<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-04T18:31:31+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா–அமெரிக்க எல்லையில் போதைப்பொருள்–துப்பாக்கி கடத்தல் சதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-officials-charge-3-akwesasne-residents-1785862272"></link>
            <id>https://canadamirror.com/article/us-officials-charge-3-akwesasne-residents-1785862272</id>
            <summary type="text">&amp;nbsp;கனடா–அமெரிக்க எல்லைப் பகுதியில் செயல்பட்டதாகக் கூறப்படும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையதாக, கனடா மற்றும் அமெரிக்காவின் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடா–அமெரிக்க எல்லைப் பகுதியில் செயல்பட்டதாகக் கூறப்படும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையதாக, கனடா மற்றும் அமெரிக்காவின் இரட்டை குடியுரிமை கொண்ட அக்வேசாஸ்னே பகுதியைச் சேர்ந்த மூவர் மீது அமெரிக்க அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர்.</p><p>
அமெரிக்க அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த வியாழக்கிழமை இந்த மூவரும் கைது செய்யப்பட்டனர். </p><p>
கனடா, அமெரிக்கா மற்றும் அக்வேசாஸ்னே பழங்குடியினர் காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட விசாரணையில், கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு மெத்தாம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்தியதாகக் கூறப்படும் வலையமைப்பு அடையாளம் காணப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ee96177-8155-4a96-8dd2-e2f0f8965115/26-6a72188292c29.webp' /></p><p>
</p><p>மேலும், இந்தக் குழு போதைப்பொருளுக்கு மாற்றாக பல துப்பாக்கிகளைப் பெற திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>
47 வயது மற்றும் 38 வயதுடைய இருவர், போதைப்பொருளை விநியோகிக்கும் சதியில் ஈடுபட்டதாகவும், விநியோகிக்கும் நோக்கில் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
</p><p>குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை சிறைத்தண்டனையும், அதிகபட்சமாக 10 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதமும் விதிக்கப்படலாம்.
81 வயதுடைய பெண் ஒருவர், போதைப்பொருளை விநியோகிக்கும் சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.</p><p> அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
</p><p>அமெரிக்க துணை தலைமை அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜான் ஏ. சார்கோன் III, கனடா மற்றும் அமெரிக்க சட்ட அமலாக்க அமைப்புகளுக்கிடையேயான முன்னெப்போதும் இல்லாத ஒத்துழைப்பை பாராட்டியுள்ளார்.
47 வயதுடைய சந்தேகநபர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற இருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T18:30:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திரையுலகில் மற்றுமொரு சோகம் ; பிரபல வில்லன் நடிகர் காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/veteran-villain-actor-pradeep-rawat-passes-away-1785867959"></link>
            <id>https://jvpnews.com/article/veteran-villain-actor-pradeep-rawat-passes-away-1785867959</id>
            <summary type="text">தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் வில்லன் கதாப்பாத்திரங்களால் ரசிகர்களிடையே தனித்துவமான இடம்பிடித்த நடிகர் பிரதீப் ராவத் (74) ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் வில்லன் கதாப்பாத்திரங்களால் ரசிகர்களிடையே தனித்துவமான இடம்பிடித்த நடிகர் பிரதீப் ராவத் (74) காலமானார்.</p><p>


குறிப்பாக, சூர்யா நடித்த ‘கஜினி’ திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த அவர், பல வெற்றிப் படங்களில் தனது வலுவான நடிப்பால் கவனம் ஈர்த்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41881202-3342-41e3-b19e-deec82e0c9de/26-6a722eb9cac69.webp' /></p><p>

74 வயதான நடிகர் பிரதீப் ராவத்தின் மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. </p><p>அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-04T18:26:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு - மீட்புப் பணிகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bad-weather-death-rises-to-7-rescues-intensify-1785860616"></link>
            <id>https://tamilwin.com/article/bad-weather-death-rises-to-7-rescues-intensify-1785860616</id>
            <summary type="text">இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளதுடன் மேலும் ஒருவர்
காணாமல்போயுள்ளார் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளதுடன் மேலும் ஒருவர்
காணாமல்போயுள்ளார் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.</p><p>ஹட்டன் - பொல்பிட்டிய, மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்சரிவு
ஏற்பட்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.</p><p></p><h2>அனர்த்தத்தில் உயிரிழந்தவர்கள்</h2><p>அனர்த்தத்தின் போது&nbsp; உயிரிழந்தவர்களுள் 47, 83 மற்றும் 58 வயதுடைய மூன்று
பெண்களும் 22 வயதுடைய இளைஞரும் உள்ளடங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
வட்டவளை, ஞானானந்தகம வீதியில் உள்ள மகாவலி கங்கைக்குக் குறுக்கே உள்ள
பாலத்தின் மீது பயணித்த 53 வயதுடைய நபர் ஒருவர் ஆற்றில் அடித்துச்
செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்</p><p>கண்டி மாவட்டம் - நாவலப்பிட்டி, சோலங்கந்த, ஜனஉதான கிராமத்தில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 67 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>பொலிஸ் ஊடகப் பிரிவு&nbsp;</h2><p>
</p><p>
நாவலப்பிட்டி - பஸ்பாகே கோரளையில் வீடு ஒன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டதில்
மற்றுமொரு 67 வயதுடைய நபரும் உயிரிழந்துள்ளார் என அனர்த்த முகாமைத்துவ
நிலையத்தின் கண்டி மாவட்டப் பிரதிப் பணிப்பாளர் இந்திக ரணவீர
உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f975e28e-567e-4f63-b3c4-4559a01dc327/26-6a721cebbe42f.webp' /></p><p>இதனிடையே, கினிகத்தேனை, அம்பகமுவ பகுதியில் 45 வயதுடைய நபர் ஒருவர் நீரில்
அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு
தெரிவித்துள்ளது. </p><p>அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், இந்த அனர்த்தங்களால் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T18:16:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற வானிலை நிலைமை ; உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/severe-weather-death-toll-continues-to-rise-1785864918"></link>
            <id>https://jvpnews.com/article/severe-weather-death-toll-continues-to-rise-1785864918</id>
            <summary type="text">கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவிய திடீர் சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவிய திடீர் சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

இன்று (04) பிற்பகல் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட அண்மைய அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88495986-2271-41b0-b860-a7a13389fe1c/26-6a7222d7a7315.webp' /></p><p style="text-align: justify; ">மேலும், இந்த அனர்த்தங்களினால் 9 மாவட்டங்களைச் சேர்ந்த 56 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">
 

அத்துடன், 3,014 குடும்பங்களைச் சேர்ந்த 11,832 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

இந்த அனர்த்தங்களால் 3 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒரு வீடு முழுமையாகவும் 290 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-04T18:00:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் வானில் மோதிய இரண்டு சிறிய விமானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-planes-crash-mid-air-near-chilliwack-airport-1785861717"></link>
            <id>https://canadamirror.com/article/two-planes-crash-mid-air-near-chilliwack-airport-1785861717</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சில்லிவாக் விமான நிலையத்திற்கு அருகே இரண்டு செஸ்னா வகை சிறிய விமானங்கள் வானில் மோதிக்கொண்ட சம்பவம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சில்லிவாக் விமான நிலையத்திற்கு அருகே இரண்டு செஸ்னா வகை சிறிய விமானங்கள் வானில் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பாக கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
</p><p>திங்கட்கிழமை இந்த விபத்து இடம்பெற்றதாக வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 
சம்பவ இடத்திற்கு விசாரணைக் குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விபத்திற்கான காரணத்தை கண்டறியும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26c375cd-1643-4ed5-ab39-b23c902868a4/26-6a72165712967.webp' /></p><p>சில்லிவாக் விமான நிலைய அதிகாரி கேரி அட்கின்ஸ் தெரிவித்ததாவது, இரண்டு பயணிகளுடன் சென்ற ஒரு விமானம் மோதலுக்குப் பின்னரும் பாதுகாப்பாக சில்லிவாக் விமான நிலையத்தில் தரையிறங்கியது.</p><p>மற்றொரு விமானம் அருகிலுள்ள கல் சுரங்க நீர்த்தேக்கத்தில் விழுந்து மூழ்கியதாகவும், அதில் ஒரே ஒருவர் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>திங்கட்கிழமை மாலை சுமார் 5.14 மணியளவில் வூல்ஃப் சாலை மற்றும் ஸ்க்வேயே சாலை பகுதிக்கு அவசர மருத்துவக் குழுவினர் அனுப்பப்பட்டனர். </p><p>
எனினும், சம்பவத்தில் காயமடைந்த எவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை.
</p><p>இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையிடம் கருத்து கேட்கப்பட்டிருந்தாலும், உடனடி பதில் எதுவும் வெளியாகவில்லை.
சில்லிவாக் நகரம், வாங்கூவர் நகரத்திலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் கிழக்கே அமைந்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T18:00:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை - உதயநிதி ஸ்டாலினுக்கு பிணையில் செல்ல அனுமதி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/udhayanidhi-stalin-arrest-1785863090"></link>
            <id>https://tamilwin.com/article/udhayanidhi-stalin-arrest-1785863090</id>
            <summary type="text">தஞ்சாவூர் செங்கிப்பட்டி பொலிஸ் நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணை நிறைவடைந்த பின்னர் அவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தஞ்சாவூர் செங்கிப்பட்டி பொலிஸ் நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.</p><p>

விசாரணை நிறைவடைந்த பின்னர் அவர் பொலிஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவருக்கு பொலிஸ் நிலைய பிணை வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பரபரப்பான சூழல்</h2><p>

பொலிஸ் நிலைய வளாகத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் ஏராளமான திமுகவினர் திரண்டிருந்ததால் பரபரப்பான சூழல் நிலவியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7814d651-708e-4a1d-b2f8-243c77a57c95/26-6a721d60c92fe.webp' /></p><p>

 பாதுகாப்பு பணிக்காக கூடுதல் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இரவு சுமார் 8.15 மணியளவில் உதயநிதி பொலிஸ் நிலையத்தில் இருந்து சென்றுள்ளார்.</p><p>

தனது காரில் இருந்தபடியே அங்கிருந்த கட்சி நிர்வாகிகளை நோக்கி கையசைத்தபடி அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.</p><h2>&nbsp;கைது</h2><p>
</p><p>
தமிழக எதிர்க்கட்சித்தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் காவிரி விவகாரம் தொடர்பாக த.வெ.க. அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து வெளியிட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e08f7435-62cf-4b66-a2a7-ff354dee1174/26-6a721d617c028.webp' /></p><p>
</p><p>
அதனால் அவர் இன்று(4) காலை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-04T17:55:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகள் மொத்தம் ஈரான் போரில் பயன்படுத்திய அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-used-all-precision-missiles-1785866142"></link>
            <id>https://news.lankasri.com/article/us-used-all-precision-missiles-1785866142</id>
            <summary type="text">ஈரானுடனானப் போரின் போது அதிதுல்லியமான நீண்ட தூர ஏவுகணைகள் மொத்தம் பயன்படுத்திய அமெரிக்கா.
அமெரிக்க இராணுவம், ஈரானுடனான தனது ஐந்து மாதப் போரின் போது, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடனானப் போரின் போது அதிதுல்லியமான நீண்ட தூர ஏவுகணைகள் மொத்தம் பயன்படுத்திய அமெரிக்கா.
</p><p>அமெரிக்க இராணுவம், ஈரானுடனான தனது ஐந்து மாதப் போரின் போது, ​​உலகம் முழுவதும் உள்ள தனது அதிதுல்லியமான நீண்ட தூர ஏவுகணைக் கையிருப்பில் பெரும்பகுதியைப் பயன்படுத்தியுள்ளது.</p><h2>கையிருப்பில் இல்லை</h2><p>
</p><p>இந்த ஏவுகணைகள் முதன்மையாக அமெரிக்க இராணுவத்தின் தரைக்குத் தரை பாயும் ஆயுதங்களாகும்; இவை இராணுவ உத்திசார் ஏவுகணை அமைப்புகள் (ATACMS) மற்றும் துல்லியத் தாக்குதல் ஏவுகணைகள் (PrSM) என அழைக்கப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccda1c8e-0439-4900-8dfe-5432062442ac/26-6a7227a0c6b0e.webp' /></p><p> </p><p>அமெரிக்க இராணுவம் இந்த ஆயுதங்கள் அனைத்தையும் ஏறக்குறைய பயன்படுத்தியுள்ளதாகவே தகவல் கசிந்துள்ளது. உண்மையில் தற்போது அமெரிக்க இராணுவத்திடம் ATACMS எதுவும் கையிருப்பில் இல்லை. </p><p>நீண்ட தூர ஏவுகணைகள் ஒவ்வொன்றின் மதிப்பு 1 மில்லியன் டொலராகும். வலிமையான ஒரு ராணுவத்தின் முக்கியமான அம்சமாகும் இந்த ஏவுகணைகள்.</p><p> பாதுகாப்பான தூரத்திலிருந்து துல்லியமாகத் தாக்க அனுமதிக்கும் ஏவுகணைகள் இவை. உக்ரைன் போரில் அமெரிக்கா வழங்கிய ATACMS ஏவுகணைகள் முக்கியப் பங்கு வகித்துள்ளது. </p><p>ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகளைத் தாக்க உக்ரைனியப் படைகளுக்கு இது பேருதவியாக இருந்துள்ளது.
PrSM என்பது ஒரு புதிய, மிகவும் மேம்பட்ட தலைமுறை ஏவுகணையாகும், இது குறைந்த வரம்பு கொண்ட ATACMS-க்கு மாற்றாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.</p><p></p><p> </p><p>இந்த நிலையில், துல்லியமாகத் தாக்கக்கூடிய நீண்ட தூர ஏவுகணைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதால், ஈரான் மீது மீண்டும் பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்த நேரிட்டால், அதிக ஆபத்துகள் நிறைந்த, விமானிகள் இயக்கும் குண்டுவீச்சு நடவடிக்கைகளையே அதிகம் சார்ந்திருக்க வேண்டிய நிலை வரும். </p><p>காஸா மீது இஸ்ரேல் நடத்திய மிகக் கொடூரமானத் தாக்குதல் போன்ற சூழலை அமெரிக்காவும் முன்னெடுக்க வழிவகுக்கும். ஈரானுடனான இந்த மோதல் குறுகிய காலமே நீடிக்கும் என்று கணித்ததன் அடிப்படையில், ட்ரம்ப் பிப்ரவரி மாதத்தில் இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீதான போரைத் தொடங்கினார்.</p><p> ஆனால் ஈரானுடனான இந்த மோதல் 5 மாதங்களாக நீடிக்கிறது. தற்போது மிக முக்கியமான ஏவுகணைகளின் கையிருப்பும் மொத்தமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. </p><p>ஏவுகணை இருப்புகள் குறைந்துள்ளது, ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட எதிரிகளைத் தடுத்து நிறுத்தும் அமெரிக்காவின் திறனைக் கட்டுப்படுத்தக்கூடும் என்றே அஞ்சப்படுகிறது. </p><p>ஆனால், உலகில் உள்ள எந்த நாட்டை விடவும், தங்களுக்குத் தேவைப்படுவதை விடவும் மிக அதிக அளவிலான ஏவுகணைகள் மற்றும் ஆயுத இருப்பை அமெரிக்கா கொண்டுள்ளது என்று ட்ரம்ப் கூறியதாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><h2>65 சதவீத 'பேட்ரியாட்' (Patriot)</h2><p> </p><p>உண்மையில், ட்ரம்பின் பேச்சுக்களில் எப்போதும் உண்மை இருந்ததில்லை என்றே ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. பீரங்கி குண்டுகள் மற்றும் பல்வேறு வகையான ஏவுகணைகள் உள்ளிட்ட சில ஆயுதங்கள் சாதனை அளவுகளில் உற்பத்தி செய்யப்படுவதை ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்; அதேவேளையில், நீண்ட காலப் போருக்குத் தேவையான அளவை விட இவற்றின் இருப்பு குறைவாக இருக்கக்கூடும் என்றே அவர்கள் எச்சரிக்கின்றனர். </p><p>இந்த நிலையில், பிப்ரவரி மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 65 சதவீத 'பேட்ரியாட்' (Patriot) இடைமறிப்பு ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுவிட்டதாகவும், அமெரிக்காவின் கையிருப்பில் உள்ள 'தாட்' (THAAD) பாலிஸ்டிக் ஏவுகணை இடைமறிப்பான்களின் எண்ணிக்கை போர் தொடங்கிய சமயத்தில் இருந்ததை விடக் குறைந்தது 38 சதவீதம் குறைவாக இருப்பதாகவும் CSIS கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e8b65ae-e2bc-4f39-8192-b63a6a93e003/26-6a7227a18213a.webp' /></p><p> 'பேட்ரியாட்' (Patriot) மற்றும் 'தாட்' (THAAD) ஆகியவை, உள்வரும் ஏவுகணைகளைக் கண்டறிந்து அழிக்கும் அமைப்புகளாகும்; இவை நாட்டின் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்படும் மிகச் சிறந்த அமைப்புகளில் அடங்கும். </p><p>மேலும், போர் தொடங்கியதிலிருந்து, பொதுவாகக் கப்பல்களில் இருந்து ஏவப்படும் டோமாஹாக் குரூஸ் ஏவுகணைகளின் உலகளாவிய இருப்பில் பாதிக்கும் சற்றுக் குறைவான அளவை அமெரிக்கா பயன்படுத்தியுள்ளதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-04T17:53:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[கஜினி பட வில்லன் நடிகர் பிரதீப் ராவத் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/villain-actor-pradeep-rawat-passes-away-1785865101"></link>
            <id>https://cineulagam.com/article/villain-actor-pradeep-rawat-passes-away-1785865101</id>
            <summary type="text">நடிகர் பிரதீப் ராவத் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வில்லன் நடிகராக கலக்கி வந்தவர். குறிப்பாக அவர் கஜினி படத்தில் நடித்து இருந்தது தற்போதும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் பிரதீப் ராவத் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வில்லன் நடிகராக கலக்கி வந்தவர். குறிப்பாக அவர் கஜினி படத்தில் நடித்து இருந்தது தற்போதும் ரசிகர்கள் அதிகம் பாரட்டும் ஒன்றாகும்.</p><p>&nbsp;தற்போது பிரதீப் ராவத் திடீரென மரணமடைந்ததாக வந்திருக்கும் செய்தி ரசிகர்கள் மற்றும் சினிமா துறையினரை கடும் அதிர்ச்சி ஆக்கி இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e2559cb-a7e6-4821-b1cc-4fc6048896d8/26-6a72238f3f209.webp' /></p><h2>மரணம்</h2><p>73 வயதாகும் பிரதீப் ராவத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சையில் இருந்த அவர் சற்றுமுன் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>

அவரது மறைவுக்கு சினிமா துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p><p>
</p>]]></content>
            <updated>2026-08-04T17:38:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போரால் அமெரிக்காவின் துல்லிய ஏவுகணை கையிருப்புக்கு பெரும் அடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-us-precision-missile-stockpile-major-setback-1785864117"></link>
            <id>https://ibctamil.com/article/iran-us-precision-missile-stockpile-major-setback-1785864117</id>
            <summary type="text">ஈரானுடனான ஐந்து மாதகால போரின் போது அமெரிக்க இராணுவம் தனது நீண்ட தூர துல்லியத் தாக்குதல் ஏவுகணைகளில் பெரும்பகுதியைப் பயன்படுத்தியுள்ளதாக பாதுகாப்புத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடனான ஐந்து மாதகால போரின் போது அமெரிக்க இராணுவம் தனது நீண்ட தூர துல்லியத் தாக்குதல் ஏவுகணைகளில் பெரும்பகுதியைப் பயன்படுத்தியுள்ளதாக பாதுகாப்புத் தகவல்களை அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. </p><p>இதனால் எதிர்கால இராணுவ நடவடிக்கைகளுக்கான அமெரிக்காவின் தயார்நிலை குறித்து கவலைகள் எழுந்துள்ளன.
</p><p>
பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகளில் Army Tactical Missile Systems (ATACMS) மற்றும் Precision Strike Missiles (PrSM) ஆகியவை முக்கியமானவையாகும். </p><p></p><h2>உக்ரைனுக்கும் வழங்கப்பட்ட ஏவுகணைகள்&nbsp;</h2><p>இவற்றில் பெரும்பாலான கையிருப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு ஏவுகணையின் பெறுமதி ஒரு மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3cd5fc6-f696-4633-8738-208f771ca2be/26-6a722283aeb3c.webp' /></p><p>
</p><p>
இந்த நீண்ட தூர துல்லிய ஏவுகணைகள் பாதுகாப்பான தூரத்திலிருந்து இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டவை.</p><p> உக்ரைனுக்கும் வழங்கப்பட்ட ATACMS ஏவுகணைகள் அந்நாட்டின் இராணுவ நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியுள்ளன.</p><p> PrSM ஏவுகணைகள் அதைவிட மேம்பட்ட புதிய தலைமுறை ஆயுதங்களாகக் கருதப்படுகின்றன.
</p><p>
ஏவுகணை கையிருப்பு குறைந்திருப்பது, ஈரானுக்கு எதிராக மீண்டும் பெரிய அளவிலான தாக்குதல்களை முன்னெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அதிக ஆபத்துள்ள விமானத் தாக்குதல்களை அமெரிக்கா அதிகம் நம்ப வேண்டிய நிலையை உருவாக்கக்கூடும் என பாதுகாப்பு வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.</p><p></p><h2>அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு</h2><p> </p><p>மேலும், ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளைத் தடுக்கும் அமெரிக்காவின் இராணுவத் திறனிலும் இதனால் தாக்கம் ஏற்படலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86f41356-3f07-488c-8f2a-64e2b5ef812e/26-6a72228467044.webp' /></p><p>

எனினும், அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) உலகின் பல பகுதிகளில் உள்ள இராணுவக் கையிருப்புகளிலிருந்து ஆயுதங்களை மீள்நிரப்பி வருவதாக மற்றொரு அதிகாரி தெரிவித்துள்ளார். </p><p>இதேவேளை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "உலகிலேயே அதிகளவு ஆயுதக் கையிருப்பு அமெரிக்காவிடம் உள்ளது; தேவையைவிட அதிகமான ஆயுதங்கள் எங்களிடம் உள்ளன" என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-04T17:34:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோன்ஸ்டன் குற்றமற்றவர் என வழங்கப்பட்ட நீதிமன்ற தீா்ப்பு ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/johnstons-case-re-hearing-again-1785864591"></link>
            <id>https://tamilwin.com/article/johnstons-case-re-hearing-again-1785864591</id>
            <summary type="text">சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுவித்து கொழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.</p><p>
இதன்படி, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொச முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பதில் பணிப்பாளர் மொஹமட் சகீர் உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ஆரம்பத்திலிருந்து மீண்டும் விசாரிக்குமாறு ஐந்து நீதிபதிகள் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.</p><p>
குறித்த வழக்குகளில், சதொச ஊழியர்களை அவர்களது உத்தியோகபூர்வ பணிகளில் இருந்து விலக்கி வேறு பணிகளில் ஈடுபடுத்தியதுடன், அவர்களுக்கு அரசுப் பணத்தில் ஊதியம் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வழங்கியதன் மூலம் அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22da8d0c-840c-4d8e-90f8-1a783ae27beb/26-6a72219174543.webp' /></p><p>
</p><p>இந்த வழக்குகள், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சட்டத்தின் 70ஆம் பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.</p><p>
எனினும், விசாரணையை ஆரம்பிப்பதற்கும் வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கும் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களின் கையொப்பங்களும் இடம்பெறவில்லை என்ற பிரதிவாதி தரப்பின் ஆரம்ப ஆட்சேபனையை ஏற்று, கொழும்பு மேல் நீதிமன்றம் 2023 மே 19ஆம் திகதி பிரதிவாதிகளை விடுவித்திருந்தது.
</p><p>அந்தத் தீர்ப்புக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், 1994ஆம் ஆண்டின் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சட்டத்தின் 2(8) பிரிவின்படி, ஆணைக்குழுவின் அதிகாரங்களைப் பயன்படுத்த மூன்று ஆணையாளர்களும் ஒரே நேரத்தில் இருப்பது கட்டாயமல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>
மேலும், ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் தனித்தனியாக அமர்ந்தாலும் அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும் என்றும், அத்தகைய நடவடிக்கை முழு ஆணைக்குழுவின் நடவடிக்கையாகவே கருதப்படும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>அத்துடன், மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையின் செல்லுபடியாக்கத்தை கேள்விக்குட்படுத்தும் அதிகாரம் மேல் நீதிமன்றத்திற்கு இல்லை; அவ்வாறான அதிகாரம் அதனை விடவும் அதிகாரம் கூடிய நீதிமன்றங்களுக்கே உரியது என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.</p><p>
மேலும், ஒவ்வொரு விசாரணைக்கும் மற்றும் வழக்குத் தாக்கலுக்கும் மூன்று ஆணையாளர்களின் கையொப்பமும் கட்டாயம் என்ற நிலைப்பாடு நீதித்துறை செயல்முறையை தேவையற்ற வகையில் தாமதப்படுத்தும் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T17:33:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்கார்பரோ குடியிருப்புக் கட்டடத்தில் தீவிபத்து: ஒருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/one-dead-after-two-alarm-fire-at-scarborough-1785861177"></link>
            <id>https://canadamirror.com/article/one-dead-after-two-alarm-fire-at-scarborough-1785861177</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஸ்கார்பரோ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நீல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஸ்கார்பரோ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p>
நீல்சன் ரோடு மற்றும் மெக்லெவின் அவென்யூ சந்திப்புக்கு அருகே அமைந்துள்ள குடியிருப்புக் கட்டடத்தில் காலை 8 மணிக்குச் சற்று முன்பாக இத்தீவிபத்து ஏற்பட்டது. </p><p>
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, கட்டடத்தின் 16-வது தளத்தில் உள்ள ஒரு வீட்டின் வரவேற்பறைப் பகுதி தீவிரமாகத் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்ததாகத் தீயணைப்புத் துறை துணைத் தலைவர் பால் ஃபிட்ஸ்ஜெரால்ட் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/188c8a95-c40d-493a-8003-49fc5355c2f4/26-6a72143b36f57.webp' /></p><p> 
ஆரம்பகட்ட சோதனையில் வீட்டில் யாரும் தென்படாததால், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாகத் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். </p><p>
இதனால் தீ அருகில் உள்ள மற்ற வீடுகளுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டது.</p><p>எனினும், கட்டடத்திற்கு வெளியே கீழே தரையில் ஒருவர் சுயநினைவின்றிக் கிடந்தது கண்டறியப்பட்டது. 
அவருக்கு மீட்புக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்துப் காப்பாற்ற முயன்றபோதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.</p><p> 
உயிரிழந்தவர் ஒரு பெரியவர் என்பதைத் தவிர்த்து, அவரது அடையாளம் குறித்த கூடுதல் விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. தீயணைப்பு நடவடிக்கைகளின் காரணமாகச் சில வீடுகளுக்குப் புகை மற்றும் நீரினால் லேசான சேதம் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
இத்தீவிபத்துக்கான காரணம் மற்றும் பின்னணி குறித்து டொரொண்டோ தீயணைப்புத் துறை, டொரொண்டோ காவல்துறை மற்றும் தீயணைப்பு ஆணையர் அலுவலகம் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றன.</p><p> உயிரிழந்த நபர் தீப்பற்றிய வீட்டில் இருந்து அவராகவே தப்பிக்க முயன்றாரா என்பது குறித்து அதிகாரிகள் சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இத்தீவிபத்தில் சந்தேகத்திற்குரிய பின்னணி எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T17:30:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறை மா அதிபர் குறித்து அவதூறு : விசாரணை வளையத்துள் சாகர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sagara-kariyawasam-is-accused-of-misconduct-1785862508"></link>
            <id>https://ibctamil.com/article/sagara-kariyawasam-is-accused-of-misconduct-1785862508</id>
            <summary type="text">காவல்துறை மா அதிபர் குறித்து சிறிலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் மற்றும் சட்டத்தரணி சாகர கரியவாசம் தெரிவித்த கருத்து தொடர்பாக, விசாரணையைத் தொடங்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>காவல்துறை மா அதிபர் குறித்து சிறிலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் மற்றும் சட்டத்தரணி சாகர கரியவாசம் தெரிவித்த கருத்து தொடர்பாக, விசாரணையைத் தொடங்குமாறு காவல்துறை மா அதிபர் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
</p><p>
நேற்று(03) ஒரு செய்தியாளர் சந்திப்பைக் கூட்டிய பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் மற்றும் சட்டத்தரணி சாகர கரியவாசம், காவல்துறை தொடர்பாக அரசாங்கத்திற்கும் காவல்துறை மா அதிபருக்கும் எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.</p><p>

</p><h2>அனுர ஆட்சியில் துரதிஷ்டமான நிலையில் காவல்துறை</h2><p>அப்போது, ​​தற்போதைய அரசாங்கம் காவல்துறையை மிகவும் துரதிர்ஷ்டவசமான நிலையில் வைத்துள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca532b9b-49d7-48d0-81b0-18849ecc460f/26-6a721f346154a.webp' /></p><p>
</p><p>
முன்னதாக, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மூன்று முன்னாள் காவல்துறை மா அதிபர்கள் மிகவும் துயரமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேர்ந்தது. மேலும், தற்போதைய காவல்துறை மா அதிபர் அரசாங்கத்திற்குச் சேவை செய்வதை நிறுத்திவிட்டு மக்களுக்குச் சேவை செய்யத் தொடங்க வேண்டும் என்று சாகர கரியவாசம் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.</p><p></p><p>
</p><p>
 </p><h2>பொதுமக்களால் காவல்துறை மா அதிபர் அடித்தே கொல்லப்படுவார்&nbsp;</h2><p>அவ்வாறு செய்யாவிட்டால், தற்போதைய காவல்துறை மா அதிபர் நெடுஞ்சாலையில் பொதுமக்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட 37வது காவல்துறை மா அதிபராக வரலாற்றில் இடம்பிடிக்கக்கூடும் என்று குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2204082-74cc-4c67-a30a-459c04b523ff/26-6a721f351af52.webp' /></p><p>

இந்த நிலையில் காவல்துறை மா அதிபரின் அறிவுறுத்தல்களின் பேரில், சாகர கரியவசம் தெரிவித்த கருத்து குறித்து மத்திய குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
</p><p>
மேலும், சட்டத்தரணி சாகர கரியவசம் வரும் நாட்களில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு வரவழைக்கப்பட்டு, அவர் நேற்று தெரிவித்த கருத்து குறித்து விசாரணை தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T17:20:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்று முன் அரங்கேறிய துப்பாக்கிச் சூடு ; போராடி தப்பிய நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shooting-reported-moments-ago-1785863969"></link>
            <id>https://jvpnews.com/article/shooting-reported-moments-ago-1785863969</id>
            <summary type="text">தெஹிவளை கடவத்த வீதியில் உள்ள தஹநாயக்க விளையாட்டரங்கிற்கு அருகில் நபர் ஒருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று முறியடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை கடவத்த வீதியில் உள்ள தஹநாயக்க விளையாட்டரங்கிற்கு அருகில் நபர் ஒருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

இன்று (04) இரவு 8.10 மணியளவில் முகத்தை மூடியவாறு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78fff588-39c4-4e65-a33e-70872111ad69/26-6a721f22d2d07.webp' /></p><p>

 

விளையாட்டரங்கிற்கு அருகில் உள்ள வெதுப்பக உரிமையாளர் ஒருவரை இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதிலும், அந்தச் சந்தர்ப்பத்தில் துப்பாக்கி இயங்கவில்லை.
</p><p>
 

இதன்போது, வெதுப்பக உரிமையாளர் துப்பாக்கிச் சூடு நடத்த வந்த நபருடன் போராடி, அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறிமுதல் செய்துள்ளார்.
</p><p>
 

பின்னர், துப்பாக்கிச் சூடு நடத்த வந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், வெதுப்பக உரிமையாளர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>

 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-04T17:20:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் - ஓமன் பேச்சுவார்த்தையில் சாதக முன்னேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-says-good-progress-made-in-talks-with-oman-1785863885"></link>
            <id>https://tamilwin.com/article/iran-says-good-progress-made-in-talks-with-oman-1785863885</id>
            <summary type="text">&amp;nbsp;ஈரான் மற்றும் ஓமான் நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் சாதக முன்னேற்ற நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானிய ராஜதந்திர வட்டாரங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈரான் மற்றும் ஓமான் நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் சாதக முன்னேற்ற நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>ஈரானிய ராஜதந்திர வட்டாரங்கள் மற்றும் அதிகாரிகளின் கூற்றுப்படி, ஈரான் மற்றும் ஓமன் இடையே உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கான தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. </p><p>
ஓமனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28a27615-1a5b-4c6b-ae3a-c59fc9042e41/26-6a721ecf4390a.webp' /></p><p> </p><p>
சில கருத்து வேறுபாடுகள் இன்னும் நீடித்த போதிலும், பேச்சுவார்த்தை நேர்மறையான பாதையில் செல்வதாக ஈரானிய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் உறுதிப்படுத்தியுள்ளார். </p><p>
இடையூறு விளைவிக்கும் சில தரப்பினரின் நடவடிக்கைகளைத் தெஹ்ரானில் உள்ள ராஜதந்திர வட்டாரங்கள் விமர்சித்த போதிலும், ஒப்பந்தம் கைக்கெட்டும் தூரத்தில் உள்ளதாகவும், நாளைய தினத்தின் இறுதிக்குள் உடன்பாடு எட்டப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். </p><p>
இந்த ஒப்பந்தம் வெறும் உடன்படிக்கை என்பதை விட, சர்வதேச வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணை வழியிலான கடல்சார் வர்த்தக நடைமுறையை சீரமைப்பதையே முதன்மையாகக் கொண்டுள்ளது. </p><p>
ஈரான் - ஓமன் இடையிலான இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டால், அது அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மேலும் ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு வழிவகுக்கும் எனக் கருதப்படுகிறது.
</p><p>எனினும், மோதல்கள் மீண்டும் மீண்டும் தொடர்வதைத் தவிர்க்கவும், நிரந்தர தீர்வை எட்டவும் பின்வரும் சிக்கல்கள் ராஜதந்திர வழியில் தீர்க்கப்பட வேண்டும் என ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T17:18:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதாகி பல மணி நேரத்தின் பின் விடுதலையான உதயநிதி ஸ்டாலின் ; வெளியில் வந்து கூறிய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/udhayanidhi-stalin-released-1785863487"></link>
            <id>https://jvpnews.com/article/udhayanidhi-stalin-released-1785863487</id>
            <summary type="text">&amp;nbsp;அவதூறு வழக்கில் கைதான இந்திய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விசாரணையின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

அதன் பின்னர் கருத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;அவதூறு வழக்கில் கைதான இந்திய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விசாரணையின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">

அதன் பின்னர் கருத்து தெரிவித்த உதயநிதி, தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் யாரையும் நான் தவறாக பேசவில்லை; காவிரி பிரச்சினையை அவையில் எழுப்பக்கூடாது என்பதற்காக இந்த அரசு திசை திருப்பியுள்ளது என கூறினார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8e1c3af-4b33-46ec-86b3-9a58664b7efb/26-6a721d40c5403.webp' /></p><h2 style="text-align: justify; ">கண்டனம்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
திருச்சி விமான நிலையத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது,</p><p style="text-align: justify; ">
திமுக தலைவரின் உத்தரவை ஏற்று தஞ்சையில் நேற்று விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினோம்.

நான் யாரையும் தவறாக பேசவில்லை, பேசாத ஒன்றை பரப்பி உள்ளனர். </p><p style="text-align: justify; ">திசை திருப்பும் முயற்சியாக, நான் பேசாத ஒன்றை பேசியதாக திரித்து வீடியோவை பரப்பி உள்ளனர். .

தீவிரவாதியை போல், என்னை 400 கி.மீ.க்கு அழைத்து சென்று செங்கிப்பட்டியில் வைத்து விசாரணை நடத்தினர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

விவசாயிகளுக்கு ஆதரவாக பேசியதற்கு தரம்கெட்ட அரசு கைது செய்துள்ளது. இதற்கு நான் அஞ்சவில்லை.

எனக்கு மனைவி, மகள் உள்ளனர். தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்களையும் எனது தாயாக, சகோதரிகளாக நான் பார்க்கிறேன்.</p><p style="text-align: justify; ">எந்த தவறான எண்ணத்திலும் பெண்களை தரம் தாழ்த்தி பேச வேண்டும் என்று நான் எண்ணவில்லை. ஆர்ப்பாட்டத்தில் இரட்டை அர்த்தத்தில் நான் பேசவில்லை, சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன். பேசுவேன். ஒருசில தலைவர்கள் நான் பேசியதை ஆராயாமல் கண்டனம் தெரிவித்தது எனக்கு வருத்தம் தருகிறது.&nbsp;</p><p style="text-align: justify; ">அரசின் பொய் வழக்கு போட்டு பயமுறுத்து பார்க்கின்றனர். இதற்கெல்லாம் பயப்படும் ஆள் நான் இல்லை என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-04T17:11:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளையில் பேக்கரி உரிமையாளரின் துணிகர செயல்: கொல்ல வந்தவரின் துப்பாக்கி பறிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dehiwala-shooting-attemt-foiled-1785863156"></link>
            <id>https://tamilwin.com/article/dehiwala-shooting-attemt-foiled-1785863156</id>
            <summary type="text">தெஹிவளை கடவத்தை வீதியில் உள்ள தஹநாயக்க விளையாட்டரங்கம் அருகே இன்று இரவு பேக்கரி உரிமையாளரை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு முயற்சி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை கடவத்தை வீதியில் உள்ள தஹநாயக்க விளையாட்டரங்கம் அருகே இன்று இரவு பேக்கரி உரிமையாளரை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.</p><p>

இரவு சுமார் 8.10 மணியளவில், ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரில் ஒருவர் பேக்கரி உரிமையாளரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உதய குமார வுட்லர் தெரிவித்துள்ளார்.</p><p>தெஹிவளை கடவத்தை வீதியில் உள்ள தஹநாயக்க விளையாட்டரங்கம் அருகே இன்று இரவு பேக்கரி உரிமையாளரை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.</p><p>
இரவு சுமார் 8.10 மணியளவில், ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரில் ஒருவர் பேக்கரி உரிமையாளரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உதய குமார வுட்லர் தெரிவித்துள்ளார்.
</p><p>எனினும், துப்பாக்கி செயல்படாததால், பேக்கரி உரிமையாளர் உடனடியாக எதிர்த்து தாக்குதலாளியுடன் போராடி, அவரது கையில் இருந்த துப்பாக்கியை பறித்துக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7ef7d9a-c469-45ef-9bb4-5717963b3fa5/26-6a721bf5af824.webp' /></p><p>
</p><p> இந்த மோதலின் போது பேக்கரி உரிமையாளருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து இரு சந்தேகநபர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணையில், தாக்குதலுக்கு இலக்கான பேக்கரி உரிமையாளரின் மகன், "கொஸ் மல்லி" என அழைக்கப்படும் பாதாள உலகக்குழு குழு உறுப்பினரின் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையவர் எனவும், அவர் தற்போது போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>மேலும், இந்த தாக்குதலை "சாண்டோ" தரப்பு அல்லது "படோவிட்ட அசங்க" தரப்பைச் சேர்ந்த குழுவினர் மேற்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p> 
எனினும், இதுவரை இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எவரும் குற்றவாளிகளாக நிரூபிக்கப்படவில்லை.</p><p>
தப்பியோடிய துப்பாக்கிதாரி மற்றும் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபரை கைது செய்வதற்காக தெஹிவளை பொலிஸார் இரண்டு விசேட விசாரணைக் குழுக்களை நியமித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T17:06:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா உள்ளிட்ட 5 வெளிநாட்டு துணைத் தூதரகங்களை மூடத் திட்டமிடும் நாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-to-close-consulates-in-canada-other-countries-1785860548"></link>
            <id>https://canadamirror.com/article/us-to-close-consulates-in-canada-other-countries-1785860548</id>
            <summary type="text">&amp;nbsp;உலக அளவில் தனது ராஜதந்திர இருப்பைச் சுருக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஐந்து வெளிநாட்டுத் தூதரக அலுவலகங்களை மூடத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உலக அளவில் தனது ராஜதந்திர இருப்பைச் சுருக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஐந்து வெளிநாட்டுத் தூதரக அலுவலகங்களை மூடத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது.
</p><p> குறிப்பிட்ட எந்தவொரு புவிசார் அரசியல் நெருக்கடியும் இல்லாத சூழலில், அமெரிக்கா ஒரே நேரத்தில் பல வெளிநாட்டு தூதரக அலுவலகங்களை மூடுவது அரிதான ஒரு நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. </p><p>
நாடாளுமன்றக் குழுக்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிவிப்பின்படி, கிரெனடாவின் செயிண்ட் ஜார்ஜஸில் உள்ள அமெரிக்கத் தூதரகம், ஜப்பானின் நகோயா, இந்தோனேசியாவின் மேடான், கனடாவின் வின்னிபெக் ஆகிய இடங்களில் உள்ள துணைத் தூதரகங்கள் மற்றும் கேமரூனின் டுவாலாவில் உள்ள தூதரகக் கிளை அலுவலகம் ஆகியவை மூடப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be000f55-5e8c-499b-8c39-aa4226381c0b/26-6a7211c57c168.webp' /></p><p> 
அதிபர் டொனால்ட் டிரம்பின் "அமெரிக்காவிற்கே முதலிடம்" என்ற கொள்கைக்கு ஏற்ப, அமெரிக்க அரசு இயந்திரத்தை மாற்றி அமைக்கும் முயற்சியின் தொடர்ச்சியாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. </p><p>
செலவுகளைக் குறைக்கும் பொருட்டுச் சிறிய அளவிலான தூதரக அலுவலகங்களை மூடுவது அவசியமானது என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.</p><p>எனினும், இத்தகைய நடவடிக்கைகள் சர்வதேச அளவில் அமெரிக்காவின் செல்வாக்கைக் குறைத்து, சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுக்குச் சாதகமான சூழலை உருவாக்கிவிடும் என ஜனநாயகக் கட்சியினரும் முன்னாள் வெளியுறவுக் கொள்கை அதிகாரிகளும் எச்சரித்துள்ளனர்.</p><p> 
இது குறித்து நேரடியாக உறுதிப்படுத்தாத அமெரிக்க வெளியுறவுத் துறை, நாட்டின் ராஜதந்திர நடவடிக்கைகள் திறம்படவும், குறைந்த செலவிலும் செயல்படுவதை உறுதி செய்வதிலேயே தாங்கள் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளது.</p><p> மூடப்பட திட்டமிடப்பட்டுள்ள நகோயா, மேடான் மற்றும் செயிண்ட் ஜார்ஜஸ் ஆகிய இடங்களில் சீனா ஏற்கனவே தனது ராஜதந்திர அலுவலகங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T17:00:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கிண்ண ஒப்பந்த விவகாரம்: ட்ரம்ப் உதவியை கோரியதாக எழுந்த முறைப்பாட்டுக்கு ஃபிஃபா மறுப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/world-cup-contract-fifa-denies-allegations-trump-1785862044"></link>
            <id>https://tamilwin.com/article/world-cup-contract-fifa-denies-allegations-trump-1785862044</id>
            <summary type="text">&amp;nbsp;ஃபிஃபா (FIFA) அமைப்பின் உலகக் கிண்ண வணிக உரிமைகளைத் தனியார்
முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யும் திட்டம் கைவிடப்பட்டதை அடுத்து,
அமெரிக்க ஜனாதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஃபிஃபா (FIFA) அமைப்பின் உலகக் கிண்ண வணிக உரிமைகளைத் தனியார்
முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யும் திட்டம் கைவிடப்பட்டதை அடுத்து,
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவை அதன் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ
கோரியதாக வெளியான செய்திகளை ஃபிஃபா நிர்வாகம் முற்றிலுமாக மறுத்துள்ளது.</p><p>
உலகக் கிண்ணத்தின் வணிகப் பங்குகளை விற்பனை செய்து சுமார் 4.2 பில்லியன் டொலர்
நிதியைத் திரட்ட ஃபிஃபா திட்டமிட்டிருந்தது.</p><p></p><h2>பிஃபா மறுப்பு</h2><p> இருப்பினும், பல்வேறு
தரப்பிலிருந்து எழுந்த கடும் எதிர்ப்புக் காரணமாக இந்த நடவடிக்கை
கைவிடப்பட்டது.</p><p>
இதன் தொடர்ச்சியாக, இன்ஃபான்டினோ அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை தொலைபேசியில்
தொடர்புகொள்ள முயன்றதாகவும், அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில்
செய்திகள் வெளியாகின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8b745bb-f1cc-4475-a55f-ee7b2e0bc7d4/26-6a7219c1bca5c.webp' /></p><p>

இந்த குற்றச்சாட்டுகளை "முற்றிலும் கற்பனையானவை" என்று வர்ணித்துள்ள ஃபிஃபா,
ஜியானி இன்ஃபான்டினோ சமீப நாட்களில் அமெரிக்க ஜனாதிபதியையோ அல்லது அவரது
நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களையோ தொடர்புகொள்ள எந்த முயற்சியும் செய்யவில்லை
என்று தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>

இருப்பினும், இந்த ஒப்பந்த விவகாரத்தால் ஃபிஃபா தலைவர் பதவியில் இன்ஃபான்டினோ
தொடர்வது குறித்து கால்பந்து அமைப்புகளிடையே தொடர்ந்து விவாதங்கள் வலுத்து
வருகின்றன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T16:56:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளமான நாடும் அழகான வாழ்க்கையும் வெறும் ஏமாற்றுத் தேர்தல் வாக்குறுதிகளே - அரசாங்கத்தை சாடிய சஜித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-govt-s-promises-are-election-deception-1785856137"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-govt-s-promises-are-election-deception-1785856137</id>
            <summary type="text">அரசால் வளமான நாடும் அழகிய வாழ்க்கையும்
உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், வழங்கிய தேர்தல் வாக்குறுதிகள்
எவையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசால் வளமான நாடும் அழகிய வாழ்க்கையும்
உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், வழங்கிய தேர்தல் வாக்குறுதிகள்
எவையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.</p><p>

நாடாளுமன்றத்தில் இன்று(04.08.2026) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>விவசாயிகளின் பிரச்சினை</h2><p>
</p><p>
அவர் மேலும் உரையாற்றுகையில், "2024ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு அறிக்கைகளின்படி நாட்டில் 39 இலட்சம்
முதியோர் சமூகம் காணப்படுகின்றனர். </p><p>இவர்களுக்குக் கடந்த காலத்தில் 15 இலட்சம்
சேமிப்புக் கணக்கிற்கு 15 சதவீத வட்டி கிடைத்த போதிலும், இன்று அந்த வட்டி 7
சதவீமாகக் குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79813c06-32d0-4bd8-b21f-707ebafa8d73/26-6a720397481d7.webp' /></p><p> அரசாங்கம் கூறும் ஸ்திரத்தன்மையும் வளமான நாடும்
இதுதானா?

விவசாயிகளுக்குச் சிறந்த உத்தரவாத விலையைப் பெற்றுத் தருவோம் என
வாக்களித்துவிட்டு, வயல்வெளிகளுக்குள் இறங்கி நெற்கதிர்களைக் கடித்துக்கொண்டு
நெல் கிலோ ஒன்றுக்கு 150 ரூபா உத்தரவாத விலை தருவதாகக் கூறிவிட்டு இன்னும்
அதனை நிறைவேற்றவில்லை. </p><p>உரிய நேரத்தில் விதை நெல் கிடைக்காததுடன், அவை தரம்
குறைந்தவையாகவும் உள்ளன. விவசாய இரசாயனப் பொருட்களின் விலையேற்றம், தரமின்மை,
உபகரணங்கள் மீதான வற் வரி மற்றும் மனித - யானை மோதல்களால் விவசாயிகள் பெரும்
இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.</p><p>சர்வதேச நாணய நிதியம் முதன்மை மீதியை 2.5 ஆக இருக்கச் சொன்ன போதிலும், அரசு
அதனை 5.4% வரை அதிகரித்து மக்கள் மீது எல்லையற்ற வரிச் சுமையைச்
சுமத்தியுள்ளது.</p><p></p><h2>அரசின் வருமான இலக்குகள்</h2><p>அரசின் வருமான இலக்குகளும் வரி மூலமே பெறப்படுகின்றன. இதனால்
மொத்த உள்நாட்டு உற்பத்திற்க்கு 52% பங்களிப்பு வழங்கும் நுண், சிறிய மற்றும்
நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களின் சொத்துக்கள் ஏலத்துக்கு விடப்பட்டு
வருகின்றன.
</p><p>
மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைப்போம் என்ற வாக்குறுதியும்
நிறைவேற்றப்படவில்லை. துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் விலைக்கு
எரிபொருளைப் பெற்றுத்தரவில்லை.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f096be4a-f6df-49de-bc15-fb48199fbefd/26-6a720398681c3.webp' /></p><p>ஈரான் மோதல்கள் காரணமாக ஏனைய நாடுகள் வரிகளைக்
குறைத்த போதிலும், நம் நாட்டில் அது நடக்கவில்லை. 'டித்வா' சூறாவளியால்
பாதிக்கப்பட்டவர்களுக்குப் பில்லியன்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டதாகக்
கூறப்பட்டாலும், களத்தில் எந்த உதவியும் சென்றடையவில்லை.
</p><p>பொய் கூறாமல், மக்களை ஏமாற்றாமல், இப்போதாவது மக்களுக்கு வழங்கிய 'வளமான நாடு,
அழகான வாழ்க்கை' வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசைக் கேட்டுக்கொள்கின்றோம்" என தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T16:49:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் இலங்கை மாணவர்கள் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/international-silambam-competition-held-malaysia-1785861691"></link>
            <id>https://ibctamil.com/article/international-silambam-competition-held-malaysia-1785861691</id>
            <summary type="text">சர்வதேச சிலம்பக் கூட்டமைப்பு (ISF) ஏற்பாடு செய்த சர்வதேச சிலம்பப் போட்டி கடந்த ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 2 வரை மலேசியாவின் பெனாங்கில் நடைபெற்றது.

இப்போட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சிலம்பக் கூட்டமைப்பு (ISF) ஏற்பாடு செய்த சர்வதேச சிலம்பப் போட்டி கடந்த ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 2 வரை மலேசியாவின் பெனாங்கில் நடைபெற்றது.
</p><p>
இப்போட்டியில் இலங்கையை சேர்ந்த மாணவர்கள் சிறப்பாகப் பங்கேற்று, தங்களது வீரத்தையும், திறமையையும், ஆதிக்கத்தையும் வெளிப்படுத்தி இலங்கைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.</p><p><b>

போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்:
</b></p><p>
ஜெயராஜா கிரஹர்ஷிஹன்
</p><p>ஜெயராஜா அருஷிஹன்
</p><p>சாதனா ஸ்ரீகுமார் </p><p>ஹர்ஷா கரிகாலன்
</p><p>
இம்மாணவர்கள் தன்னம்பிக்கையுடனும் துணிச்சலுடனும் போட்டியிட்டு, 3 வெள்ளிப் பதக்கங்களையும், 4 வெண்கலப் பதக்கங்களையும் வென்று சிறப்பான சாதனையைப் படைத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-04T16:41:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் சுற்றுலா சென்ற இருவர் வனப்பகுதியில் சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-people-found-dead-near-lake-east-1785859674"></link>
            <id>https://canadamirror.com/article/two-people-found-dead-near-lake-east-1785859674</id>
            <summary type="text">கனடாவின் வடக்குப் பகுதியான ஒன்டாரியோவில் முகாம் அமைத்துத் தங்குவதற்காகச் சென்று வீடு திரும்பாத இருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஒன்டாரியோ மாகாண...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் வடக்குப் பகுதியான ஒன்டாரியோவில் முகாம் அமைத்துத் தங்குவதற்காகச் சென்று வீடு திரும்பாத இருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஒன்டாரியோ மாகாணக் காவல்துறை தெரிவித்து உள்ளது.</p><p> 
கபுஸ்காசிங் கருக்குக் கிழக்கே அமைந்துள்ள குவெனெட் ஏரிக்கு அருகே இந்த இரண்டு திடீர் மரணங்களும் நிகழ்ந்துள்ளன.
</p><p> இந்தச் சம்பவத்தில் ஏதேனும் சதிச் செயல் அல்லது குற்றப் பின்னணி உள்ளதா என்பது குறித்து காவல்துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73f542f9-d970-4099-a48c-a4bc6bdf4f6b/26-6a720e5c67884.webp' /></p><p> </p><p>
சுற்றுலா சென்ற இருவர் வீடு திரும்பவில்லை என்று ஆகஸ்ட் 1-ஆம் திகதி காவல்துறைக்கு அழைப்பு வந்தது.</p><p> இதையடுத்து அவசரக்கால மீட்புக் குழு, மோப்பநாய் படை, காவல்துறை விமானப் பிரிவு மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சகம் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. </p><p>
தேடுதலின் முடிவில், ஆகஸ்ட் 2-ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இருவரின் உடல்களும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டன. 
உயிரிழந்தவர்களின் அடையாளங்களை காவல்துறை இன்னும் வெளியிடவில்லை. </p><p>"இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் என்றும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு எந்தப் அச்சுறுத்தலும் இல்லை" என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p> 
உயிரிழப்பிற்கான காரணம் குறித்து தற்போது கருத்து தெரிவிக்க முடியாது என்றும், இது தொடர்பான கூடுதல் தகவல்கள் விசாரணக்குப் பின்னரே வெளியாகும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><p> 
ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 2 வரை குவெனெட் ஏரிப் பகுதிக்கு அருகில் இருந்தவர்கள் யாரேனும் சந்தேகத்திற்கிடமான நிகழ்வுகளைக் கண்டிருந்தாலோ, அல்லது அது தொடர்பான வீடியோ காட்சிகள் மற்றும் கேமரா பதிவுகள் வைத்திருந்தாலோ உடனடியாகக் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p> 
இந்தச் சம்பவம் குறித்து முதன்மை மரண விசாரணை அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T16:40:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை உலுக்கிய சோகம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/4-members-same-family-death-landslide-ginigathena-1785847511"></link>
            <id>https://jvpnews.com/article/4-members-same-family-death-landslide-ginigathena-1785847511</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாட்டில் நிலவும் <a href="https://jvpnews.com/article/death-toll-from-disasters-rises-to-7-1785819725" target="_blank">சீரற்ற வானிலையால் மண்மேடு சரிந்து</a> விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>

நேற்று நுவரெலியா கினிகத்தென பொல்பிட்டியாவில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.


வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்த நிலையிலே குறித்த நான்கு பேரும் மண்ணில் புதையுண்டு உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d02d4423-7327-479f-b699-f6a4319d119f/26-6a71ded8c8c12.webp' /></p><p>
சம்பவத்தில், குசும் ரத்நாயக்க (தாய்) ஷ்யாமா குமுதுனி ரத்நாயக்க, (மூத்த சகோதரி)மனேல் குமுதுனி ரத்நாயக்க (இளைய சகோதரி) மஹின்ச தினேத் ரத்நாயக்க (மகன்). ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.</p><p></p><p>&nbsp; நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T16:37:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/multiple-arrests-after-criminal-network-hit-laval-1785860071"></link>
            <id>https://canadamirror.com/article/multiple-arrests-after-criminal-network-hit-laval-1785860071</id>
            <summary type="text">கனடாவில் மாண்ட்ரீல் நகரின் வடக்கே உள்ள லாவல் பகுதியில் செயல்பட்டு வந்த சட்டவிரோதக் குற்றவியல் வலையமைப்பினை குறிவைத்து நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் மாண்ட்ரீல் நகரின் வடக்கே உள்ள லாவல் பகுதியில் செயல்பட்டு வந்த சட்டவிரோதக் குற்றவியல் வலையமைப்பினை குறிவைத்து நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>
லாவல் காவல்துறையின் அமைக்கப்பட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட இந்நடவடிக்கை, குறித்த குற்றவியல் அமைப்பின் நிதி ஆதாரங்களை முடக்கி, அவர்களுக்குப் பல மில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>
கடந்த 2025 செப்டம்பரில் தொடங்கப்பட்ட 'புராஜெக்ட் டாரேட்' திட்டத்தின் இறுதி கட்ட நடவடிக்கையை ஜூலை 28-ஆம் திகதி காவல்துறை அதிகாரிகள் வெற்றிகரமாக முடித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9788807f-2235-4911-8b3b-c34c07853ce9/26-6a720fe934ea9.webp' /></p><p>
 லாவல், மாண்ட்ரீல் மற்றும் லானோடியர் ஆகிய பகுதிகளில் நான்கு கட்டங்களாக நடத்தப்பட்ட இச்சோதனைகளில் பல வீடுகள், வணிக வளாகம் ஒன்று மற்றும் பல வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. </p><p>
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணமோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இக்கும்பல், உணவகம் ஒன்றைக் கூட்டத்திற்குப் பயன்படுத்தி வந்தது சோதனையில் தெரியவந்துள்ளது. 
இந்தச் சோதனையின் போது, 2.874 மில்லியன் டொலர் மதிப்புள்ள மூன்று கட்டிடங்கள் முடக்கப்பட்டன மற்றும் 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
</p><p> மேலும், $3,00,000-க்கும் அதிகமான ஆடம்பரப் பொருட்கள், 5,58,900 டொலர் ரொக்கப் பணம், 14,800&nbsp; டொலர் பெறுமதியான போலி&nbsp; நோட்டுகள், 51 கிலோ கஞ்சா, 1.4 கிலோ கொக்கைன், 1.5 கிலோ எம்.டி.எம்.ஏ, 700 கிராம் மெத்தம்பெட்டமைன், கெட்டமைன், ஜிஹெச்பி உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்கள், 4 துப்பாக்கிகள் மற்றும் ஏர் பிஸ்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. </p><p>
கைது செய்யப்பட்டவர்கள் மீது போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T16:33:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகரிக்கபோகும் முட்டை விலை ; வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/egg-prices-set-to-rise-in-sri-lanka-1785861129"></link>
            <id>https://jvpnews.com/article/egg-prices-set-to-rise-in-sri-lanka-1785861129</id>
            <summary type="text">உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணமாக எதிர்காலத்தில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாயாக அதிகரிக்கக்கூடும் என சிறு மற்றும் நடுத்தர அளவிலான கோழிப் பண்ணை உரிமை...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணமாக எதிர்காலத்தில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாயாக அதிகரிக்கக்கூடும் என சிறு மற்றும் நடுத்தர அளவிலான கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். </p><p style="text-align: justify;">

தற்போதைய நாட்களில் கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் முட்டை ஒன்றின் சில்லறை விலையானது 47 ரூபாவுக்கும் 48 ரூபாவுக்கும் இடைப்பட்ட விலைக்கு உயர்வடைந்துள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94829925-e594-4d01-9a0b-2be4290c6197/26-6a72140aaddf2.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;முட்டை உற்பத்தி</h2><p style="text-align: justify; ">

விலங்குகளின் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளமையும் சந்தையில் முட்டையிடும் கோழிகள் மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகளுக்கு, அவற்றின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்க அளிக்கப்படும் உணவு குறைவடைந்துள்ளமையும் முட்டை விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகும் என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify;">
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது,
</p><p style="text-align: justify;">
கோழிகளின் வளர்ச்சிக்காக வழங்கப்படும் உணவுகள் சந்தையில் குறைவடைந்துள்ளதால் விலங்குகளுக்கு முறையான உணவு வழங்க முடியாதுள்ளதுடன், இதனால் எதிர்காலத்தில் முட்டை உற்பத்தி மேலும் குறையக்கூடும். மேலும், இத்தொழில் துறை மீது அரசாங்கத்தின் கவனம் திரும்ப வேண்டும்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">அத்துடன், மக்காச் சோளம் இறக்குமதிக்காக வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்பட்டமையால் விலங்கு உணவுக்காக மக்காச்சோளத்தை பெற்றுக்கொள்வது நெருக்கடியாகியுள்ளதுடன், அவற்றின் விலைகளும் சுமார் 10 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் எச்.குணசேகர குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify;"> 

இலங்கையின் தினசரி முட்டைத் தேவை 95 இலட்சமாக உள்ளபோதிலும், நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் மேற்குறிப்பிட்ட காரணங்களால் தற்போதைய தினசரி முட்டை உற்பத்தி 70 இலட்சமாகக் குறைந்துள்ளது என்றார்.&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-04T16:32:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீக்கிய ஆர்வலர் ஒருவருக்கு பாதுகாப்பளிக்க கனடாவை வலியுறுத்தும் ஐ.நா. நிபுணர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/un-experts-urge-canada-protect-sikh-1785860884"></link>
            <id>https://news.lankasri.com/article/un-experts-urge-canada-protect-sikh-1785860884</id>
            <summary type="text">சீக்கிய ஆர்வலரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், அவரைப் பாதுகாக்க ஐ.நா. நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சீக்கிய ஆர்வலர் மோனிந்தர் சிங்-கின் உயிரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீக்கிய ஆர்வலரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், அவரைப் பாதுகாக்க ஐ.நா. நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p>
சீக்கிய ஆர்வலர் மோனிந்தர் சிங்-கின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாக எச்சரித்துள்ள நிலையில், அவரைப் பாதுகாக்க இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஐ.நா.வின் மனித உரிமைகள் நிபுணர்கள் கனடாவை வலியுறுத்தியுள்ளனர்.</p><h2>ஐந்து நிபுணர்கள்</h2><p>
கனடிய அரசாங்கத்திற்கு எழுதிய கடிதத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் ஐந்து நிபுணர்கள், கனடியக் குடிமகனான சிங் மீது வெளிநாட்டினரால் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகள் குறித்த கவலைக்குரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90a26095-8d21-4d7c-b533-a9b19a2a1102/26-6a7213170f9e7.webp' /></p><p>
</p><p>அவரது உயிருக்கு நம்பகமான மற்றும் உடனடி அச்சுறுத்தல்கள் இருப்பதாக, 2022 முதல் கனேடிய அதிகாரிகளிடமிருந்து நான்கு எச்சரிக்கை அறிவிப்புகளைச் சிங் பெற்றுள்ளார் என்பதையும் அந்தக்கடிதம் நினைவுபடுத்தியுள்ளது. </p><p>மேலும், மோனிந்தர் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர், அத்துடன் கனேடிய மண்ணில் அதே போன்ற சூழலில் உள்ள நபர்கள் ஆகியோரைப் பாதுகாக்க, தங்களால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு கனடாவை அந்த நிபுணர்கள் குழு வலியுறுத்தியுள்ளனர். </p><p>இந்தக் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைகளைத் துரிதப்படுத்தவும், குற்றவாளிகளைப் பொறுப்பேற்கச் செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்யவும், மேலும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும் அதிகாரிகளை நாங்கள் வலியுறுத்துகிறோம் எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>அந்தக் கடிதத்தின் நகல் ஒன்று இந்திய அரசாங்கத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள சீக்கிய ஆர்வலர்களை இந்தியா குறிவைப்பதாகக் கூறப்படும் விவகாரம் மற்றும் விரிவான அளவிலான நாடுகடந்த ஒடுக்குமுறைக்கு எதிராக சர்வதேச நடவடிக்கை கோரி, சிங் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் முறையிட்டிருந்தார். </p><p>மேலும், உலகம் முழுவதும் உள்ள தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களை தற்போதைய இந்திய அரசாங்கம் குறிவைப்பதாகவும், இதில் குற்றக்கும்பல்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் கொலைகளும் அடங்கும் என்றும் சீக்கிய ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்; இந்தக் குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்துள்ளது.</p><h2>இந்தியாவிற்குத் தொடர்பு</h2><p> 2023-ல் வான்கூவர் புறநகர்ப் பகுதியில் தான் தலைமை தாங்கி வந்த சீக்கியக் கோயிலுக்கு அருகே சுட்டுக் கொல்லப்பட்ட சிங்கின் நண்பரான ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை தொடர்பிலும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>கனடாவின் அப்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்தப் படுகொலையில் இந்தியாவிற்குத் தொடர்பு இருப்பதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்; இந்தக் குற்றச்சாட்டைப் பின்னர் கனேடிய உளவு அமைப்புகளும் உறுதி செய்திருந்தது. </p><p>இந்தியா அக்குற்றச்சாட்டுகளை மறுத்தது; இருப்பினும், இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியதுடன், 2024-ல் இரு தரப்பும் தொடர்ச்சியாகத் தூதரக அதிகாரிகளை வெளியேற்றின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de22b13c-17f0-4280-b2a4-71ec017b9b5a/26-6a721317bd2f3.webp' /></p><p> </p><p>
நிஜ்ஜரைப் போலவே, 44 வயதான மோனிந்தர் சிங்கும் காலிஸ்தான் எனப்படும் தனி சீக்கிய அரசுக்காக வாதிடும் ஒரு விளிம்புநிலை அமைப்பைச் சேர்ந்தவர் ஆவார். </p><p>காலிஸ்தான் இயக்கம் இந்தியாவின் 1947-ஆம் ஆண்டு சுதந்திரக் காலத்திலிருந்தே இருந்து வருகிறது; பிரதமர் ஒருவரின் படுகொலை மற்றும் பயணிகள் விமானம் மீதான குண்டுவெடிப்புச் சம்பவம் ஆகியவற்றிற்கு இவ்வியக்கமே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. </p><p>அதிக எண்ணிக்கையிலான சீக்கிய மக்கள் வசிக்கும் பல மேற்கத்திய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே இது ஒரு சர்ச்சைக்குரிய விவகாரமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-04T16:26:08+00:00</updated>
        </entry>
    </feed>
