<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-16T11:08:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[களுத்துறையில் தொடருந்து மோதி இரு பெண்கள் பரிதாபப் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-women-killed-train-accident-in-kalutara-1789554664"></link>
            <id>https://tamilwin.com/article/two-women-killed-train-accident-in-kalutara-1789554664</id>
            <summary type="text">களுத்துறை தொடருந்து நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில்
தாயும் அவரது உறவுக்கார மகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை தொடருந்து நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில்
தாயும் அவரது உறவுக்கார மகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.</p><p>குறித்த விபத்தானது இன்றையதினம்(16.9.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><p>
அனுராதபுரம் புனித நகரத்தில் நடைபெறவுள்ள மத நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக
மதுகம பகுதியிலிருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் மற்றும்
உறவுக்கார மகள் ஆகியோர் களுத்துறை தெற்கு தொடருந்து நிலையத்துக்கு அருகில்
வந்துள்ளனர்.</p><h2>உயிரிழப்பு</h2><p>
</p><p>
அனுராதபுரம் நோக்கிச் செல்லும் தொடருந்தில் ஏறுவதற்காக, தொடருந்து நிலையத்தின் வலது
பக்க நடைமேடைக்குச் செல்வதற்காக இவர்கள் தொடருந்து பாதையில் நடந்து சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0348c10b-75d1-4ebd-94ee-172ea9ad6d36/26-6aaa748d68a9a.webp' /></p><p>
</p><p>அப்போது மருதானையிலிருந்து காலி நோக்கிச் சென்றுகொண்டிருந்த தொடருந்து மோதியதிலேயே
இவர்கள் விபத்தில் சிக்கியுள்ளனர்.</p><p>

இந்த விபத்தில் தாயும் உறவுக்கார மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்
என்று களுத்துறை தொடருந்து நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>தொடருந்து பாதையின் வழியே கவனக்குறைவாக நடந்து சென்றமையே இத்தகைய விபத்துக்குக்
காரணம் எனக் கூறப்படுகின்றது.</p><p>

உயிரிழந்தவர்களின் சடலங்கள் களுத்துறை தெற்கு தொடருந்தில் நிலையத்தில்
வைக்கப்பட்டுள்ளன.அவற்றை உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் களுத்துறை போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae05eed4-6575-4974-ae58-323746f7c1df/26-6aaa7852ce03b.webp' /></p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்குப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T11:07:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தையிட்டி - பவானி வீதி தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபையில் எடுக்கப்பட்ட தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-spport-in-release-thaiyiddy-bhavani-road-1789555407"></link>
            <id>https://ibctamil.com/article/police-spport-in-release-thaiyiddy-bhavani-road-1789555407</id>
            <summary type="text">தையிட்டி சட்டவிரோத விகாரை வளாகத்தினுள் கையகப்படுத்தப்பட்டுள்ள வலி. வடக்கு
பிரதேச சபைக்கு சொந்தமான பவானி வீதியினை விடுவிக்க காவல்துறையினர் பிரதேச
சபை...</summary>
            <content type="html"><![CDATA[<p>தையிட்டி சட்டவிரோத விகாரை வளாகத்தினுள் கையகப்படுத்தப்பட்டுள்ள வலி. வடக்கு
பிரதேச சபைக்கு சொந்தமான பவானி வீதியினை விடுவிக்க காவல்துறையினர் பிரதேச
சபையினருக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு
குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. </p><p>தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் (15) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், ஒருங்கிணைப்பு குழு தலைவரான நாடாளுமன்ற
உறுப்பினர் ச. சிறீபவானந்தராஜா தலைமையில் நடைபெற்ற போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>தையிட்டி விகாரைக்காக கையகப்படுத்தப்பட்ட காணிகளை
உரிமையாளர்களிடம் மீள ஒப்படைப்பது தொடர்பான நடவடிக்கை எந்தளவில் தற்போது
காணப்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கேள்வி
எழுப்பினார்.</p><p></p><h2>எதிர்ப்பு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்&nbsp;</h2><p>
</p><p>
அதற்கு பதிலளித்த ஒருங்கிணைப்பு குழு தலைவர், அது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் விசேட
குழு உருவாக்கப்பட்டு, அந்த குழு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfc7ef49-fc29-4422-8cd0-de7dd1e6fa5a/26-6aaa76ba4c38c.webp' /></p><p>
</p><p>
அதன் போது, விகாரை அமைந்துள்ள பகுதியில் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச
சபைக்கு சொந்தமான பவானி வீதியினை விடுவிக்க காவல்துறையினர் ஒத்துழைக்க வேண்டும்
என்றும், நீதிமன்றில் குறித்த வீதியை விடுவிக்குமாறு
கட்டளையிடப்பட்டுள்ள நிலையில் ஏன் காலதாமதம் என மீண்டும் அர்ச்சுனா&nbsp; கேள்வி எழுப்பினார்.</p><p>

அதற்கு பதிலளித்த ஒருங்கிணைப்பு குழு தலைவர், “நீதிமன்ற கட்டளையை
நடைமுறைபப்டுத்த காவல்துறையினர் ஒத்துழைக்க வேண்டும். அதற்கு பலாலி காவல்துறையினர்
ஒத்துழைக்கவில்லை எனில், வடமாகாண சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபர் உள்ளிட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட தரப்பினரை ஒன்றிணைத்து
கூட்டம் ஒன்றினை நடாத்தி, எவ்வாறு வீதியினை விடுவிக்க நடவடிக்கை எடுப்பது என
தீர்மானிப்போம்“ என தெரிவித்தார்</p><p>இந்தநிலையில் காவல்துறையினரை அழைத்து கூட்டம் கூடுவதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களான அர்ச்சுனா
இராமநாதன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் எதிர்ப்பு
தெரிவித்தனர்.</p><p></p><h2>ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்</h2><p>

பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை விடுவிக்குமாறு நீதிமன்றமும்
கட்டளையிட்டுள்ளது. அதனால் நீதிமன்ற கட்டளையை நடைமுறைப்படுத்த காவல்துறையினர்
ஒத்துழைக்க வேண்டும். இங்கே வீதியினை விடுவிக்க பிரதேச சபை நடவடிக்கை எடுக்க
கூடாது என வழக்கு தொடர்ந்ததே பலாலி காவல்துறையினர் தான். அதனால், அவர்கள் நீதிமன்ற
கட்டளையை நடைமுறைப்படுத்த பின்னடிக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/803ba83d-5823-44ae-b82d-f69010a2a54a/26-6aaa76bb03984.webp' /></p><p>
</p><p>
ஆகவே வீதியினை விடுவிக்க நீதிமன்றம் வழங்கிய கட்டளையை பிரதேச சபை
நடைமுறைப்படுத்தும் போது, அதற்கு காவல்துறையினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என
பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அதனை காவல்துறை உயர்
அதிகாரிகள் உள்ளிட்ட உரிய தரப்பினர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுங்கள் என
கோரினார்கள்.</p><p>
அதனை ஏற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீபவானந்தராஜா, ஒருங்கிணைப்பு குழு
கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தை காவல்துறையினர் உள்ளிட்ட தரப்பினருக்கு
அனுப்பி வைக்குமாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T11:04:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் துயரம் : தங்கச்சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 60 ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sudan-gold-mine-collapse-over-60-workers-killed-1789556525"></link>
            <id>https://ibctamil.com/article/sudan-gold-mine-collapse-over-60-workers-killed-1789556525</id>
            <summary type="text">சூடானின் மேற்கு கோர்டோஃபான் பிராந்தியத்தில் இயங்கி வந்த சட்டவிரோத தங்க சுரங்கம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில், 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூடானின் மேற்கு கோர்டோஃபான் பிராந்தியத்தில் இயங்கி வந்த சட்டவிரோத தங்க சுரங்கம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில், 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>


இந்தச் சுரங்கத்தில், ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர்கள் தங்கத் தாதுக்களை வெட்டியெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இடிபாடு ஏற்பட்டது. உள்ளூர் வட்டாரங்கள் அளித்துள்ள தகவலின்படி, இதுவரை 60-க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><h2>அதிக அளவில் தங்கம் உற்பத்தி செய்யும் நாடு</h2><p>சூடான் ஆபிரிக்க கண்டத்தில் அதிக அளவில் தங்கம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. எனினும், நாட்டின் பெரும்பாலான தங்க உற்பத்தி முறையான அனுமதி அல்லது பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் இல்லாத பாரம்பரிய மற்றும் கைவினைச் சுரங்க முறைகளையே நம்பியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0e012d4-aa61-4cba-84a9-892b868d8407/26-6aaa772fca4d4.webp' /></p><p> இத்தகைய சுரங்கங்களில் எந்தவிதமான கட்டமைப்பு பாதுகாப்போ, அவசர கால பாதுகாப்பு வசதிகளோ இல்லாததால், நிலச்சரிவு மற்றும் சுரங்க இடிபாடுகள் அடிக்கடி நிகழும் அபாயகரமான சூழல் நிலவுகிறது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T11:02:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாமுண்டீஸ்வரி காப்பாற்றிய கார்த்திக்.. அடுத்த சதியை தொடங்கிய சந்திரகலா -]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/karthikai-deepam-today-episode-review-1789539902"></link>
            <id>https://cineulagam.com/article/karthikai-deepam-today-episode-review-1789539902</id>
            <summary type="text">கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்</h2><p>

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி போலீஸ் கைது செய்ய கார்த்திக் சம்பந்தப்பட்ட குற்றவாளியை தேடிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது கார்த்திக் உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து சாமுண்டீஸ்வரியை விடுவிக்கிறான். </p><p>ஆனாலும் சாமுண்டீஸ்வரி இதெல்லாம் கார்த்தியின் திட்டம் தான் என தவறாக புரிந்து கொள்கிறார். 

இதையடுத்து வீட்டுக்கு வந்த கார்த்திக் நடந்த விஷயங்களை சொல்ல பரமேஸ்வரி பாட்டி வருத்தப்படுகிறார். மேலும் ரேவதி இன்னும் சாப்பிடவில்லை என்று தெரிந்து கார்த்திக் அவளுக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறான். 

அடுத்த நாள் காலையில் ரேவதிக்கு பெட் காஃபி கொடுத்து அவளை எழுப்பி கையில் அடிபட்டு இருப்பதால் பல் துலக்கி விடுகிறான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39b1e671-121b-4955-ba97-5015a3f02987/26-6aaa3641c291c.webp' /></p><p>இதன் பிறகு கோவில் திருவிழாவிற்காக காப்பு கட்ட வேண்டும் எனவும் அதற்கு ராஜராஜன் வரவேண்டும் எனவும் ஊர் பெரியவர்கள் கார்த்தி இடம் சொல்கின்றனர்.

மறுபக்கம் சந்திரகலா சாமுண்டீஸ்வரியிடம் காப்பு கட்டுவதற்கு மாமாவை அனுப்பி வைக்கக் கூடாது என சொல்லி ஏற்றி விடுகிறாள். சாமுண்டீஸ்வரியும் ராஜராஜனை அனுப்பக்கூடாது என முடிவுக்கு வருகிறாள். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.</p>]]></content>
            <updated>2026-09-16T11:00:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக வெப்பநிலை காரணமாக மனநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/climate-change-in-sri-lanka-1789555024"></link>
            <id>https://tamilwin.com/article/climate-change-in-sri-lanka-1789555024</id>
            <summary type="text">தற்போதைக்கு நிலவும் அதிக வெப்பமான காலநிலை காரணமாக மனநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அத்துடன் வெப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைக்கு நிலவும் அதிக வெப்பமான காலநிலை காரணமாக மனநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
</p><p>
அத்துடன் வெப்பநிலை அதிகரிப்பால் மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற அறிகுறிகளும் ஏற்படுவதாக மனநல வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்.
</p><p>
தொடர்ந்து அதிக வெப்பநிலைக்கு ஆட்படுவது கோபத்தை அதிகரிக்கிறது என்பதை மனநலம் குறித்த ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.</p><h2>வெப்பமான காலநிலை</h2><p> </p><p>சாலையில் வாகனம் ஓட்டும்போது மற்றும் பாதசாரிகளாக நடந்து செல்லும்போது ஏற்படும் பல்வேறு மோதல்களில் அதீத கோபம் உண்டாகிறது என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் மனநல வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52f2a3a7-91fc-43e8-9e8c-042c1c3d9dce/26-6aaa748a89286.webp' /></p><p>
</p><p>
மேலும், வெப்பத்திற்கு ஆட்படுவதால் குழந்தைகளால் கல்வி சார்ந்த செயல்பாடுகளில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம் மற்றும் அவர்களின் நினைவாற்றல் குறையலாம் என்று மனநல மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். </p><p>அத்துடன், அதிக வெப்பநிலையானது குடும்பச் சண்டைகளையும், குடும்ப வன்முறையையும் கூட அதிகரிக்கக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர்கள் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T10:56:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு ஹோட்டல் மாடியிலிருந்து கீழே விழுந்தவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/person-dies-after-falling-from-a-colombo-hotel-1789556132"></link>
            <id>https://jvpnews.com/article/person-dies-after-falling-from-a-colombo-hotel-1789556132</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு கட்டுநாயக்க பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று (16)...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு கட்டுநாயக்க பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
இச்சம்பவம் இன்று (16) அதிகாலை சுமார் 3.58 மணியளவில், சீதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுநாயக்க - கொழும்பு வீதியில் அமைந்துள்ள&nbsp; உணவகத்தில் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d357a937-5b8d-4648-992c-734f45b838bc/26-6aaa75a675c94.webp' /></p><h2>அறையில் தங்கியிருந்த மற்றொரு நபருக்கும் இடையே தகராறு</h2><p>
</p><p>
 உணவகத்தின் மேல் தளத்திலிருந்து ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்ததாகச் சீதுவ பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.</p><p></p><p>
</p><p>
 சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில், உயிரிழந்தவர் அந்த உணவகத்தில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்த போயகனே, இசுருபெதெச, 3வது லேனைச் சேர்ந்த 48 வயதுடைய வீரசிங்க முதியன்சேலாகே பிரதீப் பிரியசாந்த என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>
நேற்று இரவு (15) வேலையை முடித்த பிறகு அவர் உணவகத்தின் மேல் மாடியில் தனது அறையில் இருந்ததாகவும், உணவகத்தில் பணிபுரியும் மற்ற இரண்டு ஊழியர்கள் மற்றொரு அறையில் தங்கியிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

 இறந்தவருக்கும் அந்த அறையில் தங்கியிருந்த மற்றொரு நபருக்கும் இடையே தகராறு ஒன்று ஏற்பட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.</p><p></p><p>

எனினும், இந்த மரணம் நிகழ்ந்த சரியான விதமும் அதற்கான காரணமும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. சம்பவம் குறித்துத் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-16T10:52:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட கடல் அட்டைகளுடன் நால்வர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/arrested-with-9-000-sea-cucumbers-in-jaffna-lagoon-1789553653"></link>
            <id>https://ibctamil.com/article/arrested-with-9-000-sea-cucumbers-in-jaffna-lagoon-1789553653</id>
            <summary type="text">யாழ்ப்பாணக் களப்பு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளைப் பிடித்த நான்கு சந்தேக நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.குறித்த கைது நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணக் களப்பு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளைப் பிடித்த நான்கு சந்தேக நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.</p><p>குறித்த கைது நடவடிக்கை&nbsp;நேற்று இரவு (15.09.2026) இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p> </p><p>யாழ்ப்பாணக் களப்பின் மணியந்தோட்டம் பகுதியில்&nbsp;கல்முனை கடற்படைப் பிரிவினர் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>மேலதிக சட்ட நடவடிக்கை</h2><p>இதனை தொடர்ந்து அப்பகுதியில் பயணித்த இரண்டு சந்தேகத்திற்கிடமான படகுகளை கடற்படையினர் சோதனையிட்டபோது, சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்டு கரைக்குக் கொண்டு வரப்பட்ட 9,000 கடல் அட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84a34c5d-0bab-4c14-b0c4-7699ff8e6b3a/26-6aaa743bf262b.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து, குறித்த படகுகளில் இருந்த நான்கு சந்தேக நபர்களும் இரு படகுகளுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டடுள்ளனர்.</p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 34 முதல் 44 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்றும், அவர்கள் கற்பிட்டி, அனுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>

கைப்பற்றப்பட்ட 9,000 கடல் அட்டைகள், இரு படகுகள் மற்றும் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T10:49:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ ; 10 நாட்களில் நாடு முழுவதும் கொட்டப்போகும் மழை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/el-ni-o-rain-rainfall-across-srilanka-in-10-days-1789546591"></link>
            <id>https://jvpnews.com/article/el-ni-o-rain-rainfall-across-srilanka-in-10-days-1789546591</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இன்னும் 10 நாட்களில் நாடு முழுவதும் பரவலான மழையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இன்று (16) நடைபெற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இன்னும் 10 நாட்களில் நாடு முழுவதும் பரவலான மழையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
 

இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன இதனைத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba07ac88-fc93-4f3e-8376-00a1f3a44d18/26-6aaa5060a6c10.webp' /></p><p>
</p><p>
 

தற்போது எல் நினோ (El Niño) நிலைமையை எதிர்கொள்வதற்கு அனைத்தும் தயார்படுத்தப்பட்டுள்ள போதிலும், இனிவரும் நாட்களில் பலத்த மழை, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்ற கணிப்பிற்கு அமைய நடவடிக்கைகளை தயார்படுத்த வேண்டும் என அவர் கூறினார்.</p><p></p><h2>மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும்</h2><p>

 

ஒக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும், இதனால் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் ஏற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.</p><p>

ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வங்காள விரிகுடாவில் தொடர்ச்சியாக கலக்க நிலைமைகள் ஏற்படும் காலம் என்பதால், எல் நினோ நிலைமையின் கீழ் இது தீவிரமடையக்கூடும் என்றும் அஜித் விஜேமான்ன கூறினார்.</p><p></p><p>

 

இது குறித்து மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும், டிசம்பர் மாதத்தில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் அதிக மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>

 

அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சாதாரண மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகக் கூறிய அவர், சில வேளைகளில் IOD நிலைமையினால் அப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு கூட ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.</p><p></p><p>
</p><p>
 

அடுத்த வருடம் பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெப்பநிலை அதிகரித்து, மழைவீழ்ச்சி குறைவடையும் வானிலை எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T10:48:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[த்ரிஷா இடத்தில் நான் இருந்தால்...நிச்சயம் இதை தான் செய்வேன் - நடிகை அம்பிகா ஓபன் டாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/actress-ambika-about-trisha-cm-vijay-relationship-1789553773"></link>
            <id>https://manithan.com/article/actress-ambika-about-trisha-cm-vijay-relationship-1789553773</id>
            <summary type="text">முதல்வர் விஜய் சமீபத்தில் லண்டனுக்கு சென்றிருந்தபோது, அங்கு நடைபெற்ற கார் பந்தய நிகழ்வில் நடிகர் அஜித் பங்கேற்றதை நேரில் சென்று பார்த்தார். அப்போது அஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதல்வர் விஜய் சமீபத்தில் லண்டனுக்கு சென்றிருந்தபோது, அங்கு நடைபெற்ற கார் பந்தய நிகழ்வில் நடிகர் அஜித் பங்கேற்றதை நேரில் சென்று பார்த்தார். அப்போது அஜித்தை சந்தித்த விஜய், அவரை கட்டித்தழுவி அன்பை வெளிப்படுத்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.</p><p> விஜய் மற்றும் அஜித் இருவரும் சந்தித்துக் கொண்ட அந்த தருணத்தின் வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி, இரு தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டன.

இந்த நிலையில், அதே நிகழ்வில் நடிகை திரிஷாவும் கலந்து கொண்டிருந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் வைரலானது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34c42bad-3b5d-4b7a-a687-14a91f60cf1e/26-6aaa70a193034.webp' /></p><p>குறிப்பாக வீடியோ ஒன்றில் திரிஷா தோன்றும் போது, விஜய் தனது முகத்தை திருப்பிக் கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது.இதனைத் தொடர்ந்து விஜய் மற்றும் திரிஷா தொடர்பான பல்வேறு கருத்துகளும் இணையத்தில் பரவி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15af3f49-43a9-4f8e-a26a-8c7cda0b3628/26-6aaa70a247dfe.webp' /></p><p></p><h2>மூத்த நடிகை அம்பிகா ஓபன் டாக்!</h2><p>

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சமீபத்திய பேட்டியொன்றில் பேசிய நடிகை அம்பிகா, “திரிஷா தனது நண்பருடன் ஒரு இடத்திற்கு சென்றிருக்கிறார். யார் என்ன சொன்னாலும், தன்னுடைய நட்பை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் நினைக்கலாம். அது அவருடைய தனிப்பட்ட விருப்பம்.
</p><p>
ஆனால், தற்போது விஜய் இருக்கும் இடம் வேறு. அவர் ஒரு மதிக்கத்தக்க பொறுப்பில் இருக்கிறார். அந்த இடத்தில் இருக்கும் ஒருவர், தன்னுடைய ஒவ்வொரு செயலாலும் மற்றவர்களுக்கு தர்மசங்கடம் ஏற்படாத வகையில் கவனமாக இருக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce5e1aee-9294-4a4f-95db-2fba9e529af7/26-6aaa70a30b821.webp' /></p><p></p><p>
</p><p>
நான் த்ரிஷா இருக்கும் இடத்தில் இருந்திருந்தால், என்னால் அவருடைய பெயருக்கு எந்தவிதமான களங்கமும் வரக்கூடாது என்றும், என்னால் அவருக்கு எந்தவிதமான தர்மசங்கடமும் ஏற்படக்கூடாது என்றும் நினைப்பேன். அதனால், இதுபோன்ற சூழ்நிலையில் நான் சற்று ஒதுங்கிக் கொள்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.அம்பிகாவின் இந்தக் கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.</p><p> குறிப்பாக, விஜய்யின் தற்போதைய பொது வாழ்க்கை மற்றும் அவர் வகிக்கும் பொறுப்பு காரணமாக, தனிப்பட்ட நட்புகள் மற்றும் பொது நிகழ்வுகளில் அவருடைய அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த விவாதங்களை இணைத்தில் கிளப்பிவருகின்றது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T10:46:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பாவில் ஆக்கிரமிப்பு ; டென்மார்க் உலங்கு வானூர்தி மீது ரஷ்ய தாக்குதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russian-attack-on-danish-army-helicopter-1789538033"></link>
            <id>https://canadamirror.com/article/russian-attack-on-danish-army-helicopter-1789538033</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;டென்மார்க் இராணுவ உலங்கு வானூர்தி ஒன்றை நோக்கி ரஷ்ய போர்க்கப்பல் ஒன்று இரண்டு தீப்பொறிக் கீற்றுகளை வீசியதாகவும், அவற்றில் ஒன்று அந்த விமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;டென்மார்க் இராணுவ உலங்கு வானூர்தி ஒன்றை நோக்கி ரஷ்ய போர்க்கப்பல் ஒன்று இரண்டு தீப்பொறிக் கீற்றுகளை வீசியதாகவும், அவற்றில் ஒன்று அந்த விமானத்திற்கு மிக அருகில் கடந்து சென்றதாகவும் டென்மார்க்கின் ஆயுதப் படைகள் செவ்வாய்க்கிழமை (15) தெரிவித்தன.
</p><p>
உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போரின்போது ​​நேட்டோவின் கிழக்கு எல்லையில் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ள சூழலில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/363f66c0-fe3e-474c-b1c0-29feec1adc7a/26-6aaa2ef2d6abc.webp' /></p><h2>ஐரோப்பாவில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புத் தன்மை</h2><p>
</p><p>

ஐரோப்பாவில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புத் தன்மை அதிகரித்து வரும் ஒரு பரந்த போக்கின் ஒரு பகுதியாகவே இந்தச் சம்பவம் அமைந்துள்ளது என்று டேனிஷ் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் கூறினார் .
</p><p>
ரஷ்யா தனது ஐரோப்பாவிற்கு எதிரான கலப்புப் போரை தீவிரப்படுத்துவதாகவும், நேட்டோவை சோதித்து சவால் விடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
</p><p>
பால்டிக் கடலில் நேற்று வழக்கமான வான்வழிப் பயணத்தின் போது டென்மார்க் இராணுவத்தின் மீது ரஷ்யா மேற்கொண்ட பொறுப்பற்ற நடவடிக்கை. ரஷ்யாவின் நடவடிக்கைகள் அச்சுறுத்துவதையும் பிளவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டவை.</p><p> 

அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள். நாங்கள் பின்வாங்க மாட்டோம் என்று ஃபிரடெரிக்சன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.</p>]]></content>
            <updated>2026-09-16T10:42:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவின் பரிதாப நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pitiful-situation-for-shiranthi-rajapaksa-1789534564"></link>
            <id>https://tamilwin.com/article/pitiful-situation-for-shiranthi-rajapaksa-1789534564</id>
            <summary type="text">இலங்கையின் முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச, சமகால அரசாங்கத்தின் கீழ் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை ஆதாரபூர்வமாக உறுதியாகி உள்ளது.

நோயினால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச, சமகால அரசாங்கத்தின் கீழ் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை ஆதாரபூர்வமாக உறுதியாகி உள்ளது.
</p><p>
நோயினால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி, ஷிரந்தி ராஜபக்ச இன்று சிங்கப்பூர் நோக்கி பயணமாகி உள்ளார். </p><p>

மேலதிக வைத்திய நடவடிக்கைக்காக இன்று அதிகாலை 1.30 மணியளவில் உறவினர் என தெரிவிக்கப்படும் பெண்ணுடன் அவர் சென்றுள்ளார்.</p><p> </p><h2><b>

ஷிரந்தியின்&nbsp;பரிதாப நிலை</b></h2><p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் சாதாரண பயணிகள் செல்லும் பாதை ஊடாக பயணித்த ஷிரந்தி, தனது உடமைகளை தானே தூக்கிச் செல்லும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. </p><p>கடந்த ஆட்சிக்காலத்தின் தீவிர பாதுகாப்பு அதிகாரிகள் புடைசூழ வலம் வந்த ஷிரந்தியின் இன்றைய நிலை பரிதாபமாக மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8751322-2f45-49a4-bf3e-1fc16d53ba92/26-6aaa21e43b441.webp' />&nbsp;&nbsp;</p><p>

அதிகாரம் மற்றும் நிதி துஷ்பிரயோகங்களில் சிக்கியுள்ள ராஜபக்ச குடும்பம், தற்போது பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் குடும்பமாக சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. </p><p>

இவ்வாறான நிலையில் வழக்கு விசாரணை ஒன்றுக்காக அழைக்கப்பட்டிருந்த ஷிரந்தி ராஜபக்ச இன்றையதினம் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T10:38:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காண்டாமிருகங்களைக் கொல்ல குறிவைத்த வேட்டைக்காரர்கள்: அடுத்து நடந்த பயங்கரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/elephants-attack-on-poachers-targeting-rhinos-1789555012"></link>
            <id>https://news.lankasri.com/article/elephants-attack-on-poachers-targeting-rhinos-1789555012</id>
            <summary type="text">Elephants hide behind trees, stage surprise attack on poachers targeting rhinos: காண்டாமிருகங்களைக் கொல்ல வேட்டைக்காரர்கள் குறிவைத்த நிலையில், திடீரென...</summary>
            <content type="html"><![CDATA[<p>Elephants hide behind trees, stage surprise attack on poachers targeting rhinos: காண்டாமிருகங்களைக் கொல்ல வேட்டைக்காரர்கள் குறிவைத்த நிலையில், திடீரென யானைகள் அவர்களை தாக்கிய ஆச்சரிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
</p><p>

தென்னாப்பிரிக்காவில் வனவிலங்குகள் பூங்கா ஒன்றில் நுழைந்த சட்டவிரோத வேட்டைக்காரர்கள் இருவர், காண்டாமிருகங்களை அவற்றின் கொம்புகளுக்காக கொல்ல திட்டமிட்டுள்ளார்கள்.
</p><h3>
குறிவைத்த வேட்டைக்காரர்கள்</h3><p>

தென்னாப்பிரிக்காவிலுள்ள Kruger வனவிலங்குகள் பூங்காவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/809c24b7-f79a-4ba2-9330-88fb3b96b9f2/26-6aaa7146377d7.webp' /></p><p>
தண்ணீர் குடிப்பதற்காக குட்டை ஒன்றில் காண்டாமிருகங்கள் திரண்டிருக்க, வேட்டைக்காரர்கள் அந்த காண்டாமிருகங்களை தங்கள் துப்பாக்கியால் குறிவைத்துள்ளார்கள்.
</p><p>
விடயம் என்னவென்றால், தங்களுக்குப் பின்னால் யானைக் கூட்டம் ஒன்று மரங்களுக்கு நடுவே மறைந்திருப்பதைக் காணத் தவறிவிட்டார்கள் அந்த வேட்டைக்காரர்கள்.&nbsp;</p><p></p><p>
வேட்டைக்காரர்கள் துப்பாக்கியால் குறிபார்த்துக்கொண்டிருக்க, திடீரென வேகமாக ஓடிவந்த யானைக் கூட்டம் அவர்கள் இருவரையும் துரத்தத் துவங்கியுள்ளது.
</p><p>
அவர்களில் ஒருவர் தப்பி ஓடிவிட, மற்றவர் காண்டாமிருகம் ஒன்றை சுட்டுள்ளார்.</p><p>

சுடுவதற்காக அவர் நிற்க, அவரை சூழ்ந்துகொண்ட யானைகள் காலால் அவரை மிதித்துக் கொன்றுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0738babc-553b-4859-b4d3-fd197a85eca9/26-6aaa7146e9a8c.webp' /></p><p>
அந்த யானைக்கூட்டம் அங்கிருந்து அகன்றபோது, அங்கு அந்த நபரின் இரத்தம் தோய்ந்த உடைகளும் ஒரு பெரிய இரத்தக்கரையும் மட்டுமே மீதமிருந்ததாக வனவிலங்குகள் பூங்கா ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், அந்த இருவரும் ஏற்கனவே காண்டாமிருகங்களைக் கொல்வதை அந்த யானைகள் பார்த்திருக்கக்கூடும் என்கிறார் பூங்கா செய்தித்தொடர்பாளர்.</p><p>

யானைகள் நல்ல ஞாபக சக்தி உடையவை என்று கூறப்படுவதுண்டு. ஆக, அந்த இருவரும் காண்டாமிருகங்களைக் கொல்ல குறிபார்க்க, அவர்களை அடையாளம் கண்டுகொண்ட இந்த யானைகள், காண்டாமிருகங்களைக் காப்பாற்றுவதற்காக அந்த வேட்டைக்காரர்களைத் தாக்க வந்துள்ளன என்கிறார் அவர்.
</p><p>
அந்த வேட்டைக்காரர்களில் இரண்டாவது நபர் உயிர் தப்பிய நிலையில், பூங்கா அலுவலர்கள் அவரைப் பிடித்து பொலிசில் ஒப்படைத்துள்ளார்கள்.
</p><p>
ஒரு விலங்கினத்தை வேட்டைக்காரர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக, மற்றொரு வகை விலங்கினம் துணிந்து இறங்கி செயல்பட்ட இந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T10:37:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நியூயார்க்கில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இந்திய பெண் உட்பட 2 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indian-woman-killed-in-new-york-train-accident-1789555184"></link>
            <id>https://canadamirror.com/article/indian-woman-killed-in-new-york-train-accident-1789555184</id>
            <summary type="text">&amp;nbsp; நியூயார்க்கில் ரயில் விபத்தில் இந்திய வம்சாவளி பெண் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலாய்க்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நியூயார்க்கில் ரயில் விபத்தில் இந்திய வம்சாவளி பெண் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
</p><p>
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலாய்க்கா சித்ரே (24), அமெரிக்​கா​வின் நியூ ஜெர்​ஸி​யிலுள்ள டேடன் நகரில் வசித்து வந்​தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d205646-1ebc-4b65-b5aa-32d370bfc5c0/26-6aaa721b27858.webp' /></p><p> </p><p>

இவரும், நேபாளத்​தைச் சேர்ந்த இவரது நண்​பர் நவம்கவுலும் இங்​குள்ள ரட்​கர்ஸ் பல்​கலைக்​கழகத்​தில் பட்​டப்​படிப்பு படித்​து​விட்டு அமெரிக்​கா​விலேயே தங்கி வேலை பார்த்து வந்​தனர்.
</p><p>
இந்​நிலை​யில் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை இரு​வரும் லோயர் மன்​ஹாட்​டன் சப்வே ரயில் நிலை​யத்​துக்கு சென்​றுள்​ளனர்.

 ரயில்வே தண்​ட​வாளத்​தைக் கடக்க முயன்​ற​போது இரு​வரும் அந்த வழியே வந்த ரயில் மோதி அதே இடத்​திலேயே இறந்​தனர்.</p><p> பின்​னர் அவர்களது உடல்​கள் மீட்​கப்​பட்டு மருத்​து​வ​மனை​யில் வைக்கப்பட்டுள்ளது

ரயில் தண்​ட​வாளத்​தில் நவம் கவுல் தவறி விழுந்​த​தாக​வும், இதைப் பார்த்த மலாய்க்கா சித்ரே அவரைக் காப்​பாற்​றச் சென்று விபத்​தில் சிக்​கிய​தாக​வும் நியூ​யார்க் போஸ்ட் பத்​திரிகை செய்தி வெளி​யிட்​டுள்​ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T10:36:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு : அநுர தலைமையில் அடிக்கல் நாட்டி வைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/president-anura-visit-to-mannar-district-hospital-1789552731"></link>
            <id>https://ibctamil.com/article/president-anura-visit-to-mannar-district-hospital-1789552731</id>
            <summary type="text">மன்னார்
மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான
புதிய கட்டிடம் இந்திய அரசின் 600 மில்லியன் ரூபாய் நிதியுதவியில்
நிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார்
மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான
புதிய கட்டிடம் இந்திய அரசின் 600 மில்லியன் ரூபாய்</p><p> நிதியுதவியில்
நிர்மாணிக்கப்படவுள்ளது.இந்திய அரசின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (16) காலை நடைபெற்றது.</p><p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, காதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, வடக்கு
மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்
சந்தோஷ் ஜா ஆகியோரின் பிரதான பங்கேற்புடன் இந்நிகழ்வு நடைபெற்றது.</p><p></p><h2>சுகாதார அமைச்சு</h2><p>
வடக்கு மாகாண சுகாதார அமைச்சும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களமும்
இணைந்து ஏற்பாடு செய்யும் இத்திட்டத்தின் செயற்பாட்டு முகவர் சுகாதார அமைச்சு,
கொழும்பு என்பதுடன், நடைமுறைப்படுத்தும் முகவர் வடக்கு மாகாண சபையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db024c91-8237-43aa-8c6f-40186bc17d3e/26-6aaa6f6725fa0.webp' /></p><p>
</p><p>
இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
09.09.2025 அன்று கைச்சாத்திடப்பட்டதுடன், மத்திய சுகாதார அமைச்சுக்கும்
வடக்கு மாகாண சபைக்கும் இடையிலான உள்ளக உடன்படிக்கை 10.11.2025 அன்று
கைச்சாத்திடப்பட்டுள்ளது.
</p><p>புதிய கட்டிடத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப்
பிரிவு, படப்பதிவு மற்றும் நோயறிதல் வசதிகள், எக்ஸ்-கதிர் மற்றும் சி.ரி.
ஸ்கேன் வசதிகள், ஆய்வுகூடம், வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட முக்கிய
மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.</p><p></p><h2>நிகழ்வில் கலந்துகொண்டோர்</h2><p>
</p><p>
மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் இடம்பெறும் இந்தப் புதிய முதலீடு,
விபத்துக்கள் மற்றும் அவசர மருத்துவ நிலைமைகளுக்கு உடனடி சிகிச்சை வழங்கும்
திறனை மேம்படுத்துவதுடன், மன்னார் மாவட்ட மக்களுக்கு தேவையான பல்வேறு மருத்துவ
சேவைகளை ஒரே கட்டமைப்பின் கீழ் மேலும் ஒழுங்குபடுத்துவதற்கும் வாய்ப்பை
ஏற்படுத்தும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd17116a-1b4b-4560-bfe0-7799b9db815d/26-6aaa6f67f1965.webp' /></p><p>
</p><p>ஜனாதிபதி அநுரகுமார
திசாநாயக்க முன்னிலையில், சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, வடக்கு மாகாண
ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்
ஜா சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்
நாட்டி வைத்தனர். </p><p>இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,
ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், ப.சத்தியலிங்கம், காதர் மஸ்தான், வடக்கு மாகாண
பிரதம செயலாளர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம
செயலாளர்கள், மன்னார் மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர்கள், நகர சபைத்
தவிசாளர் மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாகாண
பணிப்பாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மருத்துவ மனையின் அத்தியட்சகர்,
மருத்துவர்கள், தாதியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பொதுமக்கள் என பலரும்
கலந்து கொண்டனர்.&nbsp;</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T10:34:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவ பட்டதாரிகள் தொடர்பில் கனடிய நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bc-rule-forcing-foreign-trained-doctors-1789546377"></link>
            <id>https://canadamirror.com/article/bc-rule-forcing-foreign-trained-doctors-1789546377</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவிற்கு வெளியே மருத்துவக் கல்வியை முடித்த பட்டதாரிகள், பிரிட்டிஷ் கொலம்பியாவின் பின்தங்கிய அல்லது தொலைதூரப் பகுதிகளில் கட்டாயம் பணியாற்ற வேண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவிற்கு வெளியே மருத்துவக் கல்வியை முடித்த பட்டதாரிகள், பிரிட்டிஷ் கொலம்பியாவின் பின்தங்கிய அல்லது தொலைதூரப் பகுதிகளில் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்ற மாகாண அரசின் நிபந்தனை சட்டவிரோதமானது என பிரிட்டிஷ் கொலம்பியா உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
</p><p>வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளிலிருந்து மருத்துவப் பயிற்சிக்கு விண்ணப்பிப்போருக்கு இத்தகைய "சேவைத் திரும்பச் செலுத்தல்" நிபந்தனையை விதிக்க மாகாண சுகாதார அமைச்சுக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என நீதிபதி மெத்யூ கெர்ச்னர் தெரிவித்துள்ளார்.</p><p>
கனடிய மருத்துவக் கல்லூரிகளில் படித்த பட்டதாரிகளுக்கு இல்லாத இந்த நிபந்தனை, வெளிநாட்டுப் பட்டதாரிகளுக்கு மட்டும் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. 
இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கிலேயே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4b642e3-96b6-479e-88f1-54bc8ea25842/26-6aaa4f8b015be.webp' /></p><p>
</p><p>ஒருவர் எங்கு வாழ வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது அவருடைய அடிப்படைத் தனிப்பட்ட முடிவாகும். அரசின் தலையீடின்றி வாழும் தனிநபர் சுதந்திர உரிமையில் அரசாங்கம் தலையிட முடியாது என நீதிபதி மெத்யூ கெர்ச்னர் தெரிவித்துள்ளார்.
</p><p>ஒப்பந்தத்தை மீறிச் செயல்படும் மருத்துவப் பட்டதாரிகளுக்குக் கடுமையான நிதி அபராதங்கள் விதிக்கப்பட்டு வந்ததாக நீதிமன்றத் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>பயிற்சி வாய்ப்பைப் பெறுவதற்காக வெளிநாட்டுப் பட்டதாரிகள் வேறு வழியின்றி இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இந்த விவகாரத்தில் தேவையான சட்ட மாற்றங்களைச் செய்யுமாறு பிரிட்டிஷ் கொலம்பியா சுகாதார அமைச்சுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>எனினும், இத்தீர்ப்பு கிராமப்புறங்களில் மருத்துவர்களின் இருப்பை உடனடியாகப் பாதிக்கக்கூடும் என்பதால், அமைச்சு இப் பிரச்சினையைச் சீர்செய்வதற்காக இத்தீர்ப்பின் அமலாக்கத்தை 60 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T10:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாயாரின் இறுதிச் சடங்கு இன்று! அரவிந்த டி சில்வாவிற்கு பிடியாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-issues-arrest-warrants-for-aravinda-1789553977"></link>
            <id>https://ibctamil.com/article/court-issues-arrest-warrants-for-aravinda-1789553977</id>
            <summary type="text">கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன, முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோருக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன, முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோருக்கு இன்று (16) பிடியாணை பிறப்பித்துள்ளார்.
</p><p>
முன்னாள் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி சம்பந்தப்பட்ட வழக்கில் ஜாமீன்தாரர்களாக முன்னிலையாகியிருந்த அரவிந்த டி சில்வாவும் அவரது மனைவியும் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதைத் தொடர்ந்து இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.</p><h2>தாயாரின் இறுதிச்சடங்கில் பிடியாணை</h2><p>&nbsp; அரவிந்த டி சில்வாவின் தாயார் ராணி டி சில்வா செப்டம்பர் 14 ஆம் திகதி காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் மற்றும் தகனச் சடங்குகள் நடைபெறும் இன்றைய நாளில் நீதிமன்றம் பிடியாணையைப் பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9f6d7c1-92f9-41ab-a195-e84582beebc5/26-6aaa6f7a43956.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T10:29:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[Kosovo முன்னாள் ஜனாதிபதிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ex-president-kosovo-sentenced-25-years-in-prison-1789554540"></link>
            <id>https://canadamirror.com/article/ex-president-kosovo-sentenced-25-years-in-prison-1789554540</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;Kosovo முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சி (Hashim Thaci ) போர்க்குற்றங்களுக்காகக் கொசோவோ போர்க்குற்றத் தீர்ப்பாயத்தால் புதன்கிழமையன்று (16) ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;Kosovo முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சி (Hashim Thaci ) போர்க்குற்றங்களுக்காகக் கொசோவோ போர்க்குற்றத் தீர்ப்பாயத்தால் புதன்கிழமையன்று (16) குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

1990-களில் செர்பியாவிலிருந்து கொசோவோ வன்முறை வழியில் பிரிந்தபோது, ​​இன ரீதியாக அல்பேனியரான தாச்சி, ‘கொசோவோ விடுதலைப் படையின்’ (KLA) உயர்மட்டத் தளபதியாக இருந்து கொலை, சித்திரவதை மற்றும் சட்டவிரோதக் காவல் வைப்பு உள்ளிட்ட குற்றங்களைச் செய்ததற்காக அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aafb11fd-aea4-469c-b7b6-35fe2b8e7d9e/26-6aaa6f6e17f0f.webp' /></p><p>

மோதலின் போது, ​​கொசோவோ விடுதலைப் படைப் பிரிவினரால் 96 அரசியல் எதிரிகள் மற்றும் செர்பியப் பாதுகாப்புப் படைகளுக்குத் துணை நின்றதாகக் கருதப்பட்டவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பாயம் கூறியது.</p>]]></content>
            <updated>2026-09-16T10:25:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் சுற்றுலாப் பயணிகள் செய்த நெகிழ்ச்சி செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-tourists-respect-for-local-islamic-culture-1789553091"></link>
            <id>https://tamilwin.com/article/young-tourists-respect-for-local-islamic-culture-1789553091</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டம் பொத்துவில், அருகம்பை பகுதிக்குச் சுற்றுலா வருகை தந்த
நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் சுற்றுலாப் பயணிகள் இருவர், உள்ளூர்
இஸ்லாமிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டம் பொத்துவில், அருகம்பை பகுதிக்குச் சுற்றுலா வருகை தந்த
நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் சுற்றுலாப் பயணிகள் இருவர், உள்ளூர்
இஸ்லாமியக் கலாச்சாரத்தை மதித்து ஹிஜாப் ஆடை அணிந்து மகிழ்ந்த நெகிழ்ச்சியான
சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.</p><p>

அருகம்பையில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் கடல் பயண மேற்கொண்டு பொழுதைக் கழித்துள்ளனர்.</p><h2>நெகிழ்ச்சி சம்பவம்</h2><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, இஸ்லாமியர் ஒருவர் வீட்டிற்கு விஜயம் செய்த அவர்கள், அவரது
குடும்பத்தினரின் உபசரிப்பிலும், விருந்தோம்பலில் பங்கேற்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bea880de-a310-4eb6-8824-cf15def12b31/26-6aaa6d86a50a9.webp' /></p><p>
</p><p>
இதன்போது, பொத்துவில் மக்களின் இயல்பான வாழ்க்கை முறையையும் கலாச்சாரத்தையும்
ஆச்சரியத்துடன் நோக்கிய அந்த இளம் பெண்கள், உள்ளூர் கலாச்சாரத்தின் மீதான
விருப்பத்தினால் இஸ்லாமியப் பெண்கள் அணியும் ‘ஹிஜாப்’ ஆடையைக் கேட்டு வாங்கி
அணிந்து கொண்டு புகைப்படங்கள் எடுத்துத் தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து
கொண்டனர்.</p><p>

அருகம்பைக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்குப் பொழுபோக்குச்
சேவைகளை வழங்குவதுடன் மட்டுமன்றி, பிராந்தியத்தின் தனித்துவமான
கலாச்சாரத்தையும் நற்பண்புகளையும் அவர்களிடம் எடுத்துரைத்து நன்மதிப்பைப்
பெற்று வரும் இந்த செயற்பாடு அப்பகுதி மக்களிடையே பெரும்
பாராட்டையும் வரவேற்பையும் பெற்று வருகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T10:24:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவசர சிகிச்சைக்காக வெளிநாடு புறப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச..! மீண்டும் நாடு திரும்புவது தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-details-on-shiranthi-summons-to-fcid-1789548655"></link>
            <id>https://tamilwin.com/article/police-details-on-shiranthi-summons-to-fcid-1789548655</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச செப்டெம்பர் 24 திகதி நிதி குற்றப்புலனாய்வுப்பிரிவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச செப்டெம்பர் 24 திகதி நிதி குற்றப்புலனாய்வுப்பிரிவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.</p><p>ஷிரந்தி ராஜபக்ச இன்று காலை (16) சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்ற நிலையில், விமான நிலையத்தில் வைத்து அவருக்கு&nbsp; அழைப்பாணை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>மீண்டும் நாடு திரும்பும்&nbsp;ஷிரந்தி </h2><p>இதற்கமைய, ஷிரந்தி ராஜபக்ச எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b11af81c-1e85-48cd-b1f0-f6e4449e3192/26-6aaa6cdcf055c.webp' /></p><p>ஷிரந்தி ராஜபக்சவுடன் ரோஹித ராஜபக்சவின் மாமியாரான ஏன் டி லிவேராவும் புறப்பட்டுச்சென்றுள்ளதுடன், அவர் ஷிராந்தி ராஜபக்சவை சிங்கப்பூரில் சிகிச்சைக்காக பரிந்துரைத்த பின்னர், நாளை மறுநாள் நாடு திரும்புவார் என்றும் கூறப்படுகின்றது.</p><p>பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் சிறிலிய சவியா கணக்கு தொடர்பான விசாரணைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.</p><h2>வாக்குமூலம் அளிக்குமாறு&nbsp;அழைப்பாணை </h2><p>
அதன்படி, வாக்குமூலம் அளிப்பதற்காக செப்டெம்பர் 24 ஆம் திகதி தங்கல்லே கார்ல்டன் இல்லத்திற்கு வருமாறு ஷிரந்தி அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு கூறுகின்றது.</p><p>ஷிரந்தி ராஜபக்ச தனியார் வைத்தியசாலையிலிருந்து நேரடியாக கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூருக்கு புறப்படுவதற்காக சென்றிருந்தார்.</p><p>
இதன்போது, செப்டம்பர் 24 அன்று முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் விமான நிலையத்தில் அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p>
</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T10:22:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் பயன்பாட்டிற்கு வந்த ஓட்டுநர் இல்லாத சரக்கு வாகனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-permit-cab-less-autonomous-truck-on-roads-1789554076"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-permit-cab-less-autonomous-truck-on-roads-1789554076</id>
            <summary type="text">germany permits first cab less autonomous truck on roads: ஜேர்மனியில் ஓட்டுநர் இல்லாத தானியங்கி சரக்கு வாகனம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

ஜேர்மனியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>germany permits first cab less autonomous truck on roads: ஜேர்மனியில் ஓட்டுநர் இல்லாத தானியங்கி சரக்கு வாகனம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
</p><h3>
ஜேர்மனியில் ஓட்டுநர் இல்லாத சரக்கு வாகனம்</h3><p> 

ஜேர்மனியில் தானியங்கி வாகன நிறுவனமான einride, பல்பொருள் அங்காடி சங்கிலியான lidl உடன் இணைந்து ஓட்டுநர் இல்லாதால் தானியங்கி சரக்கு வாகனத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47a7e212-32a0-4d12-864b-ac2ea6952551/26-6aaa6d9d7acf9.webp' /></p><p>

ஜெர்மனியின் கூட்டாட்சி மோட்டார் போக்குவரத்து ஆணையம் (KBA), விரிவான பாதுகாப்புச் சரிபார்ப்பு செயல்முறைக்குப் பிறகு முதல்முறையாக இந்த வகையான அனுமதியை வழங்கியுள்ளது. </p><p>

நிலை 4 ஓட்டுநர் இல்லாத வாகனம் ஒன்று, பெர்லின் சாலைகளில் lidl விநியோக மையத்திற்கும் ஒரு சில்லறை விற்பனைக் கடைக்கும் இடையில் பொருட்களைக் கொண்டு செல்கிறது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Einride and Lidl Germany have put a cab-less SAE Level 4 truck into daily operation on a German public road, under the first KBA permit of its kind. One shift a day, five days a week, moving real store deliveries. <a href="https://x.com/search?q=%24ENRD&amp;src=ctag&amp;ref_src=twsrc%5Etfw">$ENRD</a> <a href="https://t.co/a9lbbRven9">https://t.co/a9lbbRven9</a> <a href="https://t.co/miQN2IkhFe">pic.twitter.com/miQN2IkhFe</a></p>&mdash; Einride (@einrideofficial) <a href="https://x.com/einrideofficial/status/2099770766346666409?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
வர்த்தக ஓட்டுநர் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், விநியோகச் சங்கிலியின் நம்பகத்தன்மையை மேம்படுத்தவும் இந்த முயற்சி மேற்கொண்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. </p><p>

லிடிலின் தாய் நிறுவனமான ஷ்வார்ஸ் குழுமம் தனது மற்ற பிரிவுகளிலும் இதனை விரிவுபடுத்துவது குறித்து விவாதித்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-16T10:21:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[20வது திருமண நாளை மீண்டும் திருமணம் செய்து கொண்டாடிய சூர்யா ஜோதிகா... அழகான போட்டோஸ் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/suriya-jyotika-celebrates-wedding-anniversary-1789547328"></link>
            <id>https://cineulagam.com/article/suriya-jyotika-celebrates-wedding-anniversary-1789547328</id>
            <summary type="text">சூர்யா-ஜோதிகாதமிழ் சினிமா நட்சத்திர ஜோடிகளில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜோடி தான் சூர்யா-ஜோதிகா. இவர்கள் கடந்த 2006ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சூர்யா-ஜோதிகா</h2><p>தமிழ் சினிமா நட்சத்திர ஜோடிகளில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜோடி தான் சூர்யா-ஜோதிகா. </p><p>இவர்கள் கடந்த 2006ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர், தமிழகமே இவர்களின் திருமணத்திற்காக காத்திருந்தார்கள் என்றே கூறலாம். </p><p>இருவரும் திருமணம் செய்ததை ரசிகர்கள் சொல்ல வார்த்தையே இல்லாத அளவிற்கு கொண்டாடினார்கள். தற்போது தங்களது 20வது திருமண நாளை சூர்யா-ஜோதிகா தங்களது மகள்-மகன் இருக்க மீண்டும் திருமணம் செய்துகொண்டனர்.</p><p> அந்த வீடியோவை வெளியிட்ட சூர்யா-ஜோதிகா இப்போது சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். </p><p>இதோ போட்டோஸ்,&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T10:20:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலி. வடக்கு மீள் குடியேற்ற குழு சங்கங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/valikamam-north-resettlement-committee-1789551564"></link>
            <id>https://tamilwin.com/article/valikamam-north-resettlement-committee-1789551564</id>
            <summary type="text">தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கு வலி. வடக்கு மீள்
குடியேற்ற குழு சங்கங்களை&amp;nbsp; அழைக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கு வலி. வடக்கு மீள்
குடியேற்ற குழு சங்கங்களை&nbsp; அழைக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம்(பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ச.
சிறிபவானந்தராசா தலைமையில் நடைபெற்ற போது வலி. வடக்கு மீள் குடியேற்ற குழு சங்க பிரதிநிதிகளை கூட்டங்களுக்கு
அழைப்பதில்லை என மயிலிட்டி மீள் குடியேற்ற சங்கம் ஒன்றின் பிரதிநிதி குற்றம்
சாட்டினார்.
</p><p>
அதற்கு , ஒருங்கிணைப்பு குழு தலைவர் , நீங்கள் வந்துள்ளீர்கள் தானே என கூறிய
போது , தான் கிராம அபிவிருத்தி சங்கத்தின் சார்பில் வந்தேன் எனவும் , மீள்
குடியேற்ற குழுக்களை கூட்டங்களுக்கு திட்டமிட்டு புறக்கணிப்பதாக குற்றம்
சாட்டினார்.</p><h2>கூட்டத்திற்கு அழைப்பு</h2><p>அதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் , மீள்
குடியேற்ற குழுக்களை திட்டமிட்டு புறக்கணிப்பதாகவும் , அவர்கள் தமது காணிகளை
விடுவிக்க கோரி கூட்டத்தில் குரல் கொடுத்தால் அவர்களின் மைக்கை பறித்து ,
அவர்களை மிரட்டும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டினார்.
</p><p>
தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் மீள்குடியேற்ற
குழுக்களை கூட்டங்களுக்கு அழைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f63c798a-1aaf-4af6-aacb-76668820c9f5/26-6aaa6c90e21ba.webp' /></p><p>&nbsp;அதனை அடுத்து எதிர்வரும் கூட்டங்களில் அவர்களை அழைப்பதாக ஒருங்கிணைப்பு குழு
தலைவர் ச. சிறிபவானந்தராசா உறுதி அளித்தார்.
</p><p>
அதேவேளை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் தமது பிரதிநிதிகளையும்
வழமையாக அழைத்து, காணி விடுவிப்பு உள்ளிட்ட தமது பிரச்சினைகள் தொடர்பில்
கருத்துக்களை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டு வந்த நிலையில், அண்மையில்
இடம்பெற்ற இரண்டு கூட்டங்களுக்கு தமது அமைப்பின் பிரதிநிதிகள்
அழைக்கப்படவில்லை எனவும் எம்மை கூட்டங்களுக்கு அழைக்க வேண்டும் என கடந்த 11ஆம்
திகதி வலி. வடக்கு மீள்குடியேற்ற குழு சங்க பிரதிநிதிகள் தெல்லிப்பழை பிரதேச
செயலரிடம் மனு கையளித்திருந்த போதிலும் , இன்றைய கூட்டத்திற்கு&nbsp; அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T10:19:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான நிலையத்தில் கைவிடப்பட்ட சிகரெட்டுகள், அழகு சாதனப் பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cigarettes-cosmetics-abandoned-colomo-airport-1789554119"></link>
            <id>https://jvpnews.com/article/cigarettes-cosmetics-abandoned-colomo-airport-1789554119</id>
            <summary type="text">கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் கைவிடப்பட்டிருந்த சுமார் 16,803,750 ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் கைவிடப்பட்டிருந்த சுமார் 16,803,750 ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் சருமத்தைப் பொலிவாக்கும் முகப்பூச்சுகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை (15) கைப்பற்றியுள்ளனர்.
</p><p>

டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-648 என்ற விமானம் மூலம் நேற்று காலை 10.30 மணியளவில் கொண்டுவரப்பட்ட 6 பயணப் பைகளிலிருந்தே அவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae08a21a-d4ff-44cb-99e3-6254552cff00/26-6aaa6dc99b8d5.webp' /></p><h2>மொத்தப் பெறுமதி 1 கோடி 68 இலட்சத்து 3,750 ரூபா</h2><p>
</p><p>
6 பயணப் பைகளில் அடைக்கப்பட்டிருந்த 'டொப் கன்' மற்றும் 'பிளாட்டினம் 07' வகையைச் சேர்ந்த 111,400 சிகரெட்டுகளைக் கொண்ட 557 சிகரெட் கார்ட்டூன்களும், தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை மற்றும் சுகாதார அமைச்சின் அனுமதியின்றி சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 125 முகப்பூச்சுப் போத்தல்களும் கைப்பற்றப்பட்டன.
</p><p>
கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்தப் பெறுமதி 1 கோடி 68 இலட்சத்து 3,750 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

இது தொடர்பில் முறையான சுங்க விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகள், குறித்த சிகரெட்டுகள் மற்றும் முகப்பூச்சுத் தொகையை அரசுடமையாக்கியுள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் அவற்றை அழிப்பதற்கும் உத்தரவிட்டுள்ளனர்.
</p><p>
 இன்னிலையில் சட்டவிரோதமாக பொருட்களைக் கொண்டுவந்து கைவிட்டுச் சென்ற நபர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-16T10:18:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமண வாழ்க்கையை கெடுத்த பெரும்புள்ளி!! பழிவாங்க விடாது துரத்தும் நடிகை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/politician-under-an-actress-s-control-abroad-scene-1789553757"></link>
            <id>https://viduppu.com/article/politician-under-an-actress-s-control-abroad-scene-1789553757</id>
            <summary type="text">மூன்று எழுத்து நடிகைஅரசியலில் பெரும்புள்ளியாக இருக்கும் பிரபல நடிகர் மனைவி குழந்தையோடு வாழ்ந்து வந்தார். அதேபோல் மூன்று எழுத்து நடிகைக்கும் திருமணம் ச...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மூன்று எழுத்து நடிகை</h2><p>அரசியலில் பெரும்புள்ளியாக இருக்கும் பிரபல நடிகர் மனைவி குழந்தையோடு வாழ்ந்து வந்தார். அதேபோல் மூன்று எழுத்து நடிகைக்கும் திருமணம் செய்து கொண்டு கணவன், குழந்தைகள் என வாழலாம் என்ற எண்ணத்துடன் தொழிலதிபருடன் நிச்சயம் வரை சென்றார். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த திருமணம் நின்றது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c0e3c11-d117-450e-9af3-5bd3011993d6/26-6aaa6c5fd6644.webp' /></p><p>அதற்கு அந்த அரசியல் புள்ளி தான் காரணம் என்று கிசுகிசுக்கப்படுகிறது. நீ யாரையும் திருமணம் செய்துகொள்ள கூடாது, என்னுடன் தான் இருக்க வேண்டும் என்று அந்த நடிகர் பிரச்சனை செய்ததால் 40 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருந்துள்ளார். </p><p>அதன்பின் மனைவி, குடும்பத்தை தள்ளிவைத்து விட்டு, அந்த நடிகையுடன் இருக்க மனைவி நீதிமன்றம் வரை சென்றுள்ளார். ஆனால் அரசியலில் முக்கிய இடத்தை பிடித்ததால், மனைவி, குடும்பம் என்று வாழ நடிகர் ஆசைப்பட்டு நடிகையை விலக முயன்றுள்ளார். ஆனால் 40 வயதை கடந்தும் தனக்கென ஒரு வாழ்க்கையோ, குடும்பத்தையோ உருவாக்காமல் இருக்கும் அந்த நடிகை அதை ஏற்றுக்கொள்ளவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d58752f0-4759-486e-ab33-ceb13daa07cd/26-6aaa6c60c0d34.webp' /></p><p> </p><h2>பழிவாங்க</h2><p>என் வாழ்க்கையையும் திருமணத்தையும் கெடுத்துவிட்டு, நீ மட்டும் குடும்பத்தோடு வாழ்வதா என்று ஆத்திரமடைந்து பழி தீர்க்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார் மூன்றெழுத்து நடிகை. சமீபத்தில் வெளிநாடு சென்ற அதே இடத்திற்கு நடிகையும் ஆஜராகி சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறார். </p><p>உன்னை நிம்மதியா வாழவிடமாட்டேன் என்று கூறும் அளவுக்கு நடிகை எண்ட்ரி கொடுத்ததால், அந்த குடும்ப சமரச பேச்சுவார்த்தை நடக்காமலே போய்விட்டதாம். நடிகை திட்டமிட்டே பழிவாங்கும் நோக்கில் தான் இப்படி செய்கிறார் என்று அரசியல், சினிமா வட்டாரங்களில் காரசாரமாக பேசப்பட்டு வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-16T10:15:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய் சேதுபதி மீது வசைபாடுபவர்கள் நிறுத்தவேண்டும் - சீமான் வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/seeman-condemnattack-vijay-sethupathy-in-bigg-boss-1789546736"></link>
            <id>https://ibctamilnadu.com/article/seeman-condemnattack-vijay-sethupathy-in-bigg-boss-1789546736</id>
            <summary type="text">Seeman Condemns TVK Cadres for Criticizing Vijay Sethupathi- பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் இரண்டாவது வாரத்தில் சட்டசபையை மையமாகக் கொண்ட நிகழ்ச்சி நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Seeman Condemns TVK Cadres for Criticizing Vijay Sethupathi- பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் இரண்டாவது வாரத்தில் சட்டசபையை மையமாகக் கொண்ட நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. </p><p>

இதற்காக ஜனநாயக அறை திறக்கப்பட்டு போட்டியாளர்கள் ஆளும் அணி, எதிர் அணி என இரு பிரிவுகளாக செயல்படுகின்றனர்.</p><p> 

ஆளும் அணியினர் செய்யும் தவறுகளை எதிர் அணியினர் சுட்டிக்காட்ட வேண்டும்.
</p><p>
ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் நடிகர் விஜய் சேதுபதி போட்டியாளர்களுடன் கலந்துரையாடி, நிகழ்ச்சி மற்றும் போட்டியாளர்களின் நிறை, குறைகளை அவர் சுட்டிக்காட்டுவார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6767ef0-a27d-4ff4-b243-06de08f42cd9/26-6aaa50f23b07d.webp' /></p><p>இந்நிலையில், தலைமைப் பண்பு குறித்து பேசிய விஜய் சேதுபதி, தலைமைத்துவம் என்றால் என்னவென்று தெரியாமல் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை வழங்கிவிட்டு, பிரச்சனைகள் மற்றும் பொறுப்புகள் வரும்போது எதிரணியினர் மீது பழியைப் போட்டுவிட்டு ஓடுவது தலைவருக்கான தகுதி இல்லை எனத் தெரிவித்தார்.
</p><p>
விஜய் சேதுபதி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவர் முதலமைச்சர் விஜய்யை தாக்கிப் பேசியதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p><p> 

இதனால் ஆத்திரமடைந்த தவெக தொண்டர்கள் விஜய் சேதுபதிக்கு எதிராக சமூக வலைதளங்களில் விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
</p><p>
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுகுறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
</p><h2>
வெளியிட்டு பதிவு&nbsp; &nbsp;&nbsp;</h2><p>பிக்பாஸ் 10 தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களிடையே நடைபெற்ற விளையாட்டுச் சூழலை முன்வைத்து தலைமைத்துவம், பொறுப்புணர்வு, அதிகாரம் ஆகியவை குறித்து அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி விஜய் சேதுபதி அவர்கள் தெரிவித்த பொதுவான கருத்துகளை, முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு எதிராகப் பேசியதாகத் தாங்களாகவே பொருள் கற்பித்துக்கொண்டு, தவெகவினர் அவரை மிகக் கடுமையாக விமர்சித்தும் இழிவுபடுத்தியும் வருவது கடும் கண்டனத்திற்குரியது.&nbsp;</p><p>தம்பி விஜய்சேதுபதி யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை; எந்த அரசியல் கட்சியையும் சுட்டிக்காட்டவில்லை. ஒரு விளையாட்டில் உருவான சூழலை வைத்து தலைமைத்துவம் குறித்த தனது கருத்தைச் சொல்கிறார். அதனை உடனடியாகத் தங்களது தலைவரோடு பொருத்திப் பார்த்து, கருத்து சொன்னவரையே தாக்க முற்படுவது ஏன்?</p><p>மற்ற எந்த கட்சிக்கும் வராத கோபம் அமைச்சர் தொடங்கி தொண்டர் வரை தவெகவினருக்கு மட்டும் வருவது ஏன்?</p><p>
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr"><a href="https://x.com/hashtag/BiggBoss10?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BiggBoss10</a> தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களிடையே நடைபெற்ற விளையாட்டுச் சூழலை முன்வைத்து தலைமைத்துவம், பொறுப்புணர்வு, அதிகாரம் ஆகியவை குறித்து அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி விஜய் சேதுபதி அவர்கள் தெரிவித்த பொதுவான கருத்துகளை, முதலமைச்சர்… <a href="https://t.co/35RzihSat7">pic.twitter.com/35RzihSat7</a></p>&mdash; செந்தமிழன் சீமான் (@Seeman4TN) <a href="https://x.com/Seeman4TN/status/2099833952609644967?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>தலைமைத்துவம் குறித்த பொதுவான ஒரு கருத்தே தங்களை இவ்வளவு கோபப்படுத்துகிறதென்றால், ஜனநாயகத்தில் எழும் நேரடி விமர்சனங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?
</p><p>
இதுதான் நீங்கள் பேசிவரும் மாற்று அரசியலா?
</p><p>இதுதான் உங்கள் அரசியல் பண்பாடா?
</p><p>இதுதான் உங்கள் ஜனநாயக மாண்பா?
</p><p>இவ்வளவு தான் உங்கள் சகிப்புத்தன்மையா?&nbsp;</p><p>ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்ல; கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை உண்டு. அந்தக் கருத்து நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அதனை மறுத்துப் பேசலாம்; எதிர்வாதம் செய்யலாம். ஆனால், கூட்டமாகச் சென்று தனிநபரை வசைபாடுவதும், மிரட்டுவதும், அவதூறு செய்வதும் ஜனநாயக அரசியல் பண்பல்ல.</p><p>அரசியலுக்கு வந்த பிறகு பாராட்டுகளை மட்டும் எதிர்பார்க்க முடியாது. விமர்சனங்களையும் கேள்விகளையும் எதிர்கொண்டே ஆக வேண்டும். அதிகாரம் என்பது விமர்சனத்திலிருந்து பாதுகாக்கும் கவசம் அல்ல; விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு.
</p><p>எனவே, தம்பி விஜய் சேதுபதியின் பொதுவான கருத்தை, தங்கள் மீதான விமர்சனம் என தவறாகப் பொருள்கொண்டு அவரை இழிவுபடுத்துவதையும், வசைபாடுவதையும், தனிப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாக்குவதையும் தொடர்புடையவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். </p><p>
தனக்குப் பிடித்த கருத்தை மட்டுமே மற்றவர்கள் பேசவேண்டும் என நினைப்பது ஜனநாயகம் அல்ல. தனக்கு எதிரான கருத்தையும் பேச அனுமதித்து, அதற்கு கருத்தால் பதில் சொல்வதுதான் ஜனநாயகம்!
</p><p>ஜனநாயகன் என்று படம் எடுத்தால் மட்டும் போதாது... உண்மையான ஜனநாயகத்தைப் போற்றி அதன் மாண்புகளைக் காக்க வேண்டும். </p><p>
கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளுங்கள்!</p><p>
கேள்விக்குப் பதிலால் எதிர்வினையாற்றுங்கள்!
</p><p>வசையாலும் மிரட்டலாலும் கருத்துரிமையை முடக்க முற்படாதீர்கள்!&nbsp; என தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-16T10:10:58+00:00</updated>
        </entry>
    </feed>
