<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-07T01:15:41+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் பிரபல டிவி தொகுப்பாளினி உட்பட 12 பேருக்குத் தூக்கு தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tv-presenter-among-12-sentenced-to-death-1788703248"></link>
            <id>https://canadamirror.com/article/tv-presenter-among-12-sentenced-to-death-1788703248</id>
            <summary type="text">எகிப்தில் சட்டவிரோதமாகப் போதைப்பொருட்களைத் தயாரித்து கடத்திய வழக்கில், அந்நாட்டின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான சாரா கலீஃபா உட்பட 12 பேருக்குத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எகிப்தில் சட்டவிரோதமாகப் போதைப்பொருட்களைத் தயாரித்து கடத்திய வழக்கில், அந்நாட்டின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான சாரா கலீஃபா உட்பட 12 பேருக்குத் தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றக் கெய்ரோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. </p><p>
39 வயதான சாரா கலீஃபா, எகிப்தில் குற்றவியல் தொடர்பான 'மிஷன் இம்பாசிபிள்' என்ற புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாவார். </p><p>
போதைப்பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்து, செயற்கைப் போதைப்பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்த குற்றவியல் கும்பலுடன் இணைந்து செயல்பட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fa5d369-5466-46ea-9047-3bb4ae5316da/26-6a9d7215b0903.webp' /></p><p> </p><p>
மேலும், உரிமம் பெறாத சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்களை வைத்திருந்த குற்றச்சாட்டுகளும் இவர்கள் மீது நிரூபிக்கப்பட்டுள்ளன. 
இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், 7 பேர் விடுவிக்கப்பட்டனர்.
</p><p>கடந்த மாதம் முதற்கட்டத் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட போதிலும், எகிப்திய சட்டப்படி மரண தண்டனை விவகாரங்களில் எகிப்தின் தலைமை மதத் தலைவரான 'கிராண்ட் முஃப்தி'யின் மத ரீதியான ஆலோசனையைப் பெற்ற பிறகே இத்தீர்ப்பு தற்போது முறைப்படி உறுதி செய்யப்பட்டுள்ளது. </p><p>
விசாரணையின் போது, 750 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருட்களும், அவற்றைச் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. </p><p>
20 சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் ஆடியோ/வீடியோ உரையாடல்கள் அடங்கிய மின்னணு ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. </p><p>
எனினும் தன் மீதான குற்றச்சாட்டுகளை சாரா கலீஃபா முற்றிலுமாக மறுத்துள்ளார். போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் வைத்துப் புகைப்படம் எடுக்கப்படும் வரை தான் போதைப்பொருட்களைப் பார்த்ததே இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். </p><p>
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாகச் சாரா கலீஃபாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.</p><p>
இதேவேளை, சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்ட 2025 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, எகிப்தில் அந்த ஆண்டில் மட்டும் 492 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, அதில் 23 தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.</p><p> 
சர்வதேச சட்ட விதிகளின்படி "திட்டமிட்ட கொலை" குற்றங்களுக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற போதிலும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களுக்கும் எகிப்தில் மரண தண்டனை வழங்கப்படுவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T01:08:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 கைதிகளுடன் நாமல்; மோசமடையும் சூழல்; அநுரவின் அதிரடி பாய்ச்சல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-with-10-prisoners-anura-s-aggressive-move-1788723922"></link>
            <id>https://jvpnews.com/article/namal-with-10-prisoners-anura-s-aggressive-move-1788723922</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு எதிர்வரும் செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சிறைச்சாலையில் எந்தவிதமான உடல் பாதிப்புகளும் இல்லை என சிறைச்சாலைத் தரப்புகள் தெரிவித்துள்ளன.</p><p>
</p><p></p><p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானக் கொள்வனவு தொடர்பான விசாரணையின் அடிப்படையில் கடந்த 4ஆம் திகதி நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார். </p><p>சுமார் ஐந்து மணிநேர விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.&nbsp;</p><p>சிறைச்சாலைத் தரப்பின் தகவலின்படி, அவருக்கு விசேட சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும், ஏனைய 10 கைதிகளுடன் வழமையான சிறைச்சாலை நடைமுறைகளுக்கு அமையவே அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

இதேவேளை, நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானக் கொள்வனவு விவகாரத்துடன் தொடர்புடையதாகும்.</p><p> 2012–2013 காலப்பகுதியில் இடம்பெற்ற விமானக் கொள்வனவு ஒப்பந்தங்களில் இலஞ்சப் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அவரது கைது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. </p><p>விசாரணைகளில் வெளிநாடுகளின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் ‘கிறிஸ்’ (Krrish) விவகாரங்களுடன் தொடர்புபடுத்தப்படும் பணப் பரிமாற்றங்கள் நன்கொடைகள் எனவும், அவற்றை இலஞ்சமாகக் கருத முடியாது எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.</p><p>இந்த விடயம் தொடர்பான மேலும் பல தகவல்களை கீழே காணப்படும் காணொளியில் முழுமையாகப் பார்வையிடலாம்.......</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tgSkYHLgmMQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-07T01:07:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம் ; அசுர வளர்ச்சியை காணப்போகும் ராசிக்காரங்க இவங்க தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kuru-bhavan-asura-valarchi-kana-pogum-rasi-1788740180"></link>
            <id>https://jvpnews.com/article/kuru-bhavan-asura-valarchi-kana-pogum-rasi-1788740180</id>
            <summary type="text">ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் செல்வம், அறிவு, மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் செல்வம், அறிவு, மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். நவகிரகங்களில் குரு பகவான் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் பயணிப்பார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d9861d4-00be-4230-bb8f-47ec7f397588/26-6a9e0256b0bbe.webp' /></p><p>இந்த விபரீத ராஜயோகமானது ஒருவரது வாழ்க்கையில் குறுகிய காலத்தில் நல்ல வளர்ச்சியையும், நிதி நிலையில் முன்னேற்றத்தையும் கொண்டு வரக்கூடிய அளவில் சக்தி வாய்ந்தது. இப்போது குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகத்தால் நல்ல வளர்ச்சியைக் காணும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/506918e0-7967-4179-acfb-192d1e4e1a40/26-6a9e025608ded.webp' /></p><h3>சிம்மம்
</h3><p>சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டில் குரு பகவான் உள்ளார். இதனால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகத்தால் வெளிநாட்டுடன் தொடர்புடைய தொழிலை அல்லது வேலையை செய்பவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். வெளிநாடு செல்லும் கனவு இருந்தால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். நீண்ட காலமாக இழுத்துக் கொண்டிருந்த அரசு வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காணக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4e19356-1d12-416d-8bdf-78c80216eb36/26-6a9e0258d2bae.webp' /></p><h3>தனுசு</h3><p>
தனுசு ராசியின் 8 ஆவது வீட்டில் குரு பகவான் உள்ளார். இதனால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகத்தால், நீண்ட கால பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் குரு பகவானின் அருளால் கைக்கு வந்து சேரும்.

ஏற்கனவே முதலீடுகளை செய்து, அதிலிருந்து எந்த நலனையும் பெறாமல் இருந்தால், இக்காலத்தில் அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/788672a3-c94e-4215-a685-8822eaec39a2/26-6a9e0258192bd.webp' /></p><h3>கும்பம்
</h3><p>கும்ப ராசியின் 6 ஆவது வீட்டில் குரு பகவான் உள்ளார். இதனால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகத்தால் நிதி நிலைமை வலுவடையும், கடன் தொல்லைகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2c5f1e9-1cce-4410-aef2-0ca0c78734c9/26-6a9e0257639b9.webp' /></p>]]></content>
            <updated>2026-09-07T01:07:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்ச குடும்பத்தை தொடரும் விசாரணைகள்! மீண்டும் சிக்கலில் சிக்கிய ஷிரந்தி ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pet-scan-fundraising-probe-into-siriliya-saviya-1788739755"></link>
            <id>https://tamilwin.com/article/pet-scan-fundraising-probe-into-siriliya-saviya-1788739755</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவினால் நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படும் சிரிலிய சவிய அமைப்பு, மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவினால் நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படும் சிரிலிய சவிய அமைப்பு, மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு PET Scan இயந்திரம் ஒன்றை வழங்குவதற்காக நிதி திரட்டியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சிரிலிய சவிய அமைப்பு, PET Scan இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக அரச மற்றும் தனியார் வங்கிகளிடம் நிதியுதவி கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, தேசிய சேமிப்பு வங்கியும் குறித்த திட்டத்திற்காக ஒரு மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><h2>நிதி திரட்டு</h2><p>

இந்த விவகாரம் தொடர்பில், அப்போது தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக இருந்த பிரதீப் காரியவசத்திடம் வாக்குமூலம் பெறுமாறு சட்டமா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cea927d-8f5b-4c4c-aad9-681e6664965a/26-6a9e0311221a5.webp' /></p><p>
</p><p>
எனினும், மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட PET Scan இயந்திரம், சிரிலிய சவிய அமைப்பினால் கொள்வனவு செய்யப்படவில்லை என்றும், அது சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனால், சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட PET Scan இயந்திரத்தை கொள்வனவு செய்வதாகக் கூறி நிதி திரட்டப்பட்டதன் மூலம் மோசடி ஏதேனும் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T01:05:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கம் பணம் கொடுத்து யார் மீதும் சேறு பூசுவதில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-will-not-sling-mud-at-anybody-1788743048"></link>
            <id>https://tamilwin.com/article/npp-will-not-sling-mud-at-anybody-1788743048</id>
            <summary type="text">அரசாங்கம் பணம் கொடுத்து யார் மீதும் சேறு பூசுவதில்லை என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்காகச் சமூக ஊடகங்களில் தன்னார்வமாக குரல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கம் பணம் கொடுத்து யார் மீதும் சேறு பூசுவதில்லை என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>
அரசாங்கத்திற்காகச் சமூக ஊடகங்களில் தன்னார்வமாக குரல் கொடுக்கும் குழுக்களைத் தடுக்கும் சக்தி தமக்கு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
</p><p> இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அமைச்சர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8503ccc2-047e-4a7f-898d-0fec97ec10de/26-6a9e0d89d65a2.webp' /></p><p>
தேசிய மக்கள் சக்திக்காகச் சமூக ஊடகங்களில் தன்னார்வமாக முன்வருபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் எனவும், அரசாங்கம் எவரையும் அவ்வாறு செய்யுமாறு கேட்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
</p><p>தன்னார்வ அடிப்படையில் அரசாங்கத்தின் சார்பில் சமூக ஊடகங்களில் கருத்து வெளியிடுவேரை மதிப்பதாகவும் பாராட்டி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இவர்கள் பணத்திற்காக எழுதுபவர்களோ, கூலிக்குச் சேறுபூசுபவர்களோ அல்லது பணத்திற்காகக் கருத்துகளைப் பதிவிடுபவர்களோ அல்லர். தமது இயக்கத்திற்காகத் தன்னார்வமாக முன்வரும் ஒரு மிகப்பெரிய மக்கள் கூட்டம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>தன்னார்வமாக உழைக்கும் இத்தகைய படைகள் தானாகவே உருவாகின்றன எனவும் இவ்வாறான படைகளே முற்போக்கு மக்கள் இயக்கங்களைப் பாதுகாக்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.</p><p>
பிற எந்தவொரு சக்தியையும் விட, முற்போக்கு மக்கள் இயக்கங்கள் மூலம் தானாகவே உருவாகும் பரந்த மக்கள் சக்தியே மிகவும் வலிமையானது என சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>அத்தகைய சக்தி உருவாகுவது நல்லதே தவிர, அதைத் தடுக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை எனவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T01:04:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்லாந்து செல்லும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு! விசா விதியில் அதிரடி மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/major-change-for-sri-lankans-traveling-to-thailand-1788742247"></link>
            <id>https://tamilwin.com/article/major-change-for-sri-lankans-traveling-to-thailand-1788742247</id>
            <summary type="text">இலங்கை கடவுச்சீட்டு (Passport) வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்குத்
திட்டத்தில் தாய்லாந்து அரசு அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கடவுச்சீட்டு (Passport) வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்குத்
திட்டத்தில் தாய்லாந்து அரசு அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது.</p><p>

இந்த நிலையில் வரும் செப்டம்பர் 15, 2026 முதல் இலங்கையர்கள் தாய்லாந்திற்கு
விசா இன்றி பயணம் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>இலங்கை பயணிகள்</h2><p>

மேலும் செப்டம்பர் 15 முதல் தாய்லாந்து செல்லும் அனைத்து இலங்கை பயணிகளும்
புறப்படுவதற்கு முன்பே உரிய விசாவைப் பெற வேண்டியது அவசியமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0d795e6-5e5c-4d98-92dc-473aa47289bf/26-6a9e0b9b51252.webp' /></p><p>

அத்துடன் விசா விண்ணப்பங்களையும் அதற்கான கட்டணங்களையும் தாய்லாந்தின்
அதிகாரப்பூர்வ இணையவழி e-Visa முறைமை மூலமாகவே சமர்ப்பிக்க வேண்டும்.</p><p>

இதேவேளை கொழும்பில் உள்ள தாய்லாந்து தூதரகம் நேரில் சமர்ப்பிக்கப்படும் விசா
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளாது.</p><h2>&nbsp;விசா இரத்து</h2><p>
</p><p>
எனவே செப்டம்பர் 15-க்கு முன்னர் ஏற்கனவே உள்ள விசா விலக்கு முறையின் கீழ்
தாய்லாந்திற்குள் நுழையும் பயணிகள், அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட காலம் வரை
தொடர்ந்து அங்கு தங்கியிருக்க முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e05c0b24-9742-4ffb-8adb-9a2f5e2d25f9/26-6a9e0b9c1e27f.webp' /></p><p>

இந்தநிலையில் தேசிய பாதுகாப்பு, சுற்றுலா, பொருளாதார நலன்கள் மற்றும் பரஸ்பர
ஒத்துழைப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தாய்லாந்து அரச அமைச்சரவை இந்த முடிவை
எடுத்துள்ளது.
</p><p>
இது குறித்த "புதிய விசா நடவடிக்கைகள்" பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை
கொழும்பில் உள்ள தாய்லாந்து தூதரகம் வெளியிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T01:02:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிருசாந்தியின் நினைவு நாளில் ஜெனிவாவில் ஓங்கி ஒலிக்கப்போகும் அவலங்களின் கேள்விகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kirushanthi-kumaraswami-30-commemoration-1788707672"></link>
            <id>https://ibctamil.com/article/kirushanthi-kumaraswami-30-commemoration-1788707672</id>
            <summary type="text">கிருஷாந்தி குமாரசாமி படுகொலை செய்யப்பட்டு இன்று செப்டெம்பர் 7ஆம் திகதியுடன் 30 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 1996ஆம் ஆண்டு செம்மணி இராணுவச் சோதனைச் சாவடியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிருஷாந்தி குமாரசாமி படுகொலை செய்யப்பட்டு இன்று செப்டெம்பர் 7ஆம் திகதியுடன் 30 ஆண்டுகள் நிறைவடைகின்றன. </p><p>1996ஆம் ஆண்டு செம்மணி இராணுவச் சோதனைச் சாவடியில் கைது செய்யப்பட்ட 18 வயதான கிருஷாந்தி, பின்னர் பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதுடன், அவரைத் தேடிச் சென்ற அவரது தாயார், சகோதரர் மற்றும் அயலவரும் கொல்லப்பட்டனர். </p><p>இந்த வழக்கில் இராணுவத்தினரை உள்ளடக்கிய குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டது இலங்கையின் கடந்தகால மனித உரிமை வழக்குகளில் முக்கியத்துவமாகியது.</p><p></p><h2>கிருஷாந்தி வழக்கின் நீதி</h2><p>ஆனால், கிருஷாந்தி வழக்கின் நீதிமன்றத் தீர்ப்பு செம்மணியின் முழு உண்மையை வெளிக்கொண்டு வந்ததா? என்ற கேள்விக்கு மூன்று தசாப்தங்களுக்குப் பின்னரும் முழுமையான பதில் கிடைக்கவில்லை.&nbsp;</p><p>1998ஆம் ஆண்டு கிருஷாந்தி வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்ச செம்மணியில் நூற்றுக்கணக்கானோர் புதைக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது, வழக்கை ஒரு தனிப்பட்ட கொலைச் சம்பவத்திலிருந்து மிகப் பெரிய மனித உரிமை விவகாரமாக மாற்றியது. </p><p>அதன் பின்னர் 1999ஆம் ஆண்டு செம்மணியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.</p><p>ஆனால், அந்த அகழ்வுகளால் எழுந்த முக்கியமான கேள்விகளுக்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் முழுமையான நீதிசார் விசாரணை நடைபெறவில்லை. </p><p>குறிப்பாக, காணாமல் போனவர்களின் எண்ணிக்கை, புதைகுழிகளின் முழுமையான பரப்பு, அவர்களின் மரணத்துக்குப் பொறுப்பானவர்கள் மற்றும் அவர்களுக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படும் உயர்மட்ட அதிகாரிகள் தொடர்பான கேள்விகள் நீடித்தன.</p><p></p><h2>செம்மணி&nbsp;உண்மைகள்</h2><p>இதனால் கிருஷாந்தி குமாரசாமி வழக்கு என்பது ஒரு தனிமனித படுகொலைக்கான நீதி என்ற எல்லையைத் தாண்டி, செம்மணியில் புதைக்கப்பட்டிருக்கக்கூடிய ஏனைய உயிர்களின் உண்மையையும் வெளிக்கொணரும் திறவுகோலாக மாறியுள்ளது.</p><p>கடந்த 2025ஆம் ஆண்டு செம்மணி பகுதியில் மீண்டும் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றபோது மனித எச்சங்கள் பெருமளவில் கண்டெடுக்கப்பட்டமை, மூன்று தசாப்தங்களாக மறைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் உண்மைகள் மீண்டும் தேசிய மற்றும் சர்வதேச கவனத்திற்கு வந்தன.</p><p> 2025 செப்டெம்பர் நினைவேந்தலின் போது, அங்கு நூற்றுக்கணக்கான மனித எச்சங்கள் நீதிமன்றப் பாதுகாப்பில் இருப்பதாக உள்ளூர் செய்திகள் தெரிவித்திருந்தன.</p><p>மேலும், இந்த ஆண்டு கிருஷாந்தியின் 30ஆவது நினைவு தினம் மற்றொரு முக்கியமான சர்வதேச நிகழ்வுடன் இணைகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது வழக்கமான அமர்வு இன்று, செப்டெம்பர் 7ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகிறது. </p><p>இந்த அமர்வில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் எழுத்து அறிக்கை தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.</p><p>இதனால், கிருஷாந்தியின் 30ஆவது நினைவு தினம் ஒரு குறியீட்டு முக்கியத்துவத்தையும் பெறுகிறது.</p><p></p><h2>ஜெனீவாவில் இலங்கை</h2><p>ஒருபுறம், செம்மணியில் புதைக்கப்பட்ட உண்மையைத் தேடும் குடும்பங்கள்.

மறுபுறம், ஜெனீவாவில் இலங்கையின் கடந்தகால மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் தொடர்பான சர்வதேச விவாதம்.
</p><p>
இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரே நாளில் சந்திப்பது, இலங்கையின் கடந்தகால குற்றங்கள் தொடர்பான விசாரணைகளின் நிலை குறித்து மீண்டும் கேள்வி எழுப்புகிறது.</p><p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் கடந்தகால அரசியல் கொலைகள், கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதாக தேர்தல் காலத்தில் உறுதியளித்திருந்தது. </p><p>ஆனால், தற்போதைய நிலைமையில் பல முக்கிய வழக்குகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இன்னும் ஏற்படவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு&nbsp; தனது சமீபத்திய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. </p><p>குறிப்பாக, கடந்தகால கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகள் தேங்கிக் கிடப்பதும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதில் அரசியல் விருப்பம் போதுமானதாக இல்லாதிருப்பதும் முக்கிய கவலையாக முன்வைக்கப்பட்டுள்ளது. </p><p>அதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கடந்த பல ஆண்டுகளாக இலங்கை தொடர்பில் பொறுப்புக்கூறல் மற்றும் ஆதாரங்களைப் பாதுகாப்பது குறித்து தீர்மானங்களை நிறைவேற்றி வந்துள்ளது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p> </p>]]></content>
            <updated>2026-09-07T01:00:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவுக்கான முதல் வேளாண்மை AI மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ள Google]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/google-launches-india-agri-ai-models-1788742853"></link>
            <id>https://news.lankasri.com/article/google-launches-india-agri-ai-models-1788742853</id>
            <summary type="text">Google நிறுவனம், இந்தியாவுக்கான முதல் வேளாண்மை செயற்கை நுண்ணறிவு (AI) மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

Google DeepMind-இன் AnthroKrishi குழு உருவாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Google நிறுவனம், இந்தியாவுக்கான முதல் வேளாண்மை செயற்கை நுண்ணறிவு (AI) மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
</p><p>
Google DeepMind-இன் AnthroKrishi குழு உருவாக்கிய இந்த மாடல்கள், விவசாய நிலங்களைப் புரிந்துகொள்வதற்கும், பயிர் நிலைமைகளை கண்காணிப்பதற்கும் உதவுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a04e778d-d2cd-46b9-b830-79b0b1ba4006/26-6a9e0cc68a9ce.webp' /></p><p>
</p><h2>
இரண்டு முக்கிய மாடல்கள்</h2><p><b>Agricultural Landscape Understanding (ALU):</b> நிலத் தரவுகளை ஆய்வு செய்து, விவசாய நிலப் படங்களை அடையாளம் காண உதவுகிறது. இது நில வரைபடம், நிலப் பயன்பாடு, டிஜிட்டல் வேளாண்மை போன்ற பயன்பாடுகளுக்கு உதவுகிறது.
</p><p><b>
Agricultural Monitoring and Event Detection (AMED):</b> பயிர் நிலைமைகள், நிலப் பயன்பாட்டில் மாற்றங்கள், விவசாய சம்பவங்களை கண்காணிக்கிறது. ALU-உடன் இணைந்து பயன்படுத்தப்படும் போது, பெரிய அளவில் பயிர் கண்காணிப்பு செய்ய முடிகிறது.
</p><p></p><p>இந்த மாடல்கள், Google Earth-இல் தரவு அடுக்குகளாக இணைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தியாவைத் தவிர கென்யா, உகாண்டா, கானா, ருவாண்டா, நைஜீரியா, சாம்பியா போன்ற நாடுகளிலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
</p><h2>
பயன்பாட்டு உதாரணங்கள்</h2><p>CarbonFarm: குறைந்த கார்பன் அரிசி சாகுபடிக்கு ALU API மற்றும் ஜெமினியைப் பயன்படுத்தியுள்ளது, 2030 க்குள் 2 மில்லியன் ஹெக்டேர் இலக்கு நிர்ணயித்துள்ளது.
</p><p>
TerraStack (IIT Bombay startup): 140 மில்லியன் ஹெக்டேர் நில வரைபடமாக்க பயன்படுத்தியுள்ளது.
</p><p>
கர்நாடகா நீர்வளத் துறை: 2.6 மில்லியன் ஹெக்டேர் பாசன நிலங்களுக்கு நீர் மேலாண்மை செய்ய பயன்படுத்தியுள்ளது.
</p><p>
Telangana ADeX: டிஜிட்டல் வேளாண்மை சேவைகளுக்கு பயன்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த AI மாடல்கள், precision agriculture, irrigation planning, crop monitoring போன்ற துறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T00:57:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் நிமல் பெரேராவை சந்திக்க முயற்சித்த நாமலின் சட்டத்தரணி!மெல்பேர்ன் நகரில் நடந்த அதிர்ச்சிக்கும் சம்பவங்கள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-nimal-perera-businessman-1788742407"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-nimal-perera-businessman-1788742407</id>
            <summary type="text">நாமல் ராஜபக்சவின் நெருங்கிய நண்பராக இருந்த தொழிலதிபர் நிமல் பெரேரா,இரு சந்தர்ப்பங்களில் சாட்சியமளிக்க உள்ளதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்சவின் நெருங்கிய நண்பராக இருந்த தொழிலதிபர் நிமல் பெரேரா,இரு சந்தர்ப்பங்களில் சாட்சியமளிக்க உள்ளதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். </p><p>மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலம் முதல் ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பராக இருந்த இவர், தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.</p><p>தொழிலதிபர் நிமல் பெரேராவை நாமல் தொடர்பில் சாட்சியமளிக்க வேண்டாம் என அவுஸ்திரேலியாவிலும் பாரிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
</p><h2>

</h2><p></p><h2>நிமல் பெரேராவை சந்திக்க முயற்சித்தவர்</h2><p>

நாமல் ராஜபக்சவின் சகாக்களில் ஒருவரான இந்திக கருணாஜீவ, மெல்பேர்ன், விக்டோரியாவில் வசித்து வரும் வழக்கறிஞராவார். </p><p>ராஜபக்சவின் நீண்டகால நண்பரான இவர், அவுஸ்திரேலியாவில் உள்ள நிமல் பெரேராவைத் தொடர்புகொண்டு நாமல் ராஜபக்சவிற்கு எதிராக எந்தவொரு வாக்குமூலத்தையும் வழங்க வேண்டாம் என கோருவதற்கு தீவிர முயற்சி செய்ததாக தெரியவந்துள்ளது. </p><p>கருணாஜீவ, Narre Warren, VIC 3805, 66 Victor Crescent, Level 2, Suite 319 இல் அமைந்துள்ள ISK Law இன் முதன்மை வழக்கறிஞராவார்.
</p><p>
ஆனால் கருணாஜீவவால் நிமல் பெரேராவைத் தொடர்புகொள்ள முடியவில்லை. நிமல் பெரேரா அவரது அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும் குறுஞ்செய்திகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்த்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3e69677-6fbf-4574-a2f3-3c5249c9250c/26-6a9e0b09be350.webp' /></p><p>இதன் காரணமாக கருணாஜீவவின் முயற்சி தோல்வியடைந்ததாகவும், இச்சம்பவம் நாமல் ராஜபக்சவை முற்றிலும் விரக்தியடையச் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அவுஸ்திரேலியா சென்ற CID மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் இது தெரியவந்ததையடுத்து, குற்றப் புலனாய்வுத் துறை (CID) மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நிமல் பெரேராவிடமிருந்து சத்தியக்கடதாசி (Affidavit) பெறுவதற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ளனர். </p><p>அங்கு நிமல் பெரேரா, நாமல் ராஜபக்சவிற்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை எவ்வாறு வழங்கினார் என்பதைக் குறிப்பிட்டு சத்தியக்கடதாசியை அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார்.
</p><h2>
அவுஸ்திரேலிய அரசு வழங்கிய வாக்குறுதி</h2><p>நிமல் பெரேராவிற்கு பாதுகாப்பை வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அவர் அவுஸ்திரேலியாவிலிருந்து 'Zoom' வழியாக சாட்சியமளிக்கவுள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த விசாரணைக்கு அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பரஸ்பர சட்ட உதவியை வழங்கியுள்ளதோடு, தற்போது விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cb41ded-a7b0-4a56-a30e-b9be7029fe66/26-6a9e0b0a80c15.webp' /></p><p>எயார்பஸ் (Airbus) நிறுவனத்திடமிருந்து ஆவணங்களைப் பெறுவது தொடர்பான உடன்பாடே இந்த வழக்கின் முக்கிய விடயமாகும். வழக்கு மிகவும் வலுவாக உள்ளதாகவும், நாமல் ராஜபக்சவிற்கு எதிராக மேலும் சான்றுகள் வெளிவரும் என்றும் சட்டமா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p>
இந்த வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட மேல் நீதிமன்ற தீர்ப்பாயத்தை நியமிக்குமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுப்பாரா என்பது இன்னும் வெளியாகவில்லை.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T00:57:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் 10 கைதிகளுடன் நாமல்! அநுரவின் அதிரடி பாய்ச்சல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-case-updates-1788724787"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-case-updates-1788724787</id>
            <summary type="text">ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் செப்டம்பர் 4 அன்று நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் செப்டம்பர் 4 அன்று நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
 இந்த கைது நடவடிக்கை மட்டுமல்லாது, 2016-ல் தாக்கல் செய்யப்பட்ட கிரிஷ் குரூப் (Krrish Group) தொடர்பான 70 மில்லியன் ரூபா வழக்கு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட நான்குக்கும் மேற்பட்ட வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன.
</p><p>
இந்த வழக்குகள் அனைத்தும் நல்லாட்சி காலத்தில் தாக்கல் செய்யப்பட்டவை என்றும், சட்டமா அதிபர் திணைக்களம் தற்போதும் அதன் பணிகளைத் தொடர்கிறது.

தற்போதைய சூழலில், நாமல் ராஜபக்சவுக்கு உடனடியாக பிணை கிடைப்பது கடினம் போன்று காணப்படுகின்றது.
</p><p>
இந்தநிலையில், நாமல் ராஜபக்ச சிறைச்சாலையில் 10 கைதிகளுடன் தங்கியிருக்கிறார்.அவருக்கு சிறைச்சாலைக்குள் எந்தவிதமான சிறப்புச் சலுகைகளும் வழங்கப்படவில்லை.</p><p>

மேலும், அவர் எந்தவிதமான நோய் பாதிப்புகளும் இன்றி நலமாக இருப்பதாக சிறைச்சாலை தரப்புகள் தெரிவிக்கின்றன. </p><p>

 இந்த விடயங்கள் தொடர்பில் எடுத்து வருகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tgSkYHLgmMQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T00:56:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[கமல்ஹாசனை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/writers-union-meets-kamalhaasan-1788742587"></link>
            <id>https://cineulagam.com/article/writers-union-meets-kamalhaasan-1788742587</id>
            <summary type="text">தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல் அலுவலகத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல் அலுவலகத்தில் சந்தித்தனர்.</p><p>இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பாக மரியாதை நிமித்தமாக எங்களின் முன்னோடியும் திரையுலகின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராகவும் திகழும் திரு. கமல்ஹாசன் அவர்களை நிர்வாகிகளும் செயற்குழு உறுப்பினர்களும் சந்தித்து மகிழ்ந்தோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e0ca131-e0d5-41c9-a973-a1a64fef581c/26-6a9e0c12890f2.webp' /></p><p>
</p><p>சினிமாவில் வியக்கத்தக்க எழுத்தாளர்கள் நிறைய பேர் இருந்தாலும் திரு. கமல்ஹாசன் அவர்கள் அடுத்த தலைமுறைக்கான பாதையை வகுத்துக் கொடுத்த ஒரு முன்னோடியான எழுத்தாளர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அந்த எழுத்தாளரை சந்தித்து அவருடைய அனுபவங்களையும், அவருடைய வழிகாட்டுதலையும் நாங்கள் கேட்டுக்கொள்ள நேரம் ஒதுக்க கேட்டிருந்தோம்.
</p><p>அதை எற்றுக்கொண்டு அவர் எங்களை சந்தித்தார். அப்போது நிறைய விஷயங்களை எங்களிடம் பகிர்ந்தார். அவர் உருவாக்கிய படங்களான மகாநதி, அன்பே சிவம், ஹே ராம், குணா, தேவர் மகன் என அனைத்திலும் அவருடைய எழுத்துகள் மிகவும் வலிமையானதாகவும் கூர்மையானதாவும் இருக்கும், சிறிய வசனமாக இருந்தாலும் பெரும் அர்த்தத்தை சொல்லும்.
</p><p>அந்த மாதிரியான எழுத்துகளை கொடுத்தவர் தான் திரு. கமல்ஹாசன் அவர்கள். அவரை சந்தித்தது எங்களுக்கு பெரிய உற்சாகம். எங்களை நேரம் ஒதுக்கி சந்தித்து, வாழ்த்துகளை தெரிவித்து, சங்கத்தை சிறப்பாக நடத்துங்கள் என்று சொல்லி அனுப்பினார். இந்த சந்திப்பு எங்களுக்கு என்றென்றும் நினைவில் இருக்கும்," என்று தெரிவித்துள்ளனர். &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cb05cad-ffa0-481b-8038-637c8f4131b1/26-6a9e0c138fba4.webp' /></p>]]></content>
            <updated>2026-09-07T00:56:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக போர்சூழ்நிலைகளின் சுமையை அரசாங்கம், மக்கள் மீது திணிக்கவில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-not-imposing-burden-on-people-1788742339"></link>
            <id>https://tamilwin.com/article/npp-not-imposing-burden-on-people-1788742339</id>
            <summary type="text">உலக போர்ச் சூழ்நிலைகளின் சுமையை அரசாங்கம் மக்கள் மீது திணிக்கவில்லை என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
 பேருவளையில் நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக போர்ச் சூழ்நிலைகளின் சுமையை அரசாங்கம் மக்கள் மீது திணிக்கவில்லை என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.</p><p>
 பேருவளையில் நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p>70 ஆண்டுகளுக்கும் மேலாக சீரழிக்கப்பட்ட ஒரு நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவது நீண்டதும் சவாலானதுமான ஒரு பயணமாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/562fe399-63f6-42ab-9384-60300a8d7cd5/26-6a9e0ac940c7f.webp' /></p><p>
எனினும், உலகில் நிலவும் போர்ச் சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் நாட்டின் மக்களுக்கு அதன் சுமை தெரியாத வகையில் செயற்பட தற்போதைய அரசாங்கத்தினால் முடிந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் நிலைமை காரணமாக ஹோர்முஸ் நீரிணை ஊடான கடல்சார் போக்குவரத்துக்கு தடைகள் ஏற்பட்டுள்ளன.
</p><p>இதனால் கப்பல் கட்டணங்கள், காப்பீட்டுக் கட்டணங்கள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ள போதிலும், அரசாங்கம் எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளை உயர்த்த அனுமதிக்காமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
</p><p>வேறு அரசாங்கம் இருந்திருந்தால், இந்தப் போரைச் சாட்டாக வைத்து பெரிய சூதாட்டம் நடத்தி, எரிபொருள் இல்லை, எரிவாயு இல்லை எனக் கூறி விலைகளை உயர்த்தியிருப்பார்கள். மக்கள் மீண்டும் வரிசைகளில் நின்றிருப்பார்கள். </p><p>ஆனால், நமது அரசாங்கத்தின் கீழ் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட அனுமதிக்கப்படவில்லை. மாறாக, எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளை படிப்படியாகக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறோம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் போன்ற சவால்களின் போதும் அரசாங்கம் மிகவும் திறம்பட தலையிட்டு மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>உலகில் நிலவும் போரின் தாக்கம் கூட மக்களுக்குத் தெரியாத வகையில் நாட்டை ஆட்சி செய்ய முடிந்தது தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய சாதனை என ரில்வின் சில்வா மேலும் வலியுறுத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T00:52:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிகழ்ச்சிக்கு அழகிய உடையில் வந்த ஸ்ரீலீலா.. கியூட் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sreeleela-cute-new-photoshoot-1788742132"></link>
            <id>https://cineulagam.com/article/sreeleela-cute-new-photoshoot-1788742132</id>
            <summary type="text">நடிகை ஸ்ரீலீலாவுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அந்த அளவுக்கு தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் கலக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை ஸ்ரீலீலாவுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அந்த அளவுக்கு தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் கலக்கி வருகிறார்.
</p><p>
 ஸ்ரீலீலா தற்போது நிகழ்ச்சிக்கு அழகிய உடையில் கியூட் ஆக வந்திருக்கிறார்.

அதில் அவர் அழகிய போஸ் கொடுத்த புகைப்படங்களை பாருங்க.</p>]]></content>
            <updated>2026-09-07T00:49:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரோன்களுக்கு நிதி திரட்ட போர்னோகிராபியை சட்டபூர்வமாக்கும் உக்ரைன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-may-legalise-p0rn-for-war-funds-1788741813"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-may-legalise-p0rn-for-war-funds-1788741813</id>
            <summary type="text">உக்ரைன் நாடாளுமன்றத்தில், போர்னோகிராபியை (ஆபாச வீடியோ) சட்டபூர்வமாக்கும் மசோதா முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், நாட்டின் அடல்ட் எண்டர்டெயின்மென்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் நாடாளுமன்றத்தில், போர்னோகிராபியை (ஆபாச வீடியோ) சட்டபூர்வமாக்கும் மசோதா முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன் மூலம், நாட்டின் அடல்ட் எண்டர்டெயின்மென்ட் துறையை சட்டப்பூர்வமாக்கி, வரி வசூலிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f073b21-9771-4b0f-b8c8-4330fc7f593e/26-6a9e08b73c54e.webp' /></p><p>நாடாளுமன்ற நிதி குழுத் தலைவர் யாரோஸ்லாவ் ஜெலெஸ்னியாக், இந்தத் துறையை சட்டப்பூர்வமாக்கினால், 25 மில்லியன் டொலர் வரி வருவாய் கிடைக்கும் என மதிப்பிட்டுள்ளார். அந்த தொகை, உக்ரைன் போருக்காக 30,000 ட்ரோன்கள் வாங்க போதுமானதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

தற்போது, உக்ரைனில் போர்னோகிராபி தயாரித்தல், வைத்திருத்தல், பகிர்தல் அனைத்தும் சட்டவிரோதமாகும். இதற்காக ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். இருந்தாலும், இந்தத் துறை குற்றப்புலனாய்வு அதிகாரிகளின் ஊழல் உதவியுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.</p><p></p><p>2023-ஆம் ஆண்டு, 7,900 உக்ரைனியர்கள் OnlyFans மூலம் 131 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், வரி செலுத்தியவர்கள் கூட பார்ன் வீடியோ சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டதால், பலர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.</p><p>

OnlyFans படைப்பாளர் ஸ்விட்லானா ட்வோர்னிகோவா, “நான் 9 லட்சம் டொலர் வரி செலுத்தியுள்ளேன். அதற்குப் பிறகும் என்னை குற்றவாளியாக நடத்துவது தவறு” எனக் கூறி, ஜெலென்ஸ்கி இணையதளத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவுக்கு ஒரு வாரத்தில் 25,000 கையெழுத்துகள் கிடைத்தன.</p><p>

இதையடுத்து, ஜெலென்ஸ்கி அரசு, போர்னோகிராபி சட்டபூர்வமாக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் பரிசீலிக்க ஒப்புக்கொண்டுள்ளது. ஜூலை மாதத்தில், இந்த மசோதா முதல் வாசிப்பில் நிறைவேற்றப்பட்டு, தற்போது இரண்டாவது வாசிப்புக்காக காத்திருக்கிறது.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T00:41:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று முதல் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/schools-to-reopen-from-tomorrow-1788741297"></link>
            <id>https://tamilwin.com/article/schools-to-reopen-from-tomorrow-1788741297</id>
            <summary type="text">அனைத்து அரச மற்றும் அரச அனுசரணையில் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று(7) முதல் ஆரம்பமாகவுள்ளன...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனைத்து அரச மற்றும் அரச அனுசரணையில் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று(7) முதல் ஆரம்பமாகவுள்ளன.
</p><p>
இதன்படி, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் டிசம்பர் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவடையவுள்ளன.</p><h2>மீண்டும் திறப்பு</h2><p>
</p><p>
இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5055e311-f52f-4397-bbe7-dcd195d7c573/26-6a9e07e5ee7fe.webp' /></p><p>

இதற்கான பரீட்சை நடவடிக்கைகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T00:40:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிராந்தி ராஜபக்சவுக் எதிராக ஆரம்பமாகிறது CID-யின் அடுத்த விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cid-investigation-against-shiranthi-rajapaksa-1788706568"></link>
            <id>https://ibctamil.com/article/cid-investigation-against-shiranthi-rajapaksa-1788706568</id>
            <summary type="text">அபேக்ஷா மருத்துவமனைக்கு PET ஸ்கேனர் வழங்குவதாகக் கூறி, பெறப்பட்ட பல மில்லியன் ரூபாய் பணம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அபேக்ஷா மருத்துவமனைக்கு PET ஸ்கேனர் வழங்குவதாகக் கூறி, பெறப்பட்ட பல மில்லியன் ரூபாய் பணம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்சவுக் எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படகிறது.</p><p>நாட்டில் புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அபேக்ஷா மருத்துவமனைக்கு PET ஸ்கேனர் வழங்குவதாகக் கூறி, ஷிராந்தி ராஜபக்சவால் நடத்தப்படுவதாக அறியப்படும் சிரிலிய சவ்வா அமைப்பானது பல மில்லியன் ரூபாயை அறவிடப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>PET ஸ்கேனர் வாங்கும் திட்டத்திற்காக, சிறிலியசவியா அமைப்பு அரச மற்றும் தனியார் வங்கிகளிடம் நிதியுதவி கோரியுள்ளதாகவும், இதற்காக தேசிய சேமிப்பு வங்கி ஒரு மில்லியன் ரூபாய் வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>சட்டமா அதிபர் உத்தரவு</h2><p>

இது தொடர்பாக, அப்போதைய தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக இருந்த பிரதீப் கரியவசத்திடம் இருந்து வாக்குமூலம் பெறுமாறு குற்றப் புலனாய்வுத் துறைக்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b278fa88-4676-467c-94ab-d204ef399aeb/26-6a9d802906d9c.webp' /></p><p>

இருப்பினும், மகாரகம அபேக்ஷா மருத்துவமனை, சீன அரசாங்கத்திடமிருந்து PET ஸ்கேனரை நன்கொடையாகப் பெற்றது.</p><p>இந்நிலையில் நன்கொடையாகப் பெறப்பட்ட PET ஸ்கேனரில் பணம் சேர்க்கப்பட்டதன் மூலம் மோசடி நடந்ததா என்பது குறித்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T00:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[திரும்பப் பெறமாட்டோம்… நிறைவேற்றியே தீருவோம்! 22ஆவது திருத்தம் குறித்து அநுர அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-22nd-amendment-will-certainly-be-passed-anura-1788737974"></link>
            <id>https://tamilwin.com/article/the-22nd-amendment-will-certainly-be-passed-anura-1788737974</id>
            <summary type="text">&amp;nbsp;உத்தேச 22ஆவது அரசமைப்புத் திருத்தத்தை எக்காரணம் கொண்டும் திரும்பப்
பெறப்போவதில்லை என்றும், அது கட்டாயம் நிறைவேற்றப்பட்டே தீரும் என்றும்
ஜனாதிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உத்தேச 22ஆவது அரசமைப்புத் திருத்தத்தை எக்காரணம் கொண்டும் திரும்பப்
பெறப்போவதில்லை என்றும், அது கட்டாயம் நிறைவேற்றப்பட்டே தீரும் என்றும்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீண்டும் அறிவித்துள்ளார்.
</p><p>
களுத்துறை - புளத்சிங்கள பகுதியில் நேற்று(6) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள்
சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.</p><h2>22ஆவது அரசமைப்புத் திருத்தம்</h2><p>
</p><p>
இந்த அரசமைப்புத் திருத்தத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான தீர்ப்பு விரைவில் கிடைக்கும் என்று ஊடகச்
செய்திகள் வெளியாகியுள்ளன. </p><p>இந்தத் தீர்ப்பு கிடைத்தவுடன் அது நாடாளுமன்றத்தில்
நிறைவேற்றப்படும் என்று ஜனாதிபதி மேற்படி கூட்டத்தில் உறுதிபடக் கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

"நாங்கள் சட்டத் திருத்தங்களை உருவாக்கியுள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c47a5aec-4e36-41f7-ad8f-bf9ca3327ceb/26-6a9dfbc60d263.webp' /></p><p> அதற்காகத் தேவையான
அரசமைப்புத் திருத்தங்களையும் செய்துள்ளோம். நாங்கள் பயமின்றி முன்னோக்கிச்
செல்வோம். அப்போது என்ன நடக்கும்? கறுப்புச் சட்டங்களின் பாதுகாப்பில்
இருந்தவர்கள் அச்சமடைவார்கள். தூதரகங்களை நோக்கி ஓடுவார்கள். உலக
அமைப்புகளுக்குக் கடிதம் எழுதுவார்கள்.</p><p>

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், நாங்கள் இந்தத் தீர்மானங்களை மக்களுக்காகவே
எடுக்கின்றோம். எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் நாங்கள் திரும்பப்
பெறமாட்டோம்.
</p><p>
22ஆவது திருத்தம் குறித்த தீர்ப்பு விரைவில் கிடைக்கும். பத்திரிகைகளில் 18ஆம்
திகதி போன்ற ஒரு நாள் குறிப்பிடப்பட்டிருப்பதை நான் கண்டேன். தீர்ப்பு
கிடைத்ததும் அதனை விரைவில் நிறைவேற்றுவோம்.

இந்த ஊழல்வாதிகளுக்கு நாங்கள் தண்டனை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T23:57:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரணிலின் பொறிக்குள் சிக்காமல் லாவகமாக தப்பிய சஜித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sajith-narrowly-escaped-ranils-trap-1788727391"></link>
            <id>https://ibctamil.com/article/sajith-narrowly-escaped-ranils-trap-1788727391</id>
            <summary type="text">&amp;nbsp;கடந்த வாரம், ஐக்கிய தேசியக் கட்சி (UNP), தனது 80வது ஆண்டுவிழாவை முன்னிட்டு சிறிகொத்தா கட்சித் தலைமையகத்தில் தொடர்ச்சியான சமய நிகழ்ச்சிகளை ஏற்பாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கடந்த வாரம், ஐக்கிய தேசியக் கட்சி (UNP), தனது 80வது ஆண்டுவிழாவை முன்னிட்டு சிறிகொத்தா கட்சித் தலைமையகத்தில் தொடர்ச்சியான சமய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, ஒரு வித்தியாசமான அரசியல் வியூகத்தில் ஈடுபட்டது.</p><p>

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரை இந்த நிகழ்விற்கு வரவழைத்து, இதை நாட்டின் முன் ஒரு பெரிய அரசியல் ஒற்றுமையின் தொடக்கமாக சித்தரிப்பதே ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களின் முதன்மை நோக்கமாக இருந்தது. குறிப்பாக, சஜித் பிரேமதாசவை எப்படியாவது இந்த நிகழ்வில் பங்கேற்க வைப்பதே அவர்களின் முக்கிய குறிக்கோளாக இருந்தது.</p><h2>ஹரினிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு </h2><p>

ரணில் விக்ரமசிங்க இந்த அமைப்புப் பணியை ஹரின் பெர்னாண்டோவிடம் ஒப்படைத்தார்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb228dbd-7663-4222-add4-b9f18f69959c/26-6a9ddf75b6e2c.webp' /></p><p> </p><p>அவர் நிகழ்வின் அமைப்புப் பணிகளைப் பொறுப்பேற்றார்.

 பொதுவாக எந்தவொரு அமைப்புச் செயல்பாட்டிற்கும் பகிரங்கமாக முன்வரும் ஹரின், இவ்விதமும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டுவிழா நடவடிக்கைகளைத் திரைமறைவிலிருந்து ஏற்பாடு செய்வதை உறுதிசெய்தார். தற்போதைய அரசியல் சூழலில் சில கட்சிகளால் குறிவைக்கப்படுவோம் என்ற அச்சத்தின் காரணமாக, அவர் இவ்வாறு பகிரங்கப்படுத்தலைத் தவிர்த்தார்.</p><p></p><h2>சஜித் பிரேமதாசவின் பதில்</h2><p>

 நிகழ்ச்சிக்கு சஜித்தை அழைத்து ஹரின் பெர்னாண்டோ அனுப்பிய பல செய்திகளுக்கு சஜித் பதிலளிக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88473460-336e-487a-97c8-6876aeeca032/26-6a9ddf76894d6.webp' /></p><p>
</p><p>
 பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க சஜித்தை அழைத்தார். அதற்குப் பதிலளித்த சஜித், கொழும்புக்கு வெளியே பல முக்கியப் பணிகளில் ஈடுபட்டிருந்ததால் தன்னால் கலந்துகொள்ள இயலாது என்று கூறினார். அதற்குப் பதிலாக, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார பங்கேற்க ஏற்பாடு செய்வதாக அவர் கூறினார்.</p><h2>ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பு</h2><p> பின்னர், ரணில் விக்ரமசிங்கவும் சஜித்தை தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அழைத்து மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். ஆனால், சஜித் அந்த அழைப்பை மறுத்து, சகாலாவுக்கு அளித்த அதே பதிலை ரணிலுக்கும் அளித்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T23:54:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[காசாவில் ஹமாஸின் முக்கிய தளபதியை வீழ்த்தியது இஸ்ரேல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/idf-says-it-killed-a-hamas-commande-1788738189"></link>
            <id>https://ibctamil.com/article/idf-says-it-killed-a-hamas-commande-1788738189</id>
            <summary type="text">&amp;nbsp;காசாவின் தெற்குப் பகுதியில் உள்ள கான்யூனிஸ் நகரில் இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய துல்லியமான தாக்குதலில், ஒக்டோபர் 7-ல் நடந்த தாக்குதலை முன்னின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;காசாவின் தெற்குப் பகுதியில் உள்ள கான்யூனிஸ் நகரில் இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய துல்லியமான தாக்குதலில், ஒக்டோபர் 7-ல் நடந்த தாக்குதலை முன்னின்று தலைமை தாங்கிய ஹமாஸின் 'நுக்பா' சிறப்புப் படைப்பிரிவு தளபதி முகமது மஹ்மூத் மர்ஷாத் அல்-காடி கொல்லப்பட்டார்.&nbsp;</p><p>&nbsp;பிணைக் கைதிகளை ரக்பா பகுதியில் சிறைபிடித்து வைத்திருந்த இவர், சமீப காலமாக இஸ்ரேலுக்கு எதிராகப் புதிய பயங்கரவாதப் பயிற்சிகளையும் அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது. </p><h2>இஸ்ரேல் இராணுவத்தின் அறிவிப்பு</h2><p>போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிச் செயல்பட்டதால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e9d5446-e2d8-462d-97d4-7abce6d9e3af/26-6a9dfce6b1ae7.webp' /></p><p>


இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு இஸ்ரேலின் சின்பெட் சிறப்புப் படையினரால் ஹமாஸின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு தலைவர் முயின் அல்-அரபித் உயிரோடு கைது செய்யப்பட்டார்.</p><p></p><p> </p><h2>அச்சத்தில் ஹமாஸ் தளபதிகள்</h2><p>இஸ்ரேலிய உளவுத்துறையின் பிடியில் இருக்கும் அவர், ஹமாஸ் அமைப்பின் ஆயுதக் கிடங்குகள், பதுங்கு குழிகள் மற்றும் ரகசியத் திட்டங்கள் குறித்த அதிர வைக்கும் பல உண்மைகளைத் தொடர்ந்து கூறி வருவதாக சொல்லப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d15a3667-015b-4ab3-a506-3376c1d1f92f/26-6a9dfce765332.webp' /></p><p>
</p><p>
இதனால் இஸ்ரேல் ராணுவம் அடுத்த தாக்குதலை வான்வழியாக நடத்துமா அல்லது தரைவழியாக நடத்துமா என்ற அச்சத்தில்
ஹமாஸ் தளபதிகள் தற்போது உறைந்து போயுள்ளனர்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T23:53:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கப்பலில் இந்தியா சென்ற 13 பேருக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/13-sri-lankans-returning-india-through-kks-port-1788736610"></link>
            <id>https://tamilwin.com/article/13-sri-lankans-returning-india-through-kks-port-1788736610</id>
            <summary type="text">காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பல் மூலம் இந்தியாவுக்கு சென்ற 13 பேர் மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

காங்கேசன...</summary>
            <content type="html"><![CDATA[<p>காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பல் மூலம் இந்தியாவுக்கு சென்ற 13 பேர் மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.</p><p>

காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கப்பல் மூலம் சென்றவர்களில் 13 பேர் மீது இந்திய அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.</p><h2>காங்கேசன்துறை துறைமுகம்</h2><p>

இதனையடுத்து, குறித்த 13 பேரிடம் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fee09373-4631-4bea-b924-466322a1698d/26-6a9df6760ddbf.webp' /></p><p>

இதனைத் தொடர்ந்து, குறித்த 13 பேரும் மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.</p><p>

காங்கேசன்துறைக்கு திரும்பி வந்தவர்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்து, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
</p><p>
காங்கேசன்துறை பொலிஸார், குறித்த 13 பேரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T23:25:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனேடிய டொலர் - அமெரிக்க டொலர் ஏற்றத்தாழ்வை ஏற்றுக்கொள்ள முடியாது - டிரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-slams-canada-dollar-imbalance-1788736736"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-slams-canada-dollar-imbalance-1788736736</id>
            <summary type="text">Trump slams Canada dollar imbalance: அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், கனேடிய டொலர் மற்றும் அமெரிக்க டொலர் மதிப்பில் உள்ள ஏற்றத்தாழ்வை (imbalance) ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>Trump slams Canada dollar imbalance:</b> அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், கனேடிய டொலர் மற்றும் அமெரிக்க டொலர் மதிப்பில் உள்ள ஏற்றத்தாழ்வை (imbalance) ஏற்றுக்கொள்ள முடியாது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
</p><p>
Truth Social-ல் அவர், “கனடாவின் டொலர் ஏற்றத்தாழ்வு பல ஆண்டுகளாக உள்ளது. இனி அது தொடராது” எனக் குறிப்பிட்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d7b6f83-fa26-429e-8eea-9ab26155bb31/26-6a9df4e1adcfc.webp' /></p><p>கடந்த 15 ஆண்டுகளில், கனேடிய டொலர் பெரும்பாலும் அமெரிக்க டொலரைவிட பலவீனமாகவே இருந்துள்ளது. தற்போது, ஒரு அமெரிக்க டொலர் = 1.38 கனேடிய டொலர் ஆகும். அதாவது, ஒரு கனேடிய டொலர் = 72 அமெரிக்க சென்ட் மட்டுமே மதிப்புள்ளது.</p><p>இதனால், கனடிய பொருட்கள் அமெரிக்கர்களுக்கு மலிவாகவும், அமெரிக்க பொருட்கள் கனடியர்களுக்கு விலையுயர்ந்ததாகவும் உள்ளன.</p><p>பணமதிப்பில் உள்ள இந்த இடைவெளி, இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.</p><p> </p><p></p><p>சமீபத்தில், கனடா பிரதமர் மார்க் கார்னி, அமெரிக்காவுடன் நடந்த வர்த்தக பேச்சுவார்த்தையை நிறுத்தி, தனது குழுவை வாஷிங்டனிலிருந்து திரும்ப அழைத்தார். இதற்கு பதிலாக, அமெரிக்கா கனடிய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளது.</p><p>

கனடா, “டொலருக்கு டொலர்” என்ற முறையில் பதிலடி வரி விதிப்பதாகவும், செப்டம்பர் 8 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவித்துள்ளது.
</p><p>
டிரம்ப், கனடாவுடனான நாணய ஏற்றத்தாழ்வு குறித்து எவ்வித நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பது இன்னும் தெளிவாகவில்லை. வெள்ளை மாளிகை இதுகுறித்து கூடுதல் விளக்கம் அளிக்கவில்லை.
</p><p>
இந்த நாணய மதிப்பு மற்றும் வரி பிரச்சினைகள், அமெரிக்கா-கனடா உறவுகளில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T23:15:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் 100 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகொலை : போர் நினைவிடமாக மாறிய பாடசாலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iranian-school-becomes-a-war-memorial-1788735961"></link>
            <id>https://ibctamil.com/article/iranian-school-becomes-a-war-memorial-1788735961</id>
            <summary type="text">ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல் தொடங்கிய பெப்ரவரி 28-ம் திகதி மினாப் ஷஜரே தாய்பெஹ் பள்ளி மீதும் தாக்குதல் நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல் தொடங்கிய பெப்ரவரி 28-ம் திகதி மினாப் ஷஜரே தாய்பெஹ் பள்ளி மீதும் தாக்குதல் நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டனர். அதுமுதல் அந்த பள்ளி மூடப்பட்டு கிடந்தது. தற்போது அந்த பள்ளி போர் நினைவிடமாக மாற்றப்பட்டுள்ளது..
</p><p>


சேதமடைந்த பள்ளிக்குள் மாணவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.</p><h2>கட்டிடம் போர் அருங்காட்சியகம் மற்றும் நினைவிடமாக மாற்றப்படும்</h2><p>செப்டம்பர் 5ம் திகதி பத்திரிகையாளர்கள் அங்கு சென்றபோது, குடும்பத்தினர் உள்ளிட்டோர் உயிரிழந்தவர்களின் நினைவாக அமைதியாக அஞ்சலி செலுத்தி வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35c3f809-8b07-406d-8daf-558f031f05a0/26-6a9df3a5a6669.webp' /></p><p> </p><p>"பள்ளி இனி இயங்காது என்றும், கட்டிடம் போர் அருங்காட்சியகம் மற்றும் நினைவிடமாக மாற்றப்படும்" என்றும் மாகாண ஆளுநர் முகமது அஷூரி தாசியானி தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T23:14:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[4000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்த Tata JLR - பிரித்தானிய வணிக அமைச்சர் ஆலோசனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-minister-meets-tata-jlr-ceo-over-job-cuts-1788733743"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-minister-meets-tata-jlr-ceo-over-job-cuts-1788733743</id>
            <summary type="text">UK minister meets Tata JLR CEO over job cuts: 4000 பணிநீக்கங்களை அறிவித்த டாடாவின் JLR நிறுவனத்துடன் பிரித்தானிய வணிக அமைச்சர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK minister meets Tata JLR CEO over job cuts: 4000 பணிநீக்கங்களை அறிவித்த டாடாவின் JLR நிறுவனத்துடன் பிரித்தானிய வணிக அமைச்சர் ஆலோசனை நடத்தவுள்ளார்.</p><p>
</p><h2>
Jaguar Land Rover 4,000 பணிநீக்கம்</h2><p>பிரித்தானியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான Jaguar Land Rover (JLR), அடுத்த இரண்டு ஆண்டுகளில் 4,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe715734-6516-47e9-9832-a16fefbea361/26-6a9deb33423c8.webp' /></p><h2>வணிக அமைச்சர்&nbsp;ஆலோசனை</h2><p>இதனைத் தொடர்ந்து, பிரித்தானிய வணிக அமைச்சர் ஜொனாதன் ரெய்னல்ட்ஸ், JLR நிறுவனத்தின் CEO-வை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.</p><p>ரெய்னல்ட்ஸ், “வேலை இழப்புகளை குறைக்க முயற்சி செய்வோம். ஆனால், பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் கார் உற்பத்தி துறைக்கு சவாலான சூழ்நிலை உள்ளது” என BBC-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
</p><p></p><p>JLR தற்போது 30,000 பணியாளர்களை பிரித்தானியாவில் வேலைக்கு அமர்த்தியுள்ளது. West Midlands பகுதியில் உள்ள Solihull தொழிற்சாலை மிகப்பெரியது.
</p><p>
இந்தியாவின் Tata Motors நிறுவனத்தின் கீழ் செயல்படும் JLR, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1.7 பில்லியன் பவுண்டு செலவுகளை குறைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக தன்னார்வ பணிவிலகல் (redundancy) திட்டம் அறிவிக்கப்பட உள்ளது.</p><p></p><h2>பிரதமர் ஆன்டி பர்னாம்-க்கு சவால்</h2><p>இந்த வேலை இழப்புகள், புதிய பிரதமர் ஆன்டி பர்னாம்-க்கு பெரிய சவாலாகும்.</p><p>அவர் “பிரித்தானியாவை மீண்டும் தொழில்துறையில் முன்னேற்றம் செய்ய வேண்டும்” என வலியுறுத்தி வந்த நிலையில், JLR-இன் வேலை இழப்பு திட்டம் அரசுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
</p><p>
மேலும், JLR விற்பனைக்கு அமெரிக்காவின் 10 சதவீத சுங்கவரி மற்றும் சீன கார் பிராண்டுகளின் போட்டி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, Jaecoo 7 என்ற சீன SUV, பிரித்தானியாவில் அதிகம் விற்பனையாகி JLR-க்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>The Times பத்திரிகை, JLR-இன் 4,000 வேலை இழப்பு திட்டம் திங்கட்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
</p><p>
ஐரோப்பிய கார் துறையில், Volkswagen கூட சமீபத்தில் 50,000 வேலைகளை குறைக்கும் restructuring திட்டத்தை அறிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T23:00:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் துப்பாக்கி இயங்காதமையால் உயிர் தப்பிய பெண்மணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/woman-escapes-after-gun-malfunctions-1788732424"></link>
            <id>https://ibctamil.com/article/woman-escapes-after-gun-malfunctions-1788732424</id>
            <summary type="text">&amp;nbsp;கொழும்பில் பெண் ஒருவரை குறிவைத்து ஆயுததாரிகள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டபோதிலும் அந்த துப்பாக்கி இயங்காத காரணத்தால் குறித்த பெண்மணி மயிரிழை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கொழும்பில் பெண் ஒருவரை குறிவைத்து ஆயுததாரிகள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டபோதிலும் அந்த துப்பாக்கி இயங்காத காரணத்தால் குறித்த பெண்மணி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
</p><p>
கொழும்பு கொஸ்கொடை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (6) காலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><h2>பெண்ணொருவரை இலக்குவைத்தே&nbsp; துப்பாக்கிச் சூட்டு முயற்சி</h2><p>துப்பாக்கி இயங்காத காரணத்தால் ஆயுததாரிகள் அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/344be223-9233-4e3d-b032-fc50fba9e110/26-6a9def384f1d2.webp' /></p><p>

கொஸ்கொடை, நானோட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (6) ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரும், காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவருமான ‘கொஸ்கொட தாரக்க’வுடன் நெருங்கிய தொடர்புடைய பெண்ணொருவரை இலக்குவைத்தே இந்தத் துப்பாக்கிச் சூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.</p><p></p><h2>காவல்துறையினர் மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
சம்பவத்தின் போது வீட்டிலிருந்த எவருக்கும் காயங்களோ அல்லது சேதங்களோ ஏற்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f886ac8-fed7-489d-bdac-ec95ad3fbfaf/26-6a9def390361f.webp' /></p><p> 9 எம்.எம். ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி இருமுறை குறித்த பெண்ணை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற போதிலும், துப்பாக்கி இயங்காமையால் அவர் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் கொஸ்கொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T22:55:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கற்பிட்டியில் 200 புறாக்களுடன் நால்வர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/four-arrested-with-200-pigeons-in-kalpitiya-1788733853"></link>
            <id>https://jvpnews.com/article/four-arrested-with-200-pigeons-in-kalpitiya-1788733853</id>
            <summary type="text">புத்தளம் கற்பிட்டி கோட்டைக்கு அருகில் அமைந்துள்ள துறைமுகப் பகுதிக்குச் சமீபமாக மேற்கொள்ளப்பட்ட விசேட காவல் துறை சோதனையின் போது, சுமார் 200 புறாக்களுடன...</summary>
            <content type="html"><![CDATA[<p>புத்தளம் கற்பிட்டி கோட்டைக்கு அருகில் அமைந்துள்ள துறைமுகப் பகுதிக்குச் சமீபமாக மேற்கொள்ளப்பட்ட விசேட காவல் துறை சோதனையின் போது, சுமார் 200 புறாக்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>

புத்தளம் வலயத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல் துறை அத்தியட்சகரின் வழிகாட்டலின் கீழ், விசேட காவல் துறை குழுவொன்றினால் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98103047-9cfa-4a74-a752-27b7ef3b6cba/26-6a9de99eb2809.webp' /></p><p>கடல் வழியாக்க சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட இந்தப் புறாக்கள், பணப் பந்தயம் வைக்கும் புறாப் பந்தயங்களுக்காகப் பயன்படுத்தத் தயார் செய்யப்பட்டிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
</p><p>
கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் படகு, அதன் எஞ்சின் மற்றும் சிற்றூர்தி ஒன்றும் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மாவனெல்லையைச் சேர்ந்தவர் என்றும், ஏனைய மூவரும் கற்பிட்டிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

கைப்பற்றப்பட்ட புறா ஒன்றின் மதிப்பு சுமார் 50,000 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அனைத்துப் புறாக்களின் மொத்தப் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், கற்பிட்டி காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T22:32:29+00:00</updated>
        </entry>
    </feed>
