<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-10T22:52:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க பெண் தோழியை கொன்ற வழக்கில் இந்திய மாணவர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indian-student-arrested-killing-america-girlfriend-1786402330"></link>
            <id>https://canadamirror.com/article/indian-student-arrested-killing-america-girlfriend-1786402330</id>
            <summary type="text">அமெரிக்காவில் 19 வயது பெண் தோழியை கொலை செய்ததாகக் கூறப்படும் 20 வயதான இந்திய மாணவர் ஒருவர், ஜெர்மனியில் இருந்து இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் 19 வயது பெண் தோழியை கொலை செய்ததாகக் கூறப்படும் 20 வயதான இந்திய மாணவர் ஒருவர், ஜெர்மனியில் இருந்து இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
அரிஸோனா மாநிலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில், வருண் பட்சிகாரி (20) என்ற இந்திய மாணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அரிஸோனா பல்கலைக்கழகத்தில் பிசினஸ் அனலிட்டிக்ஸ் கற்று வந்ததாகக் கூறப்படும் வருண், தனது 19 வயது பெண் தோழியான ரூபியை கொலை செய்ததாக விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd941a35-e770-4c7c-bc02-e21a148a4604/26-6a7a561bdcbf2.webp' /></p><p>கடந்த ஆகஸ்ட் 6ஆம் திகதி மாலை சுமார் 4 மணியளவில் காவல்துறைக்கு அவசர அழைப்பு கிடைத்துள்ளது.
</p><p>
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், ரூபி படுகாயங்களுடன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

ஆரம்பகட்ட விசாரணைகளில், அவருடன் நெருங்கிப் பழகிய வருண் இந்தக் கொலையுடன் தொடர்புடையவர் என காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர்.</p><p>கொலைக்குப் பின்னர், ரூபியின் செல்போனை பயன்படுத்தி அவரது பெற்றோருக்கு, தான் நலமாக இருப்பதாகவும் குற்றமற்றவர் என்பதுபோன்றும் செய்திகள் அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனினும், அந்தச் செய்திகள் தொடர்பில் சந்தேகமடைந்த ரூபியின் பெற்றோர் காவல்துறையைத் தொடர்புகொண்டு, அவரது வீட்டுக்குச் சென்று நிலைமையைச் சரிபார்க்குமாறு கோரியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலேயே ரூபி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன</p><p>சம்பவத்துக்குப் பின்னர் வருண் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்குச் சென்று, அங்கிருந்து ஜெர்மனியின் பெர்லின் நகருக்குச் சென்றதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>பின்னர் பெர்லினிலிருந்து அவர் இந்தியாவுக்குத் திரும்பத் திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a92299c-8734-456e-9fd0-3c43e6a1820e/26-6a7a561c8e2ba.webp' /></p><p>

இந்த நிலையில், அவர் டக்சான் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து இந்தியா செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>இதனிடையே, வருண் மீது முன்னதாகவே பல்வேறு வன்முறை தொடர்பான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
மேலும், அரிஸோனா பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற காலத்தில் சண்டையில் ஈடுபட்டதாகவும், அதன் காரணமாக அவர் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
அத்துடன், அண்மையில் அவர் வேலைவாய்ப்பை இழந்திருந்ததாகவும், அதன் காரணமாக வீட்டு வாடகையை செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டதாகவும், இதனால் அவரது விசா தொடர்பிலும் சிக்கல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>விசாரணையாளர்களின் ஆரம்ப தகவல்களின்படி, வருணுடன் கொண்டிருந்த நட்புறவை முறித்துக்கொள்ள ரூபி திட்டமிட்டிருந்ததாகவும், இது தொடர்பாக இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னணியிலேயே கொலை இடம்பெற்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
</p><p>
மேலும், ஆகஸ்ட் 5ஆம் திகதி ரூபியின் அறைக்கு அருகில் தங்கியிருந்த சிலர், அவரது படுக்கையறையிலிருந்து அலறல் சத்தம் கேட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவர்கள் ரூபிக்கு குறுஞ்செய்தி அனுப்பி அவர் நலமாக இருக்கிறாரா எனக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.</p><p>அதற்கு ரூபி நலமாக இருப்பதாகவும், அந்தச் சத்தம் ஒரு வாக்குவாதத்தினால் ஏற்பட்டதாகவும் பதிலளித்ததாக சிலர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
பின்னர், அந்தக் குறுஞ்செய்திகளை ரூபி அனுப்பவில்லை என்பதும், அவரது செல்போனை பயன்படுத்தி வருண் அனுப்பியிருக்கலாம் என்பதும் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. </p><p>குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-10T22:52:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் ; 12 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ukraine-drone-attack-on-russia-12-killed-1786401522"></link>
            <id>https://canadamirror.com/article/ukraine-drone-attack-on-russia-12-killed-1786401522</id>
            <summary type="text">உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், ரஷ்யாவின் தத்தாரிஸ்தான் மாகாணத்தில் உள்ள குடியிருப்புகள் மீது உக்ரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், ரஷ்யாவின் தத்தாரிஸ்தான் மாகாணத்தில் உள்ள குடியிருப்புகள் மீது உக்ரைன் மேற்கொண்டதாக கூறப்படும் டிரோன் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 39 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13092f84-98f6-4577-af71-c8d365f8858a/26-6a7a52f37f01b.webp' /></p><p>உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன.
</p><p>
இந்நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். </p><p>எனினும், இதுவரை அந்த முயற்சிகள் எதிர்பார்த்த முடிவை எட்டாத நிலையில், இரு தரப்புக்கும் இடையிலான மோதல்கள் தொடர்ந்து வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-10T22:38:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீண்டகால ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்த வியாபாரிகள் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-dealers-involved-in-heroin-sales-arrested-1786390280"></link>
            <id>https://tamilwin.com/article/2-dealers-involved-in-heroin-sales-arrested-1786390280</id>
            <summary type="text">நீண்ட காலமாக சட்டவிரோதமான முறையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில்
ஈடுபட்டு வந்த இரு சந்தேகநபர்கள் சாய்ந்தமருது
பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீண்ட காலமாக சட்டவிரோதமான முறையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில்
ஈடுபட்டு வந்த இரு சந்தேகநபர்கள் சாய்ந்தமருது
பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>இந்தக் கைது நடவடிக்கையானது நேற்றைய தினம்(10.08.2026) மாலை இடம்பெற்றுள்ளது.</p><h2>கைது செய்யப்படோர்</h2><p>
அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் ஏ.ஆர். பிர்தௌவ்ஸிற்கு கிடைத்த
இரகசியத் தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே
கல்முனைக்குடி மற்றும் சாய்ந்தமருது பகுதிகளைச் சேர்ந்த 30 மற்றும் 44 வயதுடைய
இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து
2,400 மில்லிகிராம் மற்றும் 2,970 மில்லிகிராம் எடையுடைய ஹெரோயின்
போதைப்பொருட்களுடன், போதைப்பொருளை நிறுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட மைக்ரோ ரக
நவீன இலத்திரனியல் தராசு ஒன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/586b4425-1026-4886-b32a-4a13e6c626fe/26-6a7a3435b3de6.webp' /></p><p>அத்துடன் இந்தக் கைது நடவடிக்கையின் போது கல்முனை நீதிவான் நீதிமன்றத்தினால்
திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரும்
கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. </p><p>சந்தேகநபர்கள் இருவரையும் சான்றுப்
பொருட்களுடன் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சாய்ந்தமருது பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T22:16:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகரில் குண்டு மிரட்டல்: பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/thousands-of-people-evacuated-halifax-buildings-1786381613"></link>
            <id>https://canadamirror.com/article/thousands-of-people-evacuated-halifax-buildings-1786381613</id>
            <summary type="text">கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகர மையப்பகுதியில் நபர் ஒருவர் குண்டு மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து, இன்று காலையில் அங்குள்ள கட்டடங்களில் இருந்து பல்லாயிரக்கணக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகர மையப்பகுதியில் நபர் ஒருவர் குண்டு மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து, இன்று காலையில் அங்குள்ள கட்டடங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.</p><p> 
அப்பர் வோட்டர் வீதியில் அமைந்துள்ள 'பேர்டிஸ் வார்ஃப்' வாகன நிறுத்துமிடத்தில் சந்தேகத்திற்கு இடமான வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்த நிலையில், காலை 8:45 மணியளவில் அங்கிருந்த மக்கள் முதன்முதலாக வெளியேற்றப்பட்டனர். </p><p>
குறித்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து பொலிஸார் அந்தச் சந்தேகத்திற்குரிய வாகனத்தைச் சோதனையிட்டனர். 
நிலைமையின் தீவிரத்தைக் கருதி, காலை 10:15 மணியளவில் பொதுமக்கள் வெளியேற்றப்பட வேண்டிய பகுதி&nbsp; விரிவுபடுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b2a09da-f58e-4831-bf02-3e93aab0c23f/26-6a7a052f0cabb.webp' /></p><p>பேரிங்டன் வீதி,&nbsp; அமலமேக் வழி சந்திப்பு, அப்பர் வோட்டர் வீதி,&nbsp; பிரன்ஸ்விக் வீதி / டொக்டர் ஆல்ஃப்ரெட் வேடெல் வீதி முதல் பிரன்ஸ்விக் வீதி காக்ஸ்வெல் வீதி வரை,&nbsp; டியூக் வீதி / பேரிங்டன் வீதி சந்திப்பில் இருந்து அப்பர் வோட்டர் வீதி வரையிலான பகுதிகள் மூடப்பட்டன.</p><p>இந்த வெளியேற்ற உத்தரவு அப்பகுதியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் பாதசாரிகளும் உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என ஹாலிஃபாக்ஸ் பிராந்திய பொலிஸார் அறிவித்தனர்.</p><p>
இந்த வெளியேற்ற மண்டலத்தில் பல ஹோட்டல்கள், உணவகங்கள், ஸ்கோஷியா சதுக்கம் மற்றும் அரசு அலுவலகங்கள் அடங்கியுள்ளன. 
பொலிஸாரின் தேவைக்கேற்ப அருகிலுள்ள பக்கவாட்டுச் சாலைகளும் மூடப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>ஹாலிஃபாக்ஸ் ட்ரான்சிட் பேருந்துகள் மாற்றுப் பாதைகளில் இயக்கப்படும் அதேவேளையில், படகு முனையம் திறந்திருக்கும் என்றும் பயணிகளுக்கு வழிகாட்ட ஊழியர்கள் இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
காலை 10:30 மணியளவில் அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டது. </p><p>அதில், சந்தேகத்திற்குரிய வாகனம் உட்பட அப்பகுதியைப் பொலிஸார் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும், விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. </p><p>
கிளேட்டன் பூங்காவில் உள்ள கனடா கேம்ஸ் சென்டர் அருகே தோமஸ் ரேடால் டிரைவ் பகுதியில் வைத்து சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.</p><p> 
பிற்பகல் 1:30 மணியளவில் பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, அப்பகுதியில் தற்போது உடனடி அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>எனினும், விசாரணை தொடர்வதால் குறைந்த அளவிலான பொலிஸ் பாதுகாப்பு அங்கே நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T22:10:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் பெரிய இழப்புகளை சந்திக்கப்போகும் ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/zodiac-signs-face-big-losses-due-saturn-transit-1786399719"></link>
            <id>https://jvpnews.com/article/zodiac-signs-face-big-losses-due-saturn-transit-1786399719</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில் கர்மா மற்றும் நீதியின் அதிபதியான சனிபகவான், தற்போது மீன ராசியில் சஞ்சரித்து வருகிறது. ஆகஸ்ட் 20 அன்று சனிபகவான் ரேவதி நட்சத்திரத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில் கர்மா மற்றும் நீதியின் அதிபதியான சனிபகவான், தற்போது மீன ராசியில் சஞ்சரித்து வருகிறது. ஆகஸ்ட் 20 அன்று சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழையப்போகிறார், மேலும் அக்டோபர் 9 வரை அது நீடிக்கும். ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி புதன் என்பதால், இந்த கிரக நிலை மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed509a35-6d46-4819-b33f-4ba90d86cff7/26-6a7a4bea7eb06.webp' /></p><p>அனைத்து ராசிக்காரர்களும் இதன் தாக்கத்தை உணரக்கூடும் என்றாலும், சில ராசிக்காரர்கள் இந்த கிரக மாற்றத்தால் சவாலான காலகட்டத்தை அனுபவிக்கப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/461ceb9a-c761-4192-bb72-3b9cc5b447c8/26-6a7a4be9cbd1d.webp' /></p><h3>கடகம்</h3><p>
சனி ரேவதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் போது கடக ராசிக்காரர்கள் அவசரப்பட்டு முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அவசர முடிவுகளால் அவர்கள் பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடும், அதே சமயம் பணியிடங்களில் ஏற்படும் உரையாடல்களில் கூடுதல் எச்சரிக்கை தேவைப்படலாம். இந்த காலகட்டம் உங்களுக்கு வாழ்க்கையின் மறுபக்கத்தைக் காட்டலாம். அலுவலகத்தில் உங்கள் மீது அதிக அழுத்தம் கொடுக்கப்படலாம், இது உங்களின் மன அமைதியைக் கெடுக்கும். வியாபரத்தைப் பொறுத்தவரை, இந்த காலகட்டத்தில் எதிர்பார்த்த லாபம் வராமல் இருப்பதுடன் நஷ்டமும் அதிகரிக்கலாம்.</p><p></p><h3>கன்னி
</h3><p>கன்னி ராசிக்காரர்கள் இந்த நட்சத்திர மாற்றத்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்படுகிறது. முன்னேற்பாடும், சரியான திட்டமும் இல்லாமல் எந்த விஷயத்தையும் தொடங்குவதைத் தவிர்க்கவும், முதலீடுகள் மற்றும் தேவையற்ற செலவினங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். இந்த நேரத்தில் அவர்களின் தொடர்பு திறன்கள் எதிர்மறையாக பாதிக்கப்படலாம். அவர்களின் தொழில் வாழ்க்கையில் புதிய திட்டங்களைத் தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

அவர்களின் காதல் வாழ்க்கையில் பல்வேறு சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால், தங்கள் துணையுடன் சும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.</p><p></p><h3>மகரம்</h3><p>மகர ராசிக்குச் சனி பகவான் அதிபதியாக இருப்பதால், இந்த நட்சத்திரப் பெயர்ச்சி அவர்களுக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் மகர ராசிக்காரர்கள் பணியிடத்தில் மோதல்களைத் தவிர்க்கவும், முக்கிய ஆவணங்களைக் கவனமாகக் கையாளவும், குடும்ப உறவுகளில் இணக்கமான சூழலைப் பேண முயற்சிக்க வேண்டும். இந்த நேரத்தில் அவர்கள் நீதிமன்ற வழக்குகளில் தோல்வியை சந்திக்க நேரிடும். அவர்களின் எதிரிகளின் பலம் அதிகரிக்கலாம், அதே நேரத்தில் அவர்கள் சில விபத்துக்களை சந்திக்க நேரிடும். எனவே இந்த காலகட்டத்தில் அவர்கள் கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T22:08:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடகொரியாவின் உதவி இல்லாமல் ரஷ்யாவால் போர் நடத்த முடியாது! ஜெலென்ஸ்கி காட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/zelenskyy-alleges-n-korea-involvement-in-ukraine-1786397526"></link>
            <id>https://news.lankasri.com/article/zelenskyy-alleges-n-korea-involvement-in-ukraine-1786397526</id>
            <summary type="text">உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா தங்களது படைகளில் வட கொரிய வீரர்களை இணைத்து வருவதாக ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.உக்ரைன் போரில் வட கொரியாவின் பங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா தங்களது படைகளில் வட கொரிய வீரர்களை இணைத்து வருவதாக ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.</p><h2>உக்ரைன் போரில் வட கொரியாவின் பங்களிப்பு</h2><p>உக்ரைன் போரில் வட கொரிய வீரர்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ரஷ்யா தீவிரமாக பயன்படுத்த தொடங்கி இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி திங்கட்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p> இது தொடர்பாக X தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், வரலாற்றிலேயே முதல் முறையாக வட கொரியாவின் உதவி இல்லாமல் ரஷ்யாவால் போர் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4571a5f4-ba56-46d9-b2f0-9268ecb496c9/26-6a7a435873cfc.webp' /></p><p> உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த வடகொரியாவின் புதிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை ரஷ்யா பெற்று இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p></p><h2> உலக நாடுகளுக்கு எச்சரிக்கை</h2><p>
ரஷ்யா - வடகொரியா இடையிலான இந்த அபாயகரமான கூட்டணி உலக நாடுகளுக்கு மிகவும் பேராபத்து என்று சுட்டிக்காட்டினார்.</p><p> அத்துடன் உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிரான போரில் வட கொரிய வீரர்களும் மற்றும் ஏவுகணைகளும் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதன் மூலம் அவர்கள் நேரடியாக போர் அனுபவங்களை பெற்று வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7318d8df-2ad5-4fcd-a1c8-276cfb27b264/26-6a7a43592a171.webp' /></p><p> இதன் மூலம் அவர்கள் தங்களது பலவீனங்களை சரிசெய்து கொண்டு மிக ஆழமான ராணுவ அனுபவங்களை பெறுவதாக எச்சரித்துள்ளார்.</p><p>இந்த அனுபவம் எதிர்காலத்தில் ஜப்பான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ் மற்றும் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுக்கு ஆபத்தாக மாறக்கூடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> எனவே இந்த விவகாரத்தில் அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் எனவும், வட கொரியாவின் இலக்குகளை கட்டுப்படுத்த உக்ரைனுக்கு சர்வதேச ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T22:05:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த வருடம் யாழில்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/11th-world-tamil-conference-in-jaffna-1786398282"></link>
            <id>https://ibctamil.com/article/11th-world-tamil-conference-in-jaffna-1786398282</id>
            <summary type="text">11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த வருடம்
யாழ்ப்பாணத்தில்நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவர்
அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த வருடம்
யாழ்ப்பாணத்தில்நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவர்
அரசர் அருளாளர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும், யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் மற்றும் தமிழ் அமைப்பும் இணைந்து தனிநாயகம் நினைவரங்க நிகழ்வை யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கில் நடத்தியது.</p><p>
</p><p></p><h2>தொடக்க வுரை</h2><p>இதில் கலந்து கொண்டு தொடக்க வுரை ஆற்றுகையிலேயே அவர் இந்த அறிவிப்பை
வெளியிட்டுள்ளார்.
</p><p>
இதேவேளை, முதலாவது தமிழாராய்ச்சி மாநாடு 1966 ஆம் ஆண்டு மலேசியாவில்
கோலாலம்பூரிலும் நான்காவது மாநாடு 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்
யாழ்ப்பாணத்திலும் நடைபெற்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d248416-36d6-4b73-b6b8-de99cbf31a1d/26-6a7a4991db957.webp' /></p><p> 

உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் நிறுவுநரான
தனிநாயகம் அடிகளார் இம் மாநாட்டை ஆரம்பித்து வைத்தார்.
</p><p>
 அவர் பங்குபற்றிய இறுதி
மாநாடாகவும் இதுவே அமைந்தது.</p><p>
</p><p></p><h2>துயரச் சம்பவம்</h2><p>யாழ். குடா நாடே விழாக் கோலம் பூண்டு பேரெழுச்சியுடன் அந்த மாநாடு நடைபெற்றதாக
அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள். </p><p>

இம் மாநாட்டின் இறுதி
நாளன்று நடந்த தாக்குதலில் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்ட துயரச் சம்பவமும்
வரலாற்றில் பதிவாகியிருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c905e566-8000-4961-953a-6727524403f8/26-6a7a49928a02a.webp' /></p><p>பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கடந்த 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவின்
சிக்காக்கோ நகரில் சிறப்பாக நடந்தேறியிருந்தது. </p><p>

இந்நிலையிலேயே 11 ஆவது உலகத்
தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த வருடம் 2027 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில்
நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-10T22:02:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப் ஆட்சியில் அமெரிக்காவில் அதிரடியாக ரத்து செய்யப்பட்ட 1.75 லட்சத்துக்கும் அதிகமான விசாக்கள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/under-trump-us-has-revoked-over-1-75-000-visas-1786396484"></link>
            <id>https://tamilwin.com/article/under-trump-us-has-revoked-over-1-75-000-visas-1786396484</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தின் கீழ், வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 1.75 லட்சத்துக்கும் அதிகமான விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தின் கீழ், வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 1.75 லட்சத்துக்கும் அதிகமான விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.</p><p>

விசா விதிமுறைகளை மீறியவர்கள், குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள், அமெரிக்க குடிமக்களுக்கு எதிரான வன்முறையை ஆதரித்தவர்கள், மோசடியில் ஈடுபட்டவர்கள், குடியேற்ற முறையை தவறாகப் பயன்படுத்தியவர்கள் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்பட்டவர்கள் ஆகியோரின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;விசா ரத்துகள்</h2><p>

பெரும்பாலான விசா ரத்துகள் சட்ட அமலாக்க அமைப்புகளுடனான தொடர்புகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் தாக்குதல், மதுபோதையில் வாகனம் செலுத்துதல், திருட்டு மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் முக்கிய காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0a2dfd2-d532-425b-8d62-89e4a389ff95/26-6a7a463ca75ea.webp' /></p><p>
</p><p>
மேலும், பாலியல் துர்நடத்தை, மனிதக் கடத்தல், குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகப் பதிவுகளை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் உள்ளிட்டோரின் விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.</p><p>

வட ஆப்பிரிக்காவில் உள்ள அமெரிக்க தூதரகம், அமெரிக்காவில் குழந்தை பெற்றுக்கொள்வதன் மூலம் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பயணம் செய்ததாகக் கூறப்படும் 100-க்கும் மேற்பட்ட ‘பிறப்புச் சுற்றுலா’ பெற்றோரின் விசாக்களையும் ரத்து செய்துள்ளது.</p><p></p><h2>மீண்டும்&nbsp;ட்ரம்ப்</h2><p>
</p><p>
கடந்த ஜனவரியில், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விசாக்கள் ரத்து செய்யப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 1.75 லட்சத்தைக் கடந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7569f70-3182-471f-bf49-8a9e6aafd404/26-6a7a463d6334a.webp' /></p><p>

ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கைகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. விசா வழங்கும் நடைமுறையில் சமூக ஊடகக் கண்காணிப்பு மற்றும் விரிவான பின்னணி ஆய்வுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
</p><p>
எனினும், இந்த சமூக ஊடகக் கண்காணிப்பு நடவடிக்கைகள் கருத்துச் சுதந்திரத்தை பாதிப்பதாகவும், குடியேற்றவர்களை குறிவைக்கும் கண்காணிப்பு நடவடிக்கைகளாகவும் இருப்பதாக மனித உரிமை அமைப்புகள் மற்றும் நிபுணர்கள் விமர்சித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-10T21:44:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சா அட்சய பாத்திரம் உணவுத் திருவிழாவில் நடந்தது என்ன..? அம்பலமாகும் CCTV காணொளிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/what-happened-richa-festival-cctv-footage-reveals-1786398170"></link>
            <id>https://jvpnews.com/article/what-happened-richa-festival-cctv-footage-reveals-1786398170</id>
            <summary type="text">கிளிநொச்சி, இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா (Reecha Organic Farm) வளாகத்தில் நடைபெற்ற “அட்சய பாத்திரம்” உணவுத் திருவிழாவின் போது ஏற்பட்ட பரபரப்பு மற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி, இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா (Reecha Organic Farm) வளாகத்தில் நடைபெற்ற “அட்சய பாத்திரம்” உணவுத் திருவிழாவின் போது ஏற்பட்ட பரபரப்பு மற்றும் எதிர்பாராத சம்பவங்கள் தொடர்பான CCTV காணொளிகள் தற்போது கவனம் பெற்றுள்ளன.</p><p>
</p><p></p><p>கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் மற்றும் ஏற்பட்ட நெரிசல் காரணமாக நிகழ்வு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
நிகழ்வின் போது ஏற்பட்ட எதிர்பாராத சிரமங்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்ட அவர், பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஊழியர் மீது சிலர் குப்பைகளைக் கொட்டியது மற்றும் ஊழியர்களை துன்புறுத்தியது போன்ற அருவருப்பான சம்பவங்களுக்கு கடுமையான கவலைகளையும் வெளியிட்டுள்ளார்.</p><p>இந்த நிகழ்வைச் சீர்குலைக்க வேண்டுமென்றே சில குழுக்கள் திட்டமிட்டுச் செயல்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p>

மேலும், இது தொடர்பில் நிறுவனத் தலைவர் பாஸ்கரன் கந்தையா தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள விளக்கமும், சம்பவத்தின் பின்னணி தகவல்களும் இந்த காணொளியில் விரிவாகப் பார்க்கலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NNAXdS6Fyq8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-10T21:43:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி புதைகுழிக்கு சர்வதேச விசாரணை தேவை! விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-grave-call-for-int-l-probe-1786397192"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-grave-call-for-int-l-probe-1786397192</id>
            <summary type="text">செம்மணி புதைகுழியில் மீட்கப்பட்ட என்புகூடுகள் தொடர்பிலான விசாரணைகளை
சர்வதே நியதிகளுடன் சர்வதேச அமைப்புக்களின் உதவிகளுடன் உடனடியாக ஆரம்பிக்க
வேண்டும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி புதைகுழியில் மீட்கப்பட்ட என்புகூடுகள் தொடர்பிலான விசாரணைகளை
சர்வதே நியதிகளுடன் சர்வதேச அமைப்புக்களின் உதவிகளுடன் உடனடியாக ஆரம்பிக்க
வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ்
பிரேமச்சந்திரன் கோரியுள்ளார்.
</p><p>
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “செம்மணி மனித புதைகுழியில் இருந்து 500 இற்கும் மேற்பட்ட
என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.</p><p>
</p><p></p><h2>அகழ்வு பணிகள்&nbsp;</h2><p>100 நாட்களைத் தாண்டி அகழ்வு
பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், இவை தொடர்பான அடுத்த கட்ட
நடவடிக்கைகளை நோக்கி அரசாங்கம் ஏதாவது ஏற்பாடு செய்திருக்கிறதா என்றால்
இதுவரை இல்லை.</p><p>முக்கியமாக இந்த என்புக்கூடுகளுடைய டி.என்.ஏ (DNA) பரிசோதனைகள்
மேற்கொள்ளப்படவில்லை.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebaed771-01c4-42bb-af5f-c4984565c2dd/26-6a7a44880fa5d.webp' /></p><p>காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களின்
டி.என்.ஏ பரிசோதனைகளை மேற்கொண்டு காணாமல்
ஆக்கப்பட்டவர்களுடைய என்புக்கூடுகளாக என்பதனை கண்டறிய முயற்சிகளை மேற்கொள்ள
முடியும்.</p><p>அவற்றை முழுமையாக செய்வதற்கான தொழில்நுட்ப வசதிகள் இலங்கையில் இல்லை என்பதும் அதனை செய்வதற்கான ஆளணி பற்றாக்குறைகள் இருக்கிறது என்பதும் உண்மையானது.&nbsp;&nbsp;</p><p>
</p><p></p><h2>தொழில்நுட்ப வசதிகள்</h2><p>அதனால் இதில் பாண்டித்தியம் பெற்ற சர்வதேச அமைப்புகளிடம் இது
கையளிக்கப்பட வேண்டும்.</p><p>இந்த விசாரணைகள் அல்லது இந்த சோதனைகள் என்பது ஒரு சர்வதேச நியதிகளுக்கு
உட்பட்ட வகையில் அந்த முறையில் இது கொண்டுசெல்லப்பட வேண்டும் என்று நாங்கள்
எதிர்பார்க்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80690261-43c3-4bff-9e62-dca025eaecfb/26-6a7a4488f1bb2.webp' /></p><p>
</p><p>ஆகவே, இலங்கையில் இருக்கக்கூடிய சிவில் அமைப்புகளாக இருக்கலாம், மனித உரிமை
அமைப்புகளாக இருக்கலாம், ஜனநாயக விடயங்களுக்காக போராடக்கூடிய அமைப்புகளாக
இருக்கலாம், சர்வதேச மனித உரிமைகள் அமைப்பாக இருக்கலாம் இவர்கள் எல்லோரும்
நிச்சயமாக இலங்கையில் இவற்றை செய்து முடிப்பதற்கான சாத்தியப்பாடுகள் மிக மிகக்
குறைவு என்ற அடிப்படையில் ஒரு சர்வதேச விசாரணை ஒன்றுக்கான ஏற்பாடுகளை செய்ய
வேண்டியது எல்லோரது கடமை என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.</p><p>
ஆகவே, அந்த வகையில் மிகுதி எலும்புக்கூடுகளை தேடியெடுத்த பிற்பாடுதான் அடுத்த
கட்டத்தை நோக்கி நகர்த்துவோம் என்பதை விடுத்து இது வரையில் எடுக்கப்பட்ட
என்பு கூடுகள் தொடர்பிலான விசாரணைகளை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-10T21:41:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவை வாட்டும் வெப்பம்: 11 பகுதிகளில் வறட்சி அறிவிப்பு: 45 மில்லியன் மக்கள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/drought-declared-in-11-areas-of-england-1786394114"></link>
            <id>https://news.lankasri.com/article/drought-declared-in-11-areas-of-england-1786394114</id>
            <summary type="text">இங்கிலாந்தின் பல பகுதிகள் வறட்சி பகுதிகளாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தில் வறட்சி அறிவிப்புஇங்கிலாந்தின் பல பகுதிகளில் நிலவி வரும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்தின் பல பகுதிகள் வறட்சி பகுதிகளாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>இங்கிலாந்தில் வறட்சி அறிவிப்பு</h2><p>இங்கிலாந்தின் பல பகுதிகளில் நிலவி வரும் கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் விவசாய நெருக்கடிகள் காரணமாக நாட்டின் 71.3 சதவீத பகுதிகள் அதிகாரப்பூர்வ வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 1836 ம் ஆண்டு பதிவுகள் தொடங்கப்பட்டதில் இருந்து கடந்த 190 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான வறட்சி மாதமாக ஜூலை பதிவானதை அடுத்து இந்த நெருக்கடியானது ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5075de32-44d8-4f8e-9ed7-5664d6412ea0/26-6a7a360379b43.webp' /></p><p> இந்த வறட்சியின் காரணமாக இப்பகுதியில் வசிக்கும் 45 மில்லியன் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p> இவர்களில் 27 மில்லியனுக்கு அதிகமான மக்கள் தற்போது தண்ணீர் பயன்பாட்டை கட்டுப்பாடாக பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளனர்.</p><p> இந்த ஆண்டு 30 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் வெப்பநிலை பதிவான நாட்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.</p><p></p><p> இதில் ஜூலை மாதத்தில் மட்டும் 13 நாட்கள் வெப்பநிலை அதிகமான அளவு பதிவாகி மக்களை வாட்டியுள்ளது.</p><p> அமைச்சர்கள், நீர் நிறுவனங்கள், விவசாய அமைப்புகள் மற்றும் ஒழுங்குமுறை ஆணையங்கள் உள்ளடக்கிய தேசிய வறட்சிக் குழு அவசர கூட்டத்தை நடத்திய பிறகு, நிலைமை மிகவும் மோசமாக மாறி வருவதாக எச்சரித்துள்ளனர்.</p><p> நாட்டின் உணவு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தேசிய விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a77fbe8e-b6b6-4ce4-9185-89ce579c4ac3/26-6a7a360436a6b.webp' /></p><h2>வறட்சி அறிவிக்கப்பட்ட பகுதிகள்</h2><p>கிழக்கு மிட்லாண்ட்ஸ், லிங்கன்ஷயர் &amp; நார்தம்ப்டன்ஷயர், கென்ட் 7 கிழக்கு சசெக்ஸ், சோலென்ட் &amp; சவுத் டவுன்ஸ், கிழக்கு ஆங்லியா, ஹார்ட்போர்ட்ஷயர், லண்டன், தேம்ஸ் பள்ளத்தாக்கு, டெவோன் &amp; கார்ன்வால், வெசெக்ஸ் மற்றும் மேற்கு மிட்லாண்ட்ஸ் ஆகிய பகுதிகள் வறட்சி பகுதிகளாக அவசர வறட்சிக் குழு அறிவித்துள்ளது.</p><p> கூடுதலாக வறண்ட வானிலை நிலவும் கும்ப்ரியா &amp; லங்காஷயர், கிரேட்டர் மான்செஸ்டர், மெர்சிசைடு &amp; செஷயர், வடகிழக்கு மற்றும் யார்க்ஷயர் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T21:27:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுக்கிரனின் ஹஸ்த நட்சத்திரப் பெயர்ச்சி! நிதி நெருக்கடியைச் சந்திக்கப்போகும் ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/weekly-horoscope-1786393385"></link>
            <id>https://ibctamil.com/article/weekly-horoscope-1786393385</id>
            <summary type="text">ஜோதிடத்தில் அழகு, செல்வம் மற்றும் ஆடம்பரத்தின் காரணியான சுக்கிரன், தற்போது கன்னி ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 11 அன்று சுக்கிரன்,...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>ஜோதிடத்தில் அழகு, செல்வம் மற்றும் ஆடம்பரத்தின் காரணியான சுக்கிரன், தற்போது கன்னி ராசியில் பயணித்து வருகிறார்.
</p><p>இந்நிலையில், ஆகஸ்ட் 11 அன்று சுக்கிரன், சந்திரனின் ஹஸ்தம் நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். </p><p>சுக்கிரனின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பாக 4 ராசிக்காரர்களுக்கு பண நெருக்கடியையும் பிரச்சனைகளையும் தரக்கூடும்.
</p><p>
எனவே, நிதி விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அந்த ராசிகள் எவை என்று இந்த பதிவில் காண்போம்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>மேஷம்</td><td><ol><li>சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் திடீரென்று நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். </li><li>அதுவும் தேவையற்ற விஷயங்களுக்காகவோ அல்லது ஆடம்பரத்திற்காகவோ அதிகமாக செலவுகளை செய்யலாம். </li><li>இதனால் பட்ஜெட் பாழாகி, எதிர்பாராத அளவில் பண பிரச்சனையை சந்திக்கக்கூடும். </li><li>எனவே இக்காலத்தில் பண விஷயத்தில் கவனமாக இருங்கள். </li><li>எந்த ஒரு முதலீடுகளையும் யோசிக்காமல் செய்யாதீர்கள்.&nbsp;&nbsp;</li></ol></td></tr><tr><td>ரிஷபம் </td><td><ol><li>ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். </li><li>இந்த சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் தங்களுக்கு வரவேண்டிய பணம் கைக்கு வராமல் சிரமப்படக்கூடும்.</li><li>வியாபாரிகள் இக்காலத்தில் எந்த ஒரு ரிஸ்க்கையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். </li><li>முக்கியமாக இந்த காலகட்டத்தில் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். </li><li>இல்லாவிட்டால் அந்த பணத்தை திரும்ப பெறுவது கடினமாகிவிடும்.&nbsp;&nbsp;</li></ol></td></tr><tr><td>சிம்மம்</td><td><ol><li>சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் நிதி சிக்கல்களையோ அல்லது பண பற்றாக்குறையையோ சந்திக்க நேரிடலாம். </li><li>கைக்கு வரவேண்டிய பணத்தை பெறுவதில் இன்னும் தாமதம் ஏற்படலாம். </li><li>இது மிகுந்த மன அழுத்தத்தை உண்டாக்கும். </li><li>எதிர்பாராத நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். </li><li>இந்த செலவுகளை கட்டுப்படுத்தாவிட்டால் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.&nbsp;&nbsp;</li></ol></td></tr></tbody></table><br><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-10T21:23:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். செம்மணி மனிதப் புதைகுழி ; மேலும் 9 எலும்புக்கூடுகள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chemmani-human-grave-9-more-skeletons-identified-1786396432"></link>
            <id>https://jvpnews.com/article/chemmani-human-grave-9-more-skeletons-identified-1786396432</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன.
இதுவரை மேற்கொள்ளப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன.</p><p>
</p><p></p><p>இதுவரை மேற்கொள்ளப்பட்ட 102 நாட்கள் அகழ்வுப் பணிகளின் போது, மொத்தம் 524 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 513 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3927c4d6-d4e1-4ee3-b840-4a0e7a479a35/26-6a7a3f123f49b.webp' /></p><p>நீதிமன்ற உத்தரவின்படி, மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக 56 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன் 48ஆவது நாளான இன்றைய தினம் 09 புதிய எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p> 

 

அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 07 எலும்புக்கூடுகள் மேலதிக பரிசோதனைகளுக்காக மீட்கப்பட்டுள்ளன.
</p><p>
 

இன்றைய அகழ்வுப் பணியின் போது, சான்றுப் பொருட்களாக மாட்டின் காலில் அடிக்கப்படும் லாடம் ஒன்று மற்றும் கைவளையல் ஒன்று ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T21:14:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் களைகட்டும் இலங்கை ; 6 நாட்களில் 42,810 சுற்றுலாப் பயணிகள் வருகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-is-overrun-with-foreign-tourists-1786395751"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-is-overrun-with-foreign-tourists-1786395751</id>
            <summary type="text">ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஆறு நாட்களில் மாத்திரம் இலங்கைக்கு 42,810 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அண்மை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஆறு நாட்களில் மாத்திரம் இலங்கைக்கு 42,810 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அண்மைய தரவுகள் தெரிவிக்கின்றன.</p><p></p><p>
அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, ஆகஸ்ட் 1ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
</p><p>
அந்தக் காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 7,827 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன், இது அந்த ஆறு நாட்களில் பதிவான மொத்த சுற்றுலாப் பயணிகள் வருகையில் சுமார் 18 சதவீதமாகும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db8fb4b3-576a-4532-8a1e-6ac544520467/26-6a7a3c6940ab0.webp' /></p><p>அதேவேளை, குறித்த காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 4,922 பேரும், பிரான்ஸிலிருந்து 3,908 பேரும், சீனாவிலிருந்து 3,031 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.</p><p>

இதன்படி, இந்தியா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இலங்கையின் முக்கிய சுற்றுலா சந்தைகளாக தொடர்ந்தும் காணப்படுகின்றன.</p><p>இதேவேளை, 2026 ஜனவரி 1ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 6ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,386,228 ஆகப் பதிவாகியுள்ளது.
</p><p>
இதில் இந்தியா தொடர்ந்தும் இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலா சந்தையாக காணப்படுகிறது. ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 6 வரையான காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 346,057 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
</p><p>
அதே காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 135,323 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
</p><p>
மொத்த வருகை எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 25 சதவீதமாக காணப்படுவதுடன், ஐக்கிய இராச்சியத்தின் பங்கு சுமார் 9.8 சதவீதமாக பதிவாகியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T21:02:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறைபதமடைந்தார் தமிழ் வித்துவான் வாகரைவாணன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-scholar-vagaraivanan-achieved-natural-beauty-1786392666"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-scholar-vagaraivanan-achieved-natural-beauty-1786392666</id>
            <summary type="text">1941 டிசம்பர்22 ல் மட்டகளப்பு வாகரை மண்ணில் சந்தியாப்பிள்ளை தம்பதிகளுக்கு உதித்த அரியரெத்தினம் எனும் இயற்பெயரைக்கொண்ட 
வாகரை வாணன் நேற்று(10.08.2026)...</summary>
            <content type="html"><![CDATA[<p>1941 டிசம்பர்22 ல் மட்டகளப்பு வாகரை மண்ணில் சந்தியாப்பிள்ளை தம்பதிகளுக்கு உதித்த அரியரெத்தினம் எனும் இயற்பெயரைக்கொண்ட 
வாகரை வாணன் நேற்று(10.08.2026) இறைவடி சேர்ந்துள்ளார்.
</p><p>இவர் தோற்றத்தில் எளிமையும், அறிவில் ஆழமும் செயற்பாட்டில் இடையறா உக்கிரமும் தளராத நெஞ்சமும் கொண்ட அறிவாளன் ஆவார்.</p><h2>தமிழ் வித்துவான் வாகரைவாணன்</h2><p>
</p><p>
இலங்கை தமிழரசுக் கட்சி உத்தியோக பூர்வ பத்திரிகையான “சுதந்திரன்”பத்திரிகையில் பணியாற்றிய இவர்
மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியால் 1960, காலப்பகுதியில் இடம்பெற்ற அறவழிப்போராட்டங்களிலும் பங்குபற்றியுள்ளார்.
</p><p>
தமிழ் வித்துவான் வாகரைவாணன் ஆங்கிலம் மற்றும் இலத்தின் மொழிகளில் புலமை மிக்கவராக காணப்படுவதுடன் தழிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்களை ஆக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d85f9cea-0c8b-49b9-be91-18cbe8af2be6/26-6a7a32dbb03ef.webp' /></p><p>

மேலும் கவிதைகள், நாடகங்கள், சிறுகதைகள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகள் பலவற்றையும் இவர் எழுதியுள்ளார். அத்துடன் தமிழர் தேசியச் சிந்தனை மற்றும் தமிழ் உணர்வு கொண்ட ஒரு ஆளுமையாக இவர் அறியப்படுகிறார்.</p><p>அன்னாரில் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக மட்டக்களப்பு நாவற்குடா புனித சின்னலூர்து அன்னை திருத்தலத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று(11) பி.ப.3.30 மணிக்கு நாவற்குடா கத்தோலிக்க சேமக்கவாலையில் நல்லடக்கம் செய்யப்படும்.</p><p> </p><p>

இவர் சுட்ட பொன் (கவிதைகள்) 1970, எண்ணத்தில் நீந்துகிறேன் (கவிதைகள்) 1971, பயணம் (கவிதைகள்) 1972 ,துரோணர் சபதம் (நாடகம்) 1972தமிழ்ப்பாவை 1980, கடற்கரைப் பூக்கள் (கவிதைத் தொகுப்பு) 1983, இனிக்கும் தமிழ் (கட்டுரை) 1989, கிறிஸ்து தத்துவம் 1991, சின்னச் சின்னக் கதைகள்1991, ஆசிரியன் ஓர் அட்சயப்பாத்திரம் (புதுக்கவிதைகள்) 1992, அருளாளர் அந்தோனியார் (யாழ் இலக்கியப் பேரவையின் பரிசு பெற்றது) 1993, ஒரு பூ மலர்கிறது (நாடகம்) 1993, பாலர் தமிழ்ப்பாட்டு (சிறுவர் இலக்கியம்) (யாழ் இலக்கியப் பேரவையின் பரிசு பெற்றது) 1993, கிறிஸ்து காவியம் 1995, சின்னச் சின்னப் பூக்கள் (சிறுவர் இலக்கியம் – இலங்கை அரசின் இலக்கியப்பரிசு பெற்றது.) 1997, சமயம் – சில சிந்தனைகள் (கட்டுரைகள்) 1997
சிறு கதை விமர்சனம் 1997, அரசி உலக நாச்சியார் (சிறுகதைத் தொகுப்பு) 1998, புதுக்கவிதைப் புத்தகம் (புதுக்கவிதைகள்) 1998, விசுவாசத்தின் புதிய விடியல் (தமிழ் மொழி பெயர்ப்பு) 1998, தமிழர் வரலாற்றில் சில பக்கங்கள் 1999, இன்ரநெற் தமிழ் (கட்டுரைத் தொகுப்பு) 1999, ஆல ஊழரவெசல (ஆங்கிலக் கவிதை) 2000, நீ வா நிலாவே (சிறுவர் இலக்கியம்) 2000, சின்னஞ் சிறு கிளியே (சிறுவர் இலக்கியம்) 2000, ஆய் தமிழ் (ஆய்வுக்கட்டுரைகள்) 2001, வாகரை ஒரு வரலாற்றுப்பார்வை (வரலாறு) 2003
நந்திக்கொடி (வரலாற்றுக் குறு நாவல்) 2004, பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டக்களப்புத் தமிழ் 2005, இன்னாசியார் காவியம் 2005, பனிச்சங்கேணி அரசி (வரலாற்றுச், சிறுகதைகள்) 2007, கிழக்கிலங்கைத் தமிழகம் (வரலாறு) 2011, மட்டக்களப்புக் காவியம் 2016, வாகரை வாணனின் ஆய்வுக் கட்டுரைகள் 2017, உரைநடை மற்றும் கவிதை 2017, தமிழ்ப் பாவை தைப்பாவை 2017, தமிழ் மண் மட்டக்களப்பு. 2019, தலைநிமிர்ந்து நிற்கும் தமிழ் 2021, சோளன்சேனையும் சேலைக்கிளிகளும் 2023, எண்ணங்கள் ஆயிரம் (கட்டுரை) 2024, ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் உரிமைப் பிரகடனம்(மொழிபெயர்ப்பு) ஆகிய 42 கட்டுரைகளை எழுதியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T21:01:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலம்பியாவை உலுக்கியுள்ள மிகப்பெரிய நிலநடுக்கம்..! இதுவரையில் 111 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/earthquake-pacific-coast-shakes-colombian-capital-1786385057"></link>
            <id>https://tamilwin.com/article/earthquake-pacific-coast-shakes-colombian-capital-1786385057</id>
            <summary type="text">புதிய இணைப்புகொலம்பியாவில் திங்கட்கிழமை ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.

இதுவரை அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>கொலம்பியாவில் திங்கட்கிழமை ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.
</p><p>
இதுவரை அதிகாரப்பூர்வமாக குறைந்தது 111 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 87 பேர் காயமடைந்துள்ளனர். மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><h2>முதல் இணைப்பு</h2><p>கொலம்பியாவில் இன்று(10) 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

இது கடந்த பத்தாண்டுகளில் அந்நாட்டில் பதிவான மிகப்பெரிய நிலநடுக்கம் என கூறப்பட்டுள்ளது.</p><p>


உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை காலை 7:34 மணிக்கு இந்த நிலநடுக்கம் நாட்டை உலுக்கியுள்ளது.</p><p></p><h2>5,000 மக்கள்</h2><p> </p><p>

இதன் மையப்புள்ளி, மேற்கு கொலம்பியாவில் சுமார் 5,000 மக்கள் வசிக்கும் நகரமான சான் ஜோஸ் டெல் பால்மருக்கு வெளியே சுமார் மூன்று மைல் தொலைவில் பதிவானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2dd78dfe-5e41-4bff-aac2-b0b3bec99740/26-6a7a144eb19b3.webp' /></p><p>
</p><p>
 பொகோட்டா மற்றும் காலி உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.

2.8 மற்றும் 4.8 ரிக்டர் அளவிலான பின் அதிர்வுகள் பதிவாகியுள்ளன.</p><p>

 இந்த தொடர் நிலநடுக்கங்களால், கட்டிடங்கள் உடனடியாக இடிந்து விழுந்து, இடிபாடுகளுக்கு அடியில் மக்கள் நசுக்கப்பட்டதால், ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.</p><h2>நிலநடுக்கம்&nbsp;</h2><p> </p><p>

அதிகாலையில் மேற்கு கொலம்பியாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 77 பேர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கம் பல நகரங்களில் கட்டிடங்களைத் தரைமட்டமாக்கியதுடன், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.</p><p>

அபெலார்டோ டி லா எஸ்பிரியெல்லா ஜனாதிபதியாகப் பதவியேற்ற சில நாட்களிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/707cd0a6-383c-4921-a44e-48b636436ac6/26-6a7a144f6b89f.webp' /></p><p>


டஜன் கணக்கான கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுவதால், மேலும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>

கட்டிடங்கள் அதிர்ந்தபோது, ​​மக்கள் இடிபாடுகளிலிருந்து தப்பித்து பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்ததாக தேசிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.</p><h2>பேரழிவு</h2><p> </p><p>

கொலம்பிய புவியியல் சேவை, இந்த நிலநடுக்கம் 107 கிலோமீட்டர் (66 மைல்கள்) ஆழத்தில் ஏற்பட்டதாகவும், எல் கெய்ரோ மற்றும் எல் அகுய்லா போன்ற அண்டை நகரங்களைப் பாதித்ததாகவும் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6532d6bd-337b-4bb3-8eab-0e5f561f1a38/26-6a7a14501cfd5.webp' /></p><p>

நிலநடுக்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கணிசமான பகுதி நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாயத்தில் இருப்பதாக USGS தெரிவித்துள்ளது. </p><p>

இந்த பேரழிவிற்கு வெறும் ஏழு மணி நேரத்திற்கு முன்பு பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், கொலம்பியாவின் அண்டை நாடான ஈக்வடாரில் உள்ள மூன்று நகரங்களைப் பாதித்தது. </p><p>

பெருவின் ஸ்டிபோவில், கிட்டத்தட்ட ஒரு நாள் முன்பு 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-10T21:00:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சாவில் குழப்பம் விழைவிக்க பிரான்சில் இருந்து சென்ற உத்தரவு - சிக்கியது பெரும் ஆதாரம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reecha-food-festival-2026-issue-1786391119"></link>
            <id>https://tamilwin.com/article/reecha-food-festival-2026-issue-1786391119</id>
            <summary type="text">றீச்சா (Reecha) உணவுத் திருவிழாவில் (Food Festival) ஏற்பட்ட சர்ச்சைகள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.


ஐபிசி (IBC) மற்றும் லங்காசிறி நிறுவனத்தின் உரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>றீச்சா (Reecha) உணவுத் திருவிழாவில் (Food Festival) ஏற்பட்ட சர்ச்சைகள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.</p><p>


ஐபிசி (IBC) மற்றும் லங்காசிறி நிறுவனத்தின் உரிமையாளர் கந்தையா பாஸ்கரன் இந்தத் திருவிழாவிற்காக பெரும் உழைப்பைச் செலுத்திய நிலையில், எதிர்பாராத மக்கள் கூட்டத்தால் சில சிக்கல்கள் எழுந்தன. </p><p>

இருப்பினும், உணவுத் திருவிழாவின் தோல்விக்கு ஒரு குறிப்பிட்ட குழுவின் திட்டமிட்ட வன்முறை மற்றும் குழப்பங்கள் தான் காரணம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

இந்த உணவுத் திருவிழாவைத் திட்டமிட்டு முறியடிக்க, பிரான்சிலிருந்து சில உத்தரவுகள் சென்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 இது குறித்து சில குரல் பதிவுகள் ஆதாரமாக வெளியிடப்பட்டுள்ளன.
</p><p>
மக்கள் கூட்டம் அதிகரித்ததாலும், எதிர்பாராத நெருக்கடியாலும் ஏற்பட்ட சிரமங்களுக்கு கந்தையா பாஸ்கரன் மனப்பூர்வமாக மன்னிப்பு கோரினார்.
</p><p>
 மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணத்தைத் திருப்பித் தருவதாக உறுதியளித்துள்ளார் .

 திருவிழா நடந்த இடத்தில் உணவுப் பொருட்கள் வீணடிக்கப்பட்டும், சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டும் உள்ளன.
</p><p>
 இது வெறும் உணவுப் பற்றாக்குறையினால் ஏற்பட்டதல்ல, மாறாகத் திட்டமிட்ட வன்முறை என்று காணொளி என்பதும் தெளிவாகின்றது.

கந்தையா பாஸ்கரன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் காழ்ப்புணர்ச்சியால் தூண்டப்பட்டவை என்றும், அவர் தனது மண்ணின் மீதான பற்றுதலாலேயே இத்தகைய முதலீடுகளைச் செய்கிறார்.
</p><p> 
இந்தத் திருவிழா, உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், மக்களின் மகிழ்ச்சிக்காகவும் நடத்தப்பட்ட முயற்சி என்றும், சில விசமிகளின் குறுக்கீடுகளால் அது பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><br></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/3Jg7aTaxRew" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-10T20:50:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சா இலக்கு வைக்கப்பட்டதன் பின்னணி! தமிழர் பகுதிகளில் புலம்பெயர் தொழிலதிபர்களை குறிவைப்பது யார்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reecha-targeting-diaspora-businessmen-tamil-areas-1786393191"></link>
            <id>https://tamilwin.com/article/reecha-targeting-diaspora-businessmen-tamil-areas-1786393191</id>
            <summary type="text">வடக்கில் புலம்பெயர் முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.

இந்தநிலையில்,&#039;...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கில் புலம்பெயர் முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.</p><p>

இந்தநிலையில்,'இந்திரன்' மற்றும் கந்தையா பாஸ்கரன் போன்றோர் முன்னெடுத்த நிகழ்வுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் வன்மமான விமர்சனங்கள், தமிழர் பகுதிகளில் முதலீடு செய்வதற்கான பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதாக இராணுவ ஆய்வாளர் அரூஸ் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>

மேலும் தெரிவித்த அவர்,
</p><p>
வட மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) இலங்கையில் மிகக் குறைவாகவே உள்ளது.

 பொருளாதார ரீதியாக வடக்கும் கிழக்கும் வளர்ச்சி அடைவதைத் தடுப்பதற்கான திரைமறைவுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகக் கருதப்படுகிறது.</p><p>

புலம்பெயர் முதலீட்டாளர்களுக்குத் தேவையான அரசியல் உறுதித்தன்மை (Political Stability) அங்கு இல்லாததே முதலீடுகள் தவிர்க்கப்படுவதற்குக் காரணம் .

ஊழல் மற்றும் தவறான குழுக்களின் அச்சுறுத்தல்களை அரசு கண்டுகொள்ளாமல் விடுவது, முதலீட்டாளர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்துகிறது.
</p><p>
13-வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால், பொலிஸார் மற்றும் காணி அதிகாரங்கள் அடங்கிய உண்மையான அதிகாரப்பகிர்வு தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
</p><p>
 தமிழகம் மற்றும் தென்னிலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் போல, வடக்கிலும் கிழக்கிலும் ஊழலற்ற அரசியல் கலாச்சாரம் மற்றும் புதிய தலைமைத்துவ மாற்றம் ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/YEoM2J-B56w" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-10T20:49:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீன் குஞ்சுகள் வெளியேறுவதைத் தடுக்கும் 59 தடுப்பு வலைத் தொகுதிகள் வழங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/provision-59-barrier-net-blocks-prevent-fish-fry-1786394749"></link>
            <id>https://jvpnews.com/article/provision-59-barrier-net-blocks-prevent-fish-fry-1786394749</id>
            <summary type="text">கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள நன்னீர் மீன்பிடிக் மீனவர்சங்கங்களுக்கு, மீன் குஞ்சுகள் வெளியேறுவதைத் தடுக்கும் 59 தடுப்பு வலைத் தொகுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள நன்னீர் மீன்பிடிக் மீனவர்சங்கங்களுக்கு, மீன் குஞ்சுகள் வெளியேறுவதைத் தடுக்கும் 59 தடுப்பு வலைத் தொகுதிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.</p><p>
</p><p></p><p>கிளிநொச்சி மாவட்டத்திற்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் உட்பட்ட நீர்ப்பாசனக் குளங்களின் கீழ் இயங்கும் நன்னீர் மீன்பிடி சங்கங்களுக்கு, மீன் குஞ்சுகள் நீர்ப்பாசனக் குளங்களில் இருந்து வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் தடுப்பு வலைகள் வழங்கப்பட்டன.
</p><p>
குறித்த வலைகள் வழங்கும் நிகழ்வு, பிராந்திய நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்க அலுவலகத்தில், யாழ்–கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc6caae7-dfb8-40ed-a4d9-106463178185/26-6a7a387f5c1a7.webp' /></p><p>கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள நீர்ப்பாசனக் குளங்களில் மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, குளங்களில் நீர்மட்டம் அதிகரித்து வான்பாயும் காலப்பகுதிகளில், நீருடன் சேர்ந்து மீன் குஞ்சுகள் வெளியேறிச் செல்வதால் மீன்வள உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படுகின்றது.</p><p>

இதனைத் தடுக்கும் நோக்கில், குளங்களிலிருந்து மீன் குஞ்சுகள் வெளியேறிச் செல்லும் இடங்களில் பொருத்துவதற்காக இந்த தடுப்பு வலைகள் வழங்கப்பட்டுள்ளன. </p><p>

இதன் மூலம் குளங்களில் வளர்க்கப்படும் மீன்குஞ்சுகளைப் பாதுகாத்து, எதிர்காலத்தில் மீன்வள உற்பத்தியை அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர் சங்கங்களுக்கு மொத்தமாக 59 தடுப்பு வலைத் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு தடுப்பு வலைத் தொகுதியினதும் பெறுமதி சுமார் 5 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T20:45:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு முக்கிய அறிவிப்பு ; இன்னும் 4 ஆண்டுகளில் கண்ணிவெடிகள் முற்றிலும் அகற்றப்படுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/will-landmines-be-completely-eliminated-in-4-years-1786393843"></link>
            <id>https://jvpnews.com/article/will-landmines-be-completely-eliminated-in-4-years-1786393843</id>
            <summary type="text">இலங்கையில் கண்ணிவெடிகள் காணப்பட்ட பகுதிகளில் சுமார் 90 சதவீதமான நிலப்பரப்புகள் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் கண்ணிவெடிகள் காணப்பட்ட பகுதிகளில் சுமார் 90 சதவீதமான நிலப்பரப்புகள் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

எஞ்சியுள்ள 20.8 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு மிகவும் சிக்கலான மற்றும் கடினமான பகுதியாக இருப்பதாகவும், அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் இலங்கையை முழுமையாக கண்ணிவெடிகள் அற்ற நாடாக அறிவிக்க எதிர்பார்ப்பதாகவும் சர்வதேச கண்ணிவெடி அகற்றும் தூதுவரும் ஹொலிவுட் நடிகையுமான ரோசமண்ட் பைக் தெரிவித்துள்ளார்.</p><p>

அவர் இன்று (10) வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்கவை சந்தித்தபோது இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ca3a96b-b27c-485e-b93b-ee6f17b2e431/26-6a7a359102dd3.webp' /></p><p>இலங்கையில் முன்னெடுக்கப்படும் கண்ணிவெடி அகற்றும் பணிகளின் முன்னேற்றம் தொடர்பில் அவர் கேட்டறிந்ததுடன், சர்வதேச தரங்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்படும் பணிகளுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.</p><p>

எஞ்சியுள்ள பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சிறப்புப் பயிற்சி பெற்ற 500 படையினரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இராணுவத்தினரால் மாத்திரம் வருடாந்தம் 1.5 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பை கண்ணிவெடிகளிலிருந்து விடுவிப்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதியும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கண்ணிவெடிகளை அகற்றுவது பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கை மட்டுமல்ல எனவும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் அபிவிருத்தி, சுற்றுலாத்துறை வளர்ச்சி மற்றும் அனைத்து சமூகங்களிடையேயும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான முக்கிய தேசிய பணியாகும் எனவும் ரோசமண்ட் பைக் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T20:34:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நண்பரின் 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-abused-girl-sentenced-to-40-years-in-prison-1786389555"></link>
            <id>https://jvpnews.com/article/man-abused-girl-sentenced-to-40-years-in-prison-1786389555</id>
            <summary type="text">நண்பரின் 11 வயது மகளை பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட 36 வயதுடைய நபருக்கு 40 ஆண்டுகள் கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நண்பரின் 11 வயது மகளை பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட 36 வயதுடைய நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா தீர்ப்பளித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும், 2 இலட்சம் ரூபாய் நீதிமன்ற அபராதமாக செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.</p><p>கடந்த 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வவுனியா, தரணிக்குளம் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p>

தாயினால் கைவிடப்பட்ட நிலையில், தந்தையின் பராமரிப்பில் வசித்து வந்த 11 வயதுடைய சிறுமியே குறித்த பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73f1dd94-c860-414b-8600-11b9682421e4/26-6a7a24359a1f7.webp' /></p><p>சிறுமியின் தந்தையின் நண்பரான 36 வயதுடைய குறித்த நபரே இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.</p><p>சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாரால் 2016ஆம் ஆண்டு வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் பீ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
</p><p>
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வழக்கு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, குறித்த நபருக்கு எதிராக 2025ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பத்திரிகை வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
</p><p>
இதனையடுத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>எனினும், வழக்கு நடவடிக்கைகளின் போது குறித்த எதிரி தலைமறைவாகியிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
</p><p>
இதன் காரணமாக, எதிரி இன்றிய நிலையில் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொண்டது.
</p><p>
வழக்கு விசாரணையின்போது அரச சட்டவாதியினால் நெறிப்படுத்தப்பட்ட சாட்சிகள் மற்றும் ஆவணங்களை ஆராய்ந்த நீதிமன்றம், குறித்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தீர்மானித்தது.</p><p>இதனையடுத்து, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, குறித்த எதிரிக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecae823e-4a67-468a-a0e4-f2532b0374de/26-6a7a24364a08b.webp' /></p><p>அத்துடன், பாலியல் துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.</p><p>

மேலும், 2 இலட்சம் ரூபாய் நீதிமன்ற அபராதமாக செலுத்துமாறும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>தண்டனைத் தீர்ப்பை வழங்கியபோது, வழக்கு நடவடிக்கைகளின்போது எதிரி தலைமறைவாகியிருந்தமை, குறித்த சம்பவத்தினால் சிறுமிக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் கடுமையான உடல் மற்றும் உள பாதிப்புகள், அத்துடன் சமூகத்தில் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் ஆகியவற்றை நீதிமன்றம் கவனத்தில் கொண்டதாக நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் நீதித்துறை கடுமையான அணுகுமுறையை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் இந்தத் தீர்ப்பு எடுத்துக்காட்டுவதாக குறிப்பிடப்படுகிறது.
</p><p>
இவ்வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் அரச சட்டவாதி ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ வழக்கை நெறிப்படுத்தியிருந்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T20:04:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஸ்காட்செவானில் 44 மில்லியன் டொலர் லொத்தர் பரிசு: வென்ற அதிர்ஷ்டசாலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/winning-ticket-for-44-million-lotto-649-draw-1786381089"></link>
            <id>https://canadamirror.com/article/winning-ticket-for-44-million-lotto-649-draw-1786381089</id>
            <summary type="text">கனடாவின் சஸ்காட்செவான் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் 44 மில்லியன் டொலர் பெறுமதியான &#039;கோல்ட் போல்&#039; ஜாக்பாட் பரிசை வென்று கோடீஸ்வரராகியுள்ளார். 
ஆனால், தான...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் சஸ்காட்செவான் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் 44 மில்லியன் டொலர் பெறுமதியான 'கோல்ட் போல்' ஜாக்பாட் பரிசை வென்று கோடீஸ்வரராகியுள்ளார். </p><p>
ஆனால், தான் அந்தப் பரிசை வென்ற தகவல் இன்னும் அவருக்குத் தெரியவில்லை. 
சனிக்கிழமை நடைபெற்ற 'லொட்டோ 6/49' குலுக்கலிலேயே இந்த 44 மில்லியன் டொலா் ஜாக்பாட் விழுந்துள்ளது. </p><p>
வெற்றிபெற்ற இந்த லொத்தர் சீட்டு சஸ்காட்செவான் மாகாணத்தில் உள்ள சாஸ்கடூன் மற்றும் ரெஜினா ஆகிய இரு முக்கிய நகரங்களுக்கும் வெளியேயுள்ள ஒரு பகுதியில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29dac847-6692-4188-8bad-fdb57dce6946/26-6a7a03235e673.webp' /></p><p> </p><p>
வெற்றிபெற்ற எண் 23202513-03 ஆகும். இந்த எண் முழுமையாகத் துல்லியமாகப் பொருந்தினால் மட்டுமே பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
வெற்றிபெற்ற நபர் அல்லது நபர்கள் தங்களது பரிசுத் தொகையைக் கோருவதற்கு ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T20:04:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவின் லாங் மார்ச் 7ஏ ராக்கெட் வெடித்து சிதறியது: கடலில் விழுந்த ChinaSat-4B செயற்கைக்கோள் பாகங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-long-march-7a-rocket-exploded-after-liftoff-1786392214"></link>
            <id>https://news.lankasri.com/article/china-long-march-7a-rocket-exploded-after-liftoff-1786392214</id>
            <summary type="text">லாங் மார்ச் 7ஏ ராக்கெட் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்து சிதறிய சம்பவம் சீனாவின் விண்வெளி துறைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. வெடித்து ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>லாங் மார்ச் 7ஏ ராக்கெட் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்து சிதறிய சம்பவம் சீனாவின் விண்வெளி துறைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> வெடித்து சிதறிய சீன ராக்கெட்</h2><p>
சீனாவின் தெற்கிலுள்ள ஹைனான்(Hainan) தீவின் வென்சாங்(Wenchang) விண்வெளி தளத்தில் இருந்து பெய்ஜிங் நேரப்படி திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு அடுத்த தலைமுறை லாங் மார்ச் 7ஏ(Long March 7A) ராக்கெட் புறப்பட்டது.</p><p> உயர் பூமி சுற்றுப் பாதையை நோக்கி சென்று கொண்டிருந்த ராக்கெட் துரதிர்ஷ்டவசமாக புறப்பட்ட 90 வது நிமிடத்தில் வெடித்து சிதறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89b779f6-226a-48a9-a8ee-2fecb30e3264/26-6a7a2e9793e06.webp' /></p><p> இதன் காரணமாக ராக்கெட்டில் இருந்த ChinaSat-4B தகவல் தொடர்பு செயற்கைக்கோளும் முழுமையாக வெடித்து சிதறி சேதமடைந்தது.</p><p> ராக்கெட் ஏவுதலை ஏவுதளத்திற்கு அருகில் இருந்து பார்த்தவர்கள் இந்த காட்சிகளை தங்களுடைய செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.</p><h2> விசாரணை தொடக்கம்</h2><p>இந்நிலையில் லாங் மார்ச் 7ஏ ராக்கெட்டில் ஏற்பட்ட தீவிர கோளாறு காரணமாகவே அதன் அவசர கால பாதுகாப்பு அமைப்புகள் தானாக செயல்பாட்டுக்கு வந்து ஒட்டுமொத்த பயணத்தையும் அழித்து இருக்கலாம் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c29dcc4-98be-4aca-90f0-b5f0b2f63462/26-6a7a2e98488f8.webp' /></p><p> வெடித்து சிதறிய ராக்கெட் பாகங்கள் மற்றும் செயற்கைக்கோள் உதிரி பாகங்கள் தென் சீனக் கடலில் விழுந்து நாசமாகியுள்ளன.</p><p> விபத்து நடைபெற்ற 3 மணி நேரத்திற்கு பிறகு இந்த தோல்வியை சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான Xinhua உறுதிப்படுத்தி இருப்பதுடன் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த திட்டம் தோல்வியடைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.</p><p> அதே சமயம் விபத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய தற்போது விசாரணையானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T20:03:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுப் போக்குவரத்தில் அதிரடி மாற்றம் ; சாரதிகளுக்கு திடீர் போதைப்பொருள் பரிசோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dramatic-changes-in-public-transport-1786392020"></link>
            <id>https://jvpnews.com/article/dramatic-changes-in-public-transport-1786392020</id>
            <summary type="text">பொதுப் போக்குவரத்துச் சேவையை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும் நோக்கில், சாரதிகள் உள்ளிட்டோருக்கு மேற்கொள்ளப்படும் திடீர் போதைப்பொருள் பரிசோதனைகளை விரிவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுப் போக்குவரத்துச் சேவையை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும் நோக்கில், சாரதிகள் உள்ளிட்டோருக்கு மேற்கொள்ளப்படும் திடீர் போதைப்பொருள் பரிசோதனைகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

இதற்காக அனைத்து வசதிகளையும் கொண்ட மேலும் ஒரு நடமாடும் மருத்துவ பேருந்து சுகாதார அமைச்சினால் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த பேருந்து இன்று (10) சுகாதார அமைச்சு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d611f0f2-399a-4b8c-8e19-fd541c6a5b29/26-6a7a2dd658e33.webp' /></p><p>சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் விசேட வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவினால், தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் தலைவர் பேராசிரியர் கிளிஃபர்ட் பெரேராவிடம் பேருந்து கையளிக்கப்பட்டது.
</p><p>
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான இருவருட மூலோபாயத் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
இதன்படி, பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகள், நடத்துநர்கள் மற்றும் சாரதி உதவியாளர்கள் திடீர் போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.</p><p>

தற்போது இந்தத் திட்டம் நாட்டின் ஐந்து மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

புதிதாக வழங்கப்பட்டுள்ள நடமாடும் மருத்துவ பேருந்தின் உதவியுடன், தேவையான மனித மற்றும் பௌதிக வளங்களை அதிகரித்து, நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கும் இந்தப் பரிசோதனை நடவடிக்கையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>

தேசிய திட்டத்தின் கீழ் இதுவரை 7,150 போதைப்பொருள் பாவனை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பொதுப் போக்குவரத்து சேவையில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதன் மூலம், வீதி விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்களை குறைப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T20:00:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தற்காலிகமாக மூடப்பட்ட பிரித்தானியாவின் பிரபல பொழுதுபோக்கு பூங்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/popular-uk-theme-park-closed-over-water-shortage-1786375439"></link>
            <id>https://tamilwin.com/article/popular-uk-theme-park-closed-over-water-shortage-1786375439</id>
            <summary type="text">பிரித்தானியாவில் ஐந்தாவது வெப்ப அலை தீவிரமடைந்து வரும் நிலையில், தென்மேற்கு
லண்டனில் அமைந்துள்ள பிரபல ‘செசிங்டன் வேர்ல்ட் ஒஃப் எட்வென்ச்சர்ஸ்’ பொழுது...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் ஐந்தாவது வெப்ப அலை தீவிரமடைந்து வரும் நிலையில், தென்மேற்கு
லண்டனில் அமைந்துள்ள பிரபல ‘செசிங்டன் வேர்ல்ட் ஒஃப் எட்வென்ச்சர்ஸ்’ பொழுதுபோக்கு பூங்கா திடீர் நீர்
தட்டுப்பாடு காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.</p><p>

உள்ளூர் பகுதியில் ஏற்பட்ட நீர் விநியோகத் தடை காரணமாகவே இந்தத் தீர்மானம்
எடுக்கப்பட்டுள்ளதாக பூங்காவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><p></p><h2>திடீர் நீர் தட்டுப்பாடு</h2><p>
</p><p>
அத்துடன், இன்றைய தினத்திற்காக முன்பதிவு செய்துள்ள பார்வையாளர்கள்
பூங்காவிற்கு வருகை தர வேண்டாம் என்றும், அவர்களின் நுழைவுச்சீட்டுகள்
'ரிட்டர்ன் புரொமிஸ்' (Return Promise) திட்டத்தின் கீழ் மறுபரிசீலனை
செய்யப்பட்டு எதிர்காலத்தில் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d373be57-fcf4-4625-930b-a20c91fcf727/26-6a79ee5bc3f70.webp' /></p><p>ஆண்டுதோறும் சுமார் 1.5 மில்லியன் பார்வையாளர்கள் வருகை தரும் ஐரோப்பாவின்
முன்னணி பொழுதுபோக்கு பூங்காக்களில் ஒன்றான செசிங்டன், இதற்கு முன்னர் 2018
ஆம் ஆண்டிலும் இதேபோன்று பிரதான நீர்ழாய் உடைந்தமையினால் மூடப்பட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T20:00:21+00:00</updated>
        </entry>
    </feed>
