<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-19T22:24:36+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரான் பாஷிக்குடன் பணப் பரிமாற்றம் செய்தாரா ! – பிரபல மாடல் அழகி விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-any-connection-with-shiran-basik-says-piumi-1787158686"></link>
            <id>https://tamilwin.com/article/no-any-connection-with-shiran-basik-says-piumi-1787158686</id>
            <summary type="text">&amp;nbsp;பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினுர் சிரான் பாஷிக்குடனான தொடர்புகள் குறித்து பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலி விளக்கமளித்துள்ளார்.
போதைப்பொருள் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினுர் சிரான் பாஷிக்குடனான தொடர்புகள் குறித்து பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலி விளக்கமளித்துள்ளார்.
</p><p>போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் சிரான் பாஷிக் என்பவருடன் தான் பணப் பரிமாற்றங்களை மேற்கொண்டதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் தொடர்பில் அவர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
</p><p>தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், சிரான் பாஷிக் என்ற நபரை தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அறிந்திருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c47dfb0-248d-41f7-bb5b-4f6d7f47e477/26-6a85e09f96168.webp' /></p><p>
</p><p>தன்னிடம் இருப்பது தான் சொந்தமாக உழைத்து சம்பாதித்த பணம் மட்டுமே எனவும், போதைப்பொருள் வர்த்தகர்களுக்கோ அல்லது வேறு நபர்களுக்கோ சொந்தமான பணம் எதுவும் தன்னிடம் இல்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>
பியுமி ஹன்சமாலி தொடர்பில் காலத்திற்கு காலம் இவ்வாறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், தன்னை தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் பல்வேறு பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக குறிப்பிட்டுள்ள பியூமி ஹன்சமாலி, தான் ஒருபோதும் பொய்யான தகவல்களை வெளியிடுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
</p><p>இதனிடையே, பெருமளவிலான போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் சிரான் பாஷிக், அண்மையில் டுபாயில் கைது செய்யப்பட்ட பின்னர் கடந்த 14ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.</p><p>
அவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
</p><p>அங்கு சிரான் பாஷிக்கை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>எனினும், பியூமி ஹன்சமாலி தனது சமூக ஊடகப் பதிவில், சிரான் பாஷிக்குடன் தனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும், அவருடன் பணப் பரிமாற்றம் மேற்கொண்டதாக வெளியாகும் தகவல்கள் உண்மையல்ல என்றும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T22:18:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடும்பத்துடன் மீண்டும் பிரித்தானியாவில் குடியேறும் இளவரசர் ஹரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/harry-meghan-move-back-to-britain-1787177856"></link>
            <id>https://news.lankasri.com/article/harry-meghan-move-back-to-britain-1787177856</id>
            <summary type="text">Prince Harry and Meghan Markle are moving back to the UK: இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி, இந்த மாதம் பிரித்தானியாவிற்குத் திரும்புகின்றனர்.
ஆறு வரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Prince Harry and Meghan Markle are moving back to the UK: இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி, இந்த மாதம் பிரித்தானியாவிற்குத் திரும்புகின்றனர்.
</p><p>ஆறு வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் குடியேறியதன் பின்னர் தற்போது மீண்டும் பிரித்தானியாவிற்குத் திரும்ப அவர்கள் முடிவு செய்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>பணி உறுப்பினர்களாக</h2><p>
</p><p>கசிந்துள்ள தகவலின் அடிப்படையில், ஹரி- மேகன் தம்பதி பிரித்தானியாவில் குடியேற இருப்பதுடன்,&nbsp;பிள்ளைகள் ஆர்ச்சியும் லில்லிபெட்டும் ஒரு பிரித்தானிய பாடசாலையில் சேரவிருப்பதாகவும் தெரிய வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42371250-20a1-4038-98f1-93a767c2aa24/26-6a862b83382f1.webp' /></p><p> </p><p>இளவரசர் ஹரி குடும்பம் அரச குடும்பத்திற்கு சொந்தம் அல்லாத ஓர் இல்லத்திற்கு குடிபெயர்வார்கள், மேலும் அவர்கள் அரச குடும்பத்தின் பணி உறுப்பினர்களாக இருக்க மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. </p><p>இந்த மாத இறுதியில் பிரித்தானியாவுக்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளதாக, மன்னர் சார்லஸுக்கு அவரது மகன் ஹரி ஞாயிற்றுக்கிழமைதான் தெரிவித்தார்.</p><p>
இளவரசர் ஹரியையும் அவரது குடும்பத்தினரையும் தனிப்பட்ட முறையில் சந்திக்கும் வாய்ப்பை மன்னர் வரவேற்றாலும், கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் தெளிவாக வெளிப்படுத்திய விருப்பங்கள் மற்றும் உடன்படிக்கைக்கு இணங்க, </p><p>இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஆகியோரின் தனிநபர்களாகவும், அரச குடும்பத்தின் பணிபுரியாத உறுப்பினர்களாகவும் உள்ள பங்கு மற்றும் அந்தஸ்தில் எந்த மாற்றமும் இருக்காது என்பதில் மன்னர் தெளிவாக இருக்கிறார் என்றே அறியப்படுகிறது.</p><p></p><p> </p><p>ஹரி தம்பதி கடந்த மாதம் குளோசெஸ்டர்ஷயரில் உள்ள ஹைகிரோவ் என்ற இடத்தில் மன்னரையும் ராணி கமிலாவையும் கடைசியாகச் சந்தித்துள்ளனர் - ஆனால், தாங்கள் இடம் பெயரவிருக்கும் திட்டம் குறித்து அவர்களிடம் தெரிவிக்கவில்லை.
</p><p>இளவரசர் ஹரி 
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் வெல்சைல்ட் விருதுகள் விழாவில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியா செல்ல ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தார், மேலும் அவர் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஒரு அறையில் தங்கவும் இருந்தார்.</p><h2>விமர்சிக்கப்பட்டனர்</h2><p> </p><p>ஏழு வயதான ஆர்ச்சி மற்றும் ஐந்து வயதான லில்லிபெட் ஆகியோர் ஏற்கனவே ஒரு பிரித்தானிய பாடசாலையில் சேர்ந்திருப்பதாகக் கருதப்படுகிறது; மேலும், குழந்தைகள் தங்கள் கல்வியை முடிக்கும் வரை ஹரி தம்பதி பிரித்தானியாவில் தங்கியிருக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>2020-இல் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தது முதல் வசித்து வரும் கலிபோர்னியாவின் மான்டெசிட்டோவில் உள்ள 11 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள வீட்டை, ஹரியும் மேகனும் தொடர்ந்து தங்கள் வசம் வைத்திருக்க உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea95e6d9-09c3-418f-864b-08c3ac0c9479/26-6a862b83e4782.webp' /></p><p> </p><p>அவர்களுக்கு போர்த்துகலில் இன்னும் ஒரு குடியிருப்பு சொந்தமாக உள்ளது. பிரித்தானியாவில் இருந்து வெளியேறுவதை 
அறிவிப்பதற்கு முன்பு சார்லஸ், கமிலா அல்லது இளவரசர் வில்லியம் ஆகியோரிடம் கலந்தாலோசிக்கத் தவறியதற்காக, ஹரியும் மேகனும் அப்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.</p><p> அவர்களது குடும்பத்தினருக்குத் தெரியாமல் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டிருந்தது; 2020 பிப்ரவரி 13 அன்று தொலைக்காட்சி செய்திகளில் இந்த அறிவிப்பு வெளியானபோதுதான் குடும்பத்தினர் அதைப் பற்றி அறிந்துகொண்டனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T22:15:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா பொருள்கள் மீதான 50% வரி ஒத்திவைப்பு ; டிரம்ப் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-announces-50-tariff-deferral-canadian-goods-1787176821"></link>
            <id>https://canadamirror.com/article/trump-announces-50-tariff-deferral-canadian-goods-1787176821</id>
            <summary type="text">கனடாவின் இறக்குமதி பொருள்கள் மீது விதிக்கப்பட்ட 50 சதவீத வரியை 3 நாள்களுக்குத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் இறக்குமதி பொருள்கள் மீது விதிக்கப்பட்ட 50 சதவீத வரியை 3 நாள்களுக்குத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா்.</p><p>

கனடாவின் 2,000 கோடி டாலா் மதிப்பிலான பொருள்களைப் பாதிப்புக்குள்ளாக்கக்கூடிய இந்த வரி விதிப்பு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரவிருந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே இறுதி நேரத்தில் எட்டப்பட்ட உடன்பாட்டையடுத்து ஒத்திவைக்கப்பட்டது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a6ff68b-094b-416a-9c10-843ead054a27/26-6a86277766f64.webp' /></p><p>அமெரிக்காவில் வரும் நவம்பரில் நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், இப்புதிய வரி விதிப்புகளால் ஏற்படும் விலையுயா்வு மக்களிடையே அதிருப்தி ஏற்படும் அபாயத்தை டிரம்ப் நிா்வாகம் உணா்ந்துள்ளது. </p><p>அமெரிக்க பொருள்கள் மீது பதிலடி வரி விதிக்கப்படும் என கனடா எச்சரித்திருந்தாலும், கடந்த ஆண்டு கனடாவின் மொத்த சரக்கு ஏற்றுமதியில் சுமாா் 72 சதவீதம் அமெரிக்காவுக்கே நடந்துள்ளது. </p><p>அந்தவகையில், இரு நாடுகளுமே இந்த வா்த்தகப் போரிலிருந்து பின்வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தன.
</p><p>
இதையடுத்து, இவ்விவகாரம் தொடா்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் கனடா பிரதமா் மாா்க் காா்னி கடந்த 2 நாள்களில் இருமுறை தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசியதும், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நடைபெற்ற இறுதி நேரப் பேச்சுவாா்த்தையுமே இந்த ஒப்பந்தம் எட்டப்பட முக்கியக் காரணமாக அமைந்தன.
</p><p>
ஒப்பந்தத்துக்கான ஆவணங்களை இறதி செய்வதில் இருதரப்பு அதிகாரிகளும் ஈடுபட்டுள்ள சூழலில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த 3 நாள்கள் வரி ஒத்திவைப்பானது வணிகா்களுக்கு சற்று நிம்மதி அளித்தாலும், இது முழுமையான தீா்வல்ல என்றும், பேச்சுவாா்த்தையாளா்கள் விரைவாக ஒரு நிலையான ஒப்பந்தத்தை எட்ட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-19T22:00:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 ஆவது திருத்தத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 37 மனுக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/37-petitions-filed-high-court-again-22nd-amendment-1787176435"></link>
            <id>https://jvpnews.com/article/37-petitions-filed-high-court-again-22nd-amendment-1787176435</id>
            <summary type="text">நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் இதுவரை 37 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
</p><p>
குறித்த சட்டமூலம் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் நேற்றுமுன்தினம் (18) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3404afaf-9451-42dd-bec8-7accfaaf6aca/26-6a8625f555d91.webp' /></p><p>

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உட்பட பல தரப்பினர் இந்த புதிய அரசியலமைப்புத் திருத்தத்துக்கு பலத்த எதிர்ப்பை வெளியிட்டு வந்த நிலையிலேயே இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.</p><p>இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முதல் நாளான நேற்றுமுன்தினமே, அதனை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.</p><p>

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ஐக்கிய மக்கள் சக்தி, சர்வதேசிய பலய கட்சி மற்றும் சுயாதீன சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இந்த னுக்களை விசாரிக்க பூரண நீதியரசர்கள் குழாமை நியமிக்குமாறும் பல தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>

இந்த மனுக்களில் 22 ஆவது திருத்தமானது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்பினால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்ய மேலும் இரண்டு வார காலம் அவகாசம் உள்ளதோடு, அதன் பின்னர் மூன்று வாரங்களுக்குள் இது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T21:54:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[செங்குத்தாகத் தரையிறங்கும் ரொக்கெட் ; விண்வெளித் துறையில் சாதனை படைத்த சீனத் தனியார் நிறுவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/chinese-private-company-sets-record-space-industry-1787175641"></link>
            <id>https://canadamirror.com/article/chinese-private-company-sets-record-space-industry-1787175641</id>
            <summary type="text">சீனாவைச் சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனம் ஒன்று, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ரொக்கெட் பூஸ்டரை (Rocket Booster) வெற்றிகரமாகச் செங்குத்தாகத் தரையிறக்கி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவைச் சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனம் ஒன்று, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ரொக்கெட் பூஸ்டரை (Rocket Booster) வெற்றிகரமாகச் செங்குத்தாகத் தரையிறக்கி புதிய சாதனையைப் படைத்துள்ளது.
</p><p>
விண்வெளித் துறையில் அமெரிக்க நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸுக்கு போட்டியாகச் சீனா இந்த மைல்கல்லை எட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dae3cfe-2a97-4f5e-b803-5b7810a613fd/26-6a8622dacac47.webp' /></p><p>

விண்ணில் செலுத்தப்பட்ட ரொக்கெட் பூஸ்டர் பாகம், குறிப்பிட்ட உயரத்தை எட்டிய பின் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் மீண்டும் பூமிக்குக் கொண்டுவரப்பட்டு, குறிப்பிட்ட தளத்தில் செங்குத்தாகத் தரை இறக்கப்பட்டது.
</p><p>
ரொக்கெட் பூஸ்டர் பாகங்களை மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் விண்வெளிக்குச் செயற்கைக்கோள்களை அனுப்பும் செலவு பெருமளவில் குறையும்.
</p><p>
சீன விண்வெளித் துறையில் அரச நிறுவனங்கள் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களும் அதிநவீன தொழில்நுட்பங்களில் வேகமாக முன்னேறி வருவதை இந்தச் சோதனை உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-19T21:40:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் பாடசாலை ஒன்றில் மாணவர்களிடம் பாலியல் சேட்டை ; பொதுச் சுகாதாரப் பரிசோதகர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/health-insper-arrested-sexually-harassing-students-1787174488"></link>
            <id>https://jvpnews.com/article/health-insper-arrested-sexually-harassing-students-1787174488</id>
            <summary type="text">அம்பாறை கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில், சுகாதாரப் பரிசோதனை என்ற பெயரில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் பாலியல் சேட்டை புர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில், சுகாதாரப் பரிசோதனை என்ற பெயரில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் பாலியல் சேட்டை புரிந்ததாகக் கூறப்படும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் (PHI) ஒருவரை கைது செய்வதற்காக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc2a9433-fec9-45c9-be3f-700c38f8aecc/26-6a861e5a12e9d.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்ததைத் தொடர்ந்து, சந்தேகநபரான PHI தலைமறைவாகியுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

மாணவர்களிடம் சுகாதாரப் பரிசோதனை மேற்கொள்ளும் போது, தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி முறையற்ற வகையில் நடந்து கொண்டதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. </p><p>சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T21:21:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[கஞ்சிப்பானி இம்ரான் கைதுச் செய்தி! ஊடங்களுக்கு வெளியிட முடியாத இரகசிய நகர்வு - அமைச்சரின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kanjipani-imran-arrest-1787170622"></link>
            <id>https://tamilwin.com/article/kanjipani-imran-arrest-1787170622</id>
            <summary type="text">பாதாள உலகக் குழுவின் தலைவரான கஞ்சிப்பானி இம்ரான் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.&amp;nbsp;தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலகக் குழுவின் தலைவரான கஞ்சிப்பானி இம்ரான் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே&nbsp; அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><h3>கஞ்சிப்பானி இம்ரான் கைது&nbsp;</h3><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவனான கஞ்சிப்பானி இம்ரான் கைது செய்யப்பட்டதாக வெளிவந்த செய்திகள் எதுவும் உண்மை&nbsp; கிடையாது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d9b50c0-58db-4c3a-a101-a784ec5085d3/26-6a861e1ff0540.webp' /></p><p>வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகளைக் கைது செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. எனினும், கஞ்சிப்பானி இம்ரான் இன்னும் கைது செய்யப்படவில்லை.&nbsp;&nbsp;</p><p>கஞ்சிப்பானியைக் கைது செய்யும் செயல்முறைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்ட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அது தொடர்பான விபரங்களை ஊடகங்களுக்கு வெளியிடுவது முறையற்றது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T21:20:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா மீதான வரி விதிப்பு அச்சுறுத்தலை இடைநிறுத்திய ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-pauses-canada-tariffs-threat-1787173073"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-pauses-canada-tariffs-threat-1787173073</id>
            <summary type="text">Canada has temporarily avoided 50% US tariff: கடுமையான 50 சதவீத அமெரிக்க இறக்குமதி வரியிலிருந்து கனடா தற்காலிகமாகத் தப்பியுள்ளது.
ட்ரம்ப் நிர்வாக அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada has temporarily avoided 50% US tariff: கடுமையான 50 சதவீத அமெரிக்க இறக்குமதி வரியிலிருந்து கனடா தற்காலிகமாகத் தப்பியுள்ளது.
</p><p>ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகளுடன் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் ஊடாக, 20 பில்லியன் டொலர் மதிப்பிலான சரக்குகளைப் பாதிக்கக்கூடிய ஒரு கட்டண உயர்வு நடைமுறையில் இருந்து கனடா தப்பியுள்ளது.</p><h2>கணிசமான முன்னேற்றம்</h2><p>கனடாவும் அமெரிக்காவும், ஆவணங்கள் இறுதி செய்யப்படுவதற்கு உட்பட்டு, ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டதன் அடிப்படையில், மூன்று நாட்களுக்கு சுங்க வரிகளை நிறுத்தி வைத்திருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை இரவு சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30a3412f-5a64-4bc5-a3f2-112f75d52474/26-6a8618d33b199.webp' /></p><p> </p><p>ட்ரம்பின் அறிவிப்பிற்குப் பிறகு, கனடா பிரதமர் மார்க் கார்னி, வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கி கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளதாகவும், ஆனால் இன்னும் அதிக பணிகள் தேவைப்படுவதாகவும் கூறினார். </p><p>ட்ரம்பின் இந்த வரிகள், ஒயின் மற்றும் ஹொக்கி மட்டைகள் உள்ளிட்ட பல்வேறு கனடிய ஏற்றுமதிகளைப் பாதித்திருக்கும். இதனிடையே, அதே சமூக ஊடகப் பதிவில், சர்ச்சைக்குரிய கீஸ்டோன் எக்ஸ்எல் குழாய்வழித் திட்டம் மீண்டும் உயிர்ப்பிக்கப்படலாம் என்று ட்ரம்ப் கூறினார். </p><p>ஆனால், அது குறித்த மேலதிக விவரங்களை அவர் அளிக்கவில்லை அல்லது அது சுங்கவரி ஒப்பந்தத்துடன் தொடர்புடையதா என்பதையும் அவர் குறிப்பிடவில்லை. </p><p>கனடாவின் மேற்குப் பகுதி தார் மணல் படிவங்களிலிருந்து அமெரிக்க சுத்திகரிப்பு நிலையங்களுக்கு எண்ணெயைக் கொண்டு வருவதற்காக 2008-ல் முன்மொழியப்பட்ட கீஸ்டோன் எக்ஸ்எல் திட்டமானது,</p><p></p><p> 1,200-மைல் தொலைவுள்ள அத்திட்டத்தின் அமெரிக்கப் பகுதிக்குத் தேவையான ஒரு முக்கிய அனுமதியை ஜோ பைடன் நிர்வாகம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, அதன் உரிமையாளரான டிசி எனர்ஜி நிறுவனத்தால் 2021-ல் நிறுத்தப்பட்டது. </p><p>அமெரிக்க நில உரிமையாளர்கள், அமெரிக்கப் பூர்வகுடி மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஜோ பைடன் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இது அமெரிக்க-கனடா உறவுகளில் ஒரு பதட்டமான சூழலாக உருவெடுத்தது. </p><p>இரு நாடுகளுக்கும் இடையே கடந்த ஆண்டு நிலவிய சர்ச்சைகளுக்கு மத்தியில், செவ்வாய்க்கிழமை கடைசி நேரத்தில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.</p><p> பதிலுக்குப் பதில் விதிக்கப்பட்ட வரிகள் மற்றும் கனடாவை அமெரிக்காவின் ஒரு மாகாணமாக மாற்றுவது குறித்து ட்ரம்ப் பயன்படுத்திய இணையவழித் தாக்குதல்கள் ஆகியவற்றால், இந்த நீண்டகாலக் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.</p><h2>50 சதவீத வரி</h2><p> </p><p>பிப்ரவரி 2025-ல், எல்லை தாண்டிய சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்துவதில் போதுமான முன்னேற்றம் இல்லை எனக் காரணம் காட்டி, ட்ரம்ப் நிர்வாகம் கனடா மீது 25 சதவீத வரியை விதித்தது. </p><p>இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்காவின் நடவடிக்கைகளை தேவையற்றவை மற்றும் நியாயமற்றவை என்று கூறி, கனடா ஒரு எதிர் வரியை அறிவித்தது. </p><p>அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கார்கள், மதுபானம் மற்றும் பால் பொருட்களுக்கு எதிரான பாகுபாட்டிற்கு கனடாவைப் பொறுப்பேற்கச் செய்வதே இதன் நோக்கம் என்று கூறி, ட்ரம்ப் நிர்வாகம் 50 சதவீத வரியை அறிவித்தபோது, ​​2026 ஜூலையில் பதற்றம் மேலும் அதிகரித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93d1299c-0463-4652-ba0a-4136caf810a9/26-6a8618d3df890.webp' /></p><p> </p><p>இதனிடையே, சமீபத்திய நாட்களில், இரு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகளும் தீவிரமான மற்றும் நுட்பமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தனர் என்று பிரதமர் கார்னி திங்களன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். </p><p>வரலாற்று ரீதியாக, கனடாவும் அமெரிக்காவும் வலுவான வர்த்தகப் பங்காளிகளாக இருந்து வருகின்றன. அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியின் அலுவலகத் தரவுகளின் அடிப்படையில், 2024-ல் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் சுமார் 909 பில்லியன் டொலராக மதிப்பிடப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T20:55:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் போர் தீவிரம் : உலகளவில் நிலக்கரி நிறுவனங்களின் இலாபம் பெருமளவில் உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/middle-east-war-situation-1787171994"></link>
            <id>https://tamilwin.com/article/middle-east-war-situation-1787171994</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அமெரிக்க - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான
யுத்தம் காரணமாக உலகளாவிய ரீதியில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு
விநியோக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அமெரிக்க - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான
யுத்தம் காரணமாக உலகளாவிய ரீதியில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு
விநியோகத்தில் கடுமையான நெருக்கடிகள் உருவாகியுள்ள போதிலும், நிலக்கரி
உற்பத்தித் துறை வரலாறு காணாத இலாபத்தைப் பதிவு செய்து வருவதாகச் சர்வதேச
செய்திகள் தெரிவிக்கின்றன.
</p><p>
ஈரானினால் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதைத் தொடர்ந்து, உலகளாவிய எண்ணெய் மற்றும்
திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) விநியோகம் பெருமளவில்
பாதிக்கப்பட்டுள்ளது.</p><h2>மாற்று எரிபொருளாக நிலக்கரி</h2><p>
</p><p>
இதனால் பல நாடுகள் தங்களது மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக,
அதிகளவில் கிடைக்கக்கூடிய நிலக்கரியை மாற்று எரிபொருளாகப் பயன்படுத்தத்
தொடங்கியுள்ளன.
</p><p>
குறிப்பாக, ஆசிய பிராந்தியத்தில் ஜப்பான், தென் கொரியா, பங்களாதேஷ்,
தாய்லாந்து மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் நிலக்கரி மூலம் மின்சாரம்
தயாரிக்கும் திட்டங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fab0efc4-d066-4047-8048-040a5e46cc60/26-6a86149c5cb4e.webp' /></p><p>
</p><p>
இதன் காரணமாகத் தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளைச் சேர்ந்த
நிலக்கரி நிறுவனங்களின் அரையாண்டு இலாபம் இரட்டிப்பாகியுள்ளதாகத் தரவுகள்
சுட்டிக்காட்டுகின்றன.</p><p>

எவ்வாறாயினும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும்,
எரிபொருள் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு காரணமாகவே பல நாடுகள் காலநிலை
மாற்ற இலக்குகளைத் தற்காலிகமாகப் பின்னுக்குத் தள்ளிவிட்டு நிலக்கரிப்
பயன்பாட்டை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T20:40:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச நெருக்கடியின் தாக்கம் ; அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரிக்கும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/risk-of-price-increases-for-essential-commodities-1787171131"></link>
            <id>https://jvpnews.com/article/risk-of-price-increases-for-essential-commodities-1787171131</id>
            <summary type="text">உலகளாவிய ரீதியில் தாக்கம் செலுத்தி வரும் எல் நினோ காலநிலை மாற்றம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, இறக்குமதி செய்ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளாவிய ரீதியில் தாக்கம் செலுத்தி வரும் எல் நினோ காலநிலை மாற்றம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மேலும் உயர்வடையும் அபாயம் காணப்படுவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b13a5aec-8953-43fd-80f9-28e2c8c84f2f/26-6a86113d65a82.webp' /></p><p>இதனடிப்படையில், எதிர்வரும் நாட்களில் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை உயர்வடையக்கூடும் என அந்தச் சங்கத்தின் தலைவர் கணேஷ் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும், இந்த சர்வதேச சந்தை மாற்றங்களின் பிரதிபலிப்பாக, கடந்த சில நாட்களில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனியின் விலை சுமார் 40 ரூபாவால் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T20:25:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[5 மாதங்களில் 1.95 இலட்சம் சமூக வலைதளக் கணக்குகள் முடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/1-95-lakh-social-media-accounts-suspended-5-months-1787170640"></link>
            <id>https://jvpnews.com/article/1-95-lakh-social-media-accounts-suspended-5-months-1787170640</id>
            <summary type="text">மார்ச் முதல் ஜூலை வரையிலான ஐந்து மாதங்களில் சுமார் 1.95 இலட்சம் சமூக வலைதளக் கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>மார்ச் முதல் ஜூலை வரையிலான ஐந்து மாதங்களில் சுமார் 1.95 இலட்சம் சமூக வலைதளக் கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>



இதன்படி, நாளொன்றுக்கு சராசரியாக 1,275 முடக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 68 நொடிக்கு ஒரு முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/672d090e-2678-4f96-b72d-76dfccfd3b14/26-6a860f516fd74.webp' /></p><p>அதிகபட்சமாக இன்ஸ்டாகிராம் கணக்குகளுக்கு சுமார் ஒரு இலட்சம் முடக்க உத்தரவுகளும், முகநூல் கணக்குகளுக்கு 80 ஆயிரம் உத்தரவுகளும், யூரியூப் கணக்குகளுக்கு 15 ஆயிரம் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
</p><p>


கடந்த சில மாதங்களாக தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தவறான மற்றும் பொய்யான தகவல்கள் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த முடக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>


மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் சமூக வலைதளக் கணக்குகளை முடக்குவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
</p><p>


இந்தக் கணக்குகள் முடக்கப்படும்போது, அவற்றில் பதிவிடப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பதிவுகள் மற்றும் உள்ளடக்கங்களும் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>


இணையதள முடக்கத்திற்கான உத்தரவுகள் பெரும்பாலும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000இன் பிரிவு 79(3)(b)-ன் கீழ் பிறப்பிக்கப்படுகின்றன. </p><p>இந்தப் பிரிவின் கீழ், அரசு மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்களால் சட்டவிரோதமானவை எனக் கருதப்படும் உள்ளடக்கங்களை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T20:17:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/4-americans-killed-in-kenya-helicopter-crash-1787169123"></link>
            <id>https://ibctamil.com/article/4-americans-killed-in-kenya-helicopter-crash-1787169123</id>
            <summary type="text">கென்யாவின் சாம்புரு மாவட்டத்தில் (Samburu County) சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற உலங்கு வானூர்தி ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்தில்&amp;nb...</summary>
            <content type="html"><![CDATA[<p>கென்யாவின் சாம்புரு மாவட்டத்தில் (Samburu County) சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற உலங்கு வானூர்தி ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.</p><p>குறித்த விபத்தில்&nbsp; 4 அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் உள்ளூர் விமானி உட்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் கென்ய அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p></p><h2>உலங்கு வானூர்தி</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வடக்கு கென்யாவில் உள்ள லோயிசாபா சரணாலயத்தில் (Loisaba Conservancy) இருந்து எவாசோ நயிரோ (Ewaso Nyiro) பகுதிக்குச் சென்றபோது ஓலோலோக்வே மலையின் அடிவாரத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9b75706-bc7c-4085-bc24-32276cb90509/26-6a8609662b78f.webp' /></p><p>லேடி லோரி ஹெலிகாப்டர்ஸ் (Lady Lori Helicopters) நிறுவனத்திற்குச் சொந்தமான யூரோகாப்டர் EC130 B4 ரக உலங்கு வானூர்தியே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.</p><p>நைரோபியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் கென்ய அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதுடன் தேவையான தூதரக உதவிகளையும் வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>விபத்துக்கான காரணம்</h2><p> உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74db0de1-077b-48ec-8a48-f097b9fda2ac/26-6a860966de281.webp' /></p><p> விபத்து நடந்த பகுதி மிகவும் கடினமான நிலப்பரப்பைக் கொண்டதாக இருப்பதால், கென்ய செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் உள்ளூர் மீட்புக் குழுவினர் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p>
விபத்துக்கான காரணம் குறித்து கென்ய சிவில் விமானப் போக்குவரத்து வாரியம் (KCAA) தீவிர விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T19:59:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொலைபேசி கமராக்கள் வழியாக கண்காணிக்கும் மொசாட் - நினைப்பதைவிட அருகில் அவர்கள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mossad-monitors-via-phone-cameras-1787156092"></link>
            <id>https://tamilwin.com/article/mossad-monitors-via-phone-cameras-1787156092</id>
            <summary type="text">உலகின் சக்திவாய்ந்த உளவு அமைப்புகளில் ஒன்றாக பார்க்கப்படும் இஸ்ரேலின் மொசாட் அமைப்பு, தற்போது மக்களின் கைகளில் இருக்கும் ஸ்மார்ட்போன்களையும் குறிவைத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் சக்திவாய்ந்த உளவு அமைப்புகளில் ஒன்றாக பார்க்கப்படும் இஸ்ரேலின் மொசாட் அமைப்பு, தற்போது மக்களின் கைகளில் இருக்கும் ஸ்மார்ட்போன்களையும் குறிவைத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
நாம் 24 மணி நேரமும் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் மூலம் எமது நடவடிக்கைகள், புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் குரல் பதிவுகள் உள்ளிட்ட தகவல்கள் பதிவு செய்யப்பட்டு, எங்கோ இருக்கும் மூன்றாம் தரப்பினருக்கு சென்றடைய வாய்ப்புள்ளதாக பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.</p><p>

இதன் காரணமாக, ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் தொலைபேசி பயன்பாட்டை தவிர்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p> 

இதேவேளை, பயனர்களின் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்டு சந்தைக்கு வரும் ஐபோன்கள் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களின் கமராக்கள் மற்றும் பிற தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பிலும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
</p><p>
இது போன்ற நாம் அறிந்திராத பல சுவாரஸ்யமான தகவல்களுடன் வருகிறது “உண்மையின் தரிசனம்” நிகழ்ச்சி,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NNqduegvc0Y" width="640" height="360" class="note-video-clip"></iframe></p>]]></content>
            <updated>2026-08-19T19:57:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு - கிழக்கு மக்கள் முகம்கொடுக்கும் சவால்கள் : எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் முக்கிய பேச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/challenges-facing-the-people-of-the-north-and-east-1787168666"></link>
            <id>https://tamilwin.com/article/challenges-facing-the-people-of-the-north-and-east-1787168666</id>
            <summary type="text">எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில்
அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், எதிர்க்கட்சியைப்
பிரதிநிதித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில்
அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், எதிர்க்கட்சியைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களைச்
சந்தித்துக் கலந்துரையாடினார்.
</p><p>
இந்தச் சந்திப்பின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும்
பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கவனத்தில் கொள்ளப்பட்டன.</p><h2>அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும்&nbsp;பிரச்சினைகள் </h2><p> குறிப்பாக, இம்மாகாண
மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் சமூக, பொருளாதார மற்றும்
அபிவிருத்திப் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிராந்திய மட்டப்
பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவரின்
கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e28ddf41-6ed5-446d-9aac-32a7313094e1/26-6a86079f6be6b.webp' /></p><p>

மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளை நாடாமன்றத்தில்
பரந்தளவில் முன்வைப்பது மற்றும் அவற்றுக்கான அவசியமான அரசியல் மற்றும் சமூகத்
தலையீடுகளைச் செய்வது தொடர்பாகவும் இந்தச் சந்திப்பில் விசேட கவனம்
செலுத்தப்பட்டது.
</p><p>
இந்த நிகழ்வில் எம்.எல்.எம். ஹிஸ்புல்லா, எம்.எஸ்.ஏ. வாஸீத், எம்.டி.எம்.
தாஹிர், துறைராசா ரவிகரன், இம்ரான் மஹ்ரூப், எம்.எஸ். உதுமாலெப்பை, ரவூப்
ஹக்கீம், வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம்
காரியப்பர், காதர் மஸ்தான், செல்வம் அடைக்கலநாதன், மனோ கணேசன் உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T19:45:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிட்டு - இடியப்பம் விற்பனை செய்தவரின் மாடித் தோட்டம்! சுற்றிவளைத்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ganja-seller-arrested-1787165920"></link>
            <id>https://tamilwin.com/article/ganja-seller-arrested-1787165920</id>
            <summary type="text">கல்முனை பகுதியில் உள்ள வீட்டின் மொட்டை மாடியில் சூட்சுமமான முறையில் கஞ்சா செடி வளர்த்து வந்த சந்தேக நபர் ஒருவர்&amp;nbsp; நேற்று(19.08.2026) கைது செய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை பகுதியில் உள்ள வீட்டின் மொட்டை மாடியில் சூட்சுமமான முறையில் கஞ்சா செடி வளர்த்து வந்த சந்தேக நபர் ஒருவர்&nbsp; நேற்று(19.08.2026) கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>கல்முனை - கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மாடியிலேயே குறித்த கஞ்சாப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>இரகசிய தகவல்&nbsp;</h2><p>அம்பாறை மாவட்ட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட&nbsp; சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.&nbsp;</p><p>கல்முனை&nbsp; தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியொன்றில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது,&nbsp; குறித்த கஞ்சா பயிர்ச்செய்கை தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/917e2f02-bc0c-4f22-80de-6075d6e95c30/26-6a860400be5ec.webp' /></p><p>இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே, பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டதோடு, சந்தேகநபர் காலை மற்றும் மாலை வேளைகளில், இடியப்பம், பிட்டு போன்ற உணவுகளை விற்பனை செய்யும் போர்வையில்&nbsp; கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளமையும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>கைப்பற்றப்பட்ட கஞ்சாச் செடிகளை பொலிஸ்&nbsp; நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T19:29:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்ரான் கானுக்கு தனியார் வைத்தியசாலை சிகிச்சை...! நீதிமன்றை நாடியது பாகிஸ்தான் அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pakistan-appeals-order-on-imran-khan-medical-care-1787166504"></link>
            <id>https://ibctamil.com/article/pakistan-appeals-order-on-imran-khan-medical-care-1787166504</id>
            <summary type="text">சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை மருத்துவ சிகிச்சைக்காகத் தனியார் வைத்தியசாலையொன்றுக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை மருத்துவ சிகிச்சைக்காகத் தனியார் வைத்தியசாலையொன்றுக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p> பாகிஸ்தான் அரசாங்கம் இந்த பரிசீலனை மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>சிறை நடைமுறைகள்</h2><p>ராவல்பிண்டியின் அடியாலா சிறையிலுள்ள இம்ரான் கானை இஸ்லாமாபாத்திலுள்ள ஷிஃபா சர்வதேச வைத்தியசாலைக்கு இரண்டு நாட்களுக்குள் மாற்றுமாறும், ஐந்து நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவை அமைத்து அவருக்குச் சிகிச்சை அளிக்குமாறும் உச்ச நீதிமன்றம் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டிருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d4bf982-eb81-4236-944e-70fc613670f5/26-6a86009874202.webp' /></p><p>எனினும், சிறை நடைமுறைகளின்படி தண்டனை பெற்ற கைதியொருவருக்கு அரசாங்கப் பொது வைத்தியசாலையிலேயே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும், சிறை அதிகாரிகளின் கருத்துக்களைக் கேட்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டி அரசாங்கம் இந்த பரிசீலனை மனுவைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T19:16:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட கொரியாவின் பெரும் ரகசியம் ஒன்றை பெருமிதப் பேச்சால் அம்பலப்படுத்திய ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-reveals-north-korea-nuke-1787166507"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-reveals-north-korea-nuke-1787166507</id>
            <summary type="text">Trump casually reveals North Korea&#039;s nuke stockpile: வட கொரியாவிடம் உள்ள அணு ஆயுதக் கையிருப்பை ட்ரம்ப் சாதாரணமாக அம்பலப்படுத்தியுள்ளார்.
வட கொரிய சர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump casually reveals North Korea's nuke stockpile: வட கொரியாவிடம் உள்ள அணு ஆயுதக் கையிருப்பை ட்ரம்ப் சாதாரணமாக அம்பலப்படுத்தியுள்ளார்.</p><p>
வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன்னை இந்த ஆண்டின் பிற்பகுதியில் சந்திக்கவிருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்.</p><h2>நவம்பரில்</h2><p>
</p><p>42 வயதான கிம் ஜாங் உன்னை நேரில் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு அவர் தனது உதவியாளர்களைக் கேட்டுக்கொண்டதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b9e3268-2e3e-4b38-b587-0bc8668d4369/26-6a85ff2f05aa8.webp' /></p><p> </p><p>இந்த அமர்வு, சீனாவின் ஷென்சென் நகரில் நவம்பரில் நடைபெறவிருக்கும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) நிகழ்வில் இடம்பெற வாய்ப்புள்ளது என்றே கூறப்படுகிறது. </p><p>தென் கொரியாவுடனான கூட்டு ராணுவப் பயிற்சியானது வட கொரியாவிற்குத் தவறான செய்தியை அனுப்பக்கூடும் என்று கூறி அதனைக் கைவிட முடிவு செய்திருந்த நிலையிலேயே, வட கொரியாவின் அதிகாரமிக்க தலைவரை நோக்கி ட்ரம்ப் இணக்கமாகும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.</p><p></p><p> </p><p>ட்ரம்பின் முதல் ஆட்சியின் போது அவர் மூன்று முறை வட கொரியத் தலவரை நேரில் சந்தித்துள்ளார். அந்தப் பேச்சுவார்த்தைகள் அக்காலத்தில் வடகொரியாவிடமிருந்து அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான எந்தச் சலுகைகளையும் பெற்றுத்தரவில்லை. </p><p>மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள கிம்மை அரவணைத்துக்கொள்ள அமெரிக்க ஜனாதிபதிகள் தயக்கம் காட்டி வந்த போதிலும், நான் அவருடன் இணக்கமாக இருக்க விரும்புகிறேன் என்று புதன்கிழமை அன்று ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டார்.</p><h2>57&nbsp;அணு ஆயுதங்கள்</h2><p> </p><p>அணு ஆயுத ஒழிப்புக்கு கிம்மை இணங்க வைப்பதற்கான அமெரிக்காவின் கடந்தகால முயற்சிகள் செவிமடுக்கப்படவில்லை, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ட்ரம்புடன் நடந்த சந்திப்புகளுக்குப் பிறகு அவர் தனது அணு ஆயுதக் கையிருப்பை அதிகரித்துள்ளார். </p><p>இந்த நிலையில், வட கொரியாவிடம் 57 மிகவும் சக்திவாய்ந்த அணு ஆயுதங்கள் இருப்பதாக ட்ரம்ப் புதன்கிழமை அன்று மிகச் சாதாரணமாக அறிவித்தார்.</p><p> இதற்கு முன்னர் செய்திகளில் வராத, விசித்திரமாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை அவர் பகிர்ந்துகொண்டார். இருப்பினும், வட கொரியாவின் ஆயுதக் கையிருப்பு குறித்த தோராயமான மதிப்பீடுகள் முன்னர் சுமார் 60 ஆக இருந்ததாகக் கூறப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebd0080c-b721-439b-9472-39d04bc5982b/26-6a85ff2e487ad.webp' /></p><p> </p><p>அத்துடன், ஜோ பைடன் காலத்தில் இது அனுமதிக்கப்பட்டுள்ளதையும் அவர் சாடினார். தாம் அப்போது ஜனாதிபதியாக இருந்திருந்தால், அனுமதித்திருக்க மாட்டேன் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். </p><p>இதனிடையே, ஏதேனும் தனிப்பட்டக் கடிதப் போக்குவரத்து வட கொரியாவுடன் முன்னெடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, அதற்கு பதிலளிக்க முடியாது என்றும் ட்ரம்ப் மறுத்துள்ளார். </p><p>திங்கட்கிழமை அன்று ஓவல் அலுவலக நிகழ்ச்சி ஒன்றில், தாம் கிம்முடன் தொடர்பில் இருந்ததாக ஜனாதிபதி ட்ரம்ப் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T19:06:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை...! ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-hints-at-possible-talks-with-iran-1787165474"></link>
            <id>https://ibctamil.com/article/trump-hints-at-possible-talks-with-iran-1787165474</id>
            <summary type="text">வருங்காலத்தில் ஏதேனும் ஒரு கட்டத்தில் ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வருங்காலத்தில் ஏதேனும் ஒரு கட்டத்தில் ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் மோதல் போக்குகளுக்கு மத்தியில் இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.</p><p>சர்வதேச ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><h2>அமெரிக்காவின் கோரிக்கை</h2><p>
</p><p>மேலும் தெரிவித்த அவர், தற்போதைய சூழல் அமெரிக்காவிற்கு மிகவும் சாதகமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40e18873-dd8c-4033-80b7-82a56d76a65f/26-6a85fb245d697.webp' /></p><p>ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான அமெரிக்காவின் கோரிக்கை மிகவும் எளிமையானது என்று கூறியுள்ள ட்ரம்ப், ஈரான் அணுஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்பதே அந்த முதன்மையான நிபந்தனை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>ஈரானிடம் அணுஆயுதம் இருக்க முடியாது எனவும் அவர்களிடம் அணுஆயுதம் இருக்கவும் செய்யாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>ட்ரோன் தாக்குதல்கள்</h2><p>அத்தோடு அவர்களிடம் அணுஆயுதம் இருந்தால் அதை அவர்கள் பயன்படுத்தி விடுவார்கள் என்பது தெரியும் எனவும் எனவே அதை நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை எனவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7435545a-f9e2-4f6a-a7f0-edc82a14d77e/26-6a85fb2510943.webp' /></p><p>ஹோர்முஸ் நீரிணையின் (Strait of Hormuz) மீது அமெரிக்கா முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளதாக ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
அவ்வப்போது ஈரான் நடத்தும் ட்ரோன் தாக்குதல்கள் போன்ற சிறிய இடையூறுகளைத் தவிர, அந்த முக்கியமான கடல் வழிப் பாதை அமெரிக்காவின் முழு அதிகாரத்தின் கீழ் இயங்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T18:57:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமி ; சந்தேகத்தில் சிறுவன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/youth-arrested-in-edmonton-girls-suspicious-death-1787149749"></link>
            <id>https://canadamirror.com/article/youth-arrested-in-edmonton-girls-suspicious-death-1787149749</id>
            <summary type="text">கனடாவின் எட்மண்டன் நகரில் 16 வயது சிறுமியான ஜாஸ்மின் தீசி என்பவரின் சந்தேகத்திற்கு இடமான உயிரிழப்பு தொடர்பாக காவல்துறை ஒரு சிறுவனைக் கைது செய்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் எட்மண்டன் நகரில் 16 வயது சிறுமியான ஜாஸ்மின் தீசி என்பவரின் சந்தேகத்திற்கு இடமான உயிரிழப்பு தொடர்பாக காவல்துறை ஒரு சிறுவனைக் கைது செய்துள்ளது. </p><p>
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 139 அவென்யூ மற்றும் 32 ஸ்ட்ரீட் பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகத் தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஜாஸ்மின் தீசி உயிரிழந்தார். </p><p>
அவர் தனது நண்பரைப் பார்க்கச் சென்றிருந்ததாகக் குடும்பத்தினர் தெரிவித்தனர். 
கைது செய்யப்பட்டுள்ள சிறுவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை எட்மண்டன் காவல் துறை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f266b227-91eb-428d-b3fc-76b5a5d9309f/26-6a85bdb7bbc99.webp' /></p><p>
அல்பெர்ட்டா தலைநகரில் நடைபெற்ற 121-வது வருடாந்த உச்சிமாநாடு மற்றும் காவல் வர்த்தகக் கண்காட்சியில் செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசிய காவல் தலைமை அதிகாரி வாரன் டிரைஷல், கைது செய்யப்பட்ட நபருக்கு 16 வயது என்று தெரிவித்தார். </p><p>
புதன்கிழமை உடற்கூறாய்வு செய்யப்பட உள்ளதாகவும், அதன்பின்னரே கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும் என்றும் எட்மண்டன் காவல் துறை தெரிவித்துள்ளது. </p><p>
எட்மண்டனில் சிறுவர்களிடையே வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும், அதற்குப் பதிலளிக்கும் விதமாகச் சிறுவர்களுக்கான சிறப்புத் திட்டங்களை அதிகரித்து வருவதாகவும் காவல் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். </p><p>
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கும்பல் குற்றங்களில் ஈடுபடும் அபாயத்தில் உள்ள சிறுவர்களுக்கு, முன்னாள் குற்றவாளிகளைக் கொண்டு வழிகாட்டுதல் வழங்கப்படும். 
இதனிடையே, மற்றொரு சிறுவன் கொல்லப்பட்டது தொடர்பாகவும் எட்மண்டன் காவல்துறையும், கனடிய மத்திய அரச காவல்துறையும் விசாரணை நடத்தி வருகின்றன. </p><p>ஆகஸ்ட் 6 அன்று எட்மண்டனின் வடக்கு பகுதியில், ஃபைசல் உசேன் என்ற 12 வயது சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T18:51:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்கலைக்கழகத்தில் தொடர் உயிர்மாய்ப்பு; அதிர்ச்சியில் மயங்கி வீழ்ந்த மாணவிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/eastern-university-student-takes-her-own-life-1787141731"></link>
            <id>https://jvpnews.com/article/eastern-university-student-takes-her-own-life-1787141731</id>
            <summary type="text">&amp;nbsp; கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் இன்று(19) பிற்பகல் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் இன்று(19) பிற்பகல் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>



அதனை கண்டு அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a22907f7-ab36-4fa9-8ea4-6b1993f54097/26-6a859e64d0993.webp' /></p><h2>8 பேர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு</h2><p> 



திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில்&nbsp; சேர்ந்த 20 வயதுடைய மாணவி&nbsp; என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>



குறித்த கல்லூரிக்கு நாடகத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டதையடுத்து குறித்த மாணவி கல்லூரி விடுதியில் தங்கியிருந்து முதலாம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார்.</p><p></p><p>



இந்நிலையில் விடுதியிலுள்ள அறையில் சம்பவதினமான இன்று பிற்பகல் சுமார்.12.00 மணியளவில் குறித்த மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்துள்ளார்.</p><p>



இதனைக்கண்ட அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயங்கி வீழ்ததையடுத்து அங்குள்ள மாணவர்கள் உடனடியாக தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்து கொண்ட மாணவியையும் மயங்கி வீழ்ந்த மாணவிகளையும் மீட்டு மட்டு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.</p><p></p><p>
</p><p>


இந்த நிலையில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்து கொண்ட மாணவி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும் மயங்கி வீழ்ந்த மாணவிகள் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
</p><p>


உயிரிழந்த மாணவியின் சடலம் பிரே பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p>


இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ஜூலை 31 வரையிலான கடந்த 7 மாதத்தில் 84 பேரும் கடந்த ஜூன் மாதத்தில் 8 பேர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
</p><p>


கடந்த வருடம் 2025 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31ம் திகதி வரையான ஒரு வருடத்தில் 164 தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்து கொண்டுள்ளதாக மாவட்ட பொலிஸ் தலைமைக் காரியாலய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-19T18:51:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[போக்குவரத்து அபராதங்கள் குறித்து வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/announcement-regarding-traffic-fines-1787165282"></link>
            <id>https://jvpnews.com/article/announcement-regarding-traffic-fines-1787165282</id>
            <summary type="text">நாடளாவிய ரீதியில் வாகனங்களுக்கு விதிக்கப்படும் அனைத்து வகையான போக்குவரத்து அபராதங்களையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் டிஜிட்டல் முறையில் மாத்திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் வாகனங்களுக்கு விதிக்கப்படும் அனைத்து வகையான போக்குவரத்து அபராதங்களையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் டிஜிட்டல் முறையில் மாத்திரமே செலுத்த முடியும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>இதற்கான அனைத்து தொழில்நுட்ப மற்றும் கட்டமைப்பு வசதிகளும் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6701c0b7-3feb-4f8b-9406-bf57a22b3686/26-6a85fa64af620.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T18:48:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய ஆபிரிக்கக் குடியரசில் தங்கச் சுரங்கம் சரிந்து வீழ்ந்து விபத்து : 30இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-mine-collapses-in-central-african-republic-1787164934"></link>
            <id>https://tamilwin.com/article/gold-mine-collapses-in-central-african-republic-1787164934</id>
            <summary type="text">மத்திய ஆபிரிக்கக் குடியரசின் மேற்குப் பகுதியில், கெமரூன் எல்லைக்கு அருகில்
அமைந்துள்ள பாரம்பரிய தங்கச் சுரங்கமொன்று சரிந்து வீழ்ந்ததில் 30இற்கும் மேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய ஆபிரிக்கக் குடியரசின் மேற்குப் பகுதியில், கெமரூன் எல்லைக்கு அருகில்
அமைந்துள்ள பாரம்பரிய தங்கச் சுரங்கமொன்று சரிந்து வீழ்ந்ததில் 30இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கெமரூன் எல்லைக்கு அருகிலுள்ள சாம்போயே கிராமத்தில் இந்தச் சம்பவம்
இடம்பெற்றுள்ளது.</p><h2>மீட்கப்பட்டுள்ள உடல்கள்&nbsp;</h2><p>
</p><p>
சம்பவ இடத்திலிருந்து இதுவரை 30 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும்
சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்புப் பணிகள்
தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c44ad511-75cd-49b2-85c9-c55051b6a631/26-6a85f9089cd92.webp' /></p><p>
</p><p>
பாதுகாப்பற்ற முறையில் இயங்கிவரும் இவ்வாறான சட்டவிரோத மற்றும் பாரம்பரியச்
சுரங்கங்களில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்மையால் அடிக்கடி இவ்வாறான
விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன.
</p><p>
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு
நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T18:42:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவுக்கு ட்ரம்ப் வழங்கிய 3 நாள் கெடு: வர்த்தகப் போரில் புதிய திருப்புமுனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-pauses-50-tariff-on-canadian-goods-1787159919"></link>
            <id>https://ibctamil.com/article/trump-pauses-50-tariff-on-canadian-goods-1787159919</id>
            <summary type="text">கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்கப்படவிருந்த 50 சதவீதக் கடுமையான வரியை 3 நாட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்கப்படவிருந்த 50 சதவீதக் கடுமையான வரியை 3 நாட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.</p><p>

கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் முக்கிய முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்காக இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தநிலையில் சுமார் 20 பில்லியன் மதிப்புள்ள கனடியப் பொருட்கள் மீது நடைமுறைக்கு வரவிருந்த 50 வீதம் வரியை தற்காலிகமாக நிறுத்துவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.</p><p></p><h2>கணிசமான முன்னேற்றம்&nbsp;</h2><p>

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள ட்ரம்ப், கனடா மற்றும் அமெரிக்கா இடையே ஆவணங்களை இறுதி செய்யும் கட்டத்தில் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதன் அடிப்படையில், நடைமுறைக்கு வரவிருந்த 50 வீதம் வரியை 3 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அத்தோடு முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனால் ரத்து செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய கீஸ்டோன் எக்ஸ்எல் எண்ணெய் குழாய் திட்டம் (Keystone XL oil pipeline) மீண்டும் தொடங்கப்படலாம் என்றும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7321a31-ce9f-4e2e-b794-ea80ac70c1de/26-6a85f729768ce.webp' /></p><p>

அத்தோடு இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் இன்னும் சில முக்கியமானப் பணிகளை நிறைவு செய்ய வேண்டியுள்ளது என கனடியப் பிரதமர் மார்க் காரணி தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் தொடர்ந்தாலும், உள்நாட்டில் வலுவான மற்றும் சுதந்திரமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதிலேயே கனடா கவனம் செலுத்தும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T18:35:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனில் உடனடியாக ஜனாதிபதி தேர்தல்...! ஜெலென்ஸ்கிக்கு எதிராக உருவெடுக்கும் அரசியல் சவால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-minister-demands-ukraine-presidential-election-1787155198"></link>
            <id>https://ibctamil.com/article/ex-minister-demands-ukraine-presidential-election-1787155198</id>
            <summary type="text">உக்ரைனில் ரஷ்யப் போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், நாட்டில் உடனடியாக ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என வலியுருத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனில் ரஷ்யப் போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், நாட்டில் உடனடியாக ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என வலியுருத்தப்பட்டுள்ளது.</p><p>

சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் மைக்கைலோ ஃபெடோரோவ் (Mykhailo Fedorov) இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.</p><p> 

ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு எதிராக இது உக்ரைனிய அரசியலில் மிகப்பெரிய அரசியல் சவாலாக உருவெடுத்துள்ளது.</p><p>
</p><p></p><h2>ரஷ்யாவின் பிணைக்கைதி</h2><p>இது தொடர்பில் மைக்கைலோ ஃபெடோரோவ் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நீடித்த போருக்கு மத்தியிலும் உக்ரைன் தனது முழுமையான ஜனநாயகச் செயல்பாடுகளை மீட்டெடுப்பதற்கான சட்டப்பூர்வ, பாதுகாப்பான மற்றும் நடைமுறைக்குச் சாத்தியமான வழியைக் கண்டறிய வேண்டும்.</p><p> 

உக்ரைனின் ஜனநாயகத்தை ரஷ்யாவின் பிணைக்கைதியாக மாற்ற முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62dd317d-b15b-42b3-87c5-7cc5c4e54258/26-6a85e2b41c74c.webp' /></p><p>உக்ரைனில் 2022 இல் ரஷ்ய ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து இராணுவச் சட்டம் (Martial Law) நடைமுறையில் உள்ளது. </p><p>

உக்ரைனிய அரசியலமைப்புச் சட்டத்தின் படி இராணுவச் சட்டம் நடைமுறையில் இருக்கும் போது நாட்டில் ஜனாதிபதி, நாடாளுமன்றம் அல்லது உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த முடியாது.</p><p></p><h2>பதவி காலம்</h2><p>

ஜெலென்ஸ்கியின் 5 ஆண்டு காலப் பதவி காலம் கடந்த 2024 மே மாதத்துடன் முடிவடைந்தது. </p><p>

இருப்பினும், புதிய ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பொறுப்பேற்கும் வரை தற்போதைய ஜனாதிபதியே பதவியில் தொடருவார் என உக்ரைன் அரசியலமைப்பின் 108 ஆவது பிரிவு குறிப்பிடுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4032cb77-3731-4045-bb41-031d44203af1/26-6a85e2b4dc8ce.webp' /></p><p>போர் தீவிரமாக இருக்கும் சூழலில் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என்பதே ஜெலென்ஸ்கியின் உறுதியான நிலப்பாடாக உள்ளது.</p><p>

இந்தநிலையில் அரசு நிர்வாகத்தில் நிலவும் பணமோசடி மற்றும் ஊழல் விசாரணைகளைத் தொடர்ந்து ஜனாதிபதி அலுவலகத்தின் துணைத் தலைவர் இரினா முத்ராவை (Iryna Mudra) ஜெலென்ஸ்கி பணிநீக்கம் செய்துள்ளார்.
</p><p>
அமைச்சரவை மற்றும் ராணுவப் பொறுப்புகளில் ஜெலென்ஸ்கி மேற்கொண்டு வரும் இந்த தொடர் மாற்றங்களும், அதிகாரிகளின் ஊழல் குற்றச்சாட்டுகளும் உக்ரைனிய உள்நாட்டு அரசியலில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T18:35:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப் போரைத் தீவிரப்படுத்தினால்... வளைகுடா நாடுகளை அடுத்து ஐரோப்பாவை குறிவைக்கும் ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-considers-hitting-europe-1787162218"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-considers-hitting-europe-1787162218</id>
            <summary type="text">Iran is considering attacking US military targets in Europe: ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க ராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ஈரான் பரிசீலன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran is considering attacking US military targets in Europe: ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க ராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ஈரான் பரிசீலனை.
</p><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மத்திய கிழக்கில் போரைத் தீவிரப்படுத்தினால், ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க ராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ஈரான் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>ஈரானின் இலக்குகளாக</h2><p>
</p><p>ஃபைனான்ஷியல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், மார்ச் மாதத்தில் ட்ரோன் தாக்குதலுக்கு இலக்கான சைப்ரஸில் உள்ள பிரித்தானிய விமானப்படைத் தளம், சாத்தியமான இலக்குகளில் ஒன்றாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5bf5f90-f882-49ff-9333-e8ff8838dc6e/26-6a85ee6c717cb.webp' /></p><p> </p><p>அந்தத் தாக்குதல், பிரித்தானிய இராணுவ முகாமின் மீது நடத்தப்பட்ட முதலாவது தாக்குதலாக அமைந்ததோடு, போரின் தீவிரத்தையும் அதிகரிப்பதாக இருந்தது. </p><p>மட்டுமின்றி, தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள பல்கேரியா போன்ற நாடுகளும் ஈரானின் இலக்குகளாக அடையாளம் காணப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>பல்கேரியா கடந்த மாதம் தனது பெஸ்மர் (Bezmer) விமானப்படைத் தளத்திலிருந்து 8 போயிங் KC-135 ஸ்ட்ராடோடேங்கர் (Stratotanker) விமானங்கள் எரிபொருள் நிரப்பிக்கொள்ளவும், 250 பணியாளர்கள் செயல்படவும் அனுமதித்திருந்தது. </p><p>இதனிடையே, ஈரான் தனது ராணுவ நிலைப்பாட்டை தற்காப்பு நிலையிலிருந்து முழுமையான தாக்குதல் நிலைக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக, அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p>ஹார்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாட்டு விவகாரத்தில் நிலவும் கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கும், போருக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. </p><p>ஈரானை மீண்டும் சீண்டும் வகையில் ஹார்முஸ் நீரிணையை அமெரிக்காவின் புதிய பிரதேசமாகக் காட்டும் வரைபடம் ஒன்றை வெளியிட்ட ட்ரம்ப், அந்நாட்டுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், இனி அத்தகைய பேச்சுவார்த்தை எதுவும் திட்டமிடப்படவில்லை என்றும் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.</p><h2>இழந்து வருகிறது</h2><p>
</p><p>அமெரிக்காவும் ஈரானும் மிகவும் ஆக்கபூர்வமான மற்றும் தீவிரமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக ட்ரம்ப்பின் தூதரும் மருமகனுமான ஜாரெட் குஷ்னர் திங்களன்று கூறியிருந்த நிலையில், நிலைமை அப்படி இல்லை என்று ஜனாதிபதி ட்ரம்ப் மறுத்துள்ளார். </p><p>பொதுவாக ஒரு ஒப்பந்தத்திற்கு ஈரான் கெஞ்சுவதாக ஊடகங்களிடன் நாளும் கூறி வந்த ஜனாதிபதி ட்ரம்ப், முதல் முறையாக ஈரானுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், இனி அத்தகைய பேச்சுவார்த்தை எதுவும் திட்டமிடப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். </p><p>மேலும், ஹார்முஸ் நீரிணை தற்போது செயல்படத் தொடங்கியுள்ளதாகவும் திறந்திருப்பதாகவும் ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டுள்ள நிலையில், அமெரிக்கா தங்களின் நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை, கப்பல் போக்குவரத்தின் மீதான தங்களது பிடியைத் தக்கவைத்துக்கொள்ள ஈரான் திட்டமிட்டுள்ளதாக ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e71e01f2-5b26-4829-80d3-30adbdeb71b5/26-6a85ee6d274b7.webp' /></p><p> </p><p>ஆனால் வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், ஹார்முஸ் நீரிணை மீதான தனது பிடியை ஈரான் படிப்படியாக இழந்து வருகிறது என்றே கூறப்படுகிறது.</p><p> அமெரிக்க ராணுவம் தனது கடற்படையைக் கொண்டு அப்பிராந்தியத்தின் மீதான முற்றுகையைத் தொடர்ந்து, அப்பகுதியில் தனது பிடியை வலுப்படுத்தியுள்ளது. </p><p>கடந்த வாரம் குறைந்தது 95 கப்பல்களும், அதற்கு முந்தைய வாரத்தில் 118 கப்பல்களும் ஹார்முஸ் நீரிணை வழியாக அமெரிக்க ராணுவத்தின் ஒப்புதலுடன் கடந்துச் சென்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T17:54:34+00:00</updated>
        </entry>
    </feed>
