<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-08T18:43:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுக்கு உரத்த குரலில் ஈரான் வழங்கிய செய்தி! இதுவே ஹோர்முஸ் திறப்புக்கான நிபந்தனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/loud-message-from-iran-to-america-1786213973"></link>
            <id>https://ibctamil.com/article/loud-message-from-iran-to-america-1786213973</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் திறப்பதற்கு முன்பு, அமெரிக்கா நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை ஈரானின் தேசிய பாதுகாப்பு செயலாளர் முகமது...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் திறப்பதற்கு முன்பு, அமெரிக்கா நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை ஈரானின் தேசிய பாதுகாப்பு செயலாளர் முகமது பாகர் சுல்காதர் வெளியிட்டுள்ளார்.
</p><p>
அமெரிக்க கடற்படை முற்றுகையை நீக்குதல், இராணுவப் படைகளைத் திரும்பப் பெறுதல் மற்றும் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருதல் போன்ற நடவடிக்கைகள் அந்தப் பட்டியலில் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

மோதலால் ஏற்பட்ட சேதங்களுக்கு ஈரானுக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><h2>ஈரானிய மக்கள் உரக்கப் பிரகடனகம்</h2><p>

இதன்படி "களத்திலும் வீதிகளிலும் 160 நாட்கள் உறுதியாகப் போராடி, ஈரானிய மக்கள் உரக்கப் பிரகடனப்படுத்திய கோரிக்கைகள் இவை," என்று அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aef44b78-c4b4-43ad-960e-432e9aad2466/26-6a7777488dc94.webp' /></p><p>
</p><p>
அமெரிக்கா தனது நடத்தையைத் திருத்திக்கொள்ளும் வரை, ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படாது," எனவும் அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-08T18:37:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்லைமீறிய கூட்டம்.. ஹிப் ஹாப் ஆதி நிகழ்ச்சி ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/hiphop-tamizha-meesaya-murukku-2-event-cancelled-1786213801"></link>
            <id>https://cineulagam.com/article/hiphop-tamizha-meesaya-murukku-2-event-cancelled-1786213801</id>
            <summary type="text">இசையமைப்பாளராக இருந்து நடிகரானவர் ஹிப்ஹாப் ஆதி. அவர் தற்போது ஹீரோ ஆக படங்களில் நடித்து வருகிறார். அவரது படங்களுக்கு அவரே இசையமைப்பதால் பாடல்களும் ஹிட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இசையமைப்பாளராக இருந்து நடிகரானவர் ஹிப்ஹாப் ஆதி. அவர் தற்போது ஹீரோ ஆக படங்களில் நடித்து வருகிறார். அவரது படங்களுக்கு அவரே இசையமைப்பதால் பாடல்களும் ஹிட் ஆகின்றன.</p><p>அவர் தற்போது மீசைய முறுக்கு 2 படத்தில் நடித்திருக்கும் நிலையில், அது விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதன் ப்ரோமோஷனுக்காக சென்னை பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் ஒரு நிகழ்ச்சி இன்று நடைபெற இருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c52410fb-61c1-4c44-aaee-30dbadd5ccb6/26-6a7775aaecb3c.webp' /></p><h2>நிகழ்ச்சி ரத்து </h2><p>
ஹிப் ஹாப் ஆதி ரசிகர்கள் அதிகம் பேர் மால் உள்ளே கூடியதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்று விட்டது.</p><p>

அதனால் போலீசார் நிகழ்ச்சியை ரத்து செய்யும்படி கூறிய நிலையில், படகுழு நிகழ்ச்சியை ரத்து செய்து இருக்கிறார்கள். அதனால் ரசிகர்களை ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர்.</p><p>"உங்களுடைய பாதுகாப்பு கருதியும், காவல் துறையின் அறிவுறுத்தலின் படியும் என்னால் மேடை ஏற முடியவில்லை. உங்கள் கட்டுக்கடங்காத அன்பு ஒரு புறம் மகிழ்ச்சி தந்தாலும், உங்களோடு #meesayamurukku2 வை இன்று கொண்டாட முடியவில்லை என்பதில் மிகுந்த வருத்தம்" என ஆதி பதிவிட்டுள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Dbx9D-Ck3Ig/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Dbx9D-Ck3Ig/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Dbx9D-Ck3Ig/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Hiphop Tamizha (@hiphoptamizha)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Today’s <a href="https://x.com/hashtag/MeesayaMurukku2?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#MeesayaMurukku2</a> Celebration event with <a href="https://x.com/hashtag/HiphopTamizha?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#HiphopTamizha</a> at Phoenix Market City, Chennai had to be called off this afternoon. Huge Crowd showed up &amp; went beyond what the venue could safely handle, so police stepped in and asked to call of the Event. <a href="https://t.co/FfAdtmpcLp">pic.twitter.com/FfAdtmpcLp</a></p>&mdash; Viral Cinema (@Viral_Cinema) <a href="https://x.com/Viral_Cinema/status/2086127295937552578?ref_src=twsrc%5Etfw">August 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-08-08T18:30:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு ; 89,000-ஐ கடந்த நோயாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-increase-sri-lanka-patients-exceed-89-000-1786213641"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-increase-sri-lanka-patients-exceed-89-000-1786213641</id>
            <summary type="text">இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 89,033 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 89,033 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p><p>

இதன்படி ஆகஸ்ட் மாதத்தின் முதல் 07 நாட்களில் மாத்திரம் 3,686 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32065a2c-4a51-46a5-811e-338a9af58c93/26-6a77750b86760.webp' /></p><p>கடந்த ஜூலை மாதத்தில் 29,973 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இதுவே இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் பதிவான அதிகளவிலான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையாகும்.
</p><p>
அதேவேளை, இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு 64 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T18:27:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் புதிய சட்டமா அதிபர் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-us-attorney-general-appointed-1786209416"></link>
            <id>https://tamilwin.com/article/new-us-attorney-general-appointed-1786209416</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் தனிப்பட்ட சட்டத்தரணியான டாட்
பிளான்ச், நாட்டின் புதிய சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் தனிப்பட்ட சட்டத்தரணியான டாட்
பிளான்ச், நாட்டின் புதிய சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
அமெரிக்க செனட் சபையில் இடம்பெற்ற கடும் விவாதங்களுக்கு மத்தியில், இன்று(08.08.2026) அதிகாலை இடம்பெற்ற வாக்கெடுப்பில் 50க்கு 49 என்ற குறுகிய வாக்குகள்
வித்தியாசத்தில் இவரது நியமனத்திற்கு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.</p><p></p><h2>புதிய சட்டமா அதிபர் நியமனம்</h2><p>
</p><p>
முன்னாள் சட்டமா அதிபர் பாம் பாண்டி கடந்த ஏப்ரல் மாதம் பதவியிலிருந்து
நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, டொட் பிளான்ச் இடைக்காலச் சட்டமா அதிபராகப்
பணியாற்றி வந்துள்ளார்.</p><p>

தற்போது செனட் சபையின் ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், அவர் அமெரிக்க நீதித்
திணைக்களத்தின் நிரந்தரத் தலைவராகப் பதவியேற்கவுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f82b80b-03ff-4ed0-90fe-211baac54d11/26-6a77680c7b53f.webp' /></p><p>நீதித் திணைக்களம் வெள்ளை மாளிகையின் அரசியல் அழுத்தங்களின்றி சுயாதீனமாக
இயங்க வேண்டும் என்ற வரலாற்று ரீதியான வழக்கத்தை மீறி, ஜனாதிபதி ட்ரம்பிற்கு
மிகவும் நெருக்கமான ஒருவரை இந்தப் பதவியில் அமர்த்துவது குறித்து இரு
கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் கவலை வெளியிட்டிருந்தனர்.
</p><p>
ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களை வெளியிட்டமை மற்றும் ஜனாதிபதி டொனால்ட்
ட்ரம்பிற்கான வரி விலக்கு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட சில சர்ச்சைக்குரிய
விவகாரங்கள் தொடர்பில் ஆளும் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் மத்தியிலேயே
அதிருப்தி நிலவியது.
</p><p>
இருப்பினும், எழுத்துப்பூர்வமான சில உடன்பாடுகளின் பின்னர் குடியரசுக் கட்சி
செனட்டர்களின் ஆதரவுடன் இந்த நியமனம் உறுதி செய்யப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T18:19:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானைத் தாக்கியது டொல்பின் புயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/typhoon-dolphin-hits-japan-1786212355"></link>
            <id>https://ibctamil.com/article/typhoon-dolphin-hits-japan-1786212355</id>
            <summary type="text">மேற்கு பசிபிக் பெருங்கடலின் திறந்த கடற்பகுதியில் உருவான டொல்பின் புயல், தற்போது தென்மேற்கு ஜப்பானில் உள்ள ஒகினாவா மாகாணத்தைத் தாக்கியுள்ளது.

வகை 1 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கு பசிபிக் பெருங்கடலின் திறந்த கடற்பகுதியில் உருவான டொல்பின் புயல், தற்போது தென்மேற்கு ஜப்பானில் உள்ள ஒகினாவா மாகாணத்தைத் தாக்கியுள்ளது.
</p><p>
வகை 1 புயலாகக் கருதப்படும் டொல்பின், மணிக்கு 198 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக வெளிநாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>இலட்சக்கணக்கில் மக்கள் வெளியேற்றம்</h2><p>

கோஷிமா மற்றும் ஒகினாவா மாகாணங்களில் வசிக்கும் சுமார் 260,000 மக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aad0f64a-1574-434b-b888-2b84e68c7059/26-6a77727e8349f.webp' /></p><p>இதன் விளைவாக 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><h2>அடுத்த இலக்கு சீனா</h2><p>

அடுத்த சில நாட்களில் இந்தப் புயல் சீனாவின் கிழக்குக் கடற்கரையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96fc254a-0af5-4909-ac86-b87893b42071/26-6a77727f7e934.webp' /></p><p>
</p><p>
இதன் விளைவாக, ஷாங்காய், ஜெஜியாங் மற்றும் புஜியான் ஆகிய பகுதிகளுக்கும் கனமழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T18:16:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[LPL இறுதிப் போட்டியில் அதிரடி வெற்றி ; கிண்ணத்தை தட்டிச் சென்ற கோல் கெலன்ட்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/the-koll-giants-team-won-the-lpl-trophy-1786211706"></link>
            <id>https://jvpnews.com/article/the-koll-giants-team-won-the-lpl-trophy-1786211706</id>
            <summary type="text">2026 லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் இறுதிப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணியை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய கோல் கெலன்ட்ஸ் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் இறுதிப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணியை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய கோல் கெலன்ட்ஸ் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.</p><p>
</p><p></p><p>கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14180e89-f72f-4290-9fde-ab5230060467/26-6a777013a0663.webp' /></p><p>

அதன்படி களமிறங்கிய ஜப்னா கிங்ஸ் அணிக்கு கோல் கெலன்ட்ஸ் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தினர். </p><p>இதன் காரணமாக அந்த அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.</p><p>

இதையடுத்து 124 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கோல் கெலன்ட்ஸ் அணி ஆரம்பம் முதலே வெற்றியை நோக்கி முன்னேறியது.
</p><p>
அந்த அணி 15.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 124 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கைக் கடந்தது.
</p><p>
இதன் மூலம் ஜப்னா கிங்ஸ் அணியை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய கோல் கெலன்ட்ஸ் அணி, 2026 லங்கா பிரீமியர் லீக் தொடரின் சம்பியன் பட்டத்தை தனதாக்கியுள்ளது.</p><p>

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கோல் கெலன்ட்ஸ் அணி வெற்றியைப் பதிவு செய்து LPL கிண்ணத்தை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T18:06:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் நுழைய முயன்ற பள்ளிச் சிறுமி: விசாரணையின் கூறிய காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/school-girl-jail-visit-with-live-ammunition-in-up-1786207308"></link>
            <id>https://news.lankasri.com/article/school-girl-jail-visit-with-live-ammunition-in-up-1786207308</id>
            <summary type="text">துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பள்ளிச் சிறுமியை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.சிறைக்குள் அத்துமீறி நுழைந்த பெண்உத்தர ...</summary>
            <content type="html"><![CDATA[<p>துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பள்ளிச் சிறுமியை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.</p><h2>சிறைக்குள் அத்துமீறி நுழைந்த பெண்</h2><p>உத்தர பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள கிளைச் சிறைக்குள் வியாழக்கிழமை போலி அடையாள அட்டை காண்பித்து சிறைக் கைதி ஒருவரை பள்ளி மாணவி ஒருவர் சந்திக்க சென்ற நிலையில்&nbsp; பாதுகாப்பு பணியாளர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.</p><p> மேலும் அவரிடம் நடத்தப்பட்ட சோதனையின் போது பயன்படுத்தாத துப்பாக்கித் தோட்டாக்கள் மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்த சம்பவம் தொடர்பாக சிறைக் காவலர் அஃப்தாப் ஆலம் அன்சாரி வழங்கிய தகவலில், சிறுமியும் அவருடன் வந்த ஆண் ஒருவரும் இணைந்து சிறையில் இருந்த ஹர்ஷு காஷ்யப் என்ற கைதியை சந்திக்க வந்தது தெரியவந்துள்ளது.</p><p></p><p> முதன்மை நுழைவாயிலில் நடத்தப்பட்ட வழக்கமான சோதனையின் போது, அடையாள அட்டையில் இருந்த விவரங்களுக்கு மாறான தகவல்களை இருவரும் கூறிய நிலையில் நிலைமை தீவிரமடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca36d863-7c59-48e8-b100-21185a08ed7d/26-6a775c4de6937.webp' /></p><p> இதையடுத்து அவர்களிடம் உடல் பரிசோதனை நடத்தப்பட்ட போது, அவரின் பாக்கெட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 தோட்டாக்களை கண்டுபிடித்தனர்.</p><p>இதையடுத்து சிறைக் காவல் நிலைய பொறுப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதோடு, இருவரும் உள்ளூர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.</p><h2>விசாரணையில் கூறப்பட்ட தகவல்</h2><p>கண்டறியப்பட்ட 10 துப்பாக்கிகளும்&nbsp; சிறுமியின் தந்தையுடைய உரிமம் பெற்ற துப்பாக்கிக்கு சொந்தமானது என்று அந்த சிறுமி பொலிஸார் விசாரணையில் தெரிவித்துள்ளார்.</p><p> மேலும் சிறையில் உள்ள தன்னுடைய நண்பரை சந்திக்க சென்றது தன்னுடைய தந்தைக்கு தெரிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடும் என்ற பயத்தினால் அதனை தன்னுடன் எடுத்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p> இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தொடர் விசாரணையை நடத்தி வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T17:56:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை இடம்பெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-grade-5-scholarship-examination-tomorrow-1786210916"></link>
            <id>https://jvpnews.com/article/important-grade-5-scholarship-examination-tomorrow-1786210916</id>
            <summary type="text">இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை (9) நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்ட 2,723 பரீட்சை மையங்களில் நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் இந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை (9) நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்ட 2,723 பரீட்சை மையங்களில் நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>இம்முறை பரீட்சையில் மொத்தம் 294,089 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன், அவர்களில் 220,366 பேர் சிங்கள மொழியிலும், 73,723 பேர் தமிழ் மொழியிலும் தோற்றவுள்ளனர்.</p><p>

குறித்த பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள் கடந்த 5ஆம் திகதி நள்ளிரவுடன் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும்,பரீட்சை முடியும் வரை அச்சு அல்லது இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விளம்பர நடவடிக்கைகளை மேற்கொள்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/797d27d7-e053-4008-980e-c3f597c78e40/26-6a776a65d415e.webp' /></p><p>மேலும், பரீட்சை மையங்களுக்குள் பெற்றோர்கள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
பரீட்சார்த்திகள் தங்களது மன ஒருமைப்பாட்டைப் பேணவும், எவ்வித பதற்றமுமின்றி பரீட்சைக்குத் தோற்றுவதற்கும் வசதியாக, பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்துக்கு முன்னதாகவே, பரீட்சை மையங்களுக்கு வருகை தருமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p>

நாளை காலை 9:30 முதல் 10:45 வரை இரண்டாம் பகுதி (Paper II) வினாத்தாளுக்கு பதிலளிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து வழங்கப்படும் சிறு இடைவேளையின் பின்னர், காலை 11:15 முதல் நண்பகல் 12:15 வரை முதலாம் பகுதி (Paper I) வினாத்தாளுக்கு பதிலளிக்க கால அவகாசம் வழங்கப்படும்.
</p><p>
பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து பரீட்சார்த்திகளும் வினாத்தாளில் உள்ள அறிவுறுத்தல்களை கவனமாகப் படித்து, தங்களது சுட்டெண்ணை துல்லியமாக எழுதுவதுடன், வினாத்தாளிலேயே தெளிவான கையெழுத்தில் பதில்களை நேரடியாக எழுத வேண்டும் என்றும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.</p><p>

அத்துடன், பரீட்சை மண்டபத்தினுள் கைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது வேறு எந்த இலத்திரனியல் சாதனங்களையும் கொண்டு வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதேவேளை, ஏதேனும் அசாதாரண அல்லது அனர்த்த சூழ்நிலைகள் ஏற்படுமாயின் அது தொடர்பில் அறிவிப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் பிரத்தியேக தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
அதன்படி, 0113 - 66 81 19, 0113 - 66 80 26, 0113 - 66 80 32 மற்றும் 0113 - 66 80 87 ஆகிய இலக்கங்களினூடாக தொடர்புகொண்டு தகவல்களை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T17:42:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரம்பரிய உணவுகளை ருசிக்க திரண்ட மக்கள் ; அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா இடைநிறுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/reecha-akshaya-pattharam-food-festival-suspended-1786209872"></link>
            <id>https://jvpnews.com/article/reecha-akshaya-pattharam-food-festival-suspended-1786209872</id>
            <summary type="text">பாரம்பரிய உணவு வகைகளையும் உலகறியச் செய்யும் நோக்கில், கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்ஷா (Reecha) வளாகத்தில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாரம்பரிய உணவு வகைகளையும் உலகறியச் செய்யும் நோக்கில், கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்ஷா (Reecha) வளாகத்தில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா’ இடைநடுவே நிறுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>விழா வளாகத்தில் எதிர்பாராத வகையில் கட்டுக்கடங்காத அளவுக்கு மக்கள் ஒரே நேரத்தில் திரண்டதன் காரணமாக ஏற்பட்ட கடுமையான சன நெரிசலைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக றீச்ஷா நிர்வாகம் அறிவித்துள்ளது.
</p><p>
அத்துடன், நாளை ஞாயிற்றுக்கிழமையும், அதற்கு அடுத்த நாளான திங்கட்கிழமையும் நடைபெறவிருந்த எஞ்சிய அனைத்து நிகழ்வுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><h3>100க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகள்

</h3><p>உணவே மருந்து – மருந்தே உணவு’ என்ற ஆரோக்கிய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உணவுத் திருவிழாவில், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் பாரம்பரிய உணவு வகைகள் உட்பட 100க்கும் மேற்பட்ட உணவு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/809137a5-7aac-4c9b-b8e6-4e380cc92735/26-6a776651da11f.webp' /></p><p>ஒடியல் கூழ், பிட்டு, பனங்காய் பணியாரம், நண்டுப் பிரட்டல் உள்ளிட்ட பாரம்பரிய உணவு வகைகளை மக்கள் ஆர்வத்துடன் சுவைத்திருந்தனர்.
</p><p>
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தந்ததுடன், கனடா, லண்டன், ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழ் மக்களும் பெருமளவில் விழாவில் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>சர்வதேச மற்றும் உள்நாட்டு சமையல் வல்லுநர்களின் நேரடி சமையல் விளக்கங்கள், பனை மற்றும் தென்னை சார்ந்த தனி அரங்கு, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் ‘அட்சய பாத்திரம்’ உணவுத் திருவிழா அண்மையில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
</p><p>
மேலும், Qick Food, IBC தமிழ் மற்றும் LANKASRI நிறுவனங்களின் அனுசரணையுடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p>

விழா ஆரம்பமானதைத் தொடர்ந்து, பாரம்பரிய உணவு வகைகளை ருசிப்பதற்கும், பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கும் பெருமளவான மக்கள் றீச்ஷா வளாகத்தில் திரண்டிருந்தனர்.</p><p>
</p><h3>பாதுகாப்பு கருதி நிகழ்வுகள் இரத்து</h3><p>இந்நிலையில், எதிர்பார்த்ததை விட அதிகளவிலான மக்கள் ஒரே நேரத்தில் விழா வளாகத்தில் திரண்டதால் கடுமையான சன நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1f9b857-0df1-4ece-a836-12e31db55bf7/26-6a7767a817793.webp' /></p><p>இதனையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும் வகையில், இன்று நடைபெற்று வந்த உணவுத் திருவிழா இடைநடுவே நிறுத்தப்பட்டதாக றீச்ஷா நிர்வாகம் அறிவித்துள்ளது.
</p><p>
மேலும், நாளை மற்றும் அதற்கு அடுத்த நாளில் நடைபெறவிருந்த அனைத்து நிகழ்வுகளும் முற்றாக இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனிடையே, நாளை மற்றும் திங்கட்கிழமை நடைபெறவிருந்த நிகழ்வுகளுக்காக ஏற்கனவே நுழைவுச்சீட்டுகளை முன்பதிவு செய்திருந்த பொதுமக்களுக்கு, அவர்கள் செலுத்திய பணம் முழுமையாகத் திருப்பி வழங்கப்படும் என றீச்ஷா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
</p><p>
நுழைவுச்சீட்டுகளுக்காக செலுத்தப்பட்ட பணம், சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகள் ஊடாக முறையாக மீளச் செலுத்தப்படும் என்றும் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.</p><p>

தமிழர்களின் பாரம்பரிய உணவுக் கலாசாரத்தை முன்னிறுத்தும் வகையில் பெரும் எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கப்பட்டிருந்த ‘அட்சய பாத்திரம்’ உணவுத் திருவிழா, எதிர்பாராத அளவிலான மக்கள் திரளால் பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><iframe width="463" height="823" src="https://www.youtube.com/embed/EGcV0Fr2rf8" title="கட்டுக்கடங்காத சனக்கூட்டம்: இடைநிறுத்தப்பட்டது றீச்ஷாவின் உணவுத்திருவிழா!" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p>]]></content>
            <updated>2026-08-08T17:30:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[H-1B திட்டத்தில் வழங்கப்பட்ட 60 நாள் அவகாசம் ரத்து: அமெரிக்கா பரிசீலனை: இந்தியர்கள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-plan-to-eliminate-60-days-grace-period-in-h-1b-1786210120"></link>
            <id>https://news.lankasri.com/article/us-plan-to-eliminate-60-days-grace-period-in-h-1b-1786210120</id>
            <summary type="text">H-1B வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான 60 நாட்கள் வேலை தேடும் அவகாசத்தை அமெரிக்க அரசு ரத்து செய்ய திட்டமிட்டு வருகிறது. H-1B வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>H-1B வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான 60 நாட்கள் வேலை தேடும் அவகாசத்தை அமெரிக்க அரசு ரத்து செய்ய திட்டமிட்டு வருகிறது.</p><h2> H-1B வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்</h2><p>வேலையில் இருந்து நீக்கப்பட்ட H-1B வெளிநாட்டு தொழிலாளர்களும் அவரது குடும்பத்தினரும் அடுத்த வேலையை தேடிக் கொள்ள கொடுக்கப்பட்டுள்ள 60 நாட்கள் கால அவகாசத்தை ரத்து செய்வது குறித்து அமெரிக்க அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.</p><p>அமெரிக்க அரசின் பரிசீலனையில் உள்ள இந்த முன்மொழிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக எப்போது சட்டமாக்கப்படும் அல்லது இதன் முழுமையான விவரங்கள் குறித்து இன்னும் தெளிவாக வெளியிடப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2c7dc41-5776-42b4-929a-85187154b5f6/26-6a776749782ee.webp' /></p><p> இந்த நடைமுறை உறுதி செய்யப்பட்டால், அங்கீகரிக்கப்பட்ட காலம் முடிவதற்கும் வேலை இழந்தவர்கள் உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.</p><p></p><h2> இந்திய வம்சாவளியினருக்கு மிகப்பெரிய பாதிப்பு</h2><p>அமெரிக்காவின் H-1B திறமை வாய்ந்த தொழிலாளர் திட்டத்தில் இந்த மாற்றம் இறுதி செய்யப்பட்டால் அமெரிக்காவில் பணிபுரியும் பல இந்தியர்கள் பாதிக்கப்படக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4604610-290f-4357-bf3e-1cb9bb1c0ef8/26-6a77674a2f9b6.webp' /></p><p> அமெரிக்க குடியுரிமை மற்றும் புலம்பெயர்வு சேவைகளின்(USCIS) சமீபத்திய தரவுகள் படி, கிட்டத்தட்ட 71% அங்கீகரிக்கப்பட்ட H-1B திட்டங்கள் இந்தியர்களுக்கே கடந்த 2024ம் நிதியண்டில் வழங்கப்பட்டுள்ளது.</p><p> சமீபத்திய அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் படி, அமெரிக்க மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 52 லட்சத்திற்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T17:30:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் 15 பேரிடம் விசாரணை நடத்த கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/15-to-be-questioned-over-allaipitiya-incident-1786206318"></link>
            <id>https://tamilwin.com/article/15-to-be-questioned-over-allaipitiya-incident-1786206318</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கிச்
சூட்டுக்கு இலக்காகி 17 வயதான சிறுவன் உயிரிழந்த வழக்கில், 15 பேரிடம் ஆரம்ப
விசாரணை நடத்த வேண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கிச்
சூட்டுக்கு இலக்காகி 17 வயதான சிறுவன் உயிரிழந்த வழக்கில், 15 பேரிடம் ஆரம்ப
விசாரணை நடத்த வேண்டும் என மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிக்கை
வழங்கியுள்ளது.
</p><p>
ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று(07.08.2026) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> </p><p></p><h2>நீதிமன்ற&nbsp;விசாரணை</h2><p>இதன்போது பாதிக்கப்பட்டவர்கள்
சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இந்த விசாரணையை விரைவில் முன்னெடுக்க
வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இதனைக் கருத்திற் கொண்டு நீதிமன்றம் விரைவான விசாரணைக்கான கட்டளையை பிறப்பித்துள்ளது. </p><p>அதன்படி பொதுமக்கள், ஊர்காவற்றுறை பொலிஸார், யாழ்.
குற்ற விசாரணைப் பிரிவினர் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரி உள்ளிட்ட 15 பேரை செப்ரெம்பர் 4ஆம் திகதி நீதிமன்றத்துக்கு அழைத்து அவர்களிடம் ஆரம்ப கட்டவிசாரணை
நடத்த வேண்டும் என்றும், இதற்கான அழைப்புக் கட்டளையை உடனடியாக அனுப்புமாறும்
நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83edac9e-baaf-46b4-976f-639bbee0da12/26-6a7760f688f79.webp' /></p><p>வேலணை - அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி
அதிகாலை பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட பொலிஸார், 1.15 மணியளவில் அல்லைப்பிட்டி பகுதியில் ஹைஏஸ் வாகனம் ஒன்றை இடைமறித்துள்ளனர்.</p><p> எனினும், அந்த வாகனம் பொலிஸாரின் உத்தரவுக்குக் கட்டுப்படாமல் வேகமாகப் பயணித்துள்ளது.

இதைத் தொடர்ந்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் வாகனத்தை செலுத்திச் சென்ற 17 வயதான சிறுவன் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T17:18:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[இயக்கச்சி றீச்ஷாவில் வரலாறு காணாத சனக்கூட்டம்: உணவுத்திருவிழா இடைநிறுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reecha-s-food-festival-withhold-1786208662"></link>
            <id>https://tamilwin.com/article/reecha-s-food-festival-withhold-1786208662</id>
            <summary type="text">&quot;உணவே மருந்து – மருந்தே உணவு&quot; என்ற உன்னத நோக்கோடு, 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகளுடன் கிளிநொச்சி இயக்கச்சி றீச்ஷா (Reecha) வளாகத்தில் ஆரம்பமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>"உணவே மருந்து – மருந்தே உணவு" என்ற உன்னத நோக்கோடு, 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகளுடன் கிளிநொச்சி இயக்கச்சி றீச்ஷா (Reecha) வளாகத்தில் ஆரம்பமான ‘அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா’ பாதுகாப்பு காரணங்களுக்காக அவசரமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.</p><p>தமிழர் உணவு மரபை உலகிற்குப் பறைசாற்றும் நோக்கில் மிகப்பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்விற்கு, எதிர்பாராத அளவில் கட்டுக்கடங்காத சனக்கூட்டம் அலைமோதியது.</p><p> இதனால் ஏற்பட்ட கடுமையான சனநெரிசலைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு நிகழ்வை உடனடியாக நிறுத்துவதாக றீச்ஷா நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><h2>கடுமையான சன நெரிசல் </h2><p> </p><p>

வடக்கு-கிழக்கின் பாரம்பரிய சுவைகளான ஒடியல் கூழ், பிட்டு, பனங்காய் பணியாரம், நண்டுப் பிரட்டல் போன்ற உணவுகளைச் சுவைப்பதற்காக இலங்கை வாழ் மக்கள் மட்டுமன்றி, கனடா, லண்டன், ஜேர்மனி, சுவிஸ், பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பெருமளவிலான புலம்பெயர் தமிழ் உறவுகளும் திரண்டிருந்தனர்.
</p><p>
சர்வதேச மற்றும் உள்நாட்டு சமையல் வல்லுநர்களின் நேரடி சமையல் விளக்கங்கள், பனை-தென்னை சார்ந்த தனி அரங்கு, கலை நிகழ்ச்சிகள் எனப் பல சிறப்பம்சங்களுடன், Qick Food, IBC தமிழ் மற்றும் LANKASRI நிறுவனங்களின் அனுசரணையுடன் இந்நிகழ்வு வெற்றிகரமாக ஆரம்பமாகியது.
</p><p>
இந்நிலையில், விழா வளாகத்தில் எதிர்பாராத வகையில் கட்டுக்கடங்காத அளவுக்குப் பெருமளவிலான மக்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் கடுமையான சன நெரிசல் ஏற்பட்டது. </p><p>

இதனால் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, உணவுத் திருவிழா இன்று இடைநடுவே நிறுத்தப்படுவதாக றீச்ஷா நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
</p><p>
அத்துடன், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) அதற்கு அடுத்த நாளும் (திங்கட்கிழமை) நடைபெறவிருந்த எஞ்சிய அனைத்து நிகழ்வுகளும் முற்றாக இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
</p><h2>திருப்பி வழங்கப்படுவுள்ள&nbsp;பணம்</h2><p>
நாளை மற்றும் திங்கட்கிழமை நிகழ்வுகளுக்காக ஏற்கனவே நுழைவுச்சீட்டுக்களை முன்பதிவு (Booking) செய்திருந்த பொதுமக்களுக்கு, அவர்கள் செலுத்திய பணம் அனைத்தும் வங்கிக் கணக்குகள் (Banks) ஊடாக முறையாகத் திருப்பி வழங்கப்படும் என்றும் றீச்ஷா நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/MXSJK0Pn3B0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-08T17:09:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோல்டன் குளோப் விருது வென்ற ஹொலிவுட் நடிகை ரொசமண்ட் பைக் இலங்கைக்கு விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/award-winning-hollywood-rosamu-pike-visit-srilanka-1786208848"></link>
            <id>https://jvpnews.com/article/award-winning-hollywood-rosamu-pike-visit-srilanka-1786208848</id>
            <summary type="text">கோல்டன் குளோப் மற்றும் எம்மி விருதுகளை வென்ற பிரபல ஹொலிவுட் நடிகையும், &#039;கண்ணிவெடி ஆலோசனை குழுவின்&#039; (Mines Advisory Group - MAG) தூதுவருமான ரொசமண்ட் பை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோல்டன் குளோப் மற்றும் எம்மி விருதுகளை வென்ற பிரபல ஹொலிவுட் நடிகையும், 'கண்ணிவெடி ஆலோசனை குழுவின்' (Mines Advisory Group - MAG) தூதுவருமான ரொசமண்ட் பைக் (Rosamund Pike) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>கடந்த 17 ஆண்டுகளில் இலங்கையில் ஒரு மில்லியன் கண்ணிவெடிகள் வெற்றிகரமாக அகற்றப்பட்ட மைல்கல்லைக் குறிப்பதே இவரது விஜயத்தின் முக்கிய நோக்கமாகும்.
</p><p>
தமது விஜயத்தின்போது, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள கண்ணிவெடி அகற்றும் பகுதிகளுக்குச் சென்ற ரொசமண்ட் பைக், கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்ட மக்களையும், விபத்துகளில் இருந்து உயிர்தப்பியவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a8509dc-0430-4712-a65d-5b136b76afb4/26-6a776252666d7.webp' /></p><p>அத்துடன், பாடசாலை மாணவர்களுக்காக நடாத்தப்பட்ட கண்ணிவெடி ஆபத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சிலவற்றிலும் அவர் பங்கேற்றார்.
</p><p>
இதனிடையே, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து, நாட்டின் கண்ணிவெடி அகற்றும் பணிகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் அவர் கலந்துரையாடவுள்ளார்.
</p><p>
இந்த சந்தர்ப்பம் குறித்து கருத்து தெரிவித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக், கண்ணிவெடிகளற்ற நாடாக மாறுவதற்கான பாதையில் இலங்கை மிகச் சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
</p><p>
கடந்த 17 ஆண்டுகளில் நாட்டில் ஒரு மில்லியன் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன.

வருடாந்த கண்ணிவெடி விபத்துகளின் எண்ணிக்கை 250 இலிருந்து 2024 ஆம் ஆண்டளவில் 3 ஆகக் குறைவடைந்துள்ளது.
</p><p>
இந்த கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளின் மூலம் இடம்பெயர்ந்த சுமார் ஒரு மில்லியன் மக்கள் மீண்டும் தங்களது சொந்த வீடுகளுக்குச் சென்று பாதுகாப்பாக வாழ்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T17:07:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தையின் இறுதிச்சடங்குக்கு வர மறுத்த 3 மகள்கள் ; வைரலாகும் சமூக வலைத்தள விவாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/3-daughters-refuse-to-attend-father-s-funeral-1786208034"></link>
            <id>https://jvpnews.com/article/3-daughters-refuse-to-attend-father-s-funeral-1786208034</id>
            <summary type="text">மும்பையைச் சேர்ந்த 74 வயதான துணி தொழிலதிபர் ஒருவர், ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் உயிரிழந்த சம்பவம் இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மும்பையைச் சேர்ந்த 74 வயதான துணி தொழிலதிபர் ஒருவர், ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் உயிரிழந்த சம்பவம் இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>உயிரிழந்தவரின் மூன்று மகள்களும் ஆசிரியர்களாகப் பணியாற்றி வருவதாகவும், தந்தையின் இறுதிச்சடங்கில் நேரடியாகக் கலந்துகொள்ள அவர்கள் மறுத்ததாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
தூரம் காரணமாக இறுதிச்சடங்கில் நேரில் பங்கேற்க முடியாது எனத் தெரிவித்ததாகக் கூறப்படும் நிலையில், இறுதிச்சடங்கிற்காக ரூ.5,100 பணத்தை இணையவழியாக அனுப்பி வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94f420e3-be5a-4f75-8ad0-f9fa8596afe0/26-6a775f24004a4.webp' /></p><p>மேலும், தந்தையின் இறுதிச்சடங்கை அவர்கள் காணொளி அழைப்பு மூலம் பார்த்ததாகவும் இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
</p><p>
இதனிடையே, இறுதிச்சடங்குக்குப் பின்னர் தந்தையின் அஸ்தியைக் கூட மகள்கள் பெற்றுக்கொள்ள மறுத்ததாகவும் கூறப்படுகிறது.</p><p> இதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், மகள்களின் நடவடிக்கை குறித்து இணையவாசிகள் பலரும் கடும் அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளியிட்டு வருகின்றனர்.
</p><p>
பெற்றோரின் இறுதி தருணங்களில் பிள்ளைகளின் பொறுப்பு என்ன என்பது தொடர்பிலும், தூரம் உள்ளிட்ட காரணங்களால் இறுதிச்சடங்கில் நேரடியாகப் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அதனை எவ்வாறு அணுகுவது என்பது குறித்தும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் மற்றும் விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
</p><p>
ஒரு பெற்றோரின் இறுதிச்சடங்கில் கூட பிள்ளைகள் நேரில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருப்பது தொடர்பில் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
</p><p>
எவ்வாறாயினும், இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் இந்திய ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதுடன், சம்பவத்தின் முழுமையான பின்னணி மற்றும் குடும்பத்தினரின் தரப்பு குறித்த தகவல்கள் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T16:54:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுக்கடங்காத சனக்கூட்டம்: இடைநிறுத்தப்பட்டது றீச்ஷாவின் உணவுத்திருவிழா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/reecha-s-food-festival-has-been-suspended-1786207824"></link>
            <id>https://ibctamil.com/article/reecha-s-food-festival-has-been-suspended-1786207824</id>
            <summary type="text">தமிழர்களின் தொன்மைமிக்க உணவு மரபை உலகறியச் செய்யும் நோக்குடன், கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்ஷா (Reecha) வளாகத்தில் மிகப்பிரமாண்டமாக ஏற்பாடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழர்களின் தொன்மைமிக்க உணவு மரபை உலகறியச் செய்யும் நோக்குடன், கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்ஷா (Reecha) வளாகத்தில் மிகப்பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா’ இடைநிறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>பிரமாண்டமானமுறையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த உணவுத் திருவிழா இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், நாளையும், நாளை மறுதினமும் நடைபெற இருந்த நிகழ்வுகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் றீச்ஷா நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><p>

"உணவே மருந்து – மருந்தே உணவு" என்ற ஆரோக்கிய தத்துவத்தின்படி, 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகளுடன் இந்த மாபெரும் திருவிழா அண்மையில் கோலாகலமாகத் தொடங்கியது.</p><h2>ஒரே நேரத்தில் திரண்ட மக்கள் </h2><p> </p><p>

வடக்கு-கிழக்கின் பாரம்பரிய சுவைகளான ஒடியல் கூழ், பிட்டு, பனங்காய் பணியாரம், நண்டுப் பிரட்டல் போன்ற உணவுகளைச் சுவைப்பதற்காக இலங்கை வாழ் மக்கள் மட்டுமன்றி, கனடா, லண்டன், ஜேர்மனி, சுவிஸ், பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பெருமளவிலான புலம்பெயர் தமிழ் உறவுகளும் திரண்டிருந்தனர்.</p><p><iframe width="463" height="823" src="https://www.youtube.com/embed/EGcV0Fr2rf8" title="கட்டுக்கடங்காத சனக்கூட்டம்: இடைநிறுத்தப்பட்டது றீச்ஷாவின் உணவுத்திருவிழா!" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><p>
</p><p>
சர்வதேச மற்றும் உள்நாட்டு சமையல் வல்லுநர்களின் நேரடி சமையல் விளக்கங்கள், பனை-தென்னை சார்ந்த தனி அரங்கு, கலை நிகழ்ச்சிகள் எனப் பல சிறப்பம்சங்களுடன், Qick Food, IBC தமிழ் மற்றும் LANKASRI நிறுவனங்களின் அனுசரணையுடன் இந்நிகழ்வு வெற்றிகரமாக ஆரம்பமாகியது.
</p><p>
இந்நிலையில், விழா வளாகத்தில் எதிர்பாராத வகையில் கட்டுக்கடங்காத அளவுக்குப் பெருமளவிலான மக்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் கடுமையான சன நெரிசல் ஏற்பட்டது. </p><p>

இதனால் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, உணவுத் திருவிழா இன்று இடைநடுவே நிறுத்தப்படுவதாக றீச்ஷா நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
</p><p>
அத்துடன், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) அதற்கு அடுத்த நாளும் (திங்கட்கிழமை) நடைபெறவிருந்த எஞ்சிய அனைத்து நிகழ்வுகளும் முற்றாக இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
</p><h2>
பணம் திருப்பி வழங்கப்படும்
</h2><p>
நாளை மற்றும் திங்கட்கிழமை நிகழ்வுகளுக்காக ஏற்கனவே நுழைவுச்சீட்டுக்களை முன்பதிவு (Booking) செய்திருந்த பொதுமக்களுக்கு, அவர்கள் செலுத்திய பணம் அனைத்தும் வங்கிக் கணக்குகள் (Banks) ஊடாக முறையாகத் திருப்பி வழங்கப்படும் என்றும் றீச்ஷா நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-08T16:50:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் உயிரோடு வாழணும் ; 13 வயது குறைந்த இளைஞனுடன் தகாத உறவிலிருந்த மனைவிக்கு கணவன் செய்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/husband-attacks-wife-over-affair-with-13-year-old-1786193055"></link>
            <id>https://jvpnews.com/article/husband-attacks-wife-over-affair-with-13-year-old-1786193055</id>
            <summary type="text">கடந்த சில வருடங்களாகவே கள்ளக்காதலனுக்காக மனைவியே தனது கணவனை கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்பான செய்தி வெளியாக வருகிறது. அதுவும் பல இடங்களில் மனைவி கள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கடந்த சில வருடங்களாகவே கள்ளக்காதலனுக்காக மனைவியே தனது கணவனை கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்பான செய்தி வெளியாக வருகிறது. </p><p style="text-align: justify;">அதுவும் பல இடங்களில் மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவனை கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb37bd69-dfdc-47a7-b22b-2cc1e233c266/26-6a7724a15fb36.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;சாக விருப்பம் இல்லை...&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify;">

இந்த நிலையில்தான் தனது மனைவிக்கு இன்னொரு காதல் இருப்பதை தெரிந்து கொண்ட கணவர் மனைவியை அந்த காதலுடன் சேர்த்து வைத்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது. </p><p style="text-align: justify;">உத்தரப்பிரதேசம் சாண்ட் கபீர் நகரில் வசித்து வரும் கணவன் மனைவிக்கு திருமணம் ஆகி 21 வருடங்கள் ஆகிவிட் நிலையில் இந்த தம்பதிக்கு 5 குழந்தைகளும் இருக்கிறார்கள்.
</p><p style="text-align: justify;">
இந்நிலையில்தான் அவரை விட 13 வயது குறைந்த ஒருவருடன் அவருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை அறிந்த கணவர் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
அந்த கிராமத்தில் உள்ள கோவிலில் இருவருக்கும் அவர் திருமணம் செய்து வைத்தார்

கணவன் முன்னிலையில் அவரது மனைவிக்கு அவரின் காதலர் குங்குமப்பொட்டை வைத்து மனைவியாக ஏற்றுக் கொண்டார். </p><p style="text-align: justify;">

இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில். </p><p style="text-align: justify;">
இது தொடர்பாக கருத்து தெரிவித்த குறித்த நபர் ‘எனக்கு பிளாஸ்டிக் ட்ரம்மிற்குள் அடைபட்டு சாக விருப்பம் இல்லை.. நான் நிம்மதியாக வாழ விரும்புகிறேன்’ என கூறியிருக்கிறார்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-08T16:41:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெகசின் சிறைக் கைதிகளுக்கு போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-arrested-trying-throw-drugs-magazine-prison-1786207266"></link>
            <id>https://jvpnews.com/article/two-arrested-trying-throw-drugs-magazine-prison-1786207266</id>
            <summary type="text">மெகசின் சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்குப் போதைப்பொருள் வழங்கச் சென்ற இரு சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகள்இன்று (08) நண்பகல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மெகசின் சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்குப் போதைப்பொருள் வழங்கச் சென்ற இரு சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p> </p><p></p><h3>மேலதிக விசாரணைகள்</h3><p>இன்று (08) நண்பகல் பேஸ்லைன் வீதியிலுள்ள மெகசின் சிறைச்சாலையின் பக்கவாட்டு மதிலுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/077da7de-4f1c-4a37-99bb-f615af446d6a/26-6a775c24582f2.webp' /></p><p>அவ்விடத்திலிருந்து சிறைச்சாலையினுள் 02 பொதிகளை வீசுவதற்கு இவர்கள் முயற்சித்த வேளையில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். </p><p>

சந்தேகநபர்களிடமிருந்த 02 பொதிகளைச் சோதனையிட்ட போது, 22 கிராம் 250 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள், 02 மில்லிகிராம் 'ஏஷ்' போதைப்பொருள், 02 தொலைபேசி சார்ஜர்கள், 02 ஜோடி தோடுகள், 10 லைட்டர்கள் மற்றும் 02 சிறிய ரக கைப்பேசிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p> 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் 29 வயதுடைய கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர். </p><p>

கைது செய்யப்பட்டவர்கள் நாளை (09) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T16:41:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தை அடிப்படையாக கொண்டு இன முறுகலை ஏற்படுத்தி சதி - களமிறக்கப்படும் கும்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/confusion-in-the-south-over-occupied-road-1786205072"></link>
            <id>https://tamilwin.com/article/confusion-in-the-south-over-occupied-road-1786205072</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதியை வைத்து தெற்கில்
குழப்பங்களை ஏற்படுத்தச் சதி இடம்பெற்று வருவதாகவும்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதியை வைத்து தெற்கில்
குழப்பங்களை ஏற்படுத்தச் சதி இடம்பெற்று வருவதாகவும், இதற்காக குழுவொன்று அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>இதனையடுத்து பவானி வீதி விடுவிப்புக்கு தடைபோட முடியாது என நீதிமன்றம் திட்டவட்டமாக
அறிவித்துள்ளது.</p><p></p><h2>நீதிமன்ற&nbsp;தீர்ப்பு</h2><p> </p><p>

இந்தத் தீர்ப்பை அடிப்படையாக வைத்து, வட்ஸ்அப்
குழுக்கள் உருவாக்கப்பட்டு பிழையான தகவல்களைக் கூறி தெற்கில் இனவாதம்
பரப்பப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58672393-344c-4c73-bf0b-f2fd8fb64ef8/26-6a775651bdbe2.webp' /></p><p>இவ்வாறாக போலித் தகவல்களைப் பரப்பி ஆட்கள் திரட்டப்பட்டுள்ள நிலையில்,
போராட்டக்காரர்கள் தற்போது யாழ்ப்பாணம் நோக்கி அழைத்து
வரப்படுகின்றனர்.</p><p>

திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளையும், வீதியையும்
விடுவித்தால் கலவரங்களும் குழப்பங்களும் ஏற்படும் என நீதிமன்றத்தை நாடும்
பொலிஸார், இத்தகைய அப்பட்டமான குழப்பச் செயல்கள் தொடர்பில் அமைதியாக உள்ளமை பல
தரப்பினரிடமும் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-08T16:29:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த வருட இறுதிக்குள் கைது செய்யப்படவுள்ள அரசியல்வாதிகள் உட்பட 50 முக்கிய பிரபலங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/50-prominent-figures-to-be-arrested-this-year-1786204723"></link>
            <id>https://ibctamil.com/article/50-prominent-figures-to-be-arrested-this-year-1786204723</id>
            <summary type="text">50 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும், பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட, சுமார் ஐம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>50 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும், பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட, சுமார் ஐம்பது முன்னாள் அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அவர்களது நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் உயர் பதவியில் உள்ள அரசு அதிகாரிகள் அடங்கிய 50 பேர், இந்த ஆண்டு இறுதிக்குள் கைது செய்யப்பட உள்ளதாக உயர் மட்ட அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம், குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் காவல்துறையின் பல சிறப்புப் புலனாய்வுப் பிரிவுகள் ஆகியவை இது தொடர்பான விசாரணைகளை ஏற்கனவே முடுக்கிவிட்டுள்ளன.</p><h2>இவர்களால் நாடு இழந்த ரூபா 50 மில்லியன்</h2><p>
</p><p>
இந்த அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் செய்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகளால், நாடு 50 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான இழப்பைச் சந்தித்துள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b20a8102-3666-4ad9-8e38-afc999a12784/26-6a7757efdc676.webp' /></p><p>
</p><p>
முன்னாள் அமைச்சர்கள் உட்பட சுமார் இருபது அரசியல்வாதிகள், கடந்த காலத்தில் செய்த பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக, நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் ஏற்கனவே தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளனர்.</p><p></p><h2>வெளிநாடுகளுக்கு செல்ல பயணத்தடை</h2><p>
</p><p>
புதிய விசாரணைகளின் கீழ் குற்றம் சாட்டப்படவுள்ள நபர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன, மேலும் அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க சிறப்பு உளவாளிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 ​​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/679e24c4-9530-4bc1-9e9e-422fad627e50/26-6a7757ee810df.webp' /></p><p>பொதுச் சொத்துக்களை வீணடித்தவர்கள் மற்றும் ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தும் என்று பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.</p><h2>அரசாங்கத்தின் முக்கிய நோக்கம்</h2><p>
</p><p>
மேலும், ஊழல்வாதிகளைத் தண்டிப்பதும், அவர்கள் நாட்டிற்கு ஏற்படுத்திய பொது நிதி இழப்பை மீட்பதும் அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0e82a39-8852-4491-9595-b8b6ad6d5b9a/26-6a7757ef323b9.webp' /></p><p>

மேலதிகமாக, முன்னர் பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகளிலிருந்து விடுவிக்கப்பட்ட பல அரசியல்வாதிகள் மீதும் மீண்டும் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பப் பிழைகளைச் சரிசெய்யவும், அவர்கள் மீது புதிய வழக்குகள் பதிவு செய்யவும் தற்போது திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T16:26:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[அந்த app-ல் என்ன நடக்குதுனு எனக்கு தெரியாது.. நடிகை தர்ஷா குப்தா சர்ச்சைக்கு பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/dharsha-guptha-clarify-on-renown-app-controversy-1786205662"></link>
            <id>https://cineulagam.com/article/dharsha-guptha-clarify-on-renown-app-controversy-1786205662</id>
            <summary type="text">நடிகை தர்ஷா குப்தா இன்ஸ்டாவில் கவர்ச்சியான போட்டோக்களை அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருபவர்.அவர் சமீபத்தில் ஒரு app பற்றிய அறிவிப்பை வெளியிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை தர்ஷா குப்தா இன்ஸ்டாவில் கவர்ச்சியான போட்டோக்களை அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருபவர்.</p><p>அவர் சமீபத்தில் ஒரு app பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். அதை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். </p><p>
அவர் தவறான விஷயம் செய்வதாக வந்த விமர்சனத்திற்கு பதில் கொடுத்து இருக்கிறார் அவர். அந்த app-ல் என்ன நடக்கிறது என்ன நடக்கிறது என எனக்கு தெரியாது என கூறியுள்ளார் அவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/998ad73e-1e0a-447e-9188-8f32c2da6dab/26-6a7755e119171.webp' /></p><h2>தர்ஷா குப்தா கூறி இருப்பதாவது..
</h2><p>இத்தனை ஆண்டுகளாக என்னை நேசித்து வந்தவர்களிடம், நான் எப்படிப்பட்டவள் என்பதை விளக்க வேண்டிய நிலை வரும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ❤️
</p><p>Renown செயலி என்பது, என் ரசிகர்கள், எனக்கு குடும்பம் போன்றவர்கள், என்னிடம் தங்களுடைய பிறந்தநாள் அல்லது திருமணநாள் வாழ்த்துகளைப் பெறவோ, அல்லது என்னுடன் தனிப்பட்ட முறையில் பேசவோ முடியும் என்றுதான் நான் நினைத்தேன். அதுதான் நான் அதில் இணைய சம்மதித்த ஒரே காரணம். நான் சொல்வது உண்மை என்பதற்கு முருகப்பெருமான் சாட்சியாக இருக்கிறார்.
</p><p>அந்த தளத்தில் வேறு என்ன நடக்கிறது என்பது எனக்கு ஒருபோதும் தெரியாது.
</p><p>என் அம்மா எனக்கு கற்றுக்கொடுத்த மதிப்புகளுடன்தான் நான் வாழ்ந்து வருகிறேன். நான் கவர்ச்சியான புகைப்படங்களைப் பகிரலாம், ஆனால் எனக்கென்று சில எல்லைகள் உள்ளன. எந்த அளவிலான பணமோ அல்லது புகழோ வந்தாலும், அந்த எல்லைகளை நான் ஒருபோதும் கடக்க மாட்டேன்.
</p><p>என்னைப் பற்றிய விமர்சனங்கள் என்னை அதிகமாக காயப்படுத்தவில்லை. ஆனால், இத்தனை ஆண்டுகளாக என்னை நேசித்து நம்பியவர்கள், நான் ஒருபோதும் இல்லாத ஒரு நபராக என்னை நினைத்திருக்கலாம் என்பதுதான் என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது.
</p><p>இத்தனை ஆண்டுகளாக நீங்கள் அறிந்த அதே நபராகவே என்னை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்; நான் ஒருபோதும் செய்யாத ஒரு விஷயத்திற்காக என்னை நினைக்க வேண்டாம். ❤️&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-08T16:21:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[LPL 2026 இறுதிபோட்டி: ஜாஃப்னா கிங்ஸ் 123 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jaffna-kings-123-all-out-vs-gag-lpl-2026-final-1786205901"></link>
            <id>https://news.lankasri.com/article/jaffna-kings-123-all-out-vs-gag-lpl-2026-final-1786205901</id>
            <summary type="text">காலி கல்லன்ட்ஸ் அணிக்கு எதிரான LPL 2026 இறுதிப்போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் 123 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. 

லங்கா பிரீமியர் லீக் 2026 இறுதிப்போட்டிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி கல்லன்ட்ஸ் அணிக்கு எதிரான LPL 2026 இறுதிப்போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் 123 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. </p><p>

லங்கா பிரீமியர் லீக் 2026 இறுதிப்போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 19.3 ஓவர்களில் 123 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.&nbsp;</p><h2>இறுதிப்போட்டி&nbsp;</h2><p>

கொழும்பில் லங்கா பிரீமியர் லீக் 2026 தொடரின் இறுதிபோட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் மற்றும் காலி கல்லன்ட்ஸ் அணிகள் மோதி வருகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8982dc5e-f409-4428-bf49-b17570cd17e2/26-6a7756d08fb65.webp' />&nbsp;</p><p></p><p>

நாணய சுழற்சியில் வென்ற ஜாஃப்னா கிங்ஸ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியது.

அவிஷ்கா பெர்னாண்டோ 20 (16) ஓட்டங்களில் ஆட்டமிழக்க, கவாஜா நபாய் டக்அவுட் ஆனார். </p><p>கமில் மிஷாரா (Kamil Mishara) பொறுப்புடன் ஆட ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.&nbsp;</p><h2>ஜாஃப்னா கிங்ஸ்</h2><p>
அணியின் ஸ்கோர் 87 ஆக இருந்தபோது, கமில் மிஷாரா 41 (32) ஓட்டங்களில் இஷான் மலிங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். </p><p>

கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய சமிந்து விக்ரமசிங்கே 16 பந்துகளில் 24 ஓட்டங்கள் விளாசினார். ஜாஃப்னா கிங்ஸ் அணி 19.3 ஓவர்களில் 123 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.</p><p>

காலி அணியின் தரப்பில் சரித் அசலங்கா, இஷான் மலிங்கா தலா 3 விக்கெட்டுகளும், தரிந்து ரத்னாயகே 2 விக்கெட்டுகளும், ஆகிப் மற்றும் சச்சிந்து தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/448b2aea-b517-406a-a8d7-80b852679583/26-6a775795bb306.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T16:16:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளாமரில் கலக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்....]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/rakul-preet-singh-recent-photoshoot-post-1786197769"></link>
            <id>https://viduppu.com/article/rakul-preet-singh-recent-photoshoot-post-1786197769</id>
            <summary type="text">ரகுல் ப்ரீத் சிங்இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் நடிப்பில் அடுத்ததாக ராமாயணா திரைப்படம் வெளிவரவிருக்கிறது.

இப்படத்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரகுல் ப்ரீத் சிங்</h2><p>இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் நடிப்பில் அடுத்ததாக ராமாயணா திரைப்படம் வெளிவரவிருக்கிறது.

இப்படத்தில் ராவணனின் தங்கை சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.&nbsp;சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியானது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47fe4db4-df84-42e0-a908-1e9835058c04/26-6a77371526877.webp' /></p><p>இதில் இவருடைய கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவார்.</p><p>அந்த புகைப்படங்களும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கின்றன.

அந்த வகையில், கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-08T16:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய ஊடுருவல் தொடர்பில் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-fishermen-encroachment-rises-in-south-alam-1786204426"></link>
            <id>https://tamilwin.com/article/indian-fishermen-encroachment-rises-in-south-alam-1786204426</id>
            <summary type="text">இந்திய கடற்றொழிலாளர்களின் அத்து மீறிய வருகை தற்போது வட பகுதியை தாண்டி தென்
பகுதிக்குள் ஊடுருவியுள்ளது. எனவே அரசாங்கம் இனியாவது இவர்களின் வருகையை கட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய கடற்றொழிலாளர்களின் அத்து மீறிய வருகை தற்போது வட பகுதியை தாண்டி தென்
பகுதிக்குள் ஊடுருவியுள்ளது. எனவே அரசாங்கம் இனியாவது இவர்களின் வருகையை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள
வேண்டும் என வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம்
தெரிவித்துள்ளார்.
</p><p>
மன்னாரில் இன்று(08.08.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>இந்திய கடற்றொழிலாளர்கள்</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை எல்லைக்குள் நுழைந்து அத்துமீறி கடற்றொழிலில் 
ஈடுபடுகின்ற விடயங்கள் இன்று வடபகுதியில் பூதாகரமான விடயமாக பார்க்கப்படுகிறது.
</p><p>
கடந்த காலங்களில் இவ்வாறு இந்திய கடற்றொழிலாளர்களின் வருகை தொடர்ந்தும் இடம்பெற்றிருந்த போது
 நாங்கள் அதனை கண்டித்து போராட்டங்களை நடத்தி அவர்களின் வருகையை கட்டுப்படுத்தி
இருந்தோம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7af28595-0afb-406e-92e5-9bc6c86f4fb6/26-6a7752c33b1af.webp' /></p><p>ஆனால், இந்த தடைக்காலம் முடிந்து ஆறாம் மாதம் முதல் அவர்களின் வருகை மிக
மிஞ்சியதாக காணப்படுவதுடன் இலங்கை கடல் எல்லையாக இருக்கின்ற Sea of Sri Lanka கடல்
பகுதிக்குள் அவர்களின் அத்துமீறிய செயற்பாடுகள் அதிகரித்து வருகிறது.
</p><p>
இது தொடர்பாக அண்மையிலே தீவக கடற்றொழிலாளர்கள் பெரிய அளவிலான கடல் வழிப்
போராட்டம் ஒன்றை மேற்கொண்டு இருந்தார்கள்.
</p><p>
இருந்த போதிலும் இந்த போராட்டம் எந்த அளவுக்கு அவர்களால் செவிமடுக்க
பட்டிருக்கின்றது என்பது கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T16:07:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு - குவைத் ஸ்ரீலங்கன் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/colombo-kuwait-srilankan-flight-services-resume-1786204447"></link>
            <id>https://jvpnews.com/article/colombo-kuwait-srilankan-flight-services-resume-1786204447</id>
            <summary type="text">கொழும்புக்கும் குவைத்திற்கும் இடையிலான விமான சேவைகள் இன்று (08) பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்புக்கும் குவைத்திற்கும் இடையிலான விமான சேவைகள் இன்று (08) பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> 

மத்திய கிழக்கில் நிலவிய பதற்றமான சூழ்நிலை காரணமாக இந்த விமான சேவைகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3f8da31-072d-495b-aaa9-890128decb49/26-6a7751217f466.webp' /></p><p>எனினும், தற்போது போர்ச் சூழல் ஓரளவுக்குத் தணிந்துள்ளமையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T15:54:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்று சிறைச்சாலைகளில் மோதலில் ஈடுபட்ட கும்பல்கள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gangs-involved-in-clashes-three-prisons-identified-1786203932"></link>
            <id>https://jvpnews.com/article/gangs-involved-in-clashes-three-prisons-identified-1786203932</id>
            <summary type="text">குருவிட்ட, பல்லன்சேனை மற்றும் புதிய மெகசின் சிறைச்சாலைகளில் பதற்றமான சூழ்நிலையையும் மோதலையும் ஏற்படுத்திய குழுவினர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொலிஸா...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருவிட்ட, பல்லன்சேனை மற்றும் புதிய மெகசின் சிறைச்சாலைகளில் பதற்றமான சூழ்நிலையையும் மோதலையும் ஏற்படுத்திய குழுவினர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p></p><p>அத்துடன், அவர்களை வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றுவது உள்ளிட்ட மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனச் சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p> 

குருவிட்ட, பல்லன்சேனை மற்றும் புதிய மெகசின் ஆகிய மூன்று சிறைச்சாலைகளிலும் நேற்று (07) மற்றும் அதற்கு முதல் நாள் (06) மோதல் சம்பவங்கள் இடம்பெற்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42085397-53fa-4b6b-8565-8ad09e329f25/26-6a774f1ea1758.webp' /></p><p> 

இச்சம்பவங்களில் 3 சிறைக்கைதிகள் உயிரிழந்ததுடன், மேலும் 54 கைதிகள் காயமடைந்துள்ளனர். </p><p>

இதனிடையே, குருவிட்ட சிறைச்சாலையின் கைதிகள் நேற்று (07) ஏற்படுத்திய பதற்றத்தின் போது, சிறைக்கூடங்களின் கூரைகளை உடைத்துச் சேதப்படுத்தியமையால் தற்போது சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>

அப்பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருவதால், கைதிகளை அந்த இடங்களில் வைத்திருக்க முடியாமையே இதற்குக் காரணமாகும். </p><p>

இதற்கமைய, இன்றைய தினமும் (08) இரத்தினபுரி பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தரவின் தலையீட்டில் இது குறித்து ஆராயப்பட்டு, சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>

குறித்த மோதலின் போது இரண்டு கைதிகள் உயிரிழந்ததுடன், அவர்களின் உடல்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்தனர். </p><p>

அத்துடன், அங்கு உறவினர்கள் பார்வையிடுவதற்கான வாய்ப்பு இன்னமும் வழங்கப்படவில்லை எனச் சிறைச்சாலைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T15:45:38+00:00</updated>
        </entry>
    </feed>
