<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-18T08:30:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளம்ப தயாராக இருந்த ஜனனிக்கு ஷாக் கொடுத்த குணசேகரன், ராணா செய்த செயல்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ethirneechal-thodargiradhu-promo-18-sep-2026-1789715025"></link>
            <id>https://cineulagam.com/article/ethirneechal-thodargiradhu-promo-18-sep-2026-1789715025</id>
            <summary type="text">எதிர்நீச்சல் தொடர்கிறதுகுணசேகரன் கட்டு கட்ட வேண்டும், அப்படி செய்தால் குடும்பத்திற்கு எதிராக இருப்பவர்கள் அழிவார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளார்.இதனால்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>எதிர்நீச்சல் தொடர்கிறது</h2><p>குணசேகரன் கட்டு கட்ட வேண்டும், அப்படி செய்தால் குடும்பத்திற்கு எதிராக இருப்பவர்கள் அழிவார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளார்.</p><p>இதனால் வழக்கம் போல் பல நாடகங்கள் நடத்தினார், தம்பிகளையும் தம் பக்கம் வர வைத்தார். இதற்கு இடையில் ராணா செய்த சூழ்ச்சியால் குணசேகரன் ஜாமின் கேன்சல் ஆக அவர் போலீஸிடம் சிக்க கூடாது என தப்பித்தார்.</p><p>ஆனால் போலீஸிடம் சிக்குவது போல் காட்சி அமைந்தது, அதற்குள் தப்பித்துவிட்டார்.</p><p>இதற்கு இடையில் வீட்டில் விசாலாட்சி கேட்டுக் கொண்டது போல் ஜனனியின் வளைகாப்பு கொண்டாட்டமாக நடந்தது, எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/345bd51e-3015-4f5a-a732-fb0657268585/26-6aacf4d782a1c.webp' /></p><h2>புரொமோ</h2><p>தற்போது இன்றைய எபிசோடின் புரொமோ வந்துள்ளது. அதில், இந்த வீட்டைவிட்டு கிளம்பு முடிவு எடுத்து சக்தி-ஜனனி வெளியே வருகிறார்கள். அந்த நேரம் திடீரென குணசேகரன் என்ட்ரி கொடுக்கிறார்.</p><p>அவர் அனைவரிடமும் கட்டு கட்டும் விஷயம் குறித்து கூற யாரும் முன்வரவில்லை. அந்த நேரம் வந்த ராவணன் நான் உங்களுக்கு உதவியாக இருப்பேன் என்கிறார். குடும்பத்தினர் அனைவரும் ஒன்றானதும் செம கோபத்தில் உள்ளார் குணசேகரன்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/p8aoaYpnZ1U" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-18T08:23:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தியாகி திலீபனுக்கு வெகண்கல சிலையா? விமல் வீரவன்ச கொதிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bronze-statue-martyr-thileepan-wimal-weerawansa-1789719790"></link>
            <id>https://jvpnews.com/article/bronze-statue-martyr-thileepan-wimal-weerawansa-1789719790</id>
            <summary type="text">&amp;nbsp; விடுதலைப் புலிகளின் சக்திவாய்ந்த நாயகன் என்று கூறப்படும் தியாக தீபம் திலீபன் வெண்கலச் சிலையை யாழ்ப்பாணம் நல்லூரில் உருவாக்குவதற்கும், அந்தச் சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; விடுதலைப் புலிகளின் சக்திவாய்ந்த நாயகன் என்று கூறப்படும் தியாக தீபம் திலீபன் வெண்கலச் சிலையை யாழ்ப்பாணம் நல்லூரில் உருவாக்குவதற்கும், அந்தச் சிலைக்கு மாலைகள் சூட்டுவதற்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் விமல் வீரவன்ச கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பில், வௌ்ளிக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே&nbsp; விமல் வீரவன்ச&nbsp; &nbsp;மேற்கண்டவாறு கண்டனம் தெரிவித்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51f95043-609b-459e-a5ba-52975e0aa0e6/26-6aacf4f05c635.webp' /></p><p>
தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தல் தற்போது வடக்கு கிழக்கில் அனுஸ்டிப்பட்டு வருகின்றது.</p><p>

தமிழ் மக்களுக்காக தன்னுயிரை தியாக செய்த தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக தமிழர் பகுதிகாளில் அனுஸ்டிப்பட்டு வருகின்றது.
</p><p>
அதுமட்டுமல்லாது புலம்பெயர் தேசங்களிலும் தியாக தீபம் திலீபநின் நினைவேந்தல் அனுடிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T08:19:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்புத் துறைமுக பகுதியில் கடலில் விழுந்த மாலுமி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sailor-fell-into-the-sea-near-colombo-port-1789716869"></link>
            <id>https://tamilwin.com/article/sailor-fell-into-the-sea-near-colombo-port-1789716869</id>
            <summary type="text">கொழும்புத் துறைமுக பகுதியில்&amp;nbsp;கப்பல் மாலுமி ஒருவர் கடலில் விழுந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளார்.&amp;nbsp;குறித்த சம்பவம் நேற்றைய தினம் (17.09.2026) இட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்புத் துறைமுக பகுதியில்&nbsp;கப்பல் மாலுமி ஒருவர் கடலில் விழுந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளார்.&nbsp;</p><p>குறித்த சம்பவம் நேற்றைய தினம் (17.09.2026) இடம்பெற்றுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>கொழும்புத் துறைமுகத்திற்கு வர்த்தகக் கப்பல் ஒன்றை அழைத்து வருவதற்காக அதில் ஏற முற்பட்ட கப்பல் மாலுமி ஒருவரே இவ்வாறு கடலில் விழுந்து விபத்துக்குள்ளானார்.</p><h2>பாதுகாப்பாக மீட்கப்பட்ட மாலுமி</h2><p> </p><p>

கொழும்புத் துறைமுகக் கட்டுப்பாட்டு அறையினால் வழங்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாக, உடனடியாகச் செயற்பட்ட கடற்படையினர், கொழும்புத் துறைமுக நுழைவாயிலுக்கு அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த P-163 கரையோர ரோந்துப் படகினைச் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f078da5-54f8-4779-81ad-b8facb26e978/26-6aacf01fd74fa.webp' /></p><p> </p><p>

அதற்கமைய, குறித்த படகின் மூலம் கடலில் விழுந்த மாலுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டு, துறைமுக செயல்பாட்டுக் கட்டுப்பாட்டுத் தளத்திற்கு அழைத்து வரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T08:07:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[50 மாணவர்களுடன் இயங்கும் 1,600 பாடசாலைகள்! அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/1-600-schools-operating-with-50-students-srilanka-1789718992"></link>
            <id>https://jvpnews.com/article/1-600-schools-operating-with-50-students-srilanka-1789718992</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டில் 50-க்கும் குறைவான மாணவர்களுடன் இயங்கும் 1,600-க்கும் மேற்பட்ட பாடசாலைகள் இயங்குவதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டில் 50-க்கும் குறைவான மாணவர்களுடன் இயங்கும் 1,600-க்கும் மேற்பட்ட பாடசாலைகள் இயங்குவதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றது.
</p><p>
கல்வித்துறை மறுசீரமைப்புத் திட்டம் குறித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கருத்துக்களைத் தொடர்ந்து, கடந்த ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b500c37e-564e-406b-9cad-a74978aa135a/26-6aacf1d750414.webp' /></p><p>
</p><p>
 ஒரு தேசிய பாடசாலை உட்பட மொத்தம் 1,665 பாடசாலைகள் 50 க்கும் குறைவான மாணவர்களுடன் இயங்குகின்றன.

இதில் 49,189 மாணவர்களும், 10,324 ஆசிரியர்களும் உள்ளனர்.
</p><p>
51 முதல் 100 மாணவர்கள் வரை உள்ள 1,648 பாடசாலைகளில் மொத்தமாக 122,891 மாணவர்களும், 16,923 ஆசிரியர்களும் உள்ளனர்.</p><p></p><p>
</p><p>
101 முதல் 200 மாணவர்கள் வரை உள்ள 2,149 பாடசாலைகளில் மொத்தமாக 314,851 மாணவர்களும், 34,450 ஆசிரியர்களும் உள்ளனர்.</p><p>

201 முதல் 500 மாணவர்கள் வரை உள்ள 2,546 பாடசாலைகளில் மொத்தமாக 812,019 மாணவர்களும், 56,925 ஆசிரியர்களும் உள்ளனர்.
</p><p>
1,000 மாணவர்கள் வரை உள்ள 1,208 பாடசாலைகளில் மொத்தமாக 831,999 மாணவர்களும், 4,071 ஆசிரியர்களும் உள்ளனர்.
</p><p>
1,001 முதல் 1,500 மாணவர்கள் வரை கொண்ட 372 பாடசாலைகளில் மொத்தமாக 448,994 மாணவர்களும், 23,804 ஆசிரியர்களும் உள்ளனர்.</p><p></p><p>
</p><p>
1,501 முதல் 2,000 மாணவர்கள் வரை உள்ள 186 பாடசாலைகளில் மொத்தமாக 318,966 மாணவர்களும், 16,041 ஆசிரியர்களும் உள்ளனர்.</p><p>

2,001 முதல் 3,000 மாணவர்கள் வரை உள்ள 192 பாடசாலைகளில் மொத்தமாக 459,537 மாணவர்களும், 21,744 ஆசிரியர்களும் உள்ளனர்.
</p><p>
3,001 முதல் 4,000 மாணவர்கள் வரை உள்ள 68 பாடசாலைகளில் மொத்தமாக 230,518 மாணவர்களும், 10,214 ஆசிரியர்களும் கல்வி கற்கின்றனர்.
</p><p>
4,000க்கும் அதிகமான மாணவர்களைக் கொண்ட 33 பாடசாலைகளில் மொத்தமாக மட்டும் 158,580 மாணவர்களும், 6,813 ஆசிரியர்களும் உள்ளனர்.
</p><p>
 மேலும் , 10க்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட 65 பாடசாலைகளும், 10 முதல் 25 ஆசிரியர்களைக் கொண்ட 4,242 பாடசாலைகளும், 26 முதல் 50 ஆசிரியர்களைக் கொண்ட 1,744 பாடசாலைகளும், 51 முதல் 100 ஆசிரியர்களைக் கொண்ட 721 பாடசாலைகளும், 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்களைக் கொண்ட 275 பாடசாலைகளும் கண்டறியப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-18T08:06:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனிக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cricketer-dhoni-ordered-madras-high-court-1789717670"></link>
            <id>https://tamilwin.com/article/cricketer-dhoni-ordered-madras-high-court-1789717670</id>
            <summary type="text">சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜி. சம்பத்குமார்
தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்
மகே...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜி. சம்பத்குமார்
தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்
மகேந்திர சிங் தோனி அக்டோபர் 9 ஆம் திகதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று
நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி உத்தரவிட்டுள்ளார்.</p><p>

முன்னதாக, 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் சூதாட்ட சர்ச்சையில் தோனிக்கு தொடர்பு
இருப்பதாக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் என்பவர் தனியார்
தொலைக்காட்சி ஒன்றில் குற்றம்சாட்டியிருந்தார்.</p><h2>100 கோடி ரூபாய் நஷ்டஈடு&nbsp;</h2><p>இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டு தனது நற்பெயருக்குக் களங்கம்
விளைவிப்பதாகக் கூறி, சம்பத்குமாருக்கு எதிராக 100 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி
தோனி 2014 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a39981e6-ff01-4c44-ae4b-9bcebda31daa/26-6aacefec99af3.webp' /></p><p>
</p><p>
இதன்போது, வழக்கின் ஆவணங்கள் மற்றும் சிடிகளை (CDs) மொழிபெயர்த்து
நகலெடுப்பதற்கான செலவாக 10 இலட்சம் ரூபாயை செலுத்துமாறு நீதிமன்றம் ஏற்கனவே
தோனிக்கு உத்தரவிட்டிருந்தது.
</p><p>
இதற்கிடையில், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் சார்பில் 3 மனுக்கள்
தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><h2>&nbsp;தோனியின் வாக்குமூல&nbsp;பதிவு </h2><p>அவற்றில், தோனியின் வாக்குமூலத்தை (Deposition) பதிவு செய்யும்போது, அதை
முழுமையாக காணொளியாக பதிவு செய்ய வேண்டும்.


காணொளி பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தின் எடிட் செய்யப்படாத சான்றளிக்கப்பட்ட
நகலை தனக்கும், நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் கண்காணிப்பு அதிகாரிக்கும்
வழங்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8567a142-8280-45d8-a373-b124435752eb/26-6aacefed4cc41.webp' /></p><p>


தோனி ஒரு பிரபல கிரிக்கெட் வீரர் என்பதால், அவரது வாக்குமூலப்பதிவை நட்சத்திர
ஹோட்டல்கள் அல்லது தனியார் இடங்களில் நடத்தாமல், நீதிமன்ற வளாகத்திலோ அல்லது
அரசு கட்டடத்திலோ மட்டுமே நடத்த வேண்டும். போன்ற கோரிக்கைகள்
வலியுறுத்தப்பட்டிருந்தன.</p><p>

குறித்த மனுக்களை பரிசீலித்த நீதிபதி, இது குறித்து தோனி ஒக்டோபர் 9 ஆம்
திகதிக்குள் பதிலளிக்குமாறு அறிவித்தல் அனுப்பி, வழக்கின் அடுத்த விசாரணையை
ஒத்திவைத்தார்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T08:01:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலி ஆவணங்கள் மூலம் அரச காணிகள் விற்பனை? மன்னார் மக்களுக்கு வெளியான அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/state-lands-sold-using-fake-documents-1789718344"></link>
            <id>https://jvpnews.com/article/state-lands-sold-using-fake-documents-1789718344</id>
            <summary type="text">மன்னார் பிரதேச செயலகப் பகுதிகளில் போலியான ஆவணங்களைத் தயாரித்து அரச காணிகளை விற்பனை செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மன்னார் பிரதேச செயலகப் பகுதிகளில் போலியான ஆவணங்களைத் தயாரித்து அரச காணிகளை விற்பனை செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், காணிகளை கொள்வனவு செய்யும் பொதுமக்களுக்கு விசேட அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify;">


இதன்படி, அரச காணி என அறியாமல் போலியான ஆவணங்களை நம்பி காணிகளை கொள்வனவு செய்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5538356-a84f-464b-ac1f-56347e5251d3/26-6aacef4a06e86.webp' /></p><h2 style="text-align: justify; ">காணி கொள்வனவு&nbsp;</h2><p style="text-align: justify; ">



காணியொன்றை கொள்வனவு செய்வதற்கு முன்னர், குறித்த காணி தொடர்பான விபரங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் உண்மையானவையா என்பதை மன்னார் பிரதேச செயலகத்தின் ஊடாக உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify;">


மேலும், காணி கொள்வனவு செய்யும் நபர்கள் உரிய ஆவணங்களை முழுமையாக சரிபார்த்த பின்னரே கொள்வனவு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">



போலியான ஆவணங்களை நம்பி காணிகளை கொள்வனவு செய்வதன் மூலம் பொதுமக்கள் எதிர்காலத்தில் சட்டரீதியான மற்றும் பொருளாதார ரீதியான சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், காணி கொள்வனவில் அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-18T08:01:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதியில் கைது இலங்கை இளைஞன் அனோஜனுக்கு வழங்கப்பட்ட அதிரடி உத்தரவு! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-worker-anojan-sentenced-death-saudi-1789717588"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-worker-anojan-sentenced-death-saudi-1789717588</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, தற்போது மரண தண்டனை
விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இலங்கை
இளைஞர் சிவராசா அனோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, தற்போது மரண தண்டனை
விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இலங்கை
இளைஞர் சிவராசா அனோஜனின் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்து, அதனை
இரத்து செய்வதற்கோ அல்லது குறைப்பதற்கோ தேவையான சட்டரீதியான மற்றும்
இராஜதந்திர நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
 இலங்கையின் வெளிவிவகார,
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்
அவர்களிடம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஆயுள் கால உறுப்பினர் குமார்
ஜெயக்குமாரன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.</p><h2>அனோஜனின் மரண தண்டனை</h2><p>இது தொடர்பாக அமைச்சர் விஜித ஹேரத்துடன் இன்று (18) காலை தொலைபேசி மூலம்
தொடர்புகொண்ட குமார் ஜெயக்குமாரன், அனோஜனின் நிலைமை தொடர்பில் அவசரமாக
தலையிட்டு, சவூதி அரேபிய அதிகாரிகளுடன் தேவையான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை
முன்னெடுக்குமாறு வலியுறுத்தினார்.</p><p>

கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த
சிவராசா அனோஜன் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட பின்னர், ஆரம்பத்தில்
ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும்
விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57ef2c5a-ae58-4ab4-ae73-8ab5407537fe/26-6aaceedb267c1.webp' /></p><p>

 இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட
மேன்முறையீட்டின் தீர்ப்பில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக
செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், ஒரு இலங்கைப் பிரஜையின் உயிர் தொடர்பான மிக முக்கியமான
மனிதாபிமான விடயம் என்பதால், காலதாமதமின்றி அனைத்து சாத்தியமான சட்ட மற்றும்
இராஜதந்திர வழிமுறைகளையும் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.</p><h2>விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை</h2><p>

அனோஜனின் வழக்கின் முழுமையான சட்ட நிலைமை மற்றும் நீதிமன்றத் தீர்ப்பின்
அடிப்படைகளை உரிய முறையில் ஆராய்ந்து, அவருக்கு தேவையான சட்ட உதவி, தூதரக உதவி
மற்றும் இராஜதந்திர ஆதரவை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் உடனடி நடவடிக்கை
எடுக்க வேண்டும் என குமார் ஜெயக்குமாரன் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

“ஒரு இலங்கை இளைஞரின் உயிர் தொடர்பான இந்த முக்கியமான விடயத்தில்,
கிடைக்கக்கூடிய அனைத்து சட்டரீதியான மற்றும் இராஜதந்திர வாய்ப்புகளும்
முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும். </p><p>

அனோஜனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும்
தேவையான ஆதரவை வழங்குவதற்கு அரசாங்கம் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb69c4a8-6472-4ae2-8ce0-71fc758ca92d/26-6aaceedbf060d.webp' /></p><p>
</p><p>
அனோஜனின் வழக்கில் இலங்கை அரசாங்கம், வெளிவிவகார அமைச்சு மற்றும் சவூதி
அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவை ஒருங்கிணைந்து தேவையான நடவடிக்கைகளை
விரைவாக முன்னெடுக்க வேண்டும் எனவும் குமார் ஜெயக்குமாரன் கோரிக்கை
விடுத்துள்ளார்.</p><p>

இதேவேளை, 
அனோஜனின் தண்டனையை இரத்து செய்வதற்கும்,
அவருக்கு சட்டரீதியான மற்றும் இராஜதந்திர ரீதியான உதவிகளை வழங்குவதற்கும்
உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும், யாழ்ப்பாண
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும்
அமைச்சர் விஜித ஹேரத்திடம்
கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b><i>மேலதிக தகவல்- பவன்</i></b></p>]]></content>
            <updated>2026-09-18T07:59:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடந்த கால ஆட்சியாளர்களால் தான் நாடு வங்குரோத்து அடைந்தது! நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/newly-constructed-main-post-office-in-mullaitivu-1789717392"></link>
            <id>https://tamilwin.com/article/newly-constructed-main-post-office-in-mullaitivu-1789717392</id>
            <summary type="text">கடந்த கால ஆட்சியாளர்கள் அரச நிதிகளை தங்களது நிதி போன்று பயன்படுத்தினார்கள். அதனால் இந்த நாடு வங்குரோத்து அடைந்தது என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த கால ஆட்சியாளர்கள் அரச நிதிகளை தங்களது நிதி போன்று பயன்படுத்தினார்கள். அதனால் இந்த நாடு வங்குரோத்து அடைந்தது என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முல்லைதீவு பிரதான தபாலக கட்டடத்தினை திறந்து
வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,&nbsp;பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த அரசாங்கம் உதவிகளை செய்திருக்கின்றது. முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்பு பணிகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.</p><h2>தபால் துறை</h2><p>தபால் துறையானது வருமானமற்ற துறையாக இருக்கின்ற போதும் அதற்கான சம்பள உயர்வுகள் மற்றும் ஏனைய இதர தேவைகளை பூர்த்தி செய்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/591be6d5-a726-454c-ad0e-0f67097864ed/26-6aacedcc88e84.webp' /></p><p>மேலும், இந்தநிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பர்களான துரைராசா ரவிகரன்,
மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், செல்லத்தம்பி திலகநாதன், முல்லைத்தீவு
மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரன், அஞ்சல் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள்,
வடமாகாண அஞ்சல் அதிபர், முல்லைத்தீவு மாவட்ட அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர்கள்
என பலரும் பங்கேற்றிருந்தார்கள்.</p><p><b>மேலதிக தகவல்-சதீசன்</b></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T07:58:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/np-department-of-local-govt-important-announcement-1789716172"></link>
            <id>https://ibctamil.com/article/np-department-of-local-govt-important-announcement-1789716172</id>
            <summary type="text">உள்ளூராட்சிமன்ற அதிகார எல்லைக்குள் காட்சிப்படுத்தப்படும் விளம்பர அறிவித்தல்கள் தொடர்பில் வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>உள்ளூராட்சிமன்ற அதிகார எல்லைக்குள் காட்சிப்படுத்தப்படும் விளம்பர அறிவித்தல்கள் தொடர்பில் வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.</p><p> 


மாநகரசபைகள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகளின் அதிகார எல்லைக்குள், மாநகர முதல்வர்/தவிசாளரினால் வழங்கப்படும் அனுமதிப்பத்திரம் இல்லாது எவரேனும் ஆளினால் பகிரங்க இடங்களிலிருந்து பார்க்கும் போது புலப்படக்கூடியதாக எந்தவொரு விளம்பர அறிவித்தல்லையும் காட்சிப்படுத்தவோ காட்சிக்கு வைக்கவோ கூடாது என நியமத்துணைவிதிகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>

எனினும் உள்ளூராட்சிமன்ற அதிகார எல்லைக்குள் நியமத்துணைவிதிகளுக்கு அமைய அனுமதி பெற்றுக்கொள்ளாது விளம்பர அறிவித்தல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகளினால் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்</h2><p>
</p><p>
இந்த நிலையில் அதிகார எல்லைக்குள் விளம்பர அறிவித்தல்களையும் காட்சிப்படுத்துவதற்காக தங்களுக்கு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களுக்கான உரிமப்பத்திரங்களை நியமத்துணைவிதிகளில் கூறப்பட்ட நிபந்தனைகளை அமைவாக வழங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d655047f-5051-45ac-8a05-858ec431e54b/26-6aacef4bb4438.webp' /></p><p>
</p><p>
மேலும் ஏற்கனவே அமைக்கப்பட்ட விளம்பரப்பலகையில் காலத்திற்கு காலம் விளம்பரங்கள் மாற்றப்பட்டு காட்சிப்படுத்தப்படுகின்ற போது அவ்விளம்பரங்கள் தொடர்பில் உரிய முறையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு விளம்பர மாதிரி அமைவிட மாதிரி பெறப்பட்டு உறுதிப்படுத்தி அவற்கான உரிமம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
உள்ளூராட்சிமன்ற அதிகார எல்லைக்குள் சபையால் வழங்கப்பட்ட உரிமப்பத்திரமின்றி காட்சிப்படுத்தப்பட்டுள்ள சகல விளம்பர அறிவித்தல்களையும், உரிமம் வழங்கப்பட்ட காலம் முடிவடைந்த விளம்பரங்களையும் மேற்படி நியமத்துணைவிதிகளுக்கு அமைவாக 30.09.2026 ஆம் திகதிக்கு முன்னர் அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கையிடுமாறும் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T07:58:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதியில் தண்டனை பெற்ற அனோஜனை நாட்டுக்குத் திருப்பியழைக்க தீவிர நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lankan-tamil-sivarasa-anojan-saudi-sentenced-1789717012"></link>
            <id>https://jvpnews.com/article/lankan-tamil-sivarasa-anojan-saudi-sentenced-1789717012</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சவுதி அரேபிய நீதிமன்றத்தினால் ரிசானா நபீக்குக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அனோஜனை மீண்டும் நாட்டுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;சவுதி அரேபிய நீதிமன்றத்தினால் ரிசானா நபீக்குக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அனோஜனை மீண்டும் நாட்டுக்குத் திருப்பியழைத்து வருவதற்குத் தீவிரமான தலையீடுகள் மேற்கொள்ளப்படும் என நம்புவதாக சிவில் சமூக செயற்பாட்டாளர் சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம் தெரிவித்துள்ளார். </p><p> 

மதநிந்தனைக் குற்றச்சாட்டில் கடந்த மாதத் தொடக்கத்தில் சவுதி அரேபிய நீதிமன்றத்தினால் 5 வருட சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்ட இலங்கையரான சிவராசா அனோஜனின் மேன்முறையிட்டை அடுத்து, தற்போது அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d717c762-a879-45d7-9084-c88d0e3cb457/26-6aacea160e7e6.webp' /></p><h2>தீவிரமாக முயற்சிப்போம்</h2><p>
</p><p>
இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் சிவில் சமூக செயற்பாட்டாளராக சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம்,</p><p> சவுதிக்கு பணிக்குச்சென்ற தொழிலாளியான சிவராசா அனோஜனுக்கு சவுதி அரேபிய மேன்முறையீட்டு நீதிமன்றம் மதநிந்தனைக் குற்றச்சாட்டின்கீழ் மரணதண்டனை விதித்துள்ளது என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைவதாகத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
அதேபோன்று, '2013 ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவில் குழந்தையொன்றைக் கொன்றார் என்ற குற்றச்சாட்டில் ரிசானா நபீக் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டதை நாம் பார்த்தோம். </p><p>அக்காலகட்டத்தில் இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திரத் தலையீடு மிகப்பலவீனமானதாகவே இருந்தது.</p><p>அந்தச் சம்பவத்துக்குப் பின்னரும் கூட, அந்நாட்டின் சட்டக் கட்டமைப்பில் காணப்படுகின்ற தற்காலத்துக்குப் பொருந்தாத, மனிதநேயமற்ற தண்டனைகளிலிருந்து எமது தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான எந்தவொரு ஒப்பந்தமும் சவுதி அரேபிய அரசாங்கத்துடன் செய்துகொள்ளப்படாத நிலையிலும், நாம் எமது தொழிலாளர்களைத் தொடர்ந்து சவுதி அரேபியாவுக்கு அனுப்பிவந்தோம்' என்றும் அவர் கரிசனை வெளியிட்டுள்ளார்.</p><p></p><p>
மேலும், நாம் 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அனோஜனை மீண்டும் நாட்டுக்குத் திருப்பியழைத்து வருவதற்குத் தீவிரமாக முயற்சிப்போம் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-18T07:57:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவிலிருந்து சுதந்திரம் பெற விரும்பும் கிராமம்: உள்துறைச் செயலரை கொந்தளிக்கவைத்துள்ள விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/shabana-angry-over-danny-tommo-link-in-piddington-1789717640"></link>
            <id>https://news.lankasri.com/article/shabana-angry-over-danny-tommo-link-in-piddington-1789717640</id>
            <summary type="text">Home secretary says she wants to distinguish between far-right extremism and legitimate local concerns over asylum sites: பிரித்தானியாவிலிருந்து கிராம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Home secretary says she wants to distinguish between far-right extremism and legitimate local concerns over asylum sites: பிரித்தானியாவிலிருந்து கிராமம் ஒன்று சுதந்திரம் பெற விரும்பும் விடயம் தொடர்பில் ஒரு சம்பவம் உள்துறைச் செயலரை கொந்தளிக்கவைத்துள்ளது.
</p><p>
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட்ஷையரிலுள்ள கிராமம், பிடிங்டன்.

350 பேர் மட்டுமே வாழும் அச்சிறு கிராமத்தில் ஆயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்களை தங்க வைக்க அரசு முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அக்கிராம மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5e59fa0-9265-4e5a-a015-c97d2747d609/26-6aacec8a2944d.webp' /></p><p>

ஆகவே, அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரித்தானியாவிலிருந்து வெளியேற விரும்புவதாக தெரிவித்துள்ளனர் அக்கிராம மக்கள்.</p><h3>

உள்துறைச் செயலரை கொந்தளிக்கவைத்துள்ள விடயம்</h3><p>

விடயம் என்னவென்றால், ஏற்கனவே பிடிங்டன் கிராம மக்கள் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக கோபத்திலிருக்கும் நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
</p><p>
சமீபத்தில், இங்கிலாந்திலுள்ள டோவர் மற்றும் போர்ட்ஸ்மௌத் ஆகிய இடங்களில் முகமூடி அணிந்த ஒரு கூட்டம் ஆர்ப்பாட்டக்காரர்கள் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டது நினைவிருக்கலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af5bd255-256e-4ec7-9c46-d09804a86929/26-6aacec8b8841d.webp' /></p><p>

அந்தக் கூட்டத்தினர், Patriot Platform என்னும் புலம்பெயர்தல் எதிர்ப்பு தீவிர வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
</p><p>
அந்த அமைப்பின் தலைவர், டேனியல் தாமஸ். டேனி டாமோ என அழைக்கப்படும் இந்த தாமஸ், ஒரு கடத்தல் வழக்கு தொடர்பில் சிறை சென்றவர் ஆவார்.&nbsp;</p><p>

அவர்தான், புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தும் அமைப்பான Patriot Platform என்னும் அமைப்பை உருவாக்கி புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்.&nbsp;</p><p></p><p>
இந்த டேனியல் தாமஸ், சமீபத்தில் பிடிங்டன் கிராமத்துக்குச் சென்று அக்கிராம நிர்வாகிகளை சந்தித்துள்ளார். </p><p>அவர் ஆயிரக்கணக்கான தனது குழுவினருடன் பிடிங்டன் கிராமத்துக்குச் சென்று அக்கிராமத்துக்குள் புகலிடக்கோரிக்கையாளர்கள் நுழையாமல் தடுக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த விடயம்தான் உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூதை கொந்தளிக்கச் செய்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cccac283-5922-45c1-985a-bc84b311367e/26-6aacec8ad5221.webp' /></p><p>

புகலிடக்கோரிக்கையாளர்கள் மையம் ஒன்று தங்கள் கிராமத்தில் அமைக்கப்பட இருப்பது தொடர்பில் பிடிங்டன் கிராம மக்களின் நியாயமான கவலைகளுக்கும், பயங்கரவாத எண்ணம் கொண்டவர்கள் அதை பயன்படுத்திக்கொள்வதற்கும் வித்தியாசம் உள்ளது என்பதை தான் காட்டவிரும்புவதாக தெரிவித்துள்ளார் ஷபானா.</p><p>

அவ்வகையில், தீவிர வலதுசாரி இனவெறுப்பாளர்களான டேனியல் தாமஸ் போன்றவர்கள் சமுதாயத்தில் பிரிவினைகளை ஏற்படுத்தும் வகையில் பிடிங்டன் கிராம பிரச்சினையை எடுப்பது என்னும் விடயம் ஏற்றுக்கொள்ளமுடியாதது என்றும், அவர்கள் சட்டத்தை மீறும் நிலையில், அவர்கள் மீது சட்டம் முழுவீச்சில் பாயும் என்றும் கூறியுள்ளார் ஷபானா.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T07:49:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[20 பெண்களுக்கு மார்பகம் அகற்றும் அறுவை சிகிச்சை... தவறை ஒப்புக்கொண்ட NHS அறக்கட்டளை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/twenty-women-had-mastectomies-1789717885"></link>
            <id>https://news.lankasri.com/article/twenty-women-had-mastectomies-1789717885</id>
            <summary type="text">Twenty women had mastectomies they didn&#039;t need: இருபது பெண்களுக்குத் தேவையற்ற மார்பக அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.
NHS அறக்கட்டளை ஒன்றில் பெற்ற புற...</summary>
            <content type="html"><![CDATA[<p>Twenty women had mastectomies they didn't need: இருபது பெண்களுக்குத் தேவையற்ற மார்பக அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.
</p><p>NHS அறக்கட்டளை ஒன்றில் பெற்ற புற்றுநோய் சிகிச்சையால் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ள தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><h2>514 மருத்துவச் சம்பவம்</h2><p>
</p><p>அவர்களில் குறைந்தது 20 பேர்களுக்கு தேவையற்ற மார்பக அறுவை சிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளதும் அம்பலமாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fac3814-9dc8-4288-8cf0-533e66fedc6d/26-6aaced7f64756.webp' /></p><p> </p><p>தங்கள் மார்பகத்தை அகற்றியிருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்கவில்லை என்று தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது தாங்கள் அடைந்த அதிர்ச்சியை நோயாளிகள் விவரித்துள்ளனர்; இது அவர்களுக்கு உளவியல் ரீதியான மற்றும் உடல் ரீதியான வலியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> கவுண்டி டர்ஹாம் மற்றும் டார்லிங்டன் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் (CDDFT) ஆய்வு செய்த 514 மருத்துவச் சம்பவங்களில், 315-ல் நோயாளிகள் பாதிப்புக்குள்ளானது கண்டறியப்பட்டுள்ளது; இதில் 77 பேர் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். </p><p>ஒரு நோயாளி மரணமடைந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், சில நோயாளிகளுக்குப் புற்றுநோய் கண்டறிதலில் ஏற்பட்ட தவறுகள் அல்லது தாமதங்கள் காரணமாக, பின்னர் அவர்களது புற்றுநோய் பரவியதையும் அந்த அறக்கட்டளை கண்டறிந்துள்ளது.</p><p></p><p> </p><p>டர்ஹாம் கவுன்டியில் உள்ள கான்செட்டைச் சேர்ந்த 51 வயதான டெனிஸ் ஹோவர்த், அவரது மார்பக அறுவை சிகிச்சை தேவையற்றது என NHS-ஆல் அறிவிக்கப்பட்ட பல பெண்களில் ஒருவர் ஆவார். </p><p>தொடர்புடைய தகவல் அறிந்து அதிர்ந்துபோனதாகவும், தன்னால் அதை நம்பவே முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். தனது மார்பகத்தில் ஒரு கட்டியைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டில் ஹோவர்த்திற்கு நிலை 1 (grade 1) புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. </p><p>அவருக்கு லம்பக்டமி (lumpectomy) மற்றும் மாஸ்டெக்டமி (mastectomy) ஆகிய அறுவை சிகிச்சைகளும், அத்துடன் எட்டு சுற்றுகள் கீமோதெரபி மற்றும் ரேடியோதெரபியும் மேற்கொள்ளப்பட்டன.</p><h2>தவிர்த்திருக்கலாம்</h2><p> </p><p>இருப்பினும், செப்டம்பர் 2025-ல், அவருக்கு NHS-இலிருந்து ஒரு அழைப்பு வந்தது; அதனைத் தொடர்ந்து உடனடியாக CDDFT-இடமிருந்து ஒரு கடிதமும் வந்தது. அதில், முழு மார்பக அகற்றலுக்குப் பதிலாக இரண்டாவது கட்டி அகற்றும் அறுவை சிகிச்சை அவருக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87393691-17d0-40af-a6e8-91fac5321eb9/26-6aaced801789c.webp' /></p><p> இன்னொரு பெண்மணி, இந்த ஆண்டின் தொடக்கத்தில், தான் 2021-ல் செய்துகொண்ட மார்பக அகற்றும் அறுவை சிகிச்சையைத் தவிர்த்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அது குறித்து அந்த அறக்கட்டளையின் உதவி எண்ணைத் தொடர்பு கொண்டார். </p><p>தன்னுடன் பணிபுரிபவர்களாகக் கருதியவர்கள் தனக்காகச் சிறந்த முடிவுகளை எடுப்பார்கள் என்று தான் நம்பியிருந்ததாக அந்த முன்னாள் NHS ஊழியர் கூறினார். </p><p>அந்த இருவரின் புற்றுநோய் சிகிச்சையையும் மேற்பார்வையிட்ட மருத்துவ நிபுணர் அமீர் பாட்டி ஆவார்; இவர் 2013 முதல் 2024 வரை CDDFT-இன் மார்பகச் சிகிச்சை சேவைகளுக்கான மருத்துவப் பிரிவுத் தலைவராகப் பணியாற்றினார்.</p><p> மருத்துவர் பாட்டி தற்போது மருத்துவப் பணிகளை மேற்கொள்வதிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்; இருப்பினும், அவர் தொடர்ந்து முழு ஊதியத்துடன் அந்த அறக்கட்டளையில் பணியில் உள்ளார்.</p><p></p><p> </p><p>CDDFT முகமை, ஜனவரி 2023 முதல் பிப்ரவரி 2025 வரையிலான மார்பகப் புற்றுநோய் பாதிப்புச் சம்பவங்கள் குறித்தும், இதற்கென ஒதுக்கப்பட்ட உதவி எண்ணைத் தொடர்புகொண்ட 640 முன்னாள் நோயாளிகளின் வழக்குகள் குறித்தும் ஓர் உள்நிலை ஆய்வை மேற்கொண்டு வருகிறது. </p><p>2015-ஆம் ஆண்டு வரையிலான வழக்குகளையும் உள்ளடக்கும் வகையில் இந்த ஆய்வின் வரம்பை விரிவுபடுத்துவது குறித்த முடிவு விரைவில் எடுக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. இதனால், 10,000 வரையிலான மருத்துவப் பதிவுகள் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தக்கூடும் என்பதாகும். </p><p>முன்னாள் நோயாளிகள் அளித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக குற்றச் செயல்கள் நடைபெற்றுள்ளனவா என்பதை விசாரிப்பதற்காக, தேசிய குற்றவியல் முகமை தற்போது டர்ஹாம் காவல்துறையுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T07:48:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[57 ஓட்டங்களுக்கு சுருண்ட ஜப்பான் மகளிர் அணி: 5 ஓவர்களில் இந்தியா வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/women-india-beat-japan-by-8-wickets-in-t20-1789717688"></link>
            <id>https://news.lankasri.com/article/women-india-beat-japan-by-8-wickets-in-t20-1789717688</id>
            <summary type="text">மகளிர் ஆசிய போட்டியில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜப்பானை வீழ்த்தியது.

ஜப்பான் அணிக்கு எதிரான மகளிர் ஆசிய போட்டியில், இந்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகளிர் ஆசிய போட்டியில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜப்பானை வீழ்த்தியது.
</p><p>
ஜப்பான் அணிக்கு எதிரான மகளிர் ஆசிய போட்டியில், இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.</p><h2>சுருண்ட ஜப்பான் </h2><p>

இந்தியா மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையிலான மகளிர் ஆசிய போட்டி நிஸ்ஷினில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a978ef2-7da7-43bf-bffd-c756a0fa4b62/26-6aacecbb41be2.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய ஜப்பான் அணி, இந்தியாவின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.5 ஓவர்களில் 57 ஓட்டங்களுக்கு சுருண்டது. </p><p>அயாகா 25 ஓட்டங்கள் எடுத்தார். ஸ்ரீ சரணி 4 விக்கெட்டுகளும், ஷபாலி வெர்மா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.</p><p>

பின்னர் ஆடிய இந்தியா 5 ஓவர்களில் 59 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷபாலி வெர்மா (Shafali Verma) 40 (15) ஓட்டங்கள் விளாசினார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d7d9e2d-22e5-45f4-af2f-ab38351c91fe/26-6aacecbbf39bc.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T07:46:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[லக்ஷ்மி மேனனா இது!! உடல் எடையை கூட்டி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/actress-lakshmi-menon-appearance-video-viral-1789717045"></link>
            <id>https://viduppu.com/article/actress-lakshmi-menon-appearance-video-viral-1789717045</id>
            <summary type="text">லக்ஷ்மி மேனன்கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் தான் நடிகை லக்ஷ்மி மேனன். சுந்தரபாண்டியன், கும்கி படங்களில் நடித்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>லக்ஷ்மி மேனன்</h2><p>கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் தான் நடிகை லக்ஷ்மி மேனன். சுந்தரபாண்டியன், கும்கி படங்களில் நடித்து ஒரே ஆண்டில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார் லக்ஷ்மி மேனன். </p><p>அதன்பின் குட்டி புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன், ரெக்க உள்ளிட்ட படங்களில் நடித்து டாப் நடிகையாக மாறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e54c733c-23e9-4fb8-8ca0-00fd19973907/26-6aacea37f1eb3.webp' /></p><p> </p><p>பின் படிப்பின் மீது கவனம் செலுத்தி வந்த லக்ஷமி மேனன், 2021ல் வெளியான புலிக்குத்தி பாண்டியன், சந்திரமுகி 2, சப்தம் போன்ற படங்களில் நடித்தார். இதனையடுத்து பார் தகராறில் அவர் மீது வழக்கு போடப்பட்ட நிலையில், அதன்பின் ஆளே காணாமல் போனார். </p><p>தற்போது, உடல் எடை அதிகரித்து முகம் வீங்கி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். அவரின் சமீபத்தில் வீடியோவை பார்த்து பலரும் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ta" dir="ltr">Lakshmi Menon Ah இது , அவங்க Career Ah அவங்களே காலி பண்ணி இன்னைக்கு அடையாளம் தெரியாத அளவு மாறி போய்ட்டாங்க 😐 <a href="https://t.co/tJb8CeSMgH">pic.twitter.com/tJb8CeSMgH</a></p>&mdash; Akilan Tamilanin Cinema (@TamilaninCinema) <a href="https://x.com/TamilaninCinema/status/2100532881420656717?ref_src=twsrc%5Etfw">September 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-09-18T07:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்தில் தவறவிட்ட நகை மற்றும் பணம் : உரியவரிடம் ஒப்படைத்த சாரதி மற்றும் நடத்துநர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jewelry-and-cash-lost-in-mannar-1789716103"></link>
            <id>https://ibctamil.com/article/jewelry-and-cash-lost-in-mannar-1789716103</id>
            <summary type="text">முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தில் பயணி ஒருவர் தவறவிட்ட நகை, பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கிய பணப்பையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தில் பயணி ஒருவர் தவறவிட்ட நகை, பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கிய பணப்பையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதி மற்றும் நடத்துநர் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தில் குறித்த பணப்பையை சாரதி முருகையா மகேஸ்வரன் மற்றும் நடத்துநர் டெனிஸ் ஆகியோர் கண்டெடுத்துள்ளனர்.</p><p>

பணப்பையில் தேசிய அடையாள அட்டை, தங்கச் சங்கிலி மற்றும் பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் இருந்த நிலையில், அவை மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்கத்தின் தலைவர் ரி. ரமேஷிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>போக்குவரத்து அதிகார சபை</h2><p>
</p><p>
பின்னர் பணப்பையின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டு, அதிலிருந்த பொருட்கள் அனைத்தும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6645b531-8475-4688-b2da-ce23529ddca9/26-6aaceb703c567.webp' /></p><p>

சாரதி மற்றும் நடத்துநரின் இந்த முன்மாதிரியான செயலைப் பாராட்டும் வகையில், வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கௌரவிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருவரும் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சாரதி மற்றும் நடத்துநரை கௌரவித்தனர்.</p><p>

பொதுமக்களின் நம்பிக்கையையும் நேர்மையான சேவையையும் ஊக்குவிக்கும் வகையில், இவ்வாறான முன்மாதிரியான செயல்களில் ஈடுபடுவோர் வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் தொடர்ச்சியாக கௌரவிக்கப்பட்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T07:43:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொட்டகலை நகரில் மதுபானக் கடைகளில் இருந்த தடை நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ban-on-liquor-shops-in-kotagala-town-lifted-1789717318"></link>
            <id>https://tamilwin.com/article/ban-on-liquor-shops-in-kotagala-town-lifted-1789717318</id>
            <summary type="text">&amp;nbsp;கொட்டகலை நகரில் உள்ள மதுபான சாலைகளில் மதுபான போத்தல்களை திறந்து அங்கேயே
அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நகரில் இடம்பெற்று வந்த
ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கொட்டகலை நகரில் உள்ள மதுபான சாலைகளில் மதுபான போத்தல்களை திறந்து அங்கேயே
அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நகரில் இடம்பெற்று வந்த
பல்வேறு பிரச்சினைகள் தற்போது குறைந்துள்ளதாக கொட்டகலை வர்த்தக சங்கத்தின்
தலைவர் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.</p><p>

கொட்டகலை பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்
போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
</p><p>
கொட்டகலை நகரிலுள்ள சில மதுபான சாலைகளில் மதுபான போத்தல்களை திறந்து
சட்டவிரோதமான முறையில் சில்லறையாக மதுபானம் விற்பனை செய்யப்பட்டதாகவும்,
இதனால் நகரின் ஏனைய வர்த்தகர்களும் பொதுமக்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு
முகங்கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T07:42:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடுமையான மின்னல் தாக்கம் ; இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lightning-strike-warning-issued-to-sri-lankans-1789717045"></link>
            <id>https://jvpnews.com/article/lightning-strike-warning-issued-to-sri-lankans-1789717045</id>
            <summary type="text">நாட்டின் சில இடங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டின் சில இடங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p style="text-align: justify;">

அதன்படி, ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு, பொலன்னறுவை மாவட்டங்களிலும் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1703319-f6ea-4138-af79-2aafbdde6b65/26-6aacea374710c.webp' /></p><h2 style="text-align: justify; ">பலத்த காற்று</h2><p style="text-align: justify;"> 

இன்று (18) காலை 11 மணிக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை இன்றிரவு 11.30 மணி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

மேற்குறிப்பிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழை, மின்னல் ஏற்படும்போது பலத்த காற்றும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify; ">
இதன் காரணமாக இடி, மின்னல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-18T07:39:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள் – மருத்துவர் கூறும் தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/what-are-15-best-breakfast-foods-1789715916"></link>
            <id>https://manithan.com/article/what-are-15-best-breakfast-foods-1789715916</id>
            <summary type="text">ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற விரும்புவோர், காலை உணவில் அதிக கவனம் செலுத்துவது அவசியம்.

காலை உணவாக என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற விரும்புவோர், காலை உணவில் அதிக கவனம் செலுத்துவது அவசியம்.

காலை உணவாக என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் நாம் அக்கறையுடன் இருக்க வேண்டும்.</p><p> ஏனெனில், காலை உணவு நமது உடல் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

பொதுவாக, காலை உணவில் அதிக புரதச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்த்துக்கொள்வது உடல்நலத்திற்கு நன்மை பயக்கும்.உதாரணமாக, வேகவைத்த முட்டை, பயறு, கடலை போன்ற உணவுகளை காலையில் எடுத்துக்கொள்வது சிறந்ததாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05d3f506-fbb2-4c9c-8d44-08b288f000eb/26-6aacea98356f9.webp' /></p><p>
</p><p>
ஆனால், வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்களில், “காலையில் இதைச் சாப்பிடுங்கள்”, “காலையில் அதைச் சாப்பிடுங்கள்” என பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றில் சில தவறான தகவல்களாகவும் இருக்கலாம். </p><p>இதை அறியாமல், அவற்றை உண்மை என நம்பி பலரும் பின்பற்றுகின்றனர்.

எனவே, மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு, டாக்டர் கார்த்திகேயன் அவர்கள் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் சித்த மருத்துவம் மற்றும் நவீன அறிவியல் சார்ந்த தகவல்களின் அடிப்படையில், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டிய 15 உணவுகள் குறித்து பகிர்ந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3afd074-a85c-4b38-a1cf-4f1e394ceee8/26-6aacea98e2d45.webp' /></p><p>அந்தவகையில், காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள மிகச்சிறந்த 15 உணவுகளின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><p><b>1.வெதுவெதுப்பான நீர்:</b> காலையில் எழுந்ததும் முதலில் வெதுவெதுப்பான நீர் குடிப்பது உடலில் நீர்ச்சத்தைச் சீராக்கி, செரிமானத்தை மேம்படுத்த உதவும். வெந்நீர் கொழுப்பைக் குறைக்கும் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லை.
</p><p><b>2.துளசி: </b>துளசி இலைகளை மென்று சாப்பிடலாம் அல்லது நீரில் கலந்து குடிக்கலாம். இது நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதுடன், இரத்த சர்க்கரை மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
</p><p><b>3.கறிவேப்பிலை:</b> 4–5 கறிவேப்பிலைகளை காலையில் மென்று சாப்பிடுவது செரிமானத்திற்கும், இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்தவும் உதவும். தலைமுடிக்கும் நன்மை தரக்கூடியது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/338a48c3-b20a-4742-903f-2f5889ce2641/26-6aacea999869a.webp' /></p><p><b>4.சீரக நீர்:</b> ஒரு ஸ்பூன் சீரகத்தை இரவு ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, காலையில் வடிகட்டி குடிக்கலாம். இது வாயு, அஜீரணம், வயிற்று உப்புசம் போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்கலாம். உடல் எடை மற்றும் கொழுப்பைக் குறைக்க உதவுவதாக ஆரம்பகட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.</p><p><b>5.இஞ்சி நீர்:</b> சிறிதளவு இஞ்சியை வெந்நீரில் கலந்து குடிப்பது குமட்டல், வாந்தி போன்றவற்றைக் குறைக்க உதவும். அல்சர் அல்லது அசிடிட்டி உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
</p><p><b>6.மோர்:</b> தயிர், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்த மோர் செரிமானத்திற்கும் குடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. அசிடிட்டி உள்ளவர்கள் இதை காலை உணவுக்குப் பிறகு குடிக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d7e0014-6697-4dbf-8e5d-83e676f1ea9c/26-6aacea9a49ba4.webp' /></p><p>
</p><p><b>7.முளைக்கட்டிய பச்சைப்பயறு:</b> இதில் புரதம், வைட்டமின் C மற்றும் நார்ச்சத்து உள்ளதால் காலையில் சாப்பிடலாம். வயிற்று உப்புசம் உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் வேகவைத்து சாப்பிடுவது நல்லது.
</p><p><b>8.ஊற வைத்த கொண்டைக்கடலை</b>: இரவு ஊறவைத்த கொண்டைக்கடலையை காலையில் சாப்பிடலாம். இதில் புரதம், நார்ச்சத்து மற்றும் குறைந்த கிளைசீமிக் இன்டெக்ஸ் கொண்ட கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.
</p><p><b>9.ஊற வைத்த பேரிச்சம்பழம்: </b>2–3 பேரிச்சம்பழங்களை இரவு ஊற வைத்து காலையில் சாப்பிடுவதன் மூலம் இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து கிடைக்கும். சர்க்கரை நோயாளிகள் அளவுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf07300a-f744-43af-92db-aa3a6ef7f46b/26-6aacea9af037d.webp' /></p><p>
</p><p><b>10.ஊற வைத்த கருப்பு உலர் திராட்சை:</b> இதில் நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. மலச்சிக்கலுக்கு உதவலாம். சர்க்கரை அதிகம் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.
</p><p><b>11.பப்பாளி: </b>காலையில் ஒரு கப் பப்பாளி சாப்பிடுவது நார்ச்சத்து மற்றும் பப்பாயின் கிடைக்க உதவும். இது செரிமானத்திற்கும் குடல் ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது.
</p><p><b>12.முருங்கை இலை சூப்:</b> சத்தான இந்த சூப் இரத்த சோகை மற்றும் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் இருப்பவர்களுக்கு பயனுள்ளதாகக் கூறப்படுகிறது. இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f7da577-b0e3-48ec-bbb8-43a846e93665/26-6aacea9ba44b4.webp' /></p><p></p><p>
</p><p><b>13.நெல்லிக்காய்: </b>காலையில் நெல்லிக்காய் சாப்பிடுவது நல்லது. கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
</p><p><b>14.வெந்தய நீர்: </b>ஒரு ஸ்பூன் வெந்தயத்தை இரவு ஊற வைத்து, காலையில் நீருடன் உட்கொள்ளலாம். இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது.
</p><p><b>15.ஊற வைத்த பாதாம்: </b>4–6 பாதாமை இரவு ஊற வைத்து காலையில் சாப்பிடலாம். இது சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், எடை மற்றும் கொழுப்பைக் குறைக்கவும் உதவுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b>&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T07:39:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் இந்தப் பகுதியில் நிலநடுக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/earthquake-shakes-residents-in-kootenays-1789709888"></link>
            <id>https://canadamirror.com/article/earthquake-shakes-residents-in-kootenays-1789709888</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள குட்டனேஸ் பிராந்தியத்தில் வியாழக்கிழமை அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
வியாழக்கிழமை அதிகாலை 5:31 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள குட்டனேஸ் பிராந்தியத்தில் வியாழக்கிழமை அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.</p><p>
வியாழக்கிழமை அதிகாலை 5:31 மணிக்கு, நெல்சன் நகரத்திற்கு வடகிழக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராஃபோர்ட் பே சமூகம் அருகே, பூமிக்கு அடியில் 4 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.</p><p>
இந்நிலநடுக்கத்தின் அளவை 'எர்த்குவிக்ஸ் கனடா' அமைப்பு முதலில் ரிக்டர் அளவில் 4.4 ஆகப் பதிவு செய்து, பின்னர் 3.7 ஆகக் குறைத்து திருத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06f6af9f-bf5a-4054-8fa4-4856ef2c0391/26-6aacce4207b06.webp' /></p><p> </p><p>எனினும், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இதனை 4.2 ரிக்டர் அளவாகப் பதிவு செய்துள்ளது.
இந்த அதிர்வுகள் கிரான்புரூக், நெல்சன், காஸ்டில்கர், டிரெயில், கிரெஸ்டன் மற்றும் ஸ்லோகன் வேலி உள்ளிட்ட பல பகுதிகளிலும் உணரப்பட்டதாகப் பொதுமக்கள் தெரிவித்தனர்.
</p><p>இந்த நிலநடுக்கத்தால் கட்டிடப் பாதிப்புகளோ அல்லது பிற சேதங்களோ ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை என்று பிரிட்டிஷ் கொலம்பியாவின் அவசரகால மேலாண்மை அலுவலகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T07:37:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மற்றொரு பெண்ணைச் சந்தித்ததாக காதலனை கொலை செய்த பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/murdered-banker-he-flirted-with-colleague-london-1789714590"></link>
            <id>https://canadamirror.com/article/murdered-banker-he-flirted-with-colleague-london-1789714590</id>
            <summary type="text">&amp;nbsp;பெண் ஒருவர் காதலனை கொலை செய்த்தாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் லண்டனின் ஓல்ட் பெய்லி (Old Bailey) நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பெண் ஒருவர் காதலனை கொலை செய்த்தாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் லண்டனின் ஓல்ட் பெய்லி (Old Bailey) நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது. </p><p> 

மற்றொரு பெண்ணைச் சந்தித்ததாகத் தெரிவித்த தனது காதலனைக் கத்தியால் குத்திக் கொன்றதாகவும், பின்னர் அவர்கள் ஒன்றாக வசித்து வந்த குடியிருப்பிலேயே அவரது உடலை ஒன்பது நாட்களுக்கு மறைத்து வைத்திருந்ததாகவும் பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58f85310-027c-4d9b-986b-d6c60603a25e/26-6aace09fa9908.webp' /></p><h2>பெண் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக&nbsp; மின்னஞ்சல்</h2><p> </p><p>

உயிரிழந்தவர் ஹென்ரிக் ஸ்லோத்சா (Henrik Slothsa) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் சிட்டிபேங்கில் (Citibank) பணியாற்றிய 52 வயதுடைய டேனிஷ் வங்கி அதிகாரி ஆவார்.

 காதலனை கொலை செய்ததாகக் கூறப்படும் காதலி 50 வயதுடைய போலந்து நாட்டவருமான ஜோனா சியர்ப்கா (Joanna Sierpka) ஆவார்.</p><p>
மார்ச் 15 அன்று, குற்றம் சாட்டப்பட்ட பெண் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக் குறிப்பால் உணர்த்தும் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியதைத் தொடர்ந்து, தெற்கு லண்டனில் உள்ள அந்த குடியிருப்பின் கதவை உடைத்துக்கொண்டு போலீசார் உள்ளே நுழைந்தனர். </p><p>

போலீசார் உள்ளே சென்றபோது, ​​அவர் எட்டு அங்குல சமையலறை கத்தியால் தனது கழுத்தை அறுக்க முயன்று கொண்டிருந்தார்.
</p><p>
அதேவேளையில், வீட்டின் படுக்கையறையில் திரு. ஸ்லோத்சாவின் சிதைந்த நிலையில் இருந்த உடலையும் அவர்கள் கண்டெடுத்தனர். அப்போது, ​​உடலுக்கு அருகில் காய்ந்த ரத்தப் படலம் ஒன்றும் காணப்பட்டது.
</p><p>
தனது காதலனைக் கொலை செய்ததில் எந்தவிதமான சர்ச்சையும் இல்லை என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் டேனி ராபின்சன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். தனது மனநிலை காரணமாகவே இச்செயலைச் செய்ததாகக் கூறி 'கொலைக்குற்றமற்ற மரணத்தை' (manslaughter) ஒப்புக்கொண்டாலும், அரசுத் தரப்பு அவர் மீது திட்டமிட்ட கொலைக் குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளது.</p><p> 

மேலும், கடந்த சில மாதங்களாகவே அவர்களது உறவில் விரிசல் ஏற்பட்டு வந்ததும் நீதிமன்றத்தில் தெரியவந்தது. நவம்பர் 2025-ல் நடைபெற்ற ஒரு நிறுவன நிகழ்வில் சந்தித்த மற்றொரு ஊழியருடன் ஸ்லோத்சா நெருக்கமாகியிருந்தார்&nbsp; சியர்ப்காவின் பிறந்தநாளன்று, தனது பணியிடத்தில் வேறொரு பெண்ணைச் சந்தித்திருப்பதாக அவரிடம் அவர் கூறியிருந்தார்.</p><p>

பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ (British American Tobacco) நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவில் முன்பு பணியாற்றிய சியர்ப்காவின் நண்பர்கள், வேலையை இழந்த பிறகு அவர் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்தனர்.
</p><p>
 ஸ்லோத்சாவைக் கொன்ற பிறகு, அவரது மொபைல் போன் மூலம் அவரது மேலாளருக்கு வாட்ஸ்அப் (WhatsApp) செய்திகளை அனுப்பிய அவர், ஸ்லோத்சாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாகப் பொய்யான தகவலைத் தெரிவித்திருந்தார். </p><p>

வீட்டிற்குள் காலி மது பாட்டில்களையும் போலீசார் கண்டெடுத்தனர்; இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது</p>]]></content>
            <updated>2026-09-18T07:36:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவானில் அடித்துக்கொண்ட பயணிகள் - லண்டன் டு வங்காளதேச விமானத்தில் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mid-air-fight-shocks-london-bang-flight-passengers-1789717161"></link>
            <id>https://news.lankasri.com/article/mid-air-fight-shocks-london-bang-flight-passengers-1789717161</id>
            <summary type="text">Mid-air fight shocks London to Bangladesh flight passengers: நடுவானில் விமானத்தில் இரு பயணிகள் அடிதடி சண்டை போட்டுக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.

இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Mid-air fight shocks London to Bangladesh flight passengers: நடுவானில் விமானத்தில் இரு பயணிகள் அடிதடி சண்டை போட்டுக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.</p><p>
</p><h2>
இரண்டு பயணிகள் இடையே&nbsp;அடிதடி சண்டை</h2><p>லண்டனில் இருந்து வங்காளதேசம் நோக்கி பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தபோது, இரண்டு பயணிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதம் சில நிமிடங்களில் உடல் ரீதியான மோதலாக மாறி, விமானத்தின் உள்ளே பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">AIRPLANE BRAWL: Two male passengers got into a physical fight aboard a Biman Bangladesh Airlines flight from London to Bangladesh after an argument escalated, frightening nearby passengers, including children and elderly travelers.<br><br>Cabin crew and other passengers stepped in and… <a href="https://t.co/q1ZAqvZuY6">pic.twitter.com/q1ZAqvZuY6</a></p>&mdash; Breaking911 (@Breaking911) <a href="https://x.com/Breaking911/status/2100630585488105724?ref_src=twsrc%5Etfw">September 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோவில், இருவரும் முதலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருப்பது தெளிவாகக் காணப்படுகிறது.</p><p> சண்டையின் போது, ஒருவரின் டி-ஷர்ட் கிழிந்தது. இந்த சம்பவம் நடந்தபோது, விமானத்தில் இருந்த மற்ற பயணிகள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள், கடும் பதற்றத்திற்கு உள்ளானார்கள்.</p><p>
</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9bf4651-e589-49b6-8502-da9948cdbe4b/26-6aaceaaad5111.webp' /></p><p>சண்டை நீண்டுகொண்டிருந்த நிலையில், விமான பணியாளர்கள் மற்றும் பிற பயணிகள் இடைமறித்து, இருவரையும் பிரித்தனர். </p><p>சம்பவம் நடந்த காரணம் தெளிவாக தெரியவில்லை. மேலும், சம்பவத்திற்குப் பிறகு அந்த பயணிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றிய தகவலும் வெளிவரவில்லை.
</p><p>
பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் பொது தொடர்பு மேலாளர் மஹ்புபுத்தீன் அஹ்மத், இந்த சம்பவம் குறித்து தமக்கு தகவல் இல்லை என்று தெரிவித்தார்.</p><p></p><p>இந்த சம்பவம் விமானப் பயணங்களில் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. பயணிகள் இடையே ஏற்படும் சண்டைகள், விமானத்தில் உள்ள அனைவரின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், விமான நிறுவனங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-18T07:36:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டுக்கட்சியின் முக்கியஸ்தர் மற்றும் நாமல் ஒரே சிறையில்..! வெளியான முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/renuka-perera-also-goes-to-namal-s-crp-ward-1789696458"></link>
            <id>https://tamilwin.com/article/renuka-perera-also-goes-to-namal-s-crp-ward-1789696458</id>
            <summary type="text">ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா தற்போது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா தற்போது கொழும்பு விளக்கமறியல் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.
</p><p>
இலங்கை பொதுஜன பெரமுனவின் மூத்த உறுப்பினரும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) முன்னாள் தலைவருமான ரேணுக பெரேரா, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><h2>'N' வார்டில் 10 கைதிகளுடன்</h2><p>

தற்போது அவர் சிறைச்சாலையின் 'N' வார்டில், மேலும் சுமார் 10 கைதிகளுடன் அவர் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52a1a0ef-8ac5-46d6-810a-ef755b2100fc/26-6aace7be6676a.webp' /></p><p>
</p><p>
அதே வார்டில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p> 

பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அரசாங்க ஊழியர்களும் அந்த வார்டில் வைக்கப்பட்டுள்ள கைதிகளாவர்.</p><p>

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ரேணுகா பெரேரா, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.</p><h2>சட்டவிரோதமாக சாலை அனுமதிகள்&nbsp;</h2><p>
</p><p>
பேருந்துகளுக்கு சட்டவிரோதமாக சாலை அனுமதிகள் வழங்கியமை தொடர்பான குற்றச்சாட்டில் இலஞ்ச ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டார்.
</p><p>
1991-ஆம் ஆண்டின் 37ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணையச் சட்டத்தின் விதிகளுக்கும், 2014.09.19 திகதியிட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின் பரிந்துரைகளுக்கும் முரணாக, தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கு சட்ட முறைக்குப் புறம்பாக 56 பயணிகள் சேவை அனுமதிகளை வழங்கியதாகவும், ஆண்டு சுங்கத்தை ஒரே முறையில் வசூலிக்கவில்லை என்றும் ரேணுகா பெரேரா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p>&nbsp;</p><p></p><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T07:33:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி அரேபியா, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையே தீவிரமடையும் மோதல் ; 5 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/saudi-houthi-conflict-intensifies-further-1789715695"></link>
            <id>https://canadamirror.com/article/saudi-houthi-conflict-intensifies-further-1789715695</id>
            <summary type="text">சவுதி அரேபியா, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையேயான மோதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.


&amp;nbsp;ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியா, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையேயான மோதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.


</p><p>&nbsp;ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் ஏமனில் இரு நாடுகளும் மறைமுக மோதலில் ஈடுபட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05954c4e-6f21-4ffb-97c9-30eb1a97379a/26-6aace4f14d402.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, அமெரிக்கா, ஈரான் மோதலின்போது ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தினர். </p><p>இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனில் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது சவுதியும் தாக்குதல் நடத்தியது. </p><p>மேலும், ஏமன் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக மோதல் தீவிரமடைந்து வருகிறது.
</p><p>
உள்நாட்டுப்போர் தீவிரமடைந்து வரும் நிலையில் ஏமன் அரசுப்படையினர் கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி வருகின்றனர். </p><p>மேலும், சவுதி அரேபியா மீதும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு சவுதியும் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்பு மோதலால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.</p><p>அந்த வகையில் சவுதி அரேபியாவின் தென்கிழக்கே அமைந்துள்ள தைப் நகர் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை, டிரோன் மூலம் நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். </p><p>மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர். அதேபோல், ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள தைஸ் நகர் மீது சவுதி தாக்குதல் நடத்தியது. </p><p>இந்த தாக்குதலில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T07:30:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் ஆங்கிலக் கல்வியை மேம்படுத்த 34 புதிய அமெரிக்க சமாதானப் படை தொண்டர்கள் வருகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/support-english-education-in-sri-lanka-1789714784"></link>
            <id>https://tamilwin.com/article/support-english-education-in-sri-lanka-1789714784</id>
            <summary type="text">இலங்கையில் இரண்டு ஆண்டுகள் சேவை செய்வதற்கு முன்னதான பயிற்சிகளை
மேற்கொள்வதற்காக, 34 புதிய அமெரிக்க சமாதானப் படை பயிற்சித் தொண்டர்கள்
இலங்கையை வந்தடைந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இரண்டு ஆண்டுகள் சேவை செய்வதற்கு முன்னதான பயிற்சிகளை
மேற்கொள்வதற்காக, 34 புதிய அமெரிக்க சமாதானப் படை பயிற்சித் தொண்டர்கள்
இலங்கையை வந்தடைந்துள்ளனர்.</p><p>
எதிர்வரும் நவம்பர் மாதம் சேவை உறுதிமொழி ஏற்பதற்கு முன்பாக, இவர்கள் சிங்களம்
அல்லது தமிழ் மொழி, இலங்கைக் கலாச்சாரம் மற்றும் அமெரிக்க ஆங்கிலக் கற்பித்தல்
முறைகள் தொடர்பாகத் தீவிரப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளனர்.</p><h2>ஆங்கில கல்வி விரிவுப்படுத்தல்</h2><p>
</p><p>
சத்தியப்பிரமாண நிகழ்வுக்குப் பிறகு, இவர்கள் வட மாகாணம் மற்றும் வடமத்திய
மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் இலங்கை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன்
இணைந்து ஆங்கிலக் கல்வியை விரிவுபடுத்தப் பணியாற்றுவர்.
</p><p>
இதன் பிரகாரம் இவர்கள் உள்ளூர் குடும்பங்களுடன் இணைந்து வசிக்கவுள்ளதுடன்,
அவர்கள் சேவை செய்யும் சமூகத்தின் ஒரு அங்கமாகவும் மாறுவார்கள் என
கருத்தப்படுகிறது.
</p><p>
கொழும்பிலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில், இலங்கைக்கான
அமெரிக்க தூதுவர் எரிக் மயர் இத்தொண்டர்களை வரவேற்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5dfbc53a-81b0-40a0-b383-8b975a680c56/26-6aace68655622.webp' /></p><h2>இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பு</h2><p> </p><p>"இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான பிணைப்பு மக்கள் சார்ந்த தொடர்புகளாலேயே
கட்டியெழுப்பப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

அமெரிக்கர்களை அந்தப் பணியின் மையத்தில் நிறுத்துகிறது," எனவும் அவர்
குறிப்பிட்டார்.
</p><p>
இலங்கையில் Peace Corps சேவை 1962 ஆம் ஆண்டு தொடங்​கியது. இதுவரை 500-க்கும்
மேற்பட்ட அமெரிக்கத் தொண்டர்கள் கல்வி, சுகாதாரம், விவசாயம், சமூக மேம்பாடு
மற்றும் சுனாமி மறுவாழ்வுப் பணிகளில் இங்கு பணியாற்றியுள்ளனர்.
</p><p>
முன்னதாக 2018 ஆம் ஆண்டில் ஆங்கிலக் கல்வியை வலுப்படுத்தும் நோக்கத்துடன்
இத்திட்டம் மீண்டும் முறையாக ஆரம்பிக்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T07:23:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் 125 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்! பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/125-million-worth-of-assets-frozen-1789713921"></link>
            <id>https://tamilwin.com/article/125-million-worth-of-assets-frozen-1789713921</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தி கொள்வனவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ரூ.12.5 கோடிக்கும் அதிகமான பெறுமதியுடைய ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தி கொள்வனவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ரூ.12.5 கோடிக்கும் அதிகமான பெறுமதியுடைய சொத்துக்கள் மற்றும் வாகனங்களை முடக்குவதற்கு பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>

பணச் சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த முடக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

இதன்படி, விசாரணைகள் தொடரும் நிலையில் குறித்த சொத்துக்களை 14 நாட்களுக்கு விற்பனை செய்யவோ, மாற்றம் செய்யவோ அல்லது அப்புறப்படுத்தவோ முடியாது.</p><h2>போதைப்பொருள் கடத்தல்&nbsp;</h2><p>

வத்தளையைச் சேர்ந்த ஒருவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெற்ற பணத்தைப் பயன்படுத்தி பல சொத்துக்களையும் வாகனமொன்றையும் கொள்வனவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

ரூ.9 கோடிக்கும் அதிகமான பெறுமதியுடையதாக மதிப்பிடப்பட்டுள்ள குறித்த சொத்துக்கள் செப்டெம்பர் 17, 2026 முதல் 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d808155-559d-479a-995a-1c5279bcf26d/26-6aace593379b8.webp' /></p><p>



ஹுனுப்பிட்டிய பகுதியில் 7 பேர்ச்சஸ் காணியும் இரண்டு மாடி வீடும் – ரூ.4 கோடி,
ஹுனுப்பிட்டிய, சட்டல பகுதியில் 17 பேர்ச்சஸ் காணியும் இரண்டு வீடுகளும் – ரூ.3 கோடி,
ஹுனுப்பிட்டிய, வத்தளை பகுதியில் 5 பேர்ச்சஸ் காணியும் கட்டடமொன்றும் – ரூ.50 இலட்சம்,
ஹுனுப்பிட்டிய, காந்தி மாவத்தையில் 3 பேர்ச்சஸ் காணியும் கட்டடமொன்றும் – ரூ.70 இலட்சம்,
விசேட வகை கார் – ரூ.80 இலட்சம் என்பவையே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு விசாரணையில், தணமல்வில பகுதியைச் சேர்ந்த ஒருவர் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தி ரூ.3.5 கோடி பெறுமதியான டொயோட்டா ரக ஜீப் வாகனமொன்றைக் கொள்வனவு செய்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4946786-96f2-4f65-a87f-6c57e6dd9bb4/26-6aace5926948e.webp' /></p><p>

இதன்படி, குறித்த வாகனத்தை 2026 செப்டெம்பர் 16ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு முடக்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>இதனால் வாகனத்தை விற்பனை செய்யவோ, உரிமையை மாற்றவோ அல்லது அப்புறப்படுத்தவோ முடியாது.

இரு சம்பவங்கள் தொடர்பிலும் பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T07:21:50+00:00</updated>
        </entry>
    </feed>
