<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-09T21:36:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தலுக்கு பிறகு ஈரான் போர் முடிவுக்கு வரும், எரிபொருள் விலை குறையும்: டிரம்ப் கணிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-predicts-after-election-iran-war-conclude-1788985409"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-predicts-after-election-iran-war-conclude-1788985409</id>
            <summary type="text">Trump Predicts After Election Iran War Will Conclude: இடைக்கால தேர்தலுக்கு பிறகு ஈரான் உடனான மோதல் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump Predicts After Election Iran War Will Conclude: இடைக்கால தேர்தலுக்கு பிறகு ஈரான் உடனான மோதல் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.</p><h2> ஈரான் மோதல் எப்போது முடிவுக்கு வரும்?</h2><p>அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறும் இடைக்காலத் தேர்தலுக்கு பிறகு,&nbsp; ஈரானுடனான மோதல் உடனடியாக&nbsp; முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ab86c4b-cd76-49ec-8fea-b2eab6dc810d/26-6aa1c043298fd.webp' /></p><p> அத்துடன் உச்சத்தை தொட்டு வரும் எரிபொருள் விலையும் பெருமளவு குறையும் என்று டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.</p><p> புதன்கிழமை டெக்சாஸ் மாநிலம் டல்லாஸுக்கு(Dallas) புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த டொனால்ட் டிரம்ப் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.</p><p>அப்போது புவிசார் பதற்றங்களுக்கும், உள்நாட்டு பொருளாதார நிவாரணத்திற்கும் உள்ள தொடர்பினை டிரம்ப் விளக்கினார்.</p><p></p><p>மேலும் இடைக்காலத் தேர்தலுக்கு பிறகு எண்ணெய் விலைகள்(oil prices) அதள பாதாளத்திற்கு செல்லும் என்றும், எரிவாயுகளின்(gasoline) விலை கலன்(gallon) ஒன்றுக்கு 2 டொலர்கள் வரை குறையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.</p><p> ஈரானுடனான தூதரக உறவுகள் குறித்து பேசிய டிரம்ப், மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Trump on Iran:<br><br>I think the war will end immediately after the election. <a href="https://t.co/KT1CthdgeD">pic.twitter.com/KT1CthdgeD</a></p>&mdash; Clash Report (@clashreport) <a href="https://x.com/clashreport/status/2097757200932294731?ref_src=twsrc%5Etfw">September 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> அணுசக்தி ஒப்பந்தத்தை விட கூடுதலான நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டு வருவதாகவும், ஆனால் அதே சமயம் ஈரானுடன் வழக்கமான ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா விரும்பவில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p> போர் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்பதை வெளிப்படுத்திய டிரம்ப், எத்தகைய வழிமுறைகளில் போரை முடிவுக்கு கொண்டு வரப் போகிறோம் என்பது குறித்து கூடுதல் தகவலை அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T21:32:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[iPhone 18 தொடரை அறிமுகம் செய்த ஆப்பிள்: அசத்தும் புதிய சிறப்பம்சங்கள் என்னென்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/apple-unveils-iphone-18-pro-series-highlights-1788989325"></link>
            <id>https://news.lankasri.com/article/apple-unveils-iphone-18-pro-series-highlights-1788989325</id>
            <summary type="text">Apple unveils Iphone 18 Pro Series, What are the Highlights: ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 18 ப்ரோ தொடர் ஸ்மார்ட்போனை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Apple unveils Iphone 18 Pro Series, What are the Highlights: ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 18 ப்ரோ தொடர் ஸ்மார்ட்போனை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.</p><h2>புதிய ஸ்மார்ட்போன் தொடர்களை அறிமுகப்படுத்திய ஆப்பிள்</h2><p>ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர நிகழ்வு புதன்கிழமை நடைபெற்ற நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 18 ப்ரோ(iPhone 18 Pro) மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்(iPhone 18 Pro Max) மாடல் ஸ்மார்ட்போன்களை ஆப்பிள் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்களானது Deep Black, Refined Silver, Glacier Blue, Burgundy ஆகிய நிறங்களில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">From iPhone Duo, iPhone 18 Pro, and iPhone 18 Pro Max to Apple Watch Series 12, Apple Watch Ultra 4, and AirPods 5… here&#39;s a look at all of the latest announcements dropping today! <a href="https://x.com/hashtag/AppleEvent?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AppleEvent</a> <a href="https://t.co/YvswtNEA7m">pic.twitter.com/YvswtNEA7m</a></p>&mdash; Tim Cook (@tim_cook) <a href="https://x.com/tim_cook/status/2097766713278525689?ref_src=twsrc%5Etfw">September 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p> ஆப்பிள் ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி(CEO) ஜான் டெர்னுஸ்(John Ternus), அறிமுகமாகும் புதிய ஐபோன்களில் மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு, சக்தி வாய்ந்த செயல்திறன் மற்றும் அதிக ஆற்றலை உள்ளடக்கிய பற்றரி மற்றும் சிறந்த கேமரா வசதிகள் ஆகியவை முன்னேற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><h2>ஐபோன் 18 தொடரின் முக்கிய அம்சங்கள்</h2><p> ஐபோன் 18 மாடல்களில் 2 நானோமீட்டர் செயல்முறை நோட் மூலம் உருவாக்கப்பட்ட A20 ப்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது.</p><p> அத்துடன் சிறந்த செயல்திறனை உறுதிப்படுத்தும் விதமாக 7-கோர் ஜிபியு (GPU) இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> அத்துடன் மாற்றியமைக்க கூடிய கேமரா துளை(changeable Aperture Values) அம்சம் கொண்ட அதிநவீன கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/639eb9f7-25e0-4da2-8299-7bcb7b7bf41a/26-6aa1cf8eba9ab.webp' /></p><p> மேலும் ஒரே சார்ஜில் 45 மணி நேரம் தொடர்ச்சியாக வீடியோ ஓட கூடிய பிளேபேக் திறன் வழங்கப்பட்டுள்ளது.</p><h2> விலை மற்றும் விற்பனை விவரங்கள்</h2><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3025a0e-437d-4609-8fd7-a5ba4c4d894f/26-6aa1cf8f6db75.webp' /></p><p>அமெரிக்காவில் ஐபோன் 18 ப்ரோவின் விலை $1,199 ஆகவும், ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் விலை $1,299 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.</p><p> இந்தியாவில் இதன்&nbsp; விற்பனை விலை எவ்வளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.</p><p> இதற்கான முன் பதிவுகள் செப்டம்பர் 12ம் திகதி தொடங்குகிறது. அத்துடன் இதன் அதிகாரப்பூர்வ விற்பனை செப்டம்பர் 18ம் திகதி முதல் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T21:29:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நூலிழையில் தப்பிய ஜெலென்ஸ்கி! பயணித்த விமானத்தை நெருங்கி வந்த ட்ரோன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/danger-posed-to-zelenskyy-s-plane-by-a-drone-1788987096"></link>
            <id>https://ibctamil.com/article/danger-posed-to-zelenskyy-s-plane-by-a-drone-1788987096</id>
            <summary type="text">நோர்வே மன்னரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒஸ்லோ சென்ற விமானம், செவ்வாய்க்கிழமை மால்டோவாவிலிருந்து புறப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வே மன்னரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒஸ்லோ சென்ற விமானம், செவ்வாய்க்கிழமை மால்டோவாவிலிருந்து புறப்பட்டபோது ட்ரோன் ஒன்றினால் தாக்கப்படும் அபாயத்தை எதிர்கொண்டதாக நோர்வே பிரதமர் யோனாஸ் கார் ஸ்டோர் தெரிவித்துள்ளார்.</p><p>

மல்டோவிய வான்வெளியில் நுழைந்த இரு ரஷ்ய ட்ரோன்கள் காரணமாக, செவ்வாய்க்கிழமை கிஷினாவ் விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்து சில மணிநேரம் இடைநிறுத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அதனால் அந்நாட்டின் தலைநகருக்கு வரவிருந்த பல விமானங்கள் மல்டோவாவுக்கு வெளியே உள்ள விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டதுடன் வான்வெளியிலேயே காத்திருக்கப் பணிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.</p><p></p><h2>ஜெலென்ஸ்கியின் விமானம்</h2><p>

இந்நிலையிலேயே, மல்டோவாவிலிருந்து புறப்படத் தயாராக இருந்தபோது ஜெலென்ஸ்கியின் விமானம் ட்ரோன் ஒன்றால் தாக்கப்படும் நிலை ஏற்பட்டதாக நோர்வே பிரதமர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1975ecf8-dae2-4737-9ed6-418826162677/26-6aa1ca9e0f363.webp' /></p><p><i>Image Credit:&nbsp;kyivindependent</i></p><p>
</p><p>
எவ்வாறாயினும், ஜெலென்ஸ்கியின் விமானம் தொடர்பான நார்வே பிரதமரின் இந்தக் கூற்று குறித்து மல்டோவா அதிகாரிகள் எவ்விதக் கருத்தும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T21:19:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையேயான கப்பல் சேவை ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ferry-between-nagapattinam-kankesanthurai-cancelle-1788988702"></link>
            <id>https://jvpnews.com/article/ferry-between-nagapattinam-kankesanthurai-cancelle-1788988702</id>
            <summary type="text">நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன்துறை இடையே வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கப்பல் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன்துறை இடையே வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.</p><p> </p><p></p><p>இந்நிலையில், கப்பல் போக்குவரத்து தொடர்பான பாதுகாப்பு, ஆய்வு சான்றிதழ்கள் மற்றும் விதிமுறைகள் குறித்து ஆய்வு செய்வதற்காகச் சென்னையில் இருந்து வருகை தந்த வணிக கடல்சார் துறை அதிகாரிகள் நாகையில் இயக்கப்படும் கப்பல்களை ஆய்வு செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5ff2434-2248-4a75-a955-a8a4821f3d0d/26-6aa1cd202b1ce.webp' /></p><p>இந்த ஆய்வின் போது சில குறைபாடுகள் கண்டறியப்பட்டதாகவும், அக்குறைபாடுகளைச் சரிசெய்யும் வரை கப்பல் சேவையை ரத்து செய்யுமாறு சென்னை வணிக கடல்சார் துறை சார்பில் கடிதம் வழங்கப்பட்டதாகவும் தெரிகிறது. </p><p>இதனையடுத்து, தற்போது கப்பல்களில் அவசியமான சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
</p><p>
இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்தவுடன் வரும் 11ஆம் திகதிக்குப் பின்னர் பயணிகள் சேவை மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>அதுவரை நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன்துறை இடையே திட்டமிடப்பட்ட அனைத்துப் பயணங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T21:19:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் வாங்கியது லஞ்சமா நன்கொடையா! குழப்பத்தில் மகிந்த தரப்பு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/was-what-namal-received-a-bribe-or-a-donation-1788987416"></link>
            <id>https://tamilwin.com/article/was-what-namal-received-a-bribe-or-a-donation-1788987416</id>
            <summary type="text">நிமல் பெரேரா என்பவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நாமல் ராஜபக்ச பெற்றதாக கூறப்படும் பணம் ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிமல் பெரேரா என்பவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

நாமல் ராஜபக்ச பெற்றதாக கூறப்படும் பணம் லஞ்சமா அல்லது நன்கொடையா என்பது தொடர்பில் மகிந்த ராஜபக்ச தரப்பில் குழப்பம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இந்நிலையில், லஞ்சம் பெறுவதும் வழங்குவதும் தவறு என சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், பணத்தை முதலில் வழங்கியதாக கூறப்படும் நிமால் பெரேராவையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும் என விமர்சித்துள்ளார்.
</p><p>
நாமல் ராஜபக்சவின் கைது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என கருதும் தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
</p><p>
மறுபுறம், நாமல் ராஜபக்ச தரப்பினர், குறித்த பணம் லஞ்சமாக பெறப்படவில்லை என்று உதயகம்மன்பில குறிப்பிடுகின்றார்.
</p><p>
இவ்விவகாரத்தில் பணம் வழங்கியவர் மற்றும் பெற்றவர் ஆகிய இரு தரப்பினரிடமும் சமமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/25vMZicgGkI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T21:01:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ; ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/renewed-tension-middle-east-iran-attacks-jordan-1788987170"></link>
            <id>https://canadamirror.com/article/renewed-tension-middle-east-iran-attacks-jordan-1788987170</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஜோர்டான் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஜோர்டான் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

ஜோர்டானின் பப்ரக் மற்றும் அஸ்ரக் பகுதிகளில் அமைந்துள்ள அமெரிக்க விமானப்படைத் தளங்களை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்ற நிலை தீவிரமடைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee93aa5f-1445-4947-ad5d-191e905b75df/26-6aa1c723cc8a9.webp' /></p><p> </p><p>இதற்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளில் உள்ள இலக்குகள் மீதும், பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது.</p><p>

இதனிடையே, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் சர்வதேச கப்பல் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதுடன், கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்திருந்தது.

பின்னர் இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து சில நாட்கள் மத்திய கிழக்கில் பதற்றம் தணிந்திருந்தது. </p><p>எனினும், கடந்த மாத இறுதியில் இருந்து ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மீண்டும் அவ்வப்போது மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
</p><p>
இந்த நிலையில், ஈரானின் கார்க் தீவில் நிறுத்தப்பட்டிருந்த ஐந்து கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. </p><p>அமெரிக்க போர்க்கப்பல் ஒன்றின் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.</p><p>

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடியாக ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை ஈரான் குறிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

மேலும், இரண்டு அமெரிக்கக் கப்பல்கள், எட்டு கச்சா எண்ணெய் கப்பல்கள் மற்றும் பத்து சரக்குக் கப்பல்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

எனினும், இந்தத் தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.</p>]]></content>
            <updated>2026-09-09T20:52:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர்க்கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடி! ஈரானுக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-forces-continue-to-target-iranian-oil-tankers-1788985261"></link>
            <id>https://ibctamil.com/article/us-forces-continue-to-target-iranian-oil-tankers-1788985261</id>
            <summary type="text">தங்கள் போர்க்கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்கப் படைகள் தொடர்ந்து குறிவைக்கும் என்று அமெரிக்காவின் வெளிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தங்கள் போர்க்கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்கப் படைகள் தொடர்ந்து குறிவைக்கும் என்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்தோடு, தெஹ்ரானை பொருளாதார ரீதியாக ஒடுக்குவதே அமெரிக்காவின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

"அவர்கள் எங்கள் கடற்படைக் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறார்கள்; அப்படித் தாக்கும்போது, அதற்கான விலையை அவர்கள் தங்கள் எண்ணெய் கப்பல்களை இழப்பதன் மூலம் கொடுக்க வேண்டியுள்ளது.</p><p></p><h2>கப்பல்கள் மீதான தாக்குதல்கள்</h2><p> </p><p>

அவர்கள் எங்கள் கப்பல்களைத் தாக்குவதில் வெற்றிபெறுவதில்லை, மாறாக ஐந்து எண்ணெய் கப்பல்களை இழக்கிறார்கள்" என்று செய்தியாளர்களிடம் ரூபியோ கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0282351b-69d9-47ed-9b61-4e9ad05b631e/26-6aa1c2e95842a.webp' /></p><p><i>Image Credit:&nbsp;maalaimalar</i></p><p>

மேலும் கருத்து வெளியிட்ட அவர், அதற்கான விலையை அவர்கள் தொடர்ந்து கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர்களைப் பொருளாதார ரீதியாக ஒடுக்கும் நடவடிக்கையையும் தாங்கள் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T20:35:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரியாவில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 14 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/14-killed-in-explosion-in-syria-1788971251"></link>
            <id>https://canadamirror.com/article/14-killed-in-explosion-in-syria-1788971251</id>
            <summary type="text">சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் உள்ள சர்மாடா (Sarmada) நகருக்கு அருகே ஆயுதங்கள் மற்றும் போர்க் கழிவுகளைச் சேமித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட தற்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் உள்ள சர்மாடா (Sarmada) நகருக்கு அருகே ஆயுதங்கள் மற்றும் போர்க் கழிவுகளைச் சேமித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட தற்காலிக இடம் ஒன்றில் இன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் சுமார் 14 பேர் உயிரிழந்ததுள்ளனர்.</p><p> 

இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51701b46-60f2-48fe-989e-9c5f94570a21/26-6aa188f55c2bf.webp' /></p><p>அந்த ஆயுதங்களும் போர்க் கழிவுகளும் வேறொரு இடத்திற்கு மாற்றப்படுவதற்கு முன்னர் குறித்த இடத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகப் பாதுகாப்பு சிரியாவின் அமைச்சு தெரிவித்துள்ளது. </p><p>

சிவில் பாதுகாப்பு மற்றும் தீயணைப்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், அடுத்தடுத்து ஏற்பட்ட வெடிப்புகள் தீயை அணைக்கும் முயற்சிகளுக்குத் தடையை ஏற்படுத்தியதுடன், பல மணிநேரமாக அப்பகுதியிலிருந்து அடர்ந்த புகையும் வெளியேறியது. </p><p>

ஆரம்பக்கட்ட வெடிப்புக்கான காரணம் என்னவென்று அதிகாரிகள் இதுவரை தெரிவிக்கவில்லை. </p><p>

சிரிய அரச ஊடகங்களின் தகவலின்படி, இத்லிப் மாகாணத்தில் உள்ள பின்னீஷ் (Binnish) பகுதியிலும் செப்டம்பர் 1 ஆம் திகதி வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று வெடித்ததில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன் மேலும் சிலர் காயமடைந்தனர்.</p>]]></content>
            <updated>2026-09-09T20:32:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சினிமா பாணியில் 800 மில்லியன் ரூபாய் கொள்ளை ; திடுக்கிடும் பின்னணி அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/800-million-rupee-heist-shocking-backstory-reveale-1788972234"></link>
            <id>https://jvpnews.com/article/800-million-rupee-heist-shocking-backstory-reveale-1788972234</id>
            <summary type="text">கொழும்பு தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தில் இடம்பெற்ற 800 மில்லியன் ரூபா பெறுமதியான கொள்ளைச் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தில் இடம்பெற்ற 800 மில்லியன் ரூபா பெறுமதியான கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியும் வாகன சாரதியுமானடி அணிந்த மூன்று ஆயுதமேந்திய நபர்கள் குறித்த முகவர் நிலையத்திற்குள் புகுந்து, ஊழியர்களை அச்சுறுத்தி முழங்காலிடச் செய்து தாக்கிய பின்னர், 650 மில்லியன் ரூபா ரொக்கம் மற்றும் 150 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில், சந்தேகநபர் முல்லேரியாவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

சந்தேகநபரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பணத்தில் 15.5 மில்லியன் ரூபா, கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட சொகுசு வாகனம் மற்றும் திருடப்பட்ட பல மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்டவை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
</p><p>
கடந்த செப்டம்பர் 1ஆம் திகதி முகமூடி அணிந்த மூன்று ஆயுதமேந்திய நபர்கள் குறித்த முகவர் நிலையத்திற்குள் புகுந்து, ஊழியர்களை அச்சுறுத்தி முழங்காலிடச் செய்து தாக்கிய பின்னர், 650 மில்லியன் ரூபா ரொக்கம் மற்றும் 150 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a270f557-2a7c-44db-b5da-46f955d57e81/26-6aa18ccba912e.webp' /></p><p>விசாரணைகளில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், குறித்த முகவர் நிலையத்தில் முன்னர் உதவிப் பிரதிநிதியாக பணியாற்றியவர் என்பது தெரியவந்துள்ளது.
</p><p>
நிறுவன உரிமையாளரிடம் பெற்றிருந்த 15 மில்லியன் ரூபா கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் ஏற்பட்ட கடன் சுமை மற்றும் அண்மையில் முல்லேரியாவ பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் தனக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் பகிரங்க அவமானம் ஆகியவை கொள்ளையைத் திட்டமிடத் தூண்டியதாக சந்தேகநபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
தனியாக கொள்ளையில் ஈடுபட முடியாத நிலையில், நவகாமுவ பொலிஸ் நிலையத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரின் உதவியை நாடியதாகவும், அவர் மூலம் பொமிரியா பகுதியைச் சேர்ந்த மேலும் இருவர் குழுவில் இணைக்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

கொள்ளைக்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர், பிள்ளியந்தல – சித்தமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கும்பல் கொள்ளை தொடர்பான திட்டத்தை வகுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h3><span style="color: inherit; font-size: 1.5rem;">போலி இலக்கத் தகடுகள்&nbsp;</span></h3><p>ஹன்வெல்ல பகுதியில் உள்ள நிதி நிறுவனமொன்றில் இருந்து வாடகைக்கு பெறப்பட்ட வாகனத்திற்கு போலி இலக்கத் தகடுகளை பொருத்தி கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a29fe8e-6597-4c6c-aa55-19d2e3347706/26-6aa18ccc678f1.webp' /></p><p>கொள்ளைக்குப் பின்னர் கும்பல் மீண்டும் சித்தமுல்ல பகுதியில் உள்ள வீட்டிற்குச் சென்று கொள்ளையிடப்பட்ட பணம் மற்றும் பொருட்களைப் பகிர்ந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
இதன்படி, பிரதான சூத்திரதாரி 200 மில்லியன் ரூபாவையும், முன்னாள் பொலிஸ் ஊழியர் 150 மில்லியன் ரூபா மற்றும் தங்க நகைகளையும், ஏனைய இருவர் தலா 8 மில்லியன் ரூபாவையும் பெற்றுக் கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
பிரதான சந்தேகநபர் தனது பங்கில் இருந்து 5 மில்லியன் ரூபாவை பொமிரியா பகுதியைச் சேர்ந்த நண்பரிடம் பாதுகாப்பிற்காக வழங்கியுள்ளதாகவும், மேலும் 1.3 மில்லியன் ரூபாவை செலவிட்டு அடகு வைக்கப்பட்டிருந்த நிலத்தை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>அத்துடன், முல்லேரியாவ பகுதியில் பல பெண்களிடம் பெற்றிருந்த கடன்களையும் அவர் செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் சந்தேகநபரின் பங்கிலிருந்த 300,000 ரூபாவைத் தவிர ஏனைய பணம் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அவர்களை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் அடையாள அணிவகுப்பிற்காக கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T20:32:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பில் அதிரடி நடவடிக்கை ; IAEA தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/drastic-move-regarding-iran-s-nuclear-program-iaea-1788985765"></link>
            <id>https://canadamirror.com/article/drastic-move-regarding-iran-s-nuclear-program-iaea-1788985765</id>
            <summary type="text">ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் குறித்த ஆய்வுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, அந்த நாட்டின் மீது ஐநா பாதுகாப்புச் சபையில் அறிக்கை தாக்கல் செய்ய சர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் குறித்த ஆய்வுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, அந்த நாட்டின் மீது ஐநா பாதுகாப்புச் சபையில் அறிக்கை தாக்கல் செய்ய சர்வதேச அணுசக்தி முகவரகம் (IAEA) ஒப்புதல் அளித்துள்ளது.
</p><p>
சர்வதேச அணுசக்தி முகவரகத்திலுள்ள 35 உறுப்பினர்களில் 23 பேர் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.</p><p>எட்டு நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமலும் நடுநிலை வகித்ததோடு ரஷ்யா, சீனா மற்றும் நைஜர் ஆகிய நாடுகள் இதற்கு எதிராக வாக்களித்தன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1335bc40-12c0-45c5-9282-116260eb0130/26-6aa1c1a71f281.webp' /></p><p>அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்ட இந்தத் தீர்மானத்தை ஐநாவுக்கான ஈரானிய நிரந்தரப் பணிமனை கண்டித்துள்ளது.
</p><p>
இது ஒரு "சார்பான, அரசியல் ரீதியான தீர்மானம்" என்று ஈரான் விமர்சித்துள்ளது.

இதற்கிடையே, ஓமானுக்கான ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கக் கடற்படையின் முற்றுகைக்கு எதிராக ஈரான் தனது ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
இஸ்லாமிய புரட்சிகர காவற்படை (IRGC) அமைப்பு அமெரிக்கக் கப்பல்களைக் குறிவைத்ததாகக் கூறும் நிலையில், எந்தவொரு அமெரிக்கப் போர்க் கப்பலும் பாதிக்கப்படவில்லை என அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.</p><p>

பாதுகாப்புப் சபையில் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு வீட்டோ (Veto) அதிகாரம் இருப்பதால், ஈரானுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதை அந்த நாடுகள் தடை செய்ய வாய்ப்புள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-09T20:29:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் அணுசக்தி விவகாரம்… உலக அரங்கில் வெடித்த புதிய மோதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/effort-to-refer-iran-to-the-un-security-council-1788984478"></link>
            <id>https://tamilwin.com/article/effort-to-refer-iran-to-the-un-security-council-1788984478</id>
            <summary type="text">ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பில் சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் (IAEA)
மூலம் அந்நாட்டை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்குப் பரிந்துரைக்க
அமெரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பில் சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் (IAEA)
மூலம் அந்நாட்டை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்குப் பரிந்துரைக்க
அமெரிக்கா மற்றும் மூன்று ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குச்
சீனா, ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் கூட்டு அறிக்கை ஊடாகக் கடும்
எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.</p><p>

ஈரானை ஐநா பாதுகாப்புச் சபைக்குப் பரிந்துரைக்கும் இத்தகைய நடவடிக்கை
சட்டபூர்வமான அடிப்படையற்றது என்றும், இது நிலைமையை மேலும் மோசமாக்கும்
நோக்கம் கொண்டது என்றும் கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>அரசியல் உள்நோக்கம்</h2><p>
அத்துடன், இராஜதந்திர ரீதியில் தீர்வுகாண்பதாகக் கூறும் நாடுகளின் கூற்றுக்கு
இது முரணாக அமைவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் ஈரானின்
அணுசக்தி மையங்களை ஆய்வு செய்ய அனுமதி மறுக்கப்பட்டதைக் சுட்டிக்காட்டி,
இவ்விவகாரத்தை பாதுகாப்புச் சபைக்குப் பரிந்துரைக்குமாறு சர்வதேச அணுசக்தி
முகவரகத்தின் ஆளுநர் சபையைக் கேட்டுக்கொண்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e1e486e-867e-4c84-acef-f7f9e2f52757/26-6aa1bf26926b2.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், 2025 ஆம் ஆண்டில் ஈரான் ஆய்வுகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்ற
குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது என சீனா, ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய
மூன்றும் சாடியுள்ளன.</p><p>

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரானிய அணுசக்தி மையங்கள் மீது
மேற்கொண்ட தாக்குதல்களே, ஈரான் சர்வதேச ஆய்வாளர்களுக்கு அனுமதி மறுத்தமைக்கு
முதன்மையான காரணம் என இந்நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
</p><p>
எனவே, பொறுப்புள்ள அனைத்து உறுப்பு நாடுகளும் இதன் விளைவுகளைக் கவனத்தில்
கொண்டு, குறித்த வரைவுத் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதைத் தவிர்க்க வேண்டும்
என்றும் அவை கேட்டுக்கொண்டுள்ளன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T20:18:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் எல்லைப் பகுதியில் ரஷ்ய தாக்குதல் ; இருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russian-attack-in-ukraine-border-area-two-killed-1788984653"></link>
            <id>https://canadamirror.com/article/russian-attack-in-ukraine-border-area-two-killed-1788984653</id>
            <summary type="text">உக்ரைன் மற்றும் மால்டோவா எல்லைக் கடக்கும் பகுதியில் நடத்தப்பட்ட ரஷ்ய ஆளில்லாத வானூர்தி தாக்குதலில் 02 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைனின் ஒடேசா பிராந்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் மற்றும் மால்டோவா எல்லைக் கடக்கும் பகுதியில் நடத்தப்பட்ட ரஷ்ய ஆளில்லாத வானூர்தி தாக்குதலில் 02 பேர் உயிரிழந்துள்ளனர். </p><p>உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தில் உள்ள ஸ்டாரோகோசாச்சே (Starokozache) எல்லைச் சாவடி மீது ரஷ்யா நடத்திய ஆளில்லா வானூர்தி தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதோடு மூவர் காயமடைந்தனர் என பிராந்திய ஆளுநர் ஒலெஹ் கிப்பர் (Oleh Kiper) உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39420963-2afe-4aa2-a721-ce1167dcc42a/26-6aa1bd4ecbac4.webp' /></p><p>நேற்று அதிகாலை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால் அந்தப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதோடு, எல்லைக் கடக்கும் சேவைகளும் தற்காலிகமாக பாதிக்கப்பட்டன.
</p><p>
எனினும், பிற்பகலுக்குள் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டதாக யுக்ரைன் சுங்கத்துறை தெரிவித்துள்ளது. </p><p>உக்ரைன் முழுவதும் ரஷ்யா நடத்திய தொடர் தாக்குதல்களில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்தத் தாக்குதல்கள் உக்ரைன்-ரஷ்யா போரின் தீவிரத்தை தொடர்ந்து வெளிக்காட்டி வருவதுடன், எல்லைப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த கவலைகளையும் அதிகரித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-09T20:11:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போரின் முடிவு! ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/war-end-immediately-after-the-election-trump-1788983282"></link>
            <id>https://ibctamil.com/article/war-end-immediately-after-the-election-trump-1788983282</id>
            <summary type="text">நவம்பர் மாதத் தொடக்கத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்குப் பிறகு ஈரான் போர் உடனடியாக முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவம்பர் மாதத் தொடக்கத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்குப் பிறகு ஈரான் போர் உடனடியாக முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p> 

ஈரானுடன் எந்தவொரு ஒப்பந்தத்தையும் அமெரிக்கா நாடவில்லை என்றாலும், பேச்சுவார்த்தைகள் நடைபெறக்கூடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “அவர்களுக்குத் தேவையானது அணு ஆயுதம் மட்டுமே; அவர்களிடம் அணு ஆயுதம் கிடைத்துவிட்டால், ஒட்டுமொத்த உலகமும் ஆபத்தில் சிக்கிக்கொள்ளும்.</p><p></p><h2>பேச்சுவார்த்தைகள்&nbsp;</h2><p> நாம் அணுசக்தி விவகாரத்தைக் கையாளப் போகிறோம்.

மூன்று மாதங்களுக்கு முன்பு பரிசீலனையில் இல்லாத பல விடயங்கள் இப்போது விவாத மேசைக்கு வரவுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18cc34c2-5a69-4b55-8f3e-0f28248692a2/26-6aa1bc52b9d81.webp' /></p><p><i>Image Credit:&nbsp;citynews.ca</i></p><p>
</p><p>
தெஹ்ரானுடனான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்துக் கேட்கப்பட்டபோது, "உண்மையைச் சொல்லப்போனால், நாங்கள் அதை நாடவில்லை. நிலைமை வெகுதூரம் சென்றுவிட்டது.</p><p>

இப்போது அவர்களிடம் எஞ்சியிருப்பது மிகச் சிறிய அளவிலான நாடே. ஆம், பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்புள்ளது. எங்கள் தேர்தலுக்குப் பிறகு இந்தப் போர் உடனடியாக முடிவுக்கு வரும்" என்று ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-09-09T20:06:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவை அதிர வைத்த ஈரான்! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் - வெளியான பகீர் காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-malfunctioned-iran-video-capture-submarine-1788980733"></link>
            <id>https://tamilwin.com/article/us-malfunctioned-iran-video-capture-submarine-1788980733</id>
            <summary type="text">ஈரான்

ஹோர்முஸ் நீரிணை நுழைவுப் பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் அதிநவீன ஆளில்லா நீர்மூழ்கிக் கருவியை கைப்பற்றியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் இஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான்

ஹோர்முஸ் நீரிணை நுழைவுப் பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் அதிநவீன ஆளில்லா நீர்மூழ்கிக் கருவியை கைப்பற்றியதாக ஈரான் தெரிவித்துள்ளது.</p><p>
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) வெளியிட்ட அறிக்கையில், Dive-LD என அடையாளம் காணப்பட்ட இந்த ஆளில்லா நீருக்கடிக் கருவி, சிக்கலான உளவுத்துறை நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.</p><p> 

மேலும், உலகின் நவீன நீருக்கடித் தொழில்நுட்பங்களில் ஒன்றாக இந்தக் கருவி விளங்குவதாகவும் IRGC தெரிவித்துள்ளது.
</p><p>
இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணைக்கு மேலாக பறந்த MQ-9 Reaper ஆளில்லா விமானத்தையும் தங்களது வான் பாதுகாப்புப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் கூறியுள்ளது.</p><h2>

அமெரிக்காவின் பதில்
</h2><p>
ஈரானின் அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவம், ஒரு ஆளில்லா நீருக்கடிக் கருவி அதற்கு முந்தைய நாளில் செயலிழந்ததாக தெரிவித்துள்ளது.</p><p> 

எனினும், ஈரான் கைப்பற்றியதாக கூறப்படும் Dive-LD அதுதானா என்பதை அமெரிக்கா உறுதிப்படுத்தவில்லை.

அந்தக் கருவி பிராந்திய கடற்பரப்பை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், அது பழைய மொடல் என்பதுடன், முக்கியமான தகவல்களைச் சேகரிக்கவோ ரகசிய சோனர் அல்லது ரேடார் கருவிகளை எடுத்துச் செல்லவோ இல்லை என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Footage released by Iranian media shows what the IRGC claims is an American Dive-LD unmanned submarine captured today. Iran says the vessel is now in its possession. <a href="https://t.co/POWlEHHnd5">pic.twitter.com/POWlEHHnd5</a></p>&mdash; Open Source Intel (@Osint613) <a href="https://x.com/Osint613/status/2097390208249389519?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
Anduril நிறுவனத்தின் தகவல்படி, Dive-LD சுமார் 10 நாட்கள் வரை தொடர்ந்து செயல்படக்கூடியது. மேலும், சுமார் 6,000 மீட்டர் ஆழம் வரை செல்லும் திறன் கொண்டது. ஒரு கருவியின் விலை சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனிடையே, ஈரான் மீது அமெரிக்கா தனது அழுத்தத்தையும் அதிகரித்துள்ளது. </p><p>அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM), ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற 5 டேங்கர் கப்பல்கள் அழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. 

மேலும், ஈரானின் மீதமுள்ள 27 விமான நிறுவனங்களை அமெரிக்க கருவூலத் துறை தடுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.
</p><h2>
ஈரானின் நிலைப்பாடு</h2><p>

ஈரான் ஜனாதிதபி மசூத் பெசெஷ்கியான், போரை விரும்பவில்லை என்றாலும், தங்கள் நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிரான எதிர்ப்பை தொடர்ந்து வலுப்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.</p><p>
ஈரான் தனது உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தொடர்ந்து எதிர்த்து நிற்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9126a40-c51c-40bb-a9a7-c9681f7351c2/26-6aa1b044b9a31.webp' /></p><p>
</p><p>பெப்ரவரி 28ஆம் திகதி இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகள் மீது கூட்டு தாக்குதல்களை நடத்தின. </p><p>

இதற்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது.</p><p>

இதன் தொடர்ச்சியாக ஹோர்முஸ் நீரிணை மீதான ஈரானின் கட்டுப்பாடும் மேலும் தீவிரமடைந்துள்ளது.</p><p> இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஆளில்லா நீர்மூழ்கிக் கருவி தொடர்பான இந்த சம்பவம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-09T19:58:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐபோன் 18 ப்ரோ மற்றும் ப்ரோ மெக்ஸ் அறிமுகம் ; புதிய அம்சங்கள் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/iphone-18-pro-and-pro-max-launch-here-new-features-1788983803"></link>
            <id>https://jvpnews.com/article/iphone-18-pro-and-pro-max-launch-here-new-features-1788983803</id>
            <summary type="text">Apple நிறுவனம் தனது அதிநவீன ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மெக்ஸ் (iPhone 18 Pro &amp;amp; Pro Max) கைபேசிகளை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>Apple நிறுவனம் தனது அதிநவீன ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மெக்ஸ் (iPhone 18 Pro &amp; Pro Max) கைபேசிகளை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>

கெமரா, செயல்திறன், மின்கல ஆயுள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) வசதிகளில் பல முக்கிய மாற்றங்களுடன் இந்த புதிய கைபேசிகள் வெளியிடப்பட்டுள்ளன.</p><p>
</p><p></p><p>புதிய ப்ரோ மாதிரிகளில் 2-நனோமீற்றர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட எப்பளின் 'ஏ20 ப்ரோ' (A20 Pro) சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இதன் 7-கோர் ஜிபியு (GPU) ஆனது முந்தைய ஏ19 ப்ரோ சிப்பை விட 40 சதவீதம் வரை வேகமான செயல்திறனை வழங்கும் என Apple நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த புதிய மாதிரிகளில் கெமரா பிரிவில் மிகப்பெரிய மாற்றமாக, ஐபோனில் முதல்முறையாக 'மாறிவரும் துளை' (Variable Aperture) தொழில்நுட்பத்துடன் கூடிய 48 மெகாபிக்சல் பியூஷன் முதன்மைக் கெமரா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c949434-8866-47e5-9695-9bbc7271ed4c/26-6aa1b9fd66fe2.webp' /></p><p>ஒளியமைப்பு மற்றும் ஆழத்துக்கு ஏற்ப இந்த கெமரா தானாகவே துளை அளவை மாற்றிக்கொள்ளும் வசதியைக் கொண்டுள்ளது.</p><p> மேலும், படங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக 'எப்பள் ரெஃபரன்ஸ் இமேஜ்' (Apple Reference Image) என்ற புதிய பாதுகாப்பு அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன் புதிய சிறிய அளவிலான டைனமிக் ஐலண்ட் (Dynamic Island) ஒரே நேரத்தில் மூன்று நேரடி செயற்பாடுகளை (Live Activities) காட்டும் திறன் கொண்டது.</p><p>

ஐஓஎஸ் 27 (iOS 27) இயங்குதளத்தில் இயங்கும் இதில், பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைப் புரிந்து கொண்டு செயல்படும் புதிய 'சிறி ஏஐ' (Siri AI) வசதியும் இடம்பெற்றுள்ளது.</p><p>

மின்கல (Battery) வசதியைப் பொறுத்தவரை, ஐபோன் 18 ப்ரோ 36 மணி நேரமும், ப்ரோ மெக்ஸ் 45 மணி நேரமும் காணொளி பிளேபேக் வழங்கும். மேலும், வயர் மூலம் வெறும் 15 நிமிடங்களில் 50 சதவீதம் வரை மின்னேற்றம் செய்துகொள்ள முடியும்.</p><p>

கருப்பு, வெள்ளி, கிளேசியர் மற்றும் புதிய பர்கண்டி ஆகிய நிறங்களில் வெளிவந்துள்ள இவற்றின் ஆரம்ப விலை அமெரிக்காவில் 1,199 டொலர்களில் தொடங்குகிறது.</p><p> செப்டம்பர் 12ஆம் திகதி முதல் முன்பதிவு செய்யப்படவுள்ள இந்த கைபேசிகள், செப்டம்பர் 18ஆம் திகதி முதல் விற்பனைக்கு வரவுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T19:56:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நீதிமன்றில் சாட்சியமளித்த இளைஞர் மீது வாள்வெட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-attacked-sword-testifying-in-jaffna-court-1788983027"></link>
            <id>https://jvpnews.com/article/youth-attacked-sword-testifying-in-jaffna-court-1788983027</id>
            <summary type="text">யாழ்ப்பாணம்- ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம்- ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>குறித்த சம்பவமானது வேலணை அராலிச் சந்தி பகுதியில் இன்று (9) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
</p><p>

நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த பிரச்சினை தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், குறித்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக பாதிக்கப்பட்ட இளைஞர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d9dac7a-57f7-4e0d-b936-9e46dd1a6b12/26-6aa1b6f590b73.webp' /></p><p>வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் அவர் வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, வேலணை அராலிச் சந்தி பகுதியில் அவரை வழிமறித்த மற்றைய தரப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் நபர்கள் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
தாக்குதலாளிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சிலர் தற்போது கிளிநொச்சி பகுதியில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>தாக்குதலில் கடும் காயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T19:43:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் பெண்ணுக்கு கத்திக்குத்து: தாக்குதல்தாரியை சுட்டு வீழ்த்திய பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/woman-stabbed-in-luton-man-was-shot-by-police-1788976004"></link>
            <id>https://news.lankasri.com/article/woman-stabbed-in-luton-man-was-shot-by-police-1788976004</id>
            <summary type="text">Woman Stabbed in Luton Man Was Shot By Police: பிரித்தானியாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதலுக்கு பிறகு சந்தேக நபரை பொலிஸார் துப்பாக்கியால் சுட்டு வீழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Woman Stabbed in Luton Man Was Shot By Police: பிரித்தானியாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதலுக்கு பிறகு சந்தேக நபரை பொலிஸார் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர்.</p><h2>கத்தியை காட்டி பெண்ணை மிரட்டிய நபர்</h2><p>பிரித்தானியாவின் லூட்டன் நகரில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பெண் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளானார்.</p><p> கார்டிகன் தெருவில் பிற்பகல் 12.50 மணிக்கு தாக்குதல்தாரி ஒருவர் கத்தியை காட்டி பெண் ஒருவரை மிரட்டி வருவதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><p> அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், தாக்குதல்தாரி மீது துப்பாக்கிச்சூடு நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.</p><p> இந்த சம்பவத்தில், பொலிஸாரால் சுடப்பட்ட நபர் ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80d54dbe-a1bd-4afc-879f-7375144fb380/26-6aa19b86387b6.webp' /></p><p> மேலும் கத்திக்குத்து தாக்குதலுக்கு ஆளான பெண்ணும் உயிருக்கு ஆபத்து இல்லாத காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><h2> விசாரணையை தொடங்கிய IOPC</h2><p>பொலிஸார் நடத்திய தாக்குதலில் துப்பாக்கி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதா, தாக்குதல்தாரி மீது பயன்படுத்தப்பட்ட பலம் நியாயமானதா என்பது குறித்து சுதந்திரமான காவல்துறை ஒழுங்குமுறை குழு(IOPC) விசாரணையை நடத்தி வருகிறது.</p><p> IOPC தகவலில், இந்த தாக்குதலில் காவல்துறை அதிகாரி ஒருவர் 4 சுற்றுகள் துப்பாக்கியால் சுட்டு இருப்பதாகவும், மற்றொரு அதிகாரி லத்தியால் அடிக்கக்கூடிய ரவுண்டை பயன்படுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> ஆரம்பக்கட்ட விசாரணையில், காவல்துறை அதிகாரிகள் எந்தவொரு குற்றவியல் நடவடிக்கைகள் அல்லது தொழில்முறை தரங்களை மீறியதற்கான அறிகுறிகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T19:30:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சக்களின் குடும்ப அரசியலுக்கு இனி இடமில்லை! அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/people-no-longer-tolerate-rajapaksa-family-politic-1788980328"></link>
            <id>https://ibctamil.com/article/people-no-longer-tolerate-rajapaksa-family-politic-1788980328</id>
            <summary type="text">

இலங்கையில் ராஜபக்‌ஷ குடும்பத்தினருக்கு இனிவரும் காலங்களில் மீண்டும் அரசியல் செய்வதற்கான எந்தவொரு வாய்ப்போ அல்லது இடமோ நாட்டில் இல்லை என அமைச்சர் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>

இலங்கையில் ராஜபக்‌ஷ குடும்பத்தினருக்கு இனிவரும் காலங்களில் மீண்டும் அரசியல் செய்வதற்கான எந்தவொரு வாய்ப்போ அல்லது இடமோ நாட்டில் இல்லை என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>
ராஜபக்‌ஷக்களின் குடும்ப அரசியலுக்கு இனி நாட்டில் மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் என அவர் அரச ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
அதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,&nbsp; எதிர்வரும் செப்டம்பர் 12-ஆம் திகதிக்கு முன்னர் தான் கைது செய்யப்படக்கூடும் என்று நாமல் ராஜபக்‌ஷ தொடர்ச்சியாகக் குறிப்பிட்டது, ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தான் கைது செய்யப்படுவோம் என்பது நன்றாகவே தெரியும் என்பதால் தான், இருப்பினும் எந்தக் காரணத்திற்காகத் தனது கைது இடம்பெறப்போகிறது என்பதை நாமல் பகிரங்கமாக வெளிப்படுத்த மறுக்கிறார்.</p><p></p><h2>ராஜபக்‌சக்களின் குடும்ப அரசியல்</h2><p>ராஜபக்‌சக்களும் தங்களது தவறுகளைத் தாங்களே உணர்ந்திருப்பதால் தான் கைது பற்றிப் பேசுகிறார்கள். அநுராதபுரத்தில் பேரணிகளையோ அல்லது வேறு எங்கு என்ன கூட்டங்களை நடத்தினாலும், நாட்டு மக்கள் மிகவும் தெளிவான தீர்மானத்தில் இருக்கிறார்கள். ராஜபக்‌சக்களின் குடும்ப அரசியலுக்கு இனி நாட்டில் மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae7452cb-d5fd-42a4-bdab-f521354557a6/26-6aa1b120752ed.webp' /></p><p>
ராஜபக்‌சக்கள் தங்களது குற்றங்களையும் ஊழல்களையும் மறைப்பதற்காகவே தற்போது மீண்டும் மக்கள் கூட்டங்களை நடத்த ஆயத்தமாகி வருகின்றனர். </p><p>குறிப்பாக, 'ஏயார் பஸ்' விமானக் கொள்வனவு ஒப்பந்த ஊழல் என்பது இலங்கையில் கண்டுப்பிடிக்கப்பட்ட குற்றச்சாட்டு அல்ல, மாறாக லண்டன் மேல் நீதிமன்றத்தில் ஏயார் பஸ் நிறுவனத்திற்கு எதிராகத் தொடரப்பட்டு நிரூபிக்கப்பட்ட வழக்காகும்.</p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>
உலகளவில் பல்வேறு நபர்களுக்கு ஏயார்பஸ் நிறுவனம் இலஞ்சம் கொடுத்துள்ளமை நீதிமன்றத்தில் உறுதியான நிலையில், அதன் நேரடித் தொடர்புகளே ராஜபக்‌ச குடும்பத்தினரை நோக்கி வந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf68fcdd-4a67-496d-8b4f-f4dadaf53e34/26-6aa1b1217ea50.webp' /></p><p> </p><p>ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கும் அரசியல்வாதிகள் தங்களுக்கு இருக்கும் ஆதரவாளர்களை பயன்படுத்தி தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயல்வது வழமையாகும். அதேபோன்ற ஒரு சமூகக் கருத்தை உருவாக்கித் தங்களது குற்றங்களைக் குறைத்துக்காட்டவே ராஜபக்‌சக்களும் தற்போது முயல்கின்றனர்.</p><p>

இருப்பினும், இவ்வாறான அரசியல் நாடகங்களுக்கும் மேடைக் பேச்சுக்களுக்கும் கட்டுப்பட்டு இலங்கையின் சுயாதீன நீதிமன்றங்கள் தங்களது தீர்ப்புகளையோ சட்ட நடவடிக்கைகளையோ ஒருபோதும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை.&nbsp;</p><p>

எனவே, அவர்கள் செப்டம்பர் 12-ஆம் திகதியோ அல்லது 13, 14, 15 ஆகிய திகதிகளிலோ பேரணிகளையும் கூட்டங்களையும் நடத்தினாலும், அரசாங்கத்திற்கும் சட்ட நடவடிக்கைக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை என்றார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T19:30:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் அதிபர் விமானத்தை தாக்க முயன்ற ட்ரோன்: நூலிழையில் உயிர் தப்பிய ஜெலென்ஸ்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/zelensky-s-flight-targeted-by-drone-1788982201"></link>
            <id>https://news.lankasri.com/article/zelensky-s-flight-targeted-by-drone-1788982201</id>
            <summary type="text">Zelensky’s Flight Targeted by Drone : உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் விமானத்தின் மீது ட்ரோன் தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டுள்ளது. ஜெலென்ஸ்கி விமானத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Zelensky’s Flight Targeted by Drone : உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் விமானத்தின் மீது ட்ரோன் தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டுள்ளது.</p><h2> ஜெலென்ஸ்கி விமானத்தை தாக்க முயற்சித்த ட்ரோன்</h2><p>உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நார்வே நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்த போது அவரது விமானத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக நார்வே நாட்டு பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர்(jonas Gahr Støre) தகவல் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் இந்த தாக்குதலில் அவர் நூலிழையில் உயிர் தப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64f4bdd3-f17e-40c9-b19f-1a9a5524dcbf/26-6aa1b3bba41be.webp' /></p><p>நார்வே மன்னர் ஹரால்டின்(Harald) இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக மோல்டோவாவில் இருந்து விமானம் மூலம் ஜெலென்ஸ்கி புறப்படத் தயாரான போது இந்த தாக்குதல் சம்பவமானது நடத்தப்பட்டுள்ளது.</p><p></p><p>உக்ரைன் மீது தொடர்ந்து முன்னெடுக்கப்படும் போர் நடவடிக்கைகளுக்கு மத்தியில் அந்நாட்டு தலைவர் ஜெலென்ஸ்கி எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களுக்கு இது ஒரு சான்று என்றும் நார்வே பிரதமர் ஸ்டோர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2> சர்வதேச ஆதரவை கோரிய ஜெலென்ஸ்கி</h2><p>நார்வே மன்னரின் இறுதி சடங்கில் அஞ்சலி செலுத்திய பிறகு, சர்வதேச தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு துறை நிறுவனங்களுடன் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebd89fe1-9ec8-452e-bd97-37b279496993/26-6aa1b3bc5aae7.webp' /></p><p> அப்போது அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணைகளுக்கு பதிலாக ஐரோப்பாவின் கூட்டு தயாரிப்பான FREYJA ஏவுகணை திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.</p><p> ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவை திரட்ட அந்நாட்டு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தொடர்ந்து உலக நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். அத்துடன் போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவர சர்வதேச நாடுகளின் தற்போதைய நடவடிக்கைகள் போதாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T19:30:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[2030-க்குள் மனிதகுலத்திற்கு பேராபத்தா? ; AI நிறுவனத்தின் ஆய்வாளர் விடுத்த பகீர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/a-grave-threat-to-humanity-by-2030-ai-company-1788981212"></link>
            <id>https://canadamirror.com/article/a-grave-threat-to-humanity-by-2030-ai-company-1788981212</id>
            <summary type="text">செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என Anthropic நிறுவனத்தில் பண...</summary>
            <content type="html"><![CDATA[<p>செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என Anthropic நிறுவனத்தில் பணியாற்றிய ஆய்வாளர் ஜேகப் காக்சன் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>Anthropic மற்றும் OpenAI உள்ளிட்ட முன்னணி AI நிறுவனங்கள், போதிய கட்டுப்பாடுகள் இன்றி அதிக திறன் கொண்ட Superintelligence தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் போட்டியிட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eff1d692-baa1-4f43-80b3-d085d9be35c0/26-6aa1afddbb4eb.webp' /></p><p>

எதையும் ஹேக் செய்யும் திறன் மற்றும் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் அளவிலான அதிகாரம் கொண்ட AI அமைப்புகளின் வளர்ச்சியை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இந்த ஆபத்தான போட்டி தொடருமானால், எதிர்காலத்தில் அதன் விளைவுகள் மிகவும் தீவிரமானதாக இருக்கக்கூடும் எனவும் ஜேகப் காக்சன் எச்சரித்துள்ளார்.
</p><p>
மேலும், AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் 2030-க்குள் மனிதகுலமே அழியும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்துள்ளதாகக் கூறப்படும் தகவல், தற்போது AI பாதுகாப்பு தொடர்பான விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
</p><p>
எனினும், 2030-க்குள் மனிதகுலம் அழியும் என்ற கூற்று உறுதியான அறிவியல் கணிப்பு எனக் கருதப்பட முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-09T19:14:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவின் உளவு அமைப்புடன் ரகசிய தொடர்பு: பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swindon-man-arrested-for-assisting-russia-1788977441"></link>
            <id>https://news.lankasri.com/article/swindon-man-arrested-for-assisting-russia-1788977441</id>
            <summary type="text">Man Arrested For assisting Russian intelligence in Swindon: ரஷ்யாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் ஸ்விண்டன் பகுதியை சேர்ந்த நபர் பொலிஸாரால் கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>Man Arrested For assisting Russian intelligence in Swindon: ரஷ்யாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் ஸ்விண்டன் பகுதியை சேர்ந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>ரஷ்யாவுக்கு உளவு பார்த்த நபர்</h2><p>ரஷ்ய உளவுத்துறைக்கு உதவிய குற்றச்சாட்டின் கீழ் ஸ்விண்டன் பகுதியை சேர்ந்த 31 வயது ஜோசுவா கேமிட்ஜ் (Joshua Cammidge) என்ற நபர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>கடந்த வார இறுதியில் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளும், வில்ட்ஷயர் காவல்துறை அதிகாரிகளும் இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையின் கீழ் ஜோசுவா கேமிட்ஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59b7550c-4fc7-47af-837d-acfd09d6ba4c/26-6aa1a122ea787.webp' /></p><p></p><p>ரஷ்ய உளவு அமைப்பான GRU-யின் பிரதிநிதியுடன் ஜோசுவா கேமிட்ஜ் தொடர்பில் இருந்ததாக அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.</p><p>கைது செய்யப்பட்ட ஜோசுவா கேமிட்ஜ் உடனடியாக லண்டனுக்கு அழைத்து வரப்பட்டதுடன், அவரது முதல் விசாரணைக்காக வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.</p><p> ஜோசுவா கேமிட்ஜ் வெளிநாட்டு உளவுத் துறைக்கு உதவி தொடர்பான குற்றச்சாட்டுகளை கிரவுன் ப்ராசிகியூஷன் சர்வீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T19:05:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனித குலத்தை AI அழிக்கலாம்! 10% -க்கும் அதிகமான வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ai-could-wipe-out-humanity-within-the-next-10-yrs-1788980667"></link>
            <id>https://news.lankasri.com/article/ai-could-wipe-out-humanity-within-the-next-10-yrs-1788980667</id>
            <summary type="text">AI Could Wipe Out Humanity Within the Next 10 Years: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்(AI) மனித குலத்திற்கு அழிவை ஏற்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>AI Could Wipe Out Humanity Within the Next 10 Years: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்(AI) மனித குலத்திற்கு அழிவை ஏற்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><h2> மனித குலத்திற்கு காத்திருக்கும் பேராபத்து</h2><p>அடுத்த 10 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது(AI) மனித குலத்தையே முற்றிலுமாக அழிக்கலாம் என்றும், அதற்கான வாய்ப்புகள் 10% -க்கும் அதிகமாக இருப்பதாக முன்னணி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனமான ஆந்த்ரோபிக்(Anthropic) அமைப்பின் மூத்த பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் எவன் ஹூபிங்கர் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90f70de2-7ac7-4ad2-9ed4-1a85b0008d86/26-6aa1adbd55529.webp' /></p><p>ஆந்த்ரோபிக் நிறுவனத்தில் இருந்து விலகியவரும், ஓபன் ஏஐ(OpenAI) நிறுவனத்தில் பணியாற்றியவருமான ஜேக்கப் காக்சன்(Jacob Coxon) வெளியிட்ட பதிவுக்கு பதிலளித்த எவன் ஹூபிங்கர்(Evan Hubinger) இவ்வாறு பதிலளித்துள்ளார்.</p><p> X தளத்தில் பதிலளித்துள்ள எவன் ஹூபிங்கர், தற்போதைய AI மாடல்களால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் மிகவும் குறைவு என்றாலும், எதிர்காலத்தில் இந்த AI தொழில்நுட்பங்கள் தங்களை தாங்களே மேம்படுத்திக் கொண்டு மிகப் பெரிய ஆதிக்கத்தை செலுத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று எச்சரித்துள்ளார்.</p><p>மேலும் அவை மனித குலத்தின் இருப்பிற்கே அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.</p><p> ஆனால் இதில், AI மாடல்கள் எவ்வாறு மனித குலத்தை அழிக்கும் என்பதற்கான பிரத்யேக நிகழ்வுகளை அவர் விளக்கவில்லை.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c305c317-2279-41c1-bfc3-57fe13041a34/26-6aa1adbece5ef.webp' /></p><h2>விவாதங்களும், சந்தேகங்களும்</h2><p>இந்த கருத்துகள் துறைசார் வல்லுனர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இடையே பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.</p><p> ஐ.நா அமைப்பின் AI ஆலோசகரும், கணினி விஞ்ஞானியுமான டேம் வெண்டி ஹால், AI அச்சுறுத்தல் தொடர்பான இந்த சமூக வலைதள பதிவை கண்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.</p><p> மேலும் நிறுவனங்கள் பங்குச் சந்தைக்குள் நுழையும் போது இத்தகைய விவகாரங்களை விளம்பர உத்தியாக பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e85963a2-8514-48b9-8d9e-be7ff104e031/26-6aa1adbe0e885.webp' /></p><p> அத்துடன் இத்தகைய ஆபத்தான மதிப்பீடுகள் கொண்ட நிறுவனங்கள் மீது முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.</p><p> சமீபத்தில் பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில்,&nbsp; இங்கிலாந்து AI பாதுகாப்பு நிறுவனத்திடம், ஆந்த்ரோபிக் நிறுவனம் தங்களது அதிநவீன புதிய AI மாடலை ஆபத்து மதிப்பீட்டிற்கு வழங்கவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T19:04:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஷாரா செவ்வந்தியை இந்தியாவிற்கு அனுப்பிய யாழ்ப்பாண படகோட்டி : நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-boatman-who-sent-ishara-to-india-remanded-1788960011"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-boatman-who-sent-ishara-to-india-remanded-1788960011</id>
            <summary type="text">கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, யாழ்ப்பாணம் அரியாலையிலிருந்து இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல உதவிய படகோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, யாழ்ப்பாணம் அரியாலையிலிருந்து இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல உதவிய படகோட்டியை 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டார்.
</p><p>
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 30 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட, தலைமறைவான சந்தேக நபரான செல்வனேசன் ஜீசஸ் தாசன் என்ற பாலசுவை கொழும்பு குற்றப்பிரிவு முற்படுத்தியபோது சமர்ப்பித்த உண்மைகளைக் கருத்தில் கொண்ட பின்னர் நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.</p><h2>ஜிபிஎஸ் கருவியை அழித்த படகோட்டி</h2><p>கொழும்பு குற்றப்பிரிவு, நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்தபோது, ​​படகோட்டி கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் நாற்பத்தேழாவது சந்தேக நபராகப் பெயரிடப்படுவார் என்று கூறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43947cb6-de52-4d62-aa27-b50a0f41ed31/26-6aa163036a96a.webp' /></p><p>
</p><p>
சந்தேக நபர், படகில் இருந்த நான்கு பேரையும் நன்கு அறிந்து நாடு கடத்த ஏற்பாடு செய்திருந்தார், மேலும் இந்தியாவில் இறங்கிய பின்னர், படகில் சாட்சியமாக இருந்த ஜிபிஎஸ் கருவியை அழித்திருந்தார்.</p><p></p><h2>&nbsp;போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல உதவி</h2><p>

சந்தேக நபர் இவ்வாறு பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டை விட்டு வெளியேற உதவியிருந்தார், மேலும் இந்தியாவுக்குச் செல்வதற்காக ஐம்பதாயிரம் ரூபாய் வசூலித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/397f8287-e29b-457f-8a4d-d77c961d4287/26-6aa163041f12d.webp' /></p><p>
</p><p>
உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதிபதி, சந்தேக நபரை அடுத்த பதினெட்டு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். அந்தத் திகதிக்குள் விசாரணையின் முன்னேற்றத்தைச் சமர்ப்பிக்குமாறு கொழும்பு குற்றப்பிரிவுக்கு அவர் உத்தரவிட்டார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T19:03:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஷாரா செவ்வந்தி இந்தியா தப்பிச் செல்ல உதவிய படகு ஓட்டுநர் விளக்கமறியலில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/person-who-helped-ishara-escape-remanded-1788980110"></link>
            <id>https://jvpnews.com/article/person-who-helped-ishara-escape-remanded-1788980110</id>
            <summary type="text">மன்னாரில் கைது செய்யப்பட்ட படகு ஓட்டுநரான செல்வனேசன் ஜேசுதாசன் அல்லது ‘பலசு’ என்ற சந்தேகநபரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னாரில் கைது செய்யப்பட்ட படகு ஓட்டுநரான செல்வனேசன் ஜேசுதாசன் அல்லது ‘பலசு’ என்ற சந்தேகநபரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரம உத்தரவிட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முதன்மை சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள படகு ஓட்டுநரே நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
</p><p>
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 30 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்ட பின்னர், கொழும்பு குற்றப் பிரிவினரால் சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ae08efc-b945-4595-8f24-cbb54de815a3/26-6aa1ab8ff411d.webp' /></p><p>

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சந்தேகநபர் 47ஆவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
</p><p>
இஷாரா செவ்வந்தியை திட்டமிட்டு நாட்டை விட்டு வெளியேற்ற ஏற்பாடு செய்த சந்தேகநபர், அவரை இந்தியாவில் இறக்கிவிட்ட பின்னர் படகில் பொருத்தப்பட்டிருந்த முக்கிய சாட்சியமான GPS கருவியை அழித்துள்ளதாகவும் குற்றப் பிரிவினர் தெரிவித்தனர்.
</p><p>
மேலும், இதே முறையைப் பயன்படுத்தி பெருமளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவியுள்ளதாகவும், இஷாரா செவ்வந்தியை இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல 50,000 ரூபா பணம் பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
</p><p>
குற்றப் பிரிவினரால் முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதிவான், சந்தேகநபரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டு, வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T18:57:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் கைதுக்கு காரணமான நிமல் பெரேராவும் கைது செய்யப்பட வேண்டும்! சாமர சம்பத் வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chamara-sampath-demands-nimal-perera-s-arrest-1788976651"></link>
            <id>https://ibctamil.com/article/chamara-sampath-demands-nimal-perera-s-arrest-1788976651</id>
            <summary type="text">

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்படுவதற்கு வழிவகுத்த ஆதாரங்களை வழங்கிய சர்ச்சைக்குரிய தொழிலதிபர் நிமல் பெரேராவும் கைது செய்யப்பட வே...</summary>
            <content type="html"><![CDATA[<p>

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்படுவதற்கு வழிவகுத்த ஆதாரங்களை வழங்கிய சர்ச்சைக்குரிய தொழிலதிபர் நிமல் பெரேராவும் கைது செய்யப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, லஞ்சம் கொடுப்பதும் ஒரு குற்றம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் சாமர சம்பத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பொதுஜன பெரமுனவின்&nbsp;பேரணி </h2><p>
</p><p>
இந்நிலையில், இலங்கையில் பல நிதி மோசடிச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிமல் பெரேரா, நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுவிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab8fea9f-3e5e-4e85-bf12-4c4b95705d7e/26-6aa1a9104f073.webp' /></p><p>
</p><p>
அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நாமல் ராஜபக்சவின் கைது நடவடிக்கையின் விளைவாக, அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பேரணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
"உண்மையில் அரசாங்கம் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்குத்தான் உதவுகிறது. அப்பேரணியில் பேசுவதற்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றாலும், எதிர்க்கட்சியில் உள்ள அனைவரும் அதில் பங்கேற்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்" என்று சாமர சம்பத் மேலும் கூறியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T18:48:46+00:00</updated>
        </entry>
    </feed>
