<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-04T07:45:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் காவலில் உதயநிதி ஸ்டாலின்..பரபரப்புக்கு மத்தியில் அவசரமாக புறப்பட்ட முன்னாள் தமிழக முதல்வர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/udhayanidhi-stalin-arrested-mk-stalin-tvk-office-1785828059"></link>
            <id>https://tamilwin.com/article/udhayanidhi-stalin-arrested-mk-stalin-tvk-office-1785828059</id>
            <summary type="text">தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.&amp;nbsp;இந்நிலையில், திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மற்றும்&nbsp;உதயநிதி ஸ்டாலினின் தந்தையான மு.க ஸ்டாலின் அவசரமாக புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><h2>பரபரப்பான சூழ்நிலை</h2><p> உதயநிதி ஸ்டாலின், தஞ்சாவூரில் காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தின் போது, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தததாக முறைப்பாடளிக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5cce0a6-7254-4215-af0b-48d54ec32561/26-6a719725db42b.webp' /></p><p>இதற்கு அமைய அவர் இன்று தமிழ்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>ஸ்டாலினின் கைதை தொடர்ந்து தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகின்றது.&nbsp;</p><p>இதற்கு மத்தியில், முன்னாள் முதலமைச்சர்&nbsp;ஸ்டாலின்&nbsp;திமுக அலுவலகத்திற்கு சென்றுள்ளார். தனது மகனின் கைது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அவர் இதுவரை எவ்வித தகவலையும் வெளியிடவில்லை என இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T07:40:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலி..! தமிழகம் முழுவதும் பரவிய பெரும் பரபரப்பு - களமிறக்கப்பட்டுள்ள அதிரடிப்படையினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/udhayanidhi-stalins-arrest-dmk-protest-tamil-nadu-1785826627"></link>
            <id>https://tamilwin.com/article/udhayanidhi-stalins-arrest-dmk-protest-tamil-nadu-1785826627</id>
            <summary type="text">&amp;nbsp;தமிழக எதிர்க்கட்சித்தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தமிழக எதிர்க்கட்சித்தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
காவிரி விவகாரம் தொடர்பாக த.வெ.க. அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>&nbsp;</p><h2>பல்வேறு பகுதிகளில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்</h2><p>
</p><p>
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் உதயநிதி மீது த.வெ.க. மகளிரணியினர், தஞ்சாவூர் பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாடில் அவர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b9704d7-f715-4329-854a-b42066832c20/26-6a71947f611db.webp' />&nbsp;</p><p>

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.</p><p>அத்துடன், சாலை மறியல் போராட்டத்திலும், கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இதனால், பல்வேறு பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன் காரணமாக பதற்றத்தினை கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p>

இதன் காரணமாக உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன் பெருமளவு ஆதரவாளர்கள் குவிந்துள்ளதுடன், பெரும் பரபரப்பு நிலவுகின்றது.&nbsp; &nbsp;</p><p> </p><p>இந்த நிலையில் உதயநிதியின் நீலாங்கரை வீட்டை சுற்றி காலை முதல் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், திமுகவினர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T07:34:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷித - கரன்னாகொடவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/yoshitha-karannagoda-ordered-to-appear-colombo-hc-1785826166"></link>
            <id>https://ibctamil.com/article/yoshitha-karannagoda-ordered-to-appear-colombo-hc-1785826166</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்குக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்குக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.</p><p>அதன்படி,&nbsp;அழைப்பாணை கிடைக்கப் பெற்றதும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>குறித்த சந்தேகநபர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு இன்று (04) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.</p><p></p><h2>இலஞ்ச ஊழல் ஆணைக்குழு</h2><p> </p><p>இதன்போது, சந்தேகநபர்களான யோஷித ராஜபக்ச மற்றும் வசந்த கரன்னாகொட ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df09754b-2374-40ab-aa78-0c458cb654e4/26-6a7193717f39f.webp' /></p><p> 

இதனைத் தொடர்ந்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்திற் கொண்ட நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.</p><p>மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று (03) 8 குற்றச்சாட்டுகளைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.</p><p></p><h2>பிரித்தானிய அரச கடற்படை கல்லூரி</h2><p>
</p><p>
வசந்த கரன்னாகொட கடற்படைத் தளபதியாகப் பணியாற்றிய 2006 செப்டம்பர் 1 முதல் 2007 ஜூன் 8 வரையிலான காலப்பகுதியில், சட்டவிரோதமான முறையில் யோஷித ராஜபக்ச பிரித்தானியாவில் உள்ள ' பிரித்தானிய அரச கடற்படை கல்லூரியில்' பயிற்சி பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, அரசுக்குப் பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb0b0234-a715-46d8-814b-104ae006ea67/26-6a7194173b165.webp' /></p><p>

குறித்த பயிற்சியில் பங்குபற்றுவதற்கான தகுதிகள் இல்லாத நிலையிலும் நடைமுறைகளை மீறி யோஷித ராஜபக்ச முறையற்ற விதத்தில் அரச நிதியிலான இந்த சலுகையைப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T07:32:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுபமா பரமேஸ்வரனின் ரீசெண்ட் ரீல்ஸ் வீடியோ..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/anupama-parameswaran-dc-movie-reels-video-post-1785829400"></link>
            <id>https://viduppu.com/article/anupama-parameswaran-dc-movie-reels-video-post-1785829400</id>
            <summary type="text">அனுபமா பரமேஸ்வரன்தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் படங்கள் நடித்து மக்களின் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

கடந்த 201...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அனுபமா பரமேஸ்வரன்</h2><p>தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் படங்கள் நடித்து மக்களின் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

கடந்த 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் காதல் படமான பிரேமம் மூலம் அறிமுகமானார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20d24ad5-c6a9-45f1-b64f-83b9f603927c/26-6a71981aa8ed8.webp' /></p><p> </p><p>அப்படத்தை தொடர்ந்து தமிழ் பக்கம் வந்தவர் தனுஷின் கொடி படம் மூலம் அறிமுகமானார்.

அடுத்தடுத்து படங்கள் நடித்தவர், கடைசியாக துருவ் விக்ரமுக்கு ஜோடியாக பைசன் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். </p><p>இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா, போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது, DC பட பாடலுக்கு ஆட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbmxIIkqdrR/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbmxIIkqdrR/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DbmxIIkqdrR/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Anupama Parameswaran (@anupamaparameswaran96)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-04T07:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாளவிகா மோகனன் பிறந்தநாள்: சொத்து மதிப்பு, சம்பளம், பிரம்மாண்ட வீடு பற்றிய முழு விவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-malavika-mohanan-birthday-and-net-worth-1785828384"></link>
            <id>https://cineulagam.com/article/actress-malavika-mohanan-birthday-and-net-worth-1785828384</id>
            <summary type="text">பான்-இந்தியன் ஸ்டாராக வலம் வரும் மாளவிகா மோகனனின் பிறந்தநாளான இன்று, அவருடைய சொத்து மதிப்பு, சம்பளம், வீடு பற்றிய விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பான்-இந்தியன் ஸ்டாராக வலம் வரும் மாளவிகா மோகனனின் பிறந்தநாளான இன்று, அவருடைய சொத்து மதிப்பு, சம்பளம், வீடு பற்றிய விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
</p><h2>
மாளவிகா மோகனன்
</h2><p>
பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஓர் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதன்பின் மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின் தங்கலான் திரைப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவரிடமும் கவனத்தை பெற்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a40e647-83bc-4ae6-9f48-a60c21c8d2ab/26-6a719425aedd5.webp' /></p><p>அடுத்ததாக இவர் நடிப்பில் சர்தார் 2 திரைப்படம் வெளியாகவுள்ளது. இயக்குநர் தியராஜா குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் பிட் பாக்கெட் திரைப்படத்தில் மாளவிகா நடித்து வருகிறார். இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
</p><h2>
பிறந்தநாள்
</h2><p>
முன்னணி நடிகையாக வலம் வரும் மாளவிகா மோகனனுக்கு இன்று பிறந்தநாள். தனது 33-வது பிறந்தநாளை கொண்டாடும் மாளவிகாவிற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fa2bce9-f08c-4fde-aea2-2bbd49c6c816/26-6a71942445b58.webp' /></p><p>இந்நிலையில், நடிகை மாளவிகா மோகனனின் சொத்து மதிப்பு, சம்பளம், வீடு பற்றிய விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
</p><h2>
சொத்து மதிப்பு
</h2><p>
நடிகை மாளவிகா மோகனன் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 2 கோடி முதல் ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இவரிடம் BMW, Audi Q7 மற்றும் Mercedes-Benz ML 350 போன்ற சொகுசு கார்கள் உள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1285fc17-7102-4b66-ba91-6339a4dbb091/26-6a7194238f16d.webp' /></p><p>மும்பை, ஜூஹூவில் கடல் நோக்கிய அடுக்குமாடி குடியிருப்பு மாளவிகா மோகனனுக்கு சொந்தமாக உள்ளது. இந்த வீட்டின் மதிப்பு ரூ. 7 கோடி முதல் ரூ. 10 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdf24f65-f40f-4113-ac79-01e272afaa00/26-6a71942501579.webp' /></p><p>மொத்தத்தில் இவருடைய சொத்து மதிப்பு ரூ. 16 கோடி முதல் ரூ. 25 கோடி வரை என தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-04T07:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக வங்கி பிரதிநிதிகளுடன் கிழக்கு மாகாண ஆளுநர் கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eastern-governor-world-bank-representatives-1785827163"></link>
            <id>https://tamilwin.com/article/eastern-governor-world-bank-representatives-1785827163</id>
            <summary type="text">கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவுக்கும், உலக
வங்கியின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையே நேற்று (03) திருகோணமலையில் உள்ள
ஆளுநர் செயலகத்தில் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவுக்கும், உலக
வங்கியின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையே நேற்று (03) திருகோணமலையில் உள்ள
ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது. </p><p>இதில் கிழக்கு மாகாணத்தில் உள்ள அபிவிருத்தி
வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடினர்.
</p><p></p><h2>ஒப்பந்தங்கள் நிறைவடைந்த பின்</h2><p>குறித்த கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான்
அக்மீமன, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் கே.குணநாதன் உட்பட மாகாண
அமைச்சுக்களின் செயலாளர்கள், துறைசார் உயரதிகாரிகள் என பலரும் கலந்து
கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c1f452d-87bc-4a5b-9811-22523a84e190/26-6a7193bcf2df7.webp' /></p><p>உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டத்தின் கீழ், வடக்கு
மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்திப் பணிகளுக்காக 100 மில்லியன்
அமெரிக்க டொலர் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது</p><p>மேலும், தேவையான
ஒப்புதல்கள் மற்றும் ஒப்பந்தங்கள் நிறைவடைந்த பிறகு, இத்திட்டம் 2027ஆம்
ஆண்டில் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T07:25:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெர்வின் சில்வாவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை; நடிகை ரீத்து ஆகர்ஷா எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/i-have-no-connection-mervyn-silva-srithu-akarsha-1785819068"></link>
            <id>https://jvpnews.com/article/i-have-no-connection-mervyn-silva-srithu-akarsha-1785819068</id>
            <summary type="text">&amp;nbsp; முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வாவுக்கு எதிராக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தொடரப்பட்டுள்ள வழக்குடன் தொடர்புடைய DFCC வங்கி கணக்கு ஒன்றில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வாவுக்கு எதிராக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தொடரப்பட்டுள்ள வழக்குடன் தொடர்புடைய DFCC வங்கி கணக்கு ஒன்றில் பணம் வைப்பு செய்யப்பட்ட விவகாரத்தில், தனது பெயரைத் தொடர்புபடுத்தி வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என பிரபல சிங்கள நடிகை ரீத்து ஆகர்ஷா பகிரங்க அறிக்கை&nbsp; வெளியிட்டுள்ளார்.
</p><p>
குறித்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் 'ரீத்து ஆகர்ஷா' என்ற பெயரில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள DFCC வங்கிக் கணக்கை தாம் ஒருபோதும் பராமரிக்கவில்லை என்றும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள கணக்கு எண் தன்னுடையது அல்ல என்றும் நடிகை ரீத்து ஆகர்ஷா சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c322786-6899-4cf4-bdcf-761c78d4e9e4/26-6a716fbe0a3ab.webp' /></p><h2> சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்</h2><p>
</p><p>
தனது பெயரில் அத்தகைய வங்கிக் கணக்கு எதுவுமே குறித்த வங்கியில் இல்லை என்பதை உறுதிப்படுத்தி, DFCC வங்கியினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றையும் நடிகை ரீத்து ஆகர்ஷா ஊடகங்களுக்கு சமர்ப்பித்துள்ளார்.
</p><p>
2010 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி முதல் 2012 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் முன்னாள் அமைச்சர் 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சட்டவிரோத சொத்துக்களை சேர்த்ததாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
 இந்த நிலையில், அக் காலப்பகுதியில் தாம் பாடசாலை மாணவியாகக் கல்வி கற்றுக்கொண்டிருந்ததாக நடிகை ரீத்து ஆகர்ஷா குறிப்பிட்டுள்ளார்.</p><p>

தனது நற்பெயருக்கு பெரும் களங்கம் ஏற்படுத்தியமை தொடர்பில் பொய்ப் தகவல்களைப் பரப்பிய ஊடக நிறுவனங்கள், சமூக ஊடகக் கணக்குகள் மற்றும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர்,</p><p></p><p> இனிவரும் காலங்களில் இவ்வாறான பொய்களையோ, திருத்தப்பட்ட அல்லது தவறாக வழிநடத்தும் செய்திகளையோ வெளியிடுபவர்கள் அல்லது பகிர்ந்துகொள்பவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நடிகை ரீத்து ஆகர்ஷா எச்சரித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-04T07:25:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கழிவுகளால் நிரம்பும் வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை பிரதேசம் - ஆளுநருக்கு பறந்த கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/urging-action-regarding-garbage-in-keerimalai-area-1785827662"></link>
            <id>https://ibctamil.com/article/urging-action-regarding-garbage-in-keerimalai-area-1785827662</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வலி வடக்கு கீரிமலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் குப்பைகள்
கொட்டப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரி வலி. வடக்கின் பிரதேச சபை
உற...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வலி வடக்கு கீரிமலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் குப்பைகள்
கொட்டப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரி வலி. வடக்கின் பிரதேச சபை
உறுப்பினர்கள் வடமாகாண ஆளுநரிடம் மகஜர் கையளித்துள்ளனர்.</p><p>

வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு இன்றைய தினம் திங்கட்கிழமை சென்ற வலி. வடக்கு
பிரதேச சபையின் உறுப்பினர்கள் வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனை நேரில் சந்தித்து,
மகஜரை கையளித்துள்ளனர்
</p><p>
வலி. வடக்கு பிரதேச சபையில் 38 உறுப்பினர்களில் 26 உறுப்பினர்கள் குறித்த
மகஜரில் கையளித்துள்ளனர்.</p><p></p><p>
</p><h2>அனுமதி வழங்குவதென தீன்மானம்&nbsp;</h2><p>
வலி வடக்கு பிரதேச சபை அமர்வில் நடைபெற்ற மாதாந்த அமர்வில், கீரிமலை
சுடலைக்கும் கொங்கிறீற் அணைக்கும் இடைப்பட்ட கடலரிப்பு ஏற்பட்ட தாழ்வான
பிரதேசத்தில் உக்கிய மண்ணினை கொட்டுவதற்கு வலி தெற்கு பிரதேச சபைக்கு அனுமதி
வழங்குவதென தீன்மானம் எடுக்கப்பட்டு அனுமதியும் வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c4f1ae8-eadb-4ba1-a4c8-683397decad3/26-6a7193335f7cd.webp' /></p><p>

மாறாக, தற்போது வலி தெற்கு பிரதேச சபையினரால் மேற்குறிப்பிட்ட பகுதி அல்லாது
வேறொரு பகுதியில் உக்காத பொருட்கள் இலத்திரனியல் பொருட்கள், கண்ணாடிப்
பொருட்கள், சிகை அலங்கரிப்பு நிலைய கழிவுகள், நீர் தேங்கும் தகர டப்பாக்கள்
என்பன அனுமதிக்குப் புறம்பான முறையற்ற விதத்தில் தொடர்ச்சியான முறையில்
கொட்டப்பட்டு வருகின்றது.
</p><p>
இது தொடர்பாக பல தடவைகள் வலி வடக்கு பிரதேச பிரதேச சபைத் தவிசாளருக்கு
அறிவித்தும் ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.</p><p></p><p>
</p><h2>புனித இடங்கள்</h2><p>
அத்துடன், தற்போது குப்பை கொட்டப்பட்டு வருகினற இடமானது குடியிருப்பை அண்டிய
இடமாகவும் அதே வேளை பல புனித இடங்கள், ஆலயங்களை அண்மித்ததாகவும் காணப்படுவதால்
இவற்றின் புனிதத் தன்மையும் பாதிக்கப்படுகின்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa6846d4-ebd7-4857-96c5-54b03a013e27/26-6a719332a1563.webp' /></p><p>எனவே இது தொடர்பாக தங்களது மேலான கவனத்திற்கு கொண்டுவருவதோடு இது தொடர்பாக
நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம் என அதில்
குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

அதேவேளை, கீரிமலையில் குப்பைகள் கொட்டப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்க
கோரி, வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர், சுற்றாடல் அதிகார சபை ஆகியோரிடமும்
முறைப்பாடு செய்ய வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T07:23:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை அச்சுறுத்தும் டெங்கு; 87 ஆயிரத்தை நெருங்கிய பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-threatens-sri-lanka-cases-near-87-000-1785828254"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-threatens-sri-lanka-cases-near-87-000-1785828254</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாட்டில் நடப்பாண்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 87 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாட்டில் நடப்பாண்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 87 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>


அதன்படி நேற்று (03) நிலவரப்படி, டெங்கு நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 86,947 ஆக உயர்ந்துள்ளதாக அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/435226de-ff4c-462f-bd40-bd77c4354f3b/26-6a7193a030bd8.webp' /></p><p>
</p><p>


ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் இதுவரை 1,598 புதிய டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
</p><p>


மாவட்ட ரீதியாகப் பார்க்கும்போது, கம்பஹா மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 21.24 சதவீத டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.



அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 17,187 பேரும், கண்டி மாவட்டத்தில் 6,082 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>



இதுவரை நாடு முழுவதும் 62 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், மரண விகிதம் 0.07 சதவீதமாக இருப்பதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-04T07:22:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[18 வயதில் கல்லூரி பேராசிரியர்.., உலக சாதனை படைத்த இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/18-year-old-nathan-thomas-youngest-male-professor-1785826865"></link>
            <id>https://manithan.com/article/18-year-old-nathan-thomas-youngest-male-professor-1785826865</id>
            <summary type="text">18 வயதிலேயே அமெரிக்க இளைஞர் ஒருவர் கல்லூரி பேராசிரியராகி உலக சாதனை படைத்துள்ளார்.

உலக சாதனை 

அமெரிக்காவைச் சேர்ந்த நேத்தன் தாமஸுக்கு, உலகின் மிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>18 வயதிலேயே அமெரிக்க இளைஞர் ஒருவர் கல்லூரி பேராசிரியராகி உலக சாதனை படைத்துள்ளார்.</p><h2>

உலக சாதனை </h2><p>

அமெரிக்காவைச் சேர்ந்த நேத்தன் தாமஸுக்கு, உலகின் மிக இளம் வயது ஆண் பேராசிரியர் என்ற கின்னஸ் உலக சாதனை பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கு முன்பு, 1717ஆம் ஆண்டு 19 வயதில் பேராசிரியராக பணியேற்ற ஸ்காட்லாந்து கணிதவியலாளர் காலின் மெக்லாரின் பெயரில் இருந்த சாதனை 306 ஆண்டுகளாக நீடித்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a72cc3a-3d4e-485f-9981-2aa3a0800026/26-6a718e33cf21b.webp' /></p><p>2023 ஆகஸ்ட் மாதம், 18 வயதில் மியாமி டேட் கல்லூரியில் பேராசிரியராக சேர்ந்த நேத்தன் அந்த சாதனையை முறியடித்தார்.</p><p>

மேலும், 2008ஆம் ஆண்டு 18 வயதில் உலகின் இளம் பெண் பேராசிரியராக சாதனை படைத்த ஆலியா சபூரை விட நேத்தன் 16 நாட்கள் இளையவர். </p><h2>


இளம் பேராசிரியர்
</h2><p>
நேத்தன், 10 வயதிலேயே மியாமி டேட் கல்லூரியில் பள்ளிப் படிப்புடன் சேர்த்து கல்லூரி படிப்பையும் தொடங்கினார்.</p><p>

14 வயதில் புளோரிடா சர்வதேசப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த அவர், மின் பொறியியலில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை 18 வயதிற்குள் முடித்தார்.
</p><p>
2023 ஆகஸ்டில், மியாமி டேட் கல்லூரியில் பொறியியல் மாணவர்களுக்கு சி-பிரோகிராமிங் பாடத்தை கற்பிக்கும் பேராசிரியராக பணியில் சேர்ந்தார்.
</p><p>
அவர் கற்பித்த வகுப்பில் இருந்த பல மாணவர்கள், அவரது வயதுக்கு சமமானவர்களாகவோ அல்லது அவரைவிட வயதில் மூத்தவர்களாகவோ இருந்தார்கள்.</p>]]></content>
            <updated>2026-08-04T07:21:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிஸ் சுற்றுலா செல்வோருக்கு ஒரு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-customs-warns-over-fake-goods-1785827785"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-customs-warns-over-fake-goods-1785827785</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்பவர்கள் எதையெல்லாம் கொண்டுசெல்லக்கூடாது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.



சுவிட்சர்லாந்துக்கு சுற்றுல...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்பவர்கள் எதையெல்லாம் கொண்டுசெல்லக்கூடாது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
</p><p>


சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்பவர்கள் எதையெல்லாம் கொண்டுசெல்லக்கூடாது என்பது குறித்து சுவிஸ் சுங்க அதிகாரிகள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.
</p><h3>
சுவிஸ் சுற்றுலா செல்வோருக்கு ஒரு எச்சரிக்கை</h3><p>

சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா வருபவர்கள், போலி ஆடம்பர கைப்பைகள், கைக்கடிகாரங்கள் மற்றும் நகைகளைக் கொண்டுவரக்கூடாது என்றும், அப்படிக் கொண்டுவந்தால் அவை பறிமுதல் செய்து அழிக்கப்படும் என்றும் சுவிஸ் சுங்க அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11507680-cb7f-42fa-b69e-58f63b5037d3/26-6a7191cb02926.webp' /></p><p>

அத்துடன், 10,000 சுவிஸ் ஃப்ராங்குகளுக்கு மேல் ரொக்கமோ அல்லது பத்திரங்களோ கொண்டு வந்தால், அது குறித்து கேட்கப்பட்டால் தெரியப்படுத்தவேண்டும் என்றும், 150 சுவிஸ் ஃப்ராங்குகளுக்கு அதிக தொகையுடைய பொருட்கள் வாங்கினால், அதற்கு மதிப்புக் கூட்டு வரி செலுத்தவேண்டியிருக்கும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
மேலும், பவளம், சிப்பிகள், தந்தம், குறிப்பிட்ட மரங்கள் அல்லது தாவரங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட உயிரினங்களிலிருந்து தயாரிக்கப்படும் நினைவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதங்களும் விதிக்கப்படலாம் என்றும் சுவிஸ் சுங்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T07:17:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலைக்கலவரம்.. புலனாய்வில் கிடைத்த முக்கிய ஆதாரங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahara-prison-riot-police-investigation-cid-1785825963"></link>
            <id>https://tamilwin.com/article/mahara-prison-riot-police-investigation-cid-1785825963</id>
            <summary type="text">மஹர சிறையில் கைதிகளிடையே ஏற்பட்ட அமைதியின்மை, போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை தொடர்பான ஒரு தகராறால் தூண்டப்பட்டதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறையில் கைதிகளிடையே ஏற்பட்ட அமைதியின்மை, போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை தொடர்பான ஒரு தகராறால் தூண்டப்பட்டதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.&nbsp;</p><p>
இந்தச் சம்பவத்தை விசாரிக்கும் புலனாய்வுக் குழுக்கள், போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பட்டா மற்றும் சாத்தான் என அடையாளம் காணப்பட்ட இரண்டு கைதிகள், இந்தக் கலவரத்தைத் தூண்டுவதில் ஈடுபட்டிருக்கலாம் என்பது குறித்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன.
</p><p>

மேலும், இந்தச் சம்பவத்தில் கூடுதலாக இரண்டு கைதிகளின் ஈடுபாட்டைக் காட்டும் ஆதாரங்களையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.</p><p></p><h2>வாக்குமூலங்கள் பதிவு</h2><p>
</p><p>

சிறையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த கைதிகள் உட்பட, சுமார் 25 நபர்களிடமிருந்து இதுவரை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5de9d914-93a0-4320-a86e-ff482cf873f8/26-6a718ff247ff0.webp' /></p><p>

இந்தச் சம்பவத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளைத் தீர்மானிக்கவும், இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் அடையாளம் காணவும் பல புலனாய்வுக் குழுக்கள் தற்போது மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றன.
</p><p>


இதற்கிடையில், மஹர சிறையில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை நியமிக்க சிறைச்சாலைகள் திணைக்களம் முடிவு செய்துள்ளது.
</p><p>

விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், சிறை வளாகத்திற்கு வெளியே பாதுகாப்பைப் பேணுவதற்காக பொலிஸாரும், பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையும் (STF) தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பதில் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>சிறைக் கூரை மீது&nbsp;ஏறியவர்கள்..&nbsp;</h2><p>

அதே நேரத்தில், மஹர சிறையில் நடந்த கலவரம் குறித்த தொடர் விசாரணைகளில் பல முக்கியத் தகவல்கள் வெளிவந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8e9da26-a7cd-47ef-9186-2d3a6132e0a6/26-6a7190f76ce1d.webp' /></p><p>அங்கு, கைதிகள் குழு ஒன்று வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதாகவும், சிறைச் சொத்துக்களுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.</p><p>
விசாரணையாளர்களின் கூற்றுப்படி, கடந்த சனிக்கிழமை மாலையில் சுமார் நான்கு கைதிகள் எந்தவித காரணமும் இன்றி சிறைக் கூரை மீது ஏறியுள்ளனர்.
</p><p>
தங்களால் இனி சிறையில் இருக்க முடியாது என்று கைதிகள் கூரையிலிருந்து கூறியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p><p>
மேலும் விசாரணையில், சிறை அதிகாரிகள் கைதிகளைப் பாதுகாப்பாகக் கீழே இறக்க முயன்றபோது, ​​மற்றொரு கைதிகள் குழு ஆத்திரமடைந்து ஆக்ரோசமாகச் செயல்படத் தொடங்கியதும் தெரியவந்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T07:13:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாய்ந்தமருதில் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspect-arrested-in-sainthamaruthu-narcotic-pills-1785826917"></link>
            <id>https://tamilwin.com/article/suspect-arrested-in-sainthamaruthu-narcotic-pills-1785826917</id>
            <summary type="text">சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போதை
மாத்திரைகளுடன் சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போதை
மாத்திரைகளுடன் சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில், சாய்ந்தமருது
பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரகலாதன் தலைமையில்
அமைக்கப்பட்ட மூவர் அடங்கிய பொலிஸ் குழுவினர் நேற்று(03) மாலை குறித்த
இளைஞரின் வீட்டைச் சோதனையிட்டனர்.
</p><p>
இதன்போதே, மருத்துவப் பரிந்துரைகள் ஏதுமின்றி சட்டவிரோதமாகப் பாதுகாத்து
வைக்கப்பட்டிருந்த சுமார் 500 போதை மாத்திரைகள் பொலிஸாரால்
கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபரும் அதே இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.</p><p></p><h2>தீவிர விசாரணை</h2><p>
</p><p>
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய 32 வயதுடைய சந்தேகநபரிடம் சாய்ந்தமருது
பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bcdacd1-6fe4-488f-b04c-41725bf08c24/26-6a71906c5f963.webp' /></p><p>
</p><p>
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரைச் சான்றுகளுடன் கல்முனை நீதவான்
நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T07:11:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றத்தில் ஆஜராக யோஷித, கரன்னாகொடவிற்கு உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/yoshitha-karannagoda-ordered-to-appear-in-court-1785827458"></link>
            <id>https://jvpnews.com/article/yoshitha-karannagoda-ordered-to-appear-in-court-1785827458</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்குக் கொழும்பு நீதவான்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்குக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>

சந்தேகநபர்களுக்கு அறிவித்தல் கிடைத்தவுடன் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13868831-27b5-463e-b589-8e06d9906104/26-6a719083e47dd.webp' /></p><p> 

சந்தேகநபர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு இன்று (04) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.</p><p></p><p> 

அச்சமயத்தில் சந்தேகநபர்களான யோஷித ராஜபக்ஷ மற்றும் வசந்த கரன்னாகொட ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். </p><p>

இதனையடுத்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சமர்ப்பித்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-04T07:08:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஏனைய வான் கதவுகளும் தானாக திறக்கும் அபாயம்! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sluice-gate-of-the-upper-kotmale-reservoir-1785826076"></link>
            <id>https://tamilwin.com/article/sluice-gate-of-the-upper-kotmale-reservoir-1785826076</id>
            <summary type="text">நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மேல் கொத்மலை ஒரு வான் கதவு இன்று (04.08.2026) அதிகாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தே...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மேல் கொத்மலை ஒரு வான் கதவு இன்று (04.08.2026) அதிகாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்க பொறுப்பதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>இன்றைய தினம் அதிகாலையிலும் நீர்மட்டம் அதிகரித்ததால் வான் கதவு திறந்து நீரை வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p></p><h2>மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்</h2><p>
</p><p>
மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தொடருமானால், ஏனைய வான் கதவுகளும் தானாகவே திறக்கும் அபாயம் உள்ளது.</p><p>இதனால், அணைக்கட்டிற்கு கீழ் உள்ள கொத்மலை ஆற்றின் இரு கரைகளிலும் வாழும் மக்கள் தொடர்ந்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4963b751-bb62-42e9-abca-6c8c72f982fc/26-6a718e17e6913.webp' /></p><p>

அப்பகுதியில் நிலவும் தொடர் மழை காரணமாக, செயின்ட் கிளேயர் மற்றும் டெவோன் ஆகிய அருவிகளில் வழக்கத்திற்கு மாறாக நீர்வரத்து அதிகரித்துள்ளதாகவும் தெரியவருகிறது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T07:01:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாவலப்பிட்டி வெள்ளத்தில் சிக்கிய இ.போ.ச.பேருந்தை மீட்ட இளைஞர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rescued-an-sltb-bus-stranded-nawalapitiya-floods-1785826927"></link>
            <id>https://jvpnews.com/article/rescued-an-sltb-bus-stranded-nawalapitiya-floods-1785826927</id>
            <summary type="text">&amp;nbsp; நாவலப்பிட்டி பகுதியில் நேற்று (03) பிற்பகல் பெய்த பலத்த மழையினால் கினிகத்தேனை - நாவலப்பிட்டி பிரதான வீதியின் அம்பகமுவை பகுதியில் அம்பகமுவ ஓயா வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாவலப்பிட்டி பகுதியில் நேற்று (03) பிற்பகல் பெய்த பலத்த மழையினால் கினிகத்தேனை - நாவலப்பிட்டி பிரதான வீதியின் அம்பகமுவை பகுதியில் அம்பகமுவ ஓயா வான்பாய்ந்ததால் அவ்வீதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியது. </p><p>

அச்சமயத்தில் கினிகத்தேனையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று பயணிகளுடன் வெள்ளப்பெருக்கில் சிக்கியிருந்த போது, அம்பகமுவை பகுதியைச் சேர்ந்த இளைஞர் குழுவினர் நிலவிய ஆபத்தையும் பொருட்படுத்தாது மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd9db68b-ab7a-4fab-a6ca-7f682e190168/26-6a718e711def0.webp' /></p><p> 

அவர்கள் லொறி ஒன்றை பேருந்துக்கு அருகில் கொண்டு சென்று பேருந்திலிருந்த மக்களை மீட்டதுடன், பின்னர் கெப் ரக வாகனம் ஒன்றின் உதவியுடன் பேருந்தையும் மீட்டெடுத்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T07:00:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டில் ஜனநாயகன் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/jananayagan-movie-13-days-tamilnadu-box-office-1785825258"></link>
            <id>https://cineulagam.com/article/jananayagan-movie-13-days-tamilnadu-box-office-1785825258</id>
            <summary type="text">13 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் தமிழ்நாட்டில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>13 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் தமிழ்நாட்டில் இதுவரை எவ்வளவு <a href="https://www.youtube.com/watch?v=FM4UvDi2xiU" target="_blank">வசூல் </a>செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><h2>

ஜனநாயகன்
</h2><p>
தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்க, கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cceabea-496e-4b7f-9774-82b8bbc7ee55/26-6a7187ee3238c.webp' /></p><p>கடந்த ஜனவரி மாதம் இப்படம் வெளியாகவிருந்த நிலையில், சென்சார் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது. இதன்பின் பல தடைகளை கடந்து, ஜூலை 23-ஆம் தேதி வெளியானது. இப்படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
</p><h2>
தமிழக வசூல்
</h2><p>
ஜனநாயகன் திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். குறிப்பாக தமிழ்நாட்டில் இப்படம் எவ்வளவு வசூலிக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbdc3383-416f-444b-a5bc-a3b94608b5bc/26-6a7187ed7b36c.webp' /></p><p>இந்நிலையில், 13 நாட்களில் வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் ஜனநாயகன், இதுவரை தமிழ்நாட்டில் ரூ. 132.5 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p>]]></content>
            <updated>2026-08-04T07:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும கொடுப்பனவில் ஒரு கோடி ரூபா மோசடி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/10-million-rupee-fraud-in-aswesuma-payments-1785823704"></link>
            <id>https://ibctamil.com/article/10-million-rupee-fraud-in-aswesuma-payments-1785823704</id>
            <summary type="text">அஸ்வெசும நிவாரணக் கொடுப்பனவுகளில் ரூ.01 கோடிக்கும் அதிகமான நிதி மோசடி இடம்பெற்றதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.&amp;nbsp;சம்பவம் தொடர்பாக, அட்மையில் நோர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அஸ்வெசும நிவாரணக் கொடுப்பனவுகளில் ரூ.01 கோடிக்கும் அதிகமான நிதி மோசடி இடம்பெற்றதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.</p><p>&nbsp;சம்பவம் தொடர்பாக, அட்மையில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய இரு பெண் அதிகாரிகள் ஹற்றன் பிராந்திய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.</p><p>

ஆரம்பக்கட்ட விசாரணைகளில் 25 இலட்சம் என கண்டறியப்பட்ட நிலையில் தற்போதைய விசாரணையில் குறித்த விடயம் அம்பலமாகியுள்ளது.</p><p></p><h2>அஸ்வெசும</h2><p>2024ஆம் ஆண்டு முதல் இதுவரை ரூ.01 கோடிக்கும் அதிகமான தொகையை மோசடி செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஹற்றன் பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0205050e-8d9f-4288-a4f1-679507307bec/26-6a718d50ee846.webp' /></p><p>உண்மையான பயனாளிக் குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய அஸ்வெசும நிதியை, தங்களது உறவினர்கள் மற்றும் நெருங்கியவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி வரவு வைத்ததன் மூலம் இந்த மோசடி இடம்பெற்றுள்ளது.</p><p> கைது செய்யப்பட்ட இருவரும் கணக்குப் பிரிவில் பணியாற்றிய அதிகாரிகளாவர்.</p><h2>1 கோடி மோசடி</h2><p>அஸ்வெசும கொடுப்பனவு வழங்கலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பாக நோர்வூட் பிரதேச செயலகத்திற்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff3cba6f-3522-4eda-b08d-396a6661517b/26-6a718d51b6653.webp' /></p><p> </p><p>இதைத் தொடர்ந்து, பிரதேச செயலாளர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஹற்றன் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். </p><p>இதனுடன், நுவரெலியா மாவட்டச் செயலாளரின் ஆலோசனையின் பேரில் உள்ளக விசாரணையும் முன்னெடுக்கப்பட்டது. </p><p>விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், சந்தேக நபர்களில் ஒருவர் அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கும், மற்றையவர் தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்</p><p>கைது செய்யப்பட்ட இரு பெண் அதிகாரிகளும் 30 மற்றும் 33 வயதுடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p>இந்த மோசடி தொடர்பில் மேலும் சிலரின் தொடர்பு குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>சந்தேகநபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, இரு வாரங்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T06:58:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உதயநிதி கைதால் வெடித்த போராட்டம் - ஓ.பன்னீர்செல்வம் குண்டுக்கட்டாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ops-arrested-protest-against-udhayanidhi-arrest-1785825693"></link>
            <id>https://ibctamil.com/article/ops-arrested-protest-against-udhayanidhi-arrest-1785825693</id>
            <summary type="text">தேனியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தமிழக முதல்வர் விஜய்யை தரக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேனியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>தமிழக முதல்வர் <a href="https://ibctamil.com/article/tamil-nadu-police-have-reached-dmk-leader-1785821765" target="_blank">விஜய்யை தரக்குறைவாக</a> பேசியதாக திமுக இளைஞரணி செயலாளரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினை சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>ஆனால் காவல்துறையின் கைது நடவடிக்கையை காமெடியாகப் பார்ப்பதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.</p><p></p><h2>கண்டன ஆர்ப்பாட்டம்</h2><p>தஞ்சாவூரில் நேற்று திமுக சார்பில், காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரத்தில் தவெக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1063a9a7-6283-442c-a3ac-2ebe4d8674c6/26-6a718ce386b21.webp' /></p><p> 

அதில் கலந்து கொண்டு பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, முதல்வர் விஜய் மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார்.</p><p> இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தவெக அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>இந்நிலையில் , அவதூறாக பேசியதாக, தமிழக எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டு இருக்கிறார்.</p><p></p><h2>குண்டுக்கட்டாக கைது</h2><p>இந்த கைதுக்கு எதிராக உதயநிதி வீட்டின் முன்பு ஏரளமான தி.மு.க-வினர் தர்ணாவில் ஈடுபட்டார்கள் சாலையில் அமர்ந்து போராடியவர்களை தற்போது காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்துள்ளனர். &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/153449b0-9e5b-4d04-af82-cb36046d23d4/26-6a718ce45c0ba.webp' /></p><p>தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திமுக சாலை மறியல்களை ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேனியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T06:55:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவின் மகன் யோசிதவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-order-for-yositha-and-wasantha-1785823745"></link>
            <id>https://tamilwin.com/article/court-order-for-yositha-and-wasantha-1785823745</id>
            <summary type="text">அறிவித்தல் கிடைத்ததும் கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்சவுக்கு கொழும்பு பிரதான நீதவான...</summary>
            <content type="html"><![CDATA[<p>அறிவித்தல் கிடைத்ததும் கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்சவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவுக்கும் இதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு ஒன்று இன்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் அழைக்கப்பட்டது.</p><p>
</p><h2><b>
கோரிக்கைகளை பரிசீலித்த நீதவான்</b></h2><p>இதன்போது சந்தேகநபர்களான யோசித ராஜபக்ச மற்றும் வசந்த கரன்னகொட ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fbf2ad4-e6eb-4048-b2b9-7ee645dc08ea/26-6a718c45403cf.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து, ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-04T06:53:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய் மீது அவதூறு ; உதயநிதி கைது; தமிழகத்தில் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/defamation-cm-vijay-police-arrest-udhayanidhi-1785820605"></link>
            <id>https://jvpnews.com/article/defamation-cm-vijay-police-arrest-udhayanidhi-1785820605</id>
            <summary type="text">&amp;nbsp;முதலமைச்சர் விஜய் மீது அவதூறு பேசிய&amp;nbsp; உதயநிதியை கைது செய்யும் நோக்குடன்&amp;nbsp; பொலிஸார்&amp;nbsp; உதயநிதி வீட்டினை முற்றுகை இட்டுள்ளதாக&amp;nbsp; இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முதலமைச்சர் விஜய் மீது அவதூறு பேசிய&nbsp; உதயநிதியை கைது செய்யும் நோக்குடன்&nbsp; பொலிஸார்&nbsp; உதயநிதி வீட்டினை முற்றுகை இட்டுள்ளதாக&nbsp; இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.&nbsp; &nbsp;</p><p>சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>&nbsp; உதயநிதி&nbsp;கைது செய்து அழைத்து செல்வதாக&nbsp; கூறப்படுகின்றமை&nbsp; &nbsp;திமுகவினரிடையே&nbsp; பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a88f03a-2df1-4451-b8e1-18203217d7bb/26-6a717745ecaa1.webp' /></p><p><b>முதலாம் இணைப்பு</b></p><p>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நேற்று தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய முதல்வர் விஜய் மற்றும் நடிகை திரிஷா இருவரையும் இணைத்து மிகவும் ஆபாசமாக பேசி இருந்தார்.</p><p>
இதற்கு தவெகவினர் மட்டுமல்லாமல் பாஜக உள்ளிட்ட பல கட்சி தலைவர்களும் இதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். ஒருபக்கம், தவெகவினர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">உதயநிதி மீது&nbsp; வழக்கு பதிவு</span></p><p> 

அதோடு தஞ்சாவூரில் தவெக சார்பில் உதயநிதி மீது புகார் கொடுக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து உதயநிதியை கைது செய்யும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.

தற்போது சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் வீட்டுக்கு போலீசார் சென்றுள்ளனர்.</p><p> அவர்களிடம் உதயநிதியின் மனைவி கிருத்திகா மற்றும் உள்ளிட்ட குடும்பத்தாரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். மேலும், திமுக முன்னாள் அமைச்சர் மா சுப்பிரமணியன் போலீசாரிடம் பேசி வருகிறார்.</p><p></p><p>
</p><p>
ஒருபக்கம் உதயநிதியை போலீசார் கைது செய்ய முயற்சி செய்வதை தெரிந்துகொண்டு திமுக வழக்கறிஞர்களும், திமுக ஆதரவாளர்களும் உதயநிதியின் வீட்டிற்கு முன்பு குவிந்து போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.</p><p> எனவே அந்த இடம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


எனஏ, உதயநிதி கைது செய்யப்படுவாரா என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து விடும்.
உதயநிதியின் வீட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T06:51:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/srilanka-department-of-meteorology-red-warning-1785826237"></link>
            <id>https://jvpnews.com/article/srilanka-department-of-meteorology-red-warning-1785826237</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாட்டில் நிலவும் சீரற்ற காலனிலை காரணமாக கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாட்டில் நிலவும் சீரற்ற காலனிலை காரணமாக கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இதன்படி, புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் என்பதுடன், அப்பகுதியிலுள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a334178f-88e5-474e-bbd4-b7533e424bbd/26-6a718bbf6bf6b.webp' /></p><p> 

எனவே, மறு அறிவித்தல் வரை இக்கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் எனச் கடற்சார் மற்றும் மீனவ சமூகங்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. </p><p>

இதன்காரணமாக, இக்கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்சார் மற்றும் மீனவ சமூகங்கள் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இது தொடர்பாக வெளியிடப்படும் எதிர்வரும் அறிவித்தல்கள் குறித்து அவதானம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-04T06:48:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த ராணுவம்: பிரித்தானிய கட்சியின் திட்டத்துக்கு பிரான்ஸ் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/france-condemns-uk-use-navy-to-stop-migrants-1785824040"></link>
            <id>https://news.lankasri.com/article/france-condemns-uk-use-navy-to-stop-migrants-1785824040</id>
            <summary type="text">புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த ராணுவத்தை பயன்படுத்தப்போவதாக கூறும் பிரித்தானிய கட்சியின் திட்டத்துக்கு பிரான்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.


தாங்கள் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த ராணுவத்தை பயன்படுத்தப்போவதாக கூறும் பிரித்தானிய கட்சியின் திட்டத்துக்கு பிரான்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.</p><p>


தாங்கள் ஆட்சிக்கு வந்தால், பிரித்தானிய கடற்படை புலம்பெயர்வோரை தூக்கிக்கொண்டு போய் பிரான்சில் விட்டுவிடும் என்று கூறியிருந்தார் பிரித்தானிய அரசியல்வாதி ஒருவர்.</p><h3>

புலம்பெயர்வோரை தடுக்க ராணுவம்
</h3><p>
யூகே ரீஃபார்ம் கட்சியின் செய்தித்தொடர்பாளரான ஸியா யூசஃப், தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், பிரித்தானிய கடற்படை, பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோரை, ஆங்கிலக்கால்வாயிலிருந்து தூக்கிக்கொண்டு போய் பிரான்சில் விட்டுவிடும் என்றும், பிரான்ஸ் அவர்களை திரும்பப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/704acb95-1036-4c08-b8a5-15b973fd96b4/26-6a718329e7805.webp' /></p><p>
பிரான்ஸ் கண்டனம்

யூகே ரீஃபார்ம் கட்சியின் செய்தித்தொடர்பாளரான ஸியா யூசஃப், புலம்பெயர்வோரை தடுக்க ராணுவத்தை பயன்படுத்தப்போவதாக கூறியுள்ளதற்கு பிரான்ஸ் தரப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.</p><p>

பிரான்ஸ் உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், புலம்பெயர்வோரை தடுக்க ராணுவத்தை பயன்படுத்துவது பிரான்ஸ் இறையாண்மையை மீறும் விடயம் என்றும், கடல் சட்டத்தையும், சர்வதேச சட்டத்தையும் மீறும் விடயம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p>
அத்துடன், பிரான்ஸ் உள்துறை அலுவலக செய்தித்தொடர்பாளர் ஒருவர், இருதரப்பும் ஒப்புகொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும், பிரான்ஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் காரணமாக, ஏற்கனவே பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T06:45:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட்டவளை பகுதியில் சுமார் 661 மில்லிமீட்டர் கனமழை பதிவு! வெளியாகியுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1785823330"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1785823330</id>
            <summary type="text">வட்டவளை பகுதியில் கடந்த 4 நாட்களில் சுமார் 661 மில்லிமீட்டர் கனமழை பெய்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி டாக்டர் வசந்த சேனத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட்டவளை பகுதியில் கடந்த 4 நாட்களில் சுமார் 661 மில்லிமீட்டர் கனமழை பெய்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி டாக்டர் வசந்த சேனதீர தெரிவித்துள்ளார். </p><p>

தற்போதைய வானிலை நிலவரங்கள் குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று (03.08.2026) மட்டும், அப்பகுதியில் 204 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதுவே நேற்று (03) பதிவான அதிகபட்ச மழையளவாகும்.</p><p></p><h2>உலகளாவிய வானிலை மாற்றம்</h2><p> </p><p>

மேலும், அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவில் கடந்த 3 நாட்களில் 150 மில்லிமீட்டர் முதல் 500 மில்லிமீட்டர் வரை அதிக மழை பெய்துள்ளது. 

உலகளாவிய வானிலை மாற்றங்களின் தாக்கத்தால், மிகக் குறுகிய காலத்தில் கனமழை பெய்வது தற்போது ஒரு பொதுவான நிகழ்வாகிவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46ef9220-aa00-42b2-a308-42e35fbc23bb/26-6a7188ced37f9.webp' /></p><p>

இருப்பினும், இந்த நிலைமையை முந்தைய 'தித்வா' புயலின் போது இருந்த நிலைமையுடன் ஒப்பிட முடியாது. தித்வா புயலின் தாக்கத்தின் போது கணிசமாக அதிக மழை பதிவானது என குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால், நிலச்சரிவு மற்றும் நிலச்சரிவு அபாயம் அதிகரித்துள்ளது. </p><p>

எனவே, பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் வானிலை முன்னறிவிப்புகளை விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T06:38:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thirumal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்ற வழக்குகள் ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hatton-court-due-to-bad-weather-1785822015"></link>
            <id>https://tamilwin.com/article/hatton-court-due-to-bad-weather-1785822015</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, ஹட்டன் மாவட்ட
நீதவான் நீதிமன்றங்களில் இன்று(04.08.2026) அழைக்கப்படவிருந்த வழக்குகள்
அனைத்தும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, ஹட்டன் மாவட்ட
நீதவான் நீதிமன்றங்களில் இன்று(04.08.2026) அழைக்கப்படவிருந்த வழக்குகள்
அனைத்தும் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்க அந்த நீதிமன்றத்தின் நீதவான்களால்
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
நிலவும் மழைக் காலநிலையுடன் நீதிமன்ற ஊழியர்கள், வழக்குகளில் முன்னிலையாகும்
பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் வழக்கு விசாரணைகளுக்கு வருகை தருபவர்களுக்கு
போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லாததைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கை</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b132ef31-f881-4d43-a7f7-dcb95e687d39/26-6a7180fade1c2.webp' /></p><p>அந்த நீதிமன்றங்களில் பணியாற்றும்
சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே நீதவான்களால் வழக்குகள் இவ்வாறு
வேறு திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T06:36:17+00:00</updated>
        </entry>
    </feed>
