<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-14T00:29:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டுள்ளது ; ஈரான் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/strait-of-hormuz-completely-closed-iran-announces-1786662961"></link>
            <id>https://canadamirror.com/article/strait-of-hormuz-completely-closed-iran-announces-1786662961</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை தடையின்றி இயங்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டுள்ளதாக ஈரானிய இஸ்லாமிய புரட்சிகரக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை தடையின்றி இயங்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டுள்ளதாக ஈரானிய இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையின் (IRGC) கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் அலி அஸ்மாய் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையில் நடைபெறும் அனைத்து நகர்வுகளையும் IRGC கடற்படை முழுமையாகக் கண்காணித்து வருவதாகவும், தமது அனுமதியின்றி எந்தவொரு கப்பலும் அந்தப் பாதையில் சுதந்திரமாக இயங்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.</p><p>இதேவேளை, ஹோர்முஸ் நீரிணை திறந்திருப்பதாகவும், அமெரிக்க கடற்படை அந்தப் பகுதியில் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாத்து வருவதாகவும் அமெரிக்க தரப்பு தொடர்ந்து தெரிவித்து வருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/741d1d6b-5ac2-4457-8af1-a300988f45bf/26-6a7e50338372c.webp' /></p><p>அண்மைய தகவல்களின்படி, அமெரிக்கக் கட்டுப்பாட்டில் உள்ள பாதையில் வணிகக் கப்பல்களின் போக்குவரத்து மிகவும் குறைந்த அளவிலேயே இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனிடையே, ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பதற்கு முன்னர் அமெரிக்காவின் கடற்படை முற்றுகை முடிவுக்கு வருதல், பொருளாதாரத் தடைகள் நீக்கப்படுதல் உள்ளிட்ட பல நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. </p><p>ஈரான் மற்றும் ஓமான் இடையே கப்பல் போக்குவரத்துக்கான பாதுகாப்பான வழித்தடம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்ற போதிலும், அந்த உடன்பாடு மட்டும் நீரிணையை முழுமையாகத் திறப்பதற்கு போதுமானதல்ல என ஈரான் தெரிவித்துள்ளது.
</p><p>
ஹோர்முஸ் நீரிணை உலகின் மிக முக்கியமான எரிசக்தி வர்த்தகப் பாதைகளில் ஒன்றாகும். </p><p>இதன் ஊடான கப்பல் போக்குவரத்து பெருமளவில் குறைந்துள்ளமை உலகளாவிய எண்ணெய் விநியோகம் மற்றும் எரிசக்தி சந்தைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

எனவே, “நீரிணை முழுமையாக மூடப்பட்டுள்ளது” என்ற ஈரானின் நிலைப்பாட்டுக்கும், “நீரிணை திறந்துள்ளது” என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கும் இடையே தொடர்ந்தும் முரண்பாடு நிலவி வருகிறது. </p><p>நடைமுறையில், நீரிணை வழியாக கப்பல்கள் செல்வது முற்றிலும் நிறுத்தப்படவில்லை என்றாலும், வழக்கமான அளவுடன் ஒப்பிடுகையில் போக்குவரத்து கடுமையாகக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது</p>]]></content>
            <updated>2026-08-14T00:24:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[குப்பைத் தொட்டியிலும்... ட்ரம்ப் விமானத்தை மாற்றியதை கேலி செய்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-mocks-trump-plane-switch-1786667223"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-mocks-trump-plane-switch-1786667223</id>
            <summary type="text">Iran Mocks Trump&#039;s Plane Switch: துருக்கி பயணத்தின்போது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது விமானத்தை ரகசியமாக மாற்றிக்கொண்டதை ஈரானின் அரசு ஊடகம் கேலி செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran Mocks Trump's Plane Switch: துருக்கி பயணத்தின்போது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது விமானத்தை ரகசியமாக மாற்றிக்கொண்டதை ஈரானின் அரசு ஊடகம் கேலி செய்துள்ளது.
</p><p>இஸ்லாமியக் குடியரசின் வலிமையைக் கண்டு அவர் எவ்வளவு பதற்றமடைந்துள்ளார் என்பதை இது காட்டுவதாகவும் கூறியுள்ளது.</p><h2>ராணுவ வலிமை</h2><p> </p><p>மீண்டும் ஒரு புதிய சர்ச்சையின் மூலம், தற்போதைய அமெரிக்க ஊடகங்களில் ட்ரம்ப் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளார். ஈரான் நாட்டின் ராணுவ வலிமை குறித்த அச்சத்திலிருந்தே இந்த சர்ச்சை எழுந்துள்ளது; அந்த வலிமைதான்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/700dcfab-24b7-495a-a72e-05f430e9655d/26-6a7e60d98febb.webp' /></p><p> </p><p>கடந்த மாதம் துருக்கியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது ட்ரம்ப் தனது விமானத்தை ரகசியமாக மாற்றிக்கொள்ளும் நிலையை ஏற்படுத்தியது என ஈரானிய செய்தி ஊடகம் குறிப்பிட்டுள்ளது. </p><p>ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் தோளில் வைத்துச் சுடும் ஏவுகணையால் குறிவைக்கப்படலாம் என்ற அச்சுறுத்தலைத் தொடர்ந்து, ரகசிய சேவைப் பிரிவு ட்ரம்ப்பை இரகசியமாக ஒரு சிறிய ராணுவ விமானத்திற்கு மாற்றியது என்ற தகவல் வெளிச்சத்திற்கு வந்தது. </p><p>ஈரான் மீதான அமெரிக்காவின் போர் நடவடிக்கை காரணமாக பதற்றம் நிலவி வரும் சூழலில், நேட்டோ உச்சிமாநாட்டிற்காக அங்காராவுக்கு டிரம்ப் மேற்கொண்டிருந்த பயணத்தின் இறுதி நாளன்று இந்த அச்சுறுத்தல் உருவானதாக தகவல் கசிந்தது.</p><h2>அதிகாரிகள் அதிர்ச்சி</h2><p> </p><p>மேலும், அங்காராவில் ட்ரம்ப் தங்கியிருந்த ஹொட்டலின் சரியான தளம் உட்பட, அவர் எங்கு தங்கியிருந்தார் என்பது ஈரானியர்களுக்குத் தெரிந்திருந்தது கண்டு அமெரிக்க அதிகாரிகள் அதிர்ச்சியடைந்ததாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. </p><p>இந்த விவகாரம் தொடர்பில் ஈரான் அரசாங்கம் இதுவரை கருத்தேதும் தெரிவிக்கவில்லை. வெள்ளை மாளிகையும் விளக்கமளிக்கவில்லை.</p><p></p><p> </p><p>அமெரிக்காவின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியாக அப்போது இருந்த ட்ரம்ப்பை படுகொலை செய்ய ஈரானின் புரட்சிகரப் படை உத்தரவிட்டதாகக் கூறப்படும் சதித்திட்டம் தொடர்பாக, 2024-ல் ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் மீது அமெரிக்க நீதித்துறை குற்றஞ்சாட்டியது. </p><p>ஆனால், செப்டம்பர் 2024-ல் ஈரான் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தது. இந்த நிலையிலேயே அச்சுறுத்தல் என்றால், குப்பைத் தொட்டியிலும் ட்ரம்ப் ஒளிந்துக் கொள்வார் என ஈரான் கேலி செய்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T00:24:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்கள் கழிப்பறையில் ரகசிய கேமரா ; அதிர்ச்சியில் உறைந்த பெண்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hidden-camera-in-the-women-s-toilet-1786648715"></link>
            <id>https://jvpnews.com/article/hidden-camera-in-the-women-s-toilet-1786648715</id>
            <summary type="text">இரத்தினபுரியில் உள்ள நிதி நிறுவனமொன்றில் பணிபுரியும் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை ரகசியமாக எடுத்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் இரத்தினபுரி பொலிஸார...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரியில் உள்ள நிதி நிறுவனமொன்றில் பணிபுரியும் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை ரகசியமாக எடுத்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் இரத்தினபுரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குறித்த நிதி நிறுவனத்தில் பெண்கள் பயன்படுத்தும் கழிப்பறையில், அவர்கள் கவனிக்காத வகையில் கைபேசி ஒன்றை மறைத்து பொருத்தி, நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காட்சிகளை பதிவு செய்ததாக சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50f0bf14-26d9-4bc3-b73a-68f6f5e7d159/26-6a7e188d79c18.webp' /></p><p>இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நான்கு பெண்கள் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.</p><p> அதன் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்நிலையில், குறித்த பெண்களில் ஒருவர் கழிப்பறைக்கு அருகில் இரண்டு துளைகள் காணப்பட்ட காகிதத் துண்டொன்றை அவதானித்துள்ளார். </p><p>அதனை பரிசோதித்தபோது, காகிதத்திற்குள் கைபேசி ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனையடுத்து குறித்த கைபேசியை எடுத்துச் சென்ற அவர், சம்பவம் தொடர்பில் ஏனைய பெண்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.
</p><p>
பின்னர், குறித்த கைபேசியில் இருந்த சிம் அட்டையை அகற்றி தனது தனிப்பட்ட மடிக்கணினியில் பயன்படுத்திப் பார்த்தபோது, அதில் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>

இதனைத் தொடர்ந்து இரத்தினபுரி பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இரத்தினபுரி நீதவான் சமன் டி.கே. பரணாலியனகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
</p><p>
குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்படும் சந்தேகநபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T00:24:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் ஜனாதிபதிக்கு உயிரச்சுறுத்தல்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-judiciary-reforms-anura-takes-risk-1786666370"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-judiciary-reforms-anura-takes-risk-1786666370</id>
            <summary type="text">நீதித்துறை சீர்திருத்தங்கள் மற்றும் அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து நாட்டில் நிலவும் விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விளக்கமளித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதித்துறை சீர்திருத்தங்கள் மற்றும் அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து நாட்டில் நிலவும் விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விளக்கமளித்துள்ளார்.
</p><p>
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 11இலிருந்து 17 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 12இலிருந்து 20 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த நீதித்துறை மாற்றங்களுக்கு மிக முக்கிய காரணம், கடந்த 5 ஆண்டுகளாக இழுபறியில் உள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைதான் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
நீதிபதிகள் ஓய்வு பெறுவதால் இந்த வழக்கு மீண்டும் ஆரம்பத்திலிருந்து விசாரிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே, பதவிக்கால நீடிப்பு மற்றும் நீதித்துறை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இது எந்தவொரு தனிப்பட்ட நீதிபதிக்கோ அல்லது குறிப்பிட்ட நபருக்கோ வழங்கப்படும் சலுகையல்ல என்றும், மாறாக ஒட்டுமொத்த நீதித்துறையையும் வலுப்படுத்துவதற்கான ஒரு “அமைப்புமுறை மாற்றம்” என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால், தனது தனிப்பட்ட பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்படக்கூடும் என்பதை ஜனாதிபதி உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இருந்தபோதிலும், நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தேவையானால் அந்த ஆபத்தை ஏற்கத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதற்காக தனது பதவிக்கே ஆபத்து ஏற்பட்டாலும் அதனை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.</p><p>

நாட்டு மக்களின் பொதுநலனுக்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும் எந்தவொரு ஆபத்தையும் ஏற்கத் தயாராக இருப்பதாகவும், தனது பதவியை இழந்தாலும் அதைப் பற்றி கவலைப்படப் போவதில்லை என்றும் ஜனாதிபதி தனது உறுதியான நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது NewsInsightTamil நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/8ZMqGKOf2IA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-14T00:20:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் ட்ரூத் சோஷியல் செயலி சேவைக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/lawsuit-filed-us-agains-trump-truth-social-service-1786665299"></link>
            <id>https://canadamirror.com/article/lawsuit-filed-us-agains-trump-truth-social-service-1786665299</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் Truth Social சமூக வலைத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை ஏனைய பயனர்களைவிட மிக வேகமாகப் பெறுவதற்கு கட்டணம் வசூலிக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் Truth Social சமூக வலைத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை ஏனைய பயனர்களைவிட மிக வேகமாகப் பெறுவதற்கு கட்டணம் வசூலிக்கும் ‘Truth API’ சேவைக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
</p><p>
நியூயோர்க் மன்ஹாட்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் The Intercept மற்றும் Freedom of the Press Foundation ஆகிய ஊடக அமைப்புகள் இணைந்து இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளன.
</p><p>
Trump Media &amp; Technology Group (TMTG) அறிமுகப்படுத்தியுள்ள இந்தச் சேவை, ட்ரம்ப் உள்ளிட்ட Truth Social இன் செல்வாக்குமிக்க கணக்குகளில் வெளியாகும் பதிவுகளை நிறுவன வாடிக்கையாளர்களுக்கு மிகக் குறைந்த தாமதத்துடன் வழங்குகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3de1421d-9259-48ff-b740-2446bbb0b308/26-6a7e595626e15.webp' /></p><p>குறிப்பாக நிதி நிறுவனங்கள் மற்றும் அதிவேக வர்த்தக நிறுவனங்களை இலக்காகக் கொண்டு இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சேவைக்கு மாதாந்தம் 60,000 முதல் 100,000 அமெரிக்க டொலர் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>இதன் மூலம் ட்ரம்பின் கொள்கை அறிவிப்புகள் அல்லது சந்தையைப் பாதிக்கக்கூடிய பதிவுகளை மற்றவர்களுக்கு முன்னதாகவே சில நிறுவனங்கள் அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படுவதாக மனுதாரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
</p><p>
குறித்த நடைமுறை அமெரிக்க அரசியலமைப்பின் முதல் மற்றும் ஐந்தாவது திருத்தங்களுக்கு முரணானது எனவும், அரசாங்க தகவல்களை பணம் செலுத்தக்கூடியவர்களுக்கு முன்னுரிமையுடன் வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் மனுதாரர்கள் வாதிட்டுள்ளனர்.
</p><p>
இதனிடையே, Trump Media &amp; Technology Group இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது. </p><p>பொதுமக்களுக்கு ஏற்கனவே கிடைக்கும் Truth Social பதிவுகளை வேகமாகவும் நேரடியாகவும் வழங்கும் தரவு சேவையே Truth API என அந்த நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
</p><p>
இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்களிடையேயும் முன்னதாக கவலைகள் எழுந்திருந்தன. </p><p>Truth API மூலம் ட்ரம்பின் சந்தையைப் பாதிக்கக்கூடிய பதிவுகளை மிக வேகமாகப் பெறுவதால், முதலீட்டாளர்களுக்கு சமமற்ற தகவல் முன்னிலை கிடைக்கக்கூடும் எனக் கூறி அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடம் (SEC) விசாரணை நடத்துமாறும் கோரப்பட்டிருந்தது.
</p><p>
இந்நிலையில், இந்த வழக்கு அமெரிக்க ஜனாதிபதியின் சமூக ஊடகப் பதிவுகளை வர்த்தக ரீதியாகப் பயன்படுத்துவது தொடர்பான சட்ட மற்றும் நெறிமுறை விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-13T23:55:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் ட்ரூத் சோஷியல் செயலி மீது பாய்ந்தது வழக்கு...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/lawsuit-filed-against-trump-s-truth-api-1786654848"></link>
            <id>https://ibctamil.com/article/lawsuit-filed-against-trump-s-truth-api-1786654848</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில், அவரது பதிவுகளை மற்றவர்களுக்கு முன்பாகவே நொடிப் பொழுதில் பெறும் Truth API எனும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில், அவரது பதிவுகளை மற்றவர்களுக்கு முன்பாகவே நொடிப் பொழுதில் பெறும் Truth API எனும் புதிய சேவைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
</p><p>
நியூயோர்க் கூட்டாட்சி நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.</p><p>

தி இன்டர்செப்ட் (The Intercept) மற்றும் ஃபிரீடம் ஒஃப் தி பிரஸ் ஃபவுண்டேஷன் (Freedom of the Press Foundation) ஆகிய இரண்டு அமெரிக்க ஊடக அமைப்புகள் இணைந்து இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளன.</p><p></p><h2>அரசியலமைப்புச் சட்டம்</h2><p>

மாதத்திற்கு 100,000 டொலர் (சுமார் 74,000 பவுண்டுகள்) வரை கட்டணம் வசூலிக்கும் இந்தச் சேவையின் மூலம் சந்தைப் பொருளாதாரத்தை பாதிக்கும் ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்புகள் சிலருக்கு மட்டும் முன்கூட்டியே கிடைப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது மிகவும் ஊழல் நிறைந்தது மற்றும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்றும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ebbee50-3ef0-4bc6-b762-0629f574f8f1/26-6a7e30825cd07.webp' /></p><p>

இதற்கு பதிலளித்துள்ள ட்ரம்ப் மீடியா எண்ட் டெக்னாலஜி குரூப் (TMTG), ஜனாதிபதியை தணிக்கை செய்யும் நோக்கத்துடன் இடதுசாரி செயற்பாட்டாளர்கள் நீதிமன்றத்தை தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டியுள்ளது.</p><p>

தற்போது வரை 10 இற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த அதிவேக சேவைக்கு சந்தா செலுத்தியுள்ள நிலையில், வெள்ளை மாளிகை தரப்பில் இதுவரை இதற்கான அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-13T23:54:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் வர்த்தக பற்றாக்குறை பெருமளவு அதிகரிப்பு! வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-s-trade-deficit-increases-significantly-1786661685"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-s-trade-deficit-increases-significantly-1786661685</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை (Trade Deficit) பெருமளவில் விரிவடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை (Trade Deficit) பெருமளவில் விரிவடைந்துள்ளது.
</p><p>
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அண்மைக்கால வாராந்த பொருளாதார குறிகாட்டிகள் அறிக்கையின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 3,270 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த வர்த்தக பற்றாக்குறை, 2026 ஆம் ஆண்டின் முறையான காலப்பகுதியில் 5,489 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை உயர்ந்துள்ளது.</p><p>
</p><p></p><h2>ஏற்றுமதி வருவாய்</h2><p>ஏற்றுமதி வருவாயை விட இறக்குமதி செலவினங்கள் வேகமாக அதிகரித்தமையே இதற்கு முதன்மையான காரணமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5fae5d9-28ac-4040-83bd-a091c2433f42/26-6a7e5746b5b0e.webp' /></p><p>

2026 ஜூன் மாத நிலவரப்படி, இறக்குமதி செலவினம் 12,392 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளதுடன், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 26.9 சதவீத வளர்ச்சியாகும்.</p><p>

நடப்பாண்டில் இதுவரை அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 7.6 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.</p><p>
</p><p>[PJ4IZBN
]</p><h2>சுற்றுலாத் துறை</h2><p>சுற்றுலாத் துறையிலும் சில பின்னடைவுகள் காணப்படுவதுடன், 2025 ஜூலை மாதத்தில் 200,244 ஆக இருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை, 2026 ஜூலை மாதத்தில் 196,845 ஆகக் குறைந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b311def7-cb52-4ff0-ae94-8f30bf275920/26-6a7e574775a40.webp' /></p><p>இதற்கு மேலதிகமாக, வணிக வங்கிகளால் முன்னணி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடன் வட்டி வீதம் (Prime Lending Rate) கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் உயர்ந்து 10.76 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.</p><p>
புறக்கோட்டை மொத்த சந்தைத் தரவுகளின்படி, கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் பல வகையான காய்கறிகளின் விலைகளும் கணிசமாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T23:49:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலியர்கள் முற்றுகை... பாலஸ்தீனியர்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/israeli-settlers-besieged-1786664155"></link>
            <id>https://news.lankasri.com/article/israeli-settlers-besieged-1786664155</id>
            <summary type="text">Israeli settlers besieged houses: இஸ்ரேலிய குடியேறிகள் முற்றுகையிட்ட கிராமத்தில், பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Israeli settlers besieged houses: இஸ்ரேலிய குடியேறிகள் முற்றுகையிட்ட கிராமத்தில், பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
</p><p>ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஒரு கிராமத்தில், சுமார் ஒரு டசின் பாலஸ்தீனக் குடும்பங்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டன.</p><h2>ராணுவப் பகுதியாக</h2><p>
</p><p>இஸ்ரேலியக் குடியேறிகளை வெளியேற்றுவதற்கான இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கையின் ஒருபகுதி என்றே விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல், அப்பகுதியில் உள்ள மூன்று வீடுகளில் வசிப்பவர்களைக் குடியேறிகள் முற்றுகையிட்டு, அவர்களின் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகத்தைத் துண்டித்திருந்தனர். </p><p>குஸ்ரா மேயர் அப்தெல் அசிம் வாடி தெரிவிக்கையில், அவரது கிராமம் தடைசெய்யப்பட்ட ராணுவப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், காலி செய்யப்பட்ட சில பாலஸ்தீனிய வீடுகளை இஸ்ரேலியப் படைகள் ராணுவத் தங்குமிடங்களாகப் பயன்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edae4a7c-4e4c-4d9d-9577-dd0f0578f071/26-6a7e54dda9886.webp' /></p><p> </p><p>ஆனால் குடிமக்களைப் பாதுகாப்பதே நோக்கம் என்று இஸ்ரேலிய ராணுவம் கூறியது. இந்த நிலையில், குடியேறிகளின் செயல் கண்டிக்கத்தக்கதும் ஏற்றுக்கொள்ள முடியாததும் ஆகும்; இதற்குப் பொறுப்பானவர்களை அரசு விசாரித்து கைது செய்யும் என இஸ்ரேல் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.</p><p> தற்போதைய இஸ்ரேலிய அரசாங்கத்தின் கீழ் குடியேற்றங்கள் வேகமாக விரிவடைந்து வருவதால், குடியேறிகள் தைரியம் அடைந்துள்ளனர். இதன் விளைவாக, அவர்கள் பாலஸ்தீனியர்களை அவர்களின் நிலங்களிலிருந்து விரட்டியடிக்க முயற்சிப்பதால், குடியேறிகளின் வன்முறை வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது. </p><p>சர்வதேச சட்டத்தின் கீழ் அனைத்துக் குடியேற்றங்களும் சட்டவிரோதமானவை என அடையாளப்படுத்தப் பட்டாலும், இஸ்ரேல் அரசாங்கம் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.</p><h2>சூறையாடப்பட்ட நிலை</h2><p> </p><p>கிராமத்தின் பிற பகுதிகளில், மேலும் 11 வீடுகளில் வசிப்பவர்களையும் வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்தியிருந்தது. பாலஸ்தீன மக்களை வீடுகளில் இருந்து வெளியேற்றும் ராணுவம், பின்னர் மொத்தமாக சூறையாடப்பட்ட நிலையிலேயே வீடுகளை மீண்டும் ஒப்படைப்பதாக கூறுகின்றனர்.</p><p> ஒருவர் தமது வீட்டில் இருந்த 1,500 டொலர் தொகை திருடு போனதையும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இஸ்ரேல் ராணுவம் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்க முன்வரவில்லை. </p><p>ஐ.நா.வின் புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகளாலோ அல்லது குடியேறிகளாலோ 18 குழந்தைகள் உட்பட 76 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.</p><p></p><p> </p><p>அதே நேரத்தில், மேற்குக் கரையில் பாலஸ்தீனியர்களுடனான மோதல்களிலும், ஒரு பாலஸ்தீனியர் நடத்தியதாகக் கூறப்படும் வாகன மோதல் தாக்குதலிலும், மூன்று இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். </p><p> 2023 ஜனவரி முதல், மேற்குக் கரையில் உள்ள 127 பாலஸ்தீனிய சமூகங்கள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இடம்பெயர்ந்துள்ளன; இதில் 47 சமூகங்கள் முற்றிலுமாக இடம்பெயர்ந்துள்ளன. </p><p>இதனால் 6,390-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. தெரிவிக்கிறது. குடியேற்றக்காரர்களின் வன்முறை, இடிப்புப் பணிகள் மற்றும் வெளியேற்றங்கள் காரணமாக, 2026-ஆம் ஆண்டில் சுமார் 3,800 பாலஸ்தீனியர்கள், அவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் குழந்தைகள், இடம்பெயர்ந்துள்ளனர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T23:33:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சனி நட்சத்திர பெயர்ச்சி ; இந்த ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sani-peyarchi-kastam-mudivukku-varum-rasi-1786656386"></link>
            <id>https://jvpnews.com/article/sani-peyarchi-kastam-mudivukku-varum-rasi-1786656386</id>
            <summary type="text">சனி பகவான் மற்ற கிரகங்களை விட அதிகமாக ஒரு ராசியிலும், நட்சத்திரத்திலும் பயணித்து வரக்கூடியவர். அதில் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ராசியை மாற்றும் சனி ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சனி பகவான் மற்ற கிரகங்களை விட அதிகமாக ஒரு ராசியிலும், நட்சத்திரத்திலும் பயணித்து வரக்கூடியவர். அதில் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ராசியை மாற்றும் சனி பகவான், 5-6 மாதங்களுக்கு ஒருமுறை நட்சத்திரத்தை மாற்றுவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3890b4d-7fe1-4611-bd7b-95f3d0aeb98e/26-6a7e368498356.webp' /></p><p>இப்படி சனி பகவானின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.&nbsp;இந்நிலையில் ஆகஸ்ட் 20 ஆம் திகதி சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்குள் நுழையவுள்ளார். இங்கு அக்டோபர் 09 ஆம் திகதி வரை இருப்பார்.&nbsp;இப்போது சனி நட்சத்திர பெயர்ச்சியால் வாழ்வில் நல்ல மாற்றத்தைக் காணப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff81b099-2797-4434-b616-3099253b6912/26-6a7e3685508b3.webp' /></p><h3>ரிஷபம்</h3><p>
சனியின் நட்சத்திர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். அதுவும் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. எதிர்பாராத சில நல்ல செய்திகளைப் பெறக்கூடும். நிதி நிலைமை மேம்படும். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்குஙம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dda8fb47-997c-4615-af77-082bd258e747/26-6a7e36862092f.webp' /></p><h3>மிதுனம்</h3><p>
சனி நட்சத்திர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களின் வாழ்வில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும். பல வழிகளில் இருந்து நல்ல செய்திகள் தேடி வரும். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் இக்காலத்தில் கைக்கு வந்து சேரும். பணியிடத்தில் சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57bfbe67-aec4-4652-aaf0-fb7736d1c422/26-6a7e3686e240f.webp' /></p><h3>கன்னி
</h3><p>சனி நட்சத்திர பெயர்ச்சியானது கன்னி ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் சிறப்பானதாக இருக்கப் போகிறது. முக்கியமாக மன அழுத்தம் குறைந்து, மனதில் மகிழ்ச்சி பெருகும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். நீண்ட காலமாக ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து வந்திருந்தால், இப்பெயர்ச்சிக்கு பின் ஆரோக்கியம் மேம்படும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2aa191a2-f585-4a6e-9b60-8151c8f1695a/26-6a7e368798079.webp' /></p><h3>துலாம்</h3><p>
சனி நட்சத்திர பெயர்ச்சியானது துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறது. அதுவும் இந்த மாற்றமானது எதிர்பார்த்த ஒன்றாக இருக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். நல்ல நிதி முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மற்றும் குடும்ப சூழல் இனிமையாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd7b2a4c-ba81-4438-9974-5b8816bdecd1/26-6a7e36884af87.webp' /></p>]]></content>
            <updated>2026-08-13T23:30:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அழகியே அழகியே என ரசிகர்களின் கமெண்ட்டுகளால் பொங்கும் டிடியின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/anchor-dd-latest-saree-attire-photoshoot-1786628383"></link>
            <id>https://cineulagam.com/article/anchor-dd-latest-saree-attire-photoshoot-1786628383</id>
            <summary type="text">தொகுப்பாளினி டிடி20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் டிடி.&amp;nbsp;விஜய் தொலைக்காட்சியில் இவர் நடத...</summary>
            <content type="html"><![CDATA[<h2>தொகுப்பாளினி டிடி</h2><p>20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் டிடி.&nbsp;</p><p>விஜய் தொலைக்காட்சியில் இவர் நடத்திய நிகழ்ச்சிகள் ஏராளம், ஆனால் இப்போதெல்லாம் தொலைக்காட்சி பக்கம் வருவதில்லை. மாறாக தனியாக நிகழ்ச்சிகள், யூடியூப் பேட்டிகள் என நடத்தி வருகிறார்.</p><p>அதேசமயம் நிகழ்ச்சி பணிகளுக்கு இடையில் போட்டோ ஷுட்களும் செய்கிறார். அப்படி அண்மையில் லட்சணமாக புடவை அணிந்து டிடி வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அழகியே அழகியே கமெணட் செய்து வருகிறார்கள்.</p><p>இதோ அவரது லேட்டஸ்ட் போட்டோஸ்,</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T23:30:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமைச்சர் சந்திரசேகர் தலைமையில் திருகோணமலையில் கடற்றொழிலாளர்களின் அபிவிருத்தி குழு கூட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fisheries-development-committee-meeting-trinco-1786662262"></link>
            <id>https://tamilwin.com/article/fisheries-development-committee-meeting-trinco-1786662262</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்டத்தில் கடற்றொழில்துறை சார்ந்த பிரச்சினைகள் மற்றும்
அவற்றுக்கான சாத்தியமான தீர்வுகள் தொடர்பான மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் நேற்றை...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்டத்தில் கடற்றொழில்துறை சார்ந்த பிரச்சினைகள் மற்றும்
அவற்றுக்கான சாத்தியமான தீர்வுகள் தொடர்பான மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் நேற்றையதினம் (13) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில்
நடைபெற்றது.
</p><p>குறித்த கூட்டம், மாவட்ட செயலாளர்
W. G. H. ஹேமந்தகுமாரவின் ஒருங்கிணைப்பில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்
வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.</p><h2>ஒருங்கிணைப்புக் குழு</h2><p>

இதில் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், வெளிவிவகார
மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா
மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன ஆகியோர்
கலந்துகொண்டு, கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் மற்றும் தேவைகள்
குறித்துத் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6edc8961-1c47-4d37-9cf5-1d9f3f6b2504/26-6a7e4e6ef3a2f.webp' /></p><p>
</p><p>
கூட்டத்தின் தொடக்கத்தில், இந்நிகழ்வின் நோக்கம் மற்றும் இதன் மூலம்
எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள் குறித்து அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
விரிவாக விளக்கமளித்தார்.</p><p>

அதனைத் தொடர்ந்து, கடந்த மாவட்ட கடற்றொழிலாளர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்
முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்து விரிவாக
ஆராயப்பட்டது.
</p><p>
குறிப்பாக, திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர்கள் அன்றாடம் எதிர்நோக்கும்
சிக்கல்களுக்கு விரைவான மற்றும் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளைப்
பெற்றுக்கொடுப்பது குறித்து இக்கூட்டத்தில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
</p><p>
இந்தக் கூட்டத்தில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின்
செயலாளர், திருகோணமலை மாவட்ட மீன்பிடி கூட்டுத்தாபன அதிகாரிகள், பிரதேச
செயலாளர்கள், மாவட்ட மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-08-13T23:12:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் 3 பேருக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/three-people-executed-same-day-us-after-16-years-1786661874"></link>
            <id>https://canadamirror.com/article/three-people-executed-same-day-us-after-16-years-1786661874</id>
            <summary type="text">அமெரிக்காவில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே நாளில் மூன்று கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டென்னசி, அலபாமா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே நாளில் மூன்று கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> டென்னசி, அலபாமா மற்றும் ஓக்லஹோமா ஆகிய மூன்று மாகாணங்களில் இந்த மரண தண்டனைகள் திட்டமிடப்பட்டிருந்தன.
</p><p>
டென்னசியில் 66 வயதான அந்தோணி டேரல் ஹைன்ஸ், ஹோட்டல் பணியாளரான கேத்தரின் ஜென்கின்ஸை 1985ஆம் ஆண்டு கொலை செய்த வழக்கில் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3945751-b01e-4871-8b93-7a8505628f53/26-6a7e4bf59af0e.webp' /></p><p>ஓக்லஹோமாவில் 70 வயதான கார்லோஸ் குயெஸ்டா-ரோட்ரிக்ஸ், 2003ஆம் ஆண்டு தனது காதலியை கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.</p><p>

அலபாமாவில் 42 வயதான ஜெரமி வில்லியம்ஸ், 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்த வழக்கில் மரண தண்டனைக்கு தீர்ப்பளிக்கப்பட்டிருந்தார். </p><p>இந்த மூவருக்கும் மரண தண்டனை விஷ ஊசி மூலம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டது.</p><p>

அமெரிக்காவில் இதற்கு முன்னர் 2010ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் திகதி ஒரே நாளில் மூன்று மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருந்தன. </p><p>அதன்பின்னர் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வாறான மூன்று மரண தண்டனைகள் ஒரே நாளில் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-13T22:58:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டர் ; 2 வீரர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/military-helicopter-crashes-us-2-soldiers-killed-1786660731"></link>
            <id>https://canadamirror.com/article/military-helicopter-crashes-us-2-soldiers-killed-1786660731</id>
            <summary type="text">அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இடம்பெற்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

டெக்சாஸ் மாநிலம் சலாடோ பகுதிக்கு அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இடம்பெற்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.</p><p>

டெக்சாஸ் மாநிலம் சலாடோ பகுதிக்கு அருகே அமெரிக்க ராணுவத்துக்குச் சொந்தமான தாக்குதல் வகை அபாச்சி ஹெலிகாப்டர் ஒன்று பறந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென வயல்வெளியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fd11f62-791a-4f4e-8295-6dd88e805f0b/26-6a7e477ccea8f.webp' /></p><p>

விபத்தைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் தீப்பற்றி வெடித்துச் சிதறியதுடன், வயல்வெளியில் இருந்த புற்களிலும் தீ பரவியுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். </p><p>எனினும், தீ சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹெலிகாப்டரில் பயணித்த இரண்டு ராணுவ வீரர்களும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. </p><p>அதேவேளை, இந்த விபத்தில் வேறு எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. </p><p>விபத்துக்கான காரணத்தை கண்டறியும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
இந்நிலையில், உயிரிழந்த இரு வீரர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-13T22:38:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவ்வாயில் வேற்றுகிரகவாசிகள் வாழ்கின்றனரா... நாசா புகைப்படம் கூறுவது என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/are-aliens-living-on-mars-what-nasa-photo-say-1786660146"></link>
            <id>https://canadamirror.com/article/are-aliens-living-on-mars-what-nasa-photo-say-1786660146</id>
            <summary type="text">செவ்வாய் கோளில் இருந்து நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் அனுப்பிய புகைப்படங்களில் காணப்படும் கதவு போன்ற அமைப்பு ஒன்று சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செவ்வாய் கோளில் இருந்து நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் அனுப்பிய புகைப்படங்களில் காணப்படும் கதவு போன்ற அமைப்பு ஒன்று சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் கடந்த ஜூலை மாதம் செவ்வாய் கோளின் மவுண்ட் ஷார்ப் பகுதியைச் சேர்ந்த பல புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f45c69a-0d8a-4e65-8eac-8a36250aad56/26-6a7e4534c9d2e.webp' /></p><p>இந்தப் புகைப்படங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட பெரிய படத்தில், பாறைப் பகுதியில் கதவு போன்ற தோற்றமுடைய அமைப்பு ஒன்று தென்படுவதாக சிலர் தெரிவித்துள்ளனர்.</p><p>இதனை அடிப்படையாகக் கொண்டு, செவ்வாய் கோளில் வேற்றுகிரகவாசிகளின் நாகரிகம் இருந்திருக்கலாம் அல்லது இன்னும் இருக்கலாம் என்ற கருத்துகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
</p><p>
கியூரியாசிட்டி ரோவர் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் செவ்வாய் கோளின் கேல் பள்ளத்தில் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, சுமார் 3 மைல் உயரம் கொண்ட மவுண்ட் ஷார்ப் பகுதியில் உள்ள பாறைகள் மற்றும் மண்ணை ஆய்வு செய்து வருகிறது.
</p><p>
பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கோளில் நுண்ணுயிர்கள் வாழ்ந்தனவா என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
</p><p>
இந்நிலையில், புகைப்படத்தில் காணப்படும் கதவு போன்ற அமைப்பு குறித்து பறக்கும் தட்டு தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் ஸ்காட் வேரிங், அது உண்மையில் ஒரு கதவு போன்றே காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08d0f8b8-fdeb-46e9-b0dd-ce29a6d48e38/26-6a7e45357cc80.webp' /></p><p>அந்த அமைப்பு சுமார் 6.6 அடி உயரமும் 3.3 அடி அகலமும் கொண்டதாக அவர் கூறியுள்ளார். எனினும், இந்த அளவீடுகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன என்பது தொடர்பில் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
</p><p>
இதனிடையே, இந்தக் காட்சி தொடர்பில் பல்வேறு ஊகங்கள் பரவி வருகின்ற போதிலும், செவ்வாய் கோளில் வேற்றுகிரகவாசிகள் வாழ்ந்ததற்கான அல்லது பழமையான நாகரிகம் இருந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என நாசா தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், செவ்வாயில் உயிரினங்கள் அல்லது பண்டைய நாகரிகம் தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராயும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
இதனால், தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தில் காணப்படும் கதவு போன்ற அமைப்பு உண்மையில் என்ன என்பது குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டாலும், அதனை வேற்றுகிரகவாசிகளின் இருப்புக்கான ஆதாரமாகக் கருத முடியாது என விஞ்ஞான ரீதியில் சுட்டிக்காட்டப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-13T22:29:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் பொது வைத்தியசாலை முன்பாக வாகன நிறுத்தத்துக்கு தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-action-on-mannar-hospital-parking-1786660030"></link>
            <id>https://ibctamil.com/article/police-action-on-mannar-hospital-parking-1786660030</id>
            <summary type="text">மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக முறையற்ற வாகன நிறுத்தத்துக்கு எதிராக
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக நீண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக முறையற்ற வாகன நிறுத்தத்துக்கு எதிராக
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக நீண்டகாலமாக வாகனம் நிறுத்தத் தடை (No
Parking) என அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் வாகனங்கள் முறையற்ற விதத்தில்
நிறுத்தப்பட்டு வந்துள்ளது.
</p><p>
இந்தநிலையில், அதற்கு எதிராக போக்குவரத்து காவல்துறையினர் நேற்று (13-08-2026)
விசேட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.</p><p>
</p><p></p><h2>கிடைக்கப்பெற்ற முறைப்பாடு</h2><p>வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள், பொதுமக்கள் மற்றும் ஏனைய வாகனப்
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதாக
கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக
தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதன்போது, முறையற்ற விதத்தில் வாகனங்களை நிறுத்திய வாகன உரிமையாளர்களுக்கு
எதிராக தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், குறித்த பகுதியில் வாகனங்களை
நிறுத்துவதற்கு கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/890c3eb0-6aa1-4b5b-97f4-3fde114752db/26-6a7e44c7490be.webp' /></p><p>

வைத்தியசாலை வளாகத்திற்கு முன்பாக போக்குவரத்து ஒழுங்கை பேணுவதற்கும்
நோயாளர்களின் அவசரப் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையிலும்
இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>

எனவே, குறித்த பகுதியில் வாகனங்களை நிறுத்தாமல், போக்குவரத்து காவல்துறையினரின்
அறிவுறுத்தல்களையும் வீதிப் போக்குவரத்து விதிகளையும் பொதுமக்கள்
கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-13T22:27:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எம்.பிக்களுக்கிடையே வாக்குவாதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heated-clash-over-mannar-power-cuts-1786659507"></link>
            <id>https://ibctamil.com/article/heated-clash-over-mannar-power-cuts-1786659507</id>
            <summary type="text">மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும்
ஜெகதீஸ்வரன் ஆகியோருக்கு இடையில் கடுமையான கருத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும்
ஜெகதீஸ்வரன் ஆகியோருக்கு இடையில் கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
</p><p>
குறித்த கூட்டம் நேற்று (13-08-2026) நடைபெற்றபோது, மன்னார்
மாவட்டத்தில் அடிக்கடி இடம்பெறும் மின்சாரத் தடைகள் தொடர்பாக இடம்பெற்ற
கலந்துரையாடலின் போதே இவ்வாறு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.</p><p>

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மின்சாரம் தடைப்படுவதால் மக்கள்
எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டபோது,
மின்வெட்டை பற்றி நாங்கள் கதைக்கக் கூடாதா ? என ரிஷாட் பதியுதீன் கேள்வி
எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டது.</p><p></p><h2>அபிவிருத்திக் குழு</h2><p>

இதன்போது பதிலளித்த ஜெகதீஸ்வரன், கடந்த அரசாங்கங்களில் அமைச்சர்களாகவும்
அபிவிருத்திக் குழுத் தலைவர்களாகவும் இருந்தவர்கள், தற்போதைய நிலைமை தொடர்பாக
கேள்வி எழுப்புவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
</p><p>
இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் வார்த்தைப் பரிமாற்றம்
தீவிரமடைந்ததுடன் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53a0b3eb-33cf-420b-b910-c4c8d8885cd4/26-6a7e42b852b9f.webp' /></p><p>

நிலைமை மேலும் தீவிரமடையாத வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும்
மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் ஆகியோர் தலையிட்டு இருவரையும்
சமரசப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் மின்சாரத் தடைக்கு நிரந்தரத்
தீர்வு காணப்பட வேண்டும் என்பதே மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பான கலந்துரையாடல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும்
சூடுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-13T22:18:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப் அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து எழுந்துள்ள விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/criticism-regarding-trump-administration-action-1786654641"></link>
            <id>https://tamilwin.com/article/criticism-regarding-trump-administration-action-1786654641</id>
            <summary type="text">பாலியல் கடத்தலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று
ட்ரம்பின் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும்,
அந்நாட்டின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாலியல் கடத்தலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று
ட்ரம்பின் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும்,
அந்நாட்டின் நீதித்துறை அதற்கான நடவடிக்கைகளைச் சரியாகச் செயல்படுத்தவில்லை
என்று ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>
நீதிமன்றப் பதிவுகளை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள இந்த அறிக்கையின்படி,
நடப்பு ஆண்டின் முதல் பாதியில் பாலியல் கடத்தல் தொடர்பான வழக்குகள் கணிசமாகக்
குறைந்துள்ளன.</p><p></p><h2>ட்ரம்ப் அரசின் நடவடிக்கை</h2><p>
பாலியல் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய அனுபவமிக்க சட்டத்தரணிகள்
மற்றும் முகவர்கள் பலர் பணியை விட்டு விலகியதும், ட்ரம்பின் தீவிரக்
குடிவரவுத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அதிகாரிகள் அதிகளவில் திருப்பி
விடப்பட்டதும் இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
</p><p>
அத்துடன் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவி செய்து வந்த தொண்டு நிறுவனங்களுக்கான
நிதியுதவி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாலும் தாமதமானதாலும் வழக்குகள்
குறைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb7af9c6-8047-456f-94dd-758826db9051/26-6a7e36dd42047.webp' /></p><p>

இதன் காரணமாகப் பல தீவிர விசாரணைகள் பாதியிலேயே முடங்கியுள்ளதாகவும்,
பாதிக்கப்பட்டவர்கள் அரசு நிறுவனங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கை குறைந்து
வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>

இருப்பினும், இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள்,
பாலியல் கடத்தலையும் சிறுவர் சுரண்டலையும் தடுப்பது தங்களின் முக்கிய
முன்னுரிமையாகத் தொடர்ந்து நீடிக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-13T22:18:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[21 நாட்கள் தொடர்ந்து 1 நெல்லிக்காய் சாப்பிட்டால் உடலில் இத்தனை நன்மைகளா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/21-naatkal-thinam-nellika-saptital-kitaikum-nanmai-1786659066"></link>
            <id>https://jvpnews.com/article/21-naatkal-thinam-nellika-saptital-kitaikum-nanmai-1786659066</id>
            <summary type="text">தற்போதைய பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தால் தினந்தோறும் ஏதாவது ஒரு ஆரோக்கிய பிரச்சனையை சந்திக்க வேண்டியுள்ளது.தொடர்ந்து 2...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தால் தினந்தோறும் ஏதாவது ஒரு ஆரோக்கிய பிரச்சனையை சந்திக்க வேண்டியுள்ளது.தொடர்ந்து 21 நாட்கள் தினமும் 1 நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், உடலில் பல அதிசயங்கள் நடக்கும் என உங்களுக்கு தெரியுமா? இந்த நெல்லிக்காயை வெறுமனே சாப்பிடாமல், கருப்பு உப்புடன் சேர்த்து எடுக்கும் போது, உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. தினமும் 1 நெல்லிக்காய் எவ்வாறான நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது என நாம் இங்கு பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/771ac955-c48b-4ddb-8b3d-c417505c3970/26-6a7e40fc74a7b.webp' /></p><h4>அசிடிட்டி, அல்சர், மலச்சிக்கல்</h4><p>அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் தினமும் 2 நெல்லிக்காய் பழத்தை சாப்பிட்டு வந்தால், இந்த பிரச்சனை தானாக குறையும். அதுவும் தொடர்ந்து 2 நாட்கள் உட்கொண்டு வந்தாலே நல்ல பலன் கிடைக்கும். மேலும் வாய்வு தொல்லை, மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களும் தினமும் இந்த பழத்தை உட்கொண்டு வந்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும். அல்சர் பிரச்சனை உள்ளவர்களும் இந்த பழத்தை உட்கொண்டு வந்தால், அல்சர் குறையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79bea593-ea0c-4410-ac1e-0c5781a004a1/26-6a7e40fff021c.webp' /></p><h4>தலைமுடி பிரச்சனை</h4><p>தலைமுடி அதிகம் உதிர்தல், முடி அடர்த்தியின்மை போன்ற பிரச்சனைகளைக் கொண்டவர்கள், தினமும் இந்த பழத்தை ஒன்று உட்கொண்ட வந்தால், தலைமுடி தொடர்பான பிரச்சனைகள் குறையும்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b5a7356-770d-425d-aa59-1e71cad6c293/26-6a7e40ff48c3d.webp' /></p><h4>சரும பிரச்சனை&nbsp;</h4><p>பளபளப்பான சருமத்தைப் பெற, பருக்கள் குறைய, கரும்புள்ளிகள் நீங்க இந்த நெல்லிக்காய் பெரிதும் உதவி புரியும். அதுமட்டுமின்றி, வயதான பின் முகத்தில் தோன்றும் முதுமை தோற்றத்தை தாமதப்படுத்தவுமம், சரும வறட்சியை போக்கவும் உதவுகிறது. முக்கியமாக இந்த நெல்லிக்காயானது உள்ளிருந்து சருமத்திற்கு ஈரப்பதமூட்டும்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a152027-687f-4b70-aab7-65a697f3a6b4/26-6a7e40fe98970.webp' /></p><h4>நோயெதிர்ப்பு சக்தி
</h4><p>அடிக்கடி சளி, ஜலதோஷம் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள், தினமும் ஒரு பழத்தை உட்கொண்டு வந்தால், இவற்றை உண்டாக்கும் வைரஸ்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம். ஒருவேளை வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து விரைவில் அதிலிருந்து மீண்டு வரவும் உதவி புரியும்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3328619e-e801-418f-85da-f818b796758a/26-6a7e40fde6630.webp' /></p><h4>சர்க்கரை நோய் </h4><p>சர்க்கரை நோய் உள்ளவர்களும் இதை தினமும் தவறாமல் ஒன்று உட்கொண்டு வருவது நல்லது. இதனால் சர்க்கரை நோயாளிகள் சந்திக்கும் கண் பார்வை பிரச்சனைகள், நரம்பு பிரச்சனைகள் போன்றவை தடுக்கப்படுவதோடு, இரத்த சர்க்கரையும் கட்டுப்படும்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e18fc290-fbdd-45f0-8fd6-5e0a25c0a538/26-6a7e40fd358f9.webp' /></p>]]></content>
            <updated>2026-08-13T22:11:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திறப்பு விழாவில் ஏற்பட்ட பிரச்சனை, ஆபத்தில் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ethirneechal-thodargiradhu-promo-14-aug-2026-1786641527"></link>
            <id>https://cineulagam.com/article/ethirneechal-thodargiradhu-promo-14-aug-2026-1786641527</id>
            <summary type="text">எதிர்நீச்சல் தொடர்கிறதுஅண்ணன் பின்னாலேயே இத்தனை நாள் ஊதாரியாக, ரவுடியாக சுற்றிவந்த கதிர் இப்போது ராவணன் கொடுத்த ஐடியாவால் சொந்த தொழில் துவங்கியுள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>எதிர்நீச்சல் தொடர்கிறது</h2><p>அண்ணன் பின்னாலேயே இத்தனை நாள் ஊதாரியாக, ரவுடியாக சுற்றிவந்த கதிர் இப்போது ராவணன் கொடுத்த ஐடியாவால் சொந்த தொழில் துவங்கியுள்ளார்.</p><p>டபுப் Document உள்ள ஒரு இடத்தை ராவணன் வேண்டும் என்றே குணசேகரனுக்கு காட்ட எப்படியோ இடத்தை வாங்கிவிட்டார்கள், அதில் நந்தினி பெயரில் தொழிலையும் துவங்கிவிட்டார்.</p><p>கதிர்-நந்தினி மனமகிழ் மன்றத்தின் திறப்பு விழாவிற்காக குடும்பத்துடன் வருகிறார்கள், ஆனால் ஜனனி வரவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ed86114-0611-4c80-bfc0-84af2cf0a856/26-6a7dfc79e99fa.webp' /></p><h2>புரொமோ</h2><p>இன்றைய எபிசோட் புரொமோவில், திறப்பு விழாவில் Furniture வரவில்லை என தெரிகிறது. நந்தினி ஒன்று&nbsp;Furniture வர வேண்டும் இல்லையென்றால் அதற்கான பணம் வர வேண்டும் என கோபமாக கூறுகிறார், நிலத்தை விற்றவர் அது எப்படி என மழுப்புகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83cd7ed0-02ae-45aa-8c5c-99b8cd72baea/26-6a7dfc7941407.webp' /></p><p>இங்கு வீட்டில் ஜனனி யாரும் இல்லாமல் தனியாக இருக்கிறார். அப்போது ஜனனி எதர்சையாக வெளியே பார்க்கும் போது இருவர் வீட்டையே பார்க்கிறார்கள், அதைப்பார்த்து ஜனனி பதறுகிறார்.</p><p>மனமகிழ் திறப்பு விழாவில் நந்தினி-ரேணுகா ஏதோ பேச அங்கு வந்த ரேணுகா அம்மா இருவருக்கும் மனக் கசப்பு ஏற்படும் வகையில் பேசுகிறார். இதோ புரொமோ,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ixybIRO0B7M" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-13T22:00:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சராசரி டெஸ்லா ஊழியரைவிட 2.5 மில்லியன் மடங்கு அதிகமாக சம்பளம் பெற்ற எலோன் மஸ்க்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tesla-paid-musk-more-wokers-1786657958"></link>
            <id>https://news.lankasri.com/article/tesla-paid-musk-more-wokers-1786657958</id>
            <summary type="text">Tesla paid Elon Musk 2.5m times more: 2025-ல் டெஸ்லா நிறுவனம், தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த எலோன் மஸ்க்கிற்கு, அவரது சராசரி ஊழியரை விட 2.5 மில்லியன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Tesla paid Elon Musk 2.5m times more: 2025-ல் டெஸ்லா நிறுவனம், தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த எலோன் மஸ்க்கிற்கு, அவரது சராசரி ஊழியரை விட 2.5 மில்லியன் மடங்கு அதிகமாக ஊதியம் வழங்கியது.
</p><p>புதிய அறிக்கை ஒன்றின்படி, டெஸ்லா நிறுவனத்தின் சராசரி ஊழியர் பெறும் ஊதியத்தை விட 25 லட்சத்திற்கும் அதிகமான மடங்கு ஊதியத்தை எலோன் மஸ்க் பெற்றுள்ளார்.</p><h2>ஒவ்வொரு 4.23 வினாடி</h2><p>
</p><p>மஸ்க்கின் 158.3 பில்லியன் டொலர் ஊதிய ஒப்பந்தம் ஒரு விதிவிலக்கான நிகழ்வாக அமைந்தாலும், அது தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தொழிலாளர்களின் ஊதியங்களுக்கு இடையிலான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வந்த சூழலில் நிகழ்ந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26922103-6dc9-4b40-8226-fa7af46847e9/26-6a7e3ca85f702.webp' /></p><p> </p><p>மஸ்க்கை தவிர்த்துப் பார்க்கையில், கடந்த ஆண்டில் முன்னணி S&amp;P 500 நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) மற்றும் ஊழியர் ஊதியங்களுக்கு இடையிலான சராசரி விகிதம் 312:1 ஆக இருந்தது; இது முந்தைய ஆண்டின் 285:1 என்ற விகிதத்தை விட அதிகமாகும். </p><p>அமெரிக்காவின் மிகப்பெரிய தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பான AFL-CIO இந்த வாரம் வெளியிட்ட நிர்வாகிகளின் ஊதியம் குறித்த அறிக்கையின்படி, மஸ்க்கை கணக்கில் கொண்டால் சராசரி ஊதிய விகிதம் 5,387:1 ஆக இருந்தது. </p><p>2025-ஆம் ஆண்டில், ஒரு சராசரி டெஸ்லா ஊழியரின் ஊதியத்திற்கு இணையான தொகையை எலோன் மஸ்க் ஒவ்வொரு 4.23 வினாடிகளுக்கும் ஒருமுறை பெற்றார் என்றே அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>மேலும், S&amp;P 500 நிறுவனங்களின் பெரும்பாலான தலைமைச் செயல் அதிகாரிகள், அமெரிக்காவின் சராசரி ஊழியர் ஒருவர் ஓராண்டில் ஈட்டும் வருமானத்தை விட அதிகமான தொகையை ஒரே நாளில் ஈட்டினர். </p><p>மஸ்க்கை தவிர்த்துப் பார்க்கையில், 2025-ல் தலைமைச் செயல் அதிகாரிகளின் சராசரி ஊதியம் 22.8 மில்லியன் டொலராக இருந்தது; இது 2024-ல் 18.9 மில்லியன் டொலராக இருந்தது.</p><h2>ஏறக்குறைய 254 சதவீதம்</h2><p> </p><p>டெஸ்லாவையும் கணக்கில் கொண்டால், இந்தச் சராசரி 340.1 மில்லியன் டொலராக உயர்கிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் தேசிய வருமானத்தில் தொழிலாளர்களின் பங்கு இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிகக் குறைந்த அளவிற்குக் குறைந்துள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. </p><p>இந்த அறிக்கை டொனால்ட் ட்ரம்ப்பின் 2025-ஆம் ஆண்டு வருமானத்தையும் ஆராய்கிறது. முக்கியமாகத் தனது கிரிப்டோ சொத்துகள் மூலம் கிடைத்த 2.2 பில்லியன் டொலர் வருமானத்துடன், ட்ரம்ப்பின் வருமானம் 2024-ஆம் ஆண்டை விட ஏறக்குறைய 254 சதவீதம் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c34c6f67-badb-4a65-adc9-a1e537387051/26-6a7e3ca910929.webp' /></p><p> </p><p>2025-இல் ட்ரம்ப் பெற்ற வருமானத்தை ஈட்டுவதற்கு, அமெரிக்காவின் சராசரி (இடைநிலை) தொழிலாளிக்கு 43,154 ஆண்டுகள் தேவைப்படும். </p><p>பெரும்பாலான அமெரிக்கர்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சிக்கல்களை அந்த அறிக்கை தரவுகள் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது; அதன்படி, அமெரிக்காவில் 33 சதவீதம் பெரியவர்களிடம் ஓய்வுக்கால சேமிப்பு ஏதுமில்லை, </p><p>37 சதவீதம் பேரிடம் 400 டொலர் அளவிலான அவசரச் செலவைச் சமாளிக்கப் போதுமான பணம் இல்லை, 26 சதவீதம் பேர் செலவு காரணமாக மருத்துவச் சிகிச்சையைத் தவிர்த்துள்ளனர், </p><p>மேலும் 23 சதவீதம் வாடகைதாரர்கள் கடந்த ஓராண்டில் வாடகை செலுத்துவதில் பின்தங்கியுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T21:50:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாம்பியாவில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/voting-elect-a-new-president-in-zambia-1786654730"></link>
            <id>https://tamilwin.com/article/voting-elect-a-new-president-in-zambia-1786654730</id>
            <summary type="text">சாம்பியாவில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல்
வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

சுமார் 80 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாம்பியாவில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல்
வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
</p><p>
சுமார் 80 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கப்
பதிவெழுதியுள்ளனர்.</p><p>

மொத்தம் 14 வேட்பாளர்கள் களத்தில் உள்ளபோதிலும், தற்போதைய அதிபர் ஹக்காயிண்டே
ஹிசிலேமாவுக்கும், அவரது முக்கிய போட்டியாளரான பிரையன் முண்டுபிலேவுக்கும்
(Brian Mundubile) இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.</p><p></p><h2>பொருளாதார மீட்சி&nbsp;</h2><p>
</p><p>
பொருளாதார மீட்சி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியை முன்வைத்து ஜனாதிபதி
ஹிசிலேமா மீண்டும் ஆதரவு திரட்டி வரும் நிலையில், அதிகரித்து வரும் வாழ்க்கைச்
செலவினங்கள் மற்றும் பணவீக்கத்தால் மக்கள் அதிருப்தியில் உள்ளதாகக்
கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/153c00a8-98f1-42a8-a663-746a8549cac4/26-6a7e3a754f4d6.webp' /></p><p>

வாக்குப்பதிவு நிறைவடைந்த பின், 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப்
பெறும் வேட்பாளரே நேரடியாக ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T21:43:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை வைத்தியசாலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஆடை விவகாரம்..! யாரும் அறியாத திடுக்கிடும் தகவல்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hijab-at-kalmunai-hospital-issue-1786648877"></link>
            <id>https://tamilwin.com/article/hijab-at-kalmunai-hospital-issue-1786648877</id>
            <summary type="text">கல்முனை ஆதார வைத்தியசாலையில் (Base Hospital Kalmunai) அண்மையில் ஏற்பட்ட உடை தொடர்பான சர்ச்சை தற்போது பேசுபொருளாகியுள்ளது.
 
இந்த நிலையில், அரசு ஊழிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை ஆதார வைத்தியசாலையில் (Base Hospital Kalmunai) அண்மையில் ஏற்பட்ட உடை தொடர்பான சர்ச்சை தற்போது பேசுபொருளாகியுள்ளது.
</p><p> 
இந்த நிலையில், அரசு ஊழியர்கள் தங்கள் கடமையின் போது அனுமதிக்கப்பட்ட சீருடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்றும், இது குறித்து 2012-ம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், அம்பாறை மாவட்டத்தில் இரண்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைகள் (RDHS) இருப்பதன் சட்டப்பூர்வத்தன்மை மற்றும் வைத்தியசாலைப் பெயர்களில் உள்ள மாற்றங்கள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.</p><p>

இந்த விவாதம் எந்த ஒரு மதத்திற்கும் அல்லது இனத்திற்கும் எதிரானது அல்ல என்றும், சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுவதே அவசியம் எனவும் சமூக மட்டங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
அரச ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சீருடைகளை (Uniform) மட்டுமே பணி நேரத்தில் அணிய வேண்டும் என்று இலங்கையின் பொது நிர்வாக மற்றும் சுகாதார அமைச்சின் சுற்றறிக்கைகள் வலியுறுத்துகின்றன.

 குறிப்பாக 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை (கடித இலக்கம்: 2/176/212), சுகாதாரப் பணி உதவியாளர்கள் மற்றும் கனிஷ்ட தர ஊழியர்கள் முழங்கால் வரை இருக்கும் ஆடைகளை (Cream colour gown) அணிய வேண்டும் என்பதை மிகத் தெளிவாக வரையறுத்துள்ளது.</p><p>

 எந்தவொரு மத அல்லது இன ரீதியான அடையாளங்களையும் அல்லது உடைகளையும் பணி நேரத்தில் அணிய அனுமதி இல்லை என்றும், அரசியலமைப்பு மத சுதந்திரத்தை வழங்கினாலும், அரச கடமைகளில் சீருடை தொடர்பான விதிகளைப் பின்பற்றுவது கட்டாயம் என்றும் இதில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 குறித்த சீருடைகளை அணியத் தவறும் ஊழியர்களுக்கு எதிராக அரச நிறுவனங்களின் தலைவர்கள் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது இந்தச் சுற்றறிக்கையின் கட்டாய விதிமுறையாக உள்ளது.
</p><p>
இந்த விதிமுறைகள் இலங்கையில் உள்ள அனைத்து மாவட்ட வைத்தியசாலைகளுக்கும் பொதுவானவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mqj0Hav3DsQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-13T21:38:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா–ஈரான் போர்: ட்ரம்ப் பதவிக்காலம் வரை நீடிக்க வாய்ப்பு..! ஈரானின் அதிரடி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mideast-war-to-continue-till-trump-s-term-ends-1786653639"></link>
            <id>https://tamilwin.com/article/mideast-war-to-continue-till-trump-s-term-ends-1786653639</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் தொடங்கிய மத்திய கிழக்கு போர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் தொடங்கிய மத்திய கிழக்கு போர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் முடியும் வரை நீடிக்கக்கூடும் என ஈரானின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இஸ்லாமிய புரட்சிகர காவல் படையான IRGC-யின் தளபதியும், ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் நெருங்கிய உதவியாளருமான முகமது ரெசா நக்தி, அமெரிக்க ஊடகமான PBS-க்கு வழங்கிய நேர்காணலில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ட்ரம்பின் பதவிக்காலம்&nbsp;</h2><p>

போர் நீடிக்கும் ஒவ்வொரு நாளும் ஈரானுக்கு போரில் அதிக அனுபவம் கிடைத்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
</p><p>
“இந்தப் போர் நீடிக்கும் வரை நாங்கள் கற்றுக்கொள்வோம். அமெரிக்காவுடன் எவ்வாறு போரிடுவது என்பதை கடந்த ஐந்து மாதங்களில் கற்றுக்கொண்டுள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
ட்ரம்பின் பதவிக்காலம் முடியும் வரை போரை நீட்டிப்பதே ஈரானின் நோக்கமா என கேட்கப்பட்டபோது, ஈரானுக்கு எதிராக மீண்டும் தாக்குதல் நடத்த நினைப்பவர்கள் அதன் விளைவுகளையும் செலவையும் உணரும் வகையில் தடுப்பு சக்தியை உருவாக்க வேண்டும் என நக்தி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7896302-98ba-4029-a7d8-a9031d44253e/26-6a7e2ef4b53c9.webp' /></p><p>
</p><p>&nbsp;ட்ரம்பின் தற்போதைய பதவிக்காலம் 2029 ஜனவரி 20ஆம் திகதி முடிவடைய உள்ளது. அமெரிக்கா போரில் அணு குண்டை பயன்படுத்த வாய்ப்புள்ளதா என கேட்கப்பட்டபோது, அது அமெரிக்காவுக்கு மிகப்பெரிய தவறாக முடியும் என நக்தி எச்சரித்துள்ளார்.
</p><p>
அமெரிக்கா அணு ஆயுதத்தை பயன்படுத்தினால், உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் பாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
அதேவேளை, ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவது குறித்து பரிசீலிக்கிறதா என கேட்கப்பட்டபோது, அதற்கான தேவை இல்லை என அவர் கூறியுள்ளார்.</p><p>&nbsp;ஈரான் தனது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை மட்டுமே நம்பியிருக்கவில்லை என நக்தி தெரிவித்துள்ளார்.

போர் பல ஆண்டுகள் நீடித்தாலும், இறுதி நாள் வரை ஈரானிடம் இருந்து ரொக்கெட்டுகள் ஏவப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p></p><h2>&nbsp;ஈரான் எச்சரிக்கை</h2><p>
மேலும், ஈரான் தினமும் உற்பத்தி செய்யும் ஏவுகணைகளின் எண்ணிக்கை, அது ஏவுகின்ற ஏவுகணைகளின் எண்ணிக்கையை விட அதிகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இதற்கிடையில், போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9291c43-b323-4b9c-911c-46b0bd20c3f1/26-6a7e2ef569ac7.webp' /></p><p>
</p><p>
ஜூன் 17ஆம் திகதி ட்ரம்பும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியனும் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் 14 அம்ச உடன்பாட்டில் கையெழுத்திட்டிருந்தனர்.</p><p>

எனினும், ஜூலை 8ஆம் திகதி அந்த உடன்பாடு முடிவடைந்துவிட்டதாக ட்ரம்ப் தெரிவித்தார். </p><p>இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா தனது உறுதிமொழிகளை மீறியதாக குற்றம்சாட்டி ஈரானும் அந்த ஒப்பந்தத்தை நிறுத்தியது.

இதனால், போர் நீடிக்கும் காலம் மற்றும் அமெரிக்கா–ஈரான் இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் குறித்து தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-13T21:34:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/birthday-girl-ramya-pandian-latest-clicks-1786612251"></link>
            <id>https://cineulagam.com/article/birthday-girl-ramya-pandian-latest-clicks-1786612251</id>
            <summary type="text">ரம்யா பாண்டியன்ஒரே இரவில் ஒபாமா அளவிற்கு பேமஸ் என்பது போல் ஒரே ஒரு மொட்டை மாடி போட்டோ ஷுட்டில் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் தான் நடி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரம்யா பாண்டியன்</h2><p>ஒரே இரவில் ஒபாமா அளவிற்கு பேமஸ் என்பது போல் ஒரே ஒரு மொட்டை மாடி போட்டோ ஷுட்டில் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.</p><p>அந்த ஒரு போட்டோ ஷுட் மூலம் பிரபலமானவர் அப்படியே விஜய் டிவி பக்கம் வந்து குக் வித் கோமாளி கலக்கினார், அந்நிகழ்ச்சியும் நல்ல பிரபலத்தை கொடுக்க அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்து வந்தார்.</p><p>இப்போது குக் வித் கோமாளி புதிய சீசனிலும் கலந்துகொண்டு அருமையாக சமைத்து வருகிறார். இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் ரம்யா பாண்டியனின் சில அழகிய புகைப்படங்களை காண்போம்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T21:00:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சைக்குரிய குரில் தீவுகளுக்கு விளாடிமிர் புடின் முதல்முறையாக விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/putin-visits-disputed-kuril-islands-for-first-time-1786651534"></link>
            <id>https://tamilwin.com/article/putin-visits-disputed-kuril-islands-for-first-time-1786651534</id>
            <summary type="text">ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லைச்
சர்ச்சையில் இருக்கும் குரில் தீவுகளின் ஒரு பகுதியான &#039;இதுருப்&#039; (Iturup)
தீவுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லைச்
சர்ச்சையில் இருக்கும் குரில் தீவுகளின் ஒரு பகுதியான 'இதுருப்' (Iturup)
தீவுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பயணம் மேற்கொண்டுள்ளார்.</p><p>

ரஷ்ய ஜனாதிபதியின் இந்த விஜயத்திற்கு ஜப்பான் பிரதமர் சானே தகாய்ச்சி தனது
கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.</p><p></p><h2>முதல்முறையாக விஜயம்</h2><p>
</p><p>
செய்தியாளர்களிடம் பேசிய அவர்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/feebcb8b-381a-4330-9665-8fb8b177d262/26-6a7e246207eb3.webp' /></p><p> </p><p>புடினின் இந்த நடவடிக்கை ஜப்பான் மக்களின்
உணர்வுகளைக் காயப்படுத்தியுள்ளதாகவும், இதனைச் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாது
என்றும் தெரிவித்துள்ளார்.</p><p>

இரண்டாம் உலகப் போரின் இறுதியில் சோவியத் ஒன்றியத்தால் கைப்பற்றப்பட்ட இந்தத்
தீவுகள், வரலாற்று ரீதியாகத் தங்களுக்குச் சொந்தமானது என ஜப்பான் தொடர்ந்து
உரிமை கோரி வரும் நிலையில், இந்தச் சம்பவம் இரு நாடுகளுக்கு இடையிலான தூதரக
உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-13T20:59:18+00:00</updated>
        </entry>
    </feed>
