<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-30T21:46:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் புதிய உச்சத்தை தொட்ட வெப்பநிலை: 10000ஐ தொட்ட உயிரிழப்பு எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-reach-10000-heat-related-deaths-1785447872"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-reach-10000-heat-related-deaths-1785447872</id>
            <summary type="text">ஜேர்மனியில் வெப்ப அலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000-ஐ தொட்டுள்ளது. 10,000-ஐ தொட்ட உயிரிழப்பு
ஜேர்மனியில் இந்த ஆண்டு பதிவான மிகத் தீவிரமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியில் வெப்ப அலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000-ஐ தொட்டுள்ளது.</p><h2> 10,000-ஐ தொட்ட உயிரிழப்பு</h2><p>
ஜேர்மனியில் இந்த ஆண்டு பதிவான மிகத் தீவிரமான வெப்ப அலைகள் காரணமாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.</p><p> ராபர்ட் கோக் இன்ஸ்டிடியூட் (RKI) என்ற நிறுவனம் வெளியிட்ட தரவுகளில், இந்த ஆண்டு அதிகமான வெப்பத்தில்&nbsp; பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட 10000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faa39c3c-4ef1-412d-a9a3-91a41fde6693/26-6a6bc5c27bd6a.webp' /></p><p>கோடை காலம் நிறைவடைவதற்கு முன்பே பதிவாகியுள்ள இந்த எண்ணிக்கை கடந்த கால உச்சபட்ச&nbsp; உயிரிழப்பு எண்ணிக்கையை விட அதிகமாகும்.</p><p></p><p> கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை 19ம் திகதி வரை மட்டும் கிட்டத்தட்ட 9800 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.</p><p> ஜூன் மாதத்தில் மட்டும் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5000க்கும் அதிகமாகும்.</p><p> ஜூன் காலக்கட்டத்தில் ஜேர்மனியின் வெப்ப அலை சில பகுதிகளில் 42°C (107.6°F) வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>ஏப்ரல் மாதம் முதல் ஜூலை 19ம் திகதி வரை பதிவான இந்த எண்ணிக்கை கடந்த 2018ம் ஆண்டு பதிவான 9000 என்ற அதிகபட்ச உயிரிழப்புகளின் எண்ணிக்கையை முந்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cb16ecc-7a5b-47e2-a8f7-9084b06b4bec/26-6a6bc5c330b9c.webp' /></p><p> ஜூன் 22 முதல் 28ம் திகதி வரை பதிவான உயிரிழப்புகள் எண்ணிக்கை கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான எண்ணிக்கையை விட 32% அதிகமாகும்.</p><p> ஜூலை 19 க்கு பிந்தைய வெப்ப நிலைகள் மற்றும் உயிரிழப்புகள் இன்னும் இதில் சேர்க்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p> ஜேர்மனியில் பதிவான தீவிரமான வெப்ப அலையில் உயிரிழந்தவர்கள் பெரும்பாலானோர் முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-30T21:44:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலேசியாவில் கைதான ‘ரத்மலானே சைமா’ ; விசாரணையில் அம்பலமான பெரும் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/major-revelations-after-ratmalana-shaima-arrest-1785446912"></link>
            <id>https://jvpnews.com/article/major-revelations-after-ratmalana-shaima-arrest-1785446912</id>
            <summary type="text">மலேசியாவில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான ‘ரத்மலானே சைமா’ என்பவர், கஞ்சிபானி இம்ரானின் நிதிப் பொறுப்பாளராகச் செய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மலேசியாவில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான ‘ரத்மலானே சைமா’ என்பவர், கஞ்சிபானி இம்ரானின் நிதிப் பொறுப்பாளராகச் செயற்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

மேலும், அவர் கெஹெல்பத்தர பத்மே என்பவருக்கு மலேசியாவில் தலைமறைவாக இருப்பதற்கு ஆதரவு வழங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88a0425f-01a8-4c39-a8fb-548788f0ba46/26-6a6bc201c2827.webp' /></p><h2 style="text-align: justify; ">விசேட நடவடிக்கை</h2><p style="text-align: justify; ">

 

இலங்கை பொலிஸ் குழுவொன்று மலேசிய பொலிஸாருடன் இணைந்து அண்மையில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, தனுஷ்க கௌஷல்ய என்ற 'ரத்மலானே சைமா' உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.
</p><p style="text-align: justify; ">
 

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கஞ்சிபானி இம்ரான் என்ற குற்றவாளியின் அனைத்து நிதி நடவடிக்கைகளையும் இவரே வழிநடத்தியுள்ளார் </p><p style="text-align: justify; ">

 

கைது செய்யப்பட்ட சைமா, கஞ்சிபானி இம்ரானின் சமூக வலைத்தள நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாகச் செயற்பட்டுள்ள தோடு, அவரது குரல் பதிவுகளைச் சமூக வலைத்தளங்களில் பரப்புவதையும் மேற்கொண்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

அத்துடன், கடந்த ஆண்டில் கெஹெல்பத்தர பத்மே மலேசியாவில் தலைமறைவாக வாழ்வதற்கு, கஞ்சிபானி இம்ரானின் ஆலோசனையின் பேரில் இவர் வசதிகளைச் செய்து கொடுத்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

தற்போது பிரான்ஸில் தலைமறைவாக இருக்கும் 'குடு அஞ்சு' என்பவரின் நெருங்கிய கூட்டாளியாகச் சில காலம் செயற்பட்ட இவர், பின்னர் கஞ்சிபானி இம்ரானுடன் இணைந்து செயற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; ">

 

'குடு அஞ்சு' சைமாவைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில், அது குறித்து கஞ்சிபானி இம்ரான் சைமாவிற்கு எச்சரித்ததைத் தொடர்ந்து, அவர் கஞ்சிபானியுடன் நெருக்கமாகச் செயற்படத் தொடங்கியுள்ளார்.

 

இவர் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே மலேசியாவிற்குத் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-30T21:28:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலேசியாவில் உள்ள 5,000 ரோஹிங்கியா அகதிகளைத் திரும்பப் பெற மியன்மார் ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/myanmar-agrees-to-repatriate-5-000-rohingya-1785442661"></link>
            <id>https://tamilwin.com/article/myanmar-agrees-to-repatriate-5-000-rohingya-1785442661</id>
            <summary type="text">மலேசியாவில் தஞ்சமடைந்துள்ள 5,000 ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் திரும்பப்
பெற்றுக்கொள்ள மியன்மார் ஒப்புக்கொண்டுள்ளதாக மலேசியப் பிரதமர் அன்வார்
இப்ராஹிம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலேசியாவில் தஞ்சமடைந்துள்ள 5,000 ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் திரும்பப்
பெற்றுக்கொள்ள மியன்மார் ஒப்புக்கொண்டுள்ளதாக மலேசியப் பிரதமர் அன்வார்
இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
</p><p>
மலேசியாவில் உள்ளூர் மக்களுக்கும் ரோஹிங்கியா அகதிகளுக்கும் இடையே
சமீபகாலமாகப் பதற்றம் நிலவி வரும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p></p><h2>5,000 அகதிகள்</h2><p>
</p><p>
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற
பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம், மியன்மாருடன்
மலேசியா வைத்துள்ள நல்லுறவு காரணமாகவே இந்தப் பேச்சுவார்த்தை சாத்தியமானதாகக்
குறிப்பிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74c3c2c7-2f3c-48c1-ae18-eff739ed5a70/26-6a6bb396e9d3b.webp' /></p><p>மியன்மாருக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ள 5,000 அகதிகளைக் கண்டறிந்து,
அடையாளம் கண்டு, பரிசீலனை செய்யும் பொறுப்பு தனது அமைச்சகத்திடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுஷன் இஸ்மாயில்
தெரிவித்துள்ளார். </p><p>இதன் பின்னரே மியன்மாருடன் வெளியுறவுத்துறை மூலம் இறுதிப்
பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

பெப்ரவரி மாத நிலவரப்படி, மலேசியாவில் உள்ள ஐநா அகதிகள் அமைப்பில் சுமார்
1,26,000 ரோஹிங்கியா அகதிகள் பதிவு செய்துள்ளனர்.</p><p></p><h2>ஐ.நா அகதிகள் அமைப்பு</h2><p>
</p><p>
மலேசியாவில் சட்டப்பூர்வ அகதிகள் சட்டங்கள் இல்லாததால், அவர்கள் அனைவரும்
சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாகவே கருதப்படுகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9262c1f8-d9e5-4b74-aaae-79a36563b363/26-6a6bb397a94eb.webp' /></p><p>தற்போது மியன்மாரில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அகதிகளை
அங்குத் திருப்பி அனுப்புவது அவர்களின் உயிருக்கும் பாதுகாப்புக்கும்
அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ஐநா அகதிகள் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
</p><p>சர்வதேசச் சட்டங்களின்படி எந்தவொரு நபரும் ஆபத்தான சூழல் நிலவும் நாட்டிற்கு
வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்பப்படக் கூடாது என்றும் அது
சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-30T21:27:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச மாநாட்டில் அமெரிக்காவின் வரைபடம்: ஆப்பிரிக்க நாடுகள் சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wrong-african-names-on-us-summit-map-spark-row-1785440802"></link>
            <id>https://tamilwin.com/article/wrong-african-names-on-us-summit-map-spark-row-1785440802</id>
            <summary type="text">பிரேசிலில் நடைபெற்ற சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டில், அமெரிக்க வெளியுறவுத்துறை
சமர்ப்பித்த வரைபடத்தில் ஆப்பிரிக்கக் கண்டத்தின் அனைத்து நாடுகளின்
பெயர்களும...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரேசிலில் நடைபெற்ற சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டில், அமெரிக்க வெளியுறவுத்துறை
சமர்ப்பித்த வரைபடத்தில் ஆப்பிரிக்கக் கண்டத்தின் அனைத்து நாடுகளின்
பெயர்களும் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது பெரும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
அமெரிக்க வெளியுறவுத்துறை தனது புதிய சுகாதார ஒப்பந்தங்கள் குறித்துப்
பேசியபோது திரையில் தவறான வரைபடம் தோன்றியுள்ளது.</p><p></p><h2>செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்</h2><p>
</p><p>
மாநாட்டில் பங்கேற்றவர்கள் இதன் புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில்
பகிர்ந்ததை அடுத்து இந்த விடயம் பூதாகரமானது.
</p><p>
ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஆய்வில், அந்த வரைபடத்தில் OpenAI
நிறுவனத்தின் வாட்டர்மார்க் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0258641f-4c9d-4d82-ab06-ad176461916d/26-6a6bac6b04a67.webp' /></p><p>இதன் மூலம், அந்த வரைபடம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி
உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி
வருவதாக ஓபன்ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த குளறுபடி குறித்து முழுப் பொறுப்பேற்பதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க
வெளியுறவுத்துறை, நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக அவசர அவசரமாக ஸ்லைடுகளை
மாற்றியபோது பணியாளர் ஒருவரால் இந்தத் தவறு நேர்ந்துவிட்டதாகக் கூறியுள்ளது.</p><p></p><h2>வரைபடக் குளறுபடி</h2><p>

கடலோர நாடான நைஜீரியா, சஹாரா பாலைவனத்திற்குள் இருப்பது போல்
காட்டப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மொசாம்பிக் நாடு, ஆப்பிரிக்காவின் கொம்பு
பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. </p><p>அதேபோல், மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஐவரி
கோஸ்ட் நாடு, கண்டத்தின் முற்றிலும் எதிர் திசையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31a50e7b-4ce3-433e-a782-4bda83c2932c/26-6a6bac6babcaa.webp' /></p><p>

இந்த ஸ்லைடை உருவாக்கியவருக்கும், அதை அங்கீகரித்தவருக்கும் ஆப்பிரிக்க
நாடுகள் எங்கு இருக்கின்றன என்பதே தெரியவில்லை என்று சர்வதேச ஆய்வாளர்கள்
விமர்சித்துள்ளனர்.</p><p>

இருப்பினும், இந்த வரைபடக் குளறுபடியைத் தாண்டி மாநாட்டின் விவாதங்கள்
பயனுள்ளதாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அமைந்ததாகவும், எய்ட்ஸ் நோயை ஒழிப்பதில்
அமெரிக்கா தொடர்ந்து உறுதியுடன் செயல்படும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை
தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-30T21:21:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழரசுக் கட்சி மீது தொடுக்கப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/case-filed-against-tamil-nadu-party-adjourned-1785437770"></link>
            <id>https://tamilwin.com/article/case-filed-against-tamil-nadu-party-adjourned-1785437770</id>
            <summary type="text">இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் 28ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்த கட்டளையானது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் 28ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
</p><p>இந்த கட்டளையானது நேற்று(30.07.2026) திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தினால்&nbsp; பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>வழக்கு&nbsp;ஒத்திவைப்பு</h2><p>இந்தக் கட்டளைக்குப் பின்னரே அடுத்த கட்டமாக மூல வழக்கு மீதான விவகாரத்தை
நீதிமன்றம் எடுத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p>

வழக்கில் எதிராளிகளில் ஒருவரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மேற்படி
இடைபுகுநர் எதிராளிக்கான விண்ணப்பம் தொடர்பில் தமது எழுத்துமூல சமர்ப்பணத்தை
தாமே முன்வைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ff2ed11-cc6b-4dda-830f-8f9eb127db6c/26-6a6ba58a51c92.webp' /></p><p>

எதிராளிகளான தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கட்சியின்
நிர்வாகச் செயலாளர் குலநாயகம் மற்றும் முன்னைய பொதுச்செயலாளர் மருத்துவர்
சத்தியலிங்கம் ஆகியோர் சார்பில் சட்டத்தரணி கேசவன் சயந்தன் எழுத்து மூல
சமர்ப்பணங்களை மன்றில் சமர்ப்பித்திருந்தார்.
</p><p>அத்துடன் ஏனைய எதிராளிகளான சிறீதரன் எம்.பி, குகதாசன் எம்.பி, சீ.யோகேஸ்வரன்
ஆகியோர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி வி.புவிதரனும், வழக்காளி தரப்பில்
வழக்காளியின் சட்டத்தரணியும் இந்த விவகாரத்தையொட்டி தமது எழுத்து மூல
சமர்ப்பணங்களை மன்றில் முன்வைத்திருந்தனர்.</p><p>இதனையடுத்து இந்த விவகாரத்தையொட்டி
நீதிமன்றின் கட்டளை ஓகஸ்ட் 28ஆம் திகதி வழங்கப்படும் எனத் தெரிவித்து நீதிபதி
வழக்கை ஒத்திவைத்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T21:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரத்தில் தொங்கிய மனைவியின் தலை ; கணவர் கூறிய காரணத்தில் காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/husband-arrested-after-wife-found-beheaded-1785434501"></link>
            <id>https://jvpnews.com/article/husband-arrested-after-wife-found-beheaded-1785434501</id>
            <summary type="text">உணவு பரிமாறுவதற்கு தாமதமானதால் கோபமடைந்த நபர் தனது ச மனைவியின் தலையை வெட்டி மரத்தில் மாட்டிய சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.பீகார்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உணவு பரிமாறுவதற்கு தாமதமானதால் கோபமடைந்த நபர் தனது ச மனைவியின் தலையை வெட்டி மரத்தில் மாட்டிய சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.</p><p style="text-align: justify;">பீகார் மாநிலம் ஜகர்கன்ட் மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/206baf78-020d-4847-a1e1-c77038f2a2a8/26-6a6b918f809b0.webp' /></p><h2 style="text-align: justify; ">மதுபோதை</h2><p> </p><p style="text-align: justify;"> சகோதரர்கள் இருவர் வசித்து வந்த நிலையில் இதில் சகோதரர் ஒருவர் திருமணம் முடித்துள்ளார். குனல் குமாருக்கு மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என சொல்லப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">&nbsp;வீட்டிற்கு மதுபோதையில் சாப்பிட சென்றபோது, மனைவி&nbsp; அவருக்கு சாப்பாடு போடவில்லை எனவும்&nbsp; நீண்ட நேரம் சாப்பாட்டுக்காக காத்திருந்ததில் கோபமடைந்த குனல் குமார் பெண்ணின் தலையில் கோடாரியால் அடித்து கொலை செய்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;">
அதன்பின்&nbsp; தலையை வீட்டின் முன் இருந்த மரத்தில் தொங்க விட்டுள்ளார்.</p><p style="text-align: justify;">குணால் குமாரை கைது செய்து பொலிசார் விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-30T21:09:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சயனைடு விஷம் காரணமாக 15 யானைகள் உயிரிழப்பு: கென்யா தேசிய பூங்காவில் சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cyanide-poisoning-kils-15-elephant-in-kenya-1785445697"></link>
            <id>https://news.lankasri.com/article/cyanide-poisoning-kils-15-elephant-in-kenya-1785445697</id>
            <summary type="text">கென்யாவின் தேசிய பூங்காவில் 15 யானைகள் சயனைடு விஷம் காரணமாக உயிரிழந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சயனைடு விஷம் காரணமாக 15 யானைகள் உயிரிழப்பு
கென்ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கென்யாவின் தேசிய பூங்காவில் 15 யானைகள் சயனைடு விஷம் காரணமாக உயிரிழந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. </p><h2>சயனைடு விஷம் காரணமாக 15 யானைகள் உயிரிழப்பு</h2><p>
கென்யாவின் புகழ்பெற்ற அம்போசெலி தேசிய பூங்காவில் இந்த மாத தொடக்கத்தில் 15 யானைகள்&nbsp; உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.</p><p> இந்நிலையில் உயிரிழந்த 15 யானைகளும் விவசாய பூச்சிக்கொல்லிகளில் இருந்த சயனைடு விஷம் பாதித்ததால் தான் உயிரிழந்து இருப்பதாக அந்நாட்டு வனவிலங்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> தன்சானிய நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள இந்த பூங்காவில், விவசாயிகள் பயிரிட்டு இருந்த நச்சுத்தன்மை கொண்ட பூச்சுக்கொல்லிகள் தெளிக்கப்பட்டிந்த தக்காளிப் பழங்களை உட்கொண்டதாலே 15 யானைகளின் உயிரிழப்பிற்கு காரணம் என்று கென்ய வனவிலங்கு சேவை அமைப்பின் பேச்சாளர் டங்கன் ஜுமா வன்யாமா(Duncan Juma Wanyama) தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b982a88-cb4a-4161-a9c9-3bd399c37aa5/26-6a6bbd432fa63.webp' /></p><p></p><p>இதனை உறுதிப்படுத்தும் விதமாக, உயிரிழந்த யானைகளின் வயிற்றில் தக்காளி பழங்கள் அதிக அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><h2>திட்டமிட்ட செயலா? அல்லது தற்செயல் நிகழ்வா?</h2><p>
யானைகள் சயனைடு இருந்த தக்காளி பழங்களை உட்கொண்டது&nbsp; தற்செயல் நிகழ்வா? அல்லது திட்டமிட்ட செயலா? என பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p> சயனைடு என்பது நுரையீரல் மற்றும் கல்லீரல் ஆகிய உடல் பாகங்களை உடனடியாக பாதிக்கக்கூடிய கொடிய நச்சுப் பொருளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T21:08:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக சுகாதார அமைப்பை முற்றிலுமாக ஒதுக்கிய ட்ரம்ப் நிர்வாகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-administration-quits-who-completely-1785436462"></link>
            <id>https://tamilwin.com/article/trump-administration-quits-who-completely-1785436462</id>
            <summary type="text">அமெரிக்கா சர்வதேச தடுப்பூசி கூட்டமைப்புக்கு 600 மில்லியன் டொலர் நிதி வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில், அதன்மூலம் உலக சுகாதார அமைப்புக்கு (WHO) வழங்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா சர்வதேச தடுப்பூசி கூட்டமைப்புக்கு 600 மில்லியன் டொலர் நிதி வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில், அதன்மூலம் உலக சுகாதார அமைப்புக்கு (WHO) வழங்கப்பட்ட நிதியை முழுமையாக நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. </p><p>இதனால் WHO-க்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு மற்றும் சுகாதார அமைச்சகங்கள் தெரிவித்துள்ளன.</p><p></p><h2>தடுப்பூசி விநியோகம்</h2><p>
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவுப்படி, சுகாதாரத்துறை அமைச்சர் ரொபர்ட்
கென்னடி ஜூனியர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் காவி
அமைப்பில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்வதை அமெரிக்க நிதியுதவிக்கான
நிபந்தனையாக முன்வைத்துள்ளனர்."</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4c09b60-c7f7-4c4f-9cfe-58c8763ceeb9/26-6a6b9c24965b3.webp' /></p><p> உலகெங்கிலும் தடுப்பூசி விநியோகத்தை விரிவுபடுத்தும் இந்த சர்வதேச
திட்டத்திற்கு மீண்டும் நிதியுதவி வழங்குமாறு வலியுறுத்தி வந்த குடியரசுக் கட்சி
செனட்டர் சூசன் காலின்ஸ், இந்த முடிவை வரவேற்றுள்ளார்.
</p><p>
மேலும், தடுப்பூசிகளில் பாதரசம் பயன்படுத்தப்படுவதைத் தவிர்த்து, மாற்று
முறைகளை நோக்கிய கூட்டாண்மையை உருவாக்க காவி அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>உலக சுகாதார அமைப்பு</h2><p>
</p><p>
உலக சுகாதார அமைப்புடனான அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நீண்டகால மோதல் போக்கின்
தொடர்ச்சியாகவே இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9ffd61f-8492-437f-8467-875be28e3472/26-6a6b9c23c90f6.webp' /></p><p>ஏற்கனவே கடந்த 2025 ஜனவரியில் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே, உலக
சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகும் என்றும், அதற்கான நிதி
நிறுத்தப்படும் என்றும் ட்ரம்ப் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>

உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கப்படும் நிதியுதவி நிறுத்தப்படுவதால், போலியோ,
காசநோய், எச்.ஐ.வி (HIV), மலேரியா மற்றும் தட்டம்மை போன்ற நோய்களைத் தடுக்கும்
திட்டங்களும், காசா, சூடான் போன்ற போர் மண்டலங்களில் மேற்கொள்ளப்படும் அவசர
மருத்துவ உதவிகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என நிபுணர்கள் கவலை
தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-30T21:06:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் வடகொரிய ஏவுகணை! அதிர்ச்சியில் ஜெலென்ஸ்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/russia-used-north-korean-missile-to-strike-ukraine-1785442783"></link>
            <id>https://ibctamil.com/article/russia-used-north-korean-missile-to-strike-ukraine-1785442783</id>
            <summary type="text">உக்ரைனின் ரடுஷ்னே கிராமத்தின் மீதான ரஷ்யாவின் சமீபத்திய தாக்குதலில் வட கொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணை பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் சுட்டிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் ரடுஷ்னே கிராமத்தின் மீதான ரஷ்யாவின் சமீபத்திய தாக்குதலில் வட கொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணை பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் சுட்டிக்காட்டுவதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணையை நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும், ஆரம்பகட்ட ஆய்வுகளில் அது வட கொரியாவில் தயாரிக்கப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை என்பதையே உறுதிப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.</p><p></p><h2>வட கொரியா இராணுவ உதவி</h2><p>
</p><p>
நீண்ட நாட்களின் பின்னர் வட கொரிய ஏவுகணை பயன்படுத்தப்பட்டிருப்பது ரஷ்ய மற்றும் வட கொரிய ஆட்சிக்கும் இடையே வளர்ந்து வரும் இராணுவ ஒத்துழைப்பை வெளிப்படுத்துவதாகக் கூறிய ஜெலென்ஸ்கி, ரஷ்யாவிற்கு ஏவுகணைகளையும் வீரர்களையும் வட கொரியா வழங்குவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9e5c37e-599a-4c3d-a0b6-69794e79d888/26-6a6bb71dbcedb.webp' /></p><p><i>Image Credit:&nbsp;The Conversation</i></p><p>
</p><p>
இந்த நிலையில், கூடுதல் வான் பாதுகாப்பு ஏவுகணைகள், குறிப்பாக பேட்ரியாட் அமைப்புகளுக்கான இடைமறிப்பு ஏவுகணைகள், அத்துடன் மேற்கத்திய நாடுகள் வழங்கும் பிற வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான ஆயுதங்களை பெறுவதில் உக்ரைன் அதிக கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.</p><h2>ரஷ்யா பதில்</h2><p>

சமீபத்திய ஆண்டுகளில் ரஷ்யாவும் வட கொரியாவும் தங்களது இராணுவ உறவுகளை விரிவுபடுத்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab75ed00-1bbd-4e1c-9911-67aa3b1f407d/26-6a6bb71ea80a9.webp' /></p><p><i>Image Credit:&nbsp;CEPA</i></p><p>
இவ்வாறானதொரு பின்னணயியில், உக்ரைன் முழுவதுமாக வெளிநாட்டு ஆயுதங்களைக் கொண்டே போரிடுவதால், வெளிநாட்டு ஆயுதங்களின் பயன்பாட்டிற்காக ரஷ்யாவை விமர்சிக்க உக்ரைனுக்கு உரிமை இல்லை என்று ரஷ்யா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-30T20:54:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுட்டுக்கொல்லப்பட்ட உணவக உரிமையாளர் ; இருவருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-action-taken-in-restaurant-owner-murder-case-1785444718"></link>
            <id>https://jvpnews.com/article/court-action-taken-in-restaurant-owner-murder-case-1785444718</id>
            <summary type="text">பெல்லன்வில நடைபாதை அருகே உணவக உரிமையாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும், 90 நாட்கள் தடுத்து வைத்து வி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பெல்லன்வில நடைபாதை அருகே உணவக உரிமையாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும், 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யும் பொருட்டு மேல் மாகாண தெற்கு திசை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் முன்னாள் இராணுவச் சிப்பாய் எனவும், மற்றொருவர் பகமூண பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ce50317-0a22-4341-8da2-083707cf033c/26-6a6bb96f90fb9.webp' /></p><h2 style="text-align: justify; ">தடுப்புக் காவல்</h2><p style="text-align: justify; ">



</p><p style="text-align: justify; ">கடந்த 25ஆம் திகதி, பெல்லன்வில பகுதியிலுள்ள உணவகத்தின் முன்பாக நீல நிற முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், உணவக உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.
</p><p style="text-align: justify; ">


சம்பவத்தையடுத்து மேற்கொள்ளப்பட்ட அவசர வீதித் தடைச் சோதனையின் போது, மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்ற இரு சந்தேகநபர்களை நவகமுவ பொலிஸார் கைதுசெய்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


பின்னர் நீதிமன்ற அனுமதியுடன் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த உத்தரவு பெறப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் மேல் மாகாண தெற்கு திசை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் நேற்று (29) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-30T20:52:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைத்து அதிரடியாக இருவர் கைது - சந்தேக நபர்களிடம் இருந்த மீட்கப்பட்ட பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-held-in-batticaloa-with-stolen-goods-1785426076"></link>
            <id>https://tamilwin.com/article/two-held-in-batticaloa-with-stolen-goods-1785426076</id>
            <summary type="text">மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரை பார்வையிடுவதற்காக வந்த அவரது சகோதரன் மற்றும் நண்பர் ஆகிய இருவரையும் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருள்களு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரை பார்வையிடுவதற்காக வந்த அவரது சகோதரன் மற்றும் நண்பர் ஆகிய இருவரையும் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த கைது நடவடிக்கையானது நேற்றை தினம்(19.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கைது செய்யப்பட்டோர்</h2><p>
</p><p>

குறித்த சிறைக்கைதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டவராவார். </p><p>இவரை பார்வையிடுவதற்காக கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு வந்திருந்த நிலையிலேயே அவரது சகோதரர் மற்றும் நண்பர் ஆகிய இருவரும் போதைப்பொருட்களுடன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb44ca16-5cec-4ff0-97d1-c95e0f647cc3/26-6a6b8b722a86b.webp' /></p><p>

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த ஏப்ரல் 7ஆம் திகதி 7 அரைக் கிலோ கொண்ட ஐஸ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி நீர்கொழும்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த நிலையில் குறித்த சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட படுகொலை சம்பவத்தை அடுத்து அவர் உட்பட அங்கிருந்து 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>போதைப்பொருள் வியாபரி</h2><p>இதனையடுத்து குறித்த சகோதரனை பார்வையிட அவரது தம்பியும் அவரின் நண்பன் ஆகிய இருவரும் கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு சென்று கல்லடி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.</p><p> </p><p>

இதனை தொடர்ந்து மட்டக்களப்பு தலைமைய பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து போதை ஒழிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ தினமான நேற்று இரவு குறித்த ஹோட்டலை முற்றுகையிட்டு சோதனை நடத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3c3427d-3754-4304-a4a1-3381a6c6bbbb/26-6a6b8b72cf602.webp' /></p><p> </p><p>

இதன்போது அங்கிருந்த தொட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 26 மற்றும் 31 வயதுடைய இருவரை 100 மில்லிக்கிராம் ஹெரோயின் 500 மில்லி கிராம் ஐஸ் போதைபொருட்களுடன் கைது செய்துள்ளனர். </p><p>

இதில் போதைப்பொருள் வியாபரியின் சகோதரன் ஏற்கனவே போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டு கடந்த ஒன்றரை வருடங்கள் சிறையில் இருந்து நீதிமன்ற பிணையில் வெளியே வந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p>

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p> 



</p>]]></content>
            <updated>2026-07-30T20:49:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதி நிமிடங்களில் சீன தூதுவரின் கைகளை பிடித்த மகிந்த - கோட்டா: நடக்கப்போவது என்ன..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-gotabaya-chinese-ambassador-final-minutes-1785439433"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-gotabaya-chinese-ambassador-final-minutes-1785439433</id>
            <summary type="text">இலங்கை அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் ராஜபக்ச குடும்பத்தினர் தொடர்பில் அண்மையில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.&amp;nbsp;இந்நிலையில், அண்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் ராஜபக்ச குடும்பத்தினர் தொடர்பில் அண்மையில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.&nbsp;</p><p>இந்நிலையில், அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிரமப்பட்டு நடந்து செல்லும் காணொளி ஒன்று வெளியானது.&nbsp;</p><p>குறித்த காணொளி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்த நிலையில், அவரின் ஆதரவாளர்கள் அவர் குறித்து வருத்தம் தெரிவித்து வந்தனர்.&nbsp;</p><p>அதேநேரம், பல தமிழ் மக்கள் வெளியிட்ட கருத்துக்கள் குறிப்பாக இறுதி போர் காலத்தில் தனது உறவினர்களை இழந்தவர்களின் வருத்தம் கலந்த கருத்துக்கள் கவனத்தை ஈர்த்தன.&nbsp;</p><p>இது உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/-7HPFvKe7PQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T20:47:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/europe-threat-to-boycott-fifa-world-cup-1785435271"></link>
            <id>https://news.lankasri.com/article/europe-threat-to-boycott-fifa-world-cup-1785435271</id>
            <summary type="text">ஃபிபா பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்தால் உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து விலகுவதாக ஐரோப்பிய நாடுகள் எச்சரித்துள்ளன. உலகக் கோப்பையை புறக்கணிக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஃபிபா பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்தால் உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து விலகுவதாக ஐரோப்பிய நாடுகள் எச்சரித்துள்ளன.</p><h2> உலகக் கோப்பையை புறக்கணிக்கும் ஐரோப்பா?</h2><p>ஃபிபா தலைவர் ஜியானி இன்பான்டினோ(Gianni Infantino) முன்மொழிந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் சர்ச்சைக்குரிய திட்டத்தை ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பான UEFA எதிர்த்துள்ளது.</p><p>உலகக் கோப்பை பங்குகளை விற்பனை செய்யும் திட்டத்தை ஃபிபா தலைவர் ஜியானி இன்பான்டினோ முன் நகர்த்தி சென்றால் UEFA உறுப்பு நாடுகள் இனி ஃபிபா உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்காது என எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f8e9f20-bb1d-4254-acd6-45b8298f040e/26-6a6b948901139.webp' /></p><p> ஃபிபா பங்குகளை விற்பனை செய்யும் வணிக திட்டத்திற்கும், வெளிநாடு முதலீடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 55 உறுப்பு நாடுகளை கொண்ட UEFA கூட்டமைப்பு&nbsp; இந்த வாரம் அவசர கூட்டம் ஒன்றை கூட்டி ஃபிபா நடத்தும் தொடர்களை புறக்கணிப்பது தொடர்பான முக்கிய முடிவை எடுத்துள்ளனர்.</p><p> மேலும் உலகக் கோப்பை போட்டிகளை முதலீட்டு பொருளாக மாற்றக்கூடாது என்றும் UEFA திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.</p><p></p><h2> 20 பில்லியன் டொலரில் புதிய துணை நிறுவனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d77493b-f57d-42b8-bb4c-96eb2e1b1adb/26-6a6b9489ab6b2.webp' /></p><p>ஃபிபா தலைவர்&nbsp; ஜியானி இன்பான்டினோ 20 பில்லிய்ன் டொலர் மதிப்பிலான துணை நிறுவனத்தை தொடங்க திட்டமிட்டு இருப்பதை செவ்வாய்க்கிழமை ஃபிபா உறுதிப்படுத்தியது.</p><p> மேலும் ஃபிபா பார்வர்ட் என்டர்பிரைஸ் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய முயற்சியின் கீழ் நிறுவனத்தின் 20%-க்கும் அதிகமான பங்குகளை விற்று கிட்டத்தட்ட 4.2 பில்லியன் டொலர்களை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T20:44:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்னை சித்திரவதை செய்து கொல்ல வேண்டும் ; பல இலட்சம் கொடுத்து விபரீத முடிவை தேடிய இளம் ஆசிரியை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/teacher-pays-huge-sum-in-shocking-incident-1785443266"></link>
            <id>https://jvpnews.com/article/teacher-pays-huge-sum-in-shocking-incident-1785443266</id>
            <summary type="text">இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியைச் சேர்ந்த 32 வயதான பெண், அமெரிக்க நபருக்கு 4,000 டாலர் பணம் கொடுத்து விபரீத முடிவை தேடிக்கொண்ட திடுக்கிடும் தகவல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியைச் சேர்ந்த 32 வயதான பெண், அமெரிக்க நபருக்கு 4,000 டாலர் பணம் கொடுத்து விபரீத முடிவை தேடிக்கொண்ட திடுக்கிடும் தகவல் தற்போது நீதிமன்ற விசாரணையில் அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">

இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியைச் சேர்ந்த 32 வயதான இசை ஆசிரியை, கடுமையான மன உளைச்சல் காரணமாக விசித்திரமான இணையதளம் ஒன்றில் அமெரிக்காவைச் சேர்ந்த நபருடன் பழகி வந்துள்ளார். அந்த பழக்கம் ஒரு விபரீதமான முடிவை நோக்கி தள்ளியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e89c278b-eba7-4b61-8421-3e08422650f8/26-6a6bb3c40190c.webp' /></p><h2 style="text-align: justify; ">கொலை குற்றச்சாட்டுகள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

விசாரணையில் வெளிவந்துள்ள நீதிமன்ற ஆவணங்களின்படி, தன்னை கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொலை செய்ய வேண்டும் என்பதற்காக, சோனியா அந்த அமெரிக்க நபருக்கு 4,000 டாலர்களை கொடுத்துள்ளார்.</p><p style="text-align: justify; "> 

அமெரிக்காவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் வைத்து அந்த நபர் குறித்த ஆசிரியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார். </p><p style="text-align: justify; ">அப்போது ஆசிரியைக்கு தனது தவறு புரிய வந்துள்ளது. உடனே, தனது தோழி ஒருவருக்கு, ரகசியமாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அடுத்த சில நாட்களில் ஆசிரியை இங்கிலாந்து திரும்பாததால், அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். </p><p style="text-align: justify; ">அப்போது புளோரிடாவின் மேரியன் கவுண்டி காட்டுப் பகுதியில், 4 முறை கத்தியால் குத்தப்பட்டு, ஆழமற்ற ஒரு குழியில் கொடூரமான முறையில் புதைக்கப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
</p><p style="text-align: justify; ">

இதனை தொடர்ந்து, சோனியாவின் வங்கி அட்டைகளை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்ற 53 வயதான சந்தேகநபரை அமெரிக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> அவர் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p style="text-align: justify; ">
இந்த வினோதமான கொலை வழக்கு தற்போது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-30T20:27:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் பகுதிகளை தன்வசப்படுத்தி ரஷ்யா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/russia-capture-4-settlements-in-ukraine-1785440198"></link>
            <id>https://ibctamil.com/article/russia-capture-4-settlements-in-ukraine-1785440198</id>
            <summary type="text">
கிழக்கு மற்றும் வடகிழக்கு உக்ரேனில் உள்ள நான்கு குடியிருப்புப் பகுதிகளைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கிழக்கு மற்றும் வடகிழக்கு உக்ரேனில் உள்ள நான்கு குடியிருப்புப் பகுதிகளைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.</p><p>

உக்ரேனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள கிராஸ்நோயார்ஸ்கோயே என்ற குடியிருப்புப் பகுதியை ரஷ்யாவின் சென்டர் படைப்பிரிவு கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், நோர்த் படைப்பிரிவினர் சுமி பிராந்தியத்தில் உள்ள மாலா ஸ்லோபோட்கா மற்றும் மொக்ரிட்சியாவ் ஆகிய பகுதிகளையும், கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள யுர்சென்கோவே பகுதியையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல்</h2><p>
</p><p>
எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஒரு தடுப்பு மண்டலத்தை உருவாக்குவதாக ரஷ்யா தெரிவித்து வரும் நிலையில், வடகிழக்கு சுமி பிராந்தியத்தில் தங்களது செயல்பாடுகளை விரிவுபடுத்திக் கொண்டே கிழக்கு உக்ரேன் முழுவதிலும் ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d0da72d-f0aa-449f-a4b1-26b792b96000/26-6a6bac1de1916.webp' /></p><p><i>Image Credit: Bloomberg</i></p><p>
</p><p>
இருப்பினும், ரஷ்ய முன்னேற்றங்களை வலுவாக எதிர்த்து நிற்பதாகவும், ரஷ்யப் படைகளுக்குப் பெரும் இழப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் உக்ரேன் தரப்பு தெரிவித்து வருகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-30T20:15:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவாய் தீவில் 500 அடி உயரத்திற்கு வெடித்து சிதறும் எரிமலை குழம்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/volcano-erupts-lava-soars-500-feet-high-1785441280"></link>
            <id>https://canadamirror.com/article/volcano-erupts-lava-soars-500-feet-high-1785441280</id>
            <summary type="text">ஹவாய் தீவில் உள்ள கிலாவுவே எரிமலையில் இருந்து 500 அடி உயரத்திற்கு எரிமலை குழம்பு வெடித்து சிதறுவதாக என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவிக்கின்றத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹவாய் தீவில் உள்ள கிலாவுவே எரிமலையில் இருந்து 500 அடி உயரத்திற்கு எரிமலை குழம்பு வெடித்து சிதறுவதாக என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவிக்கின்றது.
</p><p>
ஹவாய் தீவு எனப்படும் பிக் தீவில் உள்ள கிலாவுவே எரிமலையானது, உலகின் மிக துடிப்பான எரிமலைகளில் ஒன்றாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9f59e15-0acf-409a-ac06-ca1743c29514/26-6a6bac027ed79.webp' /></p><p> </p><p>இந்த எரிமலையில், கடந்த செவ்வாய் கிழமை இரவு 7.10 மணியளவில் வெடிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து 7 மணிநேரம் நடந்த இந்த எரிமலை வெடிப்பானது, நேற்று காலை 2.36 மணி வரை நீடித்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவிக்கின்றது.
</p><p>
சுமார் 500 அடி உயரத்திற்கு எரிமலை குழம்பு பீறிட்டு வெளியேறுகிறது. இதனால், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.


</p><p>இந்த வெடிப்பில், வாயு மற்றும் தீப்பிழம்புகள் வெளிப்பட்டன. எரிமலையின் வடக்கு பகுதியில் இருந்து வெளிப்பட்ட எரிமலை குழம்பு விரைவாக வெளியேறி எரிமலை பள்ளத்தில் 50 சதவீதம் அளவுக்கு நிரம்பி காணப்படுகிறது. </p><p>அதனால் ஏற்பட்ட வெப்பம் மற்றும் சாம்பல் கடல் மட்டத்தில் இருந்து 19 ஆயிரம் அடி உயரத்திற்கு மேலே எழும்பியது.
</p><p>
எனினும் இந்த எரிமலை வெடிப்பின்போது, மக்கள் அதிகம் கூட கூடிய பகுதிகளில், பெரிய திடப்பாறைகளோ அல்லது மக்மா துகள்களோ வெளியேறவில்லை என்றும் ஆனால் சாம்பல் படிவங்கள் கண்டறியப்பட்டு உள்ளன என்றும் தகவல் தெரிவிக்கின்றது.</p>]]></content>
            <updated>2026-07-30T19:54:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் கோர விபத்தால் பறிபோன உயிர் ; விசாரணைகள் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fatal-accident-claims-life-in-tamil-area-1785440323"></link>
            <id>https://jvpnews.com/article/fatal-accident-claims-life-in-tamil-area-1785440323</id>
            <summary type="text">புல்மோட்டை - திருகோணமலை வீதியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி கால்வாய் தூணில் மோதியதில் அதன் ஓட்டுநர் உயிரிழந்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">புல்மோட்டை - திருகோணமலை வீதியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி கால்வாய் தூணில் மோதியதில் அதன் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; ">புதன்கிழமை மாலை வேளையில் புல்மோட்டை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி கால்வாய் தூணில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eae7d64b-da80-416f-bb21-b1dd5916f3d9/26-6a6ba844dc2c3.webp' /></p><p> </p><p style="text-align: justify; ">விபத்தில் படுகாயமடைந்த நபர் புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
உயிரிழந்தவர் குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபராவார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">சம்பவம் தொடர்பில் புல்மோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-30T19:45:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவசர தேவைக்காக சுவ செரிய அறிமுகப்படுத்தும் மோட்டார் சைக்கிள் சேவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/suwa-seriya-launches-new-emergency-service-1785439223"></link>
            <id>https://jvpnews.com/article/suwa-seriya-launches-new-emergency-service-1785439223</id>
            <summary type="text">அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளர்களுக்கு இன்னும் விரைவாகச் சிகிச்சை அளிக்கும் நோக்கில், மோட்டார் சைக்கிள் அடிப்படையிலான புதிய அவசர மருத்துவச் சேவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளர்களுக்கு இன்னும் விரைவாகச் சிகிச்சை அளிக்கும் நோக்கில், மோட்டார் சைக்கிள் அடிப்படையிலான புதிய அவசர மருத்துவச் சேவையை அறிமுகப்படுத்தத் திட்டம் வகுத்துள்ளதாக '1990 சுவ செரிய' அறக்கட்டளை அறிவித்துள்ளது.
</p><p>

போக்குவரத்து நெரிசல் மற்றும் குறுகிய வீதிகள் காரணமாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைவாகச் செல்வதில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்த்து, நோயாளர்களிடம் விரைவாக சென்றடைய இச்சேவை பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/821a4fbd-4d00-469d-88eb-5b9ec0609a68/26-6a6ba3f8d9e9b.webp' /></p><h2>அவசர மருத்துவ உதவி&nbsp;&nbsp;</h2><p>

நோயாளர் காவு வண்டி சம்பவ இடத்திற்கு வந்து சேருவதற்கு முன்பாகவே, நோயாளருக்குத் தேவையான உடனடி முதலுதவி மற்றும் அடிப்படை மருத்துவ ஆதரவை வழங்குவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
</p><p>
இச்சேவையில் பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அவசர மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
</p><p>
இதற்காகச் விசேடப் பயிற்சி பெற்ற வைத்திய அதிகாரிகள் மோட்டார் சைக்கிள் அவசரப் பிரிவுகளில் களமிறக்கப்படுவர்.</p><p></p><p>
</p><p>
அதிக சனத்தொகை கொண்ட பகுதிகள் மற்றும் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவும் முக்கிய நகர்ப்புறங்களில் இச்சேவை முதன்மையாகச் செயல்படுத்தப்படும்.

</p><p>இந்த ஆண்டின் இறுதிக்குள் இத்திட்டம் முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. ஆரம்பகட்டமாக கொழும்பு மற்றும் பிற முக்கிய நகரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது</p><p></p>]]></content>
            <updated>2026-07-30T19:30:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அழிக்கப்பட்ட F-35 போர் விமானங்கள்! ஈரானின் அறிவிப்பை முற்றாக மறுத்தது அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-denies-iran-destroyed-f-35-fighter-jets-1785437858"></link>
            <id>https://ibctamil.com/article/us-denies-iran-destroyed-f-35-fighter-jets-1785437858</id>
            <summary type="text">ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் F-35 போர் விமானங்கள் உட்பட பல அமெரிக்க விமானங்கள் அழிக்கப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை அமெரிக்க இராணுவம் மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் F-35 போர் விமானங்கள் உட்பட பல அமெரிக்க விமானங்கள் அழிக்கப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை அமெரிக்க இராணுவம் முற்றாக மறுத்துள்ளது.</p><p>
ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) முன்வைத்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM), சமீபத்திய தாக்குதல் முயற்சிகளில் அமெரிக்க விமானங்கள் எதுவும் அழிக்கப்படவோ அல்லது சேதமடையவோ இல்லை எனத் தெரிவித்துள்ளது. </p><p>

யோர்தானில் உள்ள அல்-அஸ்ராக் விமானப் தளத்தைக் இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று எஃப்-35 விமானங்கள் அழிக்கப்பட்டதாகவும், மேலும் மூன்று விமானங்கள் சேதமடைந்ததாகவும் ஈரான் தெரிவித்திருந்தது.</p><p></p><h2>இடைமறிக்கப்பட்ட ஏவுகணைகள்</h2><p> 

அத்துடன், அமெரிக்க அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப பராமரிப்புப் பணியாளர்கள் சிலர் கொல்லப்பட்டதாகவும் ஈரான் அறிவித்திருந்தது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Over the past few hours, Iranian state media have continued to report false claims by the Islamic Revolutionary Guard Corps (IRGC) – three in particular.<br><br>🚫 FIRST CLAIM: The IRGC (again) claims free and open routes through the Strait of Hormuz are dangerous for commercial… <a href="https://t.co/J34ILmDvyk">pic.twitter.com/J34ILmDvyk</a></p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2082850478572900753?ref_src=twsrc%5Etfw">July 30, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
இந்நிலையில், ஈரானால் ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் அனைத்தும் இடைமறிக்கப்பட்டு இலக்குகளை அடையத் தவறிவிட்டதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.</p><p>

இதேவேளை, ஈரானில் இருந்து யோர்தான் நோக்கி ஏவப்பட்ட ஐந்து ஏவுகணைகளை இடைமறித்து அழித்துள்ளதாக யோர்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-30T19:13:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவு சோதனையில் சிக்கிய பெண் ; சோதனையில் கிடைத்த பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-detained-in-late-night-operation-1785438142"></link>
            <id>https://jvpnews.com/article/woman-detained-in-late-night-operation-1785438142</id>
            <summary type="text">கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெயாட்ஸ் வீதி பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகளுக்குக் கிடைத்தத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெயாட்ஸ் வீதி பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகளுக்குக் கிடைத்தத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

நேற்று (29) இரவு வேளையில் முன்னெடுக்கப்பட்ட இந்தச் சோதனையின் போது, 772 கிராம் ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் மூலம் கிடைத்ததாகச் சந்தேகிக்கப்படும் 75,000 ரூபா பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c24995d6-f2c3-4971-8b79-22ed54f6a959/26-6a6b9fecaca7f.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify;">
கைது செய்யப்பட்டவர் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் ஆவார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-30T19:02:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய கடற்கரையில் மீண்டும் சோகம்: கடல் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-dies-at-frinton-coast-in-uk-essex-1785437185"></link>
            <id>https://news.lankasri.com/article/man-dies-at-frinton-coast-in-uk-essex-1785437185</id>
            <summary type="text">பிரித்தானியாவின் ஃப்ரின்டன் கடற்கரையில் நீரில் மூழ்கி நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நீரில் மூழ்கி உயிரிழந்த நபர்
ஃப்ரின்டன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் ஃப்ரின்டன் கடற்கரையில் நீரில் மூழ்கி நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>நீரில் மூழ்கி உயிரிழந்த நபர்</h2><p>
ஃப்ரின்டன் கடற்கரையில் கடலில் சிக்கி தவித்த நபர் இறுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்து இருப்பதாக எசெக்ஸ் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> வியாழக்கிழமை பிற்பகல் 2.10 மணி அளவில் கடல் நீரில் மூழ்கிய நபர் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டார். </p><p>&nbsp;அவருக்கு போதிய முதலுதவி சிகிச்சைகள் வழங்கியும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/939fe37e-16b1-49d7-ab95-4dd3070a7756/26-6a6b9c028b37a.webp' /></p><p> தகவல் கிடைத்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு மருத்துவ ஊர்தி மற்றும் வான்வழி அவசர ஊர்தி உட்பட 10 க்கும் மேற்பட்ட அவசர சேவை வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.</p><p> மேலும் சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தடையின்றி நடைபெறும் விதமாக பொதுமக்கள் அப்பகுதியை தவிர்க்குமாறு உள்ளூர் காவல் துறையினர் கேட்டுக் கொண்டனர்.</p><p></p><h2> எசெக்ஸ் கடற்கரையில் தொடரும் சோகம்</h2><p>
இந்த உயிரிழப்பு சம்பவத்திற்கு முன்பு ஜூலை 22ம் திகதி மேற்கு பகுதியில் உள்ள மெர்சியாவில் நிகழ்ந்த விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்து இருந்தான்.</p><p> அத்துடன் ஏற்கனவே அந்த விபத்தில் 41 வயது பெண்ணும், அவரது 15 வயது மகளும் உயிரிழந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-30T18:46:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் ; முன்னரே எச்சரித்த ஜெலென்ஸ்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/zelensky-warned-before-russia-s-missile-attack-1785435302"></link>
            <id>https://canadamirror.com/article/zelensky-warned-before-russia-s-missile-attack-1785435302</id>
            <summary type="text">ரஷ்யா ஒரு &quot;பெரும் தாக்குதலுக்கு&quot; தயாராகி வருவதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி நேற்று (29) எச்சரித்திருந்த நிலையில், இன்று (30) அதிகாலை இந்தத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா ஒரு "பெரும் தாக்குதலுக்கு" தயாராகி வருவதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி நேற்று (29) எச்சரித்திருந்த நிலையில், இன்று (30) அதிகாலை இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.
</p><p>


பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உக்ரைனிலேயே தயாரிக்க அனுமதி பெறுவதற்காக, இந்த வாரம் வொஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை ஜெலென்ஸ்கி நேரில் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து இத்தாக்குதல் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2bfa777-cf26-4f40-9d0d-5820645b5886/26-6a6b94a77d571.webp' /></p><p>
</p><p>


உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய சக்திவாய்ந்த ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு குழந்தைகள் உட்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>



மத்திய உக்ரைனின் கிரிவி ரிஹ் நகருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள வீட்டின் மீது வீசப்பட்ட பொலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலில் 5 மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர்.
</p><p>


தலைநகர் கீவ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூன்று குடியிருப்பு அல்லாத கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டது என மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.
</p><p>


போல்டாவா நகரில் நோவா போஷ்டா தபால் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T18:45:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈபிடிபியுடன் இணைந்தது போல் தமிழ் மக்கள் விடுதலை புலிகளுடனும் இணைகின்றதா தமிழரசுக் கட்சி..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamilarasu-katchi-sumanthiran-epdp-tmvp-1785434064"></link>
            <id>https://tamilwin.com/article/tamilarasu-katchi-sumanthiran-epdp-tmvp-1785434064</id>
            <summary type="text">தற்போது வடக்கு கிழக்கில் ஒரு புதிய கூட்டணியாக தமிழரசுக் கட்சியும் புதிய ஜனநாயகக் கூட்டமைப்பும் உருவாகியிருக்கின்றது எனலாம்.&amp;nbsp;இந்நிலையில், தமிழரசுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது வடக்கு கிழக்கில் ஒரு புதிய கூட்டணியாக தமிழரசுக் கட்சியும் புதிய ஜனநாயகக் கூட்டமைப்பும் உருவாகியிருக்கின்றது எனலாம்.&nbsp;</p><p>இந்நிலையில், தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சுமந்திரன், இந்த கூட்டணியில் இடம்பெற்ற ஒரு முக்கிய நகர்விற்கு ஆதரவு வழங்கியிருக்கவில்லை.&nbsp;</p><p>முன்னதாக அவர்களுக்கிடையில் வேறுபாடு இருந்திருக்கலாம் ஆனால், தற்போது&nbsp;சுமந்திரன் அந்த கூட்டணி தர்மத்தோடு செயற்பட்டிருக்கவில்லை என அரசியல் ஆய்வாளர்கள் பலர் விமர்சிக்கின்றனர்.&nbsp;</p><p>அதேநேரம், அவர் தனது தீர்மானங்கள் குறித்து வெளியிட்டுள்ள கருத்தும் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/6UknUjBX6VE" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T18:29:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் குளவிக் கொட்டுக்கு இலக்கான முதியவர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/elderly-man-dies-after-being-stung-by-a-wasp-1785435670"></link>
            <id>https://ibctamil.com/article/elderly-man-dies-after-being-stung-by-a-wasp-1785435670</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் புங்குடுதீவு காட்டுக்குள் நேற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>

இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் புங்குடுதீவு காட்டுக்குள் நேற்றையதினம்(29) பனை வெட்டுவதற்காக சென்றபோது கருங்குளவி கொட்டுக்க இலக்கான நிலையில் அவரது மகன் அவரை புங்குடுதீவு வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளார்.
</p><p>
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டதையடுத்து, சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>மரண விசாரணை</h2><p>
</p><p>
இதன்போது, 10ஆம் வட்டாரம், புங்குடுத்வைச் சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் (வயது 67) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd8b920f-5e08-4395-8bde-63437f1dc59d/26-6a6b97d26f641.webp' /></p><p>
</p><p>
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</b></h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-30T18:28:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆகஸ்டில் உருவாகும் 3 சக்திவாய்ந்த ராஜயோகங்கள் : இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/powerful-3-rajayogas-forms-on-august-who-get-luck-1785407267"></link>
            <id>https://manithan.com/article/powerful-3-rajayogas-forms-on-august-who-get-luck-1785407267</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திர நிலைகளை மாற்றிக்கொண்டே இருக்கின்றன. க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திர நிலைகளை மாற்றிக்கொண்டே இருக்கின்றன.</p><p> கிரகங்களின் இந்த இடமாற்றங்கள் ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக, ஒரு கிரகம் மற்றொரு கிரகத்துடன் இணையும் போது அல்லது ஒரே ராசியில் ஒன்றுசேரும் போது பல்வேறு யோகங்கள் உருவாகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a1014f9-5efa-4d62-b37c-cd76af61f871/26-6a6b3659949af.webp' /></p><p></p><p> அவற்றில் சில யோகங்கள் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் மங்களகரமான ராஜயோகங்களாகக் கருதப்படுகின்றன. அதன் தாக்கம் 12 ராசிகளிலும் பிரதிபலிக்கும் என்று தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.&nbsp;</p><p>
அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் புதன் கிரகம் கடக ராசியில் நுழைந்து, அங்கு ஏற்கனவே இருக்கும் சூரியன் மற்றும் குருவுடன் இணைகிறது. இந்த அரிய கிரகச் சேர்க்கையால் 'கஜலட்சுமி ராஜயோகம்', 'திரிகிரஹ யோகம்' மற்றும் 'புத ஆதித்ய ராஜயோகம்' ஆகிய மங்களகரமான யோகங்கள் உருவாகின்றன. </p><p>இந்த யோகங்களின் தாக்கம் ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை நீடிக்கும். இதன் தாக்கமானது 12 ராசிகளிலும் பிரதிபலித்தாலும், தொழில் , நிதி நிலை, தனிப்பட்ட வாழ்க்கை என்பவற்றில் உச்சகட்ட சாதக பலன்களை பெறப்போகும் ராசிகள் யார் யார் என பார்க்கலாம்.</p><h2>மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17d084e9-97b9-4002-b293-0ec56a9d146e/26-6a6b365a47ac0.webp' /></p><p>

இந்த மூன்று ராஜயோகங்கள் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். ராசி அதிபதியான புதனின் அருளால் தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் புதிய முன்னேற்றங்கள் கிடைக்கும்.</p><p> புத்திசாலித்தனமான முடிவுகள் நிதி வளர்ச்சியையும் மரியாதையையும் பெற்றுத் தரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.</p><p> நிலம், சொத்து தொடர்பான நீண்டநாள் பிரச்சினைகள் தீரும். கடின உழைப்புக்கான பலன் கிடைத்து, உடல்நலக் குறைகளும் படிப்படியாக நீங்கும்.</p><h2>

கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ef5f46c-cc39-45f2-b7ac-3f2a66b3c613/26-6a6b365aecd6f.webp' /></p><h2>
</h2><p>
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் அதிர்ஷ்டமான காலத்தைத் தொடங்குகிறது. புதிய ஒப்பந்தங்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும். </p><p>தைரியமும் தன்னம்பிக்கையும் உயரும். பழைய கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரலாம். திருமண வாழ்க்கை இனிமையாகவும் அமைதியாகவும் இருக்கும்.</p><p>வாழ்க்கைத்துணையின் ஆதரவு முன்னேற்றத்திற்கு உதவும். தொழிலில் வெற்றி, மேலதிகாரிகளின் பாராட்டு மற்றும் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நிதி உதவியும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
</p><h2>
மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f28e3e7-8e29-4004-8a03-23cd26346be8/26-6a6b3844beeb1.webp' /></p><p></p><p>

மகர ராசிக்காரர்களுக்கு இந்த யோகங்கள் சிறப்பான பலன்களை வழங்கும். நிதி நிலை மேம்பட்டு, வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. </p><p>நிலுவையில் இருந்த பணம் கைக்கு வரும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் மூலம் எதிர்பாராத லாபம் கிடைக்கும். </p><p>வெளிநாட்டு பயண வாய்ப்புகளும் உருவாகலாம். பழைய முதலீடுகள் நல்ல வருமானத்தைத் தரும். குழந்தைகள் தொடர்பாக மகிழ்ச்சியான செய்தி கிடைக்கலாம். ஆரோக்கியமும் சிறப்பாக இருந்து, மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி காண்பார்கள்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T18:25:00+00:00</updated>
        </entry>
    </feed>
