<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-17T21:21:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/observance-of-thileepan-s-39th-commemoration-event-1789677769"></link>
            <id>https://tamilwin.com/article/observance-of-thileepan-s-39th-commemoration-event-1789677769</id>
            <summary type="text">திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

நேற்று (17.09.2026) சிவன் கோயில் மூன்றலில் மாலை 5 மணியளவில் இந்த ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
</p><p>
நேற்று (17.09.2026) சிவன் கோயில் மூன்றலில் மாலை 5 மணியளவில் இந்த நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் அகரம் மக்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.</p><p>

இதன்போது, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன், பொதுச்சுடரும் ஏற்றிவைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab888768-e940-4a39-b3b1-176c7c4738bf/26-6aac511bd621b.webp' /></p><p>

இதனைத் தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
</p><p>
தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் நினைவஞ்சலி நிகழ்வுகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8adf4255-8f6e-4bd7-8b9a-450f354ac7bf/26-6aac511ccff37.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a13cf49f-63c3-4670-a6cc-ff24f6b04eb1/26-6aac511da6205.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T20:44:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு பில்லியன் டொலர் பணமோசடி வழக்கில் வங்கி அதிகாரிகளுக்குப் பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bank-officials-granted-bail-in-1-billion-money-1789677213"></link>
            <id>https://tamilwin.com/article/bank-officials-granted-bail-in-1-billion-money-1789677213</id>
            <summary type="text">பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, ஒரு பில்லியன் டொலருக்கும் அதிகமான சட்டவிரோதப் பணமோசடிக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, ஒரு பில்லியன் டொலருக்கும் அதிகமான சட்டவிரோதப் பணமோசடிக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு தனியார் வங்கி அதிகாரிகளைப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்த வழக்கு நேற்று(17.09.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><p>

அதன்படி, ஒவ்வொரு சந்தேக நபரும் 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 1 மில்லியன் ரூபா மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><h2>
பிணை உத்தரவு</h2><p>
அதேவேளை, பிணையாளிகள் நெருங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும் என்றும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் தாங்கள் பணிபுரிந்த வங்கி கிளை மற்றும் அதன் தலைமை அலுவலகத்திற்குள் நுழைவதைத் தடுக்கும் மற்றொரு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/433deeb0-c58d-4543-8fb2-2631e9d2f17e/26-6aac4f2b3e79e.webp' /></p><p>
</p><p>
மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் காவலில் வைக்கப்பட்டுள்ள தொழிலதிபர் முகமது ஜிஃப்ரியின் பிணைமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சமர்ப்பிக்கப்பட்ட வாதங்களைக் கருத்தில் கொண்ட நீதவான் இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரான தொழிலதிபரும் மற்றொரு சந்தேக நபரும் 1ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T20:36:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னாப்பிரிக்காவில் தொடரும் கொடூரம் ; நிர்வாண நிலையில் அடுத்தடுத்து 9 பெண்களின் சடலங்கள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bodies-of-9-women-recovered-in-a-naked-state-1789677130"></link>
            <id>https://canadamirror.com/article/bodies-of-9-women-recovered-in-a-naked-state-1789677130</id>
            <summary type="text">தென்னாப்பிரிக்காவின் வணிகத் தலைநகரான ஜோஹன்னஸ்பர்க் புறநகர்ப் பகுதியில், கடந்த இரண்டு மாதங்களில் எட்டு பெண்களின் உடலங்கள் மீட்கப்பட்டமையை தொடர்ந்து, கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னாப்பிரிக்காவின் வணிகத் தலைநகரான ஜோஹன்னஸ்பர்க் புறநகர்ப் பகுதியில், கடந்த இரண்டு மாதங்களில் எட்டு பெண்களின் உடலங்கள் மீட்கப்பட்டமையை தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட மேலும் ஒரு பெண்ணின் உடலத்தை காவல்துறை மீட்டுள்ளது.</p><p>

நேற்று (17) எகூர்ஹுலேனி (Ekurhuleni) நகராட்சிக்குட்பட்ட கெம்ப்டன் பார்க் (Kempton Park) பகுதியில் ஒன்பதாவது பெண்ணின் உடலம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையால் அந்தப்பகுதி முடக்கப்பட்டுள்ளது (lockdown).</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5b621b8-9541-44ca-b96c-0d7c1abdd0d1/26-6aac4e4c6d983.webp' /></p><p>குறித்தப் பகுதியில் இதுபோன்ற நிர்வாணக் கோலத்திலான மூன்று உடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்தத் தொடர் கொலைகள், இவை ஒரு தொடர் கொலையாளியால் (serial killer) நடத்தப்பட்டிருக்கலாமோ என்ற பொதுமக்களின் பீதியை அதிகரித்துள்ளன.
</p><p>
முதல் எட்டு படுகொலைகளில் சில ஒற்றுமைகள் "மிகவும் கவலை அளிக்கும் வகையில்" இருப்பதாக காவல்துறை முன்னதாக எச்சரித்திருந்தது.
</p><p>
இந்தநிலையில், "பல சந்தேக நபர்கள் அல்லது தனித்தனி குற்றவாளிகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட அனைத்து கோணங்களிலும் விசாரணையாளர்கள் விசாரித்து வருகின்றனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
இதுவரை கண்டெடுக்கப்பட்ட உடலங்கள் அனைத்தும் 20 மற்றும் 30 வயதுக்குட்பட்ட பெண்களுடையவை ஆகும்.

அனைத்து உடல்களும் நிர்வாணமாகவோ அல்லது அரைநிர்வாணமாகவோ கண்டெடுக்கப்பட்டுள்ளன. </p><p>சில உடல்களில் ஒரே மாதிரியான காயங்களும் காணப்படுகின்றன.

முதல் உடல் கடந்த ஜூலை 17 அன்று நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e88cc9cd-e29b-4c22-b088-6b720bdc861f/26-6aac4e4d2416a.webp' /></p><p>தென்னாப்பிரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உச்சத்தில் உள்ளதை இந்தக் கொலைகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.</p><p>

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, உலகில் அதிக பெண் படுகொலை (femicide) விகிதங்களைக் கொண்ட நாடுகளில் தென்னாப்பிரிக்காவும் ஒன்றாக கருதப்படுகிறது.

இதன்படி 2026, ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் தென்னாப்பிரிக்க காவல்துறை 9,782 வன்புணர்வு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
</p><p>
கடந்த ஆண்டு நவம்பரில், பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் பெண்படுகொலைகளை தென்னாப்பிரிக்காவின் தேசிய பேரிடர் முகாமைத்துவ மையம் தேசிய பேரிடராக அறிவித்தது.
</p><p>
இந்தநிலையில் தற்போதைய தொடர் கொலைக் குற்றவாளிகளைக் கைது செய்ய உதவும் தகவல்களுக்கு 400,000 தென்னாப்பிரிக்க ராண்ட் ($25,000) சன்மானம் வழங்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
</p><p>
அத்துடன் குறித்த பிரதேச பெண்கள் தனியாக வெளியே செல்ல வேண்டாம் என்றும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-17T20:32:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிஸ் நாட்டில் ஹெலிகாப்டர் விபத்து: 2 பிரித்தானியர்கள் உட்பட 3 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/helicopter-crash-in-switzerland-3-dead-1789676928"></link>
            <id>https://news.lankasri.com/article/helicopter-crash-in-switzerland-3-dead-1789676928</id>
            <summary type="text">Helicopter Crash in Switzerland 3 Dead: சுவிஸ் நாட்டில் ஏற்பட்ட விமான விபத்தில் 2 பிரித்தானியர்கள் உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர். சுவிஸ் நாட்டில் விமான...</summary>
            <content type="html"><![CDATA[<p>Helicopter Crash in Switzerland 3 Dead: சுவிஸ் நாட்டில் ஏற்பட்ட விமான விபத்தில் 2 பிரித்தானியர்கள் உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர்.</p><h2> சுவிஸ் நாட்டில் விமான விபத்து</h2><p>
சுவிட்சர்லாந்து நாட்டின் வலைஸ் மாகாணத்தின் தெற்கே லூக்கர்பாத் நகர் அருகே ரோனே வேலி பகுதியில் சிறிய ரக சிர்ரஸ் எஸ.22t என்ற விமானம் விபத்துக்குள்ளானது.</p><p> இந்த விமானம் சியான் விமான நிலையத்தில் இருந்து புறபட்டு 10வது நிமிடத்தில் விபத்தில் சிக்கியது</p><p> இந்த விபத்தானது திடீரென ஸ்விஸ் மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் மோதியதில் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfe1af95-4351-49f7-bc5d-29daf39fe70d/26-6aac4d8214c9d.webp' /></p><p></p><h2> துரதிர்ஷ்டவசமாக 3 பேர் பலி</h2><p>இந்த ஹெலிகாப்டர் விபத்தில் 2 பிரித்தானியர்கள் உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர்.</p><p>விபத்தை அடுத்து ஹெலிகாப்டரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணத்தை இன்னும் பொலிஸார் வெளியிடவில்லை.</p><p>ம்பவ பகுதியில் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.</p><p> விபத்து பற்றி விசாரணை நடந்து வருகிறது. உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியும் மறுபுறம் நடந்து வருகிறது. &nbsp;&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-17T20:29:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை தமிழ் இளைஞனுக்கு சவுதியில் மரணதண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/death-sentence-for-sri-lankan-tamil-youth-in-saudi-1789676110"></link>
            <id>https://ibctamil.com/article/death-sentence-for-sri-lankan-tamil-youth-in-saudi-1789676110</id>
            <summary type="text">சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன்அனோஜனுக்கு மரண்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் நபிகள் நாயகம் தொடர்பாக பிழையான...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன்அனோஜனுக்கு மரண்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சமூக வலைத்தளங்களில் நபிகள் நாயகம் தொடர்பாக பிழையானதொரு கருத்தைப் பதிவு செய்ததாகக் தெரிவித்தே இந்த மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
முதற்கட்டமாக ஐந்து வருட சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது</p><h2>மேன்முறையீட்டை அடுத்து வெளியான தீர்ப்பு</h2><p>இந்தத் தீர்ப்பை எதிர்த்து அனோஜன் தரப்பில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று(17.09.2026) அதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதன்போது, அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7389777b-780f-4f5d-8511-58bec5497c0c/26-6aac4d616d508.webp' /></p><p>
நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
அவருக்கான தண்டனையைக் குறைப்பதற்காக அரச தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சிகளுக்கு மத்தியில் இந்தத் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>


இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வெளியிடப்படுவதாகவும், அனோஜனுக்காக அடுத்தகட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டரீதியான மற்றும் பிற முயற்சிகளுக்கு அனைவரினதும் ஒத்துழைப்பும் ஆதரவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>&nbsp; மத அடிப்படையிலான இழிவான கருத்தை வெளியிடுவதை தவிர்க்க கோரிக்கை</h2><p>

அத்துடன், இந்த விவகாரம் தொடர்பில் இன, மத அடிப்படையிலான இழிவான அல்லது தூண்டுதலான கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6125043c-f598-471b-aa87-4492bd3ba57a/26-6aac4d6224d11.webp' /></p><p>
</p><p>
அனோஜனின் விடுதலைக்காக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்பதுடன், அவரது குடும்பத்தினருக்கு தேவையான ஆதரவையும் வழங்க வேண்டும் என்றும் இலங்கை மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T20:28:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து ஸ்வீடன் பிரதமர் பதவி விலகல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/swedish-prime-minister-resigns-election-defeat-1789676804"></link>
            <id>https://tamilwin.com/article/swedish-prime-minister-resigns-election-defeat-1789676804</id>
            <summary type="text">ஸ்வீடனில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியடைந்ததைத்
தொடர்ந்து, அந்த நாட்டின் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் தனது பதவி விலகலை அறிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்வீடனில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியடைந்ததைத்
தொடர்ந்து, அந்த நாட்டின் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.
</p><p>
தேர்தல் திணைக்களத்தினால் இறுதிக்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகள்
வெளியிடப்பட்டதனைத் தொடர்ந்தே அவர் இவ்வாறு தீர்மானத்தை எடுத்துள்ளார். </p><p>

மொத்தம் 349 இடங்களைக் கொண்ட ஸ்வீடன் நாடாளுமன்றத்திற்கான தேர்தலில்,
எதிர்க்கட்சியான மைய இடதுசாரி கூட்டணி 176 இடங்களைக் கைப்பற்றி
வெற்றியடைந்துள்ளது. </p><h2>தேர்தலின் பின்னர் பதவி விலகல்</h2><p>

பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் தலைமையிலான ஆளும் வலதுசாரி
கூட்டணி 173 இடங்களை மட்டுமே பெற்றுத் தோல்வியடைந்துள்ளது.

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும்
பொருட்டு, தமக்கு பிரதமர் பதவியிலிருந்து விலக அனுமதி அளிக்குமாறு நாடாளுமன்ற
சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாகக் கேட்டுக்கொண்டுள்ளதாக உல்ஃப் கிறிஸ்டர்சன்
தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1530999a-6eb5-4a83-aef9-730718c54579/26-6aac4d339b7cf.webp' /></p><p>
</p><p>
இந்தத் தேர்தல் முடிவுகளையடுத்து, நான்கு வருடங்களாக எதிர்க்கட்சியில் இருந்த
சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவியான மக்டலினா ஆண்டர்சன் மீண்டும் நாட்டின்
பிரதமராகப் பதவியேற்பதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.</p><p>

எனினும், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நிறைவடைய சிறிது
காலம் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T20:27:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[16 வருடங்களாக போராடும் தமிழர்களுக்கு தீர்வு வேண்டும்..! ஈரோஸ் கட்சியின் தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/criticism-by-the-eros-party-leader-1789676455"></link>
            <id>https://tamilwin.com/article/criticism-by-the-eros-party-leader-1789676455</id>
            <summary type="text">ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுடன் இணைந்து செயற்பட்டாரே அவ்வாற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுடன் இணைந்து செயற்பட்டாரே அவ்வாறு
தமிழ் மக்களின் அரசியல் ரீதியான செயற்பாட்டுக்காக புனர்வாழ்வு அழிக்கப்பட்ட
விடுதலைப் புலிகள் கட்சி தலைவர் க. இன்பராசா இணைந்து செயற்படவுள்ளதாக ஈரோஸ்
கட்சியின் தலைவர் இரா. பிரபாகரன் தெரிவித்துள்ளார். </p><p> 

மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியாவில் நேற்று(17.09.2026) தமிழீழ
விடுதலைப் புலிகள் கட்சி தலைவர் க. இன்பராசா ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா.
பிரபாகரன் இணைந்து நடத்திய ஊடக மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>


16 வருடங்களாக போராடும் மக்கள்</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

தேசிய தலைவர் பிரபாகரனால் ஒரு ஆயுத சக்தி மௌனிக்கப்பட வேண்டும், ஒரு அரசியல் சக்தியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனித்த பின்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் பேசும் மக்களின் மாபெரும் சக்தி என்ற எண்ணப்பாட்டில் தமிழ் மக்கள் மாத்திரமல்ல, சர்வதேச நாடுகளும் கூட அவதானித்துக் கொண்டிருந்தன.
</p><p>
இந்த நிலையில், அரசியல் தீர்வு தைப்பொங்கலுக்கு வரும், தீபாவளிக்கு வரும் என காலங்காலமாக தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டு, உச்சகட்ட விளிம்பில் இருந்து கொண்டிருக்கின்றனர்.
</p><p>
ஈரோஸ் பார்வையாளர்களாக இருந்தோம். ஏன் என்றால், தேசிய தலைவரால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு ஒரு தீர்வைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் இருந்தோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdecd7e6-16ea-49fb-82c5-3a71d91bbc21/26-6aac4bc00f319.webp' /></p><p>
</p><p>
இன்று 16 வருடங்கள் கடந்தும் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. மக்கள் வறுமையினால் பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இனி மக்களின் துன்பங்களையும் கஷ்டங்களையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. </p><p>அதன் காரணமாக, ஈரோஸ் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் களம் இறங்க வேண்டிய காலத்தின் கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளோம்.</p><p>

அதன் காரணமாக, புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் மற்றும் முன்னாள் போராளிகள், விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள், புனர்வாழ்வு அழிக்கப்பட்ட போராளிகள் என அனைவரையும் தொடர்புகொண்டு, இணைந்து செயற்படப் போவதாக தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T20:21:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய ஒன்றியமும் கனடாவும் இணைந்து செயற்படுவது மிக முக்கியமானது - மார்க் கார்னி தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/european-union-and-canada-to-work-together-1789672262"></link>
            <id>https://tamilwin.com/article/european-union-and-canada-to-work-together-1789672262</id>
            <summary type="text">ஐரோப்பிய ஒன்றியமும் (EU) கனடாவும் இணைந்து செயற்படுவதன் மூலமே இரு தரப்பினருக்கும் இடையிலான உறவு மேலும்
வலுவடையும் என கனடாப் பிரதமர் மார்க் கார்னி தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பிய ஒன்றியமும் (EU) கனடாவும் இணைந்து செயற்படுவதன் மூலமே இரு தரப்பினருக்கும் இடையிலான உறவு மேலும்
வலுவடையும் என கனடாப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
</p><p>
ஐரோப்பிய ஒன்றியத்தின் இணை உறுப்பினராக கனடாவை இணைத்துக் கொள்வது தொடர்பான
முன்மொழிவை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இரு தரப்பினருக்கும் இடையிலான
உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
</p><h2>ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து</h2><p>
பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பேர்க் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில்
உரையாற்றிய போதே கனடாப் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c8118a1-03ec-41ba-b2d5-e1585cf2a724/26-6aac42149d45f.webp' /></p><p>
"ஐரோப்பாவும் கனடாவும் தனித்தனியாகப் பலமானவை, ஆனால் இரண்டும் ஒன்றாக இணையும்
போது மேலும் பலமடைகின்றன" என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>எனினும், கனடாவை இணை உறுப்பினராகச் சேர்ப்பதற்கான ஐரோப்பிய ஆணைக்குழுவின்
தலைவர் உர்சுலா வொன் டேர் லேயனின் இந்த முன்மொழிவை அமெரிக்கக் ஜனாதிபதி
டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><h2>வர்த்தகங்களை நிறுத்த வேண்டி வரும்</h2><p>

இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கு எதிரான பகையான செயலாகக் கருதப்பட்டால்,
ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது மிகக் கடுமையான வரிகளை விதிக்க நேரிடும் அல்லது
சில வர்த்தகங்களை நிறுத்த வேண்டி வரும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9ab3f1c-4e3b-47f7-b561-c01c7a182c7e/26-6aac421552ff0.webp' /></p><p>

ட்ரம்ப்பின் இந்த அச்சுறுத்தல்களுக்குப் பதிலளித்துள்ள ஐரோப்பிய ஆணைக்குழு,
இந்த முன்மொழிவு எந்தவொரு நாட்டிற்கும் எதிரானது அல்ல என்றும், இரு
தரப்பினரின் பொதுவான பலத்தை அதிகரிக்கும் நோக்கிலேயே முன்வைக்கப்பட்டது
என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>

முக்கிய கனிமங்கள், பாதுகாப்புத் துறை, செயற்கை நுண்ணறிவு (AI), ஆற்றல்
பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சி போன்ற துறைகளில் ஐரோப்பிய
ஒன்றியத்துடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றக் கனடா எதிர்பார்ப்பதாகப்
பிரதமர் மார்க் கார்னி தனது உரையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T20:20:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நொர்த் யோர்க்கில் 17 வயது சிறுவன் சுட்டுக்கொலை: 16 வயது சிறுவன் மீது கொலைக் குற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/arrest-made-in-fatal-shooting-of-17-year-old-boy-1789664343"></link>
            <id>https://canadamirror.com/article/arrest-made-in-fatal-shooting-of-17-year-old-boy-1789664343</id>
            <summary type="text">கனடாவின் நொர்த் யோர்க் பகுதியில் 17 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 16 வயதுடைய சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு முதலாம் நிலை கொலைக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் நொர்த் யோர்க் பகுதியில் 17 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 16 வயதுடைய சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு முதலாம் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில் ஜேன் வீதி மற்றும் பின்ச் அவென்யூ வெஸ்ட் சந்திப்பிற்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு அருகே காஷி அகஸ்ட் என்ற சிறுவன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.</p><p> 
தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bea658c8-9058-45d2-9b6f-7438807eeed2/26-6aac1c58dcaf6.webp' /></p><p>
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவன் மீது முதலாம் நிலை கொலைக் குற்றம் மற்றும் நன்னடத்தை உத்தரவை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>
கனடாவின் இளையோர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் கீழ் சந்தேகநபரின் பெயர் மற்றும் அடையாளங்களை வெளியிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
</p><p>துப்பாக்கிச் சூட்டுக்கான பின்னணி அல்லது காரணம் குறித்து பொலிஸார் இதுவரை எவ்வித தகவலும் வெளியிடவில்லை.
</p><p>இறந்த காஷி அகஸ்டிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இந்த வாரத் தொடக்கத்தில் இடம்பெற்றதுடன், அவர் அனைவராலும் விரும்பப்பட்ட ஒரு நல்ல சிறுவன் என உறவினர்களும் நண்பர்களும் நினைவு கூர்ந்தனர்.
</p><p>இச்சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள் பொலிஸாரையோ அல்லது குற்றத் தடுப்புப் பிரிவையோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T20:20:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிங்கப்பூர் பயணம் ஷிரந்திக்கு பாவமா..! சாபமா - நாமலின் ரகசிய MAIL அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/is-the-trip-to-singapore-a-pity-for-shiranthi-1789675640"></link>
            <id>https://tamilwin.com/article/is-the-trip-to-singapore-a-pity-for-shiranthi-1789675640</id>
            <summary type="text">நெஞ்சுப் பகுதியில் ஏற்பட்டுள்ள மருத்துவ ரீதியிலான பிரச்சினை தொடர்பான பரிசோதனைக்காகவும், அறுவைச் சிகிச்சைக்காகவும் தனியார் வைத்தியசாலையொன்றின் பணிப்புர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெஞ்சுப் பகுதியில் ஏற்பட்டுள்ள மருத்துவ ரீதியிலான பிரச்சினை தொடர்பான பரிசோதனைக்காகவும், அறுவைச் சிகிச்சைக்காகவும் தனியார் வைத்தியசாலையொன்றின் பணிப்புரைக்கமைய ஷிரந்தி ராஜபக்ச சிங்கப்பூர் சென்ற நிலையில், வயதான காலத்தில் இவ்வளவு உடல்நலக் கோளாறுகளுடன் போராடுவதற்கு அவர் கடந்த காலங்களில் செய்த பாவங்கள்தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதுடன், பிரபாகரனின் தந்தை மற்றும் தாய் இருவரும் வயதான காலத்தில் இராணுவத்தினரால் சீரழிக்கப்பட்டனர். </p><p>

இவர்களின் பாவம்தான் மகிந்தவை எழுந்து நிற்க முடியாமலும், ஷிரந்தியை வயதான காலத்தில் சிங்கப்பூர் வரை கொண்டு சென்றுள்ளதோ என நினைக்க வைக்கின்றது.
</p><p>
வடக்கு - கிழக்கு மக்களின் வாழ்வாதாரங்கள், குடும்பங்கள், குழந்தைகள் என முற்றிலும் இராணுவத்தினரால் சூறையாடப்பட்டபோது, நாட்டின் முதல் பெண்மணியாகப் போற்றப்படும் ஷிரந்தி மௌனம் காத்தார். ஆனால், தற்போது சிறைக்குச் சென்றுவிடுவோமோ என்ற பயத்தில் ஓடி ஒளிய வேண்டிய நிலை வந்துவிட்டது.
</p><p>
எயார்பஸ் கொள்வனவு விவகாரத்தில் கைதான நாமல் ராஜபக்சவின் மின்னஞ்சல் மூலம் மற்றுமொரு நபர் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதுபோன்று, மனிதாபிமானமற்ற வகையில் நடந்துகொண்ட ராஜபக்சர்களின் நிலை குறித்து உங்கள் பார்வைக்குக் கொண்டு வருகின்றது “செய்திகளுக்கு அப்பால்” நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/3-h8lpvum3c" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T20:08:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பிற்கு பலத்த அடி : ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையவுள்ள கனடா..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/canada-to-join-the-european-union-1789672949"></link>
            <id>https://ibctamil.com/article/canada-to-join-the-european-union-1789672949</id>
            <summary type="text">கனடா வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்காவைச் சார்ந்திருந்த நிலையில் இருதரப்புக்கும் இடையேயான உறவுகளில் கடந்த சில காலமாக விரிசல் ஏற்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடா வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்காவைச் சார்ந்திருந்த நிலையில் இருதரப்புக்கும் இடையேயான உறவுகளில் கடந்த சில காலமாக விரிசல் ஏற்பட்டுள்ளது.
</p><p>
இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக இணைய கனடாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி வரவேற்பு தெரிவித்துள்ளார்.</p><h2>&nbsp;ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல்&nbsp;அழைப்பு</h2><p>&nbsp;ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக இணைவதற்கு கனடாவுக்கு நேற்று (செப். 17) அந்த அமைப்பின் தலைவர் உருசுலா வொன் டெர் லெயன் அழைப்பு விடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d54be23-a81f-4599-8854-569d50776b56/26-6aac48396dd81.webp' /></p><p>



</p><h2>மார்க் கார்னியின் பதில்</h2><p>இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு வரும் கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.அப்போது, முதல் இணை உறுப்பினராக இணையுமாறு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த அழைப்பை வரவேற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2b36139-b9b9-447c-8e0d-bd5e924065dd/26-6aac483a22ad2.webp' /></p><p>
</p><p>
இதுபற்றி, அவர் பேசுகையில்,

“ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா இணைந்து பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியலால் ஏற்படும் அழுத்தங்களால் இருதரப்புக்கும் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில், வர்த்தகம், செய்யறிவு, விண்வெளி ஆராய்ச்சி ஆகிய துறைகளில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T20:06:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 71 வாகனங்களை உடைத்து திருடிய நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/mississauga-man-charged-after-71-vehicle-break-1789662804"></link>
            <id>https://canadamirror.com/article/mississauga-man-charged-after-71-vehicle-break-1789662804</id>
            <summary type="text">கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள மிசிசாகா பகுதியில் 71 வாகனங்களை உடைத்து தனியாரின் உடமைகளைத் திருடிய குற்றச்சாட்டில் 34 வயதுடைய நபர் ஒருவரை பீல் பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள மிசிசாகா பகுதியில் 71 வாகனங்களை உடைத்து தனியாரின் உடமைகளைத் திருடிய குற்றச்சாட்டில் 34 வயதுடைய நபர் ஒருவரை பீல் பிராந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>
செப்டம்பர் 3 மற்றும் 6 ஆம் திகதிகளில் அதிகாலை வேளையில் குறிப்பிட்ட குடியிருப்புப் பகுதிகளில் இத்திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.</p><p> 
நிரந்தர முகவரியற்ற கோரி லவ்டன் என்ற நபரே கைது செய்யப்பட்டு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளார். 
வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்தோ அல்லது பூட்டப்படாத கதவுகள் வழியாகவோ உள்ளே நுழைந்து விலையுயர்ந்த பொருட்களைத் திருடியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4159e0e-e393-4e89-a0f5-7fde25ba0e6e/26-6aac1655d53f3.webp' /></p><p> இதன்போது வாகனங்கள் எதுவும் திருடப்படவில்லை என்பதுடன், சம்பவங்களின் போது வாகனங்களுக்குள் எவரும் இருக்கவில்லை. </p><p>
வேறு இரு நிதி மோசடி வழக்குகள் தொடர்பிலும் இவர் மீது பிடியாணை நிலுவையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> தற்போது பிணை விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் இவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். </p><p>
சமூக அமைதியைக் கெடுக்கும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இந்தக் கைது உறுதி செய்வதாக பொலிஸ் தலைமை அதிகாரி நிஷான் துரையப்பா தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T20:05:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுரத்தில் சாமி அம்மாவின் அருள்தேடி வந்த லிமினி ராஜபக்‌ஷ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/limini-rajapaksa-seeking-the-blessings-sami-amma-1789663008"></link>
            <id>https://jvpnews.com/article/limini-rajapaksa-seeking-the-blessings-sami-amma-1789663008</id>
            <summary type="text">அநுராதபுரத்தில் அருள்பாலித்து வரும் சாமி அம்மா (கிரி அம்மா) அவர்களை தரிசித்து, அவர்களிடம் அருள்தேடி, தங்களது எதிர்காலம் தொடர்பாக சாமி ஆடி அருள்வாக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரத்தில் அருள்பாலித்து வரும் சாமி அம்மா (கிரி அம்மா) அவர்களை தரிசித்து, அவர்களிடம் அருள்தேடி, தங்களது எதிர்காலம் தொடர்பாக சாமி ஆடி அருள்வாக்கு கேட்பதற்காக நாமல் ராஜபக்‌ஷவின் மனைவி லிமினி ராஜபக்‌ஷ அவர்கள் வருகை தந்திருந்தார்.</p><p>
</p><p></p><p>இந்நிகழ்வில் அன்னாரும் அவருடைய குடும்பத்தினரும் சாமி அம்மாவின் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/866e67e3-9f68-409f-8163-194705de30d3/26-6aac1721d472e.webp' /></p>]]></content>
            <updated>2026-09-17T20:04:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ; இலங்கைக்கு கனமழை எச்சரிக்கை ; நாகமுத்து பிரதீபராஜா தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/low-pressure-area-in-the-bay-of-bengal-heavy-rain-1789675460"></link>
            <id>https://jvpnews.com/article/low-pressure-area-in-the-bay-of-bengal-heavy-rain-1789675460</id>
            <summary type="text">மத்திய வங்காள விரிகுடாவில், அந்தமான் தீவுகளுக்கு வடக்காக புதிய தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளதாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா அவரது முகநூல் பக்கத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய வங்காள விரிகுடாவில், அந்தமான் தீவுகளுக்கு வடக்காக புதிய தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளதாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p></p><p>குறித்த தாழமுக்கம் வடக்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தாழமுக்கம் வலுப்பெற்று புயலாக மாறும் பட்சத்தில், பங்களாதேஷ் வழங்கியுள்ள ‘அர்னாப்’ (Arnap) என்ற பெயர் சூட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3>&nbsp;தாழமுக்கம்</h3><p> எனினும், சில சந்தர்ப்பங்களில் இது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடக்கக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1809b230-a8e5-4b5a-bd68-99dd0e2400ad/26-6aac47c674979.webp' /></p><p>இந்தத் தாழமுக்கம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள கஞ்சாம் மாவட்டத்தின் பிரம்மபூர் பகுதிக்கு அருகில் கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>இதனால் இலங்கைக்கு நேரடியான புயல் தாக்கம் ஏற்படாது எனக் கூறப்பட்டாலும், அதன் மறைமுக தாக்கமாக நாட்டின் பல பகுதிகளில் மழை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறிப்பாக, அரபிக்கடலில் இருந்து ஈரப்பதன் நிறைந்த காற்று இலங்கையின் மேற்குப் பகுதியூடாக வங்காள விரிகுடாவை நோக்கி ஈர்க்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும், இதன் காரணமாக செப்டெம்பர் 19 முதல் 23ஆம் திகதி வரை மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் எனவும் பேராசிரியர் பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
</p><p>
அதேவேளை, தற்போது வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் காணப்படும் வெப்பச்சலன மழை, எதிர்வரும் 19ஆம் திகதி முதல் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும், செப்டெம்பர் 20 முதல் 23ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படக்கூடும் என்பதால், கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்லும்போது வானிலை நிலைமைகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dfc74e4-1721-4cb0-af60-38efde4c1812/26-6aac47c729878.webp' /></p><p>இதனிடையே, எல் நினோ மற்றும் இந்து சமுத்திர இருமுனை (IOD) ஆகியவற்றின் தாக்கத்தால் வங்காள விரிகுடாவில் தாழமுக்கங்கள் உருவாகுவதற்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
வங்காள விரிகுடாவின் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்து வருவதால், எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை சுமார் 7 தாழமுக்க நிகழ்வுகள் உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் பேராசிரியர் பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அத்துடன், எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெருமழை மற்றும் வெள்ள அனர்த்தங்களுக்கான வாய்ப்புகள் இருப்பதை பல்வேறு வானிலை மாதிரிகள் சுட்டிக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதனால் பொதுமக்கள் எதிர்வரும் நாட்களில் வானிலை மாற்றங்கள் குறித்து தொடர்ந்து அவதானத்துடன் இருப்பதுடன், கடற்றொழிலாளர்கள் கடல் நிலைமை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T20:04:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடும் ரஷ்யா: போலந்து பிரதமர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/poland-prime-minister-warns-russia-s-striking-plan-1789662973"></link>
            <id>https://news.lankasri.com/article/poland-prime-minister-warns-russia-s-striking-plan-1789662973</id>
            <summary type="text">Poland Prime minister warns Russia’s Striking plan: உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக போலந்து பிரதம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Poland Prime minister warns Russia’s Striking plan: உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக போலந்து பிரதமர் எச்சரித்துள்ளார்.</p><h2> போலந்து பிரதமர் எச்சரிக்கை</h2><p>
உக்ரைனுக்கு ஆதரவு வழங்கும் நாடுகள் மீது ரஷ்யா ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்த&nbsp; திட்டமிட்டு வருவதாக போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க்(Donald Tusk) எச்சரித்துள்ளார்.</p><p> ரஷ்யாவின் இந்த சதி திட்டத்தில் போலந்தும் தாக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இந்த எச்சரிக்கையை வழங்கிய உளவு அமைப்புகளின் பெயர்களை வெளியிடாமல், தற்போது உக்ரைன்-ரஷ்யா போரானது எந்த திசையை நோக்கி செல்கிறது என்பதை போலந்து பிரதமர் வெளிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abc26986-5257-4e35-a973-f0916861ea71/26-6aac16ff26eb8.webp' /></p><p></p><p> நேட்டோ உறுப்பு நாடுகளின் எல்லைக்கு அருகே ரஷ்ய ராணுவத்தின் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில் போலந்து பிரதமர் இந்த எச்சரிக்கையை தெரிவித்துள்ளார்.</p><p> ரஷ்யாவின் இந்த அச்சுறுத்தல் போலந்து நாட்டுடன் நின்று விடவில்லை. சமீபத்தில் ஜேர்மனியின் லீப்ஜிக் விமான நிலையத்தில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.</p><p> இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு ரஷ்யா தான் காரணம் என்று ஜேர்மன் அதிகாரிகள் பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-17T19:58:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக் பாஸ் மேடையில் தொடங்கிய சர்ச்சை ; அரசியல் களத்தில் வெடித்த மோதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/clash-erupts-in-political-arena-bigg-boss-stage-1789674487"></link>
            <id>https://jvpnews.com/article/clash-erupts-in-political-arena-bigg-boss-stage-1789674487</id>
            <summary type="text">பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் நடிகரும் தொகுப்பாளருமான விஜய் சேதுபதி, தலைமைத்துவம் தொடர்பாக தெரிவித்த கருத்து தமிழக அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் நடிகரும் தொகுப்பாளருமான விஜய் சேதுபதி, தலைமைத்துவம் தொடர்பாக தெரிவித்த கருத்து தமிழக அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இயக்குநர் மோகன் ஜி, விஜய் சேதுபதியை கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் ஒருவரிடம் தலைமைத்துவம் குறித்து பேசிய விஜய் சேதுபதி, பிரச்சினைகள் வரும்போது களத்தை விட்டு விலகுவது ஒரு தலைவருக்கு அழகல்ல என்ற கருத்தை தெரிவித்திருந்தார்.</p><p> அவரது இந்தப் பேச்சு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மறைமுகமாக விமர்சிப்பதாக சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்து தெரிவித்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27afb211-a2bf-472e-9e26-1ac5d2aee6ab/26-6aac43f8ccc9b.webp' /></p><p>இதையடுத்து விஜய் சேதுபதிக்கு எதிராக தவெக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை முன்வைத்தனர். </p><p>இதற்கு விளக்கமளித்த விஜய் தொலைக்காட்சி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெறும் உரையாடல்கள் நிகழ்ச்சியின் கட்டமைப்பு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்குள் நடைபெறுபவை என்றும், அவற்றை நிகழ்ச்சிக்கு வெளியிலுள்ள தனிநபர், அமைப்பு அல்லது அரசியல் சூழலுடன் தொடர்புபடுத்த வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தது.
</p><p>
இந்த நிலையில், குறித்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் மோகன் ஜி, விஜய் சேதுபதி திமுகவைச் சேர்ந்தவர் என குற்றம்சாட்டியுள்ளார்.
</p><p>
ஒரு தனியார் நிகழ்ச்சியை பிரபலப்படுத்துவதற்காக அரசியல் தலைவர்களை பயன்படுத்துவது தவறானது என்றும், அரசியல் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பினால் சம்பந்தப்பட்ட நபரின் பெயரை நேரடியாகக் குறிப்பிட்டு பேச வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், கடந்த காலத்தில் அதிமுக ஆட்சியை விமர்சித்த விஜய் சேதுபதி, பின்னர் திமுக ஆட்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று அந்த ஆட்சியைப் பாராட்டிப் பேசியதாகவும் மோகன் ஜி குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தற்போது தவெக ஆட்சியை விமர்சிப்பதன் மூலம் விஜய் சேதுபதியின் அரசியல் நிலைப்பாடு குறித்து மக்கள் மத்தியில் தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.</p><p> இவை அனைத்தும் மோகன் ஜி முன்வைத்த அரசியல் குற்றச்சாட்டுகளாகும்.

இதனிடையே, விஜய் சேதுபதியின் பிக் பாஸ் பேச்சு தொடர்பான சர்ச்சை தொடர்ந்து அரசியல் விவாதமாக மாறியுள்ளது. </p><p>அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் அரசியல் மற்றும் திரைத்துறை சார்ந்த பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T19:48:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹெலியில் மறைந்த கதிர்காமத்தம்பியின் 26ஆவது நினைவு தினம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/26th-memorial-day-of-the-late-kathirkamathambi-1789673679"></link>
            <id>https://jvpnews.com/article/26th-memorial-day-of-the-late-kathirkamathambi-1789673679</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டத்தின் முன்னாள் அரசியல் செயற்பாட்டாளரும், தமிழ்த் தேசிய கொள்கைப் பற்றாளருமான கதிர்காமத்தம்பியின் 26ஆவது நினைவு தினம் இன்று (16) அனுஷ்டிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டத்தின் முன்னாள் அரசியல் செயற்பாட்டாளரும், தமிழ்த் தேசிய கொள்கைப் பற்றாளருமான கதிர்காமத்தம்பியின் 26ஆவது நினைவு தினம் இன்று (16) அனுஷ்டிக்கப்படுகிறது.</p><p>
</p><p></p><p>2000ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் திகதி இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அப்போதைய துறைமுக அபிவிருத்தி அமைச்சருமான எம்.எச்.எம். அஷ்ரப் உள்ளிட்டவர்களுடன் கதிர்காமத்தம்பியும் உயிரிழந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c674ae69-b3ca-432c-b02a-bf050d5a96a8/26-6aac40d149d50.webp' /></p><p>அம்பாறை மாவட்டம், சம்மாந்துறைப் பிரதேசத்தின் வீரமுனை மண்ணில் 1951ஆம் ஆண்டு ஒக்டோபர் 23ஆம் திகதி பிறந்த கதிர்காமத்தம்பி, தனது இளமைப் பருவத்திலேயே அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக அவரது நினைவு தொடர்பான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
1977ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாக இருந்த அ.அமிர்தலிங்கத்துடன் இணைந்து அரசியல் பணிகளில் ஈடுபட்ட அவர், பின்னர் கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் செயற்பாட்டாளராகவும் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது.
</p><p>
1977 பொதுத்தேர்தலுக்குப் பின்னர் எதிர்க்கட்சித் தலைவராகவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாகவும் இருந்த அ.அமிர்தலிங்கத்துடன் நெருக்கமாகப் பணியாற்றியதுடன், அக்காலகட்டத்தின் பல முக்கிய தமிழ்த் தேசிய அரசியல் தலைவர்களுடனும் அவர் தொடர்புகளைப் பேணி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அம்பாறை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும் கதிர்காமத்தம்பி முக்கிய பங்காற்றியதாக அவரது அரசியல் பயணம் தொடர்பான பதிவுகள் குறிப்பிடுகின்றன.
</p><p>
1981ஆம் ஆண்டு மாவட்ட சபைத் தேர்தலில் சம்மாந்துறை பிரதேசத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதிநிதியாகப் போட்டியிட்ட அவர், 1989 மற்றும் 1994ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற விகிதாசாரத் தேர்தல்களிலும் அம்பாறை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக போட்டியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அத்துடன், ஆயுர்வேத வைத்தியராகவும் பணியாற்றிய கதிர்காமத்தம்பி, இந்தியாவில் உள்ள ஆயுர்வேதக் கல்லூரியில் வைத்தியப் பட்டம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் மனிதநேய அடிப்படையில் சமூகப் பணிகளில் ஈடுபட்டதுடன், பலருக்கு சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் அவரை நினைவுகூரும் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T19:34:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் தீவில் HIV அதிகரிப்பு - வெளியான முக்கிய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rise-in-hiv-cases-on-island-popular-with-tourists-1789673329"></link>
            <id>https://tamilwin.com/article/rise-in-hiv-cases-on-island-popular-with-tourists-1789673329</id>
            <summary type="text">பிஜி தீவில் எச்.ஐ.வி (HIV) பாதிப்புகள் வேகமாக அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து,
அந்த நாடு தேசிய அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளதுடன் பரிசோதனை, சிகிச்சை
மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிஜி தீவில் எச்.ஐ.வி (HIV) பாதிப்புகள் வேகமாக அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து,
அந்த நாடு தேசிய அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளதுடன் பரிசோதனை, சிகிச்சை
மற்றும் தடுப்புச் சேவைகளை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

பசுபிக் பிராந்தியத்தில் உள்ள இந்த நாட்டில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 167
பெரியவர்களில் ஒருவருக்கு எச்.ஐ.வி இருந்த நிலையில், தற்போது 60 பேரில்
ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
</p><h2>
தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகள்</h2><p>
மேலும், எச்.ஐ.வி தொடர்பிலான சிக்கல்களால் உயிரிழக்கும் குழந்தைகளின்
எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>
பத்து இலட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட பிஜியில், 2025 ஆம்
ஆண்டில் மட்டும் 2,016 பேருக்குப் புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகப்
சுகாதாரத்துறை அமைச்சர் அந்தோனியோ லலாபலாவு தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49ef90bb-d2c5-4896-a4de-6b5984aa63b5/26-6aac40cda25a7.webp' /></p><p>
</p><p>
சாதாரண கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இனி போதுமானதாக இருக்காது என்றும் அவர்
எச்சரித்துள்ளார்.

போதைப்பொருள் பயன்பாடு, பாதுகாப்பற்ற உடலுறவு, ஒரே ஊசியைப் பகிர்ந்துகொள்ளுதல்
மற்றும் "ப்ளூடூத்திங்" எனப்படும் ஆபத்தான போதைப் பழக்கம் ஆகியவை இந்தத்
தொற்றுப் பரவலுக்கு முக்கியக் காரணங்களாக உள்ளதாக வல்லுநர்கள்
சுட்டிக்காட்டுகின்றனர்.
</p><h2>
தொற்று ஏற்படுவதற்கான காரணம் இதுவே..</h2><p>
போதைப்பொருளை ஊசி மூலம் செலுத்துபவர்கள், ஏற்கனவே போதையில் உள்ள ஒருவரின்
இரத்தத்தை உறிஞ்சித் தங்கள் உடலில் செலுத்திக் கொள்ளும் மிகவும் ஆபத்தான
பழக்கமே "ப்ளூடூத்திங்" அல்லது "ஹொட்ஸ்பொட்டிங்" எனக் குறிப்பிடப்படுகிறது.</p><p>

போதைப்பொருளின் செலவைக் குறைக்கவும், பிஜியில் பற்றாக்குறையாக உள்ள ஊசிகளைச்
சமாளிக்கவும் ஒரே ஊசியைப் பலரும் பகிர்ந்துகொள்ளும் இந்த முறை, வைரஸ் வேகமாகப்
பரவ முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c670b7ea-8c53-4d46-b060-1e66a5eb4b7c/26-6aac40ce6b4c3.webp' /></p><p>
</p><p>
இந்த நெருக்கடியைச் சமாளிக்க பிஜி அரசாங்கம் புதிய ஊசி மற்றும் சிரிஞ்ச்
வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

இதற்காக நாடாளுமன்றத்தில் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு, போதிய
இருப்பு உள்ள ஊசி மற்றும் சிரிஞ்சுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என
அமைச்சர் தெரிவித்துள்ளார்.
</p><h2>
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை</h2><p>
மேலும், எச்.ஐ.வி குறித்த பயம் அல்லது கூச்சம் காரணமாக மக்கள் ஒதுங்கி
நிற்காமல் தயக்கமின்றி முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும்,
சமூகப் புறக்கணிப்பே மக்களைச் சிகிச்சையிலிருந்து தூரமாக்குகிறது என்றும் அவர்
கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d64990f7-6660-49a9-b26f-7630fb997a5d/26-6aac40cf211ca.webp' /></p><p>
</p><p>
ஐக்கிய நாடுகளின் UNAIDS அமைப்பின் தரவுகளின்படி, 2025 இல் பிஜியில் எச்.ஐ.வி
உடன் வாழும் 9,100 பேரில், 39% பேருக்கு மட்டுமே தங்களுக்கு நோய் இருப்பது
தெரியும் என்றும், 22% பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர் என்றும்
தெரியவந்துள்ளது.</p><p>

உலகளவில் சராசரியாக 78% பேர் சிகிச்சை பெறும் நிலையில், பிஜியின் இந்த நிலைமை
மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.</p><p>

இந்தத் தீவிரமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்தி இயல்பு நிலைக்குக் கொண்டுவரக்
குறைந்தது ஐந்து ஆண்டுகள் வரை ஆகலாம் எனத் தேசிய எச்.ஐ.வி பணிக்குழுவின்
தலைவர் ஜேசன் மிட்செல் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T19:34:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஞானசார தேரரைக் கைது செய்யப்போவது யார்…!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/we-have-no-authority-to-arrest-gnanasara-prisons-1789670553"></link>
            <id>https://ibctamil.com/article/we-have-no-authority-to-arrest-gnanasara-prisons-1789670553</id>
            <summary type="text">&amp;nbsp;ஞானசார தேரரைக் கைது செய்ய சிறைத்துறைக்கு அதிகாரம் இல்லை என்றும், இவ்விஷயத்தை காவல்துறையே கையாள வேண்டும் என்றும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சேனக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஞானசார தேரரைக் கைது செய்ய சிறைத்துறைக்கு அதிகாரம் இல்லை என்றும், இவ்விஷயத்தை காவல்துறையே கையாள வேண்டும் என்றும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன தெரிவித்தார். </p><p>ஜனாதிபதி மன்னிப்பு ரத்து செய்யப்பட்டு, சிறைத் தண்டனை உறுதிசெய்யப்பட்ட ஞானசார தேரர் மீது எடுக்கப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கை குறித்துக் கேட்கப்பட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.</p><h2>கைது தொடர்பில் காவல்துறைக்கு அறிவிப்பு</h2><p>&nbsp; ஞானசார தேரரின் கைது தொடர்பாக காவல்துறைக்கு ஏதேனும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதா என்று கேட்கப்பட்டபோது, ​​அத்தகைய அறிவிப்பு எதுவும் செய்யப்படவில்லை என்று சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d102117-d34b-4f35-93cd-422293887b4d/26-6aac38869de13.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், முன்னதாக ஒரு விசாரணையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு காவல்துறை மா அதிபரால் அதிகாரபூர்வமாகப் பெறப்படும் வரை ஞானசார தேரர் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப். யு. வூட்லர் தெரிவித்திருந்தார்.</p><p></p><h2>கொழும்பு உயர் நீதிமன்றால் விடுதலை</h2><p>
</p><p>
இந்தச் சூழலில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியிருந்த ஞானசார தேரர், நேற்று (செப்டம்பர் 16) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff25daa4-fbaa-4483-abe8-9bc92a31b13b/26-6aac3885e7f27.webp' /></p><p>

 ஞானசார தேரர் மீது என்ன மாதிரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் தற்போது சமூகத்தின் கவனம் குவிந்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T19:32:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் - இலங்கையின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-low-pressure-area-formed-in-the-bay-of-bengal-1789671950"></link>
            <id>https://tamilwin.com/article/a-low-pressure-area-formed-in-the-bay-of-bengal-1789671950</id>
            <summary type="text">மத்திய வங்காள விரிகுடாவில், அந்தமான் தீவுகளுக்கு வடக்காக தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளதாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய வங்காள விரிகுடாவில், அந்தமான் தீவுகளுக்கு வடக்காக தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளதாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><p>

பதிவில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,</p><p> 

மத்திய வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு வடக்காக உருவாகியுள்ள தாழமுக்கம், வடக்கு - வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து புயலாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனினும், சில சந்தர்ப்பங்களில் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடக்கக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>
தாழமுக்கம் ஏற்படும் அபாயம்</h2><p>

இந்த தாழமுக்கம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள கஞ்சாம் மாவட்டத்தின் பிரம்மபூர் பகுதிக்கு அருகில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இது புயலாக மாறினால், பங்களாதேஷ் வழங்கியுள்ள அர்னாப் (Arnap) என்ற பெயர் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76b99c42-b900-43d4-a548-4b438e586550/26-6aac3b01ae1fd.webp' /></p><p>

இந்த புயலால் இலங்கையின் எந்தப் பகுதிக்கும் நேரடியான பாதிப்பு ஏற்படாது எனத் தெரிவித்துள்ள பேராசிரியர் பிரதீபராஜா, எனினும் இதன் காரணமாக அரபிக்கடலில் இருந்து ஈரப்பதன் மிக்க காற்று இலங்கையின் மேற்குப் பகுதியூடாக வங்காள விரிகுடாவை நோக்கி ஈர்க்கப்படும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>

இதன் காரணமாக எதிர்வரும் 19.09.2026 முதல் 23.09.2026 வரை இலங்கையின் மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><h2>
 19ஆம் திகதி முதல் நாட்டின் பல பகுதிகள் கனமழை</h2><p>
அதேவேளை, தற்போது வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் பதிவாகி வரும் வெப்பச்சலன மழை, எதிர்வரும் 19ஆம் திகதி முதல் நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவக்கூடும் எனவும், இந்த நிலை எதிர்வரும் 23ஆம் திகதி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d208dc64-3715-4298-ba68-cfdca6d324ce/26-6aac3b02beecd.webp' /></p><p>
</p><p>
உருவாகியுள்ள தாழமுக்கத்தின் காரணமாக எதிர்வரும் 20.09.2026 முதல் 23.09.2026 வரை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படக்கூடும் என்பதால், கடலுக்குச் செல்லும் கடற்றொழிலாளர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.</p><p>

மேலும், எல் நினோ மற்றும் இந்து சமுத்திர இருமுனை (IOD) ஆகியவற்றின் தாக்கம் காரணமாக வங்காள விரிகுடாவில் தாழமுக்கங்கள் உருவாகுவதற்கான சாதகமான நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f1cf889-29fc-4d46-aa0c-e93428d365e6/26-6aac3b038cd50.webp' /></p><p>

வங்காள விரிகுடாவின் கடல் மேற்பரப்பு வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருவதால், முன்னர் குறிப்பிடப்பட்டதைப் போன்று எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை சுமார் 7 தாழமுக்க நிகழ்வுகள் உருவாகுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அதன் ஆரம்பகட்டமாக தற்போது உருவாகியுள்ள தாழமுக்கத்தை கருதலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெருமழையுடன் கூடிய வெள்ள அனர்த்தங்களுக்கான வாய்ப்புகள் இருப்பதையே பல்வேறு வானிலை மாதிரிகள் வெளிப்படுத்துவதாகவும், எனவே பொதுமக்கள் இது தொடர்பில் விழிப்புடன் இருப்பது சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T19:10:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவத்தினருக்கு சஹ்ரான் குடும்பத்தை கைது செய்ய வாய்ப்பிருந்தும் தவறவிட்டது ஏன்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attacks-arrested-1789670877"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attacks-arrested-1789670877</id>
            <summary type="text">ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவும் இருந்தனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவும் இருந்தனர். எனினும், குற்றவாளிகளைத் தப்பிக்க வைத்ததாக அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
நல்லாட்சி அரசாங்கத்தின் போது முக்கிய பொறுப்பில் இருந்த சுரேஷ் சலே, யாருடைய பணிப்புரைக்கமைய இவ்வளவு குற்றங்களைச் செய்தார் என்ற சந்தேகம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற சில மணி நேரங்களில் சஹ்ரான் குடும்பத்தினர் அவரது வீட்டில் இருந்ததாகவும், குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நினைத்திருந்தால் அவர்களைக் கைது செய்திருக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஆனால், அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் அவர்களைத் தப்பிக்க வைப்பதற்காகவே பொறுமையாக இருந்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சஹ்ரானின் மனைவி சம்பவத்திற்குப் பின்னரும் உயிருடன் இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
வரும் 22ஆம் திகதி தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், 100 நாட்களைக் கடந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சலே இந்த விடயங்கள் தொடர்பில் வாய் திறப்பாரா என குற்றப்புலனாய்வு அதிகாரிகள் காத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இவ்வாறான கடந்தகால அரசாங்கங்களால் மூடி மறைக்கப்பட்டதாகக் கூறப்படும் பல விடயங்களை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகின்றது News Inside நிகழ்ச்சி.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/OaFyBHp3CoU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T18:48:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹூதி அமைப்பினரைக் கட்டுப்படுத்த ஈரானிடம் சீனா இரகசிய கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/china-makes-secret-request-iran-rein-in-houthis-1789667630"></link>
            <id>https://tamilwin.com/article/china-makes-secret-request-iran-rein-in-houthis-1789667630</id>
            <summary type="text">யேமன் நாட்டின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் இராணுவ நடவடிக்கைகள் அண்மைய நாட்களில்
தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, அவர்களைக் கட்டுப்படுத்த உதவுமாறு ஈரானிடம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யேமன் நாட்டின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் இராணுவ நடவடிக்கைகள் அண்மைய நாட்களில்
தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, அவர்களைக் கட்டுப்படுத்த உதவுமாறு ஈரானிடம்
சீனா இரகசியமாகக் கேட்டுக்கொண்டுள்ளதாக ஈரான் விவகாரங்களை அறிந்த மூன்று
உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

சவூதி அரேபியா விடுத்த அவசர வேண்டுகோளின் பேறாகவே சீனா இந்த நடவடிக்கையை
எடுத்துள்ளது.
</p><h2>கப்பல் போக்குவரத்து கடுமையான அச்சுறுத்தல்</h2><p>செங்கடல் கடலோரப் பகுதிகள் மற்றும் பாப் அல்-மந்தேப் நீரிணைப் பகுதிகளில் ஹூதி
அமைப்பினர் வேகமான முன்னேற்றங்களை அடைந்து வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/417ab670-67ba-42b5-b203-9ec06fd4cd97/26-6aac2f1a4bbcb.webp' /></p><p>இதன் காரணமாக சவூதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதி மற்றும் கப்பல் போக்குவரத்து
கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. </p><p>இந்த நிலையிலேயே சவூதி அரேபியா
சீனாவின் உதவியை நாடியுள்ளது.

சீனா பகிரங்கமாக அமைதி மற்றும் பேச்சுவார்த்தைக்கே அழைப்பு விடுத்து வரும்
போதிலும், ஈரானுக்கு அனுப்பிய தனியாத செய்தி மூலம் தனது அழுத்தத்தை
அதிகரித்துள்ளது.
</p><h2>செங்கடலிலும் தாக்குதல்கள் தொடர்ந்தால்&nbsp;</h2><p>
உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சீனா, தனது எரிபொருள்
தேவைகளுக்கு பெரிதும் நம்பியிருக்கும் கடல்சார் வர்த்தக வழிகளில் இந்த மோதல்
பரவுவதைத் தடுக்கவே ஈரானின் செல்வாக்கைப் பயன்படுத்த விரும்புகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a218614-536a-45d9-9068-7820023191a4/26-6aac2f1b6a485.webp' /></p><p>

சீனாவின் இந்த கோரிக்கைக்கு பதிலளித்துள்ள ஈரான், பிராந்தியத்தில் அமைதியும்
ஸ்திரத்தன்மையும் ஏற்பட வேண்டுமெனில் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர்
நிறுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
</p><p>
ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை சீனாவே
கொள்முதல் செய்து வரும் நிலையில், ஈரானை வலியுறுத்தக்கூடிய ஒரு சில நாடுகளில்
சீனாவும் ஒன்றாகும்.
</p><p>
அதேவேளை, ஹோர்முஸ் நீரிணை ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், செங்கடலிலும்
தாக்குதல்கள் தொடர்ந்தால் அது உலகளாவிய எரிபொருள் விநியோகத்தை கடுமையாகப்
பாதிக்கும் எனக் அஞ்சப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T18:45:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக வலைத்தளப் பதிவுக்காக கைது செய்யப்பட்ட இலங்கையர் அனோஜனுக்கு மரண தண்டனை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-anojan-arrested-over-social-media-post-1789667060"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-anojan-arrested-over-social-media-post-1789667060</id>
            <summary type="text">சமூக வலைத்தளங்களில் நபிகள் தொடர்பாக பிழையானதொரு கருத்தைப் பதிவு செய்ததாகக் கூறி சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட அனோஜனுக்கு முதற்கட்டமாக ஐந்து வருட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக வலைத்தளங்களில் நபிகள் தொடர்பாக பிழையானதொரு கருத்தைப் பதிவு செய்ததாகக் கூறி சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட அனோஜனுக்கு முதற்கட்டமாக ஐந்து வருட சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. </p><p> 

இந்தத் தீர்ப்பை எதிர்த்து அனோஜன் தரப்பில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று(17.09.2026) அதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. </p><p>

இதன்போது, அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><h2>

நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு</h2><p>
அவருக்கான தண்டனையைக் குறைப்பதற்காக அரச தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சிகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்தத் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/518a39ea-fb8d-49c9-9eca-1884c69c8058/26-6aac27c08d854.webp' /></p><p>
</p><p>
இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வெளியிடப்படுவதாகவும், அனோஜனுக்காக அடுத்தகட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டரீதியான மற்றும் பிற முயற்சிகளுக்கு அனைவரினதும் ஒத்துழைப்பும் ஆதரவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன், இந்த விவகாரம் தொடர்பில் இன, மத அடிப்படையிலான இழிவான அல்லது தூண்டுதலான கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
அனோஜனின் விடுதலைக்காக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்பதுடன், அவரது குடும்பத்தினருக்கு தேவையான ஆதரவையும் வழங்க வேண்டும் என்றும் இலங்கை மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.&nbsp; </p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T18:32:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவிற்கு ஏற்பட்டுள்ள நிலைமை : விரைவில் நாடு திரும்பவுள்ள ஷிராந்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shiranthi-to-return-to-the-country-soon-1789661275"></link>
            <id>https://ibctamil.com/article/shiranthi-to-return-to-the-country-soon-1789661275</id>
            <summary type="text">சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெறும். ஷிராந்தி ராஜபக்ச கூடிய விரைவில் நாடு திரும்ப விரும்புவதாக முன்னாள் ஜனாதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெறும். ஷிராந்தி ராஜபக்ச கூடிய விரைவில் நாடு திரும்ப விரும்புவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட வழக்கறிஞர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
</p><p>
“ மகிந்த ராஜபக்ச முதுமை அடைந்துள்ளார். ஒரு மனைவியாக, அவர் மகிந்த ராஜபக்சவைக் கவனித்துக்கொள்ள விரும்புகிறார். எனவே, கூடிய விரைவில் நாடு திரும்புவதே அவரது நம்பிக்கையாகும்,” என்று அவர் ஊடகங்களிடம் கூறினார்.&nbsp;</p><h2>மகிந்தவுடன் ஷராந்தி இருக்கவேண்டிய நேரம்</h2><p>“இந்த நாட்டைக் காப்பாற்றிய தலைவருக்கு 80 வயது ஆகிவிட்டது இத்தகைய சூழ்நிலையில், இது அவரது மனைவி அவருடன் இருக்க வேண்டிய நேரம்,” என்று கமகே மேலும் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81e82c0d-a0eb-4a15-b799-e00124af6a21/26-6aac177f93f02.webp' /></p><p>
</p><p>
ரூ. 10 கோடி வைப்புத்தொகை தொடர்பாக ஷிராந்தி ராஜபக்சவிடம் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) விசாரணை நடத்தி வரும் நிலையில், “சிரிலிய சவியா” கணக்கில் 10 மில்லியன் வரவு வைக்கப்பட்ட நிலையில், விசாரணைகளில் இருந்து தப்பிக்கும் முயற்சியாகவே ஷிராந்தி நாட்டை விட்டு வெளியேறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை கமகே மறுத்தார்.</p><p></p><p> </p><h2>FCID-யில் ஷிராந்தி முன்னிலையாவது உறுதி</h2><p>மேலும், ஷிராந்தி மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே சிங்கப்பூருக்குச் சென்றதாகவும், FCID-யின் முன் ஆஜராவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/add4de9f-1e10-42b6-875d-e2ce6afd0b15/26-6aac186814f9c.webp' /></p><p>
</p><p>
ஷிராந்திராஜபக்ச செப்டம்பர் 24 அன்று FCID-யின் முன் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார். அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பு, FCID அதிகாரிகள் அது தொடர்பான எழுத்துபூர்வ உத்தரவை அவரிடம் வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.&nbsp; </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T18:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரயில் பயணச்சீட்டு பெற முடியவில்லையா? இணையத்தில் பெற புதிய வசதி அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/facility-to-obtain-train-tickets-online-1789669649"></link>
            <id>https://jvpnews.com/article/facility-to-obtain-train-tickets-online-1789669649</id>
            <summary type="text">ரயில் பயணிகள் இணையவழி ஊடாக பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த திணைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரயில் பயணிகள் இணையவழி ஊடாக பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த திணைக்களம், www.pravesha.lk என்ற இணையதளத்தின் ஊடாக இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.</p><p> 

அத்துடன், 'pravesha' அலைபேசி செயலி (Mobile App) மூலமாகவும் ரயில் பயணச்சீட்டுகளைக் கொள்வனவு செய்யும் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

ரயில் பொது முகாமையாளரை நீக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ள பின்னணியிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/042706c9-37d3-437c-8e1b-d0c676f201ec/26-6aac31137e433.webp' /></p><p>இதன் காரணமாக பெரும்பாலான ரயில் நிலையங்களில் பயணச்சீட்டுகள் விநியோகிக்கப்படாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> 

எவ்வாறாயினும், பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்ட போதிலும், இன்று (17) வழக்கம்போல் ரயில்கள் இயங்கியதைக் காணக்கூடியதாக இருந்தது. </p><p>

ரயில் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு நேற்று நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்தது.</p><p> 

இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம், ரயில்வே ஊழியர்கள் சங்கம், இலங்கை பாதுகாப்பற்ற ரயில் காவலர்கள் ஒன்றியம், ரயில் பாதுகாப்பு அதிகாரிகளின் சங்கம் உட்பட 29 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.</p><p> 

ஊழியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்காமல் ரயில் பொது முகாமையாளர் தன்னிச்சையாகச் செயற்படுவதால், அவரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்குமாறு கோரியே இந்தப் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. </p><p>

இதன் காரணமாக இன்று காலை ரயில் பயணச்சீட்டுகள் விநியோகிக்கப்படவில்லை என்றாலும், ரயில்கள் வழக்கம் போல் இயங்கியதாக பயணிகள் தெரிவித்தனர்.</p><p> 

பணிப்புறக்கணிப்பு அமுலில் உள்ள போதிலும், இன்று (17) காலையைப் போன்றே பிற்பகலிலும் வழக்கம்போல் ரயில்களை இயக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p> 

இவ்வாறான பின்னணியில், தீர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்துவோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T18:27:42+00:00</updated>
        </entry>
    </feed>
