<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-05T14:50:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் கடலின் நடுவே மணல்திட்டில் சிக்கியிருந்த குழந்தைகள், பெண்கள் உட்பட 07 பேர் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/stranded-group-rescued-on-sandbar-in-sea-in-mannar-1788616260"></link>
            <id>https://ibctamil.com/article/stranded-group-rescued-on-sandbar-in-sea-in-mannar-1788616260</id>
            <summary type="text">தலைமன்னார் கடற்பகுதியில் உள்ள மணல் திட்டில் சிக்கியிருந்த 11 பேர் கொண்ட குழுவினரை இன்று (செப்டம்பர் 05, 2026) மீட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமன்னார் கடற்பகுதியில் உள்ள மணல் திட்டில் சிக்கியிருந்த 11 பேர் கொண்ட குழுவினரை இன்று (செப்டம்பர் 05, 2026) மீட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
</p><p>
தலைமன்னார் கடற்பகுதியில் ரோந்துப் பணியின் போது இந்தக் குழுவினர் காணப்பட்டனர், மேலும் சிக்கியிருந்த அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.</p><h2>இந்திய அகதி முகாம்களில் இருந்து கடல்வழியாக திரும்பியவர்கள்</h2><p>நான்கு பெண்கள், ஒரு ஆண் மற்றும் மூன்று சிறுவர்கள் இவ்வாறு மீட்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9afaf248-f530-48aa-9458-e6457b2472a2/26-6a9c2570db3a4.webp' /></p><p>
</p><p>
இந்தக் குழுவினர், இந்தியாவில் உள்ள அனயூர் மற்றும் ஒக்கூர் அகதிகள் முகாம்களில் இருந்து ராமேஸ்வரம் வழியாக வந்திருந்ததாகவும், முன்னர் இந்தியாவில் தஞ்சம் கோரியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
</p><p>


இதேவேளை தந்தை மற்றும் அவரின் 11 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுவர்களும் இன்றையதினம் மணல்திட்டில் இரந்து கடற்படையால் மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p>

இவர்கள் அனைவரும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக தலைமன்னார் காவல்துறையிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p>images credit - sri lanka navy</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T14:49:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் தனது மூன்று குழந்தைகளை கொன்ற பெண் விடுவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/woman-killed-her-3-children-in-the-us-released-1788611206"></link>
            <id>https://canadamirror.com/article/woman-killed-her-3-children-in-the-us-released-1788611206</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவில் தனது மூன்று குழந்தைகளைக் கழுத்தை நெரித்துக் கொன்ற வழக்கில் கைதான லிண்ட்சே கிளான்சி என்ற பெண் மீதான கொலை வழக்கில், விசாரணையை ரத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவில் தனது மூன்று குழந்தைகளைக் கழுத்தை நெரித்துக் கொன்ற வழக்கில் கைதான லிண்ட்சே கிளான்சி என்ற பெண் மீதான கொலை வழக்கில், விசாரணையை ரத்து செய்யப்பட்டுள்ளது. </p><p> 

மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள பிளைமவுத் நகரில் கடந்த 2023 ஜனவரி மாதம் நடந்த இந்த சம்பவத்தில், 36 வயதான முன்னாள் செவிலியரான லிண்ட்சே கிளான்சி தனது மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c827ebe-6cdd-4d9d-b30e-b0aef3bb0af1/26-6a9c0a87d897b.webp' /></p><h2>&nbsp;கடுமையான மனநலப் பாதிப்பு</h2><p>
</p><p>
பிரசவத்திற்குப் பிந்திய கடுமையான மனநலப் பாதிப்பு காரணமாகவே அவர் இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும், எனவே அவரை மனநலப் பாதிப்பின் அடிப்படையில் குற்றமற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் அவரது தரப்பு சட்டத்தரணி வாதாடினார்.</p><p>

எனினும் கிளான்சிக்கு மனநலப் பிரச்சனைகள் இருந்தபோதிலும், அவர் திட்டமிட்டே தன் குழந்தைகளைக் கொன்றதாக அரசு தரப்பு சட்டத்தரணிகள் வாதிட்டனர்.
</p><p>
இந்த வழக்கு அமெரிக்காவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், குறித்த வழக்கு தொடர்பான விசாரணையை தொடர்வது குறித்து அரசு தரப்பு இன்னும் முடிவு செய்யவில்லை என்பதுடன், குற்றம் சுமத்தப்பட்டுள்ள கிளான்சி எதிர்வரும் 29 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T14:48:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் நாட்டில் இருந்து தப்பியோடிய இலங்கை ஏதிலிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-refugees-fled-from-tamil-nadu-to-mannar-1788610017"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-refugees-fled-from-tamil-nadu-to-mannar-1788610017</id>
            <summary type="text">&amp;nbsp; தமிழ் நாட்டில் இருந்து தப்பிசென்று தலைமன்னார் கடற்பரப்பில் வழிதவறித் தவித்துக் கொண்டிருந்த குழுவொன்றைக் கடற்படையினர் மீட்டுள்ளனர். 

குறிப்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தமிழ் நாட்டில் இருந்து தப்பிசென்று தலைமன்னார் கடற்பரப்பில் வழிதவறித் தவித்துக் கொண்டிருந்த குழுவொன்றைக் கடற்படையினர் மீட்டுள்ளனர்.</p><p> 

குறிப்பிட்ட கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது, மணல்திட்டு தொன்றில் வழிதவறி இருந்த இக்குழுவினர் அவதானிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efef9430-176c-4f19-8c52-cba2902fc29f/26-6a9c05e31d168.webp' /></p><h2>பாதுகாப்பாக மீட்ட கடற்படையினர்&nbsp;</h2><p> </p><p>

இதனையடுத்து, அவர்களைப் பாதுகாப்பாக மீட்ட கடற்படையினர், இக்குழுவினர் தென்னிந்தியாவிலிருந்து கடல் வழியே இலங்கைக்கு வருகை தந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p> 

மீட்கப்பட்டவர்களில் ஒரு ஆண், நான்கு பெண்கள் மற்றும் 2 முதல் 14 வயதிற்குட்பட்ட மூன்று குழந்தைகள் அடங்குவதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.</p><p></p><p> 

இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதால், அவர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு மற்றும் தற்காலிக தங்குமிட வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d719738b-72d5-4eba-b79b-015b0d885f24/26-6a9c06c2de319.webp' /></p><p> </p><p>

ஆரம்பக்கட்ட விசாரணைகளில், இவர்கள் இந்தியாவின் அனையூர் மற்றும் ஒக்கூர் அகதிகள் முகாம்களில் இருந்து இராமேஸ்வரம் வழியாக வந்துள்ளதாகவும், இவர்கள் முன்னர் இந்தியாவில் அகதி அந்தஸ்து கோரியிருந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.</p><p></p><p> </p><p>

இவர்களை அடுத்தகட்ட சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாகக் கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-05T14:48:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாலியில் கிணறு ஒன்றிருந்து பெருமளவு வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/explosives-discovered-in-a-well-in-palali-1788619191"></link>
            <id>https://ibctamil.com/article/explosives-discovered-in-a-well-in-palali-1788619191</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து பெருமளவான வெடி பொருட்கள் காணப்படும் நிலையில்
அவற்றை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து பெருமளவான வெடி பொருட்கள் காணப்படும் நிலையில்
அவற்றை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன</p><p>

பலாலி அந்தோனிபுரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றினை துப்பரவு செய்யும் போது
கிணற்றினுள் வெடி பொருட்கள் காணப்பட்டுள்ளன.</p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p>அது தொடர்பில் பலாலி காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு
சென்ற காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டதுடன், கிணற்றினுள் காணப்படும் வெடி
பொருட்களை பாதுகாப்பாக மீட்பதற்கு மல்லாக நீதவான் நீதிமன்றில் அனுமதி பெற
நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0f9721c-decb-4a8f-b94a-7a4d5bb1d470/26-6a9c2b7d99f9a.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T14:48:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைமன்னாரில் மீட்கப்பட்ட அகதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/number-refugees-rescued-talaimannar-rises-further-1788619626"></link>
            <id>https://jvpnews.com/article/number-refugees-rescued-talaimannar-rises-further-1788619626</id>
            <summary type="text">தலைமன்னார் கடற்பரப்பில் மணல்திட்டொன்றில் தவித்துக் கொண்டிருந்த வேளையில் கடற்படையினரால் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று (0...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமன்னார் கடற்பரப்பில் மணல்திட்டொன்றில் தவித்துக் கொண்டிருந்த வேளையில் கடற்படையினரால் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.</p><p></p><p> 

இன்று (05) பிற்பகல் அங்கிருந்த மேலும் மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதை தொடர்ந்தே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. </p><p>

மீட்கப்பட்டவர்களில் தந்தை ஒருவரும் அவரது 11 மற்றும் 13 வயதுடைய இரு பிள்ளைகளும் அடங்குவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b00cf4e-a7e3-4bc7-a0bb-c310cd48dd82/26-6a9c2b6b67220.webp' /></p><p>இவர்கள் தென்னிந்தியாவிலிருந்து கடல் வழியாக வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

தலைமன்னாருக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போதே இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். </p><p>

இதன்படி, ஐந்து சிறுவர்கள், நான்கு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உட்பட 11 பேர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். </p><p>

குறித்த நபர்கள் மேலதிக சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைளுக்காக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-05T14:47:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொடுத்த காசுக்கு மேல் கூவிய நாமலின் ஆதரவாளர்கள் - அநுர செய்வது அரசியல் பழிவாங்கலா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-anura-kumara-revenge-1788618359"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-anura-kumara-revenge-1788618359</id>
            <summary type="text">நேற்றைய தினம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேற்றைய தினம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.&nbsp;</p><p>இதனை தொடர்ந்து, நாமலின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பையும் விமர்சனத்தையும் முன்வைத்திருந்தனர்.&nbsp;</p><p>இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பிலும் கண்டனம் வெளியிடப்பட்டிருந்தது.&nbsp;</p><p>மேலும், அரசாங்கம், ராஜபக்ச குடும்பத்தினரை பழிவாங்கும் நோக்கில் இவ்வாறான ஒரு நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.&nbsp;</p><p>இதற்கிடையில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு முன் கூடிய ஆதரவாளர்கள் பணம் பெற்றுக் கொண்டு அவ்வாறு நடந்து கொண்டதாக எமது தலைமுறை கட்சியின் தலைவர், சிதம்பரம் கருணாநிதி குறிப்பிடுகின்றார்.&nbsp;</p><p>அவர், லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் குறிப்பிட்டதாவது,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/5h_RMGWkyT4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T14:39:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் கைதினால் கதிகலங்கியுள்ள தென்னிலங்கை - அரசியல்வாதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reason-behind-namal-rajapaksa-s-arrest-1788616644"></link>
            <id>https://tamilwin.com/article/reason-behind-namal-rajapaksa-s-arrest-1788616644</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைது தென்னிலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பல அரசியல்வாதிகள் கலக்கத்தில் உள்ளதாக அரசி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைது தென்னிலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பல அரசியல்வாதிகள் கலக்கத்தில் உள்ளதாக அரசியல் விமர்சர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். </p><p> 

நாமலின் கைது தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேற்கொண்ட நடவடிக்கை, சாதாரண சட்டச் செயல்முறைக்கு அப்பால் ஆழமான அரசியல் நோக்கங்களைக் கொண்டதாக சுட்டிக்காட்டப்படுகிறது. </p><p> 

சட்டவாட்சிக்கும் அரசியல் பழிவாங்கல்களுக்கும் இடையிலான ஆழமாக கோடு இந்த கைதின் மூலம் தெளிவாக வெளிப்படுவதாக அரசியல் தரப்பில் பேசப்படுகிறது.
</p><h2><b>
எதிர்கால அரசியல் </b></h2><p>எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, நாட்டின் எதிர்கால அரசியல் போக்கைத் தீர்மானிக்கும் ஒரு முக்கியமான திருப்புமுனையாக குறிப்பிடப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed8505e1-6fc5-463f-9dc7-e73b6e8fbc64/26-6a9c23aceccf8.webp' /></p><p>இது தனிநபருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை மட்டுமல்ல எனவும் ஒட்டுமொத்த அரசியல் அமைப்புக்கும் வழங்கப்பட்ட ஒரு தீவிரமான செய்தியாகவும் இதனை பார்க்கப்படுகிறது. </p><p> 

இந்தக் கைது நடவடிக்கையின் முக்கிய அடிப்படை காரணமாக ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பரும் பிரபல வணிகருமான நிமல் பெரேராவினால் வழங்கப்பட்ட சாட்சியமே பிரதான காரணமாக குறிப்பிடப்படுகிறது. </p><p> 

குற்றவியல் முறைப்பாட்டுச் கோவையின் 127 வது பிரிவின் கீழ் நீதவான் முன்னிலையில் இரகசியமாக வழங்கப்பட்ட இந்த வாக்குமூலம் மிகமிக கடுமையானதாகக் கருதப்படுகிறது. </p><h3><b>

 பாரிய நிதிப் பரிமாற்றம்</b></h3><p>சிங்கப்பூரை சேர்ந்த சேப்ரே விஷன் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான கணக்கு ஊடாக 8 லட்சம் அமெரிக்க டொலர் நாமல் ராஜபக்சவிற்கு மாற்றப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfa6a93b-5c96-4389-940a-68ed9f685567/26-6a9c23adbaa1d.webp' /></p><p>இந்த பாரிய நிதிப் பரிமாற்றம் 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அத்துடன், இது நேரடியாக லஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாற்றாக ஆணைக்குழுவினால் கருதப்பட்டுள்ளது.
</p><p>
இந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
</p>]]></content>
            <updated>2026-09-05T14:30:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரியான அம்பாறை இளைஞர்; குவியும் வாழ்த்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ampara-youth-becomes-a-police-officer-in-the-usa-1788611972"></link>
            <id>https://jvpnews.com/article/ampara-youth-becomes-a-police-officer-in-the-usa-1788611972</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அமெரிக்காவில் அக்கரைப்பற்று இளைஞர் பொலிஸ் அதிகாரியாக நியமனம் பெற்ற சமூகவலைத்தள வாசிகள் பாரட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.



அக்கரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அமெரிக்காவில் அக்கரைப்பற்று இளைஞர் பொலிஸ் அதிகாரியாக நியமனம் பெற்ற சமூகவலைத்தள வாசிகள் பாரட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.</p><p>



அக்கரைப்பற்றைச் சேர்ந்த நவீத் முஹம்மத், அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரியாக நியமனம் பெற்று புதிய பணிப் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c06b381-7c20-4c5c-a08d-06ef8a75bb9b/26-6a9c0d86be2e3.webp' /></p><p></p><p>


இன்னிலையில் அமெரிக்க பொலிஸ் துறையில் சேர்ந்து அக்கரைப்பற்றுக்கு பெருமை சேர்த்த இளைஞனுக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77ef83e5-f01a-4b9d-b51a-3edf671deef4/26-6a9c0d8610332.webp' /></p>]]></content>
            <updated>2026-09-05T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசிபிக் பெருங்கடலில் ஒரே நேரத்தில் மூன்று சூறாவளிகள்.. வெளிநாடொன்றில் அவசரநிலை பிரகடனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/three-cyclones-in-the-pacific-ocean-1788617731"></link>
            <id>https://tamilwin.com/article/three-cyclones-in-the-pacific-ocean-1788617731</id>
            <summary type="text">எல் நினோ உலகம் முழுவதும் பல நாடுகளைப் பாதித்துள்ள நிலையில், பசிபிக் பெருங்கடலில் தற்போது ஒரே நேரத்தில் மூன்று சூறாவளிகள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ உலகம் முழுவதும் பல நாடுகளைப் பாதித்துள்ள நிலையில், பசிபிக் பெருங்கடலில் தற்போது ஒரே நேரத்தில் மூன்று சூறாவளிகள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>
இந்தச் சூறாவளிகளால் ஏற்பட்ட பலத்த மழை மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை காரணமாக ஹவாய் தீவுகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><h2>எல் நினோ</h2><p>

எல் நினோ காரணமாக இந்த ஆண்டில் சீனாவைப் பாதிக்கும் ஏழாவது சூறாவளியாகப் பெயரிடப்பட்டுள்ள 'சௌடல்' (Soudal) சூறாவளி, அந்நாட்டைக் கடுமையாகப் பாதித்து வருவதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea4ba4e2-e29f-49a4-a49d-efb61e93dc7f/26-6a9c24efdf4c6.webp' /></p><p>
</p><p>
எல் நினோ தாக்கத்தால் கொலம்பியாவில் மழைப்பொழிவு குறைந்து வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள வீடுகளுக்குத் தண்ணீர் லொறிகள் (bowsers) மூலம் நீர் விநியோகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>
மேலும், இந்தோனேசியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக, கடந்த சில வாரங்களாக அங்குள்ள காடுகளில் கடுமையான காட்டுத்தீ பரவியுள்ளது.

உலகைப் பாதித்துள்ள எல் நினோ நிகழ்வு இலங்கையையும் பாதித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T14:24:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் மேசையில் கிடந்த 08 இலட்சம் டொலர்கள் : கம்மன்பில வெளிப்படுத்திய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/eight-hundred-thousand-dollars-on-namal-s-table-1788609425"></link>
            <id>https://ibctamil.com/article/eight-hundred-thousand-dollars-on-namal-s-table-1788609425</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைது மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டது முற்றிலும் அநியாயமான மற்றும் சட்டவிரோதமான செயல் என்று முன்னாள் அமைச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைது மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டது முற்றிலும் அநியாயமான மற்றும் சட்டவிரோதமான செயல் என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், எந்தவித ஆதாரமும் இன்றி, ஒரே ஒரு நபரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினார்.</p><h2>எட்டு இலட்சம் அமெரிக்க டொலர்கள் தரகுப் பணம்</h2><p>சிறிலங்கன் ஏர்லைன்ஸுக்காக ஏர்பஸ் விமானங்களை வாங்கும் பரிவர்த்தனையில், நாடாளுமன்ற உறுப்பினர் எட்டு இலட்சம் அமெரிக்க டொலர்கள் தரகுப் பணம் பெற்றார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34b6905c-6fe4-4f61-b51e-f33644f02cc3/26-6a9c0b23334aa.webp' /></p><p>

இந்தச் சம்பவம் தொடர்பான உண்மைகளை விளக்கிய கம்மன்பில, பிரியங்கா விஜேநாயக்க ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து தரகுப் பணம் பெற்றதற்கும், அந்தப் பணத்தின் ஒரு பகுதியை அவுஸ்திரேலியாவில் வசிக்கும் நிமல் பெரேரா என்ற நபருக்குக் கொடுத்ததற்கும் ஆதாரம் இருப்பதாக ஒப்புக்கொண்டார்.
</p><p>
இருப்பினும், நிமல் பெரேரா, நாமல் ராஜபக்சவிடம் பணத்தைக் கொடுத்தார் என்ற வாக்குமூலத்தைத் தவிர, புலனாய்வாளர்களிடம் வேறு எந்த ஆதாரமும் இல்லை என்று அவர் வலியுறுத்தினார்.</p><p>

"யாரும் இல்லாதபோது,நாமல் ராஜபக்சவின் மேசையில் 800,000 டொலர்களை வைத்துவிட்டுச் சென்றதாக நிமல் பெரேரா கூறுகிறார். இந்தக் கூற்றைத் தவிர வேறு எந்த ஆதாரமும் இல்லை. இது உகண்டாவில் பணத்தை மறைப்பது, ரொக்கெட்டுகளை அனுப்புவது, தங்கக் குதிரைகளைக் கொண்டு வருவது, லம்போர்கினிகளைக் கொண்டு வருவது மற்றும் கூடுதலாக ஒரு திசைகாட்டியைக் கொண்டு வருவது போன்றதுதான்," என்று முன்னாள் அமைச்சர் கூறினார்.</p><p></p><h2>&nbsp;ஒட்டுமொத்த பொதுமக்களும் பாதுகாப்பற்றவர்களாகிவிட்டனர்</h2><p>
</p><p>
ஒரு அறிக்கையில் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டாலே அவரைக் கைது செய்ய முடியும் என்றால், இந்த நாட்டின் எந்தவொரு குடிமகனும் இனி பாதுகாப்பாக இல்லை என்று கம்மன்பில சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37067f0e-4340-4778-8a42-20aca5b0c2ad/26-6a9c0b23e5e1e.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்வதன் மூலம், சந்தேக நபர்கள் பிணை பெறுவது மிகவும் கடினமாக்கப்பட்டுள்ளது என்றும், இது ஒரு அடக்குமுறை ஆட்சியின் அறிகுறி என்றும் அவர் மேலும் கூறினார்.
</p><p>
இந்தத் தன்னிச்சையான நடவடிக்கையால் நாமல் ராஜபக்ச மட்டுமல்ல, ஒட்டுமொத்த பொதுமக்களும் பாதுகாப்பற்றவர்களாகிவிட்டனர் என்று உதய கம்மன்பில தனது ஊடக மாநாட்டில் வலியுறுத்தினார்.&nbsp;</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T14:23:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இடம் மாற்றப்பட்ட 2வது பெலுகா திமிங்கலம் உயிரிழப்பு: சோகத்தில் சிகாகோ அக்வாரியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2nd-beluga-whale-dies-in-chicago-aquarium-1788617728"></link>
            <id>https://news.lankasri.com/article/2nd-beluga-whale-dies-in-chicago-aquarium-1788617728</id>
            <summary type="text">2nd Beluga Whale Dies in Chicago Aquarium: கனடாவின் மூடப்பட்ட தீம் பார்க்கில் இருந்து கொண்டுவரப்பட்ட இரண்டாவது பெலுகா திமிங்கலம் உயிரிழந்து இருப்பது ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>2nd Beluga Whale Dies in Chicago Aquarium: கனடாவின் மூடப்பட்ட தீம் பார்க்கில் இருந்து கொண்டுவரப்பட்ட இரண்டாவது பெலுகா திமிங்கலம் உயிரிழந்து இருப்பது சிகாகோ அக்வாரியத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><h2> பெலுகா திமிங்கலம் உயிரிழப்பு</h2><p>நிதிச் சுமை காரணமாக ஒன்ராறியோவில் உள்ள மரின்லேண்ட்(Marineland) பூங்கா நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.</p><p> இதனால் அங்குள்ள விலங்குகள் கருணை கொலை செய்யப்படலாம் என்ற அச்சம் எழுந்த நிலையில், மரின்லேண்ட்டில் இருந்து கிட்டத்தட்ட 30 பெலுகா திமிங்கலங்கள் மற்றும் 4 டால்பின்கள் மீட்கப்பட்டன..</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/857d0aee-941f-4626-99ae-1f6d5e5ae67d/26-6a9c2401ebba3.webp' /></p><p></p><p>இந்நிலையில் சிகாகோவின் ஹெட் அக்வாரியம்(Shedd Aquarium) புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், மூடப்பட்ட மரின்லேண்ட் பூங்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட 20 வயதுடைய ரெய்ன்(Rain) என்ற&nbsp; பெலுகா திமிங்கலம் பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.</p><p> ஷெட் அக்வாரியமிற்கு கொண்டுவரப்பட்ட சில வாரங்களிலேயே ரெய்ன் திமிங்கலம் உயிரிழந்து இருப்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> கடந்த மாத இறுதியில் நயாகரா நீர்வீழ்ச்சி(மரின்லேண்ட்) பூங்காவில் இருந்து மீட்கப்பட்ட 23 வயது பீகாச்சு(Peekachu) என்ற திமிங்கலம்&nbsp; உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cebc784-60ec-4f44-b0eb-6ce5c798d05a/26-6a9c2402ac542.webp' /></p><h2> அக்வாரியத்தின் தலைவர் விளக்கம் மற்றும் விசாரணை</h2><p>
விலங்குகளை இழப்பது என்பது மிகவும் கடினமானது. பிகாச்சு மற்றும் ரெய்ன் இழந்தது அவற்றை பராமரித்து வந்தவர்களுக்கு ஆழ்ந்த மன வேதனையை ஏற்படுத்தி இருப்பதாக அக்வாரியத்தின் விலங்கு பராமரிப்பு துணைத் தலைவர் ஆண்ட்ரூ பல்வர் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் புதிதாக வந்த திமிங்கலங்கள் புதிய சூழலுக்கு பழகுவதற்காக கண்காணிப்பாளர்கள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இருப்பினும் இந்த மரணங்கள் எதிர்பாராத ஒன்று என்று பல்வர் தெரிவித்துள்ளார்.</p><p>இந்நிலையில் இரண்டு திமிங்கலங்களும் உயிரிழந்ததற்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை மற்றும் இரத்த பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T14:15:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் நாமல்.. அனுராதபுர பேரணி குறித்து மொட்டுக்கட்சி முக்கிய தீர்மானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrested-anuradhapura-rally-mottu-party-1788616210"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrested-anuradhapura-rally-mottu-party-1788616210</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் இடம்பெறவிருந்த, மொட்டுக்கட்சியின் அனுராதபுர பேரணி அறிவித்தப்படி இடம்பெறும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் இடம்பெறவிருந்த, மொட்டுக்கட்சியின் அனுராதபுர பேரணி அறிவித்தப்படி இடம்பெறும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் அடிப்படையற்றவை என்றும், அவை முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்டவை என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.</p><p>

நாட்டின் ஊழல் மற்றும் மோசடிகளை ஒழிப்பதற்காகவே இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாட்டதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு போன்ற சுயாதீன நிறுவனங்கள் நிறுவப்பட்டனவே தவிர, அரசாங்கத்தின் அரசியல் எதிரிகளை அடக்குவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்துவதற்காக அல்ல என கட்சியின் பொதுச்செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p><h2>அரசியல் பழிவாங்கல்..&nbsp;</h2><p>
</p><p>சுயாதீன அரச நிறுவனங்களை அரசியல் அச்சுறுத்தல்கள் மற்றும் பழிவாங்கல்களுக்கான கருவியாகப் பயன்படுத்த அரசாங்கம் முற்படுமானால், அது நாட்டின் ஜனநாயகத்திற்கு விடுக்கப்படும் தீவிர அச்சுறுத்தலாகும் என்றும், நாட்டின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் மதிப்பைக் கொண்டுள்ள அனைத்துக் குடிமக்களும் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1224c936-14ca-4a34-b34b-188034401e7f/26-6a9c20275aff8.webp' /></p><p>
</p><p>
தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் ஒடுக்கப்பட்டுள்ள மக்களை ஒன்றுதிரட்டுவதற்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் பேரணி செப்டெம்பர் 12 ஆம் திகதி அனுராதபுரத்தில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.</p><p>
இந்தப் பேரணியில் பெருந்திரளான மக்கள் பங்கேற்பார்கள் என்ற தகவல் கிடைத்தமையினால், மக்கள் கிளர்ந்தெழுவதைத் தடுக்கும் நேரடி நோக்கத்துடனேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாகக் கட்சியின் பொதுச்செயலாளர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>இருப்பினும், நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டபோதிலும், 12 ஆம் திகதி அனுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் பேரணி எதிர்பார்த்தபடி பாரிய வெற்றியைப் பெறும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வலியுறுத்துகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T14:01:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிவி ஷோவுக்கு பாட வந்த கனடா தமிழ்ப்பெண்!! நிர்வாண பூஜை செய்து மிரட்டிய கிளி ஜோதிடர்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/astrologer-jailed-for-threatening-canadian-woman-1788612826"></link>
            <id>https://viduppu.com/article/astrologer-jailed-for-threatening-canadian-woman-1788612826</id>
            <summary type="text">தொலைக்காட்சி சேனலில் பாட்டு பாடும் ஷோவில் வெற்றிப்பெற தன்னை நம்பிய இலங்கை தமிழ் பெண்ணை ஆடையின்றி படம் எடுத்து மிரட்டிய சென்னை பெசண்ட் நகர் கடற்கரை கிள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொலைக்காட்சி சேனலில் பாட்டு பாடும் ஷோவில் வெற்றிப்பெற தன்னை நம்பிய இலங்கை தமிழ் பெண்ணை ஆடையின்றி படம் எடுத்து மிரட்டிய சென்னை பெசண்ட் நகர் கடற்கரை கிளி ஜோதிடர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a828fca2-88f5-42ce-9037-026bdb8d7556/26-6a9c10dcf02a6.webp' /></p><p> </p><h2>கனடா&nbsp;இலங்கை பெண்</h2><p>கனடாவில் வசித்து வரும் 37 வயது இலங்கை பெண், அந்த ஷோவில் பாட்டு பாட கலந்து கொள்ள சென்னை வந்துள்ளார். உறவினர் வீட்டில் தங்கி ஷோவில் கலந்து கொண்ட அப்பெண், பெசண்ட் கடற்கரைக்கு சென்றபோது, அங்கு இருந்த கிளி ஜோதிடரிடம் வாக்கு கேட்டார். அதற்காக ரூ. 20 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார் அப்பெண். </p><p>இதனை தொடர்ந்து அப்பெண்ணிடம் உங்களுக்கு நிர்வாண பூஜை பரிகாரம் செய்தால், நீங்கள் பிரபமடைந்து விடுவீர்கள் என்று ஆசைவார்த்தை காட்டியிருக்கிறார் ஜோதிடர்.</p><p> இதனை நம்பிய அப்பெண் உறவினர் வீட்டில் இருந்தபடியே வாட்ஸ் அப் காலில் நிர்வாணமாக தோன்ற, அதை வைத்து பூஜை செய்வதாக கிளி ஜோதிடர் கூறியிருக்கிறார். அதற்காக ரூ. 70 ஆயிரம் பணம் வாங்கியிருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78082f00-320e-4b11-a758-e131cc59ea8e/26-6a9c10dda8e43.webp' /></p><h2>கிளி ஜோதிடர்</h2><p> இதன்பின் கண்டா சென்ற அப்பெண் மீண்டும் சென்னை வந்து கிளி ஜோதிடரை தொடர்பு கொண்டு பேசியபோது கிளி ஜோதிடர், இன்னொரு முறை நிர்வான பரிகார பூஜை செய்ய வேண்டும் என்று சொல்லி ரூ. 1 லட்சம் கேட்டுள்ளார். </p><p>அதற்கு இலங்கை தமிழ் பெண் மறுக்க, உன் நிர்வான படங்கள் என்னிடம் இருக்கிறது என்று மிரட்டியுள்ளார் கிளி ஜோதிடர். இதுதொடர்பாக இலங்கை தமிழ் பெண் புகார் கொடுக்க, யார் அந்த கிளி ஜோதிடர் என தனிப்படை போலிசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தென்காசியில் பதுங்கியிருந்த இசக்கிமுத்து என்ற கிளி ஜோதிடர் என்று தெரிந்து போலிசார் கைது செய்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-05T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகை உலுக்கிய நேபாள பேரழிவு; 11 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்ட மூதாட்டி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nepal-disaster-elderly-woman-rescued-after-11-days-1788610642"></link>
            <id>https://jvpnews.com/article/nepal-disaster-elderly-woman-rescued-after-11-days-1788610642</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் வீடு இடிந்து இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 60 வயது மூதாட்டி ஒருவர் 11 நாட்களுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; <a href="https://jvpnews.com/article/nepal-disaster-little-boy-searching-his-parents-1788237970" target="_blank">நேபாள</a>த்தின் நுவாகோட் மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் வீடு இடிந்து இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 60 வயது மூதாட்டி ஒருவர் 11 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
</p><p>


<a href="https://jvpnews.com/article/migrant-jaffna-family-missing-in-nepal-disaster-1788248831" target="_blank">தீவிர மீட்புப்பணி</a> நடைபெற்று வருகையில், நுவாகோட் மாவட்டத்தில் உள்ள பெட்ராபதியில், நான்கு மாடிக் கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த வீட்டின் மேல் தளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a3f9ddb-2c10-4e1f-97ed-59972203fdd9/26-6a9c08543946c.webp' /></p><p>



ஆயுதப் படை குழுவினரால் மீட்கப்பட்ட குறித்த மூதாட்டி, முதலுதவி சிகிச்சைக்காக ஹெலிக்கொப்டர் மூலம் திரிசூலியில் உள்ள நேபாள இராணுவத்தின் மைதிலி முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-05T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடைகளில் தமிழில் பெயர்ப்பலகை கட்டாயம் - உயர்நீதிமன்றம் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/hc-orders-tamil-nameboards-for-shops-by-november-1-1788616202"></link>
            <id>https://ibctamilnadu.com/article/hc-orders-tamil-nameboards-for-shops-by-november-1-1788616202</id>
            <summary type="text">high court orders tamil nameboards mandate for shops by november 1: தமிழ்நாட்டில் நவம்பர் 1 ஆம் தேதிக்குள் கடைகளில் தமிழில் பெயர்ப்பலகை கட்டாயம் வைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>high court orders tamil nameboards mandate for shops by november 1: தமிழ்நாட்டில் நவம்பர் 1 ஆம் தேதிக்குள் கடைகளில் தமிழில் பெயர்ப்பலகை கட்டாயம் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><h3> 

கடைகளில் தமிழில் பெயர்ப்பலகை கட்டாயம்</h3><p>

சென்னை மாநகராட்சி உட்பட தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகளுக்கு தமிழில் பெயர் பலகைகள் வைக்க வேண்டும் என்று 2025ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81533200-078a-4465-98c6-07861d91778b/26-6a9c1e0ce2496.webp' /></p><p>
பெயர் பலகைகளில், தமிழ் பெயருக்கு கீழ் ஆங்கிலத்தில் பெயர் வைத்துக் கொள்ளலாம். உத்தரவை அமல்படுத்த தவறினால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. </p><p>

ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து மும்பையில் உள்ள இந்திய சில்லறை வர்த்தகர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.</p><p>

இதில், உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட வணிகச் சின்னங்களின் அடிப்படையில் பெயர் பலகைகள் அமைக்கப்பட வேண்டும், அவற்றை மாற்றும்போது அது வாடிக்கையாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டது.</p><p>

மேலும், நிதி உள்ளிட்ட காரணங்களால் உடனடியாக இதனை மாற்ற இயலாது என்பதால் பெயர்ப்பலகைகளை மாற்ற கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. </p><p>

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் நவம்பர் 1 ஆம் தேதிக்குள் அனைத்து கடைகளின் பெயர்களும் தமிழில் இருக்க வேண்டும். 

அரசின் உத்தரவை பின்பற்றாத கடைகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T13:50:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொஸ்கோவில் தரையிறங்கிய ட்ரம்பின் தூதுவர்கள் : முடிவிற்கு வருமா ரஷ்ய - உக்ரைன் போர்…!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-envoys-arrive-in-moscow-1788614723"></link>
            <id>https://ibctamil.com/article/trump-envoys-arrive-in-moscow-1788614723</id>
            <summary type="text">&amp;nbsp;ஐந்து வருடத்தை தொடும் ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்தும் நோக்கத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஐந்து வருடத்தை தொடும் ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்தும் நோக்கத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இரண்டு சிறப்புத் தூதுவர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர், ரஷ்யாவின் மொஸ்கோ வந்தடைந்தனர். ஜாரெட் குஷ்னர், ட்ரம்பின் மருமகன் ஆவார்.</p><p>ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு சிறப்பு முன்மொழிவையும் கொண்டுவந்த ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர், ரஷ்யத் தரப்பைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.</p><h2>உக்ரைனுக்கும் செல்வர்</h2><p> </p><p>அதன்பிறகு, அவர்கள் உக்ரைனியத் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைனியத் தலைநகரான கீவ்விற்குச் செல்வார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3a2e835-0a7f-47d9-a519-794ca0ab4c5e/26-6a9c1c2e45c2c.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T13:42:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[குளத்துக்குள் கவிழ்ந்து உழவு இயந்திரம் விபத்து: இளைஞர் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-man-has-died-after-a-tractor-overturned-1788613374"></link>
            <id>https://tamilwin.com/article/young-man-has-died-after-a-tractor-overturned-1788613374</id>
            <summary type="text">அனுராதபுரம்- ரம்பவெல குளக்கட்டில்
பயணித்துக் கொண்டிருந்த உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம்- ரம்பவெல குளக்கட்டில்
பயணித்துக் கொண்டிருந்த உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>குறித்த சம்பவமானது நேற்றையதினம்(5.9.2026) இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p>
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,&nbsp; குளக்கட்டில் கட்டப்பட்டிருந்த மாடொன்றைக் காப்பாற்ற முயன்றபோது, உழவு இயந்திரத்தை கட்டுப்படுத்த முடியாமல் அது குளக்கட்டிலிருந்து குளத்துக்குள் கவிழ்ந்து
விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
</p><p>இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த உழவு இயந்திர சாரதி உள்ளிட்ட
மூவர் கஹடகஸ்திகிலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f490ced-e8f8-478c-929b-454dc31eeaa7/26-6a9c18a51a2a3.webp' /></p><p> </p><p>எனினும், அங்கு
சிகிச்சை பெற்று வந்த வெலிகொல்லேவ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர்
சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பாகத் திவுல்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T13:36:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாப் டூ பிளெஸ்ஸின் டாக்கர்ஸ் 93 ஓட்டங்களில் சுருண்டு படுதோல்வி: மிரட்டிய சான்ட்னர் படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tom-curran-and-santner-smash-rotterddam-dockers-1788615372"></link>
            <id>https://news.lankasri.com/article/tom-curran-and-santner-smash-rotterddam-dockers-1788615372</id>
            <summary type="text">tom curran and santner smash rotterddam dockers by bowl: ஐரோப்பிய டி20 போட்டியில் எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் அணி 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ரோட்டர்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>tom curran and santner smash rotterddam dockers by bowl: ஐரோப்பிய டி20 போட்டியில் எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் அணி 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ரோட்டர்டம் டாக்கர்ஸை வீழ்த்தியது.&nbsp; </p><p>ரோட்டர்டம் டாக்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் அணி 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ்&nbsp;148 </h2><p>
எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் மற்றும் ரோட்டர்டம் டாக்கர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐரோப்பிய டி20 போட்டி வூர்பர்க்கில் நடந்தது.&nbsp;&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Caught a literal Bullet in his hands 💥<br><br>What a catch to dismiss the Rotterdam Skipper ⚡🔥<a href="https://x.com/hashtag/ETPL?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ETPL</a> <a href="https://t.co/ksNBXJB49W">pic.twitter.com/ksNBXJB49W</a></p>&mdash; European T20 Premier League (ETPL) (@etplofficial) <a href="https://x.com/etplofficial/status/2096209753143914666?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
முதலில் ஆடிய எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் அணி 148 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. பிரண்டன் மெக்முல்லன் 37 ஓட்டங்களும், லௌரி எவன்ஸ் 33 ஓட்டங்களும், டெலனி 31 ஓட்டங்களும் எடுத்தனர்.</p><p></p><p>
</p><p> 
மிரட்டலாக பந்துவீசிய ஜெய் மூன்ரா, டேவிட் விஸே மற்றும் அன்ரிச் நோர்ஜே தலா 3 விக்கெட்டுகளும், ரோலோப் வான் டெர் மெர்வ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
</p><p>
பின்னர் ஆடிய ரோட்டர்டம் டாக்கர்ஸ் அணி 18 ஓவர்களில் 93 ஓட்டங்களுக்கு சுருண்டது. அணிதலைவர் பாப் டூ பிளெஸ்ஸிஸ் 21 ஓட்டங்களும், பென் மனேண்டி 16 ஓட்டங்களும் எடுத்தனர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">A bullet, but Watt caught it 💪🤩<a href="https://x.com/hashtag/ETPL?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ETPL</a> <a href="https://t.co/PvekX8JUsq">pic.twitter.com/PvekX8JUsq</a></p>&mdash; European T20 Premier League (ETPL) (@etplofficial) <a href="https://x.com/etplofficial/status/2096219938033955020?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>&nbsp;</p><p>

டாம் கர்ரன் (Tom Curran) 3 விக்கெட்டுகளும், மிட்செல் சான்ட்னர், மார்க் வாட் தலா 2 விக்கெட்டுகளும், போல்ட் மற்றும் ஸ்மட்ஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.&nbsp; &nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The Edinburgh Castle Rockers put on a bowling masterclass to hand Rotterdam Dockers their first loss of <a href="https://x.com/hashtag/ETPL?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ETPL</a> 👊✨<a href="https://x.com/hashtag/ETPL?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ETPL</a> <a href="https://t.co/6TrKf2ZBn2">pic.twitter.com/6TrKf2ZBn2</a></p>&mdash; European T20 Premier League (ETPL) (@etplofficial) <a href="https://x.com/etplofficial/status/2096216939081453907?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T13:35:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பிரதேசத்தை உலுக்கிய சம்பவம்; அநியாயமாக பறிபோன பிஞ்சின் உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/child-die-accident-vehicle-in-kilinochchi-1788613797"></link>
            <id>https://jvpnews.com/article/child-die-accident-vehicle-in-kilinochchi-1788613797</id>
            <summary type="text">&amp;nbsp; கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம், சிவநகர் பகுதியில் வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் ரக வாகனத்தை குழந்தையின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம், சிவநகர் பகுதியில் வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் ரக வாகனத்தை குழந்தையின் தாத்தா இயக்கிச் செலுத்திய போது, எதிர்பாராதவிதமாக குழந்தை வாகனச் சக்கரத்தில் நசியுண்டு உயிரிழந்துள்ளமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

இச்சோகச் சம்பவம் இன்று காலை 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

இச்சம்பவத்தில் ரூபன் அனாமிகா என்ற ஒன்றரை வயதுடைய பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6794e5cc-dedc-4e7a-b466-5efb73e8b038/26-6a9c14a67d6e6.webp' /></p><p> </p><p>

உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p> 

சம்பவ இடத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் எஸ். சிவபாலசுப்பிரமணியம் மரண விசாரணை மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டார்.</p><p></p><p> </p><p>

இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-05T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[9 நாட்களாக ஹரே கிருஷ்ணா என உச்சரித்து வந்த நபர் - கிருஷ்ண ஜெயந்தியில் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-chanted-hare-krishna-rescued-on-janmashtami-1788614729"></link>
            <id>https://news.lankasri.com/article/man-chanted-hare-krishna-rescued-on-janmashtami-1788614729</id>
            <summary type="text">man chanted hare krishna rescued from nepal tunnel on janmasthami: நேபாள பெருவெள்ளத்தில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளி 9 நாட்களாக ஹரே கிருஷ்ணா என உச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>man chanted hare krishna rescued from nepal tunnel on janmasthami: நேபாள பெருவெள்ளத்தில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளி 9 நாட்களாக ஹரே கிருஷ்ணா என உச்சரித்து வந்த நிலையில், கிருஷ்ண ஜெயந்தி அன்று மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டுள்ளார். </p><h3>

9 நாட்களுக்கு பின் சுரங்க தொழிலாளி மீட்பு </h3><p>

சீன மற்றும் நேபாள எல்லையில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி, பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 1200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், தமிழ்நாட்டை சேர்ந்த இந்தியர்கள் உட்பட 5000க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cd697dd-1609-4074-bddb-9f5ce0507802/26-6a9c184cf1796.webp' /></p><p>

நேபாள ராணுவம் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தியா மற்றும் சீனாவின் சுரங்க மீட்பு குழு மீட்பு பணிகளில் உதவி வருகிறது.</p><p> 

வெள்ளப்பெருக்கு நிகழ்ந்து 9 நாட்கள் ஆகி விட்டதால், காணாம;ல் போனவர்களை மீட்க குறைவான சாத்தியம் உள்ளதாகவே கருதப்பட்டது.&nbsp;</p><p></p><p>

ஆனால், திரிசூலி 3A நீர்மின் திட்டத்தில் உள்ள சுரங்கப்பாதையில் இருந்த 2 தொழிலாளர்களை மீட்பு குழுவினர் உயிருடன் மீட்டது பலருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4028e4bc-9c41-4a8c-989a-f7bc663ddfdd/26-6a9c184b8e0ec.webp' /></p><p>

மீட்கப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p> 

மீட்கப்பட்டவர்களில் ஒருவர் நேபாள மின்சார ஆணையத்தின் ஊழியரும் மேற்பார்வையாளருமான சஞ்சய் ஷா(வயது 30), மற்றொருவர் நீர்மின் திட்டத்தின் மெக்கானிக்கல் மேற்பார்வையாளர் கபிர் மகார்ஜன்(வயது 45) ஆவர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">VIDEO | Trishuli, Nepal: Two people rescued alive today from the tunnel of Trishuli–3 &#39;A&#39; Hydropower Project; search for others continues.<br><br>(Source: Security Force)<br><br>(Full video available on PTI Videos - <a href="https://t.co/d8jp61yd2p">https://t.co/d8jp61yd2p</a>) <a href="https://t.co/gNxbkPrl73">pic.twitter.com/gNxbkPrl73</a></p>&mdash; Press Trust of India (@PTI_News) <a href="https://x.com/PTI_News/status/2095739233537503410?ref_src=twsrc%5Etfw">September 4, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

பேரழிவு குறித்த தகவல் கிடைத்ததும், சஞ்சய் ஷா அங்கிருந்தவர்களை மற்றவர்களைத் தப்பிச் செல்லுமாறு எச்சரித்துள்ளார். ஆனால், அவர் தப்பிப்பதற்காகத் திரும்பியபோது, ​​அவருக்கு நேரம் இருக்கவில்லை.</p><p>
9 நாட்களாக சுரங்கப்பாதைக்குள் இருளில் சிக்கியிருந்த அவர், அருகிலிருந்த 3 அல்லது 4 மற்ற தொழிலாளர்களுடன் பேசியோ அல்லது சத்தம் எழுப்பியோ தொடர்பு கொண்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/394d236b-715e-472a-9a38-957a728b4b5d/26-6a9c184c46577.webp' /></p><p>

மேலும், மின் உற்பத்தி நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் உட்பட, சுரங்கப்பாதையின் உட்பகுதியில் இன்னும் அதிகமானோர் சிக்கியிருக்கக்கூடும்.&nbsp;</p><p></p><p> 

அனைவராலும் தப்பித்திருக்க முடிந்திருக்காது. அந்தச் சுரங்கப்பாதை மிகவும் நீளமானது, வெள்ள நீரின் வேகம் அவர்களை மேலும் உள்ளே இழுத்துச் சென்றிருக்கக்கூடும்" என தெரிவித்துள்ளார். </p><h3>ஹரே கிருஷ்ணா என உச்சரித்த தொழிலாளி </h3><p>

மேலும், 9 நாட்களாக தான் ஹரே கிருஷ்ணா என்ற மந்திரத்தை உச்சரித்து வந்ததாக தெரிவித்துள்ளார். அவர் கிருஷ்ண ஜெயந்தி அன்று மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p>

தனது கணவருக்கு இரண்டாவது வாழ்க்கை கிடைத்துள்ளதாக கூறிய அவரது மனைவி, உயிரை பணயம் வைத்து மீட்ட மீட்பு குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். </p><p>

திரிசூலி ஆற்றங்கரையில் உள்ள ஆறு நீர்மின் திட்டங்களுடன் இணைக்கப்பட்ட சுரங்கங்களில் குறைந்தது 900 பேர் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் நம்புகின்றனர். </p><p>

நேபாளத்தின் சுதந்திர மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின்படி, 11 நீர்மின் திட்டங்களில் பணிபுரியும் 600க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.&nbsp;</p><p>

நேபாள இராணுவம் தலைமையிலான பாதுகாப்புப் பிரிவு, சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T13:28:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் பலாலி கிணறில் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/explosives-recovered-from-a-well-in-palaly-jaffna-1788614992"></link>
            <id>https://jvpnews.com/article/explosives-recovered-from-a-well-in-palaly-jaffna-1788614992</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம், பலாலி அந்தோனிபுரம் பகுதியில் கிணறு ஒன்றைத் துப்பரவு செய்யும் போது பெருமளவான வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.



கிணற்றுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம், பலாலி அந்தோனிபுரம் பகுதியில் கிணறு ஒன்றைத் துப்பரவு செய்யும் போது பெருமளவான வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p><p>



கிணற்றுக்குள் வெடிபொருட்கள் காணப்பட்டமை தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1409a95-7c06-499e-85cd-528b8767f2c9/26-6a9c195200a76.webp' /></p><p>

கிணற்றுக்குள் காணப்படும் வெடிபொருட்களை பாதுகாப்பாக மீட்பதற்காக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-05T13:26:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீராட சென்ற இரு இளைஞர்கள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-youths-lost-their-lives-while-bathing-nanu-oya-1788608496"></link>
            <id>https://jvpnews.com/article/two-youths-lost-their-lives-while-bathing-nanu-oya-1788608496</id>
            <summary type="text">நுவரெலியா - நானுஓயா, கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் உள்ள ஆற்றில் நீராடச் சென்ற இருவர் இன்று (05) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

உயிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா - நானுஓயா, கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் உள்ள ஆற்றில் நீராடச் சென்ற இருவர் இன்று (05) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.</p><p> 

உயிரிழந்தவர்கள் நானுஓயா பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பெருமாள் திவாகர் மற்றும் ஹப்புத்தளை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய அன்பழகன் நிக்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07e33348-5cbb-463a-81f6-3191707e5bc4/26-6a9bfff2435fe.webp' /></p><p> 

நுவரெலியா கிரிகோரி வாவியிலிருந்து வெளியேறி, கொத்மலை ஆற்றில் சங்கமிக்கும் நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சிப் பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்கச் சென்றபோதே இவர்கள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.</p><p></p><p> 

மீட்கப்பட்ட இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளன. 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T13:22:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கேரளாவில் கோர விபத்து; தமிழ் நாட்டை உலுக்கிய சோகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/8-students-from-tamil-nadu-killed-accident-kerala-1788614573"></link>
            <id>https://jvpnews.com/article/8-students-from-tamil-nadu-killed-accident-kerala-1788614573</id>
            <summary type="text">&amp;nbsp; கேரளாவில் ​லொறியொன்றின் மீது கார் மோதிய விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 8 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கேரளாவில் ​லொறியொன்றின் மீது கார் மோதிய விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 8 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் கைப்பமங்கலம், பனம்பிக்குன்னு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86f612ee-0335-4041-83fc-6e6c1085ced8/26-6a9c17ae650dc.webp' /></p><h2>&nbsp;லொறியின் பின்புறத்தில் கடுமையாக மோதி விபத்து</h2><p> 

அப்பகுதியில் வீதியோரம் சரக்கு லொறி ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. இரவு சுமார் 11:40 மணியளவில் அந்த வழியாக வந்த தமிழகத்தின் பதிவு எண் கொண்ட கார் ஒன்று, சரக்கு லொறியின் பின்புறத்தில் கடுமையாக மோதி விபத்துக்குள்ளானது.</p><p> 

விபத்தில் கார் முற்றிலுமாகச் சிதைந்து, உள்ளே இருந்தவர்கள் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் மீட்பு படையினர் விரைந்தனர்.</p><p></p><p> </p><p>

இந்த கோர விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்விற்காக திருச்சூர் வைத்தியக் கல்லூரி வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன. </p><p>

இந்நிலையில் உயிரிழந்த எட்டு பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. 

 உயிரிழந்த மாணவர்கள் திண்டுக்கல்லில் உள்ள பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியின் மாணவர்கள் என்றும், குருவாயூரிலிருந்து கொடுங்கல்லூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, ​​கார் கட்டுப்பாட்டை இழந்து லொறி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p> 

 இன்னிலையில் விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-05T13:19:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிசயம் : 10 நாட்களுக்குப் பின்னர் நேபாளத்தில் 64 வயது மூதாட்டி உட்பட இருவர் உயிருடன் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/after-10-days-64-year-old-woman-rescued-nepal-1788613428"></link>
            <id>https://ibctamil.com/article/after-10-days-64-year-old-woman-rescued-nepal-1788613428</id>
            <summary type="text">நேபாள வெள்ளத்தில் சிக்கிய 64 வயது மூதாட்டி மற்றும் சீனாவைச் சேர்ந்த சுரங்கத் தொழிலாளி ஆகிய இருவர், 10 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாள வெள்ளத்தில் சிக்கிய 64 வயது மூதாட்டி மற்றும் சீனாவைச் சேர்ந்த சுரங்கத் தொழிலாளி ஆகிய இருவர், 10 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p>




நேற்று சுரங்கத்தில் இருந்து 2 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 10 நாட்களுக்குப் பிறகு, சீனாவைச் சேர்ந்த சுரங்கத் தொழிலாளி இன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.</p><h2>சீனாவைச் சேர்ந்த சுரங்கத் தொழிலாளி</h2><p>&nbsp;நேபாள இராணுவம் மற்றும் தென்கொரியாவின் பேரிடர் மீட்பு குழுவினர் இணைந்து மேற்கொண்ட மீட்பு பணியில், அந்த நபர் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள இராணுவம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/addcb69c-57c2-4d55-9c37-0c5b047d0663/26-6a9c166ff024c.webp' /></p><p> </p><p>சுரங்கத்திற்கு உள்ளே சுமார் 225 மீட்டர் தொலைவில் இருந்து மீட்கப்பட்ட நபர்,உலங்கு வானூர்தி மூலம் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>64 வயது மூதாட்டி</h2><p>


அதேபோல, நுவாகோட் நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீட்டில் இருந்து சந்திகா ஸ்ரேஷ்தா என்ற 64 வயது மூதாட்டியை மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டுள்ளனர்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F3140096452855503%2F&show_text=false&width=560&t=0" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p> </p><p>போர்வையில் சுற்றியபடி மீட்கப்பட்ட அந்த மூதாட்டி உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான காணொளிகள் வைரலான நிலையில், பலரும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T13:17:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்மார்ட்டல் பட பிரமோஷனுக்கு வராததுக்கு இதான் காரணம்!! கயாடு லோஹர் விளக்கம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/kayadu-lohar-replied-why-not-attend-in-promotion-1788612040"></link>
            <id>https://viduppu.com/article/kayadu-lohar-replied-why-not-attend-in-promotion-1788612040</id>
            <summary type="text">கயாடு லோஹர்துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஐ ஆம் கேம் பட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நடிகை கயாடு லோஹர், தமிழில் வெளியான இம்மார்ட்டல் பட பிரமோஷனை புறக்கணித...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கயாடு லோஹர்</h2><p>துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஐ ஆம் கேம் பட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நடிகை கயாடு லோஹர், தமிழில் வெளியான இம்மார்ட்டல் பட பிரமோஷனை புறக்கணித்தார்.</p><p> தமிழில் டிராகனுக்கு முன் நடித்த படம் இம்மார்ட்டல், அப்படி அதை ஏன் புறக்கணித்தார். சம்பள பிரச்சனையா? இல்லை ஈகோ பிரச்சனையா? என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36333171-de68-4d83-936f-d6ccfd08c791/26-6a9c0dcabea4a.webp' /></p><p> அவர் மீது இம்மார்ட்டல் படகுழு கடும் கோபத்தில் இருக்கிறதாம். ஐ ஆம் கேம் படத்தின் செகண்ட் ஆஃப் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. </p><p>தற்போது இம்மார்ட்டல் பட பிரமோஷனில் கலந்து கொள்ளாததற்கான காரணத்தை கயாடு லோஹர் தெரிவித்துள்ளார்.
</p><h2>இதான் காரணம்</h2><p>அதில், அடுத்தடுத்து தொடர்ச்சியாக படங்களின் ஷூட்டிங்கில் இருந்ததால், பிரமோஷன்களில் கலந்து கொள்ள நேரமில்லை. படத்தின் விளம்பரப் பணிகளுக்காக என் வசம் ஒரேவொரு நாள் மட்டுமே இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a2ce63d-6434-454f-9ee4-240f75b6e47f/26-6a9c0dcb6cdd1.webp' /></p><p> </p><p>அன்று ஐ ஆம் கேம் பட நிகழ்ச்சியில் பங்கேற்றேன். இம்மார்ட்டல் படக்குழுவால் அந்த தேதியில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய முடியவில்லை. நான் நடிக்கும் எல்லா படங்களுமே எனக்கு முக்கியம்தான். எந்த படங்களையும் பெரிய படம், சிறிய படம் என்று நான் பிரித்து பார்ப்பதில்லை. </p><p>அதனால் அதை வைத்து யாரும் தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுர்த்த வேண்டாம். சோசியல் மீடியாக்களில் வரும் வதந்திகளை, விமர்சனங்களை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்று கயாடு லோஹர் கூறியிருக்கிறார்.</p>]]></content>
            <updated>2026-09-05T13:00:00+00:00</updated>
        </entry>
    </feed>
