<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-04T11:53:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/johnston-fernando-bribery-or-corruption-commission-1788497114"></link>
            <id>https://tamilwin.com/article/johnston-fernando-bribery-or-corruption-commission-1788497114</id>
            <summary type="text">புதிய இணைப்புஇலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக அழைத்துச்செ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
</p><p>
 

பொல்கொல்ல மகிந்த ராஜபக்ச மண்டபத்திற்காக நாற்காலிகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்திற்காக தகுதியான முறையில் தெரிவுசெய்யப்பட்ட நிறுவனத்தை நீக்கிவிட்டு, தனக்கு நெருக்கமான ஒருவருக்கு வழங்கி 79 இலட்சம் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ee9e768-9f18-44da-a4ef-df78de657801/26-6a9ab058e662c.webp' />&nbsp;</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></h2><h2> </h2><p>முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.</p><p>இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையினை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>சற்றுமுன்னர் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். </p><p>

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் இன்று (4) ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T11:50:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kilinochchi-coordination-committee-meeting-1788522575"></link>
            <id>https://tamilwin.com/article/kilinochchi-coordination-committee-meeting-1788522575</id>
            <summary type="text">கிளிநொச்சி மாவட்டத்தின் 2026ஆம் ஆண்டுக்கான மூன்றாம் காலாண்டு மாவட்ட
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றுள்ளது. 

இந்த கூட்டமானது, இன்று(04.09....</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாவட்டத்தின் 2026ஆம் ஆண்டுக்கான மூன்றாம் காலாண்டு மாவட்ட
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றுள்ளது. </p><p>

இந்த கூட்டமானது, இன்று(04.09.2026) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது. </p><p>



கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் இ.சந்திரசேகர்
மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில்
நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் நிர்வாக
முன்னேற்றங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
</p><h2>

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்</h2><p>

இதன்போது, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்காக முன்வைக்கப்பட்ட
பல்வேறு திட்டங்கள் தொடர்பிலும், பூநகரி பிரதேச செயலாளர்
பிரிவுக்குட்பட்ட கௌதாரிமுனைப் பகுதியில் சுற்றுலா அபிவிருத்திக்காக
அடையாளப்படுத்தப்பட்டுள்ள 300 ஏக்கர் காணியில், முதல் கட்டமாக 113 ஏக்கர்
முதலீட்டாளர்களுக்கு வழங்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளன. </p><p>



இதுதொடர்பில் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்தில் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடல்
நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a647d02-5631-4506-9e92-4c73a53e6906/26-6a9ab06b64243.webp' /></p><p> </p><p>



அத்துடன், எல்லை நிர்ணயம் தொடர்பில், சில கிராம அலுவலர் பிரிவுகளை இணைப்பதற்கு எல்லை
நிர்ணய ஆணைக்குழு முன்வைத்த பரிந்துரைகள் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவில்
நிராகரிக்கப்பட்டமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன், மாவட்ட
ஒருங்கிணைப்புக் குழுவிலும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்தையே
கருத்திற்கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டது.</p><p>

கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் வருடாந்த அபிவிருத்திப் பணிகளுக்கும்,
கிராமிய வீதிகள் அபிவிருத்தித் திட்டங்கள் மூன்றிற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

போக்குவரத்து அமைச்ச விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ள இடங்களில் பாதுகாப்பு
நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் கீழ், கிளிநொச்சி
டிப்போ சந்தியிலிருந்து பரந்தன் சந்தி வரையிலான ஏ–9 வீதியில் கண்காணிப்புக்
கமராக்களைப் பொருத்துவது உள்ளிட்ட பல்வேறு முன்மொழிவுகளுக்கும் அனுமதி
வழங்கப்பட்டது.
</p><p>
மேலும், கல்மடுவில் அமைந்துள்ள சேரன் அரிசி ஆலையை முழுத் திறனுடன்
இயக்குவதற்கு பொருத்தமான முதலீட்டாளரிடம் ஒப்படைப்பது தொடர்பிலும்,
கிளிநொச்சியைச் சேர்ந்த முதலீட்டாளர் ஒருவரால் உணவு உற்பத்தித் தொழிற்சாலை
அமைப்பதற்காகக் கோரப்பட்டுள்ள காணியை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும், அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T11:50:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக அல்ல ; சஜித் வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/constitutional-reforms-narrow-political-objectives-1788521978"></link>
            <id>https://jvpnews.com/article/constitutional-reforms-narrow-political-objectives-1788521978</id>
            <summary type="text">அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படக் கூடாது எனவும், ஜனநாயகக் கோட்பாடுகள், அதிகாரப் பகிர்வு, நீதித்துறையின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படக் கூடாது எனவும், ஜனநாயகக் கோட்பாடுகள், அதிகாரப் பகிர்வு, நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகிய அடிப்படைகளில் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தேசிய உரையாடல் அவசியம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.</p><p>
</p><p></p><p>கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்டீவன் திருவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
எந்தவொரு அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அரசியலமைப்பு நிறுவனங்கள் நம்பகத்தன்மையுடனும் சுதந்திரமாகவும் செயற்படக்கூடிய வகையில் கட்டமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b032bed0-7f86-4ea2-bfc8-5a91d5951ee6/26-6a9aadfc3a971.webp' /></p><p>

தற்போதைய அரசாங்கம் அல்லது எதிர்க்கட்சியின் அரசியல் தேவைகளுக்காக மாத்திரமன்றி, அரசியல் அதிகாரம் கைமாறும் சந்தர்ப்பங்களிலும் மக்களுக்கும் அரச நிறுவனங்களுக்கும் பாதுகாப்பான வகையில் இவை திட்டமிடப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
நீதித்துறையின் சுதந்திரம், வினைத்திறன் மற்றும் மக்கள் நம்பிக்கை ஆகியன ஒன்றுக்கொன்று வலுசேர்க்க வேண்டிய முக்கிய அம்சங்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நாடாளுமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வுக்கான சர்வதேச அளவுகோலாக ‘லேட்டிமர் ஹவுஸ்’ (Latimer House) கோட்பாடுகளைப் பயன்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

தற்போதைய நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், இலங்கைக்கு விசேட அரசியலமைப்பு நீதிமன்றம் அல்லது மீளாய்வுப் பொறிமுறை ஒன்று தேவையா என்பது தொடர்பில் நீண்டகால அடிப்படையில் பரிசீலிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதேவேளை, இந்தச் சந்திப்பின்போது சுற்றாடல் சட்டத்தின் ஆட்சி தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
</p><p>
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது முன்வைக்கப்பட்ட ‘சுற்றாடல் சாசனம் 2.0’ இன் கீழ், சிறப்பு சுற்றாடல் நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயம் ஒன்றை அமைப்பது தொடர்பான கொள்கை ரீதியான முன்மொழிவு குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
</p><p>
சுற்றாடல் சட்டங்களை நடைமுறைப்படுத்துதல், சுற்றாடல் நீதி மற்றும் சுற்றாடல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு நீதிமன்றமா, தீர்ப்பாயமா அல்லது இரண்டின் அம்சங்களையும் கொண்ட அமைப்பா பொருத்தமானது என்பது தொடர்பில் பொதுநலவாய நாடுகளின் அனுபவங்களை ஆராய வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T11:39:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[படகு விபத்தில் காணாமல் போன இலங்கை கடற்படை அதிகாரியின் சடலம் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-of-missing-naval-sailor-found-1788519172"></link>
            <id>https://tamilwin.com/article/body-of-missing-naval-sailor-found-1788519172</id>
            <summary type="text">அங்குலான கடற்பகுதியில் இடம்பெற்ற கடற்படை படகு விபத்தில் காணாமல் போயிருந்த கடற்படை அதிகாரியின் உடல் இன்று
(4.9.2026) இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அங்குலான கடற்பகுதியில் இடம்பெற்ற கடற்படை படகு விபத்தில் காணாமல் போயிருந்த கடற்படை அதிகாரியின் உடல் இன்று
(4.9.2026) இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.</p><p>

இதன் மூலம் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்துள்ளதாக
கடற்படை அறிவித்துள்ளது.

​</p><p>அத்துடன் சுமார் 80 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த படகின் உட்பகுதியில் இருந்து
கடற்படை மூழ்காளர்களால் இந்த உடல் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>மோசமான வானிலை</h2><p>
</p><p>
இதேவேளை மிக மோசமான வானிலை, குறைந்த பார்வைத் தெளிவு மற்றும் குறுகிய இடங்கள்
காரணமாக தாமதமான இந்த நடவடிக்கை, சூழல் சாதகமானதும் பாதுகாப்பாக நடத்தி
முடிக்கப்பட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44c70c3e-93be-41d1-8f3a-68c761edda82/26-6a9aab8b6f59b.webp' /></p><p>

​இதற்கமைய விபத்து நடந்த நாளன்றே அங்குலானா பொலிஸார் மற்றும் கடற்றொழிலாளர்களின் உதவியுடன் 11 வீரர்கள் மீட்கப்பட்டனர்.</p><p>

அதனைத் தொடர்ந்து பனதுராவிலிருந்து சிலாவ் வரையிலான கடலோரப் பகுதிகளில் வான்
மற்றும் கடல் வழியே தீவிர தேடுதல் நடத்தப்பட்டு வந்தது.

​</p><h2>விபத்து</h2><p>மேலும் மீட்கப்பட்ட உடலின் அடையாளத்தை உறுதிப்படுத்தல் மற்றும் பிரேதப்
பரிசோதனைக்கான நடவடிக்கைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b830900-7316-44bf-be9d-2c546fb50279/26-6a9aab8c232d4.webp' /></p><p>
இந்தநிலையில் நீரில் மூழ்கியிருந்த ஏதேனும் ஒரு சிதைவுப் பொருளின் மீது படகு
மோதியிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
இருப்பினும், விபத்துக்கான முழுமையான காரணத்தைக் கண்டறிய நிபுணர் குழு ஒன்று
நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T11:33:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடியோ காலில் கனடா பெண்ணுக்கு நிர்வாண பூஜை ; காத்திருந்த ஷாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nude-ritual-canadian-woman-astrologer-chennai-1788512948"></link>
            <id>https://jvpnews.com/article/nude-ritual-canadian-woman-astrologer-chennai-1788512948</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஜோதிடத்தில் அதிக நாட்டம் கொண்ட கனடாவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் தமிழகம் வந்துள்ளார். அவர் தொலைக்காட்சிகளிலும் அது தொடர்பாக பேசுபவர் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஜோதிடத்தில் அதிக நாட்டம் கொண்ட கனடாவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் தமிழகம் வந்துள்ளார். அவர் தொலைக்காட்சிகளிலும் அது தொடர்பாக பேசுபவர் என்று தெரிவிக்கப்படுகிறது
 

அந்தப் பெண் பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றுள்ளார். </p><p>அங்கு கிளி ஜோதிடம் பார்த்துக் கொண்டிருந்த ஜோதிடர் ஒருவரிடம் சென்று தனக்கு ஜோதிடம் பார்க்குமாறு கூறியுள்ளார். 

அப்போது கிளி ஜோதிடர் நான் உங்களை தொலைக்காட்சிகளில் பார்த்து உள்ளேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d071744-92d2-4d57-b139-e5807a34b58b/26-6a9a8ab5d6ce2.webp' /></p><h2>கூடுதலாக பணம்&nbsp; கேட்டு&nbsp; மிரட்டல்</h2><p> </p><p>நீங்கள் நன்றாக ஜோதிடம் பற்றி பேசுகிறீர்கள். 

நான் சொல்வதைக் கேட்டால் நீங்கள் இன்னும் உயரத்துக்கு சென்று விடலாம் என்று கூறியதுடன் அந்தப் பெண்ணின் வாழ்வில் நடந்த ஒரு விஷயத்தையும் துல்லியமாக குறிப்பிட்டு பல கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். </p><p>

 இதனால் கனடா பெண் கிளி ஜோதிடரை முழுமையாக நம்பத் தொடங்கியுள்ளார்.</p><p></p><p> நீங்கள் ஒரு நிர்வாண பூஜை செய்தால் போதும். வீடியோ கால் மூலமாகவே இந்த பூஜையை செய்து விடலாம் என கூறியிருக்கிறார். 

இதனை உண்மை என்று நம்பிய கனடா பெண்ணும் கிளி ஜோதிடர் கூறியபடி நிர்வாண பூஜைக்கு தயாராகி உள்ளார்.</p><p> 

ஜோதிடர் சொன்னபடி பொருட்களை எல்லாம் வாங்கி வீட்டில் வைத்து தனது ஆடைகளை எல்லாம் கலைந்து நிர்வாணமாக வீடியோ காலில் கிளி ஜோதிடருக்கு காட்சி தந்துள்ளார். கிளி ஜோதிடரும் தான் இருந்த இடத்தில் இருந்து பெண்ணை ரசித்த படி நிர்வாண பூஜைகளை செய்துள்ளார்.</p><p> 

இந்த நிர்வாண பூஜைக்கு கிளி ஜோதிடர் 20,000 ரூபா பணம் வாங்கி உள்ளார்.</p><p></p><p> </p><p>இதன் பின்னர் கனடா பெண்ணிடம் தொலைபேசியில் பேசிய ஜோதிடர் உங்களது நிர்வாண வீடியோவை நான் தொலைபேசியில் பதிவு செய்து வைத்துள்ளேன். </p><p>

அதனை வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் எனக்கு கூடுதலாக பணம் தர வேண்டும் எனக் கூறி மிரட்டல் விடுத்துள்ளார். ஜோதிடர் சொன்னதைக் கேட்டு கனடா பெண் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். 

இது பற்றி மாம்பலம் பொலிஸில் புகார் அளித்தார்.</p><p></p><p> </p><p>பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பெண்ணை ஏமாற்றி நிர்வாண பூஜை செய்த கிளி ஜோதிடர் யார்? என்பது பற்றி தொலைபேசி நம்பர் மூலமாக விசாரணை நடத்தினார்கள்.</p><p> இதில் கிளி ஜோதிடர் குற்றாலம் பகுதியை சேர்ந்த இசக்கி முத்து என்பது தெரிய வந்தது. 

இதைத்தொடர்ந்து பொலிஸார் அவரை கைது செய்த விசாரணை நடைபெற்று வருகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T11:32:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை ரெஜினா கேசண்ட்ராவின் ரீசெண்ட் போஸ்ட்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/regena-cassandrra-recent-post-photos-1788521491"></link>
            <id>https://viduppu.com/article/regena-cassandrra-recent-post-photos-1788521491</id>
            <summary type="text">சென்னையில் பிறந்த ரெஜினாவின் தந்தை ஆங்கிலோ இந்தியன் என்று கூறப்படுகிறது. சென்னை பல்கலைகழகத்தில் சைக்காலஜி படித்த ரெஜினா, தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னையில் பிறந்த ரெஜினாவின் தந்தை ஆங்கிலோ இந்தியன் என்று கூறப்படுகிறது. சென்னை பல்கலைகழகத்தில் சைக்காலஜி படித்த ரெஜினா, தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருகிறார்.
</p><p>
கடந்த 2005ல் கண்ட நாள் முதல் பட்த்தின் மூலம் அறிமுகமாகி அழகிய அசுரா, சூர்யா காந்தி போன்ற கன்னட படத்திலும் நடித்து அறிமுகமாகினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98918ebf-75a7-4bad-a83a-d1b1c4ae6655/26-6a9aac15cbd45.webp' />]</p><p> </p><p>2012ல் சிவா மனசுலோ ஸ்ருதி என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகினார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், சுலுக்குவார்பட்டி சிங்கம், நெஞ்சம் மறப்பதில்லை, காஞ்சூரிங் கண்ணப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். </p><p>நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்த ரெஜினா, மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன் தாராவுடன் நடித்தும் வருகிறார்.

தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் ரெஜினா.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Dc3FABXCH9p/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Dc3FABXCH9p/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Dc3FABXCH9p/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by RegenaCassandrra (@regenacassandrra)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script>]</p>]]></content>
            <updated>2026-09-04T11:31:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுரைச்சோலை மின் நிலையத்திற்கான முதல் நிலக்கரி தொகை புத்தளத்தை வந்தடைந்தது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/first-consignment-coal-norochcholai-power-station-1788521294"></link>
            <id>https://jvpnews.com/article/first-consignment-coal-norochcholai-power-station-1788521294</id>
            <summary type="text">இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்திற்கான முதல் நிலக்கரி சரக்கு புத்தளம் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக அதிகாரிகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்திற்கான முதல் நிலக்கரி சரக்கு புத்தளம் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>

நிலக்கரி ஏற்றிச் சென்ற ‘IVS TRADER’ கப்பல் இன்று (04) புத்தளம் கடற்பரப்பை வந்தடைந்துள்ள நிலையில், நிலக்கரியை இறக்கும் பணிகள் இன்று பிற்பகல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சரக்கை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பங்கேற்புடன் மேற்கொள்ளப்படும் தரப் பரிசோதனைகள் விரைவாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f677ec9e-2850-4720-a690-b34e9dc2c76a/26-6a9aab4f5ee7c.webp' /></p><p>இந்நிலையில், ஆற்றல், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க, நுரைச்சோலை லக்விஜய மின் நிலையத்தின் நிலக்கரி கையிருப்பு மற்றும் தற்போதைய நிலைமையை ஆய்வு செய்வதற்காக இன்று (04) காலை மின் நிலையத்திற்கு விஜயம் செய்தார்.
</p><p>
இதன்போது, அடுத்த சில நாட்களுக்கு மின் நிலையத்தை இயக்குவதற்குத் தேவையான அளவு நிலக்கரி கையிருப்பில் இருப்பதை அமைச்சர் அவதானித்துள்ளார்.
</p><p>
மேலும், மின் நிலையத்தின் பணியாளர்கள் மற்றும் கீழ்நிலை ஊழியர்களை சந்தித்த அமைச்சர், தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் நாட்டின் மின்சார உற்பத்திக்காக அர்ப்பணிப்புடன் தமது கடமைகளை மேற்கொண்டு வருவதற்கு அவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
நிலக்கரி விநியோகம் மற்றும் மின் நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T11:28:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலி. வடக்கு காணி விடுவிப்பு கோரி 20ஆவது வாரமாக தொடரும் போராட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-for-jaffna-vali-north-land-release-1788520412"></link>
            <id>https://ibctamil.com/article/protest-for-jaffna-vali-north-land-release-1788520412</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க
கோரி, காணி உரிமையாளர்கள் 20ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க
கோரி, காணி உரிமையாளர்கள் 20ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர்.</p><p>இராணுவத்தினரின் "கொமோண்டோ" பங்களா முன்பாக இன்றைய
தினம் (04) இந்தப் போராட்டம் நடைபெற்றது.</p><p> வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த
மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில்
இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக
காணப்படுகிறது.</p><p></p><h2>&nbsp;உயர்பாதுகாப்பு வலயம்</h2><p>யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து
பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே
காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7980119c-15f9-405f-9bdf-c69fda3b11e7/26-6a9aa96edb86c.webp' /></p><p>
</p><p>தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள்
போராடி வருவதுடன் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை
விடுவிக்குமாறு பிரதி வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி
உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்தனர்.</p><p>இந்தநிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை
20ஆவது வாரமாக போராட்டத்தை முன்னடுத்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T11:27:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் திருமண விழாவில் குண்டு வீச்சு... கண்டுகொள்ளத் தேவையில்லை என ஜேடி வேன்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jd-vance-reacts-to-airstrike-1788521312"></link>
            <id>https://news.lankasri.com/article/jd-vance-reacts-to-airstrike-1788521312</id>
            <summary type="text">JD Vance reacts to airstrike at Iran wedding: ஈரான் திருமண விழாவில் வான்வழித் தாக்குதல் குறித்து ஜேடி வேன்ஸ் கருத்து.
தெற்கு ஈரானில் திருமண விழா ஒன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>JD Vance reacts to airstrike at Iran wedding: ஈரான் திருமண விழாவில் வான்வழித் தாக்குதல் குறித்து ஜேடி வேன்ஸ் கருத்து.
</p><p>தெற்கு ஈரானில் திருமண விழா ஒன்றில், நால்வர் கொல்லப்பட்டதற்கு அமெரிக்கத் தாக்குதல்தான் காரணமா என்ற கேள்விக்கு, ​​அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜேடி வேன்ஸ், சில நேரங்களில் இதுபோன்ற விடயங்கள் நடப்பதுண்டு என்று பதிலளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c118acfa-1eb9-488a-8ddb-55a83828d660/26-6a9aab63aeab2.webp' /></p><p>
</p><p>ஹார்முஸ் நீரிணையில் அமைந்துள்ள சிரிக் மாவட்டத்தின் குஹெஸ்டாக் என்ற நகரிலேயே அமெரிக்கா குண்டு வீச்சு நடத்தியுள்ளது. இந்த இறப்பு எண்ணிக்கையை ஈரான் அரசாங்கம் அறிவிக்கவில்லை, மாறாக ஈரான் செஞ்சிலுவை சங்கமே அறிவித்தது. </p><p>இந்த அமைப்பு, சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கத்தின் ஓர் உறுப்பினர் அமைப்பாகும். இது ஈரானிடமிருந்து சுதந்திரமாகச் செயல்படுவதுடன், உயிரிழப்பு புள்ளிவிவரங்கள் குறித்த நம்பகமான ஆதாரமாக சர்வதேச கண்காணிப்பாளர்களால் பொதுவாகக் கருதப்படுகிறது. </p><p>வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில், இத்தாக்குதல் சம்பவத்திற்கு அமெரிக்கா பொறுப்பா என்று கேட்கப்பட்டபோது, ​​வேன்ஸ் அந்தச் செய்திகளை நிராகரித்துள்ளார்.</p><p></p><p> </p><p>மேலும், ஈரானிய அரசு ஊடகங்கள், போரில் இதுவரை நடந்தவற்றைச் சரியாகப் பதிவு செய்யவில்லை என குற்றஞ்சாட்டியுள்ள அவர், எனவே இச்சம்பவம் குறித்து தனக்கு மிகுந்த சந்தேகம் உள்ளது என்றும் பதிலளித்துள்ளார். </p><p>சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மனிதாபிமான அமைப்பால் இந்தக் கொலைகள் உறுதிப்படுத்தப்பட்டதற்கான எந்த ஒப்புதலையும் அவர் அளிக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce5f8362-62e6-42f6-bca7-375dc8510c01/26-6a9aab624b8ae.webp' /></p><p> </p><p>ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையைப் (IRGC) போலல்லாமல், அமெரிக்கா ஒருபோதும் போரில் பொதுமக்களைக் குறிவைப்பதில்லை என்பதை என்னால் நூறு சதவீதம் நம்பிக்கையுடன் கூற முடியும் என்றும் வேன்ஸ் பதிலளித்துள்ளார். </p><p>அமெரிக்கா ஒருபோதும் பொதுமக்களை குறிவைக்காது, அமெரிக்கா பொதுமக்களை குறிவைத்ததில்லை, துரதிர்ஷ்டவசமாக, வெளிப்படையாகவே, சில சமயங்களில் சில விடயங்கள் நடந்துவிடும் என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42353aaa-6525-4943-a3f4-5ea20b2e310a/26-6a9aab6302952.webp' /></p><p> </p><p>குறிப்பிட்ட அந்தத் தாக்குதல் குறித்து தன்னிடம் புதிய தகவல் எதுவும் இல்லை என்றும், ஆனால் அமெரிக்கா இது குறித்து விசாரித்து வருவதாகவும், ஈரானைப் போலல்லாமல் தனது தவறுகளிலிருந்து அமெரிக்கா பாடம் கற்றுக்கொள்ளும் என்றும் வேன்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். </p><p>மேலும், 18 அமெரிக்க வீரர்களின் உயிர்ப்பலி வாங்கிய இந்த 7 மாதக் காலப் போரை வெறும் மோதல் என்றே வேன்ஸ் குறிப்பிட்டுள்ளார். இது ஜனநாயகக் கட்சியினர் மற்றும் விமர்சகர்களிடமிருந்து உடனடி கடும் எதிர்ப்பைத் தூண்டியது. </p><p>இதனிடையே, அமெரிக்காவிடம் ஆயுதப் பற்றாக்குறை என செய்திகள் வெளியிட்டுள்ள செய்தியாளர்களைக் கடுமையாக விமர்சித்த ஜனாதிபதி ட்ரம்ப், அமெரிக்காவிடம் தேவைக்கும் அதிகமான ஆயுதங்கள் இருப்பு உள்ளது என்றும், அவர்கள் நாட்டுக்கு துரோகம் இழைக்கும் இழிபிறவிகள் என்றும் குறிப்பிட்டார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T11:26:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவுக்கு உளவு பார்த்த உக்ரைனிய ராணுவ வீரர்: மனைவியுடன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukrainian-soldier-and-wife-arrested-for-spying-1788521186"></link>
            <id>https://news.lankasri.com/article/ukrainian-soldier-and-wife-arrested-for-spying-1788521186</id>
            <summary type="text">Ukrainian soldier and wife arrested for spying: உக்ரைனில்&amp;nbsp;ரஷ்யாவிற்காக உளவு வேலை பார்த்த ராணுவ வீரரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்..ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ukrainian soldier and wife arrested for spying: உக்ரைனில்&nbsp;ரஷ்யாவிற்காக உளவு வேலை பார்த்த ராணுவ வீரரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்..</p><h2>ரஷ்ய உளவாளி கைது</h2><p>உக்ரைனிய ராணுவத்தில் பணியாற்றி வரும் வீரர் ஒருவர் ரஷ்யாவிற்காக உளவு வேலை பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p> இதையடுத்து வெள்ளிக்கிழமை அந்த நபரை உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு பிரிவான SBU (Ukrainian Security Service) கைது செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1505f91d-8c31-45d7-81f1-bfe188dc6494/26-6a9aaae3a5241.webp' /></p><p></p><p>இது தொடர்பாக வெளியான அறிக்கையில், உக்ரைனின் ஆயுதப் படைகளின் பிராந்திய பாதுகாப்பு பிரிவான தெரோபோரோனி படையில் பணியாற்றிய ராணுவ வீரர் ரஷ்யாவிற்கு முகவராக செயல்பட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளது.<br></p><p>மேலும் ராணுவ வீரரின் மனைவியையும் பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்துள்ளனர்.</p><p> கைது செய்யப்பட்ட இருவரும் கார்கிவ் நகரை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T11:26:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்சவின் கைது பின்னணி! மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் பரபரப்பு வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airbus-deal-arrested-namal-rajapaksa-investigation-1788517954"></link>
            <id>https://tamilwin.com/article/airbus-deal-arrested-namal-rajapaksa-investigation-1788517954</id>
            <summary type="text">கடந்த காலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எயார்பஸ் (Airbus) விமான கொள்வனவு ஒப்பந்த ஊழல் மோசடி தொடர்பான நீண்ட வாக்குமூலத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த காலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எயார்பஸ் (Airbus) விமான கொள்வனவு ஒப்பந்த ஊழல் மோசடி தொடர்பான நீண்ட வாக்குமூலத்தின் பின்னணியில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 

இன்று காலை (04) இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் முன்னிலையான நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
</p><h2>ஏர்பஸ் (Airbus) ஒப்பந்த மோசடி</h2><p>
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களை கொள்வனவு செய்யும் ஏர்பஸ் (Airbus) ஒப்பந்த ஊழல் வழக்கில், நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேன கடந்த மார்ச் 12 கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/186a077c-dd0e-4fa7-9b6b-c15575d602a8/26-6a9aa89851952.webp' />&nbsp;</p><p> </p><p>

அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த வேளையில், கபில சந்திரசேன மே 08 அன்று மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார். </p><p>

கைது செய்யப்பட்ட போது கபில சந்திரசேன நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் மற்றும் அதன் பின்னணியில் பல கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.&nbsp;</p><p>இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்ன ஆகியோரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது.&nbsp;</p><h2>பிறப்பிக்கப்பட்டுள்ள திறந்த பிடியாணை</h2><p>இதற்கிடையில், ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் இரண்டாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள ஷமிந்திர ராஜபக்ச ஆகியோரை கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c6150d8-3b57-448e-8528-ec4ff4a9a091/26-6a9aa8990489a.webp' /></p><p>
மேலும், ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைக்கு ஆதரவளிப்பதற்காக, பிரான்ஸ் ஏர்பஸ் தாய் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று ஆகஸ்ட் முதல் வாரத்தில் நாட்டிற்கு வருகை தந்து ஆணைக்குழுவின் முன்பும் வாக்குமூலங்களை அளித்திருந்தது.</p><p>

இத்தகைய பின்னணியில், ஏர்பஸ் ஒப்பந்தம் குறித்து வாக்குமூலம் பெறுவதற்காக விடுக்கப்பட்ட அழைப்பாணையை தொடர்ந்து நாமல் ராஜபக்ச இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp; </p><p>எயார்பஸ் (Airbus) விமானங்கள் கொள்வனவு ஊழல் மற்றும் லஞ்சம் தொடர்பான விசாரணைகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையத்தால் (CIABOC) 2013 ஆம் ஆண்டும் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T11:16:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இத்தாலி பிரதமர் மெலோனி செய்த சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/giorgia-meloni-italy-longest-serving-government-1788520558"></link>
            <id>https://canadamirror.com/article/giorgia-meloni-italy-longest-serving-government-1788520558</id>
            <summary type="text">&amp;nbsp;இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அந்நாட்டின் போருக்கு பிந்தைய வரலாற்றில் தொடர்ந்து நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற புதிய சாதனையை படைத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அந்நாட்டின் போருக்கு பிந்தைய வரலாற்றில் தொடர்ந்து நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். </p><p>

அவரது அரசு தொடர்ந்து 1,413 நாட்கள் பதவியில் இருந்து&nbsp;&nbsp; தொடர்ந்து நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2a6a482-f368-4c6b-855e-28de7fedd818/26-6a9aa86f6e50f.webp' /></p><h2>பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து</h2><p>

இத்தாலியில் அரசுகள் அடிக்கடி மாறி வந்த நிலையில், மெலோனியின் ஆட்சி அந்நாட்டுக்கு குறிப்பிடத்தக்க அரசியல் நிலைத்தன்மையை ஏற்படுத்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது.

இந்த சாதனைக்காக மெலோனிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். </p><p>மெலோனியை தனது “நண்பர்” என்று குறிப்பிட்ட மோடி, இத்தாலி மக்கள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் ஆதரவையும் இந்த சாதனை வெளிப்படுத்துவதாக கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d2d584c-c553-4352-abb6-158842d9fc71/26-6a9aa87030957.webp' /></p><p>
</p><p>

 மேலும், இந்தியா–இத்தாலி சிறப்பு மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் மெலோனியின் நட்பு முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
 
மோடி–மெலோனி சந்திப்புகள் சமூக வலைதளங்களிலும் அடிக்கடி கவனம் பெறுகின்றன. குறிப்பாக, இருவரது பெயர்களை இணைத்து உருவான “Melodi” என்ற வார்த்தை இணையத்தில் பிரபலமாகியுள்ளது. </p><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T11:13:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் மீன்பிடிக்க சென்ற போது தோணி கவிழ்ந்து விபத்து : இருவர் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2-died-in-boat-capsizing-accident-while-fishing-1788517996"></link>
            <id>https://ibctamil.com/article/2-died-in-boat-capsizing-accident-while-fishing-1788517996</id>
            <summary type="text">மட்டக்களப்பு - கிரான்குளம் கடலில் மீன்பிடிக்கச் சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி
கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.இன்று (4) பிற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - கிரான்குளம் கடலில் மீன்பிடிக்கச் சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி
கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.</p><p>இன்று (4) பிற்பகல் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் அப்பகுதி கடற்றொழிலாளர் சங்க தலைவர் உட்பட இருவர்
நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன் ஒருவர் நீந்தி கரை சேர்ந்துள்ளார்.</p><p>இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒருவரின் சடலம்
மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றையவரின் சடலம் காணாமல் போயுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>விபத்துக்குள்ளான தோணி&nbsp;</h2><p>கிரான்குளம் செல்லத்தம்பி வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய கடற்றொழிலாளர் சங்க தலைவரான துரைராஜா முத்தையா, விஷ்ணு கோவில் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய அமரசிங்கம் பரமலிங்கம் என்ற இருவருமே உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b795fbcd-e18b-4509-8a9c-99cb176b6561/26-6a9aa576eb6e1.webp' /></p><p>இது குறித்து மேலும் தெரிவருகையில், குறித்த கடலில் இன்று காலை 11.00 மணியளவில் மீன் பிடிப்பதற்கு தோணி ஒன்றில் சென்ற 3 பேர் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென பாரிய அலை ஒன்றில் தோணி சிக்கி கவிழ்ந்ததையடுத்து 3 பேரும் நீரில் மூழ்கினர்.</p><p>இதில் கடற்றொழிலாளரான 45 வயதுடைய செல்வகுமார் நீந்தி கரையை வந்தடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அமரசிங்கம் பரமலிங்கம் என்பவரின் சடலம் மீட்கப்பட்டதுடன் கடற்றொழிலாளர் சங்க தலைவரின் சடலம் காணாமல் போயுள்ளது.</p><p></p><h2>மட்டு போதனா வைத்தியசாலை</h2><p>காணாமல் போயுள்ள சடலத்தை தேடும் நடவடிக்கையில் கடற்றொழிலாளர்கள், உறவினர்கள், ஊர் மக்கள் மற்றும்
கடற்படையினர் ஈடுபட்டுவருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdbdd085-b489-48a1-91e9-28b5f57571f1/26-6a9aa577ad792.webp' /></p><p>உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக
மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர்
தெரிவித்தனர்.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T11:08:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் - எதிர்வாதத்துக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக சட்டத்தரணிகள் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amendment-bill-to-the-constitution-1788519493"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amendment-bill-to-the-constitution-1788519493</id>
            <summary type="text">அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான
விசாரணைகளுக்காக பூரண அல்லது முழுமையான நீதியரசர்கள் அடங்கிய ஆயத்தை நியமிப்பதற்கான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான
விசாரணைகளுக்காக பூரண அல்லது முழுமையான நீதியரசர்கள் அடங்கிய ஆயத்தை நியமிப்பதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் பொதுநலவாய 
நாடுகளின் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் தமது கவலையை வெளியிட்டுள்ளார்.
</p><p>
அதே சமயம் இந்தச் சட்ட மூலம் தொடர்பான விசாரணைகளின் போது அரசுத் தரப்பின் வாதத்துக்கு மனுதாரர்கள் தரப்பு சட்டத்தரணிகள் எதிர்த்துப் பதில் வாதம் செய்வதற்கு இடமேயளிக்காமல் விசாரணையை முடித்துக் கொண்டமை குறித்தும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.</p><p>

பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்டீவன் திரு , அரசமைப்பின் 22ஆவது
திருத்தச் சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீதான உயர்நீதிமன்ற விசாரணையை அவதானிப்பதற்காக நேற்றுமுன்தினம் உயர்நீதிமன்றில் பிரசனமாகியிருந்தார்.</p><p>

இந்த வழக்கு தொடர்பான கவலைகள் குறித்து சட்டத்துறையைச் சேர்ந்த பலருடனும் தாம் கலந்துரையாடினார் என்று அவர் கூறினார்.
</p><h2>

அதிருப்தி வெளியிட்ட சட்டத்தரணிகள்</h2><p>

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,</p><p> 

 நீதித்துறையின் சுதந்திரத்துக்கு
இது மிகவும் முக்கியமானது என்பதால், இந்த வழக்கை விசாரிக்க ஏன் ஒரு விரிவான அமர்வு அல்லது பூரண நீதியரசர்கள் அடங்கிய ஆயம் நியமிக்கப்படவில்லை என்பது
சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட முக்கிய கேள்விகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b72b559-6f9c-42da-aba2-b6b01abeba54/26-6a9aa6367c781.webp' /></p><p>


முக்கியமான அரசமைப்பு மற்றும் நீதித்துறை சார்ந்த வழக்குகள் வழக்கமாகப் பெரிய அமர்வுகளாலேயே விசாரணை செய்யப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், பூரண
ஆயத்துக்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகத் தனக்குத் தெரிவிக்கப்பட்டது.</p><p>

நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பில் கவலைக்குரிய விடயமாக இதைக் குறிப்பிட்ட
ஸ்டீவன் திரு, விரிவான அல்லது முழுமையான அமர்வை அமைக்காமைக்கான காரணங்கள் குறித்தும் கேள்வியெழுப்ப தயார்.</p><p>

இந்த விசாரணைகளின் போது அரசு தரப்பினால் நேற்று முன்வைக்கப்பட்ட வாதங்களுக்கு
மனுதாரர் தரப்பின் சட்டத்தரணிகள் பதில் வாதம் செய்ய வாய்ப்பு
அளிக்கப்படவில்லை.</p><p> 

நேற்றுமுன்தினம், மாலை 5:30 மணியோடு இந்த வழக்கு விசாரணைகளை
முடிவுறுத்துவதாக அறிவித்த உயர்நீதிமன்றம், மனுதாரர்களின் எதிர்வாதம் ஏதேனும் இருக்குமாயின் அவற்றை நேற்று(03) வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு முன்னர்
உயர்நீதிமன்றத்தில் எழுத்து மூலமாகத் தாக்கல் செய்யும்படி கூறி விசாரணையை
முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
</p><p>
உயர்நீதிமன்ற ஆயத்தின் இந்த முடிவை பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர்
விசனத்துடன் விமர்சித்தார்.

வழமையாக இது போன்ற முக்கிய விடயங்களில் மனுதாரர் தரப்பின் பதில் வாதம் முக்கிய
விவகாரமாகக் கருதப்படும். அதற்கு வாய்ப்பளிக்க மறுத்தமை கவலைக்குரியது என்றார்.</p><h2>&nbsp;22ஆவது திருத்தச் சட்டமூலம்</h2><p>
இதேவேளை, அரசால் அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசமைப்பின்
22ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட
மனுக்கள் மீதான விசாரணையை உயர்நீதிமன்றம் நேற்றுமுன்தினம்(02) நிறைவு செய்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45249746-7d11-4ff0-9c0e-549b09f08e6e/26-6a9aa637430ea.webp' /></p><p>
</p><p>
அந்தச் சட்டமூலத்தின் அரசமைப்பு அமைவுடைமை தொடர்பான வியாக்கியானத்தை
நாடாளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைப்பதாக நேற்றுமுன்தினம் உயர்நீதிமன்றம்
அறிவித்தது.
</p><p>
அரசால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்
சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இரண்டு
நாள்களாக இடம்பெற்றிருந்தது.
</p><p>
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சசூரசேன, அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர,
சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட
உயர்நீதிமன்ற நீதியரசர் ஆயத்தின் முன்னிலையில் இந்த மனுக்கள் தொடர்பான
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.</p><p>

இதற்கமைய, 22ஆவது திருத்ததைச் சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் 79
மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அவற்றில் 41 மனுக்கள் இணைய வழி மூலம் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. </p><p>அரசமைப்பு
திருத்தம் ஒன்றுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் அதிகூடிய
எண்ணிக்கை இதுவேயாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T11:07:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்ச குடும்பத்தில் பசில் - யோஷித வரிசையில் நாமல்! வரலாற்றில் பதிவான 4ஆவது கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrested-4-times-in-sri-lankan-history-1788516687"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrested-4-times-in-sri-lankan-history-1788516687</id>
            <summary type="text">இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (09.04. 2026) கைது செய்யப்பட்டுள்ளார்.&amp;nbsp;இதற்கு ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (09.04. 2026) கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>இதற்கு முன்னர் மூன்று சந்தர்ப்பங்களில் (2016இல் இருமுறையும் 2017இல் ஒருமுறையும்) கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்சவுக்கு எதிராக, தற்போது மீண்டும் இலஞ்சக் குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>
தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் திட்டவட்டமாக மறுப்பதுடன், இந்த வழக்குகள் அனைத்தும் அரசியல் பழிவாங்கல்கள் என தொடர்ந்து கூறி வருகிறார்.</p><p></p><h2>முதல் கைது..&nbsp;</h2><p>
</p><p>
2013ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் எயார்பஸ் (Airbus A330 மற்றும் A350) விமானங்களை கொள்வனவு செய்யும் ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக, இன்று காலை 9.00 மணிக்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வ அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/604d05b3-6e4f-4f36-a4c8-3b78d150f6d8/26-6a9aa36c3625f.webp' /></p><p> </p><p>இந்த ஒப்பந்தத்தின் போது ராஜபக்ச குடும்பத்தினர் 60 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐந்து மணி நேர விசாரணையின் பின்னரே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. </p><p>இந்தச் சம்பவம் தொடர்பில் அவர் முன்னரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்ததுடன், எந்தவொரு சுயாதீன விசாரணைக்கும் முகம்கொடுக்கத் தயார் என்றும் தெரிவித்திருந்தார்.
</p><p>
நாமல் ராஜபக்ச முதன்முதலில் 2016 ஜூலை 11 அன்று நிதிப் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (FCID) கைது செய்யப்பட்டார். </p><p>கொழும்பு கோட்டையில் முன்மொழியப்பட்ட 650 மில்லியன் டொலர் பெறுமதியான ஆடம்பரக் கட்டிடத் திட்டத்துடன் தொடர்புடையதாக, ரக்பி விளையாட்டின் வளர்ச்சிக்காக இந்திய நிறுவனமான 'கிரிஷ்' நிறுவனத்திடமிருந்து பெற்றதாகக் கூறப்படும் 70 மில்லியன் ரூபாயை (அக்காலகட்டத்தில் சுமார் 480,000 அமெரிக்க டொலர்) தவறாகப் பயன்படுத்தி, அதைத் தன் தனிப்பட்ட நலன்களுக்காகப் பயன்படுத்தினார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.</p><p></p><h2>முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள்..&nbsp;</h2><p> </p><p>பசில் மற்றும் யோஷித ராஜபக்சவுக்குப் பிறகு இக்குடும்பத்தின் மூன்றாவது கைதான இச்சம்பவத்திற்குப் பிறகு அவர் சுமார் ஒரு வாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b9a7343-a31e-4f4c-838e-dc83659e3649/26-6a9aa36d0a978.webp' /></p><p> </p><p>மேலும், சட்டமா அதிபரால் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அதன்பின்னர், 2016 ஒகஸ்ட் 15 அன்று நிதிப் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அவர் இரண்டாவது முறையாகக் கைது செய்யப்பட்டார். </p><p>அங்கு, நாமல் ராஜபக்சவுடன் தொடர்புடைய 'கவர்ஸ் கோப்பரேஷன்' (Gowers Corporation) மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி 125 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 'ஹெலோ கோப்' (Hellocorp) நிறுவனத்தின் பங்குகளைக் கொள்வனவு செய்து பணமோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் ஒகஸ்ட் 22 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.</p><p>இந்த வழக்கில் வங்கிப் கணக்குகளை முடக்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், பின்னர் 2023 நவம்பரில் கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை இந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்தது.</p><p></p><h2>வரலாற்றுச் சம்பவம்..&nbsp;</h2><p>
</p><p>
அவரது மூன்றாவது கைது நடவடிக்கை 2017 ஒக்டோபர் 10 அன்று ஹம்பாந்தோட்டை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90de9b21-127e-46f5-986b-b694c709170e/26-6a9aa36dbbfec.webp' /></p><p> </p><p>மத்தள விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இந்திய நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடுவதற்கு எதிராக ஹம்பாந்தோட்டையிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்திற்கு முன்னால் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, சட்டவிரோதமாகக் கூடுதல், கடமைக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இது நடந்தது. </p><p>நாடாளுமன்ற உறுப்பினர்களான டி.வி. சானக்க மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட குழுவினருடன் ஹம்பாந்தோட்டை பொலிஸில் முன்னிலையானதைத் தொடர்ந்து அவர் ஒக்டோபர் 16 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இதன்போது ஆதரவாளர்கள் டயர்களை எரித்து சிறை வாகனத்தை மறிக்கவும் முயன்றனர்.
</p><p>
பின்னர், 2025 ஜூலையில், மாலைதீவில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றதால் 2017 போராட்ட வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதற்காக ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது. எனினும், மறுநாள் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையானதை அடுத்து அந்த பிடியாணை திரும்பப் பெறப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ece776bd-1b15-4649-8f75-a3a0f6a649ec/26-6a9aa36e7c460.webp' /></p><p> </p><p>இவ்வாறிருக்கையில், இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டத்தரணிகள் சேர்க்கையில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்தும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணை நடத்தி வருகிறது, மேலும் பல பணமோசடி புகார்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த மகனான, 1986இல் பிறந்த நாமல் ராஜபக்சஈ முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும் (2020 - 2022), 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மிக இளைய வேட்பாளரும் ஆவார்.</p><p> தற்போது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள அவரது அரசியல் தொகுதி ஹம்பாந்தோட்டை ஆகும். 2015 முதல், மைத்திரிபால சிறிசேன மற்றும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கங்களின் கீழ் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக பல விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.</p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/MKWUl_Wo_0w" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-04T11:03:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் 96 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/96-000-dengue-cases-identified-in-the-country-1788519757"></link>
            <id>https://jvpnews.com/article/96-000-dengue-cases-identified-in-the-country-1788519757</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் 96,040 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அந்த பிரிவு வௌியிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் 96,040 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>அந்த பிரிவு வௌியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில், கடந்த ஒகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 10,155 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

எவ்வாறாயினும் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையை விட ஒகஸ்ட் மாதத்தில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. </p><p>

ஜூன் மாதத்தில் 21,533 பேரும், ஜூலை மாதத்தில் 29,962 பேரும் பதிவாகியிருந்தனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b837d2c-8d0f-40fc-a551-ae151d7e871e/26-6a9aa54f4c95e.webp' /></p><p>இவ்வாண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் டெங்கு தொற்றினால் 72 மரணங்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

இக்காலப்பகுதியில் அதிகளவிலான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 50,760 ஆகும். </p><p>

தென் மாகாணத்தில் 13,931 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 8,788 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 7,910 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். </p><p>

அத்துடன், அதிகளவிலான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே இனங்காணப்பட்டுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 20,444 ஆகும். </p><p>

மேலும், கொழும்பு மாவட்டத்தில் 19,008 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 7,043 நோயாளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 6,154 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 6,181 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.</p><p> 

நாடளாவிய ரீதியில் 50 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் தொடர்ந்து அதி-அபாய வலயங்களாக இனங்காணப்பட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T11:02:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் மகாநாயக்க தேரர்களுக்கு இந்தியத் தூதுவர் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-ambassador-s-explanation-mahanayake-theros-1788518244"></link>
            <id>https://tamilwin.com/article/indian-ambassador-s-explanation-mahanayake-theros-1788518244</id>
            <summary type="text">இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, மல்வத்தை மற்றும் அஸ்கிரிய
பீடங்களின் மகாநாயக்க தேரர்களை நேற்று சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான
உறவுகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, மல்வத்தை மற்றும் அஸ்கிரிய
பீடங்களின் மகாநாயக்க தேரர்களை நேற்று சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான
உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆசிகளைப் பெற்றுள்ளார்.
</p><p>
இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதரத்துவ உறவை வலுப்படுத்த மகாநாயக்க
தேரர்களுக்கு மரியாதை செலுத்தினார் என்றும், அவர்களின் ஆசிகளைப் பெற்றார்
என்றும் இந்தியத் தூதுவர் தனது சமூக ஊடகப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>இந்தியா அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவு&nbsp;</h2><p>
</p><p>
டித்வா புயலைத் தொடர்ந்து இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு இந்தியா
அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவு குறித்து அவர் பௌத்த பீடாதிபதிகளுக்கு
விளக்கமளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7486d5b7-e5b4-4db4-8039-ec8c58651c81/26-6a9aa21002891.webp' /></p><p>

இலங்கை மக்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படும்,
திட்டமிடப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் பல இருதரப்புத் திட்டங்கள் குறித்தும்
அவர் மகாநாயக்க தேரர்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d15290aa-1fe4-4e7b-b9a8-456dd63dab04/26-6a9aa21102698.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T10:51:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள 'போராட்டம்' திரைப்படத்தின் டிரைலர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/porattam-official-trailer-1788518808"></link>
            <id>https://cineulagam.com/article/porattam-official-trailer-1788518808</id>
            <summary type="text">திரைப்படத்தை தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபரான ஐபிசி கந்தையா பாஸ்கரன் அவர்களின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள &#039;போராட்டம்&#039; திரைப்படத்தின் டிரைலர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திரைப்படத்தை தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபரான ஐபிசி கந்தையா பாஸ்கரன் அவர்களின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள 'போராட்டம்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">'போராட்டம்'</span></p><p>
ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் 'போராட்டம்'. இப்படத்தை ஐபிசி கந்தையா பாஸ்கரன் தயாரித்துள்ளார். இப்படத்தின் மூலம் பாஸ்கரன் றீகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77761ab2-5e2a-45db-91e7-a38c71346c91/26-6a9aa19c036ba.webp' /></p><p>மேலும், இந்த திரைப்படத்தை ராஜ் சிவராஜ் இயக்கியுள்ளார். பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.
ஈழ சினிமாவில் இதுவரை வெளியாகியுள்ள திரைப்படங்களிலேயே நீளமான திரைப்படமாக ‘போராட்டம்’ எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3570f3e2-8f5e-495e-81d9-6fcc7e7ebcc6/26-6a9aa1e3a1b0d.webp' /></p><p> </p><h2>

டிரைலர்</h2><p> 

பெரிதும் எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள இப்படம் வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், தற்போது 'போராட்டம்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதோ பாருங்க:&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/IcgPF0UtlUc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-04T10:50:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கையை கடிக்கும் வாழ்க்கை செலவு; ஐரோப்பாவிற்குப் புலம்பெயரும் பிரித்தானியர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/biting-cost-of-living-britons-emigrating-to-europe-1788509863"></link>
            <id>https://canadamirror.com/article/biting-cost-of-living-britons-emigrating-to-europe-1788509863</id>
            <summary type="text">&amp;nbsp; பிரிட்டனில் அதிகரித்து வரும் கடுமையான பணவீக்கம், அதிக வீட்டு வாடகை மற்றும் மின்கட்டண உயர்வு காரணமாக, அந்நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நகரங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரிட்டனில் அதிகரித்து வரும் கடுமையான பணவீக்கம், அதிக வீட்டு வாடகை மற்றும் மின்கட்டண உயர்வு காரணமாக, அந்நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நகரங்களுக்குக் குடிபெயரும் ‘காஸ்ட் ஆஃப் லீவிங்’ (Cost of Leaving) கலாச்சாரம் பிரிட்டன்வாசிகளிடையே அதிகரித்து வருகிறமை ஆய்வில் தெரியவந்துள்ளது.</p><p> 

பாரிஸ், ஸ்டாக்ஹோம் மற்றும் பெர்லின் போன்ற ஐரோப்பிய நகரங்களில் வாழ்க்கைச் செலவு லண்டனை விட கணிசமாகக் குறைவாக இருப்பது சர்வதேச நுகர்வோர் குறியீட்டு (Numbeo Cost of Living Index) ஆய்வில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64fffa31-2370-4d12-b1bd-eb7d7a9d691f/26-6a9a7ea8502ff.webp' /></p><h2>வாடகை மட்டுமல்லாது, தினசரிப் பொருட்கள் கொள்முதல்</h2><p>
</p><p>
சர்வதேச வாழ்வாதாரக் குறியீட்டின் தரவுகளின்படி, பிரிட்டன் தலைநகர் லண்டனில் தனிநபர் ஒருவர் சராசரியாக வாழத் தேவையான பணத்தை விட, பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 11 சதவீதமும், ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் 10 சதவீதமும் குறைவான செலவிலேயே வாழ முடியும் எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.</p><p> 

குறிப்பாக லண்டனில் ஒரு படுக்கையறை கொண்ட வீட்டின் சராசரி வாடகை ஐரோப்பிய தலைநகரங்களை விட 35 முதல் 40 சதவீதம் வரை அதிகமாக உள்ளது, பிரிட்டன் மக்களை பிற நாடுகளை நோக்கித் தள்ளும் முதன்மை காரணியாக மாறியுள்ளது.
</p><p>
வாடகை மட்டுமல்லாது, தினசரிப் பொருட்கள் கொள்முதல், பொதுப்போக்குவரத்து, மின்சாரம் மற்றும் உணவகங்களின் செலவுகளிலும் பிரிட்டனை விட ஐரோப்பிய நகரங்கள் அதிக சேமிப்பை வழங்கி வருகின்றன. </p><p>உதாரணமாக, ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் மற்றும் இத்தாலியின் ரோம் ஆகிய நகரங்கள் லண்டனை விட சுமார் 45 சதவீதம் வரை மலிவான வாழ்க்கைச் சூழலை வழங்குவதால், வீட்டில் இருந்தே பணியாற்றும் (Remote Work) இளம் பிரிட்டன் ஊழியர்கள் பெருமளவில் அந்நகரங்களை நோக்கிப் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
</p><p>
கடந்த சில ஆண்டுகளாகப் பிரிட்டனில் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால், குறைந்த செலவில் உயர்தர வாழ்க்கை முறையைப் (Quality of Life) பெற விரும்புவோருக்குப் பாரிஸ், பர்லின், பார்சிலோனா போன்ற நகரங்கள் சிறந்த மாற்றாக உருவெடுத்துள்ளன.</p><p>

 பிரிட்டன் அரசு வரி விதிப்புகளையும் வாழ்க்கைச் செலவுகளையும் சீரமைக்கத் தவறினால், நாட்டின் திறமைவாய்ந்த பணியாளர்கள் (Brain Drain) ஐரோப்பிய நாடுகளுக்குக் குடிபெயர்வது மேலும் அதிகரிக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-04T10:49:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்றொழிலுக்கு சென்ற தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-fishermen-lose-their-fishing-boat-1788516195"></link>
            <id>https://tamilwin.com/article/two-fishermen-lose-their-fishing-boat-1788516195</id>
            <summary type="text">மட்டக்களப்பு-கிரான்குளம் கடலில் கடற்றொழிலிலுக்காக சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.குறித்த சம்பவமானது இன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு-கிரான்குளம் கடலில் கடற்றொழிலிலுக்காக சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.</p><p>குறித்த சம்பவமானது இன்று(4.9.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>கிரான்குளம் செல்லத்தம்பி வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய கடற்றொழில் சங்க தலைவர் மற்றும் விஷ்ணு கோவில் வீதியைச்
சேர்ந்த 48 வயதுடைய நபர் இருவருமே உயிரிழந்துள்ளனர்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

குறித்த கடல் பிரதேசத்தில் சம்பவ தினமான இன்று பிற்பகல் 11.00 மணியளவில் மீன்
பிடிப்பதற்கு தோணி ஒன்றில் 3 பேர் சென்று மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த
போது திடீரென பாரிய அலை ஒன்றில் தோணி சிக்கி கவிழ்ந்ததையடுத்து 3 பேரும்
நீரில் மூழ்கினர்.
</p><p>
இதில் ஒருவர் நீந்தி கரையை வந்தடைந்த நிலையில்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் இரு கடற்றொழிலாளரின் சடலம் மீட்கப்பட்டது.</p><p>இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T10:46:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-appears-in-court-1788518614"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-appears-in-court-1788518614</id>
            <summary type="text">&amp;nbsp; இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, சற்றுமுன்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.</p><p>



பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை (04) இலஞ்ச ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6db0888-ff13-46cd-9bb1-0b64ae960c44/26-6a9aa7ccb9990.webp' /></p><h2>சர்ச்சைக்குரிய விமானங்களை கொள்வனவு</h2><p> </p><p>இந்நிலையில், வாக்குமூலம் அளித்த பின்னர் அவர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.&nbsp;&nbsp;</p><p>ஶ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்காக சர்ச்சைக்குரிய விமானங்களை கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலஞ்ச ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்காக வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (04) முற்பகல் அந்த ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார்.</p><p></p><p>
</p><p>
 

அங்கு சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னரே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ புலனாய்வு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டதுடன், அதனடிப்படையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T10:40:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழைய ஆள் என சந்திக்க மறுத்தார்... வேதனையில் அழுத வையாபுரி - வெளியான பரபரப்பு வீடியோ!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/director-refuse-to-meet-me-vaiyapuri-emotional-1788517021"></link>
            <id>https://manithan.com/article/director-refuse-to-meet-me-vaiyapuri-emotional-1788517021</id>
            <summary type="text">தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட காமெடி நடிகர்களில் ஒருவர்&amp;nbsp; தான் வையாபுரி. விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட காமெடி நடிகர்களில் ஒருவர்&nbsp; தான் வையாபுரி. விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.
</p><p>
தற்போது பட வாய்ப்புகள் குறைந்திருந்தாலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கிய வையாபுரி, தனது திரையுலக அனுபவங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d459db0-77b5-41fb-b228-320cf2fd2142/26-6a9a9f408cd15.webp' /></p><p></p><h2>வைரலாகும் காணொளி</h2><p>இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் இணைந்த குறுகிய காலத்திலேயே ஒரு லட்சம் ஃபாலோயர்களை பெற்றுள்ளார். இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், தனக்கு நேர்ந்த மனவேதனையான சம்பவம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.</p><p>

ஒரு புரொடக்ஷன் மேனேஜர் அழைத்ததால் இயக்குநர் ஒருவரை சந்திக்கச் சென்றதாகவும், ஆனால் “அவர் பழைய ஆள், இப்போது இன்ஸ்டாகிராமில் புதிதாக நிறைய பேர் இருக்கிறார்கள்” எனக் கூறி அந்த இயக்குநர் தன்னை சந்திக்க மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் தனக்கு மிகவும் மனவேதனையை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1cb30b4-a261-475b-ab3a-f60530c28d33/26-6a9a9f4141b7a.webp' /></p><p></p><p>
மேலும், இன்றைய சூழலில் இன்ஸ்டாகிராமில் இருப்பவர்களுக்கு இயக்குநர்கள் முக்கியத்துவம் அளிப்பதாகவும், தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும், “நானும் இருக்கிறேன்” என்பதை நினைவூட்டவும் தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கியதாகவும் வையாபுரி தெரிவித்துள்ளார். தற்போது ஒரு லட்சம் பேர் தன்னை பின்தொடர்வது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcyiAguPIXa/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcyiAguPIXa/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcyiAguPIXa/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Vaiyapuri R (@actorvaiyapuri)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> </a><b><u>FOLLOW NOW</u></b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">&nbsp; &nbsp;</a></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T10:40:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட நாமல் ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-rajapaksa-arrested-1788512140"></link>
            <id>https://ibctamil.com/article/namal-rajapaksa-arrested-1788512140</id>
            <summary type="text">புதிய இணைப்புஇலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.</p><p> சிறிலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ்விமானக் கொள்முதல் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகள் நிமித்தமே இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில் நாமல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டமையை ஐபிசி தமிழ் செய்தியாளர் உறுதிப்படுத்தினார்.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p><b><u>சற்றுமுன்னர் அதிரடியாக கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச..!</u></b></p><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d149f0c1-97c9-48df-96fe-4ac0298ed075/26-6a9aa79233c9b.webp' /></p><p>
</p><p>இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் இன்று (04-09-2026) காலை முன்னிலையாகிய நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>இந்நிலையில் கைது செய்யப்ட்ட நாமல்&nbsp;ராஜபக்ச, புதுக்கடை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FLankasriTv%2Fvideos%2F875241888859624%2F&show_text=false&width=560&t=0" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>
</p><p>சிறிலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ்விமானக் கொள்முதல் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகள் நிமித்தமே இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு முன்னர் கருத்து தெரிவித்திருந்த நாமல் ராஜபக்ச, வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட எதிர்ப்பு பேரணிக்கு முன்னர் தன்னைக் கைது செய்து சிறையிலடைக்க அரசாங்கம் முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.</p><p>அரசாங்கம் அச்சமடைந்து அடக்குமுறையின் மூலம் எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க முயல்வதாகவும், இத்தகைய தடைகளால் தனது அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/8JcRUCEXLkY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T10:33:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-arrested-a-short-while-ago-1788512799"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-arrested-a-short-while-ago-1788512799</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கையூட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு</h2><p>இன்று காலை 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc20b296-9b3c-4bd9-a40e-c0083a234678/26-6a9a8b2c53bf2.webp' /></p><p>வாக்கு மூலம் வழங்குவதற்காக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில், இன்று முற்பகல் அவர் முன்னிலையாகி இருந்தார்.
</p><p>
இந்தநிலையில், சுமார் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்த அதிகாரிகள் நாமல் ராஜபக்ஷவை கைது செய்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு, வானூர்திகளை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே, அவர் இன்று ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T10:33:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[20ஆவது வாரத்திலும் தொடரும் மயிலிட்டி காணி உரிமைப் போராட்டம் - முன்வைக்கப்பட்டுள்ள உருக்கமான கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mylitti-land-rights-struggle-1788517035"></link>
            <id>https://tamilwin.com/article/mylitti-land-rights-struggle-1788517035</id>
            <summary type="text">எங்கள் மயிலிட்டி காணிகளை விடுவிக்க இன்னும் நாம் எத்தனை வாரங்கள் போராட
வேண்டும்?, எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டும்?, அரச உயர் அதிகாரிகளே, அரசே
ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>எங்கள் மயிலிட்டி காணிகளை விடுவிக்க இன்னும் நாம் எத்தனை வாரங்கள் போராட
வேண்டும்?, எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டும்?, அரச உயர் அதிகாரிகளே, அரசே
பதில் சொல்!" என்ற உருக்கமான கோஷங்களுடன், மயிலிட்டி காணி இழந்த மக்கள் தமது
காணி உரிமைக்கான போராட்டத்தை இன்று 20ஆவது வாரமாகவும் தொடர்ந்துள்ளனர்.
</p><p>
மயிலிட்டி காணிக்கை மாதா தேவாலயத்துக்கு முன்பாக இடம்பெற்ற இந்தப்
போராட்டத்தில், தமது பூர்வீக நிலங்களை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்
என்று மக்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.</p><h2>வாழ்க்கையில் மாற்றம் இல்லை</h2><p>

பல வருடங்களாகத் தமது சொந்த மண்ணுக்குத் திரும்ப முடியாமல் காத்திருக்கும்
தங்களின் நிலை குறித்து மனம் தளர்ந்த நிலையில் கருத்துத் தெரிவித்த மக்கள்,
அரசாங்கம் மாறினாலும் தங்களது வாழ்க்கையில் மாற்றம் ஏற்படவில்லை என்றும் கவலை
தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/047d137f-09f5-4fbb-b8ab-57aedcf59abc/26-6a9a9e009aeec.webp' /></p><p>
</p><p>
தேர்தல் காலங்களில் வழங்கப்படும் வாக்குறுதிகளைத் தாண்டி, காணிகளை நடைமுறையில்
விடுவிப்பதற்கான நடவடிக்கையே தமக்குத் தேவை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.</p><h2>20ஆவது வாரப் போராட்டம்</h2><p>
</p><p>
தங்களது பிள்ளைகள் தங்கள் சொந்தக் காணியில் வாழ வேண்டும் என்பதற்காகவும்,
முன்னோர்கள் வாழ்ந்த நிலத்தில் மீண்டும் வாழ்ந்து மடிய வேண்டும்
என்பதற்காகவுமே இந்த 20ஆவது வாரப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என்றும்
மக்கள் உருக்கமாகத் தெரிவித்தனர்.
</p><p>
தமது காணிகள் தொடர்பில் அரச உயர் அதிகாரிகளும், அரசும் தெளிவான பதிலை வழங்க
வேண்டும் என்றும் வலியுறுத்திய மக்கள், போராட்டம் எத்தனை வாரங்கள் தொடர
வேண்டும் என்பதைத் தாங்கள் தீர்மானிக்கவில்லை என்றும், காணிகளை எப்போது
விடுவிக்கின்றார்கள் என்பதுதான் அதனைத் தீர்மானிக்கும் என்றும் மேலும்
தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7b055ec-e701-4df0-b76f-59855378e7e3/26-6a9a9e0181c58.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb811187-df33-44f8-9005-03406f9c3051/26-6a9a9e026de97.webp' /></p>]]></content>
            <updated>2026-09-04T10:32:24+00:00</updated>
        </entry>
    </feed>
