<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-04T19:35:30+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷேக் ஹசீனாவின் இணையவழி உரை! இந்தியா மீது அதிருப்தியடைந்துள்ள பங்களாதேஷ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ban-unhappy-with-hasinas-online-speech-against-ind-1785871849"></link>
            <id>https://ibctamil.com/article/ban-unhappy-with-hasinas-online-speech-against-ind-1785871849</id>
            <summary type="text">தப்பியோடியுள்ள முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இந்திய நிலப்பரப்பைப் பயன்படுத்தி அரசியல் அறிக்கைகள் வெளியிடவோ அல்லது பங்களாதேஷில் அமைதிக்கேடு வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தப்பியோடியுள்ள முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இந்திய நிலப்பரப்பைப் பயன்படுத்தி அரசியல் அறிக்கைகள் வெளியிடவோ அல்லது பங்களாதேஷில் அமைதிக்கேடு விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவோ இடமளிக்கக்கூடாது என அந்நாடு அறிவித்துள்ளது.</p><p>முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, பங்களாதேஷில் ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுத்த மக்கள் எழுச்சியின் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இணையவழியில் உரையாற்றவுள்ள நிகழ்வு குறித்து எழுந்துள்ள சர்ச்சைக்கு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில் குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்வதில் இந்திய அரசுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என இந்தியா தெரிவித்துள்ளது.</p><p></p><h2>அரசின் ஆதரவு இல்லை</h2><p>
</p><p>
இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில், “இந்த நிகழ்வை இந்திய அரசு ஏற்பாடு செய்யவோ ஆதரிக்கவோ இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7510c7e7-a4a2-4368-bc24-1d949f5e3b44/26-6a723dec2fdb3.webp' /></p><p> </p><p>இது தனியார் ஊடக நிறுவனம் ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வாகும். அங்கு முன்வைக்கப்படும் கருத்துகளுக்கு அரசின் ஆதரவு இல்லை” எனக் கூறியுள்ளதாக இந்திய தரப்புகள் விளக்கியுள்ளன.</p><p>
2024 ஆம் ஆண்டு மாணவர் தலைமையிலான போராட்டங்களால் ஷேக் ஹசீனாவின் அரசு பதவியிலிருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, அவர் புதுடெல்லியில் சுய விருப்ப நாடுகடத்தல் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.</p><p> 2025 ஆம் ஆண்டு, போராட்டங்களை அடக்கிய விதம் தொடர்பாக மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அந்தத் தீர்ப்பை அவர் சட்டரீதியாக செல்லுபடியாகாதது என நிராகரித்துள்ளார்.
</p><p>
78 வயதான ஷேக் ஹசீனா, டாக்காவை விட்டு வெளியேறிய பின்னர் முதன்முறையாக புதன்கிழமை காணொளி வாயிலாக பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றவுள்ளார்.</p><p></p><h2>தடைசெய்யப்பட்ட அவாமி லீக் கட்சி</h2><p> தெற்காசிய வெளிநாட்டு செய்தியாளர்கள் கழகம் (Foreign Correspondents’ Club of South Asia) ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில் அவரது மகன் சஜீப் வாசெட் ஜோயும், பல்வேறு பேச்சாளர்களும் பங்கேற்கவுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22518d6b-e7b0-4d16-b511-452a4519d400/26-6a723decdad74.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், ஷேக் ஹசீனாவின் திட்டமிடப்பட்ட உரை தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்குமாறு பங்களாதேஷ் அரசு கோரியிருந்தது. </p><p>மேலும், தடைசெய்யப்பட்ட அவாமி லீக் கட்சியின் தலைவர்கள் இந்திய மண்ணைப் பயன்படுத்தி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிப்பது இருநாட்டு உறவுகளை பாதிக்கக்கூடும் என்றும் எச்சரித்திருந்தது.
</p><p>
பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மானின் ஆலோசகர் எம். ஹுமாயூன் கபீர், டாக்காவில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து இது தொடர்பாக அதிகாரப்பூர்வ எதிர்ப்பை வெளியிட்டார்.</p><p>

“தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள், குறிப்பாக தப்பியோடியுள்ள ஷேக் ஹசீனா, இந்திய நிலப்பரப்பைப் பயன்படுத்தி அரசியல் அறிக்கைகள் வெளியிடவோ அல்லது பங்களாதேஷில் அமைதிக்கேடு விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவோ இடமளிக்கக்கூடாது என்பதில் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என பங்களாதேஷ் எதிர்பார்க்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-04T19:30:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீழே தவறி விழுந்த 16 வயது மாணவிக்கு பிரசவம் ; சிசுவுக்கு நேர்ந்த கதி ; காதலன் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/16-year-old-gives-birth-after-fall-1785871666"></link>
            <id>https://jvpnews.com/article/16-year-old-gives-birth-after-fall-1785871666</id>
            <summary type="text">&amp;nbsp;கீழே தவறி விழுந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு பிரசவம் ஏற்பட்டு வயிற்றில் இருந்த சிசு இறந்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;அந்த மாணவியை கர்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;கீழே தவறி விழுந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு பிரசவம் ஏற்பட்டு வயிற்றில் இருந்த சிசு இறந்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p style="text-align: justify;">அந்த மாணவியை கர்ப்பமாக்கிய காதலன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a993d927-4ff2-4c11-915f-69a0cffb3277/26-6a723d341c819.webp' /></p><h2 style="text-align: justify; ">வழக்குப்பதிவு</h2><p>
</p><p style="text-align: justify;">

விருதுநகர் மாவட்டம் ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் வசித்து வந்ததுடள் மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 25 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார்.</p><p style="text-align: justify;">சம்பவத்தன்று பள்ளியில் இருந்து மாணவி வீடு திரும்பியபோது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மாணவியின் வயிற்றில் கடும் வலி ஏற்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"> இதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify; ">இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மாணவியை வீட்டுக்கு அழைத்து வந்த நிலையில் வீட்டில் வைத்து மாணவிக்கு பிரசவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. </p><p style="text-align: justify; ">

இதை தொடர்ந்து வீட்டில் உள்ளவர்கள் மாணவியையும், சிசுவையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிசு உயிரிழந்தமை பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

மாணவியின் காதலன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-04T19:27:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் சலசலப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/development-of-jaffna-palaly-airport-1785864847"></link>
            <id>https://tamilwin.com/article/development-of-jaffna-palaly-airport-1785864847</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பிலான கலந்துரையா...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
</p><p>
இந்த கலந்துரையாடலானது இன்று(04.07.2026) வலிகாமம் - வடக்கு, தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில்
இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>காணி உரிமையாளர்கள்</h2><p>

வலிகாமம் - வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பலாலி மேற்கு, மயிலிட்டி வடக்கு, தென்மயிலை மற்றும் குரும்பசிட்டி ஆகிய நான்கு கிராம சேவகர்
பிரிவுகளில், 1986ஆம் ஆண்டு பலாலி விமான நிலைய விரிவாக்கத்திற்காக வர்த்தமானி
அறிவித்தல் மூலம் சுவீகரிக்கப்பட்ட 267 ஏக்கர் காணிகளின் 436 காணி
உரிமையாளர்கள் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
</p><p>
இதன்போது, வலி. வடக்கில் இன்னும் காணிகளை மீளப் பெறாத காணி உரிமையாளர்களும்
பிரதேச செயலகத்திற்கு வருகைத்தந்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46eaf33e-8390-498f-9401-e13024450271/26-6a72252e68d60.webp' /></p><p> 

அவர்கள் கூட்ட மண்டபத்திற்குள்
அனுமதிக்கப்படாத நிலையில், மாவட்ட அரசாங்க அதிபருடன் பேச்சுவார்த்தை
நடத்தியதையடுத்து கூட்டம் முடிந்ததும் உங்களோடு கலந்துரையாடுவதாக அரசாங்க அதிபர்
தெரிவித்திருந்தார் ஆனால் அந்த சந்திப்பு இடம் பெறவில்லை.
</p><p>
1986ஆம் ஆண்டு சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு 2022ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்
அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p> 

தொடர்ந்து,
இழப்பீடு வழங்குவதற்கான சத்தியக்கடதாசியில் கையொப்பமிடுமாறு காணி
உரிமையாளர்களிடம் கோரப்பட்டுள்ளது. எனினும், ஒவ்வொரு காணிக்கும் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பீட்டு விபரங்கள்
வழங்கப்படாத நிலையில் சத்தியக் கடதாசியில் கையொப்பமிட முடியாது என காணி
உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>மீளக் குடியேற்ற நடவடிக்கை</h2><p>

மேலும், சத்தியக்கடதாசியின் உள்ளடக்கம்
தெளிவற்றதாக இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியதால் கூட்டத்தில்
பரபரப்பும் குழப்பநிலையும் ஏற்பட்டுள்ளது.
</p><p>
குழப்பநிலை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கூட்ட மண்டபத்திற்குள் பொலிஸார்
வரவழைக்கப்பட்டுள்ளனர். பின்னர் அதிகாரிகள் மற்றும் மக்களுக்கிடையே இடம்பெற்ற
கலந்துரையாடலை அடுத்து , காணி உரிமையாளர்கள் தரப்பில் ஏழு பேர் கொண்ட
குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ea1fdeb-7195-4ee6-adad-9fbac7d41718/26-6a72252f362e2.webp' /></p><p>அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக சத்தியக்கடதாசியில்
திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அவை காணி மதிப்பீட்டுத் திணைக்களத்திற்கு
அனுப்பப்பட்டதையடுத்து மீண்டும் காணி உரிமையாளர்களை அழைப்பது என
தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், சில காணி உரிமையாளர்கள் இழப்பீடு பெறுவதில் இணக்கம் தெரிவிக்காமல்
கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.</p><p> 

அவர்கள், தங்களுக்கு இழப்பீடு மட்டும்
வழங்காமல், காணிகளை மீள வழங்கி மீளக் குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றும், அதன் பின்னரே விமான நிலையத் தேவைக்காக காணிகளை வழங்குவது குறித்து
பரிசீலிக்க முடியும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.</p><p>

மேலும், சத்தியக்கடதாசியில் தெளிவின்மை காணப்பட்டமை மக்களிடையே
நம்பிக்கையின்மையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியதாக காணி உரிமையாளர்கள்
தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T19:15:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் கடற்படையினரின் அதிரடி: ஆங்கிலக் கால்வாயில் தீப்பற்றி எரிந்த படகு- 157 அகதிகள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/french-coast-guard-operation-157-refugees-rescued-1785868702"></link>
            <id>https://tamilwin.com/article/french-coast-guard-operation-157-refugees-rescued-1785868702</id>
            <summary type="text">பிரான்ஸ் நாட்டின் பொலோன்-சுர்-மெர் துறைமுகத்திற்கு அருகில் ஆங்கிலக்
கால்வாய் பகுதியில் அகதிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று செவ்வாய்க்கிழமை
எதிர்பாராதவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் நாட்டின் பொலோன்-சுர்-மெர் துறைமுகத்திற்கு அருகில் ஆங்கிலக்
கால்வாய் பகுதியில் அகதிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று செவ்வாய்க்கிழமை
எதிர்பாராதவிதமாக தீப்பற்றி எரிந்தது.
</p><p>
தகவலறிந்து உடனடியாகச் செயல்பட்ட பிரான்ஸ் கடற்கரை காவல்படை, மூன்று மீட்புக்
கப்பல்களை அனுப்பி படகில் இருந்த 157 பேரையும் பாதுகாப்பாக மீட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>சட்டவிரோத மனித கடத்தல்காரர்கள்</h2><p>
அண்மைக்காலமாக ஆபத்தான இந்த கடல் வழியைப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்குள்
நுழைய முயலும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.</p><p>

சட்டவிரோத மனித கடத்தல்காரர்கள் தகுதியற்ற சிறிய படகுகளில் அளவுக்கு அதிகமான
மக்களை ஏற்றிச் செல்வதால் இத்தகைய கொடூர விபத்துகள் தொடர்ந்து நிகழ்கின்றன.
கடந்த வாரம் கூட இதேபோன்று சிறிய படகில் கால்வாயைக் கடக்க முயன்ற மூன்று பேர்
உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcbf63ab-34d3-48cd-879f-c35d62ce6124/26-6a723a0098831.webp' /></p><p>
இந்த விபத்து குறித்து கவலை தெரிவித்துள்ள பிரித்தானிய அரசு செய்தித்
தொடர்பாளர், "இந்த சம்பவம் சிறிய படகுகள் மூலம் கடல் கடப்பதில் உள்ள பயங்கர
ஆபத்தை உணர்த்துகிறது.

இத்தகைய ஆபத்தான பயணங்களைத் தடுக்க பிரான்ஸ் மற்றும் சர்வதேச பங்காளிகளுடன்
இணைந்து தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.</p><p>

2015-16 காலகட்டத்தில் ஏற்பட்ட அகதிகள் நெருக்கடிக்குப் பிறகு ஐரோப்பாவில்
குடியேற்றம் மிகப்பெரிய அரசியல் விவாதமாக உருவெடுத்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T19:14:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலால் வெடிக்கவிருக்கும் அடுத்த அச்சுறுத்தல்... எச்சரிக்கும் ஜோர்தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/muslim-religious-site-israeli-takeover-1785870580"></link>
            <id>https://news.lankasri.com/article/muslim-religious-site-israeli-takeover-1785870580</id>
            <summary type="text">ஜெருசலேமில் உள்ள மிக முக்கியமான முஸ்லிம் மதத் தலத்தை, இஸ்ரேல் கைப்பற்றப்போவதாக ஜோர்தான் எச்சரிக்கை.
இஸ்ரேலின் அத்தகைய நடவடிக்கை ஒரு மத மோதலைத் தூண்டக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜெருசலேமில் உள்ள மிக முக்கியமான முஸ்லிம் மதத் தலத்தை, இஸ்ரேல் கைப்பற்றப்போவதாக ஜோர்தான் எச்சரிக்கை.
</p><p>இஸ்ரேலின் அத்தகைய நடவடிக்கை ஒரு மத மோதலைத் தூண்டக்கூடும் என்ற அச்சத்தில், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் அமைச்சர்களின் அவசரக் கூட்டத்தை ஜோர்தான் கூட்டியுள்ளது.</p><h2>அத்துமீறி நுழைவது</h2><p>
</p><p>அல்-அக்ஸா மசூதி மற்றும் 'டோம் ஆஃப் தி ராக்' (Dome of the Rock) ஆகியவற்றைச் சுற்றியுள்ள வளாகத்தில், முஸ்லிம்கள் மட்டுமே வழிபடலாம் என்ற நடைமுறையை (status quo) உறுதிசெய்யும் ஒப்பந்தத்தை மீறி,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ae52bd9-b870-4145-8d45-e26a332051f1/26-6a7238f95cb3a.webp' /></p><p> </p><p>யூத மதத் தீவிரவாதிகள் அரசாங்கத்தின் ஆதரவுடன் அப்பகுதிக்குள் அத்துமீறி நுழைவது அதிகரித்து வருகிறது; புதன்கிழமையன்று நடைபெற்ற கூட்டமும், அது தொடர்பான ஜோர்தானின் எச்சரிக்கையும் இந்தச் சூழலிலேயே இடம்பெற்றுள்ளன.</p><p> ஜூலை 23 அன்று, மத அடிப்படைவாத வலதுசாரிப் பிரிவைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள், முக்கியமாக தேசியப் பாதுகாப்பு அமைச்சர் இடமார் பென்-க்விர் தலைமையிலான குடியேறிகள், யூதர்களால் 'டெம்பிள் மவுண்ட்' (Temple Mount) என்று அழைக்கப்படும் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தனர். </p><p>நவீன வரலாற்றிலேயே மிக மோசமான அத்துமீறல் என்று ஜோர்தானிய அதிகாரிகளால் குறிப்பிடப்பட்டுள்ள அந்தச் சம்பவத்தில், யூதர்கள் அந்த வளாகம் முழுவதும் பிரார்த்தனைகளையும் சடங்குகளையும் மேற்கொண்டனர்.</p><p></p><p> </p><p>இந்த நிலையில், டெம்பிள் மவுண்ட் சிறப்பு காவல் பிரிவிற்காக மத அடிப்படைவாத யூதர்களை ஆள்சேர்ப்பு செய்யும் சமீபத்திய நடவடிக்கையால் ஜோர்தான் அரசாங்கம் கவலை அடைந்துள்ளதுடன், </p><p>செப்டம்பர் மாதத்தில் வரும் முக்கிய யூதப் பண்டிகைகளின் போது, ​​தீவிரவாத இஸ்ரேலியத் தலைவர்களால் பாரம்பரிய ஜோர்தானியப் பாதுகாப்பிற்கு மேலும் நேரடியான சவால்கள் எழக்கூடும் என்பதாலும் எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5020ebd-ced7-4334-9c84-2548c0bc4726/26-6a7238f89d705.webp' /></p><p>இந்த ஆண்டு, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி கூட்டணி தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடும் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியிலேயே அந்த விடுமுறை நாட்கள் வருகின்றன. </p><p>இது ஒரு தொடர்ச்சியான மற்றும் ஆபத்தான அச்சுறுத்தல்; இதை எதிர்கொள்ள எங்களிடம் உள்ள அனைத்து வழிகளையும் நாங்கள் பயன்படுத்துவோம் என்று ஜோர்தான் வெளிவிவகார அமைச்சர் ஐமன் சஃபாடி கூறியுள்ளார். </p><p>மேலும், தற்போதைய நிலையை மாற்றியமைப்பது... பாலஸ்தீனம் மற்றும் ஜோர்தானைத் தாண்டி ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகிலும் எதிரொலிக்கக்கூடிய ஒரு மத மோதலைத் தூண்டிவிடக்கூடும் என்று நாங்கள் எச்சரிக்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>இந்த நிலையில், அரபு லீக் நாடுகளைச் சேர்ந்த தனது சகாக்களுடன் துருக்கி, இந்தோனேசியா, மலேசியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளையும் ஒன்றிணைத்து, புதன்கிழமையன்று நடைபெறவுள்ள அவசரக் கூட்டத்தை நடத்தவுள்ள சஃபாடி, இது ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விடயம் என்று கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f4ac555-9fbb-4f5e-bd9c-817389e48fa8/26-6a7238f746048.webp' /></p><p> </p><p>ஜெருசலேம் தற்போது ஒரு வெடிமருந்து கிடங்கு போன்ற பதற்றமான சூழலில் உள்ளது. அல்-அக்ஸா வளாகத்தின் மீதான ஜோர்தானின் பொறுப்புரிமை ஒட்டோமான் காலத்திலிருந்தே இருந்து வருகிறது; அத்துடன், அந்நகரின் மதத் தலங்கள் தொடர்பான தற்போதைய நிலைப்பாடு 1878-ஆம் ஆண்டின் பெர்லின் உடன்படிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டதாகும். </p><p>ஜெருசலேமில் உள்ள கிறிஸ்தவ புனிதத் தலங்களையும் உள்ளடக்கும் வகையில் 20-ஆம் நூற்றாண்டில் ஹாஷிமைட் அரசின் மேற்பார்வை விரிவுபடுத்தப்பட்டது; மேலும் 1967-ஆம் ஆண்டுப் போருக்குப் பின்னரும், 1994-ஆம் ஆண்டு இஸ்ரேல்-ஜோர்தான் அமைதி ஒப்பந்தத்தின் மூலமும் அதன் பாதுகாவலர் பொறுப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.</p><h2>கடுமையாக அதிகரிக்கக்கூடும்</h2><p> </p><p>இரு உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில், பிரித்தானிய நிர்வாகத்தின் கீழ் இருந்த பாலஸ்தீனப் பகுதியில் யூதத் தீவிரவாதிகள் மேற்கொண்ட அத்துமீறல்கள் கலவரங்களைத் தூண்டின; </p><p>அதேபோல, இஸ்ரேலின் பிரதமராகப் பொறுப்பேற்கவிருந்த வலதுசாரித் தலைவர் ஏரியல் ஷரோன் 2000-ஆம் ஆண்டில் அப்பகுதிக்கு மேற்கொண்ட பயணம், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த 'இரண்டாவது இன்டிஃபாடா' (Intifada) வன்முறைக்கு வித்திட்டது.</p><p> மேற்குக் கரையில் இஸ்ரேல் நடத்தி வரும் தீவிர இன அழிப்பு நடவடிக்கைகளின் தாக்கத்தால் ஜோர்தான் தனித்துவமான முறையில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dcff15b-30e5-4c27-96f3-7597cff74b2e/26-6a7238f7ea46f.webp' /></p><p> </p><p>அக்டோபர் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், இந்த நடவடிக்கைகள் மேலும் கடுமையாக அதிகரிக்கக்கூடும் என்று ஜோர்தான் அரசாங்கம் அஞ்சுகிறது.</p><p> தேர்தலுக்கு முந்தைய மூன்று மாதங்களில் வெற்றியை உறுதி செய்யும் பொருட்டு நெதன்யாகு அரசாங்கம் என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடும் என்பது குறித்து கவலை நிலவுகிறது; </p><p>ஏனெனில், தீவிரவாதக் கூறுகள் அப்பிராந்தியத்தின் புவியியல் அமைப்பை மாற்றியமைக்க முயன்று வருகின்றன, அம்மாற்றங்களை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவது கடினமாக அமையக்கூடும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-04T19:07:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜூலை மாத வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் சிறிய வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/july-tourist-arrivals-see-slight-decline-1785869982"></link>
            <id>https://jvpnews.com/article/july-tourist-arrivals-see-slight-decline-1785869982</id>
            <summary type="text">கடந்த ஜூலை மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சிறிய அளவிலான வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கடந்த ஜூலை மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சிறிய அளவிலான வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">

இது தொடர்பில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcf6646c-5666-4c35-b961-992fdf2a492b/26-6a7236a001a94.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;சுற்றுலாப் பயணிகள் வருகை&nbsp;</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

ஜூலை மாதத்தில் மொத்தம் 1,96,845 சர்வதேச சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன், இது கடந்த 2025 -ஆம் ஆண்டின் ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 1.7% குறைவு ஆகும்.</p><p style="text-align: justify; ">

நாட்டுக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் இந்தியாவிலிருந்து 44,547 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது மொத்த வருகையில் 26% ஆகும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">


இதேவேளை, நாட்டுக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடுகளின் பட்டியலில் பிரித்தானியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இதன்படி, பிரித்தானியாவிலிருந்து 21,834 பயணிகள் வருகை தந்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

அதேவேளை, கடந்த ஜனவரி 01 முதல் ஜூலை 31 வரையிலான 7 மாத காலப்பகுதியில் மொத்தம் 13,43,418 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-04T18:59:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையை மீளத் திறக்கும் முயற்சியில் முன்னேற்றம்! அமெரிக்கா - கட்டார் சுட்டிக்காட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/progress-in-efforts-to-reopen-the-strait-of-hormuz-1785869388"></link>
            <id>https://ibctamil.com/article/progress-in-efforts-to-reopen-the-strait-of-hormuz-1785869388</id>
            <summary type="text">அமெரிக்கா - ஈரான் போரைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற நிலையைத் தணித்து, போர்நிறுத்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கும், உலக வர்த்தகத்திற்கு முக்கியத்துவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா - ஈரான் போரைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற நிலையைத் தணித்து, போர்நிறுத்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கும், உலக வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் கப்பல் போக்குவரத்திற்காகத் திறப்பதற்குமான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க மற்றும் கட்டார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்த முன்னேற்றம் குறித்த தகவல்களைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 2 சதவீதம் குறைந்தது. </p><p>எனினும், ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டுள்ளதுடன், ஓமான் கடற்கரைக்கு அண்மையில் பயணித்த சரக்கு கப்பல் ஒன்று அடையாளம் காணப்படாத ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானதாக பிரித்தானியாவின் கடல்சார் பாதுகாப்பு அமைப்பு (UKMTO) தெரிவித்துள்ளது.
</p><p></p><h2>அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை</h2><p>
அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட், அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகவும், ஹோர்முஸ் நீரிணையைத் திறந்து மோதலை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் ஒப்பந்தம் விரைவில் எட்டப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfd0205e-5626-45ce-b785-1fb221ce27cd/26-6a72344dcc85b.webp' /></p><p>
</p><p>
இதற்கு முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.</p><p> இருப்பினும், அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
</p><p>
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தவும், ஹோர்முஸ் நீரிணையை மீளத் திறக்கவும் கட்டார், பாகிஸ்தான் மற்றும் ஓமான் ஆகிய நாடுகள் மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.</p><p></p><h2>கச்சா எண்ணெய் போக்குவரத்து </h2><p> உலகின் சுமார் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு (LNG) போக்குவரத்து ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறுவதால், இப்பகுதியின் நிலைமை உலக பொருளாதாரத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b737966-a5b3-4f9a-81f4-b78afd620236/26-6a72344e861ea.webp' /></p><p>
</p><p>
கட்டார் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மாஜித் அல்-அன்சாரி, அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையில் வரைவு முன்மொழிவுகள் பரிமாறப்பட்டு வருவதாகவும், இராஜதந்திர முயற்சிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதேவேளை, பேச்சுவார்த்தையின் மையமாக ஓமான் மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக கப்பல் போக்குவரத்து ஏற்பாடு காணப்படுவதாகவும், ஹோர்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான கடல்சார் போக்குவரத்தை மீள ஆரம்பிப்பதே தற்போதைய பேச்சுவார்த்தைகளின் முக்கிய நோக்கமாக உள்ளதாகவும் பிராந்திய இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-04T18:50:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையான் விவகாரத்தில் சிக்கிய பிரித்தானிய 'பாயிஸ்'! வெளியான அதிர்ச்சி அறிக்கை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/remand-ordered-3-individuals-including-pillayan-1785867710"></link>
            <id>https://tamilwin.com/article/remand-ordered-3-individuals-including-pillayan-1785867710</id>
            <summary type="text">பிள்ளையான் (சிவனேசதுரை சந்திரகாந்தன்) உட்பட மூவருக்கு எதிரான விளக்கமறியல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடியைச் சேர்ந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிள்ளையான் (சிவனேசதுரை சந்திரகாந்தன்) உட்பட மூவருக்கு எதிரான விளக்கமறியல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.</p><p>

காத்தான்குடியைச் சேர்ந்த 'பொலீஸ் பாயிஸ்' (முகமது பாயிஸ்) என்பவருக்கு எதிராகத் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, சர்வதேச பிடியாணைக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>

'பொலிஸ் பாயிஸ்' என்பவர் பல்வேறு கொலைகள் மற்றும் சமூகங்களுக்கு இடையே மோதல்களைத் தூண்டிய சம்பவங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலாளர் பலீல் உள்ளிட்டோரின் படுகொலைகளுடன் இவருக்குத் தொடர்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

'ஈமானிய நெஞ்சங்கள்' எனப்படும் தீவிரவாத அமைப்புடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பல வன்முறைகளை முன்னெடுத்ததாகச் சொல்லப்படுகிறது .


பலர் அரசு சாட்சிகளாக மாறியுள்ளது இந்த விசாரணைகளுக்குப் பெரும் வலு சேர்த்துள்ளது.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/wyDBgwtC3Hc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T18:35:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா–அமெரிக்க எல்லையில் போதைப்பொருள்–துப்பாக்கி கடத்தல் சதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-officials-charge-3-akwesasne-residents-1785862272"></link>
            <id>https://canadamirror.com/article/us-officials-charge-3-akwesasne-residents-1785862272</id>
            <summary type="text">&amp;nbsp;கனடா–அமெரிக்க எல்லைப் பகுதியில் செயல்பட்டதாகக் கூறப்படும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையதாக, கனடா மற்றும் அமெரிக்காவின் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடா–அமெரிக்க எல்லைப் பகுதியில் செயல்பட்டதாகக் கூறப்படும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையதாக, கனடா மற்றும் அமெரிக்காவின் இரட்டை குடியுரிமை கொண்ட அக்வேசாஸ்னே பகுதியைச் சேர்ந்த மூவர் மீது அமெரிக்க அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர்.</p><p>
அமெரிக்க அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த வியாழக்கிழமை இந்த மூவரும் கைது செய்யப்பட்டனர். </p><p>
கனடா, அமெரிக்கா மற்றும் அக்வேசாஸ்னே பழங்குடியினர் காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட விசாரணையில், கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு மெத்தாம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்தியதாகக் கூறப்படும் வலையமைப்பு அடையாளம் காணப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ee96177-8155-4a96-8dd2-e2f0f8965115/26-6a72188292c29.webp' /></p><p>
</p><p>மேலும், இந்தக் குழு போதைப்பொருளுக்கு மாற்றாக பல துப்பாக்கிகளைப் பெற திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>
47 வயது மற்றும் 38 வயதுடைய இருவர், போதைப்பொருளை விநியோகிக்கும் சதியில் ஈடுபட்டதாகவும், விநியோகிக்கும் நோக்கில் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
</p><p>குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை சிறைத்தண்டனையும், அதிகபட்சமாக 10 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதமும் விதிக்கப்படலாம்.
81 வயதுடைய பெண் ஒருவர், போதைப்பொருளை விநியோகிக்கும் சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.</p><p> அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
</p><p>அமெரிக்க துணை தலைமை அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜான் ஏ. சார்கோன் III, கனடா மற்றும் அமெரிக்க சட்ட அமலாக்க அமைப்புகளுக்கிடையேயான முன்னெப்போதும் இல்லாத ஒத்துழைப்பை பாராட்டியுள்ளார்.
47 வயதுடைய சந்தேகநபர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற இருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T18:30:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திரையுலகில் மற்றுமொரு சோகம் ; பிரபல வில்லன் நடிகர் காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/veteran-villain-actor-pradeep-rawat-passes-away-1785867959"></link>
            <id>https://jvpnews.com/article/veteran-villain-actor-pradeep-rawat-passes-away-1785867959</id>
            <summary type="text">தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் வில்லன் கதாப்பாத்திரங்களால் ரசிகர்களிடையே தனித்துவமான இடம்பிடித்த நடிகர் பிரதீப் ராவத் (74) ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் வில்லன் கதாப்பாத்திரங்களால் ரசிகர்களிடையே தனித்துவமான இடம்பிடித்த நடிகர் பிரதீப் ராவத் (74) காலமானார்.</p><p>


குறிப்பாக, சூர்யா நடித்த ‘கஜினி’ திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த அவர், பல வெற்றிப் படங்களில் தனது வலுவான நடிப்பால் கவனம் ஈர்த்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41881202-3342-41e3-b19e-deec82e0c9de/26-6a722eb9cac69.webp' /></p><p>

74 வயதான நடிகர் பிரதீப் ராவத்தின் மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. </p><p>அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T18:26:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு - மீட்புப் பணிகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bad-weather-death-rises-to-7-rescues-intensify-1785860616"></link>
            <id>https://tamilwin.com/article/bad-weather-death-rises-to-7-rescues-intensify-1785860616</id>
            <summary type="text">இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளதுடன் மேலும் ஒருவர்
காணாமல்போயுள்ளார் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளதுடன் மேலும் ஒருவர்
காணாமல்போயுள்ளார் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.</p><p>ஹட்டன் - பொல்பிட்டிய, மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்சரிவு
ஏற்பட்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.</p><p></p><h2>அனர்த்தத்தில் உயிரிழந்தவர்கள்</h2><p>அனர்த்தத்தின் போது&nbsp; உயிரிழந்தவர்களுள் 47, 83 மற்றும் 58 வயதுடைய மூன்று
பெண்களும் 22 வயதுடைய இளைஞரும் உள்ளடங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
வட்டவளை, ஞானானந்தகம வீதியில் உள்ள மகாவலி கங்கைக்குக் குறுக்கே உள்ள
பாலத்தின் மீது பயணித்த 53 வயதுடைய நபர் ஒருவர் ஆற்றில் அடித்துச்
செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்</p><p>கண்டி மாவட்டம் - நாவலப்பிட்டி, சோலங்கந்த, ஜனஉதான கிராமத்தில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 67 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>பொலிஸ் ஊடகப் பிரிவு&nbsp;</h2><p>
</p><p>
நாவலப்பிட்டி - பஸ்பாகே கோரளையில் வீடு ஒன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டதில்
மற்றுமொரு 67 வயதுடைய நபரும் உயிரிழந்துள்ளார் என அனர்த்த முகாமைத்துவ
நிலையத்தின் கண்டி மாவட்டப் பிரதிப் பணிப்பாளர் இந்திக ரணவீர
உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f975e28e-567e-4f63-b3c4-4559a01dc327/26-6a721cebbe42f.webp' /></p><p>இதனிடையே, கினிகத்தேனை, அம்பகமுவ பகுதியில் 45 வயதுடைய நபர் ஒருவர் நீரில்
அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு
தெரிவித்துள்ளது. </p><p>அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், இந்த அனர்த்தங்களால் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T18:16:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற வானிலை நிலைமை ; உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/severe-weather-death-toll-continues-to-rise-1785864918"></link>
            <id>https://jvpnews.com/article/severe-weather-death-toll-continues-to-rise-1785864918</id>
            <summary type="text">கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவிய திடீர் சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவிய திடீர் சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

இன்று (04) பிற்பகல் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட அண்மைய அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88495986-2271-41b0-b860-a7a13389fe1c/26-6a7222d7a7315.webp' /></p><p style="text-align: justify; ">மேலும், இந்த அனர்த்தங்களினால் 9 மாவட்டங்களைச் சேர்ந்த 56 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">
 

அத்துடன், 3,014 குடும்பங்களைச் சேர்ந்த 11,832 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

இந்த அனர்த்தங்களால் 3 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒரு வீடு முழுமையாகவும் 290 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-04T18:00:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் வானில் மோதிய இரண்டு சிறிய விமானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-planes-crash-mid-air-near-chilliwack-airport-1785861717"></link>
            <id>https://canadamirror.com/article/two-planes-crash-mid-air-near-chilliwack-airport-1785861717</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சில்லிவாக் விமான நிலையத்திற்கு அருகே இரண்டு செஸ்னா வகை சிறிய விமானங்கள் வானில் மோதிக்கொண்ட சம்பவம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சில்லிவாக் விமான நிலையத்திற்கு அருகே இரண்டு செஸ்னா வகை சிறிய விமானங்கள் வானில் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பாக கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
</p><p>திங்கட்கிழமை இந்த விபத்து இடம்பெற்றதாக வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 
சம்பவ இடத்திற்கு விசாரணைக் குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விபத்திற்கான காரணத்தை கண்டறியும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26c375cd-1643-4ed5-ab39-b23c902868a4/26-6a72165712967.webp' /></p><p>சில்லிவாக் விமான நிலைய அதிகாரி கேரி அட்கின்ஸ் தெரிவித்ததாவது, இரண்டு பயணிகளுடன் சென்ற ஒரு விமானம் மோதலுக்குப் பின்னரும் பாதுகாப்பாக சில்லிவாக் விமான நிலையத்தில் தரையிறங்கியது.</p><p>மற்றொரு விமானம் அருகிலுள்ள கல் சுரங்க நீர்த்தேக்கத்தில் விழுந்து மூழ்கியதாகவும், அதில் ஒரே ஒருவர் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>திங்கட்கிழமை மாலை சுமார் 5.14 மணியளவில் வூல்ஃப் சாலை மற்றும் ஸ்க்வேயே சாலை பகுதிக்கு அவசர மருத்துவக் குழுவினர் அனுப்பப்பட்டனர். </p><p>
எனினும், சம்பவத்தில் காயமடைந்த எவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை.
</p><p>இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையிடம் கருத்து கேட்கப்பட்டிருந்தாலும், உடனடி பதில் எதுவும் வெளியாகவில்லை.
சில்லிவாக் நகரம், வாங்கூவர் நகரத்திலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் கிழக்கே அமைந்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T18:00:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை - உதயநிதி ஸ்டாலினுக்கு பிணையில் செல்ல அனுமதி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/udhayanidhi-stalin-arrest-1785863090"></link>
            <id>https://tamilwin.com/article/udhayanidhi-stalin-arrest-1785863090</id>
            <summary type="text">தஞ்சாவூர் செங்கிப்பட்டி பொலிஸ் நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணை நிறைவடைந்த பின்னர் அவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தஞ்சாவூர் செங்கிப்பட்டி பொலிஸ் நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.</p><p>

விசாரணை நிறைவடைந்த பின்னர் அவர் பொலிஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவருக்கு பொலிஸ் நிலைய பிணை வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பரபரப்பான சூழல்</h2><p>

பொலிஸ் நிலைய வளாகத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் ஏராளமான திமுகவினர் திரண்டிருந்ததால் பரபரப்பான சூழல் நிலவியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7814d651-708e-4a1d-b2f8-243c77a57c95/26-6a721d60c92fe.webp' /></p><p>

 பாதுகாப்பு பணிக்காக கூடுதல் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இரவு சுமார் 8.15 மணியளவில் உதயநிதி பொலிஸ் நிலையத்தில் இருந்து சென்றுள்ளார்.</p><p>

தனது காரில் இருந்தபடியே அங்கிருந்த கட்சி நிர்வாகிகளை நோக்கி கையசைத்தபடி அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.</p><h2>&nbsp;கைது</h2><p>
</p><p>
தமிழக எதிர்க்கட்சித்தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் காவிரி விவகாரம் தொடர்பாக த.வெ.க. அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து வெளியிட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e08f7435-62cf-4b66-a2a7-ff354dee1174/26-6a721d617c028.webp' /></p><p>
</p><p>
அதனால் அவர் இன்று(4) காலை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-04T17:55:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகள் மொத்தம் ஈரான் போரில் பயன்படுத்திய அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-used-all-precision-missiles-1785866142"></link>
            <id>https://news.lankasri.com/article/us-used-all-precision-missiles-1785866142</id>
            <summary type="text">ஈரானுடனானப் போரின் போது அதிதுல்லியமான நீண்ட தூர ஏவுகணைகள் மொத்தம் பயன்படுத்திய அமெரிக்கா.
அமெரிக்க இராணுவம், ஈரானுடனான தனது ஐந்து மாதப் போரின் போது, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடனானப் போரின் போது அதிதுல்லியமான நீண்ட தூர ஏவுகணைகள் மொத்தம் பயன்படுத்திய அமெரிக்கா.
</p><p>அமெரிக்க இராணுவம், ஈரானுடனான தனது ஐந்து மாதப் போரின் போது, ​​உலகம் முழுவதும் உள்ள தனது அதிதுல்லியமான நீண்ட தூர ஏவுகணைக் கையிருப்பில் பெரும்பகுதியைப் பயன்படுத்தியுள்ளது.</p><h2>கையிருப்பில் இல்லை</h2><p>
</p><p>இந்த ஏவுகணைகள் முதன்மையாக அமெரிக்க இராணுவத்தின் தரைக்குத் தரை பாயும் ஆயுதங்களாகும்; இவை இராணுவ உத்திசார் ஏவுகணை அமைப்புகள் (ATACMS) மற்றும் துல்லியத் தாக்குதல் ஏவுகணைகள் (PrSM) என அழைக்கப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccda1c8e-0439-4900-8dfe-5432062442ac/26-6a7227a0c6b0e.webp' /></p><p> </p><p>அமெரிக்க இராணுவம் இந்த ஆயுதங்கள் அனைத்தையும் ஏறக்குறைய பயன்படுத்தியுள்ளதாகவே தகவல் கசிந்துள்ளது. உண்மையில் தற்போது அமெரிக்க இராணுவத்திடம் ATACMS எதுவும் கையிருப்பில் இல்லை. </p><p>நீண்ட தூர ஏவுகணைகள் ஒவ்வொன்றின் மதிப்பு 1 மில்லியன் டொலராகும். வலிமையான ஒரு ராணுவத்தின் முக்கியமான அம்சமாகும் இந்த ஏவுகணைகள்.</p><p> பாதுகாப்பான தூரத்திலிருந்து துல்லியமாகத் தாக்க அனுமதிக்கும் ஏவுகணைகள் இவை. உக்ரைன் போரில் அமெரிக்கா வழங்கிய ATACMS ஏவுகணைகள் முக்கியப் பங்கு வகித்துள்ளது. </p><p>ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகளைத் தாக்க உக்ரைனியப் படைகளுக்கு இது பேருதவியாக இருந்துள்ளது.
PrSM என்பது ஒரு புதிய, மிகவும் மேம்பட்ட தலைமுறை ஏவுகணையாகும், இது குறைந்த வரம்பு கொண்ட ATACMS-க்கு மாற்றாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.</p><p></p><p> </p><p>இந்த நிலையில், துல்லியமாகத் தாக்கக்கூடிய நீண்ட தூர ஏவுகணைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதால், ஈரான் மீது மீண்டும் பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்த நேரிட்டால், அதிக ஆபத்துகள் நிறைந்த, விமானிகள் இயக்கும் குண்டுவீச்சு நடவடிக்கைகளையே அதிகம் சார்ந்திருக்க வேண்டிய நிலை வரும். </p><p>காஸா மீது இஸ்ரேல் நடத்திய மிகக் கொடூரமானத் தாக்குதல் போன்ற சூழலை அமெரிக்காவும் முன்னெடுக்க வழிவகுக்கும். ஈரானுடனான இந்த மோதல் குறுகிய காலமே நீடிக்கும் என்று கணித்ததன் அடிப்படையில், ட்ரம்ப் பிப்ரவரி மாதத்தில் இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீதான போரைத் தொடங்கினார்.</p><p> ஆனால் ஈரானுடனான இந்த மோதல் 5 மாதங்களாக நீடிக்கிறது. தற்போது மிக முக்கியமான ஏவுகணைகளின் கையிருப்பும் மொத்தமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. </p><p>ஏவுகணை இருப்புகள் குறைந்துள்ளது, ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட எதிரிகளைத் தடுத்து நிறுத்தும் அமெரிக்காவின் திறனைக் கட்டுப்படுத்தக்கூடும் என்றே அஞ்சப்படுகிறது. </p><p>ஆனால், உலகில் உள்ள எந்த நாட்டை விடவும், தங்களுக்குத் தேவைப்படுவதை விடவும் மிக அதிக அளவிலான ஏவுகணைகள் மற்றும் ஆயுத இருப்பை அமெரிக்கா கொண்டுள்ளது என்று ட்ரம்ப் கூறியதாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><h2>65 சதவீத 'பேட்ரியாட்' (Patriot)</h2><p> </p><p>உண்மையில், ட்ரம்பின் பேச்சுக்களில் எப்போதும் உண்மை இருந்ததில்லை என்றே ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. பீரங்கி குண்டுகள் மற்றும் பல்வேறு வகையான ஏவுகணைகள் உள்ளிட்ட சில ஆயுதங்கள் சாதனை அளவுகளில் உற்பத்தி செய்யப்படுவதை ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்; அதேவேளையில், நீண்ட காலப் போருக்குத் தேவையான அளவை விட இவற்றின் இருப்பு குறைவாக இருக்கக்கூடும் என்றே அவர்கள் எச்சரிக்கின்றனர். </p><p>இந்த நிலையில், பிப்ரவரி மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 65 சதவீத 'பேட்ரியாட்' (Patriot) இடைமறிப்பு ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுவிட்டதாகவும், அமெரிக்காவின் கையிருப்பில் உள்ள 'தாட்' (THAAD) பாலிஸ்டிக் ஏவுகணை இடைமறிப்பான்களின் எண்ணிக்கை போர் தொடங்கிய சமயத்தில் இருந்ததை விடக் குறைந்தது 38 சதவீதம் குறைவாக இருப்பதாகவும் CSIS கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e8b65ae-e2bc-4f39-8192-b63a6a93e003/26-6a7227a18213a.webp' /></p><p> 'பேட்ரியாட்' (Patriot) மற்றும் 'தாட்' (THAAD) ஆகியவை, உள்வரும் ஏவுகணைகளைக் கண்டறிந்து அழிக்கும் அமைப்புகளாகும்; இவை நாட்டின் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்படும் மிகச் சிறந்த அமைப்புகளில் அடங்கும். </p><p>மேலும், போர் தொடங்கியதிலிருந்து, பொதுவாகக் கப்பல்களில் இருந்து ஏவப்படும் டோமாஹாக் குரூஸ் ஏவுகணைகளின் உலகளாவிய இருப்பில் பாதிக்கும் சற்றுக் குறைவான அளவை அமெரிக்கா பயன்படுத்தியுள்ளதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-04T17:53:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[கஜினி பட வில்லன் நடிகர் பிரதீப் ராவத் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/villain-actor-pradeep-rawat-passes-away-1785865101"></link>
            <id>https://cineulagam.com/article/villain-actor-pradeep-rawat-passes-away-1785865101</id>
            <summary type="text">நடிகர் பிரதீப் ராவத் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வில்லன் நடிகராக கலக்கி வந்தவர். குறிப்பாக அவர் கஜினி படத்தில் நடித்து இருந்தது தற்போதும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் பிரதீப் ராவத் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வில்லன் நடிகராக கலக்கி வந்தவர். குறிப்பாக அவர் கஜினி படத்தில் நடித்து இருந்தது தற்போதும் ரசிகர்கள் அதிகம் பாரட்டும் ஒன்றாகும்.</p><p>&nbsp;தற்போது பிரதீப் ராவத் திடீரென மரணமடைந்ததாக வந்திருக்கும் செய்தி ரசிகர்கள் மற்றும் சினிமா துறையினரை கடும் அதிர்ச்சி ஆக்கி இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e2559cb-a7e6-4821-b1cc-4fc6048896d8/26-6a72238f3f209.webp' /></p><h2>மரணம்</h2><p>73 வயதாகும் பிரதீப் ராவத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சையில் இருந்த அவர் சற்றுமுன் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>

அவரது மறைவுக்கு சினிமா துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p><p>
</p>]]></content>
            <updated>2026-08-04T17:38:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போரால் அமெரிக்காவின் துல்லிய ஏவுகணை கையிருப்புக்கு பெரும் அடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-us-precision-missile-stockpile-major-setback-1785864117"></link>
            <id>https://ibctamil.com/article/iran-us-precision-missile-stockpile-major-setback-1785864117</id>
            <summary type="text">ஈரானுடனான ஐந்து மாதகால போரின் போது அமெரிக்க இராணுவம் தனது நீண்ட தூர துல்லியத் தாக்குதல் ஏவுகணைகளில் பெரும்பகுதியைப் பயன்படுத்தியுள்ளதாக பாதுகாப்புத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடனான ஐந்து மாதகால போரின் போது அமெரிக்க இராணுவம் தனது நீண்ட தூர துல்லியத் தாக்குதல் ஏவுகணைகளில் பெரும்பகுதியைப் பயன்படுத்தியுள்ளதாக பாதுகாப்புத் தகவல்களை அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. </p><p>இதனால் எதிர்கால இராணுவ நடவடிக்கைகளுக்கான அமெரிக்காவின் தயார்நிலை குறித்து கவலைகள் எழுந்துள்ளன.
</p><p>
பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகளில் Army Tactical Missile Systems (ATACMS) மற்றும் Precision Strike Missiles (PrSM) ஆகியவை முக்கியமானவையாகும். </p><p></p><h2>உக்ரைனுக்கும் வழங்கப்பட்ட ஏவுகணைகள்&nbsp;</h2><p>இவற்றில் பெரும்பாலான கையிருப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு ஏவுகணையின் பெறுமதி ஒரு மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3cd5fc6-f696-4633-8738-208f771ca2be/26-6a722283aeb3c.webp' /></p><p>
</p><p>
இந்த நீண்ட தூர துல்லிய ஏவுகணைகள் பாதுகாப்பான தூரத்திலிருந்து இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டவை.</p><p> உக்ரைனுக்கும் வழங்கப்பட்ட ATACMS ஏவுகணைகள் அந்நாட்டின் இராணுவ நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியுள்ளன.</p><p> PrSM ஏவுகணைகள் அதைவிட மேம்பட்ட புதிய தலைமுறை ஆயுதங்களாகக் கருதப்படுகின்றன.
</p><p>
ஏவுகணை கையிருப்பு குறைந்திருப்பது, ஈரானுக்கு எதிராக மீண்டும் பெரிய அளவிலான தாக்குதல்களை முன்னெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அதிக ஆபத்துள்ள விமானத் தாக்குதல்களை அமெரிக்கா அதிகம் நம்ப வேண்டிய நிலையை உருவாக்கக்கூடும் என பாதுகாப்பு வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.</p><p></p><h2>அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு</h2><p> </p><p>மேலும், ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளைத் தடுக்கும் அமெரிக்காவின் இராணுவத் திறனிலும் இதனால் தாக்கம் ஏற்படலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86f41356-3f07-488c-8f2a-64e2b5ef812e/26-6a72228467044.webp' /></p><p>

எனினும், அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) உலகின் பல பகுதிகளில் உள்ள இராணுவக் கையிருப்புகளிலிருந்து ஆயுதங்களை மீள்நிரப்பி வருவதாக மற்றொரு அதிகாரி தெரிவித்துள்ளார். </p><p>இதேவேளை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "உலகிலேயே அதிகளவு ஆயுதக் கையிருப்பு அமெரிக்காவிடம் உள்ளது; தேவையைவிட அதிகமான ஆயுதங்கள் எங்களிடம் உள்ளன" என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-04T17:34:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோன்ஸ்டன் குற்றமற்றவர் என வழங்கப்பட்ட நீதிமன்ற தீா்ப்பு ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/johnstons-case-re-hearing-again-1785864591"></link>
            <id>https://tamilwin.com/article/johnstons-case-re-hearing-again-1785864591</id>
            <summary type="text">சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுவித்து கொழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.</p><p>
இதன்படி, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொச முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பதில் பணிப்பாளர் மொஹமட் சகீர் உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ஆரம்பத்திலிருந்து மீண்டும் விசாரிக்குமாறு ஐந்து நீதிபதிகள் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.</p><p>
குறித்த வழக்குகளில், சதொச ஊழியர்களை அவர்களது உத்தியோகபூர்வ பணிகளில் இருந்து விலக்கி வேறு பணிகளில் ஈடுபடுத்தியதுடன், அவர்களுக்கு அரசுப் பணத்தில் ஊதியம் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வழங்கியதன் மூலம் அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22da8d0c-840c-4d8e-90f8-1a783ae27beb/26-6a72219174543.webp' /></p><p>
</p><p>இந்த வழக்குகள், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சட்டத்தின் 70ஆம் பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.</p><p>
எனினும், விசாரணையை ஆரம்பிப்பதற்கும் வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கும் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களின் கையொப்பங்களும் இடம்பெறவில்லை என்ற பிரதிவாதி தரப்பின் ஆரம்ப ஆட்சேபனையை ஏற்று, கொழும்பு மேல் நீதிமன்றம் 2023 மே 19ஆம் திகதி பிரதிவாதிகளை விடுவித்திருந்தது.
</p><p>அந்தத் தீர்ப்புக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், 1994ஆம் ஆண்டின் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சட்டத்தின் 2(8) பிரிவின்படி, ஆணைக்குழுவின் அதிகாரங்களைப் பயன்படுத்த மூன்று ஆணையாளர்களும் ஒரே நேரத்தில் இருப்பது கட்டாயமல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>
மேலும், ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் தனித்தனியாக அமர்ந்தாலும் அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும் என்றும், அத்தகைய நடவடிக்கை முழு ஆணைக்குழுவின் நடவடிக்கையாகவே கருதப்படும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>அத்துடன், மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையின் செல்லுபடியாக்கத்தை கேள்விக்குட்படுத்தும் அதிகாரம் மேல் நீதிமன்றத்திற்கு இல்லை; அவ்வாறான அதிகாரம் அதனை விடவும் அதிகாரம் கூடிய நீதிமன்றங்களுக்கே உரியது என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.</p><p>
மேலும், ஒவ்வொரு விசாரணைக்கும் மற்றும் வழக்குத் தாக்கலுக்கும் மூன்று ஆணையாளர்களின் கையொப்பமும் கட்டாயம் என்ற நிலைப்பாடு நீதித்துறை செயல்முறையை தேவையற்ற வகையில் தாமதப்படுத்தும் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T17:33:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்கார்பரோ குடியிருப்புக் கட்டடத்தில் தீவிபத்து: ஒருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/one-dead-after-two-alarm-fire-at-scarborough-1785861177"></link>
            <id>https://canadamirror.com/article/one-dead-after-two-alarm-fire-at-scarborough-1785861177</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஸ்கார்பரோ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நீல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஸ்கார்பரோ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p>
நீல்சன் ரோடு மற்றும் மெக்லெவின் அவென்யூ சந்திப்புக்கு அருகே அமைந்துள்ள குடியிருப்புக் கட்டடத்தில் காலை 8 மணிக்குச் சற்று முன்பாக இத்தீவிபத்து ஏற்பட்டது. </p><p>
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, கட்டடத்தின் 16-வது தளத்தில் உள்ள ஒரு வீட்டின் வரவேற்பறைப் பகுதி தீவிரமாகத் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்ததாகத் தீயணைப்புத் துறை துணைத் தலைவர் பால் ஃபிட்ஸ்ஜெரால்ட் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/188c8a95-c40d-493a-8003-49fc5355c2f4/26-6a72143b36f57.webp' /></p><p> 
ஆரம்பகட்ட சோதனையில் வீட்டில் யாரும் தென்படாததால், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாகத் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். </p><p>
இதனால் தீ அருகில் உள்ள மற்ற வீடுகளுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டது.</p><p>எனினும், கட்டடத்திற்கு வெளியே கீழே தரையில் ஒருவர் சுயநினைவின்றிக் கிடந்தது கண்டறியப்பட்டது. 
அவருக்கு மீட்புக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்துப் காப்பாற்ற முயன்றபோதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.</p><p> 
உயிரிழந்தவர் ஒரு பெரியவர் என்பதைத் தவிர்த்து, அவரது அடையாளம் குறித்த கூடுதல் விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. தீயணைப்பு நடவடிக்கைகளின் காரணமாகச் சில வீடுகளுக்குப் புகை மற்றும் நீரினால் லேசான சேதம் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
இத்தீவிபத்துக்கான காரணம் மற்றும் பின்னணி குறித்து டொரொண்டோ தீயணைப்புத் துறை, டொரொண்டோ காவல்துறை மற்றும் தீயணைப்பு ஆணையர் அலுவலகம் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றன.</p><p> உயிரிழந்த நபர் தீப்பற்றிய வீட்டில் இருந்து அவராகவே தப்பிக்க முயன்றாரா என்பது குறித்து அதிகாரிகள் சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இத்தீவிபத்தில் சந்தேகத்திற்குரிய பின்னணி எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T17:30:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறை மா அதிபர் குறித்து அவதூறு : விசாரணை வளையத்துள் சாகர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sagara-kariyawasam-is-accused-of-misconduct-1785862508"></link>
            <id>https://ibctamil.com/article/sagara-kariyawasam-is-accused-of-misconduct-1785862508</id>
            <summary type="text">காவல்துறை மா அதிபர் குறித்து சிறிலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் மற்றும் சட்டத்தரணி சாகர கரியவாசம் தெரிவித்த கருத்து தொடர்பாக, விசாரணையைத் தொடங்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>காவல்துறை மா அதிபர் குறித்து சிறிலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் மற்றும் சட்டத்தரணி சாகர கரியவாசம் தெரிவித்த கருத்து தொடர்பாக, விசாரணையைத் தொடங்குமாறு காவல்துறை மா அதிபர் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
</p><p>
நேற்று(03) ஒரு செய்தியாளர் சந்திப்பைக் கூட்டிய பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் மற்றும் சட்டத்தரணி சாகர கரியவாசம், காவல்துறை தொடர்பாக அரசாங்கத்திற்கும் காவல்துறை மா அதிபருக்கும் எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.</p><p>

</p><h2>அனுர ஆட்சியில் துரதிஷ்டமான நிலையில் காவல்துறை</h2><p>அப்போது, ​​தற்போதைய அரசாங்கம் காவல்துறையை மிகவும் துரதிர்ஷ்டவசமான நிலையில் வைத்துள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca532b9b-49d7-48d0-81b0-18849ecc460f/26-6a721f346154a.webp' /></p><p>
</p><p>
முன்னதாக, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மூன்று முன்னாள் காவல்துறை மா அதிபர்கள் மிகவும் துயரமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேர்ந்தது. மேலும், தற்போதைய காவல்துறை மா அதிபர் அரசாங்கத்திற்குச் சேவை செய்வதை நிறுத்திவிட்டு மக்களுக்குச் சேவை செய்யத் தொடங்க வேண்டும் என்று சாகர கரியவாசம் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.</p><p></p><p>
</p><p>
 </p><h2>பொதுமக்களால் காவல்துறை மா அதிபர் அடித்தே கொல்லப்படுவார்&nbsp;</h2><p>அவ்வாறு செய்யாவிட்டால், தற்போதைய காவல்துறை மா அதிபர் நெடுஞ்சாலையில் பொதுமக்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட 37வது காவல்துறை மா அதிபராக வரலாற்றில் இடம்பிடிக்கக்கூடும் என்று குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2204082-74cc-4c67-a30a-459c04b523ff/26-6a721f351af52.webp' /></p><p>

இந்த நிலையில் காவல்துறை மா அதிபரின் அறிவுறுத்தல்களின் பேரில், சாகர கரியவசம் தெரிவித்த கருத்து குறித்து மத்திய குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
</p><p>
மேலும், சட்டத்தரணி சாகர கரியவசம் வரும் நாட்களில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு வரவழைக்கப்பட்டு, அவர் நேற்று தெரிவித்த கருத்து குறித்து விசாரணை தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T17:20:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்று முன் அரங்கேறிய துப்பாக்கிச் சூடு ; போராடி தப்பிய நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shooting-reported-moments-ago-1785863969"></link>
            <id>https://jvpnews.com/article/shooting-reported-moments-ago-1785863969</id>
            <summary type="text">தெஹிவளை கடவத்த வீதியில் உள்ள தஹநாயக்க விளையாட்டரங்கிற்கு அருகில் நபர் ஒருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று முறியடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை கடவத்த வீதியில் உள்ள தஹநாயக்க விளையாட்டரங்கிற்கு அருகில் நபர் ஒருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

இன்று (04) இரவு 8.10 மணியளவில் முகத்தை மூடியவாறு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78fff588-39c4-4e65-a33e-70872111ad69/26-6a721f22d2d07.webp' /></p><p>

 

விளையாட்டரங்கிற்கு அருகில் உள்ள வெதுப்பக உரிமையாளர் ஒருவரை இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதிலும், அந்தச் சந்தர்ப்பத்தில் துப்பாக்கி இயங்கவில்லை.
</p><p>
 

இதன்போது, வெதுப்பக உரிமையாளர் துப்பாக்கிச் சூடு நடத்த வந்த நபருடன் போராடி, அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறிமுதல் செய்துள்ளார்.
</p><p>
 

பின்னர், துப்பாக்கிச் சூடு நடத்த வந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், வெதுப்பக உரிமையாளர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>

 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-04T17:20:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் - ஓமன் பேச்சுவார்த்தையில் சாதக முன்னேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-says-good-progress-made-in-talks-with-oman-1785863885"></link>
            <id>https://tamilwin.com/article/iran-says-good-progress-made-in-talks-with-oman-1785863885</id>
            <summary type="text">&amp;nbsp;ஈரான் மற்றும் ஓமான் நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் சாதக முன்னேற்ற நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானிய ராஜதந்திர வட்டாரங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈரான் மற்றும் ஓமான் நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் சாதக முன்னேற்ற நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>ஈரானிய ராஜதந்திர வட்டாரங்கள் மற்றும் அதிகாரிகளின் கூற்றுப்படி, ஈரான் மற்றும் ஓமன் இடையே உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கான தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. </p><p>
ஓமனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28a27615-1a5b-4c6b-ae3a-c59fc9042e41/26-6a721ecf4390a.webp' /></p><p> </p><p>
சில கருத்து வேறுபாடுகள் இன்னும் நீடித்த போதிலும், பேச்சுவார்த்தை நேர்மறையான பாதையில் செல்வதாக ஈரானிய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் உறுதிப்படுத்தியுள்ளார். </p><p>
இடையூறு விளைவிக்கும் சில தரப்பினரின் நடவடிக்கைகளைத் தெஹ்ரானில் உள்ள ராஜதந்திர வட்டாரங்கள் விமர்சித்த போதிலும், ஒப்பந்தம் கைக்கெட்டும் தூரத்தில் உள்ளதாகவும், நாளைய தினத்தின் இறுதிக்குள் உடன்பாடு எட்டப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். </p><p>
இந்த ஒப்பந்தம் வெறும் உடன்படிக்கை என்பதை விட, சர்வதேச வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணை வழியிலான கடல்சார் வர்த்தக நடைமுறையை சீரமைப்பதையே முதன்மையாகக் கொண்டுள்ளது. </p><p>
ஈரான் - ஓமன் இடையிலான இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டால், அது அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மேலும் ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு வழிவகுக்கும் எனக் கருதப்படுகிறது.
</p><p>எனினும், மோதல்கள் மீண்டும் மீண்டும் தொடர்வதைத் தவிர்க்கவும், நிரந்தர தீர்வை எட்டவும் பின்வரும் சிக்கல்கள் ராஜதந்திர வழியில் தீர்க்கப்பட வேண்டும் என ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T17:18:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதாகி பல மணி நேரத்தின் பின் விடுதலையான உதயநிதி ஸ்டாலின் ; வெளியில் வந்து கூறிய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/udhayanidhi-stalin-released-1785863487"></link>
            <id>https://jvpnews.com/article/udhayanidhi-stalin-released-1785863487</id>
            <summary type="text">&amp;nbsp;அவதூறு வழக்கில் கைதான இந்திய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விசாரணையின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

அதன் பின்னர் கருத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;அவதூறு வழக்கில் கைதான இந்திய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விசாரணையின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">

அதன் பின்னர் கருத்து தெரிவித்த உதயநிதி, தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் யாரையும் நான் தவறாக பேசவில்லை; காவிரி பிரச்சினையை அவையில் எழுப்பக்கூடாது என்பதற்காக இந்த அரசு திசை திருப்பியுள்ளது என கூறினார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8e1c3af-4b33-46ec-86b3-9a58664b7efb/26-6a721d40c5403.webp' /></p><h2 style="text-align: justify; ">கண்டனம்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
திருச்சி விமான நிலையத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது,</p><p style="text-align: justify; ">
திமுக தலைவரின் உத்தரவை ஏற்று தஞ்சையில் நேற்று விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினோம்.

நான் யாரையும் தவறாக பேசவில்லை, பேசாத ஒன்றை பரப்பி உள்ளனர். </p><p style="text-align: justify; ">திசை திருப்பும் முயற்சியாக, நான் பேசாத ஒன்றை பேசியதாக திரித்து வீடியோவை பரப்பி உள்ளனர். .

தீவிரவாதியை போல், என்னை 400 கி.மீ.க்கு அழைத்து சென்று செங்கிப்பட்டியில் வைத்து விசாரணை நடத்தினர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

விவசாயிகளுக்கு ஆதரவாக பேசியதற்கு தரம்கெட்ட அரசு கைது செய்துள்ளது. இதற்கு நான் அஞ்சவில்லை.

எனக்கு மனைவி, மகள் உள்ளனர். தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்களையும் எனது தாயாக, சகோதரிகளாக நான் பார்க்கிறேன்.</p><p style="text-align: justify; ">எந்த தவறான எண்ணத்திலும் பெண்களை தரம் தாழ்த்தி பேச வேண்டும் என்று நான் எண்ணவில்லை. ஆர்ப்பாட்டத்தில் இரட்டை அர்த்தத்தில் நான் பேசவில்லை, சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன். பேசுவேன். ஒருசில தலைவர்கள் நான் பேசியதை ஆராயாமல் கண்டனம் தெரிவித்தது எனக்கு வருத்தம் தருகிறது.&nbsp;</p><p style="text-align: justify; ">அரசின் பொய் வழக்கு போட்டு பயமுறுத்து பார்க்கின்றனர். இதற்கெல்லாம் பயப்படும் ஆள் நான் இல்லை என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-04T17:11:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளையில் பேக்கரி உரிமையாளரின் துணிகர செயல்: கொல்ல வந்தவரின் துப்பாக்கி பறிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dehiwala-shooting-attemt-foiled-1785863156"></link>
            <id>https://tamilwin.com/article/dehiwala-shooting-attemt-foiled-1785863156</id>
            <summary type="text">தெஹிவளை கடவத்தை வீதியில் உள்ள தஹநாயக்க விளையாட்டரங்கம் அருகே இன்று இரவு பேக்கரி உரிமையாளரை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு முயற்சி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை கடவத்தை வீதியில் உள்ள தஹநாயக்க விளையாட்டரங்கம் அருகே இன்று இரவு பேக்கரி உரிமையாளரை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.</p><p>

இரவு சுமார் 8.10 மணியளவில், ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரில் ஒருவர் பேக்கரி உரிமையாளரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உதய குமார வுட்லர் தெரிவித்துள்ளார்.</p><p>தெஹிவளை கடவத்தை வீதியில் உள்ள தஹநாயக்க விளையாட்டரங்கம் அருகே இன்று இரவு பேக்கரி உரிமையாளரை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.</p><p>
இரவு சுமார் 8.10 மணியளவில், ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரில் ஒருவர் பேக்கரி உரிமையாளரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உதய குமார வுட்லர் தெரிவித்துள்ளார்.
</p><p>எனினும், துப்பாக்கி செயல்படாததால், பேக்கரி உரிமையாளர் உடனடியாக எதிர்த்து தாக்குதலாளியுடன் போராடி, அவரது கையில் இருந்த துப்பாக்கியை பறித்துக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7ef7d9a-c469-45ef-9bb4-5717963b3fa5/26-6a721bf5af824.webp' /></p><p>
</p><p> இந்த மோதலின் போது பேக்கரி உரிமையாளருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து இரு சந்தேகநபர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணையில், தாக்குதலுக்கு இலக்கான பேக்கரி உரிமையாளரின் மகன், "கொஸ் மல்லி" என அழைக்கப்படும் பாதாள உலகக்குழு குழு உறுப்பினரின் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையவர் எனவும், அவர் தற்போது போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>மேலும், இந்த தாக்குதலை "சாண்டோ" தரப்பு அல்லது "படோவிட்ட அசங்க" தரப்பைச் சேர்ந்த குழுவினர் மேற்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p> 
எனினும், இதுவரை இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எவரும் குற்றவாளிகளாக நிரூபிக்கப்படவில்லை.</p><p>
தப்பியோடிய துப்பாக்கிதாரி மற்றும் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபரை கைது செய்வதற்காக தெஹிவளை பொலிஸார் இரண்டு விசேட விசாரணைக் குழுக்களை நியமித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T17:06:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா உள்ளிட்ட 5 வெளிநாட்டு துணைத் தூதரகங்களை மூடத் திட்டமிடும் நாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-to-close-consulates-in-canada-other-countries-1785860548"></link>
            <id>https://canadamirror.com/article/us-to-close-consulates-in-canada-other-countries-1785860548</id>
            <summary type="text">&amp;nbsp;உலக அளவில் தனது ராஜதந்திர இருப்பைச் சுருக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஐந்து வெளிநாட்டுத் தூதரக அலுவலகங்களை மூடத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உலக அளவில் தனது ராஜதந்திர இருப்பைச் சுருக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஐந்து வெளிநாட்டுத் தூதரக அலுவலகங்களை மூடத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது.
</p><p> குறிப்பிட்ட எந்தவொரு புவிசார் அரசியல் நெருக்கடியும் இல்லாத சூழலில், அமெரிக்கா ஒரே நேரத்தில் பல வெளிநாட்டு தூதரக அலுவலகங்களை மூடுவது அரிதான ஒரு நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. </p><p>
நாடாளுமன்றக் குழுக்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிவிப்பின்படி, கிரெனடாவின் செயிண்ட் ஜார்ஜஸில் உள்ள அமெரிக்கத் தூதரகம், ஜப்பானின் நகோயா, இந்தோனேசியாவின் மேடான், கனடாவின் வின்னிபெக் ஆகிய இடங்களில் உள்ள துணைத் தூதரகங்கள் மற்றும் கேமரூனின் டுவாலாவில் உள்ள தூதரகக் கிளை அலுவலகம் ஆகியவை மூடப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be000f55-5e8c-499b-8c39-aa4226381c0b/26-6a7211c57c168.webp' /></p><p> 
அதிபர் டொனால்ட் டிரம்பின் "அமெரிக்காவிற்கே முதலிடம்" என்ற கொள்கைக்கு ஏற்ப, அமெரிக்க அரசு இயந்திரத்தை மாற்றி அமைக்கும் முயற்சியின் தொடர்ச்சியாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. </p><p>
செலவுகளைக் குறைக்கும் பொருட்டுச் சிறிய அளவிலான தூதரக அலுவலகங்களை மூடுவது அவசியமானது என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.</p><p>எனினும், இத்தகைய நடவடிக்கைகள் சர்வதேச அளவில் அமெரிக்காவின் செல்வாக்கைக் குறைத்து, சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுக்குச் சாதகமான சூழலை உருவாக்கிவிடும் என ஜனநாயகக் கட்சியினரும் முன்னாள் வெளியுறவுக் கொள்கை அதிகாரிகளும் எச்சரித்துள்ளனர்.</p><p> 
இது குறித்து நேரடியாக உறுதிப்படுத்தாத அமெரிக்க வெளியுறவுத் துறை, நாட்டின் ராஜதந்திர நடவடிக்கைகள் திறம்படவும், குறைந்த செலவிலும் செயல்படுவதை உறுதி செய்வதிலேயே தாங்கள் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளது.</p><p> மூடப்பட திட்டமிடப்பட்டுள்ள நகோயா, மேடான் மற்றும் செயிண்ட் ஜார்ஜஸ் ஆகிய இடங்களில் சீனா ஏற்கனவே தனது ராஜதந்திர அலுவலகங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T17:00:24+00:00</updated>
        </entry>
    </feed>
