<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-14T13:22:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு சாரதியாகக் கூட செல்வேன்..! ராஜபக்சர்களுக்காக குரல் கொடுத்த அர்ச்சுனா எம்.பியால் வெடித்த சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/strong-condemnation-of-arjuna-s-remarks-1789391886"></link>
            <id>https://tamilwin.com/article/strong-condemnation-of-arjuna-s-remarks-1789391886</id>
            <summary type="text">தமிழ் மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றம் சென்று, தற்போது அவர்களையே ஏமாற்றும் வகையில் செயற்பட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, “நாமல் ராஜபக்சவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றம் சென்று, தற்போது அவர்களையே ஏமாற்றும் வகையில் செயற்பட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, “நாமல் ராஜபக்சவிற்கு கார் சாரதியாகக் கூட இருப்பேன்” என மேடையில் பேசியிருப்பது தமிழ் மக்கள் மத்தியில் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை, காணி சுவீகரிப்பு , காணால் ஆக்கப்பட்டோர் போன்ற தமிழர்களின் வரலாற்றில் மோசமான நிலையை ஏற்படுத்தியவர்களாக கருதப்படும் ராஜபக்சர்களைப் போற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக அர்ச்சுனா செயற்படுகிறார். </p><p>

இந்த செயற்பாடு, தமிழ் மக்களுக்காக இதுவரை காலமும் போராடி வரும் தலைவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

பணத்திற்காகவும் பதவிக்காகவும் இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களால் தமிழ் மக்களுக்கான நீதி எவ்வளவு காலம் கடந்தாலும் கிடைக்காது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத உண்மையாக இருக்கின்றது. </p><p>

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பல வருடங்கள் கடந்தும் தங்களது உறவுகளின் நிலை குறித்து அறிந்துகொள்வதற்காக பல்வேறு வழிகளில் போராடி வருகின்றனர்.

எனினும், இதுபோன்ற அரசியல் தலைவர்கள் மக்களுக்காக செயற்படுவதாகக் கூறிக்கொண்டு, சுயலாபம் அடைந்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
இவ்வாறான பல்வேறு விடயங்களையும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் சர்ச்சைக்குரிய செயற்பாடுகளையும் உங்கள் கண்முன் கொண்டுவருகிறது அதிர்வு நிகழ்ச்சி.&nbsp; &nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/nBnFADoN9QE" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T13:19:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் முதல்வர் விஜய் முன்னிலையில் ரூ.12,300 கோடி முதலீடு ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/tamilnadu-signs-12300-cr-mou-in-cm-vijay-uk-visit-1789391002"></link>
            <id>https://ibctamilnadu.com/article/tamilnadu-signs-12300-cr-mou-in-cm-vijay-uk-visit-1789391002</id>
            <summary type="text">tamilnadu signs 12,300 crores mou in cm vijay uk visit: லண்டனில் முதல்வர் விஜய் முன்னிலையில், தமிழ்நாட்டிற்கு சுமார் ரூ.12,300 கோடி மதிப்பீட்டில் ஒப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>tamilnadu signs 12,300 crores mou in cm vijay uk visit: லண்டனில் முதல்வர் விஜய் முன்னிலையில், தமிழ்நாட்டிற்கு சுமார் ரூ.12,300 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
</p><h3>
முதல்வர் விஜய் முன்னிலையில் ரூ.12,300 கோடி ஒப்பந்தம்</h3><p>
 
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக பிரித்தானியாவிற்கு சென்றுள்ளார். 
அங்கு லண்டன் வாழ் தமிழர்கள் முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். </p><p>

இந்நிலையில், இன்று முதல்வர் விஜய் முன்னிலையில் தமிழ்நாட்டில் சுமார் ரூ.12,300 கோடி மதிப்பிலான 4 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.</p><p> 

சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Ltd.,) நிறுவனம் அதன் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து, வழிகாட்டி நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் சுமார் ரூ.11,000 கோடி முதலீட்டில், வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, கூட்டிணைப்பு (Assembly) மற்றும் தளவாட வசதிகள் ஆகிய துறைகளில் சுமார் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb7284b0-c805-46b1-abeb-a270dcbb0f76/26-6aa7f09dcdba6.webp' /></p><p> 

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் குழுமத்தின் உலகளாவிய சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் திரு.பாரி பெயிண்டர் மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு.தீபக் ஜேக்கப், இ.ஆ.ப. ஆகியோர் கையெழுத்திட்டு, ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர். </p><p>

அதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres - GCCs) விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.</p><p>இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி உலகளாவிய தகவல் தொடர்பு நிறுவனம் ஒன்று, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையத்தை (GCC) அமைப்பதற்கு ஏதுவாக, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம், ஏர்ன்ஸ்ட் &amp; யங் (Ernst &amp; Young) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6fd6017-74a4-4434-b3ba-fdd95d39e858/26-6aa7f09d20035.webp' /></p><p> 

சுமார் 1,000 கோடி ரூபாய் முதலீட்டையும், 2,000-க்கும் மேற்பட்ட உயர் மதிப்புடைய புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் வகையில் அமையவுள்ள இந்த மையம், சென்னையில் உள்ள மவுண்ட் பூந்தமல்லி சாலையில் புதிதாக அறிவிக்கப்பட்ட 'GCC காரிடார்' (GCC corridor) பகுதியில் அமைக்கப்படவுள்ளது.</p><p>

ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குரூப், தமிழ்நாட்டில் எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் ஆகிய துறைகளில் 600 உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் உள்ள தனது உலகளாவிய திறன் மையங்களை, தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் விரிவாக்குவதற்கு உறுதியளித்து, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
</p><p>
முதல்வர் விஜய் முன்னிலையில், சிக்மா டெக்னாலஜி குரூப் (Sigma Technology Group) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் கார்ல்சன் மற்றும் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், தலைமை நிர்வாக அதிகாரி, ஸ்ரியா (Sigma AB Pvt Ltd-இன் ஒரு பகுதி)மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி (Guidance) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. தீபக் ஜேக்கப் IAS ஆகியோருக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.</p><p>

மேலும், தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீடு செய்து 400 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் ‘வில்சன் பவர் சொல்யூஷன்ஸ்’ (Wilson Power Solutions) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f1214f1-e39a-408e-be20-faceb65b2ec6/26-6aa7f09c63b51.webp' /></p><p>

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் குழுமத் தொழில்நுட்ப இயக்குநர் திரு. ஹரி கிருஷ்ணா மலேபதி, குழும நிதியியல் இயக்குநர் திரு. டென்னிஸ் சோர்பி ஆகியோரும், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. தீபக் ஜேக்கப், இ.ஆ.ப. ஆகியோரால் கையெழுதிடப்பட்டு, ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T13:03:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சதுர்த்தியில் 601 கிலோ பிரம்மாண்ட லட்டு ; வியக்கவைத்த விநாயகர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/601-kilo-giant-laddu-at-chaturthi-festival-1789389713"></link>
            <id>https://jvpnews.com/article/601-kilo-giant-laddu-at-chaturthi-festival-1789389713</id>
            <summary type="text">விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 601 கிலோ எடையிலான பிரம்மாண்ட லட்டு ஒன்று தயாரிக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 601 கிலோ எடையிலான பிரம்மாண்ட லட்டு ஒன்று தயாரிக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை பகுதியில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட லட்டு, முந்திரி, திராட்சை உள்ளிட்ட பல்வேறு வகையான உலர் பழங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48448870-4019-4265-b8d2-ce26daa06818/26-6aa7eb9317da4.webp' /></p><p style="text-align: justify; ">

மேலும், பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தும் வகையில், பார்வதி தேவி விநாயகருக்கு உணவு ஊட்டுவது போன்ற தத்ரூபமான வடிவத்தில் இந்த லட்டு கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு லட்டைக் காண, அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் ஆர்வத்துடன் திரண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

601 கிலோ எடையில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த லட்டு, அப்பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-14T13:00:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் பிரமாண்ட கங்கை ஆரத்தி விழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/grand-ganga-aarti-held-on-london-s-thames-river-1789390710"></link>
            <id>https://canadamirror.com/article/grand-ganga-aarti-held-on-london-s-thames-river-1789390710</id>
            <summary type="text">பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள புகழ்பெற்ற தேம்ஸ் நதிக்கரையில், இந்திய பாரம்பரியத்தின் அடையாளமான கங்கை ஆரத்தி விழா முதன்முறையாக மிகப் பிரமாண்டமாக நடைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள புகழ்பெற்ற தேம்ஸ் நதிக்கரையில், இந்திய பாரம்பரியத்தின் அடையாளமான கங்கை ஆரத்தி விழா முதன்முறையாக மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.
</p><p>

இந்தியாவில் கங்கை நதிக்கரையில் நடத்தப்படும் புகழ்பெற்ற ஆரத்தியை நினைவூட்டும் வகையில் அமைந்த இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு மகிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a06ddcb4-65a4-4adb-b02e-06ca536e8c27/26-6aa7ef7af3dba.webp' /></p><p>&nbsp;இந்த ஆரத்தி விழாவில், தேம்ஸ் நதியின் தூய்மைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது</p>]]></content>
            <updated>2026-09-14T12:59:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[18 வரை விளக்க மறியல் : மீண்டும் 16 ஆம் திகதி நீதிமன்ற படியேறுகிறார் நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-remanded-18th-appear-fort-court-on-the-16th-1789388749"></link>
            <id>https://ibctamil.com/article/namal-remanded-18th-appear-fort-court-on-the-16th-1789388749</id>
            <summary type="text">சிறிலங்கன் ஏர்லைன்ஸுக்கு விமானங்களை வாங்கும் செயல்பாட்டில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான பணச்சலவை வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கன் ஏர்லைன்ஸுக்கு விமானங்களை வாங்கும் செயல்பாட்டில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான பணச்சலவை வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்தேக நபராகப் பெயரிட சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>&nbsp;சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் மற்றும் ஒரு கூட்டு விசாரணையைத் தொடர்ந்து, ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் செப்டம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
</p><h2>கோட்டை நீதவானின் உத்தரவு</h2><p>சட்டமா அதிபர் மற்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீபா பீரிஸ் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் குற்றவியல் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனுவின்படி, பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் அவரும் ஒரு சந்தேக நபராக சேர்க்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af5a3be0-7bc4-47cf-ae87-a910a76ab6fb/26-6aa7eea100c82.webp' /></p><p>
</p><p>
அதன்படி, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, செப்டம்பர் 16 அன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு கோட்டை நீதவான் பாசன் அமரசேன இன்று (14) உத்தரவிட்டார்&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T12:55:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருநாகலில் திடீர் விபத்து - விரைந்து செயற்பட்ட பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sudden-accident-in-kurunegala-1789390322"></link>
            <id>https://tamilwin.com/article/sudden-accident-in-kurunegala-1789390322</id>
            <summary type="text">குருநாகல் - மஹாவா நகரில் உள்ள மூன்று கடைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் இன்று(14.09.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருநாகல் - மஹாவா நகரில் உள்ள மூன்று கடைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. </p><p>

இந்த சம்பவம் இன்று(14.09.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>

தீ விபத்து</h2><p>
தீ விபத்து ஏற்பட்டதை அறிந்த பொலிஸார் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும், மஹாவா பிரதேச சபைக்கு சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff9418c6-0c9e-4b8e-bd48-5c075834df71/26-6aa7ee24d116e.webp' /></p><p> 

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக குருநாகல் மாநகர சபையிலிருந்து தீயணைப்பு வாகனங்களும் மஹாவாவிற்கு அனுப்பப்பட்டுள்ளன.
</p><p>
இதன்போது உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாக எந்தவித தகவலும் உறுதிச் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T12:53:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன அழிப்பை மேற்கொண்டவர்களுடன் சிலர் ஒரே மேடையில் ஏறி நிற்கின்றனர்: சிறீதரன் எம்.பி விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/genocide-speech-shritharan-mp-1789388877"></link>
            <id>https://tamilwin.com/article/genocide-speech-shritharan-mp-1789388877</id>
            <summary type="text">எங்களை அழித்தவர்கள், இன அழிப்பை மேற்கொண்டவர்கள், எங்கள் வீடுகளில் இன்றும்
நெருப்பின் நினைவுகளை விட்டுச் சென்றவர்கள், எங்கள் பிள்ளைகளைக் காணாமல்
ஆக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>எங்களை அழித்தவர்கள், இன அழிப்பை மேற்கொண்டவர்கள், எங்கள் வீடுகளில் இன்றும்
நெருப்பின் நினைவுகளை விட்டுச் சென்றவர்கள், எங்கள் பிள்ளைகளைக் காணாமல்
ஆக்கியவர்கள் என நாம் குற்றஞ்சாட்டுகின்ற தரப்பினருடன் இன்று சிலர் ஒரே
மேடையில் ஏறி நிற்கின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடும் விசனம்
தெரிவித்தார்.
</p><p>
கிளிநொச்சி, கோணாவில் வட்டாரத்துக்கான மக்கள் சந்திப்பு பொதுநோக்கு மண்டபத்தில்
நேற்று(13.9.2026) நடைபெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>தொடர்ந்து கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ,

"மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் பணியாற்றும்
நீதிபதிகளின் ஓய்வு வயதை 62 இலிருந்து 67 ஆக அதிகரிப்பதற்கான தீர்மானம்
முன்வைக்கப்பட்டுள்ளது.</p><h2>கடுமையான எதிர்ப்பு</h2><p> இதற்குப் பல்வேறு தரப்பினரும், வழக்கறிஞர்கள் சங்கமும்
கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இந்த விடயம் எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம்
திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வருகின்றது. </p><p>இதன்போது அந்தத்
திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க நாங்கள் தீர்மானித்துள்ளோம். அதற்கு எமது
ஆதரவு எப்போதுமே இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/661f3978-b0bf-41b2-9973-2b6e7ed65542/26-6aa7eb1811946.webp' /></p><p>தேர்தல் காலங்களில் மக்கள் சில நேரங்களில் ஆராயாமல் அல்லது கோபத்தின்
அடிப்படையில் சிலரைத் தெரிவு செய்கின்றனர். ஆனால், பின்னர் அவர்கள் எவ்வாறான
நிலைப்பாட்டை எடுக்கின்றார்கள் என்பதை மக்கள் கவனமாக உன்னிப்பாகக் கவனிக்க
வேண்டும்.
</p><p>
எங்களை அழித்தவர்களுடன் இன்று சிலர் ஒரே மேடையில் ஏறி நிற்கின்ற இவ்வாறானதொரு
கடினமான அரசியல் சூழலில்தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T12:47:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவிலிருந்து வெளியேற விரும்பும் கிராமம் ஒன்று: பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/piddington-village-to-polls-decide-leave-the-uk-1789389892"></link>
            <id>https://news.lankasri.com/article/piddington-village-to-polls-decide-leave-the-uk-1789389892</id>
            <summary type="text">&amp;nbsp;A small village will head to the polls tomorrow to decide if they leave the UK: பிரித்தானியாவை விட்டு வெளியேறுவது தொடர்பில் நாளை கிராமம் ஒன்றில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;A small village will head to the polls tomorrow to decide if they leave the UK: பிரித்தானியாவை விட்டு வெளியேறுவது தொடர்பில் நாளை கிராமம் ஒன்றில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
</p><p>

இங்கிலாந்திலுள்ள சிறு கிராமம் ஒன்று பிரித்தானியாவை விட்டு வெளியேறுவது தொடர்பில் நாளை வாக்கெடுப்பு நடத்த உள்ள விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
</p><h3>
பிரித்தானியாவிலிருந்து வெளியேற விரும்பும் கிராமம்</h3><p>

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட்ஷையரிலுள்ள கிராமம், பிடிங்டன்.

350 பேர் மட்டுமே வாழும் பிடிங்டன் கிராமம், பிரித்தானியாவை விட்டு வெளியேறுவது தொடர்பில் நாளை வாக்கெடுப்பு நடத்த உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a4cf5ba-840b-4586-9603-a45b7a548a60/26-6aa7ec4607e65.webp' /></p><p>
அதாவது, வெறும் 350 பேர் வாழும் அச்சிறு கிராமத்தில், ஆயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்களை தங்க வைக்க அரசு முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அக்கிராம மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.&nbsp;</p><p></p><p>
பிடிங்டன் கிராமத்தில், பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான பிரம்மாண்ட கட்டிடங்கள் உள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20cb47c2-5ba2-4e31-ab13-9c20de3ef8e3/26-6aa7ec46b3003.webp' /></p><p>
அந்தக் கட்டிடங்களில் ஆயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்களை தங்கவைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

ஆகவே, அப்படி ஆயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்கள் அங்கு தங்கவைக்கப்படுவதால், தங்கள் கிராமத்தின் பாதுகாப்பும் தனியுரிமையும் பாதிக்கப்படும் என அஞ்சும் அக்கிராம மக்கள், பிரித்தானியாவை விட்டு வெளியேற விரும்புவதாக தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71dbaf8a-7d95-4b32-8e50-e608f231264c/26-6aa7ec4767e73.webp' /></p><p>
அது தொடர்பில் நாளை அக்கிராமத்தில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
</p><p>
இந்நிலையில், உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க் பிடிங்டன் கிராம மக்களுக்கு தனது ஆதரவை வெளிப்படையாக தெரிவிக்க, அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பின் ஆதரவையும் கோரியுள்ளார்கள் பிடிங்டன் கிராம மக்கள்!&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T12:45:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[15ஆம் திகதி முதல் தொடர்ச்சியான சுகயீன விடுமுறையில் வட மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/northern-veterinary-surgeons-sick-leave-protest-1789388468"></link>
            <id>https://tamilwin.com/article/northern-veterinary-surgeons-sick-leave-protest-1789388468</id>
            <summary type="text">வடக்கு மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர்


வடக்கு மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும்
நிர்வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர்


வடக்கு மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும்
நிர்வாக மற்றும் சேவை சார்ந்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாத
நிலையில், 2026 செப்டம்பர் 15ஆம் திகதி முதல் தொடர்ச்சியான சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இன்றையதினம் (14.09.2026) வடக்கு
மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள
அறிக்கையிலே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><h2>
எமது முக்கிய கோரிக்கைகள்:
</h2><p>
* வடக்கு மாகாணத்தின் புவியியல் நிலைமை, நீண்ட தூரக் களப்பணிகள்,
பண்ணையாளர்களின் தேவைகள் மற்றும் சேவையின் தன்மைக்கு ஏற்ற பொருத்தமான கடமைப்
பட்டியலை வழங்குதல்.
</p><p>* அரச கால்நடை வைத்திய அலுவலகங்களில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறையைத்
தீர்த்தல்.
</p><p>* பண்ணையாளர்களின் கால்நடைகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை வழங்குவதற்கான
பொருத்தமான மருந்துப்பொறிமுறையை ஏற்படுத்துதல்.
</p><p>* களப்பணிகளுக்கு போதுமான பொருத்தமான வாகனங்களை வழங்குதல். தற்போது
பயன்படுத்தப்படும் வாகனங்கள் பழையதாகவும் அடிக்கடி பழுதடைவதாகவும் இருப்பதால்,
அதற்குத் தீர்வு காணுதல்.</p><p>
* கால்நடை வைத்தியர்களின் உயர் பதவிகளை நிரப்புவதற்கான நேர்முகத்
தேர்வுக்குரிய புள்ளியிடல் நடைமுறைகள் சேவைப் பிரமாணக் குறிப்புக்கு முரணாக
அடிக்கடி மாற்றப்படுவதைத் தடுத்து, உயர் பதவிகளை உரிய முறையில் நிரப்புதல்.
அத்துடன் தற்போது வெற்றிடமாகவுள்ள பதவிகளை காலம் தாழ்த்தாது நிரப்புதல்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afd8c4b9-b76f-4362-bcc8-830c4136c86a/26-6aa7ea7ec62d9.webp' /></p><p>
* 2026 ஜூலை 1ஆம் தேதி இடம்பெற்ற சுகயீனப் போராட்டத்தைத் தொடர்ந்து பிரதம
செயலாளர் அவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் எட்டப்பட்ட தீர்மானங்கள்
மற்றும் இணக்கப்பாடுகளை உடனடியாக நடைமுறைப்படுத்துதல்.
</p><p>* எவ்வித முன்னறிவித்தல்களுமின்றி தன்னிச்சையாக எமது சம்பளங்களை குறைத்தலை
நிறுத்துதல்.</p><p>
* விரல் அடையாளப் பதிவு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்தல்.

நாம் விரல் அடையாளப் பதிவு முறைக்கு எதிரானவர்கள் அல்லர். 2019ஆம் ஆண்டு
அன்றைய வடக்கு மாகாண பிரதம செயலாளர் பத்திநாதனுடன் இடம்பெற்ற
கலந்துரையாடல்களின் பின்னர், கால்நடை வைத்தியர்களின் களப்பணியின் தன்மையை
கருத்திற்கொண்டு திங்கட்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் விரல்
அடையாளப் பதிவு மேற்கொள்ளும் நடைமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அது இன்றுவரை
பின்பற்றப்பட்டு வருகின்றது.</p><p>

எனினும், தற்போது அந்த நடைமுறையைப் புறந்தள்ளி அனைத்து நாட்களிலும் விரல்
அடையாளப் பதிவு செய்ய வேண்டும் என நிர்வாக அழுத்தம் வழங்கப்படுவதுடன்,
யாழ்ப்பாண மாவட்டத்தில் கால்நடை வைத்தியர்கள் உண்மையாகக் கடமையாற்றியிருந்த
போதிலும், விரல் அடையாளப் பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்படவில்லை என்ற
காரணத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களிலிருந்து பல
மாதங்களுக்கான நாட்கள் விடுமுறையாகக் கணிக்கப்பட்டுள்ளன.</p><h2>உத்தியோகபூர்வ பதிவுகள்</h2><p>
</p><p>
கால்நடை வைத்தியர்கள் கடமையாற்றியமைக்கான தினக்குறிப்பு பதிவேடு (Diary),
எதிர்கால நிகழ்ச்சி திட்டம் (Advance Programme), விலகல் பதிவுகள்
(Deviation), வாகனப் பதிவுகள் (Running Chart), அலுவலக வரவுப் பதிவுகள்
(Attendance), திட்டங்களுக்குரிய கொடுப்பனவுச் சீட்டுகள், ஆவணங்கள் மற்றும்
வவுச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு உத்தியோகபூர்வ பதிவுகள் உள்ளன.
</p><p>
மேலும், நீதிமன்றங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களால் சமர்ப்பிக்கப்படும்
சான்றுப் பொருட்கள் தொடர்பான அறிக்கைகள், DCC கூட்டங்கள், பிரதேச
ஒருங்கிணைப்புக் கூட்டங்கள், பல்வேறு திணைக்களங்களின் கூட்டங்கள் மற்றும்
செயற்பாடுகளில் பங்கேற்று மேற்கொண்ட பணிகள், எமது திணைக்களத்தின் திட்டங்கள்
மற்றும் ஏனைய திணைக்களங்களின் திட்டங்களுடன் இணைந்து மேற்கொண்ட பணிகள்,
அத்துடன் கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தமை தொடர்பான உத்தியோகபூர்வ பதிவுகள்
உள்ளிட்ட ஏராளமான பணிச்சான்றுகள் எம்மிடம் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ade30bc-9e0b-4beb-9220-be24a7506d73/26-6aa7ea7f93f69.webp' /></p><p>
</p><p>
இவ்வாறான உத்தியோகபூர்வ பதிவுகள் மற்றும் பணிச்சான்றுகள் மூலம் உண்மையில்
கடமையாற்றியமை உறுதிப்படுத்தக்கூடிய நிலையில், விரல் அடையாளப் பதிவு
செய்யப்படவில்லை என்ற ஒரே காரணத்தை அடிப்படையாகக் கொண்டு உண்மையில் பணியாற்றிய
நாட்களை பல மாதங்களுக்கான விடுமுறையாகக் கணிப்பது நிர்வாக ரீதியாக முரணானதும்
முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும்.
</p><p>
அதேவேளை, வடக்கு மாகாணத்தில் உள்ள பல துறைகளில், குறிப்பாக மேலதிக
கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ளும் உத்தியோகத்தர்களுக்குக் கூட, அவர்களது
பணியின் தன்மைக்கு ஏற்ப விரல் அடையாளப் பதிவு தொடர்பில் பொருத்தமான மாற்று
நடைமுறைகள் அல்லது விலக்குகள் நடைமுறையில் உள்ளன. இத்தகைய நிலையில், மேலதிக
கொடுப்பனவு எதுவும் பெறாமல், அலுவலக நேரத்திற்கு அப்பாலும் தொடர்ந்து
அதிகளவில் களப்பணிகளில் ஈடுபடும் கால்நடை வைத்தியர்களுக்கு மட்டும் அனைத்து
நாட்களிலும் விரல் அடையாளப் பதிவு செய்ய வேண்டும் என இந்நடைமுறையைத் திணிப்பது
நியாயமானதல்ல. </p><p>இது கால்நடை வைத்தியர்களின் தொழில் உரிமை மற்றும் பணியுரிமை
சார்ந்த முக்கியமான பிரச்சினையாகும்.

எமது போராட்டம் பண்ணையாளர்களுக்கு எதிரானது அல்ல. பண்ணையாளர்களுக்கு
தொடர்ச்சியான, விரைவான மற்றும் தரமான கால்நடைச் சேவையை வழங்குவதற்குத் தேவையான
சரியான நிர்வாக மற்றும் சேவை ஏற்பாடுகளை உறுதி செய்வதே எமது நோக்கமாகும்.

எமது நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டால், பண்ணையாளர்களின் நலனை
முன்னிறுத்தி எமது தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர நாம் தயாராக
உள்ளோம் என அறியத்தருகிறோம்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T12:37:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அசத்தலாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய ஹன்சிகா மோத்வானி... குவியும் லைக்குகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/hansika-motwani-vinayagar-chaturthi-pic-viral-1789386101"></link>
            <id>https://manithan.com/article/hansika-motwani-vinayagar-chaturthi-pic-viral-1789386101</id>
            <summary type="text">நடிகை ஹன்சிகா மோத்வானி தனது கணவர் தொழிலதிபர் சோஹைல் கதுரியாவிடமிருந்து சமீபத்தில் விவாகரத்து பெற்று அதிகாரபூர்வமாக பிரிந்தார்.இந்நிலையில், விநாயகர் சத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை ஹன்சிகா மோத்வானி தனது கணவர் தொழிலதிபர் சோஹைல் கதுரியாவிடமிருந்து சமீபத்தில் விவாகரத்து பெற்று அதிகாரபூர்வமாக பிரிந்தார்.இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை வெகு விமர்சையாக கொண்டாடி ஹன்சிகா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகியுள்ளது.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">நடிகை ஹன்சிகா மோத்வானி</span></h2><p>தென்னிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக ஒரு காலகட்டத்தில் வலம் வந்த நடிகை ஹன்சிகா மோத்வானி&nbsp;தனுஷ் நடிப்பில் வெளியான ‛மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5962ef84-400f-4111-836f-d02925060cd1/26-6aa7e96ea2ed3.webp' /></p><p></p><p>அதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக ‛ஒரு கல் ஒரு கண்ணடி, ரவி மோகனுக்கு ஜோடியாக எங்கேயும் காதல், சித்தார்துடன் தீயா வேலை செய்யனும் குமாரு, ஆர்யாவுடன் சேட்டை, விஜய்க்கு ஜோடியாக வேலாயுதம், சிம்புவுடன் வாலு' சிவகார்திகேயனுடன் மான் கராத்தே என அடுத்தடுத்து டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.</p><p>தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வந்த ஹன்சிகா, 2022ம் ஆண்டு டிசம்பரில் தனது நீண்ட நாள் நண்பர் சோஹேல் கதூரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7e5dfe6-540d-45ca-bca1-0f417046b31a/26-6aa7e96f671bc.webp' /></p><p>இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அரண்மனையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

தனது நெருக்கமான தோழியாக இருந்த பெண்ணின் முன்னாள் கணவரை ஹன்சிகா கரம்பிடித்ததால் இந்த விடயம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p>ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே ஹன்சிகா மற்றும் சோஹேல் ஆகியோர் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர் என்றும், விவாகரத்து செய்யப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி இணையத்தில் புதிய புயலை கிளப்பியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/124dff4f-4f9b-4390-a9bf-4d3acf933eb4/26-6aa7e9701d6ef.webp' /></p><p></p><p>
அதனை தொடர்ந்து விவாகரத்து வழக்கில் இருவரும் ஒப்புதலுடன் (mutual consent)சட்டபூர்வமாக பிரிந்தார்கள்.தற்போது சிங்கிளாகவே வாழ்க்கை என்ஜாய் செய்யும், ஹன்சிகா மோத்வானி அடிக்கடி சுற்றுலா சென்று புகைப்படங்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றார்.</p><p>இந்நிலையில்,&nbsp;நாயகர் சதுர்த்தியை வெகு விமர்சையாக கொண்டாடி ஹன்சிகா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DdQyipvjkw8/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DdQyipvjkw8/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DdQyipvjkw8/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Hansika Motwanni (@ihansika)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T12:36:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் முதல்வர் விஜய் முன்னிலையில் ரூ.11,000 கோடி முதலீடு மற்றும் 2 GCC ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tamilnadu-sign-2-gcc-11000-cr-mou-in-vijay-uk-trip-1789389200"></link>
            <id>https://news.lankasri.com/article/tamilnadu-sign-2-gcc-11000-cr-mou-in-vijay-uk-trip-1789389200</id>
            <summary type="text">tamilnadu signs 2 gcc and 11,000 crores in mou in cm vijay uk visit: லண்டனில் முதல்வர் விஜய் முன்னிலையில், தமிழ்நாட்டில் சுமார் ரூ.11,000 கோடி முதலீட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>tamilnadu signs 2 gcc and 11,000 crores in mou in cm vijay uk visit: லண்டனில் முதல்வர் விஜய் முன்னிலையில், தமிழ்நாட்டில் சுமார் ரூ.11,000 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் GCCs விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும் 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
</p><h3>
முதல்வர் விஜய்யின் பிரித்தானியா பயணம்</h3><p> 
 
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக பிரித்தானியாவிற்கு சென்றுள்ளார். 

அங்கு லண்டன் வாழ் தமிழர்கள் முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab8b1491-a6cb-4e59-a5a8-3d09d803b9e9/26-6aa7e99221c35.webp' /></p><p> 

இந்த பயணத்தின் ஒருபகுதியாக சில்வர்ஸ்டோர் சர்க்யூட் மைதானத்தில், நடிகர் அஜித் கலந்துகொண்ட கார் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.&nbsp;</p><p></p><h3> 

கையெழுத்தான 3 ஒப்பந்தங்கள் </h3><p>

இந்நிலையில், இன்று முதல்வர் விஜய் முன்னிலையில், தமிழ்நாட்டில் சுமார் ரூ.11,000 கோடி முதலீட்டில், சுமார் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb9edbe6-dadd-46d3-a369-3ac78993be2a/26-6aa7e992cc972.webp' /></p><p>

இங்கிலாந்து, இலண்டன் நகரில் இன்று (14.09.2026), சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Ltd.,) நிறுவனம் அதன் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து, வழிகாட்டி நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் சுமார் ரூ.11,000 கோடி முதலீட்டில், வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, கூட்டிணைப்பு (Assembly) மற்றும் தளவாட வசதிகள் ஆகிய துறைகளில் சுமார் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/723cebce-617a-41cd-b957-a81fb474b3ed/26-6aa7e99382233.webp' /></p><p>


அதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres - GCCs) விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.&nbsp;</p><p></p><p>
இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி உலகளாவிய தகவல் தொடர்பு நிறுவனம் ஒன்று, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையத்தை (GCC) அமைப்பதற்கு ஏதுவாக, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம், ஏர்ன்ஸ்ட் &amp; யங் (Ernst &amp; Young) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f340e1e1-255b-403a-b2c8-70e1721b079a/26-6aa7e994eb2f5.webp' /></p><p>

சுமார் 1,000 கோடி ரூபாய் முதலீட்டையும், 2,000-க்கும் மேற்பட்ட உயர் மதிப்புடைய புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் வகையில் அமையவுள்ள இந்த மையம், சென்னையில் உள்ள மவுண்ட் பூந்தமல்லி சாலையில் புதிதாக அறிவிக்கப்பட்ட 'GCC காரிடார்' (GCC corridor) பகுதியில் அமைக்கப்படவுள்ளது.</p><p>

ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குரூப், தமிழ்நாட்டில் எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் ஆகிய துறைகளில் 600 உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் உள்ள தனது உலகளாவிய திறன் மையங்களை, தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் விரிவாக்குவதற்கு உறுதியளித்து, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e106763d-dede-4bcc-ad16-8169bc975a9a/26-6aa7e9943816b.webp' /></p><p>
முதல்வர் விஜய் முன்னிலையில், சிக்மா டெக்னாலஜி குரூப் (Sigma Technology Group) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் கார்ல்சன் மற்றும் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், தலைமை நிர்வாக அதிகாரி, ஸ்ரியா (Sigma AB Pvt Ltd-இன் ஒரு பகுதி)மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி (Guidance) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. தீபக் ஜேக்கப் IAS ஆகியோருக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.</p>]]></content>
            <updated>2026-09-14T12:35:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[13 நாட்களில் 2 ஆயிரத்தை கடந்த டெங்கு நோயாளர்கள் - பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-cases-cross-2-000-in-13-days-1789389062"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-cases-cross-2-000-in-13-days-1789389062</id>
            <summary type="text">இலங்கையில் இதுவரையில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. 

இதற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இதுவரையில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. </p><p>

இதற்கமைய, நாட்டில் 9 மாதங்களில், 97,637 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2> 

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு</h2><p>
அத்துடன், இந்த காலபகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 74 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb8814c9-ef5e-47e2-ba52-01417e20b537/26-6aa7e908c4e83.webp' /></p><p>

இதற்கிடையில், செப்டம்பர் மாதத்தின் தொடங்கிய, 13 நாட்களில் மட்டும் 2,146 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
</p><p>
இந்த நிலையில் கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 20,742 நோயாளர்களும், கொழும்பு மாவட்டத்தில் 19,235 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 7,291 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 6,247 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T12:31:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் மீன்பிடி படகு மூழ்கி விபத்து - நீரில் தவித்த இருவர் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-people-rescued-near-bc-ferry-terminal-1789386357"></link>
            <id>https://canadamirror.com/article/two-people-rescued-near-bc-ferry-terminal-1789386357</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ட்ஸவாசென் படகு முனையம் அருகே மீன்பிடிப் படகு ஒன்று மூழ்கியதில், கடலில் தவித்த இருவர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் உயிருடன் மீட்கப்பட்டனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ட்ஸவாசென் படகு முனையம் அருகே மீன்பிடிப் படகு ஒன்று மூழ்கியதில், கடலில் தவித்த இருவர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் உயிருடன் மீட்கப்பட்டனர்.
</p><p>ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:20 மணியளவில் ட்ஸவாசென் முனையம் அருகே இருவர் நீரில் தவிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
</p><p>பி.சி. ஃபெரிஸ் நிறுவனத்தின் 'ஸ்பிரிட் ஆஃப் பிரிட்டிஷ் கொலம்பியா' மற்றும் 'கோஸ்டல் ரெனடைசன்ஸ்' ஆகிய இரு கப்பல்களிலிருந்தும் மீட்புப் படகுகள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b32d374b-c9c2-4516-a400-578d0e1966e8/26-6aa7de7771c64.webp' /></p><p>
</p><p>மூழ்கிய மீன்பிடிப் படகில் இருந்த இருவரையும் மீட்டு, ட்ஸவாசென் முனையத்திற்குப் பத்திரமாகக் கொண்டு வந்தனர்.
</p><p>பி.சி. அவசர மருத்துவ உதவி சேவை மற்றும் உள்ளூர் காவல்துறை சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். </p><p>முனையத்தில் முதலுதவி அளிக்கப்பட்ட பின், இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.</p><p> தற்போது இருவரது உடல்நிலையும் சீராக உள்ளது.
இந்த மீட்பு நடவடிக்கை காரணமாக ட்ஸவாசென் மற்றும் டியூக் பாயிண்ட் இடையேயான படகு சேவைகளில் தாமதம் ஏற்பட்டது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T12:30:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[க. பொ.த சாதாரண தர பாடங்களில் ஏற்படவுள்ள மாற்றம் ; வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/changes-coming-to-g-c-e-o-l-subjects-in-sri-lanka-1789388377"></link>
            <id>https://jvpnews.com/article/changes-coming-to-g-c-e-o-l-subjects-in-sri-lanka-1789388377</id>
            <summary type="text">கல்வி பொதுத் தராதார சாதாரண தரத்திற்காக வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உட்பட 7 பாடங்களை உள்ளடக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி சீர்திருத்தங்கள் த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கல்வி பொதுத் தராதார சாதாரண தரத்திற்காக வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உட்பட 7 பாடங்களை உள்ளடக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான உபகுழுவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இக்குழு அண்மையில் கூடியபோதே இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17222359-ca44-401c-8fde-412fca777ab5/26-6aa7e65b10c33.webp' /></p><h2 style="text-align: justify; ">கல்விச் சீர்திருத்தங்கள்</h2><p style="text-align: justify; "> 

இதன்போது 12 மற்றும் 13ஆம் தரங்களுக்கு சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் ஒழுக்கநெறி ஆகிய தொகுதிகளை (Modular) உள்ளடக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. </p><p style="text-align: justify; ">

இங்கு 2027ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பொதுக் கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் முன்பள்ளிக் கல்விச் சீர்திருத்தங்களின் முன்னேற்றம் குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

பொதுக் கல்விச் சீர்திருத்தங்களின் ஆரம்பக் கட்டமாக 2 மற்றும் 6ஆம் தரங்களுக்குத் தேவையான செயற்பாட்டுப் புத்தகங்கள், ஆசிரியர் வழிகாட்டிகள் மற்றும் தொகுதிகள் (Modules) தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தொடர் திட்டங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதாக பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "> 

முன்பள்ளிக் கல்வியை முறைப்படுத்துவதற்காக தேசிய முன்பள்ளிக் கொள்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதுடன், முன்பள்ளிகளைப் பதிவுசெய்தல், பாடத்திட்டங்கள் மற்றும் ஆசிரியர் வழிகாட்டிகளைத் தயாரித்தல் மற்றும் ஆசிரியர் பயிற்சித் திட்டங்களை முன்னெடுப்பது உள்ளிட்ட பணிகள் இடம்பெற்று வருவதாகவும் இங்கு மேலும் வெளிப்படுத்தப்பட்டது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-14T12:20:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன் நகரில் வாடகை நிலுவை செலுத்தாத 10 கடைகளுக்கு சீல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/10-shops-in-hatton-sealed-for-non-payment-of-rent-1789387793"></link>
            <id>https://tamilwin.com/article/10-shops-in-hatton-sealed-for-non-payment-of-rent-1789387793</id>
            <summary type="text">ஹட்டன் நகரில் வாடகை நிலுவையை செலுத்தத் தவறிய 10 கடைகளுக்கு இன்று(14.9.2026) சீல் வைக்கப்பட்டுள்ளதாக நகரசபையின் தலைவர் அசோக கருணாரத்ன தெரிவித்தார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் நகரில் வாடகை நிலுவையை செலுத்தத் தவறிய 10 கடைகளுக்கு இன்று(14.9.2026) சீல் வைக்கப்பட்டுள்ளதாக நகரசபையின் தலைவர் அசோக கருணாரத்ன தெரிவித்தார்.
</p><p>
ஹட்டன் நகர சபைக்கு சொந்தமான கடை அறைகளுக்கான வாடகை நீண்ட காலமாக
செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ள நிலையில், அவற்றை அறவிடும் நடவடிக்கையின் ஒரு
கட்டமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, ஹட்டன்–டிக்கோயா நகர சபைக்கு சொந்தமான
வர்த்தக நிலையங்களில் இருந்து நிலுவையில் உள்ள வாடகை மற்றும் ஏனைய கட்டணங்களை
அறவிடுவதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நகர சபை
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>சிவப்பு அறிவித்தல்</h2><p>

இதன் அடிப்படையில், ஹட்டன் நகரில் நீண்ட காலமாக வாடகை நிலுவையை செலுத்தாத கடை
உரிமையாளர்களுக்கு பல தடவைகள் அறிவித்தல்கள் வழங்கப்பட்டதுடன், இறுதி
எச்சரிக்கையாக சிவப்பு அறிவித்தல்களும் வழங்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66f1628d-811f-492a-923d-77d207b44d2a/26-6aa7e67a4c8ed.webp' /></p><p>
</p><p>
எனினும், உரிய காலத்திற்குள் நிலுவைத் தொகையை செலுத்தாத 10 கடைகளுக்கே இன்று
சீல் வைக்கப்பட்டுள்ளதாக நகர சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.&nbsp;</p><p>ஹட்டன்–டிக்கோயா நகர சபையின் தலைவர் அசோக கருணாரத்ன தெரிவிக்கையில்,

நகர சபைக்கு சொந்தமான கடைகளில் இருந்து இதுவரை சுமார் 14 கோடி ரூபாய் வரையிலான
வாடகை நிலுவைத் தொகை அறவிடப்பட வேண்டியுள்ளது.</p><h2>நிலுவைத் தொகை</h2><p>&nbsp;நீண்ட காலமாக பெருந்தொகையான வாடகை நிலுவையை செலுத்தாத கடை உரிமையாளர்களுக்கு
பல சந்தர்ப்பங்களில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட போதிலும், நிலுவைத் தொகை
செலுத்தப்படாத நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99e69896-5816-4e04-8aab-e50914791055/26-6aa7e67b27c21.webp' /></p><p>மேலும், சில கடை உரிமையாளர்கள் சீல் வைக்கப்பட்ட பின்னர் குறிப்பிட்ட தொகையை
செலுத்தி, மீதமுள்ள நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு கால அவகாசம்
கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T12:20:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கட்டளை மீறிச்சென்ற டிப்பர் வாகனங்கள்: காவல்துறை துப்பாக்கி சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tipper-truck-transporting-illegally-sand-jaffna-1789386717"></link>
            <id>https://ibctamil.com/article/tipper-truck-transporting-illegally-sand-jaffna-1789386717</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், கொடிகாமம் - மீசாலை வடக்கு புத்தூர் வீதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்று, சமிக்ஞையை மீறி தப்பிச் செல்ல முயன்ற இரண்டு டிப்பர் வாகனங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், கொடிகாமம் - மீசாலை வடக்கு புத்தூர் வீதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்று, சமிக்ஞையை மீறி தப்பிச் செல்ல முயன்ற இரண்டு டிப்பர் வாகனங்கள் மீது காவல்துறை விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.</p><p> 

நேற்று(13.09.2026) இரவு 11.15 இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>

சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற இரு டிப்பர் வாகனங்களை புத்தூர் வீதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வழிமறித்துள்ளனர்.</p><p></p><h2>சாரதிகள் இருவரும் கைது</h2><p> </p><p>

இருப்பினும், அவர்களின் சமிக்ஞையை மீறி வாகனங்கள் நிறுத்தப்படாமல் வேகமாகச் சென்றுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bfc6853-92a6-4cb6-90b8-9a0f166bbef6/26-6aa7e4df78081.webp' /></p><p> </p><p>

இதனையடுத்து, அதிரடிப்படையினர் குறித்த டிப்பர் வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி அவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். </p><p>

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சோதனையில் இரு டிப்பர் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவற்றைச் செலுத்தி வந்த சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர். </p><p>

இச்சம்பவம் தொடர்பில் கொடிகாமம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T12:14:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[டீசல் விற்பனையால் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் பெரு நட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/petroleum-corporation-losses-from-diesel-sales-1789386153"></link>
            <id>https://ibctamil.com/article/petroleum-corporation-losses-from-diesel-sales-1789386153</id>
            <summary type="text">டீசல் விற்பனையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார்.

இருப்பினும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>டீசல் விற்பனையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார்.
</p><p>
இருப்பினும், பெட்ரோல் விற்பனை மூலம் எந்தவொரு தனியார் எண்ணெய் நிறுவனத்திற்கும் நஷ்டம் ஏற்படுவதில்லை என்று தலைவர் குறிப்பிடுகிறார்.</p><h2>நஷ்டத்தை சமாளிக்க முடியும்&nbsp;</h2><p>தற்போது எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு ஒரு லிட்டர் டீசலுக்கு சுமார் ரூ. 60 நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறிய தலைவர், கடந்த காலங்களில் சுத்திகரிப்பு மூலம் கிடைத்த இலாபத்தைக் கொண்டு இந்த நஷ்டத்தை சமாளிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c64f1ea5-6b65-4ea5-8dfd-46f59572c4d7/26-6aa7e42695f3e.webp' /></p><p>

இன்று (14) நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது எண்ணெய் கூட்டுத்தாபனத் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T12:10:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ காலநிலையில் வாழ்வாதாரங்களை இழந்த இலங்கை மக்கள் - அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankans-lost-their-livelihoods-due-el-ni-o-1789387662"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankans-lost-their-livelihoods-due-el-ni-o-1789387662</id>
            <summary type="text">தற்போது நாட்டில் நிலவும் எல் நினோ காலநிலை காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளதாகவும், குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது நாட்டில் நிலவும் எல் நினோ காலநிலை காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளதாகவும், குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், வறட்சி காரணமாக தோட்டச் செய்கைகளுக்குப் போதுமான நீர் கிடைக்காத நிலையில், நிலங்கள் வறண்டு வருவதால் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p>

இதனால், சிலர் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c5c235c-b35a-4794-97a9-e094068c413f/26-6aa7e3e7f001b.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், கடந்த 16 வருடங்களாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் தென்னைப் பயிர்ச்செய்கை, தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக காய்ந்து போகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்தப் பிரச்சினையை அரசாங்க அதிகாரிகள் கவனத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும் எனவும், அவ்வாறு வழங்கினால் தங்களது வாழ்வாதாரங்களைத் தொடர முடியும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36e1e48e-6565-40a6-865c-dbb4e2c739be/26-6aa7e3e8da45d.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T12:09:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜிதவுக்கு எதிரான வழக்கு விசாரணை! நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/further-hearing-in-rajitha-case-set-for-november-1789387089"></link>
            <id>https://ibctamil.com/article/further-hearing-in-rajitha-case-set-for-november-1789387089</id>
            <summary type="text">
முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக, 2012 ஆம் ஆண்டு முகத்துவாரம் மீன்பிடித் துறைமுகத்தை தனியார் நிறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>
முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக, 2012 ஆம் ஆண்டு முகத்துவாரம் மீன்பிடித் துறைமுகத்தை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (14) மேலதிக விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. &nbsp;</p><p> 

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹைல் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
விசாரணையின் போது, முறைப்பாட்டாளர் தரப்பினால் முன்னிலைப்படுத்தப்பட்ட சாட்சிகளிடம் இருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளால் குறுக்கு விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba8fc6a3-ace6-4d9e-94ca-3b532f58e042/26-6aa7e3d1385c6.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து, வழக்கு குறித்த மேலதிக விசாரணையை எதிர்வரும் நவம்பர் 17 ஆம் திகதி வரை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T12:08:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[தள்ளாடிய அணி..7 சிக்ஸர்களுடன் 29 பந்தில் 68 ஓட்டங்கள் விளாசிய அமீரக வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/khuzaima-tanveer-blast-68-runs-uae-won-by-6-wkts-1789386839"></link>
            <id>https://news.lankasri.com/article/khuzaima-tanveer-blast-68-runs-uae-won-by-6-wkts-1789386839</id>
            <summary type="text">UAE beat malaysia by 6 wickets: ஐக்கிய அரபு அமீரக அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மலேசியாவை வீழ்த்தியது. 


மலேசியா அணிக்கு எதிரான டி20 போட்டிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>UAE beat malaysia by 6 wickets: ஐக்கிய அரபு அமீரக அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மலேசியாவை வீழ்த்தியது. </p><p>


மலேசியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>ஆயன் அஃப்ஸல்&nbsp;அபார பந்துவீச்சு </h2><p>
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மலேசியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கோலாலம்பூரில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4724cb1-90cc-4e30-a0f0-6030a658f485/26-6aa7ef5227757.webp' /></p><p></p><p>
முதலில் ஆடிய மலேசிய அணியில் விரன்தீப் சிங் 32 ஓட்டங்களும், சையத் அஸிஸ் 28 ஓட்டங்களும் எடுத்தனர். </p><p>

இதன்மூலம் மலேசியா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ஓட்டங்கள் எடுத்தது. ஆயன் அஃப்ஸல் கான் 3 விக்கெட்டுகளும், குஸைமா தன்வீர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1d31749-6086-4e91-9546-e089a6110617/26-6aa7e34557231.webp' /></p><h2> 

குஸைமா தன்வீர்</h2><p>பின்னர் ஆடிய அமீரக அணியில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிய, 67 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை அணி இழந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50990714-cce5-4a08-9b16-39480cbda35a/26-6aa7e34650712.webp' /></p><p>
அப்போது அதிரடியில் மிரட்டிய குஸைமா தன்வீர் (Khuzaima Tanveer) 29 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 68 ஓட்டங்கள் விளாச, அமீரக அணி 16.5 ஓவர்களில் 150 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.</p><p>அரைசதம் விளாசியதுடன் 2 விக்கெட்களும் வீழ்த்திய குஸைமா தன்வீர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68a76247-d76e-4192-83d6-c9df0cec4624/26-6aa7e3470b933.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6d77d12-dbde-49dd-b9d5-d8c590706871/26-6aa7e347b347d.webp' /></p>]]></content>
            <updated>2026-09-14T12:03:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடும்பத்திற்குள்ளேயே நடந்த சதியால் துரோகத்தில் சிக்கிய கோட்டாபய]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-was-betrayed-by-family-1789384066"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-was-betrayed-by-family-1789384066</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக சதித் திட்டம் ஒன்று தீட்டப்பட்டிருந்தமைக்கான வலுவான சாட்சியங்கள் தற்போது வெளிவந்துள்ளதாக தென்னிலங்கை ஊ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக சதித் திட்டம் ஒன்று தீட்டப்பட்டிருந்தமைக்கான வலுவான சாட்சியங்கள் தற்போது வெளிவந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.</p><p> 

ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் எதிர்காலத்தை நாமல் ராஜபக்சவிடம் கையளிப்பதற்காக இந்த சதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
</p><p>
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச போட்டியிட, ஷிராந்தி, மகிந்த உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.</p><p> </p><h2><b>

 துரோகத்தில் சிக்கிய கோட்டாபய </b></h2><p> அதற்கு எதிராக கடும் நிலைப்பாட்டில் அவர்கள் இருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bd68079-94c4-423f-b672-9bfcb0d30177/26-6aa7e23d370c4.webp' /></p><p>எனினும், வியத்மக அமைப்பை நிறுவி, அரசியல் களத்தை அமைத்துக்கொண்டு முன்னோக்கி வந்த கோட்டாபய ராஜபக்ச, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தனது வேட்புமனுவை வலுவாக உறுதிப்படுத்திக் கொண்டார்.
</p><p>
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர், நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று கோட்டாபய ராஜபகச் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொண்டார்.
</p><p>
இந்த நிலையில் கோட்டாபயவிற்கு எதிராக, நாமல் ராஜபக்சவின் அரசியல் பெரிய அண்ணா என்று வர்ணிக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் தலைமையில் அரசாங்கத்திற்குள் உட்கட்சி மோதல் ஏற்பட்டது.</p><h3><b>

ராஜபக்சவின் அரசியல்</b></h3><p>இதனால், 2022ஆம் ஆண்டு மார்ச் 03 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/431da20b-02c7-4d83-b5dd-592b770adb59/26-6aa7e23ded411.webp' /></p><p>அதனைத் தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர்கள் இருவரும் இனி ஒருபோதும் ராஜபக்சக்களுடன் அரசியல் செய்யப்போவதில்லை எனத் தெரிவித்திருந்தனர்.
</p><p>
ஆனால், தற்போது கோட்டாபய ராஜபக்சவை முற்றிலும் கைவிட்டுவிட்டு, அவர்கள் இருவரும் உள்ளிட்ட தரப்பினர் தற்பொழுது நாமல் ராஜபக்சவுடன் கைகோர்த்து கொண்டதன் ஊடாக இந்த தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-14T12:03:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[துருக்கி பில்லியனரின் விமானம் விபத்தில் சிக்கியது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/turkey-billionaire-plane-crash-in-libya-airport-1789387271"></link>
            <id>https://news.lankasri.com/article/turkey-billionaire-plane-crash-in-libya-airport-1789387271</id>
            <summary type="text">turkey billionaire Hamdi Akın private plane crash at libya airport: துருக்கி பில்லியனர் ஹம்டி அகினுக்கு சொந்தமான வர்த்தக விமானம் லிபியாவில் தரையிறங்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>turkey billionaire Hamdi Akın private plane crash at libya airport: துருக்கி பில்லியனர் ஹம்டி அகினுக்கு சொந்தமான வர்த்தக விமானம் லிபியாவில் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியுள்ளது. </p><h3>

விபத்தில் சிக்கிய துருக்கி பில்லியனரின் விமானம்
</h3><p>
துருக்கியின் இஸ்தான்புல் அத்தாதுர்க் விமான நிலையத்திலிருந்து, செஸ்னா சிடேஷன் லாட்டிட்யூட் வர்த்தக விமானம் லிபியாவுக்குச் சென்று கொண்டிருந்தது.</p><p>

உள்ளூர் நேரப்படி காலை 10:07 மணிக்கு மிஸ்ராட்டா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்று தீப்பிடித்து விபத்தில் சிக்கியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27db9c99-b561-4f13-a654-3cce58ffc595/26-6aa7e208ef020.webp' /></p><p>விமான நிலைய அவசர மீட்புக் குழுவினர் விரைந்து சென்று தீயை அணைத்து, விமானத்தில் இருந்த 2 விமானிகள் மற்றும் ஒரு விமானப் பணியாளரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

மூவரும் காயமின்றி நலமுடன் உள்ளதாக தெரிய வந்துள்ளது. </p><p>இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விமானப் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டதாக லிபியாவின் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p>
துருக்கியிலிருந்து வந்த அந்த விமானம், 3 லிபிய அரசியல் பிரமுகர்களை துருக்கிக்கு ஏற்றிச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. </p><p>

இவர்களில், திரிப்போலியைத் தளமாகக் கொண்ட பாதுகாப்புத் துறை துணைச் செயலாளர் அப்தெல்சலாம் ஜூபியின் சகோதரரான முகமது ஜூபியும் அடங்குவார்.
</p><p>
TC-AKF என்ற பதிவு எண்ணைக் கொண்ட இந்த வர்த்தக விமானமானது துருக்கி தொழிலதிபர் ஹம்டி அகினுக்குச் சொந்தமானது ஆகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e22d6517-142f-4c70-a9ac-1cbff16e9ed3/26-6aa7e209a176c.webp' /></p><p>

72 வயதான ஹம்டி அகின், அக்ஃபென் ஹோல்டிங்கின் இயக்குநர்கள் குழுவின் தலைவர் ஆவார்.</p><p> 

போர்ப்ஸ் நிறுவன மதிப்பீட்டின் படி, ஹம்டி அகின் 2.7 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் துருக்கியின் முதல் 10 பணக்கார பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T12:01:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வீடொன்றுக்குள் அரங்கேறிய தகாத செயல் ; வசமாக பிடிபட்ட இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/improper-act-reported-inside-jaffna-house-1789386349"></link>
            <id>https://jvpnews.com/article/improper-act-reported-inside-jaffna-house-1789386349</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 210 லீட்டர் கசிப்பும் மீட்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 210 லீட்டர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது</p><p style="text-align: justify; "> 

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அச்செழு பகுதியில் வீடொன்றினுள் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டினை பொலிசார் சுற்றி வளைத்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a940893-40b6-4c7f-a421-fcebf77d1249/26-6aa7de6f5cb47.webp' /></p><h2 style="text-align: justify; ">கசிப்பு உற்பத்தி</h2><p style="text-align: justify; "> 

வீட்டினுள் பொலிஸார் சென்ற வேளையில் பெரிய பரலில் எரிவாய்வை பயன்படுத்தி கசிப்பு காய்ச்சிக்கொண்டிருந்த 34 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்தனர்.</p><p style="text-align: justify; ">அதனை அடுத்து வீட்டில் ஏற்கனவே காய்ச்சி , விற்பனைக்காக வைத்திருந்த 210 லீட்டர் கசிப்பு , 160 லீட்டர் கோடா , ஒரு போத்தல் சாராயம் , எரிவாயு சிலிண்டர் பரல்கள் உள்ளட்டவற்றையும் சான்று பொருளாக பொலிஸார் மீட்டுள்ளனர்</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்ட நபரை அச்சுவேலி போலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-14T12:00:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அலரி மாளிகை வளாகத்தில் விழுந்து கிடந்த றக்பி வீரர் தாஜுதீன்! சிரந்தியால் மூடிமறைக்கப்பட்ட சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/thajudeen-shiranthi-rajapaksa-police-1789371851"></link>
            <id>https://tamilwin.com/article/thajudeen-shiranthi-rajapaksa-police-1789371851</id>
            <summary type="text">அலரி மாளிகையில் ரக்பி வீரரான தாஜுதீன் விழுந்து கிடந்த நிலையில், சிரந்தி ராஜபக்சவின் கோரிக்கைக்கமைய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அநுர சேனநாயக்கவே இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அலரி மாளிகையில் ரக்பி வீரரான தாஜுதீன் விழுந்து கிடந்த நிலையில், சிரந்தி ராஜபக்சவின் கோரிக்கைக்கமைய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அநுர சேனநாயக்கவே இந்த சம்பவத்தை விபத்தாக மாற்றுவதற்கு உதவி செய்தார் என்ற 
திடுக்கிடும் தகவலை புலனாய்வு ஆதரங்களை மேற்கோள் காட்டி இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அஜித் தர்மபால தெரிவித்துள்ளார்.</p><p>

இந்த அமைப்பின் தலைமை அலுவலகம் லண்டனில் அமைந்துள்ளது. </p><p>

இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;&nbsp;</p><h2>

</h2><p></p><h2>அநுர சேனாநாயக்க என்ன சொன்னார்</h2><p>2015ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க - மைத்திரிபால இருவருடைய நல்லாட்சியில் தாஜுதீனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. ஆனால் அதற்கு மேல் செல்வதற்கு அன்றைய ஆட்சியாளர்கள் இடம் கொடுக்கவில்லை.</p><p>

அண்மையில் இந்த சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன. </p><p>

இதற்கமைய, மேற்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இருந்த அநுர சேனநாயக்க, தாஜுதீன் வழக்கில் வெலிக்கடை சிறைச்சாலையின் சிறப்புச் செல்லில் இருந்தபோது அவர் கூறியதே இந்த சம்பவமாகும்.
</p><p>
அநுர சேனநாயக்க அன்று காலை உடற்பயிற்சிக்குச் செல்ல ஆயத்தமாக வெள்ளை நிற காற்சட்டையும் காலணியும் அணிந்திருந்த வேளையில் “சிரந்தி மேடம்” அழைப்பதாக பொலிஸ் காவலர் ஒருவர் கூறினார்.
</p><p>
அநுர சேனநாயக்க தொலைபேசியை எடுத்தபோது “அநுர நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? விரைவில் வீட்டிற்கு வாருங்கள் ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது” என சிரந்தி ராஜபக்ச கூறினார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ecbb19f-52a9-4fb1-a4c3-7f8b02c1f5ab/26-6aa7a5cdaa625.webp' /></p><p>&nbsp;அநுர சேனநாயக்க அந்த ஆடையுடனேயே அலரி மாளிகைக்குச் சென்றுள்ளார். 

அங்கு சென்றபோது “ஒரு சம்பவம் நடந்துவிட்டது எமது பிள்ளைகளைக் காப்பாற்றுங்கள்” என்று சிரந்தி கூறினார்.
</p><p>
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த பொழுது, ரக்பி வீரர் தாஜுதீன் படுகாயமடைந்து விழுந்து கிடந்தார். அநுர சேனநாயக்க தொட்டுப் பார்த்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.</p><p> 

“சிரந்தி மேடம் இந்த பையன் இறந்துவிட்டான்” என்று கூறியதும் “ஏதாவது செய்யுங்கள் அநுர” எனக் கூறினார். 

உடனடியாக அநுர சேனநாயக்க மேலும் சிலருடன் பேசி உடலை நாரஹேன்பிட்டியில் விபத்து நடந்ததாகக் கூறப்படும் இடத்திற்கு கொண்டு சென்று காரின் சாரதி ஆசனத்திற்குப் பக்கத்தில் (இடது பக்க ஆசனத்தில்) வைத்து சம்பவத்தைச் சித்தரித்துள்ளனர்.
</p><p>
நல்லாட்சியில் தாஜுதீன் கடுமையாக தாக்கப்பட்டே கொல்லப்பட்டார் என்றும், விபத்தில் நடந்த மரணம் இல்லை என்றும் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.&nbsp;</p><h2>சி.ஐ.டி விசாரணை</h2><p>நாரஹேன்பிட்டி போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியான ஐ.பி. சுமித்த சில்வாவை அழைத்து அநுர சேனநாயக்க இந்த சம்பவத்தை ஒரு வாகன விபத்தாக மாற்றி, கார் தீப்பற்றி எரிந்த காரணத்தினால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கட்டளையிட்டுள்ளார்.</p><p> 



2015-2016 காலப்பகுதியில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த ஷானி அபயசேகர நடத்தப்பட்ட விசாரணையில் சுமித்த சில்வா கைது செய்யப்பட்டார்.
</p><p>
அப்போது அவர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் அதிபர் அநுர சேனநாயக்கவின் வழிகாட்டலிலேயே தான் இதைச் செய்ததாக நீதிவான் முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார். </p><p>ஆனால் கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக் காலத்தில், ஷானி அபயசேகரவும் அவரது குழுவினரும் தன்னைப் பயமுறுத்தியதாலேயே அவ்வாறு கூறியதாக சுமித்த சில்வா மாறுப்பட்ட கருத்தை கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8663d16-78b4-4475-bc59-c3c9989329d4/26-6aa7a5ce5f7fc.webp' /></p><p>தற்போதைய நிலைமையில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதும் பயணத்தடை விதிக்கப்பட்டிருக்கும்போதும் சுமித்த சில்வா எவ்வாறு அவுஸ்திரேலியாவிற்குச் சென்றார் என்பது கேள்விக்குறியாகவுள்ளது.
</p><p>மேலும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சட்ட மருத்துவ அதிகாரி ஜேம்ஸ் சமரகோன், அநுர சேனநாயக்க மற்றும் சம்பவ இடத்தை சுத்தம் செய்த பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். </p><p>இருப்பினும் தாஜுதீன் கொலைச் சம்பவத்தின் விசாரணைகள் இன்னும் முழுமை பெறவில்லை.</p><p>குறித்த சம்பவத்தில் நேரடியாக தொடர்புபட்டிருந்தவர்கள் மரணமடைந்துள்ள நிலையில் இப்போது வெளிவந்திருக்கும் தகவல்களின் படி மிகவும் பாரதூரமானதாக தோன்றுகிறது.</p><p></p><p>&nbsp; &nbsp;&nbsp;</p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/5sC3lP4KtB4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-14T11:53:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் கடற்தொழிலாளரின் வலையில் சிக்கிய 300 கிலோகிராம் நிறையுடைய பிரம்மாண்ட கொப்பறா மீன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/300-kg-koppara-fish-caught-in-mannar-1789386233"></link>
            <id>https://tamilwin.com/article/300-kg-koppara-fish-caught-in-mannar-1789386233</id>
            <summary type="text">மன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மன்னார் கடற்தொழிலாளர் ஒருவரின் வலையில் இன்று (14.09.2026) அதிகாலை ஆழ்கடல் மீனான “கொப்பறா” என அழைக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மன்னார் கடற்தொழிலாளர் ஒருவரின் வலையில் இன்று (14.09.2026) அதிகாலை ஆழ்கடல் மீனான “கொப்பறா” என அழைக்கப்படும் ஆழ்கடல் மீன் சிக்கியுள்ளது.
</p><p>
சுமார் 300 கிலோகிராம் எடையுடைய குறித்த மீன் ஆழ் கடலில் வாழ்ந்து வரும் நிலையில்
குறித்த கடற்தொழிலாளர்களின் வலையில் சிக்கியுள்ளது.</p><h2>அகப்பட்டுள்ள மீன்</h2><p>இது வேகமாக நீந்தக்கூடிய நீளமான
மூக்குடைய மீன் வகையாகக் காணப்படுகின்றது.
</p><p>இந்த நிலையில் குறித்த பிரம்மாண்டமான மீன் தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில்
கவனம் பெற்றுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T11:52:16+00:00</updated>
        </entry>
    </feed>
