<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-31T10:28:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏதிலிகளை தடுக்க தேசிய அவசரநிலையை அறிவித்த ஸ்பெயின்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/spain-declares-national-emergency-to-halt-migrants-1785475617"></link>
            <id>https://canadamirror.com/article/spain-declares-national-emergency-to-halt-migrants-1785475617</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஆப்பிரிக்காவின் வடமேற்கு முனையில் அமைந்துள்ள ஸ்பெயின் சியூட்டா (Ceuta) பகுதியின் அதிகாரிகள், மொரோக்கோ எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஆப்பிரிக்காவின் வடமேற்கு முனையில் அமைந்துள்ள ஸ்பெயின் சியூட்டா (Ceuta) பகுதியின் அதிகாரிகள், மொரோக்கோ எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக தேசிய அவசரநிலையை அறிவித்தனர்.
</p><p>
 எல்லையைப் பாதுகாக்க இராணுவத்தை அனுப்புமாறு வியாழக்கிழமை (31) மாட்ரிட் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44e0e401-93cf-48d8-8756-cd786d4bcd77/26-6a6c322357a8c.webp' /></p><p>
</p><p>
மொரோக்கோ மற்றும் ஸ்பெயின் பிரதேசங்களைப் பிரிக்கும் கடல்தடுப்புச் சுவர்களைச் சுற்றி நடந்து செல்லவும், எல்லை வேலியை ஏறிக் கடக்கவும் மக்கள் கூட்டம் முயற்சிக்கும் காட்சிகள் காணொளிகளில் வெளியாகியுள்ளது.
</p><p>
இதனையடுத்து, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sánchez), நிலைமையை சமாளிக்க “உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்துள்ளார்.

எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவளிப்பதற்காக, தங்கள் ஆயுதப் படைகளைச் சேர்ந்த பணியாளர்களைச் சியூட்டாவிற்கு (Ceuta) அனுப்பவுள்ளதாக ஸ்பெயினின் உள்துறை அமைச்சு வியாழக்கிழமை பிற்பகுதியில் தெரிவித்தது.
</p><p>
வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மற்றொரு ஸ்பானியத் தன்னாட்சி நகரமான மெலில்லாவுடன் (Melilla) சேர்த்து, சியூட்டா (Ceuta) நகரமும் ஆப்பிரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரே நில எல்லையாகத் திகழ்கிறது.

இந் நிலையில் ஐரோப்பாவை அடைய முற்படும் புலம்பெயர்ந்தோர் எல்லை வழியாக நுழைய முயற்சிக்கும் நிகழ்வுகள், அவ்வப்போது இவ்விரு நகரங்களிலும் அதிகரிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-31T10:18:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயின் எல்லையில் பெரும் பரபரப்பு; ஒரே நாளில் நுழைந்த 49,000 குடியேறிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/49-000-migrants-entered-spain-in-a-single-day-1785493152"></link>
            <id>https://canadamirror.com/article/49-000-migrants-entered-spain-in-a-single-day-1785493152</id>
            <summary type="text">&amp;nbsp; ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள செயூட்டா பகுதிக்குள் ஒரே நாளில் சுமார் 49,000 குடியேறிகள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
சட்டவிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள செயூட்டா பகுதிக்குள் ஒரே நாளில் சுமார் 49,000 குடியேறிகள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
சட்டவிரோதமாக நுழைந்தவர்களில் குறைந்தது 7,000 பேர் சிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில், மொராக்கோவிலிருந்து சுமார் 49,000 குடியேறிகள் தரை மற்றும் கடல் வழியாக ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான சியூட்டாவிற்குள் (Ceuta) நுழைந்துள்ளதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/210e20c0-e6a5-43b1-a000-2038916f7ff0/26-6a6c76a246f0d.webp' /></p><h2>கடலில் தடுத்து நிறுத்தப்படும் குடியேறிகள்</h2><p>
</p><p>
வியாழக்கிழமையன்று (30) ஆயிரக்கணக்கான மக்கள் கடர்மார்க்கமாக நீந்தி நகருக்குள் வருவதை வீடியோக்களும் படங்களும் காட்டின.

அதேவேளையில், இரவு முழுவதும் இத்தகைய வருகைகள் தொடர்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. </p><p>

அண்மைய நாட்களில் அப்பகுதியை அடைய முயன்றவர்களில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
</p><p></p><p>
சியூட்டா (Ceuta) அல்லது மற்றொரு ஸ்பானியப் பகுதியான மெலில்லாவை (Melilla) அடைய முயலும்போது கடலில் தடுத்து நிறுத்தப்படும் குடியேறிகளை மொராக்கோவிற்கு உடனடியாகத் திருப்பி அனுப்ப முடியாது என்று ஸ்பெயினின் உயர் நீதிமன்றம் இந்த மாதம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
</p><p>
அண்மையில் எல்லை கடக்கும் முயற்சிகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, உள்ளூர் அதிகாரிகள் மாட்ரிட்டிடம் உதவி கோரியிருந்தனர். </p><p>

ஆனால், வியாழக்கிழமையன்று எல்லைக் கட்டுப்பாடுகள் செயலிழந்ததால் அங்கு குழப்பமான காட்சிகள் நிலவின.

பின்னர், ஸ்பெயின் தனது ஆயுதப் படைகளை செவுட்டாவிலும், அதன் சகோதர நகரமான மெலிலாவிலும் பாதுகாப்பை வலுப்படுத்த அனுப்பியது. </p><p>

அங்கும் ஒரே இரவில் 300 முதல் 400 பேர் வரை எல்லை கடக்க முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஸ்பானிய அதிகாரிகளின் வியக்கத்தக்க மதிப்பீட்டின்படி, கடந்த ஓரிரு நாட்களில் சியூட்டாவிற்குள் (Ceuta) நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை, அந்நகரின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேலாக இருக்கலாம்.\</p><p>&nbsp; உள்ளூர் புள்ளிவிவரங்களின்படி இந்நகரின் மக்கள் தொகை சுமார் 83,600 ஆகும்.


தங்கள் பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்த அனைவரையும் முடிந்தவரை விரைவாக திருப்பி அனுப்புவதை உறுதிசெய்ய மொராக்கோவுடன் இணைந்து பணியாற்றி வருவதாக ஸ்பெயினின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-31T10:17:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைக்கவசம் இல்லாமல் மின்னுருளி ஓட்டினால் கடும் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/heavy-fines-for-riding-a-scooter-without-a-helmet-1785492995"></link>
            <id>https://canadamirror.com/article/heavy-fines-for-riding-a-scooter-without-a-helmet-1785492995</id>
            <summary type="text">மின்னுருளி (Electric Scooter) விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், பிரான்சின் ஓ-து-சென் (Hauts-de-Seine) மாவட்டத்தில் மின்னுருளி உள்ளிட்ட தனிநபர் மின...</summary>
            <content type="html"><![CDATA[<p>மின்னுருளி (Electric Scooter) விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், பிரான்சின் ஓ-து-சென் (Hauts-de-Seine) மாவட்டத்தில் மின்னுருளி உள்ளிட்ட தனிநபர் மின்சாரப் போக்குவரத்து சாதனங்களைப் பயன்படுத்துவோருக்கு தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
</p><p>
மாவட்ட ஆட்சியர் அலெக்சாண்டர் ப்ரூஜெர் (Alexandre Brugère) கையெழுத்திட்டுள்ள புதிய அவசர உத்தரவின் மூலம் இந்தச் சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. </p><p>பாதுகாப்பு விதிகளை மீறுவோருக்கு 1,500 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
புதிய விதிகளின்படி, மின்னுருளிகள், ஒற்றைச் சக்கர மின்வாகனங்கள் மற்றும் பிற தனிநபர் மின்சாரப் போக்குவரத்து சாதனங்களை இயக்குபவர்கள் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e30e37c2-b634-4151-ab2a-edf247aa5301/26-6a6c760473609.webp' /></p><p>மேலும், பகல் மற்றும் இரவு நேரங்களில் தொலைவிலிருந்தே தெளிவாகக் காணக்கூடிய ஒளிரும் பாதுகாப்பு மேலாடை அல்லது ஒளிரும் பட்டை அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், இந்த வாகனங்களை இயக்குபவர்கள் குறைந்தது 14 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதுடன், வாகனத்தின் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிலோமீட்டரைத் தாண்டக் கூடாது எனவும் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
</p><p>
"ஒவ்வொரு விபத்தும் தவிர்க்கப்பட வேண்டிய துயரமான நிகழ்வு" எனக் குறிப்பிட்ட மாவட்ட ஆட்சியர், புதிய சட்டத்தை அமுல்படுத்தும் நோக்கில் காவல்துறையின் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
அண்மையில் அண்டை மாவட்டமான சென்-எ-மார்னில் (Seine-et-Marne) இடம்பெற்ற 45 மின்னுருளி விபத்துகளில் ஒருவர் உயிரிழந்ததுடன், 51 பேர் காயமடைந்திருந்தனர். </p><p>அந்த விபத்துகளில் சிக்கியவர்களில் ஐந்து பேர் மட்டுமே தலைக்கவசம் அணிந்திருந்ததாக வெளியான புள்ளிவிவரங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்க காரணமாகியுள்ளன.</p><p>

மேலும், ரூவேல்-மால்மேசோன் (Rueil-Malmaison) நகரில் 'சீசர்' என்ற சிறுவன் மின்னுருளி விபத்தில் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த நகரிலும் ஏற்கனவே தலைக்கவசம் கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
</p><p>
இதனிடையே, பிரான்சின் பல நகராட்சிகள் இதேபோன்ற பாதுகாப்பு விதிகளை நடைமுறைப்படுத்தி வரும் நிலையில், இந்த நடைமுறையை நாடு முழுவதும் பொதுச் சட்டமாக்குவது தொடர்பாக பிரான்ஸ் அரசு பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-31T10:16:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயின் பகுதிக்குள் 24 மணிநேரத்தில் புகுந்த 49,000 மொரோக்கர்கள் : ஐரோப்பிய எல்லைகளில் பதற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/49000-migrants-storm-spanish-border-in-24-hours-1785491405"></link>
            <id>https://ibctamil.com/article/49000-migrants-storm-spanish-border-in-24-hours-1785491405</id>
            <summary type="text">மொராக்கோ பெருநிலப்பரப்பில் உள்ள ஸ்பெயினின் வட ஆபிரிக்கப் பகுதியான செவுட்டாவிற்குள் 24 மணிநேரத்துக்குள் 49,000 மொரோக்கர்கள் சட்டவிரோதமாக நுழைந்ததை அடுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொராக்கோ பெருநிலப்பரப்பில் உள்ள ஸ்பெயினின் வட ஆபிரிக்கப் பகுதியான செவுட்டாவிற்குள் 24 மணிநேரத்துக்குள் 49,000 மொரோக்கர்கள் சட்டவிரோதமாக நுழைந்ததை அடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>இன்று (31) காலை வரை மக்கள் அங்கு சென்றுவருவதால் ஏறபட்ட நெருக்கடியை அடுத்து ஸ்பெயினின் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் இன்று செவுட்டா பகுதிக்கு அவசரமாக சென்றுள்ளனர்.</p><p> 
ஸ்பெயின் பெருநிலப்பரப்பில் இல்லாமல் மொராக்கோவின் கடற்கரையில் செவுட்டா இருந்தாலும் பகுதிக்குள் நுழைந்தால் அது ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைவதற்கு நிகர் என்பதால் 24 மணிநேரத்துக்குள் அலை அலையாக 49,000 மொரோக்கர்கள் அங்கு நுழைந்துள்ளனர்.</p><p></p><h2>&nbsp;18 பேர் பலியாகியுள்ளனர்</h2><p> </p><p>ஆயிரக்கணக்கான மக்கள் கடலில் நீந்தியும், காற்றடைக்கப்பட்ட சாதனங்களை பயன்படுத்தியும் நுழைந்துள்ள நிலையில் கடலில் நீந்த முற்பட்டவர்களில் 9 பேர் உட்பட 18 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc84d191-872f-46c7-b1f5-da9c5e4a4f16/26-6a6c74ac5e1a5.webp' /></p><p>மொராக்கோவில் உள்ள செவுட்டா அல்லது மெலிலாவை அடைய முயற்சிக்கும் குடியேறிகளை உடனடியாக மொராக்கோவிற்குத் திருப்பி அனுப்ப முடியாது என ஸ்பெயின் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை சாதகமாக கருதி இந்த நெருக்கடி உருவாக்கியுள்ளதாக கருதபபடுகிறது. </p><p>தற்போது அங்கு ஸ்பெயின் இராணுவத்தை அனுப்பவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ள நிலையில் இந்த நெருக்கடியை அடுதத்து ஸ்பெயின் எல்லையில் கட்டுப்பாடுகளை இறுக்க தனது விரைவுத் தலையீட்டு எல்லைப் படையை பிரான்ஸ் களமிறக்கியுள்ளது.</p><p></p><h2>மக்கள் தொகை அதிகரிப்பு&nbsp;</h2><p>ஆயிரக்கணக்கான மொரோக்கர்கள் நுழைந்ததால் 24 மணிநேரத்தில் செவுட்டாவின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 50 வீதத்தால் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/011e75a8-fb56-48be-b4bd-11f6a604fe0a/26-6a6c74ad16b3d.webp' /></p><p>
நேற்று முதல், பலர் செவுட்டாவின் தெருக்களில் அலைந்து திரிந்து வருகின்றனர், அவர்களில் பலர் இரவை திறந்தவெளியில் கழித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p>
இந்த நிலையில் ஷெங்கன் வலயத்தில் இருந்து ஸ்பெயின் வெளியேற வேண்டும் என்ற இத்தாலியின் கருத்தை ஸ்பெயின் கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T10:10:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்ட அச்சம்: தமிழ்நாடு முதலமைச்சரின் கர்நாடக பயணத்தை தள்ளிவைக்க வேண்டுகோள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/tamil-nadu-cm-should-not-come-to-karnataka-1785491902"></link>
            <id>https://ibctamilnadu.com/article/tamil-nadu-cm-should-not-come-to-karnataka-1785491902</id>
            <summary type="text">காவிரி நீர் விவகாரம் தொடர்பாக ஆகஸ்ட் 3-ஆம் தேதி பெங்களூருவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை சந்திக்கலாம் என்ற தகவல்கள் வெளியான நிலையில், தற்போதைய அரசியல...</summary>
            <content type="html"><![CDATA[<p>காவிரி நீர் விவகாரம் தொடர்பாக ஆகஸ்ட் 3-ஆம் தேதி பெங்களூருவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை சந்திக்கலாம் என்ற தகவல்கள் வெளியான நிலையில், தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு அந்தச் சந்திப்பைத் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><h2>பயணத்தை தள்ளிவைக்க வேண்டுகோள்</h2><p>

காவிரி விவகாரம் குறித்து நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a60c70a-268d-4722-a526-ff6b6308bd1f/26-6a6c74290c0b4.webp' /></p><p>
</p><p>
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகா வரும்போது போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளதால், தற்போதைய சூழலில் பயணத்தைத் தவிர்த்து, உரிய சூழல் உருவான பிறகு வேறு ஒரு தேதியில் சந்தித்து பேசலாம் என தொலைபேசி மூலம் கேட்டுக்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>
அத்துடன், காவிரி மேலாண்மை ஆணையத்தின் நீர் திறப்பு உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும், கர்நாடகத்தின் நிலைப்பாட்டை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியிடம் எடுத்துரைத்துள்ளதாகவும் டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T10:09:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலந்து வான்வெளிக்குள் ரஷ்ய ஏவுகணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russian-missile-entered-polish-airspace-1785492356"></link>
            <id>https://canadamirror.com/article/russian-missile-entered-polish-airspace-1785492356</id>
            <summary type="text">&amp;nbsp; போலந்து வான்வெளிக்குள் ரஷ்ய ஏவுகணை ஒன்று நுழைந்து வீழ்ந்து நொறுங்கியதால், அங்கு நேட்டோ போர் வானூர்திகள் அவசரமாக அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; போலந்து வான்வெளிக்குள் ரஷ்ய ஏவுகணை ஒன்று நுழைந்து வீழ்ந்து நொறுங்கியதால், அங்கு நேட்டோ போர் வானூர்திகள் அவசரமாக அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
வியாழக்கிழமை அதிகாலையில் போலந்து வான்வெளிக்குள் நுழைந்த இந்த ஏவுகணை, இரவோடு இரவாக யுக்ரைன் மீது ரஷ்யா ஏவிய பெலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதலின் ஒரு பகுதி என்று கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a6b34d7-f5a1-4dfc-82e9-24591aad282a/26-6a6c7385ac678.webp' /></p><p>

இதில் சிறுவர்கள் உட்பட குறைந்தது எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஏவுகணை தென்பட்டதைத் தொடர்ந்து, போலந்து உட்பட நேட்டோ உறுப்பு நாடுகள், ஜெட் வானூர்திகளையும்,வான்வழி எரிபொருள் நிரப்பும் வானூர்தியையும், வான்வழி முன்னெச்சரிக்கை வானூர்தியையும் களமிறக்கியதாக நேட்டோ கூட்டணியின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.</p><p>

அத்துடன் தனது பிராந்தியத்தைப் பாதுகாக்க நேட்டோ அனைத்துத் தேவையான நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-31T10:04:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சைபர் தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறிய புதிய ஆய்வு மையம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-research-center-to-detect-cyber-attacks-early-1785491972"></link>
            <id>https://jvpnews.com/article/new-research-center-to-detect-cyber-attacks-early-1785491972</id>
            <summary type="text">அரச நிறுவனங்கள் மற்றும் அத்தியாவசிய தகவல் உட்கட்டமைப்புகளின் சைபர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தேசிய மட்டத்திலான சைபர் அச்சுறுத்தல் கண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச நிறுவனங்கள் மற்றும் அத்தியாவசிய தகவல் உட்கட்டமைப்புகளின் சைபர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தேசிய மட்டத்திலான சைபர் அச்சுறுத்தல் கண்டறிதல் மற்றும் தீங்கிழைக்கும் மென்பொருள் (Malware) பகுப்பாய்வு ஆய்வு மையமான MATH Lab-ஐ இலங்கை CERT நிறுவனம் உத்தியோகபூர்வமாக நிறுவியுள்ளது.</p><p>
</p><p></p><p>இந்த ஆய்வு மையத்தின் நிறுவல், இலங்கையின் சைபர் பாதுகாப்பு துறையில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுவதுடன், சைபர் தாக்குதல்கள் நிகழ்ந்த பின்னர் பதிலளிக்கும் பாரம்பரிய நடைமுறையிலிருந்து விலகி, உளவுத்தகவல் அடிப்படையிலான முன்கூட்டிய அச்சுறுத்தல் கண்டறிதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் புதிய அணுகுமுறையை அறிமுகப்படுத்துகிறது.</p><p>

நாட்டில் டிஜிட்டல் அரச சேவைகளும் இணையவழி அரச தளங்களும் விரிவடைந்து வரும் நிலையில், 'பிஷிங்' தாக்குதல்கள், தரவுக் கசிவுகள் மற்றும் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ள மின்னணு அமைப்புகளின் பலவீனங்களை இலக்காகக் கொண்ட சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக இலங்கை CERT தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cf04c8b-23f6-4cc4-bbe5-d57399831987/26-6a6c72060620e.webp' /></p><p>

தேசிய சைபர் பாதுகாப்பு செயற்பாட்டு மையம் (NCSOC) தற்போது மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு மற்றும் சம்பவங்களுக்கு பதிலளிக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தாலும், முன்கூட்டியே அச்சுறுத்தல்களை கண்டறிந்து மேம்பட்ட பகுப்பாய்வுகளை மேற்கொள்ளும் தனித்திறன் கொண்ட அமைப்பின் தேவை காரணமாகவே MATH Lab நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த ஆய்வு மையம், சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாக Proactive Threat Hunting உள்ளிட்ட மேம்பட்ட சேவைகளை வழங்கி, வலையமைப்புகளுக்குள் மறைந்திருக்கும் அச்சுறுத்தல்களை சேதம் ஏற்படுவதற்கு முன்பே கண்டறியும் திறனை வழங்கும்.</p><p>

மேலும், அரச நிறுவனங்களின் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ள மின்னணு சொத்துக்களை External Attack Surface Monitoring (EASM) தொழில்நுட்பத்தின் மூலம் தொடர்ச்சியாகக் கண்காணித்து, பாதுகாப்பு குறைபாடுகள், தவறான கட்டமைப்புகள் மற்றும் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் நுழைவு வாயில்களை அடையாளம் காண்பதும் இந்த ஆய்வு மையத்தின் முக்கிய பணிகளில் ஒன்றாகும்.
</p><p>
அதேவேளை, தேசிய சைபர் அச்சுறுத்தல் உளவுத்தகவல் (Cyber Threat Intelligence – CTI) பகிர்வு அமைப்பின் ஊடாக, அரச நிறுவனங்களுக்கு நடைமுறையில் பயன்படுத்தக்கூடிய அச்சுறுத்தல் தகவல்களை சேகரித்து, பகுப்பாய்வு செய்து, உரிய நேரத்தில் பகிர்வதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த சைபர் பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38cc5d83-7377-44a3-bdf0-9525ba2dd8ab/26-6a6c7206aeb70.webp' /></p><p>

அரச அமைப்புகளை தொடர்ச்சியாகக் கண்காணித்து, உளவுத்தகவல் அடிப்படையிலான ஆய்வுகள் மூலம் அச்சுறுத்தல்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், தாக்குதலாளர்கள் அமைப்புகளுக்குள் நீண்டகாலம் நிலைத்திருப்பதைத் தடுப்பது மற்றும் பெரியளவிலான சைபர் தாக்குதல்கள் உருவாகுமுன் அவற்றை முறியடித்தல் ஆகியவை இந்த ஆய்வு மையத்தின் பிரதான நோக்கங்களாகும்.</p><p>MATH Lab, 250-க்கும் மேற்பட்ட அரச நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்குவதுடன், சுகாதாரம், கல்வி, எரிசக்தி உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளில் ஒருங்கிணைந்த, உளவுத்தகவல் சார்ந்த தேசிய சைபர் பாதுகாப்பு அணுகுமுறையை உருவாக்குவதற்கும் பங்களிக்கவுள்ளது.</p><p>

மேலும், மால்வேர் பகுப்பாய்வு மற்றும் சைபர் அச்சுறுத்தல் கண்டறிதல் துறைகளில் உள்நாட்டு நிபுணத்துவத்தை மேம்படுத்துவதன் மூலம், சிக்கலான சைபர் தாக்குதல்களை எதிர்கொள்வதில் வெளிநாட்டு தொழில்நுட்ப உதவியைச் சார்ந்திருக்கும் நிலையை குறைத்து, இலங்கையின் சுயாதீன சைபர் திறன்களை வலுப்படுத்தும் என்றும் இலங்கை CERT தெரிவித்துள்ளது.
</p><p>
நாட்டின் டிஜிட்டல் உட்கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்கும், அரசின் டிஜிட்டல் சேவைகள் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதற்குமான நீண்டகால முதலீடாக இந்த ஆய்வு மையம் அமையும் எனவும், இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தைப் பாதுகாக்க அரசின் அனைத்து நிறுவனங்களுடனும் தொடர்ந்தும் நெருக்கமாக இணைந்து செயல்பட உறுதிபூண்டுள்ளதாகவும் இலங்கை CERT குறிப்பிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T10:00:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனுஷின் ராயன் படத்துக்கு ஏன் தேசிய விருது!! காரணங்களை அடுக்கிய சீரியல் நடிகர்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/why-did-dhanushs-raayan-win-national-award-actor-1785491044"></link>
            <id>https://viduppu.com/article/why-did-dhanushs-raayan-win-national-award-actor-1785491044</id>
            <summary type="text">தனுஷ்தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் நடிகராக ஜொலித்து வரும் நடிகர் தனுஷ், ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய வி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>தனுஷ்</h2><p>தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் நடிகராக ஜொலித்து வரும் நடிகர் தனுஷ், ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றிருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த ராயன், கேப்டன் மில்லர் ஆகிய படங்களுக்கும் தேசிய விருதுகளை அறிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c73659ea-fb1a-407c-963d-99634266295a/26-6a6c6e667e583.webp' /></p><p> </p><p>இதனை பார்த்த பலரும் ராயனுக்கும், கேப்டன் மில்லருக்கும் தேசிய விருது கொடுக்கும் அளவிற்கு அப்படத்தில் ஒன்றும் இல்லை, தகுதியான பல படங்கள் இருக்கிறது என்று ஜூரிக்களில் ஒருவரான கலா மாஸ்டரை விமர்சித்து வந்தனர். சமீபத்தில் நடந்த ரசிகர்கள் நல உதவி நிகழ்ச்சியில் தனுஷ், ஏன் கொடுத்தீர்கள் என்று கேட்கிறார்கள், தட்டிவிடாதீர்கள் தட்டிக்கொடுங்கள் என்று பேசியிருந்தார். </p><h2>வேணு அரவிந்த்</h2><p>இந்நிலையில் சீரியல் நடிகரும் விமர்சகருமான வேணு அரவிந்த் பேட்டியொன்றில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், ராயன் படத்திற்கு ஏன் தேசிய விருது? என்ற கேள்வி பலரிடம் இருக்கிறது. இதுதொடர்பான மீம்ஸ்களை பார்க்கிறேன். ஏன் ஜூரிக்கள் அப்படத்திற்கு விருது கொடுத்தார்கள் என்று எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். முதலில் ராயன் படத்திற்கு கிடைத்திருக்கும் விருது சிறந்த தமிழ் பட பிரிவில். ராயன் ஒரு பாதுகாப்பான கமர்ஷியல் படம் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2aff7555-8562-4dbe-8db9-5f5438e8bd6f/26-6a6c6e672f0a8.webp' /></p><p>படத்தின் அறிமுக காட்சி எல்லாம் ரொம்பவே நார்மலாக இருக்கும். இப்படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். அனைத்து விமர்சனங்களிலும் பொதுவாக இருந்தது என்ன என்றால் ரஹ்மானின் பிஜிஎம் பாடல்கள் சூப்பர் என்பதுதான். ஓம் பிரகாஷின் கேமராவும் சூப்பராக இருந்தது. </p><p>இவையனைத்தும் சிறப்பாக இருந்தாலும் 2வது பாதியும், கிளைமேக்ஸும் வீக் என்று எல்லோரும் உணர்ந்தார்கள். ராயன் அனைத்திலும் சிறந்த படம் என்று கொடுக்கவில்லை, ராய் கிராஃப்ட், டிரைக்‌ஷனல் போன்றவற்றிற்கு கொடுத்த மாதிரிதான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ta" dir="ltr">ராயனுக்கு எதனால தேசிய விருது தந்துருக்கலாம் 🔥🔥🔥 <a href="https://t.co/CNtxDrmUA1">pic.twitter.com/CNtxDrmUA1</a></p>&mdash; Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) <a href="https://x.com/Anshithaprincey/status/2083017516285354435?ref_src=twsrc%5Etfw">July 31, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-07-31T10:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொருளாதாரத்தை பாதிக்கும் மதுபான உற்பத்தி - நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/beer-production-affecting-the-national-economy-1785491584"></link>
            <id>https://tamilwin.com/article/beer-production-affecting-the-national-economy-1785491584</id>
            <summary type="text">மதுபான உற்பத்தியில் அரிசி மற்றும் சீனியை முதன்மை மூலப்பொருட்களாகப் பயன்படுத்துவதற்கு மதுவரி ஆணையாளர் நாயகம் மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகள் ஒப்புதல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மதுபான உற்பத்தியில் அரிசி மற்றும் சீனியை முதன்மை மூலப்பொருட்களாகப் பயன்படுத்துவதற்கு மதுவரி ஆணையாளர் நாயகம் மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகள் ஒப்புதல் அளிப்பதைத் தடுக்கும் உத்தரவு கோரும் ஒரு நீதிப்பேராணை மனுவின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. </p><p>

இன்று(31.07.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அக்டோபர் 2ஆம் திகதியிட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2> 


மதுபான உற்பத்தி</h2><p>
ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்காகவே அக்டோபர் 2 ஆம் திகதியன்று இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2b9231c-3714-41bb-ad37-8ff3fc386596/26-6a6c717b2bde1.webp' /></p><p>

நீதியரசர்கள் ஆர். குருசிங்க மற்றும் ஏ. பிரேம சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, மதுபான உற்பத்தி நிறுவனங்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், மனு தொடர்பான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய ஒரு திகதியை வழங்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டனர்.
</p><h2>

தேசிய பொருளாதாரத்தில் வீழ்ச்சி</h2><p>
உரிமம் பெற்ற மதுபான விற்பனையாளர்கள் குழுவால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் மதுவரி ஆணையாளர் நாயகம் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள், இலங்கை தர நிர்ணய நிறுவனம், சட்டத்துறைத் தலைவர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2288d339-a75f-4f3d-9bf2-bfcc355d9483/26-6a6c717a52e53.webp' /></p><p>
</p><p>
அரிசி உற்பத்திக்கு அரசாங்கம் பொது நிதியிலிருந்து கணிசமான மானியங்களை வழங்கி வருகிறது.
</p><p>
இந்தநிலையில், மதுபான உற்பத்தி
போன்ற வணிகத் தொழில்களுக்கு அரிசியைத் திசைதிருப்புவது தேசியப் பொருளாதாரத்தில் கடுமையான பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், அரிசி உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கான நாட்டின் முயற்சிகளைப் பலவீனப்படுத்தக்கூடும் என்றும் மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.
</p><p>
இதற்கமைய, மதுபான உற்பத்தியில் அரிசி மற்றும் சீனியை முதன்மை மூலப்பொருட்களாகப் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளிப்பதிலிருந்து, மதுவரி ஆணையர் நாயகம் உள்ளிட்ட எதிர்மனுதாரர்களைத் தடுக்கும் உத்தரவை மனுதாரர்கள் கோரியுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T09:57:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா, இஸ்ரேலை அடுத்து... சாத்தியமான தரைவழித் தாக்குதலுக்குத் தயாராகும் சவுதி அரேபியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/saudi-prepares-land-offensive-1785491889"></link>
            <id>https://news.lankasri.com/article/saudi-prepares-land-offensive-1785491889</id>
            <summary type="text">மத்திய ஏமனில் ஹவுதிகளுக்கு எதிராகக் கடல் வழியாகவும், சாத்தியமான தரை வழியாகவும் ஒரு பெரிய இராணுவத் தாக்குதலை நடத்த சவுதி அரேபியா தயாராகி வருவதாக தகவல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய ஏமனில் ஹவுதிகளுக்கு எதிராகக் கடல் வழியாகவும், சாத்தியமான தரை வழியாகவும் ஒரு பெரிய இராணுவத் தாக்குதலை நடத்த சவுதி அரேபியா தயாராகி வருவதாக தகவல் கசிந்துள்ளது.</p><h2>ஆயத்த நடவடிக்கை</h2><p>
</p><p>தெற்கு செங்கடல் வழியாக நடைபெறும் தனது எண்ணெய் ஏற்றுமதியின் மீதான ஹவுதிகளின் இறுக்கமான பிடியை உடைக்கும் முயற்சியாக சவுதி அரேபியா இந்த முடிவுக்கு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33f3f219-e339-4e2f-855a-81179e4cef0b/26-6a6c74bce03e4.webp' /></p><p> </p><p>ஏமனின் கிழக்குப் பகுதியிலிருந்து சவுதிப் படைகள் வெளியேறுவது வெளிச்சத்திற்கு வந்த நிலையில், இது ஒரு தரைவழித் தாக்குதலுக்கான ஆயத்த நடவடிக்கையாக இருக்கலாம் என்றே ஏமன் தரப்பு நம்புகிறது. </p><p>இதனிடையே, செங்கடல் மற்றும் பாப் அல்-மண்டப் நீரிணையில் ஹவுதிகளின் தாக்குதல்களிலிருந்து கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்காக, ஒரு கடற்படைக் கூட்டணியை உருவாக்க சவுதி அரேபியா தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. </p><p>ஐக்கிய அரபு அமீரகம் உட்பட சில நாடுகள் தவிர்த்து, துருக்கி, பாகிஸ்தான், எகிப்து, சூடான் மற்றும் ஜிபூட்டி உள்ளிட்ட 14 நாடுகள், பன்னாட்டு கடல்சார் தற்காப்புக் கூட்டணிக்கு ஆதரவளிக்கும் வகையில் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக சவுதி பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.</p><p></p><p>
ஏமனின் தலைநகரான சனா மற்றும் அதன் செங்கடல் கடற்கரைப் பகுதியின் பெரும்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹவுதிகள், சவுதி அரேபியக் கப்பல்களுக்கு எதிராகத் தடையை அமுல்படுத்துவதாக ஜூலை 20 அன்று அறிவித்தனர்; ஆனால், செங்கடலில் பயணிக்கும் அனைத்துக் கப்பல்களின் மீதும் கட்டணம் விதிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுவதை ஹவுதிகள் மறுத்துள்ளனர். </p><p>ஏமன் மீதான தனது முற்றுகையை சவுதி அரேபியா நீக்கியவுடன் தாங்களும் முற்றுகையை நீக்குவதாக ஹவுதிகள் உறுதி அளித்துள்ளனர். இதன் மூலம், இந்த மோதல் நேரடியாக ஈரான் தொடர்பானது அல்ல என்றும், ஏமனின் எதிர்காலம் சார்ந்தது என்றும் ஹவுதிகள் தெளிவுப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c68398b-72b5-4f4b-8131-70705e7ccb3b/26-6a6c74baadb66.webp' /></p><p> </p><p>ஹவுதிகளுக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரசாங்கத்திற்கு ஆதரவாக சவுதி அரேபியா 2015-இல் அந்நாட்டு உள்நாட்டுப் போரில் களமிறங்கியது. </p><p>இதனிடையே, செங்கடல் கூட்டமைப்பில் இணையுமாறு அமெரிக்கா மற்றும் ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் குழுவிடமும் சவுதி அரேபியா கோரிக்கை விடுத்துள்ளது. </p><p>செங்கடலில் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே 'ஆஸ்பிடிஸ்' (Aspides) எனும் கடற்படைப் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது; ஹவுதிகள் மேற்கொண்டுள்ள முற்றுகை பொதுவானதா அல்லது சவுதி அரேபியாவை மட்டுமே குறிவைப்பதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6418b304-f8f4-403f-adbf-5b652fa6a344/26-6a6c74bb7ac96.webp' /></p><p> </p><p>ஆனால், சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள எண்ணெய் வயல்களையும் செங்கடல் பகுதி ஏற்றுமதி மையத்தையும் இணைக்கும் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து மையங்களைத் தாக்கியதாக ஹவுதிப் படைகள் ஜூலை 25 அன்று தெரிவித்தன. </p><p>அரேபியத் தீபகற்பத்தின் மறுபுறம் உள்ள ஹார்முஸ் நீரிணை முடக்கத்திற்கு மேலதிகமாக, சவுதி கப்பல் போக்குவரத்திற்குச் செங்கடல் பாதையும் மூடப்பட்டால், அந்நாட்டின் எண்ணெய் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்படும்.</p><h2>சவுதி அரேபியாவும் ஹவுதிகளும்</h2><p> </p><p>ஈரான் போர் தொடங்குவதற்கு முன்பு, சவுதியின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 80 சதவீதம் வரை ஹார்முஸ் நீரிணை வழியாகவே அனுப்பப்பட்டது. இந்த நிலையில், தங்களையும் தங்கள் தொழில் துறையையும் பாதுகாத்துக்கொள்ளத் தயாராக இருப்பதை வெளிப்படுத்த சவுதி அரேபிய அரசாங்கம் ஆர்வமாக உள்ளது.
</p><p>அதேவேளை, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளை இன்னும் ராஜதந்திர ரீதியாகத் தீர்க்க முடியும் என்று கருதுவதால், ஈரானுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்த அவர்கள் விரும்பவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/119a5277-021c-40f6-a225-62efd10f2306/26-6a6c74bc2bdce.webp' /></p><p> </p><p>ஏமன் மீதான கட்டுப்பாட்டிற்காக சவுதி அரேபியாவும் ஹவுதிகளும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாகப் போட்டியிட்டு வரும் நிலையில், கடந்த ஒரு மாதத்தில் அங்கு நிலவி வந்த நிலையற்ற சூழல் நிலைமையை சீர்குலைந்துள்ளது. </p><p>ஏற்கனவே ஹமாஸ் விவகாரத்தில் காஸா பகுதியில் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் கொடூரமானத் தாக்குதல்களை முன்னெடுத்து, தற்போது ஒரு போர் நிறுத்தத்தில் தாக்குதலின் தீவிரத்தைக் குறைத்துக் கொண்டுள்ளனர். </p><p>ஆனால், 2022ல் உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய ராணுவம் தற்போதும் போரிட்டு வருகிறது. அந்த வரிசையில் சவுதி அரேபியாவும் ஏமன் மீது சாத்தியமான தரைவழித் தாக்குதலுக்குத் தயாராகி வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T09:56:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சரத் பொன்சேகா தாக்குதல் வழக்கு ; 17 ஆண்டுகளுக்குப் பிறகு இருவருக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sarath-fonseka-attack-case-two-grant-bail-17-years-1785490571"></link>
            <id>https://jvpnews.com/article/sarath-fonseka-attack-case-two-grant-bail-17-years-1785490571</id>
            <summary type="text">முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை இலக்காகக் கொண்டு 2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை இலக்காகக் கொண்டு 2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இருவருக்கு, 17 ஆண்டுகளுக்குப் பிறகு கொழும்பு உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.</p><p>
</p><p></p><p>கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி புத்தி சி. ரகல இந்த உத்தரவை பிறப்பித்தார்.</p><p>

பிணை நிபந்தனைகளாக தலா 2 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையும், தலா 50,000 ரூபாய் மதிப்புள்ள நான்கு சரீரப் பிணைகளும் விதிக்கப்பட்டன. </p><p>எனினும், பிணை நிபந்தனைகளை உடனடியாக நிறைவேற்றத் தவறியதால், குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41d94f28-4ca7-4878-93a9-8fd2eaf58e63/26-6a6c6c8d18919.webp' /></p><p>மேலும், வாரத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் ஆஜராக வேண்டும் என்றும், அவர்களது வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளை ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் எனக் கூறப்படும் சண்முகலிங்கம் சூரியகுமார் மற்றும் தம்பையா பிரகாஷ் என்ற தனுஷ் ஆகியோருக்கே இந்தப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
17 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததை அடிப்படையாகக் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவைத் தொடர்ந்து, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
</p><p>
2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி, "துர்கா" என்ற பெயரில் அடையாளம் காணப்பட்ட தற்கொலைத் தாக்குதலாளர், கொழும்பு இராணுவத் தலைமையக நுழைவாயிலுக்கு அருகே தாக்குதல் நடத்தியிருந்தார். </p><p>இந்தத் தாக்குதலில் அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா படுகாயமடைந்ததுடன், அவருக்குப் பாதுகாப்பாக நியமிக்கப்பட்டிருந்த இராணுவ சார்ஜென்ட் ஒருவரும், மூன்று கொமாண்டோ வீரர்கள் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினரும், பொதுமக்களும் உயிரிழந்தனர்.</p><p>

இந்தச் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் 230 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இதற்கு மேலாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முயன்றதாகவும், முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுல்ல கொலை வழக்கில் உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்குகளும் குறித்த பிரதிவாதிகளுக்கு எதிராக நிலுவையில் உள்ளன.
</p><p>
பெர்னாண்டோபுல்ல கொலை வழக்கில் அவர்கள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேன தொடர்பான வழக்கில் பிணை மனு மீதான தீர்ப்பு ஆகஸ்ட் 7 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T09:55:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல்வர் விஜய் தற்போது கர்நாடகா வர வேண்டாம் - டி.கே.சிவகுமார் வேண்டுகோள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/dk-shivakumar-says-vijay-postpone-karnataka-visit-1785491630"></link>
            <id>https://ibctamilnadu.com/article/dk-shivakumar-says-vijay-postpone-karnataka-visit-1785491630</id>
            <summary type="text">முதல்வர் விஜய் தற்போது கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காவேரி விவகாரம் 

தமிழ்நாட்டிற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதல்வர் விஜய் தற்போது கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><h3>

காவேரி விவகாரம் </h3><p>

தமிழ்நாட்டிற்கு, 3,500 கன அடி நீர் வீதம் 15 நாட்களுக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், கர்நாடகா நீரை திறக்க மறுத்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25d9250e-04a9-457c-b694-9b036286d2ba/26-6a6c70b122eb9.webp' /></p><p>
தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க கூடாது என கர்நாடகாவில் உள்ள விவசாய அமைப்புகள் மற்றும் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.</p><p> 


இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் விஜய், ஆகஸ்ட் 3 ஆம் தேதி கர்நாடகாவிற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/296febb4-6091-44cb-94b5-9ba6b6f6c019/26-6a6c70b073435.webp' /></p><p>

இந்நிலையில், தற்போது உள்ள சூழலில் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என தெரிவித்துள்ளார். </p><p>

காவேரி விவகாரம் தொடர்பான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், "இரண்டு மாநில தலைமைச் செயலாளர்களும் இது குறித்து விவாதித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1b8fe78-71eb-493e-a34c-80abdb27892e/26-6a6c70afc273f.webp' /></p><p>தமிழ்நாடு முதலமைச்சரும் நானும் அவரவர் மாநில நலனில் அக்கறையுடன் உள்ளோம். 

இரு மாநிலங்களுக்கும் சிக்கல் ஏற்படுத்தாத தீர்வை எட்ட முயற்சிக்கிறோம். </p><p>தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாத சூழல் உள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். 

தமிழ்நாடு முதல்வர் விஜய் வரும்போது போராட்டம் நடந்தால் நன்றாக இருக்காது. </p><p>வேறொரு தேதியில் சந்திப்பு கூட்டத்தை நடத்தலாம் என விஜய்க்கு கோரிக்கை வைக்கிறேன். சிறிது காலம் காத்திருக்கலாம். உரிய நேரம் வரும்போது இருவரும் சந்தித்து ஆலோசிப்போம்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T09:53:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[லக்கி பாஸ்கர் 2ம் பாகம் அப்டேட் கொடுத்த இயக்குனர்.. ஆனால் ஒரு ட்விஸ்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/venki-atluri-confirms-lucky-bhaskar-2-1785491362"></link>
            <id>https://cineulagam.com/article/venki-atluri-confirms-lucky-bhaskar-2-1785491362</id>
            <summary type="text">துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் மிகப்பெரிய ஹிட் ஆன படம். அதை இயக்கிய வெங்கி அட்லூரி தற்போது சூர்யாவை வைத்து விஸ்வநாதன் &amp;amp; சன்ஸ் என்ற படத்தை இய...</summary>
            <content type="html"><![CDATA[<p>துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் மிகப்பெரிய ஹிட் ஆன படம். அதை இயக்கிய வெங்கி அட்லூரி தற்போது சூர்யாவை வைத்து விஸ்வநாதன் &amp; சன்ஸ் என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.</p><p>அந்த படத்தை பற்றி தற்போது வெங்கி கொடுத்த பேட்டியில் பல முக்கிய விஷயங்களை கூறி இருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/872567ee-ed4a-4f72-aaa1-1af1604d7ede/26-6a6c6fa40dceb.webp' /></p><p>
</p><h2>லக்கி பாஸ்கர் 2
</h2><p>மிகப்பெரிய ஹிட் ஆன லக்கி பாஸ்கர் 2ம் பாகம் வருமா என கேட்டதற்கு, நிச்சயம் வரும் என கூறி இருக்கிறார்.
</p><p>
ஆனால் அதற்கு இன்னும் இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகும் என கூறி ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார் அவர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T09:49:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸ் புகழ் பூர்ணிமா ரவியின் சில ஸ்டைலிஷ் போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/bigg-boss-fame-poornima-ravi-stylish-photos-1785491165"></link>
            <id>https://cineulagam.com/article/bigg-boss-fame-poornima-ravi-stylish-photos-1785491165</id>
            <summary type="text">பூர்ணிமா ரவிசினிமாவில் சின்ன சின்ன வேலைகள் செய்து வந்தாலும் ஒரு கலைஞனுக்கு பெரிய மேடை என அமைய வேண்டும். அப்படி சினிமாவில் சாதிக்க துடிக்கும் நடிகர்களு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பூர்ணிமா ரவி</h2><p>சினிமாவில் சின்ன சின்ன வேலைகள் செய்து வந்தாலும் ஒரு கலைஞனுக்கு பெரிய மேடை என அமைய வேண்டும்.</p><p> அப்படி சினிமாவில் சாதிக்க துடிக்கும் நடிகர்களுக்கு ஒரு முக்கிய நிகழ்ச்சியாக அமைந்தது தான் பிக்பாஸ். இந்த பிக்பாஸ் 7வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் தமிழ் மக்களிடம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை பூர்ணிமா ரவி.</p><p>இந்நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய நடிகர்களின் படங்கள், குணச்சித்திர கதாபாத்திரங்கள் என நடித்து வருகிறார். தற்போது நாம் இவரது லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்களை காண்போம்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T09:46:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை - நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/water-bottles-high-prices-train-was-fined-5-lakhs-1785489315"></link>
            <id>https://tamilwin.com/article/water-bottles-high-prices-train-was-fined-5-lakhs-1785489315</id>
            <summary type="text">காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் தொடருந்தில் நடமாடும் சிற்றுண்டிச்சாலையில், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி போத்தல்களி...</summary>
            <content type="html"><![CDATA[<p>காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் தொடருந்தில் நடமாடும் சிற்றுண்டிச்சாலையில், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்த ஒரு நிறுவனத்திற்கு ரூ. 500,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

நுகர்வோர் விவகார ஆணையத்தின் அனுராதபுர மாவட்ட புலனாய்வு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்திருந்தனர்.
</p><p></p><h2>கண்காணிப்பு நடவடிக்கைகள்&nbsp;</h2><p>
2026 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி அனுராதபுரம் பகுதியில் நடத்தப்பட்ட ஒரு சிறப்புச் சோதனையின்போது, ​​அதிகபட்ச சில்லறை விலை ரூ. 120 ஆக இருந்த 1,000 மில்லி லிட்டர் குடிநீர் போத்தல் ஒன்று ரூ. 150இற்கு விற்கப்பட்டு வந்தது தெரியவந்தது.</p><p>

அதன்படி, சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட 96 ஆம் எண் நெறிமுறையை மீறியதற்காக, நுகர்வோர் விவகார ஆணையம் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f2ccf67-57db-4266-b3a5-f0b76ea68ba7/26-6a6c6eacced9f.webp' /></p><p>அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ​​முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதிமன்றம், பிரதிவாதிக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்தது.
</p><p>
இதற்கிடையில், தொடருந்து சிற்றுண்டிச்சாலைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து இலங்கை தொடருந்து திணைக்களத்திற்கு தெரிவிப்பதற்கான நடவடிக்கைகளையும் நுகர்வோர் விவகார அதிகார சபை எடுத்துள்ளது.
</p><p>சம்பந்தப்பட்ட நிறுவனம் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகள் எதிர்காலத்திலும் தொடரும் என்றும், மேலும் ஏதேனும் சட்ட மீறல்கள் கண்டறியப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அதிகார சபை வலியுறுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T09:46:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவுக்காக உளவு பார்த்ததாக பிரான்ஸ் முன்னாள் கடற்படை விமானி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ex-french-pilot-arrested-for-spying-china-1785490823"></link>
            <id>https://news.lankasri.com/article/ex-french-pilot-arrested-for-spying-china-1785490823</id>
            <summary type="text">பிரான்ஸ் முன்னாள் கடற்படை விமானி ஒருவர் சீனாவுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரான்ஸ் விமானி கைது

பிரான்ஸ் முன்னாள் கடற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் முன்னாள் கடற்படை விமானி ஒருவர் சீனாவுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><h3>
முன்னாள் பிரான்ஸ் விமானி கைது
</h3><p>
பிரான்ஸ் முன்னாள் கடற்படை விமானியான பியர் (Pierre-Henri Chuet) என்பவர், முக்கியமான இராணுவத் தகவல்களைச் சேகரித்து சீன உளவாளிகளுக்குக் கொடுத்ததாக பாரிஸ் அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1e30f36-6b17-40a5-8e08-0a5dbfad2a1f/26-6a6c6d8925da4.webp' /></p><p>
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீதான விசாரணை தொடர்வதாகவும் பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அந்த செய்திகளின்படி, பியர் பிரான்ஸ் கடற்படையில் பணியாற்றியபோது, 2018 செப்டம்பர் மற்றும் 2019 ஆகஸ்ட் ஆகிய காலகட்டங்களில், குறைந்தது இரண்டு முறையாவது சீனாவுக்குப் பயணம் செய்ததாக அதிகாரிகள் நம்புகிறார்கள்.
</p><p>
விடயம் என்னவென்றால், பியர் இந்தப் பயணங்கள் குறித்து பிரான்ஸ் அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.&nbsp;</p><p></p><p>
அந்தப் பயணங்களின் போது, தென்னாப்பிரிக்க விமான நிறுவனம் ஒன்றின் மூலம் சீன இராணுவ விமானிகளுக்குப் பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்ததாக பியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், அவர் பிரான்ஸ் இராணுவ விமானப் போக்குவரத்து தொடர்பான முக்கியமான செயல்பாட்டு மற்றும் தந்திரோபாய அறிவையும் பகிர்ந்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
</p><p>
இந்த பியர், சமீபத்தில், இந்திய விமானப்படையின் ரஃபேல் போர் விமானங்களின் செயல்திறனைக் குறித்து கேள்வி எழுப்பியதுடன், சீனத் தயாரிப்பு விமானங்களைப் புகழ்ந்ததால் சர்ச்சையை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T09:40:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணத்தின் பின்னும் கிளாமரில் பட்டையை கிளப்பும் சோபிதா துலிபாலா! வைரலாகும் நியூ லுக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sobhita-dhulipala-trendy-new-look-goes-viral-1785489050"></link>
            <id>https://manithan.com/article/sobhita-dhulipala-trendy-new-look-goes-viral-1785489050</id>
            <summary type="text">நடிகை சோபிதா&amp;nbsp;துலிபாலா ட்ரெண்டிங் உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை சோபிதா&nbsp;துலிபாலா ட்ரெண்டிங் உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">சோபிதா துலிபாலா</span></h2><p>
மிஸ் இந்தியா ஃபெமினா அழகுப் போட்டியில் 2013ம் ஆண்டு கலந்துக் கொண்டு அழகிப் பட்டம் வாங்கிய ஆந்திராவை சேர்ந்த சோபிதா துலிபாலா முதல் படமே இந்தியில் நடிக்கம் வாய்ப்பை பெற்றார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d567eb1-3e42-421a-8393-d893caaab7e7/26-6a6c6c1d158e5.webp' /></p><p>அதனை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாப்பாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்த இவர், தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b31d1bcb-9be2-479e-93c0-a981951e5aff/26-6a6c6c1f1baaf.webp' /></p><p></p><p>சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவை ரகசியமாக சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில்&nbsp;சோபிதா துலிபாலா மற்றும் நாக சைதன்யா இருவரும் ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் பாரம்பரிய தெலுங்கு முறையில் திருமணம் செய்து கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b04685fc-8b6d-4d4d-a70f-be5ea77f9916/26-6a6c6c1e6b47e.webp' /></p><p>சோபிதா நாக சைதன்யாவை திருமணம் செய்தபிறகு கடும் ட்ரோல்களை தற்போது வரை சந்தித்து வருகிறார். சமந்தா விவாகரத்துக்கு அவர் தான் காரணம் என நெட்டிசன்கள் சோபிதாவை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

ட்ரோல்கள் ஒருபக்கம் இருக்க சோபிதா தொடர்ந்து தனது கெரியரில்&nbsp; தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88b486ef-ccdf-45a0-8350-eda6d1ce74d6/26-6a6c6c1dbc359.webp' /></p><p></p><p>இந்நிலையில் தற்போது பேஷன் ஷோ ஒன்றில் ஷோ ஸ்டாப்பர் ஆக வந்து கிளாமர் உடையில் ரேம்ப் வாக் செய்திருந்தார். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Dba0A0JEz3o/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Dba0A0JEz3o/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Dba0A0JEz3o/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Sobhita Dhulipala (@sobhitad)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T09:36:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை இராணுவத்திற்கு புதிய தளபதி நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nilantha-premaratne-appointed-new-army-commander-1785490660"></link>
            <id>https://jvpnews.com/article/nilantha-premaratne-appointed-new-army-commander-1785490660</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன (Nilantha Premaratne) நியமிக்கப்பட்டுள்ளார்.  

இலங்கை இராணுவத்தின் 25...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன (Nilantha Premaratne) நியமிக்கப்பட்டுள்ளார். </p><p> 

இலங்கை இராணுவத்தின் 25 ஆவது தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ தனது பதவிக்காலத்தை நிறைவு செய்ததைத் தொடர்ந்து இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f54639b-71ee-462f-8472-b209b1a98e28/26-6a6c6ce6864bb.webp' /></p><p>
</p><p>
இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ. பிரேமரத்ன இராணுவத் தலைமையகத்தில் 2026 ஜுன் 01 ஆம் திகதி இராணுவத்தில் இரண்டாவது மிக உயர்ந்த பதவியாகக் கருதப்படும், இலங்கை இராணுவத்தின் 69 வது பதவி நிலை பிரதானியாக பதவியேற்றார்.</p><p></p><p>
</p><p>
இப்பதவியை ஏற்கும் முன்னர் சிரேஷ்ட அதிகாரி பிரதிப் பதவி நிலை பிரதானியாகவும் இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் தற்போதைய படைத் தளபதியாகவும் அவர் பணியாற்றினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T09:35:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-dollar-selling-rate-steady-at-rs-340-usd-to-lkr-1785489777"></link>
            <id>https://ibctamil.com/article/us-dollar-selling-rate-steady-at-rs-340-usd-to-lkr-1785489777</id>
            <summary type="text">நேற்றுடன் (30) ஒப்பிடுகையில், இன்று (31) அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வலுவடைந்துள்ளது.இன்றைய நாளுக்கான (31.07.2026) நாணயமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேற்றுடன் (30) ஒப்பிடுகையில், இன்று (31) அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வலுவடைந்துள்ளது.</p><p>இன்றைய நாளுக்கான (31.07.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.</p><p>
அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	331.20 ஆகவும் விற்பனைப் பெறுமதி 340.33 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>நாணயமாற்று விகிதம்</h2><p>ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 444.25 ஆகவும் விற்பனைப் பெறுமதி 459.05 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 379.80 ஆகவும் விற்பனைப் பெறுமதி 393.23 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cedb3d7-db6a-49c3-9a65-79239e464b58/26-6a6c6b6fed450.webp' /></p><p>கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 235.03 ஆகவும் விற்பனைப் பெறுமதி 243.92 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>அவுஸ்திரேலிய&nbsp;(Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	230.25 ஆகவும் விற்பனைப் பெறுமதி 241.34 ஆகவும் பதிவாகியுள்ளது.&nbsp; &nbsp;</p><p>சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	256.22 ஆகவும் விற்பனைப் பெறுமதி 266.79 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T09:31:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல்வர் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவகுமார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dk-shivakumar-urge-vijay-postpone-karnataka-visit-1785490205"></link>
            <id>https://news.lankasri.com/article/dk-shivakumar-urge-vijay-postpone-karnataka-visit-1785490205</id>
            <summary type="text">முதல்வர் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். 


காவேரி விவகாரம் 

காவேரி நீர் திறப...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதல்வர் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.</p><h3> 


காவேரி விவகாரம் </h3><p>

காவேரி நீர் திறப்பு மற்றும் காவேரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.</p><p> 

தமிழ்நாட்டிற்கு, 3,500 கன அடி நீர் வீதம் 15 நாட்களுக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், கர்நாடகா நீரை திறக்க மறுத்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e50c986-9bf5-420b-9ea2-38d544f90ad7/26-6a6c6b1f10306.webp' /></p><p>
தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க கூடாது என கர்நாடகாவில் உள்ள விவசாய அமைப்புகள் மற்றும் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.</p><p>
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் விஜய், கர்நாடகாவிற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><h3>விஜய் கர்நாடகா வர வேண்டாம்</h3><p> 

இந்நிலையில், தற்போது உள்ள சூழலில் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என தெரிவித்துள்ளார். </p><p>

 கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் நீர்வள மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97bfce64-8d2b-4e53-bb78-27d7610b836c/26-6a6c6b1fb7a20.webp' /></p><p>

இதன் பின்னர் பேசிய அவர், "இரண்டு மாநில தலைமைச் செயலாளர்களும் இது குறித்து விவாதித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சரும் நானும் அவரவர் மாநில நலனில் அக்கறையுடன் உள்ளோம். 

இரு மாநிலங்களுக்கும் சிக்கல் ஏற்படுத்தாத தீர்வை எட்ட முயற்சிக்கிறோம். </p><p>

போதிய நீர் இல்லை என்று கூறியும் தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க வேண்டும் என உத்தரவிட்டது வேதனை அளிக்கிறது. தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாத சூழல் உள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்.</p><p>

தமிழ்நாடு முதல்வர் விஜய் வரும்போது போராட்டம் நடந்தால் நன்றாக இருக்காது. வேறொரு தேதியில் சந்திப்பு கூட்டத்தை நடத்தலாம் என விஜய்க்கு கோரிக்கை வைக்கிறேன். 

சிறிது காலம் காத்திருக்கலாம். உரிய நேரம் வரும்போது இருவரும் சந்தித்து ஆலோசிப்போம்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T09:30:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்கள் வங்கியிடமிருந்து இழப்பீடு! காப்புறுதி வைப்பாளர்கள் குறித்து மத்திய வங்கியின் சிறப்பு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/compensation-from-people-s-bank-1785489289"></link>
            <id>https://ibctamil.com/article/compensation-from-people-s-bank-1785489289</id>
            <summary type="text">நேஷன் லங்கா ஃபைனான்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் காப்புறுதி செய்யப்பட்ட வைப்பாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கும் நடவடிக்கை நாளை (01.08.2026) முதல் ஆரம்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேஷன் லங்கா ஃபைனான்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் காப்புறுதி செய்யப்பட்ட வைப்பாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கும் நடவடிக்கை நாளை (01.08.2026) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
</p><p>
இந்த இழப்பீட்டுத் தொகைகள், தெரிவு செய்யப்பட்ட மக்கள் வங்கி கிளைகள் ஊடாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நேஷன் லங்கா ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிதி வணிக உரிமம் இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த இழப்பீட்டு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p></p><h2>அதிகபட்சமாக 11 இலட்சம்</h2><p>

இலங்கை வைப்புத் தொகை காப்புறுதி திட்டத்தின் கீழ் தகுதி பெறும் வைப்பாளர்களுக்கு, அவர்களின் காப்புறுதி செய்யப்பட்ட வைப்புத் தொகையின் மொத்த மதிப்பின் அடிப்படையில் அதிகபட்சமாக 11 இலட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8eaadb3d-fdcd-431e-b045-2b2c3f3125a7/26-6a6c678ba7678.webp' /></p><p>
</p><p>
இழப்பீட்டுத் தொகை, ஏற்கனவே உள்ள மக்கள் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவோ, புதிதாகத் திறக்கப்படும் கணக்குகள் ஊடாகவோ அல்லது வங்கி Counters மூலம் பணமாகவோ வழங்கப்படும்.
</p><p>
2023 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க வங்கிகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 66(2) ஆம் பிரிவின் கீழ், 2026 ஜூலை 3 ஆம் தேதி முதல் நேஷன் லங்கா ஃபைனான்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் நிதி வணிக உரிமத்தை மத்திய வங்கி இரத்து செய்திருந்தது.
</p><p>
மேலும், காப்புறுதி செய்யப்பட்ட வைப்பாளர்கள் மற்றும் சட்டபூர்வ உரிமையாளர்கள் 2032 ஜூலை 2 ஆம் தேதி வரை இழப்பீட்டுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஏற்கனவே மக்கள் வங்கியில் கணக்கு வைத்திருப்பதுடன், நேஷன் லங்கா ஃபைனான்ஸ் நிறுவனத்தில் மொத்த வைப்புத் தொகை 5,000 ரூபாய்க்கும் குறைவாக உள்ள வைப்பாளர்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களையும் தேவையான ஆவணங்களையும் மின்னணு முறையில் மக்கள் வங்கிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>தேவையான ஆவணங்கள்</h2><p>
</p><p>
மற்ற காப்புறுதி செய்யப்பட்ட வைப்பாளர்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் அசல் வைப்புச் சான்றிதழ்கள், அடையாள ஆவணங்கள் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை மக்கள் வங்கியின் நியமிக்கப்பட்ட கிளைகளில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1623fd0f-a0a3-463c-8d77-ec32181a35d1/26-6a6c678c5d0c0.webp' /></p><p>
</p><p>
கூட்டு வங்கிக் கணக்கு வைத்திருப்போர் தனித்தனியாக இழப்பீட்டு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். நேரில் வர இயலாத வைப்பாளர்கள், சட்டபூர்வமாக நியமிக்கப்பட்ட அதிகாரப்பத்திர (Power of Attorney) பிரதிநிதிகள் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இழப்பீட்டு வழங்கும் நடைமுறை தொடர்பான விண்ணப்பப் படிவங்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள் மத்திய வங்கியின் இணையதளத்தில் கிடைக்கப்பெறும்.</p><p> அதேபோல், மக்கள் வங்கியின் நியமிக்கப்பட்ட கிளைகளிலும் அச்சுப் பிரதிகளை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் தகவல்கள் தேவைப்படும் வைப்பாளர்கள், இலங்கை மத்திய வங்கியின் வைப்புத் தொகை காப்புறுதி மற்றும் தீர்வுகள் திணைக்களம் (Deposit Insurance and Resolution Department) ஊடாக உதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T09:30:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டியில் திடீரென சரிந்து விழுந்த மண்மேடு - ஒருவர் வைத்தியசாலையில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/20-foot-mound-of-earth-collapsed-in-kandy-1785488401"></link>
            <id>https://tamilwin.com/article/20-foot-mound-of-earth-collapsed-in-kandy-1785488401</id>
            <summary type="text">கண்டியில் மண்மேடு சரிந்து விழுந்த சம்பவத்தில் சிக்கிய ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.&amp;nbsp;குறித்த சம்பவம் இன்றைய தினம் (31.07.2026) இட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டியில் மண்மேடு சரிந்து விழுந்த சம்பவத்தில் சிக்கிய ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>குறித்த சம்பவம் இன்றைய தினம் (31.07.2026) இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>வில்லியம் கொபல்லவ மாவத்தையில் வீதிச் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளியே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.</p><p></p><h2>பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலையில் அனுமதி</h2><p>
</p><p>
 

இதில் பலத்த காயமடைந்த அவர் இன்று நண்பகல் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ccf3f5e-d231-42af-a342-2c0e4c6ca186/26-6a6c69f5adab4.webp' /></p><p>
</p><p>
 

சம்பவத்தில் ஹேவாஹெட்ட, முல்ஓய பகுதியை சேர்ந்த 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே பாதிக்கப்பட்டுள்ளார்.</p><p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பிரதேச பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T09:26:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானை சுழன்றடித்த 24 வயது இலங்கை வீராங்கனை! டி20யில் 64 பந்தில் 101 ஓட்டங்கள் விளாசல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/imesha-dulani-century-helps-sri-lanka-beat-pak-1785489264"></link>
            <id>https://news.lankasri.com/article/imesha-dulani-century-helps-sri-lanka-beat-pak-1785489264</id>
            <summary type="text">தம்புள்ளையில் நடந்த டி20 போட்டியில், இலங்கை அணி 6 வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.&amp;nbsp;முனீபா அலி,&amp;nbsp;ஷாவால் ஸுல்ஃபிஹர்&amp;nbsp;விளாசல்

இலங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தம்புள்ளையில் நடந்த டி20 போட்டியில், இலங்கை அணி 6 வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.&nbsp;</p><h2>முனீபா அலி,&nbsp;ஷாவால் ஸுல்ஃபிஹர்&nbsp;விளாசல்</h2><p>

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி தம்புள்ளையில் நடந்தது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0c46249-8d08-4642-8e90-e6fb09d2480f/26-6a6c6a8c2b082.webp' /></p><p></p><p>
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீராங்கனைகள் முதல் விக்கெட்டுக்கு 39 பந்துகளில் 66 ஓட்டங்கள் குவித்தனர்.</p><p>

முனீபா அலி (Muneeba Ali) 24 பந்துகளில் 42 ஓட்டங்கள் விளாசிய நிலையில் ரன்அவுட் ஆனார்.

பின்னர் அரைசதம் விளாசிய ஷாவால் ஸுல்ஃபிஹர் (Shawaal Zulfiqar) 41 பந்துகளில் 63 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
</p><p>
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 176 ஓட்டங்கள் எடுத்தது.
</p><p>
அதன் பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் இமேஷா துலானி, சமரி அதப்பத்து கூட்டணி அதிரயில் மிரட்டியது.&nbsp;</p><h2>இமேஷா துலானி&nbsp;சதம் </h2><p>
அணித்தலைவர் சமரி அதப்பத்து (Chamari Athapaththu) 22 பந்துகளில் 39 ஓட்டங்கள் (2 சிக்ஸர், 5 பவுண்டரிகள்) விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார். </p><p>

அடுத்து வந்த விஷ்மி (3), ஹர்ஷிதா (7) ஆகியோர் சொதப்ப, 24 வயதான இமேஷா துலானி (Imesha Dulani) பவுண்டரிகளை விரட்டி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.

63 பந்துகளில் சதம் விளாசிய இமேஷா, 19வது ஓவரில் வெற்றிக்கான இலக்கை எட்ட வைத்தார். </p><p>இலங்கை அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இமேஷா துலானி ஆட்டமிழக்காமல் 64 பந்துகளில் 1 சிக்ஸர், 17 பவுண்டரிகளுடன் 101 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் ஆட்டநாயகி விருது பெற்றார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1d1bd70-8118-433b-b53c-bb6229a8daee/26-6a6c6a8b5fa6c.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T09:25:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.., இலங்கையின் இன்றைய நிலவரம் (31-07-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1785489823"></link>
            <id>https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1785489823</id>
            <summary type="text">இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (31-07-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (31-07-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.
</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>
தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 1,312,832.00 ஆகும்.</p><p>

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 46,310.00.</p><p>

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 370,500.00.</p><p>

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 42,460.00.
</p><p>
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 339,650.00.</p><p>

21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 40,530.00.
</p><p>
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 324,200.00.</p>]]></content>
            <updated>2026-07-31T09:25:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சினிமா வட்டாரத்தில் சோகம்; மற்றுமொரு பழம்பெரும் பின்னணி பாடகி காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/veteran-playback-singer-jamuna-rani-passes-away-1785489200"></link>
            <id>https://jvpnews.com/article/veteran-playback-singer-jamuna-rani-passes-away-1785489200</id>
            <summary type="text">&amp;nbsp; பின்னணி பாடகி ஜானகி அம்மாவின் மறைவை தொடர்ந்து , பழம்பெரும் பின்னணி பாடகி ஜமுனா ராணி தனது 88ஆவது வயதில் காலமானாதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை சினிமா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பின்னணி பாடகி ஜானகி அம்மாவின் மறைவை தொடர்ந்து , பழம்பெரும் பின்னணி பாடகி ஜமுனா ராணி தனது 88ஆவது வயதில் காலமானாதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
தமிழ், தெலுங்கு, சிங்களம், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 6,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள அவர், இந்தியத் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பெற்றிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/218f6766-e949-4ee9-94be-43082b1cfa05/26-6a6c6731e253c.webp' /></p><p></p><h2>பல தலைமுறை ரசிகர்களை கவர்ந்த ஜமுனா ராணி</h2><p>

நடிகை ஸ்ரீதேவி நடித்த திரைப்படங்கள், “யாரடி நீ மோகினி”, “குங்குமப் பூவே” உள்ளிட்ட பல திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்கள் மூலம் அவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.</p><p></p><p>
</p><p>
பல தலைமுறை ரசிகர்களை தனது இனிமையான குரலால் கவர்ந்த ஜமுனா ராணியின் மறைவு, இசை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p><p>&nbsp; </p>]]></content>
            <updated>2026-07-31T09:21:19+00:00</updated>
        </entry>
    </feed>
