<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-10T21:09:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் களைகட்டும் இலங்கை ; 6 நாட்களில் 42,810 சுற்றுலாப் பயணிகள் வருகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-is-overrun-with-foreign-tourists-1786395751"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-is-overrun-with-foreign-tourists-1786395751</id>
            <summary type="text">ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஆறு நாட்களில் மாத்திரம் இலங்கைக்கு 42,810 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அண்மை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஆறு நாட்களில் மாத்திரம் இலங்கைக்கு 42,810 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அண்மைய தரவுகள் தெரிவிக்கின்றன.</p><p></p><p>
அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, ஆகஸ்ட் 1ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
</p><p>
அந்தக் காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 7,827 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன், இது அந்த ஆறு நாட்களில் பதிவான மொத்த சுற்றுலாப் பயணிகள் வருகையில் சுமார் 18 சதவீதமாகும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db8fb4b3-576a-4532-8a1e-6ac544520467/26-6a7a3c6940ab0.webp' /></p><p>அதேவேளை, குறித்த காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 4,922 பேரும், பிரான்ஸிலிருந்து 3,908 பேரும், சீனாவிலிருந்து 3,031 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.</p><p>

இதன்படி, இந்தியா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இலங்கையின் முக்கிய சுற்றுலா சந்தைகளாக தொடர்ந்தும் காணப்படுகின்றன.</p><p>இதேவேளை, 2026 ஜனவரி 1ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 6ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,386,228 ஆகப் பதிவாகியுள்ளது.
</p><p>
இதில் இந்தியா தொடர்ந்தும் இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலா சந்தையாக காணப்படுகிறது. ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 6 வரையான காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 346,057 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
</p><p>
அதே காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 135,323 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
</p><p>
மொத்த வருகை எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 25 சதவீதமாக காணப்படுவதுடன், ஐக்கிய இராச்சியத்தின் பங்கு சுமார் 9.8 சதவீதமாக பதிவாகியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T21:02:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறைபதமடைந்தார் தமிழ் வித்துவான் வாகரைவாணன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-scholar-vagaraivanan-achieved-natural-beauty-1786392666"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-scholar-vagaraivanan-achieved-natural-beauty-1786392666</id>
            <summary type="text">1941 டிசம்பர்22 ல் மட்டகளப்பு வாகரை மண்ணில் சந்தியாப்பிள்ளை தம்பதிகளுக்கு உதித்த அரியரெத்தினம் எனும் இயற்பெயரைக்கொண்ட 
வாகரை வாணன் நேற்று(10.08.2026)...</summary>
            <content type="html"><![CDATA[<p>1941 டிசம்பர்22 ல் மட்டகளப்பு வாகரை மண்ணில் சந்தியாப்பிள்ளை தம்பதிகளுக்கு உதித்த அரியரெத்தினம் எனும் இயற்பெயரைக்கொண்ட 
வாகரை வாணன் நேற்று(10.08.2026) இறைவடி சேர்ந்துள்ளார்.
</p><p>இவர் தோற்றத்தில் எளிமையும், அறிவில் ஆழமும் செயற்பாட்டில் இடையறா உக்கிரமும் தளராத நெஞ்சமும் கொண்ட அறிவாளன் ஆவார்.</p><h2>தமிழ் வித்துவான் வாகரைவாணன்</h2><p>
</p><p>
இலங்கை தமிழரசுக் கட்சி உத்தியோக பூர்வ பத்திரிகையான “சுதந்திரன்”பத்திரிகையில் பணியாற்றிய இவர்
மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியால் 1960, காலப்பகுதியில் இடம்பெற்ற அறவழிப்போராட்டங்களிலும் பங்குபற்றியுள்ளார்.
</p><p>
தமிழ் வித்துவான் வாகரைவாணன் ஆங்கிலம் மற்றும் இலத்தின் மொழிகளில் புலமை மிக்கவராக காணப்படுவதுடன் தழிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்களை ஆக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d85f9cea-0c8b-49b9-be91-18cbe8af2be6/26-6a7a32dbb03ef.webp' /></p><p>

மேலும் கவிதைகள், நாடகங்கள், சிறுகதைகள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகள் பலவற்றையும் இவர் எழுதியுள்ளார். அத்துடன் தமிழர் தேசியச் சிந்தனை மற்றும் தமிழ் உணர்வு கொண்ட ஒரு ஆளுமையாக இவர் அறியப்படுகிறார்.</p><p>அன்னாரில் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக மட்டக்களப்பு நாவற்குடா புனித சின்னலூர்து அன்னை திருத்தலத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று(11) பி.ப.3.30 மணிக்கு நாவற்குடா கத்தோலிக்க சேமக்கவாலையில் நல்லடக்கம் செய்யப்படும்.</p><p> </p><p>

இவர் சுட்ட பொன் (கவிதைகள்) 1970, எண்ணத்தில் நீந்துகிறேன் (கவிதைகள்) 1971, பயணம் (கவிதைகள்) 1972 ,துரோணர் சபதம் (நாடகம்) 1972தமிழ்ப்பாவை 1980, கடற்கரைப் பூக்கள் (கவிதைத் தொகுப்பு) 1983, இனிக்கும் தமிழ் (கட்டுரை) 1989, கிறிஸ்து தத்துவம் 1991, சின்னச் சின்னக் கதைகள்1991, ஆசிரியன் ஓர் அட்சயப்பாத்திரம் (புதுக்கவிதைகள்) 1992, அருளாளர் அந்தோனியார் (யாழ் இலக்கியப் பேரவையின் பரிசு பெற்றது) 1993, ஒரு பூ மலர்கிறது (நாடகம்) 1993, பாலர் தமிழ்ப்பாட்டு (சிறுவர் இலக்கியம்) (யாழ் இலக்கியப் பேரவையின் பரிசு பெற்றது) 1993, கிறிஸ்து காவியம் 1995, சின்னச் சின்னப் பூக்கள் (சிறுவர் இலக்கியம் – இலங்கை அரசின் இலக்கியப்பரிசு பெற்றது.) 1997, சமயம் – சில சிந்தனைகள் (கட்டுரைகள்) 1997
சிறு கதை விமர்சனம் 1997, அரசி உலக நாச்சியார் (சிறுகதைத் தொகுப்பு) 1998, புதுக்கவிதைப் புத்தகம் (புதுக்கவிதைகள்) 1998, விசுவாசத்தின் புதிய விடியல் (தமிழ் மொழி பெயர்ப்பு) 1998, தமிழர் வரலாற்றில் சில பக்கங்கள் 1999, இன்ரநெற் தமிழ் (கட்டுரைத் தொகுப்பு) 1999, ஆல ஊழரவெசல (ஆங்கிலக் கவிதை) 2000, நீ வா நிலாவே (சிறுவர் இலக்கியம்) 2000, சின்னஞ் சிறு கிளியே (சிறுவர் இலக்கியம்) 2000, ஆய் தமிழ் (ஆய்வுக்கட்டுரைகள்) 2001, வாகரை ஒரு வரலாற்றுப்பார்வை (வரலாறு) 2003
நந்திக்கொடி (வரலாற்றுக் குறு நாவல்) 2004, பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டக்களப்புத் தமிழ் 2005, இன்னாசியார் காவியம் 2005, பனிச்சங்கேணி அரசி (வரலாற்றுச், சிறுகதைகள்) 2007, கிழக்கிலங்கைத் தமிழகம் (வரலாறு) 2011, மட்டக்களப்புக் காவியம் 2016, வாகரை வாணனின் ஆய்வுக் கட்டுரைகள் 2017, உரைநடை மற்றும் கவிதை 2017, தமிழ்ப் பாவை தைப்பாவை 2017, தமிழ் மண் மட்டக்களப்பு. 2019, தலைநிமிர்ந்து நிற்கும் தமிழ் 2021, சோளன்சேனையும் சேலைக்கிளிகளும் 2023, எண்ணங்கள் ஆயிரம் (கட்டுரை) 2024, ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் உரிமைப் பிரகடனம்(மொழிபெயர்ப்பு) ஆகிய 42 கட்டுரைகளை எழுதியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T21:01:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலம்பியாவை உலுக்கியுள்ள மிகப்பெரிய நிலநடுக்கம்..! இதுவரையில் 111 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/earthquake-pacific-coast-shakes-colombian-capital-1786385057"></link>
            <id>https://tamilwin.com/article/earthquake-pacific-coast-shakes-colombian-capital-1786385057</id>
            <summary type="text">புதிய இணைப்புகொலம்பியாவில் திங்கட்கிழமை ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.

இதுவரை அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>கொலம்பியாவில் திங்கட்கிழமை ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.
</p><p>
இதுவரை அதிகாரப்பூர்வமாக குறைந்தது 111 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 87 பேர் காயமடைந்துள்ளனர். மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><h2>முதல் இணைப்பு</h2><p>கொலம்பியாவில் இன்று(10) 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

இது கடந்த பத்தாண்டுகளில் அந்நாட்டில் பதிவான மிகப்பெரிய நிலநடுக்கம் என கூறப்பட்டுள்ளது.</p><p>


உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை காலை 7:34 மணிக்கு இந்த நிலநடுக்கம் நாட்டை உலுக்கியுள்ளது.</p><p></p><h2>5,000 மக்கள்</h2><p> </p><p>

இதன் மையப்புள்ளி, மேற்கு கொலம்பியாவில் சுமார் 5,000 மக்கள் வசிக்கும் நகரமான சான் ஜோஸ் டெல் பால்மருக்கு வெளியே சுமார் மூன்று மைல் தொலைவில் பதிவானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2dd78dfe-5e41-4bff-aac2-b0b3bec99740/26-6a7a144eb19b3.webp' /></p><p>
</p><p>
 பொகோட்டா மற்றும் காலி உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.

2.8 மற்றும் 4.8 ரிக்டர் அளவிலான பின் அதிர்வுகள் பதிவாகியுள்ளன.</p><p>

 இந்த தொடர் நிலநடுக்கங்களால், கட்டிடங்கள் உடனடியாக இடிந்து விழுந்து, இடிபாடுகளுக்கு அடியில் மக்கள் நசுக்கப்பட்டதால், ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.</p><h2>நிலநடுக்கம்&nbsp;</h2><p> </p><p>

அதிகாலையில் மேற்கு கொலம்பியாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 77 பேர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கம் பல நகரங்களில் கட்டிடங்களைத் தரைமட்டமாக்கியதுடன், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.</p><p>

அபெலார்டோ டி லா எஸ்பிரியெல்லா ஜனாதிபதியாகப் பதவியேற்ற சில நாட்களிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/707cd0a6-383c-4921-a44e-48b636436ac6/26-6a7a144f6b89f.webp' /></p><p>


டஜன் கணக்கான கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுவதால், மேலும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>

கட்டிடங்கள் அதிர்ந்தபோது, ​​மக்கள் இடிபாடுகளிலிருந்து தப்பித்து பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்ததாக தேசிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.</p><h2>பேரழிவு</h2><p> </p><p>

கொலம்பிய புவியியல் சேவை, இந்த நிலநடுக்கம் 107 கிலோமீட்டர் (66 மைல்கள்) ஆழத்தில் ஏற்பட்டதாகவும், எல் கெய்ரோ மற்றும் எல் அகுய்லா போன்ற அண்டை நகரங்களைப் பாதித்ததாகவும் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6532d6bd-337b-4bb3-8eab-0e5f561f1a38/26-6a7a14501cfd5.webp' /></p><p>

நிலநடுக்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கணிசமான பகுதி நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாயத்தில் இருப்பதாக USGS தெரிவித்துள்ளது. </p><p>

இந்த பேரழிவிற்கு வெறும் ஏழு மணி நேரத்திற்கு முன்பு பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், கொலம்பியாவின் அண்டை நாடான ஈக்வடாரில் உள்ள மூன்று நகரங்களைப் பாதித்தது. </p><p>

பெருவின் ஸ்டிபோவில், கிட்டத்தட்ட ஒரு நாள் முன்பு 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-10T21:00:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரீச்சா இலக்கு வைக்கப்பட்டதன் பின்னணி! தமிழர் பகுதிகளில் புலம்பெயர் தொழிலதிபர்களை குறிவைப்பது யார்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reecha-targeting-diaspora-businessmen-tamil-areas-1786393191"></link>
            <id>https://tamilwin.com/article/reecha-targeting-diaspora-businessmen-tamil-areas-1786393191</id>
            <summary type="text">வடக்கில் புலம்பெயர் முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.

இந்தநிலையில்,&#039;...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கில் புலம்பெயர் முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.</p><p>

இந்தநிலையில்,'இந்திரன்' மற்றும் கந்தையா பாஸ்கரன் போன்றோர் முன்னெடுத்த நிகழ்வுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் வன்மமான விமர்சனங்கள், தமிழர் பகுதிகளில் முதலீடு செய்வதற்கான பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதாக இராணுவ ஆய்வாளர் அரூஸ் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>

மேலும் தெரிவித்த அவர்,
</p><p>
வட மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) இலங்கையில் மிகக் குறைவாகவே உள்ளது.

 பொருளாதார ரீதியாக வடக்கும் கிழக்கும் வளர்ச்சி அடைவதைத் தடுப்பதற்கான திரைமறைவுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகக் கருதப்படுகிறது.</p><p>

புலம்பெயர் முதலீட்டாளர்களுக்குத் தேவையான அரசியல் உறுதித்தன்மை (Political Stability) அங்கு இல்லாததே முதலீடுகள் தவிர்க்கப்படுவதற்குக் காரணம் .

ஊழல் மற்றும் தவறான குழுக்களின் அச்சுறுத்தல்களை அரசு கண்டுகொள்ளாமல் விடுவது, முதலீட்டாளர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்துகிறது.
</p><p>
13-வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால், பொலிஸார் மற்றும் காணி அதிகாரங்கள் அடங்கிய உண்மையான அதிகாரப்பகிர்வு தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
</p><p>
 தமிழகம் மற்றும் தென்னிலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் போல, வடக்கிலும் கிழக்கிலும் ஊழலற்ற அரசியல் கலாச்சாரம் மற்றும் புதிய தலைமைத்துவ மாற்றம் ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/YEoM2J-B56w" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-10T20:49:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீன் குஞ்சுகள் வெளியேறுவதைத் தடுக்கும் 59 தடுப்பு வலைத் தொகுதிகள் வழங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/provision-59-barrier-net-blocks-prevent-fish-fry-1786394749"></link>
            <id>https://jvpnews.com/article/provision-59-barrier-net-blocks-prevent-fish-fry-1786394749</id>
            <summary type="text">கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள நன்னீர் மீன்பிடிக் மீனவர்சங்கங்களுக்கு, மீன் குஞ்சுகள் வெளியேறுவதைத் தடுக்கும் 59 தடுப்பு வலைத் தொகுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள நன்னீர் மீன்பிடிக் மீனவர்சங்கங்களுக்கு, மீன் குஞ்சுகள் வெளியேறுவதைத் தடுக்கும் 59 தடுப்பு வலைத் தொகுதிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.</p><p>
</p><p></p><p>கிளிநொச்சி மாவட்டத்திற்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் உட்பட்ட நீர்ப்பாசனக் குளங்களின் கீழ் இயங்கும் நன்னீர் மீன்பிடி சங்கங்களுக்கு, மீன் குஞ்சுகள் நீர்ப்பாசனக் குளங்களில் இருந்து வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் தடுப்பு வலைகள் வழங்கப்பட்டன.
</p><p>
குறித்த வலைகள் வழங்கும் நிகழ்வு, பிராந்திய நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்க அலுவலகத்தில், யாழ்–கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc6caae7-dfb8-40ed-a4d9-106463178185/26-6a7a387f5c1a7.webp' /></p><p>கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள நீர்ப்பாசனக் குளங்களில் மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, குளங்களில் நீர்மட்டம் அதிகரித்து வான்பாயும் காலப்பகுதிகளில், நீருடன் சேர்ந்து மீன் குஞ்சுகள் வெளியேறிச் செல்வதால் மீன்வள உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படுகின்றது.</p><p>

இதனைத் தடுக்கும் நோக்கில், குளங்களிலிருந்து மீன் குஞ்சுகள் வெளியேறிச் செல்லும் இடங்களில் பொருத்துவதற்காக இந்த தடுப்பு வலைகள் வழங்கப்பட்டுள்ளன. </p><p>

இதன் மூலம் குளங்களில் வளர்க்கப்படும் மீன்குஞ்சுகளைப் பாதுகாத்து, எதிர்காலத்தில் மீன்வள உற்பத்தியை அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர் சங்கங்களுக்கு மொத்தமாக 59 தடுப்பு வலைத் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு தடுப்பு வலைத் தொகுதியினதும் பெறுமதி சுமார் 5 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T20:45:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவை வாட்டும் வெப்பம்: 11 பகுதிகளில் வறட்சி அறிவிப்பு: 45 மில்லியன் மக்கள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/drought-declared-in-11-areas-of-england-1786394114"></link>
            <id>https://news.lankasri.com/article/drought-declared-in-11-areas-of-england-1786394114</id>
            <summary type="text">இங்கிலாந்தின் பல பகுதிகள் வறட்சி பகுதிகளாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தில் வறட்சி அறிவிப்புஇங்கிலாந்தின் பல பகுதிகளில் நிலவி வரும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்தின் பல பகுதிகள் வறட்சி பகுதிகளாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>இங்கிலாந்தில் வறட்சி அறிவிப்பு</h2><p>இங்கிலாந்தின் பல பகுதிகளில் நிலவி வரும் கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் விவசாய நெருக்கடிகள் காரணமாக நாட்டின் 71.3 சதவீத பகுதிகள் அதிகாரப்பூர்வ வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 1836 ம் ஆண்டு பதிவுகள் தொடங்கப்பட்டதில் இருந்து கடந்த 190 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான வறட்சி மாதமாக ஜூலை பதிவானதை அடுத்து இந்த நெருக்கடியானது ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5075de32-44d8-4f8e-9ed7-5664d6412ea0/26-6a7a360379b43.webp' /></p><p> இந்த வறட்சியின் காரணமாக இப்பகுதியில் வசிக்கும் 45 மில்லியன் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p> இவர்களில் 27 மில்லியனுக்கு அதிகமான மக்கள் தற்போது தண்ணீர் பயன்பாட்டை கட்டுப்பாடாக பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளனர்.</p><p> இந்த ஆண்டு 30 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் வெப்பநிலை பதிவான நாட்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.</p><p></p><p> இதில் ஜூலை மாதத்தில் மட்டும் 13 நாட்கள் வெப்பநிலை அதிகமான அளவு பதிவாகி மக்களை வாட்டியுள்ளது.</p><p> அமைச்சர்கள், நீர் நிறுவனங்கள், விவசாய அமைப்புகள் மற்றும் ஒழுங்குமுறை ஆணையங்கள் உள்ளடக்கிய தேசிய வறட்சிக் குழு அவசர கூட்டத்தை நடத்திய பிறகு, நிலைமை மிகவும் மோசமாக மாறி வருவதாக எச்சரித்துள்ளனர்.</p><p> நாட்டின் உணவு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தேசிய விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a77fbe8e-b6b6-4ce4-9185-89ce579c4ac3/26-6a7a360436a6b.webp' /></p><h2>வறட்சி அறிவிக்கப்பட்ட பகுதிகள்</h2><p>கிழக்கு மிட்லாண்ட்ஸ், லிங்கன்ஷயர் &amp; நார்தம்ப்டன்ஷயர், கென்ட் 7 கிழக்கு சசெக்ஸ், சோலென்ட் &amp; சவுத் டவுன்ஸ், கிழக்கு ஆங்லியா, ஹார்ட்போர்ட்ஷயர், லண்டன், தேம்ஸ் பள்ளத்தாக்கு, டெவோன் &amp; கார்ன்வால், வெசெக்ஸ் மற்றும் மேற்கு மிட்லாண்ட்ஸ் ஆகிய பகுதிகள் வறட்சி பகுதிகளாக அவசர வறட்சிக் குழு அறிவித்துள்ளது.</p><p> கூடுதலாக வறண்ட வானிலை நிலவும் கும்ப்ரியா &amp; லங்காஷயர், கிரேட்டர் மான்செஸ்டர், மெர்சிசைடு &amp; செஷயர், வடகிழக்கு மற்றும் யார்க்ஷயர் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T20:36:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு முக்கிய அறிவிப்பு ; இன்னும் 4 ஆண்டுகளில் கண்ணிவெடிகள் முற்றிலும் அகற்றப்படுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/will-landmines-be-completely-eliminated-in-4-years-1786393843"></link>
            <id>https://jvpnews.com/article/will-landmines-be-completely-eliminated-in-4-years-1786393843</id>
            <summary type="text">இலங்கையில் கண்ணிவெடிகள் காணப்பட்ட பகுதிகளில் சுமார் 90 சதவீதமான நிலப்பரப்புகள் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் கண்ணிவெடிகள் காணப்பட்ட பகுதிகளில் சுமார் 90 சதவீதமான நிலப்பரப்புகள் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

எஞ்சியுள்ள 20.8 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு மிகவும் சிக்கலான மற்றும் கடினமான பகுதியாக இருப்பதாகவும், அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் இலங்கையை முழுமையாக கண்ணிவெடிகள் அற்ற நாடாக அறிவிக்க எதிர்பார்ப்பதாகவும் சர்வதேச கண்ணிவெடி அகற்றும் தூதுவரும் ஹொலிவுட் நடிகையுமான ரோசமண்ட் பைக் தெரிவித்துள்ளார்.</p><p>

அவர் இன்று (10) வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்கவை சந்தித்தபோது இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ca3a96b-b27c-485e-b93b-ee6f17b2e431/26-6a7a359102dd3.webp' /></p><p>இலங்கையில் முன்னெடுக்கப்படும் கண்ணிவெடி அகற்றும் பணிகளின் முன்னேற்றம் தொடர்பில் அவர் கேட்டறிந்ததுடன், சர்வதேச தரங்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்படும் பணிகளுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.</p><p>

எஞ்சியுள்ள பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சிறப்புப் பயிற்சி பெற்ற 500 படையினரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இராணுவத்தினரால் மாத்திரம் வருடாந்தம் 1.5 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பை கண்ணிவெடிகளிலிருந்து விடுவிப்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதியும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கண்ணிவெடிகளை அகற்றுவது பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கை மட்டுமல்ல எனவும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் அபிவிருத்தி, சுற்றுலாத்துறை வளர்ச்சி மற்றும் அனைத்து சமூகங்களிடையேயும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான முக்கிய தேசிய பணியாகும் எனவும் ரோசமண்ட் பைக் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T20:34:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரீச்சாவில் குழப்பம் விழைவிக்க பிரான்சில் இருந்து சென்ற உத்தரவு - சிக்கியது பெரும் ஆதாரம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reecha-food-festival-2026-issue-1786391119"></link>
            <id>https://tamilwin.com/article/reecha-food-festival-2026-issue-1786391119</id>
            <summary type="text">ரீச்சா (Reecha) உணவுத் திருவிழாவில் (Food Festival) ஏற்பட்ட சர்ச்சைகள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.


ஐபிசி (IBC) மற்றும் லங்காசிறி நிறுவனத்தின் உரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரீச்சா (Reecha) உணவுத் திருவிழாவில் (Food Festival) ஏற்பட்ட சர்ச்சைகள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.</p><p>


ஐபிசி (IBC) மற்றும் லங்காசிறி நிறுவனத்தின் உரிமையாளர் கந்தையா பாஸ்கரன் இந்தத் திருவிழாவிற்காக பெரும் உழைப்பைச் செலுத்திய நிலையில், எதிர்பாராத மக்கள் கூட்டத்தால் சில சிக்கல்கள் எழுந்தன. </p><p>

இருப்பினும், உணவுத் திருவிழாவின் தோல்விக்கு ஒரு குறிப்பிட்ட குழுவின் திட்டமிட்ட வன்முறை மற்றும் குழப்பங்கள் தான் காரணம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

இந்த உணவுத் திருவிழாவைத் திட்டமிட்டு முறியடிக்க, பிரான்சிலிருந்து சில உத்தரவுகள் சென்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 இது குறித்து சில குரல் பதிவுகள் ஆதாரமாக வெளியிடப்பட்டுள்ளன.
</p><p>
மக்கள் கூட்டம் அதிகரித்ததாலும், எதிர்பாராத நெருக்கடியாலும் ஏற்பட்ட சிரமங்களுக்கு கந்தையா பாஸ்கரன் மனப்பூர்வமாக மன்னிப்பு கோரினார்.
</p><p>
 மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணத்தைத் திருப்பித் தருவதாக உறுதியளித்துள்ளார் .

 திருவிழா நடந்த இடத்தில் உணவுப் பொருட்கள் வீணடிக்கப்பட்டும், சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டும் உள்ளன.
</p><p>
 இது வெறும் உணவுப் பற்றாக்குறையினால் ஏற்பட்டதல்ல, மாறாகத் திட்டமிட்ட வன்முறை என்று காணொளி என்பதும் தெளிவாகின்றது.

கந்தையா பாஸ்கரன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் காழ்ப்புணர்ச்சியால் தூண்டப்பட்டவை என்றும், அவர் தனது மண்ணின் மீதான பற்றுதலாலேயே இத்தகைய முதலீடுகளைச் செய்கிறார்.
</p><p> 
இந்தத் திருவிழா, உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், மக்களின் மகிழ்ச்சிக்காகவும் நடத்தப்பட்ட முயற்சி என்றும், சில விசமிகளின் குறுக்கீடுகளால் அது பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><br></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/3Jg7aTaxRew" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-10T20:08:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நண்பரின் 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-abused-girl-sentenced-to-40-years-in-prison-1786389555"></link>
            <id>https://jvpnews.com/article/man-abused-girl-sentenced-to-40-years-in-prison-1786389555</id>
            <summary type="text">நண்பரின் 11 வயது மகளை பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட 36 வயதுடைய நபருக்கு 40 ஆண்டுகள் கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நண்பரின் 11 வயது மகளை பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட 36 வயதுடைய நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா தீர்ப்பளித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும், 2 இலட்சம் ரூபாய் நீதிமன்ற அபராதமாக செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.</p><p>கடந்த 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வவுனியா, தரணிக்குளம் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p>

தாயினால் கைவிடப்பட்ட நிலையில், தந்தையின் பராமரிப்பில் வசித்து வந்த 11 வயதுடைய சிறுமியே குறித்த பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73f1dd94-c860-414b-8600-11b9682421e4/26-6a7a24359a1f7.webp' /></p><p>சிறுமியின் தந்தையின் நண்பரான 36 வயதுடைய குறித்த நபரே இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.</p><p>சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாரால் 2016ஆம் ஆண்டு வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் பீ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
</p><p>
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வழக்கு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, குறித்த நபருக்கு எதிராக 2025ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பத்திரிகை வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
</p><p>
இதனையடுத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>எனினும், வழக்கு நடவடிக்கைகளின் போது குறித்த எதிரி தலைமறைவாகியிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
</p><p>
இதன் காரணமாக, எதிரி இன்றிய நிலையில் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொண்டது.
</p><p>
வழக்கு விசாரணையின்போது அரச சட்டவாதியினால் நெறிப்படுத்தப்பட்ட சாட்சிகள் மற்றும் ஆவணங்களை ஆராய்ந்த நீதிமன்றம், குறித்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தீர்மானித்தது.</p><p>இதனையடுத்து, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, குறித்த எதிரிக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecae823e-4a67-468a-a0e4-f2532b0374de/26-6a7a24364a08b.webp' /></p><p>அத்துடன், பாலியல் துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.</p><p>

மேலும், 2 இலட்சம் ரூபாய் நீதிமன்ற அபராதமாக செலுத்துமாறும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>தண்டனைத் தீர்ப்பை வழங்கியபோது, வழக்கு நடவடிக்கைகளின்போது எதிரி தலைமறைவாகியிருந்தமை, குறித்த சம்பவத்தினால் சிறுமிக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் கடுமையான உடல் மற்றும் உள பாதிப்புகள், அத்துடன் சமூகத்தில் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் ஆகியவற்றை நீதிமன்றம் கவனத்தில் கொண்டதாக நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் நீதித்துறை கடுமையான அணுகுமுறையை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் இந்தத் தீர்ப்பு எடுத்துக்காட்டுவதாக குறிப்பிடப்படுகிறது.
</p><p>
இவ்வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் அரச சட்டவாதி ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ வழக்கை நெறிப்படுத்தியிருந்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T20:04:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஸ்காட்செவானில் 44 மில்லியன் டொலர் லொத்தர் பரிசு: வென்ற அதிர்ஷ்டசாலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/winning-ticket-for-44-million-lotto-649-draw-1786381089"></link>
            <id>https://canadamirror.com/article/winning-ticket-for-44-million-lotto-649-draw-1786381089</id>
            <summary type="text">கனடாவின் சஸ்காட்செவான் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் 44 மில்லியன் டொலர் பெறுமதியான &#039;கோல்ட் போல்&#039; ஜாக்பாட் பரிசை வென்று கோடீஸ்வரராகியுள்ளார். 
ஆனால், தான...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் சஸ்காட்செவான் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் 44 மில்லியன் டொலர் பெறுமதியான 'கோல்ட் போல்' ஜாக்பாட் பரிசை வென்று கோடீஸ்வரராகியுள்ளார். </p><p>
ஆனால், தான் அந்தப் பரிசை வென்ற தகவல் இன்னும் அவருக்குத் தெரியவில்லை. 
சனிக்கிழமை நடைபெற்ற 'லொட்டோ 6/49' குலுக்கலிலேயே இந்த 44 மில்லியன் டொலா் ஜாக்பாட் விழுந்துள்ளது. </p><p>
வெற்றிபெற்ற இந்த லொத்தர் சீட்டு சஸ்காட்செவான் மாகாணத்தில் உள்ள சாஸ்கடூன் மற்றும் ரெஜினா ஆகிய இரு முக்கிய நகரங்களுக்கும் வெளியேயுள்ள ஒரு பகுதியில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29dac847-6692-4188-8bad-fdb57dce6946/26-6a7a03235e673.webp' /></p><p> </p><p>
வெற்றிபெற்ற எண் 23202513-03 ஆகும். இந்த எண் முழுமையாகத் துல்லியமாகப் பொருந்தினால் மட்டுமே பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
வெற்றிபெற்ற நபர் அல்லது நபர்கள் தங்களது பரிசுத் தொகையைக் கோருவதற்கு ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T20:04:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவின் லாங் மார்ச் 7ஏ ராக்கெட் வெடித்து சிதறியது: கடலில் விழுந்த ChinaSat-4B செயற்கைக்கோள் பாகங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-long-march-7a-rocket-exploded-after-liftoff-1786392214"></link>
            <id>https://news.lankasri.com/article/china-long-march-7a-rocket-exploded-after-liftoff-1786392214</id>
            <summary type="text">லாங் மார்ச் 7ஏ ராக்கெட் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்து சிதறிய சம்பவம் சீனாவின் விண்வெளி துறைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. வெடித்து ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>லாங் மார்ச் 7ஏ ராக்கெட் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்து சிதறிய சம்பவம் சீனாவின் விண்வெளி துறைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> வெடித்து சிதறிய சீன ராக்கெட்</h2><p>
சீனாவின் தெற்கிலுள்ள ஹைனான்(Hainan) தீவின் வென்சாங்(Wenchang) விண்வெளி தளத்தில் இருந்து பெய்ஜிங் நேரப்படி திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு அடுத்த தலைமுறை லாங் மார்ச் 7ஏ(Long March 7A) ராக்கெட் புறப்பட்டது.</p><p> உயர் பூமி சுற்றுப் பாதையை நோக்கி சென்று கொண்டிருந்த ராக்கெட் துரதிர்ஷ்டவசமாக புறப்பட்ட 90 வது நிமிடத்தில் வெடித்து சிதறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89b779f6-226a-48a9-a8ee-2fecb30e3264/26-6a7a2e9793e06.webp' /></p><p> இதன் காரணமாக ராக்கெட்டில் இருந்த ChinaSat-4B தகவல் தொடர்பு செயற்கைக்கோளும் முழுமையாக வெடித்து சிதறி சேதமடைந்தது.</p><p> ராக்கெட் ஏவுதலை ஏவுதளத்திற்கு அருகில் இருந்து பார்த்தவர்கள் இந்த காட்சிகளை தங்களுடைய செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.</p><h2> விசாரணை தொடக்கம்</h2><p>இந்நிலையில் லாங் மார்ச் 7ஏ ராக்கெட்டில் ஏற்பட்ட தீவிர கோளாறு காரணமாகவே அதன் அவசர கால பாதுகாப்பு அமைப்புகள் தானாக செயல்பாட்டுக்கு வந்து ஒட்டுமொத்த பயணத்தையும் அழித்து இருக்கலாம் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c29dcc4-98be-4aca-90f0-b5f0b2f63462/26-6a7a2e98488f8.webp' /></p><p> வெடித்து சிதறிய ராக்கெட் பாகங்கள் மற்றும் செயற்கைக்கோள் உதிரி பாகங்கள் தென் சீனக் கடலில் விழுந்து நாசமாகியுள்ளன.</p><p> விபத்து நடைபெற்ற 3 மணி நேரத்திற்கு பிறகு இந்த தோல்வியை சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான Xinhua உறுதிப்படுத்தி இருப்பதுடன் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த திட்டம் தோல்வியடைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.</p><p> அதே சமயம் விபத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய தற்போது விசாரணையானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T20:03:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுப் போக்குவரத்தில் அதிரடி மாற்றம் ; சாரதிகளுக்கு திடீர் போதைப்பொருள் பரிசோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dramatic-changes-in-public-transport-1786392020"></link>
            <id>https://jvpnews.com/article/dramatic-changes-in-public-transport-1786392020</id>
            <summary type="text">பொதுப் போக்குவரத்துச் சேவையை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும் நோக்கில், சாரதிகள் உள்ளிட்டோருக்கு மேற்கொள்ளப்படும் திடீர் போதைப்பொருள் பரிசோதனைகளை விரிவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுப் போக்குவரத்துச் சேவையை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும் நோக்கில், சாரதிகள் உள்ளிட்டோருக்கு மேற்கொள்ளப்படும் திடீர் போதைப்பொருள் பரிசோதனைகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

இதற்காக அனைத்து வசதிகளையும் கொண்ட மேலும் ஒரு நடமாடும் மருத்துவ பேருந்து சுகாதார அமைச்சினால் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த பேருந்து இன்று (10) சுகாதார அமைச்சு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d611f0f2-399a-4b8c-8e19-fd541c6a5b29/26-6a7a2dd658e33.webp' /></p><p>சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் விசேட வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவினால், தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் தலைவர் பேராசிரியர் கிளிஃபர்ட் பெரேராவிடம் பேருந்து கையளிக்கப்பட்டது.
</p><p>
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான இருவருட மூலோபாயத் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
இதன்படி, பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகள், நடத்துநர்கள் மற்றும் சாரதி உதவியாளர்கள் திடீர் போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.</p><p>

தற்போது இந்தத் திட்டம் நாட்டின் ஐந்து மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

புதிதாக வழங்கப்பட்டுள்ள நடமாடும் மருத்துவ பேருந்தின் உதவியுடன், தேவையான மனித மற்றும் பௌதிக வளங்களை அதிகரித்து, நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கும் இந்தப் பரிசோதனை நடவடிக்கையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>

தேசிய திட்டத்தின் கீழ் இதுவரை 7,150 போதைப்பொருள் பாவனை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பொதுப் போக்குவரத்து சேவையில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதன் மூலம், வீதி விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்களை குறைப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T20:00:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தற்காலிகமாக மூடப்பட்ட பிரித்தானியாவின் பிரபல பொழுதுபோக்கு பூங்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/popular-uk-theme-park-closed-over-water-shortage-1786375439"></link>
            <id>https://tamilwin.com/article/popular-uk-theme-park-closed-over-water-shortage-1786375439</id>
            <summary type="text">பிரித்தானியாவில் ஐந்தாவது வெப்ப அலை தீவிரமடைந்து வரும் நிலையில், தென்மேற்கு
லண்டனில் அமைந்துள்ள பிரபல ‘செசிங்டன் வேர்ல்ட் ஒஃப் எட்வென்ச்சர்ஸ்’ பொழுது...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் ஐந்தாவது வெப்ப அலை தீவிரமடைந்து வரும் நிலையில், தென்மேற்கு
லண்டனில் அமைந்துள்ள பிரபல ‘செசிங்டன் வேர்ல்ட் ஒஃப் எட்வென்ச்சர்ஸ்’ பொழுதுபோக்கு பூங்கா திடீர் நீர்
தட்டுப்பாடு காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.</p><p>

உள்ளூர் பகுதியில் ஏற்பட்ட நீர் விநியோகத் தடை காரணமாகவே இந்தத் தீர்மானம்
எடுக்கப்பட்டுள்ளதாக பூங்காவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><p></p><h2>திடீர் நீர் தட்டுப்பாடு</h2><p>
</p><p>
அத்துடன், இன்றைய தினத்திற்காக முன்பதிவு செய்துள்ள பார்வையாளர்கள்
பூங்காவிற்கு வருகை தர வேண்டாம் என்றும், அவர்களின் நுழைவுச்சீட்டுகள்
'ரிட்டர்ன் புரொமிஸ்' (Return Promise) திட்டத்தின் கீழ் மறுபரிசீலனை
செய்யப்பட்டு எதிர்காலத்தில் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d373be57-fcf4-4625-930b-a20c91fcf727/26-6a79ee5bc3f70.webp' /></p><p>ஆண்டுதோறும் சுமார் 1.5 மில்லியன் பார்வையாளர்கள் வருகை தரும் ஐரோப்பாவின்
முன்னணி பொழுதுபோக்கு பூங்காக்களில் ஒன்றான செசிங்டன், இதற்கு முன்னர் 2018
ஆம் ஆண்டிலும் இதேபோன்று பிரதான நீர்ழாய் உடைந்தமையினால் மூடப்பட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T20:00:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் நகரொன்றிற்கு குண்டு மிரட்டல்! வெளியேற்றப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/halifax-downtown-evacuated-over-bomb-threat-1786388416"></link>
            <id>https://ibctamil.com/article/halifax-downtown-evacuated-over-bomb-threat-1786388416</id>
            <summary type="text">கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகர மையப்பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நபர் ஒருவர் குண்டு மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகர மையப்பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
</p><p>
நபர் ஒருவர் குண்டு மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதையடுத்து பாதுகாப்பு கருதி வணிக வளாகங்கள், ஹோட்டல்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் இருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><h2>முறையான சோதனை</h2><p>அசம்பாவிதங்களைத் தவிர்க்க முக்கியச் சாலைகள் மூடப்பட்டு, பேருந்துகள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd346a2d-3259-470c-8d86-7c08ab98717e/26-6a7a29ed8cf9f.webp' /></p><p>

இதையடுத்து, கிளேட்டன் பூங்கா பகுதியில் வைத்து அச்சுறுத்தல் விடுத்த சந்தேகநபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
</p><p>
முறையான சோதனைக்குப் பின் உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என உறுதிசெய்யப்பட்டு அப்பகுதியில் காவல்துறையினரின் தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T19:54:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் முக்கிய கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sajith-s-keynote-issues-people-north-and-east-1786391032"></link>
            <id>https://jvpnews.com/article/sajith-s-keynote-issues-people-north-and-east-1786391032</id>
            <summary type="text">எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து, அந்தப் பகுதிகளில...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து, அந்தப் பகுதிகளில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.</p><p>
</p><p></p><p>இந்தச் சந்திப்பு அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
</p><p>
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு தற்போது காணப்படும் முக்கிய பிரச்சினைகளை அடையாளம் காண்பதே இந்தச் சந்திப்பின் பிரதான நோக்கமாக அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0ac9663-62ca-4a09-8c61-e5f112c719c4/26-6a7a29f9aa0f5.webp' /></p><p>இதன்போது, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், அவற்றுக்கு எதிர்க்கட்சி என்ற வகையில் தேவையான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் சமூகப் பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன், அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் தாம் நேரடியாக தலையிடுவதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
</p><p>
மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதே இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T19:43:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூட்கேஸில் இருந்து மனித சடலம் அல்ல: உயர் ரக செக்ஸ் பொம்மை: அவுஸ்திரேலிய பொலிஸார் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/high-end-sex-doll-found-in-suitcase-in-australia-1786384813"></link>
            <id>https://news.lankasri.com/article/high-end-sex-doll-found-in-suitcase-in-australia-1786384813</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் கைவிடப்பட்ட சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட சடலம் உயர் ரக செக்ஸ் பொம்மை(Sex Toy) என்பது தெரியவந்துள்ளது. கைவிடப்பட்ட சூட்கேஸினால் பரபரப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் கைவிடப்பட்ட சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட சடலம் உயர் ரக செக்ஸ் பொம்மை(Sex Toy) என்பது தெரியவந்துள்ளது.</p><h2> கைவிடப்பட்ட சூட்கேஸினால் பரபரப்பு</h2><p>ஞாயிற்றுக்கிழமை மாலை அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் கிராமப் பகுதியில் கிடந்த கைவிடப்பட்ட சூட்கேஸில் மனித சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.</p><p> ஓலன்(Oallen) பகுதியில் மண் பாதைக்கு அருகே சந்தேகத்திற்கு உரிய வகையில் கிடந்த சூட்கேஸை கொடூரமான குற்றப் புள்ளி என்று நம்பி சந்தேகத்தின் பேரில் வோல்கான் சாலையை சுற்றி வளைத்து உள்ளூர் அதிகாரிகள் தடயங்களை பாதுகாத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24c82192-0d86-4c59-b68a-2751f18df8f5/26-6a7a11af573ed.webp' /></p><h2> 20 மணி நேர தடயவியல் விசாரணையில் தெரியவந்த உண்மை</h2><p>சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் அதிகாரிகள், 20 மணி நேரத்திற்கு மேலாக ஆராய்ந்த பிறகு திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளிப்படுத்தினர்.</p><p> அதில், சூட்கேஸில் இருந்தது மனித எச்சங்கள் என்று நம்பப்பட்ட நிலையில், அது உண்மையில் மிகவும் தத்ரூபமாக உயர் ரக செக்ஸ் பொம்மை என்பது தெரியவந்துள்ளது.</p><p> ஆரம்பத்தில் அந்த பொருள் மனிதனைப் போலவே தத்ரூபமாக இருந்ததால் ஆய்வகத்திற்கு எடுத்து சென்று சோதனை செய்வதற்கு முன்பு வரை நிபுணர்களுமே அதனை மனித சடலம் என்று நம்பி ஏமாந்ததாக ஹியூம் காவல்துறை மாவட்டத்தின் தளபதி சூப்பிரண்டு லிண்டா பிராட்பரி(Superintent linda bradbury) தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc19b18c-4198-4209-8acc-5cf779ddaade/26-6a7a11b00b7fc.webp' /></p><p> நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையின் கூற்றுப்படி, சடலம் என்று நம்பப்பட்ட அந்த பொம்மைக்கு ஆடைகள் அணிவிக்கப்பட்டு இருந்ததோடு, அவற்றில் முடி, மூக்குத்தி மற்றும் உடல் காயங்கள் ஆகியவை துல்லியமாக மனித உருவத்துடன் ஒத்திருக்கும் வகையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான பொதுமக்களுக்கு காவல்துறையினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T19:33:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிஃபா தலைவர் மீது ஐரோப்பிய, ஆசிய மற்றும் வட அமெரிக்க காற்பந்து கூட்டமைப்புகள் கடுமையான குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/global-football-federations-accuse-fifa-president-1786375986"></link>
            <id>https://tamilwin.com/article/global-football-federations-accuse-fifa-president-1786375986</id>
            <summary type="text">உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியின் சில வணிகப் பங்குகளைத் தனிப்பட்ட முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்ய முயன்ற விவகாரத்தில், FIFA தலைவர் ஜியாணி இன்ஃபான்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியின் சில வணிகப் பங்குகளைத் தனிப்பட்ட முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்ய முயன்ற விவகாரத்தில், FIFA தலைவர் ஜியாணி இன்ஃபான்டினோ ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p>

ஐரோப்பிய (UEFA), ஆசிய (AFC) மற்றும் வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் (CONCACAF) காற்பந்து கூட்டமைப்புகள் கூட்டாக இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.</p><p></p><h2>FIFA தலைவர் மீதான விமர்சனம்</h2><p>

இது தொடர்பில் குறித்த மூன்று பிராந்தியக் கூட்டமைப்புகளின் தலைவர்களும்
பொதுச் செயலாளர்களும் இணைந்து வெளியிட்டுள்ள பகிரங்கக் கடிதத்தில், காற்பந்து
விளையாட்டு என்பது எந்தவொரு தனிநபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ சொந்தமானதல்ல
என்றும், அது வீரர்கள், இரசிகர்கள் மற்றும் உறுப்புச் சங்கங்களுக்கே சொந்தமானது
என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>

இன்ஃபான்டினோவின் இந்த நடவடிக்கை விளையாட்டுத் தலைவருக்குரிய பண்பு அல்ல
என்றும் அவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63c5389b-bf2a-4780-9561-d046ecdabd62/26-6a7a151b8e0e1.webp' /></p><p>குறித்த சர்ச்சைக்குரிய வணிகப் பங்கு விற்பனைத் திட்டம் கைவிடப்பட்டு FIFA மன்னிப்புக் கோரியிருந்த போதிலும், இன்ஃபான்டினோவின் தலைமையை ஏற்க முடியாது என
நோர்வே காற்பந்துச் சம்மேளனம் அவர் பதவியிலிருந்து விலக வேண்டும் எனக்
கோரியுள்ளது.</p><p>இதனையடுத்து இங்கிலாந்து காற்பந்துச் சங்கம் அவருக்கு வழங்கி வந்த ஆதரவை&nbsp; மீளப்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T19:33:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம் தாக்குவதற்கா? தற்காப்பிற்கா? பாகிஸ்தான் பிரதமர் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pakistan-pm-sharif-clarify-mecca-defence-agreement-1786390380"></link>
            <id>https://news.lankasri.com/article/pakistan-pm-sharif-clarify-mecca-defence-agreement-1786390380</id>
            <summary type="text">மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தமானது முழுக்க முழுக்க தற்காப்பிற்காக மட்டுமே என பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் விளக்கியுள்ளார். மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தமானது முழுக்க முழுக்க தற்காப்பிற்காக மட்டுமே என பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் விளக்கியுள்ளார்.</p><h2> மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம்</h2><p>
பாகிஸ்தான், துருக்கி மற்றும் சவுதி அரேபியா ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் 3 நாடுகளும் இணைந்து மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை சமீபத்தில் கையெழுத்திட்டன.</p><p> துருக்கி, பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் முன்னெடுத்த இந்த ஒப்பந்தமானது இஸ்லாத்தின் மிகப் புனிதமான நகரமும், நபிகள் நாயகம் பிறந்த இடமுமான மெக்காவில் கையெழுத்தானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/118b9e03-b35c-4108-badd-8eb860b79196/26-6a7a276f43850.webp' /></p><p> இந்த மூன்று நாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீதான தாக்குதல், அவை அனைத்தின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.</p><p></p><h2>பாகிஸ்தான் பிரதமர் விளக்கம்</h2><p>
இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து அந்நாட்டின் பிரதமர் முகமது ஷாபாஸ் ஷெரீப் தெளிப்படுத்தியுள்ளார்.</p><p> அதில், இந்த பாதுகாப்பு ஒப்பந்தமானது எந்தவொரு ஆக்கிரமிப்பு நோக்கமும் கொண்டது அல்ல, மாறாக முற்றிலும் தற்காப்பு சார்ந்தது மட்டுமே என்று வலியுறுத்தியுள்ளார்.
பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டி வளர்ச்சி மற்றும் செழிப்பை அதிகரிக்க செய்வதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் என்றும் எடுத்துரைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74acf280-4428-4eea-b1ff-67b8cad13647/26-6a7a276e8f51c.webp' /></p><p> மேலும் இந்த மெக்கா ஒப்பந்தத்தை “முஸ்லிம் உம்மாவின் வலிமையான ஆதாரம்” என்றும் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் வர்ணித்துள்ளார்.</p><p>பல வருட தூதரக மற்றும் இராஜதந்திர முயற்சிகளுக்கு பிறகே இந்த ஒப்பந்தமானது எட்டப்பட்டு இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T19:33:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைவிலங்கு இல்லாமல் நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்ட இஷாரா செவ்வந்தி! ஏன் இந்தச் சிறப்புச் சலுகை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/relative-kanjipani-imran-shot-dead-maligawatte-1786386488"></link>
            <id>https://tamilwin.com/article/relative-kanjipani-imran-shot-dead-maligawatte-1786386488</id>
            <summary type="text">பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த இஷாரா செவ்வந்தி, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

பொதுவாக அரசியல்வாதிகள் அல்லது...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த இஷாரா செவ்வந்தி, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

பொதுவாக அரசியல்வாதிகள் அல்லது குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும்போது கைவிலங்கு இடப்படுவது வழக்கம்.</p><p>

ஆனால், இஷாரா செவ்வந்தி கைவிலங்கு இன்றி, ஆடம்பரமான தோற்றத்துடன் அழைத்துச் செல்லப்பட்டது சமூக வலைதளங்களில் பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இஷாரா செவ்வந்தி சி.ஐ.டி (CID) காவலில் இருந்தபோது அவருக்கு கேக் வெட்டியது மற்றும் பிஸ்கட் வழங்கியது போன்ற சம்பவங்கள் இதற்கு முன்பே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.</p><p> 

அந்தச் சம்பவங்களின் போது சில அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.

 இவருக்கு மட்டும் ஏன் இத்தகைய சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன, இவருக்குப் பின்னால் இருப்பவர் யார் என்பது போன்ற கேள்விகளைப் பொதுமக்கள் எழுப்பியுள்ளனர். </p><p>இதற்கான முறையான விளக்கத்தை பொலிஸ் தரப்பு வழங்க வேண்டும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது லங்காசிறியின் #NewsInsightTamil நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9zirngiDydA" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T19:01:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனித புதைகுழியின் 102 ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/semmani-mass-grave-excavation-continues-on-day-102-1786377290"></link>
            <id>https://tamilwin.com/article/semmani-mass-grave-excavation-continues-on-day-102-1786377290</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியின் 102 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(10.08.2026) முன்னெடுப்பட்டுள்ளன.

இதுவரையிலான 102 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியின் 102 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(10.08.2026) முன்னெடுப்பட்டுள்ளன.</p><p>

இதுவரையிலான 102 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 524 என்புக்கூடுகள்
அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 513 என்புக்கூடுகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>செம்மணி மனித புதைகுழி</h2><p>
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.</p><p> 48ஆவது நாளான இன்றைய தினம்
திங்கட்கிழமை 09 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df1e7adc-d3ad-4a17-bd45-2208acd5b94c/26-6a79f84915978.webp' /></p><p>இந்த நிலையில்,
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன் மாட்டின் காலில் அடிக்கப்படும் லாடம் ஒன்றும், கை வளையல் ஒன்றும்
சான்று பொருளாக மீட்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T18:43:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் டொராண்டோ திரைப்பட விழா ; உலகத் தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/toronto-film-canada-invit-global-tamil-film-artist-1786387214"></link>
            <id>https://jvpnews.com/article/toronto-film-canada-invit-global-tamil-film-artist-1786387214</id>
            <summary type="text">கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெறவுள்ள 7வது டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா (TTIFF) செப்டம்பர் 25 முதல் 27 வரை நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் உள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெறவுள்ள 7வது டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா (TTIFF) செப்டம்பர் 25 முதல் 27 வரை நடைபெற உள்ளது. </p><p>உலகம் முழுவதும் உள்ள சுயாதீன மற்றும் வளர்ந்து வரும் திரைப்பட இயக்குநர்களுக்கு தங்களது படைப்புகளை சர்வதேச அரங்கில் அறிமுகப்படுத்தும் வாய்ப்பை இந்த விழா வழங்குகிறது.

இவ்விழாவிற்கான திரைப்பட சமர்ப்பிப்புகளின் இறுதித் திகதி ஆகஸ்ட் 11 என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குறும்படங்கள், முழுநீள திரைப்படங்கள், ஆவணப்படங்கள், சமூக மற்றும் இசை சார்ந்த படைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் படங்கள் ஏற்கப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8575465-c025-46fb-9ca6-e34321b0c232/26-6a7a1b0fc4848.webp' /></p><p>

தமிழ் திரைப்படங்களையும் உலகளாவிய சுயாதீன சினிமாவையும் ஊக்குவிக்கும் நோக்கில் நடைபெறும் இந்த விழா, தமிழ் மற்றும் பிற நாடுகளின் கலை, கலாசாரம், சமூக வாழ்வு மற்றும் பாரம்பரியங்களை பரிமாறிக் கொள்ளும் முக்கிய மேடையாக விளங்குகிறது. </p><p>கனடா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த திரைப்பட கலைஞர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
</p><p>
சுமார் ஐந்து இலட்சம் கனேடியத் தமிழர்களை சென்றடையும் இந்த விழா, இந்திய துணைக்கண்டத்திற்கு வெளியே நடைபெறும் முக்கிய தமிழ் திரைப்பட விழாக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.</p><p> புதிய திரைப்பட இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் பெறுவதற்கான சிறந்த வாய்ப்பாகவும் இது அமைகிறது.
</p><p>
எனவே, www.ttff.ca என்ற இணையதளத்தின் ஊடாக உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ஆக்குனர்கள் தங்களது படைப்புகளை ஆகஸ்ட் 11-ம் திகதிக்குள் சமர்ப்பித்து, இந்த சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T18:40:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலம்பியாவை உலுக்கிய நிலநடுக்கம்...! 111 பேர் பலி - நூற்றுக்கணக்கானோர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/7-4-magnitude-earthquake-hits-colombia-72-dead-1786384514"></link>
            <id>https://ibctamil.com/article/7-4-magnitude-earthquake-hits-colombia-72-dead-1786384514</id>
            <summary type="text">🛑 புதிய இணைப்புகொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஜனா...</summary>
            <content type="html"><![CDATA[<p><b><u>🛑 புதிய இணைப்பு</u></b></p><p>கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நாட்டின் ஜனாதிபதி அபெலார்டோ டி லா எஸ்ப்ரிலா (Abelardo De La Espriella) அதிகாரப்பூர்வமாக இதனை அறிவித்துள்ளார்.
</p><p>
மேலும், இந்நிலநடுக்கத்தில் காயமடைந்த குறைந்தது 87 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><u><b>🛑 முதலாம் இணைப்பு</b></u></p><p>கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
அத்தோடு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
ரிக்டர் அளவில் 7.4 ஆகப் பதிவான இந்த அதிநவீன நிலநடுக்கம் காரணமாக காளி (Cali), பெரேரா (Pereira) மற்றும் மணிசாலேஸ் (Manizales) ஆகிய முக்கிய நகரங்களில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்து பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><h2>பெரிய சேதங்கள்</h2><p>அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவல்படி, கொலம்பியத் தலைநகர் பொகோடாவிற்கு மேற்கே சுமார் 400 கி.மீ தொலைவில் உள்ள சொகோ (Chocó) பிராந்தியத்தின் சான் ஜோஸ் டெல் பால்மர் (San Jose Del Palmar) பகுதியில் 107 கி.மீ ஆழத்தில் இந்நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d0ca725-84be-47a6-a3fb-d8211a3f1d2d/26-6a7a13c876b0b.webp' /></p><p>

இந்நிலநடுக்கத்தின் அதிர்வுகள் ஈக்வடார், வெனிசுலா மற்றும் பனாமா ஆகிய அண்டை நாடுகளிலும் உணரப்பட்டபோதிலும், அங்கு பெரிய அளவிலான சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை.
</p><p>
ரிசாரால்டா (Risaralda) மாகாணத்தில் 40 பேரும், வாலே டெல் காவுக்கா (Valle del Cauca) மாகாணத்தில் 27 பேரும், மணிசாலேஸ் நகரில் 2 பேரும் பலியாகியுள்ளனர்.</p><p> </p><p></p><h2>அவசரகால நிவாரணம்&nbsp;</h2><p>பலியானவர்களில் மூன்று சிறுவர்களும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மணிசாலேஸ் நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நோஸ்ட்ரா செனோரா டெல் ரொசாரியோ (Nuestra Senora del Rosario) பேராலயத்தின் ஒரு கோபுரம் இடிந்து விழுந்து பலத்த சேதமடைந்துள்ளது.
</p><p>
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிசாலேஸ், பெரேரா, குய்ப்டோ, அர்மேனியா, கார்டாகோ மற்றும் புவேனவென்டுரா ஆகிய 6 முக்கிய நகரங்களின் விமான நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f95f60d0-da03-4633-9e5b-c7f70071a77a/26-6a7a13c929fd8.webp' /></p><p>

கட்டடங்களின் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதால், உள்ளூர் மக்களும் அவசரகால மீட்புக் குழுவினரும் இணைந்து மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>

புதிதாகப் பதவியேற்ற கொலம்பிய ஜனாதிபதி அபெலார்டோ டி லா எஸ்ப்ரிலா (Abelardo de la Espriella), நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று அவசரகால நிவாரண மற்றும் மீட்புப் பணிகளை நேரடியாக மேற்பார்வையிட உள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T18:34:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானிடம் நஷ்டஈடு கோரும் ட்ரம்ப்...! சர்வதேசப் பேச்சுவார்த்தையில் புதிய திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-demands-reparations-from-iran-1786381157"></link>
            <id>https://ibctamil.com/article/trump-demands-reparations-from-iran-1786381157</id>
            <summary type="text">அமெரிக்கா ஈரானிடம் இருந்து இழப்பீடு கோரும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

பல மாதங்களாக நீடித்த போரின் போது அமெரிக்கா மற்றும் இஸ்ரே...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா ஈரானிடம் இருந்து இழப்பீடு கோரும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். </p><p>

பல மாதங்களாக நீடித்த போரின் போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால்<a href="https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1786368112" target="_blank"> ஏற்பட்ட சேதங்களுக்கு </a>ஈரான் இழப்பீடு கோரியிருந்த நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.</p><p>

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ஈரான் தற்போது இழப்பீடு கோருவதாகவும் ஆனால் இதற்கு முந்தைய <a href="https://ibctamil.com/article/iran-supreme-leader-appoints-6-top-commanders-1786378325" target="_blank">எந்தவொரு பேச்சுவார்த்தைகளிலோ</a> அல்லது கூட்டங்களிலோ ஈரான் இதனைப் பற்றிக் குறிப்பிடவே இல்லை என்றும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>வெடிகுண்டுகள்&nbsp;</h2><p>

ஈரானின் சாலைப்பக்க வெடிகுண்டுகள் மற்றும் பல்வேறு மோதல்களால் கொல்லப்பட்ட மற்றும் படுகாயமடைந்த அனைத்து நபர்களுக்காகவும், குறிப்பாக யூ.எஸ்.எஸ் கோல் (USS Cole) தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் போரில் உயிரிழந்த ஆயிரக்கணக்கானோரின் குடும்பங்களுக்காகவும் ஈரானிடம் இருந்து தானும் இழப்பீடு கோருவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d834bdf-e7a7-404e-ba19-25acbf09ed21/26-6a7a0fe8580b1.webp' /></p><p> 

அத்துடன், கடந்த 50 ஆண்டுகளில் ஈரானில் கொல்லப்பட்ட போராட்டக்காரர்களின் குடும்பங்களுக்கும், கடந்த ஐந்து மாதங்களில் கொல்லப்பட்ட 52,000 பேரின் குடும்பங்களுக்கும் ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும் ட்ரம்ப், எதிர்காலத்தில் நடைபெறும் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் இந்தக் கோரிக்கையைச் சேர்க்குமாறு தனது பிரதிநிதிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T18:34:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[IRGC மற்றும் முப்படைகளுக்குப் புதிய தலைமைகள்! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-supreme-leader-appoints-6-top-commanders-1786378325"></link>
            <id>https://ibctamil.com/article/iran-supreme-leader-appoints-6-top-commanders-1786378325</id>
            <summary type="text">ஈரானின் முப்படைகளின் தலைமை அலுவலகம், இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) மற்றும் பசீஜ் (Basij) அமைப்புகளுக்கு ஆறு மூத்த இராணுவத் தளபதிகள் நியமிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் முப்படைகளின் தலைமை அலுவலகம், இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) மற்றும் பசீஜ் (Basij) அமைப்புகளுக்கு ஆறு மூத்த <a href="https://ibctamil.com/article/mq-9a-reaper-goes-down-near-chabelley-air-base-1786370094" target="_blank">இராணுவத் தளபதிகள்</a> நியமிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
ஈரானின் உச்சத் தலைவரும், ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியுமான மொஜ்தாபா ஹொசைனி காமேனி இந்த நியமன உத்தரவை பிறப்பித்துள்ளார்.
</p><p>
இதன்படி, நாட்டின் <a href="https://ibctamil.com/article/ukraine-drone-strikes-in-russia-1786365929" target="_blank">ஆயுதப் படைகளின்</a> தலைமைத் தளபதியாக மேஜர் ஜெனரல் அலி அப்தொல்லாஹியும், அவரது துணைத் தளபதியாக பிரிகேடியர் ஜெனரல் கியூமர்ஸ் ஹைதரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p> </p><p></p><h2>புரட்சிகர காவல் படை</h2><p>அதேபோல, மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்றுள்ள அஹ்மத் வாஹிதி இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) தலைமைத் தளபதியாகவும், மொஸ்டாஃபா இசாதி அதன் துணைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/449b005d-601f-424f-9ffe-731bb0fee888/26-6a79fc7aa6c39.webp' /></p><p>மேலும், ஐ.ஆர்.ஜி.சி கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் அலி ஒஸ்மையும், பசீஜ் அமைப்பின் தலைவராக ஹொசைன் தாயெப்பும் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T18:34:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலம்பியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம் ; 69 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/powerful-earthquake-hits-colombia-1786376506"></link>
            <id>https://canadamirror.com/article/powerful-earthquake-hits-colombia-1786376506</id>
            <summary type="text">கொலம்பியாவின் மேற்கு பகுதிகளில் திங்கட்கிழமை ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 69 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொலம்பியாவின் மேற்கு பகுதிகளில் திங்கட்கிழமை ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 69 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
நிலநடுக்கத்தின் தாக்கத்தினால் பல நகரங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. </p><p>இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.</p><p>கொலம்பியாவின் சோகோ (Chocó) பிராந்தியத்தில் அமைந்துள்ள சான் ஜோசே டெல் பால்மர் (San José del Palmar) நகராட்சிக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) மற்றும் கொலம்பிய புவியியல் சேவை தெரிவித்துள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b9a70e3-e9fb-4027-a173-7dd8b68631d6/26-6a79f13c53941.webp' /></p><p>கொலம்பிய தலைநகர் பொகோட்டாவிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஆரம்பத்தில் இந்த நிலநடுக்கத்தின் அளவு 6.6 ரிக்டர் என கொலம்பிய அதிகாரிகளால் மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், பின்னர் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அதன் அளவு 7.4 என அறிவித்துள்ளது.
</p><p>
நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 107 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக USGS தெரிவித்துள்ளது.</p><p>நிலநடுக்கத்தின் தாக்கத்தினால் சோகோ பிராந்தியத்தின் தலைநகரான கிப்டோ (Quibdó) உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததுடன், இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கியுள்ளதாகவும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சோகோ மாகாண ஆளுநர் நுபியா கரோலினா கோர்டோபா-குரி, நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அதிர்வுகள் ஏற்படக்கூடும் என எச்சரித்துள்ளார்.</p><p>

நிலநடுக்கத்தின் மையப்பகுதி சான் ஜோசே டெல் பால்மர் அருகில் இருந்த போதிலும், கிப்டோ நகரிலும் கட்டடங்களுக்கு குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
தற்போது சேத மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், முதலாவது உத்தியோகபூர்வ அறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தலைநகர் பொகோட்டா வரையிலும் உணரப்பட்டுள்ளன.

பொகோட்டாவில் வாகனங்கள் மற்றும் கட்டடங்களில் பொருத்தப்பட்டிருந்த எச்சரிக்கை அலாரங்கள் செயல்பட்டதுடன், அச்சமடைந்த மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
பொகோட்டா மேயர் கார்லோஸ் பெர்னாண்டோ கலான், நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே வெளியிட்ட தகவலில், நகரில் உயிரிழப்புகள் அல்லது காயமடைந்தவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a862451c-bc1f-48cd-b3b9-052b290ab309/26-6a7a1362d4efd.webp' /></p><p>

எனினும், சில கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கொலம்பியா மற்றும் அண்டை நாடான ஈக்வடார் ஆகிய நாடுகளின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
</p><p>
நிலநடுக்கத்திற்குப் பின்னர் ஏற்படக்கூடிய அதிர்வுகள் தொடர்பில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
</p><p>
இதனிடையே, அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு, இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.</p><p>நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசரகால மீட்புக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதுடன், சேதமடைந்த கட்டடங்கள் மற்றும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ள நிலையில், பலர் காயமடைந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.</p><p>

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தொடர்பில் அதிகாரிகள் தொடர்ந்தும் மதிப்பீடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>
கொலம்பியா அண்மைய காலங்களில் எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய நில அதிர்வுகளில் ஒன்றாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-10T18:07:39+00:00</updated>
        </entry>
    </feed>
