<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-20T20:25:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத இஞ்சி, ஏலக்காய் மற்றும் பூச்சிக்கொல்லி போத்தல்கள் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/seizure-illegal-ginger-cardamom-pesticide-bottles-1787256008"></link>
            <id>https://jvpnews.com/article/seizure-illegal-ginger-cardamom-pesticide-bottles-1787256008</id>
            <summary type="text">சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட உலர் இஞ்சி, ஏலக்காய் மற்றும் பூச்சிக்கொல்லி திரவம் அடங்கிய போத்தல்கள் அடங்கிய பெருந்தொகைப் பொருட்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட உலர் இஞ்சி, ஏலக்காய் மற்றும் பூச்சிக்கொல்லி திரவம் அடங்கிய போத்தல்கள் அடங்கிய பெருந்தொகைப் பொருட்கள் தலவில கடற்கரையில் வைத்து கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.</p><p> 

இலங்கை கடற்படையினரால் கற்பிட்டி, தலவில கடற்கரைப் பகுதியில் இன்று (20) முற்பகல் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b1d388f-6f2f-4e80-b7ad-767fb17c5069/26-6a875cca5ad6d.webp' /></p><p>இதன்போது கடற்கரைப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான 16 பொதிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. </p><p>

அந்தப் பொதிகளுக்குள் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட 591 கிலோகிராம் உலர் இஞ்சித் துண்டுகள், 75 கிலோகிராம் ஏலக்காய் மற்றும் பூச்சிக்கொல்லி திரவம் அடங்கிய 300 போத்தல்கள் என்பன கண்டெடுக்கப்பட்டன. </p><p>

இதற்கமைய, கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட இந்தப் பொருட்கள் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T20:00:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/peru-earthqake-today-1787254722"></link>
            <id>https://tamilwin.com/article/peru-earthqake-today-1787254722</id>
            <summary type="text">
பெரு நாட்டின் தெற்கு அண்டிஸ் மலைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  


 6.7 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
பெரு நாட்டின் தெற்கு அண்டிஸ் மலைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. </p><p> 


 6.7 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளதுடன், சேத விபரங்கள் குறித்த தகவல் எவையும் வெளிப்படுத்தப்படவில்லை.
</p><p>
உள்ளூர் நேரப்படி, மதியம் 1 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.</p><h2>சேத விபரங்கள்..</h2><p> </p><p> 

பெருவின், அயகுச்சோ பிராந்தியத்தின் பரினகோச்சாஸ் மாகாணத்தில் உள்ள உபஹுவாச்சோ நகரத்திற்கு வடமேற்கே 38 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e82511d-52df-4924-835a-3a75a7f37407/26-6a875b83afdbe.webp' /></p><p> </p><p> 

இகா மற்றும் அரேகிபா உள்ளிட்ட தெற்கு பெருவின் பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.</p><p>

நாட்டின், குடிமைப் பாதுகாப்புத் தலைவர் லூயிஸ், உள்ளூர் வானொலி ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில், இதுவரை எவ்வித சேதமும் பதிவாகவிலலை என்று தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p>

</p>]]></content>
            <updated>2026-08-20T19:54:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு, கிழக்கு காணிகளை விரைவில் மக்களுக்கு விடுவிப்பது குறித்து ஜனாதிபதி அநுர அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/releasing-lands-to-the-people-of-the-north-1787252142"></link>
            <id>https://jvpnews.com/article/releasing-lands-to-the-people-of-the-north-1787252142</id>
            <summary type="text">கடந்த யுத்த காலத்தின் போது பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தபட்ட, தற்போது விடுவிக்கப்படக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த யுத்த காலத்தின் போது பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தபட்ட, தற்போது விடுவிக்கப்படக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் காணிகளை உடனடியாக விடுவித்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறு பாதுகாப்புப் பிரிவினருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தல் வழங்கினார்.</p><p>வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த காலத்தில் இராணுவ முகாம்களை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகள் மற்றும் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட அரச காணிகள் ஆகியவற்றை மீண்டும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு விடுவிப்பதை துரிதப்படுத்துவது தொடர்பாக இன்று (20) நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2280218b-623d-479c-a838-1d9f3cf6822b/26-6a874dafce180.webp' /></p><p>தேசிய பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்பதுடன், தேசிய பாதுகாப்பிற்காக இராணுவ முகாம்கள் எங்கு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது முப்படையினர் மற்றும் பொலிசார் உள்ளிட்ட பாதுகாப்புடன் தொடர்புடையவர்களின் பொறுப்பாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதன் அடிப்படையில் எவ்வாறான காணிகளை விடுவிக்கலாம், எவ்வாறான காணிகளை விடுவிக்க முடியாது என்பது தொடர்பான இறுதித் தீர்மானத்திற்கு வருமாறும் அறிவுறுத்தினார். </p><p>

அவசியமான காணி அளவைத் தீர்மானிக்கும் போது இயன்றவரை மக்களின் தரப்பிலிருந்து சிந்தித்து, விடுவிக்கக் கூடிய அதிகபட்ச காணிகளை விடுவிக்குமாறு மேலும் அறிவுறுத்திய ஜனாதிபதி, அவ்வாறு வழங்கப்படும் காணிகளுக்கு மேலதிகமாக அந்த மக்களின் வாழ்வாதார வழிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார். </p><p>

அதற்காக உயர் உற்பத்தித் திறனைப் பெற்றுக்கொள்ளக் கூடிய நவீன விவசாயத் தொழில்நுட்பத்துடன் கூடிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளருக்கு இதன்போது பணிப்புரை விடுத்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T19:54:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோ பூங்காவில் 6 வயது குழந்தையிடம் தகாத முறையில் நடந்த நபர் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/police-search-for-suspect-accused-of-sexually-1787244562"></link>
            <id>https://canadamirror.com/article/police-search-for-suspect-accused-of-sexually-1787244562</id>
            <summary type="text">டொராண்டோ பூங்காவில் 6 வயது குழந்தையிடம் தகாத முறையில் நடந்த நபர் !
டொராண்டோ நகரின் மத்திய பகுதியில் உள்ள பிரபல பூங்காவில் 6 வயது குழந்தையிடம் தகாத மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>டொராண்டோ பூங்காவில் 6 வயது குழந்தையிடம் தகாத முறையில் நடந்த நபர் !
டொராண்டோ நகரின் மத்திய பகுதியில் உள்ள பிரபல பூங்காவில் 6 வயது குழந்தையிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சந்தேக நபரின் புகைப்படங்களை வெளியிட்டு, அவரைத் தீவிரமாகத் தேடி வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
செவ்வாய்க்கிழமை பிற்பகல் பிரெம்னர் பூலேவார்ட் மற்றும் லோயர் சிம்கோ தெரு பகுதிக்கு அருகில் அமைந்துள்ள 'ரவுண்ட்ஹவுஸ் பூங்காவில்' இச்சம்பவம் நடந்துள்ளது. </p><p>
அங்குள்ள ரயில் பெட்டிகள் அருகே குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த நபர் குழந்தைக்குப் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e04c0d0-68bc-46e7-898e-8e6f45c988f3/26-6a873014ed6bd.webp' /></p><p>
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர் அந்த நபரைத் தட்டிக் கேட்டபோது, அவர் மீண்டும் அக்குழந்தையிடம் தகாத முறையில் நடந்துள்ளார் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
</p><p>புதன்கிழமை இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், சந்தேக நபரின் அடையாளங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.</p><p>
55 முதல் 60 வரை வயதுடைய, 5 அடி 6 அங்குலம் உயரமுடைய, நடுத்தர உடல்வாகு, முன் தலைமுடி குறைந்த நரைத்த முடி, தாடி-மீசை இல்லாத முகம், வெள்ளி நிற உலோகம் கொண்ட கண்ணாடி அணிந்திருந்தார் என குறித்த நபர் பற்றிய விபரங்கள் பகிரப்பட்டுள்ளன.</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பாகத் தகவல் அறிந்தவர்கள் அல்லது சந்தேக நபரை அடையாளம் காண்பவர்கள் உடனடியாகக் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T19:53:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்ணுக்குள் மிளகாய் தூள் தூவி தங்கச் சங்கிலி திருட முயற்சி ; மடக்கிப்பிடிக்கப்பட்ட நபர் நையப்புடைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/attempt-to-steal-gold-coin-sprinkling-chili-powder-1787245783"></link>
            <id>https://jvpnews.com/article/attempt-to-steal-gold-coin-sprinkling-chili-powder-1787245783</id>
            <summary type="text">கொழும்பு கடுவெல,பகுதியில் உள்ள ஜயவிக்ரம எண்ணெய் கடையில் தங்கச் சங்கிலி ஒன்றை கொள்ளையடிக்க முயற்சி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் இன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு கடுவெல,பகுதியில் உள்ள ஜயவிக்ரம எண்ணெய் கடையில் தங்கச் சங்கிலி ஒன்றை கொள்ளையடிக்க முயற்சி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் இன்று காலை சுமார் 10.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
</p><p>
குறித்த நபர், கடை உரிமையாளரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறிப்பதற்காக மிளகாய்த்தூள் அடங்கிய பையுடன் வந்ததாக கூறப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/741755df-d80c-436d-a338-98d3a2439f21/26-6a8734d8b2da5.webp' /></p><p>உரிமையாளரின் மீது மிளகாய்த்தூளைத் தூவி, தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றபோது, அவர் அங்கிருந்தவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனைத் தொடர்ந்து, குறித்த நபர் அங்கிருந்தவர்களால் தாக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T19:53:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிலாபம் கடலில் படகு கவிழ்ந்து முதியவர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/elderly-man-dies-boat-capsizes-in-sea-off-chilaw-1787253473"></link>
            <id>https://tamilwin.com/article/elderly-man-dies-boat-capsizes-in-sea-off-chilaw-1787253473</id>
            <summary type="text">சிலாபம் முகத்துவாரத்துக்கு அருகாமையில் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காகச் சென்ற
சிறிய ரகப் படகொன்று திடீரெனக் கவிழ்ந்த விபத்தில் முதியவர் ஒருவர்
உயிரிழந...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிலாபம் முகத்துவாரத்துக்கு அருகாமையில் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காகச் சென்ற
சிறிய ரகப் படகொன்று திடீரெனக் கவிழ்ந்த விபத்தில் முதியவர் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.</p><p>இந்தச் சம்பவம் நேற்றையதினம் (20) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>சிலாபம் – சேதவத்தை பகுதியைச் சேர்ந்த 67 வயதான முதியவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
கடலில் ஏற்பட்ட திடீர் சீற்றம் மற்றும் கடுமையான நீரோட்டத்தின் வேகத்தைக்
கட்டுப்படுத்த முடியாமல் படகு தலைகீழாகக் கவிழ்ந்ததே இந்த விபத்துக்குக்
காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
படகு கவிழ்ந்ததில் கடலில் தத்தளித்த இருவரில் ஒருவர் துரிதமாகச் செயற்பட்டு
உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e2ce5f9-23f9-4535-ad37-417bd2537f53/26-6a87562a2f093.webp' /></p><p>
</p><p>
காப்பாற்றப்பட்ட மேற்படி கடற்றொழிலாளர் காயங்களுடன் உடனடியாகச் சிகிச்சைக்காக சிலாபம்
பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T19:32:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சண்டே ஸ்பெஷலாக சன் டிவியில் தனுஷ், ஜெயம் ரவி பட ஸ்பெஷல்... என்னென்ன படங்கள் பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/dhanush-jayam-ravi-movies-in-sun-tv-sunday-spl-1787243194"></link>
            <id>https://cineulagam.com/article/dhanush-jayam-ravi-movies-in-sun-tv-sunday-spl-1787243194</id>
            <summary type="text">சண்டே ஸ்பெஷல்சன் டிவி, பல வருடங்களாக சீரியல்கள், புதுப்படங்கள், ரியாலிட்டி ஷோக்கள் என ஒளிபரப்பி மக்களின் பேராதரவை பெற்றிருக்கும் தொலைக்காட்சி. வாரா வா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சண்டே ஸ்பெஷல்</h2><p>சன் டிவி, பல வருடங்களாக சீரியல்கள், புதுப்படங்கள், ரியாலிட்டி ஷோக்கள் என ஒளிபரப்பி மக்களின் பேராதரவை பெற்றிருக்கும் தொலைக்காட்சி. </p><p>வாரா வாரம் இப்போதெல்லாம் புதுப்படங்கள் வருகிறது, ரிலீஸ் ஆன வேகத்தில் சமூக வலைதளங்களிலும் வந்துவிடுகிறது. ஆனால் முன்பெல்லாம் புதுப்படங்களை ஒளிபரப்புவதில் ராஜாவாக இருந்தது சன் டிவி. </p><p>இந்த வாரம் ஸ்பெஷல், சண்டே ஸ்பெஷல் என்ற வார்த்தைகளை கேட்கும் போதே மக்கள் என்ன படமாக இருக்கும் என ஆர்வமாக பார்ப்பார்கள்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f2e6447-21cc-446b-9797-f32879b2fb9e/26-6a872cd0735bd.webp' /></p><h2>படங்கள்</h2><p>
தற்போது வரும் சண்டே (ஆகஸ்ட் 23) சன் தொலைக்காட்சியில் என்னென்ன படங்கள் ஒளிபரப்பாக போகிறது என்ற தகவல் வந்துள்ளது. </p><p>ஞாயிறு காலை 10 மணிக்கு தனுஷ், நயன்தாரா, கருணாஸ், சரண்யா என பலர் நடித்த குடும்பம் ப்ளஸ் காதலை மையப்படுத்திய யாரடி நீ மோகினி படம் ஒளிபரப்பாக உள்ளதாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3313f12-79fe-4861-a082-7175d31e42da/26-6a872cce8e812.webp' /></p><p>
</p><p>அதன்பின் பிற்பகல் 2.30 மணிக்கு அம்மா என்றாலே பாசம் தான், அதிலும் இந்த படத்திற்கு பிறகு அனைவரும் தங்களது அம்மாவை இன்னும் கொண்டாடினார்கள் என்றே கூறலாம். </p><p>ஜெயம் ரவி, அசின், நதியா, விவேக், பிரகாஷ் ராஜ் என பலர் நடித்த M. குமரன் S/O மகாலட்சுமி படம் ஒளிபரப்பாக உள்ளதாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8daab544-03ac-49b9-be4e-322cf2b33d6f/26-6a872ccfa640a.webp' /></p>]]></content>
            <updated>2026-08-20T19:30:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் தேர்தல்... நித்யா ராமனை சோம்பேறி என்று அழைத்த கரேன் பாஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/karen-bass-calls-rival-raman-lazy-1787254247"></link>
            <id>https://news.lankasri.com/article/karen-bass-calls-rival-raman-lazy-1787254247</id>
            <summary type="text">Karen Bass calls rival Nithya Raman lazy: லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ், தனது போட்டியாளரான நித்யா ராமனை அவர் முகத்திற்கு நேராகவே சோம்பேறி என்று அழைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Karen Bass calls rival Nithya Raman lazy: லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ், தனது போட்டியாளரான நித்யா ராமனை அவர் முகத்திற்கு நேராகவே சோம்பேறி என்று அழைத்தார்.
</p><p>லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் பதவிக்கான விவாதம், பதவியில் இருக்கும் கரேன் பாஸ் தனது போட்டியாளரான நித்யா ராமனை சோம்பேறி என்று கூறியதைத் தொடர்ந்து அனல் பறக்கும் வகையில் தொடங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffdda84b-d271-4b21-8294-6d3eb53be6be/26-6a8755eb0516b.webp' /></p><p>
</p><p>சபாநாயகராக இருந்தபோதுதான் முதல் வரிச் சலுகைக்கான நடவடிக்கையை மேற்கொண்டேன். அப்போது உங்கள் அடையாளமே இல்லை என்று தனக்கு அருகில் அமர்ந்திருந்த ராமனிடம் பாஸ் கூறினார். </p><p>மேலும், பொழுதுபோக்குத் துறை சார்ந்த விடயங்களில் வாக்களிக்க வேண்டிய நேரம் வந்தபோதுகூட, நீங்கள் வாக்களிக்காமல் தவிர்த்துவிட்டீர்கள். சொல்லப்போனால், பணிக்கு வராத காரணத்தினால் நீங்கள் பல ஆயிரம் வாக்குகளைத் தவறவிட்டிருப்பதாகவே நான் கருதுகிறேன் என்றார். </p><p>முன்கூட்டியே வாக்களிப்பு தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலமே எஞ்சியுள்ள நிலையில், தேர்தல் நாள் நெருங்கிவரும் வேளையில், நகர மேயரான கரேன் பாஸ் புதன்கிழமை இரவு காட்டமான கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.</p><p></p><p> </p><p>கரேன் பாஸ்ஸின் கீழ் பணியாற்றும் நகர மன்ற உறுப்பினரான ராமன், தனது பணி நெறிமுறைகள் மீதான விமர்சனங்களுக்குப் பதிலளிக்க ஒரு வாய்ப்பைக் கோரியதோடு, தான் கூட்டங்களில் கலந்துகொள்ளத் தவறியதையும் ஒப்புக்கொண்டார். </p><p>அத்துடன், முந்தைய மேயராலும், இந்த மேயராலும் நான் நியமிக்கப்பட்ட வெளிவிவகார வாரியங்கள் சில சமயங்களில் நமது மன்ற நாட்களுடன் முரண்படுவதால், வழக்கமான மன்றக் கூட்டங்களைத் தவறவிட நேரிடுகிறது என்பது (பாஸுக்கும்) என்னைப் போலவே தெரியும் என்று மன்ற உறுப்பினர் ராமன் கூறினார்.</p><p>ராமனும் கடுமையாகத் தாக்கிப் பேசியதோடு, வீடற்றோர் பிரச்சினையில் மேயரின் செயல்பாடுகளைக் கண்டித்து, அவரது 'இன்சைட் சேஃப்' என்ற வீட்டுவசதித் திட்டம் ஒரு தோல்வி என்றும் குறிப்பிட்டார்.</p><p>இந்த மேயர் 'இன்சைடு சேஃப்' திட்டத்திற்காக 400 மில்லியன் டொலர்களைச் செலவிட்டுள்ளார், ஆனால் தணிக்கைகளை மேற்கொள்ள மறுத்துவிட்டார் என்றும் ராமன் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c541959-8d80-4602-bc50-38a23f8f292d/26-6a8755e9a2858.webp' /></p><p> </p><p>மட்டுமின்றி, தனது முயற்சிகளின் விளைவாக, தனது நான்காவது கவுன்சில் மாவட்டத்தில் வீடின்றித் தெருக்களில் வசிப்பவர்களின் எண்ணிக்கையில் 49 சதவீதம் குறைவு ஏற்பட்டதையும் ராமன் சுட்டிக்காட்டினார்.</p><p>வீடற்றோருக்கான திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் அனைத்து நகர நிதிகளையும் தணிக்கை செய்து, அவற்றின் செயல்திறனைக் கண்காணிப்பதாக ராமன் உறுதியளித்தார். </p><p>பாஸ், 'இன்சைட் சேஃப்' திட்டத்தை ஆதரித்துப் பேசியதோடு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் வீடற்றோருக்கான முழு அமைப்பையும் மாற்றியமைக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01ffe573-6cfd-4907-a02a-1168c92a94d9/26-6a8755ea538e4.webp' /></p><p> </p><p>லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் நடத்திய ஓர் ஆய்வில், 'இன்சைட் சேஃப்' திட்டம் தொடங்கப்பட்ட கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில், அதில் பங்கேற்ற வீடற்றவர்களில் ஏறத்தாழ 41 சதவீதத்தினர் மீண்டும் வீடற்ற நிலைக்குத் திரும்பியுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. </p><p>முதல்நிலைத் தேர்தலில் ரியாலிட்டி தொலைக்காட்சி நட்சத்திரமான ஸ்பென்சர் பிராட்டை வீழ்த்தியதன் மூலம், பாஸும் ராமனும் தேர்தலில் தங்களது இடங்களை உறுதி செய்தனர். </p><p>முதன்மைத் தேர்தலில் மேயர் கரேன் பாஸ் 34 சதவீத வாக்குகளும், ராமன் 29 சதவீத வாக்குகளும் பெற்று முன்னிலை வகித்தனர். மேயர் தேர்தலில் பாஸ் பெரும் முன்னிலையில் இருப்பதாகக் காட்டிய கருத்துக்கணிப்பு போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலேயே இந்தக் கடுமையான விவாதம் ஏற்பட்டுள்ளது. </p><p>லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் தேர்தல் நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறும். இதில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் பிறந்து தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் பதவிக்கான போட்டியில் களமிறங்கியுள்ள நித்யா ராமனுக்கு வாய்ப்புகள் இருப்பதாகவே கூறப்படுகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T19:28:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசு கவிழ்ந்தால் அதற்கு முட்டாள் அமைச்சர்களே காரணம் : மனோ எம்.பி. பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-that-the-anura-government-will-fall-1787253809"></link>
            <id>https://tamilwin.com/article/warning-that-the-anura-government-will-fall-1787253809</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு கவிழ்ந்தால் அதற்கு முட்டாள்
அமைச்சர்களே காரணம் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு கவிழ்ந்தால் அதற்கு முட்டாள்
அமைச்சர்களே காரணம் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற
உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
</p><p>
ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.</p><h2>இந்த ஆட்சி தொடர வேண்டும்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
"நண்பர் ஜனாதிபதி அநுரவின் ஆட்சி தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம்.

பாதாள உலகக் செயல்களும் போதைப் பொருளும் ஒழியும் வரை இந்த ஆட்சி தொடர வேண்டும்.

இந்த ஆட்சிக்கு வெளி நபர்களால் எந்த ஆபத்துமில்லை. உள்ளகத்திலேயே ஆபத்து
இருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6afd531a-8159-49d1-83a5-815484d737e1/26-6a8754329dff1.webp' /></p><p>
</p><p>
நாங்கள் இன்று எதிர்க்கட்சி இல்லை, தாமே அரசு, அதிகாரம் தம்மிடம்தான் உள்ளது
என்பதை உணராத, ஆளத் தெரியாத முட்டாள் அமைச்சர்கள் காரணமாகச் சிங்கள மக்கள்
மத்தியில் அரசின் செல்வாக்கு சரிந்து வருகின்றது.
</p><p>
இரண்டு வருடங்கள் கடந்தும் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் எம்மைக் குறை
கூறுவதைத் தவிர வேறு எதையும் செய்யத் தெரியாத, செய்யாத மந்திரிகள் காரணமாக அரச
செல்வாக்கு குறைந்து வருகின்றது" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T19:23:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீதான கடற்படை முற்றுகை தீவிரம்! திருப்பி அனுப்பப்பட்ட 67 வணிகக் கப்பல்கள்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-diversifies-ships-from-iranian-ports-1787247723"></link>
            <id>https://ibctamil.com/article/us-diversifies-ships-from-iranian-ports-1787247723</id>
            <summary type="text">ஈரானியத் துறைமுகங்களை நோக்கிச் சென்ற அல்லது அங்கிருந்து புறப்பட்ட 67 வணிகக் கப்பல்கள்கள் திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானியத் துறைமுகங்களை நோக்கிச் சென்ற அல்லது அங்கிருந்து புறப்பட்ட 67 வணிகக் கப்பல்கள்கள் திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> அமெரிக்க மத்தியக் கட்டளைப் பிரிவு (CENTCOM) இதனை தெரிவித்துள்ளது.</p><p>ஈரான் மீது புதுப்பிக்கப்பட்ட கடற்படை முற்றுகையை (Naval Blockade) பலப்படுத்தும் நடவடிக்கையாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முற்றுகை உத்தரவு</h2><p>
</p><p>
மேலும், முற்றுகை உத்தரவுகளை மீற முயன்ற 3 கப்பல்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் 2 கப்பல்களில் அமெரிக்கப் படையினர் ஏறி சோதனை நடத்தியதாகவும் மத்தியக் கட்டளைப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
</p><p>மத்திய கிழக்கில் போர் வெடித்ததில் இருந்து ஹோர்முஸ் நீரிணை பகுதி ஒரு இரட்டை முற்றுகை நிலையை எதிர்கொண்டுள்ளது.</p><p>
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">U.S. Marine Corps MV-22B Osprey utility aircraft take off from the flight deck of USS Boxer (LHD 4) while the ship transits the Arabian Sea and continues to enforce the U.S. blockade against Iran. As of Aug. 20, U.S. forces have redirected 67 commercial vessels, disabled 3 and… <a href="https://t.co/UAOmcLWExf">pic.twitter.com/UAOmcLWExf</a></p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2090472446314848321?ref_src=twsrc%5Etfw">August 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இந்தநிலையில் அமெரிக்கக் கூட்டணி நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்களின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த ஈரான் முயன்று வருகிறது.
</p><p>
இதற்குப் பதிலாக, சர்வதேச எரிசக்திப் பாதைகளைத் திறந்த நிலையில் வைத்திருக்க அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல்கள், கடற்படைப் பாதுகாப்பு மற்றும் ஈரானியத் துறைமுகங்கள் மீதான முற்றுகை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
</p><p>இந்த பிண்ணனியில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் எவ்வித உடன்பாடும் எட்டப்படாததைத் தொடர்ந்து ஈரான் மீது மேலும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய (Crushing) கடுமையான பொருளாதார நடவடிக்கைகளும் தடைகளும் விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T19:10:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் புதிய பொருளாதாரத் தடை எச்சரிக்கை...! ஈரான் வெளியிட்ட கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-condemns-new-us-sanction-threats-1787242734"></link>
            <id>https://ibctamil.com/article/iran-condemns-new-us-sanction-threats-1787242734</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள புதிய பொருளாதாரத் தடைகள் குறித்த எச்சரிக்கைகளுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் இந...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள புதிய பொருளாதாரத் தடைகள் குறித்த எச்சரிக்கைகளுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.</p><p>அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் மனிதநேயமற்றது என்று ஈரான் சாடியுள்ளது.&nbsp;&nbsp;</p><p>ஈரானின் வெளியுறவு அமைச்சகம் இது தொடர்பில் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.</p><p> </p><p></p><h2>கொள்கை வகுப்பாளர்கள்</h2><p>இது தொடர்பில் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ட்ரம்பின் இந்த அச்சுறுத்தல் 1953 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 அன்று ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈரானியப் பிரதமர் முகமது மொசாதெக்கை (Mohammad Mosaddegh) பதவியிலிருந்து அகற்றிய சதித்திட்டத்தின் ஆண்டு நினைவு நாளுடன் ஒத்துப் போவதாக ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be74e1d9-08bf-4e68-908b-296f62ff0edf/26-6a873bcdb3495.webp' /></p><p>இந்த நடவடிக்கை, கடந்த 73 ஆண்டுகளாக ஈரானிய மக்களுக்கு எதிராக அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் காட்டி வரும் பகைமையின் தொடர்ச்சியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>பொருளாதார விளைவுகள்</h2><p> மேலும், அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் மனிதநேயமற்ற, சட்டவிரோதமான மற்றும் அடாவடியான குணத்தையே இது நிரூபிக்கின்றது எனவும் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d6b41d7-49af-4990-ab4b-2507ba867d5e/26-6a873bce64953.webp' /></p><p>அமெரிக்காவின் புதிய தடைகள், மனிதகுலத்திற்கு எதிராகக் குற்றம் புரிவதை ஒப்புக்கொள்வது போலாகும் என்றும் இது ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுத் தோல்வியடைந்த ஒரு பழைய கொள்கையின் தொடர்ச்சியே என்றும் ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளது.</p><p>ஈரானுக்கு நிதி, வர்த்தகம் அல்லது தளவாட ஆதரவை வழங்கும் எந்தவொரு நாட்டிற்கும் கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படும் என்றும் ஈரான் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிலான பொருளாதாரப் போர் (Economic Warfare) தொடுக்கப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரித்திருந்த நிலையிலேயே ஈரானின் இந்த அதிகாரப்பூர்வப் பதில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T19:10:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கயல் சீரியல் புகழ் நடிகை ரியா விஸ்வநாதன் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/serial-actress-riya-viswanathan-stylish-photos-1787217192"></link>
            <id>https://cineulagam.com/article/serial-actress-riya-viswanathan-stylish-photos-1787217192</id>
            <summary type="text">ரியா விஸ்வநாதன்விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 தொடர் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகை ரியா விஸ்வநாதன்.ஆல்யா மானசா வெளியேறிய ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரியா விஸ்வநாதன்</h2><p>விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 தொடர் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகை ரியா விஸ்வநாதன்.</p><p>ஆல்யா மானசா வெளியேறிய பிறகு அவருக்கு பதில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அந்த தொடர் முடிவடையவே பின் ஜீ தமிழிலும் சீரியல் நடித்தவர் இப்போது சன் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் கயல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.</p><p>இந்த நிலையில் நாம் நடிகை ரியா விஸ்வநாதன் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T18:30:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுவர்களை வேலையில் அமர்த்துவது தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bill-passed-regarding-employment-of-children-1787249242"></link>
            <id>https://jvpnews.com/article/bill-passed-regarding-employment-of-children-1787249242</id>
            <summary type="text">பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை வேலையில் அமர்த்துவது தொடர்பான திருத்தச் சட்டமூலம் எவ்வித திருத்தங்களுமின்றி நிறைவேற்றப்பட்டது. இன்று (20) நாடாளு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை வேலையில் அமர்த்துவது தொடர்பான திருத்தச் சட்டமூலம் எவ்வித திருத்தங்களுமின்றி நிறைவேற்றப்பட்டது.</p><p> </p><p>இன்று (20) நாடாளுமன்றத்தில் இச்சட்டமூலம் இரண்டாம் முறை வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டதைத் தொடர்ந்தே இவ்வாறு நிறைவேற்றப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b13fd255-3caf-47f1-a69e-f2950dc89c5b/26-6a8745aa86287.webp' /></p><p>1956 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை வேலையில் அமர்த்துவது பற்றிய சட்டத்தின் கீழ் செய்யப்படும் குற்றங்களுக்காக தற்போது நடைமுறையிலுள்ள தண்டப் பணத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து 100,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு இத்திருத்தச் சட்டமூலம் மூலம் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.</p><p> 

1956 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை வேலையில் அமர்த்துவது பற்றிய சட்டமானது, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை எந்தவொரு வேலையிலும் அமர்த்துவதை முற்றாகத் தடை செய்துள்ளது. </p><p>

அத்துடன், 16 வயதுக்கு மேற்பட்ட ஆனால் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்களை வேலையில் அமர்த்தும்போது முதலாளிமார்கள் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டிய பல விசேட ஒழுங்குமுறைகளையும் நிபந்தனைகளையும் இச்சட்டம் விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T18:21:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல பாடகி நந்தா மாலினி மறைவு ; தேசிய துக்க தினமாக பிரகடனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-day-national-mourning-beg-sri-lanka-tomorrow-1787249903"></link>
            <id>https://jvpnews.com/article/three-day-national-mourning-beg-sri-lanka-tomorrow-1787249903</id>
            <summary type="text">இலங்கையில் நாளை (21) முதல்&amp;nbsp;மூன்று நாட்களுக்கு தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தி அரசாங்கம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளதுஇதன்படி, நாளை 21ஆம் திகதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நாளை (21) முதல்&nbsp;மூன்று நாட்களுக்கு தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தி அரசாங்கம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது</p><p>இதன்படி, நாளை 21ஆம் திகதி மற்றும் 22, 23 ஆகிய மூன்று நாட்களையும் தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்தி அரசாங்கம் அறிவிப்பொன்றை அரசாங்க தகவல் திணைக்களம் சற்று முன்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1eb64295-d94c-4690-ac17-73530b6a0052/26-6a8744f14ca4b.webp' /></p><p>

துக்க தினம் 
பிரபல பாடகி நந்தா மாலினியின் மறைவையொட்டி குறித்த மூன்று தினங்களையும் துக்கதினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. </p><p>

இது தொடர்பான மேலதிக விபரங்கள் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் விரைவில் அறிவிக்கப்படும் என தகவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T18:18:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பா.ஜ.க அமைச்சரவையில் இடம்பெறுகிறது திமுக..! தமிழகத்தில் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/will-the-dmk-join-the-union-cabinet-1787245918"></link>
            <id>https://ibctamil.com/article/will-the-dmk-join-the-union-cabinet-1787245918</id>
            <summary type="text">பா.ஜ.க தலைமையிலான மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அமைச்சரவையில் தி.மு.க.வும் இடம்பெற வாய்ப்பு இருப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பா.ஜ.க தலைமையிலான மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அமைச்சரவையில் தி.மு.க.வும் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக வடமாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><p>விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ள மத்திய அமைச்சரவையில் தி.மு.க.வும் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக&nbsp;வடமாநில ஊடகங்கள், செய்திகள் வெளியிட்டு வருகின்றன.</p><h2>சில நிபந்தனைகளுடன் ஆதரவு&nbsp;</h2><p>அதற்கு காரணமாக, தொகுதி மறுவரையறை மசோதாவை கடுமையாக எதிர்த்து வந்த தி.மு.க., தற்போது சில நிபந்தனைகளுடன் ஆதரவு அளிக்க முன்வந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறது</p><p>.<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d3ffd11-7ed3-4185-b124-9c2f91b9fd59/26-6a87439082f14.webp' /></p><p>
"பா.ஜ.க.வுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை" என்று தொடர்ந்து தி.மு.க. கூறிவருகிறது. இதுவரை, காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றிருந்த தி.மு.க., தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி நிலைப்பாடு மாற்றத்தால், தேசிய அளவிலான கூட்டணியை விட்டு வெளியே வந்துள்ளது.</p><p></p><p>

</p><h2>நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்களின் பலம்</h2><p>நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்களின் பலத்தை பொறுத்தவரை மக்களவையில் 22 ஆகவும், மாநிலங்களவையில் 8 ஆகவும் உள்ளது. எனவே, முக்கிய மசோதாக்களை நிறைவேற்றும்போது, தி.மு.க. எம்.பி.க்களின் ஆதரவும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு தேவையாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0b56244-fb4a-43bf-bd1d-eaa934f5dd14/26-6a874391354a5.webp' /></p><p>



அதன் அடிப்படையிலேயே, பா.ஜ.க.வும், தி.மு.க.வும் நெருக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. கடந்த 13-ந் தேதி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த தேநீர் விருந்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கலந்துகொண்டது சந்தேகத்தை ஏற்படுத்தியது.</p><p> அதை வைத்தே, மத்திய அமைச்சரவையில் தி.மு.க.வும் இடம்பெறப்போவதாக வடமாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருவதாகவும் தெரிகிறது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T18:12:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அடுத்த மூன்று நாட்களை துக்க தினமாக பிரகடனப்படுத்திய அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/three-days-of-mourning-in-sri-lanka-1787248436"></link>
            <id>https://tamilwin.com/article/three-days-of-mourning-in-sri-lanka-1787248436</id>
            <summary type="text">இலங்கையில் நாளை(21) மற்றும் 22, 23 ஆகிய மூன்று நாட்களையும் தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்தி அரசாங்கம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.&amp;nbsp;&amp;nbsp;அரசாங...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நாளை(21) மற்றும் 22, 23 ஆகிய மூன்று நாட்களையும் தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்தி அரசாங்கம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>அரசாங்க தகவல் திணைக்களம் சற்று முன்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.&nbsp;</p><h2>துக்க தினம்&nbsp;</h2><p>பிரபல பாடகி நந்தா&nbsp; மாலினியின் மறைவையொட்டி&nbsp; குறித்த மூன்று தினங்களையும் துக்கதினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.&nbsp;</p><p>இது தொடர்பான மேலதிக விபரங்கள் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் விரைவில் அறிவிக்கப்படும் என தகவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5658160-ac1e-46f0-aa6d-364d11b99937/26-6a8741598112b.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T18:03:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் புதையல் தோண்ட முற்பட்ட இராணுவ உயர் அதிகாரி உட்பட எட்டு பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/8-people-arrested-in-kilinochchi-dig-for-treasure-1787248573"></link>
            <id>https://tamilwin.com/article/8-people-arrested-in-kilinochchi-dig-for-treasure-1787248573</id>
            <summary type="text">கிளிநொச்சி-இரணைமடு 55 ஆம் கட்டை பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட&amp;nbsp;8 பேர் கொண்ட குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த கைது நடவடிக்கையானது நேற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி-இரணைமடு 55 ஆம் கட்டை பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட&nbsp;8 பேர் கொண்ட குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(19.8.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> </p><p>கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற
இரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த பகுதியை சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிசார்
குறித்த பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட இராணுவ உயர் அதிகாரி உட்பட எட்டு
பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">கைது</span></p><p>
</p><p>
கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு சிலாபம், புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம்
பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/471099a6-f90e-43db-8e63-c32d4f0f65e7/26-6a8740cdbfce7.webp' /></p><p>குறித்த சந்தேக நபர்களிடமிருந்து புதையல்
தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணம் மற்றும் சிறிய ரக வாகனம் ஒன்றும்
பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p>அத்துடன் குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T18:00:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கழுத்துக்கீழ் டாட்டூ!! நடிகை கேப்ரியல்லா செல்லஸின் கிளாமர் போட்டோஷூட்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/gabrella-sellus-recent-video-photos-post-viral-1787238718"></link>
            <id>https://viduppu.com/article/gabrella-sellus-recent-video-photos-post-viral-1787238718</id>
            <summary type="text">கேப்ரியல்லா செல்லஸ்சுந்தரி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்றவர் தான் நடிகை கேப்ரியல்லா செல்லஸ். கடந்த 2024 இறுதியில் இந்த சீரியல் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கேப்ரியல்லா செல்லஸ்</h2><p>சுந்தரி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்றவர் தான் நடிகை கேப்ரியல்லா செல்லஸ். கடந்த 2024 இறுதியில் இந்த சீரியல் நிறைவடைந்ததை அடுத்து, தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.
</p><p>
அதன்பின் நடிப்பில் இருந்து விலகி இருந்த கேப்ரியல்லா, கணவருடன் இணைந்து நடிப்பு கலையை கற்றுக்கொடுத்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09cf30db-a591-43f1-9655-c143969fe83c/26-6a87194ba34ef.webp' /></p><p>
</p><p>
சமீபத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்ததை அடுத்து மீண்டும் இணைதள பக்கம் வந்து போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
</p><p>
சமீபத்தில் தான் நடித்துள்ள இன்ஸ்பெக்டர் ரிஷி 2 படத்தின் அமேசான் பிரைம் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். கிளாமர் ஆடை அணிந்து எடுத்த மாடர்ன் லுக் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். </p><p>தற்போது, கருப்புநிற கிளாமர் ஆடையணிந்து எடுத்த போட்டோஷூட் வீடியோ, புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcQ64kJupFF/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcQ64kJupFF/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcQ64kJupFF/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by GABRELLA SELLUS (@gabrellasellus_official)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-20T18:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஞானசார தேரரின் விகாரை பாதுகாப்பில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கியால் சுட்டு உயிர்மாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/guarding-gnanasara-thero-s-temple-shot-dead-1787248437"></link>
            <id>https://jvpnews.com/article/guarding-gnanasara-thero-s-temple-shot-dead-1787248437</id>
            <summary type="text">கொழும்பு ராஜகிரியவில் அமைந்துள்ள ஞானசார தேரரின் விகாரையின் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், தனது சேவைத் துப்பாக்கியால் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு ராஜகிரியவில் அமைந்துள்ள ஞானசார தேரரின் விகாரையின் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், தனது சேவைத் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். </p><p>

குறித்த உத்தியோகத்தர் கடந்த சில நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e71068c-8737-41b9-93f9-7d926e08dce3/26-6a873f3745dd3.webp' /></p>]]></content>
            <updated>2026-08-20T17:54:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அயர்லாந்தில் கோதிக் கோட்டை ஒன்றை வாங்கிய மார்க் ஜுக்கர்பெர்க்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/zuckerberg-buys-gothic-castle-1787248435"></link>
            <id>https://news.lankasri.com/article/zuckerberg-buys-gothic-castle-1787248435</id>
            <summary type="text">Mark Zuckerberg buys Gothic castle: மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான் ஆகியோர் அயர்லாந்தில் ஒரு கோட்டையை வாங்கியுள்ளனர். 
தொழில...</summary>
            <content type="html"><![CDATA[<p>Mark Zuckerberg buys Gothic castle: மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான் ஆகியோர் அயர்லாந்தில் ஒரு கோட்டையை வாங்கியுள்ளனர். </p><p>
தொழில்நுட்பத் துறை கோடீஸ்வரரான மார்க் ஜுக்கர்பெர்க்கும் அவரது மனைவி பிரிசில்லா சானும் அயர்லாந்தில் ஒரு கோட்டையை வாங்கியுள்ளனர்; அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லம் குறித்து அவர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>கோதிக் பாணி மாளிகை</h2><p>
</p><p>மெட்டாவின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பெர்க், அண்மைய வாரங்களில் ஆலன்-பக்லி குடும்பத்திடமிருந்து கோதிக் பாணியிலான மூன்று மாடி 'ஸ்ட்ரான்க்கல்லி' (Strancally) கோட்டையை வாங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5bbb69d-e849-4626-8ad6-e14bf1e7ce07/26-6a873f362869a.webp' /></p><p> </p><p>மார்க் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையைத் தொடர்ந்து பராமரிப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்; அத்துடன் அயர்லாந்தில் நேரத்தைச் செலவிடவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். </p><p>1827-ல் ஒரு ஆங்கில அரசியல்வாதிக்காகக் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, டப்ளினிலிருந்து சுமார் 93 மைல் தென்மேற்கே, வாட்டர்ஃபோர்டு கவுன்டியில் அமைந்துள்ள ஒரு மூன்று மாடி, செதுக்கப்பட்ட கற்களால் ஆன கோதிக் மறுமலர்ச்சி பாணி மாளிகையாகும்.</p><p></p><p> </p><p>கோட்டையை வாங்க மார்க் சக்கர்பெர்க் செலுத்திய தொகை தொடர்பான தகவல் வெளியாகவில்லை. இந்தக் கோட்டையானது, கடந்த 20 வருடங்களில் அதன் முந்தைய உரிமையாளர்களால் விரிவாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2>அபராதம் விதிக்கப்பட வேண்டும்</h2><p> </p><p>மெட்டா நிறுவனம் அயர்லாந்தில் சுமார் 1,500 பேரைப் பணியமர்த்தியுள்ளது, அதன் சர்வதேசத் தலைமையகம் டப்ளினில் அமைந்துள்ளது.
ஜுக்கர்பெர்க்கும் அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து அமெரிக்காவிலேயே வசிப்பார்கள்; அயர்லாந்தில் மெட்டா நிறுவனத்தின் பணிகளை மேற்கொள்ளும்போது மட்டும் அங்குள்ள குடியிருப்பைப் பயன்படுத்துவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c9c3a97-b278-40d2-8595-01be56235b0e/26-6a873f354f1b5.webp' /></p><p>
</p><p>இதனிடையே, இளம் பயனர்களுக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கை வேண்டுமென்றே அடிமையாக்கும் வகையில் உருவாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில், மெட்டா நிறுவனத்திற்கு எதிராக செவ்வாயன்று நடைபெற்ற அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றத்தில், அந்நிறுவனம் குழந்தைகளைத் தெரிந்தே அடிமையாக்கிச் சுரண்டியதாகத் தெரிவிக்கப்பட்டது. </p><p>குழந்தைகளுக்கு அடிமைப்படுத்தும் தன்மையுள்ள தயாரிப்புகளை வடிவமைத்ததற்காக, மெட்டா (Meta) நிறுவனத்திற்கு சுமார் 200 பில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று மாகாணங்களின் கூட்டமைப்பு ஒன்று கோருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T17:51:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பிரதிவாதிகளினுடைய வாக்குமூலத்தில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/funeral-of-renowned-singer-nanda-malini-1787244957"></link>
            <id>https://tamilwin.com/article/funeral-of-renowned-singer-nanda-malini-1787244957</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான 24 பிரதிவாதிகளுக்கு எதிராக இருக்கின்ற 23270 குற்றச்சாட்டுக்கள் இதுவரை விசாரிக்கப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டு வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான 24 பிரதிவாதிகளுக்கு எதிராக இருக்கின்ற 23270 குற்றச்சாட்டுக்கள் இதுவரை விசாரிக்கப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன.</p><p>நேற்றையதினம்(19) பிரதிவாதிகள் தற்காப்பு வாக்குமூலங்களை வழங்கினர்.இந்தநிலையிலே, நெளபர் மெளலவி உள்ளிட்ட 15 பிரதிவாதிகள் இதுவரையில் சாட்சியல் அளித்துள்ளனர்.</p><p>குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தங்களை தாக்கி கட்டாய வாக்குமூலம் பெற முயன்றதாகவும், சஹ்ரானுடன் தொடர்பு இல்லை என்றும் சில பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.</p><p>அத்துடன் பிரகீத் எக்னெலிகொட வழக்கில் முக்கிய சாட்சியான முரளியின் சாட்சியம் இன்று பதிவு செய்யப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/-Q7Q47e-ps0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T17:46:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[Kiss Scene நடிக்கிறதுக்கு முன்னாடி வீட்டுல சொல்லனும்- Aditi &amp; Arjun Das Interview]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/aditi-arjun-das-interview-about-once-more-1787213772"></link>
            <id>https://cineulagam.com/article/aditi-arjun-das-interview-about-once-more-1787213772</id>
            <summary type="text">ஒன்ஸ் மோர்அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்க தயாராகியுள்ள திரைப்படம் ஒன்ஸ் மோர். அதிதி ஷங்கர் நாயகியா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஒன்ஸ் மோர்</h2><p>அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்க தயாராகியுள்ள திரைப்படம் ஒன்ஸ் மோர். </p><p>அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ள இப்படத்தை மில்லியன் டாலர் பிக்சர்ஸ் தயாரிக்க ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். வரும் ஆகஸ்ட் 28ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பாடல்களும் ரிலீஸ் ஆகியுள்ளது.</p><p>இந்த நிலையில் படத்தில் நடித்துள்ள அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் கலகலப்பான பேட்டி கொடுத்துள்ளனர். இதோ காண்போம்,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/l_jk8JWbHbI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T17:30:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாரம் இருக்கும்போது தலைக்கனம் அதிகரிக்கும் : ரோஹித அபேகுணவர்தன எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pride-increases-when-there-is-power-1787245296"></link>
            <id>https://tamilwin.com/article/pride-increases-when-there-is-power-1787245296</id>
            <summary type="text">அதிகாரம் கைவசம் இருக்கும்போது தலைக்கனம் ஏற்படுவதாகவும், அதிகாரத்தை இழந்த
பின்னரே தமது தவறுகள் குறித்துச் சிந்திக்கத் தோன்றுவதாகவும் எதிர்க்கட்சி
நாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிகாரம் கைவசம் இருக்கும்போது தலைக்கனம் ஏற்படுவதாகவும், அதிகாரத்தை இழந்த
பின்னரே தமது தவறுகள் குறித்துச் சிந்திக்கத் தோன்றுவதாகவும் எதிர்க்கட்சி
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.</p><p>

தாங்கள் தவறு செய்தால் அதனைத் தவறு என ஏற்றுக்கொண்டு உணரக்கூடிய மனப்பக்குவம்
கொண்டவர்கள் எனக் குறிப்பிட்ட அவர், "அதிகாரம் கைவசம் இருக்கும்போது தலைக்கனம்
அதிகரிக்கின்றது. அதிகாரம் கையை விட்டுச் செல்லும்போதுதான், 'நமக்கு என்ன
நடந்தது?' எனச் சிந்திக்கத் தோன்றுகின்றது.</p><p> அதிகாரம் இருக்கும் இடத்தில்
புத்தி இருப்பதில்லை, புத்தி வரும்போது கையில் அதிகாரம் இருப்பதில்லை" என்று
தெரிவித்தார்.</p><h2>வாய்ப்பு இல்லை</h2><p>
</p><p>
தற்போது ஆட்சியில் இருப்பவர்களிடம் உண்மையைச் சொன்னால், சாரைப்பாம்பு மீது
மண்ணெண்ணெய் ஊற்றியது போலத் துடிக்கின்றார்கள் எனக் குற்றம் சாட்டிய அவர்,
கடந்த 30 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும்
இருந்து மக்களுடன் பயணித்த அனுபவம் தமக்கு உண்டு என குறிப்பிட்டார்.
</p><p>
எதிர்காலத்தில் ஆளும் தரப்பினருக்கு அதிகாரமும் நாடாளுமன்ற ஆசனங்களும் இல்லாத
நிலை ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9153530-9ce6-465a-bf58-f31445a7942b/26-6a8732f29d970.webp' /></p><p>

நாட்டில் நிலவும் வரிச்சுமை குறித்துக் கடுமையாக விமர்சித்த அவர், சாதாரண
குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திருமண விருந்துக்காக விடுதிக்குச் சென்று
உணவருந்தும்போது கூட அந்த உணவுக்கும் 18 சதவீத பெறுமதி சேர் வரி
விதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டினார்.</p><p> வியாபாரிகளுக்குச் செலுத்திய வரியை
மீளப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புள்ளபோதிலும், சாதாரண நுகர்வோருக்கு அந்த
வாய்ப்பு இல்லை என்றார்.
</p><p>
வரிச்சுமையின் தாக்கம் காரணமாக மக்கள் படும் துயரத்தைக் குறிப்பிட்ட அவர்,
திருமண விருந்துக்குச் சென்றுவிட்டு பின்னர் விவாகரத்து செய்ய வேண்டிய
நிலைக்குச் சாதாரண மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்று நகைச்சுவை கலந்த தொனியில்
தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T17:02:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலாவதியான குழந்தை பால் மா வைத்திருந்த வணிக நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டது அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fines-imposed-expired-infant-formula-1787242050"></link>
            <id>https://ibctamil.com/article/fines-imposed-expired-infant-formula-1787242050</id>
            <summary type="text">தரமற்ற மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களையும், காலாவதியான குழந்தை பால் மாவையும் விற்பனைக்கு வைத்திருந்ததற்காக, கொழும்பில் உள்ள இரண்டு வணிக நிறுவனங்களுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தரமற்ற மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களையும், காலாவதியான குழந்தை பால் மாவையும் விற்பனைக்கு வைத்திருந்ததற்காக, கொழும்பில் உள்ள இரண்டு வணிக நிறுவனங்களுக்கு அளுத்கடே எண். 05 பிரதான நீதவான் நீதிமன்றம் மொத்தம் ரூ. 300,000 அபராதம் விதித்துள்ளது.
</p><p>
கொழும்பு மாவட்ட செயலகத்துடன் இணைக்கப்பட்ட நுகர்வோர் விவகாரங்கள் அதிகார சபையின் (CAA) புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனைகளைத் தொடர்ந்து இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.</p><h2>தரச் சான்றிதழ் சின்னம் இல்லாமல் விற்கப்பட்ட தலைக்கவசங்கள்</h2><p>முதல் வழக்கில், கொழும்பு 10, ஜயந்த வீரசேகர மாவத்தையில் உள்ள எஸ்.ஆர். அப்பெக்ஸ் மோட்டோகார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சம்பந்தப்பட்டது. அங்கு, தேவையான எஸ்.எல்.எஸ் 517 தரச் சான்றிதழ் சின்னம் இல்லாமல், எல்.எஸ்.எஸ் முத்திரையிடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாதுகாப்புத் தலைக்கவசங்கள் ஒவ்வொன்றும் ரூ. 1,800-க்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

நிறுவனம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதிமன்றம் ரூ. 200,000 அபராதம் விதித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9e81767-4652-4f3b-b099-164abe5a7cbd/26-6a872d83af9ed.webp' /></p><h2>காலாவதியாகும் நிலையில் இருந்த&nbsp;குழந்தை பால்மா</h2><p>இரண்டாவது வழக்கில், கொழும்பு 06, தர்மராம சாலையில் உள்ள அலிஃப் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் நடத்தப்படும் ஏ. லைஃப் பார்மசியில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ​​2026 பெப்ரவரி 1 அன்று காலாவதியாகும் நிலையில் இருந்த கேப்ரல் லாக் கோல்ட் குழந்தை பால்மாபொதிகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07c107cb-54bb-4b6a-a4fb-7c78f2b8cfbd/26-6a872d8480fcf.webp' /></p><p>
</p><p>
அந்த நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, நீதிமன்றம் ரூ. 100,000 அபராதம் விதித்தது.</p><p>மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களை வாங்கும்போது எஸ்.எல்.எஸ் 517 சான்றிதழைச் சரிபார்க்குமாறும், உணவுப் பொருட்கள், குறிப்பாக சிசு மற்றும் குழந்தைகளுக்கான உணவை வாங்கும்போது காலாவதி திகதிகளைக் கவனமாகச் சரிபார்க்குமாறும் நுகர்வோர் விவகார அதிகாரசபை(CAA) நுகர்வோரை வலியுறுத்தியது.
</p><p>
நுகர்வோர் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கான முறையான பற்றுச்சீட்டுகளை பெற்று வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டனர்.</p><p>

தரமற்ற, காலாவதியான அல்லது தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்களின் விற்பனையை அலுவலக நேரங்களில் தனது 1977 நுகர்வோர் தகவல் தொடர்பு எண் மூலம் புகாரளிக்குமாறு CAA பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T16:47:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லை உயர்வு: நாமல் எம்.பி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/raising-the-retirement-age-limit-for-judges-1787241774"></link>
            <id>https://tamilwin.com/article/raising-the-retirement-age-limit-for-judges-1787241774</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின்
முன்மொழிவானது, நீதித்துறை மீதான அரசியல் செல்வாக்கை அதிகரிப்பதற்கும்,
தங்களது பாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின்
முன்மொழிவானது, நீதித்துறை மீதான அரசியல் செல்வாக்கை அதிகரிப்பதற்கும்,
தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்குமான முயற்சியாகும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>இன்றையதினம்(20.8.2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>&nbsp;22ஆவது அரசமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வந்து நீதிமன்ற நடவடிக்கைகளில்
செல்வாக்கு செலுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்த
நடவடிக்கைக்கு மகாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஐக்கிய
நாடுகள் சபை மற்றும் காமன்வெல்த் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும்
எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.</p><h2>முறைப்பாடுகள்</h2><p>அவர் மேலும் உரையாற்றுகையில்,

"16 வயதுக்குட்பட்ட சிறுவர்களைத் தொழிலில் ஈடுபடுத்துவது தொடர்பான அபராதங்களை
அதிகரிப்பதில் எமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4545d2f4-bfd7-4822-ad10-2ee84ac5f657/26-6a872d462966a.webp' /></p><p> எனினும், இது தொடர்பாக
இதுவரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் அரசாங்கம் எடுத்துள்ள
நடவடிக்கைகள் குறித்த முழுமையான விவரங்களை வெளியிட வேண்டும்.

18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கே வேலைவாய்ப்புக் கிடைக்காத சூழ்நிலை
நிலவுகின்றது.</p><p>தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதோடு, விவசாயிகள் மற்றும்
கடற்றொழிலாளர்கள் தங்கள் உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாமல் பெரும்
சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/v9WLT_Ja8gI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>மருந்துகளுக்கு தட்டுப்பாடு</h2><p>
</p><p>
அரச வைத்தியசாலைகளில் புற்றுநோயாளிகளுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகரிக்கும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளுக்குக் கடும்
தட்டுப்பாடு நிலவுகின்றது எனக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b84cacef-17b8-4684-a95d-0c2ea4b743cc/26-6a872d46d2370.webp' /></p><p>நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்த
கருத்துக்கள் ஹன்சார்ட் அறிக்கையிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத்
தெரிவித்த அவர், இந்த விடயம் குறித்து ஆராய்வதற்கு உடனடியாகத்
தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-20T16:38:14+00:00</updated>
        </entry>
    </feed>
