<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-14T21:31:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[70 வருட வரலாற்றில் அநுரவின் ஆட்சியில் நடந்த அதிசயம் - சிறைச் செல்லப்போகும் தமிழ்த் தலைவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-government-70-years-history-of-sri-lanka-1784053246"></link>
            <id>https://tamilwin.com/article/anura-government-70-years-history-of-sri-lanka-1784053246</id>
            <summary type="text">இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் மனித உரிமைப் பிரச்சினைகளை சர்வதேச மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் மனித உரிமைப் பிரச்சினைகளை சர்வதேச மற்றும் தேசிய மட்டத்திற்கு கூட்டாகக் கொண்டு செல்லும் நோக்கில் பிரதான 6 தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.</p><p> புதிய அரசியலமைப்பு மாற்றம், மாகாண சபை தேர்தல் தாமதம் மற்றும் தமிழ் மக்களின் காணிப் பிரச்சினைகள் ஆகிய மூன்று முக்கிய புள்ளிகளை மையமாக வைத்தே இந்த கூட்டணி உருவாகியுள்ளது.&nbsp;</p><p>இது ஒரு இனவாதக் கூட்டணி அல்ல, மாறாக உரிமைகளுக்கான பொதுவான தளம் என இக்கட்சிகள் பிரகடனப்படுத்தியுள்ளன.</p><p>இந்நிலையில், இந்த கூட்டணி தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p>மேலும், இந்த புதிய தமிழ் கூட்டணியின் உருவாக்கம் குறித்து தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களிலும் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன.</p><p>இது உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/zosPXE6eNVQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T21:29:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் முதன்முறையாக AI உதவியுடன் நிகழ்ந்த மருத்துவ சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-s-first-ai-assisted-medical-breakthrough-1784064370"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-s-first-ai-assisted-medical-breakthrough-1784064370</id>
            <summary type="text">கொழும்பு, தனியார் சத்திர சிகிச்சை மருத்துவமனையில் இலங்கையின் முதலாவது AI உதவியுடன் கூடிய ரோபோடிக் சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, தனியார் சத்திர சிகிச்சை மருத்துவமனையில் இலங்கையின் முதலாவது AI உதவியுடன் கூடிய ரோபோடிக் சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p>

50 வயதுடைய பெண்ணொருவரின் கருப்பை அகற்றப்பட்டமை மற்றும் சிக்கலான சிறுநீரக சத்திர சிகிச்சை என இரண்டு சத்திர சிகிச்சைகள் இதன்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக&nbsp; செய்தி வெளியாகியுள்ளது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d71ece6-d45e-4b59-8256-7f53133214b5/26-6a56a97481349.webp' /></p><h2>சத்திர சிகிச்சைகள்&nbsp;</h2><p>
இந்த ரோபோடிக் முறைத் தானாக இயங்காது, மாறாக சத்திர சிகிச்சை நிபுணரின் முழுமையான கட்டுப்பாட்டில் இயங்கும்.
</p><p>
நிபுணர்கள் விசேட கன்சோல் மூலம் ரொபோவின் கைகளை இயக்கி, துல்லியமான சத்திர சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.</p><p></p><p>
</p><p>
இந்த நவீனத் தொழில்நுட்பத்தினால் இரத்த இழப்பு குறைதல், சிறிய கீறல்கள், தொற்று அபாயம் குறைதல் மற்றும் சத்திர சிகிச்சை பிழைகள் குறையும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T21:26:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதிக்கு விசா மறுக்கப்பட்டதா? வதந்திகளுக்கு அமைச்சரவை பேச்சாளர் முற்றுப்புள்ளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/minister-denies-president-visa-rumours-1784062897"></link>
            <id>https://jvpnews.com/article/minister-denies-president-visa-rumours-1784062897</id>
            <summary type="text">ஜனாதிபதியின் பிரான்ஸ் நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒத்திவைக்கப்பட்டமைக்கு அவருக்கு விசா மறுக்கப்பட்டதே காரணம் என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதியின் பிரான்ஸ் நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒத்திவைக்கப்பட்டமைக்கு அவருக்கு விசா மறுக்கப்பட்டதே காரணம் என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை. </p><p>இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e200f5e9-a254-4d48-8250-46dd5e184646/26-6a56a3b33e1d8.webp' /></p><h2>&nbsp; பிரான்ஸ் விஜயம்&nbsp;</h2><p>அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
</p><p>
ஜனாதிபதியின் பிரான்ஸ் விஜயம் ஒத்திவைக்கப்பட்டதாக உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, பிரான்ஸ் அரசாங்கத்தினால் ஜனாதிபதிக்கான விசா நிராகரிக்கப்பட்டதாகச் சமூக ஊடகங்களில் சில தரப்பினர் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>சமூக ஊடகங்களில் பரவும் இத்தகைய தகவல்களை யார், என்ன நோக்கத்திற்காகப் பரப்புகிறார்கள் என்பதை மக்கள் நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.</p><p></p><p>

பொதுமக்களைத் தவறான வழியில் திசைதிருப்பும் வகையிலான இத்தகைய போலியான தகவல்களை உருவாக்குபவர்கள் மற்றும் திட்டமிட்டு அவற்றைச் சமூக ஊடகங்களில் பரப்புபவர்களுக்கு எதிராகச் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கே 'இணையவழி பாதுகாப்புச் சட்டம்' தற்போது வரைவு செய்யப்பட்டு வருகின்றது. </p><p>சமூக ஊடகப் பயன்பாடு தொடர்பில் இவ்வாறான தீர்மானங்களை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு இத்தகைய போலியான செய்திகளே காரணமாக அமைகின்றன.</p><p></p><p>
</p><p>

பிரான்ஸுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் இருதரப்பு இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைவாகவே இந்த விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. </p><p>இரு தரப்பினருக்கும் மிகவும் வசதியானதொரு திகதி மற்றும் காலப்பகுதி வரும் நாட்களில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். அத்துடன், இந்த விஜயம் தொடர்பாக எம்மாலோ அல்லது பிரான்ஸ் தூதராலயத்தினாலோ உத்தியோகபூர்வமாகத் திகதிகள் எதுவும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருக்கவுமில்லை என்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T21:01:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிராகப் பாரிய கடற்படை முற்றுகையை ஆரம்பித்த அமெரிக்கா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-resumes-naval-blockade-on-iranian-ports-1784060931"></link>
            <id>https://ibctamil.com/article/us-resumes-naval-blockade-on-iranian-ports-1784060931</id>
            <summary type="text">ஈரானிய துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை (Naval blockade) அமெரிக்கா மீண்டும் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க மத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை (Naval blockade) அமெரிக்கா மீண்டும் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது குறித்து அமெரிக்க மத்திய கட்டளைகம் (CENTCOM) எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளது.</p><p>

குறித்த பதிவில், “ஈரானிய துறைமுகங்களை இலக்கு வைத்து இந்த முற்றுகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>இராணுவ விமானங்கள்</h2><p> 

தற்போதைய நிலையில், இப்பிராந்தியத்தின் கடல் மற்றும் வான் பரப்பைப் பாதுகாக்கும் நோக்கில் 20 இற்கும் மேற்பட்ட அமெரிக்க கடற்படை போர்க்கப்பல்களும் நூற்றுக்கணக்கான நவீன இராணுவ விமானங்களும் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் நிலைநிறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மற்றும் செயல்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள” என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aff0472b-8d28-4455-8f47-36be2c1db692/26-6a56a2da3ad26.webp' /></p><p>

அமெரிக்காவின் இந்த கடுமையான நடவடிக்கையினால் மத்திய கிழக்கில் போர்ச் சூழல் மேலும் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T20:58:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே நாளில் 26 சதவீதம் சரிவு... வரலாற்றில் IBM எதிர்கொள்ளும் இரண்டாவது நெருக்கடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ibm-shares-plunge-q2-earnings-1784062605"></link>
            <id>https://news.lankasri.com/article/ibm-shares-plunge-q2-earnings-1784062605</id>
            <summary type="text">இரண்டாம் காலாண்டிற்கான நிறுவனத்தின் ஆரம்பக்கட்ட விற்பனை விவரங்கள் சந்தை ஆய்வாளர்களின் கணிப்புகளை விடக் குறைவாக இருந்ததைத் தொடர்ந்து, ஒரேநாளில் IBM நிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரண்டாம் காலாண்டிற்கான நிறுவனத்தின் ஆரம்பக்கட்ட விற்பனை விவரங்கள் சந்தை ஆய்வாளர்களின் கணிப்புகளை விடக் குறைவாக இருந்ததைத் தொடர்ந்து, ஒரேநாளில் IBM நிறுவனப் பங்குகள் 26 சதவீதம் சரிந்து ஒரு பங்கின் விலை 215.67டொலராகக் குறைந்தது.</p><h2>விற்பனை குறைவு</h2><p>
</p><p>இந்த நெருக்கடிக்கு விளக்கமளித்துள்ள IBM தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா, வாடிக்கையாளர்கள் செலவு செய்வதைத் தள்ளிப்போடுவதாக கூறியுள்ளார். </p><p>இரண்டாம் காலாண்டிற்கான ஆரம்பக்கட்ட வருவாய் 17.2 பில்லியன் டொலராகப் பதிவாகியுள்ளதாக ஐபிஎம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது; இது ஆய்வாளர்களின் 17.9 பில்லியன் டொலர் மதிப்பீட்டை விடக் குறைவாகும். </p><p>நிறுவனத்தின் உள்கட்டமைப்புப் பிரிவின் விற்பனை குறிப்பாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, 7 சதவீதம் சரிவைக் கண்டது. ஐபிஎம் தனது இரண்டாம் காலாண்டு முடிவுகளை ஜூலை 22 அன்று வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>இதனிடையே, தாங்கள் இன்னும் கணக்கு விவரங்களை ஆய்வு செய்து வருவதாகவும், இறுதி முடிவுகள் ஆரம்பக்கட்ட புள்ளிவிவரங்களிலிருந்து சற்று மாறுபடக்கூடும் என்றும் IBM மேலும் தெரிவித்தது. </p><p>இந்த நிலையில், வர்த்தக நேரம் முடியும் வரை இழப்புகள் நீடித்தால், 1980-களுக்குப் பிறகு IBM தனது மிகப்பெரிய 'இன்ட்ராடே' (ஒரே நாள் வர்த்தக நேரத்திற்குள் ஏற்படும்) சரிவைப் பதிவு செய்யும் நிலையில் உள்ளது. </p><p>IBM பங்குகள் சரிவு குறித்த தகவல் மற்ற நிறுவன மென்பொருள் நிறுவனங்களையும் பாதித்தது; இதில் Workday நிறுவனத்தின் பங்குகள் 8 சதவீதத்திற்கும் அதிகமாகவும், ServiceNow நிறுவனத்தின் பங்குகள் சுமார் 7.7 சதவீதம் அளவிலும் சரிந்தன. </p><p>இதனிடையே, முதலீட்டாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், எதிர்பார்க்கப்பட்ட விலை உயர்வுகளுக்கு முன்னதாக வாடிக்கையாளர்கள் தங்கள் செலவினங்களை சர்வர்கள், சேமிப்பகம் மற்றும் நினைவகம் ஆகியவற்றின் பக்கம் திருப்பியதே, ஐபிஎம்-இன் மென்பொருள் மற்றும் உள்கட்டமைப்பு வணிகங்களில் எதிர்பார்த்ததை விட செயல்திறன் குறைந்ததற்குக் காரணம் என்று கிருஷ்ணா கூறியுள்ளார். </p><p>விநியோக முறைகளின் இடையூறுகள் தங்களது முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிறுவனம் எதிர்பார்த்திருந்ததாகவும் அவர் கூறினார். செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியால் தூண்டப்பட்ட மெமரி சிப் பற்றாக்குறை, உலகளாவிய உற்பத்தித் துறை முழுவதும் எதிரொலித்துள்ளது. </p><p>இருப்பினும், எதிர்பார்க்கப்படும் விலை உயர்வுகளைச் சமாளிப்பதற்காக, வாடிக்கையாளர்கள் தங்களின் செலவினங்களை மென்பொருள் மற்றும் உள்கட்டமைப்புத் தயாரிப்புகளிலிருந்து சர்வர்கள், சேமிப்பகம் மற்றும் நினைவகம் ஆகியவற்றின் பக்கம் திருப்புவார்கள் என்பதை ஐபிஎம் நிறுவனத்தால் முன்கூட்டியே கணிக்க முடியவில்லை. </p><p>பிப்ரவரி மாதம், IBM மெயின்ஃபிரேம்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு பழைய நிரலாக்க மொழியை நவீனமயமாக்க உதவும் என்று கூறிய ஒரு கருவியை, செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப் நிறுவனமான ஆந்த்ரோபிக் PBC வெளியிட்டதைத் தொடர்ந்து, IBM பங்குகள் கடுமையான விற்பனை அழுத்தத்திற்கு உள்ளாயின.</p><h2>வருடாந்திர வருவாய்</h2><p> </p><p>பெரும்பாலான மென்பொருள் நிறுவனங்களைப் போலவே, IBM-ம் தனது தயாரிப்புகளில் செயற்கை நுண்ணறிவை (AI) ஒருங்கிணைத்துள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன தொழில்நுட்பத்தை வழங்கும் தனது திறனையும் முன்னிலைப்படுத்தியுள்ளது. </p><p>செயற்கை நுண்ணறிவு தனது வணிகத்தை மாற்றியமைப்பதற்குப் பதிலாக அதை வலுப்படுத்தும் என்று முதலீட்டாளர்களுக்கு உணர்த்த அந்நிறுவனம் முயன்றுள்ளது. நீண்ட கால ஏற்றத்திற்குப் பிறகு, சமீபத்திய வாரங்களில் நிறுவனத்தின் பங்குகள் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளன. </p><p>ஜூன் மாதத்தில் 6% சரிவுடன் நிறைவடைந்த நிலையில், ஜூலை மாதத்தில் விற்பனை அழுத்தம் மேலும் அதிகரித்தது; இன்றைய வர்த்தக நேரத்தின் குறைந்தபட்ச விலையின் அடிப்படையில் பார்க்கும்போது, ​​IBM பங்குகள் 22 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்துள்ளது.
</p><p>மே 2023 மற்றும் நவம்பர் 2025 காலகட்டத்தில், IBM பங்குகள் வலுவான ஏற்றப் பாதையிலேயே நீடித்தது. அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட போதிலும், விலை சரிவுகளிலிருந்து அது தொடர்ந்து மீண்டு வந்து, தனது ஏற்றப் போக்கை மீண்டும் தொடர்ந்தது.
</p><p>இக்காலகட்டத்தில், IBM பங்குகள் விலை 128.59 டொலரிலிருந்து 308 டொலராக உயர்ந்து, கிட்டத்தட்ட 139 சதவீதம் வருவாயை அளித்தது. கடந்த ஐந்து ஆண்டுகளிலும் IBM நேர்மறையான வருடாந்திர வருவாயை ஈட்டியிருந்தாலும், நடப்பாண்டில் இதுவரை அதன் மதிப்பில் 25 சதவீதம் அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது. </p><p>இதற்கு முன்பு, 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐபிஎம் பங்குகள் அதிகப்படியான 23 சதவீதம் சரிந்தது, அதன் பின்பு தற்போது ஒரே நாளில் 26 சதவீதம் சரிந்து முதலீட்டு சந்தையில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T20:55:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் அதிரடித் தாக்குதல்! பல ட்ரோன்கள் அழிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/irgc-claims-it-destroyed-us-weapons-in-gulf-1784056092"></link>
            <id>https://ibctamil.com/article/irgc-claims-it-destroyed-us-weapons-in-gulf-1784056092</id>
            <summary type="text">பஹ்ரைனில் உள்ள ஆயுதக் களஞ்சியக் கூடங்களையும் குவைத்தில் அமெரிக்க ட்ரோன்கள் ஏவப்படும் தளங்களையும் தாங்கள் அழித்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

அத்தோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பஹ்ரைனில் உள்ள ஆயுதக் களஞ்சியக் கூடங்களையும் குவைத்தில் அமெரிக்க ட்ரோன்கள் ஏவப்படும் தளங்களையும் தாங்கள் அழித்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
</p><p>
அத்தோடு இதன் போது பல அமெரிக்க ட்ரோன்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 ஈரானிய செய்தி நிறுவனமான ஐஆர்ஐபி (IRIB) செய்தி இதனை குறிப்பிட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>புரட்சிகர காவல் படை</h2><p>இந்தநிலையில் அமெரிக்காவின் குற்றங்கள் தொடரும் வரை ஆக்கிரமிப்பாளருக்கு எதிரான பழிவாங்கலும் தண்டனையும் தொடரும் என இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.
</p><p>
இந்தத் தாக்குதல்கள் மீண்டும் தொடரப்பட்டால் அவை மேலும் பல ஆச்சரியமூட்டும் பதிலடித் தாக்குதல்களைச் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7802de1f-6709-4592-9e2d-3b0ea0c9584b/26-6a569adf55c88.webp' /></p><p>இப்பிராந்தியத்தில் அமெரிக்கா தனது விரோதப் போக்கைத் தொடரும் வரை இப்பிராந்தியத்திலிருந்து ஒரு துளி எண்ணெய் அல்லது எரிவாயு கூட ஏற்றுமதி செய்யப்பட மாட்டாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>

அத்துடன் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதைக் மேலும் தாமதப்படுத்த மட்டுமே வழிவகுக்கும் எனவும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T20:41:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொகுசு வாகனத்துடன் சிக்கிய இளம் பெண் ; சோதனையில் காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-woman-caught-with-luxury-vehicle-1784061211"></link>
            <id>https://jvpnews.com/article/young-woman-caught-with-luxury-vehicle-1784061211</id>
            <summary type="text">மாதம்பிட்டிய பள்ளிவாசலுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த சொகுசு வாகனம் ஒன்றைச் சோதனையிட்டபோது, பெரும் தொகையான போதைப்பொருட்களுடன் பெண் ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாதம்பிட்டிய பள்ளிவாசலுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த சொகுசு வாகனம் ஒன்றைச் சோதனையிட்டபோது, பெரும் தொகையான போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
திங்கட்கிழமை (13) பகல் வேளையில் மாதம்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்த இச் சுற்றிவளைப்பின் போது, குறித்த பெண்ணின் வசம் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 149 கிராம் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9e5ad1f-4363-4da2-9bce-e301050a7150/26-6a569d1d0f229.webp' /></p><p> </p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெனியாய பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் ஆவார்.</p><p> 

இச்சம்பவம் குறித்து மாதம்பிட்டிய பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T20:33:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து ; பலி எண்ணிக்கை உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/fire-breaks-out-at-thailand-nightclub-1784059974"></link>
            <id>https://canadamirror.com/article/fire-breaks-out-at-thailand-nightclub-1784059974</id>
            <summary type="text">தாய்லாந்து நாட்டின் பாங்காக் புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் நிறைந்த பகுதியாகும். பாங்காக்கின் சடுசக் பகுதியில் கேளிக்கை விடுதி உள்ளது. இந்த கேளிக்கை விடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்து நாட்டின் பாங்காக் புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் நிறைந்த பகுதியாகும். பாங்காக்கின் சடுசக் பகுதியில் கேளிக்கை விடுதி உள்ளது. இந்த கேளிக்கை விடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
</p><p>
இந்த தீ விபத்தில் கேளிக்கை விடுதிக்குள் இருந்த 50க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7c5c475-0953-41b3-b47c-c19ab15b7e08/26-6a569847d8436.webp' /></p><p> </p><p>ஆனால் இந்த தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.</p><p>இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாங்காக் கேளிக்கை விடுதி தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. </p><p>சிகிச்சை பெற்றுவருபவர்களில் மேலும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
</p><p>
கேளிக்கை விடுதியில் ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-14T20:12:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-sinks-russian-military-ship-1784051138"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-sinks-russian-military-ship-1784051138</id>
            <summary type="text">தீவிரமடைந்து வரும் எரிபொருள் நெருக்கடியால் ரஷ்யா முழுவதும் உள்ள எண்ணெய் நிலையங்களில் குழப்பம் நிலவி வரும் நிலையில், கருங்கடலில் ஒரு ரஷ்ய ராணுவக் கப்பல...</summary>
            <content type="html"><![CDATA[<p>தீவிரமடைந்து வரும் எரிபொருள் நெருக்கடியால் ரஷ்யா முழுவதும் உள்ள எண்ணெய் நிலையங்களில் குழப்பம் நிலவி வரும் நிலையில், கருங்கடலில் ஒரு ரஷ்ய ராணுவக் கப்பலை உக்ரைன் மூழ்கடித்துள்ளது.</p><h2>உக்ரைன் கடற்படை</h2><p>
</p><p>உக்ரேனிய ட்ரோன்கள் ரஷ்யாவின் மொத்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களையும் தாக்கிச் சிதைத்ததைத் தொடர்ந்து, எஞ்சியிருக்கும் சொற்ப அளவு பெட்ரோலைப் பெறுவதற்காகத் தவிக்கும் ரஷ்யர்களிடையே மோதல்கள் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82e82b70-85a7-4e14-a725-b09dfb3098ea/26-6a5676f7afc60.webp' /></p><p> </p><p>உக்ரைனின் சமீபத்திய தாக்குதலால், ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவிற்கு மேற்கே உள்ள ரஷ்யத் துறைமுகமான நோவோரோசிஸ்க் (Novorossiysk) கடல் பகுதியில், புடின் தனது 'எமரால்டு' பாதுகாப்புப் படை ரோந்து கப்பலை இழந்தார். </p><p>புதிய மற்றும் இரகசியமான சர்கன்-3000 கடல் ட்ரோன் மூலம் 205 அடி நீளமுள்ள ரஷ்ய கப்பல் செவ்வாய்க்கிழமை மூழ்கடிக்கப்பட்டதாக உக்ரைன் கடற்படை தெரிவித்துள்ளது. </p><p>மட்டுமின்றி, 'எமரால்டு' கப்பலின் பணியாளர்கள் மத்தியில் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டிருந்ததையும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டில் கெர்ச் நீரிணையில் மூன்று கடற்படைக் கப்பல்களைக் கைப்பற்றியதன் மூலம் இந்தக் கப்பலை உக்ரைன் நீண்டக காலமாக இலக்கு வைத்து வந்துள்ளது.</p><p></p><p> </p><p>எமரால்டு கப்பலின் குழுவினர், உக்ரேனிய இழுவை கப்பலான 'யானி கபு' (Yany Kapu) மீது மோதியதாகவும், அப்படகு மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், சுமார் 24 மாலுமிகளைப் பிணைக் கைதிகளாகப் பிடித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. </p><p>இன்று 'எமரால்டு' கப்பலைத் பழிவாங்கும் நோக்கில் தாக்கிய 'சர்கன்-3000' நீண்ட தூரக் கடற்படைத் தாக்குதல் பணிகளுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள ட்ரோன் ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1addafa-af93-4195-a61a-5e9ff47e3427/26-6a5676f700969.webp' /></p><h2>எரிபொருள் பற்றாக்குறை</h2><p> </p><p>எண்ணெய் கப்பல்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் மீதான முந்தைய தாக்குதல்களால் பெட்ரோல் இருப்பு குறைந்துள்ள நிலையில், எஞ்சியுள்ளவற்றைப் பெறுவதற்காக ரஷ்யர்கள் போராடும் சூழலில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
</p><p>சாரதிகள் எரிபொருள் நிரப்பச் செல்லும்போது பாதுகாப்பிற்காக கத்திகளை உடன் எடுத்துச் செல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ரஷ்யா முழுவதும் பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் தீர்ந்து வருவதால், நாடு முழுவதும் தேவைக்கு அதிகமாக எரிபொருள் வாங்குவதற்குத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c1e7ea6-304f-4294-aef3-bd947d38c75d/26-6a5676f862e7f.webp' /></p><p> </p><p>எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏற்றுமதியும் முடங்கியுள்ளது; இதனால், பொருளாதாரத் தடைகளுக்கு உட்பட்ட எரிபொருள் விற்பனை மூலம் ரஷ்யாவிற்குக் கிடைத்து வந்த வருவாய் தடைபட்டுள்ளது. </p><p>எரிபொருள் பற்றாக்குறை விவசாயிகளைப் கடுமையாகப் பாதித்துள்ள நிலையில், ரஷ்யாவின் அறுவடைக்கும் கடுமையான நெருக்கடி ஏற்படும் சூழலை புடின் எதிர்கொள்கிறார். </p><p>இதனிடையே, கம்பைன் ஹார்வெஸ்டர்களுக்கான எரிபொருள் தட்டுப்பாடு ரஷ்யாவின் தெற்குப் பகுதிகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது என்றே தகவல் வெளியாகியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T20:03:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை குறித்து முக்கிய திட்டத்தைக் கைவிட்ட ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-drops-key-plan-on-hormuz-strait-1784047068"></link>
            <id>https://canadamirror.com/article/trump-drops-key-plan-on-hormuz-strait-1784047068</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு விதிக்கப்படவிருந்த 20 சதவீதக் கட்டணத் திட்டத்தை அமெரிக்கா கைவிடுவதாக அமெரிக்க ஜனாதி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு விதிக்கப்படவிருந்த 20 சதவீதக் கட்டணத் திட்டத்தை அமெரிக்கா கைவிடுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

 

அதற்குப் பதிலாக, வளைகுடா நட்பு நாடுகளுடன் மேற்கொள்ளப்படும் புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் இந்த விவகாரத்திற்குத் தீர்வு காணப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61f4e6c0-88f5-45cd-bd09-ca21d43449e8/26-6a5665de1fc41.webp' /></p><p style="text-align: justify; ">

 

முக்கிய உலகளாவிய எரிசக்திப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கான அமெரிக்காவின் செலவினங்களை ஈடுசெய்ய, 20% கட்டணம் விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்திருந்தார்.</p><p style="text-align: justify; "> 

 

சர்வதேச அளவில் இந்த அறிவிப்பு பெரும் விவாதங்களைக் கிளப்பிய நிலையில், ஒரே நாளில் அவர் தனது முடிவை மாற்றியுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

இது குறித்து தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளதாவது:

 

"மத்திய கிழக்கு நாட்டுத் தலைவர்களுடன் நடத்தப்பட்ட மிகச் சிறந்த பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், 20% அமெரிக்க ஈடுசெய்யும் கட்டணத் திட்டத்தைக் கைவிட முடிவு செய்துள்ளேன்.</p><p style="text-align: justify; "> அதற்குப் பதிலாக, பல்வேறு வளைகுடா நாடுகள் அமெரிக்காவில் மேற்கொள்ளவுள்ள பிரம்மாண்ட வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்படும். இந்த முதலீடுகள் மிகவும் பிரம்மாண்டமானதாகவும், அவர்களது எதிர்காலத்திற்குப் பயனுள்ளதாகவும் அமையும்."</p>]]></content>
            <updated>2026-07-14T20:00:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேவிற்கு எதிரான நீதிமன்றத்தின் இரகசிய அறிக்கை கோட்டாபயவிடம் - கலக்கத்தில் சிஐடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-sallay-gotabaya-rajapaksa-cid-inquiry-1784057391"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-sallay-gotabaya-rajapaksa-cid-inquiry-1784057391</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுத் துறை தலைவர் சுரேஷ் சலே தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.&nbsp;</p><p>இதற்கிடையில், நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம் தீவிரமடைந்த நிலையில்&nbsp;உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் பெரிதாக பேசப்படுவதில்லை.&nbsp;</p><p>தொடர்ந்து எதிர்க்கட்சிகள் மற்றும் பிற தரப்பினர் என பலரும்&nbsp;சிறைச்சாலை விகாரத்தை மாத்திரமே நோக்கி செயற்பட்டு வருவதாக தெரிகின்றது.&nbsp;</p><p>இந்நிலையில்,&nbsp;சுரேஷ் சலே குறித்த விசாரணைகள் மற்றும்&nbsp;உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் பற்றி மறந்து விட்டதா என கேள்வி எழுப்ப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p>அதேநேரம்,&nbsp;உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மறைக்க சிறைச்சாலை விவகாரம் திட்டமிட்டு செய்யப்பட்டதா எனவும் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.&nbsp;</p><p>இவற்றை விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/prVilbf_uUQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T19:51:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரசன்ன ரணதுங்கவின் வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/prasanna-ranatunga-travel-ban-temporarily-lifted-1784058235"></link>
            <id>https://jvpnews.com/article/prasanna-ranatunga-travel-ban-temporarily-lifted-1784058235</id>
            <summary type="text">ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகி வரும் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகி வரும் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>


குறித்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று (14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/daa84e8c-bd52-495d-968f-e511b46cfa29/26-6a56917d8607a.webp' /></p><h2>கோரிக்கை</h2><p>
</p><p>


இதன்போது, பிரசன்ன ரணதுங்க சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, தனிப்பட்ட தேவைக்காக வெளிநாடு செல்ல வேண்டியுள்ளதால் பயணத்தடையை தற்காலிகமாக நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>



இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சார்பில் முன்னிலையான அதிகாரி, நீதிமன்றம் பொருத்தமான உத்தரவை பிறப்பிக்குமாறு தெரிவித்தார்.</p><p></p><p>
</p><p>


இதனை பரிசீலித்த நீதவான், 10 இலட்சம் ரூபாய் மேலதிக சரீரப் பிணையின் அடிப்படையில் வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்க உத்தரவிட்டதுடன், பிரசன்ன ரணதுங்கவை எதிர்வரும் ஓகஸ்ட் 4ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் உத்தரவிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T19:50:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெல்ஜியத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் பலர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/several-found-dead-in-lift-shaft-1784050445"></link>
            <id>https://canadamirror.com/article/several-found-dead-in-lift-shaft-1784050445</id>
            <summary type="text">பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரின் மையப்பகுதியில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு பிரம்மாண்ட வானளாவிய கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரின் மையப்பகுதியில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு பிரம்மாண்ட வானளாவிய கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கிப் பலர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>கட்டிடத்தில் ஏற்பட்ட தீயைத் தீயணைப்பு வீரர்கள் விரைவாக அணைத்த போதிலும், புகை மற்றும் தீ கட்டிடத்தின் மின் தூக்கி வழிகளில் (Lift shafts) வேகமாகப் பரவியுள்ளது. </p><p>
இதனால் இரண்டு மின் தூக்கிகள் (Lifts) நடுவழியிலேயே சிக்கிக் கொண்டன. தீயணைப்புத் துறையினர் ஒரு மின் தூக்கியின் கதவை உடைத்துப் பார்த்தபோது, அதனுள் பலர் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b9574cd-4d00-42c3-9d1a-36681e4d7d80/26-6a56730eeb5a4.webp' /></p><p>
</p><p>மின் தூக்கியின் உள்ளே பல உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன, ஆனால் சரியாக எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்று இப்போது கூற முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>விபத்துக்குப் பின் காணாமல் போனதாகக் கூறப்படும் 6 நபர்களின் உடல்களாக இவை இருக்கலாம். ஆனால், மற்றொரு மின் தூக்கியிலோ அல்லது கட்டிடத்தின் வேறு பகுதியிலோ மேலும் சிலர் சிக்கியிருக்கவும் வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.</p><p>
கட்டிடம் முழுவதும் இடிபாடுகள் நிறைந்துள்ளதால் மீட்புப் பணி மிகவும் சவாலாக உள்ளது. உடல்களை மீட்க இன்னும் பல மணிநேரம் ஆகும்," என தெரிவித்துள்ளனர்.
</p><p>இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>
மேலும், மீட்புப் பணியின் போது அதிக வெப்பம் காரணமாகப் பாதிக்கப்பட்ட ஒரு தீயணைப்பு வீரருக்கும் சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T19:30:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் நாய்களுக்கு உணவளிப்போரின் கவனத்திற்கு ; விடுக்கப்பட்ட கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-notice-for-dog-feeders-in-sri-lanka-1784056665"></link>
            <id>https://jvpnews.com/article/important-notice-for-dog-feeders-in-sri-lanka-1784056665</id>
            <summary type="text">இலங்கையில் 2030 ஆம் ஆண்டிற்குள் விஷர் நாய்க்கடி நோயை முழுமையாக ஒழிப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் 2030 ஆம் ஆண்டிற்குள் விஷர் நாய்க்கடி நோயை முழுமையாக ஒழிப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. </p><p>கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம், உலக அமைப்பு மற்றும் 'கிளீன் ஸ்ரீ லங்கா' ஆகியவற்றுடன் இணைந்து நான்கு நாள் செயலமர்வு ஒன்றைக் கட்டுநாயக்கவில் ஏற்பாடு செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e57fce4-0318-4fda-9750-6e7cd3cac867/26-6a568b5b0c598.webp' /></p><h2>பராமரிப்பு</h2><p>
</p><p>
இந்த நிகழ்வில் உரையாற்றிய கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சஞ்சக பெரேரா, வீதிகளில் திரியும் நாய்களுக்கு உணவளிப்போர் குறித்த முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.
</p><p>
வீதிகளில் உள்ள நாய்களுக்கு உணவளிப்பவர்கள், அந்த நாய்களின் முழுப் பொறுப்பையும் தாங்களே ஏற்றுக்கொண்டு முறையாகப் பராமரிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
</p><p>
1973இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நோய் ஒழிப்பு வேலைத்திட்டத்தினால், அந்த காலத்தில் 370ஆக இருந்த வருடாந்த மரணங்களின் எண்ணிக்கை தற்போது 14 ஆகக் குறைவடைந்துள்ளது. இருப்பினும், இந்த 14 மரணங்கள் கூட அதிகம் என்பதால், நோய்த்தொற்றின் அடிப்படை ஊற்றையே கட்டுப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
விஷர் நாய்க்கடியால் பாதிக்கப்படுவோருக்கு வழங்கப்படும் சிகிச்சைகளுக்காக அரசாங்கத்திற்குப் பெரும் நிதிச்சுமை ஏற்படுவதாகக் குறிப்பிட்ட அவர், நாய்களுக்கே தடுப்பூசிகளை ஏற்றுவதன் மூலம் இந்த நோயைச் சுமையின்றி ஒழிக்க முடியும் என்றார்.
</p><p>
எனவே, மனிதர்களுக்கு நோய் வராமல் தடுப்பதை விட, விலங்குகளிடமே நோயைக் கட்டுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

இந்த முன்னெடுப்பின் ஊடாக 2030 ஆம் ஆண்டுக்குள் இலங்கையை விஷர் நாய்க்கடி அற்ற நாடாக மாற்றுவதே தங்களின் இலக்கு என அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T19:17:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரிஸ் அருகே மூன்றாவது நாளாகப் பற்றியெரியும் காட்டுத்தீ: திணறும் தீயணைப்பு வீரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/blaze-near-paris-burns-on-1784056188"></link>
            <id>https://news.lankasri.com/article/blaze-near-paris-burns-on-1784056188</id>
            <summary type="text">ஐரோப்பாவின் பல பகுதிகளில் மேலும் காட்டுத்தீ பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ள வெப்ப அலைக்கு மத்தியில், பாரிஸுக்குத் தெற்கே மூன்று நாட்களாகத் தொடர்ந்து எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பாவின் பல பகுதிகளில் மேலும் காட்டுத்தீ பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ள வெப்ப அலைக்கு மத்தியில், பாரிஸுக்குத் தெற்கே மூன்று நாட்களாகத் தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை</h2><p>பிரான்ஸ் காட்டுத்தீயுடன் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், பிரித்தானியா மற்றும் ஸ்பெயினையும் பாதித்து வரும் இந்த பருவத்தின் மூன்றாவது தீவிர வெப்ப அலை இத்தாலிக்கும் பரவியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbf12eae-4cab-41b8-ba65-2f24a01e6551/26-6a568cdbe6229.webp' /></p><p>
</p><p>இத்தாலிய அதிகாரிகள் இந்த வாரம் சார்டினியா (Sardinia) பகுதியில் வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸ் (111.2 டிகிரி பாரன்ஹீட்) வரை உயரக்கூடும் என்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், செவ்வாய்க்கிழமையன்று மேற்கு ஐரோப்பா முழுவதும் பதிவான சராசரி அதிகபட்ச வெப்பநிலை 29.4 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது; இது 1961 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் ஜூலை 14-ஆம் திகதிக்கான சராசரி அதிகபட்ச வெப்பநிலையை விட 6.3 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.</p><p></p><p> </p><p>இந்த வித்தியாசம் பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மிக அதிகமாகக் காணப்பட்டது; அங்கு சராசரி அதிகபட்ச வெப்பநிலையானது முறையே 9.4 டிகிரி செல்சியஸ் மற்றும் 9.1 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகப் பதிவாகியிருந்தது. </p><p>இந்த நிலையில், காலநிலை மாற்றம் இத்தகைய நிகழ்வுகளை அடிக்கடி நிகழக்கூடியதாகவும் தீவிரமானதாகவும் மாற்றி வருவதாகவும், இதனால் கண்டம் முழுவதும் உள்ள காடுகளும் புதர்நிலங்களும் எளிதில் தீப்பற்றும் நிலையில் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். </p><p>மே மாத இறுதியில் மற்றும் ஜூன் மாதத்தில் ஐரோப்பா மற்றும் பிரித்தானியாவில் ஏற்பட்ட, சாதனை அளவிலான இரண்டு வெப்ப அலைகளின்போது 10,000-க்கும் மேற்பட்ட கூடுதல் இறப்புகள் பதிவாகியுள்ளன; இவ்வளவு அதிகமான மரணங்களுக்கு வெப்பமே நம்பத்தகுந்த ஒரே காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1ee94cf-8298-4948-ad47-1fc31077b5cc/26-6a568cdccfeb8.webp' /></p><p> </p><p>ஸ்பெயினின் பிரபலமான சுற்றுலாப் பகுதியான அல்மேரியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயில் சிக்கி குறைந்தது 13 பேர் (பெரும்பாலும் வெளிநாட்டினர்) மரணமடைந்ததுடன் 10 பேரைக் காணவில்லை; இச்சம்பவத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் காணும் பணிகளை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். </p><p>இதனிடையே, பிரான்ஸின் மிகவும் புகழ்பெற்ற அரச அரண்மனைகளில் ஒன்று அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஃபோன்டென்ப்ளூ (Fontainebleau) காட்டில் பரவிய தீயை அணைக்க, பிரெஞ்சு தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் போராடியுள்ளனர்.</p><h2>இதுவரை 32,000 ஹெக்டேர்</h2><p> </p><p>தீயை மூட்டியதாகக் கருதப்படும் சந்தேகத்தின் பேரில் குறைந்தது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஃபோன்டென்பிளோ வனப்பகுதியைச் சுற்றியுள்ள இரண்டு தீ விபத்துகள் இன்னும் தொடர்ந்து பரவி வருவதாகவும், பிரதான தீ 1,600 ஹெக்டேர் பரப்பளவையும், அருகிலுள்ள மற்றொரு தீ 450 ஹெக்டேர் பரப்பளவையும் எரித்துச் சாம்பலாக்கியுள்ளதாகவும், ஆனால் வானிலை சீரடைந்துள்ளதாகவும் உள்ளூர் பிரெஞ்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். </p><p>தீ விபத்து ஃபான்டென்ப்ளூ அரண்மனையிலிருந்து (Palace of Fontainebleau) சில கிலோமீற்றர் தொலைவிலேயே ஏற்பட்டிருந்ததால், தண்ணீர் சுமந்து செல்லும் விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் உள்ளிட்ட கணிசமான வளங்கள் அப்பகுதியில் ஈடுபடுத்தப்பட்டதாக உள்விவகார அமைச்சர் லாரன்ட் நுனெஸ் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aba74d78-72fb-493d-a92a-febf3b451653/26-6a568cdd909a6.webp' /></p><p> </p><p>மேலும், பிரான்சில் இந்த ஆண்டு இதுவரை 32,000 ஹெக்டேர் நிலப்பரப்பு தீயில் எரிந்துள்ள நிலையில், ஃபோன்டெய்ன்பிளூ (Fontainebleau) காட்டுத்தீயும் சேர்ந்து இந்த ஆண்டை காட்டுத்தீயைப் பொறுத்தவரை ஒரு சாதனை ஆண்டாக மாற்றக்கூடும் என்று அமைச்சர் நுனெஸ் கூறியுள்ளார். </p><p>இந்த பருவத்தில் தீ வைத்ததாகக் கருதப்படும் சந்தேகத்தின் பேரில் பிரான்ஸ் முழுவதும் 59 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T19:08:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - ஈரான் மோதலால் உலகளாவிய மனிதாபிமானப் பேரழிவு எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/un-rights-chief-warns-over-us-iran-conflict-1784053562"></link>
            <id>https://ibctamil.com/article/un-rights-chief-warns-over-us-iran-conflict-1784053562</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் வெடித்துள்ள நேரடி மோதல்கள், மத்திய கிழக்கு பிராந்தியம் மற்றும் அதைக் கடந்தும் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்குப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் வெடித்துள்ள நேரடி மோதல்கள், மத்திய கிழக்கு பிராந்தியம் மற்றும் அதைக் கடந்தும் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்குப் பெரும் பின்னடைவு என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் வோல்கர் துர்க் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.</p><p>

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், மீண்டும் தொடங்கியுள்ள இந்த நேரடி மோதலானது இப்பிராந்தியத்தில் அமைதி முயற்சிகளைச் சீர்குலைப்பதுடன் நிலைத்தன்மையற்ற சூழலை மேலும் ஆழமாக்குவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>மனித உரிமைகள்</h2><p>

இதனால் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதிலும் மனித உரிமைகளுக்குக் கடுமையான ஆபத்துகள் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p>

பொதுமக்களின் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்களும் ஹார்முஸ் நீரிணையிலும் பிராந்தியத்தின் பிற நாடுகளுக்கு எதிராகவும் முன்னெடுக்கப்படும் ராணுவ மோதல்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d480c24d-812c-4a05-9865-99bbafd96873/26-6a56885522d67.webp' /></p><p>உலக வர்த்தகத்தின் முக்கியப் பாதையாக விளங்கும் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதாக வெளியாகும் செய்திகள் "மிகவும் கவலையளிக்கின்றன" என துர்க் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>

இதன் தாக்கம் இப்பிராந்தியத்தையும் கடந்து உலகளவில் எதிரொலிக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>உணவுப் பொருட்கள்</h2><p>இந்த முக்கிய நீர்வழிப் பாதை மில்லியன் கணக்கான மக்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்குத் தேவையான இன்றியமையாத உயிர்நாடியாகும் எனவும் இதில் ஏற்படும் தடங்கல்கள் உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தைப் பாதிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.</p><p>

இது பிராந்திய ரீதியாகவும் உலகளாவிய ரீதியாகவும் மிகக் கடுமையான சமூக-பொருளாதார மற்றும் மனிதாபிமானப் பேரழிவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf1e8175-59c2-4c74-a90f-78c8bbac0931/26-6a56885470e73.webp' /></p><p>தற்போதைய இக்கட்டான சூழலில் இரு தரப்பும் உடனடியாக ராஜதந்திர பேச்சுவார்த்தை பொறுமை மற்றும் பதற்றத்தைக் தணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>
மேலும், இரு நாடுகளும் உடனடியாகப் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T19:06:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-l-practical-exam-application-examination-dept-1784049579"></link>
            <id>https://ibctamil.com/article/a-l-practical-exam-application-examination-dept-1784049579</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகளுக்கான மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகளுக்கான மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களைக் கோருவது தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
பரீட்சைத் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><p>

இதனடிப்படையில், தகுதியான பரீட்சகர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பம் கோரும் நடைமுறையானது இன்று (14-07-2026) முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 28 ஆம் திகதி வரை இணையவழியில் (Online) மாத்திரமே மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p></p><h2>அதிகாரப்பூர்வ இணையத்தளம்</h2><p>இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.donets.lk அல்லது onlineexams.gov.lk.eic ஆகிய இணையத்தள முகவரிகளுக்குச் சென்று இதற்கான விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்க வேண்டும் என அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bd59717-f686-412e-ac40-7d4eb6a1728b/26-6a56808acc016.webp' /></p><p>மேலும், இது தொடர்பில் ஏதேனும் மேலதிக விபரங்கள் அல்லது விசாரணைகள் தேவைப்படின், 0112784208 / 0112784537 அல்லது 0112785922 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டு விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T19:06:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகப் பொருளாதாரத்தை முடக்க ஈரானின் ஆபத்தான வியூகம்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-warns-of-closing-bab-el-mandeb-strait-1784045589"></link>
            <id>https://ibctamil.com/article/iran-warns-of-closing-bab-el-mandeb-strait-1784045589</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை வழியாக ஏற்கனவே கப்பல் போக்குவரத்தை முடக்கியுள்ள ஈரான்,
தற்போது தனது அடுத்த ஆபத்தான வியூகத்தை கையில் எடுத்துள்ளது.

ஏமனில் உள்ள தனது...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை வழியாக ஏற்கனவே கப்பல் போக்குவரத்தை முடக்கியுள்ள ஈரான்,
தற்போது தனது அடுத்த ஆபத்தான வியூகத்தை கையில் எடுத்துள்ளது.</p><p>

ஏமனில் உள்ள தனது ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களைப் பயன்படுத்தி செங்கடலின் நுழைவாயிலான பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடப்போவதாக ஈரான்
மறைமுகமாக எச்சரித்துள்ளது.
</p><p>
வொஷிங்டனுக்கு எதிராக ஒரு புதிய போர்க்களத்தைத் திறப்பதன் மூலம் உலகின் மிக
முக்கியமான இரண்டு எரிசக்தி வழித்தடங்களையும் ஒரே நேரத்தில் அச்சுறுத்தலுக்கு
உள்ளாக்க ஈரான் முயன்று வருகிறது.</p><p></p><h2>பெரும் அதிர்ச்சி</h2><p>

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் ஹூதி
அமைப்பின் அரசியல் பிரிவு உறுப்பினர் முகமது அல்-ஃபராஹ் இது குறித்து எச்சரிக்கையொன்றையும் விடுத்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67281cf2-92f6-4399-9221-c80c994ca873/26-6a566d4bac8e4.webp' /></p><p>குறித்த எச்சரிக்கையில், “நிலைமை மேலும் மோசமடைந்தால் பாப் எல்-மண்டேப் நீரிணையும்
ஹோர்முஸ் நீரிணையும் கூட்டு கூட்டணியின் மூலம் மூடப்படும்.
</p><p>
இதனால் மசகு எண்ணெய் விலை பெரலுக்கு 200 டொலராக உயர்ந்து உலகப்
பொருளாதாரத்திற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்" என தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>பொருளாதார நெருக்கடி</h2><p>சவுதி அரேபியாவின் மசகு எண்ணெய் ஏற்றுமதி மற்றும் உலகளாவிய கப்பல்
போக்குவரத்தில் பெரும்பகுதி இந்த பாப் எல்-மண்டேப் வழியாகவே நடைபெறுகிறது.</p><p>

ஈரானின் இந்த நகர்வு, போரை இரு நாடுகளுக்கு இடையேயான மோதலாக மட்டும் வைக்காமல்
உலகளாவிய பொருளாதார நெருக்கடியாக மாற்றும் ஒரு தந்திரம் என்று அரசியல்
ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4931d9c7-1f11-4540-b80c-241fd532684d/26-6a566c668b819.webp' /></p><p>அமெரிக்கா தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தினால் ஈரான் தனது இறுதி ஆயுதமாக
இதைப் பயன்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கப்படுகிறது.
</p><p>
அதே நேரத்தில் ஹூதிகள் இந்த எல்லையைத் தாண்டினால் அமெரிக்கா மற்றும் அதன்
நட்பு நாடுகள் அவர்கள் மீது இன்னும் கடுமையான கூட்டு இராணுவத் தாக்குதலை
நடத்தக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T19:06:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/foreign-tourist-arrivals-show-new-trend-1784054445"></link>
            <id>https://jvpnews.com/article/foreign-tourist-arrivals-show-new-trend-1784054445</id>
            <summary type="text">ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை நாட்டுக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 இலட்சம் (1.2 மில்லியன்) என்ற எல்லையைக் கடந்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை நாட்டுக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 இலட்சம் (1.2 மில்லியன்) என்ற எல்லையைக் கடந்துள்ளது.</p><p style="text-align: justify; ">


இதற்கமைய, கடந்த ஜனவரி 01ஆம் திகதி முதல் ஜூலை 12ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,217,956 ஆக பதிவாகியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27c281ec-3ef0-4760-8c2d-b9cf44a0aa3b/26-6a5682af1a021.webp' /></p><h2 style="text-align: justify; ">சுற்றுலாப் பயணிகள்&nbsp;</h2><p style="text-align: justify; ">

இதேவேளை, ஜூலை 01ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மட்டும் 71,383 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
ஜூலை மாதத்தில் இதுவரை வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் அதிகமானோர் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர். அந்த எண்ணிக்கை 16,610 ஆகும்.</p><p style="text-align: justify; ">

இரண்டாவது அதி கூடிய சுற்றுலாப் பயணிகள் ஐக்கிய இராச்சியத்திலிருந்து (பிரித்தானியா) வருகை தந்துள்ளனர் என்பதுடன், அந்த எண்ணிக்கை 7,296 ஆகப் பதிவாகியுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

மூன்றாவது அதி கூடிய சுற்றுலாப் பயணிகள் அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். அந்த எண்ணிக்கை 4,656 ஆகும்.


இதேவேளை, இந்த ஆண்டின் கடந்துள்ள காலப்பகுதியில் ஒட்டுமொத்தமாக அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர். அந்த எண்ணிக்கை 310,293 ஆகும்.</p><p style="text-align: justify; ">
இதற்கு மேலதிகமாக, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 115,863 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 80,487 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
அத்துடன், இந்த ஆண்டின் கடந்துள்ள காலப்பகுதியில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த மாதமாக பெப்ரவரி மாதம் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கையானது 279,328 ஆக பதிவாகியுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p>]]></content>
            <updated>2026-07-14T19:00:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[லாரி - கார் மோதி ஒருவர் பரிதாப பலி, இருவர் காயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/one-dead-two-injured-in-brockton-area-crash-1784049902"></link>
            <id>https://canadamirror.com/article/one-dead-two-injured-in-brockton-area-crash-1784049902</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் சவுத் புரூஸ் பகுதியின், பிராக்டன் நகருக்கு வடக்கே கார் மற்றும் வர்த்தக லாரி ஆகியவை மோதி ஏற்பட்ட ஒரு கொடூர விபத்து குறித்து பொலிஸார் தீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் சவுத் புரூஸ் பகுதியின், பிராக்டன் நகருக்கு வடக்கே கார் மற்றும் வர்த்தக லாரி ஆகியவை மோதி ஏற்பட்ட ஒரு கொடூர விபத்து குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>
'சைடுரோடு 10 சவுத்' மற்றும் 'கண்சேஷன் 4 ஈஸ்ட் பிரான்ட்' சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
அதிவேகமாக வந்த பயணிகள் காரும், பெரிய வர்த்தக லாரியும் இந்தச் சந்திப்பில் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்த விபத்தில் காரில் பயணம் செய்த வாக்கர்டன் (Walkerton) பகுதியைச் சேர்ந்த 61 வயது நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாகப் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45cf2255-3719-4fcc-b4f7-32b426b409c6/26-6a5670efea4b9.webp' /></p><p>
</p><p>மேலும், இந்த விபத்தில் லாரி மற்றும் காரின் ஓட்டுநர்கள் இருவரும் பலத்த காயமடைந்தனர். 
அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். </p><p>
விபத்துக்கான சரியான காரணம் குறித்துப் பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T19:00:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[1,900 ஆபாசப் படங்கள், 400 வீடியோக்கள், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ; தமிழ்நாட்டை கதிகலங்க வைத்த இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/1-900-obscene-photos-400-videos-seized-1784053732"></link>
            <id>https://jvpnews.com/article/1-900-obscene-photos-400-videos-seized-1784053732</id>
            <summary type="text">நாகர்கோவில் காசிக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் சிறை தண்டனையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று உறுதி செய்துள்ளது.

சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களிடம் பழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாகர்கோவில் காசிக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் சிறை தண்டனையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று உறுதி செய்துள்ளது.
</p><p>
சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களிடம் பழகி, அவர்களை ஏமாற்றி, தவறான கோணத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து, அதை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்ததாக கடந்த 2020ஆம் ஆண்டு நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற இளைஞர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/742553aa-356a-485d-ba9f-fdc9fb0f0408/26-6a567fe5d115b.webp' /></p><h2>சிறை தண்டனை</h2><p>
</p><p>
சி.பி.சி.ஐ.டி விசாரணையில் காசியின் மடிக்கணினியில் இருந்து 1,900 ஆபாச புகைப்படங்கள் மற்றும் 400 ஆபாச வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன. </p><p>நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இவரால் ஏமாற்றப்பட்டதாக சி.பி.சி.ஐ.டி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.</p><p>

இந்த வழக்கை விசாரித்த நாகர்கோவில் மகிளா நீதிமன்றம், கடந்த 2023 ஜூன் மாதத்தில் காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1.10 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.</p><p></p><p>
</p><p>
இது தவிர, கந்துவட்டி மற்றும் மிரட்டல் வழக்குகளிலும் இவருக்கு தனித்தனியாக சிறை தண்டனைகள் விதிக்கப்பட்டிருந்தன. </p><p>இந்த ஆயுள் தண்டனை தீர்ப்பை எதிர்த்து காசி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது என்று கூறி வாழ்நாள் சிறை தண்டனையை உறுதி செய்துள்ளது.
</p><p>

அதேசமயம் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T18:28:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெற்றோரை கொன்ற யானை, 14 ஆண்டுகள் கழித்து மருமகள்–பேரனையும் பலி தீர்த்த அதிர்ச்சி சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/elephant-kills-four-members-of-same-nepal-family-1784036777"></link>
            <id>https://manithan.com/article/elephant-kills-four-members-of-same-nepal-family-1784036777</id>
            <summary type="text">நேபாளத்தில் கூலி தொழிலாளி ஒருவரின் பெற்றோரை கடந்த 2012-ம் ஆண்டு கொன்ற அதே காட்டு யானை, 14 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மருமகள் மற்றும் பேரனையும் கொன்ற ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் கூலி தொழிலாளி ஒருவரின் பெற்றோரை கடந்த 2012-ம் ஆண்டு கொன்ற அதே காட்டு யானை, 14 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மருமகள் மற்றும் பேரனையும் கொன்ற சம்பவம்&nbsp; பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
நேபாளத்தின் சித்வான் தேசிய பூங்கா அருகே உள்ள மாடி கிராமத்தைச் சேர்ந்தவர்&nbsp; தான்சனிச்சரா போட். இவரது தந்தை புதிராம், தாய் ஜராலி ஆகியோர் கடந்த 2012-ம் ஆண்டு ‘துர்பே’ என்ற காட்டு யானை தாக்கி உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a45b5259-0b17-4700-84c2-2796644c9dd1/26-6a5641443fc63.webp' /></p><p></p><h2>காட்டு யானை ”துர்பே”</h2><p>

இதனால் அதிர்ச்சியடைந்த சனிச்சரா போட், தனது குடும்பத்தின் பாதுகாப்புக்காக மாடி கிராமத்தை விட்டு சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜகத்பூர் கிராமத்துக்கு குடிபெயர்ந்தார். அங்கு கடந்த 14 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வந்தார்.
</p><p>
ஆனால், கடந்த 12-ம் தேதி அவரது வீட்டுக்குள் நுழைந்த அதே காட்டு யானை ‘துர்பே’, சனிச்சரா போட்டின் மருமகள் ஆஷிகா போட் மற்றும் 4 வயது பேரன் பரத் போட்டை தாக்கிக் பலியாக்கியுள்ளது.</p><p>

இதுகுறித்து சனிச்சரா போட் கூறுகையில், “யானையிடம் இருந்து தப்பிக்க ஆற்றைக் கடந்து தொலைவில் குடியேறினோம். 14 ஆண்டுகளாக பாதுகாப்பாக இருந்தோம். ஆனால், என் பெற்றோரை கொன்ற அதே யானை மீண்டும் வந்து என் மருமகளையும் பேரனையும் கொன்றுவிட்டது” என வேதனையுடன் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b1a3bf9-bf7f-4c58-8104-258487ad3822/26-6a564144e70f6.webp' /></p><p></p><p>
</p><p>
நேபாளத்தில் மிகவும் ஆபத்தான காட்டு யானையாக கருதப்படும் ‘துர்பே’, கடந்த 2010-ம் ஆண்டு முதல் இதுவரை 25 பேரை கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.</p><p> அதன் நடமாட்டத்தை கண்காணிக்க பலமுறை அதன் உடலில் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டிருந்ததும் இந்த யானைக்கு என்று தனியே 'விக்கிப்பீடியா' உள்ளதும் குறிப்பிடத்தக்கது. குறித்த சம்பவம் இணையத்தில் தற்பாது பெரும் அதிர்வலைகளையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T18:25:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமலை ஒற்றைப்பனை அடியில் சம்பந்தனை முதன் முதலில் சந்தித்த விடுதலை புலிகளின் தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-tamils-sambanthan-tamil-eelam-1784051147"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-tamils-sambanthan-tamil-eelam-1784051147</id>
            <summary type="text">இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தனிடன் நினைவேந்தல் நிகழ்வில் சுமந்திரன் முன்வைத்துள்ள கருத்துக்கள் விமர்சனத்திற்குள்ளாகிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தனிடன் நினைவேந்தல் நிகழ்வில் சுமந்திரன் முன்வைத்துள்ள கருத்துக்கள் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளன.&nbsp;</p><p>இரா. சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கடந்த 11ஆம் திகதி திருகோணமலை மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.</p><p>இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில், கட்சித் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.&nbsp;</p><p>அதன்போது, அவர் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் தமிழ்த்தேசியம் சார்ந்த அரசியல் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் என பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.&nbsp;</p><p>இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/eJR3fcBrnMQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T18:15:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெதன்யாகுவிற்கு ட்ரம்ப் இட்ட கட்டளை : உடன் வெளியேற உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-urged-netanyahu-israeli-troops-out-syria-1784052835"></link>
            <id>https://ibctamil.com/article/trump-urged-netanyahu-israeli-troops-out-syria-1784052835</id>
            <summary type="text">&amp;nbsp;​​சிரியா மற்றும் லெபனானில் இருந்து இஸ்ரேலியப் படைகளைத் திரும்பப் பெறுமாறு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;​​சிரியா மற்றும் லெபனானில் இருந்து இஸ்ரேலியப் படைகளைத் திரும்பப் பெறுமாறு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியதாக ஆக்சியோஸ் இன்று செவ்வாயன்று செய்தி வெளியிட்டது.
</p><p>
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி, சிரியப் பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்தின் இருப்பு பதட்டங்களை உருவாக்குவதாகவும், மேலும் பதற்றம் அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் ட்ரம்ப் நெதன்யாகுவிடம் கூறியதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது.</p><h2>படைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்</h2><p>"நீங்கள் அங்கு இருப்பதை அவர்கள் விரும்பவில்லை. நீங்கள் படைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்," என்று ட்ரம்ப் நெதன்யாகுவிடம் தொலைபேசி உரையாடலின் போது, கூறியதாக, ஆக்சியோஸ் மேற்கோள் காட்டிய ஒரு அமெரிக்க அதிகாரி தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e25a9e0-63b4-4385-a7da-3f376d5da2ff/26-6a567c650f867.webp' /></p><p>லெபனான் தொடர்பாகவும் l்ரம்ப் இதேபோன்ற கோரிக்கையை விடுத்ததாகவும், ஆனால் இஸ்ரேலுக்கு அதன் எல்லைகளில் பாதுகாப்பு வலயங்கள் தேவை என்று நெதன்யாகு வாதிட்டதாகவும் அது கூறியது.
</p><p>
துருக்கியில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டின் ஓரத்தில், சிரிய ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷராவை ட்ரம்ப் சந்தித்த ஒரு நாள் கழித்து இந்த அழைப்பு வந்ததாகவும், இஸ்ரேலுக்கும் சிரியாவுக்கும் இடையே ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டை முன்னெடுப்பதற்கான முயற்சிகளை ட்ரம்ப் நிர்வாகம் தொடர்வதாகவும் ஆக்சியோஸ் கூறியது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T18:14:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க – ஈரான் மோதல் குறித்து ஐ.நா எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/un-human-rights-chief-warns-1784052255"></link>
            <id>https://tamilwin.com/article/un-human-rights-chief-warns-1784052255</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் வெடித்துள்ள நேரடி மோதல்கள், மத்திய கிழக்கு பிராந்தியம் மற்றும் அதைக் கடந்தும் வாழும் லட்சக்கணக்கான மக்களு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் வெடித்துள்ள நேரடி மோதல்கள், மத்திய கிழக்கு பிராந்தியம் மற்றும் அதைக் கடந்தும் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்குப் "பெரும் பின்னடைவு" என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் வோல்கர் துர்க் எச்சரித்துள்ளார். </p><p>
மீண்டும் தொடங்கியுள்ள இந்த நேரடி மோதலானது, இப்பிராந்தியத்தில் அமைதி முயற்சிகளைச் சீர்குலைப்பதுடன், நிலைத்தன்மையற்ற சூழலை மேலும் ஆழமாக்குவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>இதனால் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதிலும் மனித உரிமைகளுக்குக் கடுமையான ஆபத்துகள் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6378bf9-d057-4ff2-b85a-684e614f37e6/26-6a567a21731d9.webp' /></p><p>
</p><p>பொதுமக்களின் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்களும், ஹார்முஸ் நீரிணையிலும் பிராந்தியத்தின் பிற நாடுகளுக்கு எதிராகவும் முன்னெடுக்கப்படும் ராணுவ மோதல்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.</p><p>
உலக வர்த்தகத்தின் முக்கியப் பாதையாக விளங்கும் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதாக வெளியாகும் செய்திகள் "மிகவும் கவலையளிக்கின்றன" என துர்க் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>
இதன் தாக்கம் இப்பிராந்தியத்தையும் கடந்து உலகளவில் எதிரொலிக்கும் என அவர் எச்சரித்துள்ளார். </p><p>
இந்த முக்கிய நீர்வழிப் பாதை மில்லியன் கணக்கான மக்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்குத் தேவையான இன்றியமையாத உயிர்நாடியாகும் எனவும் இதில் ஏற்படும் தடங்கல்கள் உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தைப் பாதிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.</p><p>இது பிராந்திய ரீதியாகவும் உலகளாவிய ரீதியாகவும் மிகக் கடுமையான சமூக-பொருளாதார மற்றும் மனிதாபிமானப் பேரழிவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.
</p><p>தற்போதைய இக்கட்டான சூழலில், இரு தரப்பும் உடனடியாக ராஜதந்திர பேச்சுவார்த்தை, பொறுமை மற்றும் பதற்றத்தைக் தணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் வலியுறுத்தியுள்ளார். </p><p>
மேலும், இரு நாடுகளும் உடனடியாகப் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-14T18:04:21+00:00</updated>
        </entry>
    </feed>
