<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-12T20:01:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெல்லுக்கு நிர்ணய விலை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-announcement-regarding-fixed-price-paddy-1783886209"></link>
            <id>https://jvpnews.com/article/important-announcement-regarding-fixed-price-paddy-1783886209</id>
            <summary type="text">நெல் சந்தைப்படுத்தல் சபையினால் விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை இன்று (13) திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெல் சந்தைப்படுத்தல் சபையினால் விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை இன்று (13) திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது.</p><p></p><p>

நாடளாவிய ரீதியில் 143 கொள்முதல் நிலையங்கள் ஊடாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51dc8181-b850-47c5-b347-e72edde9c58f/26-6a53f182a2fff.webp' /></p><p>அம்பாறை, உகன பிரதேசத்திலிருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ள இந்தச் செயற்திட்டத்தின் ஊடாக, விவசாயிகளிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட விலையில் நெல்லைக் கொள்வனவு செய்யத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
</p><p>
இதற்கமைய, ஒரு கிலோ நெல்லுக்காக அரசாங்கத்தினால் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
</p><p>
அதன்படி நாடு நெல் ஒரு கிலோகிராம் 120 ரூபாவுக்கும், சம்பா நெல் ஒரு கிலோகிராம் 130 ரூபாவுக்கும், கீரி சம்பா நெல் ஒரு கிலோகிராம் 140 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளன.
</p><p>
இதனிடையே, நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகளில் ஏற்கனவே பெருமளவிலான நெல் இருப்பு காணப்படுவதால், இந்தத் தடவை எதிர்பார்க்கப்படும் அறுவடையில் சுமார் 2 சதவீதமான நெல்லை மட்டுமே கொள்வனவு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T19:56:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வைத்தியசாலையைச் சிறைச்சாலையாக மாற்றுவது சமூகத்துக்குப் பெரும் பாதிப்பு - மருத்துவர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dr-chamal-warns-hospital-to-prison-plan-1783882002"></link>
            <id>https://tamilwin.com/article/dr-chamal-warns-hospital-to-prison-plan-1783882002</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, காலி
மஹமோதர வைத்தியசாலையைச் சிறைச்சாலையாக மாற்ற அதிகாரிகள் எடுத்துள்ள
தீர்மானத்தை ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, காலி
மஹமோதர வைத்தியசாலையைச் சிறைச்சாலையாக மாற்ற அதிகாரிகள் எடுத்துள்ள
தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான
மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அந்த அமைப்பின் தலைவரும்
விசேட மருத்துவ நிபுணருமான மருத்துவர் சமல் சஞ்சீவ, இந்த வைத்தியசாலையைச்
சிறைச்சாலையாக மாற்றுவது சமூகத்துக்கும் சூழலுக்கும் ஏற்புடையதல்ல என்று
சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>மஹமோதர வைத்தியசாலை</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>
</p><p>
மஹமோதர வைத்தியசாலையைச் சிறைச்சாலையாக மாற்றுவதற்குப் பதிலாக, அதனைச்
சுற்றுலாப் பயணிகளுக்கான பிரத்தியேக வைத்தியசாலையாகவோ அல்லது டெங்கு உள்ளிட்ட
தொற்றுநோய்களுக்கான விசேட சிகிச்சை மையமாகவோ மாற்றுவதே தற்போதைய சூழலுக்குப்
பொருத்தமானது.</p><p>தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாடளாவிய ரீதியில் அதிகரித்துள்ள
நிலையில், தென் மாகாணத்திலுள்ள போதனா வைத்தியசாலைகள் மற்றும் ஆரம்ப சுகாதார
நிலையங்களில் நோயாளர்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் பாரிய சிரமங்கள்
ஏற்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fea0be9-14b7-4c3d-8f9e-7c22f13341cd/26-6a53e2cae36c4.webp' /></p><p>இத்தகைய நெருக்கடியான நிலையில், ஒரு வைத்தியசாலையைச்
சிறைச்சாலையாக மாற்றுவது எதிர்காலத் தேவைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.</p><p> மேலும், இந்த வைத்தியசாலை பிரதான வீதிக்கு அருகிலும், கடற்கரைக்கு மிக
அண்மையிலும் அமைந்துள்ளமையால், இதனைச் சிறைச்சாலையாக மாற்றாமல், கல்விப்
பயிற்சி மையமாகவோ அல்லது சுற்றுலாத்துறை சார்ந்த வைத்தியசாலையாகவோ மாற்றுவது
சுற்றுச்சூழலுக்கும் சமூகத்துக்கும் அதிக நன்மைகளைத் தரும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T19:53:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக மாறி வரும் ஈரான்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-stronger-than-us-for-now-analyst-says-1783884560"></link>
            <id>https://ibctamil.com/article/iran-stronger-than-us-for-now-analyst-says-1783884560</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையின் பெரும்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதன் மூலம் அமெரிக்காவை விட ஈரான் தற்போதைக்கு வலுவான நிலையில் இருப்பதாக பாதுகாப்பு
ஆய்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையின் பெரும்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதன் மூலம் அமெரிக்காவை விட ஈரான் தற்போதைக்கு வலுவான நிலையில் இருப்பதாக பாதுகாப்பு
ஆய்வாளர் வொல்ஃப்காங் புஸ்ஸாய் தெரிவித்துள்ளார்.</p><p>

சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தங்களுக்குத்தான் தற்போது
சாதகமான சூழல் இருப்பதாக ஈரான் கருதுகிறது.</p><p>
</p><p></p><h2>தொழில்நுட்ப நிலை</h2><p>இராணுவ ரீதியாகப் பார்த்தால் தற்போதைய நிலையில் அவர்கள் சிறந்த தொழில்நுட்ப
நிலையில் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.
</p><p>
இருப்பினும் நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது அமெரிக்காவிடம் பல
வழிகள் இருப்பதால் அதுவே வலுவான மூலோபாய நிலையில் இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca7d9bd6-861d-4276-ba76-4b41302876c9/26-6a53ef1b41b19.webp' /></p><p>

மேலும், அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு சர்வதேச அளவில்
செல்வாக்குமிக்க நாடுகள் தலையிட வேண்டியது அவசியம்.</p><p>

இது நிச்சயமாக மிகவும் கடினமான ஒரு காரியம்.
</p><p>
ஈரானை நல்வழிப்படுத்த வெளியில்
இருந்து ஒரு பரந்த அளவிலான அணுகுமுறை தேவைப்படுகிறது.</p><p>

இதில் அரபு வளைகுடா நாடுகள் மட்டுமல்லாமல் குறிப்பாக ஈரானின் மிகப்பெரிய
பொருளாதார வாடிக்கையாளர்களாக இருக்கும் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள்
தலையிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T19:46:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலநிலை மாற்றம் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது ; சஜித் பிரேமதாச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/climate-change-is-related-national-security-sajith-1783885383"></link>
            <id>https://jvpnews.com/article/climate-change-is-related-national-security-sajith-1783885383</id>
            <summary type="text">காலநிலை மற்றும் வானிலை மாற்றங்கள் குறித்து கவனம் செலுத்துவது மக்களின் நலன் கருதிய கடமையாகும். இது பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மட்டுமன்றி, உணவு மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலநிலை மற்றும் வானிலை மாற்றங்கள் குறித்து கவனம் செலுத்துவது மக்களின் நலன் கருதிய கடமையாகும்.</p><p> </p><p></p><p>இது பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மட்டுமன்றி, உணவு மற்றும் நீர் பாதுகாப்பிற்கும் மிக அவசியமான ஒன்றாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.</p><p>நாடாளுமன்ற காலநிலை மாற்றங்கள் தொடர்பான பேரவையை விளித்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1c0ff6a-f5ce-400a-9fe3-ed3c26d688f9/26-6a53ee48cd070.webp' /></p><p>இந்த பேரவையின் இணைத் தலைவர்களாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பேராசிரியர் அபேவிக்ரம ஆகியோர் செயற்படுகின்றனர்.
</p><p>
இது தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விடயம் என்பதால், முன்கூட்டியே திட்டமிட்ட கட்டுப்பாடுகளை நோக்கிச் செல்ல பல்வேறு தரப்பினருடன் பொதுவான இணக்கப்பாட்டை எட்ட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.</p><p>நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும் ஒவ்வொரு மாதமும் இரண்டு வாரங்களுக்குள், இந்த பேரவை ஒரு நாள் கூட வேண்டும். </p><p>இது ஒரு தனிநபரின் பணியல்ல. காலநிலை ஆய்வாளர்கள், அறிஞர்கள் மற்றும் சுயாதீன ஆலோசனைக் குழுக்கள் எனப் பலதரப்பட்டோர் இதில் இணைவதால், கட்சி அரசியல் பேதமின்றி இந்த பேரவை செயற்படுகிறது என்று அவர் கூறினார்.
</p><p>


காலநிலை மாற்றத்தினால் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மேலும் கலந்துரையாடப்பட வேண்டும்.</p><p></p><p>

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றங்கள் குறித்து கட்சி பேதமின்றி, விஞ்ஞான ரீதியான தரவுகள் மற்றும் தகவல்களை மையமாகக் கொண்டு, பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்னரே அதற்கேற்ப தயாராக இருக்கும் ஒரு நாட்டை உருவாக்குவதே இந்த பேரவையின் முக்கிய நோக்கமாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
</p><p>
எல் நினோ (El Niño) மற்றும் லா நினா (La Niña) காலநிலை மாற்றங்கள் குறித்தும், அவை அடுத்தடுத்த பருவ காலங்களில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. எமக்கு அறிமுகமில்லாத காலநிலை மாற்றங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
</p><p>
இந்த நிகழ்வில் பேராசிரியர் சம்பத் செனவிரத்ன, பேராசிரியர் புத்தி மாரம்பே, பேராசிரியர் இனோகா குடவிதாரண, கலாநிதி அண்ட்ரூ கீட்டில், ருக்ஷான் ஜயவர்தன, அஞ்சலி வாட்சன், துஷ்யந்த சில்வா உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் பலர் கலந்துகொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T19:43:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்லாந்து மதுபான விடுதி ஒன்றில் கோர சம்பவம்... குறைந்தது 27 பேர் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/thai-bar-blaze-27-killed-1783885330"></link>
            <id>https://news.lankasri.com/article/thai-bar-blaze-27-killed-1783885330</id>
            <summary type="text">தாய்லாந்தில் உள்ள ஒரு மதுக்கூடத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சிக்கி 27 பேர்கள் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.காயங்களுடன் மீட்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்தில் உள்ள ஒரு மதுக்கூடத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சிக்கி 27 பேர்கள் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>காயங்களுடன் மீட்கப்பட்டு</h2><p>
கழிவறைகளில் சிக்கிக்கொண்ட பலரே இவ்வாறு மரணமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>உள்ளூர் நேரப்படி இரவு சுமார் 11:57 மணிக்கு, பாங்காக்கின் சத்துசாக் (Chatuchak) மாவட்டத்தில் உள்ள பிரபலமான பொழுதுபோக்கு இடமான Rong Beer Na Lat Phrao-க்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். </p><p>அவசரகாலக் குழுவினர் அங்கு வந்து சேர்ந்தபோது, ​​கட்டிடத்திற்குள் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதைக் கண்டனர். தொடக்கத்தில் ஒருவர் தீக்காயங்களுடன் காணப்பட்டார், ஆனால் பலரும் உள்ளே சிக்கியிருப்பதை அதிகாரிகள் விரைவில் உணர்ந்தனர். </p><p>பீதியடைந்த பலர் பாதுகாப்பைத் தேடி அந்த இடத்திலிருந்த கழிவறைகளை நோக்கி ஓடியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முதற்கட்ட விசாரணையில் 27 பேர் மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது – இவர்களில் பெரும்பாலானோர் கழிவறைகளில் உயிரிழந்துள்ளனர். </p><p>மேலும் பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ள காணொளி ஒன்றில், கட்டிடத்தின் நுழைவாயிலிலிருந்து அடர்த்தியான புகை மூட்டம் வெளியேறும்போது, ​​திறந்தவெளி மதுக்கூடத்தைச் சுற்றி ஒரு குழுவினர் நின்றுகொண்டிருப்பதைக் காண முடிகிறது. </p><p>சில நொடிகளில், கதவு வழியாகக் கொழுந்துவிட்டு எரியும் தீப்பிழம்புகள் வெடித்துக் கிளம்பின; இதனால் அங்கிருந்தவர்கள் அச்சத்தில் சிதறி ஓடினர். இந்த நிலையில், தகவல் அறிந்து விரைந்து வந்துள்ள பஹோல்யோதின், ஃபயா தாய் மற்றும் ஹுவாய் க்வாங் ஆகிய தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள், மூன்று நீர் குழாய்களைக் கொண்டு அந்தப் பெரும் தீயை அணைக்கப் போராடியுள்ளனர்.</p><h2>தீ விபத்துக்கான காரணம்</h2><p> </p><p>தீயைக் கட்டுக்குள் கொண்டுவர சுமார் 35 நிமிடங்கள் ஆனது. இதனையடுத்து, மீட்புக் குழுக்கள் தற்போது உயிர் பிழைத்தவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் தீவிர முயற்சியைத் தொடங்கியுள்ளன. </p><p>அதிகாரிகள் தற்போது தீ விபத்துக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர். தாய்லாந்து கடந்த காலங்களில் இது போன்ற துயரச் சம்பவங்களைக் கண்டுள்ளது. </p><p>2022-ஆம் ஆண்டில், நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு இசை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் மரணமடைந்தனர். அதற்கும் ஒரு தசாப்தத்திற்கு முன்னதாக, தாய்லாந்தின் தலைநகரில் உள்ள 'சாண்டிகா' (Santika) இரவு விடுதியில் 2009-ஆம் ஆண்டு ஜனவரி 1-அன்று நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தீ விபத்தில் 66 பேர் மரணமடைந்தனர்; 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T19:40:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவை உலுக்கிய பாவி சூறாவளி: 28 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/typhoon-bavi-over-2-8m-evacuated-in-china-48-1783880844"></link>
            <id>https://tamilwin.com/article/typhoon-bavi-over-2-8m-evacuated-in-china-48-1783880844</id>
            <summary type="text">இந்த ஆண்டில் சீனாவைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த இயற்கைச் சீற்றமான &#039;பாவி&#039;
சூறாவளி, அந்த நாட்டின் கிழக்குக் கடலோரப் பகுதிகளைக் கடுமையாகச்
சூறையாடியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டில் சீனாவைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த இயற்கைச் சீற்றமான 'பாவி'
சூறாவளி, அந்த நாட்டின் கிழக்குக் கடலோரப் பகுதிகளைக் கடுமையாகச்
சூறையாடியுள்ளது.
</p><p>
சனிக்கிழமை நள்ளிரவில் ஜெஜியாங் மாகாணத்தின் யுஹுவான் மற்றும் வென்சூ
நகரங்களுக்கு இடையே இந்த சூறாவளி கரையைக் கடந்தது.</p><p></p><h2>பாவி சூறாவளி</h2><p>

இதன் காரணமாகப் பலத்த காற்றும், பெருமழையும் கொட்டித் தீர்த்ததால்,
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனா முழுவதும் 28 இலட்சத்திற்கும் அதிகமான
மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
</p><p>
இதில் தொழில்நுட்ப மையமாகத் திகழும் ஜெஜியாங் மாகாணத்தில் இருந்து மட்டும் 22
இலட்சம் மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abf68831-ef34-4462-95a2-9aa5e92f9960/26-6a53de61cfda5.webp' /></p><p>
</p><p>
சூறாவளி கரையைக் கடந்ததைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை அது ஓரளவுக்கு
வலுவிழந்த போதிலும், பிரான்ஸ் நாட்டின் பரப்பளவைக் கொண்ட இந்த மாபெரும் புயல்
சின்னம் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு கிழக்கு மற்றும் வடக்கு சீனாவில்
மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
</p><p>
புயலின் தாக்கத்தால் வென்சூ நகரின் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு
சாய்ந்துள்ளன, மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், குடியிருப்புப்
பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.</p><p></p><h2>சீனாவின் போக்குவரத்து</h2><p>
</p><p>
அதிர்ஷ்டவசமாக சீனாவில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. எனினும்,
அண்டை தீவான தாய்வானைக் கடந்தபோது அங்கு பலத்த காற்றினால் 134 பேர்
காயமடைந்துள்ளனர்.</p><p>

இந்த இயற்கைச் சீற்றத்தால் சீனாவின் போக்குவரத்து நெட்வொர்க் கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ளது.

ஷங்காய் மற்றும் ஹாங்சோ நகரங்களில் 2,300க்கும் மேற்பட்ட தொடருந்து சேவைகளும்,
சுமார் 1,000க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளும்
இரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4aadd37f-49b2-41d7-8c2a-c508d2255f13/26-6a53de612bf8c.webp' /></p><p>
</p><p>
எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக இந்த ஆண்டு சீனா அதிகளவிலான தீவிர வானிலைச்
சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
</p><p>
தற்போது அன்ஹுய் மாகாணத்தை நோக்கி நகர்ந்துள்ள புயல் காரணமாக, ஏற்கனவே
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜிலின், லியோனிங், ஹெபெய் மற்றும் ஷான்டாங்
மாகாணங்களுக்குப் புதிய வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T19:39:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் பிரதமரை மாற்ற ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/zelensky-decides-to-replace-ukraine-pm-1783879670"></link>
            <id>https://tamilwin.com/article/zelensky-decides-to-replace-ukraine-pm-1783879670</id>
            <summary type="text">உக்ரைன் பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோவை பதவியிலிருந்து மாற்றிவிட்டு, அவருக்குப் பதிலாக புதிய ஒருவரை நியமிக்க உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி முடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோவை பதவியிலிருந்து மாற்றிவிட்டு, அவருக்குப் பதிலாக புதிய ஒருவரை நியமிக்க உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி முடிவு செய்துள்ளார்.</p><p>

நாட்டின் "புதுப்பிக்கப்பட்ட அரசியல் உத்தியை" செயல்படுத்துவதற்காக இந்த அமைச்சரவை மாற்றம் அவசியம் என்று அவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>அமெரிக்காவுடனான உறவு
</h2><p>
இதுகுறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, "உக்ரைன் குழுவில் பிரதமராக யூலியா ஆற்றிய தெளிவான, நிலையான மற்றும் பயனுள்ள பணிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba2db35e-f8df-404e-ac2c-90a12bf18a8b/26-6a53da13bda92.webp' /></p><p>உக்ரைனின் மிக முக்கிய கூட்டாளி நாடான அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்தும் ஒரு புதிய மற்றும் முக்கியமான பொறுப்பை அவருக்கு வழங்க முன்வந்துள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
2025 ஜூலை மாதம் பிரதமராகப் பொறுப்பேற்ற ஸ்விரிடென்கோ, அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதுவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் யாரோஸ்லாவ் ஜெலெஸ்னியாக் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>

உக்ரைன் பிரதமர் பதவி விலகல்</h2><p>

உக்ரைன் சட்டப்படி பிரதமர் பதவி விலகினால் ஒட்டுமொத்த அமைச்சரவையும் கலைக்கப்பட வேண்டும் என்பதால், உக்ரைன் அரசில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd4da504-f755-4f1d-bdb4-b9fed750fbd8/26-6a53da146f564.webp' /></p><p>புதிய பிரதமருக்கான பந்தயத்தில் தற்போதைய பாதுகாப்பு அமைச்சர் மைக்கைலோ ஃபெடோரோவ், எரிசக்தி அமைச்சர் டெனிஸ் ஷ்மிஹால் மற்றும் 'நாஃப்டோகாஸ்' (Naftogaz) எரிசக்தி நிறுவனத்தின் தலைவர் செர்ஹி கொரெட்ஸ்கி ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
</p><p>
பிரதமருடன் சேர்த்து உக்ரைனின் சட்ட நடைமுறையாக்க முகமைகளின் தலைவர்களும் மாற்றப்பட உள்ளதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T19:38:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம்: நிதி அமைச்சு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2027-in-parliament-on-november-ministry-of-finance-1783872595"></link>
            <id>https://tamilwin.com/article/2027-in-parliament-on-november-ministry-of-finance-1783872595</id>
            <summary type="text">2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை எதிர்வரும் நவம்பர் 12 ஆம்
திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு
அறிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை எதிர்வரும் நவம்பர் 12 ஆம்
திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு
அறிவித்துள்ளது. இது தொடர்பான கால அட்டவணையை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது.</p><p> அதன் பிரகாரம்,
ஒவ்வொரு அமைச்சுக்குமான முன்மொழியப்பட்ட செலவின ஒதுக்கீடுகளைக் கொண்ட
சட்டமூலத்தின் வரைவு, எதிர்வரும் செப்டெம்பர் 14 ஆம் திகதி அமைச்சரவையின்
அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பிக்கப்படவுள்ளது.</p><p></p><h2>முக்கிய திகதிகள்&nbsp;&nbsp;</h2><p>செப்டெம்பர் 18: ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அரச வர்த்தமானியில் வெளியிடப்படும், ஒக்டோபர் 7: நாடாளுமன்றத்தில் முதலாம் வாசிப்பு இடம்பெறும், நவம்பர் 12: நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பு சமர்ப்பிக்கப்படும்,&nbsp; நவம்பர் 13 முதல் 20 வரை: வரவு - செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு
விவாதம் நடைபெறும்,&nbsp; நவம்பர் 21 முதல் டிசம்பர் 14 வரை: குழு நிலை விவாதங்கள் இடம்பெறும்.</p><p> நாட்டின் எதிர்வரும் ஆண்டுக்கான நிதித் திட்டமிடல் மற்றும் பொருளாதாரக்
கொள்கைகளை உள்ளடக்கிய இந்த வரவு - செலவுத் திட்டத்தின் மீது அரசியல் மற்றும்
பொதுத் தளத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3379a624-e06e-4be6-82d4-5d3d80e37fa3/26-6a53bcfac2dba.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T19:36:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனுக்கு 50,000 தாக்குதல் ட்ரோன்கள்! ஜெர்மனியின் பிரம்மாண்ட இராணுவ ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/germany-funds-50-000-drones-for-ukraine-1783872031"></link>
            <id>https://ibctamil.com/article/germany-funds-50-000-drones-for-ukraine-1783872031</id>
            <summary type="text">உக்ரைனுக்கு 50,000 தாக்குதல் ட்ரோன்களை வழங்குவதற்காக ஜெர்மனி நிதியுதவி
அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கத்திய நாடு ஒன்று உக்ரைனுக்காக ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனுக்கு 50,000 தாக்குதல் ட்ரோன்களை வழங்குவதற்காக ஜெர்மனி நிதியுதவி
அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

மேற்கத்திய நாடு ஒன்று உக்ரைனுக்காக மேற்கொண்ட மிகப்பெரிய ட்ரோன்
கொள்முதல்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.</p><p>

இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 90 மில்லியன் யூரோக்கள் (103 மில்லியன்
டொலர்) ஆகும்.</p><p></p><h2>முன்னணி உற்பத்தியாளர்</h2><p> 

இதில் பயன்படுத்தப்படும் ஷ்ரைக் வகை ஃபர்ஸ்ட்-பர்சன்-வியூ (FPV) ட்ரோன்கள் உக்ரைனின் முன்னணி உற்பத்தியாளரான ஸ்கைஃபால் நிறுவனத்தால்
தயாரிக்கப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cdff8dc-8671-4e0e-8c3f-9bfa09fcb3be/26-6a53c5d3ca8df.webp' /></p><p>

இந்த ட்ரோன்களில் அமெரிக்காவின் ஆட்டேரியன் பாதுகாப்பு தொழில்நுட்ப
நிறுவனத்தின் மென்பொருள் பொருத்தப்பட்டுள்ளது.
</p><p>
இது பறக்கும் இறுதி கட்டத்தில் நகரும் இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக்
கண்காணித்துத் தாக்கும் திறன் கொண்டது.</p><p>
</p><p></p><h2>நிர்வாக அதிகாரி&nbsp;</h2><p>ஆட்டேரியன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லோரென்ஸ் மேயர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், இந்த ஒப்பந்தத்தின்படி சில ட்ரோன்கள் ஏற்கனவே உக்ரைன் அரசாங்கத்திடம்
ஒப்படைக்கப்பட்டுவிட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51372ea7-789d-4981-a0dd-7be3a5b89dc2/26-6a53c5d318dcd.webp' /></p><p> 

மீதமுள்ளவை இந்த ஆண்டிற்குள் அனுப்பி வைக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.</p><p>இந்த ஒப்பந்தத்தில் ஜெர்மனியின் பங்களிப்பை ஸ்கைஃபால் நிறுவனம் உறுதிப்படுத்திய போதிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக கூடுதல் விவரங்களை வெளியிட மறுத்துவிட்டது.&nbsp;&nbsp;</p><p>
</p><p></p><h2>பாதுகாப்பு காரணங்கள்</h2><p>இதேபோல் ஜெர்மனி மற்றும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகங்களும் இது குறித்து
கருத்து தெரிவிக்கவில்லை.</p><p>

இதுமட்டுமின்றி பல்வேறு மேற்கத்திய நாடுகளின் நிதியுதவியுடன் இந்த ஆண்டு
உக்ரைனுக்கு மொத்தம் 1,00,000 ட்ரோன்களை வழங்க ஆட்டேரியன் நிறுவனம்
திட்டமிட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e666b64-12b7-439b-8a1f-ee1d84c1d7ce/26-6a53c5d4822f9.webp' /></p><p>இதில் அமெரிக்க பென்டகனின் 50 மில்லியன் டொலர் ஒப்பந்தமும் அடங்கும்.</p><p>
மேலும், பிரித்தானியாவும் இந்த ஆண்டு உக்ரைனுக்கு 1,50,000 ட்ரோன்களை
வழங்கவுள்ளதாக கடந்த மாதம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T19:14:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் பிரதமரை பதவி நீக்க ஸெலென்ஸ்கி முடிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/zelenskyy-to-replace-ukraine-prime-minister-1783876382"></link>
            <id>https://ibctamil.com/article/zelenskyy-to-replace-ukraine-prime-minister-1783876382</id>
            <summary type="text">உக்ரைன் பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோவை பதவியிலிருந்து மாற்றிவிட்டு அவருக்குப் பதிலாக புதிய ஒருவரை நியமிக்க உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர்
ஸெலென்ஸ்கி முடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோவை பதவியிலிருந்து மாற்றிவிட்டு அவருக்குப் பதிலாக புதிய ஒருவரை நியமிக்க உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர்
ஸெலென்ஸ்கி முடிவு செய்துள்ளார்.
</p><p>
நாட்டின் புதுப்பிக்கப்பட்ட அரசியல் உத்தியை செயல்படுத்துவதற்காக இந்த
அமைச்சரவை மாற்றம் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதுகுறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை அவர் இட்டுள்ளார்.
</p><p></p><h2>தெளிவான நிலை</h2><p>
குறித்த பதிவில் மேலும் தெரிவித்த அவர், குழுவில் பிரதமராக யூலியா ஆற்றிய தெளிவான நிலையான மற்றும் பயனுள்ள பணிகளுக்கு
எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46bd01cf-24d7-484f-aa21-5de2043d59ec/26-6a53d5cb96f6c.webp' /></p><p>
</p><p>
உக்ரைனின் மிக முக்கிய கூட்டாளி நாடான அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்தும் ஒரு
புதிய மற்றும் முக்கியமான பொறுப்பை அவருக்கு வழங்க முன்வந்துள்ளேன்" என
குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
2025 ஜூலை மாதம் பிரதமராகப் பொறுப்பேற்ற ஸ்விரிடென்கோ, அமெரிக்காவுக்கான
உக்ரைன் தூதுவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற
உறுப்பினர் யாரோஸ்லாவ் ஜெலெஸ்னியாக் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>பெரிய அளவு</h2><p>உக்ரைன் சட்டப்படி பிரதமர் பதவி விலகினால் ஒட்டுமொத்த அமைச்சரவையும்
கலைக்கப்பட வேண்டும் என்பதால் உக்ரைன் அரசில் பெரிய அளவிலான மாற்றங்கள்
எதிர்பார்க்கப்படுகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e38e2a8b-bab3-46c3-a4e8-15bec1725ca1/26-6a53d5cadb3b5.webp' /></p><p>புதிய பிரதமருக்கான பந்தயத்தில் தற்போதைய பாதுகாப்பு அமைச்சர் மைக்கைலோ
ஃபெடோரோவ், எரிசக்தி அமைச்சர் டெனிஸ் ஷ்மிஹால் மற்றும் நாஃப்டோகாஸ் (Naftogaz) எரிசக்தி நிறுவனத்தின் தலைவர் செர்ஹி கொரெட்ஸ்கி ஆகியோரின்
பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

பிரதமருடன் சேர்த்து உக்ரைனின் சட்ட அமுலாக்க முகமைகளின் தலைவர்களும்
மாற்றப்பட உள்ளதாக ஸெலென்ஸ்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T19:14:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[குவைத் மீது சரமாரி தாக்குதல் நடத்திய ஈரான்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-irgc-launches-drone-attacks-on-kuwait-1783879971"></link>
            <id>https://ibctamil.com/article/iran-irgc-launches-drone-attacks-on-kuwait-1783879971</id>
            <summary type="text">ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினர் (IRGC) குவைத் மீது ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினர் (IRGC) குவைத் மீது ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>அமெரிக்காவின் ஹைமார்ஸ் (HIMARS) ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் அவற்றின் வெடிமருந்து களஞ்சியங்களே இந்தத் தாக்குதலின் இலக்குகளாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 ஈரானின் ஃபார்ஸ் (Fars) செய்தி நிறுவனம் இதனை குறிப்பிட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>குவைத்தின் பாதுகாப்பு&nbsp;</h2><p>சில மணிநேரங்களுக்கு முன்னர் குவைத்தின் பாதுகாப்பு ஊடகப் பேச்சாளர் இது குறித்த அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aec37aab-6d7e-4811-92e4-5efe8026189f/26-6a53e71282da3.webp' /></p><p>அதில் நடத்தப்பட்ட ஒரு குற்றவியல் தாக்குதல் காரணமாக மூன்று எல்லை மையங்களும் கடல் கடந்த எண்ணெய் அகழ்வாராய்ச்சி தளம் (Offshore oil drilling platform) ஒன்றும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும் இதில் தொழிலாளி ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T19:13:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் அதிகூடிய வெப்பநிலை பதிவு ; பொத்துவிலில் 38°C வெப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/highest-temperature-recorded-in-the-country-38-c-1783882877"></link>
            <id>https://jvpnews.com/article/highest-temperature-recorded-in-the-country-38-c-1783882877</id>
            <summary type="text">இலங்கையில் இன்று (12) பதிவான அதிகபட்ச வெப்பநிலை அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பகுதியில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இன்று (12) பதிவான அதிகபட்ச வெப்பநிலை அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பகுதியில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>அதன்படி, பொத்துவிலில் 38.0 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. </p><p>இந்த வெப்பநிலை, அப்பகுதியில் அமைந்துள்ள வளிமண்டலவியல் திணைக்களத்தின் தானியங்கி வானிலை கண்காணிப்பு நிலையத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6bf6390-d40d-4429-b742-1b7ec475bc04/26-6a53e47ea00b0.webp' /></p><p>இதேவேளை, இன்றைய தினத்தில் நாட்டின் இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலையாக பொலன்னறுவை பகுதியில் 37.2 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.</p><p>

நாட்டின் பல்வேறு பிராந்தியங்களில் அமைந்துள்ள வானிலை கண்காணிப்பு நிலையங்களில் இன்று மதிய வேளையில் பதிவான உச்ச வெப்பநிலைகளின் அடிப்படையில் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p>

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அதிக வெப்பம் நிலவும் நேரங்களில் தேவையற்ற வெளிப்புறச் செயல்பாடுகளைத் தவிர்ப்பதுடன், போதுமான அளவு தண்ணீர் அருந்தி உடல்நலத்தைப் பேணுமாறும் சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T19:01:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை கூரையில் கதறிய இளம்பெண்ணின் அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-woman-screamed-roof-negombo-prison-1783881636"></link>
            <id>https://tamilwin.com/article/young-woman-screamed-roof-negombo-prison-1783881636</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரை மீது கைதிகள் அண்மையில் நடத்திய போராட்டத்தின் போது இளம் பெண்ணொருவர் தொடர்பில் அதிகம் பேசப்பட்டது.&amp;nbsp;போராட்டத்தின் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரை மீது கைதிகள் அண்மையில் நடத்திய போராட்டத்தின் போது இளம் பெண்ணொருவர் தொடர்பில் அதிகம் பேசப்பட்டது.&nbsp;</p><p>போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் இருந்த இளம் பெண் தொடர்பான பல கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.&nbsp;</p><p>குறித்த இளம் பெண், பதுளை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p> சிறுவயதிலிருந்தே கல்வியில் சிறந்து விளங்கிய அவர், ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த சித்தியைப் பெற்று கொழும்பிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் இணைந்துள்ளார்.&nbsp;</p><p>இருப்பினும் அவர் சிறைக்கு சென்றதற்கான காரணம் தொடர்பில் பலர் சில பின்னணிகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.&nbsp;</p><p>இவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_F3wv6u1dlQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T19:00:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பட்டப்பகலில் இளைஞர் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை ; தலைமறைவான கும்பலை தேடும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-hacked-death-mysterious-gang-broad-daylight-1783881261"></link>
            <id>https://jvpnews.com/article/youth-hacked-death-mysterious-gang-broad-daylight-1783881261</id>
            <summary type="text">இந்தியாவில் திருநெல்வேலி நகரின் பாறையடி பகுதியில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் திருநெல்வேலி நகரின் பாறையடி பகுதியில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p>

பாறையடி பகுதியைச் சேர்ந்த ஆவுடையப்பன் (32) என்பவர் இன்று தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் கொண்ட மர்மக் கும்பல் அவரை திடீரென வழிமறித்ததாகக் கூறப்படுகிறது.</p><p>

அதனைத் தொடர்ந்து, தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள்களை எடுத்துக் கொண்டு ஆவுடையப்பனை சரமாரியாக வெட்டித் தாக்கியுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d63651ce-7426-4564-8c09-ca4348e254c2/26-6a53de2ecd86c.webp' /></p><p>இந்த தாக்குதலில் அவரது உடல் முழுவதும் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
</p><p>
கொலைச் சம்பவத்தை அடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், நெல்லை டவுன் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணையை ஆரம்பித்தனர். </p><p>முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
இதனையடுத்து, ஆவுடையப்பனின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்ப காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். </p><p>எனினும், கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய அவரது குடும்பத்தினரும் உறவினர்களும், உடலை எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் காவல்துறையினரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
இதனால் சம்பவ இடத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியதுடன், பாதுகாப்பு கருதி கூடுதல் காவல்துறையினரும் குவிக்கப்பட்டனர்.
</p><p>
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T18:34:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டாரின் முன்னாள் அமீரின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர இரங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-sent-message-condolences-passing-qatar-1783879954"></link>
            <id>https://tamilwin.com/article/president-sent-message-condolences-passing-qatar-1783879954</id>
            <summary type="text">கட்டாரின் முன்னாள் அமீரான ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.இரங்கல் செய்தி&amp;n...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டாரின் முன்னாள் அமீரான ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.</p><h2>இரங்கல் செய்தி&nbsp;&nbsp;</h2><p>

தனது 'X' தளம் மூலம் வெளியிட்ட ஒரு செய்தியில், மறைந்த ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி, கட்டாரிற்கு ஆற்றிய தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையையும் சேவையையும் மரியாதையுடன் நினைவு கூர்வதாக அவர் கூறினார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Deeply saddened by the passing of His Highness Sheikh Hamad bin Khalifa Al Thani, Father Emir of Qatar.<br><br>His visionary leadership and service to Qatar will be remembered.<br><br>On behalf of the Government and people of Sri Lanka, I extend heartfelt condolences to HH Sheikh Tamim bin…</p>&mdash; Anura Kumara Dissanayake (@anuradisanayake) <a href="https://x.com/anuradisanayake/status/2076331689014710763?ref_src=twsrc%5Etfw">July 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
இலங்கை அரசாங்கம் மற்றும் ஒட்டுமொத்த இலங்கை மக்கள் சார்பாக, ஜனாதிபதி, கட்டாரின் தற்போதைய அமீர், ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானிக்கும், அரச குடும்ப உறுப்பினர்களுக்கும் மற்றும் கட்டார் மக்களுக்கும் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
கட்டாரில் மாற்றத்தை ஏற்படுத்திய ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி இன்று (12) காலமானார்.
</p><p>
அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கத்தார் நாட்டின் மிக உயர்ந்த அரச நிறுவனமான எமிரி திவான், நாட்டில் நான்கு நாட்கள் தேசிய துக்க காலத்தை அறிவித்துள்ளது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T18:27:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[குரு அஸ்தமனத்தால் யாருக்கு யோகம்? அதிர்ஷ்டம் பெறும் ராசிகளில் உங்க ராசியும் இருக்கா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/jupiter-combust-in-cancer-on-15-july-who-get-luck-1783872783"></link>
            <id>https://manithan.com/article/jupiter-combust-in-cancer-on-15-july-who-get-luck-1783872783</id>
            <summary type="text">ஜோதிடத்தில் தேவர்களின் குருவாகக் கருதப்படும் குரு பகவான் மிகவும் மங்களகரமான கிரகமாகப் போற்றப்படுகிறார். இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் தேவர்களின் குருவாகக் கருதப்படும் குரு பகவான் மிகவும் மங்களகரமான கிரகமாகப் போற்றப்படுகிறார். இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்கின்றார். ஆண்டிற்கு ஒருமுறை தனது ராசியை மாறுவார். </p><p>தற்போது தனது உச்ச ராசியான கடகத்தில் பயணித்து வருகிறார்.

இந்த நிலையில், ஜூலை 15ஆம் தேதி குரு பகவான் அஸ்தமனமாகிறார். அதாவது, சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் அவரது பலம் ஓரளவு குறையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dcdd762-812d-4b44-9c9d-612c98271b66/26-6a53c23c3b297.webp' /></p><p> </p><p>இருப்பினும், கடகம் குருவின் உச்ச ராசி என்பதால் முழுப் பலனும் குறையாது; அதனால் கிடைக்கும் நற்பலன்கள் மட்டும் சற்று தாமதமாக வெளிப்படும்.
</p><p>
குரு அஸ்தமனத்தின் தாக்கம் சில ராசிகளுக்கு சவாலாக இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் மற்றும் நல்ல பலன்களை அளிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.அப்படி குரு அஸ்தமனத்ததால் உச்சகட்ட சாதக பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">ரிஷபம்</span></h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d36c7d47-b7df-4e5b-8e95-343c2c67e301/26-6a53c23d0314b.webp' /></p><p>
ரிஷப ராசியின் 3-வது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகிறார். இதன் காரணமாக, நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த முக்கிய பணிகள் மீண்டும் தொடங்கி வெற்றிகரமாக நிறைவடையும்.</p><p> தொழில் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்படலாம். குறிப்பாக ஊடகம், கல்வி மற்றும் மார்கெட்டிங் துறைகளில் இருப்பவர்களுக்கு இந்த காலம் மிகவும் சாதகமாக அமையும்.</p><p>பேச்சுத் திறன் மற்றும் செல்வாக்கு அதிகரிக்கும். கடின உழைப்புக்கான அங்கீகாரமும் பலனும் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகளும் தேடி வரும்.</p><h2>கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb683edc-0ccb-49b8-9691-ca5a8c0fc20f/26-6a53c23da8f42.webp' /></p><h2>
</h2><p>கன்னி ராசியின் 11-வது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகிறார். இதனால் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.</p><p>நிதி நிலை கணிசமாக மேம்படும். செல்வாக்குமிக்க நபர்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும்.பணம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக தீரும்.</p><h2>
விருச்சிகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/956cc6eb-076a-43d5-9f87-f7155b117f0b/26-6a53c23e57a1e.webp' /></p><p>
விருச்சிக ராசியின் 9-வது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகிறார். இதனால் வாழ்க்கையில் முக்கியமான ஒரு முடிவை எடுக்கும் சூழல் உருவாகம்.பணவரவு திருப்திகரமாக இருக்கும்.</p><p>நீண்ட நாட்களாகவே தடைப்பட்டிருந்த விடயங்கள் குறைந்தம முயற்ச்சியிலேயே வெற்றிகரமாக முடிவடையும். புதிய வழிகளில் வருமானம் அதிகரிக்கும்.</p><h2>துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e551223-a7b6-4f99-8d89-c2409866a69a/26-6a53c23f05ffa.webp' /></p><p>துலாம் ராசியின் 10-வது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகிறார். இதனால் முன்னேற்றம் சற்று மெதுவாக இருந்தாலும், கடின உழைப்புக்கு பணியிடத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். </p><p>வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது ஏற்ற காலமாக இருக்கும். ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கும் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் உருவாகும்.பதவி உயர்வு மற்றும் வருமான அதிகரிப்பிற்கான சாத்தியங்களும் காணப்படும்.</p><h2>
மீனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95e7c90f-43d2-49f3-acac-e41363296533/26-6a53c23fa67db.webp' /></p><p></p><p>
மீன ராசியின் 5-வது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகிறார். இதனால் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் மனநிறைவும் அதிகரிக்கும். பணியிடத்தில் செயல்திறன் சிறப்பாக இருக்கும்.</p><p>புதுமண தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்க வாய்ப்புள்ளது. குருவின் அருளால் சரியான முடிவுகளை எடுக்கும் திறன் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள்.பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். மேலும், புதிய வருமான வாய்ப்புகளும் கிடைக்கக்கூடும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T18:25:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு பரவும் சூழல் : இலங்கையின் பிரதான சிறுவர் மருத்துவமனை மீது வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/lady-ridgeway-children-s-hospital-dengue-breeding-1783880601"></link>
            <id>https://ibctamil.com/article/lady-ridgeway-children-s-hospital-dengue-breeding-1783880601</id>
            <summary type="text">இலங்கையின் பிரதான சிறுவர் மருத்துவமனையான, கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் வளாகத்தில் பல இடங்களில் டெங்கு குடம்பிகள் கண்டறியப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பிரதான சிறுவர் மருத்துவமனையான, கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் வளாகத்தில் பல இடங்களில் டெங்கு குடம்பிகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் அந்த மருத்துவமனைக்கு எதிராக வழக்குத் தொடரத் தயாராகி வருகிறது.</p><p>சுகாதார அலுவலகத்தின் சுத்தமான இலங்கை கொசு ஒழிப்புத் திட்ட அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகள், மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை (10ஆம் திகதி) மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் போது இந்த இடங்களைக் கண்டறிந்தனர். </p><h2>பன்னிரண்டு இடங்களில் டெங்கு குடம்பிகள் கண்டறிவு</h2><p>குறிப்பாக, பன்னிரண்டு இடங்களில் டெங்கு குடம்பிகள் கண்டறியப்பட்டன.

மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்திலும், மருத்துவமனை வளாகத்திற்குள் உள்ள குப்பை அகற்றும் பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது, ​​டெங்கு குடம்பிகள் கண்டறியப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d427ce2-881d-463f-a026-bd594a0e0d66/26-6a53db9a8ac18.webp' /></p><p>
</p><p>


கடந்த சில நாட்களில் லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் சுமார் 50-75 டெங்கு பாதித்த குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சுமார் 1,200 குழந்தைகள் மருத்துவமனைக்குள் மற்ற நோய்களுக்காக உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
</p><h2>வழக்கு பதிவு செய்வதற்கான நடவடிக்கை</h2><p>இந்த மருத்துவமனை வளாகத்தில் இதற்கு முன்பும் டெங்கு குடம்பிகள் அடையாளம் காணப்பட்டு, வழக்கு பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை, மேற்கு மாகாணத்தில் மட்டும் முப்பத்தைந்தாயிரம் டெங்கு நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a95f8d24-e27d-4aed-98f4-fc6013a60398/26-6a53db9b39c56.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T18:23:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைக் கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கையில் புதிய மாற்றம்! வெளியான தகவல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-inmates-be-conducted-1783864171"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-inmates-be-conducted-1783864171</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ள கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளை காணொளி தொழில்நுட்பத்தின் (Video Conferencing) ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ள கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளை காணொளி தொழில்நுட்பத்தின் (Video Conferencing) ஊடாக முன்னெடுக்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.</p><p>

இதன்படி, நாளை (13) முதல் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டிய சம்பந்தப்பட்ட கைதிகள் காணொளி தொழில்நுட்பம் வழியாகவே விசாரணைகளில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>நீர்கொழும்பு சிறைக்கைதிகள்</h2><p>
</p><p>
அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த சில கைதிகள் பாதுகாப்பு காரணங்களால் நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.
</p><p>
இந்த நிலையில், மாற்றப்பட்ட கைதிகளை ஒவ்வொரு நீதிமன்ற அமர்விற்கும் பாதுகாப்புடன் அழைத்துச் செல்வதில் நடைமுறை மற்றும் போக்குவரத்து தொடர்பான சிக்கல்கள் இருப்பதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51b50b18-0d64-4485-954a-36d7a46b99f9/26-6a53a10e3b8f7.webp' /></p><p>
</p><p>
இதனை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகள் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளதாக ஏ.சி. கஜநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதனிடையே, நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்வதற்காக சிறைச்சாலைகள் திணைக்களம் மூவர் அடங்கிய விசேட குழுவொன்றை நியமித்துள்ளது.
</p><p>
அந்த குழு சேதங்களின் தன்மை மற்றும் அவற்றுக்கான மதிப்பீட்டு அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T18:14:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐக்கியமாகச் செயற்பட தமிழ்பேசும் மக்களின் ஆறு கட்சிகள் இணக்கம் - நாளை கொழும்பில் கூட்டாக அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/six-tamil-agree-work-together-colombo-tomorrow-1783877780"></link>
            <id>https://tamilwin.com/article/six-tamil-agree-work-together-colombo-tomorrow-1783877780</id>
            <summary type="text">இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் பிரதான ஆறு கட்சிகள் தமது மக்கள்
எதிர்நோக்கும் பொது விடயங்களில் இணைந்து செயற்படுவது சம்பந்தமான
இணக்கப்பாட்டுக்கு வந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் பிரதான ஆறு கட்சிகள் தமது மக்கள்
எதிர்நோக்கும் பொது விடயங்களில் இணைந்து செயற்படுவது சம்பந்தமான
இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றன. </p><p>அந்த இணக்கப்பாடு குறித்து அவை ஆறும்
சேர்ந்து கூட்டாக அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நாளை பிற்பகல்
1 மணிக்கு கொழும்பு - கொள்ளுப்பிட்டி ரேணுகா ஹோட்டலில் நடைபெறுகின்றது.</p><p>

இதில் அந்த ஆறு கட்சிகளினதும் தலைவர்களும் ஒரே மேசையிலிருந்து தங்கள் கூட்டுச்
செயற்பாட்டுக்கான இணக்கப்பாட்டையும் அது தொடர்பான திட்டங்களையும் நாளை
அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p></p><h2>கட்சிகளின் ஐக்கியம்&nbsp;&nbsp;</h2><p>
வடக்கு, கிழக்கு தமிழர்கள் தரப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும்
ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி, மலையகத் தமிழர்கள் தரப்பில் தமிழ்
முற்போக்குக் கூட்டணி மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், முஸ்லிம்கள்
தரப்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
ஆகியனவே ஒன்றுபட்டுச் செயற்பட இணங்கியிருக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7d9a019-a90e-45c3-b350-5a96790d595a/26-6a53d552a68ee.webp' /></p><p>
</p><p>
பிரதான எதிரணிக் கூட்டில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் தமிழ்பேசும் மக்களின்
கட்சிகளின் ஐக்கிய செயற்பாட்டுக்கு இணங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p>

இந்தக் கூட்டு அமைப்புக்கு பெயர் ஏதும் உண்டா என்று கேட்ட போது ''இப்போதைய நிலையில் இது ஒரு கூட்டு அமைப்பல்ல. ஒன்றுபட்டு விடயங்களை
எதிர்கொள்வதற்கான இணக்கப்பாடு மட்டுமே.</p><p> அதனால் அதற்கு விசேடமான பெயர்
ஒன்றுமில்லை'' என்று இந்த ஏற்பாட்டுக்குப் பின்னணியில் செயற்படும் கட்சித்
தலைவர் ஒருவர் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T17:56:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டாய உழைப்பில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்ய தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ban-import-goods-produced-through-labor-sri-lanka-1783878597"></link>
            <id>https://canadamirror.com/article/ban-import-goods-produced-through-labor-sri-lanka-1783878597</id>
            <summary type="text">கட்டாய உழைப்பைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்களை இலங்கைக்குள் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.நிதி, திட்டமிடல் மற்றும் பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டாய உழைப்பைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்களை இலங்கைக்குள் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.</p><p>நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
</p><p>
இந்த புதிய ஒழுங்குமுறை ஜூலை 10ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
</p><p>
இதன்படி, கட்டாய உழைப்பின் மூலம் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அகழ்ந்தெடுக்கப்பட்ட, தயாரிக்கப்பட்ட அல்லது உற்பத்தி செய்யப்பட்ட எந்தவொரு பொருளையும் இறக்குமதி செய்வது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81d1ce10-db37-4289-ad22-df3b380e7ea0/26-6a53d3c68b964.webp' /></p><p>சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தீர்மானங்களை கருத்தில் கொண்டு, இந்த ஒழுங்குமுறை எந்தெந்தப் பொருட்கள் அல்லது நாடுகளுக்குப் பொருந்தும் என்பதை அரசாங்கம் அவ்வப்போது தீர்மானிக்கும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் கட்டாய உழைப்பால் தயாரிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களை, இறக்குமதியாளர்கள் இலங்கைச் சுங்கத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
</p><p>
கட்டாய உழைப்பின் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதைத் தடுப்பதற்கான போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனக் கூறி, இலங்கை உள்ளிட்ட 60 நாடுகளின் மீது மேலதிக இறக்குமதி வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் முன்மொழிந்திருந்தார்.
</p><p>
இந்த முன்மொழிவின் கீழ், இலங்கை மீது 12.5 சதவீத மேலதிக இறக்குமதி வரி விதிக்கப்படலாம் எனக் கூறப்பட்டிருந்தது.
</p><p>
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, கட்டாய உழைப்பு தொடர்பான சட்டங்களை வலுப்படுத்தும் நோக்கில் இந்த தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-12T17:50:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜூன் மாத வெப்ப அலை... ஜேர்மனியில் நீரில் மூழ்கி பலியானோர் எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/heatwave-100-drowning-deaths-1783878493"></link>
            <id>https://news.lankasri.com/article/heatwave-100-drowning-deaths-1783878493</id>
            <summary type="text">ஜேர்மனியில் ஜூன் மாதம் நீரில் மூழ்கி கிட்டத்தட்ட 100 பேர்கள் மரணமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்; இவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள் என்றே தகவல் வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியில் ஜூன் மாதம் நீரில் மூழ்கி கிட்டத்தட்ட 100 பேர்கள் மரணமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்; இவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>இறப்பு எண்ணிக்கை</h2><p>
</p><p>மேற்கு ஐரோப்பாவில் நூற்றுக்கணக்கான கூடுதல் உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைந்த கடும் வெப்பநிலை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01a4dd46-595d-4f05-a927-7b7f2a8a04f4/26-6a53d57ec2263.webp' /></p><p> உத்தியோகப்பூர்வமாக வெளியாகியுள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில், ஜேர்மனியில் கடந்த ஜூன் மாதத்தில் சில பகுதிகளில் வெப்பநிலை 41.7 டிகிரி செல்சியஸ் (107.1 டிகிரி பாரன்ஹீட்) வரை உயர்ந்ததைத் தொடர்ந்து, நீர் நிலைகளை நாடியவர்களில் 99 பேர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளனர்; </p><p>இது கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் அந்நாட்டில் பதிவான மிக மோசமான இறப்பு எண்ணிக்கையாகும். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள் என்று அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது;</p><p></p><p> </p><p>வயது விவரம் அறியப்பட்டவர்களில் 40 பேர் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஆண்கள் என்றும் தெரிய வந்துள்ளது. </p><p>உலக சுகாதார அமைப்பி வெளியிட்டுள்ள தகவலின்படி, கோடைக்காலத்தின் கடும் வெப்பமான தொடக்கத்தின்போது ஐரோப்பா முழுவதும் 1,300-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர்.</p><h2>ஜூன் மாதத்தில்</h2><p> </p><p>ஐரோப்பியக் கண்டம் முழுவதும் நீரில் மூழ்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது; ஜூன் 19 முதல் பிரான்ஸில் மட்டும் 131 பேர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக அந்நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சர் மெரினா ஃபெராரி வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ee853c9-6350-4b87-9bb6-243532419559/26-6a53d57f7e937.webp' /></p><p>
</p><p>இதனிடையே, ஜேர்மனியின் முக்கிய பொது சுகாதார முகமை கடந்த வாரம் வெளியிட்ட தகவலின்படி, அந்நாட்டில் இந்த ஆண்டு குறைந்தது 5,120 பேர் வெப்பம் தொடர்பான காரணங்களால் மரணமடைந்துள்ளனர்; இவர்களில் பெரும்பாலானோர் ஜூன் மாதத்தில் இறந்தவர்கள் என்றே தெரிய வந்துள்ளது.</p><p> ராபர்ட் கோச் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், மரணமடைந்தவர்களில் சுமார் 4,270 பேர் 75 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் என்று கூறியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T17:46:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலிய கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட மர்மப் பொருட்கள் ; பொதுமக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/mysterious-objects-found-on-australian-beach-1783878049"></link>
            <id>https://canadamirror.com/article/mysterious-objects-found-on-australian-beach-1783878049</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்து கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்மமான உலோகப் பொருட்கள், விண்வெளி ஏவுகனைகளில் பயன்படுத்தப்படும் அழுத்தக் கலன்களாக (P...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்து கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்மமான உலோகப் பொருட்கள், விண்வெளி ஏவுகனைகளில் பயன்படுத்தப்படும் அழுத்தக் கலன்களாக (Pressure vessels) இருக்கலாம் என்று அவுஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் (ASA) தெரிவித்துள்ளது.
</p><p>
சுமார் ஒரு கூடைப்பந்தின் அளவை விட இரு மடங்கு பெரியதாக உள்ள இந்தக் கோளங்களை, பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் தொடவோ அல்லது நகர்த்தவோ வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02b351d8-b60c-44c4-9d88-95f75e45669c/26-6a53d1a3086cc.webp' /></p><p>இவை எந்த விண்கலத்திலிருந்து விழுந்தன என்பது குறித்து சர்வதேச அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
</p><p>
விண்வெளிக் குப்பைகள் பூமியில் விழுவது அரிதான நிகழ்வு என்றாலும், விண்வெளி ஆய்வுகள் அதிகரித்து வரும் சூழலில், இத்தகைய அவசிதங்களால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்க விண்வெளி நிறுவனங்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.</p><p>

இதற்கிடையில், மீட்கப்பட்ட கோளங்கள் தற்போது பாதுகாப்பானவை என அவசரகால மீட்புப் பணியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-12T17:40:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டாரின் முன்னாள் மன்னர் மறைவுக்கு ஜனாதிபதி அநுர இரங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/president-anuradha-condoles-passing-of-the-king-1783877268"></link>
            <id>https://jvpnews.com/article/president-anuradha-condoles-passing-of-the-king-1783877268</id>
            <summary type="text">கட்டாரின் முன்னாள் மன்னரான ஷேக் ஹமட் பின் கலீபா அல் தானியின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி தம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டாரின் முன்னாள் மன்னரான ஷேக் ஹமட் பின் கலீபா அல் தானியின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுள்ளது.</p><p> </p><p></p><p>ஜனாதிபதி தமது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62da2927-eb59-4a40-94c3-e9333ad5e8c2/26-6a53ce9561db0.webp' /></p><p>கட்டாரின் முன்னாள் மன்னராக இருந்த ஷேக் ஹமட் பின் கலீபா அல் தானி தமது 74 வது வயதில் காலமானார். </p><p>

இந்நிலையில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கட்டாரின் தந்தை ஷேக் ஹமாட் பின் கலீபா அல் தானியின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த துயரமடைகிறேன்.</p><p> 

அவரது தொலைநோக்குத் தலைமையும், கட்டார் தேசத்திற்கு அவர் ஆற்றிய சேவையும் எப்போதும் நினைவுகூரப்படும். </p><p>

இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பாக, அரச குடும்பத்தினருக்கும் மற்றும் கட்டார் மக்களுக்கும் மனமார்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T17:27:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[Viral Video: படமெடுத்து எதிர்த்து நிற்கும் பாம்பு... மதுபோதையில் நபர் செய்த காரியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/drunken-person-play-with-snake-1783862098"></link>
            <id>https://manithan.com/article/drunken-person-play-with-snake-1783862098</id>
            <summary type="text">குடிபோதையில் உள்ள நபர் ஒருவர் நல்லபாம்பு ஒன்று படமெடுத்து எதிர்த்து நிற்கும் நிலையில், அதனை அடுத்தடுத்து சீண்டிய காட்சி வைரலாகி வருகின்றது.படமெடுத்த ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>குடிபோதையில் உள்ள நபர் ஒருவர் நல்லபாம்பு ஒன்று படமெடுத்து எதிர்த்து நிற்கும் நிலையில், அதனை அடுத்தடுத்து சீண்டிய காட்சி வைரலாகி வருகின்றது.</p><h2>படமெடுத்த பாம்பிடம் நபர் செய்யும் சேட்டை</h2><p>பொதுவாக பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. அதிக விஷத்தன்மை கொண்ட பாம்பு இனங்கள் மனிதர்களை கடிக்கும் போது இறக்கும் நிலைகூட ஏற்படுகின்றது.<br></p><p>
ஆனால் பாம்புகளின் வேட்டை பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாகவும், மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் நிலையில் இருக்கும். பாம்புகள் தவளை, மற்றொரு பாம்பை வேட்டையாடுவதை நாம் அவதானித்திருப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0360cc17-7d9f-4eea-be2c-044e2aedaf54/26-6a53c9be4af87.webp' /></p><p>
சிலர் பாம்புகளை பிடித்துக் கொண்டு சுற்றி நிற்பவர்கள் முன்பு கெத்து காட்ட நினைப்பவர்கள். இங்கும் நபர் ஒருவர் குடிபோதையில் படமெடுத்த பாம்பை பிடித்து கெத்து காட்டியுள்ளார்.</p><p></p><p>பாம்பும் தனது கோபத்தினை ஆக்ரோஷமாக வெளிக்காட்டிய நிலையில், நபர் மீண்டும் மீண்டும் குறித்த பாம்பை சீண்டியுள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DapayLWTtPB/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DapayLWTtPB/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DapayLWTtPB/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by 🇸 🇦 🇧 🇦 🇷 🇮 (@sabari_village_boy)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp;&nbsp;<br></i></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T17:15:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென வந்த அவசர எச்சரிக்கை ; அடுத்தடுத்து தாக்குதல்களால் அதிர வைத்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-shocks-world-with-series-of-attacks-1783862343"></link>
            <id>https://canadamirror.com/article/iran-shocks-world-with-series-of-attacks-1783862343</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் உள்ள பஹ்ரைன், கத்தார், குவைத் போன்ற நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த ஜூன் 17 ஆம் திகத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் உள்ள பஹ்ரைன், கத்தார், குவைத் போன்ற நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த ஜூன் 17 ஆம் திகதி ஸ்விட்சர்லாந்தில் இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. </p><p>இந்த ஒப்பந்தத்தால் ஏற்கெனவே மூடப்பட்டிருந்த ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17fcb600-f9c2-49b1-81d1-88d9bb3b88fc/26-6a53944845c97.webp' /></p><p>

</p><p>
இதைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை அருகே மூன்று வணிகக் கப்பல்களின் மீது ஈரானிய படைகள் திடீர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டிய அமெரிக்கா செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) 80-க்கும் அதிகமான ஈரானின் கட்டமைப்புகள் மீது தாக்குதல்களை நடத்தியது.
</p><p>
இதனால் தாக்குதல்கள் இருபுறமும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மத்திய கிழக்கில் உள்ள பஹ்ரைன், கத்தார், குவைத் போன்ற பகுதிகளில் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
</p><p>
இதையடுத்து, கத்தாரில் வசித்து வரும் மக்களை வீட்டிலேயே இருக்குமாறும் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அந்த நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p>மேலும் கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவங்களையடுத்து, அங்கு வசிக்கும் மக்களின் செல்போன்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>ஈரான் மூலம் மத்திய கிழக்கை நோக்கி ஏவப்படும் ஏவுகணைகள், டிரோன் விமானங்கள் போன்றவற்றை தடுத்தி நிறுத்தி வருவதாகவும் ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.</p><p>

முன்னதாக ஈரானின் 140 கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஹோர்முஸ் நீரிணையை முழுவதுமாக மூடுவதாக ஈரான் புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-12T17:10:25+00:00</updated>
        </entry>
    </feed>
