<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-25T22:25:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தல்களை நடத்தாமல் ஆட்சியை நீடிக்க அரசாங்கம் சதி! சம்பிக்க குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-conspiring-holding-elections-champika-1787691505"></link>
            <id>https://tamilwin.com/article/government-conspiring-holding-elections-champika-1787691505</id>
            <summary type="text">&amp;nbsp;தேர்தல்களை நடத்தாமல் தொடர்ச்சியாக ஆட்சியில் இருப்பதற்கான சதித்திட்டத்தில்
மக்கள் விடுதலை முன்னணியினரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் செயற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தேர்தல்களை நடத்தாமல் தொடர்ச்சியாக ஆட்சியில் இருப்பதற்கான சதித்திட்டத்தில்
மக்கள் விடுதலை முன்னணியினரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் செயற்பட்டு
வருகின்றனர் என்று முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டினார்.</p><p>

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நாட்டின் உண்மையான பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளாமல், தங்களது ஆட்சிக்
காலத்தை நீடித்துக்கொள்வதற்காகவே அரசு 22ஆவது அரசமைப்புத் திருத்தத்தைக்
கையில் எடுத்துள்ளது.</p><p>

சில அமைச்சர்கள் தேர்தல்கள் வராது எனப் பிரகடனம் செய்த போதிலும், ஜனாதிபதியோ
அரசின் பேச்சாளரோ அதனை இதுவரை மறுக்கவில்லை.</p><h2>பொருளாதாரப் பிரச்சினை</h2><p>
</p><p>
சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டல்களின்படி, நாட்டின் அந்நியச் செலாவணி
கையிருப்பு 2026இல் 8.6 பில்லியன் டொலர்களாகவும், 2027இல் 12 பில்லியன்
டொலர்களாகவும் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால், எந்தவித உற்பத்தி வளர்ச்சியோ
புதிய முதலீடுகளோ இல்லாமல் வெறும் சமூக வலைத் விளம்பரங்களைக் கொண்டு நாட்டை
நடத்த முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a59ba4f-49d4-4064-a802-86f212ed089f/26-6a8e147a97762.webp' /></p><p>

கடந்த 2022 மார்ச் 7 அன்று இலங்கை வங்குரோத்தாகும் நிலை குறித்து சர்வதேச நாணய
நிதியம் இரகசியக் கடிதம் மூலம் எச்சரித்திருந்தும், அதற்குக் காரணமான எவர்
மீதும் தற்போதைய அரசு இதுவரை முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.</p><p>

உண்மையான பொருளாதாரப் பிரச்சினைகளை மூடிமறைத்து மக்களின் கவனத்தை வேறு
திசைக்குத் திருப்புவதற்காகவே அரசு இத்தகைய நாடகங்களை நடத்துகின்றது.
</p><p>
அரசின் இந்த ஏமாற்று வேலைகளுக்கு மக்கள் ஏமாந்துவிடக் கூடாது. கூட்டு
எதிர்க்கட்சியாக நாடு முழுவதும் சென்று மக்களை விழிப்புணர்வூட்டவுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T22:17:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-motor-traffic-commissioner-general-appointed-1787691140"></link>
            <id>https://jvpnews.com/article/new-motor-traffic-commissioner-general-appointed-1787691140</id>
            <summary type="text">தற்போது வெற்றிடமாக உள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் பதவிக்கு ஓய்வுபெற்ற எயார்வைஸ் மார்ஷல் துசார இந்துனில் பெர்னாண்டோவை உடனடியாக அமுலு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தற்போது வெற்றிடமாக உள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் பதவிக்கு ஓய்வுபெற்ற எயார்வைஸ் மார்ஷல் துசார இந்துனில் பெர்னாண்டோவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
</p><p style="text-align: justify; ">
குறித்த பதவிக்கு ஓய்வுநிலை எயார்வைஸ் மார்ஷல் துசார இந்துனில் பெர்னாண்டோவை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பது தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் யோசனை சமர்ப்பிக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a76cef57-75b6-48f8-9676-2bbae4aeb2e1/26-6a8e00865bc4a.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை தனது முழுமையான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-25T21:30:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை குறித்து எட்டப்படவுள்ள முடிவு! முக்கிய சந்திப்பில் அப்பாஸ் அராக்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/temporary-shipping-lane-to-strait-of-hormuz-1787690555"></link>
            <id>https://ibctamil.com/article/temporary-shipping-lane-to-strait-of-hormuz-1787690555</id>
            <summary type="text">ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் ஓமன் நாட்டு வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்புசைதி ஆகியோர், ஹோர்முஸ் நீரிணையில் ஒரு தற்காலிக கப்பல் போக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் ஓமன் நாட்டு வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்புசைதி ஆகியோர், ஹோர்முஸ் நீரிணையில் ஒரு தற்காலிக கப்பல் போக்குவரத்து வழித்தடத்தை அமைப்பது மற்றும் கண்ணிவெடிகளை அகற்றும் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து விவாதித்துள்ளனர்.
</p><p>
தெஹ்ரானில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளின் இறையாண்மையையும் மதிக்கும் வகையிலான ஏற்பாடுகளை எட்டுவதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

அதன்போது, ஹோர்முஸ் நீரிணை வழியாக ஒரு தற்காலிக கூட்டு கப்பல் போக்குவரத்து வழித்தடத்தை நிறுவுவது மற்றும் அங்குள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான கூட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவது ஆகியவற்றை உள்ளடக்கிய முன்மொழியப்பட்ட கட்டமைப்பு குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.</p><p></p><h2>எதிர்கால ஏற்பாடுகள்</h2><p>
</p><p>
இந்நிலையில், ஒரு நிரந்தர கப்பல் போக்குவரத்து வழித்தடத்தை அமைப்பது, நீரிணையை நிர்வகிப்பதற்கான எதிர்கால ஏற்பாடுகள், அத்துடன் தகவல் பரிமாற்றம், கப்பல் போக்குவரத்து மேலாண்மை மற்றும் அது தொடர்பான பாதுகாப்பு சேவைகளை வழங்குவதற்கான வழிமுறைகளை உருவாக்குவது குறித்து உடன்பாட்டை எட்டுவதற்காக இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடரும் என கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d14bdde-cfe0-43d9-8095-162fb9576c6b/26-6a8e0060dd709.webp' /></p><p>
மேலும், எட்டப்படும் எந்தவொரு உடன்பாடும் சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டதாகவும், அண்டை நாடுகளின் இறையாண்மையை மதிக்கும் வகையிலும் அமைவதை உறுதி செய்ய, வளைகுடா கடலோர நாடுகளுடன் கூட்டு விவாதங்களை நடத்துவதன் முக்கியத்துவத்தையும் அதன்போது இரு தலைவர்களும் உறுதிபடுத்தியுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T21:30:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ தாக்கத்தால் முற்றாக பாதிக்கப்பட்ட தமிழர் பகுதி - குடிநீர் தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/batticaloa-completely-affected-by-el-nino-impact-1787692456"></link>
            <id>https://tamilwin.com/article/batticaloa-completely-affected-by-el-nino-impact-1787692456</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>

மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கைத்தொழில்
மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற
உறுப்பினருமான சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க
அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு
மண்டபத்தில் நேற்று(25.08.2026) இடம்பெற்றது. </p><h2>

விசேட தீர்மானங்கள்</h2><p>

 ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த மே மாதம் மட்டக்களப்பு
மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டபோது நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்
கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் தொடர்பாக, நிகழ்நிலை
ஊடாகக் கலந்து கொண்ட அமைச்சரினால் விசேட மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது.
</p><p>

இதன்போது விசேடமாக எல் நினோ தாக்கம் குறித்தும் அதற்காக
முன்னெடுக்கப்படவேண்டிய செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c97f0b24-fc60-495c-bf89-3e28c8eeb9d1/26-6a8e06400da2b.webp' /></p><p>
</p><p>

மேலும் பிரஜா சக்தி வேலைத்திட்டங்கள், மாவட்டத்தில் இதுவரை முன்னெடுக்கப்பட்டு
வரும் அபிவிருத்தித் திட்டங்கள், புதிய வீடமைப்புத் திட்டங்கள், சிறு
குளங்களைப் புனரமைத்தல், மக்களின் வாழ்வாதார மற்றும் பொருளாதாரத்தை
மேம்படுத்துவதற்கான திட்டங்கள், விவசாய நடவடிக்கைகள், உணவுப் பாதுகாப்பு
உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது.
</p><h2>
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்</h2><p>
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், 

மாவட்டத்தில் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதுடன், மக்களின் குடிநீர்த் தேவையைப்
பூர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்பு அவசியம் எனத்
தெரிவித்தார்.
</p><p>
மேலும், மேய்ச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்டுள்ள மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல்
தரையை விடுவித்தல், முந்தானையாற்றை அபிவிருத்தி செய்தல், கிரான்
பொண்டுகள் - சேனைப் பால நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம், மண்டூர் - குருமண்வெளி
மற்றும் பட்டிருப்பு பால நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம்,
அம்பிளாந்துறை - குருக்கள்மடம், திக்கிலிவெட்டை- சந்திவெளி மற்றும் நரிப்புல்
தோட்டம்- பங்குடாவெளி ஆகிய பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட வேண்டிய பாலங்களின்
நிர்மாணப் பணிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4719aa24-8408-4546-8684-5913550ac714/26-6a8e0640b9a95.webp' /></p><p>
</p><p>

அத்துடன், மனித - காட்டு யானை மோதல்கள், நெல் கொள்வனவு, களப்பு வாவியைத்
தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது மீளாய்வு
மேற்கொள்ளப்பட்டது.
</p><p>

மேலும், எல் நினோ தாக்கத்தினால் மாவட்டத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக்
குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய செயற்றிட்டங்கள் தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு
இதன்போது ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், மக்களைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்க
வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
</p><p>

இந்த நிகழ்வில் மாவட்ட திட்டமில் பணிப்பாளர் எஸ்.நவநீதன், பிரதேச செயலாளர்கள்,
மூப்படை உயர் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து
கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/192a2372-de19-4e51-9caa-ecd8d1335afa/26-6a8e0641704d0.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a66d459-a031-4203-a3a5-24588abcddcf/26-6a8e06424e5ae.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T21:17:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாக்குதல்களை நிறுத்த உக்ரைனிடம் கோரிக்கை... ரஷ்யா பறந்த அமெரிக்க உளவுத்துறை தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-to-halt-strikes-1787692688"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-to-halt-strikes-1787692688</id>
            <summary type="text">CIA Chief On Secret Trip To Moscow: அமெரிக்க உளவுத்துறை தலைவர் மாஸ்கோவிற்கு ரகசியப் பயணம்.
அமெரிக்க உளவுத்துறை தலைவர் ஜான் ராட்க்ளிஃப், ரஷ்ய அதிகாரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>CIA Chief On Secret Trip To Moscow: அமெரிக்க உளவுத்துறை தலைவர் மாஸ்கோவிற்கு ரகசியப் பயணம்.
</p><p>அமெரிக்க உளவுத்துறை தலைவர் ஜான் ராட்க்ளிஃப், ரஷ்ய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முன்னறிவிப்பின்றி மாஸ்கோவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbf7ec52-5afe-491a-a24f-9e98c8cf60cc/26-6a8e0693da59f.webp' /></p><p>
</p><p>அவரது பயணத்திற்கு முன்பு, மாஸ்கோ மற்றும் வடக்கு ரஷ்யாவின் பிற நகரங்கள் மீதான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்துமாறு உக்ரைனிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>இந்தக் கோரிக்கை திங்கள் முதல் புதன் வரை அமுல்படுத்த வேண்டும் என்றும், ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி ரஷ்யாவிற்குப் பயணம் செய்யவிருப்பதாக கீவ்விற்குத் தெரிவிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டது.</p><p></p><p> </p><p>ரஷ்யாவையும் உக்ரைனையும் ஒரு ஒப்பந்தத்திற்கு கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் முயற்சிகளுக்கு ஒரு முக்கியமான தருணத்தில் இந்த இரகசியப் பயணம் அமைந்துள்ளது. </p><p>செவ்வாய்க்கிழமை அதிகாலையில், அமெரிக்காவின் போயிங் சி-17 குளோப்மாஸ்டர் III இராணுவப் போக்குவரத்து விமானம் ஒன்று மாஸ்கோவின் வ்னுகோவோ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96df43f6-e277-4e53-b09e-8f00fa68b763/26-6a8e0693327fe.webp' /></p><p> </p><p>அந்த விமானம் மேரிலாந்தில் உள்ள ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸிலிருந்து புறப்பட்டதாகத் தெரிகிறது. மட்டுமின்றி, தங்கள் பகுதியில் விமானத்தை இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்ததாக லாட்வியாவின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். </p><p>அவ்விமானம் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு, அந்த வான்வெளியில் இயக்குவதற்கான அனுமதியைப் பெற்றிருந்தது என்று அவர் கூறினார். </p><p>ஈரானை உலகப் பொருளாதாரத்திலிருந்து துண்டிப்பதை நோக்கமாகக் கொண்ட Operation Economic Outcast என்ற புதிய நடவடிக்கையை அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் அறிவித்த மறுநாளே, ராட்க்ளிஃப்பின் மாஸ்கோ பயணமும் அமைந்துள்ளது. </p><p>ஈரானுடன் தொடர்ந்து வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகள் மற்றும் அமைப்புகளை இந்த நடவடிக்கை குறிவைக்கிறது; ஈரானின் முக்கிய உத்திசார் வர்த்தகக் கூட்டாளிகளில் ரஷ்யாவும் ஒன்று.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T21:15:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 30 வருடங்கள் வாழ்ந்த வெளிநாட்டவரை நாடு கடத்த உத்தரவு - தமிழர்களுக்கு ஆபத்து உள்ளதாக எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/canada-took-mans-permanent-residency-1787673215"></link>
            <id>https://tamilwin.com/article/canada-took-mans-permanent-residency-1787673215</id>
            <summary type="text">கனடாவில் 30 வருடங்களாக வாழ்ந்து வந்த வெளிநாட்டவர் ஒருவர் நாடு கடத்தப்படவுள்ளார். 

செக் குடியரசை சேர்ந்த 58 வயதான ஸ்லெப்சிக் என்பவரே இவ்வாறு நாடு கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் 30 வருடங்களாக வாழ்ந்து வந்த வெளிநாட்டவர் ஒருவர் நாடு கடத்தப்படவுள்ளார். </p><p>

செக் குடியரசை சேர்ந்த 58 வயதான ஸ்லெப்சிக் என்பவரே இவ்வாறு நாடு கடத்தல் உத்தரவை பெற்றுள்ளார். </p><p>

கனடாவில் புகலிடம் கோரிய நிலையில், தனது சொந்த நாட்டுக்கு அடிக்கடி சென்று வந்தமையே அவர் இந்த உத்தரவை பெற காரணமாக அமைந்துள்ளது.</p><p> </p><h2><b>

பாதுகாப்பு அச்சுறுத்தல்</b></h2><p>செக் குடியரசில் தனக்கு ஆபத்து உள்ளதாக புகலிடம் பெற்ற நிலையில், அந்த நாட்டு கடவுச்சீட்டில் நாட்டுக்கு சென்று வந்தமை கனடா எல்லை பாதுகாப்பு முகவர அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6db49a5f-f0aa-49d2-b292-9c5789f17fe5/26-6a8dcd598b29c.webp' /></p><p>இதன்மூலம் அவரின் சொந்த நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லையெனுவும், கனடாவில் வாழ வேண்டிய அவசியம் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p>

அதற்கமைய 2012ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் அவரது நிரந்தர குடியுரிமை அந்தஸ்து மற்றும் பாதுகாப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டுள்ளன. </p><p>

இந்தச் சட்டத்திற்கு எதிராக பாதிக்கப்பட்ட தரப்பு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட போதும், அதனை விசாரிக்க மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில் ஸ்லெப்சிக்கை நாடு கடத்தும் நடவடிக்கையில் குடிவரவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

இந்தத் தீர்ப்பின் மூலம் கனடாவில் புகலிடம் கோரிய நிலையில், இலங்கை உட்பட வெளிநாடுகளுக்கு சென்று வரும் தமிழர்களுக்கு ஆபத்து உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-08-25T21:01:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தகாத உறவிலிருந்தவருடன் சேர்ந்து மனைவி செய்த சம்பவம்; மதுபோதையில் அரங்கேறிய கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wife-s-act-with-her-illicit-partner-1787679910"></link>
            <id>https://jvpnews.com/article/wife-s-act-with-her-illicit-partner-1787679910</id>
            <summary type="text">கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து, அவரது உடலை வீட்டின் அருகே புதைத்ததாக மனைவி உள்பட 2 பேரை 24 மணி நேரத்திற்குள் குற்றப்பிரிவு பொலிசார் கைது ச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து, அவரது உடலை வீட்டின் அருகே புதைத்ததாக மனைவி உள்பட 2 பேரை 24 மணி நேரத்திற்குள் குற்றப்பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர்.


</p><p style="text-align: justify; ">
கணவருடன் அடிக்கடி தகராறு
அரியானா மாநிலம் பரீதாபாத்தில் வசித்து வந்தவர் 42 வயதுடையவரின் மனைவிக்கும் காமத் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c386935b-3d63-4da2-9587-9980be1e8f06/26-6a8dd4ae35751.webp' /></p><h2 style="text-align: justify; ">கொலை செய்ய திட்டம்</h2><p style="text-align: justify; ">

இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்தநிலையில், இருவருக்கும்&nbsp; இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
</p><p style="text-align: justify; ">&nbsp;இதையடுத்து, மனைவியும் கள்ளக்காதலனும் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">அதன்படி,&nbsp; கணவருக்கு அதிக அளவில் மது குடிக்க வைத்துள்ளார்.&nbsp; கணவர் மதுபோதையில் இருந்தபோது, அவரது தலையில் ‘இன்டர்லாக்’ கல்லால் தாக்கி காமத் கொலை செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">பின்னர், கொலையை மறைக்க சியாம்வீரின் உடலை வீட்டின் அருகே இருவரும் சேர்ந்து புதைத்துள்ளனர்.இதையடுத்து இருவரையும் 24 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-25T20:53:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027-ஐ நோக்கி தீவிரமடையும் விசாரணை - காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் அநுர அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-s-response-to-the-issue-of-disappeared-1787691041"></link>
            <id>https://tamilwin.com/article/government-s-response-to-the-issue-of-disappeared-1787691041</id>
            <summary type="text">காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியைத் தேடும் பயணமும்
அந்த குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார உதவிகளை
வழங்கும் செயற்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியைத் தேடும் பயணமும்
அந்த குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார உதவிகளை
வழங்கும் செயற்பாடுகளும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.</p><p> 

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்று(25.08.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.</p><p> 

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2> 

உறவுகளை இழந்தவர்களுக்கு கொடுக்கப்படும் நிதி</h2><p>

அவர் மேலும் உரையாற்றுகையில்,</p><p>

பல ஆண்டுகளாகத் தங்களது உறவுகளைத்
தேடித் தவிக்கும் குடும்பங்களின் வலியை நாம் முழுமையாக உணர்கின்றோம்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம்
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்கு அதிக முன்னுரிமை வழங்கிச் செயற்பட்டு
வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd5398fa-6d70-4c33-8996-7d34c608ceeb/26-6a8e009b7fdda.webp' /></p><p> </p><p>

அதன் வெளிப்பாடாகவே காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின்
செயற்பாடுகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு
வருகின்றன. </p><p>


ஒரு குடும்பத்தின் வருமானம் ஈட்டுபவர் காணாமல் போயிருக்கலாம். எனவே, உண்மையைத் தேடும் விசாரணைக்கு இணையாக, அந்த குடும்பங்களின் பொருளாதார
மற்றும் சமூக வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்கான உதவிகளும் வழங்கப்பட வேண்டும்.


இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல.</p><p> அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு
மாகாணங்களில் மனிதப் புதைகுழிகள் தொடர்பான அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்று
வருகின்றன.</p><p> 

இவ்வாறான இடங்களில் கிடைக்கும் சான்றுகள் முறையாக
ஆவணப்படுத்தப்பட்டு, நிபுணத்துவத்துடன் விசாரிக்கப்பட்டு நீதிச்
செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படுவது அவசியமாகும். 

உண்மை, நீதி, நிவாரணம்,
கண்ணியம், மீள்நிகழாமை ஆகியன ஒன்றோடொன்று தொடர்புடையவை. உண்மையைத் தேடும் பொறுப்பிலிருந்து இந்த அரசாங்கம் ஒருபோதும் விலகாது என்றார்.</p><h2> 


57 மில்லியன் செலவில் மனித புதைகுழி ஆய்வு</h2><p>

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய நீதி
அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார, 


எமது அரசாங்கத்திலே முக்கியமான ஒரு கொள்கை இருக்கின்றது, சட்டம் அனைவருக்குமே
சமன். சட்டத்துக்கு மேலாக ஒருவரும் இல்லை. காணாமலாக்கப்பட்ட பிரச்சனைகள் போன்ற
சட்ட விரோதமான நடவடிக்கைகளுக்கும் சட்டம் சரியான முறையிலே
நடைமுறைப்படுத்தப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c3964a2-c24e-4a63-9d18-a423ed76dd80/26-6a8e009c72e1d.webp' /></p><p> </p><p>

அனைவருக்கும் நீதி கிடைக்கும் என்பதே எமது
எதிர்பார்ப்பு, நாட்டு மக்கள் எங்களுக்கு ஆணை வழங்கியதும் இந்த
எதிர்பார்ப்பிலாகும். 

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான செயற்பாடுகளைப்
பலப்படுத்தும் நோக்கில் அலுவலகத்தின் ஆளணிப் பற்றாக்குறை நிவர்த்தி
செய்யப்பட்டுப் புதிதாக 69 உத்தியோகத்தர்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக
2025ஆம் ஆண்டில் சுமார் 375 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன், செம்மணி சமூகப் புதைகுழி தொடர்பான ஆய்வுகளை விஞ்ஞான
ரீதியாக முன்னெடுப்பதற்காக 57 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன்,
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடமைப்பு, கல்வி மற்றும் சுகாதார வசதிகளை
உள்ளடக்கிய விசேட உதவிப் பொதி ஒன்றினை வழங்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகின்றது.</p><p> 

குற்றவாளிகள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு உரிய
தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
</p><h2>
2027 முழுமையாக நிறைவடையும் விசாரணைகள்</h2><p>

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த கருத்துத்
தெரிவிக்கையில், 

நாடளாவிய ரீதியில் கிடைக்கப்பெற்ற சுமார் 19,000
முறைப்பாடுகளில் 9,000க்கும் மேற்பட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும்,
குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் பதிவான 2,300 பேரில் 1,940 பேருக்கான
விசாரணைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/657ae54b-9430-421c-95e9-b83fe70d4a4f/26-6a8e009d599e3.webp' /></p><p>

இடைநிறுத்தப்பட்டிருந்த விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்,
எஞ்சியுள்ள அனைத்து விசாரணைகளையும் 2027ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நிறைவு
செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
இந்த நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்
சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன் மற்றும் ஜெ.ரஜீவன்,
யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டச் செயலர்கள், வடக்கு மாகாணப் பிரதிப்
பிரதம செயலாளர் - நிர்வாகம், பிரதேச செயலர்கள் உள்ளிட்ட அரச திணைக்களங்களின்
தலைவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்கள் எனப் பலரும்
பங்கேற்றிருந்தனர்.
</p><p>
இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் குடும்ப உறுப்பினர்களுக்கான மருத்துவ
முகாம் ஒன்றும் நேற்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T20:53:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொஸ்கோவில் அமெரிக்க இராணுவப் போக்குவரத்து விமானம் தரையிறக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-military-transport-aircraft-lands-in-moscow-1787687540"></link>
            <id>https://tamilwin.com/article/us-military-transport-aircraft-lands-in-moscow-1787687540</id>
            <summary type="text">அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான போக்குவரத்து விமானமொன்று மொஸ்கோவின்
நுக்கோவோ விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக ஃப்ளைட்ரேடார் 24 விமானக்
கண்காண...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான போக்குவரத்து விமானமொன்று மொஸ்கோவின்
நுக்கோவோ விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக ஃப்ளைட்ரேடார் 24 விமானக்
கண்காணிப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன.
</p><p>
07-7181 என்ற பதிவு இலக்கத்தைக் கொண்ட இந்த போயிங் குளோப்மாஸ்டர் ரக இராணுவ
விமானம், லத்வியாவின் ரிகா நகரிலிருந்து நேரடியாகப் புறப்பட்டு மொஸ்கோவில்
தரையிறங்கியுள்ளது.
</p><p>
எனினும், இவ்விமானத்தில் பயணிகள் அல்லது பொருட்கள் ஏதேனும் கொண்டு வரப்பட்டதா
என்பது குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.</p><h2>அமைதிப் பேச்சுவார்த்தை</h2><p>
</p><p>
அத்துடன், இப் பயணம் தொடர்பில் தமக்கு இதுவரை எவ்விதத் தகவலும்
கிடைக்கப்பெறவில்லை என ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
</p><p>முன்னதாக, வொஷிங்டனில் உள்ள கெம்ப் ஸ்ப்ரிங்ஸ் விமானத் தளத்திலிருந்து
புறப்பட்ட இவ்விமானம் ரிகாவை வந்தடைந்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb24c20b-3ac3-4e9b-ac41-132ce4ec08cd/26-6a8dfff0c452f.webp' /></p><p>
</p><p>
உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்காக விசேட பிரதிநிதிகள் வருகை தந்ததனைத்
தொடர்ந்து, ஐரோப்பாவிலிருந்து ரஷ்யாவிற்கு நேரடியாக அமெரிக்க விமானமொன்று
பயணித்துள்ளமை இதுவே முதன்முறையாகும்.
</p><p>
ஈரானில் இடம்பெற்று வரும் போர்ப் பதற்றங்களுக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும்
ரஷ்யாவிற்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்துள்ள நிலையில், இப் திடீர்
பயணம் பிராந்திய அரசியல் களத்தில் அவதானத்தைப் பெற்றுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T20:49:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[11 புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றிழ் கையளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/11-new-diplomats-present-credentials-to-president-1787690581"></link>
            <id>https://jvpnews.com/article/11-new-diplomats-present-credentials-to-president-1787690581</id>
            <summary type="text">இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 07 வெளிநாட்டு தூதுவர்களும் 04 உயர்ஸ்தானிகர்களும் இன்று (25) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 07 வெளிநாட்டு தூதுவர்களும் 04 உயர்ஸ்தானிகர்களும் இன்று (25) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர். </p><p>

இந்த புதிய இராஜதந்திரிகள் முறையே பிரேசில், பங்களாதேஷ், சீனா, ஒஸ்திரியா, அமெரிக்கா, டொமினிகன் குடியரசு, கானா, புரூணை தாருஸ்ஸலாம், சூடான், கயானா மற்றும் பனாமா ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12b06a54-40db-4548-ada1-5dafe462f4b6/26-6a8dfe56af078.webp' /></p><p> </p><p>

அதன்படி, இன்று ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்த புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் பின்வருமாறு, </p><h3>

தூதுவர்களாக:</h3><p>&nbsp;Jorge Geraldo Kadri - பிரேசில் கூட்டாட்சிக் குடியரசின் தூதுவர், Wei Huaxiang - சீன மக்கள் குடியரசின் தூதுவர், கலாநிதி Robert Zischg - ஆஸ்திரிய குடியரசின் தூதுவர், Eric S. Meyer - அமெரிக்கத் தூதுவர், Francisco Manuel Comprés Hernández - டொமினிகன் குடியரசின் தூதுவர், கலாநிதி Mohammed Abdalla Ali Eltom - சூடான் குடியரசின் தூதுவர், Nubiela Yanarith Ayala - பனாமா குடியரசின் தூதுவர்</p><p></p><h3> 

உயர்ஸ்தானிகர்களாக 

</h3><p> D.M. Salahuddin Mahmud - பங்களாதேஷ் குடியரசின் உயர்ஸ்தானிகர், பேராசிரியர் Kwasi Obiri-Danso - கானா குடியரசின் உயர்ஸ்தானிகர், Siti Arnyfariza Md Jaini - புரூணை தாருஸ்ஸலாமின் உயர்ஸ்தானிகர், Dharamkumar Seeraj - கயானா கூட்டுறவு குடியரசின் உயர்ஸ்தானிகர்</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T20:43:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவின் உகண்டா பணத்தை தேடும் பிக்கு - கொழும்பு பேருந்து நிலையத்தில் சிக்கிய 1029 பேர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/1029-people-trapped-at-colombo-bus-station-1787689626"></link>
            <id>https://tamilwin.com/article/1029-people-trapped-at-colombo-bus-station-1787689626</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்குகள் மிகத் தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், அடுத்த மாதம் மக்களுக்கான தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக த...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்குகள் மிகத் தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், அடுத்த மாதம் மக்களுக்கான தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதேபோன்று, கொழும்பு - புறக்கோட்டையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படுவதுடன், அவர்களது குற்றச் செயல்கள் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
“க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பலாலி காணி விவகாரம் தொடர்பில் மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>

மக்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வை வழங்க முடியாத நிலையும், இராணுவத்தினரின் நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய பதிலடி கொடுக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p> 

மேலும், இதுவரை நாட்டின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் குரல் கொடுக்காத சில அரசியல் தலைவர்கள், மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அநுர அரசாங்கத்திடம் கேள்விகளை எழுப்பி வருவதை அவதானிக்க முடிகிறது.
</p><p>இதுபோன்று, நாட்டில் நாளாந்தம் இடம்பெறும் சுவாரஸ்யமான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்களை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறது “நாட்டு நடப்பு” நிகழ்ச்சி,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Ul2MFwzqDoY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T20:35:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் வரி விதிப்புகளுக்கு கனடா பதிலடி! உள்நாட்டு வணிகர்களுக்கு நிவாரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/canada-announces-tariffs-against-the-us-1787688576"></link>
            <id>https://ibctamil.com/article/canada-announces-tariffs-against-the-us-1787688576</id>
            <summary type="text">அமெரிக்காவின் சமீபத்திய வரி விதிப்புகளுக்குப் பதிலடியாக, அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களுக்கு க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் சமீபத்திய வரி விதிப்புகளுக்குப் பதிலடியாக, அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களுக்கு கனடா பதில் வரிகளை விதித்துள்ளதுடன், உள்நாட்டு வணிகங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான நிதியுதவித் தொகுப்பையும் அறிவித்துள்ளது.
</p><p>
செப்டம்பர் 8 முதல் நடைமுறைக்கு வரும் இந்த பதில் வரிகள், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 700 வகையான பொருட்களுக்கு 15%, 25% மற்றும் 50% என்ற அளவில் விதிக்கப்படவுள்ளன. </p><p>

எஃகு(உலோகம்), அலுமினியம், மரத்தாலான பொருட்கள் மற்றும் ஆடைகளுக்கு 50% வரியும், சீஸ், வீட்டு உபகரணங்கள் மற்றும் கடல் உணவுகளுக்கு 25% வரியும், மின்னணுப் பொருட்கள் மற்றும் கருவிகளுக்கு 15% வரியும் விதிக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>கனடாவின் பதிலடி&nbsp;</h2><p>
</p><p>
இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 20 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடிய இறக்குமதிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த 50% வரிகள் கடந்த சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f3de2aa-2e7e-49bf-a66d-f87a7ee4fb1d/26-6a8df92158c44.webp' /></p><p><i>Image Credit: Aljazeera</i></p><p>
</p><p>
இதற்குக் கனடாவின் பதிலடி நடவடிக்கையாக இந்த பதில் வரிகள் அமைந்துள்ளன. </p><p>

அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்துவதையும், கனடிய வணிகங்களைப் பாதுகாப்பதையும் இந்த வரிகள் நோக்கமாகக் கொண்டுள்ளதாகத் தொழில்துறை அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.</p><h2>வட்டியில்லா கடன்கள்&nbsp;</h2><p>

அத்துடன், பாதிப்புக்குள்ளாகும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக 7.5 பில்லியன் கனடிய டொலர் மதிப்பிலான உதவித் திட்டத்தையும் கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f22302b8-8d73-4594-b775-1063fd884e1c/26-6a8df922528bd.webp' /><br></p><p><i>Image Credit: Remitly</i></p><p> </p><p>

இதன் கீழ் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு C$2.5 மில்லியன் முதல் C$5 மில்லியன் வரை 36 மாத கால அவகாசத்துடன் வட்டியில்லா கடன்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T20:33:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கப்பல்கள் உடனடியாக தகர்க்கப்படும் ; ஈரானுக்கு ட்ரம்பின் இறுதி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ships-face-immediate-destruction-1787689084"></link>
            <id>https://canadamirror.com/article/ships-face-immediate-destruction-1787689084</id>
            <summary type="text">சர்வதேச கடல் வழிப்பாதையான ஹார்முஸ் நீரிணையில் பதிக்கப்பட்டிருந்த அனைத்து கண்ணிவெடிகளும் அமெரிக்க கடற்படையால் வெற்றிகரமாக அகற்றப்பட்டு, வெடிக்க வைக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச கடல் வழிப்பாதையான ஹார்முஸ் நீரிணையில் பதிக்கப்பட்டிருந்த அனைத்து கண்ணிவெடிகளும் அமெரிக்க கடற்படையால் வெற்றிகரமாக அகற்றப்பட்டு, வெடிக்க வைக்கப்பட்டுவிட்டதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.


</p><p>புதிய கண்ணிவெடிகளை பதிக்கும் எந்தவொரு ஈரானிய கப்பலோ அல்லது படகோ கணப்பொழுதில், திட்டமிட்டு துவம்சம் செய்யப்படும்" என ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோசியல்' பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbfcb9dc-e982-4dd3-87b8-56035da24bc6/26-6a8df883224b2.webp' /></p><p> கண்ணிவெடிகள் வைக்கும் விவகாரத்தில் அமெரிக்கா "பூஜ்ஜிய சகிப்புத்தன்மை" கொள்கையை முழு வீச்சில் கையில் எடுத்துள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.</p><p>&nbsp;ஹார்முஸ் நீரிணையின் ஒவ்வொரு அங்குலமும் அமெரிக்காவின் விண்வெளிப் படை மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், ஈரானின் எந்தவொரு அத்துமீறலும் உடனடியாக முறியடிக்கப்படும் என்றும் வாஷிங்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-08-25T20:18:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[முக்கிய நாடொன்றில் இருந்து புதிய குறைந்த கட்டண விமான சேவை ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/australian-low-cost-airline-launched-service-to-sl-1787678614"></link>
            <id>https://ibctamil.com/article/australian-low-cost-airline-launched-service-to-sl-1787678614</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவின் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஜெட்ஸ்டார், அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையே தனது புதிய விமான சேவையைத் தொடங்கியுள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவின் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஜெட்ஸ்டார், அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையே தனது புதிய விமான சேவையைத் தொடங்கியுள்ளது. </p><p>

அதன் முதலாவது விமானம் மெல்போர்னிலிருந்து புறப்பட்டு, இன்று (25) மாலை 6:24 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதன்போது, 271 பயணிகள் மற்றும் 13 விமானப் பணியாளர்களுடன் வந்திறங்கிய JQ005 என்ற இந்த போயிங் 787 டிரீம்லைனர் விமானத்திற்கு விமான நிலையத்தில் பாரம்பரிய நீர் வணக்கம் செலுத்தி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>இயக்கப்படும் நாட்கள்</h2><p>
</p><p>
இந்த புதிய விமான சேவையானது மெல்போர்ன் மற்றும் கட்டுநாயக்க இடையே வாரத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் இயக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27320184-684a-49ca-8b10-2fa7dc307c6b/26-6a8dd1546d4c8.webp' /></p><p>

சுமார் 10 மணி நேரப் பயணக் காலத்தைக் கொண்ட இந்த சேவையின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பு நிகழ்வு ஒன்றும் நடைபெற்றதாக தெரியவருகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T20:11:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 5 மில்லியன் லொத்தர் சீட்டு பரிசை வென்ற பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bc-woman-looking-forward-to-suite-on-a-cruise-1787667535"></link>
            <id>https://canadamirror.com/article/bc-woman-looking-forward-to-suite-on-a-cruise-1787667535</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், மளிகைப் பொருட்கள் வாங்கச் சென்றபோது தான் 5 மில்லியன் டொலர் லொட்டோ 6/49 ஜாக்பாட் பரிசை வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், மளிகைப் பொருட்கள் வாங்கச் சென்றபோது தான் 5 மில்லியன் டொலர் லொட்டோ 6/49 ஜாக்பாட் பரிசை வென்றிருப்பதை அறிந்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
</p><p>ஜேன் டி. என்பவர் ஆகஸ்ட் 8ஆம் திகதி நடைபெற்ற லொட்டோ0 குலுக்கலில் கிளாசிக் ஜாக்பாட் பரிசை வென்றதாக பிரிட்டிஷ் கொலம்பியா லாட்டரி கழகம் திங்கட்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.</p><p>
எப்படி எதிர்வினையாற்றுவது என்றே எனக்குத் தெரியவில்லை. பணியாளர் என்னைவிட அதிக உற்சாகத்தில் இருந்தார் என ஜேன் டி. தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33e2a9b5-59e6-4e6a-85e4-abcda8584785/26-6a8da45148b37.webp' /></p><p>
</p><p>தாம் வெற்றி பெற்ற செய்தியை அறிந்த பின்னர் காருக்குத் திரும்பிச் சென்று தனது கணவரிடம் கூறியபோது, அவர் முதலில் அதை நம்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முதலில் அவர் என்னை நம்பவில்லை.</p><p> பின்னர் வெற்றிச் சீட்டின் சரிபார்ப்பு ரசீதைக் காட்டினேன். அதில் இருந்த பூஜ்ஜியங்களை அவர் எண்ணிப் பார்த்தார் என ஜேன் கூறியுள்ளார்.
</p><p>இந்த எதிர்பாராத பெரும் தொகை கிடைத்துள்ளதால், இனி தனது வாழ்க்கையில் “அதிக சுதந்திரத்துடன்” செயல்பட முடியும் என ஜேன் தெரிவித்துள்ளார்.
</p><p>தனது வீட்டில் சில புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதுடன், பணத்தின் ஒரு பகுதியை முதலீடு செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளார். </p><p>
அதேவேளை, தன்னை மகிழ்விக்கும் வகையில் சொகுசுக் கப்பல் பயணத்தின்போது ஒரு தனிப்பட்ட ஸ்யூட் அறையில் தங்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T20:03:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோதமாக கடத்தப்பட்ட பெருந்தொகையான இஞ்சி மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/large-consignment-of-smuggled-ginger-seized-1787687862"></link>
            <id>https://jvpnews.com/article/large-consignment-of-smuggled-ginger-seized-1787687862</id>
            <summary type="text">மன்னாரில் நறுவிலிக்குளம் மற்றும் வங்காலை கடற்கரைப் பகுதிகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம் உலர் இஞ்சித் தொகை ஒன்று கடற்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னாரில் நறுவிலிக்குளம் மற்றும் வங்காலை கடற்கரைப் பகுதிகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம் உலர் இஞ்சித் தொகை ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p> 

கடத்தல்காரர்களால் கைவிட்டுச் செல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் இந்த இஞ்சி தொகையானது&nbsp; கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/047416f7-0bbd-4183-95f8-7c905aa17b3b/26-6a8df3b7ceb72.webp' /></p><h2>சோதனை</h2><p> 

அதற்கமைய, வடமத்திய கடற்படை கட்டளைக்குச் சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் புஸ்ஸதேவவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம், நறுவிலிக்குளம் மற்றும் வங்காலை கடற்கரைப் பகுதிகளில் இருந்த சந்தேகத்திற்கிடமான 2 பொதிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.</p><p> 

இதன்போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்து கடத்தல்காரர்களால் அந்த கடற்கரைப் பகுதிகளில் கைவிட்டுச் செல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 240 கிலோகிராமிற்கும் அதிகமான உலர் இஞ்சித் தொகை கடற்படையினால் மீட்கப்பட்டது.</p><p></p><p> 

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட உலர் இஞ்சித் தொகை முருங்கன் மற்றும் வங்காலை பொலிஸ் நிலையங்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T19:57:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் இருந்த கண்ணிவெடிகள்! ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mines-in-international-waters-of-strait-of-hormuz-1787686488"></link>
            <id>https://ibctamil.com/article/mines-in-international-waters-of-strait-of-hormuz-1787686488</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையின் சர்வதேசக் கடல் பகுதிக்குள் இருந்த அனைத்துக் கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டுவிட்டன அல்லது வெடித்துச் சிதறடிக்கப்பட்டுவிட்டன என்று அமெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையின் சர்வதேசக் கடல் பகுதிக்குள் இருந்த அனைத்துக் கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டுவிட்டன அல்லது வெடித்துச் சிதறடிக்கப்பட்டுவிட்டன என்று அமெரிக்கக் கடற்படை தன்னிடம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
 ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>பூஜ்ய சகிப்புத்தன்மை</h2><p>
</p><p>
இந்நிலையில், புதிதாகக் கண்ணிவெடிகளை வைக்கும் எந்தவொரு கப்பலும் அல்லது படகும் உடனடியாகவும் துல்லியமாகவும் அழிக்கப்படும் என்று ஈரானுக்கு எச்சரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது எனறு அவர் அதில் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c89a73d4-47e9-4104-90dd-5f8f1f77646b/26-6a8df0f120a9d.webp' /></p><p><i>Image Credit: PBS</i></p><p>
</p><p>
மேலும், நீரிணைியில் கண்ணிவெடிகள் வைப்பதற்கு எதிரான “பூஜ்ய சகிப்புத்தன்மை” (Zero Tolerance) கொள்கை முழு வீச்சில் நடைமுறையில் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T19:49:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மன் விமான நிலையம் ஒன்றில் மீண்டும் ட்ரோன் தாக்குதல் முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/drone-near-leipzig-airport-1787686820"></link>
            <id>https://news.lankasri.com/article/drone-near-leipzig-airport-1787686820</id>
            <summary type="text">Third drone found near Leipzig airport: லீப்சிக் விமான நிலையத்திற்கு அருகே மூன்றாவது ட்ரோன் மற்றும் சந்தேகத்திற்குரிய ராணுவ வெடிபொருட்கள்.
லீப்சிக் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Third drone found near Leipzig airport: லீப்சிக் விமான நிலையத்திற்கு அருகே மூன்றாவது ட்ரோன் மற்றும் சந்தேகத்திற்குரிய ராணுவ வெடிபொருட்கள்.</p><p>
லீப்சிக் விமான நிலையத்தின் மீதான தாக்குதல் முயற்சியுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மூன்றாவது ட்ரோன் மற்றும் சந்தேகத்திற்குரிய ராணுவ வெடிபொருட்களை ஜேர்மன் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.</p><h2>விரைவில் வெளியிடும்</h2><p>
</p><p>முறியடிக்கப்பட்ட நாசவேலை முயற்சி நடந்து 10 நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 14 அன்று, லீப்சிக் விமான நிலையத்திற்குச் சற்று மேற்கே உள்ள கேபெல்ஸ்கெட்டாலில் (Kabelsketal) அந்த ட்ரோன் கண்டெடுக்கப்பட்டது; அதனுடன் சுமார் 50 கிராம் (1.8 அவுன்ஸ்) எடையுள்ள, இராணுவத் தரத்திலான வெடிபொருள் என்று சந்தேகிக்கப்படும் ஒரு பொருளும் இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35750c42-0720-4f35-a943-02032f82f95f/26-6a8defa7783c7.webp' /></p><p>
</p><p>லீப்சிக் விமான நிலையமானது நேட்டோ (NATO) மற்றும் உக்ரைனின் அன்டோனோவ் ஏர்லைன்ஸ் (Antonov Airlines) ஆகியவற்றால் இராணுவத் தளவாடங்களை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படும் சரக்கு மற்றும் இராணுவப் போக்குவரத்துக்கான ஒரு மையமாகும். </p><p>இந்த விவகாரத்தில் விசாரணையை முன்னெடுத்துவரும் தலைமை சட்டத்தரணி அலுவலகம், செவ்வாய்க்கிழமை அன்று கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.</p><p> ஆனால், ட்ரோன் தாக்குதல்களுக்குப் பின்னால் யார் இருப்பதாகக் கருதப்படுகிறது என்பது குறித்த தகவல்களை அரசாங்கம் விரைவில் வெளியிடும் என்று ஜேர்மன் சேன்ஸ்லர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c46565ce-d6e4-4834-aa19-de7124f8cb4d/26-6a8defa6c5993.webp' /></p><p> </p><p>அவர்கள் இதற்கானத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் குறிப்பிட்ட மெர்ஸ், பாதுகாப்புத் துறையினருடன் இணைந்து அரசாங்கம் இது குறித்து தீவிரமாகப் பணியாற்றி வருகிறது என்றும் விரைவில் இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து அம்பலப்படுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார். </p><p>இந்தத் தாக்குதல் முயற்சியில் ரஷ்ய உளவுத்துறையின் தொடர்பு இருக்கலாம் என்று பரவலாக சந்தேகிக்கப்படும் நிலையில், ரஷ்யா அத்தொடர்பை மறுத்துள்ளது. மட்டுமின்றி, ரஷ்யாவோ அல்லது அதனுடன் நெருங்கிய தொடர்புடைய தரப்போ இதற்குப் பொறுப்பு என்று கருதுகிறதா என்பது குறித்து, தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதை ஜேர்மானிய அரசாங்கமும் இதுவரை தவிர்த்து வந்துள்ளது. </p><p>இந்தத் தாக்குதல் முயற்சி, ஜேர்மனி அதிகளவில் இலக்காகி வருவதைக் காட்டுவதாக மெர்ஸ் கூறியுள்ளார். ராணுவப் பொருட்களைக் கொண்டு செல்வதற்காகப் பயன்படுத்தப்படும் உக்ரேனிய அன்டோனோவ் சரக்கு விமானத்திற்கு அருகே, வெடிபொருட்களுடன் இராணுவ ட்ரோன் ஒன்று ஆகஸ்ட் 4 அன்று கண்டெடுக்கப்பட்டது. </p><p>விசாரணை அதிகாரிகளின் தகவலின் அடிப்படையில், மண்ணெண்ணெய் நிரப்பப்பட்டிருந்த அந்த விமானத்தின் இறக்கைகளில் அந்த ட்ரோன் தரையிறங்கும் நோக்கில் வைக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் அதில் பொருத்தப்பட்டிருந்த வெடிபொருட்கள் வெடிக்கவில்லை என்றும் உறுதி செய்யப்பட்டது.</p><p></p><p> முதல் ட்ரோன் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, இரண்டாவது ட்ரோன் ஒன்று டிஹெச்எல் (DHL) சரக்கு விமானம் ஒன்றின் மீது மோதியிருக்கலாம் என்றும், இதன் காரணமாக அந்த விமானம் தனது தரையிறங்கும் முயற்சியைக் கைவிட்டு மார்சேய் நகருக்குத் திருப்பி விடப்பட்டதாகவும் விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர். </p><p>மூன்றாவது ட்ரோன், லீப்சிக் விமான நிலையத்தின் மேற்கு எல்லையை நேரடியாக ஒட்டியுள்ள ஒரு நகராட்சியின் வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்டது.</p><p> முதற்கட்ட மதிப்பீடுகளின்படி, அதிக வெடிப்புத்தன்மை கொண்ட ஹெக்சோஜென் என்ற வேதிப்பொருளாக இருக்கலாம் எனச் சந்தேகத்தை ஏற்படுத்தும் ஒரு பொருளின் எச்சங்களை காவல்துறை அதிகாரி கண்டெடுத்தார். </p><p>இந்த நிலையில், வெளியேத் தெரிந்ததை விட மிகப்பாரிய தாக்குதல் ஒன்றைத்தான் குற்றவாளிகள் திட்டமிட்டிருக்கக்கூடும் என செய்தி ஊடகங்கள் சந்தேகம் எழுப்பியுள்ளன. </p><p>அந்த ட்ரோன்கள் வெடித்திருந்தால், அவை ஒரு பேரழிவை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்று ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T19:37:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் வெடித்த சிறைச்சாலை மோதல் - யாழில் கள ஆய்வு செய்த நீதியமைச்சரின் முக்கிய கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/justice-minister-conducts-inspection-in-jaffna-1787686243"></link>
            <id>https://tamilwin.com/article/justice-minister-conducts-inspection-in-jaffna-1787686243</id>
            <summary type="text">யாழ்ப்பாண சிறைச்சாலையின் செயற்பாடுகள் மற்றும் நிலைமைகளையும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண சிறைச்சாலையின் செயற்பாடுகள் மற்றும் நிலைமைகளையும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.</p><p> 

இந்த விஜயம் இன்று(25.08.2026) மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஆய்வு நடவடிக்கையையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><h2>

இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கலந்துரையாடல்</h2><p>

இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதற்கமைய, கடந்த காலங்களில்
சிறைச்சாலைகளில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளை கருத்திற்கொண்டு, மாவட்ட
அரசாங்க அதிபர் தலைமையில் சம்பந்தப்பட்ட படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள்,
துறைசார் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றிணைத்து, குறைந்தது
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கலந்துரையாடல்களை நடத்தி, அவசர நிலைமைகளுக்கு
ஒருங்கிணைந்து முகங்கொடுக்கும் வகையில் செயற்பட வேண்டும் எனக்
கேட்டுக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7180e4d0-75f4-42af-9726-d4a236d18975/26-6a8dedec4299f.webp' /></p><p>
</p><p>
அத்துடன், சிறைச்சாலைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும்
ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.
</p><p>
தொடர்ந்து சிறைச்சாலையின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று அங்குள்ள
நிலைமைகளைப் பார்வையிட்ட அமைச்சர், கைதிகளுடனும் கலந்துரையாடினார். </p><h2>

கைதிகளின் பிரச்சினைகள்</h2><p>
இதன்போது சிறைச்சாலையின் வளங்கள், கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்தும் விரிவாகக் கேட்டறிந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b90b9ab-a576-4ad7-879f-b7f33e1becd0/26-6a8deded47e89.webp' /></p><p>
</p><p>
இந்தக் கண்காணிப்பு விஜயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணாநாதன்
இளங்குமரன் மற்றும் வைத்தியர் எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, யாழ்ப்பாண மாவட்ட
அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன், சிறைச்சாலை ஆணையாளர், யாழ்ப்பாண
பிரதேச செயலாளர், பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், இராணுவ மற்றும் பொலிஸ்
அதிகாரிகள், சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
</p><p>
அண்மையில் நாட்டின் பல சிறைச்சாலைகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத்
தொடர்ந்து, சகல சிறைச்சாலைகளினதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,
நீதி அமைச்சர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு நேரில் சென்று நிலைமைகளைப்
பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/421b7ac2-d6cb-441e-9668-9c760a924057/26-6a8dedee1e495.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4e3700a-7f53-4bd9-b574-f35261b48545/26-6a8dedeee5eef.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44c4631c-5a28-4081-abd1-b0c53f770a9c/26-6a8dee4395d31.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T19:33:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிரை புசித்த விருந்துபசாரம் ; அயல் வீட்டார் அரங்கேற்றிய கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/deadly-feast-neighbors-brutal-act-1787684024"></link>
            <id>https://jvpnews.com/article/deadly-feast-neighbors-brutal-act-1787684024</id>
            <summary type="text">அநுராதபுரம் கெக்கிராவ, கொட்டல்பத்த பகுதியில் வீடொன்றில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அநுராதபுரம் கெக்கிராவ, கொட்டல்பத்த பகுதியில் வீடொன்றில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
இந்த சம்பவம் கெக்கிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் திங்கட்கிழமை (25) அதிகாலை இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10094622-59eb-49e2-a8e8-f9e519d0aafe/26-6a8de4ba19300.webp' /></p><h2 style="text-align: justify; ">வாக்குவாதம்</h2><p>
</p><p style="text-align: justify; ">
இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார் என ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
உயிரிழந்தவரின் வீட்டில் நடைபெற்ற விருந்துபசாரத்தின்போது, குறித்த நபருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify; ">

இதன்போது, சந்தேக நபர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதில் குறித்த நபர் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
அதைத் தொடர்ந்து சந்தேக நபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கெக்கிராவ பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-25T19:30:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தடுப்புக்காவலில் சுரேஷ் சலேவுக்கு அநீதி..! சிறைச்சாலைக்கு அனுப்புமாறு அடம்பிடிக்கும் மனைவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/injustice-to-suresh-salley-in-detention-1787685432"></link>
            <id>https://tamilwin.com/article/injustice-to-suresh-salley-in-detention-1787685432</id>
            <summary type="text">தேசியப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவுக்கு பாரிய அநீதி இழைக்கப்படுவதாக முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசியப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவுக்கு பாரிய அநீதி இழைக்கப்படுவதாக முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
</p><p>
முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சித் தலைமையகத்தில் இன்று(25.08.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கவலை தெரிவித்துள்ளார்.
</p><h2>
சுரேஷ் சலே மனைவி அனுப்பிய கடிதம்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

முன்னாள் அரச புலனாய்வுத் தலைவர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய 180 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

தற்போதைய அமைச்சரவை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு புதிய சட்டத்தைக் கொண்டுவரவுள்ள நிலையில், இந்த மாதம் 28ஆம் திகதியுடன் முடிவடையும் இந்த 180 நாள் தடுப்புக் காவல் உத்தரவை மேலும் நீடிப்பது பொருத்தமற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1318fa56-f038-4302-a4c5-56c0f3832e71/26-6a8deafc9d9a7.webp' /></p><p>
</p><p>
சுரேஷ் சலேவின் மனைவி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தடுப்புக் காவல் உத்தரவின்றி அவரை விளக்கமறியலில் வைக்குமாறும், அவ்வாறு செய்தால் விசாரணைகளுக்கு அவர் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>

இந்திய உளவுத்துறை விடுத்த எச்சரிக்கை</h2><p>
180 நாட்கள் கடந்தும் இதுவரை குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாமலும், நீதிமன்ற நடவடிக்கை தொடங்கப்படாமலும் இருந்தால், அவரை விளக்கமறியலில் வைத்து சட்ட நடவடிக்கைகளைத் தொடருமாறு நாமும் வலியுறுத்துகிறோம்.
</p><p>
சஹ்ரான் மற்றும் நௌஃபர் மௌலவி இணைந்து இத்தகைய பயங்கரவாதத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளமை குறித்து 2015 முதலே குற்றப்புலனாய்வுத் துறை (CID) அறிந்திருந்தது.

தாக்குதலுக்கு 3 மாதங்களுக்கு முன்பு வனாத்தவில்லுவில் 100 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fb7b36e-fc64-4b88-bbcf-16395ca940de/26-6a8deafd74cf6.webp' /></p><p> </p><p>மாவனல்லையில் புத்தர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. தாக்குதலுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பு இந்திய உளவுத்துறையும் எச்சரித்தது.
</p><p>
இவை அனைத்தையும் அறிந்திருந்தும் தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், 2016 முதல் 2019 டிசம்பர் வரை மலேசியா மற்றும் இந்தியாவில் தங்கியிருந்த சுரேஷ் சலேவை எந்த அடிப்படையில் கைது செய்துள்ளனர் என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.
</p><h2>
அசாத் மௌலானா வழங்கிய பேட்டி</h2><p>
ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு உட்பட 7 உள்நாட்டுக்குழுக்களின் அறிக்கைகளிலோ அல்லது தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களிலோ சுரேஷ் சலேவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. </p><p>

மேலும், 2 ஆண்டுகள் ஆய்வு செய்த எஃப்பிஐ (FBI) மற்றும் ஆஸ்திரேலிய பொலிஸ் போன்ற சர்வதேச புலனாய்வு அமைப்புகளும் இது 'ஐஎஸ்ஐஎஸ்' (ISIS) தாக்குதல் என்றே முடிவுக்கு வந்தன, அவற்றிலும் சலேவின் பெயர் இடம்பெறவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac5bc92b-605b-4572-aad4-ececcca6ed14/26-6a8deafe631b6.webp' /></p><p>
</p><p>
சேனல் 4 (Channel 4) ஊடகத்திற்கு எல்.டி.டி.ஈ முன்னாள் உறுப்பினரான அசாத் மௌலானா அளித்த பொய் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே சலே கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த கூற்று முற்றிலும் பொய்யானது என முன்னாள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட இமாம் ஆணைக்குழுவும் உறுதிப்படுத்தியுள்ளது.</p><h2>


சுரேஷ் சலேவுக்கு இழைக்கப்படும் அநீதி</h2><p>
சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் (Writ) மனுவுக்கு எதிராக பேராயர் கார்டினல் மட்டுமே மனுத்தாக்கல் செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7e2ec75-cb2e-4c5f-a813-a598ccd155a4/26-6a8deaff17d8b.webp' /></p><p> </p><p>

தாக்குதல் நடந்த போது சுரேஷ் சலே அரச புலனாய்வுத் தலைவராக இருந்தார் என்ற தவறான தகவலின் அடிப்படையிலேயே பேராயர் அதனைச் செய்துள்ளார்.
</p><p>
நாட்டின் பயங்கரவாத வலையமைப்பை அழிக்க பாடுபட்ட ஒரு படைவீரருக்கு இழைக்கப்படும் இந்த அநீதி கவலையளிக்கிறது என்றார்.&nbsp;</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_9MgXOwQM-Q" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-25T19:21:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிறைவு பெற்றது மகிந்தானந்தவுக்கு எதிரான மற்றுமொரு விசாரணை! குற்றப்பத்திரிகை தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/another-investigation-against-mahindananda-1787684089"></link>
            <id>https://ibctamil.com/article/another-investigation-against-mahindananda-1787684089</id>
            <summary type="text">நோய்க்கிருமி நுண்ணுயிரிகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அடங்கிய இயற்கை உரக் கப்பலை இறக்குமதி செய்வதற்கு, சட்டப்பூர்வ அனுமதி பெறாமல் கடன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோய்க்கிருமி நுண்ணுயிரிகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அடங்கிய இயற்கை உரக் கப்பலை இறக்குமதி செய்வதற்கு, சட்டப்பூர்வ அனுமதி பெறாமல் கடன் கடிதங்களை (LC) திறந்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 1.3 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
</p><p>
முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே மற்றும் மகேஷ் லசந்த கம்மன்பில ஆகியோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதை, கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். பொதரகம முன்னிலையில் இலஞ்ச ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.
</p><p>
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மகிந்தானந்த அலுத்கமகே சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், பிணையில் உள்ள இரண்டாவது சந்தேகநபரான மகேஷ் லசந்த கம்மன்பில நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.</p><p></p><h2>குற்றப்பத்திரிகை தாக்கல்</h2><p>

இந்நிலையில், விசாரணைகள் நிறைவடைந்து, சேகரிக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் இலஞ்ச ஆணைக்குழுவின் சட்டப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பான தகவல்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c044ea4-7a4f-4ca4-93d8-c5c4d8a2ff9d/26-6a8de6e20b878.webp' /></p><p>

முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை பரிசீலித்த நீதிபதி, இந்த வழக்கினை மீண்டும் விசாரணைக்கு அழைப்பதற்காக டிசம்பர் 4 ஆம் திகதியை நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T19:15:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸில் திடீரென வீசிய சூறாவளி - 1400 வீடுகளுக்கு மின்சாரம் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hurricane-in-france-1787684360"></link>
            <id>https://tamilwin.com/article/hurricane-in-france-1787684360</id>
            <summary type="text">பிரான்ஸின் தென்மேற்குப் பிராந்தியத்திலுள்ள ஓட் மாவட்டத்தில் வீசிய அரிய
வகைச் சூறாவளி காரணமாகப் பல வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 39 பேர்
காயமடைந்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸின் தென்மேற்குப் பிராந்தியத்திலுள்ள ஓட் மாவட்டத்தில் வீசிய அரிய
வகைச் சூறாவளி காரணமாகப் பல வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 39 பேர்
காயமடைந்துள்ளதாகப் பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
ஓட் மாவட்டத்தில் அமைந்துள்ள பொமாஸ் என்ற கிராமத்தைத் தாக்கிய இந்த 
சூறாவளியினால் இருவர் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், அந்த கிராமத்திலுள்ள சுமார் 300 வீடுகள் பகுதியளவிலும் முழுமையாகவும்
சேதமடைந்துள்ளதுடன், மக்களின் பாதுகாப்பு கருதி கிராமத்தில் உள்ள அனைவரும்
தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
</p><h2>
 வானிலை அவதான நிலையம் வெளியிட்ட தகவல்</h2><p>
அந்த பகுதியில் வீசிய கடுமையான வெப்ப அலை நிறைவுக்கு வந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட
இடி மின்னலுடன் கூடிய காலநிலை மாற்றமே இந்த சூறாவளிக்குக் காரணம் என வானிலை
அவதான நிலையம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdc2ffcc-9c2d-4e8b-b9a5-e191c76f89a7/26-6a8de6571c16a.webp' /></p><p>

இதன் காரணமாக அப்பகுதியிலுள்ள 1,400 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கான மின்சார
விநியோகம் தடைப்பட்டுள்ளது.
</p><p>
பிரான்ஸில் சுழல் சூறாவளித் தாக்குதல்கள் ஏற்படுவது மிகவும் அரிதான ஒரு
நிகழ்வு என்பதுடன், இது அப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும்
பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p>&nbsp; &nbsp;&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T19:01:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸாரிடம் வசமாக பிடிபட்ட இளம்பெண் ; சோதனையில் காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-woman-caught-red-handed-by-police-1787682923"></link>
            <id>https://jvpnews.com/article/young-woman-caught-red-handed-by-police-1787682923</id>
            <summary type="text">கல்கிஸ்ஸை குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் சுமார் 1.6 மில்லியன் ரூபாய் பெறுமதியான 120,000 மில்லிலிட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கை...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கல்கிஸ்ஸை குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் சுமார் 1.6 மில்லியன் ரூபாய் பெறுமதியான 120,000 மில்லிலிட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்டவர் மொறட்டுவை, கொரலவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பெரேரா மாவத்தையில் வசிக்கும் 31 வயதுடைய பெண் ஆவார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c06b3413-b871-4f38-a8bf-26ac4fae7566/26-6a8de06d1bd22.webp' /></p><h2 style="text-align: justify; ">கைது நடவடிக்கை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கல்கிஸ்ஸை குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியின் நேரடி மேற்பார்வை மற்றும் வழிகாட்டலின் கீழ் இரத்மலானை கடற்கரைப் பகுதியில் வைத்து இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்ட பெண், மேலதிக விசாரணைகளுக்காக கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-25T19:00:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் தீவிரமடையும் வெள்ளப்பெருக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/floods-intensify-in-southern-china-1787682072"></link>
            <id>https://tamilwin.com/article/floods-intensify-in-southern-china-1787682072</id>
            <summary type="text">நாரா சூறாவளி காரணமாக பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து தெற்கு சீனாவில்
வெள்ளப்பெருக்கு மிக தீவிரமடைந்துள்ளது.அத்துடன், குடியிருப்புகள் மற்றும் வணிக
ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாரா சூறாவளி காரணமாக பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து தெற்கு சீனாவில்
வெள்ளப்பெருக்கு மிக தீவிரமடைந்துள்ளது.</p><p>அத்துடன், குடியிருப்புகள் மற்றும் வணிக
நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான
இடங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.
</p><p>
சீனாவின் குவாங்சி பிராந்தியத்தில் அமைந்துள்ள சொங்சுவோ நகரில் 2008 ஆம் ஆண்டு
பதிவான அதிகபட்ச வெள்ள நீர்மட்டத்தை விடவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளதைத்
தொடர்ந்து, அங்குள்ள 15,000 க்கும் மேற்பட்ட மக்கள் உடனடியாக
வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><h2>கனமழை</h2><p>

அத்துடன், குவாங்சி பிராந்தியம் முழுவதிலும் இதுவரை 54,000 க்கும் அதிகமான
மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகச் சீன அரசுத்
தொலைக்காட்சி அறிவித்துள்ளது.</p><p>

தென் சீனக் கடலின் பெங்பு வளைகுடாப் பகுதியில் சில நாட்களாக நிலை கொண்டிருந்த
நாரா சூறாவளி, ஹாய்னான் தீவுப் பகுதியில் கரையை கடந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cda15043-8dc1-4a1c-b8a7-00026749f1a2/26-6a8de5243408f.webp' /></p><p>
</p><p>
இதன் காரணமாகக் குவாங்சி, ஹாய்னான் மற்றும் குவாங்டாங் ஆகிய மாகாணங்களில்
இடைவிடாது கனமழை பெய்து வருகின்றது.</p><p>இதேவேளை, சௌடெல் என்ற பிறிதொரு சூறாவளி ஜப்பானின் தென் பகுதியையும் தாய்வானின்
வட பகுதியையும் நோக்கி நகர்ந்து வருவதாகப் வானிலை அவதான நிலையங்கள்
எச்சரித்துள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T18:57:59+00:00</updated>
        </entry>
    </feed>
