<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-01T04:54:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பர் 7 முதல் அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mercury-make-badra-rajyog-on-07-sep-who-get-luck-1788236563"></link>
            <id>https://manithan.com/article/mercury-make-badra-rajyog-on-07-sep-who-get-luck-1788236563</id>
            <summary type="text">வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, கல்வி மற்றும் வியாபாரத்தின் காரணியாக விளங்குகிறார். மிதுனம், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, கல்வி மற்றும் வியாபாரத்தின் காரணியாக விளங்குகிறார். </p><p>மிதுனம், கன்னி ராசிகளின் அதிபதியான புதன், சந்திரனுக்கு அடுத்தபடியாக வேகமாக ராசி மாறக்கூடிய கிரகமாகும்.

இந்நிலையில், புதன் செப்டம்பர் 07ஆம் தேதி தனது சொந்த ராசியான கன்னியில் நுழைகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b8b71e4-f272-4f2a-830a-95d89a80a6f0/26-6a96589b28044.webp' /></p><p></p><p> இதன் மூலம் மிகவும் மங்களகரமான பத்ரா ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான வளர்ச்சி, லாபம், பேச்சில் செல்வாக்கு மற்றும் பணவரவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
</p><p>
அப்படியென்றால், புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ரா ராஜயோகத்தின் மூலம் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் காணப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><h2>மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54e54d1c-5c7d-4019-a34a-f31b7b62db98/26-6a96589bd0778.webp' /></p><h2>
</h2><p>மிதுன ராசியின் அதிபதியாக புதன் இருப்பதால், இந்த புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ரா ராஜயோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு பல்வேறு வகைகளில் சாதகமான பலன்களை வழங்கும். </p><p>குறிப்பாக, வாழ்க்கையில் வசதிகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பணியிடத்தில் உங்களின் புத்திசாலித்தனம், திறமை மற்றும் செயல்திறன் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். </p><p>இதன் மூலம் பணியிடத்தில் உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கலாம்.

வியாபாரம் செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.புதிய வீடு மற்றும் நிலம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கூடி வரும்.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">தனுசு</span></h2><p><span style="font-size: 14px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50a92c19-f8e5-46b4-983a-080d3ce1a312/26-6a96589c821b3.webp' /></span></p><p>
புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ரா ராஜயோகம் தனுசு ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைத் தரக்கூடும். </p><p>குறிப்பாக, வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகலாம். </p><p>ஏற்கனவே பணியில் இருப்பவர்களும் தங்களது திறமையை வெளிப்படுத்தி முன்னேற்றம் காண்பார்கள்.

தொழிலதிபர்களுக்கு பெரிய அளவில் புதிய ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான புதிய வாய்ப்புகளும் அமையும்.&nbsp;<br></p><h2>
சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f551859-d343-413c-b69b-6b3f6791701f/26-6a965a1e8fad9.webp' /></p><p>
புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ரா ராஜயோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக நல்ல பலன்களை வழங்கக்கூடும். குறிப்பாக, திடீர் பணவரவு அல்லது எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. </p><p>நீண்ட காலமாக கைக்கு வராமல் இருந்த பணம் திரும்பக் கிடைப்பதுடன், வங்கி இருப்பும் அதிகரிக்கலாம்.

ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. </p><p>இந்தக் காலகட்டத்தில் உங்களின் பேச்சுத்திறன் சிறப்பாக இருக்கும். இனிமையான மற்றும் திறமையான பேச்சின் மூலம் பல முக்கியமான காரியங்களை எளிதாகச் சாதித்து முடிப்பீர்கள். </p><p>குறிப்பாக, மார்க்கெட்டிங் மற்றும் ஊடகத் துறையில் பணிபுரிபவர்களுக்கு இந்த காலம் மிகவும் சாதகமாக அமையக்கூடும்.</p><h2>

கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f2efe05-cc6c-4a91-9819-5ff836c70f01/26-6a965a1f7f25f.webp' /></p><p></p><p>
கன்னி ராசியின் முதல் வீட்டில் புதன் சஞ்சரிப்பதால் பத்ரா ராஜயோகம் உருவாகிறது. புதன் கன்னி ராசியின் அதிபதியாக இருப்பதால், இந்த யோகம் கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலன்கள் கிடைக்கும்.&nbsp;</p><p> குறிப்பாக, முக்கியமான விஷயங்களில் சரியான முடிவுகளை எடுக்கும் திறன் மேம்படும்.

உங்களின் புத்திசாலித்தனம் மற்றும் திறமையைப் பயன்படுத்தி பல்வேறு வெற்றிகளைப் பெறுவீர்கள். </p><p>பணியிடத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் நல்ல பெயரைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம்.
</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://chat.whatsapp.com/KPaiG8NNYogL3W9EipSjKP" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T04:53:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் நீதிமன்ற நடவடிக்கைகளை எளிதாக்க குரல் தட்டச்சு செயலி அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/voice-typing-app-introduced-for-court-in-sri-lanka-1788236744"></link>
            <id>https://tamilwin.com/article/voice-typing-app-introduced-for-court-in-sri-lanka-1788236744</id>
            <summary type="text">இலங்கை நீதித்துறை அமைப்பில் நிலவும் வழக்கு தாமதங்களைக் குறைக்கும் நோக்குடன்இ திறந்த நீதிமன்ற அமர்வுகளில் வழங்கப்படும் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை நீதித்துறை அமைப்பில் நிலவும் வழக்கு தாமதங்களைக் குறைக்கும் நோக்குடன்இ திறந்த நீதிமன்ற அமர்வுகளில் வழங்கப்படும் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக ஒரு சிறப்பு புதிய மென்பொருள் செயலி அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த புதிய தொழில்நுட்ப அமைப்பை பரீட்சார்த்த ரீதியில் ஆரம்ப கட்டத்தில் நீதவான் நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்கள் மட்டத்தில் செயல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.</p><h2>மென்பொருள் பேச்சு-தட்டச்சு&nbsp;</h2><p>
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் அனைத்து சாட்சிப் பதிவுகளையும் சரியாக படியெடுப்பதற்காக இந்த மென்பொருள் பேச்சு-தட்டச்சு தொழில்நுட்பத்தை (Voice-typing technology) பயன்படுத்துகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae822752-09a0-46df-aa8d-a82bd69d97ee/26-6a9658d985da3.webp' /></p><p> அதன் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், ஒவ்வொரு சாட்சியாளரின் குரலையும் தனித்தனியாக அடையாளம் காணும் திறன் ஆகும்.

இதன் மூலம், ஒரு சாட்சியாளர் பின்னர் மீண்டும் சாட்சியமளிக்கும் சந்தர்ப்பங்களில் கூட எந்தவித குழப்பமும் ஏற்படுவது தடுக்கப்படும்.
</p><p>
நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் வழக்கு அறிக்கைகள் மற்றும் சட்டப் பதிவுகளைப் பெறுவதற்கு நீண்ட காலம் எடுப்பதால், வழக்கு அமர்வுகள் தொடர்ந்து ஒத்திவைக்கப்படுவது இந்த நாட்டின் நீதித்துறை அமைப்பில் நீண்டகாலமாக இருந்து வரும் ஒரு தீவிரமான பிரச்சினையாகும்.</p><p>

இந்த புதிய செயலியை நீதவான் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம், தொடர்புடைய தாமதங்களைக் குறைத்து, நீதித்துறை செயல்முறையின் ஒட்டுமொத்த செயல்திறனை அதிகரிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T04:48:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருந்தூர் மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு பொலிஸ் பாதுகாப்பு கோரியுள்ள தேரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protection-illegally-constructed-temple-kurundur-1788237525"></link>
            <id>https://tamilwin.com/article/protection-illegally-constructed-temple-kurundur-1788237525</id>
            <summary type="text">முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் நீதிமன்ற
உத்தரவுகளை மீறி அமைக்கப்பட்ட விகாரையின் பாதுகாப்புக்காக
வழங்கப்பட்டிருந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் நீதிமன்ற
உத்தரவுகளை மீறி அமைக்கப்பட்ட விகாரையின் பாதுகாப்புக்காக
வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு கோரி,
புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சருக்கு குறித்த விகாரையின்
விகாராதிபதி கல்கமுவே சாந்தபோதி தேரர் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
</p><p>
குருந்தூர் விகாரை பூமியில் அகழ்வாராய்ச்சி மற்றும் பாதுகாப்புப் பணிகள்
ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அங்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள்
பாதுகாப்பிற்காக நிலைநிறுத்தப்பட்டிருந்ததாக அந்தக் கடிதத்தில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><h2>விலக்கப்பட்டுள்ள பாதுகாப்பு</h2><p>
</p><p>
விகாரைக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பு, தொல்லியல் தலம் மற்றும்
தொல்பொருட்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அவர்கள் அங்கு கடமையில்
ஈடுபட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bd20cd0-600d-4698-85ef-cea5d784906c/26-6a96587dab15c.webp' /></p><p>
</p><p>
எனினும், தற்போது அந்தப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அப்பகுதியிலிருந்து
விலக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியிலுள்ள தொல்லியல் விகாரை, பாதுகாக்கப்பட்ட
வனப்பகுதி மற்றும் அங்கு வருகை தரும் தொல்பொருள் ஆய்வாளர்கள் கடும் அபாயத்தை
எதிர்கொண்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, விகாரைக்கான பாதுகாப்பு அதிகாரிகளை உடனடியாக மீள பணியமர்த்துமாறு அவர்
சம்பந்தப்பட்ட தரப்பினரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T04:47:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[13 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை ; 20 வயது இளைஞன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/arrested-for-sexually-abusing-a-13-year-old-girl-1788237837"></link>
            <id>https://jvpnews.com/article/arrested-for-sexually-abusing-a-13-year-old-girl-1788237837</id>
            <summary type="text">13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 20 வயதுடைய இளைஞர் ஒருவரை புத்தளம் மாதம்பே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 20 வயதுடைய இளைஞர் ஒருவரை புத்தளம் மாதம்பே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிங்கிரிய – ஹிருவெல்பொல பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சிறுமியின் தந்தை தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டில் இருந்த சிறுமியின் தாய் கடந்த மாதம் முதலாம் திகதி நாட்டிற்கு திரும்பியுள்ளார்.</p><p>
</p><p></p><p>தாய் வெளிநாட்டில் இருந்த காலப்பகுதியில், சிறுமி தனது பாட்டி, சித்தி மற்றும் சகோதர, சகோதரிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.</p><p> கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் குறித்த வீட்டில் வசித்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38be3649-b887-4fde-8978-fb0b49bb3f12/26-6a96580eb9495.webp' /></p><p>வீட்டில் எவரும் இல்லாத சந்தர்ப்பங்களில் சந்தேகநபர் தன்னை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனையடுத்து, சிறுமியின் தாய் மாதம்பே பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்து சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
</p><p>
பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக வைத்தியப் பரிசோதனைகளுக்காக சிலாபம் பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மாதம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T04:44:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் பேரழிவு; பெற்றோரை தேடும் சிறுவனின் நெஞ்சை உலுக்கும் காணொளி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nepal-disaster-little-boy-searching-his-parents-1788237970"></link>
            <id>https://jvpnews.com/article/nepal-disaster-little-boy-searching-his-parents-1788237970</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாளத்தில் ஏற்பட்ட மிகக் கொடூரமான பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுப் பேரழிவைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு சிறுவனின் நெஞ்சை உலு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; <a href="https://jvpnews.com/article/twin-babies-rescued-from-nepal-floods-1787896496" target="_blank">நேபாளத்தில் ஏற்பட்ட மிகக் கொடூரமான பெருவெள்ளம்</a> மற்றும் நிலச்சரிவுப் <a href="https://jvpnews.com/article/stole-the-jewelry-of-a-woman-who-died-nepal-floods-1787902215" target="_blank">பேரழிவைத் தொடர்ந்து</a>, சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு சிறுவனின் நெஞ்சை உலுக்கும் காணொளி (Video) உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p>&nbsp; &nbsp;அந்த வைரல் வீடியோவில், வெள்ளப் பேரழிவிற்குப் பிறகு ஒரு சிறுவன் தனது கைக்குழந்தையான தங்கையைத் தனது முதுகில் சுமந்தபடி நடந்து செல்கிறான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9a5ec58-09dd-4cbd-af59-70845bc30792/26-6a9658937270e.webp' /></p><h2>வைரல் வீடியோ....</h2><p>

பேரழிவின் போது பெற்றோரிடமிருந்து பிரிந்த இந்த இரண்டு குழந்தைகளும், காயங்களுடன் தங்களது பெற்றோரைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
</p><p>
குழந்தைகளின் முகத்தில் வெள்ளத்தின் போது ஏற்பட்ட கீறல்களும் காயங்களும், பயமும் அப்பட்டமாகத் தெரிகின்றன.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1379736873712760%2F&show_text=false&width=380&t=0" width="380" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p> </p><p>

இக்காட்சி ஜப்பானிய அனிமேஷன் படமான 'கிரேவ் ஆஃப் தி ஃபயர்ஃபிளைஸ்' (Grave of the Fireflies) கதையை நினைவுபடுத்துவதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-01T04:43:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டு கட்சியின் முன்னாள் மேயர் ஒருவருக்கு எதிராக CCIB விசாரணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-mayor-ordered-to-statement-over-drug-kingpin-1788235603"></link>
            <id>https://ibctamil.com/article/ex-mayor-ordered-to-statement-over-drug-kingpin-1788235603</id>
            <summary type="text">மொட்டு கட்சியின் தெஹிவளை - கல்கிசை முன்னாள் மேயர் தனசிரி அமரதுங்கவிற்கு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் (CCIB) முன்னிலையாக அழைப்பு விடுக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொட்டு கட்சியின் தெஹிவளை - கல்கிசை முன்னாள் மேயர் தனசிரி அமரதுங்கவிற்கு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் (CCIB) முன்னிலையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p>பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் (Shiran Basik) தொடர்பான விசாரணைகள் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக இவ்வாறு அவரை முன்னிலையாகுமாரு தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில் இன்று (01-09-2026) அவரை&nbsp;CCIB இல் முன்னிலையாகுமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>கடத்தல்காரர்களில் ஒருவர்</h2><p>

இலங்கைக்குப் பெருமளவில் போதைப்பொருட்களை விநியோகிக்கும் முக்கிய பாதாள உலகக் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், டுபாயில் கைது செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
</p><p>தற்போது தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பொறுப்பில் உள்ள சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் மேயரிடம் வாக்குமூலம் பெறத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15d7ffe9-8f67-424f-a4b5-74e903ef2b6d/26-6a9656943ca12.webp' /></p><p>இதனடிப்படையில் இன்று காலை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகுமாறு முன்னாள் மேயர் தனசிரி அமரதுங்கவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரன்மல் கொடிதுவாக்குவின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p>
</p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T04:37:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்த லோகேஷ் கனகராஜ் DC ஓடிடி ரிலீஸ்... எப்போது தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/bo-hit-movie-lokesh-kanagaraj-ott-release-details-1788235831"></link>
            <id>https://cineulagam.com/article/bo-hit-movie-lokesh-kanagaraj-ott-release-details-1788235831</id>
            <summary type="text">DC திரைப்படம்லோகேஷ் கனகராஜ், ஒரு தரமான இயக்குனராக நிறைய ஹிட் படங்கள் கொடுத்து சினிமாவில் சாதித்துவிட்டார். இப்போது ஹீரோவாக லோகேஷ் கனகராஜ் டிசி படம் மூ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>DC திரைப்படம்</h2><p>லோகேஷ் கனகராஜ், ஒரு தரமான இயக்குனராக நிறைய ஹிட் படங்கள் கொடுத்து சினிமாவில் சாதித்துவிட்டார். </p><p>இப்போது ஹீரோவாக லோகேஷ் கனகராஜ் டிசி படம் மூலம் களமிறங்கியுள்ளார். கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பிறகு அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாரான படம் தான் டிசி.</p><p></p><p> </p><p>இதில் நாயகிகளாக வாமிகா கபி மற்றும் சஞ்சனா கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
</p><p>சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைப்பில் இப்படம் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி வெளியாகி இருந்தது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7eae1263-d874-4bcf-b17b-4507f2de30c3/26-6a9654a58cbab.webp' /></p><h2>ஓடிடி ரிலீஸ்</h2><p>
படத்தின் கதை, லோகேஷ் நடிப்பு, முக்கியமாக அனிருத் இசை என படத்திற்கு நிறைய விஷயங்கள் பலம் சேர்த்துள்ளது.
படத்தில் வன்முறை அதிகமாக இருப்பதாக சில விமர்சனங்கள் எழுந்தாலும் வசூலுக்கு எந்த குறையும் இல்லை. </p><p>15 நாட்களிலேயே இப்படம் ரூ. 100 கோடிக்கு மேலான வசூல் வேட்டை நடத்தியது.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இப்படம் வரும் செப்டம்பர் 4ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/pfnU64kk3LM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-01T04:30:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆப்பிள் நிறுவன CEO பதவியில் இருந்து விலகும் டிம் குக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tim-cook-signs-off-on-last-day-as-apple-ceo-1788235146"></link>
            <id>https://ibctamil.com/article/tim-cook-signs-off-on-last-day-as-apple-ceo-1788235146</id>
            <summary type="text">உலகம் முழுவதும் புகழ் பெற்ற ஐபோன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான (CEO) டிம் குக் தனது பதவியில் இருந்து விலகவுள்ளதாக அறிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகம் முழுவதும் புகழ் பெற்ற ஐபோன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான (CEO) டிம் குக் தனது பதவியில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.</p><p>கடந்த 2011ம் ஆண்டு, அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ், உடல்நிலை மோசம் அடைந்ததைத் தொடர்ந்து பதவி விலகிய பிறகு அந்த பதவியில் டிம் குக் நியமிக்கப்பட்டார்.</p><p>ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக் தலைமையிலான 15 வருட காலம் ஆப்பிள் வரலாற்றில் ஒரு மாபெரும் அத்தியாயமாக பார்க்கப்படுகிறது.</p><p></p><h2>டிம் குக்கின் தலைமைத்துவம்</h2><p>இந்த பதவி விலகல் குறித்து&nbsp;டிம் குக் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,&nbsp;தலைமை நிர்வாக அதிகாரியாக எனது கடைசி நாளில், ஆப்பிள் சமூகத்திற்கு என் அன்பை அனுப்புகிறேன். நாளை என் பதவிப் பெயர் மாறுகிறது, ஆனால் ஆப்பிள் சமூகத்தின் மீது நான் கொண்டுள்ள அன்பு ஒருபோதும் மாறாது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Sending lots of love to the Apple community on my last day as CEO. My title changes tomorrow, but the love I have for the Apple community never will. Thank you for being a constant source of inspiration. My gratitude is endless, and I’m excited for the next chapter!</p>&mdash; Tim Cook (@tim_cook) <a href="https://x.com/tim_cook/status/2094448088199078236?ref_src=twsrc%5Etfw">August 31, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> எனக்குத் தொடர்ச்சியான உத்வேகத்தின் ஊற்றாக இருந்ததற்கு நன்றி. என் நன்றியுணர்வு எல்லையற்றது, மேலும் அடுத்த அத்தியாயத்திற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்!” என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>ஆப்பிளின் சந்தை மதிப்பு</h2><p>
</p><p>இதேவேளை டிம் குக் ஆப்பிள் நிறுவனத்தைப் பொறுப்பேற்றபோது சுமார் 350 பில்லியன் டொலராக இருந்த ஆப்பிளின் சந்தை மதிப்பு இன்று 5 டிரில்லியன் டொலரை நெருங்கியுள்ளது. இது உலகளாவிய அளவில் ஆப்பிளின் செல்வாக்கு மற்றும் மதிப்பில் ஏற்பட்டுள்ள அசாதாரண வளர்சியை காட்டுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7ef4e2a-ae3c-441f-974c-fb37bbeb90ba/26-6a96548071be5.webp' /></p><p>அவரது தலைமையில் ஆப்பிள் நிறுவனம் பாரிய வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொடர்சியான விரிவாக்கத்தை கண்டது.</p><p>
ஐபோன் முதல் சேவைகள், அணியக்கூடிய சாதனங்கள் வரை அனைத்து துறைகளிலும் டிம் குக்கின் தலைமை ஆப்பிளை உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக உருவாக்கியது.</p><p>
</p><p>இந்தநிலையில் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து டிம் குக் விலகுவதுடன் அவருக்கு பதில் ஜான் டர்னஸ் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T04:30:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆண்டின் இறுதியில் இலங்கைக்கு அதிக மழை அபாயம் ; ஐ.நா. எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-at-risk-heavy-rains-year-end-un-warns-1788236996"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-at-risk-heavy-rains-year-end-un-warns-1788236996</id>
            <summary type="text">தற்போது நிலவும் எல் நினோ காலநிலை நிலைமை காரணமாக, இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இலங்கையில் அதிக மழைவீழ்ச்சி பதிவாவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது நிலவும் எல் நினோ காலநிலை நிலைமை காரணமாக, இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இலங்கையில் அதிக மழைவீழ்ச்சி பதிவாவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>இதன்போது வெள்ளப்பெருக்கு, நீர்நிலைகள் மூழ்குதல் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்குப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.</p><h3>ஐக்கிய நாடுகள் சபை</h3><p>

 

எல் நினோ காலநிலை நிலைமை குறித்து ஆசிய பிராந்திய நாடுகளுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பான புதிய மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டே ஐக்கிய நாடுகள் சபை இதனைத் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fe607c4-99e1-41f0-96a5-078405013e95/26-6a9654c5955e7.webp' /></p><p>அந்த மதிப்பீட்டின்படி, எல் நினோ நிலைமை காரணமாகக் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நாட்டின் பிரதான அபாயமாக வறட்சியான காலநிலையை விட அதிக மழைவீழ்ச்சி கிடைப்பதே என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
 

ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையின் பல பிரதேசங்களில் குறிப்பிடத்தக்களவு மழைவீழ்ச்சி பதிவாகும் என்பதுடன், டிசம்பர் முதல் பெப்ரவரி வரை வடகிழக்கு பருவக்காற்று தீவிரமடைவதோடு இயல்பை விட அதிக மழை பெய்யக்கூடும் என அந்த மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
 

இலங்கை தொடர்பான அறிக்கையில், காலநிலை அபாயத்துடன் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடியின் தாக்கம் காரணமாக இலங்கையின் பொருளாதார அழுத்தமும் அதிகரிக்கக்கூடும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
 

எவ்வாறாயினும், இந்த அபாயம் இன்னும் பாரிய தாக்கமாக மாறவில்லை என்பதால், முன்ஆயத்தங்களை மேற்கொள்வதற்கான தீர்மானமிக்க சந்தர்ப்பம் இன்னமும் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.
</p><p>
 

இதனிடையே, தற்போது அனுராதபுரம் மாவட்டத்தில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாகப் பல நீர்த்தேக்கங்கள் வற்றிப்போயுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய தெரிவித்துள்ளார்.</p><p>

 

எல் நினோ நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அரசாங்கம் ஏற்கனவே தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T04:29:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனேமுல்ல சஞ்ஜீவவின் கொலையுடன் தொடர்புடைய பெண் சட்டத்தரணி தொடர்பில் அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shocking-details-about-lawyer-arrested-1788235273"></link>
            <id>https://tamilwin.com/article/shocking-details-about-lawyer-arrested-1788235273</id>
            <summary type="text">கனேமுல்ல சஞ்ஜீவவின் கொலையுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட மஹர நீதவான் நீதிமன்றத்தின் முன்னாள் வழக்கறிஞரான தமரா குமரி அபேரத்ன விளக்கமறியலில் வைக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனேமுல்ல சஞ்ஜீவவின் கொலையுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட மஹர நீதவான் நீதிமன்றத்தின் முன்னாள் வழக்கறிஞரான தமரா குமரி அபேரத்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். </p><p>சந்தேகத்திற்கிடமான வழக்கறிஞர் 1970 ஆம் ஆண்டு பிறந்திருந்த போதிலும், அவர் 1972 ஆம் ஆண்டு பிறந்ததாக குறிப்பிட்டுப் போலியான தேசிய அட்டையைத் தயாரித்துள்ளார். </p><p>அதனை பயன்படுத்தி கஹவத்தை அரச வங்கி கிளையில் கணக்குகளை ஆரம்பித்து, பல சந்தர்ப்பங்களில் இலட்சக்கணக்கில் கடன்களை பெற்றுள்ளார்.</p><p> </p><h2><b>நீதிமன்றத்திடம் கோரிக்கை </b></h2><p>அத்துடன், சில கடன் தொகைகளை திருப்பிக் செலுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97126076-28a8-415e-99f0-d09c1912775f/26-6a9653017dd26.webp' /></p><p>இதன்போது, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஹேமந்த நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்து, இது தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என குறிப்பிட்டுள்ளார்.</p><p> மேலும் சந்தேகநபரின் தேசிய அடையாள அட்டை தொடர்பான விபர அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக கொழும்பு கடன் தகவல் பணியகத்திற்கு உத்தரவொன்றை வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>முன்வைக்கப்பட்ட கருத்துக்களை கவனத்தில் கொண்ட பதில் நீதவான், விசாரணை நடவடிக்கைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விபர அறிக்கையை வழங்குமாறு கொழும்பு கடன் தகவல் பணியகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-01T04:22:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் ஆரம்பமாகும் பாடசாலைகள்! அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/remove-mosquito-school-dengue-control-unit-1788233880"></link>
            <id>https://tamilwin.com/article/remove-mosquito-school-dengue-control-unit-1788233880</id>
            <summary type="text">புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர்&amp;nbsp;அரச மற்றும் தனியார் பாடசாலை வளாகங்களை சுத்தம் செய்து நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர்&nbsp;அரச மற்றும் தனியார் பாடசாலை வளாகங்களை சுத்தம் செய்து நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு&nbsp;தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு&nbsp;வலியுறுத்தியுள்ளது.</p><p>இது தொடர்பில்&nbsp;தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அனைத்து&nbsp;கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.</p><h2>அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்&nbsp;</h2><p>குறிப்பாக, கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அகற்றுவதும், மீண்டும் பரவும் வாய்ப்பை முழுமையாக கட்டுப்படுத்துவதும் அவசியம் என அறிவுறுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6422359-8070-4841-84ae-17db2be474dd/26-6a9652b9abb7f.webp' />&nbsp;</p><p>

இந்த ஆண்டு, நாட்டில் 95,174 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், 72 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்படி, சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் செப்டம்பர் 07, 2026 அன்று ஆரம்பமாகவுள்ளது.</p><p>அதன்படி, அனைத்துப் பாடசாலைகளுக்குமான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டிசம்பர் 4 வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைய உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T04:21:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-retaliates-against-us-military-bases-jordan-1788236158"></link>
            <id>https://canadamirror.com/article/iran-retaliates-against-us-military-bases-jordan-1788236158</id>
            <summary type="text">ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனை ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படை உறுதி செய்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனை ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது.</p><p>

சுமார் ஒரு மாத காலத்தில் முதல் முறையாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதன் மூலம் மேற்காசியாவில் போர்ச் சூழல் ஆறாவது மாதத்தை எட்டியுள்ளது. </p><p>ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அமைந்துள்ள ஈரானின் சிறிய தீவு பகுதியில் உள்ள ஈரான் ஏவுகணை ஏவும் தளத்தை அமெரிக்கா தாக்கி உள்ளது. இதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. இதற்கு ஈரானும் பதில் தாக்குதல் கொடுத்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77334029-2ea0-43bb-8ae0-62970740bd72/26-6a96518064534.webp' /></p><p>அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. ஈரான் புரட்சிகர பாதுகாப்பு படை இதனை உறுதி செய்துள்ளது. </p><p>இந்த மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு ஒரு டொலர் உயர்ந்துள்ளது. இந்தியா உட்பட சர்வதேச நாடுகளில் பங்குச் சந்தை வர்த்தகம் சரிவை கண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
</p><p>
லாராக் தீவு பகுதியில் அமெரிக்கா மேற்கொண்ட அண்மைய தாக்குதலுக்கு பதிலடியாக மேற்காசியாவின் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.</p><p> இதனை ஈரானின் வெளியுறவு அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.

லாராக் தீவில் தாக்குதல் மேற்கொள்ள ஜோர்டானில் உள்ள இராணுவ தளத்தை அமெரிக்கா பயன்படுத்தியதாக ஈரான் குற்றச்சாட்டு வைத்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfd29b0f-f19f-480d-bfe5-8762ea5c5ba3/26-6a96518118c6a.webp' /></p><p>அமெரிக்காவின் இந்த தாக்குதலில் ஈரான் ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்தனர் ஈரான் தெரிவித்துள்ளது.

பாலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த இடம் மோசமான சேதத்தை எதிர்கொண்டுள்ளதாக ஈரான் கூறியுள்ளது.</p><p> அதே நேரத்தில் சுமார் 8 ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக ஜோர்டான் கூறியுள்ளது. இருப்பினும் இந்த ஏவுகணைகள் எங்கிருந்து ஏவப்பட்டது என்பதை ஜோர்டான் தெரிவிக்கவில்லை.
</p><p>
அதேபோல ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் அல்-மின்ஹாத் ஏர் பேஸில் ட்ரோன்களை பயன்படுத்தி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதோடு அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரான் இராணுவம் கண்டனம் தெரிவித்துள்ளது</p>]]></content>
            <updated>2026-09-01T04:16:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் போர்... எதிரிகளால் தூக்கிலிடப்படலாம் என அஞ்சும் விளாடிமிர் புடின்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/putin-fears-enemies-will-1788236221"></link>
            <id>https://news.lankasri.com/article/putin-fears-enemies-will-1788236221</id>
            <summary type="text">Putin fears enemies will hang him: எதிரிகள் தன்னைத் தூக்கிலிட்டு விடுவார்கள் எனப் பீதியடைந்த புடின்.

உக்ரைன் மீதான தனது இடைவிடாத போரை வெற்றி இல்லாம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Putin fears enemies will hang him: எதிரிகள் தன்னைத் தூக்கிலிட்டு விடுவார்கள் எனப் பீதியடைந்த புடின்.
</p><p>
உக்ரைன் மீதான தனது இடைவிடாத போரை வெற்றி இல்லாமல் முடித்துக்கொள்வது தனது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்று புடின் அஞ்சுவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>தூக்கிலிட்டு விடுவார்கள்</h2><p>
</p><p>கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியுடன் தனது போரை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், தான் கொல்லப்படலாம் என்று புடின் தனது நெருங்கிய வட்டாரத்தினரிடம் கூறியதாகத் தகவல் கசிந்துள்ளது. </p><p>தி எகனாமிஸ்ட் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், பீதியடைந்த புடின், தான் டான்பாஸ் பகுதியின் கட்டுப்பாட்டை வெல்லவில்லை என்றால், அவர்கள் தன்னைத் தூக்கிலிட்டு விடுவார்கள் என்று தனக்கு ஆதரவான பெரும் கோடீஸ்வரர்களிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4d8124c-bad7-4659-8ecb-72ee323e3141/26-6a9651bfbd496.webp' /></p><p> </p><p>மட்டுமின்றி, உக்ரைன் மீதான படையெடுப்பு தோல்வியடைந்துவிட்டதாகவும், அது கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக நீடித்து ரஷ்யாவின் பொருளாதாரத்தைச் சீரழித்துவிட்டதாகவும் புடினின் முக்கிய கூட்டாளிகளும் கருதுகின்றனர்.
</p><p>இணையவழி சில்லறை விற்பனையாளர்களின் கிடங்குகள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்கி உக்ரைன் சமீபத்தில் நடத்திய முன்னெப்போதும் இல்லாத தாக்குதல்கள், பேரழிவுகரமான பெட்ரோல் தட்டுப்பாடுகளை ஏற்படுத்தி, போரின் விலையை புடினின் குடிமக்களுக்கு நேரடியாக உணர்த்தியுள்ளன.</p><p></p><p> </p><p>ஆனால் இதற்கு மிக மோசமான பதிலடி உறுதி என விளாடிமிர் புடின் மிரட்டல் விடுத்திருந்தாலும், புடின் ஒரு இக்கட்டான முட்டுச்சந்தில் சிக்கிக்கொண்டு, அதிலிருந்து வெளியேற ஆபத்தான வழியைத் தெரிவு செய்துள்ளதாக கிரெம்ளின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>தீவிர நெருக்கடியில் சிக்கியுள்ள புடின், நேட்டோ (NATO) உறுப்பு நாடுகள் மீது ஆவேசமாகப் பாய்வதன் மூலம் தனது அண்டை நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் அபாயத்தில் உள்ளார். </p><p>இந்த நிலையில், உக்ரைன் மீதான தனது கொடூரமான போரை நிறுத்துமாறு நரேந்திர மோடி புடினிடம் வெளிப்படையாக கூறியதால், அவர் இன்று உலக அரங்கில் தலைகுனியும் நிலை ஏற்பட்டது.</p><h2>தீவிரப்படுத்துவதில் உறுதி</h2><p> </p><p>ரஷ்யாவின் மிக நெருக்கமான நட்பு நாடான இந்தியா, நாம் ஒரு முடிவில்லாத போரிலிருந்து போரின் முடிவை நோக்கி நகர வேண்டும் என கூறியுள்ளது. </p><p>இதில் கடும் கோபமடைந்த விளாடிமிர் புடின்,
தனது மொழிபெயர்ப்புக் கருவியை (earpiece) கழற்றி வீசிவிட்டு, பற்களைக் கடித்தவாறே, மிக்க நன்றி, பிரதமரே. நாங்கள் அந்தத் திசையில்தான் நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்று பதிலளித்துள்ளார். </p><p>ரஷ்யாவிற்கு இந்தப் பேரழிவுகரமான போரினால் ஏற்படும் பெரும் இழப்புகள் இருந்தபோதிலும், புடின் மோதலைத் தீவிரப்படுத்துவதில் உறுதியாகத் தெரிகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7b3b109-f2a1-4ee5-831e-120c5b75526d/26-6a9651c07124b.webp' /></p><p> 2022-இல் உக்ரைன் மீது முழு அளவிலான போரைத் தொடங்கியதிலிருந்து, அவரது படைகளைச் சேர்ந்த சுமார் 15 லட்சம் பேர் உயிரிழந்தோ அல்லது காயமடைந்தோ போரில் இழக்கப்பட்டுள்ளனர். </p><p>எதிரிகளைப் பின்னுக்குத் தள்ளுவதற்கு இன்றியமையாததான, 50 கி.மீ அகலமுள்ள நகரங்களைக் கொண்ட பாதுகாப்பு அரணான, டான்பாஸின் எஞ்சிய பகுதியை முழுமையாகக் கைப்பற்றுவது ரஷ்யாவின் முக்கிய இலக்காக மாறியுள்ளது. டான்பாஸ் பகுதியை அவர் கைப்பற்றும் வரையில் போர் நீடிக்கலாம் என்றே கூறப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T04:15:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேட்டூர் அணையை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/chief-minister-is-opening-the-mettur-dam-1788235627"></link>
            <id>https://ibctamilnadu.com/article/chief-minister-is-opening-the-mettur-dam-1788235627</id>
            <summary type="text">Mettur Dam Opening Today: மேட்டூர் அணையிலிருந்து இன்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தண்ணீரை திறந்துவிடுகிறார்.

காவிரி டெல்டா பாசனத்துக்காக இன்று முதல் 4...</summary>
            <content type="html"><![CDATA[<p>Mettur Dam Opening Today: மேட்டூர் அணையிலிருந்து இன்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தண்ணீரை திறந்துவிடுகிறார்.
</p><p>
காவிரி டெல்டா பாசனத்துக்காக இன்று முதல் 45 நாட்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.
</p><p>
இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் சேலம் வரும் முதலமைச்சர் சாலை மார்க்கமாக மேட்டூருக்கு நண்பகல் 12 மணிக்கு சென்றடைகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20d8d921-b339-4eaa-a454-cb4751b4be1a/26-6a96508dae6aa.webp' /><br></p><p>
</p><p>
இவரது வருகையை தொடர்ந்து மேட்டூர் அணைப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
</p><p>
தொடர்ந்து மேட்டூர் அணை குறித்த விளக்கப்புகைப்பட கண்காட்சியையும், மேட்டூர் அணை மின்நிலையத்தையும் பார்வையிடுகிறார், அங்கிருந்து சேலம் விமான நிலையம் சென்று சென்னை திரும்புகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91b7acd6-103b-4b2d-bec1-21f57a48e01a/26-6a96508e60422.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-01T04:12:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவுக்கு எதிராக பசில் ராஜபக்ச தீட்டிய சதித்திட்டம்! விரைவில் ஜனாதிபதியாகும் கனவால் நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/politicians-were-sidelined-by-basil-s-conspiracy-1788234229"></link>
            <id>https://tamilwin.com/article/politicians-were-sidelined-by-basil-s-conspiracy-1788234229</id>
            <summary type="text">அமெரிக்காவுக்குச் சென்று ஒளிந்துகொண்டிருக்கும், இந்நாட்டின் தேசியவாத
அரசியலை அழித்தொழித்த பசில் ராஜபக்ச&amp;nbsp; சதித்திட்டம் தீட்டி, இரண்டு
வருடங்களுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுக்குச் சென்று ஒளிந்துகொண்டிருக்கும், இந்நாட்டின் தேசியவாத
அரசியலை அழித்தொழித்த பசில் ராஜபக்ச&nbsp; சதித்திட்டம் தீட்டி, இரண்டு
வருடங்களுக்கு முன்பாகவே தேர்தலை நடத்தி, மகிந்த ராஜபக்சவை வீட்டுக்கு
அனுப்பிவிட்டு விரைவாக ஜனாதிபதியாகும் கனவில் செயற்பட்டபோது நாம் வேதனையடைந்து
ஒதுங்கிக்கொண்டோம் என்று சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற
உறுப்பினருமான திலித் ஜயவீர சுட்டிக்காட்டினார்.
</p><p>
மொனராகலை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற சர்வஜன அதிகாரம் கட்சியின் தொகுதி
தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.</p><h2>பசிலின் திட்டம்&nbsp;</h2><p>
</p><p>
அவர் மேலும் கூறுகையில்,
</p><p>எங்களை மற்றொரு ராஜபக்சவின் அவதாரம் எனக் கூறிச் சிலர் கூச்சலிடுகின்றனர்.
அமெரிக்காவில் ஒளிந்துகொண்டு தேசியவாத அரசியலை அழித்த பசில் ராஜபக்ச, மகிந்தவை
வீட்டுக்கு அனுப்பிவிட்டுத் தாமே ஜனாதிபதியாகும் கனவில் சதித்திட்டம்
தீட்டியபோதே நாங்கள் மனவருத்தத்துடன் ஒதுங்கிக்கொண்டோம்.
</p><p>
இன்று நாட்டின் ஜனநாயகம் உச்சக்கட்டத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
மகாநாயக்க தேரர்கள் கூறினாலும் தனக்குத் தேவையானதையே செய்வேன் எனத் தற்போதைய
ஜனாதிபதி கூறியுள்ளார். இவ்வாறான சர்வாதிகாரியை மக்கள் கொண்டுவராத போதிலும்
சுயநலமிக்க அரசியல்வாதிகளே கொண்டுவந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cd37648-4f7e-42ee-8751-0ec55076dbdc/26-6a964e896f123.webp' /></p><p>
</p><p>
இன்று அனைவரும் எதிர்கொள்ளும் முதன்மையான பிரச்சினை பொருளாதாரம் எனில் அதற்கான
தீர்வும் பொருளாதாரமாகவே அமைய வேண்டும்.
</p><p>
பிராந்தியத்தில் வளர்ச்சியடைந்த நாடுகள் பயன்படுத்திய 'தொழில்முனைவோர் அரசு'
கோட்பாட்டையே நாம் முன்மொழிகின்றோம். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள்
பொருளாதாரத்தை மேம்படுத்துவது பற்றிக் பேசாமல் வரிகளை விதிப்பது பற்றியும்
கருவூலத்தை நிரப்புவது பற்றியும் மட்டுமே பேசுகின்றனர். </p><p>2028 இல் செலுத்த
வேண்டிய மிகப்பெரிய கடன் சுமை குறித்து எந்த உரையாடலையும் அவர்கள் நடத்தவில்லை.

செவனகலை சர்க்கரை ஆலையை மூடி அதனை விற்பனை செய்யும் நோக்கிலேயே அரசு
செயற்படுகின்றது.
</p><p>
2029 ஆம் ஆண்டாகும் போது 'தொழில்முனைவோர் அரசை' உருவாக்கி, செவனகலை உள்ளிட்ட
நிறுவனங்களின் இலாபத்தை மும்மடங்காக உயர்த்தும் வேலைத்திட்டத்தை முற்போக்குச்
சக்திகளை ஒன்றிணைத்து வழங்குவோம்&nbsp; என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T04:04:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பிய கைதி மீண்டும் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/prisoner-jaffna-teaching-hospital-arrested-again-1788235408"></link>
            <id>https://jvpnews.com/article/prisoner-jaffna-teaching-hospital-arrested-again-1788235408</id>
            <summary type="text">யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற கைதி மீண்டும் பொலிஸாரால் நேற்று (31) கைது செய்யப்பட்ட நிலையில்&amp;nbsp;இன்று செவ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற கைதி மீண்டும் பொலிஸாரால் நேற்று (31) கைது செய்யப்பட்ட நிலையில்&nbsp;இன்று செவ்வாய்க்கிழமை (01) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p>


இது குறித்து மேலும் தெரியவருகையில்,

பாலியல் குற்றத்துடன் தொடர்புடைய கைதி ஒருவர் உடல் சுகயீனமடைந்த நிலையில், சிறை காவலர்களின் கண்காணிப்பின் கீழ் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98a7d82d-7e18-4e15-b0d7-8cfb0db931c5/26-6a964e9244090.webp' /></p><p>இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (30) 03.00 மணி அளவில் வைத்தியசாலையில் இருந்து கை விலங்குடன் தப்பிச் சென்றுள்ளார். </p><p>

இவ்வாறு தப்பிச் சென்றவர் இளவாலை பகுதியில் ஒழிந்திருப்பதாக இளவாலை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. </p><p>அதனடிப்படையில் அவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
</p><p>
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று செவ்வாய்க்கிழமை (01) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T04:03:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய அவதாரம் எடுக்கும் நடிகையாக கலக்கிய நித்யா மேனன்... நியூ என்ட்ரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-nithya-menon-stepping-into-new-zone-1788234025"></link>
            <id>https://cineulagam.com/article/actress-nithya-menon-stepping-into-new-zone-1788234025</id>
            <summary type="text">நித்யா மேனன்தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகைகள் ஒவ்வொருவரும் ஒரு விதம். சிலர் சும்மா காதல் படங்கள் நடிக்கலாம், ஹிட் கொடுத்துவிட்டு செல்வோம் என இருப்பா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நித்யா மேனன்</h2><p>தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகைகள் ஒவ்வொருவரும் ஒரு விதம். சிலர் சும்மா காதல் படங்கள் நடிக்கலாம், ஹிட் கொடுத்துவிட்டு செல்வோம் என இருப்பார்கள். </p><p>ஆனால் சில நடிகைகள் சின்ன கதாபாத்திரம் வந்தாலும் தன் நடிப்பு பெயர் சொல்லும் அளவிற்கு இருக்க வேண்டும், தரமான கதாபாத்திரம் இருக்க வேண்டும் என கதைகள் தேர்வு செய்வார்கள். </p><p>அப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம் என இந்திய மொழிகளில் படங்கள் நடித்து கவனம் பெற்றவர் தான் நடிகை நித்யா மேனன். கடைசியாக நித்யா மேனன் நடிப்பில் தனுஷ் நடிப்பில் வெளியான இட்லி கடை படம் வெளியாகி இருந்தது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae9c8b9a-1733-44fa-8dd3-6a977efefabc/26-6a964d33d7b45.webp' /></p><h2>
புதிய என்ட்ரி</h2><p>
நடிகையாக தன்னை நிரூபித்துள்ள நடிகை நித்யா மேனன் இப்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார். அதாவது கடந்த பிப்ரவரி மாதம் கியூரி புரொடக்ஷ்ன் என்ற பெயரில் புது தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கியிருந்தார் நித்யா மேனன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe204e4b-c545-413a-8c72-2b256ec3ce42/26-6a964d323b253.webp' /></p><p>
</p><p>தற்போது நடிகை தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க இருக்கும் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. </p><p>கியூரி புரொடக்ஷ்ன்ஸ் மற்றும் லியோ விஷன் இரண்டு தயாரிப்பு நிறுவனம் சேர்த்து ஒரு படம் தயாரிக்கிறார்கள், இந்த படத்தை டி.கே. இயக்குகிறாராம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/626f2bbd-4dd9-4258-817c-53e37994d19a/26-6a964d3318880.webp' /></p>]]></content>
            <updated>2026-09-01T04:00:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் திடீரென உயிரிழந்த பிரபல அழகுக்கலை பயிற்றுவிப்பாளர்! பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/investigate-the-death-of-model-chula-padmendra-1788227420"></link>
            <id>https://tamilwin.com/article/investigate-the-death-of-model-chula-padmendra-1788227420</id>
            <summary type="text">பிரபல அழகுக் கலை பயிற்றுவிப்பாளர் சூலாபத்மேந்திர குமாரபத்திரன பிலியந்தல பகுதியில் உள்ள தொழிலதிபருக்கு சொந்தமான வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் உய...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல அழகுக் கலை பயிற்றுவிப்பாளர் சூலாபத்மேந்திர குமாரபத்திரன பிலியந்தல பகுதியில் உள்ள தொழிலதிபருக்கு சொந்தமான வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>பத்தரமுல்லையில் உள்ள ஒரு ஹோட்டலில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியின் பின்னர் நேற்று காலை (31) அவர் அந்த தொழிலதிபருடன் வீட்டிற்கு வந்ததாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><h2>பொலிஸில் முறைப்பாடு </h2><p>

இதன்போது நித்திரையிலிருந்த அவர் நீண்ட நேரம் பதிலளிக்காததால், 1990 அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f61e0197-b535-4ffd-9e85-06a24823918a/26-6a96389af145b.webp' />&nbsp;</p><p>
</p><p>இதனை்போது சம்பவ இடத்திற்கு வந்த சுகாதார பணியாளர்கள் அவரைப் பரிசோதித்து அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிசெய்துள்ளனர்.</p><p>இதனையடுத்து தொழிலதிபர் பிலியந்தல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>
</p><p>
எனினும், அவரது இறப்புக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், பிரேதப் பரிசோதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.</p><p>46 வயதான இவர் அண்மைய கால அழகிப் போட்டி நிகழ்வுகளிலும் கலந்துகொண்டிருந்தார்.&nbsp;</p><p> ஆடைவடிவமைப்புத் துறையிலும் அழகிப்போட்டிகளுக்கான பயிற்சிகளை வழங்குவதிலும் சிறந்த வல்லுநராக அவர் அடையாளப்படுத்தப்பட்டிருந்தமை&nbsp;குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;&nbsp;</p><p> &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T04:00:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கை விலங்குடன் தப்பி ஓடிய கைதி - காவல்துறையினர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prisoner-escapes-from-jaffna-hospital-1788232367"></link>
            <id>https://ibctamil.com/article/prisoner-escapes-from-jaffna-hospital-1788232367</id>
            <summary type="text">யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற
கைதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற
கைதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>யாழ்ப்பாணம் இளவாலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த 2021 ஆம் ஆண்டு தவறான முறைக்கு உட்படுத்திய குற்றத்திற்காக குறித்த நபருக்கு 24 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.</p><p></p><h2>கை விலங்குடன் தப்பி ஓட்டம்</h2><p>திடீர் சுகவீனம் என கூறி கைதி சிறை காவலர்களின் கண்காணிப்பின் கீழ் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
சிகிச்சை பெற்று வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b314491-8d47-4c8b-8b46-94b56e3c6959/26-6a9644bac1ae6.webp' /></p><p>இந்நிலையில், 30.08.2026 அன்று 3.00 மணி அளவில் வைத்தியசாலையில் இருந்து கை
விலங்குடன் தப்பிச் சென்றுள்ளார்.</p><p>இவ்வாறு தப்பிச் சென்றவர் இளவாலை பகுதியில் ஒழிந்திருப்பதாக இளவாலை காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அவர் நேற்றையதினம்
காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.</p><p>
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (01.09.2026) மல்லாகம் நீதவான்
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T03:53:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தம் தொடர்பான மனுக்கள் இன்று பரிசீலனைக்கு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/petitions-22nd-amendment-to-be-considered-today-1788233562"></link>
            <id>https://ibctamil.com/article/petitions-22nd-amendment-to-be-considered-today-1788233562</id>
            <summary type="text">இலங்கையின் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் இன்று (01) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>இலங்கையின் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் இன்று (01) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
</p><p>
 

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இன்று காலை 10 மணி முதல் இந்த மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
 

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் கடந்த 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, அதற்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்வதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்தது.</p><p></p><h2>40க்கும் மேற்பட்ட மனுக்கள்&nbsp;</h2><p>
</p><p>
 

நேற்று (31) வரை அதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்த நிலையில், 40க்கும் மேற்பட்ட ஆதரவு மற்றும் எதிர்ப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5a2d099-88bf-458a-8d93-1580a4af1406/26-6a964b3cd15ba.webp' /></p><p> </p><p>இந்தச் சட்டமூலத்தின் மூலம் நீதிமன்றத்தின் சுயாதீனத்திற்கும் சட்டத்தின் ஆட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டியும், அரசியலமைப்பு துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகத் தெரிவித்தும், இச்சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என்பதால் இதனை நிறைவேற்றுவதற்கு மக்கள் தீர்ப்பிற்கு (சர்வஜன வாக்கெடுப்பு) உத்தரவிடுமாறு கோரியும் குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.</p><p>

 

அதற்கமைய, குறித்த மனுக்களைப் பரிசீலிப்பதற்காகப் பிரதம நீதியரசரால் 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் பிரதம நீதியரசருக்கு மேலதிகமாக அசேல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய நீதியரசர்கள் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T03:52:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் ; வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்ட 15ஆம் திருவிழா சிறப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/15th-festival-of-nallur-kandaswamy-temple-1788234553"></link>
            <id>https://jvpnews.com/article/15th-festival-of-nallur-kandaswamy-temple-1788234553</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் (திங்கட்கிழமை) 15ஆம் திருவிழா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் (திங்கட்கிழமை) 15ஆம் திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.</p><p>
</p><p></p><p>இதன்போது, வள்ளி தெய்வானை சமேத வேல் பெருமான் கிடாய் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி வழங்கினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef40e70d-a6f6-46d4-9dab-3eb2e789e65e/26-6a964b3a47f02.webp' /></p><p>அதனைத் தொடர்ந்து, சுவாமி வெளிவீதியுலா இடம்பெற்றதுடன், பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து அருளாசி பெற்றனர்.
</p><p>
வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தைச் சூழவுள்ள பகுதிகளில் பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef40e70d-a6f6-46d4-9dab-3eb2e789e65e/26-6a964b3a47f02.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18a9b259-ec9c-43b5-8d2c-bd098cce0716/26-6a964b3aef752.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a99a5910-ca0e-4fc4-9ad6-96fce4ceb24a/26-6a964b3bb4df3.webp' /></p>]]></content>
            <updated>2026-09-01T03:49:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பெரும் துயரம் - நண்பனை காப்பாற்ற சென்று காணாமல் போன இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3-boys-missing-in-water-1788233081"></link>
            <id>https://tamilwin.com/article/3-boys-missing-in-water-1788233081</id>
            <summary type="text">ஹொரணை, நாரகல பாலம் அருகில் களு கங்கையில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் காணாமல் போயுள்ள நிலையில் இருவர் காப்பற்றப்பட்டுள்ளனர்.

காணாமல் போன மூவரில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹொரணை, நாரகல பாலம் அருகில் களு கங்கையில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் காணாமல் போயுள்ள நிலையில் இருவர் காப்பற்றப்பட்டுள்ளனர்.</p><p>

காணாமல் போன மூவரில் ஒரு இளைஞரை தேடும் பணி தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>நண்பர்கள் மூவரில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>

இவ்வாறு காணாமல் போனவர் 19 வயதுடைய, யால பிரதேசத்தைச் சேர்ந்த சிரான் சஸ்மித என்ற இளைஞர் என தெரியவந்துள்ளது.</p><h2><b>

காணாமல் போன இளைஞர் </b></h2><p>நேற்று மாலை 7.30 மணியளவில் நீராடுவதற்காக குறித்த இடத்திற்கு வருகை தந்த 3 இளைஞர்களில் ஒருவர் நீரில் குதித்து நீந்த முயன்ற போது நீரோடு அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/753d214a-afc8-423c-9251-fcd9c2d3a1c1/26-6a96496863cb3.webp' /></p><p>இதன் போது ஏனைய 2 இளைஞர்கள் அவரை மீட்க நீரில் குதித்துள்ளனர்.

காப்பாற்ற முயன்ற இளைஞர்களும் நீரில் சிக்கிக்கொண்டதுடன், அவர்கள் கடும் சிரமத்தின் மத்தியில் பின்னர் கரையேறியுள்ளனர்.
</p><p>
இதனையடுத்து இது குறித்து ஹொரணை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>
களு கங்கையின் நீரோட்டம் பலமான பகுதியில், இன்று காலை பொலிஸ் கடற்படைப் பிரிவின் மீட்புக் குழுவினரை ஈடுபடுத்தி காணாமல் போன இளைஞரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p>

அத்துடன், அப்பகுதியில் முதலைகளின் நடமாட்டம் காணப்படுவதால் ஆற்றங்கரையில் தீ மூட்டுவதற்கும் பிரதேசவாசிகளும் நண்பர்களும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-01T03:41:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாக்ஸ் ஆபிஸ்: 6 நாட்களில் டாக்சிக் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. முழு விவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/toxic-movie-6-days-worldwide-box-office-1788234056"></link>
            <id>https://cineulagam.com/article/toxic-movie-6-days-worldwide-box-office-1788234056</id>
            <summary type="text">கே.ஜி.எப் 2 வெற்றியை தொடர்ந்து யஷ் நடிப்பில் வெளிவந்த டாக்சிக் திரைப்படத்தின் 6 நாட்கள் வசூல் எவ்வளவு என்று இந்த பதிவில் பார்க்கலாம்.டாக்சிக்

கே.ஜி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கே.ஜி.எப் 2 வெற்றியை தொடர்ந்து யஷ் நடிப்பில் வெளிவந்த டாக்சிக் திரைப்படத்தின் 6 நாட்கள் வசூல் எவ்வளவு என்று இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>டாக்சிக்</h2><p>

கே.ஜி.எப் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகர் <a href="https://www.youtube.com/watch?v=8k-Kqg5UUq8" target="_blank">யஷ்</a>. இதை தொடர்ந்து கே.ஜி.எப் 2 மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், அவர் பான்-இந்தியன் ஸ்டாராக உயர்ந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1f88c44-fe47-4998-8c96-8a36efef21fc/26-6a96494c7d8d6.webp' /></p><p> </p><p>

இவ்வளவு பெரிய வெற்றிக்கு பின் இவர் யாருடைய இயக்கத்தில் அடுத்த படம் நடிக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இயக்குநர் கீது மோகன்தாஸின் இயக்கத்தில் டாக்சிக் படத்தில் நடிக்கிறார் எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. நடிப்பை தாண்டி இயக்குநர் கீதுடன் இணைந்து இப்படத்திற்கு திரைக்கதையையும் யஷ் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/099db9aa-d1a1-419c-b198-f4c96929b870/26-6a96494d36a66.webp' /></p><p>

இப்படத்தில் யஷ் உடன் இணைந்து நயன்தாரா, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், கியாரா அத்வானி, தாரா சுதாரியா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த டாக்சிக் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வசூலையும் இப்படத்தால் எட்ட முடியவில்லை.
</p><h2>
வசூல் விவரம்
</h2><p>
கடந்த வாரம் புதன்கிழமை அன்று வெளிவந்த டாக்சிக் திரைப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இது இப்படத்திற்கு கிடைத்த மாபெரும் ஓப்பனிங் நாள் வசூல் என கூறினாலும், அடுத்தடுத்த நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் தடுமாறி கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f07d277-2a58-4226-959e-3497f1267088/26-6a96494bb9d27.webp' /></p><p>
</p><p>
டாக்சிக் திரைப்படம் வெளியாகி 6 நாட்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 6 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 290 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் பாக்ஸ் ஆபிஸில் டாக்சிக் டிசாஸ்டர் ஆகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-01T03:41:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[22வது திருத்தம் தொடர்பில் சாதனை அளவாக உயர் நீதிமன்றத்தில் 67 மனுக்கள் தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/record-67-petitions-filed-high-court-22-amendment-1788233917"></link>
            <id>https://jvpnews.com/article/record-67-petitions-filed-high-court-22-amendment-1788233917</id>
            <summary type="text">அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சாதனை அளவாக 67 விசேட தீர்மான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இலங்கையின் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சாதனை அளவாக 67 விசேட தீர்மான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><p>
</p><p></p><p>இலங்கையின் வரலாற்றில் ஒரு அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு இவ்வளவு அதிக எண்ணிக்கையான மனுக்கள் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b98cbf32-2b54-4ad3-9f73-b6474669fc92/26-6a9648bf46b9f.webp' /></p><p>இந்த மனுக்கள் மீதான பரிசீலனைகள் இன்று (1) முற்பகல் 10 மணிக்கு உயர் நீதிமன்றத்தின் ஐவர் கொண்ட நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் ஆரம்பமாகவுள்ளது.</p><p>

இந்தச் சட்டமூலம் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அரசியலமைப்புக்கு முரணானதா என்பதையும் அவ்வாறாயின் நாடாளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் சேர்த்து மக்களிடம் பொது வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் பெற வேண்டுமா என்பதையும் இந்த உயர்நீதிமன்ற அமர்வு ஆராய்ந்து அறிவிக்கும்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T03:38:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் இருந்து இன்னொரு துயரமான செய்தி வெளிவரலாம்... சுரங்கத்தில் சிக்கிய 900 பேர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-search-hydropower-workers-1788233441"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-search-hydropower-workers-1788233441</id>
            <summary type="text">Nepal rescuers in search of hydropower workers: நேபாளத்தில் நீர்மின் தொழிலாளர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்.
நேபா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal rescuers in search of hydropower workers: நேபாளத்தில் நீர்மின் தொழிலாளர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்.</p><p>
நேபாளத்தின் திரிசூலி ஆற்றின் ஓரத்தில் உள்ள, சேறு மூடியுள்ள சுரங்கத்தில் சிக்கியிருப்பதாகக் கருதப்படும் கிட்டத்தட்ட 900 தொழிலாளர்களின் குடும்பத்தினர், தங்கள் அன்புக்குரியவர்கள் உயிருடன் மீட்கப்படலாம் என்ற நம்பிக்கையைக் கைவிடாமல் உள்ளனர்.</p><h2>ஏழில் ஒருவர்</h2><p>
</p><p>சுரங்கத்தில் சிக்கியிருப்பவர்களைச் 
 சென்றடைவதற்கான முக்கியமான வாய்ப்பு முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது என்ற அச்சத்தில், மீட்புக் குழுவினர் திங்கட்கிழமையன்றும் கடுமையாக போராடினர்;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cdd56af-3794-40e7-aedc-b0321509dd71/26-6a9646e3a987c.webp' /></p><p> </p><p>மலைச்சரிவை வெடிவைத்துத் தகர்த்த அவர்கள், பின்னர் திரிசூலி-3A பகுதிக்குள் காற்று நுழையும் வழி செய்தனர். நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 939-ஐ எட்டியுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ள நிலையிலேயே, நீர்மின் தொழிலாளர்கள் 900 பேர்கள் தொடர்பில் கவலை அதிகரித்துள்ளது.
</p><p>மேலும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 3,925 ஆக அந்த முகமை திருத்தியுள்ளது, அவர்களில் 592 பேர் வெளிநாட்டினர் என்றும் குறிப்பிட்டுள்ளது.</p><p> காணாமல் போனவர்களில் ஏறக்குறைய ஏழில் ஒருவர் நீர்மின் நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் என நம்பப்படுகிறது. அவ்விடங்களிலிருந்து 279 பேர் மீட்கப்பட்டுள்ளதாக நேபாளப் பிரதமர் பலேந்திர ஷா திங்களன்று தெரிவித்தார்.</p><p></p><p> </p><p>சீன மற்றும் நேபாள இராணுவத்தினரைக் கொண்ட ஒரு சர்வதேசக் குழு இந்த மீட்பு நடவடிக்கையை முன்னின்று நடத்துகிறது, அதேவேளையில் இந்தியா, கொரியா மற்றும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நிபுணர்களும் இதில் ஈடுபட்டுள்ளனர். </p><p>நேபாளம் நீர்மின்சக்தியை பெருமளவில் சார்ந்துள்ளதுடன், தனது மலைப்பாங்கான ஆற்றுப் படுகைகளில் இத்திட்டங்களை மேம்படுத்துவதற்காக பல ஆண்டுகளாக செலவிட்டுள்ளது. கட்டி முடிக்கப்பட்ட அல்லது கட்டுமானத்தில் இருந்த குறைந்தது 11 திட்டங்கள் வெள்ளத்தில் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b88c4db-4839-4481-9cbf-c75a0b709ec4/26-6a9646e45bd2a.webp' /></p><p> </p><p>இதனிடையே, மீட்புக் குழுவினர் வார இறுதியில் சுரங்கத்திற்குள் காற்று நுழையும் வகை செய்தனர், ஆனால் அது முன்னதாகவே செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று உள்ளே சிக்கியவர்களின் குடும்பத்தினர் கூறுகின்றனர். </p><p>திங்கள்கிழமை பகல், ஒரு நீர்மின் நிலையத்திற்குச் செல்லும் சுரங்கப்பாதைக்குள் ஒரு குழுவால் நுழைய முடிந்தது, ஆனால் அங்கு யாரும் இல்லாததைக் கண்டதும் அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.</p><h2>நான்கு உடல்கள்</h2><p> </p><p>இந்த நிலையில், நிலத்தடி தேடுதல் பணிகளில் நேபாள அதிகாரிகளுக்குத் தொலைதூரத்திலிருந்து உதவி வரும் அவுஸ்திரேலியப் பொறியாளர் அர்னால்ட் டிக்ஸ், சுரங்கப்பாதைகளைக் கண்டறிவதில் மீட்புக் குழுவினர் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகக் கூறினார். </p><p>சேறு மூடியுள்ளதால், மீட்புக் குழுவினரால் சுரங்கப்பாதைகளை அடையாளம் காண முடியாமல் உள்ளது என்றும், 
அவை எங்கு அமைந்துள்ளன என்பதை அறிந்த பிறகு, அவற்றைச் சென்றடைவதற்கான சிறந்த வழியை மீட்புக் குழுவினரால் தீர்மானிக்க முடியும் என்றும்; பொதுவாக இதற்காக நிலத்தைத் தோண்டுவதும் பாறைகளை வெடிவைத்துத் தகர்ப்பதும் அவசியமாகிறது என்றார். </p><p>மட்டுமின்றி, மேலே கொட்டிய பெருமழையிலிருந்து நிலத்தடிச் சூழல் ஒருவிதப் பாதுகாப்பை அளித்திருக்கக்கூடும் என்பதால், நிலத்தடியில் சிக்கியுள்ளவர்கள் குறித்து தனக்கு இன்னும் நம்பிக்கை இருப்பதாக அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13488f67-8c04-4e39-af55-565fe50abd07/26-6a9646e513c6b.webp' /></p><p> </p><p>ஆனால், சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 7 நாட்களாகியுள்ளதால், சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களின் நிலை தொடர்பில் கவலை அதிகரித்துள்ளது. மேலும், ஒரு சுரங்கத்தில் சிக்கியிருப்பவர்களுக்கு ஆக்ஸிஜன் வசதி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் எஞ்சிய பலரது நிலை மோசமாக இருக்கவும் வாய்ப்புள்ளது என நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். </p><p>இதனிடையே, மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், சேறு நிரம்பிய மூன்று சுரங்கப் பாதைகளிலிருந்து நான்கு உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாள ராணுவம் தெரிவித்தது. </p><p>கடந்த புதன்கிழமை பேரழிவு ஏற்பட்டபோது, ​​சில தொழிலாளர்களால் உதவிக்கு அழைப்பு விடுக்க முடிந்தது. மேலும், தப்பிய மற்றவர்கள், தங்கள் சக ஊழியர்களில் பலர் இன்னும் சுரங்கங்களில் சிக்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T03:29:10+00:00</updated>
        </entry>
    </feed>
