<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-15T07:35:27+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பனிப்பாறைச் சரிவில் உயிரிழந்த மாணவர்கள்: வழிகாட்டி மீது கொலைக் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/avalanche-tragedy-in-meiringen-bern-1786779191"></link>
            <id>https://news.lankasri.com/article/avalanche-tragedy-in-meiringen-bern-1786779191</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தில் பனிப்பாறைச் சரிவில் சிக்கி பதின்மவயதினர் இருவர் உயிரிழந்த விடயம் தொடர்பில், சுற்றுலா வழிகாட்டி மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தில் பனிப்பாறைச் சரிவில் சிக்கி பதின்மவயதினர் இருவர் உயிரிழந்த விடயம் தொடர்பில், சுற்றுலா வழிகாட்டி மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>

சுவிட்சர்லாந்திலுள்ள உறைவிடப் பள்ளி ஒன்றில் படித்துவந்த மாணவர்கள் சிலரை சுற்றுலா வழிகாட்டி ஒருவர் பனிச்சறுக்கு விளையாட அழைத்துச் சென்றுள்ளார்.
</p><h3>
பனிப்பாறைச் சரிவில் உயிரிழந்த மாணவர்கள்</h3><p>

2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி, அவர்கள் Gstelliwang என்னுமிடத்துக்கு பனிச்சறுக்கு விளையாடச் சென்றுள்ளார்கள்.
</p><p>
விடயம் என்னவென்றால், அப்போது அங்கு பனிப்பாறைச் சரிவு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்திருக்கிறது.</p><p>

ஆனால், எச்சரிக்கையையும் மீறி அந்த வழிகாட்டி பிள்ளைகளை பனிச்சறுக்கு விளையாட அழைத்துச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3826cbca-f7d2-4de8-9adf-7a2af76fd50a/26-6a80163876284.webp' /></p><p></p><p>

இந்நிலையில், அவர்கள் பனிச்சறுக்கு விளையாடும்போது பனிப்பாறைச் சரிவு ஏற்பட்டுள்ளது.

பனிப்பாறைச் சரிவில் சிக்கிய அமெரிக்க மாணவி ஒருவரும், பிரித்தானிய மாணவர் ஒருவரும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
</p><h3>
வழிகாட்டி மீது கொலைக் குற்றச்சாட்டு
</h3><p>
இந்த வழக்கில், அந்த சுற்றுலா வழிகாட்டி அலட்சியம் காரணமாக உயிரிழப்பு ஏற்படக் காரணமாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, அது தொடர்பில் கொலைக்குற்றசாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p>

அவருக்கு 13,500 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. என்றாலும், அவர் உடனடியாக அந்த அபராதத்தைச் செலுத்தவேண்டியதில்லை.
</p><p>
அவர் இரண்டு ஆண்டுகள் அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் இருக்கும் நிலையில், மீண்டும் விதிமீறலில் ஈடுபட்டால் மட்டுமே அந்த அபராதத்தை செலுத்தவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T07:33:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த ராணுவம்: பிரித்தானிய பிரதமர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/britain-wildfire-soldiers-help-firefighters-1786774414"></link>
            <id>https://news.lankasri.com/article/britain-wildfire-soldiers-help-firefighters-1786774414</id>
            <summary type="text">பிரித்தானியாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ பற்றியெரிந்துவரும் நிலையில், காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த ராணுவமும் களமிறங்க இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ பற்றியெரிந்துவரும் நிலையில், காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த ராணுவமும் களமிறங்க இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
</p><p>


இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் பகுதியில் பல இடங்களில் காட்டுத்தீ கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது அனைவரும் அறிந்ததே.</p><p>

இந்நிலையில், காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த ராணுவமும் களமிறங்க இருப்பதாக பிரித்தானிய பிரதமரான ஆன்டி பர்னாம் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b66bfae5-6cd8-45f6-aeef-602dd2c752ac/26-6a80038f9d59a.webp' /></p><p>
</p><h2>காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த ராணுவம்
</h2><p>
பிரித்தானியாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ பற்றியெரிந்துவரும் நிலையில், வேல்ஸ் நாட்டில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அவசர உதவிக்குழுவினருக்கு உதவியாக ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுவருவதாக பிரதமர் ஆன்டி பர்னாம் தெரிவித்துள்ளார்.</p><p>

வேல்ஸ் நாட்டிலுள்ள Blaenavon மற்றும் Porth போன்ற இடங்களில் பற்றியெரிந்துவரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புத்துறையினர் போராடிவரும் நிலையில், தங்களுக்கு உதவ ராணுவத்தை அனுப்பவேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
</p><p>
அதைத் தொடர்ந்து, அவர்களுக்கு உதவியாக சுமார் 100 ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பிரதமர் ஆன்டி பர்னாம் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், மக்கள் பார்பிக்யூ முறையில் சமைத்தல் போன்ற காரணங்களுக்காக திறந்தவெளிகளில் தீப்பற்றவைக்கவேண்டாம் என்றும் ஆன்டி பர்னாம் கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>
திறந்தவெளிகளில் தீப்பற்றவைத்தல் பிறர் உயிருக்கு ஆபத்தாக அமையலாம் என்று கூறியுள்ள அவர், ஆகவே, பொதுமக்கள் தயவு செய்து அதைச் செய்யவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T07:31:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[Awarapan 2: திரை விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/awarapan-2-movie-review-1786778006"></link>
            <id>https://cineulagam.com/article/awarapan-2-movie-review-1786778006</id>
            <summary type="text">2007யில் வெளியாகி பிளாப் ஆன பின்னர், கல்ட் ஸ்டேட்டஸ் பெயர் பெற்ற Awarapan படத்தின் இரண்டாம் பாகம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.கதைக்களம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2007யில் வெளியாகி பிளாப் ஆன பின்னர், கல்ட் ஸ்டேட்டஸ் பெயர் பெற்ற Awarapan படத்தின் இரண்டாம் பாகம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.</p><h2>கதைக்களம் </h2><p>

இந்தியாவின் ஒரு கிராமத்தில் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் கேங்ஸ்டராக இருந்த ஷிவம் பண்டிட் (இம்ரான் ஹாஷ்மி).

இறந்துபோன தனது காதலி ஆலியாவின் (ஷ்ரியா சரண்) கல்லறைக்கு கல்லறைக்கு அருகில் பெண் குழந்தை ஒன்றை கண்டெடுக்கிறார் ஷிவம். </p><p>

அந்த குழந்தைக்கு காதலியின் பெயரை சூட்டும் பண்டிட், அது சிறுமியாக வளர்ந்த பின் தன்னால் நல்லபடியாக பார்த்துக் கொள்ள முடியாது என நினைத்து ஒரு தம்பதிக்கு தத்துக்கொடுக்கிறார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8726690a-d76c-46a0-bb4f-034e12fbcf7a/26-6a8011fcbd330.webp' /></p><p>ஆனால், அந்த தம்பதி கொலை செய்யப்பட்டு சிறுமி ஆலியா பேங்காக் கும்பலால் கடத்தப்பட்டுள்ளதாகவும், அவளுடன் சேர்த்து மொத்தம் 40 பேர் அங்கு சிறைப்பட்டுள்ளதாகவும் இன்டர்போல் அதிகாரி ஷிவமிடம் கூறுகிறார். </p><p>

அவரின் உதவியுடன் ஆலியாவை காப்பாற்ற களமிறங்கும் ஷிவம், பேங்காக்கிற்கு சென்ற பின் ஒரு சண்டையில் ஸோராவர், சிக்கந்தர் மற்றும் அவரது சகோதரி ஸாரா (திஷா பதாணி) ஆகியோரை காப்பாற்றுகிறார். 

அதன் விளைவாக கடத்தல் கும்பல் தலைவனான ஸோராவருக்காக வேலைபார்க்க ஆரம்பிக்கிறார் ஷிவம்.

அவரது பிடியில் உள்ள ஆலியா உட்பட 40 குழந்தைகளை ஷிவம் எப்படி காப்பாற்றினார் என்பதே மீதிக்கதை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffd4787a-620b-40b5-ba90-b40bfb50903a/26-6a8011fdae5d8.webp' /></p><h2>படம் பற்றிய அலசல் </h2><p>

சைப் அலி கானை வைத்து ஜவானி ஜானெமன் படத்தை எடுத்த நிதின் காக்கர் இப்படத்தை இயக்கியுள்ளார். 

கடத்தப்பட்ட குழந்தையை பெரிய கேங்ஸ்டர் கும்பலிடம் இருந்து ஹீரோ எப்படி காப்பாற்றினார் என்ற தெரிந்த கதையை முடிந்தவரை சுவாரஸ்யமாக கொடுத்துள்ளார் இயக்குநர்.
</p><p>
திரைக்கதை இப்படித்தான் செல்லும் என்று தெரிந்தாலும், முதல் பாகத்தில் வடிவமைக்கப்பட்ட ஷிவம் பண்டிட் என்ற கதாபாத்திரம் இந்த வேலையை எப்படி செய்யும் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருப்பதுதான் இப்படத்தின் பலமே.

என்றாலும், இன்னும் கொஞ்சம் ஸ்மார்ட் ஆக திரைக்கதையை வடிவமைத்திருக்கலாம்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffd4787a-620b-40b5-ba90-b40bfb50903a/26-6a8011fdae5d8.webp' /></p><p>ஆங்காங்கே வரும் ட்விஸ்ட்களை பல படங்களில் பார்த்த நியாபகம் வருவதால், ஒன்றிரண்டு மட்டுமே ஒர்க்அவுட் ஆகியுள்ளன. 

திரைக்கதை ஒரு பக்கம் சென்றாலும், ஷிவம் பண்டிட் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு சில லாஜிக் மீறல்களையும் மன்னிக்க வைக்கிறது. </p><p>

இருந்தாலும் ஷிவம் எத்தனை அடி வாங்கினாலும் கல்லு மாதிரி நிற்பதெல்லாம் ரொம்ப ஓவர். எதிர்பார்த்த கிளைமேக்ஸ் என்றாலும் திருப்திகரமாகவே முடிகிறது.

ஷிவம் கதாபாத்திரத்தில் இம்ரான் ஹாஷ்மி மிரட்டியிருக்கிறார். சண்டைக்காட்சிகளில் ஆவேசம், எமோஷனல் காட்சிகளில் நெகிழ்ச்சி என ஸ்கோர் செய்து மொத்த படத்தையும் தோளில் தாங்கியிருக்கிறார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/084f254f-d7fb-4002-9cd5-010072c69ed7/26-6a8011ff1b424.webp' /></p><p>அவருக்கு ஈடுகொடுக்க வேண்டுமே என பூரன் கேபி நடிப்பில் கொஞ்சம் ஓவர்டோஸ் செய்தாலும், வில்லத்தனத்தில் அலறவிடுகிறார். 

ஸாராவாக வரும் திஷா பதானி கவர்ச்சியைத் தாண்டி கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார்.</p><p> ஷாபனா, சுவிந்தர் போன்ற நடிகர்கள் தங்களது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர். 

பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலம்; தேவேந்திராவின் படத்தொகுப்பு கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். விஷ்ணு ராவின் ஒளிப்பதிவு சிறப்பு.</p><p><b><u>க்ளாப்ஸ் </u></b></p><p>

இம்ரான் ஹாஷ்மி </p><p>

ஒரு சில ட்விஸ்ட் </p><p>

சண்டைக்காட்சிகள்</p><p> 

இசை </p><p><b><u>

பல்ப்ஸ்</u></b></p><p> 

தெரிந்த கதைக்களம், சில லாஜிக் மீறல்கள் </p><h5><b>

மொத்தத்தில் இந்த Awarapan 2 ஒரு டீசண்டான வாட்ச்சிங் படம்.</b></h5><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc3b1482-0743-4097-8584-3e67dad321f7/26-6a80119a702b0.webp' /></p>]]></content>
            <updated>2026-08-15T07:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தரப் பரீட்சை வினாத்தாள் தொடர்பான சர்ச்சை! விசாரணையை தொடங்கிய சிஐடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-level-question-paper-incident-cid-investigates-1786778188"></link>
            <id>https://ibctamil.com/article/a-level-question-paper-incident-cid-investigates-1786778188</id>
            <summary type="text">

ஹம்பாந்தோட்டை - அம்பலாந்தோட்டை பகுதியில் உள்ள உயர்தரப் பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையம் ஒன்றில் அண்மையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வினாத்தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>

ஹம்பாந்தோட்டை - அம்பலாந்தோட்டை பகுதியில் உள்ள உயர்தரப் பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையம் ஒன்றில் அண்மையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வினாத்தாள் தொடர்பான ஒரு பிரச்சினை தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
</p><p>
குறித்த விடயத்தை கல்வி பிரதி அமைச்சர் மதுர செனரத்ன தெரிவித்துள்ளார்.</p><p>
சம்பந்தப்பட்ட மையத்தில் வினாத்தாள் பைகள் பிரிக்கப்பட்டிருந்தாலும், வினாத்தாள்கள் எதுவும் கசிந்துள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் உறுதி செய்யப்படவில்லை என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>பரீட்சைப் பணிகள்</h2><p>
</p><p>
இச்சம்பவம் தொடர்பில் பரீட்சைத் திணைக்களமும் காவல்துறையினரும் ஆரம்பகட்ட விசாரணைகளை நடத்தியிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a66650ca-3a30-4871-baa1-3f7ba82929a8/26-6a8014f7ed58d.webp' /></p><p>
</p><p>
இந்த ஒரு சம்பவத்தைத் தவிர, க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வேறு எந்தச் சம்பவங்களும் பதிவாகவில்லை என்றும், பரீட்சைப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-15T07:27:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிடிவாதம் பிடிக்கும் அநுர அரசாங்கம்.. நாமல் விடுத்த பகிரங்க சவால்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-government-22nd-amendment-1786777697"></link>
            <id>https://tamilwin.com/article/npp-government-22nd-amendment-1786777697</id>
            <summary type="text">நீதித்துறை விவகாரத்தில் மூத்த வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெற்றே தீர்மானம் எடுத்ததாகக் கூறும் ஜனாதிபதி, அந்த வல்லுநர்கள் யார் என்பதை நாட்டுக்கு வெளிப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதித்துறை விவகாரத்தில் மூத்த வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெற்றே தீர்மானம் எடுத்ததாகக் கூறும் ஜனாதிபதி, அந்த வல்லுநர்கள் யார் என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதிக்கும் வகையில் ஜனாதிபதி தன்னிச்சையாகச் செயற்பட்டு வருவதாக அவர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.&nbsp;</p><p>மேலும், "உள்நாட்டுச் சட்டத்தரணிகள் சங்கம், நீதிபதிகள் மற்றும் கொமன்வெல்த் சட்டத்தரணிகள் சங்கம், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தும் அரசாங்கம் இந்த தீர்மானத்தில் பிடிவாதமாக இருக்கின்றது.&nbsp;</p><p></p><h2>காணாமல் போன நிதி..&nbsp;</h2><p>நீதித்துறை வெற்றிடங்களை அல்லது பிரச்சினைகளை, அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீடிப்பதாலோ அல்லது ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதாலோ ஒருபோதும் தீர்த்துவிட முடியாது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fb4736f-9c37-4c58-90e8-de4bee496202/26-6a801488c2b2d.webp' /></p><p>
அத்துடன், சுங்கத்தில் கொள்கலன்கள் காணாமல் போனமை மற்றும் நிதி அமைச்சராக உள்ள ஜனாதிபதியின் கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊடுருவல்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்படவில்லை.</p><p>அது மாத்திரமன்றி, மகாநாயக்க தேரர்கள் எழுப்பிய கேள்விகளுக்குக் கூட ஜனாதிபதி இன்னும் உரிய பதிலளிக்கவில்லை.&nbsp;</p><p>அரசாங்கம் தனது சுய தேவைகளுக்காகவும் அரசியல் நிலைப்புத்தன்மைக்காகவும் நாட்டின் நீதித்துறை அமைப்பையும் மக்களையும் காட்டிக்கொடுத்து வருகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T07:27:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: இணையத்தில் வேகமாக பரவும் காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indonesia-earthquake-building-collapse-video-1786778717"></link>
            <id>https://news.lankasri.com/article/indonesia-earthquake-building-collapse-video-1786778717</id>
            <summary type="text">இந்தோனேசியாவை 7.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியுள்ளது.இந்தோனேசியா நிலநடுக்கம்இந்தோனேசியாவில் சனிக்கிழமை காலை 5.58 மணிக்கு 7.7 ரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவை 7.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியுள்ளது.</p><h2>இந்தோனேசியா நிலநடுக்கம்</h2><p>இந்தோனேசியாவில் சனிக்கிழமை காலை 5.58 மணிக்கு 7.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.</p><p>நிலநடுக்கத்தின் மையமானது கிழக்கு நுசா தெங்காரா (East Nusa Tenggara) மாகாணத்தின் எண்டே (Ende) நகரின் வடமேற்கே 42 மைல் தொலைவில் அமைந்திருந்தது.</p><p> நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தோனேசிய கடற்கரையை ஒட்டிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">BUILDINGS SWAY VIOLENTLY and CRUMBLE as 7.7 MONSTER QUAKE ROCKS INDONESIA <a href="https://t.co/qMl0QaNyzT">https://t.co/qMl0QaNyzT</a> <a href="https://t.co/fvePye9AJo">pic.twitter.com/fvePye9AJo</a></p>&mdash; RT (@RT_com) <a href="https://x.com/RT_com/status/2088408804266307967?ref_src=twsrc%5Etfw">August 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2> அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி</h2><p>இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது கட்டிடம் ஒன்று இடிந்து விழும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.</p><p>அதில், கட்டிடத்தின் கான்கிரீட் தளங்கள் இடிந்து விழுவதும், மக்கள் அப்பகுதியில் இருந்து தப்பியோடுவதும் இடம்பெற்றுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T07:25:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[9 மாதங்கள் கடலில் ; கடும் மன அழுத்தத்தில் அமெரிக்க கப்பலின் 5,000 மாலுமிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sailors-uss-abraham-lincoln-severe-mental-stress-1786777368"></link>
            <id>https://jvpnews.com/article/sailors-uss-abraham-lincoln-severe-mental-stress-1786777368</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக நீண்ட காலமாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பலின் குழுவினர், கடுமையான மன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக நீண்ட காலமாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பலின் குழுவினர், கடுமையான மன அழுத்தத்தையும் இன்னல்களையும் சந்தித்து வருவதாக அமெரிக்க மற்றும் வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.</p><p>கப்பலில் உள்ள சுமார் 5,000 மாலுமிகளும் வீரர்களும் 9 மாதங்களாகக் கப்பலிலேயே வசித்து வருவதுடன், தொடர்ந்து 250 நாட்களாகக் கரைக்கு வராமலும் இருந்துள்ளனர்.</p><p>மேலும், கப்பலில் மோசமான சுகாதார வசதிகள், பழுதடைந்த கழிப்பறைகள் மற்றும் அடிப்படை சுகாதாரப் பொருட்களுக்குக் கடுமையான பற்றாக்குறை நிலவுவதாகவும் கூறப்படுகிறது.</p><p>தொடர்புடைய அறிக்கைகளின்படி, இந்த கடுமையான மன அழுத்தம் மற்றும் தொடர்ச்சியான பணி நீட்டிப்பு காரணமாக, பல மாலுமிகள் கடலில் குதித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.</p><p>மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களுக்கு ஒரு முடிவு எட்டப்படாததால், மத்திய கிழக்கு நடவடிக்கைகளிலிருந்து கப்பலைத் திரும்ப அனுப்புவது தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-15T07:21:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய் தலைமையில் சுதந்திர தின கொண்டாட்டம்; முதல் வரிசையில் நடிகை திரிஷா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/india-independence-day-celebration-led-by-cm-vijay-1786769256"></link>
            <id>https://jvpnews.com/article/india-independence-day-celebration-led-by-cm-vijay-1786769256</id>
            <summary type="text">இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று (15) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ் நாடு முதலமைச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று (15) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.</p><p>இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் முதன்முறையாக தேசியக்கொடியை ஏற்றினார்</p><p>சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றுவதற்காக முதலமைச்சர் விஜய் வருகை தந்தார்.&nbsp;</p><p>முதலமைச்சர் விஜயை வரவேற்ற தலைமைச் செயலாளர் அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார்.&nbsp;</p><p>புனித ஜார்ஜ் கோட்டையில் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஜோசப் விஜய் ஏற்றார்.&nbsp;</p><p>முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு முப்படை மற்றும் சிறப்பு பொலிஸ் படை உள்ளிட்ட படையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.&nbsp;</p><p>திறந்தவெளி வாகனத்தில் சென்று பொலிஸாரின் அணிவகுப்பினை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார்.&nbsp;</p><p>பின்னர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய், செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக்கொடியை ஏற்றினார்.</p><p>இந்தநிலையில்,&nbsp; சுதந்திர தின நிகழ்வில் நடிகை திரிஷா முதல் வரிசையில்&nbsp; நடிகை திரிஷா,உட்பட முதலமைச்சரின் பெற்றோர்கலும் அமர் ந் துள்ள புகைப்படம் சமூக வலைத்தலங்களில்&nbsp; வெலியாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-15T07:19:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருட வந்த இடத்தில் கடுப்பான திருடன்; என்னதான் நடந்தது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-thief-gets-annoyed-at-the-scene-of-the-crime-1786776525"></link>
            <id>https://jvpnews.com/article/a-thief-gets-annoyed-at-the-scene-of-the-crime-1786776525</id>
            <summary type="text">நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள பிரபல தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றை உடைத்து திருட முயன்றதாக சந்தேகிக்கப்படும் அடையாளம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள பிரபல தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றை உடைத்து திருட முயன்றதாக சந்தேகிக்கப்படும் அடையாளம் தெரியாத நபரின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.</p><p>கடந்த வெள்ளிக்கிழமை (14) இரவு சுமார் 10.45 மணியளவில் குறித்த விற்பனை நிலையத்திற்கு வந்த சந்தேகநபர், கதவில் பொருத்தப்பட்டிருந்த பூட்டை பலவந்தமாக திறந்து உள்ளே நுழைய நீண்ட நேரமாக முயற்சித்துள்ளார்.</p><p>எனினும், பூட்டை திறக்க முடியாத நிலையில், தனது முயற்சியைக் கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>சந்தேகநபர் பூட்டைத் திறக்க போராடிய காட்சிகள் விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கண்காணிப்பு கெமெராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளன.</p><p>சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>கண்காணிப்பு கெமெரா பதிவுகளின் உதவியுடன் சந்தேகநபரை விரைவில் அடையாளம் காண முடியும் என&nbsp; தெரிவித்துள்ள பொலிஸார் , பொதுமக்களின் உதவியையும் கோரியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-15T07:19:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் 10 மில்லியன்களால் குறைந்த பொலித்தீன் பாவனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/caa-cuts-polythene-use-by-10-million-units-in-sl-1786776205"></link>
            <id>https://ibctamil.com/article/caa-cuts-polythene-use-by-10-million-units-in-sl-1786776205</id>
            <summary type="text">இலங்கையில் பொலித்தீன் பயன்பாடு 26 மில்லியனிலிருந்து 16 மில்லியனாகக் குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.நாடளாவிய ரீதியில் நுகர்வோர் விவகார அதிகார ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் பொலித்தீன் பயன்பாடு 26 மில்லியனிலிருந்து 16 மில்லியனாகக் குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.</p><p>நாடளாவிய ரீதியில் நுகர்வோர் விவகார அதிகார சபை முன்னெடுத்த (CAA) தீவிர நடவடிக்கையின் மூலம் பொலித்தீன் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (14) நடைபெற்ற வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மூலம் 2026 ஆம் ஆண்டில் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடலின் போதே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டது.</p><p></p><h2>சுட்டிக்காட்டிய ஜனாதிபதி </h2><p>மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பை மேலும் குறைக்கும் நோக்கில் பொலித்தீனுக்கு மாற்றான பொருட்களை அறிமுகப்படுத்தும் இந்தத் திட்டம் தொடரும் எனவும் அந்த அதிகார சபையின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e934b434-7d85-44f7-ad0b-36306790b7d5/26-6a800ea0d99ba.webp' /></p><p>அத்துடன் உணவுப் பொருட்கள் சார்ந்த தரம் மற்றும் விலைக் கட்டுப்பாடு தொடர்பில் தொடர்ந்தும் மக்களிடமிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதால், நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் தீவிர பங்களிப்பின் தேவையையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.</p><p>மேலும் நெடுந்தூரப் பேருந்துகள் தரிக்கும் உணவகங்கள் மற்றும் தனியார் வைத்தியசாலைகளின் உணவகங்கள் தொடர்பில் விசேட பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-15T07:15:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெகா ஹிட் இயக்குனர் படத்தில் இணையும் ருக்மிணி வசந்த், ஹீரோ இவர்தானா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/rukmini-vasanth-next-movie-with-ram-charan-1786774061"></link>
            <id>https://cineulagam.com/article/rukmini-vasanth-next-movie-with-ram-charan-1786774061</id>
            <summary type="text">ருக்மிணி வசந்த்தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நடிகையாக வளர்ந்து வரும் நடிகை ருக்மிணி வசந்த். இவர் நடிப்பில் வெளியான காந்தாரா சாப்டர் ஒன் பிரம்மாண்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ருக்மிணி வசந்த்</h2><p>தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நடிகையாக வளர்ந்து வரும் நடிகை <a href="https://www.youtube.com/watch?v=Z3LQRqolumM" target="_blank">ருக்மிணி </a>வசந்த். இவர் நடிப்பில் வெளியான காந்தாரா சாப்டர் ஒன் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d55e036-ef64-4f0a-9a4b-67b02658549f/26-6a800230acb36.webp' /></p><p></p><p>இதை தொடர்ந்து தற்போது டாக்சிக், ட்ராகன் போன்ற பிரம்மாண்ட படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f45b2ae1-060e-4d4a-8742-881558d967f0/26-6a80023173b89.webp' /></p><h2>மெகா ஹிட் இயக்குனர்</h2><p> தற்போது கிடைத்த தகவலின்படி இவர் அடுத்து புஷ்பா என்ற மெகா ஹிட் படத்தை அளித்த சுகுமார் அவர்களின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90f288e5-6d9e-4dc7-a3ff-f99c1a19f5b3/26-6a80023229744.webp' /></p><p>அதோடு இப்படத்தில் இவர் ராம் சரணுக்கு ஜோடியாக நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ருக்மிணி தான் இன்னும் சில வருடங்கள் தென்னிந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகையாக வலம் வருவார் என கூறப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-15T07:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரணத்திற்கு வழிவகுக்கும் தீவிரமான நிலை..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/risk-of-disease-children-extreme-heat-and-rain-1786776071"></link>
            <id>https://tamilwin.com/article/risk-of-disease-children-extreme-heat-and-rain-1786776071</id>
            <summary type="text">நாட்டின் சில பகுதிகளில் நிலவும் கடும் வெப்பம் மற்றும் கனமழையுடன் கூடிய வானிலை மாற்றங்கள் காரணமாக குழந்தைகளிடையே நோய் பரவுவதற்கான அதிக வாய்ப்புள்ளதாக க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சில பகுதிகளில் நிலவும் கடும் வெப்பம் மற்றும் கனமழையுடன் கூடிய வானிலை மாற்றங்கள் காரணமாக குழந்தைகளிடையே நோய் பரவுவதற்கான அதிக வாய்ப்புள்ளதாக குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா கூறியுள்ளார்.
</p><p>
நிலவும் கடும் வெப்பத்தால் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படக்கூடும் என்றும், எனவே அதிக தண்ணீர் அருந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
குறிப்பாக, ஒரு சராசரி வயது வந்தவர் ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அருந்துமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.</p><h2>மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ள தகவல்</h2><p>
</p><p>
மேலும், குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கும்போது, ​​பெற்றோர்கள் அவர்களின் உடல் எடைக்கு ஏற்ப தண்ணீர் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cd7f89e-e08f-4a29-b3ca-7a3255962d18/26-6a800dce2234a.webp' /></p><p>

நீண்ட காலமாக போதுமான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பது சிறுநீரக பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கின்றது என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
மேலும், தண்ணீர் அருந்தாமல் வெளிப்புற வேலைகளில் ஈடுபடுவது, சுற்றுலா செல்வது போன்றவை வெப்பத்தாக்கம், மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்றும், இது மரணத்திற்கு வழிவகுக்கக்கூடிய ஒரு தீவிரமான நிலை என்றும் கூறியுள்ளார்.</p><h2>முக்கிய அறிவுறுத்தல்</h2><p>

எனவே, வீட்டை விட்டு வெளியே செல்லும்போது தண்ணீர் எடுத்துச்செல்லுமாறு அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20d82994-edd9-429d-86f2-d331cc5fd952/26-6a800dcec7b13.webp' /></p><p>
</p><p>
 இந்த காலகட்டத்தில் வயிற்றுப்போக்கு பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சுத்தமான குடிநீரும் சுத்தமான உணவும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.</p><p>
குழந்தைகளுக்கு இனிப்புப் பானங்கள் மற்றும் தின்பண்டங்களைக் கொடுப்பதைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக எலுமிச்சை, ஆரஞ்சு, கஞ்சி மற்றும் சூப் போன்ற இயற்கை திரவங்களைக் குடிக்கக் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T06:57:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிச்சிகன் மாநிலத்தில் ஐந்து பேரைச் சுட்டுக் கொன்றவர் சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/person-killed-five-people-in-michigan-found-dead-1786776956"></link>
            <id>https://canadamirror.com/article/person-killed-five-people-in-michigan-found-dead-1786776956</id>
            <summary type="text">அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் ஐந்து பேரைச் சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர், தீவிர தேடுதலின் பின்னர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் ஐந்து பேரைச் சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர், தீவிர தேடுதலின் பின்னர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மிச்சிகன்&nbsp; பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>மிசாக்கி கவுண்டியில் உள்ள வீடொன்றில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக கிடைத்த தகவலையடுத்து, நேற்று (14) காலை சுமார் 11.40 மணியளவில் பொலிஸார் அங்கு சென்றுள்ளனர்.</p><p>அங்கு மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதுடன், நான்காவது நபர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபராக 39 வயதான சாட் ஹிக்மேன் அடையாளம் காணப்பட்டுள்ளார். பொலிஸார் சம்பவ இடத்தை சென்றடைவதற்கு முன்னரே அவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதையடுத்து சந்தேகநபரைத் தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், மற்றொரு குடியிருப்பில் மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.</p><p>பின்னர் விட்லாக் ஏரிக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் சந்தேகநபரின் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு சந்தேகநபரும் மற்றொருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.</p><p>இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-15T06:56:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றத்தில் 80 வயதைக் கடந்தவர்கள்.. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது குறித்து எழுப்பப்படும் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amendment-namal-karunaratna-speech-1786774896"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amendment-namal-karunaratna-speech-1786774896</id>
            <summary type="text">நாட்டை நிர்வகிக்கும் சட்டங்களை உருவாக்கும் நாடாளுமன்றத்தில் 80 வயதைக் கடந்தவர்களும் இருக்கும்போது, அந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நீதித்துறை நீதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டை நிர்வகிக்கும் சட்டங்களை உருவாக்கும் நாடாளுமன்றத்தில் 80 வயதைக் கடந்தவர்களும் இருக்கும்போது, அந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நீதித்துறை நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதில் என்ன தவறு உள்ளது எனப் பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.</p><h2>&nbsp;80 வயதைக் கடந்தவர்கள்..&nbsp;</h2><p>சட்டங்களை இயற்றும் இடமாக நாடாளுமன்றமும், அச்சட்டங்களை நடைமுறைபடுத்தும் இடமாக நீதித்துறையும் திகழ்கின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00855b70-acae-4ebb-9ee1-2100b61d1922/26-6a800d706e31c.webp' /></p><p> நாடாளுமன்றத்தில் 80 வயதைக் கடந்தவர்கள் மற்றும் சக்கர நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு சட்டங்களை உருவாக்குபவர்கள் பலர் இருப்பதாகப் பிரதியமைச்சர் கூறியுள்ளார்.&nbsp;</p><p>அவ்வாறிருக்கையில், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நீதித்துறையில் உள்ள நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் விவகாரத்தை எதற்காக ஒரு பெரிய பிரச்சினையாக மாற்ற வேண்டும் என்றும் நாமல் கருணாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T06:55:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர ஆட்சியில் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு நடக்கும் அநியாயங்கள் - சஜித் பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-must-intervene-immediately-1786775672"></link>
            <id>https://tamilwin.com/article/government-must-intervene-immediately-1786775672</id>
            <summary type="text">அங்கவீனமுற்ற படை வீரர்கள் இரு பிரிவுகளாகப் பிரித்து இருவேறு விதமாக நடத்தப்படுவது மனித உரிமை மீறல் செயற்பாடு என்றும் இந்த குறைப்பாட்டிற்கு அரசாங்கம் தல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அங்கவீனமுற்ற படை வீரர்கள் இரு பிரிவுகளாகப் பிரித்து இருவேறு விதமாக நடத்தப்படுவது மனித உரிமை மீறல் செயற்பாடு என்றும் இந்த குறைப்பாட்டிற்கு அரசாங்கம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>&nbsp;அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி குறித்த கலந்துரையாடல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் 


பிரேமதாசவின் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(15.08.2026) இடம்பெற்றுள்ளது.</p><p>இந்த கலந்துரையாடலில், கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>இராணுவ வீரர்களுக்கான உரிமை</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>நாட்டைக் காப்பாற்றுவதற்காக தமது அவயவங்கள் மற்றும் இன்னுயிரைத் தியாகம் செய்த நமது நாட்டின் வீரம் செறிந்த படை வீரர் சமூகம், நாட்டின் ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை பாதுகாப்பதில் மகத்தான சேவைகளை ஆற்றியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f52fee9-2bea-4d45-aff0-0b839bad0fd9/26-6a800cb2c696f.webp' /></p><p> </p><p>

அவர்களுக்குச் செலுத்தக்கூடிய உச்சக்கட்ட நன்றிக்கடனைச் செலுத்த வேண்டும். </p><p>ஆனால்,&nbsp; இராணுவ வீரர்களின் பல பாரதூரமான பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வுகள் கிடைக்கவில்லை என்றார்.&nbsp; &nbsp;</p><p> </p><p></p><p></p><p> &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-15T06:54:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதியுதி திருஷ்டி யோகம்: தொழில் - பணவரவில் முன்னேற்றம் காணும் ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/pratiyuti-drishti-yog-2026-who-get-benefits-1786774860"></link>
            <id>https://manithan.com/article/pratiyuti-drishti-yog-2026-who-get-benefits-1786774860</id>
            <summary type="text">வேத ஜோதிடத்தின்படி, நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் நிலையை மாற்றுவதால், மனித வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவற்றில் அசுரர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத ஜோதிடத்தின்படி, நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் நிலையை மாற்றுவதால், மனித வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. </p><p>அவற்றில் அசுரர்களின் குருவாகவும், அழகு, காதல், செல்வம், செழிப்பின் காரணியாகவும் கருதப்படுபவர் சுக்கிரன். கர்மா, நீதி, ஒழுக்கம், கடின உழைப்பின் காரணியாகக் கருதப்படுபவர் சனி பகவான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52be5f16-1692-408d-9364-a6ce50fa872f/26-6a800b0f3e5dc.webp' /></p><p></p><p>

சனியும் சுக்கிரனும் ஒன்றுக்கொன்று 180 டிகிரியில் எதிரெதிராக அமையும் போது பிரதியுதி திருஷ்டி யோகம் உருவாகிறது. </p><p>இந்த யோகம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உருவாகவுள்ளது.

இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் நிதி நன்மைகள் மற்றும் தொழில் முன்னேற்றத்தைப் பெறவுள்ளனர். </p><p>சனி–சுக்கிரனால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/972189e6-4c57-4703-80d4-b399792010fd/26-6a800b0fe2c39.webp' /></p><p>
பிரதியுதி திருஷ்டி யோகத்தின் தாக்கத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் பொருளாதார ரீதியாக சாதகமான மாற்றங்களை கொடுக்கப்போகின்றது.</p><p>குறிப்பாக, இதுவரை எதிர்பார்த்துக் கொண்டிருந்த தொழில் முன்னேற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் அல்லது முக்கியமான பணிகள் ஒப்படைக்கப்படலாம்.</p><p>அவற்றை திறம்பட செய்து முடிப்பதன் மூலம் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறும் வாய்ப்பும் உள்ளது. தொழில் தொடர்பாக புதிய வாய்ப்புகள் தேடி வரும். மேலும், ஏற்கனவே செய்துள்ள முதலீடுகளிலிருந்து எதிர்பார்த்த லாபம் கிடைக்கக்கூடும்.</p><h2>கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0bb7d6d-90af-4ea1-a3e3-622c27d20b5b/26-6a800b1093585.webp' /></p><p>பிரதியுதி திருஷ்டி யோகம் கடக ராசிக்காரர்களுக்கு நிதி மற்றும் தொழில் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். </p><p>இதுவரை மெதுவாக நகர்ந்துகொண்டிருந்த சில பணிகள் வேகம் பெறலாம்.

பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள்&nbsp; கிடைக்கும்.</p><p>ஆரம்பத்தில் இந்தப் பொறுப்புகள் சற்று சவாலாகத் தோன்றினாலும், அவற்றை சிறப்பாக கையாள்வதன் மூலம் பணியிடத்தில் தங்களுடைய மதிப்பை உயர்த்திக் கொள்ள முடியும்.

நிதி நிலைமையும் வழக்கத்தைவிட மேம்படும் வாய்ப்பு உள்ளது. </p><h2>சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52f5eff1-9060-49ed-b579-fef97efb4760/26-6a800b1143630.webp' /></p><p></p><p>பிரதியுதி திருஷ்டி யோகத்தால் சிம்ம ராசிக்காரர்களின் வருமானத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகும். ஒரே வருமானத்தை மட்டுமே நம்பியிருப்பவர்களுக்கு கூடுதல் வருமானத்திற்கான வழிகள் கிடைக்கக்கூடும்.</p><p>
கூட்டு தொழில் அல்லது கூட்டுத் தொழில் செய்து வருபவர்களுக்கு நிதி ரீதியாக சாதகமான காலமாக அமையலாம். சரியான திட்டமிடல் மற்றும் கூட்டாளிகளுடன் நல்ல புரிதலுடன் செயல்படுவதன் மூலம் தொழிலில் வளர்ச்சி உண்டாகும்.</p><p>

சிலருக்கு எதிர்பாராத வகையில் திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கக்கூடும். இதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்த பணப் பிரச்சனைகளில் இருந்து ஓரளவு விடுபடுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T06:46:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருட்டு உள்ளடக்க குற்றச்சாட்டு: உயிரிழந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cambridge-professor-jason-ardey-found-dead-1786776148"></link>
            <id>https://news.lankasri.com/article/cambridge-professor-jason-ardey-found-dead-1786776148</id>
            <summary type="text">திருட்டு உள்ளடக்க குற்றச்சாட்டுக்கு பிறகு கேம்பிரிட்ஜ் முன்னாள் பேராசிரியர் ஜேசன் ஆர்டே மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருட்டு உள்ளடக்க குற்றச்சாட்டுக்கு பிறகு கேம்பிரிட்ஜ் முன்னாள் பேராசிரியர் ஜேசன் ஆர்டே மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h3> உயிரிழந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர்</h3><p>

41 வயது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கல்வி சமூகவியல் முன்னாள் பேராசிரியர் ஜேசன் ஆர்டே(Jason Arday) லண்டன்&nbsp;பேட்டர்சீ(Battersea)&nbsp;பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அசைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.</p><p>இதையடுத்து அவரது உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டது, மேலும் இதில் சந்தேகத்திற்குரிய விவகாரங்கள் எதுவும் இல்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d36a4df-f515-455c-839b-56d03168ee01/26-6a800a56671e8.webp' /></p><p></p><h2> ஜேசன் ஆர்டே மீது எழுந்த விமர்சனங்கள்</h2><p>ஜேசன் ஆர்டே கடந்த 2023ம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மிக இளைய கறுப்பின பேராசிரியராக பதவியேற்று வரலாற்று சாதனை படைத்து இருந்தார். &nbsp;
இருப்பினும் கடந்த மாதம் அவர் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தில் சமர்பித்த முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரை மீது திருட்டு உள்ளடக்க குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.</p><p> ஜேசன் ஆர்டே கட்டுரை கடந்த 2009ம் ஆண்டு வெளியான மாணவர் ஒருவரின் கட்டுரையின் பல உள்ளடக்கங்களை கொண்டிருந்ததாக செய்திகள் வெளியாகின.</p><p>ஜேசன் ஆர்டே அந்த மாணவரின் பெயரை அவரது கட்டுரையில் குறிப்பிட்டு இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ba719a0-b828-4fd7-98c6-67b0993f6ec8/26-6a800a571da84.webp' /></p><p>அத்துடன் ஆரம்ப காலத்தில் அவருக்கு இருந்த ஆட்டிசம் குறைபாடு, அவரது தடகள நிதி திரட்டும் முயற்சி ஆகியவையும் விமர்சனங்களுக்கு உள்ளானது.</p><h2> ராஜினாமா செய்த ஜேசன் ஆர்டே</h2><p>
இந்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் ஜேசன் ஆர்டே தனது பதவியை ராஜினாமா செய்து இருந்தார்.</p><p> மேலும் தன்னுடைய சக ஊழியர்களுக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில், தொடர்ச்சியான விமர்சனங்கள் மற்றும் ஊகங்கள் ஆகியவை கல்விசார் விவாதங்களை தாண்டி தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் பாதித்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p>தன்னுடைய பதவி விலகல் முடிவால் யாரும் நான் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்வதாக கருதக்கூடாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T06:42:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஷிரான் பாசிக்கிற்கு 72 மணி நேர தடுப்புக் காவல் உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/interpol-red-notices-issued-suspect-arrested-1786754914"></link>
            <id>https://ibctamil.com/article/interpol-red-notices-issued-suspect-arrested-1786754914</id>
            <summary type="text"> புதிய இணைப்புமுக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் என அடையாளம் காணப்பட்ட ஷிரான் பாசிக் என்பவருக்கு எதிராக 72 மணி நேர தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<h2> புதிய இணைப்பு</h2><p>முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் என அடையாளம் காணப்பட்ட ஷிரான் பாசிக் என்பவருக்கு எதிராக 72 மணி நேர தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>குறித்த நபர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மூலம் சட்டவிரோத சொத்துக்களைக் குவித்துள்ளதாக காவல்துறை சந்தேகிக்கும் நிலையில் மேலும் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்த நிலையில் காவல்துறை மா அதிபரின் (IGP) அறிவுறுத்தல்களின் கீழ் விசாரணைகள் தொடரும் என்று காவல்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8c344c6-7e48-4af6-9b40-a0cec15b31a3/26-6a8009e3c0a8b.webp' /></p><h2>இரண்டாம் இணைப்பு</h2><h5>ஈரான் - அமெரிக்கா போரின் முக்கிய தாக்குதல் காட்சிகள் - ஷிரான் பாசிக் CCIB யிடம் ஒப்படைப்பு</h5><p>டுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் மேலதிக விசாரணைக்காக கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p>

சந்தேகநபருடன் சேர்ந்து மேலும் இரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களும் விசாரணைக்காக அந்தப் பணியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p> 

சந்தேகநபர்கள் நேற்று (14) இரவு அபுதாபியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>டுபாயில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக், பலத்த பாதுகாப்புடன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p>அவருடன் மேலும் இரண்டு சந்தேக நபர்களும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

இன்று இரவு 08:48 மணியளவில் எயார் அரேபியா (Air Arabia) சேவையின் 3L-708 எனும் விமானம் மூலம் அபுதாபியிலிருந்து சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p></p><h2>சிவப்பு எச்சரிக்கை</h2><p> 

 கடந்த மே மாதம் 26 ஆம் திகதி கைது செய்யப்பட்ட, தெஹிவளை, களுபோவில பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஷிரான் பாசிக், சர்வதேச காவல்துறையினரால் (Interpol) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஒருவராவார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76dcb751-4b5b-4e93-82a4-5bf96e009a7f/26-6a7fc03f8c963.webp' /></p><p>கடந்த ஈரான் - அமெரிக்க மோதலின் போது, ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஈரான் பயன்படுத்திய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை தனது கையடக்க தொலைபேசியில் வைத்திருந்த போதே அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.</p><p>

அத்துடன், இவரை விசாரணைக்கு உட்படுத்துவதற்காக அமெரிக்காவும் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>

மேலும் இவர் டுபாயில் பெரும் கோடீஸ்வரராக தலைமறைவாகியிருந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. </p><p>

இலங்கைக்கு போதைப்பொருளை விநியோகிக்கும் 5 பெரும் அளவிலான கடத்தல்காரர்களில் ஒருவராக ஷிரான் பாசிக் கருதப்படுகிறார்.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/-aGqT2s-z34" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T06:39:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[விவசாயிகளுக்கு செல்லும் பெருந்தொகை உர மானியம்! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fertilizer-subsidy-for-farmers-monsoon-season-1786775177"></link>
            <id>https://ibctamil.com/article/fertilizer-subsidy-for-farmers-monsoon-season-1786775177</id>
            <summary type="text">இந்த ஆண்டு சிறுபோகத்தில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு உர மானியமாக சுமார் ரூபா 1,426 மில்லியன் தொகையை விநியோகிப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டு சிறுபோகத்தில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு உர மானியமாக சுமார் ரூபா 1,426 மில்லியன் தொகையை விநியோகிப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

குறித்த விடயத்தை விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.</p><p>

இதன்படி, சிறுபோகத்தில் 4,74,068 ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் அறுவடை செய்த 7,28,185 விவசாயிகளும், நெல் நிலங்களில் 6,440 ஹெக்டேர் பரப்பளவில் இதர களப் பயிர்களைச் அறுவடை செய்த 14,677 விவசாயிகளும் இந்நிதிப் பலன்களைப் பெறவுள்ளனர்.</p><p></p><h2>அதிகரிக்கப்பட்ட உர மானியம்</h2><p>

இந்நிலையில், சிறுபோகத்திலன் தொடக்கத்திலேயே உர மானியத் தொகையை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/485ee695-1c47-4725-8ff0-558f3ee04a14/26-6a80093b18fdf.webp' /></p><p>
</p><p>
அதனடிப்படையில், நெல் நிலங்களில் இதர பயிர்களைச் அறுவடை செய்வதற்கான மானியமாக ஹெக்டேருக்கு ரூ. 15,000-லிருந்து ரூ. 18,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.</p><h2>சிறப்புத் திட்டம்</h2><p>
</p><p>
மேலும், சந்தையில் உரத் தட்டுப்பாடு ஏற்படுவததைத் தவிர்க்கவும், விலை உயர்வால் விவசாயிகளுக்கு ஏற்படும் சுமையைக் குறைக்கவும் சிறப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e085279-8048-4bcf-a658-a8518e3b6328/26-6a80093bc4966.webp' /></p><p>
</p><p>
இதன்படி, நாடு முழுவதிலும் உள்ள 566 விவசாய சேவை மையங்கள் மூலம் 50 கிலோகிராம் எடையுள்ள யூரியா உர மூட்டை ரூ. 10,200 என்ற விலையில் விற்பனை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-15T06:37:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[13ஆவது முறை செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றிய பிரதமர் மோடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/india-s-80th-independence-day-1786775833"></link>
            <id>https://jvpnews.com/article/india-s-80th-independence-day-1786775833</id>
            <summary type="text">&amp;nbsp;டில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (15) 13ஆவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;டில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (15) 13ஆவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.</p><p>இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு,&nbsp; நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், டில்லி செங்கோட்டையில் நடைபெற்ற பிரதான விழாவில் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.</p><p>விழாவில் பங்கேற்க செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடிக்கு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.&nbsp;</p><p>தொடர்ந்து பிரதமர் முப்படை மற்றும் டில்லி பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.</p><p>வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில் முதன்முறையாக வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து சுதந்திரதின நிகழ்வுகள் ஆரம்பமாகின.</p><p>பின்னர் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். தேசியக் கொடி ஏற்றப்பட்டதும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இந்திய விமானப்படை சார்பில் ஹெலிக்கொப்டர்கள் மூலம் தேசியக் கொடிக்கு மலர் தூவப்பட்டது.</p><p>சுதந்திர தின உரையில் நாட்டின் வளர்ச்சி, பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பிரதமர் மோடி பேசினார்.</p><p>நாட்டின் கனவுகளும் இலட்சியங்களும் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்றும், அவற்றை நனவாக்குவதற்கான உறுதியும் வலுவான மனவலிமையும் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.</p><p>சவால்கள் மற்றும் பேரிடர்களுக்கு மத்தியில் நாட்டிற்கான பாதையை கண்டறியும் திறனை வலுவான மன உறுதி வழங்கும் எனக் குறிப்பிட்ட பிரதமர், 140 கோடி இந்தியர்களின் கூட்டு முயற்சியுடன் நாடு புதிய உயரங்களை எட்ட வேண்டும் என்றும், உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா வளர்ந்த நாடாக உருவாக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.</p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T06:37:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிலாபத்தில் சந்தேகத்திற்கிடமான படகு மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/suspicious-boat-recovered-in-chilaw-1786775481"></link>
            <id>https://jvpnews.com/article/suspicious-boat-recovered-in-chilaw-1786775481</id>
            <summary type="text">இந்தியாவுக்குச் சொந்தமானது என சந்தேகிக்கப்படும் மீன்பிடிப் படகு ஒன்று இன்று (15) காலை சிலாபம், இரணாவில பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது.பாறைகளில் மோதியதற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவுக்குச் சொந்தமானது என சந்தேகிக்கப்படும் மீன்பிடிப் படகு ஒன்று இன்று (15) காலை சிலாபம், இரணாவில பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது.</p><p>பாறைகளில் மோதியதற்கான தெளிவான அறிகுறிகள் எதுவும் படகில் காணப்படாத நிலையில், அதில் நபர்கள் பயணித்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p>கரை ஒதுங்கியுள்ள படகு தொடர்பில் இலங்கை கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>மேலும், குறித்த பகுதியில் பாதுகாப்புப் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-15T06:33:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி புதைகுழிக்கு ராஜபக்சவை அழைத்து வாருங்கள்; சிறிதரன் ஆவேசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bring-rajapaksa-to-the-chemmani-mass-grave-1786774875"></link>
            <id>https://jvpnews.com/article/bring-rajapaksa-to-the-chemmani-mass-grave-1786774875</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி தொடர்பில் , பாடசாலை மாணவி கிரிசாந்தி கொலை கொலைக்குற்றவாளியான&amp;nbsp; சோமரத்ன ராஜபக்சவை செம்மணிக்கு, அரசாங்கம் அழைத்து வந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி தொடர்பில் , பாடசாலை மாணவி கிரிசாந்தி கொலை கொலைக்குற்றவாளியான&nbsp; சோமரத்ன ராஜபக்சவை செம்மணிக்கு, அரசாங்கம் அழைத்து வந்து,&nbsp; அடையாளப்படுத்துகின்ற இடங்களைக் அகழ வேண்டும். என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.&nbsp;</p><p>இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை&nbsp; செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்டார்.&nbsp;</p><p>அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார் . இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>யாழ்ப்பாணத்தில் பல பேர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்னர். அவர்களை பற்றிய உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என தொடர்ச்சியான போராட்டங்களை அவர்களின் உறவினர்கள் முன்னெடுக்கிறார்கள்.</p><p>யாழ்ப்பாண மண்ணிலே 95 ஆம் ஆண்டிலிருந்து 2001 ஆம் ஆண்டு வரையான இடைப்பட்ட காலப்பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டும் , படுகொலை செய்யப்பட்டும் உள்ளனர்.</p><p>&nbsp;இதனை நாங்கள் சொல்லவில்லை; பாடசாலை மாணவியான&nbsp; கிரிசாந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ச&nbsp; சொல்லியிருக்கிறார். ,</p><p>எனவே சோமரத்ன ராஜபக்சவை அரசாங்கம் செம்மணிக்கு அழைத்து வந்து, அவர் அடையாளப்படுத்துகின்ற இடங்களைக் அகழ&nbsp; வேண்டும். அப்பொழுதுதான் உண்மை வெளியிலே வரும் என தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-15T06:21:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெற்றிகரமாக அகற்றப்பட்ட இராட்சத சிறுநீரக கல்: திருகோணமலை வைத்தியசாலையில் சாதனை:]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/largest-kidney-stone-removed-trincomalee-hospital-1786771872"></link>
            <id>https://ibctamil.com/article/largest-kidney-stone-removed-trincomalee-hospital-1786771872</id>
            <summary type="text">திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் மிகப்பெரிய சிறுநீரகக் கல் சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் மிகப்பெரிய சிறுநீரகக் கல் சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.</p><p>இந்த சத்திர சிகிச்சையானது&nbsp; நேற்று (14.08.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>இதன்போது&nbsp; 3 கிலோ 100 கிராம் எடையுடைய சிறுநீரகக் கல் திருகோணமலை வைத்தியர்களால் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.&nbsp;</p><p></p><h2>&nbsp;3 கிலோ 100 கிராம் எடையுள்ள சிறுநீரக கல்</h2><p>இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், 2003 ஆம் ஆண்டு பிரேசிலில் 1.9 கிராம் எடையுடைய சிறுநீரகக் கல் அகற்றப்பட்டதாக உலக சுகாதார திணைக்களத்தின் அறிக்கைகளில் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00695b54-ac11-4cd8-a55b-ba60bedd3eab/26-6a80039fb7866.webp' /></p><p>எனினும், திருகோணமலை பொது வைத்தியசாலையில் தற்போது அகற்றப்பட்டுள்ள சிறுநீரகக் கல்லின் எடை 3 கிலோ 100 கிராம் ஆகும்.&nbsp;</p><p>
</p><p>இந்த சத்திரசிகிச்சை வைத்தியர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றதுடன், வைத்தியர் எம்.எம். ரிஷ்லி, வைத்தியர் ஜே.எம். இஹ்ஸான், வைத்தியர் சீ. பிரகலாதன் உள்ளிட்டவர்களும், மயக்க மருந்து வைத்திய நிபுணர் வைத்தியர் அமிலவும் இதில் பங்கேற்றுள்ளனர்.</p><p>
திருகோணமலை பொது வைத்தியசாலையில் இவ்வாறான சிக்கலான சிறுநீரக சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளமை, கிழக்கு மாகாணத்தில் அரச வைத்தியசாலை மருத்துவ சேவையின் திறனை வெளிப்படுத்தும் முக்கிய சாதனையாகக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a0ab6e6-8ed1-40b4-a238-f402e02c73a6/26-6a8003a06d1c7.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T06:18:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பருத்தித்துறை அஞ்சல் அலுவலக காணி விடுவிப்பு : படைத்தரப்பு ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pointpedro-post-office-land-under-military-control-1786773209"></link>
            <id>https://ibctamil.com/article/pointpedro-post-office-land-under-military-control-1786773209</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்திற்கு சொந்தமான காணி விடுவிப்பு விடயத்தில் படைத்தரப்பு ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக
தமிழ்த் தேசிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்திற்கு சொந்தமான காணி விடுவிப்பு விடயத்தில் படைத்தரப்பு ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக
தமிழ்த் தேசிய பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்
பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.</p><p>குறித்த காணியை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரச தரப்பில் கூறப்பட்டு வரும் நிலையில் படையினர் ஏமாற்றும் விதமாக செயற்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p>நேற்று (14) இராணுவ
கட்டுப்பாட்டில் உள்ள பருத்தித்துறை அஞ்சல் அலுவலக பழைய கட்டிடத்தை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் வடமராட்சியில் நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>உறுதியளித்த&nbsp;கௌசல்யா ஆரியரத்ன </h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்திற்கு சொந்தமான காணி கட்டடத்தினை இராணுவ
கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக
அண்மையில் யாழ்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த வெகுஜன ஊடக பிரதியமைச்சர்
கௌசல்யா ஆரியரத்ன யாழ் மாவட்ட அஞ்சல் திணைக்கள தரப்பினரிடம்
உறுதியளித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a10dbe8-b183-4cce-a976-528a23a397f9/26-6a8003098cac8.webp' /></p><p> </p><p>இது தொடர்பில் பிரதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் வைத்து
நேரில் சந்தித்து கதைக்கும் போது குறித்த காணி விடுவிப்பு தொடர்பில் யாழ்
விஜயத்தின் போது முன்வைக்கப்பட்டதாக தெரிவித்திருந்ததுடன் அதனை நிறைவேற்றுவது
தொடர்பில் சாதகமான நிலையினையும் வெளிப்படுத்தி இருந்தார்.</p><p>இந்நிலையில் பருத்தித்துறை அஞ்சல் அலுவலக வளாகம் மற்றும் கட்டிடத்தை
விடுவிக்காது தொடர்ந்தும் ஆக்கிரமித்துக்கொண்டு அதற்கு அருகாமையில் உள்ள சிறிய
நிலப்பரப்பினை வழங்க படைத்தரப்பு திட்டமிட்டுள்ளது. இன்றைய களவிஜயத்தின் போது குறித்த ஏமாற்று அம்பலமாகியுள்ளது.</p><p>
குறித்த இடத்தில் அஞ்சல் அலுவலகத்தை அமைக்குமாறு தெரிவிக்கப்பட்ட நிலையில்
அங்கு அஞ்சல் நிலைய கட்டிடத்தை அமைக்க முடியாது என தொடர்புடைய அஞ்சல் நிலைய
கட்டுமான பொறியியல் துறை தரப்பினரால் கூறப்பட்டிருப்பதாகவும், பெருத்தமற்ற
சிறய இடத்தை விடுவிக்கவே இராணுவ தரப்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் பருத்தித்துறை அஞ்சல் நிலைய தரப்பினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>&nbsp;காணியை விடுவிக்க நடவடிக்கை&nbsp;</h2><p>படைத்தரப்பின் இருப்பை காரணம் காட்டி பருத்தித்துறை தபால் நிலைய காணி
விடுவிக்கப்படாமையை ஒருபோதும் நியாயப்படுத்தி விட முடியாது. அதற்கான
அழுத்தங்களை வழங்கி உரிய காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83eb0831-7d83-41d3-99da-98fd605e5611/26-6a800308b0a3b.webp' /></p><p>
</p><p>
தேர்தல் காலத்திலும் அதன் பின்னரும் மக்களின் காணிகள் மக்களுக்கே என தேசிய
மக்கள் சக்தி தரப்பில் வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் செயற்பாட்டில் அதனை
நடைமுறைப்படுத்த இதுவரை எதையும் செய்யவில்லை.</p><p>
மாறாக மக்களின் காணிகளை மேலும் சுவீகரிக்கப்பட்டு வருகிறது. தனியார் காணிகள்
மற்றும் அரச காணிகள் என எதனையும் விடுவிக்க இந்த அரசாங்கம் எதுவித
நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
</p><p>
காணி விடுவிப்பு இடம்பெற்று வரும் மேற்குறித்த நிலைவரங்கள் தொடர்பில்
அண்மையில் கனேடிய தூதர் மற்றும் இந்திய தூதருடனான சந்திப்பில்
தெளிவுபடுத்தியதுடன், காணி விடுவிப்பு தொடர்பில் வலியுறுத்தி உள்ளோம்” என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-15T06:15:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் அவதானம்..! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/money-laundering-warning-be-bank-officials-1786763500"></link>
            <id>https://tamilwin.com/article/money-laundering-warning-be-bank-officials-1786763500</id>
            <summary type="text">&amp;nbsp;வங்கி அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என நாடகமாடி இணையவழி ஊடாக பொதுமக்களை அச்சுறுத்தி பணமோசடியில் ஈடுபடும் குழுவினர் தொடர்பில் பொதுமக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;வங்கி அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என நாடகமாடி இணையவழி ஊடாக பொதுமக்களை அச்சுறுத்தி பணமோசடியில் ஈடுபடும் குழுவினர் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரித்துள்ளது.
</p><p>
பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லது வங்கி அதிகாரிகள் என தெரிவிக்கும் நபர்களிடம் தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>குறுஞ்செய்திகள் மற்றும் இணையவழி ஊடாக மோசடி</h2><p>

இதேவேளை, சந்தேகத்திற்குரிய அழைப்புகள் வந்தால் உடனடியாக தொலைபேசி இலக்கங்கள் ஊடாகப் பொலிஸ் நிலையம் அல்லது வங்கியை நேரடியாக தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1fea9e1-0448-4cc3-b7ad-c6f3aebb45e6/26-6a7ff15f69cf5.webp' /></p><p>
</p><p>
குறுஞ்செய்திகள் மற்றும் இணையவழி ஊடாகத் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
 மோசடிக்காரர்கள் பிரபல வங்கிகளின் பெயர்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்குப் போலி குறுஞ்செய்திகளை அனுப்பி மோசடியில் ஈடுபடுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.</p><h2>வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் அவதானம்</h2><p>

இவர்கள் வங்கி கணக்குகளில் வைப்பில் உள்ள பண விபரங்களை அறிந்து பணம் மோசடியான முறையில் ஈட்டப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்து அச்சுறுத்தி மோசடியில் ஈடுபடுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00b9c0ad-09e2-42f7-b4ed-5cd708d1b3f1/26-6a7ff1603bb64.webp' /></p><p>
</p><p>
மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கடிதத்தலைப்புகள், அதிகாரிகளின் போலி கையொப்பங்கள் மற்றும் உத்தியோகபூர்வ முத்திரைகள் இடப்பட்ட போலி ஆவணங்களை அனுப்பி பொதுமக்களை நம்பவைக்கின்றமை தெரியவந்துள்ளது.</p><p> 

இவர்களிடம் பொலிஸ் சீருடைகள், வங்கி அடையாள அட்டைகள் மற்றும் போலி முத்திரைகளும் காணப்படுவதாக தெரியவந்துள்ளது. </p><p>

இதேவேளை, ஓய்வூதியதாரர்கள் மற்றும் முதியோர்கள் மோசடி காரர்களால் இலக்குவைக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.&nbsp; </p><p>எனவே பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லது வங்கி அதிகாரிகள் என தெரிவிக்கும் நபர்களிடம் தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

&nbsp; &nbsp; </p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T06:09:48+00:00</updated>
        </entry>
    </feed>
