<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-19T11:29:36+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் வேகமாக பரவும் டெங்கு - குழந்தைகளுடன் மருத்துவமனை வருவோருக்கு அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/instructions-issued-to-mothers-dengue-testing-1787132301"></link>
            <id>https://tamilwin.com/article/instructions-issued-to-mothers-dengue-testing-1787132301</id>
            <summary type="text">இலங்கையில் மிக வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக, இலங்கையின் மிகப்பெரிய இலவசக் குழந்தைகள் மருத்துவமனைக்கு (லேடி ரிட்ஜ்வே)குழந்தைகளுடன் வரும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் மிக வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக, இலங்கையின் மிகப்பெரிய இலவசக் குழந்தைகள் மருத்துவமனைக்கு (லேடி ரிட்ஜ்வே)குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் அதிகரித்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>தற்போது நிலவும் அசாதார நிலையை கருத்திற் கொண்டு தங்கள் குழந்தைகளை சிகிச்சைக்காக அழைத்து வரும் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><h2>மருத்துவமனை நிர்வாகத்தின் அறிவுறுத்தல்</h2><p>
இதற்கமைய, தங்கள் குழந்தைகளை சிகிச்சைக்காக அழைத்து வரும்போது, ​​பின்வரும் ஆவணங்களை உடன் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55d7357b-b81e-404c-b85e-bffc4ec9f4bf/26-6a8592d6d8351.webp' /></p><p> </p><ul><li>

தனிநபர் சுகாதார எண் (PHN) </li><li>

பார்கோடு அட்டை குழந்தையின் உடல்நலம் மற்றும் வளர்ச்சி குறிப்பேடு</li><li>

 எடை பதிவு புத்தகம் </li><li>மருந்து

 உணவு ஒவ்வாமை விவரங்கள் மருத்துவக் குறிப்பேடுகள் மருத்துவமனையிலிருந்து வெளியேறும் அட்டைகள்</li><li>


 நோய் கண்டறிதல் அட்டைகள்</li></ul><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T11:26:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுங்கத் திணைக்களத்தில் பாரிய மோசடி - நெருங்கிய நண்பரை காப்பாற்ற அறிக்கையை மறைத்த ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/another-major-fraud-in-the-customs-department-1787136436"></link>
            <id>https://tamilwin.com/article/another-major-fraud-in-the-customs-department-1787136436</id>
            <summary type="text">இலங்கையின் சுங்கத் திணைக்களத்தில் இடம்பெற்ற பாரிய மோசடி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையை ஜனாதிபதி வேண்டுமென்றே மறைத்து வைத்துள்ளதாக நாடாளுமன...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் சுங்கத் திணைக்களத்தில் இடம்பெற்ற பாரிய மோசடி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையை ஜனாதிபதி வேண்டுமென்றே மறைத்து வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சாணக நாடாளுமன்றத்தில் பாரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
</p><p>
சுங்கத் திணைக்களத்தின் Red Channel ஊடாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 40 அடி கொள்கலன் ஒன்றை சோதனையிட்டபோது இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்ததாக அவர் தெரிவித்தார்.</p><h2>பெரிய மோசடி</h2><p>வாகன உதிரிப் பாகங்கள், இயந்திரங்கள் மற்றும் வாகன இருக்கைகள் அடங்கியிருந்த அந்தக் கொள்கலனை முதலாவது மற்றும் இரண்டாவது குழுக்கள் சோதனையிட்டு, எந்தவித பிரச்சினையும் இல்லை என அறிக்கை சமர்ப்பித்திருந்தன. </p><p>எனினும், சுங்கத் திணைக்களத்தின் மத்திய விசாரணைப் பிரிவு மேற்கொண்ட மூன்றாவது சோதனையின்போது 85 வகையான பொருட்கள் கண்டறியப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f9c80fc-1aa7-412e-b06c-6e200c0c972c/26-6a858fc10c1c9.webp' /></p><p>
</p><p>
அவற்றில் 45 வகையான பொருட்கள் சுங்கத் திணைக்களத்திடம் அறிவிக்கப்படாதவை எனவும், அவற்றின் கீழ் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 355 பொருட்கள் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>

மேலும், இறக்குமதி அனுமதிப்பத்திரம் இல்லாத 122 வாகன இருக்கைகளும், ரிம்களுடன் கூடிய 18 டயர்களும் அந்தக் கொள்கலனில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.</p><h2>ஜனாதிபதியின் நெருங்கிய நண்பர்&nbsp;</h2><p>
</p><p>இந்த மோசடியில் தொடர்புடையவர் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள சுங்க அதிகாரி ஒருவர் தற்போது ஜனாதிபதி செயலகத்தில் உயர் பதவியொன்றை வகிக்கும் ஜனாதிபதியின் நெருங்கிய நபர் எனவும் டி.வி. சானக குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36fd93be-d1ec-445d-afa7-a8ebd1961ba5/26-6a858fc0301cf.webp' /></p><p>

இது தொடர்பான புலனாய்வுப் பிரிவின் விசாரணை அறிக்கை நிதி அமைச்சின் செயலாளர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டிருந்த போதிலும், தனது நெருங்கிய நபரைப் பாதுகாப்பதற்காக ஜனாதிபதி அந்த அறிக்கையை வெளியிடாமல் மறைத்து வைத்துள்ளதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டினார்.
</p><p>
இந்த ஊழல் தொடர்பாக ஜனாதிபதி உடனடியாக நாட்டுக்கு விளக்கமளிக்க வேண்டும் எனவும், நீதித்துறைக்கு கூட அழுத்தம் கொடுத்து இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுபவர்களைப் பாதுகாப்பது நாட்டின் எதிர்காலத்திற்கு பாரிய அச்சுறுத்தலாகும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T11:26:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசுடமையாகிறது பசிலின் பிணை பணம் : சிறைக்கு செல்லப்போகும் பிணைதாரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/basil-s-bail-money-property-of-the-government-1787136497"></link>
            <id>https://ibctamil.com/article/basil-s-bail-money-property-of-the-government-1787136497</id>
            <summary type="text">சட்டவிரோதமாகச் சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தி மாத்தறைப் பிரதேசத்தில் ஒன்றரை ஏக்கர் காணி வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் நீதிம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோதமாகச் சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தி மாத்தறைப் பிரதேசத்தில் ஒன்றரை ஏக்கர் காணி வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தினால், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச செலுத்தியிருந்த பிணைப்பணத்தை அரசுடமையாக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (18) உத்தரவிட்டது.</p><p>மாத்தறை, எலியகந்த வீதியில், பிரவுன்ஹில்லில் அமைந்துள்ள ஒரு சொத்து தொடர்பாக காவல்தறை நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் (FCID) தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு மாத்தறை பிரதான நீதவான் சத்துர திசாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><h2>சிறைக்கு செல்லப்போகும் பசிலின் பிணைதாரர்கள்</h2><p>இந்த வழக்கில் மூன்றாவது பிரதிவாதியான பசில் ராஜபக்ச, நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மருத்துவ அறிக்கையைக் கூட சமர்ப்பிக்காமல் தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் இருந்துள்ளார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39366ce4-3ac6-4b86-b8f2-65319e98d7b0/26-6a859008422a9.webp' /></p><p> </p><p>மேலும், அவருக்காகப் பிணைதாரர்களாகக் கையெழுத்திட்ட மூன்று பேருக்கும் நீதவான் அபராதம் விதித்ததுடன், குறித்த அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் அவர்களைச் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார்.</p><p></p><h2>நீடிக்கப்பட்ட பிடியாணை</h2><p>இது தவிர, பசில் ராஜபக்சவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த கைது பிடியாணையை 2026 ஒக்டோபர் 27 ஆம் திகதி வரை நீடிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/501bcbb5-56ad-4665-9ea3-ce1acec28640/26-6a859008e89e1.webp' /></p><p>
</p><p>
செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முதல் மற்றும் இரண்டாவது பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர். அத்துடன், முறைப்பாடு சார்பில் FCID அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் டி சில்வா உட்பட சட்டத்தரணிகள் குழுவும் முன்னிலையாகினர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T11:14:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே நாளில் நான்கு சிறைச்சாலைகளை கட்டுக்குள் கொண்டு வந்த நீதி அமைச்சர் - களத்தில் அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-s-frequent-prison-clashes-1787137879"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-s-frequent-prison-clashes-1787137879</id>
            <summary type="text">சிறைச்சாலைகளில் நிகழும் அசாதார நிலை குறித்து எழுப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும், கைதிகளின் நலனை உறுதிச் செய்யும் விதமாகவும் நீதி மற்றும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைகளில் நிகழும் அசாதார நிலை குறித்து எழுப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும், கைதிகளின் நலனை உறுதிச் செய்யும் விதமாகவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷன நாணயக்கார சிறைச்சாலைகளுக்கு சென்று ஆய்வை மேற்கொண்டுள்ளார்.</p><p>

இந்த நடவடிக்கை இன்று(19.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><h2>
சிறைச்சாலை மோதல்களை குறைக்கத் திட்டம்</h2><p>
இதற்கமைய, களுத்துறை சிறைச்சாலைக்கு சென்ற ஹர்ஷன நாணயக்கார ஊடகங்களுக்கு உரையாற்றுகையில்,
</p><p>
அவசரநிலைகளுக்குப் பதிலளிப்பதையும் கைதிகளின் நலனை உறுதி செய்வதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு, தீவில் உள்ள ஒவ்வொரு சிறைச்சாலையிலும் அரச நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு கூட்டு அமைப்பு நிறுவப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2c91b40-ae6d-4d4e-bcbe-ecaddbdb1ffc/26-6a858fdc2a394.webp' /></p><h2>


புதிய அமைப்பு</h2><p>
அரச அதிகாரிகளால் கூட்டாக நிறுவப்படும் இந்தக் கூட்டு அமைப்பு, பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக மாதத்திற்கு ஒரு முறையாவது கூட வேண்டும்.
</p><p>
தீவில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளையும் அடிப்படையாகக் கொண்டு இந்தக் கூட்டு அமைப்பை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கமைய, இன்று களுத்துறை, காலி, புஸ்ஸா மற்றும் மாத்தறை சிறைச்சாலைகளை மையமாகக் கொண்டு பிராந்திய அரச நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் பங்கேற்புடன் கூட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டன என்றார்.
</p><p>
இந்த நடவடிக்கையில், களுத்துறை சிறைச்சாலை அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T11:13:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்றாவது குழந்தை பெறும் பெண் அரச ஊழியர்களுக்கு ஒரு வருடம் விடுமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/1-year-leave-female-government-employees-3rd-child-1787137935"></link>
            <id>https://jvpnews.com/article/1-year-leave-female-government-employees-3rd-child-1787137935</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண் அரச ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறைக் காலத்தை 365 நாட்கள் (ஒரு ஆண்டு) வரை நீடிக்க, முதலமைச்சர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண் அரச ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறைக் காலத்தை 365 நாட்கள் (ஒரு ஆண்டு) வரை நீடிக்க, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
</p><p>
தற்போதுள்ள நடைமுறையின்படி, மூன்றாவது குழந்தைக்கு 12 வாரங்கள் மட்டுமே மகப்பேறு விடுமுறை வழங்கப்பட்டு வரும் நிலையில், புதிய முடிவின் மூலம் அது 365 நாட்களாக அதிகரிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4744694b-731f-4291-993a-1fda162554be/26-6a858f914bbd9.webp' /></p><p>
</p><p>
சட்டப்பேரவையில் மனிதவள முகாமைத்துவ துறை தொடர்பான மானியக் கோரிக்கையைத் தாக்கல் செய்து உரையாற்றிய அமைச்சர் டி. சரத்குமார் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.</p><p></p><p>
</p><p>
தற்போது தமிழ்நாட்டில் அரச பணியில் உள்ள திருமணமான பெண்களுக்கு, இரண்டு குழந்தைகளுக்குக் குறைவாக இருக்கும் பட்சத்தில் 365 நாட்கள் மகப்பேறு விடுமுறை வழங்கப்படுகிறது.
</p><p>
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள பெண்களுக்கு 12 வாரங்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>

இந்த நிலையில், புதிய தீர்மானத்தின் கீழ் மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண் அரச ஊழியர்களுக்கும் ஒரு வருட மகப்பேறு விடுமுறை கிடைக்கப்பெறும்.

சமூக நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டை முன்னிறுத்தி தமிழக அரசு செயற்படுத்தி வரும் கொள்கைகளின் ஒரு பகுதியாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-19T11:09:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[19ஆவது மாடியிலிருந்து விழுந்து இறந்த குழந்தை: 18 மில்லியன் இழப்பீடு கோரும் குடும்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/family-sue-building-owner-baby-fall-from-apartment-1787132492"></link>
            <id>https://news.lankasri.com/article/family-sue-building-owner-baby-fall-from-apartment-1787132492</id>
            <summary type="text">Family of toddler who died in fall from Toronto apartment sues building owners: ரொரன்றோ அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து விழுந்து உயிரிழந்த சிறு குழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Family of toddler who died in fall from Toronto apartment sues building owners: ரொரன்றோ அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து விழுந்து உயிரிழந்த சிறு குழந்தையின் குடும்பத்தினர், கட்டிட உரிமையாளர்கள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
</p><p>

கனடாவின் ரொரன்றோ நகரிலுள்ள வடக்கு யார்க் பகுதியில் அமைந்துள்ளது 50 Graydon Hall Drive என்னும் அடுக்குமாடிக் குடியிருப்பு.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba56bde8-fecf-44b5-9820-fa6b3aba02fc/26-6a857a4e176e6.webp' /></p><p>
அந்த குடியிருப்பின் 19ஆவது மாடியில், ரக்‌ஷித் சௌஹான், தீபாலி காஷ்யப் தம்பதியர் தங்கள் கைக்குழந்தையுடன் வாழ்ந்துவந்த நிலையில், மே மாதம் ஒரு நாள் தங்கள் குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.</p><h3>

மாடியிலிருந்து விழுந்து இறந்த குழந்தை</h3><p>

இரண்டு வயதை எட்டாத அந்தக் குழந்தை, விளையாடும்போது ஜன்னல் கண்ணாடியைத் தொட்டதாகவும், திடீரென அந்தக் கண்ணாடி உடைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்கள் ரக்‌ஷித், தீபாலி தம்பதியர்.&nbsp;</p><p>
ஒரு நொடிப்பொழுதில், கண்ணாடி உடைந்த ஜன்னல் வழியாக குழந்தை வெளியே விழுந்திருக்கிறாள்.
</p><p>
குழந்தை தங்கள் கண் முன்னே விழுந்து உயிரிழந்ததைக் கண்டு திகிலடைந்த பெற்றோர், சொல்லொணா அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Ftoronto.culture%2Fposts%2Fpfbid02B2pTC8fk5cW2qjL3xSwALeGsfRnu6PWSUY58MKgmLvidQPuxTMEicLTFeRSxHoU3l&show_text=true&width=500" width="500" height="776" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><h3> மில்லியன் இழப்பீடு கோரும் குடும்பம்</h3><p>

இந்நிலையில், அந்தக் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் கட்டிட நிர்வாகம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்கள் அந்தக் குழந்தையின் பெற்றோரும் தாத்தா பாட்டியும்.
</p><p>
அந்தக் கட்டிடத்தில் ஏற்கனவே இதுபோல கண்ணாடி உடைந்ததால் அங்கு குடியிருக்கும் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது தெரிந்த நிலையிலும், அதை சீர் செய்ய கட்டிட உரிமையாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்கள் அவர்கள்.&nbsp;&nbsp;</p><p></p><p>
அத்துடன், குழந்தை இறந்ததும், அந்தக் கட்டிட உரிமையாளர்கள் குடும்பம் எதையோ மறைக்க முயல்வதாக அவதூறு பரப்பியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.</p><p>

ஆகவே, அந்தக் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் கட்டிட நிர்வாகம் தங்களுக்கு 18 மில்லியன் டொலர்கள் இழப்பீடு வழங்கவேண்டும் என கோரி வழக்குத் தொடர்ந்துள்ளது அந்தக் குழந்தையின் குடும்பம்.
</p><p>
இதற்கிடையில், அதே வடக்கு யார்க் பகுதியில் அமைந்துள்ள மற்றொரு அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து, ஞாயிற்றுக்கிழமையன்று, ஒரு ஆறு வயது சிறுமி விழுந்து உயிரிழந்துள்ளாள் என்னும் துயரச் செய்தி ஒன்றும் வெளியாகியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T11:06:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலிய டென்னிஸ் வீரர் நிக் கிரியோஸுக்கு தற்காலிக தடை: உறுதியான கோகைன் பயன்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nick-kyrgios-faces-suspension-after-cocaine-test-1787137534"></link>
            <id>https://news.lankasri.com/article/nick-kyrgios-faces-suspension-after-cocaine-test-1787137534</id>
            <summary type="text">Nick Kyrgios faces suspension after cocaine test: கோகைன் பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய டென்னிஸ் வீரர் நிக் கிரியோஸுக்கு தற்காலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nick Kyrgios faces suspension after cocaine test: கோகைன் பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய டென்னிஸ் வீரர் நிக் கிரியோஸுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2> நிக் கிரியோஸுக்கு தற்காலிக தடை</h2><p>அவுஸ்திரேலிய டென்னிஸ் நட்சத்திரம் நிக் கிரியோஸ்(Nick Kyrgios) கோகைன் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p> சர்வதேச டென்னிஸ் ஒருமைப்பாட்டு முகமை(ITIA) இந்த தகவலை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.</p><p> மேலும் ITIA வழங்கிய தகவலில், கடந்த ஜூன் 22ம் திகதி மயோர்கா ஓபன் போட்டிகள் நடைபெற்ற போது கிரியோஸுடம் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.</p><p> இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனைகளில் ஜூலை 17ம் திகதி கோகைன் முதன்மை கூறுகளான பென்சோயில்கோமைன் மாதிரியில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d27a6fa1-cc7a-48d2-b076-456a70e7bf1e/26-6a858dff934df.webp' /></p><h2> தவறை ஒப்புக் கொண்ட நிக் கிரியோஸ்</h2><p>இந்த அறிவிப்பு வெளியான பிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிக் கிரியோஸ் வெளியிட்ட பதிவில், “தான் பெரிய தவறிழைத்து விட்டதாக ஒப்புக் கொண்டுள்ளார்.” </p><p>&nbsp;அத்துடன் தன்னுடைய குடும்பத்தினர், விளம்பரதாரர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T11:05:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் பதவியேற்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/northern-province-sdig-of-police-takes-charge-1787136629"></link>
            <id>https://ibctamil.com/article/northern-province-sdig-of-police-takes-charge-1787136629</id>
            <summary type="text">வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபராக தினேஸ் கருணாநாயக்க தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.யாழ். காங்கேசன்துறையில் உள்ள வடக்கு மாகாண ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபராக தினேஸ் கருணாநாயக்க தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.</p><p>யாழ். காங்கேசன்துறையில் உள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபரின் காரியாலயத்தில் நடைபெற்ற சம்பிரதாயபூர்வ சர்வமத வழிபாடுகளுடன் தினேஸ் கருணாநாயக்க&nbsp;இன்று (19) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.</p><p>வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபராக கடமையாற்றிய எச்.பி.சிறிவர்தன தென் மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>&nbsp;கடமைகளை பொறுப்பேற்றார்</h2><p>இந்த நிலையில் விசேட பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபராக கடமையாற்றி வந்த தினேஸ் கருணாநாயக்க வடமாகாண புதிய சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32c6e8ac-89a1-4070-acf1-0333ab73bcb2/26-6a858c322ff5b.webp' /></p><p>குறித்த நிகழ்வில் மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்கள் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், காவல்துறை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T11:04:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட 06 சந்தேக நபர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/06-suspects-arrested-attempting-to-bribe-police-1787135224"></link>
            <id>https://tamilwin.com/article/06-suspects-arrested-attempting-to-bribe-police-1787135224</id>
            <summary type="text">கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட A9 பிரதான வீதியின் பரந்தன் பகுதியில்
காணப்படுகின்ற வீதிச் சோதனை சாவடியில் பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட 06...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட A9 பிரதான வீதியின் பரந்தன் பகுதியில்
காணப்படுகின்ற வீதிச் சோதனை சாவடியில் பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட 06
சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>குறித்த கைது நடவடிக்கை இன்று(19.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>சந்தேக நபர்களான&nbsp;டிப்பர் வாகன சாரதிகள் பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்கி சட்விரோத மணலை கொண்டு செல்ல முற்பட்டவேளை இந்த கைது நடவடிக்கை&nbsp;முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f4cb9f8-ac54-417e-8fd1-86951a52550f/26-6a8589e9b37df.webp' /></p><p>இந்நிலையில் அவர்களின் ஐந்து
டிப்பர் வாகனங்களும் பொலிஸாரினால் பொலிஸ் நிலையத்தில் தடுத்து
வைக்கப்பட்டுள்ளது.</p><p>
சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆறுபேரையும் இன்றைய தினம் நீதிமன்றில்
முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9de3e2d-b2a1-43a7-885d-477a97222f3c/26-6a8589ea91104.webp' /></p><p> </p><p>குறித்த
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T10:56:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி ஊடக அமையத்தின் காணி விடுவிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/defense-ministry-statement-1787132008"></link>
            <id>https://tamilwin.com/article/defense-ministry-statement-1787132008</id>
            <summary type="text">கிளிநொச்சி - ஏ9 வீதி, காக்கா கடைச் சநதியில் அமைந்துள்ள கிளிநொச்சி ஊடக
அமையத்தின் காணியினையும், கட்டடத்தினையும் விடுவித்து தருமாறு கிளிநொச்சி
ஊடக இல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - ஏ9 வீதி, காக்கா கடைச் சநதியில் அமைந்துள்ள கிளிநொச்சி ஊடக
அமையத்தின் காணியினையும், கட்டடத்தினையும் விடுவித்து தருமாறு கிளிநொச்சி
ஊடக இல்லம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை சில மாதங்களுக்கு முன்னர்
எழுதியிருந்தனர்.
</p><p>
இக்கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி செயலகம் பாதுகாப்பு அமைச்சிடம் பதில்
கோரியிருந்தது.</p><h2>காணியையும் கட்டடத்தையும் பயன்படுத்தும் இராணுவத்தினர்</h2><p>அதற்கமைவாக பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதி செயலகத்திற்கு
வழங்கிய பதிலில்

பாதுகாப்பு காரணங்கள் காரணமாக குறித்த காணியையும், கட்டடத்தையும்
விடுவிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சு அறிக்கையளித்துள்ளதாக
ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (அபிவிருத்தி நிர்வாகம்) W.M.S.P.
வீரசிங்க கிளிநொச்சி ஊடக அமையத்திற்கு தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efb0f73f-48c0-48dd-9011-8ed03b5f68d6/26-6a858c0e981d9.webp' /></p><p>

2009இற்கு முன்னர் கிளிநொச்சி ஊடக இல்லமாக செயற்பட்ட குறித்த காணியும்
கட்டத்தையும் தற்போது இராணுவத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். </p><p>இந்த
காணிக்கு ஒரு புறமாகவுள்ள நிலம் கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு
விடுவிக்கப்பட்ட நிலையில் மறுபுறம் யோகர் சுவாமிகள் நிலையத்திறகும்
விடுவிக்கப்பட்ட நிலையில் ஊடக அமையத்தின் காணியும் கட்டடமும் மாத்திரம் விடுவிக்கப்படாத நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T10:51:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் 22 வயதுடைய இளைஞன் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/youth-arrested-with-drugs-worth-around-rs-12-crore-1787135665"></link>
            <id>https://ibctamil.com/article/youth-arrested-with-drugs-worth-around-rs-12-crore-1787135665</id>
            <summary type="text">




சுமார் 12 கோடி ரூபாய் பெறுமதியான &#039;ஐஸ்&#039; போதைப்பொருளுடன், வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரரின் வலையமைப்புடன் தொடர்புடைய நபர் ஒருவர் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>




சுமார் 12 கோடி ரூபாய் பெறுமதியான 'ஐஸ்' போதைப்பொருளுடன், வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரரின் வலையமைப்புடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த கைது நடவடிக்கையானது, காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் (STF) மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>

கைது செய்யப்பட்ட 22 வயதுடைய சந்தேக நபரிடமிருந்து 18.672 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், இரண்டு கைபேசிகள் மற்றும் ஒரு இலத்திரனியல் தராசு என்பன கவால்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><h2>போதைப்பொருள் களஞ்சியசாலை</h2><p>

விசேட அதிரடிப்படை தலைமையகத்தின் விசேட நடவடிக்கைப் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைவாக, பண்டாரகம மஸ்வில வெந்தேசி வத்த பகுதியில் உள்ள வீடொன்றை முற்றுகையிட்ட காவல்துறையினர், சந்தேக நபரையும் போதைப்பொருள் இருப்பையும் கைப்பற்றியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3dc11415-7bd6-47ed-897c-320264e1f853/26-6a8589c54226e.webp' /></p><p>

சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான பானந்துர கூடு சலிந்து மற்றும் துபாயில் பதுங்கியிருக்கும் ரவிஷ்க ஆகியோரின் போதைப்பொருள் வலையமைப்பில் இயங்கி வந்தவர் என்பதும், அவர்களின் போதைப்பொருள் களஞ்சியசாலையின் பாதுகாப்பாளராகச் செயற்பட்டு வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T10:48:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக தினேஸ் கருணாநாயக்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/general-of-police-northern-province-1787136587"></link>
            <id>https://jvpnews.com/article/general-of-police-northern-province-1787136587</id>
            <summary type="text">&amp;nbsp; வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக தினேஸ் கருணாநாயக்க இன்று (19) புதன்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றார்.


காங்கேசன்துறையில் உள்ள வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக தினேஸ் கருணாநாயக்க இன்று (19) புதன்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றார்.</p><p>


காங்கேசன்துறையில் உள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் காரியாலயத்தில் நடைபெற்ற சம்பிரதாயபூர்வ சர்வமத வழிபாடுகளுடன் தினேஸ் கருணாநாயக்க தனது கடமைகளை பொறுப்பேற்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c88d236-7525-40d2-a6e8-81047b013c43/26-6a858a4cb5d00.webp' /></p><p>
</p><p>
வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய எச்.பி.சிறிவர்தன, தென் மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், விசேட பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபராக கடமையாற்றி வந்த தினேஸ் கருணாநாயக்க வடமாகாண புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
</p><p>
குறித்த நிகழ்வில் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளிட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-08-19T10:47:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பிற்கு பதிலடி: கலிபோர்னியாவை தனது பிரதேசமாக அறிவித்தது ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-labels-california-its-new-territory-1787135101"></link>
            <id>https://ibctamil.com/article/iran-labels-california-its-new-territory-1787135101</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணையை “புதிய அமெரிக்கப் பிரதேசம்” எனச் சித்தரிக்கும் ஒரு படத்தை வெளியிட்டதற்குப் பதிலடியாக ஈரானின் அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணையை “புதிய அமெரிக்கப் பிரதேசம்” எனச் சித்தரிக்கும் ஒரு படத்தை வெளியிட்டதற்குப் பதிலடியாக ஈரானின் அதிகாரபூர்வ சமூக ஊடகக் கணக்கு ஒன்று செவ்வாயன்று கலிபோர்னியாவை ஈரானின் “புதிய பிரதேசம்” எனக் குறிப்பிட்டது.
</p><p>
போர் முடிந்த பிறகு அந்த நீரிணை அமெரிக்கப் பிரதேசமாக மாற்றப்படும் என்று அவர் முன்பு கூறியிருந்ததைத் தொடர்ந்து, ட்ரம்ப் செவ்வாயன்று தனது ‘ட்ரூத் சோஷியல்’ கணக்கில் அந்தப் படத்தைப் பகிர்ந்தார்.</p><h2>புதிய அமெரிக்கப் பிரதேசம்</h2><p>அதில், “புதிய அமெரிக்கப் பிரதேசம்” என்ற வார்த்தைகளுக்குக் கீழே அந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழி வட்டமிடப்பட்டு, ஹோர்முஸ் நீரிணையின் வரைபடம் காட்டப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77c7138e-c639-40fa-9bff-c6400dd55b4f/26-6a85870e5cc09.webp' /></p><p>

பின்னர் வெள்ளை மாளிகை,சமூக ஊடகத் தளமான X-இல் உள்ள தனது அதிகாரபூர்வ கணக்கில் ட்ரம்பின் பதிவை மீண்டும் வெளியிட்டது.</p><p></p><h2>ஈரானின் பதிலடி</h2><p>

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, X தளத்தில் உள்ள 'ஈரான் இன் ஹைதராபாத்' அதிகாரபூர்வ கணக்கு, அமெரிக்காவின் ஒரு வரைபடத்தை வெளியிட்டது. அதில் கலிபோர்னியா நீல நிறத்தில் சிறப்பித்துக் காட்டப்பட்டிருந்ததுடன், "ஈரான் இஸ்லாமியக் குடியரசின் புதிய பிரதேசம்" என்ற வார்த்தைகளும் இடம்பெற்றிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0f8cad6-5dae-47b8-b76b-9b56af4dcba6/26-6a85870f0e9ca.webp' /></p><p>
</p><p>
ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாடியும் ட்ரம்பின் பதிவிற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, X தளத்தில் இவ்வாறு எழுதினார்: "ஹோர்முஸ் நீரிணை குறித்த அவரது பிரமை விரைவில் சரிசெய்யப்படும், அல்லது இந்த பிரமை பிடித்த மனிதனின் பிரமைகளை நாங்கள் சரிசெய்வோம்."&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T10:46:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாஸா எரிப்பு விவகாரம்: நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் ஆராயக் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/muslim-bodies-during-the-covid-19-period-included-1787134128"></link>
            <id>https://tamilwin.com/article/muslim-bodies-during-the-covid-19-period-included-1787134128</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபினால் கடந்த ஒகஸ்ட் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை, நாடா...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபினால் கடந்த ஒகஸ்ட் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் உள்ளீர்த்து ஆராயுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
கொரோனா தொற்று காலத்தில் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள், கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தினால் பலவந்தமாக எரிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என இந்தப் பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>மனித உரிமை மீறல்</h2><p>

இந்நிலையில், குறித்த பிரேரணையை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் உள்ளீர்த்து ஆராயுமாறு கோரி, 20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதம் இன்று (19.08.2026) சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/baac3fa2-7d2d-4644-81a4-f2841a118fac/26-6a85891038f22.webp' /></p><p>
ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் வாசித் ஆகியோர் சபாநாயகரைச் சந்தித்து இந்தக் கோரிக்கை கடிதத்தைக் கையளித்தனர்.
</p><p>
முன்னாள் அரசாங்கத்தின் காலத்தில், சுகாதார வழிகாட்டல்களை மீறியும், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் மத நம்பிக்கைகளுக்கு முரணாகவும் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனை மனித உரிமை மீறலாகவும் அநீதியாகவும் சுட்டிக்காட்டியுள்ள கோரிக்கை கடிதம், இந்த விவகாரம் தொடர்பில் முறையானதும் பாரபட்சமற்றதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T10:44:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறை அதிகாரிகளின் சம்பள உயர்வு : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-officers-salary-increase-ananda-wijepala-1787134858"></link>
            <id>https://ibctamil.com/article/police-officers-salary-increase-ananda-wijepala-1787134858</id>
            <summary type="text">சேவையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, காவல்துறை அதிகாரிகளின் சம்பளத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக&amp;nbsp;பொது ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சேவையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, காவல்துறை அதிகாரிகளின் சம்பளத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக&nbsp;பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p><p>அரச தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே ஆனந்த விஜேபால இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.</p><p>இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை காவல்துறை அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் புதிய சீருடையை அறிமுகப்படுத்தவுள்ளது.</p><p></p><h2>சீருடையில் மாற்றம்</h2><p>காவல்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுகின்றது, இது ஜனவரி அல்லது பெப்ரவரி மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25dcb1fe-d5f9-47e7-8798-4ca60a5967a7/26-6a85884f0e1a1.webp' /></p><p>காவல்துறை அதிகாரிகளின் தோற்றத்தை மாற்றுவதுடன் மட்டும் அரசாங்கத்தின் திட்டங்கள் நின்றுவிடவில்லை.</p><p>சேவையின் தரத்தை மேம்படுத்துவதையும் அதனை மக்கள் நட்புறவுடையதாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளும் இதில் அடங்கும்“ என தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T10:37:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டுவால் தெரிவுசெய்யப்பட்ட எட்டாவது ஜனாதிபதி ரணில் GOV.UK அறிக்கையால் சிக்கினார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ranil-gets-caught-up-in-gov-uk-report-1787128754"></link>
            <id>https://ibctamil.com/article/ranil-gets-caught-up-in-gov-uk-report-1787128754</id>
            <summary type="text">இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் தனது தனிப்பட்ட பிரித்தானிய விஜயத்திற்காக மக்களின் வரிப்பணத்தை தவறா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் தனது தனிப்பட்ட பிரித்தானிய விஜயத்திற்காக மக்களின் வரிப்பணத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்ற குற்றச்சாட்டு மற்றும் அது தொடர்பான நீதிமன்ற வழக்குகள் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன.</p><p>

GOV.UK இணையதளத்தில் வெளியாகியுள்ள அறிக்கையினை மேற்கோள்கட்டி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடும் ரணிலுக்கு எதிராக திரும்பும் ஒரு சட்ட நகர்வாக பார்க்கப்படுகிறது.
</p><p>
GOV.UK வெளியிட்ட இந்த அறிக்கையில் இராஜதந்திர முறையில் ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவுக்கு வருகைதந்ததாக எந்த விதமான தரவுகளும் அதில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
</p><p></p><h2>குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடு</h2><p>
இந்நிலையிலேயே சமூக செயற்பாட்டாளரான ஒஷால ஹேரத்தால் நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் இந்த முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b5ac17e-cc30-4513-bd1f-a1ce85510f14/26-6a857b1f73dc6.webp' /></p><p>

கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் ரணில் விக்ரமசிங்க பிரேதனியாவுக்கு மேற்கொண்ட விஜயம், ஓர் உத்தியோகபூர்வ விஜயம் அல்ல என்பது அந்த அறிக்கையில் அம்பலமாகியுள்ளது.
</p><p>
இந்த குற்றச்சாட்டானது ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது முன்னாள் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராக முன்வைக்கப்பட்டு முன்னதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது 

இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணைகள் அனைத்தும் நிறைவடைந்து. </p><p>அது தொடர்பான கோப்புகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டு பல மாதங்கள் கடந்துவிட்டன. 

எனினும், தற்போதைய பிரதம நீதியரசர் ஓய்வுபெறும் வரை இந்த வழக்கை வேண்டுமென்றே காலதாமதம் செய்ய சட்டமா அதிபர் முயல்வதாகப் பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.</p><p> 

இந்த வழக்கை மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் (Trial-at-Bar) முன்னிலையில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
</p><p>
இது குறித்து நடைபெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில், சட்டமா அதிபர் திணைக்களத்தில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையே வழக்குகளின் தாமதத்திற்கு முதன்மைக் காரணம் என்றும், நீதித்துறையின் சுயாதீனமான செயல்பாடுகளில் அரசாங்கம் தலையிட முடியாது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சட்டமாதிபர் திணைக்களம்</h2><p>

இருப்பினும், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, 

"ஜனநாயகத்தைச் சீர்குலைத்துள்ள ரணில் விக்ரமசிங்க, நாட்டின் இந்த பாரிய குற்றத்திற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும்" என மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19e6665e-07a5-4a51-87cf-d2cfe69acfff/26-6a857b20485bc.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்த சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார, 

குற்றப்புலனாய்வு திணைக்களம் பிரித்தானியாவுக்கு சென்று தேவையான தகவல்களை திரட்டி வந்துள்ளனர்.
</p><p>
அத்துடன் சட்டமாதிபர் திணைக்களத்துக்கு அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளனர். வழக்கு குறித்த அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்துள்ள.

எனவே மேல்நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என குற்றப்புலனாய்வு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
குறிப்பாக இந்த வழக்கில் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு சில பரிந்துரைகளை வழங்கியுள்ளார்.
</p><p>
மேலும் இதனை விசாரிக்க மூவரடங்கிய மேல் நீதிமன்ற அமர்வை அமைக்க பரிந்துரைகளும் மேற்கொள்ளப்பட்டது.
</p><p>
இருந்தும் இந்த அணைத்து ஆவணங்களும் சட்டமா அதிபரின் மேசைக்கு சென்று பல மாதங்கள் கடந்த போதும், சட்டமா அதிபர் மௌனம் காப்பது சரியானதா?
</p><p>
சட்டமா அதிபருக்கு இந்த வழக்கை தொடர்வதில் ஏதேனும் குழப்பம் உள்ளதா?</p><p></p><h2>மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை&nbsp;</h2><p> 

ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் சட்டமா அதிபருக்கு உள்ள பிரச்சினை என்ன?</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c4b73b0-b7f0-46e5-adaa-5a47b10fecef/26-6a857b2102d7d.webp' /></p><p>பிரதம நீடியரசரும், சட்டமா அதிபரும் முறையே டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஓஓய்வு பெறவுள்ளனர். இந்த குறுகிய காலத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாமல் வேறு எதனையும் தாக்கல் செய்ய சட்டமா அதிபருக்கு திட்டம் உள்ளதா?</p><p>
சட்டமா அதிபரே, உங்களுக்கு முன்னாள் ரணில் குறித்த விடயத்தில் சாய்வு நினை இருக்கின்றது என்ற கருத்து சமூகத்தில் பரவி உள்ளது.
</p><p>
அது என்னவாக இருந்தாலும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் நம்பகத்தன்மைக்கு இது ஏற்றது அல்ல.
</p><p>
தற்போது ரணில், சஜித் மற்றும் கம்பன்பிலவை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்க திட்டமிடுகிறார். 

இந்த கதாபாத்திரம் மற்றும் தூண்டுதலில் ரணில் இருப்பது தெளிவாகிறது." என தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T10:31:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு: குரோஷியாவில் உக்ரைனியர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukrainian-arrested-in-croatia-over-nord-stream-1787135446"></link>
            <id>https://news.lankasri.com/article/ukrainian-arrested-in-croatia-over-nord-stream-1787135446</id>
            <summary type="text">Ukrainian arrested in Croatia over Nord stream sabotage: நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் உக்ரைனியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ukrainian arrested in Croatia over Nord stream sabotage: நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் உக்ரைனியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2> உக்ரைனியர் கைது</h2><p>
உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கிய பிறகு 2022ம் ஆண்டு நோர்ட் ஸ்ட்ரீம்(Nord Stream) எரிவாயு குழாய் வெடிகுண்டு வைத்து சிதைக்கப்பட்டது.</p><p> இந்த சம்பவத்தில் புதன்கிழமையன்று உக்ரைனை சேர்ந்த விளாடிமிர் இசட்(Vladimir Z) என்ற நபர் குரோஷியாவில் உள்ள புலா நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4e3e610-2512-4eee-b6a7-e7ff9652f366/26-6a8585d76d331.webp' /></p><p>பயிற்சி பெற்ற ஸ்கூபா டைவரான விளாடிமிர் இசட், செர்ஹி கே(Serhil K) என்ற நபருடன் இணைந்து இந்த நாச வேலையை செய்ததாக விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.</p><p> இவர்கள் போலி அடையாள அட்டையை காண்பித்து இடைதரகர்கள் மூலம் ஜேர்மனியின் ரோஸ்டாக் துறைமுகத்தில் உள்ள படகை வாடகைக்கு எடுத்துள்ளனர்.</p><p> இந்த படகில் சென்று டென்மார்க்கின் பார்ஹோம்(Bornholm) தீவுக்கு அருகே உள்ள நோர்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் 2 வது எரிவாயு குழாயை வெடிபொருட்கள் வைத்து சிதைத்துள்ளனர் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 26ம் திகதி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இரண்டு நோர்ட் ஸ்ட்ரீம் வழித்தடங்களும் கடுமையான சேதமடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecf16f7a-1484-4df9-baae-db3766ef4784/26-6a8585d81ff8f.webp' /></p><p></p><h2>நாடு கடத்தப்பட்ட உக்ரைனியர்</h2><p>
விளாடிமிர் இசட் குரோஷியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை ஜேர்மனிக்கு நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> ஜேர்மனிக்கு அழைத்து வரப்பட்ட பிறகு, அவர் பெடரல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T10:31:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[என் உழைப்பிற்கும், வளர்ச்சிக்கும் எனது கணவருக்கு சம்பந்தமே கிடையாது... அறந்தாங்கி நிஷா ஓபன் டாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/aranthangi-nisha-opens-about-her-career-struggle-1787123654"></link>
            <id>https://cineulagam.com/article/aranthangi-nisha-opens-about-her-career-struggle-1787123654</id>
            <summary type="text">அறந்தாங்கி நிஷாகாமெடி நடிகர்கள் தமிழ் சினிமாவில் பலர் உள்ளனர். ஆனால் பெண் காமெடி நடிகைகள் என்றால் விரல்விட்ட எண்ணக் கூடிய வகையில் தான் சில வருடங்களுக்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அறந்தாங்கி நிஷா</h2><p>காமெடி நடிகர்கள் தமிழ் சினிமாவில் பலர் உள்ளனர். ஆனால் பெண் காமெடி நடிகைகள் என்றால் விரல்விட்ட எண்ணக் கூடிய வகையில் தான் சில வருடங்களுக்கு முன் இருந்தனர்.</p><p> ஆனால் இப்போது அதிலும் பெண் நடிகைகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. அப்படி விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தனது கலகலப்பான பேச்சால் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் அறந்தாங்கி நிஷா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8e83b1d-0625-4aed-8f10-1a925c768ef1/26-6a857efbb3623.webp' /></p><p> </p><p>சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் அடுத்து வெள்ளித்திரை பக்கம் சென்றவர் மாரி 2, ஜெயிலர், கலகலப்பு 2, கோலமாவு கோகிலா, ஆண் தேவதை என பல முன்னணித் திரைப்படங்களில் நடித்தார்.
தொலைக்காட்சி, படங்கள் தாண்டி நிறைய வெளிநாட்டு நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று வருகிறார்.
</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">நடிகை பேட்டி</span></p><p>
தனது சினிமா பயணத்தில் பிஸியாக இருக்கும் அறந்தாங்கி நிஷா அண்மையில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், என்னை பார்க்கும் பலரும் நீ இந்த இடத்திற்கு வருவதற்கு காரணம் என் புருஷன் என்று கூறுவார்கள். </p><p>ஆனால் நான் இந்த இடத்திற்கு வருவதற்கும், மேடைகளில் ஏறுவதற்கும் தெருத்தெருவா அசிங்கப்பட்டிருக்கேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ab32875-20f4-4016-91fe-25261492e5fc/26-6a857efac99b6.webp' />&nbsp;&nbsp;</p><p> </p><p>பாத்ரூம் வரைக்கும் அவமானம், ஒவ்வொரு மேடையிலும் அடிபட்டு, ரூ. 100, ரூ. 200 சம்பளத்தில் ஆரம்பித்து இன்னைக்கு இந்த அளவுக்கு வந்து நிற்கிறேன் என்றால் அது என்னோட தன்னம்பிக்கை மட்டும்தான் காரணம். </p><p>பல பேர்கிட்ட அசிங்கப்பட்டு, செருப்படிபட்டு இந்த இடத்திற்கு வந்ததற்கு முழுக்க முழுக்க நான் மட்டும்தான் காரணம். என் கணவர் ரியாஸ் கிடையாது, இதை நான் என் புருஷன்கிட்டயே ஓபனா சொல்லியிருக்கேன் என கூறியுள்ளார்,</p>]]></content>
            <updated>2026-08-19T10:30:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதன் பெயர்ச்சியால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: 6 ராசிகளுக்கு அமோக பலன்கள் உறுதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mercury-transit-in-leo-who-get-huge-luck-1787133460"></link>
            <id>https://manithan.com/article/mercury-transit-in-leo-who-get-huge-luck-1787133460</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரகங்களின் இளவரசனாகக் கருதப்படும் புதன், புத்திசாலித்தனம், பேச்சு, கல்வி மற்றும் வியாபாரத்தின் காரணியாக விளங்குகிறார். ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரகங்களின் இளவரசனாகக் கருதப்படும் புதன், புத்திசாலித்தனம், பேச்சு, கல்வி மற்றும் வியாபாரத்தின் காரணியாக விளங்குகிறார். </p><p>சந்திரனுக்கு அடுத்தபடியாக குறுகிய காலத்தில் ராசியை மாற்றும் கிரகமாகவும் புதன் கருதப்படுகிறார். தற்போது கடக ராசியில் பயணிக்கும் புதன், ஆகஸ்ட் 22-ஆம் தேதி சூரியனின் சிம்ம ராசிக்குள் நுழைந்து, செப்டம்பர் 07 வரை அங்கு இருப்பார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/996a7407-61d7-4832-bddc-486c2bee41e2/26-6a8582b5962a9.webp' /></p><p>
</p><p>
சிம்மத்தில் ஏற்கனவே அதன் அதிபதியான சூரியன் இருப்பதால், புதன்-சூரியன் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகும்.இது மிகவும் மங்களகரமான யோகமாகக் கருதப்படுகிறது. </p><p>இந்த யோகம் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்துவதுடன், தன்னம்பிக்கை, முடிவெடுக்கும் திறன் மற்றும் படைப்பாற்றலையும் அதிகரிக்கும்.
</p><p>
இந்த புதன் பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களுக்கும் இருந்தாலும், 6 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f3db980-8377-41ad-ab76-6391dd6e408c/26-6a8582b649682.webp' /></p><p> மிதுன ராசியின் 3-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் பேச்சுத்திறன் மேம்பட்டு, அதன் மூலம் பல முக்கிய பணிகளை வெற்றிகரமாக முடிவடையும்.</p><p>வணிகம், மார்கெட்டிங், கல்வி, எழுத்துத் துறையினருக்கு முன்னேற்றம் கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களால் நல்ல நிதி ஆதாயமும் கிடைக்கும்.
</p><h2>
சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bade3379-06a7-4415-a96e-6b1047dc0f03/26-6a8582b70b1ea.webp' /></p><p>சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் தன்னம்பிக்கை, தலைமைத்துவ திறன் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.</p><p> வேலை, தொழிலில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்களுக்கும் இது சிறப்பான காலமாக இருக்கும்.</p><h2>

கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4bc6f37-85a9-44ee-909a-ca9046634e8a/26-6a8582b7b11e7.webp' /></p><p> கன்னி ராசியின் 12-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். தொழிலில் முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.</p><p> ஆராய்ச்சித் துறையினருக்கு சாதகமான பலன்களும், ஆன்மீகத்தில் அதிக நாட்டமும் உண்டாகும். மனநிலையில் தெளிவு பிறக்கும்.</p><h2>

துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea3b0fb4-90d8-4232-8331-63f3789ea718/26-6a8582b8682bb.webp' /></p><p>துலாம் ராசியின் 11-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். புதிய நட்புகள் மூலம் தொழிலை விரிவுபடுத்தும் வாய்பு அமையும்.</p><p>புதிய வழிகளில் வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.நீண்ட நாள் கடன் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">தனுசு</span></h2><h2><span style="font-size: 14px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3b340bd-2694-48d6-899a-6e7b8bcd098a/26-6a8582b91a4b8.webp' /></span></h2><p>தனுசு ராசியின் 9-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் வெளிநாட்டுப் பயணம், வெளிநாட்டில் கல்வி அல்லது வேலை செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம்.</p><p> நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வரும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.</p><h2>

கும்பம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a71f0b81-fd70-481a-bfa8-698df8e142bd/26-6a858400b657e.webp' /></p><p></p><p>கும்ப ராசியின் 7-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். வணிகம் மற்றும் கூட்டு தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். </p><p>பேச்சுத்திறன் மூலம் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடனான உறவு மேம்பட்டு, திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். பணவரவு அதிகரிப்பதுடன், சட்ட விஷயங்களிலும் சாதகமான பலன்கள் கிடைக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T10:23:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாலஸ்தீன அமைச்சர் இஸ்ரேலிய காவல்துறையால் கைது !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/israeli-police-arrest-palestinian-minister-1787133425"></link>
            <id>https://ibctamil.com/article/israeli-police-arrest-palestinian-minister-1787133425</id>
            <summary type="text">&amp;nbsp; ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமின் சில்வான் பகுதியில் உள்ள இல்லத்தில் வைத்து, ஜெருசலேம் விவகாரங்களுக்கான பாலஸ்தீன அமைச்சர் அஷ்ரஃப் அல்-அவாரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமின் சில்வான் பகுதியில் உள்ள இல்லத்தில் வைத்து, ஜெருசலேம் விவகாரங்களுக்கான பாலஸ்தீன அமைச்சர் அஷ்ரஃப் அல்-அவாரை இஸ்ரேலிய காவல்துறை புதன்கிழமை கைது செய்ததாக அவரது அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
</p><p>
பெயர் வெளியிட விரும்பாத அந்த அதிகாரி, காரணம் ஏதுமின்றி அல்-அவாரை இஸ்ரேலிய காவல்துறை தடுத்து வைத்ததாக ஊடகம் ஒன்றிடம் தெரிவித்தார்.&nbsp;</p><h2>கைதுக்கான காரணம்&nbsp;</h2><p>கைதுக்கான காரணம் குறித்து இஸ்ரேலிய காவல்துறை உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18df8546-8d24-461b-a00c-f2e0e452a5d2/26-6a8581332e7f3.webp' /></p><p>கடந்த ஆண்டு, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைக்குள் அல்-அவார் நுழைவதற்கு ஆறு மாதங்களுக்குத் தடை விதித்து இஸ்ரேலிய அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர், பின்னர் அந்தத் தடை நீடிக்கப்பட்டது.</p><p>

ஜெருசலேம் விவகாரங்களுக்கான பாலஸ்தீன அமைச்சகம், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள அல்-ராம் நகரில் அமைந்துள்ளது, அதே நேரத்தில் பாலஸ்தீன அரசாங்கக் கூட்டங்கள் ரமல்லாவில் நடைபெறுகின்றன.</p><p>

ஒக்டோபர் 7, 2023 முதல், ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் பாலஸ்தீனர்களின் விளையாட்டு, சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் மீதான கட்டுப்பாடுகளை இஸ்ரேலிய அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
</p><h2>இடிக்கப்படும் பாலஸ்தீனர்களின் வீடுகள்</h2><p>இஸ்ரேலிய அதிகாரிகள் குடியேற்ற நடவடிக்கைகளையும் பாலஸ்தீனியர்களின் வீடுகளை இடிப்பதையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9afe4056-8b0d-48eb-b40c-fabd48d67dcf/26-6a858133da237.webp' /></p><p> </p><p>அதே நேரத்தில், அல்-அக்ஸா மசூதி வளாகத்திற்குள் குடியேறிகள் ஊடுருவுவதற்கு வழிவகை செய்வதுடன், வழிபாட்டாளர்களையும் மத போதகர்களையும் அவ்விடத்திற்குள் நுழையவும் தடை விதித்துள்ளனர்.
</p><p>
ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேம் தங்களின் எதிர்கால நாட்டின் தலைநகரம் என்று பாலஸ்தீனியர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், இஸ்ரேல் அந்நகரம் முழுவதையும் தனது தலைநகரம் எனக் கோருகிறது. இந்தக் கோரிக்கையை சர்வதேச சமூகம் பரவலாக நிராகரித்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T10:11:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பேருந்தில் சென்றவரின் முகம் சுழிக்க வைத்த செயல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/betel-leaf-spittle-spat-bus-passenger-in-jaffna-1787123493"></link>
            <id>https://jvpnews.com/article/betel-leaf-spittle-spat-bus-passenger-in-jaffna-1787123493</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் இருந்த பயணி ஒருவர் வெற்றிலை மென்று, பேருந்தின் யன்னல் வழியாக வெளியே து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் இருந்த பயணி ஒருவர் வெற்றிலை மென்று, பேருந்தின் யன்னல் வழியாக வெளியே துப்பியபோது வீதியில் சென்றவர் மீது பட்ட சம்பவம் விசனத்தை எற்படுத்த்யுள்ளது.
</p><p>
 பேருந்து பயணியால் துப்பப்பட்ட வெற்றிலை எச்சில், வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர்மீது பட்டதால் அவருக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfb4533e-11e9-4b26-8feb-36112d9846d4/26-6a8557276d3eb.webp' /></p><p></p><h2>வீதியில் சென்றவர் மீது பட்ட எச்சில்</h2><p>
</p><p>
இதனால் ஆத்திரமடைந்த மோட்டார் சைக்கிள் பயணி, தனியார் பேருந்தை இடைமறித்து, பொறுப்பற்ற முறையில் செயற்பட்ட பயணியை பேருந்தில் இருந்து இறக்கி, அவர் ஏற்படுத்திய வெற்றிலை கறையை சுத்தம் செய்ய வைத்துள்ளார்.</p><p></p><p>

இன்னிலையில் பொது இடங்களில் பயணிக்கும் அனைவரும் தங்களது செயற்பாடுகள் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் சமூகப் பொறுப்புடனும், நாகரிகத்துடனும் நடந்து கொள்வது அவசியம் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-19T10:09:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் 5 நாட்களில் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vishwanath-and-son-5-days-tamilnadu-box-office-1787134122"></link>
            <id>https://cineulagam.com/article/vishwanath-and-son-5-days-tamilnadu-box-office-1787134122</id>
            <summary type="text">சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த விஸ்வநாத் &amp;amp; சன்ஸ் திரைப்படத்தின் தமிழ்நாடு வசூல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

விஸ்வநாத் &amp;amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படத்தின் தமிழ்நாடு வசூல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.</p><p></p><p>
</p><h2>
விஸ்வநாத் &amp; சன்ஸ்</h2><p>

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு கடந்த வாரம் வெளியான திரைப்படம் விஸ்வநாத் &amp; சன்ஸ்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f4d8871-5098-44ae-9773-c5d0d8627845/26-6a8580adf2249.webp' /></p><p>இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக மமிதா பைஜூ நடித்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc74fa5d-2f59-47d2-b103-9fcc2a69011b/26-6a8580ad43f42.webp' /></p><h2>தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்
</h2><p>
விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் உலகளவில் 5 நாட்களில் ரூ. 138 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6815a8af-c932-4c9f-974c-f27a2c308b1c/26-6a8580aeaaaa9.webp' /></p><p>அதன்படி, இப்படம் தமிழ்நாட்டில் 5 நாட்களில் ரூ. 34.5 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு <a href="https://www.youtube.com/watch?v=9X-u8W2teXo" target="_blank">வசூல் </a>செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p>]]></content>
            <updated>2026-08-19T10:08:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரகசிய திருமணம் செய்து இல்வாழ்க்கை; பிரபல விகாராதிபதியின் நாடகம் அம்பலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/secret-marriage-monk-s-charade-exposed-1787133211"></link>
            <id>https://jvpnews.com/article/secret-marriage-monk-s-charade-exposed-1787133211</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு - குருநாகல் பிரதான வீதிக்கு அருகில் அமைந்துள்ள புராதன விகாரையின் விகாராதிபதி ஒருவர் திருமணம் செய்து கொண்டு விகாராதிபதியாகவும், கணவராகவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு - குருநாகல் பிரதான வீதிக்கு அருகில் அமைந்துள்ள புராதன விகாரையின் விகாராதிபதி ஒருவர் திருமணம் செய்து கொண்டு விகாராதிபதியாகவும், கணவராகவும் இரு வேறுவாழ்க்கை வாழ்ந்துள்ளமை அம்பலமாகியுள்ளது.
</p><p>
விகாரையின் அறங்காவல் சபையினர் தேரரின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில்&nbsp; இவரின் மோசடி முகம் தெரியவந்துள்ளது. 

ஒருபுறம் அறங்காவல் சபையை ஏமாற்றி மறுபுறம் கணவராகவும் இருந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2f2ed38-767e-481b-bd20-b6f8d3ca3614/26-6a857d1c9700b.webp' /></p><p>
</p><h2>2 ஆண்டுகளுக்கும் மேலாக&nbsp; &nbsp; இரட்டை வேடம்</h2><p>தனது மனைவிக்கு ஆடம்பரக் கார் ஒன்றையும் வாங்கிக் கொடுத்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக&nbsp; இரட்டை வேடம் .

சுமார் இரண்டு வருடங்களாக இவர் விகாராதிபதி பதவியில் இருந்துள்ளார்.</p><p></p><p> இவர் தனியார் பாடசாலை ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி வந்த இந்த இளம் பெண்ணுடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் போலியான பொதுப்பெயரில் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.</p><p>



குருநாகலையில் அமைந்துள்ள மணமகளின் வீட்டிலேயே இந்தத் திருமணம் நடந்துள்ளது. 

எனினும் தான் திருமணம் செய்தது ஒரு பௌத்த துறவியை என்பது மணமகளுக்கும் அவரது பெற்றோருக்கும் தெரிந்தே இருந்துள்ளது.
</p><p></p><p>

 குறித்த துறவி , குருநாகலை பகுதியில் உள்ள ஆடம்பர இரண்டு மாடி வீட்டில் பெண்ணை அவரது பெற்றோருடனும் தனது குழந்தையுடன் குடியமர்த்தியுள்ளார்.
</p><p>


ஊர் மக்களுக்குச் சந்தேகம் வராதிருக்க விக் அணிந்து கொண்டு பிரதேச செயலகத்தின் அதிகாரி அல்லது சர்வதேச பாடசாலை ஆசிரியர் என பெண்ணின் வீட்டாரிடமும் ஊர் மக்களிடமும் கூறியுள்ளார்.</p><p>



மாதம் ஒருமுறை சொந்த ஊருக்குச் செல்வதாகக் கூறி விகாரையிலிருந்தும் தான தர்மங்கள் மூலம் கிடைக்கும் உணவுகளை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்று 5-6 நாட்கள் தங்கியிருந்துள்ளார்.</p><p></p><p>



பின்னர் விகாரையிலிருந்து கொண்டு வந்த உணவை ஊர் மக்களுக்குப் பகிர்ந்து கொடுத்து சந்தேகம் வராதவாறு நடந்து கொண்டுள்ளார். வெளிநாட்டில் இருக்கும் பரோபகாரிகளிடம் விகாரையை அபிவிருத்தி செய்வதாகக் கூறி 2-3 இலட்சம் ரூபாய்களை நன்கொடையாகப் பெற்றுள்ளார்.



அந்தப் பணத்தையே இந்தப் பெண்ணுக்குச் செலவிட்டுள்ளார். </p><p>அதுமட்டுமன்றி விகாரைக்குச் சொந்தமான 10 ஏக்கர் காணியை 35 இலட்சம் ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டுள்ளார்.



இவை தெரியவந்ததை அடுத்து குறித்த தேரர் விகாரைக்கு வந்து நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களுடன் தலைமறைவாகியுள்ளதாக விகாரையின் அறங்காவல் சபையினர் குறிப்பிட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-19T10:08:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விகாராதிபதி ஒருவரின் இரட்டை வேடம் அம்பலம்: மனைவிக்கு சொகுசு காரும் இருமாடி வீடும்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-buddhist-monk-crime-1787060778"></link>
            <id>https://tamilwin.com/article/a-buddhist-monk-crime-1787060778</id>
            <summary type="text">கொழும்பு - குருநாகல் பிரதான வீதிக்கு அருகில் அமைந்துள்ள புராதன விகாரையின் விகாராதிபதி ஒருவர் திருமணம் செய்து கொண்டு விகாராதிபதியாகவும் நல்ல கணவராகவும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - குருநாகல் பிரதான வீதிக்கு அருகில் அமைந்துள்ள புராதன விகாரையின் விகாராதிபதி ஒருவர் திருமணம் செய்து கொண்டு விகாராதிபதியாகவும் நல்ல கணவராகவும் இரு வேறுவாழ்க்கை வாழ்ந்துள்ளமை தெரியவந்துள்ளது. </p><p>விகாரையின் அறங்காவல் சபையினர் தேரரின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் தேடிப்பார்த்ததில் இவரின் மோசடி முகம் தெரியவந்துள்ளது.
ஒருபுறம் அறங்காவல் சபையை ஏமாற்றி மறுபுறம் நல்ல கணவராகவும் இருந்துள்ளார். </p><p>தனது மனைவிக்கு ஆடம்பரக் கார் ஒன்றையும் வாங்கிக் கொடுத்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வாறு விசித்திரமான இரட்டை வேடம் தரித்துள்ளார்.
</p><h2>
</h2><p></p><h2>விகாராதிபதி போட்ட இரட்டை வேடம்</h2><p>சுமார் இரண்டு வருடங்களாக இவர் விகாராதிபதி பதவியில் இருந்துள்ளார். இவர் தனியார் பாடசாலை ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி வந்த இந்த இளம் பெண்ணுடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் போலியான பொதுப்பெயரில் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
</p><p>குருநாகலையில் அமைந்துள்ள மணமகளின் வீட்டிலேயே இந்தத் திருமணம் நடந்துள்ளது. 
தான் திருமணம் செய்தது ஒரு பௌத்த துறவியை என்பது மணமகளுக்கும் அவரது பெற்றோருக்கும் தெரிந்தே இருந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccb84cbb-d298-47cf-8a06-5c19944c3a63/26-6a857fa964808.webp' /></p><p>அனைத்தும் தெரிந்தே இந்த காரியத்தை செய்துள்ளனர். பின்னர் குருநாகலை பகுதியில் உள்ள ஆடம்பர இரண்டு மாடி வீட்டில் அப்பெண்ணை அவரது பெற்றோருடனும் தனது குழந்தையுடன் குடியமர்த்தியுள்ளார்.
</p><p>ஊர் மக்களுக்குச் சந்தேகம் வராதிருக்க விக் அணிந்து கொண்டு பிரதேச செயலகத்தின் அதிகாரி அல்லது சர்வதேச பாடசாலை ஆசிரியர் என்று அப்பெண்ணின் வீட்டாரிடமும் ஊர் மக்களிடமும் கூறியுள்ளார்.</p><h2>நான்கு இலட்சம் ரூபா</h2><p>
</p><p>மாதம் ஒருமுறை சொந்த ஊருக்குச் செல்வதாகக் கூறி விகாரையிலிருந்தும் தான தர்மங்கள் மூலம் கிடைக்கும் உணவுகளை எடுத்துக் கொண்டு அந்த வீட்டிற்குச் சென்று 5-6 நாட்கள் தங்கியிருந்துள்ளார்.</p><p>பின்னர் விகாரையிலிருந்து கொண்டு வந்த உணவை ஊர் மக்களுக்குப் பகிர்ந்து கொடுத்து சந்தேகம் வராதவாறு நடந்து கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41f939cb-0b09-4af8-a318-2a1feaf9251d/26-6a857faa1a28f.webp' /></p><p>
</p><p>வெளிநாட்டில் இருக்கும் பரோபகாரிகளிடம் விகாரையை அபிவிருத்தி செய்வதாகக் கூறி 2-3 இலட்சம் ரூபாய்களை நன்கொடையாகப் பெற்றுள்ளார். </p><p>அந்தப் பணத்தையே இந்தப் பெண்ணுக்குச் செலவிட்டுள்ளார். அதுமட்டுமன்றி விகாரைக்குச் சொந்தமான 10 ஏக்கர் காணியை 35 இலட்சம் ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டுள்ளார். </p><p>இவை தெரியவந்ததை அடுத்து குறித்த தேரர் விகாரைக்கு வந்து நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களுடன் தலைமறைவாகியுள்ளதாக விகாரையின் அறங்காவல் சபையினர் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br><br><b><i>you may like this..</i></b></p><p><b><i><br></i></b></p><p><b><i><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/O8f4RVu6rWg" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-08-19T10:04:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் டேங்கர் லொறிகள் மூலம் குடிநீர் விநியோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/france-supply-drinking-water-in-tankers-1787133781"></link>
            <id>https://news.lankasri.com/article/france-supply-drinking-water-in-tankers-1787133781</id>
            <summary type="text">Tankers are supplying drinking water in drought stricken France: வறட்சியால் பாதிக்கப்பட்ட பிரான்சில், டேங்கர் லொறிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Tankers are supplying drinking water in drought stricken France: வறட்சியால் பாதிக்கப்பட்ட பிரான்சில், டேங்கர் லொறிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
</p><p>

பிரான்சில் வழக்கமாக குடிநீர் விநியோகம் தாராளமாக இருக்கும் பகுதிகளில் தற்போது தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது.
</p><p>
இந்தக் கோடையின் கடுமையான வெப்பம், அதிகரித்து வரும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள பிரான்ஸ் மட்டுமல்ல, ஐரோப்பாவும் தயாராக இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.</p><h3>

டேங்கர் லொறிகள் மூலம் குடிநீர் விநியோகம்</h3><p>

பொதுவாக பிரான்சில் பால், அல்லது எண்ணெய்தான் டேங்கர் லொறிகள் மூலம் கொண்டு செல்லப்படும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef4378cd-3b10-49e0-870e-b96362e6fa64/26-6a857f5700cf4.webp' /></p><p>
ஆனால், வழக்கத்துக்கு மாறாக பிரான்ஸ் மக்கள் டேங்கர் லொறிகளில் குடிநீர் கொண்டு செல்லப்படும் காட்சிகளை கண்டுவருகிறார்கள்.
</p><p>
பிரான்சைப் பொருத்தவரை, சுமார் 40,000 பேர் குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
சுமார் 550,000 பேர் தொடர்ச்சியாக குடிநீர் விநியோகம் வழங்கப்படுதலை இழக்கும் அபாயத்தில் உள்ளார்கள்.
</p><p>
பிரான்சின் பெரும்பாலான பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல இடங்களில் தண்ணீர்க் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
விடயம் என்னவென்றால், அப்படியிருந்தும் சில பகுதிகளில்தான் டேங்கர் லொறி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
</p><p>
அதாவது, ஒரு முனிசிபாலிட்டி, குடிநீர் தேவைகளுக்காக எந்த தண்ணீர் ஆதாரத்தை நம்பியுள்ளது, ஒரு ஆதாரம் உதவாமல் போனால் அதற்கு மாற்றாக வேறு குடிநீர் ஆதாரம் ஏதேனும் உள்ளதா என்பதைப் பொருத்தே எந்த பகுதிகளுக்கு டேங்கர் லொறிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T10:04:28+00:00</updated>
        </entry>
    </feed>
