<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-02T13:33:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த 36 மணி நேரத்தில் வானிலையில் மாற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-forecast-for-the-next-36-hours-1785676091"></link>
            <id>https://tamilwin.com/article/weather-forecast-for-the-next-36-hours-1785676091</id>
            <summary type="text">அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.இதற்கமைய சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.</p><p>இதற்கமைய சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p> 

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p></p><h2>வறட்சியான வானிலை</h2><p> 

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e698f07c-10dc-42bd-8399-9fdd008eb70f/26-6a6f4515a73aa.webp' /></p><p> </p><p>

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. </p><p>

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p></p><h2>பலத்த காற்று</h2><p> 

வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcfe3a6c-db8f-4bba-be08-d212fbf637e9/26-6a6f451690c3b.webp' /></p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T13:30:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/weather-forecast-for-the-next-36-hours-1785676442"></link>
            <id>https://jvpnews.com/article/weather-forecast-for-the-next-36-hours-1785676442</id>
            <summary type="text">அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இதற்கமைய சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.</p><p> </p><p></p><p>இதற்கமைய சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. </p><p>

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/befda1a9-0e57-442c-acb6-cf15813150dd/26-6a6f429bec2f1.webp' /></p><p>மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.</p><p> 

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. </p><p>

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. </p><p>

வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். </p><p>

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T13:14:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[Mirnalini Ravi Boyfriend: காதலரை அறிமுகப்படுத்திய நடிகை மிருணாளினி ரவி - வைரல் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/actress-mirnalini-confirm-relationship-mahavishnu-1785674347"></link>
            <id>https://manithan.com/article/actress-mirnalini-confirm-relationship-mahavishnu-1785674347</id>
            <summary type="text">mirnalini ravi viral post :&amp;nbsp;&amp;nbsp;நடிகை மிருணாளினி ரவி தனது காதலரை சமூக வலைத்தளத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் பகிர்ந்துள்ள புக...</summary>
            <content type="html"><![CDATA[<p>mirnalini ravi viral post :&nbsp;&nbsp;நடிகை மிருணாளினி ரவி தனது காதலரை சமூக வலைத்தளத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களும், அதனுடன் இணைந்துள்ள பதிவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகின்றன.</p><h2>நடிகை மிருணாளினி ரவி&nbsp;</h2><p>
</p><p>
டப்ஸ்மாஷ் வீடியோக்கள் மூலம் ரசிகர்களிடம் முதலில் பிரபலமான மிருணாளினி ரவி, பின்னர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43737f5a-8e4e-4244-8373-57461fbb77f7/26-6a6f3f905c91c.webp' /></p><p></p><p> விஜய் சேதுபதி நடித்த 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தில் ஏலியன் பெண் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமான அவர், தொடர்ந்து சாம்பியன், எனிமி, எம்.ஜி.ஆர் மகன், கோப்ரா, ஜூங்கா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aaa2e166-7549-42f5-a80c-5d27fe157b23/26-6a6f3f91136b1.webp' /></p><p>
</p><p>
இறுதியாக விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்த 'ரோமியோ' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. சினிமாவில் பிஸியாக இருந்தாலும், சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து, தனது புகைப்படங்கள் மற்றும் வாழ்க்கை குறித்த அப்டேட்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b0662f8-d950-4ce8-a12a-8f8883ec68bf/26-6a6f40af8d904.webp' /></p><p>இந்த நிலையில், தனது காதலருடன் இருக்கும் புகைப்படங்களை மிருணாளினி ரவி தற்போது வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், மஹாவிஷ்ணு என்பவரையே தான் காதலித்து வருவதாகவும், இருவரும் சுமார் 7 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்த நிலையில், அந்த நட்பு தற்போது காதலாக மலர்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8eb593f5-83e0-42b9-8e0b-394200a5283f/26-6a6f40b0774fd.webp' /></p><p></p><p>

மிருணாளினியின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
</p><p>
குறிப்பாக, மிருணாளினி குறிப்பிட்டுள்ள மஹாவிஷ்ணு, பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார். அவர் கடந்த காலத்தில் பல்வேறு சர்ச்சைகள் தொடர்பாக செய்திகளில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Dbf65N7nyaO/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Dbf65N7nyaO/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Dbf65N7nyaO/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Mirnalini Ravi (@mirnaliniravi)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T13:08:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறை வன்முறை திட்டமிட்ட சதி: சர்வதேச மனித உரிமை அமைப்பு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/incident-mahara-prison-planned-by-a-certain-party-1785673210"></link>
            <id>https://ibctamil.com/article/incident-mahara-prison-planned-by-a-certain-party-1785673210</id>
            <summary type="text">&amp;nbsp;நேற்று (01) மஹர சிறையில் ஏற்பட்ட கலவரம் ஒரு குறிப்பிட்ட தரப்பினரால் திட்டமிடப்பட்டது என்று தாம் உறுதியாக நம்புவதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நேற்று (01) மஹர சிறையில் ஏற்பட்ட கலவரம் ஒரு குறிப்பிட்ட தரப்பினரால் திட்டமிடப்பட்டது என்று தாம் உறுதியாக நம்புவதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் நிர்வாக பணிப்பாளர் சுபாசனா சுபாவிக்ரம, கூறியுள்ளார்.
</p><p>
இன்று பிற்பகல் (02) மஹர சிறையின் நிலவரத்தைப் பார்வையிட்ட பின்னர் ​​அவர் ஊடகங்களிடம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.</p><h2>கலவரத்தின் நோக்கம் அரசாங்கத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்துவது</h2><p>இதன் நோக்கம் அரசாங்கத்திற்குச் சிரமத்தை ஏற்படுத்துவதே என்ற சந்தேகம் இருப்பதாகஅவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5814ea31-de89-454d-b713-d83146a3e412/26-6a6f3fa1332bd.webp' /></p><p>

அதன்படி, இது ஏதோவொரு நபர் அல்லது குழுவின் திட்டத்தின்படி நடக்கும் ஒரு விஷயம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.</p><p></p><h2>கைதிகளை தங்க வைக்க பொருத்தமான சூழல் இல்லை</h2><p>

இதற்கிடையில், சிறையின் நிலையை ஆய்வு செய்த பின்னர் வந்த நிர்வாக பணிப்பாளர், சிறை கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், கைதிகளை தங்க வைக்க பொருத்தமான சூழல் இல்லை என்றும், இதன் விளைவாக, கைதிகளை மற்ற சிறைகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை சிறை அதிகாரிகள் எடுத்து வருவதாகவும் ஊடகங்களிடம் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08e714ad-f9eb-4a87-ba64-fa9272bf5a64/26-6a6f3fa1d845a.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T13:01:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் இருந்த கணவருக்கு அதிர்ச்சி ; காணாமல் போன மனைவி மற்றும் மகன் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/husband-abroad-missing-wife-and-son-rescued-1785673477"></link>
            <id>https://jvpnews.com/article/husband-abroad-missing-wife-and-son-rescued-1785673477</id>
            <summary type="text">கேரளாவின் பாலுச்சேரி பகுதியில், வெளிநாட்டில் பணியாற்றி வந்த கணவரின் மனைவி தனது 7 வயது மகனுடன் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேரளாவின் பாலுச்சேரி பகுதியில், வெளிநாட்டில் பணியாற்றி வந்த கணவரின் மனைவி தனது 7 வயது மகனுடன் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறுவன் பாதுகாப்பாக தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p></p><p>

தகவல்களின்படி, கடந்த 9ஆம் திகதி ஷஹ்லா என்ற பெண், வீட்டிலிருந்த தங்க நகைகள் மற்றும் சில உடைமைகளை எடுத்துக்கொண்டு தனது 7 வயது மகனுடன் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. </p><p>இந்தச் சம்பவம், அவரது கணவர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்புவதற்கு சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9908046-b1e5-472e-b753-3f77ca1beb1d/26-6a6f37072e939.webp' /></p><p>

வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய பின்னரே மனைவியும் மகனும் காணாமல் போனதை அறிந்த கணவர், பாலுச்சேரி காவல்துறையில் முறைப்பாடு செய்தார். </p><p>வெளிநாட்டில் இருந்த காலத்திலும் தினமும் தொலைபேசியில் தொடர்பில் இருந்ததால், மனைவியின் நடவடிக்கையில் எந்தவித சந்தேகமும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.</p><p>

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், ஷஹ்லாவும் அவருடன் சென்றதாகக் கூறப்படும் நபரும் கண்டறியப்பட்டனர்.

இதையடுத்து, 7 வயது சிறுவன் பாதுகாப்பாக தனது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளை பாலுச்சேரி காவல்துறை முன்னெடுத்து வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T12:59:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[86 ஓட்டங்கள் இலக்கு வைத்து வெற்றி! 47 வயதில் கிண்ணத்தை வென்ற இம்ரான் தாஹிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/guyana-amazon-warriors-won-2nd-global-super-title-1785675311"></link>
            <id>https://news.lankasri.com/article/guyana-amazon-warriors-won-2nd-global-super-title-1785675311</id>
            <summary type="text">குளோபல் சூப்பர் லீக் கிண்ணத்தை கயானா அமேசான் வாரியர்ஸ் அணி கைப்பற்றியது.85 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்

குளோபல் சூப்பர் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>குளோபல் சூப்பர் லீக் கிண்ணத்தை கயானா அமேசான் வாரியர்ஸ் அணி கைப்பற்றியது.</p><h2>85 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்
</h2><p>
குளோபல் சூப்பர் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் சான் ஃபிரான்ஸிஸ்கோ யுனிகார்ன்ஸ் அணிகள் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e08cdc4-e5fc-484d-b5e9-f406ac488dca/26-6a6f3f6cc4830.webp' />&nbsp;</p><p></p><p> 

முதலில் ஆடிய கயானா அணி 18.5 ஓவர்களில் 85 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக மேத்யூ போர்டே (Matthew Forde) 23 பந்துகளில் 28 ஓட்டங்கள் எடுத்தார்.</p><p> 

பீட்டர் சிடில், அனிருத் இமானுவல் தலா 3 விக்கெட்டுகளும், ஃபேபியன் ஆலன், கல்லம் மற்றும் கரிமா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.&nbsp;</p><h2>கயானா அமேசான் வாரியர்ஸ் சாம்பியன் </h2><p>
பின்னர் ஆடிய சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி 18.3 ஓவர்களில் 79 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன்மூலம் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கயானா அமேசான் வாரியர்ஸ் வெற்றி பெற்றது.
</p><p>
அதிகபட்சமாக ஓலிவர் பீக் (Oliver Peake) ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 31 ஓட்டங்கள் விளாசினார்.</p><p> டிவைன் பிரிட்டோரியஸ், மொஹம்மது நபி தலா 3 விக்கெட்டுகளும், இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். </p><p>

47 வயதான இம்ரான் தாஹிர் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் குளோபல் சூப்பர் லீக் கிண்ணத்தை வென்றது.&nbsp; &nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/828edcf9-f567-411a-b3ec-25d161ef26dc/26-6a6f3f6c061af.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T12:58:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் சார்ஜில் இருந்த கைத்தொலைபேசியை திருடிய இளைஞர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-arrested-for-stealing-mobile-phone-charger-1785675422"></link>
            <id>https://jvpnews.com/article/youth-arrested-for-stealing-mobile-phone-charger-1785675422</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டம், நற்பிட்டிமுனை பகுதியில் வீடொன்றில் சார்ஜ் போடப்பட்டிருந்த கைத்தொலைபேசியை திருடியதாகக் கூறப்படும் 21 வயதுடைய இளைஞர் ஒருவரை கல்முனை தல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டம், நற்பிட்டிமுனை பகுதியில் வீடொன்றில் சார்ஜ் போடப்பட்டிருந்த கைத்தொலைபேசியை திருடியதாகக் கூறப்படும் 21 வயதுடைய இளைஞர் ஒருவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இன்று (02) கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><h3>ஆரம்பகட்ட விசாரணை</h3><p>



முறைப்பாட்டின்படி, தனது வீட்டில் சுமார் 35,000 ரூபாய் பெறுமதியான கைத்தொலைபேசியை சார்ஜில் வைத்துவிட்டு வெளியே சென்றிருந்த நிலையில், மீண்டும் வீட்டிற்கு திரும்பியபோது ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டு, கைத்தொலைபேசி திருடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/715a66fd-fc2a-4de3-a3c1-e3dff6440dd9/26-6a6f3e9fcd6db.webp' /></p><p>



இதையடுத்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டிற்கு எதிரில் தங்கியிருந்த 21 வயதுடைய இளைஞரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.</p><p>விசாரணைகளின் போது, திருடப்பட்ட கைத்தொலைபேசியை சந்தேகநபர் தனது உறவினர் ஒருவரின் வீட்டில் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டதுடன், அதனை பொலிஸார் மீட்டுள்ளனர். </p><p>மேலும், சந்தேகநபரிடமிருந்து ஒரு தொகை 'ஐஸ்' (ICE) போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p>


ஆரம்பக்கட்ட விசாரணைகளில், கைதான நபர் போதைப்பொருளுக்கு தீவிரமாக அடிமையானவர் என்பதுடன், கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் மட்டும் அவருக்கு எதிராக ஏழு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. </p><p>



கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சட்ட நடவடிக்கைகளுக்காக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T12:57:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாணவிகளுக்குத் தொந்தரவு செய்த இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களுடன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/harassment-of-tuition-students-youths-arrested-1785672346"></link>
            <id>https://tamilwin.com/article/harassment-of-tuition-students-youths-arrested-1785672346</id>
            <summary type="text">தனியார் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகளை மோட்டார் சைக்கிள்களில்
பின்தொடர்ந்து தொந்தரவு செய்தமை மற்றும் தலைக்கவசம் அணியாமல் போக்குவரத்து
விதிகளை மீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனியார் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகளை மோட்டார் சைக்கிள்களில்
பின்தொடர்ந்து தொந்தரவு செய்தமை மற்றும் தலைக்கவசம் அணியாமல் போக்குவரத்து
விதிகளை மீறி பயணித்தமை தொடர்பாகப் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 8
மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள
நபர்கள் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>விசேட அதிரடி நடவடிக்கை</h2><p>

கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல மற்றும் அம்பாறை
மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி
ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி
நிசாந்த பிரதீப் குமார, போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி விஜயவர்தன
ஆகியோர் தலைமையில் இந்த விசேட அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5490694e-32c2-4697-ba32-ab311ffeafe9/26-6a6f3c2f2a63c.webp' /></p><p>

பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்பட ஆதாரங்களின்
அடிப்படையில் இந்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார்
தெரிவித்தனர்.
</p><p>
இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த சம்மாந்துறை பொலிஸ் நிலையப்
பொறுப்பதிகாரி நிசாந்த பிரதீப்,</p><p></p><h2>&nbsp;புகைப்பட ஆதாரங்கள்</h2><p>
</p><p>
"பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது சட்டவிரோத செயல்களில் ஈடுபடும்
நபர்கள் தொடர்பான காணொளி மற்றும் புகைப்பட ஆதாரங்களை பொதுமக்கள் உடனடியாக
பொலிஸாருக்கு அனுப்பி வைக்க வேண்டும். தவறு செய்பவர்கள் எவராக இருந்தாலும்
பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>

சம்மாந்துறையை ஒழுக்கமும் சட்டமும் நிலவும் பாதுகாப்பான சமூகமாக மாற்றுவதே
எமது நோக்கமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c29d8d76-f5da-4496-ad5f-10d85b6c330b/26-6a6f3c3021673.webp' /></p><p> இளைஞர்கள் போக்குவரத்து விதிகளை மதித்து நடக்க வேண்டும்.
பெண்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்கள் கடுமையாகக் கருதப்படும்.</p><p>"

மேலும், பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் வாகனப் பயன்பாடு, நண்பர்கள் வட்டம்
மற்றும் அன்றாட நடவடிக்கைகள் குறித்து விழிப்புடனும் கூடுதல் கவனத்துடனும்
இருக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T12:51:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசிய பயணிகள் படகில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-on-indonesian-passenger-boat-5-dead-1785673418"></link>
            <id>https://tamilwin.com/article/fire-on-indonesian-passenger-boat-5-dead-1785673418</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் மதுரா தீவு கடற்பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள்
படகு ஒன்றில் திடீரெனப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தில் குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் மதுரா தீவு கடற்பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள்
படகு ஒன்றில் திடீரெனப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
</p><p>
இந்தச் சம்பவத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 41 பேரைக்
காணவில்லை என்றும் அந்நாட்டின் தேசிய தேடுதல் மற்றும் மீட்புப் படை மையம்
அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
</p><p>
தகவலறிந்து உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், கடலில்
தத்தளித்தவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p><h2>தீ விபத்து</h2><p>

எனினும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும்
உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abd84666-60e9-4d97-986c-7e22fc9ef8ba/26-6a6f3a56535bf.webp' /></p><p>
</p><p>
தீ விபத்துக்கான சரியான காரணம் என்னவென்று உடனடியாகத் தெரியவராத நிலையில், இது
குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T12:39:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயினுக்கு உதவிக்கரம் நீட்டிய கத்தார் ; 129 நிபுணர்கள் களமிறக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/qatar-extends-helping-hand-spain-129-experts-deplo-1785673995"></link>
            <id>https://canadamirror.com/article/qatar-extends-helping-hand-spain-129-experts-deplo-1785673995</id>
            <summary type="text">ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக, கத்தார் சர்வதேச தேடல் மற்றும் மீட்புக் குழுவை (Qatar International Search...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக, கத்தார் சர்வதேச தேடல் மற்றும் மீட்புக் குழுவை (Qatar International Search and Rescue Team) கத்தார் அரசு அனுப்பியுள்ளது.</p><p>

கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியின் வழிகாட்டுதலின் பேரில், இந்த சிறப்பு மீட்புக் குழு தோஹாவிலிருந்து ஸ்பெயினின் டொரெஜோன் விமான நிலையத்திற்குப் புறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbcc7d01-23ac-44b7-8879-d5b19e798b65/26-6a6f390d2632d.webp' /></p><p>இந்தக் குழுவில் 129 காட்டுத்தீ நிபுணர்கள் இடம்பெற்றுள்ளதுடன், தொழில்நுட்ப மற்றும் தளவாட ஆதரவுக்குத் தேவையான மேம்பட்ட தீயணைப்பு வாகனங்கள், லாரிகள் மற்றும் நவீன உபகரணங்களும் அனுப்பப்பட்டுள்ளன.
</p><p>
மேலும், காட்டுத்தீயை அணைக்கும் பணிகளுக்காக ஒரு ஹெலிகாப்டரும், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதற்காக மற்றொரு ஹெலிகாப்டரும் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/526a286d-de51-4ec4-bdf0-b7e91a6c55c8/26-6a6f390dcda3f.webp' /></p><p>இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்கும் தனது நீண்டகால கொள்கையின் ஒரு பகுதியாகவே இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாக கத்தார் அரசு தெரிவித்துள்ளது.
</p><p>
பேரழிவுகள் மற்றும் அவசரநிலைகளின் போது சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தி, உயிர்களையும் சொத்துகளையும் பாதுகாக்கும் முயற்சிகளுக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்க கத்தார் உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-02T12:33:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண் பொலிஸ் அதிகாரி விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/theft-inside-the-police-station-1785673626"></link>
            <id>https://tamilwin.com/article/theft-inside-the-police-station-1785673626</id>
            <summary type="text">இங்கினியாகல பொலிஸ் நிலையத்தில் பல்வேறு சேவைகளுக்காக வருமானமாக பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரியொருவர் பொலிஸ் விசேட
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கினியாகல பொலிஸ் நிலையத்தில் பல்வேறு சேவைகளுக்காக வருமானமாக பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரியொருவர் பொலிஸ் விசேட
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த சம்பவத்துடன், தொடர்புடைய பெண் பொலிஸ் அதிகாரி சுமார் 290,000 ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் நடத்திய உள் தணிக்கையின் (Internal
Audit) போதே இந்த நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளது. </p><h2>

 2 இலட்சம் ரூபாய் கையாடல் செய்த அதிகாரி</h2><p>
</p><p>
வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஒலிபெருக்கி அனுமதி பத்திரங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மூலம்
பொலிஸ் நிலையத்திற்குக் கிடைக்கும் வருமானப் பணம், அம்பாறை பொலிஸ்
அத்தியட்சகர் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ கணக்கில் வைப்பிலிடப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f4d027b-ac2f-45a9-a478-3c48a6adf2e3/26-6a6f3815d99e5.webp' /></p><p>
எனினும், குறித்த பொலிஸ் நிலையத்திற்கு வந்த பணத்தை சந்தேகநபரான பெண் பொலிஸ்
அதிகாரி உத்தியோகபூர்வ கணக்கில் செலுத்தாமல் கையாடல் செய்துள்ளமை தணிக்கை
அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
</p><p>
அம்பாறை பிரிவின் பிரதி பொலிஸ் அதிகாரியான உதவி பொலிஸ் அதிகாரி(1) சம்பத்
விக்ரமரத்னவின் மேற்பார்வையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>


அம்பாறை பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட
குழுவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். </p><p>

கைது செய்யப்பட்ட பெண் பொலிஸ் அதிகாரி அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T12:31:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாக்ஸ் ஆபிஸ்: ஜனநாயகன் திரைப்படம் தமிழ்நாட்டில் 10 நாட்களில் செய்துள்ள வசூல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/jananayagan-tamilnadu-box-office-1785667122"></link>
            <id>https://viduppu.com/article/jananayagan-tamilnadu-box-office-1785667122</id>
            <summary type="text">விஜய் - ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் ஜனநாயகன். 

இப்படத்தின் வசூல் விவரம் குறித்து தொடர்ந்து முதல் நாளிலிருந்தே பார்த்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஜய் - ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் ஜனநாயகன். </p><p>

இப்படத்தின் வசூல் விவரம் குறித்து தொடர்ந்து முதல் நாளிலிருந்தே பார்த்து வருகிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03e15ddd-4749-4e39-b1f0-5186572828b4/26-6a6f1e35bee7e.webp' /></p><p> </p><p>

உலகளவில் இப்படம் ரூ. 275 கோடிக்கும் மேல் வசூலித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. </p><p>

அதன்படி, 10 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே ஜனநாயகன் ரூ. 122 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 150 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் காட்டுத்தீயைத் தொடர்ந்து..மற்றொரு நாட்டில் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கானோர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/thousands-of-homes-are-evacuated-in-greece-1785672589"></link>
            <id>https://news.lankasri.com/article/thousands-of-homes-are-evacuated-in-greece-1785672589</id>
            <summary type="text">காட்டுத்தீயின் தீவிரத்தினால் கிரீஸ் நாட்டில் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.காட்டுத்தீ பரவல்

பிரான்ஸ் முழுவதும் &#039;முன்னெப்போதும் இல...</summary>
            <content type="html"><![CDATA[<p>காட்டுத்தீயின் தீவிரத்தினால் கிரீஸ் நாட்டில் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><h2>காட்டுத்தீ பரவல்</h2><p>

பிரான்ஸ் முழுவதும் 'முன்னெப்போதும் இல்லாத' காட்டுத்தீ பரவி வருவதால் சுற்றுலாப் பயணிகள் முகாம்களைத் தவிர்க்கின்றனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32d42d0a-75b6-4779-a9a8-540c9c3c6c07/26-6a6f3499c1f15.webp' />&nbsp;</p><p></p><p> 

அதே நேரத்தில், கிரீஸ் நாட்டில் உள்ள ஒரு கடற்கரை நகரத்தைக் காக்க தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>

தலைநகருக்கு வடமேற்கே கொரிந்து வளைகுடாவில் உள்ள போர்டோ ஜெர்மெனோவிற்கு அருகிலுள்ள காடுகளை ஒரு மாபெரும் தீ மற்றும் புகைச்சுவர் சூழ்ந்தது.
</p><p>
ஏதென்ஸில் இருந்து 45 மைல் தொலைவில் உள்ள கிரீஸில் உள்ள ஒரு முக்கிய சுற்றுலாத் தலத்திற்கு அருகில், காற்றால் பரவிய தீயை நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் எதிர்த்துப் போராடினர். </p><p>

பலத்த காற்று தீயை மிக வேகமாக பரவச் செய்து, தீயணைப்பு வீரர்களுக்கு நிலைமையைக் கணிக்க முடியாததாக மாற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb9752e5-5d13-4095-ab59-9401163b9ca2/26-6a6f349a8e3af.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T12:12:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறையில் காயமடைந்த கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு : கைதிகளை பார்வையிடவும் அனுமதி இல்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/inmates-hospitalized-in-mahara-prison-rises-1785671269"></link>
            <id>https://ibctamil.com/article/inmates-hospitalized-in-mahara-prison-rises-1785671269</id>
            <summary type="text">மஹர சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள், இந்த மாதம் 03, 04 மற்றும் 05 ஆகிய அடுத்த மூன்று நாட்களுக்கு பார்வையாளர்களை சந்திக்க அனுமதிக்கப்பட மாட்டா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள், இந்த மாதம் 03, 04 மற்றும் 05 ஆகிய அடுத்த மூன்று நாட்களுக்கு பார்வையாளர்களை சந்திக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் காயமடைந்த கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் மஹர சிறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.</p><p>நேற்று (01) சிறையில் ஏற்பட்ட கலவரம் மற்றும் சொத்து சேதம் காரணமாக, அடுத்த மூன்று நாட்களுக்கு பார்வையாளர்கள் கைதிகளை சந்திக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சிறை கண்காணிப்பாளர் குறிப்பிட்டார்.
</p><p>
</p><h2>104 கைதிகள் 07 சிறைகளுக்கு மாற்றம்</h2><p>இதற்கிடையில்,மஹர சிறையிலிருந்து மற்ற சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளின் பட்டியல் சிறைக்கு வெளியே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, 104 கைதிகள் 07 சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d194ca27-2ea5-4e3f-adfe-91288a03cd2a/26-6a6f33b3eff85.webp' /></p><p>
</p><p>
கலவரத்தால் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளின் பெயர்ப் பட்டியலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது
</p><p>
அதன்படி, இந்தச் சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது, மேலும் ஒரு கைதி உயிரிழந்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T12:10:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒபெக் பிளஸ் அமைப்பு மசகு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opec-plans-to-increase-crude-oil-production-1785669663"></link>
            <id>https://tamilwin.com/article/opec-plans-to-increase-crude-oil-production-1785669663</id>
            <summary type="text">பெற்றோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான &#039;ஒபெக் பிளஸ்&#039; எதிர்வரும்
செப்டெம்பர் மாதம் முதல் நாளொன்றுக்கு சுமார் 1,88,000 பெரல்கள் வரை மசகு
எண்ணெய் உற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெற்றோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான 'ஒபெக் பிளஸ்' எதிர்வரும்
செப்டெம்பர் மாதம் முதல் நாளொன்றுக்கு சுமார் 1,88,000 பெரல்கள் வரை மசகு
எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க அனுமதி அளிக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> இந்த உற்பத்திக் கூட்டலுக்குப் பிறகு, இந்த ஆண்டின் எஞ்சிய மாதங்களுக்கு
உற்பத்தியை மேலும் உயர்த்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என்றும்
எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

சவூதி அரேபியா, ரஷ்யா, ஈராக், குவைத், அல்ஜீரியா, கஜகஸ்தான் மற்றும் ஓமன் ஆகிய
7 முக்கிய உறுப்பு நாடுகள் இந்த உற்பத்திக் குறைப்புத் திரும்பப்பெறும்
நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.</p><p></p><h2>மசகு எண்ணெய் உற்பத்தி</h2><p>
</p><p>
ஈரானிய மற்றும் உக்ரைன் போர் காரணமாகக் வளைகுடா பகுதிகள், ரஷ்யா மற்றும்
கஜகஸ்தானில் இருந்து ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 2023-ஆம்
ஆண்டு அறிவிக்கப்பட்ட தன்னார்வ உற்பத்திக் குறைப்பை நிறைவு செய்யும் வகையில்
இந்த நடவடிக்கை அமைகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d26aff6-7385-4337-87c6-11971af79e7f/26-6a6f2da39add6.webp' /></p><p>
</p><p>
அடுத்த கட்டமாக உறுப்பு நாடுகளின் மசகு எண்ணெய் உற்பத்தித் திறனை மதிப்பாய்வு
செய்யும் பணியில் ஒபெக் பிளஸ் ஈடுபட்டுள்ளது.</p><p>

ஈராக் போன்ற சில உறுப்பு நாடுகள் தங்களின் உயர் உற்பத்தித் திறனுக்கு ஏற்ப
அதிக ஒதுக்கீட்டைப் பெற முயற்சி செய்து வருவதால், உற்பத்தியைப்
பகிர்ந்தளிப்பதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்கும் வரை இந்தத் தற்காலிக
இடைநிறுத்தம் தொடரும் எனக் கூறப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T12:07:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை - எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ai-cameras-introduced-to-catch-road-violations-1785671214"></link>
            <id>https://tamilwin.com/article/ai-cameras-introduced-to-catch-road-violations-1785671214</id>
            <summary type="text">செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன கேமரா அமைப்பைப் பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வீதிப்போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன கேமரா அமைப்பைப் பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வீதிப்போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுக்காப்பு பிரிவுப் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.</p><p>மோட்டார் வாகன விபத்துக்களைத் தடுப்பதற்கும் சாரதிகளால் மேற்கொள்ளப்படும் விதிமீறல்களைக் கண்டறிவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
இது குறித்து இன்றைய தினம் (02.08.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை அவர் கூறியுள்ளார்.</p><p></p><h2>துல்லியமாக அடையாளம்</h2><p>மேலும் தெரிவிக்கையில்,

இந்த புதிய கண்காணிப்பு நடைமுறையின் கீழ் வாகனங்களைச் செலுத்தும் போது தொலைபேசியில் பேசுவது அல்லது குறுஞ்செய்தி அனுப்புவது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடும் சாரதிகள் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கமராக்கள் மூலம் துல்லியமாக அடையாளம் காணப்பட்டு படம் பிடிக்கப்படுவார்கள்.
</p><p>
வழக்கமான கமராக்களைப் போலன்றி, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் வீதி விதிமீறல்கள் உடனடியாகப் படம்பிடிக்கப்பட்டு சான்றுகளுடன் சேமிக்கப்படுவதால், தவறிழைக்கும் சாரதிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது.
</p><p>

இத்திட்டம் முதற்கட்டமாக கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த 9 பிரதான சந்திப்புகள் மற்றும் வீதிகளில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் மூலம் கொழும்பு நகரில் இடம்பெறும் அதிகளவிலான போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் விபத்துக்களை வெகுவாகக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c02016f-3578-4a63-b3df-378ba79978bb/26-6a6f3168db5af.webp' /></p><h2>நடவடிக்கை</h2><p>இதேவேளை வீதி விபத்துக்களைக் கட்டுபடுத்தும் நோக்கில், வாகனங்களின் வேகத்தை கண்டறிவதற்காக புதிதாக 50 வேகமானி கருவிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் போக்குவரத்துப் பொலிஸாரால் 45 வேகமானி கருவிகள் மட்டுமே பயன்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 50 கருவிகள் சேர்க்கப்படுகின்றன. </p><p>45 இத்தகைய கருவிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள இந்த கருவிகளில் ஒன்றின் விலை சுமார் 33 இலட்சம் ரூபாவாகும் என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T12:02:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற கறுப்பு யூலை 43 ஆம் ஆண்டு நினைவேந்தல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/black-july-1983-commemoration-in-britain-1785671332"></link>
            <id>https://ibctamil.com/article/black-july-1983-commemoration-in-britain-1785671332</id>
            <summary type="text">1983 கறுப்பு யூலை இனவழிப்பின் 43 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>1983 கறுப்பு யூலை இனவழிப்பின் 43 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியாவின் (TGTE) லிவர்பூல் கிளையின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
 கடந்த வெள்ளிக்கிழமை (யூலை 24) <a href="https://ibctamil.com/article/twin-sisters-death-in-jaffna-1785665953" target="_blank">லிவர்பூல் லைட்ஹவுஸ்</a> மண்டபத்தில் உணர்வுபூர்வமாக நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.</p><p>

நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர் குடும்ப நலத்துறை அமைச்சர் வீரன், பிரதி அமைச்சர் யோகன் ரெட்ணம், உலகத் தமிழர் வரலாற்று வளாகம் மற்றும் லிவர்பூல் தமிழ் சமூகம் சார்பில் சிவகுமார், உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தைச் சேர்ந்த தயா மற்றும் நா.க.த.அ. லிவர்பூல் கிளை பிராந்திய ஒருங்கிணைப்பாளர் அஜந்தன், நா.க.த.அ லிவர்பூல் வெளிக்கள இணைப்புணர் ஹில்மி லிவர்பூல் தமிழ் சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.</p><p></p><h2>கறுப்பு யூலை 43 ஆம் ஆண்டு நினைவேந்தல்</h2><p>நிகழ்வினை ஐதுசன் தொகுத்து வழங்க வீரன், யோகன் ரெட்ணம், சிவகுமார், தயா, அஜந்தன், ஹில்மி மற்றும் வளர்மதி ஆகியோர் பொதுவிளக்கேற்றல் நிகழ்வில் பங்கேற்றனர்.

அத்தோடு யோகன் ரெட்ணம் பிரித்தானியக் கொடியையும் மற்றும் தயா தமிழீழக் கொடியையும் ஏற்றிவைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b509925-89c9-4b68-9184-62193cef2c18/26-6a6f2ffd353f9.webp' /></p><p> 

வீரன் நினைவேந்தல் சுடர் ஏற்றியதைத் தொடர்ந்து <a href="https://ibctamil.com/article/agreement-reopening-strait-of-hormuz-iran-denies-1785665591" target="_blank">பிரியதர்ஷினி அஜந்தன்</a> அக வணக்கம் நிகழ்த்தினார். 

அஜந்தன் அறிமுக உரையை வழங்க, சிவகுமார் நினைவேந்தல் மலர் வணக்க நிகழ்வையும் எழுச்சி உரையும் வழங்கினார்.
</p><p>
ரோய் மெர்வின் மரியதாஸ் மற்றும் மோகனா ஆகியோர் நினைவேந்தல் கவிதைகளையும் மற்றும் தருணிக்கா ஆங்கில உரையும் நிகழ்த்தினர்.

 இறுதியில் தனுஷ்காந்த் மற்றும் நிதுர்ஜன் கொடியிறக்க நிகழ்வை மேற்கொண்டதுடன் உறுதிமொழி ஏற்புடன் நிகழ்வு நிறைவுற்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T12:00:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் கிராமத்திற்குள் புகுந்து மக்களைத் துரத்திய யானை ; சிதறிஓடிய மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/elephant-enters-village-and-chases-people-1785671865"></link>
            <id>https://jvpnews.com/article/elephant-enters-village-and-chases-people-1785671865</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டம், பொத்துவில் பசறிச்சேனை கிராமத்திற்குள் நேற்றிரவு (01) புகுந்த காட்டு யானையொன்று, அதனை விரட்ட முயன்ற கிராம மக்களை நோக்கி துரத்திய சம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டம், பொத்துவில் பசறிச்சேனை கிராமத்திற்குள் நேற்றிரவு (01) புகுந்த காட்டு யானையொன்று, அதனை விரட்ட முயன்ற கிராம மக்களை நோக்கி துரத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>கிராமத்திற்குள் நுழைந்து சுற்றித்திரிந்த காட்டு யானையை, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து காட்டுப் பகுதிக்குள் விரட்ட முயன்றுள்ளனர். இதன்போது யானை ஆவேசமடைந்து பொதுமக்களை நோக்கி முன்னேறியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87e2bff3-92f2-40fe-88aa-132b54271a3a/26-6a6f30bbc7273.webp' /></p><p>இதனால் அச்சமடைந்த மக்கள் பாதுகாப்பு கருதி நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர். </p><p>எனினும், குறித்த சம்பவத்தில் எவ்வித உயிர்ச் சேதமோ அல்லது உடைமைச் சேதமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



பின்னர், கிராம இளைஞர்கள் மிகுந்த துணிச்சலுடனும் பொறுப்புடனும் செயற்பட்டு, யானைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அதனை பாதுகாப்பாக மீண்டும் காட்டுப் பகுதிக்குள் திருப்பி அனுப்பியுள்ளனர்.
</p><p>


இந்நிலையில், பசறிச்சேனை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் அண்மைக் காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
</p><p>


எனவே, இரவு நேரங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், தேவையற்ற விதத்தில் வீடுகளை விட்டு வெளியே செல்வதைத் தவிர்த்து, உயிர் மற்றும் உடைமைப் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T11:57:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இடைத்தேர்தலுக்காக வெறியோடு காத்திருக்கிறேன் - சீமான் பரபரப்பு பேச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/waiting-for-the-by-election-seeman-1785670067"></link>
            <id>https://ibctamilnadu.com/article/waiting-for-the-by-election-seeman-1785670067</id>
            <summary type="text">நாம் தமிழர் கட்சியில் புதிதாக 1,000 பேர் இணையும் நிகழ்ச்சி பல்லாவரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாம் தமிழர் கட்சியில் புதிதாக 1,000 பேர் இணையும் நிகழ்ச்சி பல்லாவரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.</p><h2>விளம்பர அரசியல்&nbsp;</h2><p>
</p><p>அவர் குறிப்பிடுகையில், நடிகருக்கும் தலைவருக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் உணர வேண்டும் என்றும், தமிழக வெற்றி கழகம் மற்றும் அதன் தலைவர் விஜயை விமர்சித்த அவர், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்களில் மதம், சாதி அடிப்படையிலான வேட்பாளர் தேர்வால் சாதி, மத ஒழிப்பைப் பற்றி பேச முடியாது என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/085a6c53-6bfa-446d-b66e-ffdcafe200bd/26-6a6f2e60db387.webp' /></p><p>
</p><p>
திமுக அரசை போன்று தமிழக வெற்றி கழகமும் விளம்பர அரசியலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டிய சீமான், அரசு நிதியை விளம்பரங்களுக்கு செலவிடுவதை விமர்சித்தார்.</p><p> மேலும், மின்கட்டணம், மீனவர் பாதுகாப்பு, ஜல் ஜீவன் திட்டம், லஞ்ச ஒழிப்பு உள்ளிட்ட விவகாரங்களிலும் கேள்வி எழுப்பினார்.
</p><p>
கரூர் சம்பவத்தில் அரசு வேலை வழங்கியதையும் எதிர்ப்பதாக தெரிவித்த அவர், "இடைத்தேர்தல் எப்போது அறிவிக்கப்படும் என்று வெறியோடு காத்திருக்கிறேன்" என்று கூறினார்.</p>]]></content>
            <updated>2026-08-02T11:49:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தவறான முடிவெடுத்து இரட்டைச் சகோதரிகள் உயிர்மாய்ப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/twin-sisters-death-in-jaffna-1785665953"></link>
            <id>https://ibctamil.com/article/twin-sisters-death-in-jaffna-1785665953</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளனர். சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட
புன்னாலைக்கட்டுவன் பகுதியை...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளனர். </p><p>சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட
புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த இரட்டையர்களே இவ்வாறு உயிர்
மாய்த்துள்ளனர்.</p><p>

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சகோதரிகள் நேற்றையதினம் (01) வீட்டில் யாரும் இல்லாதவேளை தமக்கு தாமே தீ மூட்டியுள்ளனர்.</p><p></p><h2>சுன்னாகம் காவல்துறையினர் விசாரணை</h2><p>
இந்நிலையில் அவர்கள் காப்பாற்றப்பட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக&nbsp; யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccafc711-4952-4981-abd8-1c6f7a924e4a/26-6a6f1ce7df59b.webp' /></p><p>எனினும் சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் இன்று (02) அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
வாழ்வதற்கு விருப்பமில்லாத காரணத்தால் இவ்வாறு செய்ததாக அவர்கள்
உயிரிழப்பதற்கு முன்னர் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இது குறித்து சுன்னாகம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T11:40:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவகார்த்திகேயன் மிகவும் ஒழுக்கமான நடிகர்.. மனம் திறந்து பேசிய நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/bhagyashri-borse-about-actor-sivakarthikeyan-1785664566"></link>
            <id>https://cineulagam.com/article/bhagyashri-borse-about-actor-sivakarthikeyan-1785664566</id>
            <summary type="text">பாக்யஸ்ரீ போர்ஸ்தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான பாக்யஸ்ரீ போர்ஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடன் இணைந்து நடித்து வரும் நடிகர் சி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பாக்யஸ்ரீ போர்ஸ்</h2><p>தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான பாக்யஸ்ரீ போர்ஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடன் இணைந்து நடித்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f1f1ab6-5810-4179-a1e6-0349c28afd82/26-6a6f1438cb4a4.webp' /></p><p>நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தமிழில் காந்தா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதற்கு முன் மிஸ்டர் பச்சன், கிங்டம் ஆகிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான லெனின் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1418c12-6644-442a-8870-7b1d20db1fa1/26-6a6f1439804db.webp' /></p><p></p><p>அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து <a href="https://www.youtube.com/watch?v=X0dE64F82gw&amp;t=1s" target="_blank">சேயோன் </a>திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்க, ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் ரசிகர்களிடையே அதீத எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.</p><h2>மனம் திறந்து பேசிய நடிகை</h2><p>

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தொகுப்பாளினி ஒரு வார்த்தை கேட்க, அதற்கு யார் சரியாக பொருந்திப்போவார் என்பதை நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் கூறி வந்தார். அப்போது, அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினி, 'ஒழுக்கம்' என கேட்க, நடிகர் சிவகார்த்திகேயன் என பாக்யஸ்ரீ கூறினார். இது ரசிகர்களிடையே பரவலாகி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c92c3b45-ef25-4382-a286-8740545cac80/26-6a6f143a39de9.webp' /></p>]]></content>
            <updated>2026-08-02T11:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை மீளத் திறப்பதில் உடன்பாடு இல்லை: ஈரான் மறுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/agreement-reopening-strait-of-hormuz-iran-denies-1785665591"></link>
            <id>https://ibctamil.com/article/agreement-reopening-strait-of-hormuz-iran-denies-1785665591</id>
            <summary type="text">உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணையின் நிலைமை தொடர்பாக சர்வதேச அளவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணையின் நிலைமை தொடர்பாக சர்வதேச அளவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.&nbsp;&nbsp;</p><p>இந்த நிலையில் <a href="https://ibctamil.com/article/body-of-missing-fisherman-recovered-negombo-1785656645" target="_blank">ஹோர்முஸ் நீரிணை</a>யை மீளத் திறப்பது தொடர்பில் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை என தெஹ்ரானின் பேச்சுவார்த்தைக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>ஈரான் மற்றும் ஓமான் இடையே ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக அமெரிக்கா மற்றும் கட்டார் முன்வைத்த யோசனைக்கு ஈரான் வெளிவிவகார அமைச்சர் இணக்கம் தெரிவித்ததாக இஸ்ரேலிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தது.&nbsp;</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>இருப்பினும் குறித்த செய்திகள்&nbsp; உண்மைக்குப் புறம்பானவை என்றும் அந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94aae65c-2944-45f0-ac6d-6b191060cbc7/26-6a6f2ae5800fa.webp' /></p><p>இதற்கிடையில், ஈரானிய இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டு்ள்ளது.</p><p>அதன்படி<a href="https://ibctamil.com/article/namal-says-mahara-unrest-not-isolated-event-1785646566?itm_source=article" target="_blank"> ஈரானின் புரட்சிகர காவல்படை</a>யுடன் ஒருங்கிணைப்பு மேற்கொள்ளாத எந்தவொரு கப்பலுக்கும் ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டே இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T11:39:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[படகு விபத்தில் காணாமல் போன ரொறன்ரோ தம்பதியின் உடல்கள் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/damaged-boat-found-two-people-missing-1785657424"></link>
            <id>https://canadamirror.com/article/damaged-boat-found-two-people-missing-1785657424</id>
            <summary type="text">கனடாவின் முஸ்கோக்கா பகுதியில் இடம்பெற்ற படகு மோதல் விபத்தொன்றில் காணாமல் போயிருந்த இருவரின் உடல்களையும் புலனாய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
உயிரிழந்தவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் முஸ்கோக்கா பகுதியில் இடம்பெற்ற படகு மோதல் விபத்தொன்றில் காணாமல் போயிருந்த இருவரின் உடல்களையும் புலனாய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
</p><p>உயிரிழந்தவர்கள் ரொறன்ரோவைச் சேர்ந்த 32 வயது ஆண் மற்றும் 30 வயது பெண் என பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.</p><p>
வெள்ளிக்கிழமை இரவு 10:40 மணியளவில், பேக்கன்ரிக் பே பகுதிக்கு அருகிலுள்ள ரொசோ ஏரியில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f250ee0a-6a1e-4686-8442-5e2ae40f21b5/26-6a6ef85272f70.webp' /></p><p>சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்தபோது, பலத்த சேதமடைந்த நிலையிலிருந்த படகு ஒன்று பாறை விளிம்பில் ஆபத்தான முறையில் சமநிலை இழந்து நின்றதை அவதானித்துள்ளனர்.
</p><p>விபத்து நடந்த இடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையை முன்னெடுத்தனர்.</p><p> சனிக்கிழமை பிற்பகலில் காணாமல் போன இருவரின் உடல்களும் மீட்கப்பட்டன.</p><p>
இச்சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், இது தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாகத் தங்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T11:38:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று காலைவரை நீடித்த மஹர சிறை கலவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahara-prison-riot-continues-until-morning-today-1785668968"></link>
            <id>https://ibctamil.com/article/mahara-prison-riot-continues-until-morning-today-1785668968</id>
            <summary type="text">நேற்று (02)மாலை நான்கு மணியளவில் மஹர சிறையில் தொடங்கிய கலவரம்,இன்று அதிகாலை ஐந்து அல்லது ஆறு மணி வரை நீடித்தது எனவும் தற்போது நிலைமை கட்டுப்பாட்டிற்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேற்று (02)மாலை நான்கு மணியளவில் மஹர சிறையில் தொடங்கிய கலவரம்,இன்று அதிகாலை ஐந்து அல்லது ஆறு மணி வரை நீடித்தது எனவும் தற்போது நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, அங்கு நிலைமை அமைதியாக உள்ளது எனவும் மேற்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று காலை (02) ஊடகங்களிடம் பேசிய சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர், சிறையில் உள்ள அனைத்து கைதிகளும் தற்போது பாதுகாப்பாக தங்கள் விடுதிகளுக்கு திரும்பிவிட்டனர் என்று கூறினார்.</p><h2>​​மஹர சிறையில் 4,100-க்கும் மேற்பட்ட கைதிகள்</h2><p>நேற்று (01) பிற்பகல் கலவரம் வெடித்தபோது, ​​மஹர சிறையில் 4,100-க்கும் மேற்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcaecf51-36bd-42ee-96d3-2c2c3cbe91b3/26-6a6f2a65cc5b4.webp' /></p><p>
</p><p>
இந்த நிலைமையால் கைதிகள் சிறையின் சொத்துக்களுக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்றும் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் மேலும் கூறினார்.</p><p></p><p>
</p><p>
</p><h2>ஏராளமான சொத்துக்கள் சேதம்</h2><p>அடுத்த சில மணிநேரங்களில் சிறையின் பாதுகாப்பை உறுதிசெய்த பிறகு, மஹர சிறையின் செயல்பாடுகள் இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ed0290a-37c4-4840-8749-94f02346544e/26-6a6f2a64ee00e.webp' /></p><p>


இவர்கள் சிறையில் இருந்த ஏராளமான சொத்துக்களைச் சேதப்படுத்தியுள்ளனர். நீர்கொழும்பு சம்பவத்தின் அனுபவத்தைக் கொண்டு,பாதுகாப்புப் படையினர் அனைவரும் ஒன்றிணைந்து,எந்தவொரு பெரிய அசம்பாவிதமும் இன்றி இந்தச் சூழ்நிலையைக் கையாண்டுள்ளனர். </p><p>அனைத்துக் கைதிகளும் பாதுகாப்பாகத் தங்களது விடுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

மேலும், அவர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் வழங்கப்படுகின்றன.

தற்போது நிலைமை அமைதியாக உள்ளது என மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T11:37:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும ஊழல் மோசடி ; பெண் உத்தியோகத்தர்கள் இருவர் விளக்கமறியலில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ashwesuma-corruption-scandal-two-female-officers-1785670650"></link>
            <id>https://jvpnews.com/article/ashwesuma-corruption-scandal-two-female-officers-1785670650</id>
            <summary type="text">அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த நிலையில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் உத்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த நிலையில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் உத்தியோகத்தர்களையும் எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p> </p><p></p><p>குறித்த சந்தேக நபர்கள் இன்று (02) காலை ஹட்டன் நீதிமன்ற பதில் நீதிவான் நாராயணன் பார்த்திபன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><h3>மேலதிக விசாரணை</h3><p> </p><p>

பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகளில் ஊழல் மற்றும் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகக் கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eacf5786-80a6-49bb-92ae-10b375c80089/26-6a6f2bfb8acbe.webp' /></p><p>கைது செய்யப்பட்ட 33 மற்றும் 30 வயதுடைய இரு பெண் உத்தியோகத்தர்களும் 2025 ஆம் ஆண்டு முதல் இதுவரை 29 இலட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாய் வரை மோசடி செய்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. </p><p>

நோர்வூட் பிரதேச செயலகத்தில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய இவ்விரு அரச ஊழியர்களுக்கும் எதிராகத் தொடர்ச்சியாகக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோனின் நேரடி அறிவுறுத்தலின் பேரில் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.</p><p> 

விசாரணைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இரு அதிகாரிகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டனர். </p><p>அவர்களில் ஒருவர் அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கும், மற்றொருவர் தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கும் இடமாற்றப்பட்டிருந்தனர்.</p><p> </p><p></p><p>அதன்பின்னர் நோர்வூட் பிரதேச செயலாளரினால் ஹட்டன் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், கடந்த வெள்ளிக்கிழமை (31) மாலை இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.</p><p>இச்சம்பவம் தொடர்பில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணிபுரியும் 30க்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்களிடம் இருந்து தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதுடன், உள்ளக கணக்காய்வு அதிகாரிகள் ஊடாகத் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. </p><p>

அத்துடன், அஸ்வெசும திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கணினிகளும் கணக்காய்வு அதிகாரிகளால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.</p><p> 

இச்சம்பவம் குறித்து ஹட்டன் விசேட குற்றவியல் விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T11:37:39+00:00</updated>
        </entry>
    </feed>
