<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-03T17:23:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியலமைப்புத் திருத்தம் செய்யத் தயங்க மாட்டோம்: ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-will-pursue-constitutional-changes-1788455923"></link>
            <id>https://tamilwin.com/article/government-will-pursue-constitutional-changes-1788455923</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றங்களைக் கட்டுப்படுத்தி, அமைதியான நாட்டை உருவாக்கத் தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களை அறிமுகப்படுத்தத் தமது அரசாங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றங்களைக் கட்டுப்படுத்தி, அமைதியான நாட்டை உருவாக்கத் தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களை அறிமுகப்படுத்தத் தமது அரசாங்கம் தயங்காது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். </p><p>

இலங்கை பொலிஸ் சேவையின் 160வது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p>சந்தேகநபர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தும் நடைமுறையை அரசாங்கம் வலுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளபோதிலும், கைது செய்யப்படுவதற்கும் தண்டனை வழங்கப்படுவதற்கும் இடையிலான காலதாமதம் இருப்பதாக ஜனாதிபதி ஒப்புக்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/537f0ecd-cdc9-46a5-a6a4-3850801afe26/26-6a99abf8cfc67.webp' /></p><p>
</p><p>கடந்த இரண்டு ஆண்டுகளில் பொலிஸார் சாதனை அளவிலான போதைப்பொருள் சோதனைகளை நடத்தியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>எனினும், வழக்கு விசாரணைகளும் தண்டனை வழங்குவதும் நீண்ட காலம் நீடித்தால், இந்தக் கைதுகளால் பெரிய பலன் இருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>தண்டனை கிடைக்கத் தாமதமாகும் என்பது குற்றவாளிகளுக்குத் தெரியும்" என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, நீதிச் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் மேலும் திறம்படச் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
</p><p>இந்த நடைமுறைகளை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கம் ஏற்கனவே புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களைச் செய்ய அரசாங்கம் தயங்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T17:19:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆயுதக் கையிருப்பு குறைவதாக வரும் செய்திகள் குறித்து டிரம்பின் பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-says-reports-of-low-us-weapons-stockpiles-1788453762"></link>
            <id>https://canadamirror.com/article/trump-says-reports-of-low-us-weapons-stockpiles-1788453762</id>
            <summary type="text">அமெரிக்க ராணுவத்தின் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதாக வெளியான ஊடகச் செய்திகளையும் சுயேச்சை ஆய்வுகளையும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையாக மறுத்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ராணுவத்தின் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதாக வெளியான ஊடகச் செய்திகளையும் சுயேச்சை ஆய்வுகளையும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையாக மறுத்துள்ளார்.</p><p> 
மேலும், இத்தகைய அறிக்கைகள் "தேசத்துரோகமானவை" என்றும் அவர் சாடியுள்ளார். </p><p>
அல் ஜசீரா மற்றும் பல அமெரிக்க ஊடகங்கள், அமெரிக்கா தனது சக்திவாய்ந்த ஆயுதங்களான டோமாஹாக், பேட்ரியாட் ஏவுகணைகள் மற்றும் தாட் பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு ஆகியவற்றின் கையிருப்பில் பற்றாக்குறையைச் சந்தித்து வருவதாகச் செய்தி வெளியிட்டிருந்தன. </p><p>
தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், இந்த அறிக்கைகள் "100% தவறானவை" என்று குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அமெரிக்க ராணுவத்திடம் நடுத்தர மற்றும் உயர்தர வெடிமருந்துகளின் கையிருப்பு "வரம்பற்ற அளவில்" உள்ளதாகவும், நாட்டின் ஆயுத உற்பத்தியை அமெரிக்கா மேலும் தீவிரப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/823f45c2-9144-4ad2-bd0d-4352db97260d/26-6a99a383dcc23.webp' /></p><p> 
ஈரான் மீதான அமெரிக்கப் போரின் காரணமாக, சுவிட்சர்லாந்து மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கான ஆயுத விநியோகம் சில மாதங்கள் தாமதமான நிலையில், அந்த நாடுகளுக்கான ஆயுத விற்பனை விரைவில் மீண்டும் தொடங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T17:00:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அபாயம் இன்னும் நீங்கவில்லை ; பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/danger-remains-public-warning-issued-1788453990"></link>
            <id>https://jvpnews.com/article/danger-remains-public-warning-issued-1788453990</id>
            <summary type="text">டெங்கு நோய் பரவும் அபாயம் இன்னும் நீங்கவில்லை என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.



எனவே, தமது சுற்றுப்புறங்களில் டெங்கு நுளம...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">டெங்கு நோய் பரவும் அபாயம் இன்னும் நீங்கவில்லை என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">


எனவே, தமது சுற்றுப்புறங்களில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் தொடர்பில் அதிக அவதானத்துடன் செயற்படுமாறு சமூக வைத்திய விசேட நிபுணர் வைத்தியர் பிரஷிலா சமரவீர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bdaf295-e6c4-4da8-b924-6b0631134611/26-6a99a467b9ca6.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;நோயாளர்களின் எண்ணிக்கை</h2><p>
</p><p style="text-align: justify; ">


சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">


அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது டெங்கு நோயாளர்களின் பதிவுகள் குறைந்த மட்டத்தில் காணப்படுகின்ற போதிலும், டெங்கு நோய் பரவும் அபாயம் இன்னும் நீங்கவில்லை என தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">



சில மாவட்டங்களில் முதலில் நுளம்புகளின் பெருக்கம் அதிகரிப்பதை அவதானிக்க முடிவதுடன், அதனைத் தொடர்ந்து டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் தொடர்பில் பொதுமக்கள் கவனயீனமாக செயற்பட்டால், அது எதிர்காலத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">



எனவே, பொதுமக்கள் தமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக வைத்திருப்பதுடன், நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைத்தியர் பிரஷிலா சமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T17:00:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை மிரட்டும் இயற்கை பேரிடர் : வெள்ளப்பெருக்கை அடுத்து நிலநடுக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/earthquake-hits-tibet-1788452672"></link>
            <id>https://ibctamil.com/article/earthquake-hits-tibet-1788452672</id>
            <summary type="text">&amp;nbsp;நேபாளத்தில் மட்டும் 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கும் அளவுக்குப் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நேபாளத்தில் மட்டும் 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கும் அளவுக்குப் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 14 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், ரிக்டர் அளவில் 5.0 ஆகப் பதிவாகியுள்ளது என்றும் தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><h2>போராடும் மீட்பு படையினர்</h2><p>&nbsp;இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c06af4b-8e2c-485d-9950-94ac84c604d8/26-6a99a68d734fc.webp' /></p><p>நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் தொடர்ச்சியாக ஏற்படும் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மீட்பு படையினர் போராடி வருகின்றனர். அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T16:58:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்திற்கு இணையான ஆபத்து இலங்கையிலும்.. வெளியான எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-threatens-sri-lanka-s-agriculture-1788453901"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-threatens-sri-lanka-s-agriculture-1788453901</id>
            <summary type="text">எல் நினோ (El Nino) தாக்கத்தினால் ஏற்படக்கூடிய வறட்சி மற்றும் வெள்ளம் இலங்கையின் விவசாயத்துறையை கடுமையாகப் பாதிக்கும் என்று பேராசிரியர் கோபாலப்பிள்ளை அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ (El Nino) தாக்கத்தினால் ஏற்படக்கூடிய வறட்சி மற்றும் வெள்ளம் இலங்கையின் விவசாயத்துறையை கடுமையாகப் பாதிக்கும் என்று பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமர்தலிங்கம் தெரிவித்தார்.
</p><p>
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,</p><p> 


இதனால் உணவு உற்பத்தி மற்றும் நாட்டின் பொருளாதாரம் பெரும் நெருக்கடியைச் சந்திக்கும். 

நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் இலங்கைக்கு ஒரு எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.
</p><p>
குறிப்பாக, பாதுகாப்பற்ற இடங்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள் மலைப் பிரதேசங்களில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தலாம்.
</p><p>
 குளங்கள் புனரமைக்கப்பட்டாலும், முறையான நீர்வள முகாமைத்துவம் இல்லாததால் ஒரே மாவட்டம் வறட்சியையும் வெள்ளத்தையும் எதிர்கொள்ளும் நிலை ஏற்படுகிறது.

கொழும்பு போன்ற நகரங்களில் நீர் வரத்து குறைவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/KY07L6-GGow" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T16:55:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 44 வயது நபரின் மோசமான செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nb-man-charged-with-child-sexual-abuse-material-1788453070"></link>
            <id>https://canadamirror.com/article/nb-man-charged-with-child-sexual-abuse-material-1788453070</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்திலுள்ள ஒரோமொக்டோவைச் சேர்ந்த 44 வயது நபர் மீது, குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்திலுள்ள ஒரோமொக்டோவைச் சேர்ந்த 44 வயது நபர் மீது, குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பான காட்சிகளை வைத்திருந்ததாகவும் பரப்புரை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p>
வயதான எரிக் எட்வார்ட் கிரிகோயர் என்ற நபர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>புதன்கிழமை ஃபிரெட்ரிக்டன் மாகாண நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர் மீது, இத்தகைய சட்டவிரோதப் பொருட்களை வைத்திருந்தது மற்றும் பிறருக்குப் பகிர்ந்தளித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b42fd8a-8c51-4292-8a9b-6b901dc86c31/26-6a99a0d065623.webp' /></p><p>
கனடிய காவல் துறையின் இணையக் குழந்தை சுரண்டல் தடுப்புப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 2025-ல் இந்த விசாரணை தொடங்கியது.
</p><p>ஜனவரி 21, 2026 அன்று ஒரோமொக்டோவில் உள்ள இவரது வீட்டில் சோதனை ஆணை மூலம் ஆய்வு நடத்திய காவல்துறை, கிரிகோயாரைக் கைது செய்து அவரிடமிருந்த பல மின்னணு சாதனங்களைப் பறிமுதல் செய்தது.</p><p>
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணைக்காக இவர் அக்டோபர் 7 அன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T16:48:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிருஷ்ண ஜெயந்திக்கு என்ன செய்யணும் என்ன செய்ய கூடாதுன்னு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/what-to-do-and-not-to-do-on-krishna-janmashtami-1788450538"></link>
            <id>https://manithan.com/article/what-to-do-and-not-to-do-on-krishna-janmashtami-1788450538</id>
            <summary type="text">மும்மூர்த்திகளுள் ஒருவரான மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினமே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. இதனை கோகுலாஷ்டமி, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மும்மூர்த்திகளுள் ஒருவரான மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினமே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. </p><p>இதனை கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்றும் அழைப்பர்.

இந்து மத நம்பிக்கைகளின்படி, பகவான் கிருஷ்ணர் ஆவணி மாத கிருஷ்ணபட்ச அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d02a195c-a9f7-4c1a-af70-8dd835211215/26-6a99a0ba88189.webp' /></p><p></p><p> </p><p>அந்த வகையில், இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 04ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது.

மதுரா நகர சிறைச்சாலையில் தேவகி–வசுதேவர் தம்பதிக்கு மகனாக கிருஷ்ணர் பிறந்ததாக புராணங்கள் கூறுகின்றன.</p><p> பொதுவாக அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் ஒரே நாளில் வராது. ஆனால் இந்த ஆண்டு இரண்டும் ஒரே நாளில் அமைவது சிறப்பாகக் கருதப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, வீடுகளில் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடமிட்டு அழகு பார்ப்பது வழக்கம்.</p><p> </p><p>மேலும், கிருஷ்ணருக்கு பிடித்த அவல், வெண்ணெய் உள்ளிட்டவற்றைக் கொண்டு பலகாரங்கள் செய்து படைத்து பூஜை செய்து வழிபடுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7939c54b-ed1a-4791-b795-81651863b076/26-6a99a0bb3e41e.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தி நாளில் என்னென்ன செய்ய வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து பலருக்கும் சரியாகத் தெரிவதில்லை. நாளைய தினம் கிருஷ்ண ஜெயந்தியன்று கடைப்பிடிக்க வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை குறித்து விரிவாக இந்தப் பதிவில் பார்க்கலாம்.</p><p><b>வீட்டை சுத்தம் செய்யவும்
</b></p><p>கிருஷ்ண ஜெயந்திக்கு முன்னதாக வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையை அழகாக அலங்கரித்துக் கொள்ளவும். வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி வருவதால், வியாழக்கிழமையே வீட்டை பெருக்கி, துடைத்து சுத்தம் செய்து விடுவது நல்லது. இந்த தினத்தில் வீட்டை சுத்தம் செய்வது கூடாது.&nbsp;</p><p><b>
கிருஷ்ணரின் பாதங்களை வரையவும்</b></p><p>
கிருஷ்ண ஜெயந்தியின் முக்கிய வழக்கங்களில் ஒன்று, குட்டி கிருஷ்ணர் வீட்டிற்குள் வருவது போல் பாதங்களை வரைவதாகும். பச்சரிசி மாவை நீரில் கரைத்து, வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரை கிருஷ்ணரின் பாதங்களை வரையலாம். இந்த தினத்தில் பூஜை அறையை அலங்கரிக்காமல் இருப்பது அசுபம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0feab5e6-80e6-48c3-84e6-842eb3f2978d/26-6a99a0bbea1f5.webp' /></p><p><b>
கிருஷ்ணரின் படங்கள் அல்லது சிலைகளை அலங்கரிக்கவும்
</b></p><p>வீட்டில் உள்ள கிருஷ்ணரின் படங்கள் அல்லது சிலைகளை பூக்கள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கலாம்.கிருஷ்ணருக்கு பிடித்ததாகக் கருதப்படும் பால் பொருட்களைக் கொண்டு பலகாரங்கள் செய்து படைத்து, சிறப்பு பூஜை செய்து வழிபடலாம்.நேரம் இல்லையெனில், வெண்ணெய், அவல் மற்றும் வெல்லம் ஆகியவற்றை படைத்து வழிபடலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3801cf26-c7e9-4c98-a2b2-1460f5313e6e/26-6a99a0bc9da4a.webp' /></p><p></p><p><b>
எப்போது பூஜை செய்ய வேண்டும்?</b></p><p>
கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாகக் கருதப்படுவதால், வடஇந்தியாவில் நள்ளிரவில் பூஜை செய்வது வழக்கம். தமிழ்நாட்டில் பொதுவாக மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு விளக்கேற்றி, பிரசாதங்களைப் படைத்து கிருஷ்ணரை மனதார வழிபடுவது சகல செல்வ செழிப்பையும் கொடுக்கும் என்பது ஐதீகம்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b> &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T16:31:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்சர்வேடிவ் கட்சியில் தொடரும் நெருக்கடி: மேலும் 2 சட்ட மன்ற உறுப்பினர்கள் பதவி விலகல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bc-conservative-exodus-continues-with-2-more-mlas-1788445210"></link>
            <id>https://canadamirror.com/article/bc-conservative-exodus-continues-with-2-more-mlas-1788445210</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் மேலும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகி சுயேச்சைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் மேலும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகி சுயேச்சைகளாகச் செயல்படத் தீர்மானித்துள்ளனர். </p><p>
அதேவேளையில், கட்சித் தலைவர் கெர்ரி-லின் ஃபைண்ட்லேயின் தலைமை அதிகாரி கிறிஸ் டெலானியும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.</p><p> 
பவுண்டரி-சிமில்கமீன் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வில்சன் புதன்கிழமை காலை தனது விலகலை அறிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b73b66a3-46da-4e2b-8ca8-7942f8f5d29f/26-6a99821b844e0.webp' /></p><p> </p><p>
ஃபைண்ட்லே தலைவரானபோது திறந்த மனதுடன் அவருக்கு 3 மாத காலம் அவகாசம் கொடுக்க முடிவெடுத்தேன். 3 மாதங்களுக்குப் பிறகு எனக்குப் பதில் கிடைத்துவிட்டது. நிலைமை இவ்வளவு விரைவாக இவ்வளவு மோசமடையும் என்று நான் நினைக்கவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார். </p><p>
கொலம்பியா ரிவர்–ரெவெல்ஸ்டோக் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான மெக்கின்னிஸ் பிற்பகலில் விலகினார்.</p><p>
"தற்போதைய தலைமையின் கீழ் பிரிட்டிஷ் கொலம்பியா மக்களுக்குச் சேவையாற்றும் எனது இலக்கை அடைய முடியாது என நம்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><p> 
மே மாதம் ஃபைண்ட்லே தலைவராகப் பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த மூன்று வாரங்களில் மட்டும் கட்சியிலிருந்து விலகும் 8-வது மற்றும் 9-வது சட்ட மன்ற உறுப்பினர்கள் இவர்களாவர். </p><p>
விலகிய உறுப்பினர்கள் அனைவரும் சுயேச்சைகளாகச் செயல்பட முடிவெடுத்துள்ளனர். </p><p>
தலைவர் ஃபைண்ட்லே, தனது தலைமை அதிகாரி கிறிஸ் டெலானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார்.</p><p> அவருக்குப் பதிலாக, ஃபைண்ட்லே இடைத்தேர்தலில் போட்டியிட வழிவிடும் வகையில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ரியான் காஸ்பர் புதிய தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T16:30:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த சண்டே விஜய் டிவியில் ஒரே மாஸ் தான்... என்னென்ன ஷோ, படம் லிஸ்ட் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/this-week-sunday-special-in-vijay-tv-1788424308"></link>
            <id>https://cineulagam.com/article/this-week-sunday-special-in-vijay-tv-1788424308</id>
            <summary type="text">விஜய் டிவிவிஜய் டிவி, இளைஞர்களுக்கு என்ன பிடிக்குதோ, அவர்களின் பல்ஸை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார் போல் நிகழ்ச்சிகள், சீரியல்கள் ஒளிபரப்பி முன்னணி தொல...</summary>
            <content type="html"><![CDATA[<h2>விஜய் டிவி</h2><p>விஜய் டிவி, இளைஞர்களுக்கு என்ன பிடிக்குதோ, அவர்களின் பல்ஸை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார் போல் நிகழ்ச்சிகள், சீரியல்கள் ஒளிபரப்பி முன்னணி தொலைக்காட்சியாக வலம் வருகிறார்கள். </p><p>வார நாட்களில் சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, சின்ன மருமகள் என விதவிதமான கதைக்களம் கொண்ட தொடர்களும், வார இறுதி நாட்களில் சூப்பர் சிங்கர், கேம் ஷோக்கள் எனவும் ஒளிபரப்பாகி வருகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/606e8fe6-4d0e-4736-8e02-94b2439863d5/26-6a9936294b4a5.webp' /></p><h2>சண்டே ஸ்பெஷல்</h2><p>
தற்போது வரும் செப்டம்பர் 6ம் தேதி ஒளிபரப்பாக போகும் ஸ்பெஷல் ஷோக்கள், படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. </p><p>வரும் செப்டம்பர் 6, சண்டே மதியம் 1.30 மணிக்கு சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமாரில் தரமான நடிப்பில் வெளியாகி செம சூப்பர் டூப்பர் ஹிட்டான தாய் கிழவி திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0da95059-4b16-4e47-98fa-339b31e1227c/26-6a9936284ba4a.webp' /></p><p> </p><p>அதனை தொடர்ந்து பிக்பாஸ் காமென் மேன் பைனல் எபிசோட் மாலை 4.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம். </p><p>அதோடு கடந்த சில வாரங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் 10வது சீசனின் ஆரம்ப நிகழ்ச்சி பிரம்மாண்டமாக மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக துவங்குகிறது.</p>]]></content>
            <updated>2026-09-03T16:30:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸ் நடிகை பூர்ணிமா ரவியின் கிளாமர் லுக் ஷூட்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/biggboss-poornima-ravi-recent-photoshoot-post-1788445431"></link>
            <id>https://viduppu.com/article/biggboss-poornima-ravi-recent-photoshoot-post-1788445431</id>
            <summary type="text">பூர்ணிமா ரவிடப்ஸ்மாஷ் மற்றும் டிக்டாக்கில் வீடியோக்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து பிரபலமானவர் பூர்ணிமா ரவி. யூடியூப் சேனலில் பல வீடியோக்களை...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பூர்ணிமா ரவி</h2><p>டப்ஸ்மாஷ் மற்றும் டிக்டாக்கில் வீடியோக்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து பிரபலமானவர் பூர்ணிமா ரவி. யூடியூப் சேனலில் பல வீடியோக்களை பகிர்ந்து தனக்கென ஒரு ஃபேமை உருவாக்கி பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டார் பூர்ணிமா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/525de681-b9b2-4dd6-8912-c83288efc004/26-6a99830265f22.webp' /></p><p>
</p><p>
பிக்பாஸ் வீட்டில் 96 நாட்கள் உள்ளே இருந்து வெளியேறிய பூர்ணிமா ரவி, 16 லட்சம் ரொக்கத்துடன் வெளியேறினார். தபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் செவப்பி, எல்லோ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
</p><p>
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது, கிளாமர் லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-03T16:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/key-announcement-for-scholarship-exam-students-1788452528"></link>
            <id>https://jvpnews.com/article/key-announcement-for-scholarship-exam-students-1788452528</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டின் 5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 6 ஆம் தரத்திற்கான விண்ணப்பங்களை அதிபர்கள் ஊடாக இணையவழி (Online) முறைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டின் 5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 6 ஆம் தரத்திற்கான விண்ணப்பங்களை அதிபர்கள் ஊடாக இணையவழி (Online) முறையில் சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p> 

அறிக்கையொன்றை வெளியிட்டு அந்த அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d93bbab-bd11-4ef5-a065-e4efd98368cf/26-6a999eb61926a.webp' /></p><p> </p><p>

இதற்கான உரிய திகதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படவுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T16:24:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசின் 22ஆவது திருத்தத்துக்கு எதிராக கொழும்பில் திரண்ட எதிர்க்கட்சியினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/massive-protest-government-s-22nd-amendment-1788451207"></link>
            <id>https://tamilwin.com/article/massive-protest-government-s-22nd-amendment-1788451207</id>
            <summary type="text">அரசின் மக்கள் விரோத அரசமைப்பு 22ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக,
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கொழும்பு கோட்டை தொடருந்து&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசின் மக்கள் விரோத அரசமைப்பு 22ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக,
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கொழும்பு கோட்டை தொடருந்து&nbsp; நிலையத்துக்கு முன்பாக இன்று மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைந்து ஏற்பாடு
செய்திருந்த இந்தப் போராட்டத்தில், நாட்டின் நாலாபாகங்களிலிருந்தும் திரண்டு
வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், அரசியல் ஆர்வலர்கள் மற்றும் ஆதரவாளர்கள்
பங்கேற்று அரசுக்கு எதிரான தமது பலமான எதிர்ப்பைக் காட்டினர்.</p><h2>மாபெரும் போராட்டம்</h2><p>
</p><p>
போராட்டத்தின் நடுவே மக்கள் வெள்ளத்தின் மத்தியில் கலந்துகொண்டு உரையாற்றிய
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மக்களின் அடிப்படை உரிமைகளைப்
பறிக்கும் எந்தவொரு சட்டமூலத்துக்கும் நாடா ளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும்
தகுந்த பதிலடி கொடுப்போம் என்று சூளுரைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/babb0125-2625-42c2-81f9-c5cecf888503/26-6a999b57a2c02.webp' /></p><p>

தலைநகரின் முக்கிய போக்குவரத்து மையமான கோட்டை ரயில் நிலையச் சந்தியை
முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், அரசமைப்பைத் துஷ்பிரயோகம் செய்யும் அரசின்
நடவடிக்கையைக் கண்டித்தும், ஜனநாயகத்தைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தியும்
கடுமையான கோஷங்களை எழுப்பினர்.
</p><p>
மிகக் கச்சிதமாகவும் கட்டுப்பாட்டுடனும் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம்
அந்தப் பகுதியைச் ஸ்தம்பிக்க வைத்தது.

எதிர்க்கட்சிகளின் இந்த அதிரடி நகர்வு அரசுக்குப் பாரிய அரசியல் அழுத்தத்தைக்
கொடுத்துள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T16:08:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த மாதம் திருமணம்..கனடாவில் தமிழக மாணவர் மர்மமான முறையில் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/29-year-old-tamil-guy-died-who-studying-canada-1788436664"></link>
            <id>https://news.lankasri.com/article/29-year-old-tamil-guy-died-who-studying-canada-1788436664</id>
            <summary type="text">Tamilnadu guy died in canada: இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர், கனடாவில் இருந்து புறப்பட இருந்தபோது உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>Tamilnadu guy died in canada: இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர், கனடாவில் இருந்து புறப்பட இருந்தபோது உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
தமிழ்நாட்டின் ஊட்டியைச் சேர்ந்த அரவிந்தன் என்ற மாணவர், கனடாவில் இருந்து இந்தியாவிற்கு புறப்பட இருந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. </p><h2>கனடாவில் உயர் கல்வி 
</h2><p>
நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் அரவிந்தன். இவர் கனடாவில் உயர் கல்வி பயின்று வந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8b544bc-1044-4267-88d7-3c4001288cb5/26-6a9966cb236c7.webp' /></p><p></p><p> 

அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், நேற்றைய தினம் அரவிந்தன் இந்தியாவிற்கு புறப்பட இருந்தபோது உயிரிழந்துள்ளார்.
</p><p>
அரவிந்தனின் பெற்றோரை தொடர்புகொண்ட கனேடிய பொலிஸார், அவர் 18வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.</p><p> 

இந்த நிலையில், அரவிந்தனின் பெற்றோர் தங்கள் மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், உடலை உடனடியாக இந்தியாவிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T16:06:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[02 இலட்சம் பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/information-released-on-200-000-school-students-1788451173"></link>
            <id>https://jvpnews.com/article/information-released-on-200-000-school-students-1788451173</id>
            <summary type="text">கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலாம் தரம் முதல் 10 ஆம் தரம் வரையான சுமார் 2 இலட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியுள்ளதாக புனர்வாழ்வு ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலாம் தரம் முதல் 10 ஆம் தரம் வரையான சுமார் 2 இலட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியுள்ளதாக புனர்வாழ்வு பணியகம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">

மாணவர்கள் பாடசாலையை விட்டு விலகுவதற்கு போதை பாவனையும் முக்கிய காரணியாக அமைந்துள்ளதாக புனர்வாழ்வு பணியகத்தின் நிர்வாக சபை பணிப்பாளர் பேராசிரியர் வசந்த சுபசிங்க தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ef444e4-c840-4e19-83ec-bee62379604f/26-6a999966ae419.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருள் பாவனை</h2><p style="text-align: justify; ">

கொழும்பில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

எனவே பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தும் மாணவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அத்துடன் , அவர்கள் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட ஆபத்தான சூழ்நிலைகளுக்குள் செல்வதைத் தடுப்பதற்காக துரிதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-03T15:59:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தடைப்படும் மின்சாரம் : பட்டம் விடுபவர்களுக்கு மின்சார சபை வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/avoid-flying-kites-near-high-voltage-transmission-1788449530"></link>
            <id>https://ibctamil.com/article/avoid-flying-kites-near-high-voltage-transmission-1788449530</id>
            <summary type="text">220 kV மற்றும் 132 kV உயர் மின்னழுத்த மின் செலுத்தல் தடங்கள், கோபுரங்கள் மற்றும் மின்கட்டமைப்பு துணை மின் நிலையங்களுக்குக் கீழேயோ, அருகிலோ அல்லது சுற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>220 kV மற்றும் 132 kV உயர் மின்னழுத்த மின் செலுத்தல் தடங்கள், கோபுரங்கள் மற்றும் மின்கட்டமைப்பு துணை மின் நிலையங்களுக்குக் கீழேயோ, அருகிலோ அல்லது சுற்றியோ பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறு தேசிய மின் அமைப்பு இயக்குநரகம் (NSO) பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
</p><p>
தேசிய மின் அமைப்பு இயக்குநரகத்தின் தகவலின்படி, பட்டங்களும் பட்ட நூல்களும் மின் செலுத்து தடங்களில் சிக்கியதால் பல தடைகள் ஏற்பட்டுள்ளன.</p><h2>மின்விநியோகம் தானாகவே துண்டிக்க வாய்ப்பு</h2><p>இத்தகைய சம்பவங்கள் மின்சாரக் கோளாறுகளை ஏற்படுத்தி, மின் செலுத்துத் தடங்கள் தானாகவே துண்டிக்கப்படுவதற்கு வழிவகுக்கும். சிக்கிய பட்டங்களையும் நூல்களையும் கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பான சூழ்நிலைகளில் கைமுறையாக அகற்ற வேண்டும் என்றும் தேசிய மின் அமைப்பு இயக்குநரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9174301e-074f-4e23-9011-6d54cf4e2aef/26-6a999954afefe.webp' /></p><p>
</p><p>
இந்தச் சம்பவங்கள் தேசிய மின் அமைப்பின் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை கடுமையாகப் பாதிக்கக்கூடும், மேலும் மின் உற்பத்தி அலகுகள் துண்டிக்கப்படுவதற்கும் வழிவகுக்கலாம்.</p><p></p><h2>நுகர்வோரின் மின்சார விநியோகத்தில் தற்காலிகத் தடைகள்&nbsp;</h2><p>

குறிப்பாக, 02 செப்டம்பர் 2026 அன்று, இவ்வகையான சம்பவங்கள் மின் அமைப்பின் நிலைத்தன்மையை மோசமாகப் பாதித்தன. அமைப்பின் நிலைத்தன்மையைப் பராமரிப்பதற்கான ஒரு அவசர நடவடிக்கையாக, தேர்ந்தெடுக்கப்பட்ட விநியோக ஊட்டிகளை அணைக்க வேண்டியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5a7ec09-7611-4e90-9a1a-af27fea25da4/26-6a99995560dfa.webp' /></p><p>

இதனால், அந்த மின்வழங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ள நுகர்வோரின் மின்சார விநியோகத்தில் தற்காலிகத் தடைகள் ஏற்பட்டதாக அந்த அறிக்கை தெரிவித்தது.
</p><p>
எனவே, உயர் மின்னழுத்த மின் செலுத்துத் தடங்கள், கோபுரங்கள் மற்றும் மின்கட்டமைப்புத் துணை மின் நிலையங்களுக்கு அருகில் பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறும், தேசிய மின்சார அமைப்பின் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் தடையற்ற செயல்பாட்டை உறுதி செய்வதில் ஒத்துழைக்குமாறும் தேசிய மின்சார அமைப்பு (NSO) பொதுமக்களை வலியுறுத்தியது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T15:59:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு- புறநகர் பகுதியில் 40 பேருந்துகள் மீது சோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/40-buses-failed-fitness-tests-in-petta-ntc-1788447324"></link>
            <id>https://tamilwin.com/article/40-buses-failed-fitness-tests-in-petta-ntc-1788447324</id>
            <summary type="text">கொழும்பு- பெட்டா பாஸ்டியன் மாவத்த பேருந்து நிலையத்தில் தேசிய போக்குவரத்து
ஆணையம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் இணைந்து நடத்திய
அதிரடி ஆய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு- பெட்டா பாஸ்டியன் மாவத்த பேருந்து நிலையத்தில் தேசிய போக்குவரத்து
ஆணையம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் இணைந்து நடத்திய
அதிரடி ஆய்வில், 40 நீண்ட தூரத் தனியார் மற்றும் அரச பேருந்துகள் தகுதியற்றவை என கண்டறியப்பட்டுள்ளன.

​</p><p>நேற்று(2.9.2026) காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில்,
சுமார் 67 பேருந்துகளின் எஞ்சின் நிலை, புகை வெளியேற்றம் மற்றும் பயணிகளின்
பாதுகாப்பு வசதிகள் சோதிக்கப்பட்டன.

​</p><h2>சோதனைகள்</h2><p>இதில் கடுமையான பழுதுகள் கொண்ட 2 பேருந்துகளுக்கு உடனடியாகத் தடை
விதிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 38 பேருந்துகளின் குறைபாடுகளை 14
நாட்களுக்குள் சரிசெய்து, வேரஹேரா அலுவலகத்தில் மீண்டும் ஆய்வுக்கு
உட்படுத்துமாறு உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/381b3202-3bce-4a1b-accc-5c4e1816230f/26-6a998d0fcb641.webp' /></p><p>
</p><p>
அத்துடன் ​பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நாடு முழுவதும் இத்தகைய சோதனைகள்
தொடரும் என NTC இன் தலைமை இயக்குநர் நிலன் மிராண்டா தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T15:54:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலியத் தாக்குதலுக்கு எதிராக அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-warns-the-us-against-an-israeli-attack-1788448908"></link>
            <id>https://tamilwin.com/article/iran-warns-the-us-against-an-israeli-attack-1788448908</id>
            <summary type="text">தெற்கு லெபனானில் (ஹிஸ்புல்லா) அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள அலி அல்-தாஹிர்
மலைத்தொடர் மீது இஸ்ரேல் பாரிய தாக்குதலை நடத்தினால், அதற்கு எதிராக கடுமையா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு லெபனானில் (ஹிஸ்புல்லா) அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள அலி அல்-தாஹிர்
மலைத்தொடர் மீது இஸ்ரேல் பாரிய தாக்குதலை நடத்தினால், அதற்கு எதிராக கடுமையான
பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான், அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
விடுத்துள்ளது.</p><p>

ஓமான் நாட்டின் ஊடாக கடந்த மாதம் இந்த எச்சரிக்கை செய்தி வொஷிங்டனுக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
</p><p>
குறிப்பிட்ட மலைத்தொடர் பகுதியில் ஹிஸ்புல்லா போராளிகளுடன் இணைந்து ஈரானின்
இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட
உறுப்பினர்கள் சிலர் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.</p><h2>இஸ்ரேலுக்கு அழுத்தம்</h2><p>
</p><p>
இந்த நிலையில், அங்குள்ள நிலத்தடி கட்டளை மையம் மற்றும் ஆயுதக் கிடங்குகளை
இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் தொடர்ச்சியான முற்றுகை நடவடிக்கைகளை
முன்னெடுத்து வருகிறது.
</p><p>
இருப்பினும், இந்த பகுதி மீது முழு அளவிலான தாக்குதலை நடத்துவது ஜூன் மாதம்
எட்டப்பட்ட உடன்படிக்கையை கடுமையாக மீறும் செயல் என ஹிஸ்புல்லா அமைப்பு
சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53177b8e-9dfd-4137-ad80-28372b196b9b/26-6a99973457098.webp' /></p><p>
</p><p>
அத்துடன், அலி அல்-தாஹிர் பகுதியைக் கைப்பற்ற இஸ்ரேல் முயன்றால்
பிராந்தியத்தில் மீண்டும் ஒரு முழு அளவிலான போர் வெடிக்கும் என்றும்
எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>

தற்போது இஸ்ரேலிய படைகள் அந்தப் பகுதியைச் சுற்றி முற்றுகையிட்டு உணவு மற்றும்
நீர் விநியோகங்களைத் தடுத்து வரும் அதேவேளை, நிலைமையை மேலும் தீவிரமடைய
விடாமல் தவிர்க்க அமெரிக்கா இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T15:50:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்துவிட்டேன்... பிரபல நடிகர் வருத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/missed-movie-chance-in-vijay-master-movie-1788421679"></link>
            <id>https://cineulagam.com/article/missed-movie-chance-in-vijay-master-movie-1788421679</id>
            <summary type="text">மாஸ்டர் படம்பிகில் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடித்த திரைப்படம் தான் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன், விஜய் சேதுபதி, மாளவிகா ம...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மாஸ்டர் படம்</h2><p>பிகில் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடித்த திரைப்படம் தான் மாஸ்டர். </p><p>லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடிக்க அனிருத் இசையமைப்பில் வெளியாகி இருந்தது. </p><p>விஜய்யின் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்த மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்துவிட்டேன் என ஒரு பிரபலம் வருத்தம் தெரிவித்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de1dafaa-c8c3-429d-a223-8dafe1bb0cf3/26-6a9929bd06e3b.webp' /></p><h2>
நடிகர்</h2><p>
நான் விஜய் அவர்களின் தீவிர ரசிகன். அவர் நடித்த மாஸ்டர் படத்தில் அர்ஜுன் தாஸ் நடித்த வேடத்தில் நான் தான் நடிக்க வேண்டியது. ஆனால் அப்போது வேறொரு படத்தில் கமிட் ஆகியிருந்ததால் அதை மிஸ் பண்ணிட்டேன். </p><p>இப்போது விஜய் CM ஆகிட்டாரு, இனிமேல் அவருடன் நடிக்கவே முடியாதே என இப்போதும் மிகவும் வருத்தமாக உள்ளது என ஒரு பேட்டியில் மலையாள சினிமா நடிகர் ஆண்டனி வர்கீஸ் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59c1933d-870a-4fce-8ffd-419626e3c338/26-6a9929bc29320.webp' /></p>]]></content>
            <updated>2026-09-03T15:36:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த ராசி பெண்கள் முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம்! உங்க ராசியும் இதுவா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-zodiacs-women-cant-forget-their-ex-boyfriend-1788446792"></link>
            <id>https://manithan.com/article/which-zodiacs-women-cant-forget-their-ex-boyfriend-1788446792</id>
            <summary type="text">பொதுவாகவே அனைவரின் வாழ்க்கையிலும் காதல் என்பது மறுக்க முடியாத, ஆழமான மற்றும் வலிமையான உணர்வாகும். காதல் ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, நம்பிக்கை, எத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாகவே அனைவரின் வாழ்க்கையிலும் காதல் என்பது மறுக்க முடியாத, ஆழமான மற்றும் வலிமையான உணர்வாகும். காதல் ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, நம்பிக்கை, எதிர்பார்ப்பு போன்ற பல அழகான உணர்வுகளை ஏற்படுத்தக்கூடியது.</p><p> ஆனால், எல்லா காதல் உறவுகளும் இறுதியில் வெற்றிகரமாகத் திருமணம் அல்லது நிரந்தரமான உறவில் முடிவதில்லை. சில காதல்கள் எதிர்பாராத காரணங்களால் தோல்வியடைந்து, பிரிவில் முடிவடைகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e842fbc6-dba8-4680-9365-f9dae4a2feb0/26-6a999324689d4.webp' /></p><p>
எவ்வளவு ஆழமான மற்றும் வலிமையான காதலாக இருந்தாலும், ஒரு உறவு முடிவடைந்த பிறகு அதிலேயே சிக்கிக்கொண்டு வாழ்க்கையைத் தேக்கி வைப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது. </p><p>ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், சில ராசிகளில் பிறந்த பெண்கள் தங்களுடைய கடந்த கால காதல் மற்றும் முன்னாள் துணையின் நினைவுகளை எளிதில் விட்டுவிட முடியாதவர்களாக இருப்பார்களாம்.&nbsp;</p><p>மற்றவர்களுடன் ஒப்பிடும்போது சில ராசிப் பெண்கள் தங்களுடைய முன்னாள் காதல் உறவுகளை மறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். </p><p>அப்படி தங்களுடைய முன்னாள் காதலையும் கடந்த கால உறவுகளையும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாமல் வாழ்க்கை முழுவதும் நினைவுகளை சுமந்தப்படி வாழும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/808667cf-e641-4c9c-bc05-e51993c8c92e/26-6a9993251a20a.webp' /></p><h2>
</h2><p>கடக ராசிப் பெண்கள் உணர்ச்சிகளின் அதிபதியான சந்திரனால் ஆளப்படுவதால் இவர்களின் காதல் மிகவும் உண்மையானதாகவும் ஆழமானதாகவும் இருக்கும்.&nbsp;</p><p>அவர்களின் காதல் தோல்வியில் முடிந்தால் அவர்களின் இதயம் அதிலிருந்து மீண்டு வர அதிக காலம் எடுக்கும்.அவர்களின் நினைவுகள் பெரும்பாலும் பழைய காதலலை சுற்றியே இருக்கும்.&nbsp;</p><p>இவர்களி்ன் நிலையை சுற்றியே இருக்கும். அதை சுற்றியே இருக்கும், மேலும் அவர்கள் கடந்த காலத் தருணங்களை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கலாம். </p><h2>விருச்சிகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69b40757-c01f-45d4-ad89-3036fb9a2a2d/26-6a999325c0091.webp' /></p><p></p><p>
விருச்சிக ராசிப் பெண்கள் தீவிரமானவர்கள் மற்றும் தீவிர ஆர்வம் கொண்ட பெண்களாக அறியப்படுகின்றார்கள். அவர்கள் எந்தவொரு விஷயத்தையும் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள்இ</p><p>குறிப்பாக கடந்த கால நினைவுகளை மீண்டும் மீண்டும் நினைத்து கஷ்டப்படுவார்கள். குறிப்பான முன்னாள் காதலனின் நினைவுகுள் இவர்களை பாடாய் படுத்தும்.&nbsp;</p><p>அவர்கள் நம்பிக்கைக்கும் உறவுக்கும் அதிக மதிப்பு கொடுப்பதால், ஒருவர் அவர்களை விட்டுப் பிரிந்து செல்லும்போது அவர்கள் அதை துரோகமாகக் கருதுவார்கள். அதனால் மறப்பது மிகுந்த வலியை கொடுக்கும்.</p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dd893f9-2a02-4e71-b21c-43fd59d0de24/26-6a99932677030.webp' /></p><p></p><p>
ரிஷப ராசிப் பெண்கள் தங்கள் காதல் உறவுகளில் நிலைத்தன்மையையும் பாதுகாப்பையும் முக்கிய விடயமாக கருதுவார்கள்.&nbsp;</p><p>மாற்றங்களை விரும்பாத இவர்களுக்கு, உறவு முறிவு என்பது மிகுந்த மன உளைச்சலையும் மறக்கவே முடியாத வலியையும் கொடுக்கும்.&nbsp;</p><p> இழப்பை ஏற்றுக்கொள்வது இவர்களுக்குக் கடினம் என்பதால், அந்த உறவு முறிந்த பிறகும் மீண்டும் இணையக்கூடும் என்ற நம்பிக்கையில் காலத்தை கடக்கும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</b></p><p><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><b><br></b></p><p>&nbsp; &nbsp;&nbsp;</p><br><p><br></p><br><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T15:33:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான நிலைய புகைப்படங்களை எடுத்த ஒன்டாரியோ பல்கலை மாணவர் அமெரிக்காவில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ontario-student-accused-of-taking-airport-photos-1788444613"></link>
            <id>https://canadamirror.com/article/ontario-student-accused-of-taking-airport-photos-1788444613</id>
            <summary type="text">ரொறன்டோ மற்றும் சிகாகோ விமான நிலையங்களில் சீனாவுக்கு உளவு பார்க்கும் வகையில் புகைப்படங்கள் எடுத்த குற்றச்சாட்டின் பேரில், கனடாவின் ஒன்டாரியோ பல்கலைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரொறன்டோ மற்றும் சிகாகோ விமான நிலையங்களில் சீனாவுக்கு உளவு பார்க்கும் வகையில் புகைப்படங்கள் எடுத்த குற்றச்சாட்டின் பேரில், கனடாவின் ஒன்டாரியோ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் அமெரிக்காவில் எதிர்-உளவுத்துறை விசாரணையின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>
கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் பயிலும் சீனக் குடிமகனான வேஹெங் ஜெங் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>
மிச்சிகன் நீதிமன்றத்தில் எஃப்.பி.ஐ தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின்படி, கடந்த ஏப்ரல் மாதம் சிகாகோவின் ஓ'ஹேர் விமான நிலையத்தில் நடந்த ஒரு சம்பவத் தொடர்பில் இவர் மீது அதிகாரிகளின் கவனம் திரும்பியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bb2ec9d-a129-44e4-ba54-10073ec2d430/26-6a997fc733994.webp' /></p><p> 
ஏப்ரல் 21 அன்று, ஓ'ஹேர் விமான நிலையத்தின் ஃபெட்எக்ஸ் சரக்கு மையத்தில் ஒருவர் புகைப்படங்கள் எடுப்பது, ஃபோர்க்லிஃப்ட் வாகனத்தின் மீது ஏறுவது மற்றும் பூட்டப்பட்ட கொள்கலன்களைத் திறக்க முயல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டது கண்காணிப்புக் கேமராவில் பதிவானது.</p><p> 
ஜெங் அம்பாஸடர் பாலம் வழியாக அமெரிக்காவிற்குள் நுழைந்த 10 நாட்களில் இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவ இடத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒன்டாரியோ பதிவு எண் கொண்ட மினிவான் கார் ஜெங்குடன் தொடர்புடையது என கண்டறியப்பட்டது.</p><p> 
ஆகஸ்ட் 23 அன்று, அதே மினிவான் காரில் ஜெங் மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைய முயன்றபோது, எல்லைப் பாதுகாப்பு முகவர்களாலும் FBI அதிகாரிகளாலும் தனியாக அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
</p><p>விசாரணையின் போது ஜெங் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்ததால், அவர் மீது "பொய்யான தகவல்களைத் தெரிவித்ததாக" வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T15:30:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேன்முறையீட்டு நீதிமன்ற புதிய நீதிபதியாக சஜீவனி தில்கா லக்மாலி பதவிப் பிரமாணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sajeevani-lakmali-sworn-in-as-ca-judge-1788449161"></link>
            <id>https://jvpnews.com/article/sajeevani-lakmali-sworn-in-as-ca-judge-1788449161</id>
            <summary type="text">மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சஜீவனி தில்கா லக்மாலி கருணாநாயக்க இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னில...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சஜீவனி தில்கா லக்மாலி கருணாநாயக்க இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.</p><p style="text-align: justify; "> 

இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும் பணியாற்றியுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f66977a7-cc03-41cb-b14b-3d2c902e518e/26-6a99918acbe8f.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

தற்போது வெற்றிடமாக உள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பதவிக்காக குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-03T15:30:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[குவைத் மற்றும் ஐக்கிய அமீரகத்திலுள்ள அமெரிக்க தளங்களை அதிகாலைவேளை துவம்சம் செய்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-army-attacks-target-us-communications-systems-1788446752"></link>
            <id>https://ibctamil.com/article/iran-army-attacks-target-us-communications-systems-1788446752</id>
            <summary type="text">ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் இராணுவம், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் இராணுவம், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் விமானக் கொட்டகைகள் குறிவைக்கப்பட்டன என ஈரானின் அரை அரச செய்தி நிறுவமான தஸ்னிம் தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;இந்தத் தாக்குதல்கள், செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்புகள், ஆயுத கிடங்குகள், போர் விமானக் கொட்டகைகள், படைவீரர் நிலைகள் மற்றும் ராடர் அமைப்புகளைக் குறிவைத்தன.</p><h2>அமெரிக்க தாக்குதல்களுக்கு பதிலடி</h2><p>&nbsp;அமெரிக்காவின் தூண்டுதலற்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் போது ஈரானியப் பொதுமக்கள் மற்றும் ஆயுதப் படையினர் வீரமரணம் அடைந்ததற்குப் பதிலடியாக, தனது 'சயேகே' (மின்னல்) நடவடிக்கையின் 31-வது அலையின் ஒரு பகுதியாக, இன்று (03)வியாழக்கிழமை அதிகாலையில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இராணுவம் கூறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0f9a33e-ae21-4a3b-965a-5c57491289b1/26-6a998b9443a32.webp' /></p><p>
</p><p>
அந்த அறிக்கையின்படி, குவைத்தில் உள்ள அமெரிக்காவால் இயக்கப்படும் அகமது அல்-ஜாபர் விமானத் தளத்தின் மீது ஈரானிய ஏவுகணைகளும் ஆளில்லா விமானங்களும் தாக்குதல் நடத்தின.</p><h2>&nbsp;அமெரிக்க இராணுவத்திற்கு பலத்த சேதம்</h2><p>
</p><p>
இந்தத் தாக்குதல்களால் தகவல் தொடர்பு அமைப்புகளும் போர் விமானக் கொட்டகைகளும் சேதமடைந்ததாக இராணுவம் கூறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e57684e-a852-44ed-b263-8f62599a7f5e/26-6a998b94f2924.webp' /></p><p>
</p><p>
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் மின்ஹாத் விமானப்படைத் தளத்தில், ஈரானியப் படைகள், அமெரிக்க துருப்புக்கள் நிலைநிறுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் ராடர் அமைப்புகளை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் குறிவைத்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
</p><p>
மேற்கு ஆசியாவில் உள்ள அமெரிக்கப் படைகளுக்கு அகமது அல்-ஜாபர் ஒரு முக்கிய தளவாட மற்றும் ஆதரவு மையமாக இருப்பதாக இராணுவம் விவரித்தது.</p><p></p><h2>அமெரிக்காவிற்கு முக்கிய தளங்கள்</h2><p>
</p><p>
இப்பகுதியில் அமெரிக்காவின் வான்வழி நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு செயல்பாடுகளில் இந்தத் தளம் ஒரு முக்கியப் பங்கு வகிப்பதாக அது கூறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db1d10ea-b2c9-4c80-baff-834b9c6d2e2c/26-6a998b95a6a17.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், அல் மின்ஹாத் வெளிநாட்டுப் படைகளின் வான்வழி ஆதரவு மற்றும் போக்குவரத்திற்கான ஒரு முக்கிய மையமாக விவரிக்கப்பட்டது.</p><p>

ஈரானிய சுகாதார அமைச்சகத்தின்படி, தெற்கு ஈரானிய நகரங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய அலைத் தாக்குதல்களில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 142 பேர் காயமடைந்தனர்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T15:00:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பீரியட்ஸ் நின்னு 6 மாசமாச்சு..கர்ப்பமும் இல்ல!! நடிகை ஃபரீனா அசாத் ஓபன் டாக்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/actress-farina-post-goes-viral-on-socialmedia-1788442446"></link>
            <id>https://viduppu.com/article/actress-farina-post-goes-viral-on-socialmedia-1788442446</id>
            <summary type="text">ஃபரீனா அசாத்விஜய் தொலைக்காட்சி சீரியல்களிலும் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி பிரபலமானவர் தான் நடிகை ஃபரினா அசாத். பாரதி கண்ணம்மா சீரியலி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஃபரீனா அசாத்</h2><p>விஜய் தொலைக்காட்சி சீரியல்களிலும் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி பிரபலமானவர் தான் நடிகை ஃபரினா அசாத். பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஃபரீனா, தற்போது பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e4b46ef-06d6-4604-b89a-4876e9ca785c/26-6a99775084988.webp' /></p><p>அதில், எனக்கு மாதவிடாய் நின்று ஏறக்குறைய 6 மாதங்களாகிவிட்டது. மாதவிடாயும் இல்லை, கர்ப்பமும் இல்லை, மாதவிடாய் முற்றிலும் நிறும் வயதும் இல்லை. நான் மருந்துகள் சாப்பிட்டுவிட்டேன், பொறுமையுடன் காத்திருந்துவிட்டேன், கவலைப்பட்டேன், அளவுக்கு அதிகமாக யோசித்தும் பார்த்துவிட்டேன், ஆனால் இன்னும் எதுவும் நடக்கவில்லை. </p><p>இது பார்க்க எளிதாக தோன்றலாம், ஆனால் உண்மையில் இந்த மாதங்கள் முழுவதிலும் என் ஹார்மோன்கள் எப்படி மாறுபட்டுக் கொண்டிருந்தன என்றோ, அல்லாது அதனால் தான் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்றோ எனக்கு தெரியவில்லை. மனநிலை மாற்றங்கள், உணர்ச்சிப் போராட்டங்கள், அளவுக்கு அதிகமான யோசனைகள், எந்தக் காரணமுமின்றி மனச்சோர்வாக உணர்வது, ஒருவேளை நான் உணர்ந்ததைவிட என் உடல் அதிக சிரமங்களை கடந்து கொண்டிருக்கிறது போன்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1128cb91-1ca2-4bd8-bf0e-06be8b4ff079/26-6a99775136a7e.webp' /></p><p> ஆனால் இந்த அனுபவம் எனக்கு ஒன்றைக் கற்றுக்கொடுக்கிறது. நம் உடல்கள் அமைதியாக எவ்வளவோ விஷயங்களை எதிர்கொள்கிறது. </p><p>மேலும் குணமடைவது என்பது எப்போதும் விரைவாகவோ, எளிதாகவோ நடப்பதில்லை, உடலளவிலோ, மனதளவிலோ இப்போது நீங்கள் எதைக் கடந்து கொண்டிருந்தாலும், தயவுசெய்து ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள், அதற்கு நேரமெடுக்கலாம், அது உங்கள் பொறுமையை சோதிக்கலாம், ஆனால் உங்களால் அதில் இருந்து மீண்டு வர முடியும்.</p><p> நாம் நினைப்பதைவிட நம் உடல்கள் வலிமையானவை. நானும் தான். என் உடல் விரைவில் அதற்கான இயல்பு நிலையை மீண்டும் கண்டடையும் என நம்புகிறேன். அதுவரை நான் பொறுமையும், நம்பிக்கையும், என்மீது இன்னும் கொஞ்சம் அதிகமான அன்பையும் தேர்ந்தெடுக்கிறேன் என்று ஃபரீனா பதிவிட்டுள்ளார்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Ffarinaazadofficial%2Fposts%2Fpfbid02xviNwRjR7XbF4VpcqC2aHJVZj6UShJwqV6b85Nkmw8E7x7tjFfqopUcJHxVTje71l&show_text=true&width=500" width="500" height="632" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p>]]></content>
            <updated>2026-09-03T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் மேயர் முசம்மிலின் மகனுக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bail-granted-to-former-mayor-muzammil-son-1788441831"></link>
            <id>https://jvpnews.com/article/bail-granted-to-former-mayor-muzammil-son-1788441831</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பண மோசடி தொடர்பான சம்பவம் குறித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம். முச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பண மோசடி தொடர்பான சம்பவம் குறித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம். முசம்மிலின் மூத்த மகனுக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>


மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/431c39cf-fa87-4d9c-8381-edde7b1dcc35/26-6a9974e89228d.webp' /></p><p>


எனினும், சம்பவம் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், சந்தேகநபரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p>



அத்துடன், அவருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையையும் நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-03T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[அபாய களமாக மாறும் நுவரெலியா - ஹக்கலை வீதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nuwara-eliya-road-not-widened-accidents-rise-1788445933"></link>
            <id>https://tamilwin.com/article/nuwara-eliya-road-not-widened-accidents-rise-1788445933</id>
            <summary type="text">நுவரெலியா - பதுளை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்கா அருகில் அபாயகரமான
வளைவு பகுதியில் தொடர்ச்சியாக மூன்று பாரிய விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா - பதுளை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்கா அருகில் அபாயகரமான
வளைவு பகுதியில் தொடர்ச்சியாக மூன்று பாரிய விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
</p><p>
குறித்த விபத்து ஏற்பட்ட இடமானது டித்வா (Ditwah) சூறாவளி காரணமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டு, வீதிகள் சேதமடைந்து தாழிறங்கிய
பகுதியாக காணப்படுபடுகிறது என அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.</p><h2>தொடர்ச்சியாக இடம்பெறும் விபத்துக்கள்</h2><p>நுவரெலியாவிலிருந்து வெலிமடை நோக்கி அபாயகரமான வளைவு பகுதியில் அதிக
சுமைகளை ஏற்றிக் கொண்டு பயணித்த கனரக வாகனத்தில் திடீரென்று தடையாழி செயலிழந்து விபத்திற்குள்ளாகியது.</p><p>இதனையடுத்து வாகனங்களில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர்
தப்பியுள்ளனர்.</p><p> இரண்டாவதாக ஹக்கல தாவரவியல் பூங்கா பகுதியில் வீதி ஓரத்தில் நடந்து சென்ற
ஒருவர் மீது பேருந்து மோதியதில் 46 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f6d0c64-55ea-46ca-88d7-e0531dd0518a/26-6a9988cc362fc.webp' /></p><p>
மூன்றாவாதாக அதே இடத்தில் நேற்று(02) மாலை இ.போ.ச பேருந்து ஒன்றும் கார்
ஒன்றும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வாறு விபத்துகளால் சிலர் உடல் அவயங்களையும் இழந்துள்ளனர்.</p><p> எனவே, இனியும்
விபத்துகள் இடம்பெறுவதை தடுப்பதற்காக நிலச்சரிவுகள் ஏற்பட்டு, வீதிகள்
சேதமடைந்து தாழிறங்கிய பகுதியில் வீதியை அகலப்படுத்தி கொடுப்பதற்கும்,
குன்றும், குழியுமாக காணப்படும் பகுதிகளை புனரமைப்பதற்கும் சம்பந்தப்பட்ட
தரப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இதற்கு முன்னரும் இந்த வீதியை அகலப்படுத்துமாறு பல தடவைகள் கோரியிருந்தோம்
இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் எதிர்திசையில் வரும் வாகனத்துக்கு
இடம் கொடுப்பதற்குகூட பெரும் சிரமம் ஏற்படுகிறது என குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T14:59:52+00:00</updated>
        </entry>
    </feed>
