<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-16T16:47:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். நயினாதீவு கடலில் படகு கவிழ்ந்தது ; அதிர்ஷ்டவசமாக 10 பயணிகளும் உயிருடன் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-boat-capsizes-sea-fortunately-10-rescued-1786898823"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-boat-capsizes-sea-fortunately-10-rescued-1786898823</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், நயினாதீவு கடற்பகுதியில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் பயணித்த சிறுரகப் படகொன்று ஞாயிற்றுக்கிழமை (16) மாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், நயினாதீவு கடற்பகுதியில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் பயணித்த சிறுரகப் படகொன்று ஞாயிற்றுக்கிழமை (16) மாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 10 பேரும் கடற்படையினர் மற்றும் மீனவர்களின் துரித நடவடிக்கையால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p>

ஞாயிற்றுக்கிழமை நெடுந்தீவுக்கான இறுதிப் பிரதான போக்குவரத்துப் படகு சேவை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, குறிகாட்டுவான் இறங்குதுறையில் காத்திருந்த சில பயணிகளை ஏற்றிக்கொண்டு குறித்த சிறுரகப் படகு மாலை சுமார் 3.30 மணியளவில் நயினாதீவிலிருந்து புறப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc1d625b-cf5e-4e5c-b60d-d693f5035be8/26-6a81e9891e449.webp' /></p><p>படகு புறப்பட்டு சுமார் 15 நிமிடங்களுக்குப் பின்னர், மாலை 3.45 மணியளவில் நயினாதீவு கடற்பகுதியில் திடீரெனக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><p>
படகு கவிழ்ந்ததற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவத்தை அறிந்த கடற்படையினரும் அப்பகுதி மீனவர்களும் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
இதன்போது படகில் பயணித்த 10 பேரும் எவ்வித ஆபத்துமின்றி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p>
மீட்கப்பட்ட அனைவரும் நயினாதீவு பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T16:47:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலின் தீர்மானத்திற்கு பல நாடுகள் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-war-live-talks-on-hormuz-strait-1786898228"></link>
            <id>https://tamilwin.com/article/iran-war-live-talks-on-hormuz-strait-1786898228</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் &#039;சமாதான சபை&#039; முன்வைத்த 15 அம்சங்கள் அடங்கிய விரிவான அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்தமைக்கு கடும் கண்டனம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 'சமாதான சபை' முன்வைத்த 15 அம்சங்கள் அடங்கிய விரிவான அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்தமைக்கு கடும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>ஐக்கிய அரபு அமீரகம், கட்டார், ஜோர்டான், இந்தோனேசியா, பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய 8 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.</p><p>
இஸ்ரேலின் இந்த நிலைப்பாடு அமைதிக்கான விரிவான திட்டத்தை நேரடியாக நிராகரிப்பதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42d5a264-bfe5-4a5b-b950-d8812275076e/26-6a81e738cd3bc.webp' /></p><p> </p><p>இது அத்திட்டத்தை அமல்படுத்துவதைப் பாதிப்பதோடு, நியாயமான மற்றும் நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்காக எடுக்கப்பட்டு வரும் கூட்டு முயற்சிகளையும் சீர்குலைக்கிறது என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p> 
இத்தகைய நிராகரிப்பு மூலம் காசாவிலும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் பிற பகுதிகளிலும் அமைதியைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளைத் தடுக்கும் முழுப் பொறுப்பையும் தற்போது இஸ்ரேலே ஏற்கிறது என்பது உறுதி செய்யப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>
மத்தியஸ்தர்களின் தீவிர முயற்சியால் உருவாக்கப்பட்ட இந்த வழிகாட்டல் வரைபடத்தை பாலஸ்தீன அமைப்புகள் ஏற்றுக்கொண்டுள்ளன. </p><p>
ஆயுதங்களைக் களைதல், இஸ்ரேலியப் படைகளை வாபஸ் பெறுதல், சர்வதேச நிலைப்படுத்தும் படையை அமைத்தல், காசாவின் நிர்வாக அதிகாரத்தை காசா நிர்வாகத்திற்கான தேசியக் குழுவிடம் ஒப்படைத்தல் மற்றும் காசாவை மறுசீரமைத்தல் உள்ளிட்ட முக்கிய நோக்கங்களைக் கொண்டு இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-16T16:43:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் க்ரிசில்டா மகனுக்காக இணைந்து செய்த விஷயம்.. வைரலாகும் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/madhampatty-rangaraj-and-joy-son-function-1786898238"></link>
            <id>https://cineulagam.com/article/madhampatty-rangaraj-and-joy-son-function-1786898238</id>
            <summary type="text">குக் வித் கோமாளி நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது அவரது இரண்டாவது மனைவி வழக்கு தொடுத்து இருந்தது எல்லோருக்கும் தெரிந்தது தான்.அவருக்கு பிறந்தது என்னுடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>குக் வித் கோமாளி நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது அவரது இரண்டாவது மனைவி வழக்கு தொடுத்து இருந்தது எல்லோருக்கும் தெரிந்தது தான்.</p><p>அவருக்கு பிறந்தது என்னுடைய குழந்தை என நிரூபித்தால் எல்லா செலவையும் ஏற்றுக்கொள்கிறேன் என நீதிமன்றத்தில் மாதம்பட்டி கூறினார். அதன் பின் நடந்த டிஎன்ஏ சோதனையில் அது மாதம்பட்டி ரங்கராஜ் குழந்தை தான் என உறுதியானது.
</p><p>அதன் பின் சமரசம் ஆகி தற்போது ரங்கராஜ் மற்றும் ஜாய் க்ரிசில்டா இருவரும் ஒன்று சேர்ந்துவிட்டனர்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">காதுகுத்து</span></p><p>
தற்போது மகனுக்கு மொட்டை அடித்து காதுகுத்தி இருக்கின்றனர். அந்த புகைப்படங்களை மகிழ்ச்சியாக ஜாய் வெளியிட்டு இருக்கிறார்.

.அந்த ஸ்டில்கள் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T16:37:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதி பிரதேச சபை உப தவிசாளர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pradeshiya-sabha-deputy-chairman-arrested-action-1786897898"></link>
            <id>https://jvpnews.com/article/pradeshiya-sabha-deputy-chairman-arrested-action-1786897898</id>
            <summary type="text">முல்லைத்தீவு, செம்மலை – கொக்கிளாய் வீதியில் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஐந்து பேர் கொக்குளாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (15) ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு, செம்மலை – கொக்கிளாய் வீதியில் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஐந்து பேர் கொக்குளாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><p>நேற்று (15) மாலை செம்மலை – கொக்கிளாய் வீதியில் பொலிஸார் மேற்கொண்ட வீதிச் சோதனை நடவடிக்கையின்போதே குறித்த ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6505a06b-414a-4b36-b244-f5654f12f788/26-6a81e5eba5de6.webp' /></p><p>

கைது செய்யப்பட்டவர்களில் உள்ளூராட்சி மன்றத்தின் உப தவிசாளர் ஒருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சந்தேகநபர்களிடமிருந்து 2 கிராம் ஹெரோயின் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட சான்றுப்பொருட்களும் தற்போது கொக்குளாய் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.</p><p>

சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான மேலதிக சட்ட நடவடிக்கைகளை கொக்குளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T16:31:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[2029ம் ஆண்டிலும் அநுரவே நாட்டின் ஜனாதிபதி - ஆளும் கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/in-2029-anura-will-be-prisident-says-npp-1786897685"></link>
            <id>https://tamilwin.com/article/in-2029-anura-will-be-prisident-says-npp-1786897685</id>
            <summary type="text">எதிர்வரும் 2029ம் ஆண்டிலும் அநுரகுமார திஸாநாயக்கவே ஜனாதிபதி என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போதைய அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 2029ம் ஆண்டிலும் அநுரகுமார திஸாநாயக்கவே ஜனாதிபதி என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>தற்போதைய அரசாங்கம் ஆறு மாதங்களுக்குள் கவிழ்ந்துவிடும் எனத் தொடக்கத்தில் கணித்த எதிர்க்கட்சிகள், இப்போது 2029 ஜனாதிபதித் தேர்தலைப் பற்றிப் பேச வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f693f21-390d-4abc-ba85-393fd9f6bf27/26-6a81e5173b3e4.webp' /></p><p>
</p><p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்குப் போதிய அனுபவம் இல்லை என சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முன்வைத்த அனைத்து வாதங்களும் தற்போது பொய்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் அரசாங்கத்தைக் கவிழ்க்கக் காத்திருந்தவர்கள், இப்போது 2029 ஜனாதிபதித் தேர்தலைப் பற்றி மட்டுமே கனவு காண்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>எந்தக் பக்கம் திரும்பினாலும் 2029 ஜனாதிபதி வேட்பாளர்கள் உருவாகியுள்ளனர் எனவும் அவர்கள் அனைவரும் ஏற்கனவே பதவிப் பிரமாணம் செய்யத் தயாராக இருப்பது போல் நடந்து கொள்கிறார்கள்" எனவும் தெரிவித்துள்ளார்.
</p><p>2024 ஆம் ஆண்டுத் தேர்தலில் தயக்கத்துடனோ அல்லது பயத்துடனோ மாலிமாவிற்கு வாக்களித்தவர்கள் மற்றும் வாக்களிக்காதவர்கள் கூட, தற்போது அரசாங்கத்திற்கு ஆதரவாக ஒன்றிணைந்து வருவதாகவும், அரசு மீதான மக்கள் நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் சம்பளம் மற்றும் வீடமைப்புப் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் முன்னெடுத்து வரும் திட்டங்கள் காரணமாக, அந்தப் பிராந்தியங்களிலும் அரசாங்கத்திற்குப் பெருமளவு ஆதரவு கிடைத்து வருகின்றது.
</p><p>மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் மக்கள் ஆதரவுமிக்க அரசாங்கமாக தேசிய மக்கள் சக்தி தொடர்ந்து பயணிக்கும் எனவும், அதன்படி 2029 ஆம் ஆண்டிலும் அனுர குமார திசாநாயக்க நிச்சயமாக மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் சுசந்த குமார நவரத்ன வலியுறுத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T16:28:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியுடன் ரூ 70,000 கோடியில் நீர்மூழ்கி ஒப்பந்தம்: தீவிரம் காட்டும் இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/submarine-deal-with-germany-1786897530"></link>
            <id>https://news.lankasri.com/article/submarine-deal-with-germany-1786897530</id>
            <summary type="text">India Nears Rs 70,000-Crore Submarine Deal With Germany: ஜேர்மனியுடன் ரூ. 70,000 கோடி மதிப்பிலான நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள இந்தியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>India Nears Rs 70,000-Crore Submarine Deal With Germany: ஜேர்மனியுடன் ரூ. 70,000 கோடி மதிப்பிலான நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள இந்தியா தீவிரம் காட்டி வருகிறது.
</p><p>நீண்ட காலமாகத் தாமதத்தில் உள்ள இந்தியாவின் 'புராஜெக்ட் 75(I)' நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தில், வரும் நாட்களில் இறுதியாக முன்னேற்றம் ஏற்படக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>இந்தியாவில் கட்டப்படும்</h2><p>
</p><p>இத்திட்டம் தொடர்பான முன்மொழிவு பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் பரிசீலனைக்கு வரவுள்ளது. இத்திட்டம் இந்தியக் கடற்படைக்காக சுமார் 70,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆறு மேம்பட்ட வழக்கமான நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டமைப்பதை உள்ளடக்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df83fdbb-56bf-435f-8f20-ee1c16fbc9f2/26-6a81e47c545ef.webp' /></p><p> </p><p>இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள், ஜேர்மனியின் 'திசென்க்ரூப் மரைன் சிஸ்டம்ஸ்' (TMKS) நிறுவனத்துடன் இணைந்து, மும்பையில் உள்ள 'மசாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட்' (MDL) நிறுவனத்தால் முக்கியமாக இந்தியாவில் கட்டப்படவுள்ளன. </p><p>இந்த ஒப்பந்தம் பல ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை நிலையிலேயே உள்ளது; வணிக ரீதியான நிபந்தனைகள் மற்றும் தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் தொடர்பான விவகாரங்களால் பேச்சுவார்த்தைகள் பலமுறை முடங்கியுள்ளன.
</p><p>பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதல் கிடைத்தால், ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கும் பணிகள் தொடங்குவதற்கும் இறுதியாக வழிவகை ஏற்படும்.</p><p></p><p>
</p><p>கனரக டார்பிடோக்களை (torpedoes) உருவாக்கவும், தயாரிக்கவும், ஒருங்கிணைக்கவும் மற்றும் இறுதியில் அவற்றை நவீனமயமாக்கவும் அந்த ஜேர்மானிய நிறுவனம் ஹைதராபாத்தைச் சேர்ந்த VEM டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது. </p><p>TKMS-இன் துணை நிறுவனமான ATLAS ELEKTRONIK-உம் இதில் ஈடுபட்டுள்ளது; இந்தியத் தரப்பில் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனைகளை VEM மேற்கொள்கிறது.</p><h2>சொந்தமாக வடிவமைக்கும் திறன்</h2><p> </p><p>இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த ஒப்பந்தம் என்பது வெறும் ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவது பற்றியது மட்டுமல்ல. உள்நாட்டுத் திறனை வலுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்; அதாவது கட்டுமானம், பராமரிப்பு, மேம்பாடு மற்றும் எதிர்காலத்தில் சொந்தமாக வடிவமைக்கும் திறன் ஆகியவற்றை வளர்த்துக்கொள்வதே இதன் இலக்காகும். </p><p>இந்தப் படகுகள், காற்றுச் சார்பற்ற உந்துவிசை அமைப்புடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வழக்கமான டீசல்-மின்சார நீர்மூழ்கிக் கப்பல்களால் இயங்கக்கூடிய நேரத்தை விட, இவை மிக நீண்ட நேரம் நீருக்கடியில் மூழ்கியிருக்க முடியும். </p><p>மேலும், இவற்றில் நவீன உணர்விகள், நீர்மூழ்கி ஏவுகணைகள் மற்றும் மின்னணுப் போர் அமைப்புகளும் பொருத்தப்பட்டிருக்கலாம். உள்நாட்டு கப்பல் கட்டும் தளங்களுக்கும் நிறுவனங்களுக்கும், வெறும் பாகங்களை ஒன்றிணைப்பதுடன் நின்றுவிடாமல்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fad4f8c2-b708-467e-9934-f02ddc912edd/26-6a81e47d048cb.webp' /></p><p> </p><p>தொழில்நுட்பத்தை முழுமையாக உள்வாங்கி அதன் அடிப்படையில் மேலும் மேம்பாடுகளைச் செய்யவும் போதுமான வாய்ப்பை இந்த ஒப்பந்தம் வழங்குகிறதா என்பதை இந்திய அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. </p><p>முன்னதாக, பிரான்ஸின் உதவியுடன் MDL நிறுவனம் ஆறு கல்வாரி-வகை நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டியது. இவற்றில் முதலாவது 2017-இல் சேவையில் இணைந்த நிலையில், இறுதியானதான 'ஐஎன்எஸ் வாக்ஷீர்' (INS Vagsheer) 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. </p><p>இந்தியா பல தசாப்தங்களாக ஜேர்மன் வடிவமைப்பிலான 'டைப் 209/1500 ஷிஷுமார்' (Shishumar) ரக நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்கி வருகிறது; இவற்றில் பல, 1980-களிலிருந்தே MDL நிறுவனத்தில் கட்டப்பட்டவை ஆகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-16T16:23:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆதரவில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/public-approval-of-the-government-declines-1786896997"></link>
            <id>https://tamilwin.com/article/public-approval-of-the-government-declines-1786896997</id>
            <summary type="text">அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆதரவில் சரிவு பதிவாகியுளள்தாக முன்னணி ஆய்வு நிறுவனமொன்றின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார நிலைமை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆதரவில் சரிவு பதிவாகியுளள்தாக முன்னணி ஆய்வு நிறுவனமொன்றின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்த எதிர்மறையான பார்வைகளால், தற்போதைய அரசாங்கத்திற்கான மக்களின் ஆதரவு 50 வீதமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
‘வெரிடே ரிசர்ச்’ நிறுவனம் நடத்திய ஜூலை 2026 ‘மூட் ஆஃப் தி நேஷன்’ கருத்துக்கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.</p><p><br></p><p>
</p><p>தேர்தலுக்குப் பின்னர் கடந்த பெப்ரவரி மாதம் 65 வீதமாக இருந்த அரசாங்கத்திற்கான மக்கள் ஆதரவு, தற்போது 50 வீதமாகச் சரிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/553ee9fd-0e69-4d74-b992-1ddf48b64bd5/26-6a81e266cde4e.webp' /></p><p>
</p><p>தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கு 50 வீதமானவர்கள் ஆதரவு தெரிவித்துள்ள அதேவேளையில், 31.4 வீதமானவர்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். 
நாட்டின் பொருளாதாரம் "மேம்பட்டு வருகிறது" என்று கூறுபவர்களின் விகிதம் 64 வீதத்திலிருந்து 41.63 வீதமாக ஆகக் குறைந்துள்ளது. </p><p>அதேவேளை, நிலைமை "மோசமடைந்து வருகிறது" என நம்புபவர்களின் விகிதம் 15 வீதத்திலிருந்து 40.29 வீதமாக உயர்ந்துள்ளது.
</p><p>கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 55.59 வீதமானவர்கள் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையை "மோசமானது" என மதிப்பிட்டுள்ளனர்.</p><p> 38 வீதமானவர்கள் மட்டுமே "நல்லது" அல்லது "மிகவும் சிறப்பானது" எனத் தெரிவித்துள்ளனர்.
பொருளாதார நம்பிக்கைக் குறியீடு மீண்டும் மறை பெறுமதி நிலைக்குச் சென்று 'மைனஸ் 8' ஆகப் பதிவாகியுள்ளது. </p><p>இக்குறியீடு 2024இன் பாதியில் 39 ஆக இருந்தது, பின்னர் 2025 பெப்ரவரிக்குப் பின்னர் நேர்மறை நிலைக்கு உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
</p><p>இந்தக் கருத்துக்கணிப்பு 2026 ஜூலை 11 முதல் 30 வரை நாடு முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், 2,013 இலங்கை நபர்கள் இடையே நடத்தப்பட்டது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T16:16:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுகாதாரத்துறைக்கு ரூ.100 மில்லியன் ஒதுக்கீடு ; மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rs-100-million-allocated-for-the-health-sector-1786896853"></link>
            <id>https://jvpnews.com/article/rs-100-million-allocated-for-the-health-sector-1786896853</id>
            <summary type="text">மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி – ஓந்தாச்சிமடம் கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலையின் புதிய விடுதி கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி – ஓந்தாச்சிமடம் கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலையின் புதிய விடுதி கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டை சரியான தலைமைத்துவத்துடன் முன்னெடுத்துச் செல்வதாக தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

2026ஆம் ஆண்டுக்கான மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் வரவு–செலவுத் திட்டத்தில் சுமார் 600 மில்லியன் ரூபாய் முன்மொழியப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான தொகையைக் கொண்ட வரவு–செலவுத் திட்டத்தை முன்வைத்த இலங்கையின் முதலாவது பிரதேச சபையாக தமது சபை திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
பிரதேச மக்களின் சுகாதாரத் தேவைகளை மேம்படுத்தும் நோக்கில், குறித்த வரவு–செலவுத் திட்டத்தில் சுமார் 100 மில்லியன் ரூபாய் சுகாதாரத்துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தவிசாளர் தெரிவித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28806d75-1dbf-4476-a18d-0ed40a47d3b1/26-6a81e1d729a59.webp' /></p><p>இதேவேளை, ஓந்தாச்சிமடம் கடற்கரைப் பகுதியை பாசிக்குடா போன்ற முக்கிய சுற்றுலாத்தலமாக அபிவிருத்தி செய்து அழகுபடுத்துவதற்காக 18 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமைக்கு கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
</p><p>
ஓந்தாச்சிமடம் கடற்கரையை கிழக்கு மாகாணத்தின் சிறந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக உருவாக்குவதற்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் கூறினார்.
</p><p>
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஜனாதிபதி விஜயம் செய்திருந்தபோது, சுகாதாரத்துறையை மேம்படுத்துவதுடன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அதிகளவில் ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்ததாகவும் வினோராஜ் தெரிவித்தார்.
</p><p>
பொது இடங்களில் வெற்றிலை எச்சில் துப்புவதைத் தடுப்பதிலும் பிரதேச சபை முன்னுதாரணமாக செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். </p><p>இதன் ஒரு பகுதியாக, கடந்த மே மாதம் 12ஆம் திகதி பொது இடங்களில் வெற்றிலை எச்சில் துப்பியதாகக் கூறப்படும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக சபையின் சுகாதார அதிகாரி ஊடாக களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதாகவும், அதில் 1,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>

அத்துடன், அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அணுக வேண்டும் எனவும் தவிசாளர் வலியுறுத்தினார்.
</p><p>
தமிழ் மக்களின் தேவைகளை எந்த அரசாங்கம் சரியான முறையில் நிறைவேற்றுகின்றதோ, அந்த அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு தாம் ஆதரவளிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
</p><p>
நாட்டை சரியான தலைமைத்துவத்துடன் முன்னெடுத்துச் செல்லும் அரசாங்கத்தின் கீழ், தமது பிரதேச மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக கட்டமைப்புடன் செயற்படுவதே தமது நோக்கம் என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T16:14:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவிலிருந்து தாயகத்துக்கு திரும்பிய ஈழப் பிரஜைக்கு நேர்ந்த விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-from-canada-drowned-in-the-ocean-1786884513"></link>
            <id>https://tamilwin.com/article/man-from-canada-drowned-in-the-ocean-1786884513</id>
            <summary type="text">கனடாவில் இருந்து நாடு திரும்பிய ஈழப் பிரஜையொருவர் முல்லைத்தீவு
நாயாற்று கடலில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று(16.08.2026)...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் இருந்து நாடு திரும்பிய ஈழப் பிரஜையொருவர் முல்லைத்தீவு
நாயாற்று கடலில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.</p><p>
இந்த சம்பவம் இன்று(16.08.2026) இடம்பெற்றுள்ளது.</p><h2> 

நண்பர்களுடன் கடலுக்கு சென்ற நபர்</h2><p>யாழ்ப்பாணத்தை சேர்ந்த 51 வயதான சதீசன் என்ற நபர், கனடாவில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் வருகை தந்துள்ளார்.</p><p>
இந்த நிலையில், அவர் தன்னுடைய 5 நண்பர்களுடன் முல்லைத்தீவினை சுற்றிப்பார்ப்பதற்காக சென்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a3ab7b0-4750-4f55-b015-3b53714651ce/26-6a81b25e9e16d.webp' /></p><p>
</p><p>இதன்போது, நண்பகல் அளவில் நாயாற்று பகுதிக்கு நண்பர்களுடன் குளிக்க சென்ற வேளையில், கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><h2>சடலம் மீட்பு</h2><p>அருகில் நின்றவர்களின் உதவியுடன் மீட்கப்பட்ட அவரின் சடலம், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p>
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T16:12:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[உணவுப் பெருவிழா ; தமிழ்க் கூட்டு உளவியல் ; மாகாண சபைத் தேர்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/reecha-food-festival-1786891993"></link>
            <id>https://ibctamil.com/article/reecha-food-festival-1786891993</id>
            <summary type="text">தமிழர் தாயகத்தில் நடந்த ஒப்பபீட்டளவில் பெரிய உணவுப் பெருவிழா சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.இயக்கச்சிப் பகுதியில் அமைந்திருக்கும் “ரீச்சா” நிறுவனம் ஒழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழர் தாயகத்தில் நடந்த ஒப்பபீட்டளவில் பெரிய உணவுப் பெருவிழா சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.இயக்கச்சிப் பகுதியில் அமைந்திருக்கும் “ரீச்சா” நிறுவனம் ஒழுங்குசெய்த உணவுப் பெருவிழா திட்டமிடப்பட்டபடி மூன்று நாட்கள் நடக்கவில்லை முதலாவது நாளிலேயே இடைநிறுத்தப்பட்டது.</p><p>

யாழ்ப்பாணத்தின் நவீன வரலாற்றில் சிறிய அளவில் உணவு பெரு விழாக்கள் ஆங்காங்கே நடந்திருக்கின்றன.ஆனால் ரீச்சாவின் உணவுப் பெருவிழா ஒப்பீட்டளவில் பிரமாண்டமானது.</p><h2>தமிழ் பகுதிகளில் நடந்த முதலாவது பெரிய உணவுப் பெருவிழா</h2><p>உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து எழுபதுக்கும் குறையாத சமையல் கலை வல்லுனர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.நூற்றுக்கணக்கான வகை உணவுகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.முன்பதிவுகளின் அடிப்படையில் 5000 பேர் வரை வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.ஆனால் முன்பதிவு இல்லாமலேயே மொத்தம் 15000த்துக்கு அதிகமானவர்கள் அந்த இடத்தில் குவிந்திருக்கிறார்கள்.நிலைமையை ரீச்சா நிறுவனத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதைத்தான் பின்வந்த செய்திகள் நிரூபித்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f362475-1b35-455d-96f3-cd6ba978e6fc/26-6a81dfdace7fe.webp' /></p><p>தமிழ் பகுதிகளில் நடந்த முதலாவது பெரிய உணவுப் பெருவிழா ஏன் முதலாவது நாளுடன் நிறுத்தப்பட்டது?அதற்கு இரண்டு பிரதான காரணங்களைக் கூறலாம்.முதலாவது காரணம்,ரீச்சா நிறுவனத்தின் முகாமைத்துவக் கொள்ளளவில் காணப்பட்ட போதாமைகள்.இரண்டாவது காரணம் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் தலைமைத்துவ வெற்றிடமும் அதன் விளைவுகளும்.</p><h2>கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம்</h2><p>முதலாவது காரணத்தை சிறிது விரிவாகப் பார்க்கலாம்.எதிர்பார்த்ததைவிட அதிக தொகையினர் வந்தபோது அவர்களைக் கையாள்வதற்கு ரீச்சாவிடம் பொருத்தமான ஏற்பாடுகள் இருக்கவில்லை.அதனால் நிலைமை கட்டுக்கடங்காமல் போவதைத் தடுப்பதற்காக மூன்று நாள் விழாவை முதலாவது நாளுடன் நிறுத்த வேண்டியதாயிற்று.அங்கே அவ்வளவு தொகை மக்கள் கூடியதை தமிழ் கூட்டு உளவியலின் ஒரு குறிகாட்டி என்று எடுத்துக் கொள்ளலாமா?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17adc42a-6625-4a83-bb60-dd6769a9ddd4/26-6a81deab3ea46.webp' /></p><p>தமிழ்மக்கள் கொண்டாட்ட மனோ நிலையோடு இருக்கிறார்கள்.கொண்டாடக் கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும் கொண்டாடித் தீர்க்க ஆசைப்படுகிறார்கள்.அது உணவு விழாவாக இருக்கட்டும்,ஊர்க் கோவில் திருவிழாவாக இருக்கட்டும்,பெருங்கோவில் திருவிழாக்களாக இருக்கட்டும், அல்லது பெருங் கடைகளின் திறப்பு விழாக்களாக இருக்கட்டும்,எதுவானாலும் அங்கே மக்கள் ஆயிரக்கணக்கில் திரள்கிறார்கள்.</p><p>&nbsp; ஆனால் அதை வைத்துக்கொண்டு ரீச்சாவுக்குப் போன மக்கள் ஏன் தையிட்டிக்கு வரவில்லை ? நோ-லிமிட்டுக்குப் போன மக்கள் ஏன் பலாலிக்கோ மயிலிட்டிக்கோ போராட வரவில்லை? என்று கேட்டு மக்களைக் குறை கூறுவது தோல்வியுறும் ஒரு சமூகத்தின் இயல்புதான்.</p><h2>சிவப்பு மஞ்சள் கொடிகளை அசைத்தால் மக்கள் பின்னுக்கு வருவார்கள்&nbsp;</h2><p>மாறாக ரீச்சாவுக்கும் நல்லூருக்கும் திரளும் மக்களை எப்படி தையிட்டிக்குக் கொண்டு வருவது என்று சிந்தித்து உழைப்பதுதான் பெருந்திரள் அரசியலை முன்னெடுக்க விரும்பும் வெற்றிபெற்ற சமூகம் ஒன்றின் இயல்பாக இருக்கவேண்டும்.முதலாளிகள் தங்களுடைய வணிக இலக்குகளை நோக்கி விடாது உழைக்கலாம் என்றால் அரசியல்வாதிகள் தங்களுடைய அரசியல் இலக்குகளை நோக்கி உழைக்கத்தானே வேண்டும்? சிவப்பு மஞ்சள் கொடிகளை அசைத்தால் மக்கள் பின்னுக்கு வருவார்கள் என்று ரீல்ஸ்களின் காலத்திலும் நம்பிக்கொண்டிருக்கலாமா?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe7769e0-d590-44ad-9aa7-44014f9b87e0/26-6a81deac24b2b.webp' /></p><p>தமிழ்மக்கள் தமது தேசிய அரசியலின் மீது உணர்திறன் குறைந்தவர்களாக மாறி வருகிறார்களா? ஒரு பகுதியினர் அரசியல் நீக்கம் செய்யப்படுகிறார்கள்.ஒரு தலைமுறையின் கைபேசி செயலிகளுக்குள்,அவர்கள் விரும்பிப் பார்க்கும் ரீல்ஸ்களுக்குள் தமிழ்த்தேசிய உரையாடல் இல்லை.ஒடுக்குமுறையும் ஆக்கிரமிப்பும் நேரடியானதாக இல்லாமல் மறைமுகமானதாக திணைக்களங்களின் வழி முன்னெடுக்கப்படுவதாகக் காணப்படும் ஓர் அரசியல் சூழலில்,தமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அரசியலின் மீது தமிழ் மக்களை உணர்திறன் மிக்கவர்களாக மாற்றவேண்டிய பொறுப்பு யாருடையது? தமிழ்மக்கள் அரசியல் நீக்கம் செய்யப்படுகிறார்கள் என்று சொன்னால் அது தமிழ் அரசியல்வாதிகளின் தோல்விதான்.</p><h2>பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்ட&nbsp; ரீச்சா முதலாளி</h2><p>&nbsp;கொண்டாட்ட மனோநிலையோடு இருக்கும் மக்கள் உணவு விழாவை நோக்கி குவிந்தார்கள்.அவர்களைக் கட்டுப்படுத்த ரீச்சாவால் முடியவில்லை.ஆனாலும் ரீச்சா முதலாளி பாஸ்கரன் அதற்காக பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.முன்பதிவு செய்தும் உணவு கிடைக்காதவர்களுக்கு பணம் மீள அளிக்கப்படும் என்று உறுதி கூறியுள்ளார்.</p><p><iframe width="538" height="956" src="https://www.youtube.com/embed/EGcV0Fr2rf8" title="கட்டுக்கடங்காத சனக்கூட்டம்: இடைநிறுத்தப்பட்டது றீச்ஷாவின் உணவுத்திருவிழா!" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><p>இரண்டாவது காரணம்,தமிழ்த் தேசிய அரசியலில் காணப்படும் தலைமைத்துவ வெற்றிடம்.அதனால் தமிழ்மக்கள் ஒருபுறம் அரசியல்நீக்கம் செய்யப்படுகிறார்கள்.இன்னொருபுறம் ஒரு சமூகமாக,ஒரு தேசமாக,ஒரு கிராமமாக,ஏன் சில சமயங்களில் ஒரு குடும்பமாகக்கூட திரள முடியாத நிலைமைகள் வளர்ந்து வருகின்றன.</p><p>தமிழ் மக்கள் யாரையும் நம்பாத மக்களாக;எல்லோரையும் எல்லாவற்றையும் சந்தேகிக்கும் மக்களாக;மற்றவர்கள் மீது பிழை கண்டுபிடிக்கின்ற எரிச்சலுற்ற குறைகூறிகளாக;வெறுப்பர்களை விடுப்புணர்வோடு ரசிக்கின்ற மக்களாக,சமூக ஊடக வலைத்தளங்களில் நோய்க்கூறான,நஞ்சான விவாதங்களில் ஈடுபடும் மக்களாக மாறிவருகிறார்கள்.ஒருவர் மற்றவரை நம்பாமை என்பது அதன் வளர்ச்சிக் கட்டத்தில் தன்னைத்தானே நம்பாமையில் வந்து முடிகிறது.தமிழ்ச் சமூகம் ஏறக்குறைய அப்படி ஒரு நிலையை நோக்கித்தான் செல்கிறதா?</p><p>சில தினங்களுக்கு முன் ஆளுநர் செயலகத்தில் நடந்த ஒரு கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்ட புள்ளி விபரங்களின்படி யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று மாதங்களுக்குள் 80 பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள்.நாடு முழுவதிலும் ஒரு லட்சம் பேருக்கு 15 பேர் என்ற விகிதத்துடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாணத்தில் ஒரு லட்சம் பேருக்கு 30பேர் என்ற விகிதத்தில் தற்கொலை செய்திருக்கிறார்கள்.</p><h2>&nbsp;இளையவர்களுக்கு முன்னுதாரணமாக மாறும்&nbsp;புலம்பெயர்ந்த தமிழர்கள் </h2><p>&nbsp;இந்தப் புள்ளி விபரங்கள் மட்டுமல்ல இதைவிட ஆபத்தான புள்ளி விபரங்கள் உண்டு. மூன்றாவது புலப்பெயர்ச்சி அலை ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தண்ணீர்ப் போத்தல்களோடும் ஜம்பர்களோடும் வித்தியாசமான காலணிகளோடும் உள்ளூர் வீதிகளில் நடந்து திரியும் புலம்பெயர்ந்த தமிழர்கள் இளையவர்களுக்கு முன்னுதாரணமாக மாறுகிறார்கள்.முதலாவது பட்டப்படிப்பை முடித்த பலரும் இரண்டாவது பட்டப்படிப்பை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி புலம்பெயர விரும்புகிறார்கள்.மூன்றாவது புலப்பெயர்ச்சி அலை இளையவர்களை அள்ளிக்கொண்டு போய்விடுமா?தமிழ்க் கட்சிகளால் அவர்களைத் தமது தாய் நிலத்தில் வேர் கொண்டு பூத்துக் காய்க்குமாறு ஊக்கப்படுத்த முடியுமா?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94b95d06-b68d-44d6-8fe8-ccf0321cb302/26-6a81dbe71967f.webp' /></p><p>&nbsp; ஒருபுறம் கோவில்களில் சுவாமி தூக்க இளையோர் இல்லை.இன்னொருபுறம் அதே கோவில்களில் பின்னிரவில் நடக்கும் இசை நிகழ்ச்சிகளில் மேடையின் முன் வரிசையில் நின்று ஆடும் இளையவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்?</p><p>தேசியவாத அரசியல் எனப்படுவது ஒரு மக்கள் கூட்டத்தைத் தேசமாகத் திரட்டுவதுதான்.ஆனால் நமது தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளில் அநேகர் மக்களை மட்டுமல்ல தமது சொந்தக் கட்சிகளையே திரட்ட முடியாதவர்களாகக் காணப்படுகிறார்கள்.</p><p>தமிழ் மக்களின் அரசியல்,சமூகப் பொருளாதார,பண்பாட்டு விடயங்களில் யார் சொல்வதை தமிழ்மக்கள் கேட்பார்கள்? யாரை தமது முன் உதாரணமாகப் பார்க்கிறார்கள்?இந்தத் தலைமைத்துவ வெற்றிடம் காரணமாக தமிழ் மக்களின் அரசியல்,சமூகப்பொருளாதார வாழ்வைத் தீர்மானிக்கும் விவகாரங்களில் தமிழ்மக்கள் முடிவெடுக்க முடியாத மக்களாகவும் சமூக ஊடக வலைத்தளங்களின் பெருமளவுக்கு பொழுதுபோக்கான,நஞ்சான விவாதங்களால் திசைதிருப்பப்படும் மக்களாக,யாரையும் நம்பாத மக்களாக,ஒரு கட்டத்தில் தங்களைத் தாங்களே நம்பாத மக்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.</p><h2>&nbsp;மாகாண சபைத் தேர்தலில் இறங்கக்கூடும் என்ற ஊகம்</h2><p>ரீச்சா ஒரு வணிக வளாகம்.அதற்கென்று வணிக இலக்குகள் உண்டு. வணிகர்கள் வணிக இலக்குகளை முன்வைத்து உழைப்பார்கள்.ஆனால் அரசற்ற தமிழ் மக்கள் தமது தேசிய முதலாளிகளை எப்படி அணுக வேண்டும்? தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது என்ற நோக்குநிலையில் இருந்துதான் அணுக வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9957698e-0b97-4582-80a9-ddc5741352c7/26-6a81dbe66528c.webp' /></p><p>ரீச்சா முதலாளி மாகாண சபைத் தேர்தலில் இறங்கக்கூடும் என்ற ஊகம் கடந்த சில மாதங்களாக சமூக ஊடக வலைத்தளச் சூழலில் பலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.ரீச்சா முதலாளிக்குச் சொந்தமான ஊடகங்கள் ஒரு பகுதி அரசியல்வாதிகளுக்கு எதிரான கருத்துக்களை குவிமையப்படுத்துகின்றன என்ற குற்றச்சாட்டும் உண்டு.இதனால் ரீச்சாவின் உணவுப் பெரு விழாவின் மீதான விமர்சனங்களில் ஒரு பகுதிக்கு அரசியல் பரிமாணம் உண்டு.</p><p>ரீச்சா முதலாளி ஒரு முகநூல் வாசிதான்.அடிக்கடி நேரலையில் வருபவர்தான்.அடிக்கடி கண்முன் தோன்றி கொண்டேயிருப்பார்.அது அவருடைய பாணி.அவருடைய விருப்பம்.ஆனால் அடிக்கடி கண்முன் தோன்றும்போது,அது அவர் மீது எரிச்சல் கொண்டவர்களை அடிக்கடி கோபப்படுத்தும்;அடிக்கடி சினக்கச் செய்யும்;அவர்கள் அடிக்கடி எழுதிக் கொண்டேயிருப்பார்கள்.எனினும் தன் மீது கொட்டப்படும் விமர்சனங்களையும் வெறுப்பையும் செமித்துக்கொண்டு அவர் தொடர்ந்து நேரலையில் வருகிறார்.</p><p>அவர் ஒரு நேரலைவாசி,எதிர்காலத்தில் தேர்தல் அரசியலில் குதிக்கக்கூடும் போன்ற எல்லாவற்றிற்கும் அப்பால்,முதலாவதாகவும் முக்கியமானதாகவும் தமிழ்த்தேசிய நோக்குநிலையில் அவர் ஒரு தேசிய முதலாளி;தமிழ்த் தேசிய முதலாளி.</p><p>எல்லாத் தேசிய முதலாளிகளும் தேச நிர்மாணத்தின் பிரிக்கப்படவியலாத பங்காளிகளாக இருந்திருக்கிறார்கள் என்பதைத்தான் வரலாறு நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது.தேசத்தைக் கட்டியெழுப்புவது என்பது தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதும்தான்.அதை நடைமுறை வார்த்தைகளில் சொன்னால்,தேசிய முதலாளிகளை,நிறுவன உருவாக்கிகளைக் கட்டியெழுப்புவதும்தான்.</p><h2>செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்படும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை</h2><p>&nbsp;தமிழ்மக்கள் தங்களை ஒரு தேசமாகத் திரட்டிக்கொள்ள வேண்டும் என்ற தாகத்தோடு சிந்திப்பார்களாக இருந்தால் நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் நிறுவனங்களை உருவாக்கும் கெட்டிக்காரர்களை எப்படித் தேச நிர்மானத்தின் பிரிக்கப்படவியலாத பகுதிகளாக மாற்றலாம் என்றுதான் சிந்திப்பார்கள்.ஒரு சமூகத்துக்குள் உருவாகும் நிறுவன உருவாக்கிகள் எல்லாருமே தேசியப் பண்பு மிக்கவர்களாக அல்லது தேசிய விழிப்பைக் கொண்டவர்களாக அல்லது தெளிவான விளக்கமான அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டவர்களாக இருப்பார்கள் என்றில்லை.அவர்கள் தங்கள் துறைசார்ந்து கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்.அந்தத் தேசிய ஆற்றலை எப்படி ஒரு தேசிய வளமாக மாற்றலாம்? தேச நிர்மாணத்தின் ஒரு பகுதியாக இணைத்துக்கொள்ளலாம்?என்று சிந்திப்பதுதான் அரசற்ற தமிழ் மக்களுக்குப் புத்திசாலித்தனமானது; நீண்டகால நோக்கு நிலையில் தீர்க்கதரிசனமானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/758d2a2c-5157-4dc6-b5ec-921b466d1236/26-6a81dbe554f2f.webp' /></p><p>ஆனால் இதுதொடர்பில் தேசத்தைத் திரட்டும் நோக்குநிலையில் இருந்து முதலாளிகளையும் நிறுவன உருவாக்கிகளையும் அணுகுவதற்கு மையமான ஒரு பொதுவான கட்டமைப்பு தமிழ்மக்கள் மத்தியில் இல்லை.இதுதான் பிரச்சினை.தமிழ் மக்களுக்கு யார் பொறுப்பு?</p><p>தேசிய பண்புமிக்க பெரு முதலாளிகளை எப்படித் தேசிய பொருளாதாரத்தின் அங்கமாக மாற்றலாம் என்று சிந்திக்கும் தீர்க்கதரிசனம்மிக்க தலைவர்கள் இல்லாத வெற்றிடத்தில்;சமூகத்தை ஒரு பொதுக் கருத்தை நோக்கி;பொதுவான நியாயங்களை நோக்கி;பொதுவான சமூகப்பொருளாதார,கலை பண்பாட்டு இலட்சியங்களை நோக்கி வழிநடத்தவல்ல தலைவர்களோ அமைப்புக்களும் இல்லாத ஒரு வெற்றிடத்தில்,தமிழ்மக்கள் தங்களுக்குள் தாங்களே மோதிக்கொண்டு;தங்களைத் தாங்களே திட்டிக்கொண்டு;தங்களைத் தாங்களே நம்பாமல்;தங்களைத் தாங்களே தோற்கடித்துக் கொண்டிருக்கும்போது,செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்படும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 500ஐத் தாண்டி விட்டது.</p><p>நன்றி - நிலாந்தன்</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T16:06:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை வைத்தியசாலை விவகாரம் குறித்து இரா.பிரபாகரன் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/prabhakaran-allegations-kalmunai-hospital-issue-1786896037"></link>
            <id>https://jvpnews.com/article/prabhakaran-allegations-kalmunai-hospital-issue-1786896037</id>
            <summary type="text">அம்பாறை கல்முனை வைத்தியசாலைப் பணிப்பாளர் டொக்டர் சுகுணன் சுகாதார அமைச்சின் சுற்றுநிருபங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு அமைவாகவே செயற்பட்டுள்ளதாகவும், அதனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை கல்முனை வைத்தியசாலைப் பணிப்பாளர் டொக்டர் சுகுணன் சுகாதார அமைச்சின் சுற்றுநிருபங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு அமைவாகவே செயற்பட்டுள்ளதாகவும், அதனை மத அல்லது கலாச்சாரப் பிரச்சினையாக திசைதிருப்பி இனங்களுக்கிடையே முறுகலை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாகவும் ஈரோஸ் கட்சியின் இரா.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

டொக்டர் சுகுணனை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு உரிய அடிப்படை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரான் ஹாஷிமை நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா சந்தித்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இரா.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df03b766-6f3d-42d3-8c65-b0a23cc93758/26-6a81dea7dfc6b.webp' /></p><p> இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் (CID), அரசாங்கமும் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

மேலும், ஓட்டமாவடியில் காளி கோயிலுக்குச் சொந்தமான காணி அபகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் மற்றும் ஏறாவூர் ஐயங்கேணியில் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக தயார்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 26 ஏக்கர் பரம்பரை காணி சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
அதேபோன்று, உரிய அனுமதிகள் இன்றி சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அதன் நிதி மூலங்கள், சொத்துக்கள் மற்றும் காணி தொடர்பான ஆவணங்கள் குறித்து புலனாய்வு ரீதியான ஆய்வு நடத்தப்பட வேண்டும் எனவும் இரா.பிரபாகரன் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

இதேவேளை, தமிழ் அரசியல் தலைமைகள் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக மக்களை ஏமாற்றும் அரசியலை முன்னெடுத்து வருவதாக அவர் விமர்சித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41d053f7-6e22-4a3e-92d4-a0f667a81782/26-6a81dea737ce6.webp' /></p><p>

குறிப்பாக, கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் ஆறு தமிழ் பேசும் கட்சிகள் இணைந்திருப்பது நிரந்தரமான தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சி அல்ல என்றும், தேர்தல் காலங்களில் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக முன்னெடுக்கப்படும் அரசியல் நாடகம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
</p><p>
ஹிஸ்புல்லா மற்றும் அவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கமும் குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், ஈரோஸ் கட்சி சட்டரீதியான அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தி உச்சக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தயாராக இருப்பதாகவும் இரா.பிரபாகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளின் பதில்கள் மற்றும் அதிகாரப்பூர்வ விசாரணைகளின் முடிவுகள் வெளியாகும் பட்சத்தில் அவை குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டியது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T16:00:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பங்களாதேஷ் டெஸ்ட் வரலாற்றில் மகத்தான சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bangladesh-thrash-australia-1786878124"></link>
            <id>https://canadamirror.com/article/bangladesh-thrash-australia-1786878124</id>
            <summary type="text">டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பரபரப்பான திருப்புமுனையாக, டார்வினில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டின் முன்னணி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பரபரப்பான திருப்புமுனையாக, டார்வினில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டின் முன்னணி அணியான ஆஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பங்களாதேஷ் அணி வரலாற்றுப் பதிவை எழுதியுள்ளது.</p><p>
26 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பங்களாதேஷ் அணி ஆஸ்திரேலிய மண்ணில் பதிவு செய்யும் முதல் டெஸ்ட் வெற்றி இதுவென்பதுடன், சர்வதேச கிரிக்கெட்டில் அந்த அணி பெற்ற மிகப்பெரிய வெற்றியாகவும் இது கொண்டாடப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc6824f8-4932-4791-9de4-266f54e7b759/26-6a81da035e48c.webp' /></p><p>போட்டியின் நான்காம் நாளில் 284 ரன்களுக்கு ஆஸ்திரேலியாவைச் சுருட்டிய பங்களாதேஷ் அணிக்கு வெற்றி பெற வெறும் 57 ரன்களே தேவையாக இருந்தது. சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் மிராஸ் 66 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் விக்கெட் சரிவை விரைவுபடுத்தினார்.
</p><p>ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் நிதானமாக விளையாடி 104 ரன்கள் எடுத்துப் போராடிய போதிலும், ஹசன் மஹ்மூதின் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்ததும் ஆஸ்திரேலியாவின் வெற்றி வாய்ப்பு முற்றிலும் பறிபோனது.
</p><p>இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்திய பந்துவீச்சாளர் ஹசன் மஹ்மூத் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
</p><p>இறுதியில், மொமினுல் ஹக் மற்றும் ஷாத்மன் இஸ்லாம் ஆகியோரின் உறுதியான ஆட்டத்தால் பங்களாதேஷ் அணி 57 ரன்கள் என்ற இலக்கை எளிதாக எட்டி வரலாற்றுச் சாதனையைப் படைத்தது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T15:41:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[44 வயதிலும் தங்க சிலை போல் இருக்காங்களே! படு வைராகும் சினேகாவின் புதிய புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/44-years-old-actress-sneha-new-photo-shoot-viral-1786890467"></link>
            <id>https://manithan.com/article/44-years-old-actress-sneha-new-photo-shoot-viral-1786890467</id>
            <summary type="text">44 வயதிலும் குறையாத இளமையுன் அசத்தும் நடிகை அழகிய பட்டு சேலையில் அம்மன் சிலை போல் ஜொலிக்கும் அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>44 வயதிலும் குறையாத இளமையுன் அசத்தும் நடிகை அழகிய பட்டு சேலையில் அம்மன் சிலை போல் ஜொலிக்கும் அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.&nbsp;</p><h2>

நடிகை சினேகா </h2><p>
தமிழில் என்னவளே என்றத் திரைப்படம் மூலம் சினேகா அறிமுகமாகினாலும், விஜய்யுடன் வசீகரா படத்தில் நடித்தன் பின்னர் தான் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/197a78a6-1384-488e-a94e-33b007a53f1c/26-6a81cdb249910.webp' /></p><p>அதனை தொடர்ந்து சினேகாவுக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. அடுத்தடுத்த படங்கள் எல்லாம் ஹிட் கொடுக்க சினேகாவுக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது.</p><p>

இவரது நடிப்பிற்கு மட்டுமல்ல சிரிப்பிற்கும் அவ்வளவு ரசிகர்கள் இருக்கின்றார்கள். நடிகர் பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு எனும் திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தார் சினேகா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d05e0807-0478-4db4-a57e-0cd42bf6550e/26-6a81cdb333dc5.webp' /></p><p>அதன் பின்னர் இருவருக்கும் இடையில் காதல் மலர அது திரையுலகமே அசந்து போகும் அளவிற்கு திருமணத்தில் முடிந்தது. இந்த தம்பதியினருக்கு விஹான் (Vihaan) என்ற மகனும், ஆத்யந்தா (Aadhyantaa) என்ற மகளும் இருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10c9db78-ae63-4f83-a852-ca2308dfcc53/26-6a81cdb3dce34.webp' /></p><p>திருமணத்திற்கு பின்னரும், சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சினேகா சிறப்பான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார். அது மாத்திரமன்றி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவரைாகவும் பங்கேற்று வருகின்றார்.</p><p>
தற்போது 44 வயதிலும் குறையாத அழகுடன் ஜொலித்து வரும் சினேகா அழகிய சேலையில்,&nbsp; ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.&nbsp; &nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DcDkejBCYtk/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DcDkejBCYtk/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DcDkejBCYtk/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by SnehalayaaSilks (@snehalayaasilks)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T15:32:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் ஜாய் கிரிஸில்டாவுடன் மாதம்பட்டி ரங்கராஜ்! வலுக்கும் விமர்சனங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/madhampatty-rangaraj-again-with-joy-crizilda-viral-1786892859"></link>
            <id>https://manithan.com/article/madhampatty-rangaraj-again-with-joy-crizilda-viral-1786892859</id>
            <summary type="text">மாதம்பட்டி ரங்கராஜ் ஆடைவடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுக்கு பிறந்த குழந்தை தன் குழந்தை என ஒப்புக்கொண்டு வெளியிட்ட அறிக்கை சமீபத்தில் வைரலானது.&amp;nbsp;இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாதம்பட்டி ரங்கராஜ் ஆடைவடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுக்கு பிறந்த குழந்தை தன் குழந்தை என ஒப்புக்கொண்டு வெளியிட்ட அறிக்கை சமீபத்தில் வைரலானது.&nbsp;</p><p>இந்நிலையில், தன் குழந்தைக்கு மொட்டை போடும் நிகழ்வில் தன் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டாவுடன் மீண்டும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் பல்வேறு நேர்மறை,எதிர்மறை விமர்சனங்களையும் குவித்து வருகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b75b6cd-f5fe-4809-9f83-5001c874020e/26-6a81d6a5cd4d3.webp' /></p><h2>
மாதம்பட்டி ரங்கராஜ் -&nbsp;ஜாய் கிரிஸில்டா</h2><p>பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். தமிழ்நாட்டின் பிரபல சமையல் கலைஞராக வலம் வரும் இவரின் சமையக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.</p><p>இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். இந்த திரைப்படம் பெரிதும் வரவேற்பை பெறவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db0a0f53-4509-4331-ad07-00614fb52605/26-6a81d6a69cb70.webp' /></p><p>
இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார்.இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றார்கள்.</p><p>இந்த நிலையில், பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு பின்னர் ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66ef5737-5db3-4730-b5b0-40d89a6c6276/26-6a81d6a74ff18.webp' /></p><p>கடந்த 2023ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும், தான் கர்ப்பமாக இருந்தபோது மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைவிட்டு விலகியதாகவும் ஜாய் கிரிசில்டா குற்றம் சாட்டினார்.</p><p>இந்த விவகாரம் தொடர்பாக அவர் காவல்துறை ஆணையர் அலுவலகத்திலும், மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தார்.இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் தரப்பில் விசாரணை நடைபெற்று வந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26eae59e-7da4-4909-ac05-02f86e25c5ea/26-6a81d6a8023cf.webp' /></p><p>இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தனது சமூக வலைதளப் பதிவில் முக்கியமான கருத்தை சமீபத்தில் வெளியிட்டார்.</p><p>
அதில், தனது மகன் ராகாவிற்கு ஒரு தந்தையாக செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் கடந்த 6 மாதங்களாக முழு பொறுப்புடனும் அன்புடனும் செய்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbb9175e-0bca-4fed-b5ea-ffeaf6d314cf/26-6a81d6a8a60aa.webp' /></p><p><br></p><p>மேலும், மகனின் எதிர்காலத்திற்கும் வளர்ச்சிக்கும் தொடர்ந்து முழு பொறுப்புடன் இருப்பேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.&nbsp;</p><p>
இதன் மூலம், மகனின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து தனது பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் இத்துடன் முடிவுக்கு வந்தது.&nbsp;</p><p>இந்நிலையில் மீண்டும் தன் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டாவுடன்&nbsp; ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DcGdRJXkhrq/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DcGdRJXkhrq/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DcGdRJXkhrq/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by J Joy (@joycrizildaa)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T15:31:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட விமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vietnam-flight-makes-emergency-landing-in-germany-1786891455"></link>
            <id>https://tamilwin.com/article/vietnam-flight-makes-emergency-landing-in-germany-1786891455</id>
            <summary type="text">ஜெர்மனியின் முனிச் விமான நிலையத்திலிருந்து ஹனோய் நோக்கிப் புறப்பட்ட
வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானமொன்று சிறிது நேரத்திலேயே
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜெர்மனியின் முனிச் விமான நிலையத்திலிருந்து ஹனோய் நோக்கிப் புறப்பட்ட
வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானமொன்று சிறிது நேரத்திலேயே
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக&nbsp; அவசரமாகத்
திருப்பியனுப்பப்பட்டு தரையிறக்கப்பட்டுள்ளது.</p><p>

போயிங் 787 ரகத்தைச் சேர்ந்த இவ்விமானம் டேக்-ஓஃப் செய்யப்பட்ட போது ரன்வே
எல்லை கடந்து சென்றதால், விமானத்தின் பின்னால் அதிகளவில் தூசிப் படலம்
எழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதன் காரணமாக காற்றில் இரண்டு மணித்தியாலங்களுக்கும் அதிகமாகச் சுற்றித்
திரிந்து எரிபொருளை வீணடித்த பின்னரே விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது.</p><h2>சோதனை</h2><p>

தரையிறங்கிய பின்னர் விமானம் வடக்கு ரன்வேயில் நகர்ந்து செல்ல முடியாமல்
சிக்கியதால், அவ்வழியான விமானப் போக்குவரத்து தற்காலிகமாக மூடப்பட்டு தெற்கு
ரன்வேக்கு மாற்றப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c20fa4fa-2898-494d-9178-a5e67f6bda75/26-6a81d10bbab2b.webp' /></p><p>
</p><p>
இச்சம்பவத்தின் போது பயணிகள் மற்றும் விமானப் பணிக்குழாமினர் அனைவரும்
பாதுகாப்பாக இருந்ததாக அறிவித்துள்ளதுடன், துல்லியமான காரணத்தைக் கண்டறிய உரிய
அதிகாரிகளுடன் இணைந்து சோதனைகளை மேற்கொண்டு வருவதாக வியட்நாம் ஏர்லைன்ஸ்
நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T15:02:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையிலிருந்து சென்றவர் விமான நிலையத்தில் திடீரென விழுந்து மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-returning-from-sri-lanka-dies-at-chennai-1786847181"></link>
            <id>https://tamilwin.com/article/man-returning-from-sri-lanka-dies-at-chennai-1786847181</id>
            <summary type="text">இலங்கையில் இருந்து சென்றவர் சென்னை விமான நிலையத்தில் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார். 

இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய 55 வயதான ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இருந்து சென்றவர் சென்னை விமான நிலையத்தில் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார். </p><p>

இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய 55 வயதான நபரே இவ்வாறு திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார். </p><p>

சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த சையத் சிராஜுதீன் என்பவர் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு சென்றுவிட்டு, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளார்.</p><p> </p><h2><b>குடிவரவு&nbsp;சோதனை</b></h2><p>விமானத்தில் இருந்து இறங்கியவர் குடிவரவு மற்றும் சுங்கத்துறை சோதனைகளை முடித்துவிட்டு, பிராட்வே செல்வதற்காக விமான நிலைய வளாகத்தில் உள்ள மெட்ரோ தொடருந்து நிலையத்திற்கு சென்றார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5be94a1e-4545-4af1-847b-5edf6154e5b9/26-6a8124e84e5a8.webp' /></p><p>அங்குள்ள டிக்கெட் கவுண்டர் அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைக்கண்ட சக பயணிகளும், மெட்ரோ நிலைய ஊழியர்களும் உடனடியாக விமான நிலைய மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p>இதனையடுத்து விரைந்து வந்த மருத்துவ குழுவினர் முதலுதவி வழங்கிய போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். </p><p>சம்பவத்தை தொடர்ந்து விமான நிலைய பொலிஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரச மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். </p><p>இது குறித்து வழக்குப்பதிவு செய்து பொலிஸார் மேலதிக விசாரணையை நடத்தி வருகின்றனர்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T14:45:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[600 ஆளில்லா விமானங்கள் மூலம் ரஷ்யாவில் பெரும் தாக்குதலை நடத்திய உக்ரைன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ukraine-launches-massive-attack-on-russia-1786884530"></link>
            <id>https://ibctamil.com/article/ukraine-launches-massive-attack-on-russia-1786884530</id>
            <summary type="text">&amp;nbsp; 600 ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி ரஷ்யா மீது உக்ரைன் ஒரு பெரும் தாக்குதலை நடத்தியதாக மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்தார்.

இந்தத் தாக்குத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 600 ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி ரஷ்யா மீது உக்ரைன் ஒரு பெரும் தாக்குதலை நடத்தியதாக மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்தார்.</p><p>

இந்தத் தாக்குதல் நேற்று இரவு (15) முதல் இன்று காலை (16) 6.30 மணி வரை நடைபெற்றது என்றும், ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்பு 201 ஆளில்லா விமானங்களை அழித்தது என்றும் அவர் கூறினார்.</p><h2>மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல்</h2><p>மொஸ்கோவில் நடந்த இந்தத் தாக்குதலில் மூன்று பேர் காயமடைந்தனர், அதே நேரத்தில் உக்ரைன் எல்லைக்கு அருகிலுள்ள ரஷ்யாவின் ரோஸ்டோவ் பகுதியில் நடந்த தாக்குதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/749ec543-84ad-41e5-9c6e-ec7495c95b89/26-6a81b5e30aa48.webp' /></p><p> </p><p>ரோஸ்டோவ் பிராந்தியத்தின் மூன்று நகரங்கள் மற்றும் ஒன்பது மாவட்டங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில், ரஷ்ய இராணுவத்தால் 150-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை அழிக்க முடிந்தது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T14:44:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு விபத்து! கடலில் தத்தளித்த பயணிகள் பத்திரமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/boat-accident-on-its-way-to-kurikattuwan-delft-1786890827"></link>
            <id>https://ibctamil.com/article/boat-accident-on-its-way-to-kurikattuwan-delft-1786890827</id>
            <summary type="text">குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு ஒன்று
விபத்துக்குள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித...</summary>
            <content type="html"><![CDATA[<p>குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு ஒன்று
விபத்துக்குள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
</p><p>
குறித்த படகானது இன்று பி.ப 3.00 மணியளவில் பயணிகளை ஏற்றியவாறு குறிகாட்டுவான்
பகுதியில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்தது.</p><h2>இடைநடுவில் கவிழ்ந்தது படகு</h2><p>இதன்போது அந்த படகானது நயினாதீவுக்கு அண்மித்த பகுதியில் உள்ள ஐயனார் முடக்கு
என்ற இடத்தில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ef7245b-301e-4f99-832c-17dc4c3c146f/26-6a81ca4d38c15.webp' /></p><p>

இந்நிலையில் அந்த படகில் பயணித்த 10 பேர் கடலில் தத்தளித்துக்கொண்டு
இருந்தவேளை நயினாதீவு கடற்றொழிலாளர்களால் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவராத நிலையில், கடற்படையினர் மற்றும்,
கடற்றொழிலாளர்களின் விரைவான நடவடிக்கையால் பயணிகள் அனைவரும் எவ்வித ஆபத்துமின்றி
மீட்கப்பட்டுள்ளனர்.</p><p>மீட்கப்பட்ட அனைவரும் நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் மருத்துவப்
பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

​</p><p>இதேவேளை குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T14:33:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர்களின் பெருமையை பறைசாற்ற வரும் ஈழத்து நடிகனின் போராட்டம் திரைப்படம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/porattam-movie-release-date-1786890450"></link>
            <id>https://tamilwin.com/article/porattam-movie-release-date-1786890450</id>
            <summary type="text">ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ‘போராட்டம்’ திரைப்படம் இன்னும் சில மாதங்களில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இதற்கமைய, எதிர்வரும் அக்டோபர் 2ஆம் தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ‘போராட்டம்’ திரைப்படம் இன்னும் சில மாதங்களில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.</p><p>இதற்கமைய, எதிர்வரும் அக்டோபர் 2ஆம் திகதி தமிழர்களின் கண்களுக்கு விருந்தாக வரவிருகின்றது என்றும் திரைப்படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.</p><p>

ஐபிசி தமிழின் பிரமாண்ட தயாரிப்பாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் ஈழத்து கலைஞர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.</p><p>

ராஜ் சிவராஜ் இயக்கும் ‘போராட்டம்’ திரைப்படத்திற்கு பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.
</p><p>
மேலும், ஈழத் திரையுலகில் இதுவரை வெளியாகியுள்ள திரைப்படங்களில் மிக நீளமான திரைப்படமாக போராட்டம் உருவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T14:30:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு விபத்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/boat-traveling-from-kurikadduvan-accident-1786889069"></link>
            <id>https://tamilwin.com/article/boat-traveling-from-kurikadduvan-accident-1786889069</id>
            <summary type="text">குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு ஒன்று
விபத்துக்குள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு ஒன்று
விபத்துக்குள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த படகானது இன்று(16.8.2026) பி.ப 3.00 மணியளவில் பயணிகளை ஏற்றியவாறு குறிகட்டுவான்
பகுதியில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்தது.
</p><p>
இதன்போது அந்த படகானது நயினாதீவுக்கு அண்மித்த பகுதியில் உள்ள ஐயனார் முடக்கு
என்ற இடத்தில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>தேடுதல் நடவடிக்கை</h2><p>
</p><p>
இந்நிலையில் அந்த படகில் பயணித்த 10 பேர் கடலில் தத்தளித்துக்கொண்டு
இருந்தவேளை நயினாதீவு தொடருந்தில் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c265d569-8378-48a1-b09f-dd455e000ae0/26-6a81c94b5f4ca.webp' /></p><p>
</p><p>
இதேவேளை அந்த படகில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்ற விபரம் தெரியவரவில்லை.
இந்நிலையில் யாராவது காணாமல் போயுள்ளார்களா என்ற கோணத்தில் தேடுதல்
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T14:29:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அபூர்வமான நாக பஞ்சமி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/naga-panchami-2026-zodiacs-who-get-huge-luck-1786887443"></link>
            <id>https://manithan.com/article/naga-panchami-2026-zodiacs-who-get-huge-luck-1786887443</id>
            <summary type="text">Naga Panchami : இந்த ஆண்டின் நாக பஞ்சமி ஆகஸ்ட் 17ஆம் தேதி வருகிறது. நாக தெய்வங்களை வழிபடுவதற்கு மிகவும் உகந்த இந்த புனித நாள், ஆன்மீக ரீதியாக மட்டுமின...</summary>
            <content type="html"><![CDATA[<p>Naga Panchami : இந்த ஆண்டின் நாக பஞ்சமி ஆகஸ்ட் 17ஆம் தேதி வருகிறது. நாக தெய்வங்களை வழிபடுவதற்கு மிகவும் உகந்த இந்த புனித நாள், ஆன்மீக ரீதியாக மட்டுமின்றி ஜோதிட ரீதியாகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. </p><p>குறிப்பாக, இந்த ஆண்டு வரும் நாக பஞ்சமி சிவபெருமானுக்கு உகந்த நாளான&nbsp; திங்கட்கிழமையில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e302f3eb-74fe-496c-a787-38c2cd35e900/26-6a81c4c3a5dcf.webp' /></p><p>இத்தகைய அபூர்வமான நாளின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் வெளிப்படும் என்று ஜோதிட நம்பிக்கைகள் கூறுகின்றன.</p><p>

அதிலும் குறிப்பாக, சில ராசிக்காரர்களுக்கு இந்த நாக பஞ்சமி அதிர்ஷ்டத்தின் கதவுகளைத் திறக்கப் போகிறது. சிவபெருமான் மற்றும் நாக தெய்வங்களின் அருளால், இவர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
</p><p>
நிதி நிலையில் முன்னேற்றம், தொழிலில் வளர்ச்சி, வியாபாரத்தில் விரிவாக்கம், புதிய வேலைவாய்ப்புகள் என பல்வேறு வகையான நற்பலன்களை இவர்கள் பெறப்போகின்றார்ககள் என கணிக்கப்படுட்டுள்ளது.</p><p>அப்படி நாக பஞ்சமி நாளில் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><h2>கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3afd7c7-a429-46c9-8813-6fb8ba3d8d2b/26-6a81c4c459d80.webp' /></p><p></p><p>

கடக ராசிக்காரர்களுக்கு நாக பஞ்சமி நாளானது மிகவும் மங்களகரமான நாளாக அமையும். பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.</p><p> நீங்கள் மேற்கொள்ளும் பணிகளில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். நிதி நிலையிலும் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.</p><p> பணிபுரிபவர்களுக்கு புதிய திட்டங்களில் பணியாற்றும் வாய்ப்புகள் கிடைக்கலாம். அதேபோல், புதிய வருமான வழிகளும் உருவாகும்.இதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பணப் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.&nbsp;</p><h2>
கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cfa382b-acb2-48f2-961f-2b891874fa72/26-6a81c4c50dbb6.webp' /></p><h2>
</h2><p>
கன்னி ராசிக்காரர்களுக்கு நாக பஞ்சமி நாளானது அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக அமையும். இந்நாளில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். </p><p>எதிர்பாராத வகையில் நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. உங்கள் கடின உழைப்புக்கான உரிய பலன் கிடைக்கும்.</p><p> இதனால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கியமான பணிகளை எவ்வித தடையும் இன்றி வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள். </p><p>புதிய வேலை அல்லது தொழிலைத் தொடங்குவதற்கு இந்தக் காலகட்டம் சாதகமாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மேலும், தொழில் தொடர்பான முயற்சிகளிலும் சாதகமான பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
</p><h2>
மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/329e4ddc-cb16-4db7-b272-37e50d08ae6b/26-6a81c4c5b225b.webp' /></p><p></p><h2>
</h2><p>
மகர ராசிக்காரர்களுக்கு இந்த நாக பஞ்சமி சிறப்பான பலன்களைத் தரக்கூடியதாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.</p><p> பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். இந்தக் காலகட்டத்தில் வேலை தொடர்பாக நீங்கள் எடுக்கும் முக்கியமான முடிவுகள் நல்ல பலன்களைத் தரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் இனிமையாகவும் இருக்கும்.</p><p> வாழ்க்கைத் துணையுடன் மனம் மகிழும் வகையில் நேரத்தைச் செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். மன அழுத்தம் குறைந்து, மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.</p><p> ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கலாம். திருமணமாகாதவர்களுக்கு தங்களுக்கான வாழ்க்கைத் துணையை சந்திக்கும் வாய்ப்பு அமையும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T14:24:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் முதன்முறையாக இந்தியத் தமிழ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/nallapadam-audio-launch-in-srilanka-1786890039"></link>
            <id>https://cineulagam.com/article/nallapadam-audio-launch-in-srilanka-1786890039</id>
            <summary type="text">இந்தியத் தமிழ் திரைப்படமான “நல்லபடம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி கொழும்பு போர்ட் சிட்டியில் நடைபெறவுள்ள “வேர்ல்ட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியத் தமிழ் திரைப்படமான “நல்லபடம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி கொழும்பு போர்ட் சிட்டியில் நடைபெறவுள்ள “வேர்ல்ட் ஆஃப் ராவண்” இசைத் திருவிழாவின் பிரமாண்ட மேடையில் நடைபெறவுள்ளது.</p><p>இந்தியத் தமிழ் திரைப்படங்களின் இசை வெளியீட்டு நிகழ்வுகள் தமிழகத்திற்கு வெளியேயும் பல்வேறு நாடுகளில் நடைபெற்றுள்ள நிலையில், இந்தியத் தமிழ் திரைப்படம் ஒன்றின் இசை வெளியீட்டு விழா இலங்கையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்துள்ளது.
</p><p>ஹரிஷ் சினிமாஸ் சார்பில் ஏ. அழகு பாண்டியன் தயாரிப்பில் உருவாகியுள்ள “நல்லபடம்” திரைப்படத்தில் டாக்டர் ஏ. ஹரிஷ் கதாநாயகனாகவும், தனலட்சுமி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56c26e9e-5f91-4c65-af9c-fd4f7a3b3121/26-6a81c7396d656.webp' /></p><p>
</p><p>இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா, ரமா, பிரியதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
</p><p>‘கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சி. பிரபுராம் “நல்லபடம்” திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
</p><p>இப்படத்திற்கு சகிஷ்னா சேவியர் இசையமைத்துள்ளார். பிரபல இலங்கை கவிஞரும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியருமான, ‘அய்யோ சாமி’ பாடல் மூலம் பரவலாக அறியப்பட்ட பொத்துவில் அஸ்மின் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
</p><h2>நான்கு பாடல்கள் – முன்னணி பாடகர்கள்</h2><p>“நல்லபடம்” திரைப்படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இப்பாடல்களுக்கு சகிஷ்னா சேவியர் இசையமைத்துள்ளார்.
&nbsp;</p><p>பாடல்களை வேல்முருகன், அருள்பிரகாஷம், புண்ணியா செல்வா, காயத்ரி ராஜீவ் மற்றும் சஷாங் ஆகியோர் பாடியுள்ளனர்.</p><p>மதுவை மையப்படுத்திய சமூகக் கருப்பொருளை நகைச்சுவை, காதல், உணர்வு மற்றும் சமூகச் செய்தி ஆகிய அம்சங்களுடன் இணைத்து “நல்லபடம்” திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><h2>இசை வெளியீட்டுக்கு திரையுலக வாழ்த்துகள்
</h2><p>“நல்லபடம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டை முன்னிட்டு இந்தியத் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் பாடகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
</p><p>இந்த இசை வெளியீட்டு விழா, இந்தியத் தமிழ் சினிமாவுக்கும் இலங்கைத் தமிழ் ரசிகர்களுக்கும் இடையிலான கலைத் தொடர்பை மேலும் வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>இலங்கை மண்ணில் “நல்லபடம்” திரைப்படத்தின் இசை பிரமாண்டமாக அறிமுகமாகும் இந்த நிகழ்வு, இந்தியா–இலங்கை தமிழ் கலை உறவில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என திரையுலகினர் எதிர்பார்க்கின்றனர்.&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T14:21:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[மால் திறப்பு விழாவுக்கு சேலையில் வந்த ஸ்ரீலீலா.. நடந்த சம்பவத்தால் அவரே ஆச்சர்யம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sreeleela-at-mall-opening-function-1786889505"></link>
            <id>https://cineulagam.com/article/sreeleela-at-mall-opening-function-1786889505</id>
            <summary type="text">நடிகை ஸ்ரீலிலா தற்போது நேஷ்னல் சென்சேஷன் நடிகையாக வலம் வருகிறார். அவருக்கு இளம் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் இருக்கிறார்கள்.தெலுங்கு சினிமாவை தாண்டி தற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை ஸ்ரீலிலா தற்போது நேஷ்னல் சென்சேஷன் நடிகையாக வலம் வருகிறார். அவருக்கு இளம் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் இருக்கிறார்கள்.</p><p>தெலுங்கு சினிமாவை தாண்டி தற்போது ஹிந்தி, தமிழிலும் அவர் படங்கள் நடித்து ரசிகர்களை கவர தொடங்கி இருக்கிறார். மேலும் அவரது டான்ஸ்க்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe98537e-8fd9-45c2-b5c3-652a06395032/26-6a81c5237dafa.webp' /></p><p>
</p><h2>கடை திறப்பு விழா </h2><p>
இந்நிலையில் இன்று ஸ்ரீலிலா மால் திறப்பு விழா ஒன்றுக்காக சேலையில் அழகாக வந்திருந்தார். அவரை வரவேற்க செய்யப்பட்ட விஷயம் அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்து இருந்தது.
</p><p>மேலே இருந்து ட்ரோன் மூலமாக ஸ்ரீலீலா மீது பூக்களை தூவி இருக்கின்றனர். அதை பார்த்து அவரே ஆச்சர்யம் அடைந்து விட்டார். மேலும் ஸ்ரீலீலாவை நேரில் பார்ப்பதற்காக அதிக அளவில் ரசிகர்கள் கூடி இருந்ததால் பாதுகாப்புக்கு போலீசாரும் ஏராளமாக வந்திருந்தனர்.
</p><p>ஸ்ரீலீலா போலீசார் உடன் நின்று செல்பி எடுத்துக் கொண்டார். வீடியோக்களும் தற்போது வைரலாகி இருக்கிறது.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcGKy2jxmdh/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcGKy2jxmdh/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcGKy2jxmdh/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Hyderabad Mode (@hyderabadmode_yt)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p><blockquote class="instagram-media" data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcGPJNBhYp0/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcGPJNBhYp0/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcGPJNBhYp0/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Prime Hyderabad (@primehyderabad_)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T14:13:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூரின் தோரண வாசல் வளைவுகளில் நாட்டப்பட்டது சேவல் கொடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nallur-kandaswamy-kovil-festival-1786888838"></link>
            <id>https://ibctamil.com/article/nallur-kandaswamy-kovil-festival-1786888838</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த
பெருந்திருவிழா நாளை (17) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லூரின்
முக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த
பெருந்திருவிழா நாளை (17) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லூரின்
முக்கிய தோரண வாசல் வளைவுகளில் சேவல் கொடி நாட்டும் நிகழ்வு இன்று (16)
சிறப்பாக இடம்பெற்றது.
</p><p>
இதன்படி, இன்று மதியம் 12 மணியளவில் நல்லூர் செம்மணியில் முதலாவது சேவல் கொடி
நாட்டப்பட்டது. தொடர்ந்து நல்லூரான் தெற்கு மற்றும் நல்லூரான் வடக்குவாசல்
வளைவுகளிலும் சேவல் கொடிகள் நாட்டப்பட்டன.
</p><p>
</p><h2>பக்தர்களின் கவனத்தை ஈர்த்த&nbsp;நிகழ்வு </h2><p>நல்லூர் கந்தனின் பெருந்திருவிழாவை வரவேற்கும் வகையிலும், ஆலயத்தின் வெளி
வீதிகள் திருவிழாக் கோலம் பூணும் வகையிலும் இடம்பெற்ற இந்நிகழ்வு பக்தர்களின்
கவனத்தை ஈர்த்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19962acf-edd9-4852-90ad-1e0d5d881ad7/26-6a81c288c90f0.webp' /></p><p>
</p><p>
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன்
ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லூர் சுற்றுவட்டாரம் முழுவதும் பக்தி மற்றும்
திருவிழா உணர்வுடன் களைகட்டத் தொடங்கியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T14:00:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்து - இருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-during-motorcycle-race-in-nuwara-eliya-1786888443"></link>
            <id>https://tamilwin.com/article/accident-during-motorcycle-race-in-nuwara-eliya-1786888443</id>
            <summary type="text">நுவரெலியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் இரு போட்டியாளர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து இன்று(16.08....</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் இரு போட்டியாளர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விபத்து இன்று(16.08.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
போட்டியின் போது நேர்ந்த விபத்து</h2><p>
நுவரெலியா, பிளாக்பூல் மற்றும் மகஸ்தோட்டம் இடையே
நடைபெற்ற 400சிசி மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில்
இரண்டு மோட்டார் சைக்கிள் சாரதிகள் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/909af4c7-c155-4981-95c1-fd4d1f6eaabd/26-6a81c152769ee.webp' /></p><p>
</p><p>
நுவரெலியா மாநகர சபையும், கொழும்பில் உள்ள ஒரு தனியார் சங்கமும் இணைந்து(16)
மற்றும் (17) ஆம் திகதிகளில் நுவரெலியா - அம்பேவளை பிரதான வீதியில்
பிளாக்பூல் பாலத்தில் இருந்து தொடங்கி, செங்குத்தான மலைகள் மற்றும் வளைந்து
செல்லும் தேயிலைத் தோட்டங்கள் வழியாக மகஸ்தோட்டமம் வரை அடையும் ஒரு நேரக்
கணக்கீட்டுப் பந்தயத்தை(TIMING RACE) நடத்தி வருகின்றனர்.
</p><p>
இதில் (16)ஆம் திகதி இடம்பெற்ற பந்தயத்தில் பல போட்டியாளர்கள் பங்கேற்ற
நிலையில், நுவரெலியா பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக இரண்டு மோட்டார்
சைக்கிள்கள் சாலையை விட்டு விலகி தேயிலைத் தோட்டத்தில் விழுந்ததால் இந்த
விபத்து நிகழ்ந்ததாக நேர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d3c53c7-d354-440f-8d82-06d93320d514/26-6a81c1538c4f2.webp' /></p><p>


</p>]]></content>
            <updated>2026-08-16T13:56:08+00:00</updated>
        </entry>
    </feed>
