<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-11T12:41:27+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தையால் ரத்து செய்யப்பட்ட விமானப் பயணம் - நிர்வாகம் எடுத்த திடீர் முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/canada-toronto-flight-cancelled-1786451599"></link>
            <id>https://tamilwin.com/article/canada-toronto-flight-cancelled-1786451599</id>
            <summary type="text">கனடா - டொராண்டோவிற்குச் செல்லும் விமானம் ஒன்று, ஒரு சிறு குழந்தை தனது சீட் பெல்ட்டை அணிய மறுத்ததால், ரத்து செய்யப்பட்டுள்ளதாக போர்ட்டர் ஏர்லைன்ஸ் தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடா - டொராண்டோவிற்குச் செல்லும் விமானம் ஒன்று, ஒரு சிறு குழந்தை தனது சீட் பெல்ட்டை அணிய மறுத்ததால், ரத்து செய்யப்பட்டுள்ளதாக போர்ட்டர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.</p><p>பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள விக்டோரியா சர்வதேச விமான நிலையத்திலிருந்து டொராண்டோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் PD444 விமானம், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் புறப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><h2>


ஒரு குழந்தையால் ரத்து செய்யப்பட்ட விமானம்</h2><p>
இது தொடர்பில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது,
</p><p>
விமானம் முனையத்திலிருந்து புறப்பட்டு ஓடுபாதையை நோக்கிச் சென்றது, ஆனால் உடன் வந்த பெற்றோர் மற்றும் விமானப் பணியாளர்கள் முயன்றும், இருக்கையில் நின்றுகொண்டிருந்த ஒரு சிறு குழந்தை தனது சீட் பெல்ட்டை அணியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87d2e127-1590-4c1c-9c68-88b0bbf5e056/26-6a7b1799dd746.webp' /></p><p> </p><p>

இந்த பாதுகாப்பற்ற சூழ்நிலையால் விமானத்தால் புறப்பட முடியவில்லை, எனவே விமானப் பணியாளர்கள் முனையத்திற்கே திரும்பிச் சென்று பயணிகளை இறக்கிவிட முடிவு செய்தனர்.</p><p>

விமானத்தை மீண்டும் தயார் செய்வதற்கும், குழந்தையையும் பெற்றோர்களையும் விமானத்திலிருந்து இறக்குவதற்கும், அவர்களின் உடமைகளை மீட்டெடுப்பதற்கும், ஆவணங்களை மீண்டும் தாக்கல் செய்வதற்கும் தேவைப்பட்ட நேரத்தால், விமானம் மிகவும் தாமதமாக புறப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.</p><p>இதன் காரணமாக விக்டோரியா விமான நிலையத்தின் ஓடுபாதை நள்ளிரவு 12:30 மணிக்கு மூடப்பட்டுள்ளது. ஒரு குழந்தையால் மற்ற பயணிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக நாங்கள் வருந்துகிறோம். அவர்கள் மறுநாள் விமானத்தில் புறப்பட்டுச் சென்றனர் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T12:37:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டன் துறைமுகம் ஒன்றில் சிக்கிய 232 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய போதைப்பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/232-million-pound-cocaine-seized-london-harbour-1786451800"></link>
            <id>https://news.lankasri.com/article/232-million-pound-cocaine-seized-london-harbour-1786451800</id>
            <summary type="text">வாழைப்பழங்களுக்கு நடுவே மறைத்து கொண்டுவரப்பட்ட 232 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய போதைப்பொருள் லண்டன் துறைமுகம் ஒன்றில் சிக்கியுள்ளது.


தென் அமெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாழைப்பழங்களுக்கு நடுவே மறைத்து கொண்டுவரப்பட்ட 232 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய போதைப்பொருள் லண்டன் துறைமுகம் ஒன்றில் சிக்கியுள்ளது.
</p><p>

தென் அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்கு வந்த கண்டெய்னர் ஒன்றில் 232 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய போதைப்பொருள் மறைத்துவைக்கப்பட்டிருந்ததை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.</p><h3>

துறைமுகம் ஒன்றில் சிக்கிய போதைப்பொருள்
</h3><p>
இங்கிலாந்தின் எசெக்ஸிலுள்ள London Gateway துறைமுகத்திற்கு தென் அமெரிக்காவிலிருந்து கண்டெய்னர் ஒன்று வந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/350f9938-43b2-426f-8c4d-dbb0e56ca584/26-6a7b1759da21f.webp' /></p><p>
அதில் வாழைப்பழங்கள் அடங்கிய பெட்டிகள் இருந்த நிலையில், சுங்க அதிகாரிகள் அவற்றை சோதனையிட்டுள்ளார்கள்.
</p><p>
அப்போது, அந்த பெட்டிகளிலிருந்த வாழைப்பழங்களின் இடையே போதைப்பொருள் அடங்கிய பார்சல்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. </p><p></p><p>
அந்த கண்டெய்னரில், 2,900 கிலோ போதைப்பொருள் இருந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 232 மில்லியன் பவுண்டுகள் ஆகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/441cbdf1-d0a5-419b-b847-eb2594e6010b/26-6a7b175a88f71.webp' /></p><p>

232 மில்லியன் பவுண்டுகள் என்பது, இலங்கை மதிப்பில் 1,04,69,60,08,800.00 ரூபாய் ஆகும்.
</p><p>
அந்த போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள நிலையில், அந்த போதைக்கடத்தல் தொடர்பில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T12:36:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆங்கில மொழிக் கற்பித்தலில் காலனித்துவமய நீக்கம்! சர்வதேச மாநாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/international-conference-university-of-jaffna-1786451462"></link>
            <id>https://tamilwin.com/article/international-conference-university-of-jaffna-1786451462</id>
            <summary type="text">யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஆங்கில மொழிக் கற்பித்தல் துறை (DELT)
ஏற்பாடு செய்யும் “ஆங்கில மொழிக் கற்பித்தலில் காலனித்துவமய நீக்கம்” எனும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஆங்கில மொழிக் கற்பித்தல் துறை (DELT)
ஏற்பாடு செய்யும் “ஆங்கில மொழிக் கற்பித்தலில் காலனித்துவமய நீக்கம்” எனும்
தொனிப்பொருளிலான 2வது சர்வதேச மாநாடு (ICDE – 2026), முன்னாள் ஆங்கில மொழிக்
கற்பித்தல் துறைத் தலைவரும், தற்போதைய பென்ஸ்டேட் (ஐக்கிய அமெரிக்கா)
பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற ஈவான் பஃப் பேராசிரியருமான சுரேஷ் கனகராஜாவின் அனுசரணையில், எதிர்வரும் 2026 ஆகஸ்ட் 12 முதல் 14ஆம் திகதி வரை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி மற்றும் நூலக அரங்குகளில்
நடைபெறவுள்ளது.</p><p>

ஆங்கில மொழிக் கற்பித்தல், சமூக மொழியியல் மற்றும் காலனித்துவமய நீக்கச்
சிந்தனைகள் தொடர்பான முக்கியமான உரையாடல்களை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டு
இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><h2>மாநாடு</h2><p>
</p><p>
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் மூத்த பேராசிரியர் திருநாவுக்கரசு
வேல்நம்பியின் தலைமையில், பேராசிரியர் நா.பிரதீபராஜா மற்றும்
பேராசிரியர் தி.கருணாகரன் ஆகியோரின் இணைத் தலைமையில் இம்மாநாடு
இடம்பெறவுள்ளது.
</p><p>
இம்மாநாட்டில் பேராசிரியர் சுரேஷ் கனகராஜா, பேராசிரியர் பிமாலி இந்திரரத்ன,
பேராசிரியர் ரோண்டா ஒலிவர், டாக்டர் வைதேகி ராஜபிள்ளை, பேராசிரியர் செண்டர்
தோவ்சின் மற்றும் இணைப் பேராசிரியர் மேக்ஸ் ஸ்பாட்டி உள்ளிட்ட பல சர்வதேச
புகழ்பெற்ற பேராசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் சிறப்புரையாற்றவுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/770739a0-0aad-4f1a-9f91-7b026fd07d5a/26-6a7b16091eee1.webp' /></p><p>
</p><p>
ஆகஸ்ட் 12ஆம் திகதி காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும் தொடக்க விழா உள்ளிட்ட
மாநாட்டின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு பேராசிரியர்கள்,
ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன்
அழைப்பதாக ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T12:32:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் 43,000 டொலர் மதிப்பிலான தங்கம், வெள்ளி திருட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ontario-woman-charged-in-alleged-gold-theft-1786447759"></link>
            <id>https://canadamirror.com/article/ontario-woman-charged-in-alleged-gold-theft-1786447759</id>
            <summary type="text">&amp;nbsp;கனடியப் பெண் எல்லையில் கைது
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் 43,000 கனேடிய டொலருக்கும் அதிக மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளியைத் திருடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடியப் பெண் எல்லையில் கைது
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் 43,000 கனேடிய டொலருக்கும் அதிக மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளியைத் திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்ட கனடாவைச் சேர்ந்த பெண் ஒருவர், மீண்டும் கனடாவுக்குத் திரும்ப முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>
கனடாவின் ஒன்ராறியோ, பீம்ஸ்வில் பகுதியைச் சேர்ந்த 25 வயதான கைலீ ஹோகன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார். </p><p>
கடந்த மே 11 அன்று ஃபிலடெல்ஃபியாவிலிருந்து சுமார் 40 நிமிட பயணத் தொலைவில் உள்ள பென்சலேம் டவுன்ஷிப் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f0ab8a1-4cb7-4903-821c-0291bb91a99a/26-6a7b07919341c.webp' /></p><p>
</p><p> பாதிக்கப்பட்ட நபர் தங்கம் மற்றும் வெள்ளி அடங்கிய பார்சல் ஒன்றின் வருகைக்காகக் காத்திருந்தவேளையில், அஞ்சல் ஊழியரிடம் சந்தேகநபர் தாங்களே இதன் உண்மையான உரிமையாளர் எனக் கூறி பார்சலுக்குக் கையொப்பமிட்டுப் பெற்றுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.</p><p>
இதனைப் பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் பார்த்துள்ளார். 
திருடப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் மொத்த மதிப்பு 43,549 கனேடிய டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. </p><p>
சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள், வாகனப் பதிவு எண் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் சந்திப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்த பொலிஸார், சந்தேகநபர் பயன்படுத்திய 'நிசான்' ரக காரைக் கண்டறிந்தனர். </p><p>
விசாரணையில், மே 10 அன்று ஃபிலடெல்ஃபியா விமான நிலையத்தில் உள்ள கார் வாடகை நிறுவனத்திடமிருந்து இந்த காரை ஹோகன் வாடகைக்கு எடுத்ததும், மே 11 அன்று திருட்டை அரங்கேற்றிய கையோடு காரைத் திரும்ப ஒப்படைத்துவிட்டு ஏரிஸோனாவுக்கு விமானத்தில் தப்பிச் சென்றதும் தெரியவந்தது.</p><p> 
இதனைத் தொடர்ந்து ஹோகனுக்கு எதிராகக் கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறையினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.</p><p> 
ஜூலை 5 ம் திகதி, நியூயோர்க்கின் லூயிஸ்டன் பகுதியில் உள்ள எல்லைக் கடப்பு வழியே மீண்டும் கனடாவுக்குள் நுழைய முயன்றபோது, அமெரிக்க விசா அனுமதியில் அங்கு தங்கியிருந்த ஹோகனை எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.இவர் மீது ஆவணப் போலி தயாரித்தல், சட்டவிரோதமாகப் பொருட்களைக் கவர்தல் மற்றும் ஏமாற்றித் திருடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. </p><p>இக்குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. 
கைது செய்யப்பட்ட ஹோகன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, அவருக்குப் பிணைத் தொகை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது பக்ஸ் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதல் காதல் காதல் சீரியல் நடிகை ஷோபனாவின் மாடர்ன் லுக் புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/kadhal-kadhal-kadhal-serial-shobanaa-photos-1786446079"></link>
            <id>https://viduppu.com/article/kadhal-kadhal-kadhal-serial-shobanaa-photos-1786446079</id>
            <summary type="text">ஷோபனாசின்னத்திரை நடிகைகள் பலரும் ரசிகர்கள் மத்தியில் குறுகிய காலக்கட்டத்தில் கவனத்தை ஈர்த்துவிடுகிறார்கள். அந்தவகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஷோபனா</h2><p>சின்னத்திரை நடிகைகள் பலரும் ரசிகர்கள் மத்தியில் குறுகிய காலக்கட்டத்தில் கவனத்தை ஈர்த்துவிடுகிறார்கள். அந்தவகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான முத்தழகு சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தான் தான் நடிகை ஷோபனா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca51c76c-acd4-4bde-bf69-9c0ec3d156bf/26-6a7b010861a2b.webp' /></p><p> இதனையடுத்து மீனாட்சி சுந்தரம், பூங்காற்று திரும்புமா உள்ளிட்ட சீரியலில் நடித்து வந்தார். தற்போது, ஜூலை மாதம் ஒளிப்பரப்பாகி வரும் காதல் காதல் காதல் என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.</p><p> சீரியலில் அடக்கவுடக்கமாக இருக்கும் ஷோபனா, மாடர்ன் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-11T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆகஸ்ட் 11 ஆம் திகதியை சுதந்திர தினமாக அறிவித்துள்ள பலுச்சிஸ்தான் - பாகிஸ்தான் மௌனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/balochistan-declares-august-11-independence-day-1786451195"></link>
            <id>https://news.lankasri.com/article/balochistan-declares-august-11-independence-day-1786451195</id>
            <summary type="text">&amp;nbsp;பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம் ஆகஸ்ட் 11 ஆம் திகதியை சுதந்திர தினமாக அறிவித்துள்ளது. 

சுதந்திர தினத்தை அறிவித்துள்ள பலுச்சிஸ்தான்

ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம் ஆகஸ்ட் 11 ஆம் திகதியை சுதந்திர தினமாக அறிவித்துள்ளது. </p><h3>

சுதந்திர தினத்தை அறிவித்துள்ள பலுச்சிஸ்தான்
</h3><p>
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணம், பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணம் ஆகும்.
</p><p>
பல ஆண்டுகளாகவே, பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக்கோரி, பலுச் விடுதலைப் படையினர்(BLA) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f4e9b60-15db-4540-9e69-d7d798c8df77/26-6a7b14fc6865e.webp' /></p><p>

இந்நிலையில், ஆகஸ்ட் 11 ஆம் திகதியை ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினமாக கொண்டாடப்போவதாக பலுசிஸ்தான் அமைப்புகள் அறிவித்துள்ளன.</p><p> 

மேலும், பலூசிஸ்தான் சுதந்திரத்தை சட்டப்பூர்வமாகவும், அரசியல் ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். </p><p>

பாகிஸ்தான் தனது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 14 ஆம் திகதி கொண்டாடி வரும் நிலையில், 3 நாட்களுக்கு முன்னதாக ஆகஸ்ட் 11 ஆம் திகதியை பலுசிஸ்தான் சுதந்திர தினமாக அறிவித்துள்ளது.</p><p> 

முன்னதாக பிரித்தானியர்கள் இந்த துணைக்கண்டத்தை விட்டு வெளியேறியபோது, ​​1947 ஆகஸ்ட் 11 அன்று பலுசிஸ்தான் தனது சுதந்திரத்தை அறிவித்தது.&nbsp;</p><p></p><p> 

ஆனால், அதன் பின்னர் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆக்கிரமிப்பு மூலம், சுதந்திர நாடாக செயல் பட்டு வந்த பலுசிஸ்தானை, 1948 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் திகதி பாகிஸ்தான் உடன் இணைக்கப்பட்டது. </p><p>

பாகிஸ்தான் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வரும் பலூச் மக்கள், பலூசிஸ்தான் கொடியுடன் இந்த நாளை சுதந்திரதினமாக கொண்டாடி வருகின்றனர்.
</p><p>
இது குறித்து பலூச் தலைவர் மிர் யார் பலோச் வெளியிட்டுள்ள பதிவில், "பலுசிஸ்தானின் ஆறு கோடி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி தங்கள் தேசிய சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறார்கள்.</p><p> 

இன்று நாம் நமது சுதந்திரத்தைக் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், பலுசிஸ்தானின் சுதந்திரம் சட்டப்பூர்வமாகவும், அரசியல் ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று உலகத்திடம் கோரும் ஒரு நிலையை அடைந்துள்ளோம்.
</p><p>
பலுசிஸ்தான் குடியரசு, இன்று முதல், பலுசிஸ்தானை பாகிஸ்தானின் ஒரு மாகாணம் என்று அழைப்பதற்கோ, எழுதுவதற்கோ அல்லது குறிப்பிடுவதற்கோ பதிலாக, அது ஒரு சுதந்திர நாடு என்று எழுதப்பட வேண்டும், படிக்கப்பட வேண்டும் மற்றும் அழைக்கப்பட வேண்டும் என்று முழு உலகத்திடமும் கோருகிறது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Message of Independence of the Republic of Balochistan<br><br>11 August, 2026<br><br>The six crore people of Balochistan celebrate their national independence day every year on the 11th of August. Today we have reached a stage where we do not merely celebrate our independence, but demand… <a href="https://t.co/W1LT0LNajU">pic.twitter.com/W1LT0LNajU</a></p>&mdash; Mir Yar Baloch (@miryar_baloch) <a href="https://x.com/miryar_baloch/status/2086917139777372259?ref_src=twsrc%5Etfw">August 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்பு, பொருளாதாரம், அரசியல் மற்றும் இராஜதந்திரம் ஆகியவற்றின் அனைத்துப் பொறுப்புகளையும் தானே நிறைவேற்றிக் கொள்ளும் உரிமையை பலுசிஸ்தான் இப்போது கொண்டுள்ளது.</p><p> 

மிக விரைவில் கடவுச்சீட்டு, நாணயம், பலுசிஸ்தானின் ஊடக நிறுவனங்கள், பலுசிஸ்தான் வர்த்தக மற்றும் வணிக நிறுவனம் மற்றும் தூதரகங்களின் முறையான தொடக்கம் நடைபெறும், அதற்கான தேதிகள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.</p><p> 

பலுசிஸ்தானின் குரலை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்று, நமது மக்களின் குரலாக மாறியுள்ள உலகின், குறிப்பாக இந்தியாவின், துணிச்சலான பிரதான ஊடகங்களுக்கும், அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் பலுசிஸ்தான் குடியரசு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது" என குறிப்பிட்டுள்ளார். </p><p>

பலுசிஸ்தானின் இந்த சுதந்திரதின அறிவிப்புக்கு இதுவரை பாகிஸ்தான் அரசு அதிகாரபூர்வமாக எந்த பதிலும் அளிக்கவில்லை.</p><p> 

இதற்கு அதிகாரபூர்வமாக எதிர்வினையாற்றினால் அது சர்வதேச அளவில் கவனம் பெறும் என்பதால் பாகிஸ்தான் மௌனமாக இருந்து இதனை தவிர்த்து வருகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T12:26:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் அச்சுறுத்தலால் ரகசிய விமானத்தில் ஒழித்து ஓடிய ட்ரம்ப் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-threat-trump-fled-in-a-secret-plan-uk-1786439764"></link>
            <id>https://canadamirror.com/article/iran-threat-trump-fled-in-a-secret-plan-uk-1786439764</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் துருக்கியில் இருந்து பிரிட்டனுக்கு இரகசியமாக இராணுவ விமானத்தில் பயணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் துருக்கியில் இருந்து பிரிட்டனுக்கு இரகசியமாக இராணுவ விமானத்தில் பயணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, டொனால்ட் ட்ரம்ப் இரகசியமாக இராணுவ விமானத்தில் பயணம் செய்ததாக கூறப்படுகின்றது.</p><p>

கடந்த மாதம் நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ட்ரம்ப் துருக்கியின் அங்காராவுக்குச் சென்றிருந்தார். அங்கிருந்து புறப்படும்போது வழக்கமாகப் பயன்படுத்தும் எயார் போர்ஸ் ஒன் விமானத்தில் ஊடகங்கள் முன்னிலையில் அவர் ஏறியதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e372dfa7-cf44-4b10-a9d0-f1013a257e56/26-6a7ae855affe9.webp' /></p><h2>பழைய எயார் போர்ஸ் ஒன் விமானத்தில் பயணித்த ட்ரம்ப்</h2><p>


எனினும், அந்த விமானம் புறப்படாத நிலையில், ஊடகவியலாளர்கள் அங்கிருந்து சென்ற பின்னர், கேட்டரிங் வாகனம் ஒன்றின் மூலம் ட்ரம்ப் வேறு விமானத்துக்கு இரகசியமாக அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.</p><p>



பின்னர், பாதுகாப்புத்துறை செயலாளர் ஹெக்செத் மற்றும் இரகசிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் சி-32ஏ இராணுவ விமானத்தில் துருக்கியிலிருந்து பிரிட்டனுக்கு அவர் பயணம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>


இதனிடையே, ட்ரம்ப் இல்லாமல் பழைய எயார் போர்ஸ் ஒன் விமானத்தில் பயணித்த ஊடகவியலாளர்கள் மற்றும் வெள்ளை மாளிகை ஊழியர்களிடம் விமானத்தின் ஜன்னல்களை மூடி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>


அத்தோடு பிரிட்டனில் இருந்து பின்னர் ட்ரம்ப் பாதுகாப்பாக அமெரிக்கா திரும்பியதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T12:25:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரியா முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/death-sentence-for-former-syrian-president-1786448558"></link>
            <id>https://canadamirror.com/article/death-sentence-for-former-syrian-president-1786448558</id>
            <summary type="text">&amp;nbsp; போர்க் குற்றங்கள் தொடர்பில் சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் மற்றும் அவரது இளைய சகோதரருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 

ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; போர்க் குற்றங்கள் தொடர்பில் சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் மற்றும் அவரது இளைய சகோதரருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>
 

சிரிய நீதிமன்றமொன்றினால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அசாத் மற்றும் அவரது சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் விசாரணை நடத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94046756-66a3-4743-9493-5a40ca119d55/26-6a7b0ab09d64b.webp' /></p><p>
</p><p>
 

சுமார் ஐந்து இலட்சம் பேர் உயிரிழந்த 14 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பிலேயே இவர்களுக்கு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
 

2011 ஆம் ஆண்டு தாரா (Daraa) பகுதியில் இடம்பெற்ற போராட்டங்களை அடக்குவதற்கு தலைமை தாங்கிய அசாத்தின் உறவினரான ஆட்டெஃப் நஜீப் (Atef Najib) என்பவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

 

அதேசமயம் அசாத்தும் அவரது சகோதரரும் ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட நஜீப் சிறைச்சாலை உடையில் நீதிமன்றக் கூண்டில் நின்றபோதே இத்தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-11T12:25:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாயின் தகாத உறவு; 5 நட்சத்திர விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட குழந்தைகள்! சம்பவத்தால் ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wife-affair-bengaluru-man-kills-daughters-hotel-1786436112"></link>
            <id>https://jvpnews.com/article/wife-affair-bengaluru-man-kills-daughters-hotel-1786436112</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியா பெங்களூரில் உள்ள ஒரு 5 நட்சத்திர விடுதியில் இரு குழந்தைகள் சடலமாகவும், அவர்களின் தந்தை படுகாயங்களுடனும் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியா பெங்களூரில் உள்ள ஒரு 5 நட்சத்திர விடுதியில் இரு குழந்தைகள் சடலமாகவும், அவர்களின் தந்தை படுகாயங்களுடனும் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது,</p><p> 
 
40 வயதான இம்ரான் மற்றும் அவரது இரு மகள்கள் விடுதியில் தங்கியிருந்தனர். விடுதி ஊழியர்கள் அறைக்குள் சென்று பார்த்தபோது, குழந்தைகள் கட்டிலில் சடலமாகக் கிடந்தனர். 

இம்ரான் கழுத்து அறுபட்ட நிலையில் கழிப்பறையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acf08a62-e9c8-4a4e-8ded-fd4ebb6b47fa/26-6a7ada120aeec.webp' /></p><h2>என் குழந்தைகள் இப்படிப்பட்ட தாயுடன் வளர்வதை நான் விரும்பவில்லை</h2><p> </p><p>
விடுதி ஊழியர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தற்போது அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
 
இம்ரான் தனது மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>

“என் குழந்தைகள் இப்படிப்பட்ட தாயுடன் வளர்வதை நான் விரும்பவில்லை. அதனால்தான் அவர்களைக் கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தேன்” என அவர் காவல்துறையினரிடம் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
</p><p> 
இம்ரான் தன் மகள்களின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, கத்தியால் கழுத்தை அறுத்துத் தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p> </p><p>

இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் பெங்களூரு நாகவாரா பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் , மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-11T12:24:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய ஊடகம் வியந்த ஈழத்தமிழ் தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/eelam-tamil-entrepreneur-baskaran-k-dutch-media-1786445798"></link>
            <id>https://jvpnews.com/article/eelam-tamil-entrepreneur-baskaran-k-dutch-media-1786445798</id>
            <summary type="text">றீச்சா உணவு திருவிழாவில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு சமூக வலைத்தளங்களில் வாதபிரதிவாதங்க்கள் இடம்பெற்று வரும் நிலையில் , நெதர்லாந்து ஊடகம் வியந்த ஈழத்தமிழர...</summary>
            <content type="html"><![CDATA[<p>றீச்சா உணவு திருவிழாவில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு சமூக வலைத்தளங்களில் வாதபிரதிவாதங்க்கள் இடம்பெற்று வரும் நிலையில் , நெதர்லாந்து ஊடகம் வியந்த ஈழத்தமிழர் பாஸ்கரன் கந்தையா தொடர்பில் வெளிவந்த செய்திதான் இது. </p><p>

நெதர்லாந்து ஊடகம் ஒன்றில் கடந்த வாரம், புலம்பெயர் ஈழத் தமிழர் பாஸ்கரன் கந்தையா தொடர்பில் வெளிவந்த கட்டுரையை அவதூறு பரப்புவோர் அறிந்து கொள்ளவேண்டும். 

அந்தவகையில் நெதர்லாந்து ஊடகம் வெளியிட்ட கட்டுரையில்,
 டச்சு மண்ணை அதிரவைத்த தமிழர் நெதர்லாந்து ஊடகம் வியந்த பாஸ்கரன் கந்தையாவின் 5,445 கோடி ரூபாய் சாம்ராஜ்யம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/262d7f58-4f3c-4152-a593-7d70b0dd5d21/26-6a7affe866861.webp' /></p><h2>நெதர்லாந்தின்&nbsp; செல்வாக்குமிக்க பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த&nbsp; ஈழத்தமிழர்</h2><p> நெதர்லாந்து நாட்டின் வர்த்தக உலகில் பிரகாசிக்கும் ஈழத்து நட்சத்திரம், பாஸ்கரன் கந்தையாவின் வரலாற்றுச் சுவடுகள்
ஐரோப்பியப் பெருநிலப்பரப்பில் ஈழ அகதிகளாக தடம் பதித்து, தமது கடின உழைப்பால் வெற்றி மீது வெற்றி குவித்து வாழும் புலம்பெயர் தமிழர்களின் பட்டியலில் , பாஸ்கரன் கந்தையா என்ற பெயர் இன்றைக்கு உலகளவில் அதிக கவனத்தை ஈர்த்து நிற்கிறது என நெதர்லாந்தின் முன்னணி பொருளாதார மற்றும் வணிக இதழான '<a href="https://www.quotenet.nl/lifestyle/reizen/a73375336/quote-500-lid-baskaran-kandiah-resort-sri-lanka/" target="_blank">Quote Net'</a> அண்மையில் வெளியிட்ட சிறப்புக் கட்டுரை ஒன்று, டச்சு மண்ணில் ஒரு ஈழத்தமிழர் உருவாக்கியுள்ள பிரமாண்டமான வணிகச் சாம்ராஜ்யத்தையும், தனது தாய்நிலம் மீதான காதலையும் , நன்றியுணர்வையும் வெகுவாக பாராட்டியுள்ளது .</p><p> 
நெதர்லாந்து நாட்டின் ஆகப்பெரிய மில்லியனர்களைக் வரிசைப்படுத்தும் 'Quote 500' பட்டியலில் பாஸ்கரன் கந்தையாவைச் சேர்த்து பெருமைப்படுத்தியிருக்கும் அந்த ஊடகம், அவரது வாழ்க்கைப் பாதையை ஒரு பரபரப்பான நாவலைப் போலவும், திரைப்படக் காட்சிகளைப் போலவும் வர்ணித்துள்ளது.
</p><p>அந்த டச்சு ஊடகத்தின் துல்லியமான நிதி மதிப்பீட்டின்படி, திரு . பாஸ்கரன் கந்தையாவின் தற்போதைய நிகர சொத்து மதிப்பானது 165 மில்லியன் யூரோக்கள் ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0d05f12-75c8-46a4-9eb8-72a2c2764e44/26-6a7b02b0b294b.webp' /></p><p>அதாவது நமது இலங்கை ரூபாய் மதிப்பில் இதைக் கணக்கிட்டுப் பார்த்தால், அது சுமார் 5,445 கோடி இலங்கை ரூபாயைத் தொடுகிறது (LKR 54.45 Billion).</p><p>
இந்த பிரமாண்டமான நிதிப் பலம்தான் அவரை நெதர்லாந்தின் மிகச் செல்வாக்குமிக்க பணக்காரர்கள் பட்டியலில் 437-வது இடத்தில் கம்பீரமாக அமர்த்தியிருக்கிறது எனவும் . 
இந்த எண்களுக்குப் பின்னால் இருக்கும் உழைப்பும் அசாத்தியமான துணிச்சலும்தான் உண்மையிலேயே வியப்பளிக்கக்கூடியவை எனவும் அவர்கள் வியப்படைந்துள்ளனர் . </p><p>
யாழ்ப்பாணத்தின் வடலியடைப்பில் ஒரு சாதாரன வறிய குடும்ப சூழலில் பிறந்து வளர்ந்த பாஸ்கரன், தனது இளமைக் காலத்தில் இலங்கையில் நிலவிய போர் மேகங்களினாலும் பொருளாதார நெருக்கடிகளினாலும் ஐரோப்பாவை நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கினார். </p><p>
நெதர்லாந்து மண்ணில் காலூன்றிய அவர், தன் முன்னாலுள்ள சவால்களைக் கண்டு அஞ்சாமல் தனது முப்பதாவது வயதில் தனது இரண்டு நண்பர்களுடன் இணைந்து 'லெபாரா மொபைல்' (Lebara Mobile) என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.</p><h2>ஐரோப்பாவின் முதன்மை வணிக இதழ் புகழாரம்&nbsp;</h2><p> </p><p>தாயகத்தையும், புலம்பெயர்ந்து வாழும் சொந்தங்களையும் குறைந்த செலவில் இணைக்கும் அவரது தொலைநோக்கு வர்த்தக உத்தி, ஐரோப்பா முழுவதும் காட்டுத்தீ போலப் பரவியது. 
2017-இல் அந்த நிறுவனத்தைச் சுவிட்சர்லாந்து முதலீட்டாளர்களுக்கு விற்றதன் மூலம் சர்வதேச அளவில் அறியப்படும் தமிழ் மில்லியனராக உயர்ந்தார். </p><p>அதோடு லெபாராவோடு நின்றுவிடாது 2014-இல் லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் 'IBC தமிழ்' ஊடகக் குழுமத்தைக்கொள்வனவு செய்து , அதனை ஈழத்தமிழர்களுக்கான எல்லைகடந்த ஒரே ஒரு பேரூடகமாக உருவாக்கி இன்றும் அதன் தலைவராகத் தனது பயணத்தை தொடர்கிறார் .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b70fcddd-7cef-463a-8d18-81ab46fbdbe4/26-6a7b02b1b73e2.webp' /></p><p>ஐரோப்பிய பொருளாதாரச்சூழலில் வெற்றிகரமான வியாபாரத்தில் ஆயிரக்கணக்கான கோடிகளை ஈட்டிய பிறகும், தான் பிறந்த தாய்நிலத்தின் மீது அவருக்கு இருந்த பற்றின் காரணமாக போரினால் சிதைந்து கிடந்த தாயகப்பகுதிக்கு மீண்டும் பொருளாதார ரீதியாக உயிர் கொடுக்க வேண்டும் என்ற அவரது தணியாத ஆசையின் விளைவாக உருவானதுதான் 'ரீச்சா (ReeCha) ஒருங்கிணைந்த பண்ணை சூழலியல் சுற்றுலா மையம் ஆகும் . </p><p>
பரந்து விரிந்த அந்த நிலப்பரப்பில் இயற்கை உரங்களைக் கொண்டு பராமரிக்கப்படும் கரிமப் பண்ணைகள், பலவகை மிருகங்கள் மற்றும் பறவைகள் பூங்கா, பிரமாண்டமான நீர் விளையாட்டு வளாகம், தீம் பார்க் என அனைவரையும் கவரும் வகையில் ஒரு சுற்றுலாச் சொர்க்கத்தையே உருவாக்கியுள்ளார். </p><p>
அத்துடன் பன்னாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் நட்சத்திர விடுதிகள் அறைகள், ஸ்பா, உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் உணவகங்களும் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.
 "முப்பதாண்டு கால கொடூர போருக்குப் பிறகும் நமது வடபிராந்தியத்தில் பெரிய அளவிலான பொருளாதார முதலீட்டு வளர்ச்சிப் பணிகள் எவையும் நடக்கவில்லை. </p><p>எனது சொந்த மண்ணுக்கும், என்னை உருவாக்கிய மக்களுக்கும் என்னால் முடிந்த மறுவாழ்வை அளிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் இந்த பிரமாண்ட திட்டத்தின் பின்னணியில் உள்ளது" என்று Quote இதழிடம் பாஸ்கரன் கந்தையா உருக்கமுடன் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>யுத்தத்திற்குப் பிந்தைய காலத்தில் வட இலங்கையின் பொருளாதாரம் தேக்கமடைந்து கிடந்த சூழலில், ரீச்சா மையத்தில் பாஸ்கரன் செய்த முதலீட. அந்தப்பகுதியில் ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> இன்றைக்கு அந்த மையத்தில் மட்டும் சுமார் 400 பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பும், 100 பேருக்குப் பகுதிநேர வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் நேரடியாகப் பயனடைகின்றன. 
அதுமட்டுமன்றி, 2025-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 3 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்த மையத்தைப் பார்வையிட்டுள்ளனர். </p><p>இதனால் யாழ்ப்பாணப் பகுதியிலுள்ள சிறு வியாபாரிகள், ஆட்டோ மற்றும் வாகன ஓட்டுநர்கள், உள்ளூர் கைவினைஞர்கள் என பலதரப்பட்ட மக்களின் பொருளாதாரமும் கணிசமாக உயர்ந்துள்ளது எனவும் அந்த இதழ் புகழாரம் சூடியுள்ளது </p><p>. 
ஈழத்தமிழர்களின் தேச நலன் தொடர்பிலான கருத்தாடல்களில் தேசிய முதலாளிகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை சரியானமுறையில் சமூகமயமாக்கப்படாமல் , ஒரு தரப்பின் விமர்சனம் இருந்து வந்தாலும் , தேவையுடைய ஒரு சமூகத்தின் பொருளாதார தேவையாக பாஸ்கரன் கந்தையா இருந்து வருகிறார் . </p><p>
ஐரோப்பாவின் முதன்மை வணிக இதழ் ஒன்றில் புகழாரம் சூட்டப்படும் ஒரு ஈழத்தமிழரை எண்ணி நமது 
சமூகமும் பெருமையுறும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை . 
வடக்கு கிழக்கின் இன்றைய தேவை அதை வளப்படுத்தக்கூடிய பாரம்பரியமான முதலீட்டாளர்களே என்பதை உணர்த்தி 
ஒரு முன்னுதாரனமாக தனது கனவுகளை நோக்கி வெற்றிகரமாக நகர்ந்து வருகிறார் திரு பாஸ்கரன் கந்தையா&nbsp; என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T12:23:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய மத்திய அரசு இணையதளத்தில் நடிகை ரக்சிதா புகைப்படம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/actress-rachitha-photo-indian-government-website-1786451081"></link>
            <id>https://jvpnews.com/article/actress-rachitha-photo-indian-government-website-1786451081</id>
            <summary type="text">&amp;nbsp; இந்திய மத்திய அரசு இணையதளத்தில் நடிகை ரக்சிதா மகாலட்சுமியின் புகைப்படம் வெளியானமை சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

மத்திய அரசின் அதிகாரப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்திய மத்திய அரசு இணையதளத்தில் நடிகை ரக்சிதா மகாலட்சுமியின் புகைப்படம் வெளியானமை சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
</p><p>
மத்திய அரசின் அதிகாரப்பூர்வ SIDCO இணையதளத்தில் கழக இயக்குனர் டாக்டர் அங்கிதா சிங் என்பவரின் புகைப்படத்திற்கு பதிலாக அங்கே ரச்சிதா மகாலட்சுமியின் புகைப்படம் இடம் பெற்றிருப்பது பலரையும் சிரிக்க வைத்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67470686-8b93-44e6-b24f-0a509b0d2cdc/26-6a7b148ae2dcc.webp' /></p><p>
</p><p>

இன்னிலையில் மத்திய அரசின் அதிகாரப்பூர்வதளத்தில் இப்படி தவறாக வேறொருவரின் புகைப்படத்தை பதிவிடலாமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T12:22:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலேசியாவில் சிக்கிய ரத்மலானை சைமா : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ratmalane-saima-held-for-48-hours-for-questioning-1786447014"></link>
            <id>https://tamilwin.com/article/ratmalane-saima-held-for-48-hours-for-questioning-1786447014</id>
            <summary type="text">மலேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவான காஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்படும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவான காஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்படும் 'ரத்மலானை சைமா' என்பவரை, விசாரணைக்காக 48 மணி நேரம் காவலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
சந்தேக நபர் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>ரத்மலனே சைமா மேலதிக விசாரணைகளுக்காக நேற்று இரவு (10) பேராதனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.</p><p>

வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி, மலேசிய பொலிஸ் மற்றும் இன்டர்போலின் உதவியுடன் அந்த நாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8adb1b28-396e-4200-8ca0-fa4ba2b0ab61/26-6a7b0aff94971.webp' /></p><p>அவருடன் இருந்த ரத்மலானை பகுதியைச் சேர்ந்த மேலும் இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சந்தேக நபர்கள் மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக நேற்று பிற்பகல் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.
</p><p>
பிரதான சந்தேக நபர் ரத்மலானையைச் சேர்ந்த 41 வயதானவர் என்றும், அவர் 2014ஆம் ஆண்டில் பேராதனை பொலிஸ் பிரிவில் ஒருவரைக் கடத்தி, துப்பாக்கி முனையில் காயப்படுத்தியது மற்றும் 2016ஆம் ஆண்டில் ஒருவரைச் சுட்டுக் கொன்றது ஆகிய இரண்டு வழக்குகள் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதற்கிடையில், மலேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட மற்ற இரண்டு சந்தேக நபர்கள் இன்று (11) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T12:20:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில் கியூபாவில் எரிபொருள் விநியோகம் - கறுப்புச் சந்தை வியாபாரம் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fuel-deliveries-in-cuba-amid-sanctions-1786450561"></link>
            <id>https://tamilwin.com/article/fuel-deliveries-in-cuba-amid-sanctions-1786450561</id>
            <summary type="text">அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும், கியூபாவின்
கறுப்புச் சந்தை மற்றும் தனியார் துறைகளில் அமெரிக்க எரிபொருளின் பயன்பாடு
திடீரெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும், கியூபாவின்
கறுப்புச் சந்தை மற்றும் தனியார் துறைகளில் அமெரிக்க எரிபொருளின் பயன்பாடு
திடீரென அதிகரித்து வருகின்றது.
</p><p>
ஆறு தசாப்த கால ஃபிடல் காஸ்ட்ரோவின் புரட்சிக்குப் பின்னர், அந்நாட்டின்
கம்யூனிசக் கொள்கை சார்ந்த ஆற்றல் துறையில் முதலாளித்துவ அமைப்பின் தாக்கங்கள்
வெளிப்படத் தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><h2>
எரிபொருள் தட்டுபாடு</h2><p>
வெனிசுலா மற்றும் மெக்சிகோ போன்ற பாரம்பரிய நாடுகளிலிருந்து கியூபாவிற்கு
கிடைத்து வந்த எண்ணெய் விநியோகம் முடங்கியதைத் தொடர்ந்து, அந்நாட்டில்
கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் சுகாதாரம்,
பொதுப்போக்குவரத்து மற்றும் பாடசாலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள்
கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/862a1120-2624-4589-a35b-869f5652f147/26-6a7b1352efc1b.webp' /></p><p>

இந்நிலையிலேயே, அமெரிக்க வணிகத் திணைக்களத்தின் சிறப்புத் தளர்வு ஒன்றின்
கீழ், கியூபாவின் தனியார் வணிகங்களுக்கு அமெரிக்க நிறுவனங்கள் எரிபொருளை
ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
</p><p>
இதன் மூலம், கடந்த பெப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரையான காலப்பகுதியில்
சுமார் 900,000 பீப்பாய் அமெரிக்க எரிபொருள் கியூபாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
</p><p>
இந்த எரிபொருள் நாட்டின் மொத்தத் தேவையில் சில நாட்களுக்கு மாத்திரமே
போதுமானது என்ற போதிலும், அது கியூபாவின் பொருளாதார நடைமுறைகளில் பாரிய
மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
</p><h2>

கறுப்புச் சந்தை வியாபாரம் தீவிரம்</h2><p>
தனியார் வர்த்தக நிலையங்கள், உணவகங்கள் மற்றும் வாடகை வாகன உரிமையாளர்கள் இந்த
எரிபொருளைப் பயன்படுத்தி தமது சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>
அதேவேளை, முறையான விநியோகக் கட்டமைப்பு இன்மையால் அங்கு கறுப்புச் சந்தை
வியாபாரமும் தீவிரமடைந்துள்ளது.

சமூக வலைத்தளங்கள் மற்றும் ரகசியக் கிடங்குகள் மூலம் அதிக விலைக்கு எரிபொருள்
விற்பனை செய்யப்படுவதால், குறைந்த வருமானம் பெறும் சாதாரண பொதுமக்கள் பெரும்
அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be4fcc3f-7579-46c1-8f7d-7ab47b5e5a98/26-6a7b1353a4a4f.webp' /></p><p>

நெருக்கடியைச் சமாளிக்கும் பொருட்டு, கியூபா அரசாங்கம் ஆற்றல் துறையில் தனியார்
மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்குப் பகுதியளவில் அனுமதி அளிக்கும் வகையில்
பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.
</p><p>
இருப்பினும், இது நாட்டின் தேசிய சொத்துக்களைப் பெருமளவில் தனியார் மயமாக்கும்
முயற்சி அல்ல என அந்நாட்டு ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.
</p><p>
எவ்வாறாயினும், கட்டுப்பாடுகள் நிறைந்த போதிலும் கியூபாவில் தனியார்
துறையினரால் அமெரிக்க எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவதும், அது அங்குள்ள
சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்படுத்தி வரும் தாக்கங்களும் சர்வதேச
அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T12:19:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நண்பர்களுடன் பட்டம் விடச் சென்ற சிறுவன் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/boy-dies-while-out-flying-kites-with-friends-1786450274"></link>
            <id>https://jvpnews.com/article/boy-dies-while-out-flying-kites-with-friends-1786450274</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நண்பர்களுடன் பட்டம் விடச் சென்ற 14 வயது சிறுவன் , மரத்தில் சிக்கியிருந்த பட்டத்தை எடுக்க முற்பட்டபோது தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நண்பர்களுடன் பட்டம் விடச் சென்ற 14 வயது சிறுவன் , மரத்தில் சிக்கியிருந்த பட்டத்தை எடுக்க முற்பட்டபோது தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>

இந்தச் சம்பவம் அநுராதபுரம், திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோடாமடுவ பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்றுள்ளது.

தோடாமடுவ, திறப்பனை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcc18806-3787-4dce-bb90-a059b708ab35/26-6a7b11648167f.webp' /></p><p></p><p>
சம்பவத்தன்று குறித்த சிறுவன் தனது நண்பர்கள் சிலருடன் தோடாமடுவ வயல்வெளிக்குச் சென்று பட்டம் விட்டுக்கொண்டிருந்துள்ளார்.
</p><p>
இதன்போது, மரத்தில் சிக்கியிருந்த பட்டத்தை எடுப்பதற்காக மரத்தில் ஏறிய நிலையில், எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இதனையடுத்து, சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் அநுராதபுரம், திறப்பனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-11T12:08:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் அனுப்பிய கடிதம்.. அமைச்சர் வெளியிட்ட உத்தியோகபூர்வ தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amendment-mahanayake-thero-nalinda-jeyatissa-1786444244"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amendment-mahanayake-thero-nalinda-jeyatissa-1786444244</id>
            <summary type="text">நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசியலமைப்புத் திருத்தம் பொருத்தமற்றது எனத் தெரிவித்து மகாநாயக்க தேரர்களினால் அனுப்பப்பட்ட கடிதம் ஜனாதிபத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசியலமைப்புத் திருத்தம் பொருத்தமற்றது எனத் தெரிவித்து மகாநாயக்க தேரர்களினால் அனுப்பப்பட்ட கடிதம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்குக் கிடைத்துள்ளதாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ உறுதிப்படுத்தினார்.
</p><p>
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (11) நடைபெற்ற போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் இதனைத் தெரிவித்தார். </p><p>குறித்த கடிதம் கிடைத்ததைத் தொடர்ந்து, தாமும் நீதி அமைச்சரும் மகாநாயக்க தேரர்களை நேரில் சந்தித்து நிலைமைகள் குறித்து தெளிவுபடுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.&nbsp;</p><h2>நீதியரசர்களின் ஓய்வு வயது நீட்டிப்பு..&nbsp;&nbsp;</h2><p>

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நீதிச்சேவைச் சட்டத் திருத்தம் ஆகியவற்றை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு முன்னதாகவே, மகாநாயக்க தேரர்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த விடயங்கள் தொடர்பில் தமது தரப்பு விளக்கங்களை முன்வைத்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b83f802-136c-4ae7-8311-3864473ebc6c/26-6a7b00348b08e.webp' /></p><p> </p><p>மேலும், மல்வத்து, அஸ்கிரிய மற்றும் ராமன்ன மகா நிகாயக்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து உண்மைகளை விளக்கியதாக அவர் கூறினார்.</p><p>

இதற்கிடையில், கடந்த 4ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் தங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை என தெரிவித்தார்.&nbsp;</p><p>இந்நிலையில், அதற்கு முன்னாளே, தாமும் நீதி அமைச்சரும் மல்வத்து, அஸ்கிரிய மற்றும் ராமன்ன பிரிவுகளின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்துத் தெளிவுபடுத்தியதாக அவர் தற்போது கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T12:05:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரணதண்டனை விதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/death-sentence-imposed-on-syrias-former-president-1786443409"></link>
            <id>https://ibctamil.com/article/death-sentence-imposed-on-syrias-former-president-1786443409</id>
            <summary type="text">&amp;nbsp;சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் உட்பட&amp;nbsp;மூவருக்கு &amp;nbsp;உள்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

உள்நாட்டுப் போரின்போதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் உட்பட&nbsp;மூவருக்கு &nbsp;உள்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.</p><p>

உள்நாட்டுப் போரின்போதான ‘போர்க்குற்றங்கள்’ மற்றும் ‘மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்’ ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் மேற்கண்ட தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>அசாத்&nbsp;&nbsp;இல்லாத நிலையில் மரண தண்டனைத் தீர்ப்பு</h2><p>பஷார் அல்-அசாத் சிரியாவில் இல்லாத நிலையில் இந்த மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2024-ல் கிளர்ச்சியாளர்கள் தலைநகர் டமாஸ்கஸைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அசாத் தனது குடும்பத்துடன் ரஷ்யாவின் மொஸ்கோவிற்குத் தப்பிச் சென்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7e08db6-de94-4f99-83ad-ff772666ee89/26-6a7af80e3ba2e.webp' /></p><p>
</p><p>
பஷார் அல்-அசாத்துடன் சேர்ந்து அவரது தம்பியான மாஹெர் அல்-அசாத் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி மற்றும் அசாத்தின் உறவினரான ஆதிப் நஜீப் ஆகியோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முன்னாள் பாதுகாப்பு அதிகாரி நீதிமன்றில் முன்னிலை</h2><p>

மேலும் ஆதிப் நஜீப் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், அசாத் மற்றும் அவரது தம்பியை சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f3b9a2f-0e70-4681-9fe8-c44525230996/26-6a7af80ee27c0.webp' /></p><p>
</p><p>
சிரியாவில் 14 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போரின் போது, திட்டமிட்ட கொலைகள், சித்திரவதை, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொன்றது மற்றும் சட்டவிரோதக் காவல் போன்ற மனிதநேயமற்ற குற்றங்களுக்காக இந்தத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
</p><p>

சிரியாவில் அசாத்தின் 24 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சி வீழ்ந்த பிறகு, அங்கு பொறுப்பேற்றுள்ள புதிய இடைக்கால அரசு முன்னாள் ஆட்சியாளர்களுக்கு எதிராகத் தொடங்கிய சட்ட நடவடிக்கைகளின் முதல் மரண தண்டனைத் தீர்ப்பு இதுவாகும்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T12:05:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் மகளை காணவில்லை : பெற்றோர் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/daughter-missing-in-batticaloa-1786449764"></link>
            <id>https://ibctamil.com/article/daughter-missing-in-batticaloa-1786449764</id>
            <summary type="text">&amp;nbsp;மட்டக்களப்பில் தனியார் கல்வி நிலையம் செல்வதாக சொல்லிச் சென்ற தமது மகளை காணவில்லை என பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.


மட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மட்டக்களப்பில் தனியார் கல்வி நிலையம் செல்வதாக சொல்லிச் சென்ற தமது மகளை காணவில்லை என பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
</p><p>

மட்டக்களப்பு ஆயித்தியமலையைச் சேர்ந்த அல்போன்ஸ் ஜெசிக்கா(வயது 14) என்ற மகளையே கடந்த 02 ஆம் திகதி முதல் காணவில்லை என பெற்றோர் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p><h2>முறைப்பாடு அளித்தும் நடவடிக்கை இல்லை</h2><p>வழமையாக பாடசாலை சென்று வந்து பிற்பகல் 02 மணிக்கு தனியார்கல்வி நிலையம் சென்றுள்ளார்.மாலை ஆறுமணியாகியும் அவர் வராத காரணத்தால் 119 என்ற காவல்துறையின் அவர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்கப்பட்டது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/vQPjd9OT0VY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
</p><p>
மறுநாள் ஆயித்தியமலை காவல் நிலையம் சென்று முறைப்பாடு அளித்த போதிலும் இன்றுவரை காவல்துறையால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
</p><p>
இது தொடர்பாக மட்டக்களப்பிலுள்ள மனித உரிமைகள் நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T12:02:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ் - பின்னணியில் இருக்கும் முக்கிய காரணம் இதுவா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/why-vijay-wife-sangeetha-withdrew-the-divorce-case-1786447879"></link>
            <id>https://manithan.com/article/why-vijay-wife-sangeetha-withdrew-the-divorce-case-1786447879</id>
            <summary type="text">vijay-sangeetha : முதலமைச்சர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற வேண்டும் என அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>vijay-sangeetha : முதலமைச்சர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற வேண்டும் என அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், சமீபத்தில் அந்த மனுவை அவர் வாபஸ் பெற்றிருப்பது பல்வேறு கேள்விகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2>விஜய் - சங்கீதா&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
கடந்த 1992ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான விஜய், தனது விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பால் படிப்படியாக முன்னேறி முன்னணி நடிகராக உயர்ந்தவர். தற்போது தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று சிறப்பாக கடமையாற்றி வருகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a54a235-ddb0-4924-ba4c-55313dc719bd/26-6a7b0df7acd4b.webp' /></p><p>தனது தீவிர ரசிகையான சங்கீதாவையே திருமணம் செய்து கொண்ட அவர், ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்ட நட்சத்திரத் தம்பதிகளில் ஒருவராகவும் திகழ்தனர்.</p><p>ஆனால் எதிர்பாராத விதமாக சங்கீதா, விஜய்யிடம் இருந்து பிரிந்து செல்ல விரும்புவதாகக் கூறி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64444465-c9d8-4068-9637-988e015a6268/26-6a7b0df86c072.webp' /></p><p></p><p> விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக அவர் குற்றம்சாட்டியதாகவும் தகவல்கள் வெளியாகின.

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு இதுவரை மூன்று முறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில்,&nbsp; மூன்றாவது விசாரணையின்போது, நீதிபதி சுஜாதா, சங்கீதாவிடம் சுமார் 20 நிமிடங்கள் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. </p><p>இந்த ஆலோசனைக்குப் பிறகு, தான் தொடர்ந்த விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக சங்கீதா நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.

இந்த திடீர் மனமாற்றத்துக்குப் பின்னால் சில முக்கிய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a15930fe-b398-4e87-8ac7-ce52f946ef56/26-6a7b0df91e170.webp' /></p><h2>சங்கீதாவின் மனமாற்றத்துக்கு இது தான் காரணமா?&nbsp;</h2><p>
</p><p>
முதலாவதாக, சங்கீதாவுடனான திருமண உறவு முறிவதை விஜய் ஆரம்பம் முதலே விரும்பவில்லை என்றும், குடும்பம் மீண்டும் ஒன்றாக வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அதேபோல், அவர்களது மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா ஆகிய இருவரும் பெற்றோர் பிரிவதை விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5b6dd4e-2dd1-4b3f-bf4d-6e34f935749d/26-6a7b0df9c42d6.webp' /></p><p> குறிப்பாக ஜேசன் தனது தந்தையுடனும், திவ்யா பெற்றோர் இருவரிடமும் தொடர்ந்து பேசி, அவர்களுக்குள் ஏற்பட்டிருந்த மனக்கசப்பை போக்க முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

சங்கீதாவின் மனக்கசப்புக்கு சில தவறான நபர்களின் ஆலோசனைகளும் காரணமாக இருந்ததாகவும், அவர்களின் தேவையற்ற பேச்சுகளால் விஜய் மீது அவருக்கு தவறான புரிதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, குடும்பத்தினரின் அறிவுறுத்தலை ஏற்று, அந்த நபர்களுடனான தொடர்பை சங்கீதா முற்றிலுமாக துண்டித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b88a2a30-edc6-4269-b7ee-a09af6fe2e92/26-6a7b0dfa74297.webp' /></p><p>
மேலும், மன அழுத்தத்தில் இருந்த காலகட்டத்தில் சங்கீதா, தங்களது திருமண வீடியோக்கள், சீமந்த புகைப்படங்கள் மற்றும் குழந்தைகளுடன் விஜய் மகிழ்ச்சியாக செலவிட்ட பழைய தருணங்களின் புகைப்படங்களை பார்த்ததாகவும் கூறப்படுகிறது. அந்த நினைவுகள் அவருக்குள் மிகப்பெரிய மனமாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இறுதியில், பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் அவர்களது மனநிலையை கருத்தில் கொண்டு சங்கீதா தனது முடிவை மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த தகவல்கள் சினிமா வட்டாரங்களிலும், குடும்பத்திற்கு நெருக்கமானவர்களிடையேயும் பேசப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48a35897-617d-4ebf-bea8-72a2409a8e0b/26-6a7b0dfb243c1.webp' /></p><p></p><p> விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடிய நிலையில், குறுகிய காலத்திலேயே தனது முடிவை மாற்றிக்கொண்டு சங்கீதா அந்த மனுவை வாபஸ் பெற்றிருப்பது, விஜய் – சங்கீதா தம்பதியினர் மீண்டும் இணைந்திருக்கிறார்களா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T12:00:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் பொலிசார் மீது தாக்குதல்: ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-arrested-for-stabbed-france-police-1786449600"></link>
            <id>https://news.lankasri.com/article/man-arrested-for-stabbed-france-police-1786449600</id>
            <summary type="text">பிரான்சில் பொலிசார் இருவர் மீது தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


தெற்கு பிரான்சிலுள்ள Toulouse நகரில் பொலிசார் இருவர் ரோந்து சென்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சில் பொலிசார் இருவர் மீது தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>

தெற்கு பிரான்சிலுள்ள Toulouse நகரில் பொலிசார் இருவர் ரோந்து சென்றுகொண்டிருந்தபோது, திடீரென ஒருவர் அவர்களைத் தாக்கியுள்ளார்.</p><h3>
பிரான்சில் பொலிசார் மீது தாக்குதல்
</h3><p>
நேற்று, அதாவது, திங்கட்கிழமை மாலை Toulouse நகரிலுள்ள Rue d'Austerlitz என்னுமிடத்தில் பொலிசார் ரோந்து சென்றுகொண்டிருந்தபோது, ஒருவர் அவர்களை கத்தி போன்ற ஒரு ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f08fafa4-a026-438c-b780-0ca6055511ab/26-6a7b0ec2d86eb.webp' /></p><p>

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட நகர மேயரான Jean-Luc Moudenc, தாக்கப்பட்ட பொலிசார் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.</p><p>

இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன என்றும் அவர் கூறியுள்ள நிலையில், காயமடைந்த பொலிசாரின் நிலைமை குறித்து யாரும் தெரிவிக்கவில்லை.&nbsp;</p><p></p><p>
மேலும், பொலிசாரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் Moudenc தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T12:00:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி - நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் விழிப்புடன் இயங்கும் கும்பல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/foreign-employment-scam-in-jaffna-1786449214"></link>
            <id>https://tamilwin.com/article/foreign-employment-scam-in-jaffna-1786449214</id>
            <summary type="text">வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களிடம் கடந்த சில வாரங்களுக்குள் ஏழரைக் கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களிடம் கடந்த சில வாரங்களுக்குள் ஏழரைக் கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
யாழ். மாவட்டத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><h2>
மோசடிகள் அதிகரிப்பு</h2><p>
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக இவ்வாறான மோசடி சம்பவங்கள் சடுதியாக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த மோசடிகளுடன் தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் இதுவரை கிடைத்துள்ளதாகவும், அவற்றில் அதிகபட்சமாக ஒருவரிடம் இருந்து ஒன்றரை கோடி ரூபா வரையில் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49ec35e1-d4d6-4c11-a0c4-74c71a22a4ed/26-6a7b0d9833c8e.webp' /></p><p>
</p><p>
சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் போலியான விளம்பரங்களை நம்பியே பெருமளவானோர் இவ்வாறு பணத்தை இழந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
</p><h2>
நள்ளிரவு 12 மணிக்கு பின் நடக்கும் சம்பவம்</h2><p>

கனடா, பிரித்தானியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு எவ்வித செலவுமின்றி அனுப்பி வைப்பதாகக் கூறியே இந்த போலியான விளம்பரங்கள் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b35c9809-041a-4d9d-967c-9033c6e93399/26-6a7b0d98eae5f.webp' /></p><p>
</p><p>
இதனை நம்பி தொடர்புகொள்ளும் நபர்களிடம் முதலில் ஒரு தொகைப் பணத்தை வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டு காட்டுமாறு கூறுவதாகவும், பின்னர் அவர்களின் வங்கிக் கணக்கு கடவுச்சொல் உள்ளிட்ட தகவல்களைப் பெற்று, நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் பணத்தை மோசடியாக எடுத்துக்கொள்வதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
எனவே, சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் தொடர்பான போலியான விளம்பரங்களை நம்பி பணத்தை இழக்காமல், பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T11:55:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைகளில் ஏற்பட்ட மோதல் : காரணங்கள் கண்டறிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/causes-of-prison-unrest-identified-1786446954"></link>
            <id>https://ibctamil.com/article/causes-of-prison-unrest-identified-1786446954</id>
            <summary type="text">சிறைச்சாலைகளில் சமீபத்தில் நடந்த மோதல்களுக்குப் பல காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் தொடரும் அதே வேளையில் அதற்கான தீர்வுகள் மேற்கொள்ளப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைகளில் சமீபத்தில் நடந்த மோதல்களுக்குப் பல காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் தொடரும் அதே வேளையில் அதற்கான தீர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.</p><p>

இன்றைய(11) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் பேசிய அமைச்சர், இச்சம்பவங்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) ஏற்கனவே விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக உறுதிப்படுத்தினார்.</p><h2>&nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்</h2><p>&nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் குறித்து, கைதிகள் மற்றும் அதிகாரிகள் உட்பட 1,500-க்கும் மேற்பட்ட நபர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a13fd2a9-5067-4177-be78-66361a1f7bbd/26-6a7b08d814e4a.webp' /></p><p>
</p><p>
கலவரத்தின் போது நடந்த கொலைகள் தொடர்பாக 61 சந்தேக நபர்கள் பெயரிடப்பட்டுள்ளதாகவும், நேற்று (10) ஒருவர் காவல்துறை காவலில் எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.</p><p></p><p> </p><h2>மகர சிறைச்சாலை சம்பவம்</h2><p>இச்சம்பவம் தொடர்பான உண்மைகள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மகர சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக 925 நபர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2d49e15-c6e7-459e-aea3-125154e8b7e9/26-6a7b08d761e47.webp' /></p><p> அதே வேளையில் குருவிட்ட சிறைச்சாலை மோதல் குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

மோதல்களுடன் தொடர்புடைய நபர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக அமைச்சர் வலியுறுத்தினார். </p><p>மேலும், இந்தச் சம்பவங்களுக்கு இடையே தொடர்புகள் உள்ளதா என்பது குறித்தும், வெளித் தரப்பினரின் சாத்தியமான ஈடுபாடு குறித்தும் குற்றப் புலனாய்வுத் துறை (CID) விசாரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T11:50:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் கடல்சீற்றம் ; வாடிகளுக்குள் புகுந்த வெள்ளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rough-seas-in-mullaitivu-flood-enter-fishing-huts-1786448924"></link>
            <id>https://jvpnews.com/article/rough-seas-in-mullaitivu-flood-enter-fishing-huts-1786448924</id>
            <summary type="text">&amp;nbsp; முல்லைத்தீவு மாவட்டத்தில் திடீரென அதிகரித்த கடற்சீற்றம் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின் வாடிகளுக்குள் இன்று (11.08.2026) காலை புகுந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முல்லைத்தீவு மாவட்டத்தில் திடீரென அதிகரித்த கடற்சீற்றம் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின் வாடிகளுக்குள் இன்று (11.08.2026) காலை புகுந்ததால், அப்பகுதி மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
 

கடல்நீர் உட்புகுந்ததன் காரணமாக மீனவர்களின் வாடிகள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதுடன், மீனவர்களின் அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31c4d520-51a7-4562-bbf2-f498fe4ce6dc/26-6a7b0c1e78280.webp' /></p><p>

 

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ் நேரில் சந்தித்தார் .</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T11:46:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவிலுள்ள இலங்கை ஏதிலிகளுக்கு குட் நியூஸ்: அனுமதி வழங்கிய அமைச்சரவை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/good-news-refugees-returning-homeland-from-india-1786443296"></link>
            <id>https://ibctamil.com/article/good-news-refugees-returning-homeland-from-india-1786443296</id>
            <summary type="text">யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின் (UNHCR) உதவிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின் (UNHCR) உதவியுடன் மீண்டும் தாயகம் திரும்ப எதிர்பார்க்கும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவருவதற்காக சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
</p><p>
 

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைவாக இந்த அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
 

சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கு அமைவாக, பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்றி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p></p><h2>அமைச்சரவை அங்கீகாரம்</h2><p>1. 2006-08-01 இற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட துறைமுகம் மற்றும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு இல்லாமல் நாட்டிலிருந்து வெளியேறி இந்தியாவில் இடம்பெயர்ந்தவர்கள், அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் மூலம் தமது இலங்கை அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னர், அரசு புலனாய்வுச் சேவையிடமிருந்து ஒப்புதல் அனுமதி அறிக்கையைப் பெற்றுக்கொள்ளல்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59b27e1d-370c-4aba-8c3c-bdec2dbfbd83/26-6a7b046fe29c2.webp' /></p><p>
</p><p>2. குறித்த நபர்கள் கொலை, அரசுக்கு எதிரான துரோகம் மற்றும் சட்டத்தின் விசேட ஏற்பாடுகளின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களைச் செய்யாதவர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளல்.
</p><p>3. அவ்வாறு உறுதிப்படுத்தப்பட்ட நபர்களுக்குத் தற்காலிக வெளிநாட்டு கடவுச்சீட்டை வழங்கி, 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்திற்கமைய, எந்தவித சட்ட நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தாமல் அங்கீகரிக்கப்பட்ட துறைமுகங்கள் ஊடாக நாட்டுக்கு வருகை தர வாய்ப்பளித்தல்.
</p><p>4. 2006-08-01 முதல் யுத்தம் முடிவடைந்த 2009-05-19 ஆம் திகதி வரை முறையான ஆவணங்களின்றி இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தவர்கள், தூதரகத்தின் மூலம் அடையாளத்தை உறுதிப்படுத்தி, புலனாய்வுச் சேவையின் ஒப்புதலைப் பெற்ற பின்னர், குடிவரவு மற்றும் குடியகல்வுக்கட்டுப்பாட்டாளரின் அதிகாரங்களின் பிரகாரம் சட்ட நடவடிக்கைகளின்றி நாட்டுக்குத் திரும்ப சந்தர்ப்பம் வழங்குதல்.</p><p>5. இருப்பினும், கொலை, தேசத்துரோகம் போன்ற பாரிய குற்றங்களுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்படும் நபர்கள், துறைமுகங்களில் வைத்துத் தடுக்கப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உரிய நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுவர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T11:46:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ள ஸ்பைடர் மேன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/spiderman-brand-new-day-indian-collection-report-1786444885"></link>
            <id>https://viduppu.com/article/spiderman-brand-new-day-indian-collection-report-1786444885</id>
            <summary type="text">250 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த ஜூலை 30-ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே. 

இப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>250 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த ஜூலை 30-ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே.</p><p> 

இப்படத்தை இயக்குநர் டெஸ்டின் டேனியல் க்ரெட்டன் இயக்க, டாம் ஹோலாண்ட், ஜென்டயா, சாடி சிங்க் ஆகியோர் நடித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a47c5d80-551b-4bd5-a4e4-c8ce7f2cff84/26-6a7afc585527b.webp' /></p><p>இந்நிலையில், 12 நாட்களில் இந்தியாவில் மட்டுமே ரூ. 520 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.</p><p>

இதன் மூலம் இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் திரைப்படம் என்கிற சாதனையை ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T11:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை : அரச தரப்பின் நிலைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/death-penalty-for-drug-offenders-in-sri-lanka-1786446247"></link>
            <id>https://ibctamil.com/article/death-penalty-for-drug-offenders-in-sri-lanka-1786446247</id>
            <summary type="text">இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து&amp;nbsp;இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து&nbsp;இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>இன்று (11) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;"முழு நாடும் ஒன்றாக" தேசிய செயல்பாட்டு சபையில், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என சில தரப்பினரால் யோசனைகள் முன்வைக்கப்பட்டது. அது குறித்து எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும்.</p><p></p><h2>சில தரப்பினரிடமிருந்து வந்த யோசனை</h2><p>இப்பிரச்சினையின் தீவிரத்தன்மை குறித்து கலந்துரையாடும் போது சில தரப்பினரிடமிருந்து வந்த ஒரு யோசனையே இது. அதை எவ்வாறு செய்வது என்பது குறித்து இதுவரை இறுதி முடிவோ அல்லது உடன்பாடோ எட்டப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e54b7a28-55a8-49fe-9bef-3b3dd4229a15/26-6a7b0522afdfc.webp' /></p><p>பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் குறித்து பேசப்படும் போது பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்படும் ஒரு யோசனை மட்டுமே இது." என தெரிவித்தார்.</p><p>இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து "முழு நாடும் ஒன்றாக" தேசிய செயல்பாட்டு மையத்தில் நேற்று (10) கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T11:28:55+00:00</updated>
        </entry>
    </feed>
