<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-14T00:27:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறையில் மருத்துவ மாணவி ; வைரலான உருக்கமான கதை ; அம்பலமான பொய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/medical-student-s-story-at-negombo-prison-1783988570"></link>
            <id>https://jvpnews.com/article/medical-student-s-story-at-negombo-prison-1783988570</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் போது, சிறைச்சாலை கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைதி ஒருவரை மையப்படுத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;"><a href="https://jvpnews.com/article/story-of-a-young-woman-in-negombo-prison-1783761791" target="_blank">நீர்கொழும்பு சிறைச்சாலை</a>யில் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் போது, சிறைச்சாலை கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைதி ஒருவரை மையப்படுத்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் உருக்கமான பின்னணிக் கதை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என 'உண்மைக் கண்டறியும் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,</p><p style="text-align: justify;">
கடந்த ஜூலை 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 29 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6341aa4b-1cde-42f6-977b-ed2f02ee31ce/26-6a55815bdf0b8.webp' /></p><h2 style="text-align: justify;">பெண் கைதி</h2><p> </p><p style="text-align: justify;">

இந்த பதற்றமான சூழ்நிலையின் போது, சில கைதிகள் சிறைச்சாலையின் கூரையின் மேல் ஏறி கைதிகள் உரிமைக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p style="text-align: justify;">


இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இருந்த ஒரு பெண் கைதியின் தோற்றத்தை அடிப்படையாக வைத்து, சமூக வலைத்தளங்களில் ஒரு சோகமான கதை வேகமாகப் பரப்பப்பட்டது.
</p><p style="text-align: justify;">
இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளையும் அனுதாபத்தையும் ஏற்படுத்திய நிலையில், 'உண்மைக்கண்டறியும் அமைப்பொன்று இது குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுத்தது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">


இந்தக் கதையைத் தனது பேஸ்புக் பக்கத்தில் முதன்முதலில் பதிவிட்ட நபர் "இது ஒரு உண்மைக் கதை அல்ல, பேஸ்புக் பக்கங்களில் பொழுதுபோக்கிற்காகவும், சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் நானே கற்பனையாக உருவாக்கிய கதை" என்பதை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p style="text-align: justify;">

அத்துடன், சிறைச்சாலைத் தரப்பினரிடம் இது குறித்து வினவிய போது, கைதிகளின் தனிப்பட்ட விபரங்களை வெளியிட முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify;">
எனவே, நீர்கொழும்பு சிறைக்கூரையின் மேல் போராடிய பெண் கைதி ஒரு வைத்திய மாணவி என்றும், காதலனால் ஏமாற்றப்பட்டு சிறை சென்றவர் என்றும் பரவும் செய்திகள் அனைத்தும் பேஸ்புக் பயனர் ஒருவரால் உருவாக்கப்பட்ட முற்றிலும் கற்பனையான வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-14T00:22:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரும் துயரை ஏற்படுத்திய இளம் ஆசிரியரின் மரணம் ; அதிகாலையில் நடந்தேறிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-teacher-s-death-leaves-community-in-grief-1783987423"></link>
            <id>https://jvpnews.com/article/young-teacher-s-death-leaves-community-in-grief-1783987423</id>
            <summary type="text">இப்பலோகம - கலாவெ வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (13) அதிகாலை கலாவெ பகுதியிலிருந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இப்பலோகம - கலாவெ வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>நேற்று (13) அதிகாலை கலாவெ பகுதியிலிருந்து இப்பலோகம நோக்கி இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்துடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60d2c22d-c10e-44fd-bcbd-c6c099da5585/26-6a557ce184a50.webp' /></p><h2>மேலதிக விசாரணை</h2><p> </p><p>

விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றைய நபர் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p> 

இவ்வாறு உயிரிழந்தவர் 29 வயதுடைய பாடசாலை ஆசிரியர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

சம்பவம் தொடர்பாக இப்பலோகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T00:03:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையிலுள்ள ஆண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hiv-risk-higher-among-men-in-sri-lanka-ministry-1783978096"></link>
            <id>https://ibctamil.com/article/hiv-risk-higher-among-men-in-sri-lanka-ministry-1783978096</id>
            <summary type="text">இலங்கையில் பெண்களை விட ஆண்களிடையே எச்.ஐ.வி பரவும் அபாயம் அதிகமாக இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான புள்ளிவிவரங்களையும் தகவல்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் பெண்களை விட ஆண்களிடையே எச்.ஐ.வி பரவும் அபாயம் அதிகமாக இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><p>
இது தொடர்பான புள்ளிவிவரங்களையும் தகவல்களையும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
</p><p>
ஆண்களிடையே பாதுகாப்பற்ற ஓரினச்சேர்க்கை உறவுகள் அதிகரித்ததே இந்த அபாயம் வேகமாக அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>
</p><p></p><h2>நோயாளிகளின் எண்ணிக்கை</h2><p>ஆண்டுதோறும் பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கை பொதுவாக படிப்படியாக அதிகரித்து வந்தாலும் குறிப்பாக 2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான சமீபத்திய தரவுகளைப் அவதானிக்கும் போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0d465a8-7f3c-4683-9635-dcc950d940ec/26-6a5561a71a4d6.webp' /></p><p>குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஆண்களிடையே அதிக எண்ணிக்கையிலான எச்.ஐ.வி தொற்றுகள் பதிவாகியுள்ளதாகவும் இந்த மாவட்டங்களின் அதிக மக்கள்தொகை மற்றும் அடிக்கடி நிகழும் இடம்பெயர்வு ஆகியவை இதற்குக் காரணங்கள் என்றும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T23:58:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் மலசலகூடத்துடன் இணைந்த குளியறைக்குள் கோழி இறைச்சி விற்பனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chicken-meat-sold-bathroom-toilet-vavuniya-1783986217"></link>
            <id>https://tamilwin.com/article/chicken-meat-sold-bathroom-toilet-vavuniya-1783986217</id>
            <summary type="text">வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் மலசல கூடத்துடன் இணைந்த குளியலறைப்
பகுதியில் வைத்து கோழி இறைச்சி உரிக்கப்பட்டு விற்பனை செய்யும் சம்பவம் நீண்ட
நாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் மலசல கூடத்துடன் இணைந்த குளியலறைப்
பகுதியில் வைத்து கோழி இறைச்சி உரிக்கப்பட்டு விற்பனை செய்யும் சம்பவம் நீண்ட
நாட்களாக இடம்பெற்றமை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
</p><p>
வவுனியா, வைரவபுளியங்குளம், தொடருந்து வீதியில் கதிரேசு வீதிக்கு திரும்பும்
சந்தியில் உள்ள கோழி இறைச்சி விற்பனை கடை ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>அக்கடைக்குரிய கோழிகள்
மலசலகூடம் மற்றும் அதனுடன் இணைந்த பகுதிகளில் வைக்கப்பட்டு, அப்பகுதியில் வைத்து உரிக்கப்பட்டு சுகாதார சீர்கேட்டுடன் கடையில் இறைச்சியாக
நீண்டகாலமாக விற்பனை செய்யப்படடு வந்துள்ளது.</p><p></p><h2>பொதுமக்களின் கோரிக்கை&nbsp;</h2><p>
</p><p>
இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் கடந்த காலங்களில் எந்தவித
நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இவ்விற்பனை நிலையம் இயங்கி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ace3063-89b3-4c13-8098-12e30a7bbe2c/26-6a557b41053e5.webp' /></p><p>இந்நிலையில், விசேட டெங்கு ஒழிப்பு
நடவடிக்கையின் போது கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து
டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தை முன்னெடுத்த போது சுகாதார சீர்கேட்டுடன்
குறித்த கோழி இறைச்சிக் கடை இயங்கி வைத்தமை தெரிய வந்துள்ளது.
</p><p>குறித்த இறைச்சிக்கடை தொடர்பில் சுகாதார
பரிசோதகர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடடிக்கை
எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T23:56:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேல் வட்டமிட்ட ட்ரோன்! ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrested-for-flying-drone-over-jaffna-prison-1783986709"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrested-for-flying-drone-over-jaffna-prison-1783986709</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேலே ட்ரோனைப் பறக்கவிட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேலே நேற்று (13-07-2026) மாலை 5...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேலே ட்ரோனைப் பறக்கவிட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேலே நேற்று (13-07-2026) மாலை 5 மணியளவில் அடையாளம் காணப்படாத ட்ரோன் ஒன்று சில நிமிடங்கள் வட்டமிட்டுள்ளது.</p><p>

இந்த நிலையில், ட்ரோனை அவதானிப்பதற்குள் அது அங்கிருந்து அகன்றதால் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.</p><p>
</p><p></p><h2>கண்காணிக்க அனுமதி&nbsp;</h2><p>இதேநேரம், இந்த ட்ரோனை இயக்கியவர்கள் தொடர்பில் கண்டறியுமாறு சிறைச்சாலை நிர்வாகத்தால் உடனடியாக யாழ்ப்பாணம் காவல்துறையினரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதோடு சிறைப் பாதுகாப்பும் உஷார் செய்யப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b0bb23b-4ede-47b2-8ea6-e392b5cee61c/26-6a557a16aeb30.webp' /></p><p>இதன்பின்பு இடம்பெற்ற தேடுதலின்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையால் அமைக்கப்படும் பாலங்கள் தொடர்பில் கண்காணிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட ட்ரோன் அது எனக் கண்டறியப்பட்டுள்ளது.</p><p>

பாலங்களைக் கண்காணிக்க அனுமதி பெறப்பட்டபோதும் சிறைச்சாலையின் மேலால் இயக்கியமைக்காக ட்ரோனை இயக்கியவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T23:52:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[காபி அதிகமாக குடித்தால் இவ்வளவு பிரச்சினைகள் வருமா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/too-much-coffee-health-risks-you-should-know-1783985629"></link>
            <id>https://jvpnews.com/article/too-much-coffee-health-risks-you-should-know-1783985629</id>
            <summary type="text">காலை எழுந்தவுடன் ஒரு கப் காபி குடிப்பது பலரின் அன்றாட பழக்கமாகிவிட்டது. காபியில் உள்ள கஃபீன் சோர்வை குறைத்து, புத்துணர்ச்சி அளித்து, கவனத்தை அதிகரிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">காலை எழுந்தவுடன் ஒரு கப் காபி குடிப்பது பலரின் அன்றாட பழக்கமாகிவிட்டது. காபியில் உள்ள கஃபீன் சோர்வை குறைத்து, புத்துணர்ச்சி அளித்து, கவனத்தை அதிகரிக்கிறது. </p><p style="text-align: justify; ">ஆனால், அளவுக்கு மீறி காபி அருந்துவது உடல்நலத்திற்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/411af053-c082-40fb-bcd3-c11d1a38f3d3/26-6a5575df311d6.webp' /></p><p>


</p><p style="text-align: justify; "><b>தூக்கமின்மை மற்றும் மனஅழுத்தம்:
</b>காபியில் உள்ள கஃபீன் நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறது. குறிப்பாக மாலை அல்லது இரவு நேரங்களில் அதிகமாக காபி குடித்தால் தூக்கம் வராமல் போகலாம். தொடர்ந்து தூக்கமின்மை ஏற்பட்டால் மனஅழுத்தம், பதட்டம், எரிச்சல் போன்ற பிரச்சனைகள் உருவாகும்.
</p><p style="text-align: justify; "><b>&nbsp;இதயத் துடிப்பு அதிகரிப்பு:
</b>அதிக அளவில் காபி அருந்துவது இதயத் துடிப்பை வேகப்படுத்தலாம். சிலருக்கு இதயப் படபடப்பு, ரத்த அழுத்த உயர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். ஏற்கனவே இதய நோய் அல்லது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் காபி அருந்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
</p><p style="text-align: justify; "><b>வயிறு மற்றும் செரிமானக் கோளாறுகள்:
</b>காபி வயிற்றில் அமிலச் சுரப்பை அதிகரிக்கிறது. இதனால் நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை, வயிற்று வலி, செரிமானக் கோளாறுகள் போன்றவை ஏற்படலாம். வெறும் வயிற்றில் காபி குடிப்பது இந்தப் பாதிப்புகளை மேலும் அதிகரிக்கலாம்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca1d4186-8ec4-47ea-b89d-01a87ceb3492/26-6a5575dfdb754.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "><b>&nbsp;எலும்பு ஆரோக்கியம் பாதிப்பு:
</b>அளவுக்கு அதிகமாக காபி குடிப்பதால் உடலில் இருந்து கால்சியம் வெளியேறும் அளவு அதிகரிக்கலாம். நீண்ட காலத்தில் இது எலும்பு அடர்த்தியைக் குறைத்து, குறிப்பாக பெண்களுக்கு எலும்பு பலவீனம் மற்றும் எலும்பு முறிவு அபாயத்தை அதிகரிக்கலாம்.
</p><p style="text-align: justify; "><b>அடிமைத்தன்மை:
</b>தினமும் பல முறை காபி குடிக்கும் பழக்கம் கஃபீன் சார்புநிலையை உருவாக்கலாம். திடீரென காபியை நிறுத்தினால் தலைவலி, சோர்வு, கவனக்குறைவு, எரிச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.
</p><p style="text-align: justify; "><b>கர்ப்பிணிப் பெண்களுக்கு கூடுதல் கவனம்:
</b>கர்ப்ப காலத்தில் அதிக கஃபீன் உட்கொள்வது கருவின் வளர்ச்சியை பாதிக்கும் அபாயத்தை அதிகரிக்கலாம். எனவே கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மட்டுமே காபி அருந்துவது நல்லது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3c1e50c-fcdd-4ece-afee-7ee4c5111a40/26-6a5575e096271.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "><b>கவலை மற்றும் பதட்டம் அதிகரிப்பு:
</b>ஏற்கனவே கவலைக் கோளாறு உள்ளவர்களுக்கு அதிக கஃபீன் உட்கொள்வது பதட்டம், கைகள் நடுக்கம், வியர்வை, மன அமைதியின்மை போன்ற அறிகுறிகளை மோசமாக்கலாம்.</p><p style="text-align: justify; "><b>&nbsp;நீரிழப்பு ஏற்படும் வாய்ப்பு:</b>
காபி லேசான சிறுநீர் பெருக்கும் தன்மை கொண்டது. அதிக அளவில் காபி மட்டுமே குடித்து, போதுமான தண்ணீர் குடிக்காமல் இருந்தால் சிலருக்கு நீரிழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
</p><p style="text-align: justify; ">பெரும்பாலான ஆரோக்கியமான பெரியவர்களுக்கு ஒரு நாளுக்கு 400 மில்லிகிராம் கஃபீன் (சுமார் 3–4 கப் சாதாரண காபி) வரை பொதுவாக பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. ஆனால் வயது, உடல்நிலை, கர்ப்பம், பயன்படுத்தும் மருந்துகள் போன்ற காரணிகளைப் பொறுத்து இந்த அளவு மாறுபடலாம்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T23:33:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பல்கலையின் முன்னாள் பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த வழக்கு - நீதிமன்று விடுத்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/case-filed-professor-raghuram-court-respondents-1783984545"></link>
            <id>https://tamilwin.com/article/case-filed-professor-raghuram-court-respondents-1783984545</id>
            <summary type="text">யாழ்ப்பாண பல்கலைக்கழக கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர்
சிவசுப்பிரமணியம் தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினார்கள் என
தொடரப்பட்ட வழக்கில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண பல்கலைக்கழக கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர்
சிவசுப்பிரமணியம் தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினார்கள் என
தொடரப்பட்ட வழக்கில், எதிர்மனுதாரர்களின் அவதூறு கூற்றுகளை அகற்ற வேண்டும்
என நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
</p><p>
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதியான சிவசுப்பிமணியம்
ரகுராம் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முன்னாள் பல்கலைக்கழக
மாணவியும் இரண்டு வருட காலமாக தற்காலிக உதவி விரிவுரையாளராகவும் கடமையாற்றிய
பெண் ஒருவர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்தனர்.&nbsp;</p><p>அதை அடுத்து, பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p></p><h2>முன்னெடுக்கப்படும் விசாரணைகள் </h2><p>
</p><p>இதற்கிடையில், முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்ரமணியம் ரகுராம் குறித்த
முன்னாள் மாணவியுடன் உரையாடிய தொலைபேசி ஒலிப்பதிவு என சில ஒலிப்பதிவுகள்
டிக்டோக் தளம் மற்றும் முகநூல்களில் பகிரப்பட்டன. அதன் அடிப்படையில் சிலரால் முகநூல்களிலும் யூடியூப் தளத்திலும் கருத்துக்கள்
பகிரப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c9d7f57-6029-47e3-bdd4-a0494d3f7946/26-6a55747ddc4dc.webp' /></p><p>
இந்நிலையிலையே, பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில், நிகழ்நிலை காப்பு
சட்டத்தின் பிரிவு 20இன் கீழ் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி
சிவசுப்பிரமணியம் ரகுராமால் கடந்த முதலாம் திகதி, தன் மீது குற்றச்சாட்டை
முன்வைத்துள்ள மாணவி, அவரது நண்பியான முன்னாள் மாணவி, யாழ்ப்பாண பல்கலைக்கழக
துணைவேந்தர், ஆகியோருடன் இணைய இடையீட்டாளர்களாக யூடியூப், டிக்டொக்,
பேஸ்புக் ஆகியவை மனுதாரர் தொடர்பிலான தடை செய்யப்பட்ட கூற்றுக்களை
பிரசுரித்தமைக்கு எதிராக என 14 பேரை எதிர் மனு தரர்களாக குறிப்பிட்டு வழக்கு
பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>குறித்த வழக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட
போது, முதலாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் எதிர் மனுதாரர்கள் சமூக
வலைத்தளங்களில் பேராசிரியர் ரகுராம் தொடர்பாக, பதிவிட்ட
அவதூறான பதிவுகளை அகற்றுவதோடு, இது சம்பந்தப்பட்ட எந்த விடயத்தையும் எந்த ஒரு
சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யக்கூடாது என இடைக்கால கட்டளையிட்டது.
</p><p>
அத்துடன் எதிர்மனுதாரர்களுக்கு அழைப்பாணை அனுப்ப கட்டளையிட்ட மன்று, எதிர்
மனுதரர்களின் காரணங்காட்டுதலுக்காக வழக்கு விசாரணையை எதிர்வரும் 27ஆம்
திகதிக்கு மன்று
திகதியிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T23:29:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏவுகணைகளிலிருந்து ஐரோப்பாவைப் பாதுகாக்க... அமைந்த 10 நாடுகள் கூட்டணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/coalition-protect-europe-from-1783977410"></link>
            <id>https://news.lankasri.com/article/coalition-protect-europe-from-1783977410</id>
            <summary type="text">ஐரோப்பாவை பாலிஸ்டிக் ஏவுகணைகளிலிருந்து பாதுகாக்க ஒரு கூட்டணியை அமைப்பதாக உக்ரைனும் மேலும் ஒன்பது நாடுகளும் திங்களன்று அறிவித்துள்ளன.தற்காப்பு கட்டமைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பாவை பாலிஸ்டிக் ஏவுகணைகளிலிருந்து பாதுகாக்க ஒரு கூட்டணியை அமைப்பதாக உக்ரைனும் மேலும் ஒன்பது நாடுகளும் திங்களன்று அறிவித்துள்ளன.</p><h2>தற்காப்பு கட்டமைப்பு</h2><p>
</p><p>நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக வல்லரசு ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பை எதிர்த்துப் போராடி வரும் உக்ரைனின் அனுபவத்தைப் பயன்படுத்தவும் முடிவு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c206f106-1bc2-441b-85ab-077dc8ce0c43/26-6a5558e3e136d.webp' /></p><p>ஐரோப்பாவிற்காக ஒரு பகிரப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்புத் திறனை உருவாக்குவதே எங்கள் இலக்கு என்று, பாரிஸில் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது அந்த 10 நாடுகளும் ஓர் அறிக்கையில் தெரிவித்தன. </p><p>தனது நாட்டைத் தாக்கிச் சிதைத்து, ஐரோப்பாவின் பிற பகுதிகள் மீது குறிவைத்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ள ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை உருவாக்குவதில் உதவுமாறு, ஜெலென்ஸ்கி இருபத்து நான்கு தலைவர்களிடம் கோரிக்கை வைத்திருந்தார். </p><p>இந்த நிலையில், குரூஸ் ஏவுகணைகள் அல்லது ட்ரோன்களைக் காட்டிலும் இடைமறித்துத் தடுப்பதற்கு மிகவும் கடினமான பாலிஸ்டிக் ஏவுகணைகளால் ஏற்படும் வளர்ந்து வரும் அச்சுறுத்தலைத் தாங்கள் அங்கீகரிப்பதாக ஜெலென்ஸ்கியும் டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் தலைவர்களும் தெரிவித்தனர்.</p><p></p><p> </p><p>மேலும், எதிர்கால ஏவுகணை அச்சுறுத்தல்களைத் தடுத்து முறியடிக்க, ஒருங்கிணைந்த ஏவுகணைத் தற்காப்பு கட்டமைப்பு வடிவிலான ஒரு விரிவான தீர்வு ஐரோப்பாவைப் பாதுகாப்பதற்கு அவசியமென நாங்கள் நம்புகிறோம் என்று அந்த அறிக்கையில் 10 தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.</p><h2>தனித்துவமான அனுபவம்</h2><p> </p><p>மட்டுமின்றி, ரஷ்யா தொடுத்த ஆக்கிரமிப்புப் போருக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளின் மூலம் உக்ரைன் பெற்ற தனித்துவமான அனுபவத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். </p><p>ஆனால், பாதுகாப்பு அமைப்பை நிறுவுவதற்கான காலக்கெடு எதுவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை; மேலும், இத்திட்டத்தில் பிற நாடுகளும் இணைய வாய்ப்புள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba4ff7b1-abdc-425a-a4d6-2287041d0c1b/26-6a5558e4ae87e.webp' /></p><p>
</p><p>இதனிடையே, பரவலான எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்திய சுத்திகரிப்பு நிலையங்கள், எண்ணெய்க் கப்பல்கள் மற்றும் முனையங்கள் மீதான உக்ரைனின் சமீபத்திய தொலைதூரத் தாக்குதல்களுக்குக் கடுமையான பதிலடி கொடுக்கப்போவதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் திங்களன்று அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.</p><p>மேலும், அவர்கள் ரஷ்யப் பிரதேசத்தைத் தாக்க முயற்சிக்கும் ஒவ்வொரு இடத்திலும், நாங்கள் அதேபோல் பதிலடி கொடுப்போம், ஆனால் எங்கள் தாக்குதல்கள் பல மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று புடின் கூறியுள்ளார். </p><p>இந்த நிலையில், ஐரோப்பிய வெளிவிவகார அமைச்சர்கள் பிரஸ்ஸல்ஸில் தனியாகச் சந்தித்து, உக்ரைனின் தேவைகள் மற்றும் ஐரோப்பியக் கண்டத்திற்கு ரஷ்யா விடுக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து விவாதித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/402ae082-d69c-4b3f-9b35-d920f527b604/26-6a5558e55f0ed.webp' /></p><p> </p><p>குளிர்காலத்திற்கு முன்னதாக, தனது வான் பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்துவதற்காக ஐரோப்பிய நாடுகளுடனான முயற்சிகளைத் துரிதப்படுத்த ஜெலென்ஸ்கி தீவிரமாக உள்ளார். </p><p>அக்குளிர்காலத்தில் உக்ரேனியர்களுக்கு மின்சாரம், வெப்பம் மற்றும் தண்ணீர் கிடைப்பதைத் தடுப்பதற்காக ரஷ்யா வழக்கமாகத் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T23:22:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் துறைமுகங்களில் அமெரிக்க கடற்படை முற்றுகை ; மீண்டும் தொடரும் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-navy-tightens-blockade-near-iranian-ports-1783984606"></link>
            <id>https://canadamirror.com/article/us-navy-tightens-blockade-near-iranian-ports-1783984606</id>
            <summary type="text">ஈரான் துறைமுகங்கள் மற்றும் கரையோரப் பகுதிகளுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வரும் கப்பல்களைக் கட்டுப்படுத்தும் வகையில், அமெரிக்கா மீண்டும் கடற்படை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் துறைமுகங்கள் மற்றும் கரையோரப் பகுதிகளுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வரும் கப்பல்களைக் கட்டுப்படுத்தும் வகையில், அமெரிக்கா மீண்டும் கடற்படை முற்றுகையை அமுல்படுத்த உள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>
முற்றுகை விதிமுறைகளை மீறாத அனைத்து வணிக மற்றும் மனிதாபிமான உதவி வழங்கும் கப்பல்களின் போக்குவரத்திற்கு அமெரிக்க இராணுவம் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63543edb-9ee3-491e-81bc-922e3044a0ac/26-6a5571e067e0f.webp' /></p><p>
</p><p>
ஏற்கனவே கடந்த ஏப்ரல் 13 முதல் ஜூன் 18 வரை இந்த முற்றுகை அமுலில் இருந்தது.
</p><p>
அந்த இரண்டு மாத காலத்தில், சுமார் 140 கப்பல்கள் வழிகாட்டப்பட்டு, விதிமுறைகளை மீறிய 9 கப்பல்கள் முடக்கப்பட்டன. மேலும், 50க்கும் மேற்பட்ட மனிதாபிமான உதவி வழங்கும் கப்பல்கள் அனுமதிக்கப்பட்டன.</p><p>
ஈரான் மீதான இந்த இராணுவ மற்றும் பொருளாதார அழுத்தமானது, பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-13T23:16:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[எலான் மஸ்க் நெருக்கடியில்... சரியும் பங்கு விலை: குறையும் சொத்து மதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/musk-net-worth-drops-1783984567"></link>
            <id>https://news.lankasri.com/article/musk-net-worth-drops-1783984567</id>
            <summary type="text">ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் அவற்றின் ஆதாயங்களை இழந்து, பொதுப் பங்கு வெளியீட்டு விலையை நெருங்கிச் சரிந்ததால், எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 900 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் அவற்றின் ஆதாயங்களை இழந்து, பொதுப் பங்கு வெளியீட்டு விலையை நெருங்கிச் சரிந்ததால், எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 900 பில்லியன் டொலருக்கும் கீழே குறைந்தது.</p><h2>சமீபத்திய சரிவு</h2><p>
</p><p>திங்கட்கிழமை பிற்பகல் நிலவரப்படி, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 4.45 சதவீதம் சரிந்து, அதன் 135 டொலர் ஐபிஓ விலையை நெருங்கி, 140 டொலருக்கு சற்றுக் குறைவாக இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0622bfb3-b03b-4cc4-bc89-2def620cd065/26-6a5572c9d3e69.webp' /></p><p> </p><p>செயற்கை நுண்ணறிவு மற்றும் ராக்கெட் தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், கடந்த மாதம் அமெரிக்கப் பங்குச் சந்தையில் 75 பில்லியன் டொலர் நிதியைத் திரட்டி அமோகமான அறிமுகத்தைக் கண்டது. </p><p>இந்த நிலையில், ஃபோர்ப்ஸின் நிகழ்நேரப் பில்லியனர்கள் பட்டியலில் உள்ள தரவுகளின்படி, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனப் பங்கின் விலையில் ஏற்பட்ட சமீபத்திய சரிவு மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பில் சுமார் 37 பில்லியன் டொலரைக் குறைத்து, அவரது மொத்த சொத்து மதிப்பை 882.7 பில்லியன் டொலராக மாற்றியுள்ளது. </p><p>ஜூன் 12, 2026 அன்று பொதுப் பங்குச் சந்தையில் நுழைந்த பிறகு, ஸ்பேஸ்எக்ஸ் மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்தது. சுமார் 1.8 டிரில்லியன் டொலர் மதிப்பீட்டுடன் அறிமுகமான இந்நிறுவனத்தின் மதிப்பு விரைவாக 2.7 டிரில்லியன் டொலருக்கும் அதிகமாக உயர்ந்தது; இதனால் சந்தை மதிப்பு அடிப்படையில் அமேசான் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்களை விடவும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் சிறிது காலம் அதிக மதிப்புடையதாகத் திகழ்ந்தது.</p><p></p><p> </p><p>டெஸ்லா மற்றும் எக்ஸ் ஆகிய நிறுவனங்களையும் வழிநடத்தும் மஸ்க், ஜூன் 16 அன்று உலகின் முதல் டிரில்லியன் டொலர் செல்வந்தராக உயர்ந்தார்; அன்று ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனப் பங்குகள் 225 டொலருக்கும் அதிகமாக உயர்ந்து சாதனை படைத்ததன் மூலம், அவரது மொத்த சொத்து மதிப்பு 1.45 டிரில்லியன் டொலராக அதிகரித்தது.</p><h2>பெரும்பாலும் நம்பிக்கை</h2><p> </p><p>அப்போதிலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் பங்கின் விலை 38 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைந்துள்ளதால், அவரது சொத்து மதிப்பும் பெருமளவு சரிந்துள்ளது.</p><p> அவரது சொத்து மதிப்பு கணிசமாகக் குறைந்திருந்தாலும், உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற இடத்தைத் தொடர்ந்து மஸ்க் தக்கவைத்துள்ளார்; இவருக்கு அடுத்தபடியாக, முறையே 290.7 பில்லியன் மற்றும் 268.1 பில்லியன் டொலர் சொத்து மதிப்பைக் கொண்ட கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர் உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be56768d-1dd4-4a3f-bcd0-77ead61eb369/26-6a5572caca0ab.webp' /></p><p> </p><p>
சமீபத்திய வாரங்களில் ஸ்பேஸ்எக்ஸ் பங்குகளின் ஏற்றம் வேகம் குறைந்தபோதிலும், வால் ஸ்ட்ரீட் அந்தப் பங்கின் மீது பெரும்பாலும் நம்பிக்கையுடன் இருப்பதாக ஃபோர்ப்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. </p><p>ரேமண்ட் ஜேம்ஸ் 800 டொலர் என்ற விலை இலக்கை நிர்ணயித்துள்ளது; இது 10 டிரில்லியன் டொலருக்கும் அதிகமான சந்தை மதிப்பைக் குறிக்கிறது.</p><p> FactSet தரவுகளின்படி, ஸ்பேஸ்எக்ஸ் பங்குகளின் மதிப்பு சராசரியாக 236 டொலராக இருக்கும் என்று தரகர்கள் எதிர்பார்க்கின்றனர்; இதில் Arete Research 401 டொலர், Morgan Stanley 300 டொலர் மற்றும் Goldman Sachs 205 டொலர் ஆகிய இலக்கு விலைகளை நிர்ணயித்துள்ளன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T23:14:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலிகளுடனான போரில் மக்கள் தாக்கப்பட்டது போல நீர்கொழும்பு சிறையில் தாக்கப்பட்ட கைதிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/negombo-prison-riot-intelligence-failure-1783983485"></link>
            <id>https://ibctamil.com/article/negombo-prison-riot-intelligence-failure-1783983485</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலைத் தாக்குதலால் ஏற்பட்ட அழிவுகள் புலனாய்வுத்துறையின் தோல்வியால் என அரசியல் ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலைத் தாக்குதலால் ஏற்பட்ட அழிவுகள் புலனாய்வுத்துறையின் தோல்வியால் என அரசியல் ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.</p><p>

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் பொதுமக்களை எவ்வாறு இராணுவம் தாக்கியதோ அவ்வாறு கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர்.
</p><p>
இதனால் தான் இவ்வளவு பேர் இந்த கலவரத்தில் இறந்துள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், தாக்குதலின் பின்னணி, தற்போதைய அரசியல் களம் மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/nVxJ9EwKYpI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T22:59:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் பேசும் மக்களின் ஆறு கட்சிகள் பேரினவாதத்துக்கு எதிராக ஓரணியில்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-parties-united-for-tamil-people-1783983315"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-parties-united-for-tamil-people-1783983315</id>
            <summary type="text">நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் மக்களின் ஆறு
கட்சிகள் பேரினவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு செயற்படுவதற்காக ஒரே மேடையில்
அணிதிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் மக்களின் ஆறு
கட்சிகள் பேரினவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு செயற்படுவதற்காக ஒரே மேடையில்
அணிதிரண்டுள்ளன. </p><p>இது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பை ஆறு கட்சிகளினதும்
தலைவர்கள் நேற்று மதியம் கொழும்பு - பம்பலப்பிட்டி ரேணுகா ஹோட்டலில் நடைபெற்ற
ஊடகவியலாளர் மாநாட்டில் ஒரே மேசையிலிருந்து வெளியிட்டனர்.</p><p>
</p><p>
இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் எம்.பி., அமீர் அலி,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி., அதன் செயலாளர்
ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் எம்.பி., இலங்கைத் தொழிலாளர்
காங்கிரஸின் தலைவர் ஜீவன் தொண்டமான் எம்.பி., தமிழ் முற்போக்குக் கூட்டணியின்
தலைவர் மனோ கணேசன் எம்.பி., இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர்
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின்
தலைவர்களில் ஒருவரான செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. மற்றும் அதன் உபதலைவர்
சுரேந்திரன் குருசாமி ஆகியோர் ஒரே மேடையில் இருந்து இந்த அறிவிப்பை நேற்று விடுத்தனர்.</p><p></p><h2>பொதுவான பிரச்சினைகள்&nbsp;</h2><p>

இதனையொட்டி ஆறு கட்சிகளும் ஒன்று சேர்ந்து தமிழ் பேசும் அரசியல் கட்சிகள்
பொதுவான விடயங்களில் இணைந்து செயற்பட பொது தளத்தை உருவாக்க இணக்கம் என்ற
தலைப்பில் இன்று வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பவை
வருமாறு, "இன்று சந்தித்த தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தமது
சமூகங்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவும்,
கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், இணக்கப்பாட்டை உருவாக்கவும் பொதுவான
தளமொன்றை உருவாக்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fab9f02-8dad-419c-b04e-f17a9c27696c/26-6a556dc4eef4b.webp' /></p><p>
</p><p>
ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தமது கொள்கை மற்றும் அரசியல் நிலைப்பாடுகளை
தனித்தனியாக பேணுவதற்கும் முன்வைப்பதற்கும் சுதந்திரம் இருப்பதை ஏற்றுக்கொண்ட
பிரதிநிதிகள், பொதுவான நலன்கள் காணப்படும் விடயங்களை அடையாளம் கண்டு,
சாத்தியமான சந்தர்ப்பங்களில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஒரு
பொறிமுறையாக இந்த தளம் அமையும் எனத் தெரிவித்தனர். இதன்போது மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டது.&nbsp;</p><p>அரசு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக புதிய அரசமைப்பை அறிமுகப்படுத்துவதாக
வழங்கிய உறுதிமொழியை பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
</p><p>
அந்த உறுதிமொழியை நிறைவேற்றுமாறு அரசிடம் ஒருமித்த கோரிக்கையொன்றை முன்வைக்கத்
தீர்மானிக்கப்பட்டதுடன், புதிய அரசமைப்பு நீதியும், சமத்துவமும், அர்த்தமுள்ள
அதிகாரப் பகிர்வும் உறுதி செய்யப்படும் வகையில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வை
உள்ளடக்கியதாக அமைய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.</p><p></p><h2>மாகாண சபைத் தேர்தல்கள்&nbsp;</h2><p>மாகாண சபைத் தேர்தல்கள் ஒரு வருட காலத்துக்குள் நடத்தப்படும் என அரசு
தெரிவித்திருந்த போதிலும், தொடர்ச்சியாக இடம்பெறும் தாமதங்கள் குறித்து
பிரதிநிதிகள் கவலை வெளியிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05c4861b-3a6f-4e86-a038-f19371fc2db4/26-6a556dc5a57a1.webp' /></p><p>
</p><p>
மேலும், ஜனநாயகப் பங்கேற்பையும் பிராந்திய பிரதிநிதித்துவத்தையும் உறுதி
செய்வதற்காக மாகாண சபைத் தேர்தல்களை மேலும் தாமதமின்றி நடத்துமாறு ஒருமித்த
கோரிக்கை முன்வைக்கப்பட்டது.</p><p>நாட்டின் மூன்று சமூகங்களையும் பாதிக்கும் தீவிரமான காணி தொடர்பான
பிரச்சினைகள் தொடர்ந்தும் காணப்படுவதாகப் பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டனர்.</p><p>

இந்த நீண்டகால பிரச்சினைகளுக்கு பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் அர்த்தமுள்ள
கலந்துரையாடல்களை முன்னெடுத்து, நியாயமான மற்றும் நிலையான தீர்வுகளை வழங்க
வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
</p><p>
இந்த பொதுத் தளத்தின் ஊடாக தொடர்ச்சியான உரையாடல்களை முன்னெடுப்பதற்கான
உறுதிப்பாட்டை பிரதிநிதிகள் மீண்டும் தெரிவித்தமையுடன், இந்த விடயங்களில்
பொதுவான அணுகுமுறையொன்றை உருவாக்குவது நல்லிணக்கம், ஜனநாயக ஆட்சி மற்றும்
அனைத்து சமூகங்களினதும் உரிமைகளை பாதுகாப்பதற்கு பங்களிக்கும் என நம்பிக்கை
வெளியிட்டனர்" என்றுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T22:59:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏன் எனக்கு குடும்பம் இல்லையா? நான் கொஞ்சம் ஒப்பனா பேசிடுவேன்.. நடிகர் அருள்நிதி Thug Life Interview]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/arulnithi-thug-life-interview-1783982727"></link>
            <id>https://cineulagam.com/article/arulnithi-thug-life-interview-1783982727</id>
            <summary type="text">நடிகர் அருள்நிதி உடன் exclusive interview இதோ. அவர் பல விஷயங்கள் பற்றி வெளிப்படையாக பேசி இருக்கும் முழு பேட்டியை பாருங்க.

அவர் நடித்த அருள்வான் படம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் அருள்நிதி உடன் exclusive interview இதோ. அவர் பல விஷயங்கள் பற்றி வெளிப்படையாக பேசி இருக்கும் முழு பேட்டியை பாருங்க.
</p><p>
அவர் நடித்த அருள்வான் படம் எப்படி இருக்கிறது. அந்த படம் உருவான விதம் பற்றியும் பல விஷயங்களை அவர் பேசி இருக்கிறார். அந்த படத்தில் ரம்யா பாண்டியன், ஆரவ் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/EMhdkmb90zA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-13T22:45:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[சென்னையில் புது வீடு வாங்கிய ஸ்ருதி ஹாசன்.. எப்படி இருக்கு பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/shruti-haasan-new-house-in-chennai-house-warming-1783982450"></link>
            <id>https://cineulagam.com/article/shruti-haasan-new-house-in-chennai-house-warming-1783982450</id>
            <summary type="text">ஸ்ருதி ஹாசன் தற்போது முக்கிய நடிகையாக தொடர்ந்து வலம் வருகிறார். நடிகை, பாடகி என பல திறமைகளை அவர் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.இந்நிலையில் ஸ்ருதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ருதி ஹாசன் தற்போது முக்கிய நடிகையாக தொடர்ந்து வலம் வருகிறார். நடிகை, பாடகி என பல திறமைகளை அவர் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.</p><p>இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் சென்னையில் புது வீடு வாங்கி இருக்கிறார். அதன் கிரஹப்ரவேசம் நேற்று நடைபெற்று இருக்கிறது.
</p><p>அவரது தோழிகள் மட்டுமே அவர் உடன் அந்த நிகழ்ச்சியில் இருக்கின்றனர். அந்த புகைப்படங்களை வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T22:41:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீராடச் சென்ற பாடசாலை மாணவன் மாயம்! தொடரும் தேடுதல் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grade-10-student-missing-after-drowning-in-river-1783975722"></link>
            <id>https://tamilwin.com/article/grade-10-student-missing-after-drowning-in-river-1783975722</id>
            <summary type="text">நுவரெலியா- லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வோல்ட்றீம் தோட்ட ஆற்றுப் பகுதியில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்களில் ஒருவர்
ஆற்றில் மூழ்கி காணாமல் போயுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா- லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வோல்ட்றீம் தோட்ட ஆற்றுப் பகுதியில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்களில் ஒருவர்
ஆற்றில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.</p><p>குறித்த சம்பவம் நேற்று (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக லிந்துலை பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
</p><p>மாயமான மாணவன் லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 10-ஆம்
ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>தேடுதல் நடவடிக்கை</h2><p>
தற்போது பாடசாலைகளில் நடைபெற்று வரும் இரண்டாம் தவணைப் பரீட்சைக்குத்
தோற்றியிருந்த குறித்த மாணவன், இன்று பரீட்சை நிறைவடைந்ததைத் தொடர்ந்து தனது
நண்பர்கள் சிலருடன் இணைந்து வோல்ட்றீம் தோட்டத்திலுள்ள ஆற்றுப் பகுதிக்குச்
சென்று விளையாடியதாகவும், பின்னர் நீராடச் சென்றபோது எதிர்பாராத விதமாக
ஆற்றில் மூழ்கியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் மாணவருடன் மொத்தம் பத்து மாணவர்கள் ஆற்றுப்
பகுதிக்கு சென்றிருந்ததாகவும், அவர்களில் குறித்த மாணவன் நீரில் அடித்துச்
செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e636b440-ace8-432d-9fd6-854ea504f274/26-6a554f2ca1205.webp' /></p><p>
சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் லிந்துலை பொலிஸார், பிரதேசவாசிகள்
மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தேடுதல்
நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.</p><p> தொடர்ந்து சுழியோடிகளின் உதவியுடன் ஆற்றில் தீவிர
தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T22:41:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலை புலிகளின் தலைவர் தேரர்களை சந்திக்காதது ஏன்..! வெடித்த சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/controversy-over-monk-s-comment-on-ltte-leader-1783981587"></link>
            <id>https://ibctamil.com/article/controversy-over-monk-s-comment-on-ltte-leader-1783981587</id>
            <summary type="text">விடுதலை புலிகளின் தலைவரோடு ஒரு புகைப்படம் கூட எடுத்ததில்லை என இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். 

விடுதலை புலிகளின் தலைவரோடு யாராவது ஒரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>விடுதலை புலிகளின் தலைவரோடு ஒரு புகைப்படம் கூட எடுத்ததில்லை என இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். </p><p>

விடுதலை புலிகளின் தலைவரோடு யாராவது ஒரு பௌத்த துறவி புகைப்படம் எடுத்ததை பார்த்ததுண்டா என அவர் கேள்வி எழுப்பி அவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.</p><p>

இந்நிலையில், இவர் வெளியிட்ட இந்த கருத்து தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. </p><p>

இதன் தொடர்ச்சியாக சில தேரர்களின் அநாகரீகமான நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் விடுதலை புலிகளின் தலைவரை குறித்த இந்த கருத்து தமிழ் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் பேசுபொருளாகியுள்ளது. </p><p>

இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் நடப்பு நிகழ்ச்சி...!</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/h7yCxCoAiUU" width="640" height="360" class="note-video-clip"></iframe>&nbsp;</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T22:38:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலை புலிகளின் தலைவர் தேரர்களை சந்திக்காதது ஏன்..! காலம் கடந்த உண்மைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-tamils-sri-lanka-thero-1783971567"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-tamils-sri-lanka-thero-1783971567</id>
            <summary type="text">விடுதலை புலிகளின் தலைவரோடு ஒரு புகைப்படம் கூட எடுத்ததில்லை என இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.&amp;nbsp;&quot;விடுதலை புலிகளின் தலைவரோடு யாராவது...</summary>
            <content type="html"><![CDATA[<p>விடுதலை புலிகளின் தலைவரோடு ஒரு புகைப்படம் கூட எடுத்ததில்லை என இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>"விடுதலை புலிகளின் தலைவரோடு யாராவது ஒரு பௌத்த துறவி புகைப்படம் எடுத்ததை பார்த்ததுண்டா? </p><p>இல்லை, ஏனெனில் அவர் ஒரு பயங்கரவாதி, ஒழுக்கத்தோடு இருக்கும் நாங்கள் அவரொடு எல்லாம் சேரக்கூடாது” என கூறியுள்ளார்.&nbsp;</p><p>இந்நிலையில், இவர் வெளியிட்ட இந்த கருத்து தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.&nbsp;</p><p>அண்மையில் சில தேரர்களின் அநாகரீகமான நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p>இதற்கிடையில்,&nbsp;விடுதலை புலிகளின் தலைவரை குறித்த இந்த கருத்து தமிழ் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் பேசுபொருளாகியுள்ளது.&nbsp;</p><p>இது உள்ளிட்ட நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/h7yCxCoAiUU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T22:38:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை திவ்யபாரதி சேலையில் அழகிய போஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/divyabharathi-stunning-in-saree-1783981915"></link>
            <id>https://cineulagam.com/article/divyabharathi-stunning-in-saree-1783981915</id>
            <summary type="text">படங்களில் கிளாமராக நடித்து சமீபகாலமாக இளசுகளை தன் பக்கம் ஈர்த்து வருபவர் திவ்யபாரதி. வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார் அவர்.

தற்போது...</summary>
            <content type="html"><![CDATA[<p>படங்களில் கிளாமராக நடித்து சமீபகாலமாக இளசுகளை தன் பக்கம் ஈர்த்து வருபவர் திவ்யபாரதி. வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார் அவர்.
</p><p>
தற்போது திவ்ய அழகிய சேலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்களை பாருங்க.

ரசிகர்களை கவர்ந்து வரும் ஸ்டில்கள் இதோ.

சில மணி நேரத்தில் 1.87 லட்சம் லைக்குகள் இந்த போட்டோக்களுக்கு குவிந்து இருக்கிறது.</p>]]></content>
            <updated>2026-07-13T22:32:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயின் காட்டுத்தீ... பிரித்தானியப் பெண்மணியும் 12 நண்பர்களும் சிக்கியிருக்கலாம் என்று அச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/spain-wildfires-brit-wife-12-friends-1783981399"></link>
            <id>https://news.lankasri.com/article/spain-wildfires-brit-wife-12-friends-1783981399</id>
            <summary type="text">ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி தனது மனைவியும் 12 நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாரும் மரணமடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில், அங்கிருந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி தனது மனைவியும் 12 நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாரும் மரணமடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில், அங்கிருந்து உயிர் தப்பியது எவ்வாறு என்பதை பிரித்தானியர் ஒருவர் விவரித்துள்ளார்.</p><h2>காரில் தப்பிக்க</h2><p>
</p><p>பிரித்தானியரான 70 வயது மால்கம் டிம்ப்ரெல், அல்மேரியா மாகாணத்தில் உள்ள பெடார் (Bédar) கிராமத்தில் தனது மனைவி அனெட் கில்கோருடன் வசித்து வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1558a43-f77d-4970-abb2-912037f395ba/26-6a5567a3efc64.webp' /></p><p> </p><p>கடந்த வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் அப்பகுதி அழிந்தது; இதில் குறைந்தது 13 பேர் மரணமடைந்தனர். தீப்பிழம்புகள் தங்கள் வீடுகளை நெருங்கிய நிலையில், ​​அந்தத் தம்பதியினரும் அவர்களது அண்டை வீட்டாரும் காரில் அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். </p><p>இந்த நிலையில், டிம்ப்ரெல் தனது அன்புக்குரிய பூனைகளான சார்லி மற்றும் லில்லிக்காக வீட்டிற்குத் திரும்பும் முடிவை ஒரு நொடிப் பொழுதில் எடுத்தார்.</p><p> அந்த இரண்டு பூனைகளையும் அழைத்துக்கொண்ட பிறகு, டிம்ப்ரெல் தமது மனைவி உள்ளிட்ட அந்தக் குழுவினரைச் சென்றடைய முயன்றார்; ஆனால், அவர்கள் தங்கள் வாகனங்களை விட்டு வெளியேறியிருந்ததைக் கண்டார்.</p><p></p><p>தீப்பிழம்புகளுக்கு நடுவே நடந்து செல்வது மட்டுமே பாதுகாப்பான வழி என்று தனது மனைவியும், மற்ற ஏழு நண்பர்களும் அண்டை வீட்டாரும் முடிவு செய்ததாக அவர் பிபிசியிடம் கூறினார். </p><p>அந்த முடிவை எடுக்க வேண்டாம் என தாம் அலறியதையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை என்றே டிம்ப்ரெல் தெரிவித்துள்ளார். மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நெருப்பைக் கடப்பது ஆபத்தான முடிவென்றாலும், அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்றே இவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/607f0aa7-0485-422b-8b2d-ce72c5c85c62/26-6a5567a4de095.webp' /></p><p> </p><p>இதனையடுத்து, தனித்துவிடப்பட்ட டிம்ப்ரெல், கைவிடப்பட்ட கார்களில் ஒன்றில், நெருப்பில் இருந்து தப்பிக்க ஒளிந்துகொண்டுள்ளார். ஒருகட்டத்தில் தீப்பிழம்புகள் கடந்து சென்றதை அடுத்து, டிம்ப்ரெல் அவசரகால தீயணைப்புக் குழுவினரால் மீட்கப்பட்டார்.</p><h2>ஐந்து பிரித்தானியர்கள்</h2><p> </p><p>தற்போது டிஎன்ஏ தெளிவுபடுத்தலுக்காகக் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, அந்தத் தம்பதியின் வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு பாதையில் எட்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. </p><p>இதுவரை ஐந்து பிரித்தானியர்களின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை இரவு, சியரா டி லாஸ் ஃபிலாப்ரேஸ் (Sierra de Los Filabres) மலைகளுக்கு அருகிலுள்ள அரை-வறண்ட பகுதியில் இந்தத் தீ விபத்து முதன்முதலில் ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80f65106-9ffc-42ba-ac92-8bb18948ec1a/26-6a5567a63dcc6.webp' /></p><p> மரணமடைந்தவர்களில் பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் வீதம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தீ விபத்து நிகழ்ந்த மையப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 12 உடல்களில், அடையாளம் காணப்பட்ட முதல் ஆறு பேர் இவர்களே என்று அடையாளம் காணும் பணிகளை ஒருங்கிணைக்கும் நிபுணர்கள் தெரிவித்தனர். </p><p>தீ விபத்தில் காயமடைந்த முதிய பிரித்தானியப் பெண் ஒருவர் மருத்துவமனையில் மரணமடைந்ததாக அண்டலூசியப் பிராந்திய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T22:21:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்த நபர் ; அபராதம் வசூலித்து மதுவிருந்து நடத்தி கொண்டாடிய கிராமத்தினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/villagers-hold-liquor-party-using-fine-money-1783968146"></link>
            <id>https://jvpnews.com/article/villagers-hold-liquor-party-using-fine-money-1783968146</id>
            <summary type="text">ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வாலிபர், 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

 இது குறித்து அந்த குழ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வாலிபர், 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 இது குறித்து அந்த குழந்தை தனது தாயிடம் கூறிய நிலையில், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்காமல், கிராம பஞ்சாயத்தை கூட்டி நியாயம் கேட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cae59f98-4681-4220-ba91-68bdb3e18a5d/26-6a553194c6cd2.webp' /></p><h2 style="text-align: justify; ">மது விருந்து&nbsp;</h2><p style="text-align: justify; "> ஆனால் பஞ்சாயத்தை சேர்ந்த சில நபர்கள், இந்த விவகாரத்தை காவல்துறை வரை கொண்டு செல்ல வேண்டாம் என்றும், சந்தேகநபருக்கு அபராதம் விதித்து பிரச்சினையை இங்கேயே தீர்த்துவிடலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
இதனை கிராம பஞ்சாயத்து ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதன்படி குற்றவாளிக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த தொகையில் 20,000 பணத்தை உடனடியாக செலுத்திய அவர், மீதம் உள்ள பணத்தை ஒரு வாரத்திற்குள் கொடுத்து விடுவதாக கூறியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">அவர் கொடுத்த 20,000 ரூபாய்பணத்தில் கிராமத்தினர் சிலர் மதுபானங்களையும், அசைவ உணவுகளையும் வாங்கி வந்து விருந்து வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, கிராம பஞ்சாயத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு குறித்து பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.</p><p style="text-align: justify; "> இதை அறிந்து பொலிஸார் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு மது விருந்து படுஜோராக நடந்து கொண்டிருந்தது. </p><p style="text-align: justify; ">இதையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயாரிடம் நேரடியாக புகாரைப் பெற்ற பொலிஸார், அந்த புகாரின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்து அழைத்துச் சென்றனர். தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-13T21:56:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் சரணாலயத்திற்குள் துப்பாக்கியுடன் சிக்கிய நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/armed-man-caught-inside-tamil-area-sanctuary-1783979668"></link>
            <id>https://jvpnews.com/article/armed-man-caught-inside-tamil-area-sanctuary-1783979668</id>
            <summary type="text">அம்பாறை புத்தங்கல சரணாலயப் பகுதியில் அமைந்துள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான காணி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை வைத்திருந்த நபர் அம்பாறை வன...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அம்பாறை புத்தங்கல சரணாலயப் பகுதியில் அமைந்துள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான காணி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை வைத்திருந்த நபர் அம்பாறை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">



காட்டு விலங்குகளை வேட்டையாடும் நோக்கில் குறித்த நபர் சட்டவிரோதத் துப்பாக்கியுடன் நடமாடுவதாக வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கை திங்கட்கிழமை(12) மாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4a48e48-e8a8-44fc-a5c6-e2a0c92a8f34/26-6a555e961c603.webp' /></p><p>
</p><p style="text-align: justify; ">


 கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட சட்டவிரோதத் துப்பாக்கியை மீட்டெடுத்துள்ள அதிகாரிகள் சந்தேக நபரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (13) ஆஜர்படுத்த உள்ளதாக வனவிலங்குத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">


இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-13T21:54:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்கள் அற்ற தலைமுறை கொள்கை ; ஜனாதிபதியிடம் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/call-for-tobacco-free-generation-policy-1783977922"></link>
            <id>https://jvpnews.com/article/call-for-tobacco-free-generation-policy-1783977922</id>
            <summary type="text">2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி அல்லது அதற்குப் பின்னர் பிறந்த எவருக்கும் புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதைத் தடை செய்யும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி அல்லது அதற்குப் பின்னர் பிறந்த எவருக்கும் புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதைத் தடை செய்யும் 'புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்கள் அற்ற தலைமுறை' (Tobacco-Free Generation) கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் விசேட கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
</p><p style="text-align: justify;">
புகையிலை சார்ந்த உற்பத்திகள் உலகில் மிகவும் அழிவுகரமான பொருட்கள் என்றும், அதிலிருந்து இளம் தலைமுறையினரை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றும் மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1502eaf-fd10-4498-aa3b-63013e4401fd/26-6a5557c3e713a.webp' /></p><h2 style="text-align: justify; ">புகையிலை சார்ந்த உற்பத்தி&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify; ">
இலங்கையில் வருடாந்தம் சுமார் 20,000 பேர் புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்களின் பாவனையினால் உயிரிழப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
இந்தநிலையில் புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்களின் பாவனையினால் 2019-ஆம் ஆண்டில் மாத்திரம் 214 பில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify;">
எனவே, இந்த விடயத்தில் ஜனாதிபதி உடனடியாகக் கவனம் செலுத்தி, அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-13T21:25:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சுக்கு சுற்றுலா செல்லும் கனேடியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/canada-issues-travel-advisory-for-france-1783974509"></link>
            <id>https://ibctamil.com/article/canada-issues-travel-advisory-for-france-1783974509</id>
            <summary type="text">பிரான்சுக்கு சுற்றுலா செல்லும் கனேடியர்களுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதம், காட்டுத்தீ, திருட்டுகள் மற்றும் வானிலை தொடர்பில் இந...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சுக்கு சுற்றுலா செல்லும் கனேடியர்களுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
பயங்கரவாதம், காட்டுத்தீ, திருட்டுகள் மற்றும் வானிலை தொடர்பில் இந்த பயண எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த பிரான்ஸ் அரசு ட்ரோன் கட்டுப்பாடு, சுற்றுலாத் தலங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில் பாதுகாப்பை அதிகரிப்பது போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><h2>அதிக வெப்பம்&nbsp;</h2><p>இந்தநிலையில் அதிக வெப்பம் காரணமாக ஈபிள் கோபுரம் முன்கூட்டியே மூடப்படுவதுடன் காட்டுத்தீ அபாயத்தால் காடுகள் மற்றும் மரங்கள் அடர்ந்த பகுதிகளில் புகைபிடிக்கத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba4beb40-63eb-4064-b031-567b832aa0ee/26-6a555563bfbf9.webp' /></p><p>
பாரீஸ் போன்ற முக்கிய நகரங்களில் கவனத்தைத் திசைதிருப்பி திருடும் கும்பல்கள் நடமாடுவதால் சுற்றுலாப் பயணிகள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p>

எனவே கனேடியர்கள் பாஸ்போர்ட்டைப் பாதுகாப்பாக வைக்கவும் அதன் நகலை அறையில் வைக்கவும் மற்றும் அதிக ரொக்கப் பணத்தைக் கொண்டு செல்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T21:24:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாத் டப்பில் அமர்ந்து கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ஈஷா ரெப்பா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/eesha-rebba-bathtub-photos-1783981296"></link>
            <id>https://cineulagam.com/article/eesha-rebba-bathtub-photos-1783981296</id>
            <summary type="text">தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகையாக இருப்பவர் ஈஷா ரெப்பா. அவர் படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.

ஈஷா ரெப்பா தற்போது இன்ஸ்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகையாக இருப்பவர் ஈஷா ரெப்பா. அவர் படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.
</p><p>
ஈஷா ரெப்பா தற்போது இன்ஸ்டாவில் வெளியிட்டு வரும் கவர்ச்சி போட்டோக்களுக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
</p><p>
தற்போது அவர் பாத்டப்பில் அமர்ந்து ஹாட் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க.</p>]]></content>
            <updated>2026-07-13T21:23:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு ரஷ்யா அனுப்பி வைத்துள்ள மிக சக்திவாய்ந்த பாரிய விமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tu-214pu-doomsday-russia-massive-plane-iran-1783976305"></link>
            <id>https://tamilwin.com/article/tu-214pu-doomsday-russia-massive-plane-iran-1783976305</id>
            <summary type="text">ரஷ்யா, தனது மிக பாதுகாப்பான Tu-214PU எனப்படும் டூம்ஸ்டே விமானத்தை ஈரானுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&amp;nbsp;அமெரிக்கா - ஈரான் மோதல் மீண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா, தனது மிக பாதுகாப்பான Tu-214PU எனப்படும் டூம்ஸ்டே விமானத்தை ஈரானுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>அமெரிக்கா - ஈரான் மோதல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இந்த விமானம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>Tu-214PU, கடுமையான அச்சுறுத்தல்களிலும் செயல்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட, பாதுகாப்பான தொடர்பு மற்றும் Command-Control அமைப்புகளுடன் கூடிய வானில் பறக்கும் கட்டளை மையம் ஆகும்.</p><p></p><h2>அதி பாதுகாப்பான அமைப்புக்கள்..&nbsp;</h2><p>அமெரிக்கா சமீபத்தில் ஈரானின் ஏவுகணை தளங்கள், ட்ரோன் அமைப்புகள், விமான பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல இராணுவ இலக்குகளை தாக்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05ad9ea6-0ace-4849-9f99-05cd623ebc87/26-6a555478bdd96.webp' /></p><p>ரஷ்யாவின் டூம்ஸ்டே விமானம் தெஹ்ரானில் தரையிறங்கியது, இது ரஷ்யா மற்றும் ஈரான் இடையிலான உயர் மட்ட இராணுவ மற்றும் அரசியல் ஒத்துழைப்பை வெளிப்படுத்துகிறது.</p><p>Tu-214PU, Tu-214 பயணிகள் விமானத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவம் ஆகும். 1989இல் முதன்முதலாக பறந்த இந்த விமானம், பல்வேறு சிறப்பு பயன்பாடுகளுக்காக மாற்றப்பட்டுள்ளது. </p><p>அதில் மிகவும் நவீனமயானது இந்த Tu-214PU விமானம்.

இந்த நடவடிக்கை, மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் அபாயம் இருப்பதைக் காட்டுகிறது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-07-13T21:11:30+00:00</updated>
        </entry>
    </feed>
