<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-15T03:35:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் பதவி விலகுவதாக அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/central-province-governer-resigned-1784085804"></link>
            <id>https://tamilwin.com/article/central-province-governer-resigned-1784085804</id>
            <summary type="text">மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், தனது ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பதவி விலகல் குறித்த கடிதத்தை ஜனாதிபதி அநுர குமார த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், தனது ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.</p><p> பதவி விலகல் குறித்த கடிதத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம், சரத் அபேகோன் சமர்ப்பித்துள்ளார்.
</p><p>
சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்த ராஜினாமா கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67898021-dc8f-485f-8a24-f0c17400b29f/26-6a56fe98c1713.webp' /></p><p> </p><p>அத்துடன், ஜனாதிபதி இந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை என இது தொடர்பாக பேராசிரியர் சரத் அபேகோன் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தனிப்பட்ட காரணங்களினாலேயே தான் இந்த பதவி விலகல் முடிவை எடுத்ததாக பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.
</p><p>
பேராசிரியர் சரத் அபேகோன் முன்னதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>
மத்திய மாகாண ஆளுநர் செயலாளர் பதவியும் வெற்றிடம்
இதேவேளை, மத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் பதவியும் தற்போது வெற்றிடமாக காணப்படுகிறது.</p><p> இப்பதவியை வகித்து வந்த மஞ்சுளா மடஹபொல அண்மையில் ஓய்வு பெற்றமையே இதற்கு காரணமாகும்.

இதனையடுத்து, குறித்த பதவியின் பொறுப்புக்களை தற்காலிகமாக முன்னெடுப்பதற்காக மத்திய மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர் இஷான் விஜேதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-15T03:33:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 10 வயது சிறுவன்: இஸ்ரேலிய படையினரின் அத்துமீறல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/10-yrs-old-killed-in-israel-army-shooting-in-gaza-1784086219"></link>
            <id>https://news.lankasri.com/article/10-yrs-old-killed-in-israel-army-shooting-in-gaza-1784086219</id>
            <summary type="text">காசாவில் நேற்றிரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 10 வயது சிறுவன் கொல்லப்பட்டு இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 10 வயது சிறுவன் உயிரிழப்புதெற்கு காசாவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காசாவில் நேற்றிரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 10 வயது சிறுவன் கொல்லப்பட்டு இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> 10 வயது சிறுவன் உயிரிழப்பு</h2><p>தெற்கு காசாவின் ராபாவில் உள்ள அல்மவாசி பகுதியில் அமைந்துள்ள தற்காலிக அகதிகள் முகாமில் இஸ்ரேலிய படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 வயதுடைய முவாதாஸ் அபு ஷார் என்ற சிறுவன் கொல்லப்பட்டுள்ளார்.</p><p> இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிறுவனின் அத்தை பேசிய போது, அந்த சிறுவன் கையில் என்ன துப்பாக்கியா வைத்திருந்தான்? அவன் கூடாரத்திற்குள் தனியாக விளையாடி கொண்டிருந்தான். அவனுக்கு மகிழ்ச்சியாக வாழவும், விளையாடவும் உரிமை இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b693b1fb-3c24-4b2c-97cc-3595c27d8f52/26-6a56fecc9f913.webp' /></p><p>இஸ்ரேலிய படைகள் கடந்த சில நாட்களாக நடத்தி வரும் துப்பாக்கிச் சூட்டில் 8 முதல் 14 வயதுடைய நான்கு குழந்தைகள் படுகாயமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2> &nbsp;காவல் நிலையத்தின் மீது ட்ரோன் தாக்குதல்</h2><p>
வடக்கு காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையம் மீது இஸ்ரேலிய படையினர் ட்ரோன் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளனர்.</p><p> இந்த ட்ரோன் தாக்குதலில், காவல் நிலையத்தின் தலைவரான கர்னல் முகமது மர்வான் சலீம் மற்றும் சில காவல்துறை அதிகாரிகள், பெண் ஒருவர் என 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><p> கர்னல் முகமது மர்வான் ஜபாலியா மத்திய படைப்பிரிவின் தலைவராக செயல்பட்டதாகவும், இஸ்ரேலின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட காரணத்தினாலும் இந்த தாக்குதல் தவிர்க்க முடியாதது என்று இஸ்ரேல் தரப்பு விளக்கமளித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T03:30:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகா சங்கமம் முடிந்த கையோடு சன் டிவியின் லட்சுமி சீரியலின் நேரம் மாற்றம்... புதிய நேர விவரம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sun-tv-lakshmi-serial-new-time-change-1784085099"></link>
            <id>https://cineulagam.com/article/sun-tv-lakshmi-serial-new-time-change-1784085099</id>
            <summary type="text">சன் டிவிசீரியல்களில் கெத்து காட்டி வரும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எல்லா சீரியல் கதைக்களத்திலும் விறுவிறுப்பான கதைக்களம் சென்று கொண்டிருக்கிற...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சன் டிவி</h2><p>சீரியல்களில் கெத்து காட்டி வரும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எல்லா சீரியல் கதைக்களத்திலும் விறுவிறுப்பான கதைக்களம் சென்று கொண்டிருக்கிறது.</p><p>டிஆர்பியில் டாப்பில் இருக்கும் மூன்று முடிச்சு சீரியலில் நந்தினி மீது மொத்த பழியையும் போடும் வகையில் ரஞ்சித் பக்கா பிளான் போட்டு வருகிறார், அது எப்போது வெடிக்கும், சூர்யா-நந்தினி செய்யப்போவது என்ன என்பதையெல்லாம் பொறுத்திருந்து காண்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c5c307b-cb04-49f7-83af-add497fbc0b4/26-6a56fc509ca22.webp' /></p><p>அடுத்து கயல் சீரியலில் ஏகப்பட்ட தகராறு, எழில் எப்போது கண் விழிப்பார் பிரச்சனைகள் தீரும் என்பது தெரியவில்லை. சிங்கப்பெண்ணே, மருமகள், அன்னம் போன்ற தொடர்களின் கதையும்&nbsp; விறுவிறுப்பாக தான் செல்கிறது.</p><p></p><h2>மாற்றம்</h2><p>அவ்வப்போது சன் டிவி சீரியல்களின் நேரம் மாற்றப்படுவது வழக்கம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3577f99-099b-44c5-82af-618de1d1b462/26-6a56fc4fbbd97.webp' /></p><p>அப்படி தற்போது மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த ஒரு சீரியலின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. லட்சுமி மற்றும் இரு மலர்கள் சீரியல்களின் மகா சங்கமம் நடந்து வந்தது, விரைவில் முடிவுக்கு வரப்போகிறதாம்.</p><p>அதன்பின் லட்சுமி சீரியல் நேரம் மாற்றத்துடன் ஒளிபரப்பாக உள்ளது. இனி பிற்பகல் 3 மணிக்கு லட்சுமி சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாம்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DawtEV1sw6M/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DawtEV1sw6M/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DawtEV1sw6M/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by SE (@sun_express___)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-07-15T03:30:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் அம்மா ஆக எப்போதும் விரும்பினேன்.. உருக்கமாக பேசிய நடிகை சமந்தா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/samantha-emotionally-talk-about-her-pregnancy-1784085048"></link>
            <id>https://viduppu.com/article/samantha-emotionally-talk-about-her-pregnancy-1784085048</id>
            <summary type="text">இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருப்பவர் சமந்தா.&amp;nbsp;இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த எங்கள் தங்கம் திரைப்படம் உலகளவில் ரூ. 100 கோட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருப்பவர் சமந்தா.&nbsp;இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த எங்கள் தங்கம் திரைப்படம் உலகளவில் ரூ. 100 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/186c6fe5-8d38-4072-9cf9-8214307ed25a/26-6a56fa3c14445.webp' /></p><p> </p><p>நடிகை சமந்தா தற்போது கர்ப்பமாக இருப்பதால் அடுத்து மீண்டும் சினிமாவில் இருந்து ஒரு பிரேக் எடுக்க போகிறார். இதனை அவரே அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43dec869-d9cb-4089-8325-f125f1e5a55a/26-6a56fa3cb8ea4.webp' /></p><p> 

இந்நிலையில் சமந்தா அளித்த சமீபத்திய பேட்டியில், தான் தாய்மையை அடைய ஆவலுடன் காத்திருந்ததாக தெரிவித்துள்ளார். "நான் அம்மா ஆக எப்போதும் விரும்பினேன். நான் வாழ்க்கையில் எல்லாவற்றிலும் ஆர்வத்துடன் (passion) தான் இருந்தேன். தற்போது ஒரு புது வித வலிமை மற்றும் நோக்கத்தை என்னிடம் உணர்கிறேன். இந்த பயணத்திற்காக நான் காத்திருக்கிறேன்." என கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd05d1f7-9ff7-4b9a-8d98-05fa9e048774/26-6a56fa3b620a9.webp' /></p><p>

நடிகை சமந்தாவின் இந்த உருக்கமான பேச்சு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.</p>]]></content>
            <updated>2026-07-15T03:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[உளவுத்துறை அறிக்கையின்படியே பிரமுகர்களுக்கு விசேட பாதுகாப்பு! அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-security-for-dignitaries-1784084130"></link>
            <id>https://tamilwin.com/article/special-security-for-dignitaries-1784084130</id>
            <summary type="text">இலங்கையில் அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய நபர்களுக்கு வழங்கப்படும் விசேட
பிரமுகர் பாதுகாப்பு என்பது, அரச உளவுத்துறையின் அச்சுறுத்தல் மதிப்பீட்டு
அறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய நபர்களுக்கு வழங்கப்படும் விசேட
பிரமுகர் பாதுகாப்பு என்பது, அரச உளவுத்துறையின் அச்சுறுத்தல் மதிப்பீட்டு
அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமையவே வழங்கப்படுகின்றதே தவிர, அது
தன்னிச்சையாக வழங்கப்படுவதில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த
ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.</p><p>

நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்
ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெளிவுபடுத்தினார்.</p><p></p><h2>விசேட பாதுகாப்பு&nbsp;</h2><p>

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>"அசோக ரன்வல, மொஹமட் ரிஸ்வி சாலி, சரத் குமார, அஜித் சாந்த, ருவன் விஜேவீர,
திலங்க யோகமகே, சுனில் பியன்வல, தினேஷ் ஹேமமந்த, ரஞ்சித் மத்தும பண்டார,
எச்.எம். தர்மசேன மற்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் ஆகிய 11 நபர்களுக்கும்
எந்தவித விசேட பிரமுகர் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என்பதை விசேட
பாதுகாப்புப் பிரிவு பொலிஸ்மா அதிபருக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a4661f5-9658-4a72-a6e4-bf4880390836/26-6a56fd84b1d2e.webp' /></p><p>
</p><p>அமைச்சரவை அமைச்சர்களாகிய எமக்கே கூட இத்தகைய விசேட பாதுகாப்புகள்
வழங்கப்படவில்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>பாதுகாப்பு வழங்கப்படுவது தொடர்பாக அமைச்சர் விளக்கமளிக்கையில், </p><p>"தற்போது
நடைமுறையில் உள்ள 2020ஆம் ஆண்டின் '2398/26' இலக்க பொலிஸ் சுற்றறிக்கைக்கு
அமையவே பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பாதுகாப்புத் தேவை எனக்
கோரி விண்ணப்பிக்கும் நபர்களுக்கு, அரச உளவுச் சேவையினூடாக ஒரு விசேட
'அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கை' கோரப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/688e9ad0-53c8-4a4c-8d60-02c72d6c53ea/26-6a56fd840ecca.webp' /></p><p> </p><p>அதனடிப்படையில், பொது மக்கள்
பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் செயலாளரின் தலைமையிலான
விசேட குழுவின் பரிந்துரையின் பேரே பாதுகாப்பு அதிகாரிகள்
நியமிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.
</p><p>
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்
முன்னாள் மக்கள் பிரதிநிதிகளுக்கு, தற்போது அவர்கள் நாடாளுமன்றத்தில்
இல்லாவிட்டாலும், உளவுத்துறையின் அச்சுறுத்தல் விவரங்களின் அடிப்படையிலேயே
பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T03:24:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதிப்போட்டிக்கு நுழைந்த ஸ்பெயின் - கலைந்த பிரான்ஸின் கனவு: அதிர்ச்சியில் இரசிகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/spain-beat-france-qualified-for-fifa-world-cup-1784083417"></link>
            <id>https://ibctamil.com/article/spain-beat-france-qualified-for-fifa-world-cup-1784083417</id>
            <summary type="text">உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 2026 பிபா உலகக்கோப்பை கால்பந்து திருவிழா, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற முதலாவது அரையிறுதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 2026 பிபா உலகக்கோப்பை கால்பந்து திருவிழா, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. </p><p>விறுவிறுப்பாக நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.</p><p>
இந்த போட்டி இன்று (இலங்கைநேரப்படி நள்ளிரவு 12.30 மணி) டெக்சாஸின் ஆர்லிங்டனிலுள்ள டல்லாஸ் மைதானத்தில் நடைபெற்றது.</p><p></p><h2>இறுதிப்போட்டிக்குத் தகுதி&nbsp;</h2><p>இந்தப் போட்டியில் ஸ்பெயின் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
</p><p>
ஆட்டத்தின் 22 ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மிகேல் ஓயர்ஸபால் பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3acec0a-7505-4af7-a5fe-3574298fe639/26-6a56f78c7853a.webp' /></p><p>தொடர்ந்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 58 ஆவது நிமிடத்தில் டேனி ஓல்மோவின் உதவியுடன், பெட்ரோ போரோ இரண்டாவது கோலை அடித்து ஸ்பெயினின் வெற்றியை உறுதி செய்தார்.
</p><p>வலுவான தற்காப்பு ஆட்டத்தின் மூலம் பிரான்ஸின் தாக்குதல்களை முறியடித்த ஸ்பெயின் அணி, இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.</p><p></p><h2>தோல்வியடைந்த பிரான்ஸ்</h2><p>தோல்வியடைந்த பிரான்ஸ் அணி தொடரிலிருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72697149-cbdb-4ee5-abbf-76f01632a289/26-6a56f78d2e845.webp' /></p><p> இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில், அர்ஜென்டினா - இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T03:22:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இலக்கு வைக்கப்படும் வெளிநாட்டிலிருந்து வருவோரின் வீடுகள் - சிக்கிய நபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-arrested-in-connection-with-theft-in-jaffna-1784085268"></link>
            <id>https://ibctamil.com/article/two-arrested-in-connection-with-theft-in-jaffna-1784085268</id>
            <summary type="text">யாழ். காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்கு வைத்து
மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர்&amp;nbsp;கைது செய்யப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்கு வைத்து
மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர்&nbsp;கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>குறித்த நபர்கள் நேற்று(14) யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>காரைநகரிலுள்ள வீடொன்றில் 1600 கனேடிய டொலர், ஒரு சோடி காப்பு மற்றும்
கடவுச்சீட்டு என்பனவும் மற்றொரு வீட்டில் 400 அமெரிக்க யூரோ மற்றும் இலங்கை
மதிப்பிலான ஒரு இலட்சம் ரூபா என்பனவும் களவாடப்பட்டன.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
இதுதொடர்பில் வீட்டின் உரிமையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய
யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரணைகளை
துரிதப்படுத்தியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d942f02-f27b-4891-8e31-3078dca17143/26-6a56fc5fd1494.webp' /></p><p>
விசாரணைக்கமைய காரைநகரைச் சேர்ந்த 26 மற்றும் 27 வயதுடைய இரண்டு இளைஞர்கள்
கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>சந்தேநபர்களிடமிருந்து களவாடப்பட்ட பணம், நகை என்பனவும் காவல்துறையினரால்
மீட்கப்பட்டுள்ளது.</p><p>
சந்தேநபர்களை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த காவல்துறையினர்நடவடிக்கை எடுத்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T03:21:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் முதன்முறையாக ரோபோடிக் அறுவை சிகிச்சை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ai-assisted-robotic-surgeries-1784085613"></link>
            <id>https://tamilwin.com/article/ai-assisted-robotic-surgeries-1784085613</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கையில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடனான ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொழும்பிலுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கையில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடனான ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p>
கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில், அதிநவீன ரோபோடிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிபுணத்துவம் வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்களால் இந்த இரண்டு தனித்தனி அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
</p><p>இவற்றில் ஒரு சிகிச்சை, 50 வயதுடைய பெண்ணொருவரின் கருப்பையை அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டதுடன், மற்றையது மிகவும் சிக்கலான சிறுநீரக அறுவை சிகிச்சையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dafb46ef-b73c-4dde-8092-24244bbd8919/26-6a56fc7285065.webp' /></p><p>
இந்த ரோபோடிக் அமைப்பானது தானாகவே இயங்கி அறுவை சிகிச்சைகளைச் செய்வதில்லை என்றும், இது முற்றிலும் அறுவை சிகிச்சை நிபுணரின் முழுக் கட்டுப்பாட்டின் கீழேயே இயங்குகிறது என்றும் மருத்துவ நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.</p><p>
இதன்போது, பிரத்யேக கன்சோல் வசதியைப் பயன்படுத்தி, அறுவை சிகிச்சை நிபுணர்கள் தங்களது கைகளின் அசைவுகளை மிகத் துல்லியமாக பிரதிபலிக்கும் வகையில் ரோபோடிக் கைகளை வழிநடத்துகின்றனர்.</p><p>
செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட கணினி நிரலாக்கத்தின் ஒருங்கிணைப்பு காரணமாக, இந்த அமைப்பினால் மிக நுணுக்கமான அசைவுகளை மேற்கொள்ள முடிகிறது. இது மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சைகளின் போது துல்லியத்தன்மையை மேலும் அதிகரிக்க உதவுகிறது என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>
ரோபோடிக் தொழில்நுட்ப உதவியுடனான அறுவை சிகிச்சைகள் மூலம் நோயாளிகளுக்குக் கிடைக்கும் நன்மைகள் குறித்து 
இந்த நவீன ரோபோடிக் அறுவை சிகிச்சை முறையானது பல நன்மைகளைக் கொண்டுள்ளது.</p><p> இதன் மூலம் அறுவை சிகிச்சையின் போது இரத்தப்போக்கு பெருமளவு குறைக்கப்படுவதுடன், மிகச் சிறிய வெட்டுக்காயங்களே&nbsp; ஏற்படுத்தப்படுவதாக வைத்தியர் சமந்தி டி சில்வா தெரிவித்துள்ளார்.</p><p> 
 இதனால் தொற்றுக்கள் ஏற்படும் அபாயம் குறைவடைவதுடன், நோயாளிகள் மிக விரைவாக குணமடைந்து வீடு திரும்ப முடியும். அத்துடன் அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் தவறுகளுக்கான வாய்ப்புகளும் இதனால் மிகக் குறைவாகவே இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T03:20:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கை அரசியலில் சிதையும் சுரேஷ் சலேயின் குடும்பம் - தப்பியோடும் அரசியல்வாதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/salley-s-wife-and-family-are-in-helpless-1784082652"></link>
            <id>https://tamilwin.com/article/salley-s-wife-and-family-are-in-helpless-1784082652</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள புலனாய்வுத்துறையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேயின் குடும்ப உறுப்பினர்களை முன்னிலைப்படுத்தி ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள புலனாய்வுத்துறையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேயின் குடும்ப உறுப்பினர்களை முன்னிலைப்படுத்தி பாரிய ஊடகப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. </p><p>

இதன் காரணமாக, அவர்கள் மிகவும் இக்கட்டான மற்றும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>

சுரேஷ் சலே மரணப் போராட்டம் நடத்துவதாக பிரபல அரசியல்வாதிகளான உதய கம்மன்பில, நாமல் ராஜபக்ச, விமல் வீரவன்ச மற்றும் திலித் ஜயவீர உள்ளிட்ட தரப்பினர் மிகவும் அறமற்ற முறையிலான பிரசாரங்களை மேற்கொண்டனர்.</p><p></p><p>
</p><h2><b>
தப்பியோடும் அரசியல்வாதிகள்</b></h2><p>இந்த ஊடக பிரசாரங்களுக்காக சுரேஷ் சலேயின் மனைவி, மகன் மற்றும் சகோதரர் ஆகியோரும் பயன்படுத்தப்பட்டனர். </p><p>எனினும், தற்போதைய நிலையில், குறிப்பிட்ட அரசியல் தரப்பினர் சுரேஷ் சலே குறித்து எவ்வித கவனமும் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5593cc37-eddd-404c-989d-ab80280c9452/26-6a56f3d5d5b7b.webp' />&nbsp;&nbsp;</p><p>

சலே தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட பிரசாரங்கள் குறித்து உறவினர்கள் அவரிடமும் மகனிடமும் வினவப்பட்டுள்ளது. </p><p>

அவர்களால் எவ்வித பதிலும் அளிக்க முடியாமல் மிகவும் மன வேதனைக்கும் இக்கட்டான நிலைக்கும் ஆளாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T03:11:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸை அடுத்து... செங்கடல் வழித்தடத்தை முடக்க திட்டமிடும் ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-eyes-choking-off-red-sea-1784075252"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-eyes-choking-off-red-sea-1784075252</id>
            <summary type="text">ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை முடக்கியுள்ள ஈரான், தற்போது தனது மிகவும் ஆபத்தான துருப்புச்சீட்டைப் பயன்படுத்தக்கூடும் என்று தகவல் கசிந்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை முடக்கியுள்ள ஈரான், தற்போது தனது மிகவும் ஆபத்தான துருப்புச்சீட்டைப் பயன்படுத்தக்கூடும் என்று தகவல் கசிந்துள்ளது.</p><h2>அமெரிக்கா மீது அழுத்தம்</h2><p>
</p><p>செங்கடலுக்கான பாப் அல்-மண்டேப் நுழைவாயிலை மூடுவதற்கு யேமனின் ஹவுதி படைகளைப் பயன்படுத்துவதுடன், அமெரிக்காவுக்கு எதிராக ஒரு புதிய முனையைத் திறந்து, உலகின் மிக முக்கியமான இரண்டு எரிசக்திப் பாதைகளை ஆபத்துக்குள்ளாக்குதல் என்பதே ஈரானின் திட்டம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae45e279-8d14-483f-adff-d880a8ad9363/26-6a56d50c84b43.webp' /></p><p> </p><p>ட்ரம்பின் மிரட்டலுக்கு இதுவரைப் பணியாத ஈரானுக்குள் அமெரிக்கத் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவதாலும், அதனுடன் ஹவுதிகளின் தாக்குதல்களும் அதிகரித்து வருவதாலும், </p><p>ஈரான் இந்த மோதலை விரிவுபடுத்தி, வளைகுடாப் பகுதிக்கு அப்பால் உலகளாவிய வர்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகத்திற்கான அச்சுறுத்தலை நீட்டிப்பதன் மூலம் அமெரிக்கா மீது அழுத்தத்தை அதிகரிக்க முயல்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். </p><p>ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் போக்குவரத்தைத் தடை செய்வதன் மூலம், ஈரான் தனது திட்டத்தின் வலிமையை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளது.</p><p>
தற்போது, ​​செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் அல்-மண்டேபில் இரண்டாவது அழுத்தப் புள்ளியைத் திறக்க ஈரான் தயாராக இருப்பதாகத் தெரிகிறது; இந்த நீர்வழி வழியாகவே சவூதி எண்ணெய் ஏற்றுமதியும், உலகளாவிய கப்பல் போக்குவரத்தின் கணிசமான பங்கும் கடந்து செல்கின்றன.</p><p></p><p> </p><p>இதனிடையே, சவுதி அரேபியா ஏமன் மீதான தாக்குதலைத் தொடர்ந்தால் பாப் அல்-மண்டேப் நீரிணையை மூடுவதற்கு நாட்டின் ஆயுதப் படைகள் தயாராக இருப்பதாக ஏமன் நாட்டு மூத்த அதிகாரி ஒருவர் திங்களன்று எச்சரித்தார். </p><p>மேலும், ஏமன் மீது தாக்குதல் நடத்துமாறு சவுதி அரேபியாவை வாஷிங்டன் தூண்டிவிட்டுக்கொண்டிருந்தது; இத்தகைய தூண்டுதல் நடவடிக்கை ஒருபோதும் அமெரிக்காவின் நலனுக்கு உகந்ததாக இருக்காது என ஹவுதி எதிர்ப்பு இயக்கம் ஒன்று பதிலளித்துள்ளது.</p><h2>ஹவுதிகள் நிரூபித்துள்ளனர்</h2><p>
</p><p>வளைகுடாவிலிருந்து செங்கடல் வரை மோதல் பரவும் இக்கட்டான சூழல் உருவாகி வருவதால், வர்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகத்திற்கு அதிகரித்து வரும் அச்சுறுத்தலானது, உலகின் மிக முக்கியமான இரண்டு எண்ணெய் போக்குவரத்துத் தடைகள் இந்த மோதலின் தீர்க்கமான போர்க்களமாக மாறுவதற்கு முன்பாக, பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்புமாறு அமெரிக்கா மற்றும் ஈரான் மீதான அழுத்தத்தையும் அதிகரிக்கக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f37a5de-57b2-4ff7-8186-7ef5e6e398c4/26-6a56d50d70a63.webp' /></p><p> </p><p>பாப் அல்-மண்டேப் வழியாக உலகளாவிய வர்த்தகத்தை முடக்க முடியும் என்பதை ஹவுதிகள் ஏற்கனவே நிரூபித்துள்ளனர். 2023 அக்டோபரில் காஸா போர் வெடித்த பிறகு, ஹவுதிகள், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களைக் குறிவைப்பதாகக் கூறி, செங்கடலில் வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல்களைத் தொடுத்தது.
</p><p>இந்த நடவடிக்கை, முக்கிய கப்பல் நிறுவனங்களைத் தெற்கு ஆப்பிரிக்காவைச் சுற்றி தங்கள் கப்பல்களின் பாதைகளை மாற்றிவிடக் கட்டாயப்படுத்தியது, இதனால் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்தன; மேலும் இது, கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்காக அமெரிக்க மற்றும் பிரித்தானிய வான்வழித் தாக்குதல்களையும், ஒரு பன்னாட்டுக் கடற்படை நடவடிக்கையையும் தூண்டியது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-15T03:05:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[5 நாட்களில் உலகளவில் இதயம் முரளி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/idhayam-murali-movie-5-days-box-office-collection-1784084252"></link>
            <id>https://cineulagam.com/article/idhayam-murali-movie-5-days-box-office-collection-1784084252</id>
            <summary type="text">இதயம் முரளிபுதிதாக வெளியாகும் திரைப்படங்களின் வசூல் விவரங்களை தொடர்ந்து நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில், கடந்த வாரம் வெளியான இதயம் முரளி திரைப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>இதயம் முரளி</h2><p>புதிதாக வெளியாகும் திரைப்படங்களின் வசூல் விவரங்களை தொடர்ந்து நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில், கடந்த வாரம் வெளியான இதயம் முரளி திரைப்படத்தின் வசூல் விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1bcc5a6-46de-466e-92ec-f2f8928465fc/26-6a56f720d6eb8.webp' /></p><p>இயக்குநர் ஆகாஷ் பாஸ்கர் இயக்கி தயாரித்து, அதர்வா முரளி ஹீரோவாக நடித்த படம் இதயம் முரளி. அதர்வாவின் தந்தையும் மறைந்த பிரபல நடிகருமான முரளியின் திரை வாழ்க்கையில் மாபெரும் வெற்றிபெற்ற 'இதயம்' திரைப்படத்தின் தலைப்பை இப்படத்தில் வைத்துள்ளனர். இதுவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் உருவாக்கியது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c369019-f404-4944-8964-88c9d6019d88/26-6a56f7202d9eb.webp' /></p><p>இப்படத்தில் அதர்வாவுடன் இணைந்து ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், சுதாகர், டிராவிட், பகத் பாசில், தமன், நிஹாரிகா, ஏஞ்சலின், நட்ராஜ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். நடிப்பை தாண்டி இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>வசூல் விவரம்</h2><p>
</p><p>
ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இதயம் முரளி திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. விமர்சன ரீதியாக பின்னடைவு இருந்தாலும், வசூலில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/affc347e-6ab6-40f5-8485-57a5c5f36e48/26-6a56f7218b400.webp' /></p><p>இந்நிலையில், இதயம் முரளி திரைப்படம் 5 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 5 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 16 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூலிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p>]]></content>
            <updated>2026-07-15T03:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு தொற்று குறித்து அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-threat-rises-1784084098"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-threat-rises-1784084098</id>
            <summary type="text">&amp;nbsp;டெங்கு தொற்றுநோய் நிலைமையானது தீவிர தொற்றுநோயாக உருவெடுத்து வருவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
எனினும் தற்போது ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;டெங்கு தொற்றுநோய் நிலைமையானது தீவிர தொற்றுநோயாக உருவெடுத்து வருவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.</p><p>
எனினும் தற்போது நடைமுறையிலுள்ள டெங்கு ஒழிப்புத் திட்டங்களின் மூலம் இந்த நிலைமைக்கு முறையான தீர்வுகள் எட்டப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>ஜூலை மாதத்தின் முதலாவது வாரம் நிறைவடையும் போது 142 ஆக காணப்பட்ட அதி அபாய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை, தற்போது 175 ஆக அதிகரித்துள்ளதாக சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க, குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bc055a1-4f28-4783-a7df-e95e82693166/26-6a56f68453507.webp' /></p><p>
</p><p>டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துச் செல்வது ஒரு 'சிவப்பு எச்சரிக்கை' (Red Alert) விடுக்கப்பட வேண்டிய சூழ்நிலையாகும் என தெரிவித்துள்ளார்.</p><p> 
இந்த நெருக்கடியை சமாளிக்க முறையான திட்டமிடல்கள் எதனையும் தற்போது காண முடியவில்லை என அவர் தெரிவித்தார்.</p><p>
டெங்கு ஒழிப்பு தொடர்பாக கீழ்நிலை தீர்மானங்களை எடுக்கும் வேகம் போதாது எனவும், குறைந்தபட்சம் இது தொடர்பாக ஜனாதிபதி செயலணி ஒன்றாவது உடனடியாக நிறுவப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
</p><p>இந்த நிலைமை இதே போன்று தொடருமானால், 2017 ஆம் ஆண்டில் நாம் கண்ட பாரிய பேரழிவை மீண்டும் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>
இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் 32 டெங்கு மரணங்கள் பதிவாகியிருந்த போதிலும், ஜூலை மாதத்தின் முதலாவது வாரத்தில் மாத்திரம் 15 மரணங்கள் பதிவாகியுள்ளன.</p><p> இது டெங்கு தீவிர தொற்றுநோய் நிலைமை ஏற்படுவதற்கான ஒரு முன்கூட்டிய அறிகுறியாகும் எனவும் வைத்தியர் சமில் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T02:55:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைகள் பாதாள உலகத்தின் கட்டுப்பாட்டில்! நடைமுறைப்படுத்தப்படாத பரிந்துரைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-tens-situation-1784083096"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-tens-situation-1784083096</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் சிறைச்சாலை
அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டமைக்கு, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின்
பரிந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் சிறைச்சாலை
அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டமைக்கு, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின்
பரிந்துரைகளை அதிகாரிகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்த தவறியமையே பிரதான காரணம்
என்று தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர குற்றம்
சாட்டினார்.</p><p>

கொழும்பில் உள்ள தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் காரியாலயத்தில் நேற்று
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்
தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>அரசின் பாரிய தவறு</h2><p>
</p><p>
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>அனுராதபுரம், தங்காலை மற்றும் மஹர சிறைச்சாலை மோதல்களைப் போலன்றி, இம்முறை
சிறைச்சாலை அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளமையானது, சிறைச்சாலைகள் தற்போது
பாதாள உலகக் குழுக்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளதை
உறுதிப்படுத்துகின்றது. </p><p>உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி, ஆயுதமற்ற
அதிகாரிகளை இவ்வாறான ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்தியது அரசின் பாரிய தவறு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df39ae01-059f-4707-9859-38883afd0af6/26-6a56f5fc08017.webp' /></p><p>
</p><p>
தற்போது சிறைச்சாலைகளில் உள்ளவர்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர்
போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள். மேலும், 70 சதவீதத்தினர்
அபராதம் செலுத்த முடியாத ஏழைகளே.</p><p>இவர்களைப் பராமரிக்க அரசு நாளொன்றுக்கு தலா
ஆயிரம் ரூபாவுக்கும் மேல் செலவிடுகின்றது. புதிய சிறைச்சாலைகளை அமைப்பது
இதற்குத் தீர்வாகாது. </p><p>போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களைக்
குற்றவாளிகளாகப் பார்க்காமல், அவர்களை நோயாளிகளாகக் கருதி மறுவாழ்வு அளிப்பதே
சிறைச்சாலை நெருக்கடிகளுக்கான உண்மையான தீர்வாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/724e53d8-de66-4cce-9cdb-3e652621e57f/26-6a56f5fcb405d.webp' /></p><p>

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட 27 பக்க அறிக்கையைச்
செயற்படுத்தாமல், வெறும் அரசியல் நாடகங்களை நடத்துவதில் பயனில்லை. </p><p>ஜனாதிபதி,
எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த அனைவரும் குறித்த அறிக்கையை
வாசித்து, அதன் பரிந்துரைகளை உடனடியாகச் செயற்படுத்த முன்வர வேண்டும்&nbsp; என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T02:52:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்சவின் கடிதத்துக்கு பதிலளிக்காத சஜித்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-sajith-1784081201"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-sajith-1784081201</id>
            <summary type="text">நாமல் ராஜபக்ச, சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, எதிர்க்கட்சியின் அனைத்துக் குழுக்களும் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியிருந்த போதிலும், அந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்ச, சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, எதிர்க்கட்சியின் அனைத்துக் குழுக்களும் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியிருந்த போதிலும், அந்தக் கடிதத்திற்கு இதுவரை எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.
</p><p>
கடந்த 7ஆம் திகதி நாமல் ராஜபக்சவினால் அனுப்பப்பட்ட அக்கடிதத்தில், “உயர் நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை தன்னிச்சையான முறையில் நீடிக்க முயற்சிப்பதன் மூலம் சட்டத்தின் ஆட்சியை சீர்குலைப்பதற்கு எதிராக, ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியம்” குறித்து சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. </p><p></p><h2>ஏன் பதிலளிக்கவில்லை</h2><p>இதற்கு உடனடியாக தலையிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் அந்த கடிதத்தின் தலைப்பில் குறிப்பிட்டுள்ளவாறு, நாடாளுமன்றத்தில் கூட இது குறித்து எந்தவொரு வலியுறுத்தலும் செய்யப்படவில்லை என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
நாமல் ராஜபக்ச இவ்வாறு சஜித் பிரேமதாசவுக்கு நேரடியாகக் கடிதம் அனுப்புவதற்கு முன்னர், சிதறிப்போயுள்ள எதிர்க்கட்சியின் பல குழுக்கள் பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்தி கூட்டணி அமைக்க முயற்சித்தன. </p><p>அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையிலேயே, தலைமைத்துவ மட்டத்தில் நாமல் ராஜபக்சவினால் இவ்வாறானதொரு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f769b19c-1c01-44fe-aa3c-51af24795d2c/26-6a56eb333056c.webp' /></p><p>இந்த உத்தியோகபூர்வ கடிதத்திற்கு எந்தவொரு பதிலும் அளிக்காமல் இருப்பது, சஜித் பிரேமதாசவினால் நாமல் ராஜபக்சவுக்கு விடுக்கப்பட்ட ஒரு ஏளனமான செயல் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
</p><p>
கடந்த அரசாங்கக் காலங்களில் இடம்பெற்ற நிதி மோசடிகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள பின்னணியிலேயே நாமல் ராஜபக்ச, சஜித் பிரேமதாசவுக்கு இக்கடிதத்தை அனுப்பியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T02:35:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீட்க்கப்பட்ட 271 used தோட்டாக்கள் - நீர்கொழும்பு சிறைக்கு நடந்தது இதுதான்! திக்திக் நிமிடங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cid-reveals-sparked-negombo-prison-unrest-1784080988"></link>
            <id>https://ibctamil.com/article/cid-reveals-sparked-negombo-prison-unrest-1784080988</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் நடந்த கொடூர வன்முறைக்கு கத்துவெல்லகம சுரேஷ் என்ற கைதியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமையே காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் நடந்த கொடூர வன்முறைக்கு கத்துவெல்லகம சுரேஷ் என்ற கைதியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமையே காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) சமர்ப்பித்த தகவல்களின்படி, ஜூலை 5ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையின் A1 வார்டில் இருந்த கத்துவெல்லகம சுரேஷ் என்ற கைதி, உடற்பயிற்சிக்காக வழங்கப்படும் 30 நிமிடங்களை விட மேலதிக நேரம் கோரியுள்ளார்.
</p><p>

இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் சிறைச்சாலை அதிகாரியை திட்டி அச்சுறுத்தியுள்ளார். மறுநாள் காலை, அவர் A2 வார்டு கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><h2>
 வன்முறை பரவக் காரணம்</h2><p>
இதுவே வன்முறை பரவக் காரணமாக அமைந்ததாகவும், நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தகவல்களை வழங்கியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d972cea-cc84-40c6-8870-47e2bc4d4afe/26-6a56f1d3b2459.webp' /></p><p>

மேலும், இதன் பின்னணியில், கைதிகள் சிறைச்சாலையின் மருந்தகம் மற்றும் நிர்வாகக் கட்டிடத்தை சேதப்படுத்தியுள்ளனர். சிறைச்சாலை அதிகாரிகள் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாததால் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளனர்.
</p><p>
கொழும்பில் இருந்து சிறைச்சாலை அவசரக்கால அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்ட நிலையில், கைதிகள் கூரைகளின் மீது ஏறி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
மறுநாள் காலை உணவை வழங்கச் சென்ற அதிகாரிகள் மீது கைதிகள் கற்கள், மரத்தடிகள் மற்றும் இரும்புக்கம்பிகளால் தாக்கியுள்ளனர். </p><p>நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகள் தப்பிச் சென்ற நிலையில், கொழும்பில் இருந்து சென்ற அதிகாரிகள் உள்ளே சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><h2>

 CCTV பதிவுகள்
</h2><p>கைதிகள் சிறைச்சாலையின் ஆயுதக் களஞ்சியத்தின் ஒரு பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியையும் நீட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து விசேட அதிரடிப்படையினர் (STF) கண்ணீர்ப்புகைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1101acef-812e-4fc3-87c9-9b4221a8feed/26-6a56f1d571930.webp' /></p><p>


அது பலனளிக்காததால் வான்நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பின்னர், சிறைச்சாலையின் நுழைவாயில் பகுதி ஊடாக துப்பாக்கிச் சூடு நடத்தி, உள்ளே சிக்கியிருந்த அதிகாரிகளை மீட்டுள்ளனர்.
</p><p>
சிறைச்சாலைக்குள் இருந்து ஒரு F-58 ரக துப்பாக்கி, ஒரு மெகசின் மற்றும் 271 பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் மீட்கப்பட்டன.</p><h2>தடயவியல் சோதனை</h2><p> </p><p>அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த 60 துப்பாக்கிகள் தடயவியல் சோதனைக்காகப் பெறப்பட்டுள்ளன என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b47b3332-eff8-46ef-bf97-8743db2bb6dc/26-6a56f1d488196.webp' /></p><p>இதற்கிடையில், சிறைச்சாலையின் CCTV பதிவுகள் மொரட்டுவை பல்கலைக்கழக கணினி தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்படவுள்ளதாகவும் 40 சிஐடி அதிகாரிகள் அடங்கிய 3 குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதுவரை 136 சிறைச்சாலை அதிகாரிகள், 141 கைதிகள் மற்றும் 9 STF அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. </p><h2>கைதிகள் பற்றிய அறிக்கை</h2><p>கொலைக்குற்றம், துப்பாக்கிகள் கட்டளைச் சட்டம் மற்றும் பொதுச் சொத்துச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06949c3c-ecb8-4907-b477-81b12ec33206/26-6a56f1d62d42e.webp' /></p><p>இந்நிலையில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த அனைத்து கைதிகள் பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நீர்கொழும்பு நீதவான் ஷாலனி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.</p><p> 

அத்துடன், மற்ற சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளிடமும் வாக்குமூலங்களைப் பெறுமாறு சிஐடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-15T02:35:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சினிமால பணம் சம்பாதிக்கலாம்..அவமானங்கள் தான் அதிகம்!! நடிகை விசித்ரா ஓபன் டாக்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/actress-vichithra-opens-up-cinema-industry-1784036638"></link>
            <id>https://viduppu.com/article/actress-vichithra-opens-up-cinema-industry-1784036638</id>
            <summary type="text">தமிழ் சினிமவில் 90ஸ் காலத்தில் மடிப்பு அம்சாவாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை விசித்ரா. பல ஆண்டுகளுக்கு பின் பிக்பாஸ் மற்றும் குக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சினிமவில் 90ஸ் காலத்தில் மடிப்பு அம்சாவாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை விசித்ரா. பல ஆண்டுகளுக்கு பின் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் கலந்து அனைவரது அன்பையும் பெற்றார் விசித்ரா. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், சினிமா என்பது மிக வேகமாக, நிறையப் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு களம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2238b3ca-0d1d-4350-ba14-69acd8f79e92/26-6a563d2179e85.webp' /></p><p> </p><h2>சினிமால பணம் சம்பாதிக்கலாம்</h2><p>அதில் புகழும், பணமும் கிடைக்கும், ஆனால் அங்கே உண்மையான அன்பும், கருணையும் கிடைக்குமா? என்றால் கிடையாது. அதுவும் புதுமுகமாக சினிமாவுக்குள் நுழையும்போது, அங்கே அன்பை எதிர்பார்க்கவே முடியாது. ஆரம்பத்தில் அவமானங்கள், கேலி கிண்டல்கள், அலட்சியங்கள் மட்டும்தான் அதிகம் பார்க்க வேண்டியிருக்கும். </p><p>ஆனால் ஒரேவொரு, ஹிட் படம் கொடுத்துவிட்டால் போதும், உங்களுக்கு என்று ஒரு மார்க்கெட் வந்திவிட்டால், உங்களை அவமதித்த அத்தனை பேரும் புகழ்வார்கள், அதுதான் சினிமா. சினிமாத்துறையை பொறுத்தவரை இங்கு நிரந்தரமான நண்பனும் கிடையாது, நிரந்தரமான எதிரியும் கிடையாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/317b3a75-6f27-4934-b8dd-7c70694f04e7/26-6a563d20ca135.webp' /></p><p> </p><p>அதனால் தான் சினிமாவில் எப்போதும் ஒரு குறிப்பிட்ட எல்லையில் இருக்க வேண்டும். நம்மிடம் மிகவும் பாசமாக பழகுகிறார்களே என்று நெருங்கிவிடக் கூடாது. </p><p>அதேபோல், எதிரியாக்கி ஒதுக்கவும் கூடாது. ஏனென்றால், காலம் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாறும். நான் எப்போதுமே சினிமா நபர்களிடம் ஒரு குறிப்பிட்ட தூரத்தை கடைப்பிடிப்பேன். யாரிடமும் அளவுக்கதிகமாக நெருங்கிப்பழக மாட்டேன். </p><p>அந்த எல்லையை நான் சரியாக வைத்திருந்ததால்தான், இன்று என் வாழ்க்கையை நான் எந்த குழப்பமும் இல்லாமல் மிகுந்த சந்தோஷத்தோடு நிம்மதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்று நடிகை விசித்ரா தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-15T02:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜுலை மாதத்தில் இறுதியில் சுக்கிரன் பெயர்ச்சி.... அதிர்ஷ்டத்தினை பெறும் 4 ராசியினர் இவர்கள் தானாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/venus-transit-4-lucky-zodiac-signs-1784033366"></link>
            <id>https://manithan.com/article/venus-transit-4-lucky-zodiac-signs-1784033366</id>
            <summary type="text">சுக்கிரன் பெயர்ச்சி காரணமாக அதிர்ஷ்டத்தில் நனையும் 4 ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.சுக்கிரன் பெயர்ச்சிஅழகு, ஆடம்பரம், காதல், செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுக்கிரன் பெயர்ச்சி காரணமாக அதிர்ஷ்டத்தில் நனையும் 4 ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><h2>சுக்கிரன் பெயர்ச்சி</h2><p>அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு இவற்றிற்கு காரணமாக இருக்கும் சுக்கிரன் மாதம் ஒருமுறை தனது ராசியை மாற்றுவதுடன், அவ்வப்போது நட்சத்திரத்தினை மாற்றுவார்.</p><p>சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது அனைத்து ராசியினர் வாழ்க்கையிலும் அதன் தாக்கம் ஏற்படும். தற்போது சுக்கிரன் சிம்ம ராசியில் பயணித்து வரும் நிலையில், ஜுலை 29ல் உத்திரம் நட்சத்திரத்திற்கு நுழையவுள்ளார்.</p><p>குறித்த நட்சத்திரத்தில் ஆகஸ்ட் 11ம் தேதி வரை இருக்கின்றார். உத்திரம் நட்சத்திரத்தின் அதிபதி சூரியன் என்பதால், குறித்த நட்சத்திரத்தில் சூரியன் செல்வதால் சில ராசியினருக்கு அதிர்ஷ்டமாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/609074ff-9fda-44fe-b228-63deede7e8db/26-6a56eb3ecd62d.webp' /></p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">ரிஷபம்</span><br></p><p> </p><p>சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியினால் ரிஷப ராசியினர் நல்ல பலனை பெறுவதுடன், வியாபாரிகளுக்கும் நல்ல லாபம் கிடைக்கும்.</p><p>பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதுடன், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். முக்கியமான முடிவுகள் வாழ்வில் நல்ல மாற்றத்தினை ஏற்படுத்தும். நீண்ட காலமாக சந்தித்து வந்த பணப்பிரச்சனை தீர்வதுடன், குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்குமாம். மன அழுத்தம் குறைந்து, மன அமைதியும் அதிகரிக்கும்..</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/948d2795-9329-4978-8b5a-9bfbd661d377/26-6a56eb3f7faca.webp' /></p><p>

</p><h2>மிதுனம் </h2><p>சுக்கிரன் பெயர்ச்சியினால் மிதுன ராசியினரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுவதுடன், நீண்ட காலமாக தடைபட்ட வேலையும் வெற்றியாக முடியும்.</p><p>தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிப்பதுடன், புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கு வாய்ப்புகளும் கிடைக்கும்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a244ed2-1a05-4186-9095-c940da5c0038/26-6a56eb402ede8.webp' /></p><p></p><p>

</p><h2>சிம்மம் </h2><p>சிம்ம ராசியினருக்கு இந்த சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பாக இருக்குமாம். தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.</p><p>செய்யும் வேலைகள் அனைத்தும் வெற்றியில் முடியும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிப்பதுடன், பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் சம்பள மற்றும் பதவி உயர்வு கிடைக்கும்.</p><p>புதிய வழிகளிலிலிருந்து பணம் தேடி வருவதுடன், நிதி நிலையில் நல்ல உயர்வும் ஏற்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5d162cf-4318-44b3-bdc6-2f809f864caa/26-6a56eb40daf5f.webp' /><br></p><h2>மகரம் </h2><p>மகர ராசியினருக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி நிதி ரீதியான நல்ல பலனை அளிப்பதுடன், முன்னேற்றமும் ஏற்படும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகமாகும்.</p><p>வருமானத்தில் உயர்வு, ஏற்கனவே செய்த முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக சிறப்பான பலனை பெற முடியும்.&nbsp;</p><p>காதல் வாழ்க்கை இனிமையாக இருப்பதுடன், மகிழ்ச்சி, செழிப்பு, முன்னேற்றம் ஆகியவை கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0afd81e3-8119-4604-80e4-a9bb0e5b3824/26-6a56eb418a6a5.webp' /></p><p><i><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</b></i>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;<br></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-15T02:07:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளைகுடாவில் வெடித்த போர்: நிறுத்த சொல்லும் வரை ஈரானை தாக்குங்கள் - டிரம்பின் உத்தரவால் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-says-strikes-continue-until-i-say-enough-1784079785"></link>
            <id>https://ibctamil.com/article/trump-says-strikes-continue-until-i-say-enough-1784079785</id>
            <summary type="text">நான் போதும் என்று சொல்லும் வரை ஈரான் மீதான தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மின் உற்பத்தி நிலையங...</summary>
            <content type="html"><![CDATA[<p>நான் போதும் என்று சொல்லும் வரை ஈரான் மீதான தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>
அத்துடன் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்களே தமது இலக்குகள் என்றும் அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.</p><p>செவ்வாயன்று ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2> வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்</h2><p>"அவர்கள் பேச்சுவார்த்தை மேசைக்கு வரும் வரை, நாங்கள் அவர்களின் மின் உற்பத்தி நிலையங்களைச் செயலிழக்கச் செய்வதுடன் அவர்களின் எல்லாப் பாலங்களையும் தகர்ப்போம் என்றும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/195a60f3-09ad-46cd-a2b8-534b5a805834/26-6a56e7e1a16d7.webp' /></p><p>இதேவேளை, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஈரான் படைகள் ஏழு வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையத்தின் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் தெரிவித்துள்ளார்.
</p><p>மேலும், அண்டை வளைகுடா நாடுகளை நோக்கி ஈரான் பல ஏவுகணைகளையும் ஆளில்லா ட்ரோன்களையும் ஏவியுள்ளதாகத் தெரிவித்த அட்மிரல் கூப்பர், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இத்தகைய செயல்களுக்கு ஈரான் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><h2>அமெரிக்காவின் குற்றங்கள்</h2><p>இந்தநிலையில் அமெரிக்காவின் குற்றங்கள் தொடரும் வரை ஆக்கிரமிப்பாளருக்கு எதிரான பழிவாங்கலும் தண்டனையும் தொடரும் என இஸ்லாமிய புரட்சிகர காவல் படை எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8828f6c-c1b7-4a41-9224-ca7e54a6d539/26-6a56e8d2227b2.webp' /></p><p>இந்தத் தாக்குதல்கள் மீண்டும் தொடரப்பட்டால் அவை மேலும் பல ஆச்சரியமூட்டும் பதிலடித் தாக்குதல்களை சந்திக்க நேரிடும் எனவும்&nbsp;புரட்சிகர காவல் படை&nbsp;தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T02:06:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் உயிரிழந்த கோடீஸ்வர பெண் - சடலத்திற்கு போட்டி போடும் தரப்பினால் சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/4-groups-wait-for-a-women-s-body-1784080082"></link>
            <id>https://tamilwin.com/article/4-groups-wait-for-a-women-s-body-1784080082</id>
            <summary type="text">தவுலகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிவவுல பிரதேசத்தில், உயிரிழந்த பெண்ணின் உடல் சுமார் ஒரு மாதமாக பேராதனை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தவுலகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிவவுல பிரதேசத்தில், உயிரிழந்த பெண்ணின் உடல் சுமார் ஒரு மாதமாக பேராதனை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
பல சொத்துகளுக்கு உரிமையாளரான 75 வயதுடைய பெண், உயிரிழந்ததையடுத்து, அவரது உடலை பெற்றுக்கொள்வதில் நான்கு தரப்பினரிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளமை இதற்கு காரணமாகும்.
</p><p>
உயிரிழந்தவரின் இறுதிச் சடங்குகளை முன்னெடுப்பதற்காக முன்வந்த நான்கு தரப்பினராலும் தமக்கு சட்டபூர்வமான உரிமை உள்ளதை உறுதிப்படுத்த முடியாமல் போயுள்ளது.</p><p>
</p><h2><b>
கோடீஸ்வர பெண் </b></h2><p>நீதிமன்ற உத்தரவு கிடைக்கும் வரை உடலை எந்த தரப்பினருக்கும் கையளிக்கப் போவதில்லை என மரண விசாரணை அதிகாரி சேனக கருணாரத்ன தீர்மானித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/397260a9-5830-4238-b3bc-5230eb0f6db6/26-6a56eae5a888a.webp' /></p><p>குறித்த பெண்ணுக்கு சொந்தமான 2 மாடி வீட்டின் மேல் தளத்தில், சுமார் 16 வருடங்களாக தம்பதி ஒன்று தங்கள் பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளனர். 

அவர்கள் உயிரிழந்த பெண்ணை மிகவும் அன்புடன் கவனித்து வந்துள்ளனர். அத்துடன், 14 வருடங்களாக அவரிடம் வாடகைப்பணத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை.</p><p>

உயிரிழந்த பெண் சுகவீனமுற்று பேராதனை போதனா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றபோது, அவரது அனைத்து தேவைகளையும் அந்த குடும்பமே நிறைவேற்றியுள்ளமை விசாரணையின் போது தெரியவந்துள்ளது.</p><p>

இந்தக் குடும்பத்தினர் உடலை பொறுப்பேற்று இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள முன்வந்தபோது, உயிரிழந்த பெண்ணின் நெருங்கிய உறவினர்கள் என கூறி மேலும் மூவர் முன்வந்துள்ளனர்.</p><h3><b> 

பிரேத பரிசோதனை</b></h3><p>அவர்களில் உயிரிழந்த பெண்ணின் சகோதரியின் மகன், மற்றொரு உறவினர் மற்றும் கணவர் என்று கூறிக்கொள்ளும் நபர் ஒருவரும் அடங்குவர்.

உயிரிழந்த பெண் திருமணம் செய்யாதவர் என்பது தெரியவந்தது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae0bd03a-17ee-4154-b8ae-781ce94a7983/26-6a56eae657419.webp' /></p><p>இதனையடுத்து, கணவர் என்று கூறிக் கொள்ளும் நபர் சமர்ப்பித்த திருமணப் பதிவை ஆய்வு செய்ததில், அதில் குறிப்பிடப்பட்ட பெயர் உயிரிழந்த பெண்ணின் சகோதரியினுடையது என்பது தெரியவந்துள்ளது.
</p><p>
அதற்கமைய, உயிரிழந்த பெண்ணின் உடலை யாருக்கு ஒப்படைப்பது என்பதில் கடுமையான சிக்கல் நிலை எழுந்துள்ளது. 

இதனால், பிரேத பரிசோதனையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. </p><p>நீதிமன்றத்திற்கு விடயங்களை முன்வைத்து, உரிமை தொடர்பான சிக்கலை தீர்த்துக்கொண்டு வருமாறு பொலிஸாருக்கு மரண விசாரணை அதிகாரி அறிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-15T02:05:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் மனைவிக்காக கணவன் செய்த மோசமான செயல் - விசாரணையில் அதிர்ச்சித் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/couple-arrested-for-selling-drugs-1784077879"></link>
            <id>https://tamilwin.com/article/couple-arrested-for-selling-drugs-1784077879</id>
            <summary type="text">
கொழும்பின் புறநகர் பகுதியான மாதம்பிட்டியில் மனைவியை சட்டத்தரணியாக்குவதற்கு தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கணவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கொழும்பின் புறநகர் பகுதியான மாதம்பிட்டியில் மனைவியை சட்டத்தரணியாக்குவதற்கு தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கணவர் மற்றும் அவரது மனைவியான&nbsp; ஆசிரியை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
குறித்த தம்பதி சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சர்வதேச பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக பணிபுரியும் 25 வயதுடைய மனைவி மற்றும் அவரது கணவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><h2><b>
தம்பதி கைது</b></h2><p>சந்தேகநபரிடம் இருந்து 1 கிலோ 06 கிராம் 350 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், ஆசிரியையான மனைவியிடம் இருந்து 149 கிராம் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p>வான் ஒன்றின் முன்பக்கத்தில் வைத்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு, மாதம்பிட்டி பகுதியில் விநியோகிப்பதாக மாதம்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3aa4f3fc-c032-4724-b563-48521865f816/26-6a56e07d50f1f.webp' />&nbsp;&nbsp;</p><p>
அதற்கமைய சந்தேகநபரான தம்பதியினர் மாதம்பிட்டி பகுதியில் உள்ள மதஸ்தலம் ஒன்றுக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
</p><p>
குறித்த வானில் இருந்த தம்பதியினரை சோதனையிட்டபோது அவர்களிடம் இந்த போதைப்பொருள் கண்டுகிடிக்கப்பட்டுள்ளது.</p><p>

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, இவை வத்தளை பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டதாகத் தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T02:00:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திறைசேரியின் மின்னஞ்சல் சேமிப்பு தொகுதி (Email Server) ஆபத்தான நிலையில்! கோப் (COPF) குழுவில் அம்பலமான இரகசியம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cope-committee-to-harsha-de-silva-1784079088"></link>
            <id>https://tamilwin.com/article/cope-committee-to-harsha-de-silva-1784079088</id>
            <summary type="text">திறைசேரியின் அனைத்து இரகசிய மற்றும் முக்கியமான அரச தகவல்கள் பரிமாறப்படும் மின்னஞ்சல் சேமிப்பு தொகுதி (Email Server), எந்தவொரு பராமரிப்பும் அல்லது பாது...</summary>
            <content type="html"><![CDATA[<p>திறைசேரியின் அனைத்து இரகசிய மற்றும் முக்கியமான அரச தகவல்கள் பரிமாறப்படும் மின்னஞ்சல் சேமிப்பு தொகுதி (Email Server), எந்தவொரு பராமரிப்பும் அல்லது பாதுகாப்பு புதுப்பித்தலும் (Update) இன்றி 2019ஆம் ஆண்டிலிருந்து முற்றிலும் பாதுகாப்பற்ற முறையில் பேணப்பட்டு வந்துள்ளமை அரசாங்க நிதி பற்றிய குழுவின் (COPF) அண்மைய கூட்டத்தில் தெரியவந்துள்ளது.
</p><p>

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடனைச் செலுத்துவதில் இடம்பெற்ற பெருமளவிலான நிதி மோசடி குறித்து விசாரணை செய்வதற்காகக் கூட்டப்பட்ட விசேட குழு அமர்வின் போது, </p><p>அதன் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா மற்றும் அங்கு வருகை தந்திருந்த அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற நீண்ட விசாரணைக்கு மத்தியில், நாட்டின் சைபர் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள பெரும் வீழ்ச்சி இவ்வாறு வெளிச்சத்திற்கு வந்தது.
</p><h2>

</h2><p></p><h2>மிகவும் பழமையான அமைப்பு</h2><p>இங்கு குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த இலங்கை கணினி அவசர தயார்நிலை அமைப்பின் (CERT) அதிகாரிகள், திறைசேரியினால் தற்போது கூட பயன்படுத்தப்பட்டு வருவது 2016ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஒரு அமைப்பாகும் (Server system) என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
</p><p>
அதன் உத்தியோகபூர்வ சேவைக்காலம் 2019ஆம் ஆண்டுடன் நிறைவடைந்துள்ளதுடன், அன்றிலிருந்து இன்றுவரை அதற்காக எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், வருடாந்த பாதுகாப்பு தணிக்கை (Annual Security Audit) எதுவும் செய்யப்படவில்லை என்றும் நிதிக்குழுவின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர்.
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13ad4de8-a2ad-4261-bf3f-12333b0a1c87/26-6a56e2f23a625.webp' /></p><p>2019 ஆம் ஆண்டுடன் காலாவதியான இந்த அமைப்பை எந்தவொரு சேவைப் பராமரிப்போ (service) அல்லது இக்காலப்பகுதிக்குரிய புதுப்பித்தலோ (update) இல்லாத ஒரு சேவையகத்தின் (server) மூலமாகவே திறைசேரியின் இந்த அனைத்து இரகசிய ஆவணங்களும் அனுப்பப்பட்டன? யார் வேண்டுமானாலும் மிக எளிதாக ஊடுருவக்கூடியதாகவும் இருந்துள்ளது.
</p><p>
கொடுக்கல் வாங்கல்களில் பணச் சலவை (Money laundering) அபாயம் இருப்பதாக அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி (Federal Reserve Bank), சிட்டி வங்கி (Citi Bank) என்பன இலங்கை மத்திய வங்கி ஊடாக திறைசேரிக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தமை இக்குழுவில் வெளிப்பட்டது. </p><p>எனினும், திறைசேரியின் கீழ்மட்ட அதிகாரிகளினால் அந்த பாரதூரமான எச்சரிக்கைகள் குறித்து உயர் நிர்வாகத்திற்கோ அல்லது நிதிச் செயலாளருக்கோ அறிக்கை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதும் குழுவின் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது.
</p><p>

அதிகாரிகளினால் இப்பிரச்சினை குறித்து உயர் மட்டத்திற்கு அறிக்கை செய்யப்படாமல், தங்களது மட்டத்திலேயே தீர்மானங்களை மேற்கொண்டு, மீண்டும் ஒருமுறை அந்த மோசடியான கணக்குகளுக்கே பணத்தை அனுப்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சின் செயலாளர் குழுவின் முன்னிலையில் தெரிவித்திருந்தார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T01:42:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் போர்க்களமாகும் ஹோர்முஸ் நீரிணை ; ஈரான் மீது புதிதாக தாக்குதல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/fresh-iran-strikes-as-naval-blockade-returns-1784076403"></link>
            <id>https://canadamirror.com/article/fresh-iran-strikes-as-naval-blockade-returns-1784076403</id>
            <summary type="text">கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட இடைக்காலப் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்ததைத் தொடர்ந்து, ஈரான் மீதான தனது இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட இடைக்காலப் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்ததைத் தொடர்ந்து, ஈரான் மீதான தனது இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.</p><p>

ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கரையோரப் பகுதிகளை மையமாகக் கொண்டு, அமெரிக்காவின் கடற்படை முடக்கத்தை மீண்டும் அமுல்படுத்துவதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை ஜூலை 14 மாலை 4 மணி முதல் (அமெரிக்க நேரம்) அமுலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5594c689-dd06-4108-98c9-39525bde141e/26-6a56d874e055c.webp' /></p><p>
இதற்காக மத்திய கிழக்குக் கடல் பிராந்தியத்தில் 20க்கும் மேற்பட்ட அமெரிக்கப் போர்க்கப்பல்களும், நூற்றுக்கணக்கான போர் விமானங்களும் களமிறக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது.</p><p>இதனிடையே, ஹோர்முஸ் நீரிணை ஊடாகச் செல்லும் வணிகக் கப்பல்கள் மீதான ஈரானின் தாக்குதல் திறன்களை வலுவிழக்கச் செய்யும் நோக்கில், அமெரிக்கா ஈரானின் தென்பகுதிகளில் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்கிறது.</p><p>
அமெரிக்காவின் தாக்குதல்கள் காரணமாக, ஈரானின் தெற்குத் துறைமுக நகரங்களான பண்டர் அப்பாஸ் (Bandar Abbas), சிரிக் (Sirik) மற்றும் கேஷ்ம் (Qeshm) தீவு ஆகிய பகுதிகளில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
முன்னதாக, அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக, குவைட் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. </p><p>"அமெரிக்காவின் இத்தகைய விரோதப் போக்குகள் தொடருமானால், இந்த பகுதியிலிருந்து ஒரு துளி எண்ணெய் அல்லது எரிவாயு கூட ஏற்றுமதி செய்யப்படாது என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை கடுமையாக எச்சரித்துள்ளது.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானைத் தவிர மற்ற அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் இந்த நீரிணை திறந்திருக்கும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார். </p><p>முன்னதாக, கப்பல்களிடம் 20% வரி வசூலிக்கும் திட்டத்தை முன்வைத்த அவர், தற்போது அதற்குப் பதிலாக வளைகுடா நாடுகளுடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளவிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இந்த மோதல்கள் காரணமாக உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மீண்டும் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-15T01:31:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் பிரபல பாடசாலைக்குள் நடந்த கொடூர சம்பவத்தால் பரபரப்பு ; மாணவர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shocking-incident-rocks-popular-tamil-school-1784075452"></link>
            <id>https://jvpnews.com/article/shocking-incident-rocks-popular-tamil-school-1784075452</id>
            <summary type="text">முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் சக மாணவர்களை இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் சக மாணவர்களை இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p style="text-align: justify;">


நேற்று பாடசாலை நேரத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், உயர்தர வகுப்பில் புதிதாக இணைந்திருந்த மூன்று மாணவர்கள் இரும்புக் கம்பியுடன் மற்றொரு வகுப்பறைக்குள் நுழைந்து அங்கு கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவர்களை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e487d026-9500-4aea-adf9-d6e361a667dc/26-6a56d4bdc1a1f.webp' /></p><h2 style="text-align: justify; ">விளக்கமறியல் உத்தரவு&nbsp;</h2><p style="text-align: justify; ">



இந்த தாக்குதலில் இரு மாணவர்கள் பலத்த காயமடைந்த நிலையில், அவர்கள் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p style="text-align: justify; ">


சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் பாடசாலை வளாகத்தில் ஒன்றுகூடி எதிர்ப்பை வெளியிட்டதுடன், இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify; ">


இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று மாணவர்களையும் கைது செய்த புதுக்குடியிருப்பு பொலிஸார், அவர்களை நேற்று (14.07.2026) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
</p><p style="text-align: justify; ">


வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், கைது செய்யப்பட்ட மாணவர்களை 21.07.2026 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.</p><p style="text-align: justify; ">



இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களை அடையாளம் காணும் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T01:31:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருவின் நட்சத்திர மாற்றம் ; இந்த ராசியினர்அரியணையில் அமரப்போறாங்களாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jupiter-star-change-brings-luck-to-these-signs-1784079041"></link>
            <id>https://jvpnews.com/article/jupiter-star-change-brings-luck-to-these-signs-1784079041</id>
            <summary type="text">குரு பார்வை கோடி நன்மை என்று சொல்வார்கள். எப்பேற்பட்ட துயரமாக இருந்தாலும் குருவினுடைய பார்வை இருக்க நாம் அந்த துயரத்தில் இருந்து விடுபடலாம்.

அதேபோல...</summary>
            <content type="html"><![CDATA[<p>குரு பார்வை கோடி நன்மை என்று சொல்வார்கள். எப்பேற்பட்ட துயரமாக இருந்தாலும் குருவினுடைய பார்வை இருக்க நாம் அந்த துயரத்தில் இருந்து விடுபடலாம்.
</p><p>
அதேபோல், குரு பார்வை இருக்க பெயர், புகழ், பதவி, அந்தஸ்து என்ற உயர் செல்வாக்கினை நாம் அடையலாம். அந்த வகையில், ஜூலை 19ஆம் திகதி குரு பகவான் பூச நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திற்குள் செல்கிறார்.&nbsp; இந்த மாற்றத்தால் ஒரு சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் நன்மை காத்திருக்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b293ddf-9572-44d9-a01e-69307f9d0b4d/26-6a56e2c2d80b4.webp' /></p><p><b>

மேஷம்:</b>
மேஷ ராசிக்காரர்களுக்கு குருபகவான் உடைய இந்த பெயர்ச்சியானது பொருளாதாரத்தில் இவர்களுக்கு நிலையான தன்மையை கொடுக்கப்போகிறது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை பெற போகிறார்கள்.

முடங்கி கிடந்த பணம் இவர்கள் கைகளுக்கு வந்து சேர போகிறது. எதிர்காலம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். வெளிநாடுகளில் இவர்கள் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.</p><p><b>

கடகம்:
</b>இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த காலகட்டம் பொருளாதார நிலையானதாக இருக்கப்போகிறது. தொழில் செய்யக்கூடியவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

புதிய வாடிக்கையாளர்களின் வருகையால் தொழிலை நீங்கள் வளர்ச்சி படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகி புத்துணர்ச்சி அடையும். நேர்மறையான சிந்தனைகளால் எதையும் எளிதில் சாதித்து விடுவீர்கள்.

</p><p><b>

தனுசு:
</b>இவர்கள் இந்த காலகட்டங்களில் அமோகமான வாழ்க்கையை வாழ போகிறார்கள், மன ரீதியாக முடங்கி கிடந்த தனுசு ராசியினர் மீண்டும் எழுந்து போராடக் கூடிய தன்மையை வளர்த்துக் கொள்ளப் போகிறார்கள், கடின உழைப்பிற்கான அங்கீகாரம், இவர்களை அவதூறாக பேசியவர்கள், ஏளனமாக பார்த்தவர்கள் முன்பு வாழ்ந்து காட்டக்கூடிய அற்புதமான கால அமைப்பாகும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T01:30:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை வன்முறையின் பின்னணி அம்பலம் ; நீதிமன்றத்தில் CID வெளிப்படுத்திய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-prison-violence-background-revealed-1784078479"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-prison-violence-background-revealed-1784078479</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக மூன்று குழுக்களாக 40 குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக மூன்று குழுக்களாக 40 குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளதாக, நீர்கொழும்பு நீதவான் சிலனி பெரேரா முன்னிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று (14) தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify;">
இந்த மோதலில் 31 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்தனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c653cd62-3e91-479f-95b9-1733883ed8f7/26-6a56e09102b93.webp' /></p><h2 style="text-align: justify;">விசாரணை</h2><p>
</p><p style="text-align: justify;">
நீதவான் முன்னிலையில் விசாரணைகளின் முன்னேற்றத்தை விளக்கிய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, இதுவரை 136 சிறைச்சாலை அதிகாரிகள், 141 கைதிகள் மற்றும் 9 விசேட அதிரடிப்படை வீரர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டது.
</p><p style="text-align: justify;">
வன்முறை இடம்பெற்ற போது சிறைச்சாலைக்குள் 2,417 கைதிகளும், 166 சிறைச்சாலை ஊழியர்களும் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;">பதற்ற நிலைக்குக் காரணமான முதலாவது சம்பவம் கடந்த ஜூலை 05ஆம் திகதி நடந்துள்ளது. பொதுவாக கைதிகளுக்கு உடற்பயிற்சி செய்வதற்காக 30 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03101f88-cd09-49e7-81c5-dd43e81378e4/26-6a56e091b3826.webp' /></p><p style="text-align: justify;"> அன்றைய தினம் A(1) வார்டில் வைக்கப்பட்டிருந்த 'கட்டுவெல்லேகம சுரேஷ்' என்ற கைதி, தனக்கு உடற்பயிற்சி செய்ய கூடுதல் நேரம் தருமாறு கேட்டு சிறைச்சாலை அதிகாரி ஒருவரை தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். </p><p style="text-align: justify;">



பின்னர் அன்றைய தினமே A(1) வார்டின் கதவு திறக்கப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில், சுரேஷ் என்ற இந்த கைதி வார்டில் இருந்து வெளியே தப்பி ஓடி, 02ஆம் வார்டில் இருந்த கைதிகள் குழுவொன்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதுவே பதற்ற நிலைக்குக் காரணமான ஆரம்ப சம்பவமாகும்.</p><p style="text-align: justify;"> இதன் போது ஆரம்பத்தில் இரண்டு கைதிகளும், பின்னர் மற்றுமொருவருமாக மொத்தம் மூன்று கைதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 36 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த மோதல் தீவிரமடைந்து கைதிகள் சிறைச்சாலையின் மருந்தகம் மற்றும் நிர்வாகக் கட்டிடத்திற்கு சேதம் விளைவித்துள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p> </p><p style="text-align: justify;">சிறைச்சாலையின் நிர்வாகக் கட்டிடமும் கைதிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளது. 5ஆம் திகதி மாலையிலேயே சிறைச்சாலை அதிகாரிகள் பொலிஸாருக்குத் தெரிவித்து பாதுகாப்பைக் கோரியுள்ளனர். </p><p style="text-align: justify;">



நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் அதிகாரிகள் வந்தபோதிலும், நிலைமையை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால், சிறைச்சாலை தலைமையகத்திலிருந்து அவசர தந்திரோபாயப் படையின் 89 அதிகாரிகள் நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு வரவழைக்கப்பட்டனர்.
</p><p style="text-align: justify;">


5ஆம் திகதி இரவும் கைதிகள் கூரை மீது ஏறி, குழுவாக இணைந்து வன்முறையில் ஈடுபட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. </p><p style="text-align: justify;">மறுநாள் காலையில் உணவு வழங்குவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளே சென்றபோது மீண்டும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. 'அதிகாரிகளை அடிக்கக் காத்திருக்கிறார்கள், நீங்கள் வெளியேறுங்கள்' என்று சில கைதிகள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p> </p><p style="text-align: justify;">முற்பகல் 10.30 முதல் 10.50க்கு இடைப்பட்ட காலத்தில் இந்த பதற்றநிலை பெரும் மோதலாக மாறியது. 

 

நிலைமையைக் கட்டுப்படுத்த சிறைச்சாலை அவசர தந்திரோபாயப் படையினர் உள்ளே சென்றபோது, கைதிகள் திட்டமிட்டு கற்கள், தடிகள் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களின் இரும்புப் பாகங்களைக் கொண்டு கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.</p><p style="text-align: justify;"> 



இந்த மோதலுக்கு மத்தியில் நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகள் வெளியேற முடிந்த போதிலும், சிறைச்சாலையின் கட்டமைப்பு குறித்து சரியான புரிதல் இல்லாததால் கொழும்பிலிருந்து சென்ற அதிகாரிகளால் வெளியே வர முடியாமல் போனது.



முதல் நாளில் பதற்றநிலை ஏற்பட்ட போது, சிறைச்சாலையின் ஆயுதக் கிடங்கின் ஒரு பகுதியிலிருந்த ஆயுதங்கள் அகற்றப்பட்டிருந்தன. </p><p style="text-align: justify;">ஆனால், மற்றுமொரு பகுதியிலிருந்த ஆயுதங்கள் மோதலின் போது கைதிகளின் கைகளுக்குச் சென்றுள்ளன. மோதலின் போது சிறைச்சாலையின் உள்பகுதியிலிருந்து அதிகாரிகளை நோக்கி துப்பாக்கி நீட்டப்பட்டுள்ளது. 



அந்தச் சந்தர்ப்பத்திலேயே விசேட அதிரடிப்படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியுள்ளனர். அப்போதும் நிலைமை கட்டுக்குள் வராததால் அவர்கள் வானத்தை நோக்கிச் சுட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p> </p><p style="text-align: justify;">அதற்கும் கைதிகள் கட்டுப்படாத போதே, அதிகாரி ஒருவர் சிறைச்சாலை வாயிலின் துவாரத்தினூடாக உள்ளே நோக்கிச் சுட்டுள்ளார். 



அதன் பின்னரே விசேட அதிரடிப்படையினர் உள்ளே நுழைந்தபோது கொழும்பிலிருந்து சென்ற அதிகாரிகள் தரையில் விழுந்து கிடப்பதைக் கண்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify;">


மோதலின்போது கைதிகள் சிறைச்சாலையின் நிர்வாகக் கட்டிடம் மற்றும் மருந்தகத்துக்கு சேதம் விளைவித்ததுடன், அதிகாரிகள் மீது கற்கள், தடிகள் மற்றும் இரும்புப் பொருட்களால் தாக்குதல் நடத்தியதாகவும் CID தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify;">


சம்பவம் தொடர்பாக சிறைச்சாலையின் CCTV காட்சிகள் அடங்கிய இரண்டு DVR சாதனங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவை தடய அறிவியல் பரிசோதனைக்காக மொரட்டுவ பல்கலைக்கழக கணினி தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
</p><p style="text-align: justify;">


இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் கொலைக் குற்றச்சாட்டு, துப்பாக்கிகள் கட்டளைச் சட்டம் மற்றும் பொதுச் சொத்துக்கள் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தொடரப்பட்டு வருவதாக CID தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"></p><p>
</p><p style="text-align: justify;">


முன்வைக்கப்பட்ட விபரங்களை பரிசீலித்த நீர்கொழும்பு நீதவான் ஷிலனி பெரேரா, மோதல் நடந்த நேரத்தில் சிறைச்சாலையில் இருந்த அனைத்து கைதிகள் தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.</p><p style="text-align: justify;">அத்துடன், அந்த நேரத்தில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து தற்போது வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ள அனைத்து கைதிகளிடமிருந்தும், சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரலின் மேற்பார்வையின் கீழ் வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறு நீதவான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.
</p><p style="text-align: justify;">


இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை 16ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.



இந்நிலையில் நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதலைக் கட்டுப்படுத்துவதற்காக துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரி, பல்லேகல சிறைச்சாலைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
</p><p style="text-align: justify;">
 

கடந்த ஜூலை 6ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தின் போது, கைதிகள் சிறைச்சாலையின் இறுதி மரக் கதவையும் உடைத்துக்கொண்டு வெளியே வர முயன்ற சந்தர்ப்பத்தில், சிறைச்சாலை அதிகாரி ஒருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.
</p><p style="text-align: justify;">
 

இந்தத் துப்பாக்கிச் சூடானது சிறைச்சாலை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே நடத்தப்பட்டதா அல்லது அதிகார வரம்பை மீறிச் செயல்படப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக தற்போது ஒரு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 



இந்த கொடூரமான மோதல் காரணமாக, இதுவரை 10 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T01:21:27+00:00</updated>
        </entry>
    </feed>
