<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-27T16:36:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதுவரித் திணைக்களத்தின் தீர்மானத்திற்கு நிறுவனங்கள் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/companies-oppose-excise-department-s-decision-1785169909"></link>
            <id>https://jvpnews.com/article/companies-oppose-excise-department-s-decision-1785169909</id>
            <summary type="text">மதுபான உற்பத்தி மற்றும் சேமிப்பின் போது ஏற்படும் மதுசார வீணடிப்புச் சதவீதத்தை 1.5% இல் இருந்து 0.1% ஆகக் குறைப்பதற்குப் மதுவரித் திணைக்களம் எடுத்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மதுபான உற்பத்தி மற்றும் சேமிப்பின் போது ஏற்படும் மதுசார வீணடிப்புச் சதவீதத்தை 1.5% இல் இருந்து 0.1% ஆகக் குறைப்பதற்குப் மதுவரித் திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு நாட்டின் மதுபான உற்பத்தியாளர்கள் தமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p></p><p>மதுவரித் திணைக்களத்தின் இந்த புதிய அறிவிப்பினால், தற்போது இலங்கை அரசாங்கத்திற்கு 23 பில்லியன் ரூபாயை மிகப்பெரிய வரிப் பணமாகச் செலுத்தி வரும் நாட்டின் முன்னனி நிறுவனங்கள் மீண்டும் ஒருமுறை வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p> 

இதன் காரணமாகத் தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேலும் முன்னெடுத்துச் செல்வது கடினமாகி உள்ளதாக அந்நிறுவனங்கள், மதுவரித் திணைக்களத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8eb0d68a-3087-4ee5-bb48-7889d368b96c/26-6a6787f68a88b.webp' /></p><p>மதுபான உற்பத்தியின் போதும் சேமிப்புச் செயற்பாடுகளின் போதும் மதுசாரம் ஆவியாதல் சம்பவங்கள் அதிகளவில் பதிவாவதாக உற்பத்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர். </p><p>

குறிப்பாக, போத்தல்களில் அடைக்கும் இயந்திரங்களுக்குச் மதுசாரத்தைச் செலுத்தும் போதும், நவீன இயந்திரங்கள் மூலம் போத்தல்களில் அடைக்கும் செயற்பாடுகளின் போதும் இவ்வாறு அதிகளவில் மதுசாரம் ஆவியாகின்றது.</p><p> 

இது தவிர, அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் மதுபானப் போத்தல்களைச் சமர்ப்பிக்கும் போது, மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் பொறுப்பேற்கப்படும் மதுபானப் போத்தல் தொகுதிகளும் இந்த வீணடிப்புச் சதவீதத்தின் கீழேயே கணக்கிடப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p> 

மதுவரித் திணைக்களத்தினால் இலக்கம் 991 உடைய மதுவரி அறிவித்தல் மூலம் கடந்த ஜூலை மாதம் 24ஆம் திகதி இந்த புதிய திருத்தப்பட்ட அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுடன், இது தென்னை மற்றும் பனை சாராய உற்பத்திகளின் போது ஏற்படும் வீணடிப்புகளை மட்டுமே கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதற்கு முன்னர் மதுவரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருந்த இலக்கம் 151 உடைய அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்த மதுசார வீணடிப்புச் சதவீதத்தை, திருத்தப்பட்ட 991ஆம் இலக்க அறிவித்தல் மூலம் இவ்வாறு குறைத்தது ஒரு தன்னிச்சையான செயலாகும் என மதுபான உற்பத்தியாளர்கள் வலியுறுத்துகின்றனர். </p><p>

எனவே, இந்த மதுசார வீணடிப்புச் சதவீதத்தைக் குறைப்பதற்கு முன்னர், இந்த வீணடிப்புகள் எவ்வாறு நிகழ்கின்றன, எதன் அடிப்படையில் நிகழ்கின்றன மற்றும் அதற்குப் பங்களிக்கும் அறிவியல் காரணிகள் யாவை என்பது குறித்து சரியான, நடைமுறைச் சாத்தியமான மற்றும் அறிவியல் பூர்வமான பரிசோதனையை மேற்கொள்வது அத்தியாவசியமானது என உற்பத்தியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T16:31:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்மன் கோவிலில் மறந்தும் செய்யக்கூடாத 5 தவறுகள்.., என்னென்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/5-things-never-do-even-by-mistake-in-amman-temples-1785155868"></link>
            <id>https://manithan.com/article/5-things-never-do-even-by-mistake-in-amman-temples-1785155868</id>
            <summary type="text">ஆடி மாதம் மட்டுமின்றி அனைத்து மாதங்களிலும், குறிப்பாக வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பலரும் அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபடுகின்றனர். 

அம்மன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆடி மாதம் மட்டுமின்றி அனைத்து மாதங்களிலும், குறிப்பாக வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பலரும் அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபடுகின்றனர். </p><p>

அம்மன் கோவில்களில் சில முக்கியமான மரபுகள் உள்ளன. அவற்றை முறையாகப் பின்பற்றி வழிபடுவது சிறப்பு வாய்ந்தது.</p><p>

அதன்படி, அம்மன் கோவிலுக்கு செல்லும்போது சில தவறுகளை செய்யக்கூடாது என ஆன்மிக நம்பிக்கைகள் கூறுகின்றன.</p><p> 

அந்தவகையில், அம்மன் கோவிலுக்கு சென்றால் மறந்தும் செய்யக்கூடாத 5 முக்கிய தவறுகள் குறித்து பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b8d23ac-31e6-467f-9db8-1e6f6ddefe00/26-6a67511ec3e32.webp' /></p><h3>1. கோவில் வாசல் படியை மிதிக்கக் கூடாது</h3><p>

அம்மன் கோவிலுக்குள் நுழையும்போது வாசலில் இருக்கும் படியை மிதிக்காமல் தாண்டிச் செல்ல வேண்டும் என்பது மரபு. அந்தப் படியில் காவல் தெய்வங்கள் இருப்பதால், படியை மிதிப்பது அவமரியாதையாகக் கருதப்படுகிறது.</p><h3>

2. அம்மனை கண்களை மூடி வழிபடக் கூடாது</h3><p>

மாரியம்மன், காளியம்மன், துர்க்கை அம்மன் போன்ற தெய்வங்களை வழிபடும்போது அம்மனின் திருமேனியை பார்த்து வழிபட வேண்டும் என கூறப்படுகிறது.</p><h3> 

3. எலுமிச்சை விளக்கை எங்கு வேண்டுமானாலும் ஏற்றக் கூடாது
</h3><p>
அம்மன் கோவில்களில் வேண்டுதலுக்காக ஏற்றப்படும் எலுமிச்சை விளக்கை கோவில் பிரகாரத்தில் உள்ள துர்க்கை அம்மன் சன்னதியில் மட்டுமே எலுமிச்சை விளக்கை ஏற்ற வேண்டும் என்பது வழக்கம்.</p><h3>

4. கொடிமரம் மற்றும் பலிபீடத்தின் நிழலை மிதிக்கக் கூடாது
</h3><p>
கோவிலில் உள்ள கொடிமரம், பலிபீடம் மற்றும் ராஜகோபுரத்தின் நிழலை மிதிக்கக் கூடாது என்பது ஆன்மிக நம்பிக்கை. </p><h2>

5. தவறான திசையில் வலம் வரக்கூடாது
</h2><p>
அம்பாள் சன்னதியை ஆகம விதிகளுக்கு மாறாக தவறான திசையில் சுற்றி வரக்கூடாது என கூறப்படுகிறது. மேலும், அம்மன் கோவில்களில் 5 முறை வலம் வந்து வழிபடுவது சிறப்பானது என்ற நம்பிக்கை உள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T16:30:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[40 வயதிலும் குறையாத கிளாமர்!! நடிகை மெளனி ராயின் ரீசெண்ட் போட்டோஸ்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/after-divoce-news-mouni-roy-recent-photos-clicks-1785156026"></link>
            <id>https://viduppu.com/article/after-divoce-news-mouni-roy-recent-photos-clicks-1785156026</id>
            <summary type="text">மெளனி ராய்நடிகை மெளனி ராய் மற்றும் அவரது கணவரும் தொழிலதிபருமான சூரஜ் நம்பியார் இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக கூறி அறிக்கை வெளியிட்டனர்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மெளனி ராய்</h2><p>நடிகை மெளனி ராய் மற்றும் அவரது கணவரும் தொழிலதிபருமான சூரஜ் நம்பியார் இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக கூறி அறிக்கை வெளியிட்டனர்.
</p><p>
அதில், இந்த துயரமான சூழலில் நாங்கள் இருவரும் பரஸ்பர சம்மதத்துடனும், அமைதியான முறையில் கையாண்டு வருவதாகவும் குறிப்பிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ae01ba7-e47d-4eec-a18c-c479d1a4fbfe/26-6a6751c47ec9e.webp' /></p><p>

இணையத்தளத்தில் தங்களை பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறும், இந்த தனிப்பட்ட முடிவிற்கு அனைவரும் மதிப்பளிக்கவும், தனியுரிமையை காக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் கூறியிருந்தனர்.</p><p>

தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-27T16:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷூட்டிங்கில் ஜூனியர் என்டிஆர் படுகாயம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/jr-ntr-shoulder-injury-in-dragon-shooting-1785168915"></link>
            <id>https://cineulagam.com/article/jr-ntr-shoulder-injury-in-dragon-shooting-1785168915</id>
            <summary type="text">தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜூனியர் என்டிஆர் தற்போது டிராகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். கேஜிஎப் பட புகழ் இயக்குனர் பிரஷாந்த்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜூனியர் என்டிஆர் தற்போது டிராகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். கேஜிஎப் பட புகழ் இயக்குனர் பிரஷாந்த் நீல் தான் இந்த படத்தை இயக்கி வருகிறார்.</p><p>ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜி பிலிம் சிட்டியில் பிரமாண்டமாக செட் அமைத்து ஐரோப்பிய ஸ்டைலில் சண்டை காட்சிகளை படமாக்கி வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72d9d8c8-08f9-4246-8b1f-ac4e9e855875/26-6a67841620001.webp' /></p><p>
</p><h2>படுகாயம்</h2><p>இன்று மாலை சண்டை காட்சி படமாக்கி கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் ஜூன் என்டிஆர் தோளில் பெரிய காயம் ஏற்பட்டு இருக்கிறது.
</p><p>உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்னும் 6 முதல் 8 வாரங்கள் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர்.
</p><p>ரசிகர்கள் பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என நடிகரின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T16:15:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சாந்தினியா இப்படி.. நிகழ்ச்சிக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/chandhini-prakash-glam-look-at-an-event-1785168225"></link>
            <id>https://cineulagam.com/article/chandhini-prakash-glam-look-at-an-event-1785168225</id>
            <summary type="text">விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நெகடிவ் ரோலில் நடித்து வருபவர் சாந்தினி. அவர் ஜீ தமிழில் சிங்கிள் பசங்க உள்ளிட்ட ஷோக்களில் கலந்துகொண்டு அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நெகடிவ் ரோலில் நடித்து வருபவர் சாந்தினி. அவர் ஜீ தமிழில் சிங்கிள் பசங்க உள்ளிட்ட ஷோக்களில் கலந்துகொண்டு அதிகம் ரசிகர்களை கவர்ந்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p>சாந்தினி சீரியல்களில் ஹோம்லியாக மட்டுமே நடித்து வருகிறார். ஆனால் நிஜத்தில் அவர் அப்படியே opposite.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eeaf48f2-468c-4c87-b5e4-a14cb11f4e60/26-6a6781645f33d.webp' /></p><h2>கிளாமர்</h2><p>தற்போது சாந்தினி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள மிகவும் கிளாமராக வந்து இருக்கிறார். </p><p>

அந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T16:10:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிதியுதவி குறைப்பால் காஸாவில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு - ஐ.நா. எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/severe-food-shortages-gaza-due-cuts-un-warns-1785167621"></link>
            <id>https://tamilwin.com/article/severe-food-shortages-gaza-due-cuts-un-warns-1785167621</id>
            <summary type="text">நிதியுதவி குறைந்து வருவதன் காரணமாக, வரும் ஆண்டின் இறுதிக்குள் காசா மக்கள்
தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் பசியால் வாடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக
ஐக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிதியுதவி குறைந்து வருவதன் காரணமாக, வரும் ஆண்டின் இறுதிக்குள் காசா மக்கள்
தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் பசியால் வாடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக
ஐக்கிய நாடுகள் சபை கடுமையாக எச்சரித்துள்ளது.
</p><p>
காசாவில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் முற்றிலும் சர்வதேச மனிதநேய
உதவிகளையே நம்பி வாழ்கின்றன.</p><p></p><h2>நிதியுதவி</h2><p>
</p><p>
இருப்பினும், சர்வதேச உதவி நிறுவனங்களுக்கான நிதியுதவி வேகமாக வற்றி வருவதாக
அந்த அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a261634-10e4-4869-bb37-0ed6ec8af59f/26-6a6782e46c4ff.webp' /></p><p>
</p><p>
அத்துடன், தொடர்ச்சியான இஸ்ரேலியத் தாக்குதல்களால் அங்குள்ள விவசாய நிலங்களும்
வணிக நிறுவனங்களும் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன.
</p><p>
இதனால் அப்பகுதி மக்கள் சொந்தமாக வருமானம் ஈட்டி வாழ்வாதாரத்தைப் பேண முடியாத
நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T16:10:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[துறைமுக நகரத்தில் இடம்பெற்ற சீன பிரஜையின் மரணம் ; வெளியான மேலும் பல திடுக்கிடும் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-chinese-national-shocking-details-revealed-1785168587"></link>
            <id>https://jvpnews.com/article/death-chinese-national-shocking-details-revealed-1785168587</id>
            <summary type="text">துறைமுக நகரத்தில் (Port City) கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சீன பிரஜை, கணினி சார்ந்த மோசடிகளில் ஈடுபட்டு சட்டவிரோதமாகப் பணம் ஈட்டிய ஒருவர் என அடையாளங்காண...</summary>
            <content type="html"><![CDATA[<p>துறைமுக நகரத்தில் (Port City) கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சீன பிரஜை, கணினி சார்ந்த மோசடிகளில் ஈடுபட்டு சட்டவிரோதமாகப் பணம் ஈட்டிய ஒருவர் என அடையாளங்காணப்பட்டுள்ளதாக கொழும்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த டி சொய்சா தெரிவித்துள்ளார்.</p><p> </p><p></p><p>கடந்த சில நாட்களில் கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாகச் சமூக ஊடகங்களில் பரவிய தகவல்களின் உண்மை நிலையை விளக்குவதற்காக இன்று (27) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

இதன்படி, கடந்த 23ஆம் திகதி நள்ளிரவு துறைமுக நகரத்திற்குள் சீன பிரஜைகள் குழுவிற்கிடையே இடம்பெற்ற சம்பவம் குறித்து முழுமையான விளக்கம் அளிக்கப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71404bd7-6018-45c9-8922-fde4599b0800/26-6a6782cd0601c.webp' /></p><p>இரு வேறு சீன பிரஜைகள் குழுக்களிடையே கடந்த 23ஆம் திகதி அதிகாலை 3.00 மணியளவில் ஏற்பட்ட மோதல் காரணமாக நபர் ஒருவர் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டிருந்த நிலையில், அவரது சடலம் எஹெலியகொடை பகுதியில் மீட்கப்பட்டிருந்தது. </p><p>

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த கொழும்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், சம்பவம் நடந்து சில மணிநேரங்களுக்குள் நாட்டிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற இரு சந்தேகநபர்களைக் கைது செய்ய முடிந்ததாகவும், அவர்களே இச்சம்பவத்தின் முதன்மைச் சந்தேகநபர்கள் என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். </p><p>

இதற்கிடையில், இச்சம்பவம் தொடர்பாக 08 சந்தேகநபர்கள் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் மூவர் ஏற்கனவே நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களை மீண்டும் நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

இச்சம்பவத்திற்காக இரண்டு வாயு துப்பாக்கி, ஒரு கையடக்க தொலைபேசி, ஒரு வோக்கி டாக்கி (Walkie-Talkie) மற்றும் சில வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். </p><p>

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் வேறு பல நாடுகளில் செயற்பட்டு இலங்கைக்கு வருகை தந்தவர்கள் என அடையாளங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

அதற்கமைய, இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்துடனும் சீன அரசாங்கத்துடனும் சரியான ஒருங்கிணைப்புடன் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கொழும்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த டி சொய்சா மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T16:09:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச மாநாட்டை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளால் யாழில் கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/discussion-jaffna-relatives-forcibly-disappeared-1785166188"></link>
            <id>https://ibctamil.com/article/discussion-jaffna-relatives-forcibly-disappeared-1785166188</id>
            <summary type="text">வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின்
ஏற்பாட்டில் இன்று யாழில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

எதிர்வரும் ஓகஸ்ட் 3...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின்
ஏற்பாட்டில் இன்று யாழில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.</p><p>

எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை
முன்னிட்டு, யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் சர்வதேச மாநாடு ஒன்றினை நடத்த
"வடக்கு கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின்
சங்கம்" ஏற்பாடு செய்துள்ளது.</p><h2>சர்வதேச விசாரணையேதேவை என்பதை வலியுறுத்த மாநாடு</h2><p>இலங்கை அரசிடம் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்தைக் கையாளுவதற்கோ அல்லது
நீதியைப் பெற்றுத் தருவதற்கோ எவ்வித நம்பிக்கைக்குரிய பொறிமுறைகளும் இல்லை
என்பதையும், சர்வதேச விசாரணையே தமக்குத் தேவை என்பதையும் வலியுறுத்தும்
வகையில் இம்மாநாடு அமையவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3c25e1e-0539-4f03-9b99-0476427bee93/26-6a677da481d9f.webp' /></p><h2>மாநாடு தொடர்பான ஆதரவு, பங்களிப்பு&nbsp;</h2><p>இம்மாநாடு தொடர்பான ஆதரவு, பங்களிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில்
நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39f24f6b-9c83-4e1e-b64b-7796a24ec4fd/26-6a677da588836.webp' /></p><p>குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார்
பொன்னம்பலம், சிவஞானம் சிறிதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா
கஜேந்திரன், சிவகுரு ஆதீன குரு முதல்வர் தவத் திரு வேலன் சுவாமிகள்,
சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் , வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர்
தியாகராஜா நிரோஸ், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T15:47:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலக குழுவினரை ஆட்டிப்படைப்பது ராஜபக்சர்களே..! காவடி ஊர்வலத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்த திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/plan-to-launch-drone-attack-on-kavadi-procession-1785162464"></link>
            <id>https://tamilwin.com/article/plan-to-launch-drone-attack-on-kavadi-procession-1785162464</id>
            <summary type="text">பாதாள உலகக் குழுவினரை பயன்படுத்தி நாட்டை சீரழிப்பவர்கள் ராஜபக்சர்களே. அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான ஆட்சியை மக்கள் வரவேற்று வருவதாக தேசிய மக்கள் சக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலகக் குழுவினரை பயன்படுத்தி நாட்டை சீரழிப்பவர்கள் ராஜபக்சர்களே. அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான ஆட்சியை மக்கள் வரவேற்று வருவதாக தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட தமிழ் ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன்&nbsp; தெரிவித்துள்ளார்.
</p><p>
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> 

அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

பெரஹராவின் போது நடைபெறவுள்ள பாதாள உலகக் கும்பல் பிரச்சினைகளுக்கும் ராஜபக்சர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. </p><p>

மக்களிடையே அரகலய போராட்டத்தைப் போன்ற ஒரு மதக் கலவரத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. ஆனால் யார் எப்படி செயற்படுகின்றனர் என்பதை புரிந்துகொள்ளும் அளவிற்கு மக்கள் தற்போது விழிப்புணர்வுடன் இருக்கின்றார்கள்.</p><p>
கலவரத்தை ஏற்படுத்தி நாட்டை கைப்பற்றலாம் என்ற எண்ணமே இத்தகைய குழப்பங்களுக்கு அடித்தளமாக இருக்கின்றது. கஞ்சிபாணி இம்ரானை ஆட்டிப்படைத்து வருபவர்கள் ராஜபக்சர்களே என்றார்.&nbsp; &nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/vAnKIoYja74" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T15:33:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் தாக்குதல் அச்சம் : விமானத்தை மாற்றிய ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-changes-plane-due-to-iran-attack-fears-1785164423"></link>
            <id>https://ibctamil.com/article/trump-changes-plane-due-to-iran-attack-fears-1785164423</id>
            <summary type="text">ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தலை அடுத்து துருக்கியில் ட்ரம்ப் தனது விமானத்தை மாற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தலை அடுத்து துருக்கியில் ட்ரம்ப் தனது விமானத்தை மாற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
</p><p>
இது தொடர்பில் மேலும் தெரியவருதாவது, </p><p>


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,துருக்கியில் நடைபெற்ற NATO உச்சி மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார்.இதன்போது ஈரான் படைகள் அவரை குறிவைத்து தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக அமெரிக்க ரகசிய சேவை தகவல் பெற்றது. இதனால், அவர் பயணித்த புதிய Boeing 747-8 விமானத்திலிருந்து பழைய Air Force One-க்கு மாற்றப்பட்டார்.</p><h2>அமெரிக்காவிற்கு கத்தார் வழங்கிய விமானம்</h2><p>இந்த Boeing 747-8 விமானத்தை கத்தார் அரசு அமெரிக்காவுக்கு வழங்கியிருந்தது. ஆனால், அதில் பழைய Air Force One-ல் உள்ள மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் இல்லாததால், ரகசிய சேவை அதிகாரிகள் உடனடியாக மாற்றம் செய்ய அறிவுறுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f1c7aa3-21f4-44ef-891b-6724917ed848/26-6a677644397ea.webp' /></p><p>

ட்ரம்ப் இந்த மாற்றத்தை “பிரித்தானியாவில் உள்ள அமெரிக்க படையினருக்கு புதிய விமானத்தை காட்டுவதற்காக” என கூறியிருந்தாலும், அதிகாரப்பூர்வ தகவல்கள் பாதுகாப்பு காரணமே உண்மையான காரணம் என உறுதிப்படுத்துகின்றன.</p><p></p><h2>&nbsp;புதிய விமானத்தின் பாதுகாப்பு குறைபாடு</h2><p>
</p><p>
இந்த சம்பவம், புதிய விமானத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

ஜனாதிபதி ட்ரம்ப் கூட, “விமானத்தில் ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு இல்லை, ஆனால் விரைவில் மேம்படுத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5dac8cd7-d41d-4c4d-8001-b0b4c10c8b21/26-6a677644dbb83.webp' /></p><p> </p><p>வெள்ளை மாளிகை, இந்த புதிய விமானம் பாதுகாப்பானது என்றாலும், கூடுதல் மேம்பாடுகள் செய்யப்படும் என அறிவித்துள்ளது.

அமெரிக்க ரகசிய சேவை பணிப்பாளர், “அமெரிக்க தலைவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன” என எச்சரித்துள்ளார்.&nbsp; </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T15:17:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுநீரகக் கல் உள்ளவர்கள் தக்காளி சாப்பிடலாமா? மருத்துவரின் கூற்று]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/health-can-eating-tomatoes-cause-kidney-stones-1785154307"></link>
            <id>https://manithan.com/article/health-can-eating-tomatoes-cause-kidney-stones-1785154307</id>
            <summary type="text">சிறுநீரகக் கற்கள் என்பவை சிறுநீரில் உள்ள தாதுக்கள் மற்றும் உப்புகள் கடினமான படிகங்களாக மாறுவதாகும். 

இவை போதிய தண்ணீர் குடிக்காமல் இருத்தல், அதிக உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறுநீரகக் கற்கள் என்பவை சிறுநீரில் உள்ள தாதுக்கள் மற்றும் உப்புகள் கடினமான படிகங்களாக மாறுவதாகும். </p><p>

இவை போதிய தண்ணீர் குடிக்காமல் இருத்தல், அதிக உப்பு உணவுகள் மற்றும் மரபுவழி காரணங்களால் உருவாகின்றன.
</p><p>
குறிப்பாக, இளைஞர்களிடையே சிறுநீரகக் கற்கள் அதிகரித்து வருவதால் உணவு விஷயத்தில் பலரும் அதிக கவனம் செலுத்துகின்றனர்.</p><p>

சிறுநீரகக் கல் உள்ளவர்கள் தக்காளி சாப்பிடக்கூடாது என்ற கருத்து நீண்ட காலமாக இருந்து வருகிறது.
</p><h2>
மருத்துவரின் கூற்று</h2><p>இதுகுறித்து சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் அமரேந்திர பதக் கூறுகையில், சிறுநீரகக் கற்களில் கால்சியம் ஆக்சலேட் கற்களே மிகவும் பொதுவானவை. </p><p>

தக்காளியில் சிறிதளவு ஆக்சலேட் இருந்தாலும், சிறுநீரகக் கல் உள்ளவர்கள் தக்காளியை முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb1b7f1c-4e7a-4a2a-bbb9-9ebf806d2e7f/26-6a674b06558af.webp' /></p><p>மிதமான அளவில் தக்காளி சாப்பிடலாம் என்று தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், அடிக்கடி கால்சியம் ஆக்சலேட் கற்கள் உருவாகும் நபர்கள் தங்கள் உணவு முறையில் கவனமாக இருக்க வேண்டும்.&nbsp;</p><p>போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, அதிக உப்பு உட்கொள்வது, அதிக ஆக்சலேட் உள்ள உணவுகளை சாப்பிடுவது, பரம்பரை காரணிகள் மற்றும் சில உடல்நலப் பிரச்சனைகள் சிறுநீரகக் கற்களுக்கு காரணமாக இருக்கலாம்.
</p><p>
உடலில் நீர்ச்சத்து குறையும்போது சிறுநீர் அடர்த்தியாகி, அதில் உள்ள தாதுக்கள் படிந்து கற்கள் உருவாகலாம். </p><h2>

செய்ய வேண்டியவை
</h2><p>
போதுமான அளவு தண்ணீர் குடிப்பது சிறுநீரகக் கற்களைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. </p><p>

அதிக உப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை பானங்களை அதிகமாக உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.</p><p>

ஒவ்வொரு நபருக்கும் சிறுநீரகக் கற்களின் காரணமும், கல் வகையும் மாறுபடும் என்பதால் மருத்துவப் பரிசோதனைகளின் அடிப்படையில் உணவு முறையைத் தீர்மானிப்பது அவசியம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad00ce1d-d491-4835-997c-dc0d64f773f4/26-6a674b05a3fc0.webp' /></p><p>மேலும், தக்காளியில் வைட்டமின் சி, பொட்டாசியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் லைக்கோபீன் போன்ற சத்துக்கள் உள்ளன.</p><p> 

எனவே, சிறுநீரகக் கல் உள்ளவர்கள் தக்காளியை முற்றிலும் தவிர்க்க வேண்டியதில்லை, அளவோடு சாப்பிடுவதுடன், தனிப்பட்ட உடல்நிலைக்கு ஏற்ப மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது சிறந்தது.</p>]]></content>
            <updated>2026-07-27T15:00:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இந்தியப் பெண் சுட்டுக் கொலை; அதிர்ச்சித் தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-origin-woman-shot-dead-in-canada-1785155838"></link>
            <id>https://jvpnews.com/article/indian-origin-woman-shot-dead-in-canada-1785155838</id>
            <summary type="text">&amp;nbsp; கனடாவில் கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவைச் சேர்ந்த நவ்நீத் கௌர் ( Navneet Kaur, 26)என்ற&amp;nbsp; 26 வயதான பெண் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கனடாவில் கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவைச் சேர்ந்த நவ்நீத் கௌர் ( Navneet Kaur, 26)என்ற&nbsp; 26 வயதான பெண் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், விசாரணையின்போது சாட்சிகளின் வாக்குமூலம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>


கடந்த வெள்ளிக்கிழமை காலை பொலிஸாருக்கு அவசர அழைப்பு வந்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நவ்நீத் கௌருக்கு முதலுதவி அளித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/beba2bd0-31f8-4778-b077-8df3575443a0/26-6a6750ff4e597.webp' />]</p><h2>திட்டமிட்ட கொலையாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம்</h2><p> </p><p>எனினும், சிகிச்சை பலனின்றி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.



இந் நிலையில் , பெண்ணொருவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவருக்குப் பின்னால் ஒரு நபர் பின்தொடர்ந்து சென்றுள்ளார். </p><p>சிறிது தூரம் சென்றதும் அப்பெண்ணிடம் அந்த நபர் ஏதோ பேசியுள்ளார். அதன்பிறகே அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அப்பெண்ணை சுட்டுள்ளார் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.</p><p></p><p> </p><p>



இதனையடுத்து, சந்தேக நபரை பொலிஸார் உடனடியாக கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர் பிரம்டன் பகுதியைச் சேர்ந்த ஷரன்ஜித் சிங் (வயது 37) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>


 இது ஒரு திட்டமிட்ட கொலையாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். எனினும் , இந்த கொலைக்கான பின்னணி மற்றும் அடிப்படை காரணம் என்ன என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
</p><p></p><p>


 சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்குமாறு கனடா பொலிஸ் கேட்டுக்கொண்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-27T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை பூஜா ஹெக்டேவின் ரீசெண்ட் மாடர்ன் லுக் போட்டோஷூட்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/jananayagan-heroine-pooja-hegde-recent-photos-1785155477"></link>
            <id>https://viduppu.com/article/jananayagan-heroine-pooja-hegde-recent-photos-1785155477</id>
            <summary type="text">பூஜா ஹெக்டேபான்-இந்தியன் ஸ்டாராக ஜொலித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபலம் ஆவார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பூஜா ஹெக்டே</h2><p>பான்-இந்தியன் ஸ்டாராக ஜொலித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபலம் ஆவார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களிடையே கவனத்தை பெறுவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09d2c957-9b35-4476-ac8b-6f00290d0fa0/26-6a674f9c6ff7c.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், தற்போது புதிய ஹேர் ஸ்டைலில் எடுத்துக்கொண்ட அசத்தலான புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டார். அதன்பின் அவர் நடிப்பில் ஜனநாயகன் படம் வெளியானது. </p><p>மேலும் துல்கர் சல்மானுடன் பொம்மா பொம்மா படத்திலும் நடித்துள்ளார். தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-27T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக சதமடித்த பாகிஸ்தான் வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/shan-masood-7th-test-ton-vs-west-indies-1785163773"></link>
            <id>https://news.lankasri.com/article/shan-masood-7th-test-ton-vs-west-indies-1785163773</id>
            <summary type="text">டிரினிடாட்டில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானின் ஷான் மசூத் சதம் விளாசினார்.

ஷான் மசூத்பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>டிரினிடாட்டில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானின் ஷான் மசூத் சதம் விளாசினார்.
</p><h2>
ஷான் மசூத்</h2><p>பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிரினிடாட்டில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd1783da-9efd-471d-96ac-b32ecc17fd88/26-6a6770eeceac0.webp' />&nbsp;</p><p></p><p>

மேற்கிந்திய தீவுகள் முதல் இன்னிங்ஸில் 311 ஓட்டங்கள் எடுத்தது. ஷாய் ஹோப் 92 ஓட்டங்களும், கவேம் ஹாட்ஜ் 84 ஓட்டங்களும் எடுத்தனர். </p><p>

அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி இரண்டாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ஓட்டங்கள் எடுத்தது.</p><p>

மூன்றாம் நாள் ஆட்டத்தை இன்று தொடங்கிய பாகிஸ்தான் அணியில், ஷான் மசூத் (Shan Masood) சதத்தை பூர்த்தி செய்தார்.</p><p> 

டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு இது 7வது சதம் ஆகும். 162 பந்துகளை எதிர்கொண்ட மசூத் 11 பவுண்டரிகள் அடித்தார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c57f25e-1329-4d10-8c6d-f0456f060d0f/26-6a6770ef9f854.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T14:47:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு : அமைச்சரவை அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/extension-of-retirement-age-for-judges-1785162216"></link>
            <id>https://ibctamil.com/article/extension-of-retirement-age-for-judges-1785162216</id>
            <summary type="text">உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் உள்ளிட்ட நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அரசாங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் உள்ளிட்ட நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (27) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><h2>இரண்டு ஆண்டுகளால் நீடிக்க அரசாங்கம் திட்டம்</h2><p>&nbsp;அதன்படி, தற்போது முறையே 63 மற்றும் 65 ஆண்டுகளாக உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை, அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் மேலும் இரண்டு ஆண்டுகளால் நீடிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6636339c-0112-4f36-a243-8b67215dabde/26-6a676d6a4b785.webp' /></p><p>
</p><p>

இதேவேளை நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கும் அரசாங்கத்தின் யோசனைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T14:38:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்து புதிய அரசாங்கத்தில் 3 இந்தியர்களுக்கு அமைச்சர் பதவி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/uk-pm-andy-burnham-3-indians-appointed-ministers-1785156668"></link>
            <id>https://jvpnews.com/article/uk-pm-andy-burnham-3-indians-appointed-ministers-1785156668</id>
            <summary type="text">இங்கிலாந்து பிரதமராக எண்டி பர்ன்ஹாம் (prime minister andy burnham) பொறுப்பேற்றுள்ளதைத் தொடர்ந்து, இதன் ஒருபகுதியாக, தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த 3 இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்து பிரதமராக எண்டி பர்ன்ஹாம் (prime minister andy burnham) பொறுப்பேற்றுள்ளதைத் தொடர்ந்து, இதன் ஒருபகுதியாக, தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த 3 இந்திய வம்சாவளி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கிய அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.</p><p>



அவர்களில் இங்கிலாந்து நாட்டின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) துறை அமைச்சராக கனிஷ்கா நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f708fd3-44f9-4a40-ba49-0dbc81752192/26-6a67543dca77a.webp' /></p><h2>இலங்கைத் தமிழர் வம்சாவளி&nbsp; உமா குமரன்</h2><p> இவர் வர்த்தகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்களுடன் இணைந்து, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அது தொடர்பான நிர்வாகப் பணிகளைக் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


சமத்துவத் துறை அமைச்சராக சத்வீர் கவுர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்தல், பாலின சமத்துவத்தை உறுதி செய்தல் மற்றும் சமூகச் சமத்துவம் சார்ந்த முக்கியப் பணிகளை மேற்கொள்வார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5df3dafa-eac9-4983-937f-d8a68f8f8356/26-6a67543ead3fd.webp' /></p><p>



தொழிலாளர் கட்சியின் உதவிக் கட்டுப்பாட்டு அதிகாரியாக ஹர்பிரீத் உப்பல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆளும்கட்சியின் விதிமுறைகளை ஒருங்கிணைத்து, பாராளுமன்ற உறுப்பினர்களைச் சரியாகச் வழிநடத்தும் பொறுப்புகளை செய்வாரென கூறப்படுகின்றது.</p><p> 



இந் நிலையில் இங்கிலாந்து அரசாங்கத்தின் முக்கியத் துறைகளிலும், வளர்ந்து வரும் நவீனத் தொழில்நுட்பத் துறையான AI அமைச்சின் முதல் அமைச்சராகவும் இந்திய வம்சாவளியினர் பொறுப்பேற்றிருப்பது உலகளவில் பெரும் வரவேற்பையும் கவனத்தையும் பெற்றுள்ளது.</p><p></p><p>அதேவேளை இலங்கைத் தமிழர் வம்சாவளியைச் சேர்ந்தவரும், வெளியுறவுத் துறையில் இளைய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளவருமான இந்து மதத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் ஆகியோருடன் சேர்த்து, தற்போது அமைச்சரவையின் முன்னவரிசையில் (front bench) இரண்டு இந்து மற்றும் இரண்டு சீக்கிய அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[149 பந்தில் 3 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள்: போராடி அணியை காப்பாற்றிய வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jan-frylinck-100-in-149-balls-vs-nepal-1785161371"></link>
            <id>https://news.lankasri.com/article/jan-frylinck-100-in-149-balls-vs-nepal-1785161371</id>
            <summary type="text">நேபாள அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஜென் ஃப்ரைலிங்க் நிதானமாக ஆடி சதம் அடித்தார்.&amp;nbsp;லௌரேன் ஸ்டீன்கம்ப் அரைசதம் 

நேபாளம் மற்றும் நமீபியா அணிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாள அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஜென் ஃப்ரைலிங்க் நிதானமாக ஆடி சதம் அடித்தார்.&nbsp;</p><h2>லௌரேன் ஸ்டீன்கம்ப் அரைசதம் </h2><p>

நேபாளம் மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி உட்ரெச்ட்டில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3fc566b-3f7d-42d0-8885-73d0ca28cdb2/26-6a6767c2ab9d1.webp' />&nbsp;</p><p></p><p>
நாணய சுழற்சியில் வென்ற நேபாள அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. ஆனால் மழை பெய்ததால் ஆட்டம் தொடங்க தாமதமானது.
</p><p>
முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கிய நமீபியா அணி, மைதானத்தின் தன்மையால் நிதானமாகவே ஓட்டங்களை சேர்த்தது.
</p><p>
தொடக்க வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, ஜென் ஃப்ரைலிங்க் மற்றும் லௌரேன் ஸ்டீன்கம்ப் வலுவான கூட்டணி அமைத்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d48431d-6886-46cd-a1bf-ff28a45adebd/26-6a6768f091130.webp' /></p><p>
அரைசதம் அடித்த லௌரேன் ஸ்டீன்கம்ப் (Louren Steenkamp) 87 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 59 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><h2>ஜென் ஃப்ரைலிங்க்&nbsp;சதம் </h2><p>
அடுத்து வந்த வீரர்கள் கரணின் பந்துவீச்சில் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேற, ஜென் ஃப்ரைலிங்க் (Jan Frylinck) சதம் அடித்தார். </p><p>

அதிரடியாக ஆடக்கூடிய ஃப்ரைலிங்க், வழக்கத்திற்கு மாறாக ஆடுகளத்தின் தன்மை மற்றும் நேபாளத்தின் தாக்குதல் பந்துவீச்சுக்கு ஏற்ப ஆடியதால், 149 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள் குவித்தார்.
</p><p>
அவரது பொறுப்பான ஆட்டத்தின் மூலம் நமீபியா அணி 211 ஓட்டங்கள் சேர்த்தது. நேபாளத்தின் கரண் கேசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9780398-f7b7-4746-ae17-621392aebe73/26-6a6768f17d10d.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> <b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T14:14:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்புடனான சந்திப்பில் ஈரான் விவகாரமே முதன்மையாக இருக்கும்: நெதன்யாகு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-issue-priority-in-meeting-trump-netanyahu-1785160993"></link>
            <id>https://tamilwin.com/article/iran-issue-priority-in-meeting-trump-netanyahu-1785160993</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்க உள்ள நிலையில், இந்தச்
சந்திப்பில் ஈரான் விவகாரமே பேச்சுவார்த்தையின் முக்கிய அங்கமாக இருக்கும்
என்று இஸ்ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்க உள்ள நிலையில், இந்தச்
சந்திப்பில் ஈரான் விவகாரமே பேச்சுவார்த்தையின் முக்கிய அங்கமாக இருக்கும்
என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
</p><p>
இது குறித்து தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள நெதன்யாகு,
"எங்கள் சந்திப்பின் போது மேசையிலுள்ள அனைத்து முக்கிய விவகாரங்கள் குறித்தும்
விவாதிப்போம். அதில் ஈரான் விவகாரமே முதன்மையாக இருக்கும்" என்று
குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>
இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்வதும், நாட்டின் பலத்தைப் பெருக்குவதும்,
தங்களைச் சுற்றியுள்ள அமைதி வட்டத்தை விரிவுபடுத்துவதுமே தங்கள் தெளிவான
இலக்கு என்று நெதன்யாகு தெரிவித்துள்ளார்.</p><h2>ட்ரம்புடன் அதிக தடவை சந்திப்பு</h2><p>

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக் காலத்தைத் தொடங்கிய பிறகு,
அவரைத் தான் சந்திக்கும் எட்டாவது சந்திப்பு இதுவென்றும், உலகத் தலைவர்களில்
வேறு எந்தவொரு தலைவரையும் விடத் தான் ட்ரம்பை அதிக முறை சந்தித்துள்ளதாகவும்
அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
</p><p></p><p>மேலும், தமது இந்த பயணத்தின் மற்றொரு நோக்கத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
</p><p>
இஸ்ரேலின் மிகச்சிறந்த நண்பராகவும், தமது நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்த
மறைந்த அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிராமுக்கு நேரில் இறுதி அஞ்சலி
செலுத்தவும் தான் அமெரிக்கா சென்றுள்ளதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="iw" dir="rtl">אני יוצא עכשיו לפגישה עם ידידנו הנשיא דונלד טראמפ - הפגישה השמינית שלנו מאז שנבחר לכהונתו השנייה, יותר מכל מנהיג בינלאומי אחר. זו זכות גדולה, וזו גם אחריות גדולה.<br><br>בפגישתנו נדון בכל הנושאים שעל הפרק, ובראשם איראן. המטרה שלנו ברורה: לשמור על ביטחונה של ישראל, לחזק את עוצמתה…</p>&mdash; Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) <a href="https://x.com/netanyahu/status/2081702825948553603?ref_src=twsrc%5Etfw">July 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T14:14:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கரூரில் வழங்கப்பட்ட அரசு வேலை ரத்து - அரசின் நிலைப்பாடு என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/tn-govt-to-appeal-in-sc-regard-karur-govt-job-1785161638"></link>
            <id>https://ibctamilnadu.com/article/tn-govt-to-appeal-in-sc-regard-karur-govt-job-1785161638</id>
            <summary type="text">கரூரில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசு வேலையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ள நிலையில், தவெக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கரூரில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசு வேலையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ள நிலையில், தவெக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது. </p><h3>

உச்சநீதிமன்றம் செல்லும் தவெக அரசு </h3><p>

கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.</p><p>

ஜூலை 10 ஆம் திகதி கரூர் சென்ற முதல்வர் விஜய், இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு அரசுப்பணிக்கான ஆணையை வழங்கினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fca327dc-f0dd-4a6f-99bb-c8ec4de6debf/26-6a6767a7cd09d.webp' /></p><p> 

இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதற்கு தடை விதிக்க கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
</p><p>
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ள நிலையில், கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள விதிகளை தமிழ்நாடு அரசு மீறியுள்ளதாக கூறிய நீதிபதிகள், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது என தீர்ப்பளித்துள்ளது. </p><p> 

மேலும், "திறன் கருணை அடிப்படையில் ஆன பணிக்காக காத்திருப்பவர்களை மீறி, பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு முன்னுரிமை அளிக்கப்பட்டது?

சிவகாசியில் வெடி விபத்தில் உயிரிழப்புகள் நிகழ்கின்றன. அவர்களுக்கும் அரசு வேலை வழங்க முடியுமா?
</p><p>
சாலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை தர முடியுமா? அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும்" என தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80230a54-ba10-4599-ad88-f257359d78b9/26-6a6767a89ba11.webp' /></p><p>

இந்த தீர்ப்பை எதிர்த்து நாளை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T14:14:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - ஈரான் தாக்குதல் நிறுத்தம் : கச்சாய் எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/oil-price-dives-as-us-and-iran-pause-attacks-1785160051"></link>
            <id>https://ibctamil.com/article/oil-price-dives-as-us-and-iran-pause-attacks-1785160051</id>
            <summary type="text">அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான தாக்குதல்கள் நிறுத்தப்படுவது, மோதலுக்கு ஒரு தீர்வைக் காண உதவும் என்ற நம்பிக்கையில் உலகளவில் எண்ணெய் விலை கடுமைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான தாக்குதல்கள் நிறுத்தப்படுவது, மோதலுக்கு ஒரு தீர்வைக் காண உதவும் என்ற நம்பிக்கையில் உலகளவில் எண்ணெய் விலை கடுமையாகச் சரிந்துள்ளது.
</p><p>
எண்ணெய்க்கான உலகளாவிய அளவுகோலான பிரென்ட் கச்சா எண்ணெய், ஒரு கட்டத்தில் 9%க்கும் மேல் சரிந்து ஒரு பீப்பாய் 88 டொலருக்கும் கீழே சென்றது. கடந்த வாரம் 100 டொலருக்கும் மேல் உயர்ந்திருந்த நிலையில், இது ஒரு சடுதியான மாற்றத்தைக் குறிக்கிறது.</p><h2>&nbsp;தாக்குதல்கள் நிறுத்தம்</h2><p>"பேச்சுவார்த்தைகளுக்குச் சிறிது அவகாசம் அளிப்பதற்காக" ஈரான் மீதான தாக்குதல்கள் தொடர்ச்சியாக இரண்டாவது இரவாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் கூறியதைத் தொடர்ந்து இந்தச் சரிவு ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81f0b411-c2bc-4d97-8a0c-70ac5f814524/26-6a6764b6b6455.webp' /></p><p>&nbsp;பதிலடியாக, தெஹ்ரான் அப்பகுதியில் "பதிலடி" தாக்குதல்களை நிறுத்திவிட்டதாக ஈரான் இராணுவ செய்தித் தொடர்பாளர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.</p><p></p><h2>போர் வெடித்ததால் எண்ணெய் விலையில் சடுதியான உயர்வு</h2><p>&nbsp;ஈரான் போர் வெடித்ததால் எண்ணெய் விலையில் சடுதியான உயர்வு ஏற்பட்டது. ஏனெனில், இந்த மோதல், உலகின் சுமார் 20% எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (LNG) கொண்டு செல்லும் முக்கிய கப்பல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு வழிவகுத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8678a210-353f-4b32-a45f-f56e6c750752/26-6a6764b7ba650.webp' /></p><p>&nbsp;இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி, நீரிணையை மீண்டும் திறப்பதற்காக ஈரானும் அமெரிக்காவும் ஜூன் மாதம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது, ​​எண்ணெயின் விலை போருக்கு முந்தைய நிலைகளான ஒரு பீப்பாய் சுமார் 70 டொலர் என்ற அளவிற்கு மீண்டும் சரிந்தது.</p><p>&nbsp;
இருப்பினும், இந்த மாத தொடக்கத்தில் போர் நிறுத்தம் முறிந்ததால், உலகளாவிய எரிசக்தி விநியோகம் குறித்த அச்சங்கள் மீண்டும் மேலெழும்பி, எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்தது.</p><p>

கடந்த வாரம், மே மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக ஒரு பீப்பாய் 100 டொலரை எட்டியது. ஏமனில் உள்ள ஹவுத்தி போராளிகள் செங்கடலில் எண்ணெய் கப்பல்களைத் தாக்கியதால் கூடுதல் கவலைகள் எழுந்தன. இந்தத் தாக்குதல், சவூதி அரேபியா ஹோர்முஸ் நீரிணையை தவிர்ப்பதற்காகப் பயன்படுத்தி வந்த ஒரு முக்கிய ஏற்றுமதிப் பாதைக்கு அச்சுறுத்தலாக அமைந்தது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T14:12:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரக்கிளை முறிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-dies-after-a-branch-of-a-tree-falls-1785159744"></link>
            <id>https://tamilwin.com/article/woman-dies-after-a-branch-of-a-tree-falls-1785159744</id>
            <summary type="text">கரந்தெனிய பிரதேசத்திலுள்ள பழங்கால விகாரை வளாகத்திலிருந்த மரக்கிளை முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மரக்கிளை முறிந்து விழுந்ததில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கரந்தெனிய பிரதேசத்திலுள்ள பழங்கால விகாரை வளாகத்திலிருந்த மரக்கிளை முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>

மரக்கிளை முறிந்து விழுந்ததில் காயமடைந்த பெண் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கரந்தெனிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். </p><p>

இவ்வாறு உயிரிழந்தவர் கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஆவார்.</p><p></p><p> </p><h2><b>பெண் உயிரிழப்பு</b></h2><p>இவர் நேற்று குறித்த விகாரை வளாகத்திற்கு வந்த சந்தர்ப்பத்திலேயே மரத்திலிருந்து முறிந்து விழுந்த கிளைக்கு அடியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c005b156-aee7-4c89-a12c-5ffc8bf70bdd/26-6a6765f809ac2.webp' /></p><p>இந்த கிளை முறிந்து விழுந்ததன் காரணமாக அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றிற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.</p><p> 

 இச்சம்பவம் தொடர்பாக கரந்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.[p</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-07-27T14:06:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[எத்தனை நாட்கள் கோவிலுக்கு சென்றால் என்ன பலன் கிடைக்கும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/visiting-temple-daily-spiritual-benefits-1785065206"></link>
            <id>https://manithan.com/article/visiting-temple-daily-spiritual-benefits-1785065206</id>
            <summary type="text">பொதுவாக கோவிலுக்கு சென்று வழிபடுவதால் மன அமைதியும், நேர்மறை எண்ணங்களும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. 

தினமும் கோவிலுக்கு செல்வது சாத்தியமில்லாதவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக கோவிலுக்கு சென்று வழிபடுவதால் மன அமைதியும், நேர்மறை எண்ணங்களும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.</p><p> 

தினமும் கோவிலுக்கு செல்வது சாத்தியமில்லாதவர்கள், முக்கிய நாட்கள் மற்றும் விசேஷ தினங்களில் வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.</p><p> 

இறை நம்பிக்கையுடன் கோவிலுக்கு சென்று வழிபடுவதால் நினைத்த காரியம் நடக்கும் என்று நம்பப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dcdd052-0358-4e91-835b-c36b17936ffa/26-6a65eef8a34c5.webp' /></p><p>

அதேபோல், தினமும் ஒரே கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை என்று சொல்லப்படுகிறது.
</p><p>
இருப்பினும், தொடர்ந்து குறிப்பிட்ட நாட்கள் கோவிலுக்கு சென்று வழிபட்டால் பல்வேறு பலன்கள் கிடைக்கும் என ஆன்மீக நம்பிக்கைகள் கூறுகின்றன.
</p><p>
அந்தவகையில், தொடர்ந்து கோவிலுக்கு செல்வதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.&nbsp;</p><p><b>7 நாட்கள் –</b> தடைப்பட்ட திருமணம் கைகூடும்.</p><p><b>
9 நாட்கள் – </b>தரித்திரம் விலகும்.
</p><p><b>11 நாட்கள் – </b>கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.</p><p><b>
15 நாட்கள் –</b> நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
</p><p><b>21 நாட்கள் – </b>குழந்தைச் செல்வம் கிடைக்கும்.
</p><p><b>ஒரு மாதம் –</b> அறியாமல் செய்த பாவங்கள் நீங்கும்.
</p><p><b>48 நாட்கள் (ஒரு மண்டலம்) – </b>ஆன்மீக பலன்கள் கிடைக்கும்.</p><p><b>
108 நாட்கள் – </b>தேவேந்திர பூஜை செய்த பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது.</p><p><b>
1008 நாட்கள் – </b>அஸ்வமேத யாகம் செய்த பலனும், முக்தியும் கிடைக்கும் என ஆன்மீக நம்பிக்கை உள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T14:03:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே ஒரு சிறுநீரகத்துடன் வாழும் கிராம மக்கள்.., எங்கு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/nepals-kidney-valley-village-in-tamil-1785149559"></link>
            <id>https://manithan.com/article/nepals-kidney-valley-village-in-tamil-1785149559</id>
            <summary type="text">பொதுவாக, மனித உடலில் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. 

மனிதர்களால் ஒரு சிறுநீரகம் இல்லாவிட்டாலும் மற்றொரு சிறுநீரகத்தின் உதவியுடன் உயிர் வாழ முடியும். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக, மனித உடலில் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. </p><p>

மனிதர்களால் ஒரு சிறுநீரகம் இல்லாவிட்டாலும் மற்றொரு சிறுநீரகத்தின் உதவியுடன் உயிர் வாழ முடியும். </p><p>

இதனால் சிலர் தங்களின் சிறுநீரகத்தை விற்கும் சம்பவங்கள் நடக்கின்றன. </p><p>

ஆனால், நேபாளத்தில் உள்ள ஒரு கிராமம் சிறுநீரக விற்பனை காரணமாக உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27234fa6-a609-4342-86bd-06f111cb43ea/26-6a67387a5900a.webp' /></p><p>நேபாளத்தின் காவ்ரேபிளாஞ்சோக் மாவட்டத்தில் உள்ள ஹோக்ஸே கிராமம், சிறுநீரகப் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது.</p><p> 

இந்த கிராமத்தில் உள்ள பல குடும்பங்களில் குறைந்தது ஒருவர் தனது சிறுநீரகத்தை விற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.&nbsp;</p><p>கடும் வறுமை, கடன் மற்றும் அடிப்படை தேவைகளுக்கான பணத் தேவை காரணமாக பலர் சிறுநீரகத்தை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். </p><p>

இதனை பயன்படுத்தி கொண்ட தரகர்கள், கிராம மக்களை ஏமாற்றி சட்டவிரோதமாக சிறுநீரகங்களை அகற்றி விற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29fee24d-c9db-413a-9496-a976ea60e573/26-6a67387b094e8.webp' /></p><p>

பல கிராம மக்கள் தங்கள் சிறுநீரகங்களை 20,000 முதல் 70,000 நேபாள ரூபாய் வரை விற்றதாகக் கூறப்படுகிறது.</p><p> 

இதன்மூலம் உறுப்பு கடத்தல் கும்பல்கள் குறைந்த விலையில் சிறுநீரகங்களைப் பெற்று அதிக விலைக்கு விற்று லாபம் ஈட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>முடி மற்றும் நகங்களைப் போல சிறுநீரகமும் மீண்டும் வளரும் என்று கூறி, தரகர்கள் மக்களை ஏமாற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4f04c5c-99f4-47f9-81f0-d951fd413c82/26-6a67387bb86c7.webp' /></p><p>மருத்துவ அறிவு மற்றும் கல்வியறிவு இல்லாததால் பலர் இந்தப் பொய்யை நம்பி சிறுநீரகத்தை விற்றதாகக் கூறப்படுகிறது.</p><p>

சிறுநீரகத்தை விற்பது நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. </p><p>

மேலும், சட்டவிரோத அறுவை சிகிச்சைகள் காரணமாக பலர் உடல்நலக் குறைபாடுகள், மருத்துவ சிக்கல்கள், உளவியல் பாதிப்புகளை சந்தித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-07-27T14:00:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தான் நடித்த படத்தால் கடும் ஏமாற்றத்தில் நடிகை காஜல் அகர்வால்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-kajal-agarwal-film-low-collection-1785150170"></link>
            <id>https://cineulagam.com/article/actress-kajal-agarwal-film-low-collection-1785150170</id>
            <summary type="text">காஜல் அகர்வால்சேத்தன் டி.கே. இயக்கத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் உருவான திரைப்படம் இந்தியா ஸ்டோரி. இந்தப் படத்தை சாகர் பி.ஷிண்டே தயாரித்து எழுத...</summary>
            <content type="html"><![CDATA[<h2>காஜல் அகர்வால்</h2><p>சேத்தன் டி.கே. இயக்கத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் உருவான திரைப்படம் இந்தியா ஸ்டோரி. </p><p>இந்தப் படத்தை சாகர் பி.ஷிண்டே தயாரித்து எழுதியுள்ளார். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளில் கலக்கப்படும் ரசாயனங்களால் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு தொடர்பாகவும், அதுசார்ந்த நிர்வாக ஊழல் பற்றியும் இப்படம் பேசியுள்ளது. </p><p>நல்ல கதையுடன் தயாரான இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி இருந்தது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3cc8f12-bf9e-424c-ae47-4eb7fb56dacb/26-6a673c886f2b7.webp' /></p><h2>பாக்ஸ் ஆபிஸ் </h2><p>
படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. படம் வெளியாகி 3 நாள் முடிவில் ரூ. 18 லட்சத்தை மட்டுமே வசூலித்து பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75edd4a6-3dbc-41b2-8f3b-2b5b8064883d/26-6a673c8771b10.webp' /></p>]]></content>
            <updated>2026-07-27T14:00:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இதுவும் ஒரு Gen Z வார்த்தையா? அர்த்தம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/famous-gen-z-words-meaning-in-tamil-1785156650"></link>
            <id>https://manithan.com/article/famous-gen-z-words-meaning-in-tamil-1785156650</id>
            <summary type="text">தற்போது இளைஞர்கள் மத்தியில் Gen Z வார்த்தைகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் புதிய புதிய Gen Z வார்த்தைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது இளைஞர்கள் மத்தியில் Gen Z வார்த்தைகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
</p><p>
கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் புதிய புதிய Gen Z வார்த்தைகள் சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலமடைந்து, இளைஞர்களின் அன்றாட பேச்சில் இடம்பிடித்து வருகின்றன.</p><p>முன்னர் சாதாரணமாக பயன்படுத்தப்பட்ட பல வார்த்தைகள், காலப்போக்கில் புதிய அர்த்தங்களுடன் Gen Z ஸ்டைல் வார்த்தைகளாக மாறியுள்ளன.</p><p></p><p>
</p><p>
ஒருவரை பாராட்டுவது, கிண்டல் செய்வது, அலட்சியப்படுத்துவது, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது என ஒவ்வொரு சூழலுக்கும் தனித்தனி Gen Z வார்த்தைகள் உருவாகியுள்ளன.
</p><p>
அத்துடன், பலர் இவை Gen Z வார்த்தைகள் என்பதையே அறியாமல் அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர்.
</p><p>
அந்த வகையில், தற்போது அதிகம் பயன்படுத்தப்படும் Gen Z வார்த்தைகள் என்னென்ன? அவற்றின் உண்மையான அர்த்தம் என்ன? என்பதை கீழே உள்ள காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.</p><p><iframe width="463" height="823" src="https://www.youtube.com/embed/6HN59xN9Uw4" title="Gen Z வார்த்தைகளின் உண்மையான அர்த்தம்! 🤯 | Gen Z Slang Words Explained in Tamil #shorts" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T13:53:06+00:00</updated>
        </entry>
    </feed>
