<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-26T13:31:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[20 வயசுல எனக்கு கல்யாணமாகி இருந்தா..நடிகை பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/priya-bhavani-shankar-about-mother-role-irumudi-1787746098"></link>
            <id>https://viduppu.com/article/priya-bhavani-shankar-about-mother-role-irumudi-1787746098</id>
            <summary type="text">பிரியா பவானி சங்கர்செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சின்னத்திரை நடிகையாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். தற்போது வெள்ளித்திரையிலும...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிரியா பவானி சங்கர்</h2><p>செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சின்னத்திரை நடிகையாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். தற்போது வெள்ளித்திரையிலும் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் பிரியா பவானி சங்கர், சமீபத்தில் தெலுங்கில் ரவி தேஜாவுடன் இருமுடி படத்தில் நடித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6be5dd53-6731-4fed-b961-d45377b7208e/26-6a8ed7348cf4c.webp' />]</p><p> </p><p>படமும் ரிலீஸாகி அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்து வரும் நிலையில், பேட்டியொன்றில் சில விஷயங்கலை பகிர்ந்திருக்கிறார்.</p><h2>குழந்தைக்கு அம்மாவா</h2><p> அதில், ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பதில் எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை. எனக்கு 20 வயதில் திருமணமாகி இருந்தால் குழந்தையிலிருந்து இருக்கும் அதனால், அம்மாவாக நடிப்பதில் எனக்கு தயக்கம் இல்லை. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9a46427-f274-4441-94ae-9fa95d2aa8bc/26-6a8ed7355818e.webp' /></p><p>ஆனால் கதை என்னவாக இருக்கப்போகிறது என்பதைத்தான் யோசித்தேன். இந்த கதையை முதன்முதலில் கேட்டபோதே மிகவும் இண்டென்ஸாகவும், ஆன்மாவைத் தொடும் வகையிலும் இருந்தது. </p><p>இயக்குநர் ஸ்கிரிப்டை கொடுக்கும்போதே கதை எந்த திசையில் செல்லப்போகிறது என்பது எனக்கு தெளிவாக தெரிந்தது. நான் பேப்பரில் படித்ததும், நான் கேட்டதும்தான் திரையில் அப்படியே வர வேண்டும் என்பதுதான் என் ஒரே கவலையாக இருந்தது என்று பேசியிருக்கிறார் பிரியா பவானி சங்கர்.</p>]]></content>
            <updated>2026-08-26T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இயற்கை பேரிடர்; நேபாளத்திற்கு உதவிக்கரம் நீட்டும் இந்திய விமானப்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/natural-disaster-indian-air-force-help-nepal-flood-1787750905"></link>
            <id>https://jvpnews.com/article/natural-disaster-indian-air-force-help-nepal-flood-1787750905</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் நிவாரணப் பொருட்களை அனுப்ப இந்தியா தயாராகி வருவதாக அந்நாட்டு அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் நிவாரணப் பொருட்களை அனுப்ப இந்தியா தயாராகி வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p>



அரசின் 'மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண' (HADR) திட்டத்தின் கீழ், மருந்துகள், உணவுப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய அவசர உதவித் தொகுப்பு நேபாளத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f0eafd7-33ed-4d63-9ab1-fc004bfc834b/26-6a8ee9fa9db21.webp' /></p><h2>பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணி</h2><p>
</p><p>


பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவ, தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) வீரர்களை நேபாளத்திற்கு அனுப்புவது குறித்தும் அரசு பரிசீலித்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>



இதுதொடர்பாக இந்திய பிரதமர் மோடி தனது'எக்ஸ்' வலைத்தளத்தில்,</p><p> “நேபாள பிரதமர் பலேந்திர ஷாவுடன் உரையாடி, வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்தேன். 



இக்கட்டான சூழலில் நேபாளத்தில் உள்ள எங்கள் சகோதர சகோதரிகளுடன் இந்திய மக்கள் துணை நிற்கிறார்கள்.</p><p></p><p> </p><p>



நேபாளத்திற்குத் தேவையான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் எங்கள் குழுக்கள் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T13:25:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[IMF- இன் இலங்கை குறித்த அணுகுமுறையை முற்றிலுமாக மாற்றியமைத்த நிர்மலா சீதாராமன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nirmalasitharaman-reshaped-imf-sri-lanka-approach-1787749071"></link>
            <id>https://ibctamil.com/article/nirmalasitharaman-reshaped-imf-sri-lanka-approach-1787749071</id>
            <summary type="text">இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுடன் நடைபெற்ற முக்கியமான பேச்சுவார்த்தையின் போக்கை மாற்றியதில் இந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுடன் நடைபெற்ற முக்கியமான பேச்சுவார்த்தையின் போக்கை மாற்றியதில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய பங்காற்றியதாக முன்னாள் இலங்கை நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.</p><p>வலைதள நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அலி சப்ரி, தான் நிதியமைச்சராக இருந்த காலத்தில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக IMF தலைமைத்துவத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பு தனக்கு வழங்கப்பட்டதாக கூறியுள்ளார்.</p><p>அமெரிக்காவில் IMF-ன் பிராந்திய இயக்குநர்களுடன் நடைபெற்ற சந்திப்பை நினைவுகூர்ந்த அலி சப்ரி, இலங்கை தொடர்பாக அதிகாரிகள் மிகவும் எதிர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருந்ததாகக் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>அலி சப்ரிக்கு கிடைத்த வாய்ப்பு</h2><p>அன்றைய தினம் பிற்பகல் 3 மணியளவில் IMF நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா மற்றும் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் ஆகியோரை சந்திக்க அலி சப்ரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d53e3b90-1c26-43a4-a23d-1e90fa820d57/26-6a8ee7d436377.webp' /></p><p>
அதற்கு முன்பாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மதிய உணவு அருந்தியதாக அவர் கூறியுள்ளார்</p><p>இது குறித்த மேலும் கருத்து வெளியிட்ட&nbsp;அலி சப்ரி,</p><p>&nbsp;“அவர் என்னிடம் ‘அமைச்சரே, சந்திப்பு எப்படி நடந்தது?’ என்று கேட்டார். நான், ‘அவ்வளவு சிறப்பாக இல்லை என பதில் வழங்கினேன்.</p><p>அவர்கள் தயக்கத்துடன் இருக்கிறார்கள். நிறைய பிரச்சினைகள் இருப்பதாகக் கூறுகிறார்கள் என்றேன்.</p><p> அதற்கு நிர்மலா சீதாராமன், “கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு முன்பாக நான் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவை சந்திக்கிறேன். நான் இலங்கை குறித்து அவரிடம் பேசுகிறேன்” என்றார்.</p><p></p><h2>IMF தலைமைத்துவம்</h2><p>அதன்பின்னர் IMF தலைமைத்துவத்துடன் நடைபெற்ற சந்திப்பில் நிலைமை முற்றிலும் மாறியிருந்தது.</p><p>IMF நிர்வாக இயக்குநரை சந்திக்கச் சென்றபோது, அது எனக்கு மிகவும் முக்கியமான சந்திப்பாக இருந்தது. </p><p>ஆனால் அப்போது அவர்களின் தொனி, அணுகுமுறை, சூழல் என அனைத்துமே மாறியிருந்தன.</p><p> அப்போது கிறிஸ்டலினா ஜார்ஜீவா, தாம் சிறிது நேரத்திற்கு முன்புதான் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாகவும், அந்தச் சந்திப்பில் 70 முதல் 80 சதவீதம் வரை பேச்சு இந்தியாவைப் பற்றியது அல்ல.</p><p>இலங்கையைப் பற்றியே இருந்தது என்றும் தன்னிடம் தெரிவித்தார்” என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T13:16:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[49 வயதிலும் குறையாத இளமை... படு வைரலாகும் நடிகை சிம்ரனின் நியூ லுக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/actress-simran-latest-look-in-saree-goes-viral-1787747548"></link>
            <id>https://manithan.com/article/actress-simran-latest-look-in-saree-goes-viral-1787747548</id>
            <summary type="text">actress simran :&amp;nbsp; தமிழ் சினிமாவில் 90களிலும் 2000களின் தொடக்கத்திலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை சிம்ரன், இன்றளவும் தனது அழகாலும், நடிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>actress simran :&nbsp; தமிழ் சினிமாவில் 90களிலும் 2000களின் தொடக்கத்திலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை சிம்ரன், இன்றளவும் தனது அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். </p><p>அந்த வகையில், தற்போது 49 வயதிலும் இளமை குறையாத தோற்றத்தில் வித்தியாசமான லுக்கில் சேலை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11679d8d-404a-4305-8b3b-30bb4187a295/26-6a8ee6667e400.webp' /></p><p></p><h2>நடிகை சிம்ரன்&nbsp;</h2><p>
</p><p>
தமிழ் சினிமாவில் அறிமுகம்
நடிகை சிம்ரன் தமிழ் சினிமாவில் VIP திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். </p><p>தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், தொடர்ந்து நேருக்கு நேர், வாலி உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தையும் அடையாளத்தையும் உருவாக்கிக் கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0471fa17-8d3a-4a9f-bebd-cee32fe4644b/26-6a8ee6676d3bc.webp' /></p><p>

அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த சிம்ரன், குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உயர்ந்தார். </p><p>குறிப்பாக விஜய், அஜித், கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றிப் படங்களை வழங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7654062a-d099-4c46-8166-431e31f2895d/26-6a8ee66821590.webp' /></p><p>
</p><p>
பல்வேறு கதாபாத்திரங்களில் அசத்தல்
கதாநாயகியாக மட்டுமே தன்னை நிலைநிறுத்திக் கொள்ளாமல், காலத்திற்கேற்ப தனது கதாபாத்திரத் தேர்விலும் சிம்ரன் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டார். </p><p>கதாநாயகி கதாபாத்திரங்களைத் தொடர்ந்து குணச்சித்திர வேடங்கள், வில்லி கதாபாத்திரங்கள் என பல்வேறு பரிமாணங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.</p><p>
</p><p>
இதனால், திரையுலகில் அறிமுகமாகி பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் சிம்ரனுக்கான ரசிகர்களின் வரவேற்பு இன்றளவும் குறையவில்லை.</p><p>சிம்ரன் கடந்த 2003ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்குப் பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தாலும், சினிமாவை முழுமையாக விட்டு விலகவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/485523fb-5517-4785-8c1f-013e1ea7216e/26-6a8ee668c880d.webp' /></p><p> தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் பிடித்தமான கதைகளைத் தேர்வு செய்து அவ்வப்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.</p><p>
குழந்தைகள் இருக்கும் நிலையிலும் தனது திரைப்பயணத்தை தொடர்ந்து வரும் சிம்ரன், சமூக வலைத்தளங்களிலும் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்.</p><p>

ட்ரெண்டிங் சேலையில் அசத்தல் லுக்
இந்த நிலையில், சிம்ரன் தற்போது வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. </p><p>வித்தியாசமான மற்றும் ட்ரெண்டிங்கான லுக்கில் சேலை அணிந்து அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களில், வழக்கத்திற்கு மாறான ஸ்டைலில் மிகவும் அழகாக காட்சியளிக்கிறார்.

49 வயதிலும் அவரது இளமை குறையாத தோற்றம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72433b29-3476-49aa-877d-778d48ebf021/26-6a8ee6697969d.webp' /></p><p></p><p> </p><p>குறிப்பாக, சேலையில் சிம்ரனின் இந்த புதிய லுக் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன், புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.
</p><p>
“வயது என்பது வெறும் எண் தான்” என்பதுபோல், இன்றளவும் தனது அழகாலும் ஸ்டைலாலும் ரசிகர்களை கவர்ந்து வரும் சிம்ரனின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றன.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DcfrAo5GCbg/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DcfrAo5GCbg/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DcfrAo5GCbg/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by SIMRAN (@actorsimranofficial)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T13:16:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[🔴LIVE : நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா ஆரம்பம்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nallur-kandaswamy-temple-annual-festival-begins-1787749649"></link>
            <id>https://ibctamil.com/article/nallur-kandaswamy-temple-annual-festival-begins-1787749649</id>
            <summary type="text">வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் 2026-ஆம் ஆண்டிற்கான வருடாந்தப் பெருந்திருவிழா ஆரம்பமாகியுள்ளது.

இந்தநிலையில் இன்று (17.08.2...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் 2026-ஆம் ஆண்டிற்கான வருடாந்தப் பெருந்திருவிழா ஆரம்பமாகியுள்ளது.
</p><p>
இந்தநிலையில் இன்று (17.08.2026) காலை கொடியேற்றத்துடன் மிகக் கோலாகலமாக பெருந்திருவிழ ஆரம்பமாகியுள்ளது.
</p><p>
இன்றைய கொடியேற்ற நிகழ்வுடன் நல்லூர் சுற்றுவட்டாரம் முழுவதும் ஆன்மீக பக்திப் பெருக்குடன் களைகட்டத் தொடங்கியுள்ளது.
</p><p>
 அரோகரா முழக்கத்துடன் எம்பெருமான் முருகனின் அருள்பெற அடியார்கள் பெருமளவில் திரண்டுள்ளனர்.
</p><p>
அதன் நேரடி ஒளிபரப்பு காட்சிகளை இங்கே காணலாம்...!&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/zVHpdi2LynQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-26T13:09:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[புடின் ஐரோப்பா மீது தாக்குதல் நடத்தத் தயாராகலாம்: சிஐஏ தலைவர் விடுத்த எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cia-chief-warning-to-putin-revealed-1787746181"></link>
            <id>https://news.lankasri.com/article/cia-chief-warning-to-putin-revealed-1787746181</id>
            <summary type="text">CIA Chief&#039;s mystery trip to moscow: ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு CIA தலைவர் எச்சரிக்கை விடுத்தது தெரிய வந்துள்ளது.

ஐரோப்பாவுடன் விளாடிமிர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>CIA Chief's mystery trip to moscow: ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு CIA தலைவர் எச்சரிக்கை விடுத்தது தெரிய வந்துள்ளது.</p><p>

ஐரோப்பாவுடன் விளாடிமிர் புடின் போரைத் தொடங்கக்கூடும் என்ற அச்சத்திற்கு இடையே, CIA தலைவர் அவருக்கு விடுத்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.&nbsp;</p><h2>ஐரோப்பாவுடன் போரைத் தொடங்கக்கூடும்</h2><p>
ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) ஐரோப்பாவுடன் போரைத் தொடங்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2a46e7c-c43c-4b3c-9b85-6fed16685b63/26-6a8ed843d42d3.webp' />&nbsp;</p><p></p><p>

இந்த சூழலில், அமெரிக்காவின் CIA இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப் (John Ratcliffe) ரஷ்யாவிற்கு திடீர் பயணம் மேற்கொண்டார்.</p><p> 

அவர் புடினிடம், அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ அல்லது உக்ரைனின் மேற்கத்திய நட்பு நாடுகளை குறிவைப்பதன் மூலமோ உக்ரைன் மோதலை தீவிரப்படுத்த வேண்டாம்; அதை செய்யாதீர்கள் என்று எச்சரித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>

உக்ரேனிய போர்க்களத்தில் ரஷ்யாவின் நடவடிக்கைகள் மீண்டும் தேக்கமடைந்த நிலையில் அவர்கள் உடனடியாகவும், தீவிரமாகவும் செயல்படத் தயாராக உள்ளனர் என்ற அமெரிக்க உளவுத்துறையின் தகவலின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு கூறியதாக தெரிய வந்துள்ளது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3637dfe7-b47c-42bf-b39d-2dfb20cb9c28/26-6a8ed7886fd12.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T13:02:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சதத்தை தவறவிட்ட வீரர்: கொழும்பில் போராடும் இலங்கை அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sri-lanka-struggle-2nd-test-vs-india-with-229-runs-1787749317"></link>
            <id>https://news.lankasri.com/article/sri-lanka-struggle-2nd-test-vs-india-with-229-runs-1787749317</id>
            <summary type="text">இலங்கையின் பசிந்து சூரியபண்டார கொழும்பு டெஸ்டில் 92 ஓட்டங்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். 
 
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பசிந்து சூரியபண்டார கொழும்பு டெஸ்டில் 92 ஓட்டங்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். </p><p>
 
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கையின் பசிந்து சூரியபண்டார 92 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><h2>ஃபாலோ-ஆன்</h2><p>

கொழும்பில் நடந்து வரும் இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஃபாலோ-ஆன் ஆனது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ff4d4ce-12a9-4b56-9408-cc34f39941ad/26-6a8ee3c98274a.webp' /></p><p></p><p>
அதனைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணியில் லஹிரு உதார 3 ஓட்டங்களில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
</p><p>
பின்னர் கமில் மிஷாரா 32 ஓட்டங்களில் வெளியேற, பசிந்து சூரியபண்டார (Pasindu Sooriyabandara) மற்றும் கமிந்து மெண்டிஸ் இருவரும் வலுவான கூட்டணி அமைத்தனர். </p><p>

இவர்களின் கூட்டணி 115 ஓட்டங்கள் குவிக்க, கமிந்து மெண்டிஸ் (Kamindu Mendis) 55 ஓட்டங்களில் (3 சிக்ஸர், 2 பவுண்டரிகள்) ஆட்டமிழந்தார். </p><h2>

ரிஷாப் பண்ட்டினால் ஸ்டம்பிங்</h2><p>அடுத்து தனஞ்செய டி சில்வா 23 ஓட்டங்களிலும் மானவ் சுதர் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, பசிந்து சூரியபண்டார சதத்தை நோக்கி பயணித்தார். 

ஆனால், அவர் 92 ஓட்டங்களில் இருந்தபோது மானவ் சுதர் பந்துவீச்சில் ரிஷாப் பண்ட்டினால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.
</p><p>
அதன் பின்னர் களமிறங்கிய நிரோஷன் டிக்வெல்லவை 6 ஓட்டங்களில் சரன்ஷ் ஜெயின் வெளியேற்ற, இலங்கை அணி 4வது நாள் ஆட்டநேர முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ஓட்டங்கள் எடுத்துள்ளது. </p><p>

மேலும் 16 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. மானவ் சுதர் 2 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா, மொஹம்மது சிராஜ், சரன்ஷ் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e444407-eeec-4893-9fb9-892139870b3a/26-6a8ee3c8ce374.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T12:59:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு - சிக்கியுள்ள 57 தமிழர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/nepal-flood-20-tamilnadu-tourists-rescued-37-miss-1787748983"></link>
            <id>https://ibctamilnadu.com/article/nepal-flood-20-tamilnadu-tourists-rescued-37-miss-1787748983</id>
            <summary type="text">57 tamilnadu tourists stuck in nepal flood: நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு சுற்றுலா சென்ற 57 தமிழர்கள் சிக்கியுள்ளனர். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>57 tamilnadu tourists stuck in nepal flood: நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு சுற்றுலா சென்ற 57 தமிழர்கள் சிக்கியுள்ளனர். </p><h3>

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு</h3><p>

நேபாளத்தின் கோடாரி பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பனிப்பாறை உடைந்து லெண்டே ஆற்றில் விழுந்ததில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. </p><p>

வெள்ளத்தில் பாலங்கள், வாகனங்கள் அடித்து செல்லப்படுவதும், வீடுகள் மூழ்கடிக்கப்படும் வீடியோக்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை 31 பேர் உயிரிழந்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7015a91-dd25-4ea3-bd1c-fc4da5c6539a/26-6a8ee278d5d4e.webp' /></p><p>
நேபாளத்திற்கு சென்றுள்ள100க்கும் மேற்பட்ட இந்தியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உட்பட 400க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மாயமாகியுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது. </p><h3>சிக்கிய 57 தமிழர்கள்</h3><p> 

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 57 பேர் கும்பகோணத்தை சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற சுற்றுலா நிறுவனம் மூலம், நேபாளத்திற்கு சென்றுள்ளனர். </p><p>

அங்கு அவர்கள் 3 பேருந்துகளில் பயணித்துள்ள நிலையில், ஒரு பேருந்தில் பயணித்த 20 பேர் வெள்ளத்தில் சிக்காமல் அங்குள்ள ராணுவ முகாமில் பாதுகாப்பாக தஞ்சமடைந்துள்ளனர். </p><p>

மீதமுள்ள 2 பேருந்துகளில் சென்ற 37 தமிழர்களின் நிலை குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை. </p><p>

வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை இந்தியா தூதரகம் மூலம் நேபாளத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. </p><p>

மேலும், 80690 09901, 080690 09900, 1800 309 3793 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது.
</p><p>
மேலும் மீட்பு உபகரணங்கள் மற்றும் நிவாரண பொருட்களுடன் 2 இந்திய ராணுவத்தின் விமானங்கள் நேபாளத்திற்கு செல்ல உள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T12:56:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு விசேட மாநாடு...! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/justice-first-money-next-ampara-relatives-1787744530"></link>
            <id>https://ibctamil.com/article/justice-first-money-next-ampara-relatives-1787744530</id>
            <summary type="text">எமது உறவுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நிதி உதவி தேவை தான் ஆனால் அதைவிட
எமக்கு நீதியே மிக முக்கியமானது என&amp;nbsp;அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>எமது உறவுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நிதி உதவி தேவை தான் ஆனால் அதைவிட
எமக்கு நீதியே மிக முக்கியமானது என&nbsp;அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார்.</p><p> </p><p>இந்தநிலையில் நீதி கிடைப்பதே எமது முதன்மை இலக்கு எனவும் நீதி
கிடைத்த பின்னரே நாங்கள் நிதியைப் பற்றிச் சிந்திப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பகுதியில் இன்று (26-08-2026) விசேட
ஊடகவியலாளர் சந்திபொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பல்வேறு நாடுகள்</h2><p>இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ஒரு சரியான தீர்வை நோக்கியே நாங்கள் தொடர்ச்சியாகப் போராடிக்
கொண்டிருக்கிறோம். நீதி என்பது கடையில் கொடுத்து வாங்கும் பொருள் அல்ல.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f35b23f-c738-4b20-8b55-388aff7ec1b6/26-6a8ee00cb574a.webp' /></p><p>காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் எமக்கு வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களும்
நிதித் தேவைகளும் இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.</p><p> ஆனால், நீதிக்கு
முன்னால் அந்த நிதி எமக்கு பெரிதல்ல. இலங்கை அரசாங்கமானது எங்களை எவ்வாறாவது
தங்களது உள்நாட்டு பொறிமுறைக்குள் தள்ளி வழக்கை முடிக்கப் பார்க்கிறது.
</p><p>
உலகளவில் பல்வேறு நாடுகளிலும் பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. சில நாடுகளுக்கு
30, 40 வருடங்களுக்குப் பிறகே தீர்வுகள் கிடைத்துள்ளன.</p><p></p><h2>எலும்புக்கூடுகள்&nbsp;</h2><p> நாங்களும் கடந்த 17
வருடங்களுக்கும் மேலாக நீதிக்காகப் போராடி வருகின்றோம். எமது இலக்கை அடைய 15
முதல் 17 வருடங்கள் வரை ஆகலாம். </p><p>ஆனால், எனது உறவுகளுக்கு நீதி கிடைக்கும்
என்றால் நான் செத்தாவது நீதியைப் பெற்றுத் தருவேன்.

இன்று செம்மணியில் 650 இற்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் தோண்டி
எடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13884f41-629f-4919-afe9-b3e854075e24/26-6a8ee00c0406f.webp' /></p><p> எமது உறவுகளை காணாமல் ஆக்கியது இந்த இலங்கை அரசுதான்.
தற்போதைய அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கம் கூட ஆட்சிக்கு வருவதற்கு
முன்னர் பல வாக்குறுதிகளை வழங்கியது. </p><p>நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த வலி
எமக்குத் தெரியும் நீதியைப் பெற்றுத் தருவோம் என்றார்கள். ஆனால் ஆட்சிக்கு
வந்த பின்னர் எனது இராணுவத்தினரை என்னால் காட்டிக் கொடுக்க முடியாது என்று
ஜனாதிபதி கூறிவிட்டார்” அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அத்தோடு எதிர்வரும் ஆகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச வலிந்து
காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின்
சங்கத்தால் முன்னெடுக்கப்படவுள்ள விசேட மாநாடு தொடர்பிலும் ஊடகங்களுக்குத்
தெளிவூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-26T12:53:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு மாகாணமே ஆரம்பக் கல்வியில் முதன்மையானது..! முன்னாள் பிரதம செயலாளர் இளங்கோவன் நெகிழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-prime-secretary-elangovan-lainchi-1787748040"></link>
            <id>https://tamilwin.com/article/former-prime-secretary-elangovan-lainchi-1787748040</id>
            <summary type="text">சிறுவர்களின் கல்வி வளர்ச்சியில் வடக்கு மாகணமே ஆரம்ப கல்வியை கட்டமைத்த
முதன்மை பெற்ற மாகாணமாக விளங்குகிறது என முன்னாள் வடமாகாண பிரதம செயலாளர் இ. இளங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறுவர்களின் கல்வி வளர்ச்சியில் வடக்கு மாகணமே ஆரம்ப கல்வியை கட்டமைத்த
முதன்மை பெற்ற மாகாணமாக விளங்குகிறது என முன்னாள் வடமாகாண பிரதம செயலாளர் இ. இளங்கோவன் தெரிவித்தார்.
</p><p>
இன்று(26.08.2026) புதன்கிழமை யாழ். இந்துக் கல்லூரி சபாலிங்கம் மண்டபத்தில் முன்னாள்
வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் தணிகாசலம் பிள்ளை எழுதிய இரு நூல்
வெளியீடு விழாவில் கலந்து கொண்டு தலையை உரையை ஆற்றும் போதே அவர் இவ்வாறு
தெரிவித்தார்.
</p><h2>
ஆரம்ப பிரிவு கல்வியில் முன்னேற்றம்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> 

நூலாசிரியர் தணிகாசலம் பிள்ளை எங்களுடைய ஆசான்
இந்தக் கல்லூரியின் மைந்தன் 15 நூல்களை எழுதி இருக்கிறார் இரு நூல்களை
வெளியிட்டு இருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9de6bf0-af6d-42ee-9551-747003c47eec/26-6a8edef0cd9df.webp' /></p><p>

எமது வடக்கு கல்விப் புலமானது கல்வியால் உயர்ந்த ஒரு சமுதாயத்தை கட்டி எழுப்ப
வேண்டும் என்ற தூர நோக்கோடு செயல்பட்டுக் கொண்டிருப்பதால் இவ்வாறான நூல்
வெளியீடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.
</p><p>
குறிப்பாக ஆரம்ப பிரிவு கல்வியை கட்டமைத்த ஒரு மாகாணமாக வடமாகாணமே முதன்மை
வருகின்ற நிலையில் அதற்கு அமரர் டிவகலாவின் பங்கு காத்திரமானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78fead35-5000-4fcc-ad00-128dda2ed9d3/26-6a8edef1b464f.webp' /></p><p>
</p><p>
நூல் ஆசிரியர் தணிகாசலம் பிள்ளை சிறந்த கல்விமான் தனது தள்ளாடும் வயதிலும்
கல்விக்கும் சமூகத்திற்கும் பல்வேறு சேவையை ஆற்றி வருகிறார்.
</p><p>
ஆகவே வடக்கு மாகாணம் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு இவ்வாறான பல நூல்கள்
வெளிவர வேண்டும் என்றார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T12:41:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனிடோபாவில் 19 மாத தீவிர சோதனை: 15 பேர் மீது வழக்கு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/15-arrested-drugs-and-guns-seized-manitoba-1787748133"></link>
            <id>https://canadamirror.com/article/15-arrested-drugs-and-guns-seized-manitoba-1787748133</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் மனிடோபா மாகாணத்தில் சுமார் 19 மாதங்களாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையைத் தொடர்ந்து, பெருமளவிலான சட்டவிரோத போதைப்பொருட்கள் மற்றும் துப்பாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் மனிடோபா மாகாணத்தில் சுமார் 19 மாதங்களாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையைத் தொடர்ந்து, பெருமளவிலான சட்டவிரோத போதைப்பொருட்கள் மற்றும் துப்பாக்கிகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.</p><p>
'புராஜெக்ட் டோலர்' எனப் பெயரிடப்பட்ட இந்த கூட்டு நடவடிக்கையை ராயல் கனடியன் மவுண்டட் பொலிஸ் மற்றும் விங்க்ளர் பொலிஸ் பிரிவு இணைந்து மேற்கொண்டன. </p><p>இது தொடர்பான விவரங்கள் ஆகஸ்ட் 25, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3167ee54-8d7d-4997-a08b-6a674c77231a/26-6a8edf273d1fc.webp' /></p><p>
கார்மன், விங்க்ளர், வின்னிபெக், மோர்டன் உள்ளிட்ட 10 நகரங்களைச் சேர்ந்த 15 பேர் மீது போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஆயுதக் கடத்தல் தொடர்பாக மொத்தம் 67 குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
</p><p>இவர்களில் கார்மன் நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் மீது மட்டுமே 29 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p>இவர் கடந்த பெப்ரவரி மாதம் காரில் கொகைன் மற்றும் கைத்துப்பாக்கியுடன் பிடிபட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
</p><p>கடந்த 2024 டிசம்பர் மாதம், உள்ளூர் வர்த்தக நிறுவனம் ஒன்றுக்கு பல கிலோகிராம் கொகைன் கடத்தப்பட்டதை விங்க்ளர் பொலிஸார் கண்டறிந்தனர்.</p><p> அதன்பின்னரே பொலிஸாரின் உதவியுடன் இந்த பிரம்மாண்ட கூட்டு விசாரணை தொடங்கப்பட்டது.
</p><p>சட்டவிரோத போதைப்பொருட்களையும் ஆயுதங்களையும் அகற்றுவதையே ஒரே இலக்காகக் கொண்டு அனைத்துக் குழுக்களும் இணைந்து மிகச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T12:40:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுக்கு பதிலடி: 700 பொருட்களுக்கு வரி விதித்த கனடா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-hits-us-imposes-tariffs-on-700-products-1787732836"></link>
            <id>https://canadamirror.com/article/canada-hits-us-imposes-tariffs-on-700-products-1787732836</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத சுங்கவரிக்கு பதிலடியாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 700 பொருட்களுக்கு 15 முதல் 50 சதவீதம் வரை வரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத சுங்கவரிக்கு பதிலடியாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 700 பொருட்களுக்கு 15 முதல் 50 சதவீதம் வரை வரி விதிக்க கனடா தீர்மானித்துள்ளது.
</p><p>
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்த நிலையில், அமெரிக்கா திடீரென கனடா மீது 50 சதவீத வரியை விதித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4623198e-4434-4fa9-bc67-89cf7ef3be6f/26-6a8ea36652568.webp' /></p><h2>அமெரிக்கா – கனடா உறவில் மேலும் விரிசல்&nbsp;</h2><p> இதனால் ஏற்கனவே பதற்றமடைந்திருந்த அமெரிக்கா – கனடா உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் கடுமையான நடவடிக்கைகளால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
</p><p>
இந்த வர்த்தக முரண்பாடுகளுக்கு தீர்வு காணவும், அமெரிக்கா விதித்துள்ள வரியை தவிர்ப்பது தொடர்பிலும் வொஷிங்டனில் இரு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. </p><p>எனினும், அந்த பேச்சுவார்த்தையில் எந்தவொரு இறுதி உடன்பாடும் எட்டப்படவில்லை.

இதனையடுத்து, கனடா மீது 50 சதவீத சுங்கவரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். </p><p>அத்துடன், கனடா தொடர்பில் கடுமையான விமர்சனங்களையும் அவர் முன்வைத்திருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 700 பொருட்களுக்கு 15 முதல் 50 சதவீதம் வரை சுங்கவரி விதிக்கப்படும் என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
</p><p>
இந்த புதிய வரி நடவடிக்கை எதிர்வரும் செப்டெம்பர் 8 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அமெரிக்காவுடன் முன்னர் காணப்பட்ட உறவு மீண்டும் அதே நிலைக்கு திரும்புவதற்கான வாய்ப்பு இல்லை என கனடா பிரதமர் மார்க் கார்னி முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>

அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளும் நீண்டகாலமாக நெருக்கமான வர்த்தக உறவுகளை கொண்டுள்ள நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள வர்த்தக மோதல் இரு நாடுகளின் பொருளாதார உறவுகளில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-26T12:40:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் திடீர் வெள்ளம் - சுற்றுலா சென்ற 57 தமிழர்களின் நிலை என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/57-tamilnadu-tourists-stuck-in-nepal-flood-1787747810"></link>
            <id>https://news.lankasri.com/article/57-tamilnadu-tourists-stuck-in-nepal-flood-1787747810</id>
            <summary type="text">57 tamilnadu tourists stuck in nepal flood: நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு சுற்றுலா சென்ற 57 தமிழர்கள் சிக்கியுள்ளனர். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>57 tamilnadu tourists stuck in nepal flood: நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு சுற்றுலா சென்ற 57 தமிழர்கள் சிக்கியுள்ளனர். </p><h3>

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு</h3><p>

நேபாளத்தின் கோடாரி பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பனிப்பாறை உடைந்து கடும் 
 வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3449d06e-bb9f-43b0-aaf8-bcfc6a232bb5/26-6a8edde35c47c.webp' /></p><p>

வெள்ளத்தில் பாலங்கள், வாகனங்கள் அடித்து செல்லப்படுவதும், வீடுகள் மூழ்கடிக்கப்படும் வீடியோக்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

நேபாளத்திற்கு சென்றுள்ள 100க்கும் மேற்பட்ட இந்தியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உட்பட 400க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மாயமாகியுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><h3> 

நேபாளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்</h3><p> 

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 57 பேர் கும்பகோணத்தை சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற சுற்றுலா நிறுவனம் மூலம், நேபாளத்திற்கு சென்றுள்ளனர். </p><p>

அங்கு அவர்கள் 3 பேருந்துகளில் பயணித்துள்ள நிலையில், ஒரு வாகனத்தில் பயணித்த 20 பேர் வெள்ளத்தில் சிக்காமல் அங்குள்ள ராணுவ முகாமில் பாதுகாப்பாக தஞ்சமடைந்துள்ளனர்.&nbsp;</p><p></p><p>

மீதமுள்ள 2 வாகனங்களில் சென்ற 37 தமிழர்களின் நிலை குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை. </p><p>

வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை இந்தியா தூதரகம் மூலம் நேபாளத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T12:38:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளத்தில் மூழ்கும் நேபாளம் - சீனா: உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/flooding-in-nepal-china-1787747463"></link>
            <id>https://tamilwin.com/article/flooding-in-nepal-china-1787747463</id>
            <summary type="text">நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட
கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக
ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதுடன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட
கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக
ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதுடன், பல கிராமங்கள், பாலங்கள் மற்றும் மின்
உற்பத்தி நிலையங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
</p><p>
இந்த சம்பவம் இன்று(26.08.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

​போடே கோஷி ஆற்றில் ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கினால் நேபாளத்தின் ரசுவா
மாவட்டத்தில் வீடுகள், பாலங்கள் மற்றும் வாகனங்கள் அடித்துச்
செல்லப்பட்டுள்ளன.
</p><p>
ஆற்று நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளதால் மீட்புப் பணிகளுக்காக அனுப்பப்பட்ட
ஹெலிகொப்டர்களால் தரையிறங்க முடியாத நிலை காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83af8cf3-ee31-4c02-a81e-d2a8cc505139/26-6a8edce5afdc7.webp' /></p><p> </p><p>பலரைக் காணவில்லை என்பதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>

மீட்பு பணியை தீவிரப்படுத்தும் சீன அரசு</h2><p>இதேவேளை, எல்லையோரப் பகுதியான கியிரோங் எல்லைக் கடவையில் ஏற்பட்ட நிலச்சரிவு
காரணமாகப் போக்குவரத்து, தொலைத்தொடர்பு மற்றும் மின்சார இணைப்புகள் முற்றாகத்
துண்டிக்கப்பட்டுள்ளதாகச் சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc9f3a43-d6f7-42b5-b236-993cf246edb4/26-6a8edce675589.webp' /></p><p>

காணாமல் போனவர்களை மீட்கும் பணிகளைத் தீவிரப்படுத்துமாறு சீன ஜனாதிபதி ஷீ
ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

​</p><p>இந்த திடீர் வெள்ளப் பெருக்கினால் நேபாளத்தின் நீர்மின் உற்பத்தி கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் மொத்த நீர்மின் உற்பத்தியில் 12
சதவீதத்திற்கும் அதிகமான உற்பத்தி முடங்கியுள்ளது.
</p><p>
கரையோரப் பகுதிகளில் வாழும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு
நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா அறிவுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gpoTsnvUrPA" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T12:32:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[அண்ணனுக்கு பிகினில தான் ராக்கி கட்டுவியான்னு அசிங்கப்படுத்திய கங்கனா!! க்ரித்தி சனோன் பதிலடி...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/kriti-sanons-controversial-raksha-bandhan-ad-1787745627"></link>
            <id>https://viduppu.com/article/kriti-sanons-controversial-raksha-bandhan-ad-1787745627</id>
            <summary type="text">க்ரித்தி சனோன்பாலிவுட்டில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை க்ரித்தி சனோன், ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, நகை பிராண்ட் விளம்பரத்தில் அண்ணன் தங...</summary>
            <content type="html"><![CDATA[<h2>க்ரித்தி சனோன்</h2><p>பாலிவுட்டில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை க்ரித்தி சனோன், ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, நகை பிராண்ட் விளம்பரத்தில் அண்ணன் தங்கை பாசத்தை கொண்டாடும் ரக்ஷா பந்தன் விழாவில் நடிகை க்ரித்தி சனோன், பிளவுஸ், ஸ்கர்ட் அனிந்து நடித்திருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/752d8e79-6cef-4fd7-a7f8-b475134e312d/26-6a8ed55fbe08d.webp' /></p><p> </p><p>அதுமட்டுமில்லாமல், அந்த விளம்பரத்தில் நாய் ஒன்றுக்கும் ராக்கி கட்டும் காட்சி அமைந்தது. இந்த விளம்பரத்தை பார்த்த நெட்டிசன்கள், இந்த பண்டிகைகளையும் கலாச்சாரத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாக அரைகுறை ஆடையில் ரக்ஷா பந்தன் கொண்டாடுவதா என்று விமர்சித்து வந்தனர். </p><p>இது பலருக்கு அதிர்ச்சி கொடுத்து வந்த நிலையில், தன்னுடைய இன்ஸாகிராம் பக்கத்தில் நடிகை கங்கனா ரனாவத் பெயர் குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார். </p><h2>கங்கனா</h2><p>அதில், அந்த விளம்பரத்தை சுட்டிக்காட்டி, பெண்களாக பிறந்தது, இரு பொற்காலம். நம்முடைய அலமாரியில் காக்டெய்ல் டிரஸ்கள் முதல் லெகங்கா சோளி வரை, ஜீன்ஸ், புடவை, பிகினி என்று இருக்கும். இவ்வளவு ஆடைகள் இருந்தும், ஒரு பெண் தன்னுடைய அண்ணனுக்கு பிகினி, உள்ளாடையுடன் ரக்ஷா பந்தன் கயிறு கட்டுவாரா? உங்களுடைய ஆடை தேர்வுகள் எங்கே போனது? என்று கேள்வி எழுப்பி, அந்த விளம்பரத்தை வேண்டுமென்றே அருவருப்பாக எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0d85d6e-1f07-4995-9cef-e558cd06431e/26-6a8ed56071032.webp' /></p><p> </p><h2>பதிலடி.</h2><p>அதற்கு நடிகை க்ரித்தி சனோன், ரக்ஷா பந்தன் என்பது பாதுகாப்பிற்கான ஒரு பிணைப்பு, நானும் என் சகோதரியும் ஒருவருக்கொருவர் எந்த வகையிலும் குறைவாக பாதுகாத்துக் கொள்ள முடியாது என்பதை நாங்கள் அறிவோம். ஒருவருக்கு ஒருவர் ஆரோக்கியம், மகிழ்ச்சி, நீண்ட ஆயுளுக்காக நாங்கள் பிரச்சனை செய்கிறோம்.</p><p> எங்களை பொறுத்தவரை, இந்த பிரச்சனையும் வாக்குறுதியும் எங்கள் நாய்களுக்கும் நீட்டிக்கப்படுகிறது. மேலும் பெண்கள் என்ன ஆடையணிய வேண்டும் என்று சொல்வதை நாம் எப்போது நிறுத்தப் போகிறோம், இனக்குழுவின் நாகரீகம் பல ஆண்டுகளாக வளர்ச்சியடைந்துள்ளது. </p><p>ஆனால் இன்னும் ஒரு பெண்ணின் கலாச்சாரத்திற்கான மரியாதை அவளது உடைகளை வைத்தே அளவிடப்படுகிறது. கலாச்சாரமும் பாரம்பரியமும் அவளது இதயத்தில் இருக்கிறதே தவிர, அவளது கழுத்தை சுற்றிலும் அணிந்துள்ள ஆடையில் இல்லை என்று கூறி பதிலடி கொடுத்திருக்கிறார். இதற்கு ராகுல் காந்தி உட்பட பலரும் க்ரித்தி சனோனுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.</p>]]></content>
            <updated>2026-08-26T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோபாலா நீ வாடா...யாழில் மனதை உருக்கும் ஒரு தாயின் பிரார்த்தனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-heart-rending-prayer-of-a-mother-in-jaffna-1787736708"></link>
            <id>https://jvpnews.com/article/a-heart-rending-prayer-of-a-mother-in-jaffna-1787736708</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூட மண்டப வாயிலில் காணப்பட்ட, பதாகையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது பிரார்த்தனையை எழுதி காட்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூட மண்டப வாயிலில் காணப்பட்ட, பதாகையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது பிரார்த்தனையை எழுதி காட்சிப்படுத்தியுள்ளனர்.
</p><p>


சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f9f0ba6-6674-4a99-9240-5b645b15db4a/26-6a8eb285ae7fd.webp' /></p><p></p><h2>&nbsp;இழப்பீடும் வேண்டாம், மரண சான்றிதழும் வேண்டாம்</h2><p>



அதில் கலந்து கொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மண்டப வாயிலில் உள்ள பதாகையில் தமது பிரார்த்தனை துண்டு சீட்டுக்களை இவ்வாறு காட்சிப்படுத்தியுள்ளனர்.</p><p></p><p>ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம். இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? என கோரி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p>


காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின்(ஓஎம்பி) ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை (25) யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற காணாமல் போனோருக்கான சர்வதேச தின நிகழ்வை கண்டித்து வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p></p><p>
</p><p>
உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்தும் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் இழப்பீடும் வேண்டாம், மரண சான்றிதழும் வேண்டாம் என்பதை வலியுறுத்தியே போராட்டம் நடைபெற்றது.
</p><p>
இதேவேளை சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 30ம் திகதி சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-26T12:24:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்த தாய்க்கு நேர்ந்த கதி - தமிழர் பகுதியில் பெரும் துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mother-who-died-in-thalaimannar-1787746911"></link>
            <id>https://tamilwin.com/article/mother-who-died-in-thalaimannar-1787746911</id>
            <summary type="text">தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில் கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட மோதலில், மனைவி கத்திக்குத்துக்கு இலக்காகி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில் கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட மோதலில், மனைவி கத்திக்குத்துக்கு இலக்காகி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் இன்று(26.08.2026) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><h2>
குடும்ப பிரச்சினையால் நேர்ந்த கதி</h2><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
</p><p>
கணவன் - மனைவி இருவரும் சில காலமாகப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் மீண்டும் ஒன்றிணைந்து வாழ முடிவு செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d92d73e-f2ac-44b8-bed6-b8795250c854/26-6a8edad4e6560.webp' /></p><p> </p><p>

இதையடுத்து, தங்களது இரண்டு பிள்ளைகளுடன் இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை கணவரால் கத்தியால் குத்தப்பட்டதில் இரண்டு பிள்ளைகளின் தாயான குறித்த பெண் படுகாயமடைந்துள்ளார்.
</p><p>
சம்பவத்தைத் தொடர்ந்து, படுகாயமடைந்த பெண் உடனடியாக தலைமன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
</p><h2>
கணவர் கைது</h2><p>
உயிரிழந்தவர் தலைமன்னார் பியர் பகுதியைச் சேர்ந்த கோகுலன் சோனியா (28 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்ததாகக் கூறப்படும் 32 வயதுடைய கணவர், தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdd61d6f-58fa-46cf-8a5d-0e863c9f732f/26-6a8edad5d5449.webp' /></p><p>

இதையடுத்து, உயிரிழந்த பெண்ணின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரிடம் தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T12:23:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் நூற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணிகளை அள்ளுண்டு சென்ற வெள்ளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/floods-hit-hundreds-of-touristsin-nepal-105indians-1787746390"></link>
            <id>https://ibctamil.com/article/floods-hit-hundreds-of-touristsin-nepal-105indians-1787746390</id>
            <summary type="text">நேபாளத்தின் ராசுவா பகுதியில் உள்ள போதே கோஷி (Bhote Koshi) ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் குறைந்தது 384 சுற்றுலாப் பயணிகள்&amp;nbsp; காணாமல் போயு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தின் ராசுவா பகுதியில் உள்ள போதே கோஷி (Bhote Koshi) ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் குறைந்தது 384 சுற்றுலாப் பயணிகள்&nbsp; காணாமல் போயுள்ளதாக நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.</p><p> இவர்களில் 291 பேர் வெளிநாட்டினர் என்றும் 93 பேர் நேபாள குடிமக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இந்தப் பட்டியல் முதற்கட்டமானது என்றும், காணாமல் போனவர்களின் நிலை குறித்து அதிகாரிகள் தொடர்ந்து சரிபார்த்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>105 பேர் இந்தியர்கள்</h2><p>காணாமல் போன வெளிநாட்டினரில் 105 பேர் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64e8111e-d2a0-468c-9827-e32b35156386/26-6a8edab13b7c3.webp' /></p><p>மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து, அஸ்திரேலியா, மலேசியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். </p><p>மேலும், 37 பேர் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>இன்று காலை சுமார் 9 மணியளவில் போதே கோஷி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.</p><p></p><h2>ஆரம்பகட்ட தகவல்கள்&nbsp;</h2><p>வெள்ளநீர் திபெத் பக்கத்திலிருந்து வந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவித்தாலும், வெள்ளத்திற்கான சரியான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. </p><p>மேலும், பனிப்பாறை மற்றும் பாறைச் சரிவு உள்ளிட்ட காரணங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.</p><p>இந்த வெள்ளத்தால் ராசுவா மாவட்டத்தில் உள்ள திமுரே மற்றும் சியாஃப்ருபேசி பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வீடுகள், சாலைகள், பாலங்கள், வாகனங்கள் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் நீர்மின் திட்டங்களும் சேதமடைந்துள்ளன எனவும் கூறப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T12:23:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை உலுக்கும் பேரழிவு; 380 சுற்றுலா பயணிகள் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/devastating-floods-in-nepal-380-tourists-missing-1787747125"></link>
            <id>https://jvpnews.com/article/devastating-floods-in-nepal-380-tourists-missing-1787747125</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நேபாளத்தின் வடக்கு ரசுவா பகுதியில் திடீரென ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. 

நேபாளத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நேபாளத்தின் வடக்கு ரசுவா பகுதியில் திடீரென ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. 

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், 291 வெளிநாட்டவர் உள்பட 384 சுற்றுலாப் பயணிகளைக் காணவில்லை என்று நேபாள சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>&nbsp; திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல்போனவர்களில் 291 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>

இப்பேரழிவில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதுடன், பெருமளவிலானோர் காணாமல்போயுள்ளனர்.

சீனா மற்றும் திபெத் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள நேபாளத்தின் 'ரசுவா' பகுதியிலேயே இத்திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd774e3a-47b4-4cd6-9c7b-1db61c69bf2a/26-6a8edb374426d.webp' /></p><h2>ஆற்றில் பனிப்பாறைகள் திடீரென உருகியதால்&nbsp;வெள்ளப்பெருக்கு</h2><p>
</p><p>
எல்லைப் பகுதிக்கு அருகில் பாயும் 'போத்கோஷி' ஆற்றில் பனிப்பாறைகள் திடீரென உருகியதால், அதிக அளவிலான நீர் ஒரே நேரத்தில் பெருக்கெடுத்து ஓடியதே இதற்குக் காரணமாகும். </p><p>அப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கமே பனிப்பாறைகள் திடீரென உருகுவதற்குக் காரணம் என நம்பப்படுகிறது.
</p><p></p><p>
மேலும், வெள்ளப்பெருக்கு காரணமாக போத்கோஷி ஆற்றை ஒட்டிய பிரதான நெடுஞ்சாலை முற்றாக நீரில் மூழ்கியுள்ளதுடன், சீன எல்லையில் அமைந்திருந்த சீன அரசுக்குச் சொந்தமான கட்டடம் ஒன்றும் முற்றாக அழிவடைந்துள்ளது.</p><p></p><h3>&nbsp;அவசர எண்கள் அறிவிப்பு</h3><p>மாயமான வெளிநாட்டவர்கள் இந்தியா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, அமெரிக்கா, மலேசியா, பிரிட்டன், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.</p><p> 

இதற்கிடையில் சுற்றுலா பயணிகள் குறித்த விவரங்களை அறிய 1234 என்ற கட்டணமில்லை அவசர எண், 1144 என்ற ஹாட்லைன் எண், 98512 89445 என்ற சுற்றுகா காவல்துறை தொடர்பு எண் ஆகியனவற்றை நேபாள சுற்றுலா துறை அறிவித்துள்ளது.</p><p>&nbsp; நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரம் அவசர எண்களை அறிவித்துள்ளது. +977 985 131 6807, +977 970 910 7500 ஆகிய எண்களில் தங்களின் உறவுகள் பற்றி விவரம் அறிய, தகவல் தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-26T12:22:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பிலிருந்து புறப்பட்ட தொடருந்தில் மோதிய கார் - 17 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/car-collides-with-train-departing-from-colombo-1787745974"></link>
            <id>https://tamilwin.com/article/car-collides-with-train-departing-from-colombo-1787745974</id>
            <summary type="text">கிளிநொச்சி - யாழ் பல்கலைக் கழக வீதியில் உள்ள தொடருந்து கடவையில் ஏற்பட்ட விபத்தில் இளம் வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று(26.08....</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - யாழ் பல்கலைக் கழக வீதியில் உள்ள தொடருந்து கடவையில் ஏற்பட்ட விபத்தில் இளம் வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்த விபத்து இன்று(26.08.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>


கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த தொடருந்து, தொடருந்துக் கடவையை கடக்க முற்பட்ட போது காரை மோதியுள்ளது. </p><h2>

17 வயது இளம்பெண் உயிரிழப்பு</h2><p>
இதன்போது, காரில் உள்ளே இருந்த 17 வயது இளம் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c30063af-374c-4f21-b842-f9d42845de55/26-6a8ed6f1d987d.webp' /></p><p> </p><p>

அத்துடன், இருவர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இந்த நிலையில், விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T12:07:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[Computer keyboardஇல் எழுத்துக்கள் ஏன் வரிசைப்படி இல்லை? சுவாரஸ்ய ரகசியம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/why-computer-keys-are-not-in-alphabetical-order-1787739454"></link>
            <id>https://manithan.com/article/why-computer-keys-are-not-in-alphabetical-order-1787739454</id>
            <summary type="text">why computer keys are not in alphabetical order : நாம் தினமும் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் கீபோர்டுகளைப் பயன்படுத்தி பல வார்த்தைகளைத் தட்டச்சு செய்கிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>why computer keys are not in alphabetical order : நாம் தினமும் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் கீபோர்டுகளைப் பயன்படுத்தி பல வார்த்தைகளைத் தட்டச்சு செய்கிறோம். </p><p>ஆனால், அதிலுள்ள எழுத்துக்கள் ஏன் A-B-C-D என அகரவரிசையில் இல்லாமல்&nbsp; ஏன் Q-W-E-R-T என்ற வரிசையில் அமைந்துள்ளன என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? அது குறித்த சுவாரஸ்யமான வரலாறு குறுத்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aaa9fef4-cf3b-4332-a002-7cd761c392b3/26-6a8ec7debafa1.webp' /></p><p></p><h2>என்ன காரணம்?&nbsp;</h2><p>
நாம் இன்று பரவலாகப் பயன்படுத்தும் இந்த அமைப்பு QWERTY Keyboard Layout எனப்படுகிறது. இதன் வரலாறு 1870-களில் கிறிஸ்டோபர் லாதம் ஷோல்ஸ் உருவாக்கிய தட்டச்சு இயந்திரத்திலிருந்து தொடங்குகிறது. </p><p>ஆரம்பத்தில் எழுத்துக்கள் அகரவரிசைப்படி அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் வேகமாகத் தட்டச்சு செய்யும்போது, அடிக்கடி பயன்படுத்தப்படும் எழுத்துக்களின் இயந்திரவியல் கைகள் ஒன்றுடன் ஒன்று மோதி தட்டச்சு இயந்திரம் சிக்கிக் கொள்ளும் பிரச்சினை ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7954479-f245-4d82-93fb-4f997c874008/26-6a8ec7df6fd5d.webp' /></p><p>
</p><p>
இந்தப் பிரச்சினையைத் தவிர்க்க, ஷோல்ஸ் மற்றும் அவரது சகாக்கள் எழுத்துக்களின் அமைப்பை மாற்றி, அடிக்கடி பயன்படுத்தப்படும் எழுத்துக்கள் ஒன்றுக்கொன்று தொலைவில் இருக்கும் வகையில் வடிவமைத்தனர்.இதன் விளைவாக உருவான QWERTY அமைப்பு 1878-ல் காப்புரிமை பெற்றது.</p><p> அதன் பெயர், கீபோர்டின் மேல் வரிசையில் உள்ள முதல் ஆறு எழுத்துகளான Q-W-E-R-T-Y என்பதிலிருந்து வந்தது.

பின்னர் கணினி கீபோர்டுகள் அறிமுகமானபோதும், மக்கள் ஏற்கனவே QWERTY அமைப்புக்கு பழகியிருந்ததால் அதே அமைப்பு தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40dfe9f7-1f37-4442-b2cc-a9ede18b0781/26-6a8ec7e024e7d.webp' /></p><p> </p><p>இதனுடன் Function Keys, Arrow Keys, Number Keys உள்ளிட்ட கூடுதல் விசைகளும் சேர்க்கப்பட்டன.

QWERTY மட்டுமே உள்ள ஒரே கீபோர்டு அமைப்பு அல்ல. </p><p>Dvorak மற்றும் Colemak போன்ற மாற்று அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.அவை அதிக செயல்திறனை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், QWERTY ஏற்கனவே பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததால் அவற்றுக்கு அதே அளவிலான வரவேற்பு கிடைக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f0f1839-88ee-4895-b132-8e6519e3bbed/26-6a8ec7e0cb53f.webp' /></p><p></p><p>
இதனால், இன்று நாம் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் கீபோர்டுகளில் பயன்படுத்தும் QWERTY அமைப்பு, வெறும் எழுத்துக்களை ஒழுங்கற்ற முறையில் அடுக்கியது அல்ல, மாறாக தட்டச்சு இயந்திரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கல்களைத் தீர்க்க உருவாக்கப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வடிவமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T12:01:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பொறுப்பேற்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-bishop-of-jaffna-diocese-takes-charge-1787745821"></link>
            <id>https://jvpnews.com/article/new-bishop-of-jaffna-diocese-takes-charge-1787745821</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்.மறை மாவட்டத்தின் ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள பேரருட் கலாநிதி அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகையின் பணிப் பொறுப்பேற்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்.மறை மாவட்டத்தின் ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள பேரருட் கலாநிதி அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகையின் பணிப் பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று புனித மரியன்னை பேராலயத்தில் இடம்பெற்றது.
</p><p>


யாழ்.புனித மடுத்தீனார் சிறிய குருமட நுழைவாயிலில் ஆயர் வரவேற்கப்பட்டு, பவனியாக அழைத்துவரப்பட்டார்.



தொடர்ந்து, புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், இத்திருப்பலியில் ஆயர்,யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயராக தமது பணிப்பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34ead269-045b-499a-9504-c64e2b767be8/26-6a8ed61f383fc.webp' /></p><p>



குறித்த நிகழ்வில் கர்தினால் மல்கம் ரஞ்சித், மறை மாவட்டங்களின் ஆயர்கள், அருட் தந்தைகள், அருட் சகோதரிகள், சர்வமத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொலிஸார், இராணுவத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
</p><p>


மேலும், யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராகப் பொறுப்பேற்ற பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகைக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T12:01:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உர இறக்குமதி மோசடியில் சிக்கிய கோட்டாபய...! நீதிமன்றில் அம்பலமான அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/investigation-into-fertilizer-imports-from-china-1787734483"></link>
            <id>https://ibctamil.com/article/investigation-into-fertilizer-imports-from-china-1787734483</id>
            <summary type="text">சீனாவிடமிருந்து&amp;nbsp;தரம் குறைந்த உரம் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்&amp;nbsp;விசாரணைகள்&amp;nbsp;தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கையூட்டல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவிடமிருந்து&nbsp;தரம் குறைந்த உரம் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்&nbsp;விசாரணைகள்&nbsp;தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணையம், கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் சீனாவிடமிருந்து தரம் குறைந்த 20,000 மெட்ரிக் டன் உரம் இறக்குமதி செய்யப்பட்டதன் மூலம் அரசுக்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இவ்வாறு விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>வழக்குத் தாக்கல்&nbsp;</h2><p>முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சில நபர்களுக்கு எதிராக இது தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இந்தநிலையில் வேறு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் அளுத்கமகே, சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d329b42f-070c-4f76-b17b-cb152d9a2306/26-6a8eb2f9638bc.webp' /></p><p>இந்தநிலையில் கொழும்பு பிரதான நீதிவான் அசாங்க எஸ். போதரகம முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
</p><p>
இதன்போது, வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை என்பதால் விசாரணையை நிறைவு செய்து தொடர்புடைய அறிக்கைகளைச் சமர்ப்பிக்க மேலதிக கால அவகாசத்தை, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைய அதிகாரிகள் கோரினர்.
</p><p>
சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட நீதிவான், வழக்கை எதிர்வரும் டிசம்பர் நான்காம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-26T11:59:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டோருக்காக யாழில் எழுந்த பிரார்த்தனைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prayers-for-the-disappeared-in-jaffna-1787745403"></link>
            <id>https://tamilwin.com/article/prayers-for-the-disappeared-in-jaffna-1787745403</id>
            <summary type="text">யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூட மண்டபத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த பதாகையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களது பிரார்த்தனைகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூட மண்டபத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த பதாகையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களது பிரார்த்தனைகளை எழுதி ஒட்டியிருக்கிறார்கள்.</p><p> 

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்று (25.08.2026) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
</p><p>
இந்நிகழ்வில் கலந்துகொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மண்டப வாயிலில் வைக்கப்பட்டிருந்த பதாகையில் தங்களது பிரார்த்தனைகளை துண்டுச் சீட்டுகளில் எழுதி ஒட்டியிருப்பதை காணக் கூடியதாக இருந்தது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T11:57:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருநங்கையாக மாறிய இந்திய கிரிக்கெட்டரின் மகன் - அவுஸ்திரேலியாவில் விளையாட ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/australia-approve-trans-cricketer-anaya-bangar-1787743931"></link>
            <id>https://news.lankasri.com/article/australia-approve-trans-cricketer-anaya-bangar-1787743931</id>
            <summary type="text">trans cricketer anaya bangar to play in australia: திருநங்கையாக மாறிய அனயா பங்கர் கிரிக்கெட்டில் பங்குபெற அவுஸ்திரேலியா ஒப்புதல் வழங்கியுள்ளது. 

தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>trans cricketer anaya bangar to play in australia: திருநங்கையாக மாறிய அனயா பங்கர் கிரிக்கெட்டில் பங்குபெற அவுஸ்திரேலியா ஒப்புதல் வழங்கியுள்ளது. </p><h3>

திருநங்கையாக மாறிய இந்திய கிரிக்கெட்டரின் மகன்</h3><p>

இந்திய கிரிக்கெட் அணியில் 2001-2004 காலகட்டத்தில் விளையாடி வந்தவர் சஞ்சய் பங்கர். ஓய்வுக்கு பிறகு அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டார்.&nbsp;</p><p> 

இவரின் மகனான ஆர்யன், உள்ளூர் போட்டிகளில் மும்பை மற்றும் புதுச்சேரி அணிகளுக்காக விளையாடி வந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4b0848e-1596-40be-a633-7d653422065c/26-6a8ecebde283e.webp' /></p><p>
2023 ஆம் ஆண்டில் தான் பெண்ணாக மாற விரும்புவதாக கூறி, ஹார்மோன் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன் பின்னர் பாலின மாற்று சிகிச்சை செய்து கொண்டு தனது பெயரை அனயா பங்கர்(anaya bangar) என மாற்றிக்கொண்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b1c009a-0680-48f6-b81d-5420f0d9ceab/26-6a8ecebd39bab.webp' /></p><h3> 

அவுஸ்திரேலியா ஒப்புதல்</h3><p> 

இவர் திருநங்கையாக மகளிர் கிரிக்கெட்டில் விளையாட பிசிசிஐயிடம் அனுமதி கோரினார். பிசிசிஐ எந்த பதிலும் தராத நிலையில் அவுஸ்திரேலியா கிரிக்கெட் அமைப்பை அணுகியுள்ளார். அவுஸ்திரேலியா அனயாவின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p>
ஆண் பருவமடைதலை அடைந்த திருநங்கை பெண்கள் உயர்மட்ட மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்பதைத் தடுக்கும் விதிமுறைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2023 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7b37c7a-5f03-4b2b-b48c-81a84906c0a6/26-6a8ecebe99c6d.webp' /></p><p> 

மகளிர் பிக்பாஸ் தொடரில் விளையாட அவர் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அதற்காக ஒப்புதல் தரப்பட்டுள்ளது. உயர்மட்ட கிரிக்கெட்டில் விளையாட டெஸ்ட்ரோஜென் சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.</p><p>

ஐசிசி விதிப்படி உயர்மட்ட கிரிக்கெட்டிற்குத் தகுதிபெற, அவரது இரத்தத்தில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் செறிவு குறைந்தது 12 மாதங்களுக்கு 10 nmol/L-க்குக் குறைவாக இருக்க வேண்டும்.</p><p>
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் நேர்மைப் பிரிவுத் தலைவர் ஜாக்கி பார்ட்ரிட்ஜ், "உயர்மட்ட கிரிக்கெட்டில் விளையாடுவது மார்ச் 2027 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த டெஸ்டோஸ்டிரோன் சோதனை முடிவுகளை பொறுத்து உள்ளது.&nbsp;</p><p></p><p> 

மார்ச் 2027 வரை, அவுஸ்திரேலியாவின் எந்தவொரு மாநிலம் அல்லது பிராந்தியத்திலும் நடைபெறும் பிரீமியர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தகுதியுடையவராக தொடர்வார்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T11:37:43+00:00</updated>
        </entry>
    </feed>
