<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-19T18:26:05+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப் போரைத் தீவிரப்படுத்தினால்... வளைகுடா நாடுகளை அடுத்து ஐரோப்பாவை குறிவைக்கும் ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-considers-hitting-europe-1787162218"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-considers-hitting-europe-1787162218</id>
            <summary type="text">Iran is considering attacking US military targets in Europe: ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க ராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ஈரான் பரிசீலன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran is considering attacking US military targets in Europe: ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க ராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ஈரான் பரிசீலனை.
</p><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மத்திய கிழக்கில் போரைத் தீவிரப்படுத்தினால், ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க ராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ஈரான் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>ஈரானின் இலக்குகளாக</h2><p>
</p><p>ஃபைனான்ஷியல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், மார்ச் மாதத்தில் ட்ரோன் தாக்குதலுக்கு இலக்கான சைப்ரஸில் உள்ள பிரித்தானிய விமானப்படைத் தளம், சாத்தியமான இலக்குகளில் ஒன்றாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5bf5f90-f882-49ff-9333-e8ff8838dc6e/26-6a85ee6c717cb.webp' /></p><p> </p><p>அந்தத் தாக்குதல், பிரித்தானிய இராணுவ முகாமின் மீது நடத்தப்பட்ட முதலாவது தாக்குதலாக அமைந்ததோடு, போரின் தீவிரத்தையும் அதிகரிப்பதாக இருந்தது. </p><p>மட்டுமின்றி, தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள பல்கேரியா போன்ற நாடுகளும் ஈரானின் இலக்குகளாக அடையாளம் காணப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>பல்கேரியா கடந்த மாதம் தனது பெஸ்மர் (Bezmer) விமானப்படைத் தளத்திலிருந்து 8 போயிங் KC-135 ஸ்ட்ராடோடேங்கர் (Stratotanker) விமானங்கள் எரிபொருள் நிரப்பிக்கொள்ளவும், 250 பணியாளர்கள் செயல்படவும் அனுமதித்திருந்தது. </p><p>இதனிடையே, ஈரான் தனது ராணுவ நிலைப்பாட்டை தற்காப்பு நிலையிலிருந்து முழுமையான தாக்குதல் நிலைக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக, அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p>ஹார்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாட்டு விவகாரத்தில் நிலவும் கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கும், போருக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. </p><p>ஈரானை மீண்டும் சீண்டும் வகையில் ஹார்முஸ் நீரிணையை அமெரிக்காவின் புதிய பிரதேசமாகக் காட்டும் வரைபடம் ஒன்றை வெளியிட்ட ட்ரம்ப், அந்நாட்டுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், இனி அத்தகைய பேச்சுவார்த்தை எதுவும் திட்டமிடப்படவில்லை என்றும் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.</p><h2>இழந்து வருகிறது</h2><p>
</p><p>அமெரிக்காவும் ஈரானும் மிகவும் ஆக்கபூர்வமான மற்றும் தீவிரமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக ட்ரம்ப்பின் தூதரும் மருமகனுமான ஜாரெட் குஷ்னர் திங்களன்று கூறியிருந்த நிலையில், நிலைமை அப்படி இல்லை என்று ஜனாதிபதி ட்ரம்ப் மறுத்துள்ளார். </p><p>பொதுவாக ஒரு ஒப்பந்தத்திற்கு ஈரான் கெஞ்சுவதாக ஊடகங்களிடன் நாளும் கூறி வந்த ஜனாதிபதி ட்ரம்ப், முதல் முறையாக ஈரானுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், இனி அத்தகைய பேச்சுவார்த்தை எதுவும் திட்டமிடப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். </p><p>மேலும், ஹார்முஸ் நீரிணை தற்போது செயல்படத் தொடங்கியுள்ளதாகவும் திறந்திருப்பதாகவும் ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டுள்ள நிலையில், அமெரிக்கா தங்களின் நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை, கப்பல் போக்குவரத்தின் மீதான தங்களது பிடியைத் தக்கவைத்துக்கொள்ள ஈரான் திட்டமிட்டுள்ளதாக ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e71e01f2-5b26-4829-80d3-30adbdeb71b5/26-6a85ee6d274b7.webp' /></p><p> </p><p>ஆனால் வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், ஹார்முஸ் நீரிணை மீதான தனது பிடியை ஈரான் படிப்படியாக இழந்து வருகிறது என்றே கூறப்படுகிறது.</p><p> அமெரிக்க ராணுவம் தனது கடற்படையைக் கொண்டு அப்பிராந்தியத்தின் மீதான முற்றுகையைத் தொடர்ந்து, அப்பகுதியில் தனது பிடியை வலுப்படுத்தியுள்ளது. </p><p>கடந்த வாரம் குறைந்தது 95 கப்பல்களும், அதற்கு முந்தைய வாரத்தில் 118 கப்பல்களும் ஹார்முஸ் நீரிணை வழியாக அமெரிக்க ராணுவத்தின் ஒப்புதலுடன் கடந்துச் சென்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T17:54:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்ரான் கானை தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு: பரிசீலனை மனுத் தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/order-issued-regarding-imran-khan-1787161004"></link>
            <id>https://tamilwin.com/article/order-issued-regarding-imran-khan-1787161004</id>
            <summary type="text">சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை
மருத்துவ சிகிச்சைக்காகத் தனியார் வைத்தியசாலையொன்றுக்கு மாற்றுமாறு உச்ச
நீதிமன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை
மருத்துவ சிகிச்சைக்காகத் தனியார் வைத்தியசாலையொன்றுக்கு மாற்றுமாறு உச்ச
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகப் பாகிஸ்தான் அரசாங்கம் பரிசீலனை
மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.</p><h2>பரிசீலனை மனு</h2><p>
</p><p>
ராவல்பிண்டியின் அடியாலா சிறையிலுள்ள இம்ரான் கானை இஸ்லாமாபாத்திலுள்ள 'ஷிஃபா
சர்வதேச வைத்தியசாலைக்கு' இரண்டு நாட்களுக்குள் மாற்றுமாறும், ஐந்து
நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவை அமைத்து அவருக்குச் சிகிச்சை
அளிக்குமாறும் உச்ச நீதிமன்றம் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4283983-b09e-4fba-bd49-8114c423497a/26-6a85e9aed18ca.webp' /></p><p>
</p><p>
எனினும், சிறை நடைமுறைகளின்படி தண்டனை பெற்ற கைதியொருவருக்கு அரசாங்கப் பொது
வைத்தியசாலையிலேயே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும், சிறை அதிகாரிகளின்
கருத்துக்களைக் கேட்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும்
சுட்டிக்காட்டி அரசாங்கம் இந்த பரிசீலனை மனுவைத் தாக்கல் செய்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T17:37:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026ஆம் ஆண்டில் FIFA போட்டி ; நடுவராக ஈழத்தமிழரான அனோஜன் கனகசிங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/anojan-kanakasingham-an-eelam-tamil-fifa-match-1787160697"></link>
            <id>https://canadamirror.com/article/anojan-kanakasingham-an-eelam-tamil-fifa-match-1787160697</id>
            <summary type="text">சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற FC Basel – FC Barcelona அணிகளுக்கிடையிலான போட்டியில் நடுவராகப் பணியாற்றிய அனோஜென் கனகசிங்கம், 2026ஆம் ஆண்டில் FIFA சர்வதேச ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற FC Basel – FC Barcelona அணிகளுக்கிடையிலான போட்டியில் நடுவராகப் பணியாற்றிய அனோஜென் கனகசிங்கம், 2026ஆம் ஆண்டில் FIFA சர்வதேச நடுவர் அந்தஸ்தைப் பெற்ற பின்னர் சர்வதேச அரங்கில் தனது பயணத்தை மேலும் உயர்த்தியுள்ளார்.
</p><p>
ஸ்பெயினின் முன்னணி கால்பந்து அணியான FC Barcelona பங்கேற்ற இந்தப் போட்டியில் உலகின் இளம் நட்சத்திர வீரர்களில் ஒருவரான லமீன் யமாலும் களமிறங்கியிருந்த நிலையில், போட்டியை நிர்வகிக்கும் பொறுப்பு அனோஜென் கனகசிங்கத்துக்கு வழங்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9347b045-2cd0-4177-98e6-e4e23ae55370/26-6a85e87b53386.webp' /></p><p>சுவிற்சர்லாந்து கால்பந்து சம்மேளனத்தின் அதிகாரப்பூர்வ பதிவின்படி, 1994ஆம் ஆண்டு பிறந்த அனோஜென் கனகசிங்கம், SC Ittigen கழகத்தைச் சேர்ந்தவர். </p><p>2026ஆம் ஆண்டுக்கான FIFA நடுவர்கள் பட்டியலில் அவர் இணைக்கப்பட்டுள்ளார். சுவிற்சர்லாந்தின் Super League போட்டிகளில் 2022ஆம் ஆண்டு முதல் நடுவராகப் பணியாற்றி வந்த அவர், அதுவரை நாட்டின் உயர்மட்டப் பிரிவில் 34 போட்டிகளை நிர்வகித்திருந்தார்.
</p><p>
சர்வதேச அரங்கிலும் அவரது முன்னேற்றம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. 2026 ஜூலை 16ஆம் தேதி நடைபெற்ற UEFA Europa League தகுதிச்சுற்றுப் போட்டியில் NK Aluminij மற்றும் FC Sheriff Tiraspol அணிகள் மோதிய ஆட்டத்திற்கு அனோஜென் கனகசிங்கமே பிரதான நடுவராக நியமிக்கப்பட்டிருந்தார்.</p><p>&nbsp;ஈழத்தமிழ் பின்னணியைக் கொண்ட அனோஜென் கனகசிங்கம், சுவிற்சர்லாந்தின் உயர்மட்ட கால்பந்திலிருந்து ஐரோப்பிய மற்றும் தற்போது FIFA சர்வதேச அரங்கிற்கு முன்னேறியிருப்பது, தமிழ் சமூகத்திற்கும் சுவிற்சர்லாந்தில் வாழும் தமிழர்களுக்கும் பெருமைக்குரிய சாதனையாக அமைந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-19T17:31:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனில் உடனடியாக ஜனாதிபதி தேர்தல்...! ஜெலென்ஸ்கிக்கு எதிராக உருவெடுக்கும் அரசியல் சவால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-minister-demands-ukraine-presidential-election-1787155198"></link>
            <id>https://ibctamil.com/article/ex-minister-demands-ukraine-presidential-election-1787155198</id>
            <summary type="text">உக்ரைனில் ரஷ்யப் போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், நாட்டில் உடனடியாக ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என வலியுருத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனில் ரஷ்யப் போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், நாட்டில் உடனடியாக ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என வலியுருத்தப்பட்டுள்ளது.</p><p>

சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் மைக்கைலோ ஃபெடோரோவ் (Mykhailo Fedorov) இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.</p><p> 

ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு எதிராக இது உக்ரைனிய அரசியலில் மிகப்பெரிய அரசியல் சவாலாக உருவெடுத்துள்ளது.</p><p>
</p><p></p><h2>ரஷ்யாவின் பிணைக்கைதி</h2><p>இது தொடர்பில் மைக்கைலோ ஃபெடோரோவ் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நீடித்த போருக்கு மத்தியிலும் உக்ரைன் தனது முழுமையான ஜனநாயகச் செயல்பாடுகளை மீட்டெடுப்பதற்கான சட்டப்பூர்வ, பாதுகாப்பான மற்றும் நடைமுறைக்குச் சாத்தியமான வழியைக் கண்டறிய வேண்டும்.</p><p> 

உக்ரைனின் ஜனநாயகத்தை ரஷ்யாவின் பிணைக்கைதியாக மாற்ற முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62dd317d-b15b-42b3-87c5-7cc5c4e54258/26-6a85e2b41c74c.webp' /></p><p>உக்ரைனில் 2022 இல் ரஷ்ய ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து இராணுவச் சட்டம் (Martial Law) நடைமுறையில் உள்ளது. </p><p>

உக்ரைனிய அரசியலமைப்புச் சட்டத்தின் படி இராணுவச் சட்டம் நடைமுறையில் இருக்கும் போது நாட்டில் ஜனாதிபதி, நாடாளுமன்றம் அல்லது உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த முடியாது.</p><p></p><h2>பதவி காலம்</h2><p>

ஜெலென்ஸ்கியின் 5 ஆண்டு காலப் பதவி காலம் கடந்த 2024 மே மாதத்துடன் முடிவடைந்தது. </p><p>

இருப்பினும், புதிய ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பொறுப்பேற்கும் வரை தற்போதைய ஜனாதிபதியே பதவியில் தொடருவார் என உக்ரைன் அரசியலமைப்பின் 108 ஆவது பிரிவு குறிப்பிடுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4032cb77-3731-4045-bb41-031d44203af1/26-6a85e2b4dc8ce.webp' /></p><p>போர் தீவிரமாக இருக்கும் சூழலில் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என்பதே ஜெலென்ஸ்கியின் உறுதியான நிலப்பாடாக உள்ளது.</p><p>

இந்தநிலையில் அரசு நிர்வாகத்தில் நிலவும் பணமோசடி மற்றும் ஊழல் விசாரணைகளைத் தொடர்ந்து ஜனாதிபதி அலுவலகத்தின் துணைத் தலைவர் இரினா முத்ராவை (Iryna Mudra) ஜெலென்ஸ்கி பணிநீக்கம் செய்துள்ளார்.
</p><p>
அமைச்சரவை மற்றும் ராணுவப் பொறுப்புகளில் ஜெலென்ஸ்கி மேற்கொண்டு வரும் இந்த தொடர் மாற்றங்களும், அதிகாரிகளின் ஊழல் குற்றச்சாட்டுகளும் உக்ரைனிய உள்நாட்டு அரசியலில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T17:14:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: விமல், திலித் உள்ளிட்ட 6 பேரின் கருத்துக்கள் அடங்கிய சீடிக்கள் சமர்ப்பிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cid-sumbitted-wimal-udayas-speech-cids-to-court-1787159317"></link>
            <id>https://tamilwin.com/article/cid-sumbitted-wimal-udayas-speech-cids-to-court-1787159317</id>
            <summary type="text">&amp;nbsp;ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர் தொடர்பான வழக்கு விசாரணையின் போது முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, நாடாளுமன்ற உறுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர் தொடர்பான வழக்கு விசாரணையின் போது முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு பேரின் கருத்துக்கள் அடங்கிய சீடிக்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஈஸ்டர் தாக்குதல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
</p><p>இதன்போது, குறித்த வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்துகள் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் ஆறு பேரின் அறிக்கைகள் அடங்கிய சி.டி.க்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92552229-9101-4bca-92ea-8452766020e0/26-6a85e316a08c5.webp' /></p><p>
</p><p>முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில, நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் செயலாளர் சுகீஸ்வர பண்டார, அசங்க நவரத்ன மற்றும் மஹிந்த பதிரண ஆகிய ஆறு பேரும் வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்துகள் தொடர்பான சி.டி.க்களே இவ்வாறு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p>
இதேவேளை,, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு பொலிஸ் அதிகாரிகளையும் எதிர்வரும் செப்டெம்பர் 2ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>மேலும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக வவுனதீவு முகாமில் இருந்த இலங்கை ஆயுதப் படையினரின் புலனாய்வுத் தகவல்கள் அடங்கிய குறிப்புப் புத்தகம் ஒன்றை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தமது பொறுப்பில் எடுத்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
</p><p>குறித்த குறிப்புப் புத்தகத்தை பொறுப்பில் வைத்திருந்த லெப்டினன்ட் கேணலிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் உள்ள புலனாய்வுத் தகவல்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T17:08:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்கிசை துப்பாக்கிச் சூடு ; பிரதான சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mount-lavinia-shooting-main-suspect-arrested-1787159182"></link>
            <id>https://jvpnews.com/article/mount-lavinia-shooting-main-suspect-arrested-1787159182</id>
            <summary type="text">கொழும்பிலுள்ள கல்கிசை, ஹுளுதாகொட வீதிப் பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பயங்கரவாதத் தடுப்பு மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பிலுள்ள கல்கிசை, ஹுளுதாகொட வீதிப் பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><p></p><p>நேற்று (18) மாலையில் வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விடுதியொன்றில் தங்கியிருந்தபோதே இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

இதன்படி, இதுவரை இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று ஆண் சந்தேகநபர்களும் ஒரு பெண் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac9818fc-1fa3-40a4-ae71-f0f50411446e/26-6a85e2904a6d9.webp' /></p><p>கடந்த 15 ஆம் திகதி கல்கிசை பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர். </p><p>

அன்றைய தினம் இரவே, கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் வைத்து இந்த குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் இரண்டு ஆண் சந்தேகநபர்களும் ஒரு பெண் சந்தேகநபரும் ரீவோல்வர் ரகத் துப்பாக்கி ஒன்று, 12 தோட்டாக்கள் மற்றும் 6 வெற்றுத் தோட்டாக்கூடுகளுடன் கைது செய்யப்பட்டனர். </p><p>

கைது செய்யப்பட்ட ஆண் சந்தேகநபர்கள் 32, 35 மற்றும் 28 வயதுடைய கொழும்பு 14, கொழும்பு 12, தளுபொத்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், பெண் சந்தேகநபர் 28 வயதுடைய குரண பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-19T17:07:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் அதிர்ச்சி சம்பவம்: மாணவி உயிரிழப்பு- சக மாணவிகள் மருத்துவமனையில்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/student-dies-at-eastern-university-hostel-1787157562"></link>
            <id>https://tamilwin.com/article/student-dies-at-eastern-university-hostel-1787157562</id>
            <summary type="text">கிழக்கு பல்கலைக்கழகத்தின்,&amp;nbsp; கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில்
மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதுடன், அதனை கண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு பல்கலைக்கழகத்தின்,&nbsp; கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில்
மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதுடன், அதனை கண்டு அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>



இந்த சம்பவம் இன்று(19.08.2026) இடம்பெற்றதாக&nbsp; எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் ஆர்.டி.ஏ. வீதியைச் சேர்ந்த 20
வயதுடைய மாணவியான கே. யாழினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
</p><h2>
20 வயது மாணவி உயிரிழப்பு</h2><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

குறித்த கல்லூரிக்கு நாடகத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு
முன்னர் கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டதையடுத்து குறித்த மாணவி கல்லூரி விடுதியில்
தங்கியிருந்து முதலாம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார்.
</p><p>
இந்நிலையில் விடுதியிலுள்ள அறையில் சம்பவ தினமான இன்று(19) பிற்பகல் சுமார் 12.00
மணியளவில் மாணவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9076d30c-53e3-413d-a521-66721f35b611/26-6a85dcf1c159c.webp' /></p><p> </p><p>

இந்த சம்பவத்தை பார்த்தவுடன், அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்ததையடுத்து அங்குள்ள மாணவர்கள்
உடனடியாக உயிரை மாய்த்துக் கொண்ட&nbsp; கொண்ட மாணவியையும் மயங்கி வீழ்ந்த மாணவிகளையும்
மீட்டு மட்டக்களப்பு&nbsp; போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.</p><h2>

இறப்பு வீதம் அதிகரிப்பு</h2><p>
இந்த நிலையில், மயங்கி வீழ்ந்த மாணவிகள் சிகிச்சைப் பெற்றுவருவதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட
விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c4ec791-e1b5-4c31-b2af-093c2b1ab373/26-6a85dcf28dd7e.webp' /></p><p> 

அத்துடன், உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T17:07:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல் : ஈரான் தொடர்பில் ஐக்கிய அரபு அமீரகம் எடுத்துள்ள அதிரடி முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/missile-threat-uae-halts-all-trade-with-iran-1787157919"></link>
            <id>https://ibctamil.com/article/missile-threat-uae-halts-all-trade-with-iran-1787157919</id>
            <summary type="text">&amp;nbsp;ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தலை தொடர்ந்து ஈரானுடனான அனைத்து வர்த்தகமும் இரத்து செய்யப்படுவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சகம் அறிவித்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தலை தொடர்ந்து ஈரானுடனான அனைத்து வர்த்தகமும் இரத்து செய்யப்படுவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சகம் அறிவித்து உள்ளது.</p><p>இதுதொடர்பாக அந்த அமைச்சகம் தெரிவிக்கையில், பிராந்திய, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை குலைக்கும் வகையில் பிராந்திய பதற்றங்கள் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, ஈரானுடனான அனைத்து வர்த்தகம், வணிகப் பரிமாற்றங்கள் மற்றும் நிதி நடவடிக்கைகள் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தது.</p><h2>கடந்த மே மாதம் ஏவுகணை தாக்குதல்</h2><p>&nbsp;ஐக்கிய அரபு எமிரேட்சில் கடைசியாக கடந்த மே மாதம் ஏவுகணை தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/561d1a51-ddbf-4a0b-8419-432bbba9d21f/26-6a85e189a08ee.webp' /></p><h2>குற்றச்சாட்டை&nbsp; மறுத்த&nbsp;ஈரான்</h2><p>
</p><p>

இதற்கிடையே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்த குற்றச்சாட்டை ஈரான் மறுத்து உள்ளது.</p><p><br></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2ee06eb-55ff-427d-b90b-9839e31db4e4/26-6a85e18a5464b.webp' /></p><p>ஐக்கிய அரபு எமிரேட்சை நோக்கி எந்த ஏவுகணையையும் ஏவவில்லை என்றும் இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும் ஈரான் தெரிவித்தது.</p><p>

நல்ல அண்டை உறவுமுறை என்ற கொள்கையின்படி, இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T17:03:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரான் பாஷிக்குடன் பணப் பரிமாற்றம் செய்தாரா ! – பிரபல மாடல் அழகி விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-any-connection-with-shiran-basik-says-piumi-1787158686"></link>
            <id>https://tamilwin.com/article/no-any-connection-with-shiran-basik-says-piumi-1787158686</id>
            <summary type="text">&amp;nbsp;பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினுர் சிரான் பாஷிக்குடனான தொடர்புகள் குறித்து பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலி விளக்கமளித்துள்ளார்.
போதைப்பொருள் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினுர் சிரான் பாஷிக்குடனான தொடர்புகள் குறித்து பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலி விளக்கமளித்துள்ளார்.
</p><p>போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் சிரான் பாஷிக் என்பவருடன் தான் பணப் பரிமாற்றங்களை மேற்கொண்டதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் தொடர்பில் அவர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
</p><p>தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், சிரான் பாஷிக் என்ற நபரை தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அறிந்திருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c47dfb0-248d-41f7-bb5b-4f6d7f47e477/26-6a85e09f96168.webp' /></p><p>
</p><p>தன்னிடம் இருப்பது தான் சொந்தமாக உழைத்து சம்பாதித்த பணம் மட்டுமே எனவும், போதைப்பொருள் வர்த்தகர்களுக்கோ அல்லது வேறு நபர்களுக்கோ சொந்தமான பணம் எதுவும் தன்னிடம் இல்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>
பியுமி ஹன்சமாலி தொடர்பில் காலத்திற்கு காலம் இவ்வாறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், தன்னை தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் பல்வேறு பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக குறிப்பிட்டுள்ள பியூமி ஹன்சமாலி, தான் ஒருபோதும் பொய்யான தகவல்களை வெளியிடுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
</p><p>இதனிடையே, பெருமளவிலான போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் சிரான் பாஷிக், அண்மையில் டுபாயில் கைது செய்யப்பட்ட பின்னர் கடந்த 14ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.</p><p>
அவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
</p><p>அங்கு சிரான் பாஷிக்கை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>எனினும், பியூமி ஹன்சமாலி தனது சமூக ஊடகப் பதிவில், சிரான் பாஷிக்குடன் தனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும், அவருடன் பணப் பரிமாற்றம் மேற்கொண்டதாக வெளியாகும் தகவல்கள் உண்மையல்ல என்றும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T16:58:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வஜன வாக்கெடுப்புக்கு அரசாங்கம் தயார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/we-are-ready-for-referendom-says-nalinda-1787158161"></link>
            <id>https://tamilwin.com/article/we-are-ready-for-referendom-says-nalinda-1787158161</id>
            <summary type="text">&amp;nbsp;22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என உயர் நீதிமன்றம் தீர்மானித்தால், அதனை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>
பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அமைச்சர், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை அரசாங்கம் மதித்து செயற்படும் எனத் தெரிவித்தார்.
</p><p>இந்த விவகாரம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் செப்டெம்பர் இறுதியில் அல்லது ஒக்டோபர் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49baa8ac-1842-4e6a-a8bb-dc272c0c4c99/26-6a85de93104c8.webp' /></p><p>
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் முழுமையாக மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் குறிப்பிட்டார்.</p><p> மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்கும் என மேலும் கூறினார்.</p><p>நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என தீர்மானிக்கப்பட்டால், அதற்கேற்ப செயற்படுவதற்கு நாம் தயாராக உள்ளோம் எனவும் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என உயர் நீதிமன்றம் தீர்மானித்தால், அதற்கும் நாம் தயாராக உள்ளோம் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T16:49:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கென்யாவில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/seven-killed-in-helicopter-crash-in-kenya-1787157568"></link>
            <id>https://canadamirror.com/article/seven-killed-in-helicopter-crash-in-kenya-1787157568</id>
            <summary type="text">கென்யாவின் சம்புரு மாநிலத்தில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த விமானி மற்றும் ஆறு சுற்றுலாப் பயணிகள் உட்பட ஏழு பேர் இன்று (19)உயி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கென்யாவின் சம்புரு மாநிலத்தில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த விமானி மற்றும் ஆறு சுற்றுலாப் பயணிகள் உட்பட ஏழு பேர் இன்று (19)உயிரிழந்தனர்.</p><p> </p><p>ரொயிட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் பார்வையிடப்பட்ட ஆர்ச்சர்ஸ் போஸ்ட் (Archers Post) பொலிஸ் நிலையத்தின் முதற்கட்ட அறிக்கையின்படி, இந்த ஹெலிகொப்டர் லோய்சாபா காப்பகத்தை நோக்கிப் பறந்துகொண்டிருந்த போதே விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d0b624d-8265-4f9f-82cb-2bb0eec296d2/26-6a85dc4174e63.webp' /></p><p>பொலிஸார் தெரிவிக்கையில், உயிரிழந்த சுற்றுலாப் பயணிகளின் குடியுரிமை தொடர்பான விபரங்கள் வெளியாகவில்லை. </p><p>

தங்களது விருந்தினர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் ஒலோலோக்வே மலைக்கு அருகில் விபத்துக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>

விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் அந்நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-19T16:39:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் ஆதரவுக்கு ஈராக் பிரதமர் பாராட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iraqi-pm-praises-iran-s-supportive-stance-1787157200"></link>
            <id>https://tamilwin.com/article/iraqi-pm-praises-iran-s-supportive-stance-1787157200</id>
            <summary type="text">&amp;nbsp;ஈராக்கிற்கு ஈரான் வழங்கிய ஆதரவையும், குறிப்பாக சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.எஸ்.ஐ.எல். அமைப்புக்கு எதிரான போரின்போது வழங்கிய உதவியையும் ஈராக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈராக்கிற்கு ஈரான் வழங்கிய ஆதரவையும், குறிப்பாக சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.எஸ்.ஐ.எல். அமைப்புக்கு எதிரான போரின்போது வழங்கிய உதவியையும் ஈராக் பிரதமர் அலி அல்-சைதி பாராட்டியுள்ளார்.
</p><p>ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகம்மது பாகர் காலிபாப் ஈராக்கிற்கு மேற்கொண்டுள்ள மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, அவருடன் இடம்பெற்ற சந்திப்பில் ஈராக் பிரதமர் இந்தக் கருத்தை வெளியிட்டதாக ஈரானின் அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>
இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துதல், கூட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15d6b097-56ee-4367-b82b-30b10526aa41/26-6a85dad288e02.webp' /></p><p>
</p><p>மேலும், ஈரான்–ஈராக் உறவுகளை மேலும் மேம்படுத்தவும், இரு நாட்டு மக்களின் பொதுவான நலன்களை அடைவதற்காக ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் ஈராக் அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை காலிபாப் பாராட்டியுள்ளார்.</p><p>
இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதாரம் மற்றும் ஏனைய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் இந்த விஜயத்தின்போது முக்கிய கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T16:33:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாபர் அஸாம் இல்லை..இங்கிலாந்தில் 171 ஓட்டங்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pakistan-all-out-for-171-vs-england-leeds-2026-1787156571"></link>
            <id>https://news.lankasri.com/article/pakistan-all-out-for-171-vs-england-leeds-2026-1787156571</id>
            <summary type="text">Pakistan all out for 171 vs england: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தான் அணி 171 ஓட்டங்களுக்கு சுருண்டது.

லீட்ஸில் நடந்து வரும் இங்கிலாந...</summary>
            <content type="html"><![CDATA[<p>Pakistan all out for 171 vs england: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தான் அணி 171 ஓட்டங்களுக்கு சுருண்டது.
</p><p>
லீட்ஸில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களுக்கு சுருண்டது.&nbsp;</p><h2>இமாம் உல் ஹக் 42 ஓட்டங்கள்&nbsp;</h2><p>

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லீட்ஸில் இன்று தொடங்கியது. 

வலது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக பாகிஸ்தான் அணியில் பாபர் அஸாம் விளையாடவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fab0962-f771-4883-ae74-350a93f692c6/26-6a85da5392ab7.webp' /></p><p></p><p>

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. 

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் அஸான் அவைஸ் டக்அவுட் ஆனார். </p><p>ஷான் மசூத் 5 ஓட்டங்களில் வெளியேற, இமாம் உல் ஹக் 42 ஓட்டங்கள் எடுத்தார். 

சவுத் ஷகீல் 5 ஓட்டங்களிலும், அரைசதம் அடித்த அப்துல்லா ஷாஃபிக் 61 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும் ஓலி ராபின்ஸன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். </p><p>

ஜோஷ் டங்கின் மிரட்டலான பந்துவீச்சில் சல்மான் ஆகா (21), மொஹம்மது ரிஸ்வான் (12) மற்றும் அலி உஸ்மான் ஆகியோர் ஆட்டமிழந்தனர்.&nbsp; &nbsp; </p><p>48.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த பாகிஸ்தான் அணி 171 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஓலி ராபின்ஸன், ஜோஷ் டங் தலா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b39a0de1-103b-49af-be9c-439b843b7dc8/26-6a85da52ad192.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf2f897f-852e-40e6-8e97-5a79fd25d300/26-6a85da544a4e7.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T16:28:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்கலைக்கழகத்தில் தொடர் உயிர்மாய்ப்பு; அதிர்ச்சியில் மயங்கி வீழ்ந்த மாணவிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/eastern-university-student-takes-her-own-life-1787141731"></link>
            <id>https://jvpnews.com/article/eastern-university-student-takes-her-own-life-1787141731</id>
            <summary type="text">&amp;nbsp; கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் இன்று(19) பிற்பகல் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் இன்று(19) பிற்பகல் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>



அதனை கண்டு அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a22907f7-ab36-4fa9-8ea4-6b1993f54097/26-6a859e64d0993.webp' /></p><h2>8 பேர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு</h2><p> 



திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில்&nbsp; சேர்ந்த 20 வயதுடைய மாணவி&nbsp; என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>



குறித்த கல்லூரிக்கு நாடகத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டதையடுத்து குறித்த மாணவி கல்லூரி விடுதியில் தங்கியிருந்து முதலாம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார்.</p><p></p><p>



இந்நிலையில் விடுதியிலுள்ள அறையில் சம்பவதினமான இன்று பிற்பகல் சுமார்.12.00 மணியளவில் குறித்த மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்துள்ளார்.</p><p>



இதனைக்கண்ட அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயங்கி வீழ்ததையடுத்து அங்குள்ள மாணவர்கள் உடனடியாக தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்து கொண்ட மாணவியையும் மயங்கி வீழ்ந்த மாணவிகளையும் மீட்டு மட்டு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.</p><p></p><p>
</p><p>


இந்த நிலையில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்து கொண்ட மாணவி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும் மயங்கி வீழ்ந்த மாணவிகள் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
</p><p>


உயிரிழந்த மாணவியின் சடலம் பிரே பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p>


இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ஜூலை 31 வரையிலான கடந்த 7 மாதத்தில் 84 பேரும் கடந்த ஜூன் மாதத்தில் 8 பேர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
</p><p>


கடந்த வருடம் 2025 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31ம் திகதி வரையான ஒரு வருடத்தில் 164 தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்து கொண்டுள்ளதாக மாவட்ட பொலிஸ் தலைமைக் காரியாலய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-19T16:28:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[காசாவில் 24 மணிநேரத்தில் 20 பலஸ்தீனர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/israel-kills-20-palestinians-in-gaza-in-24-hours-1787155994"></link>
            <id>https://canadamirror.com/article/israel-kills-20-palestinians-in-gaza-in-24-hours-1787155994</id>
            <summary type="text">காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படும் வான்வழி மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 20 பலஸ்தீனர்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படும் வான்வழி மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 20 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>2025 ஒக்டோபரில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், காசா பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.
</p><p>இதேவேளை, 2024 ஜனவரியில் ஐந்து வயது சிறுமி ஹிந்த் ராஜப் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலும் இஸ்ரேல் இராணுவம் தற்போது குற்றவியல் விசாரணையை ஆரம்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dad94ee4-ce55-4b1a-917d-bfce25c46fdb/26-6a85d61c1a2c7.webp' /></p><p>
ஹிந்த் ராஜப்பின் குடும்பத்தினர் அப்பகுதியிலிருந்து வெளியேற முயன்றபோது, அவர்களின் வாகனத்தின் பாதையை இஸ்ரேலிய இராணுவ டாங்கி ஒன்று தடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>வாகனத்திற்குள் சிக்கியிருந்த அவர்கள் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் ஹிந்தின் 15 வயது உறவினரான லயானும் அடங்கினார். தாக்குதலின்போது உதவிக்காக அவசர மருத்துவப் பணியாளர்களை தொலைபேசியில் தொடர்புகொண்ட அவர், பின்னர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
ஹிந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டபோது சம்பவ இடத்தில் தங்களது டாங்கிகளோ அல்லது இராணுவ வீரர்களோ இருக்கவில்லை என இஸ்ரேல் ஆரம்பத்தில் மறுத்திருந்தது.</p><p>
காசாவில் தொடர்ந்து இடம்பெறும் தாக்குதல்கள் குறித்து சர்வதேச அளவில் கேள்விகள் எழுந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T16:26:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவுக்குள் துப்பாக்கிகளை கடத்த முயன்ற 57 வயது நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nb-man-charged-for-smuggling-firearms-1787155633"></link>
            <id>https://canadamirror.com/article/nb-man-charged-for-smuggling-firearms-1787155633</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவுக்குள் துப்பாக்கிகள் மற்றும் மெகசின்களை சட்டவிரோதமாகக் கடத்த முயன்றதாக 57 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கனடா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவுக்குள் துப்பாக்கிகள் மற்றும் மெகசின்களை சட்டவிரோதமாகக் கடத்த முயன்றதாக 57 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கனடா எல்லை சேவைகள் நிறுவனம் (CBSA) அறிக்கை வெளியிட்டுள்ளது.</p><p>
அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குத் திரும்பியபோது, நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் உள்ள ரிவர் டி சுட் எல்லை நுழைவுப் பகுதியில் குறித்த நபர் மேலதிக சோதனைக்காகத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.</p><p>
திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த சோதனையின்போது, அதிகாரிகள் மற்றும் மோப்ப நாய் குழுவினர் இணைந்து வாகனத்தை சோதனையிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4001916f-537c-451e-8005-db35a603e8b9/26-6a85d4b3a7d01.webp' /></p><p>
</p><p>நான்கு துப்பாக்கிகள், அதிக கொள்ளளவு கொண்ட 12 தோட்டாக் களஞ்சியங்கள், மேலும் இரண்டு தோட்டாக் களஞ்சியங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.</p><p>
கெய்லோன் ஸ்மித் என அடையாளம் காணப்பட்ட குறித்த நபருக்கு கடத்தல் தொடர்பில் ஐந்து குற்றச்சாட்டுகளும், தவறான தகவலை வழங்கியமை தொடர்பில் ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளன.
</p><p>அவர் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அடுத்த விசாரணை செப்டெம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.
</p><p>சுங்கச் சட்டத்தின் கீழ் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கனடா எல்லை சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T16:25:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகம் மொத்தம் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்... முதல் முறையாக ஒப்புக்கொண்ட இஸ்ரேல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/israel-confirms-fired-hind-rajab-1787156801"></link>
            <id>https://news.lankasri.com/article/israel-confirms-fired-hind-rajab-1787156801</id>
            <summary type="text">The Israeli military has confirmed for the first time: ஹிந்த் ரஜாப் கொல்லப்பட்ட கார் மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதை இஸ்ரேல் உறுதி செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>The Israeli military has confirmed for the first time: ஹிந்த் ரஜாப் கொல்லப்பட்ட கார் மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது.
</p><p>ஐந்து வயது பாலஸ்தீனச் சிறுமி ஹிந்த் ரஜாப் பயணித்த கார் மீது தாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதை இஸ்ரேலிய ராணுவம் முதன்முறையாக உறுதிப்படுத்தியுள்ளது.</p><h2>குற்றவியல் விசாரணை</h2><p>
</p><p>கடந்த 2024-இல் காஸாவில் தனது ஆறு உறவினர்களுடன் குறித்த சிறுமி கொல்லப்பட்டார். ஆரம்பத்தில் ரஜப் அந்தத் தாக்குதலில் இருந்து உயிர் தப்பி, உதவி கோரி வந்த ஒரு தொலைபேசி அழைப்பிற்குப் பதிலளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ab9d022-2a0a-437f-84fc-b1aff6e745fa/26-6a85d94510fe6.webp' /></p><p> </p><p>அந்த அழைப்பு பல மணி நேரம் நீடித்தது. இதனிடையே, இஸ்ரேலிய இராணுவத்துடன் ஒருங்கிணைந்து அவரைச் சென்றடைய அனுப்பப்பட்ட ஆம்புலன்ஸ் மீது பின்னர் குண்டுவீச்சு நடத்தப்பட்டது, இதில் இரண்டு மருத்துவப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். </p><p>கொல்லப்பட்ட மற்றவர்களுடன், சிறுமி ஹிந்தின் உடலும் சில நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டது. தற்போது வெளியாகியுள்ள அறிக்கையில், 
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF), </p><p>ஹிந்த் மற்றும் அவரது குடும்பத்தினரின் கொலை குறித்தும், அத்துடன் மார்ச் 2025-ல் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் ஐ.நா. ஊழியர் உட்பட 15 பாலஸ்தீனியர்களின் கொலை குறித்தும் குற்றவியல் விசாரணை தொடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>சிறுமி ஹிந்த் ரிஜப் படுகொலையும் மருத்துவப் பணியாளர்கள் மீதான குண்டுவீச்சும் சர்வதேச அளவில் கண்டனத்தைப் பெற்றன. உலகம் மொத்த பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பில் இஸ்ரேல் ராணுவம் முதல் முறையாக தங்கள் பங்கை ஒப்புக்கொண்டுள்ளது. </p><p>சிறுமி ஹிந்த் கொல்லப்பட்டது குறித்து இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) கூறுகையில், பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ் வாகனத்தின் இயக்கத்தை ஒருங்கிணைப்பதில் ஏற்பட்டதாகக் கூறப்படும் குறைபாடுகள் காரணமாக, இச்சம்பவம் குறித்து இராணுவக் காவல் குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூலம் ஒரு குற்றவியல் விசாரணையைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. </p><p>ஆனால், சிறுமி ஹிந்த் கொல்லப்பட்ட நேரத்தில் அப்பகுதியில் தங்கள் படையினர் யாரும் இல்லை என்றே இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) ஆரம்பத்தில் கூறியது. இருப்பினும், அந்தக் கூற்று விரைவில் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b14189e8-8baf-4586-8def-65dacf725be4/26-6a85d943a2472.webp' /></p><p>
</p><p>சிறுமி ஹிந்த் குடியிருந்த டெல் அல்-ஹவா உள்ளிட்ட காஸா நகரத்தின் சுற்றுப்புறங்களில் இயங்கும் படைகளைக் கொண்டு, பயங்கரவாத இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) பின்னர் விளக்கம் அளித்தது. </p><p>பாலஸ்தீன செஞ்சிலுவை சங்கத்தின் (PRCS) மருத்துவ உதவியாளர்களிடம் சிறுமி ஹிந்த் துயரத்துடனும் பதற்றத்துடனும் பேசிய ஒலிப்பதிவு உலகம் முழுவதும் ஒளிபரப்பப்பட்டதைத் தொடர்ந்து, அவரது கொலை சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.</p><h2>தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்</h2><p>
</p><p>அன்று தொலைபேசியின் மறுமுனையில் கேட்ட ஹிந்தின் மெல்லிய குரல், அவளது இறப்பிற்குப் பிறகும் 'ரெட் கிரசண்ட்' (Red Crescent) பணியாளர்களின் நினைவை விட்டு நீங்காமல் இருந்தது. </p><p>தங்களது காருக்கு நேர் முன்னால் இஸ்ரேல் பீரங்கிகள் தங்களை நோக்கி நகர்ந்து வருவதை சிறுமி ஹிந்த் அப்போது விவரித்துக் கொண்டிருந்தார்.</p><p> இதனிடையே, செஞ்சிலுவைச் சங்கக் குழுவினர், தங்கள் ஆம்புலன்ஸை அந்த இடத்திற்குள் செல்ல அனுமதிக்குமாறு இஸ்ரேலிய இராணுவத்திடம் வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருந்தபோது, ​​ஆபரேட்டர் ராணா ஃபகிஹ் பல மணிநேரம் ஹிந்துடன் தொலைபேசி இணைப்பில் இருந்தார். </p><p>மட்டுமின்றி, யாராவது வந்து தங்களை மீட்க வேண்டும் என்று அந்தச் சிறுமி தன்னிடம் மீண்டும் மீண்டும் கெஞ்சிக் கேட்டதாக ஃபகிஹ் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d1aee60-908b-47d1-ac97-ba9b0a15f50f/26-6a85d94454d63.webp' /></p><p> </p><p>சம்பவம் நடந்து மூன்று மணி நேரம் கழித்து அப்பகுதிக்குச் செல்ல ஒரு ஆம்புலன்ஸுக்கு இறுதியாக அனுமதி அளிக்கப்பட்டு, ஹிந்தை மீட்க அனுப்பி வைக்கப்பட்டது.&nbsp;
ஆனால் அந்த ஆம்புலன்ஸ் வாகனம் மீதும் இஸ்ரேல் இராணுவம் குண்டுவீச்சு நடத்தியது.</p><p>இச்சம்பவம் 'தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்' (The Voice of Hind Rajab) என்ற ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படமாக பின்னர் உருவாக்கப்பட்டது.</p><p> ஐ.நா. தனது விசாரணை ஆணையம் ஒன்றில் சிறுமி ஹிந்தின் வழக்கை மேற்கோள் காட்டி, இஸ்ரேல் மீது போர்க்குற்றங்கள் புரிந்ததாகக் குற்றம் சாட்டியது; ஆனால் இஸ்ரேல் அக்குற்றங்களை மறுத்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T16:24:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேவையான இடங்களிலும் தேவையான நேரங்களிலும் பலத்தை பயன்படுத்துவோம் – இஸ்ரேல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/israel-to-use-force-wherever-and-necessary-1787156545"></link>
            <id>https://tamilwin.com/article/israel-to-use-force-wherever-and-necessary-1787156545</id>
            <summary type="text">இஸ்ரேலின் எல்லைப் பகுதிகளில் இராணுவ அச்சுறுத்தல்கள் உருவாகுவதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என இஸ்ரேல் இராணுவத் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேலின் எல்லைப் பகுதிகளில் இராணுவ அச்சுறுத்தல்கள் உருவாகுவதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என இஸ்ரேல் இராணுவத் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எயால் சாமிர் தெரிவித்துள்ளார்.</p><p>
சிரியாவில் உள்ள விமானப்படைத் தளம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய பின்னர், இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள முதலாவது கருத்தாக இது அமைந்துள்ளது.</p><p>
இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள தெற்கு சிரியா பகுதிகளுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது எயால் சாமிர் இந்தக் கருத்தை வெளியிட்டதாக ஹீப்ரு மொழி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38b1cf81-3ae2-42d8-b704-f3f9254c8895/26-6a85d843268ba.webp' /></p><p>
</p><p>“எமது எல்லைகளுக்கு அருகில் விரோத சக்திகள் தங்களது இருப்பை நிலைநிறுத்துவதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம். தேவையான இடங்களிலும் தேவையான நேரங்களிலும் எமது இராணுவ பலத்தை துல்லியமாக பயன்படுத்துவதற்கு நாம் தயாராக இருக்கிறோம்” என அவர் தெரிவித்ததாக சர்வதேச ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
</p><p>இதேவேளை, சிரியாவின் அலெப்போ நகருக்கு அருகிலுள்ள அபு அல்-துஹூர் விமானப்படைத் தளம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருந்தது.</p><p>
துருக்கி இராணுவத்தினர் குறித்த விமானப்படைத் தளத்தில் நிலைநிறுத்தப்படுவதைத் தடுப்பதற்காகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
</p><p>இஸ்ரேலுக்கும் சிரியாவுக்கும் இடையில் பாதுகாப்பு விவகாரங்களில் தற்போதைய நிலையைத் தொடர்வது தொடர்பில் உடன்பாடு ஏற்பட்டிருந்ததாகவும், ஆனால் துருக்கி இராணுவத்தினரை விமானப்படைத் தளத்தில் நிலைநிறுத்துவதற்கு அனுமதிப்பதன் மூலம் டமாஸ்கஸ் அந்த உடன்பாட்டை மீறும் நிலைக்கு சென்றிருந்ததாகவும் இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.
</p><p>எனினும், இஸ்ரேலின் இந்தக் குற்றச்சாட்டுகளை துருக்கி நிராகரித்துள்ளதுடன், அவை “அடிப்படையற்றவை” என தெரிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T16:23:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[22வது அரசியலமைப்பு திருத்தம் : பொது வாக்கெடுப்பு நடத்த தயார் : அரசாங்கம் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/22nd-amendment-govt-ready-for-referendum-1787154529"></link>
            <id>https://ibctamil.com/article/22nd-amendment-govt-ready-for-referendum-1787154529</id>
            <summary type="text">&amp;nbsp;அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பொது வாக்கெடுப்பும் தேவை என்று உச்ச ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பொது வாக்கெடுப்பும் தேவை என்று உச்ச நீதிமன்றம் தீர்மானித்தால், பொது வாக்கெடுப்பு நடத்த அரசு தயாராக உள்ளது என சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.</p><p>ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெயதிஸ்ஸ, செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாத இறுதியில் எதிர்பார்க்கப்படும் உச்ச நீதிமன்றதொடர அரசு தயாராக இருப்பதாகக் கூறினார்.</p><h2>பொது நலனுக்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது</h2><p>
</p><p>
முன்மொழியப்பட்ட இந்தத் திருத்தம் முற்றிலும் பொது நலனுக்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது என்றும், மக்களின் சார்பாகத் தொடங்கப்பட்ட சீர்திருத்தப் பணிகளை அரசு தொடரும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa8362df-7c5c-4548-8c9d-51cec2533af9/26-6a85d6ca6e979.webp' /></p><p>
</p><p>
"நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்பட்டால், அதற்கேற்ப நாங்கள் செயல்படத் தயாராக இருக்கிறோம். பொது வாக்கெடுப்பு தேவைப்பட்டால், உச்ச நீதிமன்றத்தின் முடிவின் அடிப்படையில் அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்," என்று அவர் கூறினார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T16:20:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொலைபேசி கமராக்கள் வழியாக கண்காணிக்கும் மொசாட் - நினைப்பதைவிட அருகில் அவர்கள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mossad-monitors-via-phone-cameras-1787156092"></link>
            <id>https://tamilwin.com/article/mossad-monitors-via-phone-cameras-1787156092</id>
            <summary type="text">உலகின் சக்திவாய்ந்த உளவு அமைப்புகளில் ஒன்றாக பார்க்கப்படும் இஸ்ரேலின் மொசாட் அமைப்பு, தற்போது மக்களின் கைகளில் இருக்கும் ஸ்மார்ட்போன்களையும் குறிவைத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் சக்திவாய்ந்த உளவு அமைப்புகளில் ஒன்றாக பார்க்கப்படும் இஸ்ரேலின் மொசாட் அமைப்பு, தற்போது மக்களின் கைகளில் இருக்கும் ஸ்மார்ட்போன்களையும் குறிவைத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
நாம் 24 மணி நேரமும் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் மூலம் எமது நடவடிக்கைகள், புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் குரல் பதிவுகள் உள்ளிட்ட தகவல்கள் பதிவு செய்யப்பட்டு, எங்கோ இருக்கும் மூன்றாம் தரப்பினருக்கு சென்றடைய வாய்ப்புள்ளதாக பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.</p><p>

இதன் காரணமாக, ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் தொலைபேசி பயன்பாட்டை தவிர்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p> 

இதேவேளை, பயனர்களின் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்டு சந்தைக்கு வரும் ஐபோன்கள் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களின் கமராக்கள் மற்றும் பிற தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பிலும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
</p><p>
இது போன்ற நாம் அறிந்திராத பல சுவாரஸ்யமான தகவல்களுடன் வருகிறது “உண்மையின் தரிசனம்” நிகழ்ச்சி,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NNqduegvc0Y" width="640" height="360" class="note-video-clip"></iframe></p>]]></content>
            <updated>2026-08-19T16:16:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரி தொடர்பில் கனடிய உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் நிலைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadian-manufacturers-say-tariff-delay-1787152309"></link>
            <id>https://canadamirror.com/article/canadian-manufacturers-say-tariff-delay-1787152309</id>
            <summary type="text">அமெரிக்காவின் புதிய வரிகள் அமல்படுத்தப்படுவதைத் தற்காலிகமாக ஒத்திவைக்க எடுக்கப்பட்ட முடிவுக்கு கனடிய உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அமைப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் புதிய வரிகள் அமல்படுத்தப்படுவதைத் தற்காலிகமாக ஒத்திவைக்க எடுக்கப்பட்ட முடிவுக்கு கனடிய உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. </p><p>
எனினும், வரிகள் குறித்த இந்தத் தொடர் அச்சுறுத்தல், நிறுவனங்களையும் அவற்றின் தொழிலாளர்களையும் பேரழிவை ஏற்படுத்தும் அதே அபாயநிலைக்குத் தள்ளுவதாகக் கவலை வெளியிட்டுள்ளது. </p><p>
எதிர்கால வரிக் கொள்கைகள் எவ்வாறு இருக்கும் என்பது தெரியாமல், வர்த்தக நிறுவனங்களால் நீண்டகால திட்டமிடல் மற்றும் முதலீட்டு முடிவுகளைத் தெளிவான நம்பிக்கையுடன் எடுக்க முடியாது என்று கனடாவின் உற்பத்தித் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அமைப்பு கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91731b8d-e362-4f28-a491-223a0a7c95af/26-6a85c7b7c45e5.webp' /></p><p>
புதிய வர்த்தக ஒப்பந்தத்தைச் இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சுமார் 28 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்கள் மீது விதிக்கப்படவிருந்த புதிய 50 சதவீத வரியை மூன்று நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். </p><p>
இதனிடையே, பேச்சுவார்த்தைகளில் "குறிப்பிடத்தக்க முன்னேற்றம்" ஏற்பட்டுள்ள போதிலும், இன்னும் செய்ய வேண்டிய பணிகள் மீதமுள்ளதாகப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். </p><p>
புதிய வரிகள் விதிக்கப்பட்டால் அது கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளையுமே பலவீனப்படுத்தும், செலவுகளை அதிகரிக்கும் மற்றும் உலக அளவில் இரு நாட்டு நிறுவனங்களின் போட்டியிடும் திறனைக் குறைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>எனவே, பேச்சுவார்த்தையாளர்கள் இந்த கூடுதல் நேரத்தைப் பயன்படுத்தி ஒரு முழுமையான வர்த்தக ஒப்பந்தத்தை எட்ட முயற்சி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T16:13:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெல்ஜியத்தில் 10 மில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கம் கண்டெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/construction-workers-strike-gold-at-belgian-1787151773"></link>
            <id>https://canadamirror.com/article/construction-workers-strike-gold-at-belgian-1787151773</id>
            <summary type="text">பெல்ஜியத்தில் கட்டடப் பணி நடந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் தொடர்பாக, அப்பகுதிக்கு வர வேண்டாம் எனப் புதையல் தேடுபவர்களுக்குப் பெல்ஜியம் காவல்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெல்ஜியத்தில் கட்டடப் பணி நடந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் தொடர்பாக, அப்பகுதிக்கு வர வேண்டாம் எனப் புதையல் தேடுபவர்களுக்குப் பெல்ஜியம் காவல்துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. </p><p>
கிழக்கு பிளெமிஷ் நகரமான டென்டர்மொண்டே பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.</p><p> அப்போது, வடிகால் குழாய் அமைப்பதற்காகத் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், தற்செயலாகப் பெருமளவிலான தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்களைக் கண்டெடுத்தனர். </p><p>
இதுகுறித்துத் தகவலறிந்த காவல்துறை, சுமார் 50 தங்கக் கட்டிகள் மற்றும் தங்க நாணயங்களை மீட்டு, தங்களது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் புகைப்படங்களாகப் பகிர்ந்தனர். 
சிஏடபிள்யூ ஈஸ்ட்-ப்ளாண்டர்ஸ் என்ற உள்ளூர் தொண்டு நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தக் கட்டடத்தின் அடித்தளச் சுவரில் சுமார் 10.4 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள இந்தத் தங்கக் கட்டிகளும் நாணயங்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது. </p><p>
ஆரம்பத்தில் அதிர்ச்சியும் வியப்புமாக இருந்தது. கழிவுநீர் குழாய் பதிக்கும் பணியின் போதுதான் இதைக் கண்டெடுத்தோம்; நிச்சயமாகத் தங்கம் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என கோபி என்ற கட்டுமானத் தொழிலாளி க் கூறியுள்ளார்.
</p><p>கண்டெடுக்கப்பட்ட தங்கம் அனைத்தும் விரைவாகப் கணக்கெடுக்கப்பட்டு, பெல்ஜியம் அரசாங்கத்திற்குச் சொந்தமான உயர்பாதுகாப்பு பெட்டகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p> 
இதனிடையே, ஃபேஸ்புக் பக்கத்தின் சுயவிவரப் படத்தை (Profile picture) தங்க நாணயத்தின் படமாக மாற்றிய காவல்துறை, "இந்தப் பகுதிக்கு மீண்டும் வருகை தரப் பல புதையல் வேட்டைக்காரர்கள் விரும்புவது தெரிகிறது. உங்களுக்கு ஒரு 'தங்கமான அறிவுரை': இங்கு வருவது முற்றிலும் வீண் முயற்சி" என்று குறிப்பிட்டுள்ளதுடன், வேலி அமைக்கப்பட்டுள்ள அந்தப் பகுதிக்கு யாரும் வர வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.</p><p> 
இந்தத் தங்கப் புதையல் சட்டப்பூர்வமாக யாருக்குச் சொந்தமானது, இதை யார் வைத்துக்கொள்வார்கள் என்பது குறித்த விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. "இந்தச் செல்வம் சரியான நபர்களின் கரங்களைச் சென்றடையும் என நம்புவோம்" என்றும் காவல்துறை தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T16:13:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூட்டப்படாத காரில் மாட்டிக்கொண்ட கரடி பரிதாமாக உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bear-dies-after-becoming-trapped-inside-car-1787151341"></link>
            <id>https://canadamirror.com/article/bear-dies-after-becoming-trapped-inside-car-1787151341</id>
            <summary type="text">அமெரிக்காவின் கொலராடோ ஸ்பிரிங்ஸ் பகுதியில், பூட்டப்படாத காரில் சிக்கிக்கொண்ட கரடி ஒன்று, வெளியே வர முடியாமல் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் கொலராடோ ஸ்பிரிங்ஸ் பகுதியில், பூட்டப்படாத காரில் சிக்கிக்கொண்ட கரடி ஒன்று, வெளியே வர முடியாமல் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>சில நாட்களுக்குப் பிறகே அந்தப் பிணம் கண்டெடுக்கப்பட்டது.
சுமார் 113 கிலோ எடையுள்ள அந்தப் கறுங்கரடி, பூட்டப்படாத காரின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்துள்ளது. </p><p>
கதவு தானாக மூடிக்கொண்டதால் வெளியே வர முடியாமல் காரை சேதப்படுத்திய நிலையில், அதிக வெப்பம் காரணமாகக் காரின் உள்ளேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82825382-7190-4d79-a21d-93eb4e545344/26-6a85c3eed01b4.webp' /></p><p>
இச்சம்பவத்தையடுத்து, கொலராடோ பூங்காக்கள் மற்றும் வனவிலங்குத் துறை வாகன ஓட்டிகளுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. </p><p>கார் கதவுகளை எப்போதும் பூட்டி வைக்கவும், வாகனங்களுக்குள் உணவுகள் மற்றும் குப்பைகளை வைக்க வேண்டாம் என்றும், ஜன்னல்களை முழுமையாக மூடி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
நடப்பு ஆண்டில் இதுவரை 6,000-க்கும் மேற்பட்ட கரடி நடமாட்டங்கள் குறித்துப் புகார்கள் வந்துள்ளதாக கொலராடோ பூங்காக்கள் மற்றும் வனவிலங்குத் துறை தெரிவித்துள்ளது. </p><p>
இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தை விட இருமடங்காகும். வறட்சி காரணமாகக் காடுகளில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், உணவைத் தேடி கரடிகள் மலைப் பகுதிகளிலிருந்து மக்கள் வாழும் குடியிருப்புகளை நோக்கி வரத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.</p><p>
மனிதர்களும் வனவிலங்குகளும் பாதுகாப்பாக இணைந்து வாழ்வது குறித்தும், கரடிகளின் பழக்கவழக்கங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கொலராடோ பூங்காக்கள் மற்றும் வனவிலங்குத் துறை தனது இணையதளத்தில் 'Living with Bears' என்ற சிறப்புப் பிரிவைத் தொடங்கியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T16:12:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோ நகரசபை தேர்தலில் போட்டியிடும் முன்னாள் எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/former-mp-erskine-smith-expected-to-run-toronto-1787150716"></link>
            <id>https://canadamirror.com/article/former-mp-erskine-smith-expected-to-run-toronto-1787150716</id>
            <summary type="text">முன்னாள் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நெய்ட் எர்ஸ்கைன்-ஸ்மித் டொராண்டோ நகரசபை உறுப்பினராகப் போட்டியிடுவதற்காகத் தனது வேட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நெய்ட் எர்ஸ்கைன்-ஸ்மித் டொராண்டோ நகரசபை உறுப்பினராகப் போட்டியிடுவதற்காகத் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.</p><p> 
வழக்கறிஞராக இருந்து அரசியல்வாதியான 42 வயதான எர்ஸ்கைன்-ஸ்மித், 'பீச்சஸ்-ஈஸ்ட் யார்க்' தொகுதி நகரசபை இடத்திற்கு போட்டியிடுவதற்காகக் கடந்த புதன்கிழமை காலை டொராண்டோ சிட்டி ஹாலில் ஆவணங்களைச் சமர்ப்பித்தார். </p><p>
2015-ஆம் ஆண்டு இதே தொகுதியிலிருந்து கூட்டாட்சி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், வீடமைப்பு அமைச்சராகக் குறுகிய காலம் பணியாற்றினார். மே மாதம் பிரதமர் மார்க் கார்னி அமைச்சரவையை மாற்றியமைத்தபோது இவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0e566e6-5c27-4957-ab02-9148b76c9d44/26-6a85c17e53e86.webp' /></p><p> </p><p>
புதன்கிழமை சிட்டி ஹாலில் செய்தியாளர்களிடம் பேசிய எர்ஸ்கைன்-ஸ்மித், டொராண்டோ மேயர் ஒலிவியா சோ தன்னை தேர்தலில் போட்டியிடுமாறு ஊக்குவித்ததாகத் தெரிவித்தார்.
</p><p>ஒட்டாவாவில் வீடமைப்புத் துறையில் பணியாற்றிய காலத்தில் தாமும் மேயர் ஒலிவியா சோவும் மிக நெருக்கமாகப் பணியாற்றியதாக அவர் குறிப்பிட்டார். 
"நாங்கள் இருவரும் இணைந்து நமது நகரத்திற்காகப் பல நன்மைகளைச் செய்துள்ளோம். இணைந்து செயல்படுவதற்கான நல்ல வாய்ப்பு மீண்டும் கிடைத்துள்ளது. மேயர் சோவுடன் இணைந்து எனது தொகுதி மற்றும் நகரத்தின் வளர்ச்சிக்காகப் பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன்," என்று அவர் கூறினார்.</p><p>
முன்னதாக மாகாண அரசியலில் கவனம் செலுத்திய எர்ஸ்கைன்-ஸ்மித், 'ஸ்கார்பரோ சவுத்வெஸ்ட்' இடைத்தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட முயன்றார். ஆனால் அந்த உட்கட்சித் தேர்தலில் தோல்வியடைந்தார். அதை எதிர்த்து அவர் செய்த மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T16:12:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[800 ஆண்டுகள் பழமையான கைவிடப்பட்ட கோட்டை: பாரிய செலவில் புனரமைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/haverfordwest-castle-in-refurb-work-1787155175"></link>
            <id>https://news.lankasri.com/article/haverfordwest-castle-in-refurb-work-1787155175</id>
            <summary type="text">Haverfordwest castle in refurb work: வேல்ஸில் 800 ஆண்டுகள் பழமையான கைவிடப்பட்ட கோட்டை புனரமைக்கப்பட உள்ளது.

வேல்ஸில் 800 ஆண்டுகள் பழமையான கைவிடப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Haverfordwest castle in refurb work: வேல்ஸில் 800 ஆண்டுகள் பழமையான கைவிடப்பட்ட கோட்டை புனரமைக்கப்பட உள்ளது.
</p><p>
வேல்ஸில் 800 ஆண்டுகள் பழமையான கைவிடப்பட்ட கோட்டை ஒன்றை, முக்கிய சுற்றுலாத் தலமாக மாற்ற பாரிய அளவில் செலவு செய்யப்பட உள்ளது.</p><h2>800 ஆண்டுகள் பழமையான&nbsp;கோட்டை </h2><p>

வேல்ஸில் உள்ள பெம்ப்ரோஷையரில் Cleddau நதியின் அருகேயுள்ள குன்றின் உச்சியில் Haverfordwest கோட்டை அமைந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b81f2cb2-c52d-45d4-807f-3ed2bf7add60/26-6a85d3b9367c0.webp' />&nbsp;</p><p></p><p>

1188-ஆம் ஆண்டில் இந்தக் கோட்டை வெறும் மரம் மற்றும் மண்ணால் கட்டப்பட்டது.

800 ஆண்டுகள் பழமையான இந்தக் கோட்டை, பல ஆண்டுகளாக நடந்த பல்வேறு போர்கள் மற்றும் சண்டைகளில் இருந்து தப்பிப் பிழைத்தது.
</p><p>
என்றாலும், இதன் உள் முற்றம் மற்றும் சுற்றுச்சுவரின் எலும்புக்கூடும், பல கோபுரங்களும் இன்னும் எஞ்சியுள்ளன. சிதைந்த காரணத்தால் இக்கோட்டை கைவிடப்பட்டது.</p><p>

இந்த நிலையில், இதனை ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்காக புனரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளன.

இதற்காக, பெம்ப்ரோஷையர் கவுண்டி கவுன்சிலின் நிதியுதவியுடன் 17.7 மில்லியன் பவுண்ட் செலவிடப்படுகிறது. </p><p>

மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்போது ஹேவர்ஃபோர்ட்வெஸ்ட் கோட்டை பொதுமக்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று டைம் அவுட் செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4c481fb-f93e-43d4-b53e-7dd2bff041c0/26-6a85d3b8711fe.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T16:00:37+00:00</updated>
        </entry>
    </feed>
