<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-15T11:30:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் ஜயரத்ன ஹேரத் மீண்டும் சுதந்திரக் கட்சியில் இணைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jayarathna-herath-join-slfp-1789469853"></link>
            <id>https://tamilwin.com/article/jayarathna-herath-join-slfp-1789469853</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் ஜயரத்ன ஹேரத் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் மீண்டும் இணைந்து கொண்டுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் ஜயரத்ன ஹேரத் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் மீண்டும் இணைந்து கொண்டுள்ளார்.
</p><p>சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா முன்னிலையில் கட்சியின் இணைந்து கொண்ட ஜயரத்ன ஹேரத், பொல்கஹவெல தேர்தல் தொகுதியின் பிரதம அமைப்பாளராகவும், குருநாகல் மாவட்டத் தலைவராகவும் நியமனக் கடிதங்களைப் பெற்றுள்ளார்.</p><p>ஜயரத்ன ஹேரத் இதற்கு முன்னர் குருநாகல், பொல்கஹவெல மற்றும் மாவத்தகம தேர்தல் தொகுதிகளில் கட்சியையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியையும் அமைப்பாளராகப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.</p><h2>கட்சியில் இணைவு</h2><p> </p><p>பின்னர், அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து, அக்கட்சியின் யாபஹுவ தேர்தல் தொகுதி அமைப்பாளராகவும் பணியாற்றினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05baa36a-dd09-41a0-99f2-b823babc0680/26-6aa92b258efff.webp' /></p><p>
</p><p>
ஜயரத்ன ஹேரத் கட்சியில் மீண்டும் இணைந்து கொண்ட சந்தர்ப்பத்தில், இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க, தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க, பொருளாளர் லசந்த அழகியவன்ன, பிரதி செயலாளர் ஜகத் புஷ்பகுமார மற்றும் முன்னாள் வடமேல் மாகாண அமைச்சரும் குருநாகல் தொகுதி அமைப்பாளருமான லட்சுமன் வெண்டருவ ஆகியோரும் கலந்து கொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T11:25:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன அழுத்ததைன் போக்க கடலை நோக்கி சத்தமிட்ட சென் பிரான்சிஸ்கோ மக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/san-francisco-crowns-a-screaming-champion-1789471703"></link>
            <id>https://canadamirror.com/article/san-francisco-crowns-a-screaming-champion-1789471703</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவின் சென் பிரான்சிஸ்கோ நகரில்,&amp;nbsp; &amp;nbsp;நூற்றுக்கும் மேற்பட்டோர் கடலை நோக்கி ஒரே நேரத்தில் உரக்கச் சத்தமிட்ட வினோத நிகழ்வு இடம்பெற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவின் சென் பிரான்சிஸ்கோ நகரில்,&nbsp; &nbsp;நூற்றுக்கும் மேற்பட்டோர் கடலை நோக்கி ஒரே நேரத்தில் உரக்கச் சத்தமிட்ட வினோத நிகழ்வு இடம்பெற்றுள்ளது.</p><p>மக்களின் மன அழுத்தத்தை வெளிப்படுத்துவதற்கான வித்தியாசமான முயற்சியாக இந்த நிகழ்வு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><h2>கடலை நோக்கி அடிவயிற்றிலிருந்து அலறும் நிகழ்வு</h2><p>

சென் பிரான்சிஸ்கோவின் ஓஷன் பீச் கடற்கரையை ஒட்டியுள்ள ‘விஸ்டா டெல் மார்’ (Vista del Mar )பகுதியில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
</p><p>
“கடலை நோக்கி அடிவயிற்றிலிருந்து அலறும் நிகழ்வு” என்ற பெயரில் சென் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த டேனியல் ஈகன் (Daniel Egan ) என்பவரால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p>

நவீன வாழ்க்கை முறையில் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு அழுத்தங்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு வழியாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, வீட்டு வாடகை உயர்வு, செயற்கை நுண்ணறிவின் வேகமான வளர்ச்சியால் உருவாகும் வேலைவாய்ப்பு குறித்த அச்சம், தனிமை, குடும்பப் பிரச்சினைகள் மற்றும் பொருளாதாரச் சவால்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்படும் மன அழுத்தத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்துவதற்காக மக்கள் இதில் பங்குபற்றனர்.
</p><p>

இந்த நிகழ்வுக்கு முன்னதாக, குரலின் ஒலி அளவு, நீடிக்கும் காலம் மற்றும் கத்தும் பாணி ஆகியவற்றின் அடிப்படையில் போட்டியொன்றும் நடத்தப்பட்டுள்ளது.

இதில் ஒலிம்பியா குக்லியெமோட்டோ என்ற பெண் 121.9 டெசிபல் அளவில் உரக்கச் சத்தமிட்டதன் மூலம் போட்டியில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார். இதற்காக அவருக்கு சிறிய ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசியும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
உரக்கச் சத்தமிடும் போட்டிக்கு முன்னதாக, பங்கேற்பாளர்களுக்கு குரல் தசைகளைத் தயார்படுத்தும் பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இறுதியாக, மாலை வேளையில் போடிடியில் பங்கேற்ற அனைவரும் ஒன்றிணைந்து கடலை நோக்கி ஒரே நேரத்தில் உரக்கக் சத்தமிட்டுள்ளனர்.
</p><p>
நிகழ்வின் நிறைவில், பங்கேற்பாளர்கள் தாங்கள் கொண்டு வந்த பழங்களைப் பகிர்ந்து உண்டு, சமூக ரீதியாக ஒன்றிணைந்து இந்த நிகழ்வை நிறைவு செய்தனர்.</p>]]></content>
            <updated>2026-09-15T11:25:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனாவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தது அரசாங்கம்! எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-rejects-claims-of-diaspora-funding-to-npp-1789468046"></link>
            <id>https://ibctamil.com/article/govt-rejects-claims-of-diaspora-funding-to-npp-1789468046</id>
            <summary type="text">


தேர்தல் பிரசாரத்திற்காகத் தேசிய மக்கள் சக்திக்கு (NPP) புலம்பெயர் தமிழர்கள் நிதி உதவி வழங்கியதாகப் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>


தேர்தல் பிரசாரத்திற்காகத் தேசிய மக்கள் சக்திக்கு (NPP) புலம்பெயர் தமிழர்கள் நிதி உதவி வழங்கியதாகப் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுகளை அரசாங்கம் இன்று நிராகரித்துள்ளது. </p><p>

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
அதன்படி, அர்ச்சுனா வெளியிட்ட பொய் அறிக்கைகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>முறையான விசாரணை</h2><p>
</p><p>
அநுராதபுரத்தில் நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) கூட்டத்தில், தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் அர்ச்சுனா சமீபத்தில் உரையாற்றினார் எனக் கூறப்படும் சம்பவம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஜயதிஸ்ஸ, இது தொடர்பாகப் காவல்துறையினரிடமும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடமும் (CID) முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9dcbbe27-062f-4a45-8077-bb922fe87aa8/26-6aa92a8109cac.webp' /></p><p> 

இந்தச் சம்பவம் தொடர்பாக முறையான விசாரணைகள் நடத்தப்படும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T11:22:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் 37 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்! அமைச்சர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/37-shooting-incidents-reported-in-sri-lanka-1789470651"></link>
            <id>https://tamilwin.com/article/37-shooting-incidents-reported-in-sri-lanka-1789470651</id>
            <summary type="text">இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் 37 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் 37 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>

இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.</p><h2>துப்பாக்கிச் சூடு</h2><p>

பதிவாகியுள்ள 37 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
மேலும், இந்த வருடம் ஜனவரி 1ஆம் திகதி முதல் செப்டெம்பர் 10ஆம் திகதி வரையான காலப்பகுதியில் துப்பாக்கிகள் உள்ளிட்ட 867 ஆயுதங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1aaf461f-72ca-4e89-8295-7b2a2fd88e5e/26-6aa929ceb2cd2.webp' /></p><p>

அவற்றில் T-56 ரக துப்பாக்கிகள் 14, கைத்துப்பாக்கிகள் 31, ரிவோல்வர்கள் 25 உள்ளிட்ட ஏனைய ஆயுதங்களும் அடங்குவதாக அவர் கூறினார்.</p><p>அதேவேளை, 2025ஆம் ஆண்டு முழுவதும் 2,404 ஆயுதங்கள் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T11:19:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழா தமிழா: என் கணவருக்கு நானே சரக்கு ஊத்திக்கொடுக்கணும்!! நெட்டிசன்கள் புலம்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/tamizha-tamizha-a-gen-z-dreams-of-a-husband-1789471513"></link>
            <id>https://viduppu.com/article/tamizha-tamizha-a-gen-z-dreams-of-a-husband-1789471513</id>
            <summary type="text">ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சி தான் தமிழா தமிழா. சமீபத்திய எபிசோட்டில் ஜென் ஜி தலைமுறை பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சி தான் தமிழா தமிழா. சமீபத்திய எபிசோட்டில் ஜென் ஜி தலைமுறை பெண்கள், தங்களின் வருங்காலக் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை வெளிப்படையாக பேசி பலரது விமர்சனத்தையும் பெற்று வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce90dba2-fe8a-4cff-808e-645c69dcad5d/26-6aa92b1b31577.webp' /></p><p>நிகழ்ச்சியின் போது பேசிய ஒரு பெண், எனக்கு வரப்போகும் கணவர் மாதம் ரூ. 3 லட்சம் சம்பளம் வாங்க வேண்டும், பிசினஸ் தான் செய்ய வேண்டும், முழு தாடி இருக்க வேண்டும், கேடிஎம் பைக் வைத்திருக்க வேண்டும் என்று கூறியதோடு, அவருக்கு குடிப்பழக்கம் வேண்டாம் என்று பலர் சொல்வார்கள்ம் ஆனால் நானே அவருக்கு மது ஊற்றிக் கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். </p><p>அப்போது பேசிய தொகுப்பாளர் ஆவுடையப்பன், நீங்கள் ஏன் ஊற்றிக் கொடுக்க வேண்டும் என்றதற்கு, நான் அவருக்கு ஊட்டிவிட வேண்டும், இந்தப் பழக்கத்தால் நிறைய காதல்கள் பிரிந்து போயிருக்கிறது, நான் யாரையும் காதலிக்கவில்லை, எனக்கு இலக்கே அதுதான் சார், நமக்கு ஒருவர் வருகிறார் என்றால் அவருக்கு எல்லாமே நாமே செய்ய வேண்டும், ஊட்டிவுடுவது முதல் சமைப்பது வரை, சாப்பாடு போடுவதில் இருந்து மது ஊற்றிக் கொடுப்பது வரை எல்லாமே நானே பண்ண வேண்டும் என்று கூறியிருக்கிறார் அப்பெண்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6131e2f7-66e7-4b42-9341-73b14258e85f/26-6aa92b1bdc4ee.webp' /></p><p> </p><p>அதற்கு ஆவுடையப்பன், ஊட்டிவிடுவது, ஓகேம்மா, ஊற்றிக் கொடுப்பது எப்படி சரியாகும் என்று கேட்க, குழந்தையை நானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். என் வருங்கால கணவருக்கு சரக்கு ஊற்றிக் கொடுக்க வேண்டும் என்பது என் கனவு சார், சின்ன வயசில் என் அம்மா, என் அப்பாவுக்கு குடிக்கக்கூடாது என்று கூறிக்கொண்டே இருப்பார், அதனால் என் அப்பா மிகவும் டார்ச்சராகிவிட்டார்.</p><p> அவருக்கு நிறைய நோய்கள் எல்லாம் வந்தது சார், என் கணவர் அதுபோல் ஆகக்கூடாது என்பதற்காக நானே அவருக்கு ஊற்றிக் கொடுக்க நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார் அப்பெண். இதனை பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ta" dir="ltr">எனக்கு வர போற புருஷனுக்கு 3 லட்சம் சம்பளம் இருக்கணும். இருந்தா அவனுக்கு நானே சரக்கு ஊத்தி குடுப்பேன், அதான் என் கனவு - genz<br>அடடா..என்ன மாதிரியான கனவு <a href="https://t.co/IKEMa6GRsy">pic.twitter.com/IKEMa6GRsy</a></p>&mdash; Nordnomad (@arcot2arctic) <a href="https://x.com/arcot2arctic/status/2099159357082525945?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-09-15T11:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் சிறைக்கு செல்வதை எவரும் தடுக்கமுடியாது:எதிரணி எம்.பி உறுதிபட தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-cannot-be-stopped-from-going-to-jail-1789469944"></link>
            <id>https://ibctamil.com/article/namal-cannot-be-stopped-from-going-to-jail-1789469944</id>
            <summary type="text">விளக்கமறியலில் இருக்கும் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் அவர் பத்து சிறைச்சாலைகளில் இருப்பதை தடுக்க முடியாது என ஐக்கிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விளக்கமறியலில் இருக்கும் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் அவர் பத்து சிறைச்சாலைகளில் இருப்பதை தடுக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின்நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.</p><p> நாட்டை வங்குரோத்து அடையச் செய்த ராஜபக்சவை 2022ஆம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதியாக அமர வைப்பதில் நாட்டு மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><h2>நாமலை ஜனாதிபதியாக்கினால் அவர்கள் மக்களே அல்ல</h2><p>2029 ஆம் ஆண்டு நல்ல பிள்ளை என்று கூறி நாமலை ஜனாதிபதியாக்க யாராவது கை ஓங்கினால் அவர்கள் மக்களாக இருக்க முடியாது எனவும் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90770386-92a1-44d6-9f25-8436323fd6b6/26-6aa92753a1ae4.webp' /></p><p>தம்மைப் போல் அல்லாமல் ராஜபக்சாக்களிடம் பணம் இருப்பதால் எந்நேரமும் பேருந்துகளில் மக்களை ஏற்றிக்கொண்டு பேரணிகளை நடத்தலாம் என்றாலும் அதுபற்றி அவ்வளவாக சிந்திக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T11:09:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தடை செய்யப்பட்ட வலைகள் பயன்பாடு! வட மாகாண கடற்றொழில் சங்கங்கள் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/northern-province-fisheries-societies-press-meet-1789467225"></link>
            <id>https://tamilwin.com/article/northern-province-fisheries-societies-press-meet-1789467225</id>
            <summary type="text">உள்ளூர் கடற்தொழிலாளர்கள் சிலர் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி கடல் வளத்தை அழித்து வருவதாக வடக்கு மாகாண கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தினர் தெரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உள்ளூர் கடற்தொழிலாளர்கள் சிலர் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி கடல் வளத்தை அழித்து வருவதாக வடக்கு மாகாண கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தினர் தெரிவித்துள்ளனர். </p><p>

இது தொடர்பான ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் இன்றைய தினம் (15.09.20263) இடம்பெற்றிருந்தது.</p><h2>தடை செய்யுமாறு கோரிக்கை</h2><p> </p><p>

சட்டவிரோத கடற்றொழில்களை தடை செய்யுமாறு கோரி வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சங்கங்களை சேர்ந்தவர்கள் இன்றைய தினம் ஊடக சந்திப்பு ஊடாக தமது கருத்துக்களை முன்வைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c023121-b0ea-4f00-a298-a5f2f1c6480e/26-6aa926cc0730d.webp' /></p><p> </p><p>

இதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில், நீண்ட காலமாக குறித்த பகுதிகளில் உள்ள உள்ளூர் கடற்தொழிலாளர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி கடல் வளத்தை அழித்து வருகின்றனர்.</p><h2>பாதிப்பு</h2><p>
</p><p>
இதனால் ஏனைய சிறு தொழில் கடற்தொழிலாளர்கள் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாகுகின்றனர். 

சட்டவிரோத தொழிலை நிறுத்துவதற்கு கடற்படை முயற்சிகளை எடுத்து வரும் நிலையிலும் சில அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இதற்கு உடந்தையாக காணப்படுகின்றனர்.
</p><p>
எனவே தடை செய்யப்பட்ட வலைகள் பயன்பாட்ட கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு உரிய தரப்புகள் முன் வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-15T11:07:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் சற்று குறைந்த தங்கம் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gold-prices-have-dropped-slightly-in-sri-lanka-1789470625"></link>
            <id>https://jvpnews.com/article/gold-prices-have-dropped-slightly-in-sri-lanka-1789470625</id>
            <summary type="text">&amp;nbsp; நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (15) 24 கரட் தங்கத்தின் பவுண் விலை 1,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (15) 24 கரட் தங்கத்தின் பவுண் விலை 1,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
அதன்படி, இன்றைய தங்க விலை நிலவரத்தின்படி 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் 374,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், 22 கரட் தங்கத்தின் ஒரு பவுண் 344,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ea88d05-5518-4960-8abf-fb2f99ea8f5b/26-6aa927a30573a.webp' /></p><p>

இதற்கமைய, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 46,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 43,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-15T11:07:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு வைத்தியசாலையில் தாமதமாகும் சுரேஷ் சலேவின் மருத்துவ அறிக்கை! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/medical-report-regarding-suresh-saleh-issue-1789466006"></link>
            <id>https://tamilwin.com/article/medical-report-regarding-suresh-saleh-issue-1789466006</id>
            <summary type="text">அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமை தொடர்பாக கொழும்பு தேசிய வைத்தியசாலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமை தொடர்பாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு&nbsp;அழைப்பாணை அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் எதிர்வரும் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.</p><p></p><h2> சுரேஷ் சலே கைது விவகாரம்</h2><p>அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே , ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் பெப்ரவரி 25 அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d8ba6fc-f4d0-4fc3-a9cc-022774987ee7/26-6aa9193da697a.webp' /></p><p>இதனைத்தொடர்ந்து, தடுப்புக்காவல் உத்தரவுகளின் பேரில் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தாம் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்குள் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதயவியல் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப்பெற்று வருகின்றார்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p>இந்நிலையில், அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் தற்போதைய உடல்நிலை தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான், கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>you may like this video</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/JizdtBakd1s" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T11:05:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tribute-to-thileepan-39th-event-1789465551"></link>
            <id>https://ibctamil.com/article/tribute-to-thileepan-39th-event-1789465551</id>
            <summary type="text">🛑&amp;nbsp;யாழ் பல்கலைக்கழகம் 
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து
உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவே...</summary>
            <content type="html"><![CDATA[<h5><b><u>🛑&nbsp;யாழ் பல்கலைக்கழகம் 
</u></b></h5><p>ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து
உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய
தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ் பல்கலைக்கழக பிரதான
வளாகத்தில் தியாக தீபத்தின் உருவ படத்திற்கு சுடரேற்றி, மலரஞ்சலி
செலுத்தப்பட்டது.</p><p>நிகழ்வில் மாணவர்கள் , விரிவுரையாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.</p><h5><b><u>🛑 யாழ் மாநகரசபை</u></b></h5><p>தியாக தீபம் திலீபனின் நினைவு கூறல் ஆரம்ப நாளான இன்று (15) யாழ் மாநகரசபையின்
மாதாந்த அமர்வில் முதல்வர் வி.மதிவதனி தலைமையில் சபா
மண்டபத்தில் சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
</p><p>
முதல்வர் தனது நினைவு கூறல் அஞ்சலி உரையில் அஹிம்சையை உலகுக்கு உணர்த்திய
காந்திய வழியில் ஒரு துளி நீரையேனும் அருந்தாது 12 நாட்கள் உண்ணா நோன்பிருந்து
தமிழ் இனத்தின் விடுதலைக்காக மன்னுயிறை ஈகம் செய்த லெப்டினன்கேணல் திலீபனின் தியாகத்தை நெஞ்சில் நிறுத்தி எமது தமிழ் இனத்தின் விடுதலைக்காக
போராட்டத்தின் சுவடுகளை என்றும் நெஞ்சில் சுமக்க உறுதி பூணுவதே பசியுடன் உயிர்
நீத்த மாவீரன் இராசையா பார்த்தீபனுக்கு நாம் செய்யும் உணர்வு பூர்வமான
அஞ்சலியாகும் என்று குறிப்பிட்டார்.</p><p>

முதலாவது சுடரை முதல்வர் ஏற்றி வைத்து மலரஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து பிரதி
முதல்வர், கௌரவ உறுப்பினர்கள் மலரஞ்சலி செலுத்தியிருந்தமை
குறிப்பிடத்தக்கதாகும்.&nbsp;</p><h5><b><u>🛑 பருத்தித்துறை&nbsp;</u></b></h5><p>பருத்தித்துறை பகுதியில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு
இன்று காலை 9.55 மணியளவில் ஆரம்பமாகியது.
</p><p>
பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் பிரதான
நினைவுத் தூபியில், பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெயகோபி தலைமையில்
நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
</p><p>
நிகழ்வின் ஆரம்பத்தில் சிறிது நேர அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், ஜனநாயக
போராளிகள் கட்சியின் தலைவர் ஈகைச் சுடரை ஏற்றி நினைவேந்தலை ஆரம்பித்து
வைத்தார்.
</p><p>
தொடர்ந்து பருத்தித்துறை நகர சபை பிதா வின்சென்ட் டீ போல் டக்ளஸ் போலால் நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. </p><p>அதனைத் தொடர்ந்து
பருத்தித்துறை நகர சபை உப தவிசாளர் இந்திரன் மலர் அஞ்சலி செலுத்தினார்.
</p><p>
இதனையடுத்து நிகழ்வில் கலந்துகொண்ட சமூக பிரதிநிதிகள், உள்ளூராட்சி சபை
உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தி தமது அஞ்சலியை
வெளிப்படுத்தினர்.
</p><p>
நினைவேந்தல் நிகழ்வில் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T10:59:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் வீடற்ற நபரைத் தாக்கிய பொலிசார்... பூதாகரமாகும் பிரச்சினை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/police-officer-in-investigation-for-violent-on-man-1789469727"></link>
            <id>https://news.lankasri.com/article/police-officer-in-investigation-for-violent-on-man-1789469727</id>
            <summary type="text">Police officer under investigation after video shows man violently thrown to ground: பொலிசார் ஒருவர் வீடற்ற நபர் ஒருவரை முரட்டுத்தனமாக தள்ளிய நிலையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Police officer under investigation after video shows man violently thrown to ground: பொலிசார் ஒருவர் வீடற்ற நபர் ஒருவரை முரட்டுத்தனமாக தள்ளிய நிலையில், அவர் உயிரிழக்க, அந்த பொலிசார் மீது விசாரணை துவக்கப்பட்டுள்ளது.
</p><p>

பிரான்சில் பொலிசார் மீதான புகார்கள் அதிகரித்துவரும் நிலையில், வீடற்ற நபர் ஒருவரின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என கருதப்படும் பொலிசார் ஒருவர் மீது விசாரணை துவக்கப்பட்டுள்ளது.
</p><h3>
என்ன பிரச்சினை?
</h3><p>
ஜூன் மாதம் 21ஆம் திகதி, தெற்கு பிரான்சிலுள்ள Carcassonne நகரில், இசை நிகழ்ச்சி ஒன்றின்போது பொலிசார் ஒருவர் வீடற்ற நபர் ஒருவரைத் தூக்கி தரையில் வீசும் காட்சி ஒன்று வெளியானது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d890e13-1631-4268-97da-ebc168e7f329/26-6aa924206fd64.webp' /></p><p>
அந்த நபர் தலையைப் பிடித்துக்கொண்டு தரையில் விழுந்து கிடப்பதை அந்த வீடியோவில் காணலாம்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="fr" dir="ltr">Après les propos racistes, les violences policières. À Carcassonne la police est hors de contrôle ! <a href="https://t.co/dT7k4JFhPy">pic.twitter.com/dT7k4JFhPy</a></p>&mdash; Thomas Portes (@Portes_Thomas) <a href="https://x.com/Portes_Thomas/status/2098857532663996452?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
விடயம் என்னவென்றால், அந்த 29 வயது நபர், ஜூலை மாதம் 3ஆம் திகதி மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார்.
</p><p>
அந்த பொலிசார் அந்த வீடற்ற நபரைத் தாக்கும் காட்சியை சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினரான தாமஸ் (Thomas Portes) என்பவர் சமூக ஊடகத்தில் வெளியிட்டு Carcassonne நகரில் பொலிசார் கட்டுப்பாடின்றி நடந்துகொள்கிறார்கள் என குறிப்பிட்டிருந்தார்.</p><p>

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று, சம்பந்தப்பட்ட பொலிசார் மீது நீதிமன்ற விசாரணை துவக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-15T10:56:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் அதிரடி; புடினின் முதன்மை ஜெனரல் கொல்லப்பட்டதாகத் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/putin-s-top-general-has-been-killed-ukraine-attack-1789450911"></link>
            <id>https://canadamirror.com/article/putin-s-top-general-has-been-killed-ukraine-attack-1789450911</id>
            <summary type="text">&amp;nbsp; உக்ரைனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள டொனெட்ஸ்க் (Donetsk) பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் நடத்திய அதிநவீன ஏவுகணைத் தாக்குதலில், ரஷ்ய அதிபர் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; உக்ரைனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள டொனெட்ஸ்க் (Donetsk) பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் நடத்திய அதிநவீன ஏவுகணைத் தாக்குதலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினால் ‘ரஷ்யாவின் வீரன்’ (Hero of Russia) என நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் செர்ஜி மில்சாகோவ் (Sergei Milchakov) கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>

ரஷ்ய ராணுவத்தின் தெற்கு ராணுவ மண்டலத்திற்குட்பட்ட 51-வது ஒருங்கிணைந்த படைகளின் (51st Combined Arms Army) தளபதியாகச் செயல்பட்டு வந்த செர்ஜி மில்சாகோவ், உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் அவ்டிவ்கா உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் கைப்பற்றுவதற்கான ராணுவ நகர்வுகளுக்குத் தலைமை தாங்கி வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d955ac7-d78f-4fff-b935-90731f3acd6d/26-6aa8daa06f163.webp' /></p><p> </p><p>

உக்ரைன் படையினரின் ஏவுகணைகள் ரஷ்யாவின் முதன்மை மற்றும் மாற்று ராணுவக் கட்டுப்பாட்டு மையங்களை மிகத் துல்லியமாகத் தாக்கி அழித்ததில் மில்சாகோவ் உட்படப் பல உயர் ராணுவ அதிகாரிகள் பலியானதாகக் கூறப்படுகிறது.</p><h2>&nbsp;பல உயர் ராணுவ அதிகாரிகள் பலி</h2><p>
</p><p>
உக்ரைனின் மறைமுக ஆதரவு இயக்கமான ‘அதேஷ்’ (Atesh) மற்றும் ரஷ்யாவின் சுதந்திர ஊடகங்கள் இந்த மரணச் செய்தியைப் பரப்பி வருகின்றன. தாக்குதல் நடந்த ராணுவ முகாமின் துல்லியமான இருப்பிடம் ரஷ்ய ராணுவத்திற்குள் இருந்தே கசிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை ரஷ்ய ஆதரவுப் பிரச்சாரகர்களும் எழுப்பியுள்ளனர்.
</p><p>
 உக்ரைன் மீதான முழு அளவிலான போரில் இதுவரை 23-க்கும் மேற்பட்ட ரஷ்ய ஜெனரல்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், மில்சாகோவின் இழப்பு ரஷ்ய ராணுவத்திற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
</p><p>

இருப்பினும், இந்தத் தாக்குதல் மற்றும் ஜெனரல் செர்ஜி மில்சாகோவின் மரணம் குறித்த அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தலை மாஸ்கோவில் உள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை வெளியிடவில்லை. </p><p>

உக்ரைன் படைகளின் இந்தத் திடீர் ஏவுகணைத் தாக்குதலால், கிழக்கு உக்ரைன் போர்க்களத்தில் மீண்டும் பதற்றமும் மோதல் சூழலும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-15T10:56:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா - ஐரோப்பிய ஒன்றியம் புதிய கூட்டணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-european-union-new-partnership-1789467851"></link>
            <id>https://canadamirror.com/article/canada-european-union-new-partnership-1789467851</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அமெரிக்காவுடன் நிலவும் கடும் வர்த்தகப் பதற்றத்துக்கு மத்தியில், கனடா ஐரோப்பிய ஒன்றியத்துடன் முன்னெப்போதும் இல்லாத வகையிலான உத்திசார் கூட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அமெரிக்காவுடன் நிலவும் கடும் வர்த்தகப் பதற்றத்துக்கு மத்தியில், கனடா ஐரோப்பிய ஒன்றியத்துடன் முன்னெப்போதும் இல்லாத வகையிலான உத்திசார் கூட்டணியை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளது.
</p><p>


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் கனடா மீது வர்த்தக அழுத்தங்களை அதிகரித்து வருவதுடன், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களுக்கு புதிய வரிகளை விதிக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe86ee2c-3ded-40d8-8ca5-44e4e9777752/26-6aa91ccc5ac78.webp' /></p><h2>ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு உறுப்பினராக இணையப் போவதில்லை</h2><p>
</p><p>


இந்த நிலையில், கனடா தனது வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை பல்வகைப்படுத்தும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான உறவை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றது.
</p><p>


கனடா, ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு உறுப்பினராக இணையப் போவதில்லை என பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக, இரு தரப்புக்கும் இடையே விசேட உத்திசார் கூட்டணியை உருவாக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.</p><p>



பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி மற்றும் முக்கியத் தாதுக்கள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதும், தொழிலாளர்கள் மற்றும் சேவைகள் எல்லைகளை கடந்து செல்வதற்கான தடைகளை குறைப்பதும் இந்த கூட்டணியின் முக்கிய நோக்கங்களாகவுள்ளன.
</p><p>


மேலும், கடலுக்கு அடியில் தகவல் தொடர்பு கேபிள்களை அமைத்தல், பிரமாண்ட தரவு மையங்களை இணைந்து உருவாக்குதல் உள்ளிட்ட திட்டங்களும் பரிசீலிக்கப்படுகின்றன. 

கனடா குடிமக்கள் ஐரோப்பாவில் விசா இன்றி வாழவும் பணியாற்றவும் வாய்ப்பளிப்பது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



இந்த புதிய கூட்டணியை இறுதி செய்வதற்காக கனடா பிரதமர் மார்க் கார்னி அடுத்த வாரம் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.</p><p> அப்போது ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.



எனினும், இத்தகைய ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் சில உறுப்பு நாடுகளில் உள்ளூர் அரசியல் எதிர்ப்புகள் எழலாம் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-09-15T10:55:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுமுகாமையாளரை நீக்குமாறு கோரி தொடருந்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/railway-trade-unions-strike-removal-manager-1789467237"></link>
            <id>https://tamilwin.com/article/railway-trade-unions-strike-removal-manager-1789467237</id>
            <summary type="text">தொடருந்து திணைக்கள பொதுமுகாமையாளரை பதவியில் இருந்து நீக்குமாறு வலியுறுத்தும் வகையில் ஒருங்கிணைந்த தொடருந்து தொழிலாளர் சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடருந்து திணைக்கள பொதுமுகாமையாளரை பதவியில் இருந்து நீக்குமாறு வலியுறுத்தும் வகையில் ஒருங்கிணைந்த தொடருந்து தொழிலாளர் சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டமொன்றை அறிவித்துள்ளன.
</p><p>தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளரை பதவியிலிருந்து நீக்குவது தொடர்பாக அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகள் உடன்பாடு எட்டப்படாமல் முடிவடைந்ததால், ஒருங்கிணைந்த தொடருந்து தொழிற்சங்கங்கள் திட்டமிட்டபடி 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் அடையாள வேலைநிறுத்தத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளன.
</p><p>
போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கும் ஒருங்கிணைந்த புகையிரத திணைக்கள தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற ஒரு விசேட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தொழிற்சங்கத் தலைவர்கள் அந்த அறிவித்தலை விடுத்துள்ளனர்.</p><h2>முக்கிய கோரிக்கை</h2><p>

இந்தப் பேச்சுவார்த்தையின் போது, ​​தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தொடருந்து துறையில் நிர்வாக மற்றும் செயல்பாட்டுச் சிக்கல்கள், ஊழியர் பிரச்சினைகள் மற்றும் பயணிகள் எதிர்கொள்ளும் பல சிரமங்களை விளக்கினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3df0729c-b8b9-46e0-9a5a-84e81f7a69e8/26-6aa922dd9f7f5.webp' /></p><p> </p><p>மேலும், தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையளரின் நிர்வாகத்தின் மீது தங்களுக்கு இனி நம்பிக்கை இல்லாததால், அவரைப் பதவியிலிருந்து நீக்குவதே தங்களின் முக்கிய கோரிக்கை என்றும் வலியுறுத்தியிருந்தனர்.
</p><p>
இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை அரசாங்கத்திற்கு எதிரான ஒரு எதிர்ப்பு அல்ல என்றும், திறமையான மற்றும் நம்பகமான சேவையை நிறுவுவதன் மூலம் பயணிகளுக்கு உயர்தர சேவையை வழங்குவதும் தொடருந்து துறையை மீண்டும் நிலைநிறுத்துவதும் இதன் முதன்மை நோக்கம் என்றும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T10:50:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாக்ஸ் ஆபிஸ்: தமிழ்நாட்டில் 5 நாட்களில் சர்தார் 2 மற்றும் மண்டாடி செய்துள்ள வசூல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sardar-2-mandaadi-5-days-tamilnadu-box-office-1789469330"></link>
            <id>https://cineulagam.com/article/sardar-2-mandaadi-5-days-tamilnadu-box-office-1789469330</id>
            <summary type="text">Sardar 2 Mandaadi movies 5 days Tamilnadu box office: சர்தார் 2 மற்றும் மண்டாடி ஆகிய இரண்டு திரைப்படங்களும் 5 நாட்களில் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் எவ்வள...</summary>
            <content type="html"><![CDATA[<p>Sardar 2 Mandaadi movies 5 days Tamilnadu box office: சர்தார் 2 மற்றும் மண்டாடி ஆகிய இரண்டு திரைப்படங்களும் 5 நாட்களில் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூல் செய்துள்ளன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><h2>

கடந்த வார ரிலீஸ்
</h2><p>
தமிழ் சினிமாவிலிருந்து ஒவ்வொரு வாரமும் புதிய புதிய கதைக்களத்தில் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், கடந்த வாரம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சர்தார் 2 மற்றும் மண்டாடி ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகின.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b26b12e-4f3e-4768-88ec-88716c933219/26-6aa922954187e.webp' /></p><p></p><p>இதில், கார்த்தி நடிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவான சர்தார் 2 திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யாத காரணத்தினால், பாக்ஸ் ஆபிஸில் கடும் சரிவை சந்தித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d1ae420-889d-4ba2-bd04-31a397181df7/26-6aa92295eea55.webp' /></p><p>ஆனால், சூரி நடிப்பில் அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகி வெளிவந்த மண்டாடி திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து, வசூல் வேட்டையாடி வருகிறது.</p><p></p><p> </p><h3>

தமிழ்நாடு வசூல் விவரம்
</h3><p>
இந்த நிலையில், <a href="https://www.dinamani.com/cinema/cinema-news/2026/Sep/15/sardar-2-movie-collection" target="_blank">சர்தார் 2 </a>மற்றும் மண்டாடி ஆகிய இரண்டு திரைப்படங்களும் தமிழ்நாட்டில் 5 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சர்தார் 2 திரைப்படம் ரூ. 9.5 கோடியும், மண்டாடி ரூ. 40 கோடியும் 5 நாட்களில் தமிழ்நாட்டில் வசூல் செய்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c78a9ffd-c289-4258-ba1b-e1a4a2710bed/26-6aa92296b69f2.webp' /></p>]]></content>
            <updated>2026-09-15T10:50:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[AI மனிதர்களை அழித்துவிடும் என்ற பயத்தில் ஆராய்ச்சியாளர்கள் அடுத்தடுத்து ராஜினாமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-google-deepmind-researchers-quit-over-fear-on-ai-1789469182"></link>
            <id>https://news.lankasri.com/article/2-google-deepmind-researchers-quit-over-fear-on-ai-1789469182</id>
            <summary type="text">AI மனித குலத்தையே அழித்து விடும் என்ற அச்சம் தெரிவித்து ஆராய்ச்சியாளர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர்.

AI மனித குலத்தையே அழித்து விடும...</summary>
            <content type="html"><![CDATA[<p>AI மனித குலத்தையே அழித்து விடும் என்ற அச்சம் தெரிவித்து ஆராய்ச்சியாளர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர்.
</p><h3>
AI மனித குலத்தையே அழித்து விடும் என அச்சம் </h3><p>

AI வளர்ச்சியால் மனிதர்களில் சிலர் வேலை இழப்பை சந்தித்து வரும் சூழலில், இன்னும் சில ஆண்டுகளில் AI மனித குலத்தையே அழிக்கும் சாத்தியமுள்ளதாக முன்னணி AI நிறுவனங்களில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p> 

Open AI மற்றும் Anthropic ஆகிய 2 நிறுவனங்களில் பணியாற்றியுள்ள ஜேக்கப் காக்சன் என்ற 27 வயது AI ஆராய்ச்சியாளர், ஆந்த்ரோபிக் நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டு, "ஏஐ விரைவில் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட அமைப்புகளாக மாறும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9af36eee-2ea5-40a1-a4e9-6a84d56860e7/26-6aa92200292c3.webp' /></p><p>
AI-யை உருவாக்குபவர்களே, அது இந்த தசாப்தத்தின் முடிவில் நம் அனைவரையும் கொன்றுவிடும் என்று உண்மையாகவே நம்புகிறார்கள். அவர்கள் ஊடகங்களின் முன்பு அறிவுப்பூர்வமாகத் தோன்றும் வகையில் பேசிவிட்டு AI குறித்த பயத்தை வெளிப்படுத்துவதை நான் கேட்டிருக்கிறேன்" என கூறியுள்ளார்.</p><p> 

அவரின் கருத்தை தொடர்ந்து விவாதம் எழுந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகத்தை குறைக்க வேண்டும் என முன்னணி AI நிறுவனங்களின் தலைவர்கள் பலரும் அழைப்பு விடுத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p>

ஆனால், செயற்கை நுண்ணறிவு துறையின் வளர்ச்சியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அனைத்தும் இந்த துறைக்கு எதிரான ஒரு அபத்தமான சதி என இந்த முடிவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். </p><h3>

கூகுள் டீப்மைண்ட் ஊழியர்கள் ராஜினாமா </h3><p>

இந்த சூழலில், AI மனிதர்களை அழித்து விடும் என்ற எச்சரிக்கையுடன் கூகுள் டீப்மைண்ட் நிறுவனத்தின் முன்னணி AGI பாதுகாப்பு மற்றும் அலைன்மென்ட் ஆராய்ச்சியாளர்களான பிலால் சுஹ்தாய் மற்றும் ஜோஷ் எங்கெல்ஸ் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66bfb4a8-6fdb-405c-afb3-0e3e5f468323/26-6aa921ff7494d.webp' /></p><p>

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிலால் சுஹ்தாய், "நான் சமீபத்தில் கூகிள் டீப்மைண்ட் நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்தேன். அங்கு நான் ஏஜிஐ பாதுகாப்பு மற்றும் சீரமைப்பு ஆராய்ச்சியில் பணியாற்றி வந்தேன்.&nbsp;</p><p>

கூகிளில், நான் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை நேரடியாகக் கண்டேன். இந்தத் தொழில்நுட்பத்தின் இயல்பான போக்கைக் கண்டு நானும் மிகவும் கவலைப்படுகிறேன். செயற்கை நுண்ணறிவு நம்மைக் கொல்லும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.</p><p> 

கடந்த சில ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவின் முன்னேற்ற வேகம் திகைக்க வைப்பதாக உள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I recently resigned from Google DeepMind, where I worked on AGI safety and alignment research. At Google, I witnessed AI development first hand. I too am extremely concerned by the default trajectory of this technology. I earnestly believe that AI has the potential to kill us…</p>&mdash; bilal 🔶 (@bilalchughtai_) <a href="https://x.com/bilalchughtai_/status/2099592489023734085?ref_src=twsrc%5Etfw">September 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், அவை ஓப்பன்ஏஐ-யின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பித்து, யாருடைய விருப்பத்திற்கும் எதிராக, ஹக்கிங்ஃபேஸ் என்ற மூன்றாம் தரப்பு நிறுவனத்தை தன்னிச்சையாக ஹேக் செய்கின்றன.</p><p> 

ஹக்கிங்ஃபேஸ் சம்பவத்தில் ஈடுபட்ட கட்டுப்பாடற்ற செயற்கை நுண்ணறிவு முகவர்களைப் போலவே, தவறாக ஒருங்கிணைக்கப்பட்ட மீயறிவுகள் நமது கட்டுப்பாட்டிலிருந்து தப்பித்து, மனிதகுலத்தின் நிரந்தர அதிகார இழப்பு அல்லது மரணத்திற்கு வழிவகுக்கும் அபாயகரமான செயல்களைச் செய்யக்கூடும். </p><p> 

என் பார்வையில், இந்த நூற்றாண்டில் மனிதகுலம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சனை இதுதான்" என தெரிவித்துள்ளார்.</p><p> 

கூகுள் டீப்மைண்டின் AGI பாதுகாப்பு குழுவில் பணியாற்றிய ஆராய்ச்சியாளரான ஜோஷ் எங்கெல்ஸ், "நான் 3 வாரங்களுக்கு முன்பு கூகிள் டீப் மைண்டின் ஏஜிஐ பாதுகாப்புக் குழுவிலிருந்து விலகி இதில் சேரவிருக்கிறேன்.</p><p>

கடந்த சில வாரங்களில், செயற்கை மாதிரிகள் ஒன்றுடன் ஒன்று கூட்டுச் சதி செய்வது, நிறுவனங்களை ஹேக் செய்வது, தங்கள் தடயங்களை மறைப்பது, மற்றும் மனிதர்களைச் சமூகப் பொறியியல் மூலம் கட்டுப்படுத்துவது பற்றி நாம் அறிந்து கொண்டோம்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I left Google DeepMind&#39;s AGI safety team three weeks ago to join <a href="https://x.com/METR_Evals?ref_src=twsrc%5Etfw">@METR_Evals</a>. To some of my friends and family this seemed like a strange decision: I enjoyed the work I did at GDM and turned down offers from Anthropic and OpenAI. But I made the decision because of how high I…</p>&mdash; Josh Engels (@JoshAEngels) <a href="https://x.com/JoshAEngels/status/2098890712830169115?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

அடுத்த 5 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு பயங்கரமான வாய்ப்பு இருப்பதாக நான் இப்போது நினைக்கிறேன். </p><p>

அதன் சரியான நிகழ்தகவு எனக்குத் தெரியாது, ஆனால் இது உலகின் மிக முக்கியமான பிரச்சனையாக மாறும் அளவுக்கு அது அதிகமாக இருப்பதாக நான் நினைக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T10:47:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவில் வெளிநாட்டு பயணங்களுக்கு கட்டுப்பாடு - புதிய பயண விதிகள் அமுல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-tightens-tech-security-travel-rules-1789469431"></link>
            <id>https://news.lankasri.com/article/china-tightens-tech-security-travel-rules-1789469431</id>
            <summary type="text">China tightens tech security travel rules: சீனாவில் வெளிநாட்டு பயணத்தில் கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

சீனாவில் இன்று முதல் (செப்டம்பர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>China tightens tech security travel rules: சீனாவில் வெளிநாட்டு பயணத்தில் கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
</p><p>
சீனாவில் இன்று முதல் (செப்டம்பர் 15, 2026) புதிய நுழைவு மற்றும் வெளியேறும் விதிகள் அமுலுக்கு வந்துள்ளன.

இந்த விதிகள், தேசிய தொழில்நுட்ப பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக கருதப்படும் சீன குடிமக்கள் வெளிநாடு செல்லத் தடை விதிக்கின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bda5ced4-1be3-4d3b-8df9-3d80d4bad61d/26-6aa922f85e338.webp' /></p><p>முன்னதாக, சீனர்கள் பொதுவாக சுதந்திரமாக வெளிநாடு பயணம் செய்ய முடிந்திருந்தாலும், அரசாங்கம் எப்போதும் பாதுகாப்பு அபாயம் உள்ளவர்களின் பயணங்களை கண்காணித்து வந்தது. </p><p>புதிய விதிகளின்படி, ஏற்றுமதி கட்டுப்பாடுகள் அல்லது தொழில்நுட்ப இறக்குமதி-ஏற்றுமதி விதிகளை மீறுவோருக்கு தடை விதிக்கப்படும்.

இந்த தடை, குறைந்தது ஆறு மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை நீடிக்கலாம்.</p><p></p><p> வெளிநாட்டில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, தேசிய பாதுகாப்பிற்கு கேடு விளைவித்தவர்கள் சீனாவுக்கு திரும்பிய பின் வெளிநாடு செல்ல முடியாது.
</p><p>
வெளிநாட்டவர்கள் கூட, விசா விண்ணப்பத்தில் தவறான தகவல் அளித்தால், ஓராண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சீனாவிற்குள் நுழையத் தடை விதிக்கப்படலாம்.
</p><p>
முன்னதாக, சீன அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வெளிநாட்டு பயணத்தில் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.</p><p></p><p>2023-இல், அரசு ஊழியர்கள் மற்றும் அரசு தொடர்புடைய நிறுவன ஊழியர்களுக்கு தனிப்பட்ட வெளிநாட்டு பயணத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
</p><p>
சமீபத்தில், அமெரிக்க நிபுணர் மின் சின், சீனாவில் தேசிய பாதுகாப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தவறாக தடுத்து வைக்கப்பட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.
</p><p>
இந்த புதிய விதிகள், தைவான் மக்களிடையே பெரும் கவலை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தொழில்நுட்ப துறையில் பணிபுரியும் தைவான் குடிமக்கள் சீனாவிற்கு செல்லும்போது கூடுதல் அபாயம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>

சீனா, இந்த விதிகள் தைவான் மக்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பை வழங்கும் என தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T10:47:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பெரும் துயரை ஏற்படுத்திய இளம் காதலர்கள் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-of-lovers-brings-sorrow-to-jaffna-1789455750"></link>
            <id>https://jvpnews.com/article/death-of-lovers-brings-sorrow-to-jaffna-1789455750</id>
            <summary type="text">&amp;nbsp;யாழில் இளைஞன் ஒருவரும் , யுவதியும் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த இளைஞனும் யுவதியும் காதல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழில் இளைஞன் ஒருவரும் , யுவதியும் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
உயிரிழந்த இளைஞனும் யுவதியும் காதல் உறவில் இருந்ததாகவும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பை அடுத்து நேற்று முன் தினம் (13) இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78105c33-361b-4ba4-87c4-0dfd9b8e3ba3/26-6aa8ed87968f7.webp' /></p><p>

 குறித்த இருவரின் மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள அதேவேளை , ஒரு நிமிடத்தில் எடுக்கும் முடிவு, இரு குடும்பத்தை மீளாத துயரில் ஆழ்த்தியுள்ளது.</p><p></p><p>அண்மைகாலமாக&nbsp; &nbsp;தமிழர் பகுதிகளில் இளையோரின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் வேதனை வெளியிட்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T10:47:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திருட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/theft-at-jaffna-meesalai-water-purification-plant-1789469188"></link>
            <id>https://jvpnews.com/article/theft-at-jaffna-meesalai-water-purification-plant-1789469188</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; யாழ்ப்பாணம் மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்த 13 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான கேபிள்களைத் திருடிய சம்பவத்துடன் தொடர்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; யாழ்ப்பாணம் மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்த 13 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான கேபிள்களைத் திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

சம்பவம் தொடர்பாகச் சாவகச்சேரி பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30d2aec7-d1c8-4bd1-a055-f79cb84a343f/26-6aa922058dc24.webp' /></p><p> 

சந்தேகநபர்களில் ஒருவர் அதே நிறுவனத்தில் தனியார் துறை பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணியாற்றியவர் என்பதுடன், மற்றைய நபர் திருடப்பட்ட பொருட்களைத் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p> 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23 மற்றும் 43 வயதுடைய நீர்வேலி மற்றும் கொட்டகலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-15T10:43:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு அழைப்பாணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/summons-issued-director-national-hospital-colombo-1789468767"></link>
            <id>https://jvpnews.com/article/summons-issued-director-national-hospital-colombo-1789468767</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு , எதிர்வரும் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அழைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு , எதிர்வரும் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
</p><p>


வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் இயக்குநர் சுரேஷ் சலே தொடர்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11a8237b-5b97-4067-b0cd-425b3b4af57d/26-6aa92060a7e08.webp' /></p><p></p><h2>சுரேஷ் சலே தொடர்பான மருத்துவ அறிக்கை</h2><p>
</p><p>
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காதது தொடர்பாக, நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


 இந்நிலையில் மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காதது தொடர்பாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இயக்குநருக்கு எதிர்வரும் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T10:36:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்த் யார்க்கில் பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு – பதின்ம வயது சிறுவன் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/teen-boy-killed-in-north-york-shooting-1789468378"></link>
            <id>https://canadamirror.com/article/teen-boy-killed-in-north-york-shooting-1789468378</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் டொரண்டோவிலுள்ள நோர்த் யார்க் பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் வேளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பதின்ம வயது சிறுவன் ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் டொரண்டோவிலுள்ள நோர்த் யார்க் பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் வேளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பதின்ம வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். </p><p>
இச்சம்பவம் திங்கள்கிழமை பிற்பகல் சுமார் 3:30 மணியளவில் ஜேன் வீதி மற்றும் ஃபின்ச் அவென்யூ வெஸ்ட் சந்திப்பிற்கு அருகில் இடம்பெற்றதாக டொரண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 
சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்தபோது, துப்பாக்கிக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறுவனை மீட்டனர்.</p><p> 
உடனடியாக அவர் உள்ளூர் அதிதீவிர சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ஆய்வாளர் டேன் பிரவிகா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10fa2258-15a3-42c9-b991-5ade3591cb47/26-6aa91edc0bbf7.webp' /></p><p>
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில், ஒரு ஸ்கேட்போர்டை சுற்றி பொலிஸார் அடையாளக் குறிகளை அமைத்திருந்தனர். </p><p>
மேலும், நார்ஃபின்ச் ஓக்டேல் மற்றும் டிராஃப்ட்வுட் நிலையங்களுக்கு இடையே 'லைன் 6 LRT' ரயில் சேவை நிறுத்தப்பட்டு, மாற்றுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.</p><p>
இச்சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால், டொரண்டோ பொலிஸாரையோ அல்லது குற்றத் தடுப்புப் பிரிவையோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T10:30:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடக தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/social-media-ban-for-children-under-15-in-france-1789466804"></link>
            <id>https://canadamirror.com/article/social-media-ban-for-children-under-15-in-france-1789466804</id>
            <summary type="text">&amp;nbsp;பிரான்ஸில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் புதிய சட்ட வரைவை செப்டம்பர் மாதம் 14 திங்கட்கிழமை ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பிரான்ஸில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் புதிய சட்ட வரைவை செப்டம்பர் மாதம் 14 திங்கட்கிழமை பிரெஞ்சு அரசாங்கம் ஐரோப்பிய ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது.</p><p> 

இதனை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சமூக வலைத்தளமான X-இல் அறிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் இதே நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட சட்டமூலம் Conseil constitutionnel எனப்படும் அரசியலமைப்பு கவுன்சிலால் நிராகரிக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d5f42b8-1c91-462a-aac5-228977fc4992/26-6aa918b677f4c.webp' /></p><p> </p><p>இதையடுத்து, தொழில்நுட்ப ரீதியாக விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர், புதிய சட்ட வடிவம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p>

“கடுமையான தொழில்நுட்ப ஆய்வுக்குப் பின்னர், புதிய சட்ட வடிவத்தை ஐரோப்பிய ஆணையத்திடம் சமர்ப்பிப்பதாக மக்ரோன் தெரிவித்துள்ளார். </p><p>

Conseil constitutionnel-ன் தீர்ப்புக்கு ஒரு மாதத்துக்குப் பின்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்கால சட்டம் ஐரோப்பிய ஒன்றிய சட்டங்களுக்கு இணங்குகிறதா என்பதை உறுதி செய்வதில் இந்த அறிவிப்பு முக்கியமான கட்டமாக கருதப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-15T10:27:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனின் துல்லிய தாக்குதலில் புடினின் நம்பிக்கைக்குரிய தளபதி பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/putin-s-top-general-killed-in-a-ukrainian-strike-1789464767"></link>
            <id>https://ibctamil.com/article/putin-s-top-general-killed-in-a-ukrainian-strike-1789464767</id>
            <summary type="text">ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் முக்கிய பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிட்ட ரஷ்யாவின் 51-வது ஒருங்கிணைந்த ஆயுதப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் முக்கிய பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிட்ட ரஷ்யாவின் 51-வது ஒருங்கிணைந்த ஆயுதப் படையின் (51st Combined Arms Army) தளபதி லெப்டினன்ட் ஜெனரல் செர்ஜி மில்காகோவ்,உக்ரைன் நடத்திய துல்லிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக செப்டம்பர் 14 அன்று ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.</p><p>&nbsp;ஓகஸ்ட் 26 அன்று ரஷ்யா ஆக்கிரமித்துள்ள டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ரஷ்யக் கட்டளை மையங்களை குறிவைத்து உக்ரைன் நடத்திய தாக்குதலில் இந்த ஜெனரல் கொல்லப்பட்டார்.
</p><p>
</p><h2>உயிரிழப்பை உறுதிப்படுத்திய உக்ரைன் இராணுவத்தலைமை</h2><p>ஓகஸ்ட் 27 அன்று, உக்ரைனின் இராணுவத் தலைமை (General Staff) இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியது. டொனெட்ஸ்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரஷ்யக் கட்டளை மையங்கள் துல்லியமான தாக்குதல்களால் அழிக்கப்பட்டதாகவும், ரஷ்ய அதிகாரிகளுக்கு ஏற்பட்ட "கடுமையான இழப்புகள்" குறித்த தகவல்கள் இன்னும் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் அப்போது தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0427cc8a-347a-45b7-b3f8-2e473269a23c/26-6aa913c66d180.webp' /></p><p>
</p><p>
மில்காகோவ் கொல்லப்பட்டிருக்கலாம் என்பது குறித்த செய்தியை வெளியிட்ட ரஷ்யாவின் சுயாதீன ஊடகமான 'வாஷ்னியே இஸ்டோரி' (Vazhniye Istorii), இது உறுதிப்படுத்தப்பட்டால், உக்ரைனுக்கு எதிரான போரில் கொல்லப்பட்ட 23-வது ரஷ்ய ஜெனரலாக அவர் இருப்பார் என்று கூறியது.</p><p></p><p>

</p><h2>‘ரஷ்யாவின் வீரன்’</h2><p>ரஷ்ய ஆதரவு பிரச்சாரகரான அனஸ்தேசியா கஷேவரோவா, இந்தத் தாக்குதல் ஒரு துல்லியமான தாக்குதலாகத் தெரிவதாகவும், கட்டளை மையம் இருந்த இடம் குறித்த தகவல் "நமது சொந்த தரப்பிலிருந்தே" கசிந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8290ab9-82a4-4bc5-b692-7d1ea47a5c78/26-6aa913c71e072.webp' /></p><p>
</p><p>
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினால் ‘ரஷ்யாவின் வீரன்’ (Hero of Russia) என நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T10:24:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருணா, பிள்ளையானை போல அர்ச்சுனாவையும் மாற்றி விட்டோம் : மார்தட்டுகிறது மகிந்த தரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archuna-replaced-like-karuna-and-pillaiyan-1789466909"></link>
            <id>https://ibctamil.com/article/archuna-replaced-like-karuna-and-pillaiyan-1789466909</id>
            <summary type="text">&amp;nbsp;அர்ச்சுனா எம்.பி.யின் அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்குப் பின்னால் உள்ள ஒரே முக்கிய நபர் நாமல் ராஜபக்ச என்றும். முன்னதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அர்ச்சுனா எம்.பி.யின் அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்குப் பின்னால் உள்ள ஒரே முக்கிய நபர் நாமல் ராஜபக்ச என்றும். முன்னதாக, மகிந்த ராஜபக்ச கருணா அம்மான் மற்றும் பிள்ளையானை ஜனநாயக அரசியலுக்குள் கொண்டுவந்து அவர்களின் பாதையை மாற்றியமைத்ததைப் போலவே, அர்ச்சுனா எம்.பி.யின் இந்த புதிய அணுகுமுறையும் நிகழ்ந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அநுருத்த தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>&nbsp;இது தெடார்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
</p><p>




</p><h2>தமிழ்,சிங்கள சமுகத்தை ஒன்றாக வாழவைக்க முயற்சிக்கிறார்</h2><p>அர்ஜுனா எம்.பி. தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றை ஊக்குவித்தால், அது அவருக்கே நல்லதல்ல. ஏனென்றால், அவர் நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராக சதி செய்ய மாட்டேன் என்று சத்தியப்பிரமாணம் செய்கிறார். அது இங்கு எங்களுக்கு முன் அவருக்கே நல்லதல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d09b6142-7a87-4277-9da7-b923560cda3b/26-6aa91cb334671.webp' /></p><p>
</p><p>





ஆகவே, அந்த மேடையில் இருந்த ஒருவராக, அர்ஜுனாவின் உரை முழுவதும் அவர் வடக்கையும் தெற்கையும் இணைக்க ஏதோ ஒரு முயற்சியை மேற்கொள்வதையே நான் கண்டேன். ஆகவே, தமிழ் சமூகத்தையும், சிங்கள சமூகத்தையும் சகோதரர்களைப் போல வாழ வைக்க, அல்லது இணைந்து வாழ முயற்சிக்கிறார்.
</p><p>
இப்போது இது சமஷ்டி கேட்பவர்களுக்கு கண்ணில் முள் குத்துவது போலல்லவா? இந்த நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று கூறுபவர்களுக்கு கண்ணில் முள் குத்துவது போலல்லவா? ஆனால் அர்ஜுனாவின் வரலாற்றைப் பார்த்தால், அர்ஜுனா நாடாளுமன்றத்தில் பேசியவற்றைப் பார்த்தால், அர்ஜுனா ஏன் திடீரென இந்த நிலைக்கு மாறினார்?</p><h2>மாற்றத்திற்கான ஒரே காரணம் நாமல் ராஜபக்ச</h2><p> </p><p>மாற்றத்திற்கான ஒரே காரணம் நாமல் ராஜபக்ச. வேறு யாருமில்லை. அவர்தான் அர்ஜுனாவை மாற்றினார்.




அவரது தந்தையார்தான் பிள்ளையானை மாற்றினார். அவரது தந்தையார்தான் கருணாவை மாற்றினார். அவர்களை மாற்றி நாட்டின் அரசியலுக்குள் கொண்டுவந்து, அவர்கள் மூலம் அந்த மக்களுக்கு அந்தந்த கிராமப் பகுதிகளை மேம்படுத்த வாய்ப்பளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faf86430-34aa-4dc0-a0c2-b82e4077390e/26-6aa91cb27e336.webp' /></p><p> </p><p>கிழக்கு எவ்வாறு அபிவிருத்தி அடைந்தது என்பதை நாம் கண்டோம். ஆனால் கிழக்கிலிருந்து கருணா ஒருபோதும் சமஷ்டியைக் கேட்கவில்லை; அல்லது நாட்டைப் பிரித்து கிழக்கு மாகாணத்தை தனியாகக் கொடுக்க வேண்டும் என்று கேட்கவில்லை. பிள்ளையான் கேட்கவில்லை. இப்போது அர்ஜுனாவும் வடக்கை தனியாகக் கொடுக்க வேண்டும் என்று கேட்காத நிலைக்கு நாமல் ராஜபக்ச கொண்டுவந்திருப்பது ஒரு வெற்றியல்லவா?&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T10:24:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடிகை ராஷ்மிகா மந்தனா.. படத்தை தொடங்கி வைக்கும் கமல் ஹாசன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/rashmika-confirmed-in-ms-subbulakshmi-biopic-1789465822"></link>
            <id>https://cineulagam.com/article/rashmika-confirmed-in-ms-subbulakshmi-biopic-1789465822</id>
            <summary type="text">Rashmika Mandanna is confirmed to star in MS Subbulakshmi Biopic movie: பான்-இந்தியன் ஸ்டார் நடிகை ராஷ்மிகா மந்தனா, எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Rashmika Mandanna is confirmed to star in MS Subbulakshmi Biopic movie: பான்-இந்தியன் ஸ்டார் நடிகை ராஷ்மிகா மந்தனா, எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், நாளை நடிகர் கமல் ஹாசன் படத்தை தொடங்கி வைக்கிறார் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p> </p><p></p><h2>எம்.எஸ். சுப்புலட்சுமி
</h2><p>
புகழ்பெற்ற இந்திய கர்நாடக இசைக்கலைஞரான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை சினிமா படமாக எடுக்க கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் கௌதம் தின்னூரி இயக்கப்போகிறார். இவர் இதற்கு முன் தெலுங்கில் வெளிவந்த ஜெர்ஸி மற்றும் கிங்டம் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89ff0f30-caad-426c-a0a2-ca48479c7f2f/26-6aa914e14bc46.webp' /></p><h3>ராஷ்மிகா மந்தனா</h3><p>
</p><p>
இப்படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடிக்க பல்வேறு முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனா இறுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.&nbsp;மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d1025c2-35ec-4145-a2e3-fc5c1002aa13/26-6aa916287d2e7.webp' /></p><p>

எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் 110-வது பிறந்தநாளான நாளை (செப்டம்பர் 16-ஆம் தேதி) இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்குகிறது. இதனை உலகநாயகன் கமல் ஹாசன் தொடங்கி வைக்கவுள்ளார் என்பதையும் தயாரிப்பு நிறுவனம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e992e0d-12b0-4fc4-aa51-fecc9011b69b/26-6aa914e206f4b.webp' /></p><p>இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் நடிகை <a href="https://x.com/GeethaArts/status/2099720594925445390/photo/1" target="_blank">ராஷ்மிகா </a>மந்தனாவிற்கு, இப்படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடிப்பதன் மூலம் மிகப்பெரிய புகழை தேடி தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும், இது அவருடைய திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை ராஷ்மிகாவிற்கு தெரிவித்து வருகிறார்கள்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61de5068-7cac-4151-8aeb-c97e0056b7f7/26-6aa91627abfc3.webp' /></p>]]></content>
            <updated>2026-09-15T10:20:00+00:00</updated>
        </entry>
    </feed>
