<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-28T11:22:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்கவில் இரு சீனப்பெண்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/arrested-with-counterfeit-cigarettes-worth-77-lakh-1787914017"></link>
            <id>https://ibctamil.com/article/arrested-with-counterfeit-cigarettes-worth-77-lakh-1787914017</id>
            <summary type="text">வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து&amp;nbsp;கட்டுநாயக்க விமான நிலையத்தின் ‘கிரீன் சேனல்’ ஊடாக வெளியேற முயன்ற இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து&nbsp;கட்டுநாயக்க விமான நிலையத்தின் ‘கிரீன் சேனல்’ ஊடாக வெளியேற முயன்ற இரு சீனப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>குறத்த பெண்களை சுங்க அதிகாரிகள் இன்று (28.08.2026) காலை கைது செய்துள்ளனர்.&nbsp;</p><p>சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றபட்ட சட்டவிரோத சிகரட்டுக்கள் சுமார் ரூ.77 இலட்சத்து 40 ஆயிரம் பெறுமதி என விசாரணைகளின் பின் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p></p><h2>சிகரெட்டுகளுடன் இரு பெண் கைது</h2><p>கைது செய்யப்பட்டவர்கள் 30 மற்றும் 35 வயதுடைய இரு சீன வர்த்தகப் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61a1a309-65a3-43f3-97fb-7f57b2efdd7a/26-6a916dd2b55e2.webp' /></p><p>
சீனாவில் கொள்வனவு செய்யப்பட்ட சிகரெட்டுகளை மலேசியாவின் கோலாலம்பூர் ஊடாக, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அவர்கள் இலங்கைக்கு கொண்டு வந்துள்ளனர்.
</p><p>
அவர்களின் 4 பயணப் பொதிகளில் 258 அட்டைப்பெட்டிகளில் 51,600 சீனத் தயாரிப்பு சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இரு சந்தேகநபர்களையும் தடுத்து வைத்துள்ள சுங்க அதிகாரிகள், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T11:16:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவோடு இரவாக கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி: மக்கள் எதிர்ப்பால் அடுத்தடுத்து நடந்த அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attempt-to-set-up-a-watchtower-overnight-1787915298"></link>
            <id>https://tamilwin.com/article/attempt-to-set-up-a-watchtower-overnight-1787915298</id>
            <summary type="text">பூநகரி - கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு பகுதியில் இரவு வேளை வாகனங்களில்
வந்தவர்களால் இரகசியமாக கோபுரம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பூநகரி - கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு பகுதியில் இரவு வேளை வாகனங்களில்
வந்தவர்களால் இரகசியமாக கோபுரம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்ற
நிலையில் அப்பகுதி மக்கள் ஒன்று கூடியதால் கோபுரம் அமைக்கும் முயற்சி
தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த பொது அமைப்பின் பிரதிநிதி
ஒருவர் கருத்து தெரிவிக்கையில், </p><p>


 கிராஞ்சி பொன்னாவெளியை ஊடார்த்து சுமார் 238 ஏக்கர்
பரப்பளவில் காற்றாலை திட்டம் ஒன்று அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றது.</p><p> 

அப்பகுதி மக்களின்
பாரிய எதிர்ப்பை மீறி குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக
அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்புடனும் 34 காற்றாலை அமைக்கும்
திட்டத்திற்கான ஏற்பாடுகள் மும்மரமாக இடம்பெற்று வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/991106e6-4cd4-4285-afa2-ed891435a7fe/26-6a916cda342ca.webp' /></p><p>

இதன் பின்னணியில் இரவு வேளை வாகனத்தில் வந்த பெரும்பான்மை இனமொழியை பேசும்
நபர்கள் எருமை தீவுப் பகுதியில் நிற்பதாக தகவல் கிடைத்த நிலையில், பொலிஸாருக்கு
உடனடியாக தகவல் வழங்கிய போதும் அவர்கள் குறித்த இடத்துக்கு வரவில்லை.
</p><h2>

7ஆயிரம் தென்னங்கன்றுகள் அழியும் வாய்ப்பு</h2><p>
இந்த நிலையில் ஊர் மக்கள் குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்டபோது வாகனம்
ஒன்றில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் தங்குவதற்காக நிழல் கொட்டகை ஒன்றை இரவு
வேளை அமைத்துள்ளனர்.</p><p>

அவர்களிடம் விடயத்தை வினவியபோது, காற்றாலை திட்டத்தை கொழும்பிலிருந்து
பார்ப்பதற்கும் தகவல் வழங்குவதற்கும் கண்காணிப்பு கோபுரம் ஒன்றை அமைக்க
வந்ததாக தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f0d6312-c443-46a8-812d-637beba85298/26-6a916cdb2d39f.webp' /></p><p>
</p><p>
நாங்கள் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம் என தெரிவித்து
அவர்களின் பொருட்களை மீட்கச் சென்ற போது தாங்கள் வெளியேறுகிறோம் எனத்
தெரிவித்து அந்த இடத்தில் இருந்து சென்றுள்ளனர்.
</p><p>
குறித்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி அரசாங்க அதிபரை மறுநாள் தொடர்பு கொண்டு
கேட்டபோது அவர், “தனக்கு ஏதும் தெரியாது” என பதிலளித்தார். இந்த காற்றாலை திட்டம் கிராஞ்சி பொன்னாவெளியைச் சேர்ந்த சுமார் 2ஆயிரம்
குடும்பங்களை சேர்ந்த சுமார் பத்தாயிரம் பேர் குறித்த திட்டத்தினால் நேரடியாக
பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.</p><p>

கற்றாலை அமைக்க திட்டம் போடப்பட்டிருக்கும் பகுதிகள் அதிகளவிலான தென்னை மரங்கள் காணப்படுகின்ற நிலையில், 12
காற்றாலை நிறுவும் இடங்களில் சுமார் 7 ஆயிரம் தென்னங்கன்றுகள் அழிக்கப்பட வாய்ப்பு உள்ளன.

ஒரு காற்றாலையின் விட்டம் 165 மீட்டர் நீளம் கொண்ட நிலையில் ஒரு காற்றாலை
அமைப்பதற்கு சுமார் 7 ஏக்கர் காணி கையகப்படுத்தப்படவுள்ளது.</p><h2>

பாதிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்</h2><p>
ஒரு காற்றாலை 120 அடி நீளம் கொண்டதாக காணப்படுகின்ற நிலையில், நிலத்துக்கு கீழ்
சுமார் 60 அடி நீளத்தில் பொருத்தப்படவுள்ள நிலையில் ஒரு காற்றாலைக்கு சுமார்
3000 தொடக்கம் 4000 ஆயிரம் பொதியில் அடைக்கப்பட்ட சீமெந்து செலவாகும் என
கணிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b291ee9-5aca-4fdb-a334-bbf00e617db5/26-6a916cdc0a578.webp' /></p><p>
</p><p>
இந்தத் திட்டம் மக்களின் எதிர்ப்பை மீறி நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்தப் பிரதேசத்தின் வயல் நிலங்கள்
,வழிபாட்டு இடங்கள், மற்றும் நல்ல தண்ணிக் கிணறு என்பன பாதிக்கப்படும் சூழல்
உருவாகியுள்ளன.</p><p>

மக்கள் வாழுகின்ற வளமான பகுதியை அழித்து அபிவிருத்தி என்ற போர்வையில் கனிம
மண்ணையும் காற்றாலையையும் நிறுவும் திட்டத்தை கைவிட்டு குறித்த பிரதேசத்தில்
மாற்றுக்காணியை தெரிவு செய்ய வேண்டும்.
</p><p>
ஆகவே மக்களுக்கு ஆபத்தை விளைவிக்க கடிய திட்டங்களை தடுத்து நிறுத்த வேண்டிய
பொறுப்பு அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் உள்ளது என்பதை சுட்டி காட்ட
விரும்புகிறேன் என்றார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T11:12:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் அதிகரிக்கும் எலிகளின் பெருக்கம்...! மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rising-rat-population-threatens-colombo-health-1787912427"></link>
            <id>https://ibctamil.com/article/rising-rat-population-threatens-colombo-health-1787912427</id>
            <summary type="text">இலங்கையின் வர்த்தகத் தலைநகரமான கொழும்பு நகரில் எலிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அன்றாட மக்கள் வாழ்க்கை பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் வர்த்தகத் தலைநகரமான கொழும்பு நகரில் எலிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இதனால் அன்றாட மக்கள் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எலித் தொல்லைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்றும் மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>எலிகள் மூலம் ரேபிஸ் (Rabies) , எலிக்காய்ச்சல் உள்ளிட்ட ஆபத்தான நோய்கள் பரவக்கூடிய அபாயம் இருப்பதால் கொழும்புக்கு வரும் மக்களின் சுகாதாரத்திற்கும் இது அச்சுறுத்தலாக இருப்பதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p>
</p><p></p><h2>எலிகளின் எண்ணிக்கை</h2><p>கொழும்பில் உள்ள முக்கிய விடுதிகள், உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களிலும் எலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
நகரின் பல பகுதிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உணவாகக் உட்கொள்ளும் எலிகள், தற்போது பொதுமக்களின் சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக அஞ்சப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fd46ec2-30bb-4828-8975-7381ed8c67c2/26-6a916c27b6e41.webp' /></p><p>
மேலும், பல்வேறு இடங்களில் தங்குமிடங்களை அமைத்துக்கொள்ளும் எலிகளால் கட்டிடங்கள், சொத்துக்கள் மற்றும் ஏனைய பகுதிகளும் சேதமடைவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
எலித் தொல்லையை கட்டுப்படுத்த குப்பைகளை முறையாக அகற்றுதல், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் வடிகால் அமைப்புகளை சுத்தமாகப் பராமரித்தல் அவசியம் என வலியுருத்தப்பட்டுள்ளது.</p><p>
இதற்காக கொழும்பு நகர அதிகாரிகளுடன், நகரில் வசிக்கும் மக்களும் கொழும்புக்கு வருகை தரும் மக்களும் இணைந்து செயல்பட வேண்டியது சமமான பொறுப்பாகும் என வலியுருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-28T11:12:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளப் பேரிடர்... 5 மாதங்களுக்கு முன்னரே விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-disaster-5-months-before-1787911956"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-disaster-5-months-before-1787911956</id>
            <summary type="text">Two Reports Indicated What Lay Ahead: நேபாள மக்களுக்கு என்ன காத்திருக்கிறது என்பதை இரண்டு அறிக்கைகள் சுட்டிக்காட்டின.
இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Two Reports Indicated What Lay Ahead: நேபாள மக்களுக்கு என்ன காத்திருக்கிறது என்பதை இரண்டு அறிக்கைகள் சுட்டிக்காட்டின.
</p><p>இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து பனி இழப்பு விகிதம் இரட்டிப்பாகியுள்ளதால், இந்து குஷ் இமயமலை முழுவதும் உள்ள பனியாறுகள் மிக வேகமாக உருகி வருவதாக ஐந்து மாதங்களுக்கு முன்பு இரண்டு அறிக்கைகள் எச்சரித்துள்ளது.</p><h2>இரண்டு பில்லியன்</h2><p>
</p><p>குறித்த ஆய்வறிக்கையை இந்து குஷ் இமயமலை (HKH) பகுதி மக்களின் நலனுக்காகச் செயல்படும், அரசுகளுக்கு இடையிலான ஓர் அறிவு மற்றும் கற்றல் மையம் முன்னெடுத்துள்ளது. </p><p>
காத்மாண்டுவை மையமாகக் கொண்டு செயல்படும் 'ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டிற்கான சர்வதேச மையம்' (ICIMOD) தனது இரண்டு அறிக்கைகளில், 1975-ஆம் ஆண்டு முதல் பனிப்பாறைகளின் தடிமன் 27 மீற்றர் வரை குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d60f06fb-243e-4dad-9a33-1876ddc2f470/26-6a915f16b7b9f.webp' /></p><p> </p><p>இந்த மையத்தின் பிராந்திய உறுப்பினர்களாக இந்தியா, நேபாளம், பூட்டான் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் உள்ளன.
இந்து குஷ்-இமயமலைப் பகுதி மற்றும் திபெத்திய பீடபூமியில் இருந்து உருகும் நீரைச் சார்ந்து வாழும், கீழ்நிலையில் உள்ள சுமார் இரண்டு பில்லியன் மக்களுக்கு எதிர்காலத்தில் ஒரு கவலைக்குரிய சூழல் நிலவக்கூடும் என அந்த அறிக்கைகள் சுட்டிக்காட்டின. </p><p>இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு 489 பேரின் உயிரைப் பறித்த நேபாளத்தின் திடீர் வெள்ளப்பெருக்கிற்கான துல்லியமான காரணம் குறித்து விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>இருப்பினும், அவர்களில் பலர் பல்வேறு காரணிகளின் கலவையையே கருத்தில் கொள்கின்றனர்; அவற்றில் மிகவும் கவலைக்குரிய ஒரு விடயம் என்னவென்றால், 4,000 மீற்றர் மற்றும் அதற்கு மேற்பட்ட உயரத்தில் பனிப்பொழிவுக்குப் பதிலாக மழை பெய்திருக்கிறது. </p><p></p><p>இந்த நிலையில், ஒரு காலத்தில் பனிப்பொழிவு இருந்த உயரங்களில் தற்போது மழை பெய்வதற்கும், பனியாறுகள் மிக வேகமாகப் பின்வாங்குவதற்கும் வெப்பமயமாதலே காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>இதனிடையே, தனித்தனியாக, இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட இரண்டு ICIMOD அறிக்கைகளில், 1990 மற்றும் 2020-க்கு இடைப்பட்ட காலத்தில், இந்து குஷ்-இமயமலைப் பகுதியில் பனிப்பாறைகள் தங்கள் மொத்தப் பரப்பளவில் சுமார் 12 சதவீதத்தையும், மதிப்பிடப்பட்ட பனிக்கட்டி இருப்பில் 9 சதவீதத்தையும் இழந்தன என்று குறிப்பிட்டிருந்தன. </p><p>ICIMOD-இன் இரண்டு அறிக்கைகளில் ஒன்றான 'HKH Glacier Outlook 2026' (கண்காணிக்கப்பட்ட 38 பனிப்பாறைகளின் தரவுகளை இது ஆய்வு செய்தது), 2000-ஆம் ஆண்டிலிருந்து பனிப்பாறை இழப்பு இருமடங்காக அதிகரித்துள்ளதைக் கண்டறிந்துள்ளது; </p><p>இது, இமயமலையின் பனி மண்டலத்தின் (cryosphere) சில பகுதிகள், மீளமுடியாத வகையில் பின்வாங்கும் நிலையை நோக்கிய முக்கியமான திருப்புமுனைகளை நெருங்கிக்கொண்டிருக்கலாம் என்பதற்கான வலுவான அறிகுறியாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98c339b1-dcec-408e-9b44-f0b0a8c61812/26-6a915f176d6c9.webp' /></p><p> </p><p>அதிக உயரத்தில் உள்ள ஒரு இடத்திலிருந்து உருவான பனி மற்றும் பாறைச் சரிவு இந்தப் பெருவெள்ளத்தைத் தூண்டியிருக்கக்கூடுமா என்பது குறித்து ICIMOD ஆராய்ச்சியாளர்கள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். </p><p>போட்டே கோஷி ஆற்றின் துணை ஆறான லெண்டே கோலாவிற்குள் பெருமளவிலான பனிக்கட்டியும் பாறைச் சிதைவுகளும் நுழைந்திருக்கலாம்; இது நீர், வண்டல் மற்றும் பெரிய பாறைகளை அடித்துக்கொண்டு கீழ்நோக்கிச் செல்லும் வகையிலான திடீர் நீரோட்டப் பெருக்கை ஏற்படுத்தியிருக்கலாம். </p><p>சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், பனியாறுகள் பின்வாங்குவதாலும் நிரந்தர உறைபனி சிதைவடைவதாலும் பனிப்பொழிவு குறைந்து வருவதையே இது அதிகமாகச் சுட்டிக்காட்டுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T11:10:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[34 வயதான உகாண்டா அரசர் காலமானார்; காரணம் வெளியாகவில்லை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/34-year-old-ugandan-king-oyo-nyimba-passes-away-1787913521"></link>
            <id>https://canadamirror.com/article/34-year-old-ugandan-king-oyo-nyimba-passes-away-1787913521</id>
            <summary type="text">&amp;nbsp; உகாண்டா அரசர் ஓயோ நியம்பா தனது 34-வது வயதில் நேற்று இரவு காலமானதாக அவரது இராஜ்ஜியத்தின் பிரதமர் அறிவித்துள்ளார்.

ஓயோ நியம்பா (Oyo Nyimba), உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; உகாண்டா அரசர் ஓயோ நியம்பா தனது 34-வது வயதில் நேற்று இரவு காலமானதாக அவரது இராஜ்ஜியத்தின் பிரதமர் அறிவித்துள்ளார்.

ஓயோ நியம்பா (Oyo Nyimba), உகாண்டா அரசராக 1995-ல் அரியணை ஏறியதன் மூலம் உலகின் மிக இளைய மன்னராக மாறினார்.</p><p> 


உகாண்டா ஒரு குடியரசாகும், இது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாட்டுத் தலைவரால் ஆளப்படுகிறது, ஆனால் அது காலனித்துவத்திற்கு முந்தைய காலத்தில் இருந்ததைப் போலவே தங்கள் இராஜ்ஜியங்களின் மீது தொடர்ந்து ஆட்சி புரியும் பல பாரம்பரிய அரசுகளைக் கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f910df0b-08cb-448c-b72d-2ee341eac6fb/26-6a91653301ab3.webp' /></p><h2>இறப்புக்கான காரணத்தை வெளியிடவில்லை</h2><p> </p><p>


அவர்களின் அரசியல் அதிகாரம் பெரிதும் அடையாளமானது, ஆனால் அவர்கள் மகத்தான கலாசார மற்றும் சமூக தாக்கத்தை கொண்டுள்ளனர்.



ஓயோ நியம்பா (Oyo Nyimba) கபாம்பா இகுரு ருகிடி IV, காங்கோ ஜனநாயக குடியரசு எல்லையின் அருகே உகாண்டாவின் மேற்கில் உள்ள ஒரு சிறிய இராஜ்ஜியமான டோரோவின் மன்னனாவார்.</p><p>



"டோரோவின் ஓமுகாமா, மன்னர் ஓயோ நியம்பா கபாம்பா இகுரு ருகிடி IV இன் மறைவை ஆழ்ந்த சோகத்தோடும் கனத்த இதயத்தோடும் அறிவிக்கிறேன்" என்று ராஜ்ஜியத்தின் பிரதமர் கால்வின் ஆம்ஸ்ட்ராங் ரூமிர் அகிகி எக்ஸ் (X) தளத்தில் வியாழக்கிழமை இரவு பதிவிட்டுள்ளார்.</p><p>



மன்னர் வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 10:00 மணி அளவில் காலமானார் என்று அகிகி கூறினார், இருப்பினும் அவர் இறப்புக்கான காரணத்தை வெளியிடவில்லை.</p><p>



அவரது தந்தை ருபிரபாசாய்ஜா பேட்ரிக் டேவிட் மேத்யூ கபோயோ ஒலிமி III இன் மறைவுக்குப் பிறகு, ருகிடி IV செப்டம்பர் 12, 1995 அன்று வெறும் மூன்று வயதில் முடிசூட்டப்பட்டார்.</p>]]></content>
            <updated>2026-08-28T11:08:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தலில் வெற்றி பெறும் நிலையில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி: குழப்பத்தில் புலம்பெயர்ந்தோர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/migrants-raising-questions-about-germany-election-1787915117"></link>
            <id>https://news.lankasri.com/article/migrants-raising-questions-about-germany-election-1787915117</id>
            <summary type="text">September 6 German state election raises questions among migrants: ஜேர்மன் மாகாணமொன்றில் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி நடைபெற உள்ள தேர்தல் புலம்பெயர்ந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>September 6 German state election raises questions among migrants: ஜேர்மன் மாகாணமொன்றில் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி நடைபெற உள்ள தேர்தல் புலம்பெயர்ந்தோருக்கு எதிர்காலம் குறித்த குழப்பத்தை உருவாக்கியுள்ளது.
</p><p>

ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத்தில் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி தேர்தல் நடைபெற உள்ளது.
</p><p>
அந்தத் தேர்தலில் வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி வெற்றி பெறலாம் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.</p><h3>

குழப்பத்தில் புலம்பெயர்ந்தோர்
</h3><p>
 AfD கட்சி, புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி என்பது அனைவரும் அறிந்த விடயம். அக்கட்சியின் கொள்கைகளில் முக்கியமானவை ஜேர்மனிக்கு மற்ற நாட்டவர்கள் புலம்பெயர்தலைக் குறைப்பது, புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துவது முதலானவையாகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b97d8c0-ed9b-4d61-adb4-41a7f94b5458/26-6a916b6f067fe.webp' /></p><p>
ஆக, அக்கட்சி தேர்தலில் வெற்றி பெறுமானால், தங்கள் நிலைமை என்ன என்பது குறித்து அம்மாகாணத்தில் வாழும் புலம்பெயர்ந்தோர் இப்போதே தீவிரமாக யோசிக்கத் துவங்கிவிட்டார்கள்.
</p><p>
ஏற்கனவே கருப்பினத்தவர் முதலானோர் இனவெறுப்பை எதிர்கொண்டுவரும் நிலையில், புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியான AfD கட்சி தேர்தலில் வெற்றி பெறுமானால், அதற்குப் பிறகு நாங்கள் எப்படி பாதுகாப்பாக உணரமுடியும், எப்படி சமுதாயத்தின் ஒரு சாதாரண பாகமாக நாங்கள் அங்கீகரிக்கப்படுவோம் என்கிறார்கள் கருப்பினத்தவர்கள் சிலர்.&nbsp;</p><p></p><p>
AfD கட்சி தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில், இந்த நாட்டில் தாங்கள் தொடர்ந்து வாழமுடியுமா என கேள்வி எழுப்புகிறார்கள் கருப்பின இளைய தலைமுறையினர்.
</p><p>
புலம்பெயர்தல் பின்னணி கொண்ட பலர், தாங்கள் என செய்வதென தெரியாமல் குழப்பத்தில் இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
</p><p>
சிரியா நாட்டவரான Batoul Nayouf என்பவர், நிலைமையை ஒரே வாக்கியத்தில் தெளிவாக உணர்த்திவிட்டார். ஆம், நாங்கள் சூட்கேஸ்களை தயாராக வைத்துக்கொண்டு, அவற்றின் மீதுதான் உட்கார்ந்திருக்கிறோம் என்கிறார் அவர்.
</p><p>
வாக்களிப்போம், AfD கட்சி தேர்தலில் வெற்றி பெறுமானால், அதன்பின் Saxony-Anhalt மாகாணத்தில் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்று பார்க்கலாம், எப்படியும் நாம் அக்கட்சி வெற்றி பெறுவதைத் தடுக்க முயற்சிக்கவேண்டும் என்கிறார் ஒருங்கிணைப்பு ஆலோசகரும் உள்ளூர் அரசியல்வாதியும், கருப்பினத்தவருமான Amidou Traore என்பவர்.
</p><p>
ஆக மொத்தத்தில், செப்டம்பர் 6ஆம் திகதி Saxony-Anhalt மாகாணத்தில் நடைபெற உள்ள தேர்தல், அம்மாகாணத்தில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு எதிர்காலம் குறித்த குழப்பத்தை உருவாக்கியுள்ளதில் சந்தேகம் இல்லை எனலாம்!</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T11:07:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாலை விட அதிக கால்சியம் உள்ள சூப்பர் உணவுகள்; உங்களுக்கு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/muts-superfoods-with-more-calcium-than-milk-1787915123"></link>
            <id>https://jvpnews.com/article/muts-superfoods-with-more-calcium-than-milk-1787915123</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கால்சியம் சத்து என்றாலே எல்லோருக்கும் பால் தான் நினைவுக்கு வரும். ஆனால், பாலை விட அதிக கால்சியம் சத்துக்களைக் கொண்ட சில உணவுகளும் இருக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கால்சியம் சத்து என்றாலே எல்லோருக்கும் பால் தான் நினைவுக்கு வரும். ஆனால், பாலை விட அதிக கால்சியம் சத்துக்களைக் கொண்ட சில உணவுகளும் இருக்கின்றன. </p><p>இந்த உணவுகளில் கால்சியம் சத்து மட்டுமின்றி, வேறு பல ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd09acd3-f8d0-4c78-80ea-cbdcb3a8514f/26-6a916b7459400.webp' /></p><p> </p><p><b>

சியா விதைகள்</b> - கிராம் சியா விதைகளில் 631 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. இது எலும்பு ஆரோக்கியத்திற்கும், ஒட்டுமொத்த உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. </p><p><b>

பாதாம்</b> - 100 கிராம் பாதாமில் 264 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. இது எலும்புகளை வலுப்படுத்த உதவும் ஒரு சிறந்த, சத்தான ஸ்நாக்ஸ்.</p><p><b> 

மத்தி மீன்</b> - அவுன்ஸ் மத்தி மீனில் 351 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. இதனுடன், இதய ஆரோக்கியத்திற்கு தேவையான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் இதில் நிறைந்துள்ளன.</p><p><b> 

கேல்</b> - 100 கிராம் கேல் கீரையில் 254 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. மேலும், இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.</p><p><b> 

டோஃபு </b>- கால்சியம் சல்பேட் சேர்க்கப்பட்ட கெட்டியான டோஃபுவில், ஒரு கப்பில் 506 மில்லிகிராம் வரை கால்சியம் உள்ளது. இது ஒரு சிறந்த புரோட்டீன் நிறைந்த உணவு தேர்வாகும்.</p>]]></content>
            <updated>2026-08-28T11:03:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேலைநிறுத்தத்தில் குதிக்கவுள்ள அரச மருந்தாளர் சங்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-pharmacists-to-launch-trade-union-action-1787913339"></link>
            <id>https://ibctamil.com/article/govt-pharmacists-to-launch-trade-union-action-1787913339</id>
            <summary type="text">மேலதிக நேர கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்து அரச மருந்தாளர் சங்கம் ஒரு நாள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.எதிர்வரும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேலதிக நேர கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்து அரச மருந்தாளர் சங்கம் ஒரு நாள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.</p><p>எதிர்வரும் 31 ஆம் திகதி (திங்கட்கிழமை) காலை 8.00 மணி முதல் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p>2026 ஓகஸ்ட் 29 ஆம் திகதியை அடிப்படையாகக் கொண்டு சுகாதாரச் செயலாளரினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்த நிலையில், அதில் மருந்தாளர்களின் மேலதிக நேர கொடுப்பனவுகளின் பெயர் "மேலதிக நேர கொடுப்பனவுகள்" எனத் திருத்தப்பட்டிருந்தது.</p><p>&nbsp;</p><h2>சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை</h2><p>

 

அதன்பின்னர், ஏற்றுக்கொள்ளக்கூடிய எந்தக் காரணமும் தெரிவிக்கப்படாமல், மருத்துவச் சேவையின் தலையீடு காரணமாக அச்சுற்றறிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் அஜித் பி. திலகரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53bf08de-865e-400e-b84c-b09f756f7ae0/26-6a916902e8e8e.webp' /></p><p>
</p><p>எனினும், இதுவரை இப்பிரச்சினைகளுக்கு அதிகாரிகளால் திருப்திகரமான தீர்வு வழங்கப்படவில்லை எனவும் குறித்த சுற்றறிக்கையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு கோரியும், அதற்கு அழுத்தம் கொடுத்தும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
 

மானிதாபிமானக் காரணங்களைக் கருத்திற் கொண்டு அனைத்து மகப்பேறு மற்றும் குழந்தைகள் வைத்தியசாலைகள், புற்றுநோய் வைத்தியசாலைகள் மற்றும் மனநல வைத்தியசாலைகள் இந்த வேலைநிறுத்தத்தில் இருந்து விலக்களிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.</p><p></p><h2>&nbsp;அரச மருந்தாளர் சங்கம்</h2><p>
</p><p>
 

ஏனைய அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்தந்த நிறுவனங்களின் தலைவர்கள் முதன்மை மருந்தாளர்களைத் தொடர்புகொண்டு சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8706271a-68e8-43f9-8819-fb85c6730def/26-6a916903b2a2e.webp' /></p><p>
</p><p>
 

அத்துடன், இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரச மருந்தாளர் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T11:00:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய மலைநாட்டைப் பாதுகாக்கப் புதிய அதிகாரசபை - அநுர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-authority-to-protect-the-central-highlands-1787911915"></link>
            <id>https://tamilwin.com/article/new-authority-to-protect-the-central-highlands-1787911915</id>
            <summary type="text">மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை சட்டமூலத்தை இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, அந்த சூழல் அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை சட்டமூலத்தை இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, அந்த சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்கான அனைத்து அதிகாரங்களையும் அந்த அதிகாரசபைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>


2023ஆம் ஆண்டு பண்டாரவளை பூனாகலை கபரகலை நிலச்சரிவினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட ‘நவோதயா புரம்’ வீட்டுத் திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர்</h2><p>மத்திய மலைநாட்டை பழைய நிலைக்குக் கொண்டுவர பல தசாப்தங்கள் ஆகலாம் என்றபோதிலும், இடம்பெற்று வரும் அழிவுகளைத் தடுப்பதற்கு எவ்வாறேனும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/an0IaNuHhBE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>

மத்திய மலைநாடு இலங்கையின் இதயம் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அது கண்முன்னே அழிந்து வருவதாகவும்; மலை சரிவுகள், நீரூற்றுகள் வற்றுதல், ஆறுகள் மற்றும் ஓடைகள் தூர்ந்துபோதல் என்பவற்றை நாம் கண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p><p>அதற்கமைய, இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபைக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும்.
</p><p>நமது நாட்டின் எதிர்காலத்தின் முக்கிய பகுதி மத்திய மலைநாட்டிலேயே தங்கியுள்ளது. நமது எதிர்காலத்திற்காக மத்திய சூழலைப் பாதுகாப்பது நமது பொறுப்பாகும்.
</p><p>

இந்த வேலைத்திட்டத்தின் போது வீடுகளை இழக்க நேரிடலாம். சாகுபடி நிலங்கள் காடுகளாக மாறக்கூடும். ஆனால் அதைச் செய்தாக வேண்டும். இல்லையெனில் நாம் பெரும் பேரழிவை எதிர்கொள்ள வேண்டி வரும்.


நிறுவனங்களின் அதிகாரங்கள் பிரியலாம், பதவிகள் மாறலாம். யாரும் கலங்க வேண்டாம்" என்றும் அவர் தெரிவித்தார்.</p><h2>இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக</h2><p>மலையக மக்கள் குறித்து மேலும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,


"தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பு அனைத்து மக்கள் குழுக்களுக்கும் தேவையான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதாகும். அதற்காக பல வீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1e296b5-0cc4-40e6-935d-bce80b38b9d7/26-6a916a13c6a02.webp' /></p><p>வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் வீடமைப்புக்கு முன்னுரிமை அளிக்க எதிர்பார்க்கப்படுகிறது.


அம்மக்களுக்கு நல்ல வருமான வழி தேவை. அதை பூர்த்தி செய்ய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. </p><p>அதேபோல் ஆரோக்கியமான வாழ்விற்காக நல்ல சுகாதார வசதிகள் வழங்கப்படும். குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள் இந்த மலையக மக்களிலேயே அதிகமாக உள்ளனர். 5 வயதுக்கு உட்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் எங்கிருக்கிறார்கள், ஆயுட்காலம் குறைந்த சமூகம் எங்குள்ளது.</p><p>இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக ஒதுக்கி வைக்கப்பட்ட, ஏறெடுத்தும் பார்க்காத ஆட்சிகளால் இந்த மக்கள் இந்த அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்" என்றும் தெரிவித்தார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T10:59:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த இரண்டு பெண்கள் கைது! அதிகாரிகளிடம் சிக்கிய ஆபத்தான பொதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/female-businesswomen-katunayake-airport-arrested-1787913324"></link>
            <id>https://tamilwin.com/article/female-businesswomen-katunayake-airport-arrested-1787913324</id>
            <summary type="text">வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவந்த, இரு வெளிநாட்டுப்பெண் பயணிகள்&amp;nbsp;விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவந்த, இரு வெளிநாட்டுப்பெண் பயணிகள்&nbsp;விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p> இன்று (28) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் 77 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>சீன நாட்டை சேர்ந்த 30 மற்றும் 35 வயதுடைய பெண்களே இவ்வாறு&nbsp; கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">விமான நிலையச்சுங்க அதிகாரிகள்&nbsp;விசாரணை</span></p><p>இவர்கள் சீனாவில் சிகரெட்டுகளை கொள்வனவு செய்து, மலேசியாவின் கோலாலம்பூர் நகரை சென்றடைந்து, அங்கிருந்து மலேசியன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான எம்.எச் -497 என்ற விமானம் மூலம் இன்று காலை 10.10 மணிக்குக் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2410a664-b629-40ae-ab01-31d213bb1c42/26-6a9169c13d8cc.webp' /></p><p>சந்தேகநபர்கள் கொண்டுவந்த 4 பயணப்பைகளை பரிசோதித்தபோது, சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட 51,600 சிகரெட்டுகள் அடங்கிய 258 சிகரெட் கார்ட்டூன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p><p>இதனையடுத்து கைது செய்யப்பட்ட இரு சீன பெண்களும் சுங்க பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், கட்டுநாயக்க விமான நிலையச்சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p>

</p>]]></content>
            <updated>2026-08-28T10:58:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட இந்திய இளம்பெண்: குற்றவாளி சிக்கினார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hyderabad-girl-killed-in-us-ex-bf-arrested-in-agra-1787912482"></link>
            <id>https://news.lankasri.com/article/hyderabad-girl-killed-in-us-ex-bf-arrested-in-agra-1787912482</id>
            <summary type="text">An Indian man wanted in the United States for allegedly murdering his former roommate has been arrested: இந்திய இளம்பெண்ணொருவர் அமெரிக்காவில் சடலமாக ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>An Indian man wanted in the United States for allegedly murdering his former roommate has been arrested: இந்திய இளம்பெண்ணொருவர் அமெரிக்காவில் சடலமாக மீட்கப்பட்ட விடயத்தில், அவரைக் கொலை செய்ததாக கருதப்படும் நபரை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
</p><p>

அமெரிக்காவின் மேரிலேண்டில் வாழ்ந்துவந்த இந்திய இளம்பெண்ணான நிகிதா (Nikitha Rao Godishala, 27), டிசம்பர் மாதம் 31ஆம் திகதி மாயமானார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b54be3e-12d6-4aeb-acd3-ba74d791c196/26-6a916124d0c7b.webp' /></p><p>
ஜனவரி மாதம் 2ஆம் திகதி, அர்ஜூன் ஷர்மா (26) என்னும் நபர், நிகிதாவைக் காணவில்லை என பொலிசில் புகாரளித்துள்ளார். இந்த அர்ஜூன், நிகிதா தங்கியிருந்த அதே குடியிருப்பில் அவருடன் தங்கியிருந்தவர் ஆவார்.</p><h3>
இந்திய இளம்பெண் சடலமாக மீட்பு
</h3><p>
நிகிதாவை தீவிரமாகத் தேடிவந்த பொலிசார், ஜனவரி மாதம் 3ஆம் திகதி, அர்ஜூன் வாழ்ந்துவந்த அடுக்குமாடிக் குடியிருப்பிலேயே நிகிதாவின் உயிரற்ற உடலைக் கண்டு பிடித்தார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b334c142-e085-44b9-9f51-a27731d29cc2/26-6a91612427b62.webp' /></p><p>
அர்ஜூன் தலைமறைவாகிவிட, அமெரிக்க பொலிசார், அவரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்திருந்தார்கள்.</p><p>

முரணான தகவல்கள்

அர்ஜூன் நிகிதாவின் காதலர் என அமெரிக்க பொலிசார் தெரிவித்திருந்த நிலையில், அவர் தன் மகளுடைய காதலர் அல்ல என்றும், அவர் தன் மகளுடைய அறைத்தோழர் மட்டுமே என்றும், இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் விடயத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே தன் மகளை அர்ஜூன் கொலை செய்துவிட்டதாகவும் நிகிதாவின் தந்தை கூறியுள்ளார்.&nbsp;</p><p></p><p>
அத்துடன், ஜனவரி மாதம், அர்ஜூன் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.</p><p>
ஆனால், அர்ஜூன் ஆக்ராவில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இம்மாதம், அதாவது, ஆகத்து மாதம் 25ஆம் திகதி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
இந்நிலையில், அர்ஜூன் கைது குறித்து அமெரிக்க அதிகாரிகளுக்கு தகவலளிக்கட்டுள்ளதாகவும், அவரை அமெரிக்காவுக்கு நாடுகடத்தும் முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T10:56:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு - கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க ஒன்றிணையும் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-unite-reclaim-expropriate-lands-north-east-1787909681"></link>
            <id>https://tamilwin.com/article/people-unite-reclaim-expropriate-lands-north-east-1787909681</id>
            <summary type="text">இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு
நிரந்தரத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கலந்துர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு
நிரந்தரத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.</p><p>இன்று(28.08.2026) யாழ்ப்பாணத்தில் வடக்கு - கிழக்கின் ஏழு
மாவட்டங்களைச் சேர்ந்த காணி உரிமையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் இணைந்து இந்தக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளனர்.</p><h2>ஒன்றுபட்ட அமைப்பு</h2><p>
உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையிலும், வனவள மற்றும் தொல்பொருள்
திணைக்களங்களின் நடவடிக்கைகள் ஊடாகவும் தமது பூர்வீக காணிகளை இழந்துள்ள மக்களை
ஒருங்கிணைத்து, அவர்களின் காணி உரிமைக்காக எதிர்காலத்தில் ஒருங்கிணைந்த
வகையில் செயற்படுவதற்கான முக்கிய கலந்துரையாடலாக இது அமைந்துள்ளது.
</p><p>காணிகளை இழந்த மக்களின் குரலாகவும், அவர்களின் உரிமைகளுக்கான பொதுவான
அமைப்பாகவும் செயற்படும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள “ஒன்றுபட்ட அமைப்பு”
ஊடாக இந்தக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92bd38e4-7bbb-44da-aaf1-d21ac6462f84/26-6a916110a5e69.webp' /></p><p>வட மாகாணத்தின் 5 மாவட்டங்களையும், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு
மற்றும் திருகோணமலை மாவட்டங்களையும் உள்ளடக்கிய 7 மாவட்டங்களை சேர்ந்த
காணி உரிமையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.
</p><p>இதன்போது காணி அபகரிப்பு, காணிகளுக்குள் மக்கள் மீள்குடியேறுவதற்கான தடைகள், வனவள
மற்றும் தொல்பொருள் திணைக்களங்களின் பெயரில் பொதுமக்களின் பாரம்பரிய காணிகள்
ஆக்கிரமிக்கப்படுதல், உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில்
காணிகளை இழந்த மக்களின் நிலை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில்
பிரதிநிதிகள் விரிவாக ஆராய்ந்துள்ளனர்.</p><p>
போருக்குப் பின்னரான காலப்பகுதியில் தமது பூர்வீக நிலங்களை மீளப்பெறுவதற்காக
மக்கள் பல்வேறு போராட்டங்களையும் சட்டரீதியான முயற்சிகளையும் முன்னெடுத்து
வருகின்ற போதிலும், பல பகுதிகளில் இதுவரை நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை
எனவும் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><h2>காணி விவகாரம்</h2><p>
</p><p>குறிப்பாக, பாதுகாப்புத் தேவைகள் என்ற காரணத்தை முன்வைத்து நீண்டகாலமாக
பொதுமக்களின் காணிகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், அவற்றில் ஒரு பகுதி
விடுவிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் பல பகுதிகள் மக்கள் பயன்பாட்டுக்கு
முழுமையாக வழங்கப்படாத நிலை தொடர்வதாகவும் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>அதேவேளை, வனவள மற்றும் தொல்பொருள் திணைக்களங்களின் பெயரில் மக்களின் பாரம்பரிய
வாழ்விடங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளடக்கப்படுவதால், தமது வாழ்வாதாரமும்
எதிர்காலமும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காணி உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cafe08f-fc11-4a82-981d-ee93e489287f/26-6a9161117d4ea.webp' /></p><p>“ஆட்சி மாறினாலும் நிலை மாறவில்லை” எனக் குறிப்பிட்ட பிரதிநிதிகள், புதிய
அரசாங்கத்தின் காணிக் கொள்கை தொடர்பிலும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
</p><p>கடந்த அரசாங்கங்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டியும், மக்களின் உரிமைகள்
மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாகவும் கூறியே புதிய அரசாங்கம் ஆட்சிக்கு
வந்ததது. ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் காணி விவகாரத்தில் கடந்த
அரசாங்கங்களின் அணுகுமுறைகளிலிருந்து வேறுபட்ட நிலைப்பாடு தென்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>மக்களின் காணிகளைப் பாதுகாப்பதாகவும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள காணிப்
பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகவும் அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும்,
நடைமுறையில் பல இடங்களில் பழைய நிலைமையே தொடர்வதாகவும் அவர்கள் மேலும் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T10:54:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழகத்தில் மிக மோசமான வசூலில் டாக்ஸிக், இரண்டாம் நாள் பெரும் சரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/toxic-down-at-tamilnadu-box-office-1787913232"></link>
            <id>https://cineulagam.com/article/toxic-down-at-tamilnadu-box-office-1787913232</id>
            <summary type="text">டாக்சிக்கீது மோகன் தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் ரூ. 400 கோடிக்கும் மேல் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் டாக்சிக். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>டாக்சிக்</h2><p>கீது மோகன் தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் ரூ. 400 கோடிக்கும் மேல் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் டாக்சிக்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5c51c2e-9a8b-4346-aa2c-fbd5c6f34355/26-6a916413513b8.webp' /></p><p>இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. 

ஆனால், தற்போது வரை இப்படம் மிக மோசமான விமர்சனங்களையே பெற்றுள்ளது.</p><p></p><h2>தமிழ்நாடு வசூல்</h2><p> </p><p>தமிழகத்தில் முதல் நாள் ரூ. 7 கோடி வரை <a href="https://www.youtube.com/watch?v=7TwkpFlc0dA" target="_blank">வசூல் </a>செய்த இப்படம், இரண்டாம் நாளான நேற்று வெறும் ரூ. 2 கோடி மட்டுமே தமிழகத்தில் வசூல் செய்துள்ளதாம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29cf6404-db6e-479c-ad5b-a90fcecab64d/26-6a916414085f2.webp' /></p><p>இதனால், இந்த படம் 2 நாட்களில் முடிவில் ரூ 9 கோடி வரை வசூல் செய்ய, கண்டிப்பாக விநியோகஸ்தர்களுக்கு டாக்சிக் பெரிய நஷ்டத்தையே கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37035ae2-1295-45c8-943c-9bd38fb6fa34/26-6a916414b77d9.webp' /></p><p>மேலும், வரும் நாட்களில் மொத ராத்திரி மற்றும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்திற்கே அதிக ஷோக்கள் ஒதுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-28T10:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் வெளிநாட்டு கடனில் அடுத்த 10 ஆண்டுகளில் ஏற்படவுள்ள மாற்றம்! வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/changes-in-sri-lanka-foreign-debt-next-10-years-1787903697"></link>
            <id>https://tamilwin.com/article/changes-in-sri-lanka-foreign-debt-next-10-years-1787903697</id>
            <summary type="text">அடுத்த 10 ஆண்டுகளுக்கு இலங்கை தனது வெளிநாட்டுக் கடனை எந்த பிரச்சினையுமின்றி திருப்பிச்செலுத்த முடியும் என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த 10 ஆண்டுகளுக்கு இலங்கை தனது வெளிநாட்டுக் கடனை எந்த பிரச்சினையுமின்றி திருப்பிச்செலுத்த முடியும் என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். </p><p>

இலங்கை மற்றொரு கடன் தவணை தவறுதலையோ அல்லது கடன் நெருக்கடியையோ சந்திக்காது என்றும் கூறியுள்ளார். </p><p>

இலங்கை தனது கடன் மறுசீரமைப்பு செயல்முறையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதால், அடுத்த 10 ஆண்டுகளில் ஆண்டுதோறும் செலுத்தப்பட வேண்டிய வெளிநாட்டு கடனின் அளவு 4 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் குறைவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><h2>நாட்டின் மொத்த உத்தியோகப்பூர்வ கையிருப்பு&nbsp;</h2><p> 

இதற்கமைய, ஆண்டுதோறும் செலுத்தப்பட வேண்டிய அந்த கடன் தொகையை எந்த பிரச்சினையுமின்றி திருப்பி செலுத்துவதற்கு தேவையான மொத்த உத்தியோகப்பூர்வ கையிருப்பை நாடு உருவாக்கி வருகின்றதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46ae660b-d03e-46ec-8fc3-0b5ef45307cf/26-6a91458167b68.webp' />&nbsp;</p><p>
</p><p>
சுற்றுலா வருவாய், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடமிருந்து வரும் பணப்பரிமாற்றங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றிலிருந்து பெறப்படும் கடன்கள் ஆகியவற்றின் ஆதரவுடன், நாட்டின் மொத்த உத்தியோகப்பூர்வ கையிருப்பு இந்த ஆண்டின் இறுதியில் 8 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். </p><p>

நாட்டின் தற்போதைய மொத்த உத்தியோகப்பூர்வ கையிருப்பு 6.8 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் 8 பில்லியன் அமெரிக்க டொலராக உயரும் என எதிர்பார்க்கப்படும் நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ அந்நிய செலாவணி கையிருப்பு, வரும் ஆண்டுகளில் 10 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கும் என்று மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>

இதன் விளைவாக, இலங்கை ஆண்டுக்கு 4 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் குறைவான அந்நியக்கடன் செலுத்துதலை எந்த பிரச்சினையுமின்றி செய்ய முடியும் என்று வீரசிங்க கூறியுள்ளார்.</p><h2>மத்திய கிழக்கு நெருக்கடி</h2><p> 

மத்திய கிழக்கு நெருக்கடி மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மைகள் இருந்தபோதிலும், இலங்கையால் அத்தகைய பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77b020c5-fcab-4626-9f58-8c02ed36763d/26-6a91458231f40.webp' /></p><p>
இந்த ஆண்டின் முதல் பாதியில் இலங்கை 5 சதவிகித பொருளாதார வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

நாட்டின் பொருளாதார வளர்ச்சிப் பாதை சர்வதேச அளவிலும் பாராட்டப்பட்டுள்ளது என்று மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
</p><p>
எரிபொருள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்ததன் காரணமாக பணவீக்கம் தற்காலிகமாக 7 சதவீதமாக உயர்ந்திருந்தாலும், மத்திய வங்கியின் பணவியல் கொள்கை நடவடிக்கைகளால் அடுத்த ஆண்டின் முதல் பாதியில் அது 5 சதவீத இலக்கு நிலைக்கு திரும்பும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T10:39:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் காலமானார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/norway-s-king-harald-v-dies-at-89-1787909863"></link>
            <id>https://ibctamil.com/article/norway-s-king-harald-v-dies-at-89-1787909863</id>
            <summary type="text">நோர்வேயின் மன்னர் ஐந்தாம் ஹரால்ட் தனது 89 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

ஒஸ்லோவிலுள்ள தேசிய வைத்தியசாலையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வேயின் மன்னர் ஐந்தாம் ஹரால்ட் தனது 89 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

 

ஒஸ்லோவிலுள்ள தேசிய வைத்தியசாலையில் இன்று (28) காலை 6:35 மணியளவில் அவர் காலமானதாக நோர்வே அரச மாளிகை அறிவித்துள்ளது.</p><p>அரிய வகை இரத்த நோய் காரணமாக கடந்த வாரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>புதிய அரசராக பதவியேற்பு</h2><p>
</p><p>ஐரோப்பாவின் மிகவும் வயதான நாட்டின் தலைவராக இருந்த ஐந்தாம் ஹரால்ட், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நோர்வே நாட்டின் அரசராகப் பணியாற்றியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3aa38376-1229-466c-a1cb-aa92d303b807/26-6a915fc8b53c7.webp' /></p><p>
</p><p>அத்துடன் 14ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் நோர்வேயிலேயே பிறந்த முதல் நோர்வே மன்னர் என்ற சிறப்பையும் இவர் பெற்றிருந்தார்.
</p><p>இந்தநிலையில் மன்னரின் மறைவு காரணமாக முழு நாடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளதாக நோர்வே பிரதமர் தெரிவித்துள்ளார்.
</p><p>
 

ஐந்தாம் ஹரால்ட் மன்னரின் மறைவைத் தொடர்ந்து, அவரது மகனான இளவரசர் ஹாகன் (Haakon), நோர்வேயின் புதிய அரசராக பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T10:31:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் பேருந்து நிறுத்தத்தில் கூட்டம் மீது மோதியகார்; இருவர் உயிரிழப்பு 9 பேர் காயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/car-crashes-into-crowd-at-french-bus-stop-two-dead-1787893423"></link>
            <id>https://canadamirror.com/article/car-crashes-into-crowd-at-french-bus-stop-two-dead-1787893423</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வடமேற்கு பிரெஞ்சு நகரமான கேனில், புதன்கிழமை (26) மக்கள் கூட்டத்தின் மீது கார் ஒன்று புகுந்ததில், குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்ததுடன் ஒன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வடமேற்கு பிரெஞ்சு நகரமான கேனில், புதன்கிழமை (26) மக்கள் கூட்டத்தின் மீது கார் ஒன்று புகுந்ததில், குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்ததுடன் ஒன்பது பேர் காயமடைந்த&nbsp; நிலையில் அவர்களில் ஆறு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அன்னாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p> 

 விபத்து குரித்த விசாரணை இப்போதுதான் தொடங்கியுள்ளது என்று துணை அரசு வழக்கறிஞர் பிலிப் லியோனார்டோ வியாழக்கிழமை அதிகாலையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adfec840-8ec6-433e-b23c-9945e5a6f99c/26-6a9116b15d011.webp' /></p><h2>விபத்தை ஏற்படுத்திய ரஷ்ய வம்சாவளியைச் சேர்ந்தவர்&nbsp;</h2><p>

விபத்தை ஏற்படுத்திய ரஷ்ய வம்சாவளியைச் சேர்ந்தவர் என விவரிக்கப்பட்ட 26 வயது நபர் ஒருவர், புதன்கிழமை இரவு நகரின் பிரதான ரயில் நிலையம் அருகே மக்கள் கூட்டத்தின் மீது காரை ஓட்டிச் சென்றதாகக் கூறப்பட்டதை அடுத்து, காவலில் வைக்கப்பட்டார்.
</p><p>
சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாகவும், விபத்தில் ஏற்பட்ட காயங்களால் மற்றொருவர் பின்னர் உயிரிழந்ததாகவும் பிரெஞ்சு காவல்துறை தெரிவித்துள்ளது. </p><p>

விபத்தை அடுத்து ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில் சம்பவ இடத்திலிருந்து 20 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவில் கைது செய்யப்பட்டார் என்று பிரெஞ்சு ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திற்கு ஒரு தகவல் மூலம் தெரிவிக்கப்பட்டது.
</p><p>
அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. 

தாக்குதலுக்குப் பிறகு, சந்தேக நபர் உளவுத்துறைக்கு அறிமுகமானவர் அல்ல என்றும், ஆனால் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக அவருக்கு முன்பு காவல்துறையுடன் தொடர்பு இருந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-28T10:26:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா ஏரியின் பெயரை மாற்றிய டிரம்ப்; சுட சுட பிரதமர் மார்க் கார்னி பதிலடி !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-renames-canadian-lake-mark-carney-retort-1787897383"></link>
            <id>https://canadamirror.com/article/trump-renames-canadian-lake-mark-carney-retort-1787897383</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவுடனான வர்த்தக மோதலுக்கு மத்தியில், வட அமெரிக்காவின் முக்கியமான ஐந்து பெரிய ஏரிகளில் ஒன்றான Lake Ontario-வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவுடனான வர்த்தக மோதலுக்கு மத்தியில், வட அமெரிக்காவின் முக்கியமான ஐந்து பெரிய ஏரிகளில் ஒன்றான Lake Ontario-வின் பெயரை அமெரிக்க அரசு பயன்பாட்டில் “Lake America” என மாற்ற உத்தரவிட்டுள்ளார்.</p><p> 
 
 இந்த பெயர் மாற்றம் அமெரிக்க மத்திய அரசின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டுக்கு மட்டுமே பொருந்தும். கனடா, சர்வதேச அமைப்புகள் அல்லது பிற நிறுவனங்கள் பழைய பெயரான Lake Ontario-வை தொடர்ந்து பயன்படுத்தலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5a3c4f3-b361-40c5-bf49-e174d2709d92/26-6a912628d8e21.webp' /></p><h2>நியூயார்க் இதை அந்த பெயரில் அழைக்காது</h2><p>
</p><p> 
இந்த அறிவிப்புக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 
400 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றை கொண்ட இந்த ஏரியின் பெயர், கனடா மற்றும் அமெரிக்கா நாடுகளாக உருவாவதற்கு முன்பே பயன்பாட்டில் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

அத்துடன் நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுலும் “நியூயார்க் இதை அந்த பெயரில் அழைக்காது” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
</p><p> 
Lake Ontario-வின் நீர்ப்பரப்பில் சுமார் 52 சதவீதம் கனடாவிலும், மீதமுள்ள பகுதி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்திலும் அமைந்துள்ளது.</p><p>

 இதனால் பெயர் மாற்றம் கனடாவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஏற்கனவே கனடாவுடன் பல பில்லியன் டாலர் வர்த்தக வரிகள் தொடர்பாக மோதல் நீடித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை அமெரிக்கா - கனடா உறவை மேலும் பதற்றமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-28T10:26:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஷாரா செவ்வந்தி தொடர்பில் சிசிடி நீதிமன்றத்திடம் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/permission-ccd-court-regarding-ishara-sewwandi-1787912881"></link>
            <id>https://jvpnews.com/article/permission-ccd-court-regarding-ishara-sewwandi-1787912881</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக அங்குனுகொல பெலஸ்ஸ சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் வாக்குமூலம் பெறுவது அவசியம் என ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக அங்குனுகொல பெலஸ்ஸ சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் வாக்குமூலம் பெறுவது அவசியம் என கொழும்பு குற்றப்பிரிவு இன்று (28) கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். போதரகமவிடம் தெரிவித்தது.
</p><p>
சம்பவம் தொடர்பாக ஒரு மனுவைத் தாக்கல் செய்யும் போது, ​​கொழும்பு குற்றப்பிரிவு இதனை நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44b7d4db-8514-4a03-8823-472c550f753b/26-6a9162b289d49.webp' /></p><p>
</p><p>
கணேமுல்ல சஞ்சீவவின் கொலை சம்பவம் தொடர்பான உண்மைகளை நீதிமன்றத்தில் மேலும் எடுத்துரைத்த விசாரணை அதிகாரிகள், கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பாக இந்த சந்தேக நபரிடமிருந்து வாக்குமூலம் பெற உள்ளதாகத் தெரிவித்தனர்.</p><p></p><p>

மேலும், 2ஆம் திகதி அங்குனுகொல பெலஸ்ஸ சிறைக்குச் சென்று வாக்குமூலம் பெற அனுமதி வழங்குமாறு கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டது.</p><p></p><p>
</p><p>
இது தொடர்பாக சிறை கண்காணிப்பாளருக்குத் தெரிவிக்குமாறும் கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டது.

நீதிபதி, முன்வைக்கப்பட்ட உண்மைகளைப் பரிசீலித்த பின்னர், சிசிடி கோரிக்கை தொடர்பாக உத்தரவைப் பிறப்பித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-28T10:25:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணேமுல்ல சஞ்சீவவின் கொலை விவகாரம்! இஷாரா செவ்வந்தியிடமிருந்து மீண்டும் வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ccd-permission-court-prison-to-question-sewwandi-1787909258"></link>
            <id>https://tamilwin.com/article/ccd-permission-court-prison-to-question-sewwandi-1787909258</id>
            <summary type="text">&amp;nbsp;கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளின் ஒரு பகுதியாக, அங்குனுகொல பெலஸ்ஸ சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளின் ஒரு பகுதியாக, அங்குனுகொல பெலஸ்ஸ சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடமிருந்து வாக்குமூலம் பெற கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றில் அனுமதி கோரியுள்ளது.</p><p>இந்த விவகாரம் தொடர்பாக கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். பொதரகம முன்னிலையில் இன்று (28) மனுவைத்தாக்கல் செய்யும் போது, ​​கொழும்பு குற்றப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">செவ்வந்தியிடமிருந்து வாக்குமூலம்&nbsp;</span></p><p> </p><p>இந்த சம்பவம் தொடர்பான விபரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த விசாரணை அதிகாரிகள், கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளின் ஒரு பகுதியாக இந்த சந்தேகநபரிடமிருந்து வாக்குமூலம் பெற உள்ளதாக தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1703799-f40f-4192-9a5a-af1f854079bf/26-6a915d7da67f1.webp' />&nbsp;</p><p>
</p><p>
மேலும், 2 ஆம் திகதி அங்குனுகொல பெலஸ்ஸ சிறைக்குச் சென்று வாக்குமூலம் பெற அனுமதி வழங்குமாறு கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>

இது தொடர்பாக சிறை கண்காணிப்பாளருக்கு தெரிவிக்குமாறும் கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளது.</p><p>

இதன்போது சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளை கருத்தில்கொண்ட நீதிபதி, கோரிக்கை தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T10:25:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[வறண்ட வானிலை - தொடர்ந்து குறையும் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/water-levels-in-reservoirs-continue-to-drop-1787910041"></link>
            <id>https://tamilwin.com/article/water-levels-in-reservoirs-continue-to-drop-1787910041</id>
            <summary type="text">தற்போது நிலவும் வறண்ட வானிலை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

அதன்படி, சேனநாயக்க சமுத்திரத்தின் நீர் கொள்ளளவு 18 சதவீதமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது நிலவும் வறண்ட வானிலை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
</p><p>
அதன்படி, சேனநாயக்க சமுத்திரத்தின் நீர் கொள்ளளவு 18 சதவீதமாகக் குறைந்துள்ளது.</p><p> அதேநேரத்தில் ஹுருலு வேவாவின் நீர்மட்டம் 24 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.</p><h2>குறைந்துள்ள நீர் கொள்ளளவு</h2><p>
</p><p>
மேலும், அதிமலை வேவாவின் நீர் கொள்ளளவு 5 சதவீதமும், மோரா வேவாவின் நீர் கொள்ளளவு 9 சதவீதமும், வெஹரகல நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 15 சதவீதமும், கௌடுல்ல வேவாவின் நீர் கொள்ளளவு 20 சதவீதமும், பதாவியா வேவாவின் நீர் கொள்ளளவு 22 சதவீதமும், தப்போவ வேவாவின் நீர் கொள்ளளவு 28 சதவீதமும் குறைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffd01269-6fd7-4b5a-b532-2096b9f1b50b/26-6a9160b615137.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், இலங்கையின் பல மாவட்டங்களில் மனித உடல் உணரும் வெப்பம் இன்று கவனம் தேவைப்படும் அளவில் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>
இதன்படி, கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வெப்பநிலை 39 முதல் 45 செல்சியஸ் பாகையாக பதிவாகும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T10:22:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க புதிய அதிகாரசபை: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hill-country-authority-bill-to-pass-soon-akd-1787910567"></link>
            <id>https://ibctamil.com/article/hill-country-authority-bill-to-pass-soon-akd-1787910567</id>
            <summary type="text">மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை சட்டமூலம் நடப்பாண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை சட்டமூலம் நடப்பாண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
பண்டாரவளை நவோதயா புரம் வீட்டுத் திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>சில தியாகங்கள்</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) நிதியுதவியுடன் இந்த புதிய அதிகாரசபையை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a0a4ce3-a63f-4be7-a2c9-c90e4fa55ac6/26-6a915f7c387bc.webp' /></p><p>இலங்கையின் இதயம் போன்ற மத்திய மலைநாட்டின் அழிவுகளைத் தடுக்கவும் சூழலைப் பாதுகாக்கவும் இந்த அதிகாரசபைக்கு முழு அதிகாரங்களும் வழங்கப்படும்.
</p><p>
இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் இந்த வேலைத்திட்டத்திற்காக சில தியாகங்களைச் செய்ய வேண்டி வந்தாலும் அது நாட்டின் எதிர்காலத்திற்கு அத்தியாவசியமானது.</p><p></p><h2>குத்தகை ஒப்பந்தங்கள்</h2><p>
தோட்ட நிறுவனங்களின் குத்தகை ஒப்பந்தங்கள் 2042 இல் முடிவடையும் போது மலையக மக்களின் காணி மற்றும் வாழ்வுரிமைகளைப் பாதுகாக்கும் புதிய சரத்துகள் சேர்க்கப்படும்.
</p><p>
யுத்த காலத்தில் இந்தியாவிற்கு சென்ற இலங்கை மக்கள் மீண்டும் தாயகம் திரும்புவதற்காக இருந்த தடைகளை அமைச்சரவை நீக்கியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/828f38cf-5745-4e0f-9c59-25e6a0cb6529/26-6a915f7ce53cb.webp' /></p><p>வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் மலையக மக்களின் வீடமைப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.</p><p>
மலையக மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த ஏற்கனவே முதற்கட்ட சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதுடன் மலையகச் சமூகம் தலைமுறை தலைமுறையாக எதிர்கொள்ளும் வறுமை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கி, கல்வியின் மூலம் அவர்களை முன்னேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-28T10:18:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை விஜயலட்சுமி எடுத்த முடிவால் சீமான் மகிழ்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/seeman-happy-by-actress-vijayalakshmi-twist-video-1787900306"></link>
            <id>https://jvpnews.com/article/seeman-happy-by-actress-vijayalakshmi-twist-video-1787900306</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள புதிய காணொளியில், சிலர் தன்னையும் சீமானையும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள புதிய காணொளியில், சிலர் தன்னையும் சீமானையும் தொடர்ந்து அவதூறாகப் பேசி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>

தவறை உணர்ந்து ஒருவர் மன்னிப்பு கேட்கும்போது, அவரைத் தொடர்ந்து விமர்சிக்காமல் வாழவிடுவதுதான் மனிதநேயம் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cc6ce03-12c3-4161-a971-3f28027d397c/26-6a91319400afe.webp' /></p><h2>&nbsp;சீமானுக்கு ஆதரவாக உறுதியாக நிற்பேன்</h2><p>
</p><p>
மேலும், தன்னைப் பற்றியும் சீமான் குறித்தும் தொடர்ந்து அவதூறாகப் பேசினால், இனி சீமானுக்கு ஆதரவாக உறுதியாக நிற்பேன் என்றும் விஜயலட்சுமி கூறியுள்ளார்.</p><p></p><p>
</p><p>
நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாகப் பேசுவதற்காக தனக்கு பணம் வழங்கப்பட்டதாக கூறப்படும் விமர்சனங்களை மறுத்துள்ள அவர்,பணத்தைக் கொடுத்து தன்னை யாராலும் வாங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இதுவரை சீமானுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டு வந்த விஜயலட்சுமி, தற்போது அவருக்கு ஆதரவாக பேசியிருப்பது அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>
முன்னதாக, சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்திருந்த முறைப்பாடு தொடர்பான வழக்கில், இருதரப்புக்கும் இடையே உச்சநீதிமன்றத்தில் சமரசம் எட்டப்பட்டது.</p><p></p><p>

 அதேசமயம் இந்த காணொளி மூலம் தமிழக வெற்றிக் கழகத்தினரை அவர் மறைமுகமாக விமர்சித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் வெளியாகி வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-28T10:17:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸை புவியியல் அணு குண்டாக பயன்படுத்தும் ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-using-hormuz-as-a-geological-nuclear-bomb-1787912102"></link>
            <id>https://ibctamil.com/article/iran-using-hormuz-as-a-geological-nuclear-bomb-1787912102</id>
            <summary type="text">அமெரிக்காவுடனான முந்தைய பதட்டங்களின்போது ஹோர்முஸ் நீரிணையை ஒரு பேரம் பேசும் கருவியாக ஈரான் பயன்படுத்தியுள்ளதாக மத்தியகிழக்கு ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடனான முந்தைய பதட்டங்களின்போது ஹோர்முஸ் நீரிணையை ஒரு பேரம் பேசும் கருவியாக ஈரான் பயன்படுத்தியுள்ளதாக மத்தியகிழக்கு ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>

இது இரு தரப்பையும் கடந்து ஒரு உலகளாவிய பிரச்சனையாக மாறியுள்ளது என்றும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
</p><p>
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போர் தொடங்கியபோது அணுசக்தி விவகாரம், ஏவுகணைத் திட்டம், பிராந்தியத்தில் உள்ள ஈரானின் சக்திகள் அல்லது கூட்டாளிகள் எனப் பல விடயங்கள் பேசப்பட்டன.
</p><p></p><h2>மோதல் அடுத்த கட்டத்திற்கு</h2><p>
ஆனால் இப்போது அனைவரும் சுற்றிச் சுற்றி வரும் முக்கிய விடயம் நீரிணையை திறப்பதுதான் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6ad38ab-86ad-42f9-b3f4-42c003ecc557/26-6a915fa8d3396.webp' /></p><p>
</p><p>
போருக்கு முன்பு நிலைமை எப்படி இருந்ததோ, போருக்குப் பிறகு அப்படி இருக்காது என்று கூறிய அவர்கள் இந்த மோதல் அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளது என்றும் எச்சரித்துள்ளனர்.</p><p> 

ஹோர்முஸ் நீரிணையின் மூலம், ஈரான் ஒரு சாதகமான நிலையைக் கண்டறிந்துள்ளது என்பது தெளிவாகிறது.
</p><p>
 மேலும், சில ஆய்வாளர்கள் இதை ஈரானின் புவியியல் அணு குண்டு என்று கூட வர்ணிக்கின்றனர். 

ஏனெனில், அதைச் செயல்படுத்திப் பயன்படுத்துவதன் மூலம், அதைக் கருத்தில் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்பதே காரணமாகவும் எனவும் கூறியுள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T10:15:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே நாளில் 7,492 விமானங்கள்: பிரித்தானியர்களுக்கு கடும் நெரிசல், குழப்பம் ஏற்பட வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/29592-flights-scheduled-across-spain-airports-1787912044"></link>
            <id>https://news.lankasri.com/article/29592-flights-scheduled-across-spain-airports-1787912044</id>
            <summary type="text">29592 Flights Scheduled Across Spain Airports: ஸ்பெயினில் சாதனை அளவிலான விமானங்கள் இயக்கப்பட உள்ளதால், கடும் பயண நெரிசல் மற்றும் குழப்பம் ஏற்பட வாய்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>29592 Flights Scheduled Across Spain Airports: ஸ்பெயினில் சாதனை அளவிலான விமானங்கள் இயக்கப்பட உள்ளதால், கடும் பயண நெரிசல் மற்றும் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.
</p><p>
ஸ்பெயின் நாட்டில் விமான நிலையங்களில் சாதனை அளவிலான விமானங்கள் இயக்கப்பட உள்ளதால், பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் வழக்கத்தை விட அதிக நெரிசலான பயண சூழலை எதிர்கொள்ள நேரிடலாம்.&nbsp;</p><h2>விமானப் பயணங்களின் எண்ணிக்கை&nbsp;</h2><p>
ஸ்பெயின் நாட்டில் 29-ஆம் திகதி முதல் 31-ஆம் திகதி வரை, விமானப் பயணங்களின் எண்ணிக்கை சாதனை அளவை எட்டவுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b458168-66f7-4f31-aaef-25c7dff7a203/26-6a916052a5412.webp' />&nbsp;</p><p></p><p>
கோடை விடுமுறையின் கடைசி வார இறுதி என்பதாலும், அதே வேளையில் பிரித்தானியாவில் பொது விடுமுறை என்பதாலும், பலர் தங்கள் விடுமுறையின் ஒரு பகுதியாக வெளிநாட்டிற்கு செல்லவோ அல்லது அங்கிருந்து திரும்பவோ இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார்கள். </p><p>

ஸ்பெயின் விமான நிலையங்களை நிர்வகிக்கும் நிறுவனமான AENA-வின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையங்களில், இக்காலகட்டத்தில் மொத்தம் 29,592 விமானங்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக Majorca Daily Bulletin செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;</p><h2>7,492 விமானங்கள்</h2><p>
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்த 28,826 விமானங்களுடன் ஒப்பிடுகையில் 2.6 சதவீத அதிகரிப்பாகும். </p><p>

மேலும், ஞாயிற்றுக்கிழமை மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; அன்று மட்டும் 7,492 விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

இதனால் ஸ்பெயின் நாட்டு விமான நிலையங்கள் கடும் பயண நெரிசலை சந்திக்க தயாராகி வருகின்றன.</p><p> 

அந்த விமான நிலையங்களுக்கு செல்லும் மற்றும் திரும்பும் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள், வழக்கத்தை விட அதிக நெரிசலான பயண சூழலை எதிர்கொள்ள நேரிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2faf546-c100-47a5-945a-69c6fd6b8b99/26-6a9160536232b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T10:15:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜாலியாக வெளிநாட்டிற்கு டூர் சென்றுள்ள சீரியல் நடிகை ஹரிப்பிரியா... கலக்கல் போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/serial-actress-haripriya-vacation-photos-1787911821"></link>
            <id>https://cineulagam.com/article/serial-actress-haripriya-vacation-photos-1787911821</id>
            <summary type="text">நடிகை ஹரிப்பிரியாசன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது. இந்த தொடரில் எல்லா கதாபாத்திரத்திற்கும் ஒர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகை ஹரிப்பிரியா</h2><p>சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது. </p><p>இந்த தொடரில் எல்லா கதாபாத்திரத்திற்கும் ஒரு ரசிகர்கள் கூட்டம் இருந்தாலும் நந்தினி வேடத்தில் நடிக்கும் ஹரிப்பிரியாவிற்கு தனி ரசிகர்கள் உள்ளார்கள் என கூறலாம். </p><p>சீரியஸான காட்சிகளை விட நந்தினி செய்யும் காமெடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. </p><p>அண்மையில் நடிகை ஹரிப்பிரியா மலேசியாவிற்கு டூர் சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களை அவர் வெளியிட லைக்ஸ் குவிந்து வருகிறது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T10:11:19+00:00</updated>
        </entry>
    </feed>
