<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-24T04:20:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டில் சர்க்கரை விலை கிடுகிடுவென உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/sugar-price-hike-in-tamilnadu-1787544843"></link>
            <id>https://ibctamilnadu.com/article/sugar-price-hike-in-tamilnadu-1787544843</id>
            <summary type="text">Reasons for the Price Hike: தமிழ்நாட்டில் சர்க்கரை விலை மேலும் உயர்ந்து 72 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் சர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Reasons for the Price Hike: தமிழ்நாட்டில் சர்க்கரை விலை மேலும் உயர்ந்து 72 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
</p><p>
கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் சர்க்கரை விலை உயர்ந்துகொண்டே வருகிறது, கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சர்க்கரை விலை கடந்த 20ம் தேதி 67 ரூபாய்க்கு விற்பனையானது.
</p><p>
அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வரவிருப்பதை தொடர்ந்து சர்க்கரையின் தேவை அதிகரித்துள்ளது, நேற்று கிலோ 72 ரூபாய்க்கு விற்பனையானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f0ea604-06f0-4bae-9b90-0d5c7a8f93c8/26-6a8bc5e6f2ae0.webp' /><br></p><p>

இந்நிலையில் E20 பெட்ரோல் தயாரிப்பதற்கு கரும்பை மூலப்பொருளாக கொண்ட எத்தனால் யன்படுத்தப்படுகிறது, இதனால் கரும்பின் தேவை அதிகம் இருப்பதால் சர்க்கரை விலை உயர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
விலை உயர்வை குறைக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e275d42-04c2-4e30-94cb-cad4c33a5613/26-6a8bc5e7a4a78.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-24T04:18:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பெண் அதிபர் கொடூரமாக கொலை - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/old-teacher-killed-shocking-reason-revealed-1787536896"></link>
            <id>https://tamilwin.com/article/old-teacher-killed-shocking-reason-revealed-1787536896</id>
            <summary type="text">இரத்தினபுரி, இறக்குவானை பிரதேசத்தில் 69 வயதான ஓய்வுபெற்ற பெண் அதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. 

நபர் ஒருவர் தனது பிள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரி, இறக்குவானை பிரதேசத்தில் 69 வயதான ஓய்வுபெற்ற பெண் அதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. </p><p>

நபர் ஒருவர் தனது பிள்ளையின் பிறந்தநாளுக்கு கேக் வாங்குவதற்காகப் பணம் திரட்ட முயன்ற போது, வீட்டில் தனியாக இருந்த ஆசிரியர் ஒருவர் கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது. </p><p>

இந்த சம்பவம் தொடர்பாக இருவர் 22 ஆம் திகதியன்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக இறக்குவானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><h2><b>

கொடூரமாக கொலை</b></h2><p>வீடு வீடாக சென்று தேங்காய் பறிக்கும் நபர் ஒருவரும், 2 முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுமே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f649e6dd-62ca-4d90-a410-6e6dbdd688e5/26-6a8bc57085de0.webp' /></p><p>இறக்குவானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலஹிட்டிய, பெலவத்தை பகுதியை சேர்ந்த விமலானி என்ற ஓய்வுபெற்ற பெண் அதிபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

கடந்த 21ஆம் திகதி மாலை, தனியார் வர்த்தக நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் உயிரிழந்த பெண்ணின் ஒரே மகன், இரவு 7.45 மணியளவில் வீடு வந்து தனது தாயை தேடியுள்ளார். </p><p>

இதன்போது தாயின் நிர்வாணமான சடலம் வீட்டின் அறை ஒன்றின் தரையில் கிடப்பதைக் கண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இது குறித்து அயலவர்களுக்கு தெரிவித்து, தாயின் மர்ம மரணம் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.</p><p> 

சம்பவம் நடந்த நாளின் பகல் வேளையில் கூலிக்குத் தேங்காய் பறிக்கும் நபர் ஒருவர் நடமாடியுள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>அன்று மாலை வேளையில் ஆசிரியை கொல்லப்பட்ட வீட்டிற்கு அருகிலுள்ள வீதியில் பிரதான சந்தேக நபர் நடமாடியுள்ளதாகவும் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. </p><p>

அடுத்த நாள் அதிகாலை மூன்று மணியளவில் சந்தேக நபரை கைது செய்து விசாரித்த போது, கொலை செய்யப்பட்ட ஆசிரியைக்கு சொந்தமான தங்க மோதிரம் ஒன்று சந்தேக நபரின் வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><h3><b>

தங்க மோதிரம்</b></h3><p>பெண் அதிபரின் வீட்டின் காணிக்குள் சென்று மறைந்திருந்து வீட்டின் பின்பக்க கதவூடாக வீட்டிற்குள் நுழைந்து, குளிக்கத் தயாராக இருந்த அவரது தலையில் கட்டையால் பலமுறை தாக்கியதாக சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66367a69-b77a-48cc-8714-a81086f1f2d4/26-6a8bc57149717.webp' /></p><p>பின்னர் அவர் கீழே விழுந்ததும், அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியையும் தங்க மோதிரத்தையும் கழற்றிக் கொண்டு தப்பியோடியதாக குறிப்பிட்டுள்ளார். </p><p>

இந்தச் செயலுக்காகத் தனது உதவிக்கு முச்சக்கர வண்டி ஓட்டுநரான தனது நண்பரையும் ஈடுபடுத்திக் கொண்டதாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார். </p><p>தனது பிள்ளையின் பிறந்தநாளுக்கு கேக் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் வாங்குவதற்குப் பணம் தேடுவதற்காகவே இதனைச் செய்ததாகச் சந்தேக நபர் மேலும் தெரிவித்துள்ளார். </p><p>

திருடப்பட்ட தங்கச் சங்கிலியை கொடகெவல நகரில் உள்ள தனியார் அடகு மையமொன்றில் 90,000 ரூபாவிற்கு அடகு வைத்து பணம் பெற்றுக் கொண்டதாகவும், அன்றைய இரவில் நண்பர்களுடன் சேர்ந்து விருந்து வைத்து கொண்டாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

அதற்கமைய, கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபருடன் முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் இருவரிடமும் சம்பவம் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.</p>]]></content>
            <updated>2026-08-24T04:18:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென காணமல் போன மருத்துவர்: கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட கார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/doctor-attached-badulla-hospital-reported-missing-1787542650"></link>
            <id>https://ibctamil.com/article/doctor-attached-badulla-hospital-reported-missing-1787542650</id>
            <summary type="text">பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் மயக்கவியல் நிபுணர் (Anesthesiologist) மருத்துவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் மயக்கவியல் நிபுணர் (Anesthesiologist) மருத்துவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். </p><p>குறித்த வைத்தியர் நேற்று (23.08.2026) வழமைபோன்று பணியில் இருந்ததாகவும், அதன் பின்னர் அவரைத் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>இதன்படி காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவருகையில்,</p><p></p><h2>மருத்துவர் மாயம்</h2><p> </p><p>வைத்தியர் மஹியங்கனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அவரது கார், மீகஹகியுல பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களில் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/693b1d16-4121-4789-882d-88c8c86fb364/26-6a8bc44aa7ba1.webp' /></p><p>
</p><p>
மேலும், பதுளை - மஹியங்கனை கால்வாய் வீதியில் 17ஆம் மைல் கல் அருகிலுள்ள மப்பக்கடை வேவப் பகுதியில், வைத்தியரின் கார் நேற்று இரவு கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதனையடுத்து, காணாமல் போன வைத்தியரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
அதன்படி, காவல்துறையினரும் இலங்கை இராணுவத்தினரும் இணைந்து இன்று (24.08.2026) குறித்த பகுதிகளில் விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T04:17:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடளாவிய ரீதியில் பொது சுகாதார பரிசோதகர்கள் தொழிற்சங்க நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/public-health-inspectors-union-action-islandwide-1787544981"></link>
            <id>https://jvpnews.com/article/public-health-inspectors-union-action-islandwide-1787544981</id>
            <summary type="text">இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று (24) முதல் நாடளாவிய ரீதியாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
கட்டுநாயக்க வானுர்தி நிலைய சுகாதார அலுவலக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று (24) முதல் நாடளாவிய ரீதியாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.</p><p>
</p><p></p><p>கட்டுநாயக்க வானுர்தி நிலைய சுகாதார அலுவலகத்தில் இடம்பெற்ற முறைகேடு மற்றும் ஊழல்களை வெளிக் கொணர்ந்த தமது சங்க அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8aa3b57-3fa6-48cf-ae18-fb3e8ce04b1d/26-6a8bc59747b1f.webp' /></p><p>

இதற்கமைய, இன்று முதல் அனைத்து சுகாதார பரிசோதகர்களும் நிர்வாக பொது சுகாதார பரிசோதகர்களும் நிர்வாகத்தினருக்கு வழங்கும் தரவு மற்றும் அறிக்கை விநியோகத்தை தவிர்க்கவுள்ளதாக அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்துள்ளார்.
</p><p>
இலங்கை பொது சுகாதார பரிசோதர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானத்திற்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T04:16:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவத்திடமிருந்து காணிகளை மீட்க சர்வதேச சமூகத்தினர் தலையிட வேண்டும்! சிறீதரன் எம்.பி கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sridharan-mp-international-action-reclaim-lands-1787539530"></link>
            <id>https://tamilwin.com/article/sridharan-mp-international-action-reclaim-lands-1787539530</id>
            <summary type="text">ஈழத்தமிழர்களின் பூர்வீக நிலங்களை சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளில்
இராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என இலங்கை தமிழரசுக்கட்சியின்
நாடாளுமன்ற உறுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத்தமிழர்களின் பூர்வீக நிலங்களை சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளில்
இராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என இலங்கை தமிழரசுக்கட்சியின்
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>

 நேற்று (23.08.2026) யாழ். பலாலி பகுதியில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுவரும் தமிழ்
மக்களின் பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி இடம்பெறும்
போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>அறவழிப் போராட்டம்</h2><p>
</p><p>&nbsp;இலங்கை இராணுவம் தமிழ் மக்களின் காணிகளை தொடர்ந்து அபகரித்துவரும்
நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியேறும்
நோக்கில் அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>
இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் மீது புலனாய்வுத் துறையினரும்
இராணுவத்தினரும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை விடுத்து வருவதுடன், அவர்களைப்
பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்து விசாரணை நடத்துவதோடு வழக்குத் தொடரும்
நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8e3349c-1cda-4cbd-80e1-01aa9ff4a13e/26-6a8bb43d227a8.webp' /></p><p>
</p><p>
மக்கள் சுதந்திரமாக போராட முடியாதவாறு பந்தல் அமைக்கக்கூட அனுமதி
மறுக்கப்பட்டு, மிகுந்த வெயிலில் நிற்கும் அவல நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த 36 வருடங்களாக சொந்த வீடுகளில் வாழ முடியாமல், இராணுவத்தால் வீடுகளும்
வழிபாட்டுத் தலங்களும் அழிக்கப்பட்ட நிலையில் மக்கள் பெரும் துயரங்களை சந்தித்து வருகின்றனர்.</p><h2>தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள்</h2><p>
</p><p>
போர் முடிந்து பல ஆண்டுகள் கடந்த நிலையிலும், இராணுவ முகாம்களுக்கு அருகில்
சிங்களக் குடும்பங்கள் தொடர்ச்சியாக குடியேற்றப்பட்டு வருகின்றன. </p><p>இது தமிழ்
மக்களின் பூர்வீக நிலங்களைப் பறித்துச் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கும்
முழுமையான முயற்சியாகும்.

இலங்கை அரசும் ஜனாதிபதியும் காணிகளை விடுவிக்கப் போவதாக தெரிவித்தாலும்,
களத்தில் நிலைமை முற்றிலும் மாறாகவே உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e095ed9-98cf-4fb4-a29c-08f0659e926c/26-6a8bb43e08d94.webp' /></p><p>

எனவே, சர்வதேச சமூகமும் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் தமிழ்
மக்களின் பூர்வீக நிலங்களை இராணுவத்திடமிருந்து மீட்டுத் தருவதற்கு உடனடியாக தலையிட வேண்டும்.
</p><p>
தமிழ் மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் வரை பலாலி, வசாவிளான்
மற்றும் மயிலிட்டி ஆகிய பகுதிகளில் மக்களின் இந்த நியாயமான போராட்டம்
தொடரும் என&nbsp; சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T04:15:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் அதிரடி சோதனை ; போலி தரச் சான்று குடிநீர் போத்தல்கள் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fake-quality-certificat-drink-water-bottles-seized-1787544527"></link>
            <id>https://jvpnews.com/article/fake-quality-certificat-drink-water-bottles-seized-1787544527</id>
            <summary type="text">கொழும்பு அவிசாவளையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, போலியான இலங்கைத் தரச் சான்றிதழ் (SLS) முத்திரையிடப்பட்ட சுமார் 8,500 குடிநீர் போத்தல்களை நுகர்வோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு அவிசாவளையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, போலியான இலங்கைத் தரச் சான்றிதழ் (SLS) முத்திரையிடப்பட்ட சுமார் 8,500 குடிநீர் போத்தல்களை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) கைப்பற்றியுள்ளது.
</p><p>
முதற்கட்ட விசாரணைகளின்படி, குறித்த குடிநீர் அமித்திரிகல–ருவன்வெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் உற்பத்தி செய்யப்பட்டு, விநியோகத்திற்காக அவிசாவளை பகுதியில் உள்ள களஞ்சியசாலையொன்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.</p><p>கைப்பற்றப்பட்ட பொருட்களில் 500 மில்லிலிற்றர் முதல் 19 லிற்றர் வரையிலான பல்வேறு அளவிலான குடிநீர் கொள்கலன்கள் இருந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1abe0867-3a08-40bd-967d-64e3afa4f9cf/26-6a8bc3d0d607e.webp' /></p><p>

அவற்றில் போலியான SLS சான்றிதழ் குறியீடும், 894 என்ற சான்றிதழ் இலக்கமும் குறிப்பிடப்பட்டிருந்ததாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p>
</p><p>இந்த குடிநீர் போத்தல்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதற்கு முன்னரே அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
</p><p>
விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், சம்பவத்துடன் தொடர்புடையவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், பொருட்களை கொள்வனவு செய்யும் போது மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், நுகர்வோர் சான்றிதழ் குறியீடுகள் மற்றும் பொருட்களின் தகவல்களை கவனமாக சரிபார்க்குமாறும், </p><p>சந்தேகத்திற்கிடமான பொருட்கள் தொடர்பில் 1977 என்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T04:08:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரத்த சோகை இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய முள் இல்லாத மீன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/best-fish-for-anemic-patients-to-eat-1787483281"></link>
            <id>https://manithan.com/article/best-fish-for-anemic-patients-to-eat-1787483281</id>
            <summary type="text">பலருக்கும் சரியான ஊட்டச்சத்து இல்லாமையால் ரத்த சோகை ஏற்பட்டு விடுகிறது. அந்த வகையில், ரத்த சோகை இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய மீன் வகைகளை பற்றி பார்ப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலருக்கும் சரியான ஊட்டச்சத்து இல்லாமையால் ரத்த சோகை ஏற்பட்டு விடுகிறது. அந்த வகையில், ரத்த சோகை இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய மீன் வகைகளை பற்றி பார்ப்போம். மிகவும் எளிதான தோற்றத்தில் மற்றும் நீளமான உடல் அமைப்பை கொண்ட ஒரு மீன் நமக்கு ஏற்படுகின்ற ரத்த சோகை ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவியாக இருக்கிறது.</p><p> இவ்வளவு நன்மைகளை கொண்டுள்ள ஒரு ஆரோக்கியமான மீன்தான் செல்வ முரல் மீன்.
இது உருளை வடிவ உடலையும் கூர்மையான ஊசி போன்ற நீண்ட தாடகைளையும் கொண்ட ஒரு தனித்துவமான கடல் மீன் வகையாகும். இதனுடைய மேல் பகுதியில் பளபளப்பான சாம்பல் அல்லது நீல நிறத்திலும் அடிவயிற்று பகுதி வெள்ளி நிறத்திலும் காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e06b2ad-eee8-4bc1-8ecd-5db9eec6ef10/26-6a8ad4936ec23.webp' /></p><p></p><p> அந்த வகையில், இந்த மீன்களை நாம் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
 இந்த மீன்களை நாம் சாப்பிடுகின்ற பொழுது நம்முடைய உடல் திசுக்களை புதுப்பிக்கவும் தசை வளர்ச்சியை மேம்படுத்துவதோடு நமக்கு தேவையான உயர்தர புரோட்டீன்கள் இந்த மீனில் நிறைந்துள்ளது. </p><p>ஆதலால், வளரும் குழந்தைகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு இது சிறந்த உணவாகும். அதே போல், இந்த மீன்களில் ஆரோக்கியமற்ற கெட்ட கொழுப்புகள் இல்லை. அதனால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கட்டாயம் எடுத்துக் கொள்ளலாம். </p><p>இந்த மீனில் உள்ள ஒமேகா மூன்று கொழுப்பு அமிலங்கள் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதுடன் நமக்கு மாரடைப்பு ஏற்படக்கூடிய அபாயத்தை தடுக்கிறது. மேலும், இவை நம்முடைய நினைவாற்றலை அதிகரிப்பதோடு சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது. </p><p>வைட்டமின் டி கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் அதிகளவில் இருப்பதால் நம்முடைய பற்கள் வலுவாக்குவதோடு எலும்பு தேய்மானம் மூட்டு வலி போன்ற பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. 
அதோடு, இந்த மீனில் இருக்கக்கூடிய செலினியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி தொற்று நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45542699-a106-4969-a76b-2814db127f3f/26-6a8ad494289af.webp' /></p><p></p><p> </p><p>இந்த செல்வ முரல் மீனின் சதை பகுதி மிகவும் மென்மையாக இருக்கும். ஆதலால், இவை எளிதில் ஜீரணம் ஆகிவிடும். செரிமான கோளாறு பிரச்சனைகள் உள்ளவர்கள் மூலநோய் உள்ளவர்கள் இந்த மீனை பயமின்றி எடுத்துக் கொள்ளலாம். அதைப்போல், சுவாச நோய் உள்ளவர்களும் முரல் மீனை அளவோடு சாப்பிடலாம். </p><p>காரணம், இதில இருக்கக்கூடிய உயர் தர புரதம் உடல் வலிமை மற்றும் தசை பராமரிப்புக்கு உதவுகிறது. இருப்பினும் மீன் ஒவ்வாமை இருப்பவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. இந்த செல்வ முரல் மீனானது சுவையிலும் சிறந்தது. அதே நேரம், மிக குறைந்த முட்களையும் கொண்டுள்ளது. அதனால் குழந்தைகள் இதனை பயமின்றி சாப்பிடலாம்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T04:01:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஸ்வநாத் அண்ட் சன்ஸ் தமிழகத்தில் 10 நாளில் செய்துள்ள வசூல் விவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vishwanath-and-sons-tn-box-office-1787536320"></link>
            <id>https://cineulagam.com/article/vishwanath-and-sons-tn-box-office-1787536320</id>
            <summary type="text">விஸ்வநாத் அண்ட் சன்ஸ்சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் இரண்டு வாரம்முன்பு பிரமாண்டமாக வெளிவந்த படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இப்படம் ரசிகர்களி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>விஸ்வநாத் அண்ட் சன்ஸ்</h2><p>சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் இரண்டு வாரம்முன்பு பிரமாண்டமாக வெளிவந்த படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. </p><p>இந்த படம் உலகம் முழுவதும் ரூ 200 கோடி வசூலை நெருங்கி கொண்டு இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் இப்படம் எதிர்பார்த்த வசூல் இல்லை, ஆரம்பத்தில் இருந்தே விஸ்வநாத் அண்ட் சன்ஸ் தமிழக வசூல் குறைந்தே வந்துகொண்டு இருக்க, கடந்த சனி, ஞாயிறு நல்ல வசூல் வந்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b406ee9-fedb-4b9d-9445-6d549e520225/26-6a8ba3c3621dd.webp' /></p><p>இதன் மூலம் தமிழகத்தில் இந்த படம் ரூ 50 கோடி வரை வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்களால் கூறப்படுகிறது. இன்னும் 2 வாரத்திற்கு தமிழில் பெரிய படங்கள் இல்லாததால் கண்டிப்பாக விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரூ 65 கோடி வரை தமிழக வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-24T04:00:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓராண்டு காத்திருப்பு பின்.,இந்திய ஆண்களை திருமணம் செய்த 150 பாகிஸ்தான் பெண்கள்: ஓராண்டு காத்திருப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/150-pakistani-brides-marry-indian-grooms-1787543623"></link>
            <id>https://news.lankasri.com/article/150-pakistani-brides-marry-indian-grooms-1787543623</id>
            <summary type="text">150 pakistani brides marry indian grooms after a year: இந்திய ஆண்களுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பாகிஸ்தான் மணப்பெண்கள் ஓராண்டு காத்திருப்புக்கு பிறக...</summary>
            <content type="html"><![CDATA[<p>150 pakistani brides marry indian grooms after a year: இந்திய ஆண்களுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பாகிஸ்தான் மணப்பெண்கள் ஓராண்டு காத்திருப்புக்கு பிறகு இந்தியா வந்துள்ளனர்.</p><h2> இந்திய ஆண்களை திருமணம் செய்யும் பாகிஸ்தான் பெண்கள்</h2><p>
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை சேர்ந்த சிந்தி சமூக குடும்பங்கள், இந்தியாவில் உள்ள தங்களுடைய உறவினர்கள் மற்றும் சிந்தி சமூகத்தினருக்கு தங்களுடைய மகள்களை திருமணம் செய்து கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.</p><p>பஹல்காமில் கடந்த 2025ம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து இந்திய படைகள் ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கை மூலம் பதிலடி கொடுத்தனர்.</p><p> மேலும் பாகிஸ்தானுடனான அனைத்து தூதரக முயற்சிகளையும் இந்தியா நிறுத்திக் கொண்டது. அத்துடன் பஞ்சாபில் உள்ள வாகா அட்டாரி எல்லை மூடப்பட்டதுடன், பாகிஸ்தானியர்களுக்கான விசாகளையும் இந்தியா முற்றிலுமாக நிறுத்தி வைத்தது.</p><p></p><p> இதனால் நாக்பூர், ராய்ப்பூர், ஜோத்பூர், புனே ஆகிய நகரங்களில் உள்ள ஆண்களுடன் திருமணம் செய்ய நிச்சயக்கப்பட்ட பெண்கள் இந்தியா வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.</p><h2> இந்தியா வந்தடைந்த பாகிஸ்தான் பெண்கள்</h2><p>
மணப்பெண்களின் எதிர்காலம் கேள்விக் குறியான நிலையில், சிந்தி சமூக அமைப்புகள் பாகிஸ்தானின் ஷடானி தர்பார் என்ற சிந்தி புனித அமைப்பான ஆன்மீகத் தலைவர் சாந்த் யதிஷ்டிர்லால் ஷடானியை அணுகி முறையிட்டுள்ளனர்.</p><p> இதையடுத்து இந்திய ஆண்களுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்களின் விவரப் பட்டியல் தயார் செய்யப்பட்டு இந்திய உள்துறை அமைச்சகத்திடம் வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a44d8d37-b913-4dbe-a0cd-3487d41e5f05/26-6a8bc048a3885.webp' /></p><p> இதனை தொடர்ந்து கோரிக்கையை ஏற்றுக் கொண்டது இந்தியா. ஆனால் தரைவழி நுழைவிற்கு அனுமதி வழங்கப்படவில்லை. மாறாக வான்வழி நுழைவுக்கு மட்டுமே இந்தியா நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது.</p><p> ஆனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே விமான சேவைகள் முடங்கியுள்ளதால் அவர்களால் நேரடியாக இந்தியா வர முடியாத சூழல் நீடித்தது.</p><p> இந்நிலையில் மணப்பெண்களும் அவர்களது குடும்பத்தினரும் துபாய், மஸ்கட், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்றாம் நாடுகள் வழியாக இந்தியாவிற்கு வந்துள்ளனர்.</p><p> கடந்த ஏப்ரலில் இருந்து இதுவரை 150 மணப்பெண்கள் இந்தியா வந்து சேர்ந்துள்ளனர்.</p><p> இன்னும் 300 பெண்கள் வரை இந்தியா வர காத்திருப்பதாகவும் அவர்களுக்கான விசா அனுமதிக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-24T03:54:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். கடற்கரையில் கரையொதுங்கிய அடையாளம் தெரியாத மர்ம சடலம் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mysterious-body-recovered-from-jaffna-beach-1787543464"></link>
            <id>https://jvpnews.com/article/mysterious-body-recovered-from-jaffna-beach-1787543464</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் காரைநகர் - வேரப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இன்று (24) கரையொதுங்கியது 

கடற்கரைக்கு சென்றவர்கள் சடலம் ஒன்று மிதப்பதை...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் காரைநகர் - வேரப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இன்று (24) கரையொதுங்கியது 

கடற்கரைக்கு சென்றவர்கள் சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2ec2f91-3ccb-4cab-8442-d1bb595e8678/26-6a8bbfa966fb5.webp' /></p><p>சடலம் யாருடையது என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை. </p><p>

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T03:51:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரக்தியின் அறிகுறி... அமெரிக்காவின் புதிய தடை அச்சுறுத்தலைப் புறந்தள்ளிய ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-dismisses-new-us-sanctions-1787513778"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-dismisses-new-us-sanctions-1787513778</id>
            <summary type="text">Iran dismisses threat of new US sanctions: புதிய அமெரிக்கத் தடைகள் குறித்த அச்சுறுத்தலை, விரக்தியின் வெளிப்பாடு என்று ஈரான் நிராகரித்துள்ளது.
அமெரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran dismisses threat of new US sanctions: புதிய அமெரிக்கத் தடைகள் குறித்த அச்சுறுத்தலை, விரக்தியின் வெளிப்பாடு என்று ஈரான் நிராகரித்துள்ளது.</p><p>
அமெரிக்காவின் புதிய தடைகள் குறித்த அச்சுறுத்தலை, விரக்தியின் வெளிப்பாடு என்று ஈரானின் வெளிவிவகார அமைச்சர் நிராகரித்துள்ளார்.</p><h2>மிகக் கடுமையான</h2><p>
எதிர்பார்க்கப்படும் புதிய நடவடிக்கைகள் ஈரானைத் தோற்கடிக்கத் தவறிவிடும் என்றும் அவர் பதிலளித்துள்ளார். திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு செய்தியாளர் சந்திப்பை நடத்தவுள்ள அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட், ஈரான் மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான தடைகளை விதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61594246-0fae-4eda-972d-8a11b3a7d062/26-6a8b4bb4acab2.webp' /></p><p> </p><p>சர்வதேசத் தடைகளால் ஈரானின் பொருளாதாரம் ஏற்கனவே கடும் நெருக்கடியில் உள்ளது; பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து, அந்நாட்டின் உள்கட்டமைப்பு பலமுறை தாக்கப்பட்டுள்ளதுடன், வான்வழித் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். </p><p>ஆனால், கிட்டத்தட்ட ஆறு மாத காலப் போருக்குப் பிறகும் ஈரான் தனது நிலையில் உறுதியாக உள்ளது. உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதிக்கு இன்றியமையாததான ஹார்முஸ் நீரிணையில், அங்கீகரிக்கப்படாத எண்ணெய் கப்பல்கள் கடந்து செல்ல அனுமதிக்க மறுத்து, கப்பல் போக்குவரத்தை அது கிட்டத்தட்ட முடக்கியுள்ளது. </p><p>ஈரானின் இந்த நடவடிக்கைகள் உலகளாவிய எண்ணெய் விலைகளை உயர்த்தியுள்ளது. பதிலுக்கு அமெரிக்க இராணுவமும் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை முடக்கும் வகையில் கடற்படை முற்றுகையை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p> </p><p>இந்த நிலையில், காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அவர்கள் (அமெரிக்கத் தலைவர்கள்) இராணுவ நடவடிக்கைகளிலிருந்து விலகிச் சென்ற நிலையில்... மீண்டும் அதே பழைய திட்டங்களைக் கையில் எடுப்பது, அவர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு விரக்தியில் உள்ளனர் என்பதைக் காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார். </p><p>நீதி மற்றும் கண்ணியத்தின் அடிப்படையில் ஒரு தீர்வைக் காண, அமெரிக்கா ஈரானிடம் மரியாதையுடன் பேச வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ஈரானியர்கள் ஒருபோதும் அஞ்சியதில்லை. </p><p>முற்றுகைகள் அல்லது பிற இராணுவ நடவடிக்கைகள் என அவர்கள் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியடைந்துவிட்டன; அவர்களின் இந்தப்புதிய முயற்சியும் தோல்வியடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>அவர்கள் தயாராக இல்லை</h2><p> </p><p>இதனிடையே, ஈரானுக்கு எந்த விதமான அவசர உதவியை வழங்கும் நாட்டிற்கும் எதிராகப் பொருளாதார விளைவுகள் ஏற்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். மேலும், ஈரானில் இருந்து அனுப்பப்படும் எண்ணெயில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை வாங்கும் சீனா, இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் ஒத்துழைக்குமாறு பெசென்ட் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de6887dd-8758-4df6-b073-779dd011093f/26-6a8b4bb55fc48.webp' /></p><p> </p><p>ஆனால், முறையான பேச்சுவார்த்தைகளில் தீர்வு காண வேண்டும் என சீனா வலியுறுத்தி வருகிறது. இதனிடையே, ஈரான் தரப்பில் மீண்டும் ஒப்பந்தத்திற்கு கெஞ்சுவதாக குறிப்பிட்ட டொனால்ட் ட்ரம்ப், ஆனால், சரியான ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள அவர்கள் தயாராக இல்லை என்பது என் கருத்து என்றும் ஈரானைப் பற்றி அவர் கூறியுள்ளார். </p><p>இந்த நிலையில், புதிய பிராந்தியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்துவது குறித்து அண்டை நாடுகளிடமிருந்து பல அழைப்புகளைத் தாங்கள் பெற்றுள்ளதாக, ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் சனிக்கிழமையன்று தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9523d8db-e851-4429-af61-7767051ee87b/26-6a8b4bb6109bf.webp' /></p><p> </p><p>ஆனால்
எந்தெந்த நாடுகள் அவை என்பதை காலிபாஃப் தெரிவிக்கவில்லை. இஸ்ரேலுக்காக இப்பிராந்தியத்தில் உள்ள தனது நட்பு நாடுகளின் பாதுகாப்பை அமெரிக்கா ஆபத்துக்குள்ளாக்குவதாக அவர் குற்றம் சாட்டியதுடன், சுதந்திரமான மற்றும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பிராந்திய ஒழுங்கமைப்பே அமைதியையும் பாதுகாப்பையும் நிலைநாட்டும் என்றும் கூறினார். </p><p>ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முடக்குவது போன்ற, போரின் தொடக்கத்தில் ட்ரம்ப் நிர்ணயித்த இலக்குகளை அவரால் இன்னும் அடைய முடியவில்லை.</p><p> மட்டுமின்றி, போரைக் கைவிட்டு வெளியேறவும் ட்ரம்பால் முடியவில்லை. ஈரான் பிடிவாதமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும், ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தூதரக ரீதியிலான தீர்வுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T03:50:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேக்கு ஆபத்து ஏற்பட்டால் அநுர அரசே முழுப் பொறுப்பு : விடுக்கப்பட்டுள்ள எசச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-is-responsible-if-anything-happens-to-sallay-1787541910"></link>
            <id>https://ibctamil.com/article/govt-is-responsible-if-anything-happens-to-sallay-1787541910</id>
            <summary type="text">தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைத்திருக்கப்படும் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், ஜனாதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைத்திருக்கப்படும் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p> அரசாங்கத்தை எச்சரிக்கும் வகையில் தேசிய அமைப்புகளின் ஒன்றியம் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.</p><p>"சலேவுக்கான நீதி - கலந்துரையாடல் மன்றம்" என்ற கருப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்த அமைப்பின் பிரதிநிதிகள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.</p><p>&nbsp;</p><h2>நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தல்</h2><p>தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்கள், சுரேஷ் சலேக்கு எதிராக மூன்றாவது தடுப்புக் காவல் உத்தரவைப் பிறப்பிப்பதைத் தவிர்க்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90ab2cc7-bd37-49a4-8e10-75712d7baa09/26-6a8bbe175b42e.webp' />&nbsp;</p><p>

அத்துடன், அவரை உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு ஜனாதிபதியைக் கேட்டுக்கொள்கின்றோம்.</p><p>இரண்டாவது தடுப்புக்காவல் உத்தரவு எதிர்வரும் 28ஆம் திகதியன்று முடிவடையும் நிலையில், சுரேஷ் சலேயை இனியும் தாமதிக்காமல் உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும்.” என தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T03:46:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிகழவுள்ள வானியல் அதிசயம் - இந்த வாரம் இரத்த நிற முழு சந்திர கிரகணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rare-lunar-eclipse-to-cover-96-of-moon-this-week-1787537938"></link>
            <id>https://ibctamil.com/article/rare-lunar-eclipse-to-cover-96-of-moon-this-week-1787537938</id>
            <summary type="text">இந்தப் பிரபஞ்சம் பல வானியல் அதிசயங்களைக் கொண்டதாகும். எதிர்வரும் வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை), ரக்ஷா பந்தன் பண்டிகை தினத்தன்று ஓர் அரிய ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தப் பிரபஞ்சம் பல வானியல் அதிசயங்களைக் கொண்டதாகும். எதிர்வரும் வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை), ரக்ஷா பந்தன் பண்டிகை தினத்தன்று ஓர் அரிய பகுதியளவு சந்திர கிரகணம் நிகழவுள்ளது.&nbsp;</p><p>இந்நிகழ்வில் நிலவின் பெரும் பகுதி மறைக்கப்பட்டு, கிட்டத்தட்ட முழு சந்திரகிரகணம் போலக் காட்சியளிக்கும். எனினும் இந்த நிகழ்வை இலங்கையில் காண முடியாது.</p><p>

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைக்கிறது.</p><p></p><h2>ரத்த நிலவு</h2><p> </p><p>

அப்போது சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து சந்திரனின் மீது படுகிறது. 

இதனால் சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. எனவே இதை ரத்த நிலவு (Blood Moon) என்கின்றனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/677011b8-874b-44db-9fd0-583c0b73e7db/26-6a8baf051ba49.webp' /></p><p>சாதாரண பகுதி சந்திரகிரகணங்களில் நிலவின் ஒரு சிறிய பகுதி மட்டுமே பூமியின் நிழலால் மூடி மறைக்கப்படும். 

ஆனால், வெள்ளிக்கிழமை நடக்க உள்ள இந்த கிரகணத்தின் போது நிலவின் மேற்பரப்பில் 96 சதவீத பகுதி பூமியின் நிழலால் மூடப்படுகிறது. </p><p>வெறும் 4% மட்டுமே விளிம்பில் வெளிச்சமாக இருக்கும். 

வழக்கமாக முழு சந்திரகிரகணத்தின் போது மட்டுமே சந்திரன் சிவப்பு நிறத்தில் பிரகாசிக்கும்.</p><p> 

ஆனால், இந்த கிரகணத்தில் 96% நிலவு மறைக்கப்படுவதால், இது பகுதி கிரகணமாக இருந்தாலும் முழு சந்திரகிரகணத்தை போலவே ரத்தச் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் என்பதால் இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றது.</p><p></p><h2>நேரடியாக காண வாய்ப்பு</h2><p> </p><p>

வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களில் இந்த கிரகணம் மிகவும் தெளிவாகப் புலப்படும். 

சுமார் 100 கோடி மக்கள் இதனை நேரடியாக காண வாய்ப்புள்ளதாக வானியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47f56029-1bd6-4eed-b793-c91792a41c95/26-6a8baf05c6124.webp' /></p><p>ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளில் இது பகுதி அளவாகத் தெரியும். </p><p>

இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, அண்டார்டிகா மற்றும் பசுபிக் பெருங்கடல் நாடுகளில் இந்த கிரகணம் தெரியாது. </p><p>

இலங்கை நேரப்படி ஒகஸ்ட் 28 காலையில் இந்த கிரகணம் நிகழ்கிறது. காலை 8:04 மணிக்கு தொடங்கி, முற்பகல் 9:43 மணிக்கு உச்சகட்டத்தை எட்டி காலை 11:22 மணிக்கு முடிவடையும். இக்காலகட்டத்தில் இலங்கையில் பகல் நேரமாக இருப்பதால், இந்த கிரகணத்தை நம்மால் பார்க்க முடியாது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T03:45:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்கரையில் கரையொதுங்கிய அடையாளம் தெரியாத சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/body-washed-ashore-at-karainagar-beach-1787542362"></link>
            <id>https://ibctamil.com/article/body-washed-ashore-at-karainagar-beach-1787542362</id>
            <summary type="text">கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கரையொதுங்கியது.குறித்த சடலமானது காரைநகர் - வேரப்பிட்டி பகுதியில் இன்று (24) கரை ஒதுங்கியுள்ளது. 

கடற்கரைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கரையொதுங்கியது.</p><p>குறித்த சடலமானது காரைநகர் - வேரப்பிட்டி பகுதியில் இன்று (24) கரை ஒதுங்கியுள்ளது.</p><p> 

கடற்கரைக்கு சென்றவர்கள் சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p> </p><p>

சடலம் யாருடையது என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee75baa8-65e2-44bd-a0ce-5c3a8154a3d7/26-6a8bbe293f1a9.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T03:45:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென காணாமல்போயுள்ள மயக்கவியல் வைத்திய நிபுணர் - காட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/doctor-from-badulla-teaching-hospital-missing-1787540561"></link>
            <id>https://tamilwin.com/article/doctor-from-badulla-teaching-hospital-missing-1787540561</id>
            <summary type="text">பதுளை போதனா வைத்தியசாலையில் மயக்கவியல் வைத்திய நிபுணர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வைத்திய நிபுணர் நேற்று (23) காலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதுளை போதனா வைத்தியசாலையில் மயக்கவியல் வைத்திய நிபுணர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

குறித்த வைத்திய நிபுணர் நேற்று (23) காலை பணியில் இருந்ததன் பின்னர் காணாமல்போயுள்ளார்.
</p><p>
 பதுளை போதனா வைத்தியசாலையில் மயக்கவியல் வைத்திய நிபுணராக பணிபுரியும் கண்டியை சேர்ந்த திருமணமான வைத்தியரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.</p><h2> கார் கண்டுபிடிப்பு</h2><p>

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், ​​மீகஹகிவுல பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில், அந்த வைத்தியரின் கார் மஹியங்கனை நோக்கிச்செல்வது பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5948d344-4c37-49aa-b39a-77298e4fc3ac/26-6a8bbbe80dfd9.webp' /></p><p>
</p><p>
இதற்கமைய, நடத்தப்பட்ட விசாரணையில், பதுளை - மஹியங்கனை கால்வாய் வீதியில் உள்ள 17வது தூண் பகுதியில் நேற்றிரவு கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>

அதன்படி, காணாமல்போன வைத்தியரை தேடுவதற்காக, பொலிஸார், குற்ற நிகழ்வு அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இன்று அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.</p><p>வைத்தியரின் கார் கண்டெடுக்கப்பட்ட இடம் யானைகள் நிறைந்த காடு என்றும், வனவிலங்கு அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T03:41:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடமையில் இருந்த விசேட வைத்தியர் திடீர் மாயம் ; பொலிஸார் தீவிர தேடுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/special-doctor-on-duty-suddenly-disappears-1787542065"></link>
            <id>https://jvpnews.com/article/special-doctor-on-duty-suddenly-disappears-1787542065</id>
            <summary type="text">பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன் பின்னர் இவ்வாறு காணாமல் போயுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c397f399-a76a-4144-9715-1f676bd5372f/26-6a8bba32e6836.webp' /></p><p>இது தொடர்பில் ஆராய்ந்த போது, வைத்தியரின் கார் மஹியங்கனை திசையை நோக்கிப் பயணிப்பது மீகஹகிவுல பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காணொளியில் பதிவாகியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, பதுளை - மஹியங்கனை வீதியின் 17ஆம் கட்டை, மாப்பாக்கடவெவ பகுதியில் வைத்து வைத்தியரின் கார் நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> 

இதற்கமைவாக, காணாமல் போன வைத்தியரைத் தேடும் நோக்கில் இன்றைய தினம் அப்பகுதியில் பொலிஸார், குற்றச் சம்பவ இடங்களை ஆராயும் தடயவியல் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து கூட்டுத் தேடுதல் நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T03:28:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[முழு சந்திர கிரகணத்தைப் போல் காட்சியளிக்கும் அரிய நிகழ்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-rare-event-that-looks-like-a-total-lunar-eclipse-1787541734"></link>
            <id>https://jvpnews.com/article/a-rare-event-that-looks-like-a-total-lunar-eclipse-1787541734</id>
            <summary type="text">எதிர்வரும் 28 ஆம் திகதி ஓர் அரிய பகுதியளவு சந்திர கிரகணம் நிகழவுள்ளது. 

இந்நிகழ்வில் நிலவின் பெரும் பகுதி மறைக்கப்பட்டு, கிட்டத்தட்ட முழு சந்திரகிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 28 ஆம் திகதி ஓர் அரிய பகுதியளவு சந்திர கிரகணம் நிகழவுள்ளது. </p><p>

இந்நிகழ்வில் நிலவின் பெரும் பகுதி மறைக்கப்பட்டு, கிட்டத்தட்ட முழு சந்திரகிரகணம் போலக் காட்சியளிக்கும். எனினும் இந்த நிகழ்வை இலங்கையில் காண முடியாது.</p><p> 

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9d9a9d8-5ff5-4e12-a6b5-4cd534a43b1e/26-6a8bb8e78fc35.webp' /></p><p> </p><p>

அப்போது சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து சந்திரனின் மீது படுகிறது. 

இதனால் சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.</p><p>எனவே இதை ரத்த நிலவு (Blood Moon) என்கின்றனர். 

சாதாரண பகுதி சந்திரகிரகணங்களில் நிலவின் ஒரு சிறிய பகுதி மட்டுமே பூமியின் நிழலால் மூடி மறைக்கப்படும். </p><p>

ஆனால், வெள்ளிக்கிழமை நடக்க உள்ள இந்த கிரகணத்தின் போது நிலவின் மேற்பரப்பில் 96 சதவீத பகுதி பூமியின் நிழலால் மூடப்படுகிறது.</p><p> வெறும் 4% மட்டுமே விளிம்பில் வெளிச்சமாக இருக்கும். 

வழக்கமாக முழு சந்திரகிரகணத்தின் போது மட்டுமே சந்திரன் சிவப்பு நிறத்தில் பிரகாசிக்கும். </p><p>

ஆனால், இந்த கிரகணத்தில் 96% நிலவு மறைக்கப்படுவதால், இது பகுதி கிரகணமாக இருந்தாலும் முழு சந்திரகிரகணத்தை போலவே ரத்தச் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் என்பதால் இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றது. </p><p>

வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களில் இந்த கிரகணம் மிகவும் தெளிவாகப் புலப்படும்.</p><p> 

சுமார் 100 கோடி மக்கள் இதனை நேரடியாக காண வாய்ப்புள்ளதாக வானியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். 

ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளில் இது பகுதி அளவாகத் தெரியும். </p><p>

இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, அண்டார்டிகா மற்றும் பசுபிக் பெருங்கடல் நாடுகளில் இந்த கிரகணம் தெரியாது. 

இலங்கை நேரப்படி ஒகஸ்ட் 28 காலையில் இந்த கிரகணம் நிகழ்கிறது. </p><p>காலை 8:04 மணிக்கு தொடங்கி, முற்பகல் 9:43 மணிக்கு உச்சகட்டத்தை எட்டி காலை 11:22 மணிக்கு முடிவடையும். </p><p>

இக்காலகட்டத்தில் இலங்கையில் பகல் நேரமாக இருப்பதால், இந்த கிரகணத்தை நம்மால் பார்க்க முடியாது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T03:22:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசிலின் சர்ச்சைக்குரிய வீட்டில் தொடரும் சிக்கல் - ஆபத்தான கூடாரமாக மாறும் வீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/basils-building-is-a-place-of-illegal-activities-1787539241"></link>
            <id>https://tamilwin.com/article/basils-building-is-a-place-of-illegal-activities-1787539241</id>
            <summary type="text">மாத்தறை பிரௌன்ஸில் பகுதியில் உள்ள ஒன்றரை ஏக்கர் தென்னந்தோட்டத்தில், அரைவாசி கட்டப்பட்டு கைவிடப்பட்டுள்ள கட்டடம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களின...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை பிரௌன்ஸில் பகுதியில் உள்ள ஒன்றரை ஏக்கர் தென்னந்தோட்டத்தில், அரைவாசி கட்டப்பட்டு கைவிடப்பட்டுள்ள கட்டடம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களின் கூடாரமாக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>

அந்த கட்டடம் முன்னாள் அமைச்சர் பாசில் ராஜபக்சவினால் முறையற்ற விதத்தில் ஈட்டப்பட்ட பணத்தை பயன்படுத்தி கொள்வனவு செய்ததாக சந்தேகிக்கப்படுகின்றது. </p><p>

இந்தக் காணியை கொள்வனவு செய்தது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.</p><p> </p><h2><b>

நிர்மாணப் பணிகள் </b></h2><p>விசாரணையில் இருக்கும் போதே, வழக்கறிஞரின் தலையீட்டுடன் இக்கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a44ff83-63db-45e9-bdc2-e7d87ad99afa/26-6a8bb660aacb2.webp' /></p><p>குறித்த காணியை கொள்வனவு செய்தது தொடர்பில் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்குக்கு பல சந்தர்ப்பங்களில் பசில் ராஜபக்ச முன்னிலையாக தவறியுள்ளார். </p><p>

இதன் காரணமாக, பாசில் ராஜபக்சவின் பிணைப் பணத்தை பறிமுதல் செய்யவும், அவரது பிணைதாரிகளிடம் இருந்து பிணைப் பணத்தை அறவிட்டுக்கொள்ளவும் மாத்தறை பிரதான நீதவான் உத்தரவிட்டிருந்தார். </p><p>

அத்துடன், பாசில் ராஜபக்சவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி வரை நீடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>

நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்குக்கு தொடர்புடைய காணியில் கட்டப்பட்டுள்ள வீடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, அதற்குள் சட்டவிரோதச் செயல்கள் இடம்பெற்று வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. </p><p>

அங்கு வெற்று மதுபானப் போத்தல்கள், தீப்பெட்டிகள், லைட்டர்கள், படுக்கை விரிப்புகள், ஊசிகள் மற்றும் ஊசி செலுத்தும் உபகரணங்களும் ஆங்காங்கே காணக்கூடியதாக இருந்தன.</p><h3><b>சட்டவிரோத நடவடிக்கை</b></h3><p> இந்தக் கட்டடத்தைப் பல்வேறு குழுக்கள் அல்லது நபர்கள் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதாக சந்தேகிக்கப்படுகின்றது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15ea5587-bbdd-473e-a781-b687b43ee268/26-6a8bb78f73d94.webp' /></p><p>ஆரம்பக் கட்டத்தில் 2 அல்லது 3 மாடிக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக பாரிய தடிமன்கொண்ட கம்பிகளையிட்ட தூண்களின் மீது நிர்மாணப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. </p><p>

பின்னர் அவசரமாக அதன் மீது சுவர்கள் எழுப்பப்பட்டு, பூச்சு பூசப்பட்டு, கூரை ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>9 கொள்கலன் பெட்டிகளில் கட்டடப் பொருட்கள் இவற்றுக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் அவ்வப்போது நிர்மாணப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். </p><p>

இந்த காணி ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஹெர்பெட் கெல்லர் என்பவருக்குச் சொந்தமாக இருந்தது. இதன்போது, அவருக்கு 60 மில்லியன் ரூபா பணத்தைச் செலுத்தி அந்த காணி கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

காணியைக் கொள்வனவு செய்வதற்காக செலுத்தப்பட்ட பணம் முறையற்ற விதத்தில் ஈட்டப்பட்டுள்ளது. இதனால், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p> பாசில் இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபர் என்பது குறிப்பிடத்தக்கது.
</p>]]></content>
            <updated>2026-08-24T03:14:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெக்கோ சமனின் தாயார் கொலைச் சம்பவம் ; மேலும் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/the-murder-of-peko-saman-s-mother-person-arrested-1787540944"></link>
            <id>https://jvpnews.com/article/the-murder-of-peko-saman-s-mother-person-arrested-1787540944</id>
            <summary type="text">திட்டமிட்ட குற்றவாளியான &#039;பெக்கோ சமன்&#039; என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இந்தக் கொலை த...</summary>
            <content type="html"><![CDATA[<p>திட்டமிட்ட குற்றவாளியான 'பெக்கோ சமன்' என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். </p><p>

இந்தக் கொலை தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேகநபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.</p><h3>மேலதிக விசாரணை</h3><p> 

கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட மித்தெனிய பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை, மித்தெனிய பொலிஸார் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23aecbb5-ea60-4c37-88c8-8885c05d3b91/26-6a8bb5d15cffb.webp' /></p><p>இதன்போது, கடந்த 12ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில் வைத்து 'பெக்கோ சமன்' என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு குறித்த சந்தேகநபர் உதவி மற்றும் ஒத்தாசை புரிந்துள்ளமை தெரியவந்துள்ளது. </p><p>

இதற்கமைவாக, தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேகநபரை நேற்று (23) வலஸ்முல்ல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின்னர், அவரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>

சந்தேகநபரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், இந்தக் கொலைக்கு உதவி ஒத்தாசை புரிந்த மற்றுமொரு சந்தேகநபர் நேற்றைய தினம் தங்கல்லை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

அங்கு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மித்தெனிய பொலிஸாரிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மித்தெனிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவராவார். </p><p>

இச்சம்பவம் தொடர்பில் மித்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-24T03:09:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெக்கோ சமனின் தாயார் கொலை சம்பவம் - வாக்குமூலத்தில் அடுத்தடுத்து சிக்கும் சந்தேகநபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/another-person-arrested-murder-peko-saman-mother-1787538944"></link>
            <id>https://tamilwin.com/article/another-person-arrested-murder-peko-saman-mother-1787538944</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார்&amp;nbsp; சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த கொலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார்&nbsp; சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>

இந்த கொலை தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேகநபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.</p><p>மித்தெனிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேகநபர் நேற்றைய தினம் தங்கல்லை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><h2>&nbsp;மித்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணை</h2><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மித்தெனிய பொலிஸாரிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e45c89d7-7529-445a-9a68-4388868226e6/26-6a8bb3cfd02d9.webp' /></p><p> 

கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய சந்தேகநபரை மித்தெனிய பொலிஸார் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர். </p><p>இதற்கமைவாக, தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரை நேற்று (23) வலஸ்முல்ல நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்தியதன் பின்னர், அவரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>இச்சம்பவம் தொடர்பில் மித்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T03:00:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[டாக்சிக் பெண்களை கேவலமாக காட்டும் படமில்லை, யஷ் சொன்ன சுவாரஸ்ய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actor-yash-about-toxic-movie-1787536075"></link>
            <id>https://cineulagam.com/article/actor-yash-about-toxic-movie-1787536075</id>
            <summary type="text">&amp;nbsp;யஷ்டாக்சிக் யஷ் நடிப்பில் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் பிரமாண்டமாக நாளை மறு நாள் வெளி வரவிருக்கும் படம் டாக்சிக். இந்த படத்தின் முன்பதிவு தொடங்கி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>&nbsp;யஷ்</h2><p>டாக்சிக் யஷ் நடிப்பில் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் பிரமாண்டமாக நாளை மறு நாள் வெளி வரவிருக்கும் படம் டாக்சிக். இந்த படத்தின் முன்பதிவு தொடங்கி படு ஜோராக சென்று கொண்டு இருக்கிறது. </p><p>இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் டாக்சிக் ட்ரைலரில் பெண்களை மிக மோசமாக காட்டியுள்ளார்களா என பலரும் கேட்க, யஷ் உடனே டாக்சிக் படத்தில் பெண்களை இழிவாக சித்தரித்ததாக நீங்கள் நினைப்பது தவறு, படத்தை பார்த்தால் உங்களுக்கே தெரியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77d0747c-2937-420f-95b4-1851f392cb43/26-6a8ba2cebc409.webp' /></p><p> கீது மோகன் தாஸ் பெண்கள் எந்த சூழ்நிலையிலும் பிரச்சனைகளை எதிர்கொண்டு மீண்டு வரவேண்டும் என்பதை தான் அழுத்தமாக கூறியுள்ளார் என யஷ் கூறியுள்ளார். மேலும் டாக்சிக் படத்தில் கியாரா, நயன்தாரா, ஹுமா குரேஷி, ருக்மிணி, டாரா என பல ஹீரோயின்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-24T03:00:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் நடவடிக்கை விரக்தியின் அறிகுறி ; ஈரான் மீது வரலாற்றிலேயே கடுமையான தடைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/america-s-move-is-a-sign-of-desperation-1787540146"></link>
            <id>https://canadamirror.com/article/america-s-move-is-a-sign-of-desperation-1787540146</id>
            <summary type="text">ஈரானின் மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான தடைகளை இன்று விதிக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

இந்த புதிய தடைகள் குறித்த அறிவிப்பை அமெரிக்க நேரப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான தடைகளை இன்று விதிக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. </p><p>

இந்த புதிய தடைகள் குறித்த அறிவிப்பை அமெரிக்க நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு அறிவிக்கவுள்ளதாக அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.</p><p> 

எனினும் இந்த புதிய அமெரிக்கத் தடைகள் குறித்த அச்சுறுத்தலை ஒரு விரக்தியின் அறிகுறியாக பார்ப்பதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி குறிப்பிட்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2193e00-320e-466a-86b9-ddb47e6ea66d/26-6a8bb2b3c4334.webp' /></p><p>இவ்வாறான புதிய நடவடிக்கைகள் ஈரானை வீழ்த்துவதில் இருந்து தோல்வியடையும் என்றும் அவர் கூறியுள்ளார். </p><p>

அமெரிக்கத் தலைவர்கள் இராணுவ நடவடிக்கைகளிலிருந்து விலகி, அதே பழைய திட்டங்களை மீண்டும் கொண்டு வந்திருப்பது அவர்களது விரக்தியை பிரதிபலிப்பதாக காட்டுகிறது. </p><p>

நீதி மற்றும் கண்ணியத்தின் அடிப்படையிலான ஒரு தீர்வைக் காண அமெரிக்கா, ஈரானுடன் கலந்துரையாட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.</p><p> 

சர்வதேசத் தடைகளால் ஈரானின் பொருளாதாரம் ஏற்கனவே பெரும் நெருக்கடியில் உள்ளது. 

பெப்ரவரி 28 ஆம் திகதியன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களைத் தொடங்கியதில் இருந்து, அதன் உட்கட்டமைப்புகள் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டுள்ளன. </p><p>

மேலும் இஸ்லாமியக் குடியரசின் மீதான வான்வழித் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

ஆனால் சுமார் ஆறு மாத காலப் போருக்குப் பின்னரும் தெஹ்ரான் விட்டுக் கொடுக்காமல் உறுதியாக போரிட்டு வருகின்றது. </p><p>

உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கியமான நீர்வழியான ஹோர்முஸ் நீரிணையில் அனுமதியற்ற எண்ணெய் கப்பல்களைப் பயணிக்க அனுமதிக்க மறுத்து, கப்பல் போக்குவரத்தை அது முடக்கியுள்ளது.</p><p> 

நீரிணையில் ஏற்பட்டுள்ள இந்தத் தடையால் உலகளாவிய எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-24T02:55:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை வன்முறைகள் குறித்து ஜெனீவாவில் விவாதிக்க திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prison-matters-will-raised-in-geneva-1787539369"></link>
            <id>https://tamilwin.com/article/prison-matters-will-raised-in-geneva-1787539369</id>
            <summary type="text">&amp;nbsp;ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது அமர்வில், இலங்கையின் அண்மைய சிறைச்சாலை சம்பவங்கள் தொடர்பில் விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது அமர்வில், இலங்கையின் அண்மைய சிறைச்சாலை சம்பவங்கள் தொடர்பில் விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>
மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்கள்</h2><p>
</p><p>இந்த அமர்வின் போது, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு தொடர்பாக இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்கள் குறித்த விடயங்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77698420-7f36-4fb8-b0fe-c35d4304f1b1/26-6a8bafab0b828.webp' /></p><p>
</p><p>கடந்த சில மாதங்களில் இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் வன்முறைகள் வெடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>இந்த சம்பவங்களில் பல கைதிகள் கொல்லப்பட்டதுடன், சிறைச்சாலை அதிகாரிகளும் உயிரிழந்திருந்தனர்.</p><p>கைதிகளின் உரிமைகள் தொடர்பிலும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டிருந்த நிலையில், ஜெனீவா அமர்வுகளில் இந்த விவகாரம் தொடர்பில் பேசப்பட உள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இந்த அமர்வு அடுத்த மாதம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T02:43:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆபத்தான நபரின் கட்டுப்பாட்டில் ஆசிரியர் - விசாரணையில் திடுக்கிடும் தகவல் - சிக்கப் போகும் மனைவியும் மகனும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiran-basik-had-connection-with-a-teacher-1787535734"></link>
            <id>https://tamilwin.com/article/shiran-basik-had-connection-with-a-teacher-1787535734</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிகிடம் நிதி உதவி பெற்றதாக கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியர், சில ஆண்டுகளுக்கு முன்பு க.பொ.த. சாதாரண தரப் பரீட்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிகிடம் நிதி உதவி பெற்றதாக கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியர், சில ஆண்டுகளுக்கு முன்பு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள்களை, பரீட்சைக்கு முன்பாக கசியவிட்ட நபர் என்பது தெரியவந்துள்ளது. </p><p>இந்தத் தனியார் வகுப்பு ஆசிரியர் தற்போது டுபாயில் வசித்து வருவதாக பொலிஸ் மத்திய குற்றத்தடுப்புப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். </p><p>குறித்த ஆசிரியரை கைது செய்வதற்காக இன்டர்போல் அமைப்பின் உதவி பெறப்படவுள்ளது.</p><p> </p><h2><b>சிவப்பு அறிவிப்பு </b></h2><p>அத்துடன், அவருக்கு எதிராகச் சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c99bb1e7-e79b-4a9f-932c-f4ec36957e3b/26-6a8baa8626419.webp' /></p><p> தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் உள்ள ஷிரான் பாசிக் தனது சொத்துக்களை எழுதி வைத்துள்ள அவரது மகனையும் மனைவியை பொலிஸார் விசாரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-24T02:21:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் எச்சரிக்கை மட்டத்தில் எல் நினோவின் தாக்கம்! வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-affects-7-districts-1787535714"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-affects-7-districts-1787535714</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று(24) பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் &#039; எச்சரிக்கை&#039; (Caution) மட்டத்தை எட்டக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, இயற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று(24) பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் ' எச்சரிக்கை' (Caution) மட்டத்தை எட்டக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்படி, இயற்கை அபாயங்கள் பற்றிய முன்னெச்சரிக்கை மையம் செம்மஞ்சள் நிற (Amber) வெப்ப வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
</p><p>குறிப்பிடப்பட்ட சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பமானது பகல் நேரத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>
</p><p>எனவே வெப்பமான வானிலையின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd9b3552-34f0-42af-ae6d-6eb8b51860bf/26-6a8ba996903d9.webp' /></p><p>எனவே போதுமான அளவு நீரைக் குடிக்க வேண்டும்; முடிந்தவரை நிழலான இடங்களில் அடிக்கடி ஓய்வு எடுக்குமாறும், வெப்பத்தினால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய முதியவர்கள் மற்றும் நோயாளிகள் குறித்து அவதானம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>வாகனங்களில் சிறுவர்களைத் தனியாக வாகனங்களுக்குள் விட்டுச் செல்லக் கூடாது.

வெளியில் கடினமான உடற்பயிற்சிகள் அல்லது வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைத்து, நிழலான இடங்களில் தங்குவதுடன் அதிகளவில் திரவ ஆகாரங்களை அருந்த வேண்டும்.

இலகுரக, வெள்ளை அல்லது லேசான நிறமுடைய ஆடைகளை அணியவும் கோரப்பட்டுள்ளது.</p><h2>எல் நினோவின் தாக்கம்</h2><p>இதேவேளை, 7 மாவட்டங்கள் எல் நினோவின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.</p><p>
இந்த 7 மாவட்டங்களில் உள்ள 23 பிரதேச செயலகப் பிரிவுகள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மையம் சுட்டிக்காட்டுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/facedab5-1f65-4820-b49c-160655122bc1/26-6a8ba997411d3.webp' />&nbsp;</p><p>

மேலும், 25,628 குடும்பங்களைச் சேர்ந்த 81,865 நபர்கள் எல் நினோவின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பேரிடர் மேலாண்மை மையம் கூறியுள்ளது.
</p><p>
இந்தத் தாக்கத்தின் காரணமாக, 20 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குக் குடிநீர் விநியோகிக்கவும் பேரிடர் மேலாண்மை மையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T02:17:02+00:00</updated>
        </entry>
    </feed>
