<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-19T08:24:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதுபானக்கடையில் கொள்ளை முயற்சி - துப்பாக்கிச்சூடு நடத்த முயன்றுள்ளதாக தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/robbery-involving-a-shooting-in-trincomalee-1789801867"></link>
            <id>https://tamilwin.com/article/robbery-involving-a-shooting-in-trincomalee-1789801867</id>
            <summary type="text">திருகோணமலை - அநுராதபுரம் சந்தியில் அமைந்துள்ள மதுபானக் கடை ஒன்றில் இருவரால்
மேற்கொள்ளப்பட்ட கொள்ளை முயற்சியை அதன் ஊழியர்கள் முறியடித்துள்ளனர்.

நேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - அநுராதபுரம் சந்தியில் அமைந்துள்ள மதுபானக் கடை ஒன்றில் இருவரால்
மேற்கொள்ளப்பட்ட கொள்ளை முயற்சியை அதன் ஊழியர்கள் முறியடித்துள்ளனர்.
</p><p>
நேற்று (18) இரவு 9:45 அளவில் மோட்டார்சைக்கிளில் வந்த இருவர், பணத்தைத்
திருடித் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.&nbsp;</p><p>
இருப்பினும், ஊழியர்களின் கடும் போராட்டத்திற்குப் பின்னர் பணப் பையுடன்
கொள்ளையர்களில் ஒருவரைப் பிடிக்க முற்பட்டனர்.</p><h2>துப்பாக்கிச்சூடு நடத்த முயற்சி</h2><p>

அந்தச் சமயத்தில், துப்பாக்கி வைத்திருந்த நபர், ஊழியர்களை நோக்கி
துப்பாக்கிச்சூடு நடத்த முயன்ற போதிலும் இலக்கு தவறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df521e5b-46a8-423b-9dad-e73f44d45bd4/26-6aae45ccaf8e1.webp' /></p><p>
</p><p>
அதனைத் தொடர்ந்து, இரு கொள்ளையர்களும் மோட்டார்சைக்கிளில் அநுராதபுரம் வீதி
வழியாகத் தப்பிச் சென்றனர்.

எனினும், இந்த சம்பவம் குறித்து உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார், திடீர்
தேடுதல் நடவடிக்கையை நடத்தி மிஹிந்துபுர பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து
இரண்டு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.</p><p>இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T08:20:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மண்டாடி திரைப்படம் தமிழ்நாட்டில் இதுவரை செய்துள்ள வசூல்.. விவரம் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/mandaadi-movie-tamilnadu-box-office-collection-1789801802"></link>
            <id>https://cineulagam.com/article/mandaadi-movie-tamilnadu-box-office-collection-1789801802</id>
            <summary type="text">Mandaadi movie tamilnadu box office collection: ரூ. 75 கோடி பட்ஜெட்டில் உருவாகி கடந்த வாரம் வெளியான மண்டாடி திரைப்படத்தின் தமிழ்நாடு வசூல் விவரம் வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Mandaadi movie tamilnadu box office collection: ரூ. 75 கோடி பட்ஜெட்டில் உருவாகி கடந்த வாரம் வெளியான மண்டாடி திரைப்படத்தின் தமிழ்நாடு வசூல் விவரம் வெளியாகியுள்ளது.</p><p></p><h2>

மண்டாடி
</h2><p>
தமிழ் சினிமாவின் ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்துள்ள நடிகர் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-soori-says-jason-sanjay-just-like-his-father-vijay" target="_blank">சூரி</a>யின் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் மண்டாடி. வெற்றிமாறனின் உதவி இயக்குநரான மதிமாறன் புகழேந்தி இயக்கிய இப்படத்தை RS Infotainment நிறுவனம் தயாரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b34de77-4b39-45a4-af06-aef48680ebb2/26-6aae354d72c68.webp' /></p><p></p><p> 

இப்படத்தில் சூரியுடன் இணைந்து சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படகு போட்டியை மையமாக வைத்து உருவான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d52611e-894b-40c6-895e-f773235cc78b/26-6aae354e2c956.webp' /></p><p></p><h3>தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்</h3><p>

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வரும் மண்டாடி திரைப்படம், உலகளவில் 9 நாட்களில் ரூ. 82 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இப்படம் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93f2428e-bacf-4e22-8231-8e16fa721b0c/26-6aae354edcf13.webp' /></p>]]></content>
            <updated>2026-09-19T08:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருட சென்ற இடத்தில் கடுப்பான திருடன் ; வீட்டு சுவரில் காத்திருந்த ட்விஸ்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/an-angry-thief-at-the-place-he-went-to-rob-1789804693"></link>
            <id>https://jvpnews.com/article/an-angry-thief-at-the-place-he-went-to-rob-1789804693</id>
            <summary type="text">திருட சென்ற வீட்டில் நகை, பணம் இல்லாததால் பொருட்களை உடைத்து அட்டகாசம் செய்த ஆசாமி சுவரில் &#039;சாரி&#039; என எழுதி வைத்துவிட்டு தப்பிச்சென்றார்.


கோவையில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருட சென்ற வீட்டில் நகை, பணம் இல்லாததால் பொருட்களை உடைத்து அட்டகாசம் செய்த ஆசாமி சுவரில் 'சாரி' என எழுதி வைத்துவிட்டு தப்பிச்சென்றார்.


</p><p>கோவையில் உள்ள ஒரு வீட்டில் புகுந்த மர்ம ஆசாமி, அங்கு திருடுவதற்கு நகை, பணம் இல்லாத விரக்தியில் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்திவிட்டு, சுவரில் 'சாரி' என்று எழுதி வைத்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eca4f339-b42d-4eae-938a-192c726f0130/26-6aae40974675d.webp' /></p><p>வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. சில பொருட்கள் உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன.
</p><p>
உடனடியாக படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது, அங்குள்ள பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் அனைத்தும் கீழே கொட்டப்பட்டு இருந்தன. </p><p>மேலும், கட்டிலில் இருந்த மெத்தை, சோபா, வாஷிங் மிஷின் மற்றும் பிரிட்ஜ் ஆகியவையும் சேதப்படுத்தப்பட்டு இருந்தது.&nbsp;&nbsp;</p><p></p><p>வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமி பக்கவாட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டது உள்ளார். </p><p>ஆனால் நகை, பணம் எதுவும் இல்லாத ஆத்திரத்தில், அந்த நபர் பொருட்களை சேதப்படுத்திவிட்டு, சுவரில் ஆங்கிலத்தில் 'சாரி' என்று எழுதி வைத்துவிட்டு தப்பி சென்றுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T08:12:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடும்பத்தாருடன் உரையாடிய மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-youth-faces-death-sentence-in-saudi-1789803038"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-youth-faces-death-sentence-in-saudi-1789803038</id>
            <summary type="text">சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசா, தனது குடும்பத்தாருடன் நேற்று தொலைபேசியில் உரையாடியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.இந்த உரையாடலின...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசா, தனது குடும்பத்தாருடன் நேற்று தொலைபேசியில் உரையாடியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.</p><p>இந்த உரையாடலின் போது, தன்னை சாதாரண கைதிகள் தடுத்து வைத்திருக்கும் சிறையில் இருந்து சிறப்பு சிறைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக&nbsp;அனோஜன் கூறியுள்ளார்.</p><p>
எனினும், இந்தத் தண்டனை குறித்த அடுத்தக்கட்டம் தொடர்பாக எந்தத் தகவலும் தனக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் அனோஜன் தெரிவித்ததாக குடும்ப உறுப்பினர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பொதுமன்னிப்பு&nbsp;</h2><p>

இதனிடையே, அனோஜனின் நலனை உறுதிசெய்ய, இராஜதந்திர ரீதியாக தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc0f536b-5a5c-4bf6-aa15-104fa9d61339/26-6aae3dd3ae2c9.webp' /></p><p>அதேபோன்று, சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.</p><p>ஆட்சேபகரமான சமூக ஊடகக் கருத்து ஒன்றின் காரணமாக தண்டனை விதிக்கப்பட்ட, இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
ஐந்தாண்டு சிறைத் தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டதாக வெளியான செய்திகளை தொடர்ந்து அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.</p><p></p><h2>மன்னரிடம் அவசர வேண்டுகோள்</h2><p>சவுதி அரேபியாவில் இலங்கை இளைஞன் அனோஜன் சிவராசாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி இலங்கை முஸ்லிம் சமூகத்தினரிடையே கவலையினை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d40ef2c3-e28e-4a87-b287-a7b9de13e431/26-6aae3dd30183d.webp' /></p><p>இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து, அனோஜன் சிவராசா தொடர்பில் ஜனாதிபதியிடமும் சவுதி அரேபிய மன்னரிடமும் அவசர வேண்டுகோளை முன்வைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p>மேலும் சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நட்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இலங்கை இளைஞரை உயிருடன் மீட்டுத் தருமாறு அவரது தாயார் கண்ணீர்மல்க உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T08:09:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சர்வதேச பிடியாணை : வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/interpol-notice-issued-for-ex-min-basil-rajapaksa-1789802373"></link>
            <id>https://ibctamil.com/article/interpol-notice-issued-for-ex-min-basil-rajapaksa-1789802373</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக இன்டர்போல் நீல நிற அறிவிப்பை (Blue notice) வெளியிட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக இன்டர்போல் நீல நிற அறிவிப்பை (Blue notice) வெளியிட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p><p>மாத்தறையில் உள்ள 1.5 ஏக்கர் காணியை 60 மில்லியன் ரூபாய்க்கு கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கில் பல சந்தர்ப்பங்களில் நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதால், பசில் ராஜபக்சவை கைது செய்வதற்காக இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கோரிக்கைக்கு அமைய அவருக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>சட்ட மற்றும் சர்வதேச நடவடிக்கைகள்</h2><p>இலங்கையில் நடைபெற்று வரும் சட்ட நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நபர்களைக் கண்டறிந்து மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p>இந்தநிலையில், இலங்கையில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள அதேவேளை வெளிநாடுகளில் வசிக்கும் முன்னாள் அரசியல்வாதிகள் மற்றும் தேடப்படும் பிற நபர்களைக் கண்டறிய அரசாங்கம் சர்வதேச சட்ட நடைமுறைப்படுத்தல் வழிமுறைகளைப் பயன்படுத்தி வருகின்றதாக கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/956d4a5c-b0d7-4584-af9e-9a88438ecc19/26-6aae41e2a87e5.webp' /></p><p>பசில் ராஜபக்ச தொடர்பான குற்றவியல் விசாரணைகளின் ஒரு பகுதியாக அவரது அடையாளம், இருப்பிடம் அல்லது நடவடிக்கைகள் குறித்த தகவல்களை சர்வதேச சட்ட நடைமுறைப்படுத்தல் அதிகாரிகள் பெற்றுக்கொள்வதை சாத்தியமாக்கும் வகையில் அவருக்கு எதிராக 'நீல நிற அறிவிப்பு' ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.</p><p>பசில் ராஜபக்சவுக்கு எதிராக நீல நிற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் விசாரணைக்கு நபர்கள் தேவைப்படும்போது, ​​'நீல நிற அறிவிப்பு' மூலம் இன்டர்போலுக்கு அறிவிக்கிறோம். அவர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசிப்பதற்கான முகவரி தெரிந்திருந்தால், அந்த நாட்டிற்கு அவர் தேவைப்படுகிறார் என்பதை 'நீல நிற அறிவிப்பு' உணர்த்துகிறது என்று அமைச்சர் கூறினார்.</p><p> குற்றவியல் மற்றும் இலஞ்சம் தொடர்பான வழக்குகளில் தேடப்படும் நபர்கள், அவர்கள் முன்பு வகித்த அரசியல் பதவிகள் எதுவாக இருந்தாலும், அவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரத் தேவையான சட்ட மற்றும் சர்வதேச நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T08:07:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோட்டலுக்குள் நடந்த பயங்கரம்! விருந்தின் போது வன்முறை - இருவர் மீது துப்பாக்கி சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fight-in-hotel-2-injured-1789797754"></link>
            <id>https://tamilwin.com/article/fight-in-hotel-2-injured-1789797754</id>
            <summary type="text">கேகாலையிலுள்ள ஹோட்டலில் நடைபெற்ற விருந்தின் போது, ​​மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விருந்தில் இரு தரப்பின...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேகாலையிலுள்ள ஹோட்டலில் நடைபெற்ற விருந்தின் போது, ​​மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
</p><p>
குறித்த விருந்தில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு வாக்குவாதம் முற்றியுள்ளது.
</p><p>
இதனைத் தொடர்ந்து ஹோட்டல் ஊழியர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் காயமடைந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.</p><h2><b> 

துப்பாக்கி சூடு </b></h2><p>இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/253d40eb-fec8-429d-b8ae-1eda7ed25f83/26-6aae28425bd35.webp' /></p><p>ஹோட்டல் ஊழியருக்கு துப்பாக்கி சூடு நடத்தும் உரிமை எவ்வாறு வழங்கப்பட்டது என்பது தொடர்பில் மக்கள் மத்தியில் சர்ச்சை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-19T07:59:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[31 மெட்ரிக் டன் தங்கத்தை லண்டனிலிருந்து அமெரிக்காவிற்கு மாற்ற வெனிசுலா திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/venezuela-transfer-4-bn-dollar-gold-to-new-york-1789804375"></link>
            <id>https://news.lankasri.com/article/venezuela-transfer-4-bn-dollar-gold-to-new-york-1789804375</id>
            <summary type="text">Venezuela nears 4 Bn dollar gold transfer to New York: வெனிசுலா பிரித்தானியாவில் உள்ள அதன் தங்கத்தை அமெரிக்காவிற்கு மாற்றவுள்ளது.

31 மெட்ரிக் டன் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Venezuela nears 4 Bn dollar gold transfer to New York: வெனிசுலா பிரித்தானியாவில் உள்ள அதன் தங்கத்தை அமெரிக்காவிற்கு மாற்றவுள்ளது.
</p><h2>
31 மெட்ரிக் டன் தங்கம்</h2><p>வெனிசுலா அரசு மற்றும் எதிர்க்கட்சிகள், லண்டனில் உள்ள Bank of England-இல் சிக்கியிருந்த சுமார் 31 மெட்ரிக் டன் தங்கக் கையிருப்பை (மொத்த மதிப்பு 4 பில்லியன் டொலர்) நியூயார்க் நகரில் உள்ள Federal Reserve Bank-க்கு மாற்றும் ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நிலையில் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5a542c8-3047-4e24-98b2-73722867b79f/26-6aae3f58d9b40.webp' /></p><p>2019-இல், பிரித்தானிய அரசு நிக்கோலஸ் மதுரோவை சட்டபூர்வமான ஜனாதிபதியாக அங்கீகரிக்க மறுத்ததால், அந்த தங்கம் முடக்கப்பட்டது. </p><p>அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவைடோவை பல நாடுகள் ஆதரித்தன. இதனால், வெனிசுலா அரசுக்கு தங்கத்தை பயன்படுத்த முடியாமல் போனது.</p><p>
</p><p></p><p>இப்போது, இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரொட்ரிகஸ் தலைமையிலான அரசு மற்றும் எதிர்க்கட்சிகள், அரிதாக ஒற்றுமையை வெளிப்படுத்தி, தங்கத்தை மீட்கும் முயற்சியில் இணைந்துள்ளன. ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், வெனிசுலா அரசுக்கு தங்கத்தின் சட்ட உரிமை கிடைக்கும். </p><p>ஆனால், உடனடியாக அதை விற்க முடியாது.

இந்த தங்கம் அரசின் கடன்களுக்கு அடமானமாக பயன்படுத்தப்படலாம். குறிப்பாக, ஜூன் மாதம் வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்யும் பணிகளுக்கு நிதி திரட்டுவதில் உதவியாக இருக்கும். </p><p></p><p>உலக வங்கி மதிப்பீட்டின்படி, அந்த நிலநடுக்கம் 19.6 பில்லியன் டொலர் அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஒப்பந்தம், வெனிசுலா அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே அமெரிக்காவின் ஆதரவுடன் நடந்துவரும் பேச்சுவார்த்தைகளின் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.</p><p> மேலும், இது வெனிசுலா சர்வதேச நிதி நிறுவனங்களுடன் மீண்டும் உறவை மேம்படுத்தும் வழியைத் திறக்கும்.

இன்னும் சில சட்ட மற்றும் தொழில்நுட்ப விவரங்கள் தீர்க்கப்பட வேண்டியுள்ளன. </p><p>இருப்பினும், இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், வெனிசுலா தனது பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முக்கியமான வாய்ப்பை பெறும்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T07:49:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் கோடை முடிந்தபின்பும் தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/summer-like-temperatures-rise-to-france-in-weekend-1789803987"></link>
            <id>https://news.lankasri.com/article/summer-like-temperatures-rise-to-france-in-weekend-1789803987</id>
            <summary type="text">Summer like temperatures to return to France this weekend: பிரான்சில் இந்த வார இறுதியில், மீண்டும் கோடை போன்ற வெப்பநிலை நிலவ உள்ளதாக வானிலை ஆராய்ச்சி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Summer like temperatures to return to France this weekend: பிரான்சில் இந்த வார இறுதியில், மீண்டும் கோடை போன்ற வெப்பநிலை நிலவ உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
</p><p>

பிரான்சில், மீண்டும் வெப்பநிலை அதிகரித்து 30 டிகிரி செல்ஷியஸ் வரை எட்டக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.</p><h3>

மீண்டும் கோடை போன்ற வானிலை</h3><p>

பிரான்சில், கோடையில் வழக்கத்தை விட அதிக வெப்பம் நிலவிய நிலையில், வறட்சி தொடர்வதால் மக்களின் அவஸ்தையும் தொடர்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6a3482a-708c-4342-ac4a-433d317e83d3/26-6aae3dd50df78.webp' /></p><p>
பிரான்சின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வெப்பமாகவே இருக்கும் என்றும், நாட்டின் வட பகுதியில், மதியம் வெப்பநிலை 21 முதல் 26 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கலாம் என்றும், தென்பகுதியில் வெப்பநிலை 25 முதல் 30 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கலாம் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
</p><p>
இன்னும் தெற்கு நோக்கிச் சென்றால், கோடைகாலத்தில் இருந்த அளவுக்கு வெப்பநிலை அதிகரிக்கலாம், அதாவது, 28 முதல் 29 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
அதே நேரத்தில், தெற்கு ஆல்ப்ஸ் மற்றும் கோர்சிக்கா பகுதிகளைப் பொருத்தவரை, லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
மற்ற பகுதிகளைப் பொருத்தவரை, அடுத்தடுத்த நாட்களுக்கும் அதிக வெப்பமே தொடரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக நிலவிய கோடைக்குப் பிறகு, இன்னமும் மழை இல்லாத விடயம் கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T07:47:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்டத்தில் குதித்த வடமாகாண கால்நடை வைத்தியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-by-northern-province-veterinarians-1789803147"></link>
            <id>https://tamilwin.com/article/protest-by-northern-province-veterinarians-1789803147</id>
            <summary type="text">வடமாகாண அரச கால்நடை வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்புப்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.குறித்த போராட்டமானது நேற்றையதினம்(18.9.2026) ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடமாகாண அரச கால்நடை வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்புப்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>குறித்த போராட்டமானது நேற்றையதினம்(18.9.2026) ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் இடம்பெற்றது.</p><p>இதன்போது, பெண் வைத்தியரகள் தமக்கு வாகன வசதிகள் வழங்கப்படாமையால் தாம் பெரிதும் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டினர்.</p><h2>மருந்து பற்றாக்குறை</h2><p>அத்தோடு, இந்த விடயம் தொடர்பில் மாகாண பணிப்பாளருக்கு அறிவித்தும் எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1593132442609992%2F&show_text=false&width=267&t=0" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>மேலும், மருந்து பற்றாக்குறை காணப்படுவதால் பணியாளர்களுடன் முரண்படவேண்டிய நிலை ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>எனவே தமக்கு சிறந்த மருந்துப் பொறிமுறை வேண்டும் எனவும் வைத்தியர்கள் கோரிக்கை விடுத்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T07:44:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜீ தமிழுக்கு வரும் இரண்டு புதிய சீரியல்கள், என்ன சீரியல் எப்போது தெரியுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/zee-tamil-new-dubbing-serials-1789800167"></link>
            <id>https://cineulagam.com/article/zee-tamil-new-dubbing-serials-1789800167</id>
            <summary type="text">ஜீ தமிழ்ஜீ தமிழ் தற்போது சன் டிவி, விஜய் டிவி போல் சீரியல்களில் கலக்கி வருகிறது. கார்த்திகை தீபம், சந்தியாராகம், வீரா, வாகை சூடவா என பல சீரியல்கள் ரசி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜீ தமிழ்</h2><p>ஜீ தமிழ் தற்போது சன் டிவி, விஜய் டிவி போல் சீரியல்களில் கலக்கி வருகிறது. கார்த்திகை தீபம், சந்தியாராகம், வீரா, வாகை சூடவா என பல சீரியல்கள் ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் TRP-யிலும் கலக்கி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d916a79d-18e6-4844-8f0b-c18aadeb7c7b/26-6aae2ee9cca1a.webp' /></p><p></p><p> 

அந்த வகையில் தற்போது மேலும் இரண்டு சீரியல்களை <a href="https://www.youtube.com/shorts/TY4KprzGWYE" target="_blank">ஜீ தமிழ்</a> களமிறக்கவுள்ளது. இந்த இரண்டு சீரியல்களில் ஒன்று ஹிந்தி டப்பிங், மற்றொன்று தெலுங்கு டப்பிங் சீரியலாம்.</p><p></p><h3>புதிய சீரியல்கள்</h3><p> </p><p>

முதலில் ஹிந்தி டப்பிங் சீரியலான வசுதா வரும் திங்கள் முதல் மதியம் 3.30 மணிக்கு ஒளிபரப்ப உள்ளதாம். அதேபோல் தெலுங்கு டப்பிங் சீரியலான என்ன சொல்ல போகிறாய் திங்கள் முதல் மதியம் 4.30 மணிக்கு ஒளிபரப்ப உள்ளதாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0f81eb3-3708-4664-baa2-9d01fd7aea0e/26-6aae2eea835e1.webp' /></p><p></p><p>

கண்டிப்பாக இந்த இரண்டு சீரியல்களும் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9178b296-9739-40c6-be5b-decdb3b28314/26-6aae2eeb3f04a.webp' /></p>]]></content>
            <updated>2026-09-19T07:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[H-1B விசாவுக்கான கட்டணத்தை மேலும் ஓராண்டுக்கு நீடிக்க ட்ரம்ப் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-extends-h-1b-visa-fee-for-one-year-1789803117"></link>
            <id>https://canadamirror.com/article/trump-extends-h-1b-visa-fee-for-one-year-1789803117</id>
            <summary type="text">H-1B குடியேறாதோர் விசா திட்டத்தின் கீழ் அமெரிக்காவுக்கு வரும் குறிப்பிட்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கான 1 இலட்சம் அமெரிக்க டொலர் கட்டணத்தை மேலும் 12 மாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>H-1B குடியேறாதோர் விசா திட்டத்தின் கீழ் அமெரிக்காவுக்கு வரும் குறிப்பிட்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கான 1 இலட்சம் அமெரிக்க டொலர் கட்டணத்தை மேலும் 12 மாதங்களுக்கு நீடிக்கும் உத்தரவை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். </p><p>



புதிய உத்தரவு 2026 செப்டம்பர் 21 முதல் அமுலுக்கு வந்து, 2027 செப்டம்பர் 21 வரை நீடிக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/203fff20-97ed-4d9a-8b9e-91c8f26e0c75/26-6aae3a6f5456c.webp' /></p><p>



2025ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் கட்டண விதி, அமெரிக்காவுக்கு வெளியே இருக்கும் H-1B பணியாளர்களை உள்ளடக்கிய குறிப்பிட்ட புதிய மனுக்களுக்கு பொருந்துகின்றது. </p><p>



தேசிய நலன் கருதி விதிவிலக்குகளை வழங்கும் அதிகாரமும் உள்நாட்டு பாதுகாப்புத் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
</p><p>


H-1B திட்டத்தில் முறைகேடுகளைத் தடுப்பதும், அமெரிக்க தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாப்பதும் கட்டணத்தை நீட்டிப்பதற்கான காரணங்களாக ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. </p><p>



அதேவேளை, புதிய நிர்வாக உத்தரவின் கீழ் H-1B விண்ணப்பங்களை பரிசீலிக்கும்போது, தொடர்புடைய அமெரிக்க ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதா அல்லது எதிர்காலத்தில் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதா என்பதையும் அதிகாரிகள் கருத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>



வெள்ளை மாளிகையின் தகவலின்படி, 2025ஆம் ஆண்டு கட்டண விதி அமுலுக்கு வந்ததிலிருந்து 700க்கும் மேற்பட்ட H-1B மனுக்களுக்கு 1 இலட்சம் டொலர் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p>



H-1B விசா திட்டம் தொழில்நுட்பம் உள்ளிட்ட சிறப்புத் திறன் தேவைப்படும் துறைகளில் வெளிநாட்டு பணியாளர்களை தற்காலிகமாக அமெரிக்காவில் பணியாற்ற அனுமதிக்கும் திட்டமாகும்.</p><p> 



இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு இந்தத் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-19T07:32:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ராவிட் மகனின் அதிரடி ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய U19 அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/anvay-dravid-strikes-india-u19-beat-australia-u19-1789803034"></link>
            <id>https://news.lankasri.com/article/anvay-dravid-strikes-india-u19-beat-australia-u19-1789803034</id>
            <summary type="text">anvay dravid strikes india u19 beat australia u19: ட்ராவிட் மகனின் அதிரடி ஆட்டத்தில் இந்திய U19 அணி அவுஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது.  

ட்ராவிட் மகன...</summary>
            <content type="html"><![CDATA[<p>anvay dravid strikes india u19 beat australia u19: ட்ராவிட் மகனின் அதிரடி ஆட்டத்தில் இந்திய U19 அணி அவுஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது. </p><h3> 

ட்ராவிட் மகனின் அதிரடி ஆட்டம்</h3><p> 

3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக, அவுஸ்திரேலியா U19 அணி இந்தியாவிற்கு வருகை தந்துள்ளது.</p><p> 

நேற்று ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் தொடங்கிய அதிகாரப்பூர்வமற்ற முதல் ODI போட்டி, மழை காரணமாக 20 ஓவர்களாக குறைக்கப்பட்டது.</p><p> 

நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a610eae-4105-48a7-aa22-0081b3101d6e/26-6aae3a1c4275f.webp' /></p><p>

முதலில் துடுப்பாட்டம் ஆடிய இந்திய U19 அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்கள் குவித்துள்ளது. </p><p>

அதிகபட்சமாக, இந்திய அணி தரப்பில் யாஷ்பர்தன் சவுகான் 54 ஓட்டங்கள் குவித்தார்.&nbsp;</p><p></p><p>

இதே போல் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர்களான விரேந்திர சேவாக் மற்றும் ராகுல் ட்ராவிட்டின் மகன்கள் இடம் பெற்றிருந்தனர். </p><p>

சேவாக்கின் மகன் ஆர்யவிர் சேவாக், 26 பந்துகளில் 5 பவுண்டரிகள் உட்பட 28 ஓட்டங்கள் குவித்தார்.</p><p> 

ராகுல் ட்ராவிட்டின் மகன் அன்வே டிராவிட், தனது தந்தையை போல் நிதானமாக ஆடாமல் அதிரடியாக ஆடி, 18 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட 38 ஓட்டங்கள் குவித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/545ce93c-c86b-48df-b5ea-f47f7d4e520f/26-6aae3a1b8e8a1.webp' /></p><p>

183 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலியா U19 அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது. </p><p>

இதன் மூலம், இந்திய U19 அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bce0f21c-80a8-48a7-8c08-e4dce963425d/26-6aae3a1cea97d.webp' /></p><p>தனது மகன் விளையாடும் முதல் போட்டியை நேரில் காண ராஜ்கோட் நிரஞ்சன் ஷா மைதானத்திற்கு விரேந்திர சேவாக் வருகை தந்திருந்தார்.</p>]]></content>
            <updated>2026-09-19T07:30:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜன் விவகாரம் ; சவுதி மன்னரிடம் அவசர வேண்டுகோளை முன்வைக்க தயாராகும் ரிஷாட் எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rishad-mp-to-appeal-to-saudi-king-over-anojan-case-1789801957"></link>
            <id>https://jvpnews.com/article/rishad-mp-to-appeal-to-saudi-king-over-anojan-case-1789801957</id>
            <summary type="text">சவுதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களைத் தொடர்ந்து, அகில இலங்கை மக்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சவுதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களைத் தொடர்ந்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் நேற்று இரவு (18) கல்முனை, நற்பிட்டிமுனையில் உள்ள அனோஜன் சிவராசாவின் இல்லத்திற்கு விஜயம் செய்தார். </p><p style="text-align: justify; ">

இதன்போது அனோஜனின் தாயார் மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்த ரிஷாட் பதியுதீன், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், அனோஜனின் நிலைமை தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a79f4b2a-965c-461a-bb6c-dab5ffc50a90/26-6aae372cdfa54.webp' /></p><h2 style="text-align: justify; ">சவுதி அரேபியாவில் தண்டனை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இந்த சந்திப்பின்போது கருத்து தெரிவித்த ரிஷாட் பதியுதீன், அனோஜன் சிவராசாவுக்கு சவுதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி இலங்கை முஸ்லிம் சமூகத்தினரிடையேயும் கவலையினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். </p><p style="text-align: justify; ">

மேலும், இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து, அனோஜன் சிவராசா தொடர்பில் ஜனாதிபதியிடமும் சவுதி அரேபிய மன்னரிடமும் அவசர வேண்டுகோளை முன்வைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாகவும் இதன் போது ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அத்துடன் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையிடமும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, அனோஜனின் விடுதலை தொடர்பில் சவுதி அரேபிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.</p><p style="text-align: justify; "> 

இதன்போது, அனோஜனின் குடும்பத்தினர் முஸ்லிம் சமூகம் இந்த விடயத்தில் தங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக ரிஷாட் பதியுதீனிடம் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-19T07:18:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த மாதம் கச்சா எண்ணெய் இல்லை... ஐரோப்பிய சுத்திகரிப்பு நிலையங்களிடம் சவுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/saudis-european-refiners-no-crude-1789802313"></link>
            <id>https://news.lankasri.com/article/saudis-european-refiners-no-crude-1789802313</id>
            <summary type="text">no crude next month Saudis tell European refiners: அடுத்த மாதம் கச்சா எண்ணெய் இல்லை என ஐரோப்பிய சுத்திகரிப்பு ஆலைகளிடம் சவுதி அரேபியா தெரிவித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>no crude next month Saudis tell European refiners: அடுத்த மாதம் கச்சா எண்ணெய் இல்லை என ஐரோப்பிய சுத்திகரிப்பு ஆலைகளிடம் சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
</p><p>செங்கடலுக்குச் செல்லும் சவுதி அரேபியாவின் முக்கியக் குழாய்வழித் தாக்குதலுக்கு இலக்கானதைத் தொடர்ந்து, அடுத்த மாதம் தங்களுக்குக் கச்சா எண்ணெய் ஒதுக்கப்படாது என ஐரோப்பாவில் உள்ள குறைந்தபட்சம் இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு வாடிக்கையாளர்களுக்கு சவுதி அரம்கோ தெரிவித்துள்ளது.</p><h2>அனைத்து ஐரோப்பிய&nbsp;</h2><p>
</p><p>ஐரோப்பிய வாடிக்கையாளர்கள் பொதுவாக 'காலமுறை ஒப்பந்தங்கள்' (term contracts) மூலம் சவுதி அரேபிய கச்சா எண்ணெயைப் பெறுகின்றனர்; இது ஒவ்வொரு மாதமும் சீரான விநியோகத்தை உறுதி செய்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5a0cb81-2875-468a-8f74-b48be0cd9f8e/26-6aae374badbc1.webp' /></p><p> </p><p>ஆனால் அடுத்த மாதம் குறைந்தபட்சம் இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய் விநியோகிக்க வாய்ப்பில்லை என்பதை சவுதி அறிவித்துள்ளது. இந்த முடிவு அனைத்து ஐரோப்பிய வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>ட்ரோன் தாக்குதலுக்குள்ளானதைத் தொடர்ந்து, சவுதி அரேபியா கடந்த வாரம் தனது கிழக்கு-மேற்கு குழாய் வழித்தடத்தை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.</p><p> இந்த வழித்தடம் இன்னும் சில நாட்களில் பகுதியளவு மீண்டும் இயங்கத் தொடங்கி, ஆறு வாரங்களுக்குள் முழுமையாக மீண்டும் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p> </p><p>ஐரோப்பிய சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுவாக, குழாய் வழியாக செங்கடலுடன் இணைக்கப்பட்டுள்ள எகிப்தின் மத்திய தரைக்கடல் துறைமுகமான சிடி கெரிரிலிருந்து சவுதி கச்சா எண்ணெயை எடுத்துக்கொள்கின்றன.
</p><p>குழாய்வழி விநியோகம் நிறுத்தப்பட்டதால், அரம்கோவின் சில வாடிக்கையாளர்கள் மத்தியில் பீதி கொள்முதல் ஏற்பட்டது. மாற்று விநியோகங்களைப் பெறுவதற்கான போட்டியில், போலந்தின் ஓர்லென் எஸ்.ஏ. நிறுவனம் வெள்ளிக்கிழமை முதல் பத்துக்கும் மேற்பட்ட டெண்டர்களை வெளியிட்டுள்ளது. </p><p>OECD கூட்டமைப்பில் உள்ள ஐரோப்பிய நாடுகள், ஜூன் மாதத்தில் சவுதி அரேபியாவிலிருந்து ஒரு நாளைக்கு 577,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தன என்று சர்வதேச எரிசக்தி முகமை தனது மாதாந்திர எண்ணெய் சந்தை அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-19T07:15:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய் எனக்கு போன் பண்ணி பேசினார்!! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தாரா விஜய் சேதுபதி...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/vijay-sethupathi-end-to-controversy-vijay-called-1789802893"></link>
            <id>https://viduppu.com/article/vijay-sethupathi-end-to-controversy-vijay-called-1789802893</id>
            <summary type="text">விஜய் சேதுபதிநடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள பத்தா படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. அதே நாளில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத...</summary>
            <content type="html"><![CDATA[<h2>விஜய் சேதுபதி</h2><p>நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள பத்தா படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. அதே நாளில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள சிக்மா படமும் ரிலீஸாகவுள்ளது. 2 படங்களில் இசை வெளியீட்டு விழாவும் சமீபத்தில் ஒரே நாளில் நடந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab578958-7817-4a88-b6a3-384bdcfb8acb/26-6aae398f75131.webp' /></p><p> அப்போது விஜய் சேதுபதி, விஜய் பற்றி பேசுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. அதற்கு காரணம், விஜய் சேதுபதி பிக்பாஸ் 10 நிகழ்ச்சியில் லீடர்ஷிப் பற்றி பேசியது தான். மேடையில் விஜய் சேதுபதி இருக்கும் போது விஜய் போட்டோ ஸ்கிரீனில் போடப்பட்டது. </p><h2>விஜய் எனக்கு போன்</h2><p>அப்போது அவர், விஜய் எனக்கு ரொம்ப பிடிக்கும், சர்கார் படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்தபோது ஜேசன் சஞ்சய் பிறந்தநாளுக்கு நான் வாழ்த்து சொன்னேன். உடனே அவர் எனக்கு போன் செய்து, நீங்க வாழ்த்து சொன்னதை கேட்டு ஜேசன் ரொம்ப சந்தோஷப்பட்டான் என்று சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. </p><p>ரொம்ப நேரம் அன்னைக்கு பேசினோம். அதன்பின் நான் ஜேசனுக்கு போன் செய்து, எப்படி டா என்னை உனக்கு பிடிச்சிச்சு? உங்க வீட்டில் ஒரு பெரிய ஆளை வச்சிருக்க என்று கேட்டேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9568cd32-87c7-472b-acdb-da1b9040a0e2/26-6aae3990289e2.webp' /></p><p> </p><p>அதற்கு அவனும் சிரித்தபடியே பேசிக்கொண்டு இருந்தான். அதுபோல் இன்று ஜேசன் இயக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்குது, எனக்கு சந்தோஷம் தான். அப்படத்தை அவர் இயக்கிக் கொண்டிருக்கும் போது ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே போய் பார்க்க போயிருந்தேன். அங்கு ஒரு மணி நேரம் ஜேசனிடம் பேசிட்டு வந்தேன். </p><p>அந்த சமயத்தில் ஜனநாயகன் படத்தில் என் கூட இருக்கிற ஒருவர் நடித்துக் கொண்டிருந்தார். அவர் விஜய் சார் கிட்ட போய் சொல்லி இருக்கிறார். அப்போ அவர் இறுக்கமாக கட்டிப்பிடித்து இதை விஜய் சேதுபதிக்கு கொடுத்திடு என்று சொல்லி அனுப்பி இருக்ல்கிறார். இப்படித்தான் எங்களுக்குள்ள பழக்கம் இருக்கு என்று விஜய் சேதுபதி பேசியிருக்கிறார்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Vijay Sethupathi at <a href="https://x.com/hashtag/Baththa?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Baththa</a> audio launch - When I wished <a href="https://x.com/official_jsj?ref_src=twsrc%5Etfw">@official_jsj</a> on his birthday, <a href="https://x.com/hashtag/ThalapathyVijay?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ThalapathyVijay</a> called and said Thank You Nanba he was very happy. It was a big surprise for me, he himself is a big superstar , I even asked you have a big star in your home, how you…</p>&mdash; Ramesh Bala (@rameshlaus) <a href="https://x.com/rameshlaus/status/2101119036990099840?ref_src=twsrc%5Etfw">September 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-09-19T07:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[நானுஓயாவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இளம் பெண்ணொருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-person-killed-in-van-motorcycle-collision-1789801526"></link>
            <id>https://tamilwin.com/article/one-person-killed-in-van-motorcycle-collision-1789801526</id>
            <summary type="text">நானுஓயாவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இளம்
பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்தானது&amp;nbsp;இன்று (19.09.2026) காலை இடம்பெற்றுள்ளது.

லிந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>நானுஓயாவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இளம்
பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த விபத்தானது&nbsp;இன்று (19.09.2026) காலை இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p>
லிந்துலை பகுதியைச் சேர்ந்தவரும், நானுஓயாவில் வசித்து வந்தவருமான 34 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.</p><h2>சாரதி கைது</h2><p>
</p><p>
தொழில் நிமித்தம் இன்று காலை நானுஓயாவில் இருந்து தலவாக்கலை நோக்கி அவர்
மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து
நேர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/799477ef-95ae-4c91-8567-50473be76803/26-6aae34fb1a8b5.webp' /></p><p>
</p><p>
கட்டுநாயக்கவிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு நுவரெலியா நோக்கிப்
பயணித்த வேன் ஒன்று, மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ்விபத்து
சம்பவித்துள்ளது.
</p><p>
இவ்விபத்து தொடர்பில் 42 வயதான வான் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>சம்பவம் தொடர்பில் நானுஓயா
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T07:08:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் இந்தியருக்கு நடத்தப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சி ; 17 இடங்களில் கத்திக்குத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indian-in-us-shocked-by-incident-1789790355"></link>
            <id>https://canadamirror.com/article/indian-in-us-shocked-by-incident-1789790355</id>
            <summary type="text">அமெரிக்காவில் இந்தியாவைச் சோ்ந்த சீக்கியா் மீது வெள்ளை இனத்தைச் சோ்ந்த ஒருவா் 17 முறை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினாா். இதில் படுகாயமடைந்த அவா்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் இந்தியாவைச் சோ்ந்த சீக்கியா் மீது வெள்ளை இனத்தைச் சோ்ந்த ஒருவா் 17 முறை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினாா்.</p><p> இதில் படுகாயமடைந்த அவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e765c029-49d5-4690-a429-b8a24355a08f/26-6aae0895413c2.webp' /></p><p>

அமெரிக்காவில் வெள்ளை இனத்தவா் ஆப்பிரிக்க மற்றும் தெற்காசிய பிராந்தியத்தைச் சோ்ந்தவா்கள் மீது இனரீதியாகவும், நிறரீதியாகவும் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
</p><p>

பென்சில்வேனியா மாகாணத்தில நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து அங்குள்ள ஊடகங்களில் வெளியான செய்தியில் பென்சில்வேனியாவின் தெற்கு வியோமிங் பகுதியில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.</p><p> தாக்குதலுக்கு உள்ளானவா் இந்தியாவைச் சோ்ந்த சீக்கியா். லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்த அவரை வழிமறித்த ஆண்ட்ரூ கிரிஸ் பஸ்டாக் என்ற நபா் கத்தியால் 17 இடங்களில் அவரைக் குத்தியுள்ளாா். </p><p>&nbsp;இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார் அங்கு விரைந்து தாக்குதலுக்கு உள்ளானரை மீட்டு விமான ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
</p><p>
தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய ஆண்ட்ரூ கிரிஸ், அப்பகுதி மக்கள் உதவியுடன் கைது செய்யப்பட்டாா். அவா் மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யபபட்டுள்ளன.</p><p>தெற்காசியாவைச் சோ்ந்தவா்கள் மீதான இனரீதியான வெறுப்புணா்வு அடிப்படையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.</p>]]></content>
            <updated>2026-09-19T07:01:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மண்டாடி பட நடிகை மஹிமா நம்பியாரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/mahima-nambiar-latest-clicks-1789798677"></link>
            <id>https://cineulagam.com/article/mahima-nambiar-latest-clicks-1789798677</id>
            <summary type="text">தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மஹிமா நம்பியார். இவர் நடிப்பில் சமீபத்தில் மண்டாடி திரைப்படம் வெளியான மாபெரும் வெற்றி பெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மஹிமா நம்பியார். இவர் நடிப்பில் சமீபத்தில் மண்டாடி திரைப்படம் வெளியான மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 82 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ள நடிகை மஹிமா நம்பியார் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிடுவார். அந்த வகையில் தற்போது சிவப்பு நிற ஆடையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T07:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலை இடம்பெற்ற கொடூரம்! தாயை காப்பாற்ற போராடிய மகன் - பலியான சகோதரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/son-s-brother-dies-while-trying-to-save-mother-1789796227"></link>
            <id>https://tamilwin.com/article/son-s-brother-dies-while-trying-to-save-mother-1789796227</id>
            <summary type="text">அங்குருவடோட்ட - பெத்திகமுவ பகுதியில் இன்று அதிகாலை (19) நடந்த கூர்மையான தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் ஹல்தோட்ட பகுதியை சேர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அங்குருவடோட்ட - பெத்திகமுவ பகுதியில் இன்று அதிகாலை (19) நடந்த கூர்மையான தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்த சம்பவத்தில் ஹல்தோட்ட பகுதியை சேர்ந்த 37 வயது நபர் உயிரிழந்துள்ளார்.</p><p>

சம்பவத்தில் உயிரிழந்தவர், போதைக்கு அடிமையானவர் என்றும், வீட்டில் அடிக்கடி சண்டைகளை ஏற்படுத்துபவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><h2>பொலிஸார் மேலதிக விசாரணை</h2><p>

நேற்று இரவு (18) உயிரிழந்தவர் தனது தாயை தாக்கியபோது, ​​தாயை காப்பாற்றும் முயற்சியில் அவரது 35 வயது தம்பி அரிவாளால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25c1553a-5832-4688-8462-4f9166a05c9b/26-6aae2c6c69140.webp' /></p><p>
</p><p>
சம்பவத்தில் உயிரிழந்தவரால் தாக்கப்பட்ட தாய், காயங்களுடன் ஹொரன மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த நபர் இதற்கு முன்னர் தனது தந்தையை தாக்கி காயப்படுத்தியதாகவும், தந்தையும் ஹொரன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகின்றது.</p><p>

இந்த சம்பவம் தொடர்பாக 35 வயது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T06:57:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொழிலுக்கு சென்ற இளம் பெண்ணின் உயிரை பறித்த சம்பவம் ; பொலிஸாரின் பிடியில் ஒருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incident-claims-young-woman-s-life-1789800981"></link>
            <id>https://jvpnews.com/article/incident-claims-young-woman-s-life-1789800981</id>
            <summary type="text">நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று சனிக்கிழமை (19) இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.


தொழில் நிமித்தம் நானுஓயாவி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று சனிக்கிழமை (19) இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; ">


தொழில் நிமித்தம் நானுஓயாவிலிருந்து தலவாக்கலை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே இவ் விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbb10bd0-899d-4092-9124-77d0f2a7828b/26-6aae3216f322b.webp' /></p><h2 style="text-align: justify; ">பிரேத பரிசோதனை</h2><p>
</p><p style="text-align: justify; ">
லிந்துலை பகுதியைச் சேர்ந்தவரும், நானுஓயாவில் வசித்து வந்தவருமான 34 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
கட்டுநாயக்கவிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு நுவரெலியா நோக்கிப் பயணித்த வேன் ஒன்று, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ் விபத்து நேர்ந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
விபத்து தொடர்பில் 42 வயதான வேன் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-19T06:56:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். கந்தர்மட சந்தியில் விபத்து: ஒருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-at-jaffna-kandarmadam-one-injured-1789800559"></link>
            <id>https://tamilwin.com/article/accident-at-jaffna-kandarmadam-one-injured-1789800559</id>
            <summary type="text">யாழ்ப்பாணம்- கந்தர்மட பகுதியில் இடம்பெற்ற வீதி
விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.குறித்த விபத்தானது இன்றையதினம்(19.9.2026) இடம்பெற்றுள்ளது.

பலா...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம்- கந்தர்மட பகுதியில் இடம்பெற்ற வீதி
விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.</p><p>குறித்த விபத்தானது இன்றையதினம்(19.9.2026) இடம்பெற்றுள்ளது.</p><p>

பலாலி வீதியூடாக யாழ்ப்பாண நகர் பகுதியில் இருந்து பயணித்த மோட்டார்
சைக்கிளும் ஓட்டுமட வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளும் கந்தர்மட சந்தியில்
மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>
</p><p>
அதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் , சிகிச்சைக்காக யாழ்.போதனா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/243a3740-23ab-4196-bd57-e78ed7fdc163/26-6aae31448c0b0.webp' /></p><p>விபத்து தொடர்பில் யாழ்ப்பாண
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T06:53:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏர்போர்ட் மலேரியா: ஜேர்மனியில் கவனம் ஈர்த்துவரும் ஒரு விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/outbreak-of-malaria-at-frankfurt-airport-1789800608"></link>
            <id>https://news.lankasri.com/article/outbreak-of-malaria-at-frankfurt-airport-1789800608</id>
            <summary type="text">An outbreak of malaria at Frankfurt Airport this summer has raised alarm: ஜேர்மனியின் ஃப்ராங்பர்ட் விமான நிலையத்தில் மலேரியா தொற்று பரவும் விடயம் கவனம...</summary>
            <content type="html"><![CDATA[<p>An outbreak of malaria at Frankfurt Airport this summer has raised alarm: ஜேர்மனியின் ஃப்ராங்பர்ட் விமான நிலையத்தில் மலேரியா தொற்று பரவும் விடயம் கவனம் ஈர்த்துள்ளது.
</p><p>

ஜேர்மனியின் ஃப்ராங்பர்ட் விமான நிலையத்தில் ஏர்போர்ட் மலேரியா என்னும் விடயம் கவனம் ஈர்த்துவருகிறது.
</p><h3>
ஏர்போர்ட் மலேரியா</h3><p>

ஜூலை மாதம் முதல், மத்திய ஜேர்மனியிலுள்ள ஃப்ராங்பர்ட் விமான நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பரவும் மலேரியா தொற்றால் எட்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bc11f04-9674-4930-8b3d-e40378417d8e/26-6aae30a1d4ebf.webp' /></p><p>
அதிர்ச்சியளிக்கும் விடயம் என்னவென்றால், அவர்களில் மூன்று பேர் உயிரிழந்துவிட்டார்கள்!
</p><p>
இன்னொரு குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் ஃப்ராங்பர்ட் விமான நிலைய ஊழியர்கள்.&nbsp;</p><p></p><p>
இந்த தொற்று பரவல், ஏர்போர்ட் மலேரியா என்னும் நிகழ்வால் ஏற்படுவதாக ஃப்ராங்பர்ட் சுகாதாரத்துறை நம்புகிறது.</p><p>

அதாவது, மலேரியா தொற்று பரவல் அதிகம் உள்ள ஒரு நாட்டுக்குச் செல்லும் விமானங்களிலிருக்கும் பயணிகளின் உடைமைகளில் அமர்ந்துகொள்ளும் மலேரியா கிருமிகளைக் கொண்ட கொசுக்கள், அந்த நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு பரவி, அங்குள்ளவர்களைக் கடிப்பதால் இந்த மலேரியா தொற்று அங்குள்ளவர்களுக்கு பரவுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffbf3f1e-fa05-4fac-87a0-85e060ed51cd/26-6aae30a287979.webp' /></p><p>
ஃப்ராங்பர்ட்டில் பரவும் மலேரியா தொற்று, Plasmodium falciparum என்னும் கிருமி மூலம் பரவும் அபாயகரமான, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும், Malaria tropica என்னும் ஒருவகை தொற்று ஆகும்.
</p><p>
இந்நிலையில், ஃப்ராங்பர்ட் விமான நிலையத்துக்கு அருகில் வாழும் மக்கள் யாருக்காவது மலேரியா தொற்றுக்கான அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக மருத்துவரை அணூகுமாறு ஃப்ராங்பர்ட் சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளார்கள்.</p>]]></content>
            <updated>2026-09-19T06:52:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[45 பந்தில் 102 ஓட்டங்கள்! ருத்ரதாண்டவமாடிய ஷிம்ரான் ஹெட்மையர்..கடைசி ஓவரில் தோல்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hetmyer-smash-102-runs-vs-jamaica-kingsmen-1789800844"></link>
            <id>https://news.lankasri.com/article/hetmyer-smash-102-runs-vs-jamaica-kingsmen-1789800844</id>
            <summary type="text">Shimron Hetmyer 102 runs in 45 balls: CPL டி20 போட்டியில் ஷிம்ரான் ஹெட்மையர் 45 பந்துகளில் 102 ஓட்டங்கள் விளாசினார்.

ஜமைக்கா கிங்ஸ்மென் அணிக்கு எதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Shimron Hetmyer 102 runs in 45 balls: CPL டி20 போட்டியில் ஷிம்ரான் ஹெட்மையர் 45 பந்துகளில் 102 ஓட்டங்கள் விளாசினார்.</p><p>

ஜமைக்கா கிங்ஸ்மென் அணிக்கு எதிரான CPL டி20 போட்டியில், கயானா அணி வீரர் ஷிம்ரான் ஹெட்மையர் 45 பந்துகளில் 102 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;</p><h2>ருத்ரதாண்டவம் ஆடிய ஷிம்ரான்&nbsp;</h2><p>கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த CPL டி20 போட்டியில், கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் ஜமைக்கா கிங்ஸ்மென் அணிகள் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c37ca3a2-8740-444c-94ca-1d69abb3862d/26-6aae318f61bf6.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய கயானா அணி 206 ஓட்டங்கள் குவித்தது. சிக்ஸர்களை பறக்கவிட்டு ருத்ரதாண்டவம் ஆடிய ஷிம்ரான் ஹெட்மையர் 102 (45) ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 8 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடங்கும்.</p><p>ஷாய் ஹோப் 33 பந்துகளில் 40 ஓட்டங்களும், சாம்ப்ஸன் 17 பந்துகளில் 29 ஓட்டங்களும் விளாசினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7355f7e9-a16e-40a7-8f23-2eae5a8ab70a/26-6aae347a00fef.webp' /></p><h2>ஜமைக்கா வெற்றி&nbsp;</h2><p>ஹசன் கான், ஆந்த்ரே ரஸல் மற்றும் ஹுனைன் ஷா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
</p><p>
பின்னர் ஆடிய ஜமைக்கா கிங்ஸ்மென் 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
</p><p>
கேசி கார்ட்டி 40 பந்துகளில் 56 ஓட்டங்களும், மாஸ் சதாகத் 41 (17) ஓட்டங்களும், ரோவ்மன் பௌல் ஆட்டமிழக்காமல் 17 பந்துகளில் 40 ஓட்டங்களும் (4 சிக்ஸர், 2 பவுண்டரிகள்) விளாசினர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8bf00c4-c846-4ab9-9394-eb2b86d57fbd/26-6aae347ae8a86.webp' /></p>]]></content>
            <updated>2026-09-19T06:52:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இடம்பெற்ற விபத்து ; ஒருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-accident-leaves-one-seriously-injured-1789800185"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-accident-leaves-one-seriously-injured-1789800185</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் கந்தர்மட பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணம் கந்தர்மட பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

பலாலி வீதியூடாக யாழ்ப்பாண நகர் பகுதியில் இருந்து பயணித்த மோட்டார் சைக்கிளும் ஓட்டுமட வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளும் கந்தர்மட சந்தியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82c42e3d-8925-4c6e-b002-daa73ef5f9c6/26-6aae2efaaa5f3.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-19T06:43:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை அதிபர்களுக்கு பிரதமர் வழங்கியுள்ள கடுமையான அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/harini-rules-out-smart-boards-for-every-classroom-1789798797"></link>
            <id>https://tamilwin.com/article/harini-rules-out-smart-boards-for-every-classroom-1789798797</id>
            <summary type="text">ஒவ்வொரு வகுப்பறைக்கும் &#039;ஸ்மார்ட் போர்டுகள்&#039; (smart boards) வழங்கப்போவதில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார். 

நிகழ்வொன்றில் வைத்து அவர் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒவ்வொரு வகுப்பறைக்கும் 'ஸ்மார்ட் போர்டுகள்' (smart boards) வழங்கப்போவதில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார். </p><p>

நிகழ்வொன்றில் வைத்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கல்வியின் அனைத்து நிலைகளிலும் 'ஸ்மார்ட் போர்டுகள்' (smart boards) அவசியமில்லை என்பதால், ஒவ்வொரு வகுப்பறைக்கும் அவற்றை வழங்கப் போவதில்லை. </p><p>

குழந்தைகளுக்குப் பொருத்தமான வயதிலேயே தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். ஸ்மார்ட் போர்டுகளை வாங்குவதற்காக பெற்றோரிடமிருந்து பணம் வசூலிக்க வேண்டாம் என பாடசாலை அதிபர்களுக்கு அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.</p><h2>பணம் வசூலிக்க வேண்டாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90d876a3-265b-4568-aac7-3aed3e22a77c/26-6aae2e5136c13.webp' /></p><p>
</p><p>
அத்துடன் பெற்றோரிடமிருந்து பணம் வசூலிக்க வேண்டாம் என்று தயவுசெய்து அதிபர்களிடம் கூறுங்கள். தேவையற்ற முறையில் இத்தகைய சாதனங்களைப் பயன்படுத்துவது பல்வேறு சிக்கல்களை உருவாக்கக்கூடும். இது அடிமையாகும் நிலைக்குக்கூட வழிவகுக்கலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>
மேலும் தேவை மற்றும் வயதுக்கு ஏற்ற தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், ஒரு திட்டமிட்ட முறையிலேயே ஸ்மார்ட் போர்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T06:41:48+00:00</updated>
        </entry>
    </feed>
