<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-31T21:25:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் காட்டுத்தீ சம்பவம்: 308 பேரை அதிரடியாக கைது செய்த பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/france-arrest-308-persons-for-wildfire-1785532980"></link>
            <id>https://news.lankasri.com/article/france-arrest-308-persons-for-wildfire-1785532980</id>
            <summary type="text">பிரான்ஸில் காட்டுத்தீ பரவலுக்குக் காரணமாக இருந்த 300 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்ஸில் காட்டுத்தீபிரான்ஸில் இந்த ஆண்டு கோடை காலத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸில் காட்டுத்தீ பரவலுக்குக் காரணமாக இருந்த 300 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2> பிரான்ஸில் காட்டுத்தீ</h2><p>பிரான்ஸில் இந்த ஆண்டு கோடை காலத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.</p><p> அரசாங்கத்தின் புள்ளிவிவரத் தகவலின் படி, காட்டுத் தீயில் இதுவரை 1,15,000 ஹெக்டேர் நிலங்கள்&nbsp; தீயில் கருகி சாம்பலாகியுள்ளன.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ccf2705-1971-4c11-b8a0-acf973d5a85a/26-6a6d123704ff6.webp' /></p><h2> 300க்கும் மேற்பட்டோர் கைது</h2><p>இந்நிலையில் பிரான்ஸ் காட்டுத்தீ சம்பவத்திற்கு காரணமாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் 308 பேர் இதுவரை காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p> கைது செய்யப்பட்டவர்களில் 120 பேர் சிறுவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> மேலும் இந்த கைது நடவடிக்கையில் வேண்டும் என்றே தீ வைத்தவர்களும், கவனக்குறைவாக தீ விபத்தை ஏற்படுத்தியவர்களும் சிக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5df52f0b-982c-4473-963a-0760709db790/26-6a6d12364cada.webp' /></p><h2> தீவிரமான சட்ட நடவடிக்கை</h2><p>வேகமாக பரவி வரும் காட்டுத்தீ அபாயத்தை கட்டுப்படுத்தும் விதமாக, தீ வைப்பு நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடிப்பதற்காக ரோந்து பணிகளில் வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.</p><p> இதுவரை 33 நபர்கள் காட்டுத்தீ தொடர்பாக வழக்கில் தண்டனை பெற்றுள்ளனர் அல்லது நீதிமன்ற காவலில் உள்ளனர்.</p><p> காட்டுத்தீ சம்பவத்தில் பொதுமக்களின் கவனக்குறைவு மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தகவல் தெரிவிக்கின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-31T21:23:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதேச நிர்வாக அலகுகளை, அபிவிருத்தி அலகுகளாக மாற்ற ஜனாதிபதி பணிப்புரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/president-directs-transformation-of-units-1785532494"></link>
            <id>https://jvpnews.com/article/president-directs-transformation-of-units-1785532494</id>
            <summary type="text">&amp;nbsp; பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடலில் ஜனாதிபதி பணிப்புரை



பிரத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp; பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடலில் ஜனாதிபதி பணிப்புரை



பிரதேச ரீதியாக சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை பெற்றுக் கொள்ளும் வகையில், பிரதேச நிர்வாக அலகுகளை அபிவிருத்தி அலகுகளாக மாற்றுவதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
</p><p style="text-align: justify; ">


இந்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள நிர்வாக முறைமைக்கு பல தசாப்தங்கள் கடந்திருந்தாலும் மக்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கவில்லை என்று சுட்டிக் காட்டிய ஜனாதிபதி, சிறிய திருத்தங்களுடன் நிலவும் முறையையே தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடிந்தாலும், இந்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு முழுமையான மாற்றமே என்பதையும் இங்கு சுட்டிக் காட்டினார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ed0a312-658d-4c0a-ad5e-e24da7dbe08c/26-6a6d10500942a.webp' /></p><h2 style="text-align: justify; ">விசேட கவனம்</h2><p style="text-align: justify; ">



அந்த விடயத்தை ஒரே தடவையில் செய்ய முடியாது என்றாலும், நிர்வாகத் துறையில் அது குறித்த ஒரு கருத்தாடலை ஏற்படுத்தி அதற்கு அடித்தளம் இடுவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி மேலும் சுட்டிக் காட்டினார்.
</p><p style="text-align: justify; ">


பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பற்றிய கலந்துரையாடலில் நேற்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5ec6309-96b3-4b89-97a0-350b72c6b7e9/26-6a6d1050b6806.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">



பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் செயற்படும் பொது நிர்வாகப் பிரிவு, உள்நாட்டலுவல்கள் பிரிவு மற்றும் உள்ளூராட்சிப் பிரிவு என்பவற்றுக்காக 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 60,430.04 மில்லியன் ரூபா மூலதனச் செலவுகள் மற்றும் 706,226.83 மில்லியன் ரூபா மீண்டெழும் செலவுகளின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் இங்கு விரிவாக ஆராயப்பட்டன.
</p><p style="text-align: justify; ">


அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாக வழங்கக்கூடிய சேவைகள் குறித்து எதிர்வரும் சில மாதங்களுக்குள் ஆராய்ந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி இங்கு அறிவுறுத்தினார்.</p><p style="text-align: justify; ">



அம்பாறை, மட்டக்களப்பு, கேகாலை, பொலன்னறுவை ஆகிய மாவட்ட செயலக வளாகங்களில் மேற்கொள்ளப்படும் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் களுத்துறை, பிடபெத்தர, அகுணுகொலபெலஸ்ஸ, இரத்மலானை, கோட்டை மற்றும் கொலன்னாவை உள்ளிட்ட பிரதேச செயலகங்களின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


நாடு முழுவதும் தற்போது 2,000க்கும் அதிகமான குறைவான பயன்பாட்டில் உள்ள கட்டிட நிர்மாணப் பணிகள் காணப்படுவதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டியதுடன், தற்போதைய அனைத்து நிர்மாணங்களின் தேவைகள் குறித்தும் முறையான ஆய்வு ஒன்றை மேற்கொண்டு, அவசியமான நிர்மாணங்களுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.</p><p style="text-align: justify; ">



மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிப் பிரிவின் கீழ் அரசாங்க நிதிகள் மற்றும் வெளிநாட்டு உதவிகளுடன் செயற்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், கொழும்பு பெருநகர கழிவுநீர் முகாமைத்துவத் திட்டம் தொடர்பான பணிகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. </p><p style="text-align: justify; ">2015 ஆம் ஆண்டு முதல் காலத்திற்குக் காலம் செயற்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம் மற்றும் கொழும்பு மாநகரசபை எல்லைப் பிரதேசத்திற்கு உரிய ஒட்டுமொத்த வடிகாலமைப்புக்கள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து கலந்துரையாடி ஒரு திட்டத்தை தயாரிக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் செயற்பட்டு வரும் 1927 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட கடன் அபிவிருத்தி நிதியம் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டது.
</p><p style="text-align: justify; ">


உள்ளூராட்சி மன்றங்களுக்கு உரிய கிராமிய சிறு பாலங்கள் அபிவிருத்தித் திட்டங்களின் இந்த வருடத்தின் முன்னேற்றமும் இங்கு மீளாய்வு செய்யப்பட்டதுடன், கிராமிய சிறு பாலங்களின் அபிவிருத்திக்காக 2026/2029 ஆம் ஆண்டுகாலப் பகுதிக்கு 6,793 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், அதன்படி, 2026 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட 1,050 மில்லியன் ரூபா ஒதுக்கீடுகளின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்களில் 29% முன்னேற்றம் அடையப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.</p><p style="text-align: justify; "> இத்திட்டம் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு கிராமிய பாலங்களின் நிர்மாணத் திட்டங்களை மிகவும் பயனுள்ள வகையில் செயற்படுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


மேலும், ஓய்வூதியத் திணைக்களம் மற்றும் பதிவாளர் ஜெனரல் திணைக்களத்தின் பணிகள் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், தற்போது 750,000 அளவிலானோர் ஓய்வூதிய உரிமையைப் பெற்று வருவதாகவும் இங்கு தெரவிக்கப்பட்டது.
</p><p style="text-align: justify; ">


அமைச்சர்களால் உத்தியோகபூர்வ வதிவிடங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பங்களாக்கள் மற்றும் வீடுகளை பொருளாதார ரீதியில் பயனுள்ள பணிகளுக்காக ஈடுபடுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள திட்டத்தின் முன்னேற்றத்தினையும் ஆராய்ந்த ஜனாதிபதி, அந்த வளங்களிலிருந்து முறையான பயன்களைப் பெற்றுக் கொள்வதற்காக அந்தப் பணிகளை விரைவுபடுத்துமாறும் அறிவுறுத்தினார்.
</p><p style="text-align: justify; ">


உள்ளூராட்சி மன்றங்களின் பணிகளை முன்னெடுத்துச் செல்லும் போது எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், இயந்திர உபகரணங்களைப் பெற்றுக்கொள்ளுதல், வருமானம் ஈட்டல் பணிகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.</p><p style="text-align: justify; "> ஏனைய பொது சேவைகளின் போது பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வழங்கப்படுகின்ற பங்களிப்பினை மேலும் முறைமைப்படுத்துவது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டதுடன், உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேவையான பொது வசதிகளை வழங்குதல் மற்றும் புதிதாக இணைத்துக் கொள்ளப்படும் அதிகாரிகளுக்குத் தேவையான பயிற்சியினை வழங்குதல் உள்ளிட்ட செயற்பாடுகளை மிகவும் பயனுள்ள வகையில் முன்னெடுத்தல் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.</p><p style="text-align: justify; "><br></p>]]></content>
            <updated>2026-07-31T21:15:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனுக்கு பெருத்த ஏமாற்றம்! பேட்ரியாட் ஏவுகணைகான அனுமதியை மறுத்தது அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-not-agreed-to-ukraine-build-patriot-missiles-1785529933"></link>
            <id>https://ibctamil.com/article/us-not-agreed-to-ukraine-build-patriot-missiles-1785529933</id>
            <summary type="text">
பேட்ரியாட் ஏவுகணைகளை உக்ரைன் தயாரிப்பதற்கு அமெரிக்கா இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அது குறித்து தொடர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
பேட்ரியாட் ஏவுகணைகளை உக்ரைன் தயாரிப்பதற்கு அமெரிக்கா இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
அது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும், பேச்சுவார்த்தைகள் யாராவது அவற்றை உருவாக்க அனுமதிப்பதில் அமெரிக்கா மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

​​</p><p></p><h2>உக்ரைனுக்கு உரிமம்</h2><p>ரஷ்ய தாக்குதல்களில் இருந்து தற்காத்து கொள்ள உதவும் வகையில் பேட்ரியாட் ஏவுகணை இடைமறிப்பான்களை தயாரிக்க உக்ரைனுக்கு உரிமம் வழங்கப் போவதாக அண்மையில் ட்ரம்ப் கூறியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/334c5e57-9705-4581-9a20-7df1b1369e0f/26-6a6d0b47ac5e8.webp' /></p><p> 

இந்நிலையில், குறித்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கியுள்ள ட்ரம்ப், ஏவுகணைத் தொழில்நுட்பம் உள்ளிட்ட மேம்பட்ட அமெரிக்க ஆயுதங்களைப் பகிர்வது தொடர்பில் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>கடினமான விடயம்</h2><p>

அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “தற்போது நாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. நாங்கள் அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம், ஆனால் அந்த வகையான தொழில்நுட்பத்தை விட்டுக்கொடுப்பது ஒரு கடினமான விடயம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8be29eaf-4451-4b14-827a-b628603a10d7/26-6a6d0b488689e.webp' /></p><p><i>Image Credit: PBS</i></p><p> 

இது ஒருபோதும் நடக்கும் என்று நான் நினைக்கவில்லை, ஆனால், உங்களுக்குத் தெரியும், நீங்கள் யாரிடம் அந்தத் தொழில்நுட்பத்தைக் கொடுக்கிறீர்களோ, அவர்கள் ஒருநாள் உங்களுக்கு எதிராகத் திரும்பக்கூடும்," என்று கூறியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T21:05:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து ; 34 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/34-dead-in-devastating-coal-mine-blast-1785531411"></link>
            <id>https://canadamirror.com/article/34-dead-in-devastating-coal-mine-blast-1785531411</id>
            <summary type="text">நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 34 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணம் குவாட்டா பகுதியில் நிலக்கரி சுரங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 34 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணம் குவாட்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் உள்ளது.</p><p> இந்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்று 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென சுரங்கத்தில் வெடி விபத்து ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/272f8724-a058-4368-a6d2-97b9df415757/26-6a6d0c152abe8.webp' /></p><p>இதில் நிலக்கரி சுரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால், தொழிலாளர்கள் அனைவரும் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்டனர்.
</p><p>&nbsp;இந்த சம்பவம் குறித்து அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். </p><p>ஆனாலும், இந்த சுரங்க வெடி விபத்தில் சிக்கி 34 பேர் உயிரிழந்தனர். </p><p>மேலும், 10க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-31T20:56:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் சீனத் தூதரகம் அமைக்க உயர் நீதிமன்றம் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/allow-establishment-chinese-embassy-in-london-1785528477"></link>
            <id>https://tamilwin.com/article/allow-establishment-chinese-embassy-in-london-1785528477</id>
            <summary type="text">மத்திய லண்டனில் சீனாவின் பிரம்மாண்ட தூதரகத்தை அமைக்க அனுமதி அளித்த
அரசாங்கத்தின் முடிவு சட்டப்பூர்வமானது தான் என பிரித்தானிய உயர் நீதிமன்றம்
தீர்ப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய லண்டனில் சீனாவின் பிரம்மாண்ட தூதரகத்தை அமைக்க அனுமதி அளித்த
அரசாங்கத்தின் முடிவு சட்டப்பூர்வமானது தான் என பிரித்தானிய உயர் நீதிமன்றம்
தீர்ப்பளித்துள்ளது.
</p><p>
இதன் மூலம் தூதரக கட்டுமானத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>சீனத் தூதரகம்&nbsp;</h2><p>
</p><p>
லண்டனின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'ரோயல் மிண்ட் கோர்ட்' குடியிருப்பு
பகுதியில் அமையவுள்ள இந்த பிரம்மாண்ட தூதரகம் தொடர்பாக, அப்பகுதி
குடியிருப்புவாசிகள் கூட்டமைப்பு உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்
செய்திருந்தது.
</p><p>
இந்த தூதரகம் அமைந்தால் சீன எதிர்ப்பாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களின்
மனித உரிமைகளுக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என்றும், உளவு
பார்க்கும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eacef4b5-6a2f-42fb-8b99-6616822f0252/26-6a6d01ecdf564.webp' /></p><p>எனினும், இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வீடமைப்பு அமைச்சகமும்
உள்ளூர் நிர்வாகமும் அனைத்துக் கவலைகளையும் கவனமாகப் பரிசீலித்த பிறகே
சட்டப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளதாகக் கூறி குடியிருப்புவாசிகளின் மனுவை
நிராகரித்தது.
</p><p>
சுமார் 20,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமையவுள்ள இந்த வளாகம்,
பிரித்தானியாவிலேயே மிகப்பரிய தூதரக வளாகமாக இருக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக குடியிருப்புவாசிகள்
அமைப்பின் தலைவர் லூக் பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T20:46:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் வெளியான காணொளிகள் - மெட்டா தலைவருக்கு எதிராக வழக்கு பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/videos-released-insulting-prime-minister-modi-1785527403"></link>
            <id>https://tamilwin.com/article/videos-released-insulting-prime-minister-modi-1785527403</id>
            <summary type="text">இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையிலான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டதாகக் கூறி, மெட்டாவின் இந்தியத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையிலான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டதாகக் கூறி, மெட்டாவின் இந்தியத் தலைவர் அருண் ஸ்ரீனிவாஸுக்கு எதிராக ஹைதராபாத் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.</p><p> பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பான போராட்டங்களுக்கு மத்தியில், பாஜக ஆதரவாளர்களின் முறைப்பாட்டின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>வழக்கு பதிவு&nbsp;</h2><p>
இந்த விவகாரம் குறித்து மெட்டா நிறுவனத்திற்கு விரைவில் அறிவித்தல் அனுப்ப
உள்ளதாக ஹைதராபாத் பொலிஸ் இணையவழிக் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>

இதற்குப் பதிலளித்துள்ள மெட்டா செய்தித் தொடர்பாளர், சம்பந்தப்பட்ட
அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு பிரச்சினைக்குத் தீர்வு காண ஒத்துழைப்பதாகத்
தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d564cd35-867a-4594-8863-0fc2867f70a4/26-6a6cff5276ee4.webp' /></p><p>சமீபத்தில் இந்தியாவில் கொண்டு வரப்பட்ட புதிய விதிகளின்படி, சட்டவிரோதமான
உள்ளடக்கங்களை 3 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்ற நிபந்தனை
விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
முகப்புத்தகத்தில் பயனர் பதிவிடும் கருத்துகளுக்கு நிறுவன முகாமையாளர்கள்
நேரடியாகப் பொறுப்பாக்கும் வகையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T20:43:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏற்படவுள்ள மாற்றம் ; மெட்ரோ பேருந்துகள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-among-regions-set-for-major-changes-1785530439"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-among-regions-set-for-major-changes-1785530439</id>
            <summary type="text">&amp;nbsp;வரும் வாரங்களில் புதிய மெட்ரோ பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளதுடன், இந்த ஆண்டின் இறுதிக்குள் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை மெட்ரோ பேருந்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;வரும் வாரங்களில் புதிய மெட்ரோ பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளதுடன், இந்த ஆண்டின் இறுதிக்குள் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை மெட்ரோ பேருந்து சேவையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify;">


சீனா மற்றும் பல நாடுகளிலிருந்து பெறப்பட்ட 121 மெட்ரோ பேருந்துகள் தற்போது பதிவு மற்றும் சட்ட நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், அவை நிறைவடைந்தவுடன் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc44a930-84a9-4bee-8155-0cdc9f326bd3/26-6a6d08490ae52.webp' /></p><h2 style="text-align: justify; ">மெட்ரோ பேருந்து</h2><p style="text-align: justify; ">



மெட்ரோ பேருந்து நிறுவனம் பல புதிய வழித்தடங்களை ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளதாகவும், அவை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "> மேலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் ஜப்பானிலிருந்து மேலும் 50 பேருந்துகள் கிடைக்கவுள்ளதால், சேவையை கொழும்பைத் தாண்டி யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை விரிவுபடுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;">



யாழ்ப்பாணம் மற்றும் கண்டியில் மெட்ரோ பணிமனைகள் அமைக்கும் பணிகளும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசல், எரிபொருள் நுகர்வு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பதே அரசாங்கத்தின் நீண்டகால இலக்காகும் என்றார்.</p><p style="text-align: justify; ">



மேலும், எதிர்கால மெட்ரோ பேருந்துகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பயணிகளுக்கான தகவல்கள் வழங்கப்படவுள்ளதுடன், 2030ஆம் ஆண்டுக்குள் மெட்ரோ பேருந்துகளின் எண்ணிக்கையை 500க்கும் அதிகமாக உயர்த்த அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-31T20:40:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெலாரஸ் உடனான எல்லையை மூடிய லாட்வியா: குடிமக்களுக்கு தாயகம் திரும்ப அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/latvia-close-his-border-with-belarus-1785530377"></link>
            <id>https://news.lankasri.com/article/latvia-close-his-border-with-belarus-1785530377</id>
            <summary type="text">பெலாரஸ்(Belarus) உடனான எல்லையை மூடுவதாக லாட்வியா(Latvia) அறிவித்துள்ளது. எல்லையை மூடிய லாட்வியாதொழில்நுட்ப காரணங்களால் லாட்வியா மற்றும் பெலாரஸ் நாடுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெலாரஸ்(Belarus) உடனான எல்லையை மூடுவதாக லாட்வியா(Latvia) அறிவித்துள்ளது.</p><h2> எல்லையை மூடிய லாட்வியா</h2><p>தொழில்நுட்ப காரணங்களால் லாட்வியா மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கு இடையிலான எல்லைகள் உடனடியாக மூடப்படுவதாக லாட்வியா நாட்டு உள்துறை அமைச்சர் ஜானிஸ் டோம்பிராவா(Janis Dombrava) வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.</p><p>மேலும் இது தொடர்பாக டோம்பிராவா வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் பெலாரஸ் நாட்டில் தங்கியுள்ள லாட்வியா குடிமக்கள் அனைவரும் உடனடியாக மாற்றுப்பாதையை பயன்படுத்தி தாயகம் திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளார்.</p><p> பெலாரஸ் நாட்டுடனான எல்லை மூடல் நடவடிக்கையானது, இந்த வார தொடக்கத்தில் விடுக்கப்பட்ட எச்சரிக்கையை தொடர்ந்து வெளிவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04661000-4b5a-496b-a45e-d6b00dba8e1c/26-6a6d080b7940e.webp' /></p><p> X தளத்தில் டோம்பிராவா வெளியிட்ட பதிவில், பெலாரஸ் நாட்டிற்கு செல்லும் அனைத்து பயண திட்டங்களையும் உடனடியாக கைவிடுமாறு லாட்வியா குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.</p><p> பெலாரஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள அகதிகள் கலப்பினப் போர் தீவிரமடைந்து வருவதால் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு போக்குவரத்து எப்போது வேண்டுமாலும் தடைபடலாம் என்று அவர் எச்சரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T20:39:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[43 சீன நிறுவனங்களின் இறக்குமதிகளுக்கு அமெரிக்கா தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-bans-imports-from-43-chinese-companies-1785525994"></link>
            <id>https://tamilwin.com/article/us-bans-imports-from-43-chinese-companies-1785525994</id>
            <summary type="text">சீனாவின் சின்ஜியாங் பகுதியில் சிறுபான்மையினரை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதாகவும், மனித உரிமை மீறல்களில்
ஈடுபடுவதாகவும் கூறி, மேலும் 43 சீன நிறுவனங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவின் சின்ஜியாங் பகுதியில் சிறுபான்மையினரை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதாகவும், மனித உரிமை மீறல்களில்
ஈடுபடுவதாகவும் கூறி, மேலும் 43 சீன நிறுவனங்களின் பொருட்களுக்கு அமெரிக்கா
தடை விதித்துள்ளது.
</p><p>
அமெரிக்க அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, சீனாவின் முன்னணி
மின்தேக்கி தயாரிப்பு நிறுவனமான ஹுனான் ஐஹுவா குழுமம் உட்பட பல நிறுவனங்கள்
இந்தத் தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>உழைப்புத் தடுப்புச் சட்டம்</h2><p>

இந்தத் தடையின் மூலம் மின்தேக்கி தயாரிப்புத் துறை மட்டுமன்றி, மருந்தாக்கம்,
உலோகங்கள் மற்றும் பருத்தி சார்ந்த தொழில்களில் ஈடுபடும் பல்வேறு
நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbd210dc-8665-4ed1-a96d-74aa456bfce2/26-6a6cf9b1e3547.webp' /></p><p>'உய்குர் கட்டாய உழைப்புத் தடுப்புச் சட்டத்தின்' கீழ் எடுக்கப்பட்டுள்ள இந்த
நடவடிக்கையால், தடைசெய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 144-லிருந்து தற்போது
187 ஆக உயர்ந்துள்ளது.</p><p>

சின்ஜியாங் பகுதியில் உய்குர் மற்றும் இதர மத அல்லது இன சிறுபான்மையினரை
சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்து மனித உரிமை மீறல்களில் சீனா ஈடுபடுவதாக
அமெரிக்கா தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வரும் நிலையில், தன் மீதான இந்தக்
குற்றச்சாட்டுகளை சீனா திட்டவட்டமாக மறுத்து வருகிறது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T20:39:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எங்கள் அரசு நீதித்துறையை சரியான முறையில் கட்டமைக்கும் - கந்தசாமி பிரபு எம் பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mp-prabhu-opposition-members-in-panic-mode-1785515358"></link>
            <id>https://tamilwin.com/article/mp-prabhu-opposition-members-in-panic-mode-1785515358</id>
            <summary type="text">எதிர்க்கட்சியினர் என்ன குழப்பம் செய்தாலும் நீதித்துறை சரியான முறையில்
கட்டமைக்க வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிலையாக நிற்கிறது
என ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சியினர் என்ன குழப்பம் செய்தாலும் நீதித்துறை சரியான முறையில்
கட்டமைக்க வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிலையாக நிற்கிறது
என நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
</p><p>நேற்று (31.07.2026) நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு
கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்தக் கூட்டத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்கு வரவு செலவு திட்டத்தின் ஊடாக 10, 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>அதேபோன்று கடந்த மாதம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அபிவிருத்திக்குழு
கூட்டத்தில் மயிலத்தமடு மாதவனை காணி தொடர்பில்&nbsp; ஆராயந்துள்ளோம். அந்த காணிகளை விரைவில் விடுவிப்பதற்கான நடவடிக்கையை
அரசாங்கம் மேற்கொள்ளும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a0793be-2d9f-48a0-a7cc-b20504424281/26-6a6cf1f433dca.webp' /></p><p>

அத்துடன் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற யானை - மனித மோதலை
தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள யானை வேலி தொடர்பாகவும் வாழைச்சேனை கடதாசி ஆலையில்
இருக்கும் தண்ணீர் தாங்கி அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் நாங்கள் கலந்துரையாடியுள்ளோம்.
</p><p>
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் வயதெல்லை அதிகரிப்பு தொடர்பாக கடந்த கால ஆட்சியாளர்கள் எதிர்மறையான சிந்தனையில் செயற்பட்டு வருகின்றனர்.</p><p></p><h2>கூட்டு சேர்ந்த எதிர்க்கட்சி&nbsp;</h2><p>
</p><p>
இப்போது இருக்கின்ற எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து கொண்டு இந்த வயதெல்லை அதிகரிப்பில் மாறுபாடான கருத்துக்களை உருவாக்கி கொண்டிருக்கின்றனர்.
</p><p>
 உதாரணமாக சாரை பாம்புக்கு மண்ணெண்னை ஊற்றினால் எப்படி பதறும் அதுபோல பதறியடித்துக் கொண்டு திரிவதை பார்கக்கூடியதாக உள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9aee788d-3a1b-4908-964e-9c5f2f8023c1/26-6a6cf1f3812d6.webp' /></p><p>கூட்டு சேர மாட்டோம் என்றவர்கள் இன்று கூட்டு சேர்ந்து கொண்டு இந்த வயதெல்லை அதிகரிப்பதை எதிர்க்கின்ற நிலை உருவாகியுள்ளது.
</p><p>
இவர்களின் நோக்கம் மக்களை குழப்பி தங்கள் காலத்தில் இருந்த குற்ற செயல்களில் இருந்து தாங்களை விடுவித்து கொள்வதே ஆகும்.</p><p>எதிர்க்கட்சியினர் என்ன குழப்பம் செய்தாலும் நீதித்துறை சரியான முறையில் கட்டமைக்க வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிலையாக நிற்கிறது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T20:37:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்ற தீர்ப்பால் கதி கலங்கும் ராஜபக்சக்கள் - வரலாற்றில் இடம்பெற்ற சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rajapaksa-fate-court-ruling-historical-incident-1785528295"></link>
            <id>https://tamilwin.com/article/rajapaksa-fate-court-ruling-historical-incident-1785528295</id>
            <summary type="text">2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் உல்லாச விடுதிகள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் உல்லாச விடுதிகள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.&nbsp;</p><p>இந்நியைில், குறித்த ஈஸ்டர் குண்டுதாக்குதல்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. அத்துடன், பல முக்கிய முன்னாள் அரசியல் மற்றும் அரச தரப்பினர் மீது குற்றம் சாட்டப்பட்டது.&nbsp;</p><p>இவ்விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுதந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. </p><p>

இலங்கை வரலாற்றிலேயே, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முதல் முன்னாள் பொலிஸ் அதிகாரி மற்றும் பாதுகாப்பு அதிகாரியாக இருவரும் பதிவாகியுள்ளனர்.</p><p>நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றமாக வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p> 

இது உட்பட பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mr_FJwTDCao" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T20:34:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமீபத்திய நாட்களில் கிடைத்த ஒரே ஒரு நல்ல செய்தி! ஐ.நா வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-only-good-news-in-recent-days-un-opinion-1785527269"></link>
            <id>https://ibctamil.com/article/the-only-good-news-in-recent-days-un-opinion-1785527269</id>
            <summary type="text">

ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களைக் கைவிடவும், காசாவிலிருந்து இஸ்ரேல் தனது படைகளைத் திரும்பப் பெறவும் எட்டப்பட்டுள்ள ஒப்பந்தமே சமீபத்திய நாட்களில் கிடைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களைக் கைவிடவும், காசாவிலிருந்து இஸ்ரேல் தனது படைகளைத் திரும்பப் பெறவும் எட்டப்பட்டுள்ள ஒப்பந்தமே சமீபத்திய நாட்களில் கிடைத்த ஒரே நல்ல செய்தி என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>
சிரியா, ஜோர்தான் மற்றும் சைப்ரஸ் நாடுகளுக்கான தனது சமீபத்திய பயணங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய கிழக்கு பிராந்தியத்தால் இனி மற்றொரு போரைத் தாங்க முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

இதன்படி, மத்திய கிழக்கின் அனைத்து முனைகளிலும் மோதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதை குட்டெரெஸ் உறுதியாக வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><h2>ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம்</h2><p>
</p><p>
மேலும், ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகிய இரு தரப்பும் விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b6f2f9b-b640-4a0c-8dac-cff80c78c3e8/26-6a6d001e58f9f.webp' /></p><p>

இந்த இலக்குகளைச் செயல்படுத்துவதற்கான வழிவரைபடம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், எந்தவித கேள்விகளோ, சந்தேகங்களோ அல்லது அதைச் சீர்குலைக்கும் முயற்சிகளோ இன்றி அந்த வழிமுறை முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-07-31T20:10:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் ஆப்பிரிக்காவில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 11 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/11-killed-as-bus-overturns-in-south-africa-1785528442"></link>
            <id>https://canadamirror.com/article/11-killed-as-bus-overturns-in-south-africa-1785528442</id>
            <summary type="text">தென் ஆப்பிரிக்காவின் மத்திய ஃப்ரீ ஸ்டேட் மாகாணத்தில் உள்ள என்1 நெடுஞ்சாலையில்&amp;nbsp; பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், ஐந்து குழந்தைகள் உட்பட பதினொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் ஆப்பிரிக்காவின் மத்திய ஃப்ரீ ஸ்டேட் மாகாணத்தில் உள்ள என்1 நெடுஞ்சாலையில்&nbsp; பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், ஐந்து குழந்தைகள் உட்பட பதினொரு பேர் உயிரிழந்தனர்.</p><p> மேலும், பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><br></p><p>

</p><p>தென் ஆப்பிரிக்காவின் ட்ராம்ப்ஸ்பர்க்கிற்கு வடக்கே சுமார் 24 கி.மீ தொலைவில், ஈடன்பர்க் செல்லும் வழியில் நேற்று இரவு 9.30 மணியளவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
</p><p>
அந்த பேருந்தில் சுமார் 60 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
</p><p>
இதில், பேருந்திற்கு வெளியே 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரவில் அனுமதிக்கப்பட்டுளதாக துறை செய்தித் தொடர்பாளர் மோண்ட்லி மவாம்பி கூறினார்.</p><p>

மேலும், வாகனத்தின் அடியில் சிக்கியிருந்த குழந்தைகளை மீட்புக் குழுவினர் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.</p>]]></content>
            <updated>2026-07-31T20:07:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இந்திய மாணவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை:]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indian-man-whod-been-studying-in-canada-sentenced-1785505943"></link>
            <id>https://canadamirror.com/article/indian-man-whod-been-studying-in-canada-sentenced-1785505943</id>
            <summary type="text">&amp;nbsp;முதியவர்களை இலக்கு வைத்து பல மில்லியன் டொலர் பணமோசடியில் ஈடுபட்ட இந்திய இளைஞருக்கு அமெரிக்க நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
கன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முதியவர்களை இலக்கு வைத்து பல மில்லியன் டொலர் பணமோசடியில் ஈடுபட்ட இந்திய இளைஞருக்கு அமெரிக்க நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
</p><p>கனடாவிற்கு மாணவர் விசா மூலம் வந்து கல்லூரியில் படித்து வந்த ரோஷன் ஷா என்ற இந்தியப் பிரஜை, அமெரிக்காவில் முதியவர்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட பிரம்மாண்ட பணமோசடி வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.
</p><p>அமெரிக்காவின் விஸ்கான்சின் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை சதித்திட்டத்தில் ஈடுபட்டதற்காக இவருக்கு நீதிபதி 48 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30810a8d-7463-4044-8ab6-2c6a949f28d2/26-6a6ca898e46c8.webp' /></p><p>
கனடாவில் படித்து வந்த ரோஷன் ஷா, மோசடி மூலம் கிடைத்த பணத்தையும் தங்கத்தையும் சேகரிப்பதற்காக சுற்றுலா விசா மூலம் அமெரிக்காவிற்குள் நுழைந்துள்ளார்.</p><p>
இந்தியாவில் உள்ள இவரது நண்பர்கள் அமெரிக்காவில் உள்ள முதியவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவர்களின் அடையாள அட்டைகள் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகப் பயமுறுத்தியுள்ளனர்.
</p><p>பாதுகாப்பிற்காகத் தங்களது பணம் அல்லது தங்கத்தைப் போலி கூட்டாட்சி முகவரிடம் ஒப்படைக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்டவர்களை நம்ப வைத்துள்ளனர். </p><p>
இந்த போலி முகவராகவே ரோஷன் ஷா நேரில் சென்று பணத்தைச் சேகரித்துள்ளார்.
அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 15 முதியவர்களிடம் இருந்து மொத்தம் 3.7 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான பணம் மற்றும் தங்கத்தை ரோஷன் ஷா திரட்டியமை விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>
விஸ்கான்சினில் உள்ள நியூ பெர்லின் பகுதியில் மீண்டும் ஒரு மோசடிப் பணத்தைச் சேகரிக்க முயன்றபோது, அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை மற்றும் உள்ளூர் காவல்துறையினரால் இவர் கைது செய்யப்பட்டார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T19:56:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வரலாற்றை புரட்டிப் போட்ட நீதிமன்ற தீர்ப்பு..! ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் நடந்த அதிரடி திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-court-order-today-1785519190"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-court-order-today-1785519190</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுதந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுதந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.&nbsp;</p><p>இலங்கை வரலாற்றிலேயே, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முதல் முன்னாள் பொலிஸ் அதிகாரி மற்றும் பாதுகாப்பு அதிகாரியாக இருவரும் பதிவாகியுள்ளனர்.&nbsp;</p><p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் வழக்கில் குற்றவாளிகளாக இவர்கள் இருவரும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>முன்னதாக&nbsp;2022ஆம் ஆண்டில், மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, இருவரையும் குற்றமற்றவர்கள் என விடுவித்துத் தீர்ப்பளித்தது. </p><p>அதனை தொடர்ந்து, இதற்கு எதிராக அரசு தலைமை சட்டத்தரணி தாக்கல் செய்த மேல்முறையீடு தொடர்பான உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, இந்த வழக்கில் எதிர் தரப்பின் சாட்சியங்கள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமையே இதற்கு ஆரம்பமாகும்.&nbsp;</p><p>இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tNtQzCV29AI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T19:53:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயினுடனான ஷெங்கன் விதியை இடைநீக்கம் செய்த இத்தாலி: பிரான்சுடன் கூட்டு ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/italy-suspends-schengen-visa-rules-for-spain-1785526967"></link>
            <id>https://news.lankasri.com/article/italy-suspends-schengen-visa-rules-for-spain-1785526967</id>
            <summary type="text">ஸ்பெயின் உடனான ஷெங்கன் விதிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இத்தாலி அறிவித்துள்ளது. அதிருப்தியை வெளிப்படுத்திய ஸ்பெயின்வியாழக்கிழமையன்று மொராக்கோவில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயின் உடனான ஷெங்கன் விதிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இத்தாலி அறிவித்துள்ளது.</p><h2> அதிருப்தியை வெளிப்படுத்திய ஸ்பெயின்</h2><p>வியாழக்கிழமையன்று மொராக்கோவில் இருந்து கிட்டத்தட்ட 500000 மக்கள் ஸ்பெயினின் சியூட்டா(Ceuta) பகுதிக்குள் ஒரே நேரத்தில் முயன்றனர். இது ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது.</p><p> இதையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தின் விசா இல்லாத ஷெங்கன் பயண மண்டலத்திலிருந்து ஸ்பெயினை இடைநீக்கம் செய்ய வேண்டும் என இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி கோரிக்கை விடுத்து இருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aea8b839-1087-4c45-9577-1b84fb77fe7b/26-6a6cfab9a15c2.webp' /></p><p>இது தொடர்பாக சமூக வலைதளத்தில் மெலோனி வெளியிட்ட தகவலில், ஷெங்கன்(Schengen)&nbsp; பயண மண்டலத்திலிருந்து ஸ்பெயினை இடைநீக்கம் செய்து தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம், மேலும் இது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.</p><p> அத்துடன் சியூட்டா நகரத்தில் இருந்து வெளிவரும் காட்சிகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும் மெலோனி தெரிவித்து இருந்தார்.</p><h2> ஷெங்கன் விதியை இடைநீக்கம் செய்த இத்தாலி</h2><p>
இந்நிலையில் முக்கிய கொள்கை மாற்றமாக, ஸ்பெயின் உடனான விசா மற்றும் கடவுச் சீட்டு இல்லாத ஷெங்கன் பயண முறையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இத்தாலி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9abf213-1189-4701-b4cd-bf0047616d88/26-6a6cfab8ee6b8.webp' /></p><p> சியூட்டா நகரத்தில் நடந்த நிகழ்வே இந்த அதிரடி நடவடிக்கைக்கான முக்கிய காரணம் என்று இத்தாலிய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.</p><p> இந்த இடைக்கால தடை தவிர இத்தாலி - பிரான்ஸ் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> மேலும் எல்லையில் சோதனைகளை தீவிரப்படுத்த பிரான்ஸ் அரசுடன் கூட்டு ஒப்பந்தமும் செய்யப்பட்டு இருப்பதாக உள்துறை அமைச்சகம் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T19:43:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயினுடனான தனது ஷெங்கன் தடையற்ற பயண ஒப்பந்தத்தை இடைநிறுத்திய இத்தாலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/italy-suspends-schengen-free-travel-spain-1785526341"></link>
            <id>https://tamilwin.com/article/italy-suspends-schengen-free-travel-spain-1785526341</id>
            <summary type="text">சியூட்டாவிற்குள் பெருமளவில் மக்கள் எல்லையைக் கடந்து வருவதைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகளற்ற ஷெங்கன் திட்டத்தின் கீழ் ஸ்பெயினுடனான தனது எல...</summary>
            <content type="html"><![CDATA[<p>சியூட்டாவிற்குள் பெருமளவில் மக்கள் எல்லையைக் கடந்து வருவதைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகளற்ற ஷெங்கன் திட்டத்தின் கீழ் ஸ்பெயினுடனான தனது எல்லை ஏற்பாடுகளை இடைநிறுத்துவதாக இத்தாலி அறிவித்துள்ளது.</p><h2>பாரிஸுடன் உடன்பாடு</h2><p>
</p><p>
இத்தாலிக்கு ஸ்பெயினுடன் தரைவழி எல்லை இல்லை என்றாலும், இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையே விமானம் அல்லது படகு மூலம் பயணம் செய்பவர்களைப் பாதிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dbc400f-471e-4127-bb10-9986167062ee/26-6a6cfabdc7cf5.webp' /></p><p>
</p><p>
பிராங்கோ - இத்தாலிய தரைவழி எல்லையில் கட்டுப்பாடுகளை வலுப்படுத்த பாரிஸுடன் உடன்பாடு எட்டியுள்ளதாகவும் இத்தாலியின் உள்துறை அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T19:42:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல் வைத்தியருக்கும் தாய்க்கும் அரங்கேறிய கொடூரம் ; உடன் பிறந்தவர்களே செய்த அதிர்ச்சிப் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/entist-and-mother-killed-in-brutal-attack-1785526950"></link>
            <id>https://jvpnews.com/article/entist-and-mother-killed-in-brutal-attack-1785526950</id>
            <summary type="text">சென்னை அண்ணா நகரில் நடந்துள்ள இரட்டை கொலை சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சொத்து தகராறில் பல் டாக்டரும், அவரது தாயாரும் கொடூரமாக கொல்லப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சென்னை அண்ணா நகரில் நடந்துள்ள இரட்டை கொலை சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சொத்து தகராறில் பல் டாக்டரும், அவரது தாயாரும் கொடூரமாக கொல்லப் பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;">

சென்னை அண்ணா நகர் கிழக்கு 1-வது அவென்யூவில் 3 மகன்களுடன் பெண்ணொருவர் ஒரே வீட்டில் இருந்துள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfd35b68-db2e-4184-90fc-80ca15ad903b/26-6a6cfaae65d15.webp' /></p><h2 style="text-align: justify;">சொத்து தகராறு</h2><p style="text-align: justify;">

இந்த நிலையில் குறித்த பெண்ணின் இளைய மகனான பல் வைத்தியருக்கும் அவரது அண்ணன்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.
</p><p style="text-align: justify;">
இது தொடர்பாக நேற்று இரவு வீட்டில் வைத்து சொத்து தொடர்பாக இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அண்ணன்கள் இருவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி தாய், தம்பியை அடித்து கொன்றுவிட்டு இருவரும் நாடகம் ஆடியுள்ளனர்.
</p><p style="text-align: justify;">
தாயும், தம்பியும் வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்துவிட்டனர் என்று அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்தனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும், பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். முகம் மற்றும் பல இடங்களில் காயங்கள் இருந்தது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">இதைத் தொடர்ந்து சகோதரர்களான இருவரிடமும் பொலிஸார் அதிரடி விசாரணையில் ஈடுபட்டனர்.</p><p style="text-align: justify;">
இதில் இருவரும் தாயையும், தம்பியையும் சொத்து தகராறில் அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
</p><p style="text-align: justify;">

இதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு இந்த இரட்டை கொலை சம்பவம் அண்ணாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-31T19:42:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேச்சுவார்த்தைக்கு வரும் வரை கடும் தாக்குதல்! ஈரானுக்கு ட்ரம்பின் பேரிடியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-announces-continued-attacks-on-iran-1785525349"></link>
            <id>https://ibctamil.com/article/trump-announces-continued-attacks-on-iran-1785525349</id>
            <summary type="text">

ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்பும் வரை தாக்குதல்களை தொடரப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அந்நாட்டின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>

ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்பும் வரை தாக்குதல்களை தொடரப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>
அந்நாட்டின் அமைச்சரவைக் கூட்டத்தின் போது இது குறித்துப் பேசிய ட்ரம்ப், ஈரானைத் தொடர்ந்து கடுமையாகத் தாக்குவோம் என்றும், தாங்க முடியாத ஒரு கட்டத்தில் அவர்களே இறங்கி வருவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்த மோதல் தொடங்கி ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், கடந்த ஜூன் மாதம் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் சில வாரங்களிலேயே முறிந்தது.</p><p></p><h2>தீவிர&nbsp;தாக்குதல்</h2><p>
</p><p>
இந்நிலையில், மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் போன்ற ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து தாக்குதல்களை தீவிரப்படுத்தப் போவதாக ட்ரம்ப் தொடர்ச்சியாக எச்சரித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a9ca6b2-cd74-47f9-88a1-e0c6ac0922e2/26-6a6cfa048a927.webp' /></p><p><i>Image Credit:&nbsp;Reuters</i></p><p> </p><p>

அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் தகவல்படி, புதன்கிழமை இரவு மிகக் கடுமையான வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும், வெள்ளிக்கிழமை புதிதாக எந்த தாக்குதல்களும் பதிவாகவில்லை என்றே கூறப்படுகிறது.</p><h2>குறையும் ட்ரம்பின் அமெரிக்க ஆதரவு</h2><p>
</p><p>
இவ்வாறானதொரு பின்னணியில், ஈரான் உடனான இந்தப் போர் அமெரிக்க மக்களிடையே பெரும் எதிர்ப்பை கிளப்பி வருவதாக சர்வதேச வட்டராங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dddaca8c-480e-4177-81d2-f260861043e6/26-6a6cfa057616f.webp' /></p><p><i>Image Credit:&nbsp;Spectrum News</i></p><p>

அந்தவகையில், எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட கடுமையான பொருளாதார பாதிப்புகளையும் குறித்த போர் ஏற்படுத்தியுள்ளதால், அதனை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர ட்ரம்பிற்கு அரசியல் ரீதியாக கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
</p><p>
தற்போதைய நிலையில், இந்த விவகாரத்தில் ட்ரம்பின் செயல்பாடுகளுக்கு 28 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T19:41:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குளவி கொட்டுக்கு உள்ளான ஒருவர் பலி ; வைத்தியசாலையில் ஐவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/erson-dies-after-wasp-sting-1785524609"></link>
            <id>https://jvpnews.com/article/erson-dies-after-wasp-sting-1785524609</id>
            <summary type="text">லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாமஸ்டன் தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் குழுவொன்று குளவி கொட்டுக்கு உள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாமஸ்டன் தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் குழுவொன்று குளவி கொட்டுக்கு உள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்தார்.</p><p>நேற்று&nbsp; காலை 10.00 மணிளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b9a9ae1-8b66-46dd-852a-5e3faaea7906/26-6a6cf182a0b5e.webp' /></p><p> </p><p>

சம்பவத்தில் 61 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 5 பேர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p></p><p> </p><p>

எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஏனையவர்களில் பலத்த காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T19:03:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் காவேரி நீர் விவகாரம்.. தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடகாவிலிருந்து வந்த அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cm-vijay-should-not-come-karnataka-dk-shivakumar-1785523333"></link>
            <id>https://tamilwin.com/article/cm-vijay-should-not-come-karnataka-dk-shivakumar-1785523333</id>
            <summary type="text">தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>
காவேரி நீர் திறப்பு மற்றும் காவேரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.</p><p>

தமிழ்நாட்டிற்கு, 3,500 கன அடி நீர் வீதம் 15 நாட்களுக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், கர்நாடகா நீரை திறக்க மறுத்துள்ளது. </p><p>இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க கூடாது என கர்நாடகாவில் உள்ள விவசாய அமைப்புகள் மற்றும் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.</p><p></p><h2>இடம்பெறும் போராட்டங்கள்..&nbsp;</h2><p>இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய், கர்நாடகாவிற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.</p><p> </p><p>
இந்நிலையில், தற்போது உள்ள சூழலில் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecbfa3bf-bb71-4c42-9df5-b3421e94b6d6/26-6a6cf0a4a845a.webp' /></p><p>
</p><p>
கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் நீர்வள மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.</p><p> இதன் பின்னர் பேசிய அவர், "இரண்டு மாநில தலைமைச் செயலாளர்களும் இது குறித்து விவாதித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சரும் நானும் அவரவர் மாநில நலனில் அக்கறையுடன் உள்ளோம். </p><p>இரு மாநிலங்களுக்கும் சிக்கல் ஏற்படுத்தாத தீர்வை எட்ட முயற்சிக்கிறோம்.


போதிய நீர் இல்லை என்று கூறியும் தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க வேண்டும் என உத்தரவிட்டது வேதனை அளிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d40dafa6-8f24-41eb-b1eb-c335214f2128/26-6a6cf0a599890.webp' /></p><p> </p><p>தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாத சூழல் உள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்.

தமிழ்நாடு முதல்வர் விஜய் வரும்போது போராட்டம் நடந்தால் நன்றாக இருக்காது. </p><p>வேறொரு திகதியில் சந்திப்பு கூட்டத்தை நடத்தலாம் என விஜய்க்கு கோரிக்கை வைக்கிறேன். சிறிது காலம் காத்திருக்கலாம். உரிய நேரம் வரும்போது இருவரும் சந்தித்து ஆலோசிப்போம்" என தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T19:02:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிரான போர் வெற்றிகரமாக நடைபெறுகிறது – டிரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-says-war-going-well-1785516413"></link>
            <id>https://canadamirror.com/article/trump-says-war-going-well-1785516413</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிராக மேற்கொண்டு வரும் போர் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிராக மேற்கொண்டு வரும் போர் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.
</p><p>எல்லாம் நன்றாகவே நடைபெற்று வருகிறது. தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். இறுதியில் ஏதோ ஒரு முடிவு ஏற்படும் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a9fa9df-8449-4edb-8f45-2915fe50745e/26-6a6cd17eef473.webp' /></p><p>
</p><p>மேலும், எங்கள் படைகள் ஈரானை கடுமையாக தாக்கி வருகின்றன. அவர்களை முற்றிலும் தளர்ச்சியடையச் செய்து வருகிறோம். </p><p>நாங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறோம். இறுதியில் அவர்கள் பின்வாங்குவதைத் தவிர வேறு வழியிருக்காது என டிரம்ப் கூறியுள்ளார்.</p><p>
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், டிரம்பின் இந்த கருத்து மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T19:00:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில், ஜோதிடர் என 8 லட்சம் டொலர் மோசடி செய்த நபர் இந்தியா தப்பியோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indian-man-who-posed-as-psychic-1785515890"></link>
            <id>https://canadamirror.com/article/indian-man-who-posed-as-psychic-1785515890</id>
            <summary type="text">இந்தியா தப்பியோட்டம்
கனடாவின் டொராண்டோவில் தன்னை ஆன்மீக சிகிச்சையாளர் மற்றும் ஜோதிடர் எனக் காட்டி, ஒருவரிடம் இருந்து சுமார் 800,000 கனேடிய டொலர் மோசட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா தப்பியோட்டம்
கனடாவின் டொராண்டோவில் தன்னை ஆன்மீக சிகிச்சையாளர் மற்றும் ஜோதிடர் எனக் காட்டி, ஒருவரிடம் இருந்து சுமார் 800,000 கனேடிய டொலர் மோசடி செய்ததாகக் கூறப்படும் இந்தியப் பிரஜைக்கு எதிராக நாடு முழுவதும் பிடி விராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாக டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>
கங்காதர் பாபு என்பவர் மீது இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
 2024 ஏப்ரல் முதல் 2025 செப்டம்பர் வரை இந்த மோசடி இடம்பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>
விசாரணையின்படி, "பாபு" என்ற பெயரில் சேவையாற்றியதாகக் கூறப்படும் சந்தேகநபர், தன்னை ஆன்மீக சக்தி கொண்டவராகவும், எதிர்காலத்தை கணிக்கும் ஜோதிடராகவும், ஆன்மீக சிகிச்சையளிப்பவராகவும் அறிமுகப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/133c6d93-1595-4152-901d-778eab4d3550/26-6a6ccf7430536.webp' /></p><p>
</p><p>பாதிக்கப்பட்டவரையும் அவரது குடும்பத்தினரையும் மரணம் அல்லது கடுமையான தீங்கு சூழும் என அச்சுறுத்தி, அதிலிருந்து காப்பாற்ற விசேட ஆன்மீக சடங்குகள் நடத்த வேண்டுமெனக் கூறி தொடர்ந்து பணம் பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>கங்காதர் பாபு மீது 5,000 டொலருக்கு மேற்பட்ட மோசடி, குற்றச்செயலில் கிடைத்த வருமானத்தை வைத்திருத்தல் மற்றும் நிதிச் சலவையில் ஈடுபடல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p>
சந்தேகநபர் தற்போது இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என டொராண்டோ காவல்துறை நம்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>கங்காதர் பாபு சுமார் 5 அடி 6 அங்குல உயரம், ஒல்லியான உடலமைப்பு, கருமையான சுருட்டை முடி, அடர் பழுப்பு நிறக் கண்கள், ஒழுங்காக வெட்டப்பட்ட தாடி மற்றும் முன்பற்களுக்கு இடையில் தெளிவான இடைவெளி கொண்டவராக விவரிக்கப்பட்டுள்ளார்.</p><p>இந்த நபரால் ஏமாற்றப்பட்டிருக்கக்கூடிய மேலும் பலர் இருக்கலாம் என காவல்துறை சந்தேகிப்பதுடன், வழக்குத் தொடர்பான தகவல்கள் இருப்பவர்கள் முன்வருமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T19:00:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[2 மணி நேரம் இடைவிடாமல் வான்வழித் தாக்குதல்: ஈரானுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-military-counter-strikes-iran-infrastructure-1785524057"></link>
            <id>https://news.lankasri.com/article/us-military-counter-strikes-iran-infrastructure-1785524057</id>
            <summary type="text">ஈரான் மீதான நீண்ட நேர தீவிர வான்வழித் தாக்குதலை வெற்றிகரமாக நிறைவு செய்து இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.அமெரிக்காவின் தீவிர வான்வழித் தாக்குதல்ஈர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான நீண்ட நேர தீவிர வான்வழித் தாக்குதலை வெற்றிகரமாக நிறைவு செய்து இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.</p><h2>அமெரிக்காவின் தீவிர வான்வழித் தாக்குதல்</h2><p>ஈரானின் முக்கிய இலக்குகளை குறிவைத்து அமெரிக்க மத்திய கட்டளை பீடம் கிட்டத்தட்ட 2 மணி நேரம் விடாமல் தீவிர தாக்குதல் நடத்தி முடித்து இருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பீடம்(CENTCOM) தெரிவித்துள்ளது.</p><p>CENTCOM வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலில், அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஈரானின் முக்கிய வியூக மையங்கள் வெற்றிகரமாக தகர்க்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b81e468-9e15-4068-bc7c-369a8285fec7/26-6a6cef5ac2501.webp' /></p><p>அதில் முக்கியமாக இராணுவ கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், அதிநவீன ஏவுகணை மற்றும் ட்ரோன் தயாரிப்பு மற்றும் சேமிப்பு வசதிகள், கடற்கரை கண்காணிப்பு மையங்கள் மற்றும் முக்கிய கடல்சார் பாதுகாப்பு திறன்கள் அழிக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>தாக்குதலுக்கான பின்னணி</h2><p>செவ்வாய்க்கிழமை அமெரிக்க நிலைகளை குறிவைத்து ஈரான் நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த பதிலடி நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52e64c48-69da-43b9-a0ad-ef04a7432d20/26-6a6cef5b72f9c.webp' /></p><p>மேலும் ஈரான் நடத்திய இந்த ஏவுகணை தாக்குதல்களை அமெரிக்க பாதுகாப்பு திறன்கள் வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததாகவும், இதனால் அமெரிக்க தளங்கள் மற்றும் சொத்துகளுக்கு எந்தவொரு சேதமும், உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p> ஈரானிய படைகளின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை தடுத்து அமெரிக்க பணியாளர்கள் மற்றும் சொத்துக்களை பாதுகாக்க அமெரிக்கா உறுதியுடன் இருப்பதை இந்த நடவடிக்கைகள் வெளிக்காட்டுவதாக இராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T18:54:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசுக்கு ஒத்தூதும் அதிகாரிகளின் சூழ்ச்சி! வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/intrigue-of-officials-agree-with-government-1785522773"></link>
            <id>https://ibctamil.com/article/intrigue-of-officials-agree-with-government-1785522773</id>
            <summary type="text">
​மக்களின் கோரிக்கைக்கும் விருப்பங்களுக்கும் மாறாக, இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள பூர்வீக நிலங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் சதி முயற்சியை அரசின் ஏவுதலு...</summary>
            <content type="html"><![CDATA[<p>
​மக்களின் கோரிக்கைக்கும் விருப்பங்களுக்கும் மாறாக, இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள பூர்வீக நிலங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் சதி முயற்சியை அரசின் ஏவுதலுடன் சில அரச அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது.</p><p>இந்த சதி முயற்சியின் ஒரு கட்டமாக, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதியன்று தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நஷ்ட ஈடு வழங்குவதற்கான கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>

இதற்காக, காணிகளை இழந்து தவிக்கும் மற்றும் எக்காலத்திலும் நஷ்ட ஈடு கோராத மக்களுக்கே பிரத்தியேகமாக கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p><h2>போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் சதி</h2><p>இவ்வாறு அழைக்கப்படும் மக்களிடம் ஏதோ ஒரு வகையில் சம்மதத்தைப் பெற்று, அவர்களின் பூர்வீகக் காணிகளை நிரந்தரமாகக் கபளீகரம் செய்யவே இன்றைய அரசும் அதன் அதிகாரிகளும் தீவிரமாக முயற்சிக்கின்றனர் என்று அக்குழு எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f277c650-e4b4-4e18-8f7c-224e8b77df57/26-6a6ced9ddb29e.webp' /></p><p>இராணுவப் பிடிக்குள் இருக்கும் தமது சொந்த நிலங்களை நிபந்தனையின்றி விடுவிக்குமாறு கோரி மயிலிட்டி மக்கள் தொடர்ந்து 15 வாரங்களாகத் தொடர் அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மக்களின் இந்த நியாயமான போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் சதி வேலைகளிலேயே அரசு இறங்கியுள்ளது.</p><p>

​எனினும், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் உறுதியாக நின்று போராடினால் மட்டுமே எமது காணி நிலங்களை வெற்றிகரமாக மீட்டெடுக்க முடியும் என்று ஏற்பாட்டுக் குழுவினர் வலுவாக வலியுறுத்தியுள்ளனர்.</p><p>
மக்களின் காணிகளைச் சுவீகரிக்கத் துடிக்கும் அரசின் கோரிக்கைக்கு இணங்க, குறித்த கலந்துரையாடல் தினத்திற்கு முன்னர் எந்த வகையான நஷ்ட ஈடு, எந்தக் காலப்பகுதிக்குள் வழங்கப்படும் என்பது குறித்த தெளிவான உத்தரவாதத்தை அரசு எழுத்து மூலம் வழங்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.&nbsp;</p><p>

அரசின் சூழ்ச்சி வலையில் சிக்கி, நஷ்ட ஈட்டிற்காக எமது பூர்வீகச் சொத்துக்களை இழந்துவிடாமல் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><p>

</p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-07-31T18:49:42+00:00</updated>
        </entry>
    </feed>
