ததாகவும், அவரது குரல் பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>கடந்த ஆண்டு கஞ்சிபானி இம்ரானின் ஆலோசனையின் பேரில், “கெஹெல்பத்தர பத்மே” என அழைக்கப்படும் நபருக்கு மலேசியாவில் தலைமறைவாக இருப்பதற்கான வசதிகளை “ரத்மலானே சைமா” ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதுதொடர்பான மேலதிக தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதேவேளை, சில காலம் பிரான்ஸில் தங்கியிருந்த “குடு அஞ்சு” என அழைக்கப்படும் நபரின் நெருங்கிய கூட்டாளியாகவும் குறித்த சந்தேகநபர் செயற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f444258-859c-41fc-ba91-b82a1cd62850/26-6a7a0e4f63364.webp' /></p><p>பின்னர் அவர் கஞ்சிபானி இம்ரானுடன் இணைந்து செயற்படத் தொடங்கியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

“குடு அஞ்சு” என்பவர் “ரத்மலானே சைமா”வை கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாகவும், அது தொடர்பில் கஞ்சிபானி இம்ரான் அவரை எச்சரித்த பின்னரே சைமா, கஞ்சிபானி இம்ரானுடன் நெருக்கமாகச் செயற்படத் தொடங்கியதாகவும் விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>“ரத்மலானே சைமா” என அழைக்கப்படும் தனுஷ்க கௌசல்ய சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையிலிருந்து தப்பிச் சென்று மலேசியாவில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
நீண்ட காலமாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த அவருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், மலேசிய அதிகாரிகளின் உதவியுடன் அவரை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டுதல் மற்றும் நேரடி மேற்பார்வையின் கீழ் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சந்தேகநபர்கள் மீது குறிப்பிடப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற செயற்பாடுகள் விசாரணைகளின் முன்னேற்றத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T17:45:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை நெரிசலுக்கு முற்றுப்புள்ளி? நாடு முழுவதும் புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/an-end-to-prison-overcrowding-1786381083"></link>
            <id>https://jvpnews.com/article/an-end-to-prison-overcrowding-1786381083</id>
            <summary type="text">இலங்கையில் சிறைச்சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கும் செயற்பாட்டை மேலும் வலுப்படுத்துவது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் சிறைச்சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கும் செயற்பாட்டை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.</p><p></p><p> 


குறித்த குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக்க அவர்களின் தலைமையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது.</p><p>


சிறைச்சாலைகள் திணைக்களம், சமுதாயம் சார் சீர்திருத்தத் திணைக்களம், புனர்வாழ்வுப் பணியகம், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை ஆகிய அரசாங்க நிறுவனங்களினால் புனர்வாழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிகள் குழுவில் விளக்கமளித்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ce197d8-0b1b-468b-ad22-16478190ac8b/26-6a7a0b4483dad.webp' /></p><p>தண்டனை விதிக்கப்பட்ட 4,962 கைதிகளில் 1,492 பேருக்கு புனர்வாழ்வுத் திட்டங்கள் முன்னெக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p>

 

நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டவர்களுக்கும், ஒரு தன்னிச்சையாக முன்வரும் கைதிகளுக்குமே இவ்வாறு புனர்வாழ்வு வழங்கப்படுவதாகவும், பல்வேறு வழக்குகளுடன் தொடர்புபட்ட தண்டனைக் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கான வாய்ப்புக்கள் தமக்கு இல்லையென்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
</p><p>

போதைக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்பதற்குத் தேவையான புனர்வாழ்வு நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைளை முன்னெடுத்திருப்பதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p> இதற்குத் தேவையான அதிகாரிகளை சேவையில் இணைந்து, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பிரதேச செயலகப் பிரிவுகளில் இதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்தும் திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டினர்.
</p><p>

புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களுக்கு சமூகத்தில் காணப்படும் வரவேற்பு மற்றும் அவ்வாறானவர்களுக்கு நன்சான்றிதழ் வழங்குவதில் காணப்படும் குறைபாடுகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. </p><p>புனர்வாழ்வு நடவடிக்கைகளை திறைமையான முறையில் முன்னெடுப்பதற்கு சட்ட திட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T17:32:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதிலுக்கு பதில் - ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்..! ட்ருத் சோசியலில் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/interesting-idea-iran-demand-trump-compensation-1786382594"></link>
            <id>https://tamilwin.com/article/interesting-idea-iran-demand-trump-compensation-1786382594</id>
            <summary type="text">எதிர்கால சமாதானப் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக, ஈரானால் பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆதரிக்கப்பட்டதாகவும் கூறப்படும் தாக்குதல்கள் மற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்கால சமாதானப் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக, ஈரானால் பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆதரிக்கப்பட்டதாகவும் கூறப்படும் தாக்குதல்கள் மற்றும் அட்டூழியங்களைச் சுட்டிக்காட்டி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானிடம் இழப்பீடு கோரியுள்ளார்.
</p><p>
Truth Social தளத்தில் வெளியிட்ட பதிவில்,</p><p> 

கடந்த ஐந்து மாதப் போரில் தங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு ஈரான் இழப்பீடு கோருவது தொடர்பான யோசனையை "சுவாரஸ்யமான யோசனை" என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>ஈரானிடம் இழப்பீடு</h2><p> </p><p>

அதேவேளை, அதற்குப் பதிலாக அமெரிக்காவும் ஈரானிடம் இழப்பீடு கோரும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் கோரி வரும் இழப்பீடு தொடர்பான விடயம், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் ஒருபோதும் குறிப்பிடப்படவில்லை என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.</p><p><iframe src="https://truthsocial.com/@realDonaldTrump/117072168149236615/embed" class="truthsocial-embed" style="max-width: 100%; border: 0" width="600" allowfullscreen="allowfullscreen"></iframe><script src="https://truthsocial.com/embed.js" async="async"></script></p><p>

2000ஆம் ஆண்டு யேமன் துறைமுகத்தில் அமெரிக்க கடற்படையின் வழிகாட்டப்பட்ட ஏவுகணை போர்க்கப்பலான USS Cole மீது நடத்தப்பட்ட கொடிய குண்டுத் தாக்குதலையும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

 இந்தத் தாக்குதலுக்கு அல்-கொய்தா அமைப்பே காரணம் என FBI தெரிவித்துள்ளது. </p><p>

இந்தச் சம்பவத்தில் 17 அமெரிக்க கடற்படை வீரர்கள் உயிரிழந்ததுடன், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

"இது ஒரு சுவாரஸ்யமான யோசனை. ஏனெனில், பல மோதல்களிலும் சாலையோர குண்டுத் தாக்குதல்களிலும் கொல்லப்பட்ட மற்றும் படுகாயமடைந்த மக்களுக்காக, தற்போது நானும் ஈரானிடம் இழப்பீடு கோருகிறேன்.</p><p></p><h2>ட்ரம்ப் பதிவு</h2><p>
</p><p>
 இதுபோன்ற தாக்குதல்களுக்கு ஈரான் பிரபலமானது. ஆரம்பத்தில் ஜெனரல் சுலைமானி தலைமையிலும் இவை இடம்பெற்றன. USS Cole தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காகவும், போரில் உயிரிழந்த ஆயிரக்கணக்கானோருக்காகவும் இந்த இழப்பீட்டை கோருகிறேன்" என ட்ரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa5eed04-60b9-44d2-8b8e-8b762d66711f/26-6a7a0ae34eddc.webp' /></p><p>
</p><p>
மேலும், கடந்த 50 ஆண்டுகளில் இடம்பெற்ற பொது எழுச்சிப் போராட்டங்களின்போது கொல்லப்பட்ட போராட்டக்காரர்களின் குடும்பங்களுக்கும், கடந்த ஐந்து மாதங்களில் கொல்லப்பட்ட 52,000 பேருக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
"எதிர்காலத்தில் நடைபெறும் அனைத்து பேச்சுவார்த்தைகளிலும் இந்த விடயத்தை உறுதியாக முன்வைக்குமாறு எனது பிரதிநிதிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்" என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.</p><p>YOU MAY LIKE THIS..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/rampG3yZRg0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-10T17:31:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகரில் குண்டு மிரட்டல்: பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/thousands-of-people-evacuated-halifax-buildings-1786381613"></link>
            <id>https://canadamirror.com/article/thousands-of-people-evacuated-halifax-buildings-1786381613</id>
            <summary type="text">கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகர மையப்பகுதியில் நபர் ஒருவர் குண்டு மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து, இன்று காலையில் அங்குள்ள கட்டடங்களில் இருந்து பல்லாயிரக்கணக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகர மையப்பகுதியில் நபர் ஒருவர் குண்டு மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து, இன்று காலையில் அங்குள்ள கட்டடங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.</p><p> 
அப்பர் வோட்டர் வீதியில் அமைந்துள்ள 'பேர்டிஸ் வார்ஃப்' வாகன நிறுத்துமிடத்தில் சந்தேகத்திற்கு இடமான வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்த நிலையில், காலை 8:45 மணியளவில் அங்கிருந்த மக்கள் முதன்முதலாக வெளியேற்றப்பட்டனர். </p><p>
குறித்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து பொலிஸார் அந்தச் சந்தேகத்திற்குரிய வாகனத்தைச் சோதனையிட்டனர். 
நிலைமையின் தீவிரத்தைக் கருதி, காலை 10:15 மணியளவில் பொதுமக்கள் வெளியேற்றப்பட வேண்டிய பகுதி&nbsp; விரிவுபடுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b2a09da-f58e-4831-bf02-3e93aab0c23f/26-6a7a052f0cabb.webp' /></p><p>பேரிங்டன் வீதி,&nbsp; அமலமேக் வழி சந்திப்பு, அப்பர் வோட்டர் வீதி,&nbsp; பிரன்ஸ்விக் வீதி / டொக்டர் ஆல்ஃப்ரெட் வேடெல் வீதி முதல் பிரன்ஸ்விக் வீதி காக்ஸ்வெல் வீதி வரை,&nbsp; டியூக் வீதி / பேரிங்டன் வீதி சந்திப்பில் இருந்து அப்பர் வோட்டர் வீதி வரையிலான பகுதிகள் மூடப்பட்டன.</p><p>இந்த வெளியேற்ற உத்தரவு அப்பகுதியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் பாதசாரிகளும் உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என ஹாலிஃபாக்ஸ் பிராந்திய பொலிஸார் அறிவித்தனர்.</p><p>
இந்த வெளியேற்ற மண்டலத்தில் பல ஹோட்டல்கள், உணவகங்கள், ஸ்கோஷியா சதுக்கம் மற்றும் அரசு அலுவலகங்கள் அடங்கியுள்ளன. 
பொலிஸாரின் தேவைக்கேற்ப அருகிலுள்ள பக்கவாட்டுச் சாலைகளும் மூடப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>ஹாலிஃபாக்ஸ் ட்ரான்சிட் பேருந்துகள் மாற்றுப் பாதைகளில் இயக்கப்படும் அதேவேளையில், படகு முனையம் திறந்திருக்கும் என்றும் பயணிகளுக்கு வழிகாட்ட ஊழியர்கள் இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
காலை 10:30 மணியளவில் அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டது. </p><p>அதில், சந்தேகத்திற்குரிய வாகனம் உட்பட அப்பகுதியைப் பொலிஸார் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும், விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. </p><p>
கிளேட்டன் பூங்காவில் உள்ள கனடா கேம்ஸ் சென்டர் அருகே தோமஸ் ரேடால் டிரைவ் பகுதியில் வைத்து சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.</p><p> 
பிற்பகல் 1:30 மணியளவில் பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, அப்பகுதியில் தற்போது உடனடி அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>எனினும், விசாரணை தொடர்வதால் குறைந்த அளவிலான பொலிஸ் பாதுகாப்பு அங்கே நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T17:29:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஸ்காட்செவானில் 44 மில்லியன் டொலர் லொத்தர் பரிசு: வென்ற அதிர்ஷ்டசாலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/winning-ticket-for-44-million-lotto-649-draw-1786381089"></link>
            <id>https://canadamirror.com/article/winning-ticket-for-44-million-lotto-649-draw-1786381089</id>
            <summary type="text">கனடாவின் சஸ்காட்செவான் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் 44 மில்லியன் டொலர் பெறுமதியான &#039;கோல்ட் போல்&#039; ஜாக்பாட் பரிசை வென்று கோடீஸ்வரராகியுள்ளார். 
ஆனால், தான...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் சஸ்காட்செவான் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் 44 மில்லியன் டொலர் பெறுமதியான 'கோல்ட் போல்' ஜாக்பாட் பரிசை வென்று கோடீஸ்வரராகியுள்ளார். </p><p>
ஆனால், தான் அந்தப் பரிசை வென்ற தகவல் இன்னும் அவருக்குத் தெரியவில்லை. 
சனிக்கிழமை நடைபெற்ற 'லொட்டோ 6/49' குலுக்கலிலேயே இந்த 44 மில்லியன் டொலா் ஜாக்பாட் விழுந்துள்ளது. </p><p>
வெற்றிபெற்ற இந்த லொத்தர் சீட்டு சஸ்காட்செவான் மாகாணத்தில் உள்ள சாஸ்கடூன் மற்றும் ரெஜினா ஆகிய இரு முக்கிய நகரங்களுக்கும் வெளியேயுள்ள ஒரு பகுதியில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29dac847-6692-4188-8bad-fdb57dce6946/26-6a7a03235e673.webp' /></p><p> </p><p>
வெற்றிபெற்ற எண் 23202513-03 ஆகும். இந்த எண் முழுமையாகத் துல்லியமாகப் பொருந்தினால் மட்டுமே பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
வெற்றிபெற்ற நபர் அல்லது நபர்கள் தங்களது பரிசுத் தொகையைக் கோருவதற்கு ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T17:28:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[456 உக்ரைன், 126 ரஷ்யா: எல்லையில் வெடித்த சண்டை: கொல்லப்பட்ட 17 பேர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-russia-cross-border-drone-fight-17-dead-1786382613"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-russia-cross-border-drone-fight-17-dead-1786382613</id>
            <summary type="text">உக்ரைன் - ரஷ்யா இடையே நடந்த ட்ரோன் மற்றும் பீரங்கி தாக்குதலில் 17 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைன் - ரஷ்யா எல்லையில் தீவிர சண்டை
ரஷ்யா மற்றும் உக...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் - ரஷ்யா இடையே நடந்த ட்ரோன் மற்றும் பீரங்கி தாக்குதலில் 17 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> உக்ரைன் - ரஷ்யா எல்லையில் தீவிர சண்டை</h2><p>
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளின் எல்லையில் நடந்த கடுமையான ட்ரோன் மற்றும் பீரங்கி தாக்குதலில் குறைந்தது 17 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><p> ரஷ்யாவின் டாடர்ஸ்தான்(Tatarstan) பகுதியில் உக்ரைன் நடத்திய மிகப்பெரிய அளவிலான ட்ரோன் தாக்குதலில் 12 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><p> டாடர்ஸ்தான் பகுதியில் ரஷ்யாவின் முக்கியமான எரிசக்தி மையங்களில் ஒன்றாகவும், இங்குள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உக்ரைனின் தாக்குதலுக்கு அடிக்கடி உள்ளாகின்றன. சமீபத்திய 75 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாக அப்பிராந்திய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10c3c542-926c-471c-8362-5f339c4dc1f8/26-6a7a0917386ad.webp' /></p><p>உக்ரைனின் தாக்குதலை தொடர்ந்து டாடர்ஸ்தான் பகுதியில் உள்ள எண்ணெய் ஆலை ஒன்றில் இருந்து கரும்புகை எழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.</p><p> உக்ரைனிய எல்லையில் இருந்து கிட்டத்தட்ட 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Nizhnekamsk என்ற தொழில்துறை நகரத்தை வெற்றிகரமாக தாக்கி இருப்பதாக கீவ் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p></p><h2> சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்கள்</h2><p>
நேற்று இரவு மட்டும் கிட்டத்தட்ட 456 உக்ரைனிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>அதே நேரத்தில் உக்ரைனுக்குள் அத்துமீறி நுழைந்த&nbsp; ரஷ்ய 126 ட்ரோன்களை உக்ரைனிய விமானப்படை இடைமறித்து அழித்து இருப்பதாக அறிவித்துள்ளது.</p><p> உக்ரைனின் எல்லைப் புற நகரமான கார்கிவ்-வில் ரஷ்யா நடத்திய பீரங்கி தாக்குதலில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T17:23:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலேசியாவிலிருந்து ஆபத்தான நபர்களை ஏற்றிய சிறிலங்கன் எயார் லைன்ஸ் கட்டுநாயக்காவில் தரையிறங்கியது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/plane-carrying-rathmalane-saima-arrives-katunayake-1786379845"></link>
            <id>https://ibctamil.com/article/plane-carrying-rathmalane-saima-arrives-katunayake-1786379845</id>
            <summary type="text">மலேசியாவில் கைது செய்யப்பட்ட, சக்திவாய்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான தனுஷ்க கௌசல்யா என்ற ‘ரத்மலானே சைமா’ உட்பட மூன்று சந்தேக நபர்களை ஏற்றி வந்த ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலேசியாவில் கைது செய்யப்பட்ட, சக்திவாய்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான தனுஷ்க கௌசல்யா என்ற ‘ரத்மலானே சைமா’ உட்பட மூன்று சந்தேக நபர்களை ஏற்றி வந்த சிறிலங்கன் விமானம், மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளது.
</p><p>
இந்த மூன்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ALK315 மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.</p><h2>சிறப்பு காவல்துறை குழுவினரால் நடவடிக்கை</h2><p>காவல் உதவி கண்காணிப்பாளர் றொகன் ஒலுகல உள்ளிட்ட ஒரு சிறப்பு காவல்துறை குழுவினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15eead94-420c-45c4-8e0d-f367121835e2/26-6a7a057bb5031.webp' /></p><p>
</p><p>
தனுஷ்க கௌசல்யா என்ற ‘ரத்மலானே சைமா’, சக்திவாய்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபானி இம்ரானின் பிரதான அடியாள் என்று கருதப்படுகிறார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T17:08:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பை உலுக்கிய படுகொலை - பிரான்ஸில் இருந்து தீட்டப்பட்ட திட்டம் - பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/colombo-gun-fire-police-revealed-details-1786372036"></link>
            <id>https://tamilwin.com/article/colombo-gun-fire-police-revealed-details-1786372036</id>
            <summary type="text">கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இன்று மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.  

இந்த துப்பாக்கிச்சூட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இன்று மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். </p><p> 

இந்த துப்பாக்கிச்சூடு தற்போது பிரான்ஸில் பதுங்கியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான குடு அஞ்சு என்பவரால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
</p><p>
அண்மையில் குடு அஞ்சுவின் நெருங்கிய நபர் ஒருவர் இரத்மலானை பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிவாங்கும் நோக்கில் இந்தத் கொலை நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். </p><h2><b>

துப்பாக்கி சூடு</b></h2><p>இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் முகமது அஸ்மின் மொஹிதீன் என்ற 54 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17b6613f-9ec6-4ce8-b1f0-a5db6fe45ba7/26-6a79e3a216e66.webp' /></p><p>கொழும்பு 10, ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் அமைந்துள்ள கட்டடப் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரை குறிவைத்து பிற்பகல் 1.30 மணியளில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. </p><p>

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டுத் தப்பியோடியுள்ளனர். </p><p> 

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.</p><p>

உயிரிழந்தவர் பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய போதைப்பொருள் மன்னன் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
</p><p>
துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் விதம் அருகிலுள்ள கட்டடமொன்றின் சிசிடிவி கமராவிலும் பதிவாகியுள்ளது.<iframe frameborder="0" src="//www.youtube.com/embed/3Jg7aTaxRew" width="640" height="360" class="note-video-clip"></iframe></p>]]></content>
            <updated>2026-08-10T16:58:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தான் - துருக்கி - சவுதி பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து அச்சப்பட தேவையில்லை: ஈரான் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pakistan-turkey-saudi-security-deal-iran-state-1786373553"></link>
            <id>https://tamilwin.com/article/pakistan-turkey-saudi-security-deal-iran-state-1786373553</id>
            <summary type="text">​பாகிஸ்தான், துருக்கி மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு இடையே
கையெழுத்திடப்பட்டுள்ள புதிய பாதுகாப்பு ஒப்பந்தம், தெஹ்ரானுக்கு (ஈரானுக்கு)
எதிராக...</summary>
            <content type="html"><![CDATA[<p>​பாகிஸ்தான், துருக்கி மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு இடையே
கையெழுத்திடப்பட்டுள்ள புதிய பாதுகாப்பு ஒப்பந்தம், தெஹ்ரானுக்கு (ஈரானுக்கு)
எதிராக அமைந்தது என அஞ்சத் தேவையில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.

​</p><p>ஈரான் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர், பிராந்திய நாடுகள் வெளிச்சக்திகளைச் சாராமல் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சியாகவே இந்த ஒப்பந்தத்தைப் பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><h2> புதிய பாதுகாப்பு ஒப்பந்தம்</h2><p>

​பிராந்தியத்தின் புவிசார் மற்றும் வரலாற்று உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு,
துல்லியமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை அடையாளம் கண்டு செயற்படுத்தப்படும்
எந்தவொரு திட்டமும், அப்பிராந்தியத்தின் பாதுகாப்பை பலப்படுத்தவும்
ஸ்திரமின்மையை தடுக்கவும் உதவும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18607002-05d0-485b-a1d2-ae6279883f11/26-6a79e957be462.webp' /></p><p>

​சவுதி அரேபியாவின் மக்கா நகரில் இடம்பெற்ற சந்திப்பில், பாகிஸ்தான் பிரதமர்
ஷெஹ்பாஸ் ஷரீப், துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகான் மற்றும் சவுதி பட்டத்து
இளவரசர் மொஹமட் பின் சல்மான் ஆகியோரால் இந்த கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம்
கையெழுத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T16:57:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலம்பியாவில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: இடிந்து விழுந்த பல கட்டிடங்கள்: 50 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/colombia-hit-by-7-4-magnitude-earthquake-1786380284"></link>
            <id>https://news.lankasri.com/article/colombia-hit-by-7-4-magnitude-earthquake-1786380284</id>
            <summary type="text">கொலம்பியாவில் ரிக்டர் அளவுகோலில் 7.4 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பது அந்நாட்டு மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. கொலம்பியாவில் நிலநட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொலம்பியாவில் ரிக்டர் அளவுகோலில் 7.4 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பது அந்நாட்டு மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.</p><h2> கொலம்பியாவில் நிலநடுக்கம்</h2><p>மேற்கு கொலம்பியாவில் உள்ளூர் நேரப்படி காலை 7.34 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.4 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி இருப்பதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.</p><p> பசிபிக் கடலோர பகுதியான சோகோ மாகாணத்தில் இந்த 7.4 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9af16efe-d49b-4650-bbe0-9dd0661f2591/26-6a7a018f068a2.webp' /></p><p> சான் ஜோஸ் டெல் பால்மார் என்ற கிராமத்திற்கு அருகில் கிட்டத்தட்ட 107 கிலோமீட்டர் மையத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக கொலம்பியா புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.</p><p></p><p>சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கம் காரணமாக சோகோ மாகாணத்தின் தலைநகர் கிப்டோ மற்றும் பிற பகுதிகளில் உள்ள பல கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.</p><p> மேலும் இந்த நிலநடுக்கத்தில் &nbsp;இதுவரை 50 பேர் வரை உயிரிழந்து இருப்பதாகவும் பலர் காயமடைந்து இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99255d79-69f0-4197-bc26-c5375023e655/26-6a7a018fd3648.webp' /></p><h2>மீட்பு பணிகள் தீவிரம்</h2><p>சாண்டியாகோ நகரில் குறைந்து 20 கட்டிடங்கள் இடிந்து விழுந்து இருப்பதாகவும், இந்த இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு பணியினர் தீவிரமாக செயல்பட்டு வருவதாக அந்நகர மேயர் தகவல் தெரிவித்துள்ளார்.</p><p> கொலம்பியாவில் முக்கியமாக உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், அண்டை நாடுகளான ஈக்வடார் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் வரை உணரப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T16:51:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 3 வயது சிறுமியைத் தாக்கிய கரடி: அதிர்ச்சி சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/shock-bc-mom-describes-bear-attack-on-toddler-1786348616"></link>
            <id>https://canadamirror.com/article/shock-bc-mom-describes-bear-attack-on-toddler-1786348616</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், மேப்பிள் ரிட்ஜ் பகுதியில் உள்ள வீட்டின் பின்புறக் கொல்லைப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், மேப்பிள் ரிட்ஜ் பகுதியில் உள்ள வீட்டின் பின்புறக் கொல்லைப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியைப் பாக்கரடி ஒன்று கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர், கரடி சிறுமியின் கழுத்தைக் கவ்வ முயன்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். </p><p>உடனடியாகச் செயல்பட்ட தந்தை, வில் மற்றும் அம்பைப் பயன்படுத்தி கரடியின் தலையில் எய்து அதைத் தாக்கி விரட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6b22b8e-f638-400e-a747-29b174259aa2/26-6a79844a6c312.webp' /></p><p> </p><p>
கரடி கடித்ததில் சிறுமியின் கழுத்து, தலை மற்றும் முதுகுப் பகுதியில் ஆழமான காயங்களும் வெட்டுக் காயங்களும் ஏற்பட்டுள்ளன.</p><p> உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் வான்கூவரில் உள்ள சிறுவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அச்சிறுமி, தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உயிராபத்திலிருந்து தப்பியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. </p><p>
சம்பவ இடத்திற்குப் பொலிஸார் வந்தபோதும், அந்த இடத்தில் மிகுந்த ஆர்வம் காட்டிய கரடி மீண்டும் மீண்டும் அவ்வீட்டுப் பகுதிக்கு வந்துள்ளது. </p><p>பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி அதிகாரிகள் கரடியை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினர். </p><p>
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கரடி அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குள் தப்பி ஓடியது. வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் அப்பகுதியில் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன், அதைக் கண்டுபிடித்தவுடன் அழிக்க முடிவு செய்துள்ளனர்.</p><p> 
அப்பகுதி மக்கள் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறும், வனவிலங்குகள் நடமாட்டம் தென்பட்டால் உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T16:26:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எனது தாயார் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்; இயக்குனர் ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cm-vijay-jason-sanjay-talk-sangeetha-roots-jaffna-1786345121"></link>
            <id>https://jvpnews.com/article/cm-vijay-jason-sanjay-talk-sangeetha-roots-jaffna-1786345121</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நடிகரும் தமிழ் நாட்டின் முதலமைச்சருமான விஜய்யின் மகன்&amp;nbsp;இயக்குனர் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை பூர்வீகம் மற்றும் யாழ்ப்பாணத்துடனான தொடர்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நடிகரும் தமிழ் நாட்டின் <a href="https://jvpnews.com/article/jason-sanjay-emotional-about-his-father-cm-vijay-1785559667" target="_blank">முதலமைச்சருமான விஜய்யின் மகன்&nbsp;இயக்குனர் ஜேசன் சஞ்சய்</a>, தனது இலங்கை பூர்வீகம் மற்றும் யாழ்ப்பாணத்துடனான தொடர்பு குறித்தும் நேர்காணலில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
</p><p>
நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் ஜேசன், தனது தாயார் இலங்கையின் வடக்கே உள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும், குடும்பத்தினர் வெளிநாட்டில் குடியேறும் முன்பு அவர் அங்கேயே வளர்ந்தவர் என்றும் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/711527ed-dbcf-45f5-82d0-a319af02cb49/26-6a7976a2d23c8.webp' /></p><p></p><h2>&nbsp;எதிர்காலத்தில் இலங்கையில் படப்பிடிப்பு</h2><p>
</p><p>
"என் அம்மா யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர், அதாவது இலங்கையின் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர். அவர் அங்கு பிறந்து வளர்ந்தார்; பின்னர் அவர்கள் வெளிநாட்டில் குடியேறினர்," என்று அவர் குறிப்பிட்டார்.</p><p></p><p>
</p><p>
இலங்கைக்குச் செல்லும்போது, ​​தனது தாத்தாவின் சொத்துக்களில் ஒன்று தனது குடும்பத்தின் கடந்த காலத்துடனான ஒரு முக்கியத் தொடர்பை நினைவூட்டும் இடமாகத் திகழ்வதாக இயக்குனர் ஜேசன் சஞ்சய்&nbsp; கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63aa0c9d-07e7-4cc8-94c1-36c8858cb4f7/26-6a7976a38731f.webp' /></p><p>
</p><p>
மேலும், தனது 'சிக்மா' (Sigma) திரைப்படத் திட்டத்திற்காக இலங்கையை ஒரு படப்பிடிப்புத் தளமாகக் கருதியதாகவும், அதற்கான இடங்களைப் பார்வையிட படக்குழுவினர் அங்கு சென்றிருந்ததாகவும் இயக்குனர் ஜேசன் சஞ்சய்&nbsp; தெரிவித்தார்.</p><p></p><p> </p><p>இருப்பினும், அந்தத் திட்டம் கைகூடவில்லை.

எனினும் எதிர்காலத்தில் இலங்கையில் படப்பிடிப்பு நடத்தி, அந்நாட்டின் அழகை வெளிப்படுத்த விரும்புவதாகவும் இயக்குனர் ஜேசன் சஞ்சய்&nbsp; கூறியுள்ளார்.</p><p>முதலமைச்சர்&nbsp; விஜயின் மனைவி&nbsp; சங்கீதா,&nbsp; &nbsp;யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக&nbsp; கொண்ட லண்டன் வாழ்&nbsp; புலம்பெயர் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-10T16:25:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை? தேசிய செயல்பாட்டு சபையில் தீவிர ஆலோசனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-penalty-for-drug-crimes-1786378697"></link>
            <id>https://jvpnews.com/article/death-penalty-for-drug-crimes-1786378697</id>
            <summary type="text">போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து &quot;முழு நாடுமே ஒன்றாக&quot; தேசிய செயல்பாட்டு சபையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து "முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயல்பாட்டு சபையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p>

 

இன்று (10) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இச்செயல்பாட்டு சபை கூடியபோதே இது தொடர்பில் ஆராயப்பட்டது.</p><p>

 

நச்சு போதைப்பொருள் அச்சுறுத்தல் தற்போது தனிப்பட்ட தொடர்புகளையும் தாண்டி, ஒட்டுமொத்த பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பிற்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளமையையும், அது தொடர்ந்து அதிகரித்து வருவதையும் கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b94c8e03-7068-4b72-bdc9-553deab92650/26-6a79f9cc302d2.webp' /></p><p>போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்படும் வரம்பற்ற செல்வத்தைச் சுற்றி உருவெடுத்துள்ள குற்றவியல் சூழல், தற்போது தேசிய பொருளாதாரம், சுற்றுலாத்துறை மற்றும் சமூக ஒழுக்க நெறிமுறைகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றது.
</p><p>
 

போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றச்செயல்கள் குறித்து அச்சப்படும் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காகக் கடுமையான சட்டதிட்டங்களை அமல்படுத்துவதன் அவசியம் குறித்து "நாடு ஒன்றாக" தேசிய செயல்பாட்டு சபையில் விவாதிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.</p><p>

 

ஒட்டுமொத்த சமூகக் கட்டமைப்பையும் சீர்குலைத்து, நாட்டின் எதிர்கால சந்ததியை இரையாக்கிக் கொண்டிருக்கும் நச்சு போதைப்பொருள் பேரழிவை வேரோடு பிடுங்கியெறிய நாட்டில் நடைமுறைச் செயல்பாடுகளையும், விரைவான கருத்தியல் மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். </p><p>

 

இதற்காக மதத் தலைவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் தீவிர பங்களிப்பை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
</p><p>
 

இந்த தேசிய பேரழிவின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு, நிறுவன அமைப்பிற்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.
</p><p>
 

போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் பிணை வழங்குதல் தொடர்பான சட்டத் திருத்தங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு இறுதிப் கட்டத்தில் உள்ளன என்றும், அவை விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1ef1123-a886-4cb6-b94b-3795bc46e116/26-6a79f9cb7df19.webp' /></p><p>போதைப்பொருள் வழக்குகள் தாமதமாவதற்கு முக்கிய காரணமாக இருந்த அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கைகளை வெளியிடும் செயல்முறை கணிசமாக துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 6,414 அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.</p><p>இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கை தாமதத்தால் சிறையிலுள்ளவர்களின் சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக, கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் அளவுக்கு ஏற்ப (5 கிராமிற்கும் குறைவாக, 10 கிராமிற்கும் குறைவாக என) துல்லியமான தரவு வகைப்பாட்டைச் சமர்ப்பிக்குமாறும் இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம், பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, அறிக்கைகள் கிடைத்தவுடன் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான முறையான வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
</p><p>
 

அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் கொள்ளளவை அதிகரிப்பது மற்றும் வசதிகளை விரிவுபடுத்துவது குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் கேட்டறிந்த ஜனாதிபதி, இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளைப் பெறுவதற்கு கடற்படையின் உதவியைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
</p><p>
 

பாதுகாப்பு கெமரா அமைப்புகளை (CCTV) பொருத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்வதற்கும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T16:18:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி புதைகுழி: சர்வதேச நியதிகளுடன் விசாரணை நடத்த சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/begin-the-chemmani-inquiries-1786377814"></link>
            <id>https://tamilwin.com/article/begin-the-chemmani-inquiries-1786377814</id>
            <summary type="text">செம்மணி புதைகுழியில் மீட்கப்பட்ட என்புகூடுகள் தொடர்பிலான விசாரணைகளை
சர்வதே நியதிகளுடன் , சர்வதேச அமைப்புக்களின் உதவிகளுடன் உடனடியாக ஆரம்பிக்க
வேண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி புதைகுழியில் மீட்கப்பட்ட என்புகூடுகள் தொடர்பிலான விசாரணைகளை
சர்வதே நியதிகளுடன் , சர்வதேச அமைப்புக்களின் உதவிகளுடன் உடனடியாக ஆரம்பிக்க
வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ்
பிரேமச்சந்திரன் கோரியுள்ளார்.
</p><p>
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்

மேலும் தெரிவிக்கையில்,</p><h2>செம்மணி மனித புதைகுழி</h2><p>
</p><p>
செம்மணி மனித புதைகுழியில் இருந்து 500க்கும் மேற்பட்ட
என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.100 நாட்களைத் தாண்டி அகழ்வு
பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், இவை தொடர்பான அடுத்த கட்ட
நடவடிக்கைகளை நோக்கி அரசாங்கம் ஏதாவது ஏற்பாடு செய்திருக்கிறதா என்றால்
இதுவரை இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48ecb540-d2f2-4691-8a56-487dc7e083bd/26-6a79f93917361.webp' /></p><p>
</p><p>
முக்கியமாக, இந்த என்புக்கூடுகளுடைய டி.என்.ஏ (DNA) பரிசோதனைகள்
மேற்கொள்ளப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களின்
டி.என்.ஏ பரிசோதனைகளை மேற்கொண்டு, காணாமல்
ஆக்கப்பட்டவர்களுடைய என்புக்கூடுகளாக என்பதனை கண்டறிய முயற்சிகளை மேற்கொள்ள
முடியும்.

அவற்றை முழுமையாக செய்வதற்கான தொழில்நுட்ப வசதிகள் இலங்கையில் இல்லை
என்பதும்; அதனை செய்வதற்கான ஆளணி பற்றாக்குறைகள் இருக்கிறது என்பதும்
உண்மையானது. </p><p>அதனால் இதில் பாண்டித்தியம் பெற்ற சர்வதேச அமைப்புகளிடம் இது
கையளிக்கப்பட வேண்டும்.

இந்த விசாரணைகள் அல்லது இந்த சோதனைகள் என்பது ஒரு சர்வதேச நியதிகளுக்கு
உட்பட்ட வகையில், அந்த முறையில் இது கொண்டுசெல்லப்பட வேண்டும் என்று நாங்கள்
எதிர்பார்க்கின்றோம்.</p><h2>விசாரணை</h2><p>
</p><p>
ஆகவே, இலங்கையில் இருக்கக்கூடிய சிவில் அமைப்புகளாக இருக்கலாம், மனித உரிமை
அமைப்புகளாக இருக்கலாம், ஜனநாயக விடயங்களுக்காக போராடக்கூடிய அமைப்புகளாக
இருக்கலாம், சர்வதேச மனித உரிமைகள் அமைப்பாக இருக்கலாம் இவர்கள் எல்லோரும்
நிச்சயமாக இலங்கையில் இவற்றை செய்து முடிப்பதற்கான சாத்தியப்பாடுகள் மிக மிகக்
குறைவு என்ற அடிப்படையில், ஒரு சர்வதேச விசாரணை ஒன்றுக்கான ஏற்பாடுகளை செய்ய
வேண்டியது எல்லோரது கடமை என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9da005d3-b8f5-4062-bfe7-4f70743ba501/26-6a79f939bd775.webp' /></p><p>
</p><p>
ஆகவே, அந்த வகையில் மிகுதி எலும்புக்கூடுகளை தேடியெடுத்த பிற்பாடுதான் அடுத்த
கட்டத்தை நோக்கி நகர்த்துவோம் என்பதை விடுத்து, இது வரையில் எடுக்கப்பட்ட
என்பு கூடுகள் தொடர்பிலான விசாரணைகளை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என
தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T16:15:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பைடனின் புற்றுநோய் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/former-us-president-joe-bidens-cancer-worsens-1786376124"></link>
            <id>https://ibctamil.com/article/former-us-president-joe-bidens-cancer-worsens-1786376124</id>
            <summary type="text">&amp;nbsp;முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு (83) பரவி வரும் புரோஸ்டேட் புற்றுநோய் மேலும் தீவிரமடைந்து, அவரது எலும்புகள் மற்றும் உடலின் பிற பாகங்களுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு (83) பரவி வரும் புரோஸ்டேட் புற்றுநோய் மேலும் தீவிரமடைந்து, அவரது எலும்புகள் மற்றும் உடலின் பிற பாகங்களுக்கும் பரவியுள்ளதாக அவரது மகன் ஹண்டர் பைடன் தெரிவித்துள்ளார்.



2025 மே மாதம் ஜோ பைடனுக்கு கடுமையான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. </p><p>தற்போது இந்நோய் எலும்புகளுக்குப் பரவியுள்ளதால், அவர் கடுமையான வலியினாலும் உடல்நலக் குறைவாலும் அவதிப்பட்டு வருவதாக ஹண்டர் பைடன் கூறியுள்ளார்.</p><h2> கடுமையான வலியால் அவதி</h2><p>&nbsp;பைடனின் புற்றுநோய் திசு பரிசோதனையில் கிளீசன் ஸ்கோர் 9 எனப் பதிவாகியுள்ளது. இது புற்றுநோயின் மிகத் தீவிரமான நிலையைக் (Grade Group 5) குறிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75a4ac83-7c38-400a-a0eb-f3954095e1bb/26-6a79f8e1ab44b.webp' /></p><p>


கதிர்வீச்சு மற்றும் ஹார்மோன் சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும், புற்றுநோய் செல்கள் எலும்புகளுக்கு அப்பாலும் பரவி, அவரது உடலை மிகவும் பலவீனப்படுத்தியுள்ளன.</p><p> </p><p>இதுகுறித்து அவரது மகன் ஹண்டர் பைடன் கூறுகையில், "என் தந்தை கடுமையான வலியால் அவதிப்படுவதைப் பார்ப்பது மிகவும் வேதனையாக உள்ளது. இருப்பினும், அவர் தனது மன உறுதியுடன் தொடர்ந்து பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T16:14:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரிசில் மின்சார ஸ்கூட்டர் பயணிகளுக்கு புதிய பாதுகாப்பு விதிகள் அமுல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/paris-helmet-law-for-e-scooter-riders-1786365190"></link>
            <id>https://news.lankasri.com/article/paris-helmet-law-for-e-scooter-riders-1786365190</id>
            <summary type="text">Paris orders e-scooter riders wear helmets: பாரிசில் மின்சார ஸ்கூட்டர் பயணிகளுக்கான புதிய பாதுகாப்பு விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. 

பிரான்ஸ் தலைந...</summary>
            <content type="html"><![CDATA[<p>Paris orders e-scooter riders wear helmets: பாரிசில் மின்சார ஸ்கூட்டர் பயணிகளுக்கான புதிய பாதுகாப்பு விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.</p><p> 

பிரான்ஸ் தலைநகரான பாரிசில், இனி, மின்சார ஸ்கூட்டர், செக்வே, ஹோவர்போர்டு போன்ற மின்சார இயக்கக் கருவிகளை பயன்படுத்தும் அனைவரும் ஹெல்மெட் மற்றும் பிரதிபலிப்பு உடை அணிய வேண்டும்.
</p><p>
விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56909f22-b7c4-4775-bcf5-048b68000611/26-6a79c72472369.webp' /></p><p>கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்த விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
2025-ஆம் ஆண்டில் மட்டும், 79 பேர் உயிரிழந்துள்ளனர். இது 2024-இல் ஏற்பட்ட 45 உயிரிழப்புகளை விட அதிகம். மேலும், 1,100-க்கும் மேற்பட்ட பயணிகள் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். பெரும்பாலான விபத்துகளில் தலையில் காயங்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.</p><p></p><p>
</p><h2>
விதிகளை மீறுவோருக்கு அபராதம்</h2><p>

ஹெல்மெட் அணியாமல் சென்றால் 135 யூரோ அபராதம் விதிக்கப்படும். பிரதிபலிப்பு உடை அல்லது ஹை-விசிபிலிட்டி ஜாக்கெட் அணியாமல் சென்றால் 35 யூரோ அபராதம் விதிக்கப்படும். </p><p>இந்த விதிகள், பாரிசிலும் அதன் புறநகரங்களிலும் பொதுச் சாலைகளில் எப்போதும் அமுலில் இருக்கும்.
</p><p>
2023-ஆம் ஆண்டில், பாதுகாப்பு சிக்கல்களால் வாடகை e-scooter-கள் பாரிசில் தடைசெய்யப்பட்டன. ஆனால், தனிப்பட்ட முறையில் வைத்திருக்கும் e-scooter-கள் இன்னும் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. இதனால், விபத்துகள் அதிகரித்துள்ளன.

மற்ற ஐரோப்பிய நகரங்களும் இதேபோன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன. </p><p></p><p>2024-இல் மாட்ரிட் நகரம் வாடகை e-scooter-களை தடை செய்தது. 2026-இல் பிரஸ்ஸல்ஸ் நகரமும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டது.</p><p>

இந்த புதிய விதிகள், பாரிசில் சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதில் முக்கியமான முயற்சியாகக் கருதப்படுகின்றன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T16:05:48+00:00</updated>
        </entry>
    </feed>
