<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-17T17:37:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அத்துருகிரியவில் டுபாய் கசுனின் உறவினர் மீது துப்பாக்கிச் சூடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shooting-in-athurugiriya-one-person-injured-1786986810"></link>
            <id>https://tamilwin.com/article/shooting-in-athurugiriya-one-person-injured-1786986810</id>
            <summary type="text">அத்துருகிரிய - ஹபரகட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.குறித்த சம்பவமானது இன்றையதினம்(17.8.2026) இடம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அத்துருகிரிய - ஹபரகட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.</p><p>குறித்த சம்பவமானது இன்றையதினம்(17.8.2026) இடம்பெற்றுள்ளது.</p><p> </p><p>

காயமடைந்தவர் தற்போது ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> 

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான டுபாய் கசுனின் உறவினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-17T17:20:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்றாவது நாளாகக் களைகட்டிய யாழ். உணவுத் திருவிழா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-culture-and-food-fest-2026-held-1786984003"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-culture-and-food-fest-2026-held-1786984003</id>
            <summary type="text">“யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 – கலாசார மற்றும் உணவுத் திருவிழா” நிகழ்வு மூன்றாவது நாளாகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வடக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>“யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 – கலாசார மற்றும் உணவுத் திருவிழா” நிகழ்வு மூன்றாவது நாளாகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
</p><p>
வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.</p><p> 

கடந்த 15 ஆம் திகதியிலிருந்து இன்று (17-08-2026) வரை குறித்த நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.</p><p>
</p><p></p><h2>பாரம்பரிய உணவுகள்&nbsp;</h2><p>இந்தநிலையில், இன்று (17-08-2026) குறித்த திருவிழா நிகழ்விற்கு றீ(ச்)ஷா நிறுவனத்தின் உரிமையாளர் கந்தையா பாஸ்கரன் (Baskaran Kandiah) வருகை தந்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e23306f6-4817-4826-a11d-0660ca4ee299/26-6a83405c7cdac.webp' /></p><p>
நிகழ்வில் வடக்கின் பாரம்பரிய உணவு வகைகள், கைவினைப் பொருட்கள் மற்றும் கலைப் பாரம்பரியங்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு யாழ்ப்பாணத்தின் தனித்துவமான பண்பாட்டு அடையாளத்தை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதோடு, பாரம்பரிய கலை மற்றும் உணவுக் கலாசாரத்தை உலகளாவிய ரீதியில் எடுத்துச்செல்லும் முயற்சியாக இத்திருவிழா அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T17:13:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாய்ந்தமருதில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-police-officers-arrested-for-accepting-a-bribe-1786986221"></link>
            <id>https://tamilwin.com/article/2-police-officers-arrested-for-accepting-a-bribe-1786986221</id>
            <summary type="text">சாய்ந்தமருதில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது இன்று(17) இலஞ்ச ஊ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாய்ந்தமருதில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>குறித்த கைது நடவடிக்கையானது இன்று(17) இலஞ்ச ஊழல் விசாரணை
ஆணைக்குழுவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>அண்மையில் கைதான போதைப்பொருள் சந்தேகநபர் ஒருவரை சட்ட நடவடிக்கைகளில் இருந்து
விடுவிப்பதற்கு உதவ நடவடிக்கை எடுப்பதாகக் கூறி 20 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாகப்
பெற்றதாக கூறப்படுகின்றது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில்
கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் தர உத்தியோகத்தர் ஒருவரும், சாய்ந்தமருது
பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி தற்போது பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தின்
பதில் பொறுப்பதிகாரியாக செயற்பட்டு வரும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f5dfa52-ee35-4f89-95a8-b02809b7a60b/26-6a833eeeb42b8.webp' /></p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள்
மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T17:08:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் எரிபொருள் வரி விலக்கை நீட்டிக்கக் கன்சர்வேடிவ் கட்சி வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/conservatives-call-for-extension-of-temporary-1786985894"></link>
            <id>https://canadamirror.com/article/conservatives-call-for-extension-of-temporary-1786985894</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவில் எரிபொருட்களுக்கான மத்திய அரசின் எரிபொருள் வரி விலக்கை மேலும் 10 மாதங்களுக்கு நீட்டித்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கன்சர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவில் எரிபொருட்களுக்கான மத்திய அரசின் எரிபொருள் வரி விலக்கை மேலும் 10 மாதங்களுக்கு நீட்டித்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லீவ்ரே அரசை வலியுறுத்தியுள்ளார்.
</p><p>ஈரானில் ஏற்பட்ட அமெரிக்க-இஸ்ரேல் போர் காரணமாக உலகளவில் எரிபொருள் விலைகள் உயர்ந்ததைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் கனடா அரசு எரிபொருள் வரியைத் தற்காலிகமாக நீக்கியது.</p><p> 
இந்நடவடிக்கை 'தொழிலாளர் தினம்' வரை அமலில் இருக்கும் என்றும், இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு சராசரியாக 10 சென்ட்களும், டீசல் விலை 4 சென்ட்களும் குறைந்ததாகவும் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d67329b3-bb9b-4424-814f-e848c6357a3e/26-6a833da7a2cfc.webp' /></p><p> </p><p>
வேன்கூவர் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பியர் பொய்லீவ்ரே, எரிபொருள் விலைகள் மீண்டும் உயர்ந்து வரும் நிலையில், அடுத்த மாதம் வரவிருக்கும் லிட்டருக்கு 10 சென்ட் விலை உயர்வைக் கனடா மக்களால் தாங்க முடியாது என்று கூறினார்.</p><p> 
"எரிபொருள் வரியைக் குறைப்பது பெட்ரோல் நிலையங்களில் விலையைக் குறைப்பதுடன், மளிகைப் பொருட்கள், வீடு கட்டும் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்துச் செலவைக் குறைத்து மக்களுக்கு மலிவான விலையில் கிடைக்க உதவும்" என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>எண்ணெய் விலையேற்றத்தின் காரணமாக கனடா அரசிற்கு சுமார் $6 பில்லியன் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாகக் கணித்துள்ள கன்சர்வேடிவ் கட்சி, அந்தப் பணத்தைப் பயன்படுத்தி இந்த வரி விலக்கு நிவாரணத்தைத் தொடர்ந்து வழங்கலாம் எனப் பரிந்துரைத்துள்ளது.</p><p>
பிரதமர் மார்க் கார்னிக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த கலால் வரி விலக்கை குறைந்தபட்சம் 2027 ஜூலை 1 ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்றும், அதன் பின்னர் நிலைமையை மதிப்பாய்வு செய்யலாம் என்றும் பொய்லீவ்ரே கேட்டுக்கொண்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T16:59:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பயிர்களைத் தாக்கும் பூஞ்சை நோய்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadian-farmers-fight-heavy-disease-threat-1786983990"></link>
            <id>https://canadamirror.com/article/canadian-farmers-fight-heavy-disease-threat-1786983990</id>
            <summary type="text">கனடாவில், தீவிரப் பயிர் நோய்களால் கேனோலா, டூரம் கோதுமை, வசந்தகாலக் கோதுமை மற்றும் பருப்பு வகைப் பயிர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 
இந்தத் தசாப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில், தீவிரப் பயிர் நோய்களால் கேனோலா, டூரம் கோதுமை, வசந்தகாலக் கோதுமை மற்றும் பருப்பு வகைப் பயிர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p> 
இந்தத் தசாப்தத்தின் முதல் அதிக மழைப் பொழிவு கொண்ட ஆண்டாக இது அமைந்துள்ள நிலையில் நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளது.
நோய்த் தாக்கத்திலிருந்து பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் பெரும் தொகையைச் செலவிட்டு பூஞ்சைக் கொல்லிகளை தெளித்து வருகின்றனர். </p><p>
வசந்த காலத்தின் இறுதியிலும் கோடையின் தொடக்கத்திலும் பெய்த அதிக மழையால் மண்ணில் ஈரப்பதம் அதிகரித்தது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff65eb7b-b991-4004-a35f-7c611dc33de2/26-6a8336385eada.webp' /></p><p>அதைத் தொடர்ந்து நிலவிய அதிக வெப்பம் மற்றும் புழுக்கமான வானிலை, பூஞ்சை நோய்கள் வேகமாகப் பரவுவதற்குச் சாதகமான சூழலை உருவாக்கியது. </p><p>
உரம் உள்ளிட்ட பொருட்களின் அதிக விலை காரணமாக நடப்பு ஆண்டில் விவசாயத்தில் போதிய லாபம் கிடைக்காது என எதிர்பார்க்கப்படும் நிலையிலும், பயிர்களைக் காப்பாற்ற பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். </p><p>
சாஸ்காட்செவன் மாகாணத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஏக்கருக்கு $6 முதல் $20 வரை கூடுதல் தொகையை பூஞ்சைக் கொல்லிகளுக்காகச் செலவிட்டுள்ளனர்.</p><p> 
அதிகளவில் கடன் வாங்கி பூஞ்சைக் கொல்லிகளைத் தெளித்துள்ள போதிலும், அறுவடை முழுமையாக நிறைவடைந்த பிறகே விளைச்சலின் தரம் மற்றும் அளவைச் துல்லியமாகக் கணிக்க முடியும் எனப் பயிர் ஆலோசகர்களும் விவசாயிகளும் கவலை தெரிவிக்கின்றனர்.
</p><p>கனடா உலக அளவில் கேனோலா, டூரம் கோதுமை மற்றும் உலர் பட்டாணி ஆகியவற்றின் முன்னணி ஏற்றுமதியாளராகத் திகழ்வதால், இந்நோய் தாக்கம் உலகளாவிய பயிர் ஏற்றுமதியிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T16:57:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் குளத்துச் சேற்றில் சிக்கிய பெண்: தீயணைப்புப் படையினரால் பாதுகாப்பாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ottawa-firefighters-rescue-woman-trapped-1786984658"></link>
            <id>https://canadamirror.com/article/ottawa-firefighters-rescue-woman-trapped-1786984658</id>
            <summary type="text">கனடாவின் ஒட்டாவா நகருக்கு அருகிலுள்ள கனாட்டா பகுதியில், ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற 27 வயதுப் பெண் ஒருவர் குளத்துச் சேற்றில் சிக்கிய நிலையில்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒட்டாவா நகருக்கு அருகிலுள்ள கனாட்டா பகுதியில், ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற 27 வயதுப் பெண் ஒருவர் குளத்துச் சேற்றில் சிக்கிய நிலையில், தீயணைப்புப் படையினரால் மீட்புப் பணிய மேற்கொண்டு பாதுகாப்பாக மீட்கப்பட்டார். </p><p>
சவுத் மார்ச் ஹைலேண்ட்ஸ் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள 'ரெபெக்கா குளத்தில்' 27 வயதுப் பெண் ஒருவர் சேற்றில் சிக்கியிருப்பதாக பிற்பகல் 3 மணியளவில் ஒட்டாவா தீயணைப்புத் துறைக்கு 911 அவசர அழைப்பு வந்தது. </p><p>
பிளாஸ்டிக் வடிகால் குழாய் மீது நின்று மீன்பிடித்துக் கொண்டிருந்த தனது மகள், நிலைதடுமாறி குளத்தில் விழுந்துவிட்டதாக அவளது தந்தை தீயணைப்புத் துறையினரிடம் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01b11a8b-bb01-40a6-81a1-9bb85ac168c9/26-6a8338d431d5d.webp' /></p><p> </p><p>சேற்றில் இடுப்பளவு மூழ்கிய அந்தப் பெண், நகர முயன்ற ஒவ்வொரு முறையும் மேலும் ஆழமாகச் மூழ்கத் தொடங்கினார். </p><p>
அவசர அழைப்பு விடுத்த தந்தையின் கைபேசி ஜி.பி.எஸ் (GPS) தகவலைப் பயன்படுத்தி, தீயணைப்புப் படையினர் அப்பெண் இருக்கும் இடத்தை விரைவாகக் கண்டறிந்தனர்.</p><p> வனப்பகுதியின் நுழைவாயிலில் தந்தையைச் சந்தித்த வீரர்கள், அவரோடு சென்று அப்பெண் இருக்கும் இடத்தை அடைந்தனர். </p><p>
அப்பெண்ணின் இடது கால் இடுப்பு வரை சேற்றில் பலமாகச் சிக்கியிருந்ததை உறுதிசெய்த தீயணைப்பு வீரர்கள், 'பைக் போல்' என்ற கருவியைப் பயன்படுத்தி அவரைச் சீராகப் பிடித்துக்கொண்டு, காலைச் சுற்றியிருந்த சேற்றைக் கவனமாகத் தோண்டி எடுத்து அவரை வெளியே மீட்டனர். </p><p>
அவசர அழைப்பு வந்த 15 நிமிடங்களுக்குள் அந்தப் பெண் சேற்றிலிருந்து மீட்கப்பட்டார்.
மருத்துவக் குழுவினர் அவரைப் பரிசோதித்ததில் அவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T16:56:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 16 வயதுச் சிறுமி சுட்டுக்கொலை: காவல்துறை தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/investigating-suspicious-death-of-16-year-old-girl-1786984972"></link>
            <id>https://canadamirror.com/article/investigating-suspicious-death-of-16-year-old-girl-1786984972</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் எட்மண்டன் நகரில் உள்ள 139 அவென்யூ மற்றும் 32 ஸ்ட்ரீட் பகுதிக்கு அருகில் 16 வயதுச் சிறுமி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் எட்மண்டன் நகரில் உள்ள 139 அவென்யூ மற்றும் 32 ஸ்ட்ரீட் பகுதிக்கு அருகில் 16 வயதுச் சிறுமி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>
அப்பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், தீவிர காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த 16 வயதுச் சிறுமியைக் கண்டறிந்தனர். </p><p>
காவல்துறையினர் அச்சிறுமிக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர். எனினும், அவசர மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தபோது அச்சிறுமி உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. </p><p>
இச்சம்பவத்தை மர்ம மரணமாகக் கருதி எட்மண்டன் காவல்துறையின் கொலை வழக்கு விசாரணைப் பிரிவு விசாரணையைக் கையில் எடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b98d73c-9f8c-45b4-841c-8287ce25aa16/26-6a833a0e62678.webp' /></p><p> மரணத்திற்கான பின்னணி மற்றும் சூழ்நிலைகளைக் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
கூடுதல் விவரங்கள் கிடைக்கும் பட்சத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>
இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் 780-423-4567 என்ற எண்ணிலோ அல்லது கைபேசி மூலம் #377 என்ற எண்ணிலோ எட்மண்டன் காவல்துறையைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T16:54:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோவில் 'லிஜியோனைர்ஸ்' சுவாச நோய் பரவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/health-officials-investigating-legionnaires-1786985404"></link>
            <id>https://canadamirror.com/article/health-officials-investigating-legionnaires-1786985404</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் டொராண்டோ நகரின் மையப்பகுதிக்கு அருகில் &#039;லிஜியோனைர்ஸ்&#039; என்ற சுவாச நோய் பரவி வருவதாக டொராண்டோ பொதுச்சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
பாத்ஹ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் டொராண்டோ நகரின் மையப்பகுதிக்கு அருகில் 'லிஜியோனைர்ஸ்' என்ற சுவாச நோய் பரவி வருவதாக டொராண்டோ பொதுச்சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
</p><p>பாத்ஹர்ஸ்ட் மற்றும் டுபாண்ட் வீதிகளின் சந்திப்பில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் சுற்றளவில் இந்நோய் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. </p><p>
அப்பகுதியில் வசிக்கும், பணிபுரியும் அல்லது வந்து சென்ற 6 பேருக்கு இந்நோய் பாதிப்பு இருப்பது இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bf240da-6946-4a3a-9ccb-da0a615c1ff3/26-6a833bbe8a311.webp' /></p><p> 
ஜூலை 2 முதல் ஜூலை 26 வரையிலான காலக்கட்டத்தில் இவர்களுக்கு இந்நோய்க்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.
</p><p>மேலும், அருகில் உள்ள 'கேஸ்டில்வியூ விச்வுட் டவர்ஸ்' முதியோர் பராமரிப்பு இல்லத்தில் கண்டறியப்பட்ட 5 லிஜியோனைர்ஸ் நோய் பாதிப்புகளுக்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
</p><p>இந்நோய் 'லிஜியோனெல்லா' என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இது நீர் ஆதாரங்கள், குளிர்விக்கும் கோபுரங்கள், வெந்நீர்த் தொட்டிகள், தெளிப்பான்கள் மற்றும் அலங்கார நீரூற்றுகள் போன்ற செயற்கை நீர் அமைப்புகளில் காணப்படுகிறது.</p><p>
பாக்டீரியா கலந்த நுண்ணிய நீர் துளிகளைச் சுவாசிப்பதன் மூலம் இந்நோய் பரவுகிறது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நேரடியாகப் பரவாது என்பதால், மக்களுக்குப் பெரிய அளவில் ஆபத்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் தசை வலி போன்றவை இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும்.</p><p> முதியவர்கள், புகைபிடிப்பவர்கள் மற்றும் ஏற்கனவே உடல்நலக் குறைபாடு உள்ளவர்களுக்கு இந்நோய் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
</p><p>நோய் பரவலுக்கான முதன்மைக் காரணத்தைக் கண்டறியும் முயற்சியில் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதுடன், கூடுதல் பாதிப்புகளை உடனடியாக அடையாளம் காண உள்ளூர் மருத்துவமனைகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T16:54:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[முப்படை ஆராய்ச்சி அமைப்புகளையும் இணைத்து ஒரே தேசிய மையம் ; ஜனாதிபதி யோசனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/single-center-combining-tri-service-research-1786985481"></link>
            <id>https://jvpnews.com/article/single-center-combining-tri-service-research-1786985481</id>
            <summary type="text">இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்பப்படைகளினாலும் தனித்தனியாக நடத்தப்பட்டு வரும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவுகளை ஒருங்கிணைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்பப்படைகளினாலும் தனித்தனியாக நடத்தப்பட்டு வரும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவுகளை ஒருங்கிணைத்து, ஒரே தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தை நிறுவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க யோசனை தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>பாதுகாப்பு அமைச்சின் 2027ஆம் ஆண்டிற்கான பாதீட்டுக்கு முன்னாயத்தமாக, ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
</p><p>
பாதுகாப்புத் துறையின் இலக்குகளை மேலும் திறமையாகவும் வினைத்திறனுடனும் அடைவதற்கு இத்தகைய ஒருங்கிணைந்த மையம் வழிவகுக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd49eeb0-c25b-4c32-b58f-9b339db0ad14/26-6a833c0ac61d7.webp' /></p><p>

தேசிய பாதுகாப்பை பலப்படுத்தவும், உலகளாவிய புதிய சவால்களை எதிர்கொள்ளவும் பாதுகாப்புத் துறை நவீன தொழில்நுட்பத்துக்கு விரைவாக மாற வேண்டியதன் அவசியம் குறித்தும், நவீன தொழில்நுட்ப சாதனங்களை அதிகளவில் பயன்படுத்துவது குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
</p><p>
அத்துடன், பாதுகாப்புப் படையினரின் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்துவதற்கும், புதிய அறிவைப்பெறுவதற்கும் வாய்ப்பளிக்கும் வகையில் வெளிநாட்டுப் பயிற்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை அதிகரிப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
</p><p>
மேலும், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையின் நடவடிக்கைகள் மற்றும் ஆரம்பிக்கப்படவுள்ள நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையின் செயற்பாடுகள் குறித்தும், இவ்விரு நிறுவனங்களுக்குமான தேவையான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.</p><p>

பாதுகாப்புப் படையினரின் உழைப்புப் பங்களிப்பின் மூலம் அவர்களைக் கட்டுமானத் துறையில் ஈடுபடுத்துவதை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் குறித்தும் இந்தக் கலந்தரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T16:51:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 - கலாசார, உணவுத் திருவிழாவில் கலந்து கொண்ட தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2026-cultural-food-festival-kandiah-baskaran-1786983113"></link>
            <id>https://tamilwin.com/article/2026-cultural-food-festival-kandiah-baskaran-1786983113</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 - கலாசார மற்றும் உணவுத் திருவிழா நிகழ்வு மூன்றாவது நாளாகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வடக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 - கலாசார மற்றும் உணவுத் திருவிழா நிகழ்வு மூன்றாவது நாளாகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p>

வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.</p><p> 

கடந்த 15 ஆம் திகதியிலிருந்து இன்று (17.08.2026) வரை இந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.&nbsp;</p><h2>தனித்துவ அடையாளம்..&nbsp;</h2><p>
</p><p>
இந்தநிலையில், இன்று (17.08.2026) இத்திருவிழா நிகழ்விற்கு றீ(ச்)ஷா நிறுவனத்தின் உரிமையாளர் கந்தையா பாஸ்கரன் (Baskaran Kandiah) வருகை தந்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0787ca3-d167-4743-b001-c955ea05e0f5/26-6a8339c6a1d37.webp' /></p><p>
</p><p>
நிகழ்வில் வடக்கின் பாரம்பரிய உணவு வகைகள், கைவினைப் பொருட்கள் மற்றும் கலைப் பாரம்பரியங்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு யாழ்ப்பாணத்தின் தனித்துவமான பண்பாட்டு அடையாளத்தை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதோடு, பாரம்பரிய கலை மற்றும் உணவுக் கலாசாரத்தை உலகளாவிய ரீதியில் எடுத்துச்செல்லும் முயற்சியாக இத்திருவிழா அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T16:43:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளைக் கொடி ஏந்தி ஈரான் சரண் அடைய வேண்டும் : ட்ரம்ப் விதித்துள்ள நிபந்தனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-says-iran-surrender-under-a-white-flag-1786980276"></link>
            <id>https://ibctamil.com/article/trump-says-iran-surrender-under-a-white-flag-1786980276</id>
            <summary type="text">வெள்ளைக் கொடி ஏந்தி ஈரான் சரண் அடைய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

 ஈரான் சரணடைவதற்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெள்ளைக் கொடி ஏந்தி ஈரான் சரண் அடைய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

 ஈரான் சரணடைவதற்கு காலக்கெடு ஏதும் இல்லை. நான் அவசரப்படவில்லை. அமெரிக்காவின் பொருளாதாரத்தடை ஈரான் மீது கடும் அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது என தெரிவித்துள்ளார்.</p><h2>ஓமான் - ஈரான் இடையே ஒப்பந்தம்</h2><p>இதேவேளை ஹோர்முஸ் நீரிணை வழியே கப்பல் போக்குவரத்தை சீரமைப்பது தொடர்பாக ஓமான் - ஈரான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. ஈரான் ஒட்டிய கடல் பரப்பு வழியாக கப்பல்கள் உள்ளே நுழையவும், ஓமான் அருகிகேயுள்ள கடல் பரப்பு வழியாக வெளியேறவும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97420b3d-6220-425b-bfca-d08599ad5894/26-6a83312944196.webp' /></p><p>
</p><p>

இந்த நிலையில் தங்கள் தரப்பின் பங்களிப்பு இல்லாமல், ஈரான் - ஓமான் ஒப்பந்தம் செய்தது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><h2>ஓமான் மீது தாக்குதல் நடத்துவோம்</h2><p>
</p><p>

 ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்கள் தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் தலையிட்டால் ஓமான் மீது தாக்குதல் நடத்துவோம் என&nbsp;அவர் எச்சரித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8addb6c4-3e17-4b2d-80d7-a5f4b126bd31/26-6a833129e96fe.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T16:41:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் கடற்கரையிலும் ஆணின் சடலம் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mans-body-recovered-from-mannar-beach-1786983185"></link>
            <id>https://ibctamil.com/article/mans-body-recovered-from-mannar-beach-1786983185</id>
            <summary type="text">&amp;nbsp;தலைமன்னார் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நடுக்குடா மீன்பிடி துறையை அண்டிய
கடற்கரை பகுதியில் சிதைவடைந்த நிலையில் அடையாளம் காண முடியாத வகையில் ஆண்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தலைமன்னார் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நடுக்குடா மீன்பிடி துறையை அண்டிய
கடற்கரை பகுதியில் சிதைவடைந்த நிலையில் அடையாளம் காண முடியாத வகையில் ஆண்
ஒருவரின் சடலம் மீன்பிடி வலையினால் சுற்றப்பட்ட நிலையில் இன்று
திங்கட்கிழமை (17) காலை கரை ஒதுங்கியுள்ளது.</p><p>&nbsp;கடற்கரை பகுதியில் உள்ள கடற்படையினர் சடலத்தை இன்று
திங்கட்கிழமை (17) காலை அவதானித்து தலைமன்னார் காவல்துறையினருக்கு தகவல் வழங்கிய
நிலையில் தலைமன்னார் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை
மீட்டுள்ளனர்.</p><h2>&nbsp;மன்னார் பொது வைத்தியசாலையில் சடலம்&nbsp;</h2><p>
</p><p>
சடலம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்
செல்லப்பட்டுள்ளதுடன் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3c7b14f-533a-4a46-b903-4bdf263c4fae/26-6a83395cbbad9.webp' /></p><p>
</p><p>
 சடலம் தொடர்பாக தலைமன்னார் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T16:40:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-threatens-to-bomb-oman-1786984671"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-threatens-to-bomb-oman-1786984671</id>
            <summary type="text">Donald Trump threatens to bomb Oman: ஓமான் இடையூறு செய்தால், அதன் மீது குண்டுவீசுவதாக டொனால்ட் ட்ரம்ப் மிரட்டியுள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Donald Trump threatens to bomb Oman: ஓமான் இடையூறு செய்தால், அதன் மீது குண்டுவீசுவதாக டொனால்ட் ட்ரம்ப் மிரட்டியுள்ளார்.
</p><p>ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் தனது முயற்சிக்கு ஓமான் நாடு தடையாக நின்றால், அந்நாட்டின் மீது குண்டுவீசுவதாக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் மிரட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43ff41fc-ff1d-407f-a8a9-8a65287c751b/26-6a8338e24b290.webp' /></p><p>
</p><p>ஓமான் குறுக்கிட்டால், அவர்களைக் குண்டுமழையால் சின்னாபின்னமாக்குவோம் என்று ட்ரம்ப் திங்களன்று ஃபாக்ஸ் நியூஸிடம் கூறியுள்ளார்.</p><p> 
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பாரம்பரியமாக ஒரு முக்கிய மறைமுகத் தொடர்பாளராகச் செயல்பட்டு வரும், அமெரிக்காவின் நீண்டகால உத்திசார்ப் பங்காளியான ஓமானை நோக்கி, அவர் இதுபோன்ற அச்சுறுத்தலை விடுப்பது இது இரண்டாவது முறையாகும். </p><p>இஸ்ரேலின் அழுத்தம் காரணமாக போர் தொடங்கி, 
கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, அதை ஒரு முடிவுக்குக் கொண்டுவரப் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், </p><p>ஈரானுடன் ஒப்புக்கொள்ளப்பட்ட இராஜதந்திர வாய்ப்புக்கான காலக்கெடு முடிந்து, இறுதி உடன்பாடு எதுவும் தென்படாத நிலையிலும் அமெரிக்க ஜனாதிபதி கடும் விரக்தியில் இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளார் என்றே கூறுகின்றனர்.</p><p></p><p> </p><p>ஆனால், ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு தமக்கு அவசரம் இல்லை என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இதனிடையே, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான அந்த இரண்டு மாத கால அவகாசம், எந்தவொரு திருப்புமுனையும் இன்றி திங்களன்று முடிவடைந்தது. </p><p>போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று ட்ரம்ப் தொடர்ச்சியாக கூறிவந்தாலும், அத்தகைய ஒரு திருப்புமுனை எதுவும் ஏற்படாத நிலையில், சமீப மாதங்களில் ஒரு நீடித்த அமைதி ஒப்பந்தத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அவர் பேசி வந்துள்ளார். </p><p>ஈரான் விவகாரத்தில் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் ட்ரம்ப் நிர்வாகம், போரில் இருந்து வெளியேற முடியாமலும் திணறி வருகிறது. ஆனால், ஈரான் சரணடைய வேண்டும் என்ற கோரிக்கையை ட்ரம்ப் தற்போது முன்வைத்துள்ளார். </p><p>இருப்பினும்
ஈரான் மீது புதிய காலக்கெடுவை விதிக்கப் போவதில்லை என்று அவர் தெரிவித்தார். ஈரான் விவகாரத்தில் தாம் அவசரப்படவில்லை என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
</p><p>கிட்டத்தட்ட ஆறு மாத கால சண்டையால் அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருகிறது என்ற கவலைகளையும் ட்ரம்ப் நிராகரித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d72fd95b-6795-47f1-9d7d-63b2b2e369d1/26-6a8338e19b1e0.webp' /></p><p> </p><p>ஈரானுக்கு எதிராக அமெரிக்கா இதுவரை செலவிட்ட ஆயுதங்கள் வெறும் சிறு அளவு மட்டுமே என்றும் ஃபாக்ஸ் நியூஸிடம் கூறியுள்ளார். மேலும், ஜோ பைடன் நிர்வாகத்தால் மேம்பட்ட ஆயுதங்கள் பல உக்ரைனுக்கு வழங்கப்பட்டதால் சிறு நெருக்கடி ஏற்பட்டது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். </p><p>இதனிடையே, ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் யார் கட்டுப்படுத்துவது என்பது தொடர்பில் ஈரானும் ஓமானும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதில் முன்னேற்றம் ஏற்படுவதாக தகவல் வெளியான நிலையிலேயே, ஓமான் மீது குண்டுவீசப்படும் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். </p><p>அமெரிக்காவுடன் ஓமானுக்கு இருக்கும் பல தசாப்த கால இராணுவ மற்றும் பொருளாதார உறவுகளுக்கு மேலதிகமாக, 53 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த வளைகுடா நாடு, போரில் ஒரு மத்தியஸ்தப் பாத்திரத்தை வகித்துள்ளதுடன், ஈரானின் தாக்குதலுக்கும் உள்ளானது. </p><p>ட்ரம்பின் சமீபத்திய சீற்றத்தையும் மீறி, ஓமானுடன் பேச்சுவார்த்தைகள் தீவிரமாகத் தொடர்வதாக ஈரான் வெளிவிவகார அமைச்சகம் திங்களன்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T16:35:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[படத்தில் கமிட் ஆன பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. சீரியலில் இருந்து விலக போகிறாரா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/pandian-stores-actress-shalini-debuts-in-cinema-1786984391"></link>
            <id>https://cineulagam.com/article/pandian-stores-actress-shalini-debuts-in-cinema-1786984391</id>
            <summary type="text">விஜய் டிவியின் முக்கிய சீரியல் ஆக இருந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். அதில் ராஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஷாலினி.கதையில் முக்கிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஜய் டிவியின் முக்கிய சீரியல் ஆக இருந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். அதில் ராஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஷாலினி.</p><p>கதையில் முக்கிய ரோல்களில் ஒன்று தான் அது. ஷாலினியின் நடுப்புக்கும் ரசிகர்களிடம் வரவேற்பு இருந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15087acd-610d-470a-8ce7-e31fc14d8aec/26-6a8337c93cf0a.webp' /></p><p>
</p><h2>கவின் படம்
</h2><p>இந்நிலையில் ஷாலினி தற்போது படத்தில் கமிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கவின் அடுத்து நடிக்கும் படத்தில் ஷாலினி ஒரு முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறாராம்.</p><p>அதனால் அவர் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிப்பாரா அல்லது விலக போகிறாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/949d32fa-7149-4626-ba80-4b0bf2a03058/26-6a8337ca17585.webp' /></p>]]></content>
            <updated>2026-08-17T16:33:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இ. ஜீன் கரோல் வழக்கு: டொனால்ட் ட்ரம்ப்பின் மேன்முறையீட்டை மீண்டும் நிராகரித்தது அமெரிக்க உயர் நீதிமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-supreme-court-rejects-donald-trump-1786983511"></link>
            <id>https://tamilwin.com/article/us-supreme-court-rejects-donald-trump-1786983511</id>
            <summary type="text">எழுத்தாளர் இ. ஜீன் கரோலுக்கு 5 மில்லியன் அமெரிக்க
டொலர்களை நஷ்டஈடாக வழங்குமாறு அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக ஜனாதிபதி
டொனால்ட் ட்ரம்ப் தாக்கல் செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எழுத்தாளர் இ. ஜீன் கரோலுக்கு 5 மில்லியன் அமெரிக்க
டொலர்களை நஷ்டஈடாக வழங்குமாறு அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக ஜனாதிபதி
டொனால்ட் ட்ரம்ப் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை அமெரிக்க உயர்
நீதிமன்றம் மீண்டும் நிராகரித்துள்ளது.</p><p>

கடந்த 1990களில் நியூயோர்க்கில் உள்ள பேரங்காடி ஒன்றில் வைத்துத் தம்மை
பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும், பின்னர் அது குறித்து தவறான
தகவல்களை வெளியிட்டு தமக்கு அவதூறு ஏற்படுத்தியதாகவும் கூறி இ. ஜீன் கரோல்
வழக்குத் தொடர்ந்திருந்தார்.
</p><p>
இவ்வழக்கை விசாரித்த நடுவர் மன்றம், ட்ரம்ப் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும்
அவதூறு வழக்குகளில் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து 5 மில்லியன் டொலர் நஷ்டஈடு
வழங்குமாறு உத்தரவிட்டது.</p><h2>நஷ்டஈடு</h2><p>
</p><p>
கடந்த ஜூன் மாதம் இந்தத் தீர்ப்பை எதிர்த்து ட்ரம்ப் தாக்கல் செய்த மனுவை உயர்
நீதிமன்றம் நிராகரித்த நிலையில், அம்மனுவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரி
ட்ரம்ப்பின் சட்டத்தரணிகள் மீண்டும் விண்ணப்பித்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5073dfbf-189d-4e58-80af-0e4af4282ce7/26-6a8335099a6de.webp' /></p><p>
</p><p>
இந்நிலையிலேயே, அந்த மறுபரிசீலனை மனுவையும் உயர் நீதிமன்றம் தற்போது தள்ளுபடி
செய்துள்ளது.
</p><p>
அதேவேளை, ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கரோலின் குற்றச்சாட்டுகளை
மறுத்து அவதூறு பரப்பியதாகத் தொடரப்பட்ட மற்றொரு வழக்கில், அவருக்கு 83.3
மில்லியன் டொலர் நஷ்டஈடு விதிக்கப்பட்டிருந்தது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T16:21:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் வரிக் கொள்கை மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-needs-tax-reform-relieving-small-business-1786956630"></link>
            <id>https://canadamirror.com/article/canada-needs-tax-reform-relieving-small-business-1786956630</id>
            <summary type="text">கனடாவில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் வரிக் கொள்கை சீர்திருத்தங்களை ஒட்டாவா அரசு &quot;படிப்படியாக&quot; அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதில் சிறு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் வரிக் கொள்கை சீர்திருத்தங்களை ஒட்டாவா அரசு "படிப்படியாக" அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதில் சிறு வணிகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் பிரதமர் மார்க் கார்னியின் வரவுசெலவுத் திட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேய்ன் லாங் தெரிவித்துள்ளார். </p><p>
கனடாவின் சிக்கலான வரி அமைப்பை எளிமையாக்கி, மேம்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என பல வரி நிபுணர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
</p><p>தற்போதைய வரி முறையின் விதிமுறைகள் அடுக்கடுக்காக அதிகரித்து, வணிகங்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் சுமையாக மாறியுள்ளதை அரசு ஒப்புக்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c391352-f9e4-4f27-9727-ee44885b8810/26-6a82cb57ee108.webp' /></p><p> </p><p>
கனடாவின் சிக்கலான வரி விதிகளால் சில முக்கிய சர்வதேச முதலீட்டாளர்கள் முதலீடு செய்யத் தயங்குவதாகவும், இந்தத் தடைகளைக் குறைத்து முதலீடுகளை ஈர்ப்பதே அரசின் நோக்கம் என்றும் வேய்ன் லாங் குறிப்பிட்டார்.</p><p>
பிரதமர் மார்க் கார்னியின் தலைமையில் சமர்ப்பிக்கப்படவுள்ள இரண்டாவது இலையுதிர் கால வரவுசெலவுத் திட்டம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் "இரண்டாம் கட்ட நடவடிக்கையாக" இருக்கும். 
கனடாவில் பெரிய அளவிலான வரி சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு சுமார் 40 ஆண்டுகள் ஆகிவிட்டன.</p><p> தற்போதைய அரசு சிறு மாற்றங்களை மட்டுமே செய்து வருவதாகவும், பொருளாதாரத்தை முடக்கும் பழைய வரி முறையை முழுமையாக மாற்ற தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கன்சர்வேடிவ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.</p><p>
சிறு வணிகர்களுக்கான வரி விதிப்பு நடைமுறைகளை எளிமையாக்கி, அறிக்கை சமர்ப்பிக்கும் சுமையைக் குறைப்பதே அரசின் முதன்மை இலக்காக உள்ளது. </p><p>
அரசின் இந்த முடிவை கனடிய சுதந்திர வணிக கூட்டமைப்பு வரவேற்றுள்ள அதே வேளையில், நிஜமான மாற்றம் வரவுசெலவுத் திட்டத்தில் பிரதிபலித்தால் மட்டுமே சிறு வணிகர்கள் பலனடைவர் என்று சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T16:10:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேனிலவு சென்றபோது மாதவிடாய்.. மணமகன் செயலால் அதிர்ந்த மணமகள்; காப்பாற்றிய ஹோட்டல் ஊழியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/menstruation-honeymoon-groom-strangles-bride-1786950927"></link>
            <id>https://jvpnews.com/article/menstruation-honeymoon-groom-strangles-bride-1786950927</id>
            <summary type="text">இந்தியா உத்திர பிரதேசத்தை சேர்ந்த புதுமண தம்பதிகள்&amp;nbsp; தேனிலவின்போது மாதவிடாய் ஏற்பட்டதால் தனது கணவர் தன்னைத் தாக்கியதாகப், உத்தரப்பிரதேச மாநிலம் கோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா உத்திர பிரதேசத்தை சேர்ந்த புதுமண தம்பதிகள்&nbsp; தேனிலவின்போது மாதவிடாய் ஏற்பட்டதால் தனது கணவர் தன்னைத் தாக்கியதாகப், உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்த பெண் ஒருவர், பெண் ஒருவர் முறைப்பாடு செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
</p><p>
இதையடுத்து, அவரது கணவர், மாமியார் மற்றும் நாத்தனார் ஆகியோர் மீது போலீஸார் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdf20a8b-52fd-4b95-9f0a-030f61cf05cd/26-6a82b511a9314.webp' /></p><h2>கணவர் மற்றும்&nbsp; குடும்பத்தினர்&nbsp; துன்புறுத்தியதாக பெண் முறைப்பாடு</h2><p> </p><p>

 

கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் நிகில் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின்போது வரதட்சணையாக லட்சக்கணக்கில் பணமும், காரும் கொடுக்கப்பட்ட போதிலும், கூடுதல் வரதட்சனை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை துன்புறுத்தியதாக அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
டெல்லியைச் சேர்ந்த தனது கணவர் நிகில் மிஸ்ரா, தனக்கு மாதவிடாய் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்து தன்னை அறைந்தும், உதைத்தும், குத்தியும் தாக்கியதுடன், கழுத்தை நெரிக்கவும் முயன்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவரது அலறல் சத்தம் கேட்டு ஹோட்டல் ஊழியர்கள் தலையிட்டு தாக்குதலை நிறுத்தியதாக அவர் கூறினார்.

தொடர்ந்து டெல்லிக்கு திரும்பிய பின்னரும் கணவர் மற்றும் மாமியார், நாத்தனார் ஆகியோர் சேர்ந்து அவரை மனரீதியாக தொடர்ந்து சித்திரவதை செய்துள்ளனர்.</p><p></p><p> </p><p>மேலும், திருமணமான 45 நாட்களுக்குள் அதாவது ஜூலை 14 அன்று அவர் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். </p><p>
 
இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்க முயன்றும் பலனளிக்காத நிலையில், கோரக்பூர் மூத்த காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கௌஸ்துப் அவர்களின் தலையீட்டிற்கு பின் கணவர் நிகில் மிஸ்ரா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T16:09:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டுப் பணியாளர்களின் பணப் பரிமாற்றம் தொடர்பில் இறைவரித் திணைக்களம் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/foreign-workers-need-not-fear-taxes-1786982815"></link>
            <id>https://jvpnews.com/article/foreign-workers-need-not-fear-taxes-1786982815</id>
            <summary type="text">வெளிநாட்டுப் பணியாளர்கள் வெளிநாடுகளில் சட்டப்பூர்வமாக ஈட்டும் வருமானத்தை வங்கி அமைப்பின் ஊடாக இலங்கைக்கு அனுப்பும்போது வரிகள் தொடர்பில் அச்சப்படத் தேவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டுப் பணியாளர்கள் வெளிநாடுகளில் சட்டப்பூர்வமாக ஈட்டும் வருமானத்தை வங்கி அமைப்பின் ஊடாக இலங்கைக்கு அனுப்பும்போது வரிகள் தொடர்பில் அச்சப்படத் தேவையில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி ஆணையாளர் ஹிரான் மெனேரிபிட்டிய இதனைத் தெரிவித்தார். </p><p>

இலங்கையின் வரி நோக்கங்களுக்காக ஒருவர் வசிப்பிடவாசியாகக் (resident) கருதப்பட்டால், அந்த நபர் வெளிநாடுகளிலிருந்து ஈட்டும் வருமானமும் இலங்கையிலிருந்து ஈட்டும் வருமானமும் வரிக்கு உட்படும் என அவர் கூறினார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e7afd5d-3052-4458-a098-7721dca32d91/26-6a8331a1424ad.webp' /></p><p>இருப்பினும், குறித்த மதிப்பீட்டு ஆண்டிற்கு ஒருவர் இலங்கையின் வரி நோக்கங்களுக்காக வசிப்பிடவாசியாக இல்லாதிருப்பின், அவர் இலங்கைக்கு வெளியில் ஈட்டும் வருமானம் இலங்கையில் வரிக்கு உட்படுத்தப்படமாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். </p><p>

இதன்படி, வெளிநாட்டு ஊழியர் ஒருவர் வெளிநாட்டில் ஈட்டும் வருமானத்தை வங்கி அமைப்பின் மூலம் இலங்கைக்கு அனுப்பும்போது வரி தொடர்பில் தேவையற்ற பயம் கொள்ளத் தேவையில்லை என ஹிரான் மெனேரிபிட்டிய வலியுறுத்தினார். </p><p>

வெளிநாடுகளிலிருந்து பணத்தை அனுப்பும்போது, வங்கி அமைப்பின் ஊடாக அப்பணத்திற்காக தனியாக எந்தவொரு வரியும் அறவிடப்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p> 

மேலும், வெளிநாட்டுப் பணியாளர்கள் தங்களால் சட்டப்பூர்வமாக ஈட்டப்பட்ட வருமானத்தை வங்கி அமைப்பின் மூலம் நாட்டிற்கு அனுப்பி, அதைச் சட்டப்பூர்வமாக முதலீடு செய்வதற்கான வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.</p><p> 

"வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் வரிக்கு உட்படுவது, அவர்கள் இலங்கையின் வரி நோக்கங்களுக்காக வசிப்பிடவாசியாக இருந்தால் மட்டுமே. அவ்வாறாயின், அவர்கள் வெளிநாட்டிலும் இலங்கையிலும் ஈட்டும் வருமானம் வரிக்கு உட்படும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a0e2902-d20b-4125-9326-d7d5f2cd90e7/26-6a8331a1e6a3d.webp' /></p><p>ஆனால், குறித்த மதிப்பீட்டு ஆண்டிற்கு அந்த வெளிநாட்டு ஊழியர் இலங்கையில் வரி நோக்கங்களுக்காக வசிப்பிடவாசியாக இல்லாதிருப்பின், அவர் இலங்கைக்கு வெளியில் ஈட்டும் வருமானம் இலங்கையில் வரிக்கு உட்படுத்தப்படமாட்டாது. </p><p>எனவே, வெளிநாட்டு ஊழியர் ஒருவர் வெளிநாட்டில் ஈட்டும் வருமானத்தை வங்கி அமைப்பின் மூலம் இலங்கைக்கு அனுப்பும்போது வரி குறித்து பயப்படத் தேவையில்லை.</p><p> பணத்தை அனுப்பும்போது வங்கி அமைப்பின் மூலம் அதற்காக எந்த வரியும் அறவிடப்படுவதில்லை. </p><p>அதேபோல், அவர்கள் வெளிநாட்டில் சட்டப்பூர்வமாக ஈட்டிய வருமானத்தை வங்கி அமைப்பின் மூலம் இலங்கைக்கு அனுப்புவதன் மூலம், அது சட்டப்பூர்வமான வருமானம் என்பதை உரிய நிறுவனங்களுக்குத் தெரிவித்து அதை முதலீடு செய்வதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது. </p><p>இதனால் வரி குறித்து அச்சமடைந்து சட்டவிரோதமான வழிகளில் பணத்தை அனுப்புவது இதற்குத் தீர்வாகாது" எனக் கூறினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T16:07:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/advanced-level-exam-student-passes-away-1786981013"></link>
            <id>https://tamilwin.com/article/advanced-level-exam-student-passes-away-1786981013</id>
            <summary type="text">யாழில் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் ஒருவர்&amp;nbsp; பரிதாபமாக
உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவமானது நேற்றையதினம்(16.8.2026) இடம்பெற்றுள்ளது.இதன்போது அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் ஒருவர்&nbsp; பரிதாபமாக
உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த சம்பவமானது நேற்றையதினம்(16.8.2026) இடம்பெற்றுள்ளது.</p><p>இதன்போது அரசடி வீதி, கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><h2>சிகிச்சை</h2><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த மாணவன் கடந்த 10ஆம் திகதி உயிரியல் பிரிவில் இரண்டாவது நாள் பரீட்சை
எழுதும்போது மயக்கம் ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a721f3af-a9e3-4f6b-a13d-0b89a00aa7fd/26-6a832d8ada213.webp' /></p><p> </p><p>இதன்போது அவரது பெற்றோர் வரவழைக்கப்பட்டு
வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.பின் சிகிச்சையின் பின் வீடு திரும்பினார்.</p><p>அதன்பின்னர் மீண்டும் 12 ஆம் திகதி
உடல் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் சிகிச்சை பெற்றார்.</p><h2>உயிரிழப்பு</h2><p>
</p><p>
பின்னர் நேற்றிரவு (16) உணவு அருந்திவிட்டு இருந்தவேளை வலிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து
விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/967c780f-b90b-4cd4-9440-da0f2c9e3585/26-6a832d8b912ee.webp' /></p><p>
</p><p>
அவரது மரணம் சம்பந்தமான விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி வி.அன்ரலா
மேற்கொண்டார்.
</p><p>
உடற்கூற்று பரிசோதனைகளின் போதும் குறித்த மரணத்துக்கான காரணம்
கண்டுபிடிக்கப்படாத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T15:49:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்கிடம் 250 கோடி ரூபா இலஞ்சம் கேட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/deshabandu-tennakoon-drugs-crime-1786925811"></link>
            <id>https://tamilwin.com/article/deshabandu-tennakoon-drugs-crime-1786925811</id>
            <summary type="text">பெரும் அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவருமான ஷிரான் பாசிக்கின் &#039;சோல் பீச்&#039; (Soul Beach) ஹோட்டலை இடித்து தரைமட்டமாக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெரும் அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவருமான ஷிரான் பாசிக்கின் 'சோல் பீச்' (Soul Beach) ஹோட்டலை இடித்து தரைமட்டமாக்கியதில் மறைக்கப்பட்ட உண்மை கதையொன்றை புலனாய்வு ஊடகவியலாளரும், இலங்கை விமானப்படையின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான கீர்த்தி ரத்நாயக்க வெளியிட்டுள்ளமை சர்ச்சையை கிளப்பியுள்ளது.</p><p>வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய விசேட கலந்துரையாடலிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள தகவல்களில்,</p><p>சவேந்திர சில்வாவின் கோரிக்கையின் அடிப்படையில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஹோட்டலை இடித்தார் என்று குறித்த ஹோட்டலின் முகாமையாளர் ரிபா காதர் கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
</p><p></p><h2>பழிவாங்கிய சம்பவம்</h2><p>இருப்பினும், இது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டாகும். அதாவது தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய போது ஷிரான் பாசிக்கிடம் 250 கோடி ரூபா இலஞ்சம் கோட்டுள்ளார். அதை கொடுக்க மறுத்ததால் பழி தீர்க்கும் முகமாக தேசபந்து தென்னகோன் ஹோட்டலை இடித்து தரைமட்டமாக்கினார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gKFV72M95uY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக பதவியேற்ற பின்னர், அவரை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட ஊடக பிரசாரத்திற்கு தேவையான கூட்டங்கள் அனைத்தும் 'சோல் பீச்' ஹோட்டலிலேயே நடைபெற்றன.
</p><p>இந்த பிரசாரங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் 'சோல் பீச்' ஹோட்டலே வழங்கியது. அவர் பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டதும், "இதை நிரந்தரமாக்கிக்கொள்ள எனக்கு இவ்வளவு தொகை பணம் வேண்டும்" என்று கேட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6d3c367-cb7b-41c4-8e3d-2cdd12638cd7/26-6a8252f52914c.webp' /></p><p>அதற்கு ஷிரான் பாஷிக், "இந்த நேரத்தில் அவ்வளவு தொகையைக் கொடுக்க முடியாது" என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக தேசபந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதனை நிராகரித்த பின்னர் தனக்கு உதவிய நபரை பழிவாங்குவதற்காக இந்த ஹோட்டலை இடித்தார். தான் கேட்ட பணம் கிடைக்காததால் பழிவாங்கும் நோக்கில் இதைச்செய்தார்.</p><p>அக்காலத்தில் இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் (SSP), பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் (OIC) என பொலிஸில் உள்ள அனைவரும் வந்து சாப்பிட்டு, குடித்தது இந்த 'சோல் பீச்' ஹோட்டலில் தான். இது அனைவருக்கும் தெரிந்த விடயம். </p><p>ஆனால், அதற்கு அடுத்ததாக உள்ள 'பரகுடா' (Barracuda) உணவகத்தில் பொலிஸாரால் சும்மா ஒரு தேநீர் கூட குடிக்க முடியாது என்றும் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T15:35:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈராக் பிரதமரின் அலுவலகம் மீது ட்ரோன் தாக்குதல்: ஈரானிய எல்லையிலிருந்து ஏவப்பட்டதாக குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drone-attack-on-iraqi-prime-minister-s-office-1786980440"></link>
            <id>https://tamilwin.com/article/drone-attack-on-iraqi-prime-minister-s-office-1786980440</id>
            <summary type="text">பர்ஸானியின் அலுவலகம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு பிரதானியின் இல்லத்தைக்
குறிவைத்து ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>பர்ஸானியின் அலுவலகம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு பிரதானியின் இல்லத்தைக்
குறிவைத்து ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்த தாக்குதல், இன்று(17.08.2026) ஈராக்கில் அதிகாலை வேளையில் இடம்பெற்ற இத் தாக்குதல்களில்
எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என குர்திஸ்தான்
பாதுகாப்புப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
“ஹதீத்-110” ரகத்தைச் சேர்ந்த இரண்டு ட்ரோன்கள் மூலம் இந்த தாக்குதல்
முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><h2>
நேரடி அச்சுறுத்தல்</h2><p>
இந்த தாக்குதலானது ஈரானிய எல்லைப் பகுதிக்குள் இருந்தே ஏவப்பட்டதாக குர்திஷ்
பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், ட்ரோன்கள் இலக்குகளைச் சரியாகத் தாக்கியதா என்பது குறித்த தெளிவான
விவரங்கள் வெளியிடப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1537e31a-d7aa-4eef-b909-111a6074d673/26-6a83296773130.webp' /></p><p>

இந்த சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ள பிரதமர் மஸ்ரூர் பர்ஸானி, இது
சட்டவிரோதமானதும் ஏற்றுக்கொள்ள முடியாததுமான ஒரு நடவடிக்கை எனக்
குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அத்துடன், குர்திஸ்தான் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கும் ஸ்திரத்தன்மைக்கும்
விடுக்கப்பட்ட நேரடி அச்சுறுத்தல் இதுவெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானிய குர்திஷ் எதிர்ப்பு
அமைப்புகளுக்கு ஈராக் பிராந்தியம் புகலிடம் அளிப்பதாக ஈரானும் அதன் ஆதரவு
ஆயுதக் குழுக்களும் தொடர்ச்சியாகக் குற்றம் சுமத்தி வருகின்றன.
</p><p>
எனினும், அண்டை நாடுகளுக்கு எதிராகத் தமது நிலப்பரப்பைப் பயன்படுத்த
அனுமதிக்கவில்லை என ஈராக்கிய குர்திஷ் அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T15:32:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்கூட்டர் விற்பனையில் ஹோண்டாவை முந்திய TVS - வரலாற்று சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tvs-overtakes-honda-in-july-scooter-sales-1786979288"></link>
            <id>https://news.lankasri.com/article/tvs-overtakes-honda-in-july-scooter-sales-1786979288</id>
            <summary type="text">TVS overtakes Honda in July scooter sales: ஸ்கூட்டர் விற்பனையில் TVS சாதனை படைத்துள்ளது.

இந்தியாவின் இரு சக்கர வாகன சந்தையில் ஜூலை 2026 மாதம் முக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>TVS overtakes Honda in July scooter sales: ஸ்கூட்டர் விற்பனையில் TVS சாதனை படைத்துள்ளது.
</p><p>
இந்தியாவின் இரு சக்கர வாகன சந்தையில் ஜூலை 2026 மாதம் முக்கியமான மாற்றம் நிகழ்ந்தது.
</p><p>
TVS மோட்டார் நிறுவனம், ஹோண்டா மோட்டார் &amp; ஸ்கூட்டர் இந்தியாவை (HMSI) முந்தி, ஸ்கூட்டர் விற்பனையில் முதலிடம் பிடித்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7eda28c9-b849-4c32-8b5b-67bcf1553742/26-6a8323daafc19.webp' /></p><h2>40 சதவீதம் அதிக&nbsp;விற்பனை</h2><p>ஜூலை மாதத்தில் மொத்தம் 7.98 லட்சம் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. இதில் TVS 2,56,675 யூனிட்களை விற்றது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 40 சதவீதம் அதிகம்.
</p><p>
ஹோண்டா 2,33,337 யூனிட்களை மட்டுமே விற்றது. இது 12 சதவீதம் வீழ்ச்சி. இதனால் TVS, ஹோண்டாவை 23,338 யூனிட்கள் வித்தியாசத்தில் முந்தியது.</p><p></p><h2>சந்தைப் பங்கு</h2><p>TVS-இன் சந்தைப் பங்கு 28 சதவீதத்திலிருந்து 32 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஹோண்டாவின் பங்கு 41 சதவீதத்திலிருந்து 29 சதவீதமாக குறைந்துள்ளது.</p><p><b>

TVS-இன் வளர்ச்சிக்கு முக்கிய காரணங்கள்</b></p><p>ICE ஸ்கூட்டர்கள் (Jupiter, NTorq, Zest) - 1,97,289 யூனிட்கள் (23 சதவீதம் அதிகம்).
</p><p>
EV ஸ்கூட்டர்கள் (iQube, Orbiter) - 59,386 யூனிட்கள் (158 சதவீதம் அதிகம்).
</p><p></p><p>ஹோண்டாவின் Activa மற்றும் Dio மாடல்கள் 2,32,073 யூனிட்கள் விற்றன. இது 12 சதவீதம் வீழ்ச்சி. ஹோண்டாவின் EV விற்பனை 1,264 யூனிட்கள் மட்டுமே.</p><h2>

மற்ற நிறுவனங்கள்: </h2><ul><li>Suzuki (1,20,998 யூனிட்கள்)</li><li>Hero MotoCorp (61,347)</li><li> Bajaj Auto (48,684)</li><li>Yamaha (36,783)</li><li>Ather Energy (31,044)</li></ul><p>

ஜூலை மாதத்தில் மொத்த EV விற்பனை 1,70,243 யூனிட்கள். இது மொத்த ஸ்கூட்டர் விற்பனையின் 21 சதவீதம் ஆகும்.

இந்த சாதனை, இந்திய ஸ்கூட்டர் சந்தையில் TVS-இன் வலுவான நிலையை வெளிப்படுத்துகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T15:05:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொங்கோவில் இதுவரை இல்லாத மிக மோசமான பேரழிவு: எபோலா உயிரிழப்பு உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/worst-disaster-ever-in-congo-1786978905"></link>
            <id>https://tamilwin.com/article/worst-disaster-ever-in-congo-1786978905</id>
            <summary type="text">ஜனநாயகக் கொங்கோ குடியரசில் மிக வேக பரவிவரும் எபோலா வைரஸ் தொற்றினால்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,325 ஆக உயர்வடைந்துள்ளது. 

இதன் மூலம் அந்நாட்டின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனநாயகக் கொங்கோ குடியரசில் மிக வேக பரவிவரும் எபோலா வைரஸ் தொற்றினால்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,325 ஆக உயர்வடைந்துள்ளது. 

இதன் மூலம் அந்நாட்டின் வரலாற்றில் பதிவான மிக மோசமான மற்றும் பேரழிவை ஏற்படுத்திய எபோலா பரவலாக இது மாறியுள்ளது.
</p><p>
கடந்த 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் ஏற்பட்ட எபோலா பரவலின் போது 2,299 பேர் உயிரிழந்திருந்த நிலையில், தற்போதைய அலையின் தாக்கத்தினால் பலி எண்ணிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.</p><h2>

அதிகரிக்கும் எபோலா தொற்று</h2><p>
</p><p>
நாட்டின் தேசிய பொது சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அண்மைக்கால
அறிக்கையின்படி, இதுவரை 4,945 பேருக்கு நோய் தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 101 புதிய
நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3097e10-5270-41ad-b121-58b9d29a1678/26-6a8322cb71414.webp' /></p><p>
</p><p>
வைரஸின் தீவிர பரவல் குறித்து எச்சரித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உதவித்
திட்ட அதிகாரி டொம் பிளெட்சர், எபோலா வைரஸ் கட்டுப்பாடுகளை மீறி வெகுவேகமாக பரவி வருவதாகவும், இதனைத் தடுக்க சர்வதேச சமூகத்தின் உடனடி ஒத்துழைப்பும்
வேகமான நடவடிக்கைகளும் அவசியமெனவும் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

இந்த முறை பரவிவரும் 'புண்டிக்புஜோ' ரக எபோலா வைரஸுக்கு இதுவரை
அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது உரிய சிகிச்சைகளோ கண்டறியப்படவில்லை என்பது நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
</p><h2>
உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்வு</h2><p>

அத்துடன் மோசமான சுகாதார கட்டமைப்பு, நாட்டின் எல்லைப் பகுதிகளில் நிலவும்
ஆயுத மோதல்கள் மற்றும் போக்குவரத்து வசதியின்மை என்ப </p><p>ன நோய் தடுப்புப்
பணிகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளன.

தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் மரணிப்போரின் விகிதம் ஆரம்பத்தில் 20
சதவீதமாக இருந்தபோதிலும், தற்போது அது 46 சதவீதமாக கணிசமாக அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b429ebcc-0ca8-469e-8c1e-fef2d92e8fce/26-6a8322cc3c6c0.webp' /></p><p>
</p><p>
அதாவது நோய்த்தொற்றுக்குள்ளாகும் இருவரில் ஒருவர் உயிரிழக்கும் அபாயகரமான
சூழல் நிலவுவதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் நிபுணர்கள் கவலை
வெளியிட்டுள்ளனர்.</p><p>

தற்போதைய பரவல் வேகம் தொடருமானால், உலகளவில் பேரழிவை ஏற்படுத்திய 2014-2016 மேற்கு ஆபிரிக்க எபோலா பரவலையும் இது விஞ்சிவிடும் என உலக சுகாதார நிறுவனம்
எச்சரித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-17T15:03:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வரி வசூலில் புதிய சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-record-in-sri-lanka-govt-tax-collection-1786971650"></link>
            <id>https://jvpnews.com/article/new-record-in-sri-lanka-govt-tax-collection-1786971650</id>
            <summary type="text">&amp;nbsp; 2026ஆம் ஆண்டுக்காக உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 2,402 பில்லியன் ரூபாய் வரி வருவாய் இலக்கில் இதுவரை 61 சதவீதம் வசூல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 2026ஆம் ஆண்டுக்காக உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 2,402 பில்லியன் ரூபாய் வரி வருவாய் இலக்கில் இதுவரை 61 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நந்தன குமார தெரிவித்துள்ளார்.</p><p>



கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு வரி வருவாய் வசூல் சுமார் 16 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9d5d24a-5b4d-4812-a2f3-0b64fd841dd9/26-6a83060467b2e.webp' /></p><p>
</p><p>


இதன்படி, 2026ஆம் ஆண்டுக்கான முழுமையான வரி வருவாய் இலக்கை எட்ட முடியும் என உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
</p><p>


மேலும், நாட்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பயனாக, இதுவரை சுமார் 12 இலட்சம் தனிநபர் வருமான வரிக் கோப்புகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


அத்துடன், 1,30,000க்கும் அதிகமான நிறுவனங்கள் வரி செலுத்துவதற்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-17T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக அரசியலில் பரபரப்பு : விஜயுடன் நிரந்தரமாக கூட்டணி அமைக்கிறார் திருமாவளவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/alliance-with-tavega-visika-1786976762"></link>
            <id>https://ibctamil.com/article/alliance-with-tavega-visika-1786976762</id>
            <summary type="text">&amp;nbsp;தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைத்து இனிவரும் தேர்தல்களில் இணைந்து பயணிக்கப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைத்து இனிவரும் தேர்தல்களில் இணைந்து பயணிக்கப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.</p><p>கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற பிரமாண்ட மாநாட்டில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்களின் பலத்த கரகோஷத்திற்கு இடையே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.</p><h2>அரசியல் களத்தில் இணைந்தே பயணிக்கும்</h2><p>மாநாட்டில் உரையாற்றிய விசிக தலைவர் திருமாவளவன், "இன்றைக்கு ஆளுகிற முதலமைச்சர் அன்பு சகோதரர் ஜோசப் விஜய் அவர்களோடு நாம் கூட்டணி வைத்திருக்கிறோம்.

விசிகவும் தவெகவும் இனி இந்த அரசியல் களத்தில் இணைந்தே பயணிக்கும்" என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8aec7766-1035-453e-afb0-26c78257ebf8/26-6a831f2079379.webp' /></p><p> சமூக நீதி, மாநில உரிமைகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளின் அடிப்படையில் இந்த கூட்டணி வலுப்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இத்தனை ஆண்டுகாலம் ஆளுங்கட்சிகளோடு நாம் கூட்டணி வைத்தோம். இனி நாம் ஆளுங்கட்சியாக வரவேண்டும் என திருமாவளவன் பேசினார்.</p><p></p><h2>திடீர் அறிவிப்பால் தமிழக அரசியலில் பரபரப்பு</h2><p>

விசிக-தவெக கூட்டணியின் இந்த திடீர் அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளது. இரு முக்கியக் கட்சிகளின் கரங்கள் கோர்க்கப்பட்டுள்ள நிலையில், வரவிருக்கும் தேர்தல் களத்தில் இது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96435867-86b2-4a54-90ec-b06686b0366a/26-6a831f214a241.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T14:53:29+00:00</updated>
        </entry>
    </feed>
