<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-21T05:21:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளியில் செல்ல வேண்டாம் - பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heat-advisory-issued-to-08-districts-today-1784610589"></link>
            <id>https://tamilwin.com/article/heat-advisory-issued-to-08-districts-today-1784610589</id>
            <summary type="text">வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களின் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெப்ப நிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.அந்த வகையில் கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களின் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெப்ப நிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>அந்த வகையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் அதிக வெப்பநிலை நிலவக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

இதனால், பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது சில இடங்களில் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>சுகாதாரப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை</h2><p> கடும் வெப்பத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்காக போதுமானளவு தண்ணீர் அருந்துதல், வெப்பமான நேரங்களில் கடுமையான வெளிப்புறச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் போன்ற சுகாதாரப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p>அத்துடன் வெயில் அதிகமாகவுள்ள பகல் நேரப்பகுதியில் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோய்த்தாக்கம் உள்ளவர்கள் வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T05:20:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[துறைமுகத்தில் கைவிடப்பட்டுள்ள கோடிக்கணக்கான மதிப்புள்ள வாகனங்கள்! சிக்கலில் இறக்குமதியாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicles-worth-crores-abandoned-at-the-port-1784600524"></link>
            <id>https://tamilwin.com/article/vehicles-worth-crores-abandoned-at-the-port-1784600524</id>
            <summary type="text">ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு விதிக்கப்படும் அதிகப்படியான தடுத்துவைப்பு கட்டணங்கள் காரணமாக இறக்குமதியாளர்கள் இறக்குமதி ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு விதிக்கப்படும் அதிகப்படியான தடுத்துவைப்பு கட்டணங்கள் காரணமாக இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1000 சொகுசு கார்களை விடுவிக்காமல் இருப்பதாக இலங்கை சுங்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சுமார் 40,000 இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன.</p><p></p><h2>மறு ஏற்றுமதிக்கான வாகனங்கள்&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
இவை மறு ஏற்றுமதி மற்றும் போர் காரணமாக துபாய் போன்ற நாடுகளுக்கு அனுப்ப முடியாததால் இந்த வாகனங்களில் பெரும்பாலானவை இறக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/112903cf-0a1d-4eda-b514-48e716e65a83/26-6a5f006573a28.webp' /></p><p><span style="font-size: 14px;">இதேவேளை, மறுஏற்றுமதிக்காக ஹம்பாந்தோட்டைக்கு வரும் வாகனங்களும் தடுத்துவைப்பு கட்டண சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</span></p><p>
கடந்த சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு இறக்குமதி செய்து ஹம்பாந்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தியிருந்த, சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சொகுசு காரை விடுவிக்க முயன்றபோது, ​​இலங்கை இறக்குமதியாளர் கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் தடுத்துவைப்பு கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளார் என்று சுங்கத்துறை தெரிவித்துள்ளது.</p><h2>சீன நிறுவனத்திற்கு மாற்றப்பட்ட&nbsp;நிர்வாகம் </h2><p>
</p><p>
இந்த தடுத்துவைப்பு கட்டணத்துடன், வாகனத்தின் விலை தற்போது 7 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும்,
வாகனத்தின் விலை அதன் உண்மையான விலையை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும் சுங்கத்துறை அதிகாரி கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/117bb654-9fd1-4fbb-977e-a84bae7b047c/26-6a5f0066495a8.webp' /></p><p>
</p><p>
அதிகப்படியான தடுத்துவைப்பு கட்டணம் காரணமாக வாகனத்தை விடுவிக்கும் முயற்சியை இறக்குமதியாளர் பலர் கைவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்வாகம் ஒரு சீன நிறுவனத்திற்கு மாற்றப்பட்ட பின்னரே இந்த நிலைமை ஏற்பட்டதாகவும் சுங்கத்துறை அதிகாரி கூறியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T05:15:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் உள்துறைச் செயலராக ஷபானா மஹ்மூத்... மக்கள் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/shabana-mahmood-retained-as-uk-home-secretary-1784610272"></link>
            <id>https://news.lankasri.com/article/shabana-mahmood-retained-as-uk-home-secretary-1784610272</id>
            <summary type="text">பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆட்சியில் உள்துறைச் செயலராக பொறுப்பு வகித்த ஷபானா மஹ்மூதே, புதிய பிரதமரான ஆன்டி பர்னாம் அமைச்சரவையிலும் உள்துறைச் செயலராக நீட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆட்சியில் உள்துறைச் செயலராக பொறுப்பு வகித்த ஷபானா மஹ்மூதே, புதிய பிரதமரான ஆன்டி பர்னாம் அமைச்சரவையிலும் உள்துறைச் செயலராக நீடிக்கிறார்.</p><h3>

ஷபானா வெளியிட்டுள்ள செய்தி</h3><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9f897f3-9a8e-4c4d-bd87-02b89993451e/26-6a5efde19ca3a.webp' /></p><p>ஆன்டி பர்னாம் அமைச்சரவையிலும் தான் உள்துறைச் செயலராக நீடிப்பது உறுதியானதைத் தொடர்ந்து சமூக ஊடகம் ஒன்றில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள ஷபானா, ஆன்டி பர்னாம் அமைச்சரவையிலும் உள்துறைச் செயலராக நீடிப்பதை தான் கௌரவமாகக் கருதுவதாக தெரிவித்துள்ளார்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fshabanamahmoodforladywood%2Fposts%2Fpfbid027B95Eu2P3B3QqEHcwTqy7R3ML9AGutnr6p3xpm5nDmerE9axjqNS9da2tqmuWdLBl&show_text=true&width=500" width="500" height="660" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p>


மேலும், என் கருத்து ஒருதலைப்பட்சமாக இருக்கலாம், ஆனால் இந்தத் துறையிலேயே இதுதான் சிறந்த வேலை என்றும் குறிப்பிட்டுள்ள ஷபானா, நமது தெருக்களைப் பாதுகாப்பானவையாகவும், நமது புலம்பெயர்தல் அமைப்பை அனைவருக்கும் நியாயமானதாகவும் மாற்றுவதற்கான பெரும் சீர்திருத்தப் பணியை நாம் தொடங்கியுள்ளோம். இப்போது அந்த வேலையை நாம் முடிப்போம் என்றும் கூறியுள்ளார்.</p><p>
ஆன்டி பர்னாம் அமைச்சரவையில் ஷபானா மஹ்மூதுக்கு சேன்ஸலர் பதவி கொடுக்கப்படலாம் என பிரித்தானிய ஊடகங்கள் எழுதிவந்தன.
</p><p>
அத்துடன், எரிசக்திச் செயலரான எட் மிலிபேண்ட், முன்னாள் சுகாதாரச் செயலரான வெஸ் ஸ்ட்ரீட்டிங், வெளியுறவுச் செயலரான யெவட் கூப்பர் என பலரது பெயர்கள் அடிபட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக, பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த ஜான் ஹீலியை சேன்ஸலராக்கியுள்ளார் ஆன்டி பர்னாம்.&nbsp;</p><p></p><p>
இதற்கிடையில், ஆன்டி பர்னாம் அமைச்சரவையிலும் தான் உள்துறைச் செயலராக நீடிப்பது குறித்து ஷபானா வெளியிட்டுள்ள செய்தியின் கீழ் கருத்து தெரிவித்துள்ளவர்கள், ஷபானா, நீங்கள் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் விடயத்தில் எடுத்த நடவடிக்கைகள் நியாயமானவை.
</p><p>
ஆனால், நீங்கள் சட்டப்படி புலம்பெயர்ந்தோரை அங்கீகரிக்கவில்லை. மீண்டும் உள்துறைச் செயலராக பொறுப்பேற்றுள்ள நீங்கள், அவர்கள் பிரித்தானியாவுக்கு அளித்துவரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்னும் ரீதியில் கருத்து தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T05:14:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் பிரதான சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspect-arrested-with-ice-drugs-ampara-1784609984"></link>
            <id>https://tamilwin.com/article/suspect-arrested-with-ice-drugs-ampara-1784609984</id>
            <summary type="text">அம்பாறை உகண புறநகர் பகுதியில் சுமார் 3050 கிராம் &#039;ஐஸ்&#039;
போதைப்பொருளுடன் பிரதான கடத்தல்காரர் இன்று(21) காலை பொலிஸாரினால் கைது
செய்யப்பட்டுள்ளார்.

க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை உகண புறநகர் பகுதியில் சுமார் 3050 கிராம் 'ஐஸ்'
போதைப்பொருளுடன் பிரதான கடத்தல்காரர் இன்று(21) காலை பொலிஸாரினால் கைது
செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கைதான சந்தேக நபர் வசம் இருந்து ஐஸ் போதைப்பொருள் விற்பனை மூலம்
சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 39000 ரூபா,ஒரு மின்னணு தராசு மற்றும்
ஒரு கைபேசி இதர பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக&nbsp;</h2><p>
</p><p>
சந்தேகநபரின் வீடு உகண பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. எனினும்
அவர் மாலிகா தென்ன பகுதியில் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இந்த
போதைப்பொருள் கடத்தலை நடத்தி வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5848c49-ff86-413e-a7a1-b99d58b09eac/26-6a5efffed821b.webp' /></p><p>கைது செய்யப்பட்டவர் ஒரு தீவிர போதைப்பொருள் அடிமை எனவும் இவருடைய தந்தை ஒரு
ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக உகண பொலிஸ்
நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p>

இச்சோதனை நடவடிக்கையில் அம்பாறை மாவட்டப் பொறுப்பு பிரதி பொலிஸ் மா அதிபர்
சுஜித் வேடமுல்ல மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார
கஸ்தூரி ஆராச்சி ஆகியோரின் வழிகாட்டலில் ஊழல் ஒழிப்புப் பிரிவினர் உள்ளிட்ட
விசேட பொலிஸ் குழுவினர் முன்னெடுத்திருந்தனர்.
</p><p>
அத்துடன் உகண பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதம பொறுப்பதிகாரி சுமித் குணவர்தன
தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T05:13:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[192,641 அரச ஊழியர்களுக்கு கிடைத்த திருத்தப்பட்ட ஓய்வூதியம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/revised-pension-for-192-641-government-employees-1784608589"></link>
            <id>https://ibctamil.com/article/revised-pension-for-192-641-government-employees-1784608589</id>
            <summary type="text">2019 ஜனவரி 1 அல்லது அதற்கு முன்னர் ஓய்வுபெற்ற 192,641 அரச ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட ஓய்வூதியப் பலன்கள் தற்போது முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக ஓய்வூதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019 ஜனவரி 1 அல்லது அதற்கு முன்னர் ஓய்வுபெற்ற 192,641 அரச ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட ஓய்வூதியப் பலன்கள் தற்போது முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக ஓய்வூதியத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சாமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.</p><p>2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்ட அரசாங்க ஓய்வூதிய திருத்தத் திட்டத்தின் கீழ்&nbsp; ஓய்வூதியங்களை மறுசீரமைக்கும் நடவடிக்கை 2026 ஜூலை 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.</p><p>அதன் முக்கிய கட்டமாக, 2026 ஜூலை 10 ஆம் திகதியன்று இடம்பெற்ற ஓய்வூதியக் கொடுப்பனவு நாளுக்குள், தகுதி பெற்ற 192,641 ஓய்வூதியதாரர்களுக்கு திருத்தப்பட்ட ஓய்வூதியத் தொகைகளை வெற்றிகரமாக வழங்கி முடித்துள்ளதாக ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>ஓய்வூதியத் திணைக்களம்</h2><p> </p><p>இன்னும் திருத்தப்பட்ட பலன்களைப் பெற வேண்டியுள்ள ஏனைய தகுதியுடைய ஓய்வூதியதாரர்களுக்கான நடவடிக்கைகளும் தற்போது விரைவாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a02b148c-47d6-4e53-a625-53c622e6ecef/26-6a5effba8e11c.webp' /></p><p>
</p><p>
ஓய்வூதியதாரர்களுக்கு மேலும் திறமையான, ஒழுங்குமுறைப்பட்ட மற்றும் தரமான சேவையை வழங்கும் நோக்கில் திணைக்களத்தின் அனைத்து பணியாளர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக சுட்டிக்காட்டினார்.</p><p>இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுக்க ஓய்வூதியதாரர்கள் வெளிப்படுத்தும் பொறுமை மற்றும் ஒத்துழைப்பை திணைக்களம் பாராட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T05:13:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கால்கள் மடித்து அமர்ந்திருக்கும் எலும்புக்கூடு - கொன்று புதைக்கப்பட்ட மனிதர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/skeleton-sitting-criss-cross-in-chemmani-graves-1784609933"></link>
            <id>https://ibctamil.com/article/skeleton-sitting-criss-cross-in-chemmani-graves-1784609933</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழாய்வு பணிகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் கண்காணிப்பில்&amp;nbsp;முன்னெடுக்கப்படுகின்றது.செம்மணி புதைகுழியிலிருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழாய்வு பணிகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் கண்காணிப்பில்&nbsp;முன்னெடுக்கப்படுகின்றது.</p><p>செம்மணி புதைகுழியிலிருந்து இதுவரை வெளிப்பட்ட மொத்த மனித என்புக்கூடுகளின் எண்ணிக்கை 446 ஆக உயர்ந்துள்ளது. </p><p>இதில் 434 என்புக்கூடுகள் இதுவரை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>புதைக்கப்பட்ட மனித எலும்புக்கூடு</h2><p>இந்நிலையில், சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மனித எலும்பு கூடொன்று கால்கள் மடித்து செங்குத்தாக அமர்ந்திருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb06a389-962f-4ab2-9405-8f7803c83868/26-6a5f017073c34.webp' /></p><p>இதேபோன்ற நிலையில் புதைக்கப்பட்ட மனித எலும்புக்கூடு கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாம் கட்ட அகழாய்விலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>அந்தவகையில், செங்குத்தாக அமர்ந்திருந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதி தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீட பீடாதிபதியுடன் கலந்துரையாடி, பேராசிரியர் ராஜ்சோமதேவாவின் அபிப்பிராஜங்களை கேட்ட பின் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T05:09:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[குரு–சூரியன் சேர்க்கையால் உருவான சிவ ராஜயோகம் - உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 3 ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/jupiter-sun-make-shiv-rajyog-who-get-huge-luck-1784607702"></link>
            <id>https://manithan.com/article/jupiter-sun-make-shiv-rajyog-who-get-huge-luck-1784607702</id>
            <summary type="text">ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மாறுவதுடன், பிற கிரகங்களுடன் இணைந்து பல்வேறு சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகின்றன. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மாறுவதுடன், பிற கிரகங்களுடன் இணைந்து பல்வேறு சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகின்றன. இந்த யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும் என்று நம்பப்படுகிறது.
</p><p>அந்தவகையில், தற்போது தேவர்களின் குருவாகக் கருதப்படும் குரு பகவான் கடக ராசியில் பயணித்து வருகிறார். அதேவேளை, கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படும் சூரியனும் சமீபத்தில் கடக ராசியில் நுழைந்துள்ளார். இதன் விளைவாக, குரு–சூரியன் சேர்க்கையால் சிவ ராஜயோகம் உருவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0796596-a46d-40a9-8f4b-ea4c940f7be0/26-6a5ef7b6b80ca.webp' /></p><p>
</p><p>
ஜோதிடத்தில் மங்களகரமான யோகங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த சிவ ராஜயோகம், மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், தனிப்பட்ட வாழ்க்கை, நிதி நிலை, தொழில், கல்வி என அனைத்திலும் அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e0eeff0-c17c-4b3e-8db3-dc28183ca8e5/26-6a5ef7b7732a7.webp' /></p><p>குரு மற்றும் சூரியன் இணைவால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம், மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். குறிப்பாக நிதி நிலையில் ஏற்றம் உண்டாகும்.</p><p>நீண்ட காலமாக புதிய வீடு அல்லது வாகனம் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தால், அது இந்த காலகட்டத்தில் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. </p><p>பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளின் முழு ஆதரவும் பாராட்டும் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். தொழில் மற்றும் வியாபாரம் செய்து வருபவர்களுக்கு நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும் வாய்ப்பு உள்ளது.</p><h2>கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b480d27-e391-4761-8fc2-8bb3309c7e99/26-6a5ef7b823927.webp' /></p><p>

குரு மற்றும் சூரியன் சேர்க்கையால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம், கடக ராசிக்காரர்களுக்கு பல சாதகமான பலன்களை வழங்கும். </p><p>நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வேலை கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகும். தன்னம்பிக்கை அதிகரித்து, எந்த செயலிலும் உற்சாகமாக செயல்படுவீர்கள்.</p><p> தொழிலில் புதிய முன்னேற்றங்களும், வளர்ச்சிக்கான வாய்ப்புகளும் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு அல்லது முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.</p><h2>விருச்சிகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32d93a51-eef7-45a1-a4cf-44685b2c8060/26-6a5ef7b8c8b9a.webp' /></p><p></p><p>

குரு மற்றும் சூரியன் உருவாக்கியுள்ள சிவ ராஜயோகம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை வழங்கும். </p><p>குறிப்பாக வெளிநாடுகளுடன் தொடர்புடைய தொழில் அல்லது வியாபாரம் செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். போட்டித் தேர்வுகளுக்காக தீவிரமாக தயாராகும் மாணவர்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.</p><p> முதலீடுகள் மூலம் நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக தாமதமாகி வந்த பணிகள் சுமுகமாக முடிவடைந்து மனநிம்மதியை அளிக்கும். புதிய வாய்ப்புகள் உருவாகி, தொழில் மற்றும் நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> </a><b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T05:05:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர்ந்து உயர்ந்த தங்க விலை... சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/today-july-21st-gold-and-silver-price-in-chennai-1784609458"></link>
            <id>https://ibctamilnadu.com/article/today-july-21st-gold-and-silver-price-in-chennai-1784609458</id>
            <summary type="text">&amp;nbsp;தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் அதிரடியாக சரிந்த தங்கம் விலை, அதன் பின்னர் சற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் அதிரடியாக சரிந்த தங்கம் விலை, அதன் பின்னர் சற்று நிலைத்திருந்தாலும், இடையிடையே சிறிய மாற்றங்களை சந்தித்தது.</p><p> குறிப்பாக கடந்த வாரத்தில் ஒரே நாளில் காலை மற்றும் மாலை என இரண்டு முறை விலை மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அதன் பிறகு தொடர்ந்து சரிவை பதிவு செய்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/334891db-f439-4001-8568-a4b4aeed2b65/26-6a5efdbf36300.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை மீண்டும் உயர்வை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.

நேற்று முன்தினம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,135-க்கும் விற்பனை செய்யப்பட்டது. </p><p>அதேபோல், சவரனுக்கு ரூ.280 உயர்வுடன் ஒரு சவரன் ரூ.1,05,080-க்கு விற்பனையானது.

அதைத் தொடர்ந்து நேற்று (ஜூலை 20) தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,150-க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த உயர்வு இன்று (ஜூலை 21) மேலும் வேகமடைந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87090a74-6747-4e2b-bc60-89251eeb103d/26-6a5efdbfe6235.webp' /></p><h2>இன்றை நிலவரம்</h2><p>இன்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,220-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. </p><p>அதேபோல், சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,05,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கம் விலை

22 காரட் தங்கத்தைப் போலவே 18 காரட் தங்கத்தின் விலையும் இன்று உயர்ந்துள்ளது.</p><p>கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,035-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.88,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/defac7f7-b624-4514-8509-bf8fe9d4ccb6/26-6a5efdc0af938.webp' /></p><p>
</p><p>
வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலையிலும் இன்று உயர்வு பதிவாகியுள்ளது.ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.5 உயர்ந்து ரூ.240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதனால், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,40,000 ஆக உயர்ந்துள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T05:04:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கோப்பை வெற்றி கொண்டாட்டத்தில் 13 வயது சிறுவனுக்கு நேரந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fate-boy-during-the-world-cup-victory-celebration-1784610079"></link>
            <id>https://jvpnews.com/article/fate-boy-during-the-world-cup-victory-celebration-1784610079</id>
            <summary type="text">ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டத்தை வென்றதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டத்தை வென்றதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாகமாக வெற்றியைக் கொண்டாடினர்.</p><p>

இதன் ஒரு பகுதியாக, ஸ்பெயினின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சியுடாட் ரோட்ரிகோ நகரின் ஆர்போல் கோர்டோ நீரூற்று அருகே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3b63d8a-ede0-41f0-ace4-50325bdbbb3b/26-6a5efd2069bd8.webp' /></p><p>திங்கட்கிழமை அதிகாலை கொண்டாட்டங்கள் உச்சத்தை எட்டியபோது, பலர் நீரூற்றின் மேல் பகுதியில் ஏறி நின்றதால் அதன் மேல்தளம் திடீரென இடிந்து விழுந்தது. </p><p>இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 13 வயது சிறுவன், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட வழியிலேயே உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்தைத் தொடர்ந்து சியுடாட் ரோட்ரிகோ நகர மன்றம், உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.</p><p>மேலும், உயிரிழப்புக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நகரில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், மாநகரக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த துயர சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-21T05:01:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல நடிகர் சதீஷின் தந்தை காலமானார்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actor-sathish-father-passed-away-1784609404"></link>
            <id>https://cineulagam.com/article/actor-sathish-father-passed-away-1784609404</id>
            <summary type="text">தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து இன்று ஹீரோவாக மாறியுள்ளார் சதீஷ். இவர் கத்தி, எதிர்நீச்சல், கான்ஜுரிங் கண்ணப்பன், நாய் சேகர் உள்ளிட்ட ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து இன்று ஹீரோவாக மாறியுள்ளார் சதீஷ். இவர் கத்தி, எதிர்நீச்சல், கான்ஜுரிங் கண்ணப்பன், நாய் சேகர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.</p><h2>சதீஷின் தந்தை காலமானார்</h2><p>
</p><p>
இந்த நிலையில், நடிகர் சதீஷின் தந்தை காலமானார். இதையடுத்து அவருடைய உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed17d185-3c09-4c8f-9dda-d4ab691623d3/26-6a5efa7f46e33.webp' /></p><p></p><p>

சதீஷின் தந்தையின் மறைவிற்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1d46f46-8d7f-43d4-abdf-ad159c0a1b91/26-6a5efa7ff0cf2.webp' /></p><p>இந்த நிலையில், பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும், தனது இரங்கலை எக்ஸ் தளத்திலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T05:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[குட்டிமணி மற்றும் தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா ஏற்பாட்டாளருக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ceremony-of-kuttimani-and-thangadurai-court-order-1784609303"></link>
            <id>https://tamilwin.com/article/ceremony-of-kuttimani-and-thangadurai-court-order-1784609303</id>
            <summary type="text">குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழாவினை ஏற்பாடு செய்திருந்த கந்தசாமி சதீஸ்,
நேற்று வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழாவினை ஏற்பாடு செய்திருந்த கந்தசாமி சதீஸ்,
நேற்று வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.</p><p>வெலிக்கடை சிறைக்கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்
(ரெலோ) முன்னாள் தலைவர் தங்கத்துரை மற்றும் முன்னாள் செயலதிபர் குட்டிமணி
ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழாவை ஏற்பாடு இடம்பெற்று வருகின்றன.</p><p></p><h2>உருவச்சிலைகளைத் திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள்&nbsp;</h2><p>வல்வெட்டித்துறையில் எதிர்வரும் 25 ஆம் திகதி மேற்படி உருவச்சிலைகளைத் திறந்து
வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fabd20f-83bc-4963-b295-7d5d10686359/26-6a5efa18c81ad.webp' /></p><p>இதன்போது, ஏற்பாட்டுக்குழுவில்
ஒருவரான வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உப தவிசாளர் கந்தசாமி சதீஸ்,
பொலிஸாரால் நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டு தமிழீழ விடுதலைப்புலிகளை
மீளுருவாக்கம் செய்ய முற்பட்டார் என குற்றம்சுமத்தப்பட்டு அவர் கைது
செய்யப்பட்டிருந்தார்.</p><p>இதனையடுத்து அவர், பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை நீதிவான் பிணையில் விடுவித்து நாளை
புதன்கிழமை வரை வழக்கை ஒத்திவைத்துள்ளார்.</p><h2>ஏற்பாடுகளுக்கும் தடை</h2><p> </p><p>அதேவேளை, நாளை வரை உருவச்சிலை திறப்பு
விழா ஏற்பாடுகளுக்கும் நீதிவான் தடை விதித்துள்ளார்.</p><p>1983 ஆம் ஆண்டு ஜூலை வன்முறையின் போது, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து
வைக்கப்பட்டிருந்த தங்கத்துரை மற்றும் குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழ் அரசியல்
கைதிகள் சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளால் படுகொலை செய்யப்பட்டமை இலங்கை
வரலாற்றில் ஒரு கறுப்புப் பக்கமாகும். இந்த வரலாற்று நிகழ்வை முன்னிறுத்தி
முன்னெடுக்கப்படும் சிலை திறப்பு விழா ஏற்பாடுகளால் தற்போது பரபரப்பு
ஏற்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p><p><br></p><p>.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T04:52:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[11 நிறுவனங்களுக்கு இலங்கை மத்திய வங்கி விதித்த கோடிக்கணக்கான அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cbsl-imposes-rs-1-46-crore-fine-on-11-companies-1784606140"></link>
            <id>https://ibctamil.com/article/cbsl-imposes-rs-1-46-crore-fine-on-11-companies-1784606140</id>
            <summary type="text">11 அறிக்கையிடல் நிறுவனங்களுக்கு மொத்தம் 1.46 கோடி ரூபாய் நிர்வாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் நிதி உளவறிதல் பிரிவு அறிவித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>11 அறிக்கையிடல் நிறுவனங்களுக்கு மொத்தம் 1.46 கோடி ரூபாய் நிர்வாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் நிதி உளவறிதல் பிரிவு அறிவித்துள்ளது.</p><p>2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதிக் கொடுக்கல் வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தின் விதிகளை மீறியமைக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p>
பணமோசடி எதிர்ப்பு மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பதைக் தடுப்பதற்கான இலங்கையின் ஒழுங்குமுறை அமைப்பாகச் செயற்படும் நிதி உளவறிதல் பிரிவு, கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் 2026 ஆம் ஆண்டு மார்ச் வரையிலான காலப்பகுதியில் இந்த சட்டத்தின் 19(1) மற்றும் 19(2) பிரிவுகளின் கீழ் இந்த அபராதங்களை விதித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>மத்திய வங்கி உறுதி</h2><p>
குறிப்பிட்ட நிறுவனங்களில் கண்டறியப்பட்ட விதிமீறல்களின் தன்மை மற்றும் தீவிரத்தன்மையின் அடிப்படையிலேயே இந்த அபராதத் தொகை தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f484fe25-b219-4fe9-bab3-fadc7fcaae9d/26-6a5ef40363eaf.webp' /></p><p>
</p><p>இந்த நிலையில் அபராதமாக வசூலிக்கப்பட்ட அனைத்துத் தொகையும், திரட்டிய நிதியத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>
அறிக்கையிடல் நிறுவனங்களிடையே சட்ட இணக்கப்பாட்டை வலுப்படுத்துவதற்கும், இலங்கையின் நிதியியல் அமைப்பின் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதற்குமான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T04:51:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் ; ஈரானை குறிவைக்கும் டிரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tensions-in-strait-of-hormuz-trump-targets-iran-1784609296"></link>
            <id>https://canadamirror.com/article/tensions-in-strait-of-hormuz-trump-targets-iran-1784609296</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் ஈரானின் திறனை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கில், ஈரானுக்கு எதிராக புதிய தாக்குதல்களைத் தொடங்கியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் ஈரானின் திறனை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கில், ஈரானுக்கு எதிராக புதிய தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
</p><p>
அமெரிக்கா தொடர்ந்து 10-ஆவது நாளாக இந்தத் தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.</p><p> சமீபத்தில் ஜோர்தான் மற்றும் ஈராக்கில் நடைபெற்ற தாக்குதல்களில் மூன்று அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அதற்கு பதிலடியாக இந்த இராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c36f43e-4742-4dcb-ab28-28890e988357/26-6a5efa1229bc2.webp' /></p><p>இந்தச் சம்பவத்தையடுத்து, ஈரான் தனது நடவடிக்கைகளுக்கு "கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருந்தார். </p><p>அதனைத் தொடர்ந்து, ஈரானின் இராணுவத் தளங்கள் மற்றும் தகவல் தொடர்பு மையங்களை இலக்கு வைத்து அமெரிக்கா பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது.
</p><p>
மறுபுறம், பஹ்ரைன், ஜோர்தான் மற்றும் சிரியாவில் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. </p><p>மேலும், அமெரிக்காவுடன் தமது நாடு தற்போது "பெரிய அளவிலான போரில்" ஈடுபட்டுள்ளதாக ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
</p><p>
பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ள நிலையில், ஜோர்தான் தனது வான்வெளிக்குள் நுழைந்த மூன்று ஈரானிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p> அதேபோல், குவைத் இராணுவமும் ஈரானிய ட்ரோன்களை இடைமறித்து செயலிழக்கச் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
</p><p>
இதனிடையே, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு எண்ணெய் தாங்கி கப்பல்கள் வெடித்துச் சிதறியதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. </p><p>எனினும், இந்தக் குற்றச்சாட்டை அமெரிக்க மத்திய கட்டளைப் பீடம் (CENTCOM) மறுத்து, அத்தகைய தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளது.</p><p>

இதனால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை மேலும் பதற்றமடைந்துள்ளதுடன், சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் பாதுகாப்பு குறித்த கவலைகளும் அதிகரித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-21T04:48:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களுக்கு அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/application-period-for-gce-ol-examination-1784607462"></link>
            <id>https://tamilwin.com/article/application-period-for-gce-ol-examination-1784607462</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களுக்கு விசேட அறிவிப்பொன்றை பரீட்சைகள் திணைக்களம் வழங்கியுள்ளது.அதன்படி பரீட்சைக்கு விண...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களுக்கு விசேட அறிவிப்பொன்றை பரீட்சைகள் திணைக்களம் வழங்கியுள்ளது.</p><p>அதன்படி பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலம் எதிர்வரும் 23ஆம் திகதியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p></p><h2>தேசிய அடையாள அட்டை</h2><p>
</p><p>
தேசிய அடையாள அட்டை இல்லாமை ஒரு தடையாக இருக்காது என்பதால், அனைத்து விண்ணப்பதாரர்களும் அதற்கு முன் விண்ணப்பிக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
</p><p>
விண்ணப்பதாரர்கள் பரீட்சை அறிவித்தலில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a69c7b1-c950-4a6b-82e9-d74bb2e49218/26-6a5ef9ca96663.webp' /></p><h2>இறுதித் திகதி நீடிக்கப்பட மாட்டாது&nbsp;</h2><p>
</p><p>
எந்த காரணம் கொண்டும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி நீடிக்கப்பட மாட்டாது என்றும் பரீட்சைகள் திணைக்களம் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.
</p><p>
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் அல்லது சந்தேகங்களுக்கு 1911 என்ற துரித சேவை இலக்கம் மற்றும் 0112784537, 0112786616, 0112784208 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அல்லது 0112784422 என்ற தொலைநகல் இலக்கம் ஊடாக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் எனப் பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T04:47:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[துணிவிருந்தால் தேர்தலை உடனே நடத்துங்கள்! அரசுக்கு கம்மன்பில பகிரங்க சவால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/election-immediately-gammanpila-s-open-challenge-1784607057"></link>
            <id>https://tamilwin.com/article/election-immediately-gammanpila-s-open-challenge-1784607057</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீதான மக்கள் நம்பிக்கை 75 சதவீதம்
உயர்வடைந்துள்ளது என்று மாற்றுக்கொள்கைக்கான கேந்திர நிலையம் வெளியிட்டுள்ள
அறிக்கை முற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீதான மக்கள் நம்பிக்கை 75 சதவீதம்
உயர்வடைந்துள்ளது என்று மாற்றுக்கொள்கைக்கான கேந்திர நிலையம் வெளியிட்டுள்ள
அறிக்கை முற்றிலும் போலியானது என்று பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்
முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் நேற்று(20.07.2026) நடைபெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p></p><h2>அரசின் வாக்கு வங்கி சடுதியாக வீழ்ச்சி</h2><p>
இது குறித்து உதய கம்மன்பில மேலும் கூறுகையில், "22 மில்லியன் மக்கள் தொகையைக்
கொண்ட இலங்கையில், வெறும் 1240 பேரை மட்டும் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த
ஆய்வு, ஒட்டுமொத்த நாட்டு மக்களின் கருத்தைப் பிரதிபலிக்காது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2769ae9-fa44-426a-b265-7f34d7ee0e6d/26-6a5ef4b1b4d0c.webp' /></p><p>தேசிய அளவில்
பாதிப்பு ஏற்படுத்தும் ஒரு விடயத்தை இவ்வளவு சிறிய மாதிரி அளவுடன் மதிப்பீடு
செய்வது ஏற்புடையதல்ல" என்று சுட்டிக்காட்டினார்.&nbsp;</p><p>தேசிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கி குறித்த தரவுகளை அவர் முன்வைத்தார்.
</p><p>
*2024 ஜனாதிபதித் தேர்தல்: 42வீத வாக்குகள்.</p><p>
* பொதுத்தேர்தல்: 62வீத வாக்குகள்.
</p><p>* 2025 மே மாத உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: 43வீத வாக்குகள்.&nbsp;</p><p>ஆட்சிக்கு வந்து ஆறு மாத காலத்துக்குள்ளேயே அரசின் வாக்கு வங்கி சடுதியாக
வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதாரப் பாதிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு
உயர்வால் மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கும் சூழலில், இத்தகைய சாதகமான
அறிக்கையை வெளியிடுவது நகைப்புக்குரியது" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்து உரையாற்றிய அவர், "ஜனாதிபதி மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும்
இந்த அமைப்பு, மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு அரசுக்கு அழுத்தம்
கொடுக்க வேண்டும். அப்போதுதான் உண்மையான மக்கள் தீர்ப்பு வெளியாகும், மக்கள்
சரியான தீர்மானத்தை எடுப்பார்கள்" என்று சவால் விடுத்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T04:47:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[முழங்கால் வரை முடி வளர உதவும் நெல்லிக்காய் எண்ணெய்.., எப்படி தயாரிப்பது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/home-made-hair-oil-for-hair-growth-in-tamil-1784608946"></link>
            <id>https://news.lankasri.com/article/home-made-hair-oil-for-hair-growth-in-tamil-1784608946</id>
            <summary type="text">நெல்லிக்காய் உடலுக்கு மட்டுமின்றி முடிக்கும் நன்மை பயக்கும், இதில் வைட்டமின் சி அதிகம் காணப்படுகிறது.

வைட்டமின் சி முடிக்கு இன்றியமையாத ஊட்டச்சத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெல்லிக்காய் உடலுக்கு மட்டுமின்றி முடிக்கும் நன்மை பயக்கும், இதில் வைட்டமின் சி அதிகம் காணப்படுகிறது.
</p><p>
வைட்டமின் சி முடிக்கு இன்றியமையாத ஊட்டச்சத்து என்பதால் நெல்லிக்காய் எண்ணெய் முடி ஆரோக்கியத்துக்கு நல்லது.</p><p>இதில் நிறைந்துள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மயிர்க்கால்களைத் தூண்டி, முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், முடி உதிர்வைக் குறைக்கவும் உதவுகின்றன.</p><p>அந்தவகையில், முழங்கால் வரை முடி வளர உதவும் நெல்லிக்காய் எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.</p><p></p><h2>
தேவையான பொருட்கள்</h2><ul><li>

நெல்லிக்காய்- 10
</li><li>தேங்காய் எண்ணெய்- 2 கப்
</li></ul><h2>
எப்படி தயாரிப்பது?</h2><p>
முதலில் நெல்லிக்காயை நன்கு கழுவி அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
</p><p>
பின் அடுப்பில் ஒரு இரும்பு வாணல் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து கொதிக்கவைக்கவும்.
</p><p>
அடுத்து இதில் நெல்லிக்காய் அரைத்த சாற்றை சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவைக்கவும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d60a4bfd-6d02-41d5-82a7-cf86faf31b49/26-6a5ef8b449a87.webp' /></p><p>இதற்கடுத்து எண்ணெய் நன்கு நிறம் மாறி வந்ததும் அடுப்பை அனைத்து எண்ணெய் ஆறியதும் இதனை வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
</p><p>
நெல்லிக்காய் எண்ணெயை உள்ளங்கையில் ஊற்றி, இரண்டு கைகளாலும் தேய்த்து முடியின் வேர் முதல் நுனி வரை நன்றாக தடவவும்.
</p><p>
பின்னர் 10 நிமிடங்கள் வரை மெதுவாக மசாஜ் செய்து ஊறவிட்டு கூந்தலை மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T04:45:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் ஏற்க முடியாத நடத்தை... 50 சதவீதம் வரி விதித்த ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-slaps-50-per-cent-tariffs-1784609203"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-slaps-50-per-cent-tariffs-1784609203</id>
            <summary type="text">அமெரிக்கக் கார்கள், பால் பொருட்கள் மற்றும் மதுபானங்கள் மீதான கனடாவின் சமமற்ற நடத்தையை சுட்டிக்காட்டி, அதிரடியாக 50 சதவீதம் வரி விதித்துள்ளார் டொனால்ட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கக் கார்கள், பால் பொருட்கள் மற்றும் மதுபானங்கள் மீதான கனடாவின் சமமற்ற நடத்தையை சுட்டிக்காட்டி, அதிரடியாக 50 சதவீதம் வரி விதித்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.</p><h2>முக்கிய ஏற்றுமதிகளுக்கு</h2><p>
</p><p>ட்ரம்பின் இந்த அதிரடி நகர்வால் ஒயின் போன்ற அன்றாட நுகர்வுப் பொருட்கள் மற்றும் ஹாக்கி மட்டைகள், சிமெண்ட் போன்ற தொழில்சார் பொருட்கள் ஆகியவை குறிவைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71a69db7-8f4f-4aba-b5e7-9276414583f7/26-6a5efb29b920c.webp' /></p><p> </p><p>இருப்பினும், எரிசக்தி, பொட்டாஷ், முக்கிய கனிமங்கள் மற்றும் மீன் போன்ற பல முக்கிய ஏற்றுமதிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வரும் வாரங்களில் அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்த கனடா தயாராக இருப்பதாகப் பிரதமர் மார்க் கார்னி பதிலளித்துள்ளார்.</p><p> இந்த வரிகள் 30 நாட்களில் அமுலுக்கு வரும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மேலும், வட அமெரிக்க அண்டை நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பதற்றங்கள் கணிசமாக அதிகரிப்பதைக் இது குறிக்கிறது. </p><p>கனடா, அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளுக்கு இடையிலான தற்போதைய சுதந்திர வர்த்தக ஒப்பந்தமான USMCA-வின் கீழ் அந்தப் பொருட்கள் இடம்பெற்றிருந்தாலும் இல்லாவிட்டாலும், சம்பந்தப்பட்ட அனைத்துப் பொருட்கள் மீதும் புதிய வரிகள் பொருந்தும்.</p><p></p><p> </p><p>இதனிடையே, ட்ரம்பின் இந்த நகர்வு கனடிய இறையாண்மைக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் என்றும் பிரதமர் கார்னி குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே நடைமுறையில் உள்ள வர்த்தகத் தடைகளை, திங்கட்கிழமை விதிக்கப்பட்ட இறக்குமதி வரிகள் மேலும் வலுப்படுத்துகின்றன. </p><p>கனடிய எஃகு, அலுமினியம் மற்றும் தாமிரம் ஆகியவற்றின் மீது அமெரிக்கா 15 முதல் 50 சதவீதம் வரையிலான சுங்கவரிகளைத் தொடர்ந்து விதித்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d758b70-53da-4bf9-9947-cfc9f05b96c9/26-6a5efb2a7fdb1.webp' /></p><p> </p><p>மேலும், கனடிய மென்மரக் கட்டைகள் (softwood lumber) மீது 35 சதவீதம் சுங்கவரியையும், கார்களில் பயன்படுத்தப்படும் அமெரிக்கத் தயாரிப்பு அல்லாத உதிரிபாகங்கள் மீது 25 சதவீதம் வரியையும் அமெரிக்கா விதிக்கிறது.</p><h2>இது நியாயமற்றது</h2><p> </p><p>அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட சில எஃகு, அலுமினியம் மற்றும் வாகனங்கள் மீது கனடா தனது சொந்த 25 சதவீத சுங்கவரிகளையும் கொண்டுள்ளது. </p><p>கனடாவில் ஏற்படும் காட்டுத்தீயின் புகை அமெரிக்க நகரங்களுக்குள் பரவுவது தொடர்பாக, கனடா மீது வரிகளை விதிப்பதாக ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து திங்கள்கிழமை இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், திங்கள்கிழமை ட்ரம்ப் கையெழுத்திட்ட நிர்வாக உத்தரவுகளில் காட்டுத்தீ பற்றிய குறிப்பு எதுவும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6766c3f7-63c6-4d80-8ca5-e53961ca5a3e/26-6a5efb2b2d30e.webp' /></p><p> </p><p>அதற்குப் பதிலாக, கார்கள், பால் பொருட்கள் மற்றும் மதுபானங்கள் தொடர்பாக கனடாவுக்கு ஏற்கனவே தெரிந்திருந்த அமெரிக்க வர்த்தகச் சிக்கல்களை அந்த மூன்று அறிவிப்புகளும் பட்டியலிடுகின்றன; இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்ததைக் குறிப்பதாக கூறுகின்றனர்.
</p><p>கார்களைப் பொறுத்தவரை, USMCA ஒப்பந்தத்தின் கீழ் வராத அமெரிக்க வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் மீது கனடா வரி விதிப்பதாக ட்ரம்ப் குற்றம் சாட்டுகிறார். இது நியாயமற்றது என்றும், மற்ற நாடுகளுக்கு இத்தகைய வரியை விதிக்காததன் மூலம் கனடா அமெரிக்காவை பாகுபாட்டுடன் நடத்தியுள்ளது என்றும் அவர் வாதிடுகிறார். </p><p>வட அமெரிக்காவில் வாகன உற்பத்தித் துறையானது கனடா, அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளுக்கு இடையே மிகவும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T04:45:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[படையெடுப்புக்குத் தயாராகும் அமெரிக்கா... நேருக்கு நேர் போர் என அதிரடியாக அறிவித்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-declares-full-scale-war-1784606987"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-declares-full-scale-war-1784606987</id>
            <summary type="text">அமெரிக்காவுடன் மீண்டும் முழு அளவிலான போரில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ள ஈரான், அமெரிக்கா படையெடுப்பைத் தொடங்கும் என்பதையும் எதிர்பார்ப்பதாக தெரிவித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடன் மீண்டும் முழு அளவிலான போரில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ள ஈரான், அமெரிக்கா படையெடுப்பைத் தொடங்கும் என்பதையும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.</p><h2>தீவிரமடையக்கூடும்</h2><p>
</p><p>மத்திய கிழக்கில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டொனால்ட் ட்ரம்ப் அப்பகுதிக்கு மேலும் பல போர் விமானங்களை அனுப்பியதைத் தொடர்ந்து ஈரான் இதை அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce2c704f-946c-46c0-842b-264e14091003/26-6a5ef23d479b7.webp' /></p><p> </p><p>இந்த நிலையில் மோதல் தீவிரமடையக்கூடும் என்பதைக் குறிக்கும் வகையில், ஐரோப்பாவில் உள்ள தளங்களிலிருந்து கூடுதல் F-16 மற்றும் F-35 போர் விமானங்களையும், மேலும் பல வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்களையும் அமெரிக்கா நிலைநிறுத்தி வருகிறது. </p><p>தற்போது முறிந்துவிட்ட அமைதி ஒப்பந்தம் கடந்த வாரம் சிதைந்து கொண்டிருந்த நிலையில், போரைத் தீவிரப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இராணுவத் தலைவர்களிடமிருந்து விளக்கம் கோரியிருந்தார். </p><p>ஈரானின் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதி நடைபெறும் கர்க் தீவைக் (Kharg Island) கைப்பற்றுவது அல்லது பிக்காக்ஸ் மலையில் (Pickaxe Mountain) உள்ள ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுவீசுவது ஆகியவை இதில் அடங்கும்.</p><p></p><p> </p><p>இப்போர் பிராந்தியம் தழுவிய மோதலாக மாறக்கூடும் என்பதற்கான மற்றொரு அறிகுறியாக, ஈரானை ஆதரிக்கும் ஏமன் நாட்டின் ஹவுதிகள், சவுதி அரேபியா மீது கடல்வழித் தடையை அறிவித்துள்ளனர். </p><p>கடந்த வாரம் சவுதி தரப்பினர் தாக்குதல்களை நடத்தியதாகக் குற்றம் சாட்டிய அந்த அமைப்பு, இது கண்ணுக்குக் கண் நடவடிக்கை என்றும் கூறியுள்ளது.</p><p> இதனிடையே, ஒரு வாரத்திற்கும் மேலாகத் தொடர்ச்சியாகத் தாக்குதல் நீடித்த நிலையில், ஈரானும் அமெரிக்காவும் மீண்டும் முழு அளவிலான போரில் ஈடுபட்டுள்ளதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f2da14f-7347-4001-8edb-a9a5ca7add30/26-6a5ef23ed8a45.webp' /></p><p> </p><p>உண்மையில், ஈரான் தற்போது ஒரு முழு அளவிலான போரில் ஈடுபட்டுள்ளது என்றும், நாம் யதார்த்தத்தை உணர்ந்து, இந்த எதிர்ப்பின் இயல்பான விளைவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>அத்துடன், அமெரிக்க இராணுவம் எந்த நேரத்திலும் ஈரானுக்குள் களமிறங்கும் என்றும், அதை எதிர்கொள்ள மக்கள் தயாராக வேண்டும் எனவும் அதிகாரிகள் தரப்பில் விவாதிக்கப்பட்டு வருகிறது.</p><h2>விளைவுகள் மோசமாக இருக்கும்</h2><p> </p><p>இந்த நிலையில், அமெரிக்கப் படைகளைத் தரைவழித் தாக்குதலில் எதிர்கொண்டு வரவேற்கத் தங்கள் நாடு ஆவலுடன் எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பாகாய் தெரிவித்தார். </p><p>மேலும், கர்க் தீவை அமெரிக்கா தொட முயன்றால், அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். அமெரிக்கா தனது சமீபத்திய தாக்குதல்களில், ஈரானின் தென்மேற்குப் பகுதியில் பகுதியளவு கட்டப்பட்டிருந்த டார்கோவின் (Darkhovin) அணுமின் நிலையத்தையும் இலக்கு வைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef075222-dd55-40a2-b050-a47a9f435111/26-6a5ef23e307a7.webp' /></p><p> </p><p>ஆனால், ஈரானின் 
ராணுவக் கட்டளை மையங்கள், வான் பாதுகாப்புத் தளங்கள் மற்றும் ஏவுகணை மற்றும் ட்ரோன் ஏவுதளங்களை மட்டுமே இலக்கு வைத்ததாக அமெரிக்க மத்தியக் கட்டளை மையம் தெரிவித்துள்ளது. </p><p>மேலும், ஈரானுடன் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வை எட்டும் வாய்ப்புகளை தமது நிர்வாகம் நிராகரிக்காது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>மட்டுமின்றி, ஈரான் மீது படையெடுப்பது சிக்கலில் முடியும் என்பதையும் இராணுவ அதிகாரிகள் தரப்பு ட்ரம்பிடம் விளக்கமளித்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T04:30:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரிலீஸுக்கு 2 நாட்கள் உள்ள நிலையில், முன்பதிவில் ஜனநாயகன் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/pre-booking-box-office-of-jananayagan-movie-1784604500"></link>
            <id>https://cineulagam.com/article/pre-booking-box-office-of-jananayagan-movie-1784604500</id>
            <summary type="text">ஜனநாயகன்&amp;nbsp;முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது முன்பதிவு அமோகமாக நடைபெறும். அந்த வகையில், முதலமைச்சர் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜனநாயகன்&nbsp;</h2><p>முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது முன்பதிவு அமோகமாக நடைபெறும். அந்த வகையில், முதலமைச்சர் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் முன்பதிவு கடந்த வாரம் தொடங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97d5b711-8982-4ad5-989a-47348c47e6c4/26-6a5ee756d1737.webp' /></p><p></p><p> 

சென்சார் பிரச்சனை, 6 மாதங்கள் கழித்து ரிலீஸ், படம் லீக்காகிவிட்டது என பல தடைகளை தாண்டித்தான் ஜனநாயகன் படம் வருகிற 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. லீக்கான திரைப்படத்தை 1 கோடி மக்களுக்கும் மேல் பார்த்துவிட்டார்கள் என தகவல் வெளியானது அனைவருக்கும் அதிர்ச்சியை தந்தது.</p><h2>இதுவரை முன்பதிவில் செய்துள்ள வசூல்</h2><p>
</p><p>
இப்படி இப்படத்தை சுற்றி பல சர்ச்சைகள் இருந்தும் கூட, முன்பதிவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை நடந்துள்ள முன்பதிவில் ஜனநாயகன் திரைப்படம் ரூ. 30 கோடிக்கும் மேல் <a href="https://www.youtube.com/watch?v=FM4UvDi2xiU" target="_blank">வசூல் </a>செய்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34c64cd8-d581-4122-a8ee-e36e76a8ff6d/26-6a5ee757812ee.webp' /></p><p>முதல் நாள் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கூலி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்து ஜனநாயகன் புதிய சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p>]]></content>
            <updated>2026-07-21T04:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/debate-on-committee-on-public-petition-s-work-1784607496"></link>
            <id>https://ibctamil.com/article/debate-on-committee-on-public-petition-s-work-1784607496</id>
            <summary type="text">இன்றைய&amp;nbsp;(21.07.2026)&amp;nbsp;நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில்&amp;nbsp;சற்று முன்னர் ஆரம்பமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>இன்றைய<span style="font-size: 14px; color: inherit;">&nbsp;</span>(21.07.2026)<span style="font-size: 14px; color: inherit;">&nbsp;</span><span style="color: inherit;">நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (</span>Jagath Wickramaratne<span style="color: inherit;">) தலைமையில்&nbsp;</span><span style="color: inherit;">சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.</span></p><p>காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.</p><p>அதன்படி, காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. </p><p>காலை 10.00 மணி முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27 (2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>காலை 11.30 முதல் மாலை 2.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் கீழான இரு தீர்மானங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>மாலை 2.30 முதல் 5.30 வரை பத்தாவது நாடாளுமன்றத்தின் பொது மனுக்கள் பற்றிய குழுவின் பணி மற்றும் செயல்திறன் தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/eeX6KMw54JY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-21T04:18:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொடூர தாக்குதலின் பின்னணியில் முக்கிய சூத்திரதாரியான ராஜபக்ச குடும்பத்தினர்..! அம்பலமாகும் சதித்திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-must-arrest-gota-syas-chameera-1784596663"></link>
            <id>https://tamilwin.com/article/govt-must-arrest-gota-syas-chameera-1784596663</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என &#039;ஈஸ்டர் நீதிக்கான மக்கள் கூட்டமைப்பின்&#039; அழைப்பாளர் சமீர...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என 'ஈஸ்டர் நீதிக்கான மக்கள் கூட்டமைப்பின்' அழைப்பாளர் சமீர பெரேரா வலியுறுத்தியுள்ளார். </p><p>
உயிர்த்த ஞாயிறுத் தினத்தன்று நடத்தப்பட்ட கொடூரப் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள உண்மை சதி தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,</p><p>&nbsp;</p><h2>முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தீர்மானமிக்க சாட்சியங்கள்</h2><p>
இந்தச் சதித்திட்டம் தொடர்பாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தீர்மானமிக்க சாட்சியங்களை வழங்கியுள்ளார் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69025692-d9b2-4384-a687-3208eedff0f9/26-6a5ec8b960034.webp' /></p><p>
</p><p>ராஜபக்ச குடும்பத்தினரும் அவர்களைச் சுற்றியுள்ள குழுவினரும் பாதாள உலகக் குழுவைப் போல் செயற்பட்டு, கூலிப்படையினரைப் பயன்படுத்தி விசாரணைகளைத் திசைதிருப்ப முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலைக் பகடைக்காயாகப் பயன்படுத்தி, 'தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்' எனக் கூறிக்கொண்டு கோட்டாபய ராஜபக்ச அதிகாரத்தைக் கைப்பற்றினார். இது ஒரு திட்டமிடப்பட்ட அரசியல் சதியாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
பிணங்களை வைத்துக்கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள் யார் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த கொடூரத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகள் யார் என்பது முழு நாட்டுக்குமே இப்போது தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>சீரழிந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி&nbsp;</h2><p>
</p><p>சிங்கள பௌத்த அடையாளத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு முன்னெடுக்கப்பட்ட பெருமளவிலான மோசடிகளும் குற்றங்களும் தற்போது அம்பலமாகி வருகின்றன. </p><p>உண்மையான பௌத்தர்கள் இத்தகைய கொடூர அரசியலுக்கு ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2de89fcf-aa0d-4a82-84fc-e3e0204448d9/26-6a5eef3574974.webp' /></p><p>
</p><p>மதத் தலைவர்களைக் கூட ஏமாற்றி அதிகாரத்தைக் கைப்பற்றிய இந்த சீரழிந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
</p><p>தற்போதைய அரசாங்கமும் ஜனாதிபதியும் இந்த விசாரணைகளை மேலும் தாமதிக்காமல் உடனடியாகச் செயற்பட்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என சமீர பெரேரா குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதை மேலும் ஓரிரு மாதங்களுக்கு இழுத்தடிக்க வேண்டாம் எனவும் இந்த சதித்திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, மக்களுக்கு நீதியை நிலைநாட்டுங்கள் எனவும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T04:12:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய அடையாள அட்டை விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3800-ids-returned-to-the-department-1784604345"></link>
            <id>https://tamilwin.com/article/3800-ids-returned-to-the-department-1784604345</id>
            <summary type="text">கடந்த ஒரு வருட காலத்தில் தபால்கள் மூலம் ஆட்பதிவு திணைக்களத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டைகளின் எண்ணிக்கை சுமார் 3,800 என தேசிய கண...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த ஒரு வருட காலத்தில் தபால்கள் மூலம் ஆட்பதிவு திணைக்களத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டைகளின் எண்ணிக்கை சுமார் 3,800 என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளிப்படுத்தியுள்ளது. </p><p>

குறித்த தொகையில் 2,433 அடையாள அட்டைகள் 2005 ஆம் ஆண்டில் பிறந்த பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கு சொந்தமானவையாகும். </p><p>

இது சதவீத அடிப்படையில் 64 சதவீதமாகும். குறித்த விண்ணப்பதாரர்கள் 2005 ஆம் ஆண்டில் பிறந்திருந்த போதிலும், அவர்கள் 2020 ஆம் ஆண்டிலேயே விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.</p><p> </p><h2><b>

தேசிய அடையாள அட்டை</b></h2><p>தேசிய அடையாள அட்டையை வழங்குவதற்கு திணைக்களம் 4 வருட காலத்தை எடுத்துக் கொண்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8eadc792-cda4-46bf-8148-deca89195cfc/26-6a5eefaaf21c3.webp' /></p><p>அந்தக் காலப்பகுதியில் விண்ணப்பதாரரின் தனிப்பட்ட முகவரி மாறியமை, விண்ணப்பதாரர் வெளிநாடு சென்றமை, உயிரிழந்தமை மற்றும் முகவரிகள் பிழையாக குறிக்கப்பட்டிருந்தமை போன்ற காரணங்களால் அடையாள அட்டைகள் இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.</p><p> </p><h3><b>

தேசிய கணக்காய்வு அலுவலகம் </b></h3><p>தேசிய அடையாள அட்டை அச்சிடும் போது ஏற்பட்ட பிழைகள் மற்றும் புதிய அடையாள அட்டைகளை வழங்கும் போது பழைய அடையாள அட்டைகளை மீளப் பெற்றுக்கொள்ளப்படுகின்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/383a5d8c-e936-4fa7-ad7e-a2e9f0180977/26-6a5eefaba2b43.webp' /></p><p>இந்த சந்தர்ப்பங்களில் சேகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளின் மொத்த எண்ணிக்கை கடந்த ஆண்டளவில் 6 லட்சத்தை நெருங்கியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளிப்படுத்தியுள்ளது. </p><p>

இவ்வாறு சேரும் அடையாள அட்டைகளை அழிப்பதற்கான முறையான செயற்திறன்மிக்க பொறிமுறை திணைக்களத்திடம் இல்லை எனவும் தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவிக்கிறது.</p>]]></content>
            <updated>2026-07-21T04:04:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகளிர் மற்றும் சிறுவர் நலன்புரித் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் முக்கிய கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/important-discussion-at-the-presidential-office-1784605308"></link>
            <id>https://tamilwin.com/article/important-discussion-at-the-presidential-office-1784605308</id>
            <summary type="text">மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுக்கு 2026ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட
வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும்
திட்டங்களி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுக்கு 2026ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட
வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும்
திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், 2027ஆம் ஆண்டுக்கான வரவு -
செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்தும் ஆராய்வதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.</p><p>ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று(20.07.2026) ஜனாதிபதி அலுவலகத்தில்
நடைபெற்றது.
</p><p></p><h2>மாதாந்தக் கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம்</h2><p>
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள இலங்கை மகளிர் பணியகம்,
பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு, முன் பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய
செயலகம், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் மற்றும்
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆகியவற்றினால் 2026 ஆம் ஆண்டில்
மேற்கொள்ளப்பட்ட மீண்டெழும் மற்றும் மூலதனச் செலவினங்களின் முன்னேற்றம்
குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab23fb1f-61e6-42bb-bc08-612d135bc3c5/26-6a5eed0e10d96.webp' /></p><p>மேலும், 2026 ஆம் ஆண்டில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் கீழ்
நடைமுறைப்படுத்தப்படும் முதன்மைத் திட்டங்களான நிறுவனப் பராமரிப்பு மற்றும்
பாதுகாவலர் உரிமை, தெருவோரச் சிறுவர்களுக்கான வாழ்வாதாரக் கொடுப்பனவு,
கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்கு உணவுப் பொதி வழங்கும் திட்டம்,
முன்பள்ளிச் சிறுவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டம், முன்பள்ளி
ஆசிரியர்களுக்கான ‘குரு அபிமானி’ கொடுப்பனவுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின்
முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி இதன்போது கேட்டறிந்தார்.</p><p>கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் போஷாக்கு உணவுக் கொடுப்பனவை வெறும்
மற்றொரு பண உதவித் திட்டமாக அன்றி, அதன் ஊடாக எதிர்பார்க்கப்பட்ட நோக்கமான
கர்ப்பிணித் தாய்மார்களின் போஷாக்கை உறுதிப்படுத்துவதை இலக்காகக் கொண்டு, உரிய
மேற்பார்வையின் கீழ் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை
ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.</p><p>மேலும், 'டித்வா' சூறாவளியால் பெற்றோரை இழந்த பிள்ளைகளைப் பராமரிப்பதற்காக
மாதாந்தக் கொடுப்பனவை வழங்கும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் இதன்போது
மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டதுடன், அந்தக் கொடுப்பனவை உரிய சிறுவர்களுக்கு
விரைவாக வழங்குவதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T03:59:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனில் ஜயந்த பெர்னாண்டோவின் பெயரில் பரவும் போலி தகவல் : அமைச்சு கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fake-information-spread-in-min-anil-jayantha-name-1784604195"></link>
            <id>https://ibctamil.com/article/fake-information-spread-in-min-anil-jayantha-name-1784604195</id>
            <summary type="text">தொழில் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோவின் பெயரைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களின் ஊடாக&amp;nbsp; பொய்ப் பிரசாரம் முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொழில் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோவின் பெயரைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களின் ஊடாக&nbsp; பொய்ப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது</p><p>அதன்படி, பௌத்த மத யாத்திரைக்கான தம்பதிவ பயணம் மற்றும் தாய்லாந்துக்கான ஆன்மீகச் சுற்றுப்பயணங்களை தடை செய்வதற்கு அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாக பரவும் தகவல் முற்றிலும் போலியான செய்தியாகும் என அந்த அமைச்சு மறுத்துள்ளது.</p><p>

தொழில் அமைச்சினால் நேற்று (20) விடுக்கப்பட் அறிக்கையிலே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>பௌத்த மத யாத்திரை</h2><p>மேலும் அந்த அறிக்கையில், அனில் ஜயந்த பெர்னாண்டோவின் பெயரைப் பயன்படுத்தி பௌத்த மத யாத்திரைக்கான தம்பதிவ பயணம் மற்றும் தாய்லாந்துக்கான ஆன்மீகச் சுற்றுப்பயணங்களை தடை செய்வதற்கு அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாக சமூக ஊடகங்களின் ஊடாக மிக மோசமான முறையில் அப்பட்டமான பொய்ப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcb7ba09-3c85-4df5-b700-5e20b38d3f1c/26-6a5ee9abb72cb.webp' />&nbsp;</p><p>


இந்த போலிப் பிரசாரமானது நாட்டின் பல்லின சமூகங்களுக்கு இடையிலான சகவாழ்வைச் சீர்குலைக்கும் ஒரு சதியாகும்.</p><p></p><h2>வன்மையான கண்டனம்&nbsp;</h2><p> </p><p>பொதுமக்களை திசைதிருப்பி தவறாக வழிநடத்தும் நோக்கில் பரப்பப்படும் இத்தகைய கீழ்த்தரமான போலிப் பிரசாரங்களை தொழில் அமைச்சு மிக வன்மையாகக் கண்டிப்பதுடன், இது குறித்து தனது ஆழ்ந்த கவலையையும் அருவருப்பையும் தெரிவித்துக் கொள்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0982edeb-a060-4a90-be53-ab43eee1085e/26-6a5eec4455d96.webp' /></p><p>அமைச்சரினால் இவ்வாறானதொரு கருத்து வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் சோடிக்கப்பட்டவை. அமைச்சர் ஒருபோதும் அத்தகையதொரு கூற்றை வெளியிடவில்லை. </p><p>குறிப்பாக இலங்கையின் சமூக, அரசியல் மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டு, குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களைப் பின்தொடரும் சில குழுக்களினாலேயே இந்த வதந்திகள் திட்டமிட்ட முறையில் பரப்பப்பட்டு வருகின்றது” என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T03:50:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் நீரிணையில் பற்றி எரியும் கப்பல்கள் - விலை கொடுக்க நேரிடும் - எச்சரிக்கும் டிரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-war-live-us-launches-10th-night-of-strikes-1784602378"></link>
            <id>https://ibctamil.com/article/iran-war-live-us-launches-10th-night-of-strikes-1784602378</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையேயான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பத்தாவது நாளாக ஈரானிய நகரங்களைக் குறிவைத்து அமெரிக்கப் படைகள் ஏவுகணை தாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையேயான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பத்தாவது நாளாக ஈரானிய நகரங்களைக் குறிவைத்து அமெரிக்கப் படைகள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளன.</p><p>சிரிக் அருகேயும், பந்தர் அப்பாஸ், கெஷ்ம் தீவு, சபாஹர் மற்றும் கொனாரக் ஆகிய பகுதிகளிலும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>அமெரிக்க வீரர்களின் மரணங்களுக்காக ஈரான் "பல மடங்கு" விலை கொடுக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.</p><p></p><h2>ஹார்முஸ் நீரிணை</h2><p>ஈரான் தனது பதிலடித் தாக்குதல்களைத் தொடர்வதுடன் கடந்த சில மணிநேரங்களில் பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க நிலைகளை தாக்கியதாக வைத்ததாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f176d233-7cb4-4d63-8b07-d43d5aad1e80/26-6a5eebc4d723c.webp' /></p><p>ஹார்முஸ் நீரிணை வழியாக சென்ற 2 எண்ணெய் கப்பல்கள் கண்ணி வெடிகளில் வெடித்து சிதறியுள்ளதாகவும் கப்பல்களில் "பாரிய தீ" ஏற்பட்டுள்ளதாகவும் ஐ.ஆர்.ஜி.சி குறிப்பிட்டுள்ளது.</p><p>அரச செய்தி நிறுவனமான ஐஆர்ஐபி வெளியிட்ட ஓர் அறிக்கையில், இரண்டு கப்பல்களின் மாலுமிகளை மீட்புக் குழுவினர் வெளியேற்றி வருவதாகதெரிவித்துள்ளது.</p><p>ஈரானின் ஆதரவு பெற்ற யேமனில் உள்ள ஹூதிகள், சவூதி அரேபியாவுக்கு எதிராக கடல்வழி முற்றுகையை அறிவித்துள்ளதால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் மேலும் சீர்குலைக்கப்படும் என அச்சம் எழுந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T03:47:25+00:00</updated>
        </entry>
    </feed>
