<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-20T13:21:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[40 டிரில்லியன் டொலரை கடந்த அமெரிக்கா கடன் - டிரம்ப் ஆட்சியில் 2 மடங்கு உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-debt-crosses-40-trillion-in-1st-time-1787232008"></link>
            <id>https://news.lankasri.com/article/us-debt-crosses-40-trillion-in-1st-time-1787232008</id>
            <summary type="text">us debt crosses 40 trillion debt: அமெரிக்காவின் கடன் முதல்முறையாக 40 டிரில்லியன் டொலரை கடந்துள்ளது.

40 டிரில்லியன் டொலரை கடந்த அமெரிக்கா கடன்

அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>us debt crosses 40 trillion debt: அமெரிக்காவின் கடன் முதல்முறையாக 40 டிரில்லியன் டொலரை கடந்துள்ளது.
</p><h3>
40 டிரில்லியன் டொலரை கடந்த அமெரிக்கா கடன்
</h3><p>
அமெரிக்காவிற்கு உள்ள கடன்கள் குறித்த விவரங்களை அமெரிக்கா கருவூலத் துறை வெளியிட்டுள்ளது. </p><p>

அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் முதன்முதலில் பதவியேற்ற கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அமெரிக்காவின் கடன் 19.95 டிரில்லியன் டொலராக இருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7843746f-91fb-46fe-a8f6-70c5478321c5/26-6a86ff0aa6118.webp' /></p><p>
தற்போது இந்த கடன்தொகை இரட்டிப்பாகி 40.047 டிரில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. </p><p>

ஒட்டுமொத்த கடன் தொகையில் 32.266 டிரில்லியன் டொலர் பொதுக் கடனாகவும்,7.782 டிரில்லியன் டொலர் அரசாங்கங்களுக்கு இடையேயான கடனாகவும் உள்ளது.&nbsp;</p><p></p><p>

இந்த ஆண்டின் தொடக்கத்தில் 39 டிரில்லியன் டொலராக இருந்த கடன், அடுத்த 5 மாதங்களில் ஒரு டிரில்லியன் டொலர் உயர்ந்து 40.047 டிரில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.</p><p> 

கொரோனா கால நிவாரணங்களுக்காக பெருமளவில் கடன் வாங்கப்பட்டது. ராணுவ செலவுகள், மூத்த குடிமக்களுக்கான சமூக பாதுகாப்பு, சுகாதார பராமரிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக அதிகளவில் கடன் வாங்கப்பட்டுள்ளது.</p><p> 

இதன் மூலம், அமெரிக்காவில் தனிநபர் கடன் சுமார் 1,17,000 டொலராக உள்ளது.

கடன் அதிகரித்து வரும் சூழலில் அமெரிக்க சந்தையில் வட்டி விகிதங்களும் பணவீக்கமும் உயர்ந்து, சாமானிய மக்களின் வீட்டு வாடகை உள்ளிட்டவை அதிகரித்து வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T13:20:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மண்ணுக்குள் புதைந்திருந்த ரூ.98 கோடி தங்கப் புதையல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/100-crore-rupees-gold-stash-in-discover-belgium-1787228284"></link>
            <id>https://manithan.com/article/100-crore-rupees-gold-stash-in-discover-belgium-1787228284</id>
            <summary type="text">பெல்ஜியத்தில் பழமையான கட்டடம் ஒன்றில் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணியின்போது, சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான தங்கப் புதையல் கண்டெடுக்கப்பட்டது பெரும் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெல்ஜியத்தில் பழமையான கட்டடம் ஒன்றில் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணியின்போது, சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான தங்கப் புதையல் கண்டெடுக்கப்பட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>புதைந்திருந்த கோடிக்கணக்கான தங்கம்</h2><p>
பிளாண்டர்ஸ் மாகாணத்தில் உள்ள டென்டர்மாண்ட் நகரில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்ட பழமையான மாளிகை ஒன்று உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fcacb56-9506-4f5c-a839-4bdb7fbf060c/26-6a86fe007804c.webp' /></p><p></p><p>ஒரு காலத்தில் மதுபான ஆலை உரிமையாளருக்குச் சொந்தமான இந்தக் கட்டடம், தற்போது தொண்டு நிறுவனம் ஒன்றின் நிர்வாகத்தில் உள்ளது. </p><p>இங்கு தற்போது புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கழிவுநீர் குழாய் பதிப்பதற்காக தொழிலாளர்கள் மண்ணைத் தோண்டிக் கொண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd9b9d69-7d4a-4258-aa34-4e3db36124b9/26-6a86fe0140bf5.webp' /></p><p> அப்போது, 18 வயதான கோபி என்ற தொழிலாளியின் கண்களில் மண்ணுக்குள் இருந்து பளபளப்பாக ஏதோ ஒன்று தென்பட்டது.

முதலில் அது சாதாரண யூரோ நாணயங்களாக இருக்கலாம் என அவர் நினைத்துள்ளார்.</p><p>ஆனால், அருகில் தோண்டிப் பார்த்தபோது தங்கக் கட்டிகளும் தங்க நாணயங்களும் அடங்கிய ஒரு பை கிடைத்தது. இதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்ததுடன், தான் கண்டெடுத்தது மிகப்பெரிய புதையல் என்பதை உணர்ந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fb4ad8e-4494-4fb5-acd0-d7064829e4e8/26-6a86fe01ec89c.webp' /></p><p>

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், புதையல் கண்டெடுக்கப்பட்ட பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.</p><p>அதிகாரிகளின் ஆரம்ப மதிப்பீட்டின்படி, இந்த தங்கப் புதையலின் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் ரூ.98 கோடி இருக்கலாம் என கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb6070f8-58c9-4a77-8f7c-bd4d2fdfa274/26-6a86feb06cab7.webp' /></p><p></p><p>

இந்நிலையில், இந்தப் புதையலுக்கு உண்மையான உரிமையாளர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பெல்ஜிய சட்டப்படி, புதையலின் உரிமையை நிரூபிக்க உரிமை கோருபவர்களுக்கு 5 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T13:18:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் வறண்ட நாட்டில் ஒருவருடத்தில் கிடைக்கவேண்டிய மழை 03 மணிநேரத்தில் கொட்டித்தீர்த்தது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chile-hit-by-heavy-rain-landslides-1787231034"></link>
            <id>https://ibctamil.com/article/chile-hit-by-heavy-rain-landslides-1787231034</id>
            <summary type="text">உலகின் வறண்ட நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் சிலி, லத்தீன் அமெரிக்காவில் ஏற்பட்ட திடீர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் பெய்யும் மழையளவு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் வறண்ட நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் சிலி, லத்தீன் அமெரிக்காவில் ஏற்பட்ட திடீர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் பெய்யும் மழையளவு முழுவதையும் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் நாடு பெற்றுவிட்டதாக சிலி வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்</p><p>&nbsp;இந்த திடீர் கனமழையால் பல மாகாணங்களில் நிலச்சரிவுகளும் வெள்ளமும் ஏற்பட்டுள்ளன. கனமழை மற்றும் வெள்ளத்தால் 25,000-க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.</p><h2>ஆண்டுக்கு 5 மில்லிமீட்டர் மழை</h2><p>வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட முக்கிய நகரம் டோகோபில்லா ஆகும். இந்த நகரம் ஆண்டுக்கு 5 மில்லிமீட்டர் மழைப்பொழிவைப் பெறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26f18f12-fbd1-43d4-b52c-b06afc0cc3fb/26-6a86fe5e7b250.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், நேற்று (19) சில மணி நேரத்தில் இந்த நகரம் 30 மில்லிமீட்டர் மழைப்பொழிவைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T13:17:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பாரிய போதைப் பொருள் கடத்தல் கும்பல் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/opp-seize-12m-in-drugs-weapons-and-vehicles-1787210591"></link>
            <id>https://canadamirror.com/article/opp-seize-12m-in-drugs-weapons-and-vehicles-1787210591</id>
            <summary type="text">கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள வால்போல் ஐலண்ட் ஃபர்ஸ்ட் நேஷன் பகுதியில் பல மாதங்களாக நடைபெற்ற தீவிர போதைப்பொருள் கடத்தல் தடுப்பு விசாரணையை அடுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள வால்போல் ஐலண்ட் ஃபர்ஸ்ட் நேஷன் பகுதியில் பல மாதங்களாக நடைபெற்ற தீவிர போதைப்பொருள் கடத்தல் தடுப்பு விசாரணையை அடுத்து, லண்டன் நகரைச் சேர்ந்த 3 பேரை ஒன்ராறியோ மாகாணக் காவல்துறை கைது செய்துள்ளது.</p><p> 
'புராஜெக்ட் பிரேக்' எனப் பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையின் முடிவுகளை, வால்போல் ஐலண்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காவல்துறையினர் முறைப்படி அறிவித்தனர்.</p><p> 
பல்வேறு தென்மேற்கு ஒன்ராறியோ சமூகங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனைகளில், சுமார் 1.2 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faa51b19-a6ab-4df2-aadc-2b6a5224c69f/26-6a86ab61533e1.webp' /></p><p> ஃபெண்டானில், கொக்கைன், மெத்தாம்பெட்டமைன் ஆகிய ஆபத்தான போதைப்பொருட்கள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் 5 திருடப்பட்ட வாகனங்கள் மற்றும் சுமார் 20,000 கனடிய டாலர் ரொக்கம் என்பன மீட்கப்பட்டுள்ளன.</p><p>
கடந்த 2026 ஏப்ரல் மாதம் வால்போல் ஐலண்டில் போதைப்பொருள் கடத்தல் நடப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கியது.</p><p> லேம்ப்டன் மற்றும் சாதம்-கென்ட் பகுதிகளில் போதைப்பொருள் விநியோகம் செய்து வந்த குழுவைக் குறிவைத்து ஜூலை 17 அன்று சோதனைகள் நடத்தப்பட்டு 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். </p><p>
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். </p><p>இந்த போதைப்பொருட்கள் கனடாவிற்குள்ளேயே விநியோகிக்க திட்டமிடப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். </p><p>
சமூகத்தின் பாதுகாப்பைப் பேணவும், குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் இளைஞர்களைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை மிகவும் அவசியமானது என வால்போல் ஐலண்ட் ஃபர்ஸ்ட் நேஷன் தலைவர் லீலா தாமஸ் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T13:16:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரியங்கா மோகனின் ரீசெண்ட் சேலை புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/priyanka-mohan-recent-saree-photos-post-1787231224"></link>
            <id>https://viduppu.com/article/priyanka-mohan-recent-saree-photos-post-1787231224</id>
            <summary type="text">பிரியங்கா மோகன்கன்னடம், தெலுங்கு மொழிகளில் அறிமுகமாகி தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் போன்ற ஹிட் படங்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் தான்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிரியங்கா மோகன்</h2><p>கன்னடம், தெலுங்கு மொழிகளில் அறிமுகமாகி தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் போன்ற ஹிட் படங்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை பிரியங்கா மோகன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38d33176-4ac0-40b4-8b40-4e5da8bc517d/26-6a86fbfdcbffa.webp' /></p><p>
</p><p>இதனையடுத்து, எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர், பிரதர்ஸ், ஓஜி உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவர் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான மேட் இன் கொரியா படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
</p><p>
தற்போது 666 ஆபரேஷன் ட்ரீம் தேட்டர் என்ற படத்தில் நடித்துள்ளார் பிரியங்கா. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா, வீக்கெண்ட் ஆனால் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்வார்.</p><p> தற்போது, சேஎலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் பிரியங்கா.</p>]]></content>
            <updated>2026-08-20T13:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் பள்ளி அதிபர் படுகொலை! 10 ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-students-killed-principal-in-telangana-1787230543"></link>
            <id>https://ibctamil.com/article/two-students-killed-principal-in-telangana-1787230543</id>
            <summary type="text">இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தில், நாகார்ஜுனா பொதுப் பள்ளியின் அதிபரை படுகொலை செய்த அதே பள்ளியை சேர்ந்த இரு மாணவர்கள் கைது...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தில், நாகார்ஜுனா பொதுப் பள்ளியின் அதிபரை படுகொலை செய்த அதே பள்ளியை சேர்ந்த இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
ஹைதராபாத்தில் இருந்த அவரது கணவர், ரூபா ரெட்டியைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாமல் போனதை தொடர்ந்து அவரது வீட்டில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரியவருகிறது.
</p><p>
இக்கொலை வழக்கு குறித்து விசாரிக்கக் காவல்துறை ஐந்து தனிப்படைகளை அமைத்து, சிசிடிவி காட்சிகள், தடயவியல் சான்றுகள் மற்றும் கைரேகைகளை ஆய்வு செய்து 80-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.</p><p></p><h2>சந்தேகத்துக்குரிய மாணவர்கள்</h2><p>

அதில், உயிரிழந்த ரெட்டி இறுதியாக தனது அத்தையுடன் பேசிய தொலைபேசி உரையாடலில் 'பாபு' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது தெரியவந்தள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0099c95a-7b9e-431a-b40e-e098d65b992f/26-6a86fc3212beb.webp' /></p><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து பள்ளிக்கு வராத ஐந்து 10 ஆம் வகுப்பு மாணவர்களைக் காவல்துறை தீவிரமாகப் பின்தொடர்ந்த நிலையில், அதில் இருவர் சமீபகாலமாக அதிக அளவில் பணம் செலவழித்து விருந்துகளை நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.</p><p>

முன்னதாக பைகளில் பணமும் கைபேசியும் வைத்திருந்ததற்காக கொலை செய்யப்பட்ட ரெட்டியால் தண்டிக்கப்பட்டு, விடுதியிலிருந்து நீக்கப்பட்டு நாள்தோறும் பள்ளிக்கு வரும் மாணவர்களாக மாற்றப்பட்ட கோபத்தில் அவர்கள் இச்சம்பவத்தைத் திட்டமிட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><h2>கொலை சம்பவம்&nbsp;</h2><p>
</p><p>
கத்தி மற்றும் கையுறைகளுடன் ரெட்டியின் வீட்டிற்குள் புகுந்த ஒரு மாணவன், அங்கிருந்த ரூ. 2,50,000 ரொக்கப் பணத்தைக் கைப்பற்றியுள்ளான். 

அப்போது அவனது முகக்கவசம் விலகியதால் ரெட்டி அவனை அடையாளம் கண்டுகொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64a5b093-c3d9-4401-9cbf-78f8b3121d07/26-6a86fc32cf243.webp' /></p><p> </p><p>இதனால் அவர் குறித்த மாணவனாலேயே 27 முறை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்நிலையில், இரத்தக்கறை படிந்த உடைகளை மறைத்துவிட்டு கோவாவுக்குத் தப்பிச் சென்ற அந்த மாணவர்களிடமிருந்து ரூ. 1,54,000 ரொக்கம், ஒரு ஐபோன் மற்றும் படுகொலை செய்யப்பட்ட ரெட்டியின் தொலைபேசியைக் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.
</p><p>
குற்றத்தைச் செய்வதற்கு முன், குறைந்த காலத்தில் விரைவாகப் பணம் சம்பாதிப்பது எப்படி என்று அவர்கள் இணையத்தில் தேடியிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T13:12:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராஜகிரிய பகுதியில் பொலிஸ் அதிகாரி துப்பாக்கிச் சூட்டுக்கு பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-officer-shot-dead-in-rajagiriya-area-1787231691"></link>
            <id>https://jvpnews.com/article/police-officer-shot-dead-in-rajagiriya-area-1787231691</id>
            <summary type="text">&amp;nbsp;இராஜகிரிய ஸ்ரீ சத்தர்மராஜிக விஹாரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இராஜகிரிய ஸ்ரீ சத்தர்மராஜிக விஹாரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த நிலையில், குறித்த அதிகாரி தன்னை தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2da605a-214e-4e5f-8c91-26760d53848d/26-6a86fdccd967b.webp' /></p>]]></content>
            <updated>2026-08-20T13:12:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை ஆதார வைத்தியசாலை தாதியர்களின் சீருடை விவகாரம் : அவசர சந்திப்பை நடத்திய தமிழ் எம்.பிக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kalmunai-hospital-nurses-uniform-dispute-resolved-1787193825"></link>
            <id>https://tamilwin.com/article/kalmunai-hospital-nurses-uniform-dispute-resolved-1787193825</id>
            <summary type="text">சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசர சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். 
இந்த சந்திப்பானது நேற்றைய தினம்(19.08.2026) இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசர சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். </p><p>
இந்த சந்திப்பானது நேற்றைய தினம்(19.08.2026) இடம்பெற்றுள்ளது.</p><h2>சுகாதார அமைச்சருடனான சந்திப்பு</h2><p>இந்த சந்திப்பின் போது வைத்தியசாலை தொடர்பாக சில விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. </p><p> அண்மையில் நடந்த சர்ச்சைக்குரிய சீருடை விவகாரத்தால் கல்முனை - வடக்கு வைத்தியசாலையில் இருந்து
புதிதாக நியமனம் பெற்ற இஸ்லாமிய உதவியாளர்கள் கல்முனை அஷ்ரப் ஞாபகாரத்த வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.</p><p>இவர்களின் இடத்திற்கு பதிலாக கல்முனை - வடக்கு வைத்தியசாலைக்கு ஆளணி நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77d15660-1c49-4a9b-9419-32143b929862/26-6a86fd285fd67.webp' /></p><p>இதனை அமைச்சர் விரைவில் சீர் செய்வது தருவதாக உறுதியளித்துள்ளார். அடுத்ததாக புதிதாக நியமனம் பெற்ற தமிழ் வைத்தியசாலை உதவியாளர்கள் ஒரு குறுகிய ஆரம்ப பயிற்சிக்காக அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு சமூகமளிக்குமாறு கோரப்பட்டிருந்தனர்.</p><p> அஸ்ரப் வைத்தியசாலை ஒரு இஸ்லாமிய ஆதிக்கம் கொண்ட வைத்தியசாலை. இப்போது தமிழ் பிள்ளைகள் அங்கு பயிற்சிக்கு செல்ல பயப்படுகிறார்கள். ஆதலால் தமிழ் பிள்ளைகளுக்கு வேறொரு இடத்தை தெரிவு செய்யுமாறு ஒரு கருத்து அமைச்சரிடம் முன் வைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>சீருடை பற்றிய சர்ச்சைகள்</h2><p> </p><p>இதனையடுத்து அமைச்சர் அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளார். அந்த இடத்தை தமிழ் பிள்ளைகளுக்கு மாற்றி தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், சீருடை விடயம் மதச்சார்பற்றதாகவும் மொழி சார்பற்றதாகவும் இனச்சார்பற்றதாகவும் இருக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97d42548-356d-4043-acdc-f9cb98ef652a/26-6a86e7eb8232c.webp' /></p><p>இலங்கையிலுள்ள அரச உத்தியோகஸ்தர்கள் மதத்துக்கேற்றவாறு மொழிக்கு ஏற்றவாறு இனத்துக்கேற்றவாறு சீருடை அணிவதில்லை. சீருடை ஆராய்வதற்கும் வடிவமைப்பதற்கும் ஒரு சிரேஷ்ட குழு அமைச்சு மட்டத்தில் இயங்கி வருகிறது.</p><p> சீருடை பற்றிய சர்ச்சைகள் எழும்பும் போது அதன் இறுதித் தீர்மானமே முற்றாகவும், முடிவானதுமாக இருக்கும். இந்த நாட்டு மக்கள் இலங்கையர்கள் இதை பிரித்து பார்க்க முடியாது. பிரித்துப் பார்க்கவும் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ.சிறிநாத் மற்றும் ஞா.சிறிநேசன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b5e2375-fd89-4e58-a616-604f97baa20f/26-6a866c6a095e4.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T13:12:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஞானசார தேரரின் விகாரையில் பாதுகாப்புப் பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rajagiriya-gunshoot-1787230866"></link>
            <id>https://tamilwin.com/article/rajagiriya-gunshoot-1787230866</id>
            <summary type="text">ராஜகிரியவில் ஞானசார தேரரின் விகாரையான, ஸ்ரீ சத்தர்மராஜிக விஹாரையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராஜகிரியவில் ஞானசார தேரரின் விகாரையான, ஸ்ரீ சத்தர்மராஜிக விஹாரையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த அதிகாரி தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தவறான முடிவெடுத்திருக்கலாம்&nbsp; என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p>குறித்த பொலிஸ் அதிகாரி சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T13:09:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் வாழ்ந்துவந்த இந்திய இளம்பெண் மாரடைப்பால் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/indian-women-died-of-heart-attack-in-canada-1787214395"></link>
            <id>https://ibctamilnadu.com/article/indian-women-died-of-heart-attack-in-canada-1787214395</id>
            <summary type="text">An Indian woman died of a heart attack in Canada: கனடாவில் வாழ்ந்துவந்த இந்திய இளம்பெண்ணொருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.


இந்தியாவின் பஞ்சாபைச...</summary>
            <content type="html"><![CDATA[<p>An Indian woman died of a heart attack in Canada: கனடாவில் வாழ்ந்துவந்த இந்திய இளம்பெண்ணொருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
</p><p>

இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் கல்வி கற்பதற்காக கனடா சென்றிருந்த நிலையில், அவர் மாரடைப்பால் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
</p><h3>
கல்வி கற்பதற்காக கனடா சென்றிருந்த இளம்பெண்
</h3><p>
அன்மோல்தீப் கௌர் (24), நான்கு ஆண்டுகளுக்கு முன் கல்வி கற்பதற்காக கனடா சென்றிருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cab5f88-bf7b-4842-8041-008c23b9e37d/26-6a86ba3c9909e.webp' /></p><p>
மனித்தோபா மாகாணத்தின் வின்னிபெக் நகரில் கல்வி கற்று முடித்து, நிரந்தர குடியிருப்பு அனுமதிக்காக விண்ணப்பித்துவிட்டு காத்திருந்தார் கௌர்.&nbsp;</p><p></p><p>

இந்நிலையில், செவ்வாயன்று திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட கௌர், மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
</p><p>
கௌர் உயிரிழந்த செய்தி அறிந்து அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T13:05:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெல்லையில் கிருத்துவ மத போதகருக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/nellai-preacher-got-death-sentence-in-pocso-case-1787222132"></link>
            <id>https://ibctamilnadu.com/article/nellai-preacher-got-death-sentence-in-pocso-case-1787222132</id>
            <summary type="text">Preacher got deah sentence in nellai: தமிழக மாவட்டம் திருநெல்வேலியில் போக்ஸோ வழக்கில், கிருத்துவ மத போதகருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Preacher got deah sentence in nellai: தமிழக மாவட்டம் திருநெல்வேலியில் போக்ஸோ வழக்கில், கிருத்துவ மத போதகருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

திருநெல்வேலி மாவட்டம் இலந்தை குளம் பகுதியில் மத போதகர் ஆபிரகாமிற்கு போக்ஸோ வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. </p><h2>போக்ஸோ&nbsp;வழக்கு </h2><p>

திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அருகேயுள்ள இலந்தை குளம் பகுதியில், நான்கு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 50 வயதான கிருத்துவ மத போதகர் ஆபிரகாம் கைது செய்யப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5963a1a6-c704-42e7-b54e-072da8e6a956/26-6a86d91c16801.webp' />&nbsp;</p><p></p><p>
அவர் மீது போக்சோ வழக்குப் பதியப்பட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.
</p><p>
இந்த நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி இவ்வழக்கில் தீர்ப்பை வாசித்தார். சிறுமிகளை வன்கொடுமை செய்த ஆபிரகாமிற்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.</p><p> 

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T13:05:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தான் ஆல்அவுட்: பந்தை அறுத்து..ஆளுக்கு பாதியாக எடுத்துக் கொண்ட வீரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/ollie-robinson-and-josh-tongue-split-test-ball-1787228525"></link>
            <id>https://ibctamilnadu.com/article/ollie-robinson-and-josh-tongue-split-test-ball-1787228525</id>
            <summary type="text">Robinson and Tongue split ball: பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்தின் ஓலி ராபின்ஸன் மற்றும் ஜோஷ் டங் பந்தை பிரித்துக்கொண்ட சுவாரஸ்ய நிகழ்வு நடந...</summary>
            <content type="html"><![CDATA[<p>Robinson and Tongue split ball: பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்தின் ஓலி ராபின்ஸன் மற்றும் ஜோஷ் டங் பந்தை பிரித்துக்கொண்ட சுவாரஸ்ய நிகழ்வு நடந்தது.
</p><p>
லீட்ஸில் நடந்து வரும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில், 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்தின் ஓலி ராபின்ஸன் மற்றும் ஜோஷ் டங் பந்தை பிரித்துக்கொண்டனர்.&nbsp;&nbsp;</p><h2>ஓலி ராபின்ஸன், ஜோஷ் டங்</h2><p>லீட்ஸின் ஹெட்டிங்லே மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bea7607e-a0d1-4bf4-87df-9d5239e2fe86/26-6a86f17099364.webp' />&nbsp;</p><p></p><p>
முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி, ஓலி ராபின்ஸன் மற்றும் ஜோஷ் டங் ஆகியோரின் தாக்குதல் பந்துவீச்சில் 171 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
</p><p>
அதிகபட்சமாக அப்துல்லா ஷாஃபிக் 61 ஓட்டங்களும், இமாம்-உல்-ஹக் 42 ஓட்டங்களும் எடுத்தனர். ஓலி ராபின்ஸன் (Ollie Robinson), ஜோஷ் டங் (Josh Tongue) தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் இருவரும் ஒரு வித்தியாசமான சூழலை எதிர்கொண்டனர்.
</p><h2>
பந்தை இரண்டாக அறுக்குமாறு
</h2><p>அதாவது, ஒரு போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தும் பந்துவீச்சாளர், அப்போட்டியின் பந்தை நினைவுப் பரிசாக எடுத்துச் செல்லும் நீண்டகால மரபு பின்பற்றப்படுகிறது.

இப்போட்டியில் இருவருமே 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதால், ஒரு தனித்துவமான தீர்வை மேற்கொண்டனர். </p><p>மைதான பராமரிப்புக் குழுவைச் சேர்ந்த ஒருவரிடம் பந்தை இரண்டாக அறுக்குமாறு வீரர்கள் கேட்டுக்கொண்டனர்.

அதன்படி ஆளுக்கு பாதி பந்தை அறுத்த பின் எடுத்துக் கொண்டனர். </p><p>இதுகுறித்து ஓலி ராபின்ஸன் கூறுகையில், "நாங்கள் ஆட்டத்தை முடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது, டங்கிடம் நாம் இதை இரண்டாக பிரித்துக் கொள்ளலாம் என்று கூறினேன்.</p><p>அவரும் அதை சொன்னார், நானும் அதை செய்யலாம் அது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்றேன். இது ஒரு வித்தியாசமான விடயம்; கிரிக்கெட் பந்தின் பாதியை வைத்துக்கொள்வது என்பது அடிக்கடி நடப்பதில்லை; அதனால் இது நாங்கள் என்றும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும்" என தெரிவித்தார். 

&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/613d0a78-9764-48c5-a2f4-111252315ee7/26-6a86f1714e22a.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T13:05:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[புர்ஜ் கலிஃபாவில் ஒரு இரவு தங்குவதற்கு எவ்வளவு செலவாகும் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/how-much-cost-to-stay-one-night-at-burj-khalifa-1787229144"></link>
            <id>https://news.lankasri.com/article/how-much-cost-to-stay-one-night-at-burj-khalifa-1787229144</id>
            <summary type="text">How Much Does a Night at the Burj Khalifa Cost?: துபாயில் அமைந்துள்ள புர்ஜ் கலிஃபா எனும் கட்டிடம் உலக அளவில் மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்த ஒரு இடமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>How Much Does a Night at the Burj Khalifa Cost?: துபாயில் அமைந்துள்ள புர்ஜ் கலிஃபா எனும் கட்டிடம் உலக அளவில் மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்த ஒரு இடமாகும். அந்த நிலையில், புர்ஜ் கலிஃபாவில் ஏதேனும் ஹோட்டல் உள்ளதா? மக்கள் அங்கு சென்று தங்கலாமா? என்ற கேள்வி எழுகிறது.&nbsp;</p><h2>புர்ஜ் கலிஃபா</h2><p>
இந்த உலகத்தில் மிகப்பெரிய கட்டிடங்களில் புர்ஜ் கலிஃபாவிவும் ஒன்று. துபாயில் அமைந்துள்ள இந்த வானுயர கட்டிடம் உலகம் முழுவதும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள ஒரு முக்கிய இடமாகும். அப்படியாக, புர்ஜ் கலிஃபாவில் ஒரு ஹோட்டல் உள்ளது. </p><p>இருப்பினும் அதனுடைய வாடகை தெரிந்து கொண்டால் அதிர்ச்சியடைந்து விடுவோம். அங்கு ஒரே ஒரு ஹோட்டல் மட்டுமே இருக்கிறது.&nbsp;அந்த ஹோட்டலின் பெயர் "அர்மானி ஹோட்டல் துபாய்.

</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/144b4ffb-c45e-4b22-93ca-f0c9a7b1570d/26-6a86f3d9cc59c.webp' /></p><p></p><p> </p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">அர்மானி ஹோட்டல் துபாய்</span><br></p><p>இந்த ஒரு" சொகுசு 5 நட்சத்திர ஹோட்டல்" அர்மானி ஹோட்டல் துபாய் ஃபேஷன் ஜாம்பவான், ஜார்ஜியோ அர்மானியால் வடிவமைக்கப்பட்டது. உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் தரைத்தளத்தில் இருந்து 39வது தளம் வரை அர்மானி&nbsp;ஹோட்டல் அமைந்துள்ளது.</p><p>

 இது ஜார்ஜியோ அர்மானியின் எளிமையான அழகுக்கும் நுட்பமான சொகுசு சிந்தனைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். அதோடு, ஹோட்டலில் ஒவ்வொரு அம்சமும் அர்மானி அவர்களாலே வடிவமைக்கப்பட்டுள்ளது.

 இந்த ஹோட்டலில் சுமார் 160 விருந்தினர் அறைகள் உள்ளது.</p><p> அங்கு உலக தரம் வாய்ந்த உணவகம் மற்றும் ஓய்வளிக்கும் அர்மானி-ஸ்பா&nbsp;வரை அனைத்தும் ஜார்ஜியோ ஆர்மானி அவர்களாலே வடிவமைக்கப்பட்டுள்ளது.

 இது ஒரு ஆடம்பரமான மற்றும் சொகுசு தங்குமிடத்தை வழங்குகிறது. இந்த ஹோட்டல் டவுன்டவுன் துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் ஒரு முக்கிய இடத்தில் அமைந்து இருக்கிறது.</p><p>இது துபாய் மால் மற்றும் துபாய் நீரூற்றிலிருந்து சில அடிகள் தொலைவில் மட்டுமே உள்ளது. இங்கு ஒரு இரவு ஒரு நபர் தங்குவதற்கு எவ்வளவு செலவாகும் என்கின்ற ஒரு கேள்வி உங்களுக்கு இப்பொழுது வரலாம். அந்த வகையில், இந்த ஹோட்டலில் ஒரு இரவு தங்குவதற்கு சராசரி விலை 60 ஆயிரம் முதல் மூன்று லட்சம் வரை ஆகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03a48e8f-18f7-4b77-aef1-feeb5375974e/26-6a86f3da85cc1.webp' /></p><p></p><p>இருந்தாலும் சிக்னேச்சர் சூட்ஸ் போன்ற மிகப்பெரிய மற்றும் மிகவும் ஆடம்பரமான அறைகளுக்கு முன்பதிவு மற்றும் வரிகளை பொறுத்து ரூபாய் 3 லட்சத்து ஐம்பதாயிரம் முதல் 8 லட்சம் அல்லது அதற்கு அதிகமாகவும் செலவாகலாம் என்று சொல்லப்படுகிறது.</p><p> இங்கு நீச்சல் குளங்கள் ஸ்பாக்கள் உணவகங்கள் பார்கள் ஓய்வறைகள் போன்ற பல உலக தரம் வாய்ந்த வசதிகள் இருக்கிறது. இவற்றில் பலவற்றுக்கும் பல்வேறு கட்டணங்கள் உண்டு. விலை அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தாலும் இங்கு தங்க கூடிய அனுபவம் வித்தியாசமானதும் அற்புதமானதாகவே அமைகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T13:02:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[கேரள அழகியை திருமணம் செய்து கொண்ட ஸ்காட்லாந்து எம்பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/scottish-mp-who-married-a-woman-from-kerala-1787206696"></link>
            <id>https://ibctamilnadu.com/article/scottish-mp-who-married-a-woman-from-kerala-1787206696</id>
            <summary type="text">Scotland MP Marries Kerala Woman: ஸ்காட்லாந்து தேசிய கட்சியை சேர்ந்த எம்பி மார்ட்டின் டே கேரள பெண்ணான நிதின் சந்தை திருமணம் செய்து கொண்டார்.நட்பு காதல...</summary>
            <content type="html"><![CDATA[<p>Scotland MP Marries Kerala Woman: ஸ்காட்லாந்து தேசிய கட்சியை சேர்ந்த எம்பி மார்ட்டின் டே கேரள பெண்ணான நிதின் சந்தை திருமணம் செய்து கொண்டார்.</p><h2>நட்பு காதலான தருணம்</h2><p>
</p><p>
கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்தவர் நிதின் சந்த்(வயது 49), கடந்த 2008ம் ஆண்டு உயர்கல்விக்காக இங்கிலாந்து சென்றார்.
</p><p>
அங்கு தகவல்தொழில்நுட்ப துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த போது, தேசிய கட்சியின் முக்கிய பிரமுகரான மார்ட்டின் டே என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது, இவர்களது நட்பு பின்னாளில் காதலாக மாறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/315f30dd-f965-4951-aaf7-b1c3e9c16e35/26-6a869db5cb1f3.webp' /><br></p><p>

இதனை தொடர்ந்து 2016ம் ஆண்டு இங்கிலாந்தில் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர், இருப்பினும் கேரளத்தில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நிதின் விரும்பினார்.</p><h2>பாரம்பரிய உடையில் திருமணம்</h2><p>
</p><p>
</p><p>சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் 2026ம் ஆண்டு நிதினின் ஆசை நிறைவேறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/847d17ab-fc94-4e40-a384-f688e169f3f1/26-6a869db67d84a.webp' /><br></p><p>
</p><p>
கடந்த 18ம் தேதி குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் பாரம்பரிய உடை அணிந்து திருமணம் செய்து கொண்டனர்.
</p><p>
ஸ்காட்லாந்தின் எம்பி-யான மணமகன் மார்ட்டின் டே வேட்டி அணிந்துகொண்ட மாங்கல்யத்தை கட்டினார், இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/257d6714-d705-4d4f-9bae-104f53c9264e/26-6a869db7376cb.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-20T13:00:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது அமெரிக்கா தடைக்கு சீனா கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/china-strongly-condemns-us-sanctions-on-iran-1787230980"></link>
            <id>https://canadamirror.com/article/china-strongly-condemns-us-sanctions-on-iran-1787230980</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஜனாதிபதியின் &quot;பொருளாதார டி-டே&quot; பிரச்சாரத்தை சீனா கடுமையாக சாடியுள்ளதுடன், கூடுதல் பொருளாதாரத் தடைகள் நிலுவையில் உள்ள பிரச்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஜனாதிபதியின் "பொருளாதார டி-டே" பிரச்சாரத்தை சீனா கடுமையாக சாடியுள்ளதுடன், கூடுதல் பொருளாதாரத் தடைகள் நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க உதவாது என்றும் தெரிவித்துள்ளது.</p><p>



பீஜிங்கில் செய்தியாளர்களைச் சந்தித்த சீனாவின் வெளிவிவகார அமைச்சகப் பேச்சாளர் லின் ஜியான் (Lin Jian), இதனை தெரிவித்துள்ளார்.



இதன்போது, தடைகளை விதிப்பதும் அழுத்தம் கொடுப்பதும் பிரச்சினையைத் தீர்க்க உதவாது என்று தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48deb9c5-8e7e-4287-9ac9-400a5f87cbb4/26-6a86fb05a28d2.webp' /></p><p> </p><p>



மேலும், பொறுப்பான நடவடிக்கைகளை எடுத்து, தூதரக மற்றும் அரசியல் வழிமுறைகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க சம்பந்தப்பட்ட தரப்பினரை சீனா வலியுறுத்துகிறது என்றும் அவர் கூறினார்.
</p><p>


பகுப்பாய்வு நிறுவனமான கெப்லர் (Kpler) வெளியிட்ட 2025 ஆம் ஆண்டுத் தரவுகளின்படி, ஈரான் ஏற்றுமதி செய்யும் எண்ணெயில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை சீனா வாங்குவதால், இந்த நடவடிக்கைகள் சீனாவைப் பிரதானமாகப் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T13:00:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தை செல்வாவின் 50 வது சிரார்த்த தின நிகழ்வு! செந்தில் தொண்டமான் - சிறிதரன் கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/senthil-thondaman-sridharan-discuss-1787229750"></link>
            <id>https://tamilwin.com/article/senthil-thondaman-sridharan-discuss-1787229750</id>
            <summary type="text">தந்தை செல்வாவின் 50 வது சிரார்த்த தின நிகழ்வை முன்னிட்டு, இலங்கை தொழிலாளர்
காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தந்தை செல்வாவின் 50 வது சிரார்த்த தின நிகழ்வை முன்னிட்டு, இலங்கை தொழிலாளர்
காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.</p><p> இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி
தலைமையகத்தில் இன்று(20) குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.</p><p>

இக்கலந்துரையாடலின்போது, மறைந்த தலைவர்களான சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும்
தந்தை செல்வா ஆகியோருக்கிடையிலான நீண்டகால நட்புறவு நினைவுகூரப்பட்டது.</p><h2>சிரார்த்த தின நிகழ்வு</h2><p>
</p><p>
அத்துடன், இலங்கை இந்திய வம்சாவளித் தமிழர்களின் குடியுரிமை மற்றும்
வாக்குரிமையைப் பறிக்கும் சட்டங்களுக்கு எதிராக தந்தை செல்வா, சௌமியமூர்த்தி
தொண்டமானுடன் இணைந்து நாடாளுமன்றத்தில் எதிர்த்து வாக்களித்தமை உள்ளிட்ட
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களையும் செந்தில் தொண்டமான்
நினைவூட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d410332-d2e5-4330-b6d1-3f2da41e16ed/26-6a86f97acd776.webp' /></p><p>
</p><p>
மேலும், தந்தை செல்வாவின் நினைவைப் போற்றும் வகையில் மலையகத்தில் சிரார்த்த
தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முழுமையாக
மேற்கொள்ளும் என செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T12:56:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் வாழ்ந்துவந்த இந்திய இளம்பெண் மாரடைப்பால் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-women-died-of-heart-attack-in-canada-1787214395"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-women-died-of-heart-attack-in-canada-1787214395</id>
            <summary type="text">An Indian woman died of a heart attack in Canada: கனடாவில் வாழ்ந்துவந்த இந்திய இளம்பெண்ணொருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.


இந்தியாவின் பஞ்சாபைச...</summary>
            <content type="html"><![CDATA[<p>An Indian woman died of a heart attack in Canada: கனடாவில் வாழ்ந்துவந்த இந்திய இளம்பெண்ணொருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
</p><p>

இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் கல்வி கற்பதற்காக கனடா சென்றிருந்த நிலையில், அவர் மாரடைப்பால் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
</p><h3>
கல்வி கற்பதற்காக கனடா சென்றிருந்த இளம்பெண்
</h3><p>
அன்மோல்தீப் கௌர் (24), நான்கு ஆண்டுகளுக்கு முன் கல்வி கற்பதற்காக கனடா சென்றிருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cab5f88-bf7b-4842-8041-008c23b9e37d/26-6a86ba3c9909e.webp' /></p><p>
மனித்தோபா மாகாணத்தின் வின்னிபெக் நகரில் கல்வி கற்று முடித்து, நிரந்தர குடியிருப்பு அனுமதிக்காக விண்ணப்பித்துவிட்டு காத்திருந்தார் கௌர்.&nbsp;</p><p></p><p>

இந்நிலையில், செவ்வாயன்று திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட கௌர், மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
</p><p>
கௌர் உயிரிழந்த செய்தி அறிந்து அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T12:55:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோயில் நகைகளை வைத்து சூதாடிய குருக்கள் - நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/theft-at-colombo-temple-1787229566"></link>
            <id>https://tamilwin.com/article/theft-at-colombo-temple-1787229566</id>
            <summary type="text">கொழும்பு - கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில்
இடம்பெற்ற நகைத் திருட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆலயத் தர்மகத்தாக்களின்
தாராளமான தனிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில்
இடம்பெற்ற நகைத் திருட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆலயத் தர்மகத்தாக்களின்
தாராளமான தனிப்பட்ட நிதியுதவி மூலம் புனிதமான தங்க நகைகள் அனைத்தும்
மீட்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p>

ஆலயத்தின் புனிதத்தையும் பக்தர்களின் நம்பிக்கையையும் காக்கும் நோக்கில்,
தர்மகர்த்தாக்களான ஏ.எம்.ரி.தனநாயகம் 12.4 மில்லியன் ரூபாவையும், திருக்குமாரன் நடேசன் 12.4 மில்லியன் ரூபாவையும் தமது சொந்த நிதியிலிருந்து நன்கொடையாக
வழங்கி அடகு வைக்கப்பட்டிருந்த நகைகளை முழுமையாக மீட்டுள்ளனர்.</p><p>

ஆலயத்தில் கடமையாற்றிய சதீஸ்குமார குருக்கள் என்பவரே நகைப்பெட்டகத்தின்
சாவியைப் பயன்படுத்தி இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளார்.</p><h2>


2 கோடிக்கும் மேல் திருட்டு</h2><p>
இவர் திருடிய நகைகளை கொட்டாஞ்சேனைப் பகுதியிலுள்ள சி.டி.பி வங்கியில்
5,280,000 ரூபாவுக்கும், விமல் அடகு நிறுவனத்தில் 5,570,000 ரூபாவுக்கும்,
எஸ்.எம்.பி நிறுவனத்தில் 15,925,950 ரூபாவுக்கும் அடகு வைத்து, மொத்தமாகப்
பெற்ற சுமார் 2 கோடியே 67 இலட்சம் ரூபாவைச் சூதாட்டத்தில் இழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/795e10da-e440-4410-aa05-b46f50c65d27/26-6a86f8153c1a9.webp' /></p><p>


கடந்த மாதம் 29ஆம் திகதி ஆலய உற்சவத்தின் போது நகைப்பெட்டகத்தைத் திறந்தபோதே
இந்த திருட்டு வெளிச்சத்திற்கு வந்தது. 

இதனையடுத்து, ஆலய நிர்வாகத்தினர்
கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை மேற்கொண்டனர்.
</p><p>

இந்த நிலையில், குறித்த வழக்கு கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில்
விசாரணைக்கு வந்தபோது, தலைமறைவாகியுள்ள சந்தேகநபரான சதீஸ்குமார குருக்களுக்கு
வெளிநாடு செல்லத் தடை விதித்த நீதிவான், அவரை உடனடியாகக் கைது செய்து
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T12:51:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்குடன் பியூமி ஹன்சமாலிக்கு தொடர்பு?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/link-between-piumi-hansamali-and-shiran-basik-1787230428"></link>
            <id>https://jvpnews.com/article/link-between-piumi-hansamali-and-shiran-basik-1787230428</id>
            <summary type="text">&amp;nbsp; சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக்குடன் தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளை நடிகை பியூமி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக்குடன் தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளை நடிகை பியூமி ஹன்சமாலி கடுமையாக மறுத்துள்ளார்.
</p><p>


தாம் இலங்கையில் இல்லாத நிலையில், சில முகநூல் பக்கங்கள் தம்மை தொடர்புபடுத்தி போலியான செய்திகளைப் பரப்புவதை அறிந்ததாக அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d71969d-00b5-4cc6-9db8-fb7a28bfd02e/26-6a86f8ddb0af5.webp' /></p><p></p><h2>ஷிரான் பாசிக்&nbsp; யார் என்றே&nbsp; தெரியாது...&nbsp;</h2><p>
</p><p>


ஷிரான் பாசிக் என்பவர் யார் என்றே தனக்குத் தெரியாது எனத் தெரிவித்துள்ள பியூமி ஹன்சமாலி, டுபாயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கெஹெல்பத்தர பத்மேவை மாத்திரமே சந்தித்ததாகவும், அவருடன் எவ்வித பணப் பரிவர்த்தனையும் மேற்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>


இந்த விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சென்று வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>


தான் உழைத்த பணமே தன்னிடம் இருப்பதாகவும், அழகுசாதனப் பொருட்கள் வியாபாரத்தின் ஊடாகவே முன்னேறியதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், போதைப்பொருள் அல்லது கருப்புப் பணம் தனக்குத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>


மேலும், தன்னைப் பற்றிய பொய்யான பிரசாரங்களை நம்ப வேண்டாம் எனவும் பியூமி ஹன்சமாலி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-20T12:51:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இன்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/recording-of-statements-relatives-of-disappeared-1787229996"></link>
            <id>https://ibctamil.com/article/recording-of-statements-relatives-of-disappeared-1787229996</id>
            <summary type="text">காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவினர்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை இன்று யாழ்ப்பாணம் பிரதேச
செயலகத்தில் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவினர்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை இன்று யாழ்ப்பாணம் பிரதேச
செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.</p><p>
இதன்போது விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவின் தலைவர்கள்
மற்றும் உறுப்பினர்கள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் விசாரணைகளை
மேற்கொண்டு வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
</p><p>யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல்வேறு கிராம சேவையாளர் பிரிவுகளைச்
சேர்ந்தவர்களுடன், சாவகச்சேரி பிரதேசத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவினர்களும் அதிகளவில் இந்த நடவடிக்கையில் பங்கேற்றுள்ளனர்.</p><p></p><h2>தகவல்கள் பதிவு</h2><p>
</p><p>காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வயது, காணாமல் ஆக்கப்பட்ட காலப்பகுதி, சம்பவம்
இடம்பெற்ற விதம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் உறவினர்களிடம்
விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8503844f-2401-4c96-9fb3-49cf59762d86/26-6a86f72dc822c.webp' /></p><p>
மேலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலை தொடர்பில் உண்மையை கண்டறிந்து, அவர்களது
உறவினர்களுக்கு உரிய பதிலை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக
இந்த வாக்குமூலம் பதிவு செய்யும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டதாக
தெரிவிக்கப்பட்டது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="http://செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T12:47:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெற்றோர், ஆசிரியர்களுக்கு பிரதமர் ஹரிணியின் வேண்டுகோள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pm-urges-parents-teachers-children-enjoyl-holidays-1787227428"></link>
            <id>https://ibctamil.com/article/pm-urges-parents-teachers-children-enjoyl-holidays-1787227428</id>
            <summary type="text">குழந்தைகள் ஓய்வெடுக்கவும், தங்களது பாடசாலை விடுமுறைகளை மகிழ்ச்சியாகக் கழிக்கவும் போதுமான நேரத்தை வழங்குமாறு பிரதமர் ஹரினி அமரசூரிய பெற்றோர்களையும் ஆசி...</summary>
            <content type="html"><![CDATA[<p>குழந்தைகள் ஓய்வெடுக்கவும், தங்களது பாடசாலை விடுமுறைகளை மகிழ்ச்சியாகக் கழிக்கவும் போதுமான நேரத்தை வழங்குமாறு பிரதமர் ஹரினி அமரசூரிய பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் கேட்டக்கொண்டுள்ளார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், குழந்தைகளின் மனநலத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு, விடுமுறை நாட்களில் அவர்கள் மீது அதிகப்படியான கல்வி சார்ந்த கோரிக்கைகளை வைப்பதற்கு எதிராகவும் எச்சரித்தார்.</p><h2>மாணவர்கள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டவரும் நடவடிக்கை</h2><p>&nbsp;குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி சீர்திருத்தங்கள், பள்ளிப் போக்குவரத்துப் பாதுகாப்பு மற்றும் மாணவர்களுக்கான உளவியல் சமூக ஆதரவு ஆகியவற்றில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் பிரதமர் எடுத்துரைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c10bbdf-6322-4816-a528-64c8690490f9/26-6a86f7297029c.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T12:46:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் மிக அதிக அளவில் விலை உயர்ந்துள்ள பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/consumer-products-personal-finance-rises-in-uk-1787229289"></link>
            <id>https://news.lankasri.com/article/consumer-products-personal-finance-rises-in-uk-1787229289</id>
            <summary type="text">The products that increased in price most in UK: பிரித்தானியாவில் மிக அதிக அளவில் விலை உயர்ந்துள்ள பொருட்கள் எவை தெரியுமா?


கோவிட் காலகட்டத்துக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>The products that increased in price most in UK: பிரித்தானியாவில் மிக அதிக அளவில் விலை உயர்ந்துள்ள பொருட்கள் எவை தெரியுமா?
</p><p>

கோவிட் காலகட்டத்துக்குப் பிறகு, அதாவது, லாக் டவுனுக்குப் பிறகு, இன்னும் தெளிவாகக் கூறினால், 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு, பிரித்தானியாவில் சில பொருட்கள் கணிசமான அளவில் விலை உயர்ந்துள்ளன.
</p><h3>
மிக அதிக அளவில் விலை உயர்ந்துள்ள பொருட்கள்
</h3><p>
ஆய்வமைப்பு ஒன்று மேற்கொண்ட ஆய்வில், மிக அதிக அளவில் விலை உயர்ந்துள்ள பொருள் ஆலிவ் ஆயில் என தெரியவந்துள்ளது. ஆம், ஆலிவ் ஆயில், 116. 3 சதவிகிதம் விலை உயர்ந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6542905c-467c-4f12-8710-96c35cf11c58/26-6a86f46b1d4d4.webp' /></p><p>
அதற்கு அடுத்தபடியாக, கால்நடைகளின் உள்ளுறுப்புகளால் செய்யப்படும் உணவாக உட்கொள்ளப்படும் offal என்னும் பொருள், 75.8 சதவிகிதமும், மாட்டிறைச்சி 61.3 சதவிகிதமும் விலை உயர்ந்துள்ளன.</p><p>

அதைத் தொடர்ந்து, முட்டை விலை 56.7 சதவிகிதமும், பாஸ்தா உணவின் விலை 54.9 சதவிகிதமும், சொக்லேட் விலை 51.2சதவிகிதமும் உயர்ந்துள்ளன.
</p><p>
மக்கள் அதிகம் பயன்படுத்தும் பாலின் விலை 45.8 சதவிகிதமும், சீஸ் விலை 42.2 சதவிகிதமும் உயர்ந்துள்ளன.&nbsp;</p><p></p><p>
மேலும், வாகனக் காப்பீடு 72.0 சதவிகிதமும், எரிவாயு விலை 63.3 சதவிகிதமும், மின்சாரக் கட்டணம் 40.8 சதவிகிதமும் உயர்ந்துள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac06bb8f-cf72-4d8b-94b1-c08e643ce395/26-6a86f46bc3382.webp' /></p><p>
விலை குறைந்துள்ள பொருட்களைப் பார்த்தால், கணினி விலை 24.6 சதவிகிதம் குறைந்துள்ளதை வேண்டுமானால் குறிப்பிட்டுச் சொல்லலாம்!
</p><p>
விடயம் என்னவென்றால், நவம்பர் வாக்கில், மீண்டும் பல பொருட்கள் 3.5 சதவிகிதம் வரை விலை உயர இருப்பதாக ஆய்வமைப்புகள் தெரிவித்துள்ளன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T12:42:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோலாகலமாக நடக்கும் முத்து-மீனா, ரவி-ஸ்ருதி திருமணம்... சிறகடிக்க ஆசை சீரியல் கொண்டாட்டமான புரொமோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/siragadikka-aasai-20th-to-23rd-august-2026-promo-1787223327"></link>
            <id>https://cineulagam.com/article/siragadikka-aasai-20th-to-23rd-august-2026-promo-1787223327</id>
            <summary type="text">சிறகடிக்க ஆசைசிறகடிக்க ஆசை சீரியலில் எப்போது மனோஜ் செய்யும் அட்டுழீயம் வெளியே வரும் என தான் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள். ரோஹினியை கர்ப்பமாக்கிவிட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சிறகடிக்க ஆசை</h2><p>சிறகடிக்க ஆசை சீரியலில் எப்போது மனோஜ் செய்யும் அட்டுழீயம் வெளியே வரும் என தான் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள். </p><p>ரோஹினியை கர்ப்பமாக்கிவிட்டு விவாகரத்து செய்யும் முடிவில் இருக்கிறார் மனோஜ். ஆனால் வயிற்றில் வளரும் குழந்தையை வைத்து க்ரிஷுடன் மனோஜை பழக வைத்து ஒரு குடும்பமாக மாறலாம் என ரோஹினி ஒரு பிளான் போட்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db140444-3b8b-4e97-98de-9d689a8e1c7d/26-6a86deb526da9.webp' /></p><p> </p><p>இதற்கு இடையில் கனகா அம்மா மனோஜிற்கு தனது சொத்தை எழுதி வைக்க முடிவு செய்திருக்கிறார். இரண்டு மனைவி டிராமா போடும் மனோஜ் முகத்திரை எப்போது கிழியும் என தெரியவில்லை.</p><h2>புரொமோ</h2><p>
சீரியலில் ரசிகர்கள் ஒருவிஷயம் எதிர்ப்பார்க்க திடீரென பாட்டி மறதி டிராமா செல்கிறது. அவர் முத்து-மீனா, ரவி-ஸ்ருதி இருவருக்கும் திருமணம் செய்துவைக்க முடிவு செய்ய ஏற்பாடுகளும் நடக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6dd7705-a113-485d-857f-229f10034de1/26-6a86deb446d65.webp' /></p><p> </p><p>தற்போது சீரியலின் புதிய புரொமோவில், இரண்டு அழகான ஜோடிக்கு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் திருமணம் நடக்கிறது. இதோ புரொமோ,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/r7wndISeVtg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-20T12:32:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டத்தரணிகள் சங்கம் நாடாளுமன்றத்துக்கு வருகை தராதமைக்கு அச்சுறுத்தலே காரணம்! சஜித் பகிரங்க குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lawyers-association-not-attending-parliament-1787227976"></link>
            <id>https://tamilwin.com/article/lawyers-association-not-attending-parliament-1787227976</id>
            <summary type="text">அரசின் அச்சுறுத்தல் பாணியிலான கருத்துத் தெரிவிப்புக்கள் காரணமாகவே இலங்கை
சட்டத்தரணிகள் சங்கம் இன்று நாடாளுமன்றத்துக்கு வருகை தரவில்லை என்று
எதிர்க்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசின் அச்சுறுத்தல் பாணியிலான கருத்துத் தெரிவிப்புக்கள் காரணமாகவே இலங்கை
சட்டத்தரணிகள் சங்கம் இன்று நாடாளுமன்றத்துக்கு வருகை தரவில்லை என்று
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் மற்றும் உயர்நீதிமன்றங்களுக்கு நீதியரசர்களை
நியமிக்காமை தொடர்பில் விடயங்களை முன்வைப்பதற்காக, சட்டத்தரணிகள் சங்கத்தின்
தலைவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பு தொடர்பான சகல கடித ஆவணங்களையும் ஹன்சாட்
பதிவுகளில் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் இன்று சபையில் குறிப்பிட்டார்.</p><h2>ஊடகங்கள் வாயிலாக தவறான பிரசாரங்கள்</h2><p>
</p><p>
இது தொடர்பில் இதற்கு முன்னர் சபாநாயகருக்கும் சபை முதல்வருக்கும்
அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும், ஊடகங்கள் வாயிலாகத் தவறான பிரசாரங்கள்
கொண்டு செல்லப்பட்டன என்றும் அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39624379-9417-4091-95d1-e73cdfa2a276/26-6a86f3565340f.webp' />&nbsp; &nbsp;</p><p>
</p><p>
எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் இது தனது தனிப்பட்ட அழைப்பு அல்ல என்றும்,
தான் ஓர் இணைப்பாளராகவே செயற்பட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

சபாநாயகர் ஊடாக நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் இதில் பங்கேற்க
வேண்டும் என்றே தான் வலியுறுத்தினார் என்றும், இதனை வேறு விதமாகத் தவறாகச்
சித்தரித்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><h2>அரச தரப்பினரின் நிலைப்பாடு</h2><p>

அரச தரப்பினரின் நிலைப்பாடு குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,</p><p>"நேற்று நாடாளுமன்றத்தில் அரசைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்
அச்சுறுத்தலான தொனியிலேயே உரையாற்றினர். அரசமைப்பின் ஊடாக கருத்துத்
தெரிவிக்கும் பேச்சுச் சுதந்திரம் இந்த நாட்டில் இல்லையா எனக் கேட்கின்றேன்.
அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்தை எந்தவொரு நபராலும் கட்டுப்படுத்த
முடியாது என்றார்.</p><p>

சட்டத்தரணிகள் சங்கம் வேறொரு நாளைக் கோரியுள்ள வேளையில், அரசுக்குச் சார்பான
ஊடகங்கள், சட்டத்தரணிகள் சங்கம் அதனை நிராகரித்துள்ளது என்று தவறான
பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
</p><p>
எதிர்க்கட்சித் தலைவரைப் போன்றே சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் ஒரு
பிரஜையாவார் என்றும், பிரஜைகளைச் சமமாக நடத்துவது அரசமைப்பின் மூலம்
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>&nbsp;</p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/qiT2Uau4Yk8" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-20T12:32:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் அடுத்த பிரதமர் விஜய் ; சூடாகி கனிமொழி கூறிய பதில்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cm-vijay-as-india-next-pm-kanimozhi-response-1787218706"></link>
            <id>https://jvpnews.com/article/cm-vijay-as-india-next-pm-kanimozhi-response-1787218706</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியாவின் அடுத்த பிரதமர் விஜய் தான் என்று தமிழக வெற்றிக் கழகத்தினர் தீவிரமாக பேசி வரும் நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் கட்சியினர் தான்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியாவின் அடுத்த பிரதமர் விஜய் தான் என்று தமிழக வெற்றிக் கழகத்தினர் தீவிரமாக பேசி வரும் நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் கட்சியினர் தான் பதில் சொல்ல வேண்டும் என்று திமுக துணை பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி கூறியுள்ளார்.</p><p> 

தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவரிடம், தவெக தரப்பு முன்வைக்கும் இந்த வாதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bec890fd-3f55-44d4-94bd-a514cfb6b05f/26-6a86cb13b1400.webp' /></p><h2>&nbsp;தமிழக அரசியலில் தவெகவின் வளர்ச்சி</h2><p>
</p><p>
இதற்கு பதிலளித்த கனிமொழி, "இந்த விவகாரத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் உள்ள நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் மிக முக்கியமானது. நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதில் எந்த குறிக்கோளும் இல்லை என்றார்.</p><p></p><p> 
 
மேலும், கடந்த காலத்தை நினைவுகூர்ந்த அவர், திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகித்தபோது, ராகுல் காந்திதான் பிரதமராக வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக சொல்வதற்கு முன்பே மு.க. ஸ்டாலின் பகிரங்கமாக அறிவித்ததையும் கனிமொழி சுட்டிக்காட்டினார்.</p><p></p><p>
</p><p> 
தற்போது கூட்டணியில் அங்கம் வகிக்கும் சூழலில், இதுபோன்ற புதிய அறிவிப்புகள் வெளியாகும் போது காங்கிரஸ் தரப்புதான் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.</p><p></p><p> </p><p>

இன்னிலையில் கனிமொழியின் இந்த பதில் தமிழக அரசியலில் தவெகவின் வளர்ச்சி மற்றும் தேசிய கட்சிகளின் கூட்டணி நிலைப்பாடு குறித்தான விவாதங்களை இந்தச் சந்திப்பு மேலும் சூடாக்கியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-20T12:31:04+00:00</updated>
        </entry>
    </feed>
