<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-12T02:29:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடருந்தொன்றில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக்கோளாறு - பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/train-on-coastal-line-suffers-a-technical-fault-1786500493"></link>
            <id>https://tamilwin.com/article/train-on-coastal-line-suffers-a-technical-fault-1786500493</id>
            <summary type="text">ஹிக்கடுவவிலிருந்து மருதானைக்கு செல்லும் தொடருந்தொன்றில் இன்று காலை (12) தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளது.
பெருவளை தொடருந்து நிலையம் மற்றும் மக்கோண த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹிக்கடுவவிலிருந்து மருதானைக்கு செல்லும் தொடருந்தொன்றில் இன்று காலை (12) தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளது.</p><p>
பெருவளை தொடருந்து நிலையம் மற்றும் மக்கோண தொடருந்து நிலையத்திற்கிடையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
</p><p>
இதன் காரணமாக, ஹிக்கடுவவிலிருந்து மருதானைக்கு செல்லும் தொடருந்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T02:19:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வு தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/central-bank-of-policy-interest-rates-1786498601"></link>
            <id>https://tamilwin.com/article/central-bank-of-policy-interest-rates-1786498601</id>
            <summary type="text">இந்த ஆண்டில் மேலும் வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய அவசியமில்லை என இலங்கை மத்திய வங்கி கருதுவதாக மத்திய வங்கி ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க தெரிவித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டில் மேலும் வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய அவசியமில்லை என இலங்கை மத்திய வங்கி கருதுவதாக மத்திய வங்கி ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> </p><p>2.9 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் பொருளாதாரம் மீண்டு வருகின்றது.</p><h2>நாணயக்கொள்கை பராமரிப்பு</h2><p> மேலும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதோடு, பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இல்லாத வகையில் நாணயக் கொள்கையைப் பராமரிப்பதே இதன் நோக்கமாகும் என்றும் கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba0fa5cf-f574-41ed-819a-43b5e29fd6f5/26-6a7bd4f148a59.webp' />&nbsp;</p><p>பணவீக்கம் தற்போதைய மட்டங்களிலேயே உச்சத்தை எட்டி, அடுத்த ஆண்டில் 5 சதவீத இலக்கை நோக்கி மீண்டும் குறையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஈரான் போரினால் தூண்டப்பட்ட பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, மூன்று ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் தனது முதல் அதிகரிப்பாக கடந்த மே மாதத்தில் 100 அடிப்படைப் புள்ளிகள் வட்டி உயர்வைக் கொண்டுவந்து மத்திய வங்கி சந்தைகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><p> 

இந்த நடவடிக்கை சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் இடம்பெறும் மீட்சியில் அதன் அறிவுறுத்தலில் தெரிவு செய்யப்பட்ட ஆபத்தான வழிமுறையாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>

பணவீக்கம் 7 சதவீதமாக உயரும் என மத்திய வங்கி எதிர்பார்த்ததால், மே மாத வட்டி உயர்வு ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டது என்றும், தற்போதைய பணவீக்கம் எதிர்பார்க்கப்பட்ட பாதையிலேயே உள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கூறியுள்ளார். </p><p>இதேவேளை, மே மாத வட்டி அதிகரிப்பின் முழுமையான தாக்கம் பொருளாதாரத்தில் வெளிப்பட 12 முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என்றும், அடுத்த ஆண்டின் முதலரை பகுதியில் பணவீக்கம் மத்திய வங்கியின் 5 சதவீத இலக்கிற்கு மீண்டும் திரும்பும் வாய்ப்புள்ளதாகவும் ஆளுநர் கூறியுள்ளார்.</p><p>இதற்கமைய, மத்திய வங்கியின் அடுத்த வட்டி விகித அறிவிப்பு செப்டம்பர் 30 ஆம் திகதி வெளியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T02:05:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் பதற்றம் - அடுத்தடுத்து தாக்கப்பட்ட கப்பல்கள்: ஆட்டம் காட்டும் ஹூதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-blockade-us-military-fires-on-cargo-vessel-1786498956"></link>
            <id>https://ibctamil.com/article/iran-blockade-us-military-fires-on-cargo-vessel-1786498956</id>
            <summary type="text">செங்கடலில் சரக்குக் கப்பல் ஒன்று மீது ஈரான் ஆதரவு ஹூதிகள் நடத்திய தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் ஏமன் அரசாங்கம் தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>செங்கடலில் சரக்குக் கப்பல் ஒன்று மீது ஈரான் ஆதரவு ஹூதிகள் நடத்திய தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் ஏமன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p>மோச்சா துறைமுகத்திற்கு தெற்கே கப்பல் மீது மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்கியதில் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் இதனால் மூன்று பாகிஸ்தானியர்கள் மற்றும் ஒரு இந்தோனேசியர் உட்பட நான்கு மாலுமிகள் உயிரிழந்ததாகவும் சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>சவூதி இராணுவ உபகரணங்களை ஏற்றிச் சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஹூதிகள் கூறியுள்ளனர்.</p><p></p><h2>தனித்தனித் தாக்குதல்</h2><p>இந்நிலையில், அமெரிக்காவும், ஈரானின் ஆதரவு பெற்ற யேமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களும் கப்பல்கள் மீதான தனித்தனித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01978962-de4f-4867-a6ae-26cebb08a98b/26-6a7bd2373ef07.webp' /></p><p>
உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கு முக்கியமாக விளங்கும் ஓமான் வளைகுடா மற்றும் செங்கடலின் நுழைவாயிலில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன. </p><p>அதேநேரம் அமெரிக்கா தமது நிபந்தனைகளை ஏற்கும் வரை ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என்று ஈரான் கூறியுள்ளதால், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் குறைவடைந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். &nbsp;</p><p>மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை குறைந்ததால், எண்ணெய் விலைகள் உயர்ந்து உலகளாவிய பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T01:54:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தையிட்டி திஸ்ஸ விகாரை பவானி வீதி தொடர்பில் தென்னிலங்கையில் உண்மைக்கு புறம்பான பரப்புரைகள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tissa-raja-maha-vihara-in-thaiyiddy-1786497326"></link>
            <id>https://tamilwin.com/article/tissa-raja-maha-vihara-in-thaiyiddy-1786497326</id>
            <summary type="text">தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி தொடர்பில் தென்னிலங்கையில் உண்மைக்கு புறம்பான விடங்கள் பரப்பப்படுகின்றன.
பொப்பிலியான சுனேத்ரா த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி தொடர்பில் தென்னிலங்கையில் உண்மைக்கு புறம்பான விடங்கள் பரப்பப்படுகின்றன.
</p><p>பொப்பிலியான சுனேத்ரா தேவி பிரிவெனவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தேசிய உரிமைகளை பாதுகாக்கும் மத்திய நிலையத்தின் தலைவரான கலகம குசலதம்ம தேரர் திரிபுபடுத்தப்பட்ட பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
</p><p></p><h2>பவானி வீதி விடுவிப்பு</h2><p>
தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி விடுவிப்புக்கு எதிராக வலிவடக்கு பிரதேச சபைக்கு எதிராக பொலிசார் தொடர்ந்த வழக்கு மல்லாகம் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான பரப்புரைகள் முன்வைக்கப்படுகின்றன.</p><p>குறித்த ஊடக சந்திப்பில் தேரர் தெரிவித்த கருத்து
திஸ்ஸ விகாரையின் நடுவே வீதியொன்றை அமைக்க வேண்டும் என ஒருவித அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகிறது.</p><p>பலாலி பொலிஸாரினால் பெறப்பட்டிருந்த தடை உத்தரவை மல்லாகம் நீதவான் நீதிமன்றம் முற்றாக இரத்து செய்துள்ளது. இதன்படி, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த வீதி அமைக்கும் பணியை மீண்டும் முன்னெடுக்க வேண்டும் என பிரதேச சபை தீர்மானித்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbc6e656-6a35-44ce-be95-0af911b326f6/26-6a7bc9304bcdb.webp' /></p><p>சுமார் மூன்று நாட்களுக்கு முன்னர் தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி தேரர் 'இங்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, வீதி அமைக்கப்பட மாட்டாது, யாரும் பதற்றமடைய வேண்டாம்' என அறிக்கை விட்டிருந்தார். </p><p>இருப்பினும், விகாராதிபதி தேரரின் அறிக்கையை விட வலிவடக்கு பிரதேச செயலாளரின் கூற்றே பலமானதாக மாறியுள்ளது. அரசாங்கம் இதுவரை செய்த விடயங்கள், </p><p>கொண்டுவரப்பட்ட சட்டமூலங்கள் மற்றும் பௌத்தத்திற்கு எதிரான செயற்பாடுகளை பார்க்கும்போது, அவர்களின் கடந்தகால செயற்பாடுகளின் அடிப்படையில் இவர்கள் ஏன் இதனைச் செய்கிறார்கள் என்ற நியாயமான சந்தேகமும் பயமும் எங்களுக்கு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T01:50:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடரும் அநுரவின் வேட்டை! அடுத்தடுத்து சிக்கப் போகும் முக்கிய புள்ளிகள் - பலரை காட்டிக்கொடுத்த சைமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/10-people-had-phone-connection-with-saima-1786497593"></link>
            <id>https://tamilwin.com/article/10-people-had-phone-connection-with-saima-1786497593</id>
            <summary type="text">அநுர அரசாங்கத்தில் போதைப்பொருளுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் கடுமையான நடவடிக்கை காரணமாக மேலும் பல அரசியல்வாதிகள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் சிக்கவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுர அரசாங்கத்தில் போதைப்பொருளுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் கடுமையான நடவடிக்கை காரணமாக மேலும் பல அரசியல்வாதிகள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் சிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. </p><p>

சில தினங்களுக்கு முன்னர் மலேசியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இரத்மலானையைச் சேர்ந்த சைமா உள்ளிட்ட மூன்று பாதாள உலகச் சந்தேகநபர்கள் பல உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளனர். </p><p>

அவர்கள் வெளிப்படுத்தும் தகவல்களுக்கமைய, அவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் சிலரும் சிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><h2><b>
கைது செய்ய நடவடிக்கை</b></h2><p>அவர்களுடன் தொலைபேசித் தொடர்புகளைப் பேணிய 10 நபர்கள் குறித்த தகவல்கள் வெளிவரவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7fc919a-1bb9-4fc5-be17-94d896fd3123/26-6a7bcdc0e6447.webp' /></p><p>மேலும் அவர்களுக்குக் குற்றச் செயல்களைச் செய்வதற்கு ஒப்பந்தம் வழங்கிய நபர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அத்துடன் இந்த குழுவினருக்கு ஆயுதங்களை வழங்கியவர்களையும் எதிர்வரும் காலத்தில் கண்டறிய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p>
</p>]]></content>
            <updated>2026-08-12T01:37:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் திரும்பப்பெறபப்டும் டொயோடா வாகனங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/toyota-recalls-more-than-11000-vehicles-1786493484"></link>
            <id>https://canadamirror.com/article/toyota-recalls-more-than-11000-vehicles-1786493484</id>
            <summary type="text">டிஜிட்டல் திரையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கனடாவில் விற்பனை செய்யப்பட்ட 11,000-க்கும் மேற்பட்ட கேம்ரி மாடல் கார்களைத் தயாரிப்பு நிறுவனமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>டிஜிட்டல் திரையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கனடாவில் விற்பனை செய்யப்பட்ட 11,000-க்கும் மேற்பட்ட கேம்ரி மாடல் கார்களைத் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.</p><p> 
வாகனத்தைத் தொடங்கும் போது திரையில் ஏற்படும் பிரச்சனையால் சிக்னல் விளக்குகள், அவசரகால விளக்குகள் மற்றும் எச்சரிக்கை ஒலிகள் போன்றவை வேலை செய்யாமல் போகக்கூடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>
ஆகஸ்ட் 6 நாளிட்ட அறிவிப்பின்படி, கனடாவில் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டு மாடலைச் சேர்ந்த சுமார் 11,159 டொயோட்டா கேம்ரி வாகனங்கள் இந்தத் திரும்பப் பெறும் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60c56619-f838-4ef8-9a16-08cd6356bded/26-6a7bba2e7e839.webp' /></p><p> </p><p>
இந்த வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள 7 அங்குல 'காம்பினேஷன் மீட்டர்' திரை, வாகனம் ஸ்டார்ட் செய்யும்போது திடீரென செயலிழந்து காலியாக மாறக்கூடும். </p><p>
இதனால் வேகமானி, டர்ன் சிக்னல், ஹஸார்ட் லைட் மற்றும் சீட்பெல்ட் எச்சரிக்கை ஒலிகள் செயல்படாமல் போகும் ஆபத்து உள்ளது.
</p><p>முக்கியமான தகவல்களும் எச்சரிக்கைகளும் தெரியாமல் போவது, குறிப்பிட்ட சூழ்நிலைகளில் விபத்து அல்லது காயங்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என அந்நிறுவனம் எச்சரித்துள்ளது. </p><p>
பாதிக்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அக்டோபர் மாதத் தொடக்கத்திற்குள் முறைப்படி தகவல் தெரிவிக்கப்படும். 
வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை அருகில் உள்ள டொயோட்டா டீலர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். அங்கு காம்பினேஷன் மீட்டருக்கான மென்பொருள் முற்றிலும் இலவசமாகப் புதுப்பித்துத் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T01:32:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா ஏரியில் படகிலிருந்து தவறி விழுந்து மாயமான 13 வயது சிறுமி சடலமாகக் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/body-of-missing-girl-who-fell-off-paddleboard-1786493172"></link>
            <id>https://canadamirror.com/article/body-of-missing-girl-who-fell-off-paddleboard-1786493172</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் உள்ள &#039;கல்டஸ்&#039; ஏரியில் துடுப்புப் படகில் சென்று கொண்டிருந்த போது நீரில் மூழ்கி மாயமான 13 வயது சிறுமியின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் உள்ள 'கல்டஸ்' ஏரியில் துடுப்புப் படகில் சென்று கொண்டிருந்த போது நீரில் மூழ்கி மாயமான 13 வயது சிறுமியின் உடலை காவல்துறையினர் சடலமாக மீட்டுள்ளனர்.</p><p> 
காவல்துறையின் நீருக்கடியிலான மீட்புக் குழுவினர் திங்கள்கிழமை மதியம் 2 மணியளவில் ஏரியிலிருந்து அச்சிறுமியின் உடலைக் கண்டெடுத்ததாகத் தெரிவித்துள்ளனர். </p><p>
கடந்த சனிக்கிழமை பிற்பகலில் அச்சிறுமி ஏரியில் துடுப்புப் படகில் பயணம் செய்து கொண்டிருந்த போது, அவருக்கு எதிர்பாராதவிதமாக திடீர் மருத்துவ அவசரநிலை ஏற்பட்டு நீரில் தவறி விழுந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4c04383-512f-4077-b312-c86ec72663fb/26-6a7bb8f63a3fb.webp' /></p><p> 
விசாரணையில், நீரில் மூழ்கிய போது அந்தச் சிறுமி உயிர் காக்கும் கவசச் சட்டையை அணிந்திருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. </p><p>
சிறுமியின் உடல் குறித்த பிரதேப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>சிறுமி உயிரிழந்த செய்தி எங்களை மிகவும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.</p><p> சிறுமியின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T01:32:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 8 பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/eight-charged-18-firearms-seized-in-calgary-1786492777"></link>
            <id>https://canadamirror.com/article/eight-charged-18-firearms-seized-in-calgary-1786492777</id>
            <summary type="text">கனடாவில் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய எட்டு பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கனடாவின் கால்கரி நகரில் இயங்கிவந்த திட்டமிடப்பட்ட போதைப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய எட்டு பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.</p><p>
கனடாவின் கால்கரி நகரில் இயங்கிவந்த திட்டமிடப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றப்பின்னணி கொண்ட கும்பலைக் குறிவைத்து 11 மாதங்களாக நடத்தப்பட்ட தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>
விசாரணை அடிப்படையில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 18 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c191546-fc05-4ad4-957a-99283c28dbc4/26-6a7bb76b91bff.webp' /></p><p> </p><p>
இந்த சோதனைகளின் போது சுமார் 58,500 டொலர் மதிப்பிலான போதைப்பொருட்களையும், பல்லாயிரக்கணக்கான டாலர் ரொக்கப் பணத்தையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். </p><p>
செப்டம்பர் 2025-இல், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை அடையாளம் கண்டதைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கியது.
</p><p> தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத ஆயுதக் குற்றங்கள், வாகனங்களின் அடையாள எண்களை மாற்றுதல் மற்றும் போலியான மருத்துவச் சீட்டுகள் மூலம் மருந்துகளைப் பெறுதல் போன்ற பல குற்றங்களில் ஈடுபட்ட ஒரு பெரும் வலையமைப்பினை அதிகாரிகள் கண்டறிந்தனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T01:32:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் 14 வயது மகள் மாயம் ; பொலிஸ் நடவடிக்கை குறித்து பெற்றோர் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/daughter-goes-missing-parents-allege-police-action-1786475291"></link>
            <id>https://jvpnews.com/article/daughter-goes-missing-parents-allege-police-action-1786475291</id>
            <summary type="text">மட்டக்களப்பு ஆயித்தியமலை பகுதியில் தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற 14 வயது சிறுமி ஒருவர் கடந்த 2ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு ஆயித்தியமலை பகுதியில் தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற 14 வயது சிறுமி ஒருவர் கடந்த 2ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>ஆயித்தியமலையைச் சேர்ந்த அல்போன்ஸ் ஜெசிக்கா (வயது 14) என்ற சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>சம்பவத்தன்று வழமைபோன்று பாடசாலைக்குச் சென்ற சிறுமி, பின்னர் பிற்பகல் 2 மணியளவில் தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40daf2bb-7091-4fd8-a007-0671c273e125/26-6a7b731d942dc.webp' /></p><p>

எனினும், மாலை 6 மணியாகியும் சிறுமி வீடு திரும்பாத நிலையில், பெற்றோர் 119 என்ற அவசர காவல்துறை தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.</p><p>

இதனைத் தொடர்ந்து, மறுநாள் ஆயித்தியமலை காவல் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு பதிவு செய்ததாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.</p><p>

எனினும், முறைப்பாடு செய்யப்பட்டு பல நாட்கள் கடந்துள்ள போதிலும், தமது மகளை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் இதுவரை உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை என பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
</p><p>
இந்நிலையில், சிறுமி காணாமல் போனமை தொடர்பில் மட்டக்களப்பிலுள்ள மனித உரிமைகள் நிலையத்திற்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
காணாமல் போன சிறுமி தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது சிறுமியின் குடும்பத்தினருக்கோ தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T01:31:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா, தம்பி பலி - படுகாயமடைந்த நிலையில் தந்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-kids-drown-and-dead-1786497114"></link>
            <id>https://tamilwin.com/article/2-kids-drown-and-dead-1786497114</id>
            <summary type="text">புத்தளம், கற்பிட்டியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரவித்துள்ளனர்.

கற்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>புத்தளம், கற்பிட்டியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரவித்துள்ளனர்.</p><p>

கற்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குரகன்ஹேன பிரதேசத்தில் உள்ள ஆற்றில் நேற்று பிற்பகல் படகு கவிழ்ந்துள்ளது.</p><p>

அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விபத்துக்குள்ளானதில் 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
</p><h2><b>
சிறுவர்கள் பலி</b></h2><p>நீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் 7 வயதுடைய சிறுவனும் 13 வயதுடைய சிறுமியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3ef7bf0-0838-4828-b684-4f2d0f5c397c/26-6a7bc9b2aa90e.webp' /></p><p>மீன்பிடிப்பதற்காக பயன்படுத்தப்படும் வலைகளை எடுத்துவருவதற்காக சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
சம்பவத்தில் காயமடைந்த தந்தை மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p> 

கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

</p>]]></content>
            <updated>2026-08-12T01:17:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1786496357"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1786496357</id>
            <summary type="text">சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (12-08-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனடிப்படையில் ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.



</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2251bab9-bf9c-44a1-82a5-aa2fd4f10734/26-6a7bc56787774.webp' />&nbsp;&nbsp;</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T01:09:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச வாகன ஏலத்தில் 10 மில்லியன் மோசடி....! சிக்கிய அமைச்சரின் உறவினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/lalkantha-s-brother-in-law-arrested-1786495528"></link>
            <id>https://ibctamil.com/article/lalkantha-s-brother-in-law-arrested-1786495528</id>
            <summary type="text">கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால் காந்தவின் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளாார்.

கேகாலை குற்றப் புலனாய்வுப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால் காந்தவின் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளாார்.
</p><p>
கேகாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>

சுசந்த சுதர்சன எனப்படும் குறித்த நபர் அமைச்சர் லால் காந்தவின் மனைவியின் தங்கையின் கணவர் ஆவார்.</p><p>
</p><p></p><h2>மேலதிக விசாரணைக</h2><p>அரச வாகன ஏலத்தின் போது நபர் ஒருவரிடம் 10 மில்லியன் ரூபாவுக்கு மேல் மோசடி செய்ததாக அமைச்சர் லால் காந்தவின் மைத்துனருக்கு எதிராக சுரங்க ரஞ்சித் சமரவீர என்பவரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

 அளிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக அனைத்துக் காரணிகளும் வெளிவந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0c3405f-48fe-4724-9801-b665fda17705/26-6a7bc229dfc54.webp' /></p><p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட அமைச்சரின் மைத்துனரை நேற்று (11-08-2026) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியாததால் நேற்று இரவு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் இன்று (12-08-2026) கேகாலை நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
</p><p>
அமைச்சர் லால் காந்த தரப்பிலிருந்து எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T00:48:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேவிபியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரின் உறவினர் அதிரடியாக கைது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/k-d-lalkantha-arrested-1786490460"></link>
            <id>https://tamilwin.com/article/k-d-lalkantha-arrested-1786490460</id>
            <summary type="text">ஜேவிபியின் பிரதான பாத்திரங்களில் ஒருவரும் அரசாங்கத்தில் சிரேஷ்ட அமைச்சரின் உறவினர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.கமத்தொழில், கால்நடை வளங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேவிபியின் பிரதான பாத்திரங்களில் ஒருவரும் அரசாங்கத்தில் சிரேஷ்ட அமைச்சரின் உறவினர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால் காந்தவின் மைத்துனரே கேகாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>சுசந்த சுதர்சன எனப்படும் குறித்த நபர் அமைச்சர் லால் காந்தவின் மனைவியின் தங்கையின் கணவர் ஆவார்.
</p><p></p><h2>வாகன மோசடி</h2><p>அரச வாகன ஏலத்தின் போது நபர் ஒருவரிடம் 10 மில்லியன் ரூபாவுக்கு மேல் மோசடி செய்ததாக அமைச்சர் லால் காந்தவின் மைத்துனருக்கு எதிராக சுரங்க ரஞ்சித் சமரவீர என்பவரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>நேற்று அளிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக அனைத்துக் காரணிகளும் வெளிவந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை&nbsp;கேகாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85ee431a-e320-4cd5-ba58-9eef436b7f05/26-6a7bae5ec2678.webp' /></p><p>கைது செய்யப்பட்ட அமைச்சரின் மைத்துனரை நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியாததால் நேற்று இரவு&nbsp; அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு இன்று கேகாலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.</p><p><span style="color: inherit;">அமைச்சர் லால் காந்த தரப்பிலிருந்து எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.&nbsp;</span>யாருக்கும் சட்டம் சமமாக இருக்க வேண்டும். அமைச்சர்களுக்கோ அல்லது அவர்களுடைய ஆட்களுக்கோ மட்டுமல்ல, சொந்தக் காரர்களுக்கும் அதுவே நிலைமை.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T00:46:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்த முயன்ற சிறைச்சாலை அதிகாரி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prison-officer-arrest-supply-drugs-magazine-prison-1786494999"></link>
            <id>https://tamilwin.com/article/prison-officer-arrest-supply-drugs-magazine-prison-1786494999</id>
            <summary type="text">பொரளை மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்து வந்ததாகக் கூறப்படும் சிறைச்சாலை அதிகாரியொருவர் கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொரளை மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகித்து வந்ததாகக் கூறப்படும் சிறைச்சாலை அதிகாரியொருவர் கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கைது செய்யப்பட்ட அதிகாரியிடமிருந்து சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான 100 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 20 கிராம் ஹெரோயின் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>&nbsp;சிறை அதிகாரி கைது</h2><p>

இந்தச் சம்பவம் தொடர்பில், தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் முதலில் கல்கிசை பகுதியில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

மெகசின் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் கைதியொருவர் வட்ஸ்அப் அழைப்பு மூலம் போதைப்பொருளை பெற்றுக்கொள்ள வேண்டிய இடம் தொடர்பில் தகவல் வழங்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b877cfa1-af07-41d3-b3fc-5e8be601270a/26-6a7bc199ceaa4.webp' /></p><p>

அதற்கமைய, குறித்த சந்தேகநபர் போதைப்பொருள் பொதியைப் பெற்றுக்கொண்டு, அதனை பொரளை வனாத்த வீதியில் வைத்து மற்றொரு நபரிடம் ஒப்படைக்கத் தயாராகியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

சந்தேகநபரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொறுப்பதிகாரி தலைமையிலான அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இதன்போது, சிறைச்சாலை விளையாட்டு உடையில் வந்த நபரொருவர் சந்தேகநபருக்கு அருகில் சென்று போதைப்பொருள் அடங்கிய பொதியைப் பெற முற்பட்டுள்ளார்.</p><p>

அப்போது மறைந்திருந்த பொலிஸ் அதிகாரிகள் சந்தேகநபரை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfe3bf0a-482d-4db2-a190-05658a590f0c/26-6a7bc19abc46f.webp' /></p><p>

கைது செய்யப்பட்ட சிறைச்சாலை அதிகாரி கடந்த ஜனவரி மாதமே மெகசின் சிறைச்சாலையில் பணியில் இணைந்துள்ளதாகவும், அதற்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் பணியாற்றியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p>
தங்காலை – பெலியத்த பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய குறித்த சிறைச்சாலை அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-12T00:44:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்றொழில் சார் கற்கைகள் தொடர்பான பல்கலைக்கழக பீடம் துரித கதியில் அமைக்கப்படும்..! கடற்தொழில் அமைச்சர் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fishing-studies-faculty-be-set-up-soon-sri-lanka-1786493922"></link>
            <id>https://tamilwin.com/article/fishing-studies-faculty-be-set-up-soon-sri-lanka-1786493922</id>
            <summary type="text">முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் ஒழுங்கிணைப்புக்குழுக்கூட்டம்
இன்று(101.08.2026) முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன்
தலைமையில் நடைபெற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் ஒழுங்கிணைப்புக்குழுக்கூட்டம்
இன்று(101.08.2026) முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன்
தலைமையில் நடைபெற்றுள்ளது.
</p><p>
இதில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், நாடாளுமன்ற
உறுப்பினர்களான காதர்மஸ்தன்,செல்வம் அடைக்கலநாதன்,து.ரவிகரன் ஆகியோருடன்
கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள பணிப்பாளர் நாயகம் சுசந்த ஹகவத்த மற்றும்
திணைக்கள அதிகாரிகள் பொலிசார்,கடற்படையினர் கடற்தொழில் சமூக அமைப்புக்களின்
பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.</p><h2>கடற்தொழில் நடவடிக்கை</h2><p>
</p><p>
இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட கடற்தொழில் நடவடிக்கையினை
கடற்படையினரின் உதவியுடன் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3d1f9e3-2989-4578-b452-3054813e2c4f/26-6a7bbe4a4f572.webp' /></p><p> நன்னீர் மீன்பிடி உற்பத்தி மற்றும் மீன்வளப்பினை மேம்படுத்தல்நடவடிக்கை
மேற்கொள்ளல்

சீன அரசாங்கத்தினால் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட 54 வீடுகள் இந்த மாத
இறுதிக்குள் கட்டிமுடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக முல்லைத்தீவு மாவட்ட
கடற்தொழில் நீரியல்வளப்பணிப்பாளர் தெரிவித்துள்ளதுடன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீன்பிடி பல்கலைக்கழகம் அமைப்பதற்கான நிதி
ஒதுக்கப்பட்டு இடம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது விரைவில் அது அமையவுள்ளது என
அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;கடற்படையினரின் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும்
முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களதின் ஆளணி பற்றாக்குறையினை
நிவர்த்தி செய்ய இந்த மாதம் 19 ம் திகதி 8 பேர் புதிய நியமனம் பெறவுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
முல்லைத்தீவு மாவட்டத்தில் 4542 கடற்றொழிலாளர்&nbsp; குடும்பங்கள் ஊடாக இந்த ஆண்டு ஒகஸ்ட்
மாதம் வரை 8220.49 மெட்ரிக்தொன் மீன் பிடிக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளபோது இந்த அளவு சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட மீன்களும்
உள்ளடங்கப்பட்டுள்ளது என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன்
சுட்டிக்காட்டியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-12T00:29:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழிலிருந்து சட்டவிரோதமாக பயணிக்கும் தனியார் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/crackdown-on-unauthorized-jaffna-buses-1786493691"></link>
            <id>https://ibctamil.com/article/crackdown-on-unauthorized-jaffna-buses-1786493691</id>
            <summary type="text">தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட
அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு பயணிக்கும் தனியார் பேருந்துகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட
அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு பயணிக்கும் தனியார் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார
சபையும் காவல்துறையினரும் இணைந்து விரைவில் இந்த விசேட சட்ட அமுலாக்க நடவடிக்கையை
முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த விடயத்தை அதன் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>பேருந்துச் சேவை</h2><p>இதனுடன் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு சொகுசுப் பேருந்துச் சேவைகளை இயக்கிவரும்
பேருந்துகளுக்கு எதிராகவும், வடக்கு மாகாணத்தினுள் உரிய பதிவுகள் மற்றும்
அனுமதிகளின்றி பணியாளர்களைப் போக்குவரத்து செய்யும் தனியார் பேருந்துச்
சேவைகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b45a9559-03fb-4b61-830e-0709a7b0bc12/26-6a7bbafd83631.webp' /></p><p>


இது தொடர்பாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபருக்கு
உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பி, காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்த
சுற்றிவளைப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு
கோரப்பட்டுள்ளதாக விமலேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு சேவையில் ஈடுபட்டு வரும் மொத்தம்
பத்து பேருந்துகள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட
அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்டு வருவதாக அடையாளம்
காணப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான சட்டவிரோத சேவைகள் ஒழுங்குபடுத்தப்பட்ட
பயணிகள் போக்குவரத்து முறைமையை பாதிப்பதுடன் சட்டபூர்வமாக சேவையாற்றும்
பேருந்து இயக்குநர்களுக்கும் அநீதி விளைவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>தொழிற்சாலைகள்</h2><p>அத்தோடு, வடக்கு மாகாணத்தினுள் அரச திணைக்களங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள்
மற்றும் ஏனைய பணியிடங்களுக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை பதிவு
செய்து சட்டபூர்வமாக இயங்குவதற்காக போதுமான கால அவகாசம் ஏற்கனவே
வழங்கப்பட்டிருந்ததாகவும் அந்த அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையிலும் இதுவரை
பதிவு செய்யப்படாமல் சேவையில் ஈடுபட்டு வரும் பேருந்துகளுக்கு எதிராக இனி சட்ட
நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dfaf5da-5982-49fe-8505-7ca5e7182110/26-6a7bbafe35e2b.webp' /></p><p>மேலும் தெரிவித்த அவர், “இந்த விசேட நடவடிக்கையின் போது வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து
அதிகார சபையின் பறக்கும் படை அதிகாரிகளும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு
அதிகாரிகளும் மற்றும் காவல்துறையினரும் இணைந்து சம்பந்தப்பட்ட பேருந்துகளை பரிசோதித்து வழித்தட அனுமதிப்பத்திரங்கள் மற்றும் ஏனைய சட்டபூர்வ ஆவணங்களை ஆய்வு
செய்வதுடன் அனுமதியின்றி சேவையில் ஈடுபடுவது உறுதிப்படுத்தப்படும்
பேருந்துகளுக்கு எதிராக சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும். </p><p>

மேலும்,
அனுமதியற்ற பேருந்துகள் சேவையை ஆரம்பிப்பதைத் தடுப்பதற்கும் அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்கள் மற்றும் கால அட்டவணைகளுக்கு அமைவாகவே சேவைகள்
இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
</p><p>
பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் சட்டத்தின்
ஆட்சியை உறுதிப்படுத்துவதற்காக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதுடன் அனுமதியின்றி சேவையில் ஈடுபடும் எந்தவொரு பேருந்திற்கும் இனி சலுகை
வழங்கப்படமாட்டாது” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T00:19:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[செங்கடலில் இரட்டை தாக்குதல்: சரக்கு கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்: 6 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/double-strike-on-cargo-vessel-in-red-sea-6-dead-1786488332"></link>
            <id>https://news.lankasri.com/article/double-strike-on-cargo-vessel-in-red-sea-6-dead-1786488332</id>
            <summary type="text">செங்கடல் பகுதியில் சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட இரட்டை தாக்குதலில் 6 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். சரக்கு கப்பல் மீது தாக்குதல்செவ்வாய்க்கிழமை செங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செங்கடல் பகுதியில் சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட இரட்டை தாக்குதலில் 6 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> சரக்கு கப்பல் மீது தாக்குதல்</h2><p>செவ்வாய்க்கிழமை செங்கடலின் பாப் எல்-மந்தேப்(Bab el-Mandeb) நீரிணை பகுதியில் சரக்கு கப்பல் மீது ஈரான் ஆதரவு ஹவுதி படையினர் கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.</p><p>ஓமனின் சலாலா நகரிலிருந்து ஜிபூட்டி வழியாக வந்த எகிப்துக்கு நாட்டுக் சொந்தமான திகமா(Tihamah) என்ற சரக்குக் கப்பல் மீது இந்த தாக்குதலானது நடத்தப்பட்டுள்ளது.</p><p>இந்த தாக்குதலில் நான்கு கப்பல் ஊழியர்கள் மற்றும் இரண்டு மீட்புப் படை பணியாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a782fd5-9e7a-4de6-8a9d-d69fd97322dd/26-6a7ba60d6bd79.webp' /></p><p> உயிரிழந்தவர்களில் 3 பேர் பாகிஸ்தானியர்கள் மற்றும் ஒருவர் இந்தோனேசிய நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.</p><p> இந்த தாக்குதலில் மேலும் 10 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பாக ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படையினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2> இரட்டை தாக்குதல்</h2><p>ஹவுதி படையினரின் இந்த தாக்குதலானது இரண்டு கட்டங்களாக நடைபெற்றுள்ளது, முதலில் சரக்கு கப்பலானது நீரிணையை கடந்து செல்லும் போது ஏவுகணை மற்றும் வெடிமருந்து தாக்கியதில் கப்பலில்&nbsp; தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p> இந்த தாக்குதலின் போதே உயிரிழப்புகள் மற்றும் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.</p><p>இதனை தொடர்ந்து சேதமடைந்த கப்பலில் ஆபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக மீட்பு பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்த போது இரண்டாவது முறையாக மற்றொரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p> இதில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T00:15:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[கயல் சீரியலில் இருந்து விலகிய சஞ்ஜீவ்? ரசிகர்கள் ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sanjeev-karthick-to-exit-kayal-serial-say-reports-1786493035"></link>
            <id>https://cineulagam.com/article/sanjeev-karthick-to-exit-kayal-serial-say-reports-1786493035</id>
            <summary type="text">சன்டிவி-யின் கயல் சீரியல் சின்னத்திரையில் அதிகம் ரசிகர்களை கடந்த தொடர்களில் ஒன்றாக இருந்து வருகிறது.ஹீரோயினாக சைத்ரா ரெட்டி மற்றும் அவருக்கு ஜோடியாக ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>சன்டிவி-யின் கயல் சீரியல் சின்னத்திரையில் அதிகம் ரசிகர்களை கடந்த தொடர்களில் ஒன்றாக இருந்து வருகிறது.</p><p>ஹீரோயினாக சைத்ரா ரெட்டி மற்றும் அவருக்கு ஜோடியாக சஞ்ஜீவ் கார்த்திக் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
</p><p> கதைப்படி தற்போது சஞ்ஜீவ் நடித்துவரும் எழில் கதாபாத்திரம் கோமாவில் இருப்பது போல காட்டப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64d57233-8118-475e-9f50-2df59cf6fc1e/26-6a7bb86d2ab4f.webp' /></p><p>
</p><h2>சஞ்ஜீவ் விலகிவிட்டாரா?
</h2><p>இந்நிலையில் தற்போது சஞ்ஜீவ் கயல் சீரியலில் இருந்து விலகிவிட்டதாக தகவல் பரவி வருகிறது. அதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர்.
</p><p>இருப்பினும் இது பற்றி சஞ்ஜீவ் தரப்பு இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1e58c5d-252d-448a-af21-fd76818921dc/26-6a7bb86e763e0.webp' /></p>]]></content>
            <updated>2026-08-12T00:05:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓகஸ்ட் மாதத்தில் சேதம் ஏற்படுத்தும் சந்தைச் சூழலில் வர்த்தகம் செய்தல்: EUR/USD-க்குப் பொறுமை தேவை கணிப்பு அல்ல அது ஏன்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eur-usd-trading-in-august-why-patience-matters-1786492114"></link>
            <id>https://tamilwin.com/article/eur-usd-trading-in-august-why-patience-matters-1786492114</id>
            <summary type="text">சவாலான சகல சந்தைகளும் அதிக ஏற்ற இறக்கம் கொண்டவை
அல்ல. நிச்சயமற்ற தன்மையானது, சந்தைகளில் தெளிவான
போக்குகள் உருவாவதைத் தடுக்கும் சூழல்களே மிகவும் கடின...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவாலான சகல சந்தைகளும் அதிக ஏற்ற இறக்கம் கொண்டவை
அல்ல. நிச்சயமற்ற தன்மையானது, சந்தைகளில் தெளிவான
போக்குகள் உருவாவதைத் தடுக்கும் சூழல்களே மிகவும் கடினமான
வர்த்தகச் சூழல்களில் சிலவாகும். </p><p>ஓகஸ்ட் மாதம் நெருங்கி வரும்
நிலையில், பணவீக்கம் மத்திய வங்கியின் நிர்ணயிக்கப்பட்ட அளவைக்
காட்டிலும் அதிகமாகவே இருக்கிறது, அதேவேளையில் பல முக்கியப்
பொருளாதாரங்களில் விலை மாறும் வேகம் குறைகிறது.</p><p> ஐரோப்பிய
மத்திய வங்கி மற்றும் யுஎஸ் ஃபெடரல் ரிசர்வ் ஆகிய இரண்டின்
மீதான எதிர்பார்ப்புகளையும் சந்தைகள் தொடர்ந்து மறுமதிப்பீடு செய்து
வருவதால், யூரோ/டொலர் பரிமாற்ற வீதமானது, ஒன்றுக்கொன்று
முரண்படும் பேரியல் பொருளாதாரக் கண்ணோட்டங்களுக்கு இடையில்
சிக்கியுள்ளது.</p><p> யூரோ அல்லது யுஎஸ் டொலர் ஆகிய இரண்டுமே
தீர்க்கமான பேரியல் சாதகத்தைக் கொண்டிருக்காதபோது​ தற்போதும்
வணிகத்தை மேற்கொண்டுவரும் வர்த்தகர்கள் தங்கள் கவனத்தைத்
திசைசார் கணிப்பிலிருந்து, ஒழுங்குபடுத்தப்பட்ட செயலாக்கம் மற்றும்
புறநிலை இடர் மேலாண்மைக்கு மாற்ற வேண்டும்.
</p><h2>சேதம் ஏற்படுத்தும் சந்தைச் சூழலைப் புரிந்துகொள்ளுதல்
</h2><p>சேதம் ஏற்படுத்தும் சந்தைச் சூழல்-பாணி நிலைமைகள் நாணயச்
சந்தைகளுக்கு ஒரு விரக்தி தரும் பொறியை உருவாக்குகின்றன,
கட்டுக்கடங்காத பணவீக்கம் மற்றும் பலவீனமடையும் பொருளாதார
வளர்ச்சி ஆகியவற்றின் கலவையானது, மத்திய வங்கிகள் கடினமான
கொள்கைகளைப் பின்பற்ற வேண்டிய சூழலுக்குத் தள்ளுகிறது. இந்தச்
சூழல் ஒவ்வொரு வாரமும் முரண்பாடான பொருளாதாரச்
சமிக்ஞைகளை உருவாக்குகிறது. </p><p>ஒரு நாள், எதிர்பார்த்ததை விட
அதிகமான பணவீக்கக் குறியீடு இருப்பது, உயர் வட்டி வீதங்களைச்
சுட்டிக்காட்டி, நாணயத்தின் வலிமையை அதிகரிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fbca282-f3d0-4e81-94c8-fbefc65c05ea/26-6a7bb80d667a2.webp' /></p><p> அடுத்த நாள்,

ஒரு மோசமான உற்பத்தி அறிக்கையானது பொருளாதாரச் சுழற்சி
மெதுவாக இருப்பதை உணர்த்தி, உடனடியாக நாணய மதிப்பின்
பலவீனத்திற்கு வழிவகுக்கிறது.
யூரோ மண்டலத்தின் பொருளாதாரக் கண்ணோட்டம் மறுக்க
முடியாதபடி நிலையற்றதாகவே உள்ளது.</p><p> சமீபத்திய OECD
பகுப்பாய்வானது, பலவீனமான உலகளாவிய வளர்ச்சிச் சூழலைச்
சுட்டிக்காட்டியுள்ளதுடன், ஐரோப்பா குறிப்பாக எரிசக்தி விலையின்
சடுதியான மாற்றங்கள் மற்றும் மந்தமான தேவை ஆகியவற்றால்
பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. அதே சமயத்தில், யுஎஸ்
தரவுகளும் இது போன்ற ஒரு சிக்கலான சித்திரத்தை அளிக்கின்றன.</p><p>
ராய்ட்டர்ஸ் வெளியிட்ட சமீபத்திய தரவு, ஜூன் மாதத்தில் யுஎஸ்
நுகர்வோர் பணவீக்கம் 3.5% ஆகக் குறைந்துள்ளதைக் குறிக்கிறது.
</p><p>ஒருங்கிணைந்த உலகளாவிய வளர்ச்சிக் கண்ணோட்டம் இல்லாததால்,
EUR/USD இன் பாரம்பரிய உந்தும் காரணிகளைப் புரிந்துகொள்வது
கடினமாகிறது. பொதுவாக, ஒரு பிராந்தியத்தில் காணப்படும் வலுவான
வளர்ச்சியும் உயரும் வட்டி வீதங்களும் அதன் நாணயத்தின் மதிப்பை
உயர்த்துகின்றன. </p><p>இன்று, இரு பிராந்தியங்களும் வளர்ச்சி
மந்தநிலையையும் குறையாத பணவீக்கத்தையும் எதிர்கொள்கின்றன.
மாறிவரும் இந்தச் சூழலால், யுஎஸ் மற்றும் ஐரோப்பா இடையிலான
வட்டி வீத வேறுபாடுகள் சந்தையால் தொடர்ந்து மறுமதிப்பீடு
செய்யப்பட்டு வருகின்றன. எண்ணெய் விலையில் மீண்டும்
ஏற்பட்டுள்ள அழுத்தத்திற்கு மத்தியிலும், வட்டி வீதங்கள் ஏற்கனவே
பொருத்தமான நிலையில் இருப்பதாகக் கொள்கை வகுப்பாளர்கள்
சுட்டிக்காட்டியுள்ளதால், ஜூலை மாதத்தில் ECB எச்சரிக்கையுடன்
செயல்படும் என்று சந்தைகள் பரவலாக எதிர்பார்க்கின்றன. இதனால்,
EUR/USD ஜோடிக்கு நிலையான போக்குகளை உருவாக்க முடியாமல்
சிரமம் ஏற்படுகிறது. </p><p>ஒவ்வொரு புதிய பொருளாதார வெளியீடும் சந்தை
எதிர்பார்ப்புகளை மாற்றியமைத்து, திட்டவட்டமான ஏற்றங்களுக்குப்
பதிலாக அடிக்கடி தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.</p><h2>

நிச்சயமற்ற தன்மையின் உளவியல்
</h2><p>விலைகள் தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் மாறும் போக்குடைய
சூழல்களைவிட, இழுபறியான சந்தை நிலவரங்கள் வர்த்தகர்கள்மீது
பெரும்பாலும் அதிக உளவியல் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. </p><p>ஒரு
தெளிவான சந்தைப் போக்கு நிலவும்போது, ​​வர்த்தகர்கள் தங்கள்
வர்த்தகத்தில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் வழிகாட்டும்
ஆதரவையும் எதிர்ப்பு நிலைகளையும் எளிதாக அடையாளம் காண
முடியும். ஒரு சேதம் ஏற்படுத்தும் சந்தைச் சூழலில், ஒரு குறிப்பிட்ட
திசையை நோக்கிய தெளிவான போக்கு இல்லாத நிலை
விரக்தியையும், அதிக இழப்பை ஏற்படுத்தக்கூடிய நடத்தை சார்ந்த
தவறுகளையும் ஏற்படுத்துகிறது.
</p><p>விலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மாறிக்கொண்டிருக்கும் சூழலில்,
அளவுக்கு அதிகமாக வர்த்தகம் செய்வது மிகவும் பொதுவான ஓர்
ஆபத்தாகும். அடுத்தப் பெரிய சந்தை நகர்வைப் பிடித்து லாபம்
பெறலாம் என்ற நம்பிக்கையில் வர்த்தகர்கள் ஒவ்வொரு மேக்ரோ
தலைப்புச் செய்தியையும் அடிக்கடி பின்பற்றிச் செல்கிறார்கள். இந்த
உறுதிப்படுத்தும் சார்புநிலை, உண்மையில் சீரற்ற சந்தை ஏற்றத்
தாழ்வுகள் மட்டுமே உள்ள இடங்களில் போக்குகளைக் காண
அவர்களைத் தூண்டுகிறது. </p><p>எதிர்பார்ப்பைவிடச் சிறந்த ஒரு
வேலைவாய்ப்பு அறிக்கை, ஒரு தீவிரமான நீண்டகால முதலீட்டு
நிலையைத் தூண்டக்கூடும்; ஆனால், சில மணித்தியாலங்களிலேயே
ஒரு மோசமான கொள்முதல் முகாமையாளர்கள் குறியீட்டுக்
கணக்கெடுப்பு அந்த நகர்வைத் தலைகீழாக மாற்றிவிடக்கூடும். அடுத்த
ஏற்றத்தைத் தவறவிட்டுவிடுவோமோ என்ற அச்சம், தொடர்ச்சியான
தவறான சமிக்ஞைகள் மூலமாக மூலதனத்தை வற்றச் செய்கிறது.</p><p>
EUR/USD ஜோடி பல வாரங்களாக ஒரு குறுகிய வரம்பிற்குள்
தேக்கமடைந்திருக்கும்போது, ​​கட்டாயப்படுத்தி வர்த்தகம் செய்ய
வேண்டும் என்ற உளவியல் உந்துதல் மிகத் தீவிரமாகிறது.</p><p> குறுகிய
கால வேக மாற்றத்தை ஓர் அடிப்படை மாற்றமாகக் தவறாகக் கருதி,

வர்த்தகர்கள் குறைந்த கால அளவுகளுக்கு மாறத் தொடங்குகிறார்கள்.
நிச்சயமற்ற பேரியல் பொருளாதாரச் சூழல்களில் மூலதனத்தைப்
பாதுகாப்பது, பெரிய திசைசார் நகர்வுகளைக் கைப்பற்றுவதைப்
போலவே பல நேரங்களில் மதிப்புமிக்கது என்பதை அனுபவமிக்க
வர்த்தகர்கள் புரிந்துகொள்கிறார்கள். </p><p>பொறுமையும், தேர்ந்தெடுக்கப்பட்ட
வர்த்தக நிறைவேற்றமும் அதயாவசியமானவையாகின்றன. இத்தகைய
சூழல்களில், குறைவாக வர்த்தகம் செய்வதே பெரும்பாலும் அதிக
லாபம் தரும் மூலோபாயமாக அமைகிறது.</p><h2>
அமைப்பு தெளிவாக இல்லாதபோது, ​​சூழல் அதிக முக்கியத்துவம்
பெறுகிறது</h2><p>
நிலையற்ற பேரியல் சூழல்களில் செயல்படுவதற்குப் பொறுமைக்கு
அப்பால் கூடுதல் திறன்கள் தேவைப்படுகின்றன.</p><p> உண்மையற்ற
தொடக்கங்கள், முக்கியச் செய்திகளின் தலைகீழ் மாற்றங்கள், திடீர்
விலை மாற்றங்கள் ஆகியவற்றைத் தாங்கக்கூடிய ஒரு வர்த்தகச்
செயல்முறை இதற்குத் தேவைப்படுகிறது. பணவீக்கத் தரவுகள்,
வளர்ச்சிகுறித்த கவலைகள், மத்திய வங்கியின் சமிக்ஞைகள், வட்டி
வீதம்குறித்த மாறிவரும் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றிற்கு இடையே
EUR/USD ஜோடி இழுபறிக்கு உள்ளாகும்போது, ​​வர்த்தகச் சூழலின்
ஒவ்வொரு அம்சமும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
</p><p>
இங்குதான், விஷயத்தைத் திணிக்காமல் Exness-ஐ அறிமுகப்படுத்த
முடியும். EUR/USD போன்ற ஒரு சந்தையில், அடுத்தடுத்த தரவு
வெளியீடுகளின் அடிப்படையில் சூழல் மாறக்கூடும் என்பதால், CFD
வர்த்தகர்களுக்கு நிதானத்துடன் செயல்பட உதவும் சூழல்
தேவைப்படுகிறது. </p><p>ஒரு தரகரால் பேரியல் சித்திரத்தை மேலும்
தெளிவுபடுத்த முடியாது, ஆனால் முடிவெடுப்பது தொடர்பான
பின்வரும் கவனச்சிதறல்களைக் குறைக்க அவரால் உதவ முடியும்:
அதாவது, பிழையின்றி ஓர்டர் செய்யப்பட்டதா, செலவுகள்

புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றனவா மற்றும் CFD வர்த்தகர்
கவனத்தைச் சிதறடிக்காமல் இடர் அபாயத்தை நிர்வகிக்க முடியுமா
என்பன.</p><p>
இது முக்கியமானது, ஏனெனில் வரம்பு-பிணைக்கப்பட்ட நாணயச்
சந்தைகள் பெரும்பாலும் தயக்கம் மற்றும் அதிகப்படியான
எதிர்வினையைச் சம அளவில் தண்டிக்கின்றன. ஒரு CFD வர்த்தகர்
ஏற்கனவே ஓர் உண்மையான கொள்கைச் சமிக்ஞையை மற்றொரு
தவறான நகர்விலிருந்து பிரித்தறிய முயற்சிக்கும்போது, ​​அந்த
வர்த்தகத்தின் செயல்முறைகள் நிச்சயமற்ற தன்மைக்கு மற்றொரு
ஆதாரமாக மாறிவிடக் கூடாது. மிகவும் சீரான செயலாக்கமும்
தெளிவான விலை நிர்ணயமும் பின்வருவனவற்றின் மீதான
கவனத்தை அது இருக்க வேண்டிய இடத்தில் வைத்திருக்க உதவலாம்:
</p><p>அமைவு, ஆபத்து மற்றும் வர்த்தகத்தில் இருப்பதற்கான காரணம்.
EUR/USD ஜோடி உண்மையில் வர்த்தகம் செய்யப்படும் விதத்தின்
அடிப்படையில், Exness Terminal கூட இந்த விவாதத்திற்குப்
பொருத்தமானதாக அமைகிறது. </p><p>அந்த ஜோடி அரிதாகவே ஒரே ஒரு
சமிக்ஞையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. CFD
வர்த்தகர்கள் ஒரே நேரத்தில் டொலர், யூரோஸோன் தரவுகள், ஃபெட்
குறித்த எதிர்பார்ப்புகள், ECB-இன் கருத்துகள், தங்கம், கச்சா எண்ணெய்,
பங்குச் சந்தை மனநிலை ஆகியவற்றைக் கவனிக்க
வேண்டியிருக்கலாம். </p><p>வரைபட பகுப்பாய்வு, செயல்படுத்துதல், நிலை
முகாமைத்துவம், கணக்குக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்கான ஒற்றைப்
பணிச்சூழல், அந்தப் பரந்த பேரியல் கண்ணோட்டத்தை ஒன்றிணைத்து
வைத்திருக்க உதவுகிறது.</p><p> குறிப்பாக, EUR/USD கூடிக் குறையாமல்,
கிடைமட்டமாக நகரும்போதும், ஒவ்வொரு நகர்விற்கும் பின்னால்
இருக்கும் காரணங்கள் மாறிக்கொண்டே இருக்கும்போதும் இது மிகவும்
பயனுள்ளதாக இருக்கும்.
இடர் கட்டுப்பாடானது வகுத்த அதே திட்டத்தின் ஒரு பகுதியாக
மாறுகிறது. தெளிவான போக்கு நிலவும் ஒரு சூழலில், CFD

வர்த்தகர்கள் பெரும்பாலும் சந்தை அமைப்பையே தங்கள் பணிகளைச்
செய்ய அனுமதிக்க முடியும். EUR/USD சந்தையில் ஏற்ற இறக்கங்கள்
அதிகமாக இருக்கும்போது, ​​சந்தை அமைப்பு சாதகமான
வாய்ப்புகளைக் குறைவாகவே வழங்குகிறது. </p><p>பிரத்தியேகமான விலை
நிலைகள் அடிக்கடி சோதிக்கப்படுகின்றன, சந்தைகுறித்த உறுதிப்பாடு
விரைவாகக் குறைகிறது; இதனால், வர்த்தகம்
நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே திட்டத்தை மாற்றியமைக்க CFD
வர்த்தகர்கள் தூண்டப்படலாம்.</p><p> வெளிப்பாடு, மார்ஜின் மற்றும் கணக்கின்
நிலைகுறித்த தெளிவான புலப்படுநிலையானது, வர்த்தகத்தை
உணர்ச்சிவசப்பட்ட எதிர்வினைகளின் அடிப்படையில் அல்லாமல்,
விதிமுறைகளின் அடிப்படையில் மேற்கொள்ள உதவுகிறது.
உட்கட்டமைப்பானது நிச்சயமற்ற தன்மையைத் தீர்க்கின்றன என்பது
விஷயமல்ல. அது தீர்ப்பதில்லை.</p><p> முக்கியமான விஷயம்
என்னவென்றால், நிலையற்ற சந்தைகள் ஏற்கனவே CFD வர்த்தகரிடம்
போதும் என்கிற அளவுக்குச் சவால்களை முன்வைக்கின்றன. EUR/USD
ஜோடியானது இரண்டு பலவீனமான கண்ணோட்டங்களுக்கு இடையே
சிக்கியிருக்கும்போது, ​​கையாள வேண்டிய மற்றொரு காரணியைச்
சேர்ப்பதற்குப் பதிலாக, வர்த்தக ஒழுக்கத்தைக் காக்க அந்தத் தளம்
உதவ வேண்டும்.</p><p>
முடிவுரை
பணவீக்க மந்தநிலையின்போது வெற்றிகரமான EUR/USD வர்த்தகம்
என்பது, ஒவ்வொரு பொருளாதார வெளியீட்டையும் கணிப்பதை விட,
சந்தைகள் ஒரு வழிகாட்டலைத் தேடும்போது ஒழுக்கத்தைக்
கடைப்பிடிப்பதைப் பற்றியதே ஆகும். ஓகஸ்ட் மாதத்தில் சேதம்
ஏற்படுத்தும் சந்தைச் சூழலானது, பேரியல் முதலீட்டாளர்கள் மற்றும்
சில நாட்கள் அல்லது வாரங்கள் வரை வர்த்தகம் செய்யும் வர்த்தகர்கள்
ஆகிய இரு தரப்பினரின் பொறுமையையும் சந்தேகமின்றிச் சோதிக்கும்.</p><p>
வர்த்தகர்கள் இத்தகைய நிச்சயமற்ற பேரியல் சூழல்களை ஒரு

புறநிலை சார்ந்த பகுப்பாய்வுடனும், கட்டாயப்படுத்தி வர்த்தகம்
செய்வதை உறுதியாகத் தவிர்த்தும் அணுக வேண்டும். </p><p>சீரான
நிறைவேற்றலை ஆதரிக்கும் ஒரு வலுவான வர்த்தக
உள்கட்டமைப்பைச் சார்ந்திருப்பதன் மூலம், வர்த்தகர்கள் சவாலான,
ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் கட்டுண்ட சந்தைகளைச் சமாளித்து,
தங்கள் மூலதனத்திற்குப் பாதிப்பின்றி வெளிவர முடியும்.</p>]]></content>
            <updated>2026-08-12T00:02:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/manivannan-calls-for-immediate-pc-polls-1786491171"></link>
            <id>https://ibctamil.com/article/manivannan-calls-for-immediate-pc-polls-1786491171</id>
            <summary type="text">மாகாண சபை தமிழ் மக்களுக்கு தீர்வு அல்ல, சமஸ்டி தீர்வே எமது நிலைப்பாடு
என்று சட்டத்தரணியும், முன்னாள் யாழ்ப்பாணம் மாநகர முதல்வரும், தமிழ்
மக்கள் கூட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபை தமிழ் மக்களுக்கு தீர்வு அல்ல, சமஸ்டி தீர்வே எமது நிலைப்பாடு
என்று சட்டத்தரணியும், முன்னாள் யாழ்ப்பாணம் மாநகர முதல்வரும், தமிழ்
மக்கள் கூட்டணியின் துணைப் பொதுச் செயலாளருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன்
தெரிவித்துள்ளார்.
</p><p>
வடமராட்சியில் ஊடகவியலாளர்கள் மாகாண சபை தேர்தல் தொடர்பில் எழுப்பிய
கேள்விக்கு பதில் அளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p><p>


இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “மாகாண சபை தேர்தல் ஒத்திவைக்கப்பட முடியாது. </p><p></p><h2>அரசாங்கங்கள்&nbsp;</h2><p>உடனடியாக நடத்தப்பட வேண்டும். 2018 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபை பதவியை இழந்திருந்தது.</p><p>2017 கிழக்கு மாகாண
சபை பதவியை இழந்திருந்தது
கிட்ட தட்ட 6 ஆண்டுகளுக்கு மேலாக மாகாண சபை தேர்தல் நடத்தாமல் அரசாங்கங்கள்
வேண்டுமென்றே இழுத்தடிப்பு செய்து வருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6d916b7-4c5c-44be-a680-58cb4d4fa505/26-6a7bb12556aae.webp' /></p><p>அவர்களைப் பொறுத்தவரையில் இந்த
நாடு ஒற்றை ஆட்சிக்குள்ள இருக்க வேண்டும். இந்த நாட்டிலே அதிகாரம் சற்று கூட
பகிரக்கூடாது.</p><p>

அதிலும் விசேஷமாக தமிழ் மக்கள் தங்களுடைய எந்தவொரு
பிராந்தியத்தின் மீது தங்களுடைய ஆளுமையை அல்லது தங்களுடைய ஆட்சியை
செயற்படுத்த கூடாது என்பதில் அவர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்.</p><p> </p><p></p><h2>தீர்வு திட்டம்</h2><p>அந்த
அடிப்படையில் தான் இந்த மாகாண சபை தேர்தல்கள் மாறி மாறி வந்த எல்லா
அரசாங்கங்களாலும் இழுத்தடிப்பு செய்யப்படுகிறது.

2018 ஆம் ஆண்டிலேயே ஆட்சியில் இருந்தது மைத்திரிபால சிறிசேனா ரணில்
விக்ரமசிங்க தலைமையிலான கூட்டாட்சி. </p><p>

அந்த அரசாங்கம் வேண்டுமென்று செய்த
சதியினாலே இந்த தேர்தல் பொறிமுறையை இல்லாமல் செய்து இன்று இந்த தேர்தல்
நடைபெறாமல் இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e532502-4bad-4ec9-8349-6f55a6d7f17f/26-6a7bb126abbbe.webp' /></p><p> ஆகவே என்னைப் பொறுத்தமட்டில் 13வது திருத்தச்
சட்டத்தில் எதுவுமே இல்லை என்பதை நான் 100 வீதம் ஏற்றுக் கொள்கிறேன்.


13-வது திருத்தச் சட்டம் எங்களுக்கு தீர்வு இல்லை என்பதையும் நான் 100 வீதம்
ஏற்றுக் கொள்கிறேன்.
</p><p>
தமிழ் மக்களுக்கு சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வு திட்டம் முன்வைக்கப்பட
வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கின்றோம்.</p><p></p><h2>மாகாண சபை தேர்தல்&nbsp;</h2><p>


ஆனால் மாகாண சபை தேர்தலை வைக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு இருக்கிறது.
</p><p>

அந்த தேர்தலை கட்டாயமாக வைக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய நிலைப்பாடாக
இருக்கிறது. நான் சொல்லவில்லை மாகாண சபை எங்களுக்கு போதும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/205866ac-46bc-42d8-b766-aab73ad5a650/26-6a7bb128121ed.webp' /></p><p> மாகாணசபையோடு
எங்களுடைய உரிமை போராட்டத்தை முடித்துக் கொள்ளலாம் என்று ஒருபோதும் சொல்லப்
போவதில்லை சொல்லவுமில்லை.
</p><p>

ஆனால் அரசியல் அமைப்பில் இருக்க கூடிய ஒரு பொறிமுறையை இயங்க வைக்கப்பட
வேண்டும். அந்த ஜனநாயக பொறிமுறையை இயங்க வைக்கப்பட வேண்டியது கட்டாயத் தேவை.</p><p>
ஆகவே மாகாண சபை தேர்தல் கட்டாயமாக வைக்கப்பட வேண்டும் என்பதை நான் ஆணித்தரமாக
கூறிக் கொள்ள விரும்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T23:59:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிச்சத்திற்கு வந்த பாதாள உலகத்தின் அரசியல் தொடர்புகள்..! மரண தண்டனை மீண்டும் நடைமுறையாகுமா..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussion-regardin-death-penalty-drug-trafficking-1786470851"></link>
            <id>https://tamilwin.com/article/discussion-regardin-death-penalty-drug-trafficking-1786470851</id>
            <summary type="text">இலங்கையில் தற்பொழுது&amp;nbsp; மரண தண்டனை மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விவாதங்கள் பேசுபொருளாகியுள்ளன.


போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தற்பொழுது&nbsp; மரண தண்டனை மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விவாதங்கள் பேசுபொருளாகியுள்ளன.</p><p>


போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயல்பாடுகளுக்கு அரசியல்வாதிகளின் அனுசரணை இல்லாமல் இவ்வளவு பெரிய வலையமைப்பு இயங்க முடியாது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
 மாக்கந்தர மதுஷ் போன்ற பாதாள உலகத் தலைவர்கள் அரசியல்வாதிகளுடன் கொண்டிருந்த தொடர்புகள் இதற்கான முக்கிய சான்றாக பார்க்கப்படுகின்றது.</p><p>

இலங்கையில் மரண தண்டனை சட்டம் புத்தகத்தில் இருந்தாலும், 1976 முதல் நடைமுறையில் செயல்படுத்தப்படாமல் உள்ளது.
</p><p>
போதைப்பொருள் குற்றங்களைக் குறைக்க மரண தண்டனையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை ஒரு தரப்பினரால் முன்வைக்கப்பட, தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதற்கு ஆதரவாகவோ அல்லது நிறைவேற்றுவதாகவோ இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
</p><p>
 மரண தண்டனைக்கு எதிரான வாதங்களில் மனித உரிமை கவலைகள், நீதித்துறை தவறுகள் நிகழ்ந்தால் அதைத் திருத்த முடியாது என்ற அம்சம் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்கள் (ICCPR) ஆகியவை முதன்மையாக உள்ளன.
</p><p>
வெறும் மரண தண்டனை மட்டுமே தீர்வாகாது; போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்களைக் கண்டறிதல்,பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகளில் ஊழலை ஒழித்தல், விசாரணை மற்றும் நீதிமன்றச் செயல்பாடுகளை விரைவுபடுத்துதல் போன்ற கட்டமைப்பு ரீதியான மாற்றங்களே அவசியமானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது NewsInsightTamil நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/DEmhAJm0O5s" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-11T23:55:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சி: மர்மமான ஏவுகணையை ஏவிய வட கொரியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/north-korea-fires-suspected-ballistic-missile-1786492335"></link>
            <id>https://news.lankasri.com/article/north-korea-fires-suspected-ballistic-missile-1786492335</id>
            <summary type="text">வட கொரியா சந்தேகத்திற்குரிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி இருப்பதாக ஜப்பான் குற்றஞ்சாட்டியுள்ளது.கடலில் பாய்ந்த வட கொரிய ஏவுகணைபுதன்கிழமை வடகொரியா ராணுவம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட கொரியா சந்தேகத்திற்குரிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி இருப்பதாக ஜப்பான் குற்றஞ்சாட்டியுள்ளது.</p><h2>கடலில் பாய்ந்த வட கொரிய ஏவுகணை</h2><p>புதன்கிழமை வடகொரியா ராணுவம் சந்தேகத்திற்குரிய பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை கடல் பிராந்தியத்தில் ஏவி இருப்பதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p>ஏவுகணை கடலில் விழுந்து இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ஒரே வாரத்தில் நடத்தப்படும் வட கொரியாவின் இரண்டாவது ஆயுதச் சோதனை இதுவாகும்.</p><p> ஜப்பானை தொடர்ந்து, தென்கொரியாவும் கிழக்கு கடற்கரைப் பகுதிக்கு அப்பால் அடையாளம் தெரியாத ஏவுகணை ஒன்றை வட கொரியா ஏவி இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8838d621-8403-443e-8dd4-1847d253e022/26-6a7bb5b07079b.webp' /></p><p></p><h2> அமெரிக்கா - தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சி</h2><p>அமெரிக்கா - தென்கொரியா இடையே அடுத்த வாரம் வருடாந்திர ராணுவ பயிற்சி தொடங்க உள்ள நிலையில் இது தொடர்பான அறிவிப்பு வந்த இரண்டு நாட்களில் வட கொரியா இந்த ஏவுகணை சோதனையை செய்துள்ளது.</p><p> பிராந்திய மற்றும் தற்காப்பு திறன்களை வலுப்படுத்தும் நோக்கில் Ulchi Freedom Shield என்று அழைக்கப்படும் கூட்டுப் பயிற்சி வட கொரியாவை எரிச்சலடைய செய்துள்ளது.</p><p> ஏனென்றால் இந்த போர் பயிற்சியானது வட கொரியா மீதான படையெடுப்பிற்கான ஒத்திகையாக அது கருகிறது.</p><p> தென் கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய 3 நாடுகளின் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்கு பிறகு வடகொரியாவின் இந்த நடவடிக்கை நிகழ்ந்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-11T23:52:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடி அமாவாசை நாளான இன்று மறந்தும் இந்த விஷயங்களை செஞ்சுடாதீங்க.]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/don-t-forget-to-do-these-things-aadi-amavasai-1786488680"></link>
            <id>https://jvpnews.com/article/don-t-forget-to-do-these-things-aadi-amavasai-1786488680</id>
            <summary type="text">என்ன தான் ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும், ஆடி மாத அமாவாசை சிறப்பு வாய்ந்தது. அதுவும் இந்த மாதத்தில் வரும் அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>என்ன தான் ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும், ஆடி மாத அமாவாசை சிறப்பு வாய்ந்தது. அதுவும் இந்த மாதத்தில் வரும் அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், பித்ரு காரியம் செய்ய, திதி கொடுக்க உகந்த நாளாகும். சொல்லப்போனால் எந்த அமாவாசையிலும் பித்ருக்களுக்கு எந்த ஒரு திதி கொடுக்காவிட்டாலும், இந்த அமாவாசையில் காரியம் செய்வதால் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையும் என்பது நம்பிக்கை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a318fb8d-e62a-4c6d-8d82-88fdfadcc750/26-6a7ba76ad8d9e.webp' /></p><p>இந்த ஆண்டின் ஆடி அமாவாசை இன்றைய நாளான ஆகஸ்ட் 12 ஆம் திகதி வருகிறது. இந்நாளில் எந்த மாதிரியான விஷயங்களை செய்ய வேண்டும் என்பது குறித்து நிறைய பேருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் எதை செய்யக்கூடாது என்பது நிச்சயம் பலருக்கு தெரிந்திருக்காது. எவ்வாறான விடயங்களை ஆடி அமாவாசை நாளில் செய்யக்கூடாதவைகள் எவையென நாம் இங்கு பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f00fc842-3f1c-465c-af7d-ea619b81f284/26-6a7ba76a32e33.webp' /></p><h4>தர்ப்பணத்திற்கு முன் கோலம் கூடாது
</h4><p>ஆடி அமாவாசை நாளானது இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய தர்ப்பணம் செய்யும் நாளாகும். இந்நாளில் தர்ப்பணம் செய்வதற்கு முன் வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. எனவே ஆடி அமாவாசை நாளில் வீட்டில் திதி அல்லது தர்ப்பணம் செய்யும் வரை கோலம் போடாதீர்கள்.</p><h4>சுப காரியங்களைத் தவிர்க்கவும்
</h4><p>அமாவாசை நாளானது முன்னோர்களுக்கு வழிபாடு செய்ய உகந்த நாள் என்பதால், இந்நாளில் சுப காரியங்களான திருமண பேச்சு வார்த்தை, புதுமனை புகுவிழா நடத்துவது, புதிய தொழிலை தொடங்குவது, வீடு, வாகனம் வாங்குவது போன்ற சுப காரியங்களை செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்பது ஒரு பாரம்பரிய நடைமுறை.</p><h4>அசைவ உணவுகள் கூடாது
</h4><p>ஆடி அமாவாசை நாளில் வீட்டில் அசைவ உணவுகளை சமைப்பது அல்லது அசைவ உணவை வெளியில் வாங்கி உண்பது போன்றவற்றை தவிர்ப்பது வழக்கம். அதேப் போல் சைவ உணவை உண்பவர்கள் வெங்காயம், பூண்டு, காலிஃப்ளவர், முருங்கை, முட்டைக்கோஸ் போன்ற உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த உணவுகள் தாமச குணம் கொண்டதாக கருதப்படுகிறது. எனவே எளிமையான உணவுகளை சமைத்து சாப்பிடுங்கள்.</p><h4>ஷேவிங் மற்றும் முடி வெட்டுவது</h4><p>கூடாது
ஆடி அமாவாசை நாளில் ஷேவிங் செய்வது, முடி வெட்டுவது, ட்ரிம் செய்வது, நகம் வெட்டுவது போன்றவற்றை செய்யாமல் இருப்பது நல்லது. சில வீடுகளில் தாய் தந்தை உள்ளவர்கள் அமாவாசை நாளில் எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிப்பதைத் தவிர்ப்பார்கள்.</p><h4>உணவை வீணாக்கக்கூடாது
</h4><p>ஆடி அமாவாசை நாளில் முன்னோர்கள் ஏதாவது ஒரு வடிவில் நம்மை சுற்றி வருவார்கள் என்பது நம்பிக்கை. இப்படிப்பட்ட நாளில் காகத்திற்கு உணவளிப்பது, ஏழை எளியோருக்கு அன்னதானம் செய்வது போன்ற நல்ல விஷயங்களை செய்ய வேண்டும். அதை விடுத்து அமாவாசை நாளன்று வீட்டில் சமைத்த உணவை வீணாக்காமல் அளவாக சமைத்து சாப்பிடுங்கள். ஒருவேளை சாதம் மீந்து போனால், பசியுடன் இருப்பவர்களுக்கு அதை கொடுங்கள்.</p>]]></content>
            <updated>2026-08-11T23:51:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலம்பியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்..! அதிரவைக்கும் காணொளி - புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/180-dead-in-colombia-earthquake-1786490585"></link>
            <id>https://tamilwin.com/article/180-dead-in-colombia-earthquake-1786490585</id>
            <summary type="text">கொலம்பியாவில் நேற்று ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 570க்கும் மே...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொலம்பியாவில் நேற்று ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 570க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், 2,000க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
இந்தநிலையில் நிலநடுக்கம் தொடர்பான பல திடுக்கிடும் காணொளிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.</p><p></p><h2>சக்திவாய்ந்த நிலநடுக்கம்</h2><p>
</p><p>
மேற்கு கொலம்பியாவின் சொகோ (Choco) மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் டெல் பால்மர் நகருக்கு அருகே பூமிக்கு அடியில் சுமார் 100 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

தொடர்ந்து பல நில அதிர்வுகள் பதிவாகின. </p><p>இந்த அதிர்வுகள் அண்டை நாடுகளான ஈக்வடார், பானமா மற்றும் வெனிசுவேலா வரையிலும் உணரப்பட்டன.


அண்டை நாடான வெனிசுவேலாவில் கடந்த மாதம் ஜூன் 24 அன்று 7.2, 7.5 ரிக்டர் அளவுகளில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தில் மீட்பு பணிகள் இன்னும் தொடர்ந்து வரும் நிலையில் இன்றைய நிலவரப்படி 6,301 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">NEW footage is circulating from a magnitude 7.4 earthquake that struck Colombia&#39;s Pacific region today. <br><br>The epicenter was near San José del Palmar in Chocó department, at a depth of around 96 km. <br><br>It was felt strongly across much of Colombia—including Bogotá, Medellín, and… <a href="https://t.co/X03limcIts">pic.twitter.com/X03limcIts</a></p>&mdash; Clash Report (@clashreport) <a href="https://x.com/clashreport/status/2086811623902052811?ref_src=twsrc%5Etfw">August 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
இந்த சூழலில் தற்போது கொலம்பியாவில் 21ஆம் நூற்றாண்டின் ஏற்பட்ட மிகக் கடுமையான நிலநடுக்கம் இது என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>வெனிசுலாவில் 3.8 ரிக்டர் அளவு தற்போது நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.


கொலம்பியாவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நகரமாகப் பெரேரா உருவெடுத்துள்ளது.இங்கு மட்டும் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 2,000க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தரவுகள் தெரிவிக்கின்றன.</p><h2>அவசரநிலை பிரகடனம்</h2><p>குறிப்பாகக் காளி (Cali) மற்றும் பெரேரா (Pereira) நகரங்களில் அதிகமானோர் மாயமாகியுள்ளனர்.

நாட்டின் 5 முக்கியத் நகரங்களுக்கு இன்னமும் ரெட் அலர்ட் நடைமுறையில் உள்ளது.


நிலநடுக்கம் குறித்து பேசிய கொலம்பியா ஜனாதிபதி அபெலார்டோ டி லா எஸ்ப்ரீல்லா கூற்றுப்படி,

நிலநடுக்கத்தால் 1,577 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.</p><p> அதில் 37 கட்டிடங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன.

60க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் முழுமையாக இடிந்து தரைமட்டமாகியுள்ளன. </p><p>18 மருத்துவ மையங்கள் மற்றும் 52 பள்ளிகள் பலத்த சேதமடைந்துள்ளன. 7 விமான நிலையங்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">A powerful earthquake struck Colombia, and several buildings appeared to be about to collapse due to the powerful tremors. <a href="https://x.com/hashtag/Earthquake?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Earthquake</a> <a href="https://x.com/hashtag/colombia?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#colombia</a> <a href="https://x.com/hashtag/colombiaearthquake?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#colombiaearthquake</a> <a href="https://t.co/Kp2jWEuXlf">https://t.co/Kp2jWEuXlf</a> <a href="https://t.co/10A3kYSs2D">pic.twitter.com/10A3kYSs2D</a></p>&mdash; Bara (@Reueus) <a href="https://x.com/Reueus/status/2087024035591041294?ref_src=twsrc%5Etfw">August 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>


நிலநடுக்கத்தின் பேரழிவைக் கருத்தில் கொண்டு கொலம்பியா அரசு தேசிய பேரிடர் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளது.

இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை விரைவாக மீட்க ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
காளி நகரில் உள்ள ஒரு மருத்துவமனையின் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவுகள் இடிந்து விழுந்துள்ளதால், அங்குப் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
</p><p>
 ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து, இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள உயிர் பிழைத்தவர்களை மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-11T23:35:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முன்னெடுப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kilinochchi-fisheries-meeting-chaired-1786490381"></link>
            <id>https://ibctamil.com/article/kilinochchi-fisheries-meeting-chaired-1786490381</id>
            <summary type="text">கிளிநொச்சியில் அமைச்சர் சந்திரசேகரன் தலைமையில் மாவட்ட கடற்றொழில்
அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் அபிவிருத்தி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சியில் அமைச்சர் சந்திரசேகரன் தலைமையில் மாவட்ட கடற்றொழில்
அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இடம்பெற்றுள்ளது.
</p><p>
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் தலைமையில் நேற்று (11-08.2026) குறித்த கூட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணியளவில்
இக்கூட்டம் இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p></p><h2>அபிவிருத்தி நடவடிக்கைகள்</h2><p>இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.
முரளிதரன், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் துறை சார்ந்த அதிகாரிகள்,
துறைசார் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89a5a730-b4f5-400f-b3ab-52e2f5b03267/26-6a7bae100be76.webp' /></p><p>மாவட்டத்தின் கடற்றொழில் துறை சார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகள், கடற்றொழில்
சமூகத்தினர் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து
இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T23:20:05+00:00</updated>
        </entry>
    </feed>
