<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-18T12:23:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[டுபாய் பிரியங்கரவின் போதைப்பொருள் வலையமைப்பை இயக்கிய முன்னாள் கடற்படை சிப்பாய் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/underworld-figure-arrested-with-narcotics-worth-1789731566"></link>
            <id>https://tamilwin.com/article/underworld-figure-arrested-with-narcotics-worth-1789731566</id>
            <summary type="text">வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் குழுவொன்றின் போதைப்பொருள் வலையமைப்பை இலங்கையில் இயக்கி வந்ததாக சந்தேகிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் குழுவொன்றின் போதைப்பொருள் வலையமைப்பை இலங்கையில் இயக்கி வந்ததாக சந்தேகிக்கப்படும் முன்னாள் கடற்படை சிப்பாய் ஒருவர், போதைப்பொருட்கள் மற்றும் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
வெல்லம்பிட்டிய, நாகஹமுல்ல பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது 43 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>விசேட நடவடிக்கை</h2><p>
</p><p>
விசேட அதிரடிப்படையின் விசேட நடவடிக்கை II பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>

இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 716 கிராம் ஹெரோயின் மற்றும் 255 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a946f069-ca80-4726-8489-88a6cbdff847/26-6aad2b6f47e1d.webp' /></p><p>
</p><p>
மேலும், ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட மைக்ரோ ரக கைத்துப்பாக்கி, அதற்கான மகசின் மற்றும் சந்தேகநபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
கைது செய்யப்பட்டவர் முன்னர் இலங்கை கடற்படையில் பணியாற்றியவர் எனவும், பின்னர் சேவையிலிருந்து தப்பிச் சென்றவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p> எனினும், 2025ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பின் கீழ் அவர் சட்டபூர்வமாக கடற்படை சேவையிலிருந்து விலகியுள்ளார்.
</p><p>
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், தற்போது டுபாயில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் ‘டுபாய் பிரியங்கர’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் நபரின் இலங்கையிலுள்ள போதைப்பொருள் வலையமைப்பை இவர் பிரதானமாக இயக்கி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d7f5b3b-0a1b-4ea2-9b90-4a6a1713ef3c/26-6aad2b6feecb4.webp' /></p><p>
</p><p>
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபரும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p>

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T12:15:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கை மாறியது யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மன்ற நிர்வாகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/administration-jaffna-thiruvalluvar-cultural-forum-1789733191"></link>
            <id>https://jvpnews.com/article/administration-jaffna-thiruvalluvar-cultural-forum-1789733191</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மன்றத்தை நிர்வகிப்பதற்காக உருவாக்கப்பட்டுள் நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையின் உறுப்பினர்கள் உத்தியோகபூர்வமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மன்றத்தை நிர்வகிப்பதற்காக உருவாக்கப்பட்டுள் நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையின் உறுப்பினர்கள் உத்தியோகபூர்வமாக நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபை ஆவணத்தில் இன்று (18) கையொப்பமிட்டனர் .</p><p>நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மன்றத்தில் காலை 11 மணியளவில் இடம்பெற்றது. 

நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையில் அங்கம் வகிக்கும் 9 உறுப்பினர்களும் கலந்துகொண்டு, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62f6572b-cde7-4f9a-9cab-03bc5166ba95/26-6aad2949542e7.webp' /></p><h2>அமைச்சரவை&nbsp; அனுமதி</h2><p> 

இலங்கை பாராளுமன்ற அமைச்சரவையின் அனுமதியுடன்&nbsp;யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மன்ற நிர்வாகம்&nbsp; நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையிடம் கையளிக்கப்படுகின்றது.</p><p></p><p> </p><p>

மாகாண சபை ஆட்சி இல்லாத காரணத்தால், வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ். மாநகர சபை ஆணையாளர் ஏ.சி. அரவிந்தராஜ், கலாச்சார அமைச்சின் செயலாளர் வர்ணகுல சூரிய பிறின்ஸ் சேனாதீர யாழ் மாநகர முதல்வர் வி. மதிவதனி இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் சிறிமான் சாய் முரளி, மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம்.ஆகியோர் கலந்து கொண்டு கைச்சாத்திட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17a9c680-472f-49d5-888c-6a643d8445e1/26-6aad294a0dbdd.webp' /></p><p> 

மேலும், சட்டவிரிவுரையாளர் கோசலை மதன், யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சிறி பற்குணராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் 

2 வருட காலத்திற்கு நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையின் அனுமதியுடன், எதிர்காலத்தில் பராமரிப்பு மற்றும் சேவைகள் தொடர்பான விடயங்கள் கையாளப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b32de268-9be9-43b5-8f52-04692a0dba45/26-6aad294abd7c6.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T12:03:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சக்கட்ட கிளாமரில் ரீல்ஸ் வீடியோ!! நோவா பட நடிகை ரைசா..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/raiza-wilson-recent-photoshoot-reels-video-1789724668"></link>
            <id>https://viduppu.com/article/raiza-wilson-recent-photoshoot-reels-video-1789724668</id>
            <summary type="text">ரைசா வில்சன்கன்னட சினிமாவில் மாடலிங் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கியவர் தான் ரைசா வில்சன். அந்த துறையில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதே தமிழ் பக்கம் வந...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரைசா வில்சன்</h2><p>கன்னட சினிமாவில் மாடலிங் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கியவர் தான் ரைசா வில்சன். அந்த துறையில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதே தமிழ் பக்கம் வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7288033-6d52-403b-9ec1-6fb2b693f94e/26-6aad07ff05fc1.webp' /></p><p>

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் கவனம் பெற்றார். அந்நிகழ்ச்சி முடிந்த கையோடு ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ஒரு காதல் திரைப்படம் நடித்தார்.</p><p>

நோவா என்ற படத்தில் நடித்து வரும் ரைசா தற்போது, மாடர்ன் லுக்கில் எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Dda8R1FPCHX/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Dda8R1FPCHX/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Dda8R1FPCHX/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Raiza (@raizawilson)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-18T12:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பை உலுக்கிய மட்டக்குளி கோர விபத்து: கைதான சாரதி போதைப்பொருள் பயன்படுத்தவில்லை...! நீதிமன்றில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mattakkuliya-accident-driver-arrest-1789731145"></link>
            <id>https://tamilwin.com/article/mattakkuliya-accident-driver-arrest-1789731145</id>
            <summary type="text">மட்டக்குளி - கந்தஉட பகுதியில் பதிவான கோர விபத்து தொடர்பில் கைதான சந்தேகநபர் சம்பவம் இடம்பெற்ற போது கஞ்சா போதைப்பொருளை பயன்படுத்தியிருக்கவில்லை என அவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்குளி - கந்தஉட பகுதியில் பதிவான கோர விபத்து தொடர்பில் கைதான சந்தேகநபர் சம்பவம் இடம்பெற்ற போது கஞ்சா போதைப்பொருளை பயன்படுத்தியிருக்கவில்லை என அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். </p><p>

இது தொடர்பான வழக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (17.09.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p> 

இதன்போது நீதிமன்றில் முன்னிலையான விசாரணை அதிகாரிகள் விடயங்களை முன்வைக்கையில், சந்தேகநபர் செலுத்திச் சென்ற மின்சாரத்தால் இயங்கும் கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேகமாக முன்னோக்கிப் பயணித்துள்ளது. தானாகவே வேகத்துடன் முன்னோக்கி சென்றமையால் அதனை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளனர்.</p><h2>கார் பரிசோதனை</h2><p>
ஆகையால் வாகனத்தின் இயந்திரம் அல்லது, தொழில்நுட்ப அமைப்பில் கோளாறு ஏற்பட்டதா என்பதை கண்டறிவதற்காக, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையிலான நிபுணர் குழுவினரால், குறித்த கார் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. 

அத்தோடு வைத்திய குழுவின் மூலம் சந்தேகநபரின் மனநிலை தொடர்பான மதிப்பிட்டை பெறுவதற்கும் எதிர்பார்த்துள்ளதாகவும் நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தனர்.</p><p> 

அதனை தொடர்ந்து சந்தேகநபர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, தனது சேவைபெறுநர் மதுபானம் அல்லது சட்டவிரோத போதைப்பொருளையோ ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோய்க்காக ஆயுர்வேத மருந்துகளை எடுத்து வருபவர். போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பதை உறுதி செய்வதற்கான பொலிஸார் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையின் போது, போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்தமைக்கு அம்மருந்துகளே காரணம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0b7306d-d208-4a9e-92c7-1f5f542e2a69/26-6aad2469b9abb.webp' /></p><p> </p><p>எனது சேவை பெறுநர் செலுத்திய காரில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறே விபத்துக்கு காரணம் என்றார். 

இந்நிலையில் சந்தேகநபருக்கு பிணை வழங்குவதால் பொதுமக்களிடையே அமைதியின்மை ஏற்பட வாய்ப்புள்ளமையால், அவருக்கு பிணை வழங்க வேண்டாம் என நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.</p><h2>விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு</h2><p> </p><p>

இந்நிலையில் மன்றில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை பரிசீலித்த நீதிவான் எதிர்வரும் 30ஆம் திகதிவரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். </p><p>

மட்டக்குளி கந்தஉட பெர்குசன் வீதி சந்திக்கருகில் நேற்று முன்தினம் புதன்கிழமை (16) இரவு, வத்தளை பகுதியில் இருந்து அதிக வேகத்தில் வந்த கார், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்றுக் கொண்டிருந்த மூன்று முச்சக்கர வண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. </p><p>

இதன்போது விரைந்து செயற்பட்ட பிரதேசவாசிகள் காயமடைந்த 13 நபர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், 03 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T11:57:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். திருவள்ளுவர் பண்பாட்டு மையம் நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையிடம் கையளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-thiruvalluvar-cultural-center-hand-over-1789731985"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-thiruvalluvar-cultural-center-hand-over-1789731985</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்காக
உருவாக்கப்பட்டுள் நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையின் உறுப்பினர்கள்
உத்தியோகபூர்வமாக நம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்காக
உருவாக்கப்பட்டுள் நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையின் உறுப்பினர்கள்
உத்தியோகபூர்வமாக நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபை ஆவணத்தில் கையொப்பமிட்டனர்.</p><p>நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (18)&nbsp; யாழ்ப்பாணம்
திருவள்ளுவர் கலாச்சார மன்றத்தில் காலை 11 மணியளவில் இடம்பெற்றது.
</p><p>
நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையில் அங்கம் வகிக்கும் 9 உறுப்பினர்களும்
கலந்துகொண்டு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.</p><p></p><h2>ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்கள்&nbsp;</h2><p>
</p><p>
இலங்கை நாடாளுமன்ற அமைச்சரவையின் அனுமதியுடன் நம்பிக்கை நிதியப் பொறுப்பு
சபையிடம் கையளிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a90cc47c-6b9d-48a4-877b-3ed4e0dd0ebe/26-6aad25eb150f2.webp' /></p><p>
</p><p>
மாகாண சபை ஆட்சி இல்லாத காரணத்தால், வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ்.
மாநகர சபை ஆணையாளர் ஏ.சி. அரவிந்தராஜ், கலாச்சார அமைச்சின் செயலாளர் வர்ணகுல
சூரிய பிறின்ஸ் சேனாதீர, யாழ் மாநகர முதல்வர் வி. மதிவதனி, இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் சாய் முரளி, மாகாண சபை அவைத் தலைவர்
சீ.வி.கே.சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டு கைச்சாத்திட்டனர்.</p><p>
மேலும், சட்டவிரிவுரையாளர் கோசலை மதன், யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்
சிறிசற்குணராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p><p>2 வருட காலத்திற்கு நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையின் அனுமதியுடன்,
எதிர்காலத்தில் பராமரிப்பு மற்றும் சேவைகள் தொடர்பான விடயங்கள்
கையாளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T11:54:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே எண்களை நம்பியதனால் ஒருவருக்கு அடித்த அதிர்ஸ்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/lucky-numbers-win-innisfil-man-25-million-1789714073"></link>
            <id>https://canadamirror.com/article/lucky-numbers-win-innisfil-man-25-million-1789714073</id>
            <summary type="text">கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், இன்னிஸ்ஃபில் நகரைச் சேர்ந்த ஸ்டான்லி ஜே என்ற பிளம்பர், &#039;லொட்டோ மேக்ஸ்&#039; குலுக்கலில் 2.5 மில்லியன் கனடிய டாலர்கள் பரிசாக வென...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், இன்னிஸ்ஃபில் நகரைச் சேர்ந்த ஸ்டான்லி ஜே என்ற பிளம்பர், 'லொட்டோ மேக்ஸ்' குலுக்கலில் 2.5 மில்லியன் கனடிய டாலர்கள் பரிசாக வென்றுள்ளார். </p><p>
40 ஆண்டுகளாகப் பிளம்பராகப் பணியாற்றி வரும் ஸ்டான்லி, கடந்த ஜூலை 24 அன்று வுட்ஸ்டாக் நகரில் உள்ள ஒரு மளிகைக் கடையில் தனது காதலியைச் சந்திக்கச் சென்றபோது இந்த லொட்டரி சீட்டை கொள்வனவு செய்துள்ளார். </p><p>
பல ஆண்டுகளுக்கு முன்பு 'க்விக் பிக்' முறையில் தனக்குக் கிடைத்த அதே எண்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்ததே இவருக்கு இந்த மாபெரும் வெற்றியைத் தந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76a556c8-d241-4f7c-b55c-82945cd59769/26-6aacde9aa880b.webp' /></p><p> </p><p>
லொட்டரி முடிவுகளைச் செயலி மூலம் சரிபார்த்தபோது, தான் 25,000 டொலர் மட்டுமே வென்றதாக ஸ்டான்லி நினைத்துள்ளார்.</p><p> 
ஆனால் அவரது காதலி சரிபார்த்த போதே அது 25 மில்லியன் டொலர் என்பது தெரியவந்தது. 
அந்தத் தொகை தனது வங்கிச் கணக்கிற்கு வந்த பிறகே, தான் உண்மையாகவே கோடீஸ்வரனாகிவிட்டதை அவரால் நம்ப முடிந்தது.
</p><p>ஏரிக்கரையில் ஒரு புதிய வீடு மற்றும் கிளாசிக் 'ஹாட்-ராட்' (hot-rod) கார் கொள்வனவு செய்தல், சூரிய ஒளியும் கடற்கரையும் நிறைந்த சுற்றுலாத் தலங்களுக்குத் தனது காதலியை அழைத்துச் செல்வது மற்றும் தனது மகள் மற்றும் பேத்தியைப் பரிசுகளால் மகிழ்விப்பது என இந்த பரிசுப் பணத்தில் செய்யப் போகும் விடயங்களை பட்டியலிட்டுள்ளார்.</p><p>
தனது நெருங்கிய வட்டாரத்திற்கு மட்டும் இந்தத் தகவலை மெதுவாகத் தெரிவிக்க நினைத்த போதிலும், இந்த செய்தி நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே வேகமாகப் பரவி, அனைவரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். </p><p>
இந்த வெற்றி தனது வாழ்க்கைக்குப் பெரிய பாதுகாப்பையும் நிம்மதியையும் தந்துள்ளதாக ஸ்டான்லி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T11:51:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[Resident Evil திரை விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/resident-evil-2026-movie-review-1789732266"></link>
            <id>https://cineulagam.com/article/resident-evil-2026-movie-review-1789732266</id>
            <summary type="text">ஹாலிவுட் திரையுலகை தாண்டி, உலகம் முழுவதுமே ரெசிண்டண்ட் ஈவில் சீரிஸ் படங்களுக்கு பெரிய ரசிகர்கள் இருக்க, இன்று வெளிவந்துள்ள ஜாக் கிரிகேர் இயக்கத்தில் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹாலிவுட் திரையுலகை தாண்டி, உலகம் முழுவதுமே ரெசிண்டண்ட் ஈவில் சீரிஸ் படங்களுக்கு பெரிய ரசிகர்கள் இருக்க, இன்று வெளிவந்துள்ள ஜாக் கிரிகேர் இயக்கத்தில் இந்த ரெசிடண்ட் ஈவில் எப்படியுள்ளது? பார்ப்போம்.</p><h2>கதைக்களம்</h2><p>நாயகன் ப்ரேயான் ஒரு மெடிக்கல் கொரியர் பாய் ஆக வேலை பார்த்து வருகிறார். அதாவாது முக்கியமான ஆர்கான் இன்னொருத்துருக்கு தேவைப்படும் போது அதை தேவைப்படும் மருத்துவ மனையில் கொடுப்பது.
</p><p>அப்படி அவர் கையில் ஒரு ஆர்கான் கொடுத்து ஒரு இடத்திற்கு போக சொல்ல, அங்கு செல்லும் வழியில் ஒருவரை காரில் இடித்துவிடுகிறார். அதை தொடர்ந்து அவரை காரில் வைத்துகொண்டு மருத்துவமனை செல்ல பல அசம்பாவிதம் நடக்க, ப்ரேயான், அங்கிருந்து ஒரு வீட்டிற்கு செல்கிறார்.
</p><p>அங்கு பல விசித்திரமான மனிதர்கள், விலங்குகள் என பார்க்க அவர்கள் ப்ரேயானை தாக்க வர, பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54663b56-809b-47f7-8b6f-949079bfe2c6/26-6aad25ac0aebd.webp' /></p><p>
</p><h2>படத்தை பற்றிய அலசல்
</h2><p>ப்ரேயான் ஆக ஆஸ்டில் படம் முழுவதும் உயிரை கையில் பிடித்துகொண்டே ஓடுகிறார். அதிலும் அத்தனை பதட்டத்திலும் படம் முழுவதும் காமெடி கவுண்டர் கொடுத்து கொண்டே இருக்கிறார்.
</p><p>ரெசிடண்ட் ஈவில் என்றாலே திரில்லர், பதட்டம் என்று தான் இருக்கும், ஆனால் இதில் இயக்குனர் கூடவே காமெடியும் சேர்த்தது சர்ப்ரைஸ் தான், அது ஓரளவிற்கு ஒர்க் அவுட் ஆகியுள்ளது. அதே நேரத்தில் ரெசிடண்ட் ஈவில் படத்திற்கான தன்மையையும் இது பாதிக்கிறது.
</p><p>ஆரம்பத்தில் இருந்த திரில் நமக்கு விஷயம் தெரிந்தவுடன் பிறகு என்ன ஜாம்பிகளை வேட்டையாடும் அதிரடியாகவே நகர்கிறது. ஆனால், பழைய ரெசிடண்ட் ஈவில் சீரிஸில் பார்த்த பிரமாண்ட அதிரடி காட்சிகள் இல்லை, இதில் கொஞ்சம் ராவ் ஆகவே காட்சிகளை எடுத்துள்ளனர்.
</p><p>அதிலும் ஒரு சிறுமி காலில் வைரஸ் பாதிக்கப்பட்டது, அதை ஹீரோ காப்பாற்ற போகும் காட்சி எல்லாம் செம பதட்டமாக இருக்க வேண்டும், ஆனால் அதையும் காமெடியாக ட்ரீட் செய்தது இந்த படத்தை நாம் எப்படி எடுத்துகொள்வது என்ற எண்ணத்தை தான் தருகிறது.
</p><p>கிளைமேக்ஸ் அந்த மாற்று மருந்தை நாயகன் எடுத்து வரும் காட்சி, அதுவும் அந்த 28 மாடி பில்டிங்கில் மாற்று மருந்து எடுத்து வரும் போது வரும் ஆபத்துக்கள் அதிலிருந்து நாயகன் மீண்டு வரும் காட்சிகள் எல்லாம் செம சுவாரஸியம்.
</p><p>டெக்னிக்கலாக படத்தின் ஒளிப்பதிவு, படம் முழுவதும் இரவு காட்சியை அத்தனை துல்லியமாக எடுத்துள்ளனர், இசை திரில்லர் படத்திற்கான பயத்தை தூண்டுகிறது.
</p><h2>க்ளாப்ஸ்</h2><p>திரில்லங் காட்சிகள்
</p><p>இரண்டாம் பாதியில் அந்த பில்டிங்கில் வரும் காட்சிகள்.
</p><h2>பல்ப்ஸ்</h2><p>சீரியஸான இடங்களில் காமெடி வைத்தது கொஞ்சம் கதையிலிருந்து அந்நியப்படுத்துகிறது.
</p><p>கிளைமேக்ஸ் </p><p>பாடி ஹாரர் காட்சிகள் ஏராளம்.</p><p>மொத்தத்தில் ரெசிடண்ட் ஈவில் சுவாரஸ்யமான களம் இருந்தும் பார்த்து பழகி போன காட்சிகளால் ஒன் டைம் வாட்ச் ஆக அமைகிறது.

&nbsp;</p><h2>Rating: 2.5/5</h2>]]></content>
            <updated>2026-09-18T11:51:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கும்கி பட புகழ் நடிகை லட்சுமி மேனனா இது, ஆளே மாறிவிட்டாரே... ஷாக்கான ரசிகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-lakshmi-menon-latest-photo-fans-shock-1789728637"></link>
            <id>https://cineulagam.com/article/actress-lakshmi-menon-latest-photo-fans-shock-1789728637</id>
            <summary type="text">லட்சுமி மேனன்தமிழ் சினிமாவில் இளம் நாயகியாக களமிறங்கிய சில வெற்றிப் படங்களை கொடுத்தவர் தான் நடிகை லட்சுமி மேனன். இவர் கடந்த 2011ம் ஆண்டு மலையாளத்தில் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>லட்சுமி மேனன்</h2><p>தமிழ் சினிமாவில் இளம் நாயகியாக களமிறங்கிய சில வெற்றிப் படங்களை கொடுத்தவர் தான் நடிகை லட்சுமி மேனன். </p><p>இவர் கடந்த 2011ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ரகுவின்டே சொந்தம் ரசியா என்ற படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி இருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19c130b9-34a1-4dd1-9e56-7fe8c2e19c0c/26-6aad238135702.webp' /></p><p> </p><p>பின் தமிழ் பக்கம் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் 2012ம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
பின் கும்பி, குட்டி புலி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன், ரெக்க என தொடர்ந்து படங்கள் நடித்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5c092b1-50af-4573-af7c-3ecfba6bde55/26-6aad2380690e4.webp' /></p><h2>லேட்டஸ்ட்</h2><p>
இவர் கேரளாவில் சில போலீஸ் வழக்குகளில் சிக்கியிருந்தார். </p><p>இந்த நிலையில் இமான் அண்ணாச்சி பக்கத்தில் பச்சை நிற புடவையில் கையில் குழந்தையுடன் லட்சுமி மேனன் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாக ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். </p><p>ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருக்கும் நடிகை லட்சுமி மேனன் போட்டோ இதோ,&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbed3b5d-f5f8-40a2-9b22-305432d87272/26-6aad237f9d098.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T11:50:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட்டி விகிதத்தை அதிரடியாக உயர்த்திய ஜப்பான் மத்திய வங்கி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/japan-s-central-bank-sharply-raised-interest-rates-1789731325"></link>
            <id>https://tamilwin.com/article/japan-s-central-bank-sharply-raised-interest-rates-1789731325</id>
            <summary type="text">ஜப்பான் நாட்டின் மத்திய வங்கியான &#039;பேங்க் ஒஃப் ஜப்பான்&#039; நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் பொருளாதாரத்தைச் சீரமைக்கவும்
தனது கொள்கை வட்டி விகிதத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பான் நாட்டின் மத்திய வங்கியான 'பேங்க் ஒஃப் ஜப்பான்' நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் பொருளாதாரத்தைச் சீரமைக்கவும்
தனது கொள்கை வட்டி விகிதத்தை 1.25% ஆக உயர்த்தியுள்ளது.
</p><p>
இது கடந்த 31 ஆண்டுகளில் ஜப்பானில் பதிவான மிக உயர்ந்த வட்டி விகித அளவாகும்.
</p><p>
வங்கிக் கொள்கைக் குழுவின் கூட்டத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், வட்டி
உயர்விற்கு ஆதரவாக 7 உறுப்பினர்களும், எதிராக 2 உறுப்பினர்களும்
வாக்களித்தனர்.</p><h2>பொருளாதார வளர்ச்சி</h2><p>
</p><p>பிரதமர் சானே தகாய்ச்சி தனது அமைச்சரவையை மாற்றியமைத்து,
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் புதிய திட்டங்களைச்
செயல்படுத்தப் போவதாக அறிவித்த மறுநாளே மத்திய வங்கி இந்த அதிரடி முடிவை
எடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87780030-b231-423b-87f6-4dc53c7bd7b7/26-6aad250197dbe.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், மத்திய வங்கியின் தலைவர் கசுவோ உயேடா செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார்.
</p><p>
இனிவரும் மாதங்களில் வட்டி விகிதங்கள் எந்த வேகத்தில் மீண்டும் உயர்த்தப்படும்
என்பது குறித்த முக்கியக் குறிப்புகள் இந்தச் சந்திப்பில் வெளியாகும் என உலக
நிதிச் சந்தை வல்லுநர்கள் எதிர்பார்த்துள்ளனர்.</p><h2>வட்டி விகிதம் அதிகரிப்பு</h2><p>
</p><p>
மேலும் இந்த வட்டி உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேசச் சந்தையில் ஜப்பானிய
நாணயமான 'யென்' (Yen) மதிப்பு வலுவடையத் தொடங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b24223ff-61d6-4660-ba5a-71c43ae2dc66/26-6aad25024ac7a.webp' /></p><p>&nbsp;ஜப்பானில் கடன் வாங்குவோருக்கான வட்டிச் சுமை சற்றே அதிகரிக்கும் என்றாலும்,
வங்கிகளில் பணம் சேமிப்போருக்குக் கூடுதல் வட்டி கிடைக்கும்.</p><p>

நாட்டின் விலைவாசி உயர்வைக்கட்டுப்படுத்தி, நுகர்வோர் சந்தையை நிலைநிறுத்த
இந்த நடவடிக்கை உதவும் எனக் கருதப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T11:48:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜிம்பாப்வேவிற்கு எதிராக அதிவேக சதம்: சாதனை படைத்த அவுஸ்திரேலிய வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/travis-head-fastest-century-against-zimbabwe-1789731537"></link>
            <id>https://news.lankasri.com/article/travis-head-fastest-century-against-zimbabwe-1789731537</id>
            <summary type="text">Travis head 112 runs in 84 balls vs zimbabwe: அவுஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சதம் விளாசினார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Travis head 112 runs in 84 balls vs zimbabwe: அவுஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சதம் விளாசினார்.
</p><p>
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், அவுஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் அதிவேக சதம் விளாசி சாதனை படைத்தார்.&nbsp;</p><h2>அதிவேக சதம்</h2><p>
ஹராரேயில் அவுஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">A magnificent knock by Travis Head! 🔥 He scored a brilliant 112 runs. 💯<a href="https://x.com/hashtag/TravisHead?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TravisHead</a> <a href="https://x.com/hashtag/AUSvsZIM?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AUSvsZIM</a><br> <a href="https://t.co/aHlk5KYIb6">pic.twitter.com/aHlk5KYIb6</a></p>&mdash; CREX (@Crex_live) <a href="https://x.com/Crex_live/status/2100881735781318686?ref_src=twsrc%5Etfw">September 18, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷ் (Mitchell Marsh) 53 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p></p><p> 

டிராவிஸ் ஹெட், கூப்பர் கோனொலி கூட்டணி நிதானமாக ஓட்டங்களை சேர்த்தது. அதிரடி ஆட்டத்தில் மிரட்டிய டிராவிஸ் ஹெட் (Travis Head) 75 பந்துகளில் சதம் விளாசினார்.
</p><p>
இதன்மூலம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அதிவேகமாக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை ஹெட் படைத்தார்.&nbsp;</p><h2>86 பந்துகளில்</h2><p>
இதற்கு முன் சக அணி வீரர் மேட் ரென்ஷா 86 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. 

டிராவிஸ் ஹெட் 84 பந்துகளில் 3 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 112 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f0edc51-46d1-43ed-b309-e6fa29aaa1eb/26-6aad24e034468.webp' /></p><p>பின்னர் இங்கிலிஸ் 21 ஓட்டங்களிலும், கேரி 20 ஓட்டங்களிலும் வெளியேறினர்.

அரைசதம் அடித்த கூப்பர் கோனொலி 69 பந்துகளில் 78 ஓட்டங்கள் விளாசினார். </p><p>ஆலிவர் பீக் 18 பந்துகளில் 41 ஓட்டங்கள் (3 சிக்ஸர், 2 பவுண்டரிகள்) விளாச, அவுஸ்திரேலியா 356 ஓட்டங்கள் குவித்தது.

பிராட் எவன்ஸ் 3 விக்கெட்டுகளும், மஸகட்சா 2 விக்கெட்டுகளும், மாத்வேரே ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ffd48bc-6a70-485b-b538-ea9081ba0395/26-6aad24e106188.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T11:40:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை இளைஞர் : நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kumar-jayakumaran-s-request-sri-lankan-anojan-1789730411"></link>
            <id>https://ibctamil.com/article/kumar-jayakumaran-s-request-sri-lankan-anojan-1789730411</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனின் தண்டனையை மறுபரிசீலனை செய்து, இரத்து செய்யவோ அல்லது குறைக்கவோ தேவையான சட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனின் தண்டனையை மறுபரிசீலனை செய்து, இரத்து செய்யவோ அல்லது குறைக்கவோ தேவையான சட்டரீதியான மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத்திடம் குமார் ஜெயக்குமாரன் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

இது தொடர்பாக அமைச்சர் விஜித ஹேரத் அவர்களுடன் இன்று (18.09.2026)காலை தொலைபேசி மூலம்
தொடர்புகொண்ட குமார் ஜெயக்குமாரன், அனோஜனின் நிலைமை தொடர்பில் அவசரமாக
தலையிட்டு, சவூதி அரேபிய அதிகாரிகளுடன் தேவையான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை
முன்னெடுக்குமாறு வலியுறுத்தினார்.
</p><p>
கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த
சிவராசா அனோஜன் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட பின்னர், ஆரம்பத்தில்
ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும்
விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>குமார் ஜெயக்குமாரன்</h2><p> </p><p>இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட
மேன்முறையீட்டின் தீர்ப்பில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக
செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/291572fd-2c6c-44e8-8427-755cf3d46f50/26-6aad22d6d2521.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், ஒரு இலங்கைப் பிரஜையின் உயிர் தொடர்பான மிக முக்கியமான
மனிதாபிமான விடயம் என்பதால், காலதாமதமின்றி அனைத்து சாத்தியமான சட்ட மற்றும்
இராஜதந்திர வழிமுறைகளையும் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
</p><p>
அனோஜனின் வழக்கின் முழுமையான சட்ட நிலைமை மற்றும் நீதிமன்றத் தீர்ப்பின்
அடிப்படைகளை உரிய முறையில் ஆராய்ந்து, அவருக்கு தேவையான சட்ட உதவி, தூதரக உதவி
மற்றும் இராஜதந்திர ஆதரவை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் உடனடி நடவடிக்கை
எடுக்க வேண்டும் என குமார் ஜெயக்குமாரன் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
மேலும், சவூதி அரேபிய அரசாங்கத்துடன் உயர்மட்ட இராஜதந்திர தொடர்புகளை
மேற்கொண்டு, மரண தண்டனையை மறுபரிசீலனை செய்வதற்கும், சாத்தியமான சட்ட
நடைமுறைகளின் ஊடாக தண்டனையை இரத்து செய்வதற்கோ அல்லது குறைப்பதற்கோ தேவையான
நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் அமைச்சரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>

“ஒரு இலங்கை இளைஞரின் உயிர் தொடர்பான இந்த முக்கியமான விடயத்தில்,
கிடைக்கக்கூடிய அனைத்து சட்டரீதியான மற்றும் இராஜதந்திர வாய்ப்புகளும்
முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும். </p><p>அனோஜனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும்
தேவையான ஆதரவை வழங்குவதற்கு அரசாங்கம் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
</p><p>
அனோஜனின் வழக்கில் இலங்கை அரசாங்கம், வெளிவிவகார அமைச்சு மற்றும் சவூதி
அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவை ஒருங்கிணைந்து தேவையான நடவடிக்கைகளை
விரைவாக முன்னெடுக்க வேண்டும் எனவும் குமார் ஜெயக்குமாரன் கோரிக்கை
விடுத்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T11:39:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவேக வீதிகளில் நள்ளிரவு முதல் கட்டாயமாக்கப்படும் சட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/seat-belts-mandatory-for-all-expressway-passengers-1789711821"></link>
            <id>https://ibctamil.com/article/seat-belts-mandatory-for-all-expressway-passengers-1789711821</id>
            <summary type="text">புதிய இணைப்புஅதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் உள்ள அனைத்து பயணிகளுக்கும் இன்று (18) நள்ளிரவு முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்க தீர்மானி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் உள்ள அனைத்து பயணிகளுக்கும் இன்று (18) நள்ளிரவு முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p> 

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4535dacf-d319-4cd9-a2ea-e83bafc4e5c3/26-6aad224a70fed.webp' /></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களில் ஆசனப் பட்டிகளை அணிவதைக் கட்டாயமாக்கும் சட்டம் நாளை (19) முதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். </p><p>

இதற்காக வழங்கப்பட்டிருந்த சுமார் ஒரு வருட கால சலுகைக் காலம் இன்றுடன் (18) முடிவடைவதால், நாளை முதல் ஆசனப் பட்டி அணியாமல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்தார். </p><p>அதற்கமைய ஆசனப் பட்டிகள் இல்லாத வாகனங்கள் நாளை முதல் அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>&nbsp;</p><h2>நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள்</h2><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களின் முன் மற்றும் பின் இருக்கைகளில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் ஆசனப் பட்டிகளை அணிய வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1226a38d-129d-4ef4-94a1-210cef82c056/26-6aacdcfe09eee.webp' /></p><p>

ஆசனப் பட்டிகளை அணியாததால் வீதி விபத்துக்கள் மற்றும் விபத்துக்களினால் ஏற்படும் ஆபத்துக்கள் அதிகரிக்கின்றன, இதன் காரணமாகவே இச்சட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.</p><p> 

அபராதம் விதிப்பதையோ அல்லது சட்ட நடவடிக்கை எடுப்பதையோ மட்டுமே நோக்கமாகக் கொண்டு இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை, சாரதிகள் மற்றும் பயணிகளின் உயிரைப் பாதுகாப்பதற்காகவே இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.</p><p></p><h2>வீதி பாதுகாப்பு பற்றிய தேசிய சபை</h2><p> </p><p>

குறிப்பாக வாகனத்தின் பின் இருக்கைகளில் பயணிக்கும் பயணிகளும் கட்டாயம் ஆசனப் பட்டிகளை அணிய வேண்டும், ஆசனப் பட்டிகள் இல்லாத வாகனங்களில் அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைய முயற்சிக்க வேண்டாம்.” என தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e5ecf35-5c60-4140-b04c-e035e1adf5eb/26-6aacdcfd538dc.webp' /></p><p>

இதேவேளை, ஆசனப் பட்டி அணிவதைக் கட்டாயமாக்கும் சட்டம் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், சில பழைய வாகனங்களில் தயாரிப்பாளர்களால் ஆசனப் பட்டிகள் பொருத்தப்பட்டிருக்காததால், அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த சிறிது காலம் வழங்க வேண்டியிருந்ததாக வீதி பாதுகாப்பு பற்றிய தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்தார். </p><p>

அவ்வாறான வாகனங்களில் ஆசனப் பட்டிகளைப் பொருத்திக் கொள்வதற்காகப் பல சந்தர்ப்பங்களில் சலுகைக் காலம் வழங்கப்பட்டிருந்ததுடன், அந்த இறுதிச் சலுகைக் காலமும் இன்றுடன் முடிவடடைவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T11:34:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவர் இல்லாத நேரத்தில் நோயாளிகளுக்கு மருந்துகள் பரிந்துரைத்த சாரதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kanpur-doctor-driver-caught-for-prescribe-medicine-1789731033"></link>
            <id>https://news.lankasri.com/article/kanpur-doctor-driver-caught-for-prescribe-medicine-1789731033</id>
            <summary type="text">Doctor&#039;s driver caught prescribing medicines to patients: மருத்துவர் ஒருவரின் சாரதி ஒருவர் நோயாளிகளுக்கு மருந்துகள் பரிந்துரைக்கும் காட்சி ஒன்று வெளிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Doctor's driver caught prescribing medicines to patients: மருத்துவர் ஒருவரின் சாரதி ஒருவர் நோயாளிகளுக்கு மருந்துகள் பரிந்துரைக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.</p><p>
 

மருத்துவமனையில் மருத்துவர் இல்லாத நேரத்தில், அவரது சாரதி, நோயாளிகளுக்கு மருந்துகள் பரிந்துரைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை உருவாக்கியுள்ளது.
</p><h3>
நோயாளிகளுக்கு மருந்துகள் பரிந்துரைத்த சாரதி</h3><p>

உத்தரப்பிரதேசத்திலுள்ள கான்பூரில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் மருத்துவராகப் பணிபுரிபவர் Dr. ராம்கேஷ்.

புதன்கிழமையன்று, ராம்கேஷ் தன் நோயாளி ஒருவர் தொடர்புடைய வழக்கு ஒன்றிற்காக நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c46be2bf-b41c-4d4e-ab50-fd1f0e311e42/26-6aad20da5ba0a.webp' /></p><p>
அந்த நேரத்தில், ராம்கேஷின் சாரதி, மருத்துவரின் இருக்கையில் அமர்ந்து நோயாளிகளுக்கு மருந்துச்சீட்டில் மருந்து எழுதிக்கொடுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
</p><p>
அத்துடன், அந்த மருந்துகளில் சில மருத்துவமனையில் கிடைக்காது என்றும், அவற்றை வெளியிலிருந்துதான் வாங்கவேண்டும் என்றும் அந்த சாரதி கூறியுள்ளார்.&nbsp;</p><p></p><p>
இந்த வீடியோ, மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரியின் கவனத்தை எட்டிய நிலையில், அவர் மருத்துவர் ராம்கேஷை அழைத்து அவரது சாரதி செய்த விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
</p><p>
அந்த விடயம் குறித்து ராம்கேஷ் விளக்கமளிக்கவேண்டும் என்று கூறியுள்ள தலைமை மருத்துவ அதிகாரி, அவரது விளக்கம் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லையெனில், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசுக்கு இந்த விடயம் குறித்து தகவலளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதற்கிடையில், தனது சாரதியை பணீநீக்கம் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார் மருத்துவர் ராம்கேஷ்.</p>]]></content>
            <updated>2026-09-18T11:34:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நைஜீரியா சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த 33 கைதிகள் ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/33-prisoners-die-mysteriously-in-nigeria-jail-1789731164"></link>
            <id>https://canadamirror.com/article/33-prisoners-die-mysteriously-in-nigeria-jail-1789731164</id>
            <summary type="text">நைஜீரியாவில் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளில் 33 கைதிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நைஜீரியாவில் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளில் 33 கைதிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் பல்வேறு சட்டவிரோத சுரங்கள் செயல்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21a889bb-e329-47f4-bb92-1740bc135fdd/26-6aad215e53ec3.webp' /></p><p> </p><p>தங்கம், கனிம வளங்களை வெட்டி எடுக்கும் இந்த சுரங்கள் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் நிலையில் அவற்றை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
</p><p>&nbsp;இந்நிலையில், அந்நாட்டின் நைஜர் மாகாணத்தில் செயல்பட்டு வந்த சட்டவிரோத சுரங்கத்தில் பணியாற்றி வந்த 65 பேரை பாதுகாப்புப்படையினர் நேற்று முன் தினம் கைது செய்துள்ளனர்.</p><p> கைது செய்யப்பட்ட அனைவரும் அம்மாகாணத்தில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். </p><p>இதில் 33 பேர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைதிகளை மர்ம நோய் தாக்கியதால் அவர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அதேவேளை, சிறிய சிறையில் அதிக அளவிலான கைதிகளை அடைத்ததால் பலரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-18T11:32:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[44 வயதிலும் குறையாத இளமை... மஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் சினேகா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/44-years-old-actress-sneha-yellow-attire-photos-1789725400"></link>
            <id>https://manithan.com/article/44-years-old-actress-sneha-yellow-attire-photos-1789725400</id>
            <summary type="text">44 வயதிலும் தனது இளமைப் பொலிவை சற்றும் இழக்காமல் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை சினேகா, தற்போது மஞ்சள் நிற ட்ரெண்டிங் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>44 வயதிலும் தனது இளமைப் பொலிவை சற்றும் இழக்காமல் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை சினேகா, தற்போது மஞ்சள் நிற ட்ரெண்டிங் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.&nbsp;&nbsp;</p><h2>நடிகை சினேகா
</h2><p>தமிழ் சினிமாவில் ‘என்னவளே’ திரைப்படம் மூலம் அறிமுகமான சினேகா, விஜய்யுடன் இணைந்து நடித்த ‘வசீகரா’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07f1891f-4c34-4506-a333-0b6ee316806f/26-6aad1fa912b5b.webp' /></p><p></p><p>
</p><p>
அதனைத் தொடர்ந்து சினேகாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அவர் நடித்த பல படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சினேகாவுக்கென தனி ரசிகர் பட்டாளமும் உருவானது.சினேகாவின் நடிப்புக்கு மட்டுமல்ல… அவரது அழகான புன்னகைக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.&nbsp;</p><p> நடிகர் பிரசன்னாவுடன் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ திரைப்படத்தில் இணைந்து நடித்த சினேகாவுக்கு, அவருடன் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abf61d36-3764-45ec-8f4b-90cd2942877b/26-6aad1fa9d3c99.webp' /></p><p>
</p><p>
இருவரின் காதலும் பின்னர் திருமணத்தில் முடிந்தது. இன்று திரையுலகில் ரசிகர்களால் ரசிக்கப்படும் நட்சத்திரத் தம்பதிகளில் ஒருவராக சினேகா–பிரசன்னா ஜோடி வலம் வருகிறது.இந்த தம்பதியினருக்கு விஹான் (Vihaan) என்ற மகனும், ஆத்யந்தா (Aadhyantaa) என்ற மகளும் உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38328507-6855-443d-85cd-5416025c2306/26-6aad1faa9ec38.webp' /></p><p></p><p>திருமணத்திற்குப் பின்னரும் சினிமாவை விட்டு விலகாமல், தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து சினேகா நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி, சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்று ரசிகர்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார்.</p><p>
இந்நிலையில், 44 வயதிலும் குறையாத அழகுடனும் இளமைப் பொலிவுடனும் சினேகா வெளியிட்டுள்ள இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Ddar-8AGYBr/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Ddar-8AGYBr/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Ddar-8AGYBr/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Sneha (@realactress_sneha)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T11:30:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் மகன்களுடன் பாகிஸ்தான் இராணுவ ட்ரோன் ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/drone-contract-pakistan-companies-trump-s-sons-1789728793"></link>
            <id>https://canadamirror.com/article/drone-contract-pakistan-companies-trump-s-sons-1789728793</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்க ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான Powerus, பாகிஸ்தான் இராணுவத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, ட்ரோன் தொடர்பான ஆரம்பகட்ட ஓர்டரையும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்க ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான Powerus, பாகிஸ்தான் இராணுவத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, ட்ரோன் தொடர்பான ஆரம்பகட்ட ஓர்டரையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 



ஒப்பந்தத்தின் மதிப்பு மற்றும் ட்ரோன்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5744c3c0-8166-4b54-92df-c9539031fd8e/26-6aad181adc67e.webp' /></p><p>
</p><p>


Powerus, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகன்களான டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் மற்றும் எரிக் ட்ரம்ப் முதலீடு செய்துள்ள Aureus Greenway Holdings நிறுவனத்துடன் அக்டோபரில் இணையத் திட்டமிட்டுள்ளது.
</p><p>


பாகிஸ்தானில் ட்ரோன் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கும் எதிர்காலத்தில் உற்பத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக Powerus தெரிவித்துள்ளது.</p><p> 



அதேவேளை, ட்ரம்பின் மகன்களுக்கு ஒப்பந்தத்தில் எந்தவித நேரடி தொடர்பும் இல்லை என நிறுவனத் தரப்பு கூறியுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T11:28:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தபால் பெட்டிக்கு மாலை அணிவித்து பட்டதாரிகள் நூதன போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/graduates-protest-by-garlanding-a-postbox-jaffna-1789729550"></link>
            <id>https://tamilwin.com/article/graduates-protest-by-garlanding-a-postbox-jaffna-1789729550</id>
            <summary type="text">யாழில் வேலையற்ற பட்டதாரிகள் தபால் பெட்டிக்கு மலர் மாலை அணிவித்து, தேங்காய்
உடைத்து நூதன முறையில் போராட்டம் நடாத்தியுள்ளனர்.குறித்த போராட்டமானது&amp;nbsp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் வேலையற்ற பட்டதாரிகள் தபால் பெட்டிக்கு மலர் மாலை அணிவித்து, தேங்காய்
உடைத்து நூதன முறையில் போராட்டம் நடாத்தியுள்ளனர்.</p><p>குறித்த போராட்டமானது&nbsp;இன்று(18.9.2026) மதியம் 2 மணியளவில் யாழ்.தபால் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.</p><p>இதன்போது, வேலையற்ற பட்டதாரிகள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு பதிவு தபால் மூலம் மனுவொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.</p><h2>கோரிக்கை</h2><p> </p><p>1 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்திற்கு, பட்டதாரிகள் 5
ஆயிரம் பேர் மட்டுமே உள்வாங்கப்படவுள்ளதாக அரசாங்கம் தீர்மானித்துள்ளதை
கண்டித்து இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97efe4f4-b01f-4c1b-8f04-a737d947c40f/26-6aad1fff12a5b.webp' /></p><p>
</p><p>
தபால் நிலையத்தில் இருந்து மனு அனுப்பிய போது, தபால் பெட்டிக்கு மலர் மாலை
அணிவித்தும் மலர் தூவி, கற்பூரம் காட்டி, தேங்காய் உடைக்கும் போது, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமக்கான வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகள்
எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>அத்துடன், தமது வேலை வாய்ப்பு
தொடர்பில் கடவுளும், எமது தாய் தந்தையர்களுமான பொது மக்கள் ஆதரை வழங்க
வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T11:27:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்திரமடைந்துள்ள பொருளாதாரம் : இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-s-economic-progress-imf-praises-1789730318"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-s-economic-progress-imf-praises-1789730318</id>
            <summary type="text">இலங்கையின் பொருளாதாரம் தற்போது ஸ்திரத்தன்மையை நோக்கிய பாதையில் பயணித்து வருவதாகவும், அண்மைய பொருளாதாரக் குறிகாட்டிகள் இதனை வெளிப்படுத்துவதாகவும் ஜனாதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பொருளாதாரம் தற்போது ஸ்திரத்தன்மையை நோக்கிய பாதையில் பயணித்து வருவதாகவும், அண்மைய பொருளாதாரக் குறிகாட்டிகள் இதனை வெளிப்படுத்துவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) செயல்பாட்டு பிரிவின் தலைமை அதிகாரி இவான் பபகியோர்ஜியு உள்ளிட்ட பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் நேற்று (17) சந்திப்பு இடம்பெற்ற போதே அவர் அதனைக் குறிப்பிட்டார்.</p><p>பொருளாதார ஸ்திரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு நாட்டை மாற்றத்திற்கான புதிய கட்டத்தை நோக்கி கொண்டு செல்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>சர்வதேச நாணய நிதியம் வழங்கிய ஆதரவு</h2><p>
</p><p>
இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கிய ஆதரவையும் வலுவான அடித்தளத்தையும் ஜனாதிபதி இதன்போது நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3aec5030-2125-4021-8e0a-3d9a1c2eebff/26-6aad1fe1dddc5.webp' /></p><p>
</p><p>
இதனிடையே, இலங்கை அண்மைக்காலத்தில் பதிவு செய்துள்ள பொருளாதார முன்னேற்றம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தங்களது மதிப்பீட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
மேலும், அரச வருமானத்தை அதிகரித்தல், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் நிதி ஒழுக்கத்தைப் பேணுதல் உள்ளிட்ட விடயங்களில் கடந்த காலப்பகுதியில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது பாராட்டு தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/cK7K5AHP4m0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T11:24:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கப் போருக்கு ஆதரவாக தென் கொரியா இராணுவத்தை அனுப்பாது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sending-military-to-hormuz-1789730293"></link>
            <id>https://news.lankasri.com/article/sending-military-to-hormuz-1789730293</id>
            <summary type="text">Seoul resolves recent speculation over sending military: இராணுவத்தை அனுப்புவது குறித்த சமீபத்திய யூகங்களுக்கு சியோல் முற்றுப்புள்ளி வைத்தது.
ஈரானுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Seoul resolves recent speculation over sending military: இராணுவத்தை அனுப்புவது குறித்த சமீபத்திய யூகங்களுக்கு சியோல் முற்றுப்புள்ளி வைத்தது.</p><p>
ஈரானுக்கு எதிரான தனது போருக்கு ஆதரவளிக்குமாறு டொனால்ட் ட்ரம்ப் விடுத்த கோரிக்கையை தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே-ம்யுங் நிராகரித்துள்ளார்.</p><h2>ஆதரவை அளிக்கவில்லை</h2><p>
நாட்டை மோதலில் சிக்கவைக்கக்கூடிய வகையில் மத்திய கிழக்குக்கு ராணுவத்தை அனுப்பப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fc61cb6-8746-461a-a53b-b4a2b1feeb23/26-6aad1df77baba.webp' /></p><p> </p><p>இருப்பினும், அப்பகுதியில் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதில் கூடுதல் பங்காற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாக லீ கூறியுள்ளார். கடற்கொள்ளைக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சோமாலியக் கடற்கரைக்கு அப்பால் தென் கொரியா தனது கடற்படை இருப்பைப் பராமரித்து வருகிறது. </p><p>ஈரான் விவகாரத்தில் போதுமான ஆதரவை அளிக்கவில்லை என்று கூறி சியோலை விமர்சித்த ட்ரம்ப், இந்த கோடையில் இரு நாடுகளின் படைகளும் இணைந்து நடத்திய முக்கிய கூட்டு ராணுவப் பயிற்சிகளையும் குறைத்துக்கொண்டார்; இச்செயல் அமெரிக்காவின் கூட்டாளியான தென் கொரியாவை அதிருப்திக்குள்ளாக்கியது. </p><p>ஹார்முஸ் நீரிணைக்கு ராணுவப் படைகளை அனுப்புவது குறித்து தென் கொரிய அரசு பரிசீலித்து வருகிறது; இருப்பினும், உள்நாட்டில் இத்திட்டத்திற்குப் போதிய ஆதரவு இல்லை.</p><p></p><p> </p><p>அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவில் முதலீடு செய்வதற்கான தென் கொரியாவின் உறுதிப்பாடுகள் குறித்து அமெரிக்காவுடன் ஓர் உடன்பாட்டை எட்டுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றிக் கேட்டபோது, ​​அந்த முதலீட்டுத் திட்டத்தின் வணிக ரீதியான சாத்தியத்தன்மை குறித்த கவலையே முக்கிய முட்டுக்கட்டையாக உள்ளதாக லீ கூறினார். </p><p>சியோல் ஏற்றுக்கொள்வதற்குச் சிரமமான அம்சங்கள் இருந்தபோதிலும், இரு தரப்பினரும் ஓர் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருக்கமாக இருப்பதாக லீ கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7769bbd3-d3a5-4782-a32a-862e38659845/26-6aad1df82cb39.webp' /></p><p> கொரிய இறக்குமதிகள் மீதான சுங்க வரிகளை 15 சதவீதமாகக் குறைக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டதற்குப் பதிலாக, அமெரிக்க உற்பத்தித் துறையில் 350 பில்லியன் டொலர் முதலீடு செய்வதாகத் தென் கொரியா கடந்த ஆண்டு உறுதியளித்தது. </p><p>முதலீட்டுத் திட்டங்கள் குறித்த நாடாளுமன்ற விளக்கக் கூட்டத்தை சியோல் இந்த வாரம் ஒத்திவைத்தது; அதற்குப் பதிலாக அடுத்த வாரம் இக்கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-18T11:14:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கவனயீர்ப்பு போராட்டத்தில் இறங்கிய கிளிநொச்சி நகர் மற்றும் கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-at-kilinochchi-1789729275"></link>
            <id>https://tamilwin.com/article/protest-at-kilinochchi-1789729275</id>
            <summary type="text">கிளிநொச்சி நகர் மற்றும் கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் கவனயீர்ப்பு
போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி நகர் மற்றும் கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் கவனயீர்ப்பு
போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.</p><p>வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி அவர்கள் இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.&nbsp;</p><p>கிளிநொச்சி சேவைச்சந்தை முன்பாக ஆரம்பித்த கவனயீர்ப்பு பேரணி கிளிநொச்சி
மாவட்ட செயலகம் வரை சென்றுள்ளது.</p><h2>மகஜர் கையளிப்பு</h2><p>இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நளாயினி இன்பராஜிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை போராட்டக்காரர்கள் கையளித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32163783-3fec-40d9-92a1-b857cd47e514/26-6aad1c8756d6b.webp' /></p><p> கிளிநொச்சி நகரில் தொடர்ச்சியாக வர்த்தகர்களை அச்சுறுத்தும் வகையில் வாள்
வெட்டுக்குழுக்கள் வாள் வெட்டுத்தாக்குதல்களை மேற்கொள்வதாகவும், கடந்த
வாரத்தில் மாத்திரம் தொடர்ச்சியாக இரண்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும்
வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T11:13:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தில் நூதன போராட்டத்தில் குதித்த பட்டதாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-graduates-launch-novel-protest-1789729643"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-graduates-launch-novel-protest-1789729643</id>
            <summary type="text">வேலையற்ற பட்டதாரிகள் தபால் பெட்டிக்கு மலர் மாலை அணிவித்து, தேங்காய் உடைத்து நூதன முறையில் போராட்டம் செய்தனர். 

யாழ். தபால் நிலையத்திற்கு முன்பாக இன...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வேலையற்ற பட்டதாரிகள் தபால் பெட்டிக்கு மலர் மாலை அணிவித்து, தேங்காய் உடைத்து நூதன முறையில் போராட்டம் செய்தனர். </p><p style="text-align: justify; ">

யாழ். தபால் நிலையத்திற்கு முன்பாக இன்று (18) மதியம் 2 மணியளவில் ஒன்று கூடிய வேலையற்ற பட்டதாரிகள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு பதிவு தபால் மூலம் உங்களுக்கு மகஜர் அனுப்பி வைத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50fb8596-f2b6-4467-9ed6-dd57fd687494/26-6aad1b6c71e70.webp' /></p><h2 style="text-align: justify; ">வேலைவாய்ப்பு</h2><p style="text-align: justify; "> 

1 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்திற்கு, பட்டதாரிகள் 5 ஆயிரம் பேர் மட்டுமே உள்வாங்கப்படவுள்ளதாக அரசாங்கம் தீர்மானித்துள்ளதை கண்டித்து இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

தபால் நிலையத்தில் இருந்து மகஜர் அனுப்பிய போது, தபால் பெட்டிக்கு மலர் மாலை அணிவித்தும் மலர் தூவி, கற்பூரம் காட்டி, தேங்காய் உடைக்கும் போது, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமக்கான வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதுடன், தமது வேலை வாய்ப்பு தொடர்பில் கடவுளும், எமது தாய் தந்தையர்களுமான பொது மக்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-18T11:09:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் பிரித்தானிய மண்ணில்.. ஆனாலும் நாங்கள் - இளவரசர் ஹரி கூறிய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/prince-harry-said-back-on-british-soil-really-nice-1789727472"></link>
            <id>https://news.lankasri.com/article/prince-harry-said-back-on-british-soil-really-nice-1789727472</id>
            <summary type="text">Prince harry said back on british soil really nice: பிரித்தானிய மண்ணில் மீண்டும் இருப்பது அருமையாக உள்ளதாக இளவரசர் ஹரி ஊடகத்திடம் தெரிவித்தார். 

பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Prince harry said back on british soil really nice: பிரித்தானிய மண்ணில் மீண்டும் இருப்பது அருமையாக உள்ளதாக இளவரசர் ஹரி ஊடகத்திடம் தெரிவித்தார். </p><p>

பிரித்தானியாவில் ஊடகத்திடம் பேசிய இளவரசர் ஹரி, தாய் மண்ணிற்கு திரும்பியது மகிழ்ச்சி என்று கூறியதுடன் சர்ச்சைக்குரிய புத்தகம் குறித்த கேள்விகளை புறக்கணித்தார்.&nbsp;</p><h2>சவால்கள்</h2><p>

இளவரசர் ஹரி மற்றும் மேகன் பிரித்தானியா திரும்பியதில் இருந்து பல சவால்களை சந்தித்து வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e9d0812-6153-4036-9d0b-ad7b56c691d7/26-6aad14f34ab83.webp' />&nbsp;</p><p></p><p>

இந்த சூழலில், கிரீன்விச்சின் வரலாற்று சிறப்புமிக்க Old Royal Naval College வளாகத்தில் நடைபெற்ற முதல் Invictus Spirit Awards விழாவில் ஹரி கலந்துகொண்டார்.
</p><p>
அப்போது சிவப்பு கம்பள வரவேற்பு பாதையில் நின்றிருந்த செய்தியாளர் ஒருவர், "ஹரி, ஹரி...உங்கள் மாமாவின் புத்தகம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று உரக்கக் கேட்டார். அதற்கு தீவிர முகபாவனையை ஹரி பதிலாக தந்தார். </p><h2>

நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்</h2><p>எனினும், நேற்றிரவு அவர் அளித்த முதல் பேட்டியில், "இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மீண்டும் பிரித்தானிய மண்ணில் இருப்பதும், பல பழைய முகங்களையும், நண்பர்களையும் காண்பதும் மிகவும் அருமையாக இருக்கிறது.</p><p>

பல நிகழ்வுகள் நிறைந்ததாக இது அமைந்திருக்கிறது; ஆனாலும் நாங்கள் எங்கள் பணிகளில் முழுவீச்சில் ஈடுபடத் தொடங்கியுள்ளோம்.

குழந்தைகள் பாடசாலைகளில் இருக்கிறார்கள். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். </p><p>மேலும், நான் கூறியது போல் மீண்டும் பிரித்தானிய மண்ணிற்கு திரும்புவது அற்புதமாக இருக்கிறது. 

பிரித்தானியா திரும்பிய முதல் இரண்டு வாரங்கள் 'விறுவிறுப்பான நிகழ்வுகள் நிறைந்ததாக' இருந்தது. அடுத்த ஆண்டு பர்மிங்காமிற்கு செல்வதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என்றார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fd2b7f6-cc54-4dc2-a15b-7281fcdd9695/26-6aad14f405ae6.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T11:05:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமல் வீரவன்சவின் சர்ச்சைக்குரிய கருத்து : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-directs-igp-to-probe-wimal-s-statement-1789728461"></link>
            <id>https://ibctamil.com/article/court-directs-igp-to-probe-wimal-s-statement-1789728461</id>
            <summary type="text">முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளாரா என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளாரா என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் காவல்துறை மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது. </p><p>

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு அமைய, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (18) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.</p><p> 

கடந்த 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் சந்திப்பொன்றின் போது, விமல் வீரவன்ச வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.</p><p></p><h2>இலஞ்ச ஊழல் ஆணைக்குழு&nbsp;</h2><p> </p><p>

இதனிடையே எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக நாமல் ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, குறிப்பிட்ட உரை அடங்கிய இறுவட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7abac9af-0527-4e08-97da-1aa08847f8ff/26-6aad19a7112bc.webp' /></p><p> </p><p>

அதனை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ்.போதரகம, அவர் நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளரா என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவைப் பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T11:04:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரட்டைவேடம் போடும் அர்ச்சுனா எம்.பி..! குற்றஞ்சாட்டும் விமல் வீரவன்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wimal-weerawansa-make-controversial-remark-archuna-1789724921"></link>
            <id>https://tamilwin.com/article/wimal-weerawansa-make-controversial-remark-archuna-1789724921</id>
            <summary type="text">உதவி செய்யும் போது நல்லவராகத் தெரிந்த வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, எதிர்க்கட்சிக் களத்தில் இணைந்த பின்னர் தமிழினப் பிரிவினைவாதத்திற்கு எதிரான நிலைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உதவி செய்யும் போது நல்லவராகத் தெரிந்த வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, எதிர்க்கட்சிக் களத்தில் இணைந்த பின்னர் தமிழினப் பிரிவினைவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.</p><p>

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த அவர், வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.</p><h2>புலம்பெயர் தமிழர்கள்</h2><p>
</p><p>
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது புலம்பெயர் தமிழர்களின் பணத்தைப் பயன்படுத்தி தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து, தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளித்தவரே இராமநாதன் அர்ச்சுனா என விமல் வீரவன்ச தெரிவித்தார்.
</p><p>
அப்போது அனைவருக்கும் நல்லவராகத் தெரிந்த அவர், தற்போது எதிர்க்கட்சிக் களத்தில் இணைந்த பின்னர் வேறு விதமான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/znPLorqc7l0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p>

அண்மையில் தெற்கில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றிய அர்ச்சுனா, தனது வாழ்நாளில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனியான தமிழீழம் உருவாக இடமளிக்கப் போவதில்லை என்றும், தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் மோதலில் ஈடுபட ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்ததாக விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.
</p><p>
அர்ச்சுனாவின் குறித்த கருத்துக்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>&nbsp;இதேவேளை, யாழ்ப்பாணம் நல்லூரில் தியாகி திலீபனுக்கு சிலை அமைக்கப்பட்டு, மக்கள் அவரை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவதாகவும் பிரார்த்தனைகளில் ஈடுபடுவதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.</p><h2>திலீபனின் சிலை</h2><p>
</p><p>
திலீபனின் பெயரைப் பயன்படுத்தி சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் குடியேறுவதைத் தடுப்பது உள்ளிட்ட பிரிவினைவாதக் கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
</p><p>
திலீபன் விடுதலைப் புலிகள் அமைப்பின் லெப்டினன்ட் கர்னல் தரத்தில் இருந்தவர் என்றும், அவர் ஒரு பயங்கரவாதி என்றும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/764e2daa-0acf-4bf8-aaf4-8f2a2c81dcc9/26-6aad0d44b7be5.webp' /></p><p>

இவ்வாறான நிலையில், திலீபனின் சிலையை நிறுவி அவருக்கு அஞ்சலி செலுத்தியதாகக் கூறப்படும் தமிழ் தேசியவாதக் குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.</p><p>

மேலும், நாட்டின் சட்டத்தைப் பொருட்படுத்தாமல் மேற்கொள்ளப்படும் தீவிரவாத மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது பெறப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத பணம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் விமல் வீரவன்ச குற்றம் சாட்டினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T11:02:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த மேடையில் சர்ச்சை கருத்து ; விமல் வீரவங்ச குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-order-issued-regarding-wimal-weerawansa-1789729491"></link>
            <id>https://jvpnews.com/article/court-order-issued-regarding-wimal-weerawansa-1789729491</id>
            <summary type="text">&amp;nbsp; முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளாரா என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளாரா என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது. </p><p>



இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு அமைய, கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்று (18) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8262e83-cf27-427c-8a40-22272c628da4/26-6aad1ad4c90e3.webp' /></p><h2>&nbsp;விமல் வீரவங்ச வௌியிட்ட கருத்து</h2><p> 



கடந்த 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் சந்திப்பொன்றின் போது, விமல் வீரவங்ச வௌியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p> </p><p>



இந்நிலையில், நீதிமன்றில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, குறிப்பிட்ட உரை அடங்கிய இறுவெட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.</p><p></p><p> </p><p>



அதனை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதிவான் அஸங்க எஸ்.போதரகம, அவர் நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளரா என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவைப் பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-18T11:01:28+00:00</updated>
        </entry>
    </feed>
