<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-19T11:34:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோபல் பரிசு தொடர்பில் ஒரு புதிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nobel-prize-money-raised-1789817361"></link>
            <id>https://news.lankasri.com/article/nobel-prize-money-raised-1789817361</id>
            <summary type="text">Nobel prize sum raised: நோபல் பரிசுக்கான பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.


நோபல் அறக்கட்டளை, நோபல் பரிசுக்கான பரிசுத்தொகையை உயர்த்தியுள்ளது.

நோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nobel prize sum raised: நோபல் பரிசுக்கான பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.


நோபல் அறக்கட்டளை, நோபல் பரிசுக்கான பரிசுத்தொகையை உயர்த்தியுள்ளது.</p><h3>

நோபல் பரிசு தொடர்பில் ஒரு புதிய தகவல்</h3><p>

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை வென்றவர்கள் பெயர்கள், அக்டோபர் மாதம் 5 முதல் 12ஆம் திகதிக்குள்ளான காலகட்டத்தில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், நோபல் பரிசை வழங்கும் நோபல் அறக்கட்டளை, நோபல் பரிசுக்கான பரிசுத்தொகையை உயர்த்தியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b9f6b4f-af68-4c75-9204-124349154b21/26-6aae72134355d.webp' /></p><p>
ஆம், இதற்கு முன் நோபல் பரிசு வென்றவர்களுக்கு 11 மில்லியன் குரோனர் (kronor) வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு நோபல் பரிசு வெல்பவர்களுக்கு 12 மில்லியன் குரோனர் வழங்கப்பட உள்ளது.
</p><p>
நோர்வே பணமான 12 மில்லியன் குரோனர் என்பது, 1.27 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இலங்கை மதிப்பில் அது, 42,22,53,628.20 ரூபாய்.&nbsp;</p><p></p><p>

நோபல் பரிசுகள் வழங்குவது துவங்கப்பட்டு 125 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து, அதைக் கொண்டாடும் வகையில் இந்த பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக நோபல் அறக்கட்டளையின் இயக்குநரான Hanna Stjarne தெரிவித்துள்ளார்.
</p><p>
முதல் நோபல் பரிசு, 1901ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அப்போது நோபல் பரிசுக்கான பரிசுத்தொகை 150,782 குரோனர் ஆகும்.</p>]]></content>
            <updated>2026-09-19T11:29:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் ஏற்பட்ட பயங்கர கலவரம்.. காவலில் அடைக்கப்பட்ட 37 சுரங்கத் தொழிலாளர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/37-detained-miners-die-in-nigeria-1789816208"></link>
            <id>https://tamilwin.com/article/37-detained-miners-die-in-nigeria-1789816208</id>
            <summary type="text">நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் (Niger State) சட்டவிரோதமாகத் தங்கம் வெட்டி
எடுத்ததாகச் சந்தேகத்தின் பேரில் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 37...</summary>
            <content type="html"><![CDATA[<p>நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் (Niger State) சட்டவிரோதமாகத் தங்கம் வெட்டி
எடுத்ததாகச் சந்தேகத்தின் பேரில் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 37
சுரங்கத் தொழிலாளர்கள், காவலில் இருந்தபோது உயிரிழந்தனர்.
</p><p>
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட மக்கள் போராட்டத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில்,
அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நைஜர் மாநிலத்தின் தலைநகரான மின்னா (Minna) பகுதியில், 'நைஜீரியா பாதுகாப்பு
மற்றும் சிவில் பாதுகாப்பு அமைப்பு' (NSCDC) அதிகாரிகள் சட்டவிரோத தங்கச்
சுரங்கங்களுக்கு எதிராக அதிரடி சோதனை நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான
தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு NSCDC-ன் சிறை முகாமில் அடைக்கப்பட்டனர்.</p><h2>வெடித்த போராட்டம்..&nbsp;</h2><p>
</p><p>
அவ்வாறு காவலில் வைக்கப்பட்டிருந்த தொழிலாளர்களில் 37 பேர் அடுத்தடுத்து
உயிரிழந்தனர்.

சிறை முகாமில் ஏற்பட்ட எதிர்பாராத நோய் பரவல் காரணமாகவே தொழிலாளர்கள்
உயிரிழந்ததாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f24b6c3-c964-471f-a0cb-401c0a3c8e63/26-6aae6f84b258d.webp' /></p><p>

ஆனால் போதிய காற்றோட்டம் இல்லாத சிறிய சிறை அறையில் (Overcrowded cell),
அளவுக்கு அதிகமான நபர்களை அடைத்து வைத்ததால் ஏற்பட்ட மூச்சுத்திணறலே இந்த
மரணங்களுக்குக் காரணம் எனத் தப்பிய தொழிலாளர்களும் உறவினர்களும் குற்றம்
சாட்டியுள்ளனர்.</p><p>

தொழிலாளர்களின் மரண செய்தி பரவியதைத் தொடர்ந்து, நீதி கேட்கும் ஆயிரக்கணக்கான
மக்கள் மின்னா நகரின் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை
வீசியதுடன், துப்பாக்கிச்சூடும் நடத்தினர்.

இந்த மோதலில் போராட்டக்காரர் ஒருவர் உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணைகள்
தெரிவிக்கின்றன.
</p><p>
இந்த நிலையில் மின்னா பகுதியில் வன்முறை மேலும் பரவாமல் தடுக்க நைஜர் மாநில
ஆளுநர் உமர் பாகோ (Umar Bago) உடனடியாக 24 மணி நேர ஊரடங்கு உத்தரவைப்
பிறப்பித்துள்ளார்.
</p><p>
இதேவேளை அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கூறி, NSCDC கொமாண்டண்ட் சுபெரு சியாக்கா
அனிவியே (Suberu Siaka Aniviye) உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் தொழிலாளர்களின் மரணம் குறித்து விரிவான உயர்நிலை விசாரணை நடத்த மாநில
அரசு உத்தரவிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T11:19:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருட சென்ற இடத்தில் கடுப்பான திருடன் ; வீட்டு சுவரில் காத்திருந்த ட்விஸ்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/an-angry-thief-at-the-place-he-went-to-rob-1789804693"></link>
            <id>https://jvpnews.com/article/an-angry-thief-at-the-place-he-went-to-rob-1789804693</id>
            <summary type="text">திருட சென்ற வீட்டில் நகை, பணம் இல்லாததால் பொருட்களை உடைத்து அட்டகாசம் செய்த ஆசாமி சுவரில் &#039;சாரி&#039; என எழுதி வைத்துவிட்டு தப்பிச்சென்றார்.


கோவையில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருட சென்ற வீட்டில் நகை, பணம் இல்லாததால் பொருட்களை உடைத்து அட்டகாசம் செய்த ஆசாமி சுவரில் 'சாரி' என எழுதி வைத்துவிட்டு தப்பிச்சென்றார்.


</p><p>கோவையில் உள்ள ஒரு வீட்டில் புகுந்த மர்ம ஆசாமி, அங்கு திருடுவதற்கு நகை, பணம் இல்லாத விரக்தியில் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்திவிட்டு, சுவரில் 'சாரி' என்று எழுதி வைத்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eca4f339-b42d-4eae-938a-192c726f0130/26-6aae40974675d.webp' /></p><p>வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. சில பொருட்கள் உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன.
</p><p>
உடனடியாக படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது, அங்குள்ள பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் அனைத்தும் கீழே கொட்டப்பட்டு இருந்தன. </p><p>மேலும், கட்டிலில் இருந்த மெத்தை, சோபா, வாஷிங் மிஷின் மற்றும் பிரிட்ஜ் ஆகியவையும் சேதப்படுத்தப்பட்டு இருந்தது.&nbsp;&nbsp;</p><p></p><p>வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமி பக்கவாட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டது உள்ளார். </p><p>ஆனால் நகை, பணம் எதுவும் இல்லாத ஆத்திரத்தில், அந்த நபர் பொருட்களை சேதப்படுத்திவிட்டு, சுவரில் ஆங்கிலத்தில் 'சாரி' என்று எழுதி வைத்துவிட்டு தப்பி சென்றுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T11:18:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் துப்பாக்கி முனையில் நடந்த திருட்டு முயற்சி முறியடிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/attempted-robbery-at-gunpoint-in-trincomalee-1789815580"></link>
            <id>https://ibctamil.com/article/attempted-robbery-at-gunpoint-in-trincomalee-1789815580</id>
            <summary type="text">திருகோணமலை - அநுராதபுரம் சந்தியில் அமைந்துள்ள மதுபானக் கடை ஒன்றில் இருவரால்
மேற்கொள்ளப்பட்ட திருட்டு முயற்சியை அங்கிருந்த ஊழியர்கள் முறியடித்துள்ளனர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - அநுராதபுரம் சந்தியில் அமைந்துள்ள மதுபானக் கடை ஒன்றில் இருவரால்
மேற்கொள்ளப்பட்ட திருட்டு முயற்சியை அங்கிருந்த ஊழியர்கள் முறியடித்துள்ளனர்.</p><p>இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று (18) இரவு 9:45 அளவில் உந்துருளியில் வந்த இரு கொள்ளையர்கள், பணத்தைத்
திருடித் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். எனினும், ஊழியர்களின் கடும் போராட்டத்திற்குப் பின்னர் பணப் பையுடன்
கொள்ளையர்களில் ஒருவரைப் பிடிக்க முற்பட்டனர்.</p><p>

அந்தச் சமயத்தில், துப்பாக்கி வைத்திருந்த மற்றைய நபர் ஊழியர்களை நோக்கி
துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற போதிலும் இலக்கு தவறியது. அதனைத் தொடர்ந்து, இரு கொள்ளையர்களும் உந்துருளியில் ஏறி அனுராதபுரம் வீதி
வழியாகத் தப்பிச் சென்றனர்.</p><p></p><h2>இரண்டு சந்தேகநபர்களும் கைது</h2><p>
எனினும், இந்த சம்பவம் குறித்து உடனடியாகச் செயற்பட்ட காவல்துறையினர், திடீர்
தேடுதல் நடவடிக்கையை நடத்தி மிஹிந்துபுர பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து
இரண்டு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b97c270c-8e94-4591-a5c5-4b5c46b66635/26-6aae6e9927c3e.webp' /></p><p>
</p><p>குறித்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் உப்புவெளி காவல் நிலையத்தில்
கடமையாற்றி வரும் காவல்துறையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்தவர் எனவும்
தெரியவருகிறது.</p><p>குறித்த இருவரும் மது போதையில் இருந்துள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் தற்போது மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T11:15:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவலிங்கத்தை அவமதித்தவர் வீட்டிலிருக்கையில் அனோஜனுக்கு தலை துண்டிப்பு தண்டனை - சிறீதரன் ஆவேசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anojan-death-panalty-case-1789814362"></link>
            <id>https://tamilwin.com/article/anojan-death-panalty-case-1789814362</id>
            <summary type="text">சிவலிங்கத்தை கீழ்த்தரமாக எழுதியவர் வீட்டில் இருக்கப் போகிறார், அல்லாஹ்வை கீழ்த்தரமாக பதில் எழுதிய அனோஜனுக்கு தலை துண்டிக்கப்பட போகிறது என நாடாளுமன்ற உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிவலிங்கத்தை கீழ்த்தரமாக எழுதியவர் வீட்டில் இருக்கப் போகிறார், அல்லாஹ்வை கீழ்த்தரமாக பதில் எழுதிய அனோஜனுக்கு தலை துண்டிக்கப்பட போகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். </p><p>

கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை உள்ளூராட்சி வாரத்தின் இறுதி நாள் நிகழ்வும், பரிசளிப்பு விழாவும் இன்று (19.09.2026 கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
</p><p>
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>அனோஜன் விவகாரம்</h2><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், நாம் இங்கு பேசிக் கொண்டிருக்கும் போது அனோஜனுடைய தலையை துண்டிப்பதை பற்றி ஒரு நாடு சிந்தித்துக் கொண்டிருக்கிறது. எங்களோடு பிறந்த ஒரு மனிதன், உங்களுடைய சகோதரன் உயிரோடு வருவானா அல்லது அவனது உடல் தான் வருமா நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்ற சிக்கல் நீடிக்கிறது. </p><p>நேற்று காலை கூட அமைச்சர் விஜித ஹேரத்துடன் பேசியிருந்தேன். ஜனாதிபதியினுடைய செயலாளரோடும் போசியிருந்தேன். இந்த விடயம் தொடர்பில் உங்களது அதீத கவனமும் அந்த உயிரை காப்பாற்றுகின்ற விடயமும் ஒரு அரசுக்குரியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38423397-8319-4c0c-85ac-17eb3543cfef/26-6aae6e9a8b399.webp' /></p><p> </p><p>யாரோ ஒருவர் ஊர்வலம் போகும்போது நாயைக் கொண்டு போனார்கள். அதற்கு சுப்பிரமணி என பெயரையும் வைத்து விட்டார்கள். தெருவில் நின்ற ஒருவர் அதனை காலால் தட்டி விட்டார். அதனை எங்களுடைய ஆட்களே பெரிதுபடுத்தினார்கள். அதற்கு நிறைய விமர்சனங்களை எழுதினார்கள்.</p><h2>தண்டனை</h2><p> </p><p>இந்த நிலையில் அந்த மார்க்கத்தை சேர்ந்த ஒருவர் சிவலிங்கத்தை கீழ்த்தரமாக எழுதினார். பொறுக்க முடியாத அனோஜன் அல்லாஹ்வை பற்றி கீழ்த்தரமாக எழுதினார். </p><p>இரண்டுமே பொருத்தமில்லாத ஒன்று தான். எழுதக்கூடாது தான். ஆனால் அவர் எழுதினார். இவர் பதில் எழுதினார். இவருக்கு தலை போகிறது. ஆனால் அவர் வீட்டில் இருக்கப்போகிறார். </p><p>அனோஜனின் பதிவை மொழி பெயர்த்து கொடுத்தவர் ஒரு தமிழ் பேசும் இனத்தைச் சேர்ந்தவர். அனோஜனுக்கு தண்டனை கிடைப்பதற்கு காரணம் இலங்கையில் இருக்கின்ற தமிழ் பேசுகின்ற இந்த சகோதரர்கள் தான் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T11:15:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கையில் நோட்டு, வாலிபால்!! 80-s லுக்கில் மாறிய நடிகை சன்னி லியோன்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/sunny-leone-80s-look-photos-post-viral-1789815773"></link>
            <id>https://viduppu.com/article/sunny-leone-80s-look-photos-post-viral-1789815773</id>
            <summary type="text">சன்னி லியோன்ஆபாச படங்கள் மூலம் பிரபலமான நடிகை சன்னி லியோன், அதிலிருந்து வெளியேறி இந்தியாவில் குடியேறினார். பல படங்களில் நடித்து பிரபலமான சன்னி, மலையாள...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சன்னி லியோன்</h2><p>ஆபாச படங்கள் மூலம் பிரபலமான நடிகை சன்னி லியோன், அதிலிருந்து வெளியேறி இந்தியாவில் குடியேறினார். பல படங்களில் நடித்து பிரபலமான சன்னி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05816e84-f1ba-40fe-af07-f3add8601cff/26-6aae6be1dfda1.webp' /></p><p>திருமணமாகி 4 குழந்தைகளை பெற்றும், தத்தெடுத்தும் வளர்த்து வரும் சன்னி லியோ, பணத்தேவைக்காக ஆபாச படங்களில் நடித்தது குறித்து Karenjit Kaur: The Untold Story of Sunny Leone என்ற தன்னுடைய சுயசரிதை வலைத்தொடரில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.</p><p> தற்போது 80ஸ் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-19T11:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனுக்கு மன்னிப்பு : இலங்கை அரசு துரித நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-govertakes-action-to-pardon-anojan-1789814541"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-govertakes-action-to-pardon-anojan-1789814541</id>
            <summary type="text">&amp;nbsp;சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கை தமிழ் இளைஞன் சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர முடிந்தவரை முயற்சிப்பதாக சுகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கை தமிழ் இளைஞன் சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர முடிந்தவரை முயற்சிப்பதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
 

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், விதிக்கப்பட்டுள்ள தண்டனையைக் குறைப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><h2>&nbsp; தீவிர செயற்பாட்டில் வெளிவிவகார அமைச்சு</h2><p>&nbsp;இது குறித்து வெளிவிவகார அமைச்சுக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, ஐக்கிய அரபு இராச்சிய (சவுதி) அரசாங்கத்துடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/345fec4c-3648-4205-af37-fb9943cbef4f/26-6aae68ce646d6.webp' /></p><p>
</p><p>
 

அத்துடன், சிவராசா அனோஜனுக்கு சட்ட உதவியை வழங்குவதற்கு தூதரகம் தலையிட்டுள்ளதுடன், இதற்காக விசேட அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நலிந்த ஜயதிஸ்ஸ வெளிப்படுத்தினார்.</p><p>

 

இச்சம்பவம் தொடர்பில் சவுதியில் நிலவும் சட்டத்திற்கு அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T11:14:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[245 முறைப்பாடுகள் ; இரு இளம் பெண் உயரதிகாரிகள் செய்த செயல் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-young-female-officers-act-exposed-1789816339"></link>
            <id>https://jvpnews.com/article/two-young-female-officers-act-exposed-1789816339</id>
            <summary type="text">தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் தவணை முறையில் வீடு கட்டித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த சம்பவம் தொடர்பில், அதன் ஊழியர்கள் இருவரை மிரிஹான விசேட குற்றப்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் தவணை முறையில் வீடு கட்டித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த சம்பவம் தொடர்பில், அதன் ஊழியர்கள் இருவரை மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

குறித்த நிறுவனம் தொடர்பாக 245 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 30 மற்றும் 31 வயதுடைய கஹவத்த மற்றும் கடுவெல பகுதிகளைச் சேர்ந்த இரு யுவதிகள் கடந்த 17ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3e3aae8-c973-4f33-9f20-de0d1340b0f2/26-6aae6e147c6ef.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

கைது செய்யப்பட்ட இருவரும் அந்நிறுவனத்தின் முதன்மை விற்பனை முகாமையாளராகவும், செயல்பாட்டு அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேகநபர்களிடம் இருந்த 04 சொகுசு கார்களும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify; ">
 

இவர்கள் இருவரையும் வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 

இந்த பண மோசடி சம்பவம் தொடர்பாக குறித்த தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் ஒருவர் கடந்த ஜூலை மாதம் 28ஆம் திகதி கைது செய்யப்பட்டதுடன், அவரும் வரும் 29ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிகான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-19T11:12:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று மாலை உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி- இந்திய வானிலை மையம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/low-pressure-area-forming-over-andaman-sea-1789816258"></link>
            <id>https://news.lankasri.com/article/low-pressure-area-forming-over-andaman-sea-1789816258</id>
            <summary type="text">அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மாலை ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

வானிலை மையம் கூற...</summary>
            <content type="html"><![CDATA[<p>அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மாலை ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
</p><h2>
வானிலை மையம் கூறுகையில்.., </h2><p>

வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.</p><p>

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மாலை ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27d35524-e9d2-4199-b36f-09dd046fd7bb/26-6aae6dc45cfa5.webp' /></p><p>குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும்.
</p><p>
தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி அடுத்த 3 தினங்களுக்கு நகரக்கூடும்.
</p><p>
மேலும், கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T11:11:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகனப் பதிவு தொடர்பான பிரச்சினையா..! இதோ முறைப்பாடு செய்ய புதிய வழி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-whatsapp-hotline-for-motor-vehicle-complaints-1789815381"></link>
            <id>https://tamilwin.com/article/new-whatsapp-hotline-for-motor-vehicle-complaints-1789815381</id>
            <summary type="text">வாகனங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளின்போது பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் வாகனங்களால் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் முறைப்பாடுகளைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாகனங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளின்போது பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் வாகனங்களால் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் முறைப்பாடுகளைத் தெரிவிப்பதற்காக புதிய வட்ஸ்அப் சேவையொன்றை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>

மோட்டார் போக்குவரத்து ஆணையாளரினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சேவையின் ஊடாக, பொதுமக்கள் தங்களது முறைப்பாடுகளை எழுத்துமூலம் 074 245 3300 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்ப முடியும்.</p><h2>இந்தப் புதிய சேவை</h2><p>
</p><p>
வாகனப் பதிவில் ஏற்படும் தாமதங்கள், முறைகேடுகள் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பிலும், வாகனங்களின் செயற்பாடுகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் பொது இடையூறுகள் தொடர்பிலும் முறைப்பாடுகளை இந்த இலக்கத்திற்கு அனுப்ப முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a499a9a-d22a-4b31-a518-de202fb673eb/26-6aae6d0869918.webp' /></p><p>
</p><p>
பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளை நேரடியாகத் திணைக்களத்திடம் தெரிவித்து, அவற்றுக்கு உரிய நேரத்தில் தீர்வு அல்லது பதில் வழங்குவதற்கான வசதியை ஏற்படுத்தும் நோக்கில் இந்தப் புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T11:10:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு தயாராகும் அப்பத்தா குடும்பம்.. மீனாட்சிக்கு எதிராக நடக்கும் சதி - வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vaagai-sooda-vaa-today-episode-sep-19-2026-1789811435"></link>
            <id>https://cineulagam.com/article/vaagai-sooda-vaa-today-episode-sep-19-2026-1789811435</id>
            <summary type="text">தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வாகை சூடவா. இந்த சீரியலின் நேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வாகை சூடவா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மீனாட்சி ஜீவா பாக்கெட்டின் தாலியை வைத்து நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.</p><p>அதாவது மீனாட்சி வீட்டுக்கு வந்த டீச்சரிடம் ஜீவா கிட்ட கொஞ்சம் பார்த்து நடந்துக்கோங்க.. கையில எப்பயும் தாலியோடு தான் சுத்துவான். எனக்கும் வேற ஒருத்தரோட கல்யாணம் நிச்சயம் ஆகி இருந்தது ஜீவா என் கழுத்துல தாலி கட்டிட்டான்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/996157f6-e996-4815-a65c-b0b27a64e9b6/26-6aae5aef9a176.webp' /></p><p>இந்த மாதிரி ரெண்டு மூணு பொண்ணுக்கு நடந்திருக்கு என்று சொல்ல அந்த டீச்சர் ஜீவா அப்படி எல்லாம் செய்ய மாட்டார் என்று சொல்ல வேண்டும் நான் போய் நான் பாக்கெட்டை பாருங்க என்று சொல்ல அந்த டீச்சரும் ஜீவா பாக்கெட்டை பார்க்க பாக்கெட்டுக்குள் தாலி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். </p><p>
மீனாட்சி பார்ப்பதை பார்த்த ஜீவா அந்த பெண்ணிடம் வேண்டுமென்றே நெருங்கி பேச அந்தப் பெண் எனக்கு தாலி கட்ட போறீங்களா என பயந்து அங்கிருந்து ஓடி விடுகிறார். பிறகு ஜீவா தன்னுடைய பாக்கெட்டில் தாலி எப்படி வந்தது என யோசிக்க மீனாட்சி அது எப்படி வந்தது? எனக்கு என்ன தெரியும் போய் வேலையை பாருடா என சொல்லிவிட்டு நகர்கிறாள்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed4c5cfe-eea1-4a54-a986-f028c5787129/26-6aae5af0517c5.webp' /></p><p>மீனாட்சி மனதுக்குள்ளும் பொசசிவ் இருப்பதை ஜீவா புரிந்து கொள்கிறான். அடுத்ததாக அப்பத்தா எல்லோரையும் கூப்பிட்டு விநாயகர் சதுர்த்திக்கான ஏற்பாடுகளை கவனிக்க சொல்ல தேவி அப்பத்தாவிடம் கோபப்படுகிறாள். </p><p>
அப்பத்தான் மீனாட்சி எல்லாம் ஏற்பாடுகளையும் செய்து முடித்த பிறகு பிள்ளையாரை தூக்கி குளத்துல போடு.. ஒழுங்கா எதையும் செய்ய தெரியலன்னு சொல்லி அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்பலாம் என கணக்கு போடுகிறார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca05bff1-b60d-4a2b-a6f7-fcff0679e215/26-6aae5aeed3cd1.webp' /></p><p>இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வாகை சூடவா சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T11:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாஓயாவில் 3 யுவதிகள் உட்பட நான்கு பேர் நீரில் மூழ்கி மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/four-missing-after-drowning-in-maha-oya-1789815372"></link>
            <id>https://jvpnews.com/article/four-missing-after-drowning-in-maha-oya-1789815372</id>
            <summary type="text">படல்கம பகுதியில், மாஓயா ஆற்றில் நீராடச் சென்ற நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்.

 

காணாமல் போனவர்களில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் அடங்குவதாகத் தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>படல்கம பகுதியில், மாஓயா ஆற்றில் நீராடச் சென்ற நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்.</p><p>

 

காணாமல் போனவர்களில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de98442d-23db-4701-b624-8f638c09462c/26-6aae6a4deb860.webp' /></p><p>
</p><p>
 

இவர்கள் அனைவரும் 25 வயதுடையவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p>

 

காணாமல் போனவர்களைத் தேடி பொலிஸாரும் உள்ளூர்வாசிகளும் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T10:58:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீரில் மூழ்கிய 3 இளம் பெண்கள் உட்பட 4 பேர் மாயம் - இருவரின் சடலங்கள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/4-drown-in-water-and-missing-1789814820"></link>
            <id>https://tamilwin.com/article/4-drown-in-water-and-missing-1789814820</id>
            <summary type="text">கம்பஹா,&amp;nbsp; படல்கம பகுதியில் உள்ள மா ஓயா ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது, ​​3 இளம் பெண்கள் உட்பட 4 பேர் நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில் இருவரின...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா,&nbsp; படல்கம பகுதியில் உள்ள மா ஓயா ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது, ​​3 இளம் பெண்கள் உட்பட 4 பேர் நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. </p><p> 

இச்சம்பவம் இன்று பிற்பகல் 2:00 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>
</p><p>
ஒரு ஆணின் உடலமும் ஒரு பெண்ணின் உடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>3 இளம் பெண்கள் மற்றும் பதின்ம வயது இளைஞன் அடங்கிய குழுவினர் மா ஓயா ஆற்றில் குளிக்க சென்றிருந்தனர். </p><h2><b>

இளம் பெண்கள்</b></h2><p>அவர்களில் நால்வர் பாதுகாப்பற்ற பகுதியில் குளித்துக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a9fe00a-e6d7-4b8f-83e5-ec2803771b98/26-6aae6ad2071be.webp' /></p><p>அவர்களில் ஒரு இளம் பெண் நீரில் மூழ்கத் தொடங்கிய போது, ​​அவரை மீட்க முயன்ற ஏனைய மூவரும் நீரில் மூழ்கி காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

காணாமல்&nbsp; போனவர்களை
&nbsp;தேடும் பணியை உள்ளூர் மக்களும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-19T10:58:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் இனி சிறார் செய்யும் குற்றங்களுக்கு பெற்றோர் தண்டிக்கப்படலாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/parents-could-be-fined-or-jailed-1789815052"></link>
            <id>https://news.lankasri.com/article/parents-could-be-fined-or-jailed-1789815052</id>
            <summary type="text">Parents in England could be jailed for child’s crimes: பிரித்தானியாவில், தங்கள் குழந்தைகளின் குற்றங்களுக்காகப் பெற்றோர்கள் சிறையில் அடைக்கப்படலாம்.
க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Parents in England could be jailed for child’s crimes: பிரித்தானியாவில், தங்கள் குழந்தைகளின் குற்றங்களுக்காகப் பெற்றோர்கள் சிறையில் அடைக்கப்படலாம்.
</p><p>குற்றச் செயல்களில் ஈடுபடும் குழந்தைகளின் பெற்றோர்கள், தங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை இழக்க நேரிடலாம், அபராதங்களைச் சந்திக்க நேரிடலாம், மேலும் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் என்று அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><h2>ஆலோசனை அமர்வு</h2><p>
</p><p>சமூகங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் தங்கள் பங்கை ஆற்றுவதை உறுதிசெய்வது தொடர்பாக, இளம் குற்றவாளிகள் தொடர்பான நீதி அமைப்பு பெற்றோர்களைப் பொருத்தமான வகையில் பொறுப்புக்கூறச் செய்ய வேண்டும் என்று&nbsp;அமைச்சர் ஜேக் ரிச்சர்ட்ஸ் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3661551b-42a6-47c6-bc67-a125009c8fbf/26-6aae690e631e2.webp' /></p><p> </p><p>பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளின் நடத்தையைச் சரிசெய்யும் வகையில் ஆலோசனை அமர்வுகளில் (தங்கும் வசதியுடன் கூடிய பயிற்சிகள் உட்பட) பங்கேற்கக் கட்டாயப்படுத்தும் வகையிலான 'பெற்றோருக்கான உத்தரவுகளை' (parenting orders) வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் அரசு திட்டங்களை வகுத்துள்ளது; </p><p>இத்தகைய உத்தரவுகளைப் பின்பற்றத் தவறினால் 1,000 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படலாம் என அறிவிப்பு வெளியான நிலையிலேயே அமைச்சர் தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார்.</p><p></p><p> </p><p>மேலும், மிகத் தீவிரமான சூழல்களில் மட்டுமே பெற்றோருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும், தண்டனை குறித்த முடிவு நீதிபதியின் விருப்பத்திற்கு உட்பட்டது என்றும் அமைச்சர் கூறியுள்ளார். </p><p>மட்டுமின்றி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் முன்மொழியப்பட்ட மாற்றங்களை, அவர் ஊக்கமும் தண்டனையும் கலந்த அணுகுமுறையின் ஒரு பகுதியாக விவரித்துள்ளார். </p><p>குற்றவியல் நீதித்துறையைச் சேர்ந்த பல நிபுணர்கள் இந்த முன்மொழிவுகளை விமர்சித்துள்ளனர்; மேலும், இந்த உத்தரவுகள் பயனளிக்காதவை என்றும் ஏழைகளைத் தண்டிப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். </p><p>டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் உதவிப் பேராசிரியரான நிக்கி ரூட்டர், அபராதத் தொகையை அதிகரிப்பது சமூகங்களின் மீது பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.</p><h2>குற்றவியல் நடவடிக்கை</h2><p> </p><p>மேலும், வறுமை என்பது ஏராளமான குற்றச் செயல்களுடன் பிரிக்க முடியாதபடி பிணைக்கப்பட்டுள்ளது. பெற்றோரின் அபராதம் அதிகரிக்க அதிகரிக்க, அவர்களிடம் இருக்கும் பணமும் குறைகிறது. ஒரு குடும்பத்திடம் பணம் குறையக் குறைய, அவர்கள் மேலும் வறுமையில் மூழ்குவதை நாம் காண்கிறோம் என்றார். </p><p>16 வயதுக்குட்பட்ட குழந்தை ஒரு குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், நீதிமன்றங்கள் 'பெற்றோர் பொறுப்புக்கான உத்தரவு' (parenting order) ஒன்றை வழங்குவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும். </p><p>மேலும் குற்றங்கள் நிகழ்வதைத் தடுக்க இது உதவும் என்று அவர்கள் கருதினால், 16 மற்றும் 17 வயதுடையவர்களுக்கான உத்தரவு குறித்தும் அவர்கள் பரிசீலிக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34a62bb1-6019-40c7-908e-8d65bc250acb/26-6aae690f2013a.webp' /></p><p> </p><p>தண்டனை விதிப்புக்கான கவுன்சிலின் (Sentencing Council) கூற்றுப்படி, இந்த உத்தரவின் காலம் 12 மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்; மேலும், பெற்றோர் பொறுப்பு தொடர்பான உத்தரவை மீறுவது ஒரு குற்றவியல் நடவடிக்கையாகக் கருதப்பட்டு, அதிகபட்சமாக 1,000 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படலாம். </p><p>அரசுப் புள்ளிவிவரங்களின்படி, பெற்றோர் தொடர்பான உத்தரவுகளின் (parenting orders) பயன்பாடு சமீபத்திய ஆண்டுகளில் குறைந்துள்ளது; 2009-10 ஆம் ஆண்டில் 1,000-க்கும் மேற்பட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில், 2022-23 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை வெறும் 33-ஆகக் குறைந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-19T10:47:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ள அவசர இலக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dmt-introduces-new-whatsapp-number-for-complaints-1789813978"></link>
            <id>https://ibctamil.com/article/dmt-introduces-new-whatsapp-number-for-complaints-1789813978</id>
            <summary type="text">மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் 074 245 3300 என்ற புதிய வட்ஸ்அப் (WhatsApp) அவசரத் தொடர்பு எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் 074 245 3300 என்ற புதிய வட்ஸ்அப் (WhatsApp) அவசரத் தொடர்பு எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p> இதன் மூலம், மோட்டார் வாகனப் பதிவு தொடர்பான சிக்கல்கள் மற்றும் வாகனங்களால் ஏற்படும் இடையூறுகள் குறித்த எழுத்துப்பூர்வமான முறைப்பாடுகளைப் பொதுமக்கள் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
இந்தச் சேவையானது மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்கள ஆணையாளரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><h2>முறைப்பாடுகளை சமர்ப்பித்தல்</h2><p>பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிப்பதற்கான நேரடி மற்றும் எளிதில் அணுகக்கூடிய ஒரு வழிமுறையை வழங்குவதையும், உரிய நேரத்தில் அதற்கான பதில்கள் கிடைப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acb582b0-9959-4b81-8134-92995ae73703/26-6aae678f5fe1a.webp' /></p><p>
</p><p>
வாகனச் செயற்பாடுகள் தொடர்பான தாமதங்கள், முறைகேடுகள் அல்லது பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் போன்ற விடயங்கள் குறித்த முறைப்பாடுகளை, இந்த எண்ணிற்கு வட்ஸ்அப் செய்திகள் மூலம் எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பிக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T10:45:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய சட்டத்தில் கையெழுத்திட்ட ட்ரம்ப் ; ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trouble-for-countries-buying-russian-oil-1789814671"></link>
            <id>https://canadamirror.com/article/trouble-for-countries-buying-russian-oil-1789814671</id>
            <summary type="text">ரஷ்யா மற்றும் ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட புதிய சட்ட மசோதாவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா மற்றும் ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட புதிய சட்ட மசோதாவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார். </p><p>இந்த சட்டம் மூலம் ரஷ்யாவுக்கு எதிரான தடைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96ef82be-fe50-4b75-9439-1728b590a1f3/26-6aae6790d33e5.webp' /></p><p> ‘லிண்ட்சே ஓ. கிரஹாம் ரஷியா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026’ என்ற இந்த சட்டத்தின் கீழ், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாங்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்க டிரம்புக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை அதிக அளவில் வாங்கும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் இடம்பெற்றுள்ளதால், இந்த சட்டம் இந்தியாவுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. </p><p>எனினும், இந்திய பொருட்களுக்கு உடனடியாக 100 சதவீத வரி விதிக்கப்பட்டதாக அர்த்தமில்லை. அதற்கான அதிகாரம் டிரம்புக்கு வழங்கப்பட்டுள்ளது.


</p><p>
ரஷியாவின் எரிசக்தி துறைக்கு குறி
ரஷ்ய அதிகாரிகள், வங்கிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு எதிரான தடைகளை விரிவுபடுத்துவதுடன், ரஷியாவின் எரிசக்தி வர்த்தகம் மற்றும் தடைகளைத் தவிர்க்க உதவும் கப்பல் அமைப்புகளுக்கும் இந்த சட்டம் கடும் நெருக்கடியை ஏற்படுத்தும். </p><p>மேலும், ஈரான் மீது ஏற்கனவே உள்ள தடைகளையும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் வகையில் சட்டத்தில் விதிகள் இடம்பெற்றுள்ளன. </p><p>ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது புதிய வரிகளை விதிப்பதன் மூலம், அந்த நாடுகள் ரஷிய எரிசக்தியை வாங்குவதை குறைக்கச் செய்வதும், உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யா மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரித்து போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கிலும் இத்தகைய சட்டங்களை நிறைவேற்றி வருவதாக டிரம்ப் நிர்வாகம் கூறி வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-19T10:44:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பொலிஸ் மறித்தபோது மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்த இளைஞர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-dies-falling-off-motorcycle-police-jaffna-1789812288"></link>
            <id>https://tamilwin.com/article/youth-dies-falling-off-motorcycle-police-jaffna-1789812288</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞர்
ஒருவரை வீதிப் போக்குவரத்துப் பொலிஸார் மறித்தபோது அவர் மோட்டார் சைக்கிளுடன் கீழே...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞர்
ஒருவரை வீதிப் போக்குவரத்துப் பொலிஸார் மறித்தபோது அவர் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த சம்பவமானது&nbsp;இன்று(19.9.2026) காலை இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p>சுன்னாகம், சபாபதிப்பிள்ளை வீதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞரே
இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><h2>பிரேத பரிசோதனை</h2><p>
</p><p>
யாழ்ப்பாணத்தில் இயங்கும் பிரபல உணவகம் ஒன்றில் பணிபுரியும் இளைஞரே இவ்வாறு
உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fcb1f59-ee42-4056-b662-004ea001a1af/26-6aae648f356cf.webp' /></p><p>உயிரிழந்தவரின் சடலம் மேலதிக பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T10:43:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரியின் மண்டாடி திரைப்படத்தின் மொத்த வசூல் எத்தனை கோடி தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/soori-starrer-mandaadi-movie-box-office-collection-1789800305"></link>
            <id>https://manithan.com/article/soori-starrer-mandaadi-movie-box-office-collection-1789800305</id>
            <summary type="text">சூரி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் &quot;மண்டாடி&quot; திரைப்படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>சூரி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் "மண்டாடி" திரைப்படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடித்துள்ள மண்டாடி திரைப்படம் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
</p><p>
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தில் மஹிமா நம்பியார் கதாநாயகியாகவும், சுஹாஸ் வில்லனாகவும் நடித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c20814c0-3866-46a8-97fc-6aa6ba97f47b/26-6aae2f781a0f8.webp' /></p><p> 

ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.</p><p> 

இதனால் படத்திற்கான திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.</p><p>

படகு பந்தயத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், சுவாரஸ்யமான திரைக்கதையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/Mandaadi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Mandaadi</a> Reaches Yet Another Milestone! 🔥<a href="https://x.com/hashtag/Mandaadi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Mandaadi</a> Grosses ₹80+ Crores Worldwide! 💥<br><br>The Reign Continues! ⛵⚓💥<a href="https://x.com/hashtag/Mandaadi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Mandaadi</a> is Running Successfully in theatres near you! 💥<a href="https://x.com/sooriofficial?ref_src=twsrc%5Etfw">@sooriofficial</a> <a href="https://x.com/hashtag/Suhas?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Suhas</a> <a href="https://x.com/hashtag/Sathyaraj?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Sathyaraj</a> <a href="https://x.com/Mahima_Nambiar?ref_src=twsrc%5Etfw">@Mahima_Nambiar</a><a href="https://x.com/RavindraVijay1?ref_src=twsrc%5Etfw">@RavindraVijay1</a> <a href="https://x.com/MithunJS5?ref_src=twsrc%5Etfw">@MithunJS5</a><a href="https://x.com/Bala_actor?ref_src=twsrc%5Etfw">@bala_actor</a>… <a href="https://t.co/eDCc9CT45S">pic.twitter.com/eDCc9CT45S</a></p>&mdash; RS Infotainment (@rsinfotainment) <a href="https://x.com/rsinfotainment/status/2100873325270757888?ref_src=twsrc%5Etfw">September 18, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>படம் சிறந்த திரையரங்க அனுபவத்தை வழங்குவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p><p>

ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவான மண்டாடி திரைப்படம் உலக அளவில் ரூ.80 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T10:42:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[தியாகதீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவின் ஐந்தாம் நாள் நினைவேந்தல் அனுஸ்டிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/commemoration-of-thiyagatheepam-thileepan-1789813934"></link>
            <id>https://tamilwin.com/article/commemoration-of-thiyagatheepam-thileepan-1789813934</id>
            <summary type="text">தியாகதீபம் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவின் ஐந்தாம் நாள்
நினைவேந்தல் பருத்திதுறையில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவகத்தில் இடம்பெற்றுள்ளது.&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>தியாகதீபம் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவின் ஐந்தாம் நாள்
நினைவேந்தல் பருத்திதுறையில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவகத்தில் இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>பருத்துத்துறை நகர சபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி தலைமையில் இன்று (19.09.2026) காலை இந்த நிகழ்வு இடம் பெற்றுள்ளது.</p><p>

இதில் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன், பருத்தித்துறை நகரசபை
உறுப்பினர்கள், அரசியல் செயற்பாடாளர்கள், என பலரும் கலந்துகொண்டு மலர்
அணிவித்து மலர் அஞ்சலி செய்தும் நினைவேந்தலில் ஈடுபட்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84912769-4720-436f-a4b0-5b9b14a0e4ff/26-6aae6637e4cb9.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T10:40:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை முற்றத்தில் காலைவேளை பாடிக்கொண்டிருந்த மாணவிக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/female-student-school-courtyard-fell-down-and-died-1789813794"></link>
            <id>https://ibctamil.com/article/female-student-school-courtyard-fell-down-and-died-1789813794</id>
            <summary type="text">மாத்தறை, அக்குருகொட சேனாணி கனிஷ்ட வித்தியாலயத்தில் 08 ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த 12 வயது மாணவி ஒருவர் பாடசாலை முற்றத்தில் திடீரென மயங்கி விழுந்து வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை, அக்குருகொட சேனாணி கனிஷ்ட வித்தியாலயத்தில் 08 ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த 12 வயது மாணவி ஒருவர் பாடசாலை முற்றத்தில் திடீரென மயங்கி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக மாலிம்பட தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p> இவ்வாறு துரதிஷ்டவசமாக உயிரிழந்தவர் தெலிஜ்ஜவில, கல்எந்தகுட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பஹந்துவே சிகன்யா மிபுனி என்ற சிறுமி ஆவார்.&nbsp;</p><h2>&nbsp;சக மாணவின் கையை பிடித்து பாடிக் கொண்டிருந்தவேளை சம்பவம்</h2><p>கடந்த 17ஆம் திகதி காலை பாடசாலைக்கு வந்த குறித்த மாணவி, ஆசிரியர் இல்லாத நேரத்தில் வகுப்பறையிலிருந்து வெளியே சென்று சக மாணவியின் கையைப் பிடித்துக்கொண்டு பாடல் பாடிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மாணவியின் கையிலிருந்து நழுவி, அவள் மல்லாக்க தரையில் விழுந்தாள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/293d5ed6-70a2-48e6-9936-6ef9f88b2652/26-6aae6425542ae.webp' /></p><h2>மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதி</h2><p>

இந்த சம்பவத்தை அடுத்து ஏனைய மாணவிகள் கூச்சலிட்டனர், உடனடியாக செயல்பட்ட ஆசிரியர்கள் இது குறித்து விசாரித்து, 1990 அம்புலன்ஸ் மூலம் சிறுமியை மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbdccb70-45e7-4044-b601-6048909df853/26-6aae6424a09ae.webp' /></p><p> </p><p>அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவள் உயிரிழந்தாள். உயிரிழந்த சிறுமி சிறு வயதில் இதய நோய்க்கு சிகிச்சை பெற்றிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp; &nbsp; &nbsp; </p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T10:30:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை விட்டு தப்பியோடும் அரசியல்வாதிகள் மற்றும் குடும்பத்தினருக்கு சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trouble-for-politicians-families-fleeing-country-1789810544"></link>
            <id>https://tamilwin.com/article/trouble-for-politicians-families-fleeing-country-1789810544</id>
            <summary type="text">


இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அல்லது பிற அமைப்புகள் பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை தொடங்கிய பின்னர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>


இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அல்லது பிற அமைப்புகள் பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை தொடங்கிய பின்னர் வெளிநாடு செல்ல முயற்சிக்கும் அரசியல்வாதிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p>உளவுத்துறை அமைப்புகளுக்கு அரசாங்கம் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.</p><h2>பொய் கூறி வெளிநாடு செல்ல முயற்சி</h2><p>
</p><p>
பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை தொடங்கிய பின்னர், உடல்நலக்குறைவு என்று பொய் கூறி வெளிநாடு செல்ல முயற்சிக்கும் நபர்களை இந்த அமைப்பு கூர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0d3e589-5c11-4b8c-b6e1-77888e1eedb3/26-6aae61c06ac53.webp' /></p><p> </p><p>

இதற்கிடையில், குற்றம்சாட்டப்பட்ட சில அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சமர்ப்பித்த மருத்துவ அறிக்கைகள் உண்மையானவையா என்பதை உறுதிப்படுத்தவும் விசாரணைகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>

இவ்வாறான சில விசாரணைகள் தொடங்கப்பட்ட பின்னர், வெளிநாடு சென்று திரும்பத்தவறிய பல அரசியல்வாதிகளை உளவு அமைப்புகள் தற்போது விசாரித்து வருவதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><h2>தூதரக மட்டத்திலும் பேச்சுவார்த்தை</h2><p>
</p><p>
அவர்களை நாட்டிற்கு திரும்ப அழைத்து வருவது குறித்து தூதரக மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
</p><p>
 இதற்கிடையில், பல்வேறு பொதுமன்னிப்புகளின் கீழ் விடுவிக்கப்பட்ட சில நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
</p><p>
அவர்களது விடுதலை சட்டப்பூர்வமானதா என்பதை உறுதி செய்வதே இந்த விசாரணையின் நோக்கம் என்று நீதித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T10:26:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்பதிவு வசூலில் உச்சம் தொட்ட நானி-யின் 'பாரடைஸ்']]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/paradise-movie-pre-booking-1789809627"></link>
            <id>https://cineulagam.com/article/paradise-movie-pre-booking-1789809627</id>
            <summary type="text">பாரடைஸ்நானி, கயாடு லோகர் நடிப்பில் இந்த வாரம் பிரம்மாண்டமாக திரைக்கு வரவிருக்கும் படம் பாரடைஸ். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே அனிருத...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பாரடைஸ்</h2><p>நானி, கயாடு லோகர் நடிப்பில் இந்த வாரம் பிரம்மாண்டமாக திரைக்கு வரவிருக்கும் படம் <a href="https://www.dinamani.com/cinema/cinema-news/2026/Sep/18/nani-doesnt-want-the-paradise-called-pan-india-heres-why" target="_blank">பாரடைஸ்</a>. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/879d56d7-9f2f-4906-9b06-cd58ebbec01a/26-6aae53de9a195.webp' /></p><p></p><p>ஏற்கனவே அனிருத் இசையில் இப்படத்தின் இரண்டு பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f11af6a-b587-4a27-b96f-e5f0c5662f98/26-6aae53df55f11.webp' /></p><p></p><h2>முன்பதிவு&nbsp;</h2><p> </p><p>

இந்நிலையில் பாரடைஸ் தெலுங்கு மட்டுமின்றி தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது. மேலும் இந்த படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்க வேண்டும் என ட்ரைலரே ரிலீஸ் செய்யவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2331dabf-f043-442e-9ed1-bb9b35b74169/26-6aae53e00e750.webp' /></p><p></p><p> அப்படியிருந்தும் இந்த படத்தின் முன்பதிவு நார்த் அமெரிக்காவில் தொடங்கி 5.5 லட்சம் டாலர் முன்பதிவு வசூலாகியுள்ளதாம். கண்டிப்பாக 10+ லட்சம் டாலர் முதல் நாள் வசூல் வட அமெரிக்காவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-19T10:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர முயற்சி ; அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/minister-nalinda-jayatissa-seeks-pardon-for-anojan-1789813137"></link>
            <id>https://jvpnews.com/article/minister-nalinda-jayatissa-seeks-pardon-for-anojan-1789813137</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர முடிந்தவரை முயற்சிப்பதாக சுகாதார மற்றும் ஊடக அம...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர முடிந்தவரை முயற்சிப்பதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

 

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், விதிக்கப்பட்டுள்ள தண்டனையைக் குறைப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7793291d-6b7b-44df-a087-be5d8e718201/26-6aae61931e38a.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;பல கட்ட பேச்சுவார்த்தைகள்</h2><p style="text-align: justify; ">

 

இது குறித்து வெளிவிவகார அமைச்சுக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, ஐக்கிய அரபு இராச்சிய (சவூதி) அரசாங்கத்துடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.</p><p style="text-align: justify; ">

 

அத்துடன், சிவராசா அனோஜனுக்கு சட்ட உதவியை வழங்குவதற்கு தூதரகம் தலையிட்டுள்ளதுடன், இதற்காக விசேட அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நலிந்த ஜயதிஸ்ஸ வெளிப்படுத்தினார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

இச்சம்பவம் தொடர்பில் சவூதியில் நிலவும் சட்டத்திற்கு அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.&nbsp; &nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-19T10:19:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸ் 10ல் தலைமைத்துவம் பற்றி சர்ச்சை பேச்சு!! முற்றுப்புள்ளி வைத்த விஜய் சேதுபதி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/vijay-sethupathi-stop-rumour-about-leadership-bb10-1789811667"></link>
            <id>https://viduppu.com/article/vijay-sethupathi-stop-rumour-about-leadership-bb10-1789811667</id>
            <summary type="text">நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள பத்தா படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. அதே நாளில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள பத்தா படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. அதே நாளில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள சிக்மா படமும் ரிலீஸாகவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a335a94-405c-4b86-bdb5-8edfd3acb9ac/26-6aae5bd57b586.webp' /></p><p> </p><p>2 படங்களில் இசை வெளியீட்டு விழாவும் சமீபத்தில் ஒரே நாளில் நடந்தது. அப்போது விஜய் சேதுபதி, விஜய் பற்றி பேசுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. அதற்கு காரணம், விஜய் சேதுபதி பிக்பாஸ் 10 நிகழ்ச்சியில் லீடர்ஷிப் பற்றி பேசியது தான்.</p><p>இந்நிலையில், இது குறித்து விஜய் தொலைக்காட்சி விளக்கம் அளித்த நிலையில், விஜய் சேதுபதி இன்றைய சனிக்கிழமை பிக்பாஸ் 10 பிரமோ வீடியோவில் விளக்கம் கொடுத்துள்ளார். இந்த பிரமோவை பார்த்த பலரும் அடி பலமோ என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/d_x5jXpag8U" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-19T10:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொகுசு பேருந்தால் ஏற்பட்ட விபரீதம் : தம்புள்ள தேசிய பாடசாலை அதிபர் உயிரிழந்தார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dambulla-national-school-principal-dies-1789811858"></link>
            <id>https://ibctamil.com/article/dambulla-national-school-principal-dies-1789811858</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தம்புள்ள - ஹபரண பிரதான வீதியில் உள்ள பெல்வெஹெர பகுதியில் நேற்றையதினம்(18) நிகழ்ந்த ஒரு பயங்கரமான சாலை விபத்தில் தம்புள்ள தேசிய பாடசாலையின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தம்புள்ள - ஹபரண பிரதான வீதியில் உள்ள பெல்வெஹெர பகுதியில் நேற்றையதினம்(18) நிகழ்ந்த ஒரு பயங்கரமான சாலை விபத்தில் தம்புள்ள தேசிய பாடசாலையின் அதிபர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்தனர். </p><p>

இந்த விபத்தில் தம்புள்ள தேசிய பாடசாலையின் அதிபராக பணியாற்றி வந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜனக விஜேசிங்க என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.</p><h2>&nbsp;சொகுசு பேருந்தால் ஏற்பட்ட விபரீதம்</h2><p>ஒரு சொகுசு பேருந்துக்கும் இரண்டு கார்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் இந்த விபத்து நிகழ்ந்தது.

திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து, தனது வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் எதிர் திசைப் பாதைக்குள் விலகிச் சென்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6e257c1-05f5-42f3-8ffc-26b87df82eb8/26-6aae5f4c789d9.webp' /></p><p> அப்போது, ​​தம்புள்ளையிலிருந்து ஹபரண நோக்கிச் சென்று கொண்டிருந்த அதிபரின் கார், பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில்,கார் சாலையிலிருந்து தூக்கி எறியப்பட்டது. நிற்காமல் தொடர்ந்து சென்ற பேருந்து, ஒரு சுற்றுலா விடுதிக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரைக் கவிழ்த்து, அருகிலிருந்த உணவகம் ஒன்றில் மோதியது.
</p><p>
விபத்துக்குப் பிறகு, பலத்த சேதமடைந்த தனது காரில் அதிபர் ஜனக விஜேசிங்க 45 நிமிடங்களுக்கும் மேலாகச் சிக்கியிருந்தார். அவரை வெளியே கொண்டுவர உள்ளூர் மக்கள் கடுமையாகப் போராடினர்.</p><p></p><p> </p><h2>மக்களால் மிகவும் நேசிக்கப்பட்டார்</h2><p>உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அதிபர், பின்னர் தம்புள்ளை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தம்புள்ளை தலைமையக காவல்துறை ஆய்வாளர் சுகத் விஜேசிங்க உறுதிப்படுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/740ee916-5207-476e-a5bb-08882ebe7904/26-6aae5f4d2e452.webp' /></p><p> </p><p>இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

பல ஆண்டுகளாக தம்புள்ளை தேசியபாடசாலையில் மிகவும் சுறுசுறுப்பாகப் பணியாற்றி வந்த ஜனக விஜேசிங்க, அப்பகுதியில் உள்ள கோயில்கள் மற்றும் பிற பள்ளிகளுடன் நெருங்கிய உறவைப் பேணி, பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ததன் காரணமாக அப்பகுதி மக்களால் மிகவும் நேசிக்கப்பட்டார் மற்றும் மதிக்கப்பட்டார். </p><p>விபத்தில் அதிபரின் கார் பலத்த சேதமடைந்தது, மேலும் இச்சம்பவம் குறித்து தம்புள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T10:09:33+00:00</updated>
        </entry>
    </feed>
