<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-11T09:26:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாலமன் பாப்பையா காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/solomon-pappaiah-passed-away-1789115391"></link>
            <id>https://ibctamilnadu.com/article/solomon-pappaiah-passed-away-1789115391</id>
            <summary type="text">பட்டிமன்ற பேச்சாளரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா வயது மூப்பின் காரணமாக மதுரையில் இன்று காலமானார்.

1936ம் ஆண்டு பிறந்தவர் சாலமன் பாப்பையா, மதுரை அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பட்டிமன்ற பேச்சாளரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா வயது மூப்பின் காரணமாக மதுரையில் இன்று காலமானார்.</p><p>
</p><p>
1936ம் ஆண்டு பிறந்தவர் சாலமன் பாப்பையா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றியவர்.
</p><p>
திருக்குறள் உட்பட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு சாலமன் பாப்பையா உரை எழுதி இருக்கிறார், 12000க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்திய புகழுக்குரியவர்.
</p><p>
வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார், 2000ம் ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருதினையும், 2021ம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5baf705c-a387-42ff-9687-ab6791c90bd7/26-6aa3bc3c9673c.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-11T09:20:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரட்டை கோபுர தாக்குதல்களின் 25வது ஆண்டு நினைவு நாள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/25th-anniversary-of-the-twin-towers-attacks-1789118530"></link>
            <id>https://canadamirror.com/article/25th-anniversary-of-the-twin-towers-attacks-1789118530</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவில் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி நடத்தப்பட்ட இரட்டை கோபுரத் தீவிரவாதத் தாக்குதல்களின் 25வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவில் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி நடத்தப்பட்ட இரட்டை கோபுரத் தீவிரவாதத் தாக்குதல்களின் 25வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. </p><p>

நியூயோர்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் மீது இரண்டு விமானங்கள் மோதி தாக்குதல் நடத்தின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f96f3f1-6af7-4399-bb8c-8808c501b26a/26-6aa3c847d7ff4.webp' /></p><h2>இரண்டு விமானங்கள் மோதி தாக்குதல்&nbsp;</h2><p> </p><p>இரண்டாவது தாக்குதல் முதல் தாக்குதலுக்குப் பிறகு 17 நிமிடங்கள் கழித்து நிகழ்ந்தது. </p><p>

கட்டடங்கள் தீப்பிடித்ததால் மேல் தளங்களில் சிக்கிய மக்கள் அவதிப்பட்ட நிலையில், இரண்டு மணி நேரத்திற்குள் 110 மாடிகளைக் கொண்ட இரண்டு கோபுரங்களும் தூசு மண்டலமாக இடிந்து விழுந்தன. </p><p>

வொஷிங்டன் டிசி அருகில் உள்ள அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகனின் மேற்குப் பகுதியை மூன்றாவது விமானம் தகர்த்தது. 

பயணிகளின் கடுமையான எதிர்ப்பால் நான்காவது விமானம் பென்சில்வேனியாவில் உள்ள திறந்தவெளியொன்றில் விழுந்து நொறுங்கியது. </p><p>

இது வொஷிங்டனில் உள்ள பாராளுமன்றக் கட்டடத்தை குறிவைத்துத் தாக்கப்படவிருந்ததாக நம்பப்படுகிறது. இந்தத் தாக்குதல்களில் கடத்தல்காரர்கள் 19 பேர் தவிர்த்து மொத்தம் 2,977 பேர் உயிரிழந்தனர். </p><p>

இவர்களில் பெரும்பாலோர் நியூயோர்க்கைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும், அமெரிக்க வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் 441 அவசரகால மீட்புப் பணியாளர்கள் இதில் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். </p><p>

இந்தத் தாக்குதல்களும், அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் இந்த நூற்றாண்டின் முதல் இரண்டு தசாப்தங்களுக்குரிய வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை கொள்கைகளை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகித்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p> 

இந்த நிலையில் குறித்த தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து, தாக்குதல்கள் நடைபெற்ற நியூயோர்க், வெர்ஜீனியா மற்றும் பென்சில்வேனியா ஆகிய மூன்று முக்கிய இடங்களிலும் அதிகாரப்பூர்வ நினைவு சடங்குகள் இன்று இடம்பெறுகின்றன. </p><p>

அத்துடன், இன்றைய தினம் லண்டனில் உள்ள குவீன் எலிசபெத் ஒலிம்பிக் பூங்காவிலும் உயிரிழந்தவர்களின் நினைவாக விசேட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.</p>]]></content>
            <updated>2026-09-11T09:19:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[வற்றிப்போகும் கிணறுகள்: சீனிபுர பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wells-dried-up-drought-trinco-drinking-water-1789117308"></link>
            <id>https://tamilwin.com/article/wells-dried-up-drought-trinco-drinking-water-1789117308</id>
            <summary type="text">தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக கந்தளாய் சீனிபுர பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அத்தோட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக கந்தளாய் சீனிபுர பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>அத்தோடு,&nbsp;அப்பகுதியிலுள்ள
கிணறுகளின் நீர்மட்டம் வற்றியுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p>
இந்நிலையில், கந்தளாய் பிரதேச சபையினால் வாரத்திற்கு ஒருமுறை குடிநீர் கொண்டு
வந்து விநியோகிக்கப்படுவதாகவும், எனினும் தற்போதைய தேவைக்கு அது போதுமானதாக
இல்லை என அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.</p><h2>கோரிக்கை</h2><p>

மேலும், வறட்சி காரணமாக காடுகளிலும் நீராதாரங்கள் குறைந்துள்ளதால், குடிநீரைத்
தேடி காட்டு யானைகள் கிராமப் பகுதிகளுக்குள் நுழையும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக
மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d7b6291-4349-4dfd-bef8-03b16a26a285/26-6aa3c6d84e672.webp' /></p><p>சீனிபுர மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக
நிரந்தரத் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை
விடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T09:16:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ccib-questions-shiran-basik-s-father-1789103827"></link>
            <id>https://ibctamil.com/article/ccib-questions-shiran-basik-s-father-1789103827</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;சமீபத்தில் துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட, முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் என சந்தேகிக்கப்படும் ஷிரான் பாசிக்கின் தந்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>சமீபத்தில் துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட, முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் என சந்தேகிக்கப்படும் ஷிரான் பாசிக்கின் தந்தை, சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து தொடர்பான விசாரணை ஒன்றின் தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவால் (CCIB) கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 

அறிக்கைகளின்படி, ஷிரான் பாசிக் கம்பஹா பகுதியில் உள்ள ஒரு ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில், தனது தந்தையின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட ஒரு வீட்டை வாங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
 

ஷிரான் பாசிக்கின் தந்தை, சொத்து சம்பந்தமாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (11) CCIB முன் முன்னிலையாக அறிவுறுத்தப்பட்டிருந்தார்.
</p><p>
அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p><b><i><u>மற்றுமொரு ஆடம்பர வீடு....! ஷிரான் பாசிக்கின் தந்தையிடம் CCIB விசாரணை</u></i></b></p><p>போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் தற்போது விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>



டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஷிரான் பாசிக், கம்பஹா பகுதியில் அமைந்துள்ள ஆடம்பரக் குடியிருப்புத் தொகுதியொன்றில், சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான வீடு ஒன்றை கொள்முதல் செய்துள்ளதாகவும், அது அவரது தந்தையின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.</p><p>இதற்கமைய, இது தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக, ஷிரான் பாசிக்கின் தந்தையை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><h2>முடக்க அதிகாரிகள் நடவடிக்கை</h2><p> 



இதற்கமைய, இது தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக, ஷிரான் பாசிக்கின் தந்தையை இன்றைய தினம் (11) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d7718b5-0d31-469c-944c-8e30830bc171/26-6aa3a0d2e5ad1.webp' /></p><p>இதேவேளை, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தல்கார் என அறியப்ஸபடும் மொஹமட் ஷிரான் பாசிக்கின் நெருங்கிய சகாவான ரணதுங்க ஆரச்சிஸே நலின் அர்ஜுன என்பவரால் சட்டவிரோதமான முறையில் ஈட்ப்பட்ட பணத்தைக் கொண்டு கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் உடமைககளை முடக்குவதற்குச் குற்றவரும்படி விசாரணை பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. </p><p>இதற்கமைய, வியாழக்கிழமை (10) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 14 நாட்களுக்குக் குறித்த சொத்துக்கள் மற்றும் உடமைகள் முடக்கப்பட்டுள்ளன.</p><p>விசாரணை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த சந்தேகநபரால் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்தைக்கொண்டு கொள்முதல் செய்யப்பட்ட சொத்துக்களை வேறு எவருக்கும் விற்பனை செய்வதோ, உரிம மாற்றம் செய்வதோ அல்லது அதில் மாற்றங்களை ஏற்படுத்துவதை தடுத்து, அவற்றை முடக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T09:13:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுவனை கண்டித்த ஆசிரியை: மிரட்டிய தந்தைக்கு சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-jailed-threatening-behead-sons-teacher-1789117869"></link>
            <id>https://news.lankasri.com/article/man-jailed-threatening-behead-sons-teacher-1789117869</id>
            <summary type="text">A father has been jailed for threatening his son&#039;s teacher in France: பிரான்சில், தன் மகனைக் கண்டித்த ஆசிரியையை மிரட்டிய தந்தை சிறையில் அடைக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>A father has been jailed for threatening his son's teacher in France: பிரான்சில், தன் மகனைக் கண்டித்த ஆசிரியையை மிரட்டிய தந்தை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.</p><p>


பிரான்சிலுள்ள Le Fauga என்னும் கிராமத்தில், அப்தெல்காதர் (47) என்னும் நபரின் மகன் வகுப்பில் சேட்டை பண்ணிக்கொண்டிருந்ததால், அவனை வேறொரு வகுப்பில் அமர வைத்துள்ளார் அவனது ஆசிரியை.
</p><h2>
சிறுவனை கண்டித்த ஆசிரியை</h2><p>

அப்போதும் அவன் அமைதியாகாததால், வம்பு செய்கிறவன் போல் நடந்துகொள்ளாதே என அவனைத் திட்டினாராம் அந்த ஆசிரியை.
</p><p>
அந்தச் சிறுவன் தன் ஆசிரியை தன்னைத் திட்டியதை தன் தந்தையிடம் சென்று கூற, அவர் பள்ளிக்குச் சென்று, கார் பார்க்கிங்கில் வைத்து அந்த ஆசிரியையை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93309a0e-dcb9-4bdc-9372-6453415a0493/26-6aa3c615bbc9e.webp' /><br></p><p>

பின்னர் அவர் பள்ளிக்கு வரவழைக்கப்பட, அந்த ஆசிரியையைப் பார்த்து, நீ ஆணாக இருந்திருந்தால் உன் தலையை வெட்டி விடுவேன் என்று மிரட்டியுள்ளார் அப்தெல்காதர்.
</p><p>
அதைக் கேட்டு பயந்துபோன ஆசிரியை மருத்துவ விடுப்பில் போய்விட்டாராம். பிற ஆசிரியர்களும் பள்ளிக்கு வர அஞ்சுகிறார்களாம்.
</p><p>
இந்நிலையில், விடயம் நீதிமன்றத்தை எட்ட, அப்தெல்காதருக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பிரான்ஸ் சட்டப்படி, பிள்ளைகளால் பிரச்சினை ஏற்படும்போது அவர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவார்கள் என்பதால், சம்பந்தப்பட்ட மாணவனும் அவனது தங்கையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட உள்ளார்கள்.</p><p>

ஒரு பள்ளியில் ஒரு மாணவனை ஒரு ஆசிரியை திட்ட, அவனது தந்தை ஆசிரியையை மிரட்ட, ஏன் இப்படி சட்டம் வரை இந்த விடயத்தில் தலையிட்டு சிறைத்தண்டனை வரை செல்கிறது என்றால், அதற்குக் காரணம் உள்ளது.
</p><p>
2020ஆம் ஆண்டு, சாமுவேல் (Samuel Paty) என்னும் ஆசிரியர் குறித்து ஒரு மாணவி தன் தந்தையிடம் பொய்யாக புகார் ஒன்றைக் கூற, அவர் அதை நம்பி மதம் சார்ந்த பிரச்சினையாக மாற்ற, பயங்கரவாத எண்ணம் செசன்ய அகதியான Abdoullakh Anzorov என்பவன், சாமுவேலை தலையை வெட்டிக் கொன்றுவிட்டான்.
</p><p>
அதே நிலை தனக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்று பயந்தே இந்த ஆசிரியையும் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார்.
</p><p>
ஆகவேதான் இந்த விடயத்தை பிரான்ஸ் அரசு கையில் எடுத்துள்ளதுடன், அப்தெல்காதருக்கு சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.<br></p>]]></content>
            <updated>2026-09-11T09:13:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை ரூபாயின் மதிப்பில் சிறிய மாற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/slight-change-in-the-value-of-the-sri-lankan-rupee-1789118114"></link>
            <id>https://jvpnews.com/article/slight-change-in-the-value-of-the-sri-lankan-rupee-1789118114</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான(11) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.



இதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான(11) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
</p><p>


இதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றும் சிறிய அளவிலான மாற்றம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/014b50ea-ac2f-4496-bc05-06ed86855069/26-6aa3c6aa45498.webp' /></p><p>
</p><p>


அமெரிக்க டொலரின் இன்றைய சராசரி கொள்வனவு விலை 324.0476 ரூபாயாகவும், அதன் விற்பனை விலை 333.0703 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.</p><p></p><p> 



அமெரிக்க டொலர் தவிர, ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களான அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்க் உள்ளிட்ட ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களின் விற்பனை விலைகளும் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று சற்று ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-09-11T09:12:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்கின் மற்றுமொரு ஆடம்பர வீடு : அவரது தந்தை சற்று முன்னர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ccib-questions-shiran-basik-s-father-1789101993"></link>
            <id>https://tamilwin.com/article/ccib-questions-shiran-basik-s-father-1789101993</id>
            <summary type="text">புதிய இணைப்புபோதைப் பொருள் கடத்தல்காரர், ஷிரான் பாசிக்கின் தந்தை அப்துல் ரசாக் முகமது பாசிக் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.&amp;nbsp;மத்தியக் குற்...</summary>
            <content type="html"><![CDATA[<h2><b>புதிய இணைப்பு</b></h2><p>போதைப் பொருள் கடத்தல்காரர், ஷிரான் பாசிக்கின் தந்தை அப்துல் ரசாக் முகமது பாசிக் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>மத்தியக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைது செய்துள்ளார்.&nbsp;</p><p>கம்பஹா பகுதியில் உள்ள 3 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடொன்றினை கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைகளுக்காக அவர் இன்று மத்தியக் குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், விசாரணைகளின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>டுபாயிலிருந்து நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம் மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவு தற்போது விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கம்பஹா பகுதியில் உள்ள ஒரு ஆடம்பர குடியிருப்பு வளாகத்தில், ஷிரான் பாசிக் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு வீட்டை வாங்கியுள்ளார்.</p><h2>குற்றப்புலனாய்வுப்பிரிவில் முன்னிலை&nbsp;</h2><p> </p><p>மேலும், அந்த வீடு அவரது தந்தையின் பெயரில் வாங்கப்பட்டதும் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/660c0cbb-68da-4c4b-a9cd-1264a13c9e44/26-6aa392cbb05cf.webp' /></p><p>
</p><p>
அதன்படி, இது தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக, ஷிரான் பாசிக்கின் தந்தை இன்று (11) மத்திய குற்றப்புலனாய்வுப்பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T09:10:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[செங்கடல் துறைமுகத்தைக் கைப்பற்றிய ஹவுதிகள்... உயரும் கச்சா எண்ணெய் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/oil-prices-surge-as-1789117952"></link>
            <id>https://news.lankasri.com/article/oil-prices-surge-as-1789117952</id>
            <summary type="text">Oil prices surge as Houthis seize Red Sea port: செங்கடல் துறைமுகத்தை ஹவுதிகள் கைப்பற்றியதால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.
செங்கடல் வழியாக நடைபெறும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Oil prices surge as Houthis seize Red Sea port: செங்கடல் துறைமுகத்தை ஹவுதிகள் கைப்பற்றியதால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.</p><p>
செங்கடல் வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றும் ஏமனின் துறைமுக நகரான மோச்சாவை, ஹவுதிகள் கைப்பற்றியதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்தன.</p><h2>கச்சா எண்ணெய் விலை</h2><p>
</p><p>வியாழக்கிழமையன்று பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 105 டொலருக்கும் அதிகமாக 4 சதவீதம் வரை உயர்ந்தது; அதேவேளையில், அமெரிக்காவில் டீசலின் தேசிய சராசரி விலை முதன்முறையாக ஒரு கேலனுக்கு 6 டொலரைக் கடந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8981f56a-6b9d-4ef4-92e4-4564c0ce0a83/26-6aa3c60212089.webp' /></p><p> </p><p>செங்கடலின் தெற்கு நுழைவாயிலாகவும், உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாகவும் திகழும் பாப்-எல்-மண்டேப் (Bab el-Mandeb) நீரிணைப் பகுதியில் ஹவுதிகள் கூடுதல் ஆதிக்கத்தைப் பெற்றுள்ளதாகவும், ஹனிஷ் (Hanish) தீவுகளை அவர்கள் சென்றடைந்துள்ளதாகவும் யேமன் அரசுத் தரப்பு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. </p><p>ஹார்முஸ் நீரிணைக்கு அப்பால், அரேபியத் தீபகற்பத்தின் மறுபுறத்தில் உள்ள நீர்வழியின் கட்டுப்பாட்டை ஹவுதிகள் கைப்பற்றினால், அது அமெரிக்காவுடனான போரில் அவர்களுக்கு ஆதரவளிக்கும் ஈரானுக்கு ஒரு முக்கிய சாதகமான நிலையை அளிக்கக்கூடும்; இது இரண்டாவது முக்கிய போக்குவரத்துப் பாதை வழியாக நடைபெறும் விநியோகத்தைக் குறைப்பதோடு, கச்சா எண்ணெய் விலையையும் பெருமளவு உயரச் செய்யும்.</p><p></p><p> நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைத் தேர்தல்களுக்கு முன்னதாக, தனது குடியரசுக் கட்சியின் தேர்தல் வாய்ப்புகளைப் பாதித்துள்ள ஒரு போரிலிருந்து வெளியேறுவதற்கான வழியைக் கண்டறிவதை இது ட்ரம்ப்புக்கு மேலும் கடினமாக்கக்கூடும். </p><p>சவுதி கப்பல்களைத் தவிர மற்ற அனைத்து கப்பல் நிறுவனங்களுக்கும் செங்கடல் வழித்தடப் போக்குவரத்து பாதுகாப்பானது என்று ஏமனில் ஹவுதி அமைப்பால் நடத்தப்படும் மனிதாபிமானப் பணிகள் ஒருங்கிணைப்பு மையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
</p><p>உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியா, செங்கடல் வழித்தடத்தைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது; உலகளாவிய எண்ணெய் பயன்பாட்டில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து சென்ற ஹார்முஸ் நீரிணைப் பாதை, ஈரானுடனான மோதலால் நடைமுறையில் முடக்கப்பட்டுள்ளது.</p><h2>வரலாறு காணாத உச்சம்</h2><p> இந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று எண்ணெய் விலைகள் சரிந்தபோதிலும், மே மாத நடுப்பகுதிக்குப் பிறகு முதல் முறையாக ஒரு பீப்பாய் 100 டாலருக்கும் மேல் என்ற நிலையை எட்டும் போக்கிலேயே இருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e60691a2-a238-4573-beec-fae7b9c0abf6/26-6aa3c602bd34a.webp' /></p><p> </p><p>மேலும், முக்கிய மத்திய கிழக்கு கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் நடந்த தாக்குதல்கள், நீடித்த விநியோகத் தடை குறித்த அச்சங்களைத் தூண்டியதால், அமெரிக்க டீசல் விலைகள் வரலாறு காணாத உச்சத்தை எட்டின.
</p><p>பிரென்ட் கச்சா எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்கள், ஒரு பேரலுக்கு 1.65 டொலர் அல்லது 1.53 சதவீதம் சரிந்து, 105.98 டொலராகக் குறைந்தது. அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 1.36 டொலர் அல்லது 1.33 சதவீதம் சரிந்து, 101.12 டொலராகக் குறைந்தது.</p><p></p><p> வியாழக்கிழமையன்று இரண்டு அளவீடுகளுமே 6 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தன; மேலும் வாராந்திர அடிப்படையில் 10 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வுடன் தொடர்ந்து வர்த்தகமாகின. </p><p>ஈரான் தொடர்பான மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் முன்னேற்றம் இல்லாததால், மத்திய கிழக்கிலிருந்து இயல்பான எண்ணெய் விநியோகம் மீண்டும் தொடங்குவது 2027-ஆம் ஆண்டு வரை தள்ளிப்போகிறது; </p><p>இதனால், இந்த ஆண்டில் உலகளாவிய எண்ணெய் விநியோகம் மற்றும் தேவை ஆகியவை முன்னதாகக் கணிக்கப்பட்டதை விடக் கூடுதலாகக் குறையும் என்று சர்வதேச எரிசக்தி முகமை தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T09:09:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[வருங்கால முதலமைச்சரே! சிவகார்த்திகேயன் கொடுத்த ரியாக்ஷன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sivakarthikeyan-reaction-for-fans-chant-1789117391"></link>
            <id>https://cineulagam.com/article/sivakarthikeyan-reaction-for-fans-chant-1789117391</id>
            <summary type="text">சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த பராசக்தி படம் எதிர்பார்த்த அளவிற்கு பெர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சிவகார்த்திகேயன் </h2><p>சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த பராசக்தி படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f4d796f-4dc4-4e24-9d3e-361e85e42183/26-6aa3c3d27e8d8.webp' /></p><p></p><p>இதனால் இனி தான் நடிக்கும் படங்கள் முறையான மசாலா ரசிகர்களுக்கு விருந்தாக இருக்க வேண்டும் என தாய்கிழவி இயக்குநருடன் <a href="https://www.manoramaonline.com/movies/movie-news/2026/09/11/suriya-sivakarthikeyan-fan-fight-erupts-over-film-wishes.html" target="_blank">சேயோன் </a>படத்தில் சிவகார்த்திகேயன் கைக்கோர்த்துள்ளார். இப்படத்தை கமல்ஹாசன் தயாரித்து வருகிறார், இந்த படத்தின் 80% படப்பிடிப்பு முடிய, படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது.</p><h2>வருங்கால முதலமைச்சரே!</h2><p>
</p><p>
இந்நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் தன் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்வு ஒன்றை நடத்தினார். அதில் அவர் பேசும் போது ரசிகர்கள் அனைவரும் 'வருங்கால முதல்வர் SK' என கூச்சலிட, சிவகார்த்திகேயன் உடனே தன் கையை காட்டி அப்படியெல்லாம் சொல்ல வேண்டாம் என அன்பாக செய்கை மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/112ac8d3-9d10-403a-a8e9-cb2154bcceaa/26-6aa3c3d347249.webp' /></p><p></p><p>சமீப காலமாக எந்த நடிகரின் ரசிகர்கள் சந்திப்பு நடந்தாலும் இப்படியொரு கூச்சல் வந்துகொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-11T09:03:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் நிபந்தனைகளுடன் அம்பிட்டிய தேரருக்கு பிணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ampitiya-sumanarathana-thero-released-on-bai-1789115281"></link>
            <id>https://ibctamil.com/article/ampitiya-sumanarathana-thero-released-on-bai-1789115281</id>
            <summary type="text">
மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>
மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>

இது தொடர்பான வழக்கு இன்று (11) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர், கடந்த 31ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் அலுவலகத்திற்குச் சென்று அங்கிருந்த அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கடந்த 7ஆம் திகதி மட்டக்களப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.</p><p></p><h2>பிணை</h2><p>
</p><p>
இதனையடுத்து, அவர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7436461e-8f08-4e98-84e7-74c9a9edcb59/26-6aa3be48b5444.webp' /></p><p>

இந்நிலையில், குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அம்பிட்டிய சுமனரத்ன தேரரை கடும் நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T09:02:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியா 190 அணு குண்டுகள் வரை உருவாக்கியிருக்கலாம் - விரைவில் பிரித்தானியாவை முந்த வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indias-nuclear-arsenal-may-reach-190-warheads-1789117199"></link>
            <id>https://news.lankasri.com/article/indias-nuclear-arsenal-may-reach-190-warheads-1789117199</id>
            <summary type="text">India’s Nuclear Arsenal May Reach 190 Warheads: இந்தியாவிடம் தற்போது 190 அணு குண்டுகள் வரை இருக்கலாம் என ஆய்வு வெளியாகியுள்ளது.

190 அணு குண்டுகள் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>India’s Nuclear Arsenal May Reach 190 Warheads: இந்தியாவிடம் தற்போது 190 அணு குண்டுகள் வரை இருக்கலாம் என ஆய்வு வெளியாகியுள்ளது.</p><h2>

190 அணு குண்டுகள் </h2><p>அமெரிக்காவின் Federation of American Scientists (FAS) வெளியிட்ட புதிய ஆய்வின் படி, இந்தியா தற்போது 140 முதல் 225 அணு குண்டுகளுக்குத் தேவையான புளுடோனியம் உற்பத்தி செய்திருக்கலாம். அதில் 190 அணு குண்டுகள் வரை உருவாக்கப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

இந்தியாவின் அணு ஆயுத களஞ்சியம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. புதிய விமானங்கள், நில அடிப்படையிலான ஏவுகணைகள் மற்றும் கடல் அடிப்படையிலான ஏவுகணைகள் ஆகியவற்றை கொண்டு இந்தியா தனது பாதுகாப்பு திறனை விரிவாக்கி வருகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb44026d-aff6-45ad-91b2-1b2d4546aa12/26-6aa3c311897f0.webp' /></p><p>இந்த ஆய்வின் படி, இந்தியா தற்போது ஒன்பது வகையான அணு ஆயுத ஏவுகணை அமைப்புகளை இயக்குகிறது. இதில் இரண்டு விமானங்கள், ஆறு நில அடிப்படையிலான ஏவுகணைகள் மற்றும் ஒரு கடல் அடிப்படையிலான ஏவுகணை அடங்கும்.
</p><p>
மும்பை அருகே உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் Dhruva ரியாக்டர் மற்றும் 2010 வரை செயல்பட்ட CIRUS ரியாக்டர் ஆகியவை இந்தியாவின் புளுடோனியம் உற்பத்தியின் மூலமாக இருந்தன.</p><p> 2026 ஏப்ரலில், கல்பாக்கத்தில் உள்ள 500-MWt Prototype Fast Breeder Reactor (PFBR) செயல்பாட்டைத் தொடங்கியது. இது ஆண்டுக்கு சுமார் 140 கிலோ புளுடோனியம்-239 உற்பத்தி செய்யக்கூடிய திறன் கொண்டதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>பிரித்தானியாவை விட அதிகமாக</h2><p>சமீபத்திய SIPRI அறிக்கையின் படி, இந்தியாவிடம் சுமார் 170 அணு குண்டுகள் உள்ளன. அதே அளவு பாகிஸ்தானிடமும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

இந்த ஆய்வு, இந்தியாவின் அணு ஆயுத களஞ்சியம் விரைவில் பிரித்தானியாவை விட அதிகமாக இருக்கக்கூடும் எனவும், சீனாவின் வளர்ச்சி இந்தியாவை அதிகப்படியான ஆயுத மேம்பாட்டுக்கு தூண்டுகிறது எனவும் குறிப்பிடுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T08:57:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிக் ஒப்பந்தம் குறித்து அறிக்கை அளித்த பின்னர் FCID-யிலிருந்து வெளியேறிய கோட்டபய]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-president-gotabaya-rajapaksa-arrives-at-fcid-1789098887"></link>
            <id>https://ibctamil.com/article/ex-president-gotabaya-rajapaksa-arrives-at-fcid-1789098887</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;&amp;nbsp;மிக் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் குறித்து அறிக்கை அளித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதிக்குற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;&nbsp;</h2><p>மிக் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் குறித்து அறிக்கை அளித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து (FCID) வெளியேறியுள்ளார்.</p><p>

சர்ச்சைக்குரிய மிக் விமானக் கொள்முதல் பரிவர்த்தனை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி FCID-க்கு வரவழைக்கப்பட்டிருந்தார்.</p><p>

அதன்படி, அவர் இன்று காலை (11) FCID-ஐயில் முன்னிலையானார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4335da1d-475e-4aa5-82b6-e8955ec4c1fd/26-6aa3c278379be.webp' /></p><p>

பல மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் அவர் தற்போது வெளியேறியுள்ளார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p><i><b><u>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச FCIDயில் முன்னிலை</u></b></i></p><p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சற்றுமுன்னர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகியுள்ளார். </p><p>

மிக் போர் ரக விமானக் கொள்முதல் கொடுக்கல்வாங்கல் தொடர்பான வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p>கோட்டாபய ராஜபக்சவை இன்று (11) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.</p><p></p><h2>முன்னாள் விமானப்படைத் தளபதி</h2><p>இதேவேளை, மிக் போர் விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக நேற்று (10) காலை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையானார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/972ea612-8615-4e0e-a3ec-a0e3df7c081d/26-6aa37fdfcb032.webp' /></p><p> </p><p>

அங்கு அவர் ஐந்து மணித்தியாலங்களுக்கும் மேலாக வாக்குமூலம் அளித்ததன் பின்னர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UKzXQ1Zl1M8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T08:56:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா - உக்ரைன் இடையே 100 ஆண்டுகால வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/pm-carney-zelenskyy-sign-100-year-partnership-1789100101"></link>
            <id>https://canadamirror.com/article/pm-carney-zelenskyy-sign-100-year-partnership-1789100101</id>
            <summary type="text">&amp;nbsp;கனடிய பிரதமர் மார்க் கார்னி மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையே 100 ஆண்டுகால கூட்டாண்மைப் பிரகடனம் மற்றும் ட்ரோன் உற்பத்திக்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடிய பிரதமர் மார்க் கார்னி மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையே 100 ஆண்டுகால கூட்டாண்மைப் பிரகடனம் மற்றும் ட்ரோன் உற்பத்திக்கான ஒத்துழைப்பு உட்பட பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.</p><p>
வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கனடாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இந்த உறவு கடந்த 100 ஆண்டுகளாகச் செழித்தோங்கியுள்ளது.</p><p> இந்தப்போர் முடிந்த பின்னரும், வரவிருக்கும் நூற்றாண்டிலும் இது மேலும் வலுவடையும்" என பிரதமர் மார்க் கார்னி தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/926e5628-613a-415a-b4f4-a85af10ccba2/26-6aa3804726e72.webp' /></p><p>
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை 'விரிவான மூலோபாயக் கூட்டாண்மையாக' உயர்த்தவும், பாதுகாப்பு மற்றும் முக்கிய கனிமவளத் துறைகளில் இணைந்து செயல்படவும் பிரகடனம் கையெழுத்தாகியுள்ளது.
</p><p>கனடிய ஆயுதப் படைகளுக்காகத் தேசிய ட்ரோன் சந்தை ஒன்றை கனடா தொடங்கவுள்ளது. இதன் மூலம் அடுத்த 2 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான ட்ரோன்களை உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p> இதில் உலகளவில் முன்னணி வகிக்கும் உக்ரைனிய ட்ரோன் நிறுவனங்கள் கனடிய நிறுவனங்களுடன் இணைந்து ட்ரோன்களை உருவாக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
ரஷ்யாவின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில், குறைந்த செலவில் அதிக எண்ணிக்கையிலான ஏவுகணைத் தடுப்புகளை உருவாக்கும் உக்ரைனின் 'புரொஜெக்ட் ஃப்ரேயா' திட்டத்திற்குக் கூடுதல் ராணுவ உதவி வழங்க கனடா உறுதியளித்துள்ளது.</p><p>
2022-இல் போர் தொடங்கியதிலிருந்து கனடா உக்ரைனுக்கு 8.5 பில்லியன் டொலர் ராணுவ உதவியையும், நாட்டின் புனரமைப்புப் பணிகளுக்காக 750 மில்லியன் டாலரையும் வழங்கியுள்ளது. </p><p>அத்துடன் ரஷ்யா மீது 3,500-க்கும் மேற்பட்ட தடைகளையும் கனடா விதித்துள்ளது.
கால்கரி சந்திப்பைத் தொடர்ந்து, பானிஃப் நகரில் நடைபெறும் கனடிய லிபரல் அரசின் அமைச்சரவை திட்டமிடல் மன்றத்தில் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி உரையாற்றுகிறார்.</p><p> பிரான்ஸின் ஏவியான்-லே-பைன்ஸ் நகரில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற G7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் மார்க் கார்னி விடுத்த அழைப்பின் பேரிலேயே ஸெலென்ஸ்கி இதில் பங்கேற்கிறார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T08:54:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[விண்டோபெக்கில் பயங்கர சூறாவளி – இரு பகுதிகளில் கடும் சேதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/one-person-injured-after-2-tornadoes-hit-1789058449"></link>
            <id>https://canadamirror.com/article/one-person-injured-after-2-tornadoes-hit-1789058449</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் உள்ள விண்டோபெக் நகரின் ரிவர் ஹைட்ஸ் மற்றும் பெனார்ட் ஆகிய பகுதிகளைச் சூறாவளி தாக்கியதில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் உள்ள விண்டோபெக் நகரின் ரிவர் ஹைட்ஸ் மற்றும் பெனார்ட் ஆகிய பகுதிகளைச் சூறாவளி தாக்கியதில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
போர்ட்டேஜ் லா பிரேரிக்கு கிழக்கே உள்ள பெனார்ட் பகுதியில் முதல் சூறாவளி தாக்கியது.</p><p> மணிக்கு 165 கி.மீ வேகத்தில் வீசிய காற்றினால் பல கட்டடங்களும் தானியக் கிடங்குகளும் சேதமடைந்தன.</p><p> இச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.</p><p>
முதல் சூறாவளி தாக்கிய சுமார் அரை மணி நேரத்திற்குப் பின்னர் விண்டோபெக்கின் ரிவர் ஹைட்ஸ் பகுதியில் இரண்டாவது சூறாவளி தாக்கியது. இங்கு காற்றின் வேகம் மணிக்கு 155 கி.மீ வரை பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72df3743-67f6-48b3-a4d3-850d066451fd/26-6aa2dd9357574.webp' /></p><p>
</p><p>இந்த கடும் காற்றினால் மேனிடோபா ஹைட்ரோ மின் நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் மின்சாரத்தை இழந்தனர்.</p><p> 
இதில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 3 நாட்களுக்கும் மேலாக மின்சாரமின்றி தவித்து வருகின்றன.</p><p>
ட்ரோன்கள், செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் நேரடியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் இந்தச் சூறாவளிகளின் பாதிப்பை என்.ரீ.பீ அமைப்பினர் மதிப்பீடு செய்து உறுதிப்படுத்தியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T08:53:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராகுவின் நட்சத்திரத்தில் சுக்கிரன்: செப்டம்பர் 11 முதல் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/venus-transit-in-swaathi-nakshatra-who-get-luck-1789115308"></link>
            <id>https://manithan.com/article/venus-transit-in-swaathi-nakshatra-who-get-luck-1789115308</id>
            <summary type="text">ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன், அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறார். ரிஷபம் மற்றும் துல...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன், அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறார். </p><p>ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியான சுக்கிரன், மாதத்திற்கு ஒருமுறை ராசியையும் அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுகிறார். சுக்கிரனின் நிலையில் ஏற்படும் இந்த மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/924c681f-2ff9-4fac-8ca5-d61eb2378ec9/26-6aa3c00d28f0a.webp' /></p><p>
</p><p>
தற்போது துலாம் ராசியில் பயணித்து வரும் சுக்கிரன், செப்டம்பர் 11ஆம் தேதி சித்திரை நட்சத்திரத்தில் இருந்து வெளியேறி, ராகுவின் ஆதிக்கம் கொண்ட சுவாதி நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். </p><p>இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திரப் பெயர்ச்சி மிகவும் மங்களகரமானதாக அமைய உள்ளது.
</p><p>
குறிப்பாக, இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிப்பதுடன், எடுத்த காரியங்களில் வெற்றியும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்புள்ளது. சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.&nbsp;</p><p></p><h2>கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3ca5468-9acd-4109-94d0-75a963ef92bd/26-6aa3c00dd4454.webp' /></p><p>சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களின் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நிறைவேறும். </p><p>ஏற்கனவே முதலீடுகள் செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.</p><p> வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சில சாதகமான மாற்றங்களைக் காண்பார்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
</p><h2>
துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94b3c9ac-3ecf-4f10-9067-83cbc8717656/26-6aa3c00e88309.webp' /></p><h2>
</h2><p>சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் மேற்கொள்ளும் காரியங்களில் நல்ல வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். </p><p>நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கலாம். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.</p><p> பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால், இந்தக் காலகட்டம் அதற்கு சாதகமாக இருக்கும். வருமானம் அதிகரிப்பதன் மூலம் நிதி நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
</p><h2>
மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93175c01-4a3b-428c-9589-408f2c178c67/26-6aa3c00f444c0.webp' /></p><p></p><h2>
</h2><p>சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையில் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கும்.</p><p> நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக முடிவுக்கு வரும்.

தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.</p><p> வியாபாரிகளுக்கு எதிர்பாராத வகையில் நல்ல லாபம் கிடைக்கலாம். சமூகத்தில் மதிப்பும், அந்தஸ்தும் அதிகரிக்கும். பணம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், அவற்றுக்கும் தீர்வு கிடைக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T08:50:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதம நீதியரசருக்கு அழுத்தம் கொடுக்கும் அரசின் தனிநபர்..! பிரசாத் சிறிவர்தன சபையில் பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/an-individual-acting-pressuring-the-chief-justice-1789116494"></link>
            <id>https://tamilwin.com/article/an-individual-acting-pressuring-the-chief-justice-1789116494</id>
            <summary type="text">பிரதம நீதியரசரின் மகனை இலக்காகக் கொண்டு அரசிலுள்ள “டிஜிட்டல் பயங்கரவாதிகள்”
குற்றச்சாட்டுக்களைப் பரப்பி வருகின்றனர் என்றும், தமக்கு ஏற்றாற்போல்
தீர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதம நீதியரசரின் மகனை இலக்காகக் கொண்டு அரசிலுள்ள “டிஜிட்டல் பயங்கரவாதிகள்”
குற்றச்சாட்டுக்களைப் பரப்பி வருகின்றனர் என்றும், தமக்கு ஏற்றாற்போல்
தீர்ப்பளிக்காவிட்டால் சிறை செல்ல நேரிடும் எனக் கூறி பிரதம நீதியரசருக்கு
அரசு கடும் அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றது என்றும் ஐக்கிய மக்கள்
சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் நேற்று(10.09.2026) வியாழக்கிழமை நடைபெற்ற பெண்களின் வலுவூட்டல்
சட்டத்தின் கீழான தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே
அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>

அரசின் தனிநபர் மூலம் கடும் அழுத்தம்</h2><p>
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
</p><p>
அரசமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு எதிராகத் தேசிய மற்றும் சர்வதேச
மட்டத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், அரசின் முக்கிய
தரப்பினருக்குத் தற்போதைய பிரதம நீதியரசரை மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப்
பதவியில் நீடிக்கச் செய்யும் தேவை காணப்படுகின்றது.</p><p>

நீதிச்சேவை ஆணைக்குழுவின் தலைவராகவும், உயர்நீதிமன்றத்தின் தலைவராகவும் பதவி
வகிக்கும் பிரதம நீதியரசர் நாட்டின் ஜனநாயகத்துக்கு நேரடிச் செல்வாக்குச்
செலுத்தும் ஒருவராவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9346ab26-892a-4a2b-be3f-7fd346d15e87/26-6aa3c0be7dde4.webp' /></p><p> </p><p>

எனினும், தமக்கு ஏற்ற வகைத் தீர்ப்புகளை வழங்கவும்,
சட்டங்களை இயற்றவும் அரசின் தனிநபர் ஒருவர் மூலமாக அவருக்குக் கடும்
அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன.</p><p>

அரசில் உள்ள டிஜிட்டல் பயங்கரவாதிகள் பிரதம நீதியரசரின் மகனை இலக்காகக் கொண்டு
பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். தமக்குச் சாதகமான
தீர்ப்புகள் வழங்கப்படாவிட்டால் சிறை செல்ல நேரிடும் என்ற மிரட்டல்
விடுக்கப்படுவதே இப்போதைய உண்மையாகும்.</p><h2>
பிரதம நீதியரசருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்</h2><p>

இந்த நெருக்கடியான நிலையில் இருந்து பிரதம நீதியரசரை உடனடியாகப்
பாதுகாக்காவிட்டால், நீதித்துறையின் முழுக் கட்டமைப்பையும் அரசு
கைப்பற்றிவிடும். </p><p>இது நாட்டின் ஜனநாயகத்துக்குப் பாரிய அச்சுறுத்தலாக
அமைவதுடன், அரசின் இந்த முறையற்ற செயற்பாட்டைத் தோற்கடிக்காவிட்டால் முழு
நாடும் அழிவைச் சந்திக்கும்.

ஜனாதிபதி நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதமாகவே செயற்படுகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c40df07-b2c7-4973-936f-78b82855b779/26-6aa3c0bf54d85.webp' /></p><p>
</p><p>நீதிமன்றம் ஒரு விடயம் தொடர்பில் தீர்ப்பளிப்பதற்கு முன்பே, ஜனாதிபதி
முன்கூட்டியே அரசியல் மேடைகளில் தீர்ப்புகள் குறித்துக் கருத்துத்
தெரிவிக்கின்றார்.
</p><p>
இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு, குற்றப்புலனாய்வுத் திணைக்களம், பொலிஸ், டிஜிட்டல்
பயங்கரவாதம் மற்றும் 80ஆம் ஆண்டு காலப்பகுதியின் உண்மையான பயங்கரவாதக்
கூறுகளைத் தன் கைவசம் வைத்துக்கொண்டு ஜனாதிபதி செயற்படுகின்றார். இத்தகைய
முறையற்ற செயற்பாடுகள் முற்றிலும் கண்டிக்கத்தக்கது என்றார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T08:50:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலி சிறைச்சாலையில் விசேட சோதனை: மீட்கப்பட்ட 25 தொலைபேசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mobile-phones-sim-cards-recovered-galle-prison-1789114352"></link>
            <id>https://ibctamil.com/article/mobile-phones-sim-cards-recovered-galle-prison-1789114352</id>
            <summary type="text">காலி சிறைச்சாலையில் கைதிகளின் தங்குமிடங்களை சோதனையிட்டபோது, மறைத்து வைக்கப்பட்டிருந்த 25 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 11 சிம் அட்டைகள் கண்டுபிடிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி சிறைச்சாலையில் கைதிகளின் தங்குமிடங்களை சோதனையிட்டபோது, மறைத்து வைக்கப்பட்டிருந்த 25 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 11 சிம் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
ஆண் மற்றும் பெண் கைதிகள் தங்கியிருக்கும் அறைக்கட்டிடங்ளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே குறித்த கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சிம் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.
</p><p>
கைப்பற்றப்பட்ட பொருட்கள் சிறைச்சாலை தலைமையகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>காலி சிறைச்சலை</h2><p> </p><p>இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை சிறைச்சாலை தலைமையக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ac083e9-112e-458f-8104-6f3cbd50f594/26-6aa3bc882dbd7.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T08:44:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் சுற்றுலா பேருந்து விபத்து; பலர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tourist-bus-accident-in-switzerland-many-dead-1789103854"></link>
            <id>https://canadamirror.com/article/tourist-bus-accident-in-switzerland-many-dead-1789103854</id>
            <summary type="text">&amp;nbsp; சுவிட்சர்லாந்தின் கிராபுண்டன் மாகாணத்தில் உள்ள சுஷ் மலைக்கிராமத்திற்கு அருகே சுற்றுலாப் பயணிகள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சுவிட்சர்லாந்தின் கிராபுண்டன் மாகாணத்தில் உள்ள சுஷ் மலைக்கிராமத்திற்கு அருகே சுற்றுலாப் பயணிகள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>

இந்தப் பேருந்தில் நெதர்லாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்ததாக டச்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டச்சு சுற்றுலா நிறுவனமான OAD ஏற்பாடு செய்த பயணத்தில் அவர்கள் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2578c44-41dc-4718-a23e-13e1441df77e/26-6aa38eefe5070.webp' /></p><h2>&nbsp;நெதர்லாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள்</h2><p>

பேருந்தில் மொத்தம் 48 பேர் இருந்ததாக ‘De Telegraaf’ செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இந்த எண்ணிக்கையை சுவிஸ் காவல்துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
</p><p>
சுஷ் மற்றும் அருகிலுள்ள ஜெர்னெஸ் கிராமத்திற்கு இடையேயான சாலையில், உள்ளூர் நேரப்படி மாலை 4.45 மணியளவில் பேருந்து தடுப்பு வேலியில் மோதியதாக சுவிஸ் ஒளிபரப்பு நிறுவனமான SRF தெரிவித்துள்ளது.

விபத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளில் பல ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் SRF தெரிவித்துள்ளது.</p><p>
 
இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சுவிட்சர்லாந்து அதிபர் கை பார்மெலின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

கிராபுண்டனில் இன்று ஒரு டச்சுப் பேருந்துக்கு ஏற்பட்ட துயரமான விபத்தால் நான் மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளேன்.</p><p> 

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

விபத்துக்கான காரணம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து சூழ்நிலைகளையும் கண்டறிய சுவிஸ் அதிகாரிகள் விரிவான விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T08:44:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னிற்கு மகன் இருக்கிறாரா? உடைந்த ரகசியம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/south-korea-trying-to-learn-kim-jong-un-has-a-son-1789108803"></link>
            <id>https://canadamirror.com/article/south-korea-trying-to-learn-kim-jong-un-has-a-son-1789108803</id>
            <summary type="text">வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அவர்களுக்குப் பிறந்த மூத்த மகன் குறித்த ரகசியத் தகவல்களைச் சேகரிக்கத் தென்கொரிய தேசிய உளவுத்துறை (NIS) தீவிர முயற்சிகளை ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அவர்களுக்குப் பிறந்த மூத்த மகன் குறித்த ரகசியத் தகவல்களைச் சேகரிக்கத் தென்கொரிய தேசிய உளவுத்துறை (NIS) தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
</p><p>
 எனினும் , நாட்டின் அடுத்த அதிபராக கிம்மின் மகள் ‘கிம் ஜூ ஏ’ (Kim Ju Ae) நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகளே மிகவும் உறுதியாக உள்ளதாகப் புதிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65a02aba-885a-4f57-a7e6-3a7b7029e0eb/26-6aa3a2453d145.webp' /></p><h2>ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் அதிகாரப் படிநிலை</h2><p>
</p><p>
வடகொரியாவில் தந்தை வழி சமூக அமைப்பும், ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் அதிகாரப் படிநிலையும் ஆழமாக வேரூன்றியுள்ளது.</p><p> 

இருப்பினும், இதுவரை கிம்மின் மூத்த மகன் அல்லது மூன்றாவது குழந்தை குறித்து எவ்வித உறுதியான வரலாற்றுச் சான்றுகளோ அல்லது பொதுவெளி நகர்வுகளோ வெளியாகவில்லை.</p><p>

மாறாக, கிம் ஜோங் உன்னின் சுமார் 13 வயது நிரம்பிய மகள் ‘கிம் ஜூ ஏ’, சமீபகாலமாக நாட்டின் முக்கிய இராணுவக் கூட்டுப் பயிற்சிகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனைகள் மற்றும் அரசாங்க நிகழ்வுகளில் அதிபருக்கு நிகராகத் தொடர்ந்து முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார்.
</p><p>
 வடகொரிய அரசு ஊடகங்களும் அவரை “மிகவும் மதிப்பிற்குரிய வழிகாட்டி” (Respected Guide) என வாரிசுக்கான சொற்களைப் பயன்படுத்திக் குறிப்பிடத் தொடங்கியுள்ளன.
</p><p>
தென்கொரிய நாடாளுமன்றத்தில் உளவுத்துறை அதிகாரிகள் அளித்த விளக்கத்தின்படி, கிம் ஜூ ஏ வாரிசுப் பயிற்சிகளை முழுமையாக நிறைவு செய்துவிட்டார் என்றும், வடகொரியாவின் நான்காம் தலைமுறை அதிகாரத்தை அவரே கைப்பற்றுவார் என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.</p><p> 

வடகொரியாவில் மூத்த ஆண் வாரிசு உள்ளாரா என்ற கேள்விகள் நிலவியபோதிலும், இராணுவப் படைகளின் ஆதரவு மற்றும் அதிகாரப்பூர்வ நகர்வுகள் அனைத்தும் கிம் ஜூ ஏ-வை நோக்கியே நகர்வதாகச் சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-11T08:43:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/solomon-pappaiah-has-passed-away-1789115220"></link>
            <id>https://ibctamil.com/article/solomon-pappaiah-has-passed-away-1789115220</id>
            <summary type="text">தமிழ் அறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா அவரது 90 ஆவது வயதில் காலமானார்.

உடல்நல குறைவு காரணமாக மதுரையில் உள்ள அவரது வீட்டில் ஓய்வு பெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் அறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா அவரது 90 ஆவது வயதில் காலமானார்.
</p><p>
உடல்நல குறைவு காரணமாக மதுரையில் உள்ள அவரது வீட்டில் ஓய்வு பெற்றுவந்த நிலையில் அவர் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>
1936ஆம் ஆண்டு பிறந்த இவர், தமிழறிவு, நகைச்சுவை மற்றும் சிறப்பான பேச்சாற்றலால் பட்டிமன்ற உலகில் தனக்கென தனி இடத்தைப் பெற்றவர்.</p><p></p><h2>திரைப்பட துறை</h2><p> </p><p>

தொலைக்காட்சி பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/231bb28e-9f63-4759-8c3b-37a6fa29f597/26-6aa3c00859cb9.webp' /></p><p> </p><p>இந்திய தமிழ் தொலைகாட்சிகளில் பட்டிமன்ற நடுவராக வலம் வந்த அவர் 13,000 பட்டிமன்றங்களில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.
</p><p>
தொலைக்காட்சி மட்டுமின்றி திரைப்பட துறையிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். </p><p>

அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்துறைத் தலைவராக பணியாற்றி ஓய்வுபெற்ற சாலமன் பாப்பையா, பட்டிமன்றங்களில் பேசி தமிழுக்கென தனக்கான இடத்தை கொண்டுவந்தவர்.</p><p></p><h2>ஆய்வு நூல்கள்</h2><p>

இவர் பல ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b847df38-9ad8-4937-96ab-189808866340/26-6aa3c00916a9f.webp' /></p><p>

இவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றக் கலைக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். </p><p>

அவரது மறைவுக்குப் பல்துறைச் சார்ந்த பிரபலங்களும், தமிழார்வலர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T08:43:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாலமன் பாப்பையா காலமானார்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/solomon-pappaiah-passed-away-at-90-1789115681"></link>
            <id>https://viduppu.com/article/solomon-pappaiah-passed-away-at-90-1789115681</id>
            <summary type="text">சாலமன் பாப்பையாதன்னுடைய பாமரத்தனமான நகைச்சுவை, எளிய தமிழ் மற்றும் அனுபவமிக்க நடுவர் திறமையால் பல தலைமுறை மக்களை ஈர்த்தவர் தான் சாலமன் பாப்பையா. பல பட்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சாலமன் பாப்பையா</h2><p>தன்னுடைய பாமரத்தனமான நகைச்சுவை, எளிய தமிழ் மற்றும் அனுபவமிக்க நடுவர் திறமையால் பல தலைமுறை மக்களை ஈர்த்தவர் தான் சாலமன் பாப்பையா. </p><p>பல பட்டிமன்ற நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து வந்த சாலமன் பாப்பையா, பேராசிரியராகவும், தமிழ்த் தொண்டாற்றியும், பல தமிழ் நூல்களையும், உரைகளையும் எழுதியவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e81d5a92-df13-4b64-9502-60fcbab9bc0a/26-6aa3bd23ded46.webp' /></p><p> இந்நிலையில், சாலமன் பாப்பையா தன்னுடைய 90 வயதில் உயிரிழந்துள்ள தகவல் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. </p><p>தமிழ் பட்டிமன்றங்கலை உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடையே கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் சாலமன் பாப்பையா, உடல் நலக்குறைவு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், உடனடியாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.</p>]]></content>
            <updated>2026-09-11T08:35:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/salmon-papaya-has-passed-away-1789115672"></link>
            <id>https://cineulagam.com/article/salmon-papaya-has-passed-away-1789115672</id>
            <summary type="text">சாலமன் பாப்பையாபட்டிமன்றம் என்று சொன்னாலே ஒருவர் முதலில் மக்களுக்கு நியாபகம் வந்துவிடுவார். அவர் வேறுயாரும் இல்லை பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞருமான சால...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சாலமன் பாப்பையா</h2><p>பட்டிமன்றம் என்று சொன்னாலே ஒருவர் முதலில் மக்களுக்கு நியாபகம் வந்துவிடுவார். </p><p>அவர் வேறுயாரும் இல்லை பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையா தான். திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியவர். </p><p>தமிழக அரசு சார்பில் கடந்த 2000-ம் ஆண்டு இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது, 2021ம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. பாய்ஸ், சிவாஜி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.</p><p>கடைசியாக செப்டம்பர் 5ம் தேதி கூட சன் தொலைக்காட்சி சார்பாக நடத்தப்பட்ட பட்டிமன்றத்தில் கலந்துகொண்டிருக்கிறது.&nbsp;</p><p>90 வயதான சாலமன் பாப்பையா அவர்கள் வயது மூப்பு காரணமாக இன்று (செப்டம்பர் 11) உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41a919d3-629b-4429-8062-0e9747a6ad06/26-6aa3bd194aead.webp' /></p>]]></content>
            <updated>2026-09-11T08:34:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல பட்டிமன்ற நடுவர் தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/solomon-pappayya-has-passed-away-1789115436"></link>
            <id>https://canadamirror.com/article/solomon-pappayya-has-passed-away-1789115436</id>
            <summary type="text">பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா தமது 90 வது வயதில் இன்று (11) காலமானார். 

வயது மூப்பு காரணமாக மதுரையில் அவர் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா தமது 90 வது வயதில் இன்று (11) காலமானார். </p><p style="text-align: justify; ">

வயது மூப்பு காரணமாக மதுரையில் அவர் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b466916-1217-46da-a651-82737d39b30a/26-6aa3bc2e48b13.webp' /></p><p style="text-align: justify; "> 

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும், தமிழ் இலக்கிய விளக்கவுரையாளருமான சாலமன் பாப்பையா, எளிய மற்றும் நகைச்சுவையான தமிழில் பேசி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஆவார். </p><p style="text-align: justify; ">

அன்றாட சமூக நிகழ்வுகள் மற்றும் குடும்பச் சூழல்களை மையமாகக் கொண்டு இவர் நடத்தும் பட்டிமன்றங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. </p><p style="text-align: justify; ">

சாலமன் பாப்பையா 1936ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் திகதி மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுக்காவில் உள்ள சாத்தங்குடியில் பிறந்தார். </p><p style="text-align: justify; ">

இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், தியாகராசர் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். 

மேலும், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். 

</p><p style="text-align: justify; "> 

அத்துடன், இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான முதல்வன், போய்ஸ் மற்றும் சிவாஜி உள்ளிட்ட மூன்று திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். </p><p style="text-align: justify; ">

பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ள இவர், இலக்கியத் திறனாய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "> 

'பட்டிமன்றமும் பாப்பையாவும்” என்ற தன்வரலாற்று நூலை எழுதியுள்ளார். </p><p style="text-align: justify; ">

திருக்குறள் உரை, புறநானூறு புதிய வரிசை வகை, அகநானூறு உள்ளிட்ட உரை நூல்களையும், 'பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்: ஓர் பார்வை” என்ற இலக்கியத் திறனாய்வு நூலையும் எழுதியுள்ளார். </p><p style="text-align: justify; ">

மேலும், 'அவர்கள் கண்ட ராமன்”, 'இவர்கள் நோக்கில் கம்பன்”, 'கம்பவனத்தில் ஓர் உலா”, 'கம்பனின் தமிழமுது” போன்ற பல்வேறு நூல்களைத் தொகுத்துள்ளார். </p><p style="text-align: justify; ">&nbsp;தமிழ்த் துறைக்கும் இலக்கியத்திற்கும் இவர் ஆற்றிய தொண்டினைப் பாராட்டி பல உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 

குறிப்பாக, இந்தியாவின் நான்காவது உயரிய விருதான மத்திய அரசின் 'பத்மஸ்ரீ” விருது 2021 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. </p><p style="text-align: justify; ">

மேலும், 2010 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 'முத்தமிழ் பேரறிஞர்” விருதும், 2000 ஆம் ஆண்டில் தமிழக அரசின் 'கலைமாமணி' விருதும் இவருக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T08:34:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் FCID-ல் இருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-appeared-before-the-fcid-1789098506"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-appeared-before-the-fcid-1789098506</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச சற்றுமுன்னர் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் இருந்து வெளிய...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச சற்றுமுன்னர் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் இருந்து வெளியேறியுள்ளார்.&nbsp;&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b1e7f0c-1a3a-4261-81e4-90c70cd83690/26-6aa3bc9f1a1fa.webp' /></p><p> </p><p>

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்ளும் பொருட்டு, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.</p><h2>வாக்குமூலம்..</h2><p> 

மிக் ரக விமானக் கொள்வனவு தொடர்பான விசாரணைகளின் தொடர்ச்சியாக கோட்டாபய ராஜபக்சவிடம் இன்று வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Y01YyJJ7wLE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>

இதேவேளை, மிக் ரக விமானக் கொள்வனவு தொடர்பான வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் விமானப் படைத் தளபதி ரொஷான் குணதிலகவும் நேற்று முன்தினம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b784fc7f-1bf6-40e7-a227-3746acc5f00e/26-6aa37ed3b37a2.webp' /></p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/lh-7Hx2sMkw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> 








</p>]]></content>
            <updated>2026-09-11T08:32:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்; அடுத்தடுத்து சகோதரிகள் மரணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/batticaloa-tiktok-young-woman-suicide-1789104702"></link>
            <id>https://jvpnews.com/article/batticaloa-tiktok-young-woman-suicide-1789104702</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டக்களப்பில் TikTok இல் வலம்வந்த 18 வயது யுவதி விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த யுவதி தாய் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மட்டக்களப்பில் TikTok இல் வலம்வந்த 18 வயது யுவதி விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
உயிரிழந்த யுவதி தாய் அற்ற நிலையில் தந்தையுடன் வாழ்ந்து வந்த மட்டக்களப்பு ஒந்தாட்சிபடத்தைச் சேர்ந்த குறித்த யுவதி ஏன் இந்த முடிவு எடுத்தார் எனத் தெரியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08a4d0c4-0d3e-4397-9ca3-995ca5d14042/26-6aa3923f9c008.webp' /></p><p></p><p>
</p><p> 
அதேவேளை உயிரிழந்த யுவதியின் சகோதரியும் ஏற்கனவே இவ்வாறே தற்கொலை செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.&nbsp; &nbsp;யுவதியின் மரணத்திற்கான&nbsp; காரணம் வெளியாகாத&nbsp; நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக&nbsp; கூறப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T08:32:35+00:00</updated>
        </entry>
    </feed>
