<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-22T02:44:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை உலுக்கிய ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்து - நேரில் கண்ட தொழிலாளியொருவர் வெளியிட்ட காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/homagama-factory-fire-electrical-leakage-1784686646"></link>
            <id>https://tamilwin.com/article/homagama-factory-fire-electrical-leakage-1784686646</id>
            <summary type="text">ஹோமாகம - கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்துக்கு, மின்கசிவு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோமாகம - கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்துக்கு, மின்கசிவு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p>நேற்று காலை ஏற்பட்ட இந்த தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், புகையை சுவாசித்த பெண் ஒருவர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>வெளியான காரணம்</h2><p>இந்நிலையில், தீ விபத்து தொடர்பில்&nbsp;உயிர்பிழைத்த தொழிலாளி ஒருவர் கூறுகையில்,&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4efe5d05-0ebf-4e30-a09e-9f1723871f4d/26-6a602d524bfff.webp' /></p><p>உள்ளே இருக்கும் தூசியை வெளியே இழுக்கும் விசிறியில் ஏற்பட்ட திடீர் மின் கசிவே இதற்கு காரணம். நாங்கள் அதை பார்த்து தீ எச்சரிக்கை மணியை ஒலித்தோம்.” மின்சாரக் கசிவின் காரணமாக மெழுகு பூசப்பட்ட துணி ஒன்றில் தீ பற்றிக்கொண்டது. இதன் பின்னர் அது 5 லீட்டர் தகரக்கேன்களுக்கும் பரவியது. </p><p>இதன்போது உள்ளே சிக்கியிருந்த ஒருவர், தீயை அணைக்க முயன்றபோது உயிரிழந்தார். சிலர் அடையாளம் காண முடியாத அளவுக்குத் தீக்காயமடைந்திருந்தனர். சிலர் உள்ளே சிக்கிக்கொண்டனர். புகையால் இருமலும் ஏற்பட்டது. சிலர் கோமா நிலையில் இருப்பது போன்ற உணர்வை பெற்றனர்," என்றும் உயிர் பிழைத்த தொழிலாளி கூறியுள்ளார்.&nbsp;</p><h2>&nbsp;பல மணி நேரத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள்</h2><p>இதேவேளை, தீப்பரவலை கட்டுப்படுத்த, கோட்டே மற்றும் தெஹிவளை மாநகர சபைகளிலிருந்து 12 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், பல மணி நேரத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5305de80-8443-4ef4-a754-2ebe4301c247/26-6a602d52eea07.webp' /></p><p>இந்நிலையில், தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு இரண்டு மணி நேரம் தாமதமானதாக ஹோமாகம, கட்டுவன பகுதியை சேர்ந்த குடியிருப்பாளர்கள் நேற்று (21) ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்த தீ விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், அருகிலுள்ள ஹோமாகம பிரதேச சபையில் தீயணைப்பு வாகனங்கள் இருந்திருந்தால், இன்று இந்த விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோயிருக்காது என்றும் பலர் குற்றம்சாட்டியுள்ளனர்.</p><p>இதனிடையே, கட்டுவான தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தொழிலாளர் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T02:39:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வக்ர நிலையிலிருந்து மீண்ட புதன்... பணம், பதவி என அதிர்ஷ்டம் பெறும் ராசி யார் யார்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mercury-direct-big-changes-these-zodiac-sign-1784654021"></link>
            <id>https://manithan.com/article/mercury-direct-big-changes-these-zodiac-sign-1784654021</id>
            <summary type="text">வக்ர நிலையிலிருந்த புதன் நேர்கதியில் பயணிக்க தொடங்கியுள்ளதால், மிதுனம், கன்னி மற்றும் கும்ப ராசியினரின் வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் ஏற்படுமாம்.நேர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வக்ர நிலையிலிருந்த புதன் நேர்கதியில் பயணிக்க தொடங்கியுள்ளதால், மிதுனம், கன்னி மற்றும் கும்ப ராசியினரின் வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் ஏற்படுமாம்.</p><h2>நேர்கதியில் புதன்</h2><p> ஜோதிடத்தில் புதன் கிரகமானது அறிவு, பேச்சுத் திறன், தொழில், வியாபாரம் இவற்றினை கட்டுப்படுத்துவதாக கருதப்படுகின்றார். கடந்த சில வாரங்களாக வக்ர நிலையிலிருந்த புதன் 2026ம் ஆண்டு மீண்டும் நேர்கதியில் பயணிக்க தொடங்கியுள்ளார்.</p><p>இதனால் சில ராசியினரின் வாழ்க்கையில் முக்கிய மாற்றங்கள் ஏற்படுகின்றது. குறிப்பாக மிதுனம், கன்னி மற்றும் கும்ப ராசியினருக்கு இந்த மாற்றம் பல புதிய வாய்ப்புகளையும், முன்னேற்றத்தினையும் அளிக்குமாம். ஆனாலும் எந்த முடிவையும் கவனமாக எடுப்பது நல்லது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25259b3e-b608-4843-a32e-72b435828b55/26-6a602cb6861fd.webp' /></p><p></p><h2>மிதுனம்</h2><p>புதனின் ஆதிக்க ராசியாக இருக்கும் மிதுனமானது இந்த நிலையினால் பல நன்மையினை பெறுவீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட வேலைகள் மீண்டும் வேமாக முடியும்.&nbsp;</p><p>தொழிலில் புதிய வாய்ப்புகள் உருவாகலாம். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரமும் கிடைக்கும். கருத்து வேறுபாடுகள் குடும்பத்தில் குறையும்.</p><p>புதிய முதலீடு குறித்து யோசிப்பீர்கள். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனையைப் பெற்று முடிவெடுப்பது மிகவும் நல்லது. கல்வியில் மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f729d99-b3f0-411b-bd3b-5ed5d47dcb4d/26-6a602cb73560f.webp' /></p><h2>கன்னி
</h2><p>கன்னி ராசிக்கு புதனின் இந்த நிலையினால் பல சாதகமான பலன்கள் கிடைக்கும். நீண்ட காலமாக எதிர்பாத்திருந்த பதவி மற்றும் சம்பள உயர்வும் கிடைக்கும்.</p><p>வியாபாரத்தில் லாபம் அதிகரிப்பதுடன், வெளிநாட்டு பயணம் அல்லது புதிய ஒப்பந்தங்கள் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியாக மாறும்.</p><p>ஆனாலும், பண விஷயங்களில் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. உடல்நலத்தில் சிறிய கவனக்குறைவு கூட ஏற்பட வேண்டாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad1eb467-d446-4715-9172-2e7268623def/26-6a602cb7d8fab.webp' /></p><h2>கும்பம்
</h2><p>கும்ப ராசியினருக்கு புதனின் இந்த மாற்றத்தால் புதிய மாற்றங்கள் ஏற்படுவதுடன், புதிய நண்பர்கள் மற்றும் தொழில் தொடர்புகள் உருவாகும்.</p><p>நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள், திட்டங்கள் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும். சொத்து தொடர்பான விடயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.</p><p>பணவரவு அதிகரித்தாலும், தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியமாகும். குடும்பத்துடன் நேரத்தினை செலவு செய்வதால் உறவுகள் வலுப்படும்.</p><p>இவ்வாறு பலன்கள் காணப்பட்டாலும் எந்தவொரு முடிவையும் முழுமையாக ஜோதிடத்தினை நம்பி எடுக்கக்கூடாது. குறிப்பாக பணம் மற்றும் குடும்ப தொடர்பான முடிவுகளை அனுபவம் மற்றும் நடைமுறை சூழ்நிலையைக் கொண்டு தான் எடுக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b542974-9ff7-4a6c-be5b-c14ab47ab81e/26-6a602cb88a990.webp' /></p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</b>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;<br></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T02:36:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோதமாக புதையல் தோண்டிய முன்னாள் அமைச்சரின் மகன் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-minister-s-son-arrested-1784686269"></link>
            <id>https://ibctamil.com/article/ex-minister-s-son-arrested-1784686269</id>
            <summary type="text">அனுமதியின்றி காணி ஒன்றில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அமைச்சரொருவரின் மகன் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹபரணை - திருகோணமலை வீதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுமதியின்றி காணி ஒன்றில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அமைச்சரொருவரின் மகன் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>ஹபரணை - திருகோணமலை வீதியில், யகா வங்குவ அருகில் அமைந்துள்ள காணி ஒன்றிலேயே இந்த அனுமதியற்ற அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 20ஆம் திகதி கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><h2>சந்தேக நபர்கள் கைது&nbsp;</h2><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில், தற்போது உயிரிழந்த முன்னாள் புத்தசாசன மற்றும் காணி அமைச்சரொருவரின் 50 வயதுடைய மகன் ஒருவரும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44b08c09-2f9e-43a1-a4d4-3edb486857fa/26-6a602932c4992.webp' /></p><p>ஏனைய சந்தேகநபர்கள் 25, 26, 31 மற்றும் 44 வயதுடைய கந்தளாய், அலுத்ஓய மற்றும் இப்படுகம ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களாகும்.</p><p>பொலிஸ் அதிகாரிகள் குறித்த இடத்திற்குச் சென்ற சந்தர்ப்பத்திலும் சந்தேகநபர்கள் 8 அடிகள் வரை ஆழத்திற்கு அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
</p><p>
சந்தேகநபர்களுடன் அகழ்வாராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட மண்வெட்டிகள், இரும்புத் கம்பிகள் மற்றும் பூஜை பொருட்கள் உள்ளிட்ட பல வழக்குப் பொருட்களும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T02:22:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பாரிய கொள்ளையில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சரின் மகன்! பின்னணியில் அதிர்ச்சித் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ex-minister-s-son-arrested-for-cheating-foreigner-1784685252"></link>
            <id>https://tamilwin.com/article/ex-minister-s-son-arrested-for-cheating-foreigner-1784685252</id>
            <summary type="text">கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட நால்வர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் உத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட நால்வர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
பொலிஸ் உத்தியோகத்தர்கள் போல் நடித்து, கொள்ளுப்பிட்டியில் சீன நாட்டவர் ஒருவரிடமிருந்து 2 கோடி ரூபா பணத்தைக் கொள்ளையிட்டதாக கூறப்படும், சம்பவம் தொடர்பில் இந்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
விசாரணை அதிகாரிகளின் தகவல்களுக்கமைய, இந்தக் கொள்ளைச் சம்பவத்தை முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகனே திட்டமிட்டு முன்னெடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.</p><p>
</p><h2><b>
 மூவர் கைது</b></h2><p>இதன்போது கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களில் ஒருவர் பிரபல முன்னாள் வர்த்தகர் ஒருவரின் பேரன் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த நான்கு சந்தேகநபர்களில் மூவர் முதலில் கைது செய்யப்பட்டனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4a30a56-ce22-43a2-9290-3fc4cfc91c12/26-6a6027c211c20.webp' /></p><p>அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதே கொள்ளைச் சம்பவத்தை முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகனால் முன்னெடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
</p><p>
அதற்கமைய, குறித்த சந்தேகநபரைக் கைது செய்வதற்காக கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் அவர் சட்டத்தரணிகள் ஊடாக நேற்று பொலிஸில் சரணடைந்துள்ளார்.</p><p>

2 கோடி ரூபாய் இலங்கைப் பணத்திற்கு அமெரிக்க டொலர்களை மாற்றித் தருவதாகக் கூறி, இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>

அதற்கமைய, குறித்த சீன நாட்டவரை கொள்ளுப்பிட்டி பகுதிக்கு வரவழைத்தவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகன் என விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p>
</p><h3><b>
விசாரணை அதிகாரிகள்</b></h3><p>அதன் பின்னர் ஏனைய மூன்று பேரும் கைவிலங்குடன் சென்று, தாங்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனக் கூறிக்கொண்டு, சீன நாட்டவரிடம் இருந்த 2 கோடி ரூபா பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பியோடியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd3b7004-6014-4b50-9757-b19fccc81a6e/26-6a6027c2cda22.webp' /></p><p>இது தொடர்பாக கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய செயற்பட்ட நிலையப் பொறுப்பதிகாரி மூவரை முதலில் கைது செய்தனர்.</p><p> முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகன் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். </p>]]></content>
            <updated>2026-07-22T02:15:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் அவசர அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lady-ridgeway-hospital-emergency-instructions-1784686333"></link>
            <id>https://tamilwin.com/article/lady-ridgeway-hospital-emergency-instructions-1784686333</id>
            <summary type="text">நாட்டில் தொடர்ந்து பரவிவரும் டெங்கு காய்ச்சல் காரணமாக, கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருபவர்களுக்கு வைத்தியசாலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தொடர்ந்து பரவிவரும் டெங்கு காய்ச்சல் காரணமாக, கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருபவர்களுக்கு வைத்தியசாலை நிர்வாகத்தினால் அவசர அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
தற்போது சிறுவர் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் பிரதீப் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>அவசர அறிவித்தல்</h2><p>

இந்த சூழ்நிலையைக்கருத்தில் கொண்டு, குழந்தைகளுக்கு விரைவான மற்றும் திறமையான மருத்துவ சிகிச்சையை வழங்குவதற்கு பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ffe6756-3b79-49d7-b612-29c2246d39ee/26-6a6026ffa566e.webp' /></p><p>
</p><p>
அதன்படி, சிகிச்சை அல்லது மருத்துவ பணிகளுக்காக தங்கள் பிள்ளைகளை வைத்தியசாலைக்கு அழைத்து வரும்போது பின்வரும் ஆவணங்களைக் கொண்டு வருமாறு வைத்தியசாலை நிர்வாகம் பெற்றோர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.</p><h2>முக்கிய ஆவணங்கள்</h2><p><b>

தனிநபர் சுகாதார எண் (PHN) அல்லது பார்கோடு அட்டை
</b></p><p><b>குழந்தை சுகாதார மேம்பாட்டுக் குறிப்பேடு அல்லது எடை குறிப்பேடு
</b></p><p><b>மருந்து அல்லது உணவு ஒவ்வாமை பதிவேடுகள்</b></p><p><b>
மருத்துவக் குறிப்பேடுகள்
</b></p><p><b>வைத்தியசாலை வெளியேற்ற அட்டைகள் அல்லது நோய் கண்டறிதல் அட்டைகள் </b>என்பனவற்றினை கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
மேலதிக தகவல்களுக்கு, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் அலுவலகத்தை 011 2693711 (307) என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T02:12:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் சிக்கிய முன்னாள் அமைச்சரின் மகன் - சுற்றிவளைத்து பிடித்த பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ex-ministers-son-arrested-1784682951"></link>
            <id>https://tamilwin.com/article/ex-ministers-son-arrested-1784682951</id>
            <summary type="text">ஹபரணை - அலுத்ஓய பகுதிகளில் புராதன பொருட்களைத் தேடும் நோக்கில் அனுமதியின்றி காணி ஒன்றில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹபரணை - அலுத்ஓய பகுதிகளில் புராதன பொருட்களைத் தேடும் நோக்கில் அனுமதியின்றி காணி ஒன்றில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
கடந்த 20ஆம் திகதி இரவு வேளையில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில், தற்போது உயிரிழந்த முன்னாள் புத்தசாசன மற்றும் காணி அமைச்சரொருவரின் 50 வயதுடைய மகன் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p>
</p><h2><b>
அனுமதியற்ற அகழ்வாராய்ச்சி</b></h2><p>ஏனைய சந்தேகநபர்கள் 25, 26, 31 மற்றும் 44 வயதுடைய கந்தளாய், அலுத்ஓய மற்றும் இப்படுகம ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களாகும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e11b620-54f9-4130-9820-f5355704046e/26-6a601bc66bb2f.webp' /></p><p>ஹபரணை - திருகோணமலை வீதியில், யகா வங்குவ அருகில் அமைந்துள்ள காணி ஒன்றிலேயே இந்த அனுமதியற்ற அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>

பொலிஸ் அதிகாரிகள் குறித்த இடத்திற்குச் சென்ற சந்தர்ப்பத்திலும் சந்தேகநபர்கள் 8 அடிகள் வரை ஆழத்திற்கு அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். </p><p>

சந்தேகநபர்களுடன் அகழ்வாராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட மண்வெட்டிகள், இரும்புத் கம்பிகள் மற்றும் பூஜை பொருட்கள் உள்ளிட்ட பல வழக்குப் பொருட்களும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T01:54:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[2016இல் சுரேஷ் சலே சமர்ப்பித்த அறிக்கை.. உயர் அதிகாரி ஒருவரின் செயலால் மறைக்கப்பட்ட உண்மை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-sallay-easter-attack-2016-police-report-1784682787"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-sallay-easter-attack-2016-police-report-1784682787</id>
            <summary type="text">2016இல், இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் நடவடிக்கைகள் குறித்து&amp;nbsp;சுரேஷ் சலே முன்வைத்த அறிக்கையை உயர் அதிகாரி ஒருவர் நிராகரித்ததாக நீதிமன்றி...</summary>
            <content type="html"><![CDATA[<p>2016இல், இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் நடவடிக்கைகள் குறித்து&nbsp;சுரேஷ் சலே முன்வைத்த அறிக்கையை உயர் அதிகாரி ஒருவர் நிராகரித்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்படுவதை எதிர்த்து அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இத்தகவல் முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்போது, சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, "சுரேஷ் சலே, 2016 ஆம் ஆண்டில் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக இருந்தபோது, இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் கொள்கை பரப்பப்படும் விதம் குறித்து கவனம் செலுத்தினார்.</p><p></p><h2>சிரிய விமானத் தாக்குதல்</h2><p>அந்தச் சித்தாந்தங்கள் நாட்டில் எவ்வாறு பரவுகின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார். சிரியாவில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட, ஐ.எஸ் அமைப்போடு தொடர்புடைய இலங்கை நபர் ஒருவர் குறித்து இராணுவப் புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7479d927-1de6-428e-891f-1cb9c8cde8fa/26-6a601cdbb4fc4.webp' /></p><p>பின்னர், இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கை ஒன்றை சுரேஷ் சலே தயாரித்தார். </p><p>அதற்காக ஒரு சிறப்புக் குழுவை நியமிக்க வேண்டும் என்றும் அவர் முன்மொழிந்தார். இவை அனைத்தையும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சிவிடம் அவர் சமர்ப்பித்தார்.
</p><p>
இருப்பினும், இஸ்லாமிய தீவிரவாதம் தொடர்பாக சுரேஷ் சலே செய்த விளக்கமளிப்புகளுக்குப் பாதுகாப்புச் சபையில் உள்ள உயர் மட்ட நபர் ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்தார்.</p><p></p><h2>கிறிஸ்தவ தாய்..&nbsp;</h2><p> </p><p>இதனை அப்போதைய இராணுவத் தளபதி ஜகத் கிரிஷாந்த டி சில்வா, ஜனக் டி சில்வா ஆணைக்குழுவில் வழங்கிய சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/800e1a21-6618-42c2-b80e-a688bf883d5c/26-6a601cdcc5926.webp' /></p><p> இதன் காரணமாக, இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து சுரேஷ் சலே பாதுகாப்புச் சபையில் முன்வைத்த தகவல்களில் சில குழப்பங்கள்/திரிபுகள் ஏற்பட்டதாக அப்போதைய இராணுவத் தளபதி ஆணைக்குழுவின் முன் தெரிவித்திருந்தார்.
</p><p>
சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சுரேஷ் சலே இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இருந்து நீக்கப்பட்டு மலேசியாவிற்கு அனுப்பப்பட்டார். அது அரசியல் காரணங்களுக்காகவே நடந்தது. </p><p>அவ்வாறு இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராகச் செயல்பட்ட ஒருவரை, ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி என்று எவ்வாறு குறிப்பிட முடியும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.&nbsp;</p><p>குறித்த உயர் அதிகாரி தொடர்பில் தகவல் எதுவும் வெளியிடப்படாத நிலையில்,&nbsp;சுரேஷ் சலேவின் தாயார் ஒரு கிறிஸ்தவப் பெண்மணி எனவும், ஈஸ்டர் தாக்குதல் நடந்த அன்று அவரும் தேவாலயத்திற்கு சென்றிருந்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T01:34:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் வீடொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gunmen-open-fire-at-house-in-matara-1784682730"></link>
            <id>https://ibctamil.com/article/gunmen-open-fire-at-house-in-matara-1784682730</id>
            <summary type="text">மாத்தறையில் வீடொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொன்றை (Dondra), கந்தற காவல் பிரிவிற்குட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறையில் வீடொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
தொன்றை (Dondra), கந்தற காவல் பிரிவிற்குட்பட்ட ஏதண்ட வீதியில் உள்ள வீடொன்றின் மீதே இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.</p><p>

இந்த துப்பாக்கி பிரயோகத்தை இன்று (22-07-2026) அதிகாலையில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>தீவிர விசாரணை</h2><p>

காரில் வந்த ஆயுதமேந்திய குழுவொன்றே இந்தத் தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இத்தாக்குதலுக்கு அவர்கள் கைத்துப்பாக்கி (Pistol) ரக ஆயுதத்தைப் பயன்படுத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
இத்தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை எனப் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d40ec8c9-52c7-4f4c-b0ce-7bc6d257cd0d/26-6a601b00ad734.webp' /></p><p>

தாக்குதலுக்கு இலக்கான வீடு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் நபர் ஒருவருக்குச் சொந்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p>

தாக்குதலை நடத்திய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கும், இத்தாக்குதலின் பின்னணியில் உள்ள காரணத்தைக் கண்டறிவதற்கும் கந்தற காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-22T01:13:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நான்கு பாடசாலை மாணவர்கள் கைது ; காரணத்தில் காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/four-school-students-arrested-in-jaffna-1784681061"></link>
            <id>https://jvpnews.com/article/four-school-students-arrested-in-jaffna-1784681061</id>
            <summary type="text">வல்வெட்டித்துறை பொலிஸாரால் பாடசாலைக்கு ஒழுங்காக செல்வதில்லை என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>வல்வெட்டித்துறை பொலிஸாரால் பாடசாலைக்கு ஒழுங்காக செல்வதில்லை என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

நேற்றையதினம்(21) காலை கைது செய்யப்பட்ட குறித்த நான்கு மாணவர்களும் இரவாகியும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டு இருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/779f3bf5-5d92-47fe-82b6-c631bc8dd91f/26-6a6012d53464a.webp' /></p><h2>பிணையில் விடுதலை</h2><p>
</p><p>
இந்த நிலையில் பல்வேறு அழுத்தங்கள் பெற்றோர் மற்றும் உறவுகளால் முன்வைக்கப்பட்டு இருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>சிறுவர் என்ற காரணத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் நாளை காலை 7:00 மணிக்கு பொலிஸ் நிலையம் வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை நாளைய தினம் எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>&nbsp;இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில் தற்போது பொலிஸ் பிணையில் மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T01:10:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக சாம்பியனை வரவேற்ற 20 லட்சம் பேர்; ஸ்பெயின் முழுவதும் களைக்கட்டிய கொண்டாட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-million-fans-welcome-world-champion-1784680427"></link>
            <id>https://canadamirror.com/article/two-million-fans-welcome-world-champion-1784680427</id>
            <summary type="text">உலக கோப்பை வென்ற ஸ்பெயின் வீரர்களை வரவேற்க, 20 லட்சம் ரசிகர்கள் திரண்டனர்.



அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடந்த உலக கோப்பை பைனலில், ஸ்பெயின் அணி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உலக கோப்பை வென்ற ஸ்பெயின் வீரர்களை வரவேற்க, 20 லட்சம் ரசிகர்கள் திரண்டனர்.
</p><p style="text-align: justify; ">


அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடந்த உலக கோப்பை பைனலில், ஸ்பெயின் அணி, அர்ஜென்டினாவை சாய்த்து, இரண்டாவது முறையாக சாம்பியன் ஆனது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fddc5ff4-4a54-4f9f-ab1c-84fa98082fbd/26-6a600fed5f499.webp' /></p><p> </p><p style="text-align: justify; ">இதையடுத்து 26 வீரர்கள், பயிற்சியாளர் குழுவினர் நேற்று ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் வந்தனர்.


உலக கோப்பையுடன் மன்னர் குடும்பத்தினர், பிரதமர் பெட்ரோ சான்செசையும் சந்தித்து பாராட்டு பெற்றனர். </p><p style="text-align: justify; ">பின் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான மான்க்லோவா அரண்மனையில் இருந்து சிபெலெஸ் சதுக்கம் வரை திறந்த வெளி பஸ்சில், மாட்ரிட் நகரின் மையப்பகுதியில் ஊர்வலமாக சென்றனர்.


</p><p style="text-align: justify; ">
'வி ஆர் சாம்பியன்' என்ற வாசகம் கொண்ட ஜெர்சி அணிந்து காணப்பட்டனர்.</p><p style="text-align: justify; "> பல்வேறு இடங்களில் வீரர்கள், ரசிகர்களுடன் நடனமாடி மகிழ்ந்தனர்.


சிபெலெஸ் சதுக்கத்தில் ஸ்பெஷலான மேடை அமைக்கப்பட்டு இருந்தது. இங்கு வந்ததும் ஒவ்வொரு வீரராக அறிமுகம் செய்யப்பட்டனர். </p><p style="text-align: justify; ">தனது 25 வது பிறந்த நாள் கொண்டாடிய பயனா, உலக கோப்பை ஏந்திய படி வந்தார். கடைசியில் பயிற்சியாளர் லுாயிஸ் டி லாவை வீரர்கள் மேலே துாக்கி ஆரவாரம் செய்தனர்.
</p><p style="text-align: justify; ">

பின் ஆட்டம் களை கட்டியது. வீரர்களுடன் பாடகிகள் ஐடனா, அனா மெனா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-22T01:10:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் அதிர வைத்த துப்பாக்கிச்சூடு ; காரில் வந்தவர்கள் அரங்கேற்றிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/early-morning-gunfire-shocks-residents-1784682547"></link>
            <id>https://jvpnews.com/article/early-morning-gunfire-shocks-residents-1784682547</id>
            <summary type="text">தேவேந்திரமுனை, கந்தர பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

இன்று (22) அதிகாலை காரில் வந்த சிலர் கைத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேவேந்திரமுனை, கந்தர பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
 

இன்று (22) அதிகாலை காரில் வந்த சிலர் கைத்துப்பாக்கி ஒன்றினால் இத்துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/019723ff-ae26-45d0-8c41-796e7d4ec6a1/26-6a6018348898b.webp' /></p><p>
</p><p>
 

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் எவருக்கும் காயம் அல்லது பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p>

 

கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏதண்ட வீதி, தேவேந்திரமுனை பகுதியில் அமைந்துள்ள மீனவர் ஒருவரின் வீட்டின் மீதே இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T01:09:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[செட்டிநாடு உருளைக்கிழங்கு அடை... மாலை நேரத்திற்கான அருமையான ஸ்நாக்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/how-to-prepare-tasy-healthy-urulaikilangu-adai-1784648156"></link>
            <id>https://manithan.com/article/how-to-prepare-tasy-healthy-urulaikilangu-adai-1784648156</id>
            <summary type="text">&amp;nbsp;தமிழ்நாடு சுவையான உணவுகளுக்கு பெயர் பெற்றது. மதுரை, காரைக்குடி போன்ற இடங்கள் உணவுக்கு பிரசித்தி பெற்றவையாக இருந்தாலும், ஒவ்வொரு பிராந்தியத்திற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தமிழ்நாடு சுவையான உணவுகளுக்கு பெயர் பெற்றது. மதுரை, காரைக்குடி போன்ற இடங்கள் உணவுக்கு பிரசித்தி பெற்றவையாக இருந்தாலும், ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் பிரசித்தி பெற்ற சில உணவுகள் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் செட்டிநாட்டின் பல புகழ்பெற்ற உணவுகளில் அடை தோசை மிகவும் பிரபலமானதாகும்.</p><p>தினமும் இட்லி, தோசை போன்ற உணவுகளையே சாப்பிட்டு சலித்துப் போனவர்களுக்கு இந்த உருளைக்கிழங்கு அடை வித்தியாசமானதாக சுவையில் மிகவும் அருமையாக இருக்கும். இந்த உருளைக்கிழங்கு அடையை காலை அல்லது இரவு உணவாகவும் சாப்பிடலாம் அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம். இதில் கூடுதல் சிறப்பு இதற்கு சைடிஷ் எதுவுமே தேவையில்லை அப்படியே சாப்பிடலாம்.

</p><p>உங்களுக்கு செட்டிநாடு ஸ்பெஷல் உருளைக்கிழங்கு அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு உருளைக்கிழங்கு அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/046195db-ef03-4ba1-9176-f0068734df17/26-6a5f95005eebb.webp' /></p><h2>தேவையான பொருட்கள்</h2><p>அரிசி - 2 கப் <br>கடலைப்பருப்பு - 1 கப் <br>மசூர் பருப்பு - 1.5 கப் <br>உளுத்தம் பருப்பு <br>1/2 கப் - காய்ந்த மிளகாய்&nbsp;<br>&nbsp;2 - பச்சை மிளகாய்&nbsp;<br>&nbsp;2 - மிளகு - 1 ஸ்பூன்<br>மிளகுத்தூள் - 1 ஸ்பூன்<br>&nbsp;உப்பு - தேவையான அளவு <br>பெருங்காயம் - 2 சிட்டிகை <br>கறிவேப்பிலை - சிறிதளவு&nbsp;<br>&nbsp;எண்ணெய் - தேவையான அளவு<br>உருளைக்கிழங்கு - 2 (மெல்லியதாக நறுக்கியது)</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28ddf06c-56a4-42f4-aae5-002f97feef9f/26-6a5f9501132c0.webp' /></p><h2>செய்முறை</h2><p>அரிசி, பருப்பு வகைகள் மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒன்றாகக் கழுவி, 3-4 மணி நேரம் ஊறவைக்கவும்.

</p><p>ஊறியதும் அதனுடன் வர மிளகாய், பச்சை மிளகாய் மற்றும் மிளகு பிற பொருட்களுடன் சேர்த்து, மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.&nbsp;</p><p> மாவு குறைந்தது 5-6 மணி நேரம் புளிக்கட்டும். பின்னர் இதில் உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.&nbsp;</p><p> அடுப்பில் தோசைக்கல்லை வைத்துச் சூடாக்கவும். கல் சூடானதும் சிறிது எண்ணெய் தடவி, பாதியாக வெட்டிய வெங்காயத்தைக் கொண்டு தேய்க்கவும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/633e3479-2849-4e73-824c-7a7ca7954f80/26-6a5f9501b632f.webp' /></p><p> இப்போது நறுக்கிய உருளைக்கிழங்குத் துண்டுகளை மாவில் நனைத்து, தோசைக்கல்லில் வட்ட வடிவில் அடுக்கவும்.&nbsp;</p><p> உருளைக்கிழங்குத் துண்டுகளைச் சரியாகச் சீரமைத்து வைத்துவிட்டு, இடைவெளிகளை மாவு கொண்டு நிரப்பிச் சரியான வட்ட வடிவத்தை உருவாக்கவும்.</p><p> அதன் மேல் மிளகுத்தூளைத் தூவி, ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றவும்.ஒரு பக்கம் வெந்ததும், மறுபக்கம் வேகவைக்கத் திருப்பிப் போடவும். மீண்டும் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.&nbsp;</p><p> இருபுறமும் வெந்ததும் இதை தட்டிற்கு மாற்றவும். இதே போல அடுத்தடுத்த உருளைக்கிழங்குகளை சுடவும். இதை காரமான சட்னியுடன் பரிமாறலாம் இல்லையெனில் அப்படியே சாப்பிடலாம்.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></a><br></i></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T01:05:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் ஏற்பட்ட பரபரப்பு.. தென்னிலங்கையில் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கும்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-shoot-in-devinuwara-gandhara-this-morning-1784681548"></link>
            <id>https://tamilwin.com/article/gun-shoot-in-devinuwara-gandhara-this-morning-1784681548</id>
            <summary type="text">தேவினுவர - கந்தார பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை (22) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேவினுவர - கந்தார பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
இன்று அதிகாலை (22) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><h2>பொலிஸ் விசாரணை&nbsp;</h2><p>ஒரு மோட்டார் வாகனத்தில் வந்த ஒரு கும்பல், துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03223118-53f0-43ca-89a9-825e7bc39c7f/26-6a6015e27bd98.webp' /></p><p>

துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
</p><p>
கந்தார பொலிஸ் பிரிவு, எடண்டா வீதி, தேவினுவராவில் உள்ள கடற்றொழிலில் ஈடுபட்டு வந்த ஒருவரின் வீட்டில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்ததாகத் கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T01:04:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி துறைமுகங்களைத் தவிர்க்க கப்பல் நிறுவனங்களுக்கு ஹவுதிகள் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/houthis-warn-ships-to-avoid-saudi-ports-1784682218"></link>
            <id>https://news.lankasri.com/article/houthis-warn-ships-to-avoid-saudi-ports-1784682218</id>
            <summary type="text">யேமனின் ஹவுதி கிளர்ச்சிக் குழு, சவுதி அரேபிய துறைமுகங்களை நோக்கி செல்லும் கப்பல் நிறுவனங்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹவுதிகள் அனுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யேமனின் ஹவுதி கிளர்ச்சிக் குழு, சவுதி அரேபிய துறைமுகங்களை நோக்கி செல்லும் கப்பல் நிறுவனங்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>

ஹவுதிகள் அனுப்பிய மின்னஞ்சலில், “சவுதி துறைமுகங்களுடன் தொடர்புடைய எந்தவொரு கப்பலும் தாக்குதலுக்கு உள்ளாகலாம்” என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த மின்னஞ்சல் ஹவுதிகளின் சனா-அடிப்படையிலான மனிதாபிமான நடவடிக்கை ஒருங்கிணைப்பு மையம் (HOCC) மூலம் அனுப்பப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7922a8f-640b-45e8-bede-d809fa672337/26-6a6016ebca2d3.webp' /></p><p>புதிய விதிமுறைகள் திங்கட்கிழமை 12:01 GMT முதல் அமுலுக்கு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹவுதிகள், சவுதி அரேபியாவை ஆதரிக்கும் கப்பல்கள் அல்லது நிறுவனங்கள் மீது தண்டனைகள் மற்றும் தாக்குதல்கள் நடத்தப்படும் என எச்சரித்துள்ளனர்.
</p><p>
இந்த எச்சரிக்கை, செங்கடல் வழியாகச் செல்லும் சர்வதேச வர்த்தக பாதைகளுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். </p><p></p><p>சவுதி அரேபியா, செங்கடல் வழியாக எண்ணெய் மற்றும் பொருட்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக இருப்பதால், இந்த எச்சரிக்கை உலகளாவிய கப்பல் போக்குவரத்துக்கு புதிய சவாலாக உள்ளது.
</p><p>
ஹவுதிகள், 2024 முதல் யேமனில் நடந்து வரும் போரில் ஈடுபட்டு, சவுதி அரேபியாவை எதிர்த்து பல தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். தற்போது, இந்த மின்னஞ்சல் எச்சரிக்கை, மத்திய கிழக்கின் கடல்வழி பாதுகாப்பு நிலைமை குறித்து சர்வதேச அளவில் கவலைகளை அதிகரித்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T01:01:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவின் உயரிய இலக்கிய விருதை வென்ற உணவு டெலிவரி ஊழியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/courier-makes-history-with-top-literature-prize-1784682033"></link>
            <id>https://canadamirror.com/article/courier-makes-history-with-top-literature-prize-1784682033</id>
            <summary type="text">சீனாவைச் சேர்ந்த உணவு டெலிவரி பணியாளரும், கவிஞருமான வாங் ஜிபிங், கவிதைப் பிரிவில் சீனாவின் மதிப்புமிக்க லு சூன் இலக்கியப் பரிசை வென்றுள்ளார்.

நவீன ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவைச் சேர்ந்த உணவு டெலிவரி பணியாளரும், கவிஞருமான வாங் ஜிபிங், கவிதைப் பிரிவில் சீனாவின் மதிப்புமிக்க லு சூன் இலக்கியப் பரிசை வென்றுள்ளார்.
</p><p>
நவீன சீன இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படும் லு சூனின் பெயரால் வழங்கப்படும் இந்த விருது, சீனாவின் மிக உயர்ந்த இலக்கிய அங்கீகாரங்களில் ஒன்றாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03dc394a-c2b6-42c0-8814-217f30ee46f2/26-6a601632e3a4b.webp' /></p><p>

</p><p>
லோ பிளைட்
சீனாவில் பணிபுரியும் தொழிலாளர்களின் அன்றாடப் போராட்டங்கள், விரக்திகள் மற்றும் சவால்களை மையமாக வைத்து 'லோ பிளைட்' (Low Flight) எனும் கவிதைத் தொகுப்பு நூலை எழுதியுள்ளார்.
</p><p>
இந்த நூலுக்காக சுமார் 200 சக டெலிவரி ஊழியர்களிடம் அவர் உரையாடியுள்ளார்.
</p><p>
6,000 கவிதைகள்
பகலில் உணவு டெலிவரி செய்யும் இவர், கடந்த 8 ஆண்டுகளில் தனது ஸ்கூட்டரில் சுமார் 1,50,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணித்து, ஓய்வு நேரங்களில் 6,000-க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார்.
</p><p>
களப்பணியாளர்களின் யதார்த்தமான வாழ்க்கையை எழுத்தாக்கிய இவரது வெற்றி, சீனாவில் தொழிலாளர்களின் இலக்கிய படைப்புகளுக்குக் கிடைத்துவரும் மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
</p><p>
ஜியாங்சு மாகாணத்தில் பிறந்த வாங் ஜிபிங், வீட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக இளமையிலேயே பள்ளியிலிருந்து விலகினார். </p><p>அவர் உணவு டெலிவரி ஊழியராக மாறுவதற்கு முன் கட்டுமானம், குப்பை சேகரிப்பு மற்றும் தெருவோர வியாபாரம் என பல்வேறு வேலைகளைச் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-22T01:00:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-thunderstorms-in-maritime-regions-1784681993"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-thunderstorms-in-maritime-regions-1784681993</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (22-07-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.

 


</p><p> 
</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad459c36-9459-4b9e-8a53-cd5407d93933/26-6a60160b07310.webp' /></p><p>கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் காரணமாக மனித உடலினால் அதிகரித்த வெப்பநிலையை உணரக்கூடியதாக இருக்கும்.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T01:00:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பாரிய முறைகேடுகள்: ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/probe-into-sri-lanka-cricket-corruption-1784681290"></link>
            <id>https://ibctamil.com/article/probe-into-sri-lanka-cricket-corruption-1784681290</id>
            <summary type="text">சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிருவாகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிருவாகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இலஞ்ச, ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவினால் விரிவான விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த விசாரணை, சமூக ஆர்வலரான தனீஷ் அலி சமர்ப்பித்த முறைப்பாட்டிற்கு அமையவே தொடங்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>சிறப்பு விசாரணை</h2><p>இந்த விசாரணைக்கு அமைவாக, 2023 செப்டம்பர் 11 ஆம் திகதி வெளியிடப்பட்ட சிறப்பு கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தி விரிவான வாக்குமூலம் அளிப்பதற்காக, தனீஷ் அலியை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>

இதனடிப்படையில், எதிர்வரும் 31 ஆம் திகதி உரிய ஆவணங்களுடன் ஆணைக்குழுவின் சிறப்பு விசாரணைப் பிரிவிற்கு வருகை தருமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f6ca7fd-80c6-4256-b5f7-c419697a414a/26-6a60134bc334b.webp' /></p><p>முன்னாள் தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் மற்றும் திலங்க சுமதிபாலவின் தலைமையிலான காலத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் நிதி மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பிலும் இந்த முறைப்பாட்டின் மூலம் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
குறிப்பாக, அப்போதைய சிறிலங்கா கிரிக்கெட் நிர்வாகத்திற்கும் சூதாட்டக்காரர்களுக்கும் இடையே நிலவியதாகக் கூறப்படும் சட்டவிரோத தொடர்புகள், போட்டி நிர்ணயக் குற்றச்சாட்டுகள் மற்றும் சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பணத்தை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் தனீஷ் அலி ஆணைக்குழு முன்னிலையில் கருத்துக்களை முன்வைக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T00:52:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரு வாரத்திற்கு மாத்திரமே எம்பி பதவி! சபையில் அர்ச்சுனா வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/archchuna-may-leave-parliament-within-weeks-1784680535"></link>
            <id>https://tamilwin.com/article/archchuna-may-leave-parliament-within-weeks-1784680535</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், தாம் இன்னும் அதிக காலம் சட்டமன்றத்தில் நீடிக்கப் போவதில்லை என்றும், அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், தாம் இன்னும் அதிக காலம் சட்டமன்றத்தில் நீடிக்கப் போவதில்லை என்றும், அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் வெளியேறிவிடக்கூடும் என்றும் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.</p><p>நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், “நான் இன்னும் அதிக காலம் இந்த நாடாளுமன்றத்தில் இருக்க மாட்டேன். </p><p>நான் உங்களை நீண்ட காலத்திற்குத் தொந்தரவு செய்ய மாட்டேன். இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மட்டுமே நான் இங்கு இருப்பேன்” என்று கூறினார்.</p><p>
மாவட்ட ஒருங்கமைப்புக் குழு (DCC) கூட்டத்தின் போது பொதுமக்களின் கவலைகளை எழுப்பிய பின்னர் தாம் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாகவும் அவர் இதன்போது குற்றம் சாட்டினார்.</p><p></p><h2>DCC&nbsp;கூட்ட சலசலப்பு&nbsp;</h2><p> </p><p>மேலும், வடக்கில் முன்வைக்கப்படும் ஊழல் தொடர்பான பல முறைப்பாடுகளையும் ஆவண ஆதாரங்களையும், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்கள் விசாரணை ஆணைக்குழுவிடமும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடமும் சமர்ப்பித்ததாகவும், ஆனால் எந்த விசாரணையும் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a53a054-ed9d-4f84-bb4a-f09f815b48c3/26-6a60133e513eb.webp' /></p><p>
</p><p>
அத்துடன், யாழ்ப்பாண போதனா மருத்துவமனையின் மருந்துக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து முறையான விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை என்றும், இப்பிரச்சினையை எழுப்பிய பின்னர் தாம் அச்சுறுத்தல்களையும் சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொண்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.</p><p>

தன்னை நாடாளுமன்றத்திலிருந்து நீக்கக் கோரும் சட்ட நடவடிக்கையானது, வடக்கிலிருந்து வரும் சுயேட்சைப் பிரதிநிதிகள் நியாயமற்ற முறையில் குறிவைக்கப்படுகிறார்கள் என்ற எண்ணத்தை சில தமிழ் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது என்று அர்ச்சுனா மேலும் கூறினார்.</p><p>மேலும், இந்தக் கவலைகளைக் களைந்து, சுயேட்சைப் பிரதிநிதிகளுக்குச் சமமான உரிமைகளை உறுதி செய்யுமாறு அவர் அரசை வலியுறுத்தினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T00:48:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[23 ஏக்கர் Farm YouTube-ல சம்பாரிச்சு வாங்குனதா? - Saapattu Raman Farm Tour]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/saapattu-raman-farm-tour-video-1784646261"></link>
            <id>https://cineulagam.com/article/saapattu-raman-farm-tour-video-1784646261</id>
            <summary type="text">Farm Tourஇப்போதெல்லாம் மக்கள் ஒரு வேலையை நம்பி இருப்பது இல்லை. தமக்கு தெரிந்த விஷயங்களில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி பெரிய அளவில் தொழிலதிபராகிவிடுகிறார...</summary>
            <content type="html"><![CDATA[<h2>Farm Tour</h2><p>இப்போதெல்லாம் மக்கள் ஒரு வேலையை நம்பி இருப்பது இல்லை. தமக்கு தெரிந்த விஷயங்களில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி பெரிய அளவில் தொழிலதிபராகிவிடுகிறார்கள்.</p><p>அப்படி இப்போது நாம் ஒரு பிரபலத்தின் Farm Tour தான் பார்க்கப்போகிறோம். சமூக வலைதளங்களில் பிரபலம் அடைந்த சாப்பாட்டு ராமன் ஒரு Farm வைத்துள்ளார்.</p><p>அதில் என்னென்ன இருக்கிறது, எப்படியெல்லாம் பராமரிக்கிறார் என்ற முழு Farm Tourஐ இப்போது காண்போம்.</p><p>&nbsp;<iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gEDO5vSA97I" width="640" height="360" class="note-video-clip"></iframe></p>]]></content>
            <updated>2026-07-22T00:30:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமரைத் இரகசியமாக நோட்டமிட்ட மூன்று நபர்கள் அதிரடி கைது...! எழுந்த பாதுகாப்பு அச்சுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3-arrested-for-spying-on-pm-harini-1784679813"></link>
            <id>https://ibctamil.com/article/3-arrested-for-spying-on-pm-harini-1784679813</id>
            <summary type="text">பிரதமர் ஹரினி அமரசூரியவைத் தொலைநோக்கி மூலம் கண்காணித்ததாக சந்தேகத்தின் பேரில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் உள்ள பிரபல நட்சத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதமர் ஹரினி அமரசூரியவைத் தொலைநோக்கி மூலம் கண்காணித்ததாக சந்தேகத்தின் பேரில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
கொழும்பில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு ஹரினி அமரசூரிய நேற்று (21-07-2026) சென்றிருந்த போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>

சந்தேக நபர்களான மூவரையும் கொம்பனித் தெரு காவல்துறையினர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தினர்.</p><p>
</p><p></p><h2>முழுமையான அறிக்கை</h2><p>இதையடுத்து சந்தேக நபர்களான மூவரையும் இன்று (22-07-2026) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.</p><p>

அத்தோடு இச்சம்பவம் குறித்த முழுமையான அறிக்கையை நாளை (23-07-2026) சமர்ப்பிக்குமாறு கொம்பனி தெரு காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91513e12-ec10-4dee-88f0-e25e5e377098/26-6a600d86f38c9.webp' /></p><p>சந்தேக நபர்களான மூவரில் இருவர் சகோதரர்கள் என்றும் அவர்கள் கிண்ணியா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றைய நபர் முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சந்தேக நபர்கள் மூவரும் கொழும்புப் பகுதியில் பணிபுரிவதாக தெரிவித்திருந்தனர் என காவல்துறையினர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.</p><p> 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொம்பனித் தெரு காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T00:28:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவுக்கு விருப்பம் இல்லை ; ட்ரம்ப் திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-rules-out-talks-with-the-united-states-1784674748"></link>
            <id>https://canadamirror.com/article/trump-rules-out-talks-with-the-united-states-1784674748</id>
            <summary type="text">அமெரிக்கா-ஈரான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை முறிந்து மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 10 நாட்களாக நீடித்து வரும் இந்த சண்டையில் ஈரான் தனது அண்டை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா-ஈரான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை முறிந்து மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. </p><p>10 நாட்களாக நீடித்து வரும் இந்த சண்டையில் ஈரான் தனது அண்டை நாடான குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டன், கத்தார் உள்ளிட்டவை மீது தாக்குதல் நடத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1353add-e951-48a3-a761-f0282837333d/26-6a5ff9bd9f715.webp' /></p><p>


</p><p>
இதற்கிடையே ஈரான் உள்துறை அமைச்சர் எஸ்கந்தர் மொமேனி, அமெரிக்காவுடனான மோதலைத் தணித்து, முறிந்த இடைக்கால அமைதி ஒப்பந்தத்தை மீட்டெடுப்பதற்காக பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். </p><p>இஸ்லாமாபாத்துக்கு நேரில் சென்று ராணுவத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் ஆகிய மத்தியஸ்தர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். </p><p>ஆனால் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ஈரானுடன் தற்போதைக்கு பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவுக்கு எந்த விருப்பமும் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>

ஓவல் அலுவலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "ஈரான் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த மிகவும் ஆர்வமாக உள்ளனர். ஆனால், முறையான மற்றும் பயனுள்ள பேச்சுவார்த்தைக்கு அவர்கள் தயாராகும் வரை சந்திப்பில் எங்களுக்கு ஆர்வம் இல்லை” என்றார்.</p><p> மேலும், போரினால் ஈரான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், அதை முடிவுக்கு கொண்டுவரவே அவர்கள் பேச்சுவார்த்தைக்கு துடிப்பதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.</p><p> தற்போது, இரு நாடுகளுக்கும் இடையேயான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் பலவீனமடைந்துள்ளதால், தாக்குதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-22T00:26:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகில் அதிகளவில் பட்டினியை எதிர்கொள்ளும் கண்டம்: ஆசியாவை விஞ்சிய ஆப்பிரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/africa-tops-hunger-list-surpasses-asia-un-1784662087"></link>
            <id>https://news.lankasri.com/article/africa-tops-hunger-list-surpasses-asia-un-1784662087</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகள் சபையின் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்த வருடாந்திர அறிக்கையில், உலகளவில் பட்டினி குறையும் நிலையில் இருந்தாலும், அந்த முன்னே...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் சபையின் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்த வருடாந்திர அறிக்கையில், உலகளவில் பட்டினி குறையும் நிலையில் இருந்தாலும், அந்த முன்னேற்றம் சமமாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
2026 ஜூலை 21 அன்று வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், ஆப்பிரிக்கா கண்டம், ஆசியாவை விட அதிகமான மக்கள் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இதன் மூலம், முதன்முறையாக உலகில் அதிகளவில் பட்டினியை எதிர்கொள்ளும் கண்டமாக ஆப்பிரிக்கா மாறியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ef1fb7d-305e-4bd5-8bfe-0f2126d4eabc/26-6a5fc8c67d0aa.webp' /></p><p>ஆப்பிரிக்காவில் பல கோடி மக்கள் போதுமான உணவின்றி வாழ்ந்து வருவதாகவும், குறிப்பாக சஹாரா தெற்குப் பகுதிகள் மற்றும் ஜிம்பாப்வே போன்ற நாடுகளில் உணவு உதவிக்கு மக்கள் அதிகமாக சார்ந்துள்ளனர்.
</p><p>
ஐ.நா. அறிக்கையில், உலகளவில் பட்டினி குறைப்பதில் முன்னேற்றம் இருந்தாலும், அது சமமாக இல்லை. சில பகுதிகளில் உணவு பாதுகாப்பு மேம்பட்டாலும், ஆப்பிரிக்காவில் நிலைமை மோசமடைந்துள்ளது.</p><p>

இதனால், ஆப்பிரிக்கா கண்டத்தில் உணவு பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் சர்வதேச உதவி, அரசியல் நிலைத்தன்மை, வேளாண் வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றம் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T00:25:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் தொடர்பில் ஜேர்மனி-ரஷ்யா ரகசிய சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/secret-baku-talks-germany-russia-on-ukraine-war-1784679962"></link>
            <id>https://news.lankasri.com/article/secret-baku-talks-germany-russia-on-ukraine-war-1784679962</id>
            <summary type="text">அசர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் ஜூலை 21, 2026 அன்று பெர்லினில் ஜேர்மன் சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸுடன் கூட்டு செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அசர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் ஜூலை 21, 2026 அன்று பெர்லினில் ஜேர்மன் சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸுடன் கூட்டு செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டார்.</p><p>

அப்போது, ஜேர்மனி மற்றும் ரஷ்யாவின் முன்னாள் உயர் அதிகாரிகள் பாகுவில் (Baku) ரகசியமாக சந்தித்ததாக உறுதிப்படுத்தினார்.
</p><p>
அலியேவ் கூறியதாவது: “எங்கள் நாட்டின் நிலப்பரப்பை, எங்களுக்குத் தெரியாமல் இந்த சந்திப்புக்கு பயன்படுத்தினர். விமானப் பதிவுகள் மூலம் அந்த சந்திப்பு நடந்தது உறுதியாகிறது” என தெரிவித்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42180a05-c6e8-4753-872d-efa473f2380a/26-6a600e1c2b345.webp' /></p><p>இந்த சந்திப்பு ஜூலை 12 முதல் 14 வரை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், ஜேர்மனியின் முன்னாள் சேன்சலர் அங்கேலா மேர்கலின் முன்னாள் தலைமைச் செயலாளர் ரோனால்ட் போஃபல்லா, பிராண்டன்பர்க் மாநில முன்னாள் தலைவர் மத்தியாஸ் பிளாட்செக் ஆகியோர் பங்கேற்றனர்.</p><p>

ரஷ்ய தரப்பில், விக்டர் சூப்கோவ் (Gazprom தலைவர், முன்னாள் பிரதமர்) மற்றும் வலெரி ஃபடேயேவ் (ரஷ்ய குடியரசுத் தலைவரின் மனித உரிமை கவுன்சில் தலைவர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
</p><p></p><p>ஆனால், ஜேர்மன் அரசுக்கு இந்த சந்திப்பில் எந்தவித பங்கும் இல்லை என்று சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் தெரிவித்தார். தனக்கு இப்படியான சந்திப்பு பற்றி எந்தத் தகவலும் இல்லை என்று அவர் கூறினார்.
</p><p>
இந்த சந்திப்பு, ரஷ்யா-உக்ரைன் போருக்கு முடிவு காணும் வழிகளை ஆராய்வதற்காக நடந்ததாக ஊடகங்கள் கூறுகின்றன. </p><p>அலியேவ், “இந்த சந்திப்பு உண்மையில் போருக்கு முடிவு காண உதவுவதாக இருந்தால், அதை வரவேற்கிறோம்” என்றார்.
</p><p></p><p>அசர்பைஜான், 2022-இல் ரஷ்யா உக்ரைனை முழுமையாக ஆக்கிரமித்த பிறகு, இரு தரப்புடனும் உறவை சமநிலைப்படுத்த முயற்சித்து வருகிறது. ஆனால், 2024-இல் ரஷ்ய விமானப்படை தவறுதலாக அசர்பைஜான் பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்திய சம்பவம் இரு நாடுகளின் உறவை பாதித்தது.
</p><p>
இந்த ரகசிய சந்திப்பு, ஜேர்மனி-ரஷ்யா இடையிலான பின்வழி (back-channel) தொடர்பு முயற்சியாக கருதப்படுகிறது. இது, உக்ரைன் போருக்கான அமைதி முயற்சிகளில் புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T00:24:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணை தோல்வியடையும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/motion-against-justice-minister-nalinda-jayatissa-1784678734"></link>
            <id>https://tamilwin.com/article/motion-against-justice-minister-nalinda-jayatissa-1784678734</id>
            <summary type="text">நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்படும்
நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசுக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது என்று
அமைச்சரவைப் பேச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்படும்
நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசுக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது என்று
அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
</p><p>
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக்
குறிப்பிட்டார்.</p><p></p><h2>நம்பிக்கையில்லாப் பிரேரணை</h2><p>

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

"கல்வி மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டபோது, கல்வி அமைச்சை வகிக்கும்
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவரவும், அவர்
பதவியிலிருந்து விலகவும் எதிர்க்கட்சிகள் முயன்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8baae89c-c827-4b29-a4ec-d3d1d1ab7e5f/26-6a600d1a81698.webp' /></p><p> எனினும், அந்த முயற்சி
இறுதி வரை வெற்றி பெறவில்லை.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சராக இருந்த குமார ஜயக்கொடிக்கு எதிராகவும்
நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்தனர். </p><p>எனினும், அரசு எடுத்த
தீர்மானத்தின்படி, சுயாதீனமான விசாரணைக்கு வழிவகுக்கும் வகையிலேயே அவர்
அவராகவே பதவி விலகினாரே தவிர, எதிர்க்கட்சிகளின் பிரேரணையால் அரசுக்கு எந்தப்
பாதிப்பும் ஏற்படவில்லை.
</p><p>
தற்போது நீதி அமைச்சருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப்
பிரேரணையும் முந்தைய முயற்சிகளைப் போன்றதுதான். இதனால் அரசுக்கு எந்தவித
தாக்கமும் ஏற்படப்போவதில்லை"என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T00:23:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிதி முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/probe-against-thilanga-and-shammi-1784679709"></link>
            <id>https://tamilwin.com/article/probe-against-thilanga-and-shammi-1784679709</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிருவாகத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள், மோசடிகள் மற்றும் பல்வேறு அக்கிரமங்கள் தொடர்பாக இலஞ்ச, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிருவாகத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள், மோசடிகள் மற்றும் பல்வேறு அக்கிரமங்கள் தொடர்பாக இலஞ்ச, ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவினால் விரிவான விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p>
ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த விசாரணை, சமூக ஆர்வலரான தனீஷ் அலி சமர்ப்பித்த முறைப்பாட்டிற்கு அமையவே தொடங்கப்பட்டுள்ளது.
</p><p>இந்த விசாரணைக்கு அமைவாக, 2023 செப்டம்பர் 11 ஆம் திகதி வெளியிடப்பட்ட சிறப்பு கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தி விரிவான வாக்குமூலம் அளிப்பதற்காக, தனீஷ் அலியை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, எதிர்வரும் 31 ஆம் திகதி உரிய ஆவணங்களுடன் ஆணைக்குழுவின் சிறப்பு விசாரணைப் பிரிவிற்கு வருகை தருமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>முன்னாள் தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் மற்றும் திலங்க சுமதிபாலவின் தலைமையிலான காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பிலும் இந்த முறைப்பாட்டின் மூலம் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4aecda31-859f-4769-9c2c-63ef41e5fee5/26-6a600d1eb4d4e.webp' /></p><p>
குறிப்பாக, அப்போதைய ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்திற்கும் சூதாட்டக்காரர்களுக்கும் இடையே நிலவியதாகக் கூறப்படும் சட்டவிரோத தொடர்புகள், போட்டி நிர்ணயக் குற்றச்சாட்டுகள் மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பணத்தை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் தனீஷ் அலி ஆணைக்குழு முன்னிலையில் கருத்துக்களை முன்வைக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T00:21:55+00:00</updated>
        </entry>
    </feed>
