<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-19T22:23:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி அரேபியாவின் முக்கிய நகரங்களை தாக்கிய ஹவுதிகள்: பதிலடிகள் தொடரும் என எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/houthi-attacks-riyadh-and-yanbu-in-saudi-1789854301"></link>
            <id>https://news.lankasri.com/article/houthi-attacks-riyadh-and-yanbu-in-saudi-1789854301</id>
            <summary type="text">சவுதி அரேபியாவின் முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தி இருப்பதாக அதன் இராணுவ பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். சவுதியின...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவின் முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தி இருப்பதாக அதன் இராணுவ பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><h3> சவுதியின் முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்த ஹவுதி</h3><p>
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் மற்றும் யான்பு நகரில் உள்ள சவுதி அராம்கோ நிறுவனத்தின் முக்கிய உள்கட்டமைப்பு வசதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக ஹவுதி படையினர் இராணுவ பேச்சாளர் யஹ்ஹா சரீ தகவல் தெரிவித்துள்ளார்.</p><p> இந்த தாக்குதலில் பாலிஸ்டிக் ஏவுகணைகள், குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஏராளமான ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஏமன் தலைநகர் சனா மீது சவுதி ராணுவத்தினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக யஹ்ஹா சரீ குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5087c42e-cc0d-4463-8812-278cae157840/26-6aaf025ea6350.webp' /></p><p> பொதுமக்களை குறிவைத்து ஹவுதி படையினர் தாக்குதல் நடத்துவதாக சவுதி குற்றஞ்சாட்டிய நிலையில், அதனை மறுத்த யஹ்ஹா சரீ, குறிவைக்கப்பட்ட ராணுவ இலக்குகளை ஏவுகணைகள் வெற்றிகரமாக அடைந்ததாக தெரிவித்துள்ளார்.</p><p> அத்துடன் சவுதிக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர போவதாகவும் சரீ குறிப்பிட்டுள்ளார்.</p><p> இதற்கிடையில் ஹவுதி படையினர் நடத்திய தாக்குதல் பதற்றம் காரணமாக தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக விமான சேவைகளை இடை நிறுத்தியுள்ளது.<br></p>]]></content>
            <updated>2026-09-19T21:45:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொருளாதார வளர்ச்சி விகிதம் மீண்டும் வீழ்ச்சி! விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/economic-growth-rate-falls-again-1789852296"></link>
            <id>https://tamilwin.com/article/economic-growth-rate-falls-again-1789852296</id>
            <summary type="text">இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் கணிசமான அளவில் மீண்டும் வீழ்ச்சியுற்றிருப்பதை சுட்டிக் காட்டும் பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ, சீர்திருத்தங...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் கணிசமான அளவில் மீண்டும் வீழ்ச்சியுற்றிருப்பதை சுட்டிக் காட்டும் பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ, சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமல் போனால் பாரிய நெருக்கடி ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.</p><p>

அட்வகேட்டா நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியும் பொருளாதார ஆய்வாளருமான தனநாத் பெர்னாண்டோ, அண்மையில் வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வுக் கட்டுரையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><h2>நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம்</h2><p>
அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் மீண்டும் கணிசமான அளவில் குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42f274d0-e68f-490c-914e-ca33019829e6/26-6aaefd7d23238.webp' /></p><p>தற்போதைய பொருளாதாரம் 2018ஆம் ஆண்டில் இருந்த நிலையைக்கூட எட்டவில்லை.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் சமீபத்திய தரவுகளை ஆய்வு செய்யுயும்போது, ஆண்டின் முதல் காலாண்டில் 5.1 சதவீதமாகப் பதிவான பொருளாதார வளர்ச்சி விகிதம், இரண்டாவது காலாண்டில் கிட்டத்தட்ட ஒரு சதவீதப் புள்ளி குறைந்து 4.2 சதவீதமாகச் சரிந்துள்ளது.</p><p>பொருளாதாரம் வளர்ந்து வந்தாலும், வளர்ச்சி விகிதத்தில் ஏற்பட்டுள்ள இந்த மந்தநிலை நாட்டின் எதிர்காலத்திற்கு சாதகமற்ற போக்கு எனலாம்.

குறிப்பாக, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ​​இரண்டாவது காலாண்டில் பதிவுசெய்யப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி (சுமார் 3,029.8 பில்லியன் ரூபா), 2018 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பதிவுசெய்யப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியை (3,121.5 பில்லியன் ரூபா) விட கிட்டத்தட்ட 2 சதவீதம் குறைவாகவே உள்ளது.</p><p>
பொருளாதார நெருக்கடியின் காரணமாக இந்த நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் 8 முதல் 10 ஆண்டுகள் வரை பின்னோக்கிச் சென்றுள்ளது என்பதை இது உணர்த்துகிறது.
</p><p>
இரண்டாவது காலாண்டில் துறைரீதியாக பொருளாதார வளர்ச்சியை ஆய்வு செய்யும்போது, ​​விவசாயத் துறை 2.3 சதவீதம் சுருங்கியுள்ளது. அதே நேரத்தில் நெல் உற்பத்தி 15.1 சதவீதமும், பெட்ரோலியம் சார்ந்த பொருட்கள் கிட்டத்தட்ட 15 சதவீதமும் குறைந்துள்ளன.</p><h2>நாடு இன்னும் பல ஆண்டுகளுக்குப் பின்னோக்கி</h2><p>தொழில்துறை 7.3 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது முதன்மையாக கட்டிட கட்டுமானத் துறை (13.9மூ) மற்றும் சுரங்கம் மற்றும் கல் குவாரித் துறை (17.4மூ) ஆகியவற்றின் வளர்ச்சியால் ஏற்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e5f468f-425c-4cf1-94c9-a489caa508e8/26-6aaefd7dd0547.webp' /></p><p>
சேவைத் துறை சராசரியாக 2.7 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இருப்பினும், பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் ஏற்படும் மந்தநிலை, சாமானிய மக்களின் வருமான ஆதாரங்களையும் ஊதியங்களையும் நேரடியாகப் பாதிக்கிறது. </p><p>இது வறுமையின் அபாயத்தை அதிகரிப்பதோடு, கடன் மறுசீரமைப்பிற்குப் பிறகு நாடு மீண்டும் கடன் நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயத்தையும் ஏற்படுத்தும்.
</p><p>
மேலும், இது சர்வதேச கடன் மதிப்பீடுகளில் முன்னேறுவதற்கு ஒரு தடையாக அமையும்.

நாடு எதிர்கொள்ளும் இந்த அபாயத்தைக் கடக்க, பொருளாதார வளர்ச்சி விகிதத்தை நீண்ட காலத்திற்கு 6 முதல் 7 சதவிகித அளவில் பராமரிக்க வேண்டும் என்பதுடன், இதற்காக, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதையும் தாண்டிய விரிவான பொருளாதார சீர்திருத்தங்களை அவசரமாக மேற்கொள்ள வேண்டும்.
</p><p>
மேலும், சீர்திருத்தங்கள், குறிப்பாக காணிச் சீர்திருத்தங்கள், தொழிலாளர் சந்தை சீர்திருத்தங்கள் மற்றும் பொதுத்துறையில் செயல்திறன் மேம்பாடுகள் ஆகியவை உடனடியாகச் செயல்படுத்தப்படாவிட்டால், நாடு இன்னும் பல ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் செல்ல நேரிடும் என்றும் தனநாத் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T21:34:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாலத்தீவில் கிளாமரான நீச்சல் உடையில் சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ் வெளியிட்ட போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/serial-actress-aarthi-subash-beach-photoshoot-1789818557"></link>
            <id>https://cineulagam.com/article/serial-actress-aarthi-subash-beach-photoshoot-1789818557</id>
            <summary type="text">ஆர்த்தி சுபாஷ்யூடியூபில் குறும்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆர்த்தி சுபாஷ். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் மூலம் சின்னத்திரையி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஆர்த்தி சுபாஷ்</h2><p>யூடியூபில் குறும்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆர்த்தி சுபாஷ். </p><p>சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி ஆனார்.
மல்லிகா கதாபாத்திரத்தில் தனக்கே உரிய நகைச்சுவை கலந்த துணிச்சலான பாணியில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
</p><p>அந்த சீரியலை தொடர்ந்து விஜய் டிவி பக்கம் வந்தவர் வீட்டுக்கு வீடு வாசப்படி, சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம் தொடர்களில் நடித்தார். </p><p>இவர் சன் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி சீரியல் நாயகன் பவன் ரவீந்திரனை காதலித்துள்ளார், இருவருக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்தது. </p><p>தற்போது நடிகை ஆர்த்தி சுபாஷ் கடற்கரையில் கிளாமரான நீச்சல் உடையில் வெளியிட்ட புகைப்படங்களை காண்போம்.&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T21:30:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவீடன் நாட்டு எம்.பி.யாக இந்திய வம்சாவளி பெண் தேர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indian-origin-woman-elected-as-swedish-mp-1789851374"></link>
            <id>https://canadamirror.com/article/indian-origin-woman-elected-as-swedish-mp-1789851374</id>
            <summary type="text">சுவீடனில் நடைபெற்ற பொதுத்தேர்தலில், ஸ்டாக்ஹோம் சிட்டி தொகுதியில் பசுமைக்கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிலா விகே பாட்டீல் (41)...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவீடனில் நடைபெற்ற பொதுத்தேர்தலில், ஸ்டாக்ஹோம் சிட்டி தொகுதியில் பசுமைக்கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிலா விகே பாட்டீல் (41) வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
</p><p>
மராட்டியத்தைச் சேர்ந்த பிரபல கல்வியாளர் அசோக் விகே பாட்டீலின் மகளான நிலா விகே பாட்டீல், மராட்டியத்தின் முக்கிய அரசியல் மற்றும் கூட்டுறவுத் துறை குடும்பத்தைச் சேர்ந்தவர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96169be7-aa33-4baf-87b3-a7603148f5a1/26-6aaef6ef7b543.webp' /></p><p>ஆசியாவின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையை நிறுவிய விதல்ராவ் விகே பாட்டீலின் கொள்ளுப் பேத்தியும், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் பாலசாகேப் விகே பாட்டீலின் பேத்தியும் ஆவார். மேலும், தற்போதைய பா.ஜனதா அமைச்சர் ராதாகிருஷ்ண விகே பாட்டீலின் அண்ணன் மகளும் ஆவார்.
</p><p>
சுவீடனில் பிறந்த நிலா, தனது குழந்தைப் பருவத்தின் ஒரு பகுதியை மராட்டிய மாநிலம் அகமதுநகரில் கழித்துள்ளார். சுவீடனில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றுள்ள அவர், கடந்த 25 ஆண்டுகளாக அந்நாட்டின் பசுமைக்கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்துள்ளார்.
</p><p>
இதற்கு முன்னர், முன்னாள் சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோஃப்வென் தலைமையிலான அரசில் நிதி மற்றும் வீட்டுவசதி துறைகளுக்கான அரசியல் ஆலோசகராகவும் நிலா விகே பாட்டீல் பணியாற்றியுள்ளார்.
</p><p>
தனது வெற்றி குறித்து கருத்து தெரிவித்த நிலா, 349 உறுப்பினர்களைக் கொண்ட சுவீடன் நாடாளுமன்றத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார்.</p><p> மேலும், தனது 15 வயதில் மராட்டிய மாநில பட்ஜெட்டை படிக்கச் செய்த தனது தாத்தா பாலசாகேப் விகே பாட்டீல் உயிருடன் இருந்திருந்தால், தனது வெற்றியைப் பார்த்து பெருமைப்பட்டிருப்பார் என்றும் கூறினார்.
</p><p>
“இந்தியாவை எனக்கு மிகவும் பிடிக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
சுவீடன் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி 176 இடங்களைப் பெற்று பெரும்பான்மையைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மராட்டிய மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-19T20:56:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருடப்பட்ட மாடுகளை ஏற்றிச் சென்ற சொகுசு கார் கைப்பற்றல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/luxury-car-used-to-transport-stolen-cattle-seized-1789849494"></link>
            <id>https://tamilwin.com/article/luxury-car-used-to-transport-stolen-cattle-seized-1789849494</id>
            <summary type="text">திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வநகர் பகுதியில்,
திருடப்பட்டதாகக் கூறப்படும் மாடுகளை ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படும்
சொகுசு கார...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வநகர் பகுதியில்,
திருடப்பட்டதாகக் கூறப்படும் மாடுகளை ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படும்
சொகுசு கார் ஒன்றை சேருநுவர பொலிஸார்&nbsp;கைப்பற்றியுள்ளனர்</p><p>குறித்த நடவடிக்கையானது நேற்று (19.09.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><h2>கைப்பற்றப்பட்ட சொகுசு கார்</h2><p>
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது குறித்த கார்
கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எனக்
கூறப்படும் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18411d26-57ff-4a2b-a94a-951ac300baad/26-6aaef56a71607.webp' /></p><p>

கைப்பற்றப்பட்ட சொகுசு காரை அடிப்படையாகக் கொண்டு, மாடுகள் திருட்டுச்
சம்பவத்துடன் குறித்த வாகனத்துக்கு தொடர்பு உள்ளதா என்பது தொடர்பிலும்
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>
தப்பிச் சென்றதாகக் கூறப்படும் சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும்
முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T20:50:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நியூயார்க்கில் நிறுவப்பட்ட இலவச பொது கழிப்பறைகள் ; 10 நிமிடத்திற்கு மேல் உள்ளே இருந்தால் கதவு திறந்துவிடும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/free-public-toilets-installed-in-new-york-1789844490"></link>
            <id>https://canadamirror.com/article/free-public-toilets-installed-in-new-york-1789844490</id>
            <summary type="text">அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பொதுமக்களின் தேவைக்காக, நகரின் 5 முக்கிய பகுதிகளில் மொத்தம் 17 இலவச பொது கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த கழிப்பறைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பொதுமக்களின் தேவைக்காக, நகரின் 5 முக்கிய பகுதிகளில் மொத்தம் 17 இலவச பொது கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. </p><p>இந்த கழிப்பறைகளை யார் வேண்டுமானாலும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த கழிப்பறைகள் திறந்திருக்கும்.</p><p>இந்த கழிப்பறைகள் இருக்கும் இடத்தை கண்டறிய பிரத்யேக மொபைல் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பல வசதிகள் இருந்தாலும், இந்த கழிப்பறைகளை பயன்படுத்துவதற்கு ஒரு முக்கியமான விதி உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b50bc855-abe8-4d3b-89f4-a81c584c7d64/26-6aaedc0ca9f45.webp' /></p><p>அதாவது, கழிவறைக்கு உள்ளே சென்றுவிட்டால் 10 நிமிடத்திற்குள் வேலையை முடித்துவிட்டு வெளியே வந்துவிட வேண்டும். </p><p>கழிவறையை பயன்படுத்த தொடங்கியதில் இருந்து கவுண்ட் டவுன் ஓடத் தொடங்கிவிடும். 5 நிமிடங்கள் ஆனவுடன் ஒரு ஆடியோ எச்சரிக்கை வரும். தொடர்ந்து 8-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு எச்சரிக்கை வரும்.</p><p>இதைத் தொடர்ந்து 10-வது நிமிடத்தில் கடைசியாக ஒரு எச்சரிக்கை ஒலிக்கும். அதன் பிறகு சில வினாடிகளில் கழிப்பறையின் கதவு தானாக திறந்துவிடும். </p><p>இத்தகைய நவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த கழிப்பறையை நியூயார்க் நகரில் நிறுவுவது தொடர்பான அறிவிப்பை நியூயார்க் மேயர் சோஹ்ரான் மம்தானி வெளியிட்டார்.
</p><p>
இது குறித்து அவர் கூறுகையில், “கழிப்பறைகள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளோம். கழிப்பறை என்பது செல்போனில் ஸ்கோரல் செய்து கொண்டிருக்கும் இடமாக இருக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13fd3acc-a29a-4d68-af3f-0931088c64df/26-6aaedc0bf1e78.webp' /></p><p>இந்த நவீன கழிப்பறை திட்டத்திற்காக நியூயார்க் நகர நிர்வாகம் சுமார் 4 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.38 கோடி) செலவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
</p><p>
இத்தகைய கழிப்பறைகளை நிறுவுவதற்கு முன்னதாக, இது குறித்து ஆய்வுகளும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. </p><p>அதாவது சராசரியாக ஒரு நபர் மூன்றரை நிமிடங்கள் கழிப்பறையை பயன்படுத்துகிறார் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும், எனவே 10 நிமிடங்கள் என்பது பெரும்பாலான நபர்களுக்கு போதுமான நேரமாகவே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T20:47:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதலருடன் 2 மாதம் உல்லாசம் ; வீட்டுக்கு திரும்பி வந்து கணவரின் அந்தரங்க உறுப்பில் கடித்து வைத்த மனைவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/illicit-romance-lover-wife-husband-private-part-1789842438"></link>
            <id>https://jvpnews.com/article/illicit-romance-lover-wife-husband-private-part-1789842438</id>
            <summary type="text">காதலருடன் 2 மாத உல்லாசம் அனுபவித்து விட்டு, வீட்டுக்கு திரும்பி வந்த மனைவி, கணவரின் அந்தரங்க உறுப்பில் கடித்து வைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>காதலருடன் 2 மாத உல்லாசம் அனுபவித்து விட்டு, வீட்டுக்கு திரும்பி வந்த மனைவி, கணவரின் அந்தரங்க உறுப்பில் கடித்து வைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.</p><p></p><p>

உத்தர பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் வசித்து வருபவர் சாதனா. இவருடைய கணவர் தீபக். இந்த தம்பதிக்கு, 3 வயது பெண் குழந்தை உள்பட 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.</p><h3>குடும்பத் தகராறு</h3><p> </p><p>இந்த நிலையில், தீபக்கின் நண்பருடன் சாதனாவுக்கு நட்பு ஏற்பட்டது.

இதன்பின்னர் அவருடனான உறவு நெருக்கமடைந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc6f1d97-7c00-48f3-9ac9-ef69c907b07d/26-6aaed407b589f.webp' /></p><p>ஒரு நாள் யாரிடமும் எதுவும் கூறாமல் அவருடன் சாதனா ஓடி விட்டார். 2 மாதங்களாக அவருடனேயே தங்கி, உல்லாசம் அனுபவித்து வந்த சாதனா, நேற்று முன்தினம் கணவரின் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.</p><p>அப்போது, சாதனாவுடன் தீபக் வாக்குவாதம் செய்துள்ளார். இதில், இருவருக்கும் மோதல் ஏற்பட்டு வன்முறையில் முடிந்தது. விசயம் பொலிஸ் வரை சென்றது. இந்த சம்பவம் பற்றி பொலிஸார் கூறும்போது, சாதனாவின் மூக்கை தீபக் கடித்து விட்டார் என புகார் பதிவானது. </p><p>இதனால், தீபக் கைது செய்யப்பட்டு உள்ளார் என்றனர்.

தீபக், சாதனாவின் தலையில் தாக்கியதுடன், அவருடைய மூக்கை கடித்து, சாக்கடையில் வீசி விட்டார். </p><p>இந்த சண்டையின்போது மாமனாரும், மாமியாரும் சாதனாவின் கைகளை பிடித்து கொண்டனர் என சாதனா குற்றச்சாட்டாக கூறியுள்ளார். </p><p>இதனால் பலத்த காயமடைந்த மீட்ட பொலிஸார் அவரை சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.</p><p>எனினும், தீபக்கின் தாய் கூறும்போது, தீபக்கின் நண்பருடன் சாதனா ஓடி விட்டார். இதுபற்றி பொலிசிடம் கூறினோம். அவர்கள் சமரசம் செய்து வைத்தனர். ஆனால், யாரும் எதிர்பாராமல் பக்கத்து வீட்டு மாடியில் இருந்து எங்களுடைய வீட்டுக்குள் சாதனா குதித்து விட்டார். </p><p>குழந்தைகளை அழைத்து செல்ல முற்பட்டார்.

இந்த தகராறில், தீபக்கின் அந்தரங்க உறுப்புகளை சாதனா கடித்து வைத்து விட்டார். </p><p>பின்னர், அவராகவே தரையில் தலையைக்கொண்டு மோதி காயம் ஏற்படுத்தி கொண்டார் என கூறினார். இதுதொடர்பாக சாதனாவுக்கு எதிராக முறைபாடு அளித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T20:46:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் ஊழல் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/full-support-government-anti-corruption-anti-drug-1789850659"></link>
            <id>https://jvpnews.com/article/full-support-government-anti-corruption-anti-drug-1789850659</id>
            <summary type="text">அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்குத் தாம் முழுமையான ஆதரவை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்குத் தாம் முழுமையான ஆதரவை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
</p><p>
 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்:

 

"நாட்டிற்கு எதிராகச் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c272ba3-9d8c-46dc-b980-8e6e89c1dc2a/26-6aaef42504730.webp' /></p><p>என் மீது சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு சாமர சம்பத் அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் சவால் விடுத்திருந்தேன். </p><p>ஆனால், இதுவரை அவர்களால் எந்தவொரு குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியவில்லை. </p><p>ஊழல் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு, நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் நேர்மறையான நடவடிக்கைகளுக்கு இலங்கைத் தமிழரசுத் கட்சி தொடர்ந்து ஆதரவளிக்கும். </p><p>போதைப்பொருள் மற்றும் மதுப் பயன்பாட்டினால் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழ் இளைஞர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வன்முறைகளும் அதிகரித்துள்ளன.</p><p>எனவே, போதைப்பொருள் ஒழிப்புக்கும் மதுபானசாலைகளை மூடும் நடவடிக்கைகளுக்கும் நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவோம். </p><p>மேலும், இந்த ஆண்டில் மாகாண சபைத் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை. அடுத்த ஆண்டு அதற்கான அறிவிப்பு வரும்போதே முதலமைச்சர் வேட்பாளர் குறித்த முடிவுகள் பரிசீலிக்கப்படும்" என்று தெரிவித்தார்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T20:44:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியா - சீனாவை குறிவைக்கும் அமெரிக்கா! ட்ரம்பின் கைகளுக்கு சென்ற அதிகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-targets-india-and-china-1789847624"></link>
            <id>https://ibctamil.com/article/us-targets-india-and-china-1789847624</id>
            <summary type="text">ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை தொடர்ந்து கொள்முதல் செய்யும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை தொடர்ந்து கொள்முதல் செய்யும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.
</p><p>
‘Lindsey O. Graham Sanctioning Russia and Iran Act of 2026’ எனப்படும் இந்தச் சட்டம், அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் மற்றும் பிரதிநிதிகள் அவையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, ட்ரம்பின் கையெழுத்துடன் சட்டமாகியுள்ளது. </p><p>


இந்தச் சட்டத்தின் கீழ், ரஷ்ய கச்சா எண்ணெய் அல்லது எரிவாயுவை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருள்களுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>எரிசக்தியின் முக்கிய இறக்குமதியாளர்கள்&nbsp;</h2><p>
</p><p>
இதில் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட ரஷ்ய எரிசக்தியின் முக்கிய இறக்குமதியாளர்கள் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/beaf7f5b-2823-4e5f-b438-ed060e6ff5f1/26-6aaef0f2c4352.webp' /></p><p>


எனினும், இந்தியா அல்லது சீனா மீது 100 சதவீத வரி தானாகவே நடைமுறைக்கு வந்துவிட்டதாக இந்தச் சட்டம் பொருள்படாது. </p><p>

வரி விதிக்க வேண்டிய நாடுகள், வரி விகிதம் உள்ளிட்ட அம்சங்களில் அமெரிக்க நிர்வாகத்திற்கு பரந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. </p><p>


ரஷ்ய கச்சா எண்ணெயின் முக்கிய கொள்முதல் நாடுகளாக இந்தியாவும் சீனாவும் உள்ளன.</p><p> </p><p>

இதனால் புதிய அமெரிக்க சட்டத்தின் கீழ் இரு நாடுகளும் கூடுதல் வர்த்தக அழுத்தத்தை எதிர்கொள்ளக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. </p><p>

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, ரஷ்யாவின் எண்ணெய் வருவாயை கட்டுப்படுத்துவதுடன், ரஷ்யாவுடன் எரிசக்தி வர்த்தகத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளும் நாடுகள் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-09-19T20:30:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப் புலிகளின் தலைவருக்கு உருவச்சிலை அமைக்க அனுமதிப்பீர்களா.. அநுர தரப்பிடம் சரத் வீரசேக கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/statue-of-prabhakaran-in-the-north-1789847402"></link>
            <id>https://tamilwin.com/article/statue-of-prabhakaran-in-the-north-1789847402</id>
            <summary type="text">
வடக்கில் தற்போது திலீபனுக்கு உருவச்சிலை வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் எதிர்காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் உருவச்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>
வடக்கில் தற்போது திலீபனுக்கு உருவச்சிலை வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் எதிர்காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் உருவச்சிலை அமைக்க இந்த அரசாங்கம் அனுமதியளிக்குமா என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கேள்வி தொடுத்திருந்தார்.</p><p>
</p><p>
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,</p><p> 

வடக்கில் திலீபனுக்கு உருவச்சிலை அமைக்கப்பட்டு, நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளமை இலங்கை இராணுவத்தை அவமதிக்கும் ஒரு செயற்பாடாகும்.</p><h2>நல்லாட்சி அரசாங்கத்தின் தவறு&nbsp;</h2><p>
</p><p>
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தற்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் கொள்கைகள் தற்போது வெளிப்படையாகவே வெளிப்படுத்தப்படுகின்றன.
</p><p> 
வடக்கில் திலீபனுக்கு உருவச்சிலை அமைக்கப்பட்டு, அதனை திறக்கும் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் சீருடைகளுடன் கலந்து கொண்டுள்ளார்கள். கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி இதனை ஏற்றுக் கொள்வாரா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1a17b1a-6988-4b5d-b05d-e29ff60986bf/26-6aaeef5d7881e.webp' /></p><p>
</p><p>
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசியல் ரீதியாக பிரபல்யமடைய வேண்டும்&nbsp; என்பதற்காக அரசாங்கம் பாதுகாப்புசார்ந்த விடயங்களை அலட்சியப்படுத்துகின்றது.</p><p> 

நல்லாட்சி அரசாங்கமும் இதே தவறை இழைத்தது. அதன் விளைவு தான் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளியது. </p><p>

எனவே, அரசியல் வெற்றிக்காக பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்களை அலட்சியப்டுத்த வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-19T20:24:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாகப்பட்டினம் காங்கேசன்துறை படகு சேவைக்கான நிதி உதவி மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/assista-nagapattinam-kankesanthurai-extended-1year-1789849037"></link>
            <id>https://jvpnews.com/article/assista-nagapattinam-kankesanthurai-extended-1year-1789849037</id>
            <summary type="text">நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவியை இந்திய அரசு மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகரால...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவியை இந்திய அரசு மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>ஓகஸ்ட் 2024-இல் இச்சேவை மீண்டும் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்திய அரசு வழங்கும் நிதியுதவியின் தொடர்ச்சியான மூன்றாவது ஆண்டு இதுவாகும்.</p><p> பிராந்திய இணைப்புத் திறனை மேம்படுத்துவதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான மக்கள் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதிலும் இந்தியா கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த நீட்டிப்பு பிரதிபலிக்கிறது என்று உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d680606-1a80-4df2-ae8e-25a8ddaaa0b8/26-6aaeedcee9962.webp' /></p><p>ஆண்டுக்கு சுமார் 300 மில்லியன் ரூபாய் மதிப்பிலான இந்த நிதியுதவி, ‘வியாபிலிட்டி கேப் ஃபண்டிங்’ (Viability Gap Funding – செயல்பாட்டுச் செலவு இடைவெளிக்கான நிதி) எனும் நடைமுறையின் கீழ் வழங்கப்படுகிறது. </p><p>முந்தைய ஆண்டைப் போலவே, முக்கிய தளவாட மற்றும் செயல்பாட்டுச் செலவுகளை ஈடுகட்டுவதன் மூலம், இச்சேவையை மலிவு விலையிலும் அதே சமயம் நிலையான செயல்பாட்டுத் திறனுடனும் பராமரிப்பதை இந்த உதவி நோக்கமாகக் கொண்டுள்ளது.
</p><p>
ஓகஸ்ட் 2024-இல் மீண்டும் தொடங்கப்பட்டதிலிருந்து, இப்படக்ச் சேவை சுமார் 52,000 பயணிகள் பயணிக்க உதவியுள்ளது; இது இந்தியா மற்றும் இலங்கை இடையிலான கலாச்சார, பொருளாதார மற்றும் சமூக பரிமாற்றங்களுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது. </p><p>இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்வழி இணைப்பை மீண்டும் உயிர்ப்பிப்பதில் இச்சேவை ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
</p><p>
டிசம்பர் 2024-இல் இலங்கை அதிபரின் இந்தியப் பயணம் மற்றும் ஏப்ரல் 2025-இல் இந்தியப் பிரதமரின் இலங்கை பயணம் ஆகியவற்றின் போது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்ட, மேம்படுத்தப்பட்ட கடல்வழி இணைப்பு குறித்த கூட்டு நோக்கத்துடனும் இந்த நிதியுதவி நீட்டிப்பு ஒத்துப்போகிறது.</p><p>

எதிர்காலத் திட்டங்களில், 65 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இந்திய மானிய உதவியின் கீழ் காங்கேசன்துறை துறைமுகத்தைச் சீரமைத்தல் மற்றும் கடல்வழி இணைப்பை மேலும் விரிவுபடுத்தி, இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பொருளாதார மற்றும் மக்கள் இடையிலான உறவுகளை ஆழப்படுத்தக்கூடிய கூடுதல் வழித்தடங்கள் மற்றும் சேவைகளை ஆராய்தல் ஆகியவை அடங்கும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T20:17:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[குளிரூட்டிகளின் பயன்பாட்டைக் குறைத்து 'பாசிவ் கூலிங்' முறைகளை ஊக்குவிக்க இலங்கை அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-calls-promoting-passive-cooling-methods-1789847331"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-calls-promoting-passive-cooling-methods-1789847331</id>
            <summary type="text">குளிரூட்டிகளின் (A/C -Air Conditioning) பயன்பாட்டைக் குறைத்து, கார்பன் வெளியீட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாரம்பரிய மற்றும் நவீன &#039;பாசிவ் கூலிங்&#039; ...</summary>
            <content type="html"><![CDATA[<p>குளிரூட்டிகளின் (A/C -Air Conditioning) பயன்பாட்டைக் குறைத்து, கார்பன் வெளியீட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாரம்பரிய மற்றும் நவீன 'பாசிவ் கூலிங்' (Passive Cooling) முறைகளை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என இலங்கை அழைப்பு விடுத்துள்ளது.</p><p>
</p><p></p><p>ஐக்கிய நாடுகள் சுற்றாடல் திட்டம் (UNEP) மற்றும் 'குளிர்விப்பு கூட்டமைப்பு' (Cool Coalition) இணைந்து கடந்த15 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடத்திய 'உலகளாவிய குளிர்விப்பு உறுதிமொழி பேரவை 2026' (Global Cooling Pledge Assembly 2026) நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கை தூதுக்குழுவினால் இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டது.</p><p>

இந்தப் பேரவையில் கலந்துகொண்டு உரையாற்றிய சுற்றாடல் பிரதி அமைச்சர் எண்டன் ஜயக்கொடி, 'பாசிவ் கூலிங்' முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், வீடுகள் மற்றும் வர்த்தகக் கட்டடங்களின் உட்புற வெப்பநிலையை A/C இயந்திரங்களின் அதிகளவிலான பயன்பாடின்றி சுமார் 23°C முதல் 25°C வரை பராமரிக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9490583d-804c-40df-94b0-3cb5f3777e3f/26-6aaee72503916.webp' /></p><p>

உள்ளூர் சூழலுக்கு ஏற்ற நடைமுறைச் செயல்பாடுகள் மூலம் இந்த மாற்று முறைகளை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இலங்கை தூதுக்குழுவினர் வலியுறுத்தினர்.</p><p>

மேலும், கார்பன் வெளியீட்டைக் குறைக்கவும், உயர்ந்து வரும் உலகளாவிய வெப்பநிலையை எதிர்கொள்ளவும் 'தேசிய குளிர்விப்பு கொள்கை' (National Cooling Policy) ஒன்றை உருவாக்குவதற்கான திட்டங்கள் குறித்தும் இலங்கை அங்கு சுட்டிக்காட்டியது.
</p><p>
கடுமையான வெப்பத்துக்குத் தீர்வு காண்பது மற்றும் சுற்றுச்சூழல் நட்புமிக்க குளிர்ச்சி அமைப்புகளை ஊக்குவிப்பது குறித்து இந்தப் பேரவையில் கவனம் செலுத்தப்பட்டது.</p><p>

காலநிலை மீள்தன்மையை வலுப்படுத்துவதற்கான முயற்சியில் பாசிவ் கூலிங் முறைகளை ஊக்குவிப்பது ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பாசிவ் கூலிங் (Passive Cooling) முறை என்பது மின்சாரம் அல்லது செயற்கையான குளிரூட்டிகள் (Air Conditioners / Fans) ஏதும் இன்றி, இயற்கை வழிகளிலேயே ஒரு கட்டடத்தின் உட்புற வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும் வடிவமைப்பு நுட்பமாகும்.
</p><p>
அதாவது, வெப்பம் கட்டடத்துக்குள் நுழைவதைத் தடுப்பது மற்றும் கட்டடத்துக்குள் இருக்கும் வெப்பத்தை இயற்கை காற்றுச் சுழற்சி மூலம் வெளியேற்றுவது இதன் முதன்மை நோக்கமாகும்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T19:49:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரவு மையங்களுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பு : தேர்தல் வெற்றிக்காகப் பயன்படுத்த முயலும் அமெரிக்க ஜனநாயகக் கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/public-opposition-data-centers-us-democratic-party-1789845675"></link>
            <id>https://tamilwin.com/article/public-opposition-data-centers-us-democratic-party-1789845675</id>
            <summary type="text">அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மேகக்கணி
கணினியியல் (Cloud-computing) தரவு மையங்களின் அபரிமிதமான வளர்ச்சிக்கு எதிராக
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மேகக்கணி
கணினியியல் (Cloud-computing) தரவு மையங்களின் அபரிமிதமான வளர்ச்சிக்கு எதிராக
மக்களிடையே கிளம்பியுள்ள எதிர்ப்பு, வரவிருக்கும் இடைத்தேர்தலில் முக்கிய
அரசியல் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
</p><p>
அமேசான் மற்றும் மெட்டா போன்ற பெரு நிறுவனங்களின் தரவு மையங்களுக்கு
வழங்கப்பட்ட வரி விலக்குகள் காரணமாக ஒஹாயோ மாநிலத்திற்கு 2 பில்லியன்
டொலர்களுக்கும் அதிகமான விற்பனை வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அண்மையில்
வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள்</h2><p>அதேவேளை, விவசாய நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதுடன், மின்கட்டண உயர்வும்
குடிநீர் தேவையும் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70a92cec-727e-46a5-b094-06db90df1f8c/26-6aaee6cb71159.webp' /></p><p>

சமீபத்திய கருத்துக்கணிப்பின் படி, ஒஹாயோ மாநில மக்களில் 71 சதவீதத்தினர்
புதிய டேட்டா மையங்களின் கட்டுமானத்திற்குத் தற்காலிகத் தடை விதிக்க ஆதரவு
தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதனைப் பயன்படுத்தி, கிராமப்புறப் பகுதிகளில் பின்தங்கியுள்ள ஜனநாயகக்
கட்சியினர், குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராகத் தீவிரப்
பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>
குறிப்பாக, பெருநிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகைகளால் சாதாரண
மக்களின் மின்சாரக் கட்டணம் உயர்ந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
</p><p>
நிலைமை தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, இரு கட்சிகளைச் சேர்ந்த அரசியல்
தலைவர்களும் தரவு மையக் கட்டுமானங்களைக் கட்டுப்படுத்தவும், அவற்றுக்கான வரிச்
சலுகைகளைக் குறைக்கவும் புதிய கொள்கை முன்மொழிவுகளை வெளியிட வேண்டிய
கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-09-19T19:47:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[9 ஆண்டுகளாக இந்திய சிறையில் போராடும் பிரித்தானியர்: ஜாமீன் வழங்கிய டெல்லி நீதிமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/british-sikh-jagtar-singh-johal-gets-bail-1789842800"></link>
            <id>https://news.lankasri.com/article/british-sikh-jagtar-singh-johal-gets-bail-1789842800</id>
            <summary type="text">British Sikh Jagtar Singh Johal Gets Bail: இந்தியாவில் பல ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பிரித்தானியருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>British Sikh Jagtar Singh Johal Gets Bail: இந்தியாவில் பல ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பிரித்தானியருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.</p><h2> பிரித்தானியருக்கு ஜாமீன் வழங்கிய இந்திய நீதிமன்றம்</h2><p>
பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் கடந்த 2017 ம் ஆண்டு முதல் ஸ்காட்லாந்தை சேர்ந்த பிரித்தானிய சீக்கியர் ஜக்தார் சிங் ஜோஹல்&nbsp; இந்திய அதிகாரிகளால் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.</p><p> தற்போது 39 வயதாகும் ஜக்தார் சிங் ஜோஹல் கடந்த 2017ம் ஆண்டு தன்னுடைய திருமணத்திற்காக இந்தியா வந்து சேர்ந்தார்.</p><p> திருமணம் முடிந்து 3 வாரங்கள் மட்டுமே ஆன நிலையில், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ஷாப்பிங் மாலில் தன்னுடைய மனைவுடன் இருக்கும் போது ஜக்தார் சிங் ஜோஹல் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் காரில் பலவந்தமாக கடத்தப்பட்டு கொண்டு செல்லப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4eb0b435-7673-4377-be66-03538b104a9b/26-6aaed571938fc.webp' /></p><p></p><h2> ஜக்தார் சிங் ஜோஹல் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு</h2><p>
ஜக்தார் சிங் ஜோஹல் பஞ்சாபில் உள்ள காலிஸ்தான் விடுதலை படைகளுக்கு நிதியுதவி செய்து வந்ததாக இந்திய அதிகாரிகள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.</p><p> இருப்பினும் இது தொடர்பான போதிய ஆதாரங்களை இந்திய அரசு அதிகாரிகள் சமர்ப்பிக்க தவறியதால், ஜக்தார் சிங் ஜோஹல் மீதான நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தன.</p><p> இந்நிலையில்&nbsp; பல ஆண்டுகளாக இந்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரித்தானிய சீக்கியர் ஜக்தார் சிங் ஜோஹலுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-19T19:44:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் காணாமல் போன 13 வயது சிறுமி: புதிய சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட காவல்துறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/missing-13-year-old-girl-lillia-new-cctv-released-1789846974"></link>
            <id>https://news.lankasri.com/article/missing-13-year-old-girl-lillia-new-cctv-released-1789846974</id>
            <summary type="text">Missing 13-Year-Old Girl Lillia New CCTV Released: பிரித்தானியாவில் காணாமல் போன 13 வயது சிறுமி தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Missing 13-Year-Old Girl Lillia New CCTV Released: பிரித்தானியாவில் காணாமல் போன 13 வயது சிறுமி தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.</p><h2> காணாமல் போன 13 வயது சிறுமி</h2><p>
கடந்த செப்டம்பர் 11ம் திகதி வெள்ளிக்கிழமை போல்டனைச் சேர்ந்த 13 வயது சிறுமி லில்லியா(Lillia) தன்னுடைய வீட்டில் இருந்து வெளியேறியதை அடுத்து காணாமல் போனார்.</p><p>கடந்த ஒரு வார காலமாக காணாமல் போன 13 வயது சிறுமி லில்லியை கண்டுபிடிக்கும் முயற்சியில் &nbsp; கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸார் புதிய சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56f0c5bb-4048-4724-aa1d-1688fa4159bf/26-6aaee5c06a24f.webp' /></p><p> பல மணி நேர தீவிர சிசிடிவி ஆய்வுக்கு பிறகு செப்டம்பர் 14ம் திகதி காலை 10.36 மணிக்கு&nbsp; தேடப்பட்டு வரும் சிறுமி லில்லியா மான்செஸ்டர் பிக்காடில்லி(Piccadilly) பேருந்து நிலையில் இருந்ததை கண்டுபிடித்தனர்.</p><p></p><p> மேலும் அவர் சால்போர்ட் நகருக்கான நம்பர் 36 பேருந்தில் ஏறிய லில்லியா, பேருந்தில் இருந்து கீழே இறங்கிய சில நிமிடத்தில் கேமராவில் பதிவாகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c5a307f-e80d-4486-98ad-6482c05215d3/26-6aaee5c12f1ca.webp' /></p><p> இந்நிலையில் அந்த சிசிடிவி காட்சிகளை தற்போது பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டுள்ள காவல்துறை, பேருந்தில் இருந்து கீழே இறங்கிய லில்லி எந்த திசையில் சென்றார் அல்லது அவரை பற்றி வேறு ஏதேனும் தகவல் தெரிந்து இருந்தால் உடனடியாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுள்ளனர்.</p><p>புதிதாக வெளியான சிசிடிவி காட்சிகளில், காணாமல் போன லில்லி முதுப்பையுடன் கருப்பு நிற உடை அணிந்து இருந்ததும், தலையில் ஹூடி அணிந்து இருந்ததும் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T19:43:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜின்பிங்கை வரவேற்க தயாராகும் அமெரிக்கா! சீன - அமெரிக்க இராஜதந்திரத்தின் மீது உலகின் கவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-prepares-to-welcome-xi-jinping-1789846214"></link>
            <id>https://ibctamil.com/article/us-prepares-to-welcome-xi-jinping-1789846214</id>
            <summary type="text">ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலத்திற்குப் பின்னர் சீன ஜனாதிபதி ஒருவர் மேற்கொள்ளும் முக்கியமான அமெரிக்க அரசுமுறைப் பயணத்தின் மீது சர்வதேசத்தின் கவனம் தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலத்திற்குப் பின்னர் சீன ஜனாதிபதி ஒருவர் மேற்கொள்ளும் முக்கியமான அமெரிக்க அரசுமுறைப் பயணத்தின் மீது சர்வதேசத்தின் கவனம் திரும்பியுள்ளது.</p><p>இந்த விஜயத்தின்போது சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p>இந்த விஜயத்தின் போது ட்ரம்ப்,&nbsp;ஷி ஜின்பிங்கை நேரில் சென்று வரவேற்க உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>ட்ரம்ப் மற்றும் ஷி ஜின்பிங்</h2><p>வெளிநாட்டு தலைவர்களை பொதுவாக வெள்ளை மாளிகையில் வரவேற்கும் ட்ரம்ப், இந்த முறை விமானத் தளத்திற்கே சென்று ஷி ஜின்பிங்கை வரவேற்க இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c7d0fa6-ccd6-479d-8272-3f69e93e3cee/26-6aaee2c88d2f3.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் மற்றும் ஷி ஜின்பிங், வெள்ளை மாளிகையின் Rose Garden பகுதியில் இராணுவ அணிவகுப்பு மரியாதையை பார்வையிட உள்ளனர். </p><p>பின்னர் இரு தலைவர்களும் மூடிய அறையில் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளனர்.
</p><p>எனினும் இந்த சந்திப்பு தொடர்பான விரிவான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
</p><p>இதன்படி இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் முக்கியமான கட்டமாகக் கருதப்படும் இந்தச் சந்திப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T19:30:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸ் 10 மேடையில் பேசியது சர்ச்சையானது குறித்து விஜய் சேதுபதி ஓபன் டாக்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vijay-sethupathi-clears-about-bb-10-talk-1789809593"></link>
            <id>https://cineulagam.com/article/vijay-sethupathi-clears-about-bb-10-talk-1789809593</id>
            <summary type="text">பிக்பாஸ் 10பிரம்மாண்டத்தின் உச்சமாக விஜய் டிவியில் பிக்பாஸ் 10வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த செப்டம்பர் 6ம் தேதி 19 போட்டியாளர்களுடன் தொடங்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிக்பாஸ் 10</h2><p>பிரம்மாண்டத்தின் உச்சமாக விஜய் டிவியில் பிக்பாஸ் 10வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. </p><p>கடந்த செப்டம்பர் 6ம் தேதி 19 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. இதில் மக்களுக்கு அதிகம் தெரிந்த, தெரியாத போட்டியாளர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இதுவரை 2 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர், பிரபல நடிகை ஆனந்தி வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fae460f-1f77-4a4b-b87f-03c763d0d9cb/26-6aae55d9ad670.webp' /></p><p> </p><p>கடைசி வார இறுதி நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி வந்துபோது அவர் சட்டசபை விஷயங்கள் பல பேச அது சர்ச்சையானது. இதனால் விஜய் சேதுபதிக்கு நிறைய எதிர்ப்புகளும் வந்தது, ஆதரவும் வந்தன.</p><h2>
விளக்கம்</h2><p>
இந்த நிலையில் விஜய் சேதுபதி, பிக்பாஸ் மேடையில் பேசியது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c923e4f6-f51e-452b-84da-2b077c8ad0ba/26-6aae55d88e6d1.webp' /></p><p> </p><p>அதில் அவர், இந்த மேடையில் பேசப்படும் கருத்துகள் அனைத்தும் இந்த வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கும் எங்களுக்கும் மட்டுமே சொந்தமானவை. வெளியில் இருக்கும் எந்த நபரையும் அல்லது அமைப்பையும் சார்த்து குறிப்பிடப்படவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம். </p><p>இதைப்பற்றி ஏற்கெனவே புரிந்திருக்கும் என்று நினைத்தேன், ஆனால் கடந்த வாரமே இதை சொல்லியிருக்க வேண்டும், இப்போது சொல்ல வேண்டிய அவசியமாகிவிட்டது என விளக்கமளித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-19T19:30:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் ஹோட்டலில் நள்ளிரவு பற்றிய தீ: சந்தேகம் எழுப்பும் காவல்துறையினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/folkestone-hotel-fire-police-launch-investigation-1789845462"></link>
            <id>https://news.lankasri.com/article/folkestone-hotel-fire-police-launch-investigation-1789845462</id>
            <summary type="text">Folkestone Hotel Fire Police Launch Investigation: போக்ஸ்டோன் ஹோட்டலில் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Folkestone Hotel Fire Police Launch Investigation: போக்ஸ்டோன் ஹோட்டலில் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><h2>ஹோட்டலில் பரவிய தீ</h2><p>பிரித்தானியாவின் கென்ட் பகுதியில் உள்ள பிரபல கிராண்ட் பர்ஸ்டின் ஹோட்டலில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.</p><p> அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் அவசர கால சேவையினர் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்</p><p>கிட்டத்தட்ட 26 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு ஹோட்டலில் பரவிய தீயானது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.</p><p> இந்த சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில் ஹோட்டலின் அடித்தளத்தில் இருந்து தீயானது பரவியிருக்க கூடும் என்று தெரியவந்துள்ளது.</p><p> ஹோட்டலில் பற்றிய தீயின் நிலவரத்தை சுதாரித்துக் கொண்ட அவசரகால மீட்புக் குழுவினர் அங்கு தங்கியிருந்த 300க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் மற்றும் ஊழியர்களை அவசர அவசரமாக வெளியேற்றினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86b34d6f-69fb-4ad5-89b4-8e491654ecd8/26-6aaedfd75ea48.webp' /></p><p></p><p> இந்த தீ விபத்து சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><h2>திட்டமிட்ட சதியாக இருக்கலாம்</h2><p>ஹோட்டலில் நிகழ்ந்த இந்த தீ விபத்து வேண்டுமென்றே வைக்கப்பட்ட தீ எரிப்பு சம்பவமாக இருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.</p><p> இந்நிலையில் ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்ட போது சந்தேகத்திற்குரிய முறையில் யாரேனும் நடமாடியதை கண்டிருந்தால் உடனடியாக காவல்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.</p><p> குறிப்பாக வெள்ளிக்கிழமை இரவு 10.00 முதல் சனிக்கிழமை அதிகாலை 12.30 மணி வரையிலான நேரத்தில் பதிவான டாஷ் கேம் காட்சிகளை வழங்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.<br></p>]]></content>
            <updated>2026-09-19T19:19:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் மோசமாக செயற்பட்ட இலங்கையர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-arrested-in-canada-1789832251"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-arrested-in-canada-1789832251</id>
            <summary type="text">கனடாவில் மோசமான செயற்பாட்டில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர்&amp;nbsp;கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

விட்பி பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் மோசமான செயற்பாட்டில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர்&nbsp;கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

விட்பி பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணியாற்றிய 62 வயதான சம்பத் பெரேரா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

குறித்த மருந்தகத்தில் பணியாற்றிய சிறுவன் ஒருவரை தகாத முறையில் துன்புறுத்திய குற்றச்சாட்டில் இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><h2><b>

இலங்கையர் கைது</b></h2><p>பாதிக்கப்பட்ட 16 வயதான சிறுவன் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக டர்ஹாம் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>சந்தேக நபரான இலங்கையர் மீது தகாத வகையில் செயற்பட்ட இரண்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. எனினும் நீதிமன்றத்தில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.</p><p>

குறித்த நபரால் எவராது பாதிக்கப்பட்டிருந்தால் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9NhzR1qe95s" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p>]]></content>
            <updated>2026-09-19T19:13:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/number-of-dengue-deaths-rises-to-75-1789845135"></link>
            <id>https://jvpnews.com/article/number-of-dengue-deaths-rises-to-75-1789845135</id>
            <summary type="text">நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.</p><p>
</p><p></p><p>தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகளின்படி, இதுவரை 98,616 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மரண வீதம் 0.076% ஆகப் பதிவாகியுள்ளது.
</p><p>
 

மொத்த நோயாளர்களில் 52.62% பேர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7756a99-0bf9-4f53-ac60-8512e1cc080e/26-6aaede91286c0.webp' /></p><p>இரண்டாவதாக அதிகளவிலான நோயாளர்கள் தென் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 14,209 ஆகும்.</p><p>

 

மாவட்ட ரீதியில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். </p><p>அங்கு 20,917 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், கொழும்பு மாவட்டத்தில் 19,435 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 7,410 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
</p><p>
 

இதனிடையே, ஜூலை மாதத்திலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 29,964 ஆகும்.

 

மேலும், ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும், ஓகஸ்ட் மாதத்தில் 10,155 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
</p><p>
 

செப்டம்பர் மாதத்தில் இதுவரையிலான காலப்பகுதியில் 3,125 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
</p><p>
 

34 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இன்னமும் டெங்கு அதிடர்க் மண்டலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நுளம்புகள் பரவும் இடங்களை அழித்து சுற்றுச்சூழலைச் சுத்தமாக வைத்திருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T19:12:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியாவில் சிக்கிய அனோஜன்! இலங்கை அரசாங்கத்தின் தொடர் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/saudi-arabia-anojan-issue-1789843480"></link>
            <id>https://tamilwin.com/article/saudi-arabia-anojan-issue-1789843480</id>
            <summary type="text">சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையரான அனோஜன் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்து வெளிவிவகார அமைச்சு தீவிரமாக கண்காணித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையரான அனோஜன் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்து வெளிவிவகார அமைச்சு தீவிரமாக கண்காணித்து வருவதாக ஊடகத் துறைய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். </p><p>

இது குறித்து ஊடகங்களிடம் அவர் தெரிவிக்கையில், </p><p>

சவூதி அரேபியா நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுக் கொடுக்க அல்லது அவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையைக் குறைப்பதற்கு அரசாங்கம் இயன்றவரை முயற்சி செய்து வருகின்றது.</p><h2>பல கட்ட கலந்துரையாடல்கள்&nbsp;</h2><p> </p><p>

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சுக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>

சம்பந்தப்பட்ட அரசாங்கத்துடன் ஏற்கனவே பல கட்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3113ba48-991e-4090-ad9b-bbb8243f9403/26-6aaedb2b9f157.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் அனைத்தும் சவூதி அரேபியாவில் நடைமுறையில் உள்ள சட்டத்திட்டங்களுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T18:57:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் 100 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட புதிய பூனை இனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-new-cat-species-discovered-after-100-years-1789843879"></link>
            <id>https://ibctamil.com/article/a-new-cat-species-discovered-after-100-years-1789843879</id>
            <summary type="text">100 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர், அறிவியலுக்கு இதுவரை அறியப்படாத புதிய பூனை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>100 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர், அறிவியலுக்கு இதுவரை அறியப்படாத புதிய பூனை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

2017ஆம் ஆண்டு பொலிவியாவில் பணியாற்றி வந்த உயிரியல் நிபுணரும் National Geographic Explorer-ஆகவும் இருந்த பவுலா நோகலெஸ்-அஸ்கர்ருன்ஸ் என்பவருக்கு, உள்ளூர் வனவிலங்கு சரணாலயத்திலிருந்து வித்தியாசமான பூனை ஒன்று குறித்து தகவல் கிடைத்துள்ளது.</p><p>
காட்டுப்பகுதிக்கு அருகிலுள்ள சாலையோரத்தில் பூனைக்குட்டியாக இருந்தபோது உள்ளூர் நபர் ஒருவர் அதனை மீட்டெடுத்து, வீட்டுப் பூனை என நினைத்து வளர்த்து வந்துள்ளார்.</p><p></p><h2>வித்தியாசமான&nbsp;தோற்றம் </h2><p> சுமார் ஒரு வருடத்திற்குப் பின்னர், அது காட்டுப் பூனை என்பதை உணர்ந்த அவர், அந்த விலங்கை வனவிலங்கு சரணாலயத்தில் ஒப்படைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b6b5cbb-f472-48c4-98ba-98915f4f3b18/26-6aaeda349e50a.webp' /></p><p>
</p><p>
இந்த விலங்கை பார்வையிட்ட நோகலெஸ்-அஸ்கர்ருன்ஸ், அதன் தோற்றம் மிகவும் வித்தியாசமாக இருப்பதை கவனித்துள்ளார்.</p><p>சிறிய சுருங்கிய முகம், குட்டையான வட்டமான காதுகள், நீண்ட மீசைகள் மற்றும் சிறுத்தையைப் போன்ற உடல் புள்ளிகள் ஆகியவை அந்தப் பூனையின் முக்கிய தனிச்சிறப்புகளாக இருந்துள்ளன.</p><p>

“அந்தப் பூனையை சுமார் 100 புகைப்படங்கள் எடுத்தேன். நான் மிகவும் வியப்படைந்திருந்தேன்” என நோகலெஸ்-அஸ்கர்ருன்ஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>
முதலில் இந்தப் பூனை ஏற்கனவே அறியப்பட்ட Leopardus tigrinus இனத்தைச் சேர்ந்ததாகவே விஞ்ஞானிகள் கருதியுள்ளார்.</p><p></p><h2>மேற்கொள்ளப்பட்ட ஆய்வு</h2><p> இந்த இனத்திற்கு Tigrina, Oncilla, Tigrillo மற்றும் Little Spotted Cat உள்ளிட்ட பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0ce61c6-3927-4f8c-b883-d5801de81a9a/26-6aaeda355796e.webp' /></p><p>
</p><p>
எனினும், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த விலங்கு ஏற்கனவே அறியப்பட்ட இனத்தைச் சேர்ந்தது அல்ல என்பது தெரியவந்துள்ளது.</p><p> இதன் மூலம், 100 ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்குப் பிறகு பூனை குடும்பத்தில் புதிய இனமாக அறிவிக்கப்படும் முக்கியமான கண்டுபிடிப்பாக இது அமைந்துள்ளது.
</p><p>
இந்தக் கண்டுபிடிப்பு தொடர்பான ஆய்வு Current Biology என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>

அறிவியலுக்கு முற்றிலும் புதிய ஒரு பூனை இனம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, உலக வனவிலங்கு ஆராய்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T18:53:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரியாத்தில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை : விமான சேவைகள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/houthis-claim-attack-on-saudi-capital-1789841114"></link>
            <id>https://tamilwin.com/article/houthis-claim-attack-on-saudi-capital-1789841114</id>
            <summary type="text">சவூதி தலைநகரில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, ரியாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் கறுப்புப் புகை...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி தலைநகரில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, ரியாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் கறுப்புப் புகைமண்டலம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

 

அண்டை நாடான யேமனில் ஈரான் ஆதரவு ஹூத்தி போராளிகளுடனான மோதல் சமீபத்தில் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
</p><p>
 

</p><h2>பதிலடி கொடுக்கப்படாமல் போகாது</h2><p>அதனைத் தொடர்ந்து தலைநகரில் பல வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாகவும், கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75b2a0b2-5132-4880-a1c0-40ac15a3f52a/26-6aaed84d2c831.webp' /></p><p> மேலும், நீண்ட தாமதங்கள் மற்றும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக FlightRadar24 என்ற கண்காணிப்பு இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p>கடந்த வாரத்தில் சவூதி அரேபியா யேமன் முழுவதும் 300 தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஹூத்தி இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா அல்-சரியா தெரிவித்தார்.
</p><p>
 

சனா மீதான தாக்குதல்கள் குறித்துக் கூறப்படும் செய்திகளுக்குப் பதிலடி கொடுக்கப்படாமல் போகாது என அவர் எச்சரித்தார்.</p><h2>முக்கிய கப்பல் வழித்தடத்தின் நுழைவாயில்</h2><p>

 

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரசாங்கத்துடன் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ள ஹூதிகள், சமீபத்தில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மோக்காவையும், பெரிம் தீவையும் கைப்பற்றினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d887528c-ab6a-49ba-816b-991198e94ff3/26-6aaed84dd968d.webp' /></p><p> இந்தத் தீவு, வளைகுடா நாடான யேமன் ஆசியா மற்றும் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப் பயன்படுத்தும் ஒரு முக்கிய கப்பல் வழித்தடத்தின் நுழைவாயிலாகும்.
</p><p>
 

ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடமேற்கு யேமனில் உள்ள துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு சவூதி விதித்த முற்றுகைக்குப் பதிலடியாகவே இந்தக் கடற்படை முற்றுகையிடப்பட்டதாக அக்குழு கூறியது.
</p><p>
 

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக நடத்திய போரினால் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதிலிருந்து, சவூதி கப்பல்கள் எண்ணெய் ஏற்றுமதிக்காக செங்கடலின் அந்தப் பகுதியையே நம்பி இருந்து வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T18:45:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா மீது பொருளாதார அழுத்தம் ; ட்ரம்ப் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/economic-pressure-on-russia-to-end-the-ukraine-war-1789843282"></link>
            <id>https://canadamirror.com/article/economic-pressure-on-russia-to-end-the-ukraine-war-1789843282</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அந்த நாட்டுக்கு எதிராக விரிவான பொர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அந்த நாட்டுக்கு எதிராக விரிவான பொருளாதாரத் தடைகளை விதிக்க வழிவகுக்கும் சட்டத்தில் கையொப்பமிட்டுள்ளார்.
</p><p>
இந்தச் சட்டத்தின் மூலம், ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை மேலும் கடுமையாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்க நிர்வாகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09dcf490-5b43-4c70-8fa3-6fd795e94635/26-6aaed753b8c0e.webp' /></p><p>அத்துடன், ரஷ்யாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை மீறி அந்தநாட்டுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகளுக்கு மேலதிக வரிகளை விதிக்கும் அதிகாரமும் ஜனாதிபதி ட்ரம்புக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நடவடிக்கைகள், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவர அந்தநாட்டின் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதேவேளை, குறித்த சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மேலதிக தடைகள் மற்றும் வரிகள் தொடர்பான விபரங்கள் அமெரிக்க நிர்வாகத்தால் பின்னர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது</p>]]></content>
            <updated>2026-09-19T18:41:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிம்பிளான உடையில் நடிகை மமிதா பைஜு வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷுட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-mamitha-baiju-latest-cute-photoshoot-1789817224"></link>
            <id>https://cineulagam.com/article/actress-mamitha-baiju-latest-cute-photoshoot-1789817224</id>
            <summary type="text">மமிதா பைஜு2026ம் ஆண்டு சினிமாவில் உள்ள பல கலைஞர்களுக்கு வெற்றி ஆண்டாக அமைந்துள்ளது. இதில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து 3 ரூ. 100 கோடி படங்களை...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மமிதா பைஜு</h2><p>2026ம் ஆண்டு சினிமாவில் உள்ள பல கலைஞர்களுக்கு வெற்றி ஆண்டாக அமைந்துள்ளது. </p><p>இதில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து 3 ரூ. 100 கோடி படங்களை கொடுத்துள்ளவர் தான் நடிகை மமிதா பைஜு. </p><p>முதலில் விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ், அடுத்து சூர்யாவுடன் அவர் நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அடுத்து மலையாளத்தில் மமிதா பைஜு நடித்த பெத்லேகேம் குடும்ப யூனிட். இந்த 3 படங்களுமே ரூ. 100 கோடியை எட்டிவிட்டது. </p><p>இந்த வருடம் மமிதா பைஜுவிற்கு மாஸ் வெற்றி ஆண்டாக அமைந்துள்ளது, இந்த நிலையில் அவர் லேட்டஸ்ட்டாக வெளியிட்டுள்ள போட்டோ ஷுட் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதோ போட்டோஸ்,</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T18:30:22+00:00</updated>
        </entry>
    </feed>
