<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-07T15:14:24+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே இரவில் 6 ஆலயங்களில் திருட்டு; மக்கள் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/theft-at-six-hindu-temples-in-a-single-night-1788786643"></link>
            <id>https://jvpnews.com/article/theft-at-six-hindu-temples-in-a-single-night-1788786643</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கண்டி, பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு தோட்டப் பகுதிகளிலும் நகர்பகுதிகளிலும் அமைந்துள்ள ஆலயங்களில், ஒரே இரவில் பல திருட்டுச் சம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கண்டி, பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு தோட்டப் பகுதிகளிலும் நகர்பகுதிகளிலும் அமைந்துள்ள ஆலயங்களில், ஒரே இரவில் பல திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இந்த திருட்டு ச்சம்பவங்கள் 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவில் நடந்தேறியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8f18f50-2d2b-4f69-8255-f4c446572ad1/26-6a9eb7d51ceb2.webp' /></p><h2>தங்க நகைகள், உண்டியல்கள்&nbsp;&nbsp;திருட்டு</h2><p>

மடுல்கலை, உன்னகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், டீமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், உளுகங்கை ஸ்ரீ விநாயகர் ஆலயம், உளுகங்கை கம்பளிக்கடை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், தவலந்தன்னை கந்தகட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், அகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களிலேயே இந்தத் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.</p><p></p><p>

திருவுருவச் சிலைகளில் அணியப்பட்டிருந்த தங்க நகைகள், உண்டியல்கள் மற்றும் ஆலயத்தின் பல்வேறு பொருட்கள் பலவற்றை, திருடர்கள் மிகவும் சூட்சுமமாகத் திட்டமிட்டு ஒரே இரவில் பல ஆலயங்களிலிருந்து திருடிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>


 திருட்டு சம்பவங்கள் தொடர்பாகப் பன்விலை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பன்விலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-07T15:00:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க கடற்படையின் முற்றுகைக் கோடு! ஹோர்முஸ் நிரிணையில் கட்டுப்பாட்டு மண்டலத்தை அமைக்கவுள்ள ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-to-establish-control-zone-in-strait-of-hormuz-1788792755"></link>
            <id>https://ibctamil.com/article/iran-to-establish-control-zone-in-strait-of-hormuz-1788792755</id>
            <summary type="text">அமெரிக்காவுக்கும் மத்திய கிழக்கு நாடான ஈரானுக்கும் இடையே சமீபத்தில் நடந்த மோதலை தொடர்ந்து, ஹோர்முஸ் நிரிணைக்கு அருகில் ஒரு கட்டுப்பாட்டு மண்டலத்தை ஈரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுக்கும் மத்திய கிழக்கு நாடான ஈரானுக்கும் இடையே சமீபத்தில் நடந்த மோதலை தொடர்ந்து, ஹோர்முஸ் நிரிணைக்கு அருகில் ஒரு கட்டுப்பாட்டு மண்டலத்தை ஈரான் அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்படி அடுத்த சில நாட்களில் நீரிணைக்கு அருகில் ஒரு புதிய கட்டுப்பாட்டு மண்டலம் அறிவிக்கப்பட உள்ளதாக ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு மன்றத்தின் செயலாளர் மேஜர் ஜெனரல் மொஹ்சென் ரெசாய் இன்று(07.09.2026) தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;அந்த மண்டலத்திற்குள் வரும், ஈரானியர்களுடன் ஒத்துழைக்காத அனைத்து கப்பல்களும் தடைகள் பட்டியலில் சேர்க்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><h2>எண்ணெய் மற்றும் எரிவாயு விலை</h2><p>இது குறித்து மேலும் கருத்து வெளியிடுகையில், “ இது அமெரிக்க கடற்படையின் முற்றுகைக் கோட்டிலிருந்து தொடங்கி பாரசீக வளைகுடாவின் சில பகுதிகள் வரை நீட்டிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ce5d941-590b-4c4f-9d41-0a2ed72d01b4/26-6a9ecfb56434e.webp' /></p><p>ஈரான் போர் ஆறு மாதங்களைக் கடந்துள்ள நிலையில், இந்த மோதல் அமெரிக்காவின் வரலாற்று நட்பு நாடுகளுடனான உறவுகளைச் சீர்குலைத்துள்ளது.</p><p>ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதன் மத்தியில் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகளை உயர்த்தியுள்ளது.</p><p>மேலும், சமீபத்திய கருத்துக் கணிப்புகளில் அமெரிக்கப் பொதுமக்களிடையே இது செல்வாக்கற்றதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.</p><p>தொலைவிலிருந்து இயக்கப்படும் ஒரு அமெரிக்க இராணுவக் கப்பல், இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையால் (IRGC) தாக்கப்பட்டதாக அந்த இராணுவக் குழு தெரிவித்துள்ளது.</p><p>சர்வவல்லமையுள்ள இறைவனின் அருளாலும் கருணையாலும், எதிரியின் ஒவ்வொரு தீவிர முயற்சியும், வீரமும் தியாக மனப்பான்மையும் கொண்ட ஐ.ஆர்.ஜி.சி கடற்படையினரால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு, தீர்க்கமான தாக்குதல் மூலம் முறியடிக்கப்படும்” என கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T14:52:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நள்ளிரவில் நடத்தப்பட்ட சோதனை: மணல் ஏற்றிய வாகனம் பறிமுதல் - சந்தேக நபர்கள் தப்பியோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/midnight-raid-in-jaffna-1788792586"></link>
            <id>https://tamilwin.com/article/midnight-raid-in-jaffna-1788792586</id>
            <summary type="text">யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில்
மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மருதங்கேணி பொலிஸாரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில்
மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மருதங்கேணி பொலிஸாரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த நடவடிக்கை நேற்று(06.09.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2> 



மணல் ஏற்றிய வாகனம் பறிமுதல்</h2><p>

சம்பவம் குறித்து மெலும் தெரிய வருகையில்,
</p><p>
கட்டைக்காடு பகுதியில் இரவு நேரத்தில் சில உழவு இயந்திரங்கள் மூலம்
சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி அருகில் உள்ள கேவில், நித்தியவெட்டை,
வெற்றிலைக்கேணி பகுதிகளுக்கு கொண்டு செல்வதாக மருதங்கேணி பொலிஸாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7f45fb1-f50c-4c7f-9540-6f71436b60c0/26-6a9ecf589f5e4.webp' /></p><p> </p><p>

இதன் அடிப்படையில், குறித்த பகுதியை நேற்று(6) இரவு சுற்றிவளைத்த மருதங்கேணி
பொலிஸ் பொறுப்பதிகாரி கெலும் பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் மணல் ஏற்றிய உழவு இயந்திரத்தை கைப்பற்றியுள்ளனர்.</p><p>

தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன்
கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி
பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
</p><p>
உழவு இயந்திரம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த நபர்
ஒருவருக்கு சொந்தமானது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்த நிலையில், குறித்த பகுதியில் இருந்து மேலும் ஒருவரும், கேவில் பகுதியில் இருந்து
இன்னொருவரும் தொடர்ச்சியாக களவாக மணல் ஏற்றிவருவது தொடர்பில் பொலிஸார் அவதானம் செலுத்தியுள்ளதுடன், விரைவில் அவர்களை கைது செய்யும் பணி முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp; &nbsp; </p><p>&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T14:51:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[73ஆவது உலக அழகி போட்டி : 44 ஆண்டுகளுக்குப் பிறகு டொமினிகன் குடியரசுக்கு உலக அழகி பட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/miss-world-2026-dominican-republic-joheiry-mola-1788787076"></link>
            <id>https://manithan.com/article/miss-world-2026-dominican-republic-joheiry-mola-1788787076</id>
            <summary type="text">வியட்நாமில் நடைபெற்ற 73ஆவது உலக அழகி போட்டியில் டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹெய்ரி மொலா டொமிங்கஸ் உலக அழகி பட்டத்தை வென்றார்.

நடப்பாண்டுக்கான உல...</summary>
            <content type="html"><![CDATA[<p>வியட்நாமில் நடைபெற்ற 73ஆவது உலக அழகி போட்டியில் டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹெய்ரி மொலா டொமிங்கஸ் உலக அழகி பட்டத்தை வென்றார்.

நடப்பாண்டுக்கான உலக அழகி போட்டியில் 111 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர். </p><p>பல்வேறு சுற்றுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட எரித்தியா, ஸ்பெயின், மலேசியா, வியட்நாம், டொமினிகன் குடியரசு மற்றும் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த போட்டியாளர்கள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33ef50ba-fede-4fdc-8e29-87a7a4081c1b/26-6a9eca9323223.webp' /></p><p></p><h2>44 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த வெற்றி&nbsp;</h2><p>
</p><p>
இறுதிச்சுற்றில் சிறப்பாகப் போட்டியிட்ட டொமினிகன் குடியரசைச் சேர்ந்த 24 வயதான ஜோஹெய்ரி மொலா டொமிங்கஸ், உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3a25e5e-a49d-471f-b12c-2ee2cd8c5b8a/26-6a9eca93d4387.webp' /></p><p></p><p> </p><p>ஆசிரியர், பத்திரிகையாளர் மற்றும் சமூகப் பணியாளர் எனப் பன்முகத் திறமைகளைக் கொண்ட இவர், தனது வெற்றியின் மூலம் டொமினிகன் குடியரசின் அழகிப் போட்டி வரலாற்றில் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.</p><p>இதனிடையே, ஸ்பெயினைச் சேர்ந்த எலிசபெத் ரெய்னெஸ் முதல் ரன்னர் அப்பாகவும், மலேசியாவைச் சேர்ந்த டானுசியா செட்டி இரண்டாவது ரன்னர் அப்பாகவும் தேர்வு செய்யப்பட்டடுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75a11395-ad94-442f-b05e-62af0e6608b4/26-6a9eca926c3a4.webp' /></p><p>சுமார் 44 ஆண்டுகளுக்குப் பிறகு டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஒருவர் உலக அழகி பட்டத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T14:31:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த ஆபத்தான நபர் - நள்ளிரவில் கொடூரமாக வெட்டிக்கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-killed-who-returned-to-sri-lanka-1788790718"></link>
            <id>https://tamilwin.com/article/man-killed-who-returned-to-sri-lanka-1788790718</id>
            <summary type="text">கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில், வெளிநாட்டிலிருந்த வந்த குற்றக் கும்பலுடன் தொடர்புடைய நபர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். 

இந்த கொல...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில், வெளிநாட்டிலிருந்த வந்த குற்றக் கும்பலுடன் தொடர்புடைய நபர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். </p><p>

இந்த கொலை சம்பவம் தெஹிவளை ஓபன் பகுதியில் இன்று அதிகாலை 1.45 மணியில் இடம்பெற்றுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளார். </p><p>

திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கொஸ் மல்லி என்பவரின் உறவினரான பூத களுவா என்ற நபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><h2><b>

குத்தி கொலை</b></h2><p>நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று வீட்டுக்குள் நுழைந்து உறக்கத்தில் இருந்த களுவா மீது கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7321441-bbe1-4e71-b2ea-c6cc96912148/26-6a9eca660dd26.webp' /></p><p>படுகாயம் அடைந்த களுவா, களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p> 

கொலை செய்யப்பட்ட நபர், திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கொஸ் மல்லி என்பவருடன் பல வருடங்கள் டுபாயில் தங்கியிருந்துள்ளார். </p><p>

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டதையடுத்து, அவர் சில வாரங்களுக்கு முன்பு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். </p><p>

இந்தக் கொலையைத் திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான படோவிட்ட அசங்கவின் தரப்பினர் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.&nbsp;</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jaiQIN4g2fs" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p> 
</p>]]></content>
            <updated>2026-09-07T14:30:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறந்துவிட்டதாக தகனம் செய்த பெண் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lucknow-woman-dead-cremated-returns-alive-1788784885"></link>
            <id>https://jvpnews.com/article/lucknow-woman-dead-cremated-returns-alive-1788784885</id>
            <summary type="text">&amp;nbsp; இறந்துவிட்டதாக தகனம் செய்த பெண் உயிருடன் வந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இந்தியாவில் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இறந்துவிட்டதாக தகனம் செய்த பெண் உயிருடன் வந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இந்தியாவில் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, </p><p>

லக்னோவின் பி.கே.டி பகுதிக்கு உட்பட்ட நாவிகோட் நந்தனா கிராமத்தைச் சேர்ந்த ஷிவானி என்ற பெண், கடந்த 2024-ஆம் ஆண்டு மே 2-ஆம் தேதி திடீரென காணாமல் போனார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae56e3be-8150-45f8-893e-fc2e2fe7e838/26-6a9eb0f719e6c.webp' /></p><h2>கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட எரிக்கப்பட்ட பெண் யார்?</h2><p> </p><p>

 அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், 2024 ஜூலை 16 அன்று ஐ.ஐ.எம் சாலைக்கு பின்புறம் உள்ள ஒரு கழிவுநீர் கால்வாயில் இருந்து அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலத்தை காவல்துறை மீட்டது.</p><p> 
உடலை பார்வையிட்ட ஷிவானியின் குடும்பத்தினர், கையில் கட்டப்பட்டிருந்த காப்பு மற்றும் விரலில் இருந்த மோதிரத்தை வைத்து அது ஷிவானிதான் என அடையாளம் காட்டி மயானத்தில் தகனமும் செய்தனர்.</p><p></p><p>

 அத்துடன் ஷிவானியின் குடும்பத்தினர் அவருடைய கணவர் மற்றும் மாமனார் வீட்டினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஷிவானியை வரதட்சணைக்காகக் கொடுமைப்படுத்தி கொலை செய்து உடலை வீசிவிட்டதாகக் குற்றம் சாட்டினர்.</p><p> இதன் அடிப்படையில் காவல்துறை வரதட்சணைக் கொடுமை, கடத்தல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியது.</p><p></p><p>


 எனினும் உடற்கூறாய்வு மற்றும் தடயவியல் சோதனைகளின் ஒரு பகுதியாக டி.என்.ஏ மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அதில், தகனம் செய்யப்பட்ட உடலின் டி.என்.ஏ மாதிரியும், ஷிவானியின் பெற்றோரின் டி.என்.ஏ மாதிரியும் பொருந்தவில்லை.</p><p> இதனால், மீட்கப்பட்ட உடல் ஷிவானியுடையது அல்ல என்பது தெரியவந்ததை அடுத்து, வரதட்சணைக்கொடுமை பிரிவுகள் வழக்கில் இருந்து நீக்கப்பட்டன.</p><p></p><p>
</p><p>
இந்நிலையில், காணாமல் போய் 27 மாதங்கள் கழித்து கடந்த சனிக்கிழமை அன்று ஷிவானி திடீரென தனது பெற்றோர் வீட்டிற்கு நேரில் வந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும் காவல்துறையினரும் அவரிடம் விசாரணை நடத்தினர். </p><p>

விசாரணையில், ஷிவானி பரா பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை பராமரிப்பில் இருக்கும் கழிப்பறையை நிர்வகித்து வரும் ஜாவேத் என்பவருடன் தங்கியிருந்தது தெரியவந்தது. 

ஷிவானி உயிருடன் திரும்பியதைத் தொடர்ந்து, காவல்துறையினர் இந்த வழக்கை மீண்டும் தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். </p><p> 

அதேவேளையில், லக்னோ காவல்துறைக்கு மற்றொரு பெரிய புதிர் எழுந்துள்ளது. ஷிவானி உயிருடன் இருக்கும் பட்சத்தில், கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட எரிக்கப்பட்ட பெண் யார், அவரைப் படுகொலை செய்தது யார் என்ற கோணத்தில் காவல்துறை தங்களது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-07T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஷம் குடித்து உயிருக்கு போராடும் திவ்யா... கிருஷ்ண ஜெயந்தி விழாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! - திருமாங்கல்யம் இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/thirumangalyam-serial-today-episode-07-09-2026-1788772505"></link>
            <id>https://viduppu.com/article/thirumangalyam-serial-today-episode-07-09-2026-1788772505</id>
            <summary type="text">தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் திருமாங்கல்யம். கடந்த ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் திருமாங்கல்யம். கடந்த சண்டே ஸ்பெஷல் எபிசோடில் கிருஷ்ண ஜெயந்தி நாடகம் நடைபெற்று முடிந்த நிலையில், ராதையாக நடித்த திவ்யா திடீரென வாயில் ரத்தம் வடிந்தபடி "நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது" என்று கூறி சரிந்து விழுந்தார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.</p><p>&nbsp;திவ்யாவின் வாயிலிருந்து உண்மையாகவே ரத்தம் வருவதை பார்த்து அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது பிளாஷ்பேக்கில், கவிதா பானத்தில் விஷம் கலந்தது தெரியவருகிறது. திவ்யாவின் நிலைமை மோசமடைந்ததால், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/674f46a3-b7c5-4fd2-bd5d-830749c18c6d/26-6a9e809c649c0.webp' /></p><p>மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர், திவ்யா எந்த வகையான விஷத்தை குடித்திருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டால்தான் சரியான சிகிச்சை அளிக்க முடியும் என்று கூறுகிறார். விஷம் இருந்த பாட்டில் கிடைத்தால் மட்டுமே அதற்கேற்ற சிகிச்சையை விரைவாக தொடங்க முடியும் எனவும் தெரிவிக்கிறார்.</p><p>இதற்கிடையில், நடந்த அனைத்திற்கும் மகாதான் காரணம் என்று நம்பும் காஞ்சனா, மகா மீது கடும் கோபம் கொள்கிறாள். அவரை அனைவரின் முன்னிலையிலும் திட்டி மருத்துவமனையை விட்டு வெளியே தள்ளுகிறாள். இதனால் மனமுடைந்த மகா அங்கே நிற்கிறாள்.
</p><p>அப்போது காவேரி மற்றும் மயில், விஷம் கலந்த பாட்டிலை கண்டுபிடிக்க வீட்டிற்கு சென்று தேடலாம் என்று முடிவு செய்கின்றனர். மூவரும் வீட்டிற்குச் சென்று தீவிரமாக தேடியபோது, இறுதியில் மகாவின் கையிலேயே அந்த விஷப் பாட்டில் சிக்குகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1187b5b6-80e7-4e6f-840c-0608d4509c5d/26-6a9e809d2290e.webp' /></p><p>மறுபக்கம் மருத்துவமனையில் திவ்யாவின் உடல்நிலையை நினைத்து அனைவரும் பதற்றத்துடன் காத்திருக்கின்றனர். அப்போது மகா விஷப் பாட்டிலுடன் மருத்துவமனைக்கு வருகிறாள். ஆனால் அதைப் பார்த்த காஞ்சனா, “நீதான் விஷம் கலந்திருக்கிறாய்... இப்போது நாடகம் ஆடி பாட்டிலையும் கொண்டு வந்திருக்கிறாய்” என்று மகா மீது மேலும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறாள்.
</p><p>இப்படி பரபரப்பான திருப்பங்களுடன் நகரும் இந்தக் கதையில், திவ்யா உயிர் பிழைப்பாரா? விஷம் கலந்ததற்கான உண்மையான காரணம் வெளிச்சத்துக்கு வருமா? மகா தன் மீதான குற்றச்சாட்டிலிருந்து தப்பிப்பாரா? என்பதை அறிய திருமாங்கல்யம் சீரியலை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு Zee தமிழ் தொலைக்காட்சியில் தவறாமல் காணுங்கள்.
&nbsp;</p><p>
</p>]]></content>
            <updated>2026-09-07T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை நாடாளுமன்றத்திற்கு வருகைத்தரவுள்ள நாமல்! சிறைச்சாலை ஆணையாளரை சென்றடைந்த கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-to-visit-parliament-tomorrow-1788790484"></link>
            <id>https://ibctamil.com/article/namal-to-visit-parliament-tomorrow-1788790484</id>
            <summary type="text">எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச விடுத்த கோரிக்கைக்கு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் பதில் வழங்கியுள்ளார்.</p><p>

குறித்த கோரிக்கை தொடர்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சட்டத்தரணி குஷானி ரோஹணதீர, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
</p><p>
இதற்கமைய, நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வருகை தருவதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற செயலாளர் நாயகம், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளார்.</p><p></p><h2>நாமல் ராஜபக்ச</h2><p>




இந்தக் கோரிக்கைக்கமைய, நாமல் ராஜபக்ச நாளை (08) நாடாளுமன்றத்திற்கு வருகை தருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbc2a2e8-92a6-4a78-b684-c81458a73bca/26-6a9ec6d7216b2.webp' /></p><p>இதன்படி நாடாளுமன்றம் நாளை முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை கூடவுள்ளது.
</p><p>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள முன்னதாக அனுமதி கோரியிருந்தார்.</p><p></p><h2>எழுத்துபூர்&nbsp;கோரிக்கை</h2><p>இந்த கோரிக்கையானது சபாநாயகருக்கு எழுத்துபூர்வமாக அனுப்பப்பட்டிருந்தது.</p><p>



நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் மற்றும் நடைமுறையில் உள்ள மரபுகளுக்கு அமைய சபாநாயகர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என முன்னதாக கூறப்பட்டது.</p><p>அதன்படி, நாடாளுமன்றத்தின் தற்போதைய மரபுகளுக்கு அமைய, நாளை (08) நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் நாமல் ராஜபக்ச கலந்துகொள்ளகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T14:22:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய வீராங்கனை ஆட்டமிழந்ததும் சைகை - பாகிஸ்தான் கேப்டனுக்கு அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pakistan-captain-fatima-fined-for-send-off-gesture-1788789509"></link>
            <id>https://news.lankasri.com/article/pakistan-captain-fatima-fined-for-send-off-gesture-1788789509</id>
            <summary type="text">இந்திய வீராங்கனை ஷிபாலி வர்மா ஆட்டமிழந்ததும் அவரை நோக்கி சைகை செய்த பாகிஸ்தான் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் கேப்டனுக்கு அபர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய வீராங்கனை ஷிபாலி வர்மா ஆட்டமிழந்ததும் அவரை நோக்கி சைகை செய்த பாகிஸ்தான் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. </p><h3>

பாகிஸ்தான் கேப்டனுக்கு அபராதம்</h3><p> 


2026 மகளிர் ஆசிய கிண்ண தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.&nbsp;</p><p>

பாகிஸ்தான் 55 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, 8.4 ஓவர்களில் 57 ஓட்டங்கள் குவித்து இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e53154d2-04a9-4707-846c-e6241f6b3c57/26-6a9ec30747dc8.webp' /></p><p>

இந்தியா 1.3 ஓவர்களில் 13 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய வீராங்கனை ஷிபாலி வர்மா, பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா பந்தை அடித்து அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p></p><p> 

ஷிபாலி வர்மாவின் விக்கெட்டை வீழ்த்தியதும் வெளியே போ என்ற ரீதியில், பாத்திமா சனா சைகை செய்தார். </p><p>

இது ஐசிசி நன்னடத்தை விதியை மீறியதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், குற்றத்தை ஒப்புக்கொண்ட பாத்திமா சனாவிற்கு போட்டிக்கான கட்டணத்தில் 10 சதவீதம் அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T14:05:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் எம்.பிக்கள் சிலருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு வழங்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/corruption-charges-filed-against-former-batti-mps-1788789710"></link>
            <id>https://ibctamil.com/article/corruption-charges-filed-against-former-batti-mps-1788789710</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மீது
ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக&amp;nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் கந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மீது
ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக&nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.</p><p>மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.</p><p>மேலும் கருத்து வெளியிட்ட அவர்,&nbsp;</p><p></p><h2>தீவிர&nbsp;விசாரணை</h2><p>“குற்றச்சாட்டுகள் தொடர்பாக மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfb5cdca-c0bc-42de-aa13-bad916f9d5f1/26-6a9ec3d114b7b.webp' /></p><p>சட்டத்திற்கு மதிப்பளித்து அனைவரும் செயல்பட வேண்டும் என்பதோடு,
விசாரணையின் முடிவில் எட்டப்படும் தீர்மானங்கள் எவ்வித தலையீடுமின்றி
நடைமுறைப்படுத்தப்படும்.</p><p>

சட்ட ஆட்சியை நடைமுறைப்படுத்தும் ஒரு அரசாங்கம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்
எனவே ஜனாதிபதி வேட்பாளராக இருந்தவர்கள் ஆளுநராக இருந்தவர்கள் இப்போது
நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் அதே சட்டம் பாயும்.
</p><p>
நாமல் ராஜபக்ச தற்போது சிறைவாசம் அனுபவித்து கொண்டிருக்கும் நிலையில்
சமூகத்தில் பலவிதமான கருத்துக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p> அதே நேரத்தில்
முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க,
கடந்த காலங்களில் எதிர்க்கட்சி ஆளும் கட்சியாக இருந்த காலத்தில் ராஜபக்ச
குடும்பத்தினரை 'திருடர்கள்' என பகிரங்கமாக விமர்சித்தார்.</p><p></p><h2>ராஜபக்சர்களின் தலைவராக ரணில்</h2><p>
</p><p>
இவ்வாறு ராஜபக்ஸக்கள் திருடர்கள் என சொன்ன ரணில் கடந்த காலத்தில் அவர்களுடன்
சேர்ந்து ஆட்சி பீடம் ஏறிய அவர் இன்று அந்த திருடர்களுக்கு ஆதரவாக குரல்
கொடுத்து வருகின்றார்.</p><p>
ரணிலுக்கு அன்று ராஜபக்சர்கள் திருடர்களாக தெரிந்தது. இன்று அவர்கள் நல்லவர்கள்
போல தெரிகின்றது. </p><p>ஆகவே இந்த திருட்டுக் கும்பலின் மகிந்த ராஜபக்சர்களின்
தலைவராக ரணில் விக்கிரமசிங்க பெறுப்பேற்றுள்ளார். </p><p>அவர்களின் செயல்பாடு இன்று
மக்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது

இந்த நாட்டை வங்குரோத்து அடைய காரணமாக இருந்தவர்களில் இவரும் ஒருவராக
இருந்துள்ளதுடன் குற்ற செயல்களுடன் சம்மந்தமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றது” என்றார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T14:02:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றம் செல்ல அனுமதி கோரும் நாமல் ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-seeks-permission-visit-parliament-1788785751"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-seeks-permission-visit-parliament-1788785751</id>
            <summary type="text">&amp;nbsp; விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் எழுத்துமூல கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>



ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாரித்துள்ள குறித்த கடிதம், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் ஊடாக சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/153796b9-865e-4a45-8cde-b498ab038b50/26-6a9eb45910c38.webp' /></p><p>
</p><p>


இந்தக் கோரிக்கை தொடர்பில் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் மற்றும் நடைமுறைகளுக்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p></p><p>
</p><p>


இதேவேளை, வழக்கமான நடைமுறைகளுக்கு அமைய நாமல் ராஜபக்ச நாளைய (08) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வார் என எதிர்பார்ப்பதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-07T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை கூடும் நாடாளுமன்றம் - நாமலின் கோரிக்கையை ஏற்ற அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-requested-to-join-parliament-session-1788781248"></link>
            <id>https://tamilwin.com/article/namal-requested-to-join-parliament-session-1788781248</id>
            <summary type="text">புதிய இணைப்புஎதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு விளக்கமறியலில் வைக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ச விடுத்த கோரிக்கைக்கு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் பதிலளித்துள்ளார்.
</p><p>
குறித்த கோரிக்கை தொடர்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சட்டத்தரணி குஷானி ரோஹணதீர, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.</p><p>

இதற்கமைய, நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வருகை தருவதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற செயலாளர் நாயகம், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46d2640a-6529-4038-b850-e74d42007f3b/26-6a9ec357be6b5.webp' /></p><p>
</p><p>
இந்தக் கோரிக்கைக்கமைய, நாமல் ராஜபக்ச நாளை (08) நாடாளுமன்றத்திற்கு வருகை தருவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

நாடாளுமன்றம் நாளை முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை கூடவுள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதி கோரியுள்ளார்.&nbsp;</p><h2>நாடாளுமன்ற அமர்வுகள்..&nbsp;</h2><p>
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் ஊடாக இலங்கை பொதுஜன பெரமுன விடுத்த இந்த எழுத்துப்பூர்வமான கோரிக்கை, தற்போது சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6864ee0e-bf63-453b-8acc-53fea132c400/26-6a9ea6a95bc25.webp' /></p><p>

நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் மற்றும் நடைமுறையில் உள்ள மரபுகளுக்கு அமைய சபாநாயகர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என சபாநாயகர் அலுவலகப் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.&nbsp;</p><p>
இதற்கிடையில், நாடாளுமன்றத்தின் தற்போதைய மரபுகளுக்கு அமைய, நாளை (08) நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் நாமல் ராஜபக்ச கலந்துகொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்று தாம் நம்புவதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MSY LIKE THIS..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/uEYkPlSoXv8" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-07T13:59:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[லட்சணமாக புடவையில் நடிகை மௌனி ராயின் வெளியிட்ட கலக்கல் போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-mouni-roy-saree-attire-photoshoot-1788784283"></link>
            <id>https://cineulagam.com/article/actress-mouni-roy-saree-attire-photoshoot-1788784283</id>
            <summary type="text">மௌனி ராய்பாம்பு என்றாலே பயந்துகொண்டிருந்த மக்கள் ரசித்து பார்க்க வைத்தவர் தான் நடிகை மௌனி ராய்.ஹிந்தியில் நாகினி என்ற சீரியலில் பாம்பாக நடித்ததன் மூலம...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மௌனி ராய்</h2><p>பாம்பு என்றாலே பயந்துகொண்டிருந்த மக்கள் ரசித்து பார்க்க வைத்தவர் தான் நடிகை மௌனி ராய்.</p><p>ஹிந்தியில் நாகினி என்ற சீரியலில் பாம்பாக நடித்ததன் மூலம் இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்ற மௌனி ராய் இப்போது படங்கள் நடித்து வருகிறார். படங்களில் இடம்பெறும் ஸ்பெஷல் பாடல்களிலும் நடனம் ஆடி வருகிறார்.</p><p>எப்போதும் கிளாமராக ஸ்டைலிஷ் உடையில் புகைப்படங்கள் வெளியிடும் மௌனி ராய் லட்சணமாக புடவையில் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.</p><p>இதோ அந்த போட்டோஸ்,</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T13:50:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் கோர விபத்து: வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இளைஞர் பரிதாப பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/new-brunswick-article-one-dead-following-1788780961"></link>
            <id>https://canadamirror.com/article/new-brunswick-article-one-dead-following-1788780961</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் நியூ பிரன்சுவிக் மாநிலத்தில் உள்ள கெட்ஜ்விக் ஆற்றுக்கு அருகில் உள்ள பால்ஸ் புரூக் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் நியூ பிரன்சுவிக் மாநிலத்தில் உள்ள கெட்ஜ்விக் ஆற்றுக்கு அருகில் உள்ள பால்ஸ் புரூக் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p>எதிரே வந்த வாகனத்துடன் மோதாமல் தவிர்க்க முயன்றபோது, ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால் இவ்விபத்து நேரிட்டுள்ளதாகப் பொலிஸார் நம்புகின்றனர்.</p><p>வாகனத்தில் பயணித்த ஒரேயொரு பயணியான 26 வயதுடைய இளைஞர், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bec6ca69-5f60-489d-90b8-58f2f59e957d/26-6a9ea1a342115.webp' /></p><p>
</p><p>செயிண்ட்-குவென்டின் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் ஓட்டுநருக்கு எந்தவித உடற்காயங்களும் ஏற்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>
இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T13:30:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச அலுவலகங்களுக்கு இனி செல்லத் தேவையில்லை! முக்கிய சேவைகள் குறித்து ஜனாதிபதியின் தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-more-trips-govt-offices-anura-kumara-says-1788786027"></link>
            <id>https://tamilwin.com/article/no-more-trips-govt-offices-anura-kumara-says-1788786027</id>
            <summary type="text">நாட்டின் டிஜிட்டல் மயமாக்கல் செயல்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கில், சுமார் 80 சதவீதமான அரசாங்க சேவைகளை கைபேசி ஊடலாக வீட்டிலிருந்தே பொதுமக்கள் பெற்றுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் டிஜிட்டல் மயமாக்கல் செயல்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கில், சுமார் 80 சதவீதமான அரசாங்க சேவைகளை கைபேசி ஊடலாக வீட்டிலிருந்தே பொதுமக்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதிகள் செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p> புளத்சிங்கள பகுதியில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். </p><p>இதற்காக அடுத்த வருட வரவு - செலவுத் திட்டத்தில் 30 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், நாடு தழுவிய ரீதியில் 4G அலைவரிசை சேவையை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2>முக்கிய சேவைகள்..&nbsp;</h2><p>
இதன்படி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெறுதல், காணி உரிமப் பத்திரப் பரிவர்த்தனைகள் மற்றும் வாகன வருமான உரிமங்களைப் பெறுதல் உள்ளிட்ட முக்கிய அரச சேவைகள் அனைத்தும் இணையவழியில் (Online) மாற்றப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/109770d1-49d9-4992-958d-d4b97744f153/26-6a9eba3d1beda.webp' /></p><p> </p><p>மேலும், நாடு முழுவதும் 4G வலையமைப்பை பூர்த்தி செய்யும் நோக்கில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 1,000 புதிய 4G கோபுரங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், அதில் 250 கோபுரங்களின் பணிகள் அடுத்த ஆண்டிலேயே நிறைவுசெய்யப்படவுள்ளன. </p><p>நெடுஞ்சாலைகள் மற்றும் தொடருந்து மின்மயமாக்கல் உள்ளிட்ட அரசாங்கத்தின் பிரம்மாண்ட உட்கட்டமைப்பு திட்டங்களின் ஒரு அங்கமாகவே இந்த டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Qb6I0-FcAr4" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-07T13:29:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிஸ் வேர்ல்ட் பட்​டத்தை வென்ற தமிழ் பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/taanusiya-chetty-3rd-won-the-miss-world-2026-1788766152"></link>
            <id>https://canadamirror.com/article/taanusiya-chetty-3rd-won-the-miss-world-2026-1788766152</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மிஸ் வேர்ல்ட் பட்​டத்தை டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா (வயது 24), வென்றுள்ளார்.

 ஸ்பெ​யினைச் சேர்ந்த எலிசபெத் 2 ஆம் இடத்​தை​...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மிஸ் வேர்ல்ட் பட்​டத்தை டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா (வயது 24), வென்றுள்ளார்.

 ஸ்பெ​யினைச் சேர்ந்த எலிசபெத் 2 ஆம் இடத்​தை​யும், மலேசியாவை சேர்ந்த தமிழ்ப் பெண்ணான தனுசியா செட்டி 3 ஆம் இடத்​தை​யும் பிடித்​தனர்.
</p><p>
வியட்​நாமின் காங் ஹோவா மாகாணம், நியா ட்ராங் நகரில் கடந்த ஓகஸ்ட் 8 ஆம் திகதி மிஸ் வேர்ல்டு உலக அழகிப் போட்டி தொடங்​கியது. 

இதில் இந்​தி​யா​வைச் சேர்ந்த நிகிதா போர்​வால் உட்பட 111 நாடு​களைச் சேர்ந்த போட்​டி​யாளர்​கள் பங்​கேற்​றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fb0d005-7f95-47ee-a99a-072ff28aaa91/26-6a9e67ca6bf76.webp' /></p><h2>மலேசியாவை சேர்ந்த தமிழ்ப் பெண்</h2><p> </p><p>அவர்​களுக்கு பல்​வேறு கட்​டங்​களாக போட்​டிகள் நடத்​தப்​பட்​டன.

வியட்​நாமின் நியா ட்ராங் நகரில் நேற்று முன்​தினம் மாலை இறுதிப் போட்டி நடை​பெற்​றது. முதல்​கட்​ட​மாக 111 போட்டியாளர்களில் இருந்து 40 பேர் தேர்வு செய்​யப்​பட்​டனர். இதில் இந்​தி​யா​வின் நிகிதா இடம் பெற்​றிருந்​தார். அதன்​பிறகு 20 பேர் தேர்வு செய்​யப்​பட்​டனர்.</p><p>

ஆனால் அந்​தப் பட்​டியலில் இந்​திய அழகி இடம்​பெற​வில்​லை. அடுத்த கட்​ட​மாக 12 போட்​டி​யாளர்​கள் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டனர். அவர்​களில் இருந்து 6 பேர் தேர்வு செய்யப்​பட்​டனர். நள்​ளிர​வில் முடிவு​கள் அறிவிக்​கப்​பட்​டன.
</p><p>
அப்​போது டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா முதலிடத்​தைப் பிடித்து ‘மிஸ் வேர்ல்​டு’ உலக அழகி பட்​டத்தை வென்​றார்.

 அவருக்கு கடந்த ஆண்டு பட்​டம் வென்ற தாய்​லாந்​தின் ஓபல் சுசாடா மகுடம் சூட்​டி​னார். ஸ்பெ​யின் நாட்டை சேர்ந்த எலிசபெத் ரெய்​னெஸ் (வயது 22) இரண்​டாவது இடம் பிடித்​தார்.

மலேசி​யா​வைச் சேர்ந்த தனுசியா செட்டி (வயது 25) மூன்​றாம் இடத்தைப் பெற்​றார். </p><p>அவரது தாய்​மொழி தமிழ் ஆகும்.

 அவரது தந்தை வீர​பாண்​டியன். 14 வயதில் தாயை இழந்த தனுசியா தந்தை​யின் அரவணைப்​பில் வளர்ந்​தார். அவர் கொடுத்த ஊக்கத்தால் மிஸ் மலேசியா பட்​டம் வென்​று, மிஸ் வேர்ல்டு போட்டி​யில் நுழைந்​தார்.
</p><p>
வியட்​நாமில் நடை​பெற்ற மிஸ் வேர்ல்டு போட்​டி​யின்​போது ஆங்​கிலம், மலாய், மாண்​டரின், தமிழ் ஆகிய 4 மொழிகளில் தனுசியா சரள​மாக பேசி​னார். “மாற்​றம் என்​பது நமக்​குள் இருந்தே தொடங்க வேண்​டும்” என்று அவர் 4 மொழிகளில் பேசிய வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாக பரவி வரு​கிறது.</p>]]></content>
            <updated>2026-09-07T13:28:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வியாபாரியிடம் மனைவியை இலஞ்சமாக கேட்ட பொலிஸ்! தமிழர் பகுதியில் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-demands-money-and-businessman-wife-bribe-1788777548"></link>
            <id>https://jvpnews.com/article/police-demands-money-and-businessman-wife-bribe-1788777548</id>
            <summary type="text">&amp;nbsp;திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்கு இலஞ்சமாக பணமும் மற்றும் வியாபாரியின் மனைவியை பாலியல் இலஞ்சாமக கோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்கு இலஞ்சமாக பணமும் மற்றும் வியாபாரியின் மனைவியை பாலியல் இலஞ்சாமக கோரிய சம்பவம் தொடர்பாக பொலிஸ் உப பரிசோதகர் பணி நீக்கப்பம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>

 மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் நிலையத்தில் கடமையயாற்றிவரும் ஓட்டுமாவடியைச் சோந்த பொலிஸ் உப பரிசோதகர் (எஸ்.ஜ) ஒருவரை&nbsp; &nbsp;சனிக்கிழமை (5) பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2ed3c44-4b02-4828-96b6-8b4d24803032/26-6a9e944e7e258.webp' /></p><h2>&nbsp;வியாபாரியை விடுவிப்பதற்கு&nbsp; &nbsp; பாலியல்&nbsp;இலஞ்சம்</h2><p>
</p><p>
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த 2021ம் ஆண்டு திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட போதை பொருள் வியாபாரியை விடுவிப்பதற்கு ஒரு தொகை பணம் மற்றும் வியாபரியின் மனைவியை பாலியல் இலஞ்சமாக கோரியுள்ளார்.</p><p>.</p><p>
 வியாபாரி இது தொடர்பாக பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக திருகோணமலை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகள் இடம்பெற்று வந்தது.</p><p></p><p>&nbsp; இந்த நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர் அங்கிருந்து வாழைச்சேனை மற்றும் கந்தளாய் பொலிஸ் பிரிவிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்கிருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கல்குடா பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றப்பட்டு கடமையாற்றி வருகின்றதாக கூறப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>&nbsp;இதனையடுத்து&nbsp; பொலிஸ் உப பரிசோதகரை உடனடியாக பணி இடைநீக்கம் செய்துள்ளது பொலிஸ் தலைமையகம் அறிவித்து கடிதம் அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-09-07T13:26:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/arrested-ampitiye-sumanarathana-thero-1788765664"></link>
            <id>https://ibctamil.com/article/arrested-ampitiye-sumanarathana-thero-1788765664</id>
            <summary type="text">புதிய இணைப்புகைது செய்யப்பட்ட அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை (8) வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>கைது செய்யப்பட்ட அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை (8) வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p> 

கடந்த 31 ஆம் திகதி, மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின் அலுவலகத்திற்கு சென்று, அங்குள்ள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.</p><p> 

பின்னர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை நாளை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c950b893-0984-4e2c-a033-e23a551b2208/26-6a9ec9576fc66.webp' /></p><h2>முதலாம் இணைப்பு</h2><p><u><b>அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கைது</b></u></p><p>மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் தற்போது மட்டக்களப்பு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.</p><p>
மட்டக்களப்பில் உள்ள புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.</p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>இந்நிலையில் கைது செய்யப்பட்ட அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a4df37b-f81d-4f97-b493-0a8cab872c16/26-6a9e6897ea491.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T13:25:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறிய கூடாரங்களுக்குள் கூட்டங்களை நடத்தும் நிலையில் அநுர அரசு : முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-govt-holding-meetings-inside-small-tents-1788783376"></link>
            <id>https://tamilwin.com/article/anura-govt-holding-meetings-inside-small-tents-1788783376</id>
            <summary type="text">தேர்தல் காலத்தில் பிரம்மாண்ட பேரணிகளை நடத்திய தற்போதைய அரசு, ஆட்சியைப்
பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் தருவாயில் மக்கள் ஆதரவை இழந்து, ஒரு
ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேர்தல் காலத்தில் பிரம்மாண்ட பேரணிகளை நடத்திய தற்போதைய அரசு, ஆட்சியைப்
பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் தருவாயில் மக்கள் ஆதரவை இழந்து, ஒரு
சிறிய கூடாரத்துக்குள் கூட்டங்களை நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்று
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>

பத்தரமுல்ல, நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித்
தலைமையகத்தில் இன்று(07.09.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்
தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><h2>பொருளாதார நிவாரண அறிவிப்புகள்</h2><p>மேலும் தெரிவிக்கையில்,

"புளத்சிங்ஹலவில் ஆரம்பிக்கப்பட்ட அரசின் முதலாவது பேரணியில் நாற்காலிகளை
இடைவெளிவிட்டுப் போட்டு ஒரு சிறிய கூடாரத்துக்குள்ளேயே கூட்டம்
நடத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5327b2d3-e392-4d73-a1c2-8ce28738d796/26-6a9eb691be1eb.webp' /></p><p> ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் காலங்களில்
பிரம்மாண்ட கூட்டங்களை நடத்திய இவர்கள், தற்போது 1,800 முதல் 2,000 பேருக்கு
மேல் சேர்க்க முடியாத ஒரு கூடாரத்துக்குள் கூட்டத்தை நடத்திவிட்டு மக்கள்
கூட்டம் வந்திருப்பதாகக் கூறுவது வேடிக்கையானது.</p><p>அரசின் வீழ்ச்சியையும் மக்கள் ஆதரவு இன்மையையுமே இது வெளிச்சம் போட்டுக்
காட்டுகின்றது.
</p><p>
இந்தக் கூட்டத்துக்கு வருகை தந்த மக்கள் ஜனாதிபதியிடமிருந்து ஏதேனும்
பொருளாதார நிவாரண அறிவிப்புகள் வரும் எனப் பெரிதும் எதிர்பார்த்தனர்.</p><p>எனினும்,
'திருடர்களைப் பிடிப்போம்' என்ற பழைய கதைகளையே மீண்டும் கேட்க
வேண்டியிருந்ததால் மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.</p><h2>எதிர்க்கட்சி ஒருபோதும் பயப்படாது</h2><p> </p><p>முன்பெல்லாம்
ஜனாதிபதியின் பேச்சைக் கேட்டு உற்சாகமாக ஆரவாரம் செய்த மக்கள், தற்போது
கைதட்டுவதற்குக் கூட முன்வரவில்லை. அமைப்பாளர்களே கேட்டுக்கொண்ட பின்னரே
கைதட்டும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d1554a1-3d8e-4554-af70-bf478314fc4a/26-6a9ebabdc4c20.webp' /></p><p>நாட்டில் மக்கள் குடிநீரின்றியும் உணவின்றியும் தவிக்கும் சூழலில், தங்களின்
மாவட்டங்களுக்குச் சென்று மக்களுக்கு வேலை செய்யாமல், இவ்வாறான
கூட்டங்களுக்குப் பணத்தை வீணடிப்பதை விடுத்து மக்களுக்குக் குடிதண்ணீர்
போத்தல்களையாவது வழங்கியிருக்கலாம். </p><p>அரசின் அடக்குமுறைக்கும்
அச்சுறுத்தல்களுக்கும் எதிர்க்கட்சி ஒருபோதும் பயப்படாது.
</p><p>
அரசுக்கு உண்மையான மக்கள் பலத்தைக் காட்டுவதற்காக, எதிர்வரும் 12ஆம் திகதி
அனுராதபுரத்தில் சிறிய கூடாரங்களுக்குள் அல்லாமல், மைதானங்கள் மற்றும் வீதிகள்
அடங்கலாக மக்கள் வெள்ளத்துடன் பிரம்மாண்டமான பேரணியை நடத்தித் காட்டவுள்ளோம்.
</p><p>அதில் கலந்து கொள்ளுமாறு நாட்டின் முற்போக்குவாத மக்களுக்கு அழைப்பு
விடுக்கின்றோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/5_Sofoe8xtQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-07T13:23:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்து ஒன்று ரயிலுடன் மோதி விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bus-collides-with-train-accident-occurs-1788787484"></link>
            <id>https://jvpnews.com/article/bus-collides-with-train-accident-occurs-1788787484</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; காலி மாவட்டத்தில் அமைந்துள்ள ரத்கம, ஓவகந்த ரயில்வே கடவையில் திங்கட்கிழமை (7) பிற்பகல் பயணிகள் பேருந்து ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; காலி மாவட்டத்தில் அமைந்துள்ள ரத்கம, ஓவகந்த ரயில்வே கடவையில் திங்கட்கிழமை (7) பிற்பகல் பயணிகள் பேருந்து ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில், பேருந்து பலத்த சேதமடைந்ததாக ரத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 விபத்தில் பேருந்து சாரதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

காலி – கொழும்பு பயணிகள் சேவையில் ஈடுபடும் குறித்த பேருந்து, தனது பயணத்தை நிறைவு செய்த பின்னர், பழுதுபார்க்கும் பணிக்காக ரத்கம, ஓவகந்த பகுதியில் உள்ள கராஜ் ஒன்றுக்குச் சென்று கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84783991-9ea8-4b68-94c8-7c13a9189dd5/26-6a9ebb1e550ee.webp' /></p><p>
</p><p>
 கொழும்பில் இருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த ரயிலுடன் பேருந்து மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரத்கம, ஓவகந்த ரயில்வே கடவையில் ஒளி சமிக்ஞை அமைப்பு இருந்தபோதிலும், அது முறையாகச் செயல்படுவதில்லை என ரத்கம பிரதேச சபை உறுப்பினர் ஹர்ஷ பசான் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இதன் காரணமாக, குறித்த ரயில்வே கடவை நீண்ட காலமாகவே பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ரத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-07T13:23:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் சமரசம் ஆக வாய்ப்புள்ளதா? நிபுணர் கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/prince-harry-uk-return-hope-reconcile-with-william-1788786920"></link>
            <id>https://news.lankasri.com/article/prince-harry-uk-return-hope-reconcile-with-william-1788786920</id>
            <summary type="text">Prince Harry&#039;s return to Home sparked hope that the brothers would reconcile: இளவரசர் ஹரி பிரித்தானியா திரும்பிய விடயம், அவரும் வில்லியமும் சமரசம் ஆவா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Prince Harry's return to Home sparked hope that the brothers would reconcile: இளவரசர் ஹரி பிரித்தானியா திரும்பிய விடயம், அவரும் வில்லியமும் சமரசம் ஆவார்கள் என்ற நம்பிக்கையை பலருக்கும் ஊட்டியது.
</p><p>

அமெரிக்காவில் வாழ்ந்துவந்த இளவரசர் ஹரி, ஆறு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பிரித்தானியா திரும்பிய விடயம், அவரும் வில்லியமும் சமரசம் ஆவார்கள் என்ற நம்பிக்கையை பலருக்கும் ஊட்டியது.</p><h3>

வில்லியமும் ஹரியும் சமரசம் ஆக வாய்ப்புள்ளதா?</h3><p>

இளவரசர் ஹரி பிரித்தானியா வந்து இத்தனை வாரங்கள் ஆகியும், தன் அண்ணனான இளவரசர் வில்லியமை சென்று சந்திக்கவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cdf83eb-2ffe-4f9a-bbb2-77ae69f90c89/26-6a9eb8ea41b38.webp' /></p><p>
ஹரியின் தாய் டயானா முதல், மறைந்த மகாராணியார் இரண்டாம் எலிசபெத் வரை, மன்னராகும் இளவரசர் வில்லியமுக்கு உறுதுணையாக இளவரசர் ஹரி நிற்பார் என்றே நம்பியிருந்தார்கள்.
</p><p>
ஆனால், ஹரியோ, தான் ஸ்பேர் என தன்னைத்தான் அழைத்துக்கொண்டு தன் சுயசரிதைப் புத்தகத்தில், தன் கோபத்தையும் வெறுப்பையும் தன் அண்ணன் மற்றும் அண்ணி மீது உமிழ்ந்துவிட்டார்.&nbsp;</p><p></p><p>
சட்டப்படி, பிரித்தானியாவில் மன்னருடைய மூத்த மகன்தான் அடுத்து மன்னராகவேண்டும். இது அனைவரும் அறிந்ததே.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/150d9a46-3b33-42e4-812f-a941d424868e/26-6a9eb8eae893c.webp' /></p><p>
ஆனால், அதை ஏற்றுக்கொள்ள இயலாமல், வாய்க்கு வந்தபடி பேசி பிரிவினையை ஏற்படுத்திவிட்டார் ஹரி.
</p><p>
ஹரி, எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுப்பவர், மூடுக்கு ஏற்றபடி நடந்துகொள்பவர் என்பதும் அனைவருக்கும் தெரியும்.
</p><p>
ஆனால், அவர் தன் அண்ணனுக்கு துரோகம் செய்வார் என யாரும் கொஞ்சமும் நினைக்கவில்லை. ஆனால், ஹரி துரோகம் செய்துவிட்டார் என்கிறார் ராஜ குடும்ப நிபுணரான ஆண்ட்ரூ மார்ட்டன் என்பவர்!</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T13:19:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலர் பற்றாக்குறையால் நெருக்கடியில் இலங்கை - அநுர ஆட்சியில் தொடரும் ஊழல் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-in-crisis-due-to-lack-of-dollars-1788786861"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-in-crisis-due-to-lack-of-dollars-1788786861</id>
            <summary type="text">இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி, டொலர் பற்றாக்குறை
மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என்பவற்றுக்கு முன்னாள் ஆட்சியாளர்களின்
ஊழல்களும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி, டொலர் பற்றாக்குறை
மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என்பவற்றுக்கு முன்னாள் ஆட்சியாளர்களின்
ஊழல்களும் முறைகேடான நிர்வாகமுமே முதன்மைக் காரணம் என இடதுசாரி கேந்திர
அமைப்பின் செயற்பாட்டாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார். </p><p>

கொழும்பில் இன்று(07.09.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
நாமல் ராஜபக்ச தனக்கு எதுவுமே தெரியாது எனப் பொறுப்பற்ற முறையில் நடந்து
கொள்கின்றார்.</p><p> இருப்பினும், கைதான நபர் ஒருவரின் வாக்குமூலங்களும், கேமன்
தீவுகளில் நடைபெற்ற விருந்தொன்றில் தொழிலதிபர் நிமால் பெரேராவுடன் நாமல்
ராஜபக்ச இணைந்து இருக்கும் புகைப்படங்களும் உண்மை நிலையை வெளிப்படுத்துகின்றன.
</p><h2>
கப்பம் பெறும் ஊழல்வாதிகள்</h2><p>
கப்பம் பெறுபவர்களுடனும் ஊழல்வாதிகளுடனும் கேமன் தீவுகளில் சூதாட்டத்தில்
ஈடுபட்டது யார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
</p><p>
ரணில் விக்ரமசிங்க, மகிந்த ராஜபக்ச, சஜித் பிரேமதாஸ மற்றும் உதய கம்மன்பில
போன்ற அரசியல்வாதிகள் வெளிநாட்டு ஒப்பந்தங்களில் பெருமளவு நிதி முறைகேடுகளைச் செய்துவிட்டு, தற்போது ஏதும் அறியாதவர்கள் போல் நடிக்கின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7b81c9f-fc88-44e6-998c-fb372ca9f59f/26-6a9eb91841043.webp' /></p><p>

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கைகளின்படி, நாட்டுக்காகப் பெறப்பட்ட
கடன்களுக்கு இணையான திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்பது
தெளிவாகின்றது.
</p><p>
 எனவே, கடனாகப் பெறப்பட்ட பல மில்லியன் டொலர்களுக்கு என்ன
நடந்தது என்பதற்கு இவர்கள் பதிலளிக்க வேண்டும். ஜே.வி.பி. இந்தியாவுக்கு முன் மண்டியிட்டுள்ளது என்று விமல் வீரவன்ச கூறுவது
அறியாமையாகும். </p><h2>

எரிபொருள் வாங்க டொலர் இன்மை...</h2><p>

நாட்டில் எரிபொருள் வாங்குவதற்குக் கூட டொலர் இல்லாத நிலையை
உருவாக்கி, நாட்டை இந்தியாவை நோக்கிச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளியது
யார்?</p><p> தரமற்ற மற்றும் கழிவு உரக் கப்பல்களை நாட்டுக் குள் கொண்டுவந்து
நாட்டின் விவசாயத் துறையை முற்றாக அழித்தது யார் என்பதை விவசாயிகள் நன்கு
அறிந்து வைத்துள்ளனர். 

இனிமேலும் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை நம்பி ஏமாற அவர்கள் தயாராக இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98606de4-a1af-4d06-9285-5e738fb24868/26-6a9eb91915988.webp' /></p><p>
</p><p>
மக்களின் வரிப்பணத்திலும் வெளிநாட்டுக் கடன்களிலும் சுகபோகம் அனுபவித்த இந்த
ஆட்சியாளர்கள் செய்த ஊழல்களில் இது ஒரு சிறிய பகுதி மட்டுமே. </p><p>தற்போது சட்டமா
அதிபர் திணைக்களத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி
மிகத் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T13:16:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் கரை ஒதுங்கும் இறந்த மீன்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dead-fish-washed-ashore-in-mullaitivu-1788787012"></link>
            <id>https://jvpnews.com/article/dead-fish-washed-ashore-in-mullaitivu-1788787012</id>
            <summary type="text">&amp;nbsp; முல்லைத்தீவு கடற்கரைப் பிரதேசத்திற்கு பெருமளவில் இறந்த மீன்கள் கரை ஒதுங்குவதை அவதானிக்க முடிவதாக அப்பகுதிப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முல்லைத்தீவு கடற்கரைப் பிரதேசத்திற்கு பெருமளவில் இறந்த மீன்கள் கரை ஒதுங்குவதை அவதானிக்க முடிவதாக அப்பகுதிப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
முல்லைத்தீவு, புதுமாத்தளன் கடற்கரைப் பிரதேசத்தில் இவ்வாறு பெருமளவிலான இறந்த மீன்கள் கடந்த சில நாட்களாகக் கரை ஒதுங்கத் தொடங்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfcceb69-1132-48b7-b17f-da60b78f92cf/26-6a9eb945d57ff.webp' /></p><p>

இதற்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், இதுவொரு சுற்றுச்சூழல் பிரச்சினையா அல்லது மனித செயற்பாடுகள் காரணமாக உருவான நிலையா என்பது தொடர்பில் இதுவரை எவ்வித உறுதியான தகவல்களும் வெளியிடப்படவில்லை.</p><p></p>]]></content>
            <updated>2026-09-07T13:13:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அறிவித்த தேர்தல் ஆணையம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/by-election-announced-for-madurantakam-dharapuram-1788786037"></link>
            <id>https://news.lankasri.com/article/by-election-announced-for-madurantakam-dharapuram-1788786037</id>
            <summary type="text">by election announced for madurantakam and dharapuram: தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்குமான இடைத்தேர்தலை தேர்தல் ஆணைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>by election announced for madurantakam and dharapuram: தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்குமான இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.</p><h3> 

தமிழ்நாட்டில் 2 தொகுதிகளுக்கு இடைதேர்தல்</h3><p>

தமிழ்நாட்டில் அதிமுகவை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
</p><p>
மேலும், 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ea86c67-d613-4f54-bf24-983823ebec1c/26-6a9eb5772c3a0.webp' /></p><p>

இதனைத்தொடர்ந்து, 7 சட்டமன்ற தொகுதிகள் காலியானாதாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.&nbsp;</p><p></p><p>

இதில், திருச்சி கிழக்கு, பெருந்துறை, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில் தேர்தல் வழக்கு, இருப்பதால் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8604aeb-569d-444a-8ea8-2cf9632114df/26-6a9eb57679fec.webp' /></p><p> 

இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 9 ஆம் திகதி தொடங்கும் எனவும், செப்டம்பர் 16ஆம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் எனவும், வேட்பு மனுவை திரும்ப பெற செப்டம்பர் 9 ஆம் திகதி செப்டம்பர் 17ஆம் திகதி கடைசி நாள் எனவும், வேட்பு மனு பரிசீலனை செப்டம்பர் 17 நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>

மேலும், இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 6 ஆம் திகதி எனவும், வாக்கு எண்னிக்கை அக்டோபர் 8 ஆம் திகதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T13:00:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் துணை மின் நிலைய தாக்குதல்கள்..சந்தேக நபர் குறித்து விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-investigating-suspect-after-fire-damage-1788785801"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-investigating-suspect-after-fire-damage-1788785801</id>
            <summary type="text">Germany investigating after another substation fire: ஜேர்மனியில் மற்றொரு மின் துணை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>Germany investigating after another substation fire: ஜேர்மனியில் மற்றொரு மின் துணை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.</p><p>

ரஷ்யாவின் ஹைபிரிட் தாக்குதல் குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், ஜேர்மனியில் மற்றொரு மின் துணை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>ஜேர்மனியை குறிவைத்து</h2><p> 
ஐரோப்பிய நாடான ஜேர்மனியை குறிவைத்து சம்பவம் தொடர்ச்சியாக நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3751eb32-da13-46b8-8076-7dd7c3d13caf/26-6a9eb5879eea7.webp' />&nbsp;</p><p></p><p>
இந்த சூழலில், திங்களன்று பெர்லினில் உள்ள ஒரு மின் துணை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதம் உண்டானது.</p><p> 

இதுகுறித்து பேசிய காவல்துறையினர், "கட்டுமானப் பணி நடைபெறும் இடம் மற்றும் துணை மின் நிலையத்தின் ஒரு பகுதி ஆகியவை தீயில் எரிந்து சேதமடைந்தன. இதனால் விநியோகத்தில் எந்தத் தடங்கலும் ஏற்படவில்லை" என்றனர். </p><p>

மேலும், நாசவேலை குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இது நாசவேலையா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருவதாக என்றும் தெரிவித்தனர்.
</p><p>
இதற்கிடையில், நிலக்கரி மின் நிலையங்களில் இருந்து மின்சார விநியோகத்தைத் துண்டிக்கும் நோக்கில், கடந்த வாரம் ஜேர்மனி முழுவதும் உள்ள துணை மின் நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களுக்குக் காரணமானவர் என்று சந்தேகிக்கப்படும், தீவிரப் போக்குடைய சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38b2eedd-cc20-48db-871a-f63f41b4f39c/26-6a9eb586df47b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T12:57:56+00:00</updated>
        </entry>
    </feed>
