<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-29T07:50:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நபர் ஒருவர் கொடூரமாக கொலை - சகோதரியின் மகனின் கொடூரச் செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-killed-brutally-1785291583"></link>
            <id>https://tamilwin.com/article/man-killed-brutally-1785291583</id>
            <summary type="text">கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீரப்பனை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிற்குள் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டே நப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீரப்பனை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிற்குள் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டே நபர் ஒருவர் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். </p><p>நேற்று(28.07.2026) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். </p><p>

தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தவர் கம்பளை, கீரப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.</p><p></p><p> </p><h2><b>

குடும்ப வன்முறை</b></h2><p>காயம் அடைந்த நபர் ஒருவர் கீழே விழுந்து கிடப்பதாகக் கம்பளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின்படி உடனடியாக செயற்பட்ட பொலிஸார், காயமடைந்தவரை கம்பளை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13829db9-86d6-435d-9658-c6dbc49399da/26-6a6964f7a3745.webp' /></p><p>இந்த நபருக்கும் அவரது சகோதரியின் மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதன் காரணமாக, சகோதரியின் மகனால் கத்தியால் தாக்கி இந்தச் கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

43 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T07:43:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் ஆபத்தாக மாறும் நோய் நிலைமை: அதிகரிக்கும் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/number-of-dengue-patients-has-crossed-83-000-1785310244"></link>
            <id>https://tamilwin.com/article/number-of-dengue-patients-has-crossed-83-000-1785310244</id>
            <summary type="text">நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை 3,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.அத்துடன், டெங்கு நோய் காரணமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை 3,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>அத்துடன், டெங்கு நோய் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
 

இவர்களில் அதிகளவான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 17,779 ஆகும்.</p><p></p><h2>டெங்கு நோயாளர்கள்&nbsp;</h2><p>

 

இரண்டாவது அதிகளவான நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 16,665 ஆகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
 

இதேவேளை, அதிகளவான நோயாளர்கள் பதிவான மாகாணமாக மேல் மாகாணம் தொடர்ந்து நீடிப்பதுடன், இந்த ஆண்டில் இதுவரை மேல் மாகாணத்தில் 44,359 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac30b68c-0ab4-49be-a976-f0eb6885d21a/26-6a69ae7b7a01b.webp' /></p><p>
</p><p>
 

இரண்டாவதாக தென் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அந்தப் பிராந்தியத்தில் 12,586 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
</p><p>
 

நாடு முழுவதும் டெங்கு நோய் பரவி வரும் இந்த வேளையில், 175 அதி-அபாய வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T07:40:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/highest-100-crore-movies-in-tamilnadu-1785307018"></link>
            <id>https://cineulagam.com/article/highest-100-crore-movies-in-tamilnadu-1785307018</id>
            <summary type="text">ரூ. 100 கோடி வசூல்&amp;nbsp; &amp;nbsp;தமிழ்நாட்டில் ஒரு திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்வது என்பது மாபெரும் சாதனையாகும். இதனை தொடர்ந்து ரஜினி, வ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரூ. 100 கோடி வசூல்&nbsp; &nbsp;</h2><p>தமிழ்நாட்டில் ஒரு திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்வது என்பது மாபெரும் சாதனையாகும். இதனை தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித் போன்ற டாப் நடிகர்கள் செய்துள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7788292e-dffe-4743-94e0-2fb2a205788b/26-6a699f8de740b.webp' /></p><p>

மேலும், மற்ற மாநிலங்களில் இருந்து வெளிவந்த திரைப்படங்களும் தமிழ்நாட்டில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளன. 

இந்நிலையில், தமிழ்நாட்டில் எந்த நடிகர் அதிக முறை ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படங்களை கொடுத்துள்ளார் என்பதைத்தான் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.</p><p></p><h2>விஜய்யா அல்லது ரஜினியா?</h2><p>விஜய் நடிப்பில் வெளிவந்த 9 திரைப்படங்கள் தமிழ்நாட்டில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. சமீபத்தில் வெளியான <a href="https://www.youtube.com/watch?v=hPCdinzXbPo" target="_blank">ஜனநாயகன் </a>திரைப்படமும் 6 நாட்களிலேயே தமிழ்நாட்டில் ரூ. 100 கோடியை கடந்துவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05f53104-2435-4139-9ae3-24be22d81e4f/26-6a699f8d3a0f3.webp' /></p><p>

இதை தொடர்ந்து ரஜினிகாந்தின் 6 திரைப்படங்களும், அஜித்தின் 4 திரைப்படங்களும் தமிழகத்தில் ரூ. 100 கோடி வசூலித்துள்ளன. மேலு,ம் கமல் ஹாசன் - 1, சிவகார்த்திகேயன் - 1, பிரபாஸ் - 1, யாஷ் - 1, சூர்யா - 1 மற்றும் பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 ஆகிய திரைப்படங்களும் ரூ. 100 கோடிக்கும் மேல் தமிழ்நாட்டில் வசூலித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-29T07:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த 3 வருடங்களுக்கு H-1B விசா நிறுத்தப்படலாம்: ஐ.டி ஊழியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/could-halt-h-1b-visas-1785310756"></link>
            <id>https://news.lankasri.com/article/could-halt-h-1b-visas-1785310756</id>
            <summary type="text">H-1B விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றத் திட்டமிட்டிருந்தால், தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.H-1B முறைகேடு ஒழிப்பு
புதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>H-1B விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றத் திட்டமிட்டிருந்தால், தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.</p><h2>H-1B முறைகேடு ஒழிப்பு</h2><p>
</p><p>புதிய H-1B விசாக்களை வழங்குவதை மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பது உட்பட, H-1B விசா திட்டத்தில் முக்கிய மாற்றங்களைக் கோரும் பிரேரணை ஒன்றை அமெரிக்க செனட் சபையில் குடியரசுக் கட்சி செனட்டர் ஒருவர் தாக்கல் செய்துள்ளார். </p><p>இந்த முன்மொழிவு தற்போதைய நிலையில் ஒரு பிரேரணையாக மட்டுமே உள்ளது. இது இன்னும் சட்டமாக மாறவில்லை; H-1B திட்டத்தில் இதுவரை எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. </p><p>ஆனால் இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டால், ஒவ்வொரு வருடமும் அதிக எண்ணிக்கையிலான H-1B விசாக்களைப் பெறும் இந்தியத் தொழில்முறை நிபுணர்களை இது கணிசமாகப் பாதிக்கக்கூடும். </p><p>அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தைச் சேர்ந்த செனட்டர் டிம் ஷீஹி, செனட் சபையில் H-1B முறைகேடு ஒழிப்புச் சட்டத்தை' (End H-1B Abuse Act) அறிமுகப்படுத்தியுள்ளார். </p><p>ஷீஹியின் கூற்றுப்படி, போதுமான தகுதிவாய்ந்த பணியாளர்களைக் கண்டறிய முடியாத சிறப்புத் திறன் சார்ந்த பணிகளை நிரப்புவதற்காகவே H-1B திட்டம் உருவாக்கப்பட்டது என அவர் வாதிடுகிறார். </p><p>மேலும், குறைந்த ஊதியம் பெறும் வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கொண்டு அமெரிக்கத் தொழிலாளர்களை இடமாற்றம் செய்வதற்கு இது பயன்படுத்தப்படக் கூடாது என்றும் அவர் வாதிட்டுள்ளார். </p><p>முன்மொழியப்பட்ட இந்தச் சட்டம் அத்திட்டத்தை அதன் அசல் நோக்கத்திற்கேற்ப மீட்டெடுக்கும் என்றும், பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் என்றும், மோசடிகளைக் குறைக்கும் என்றும், அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். </p><p>முன்மொழியப்பட்ட சட்ட மசோதா பல முக்கிய மாற்றங்களை உள்ளடக்கியுள்ளது. அதில், அனைத்து புதிய H-1B விசாக்களையும் மூன்று வருடங்களுக்கு நிறுத்தி வைக்கக் கோரப்பட்டுள்ளது. </p><p>ஒவ்வொரு H-1B விண்ணப்பத்திற்கும் 100,000 அமெரிக்க டொலர் (ரூ. 96,00,000) கட்டாயக் கட்டணமாக அமுல்படுத்த வேண்டும். தற்போதைய சீரற்ற குலுக்கல் முறையை மாற்றி, ஊதியத்தின் அடிப்படையில் தெரிவு செய்யும் முறையை அமுல்படுத்த வேண்டும்; இதில் அதிக ஊதியம் தரும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வாய்ப்புள்ளது.</p><h2>இந்தியர்களையே பாதிக்கும்</h2><p> </p><p>H-1B விசா வைத்திருப்பவர் ஒரே நேரத்தில் பல இடங்களில் பணிபுரியும் முறையைத் தடை செய்ய வேண்டும். H-1B விசா வைத்திருப்பவர்கள் நிரந்தரக் குடியுரிமைக்கு முயற்சிக்கும் அதே வேளையில் அமெரிக்காவில் பணிபுரிய அனுமதிக்கும் 'இரட்டை நோக்கம்' (dual intent) தொடர்பான ஏற்பாட்டை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். </p><p>H-வகை விசா வைத்திருப்பவர்கள் தங்கள் சார்ந்திருப்பவர்களை அமெரிக்காவிற்கு அழைத்து வருவதைத் தடுக்க வேண்டும். இந்த நிலையில், H-1B விசா தொடர்பான புதிய பிரேரணை சட்டமாக நிறைவேறினால், அது இந்தியர்களையே வெகுவாக பாதிக்கும். </p><p>H-1B திட்டத்தின் மிகப்பெரிய பயனாளிகளில் இந்தியாவும் ஒன்று. அமெரிக்காவில் பணிபுரிவதற்காக, ஆயிரக்கணக்கான இந்தியப் பொறியாளர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பிற திறன்மிக்க ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டும் H-1B விசாக்களைப் பெறுகின்றனர். </p><p>தற்போதைக்கு, ஏற்கனவே உள்ள H-1B விசா திட்டம் தற்போதைய விதிகளின்படியே தொடர்ந்து செயல்படும். H-1B விசாவிற்கு விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ள இந்தியர்கள், இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் மட்டும் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை என்றே கூறப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T07:37:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈராக் மீது அமெரிக்க - சவூதி வான்வழித் தாக்குதல்; மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/u-s-and-saudi-arabia-strike-iran-backed-in-iraq-1785303129"></link>
            <id>https://canadamirror.com/article/u-s-and-saudi-arabia-strike-iran-backed-in-iraq-1785303129</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஈராக்கில் உள்ள,ஈரான் ஆதரவு இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு தெரிவித்துள்ளது.

கடந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஈராக்கில் உள்ள,ஈரான் ஆதரவு இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
கடந்த 72 மணித்தியாலங்களில் அமெரிக்கப் படைகள் மற்றும் சவூதி எரிசக்தி உட்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு, ஈரான் புரட்சிகரக் காவல்படை 30 க்கும் மேற்பட்ட வான்வழி தாக்குதல்களை நடத்தி இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3796d8ed-8e84-489f-98c4-98d2abf4eea0/26-6a69905b730d7.webp' /></p><p>
</p><p>
இந் நிலையில் அடந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக, ,ஈரான் ஆதரவு இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-29T07:33:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2031 ஆம் வருடம் தமிழகத்தில் இவர்கள்தான் அரசியல் களம்; ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2031-political-cm-vijay-vs-dhanush-radhan-pandit-1785310210"></link>
            <id>https://jvpnews.com/article/2031-political-cm-vijay-vs-dhanush-radhan-pandit-1785310210</id>
            <summary type="text">&amp;nbsp; தமிழ் நாட்டின் முதலமைச்சர் விஜயை பின்பற்றி நடிகர் தனுஷும் அரசியலுக்கு வரப்போகிறார் என்கிற செய்தி சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகின்றது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தமிழ் நாட்டின் முதலமைச்சர் விஜயை பின்பற்றி நடிகர் தனுஷும் அரசியலுக்கு வரப்போகிறார் என்கிற செய்தி சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகின்றது.
</p><p>
இந் நிலையில் தமிழ் நாட்டின் முதலமைச்சர் விஜயின் ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் ‘நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் திமுக, அதிமுக காலியாகும், என கூறியுள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f9470d3-5478-4818-b539-1884f48a6397/26-6a69ac041c5e8.webp' /></p><h2>அரசியலில் ரிஸ்க் எடுக்க தனுஷ் தயாராக இருந்தால்.....&nbsp;</h2><p>
</p><p>
தனுஷின் ஜாதகத்தில் அந்த யோகம் இருக்கிறது.. உதவி செய்வதற்கு அனுபவமும், அறிவும் தேவையில்லை.. மனம் இருந்தால் போதும்.. அரசியலில் ரிஸ்க் எடுக்க தனுஷ் தயாராக இருந்தால் 2031 ஆம் வருடம் விஜய் vs தனுஷ் என்று அரசியல் களம் மாறும்’ எனவும்&nbsp; ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட்&nbsp; &nbsp;கூறியுள்ளாராம்.</p><p></p><p>
</p><p>
அதேவேளை சமீபத்தில் தனது பிறந்த நாள் விழாவில் ரசிகர்கள் முன்பு பேசிய தனுஷ் ‘நாம் இதோடு நின்று விடக்கூடாது.. உங்கள் வீட்டு அருகில் வசிக்கும் மக்களுக்கு என்ன பிரச்சனை என்றாலும் உதவி செய்யுங்கள்.. நலத்திட்ட உதவிகளை செய்யுங்கள்.. நாம் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும்’ என்று பேசினார்.</p><p>

தனுசின் இந்த பேச்சை தொடர்ந்தே அவர் அரசயலுக்குள் வரலாம் என்கின்ற ஊகங்கள் எழுந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T07:30:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சின்ன ரோலுக்கு கூட அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண கேட்டாங்க..வேண்டானு சொன்னாலும்! அய்யனார் துணை நடிகை...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/ayyanar-thunai-serial-reshma-open-adjustments-1785310453"></link>
            <id>https://viduppu.com/article/ayyanar-thunai-serial-reshma-open-adjustments-1785310453</id>
            <summary type="text">விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருபவர் தான் நடிகை ரேஷ்மா பிரசாத். யூடியூப் மூலம் பிரபலமான ரேஷ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருபவர் தான் நடிகை ரேஷ்மா பிரசாத். யூடியூப் மூலம் பிரபலமான ரேஷ்மா சினிமா துறையில் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து பேசியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff3c80ef-44cd-43fb-aeb5-9f8a83a018c2/26-6a69acf71a27b.webp' /></p><h2>அய்யனார் துணை&nbsp;ரேஷ்மா</h2><p> அதில், நான் முதலில் நடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தபோதெல்லாம் எனக்கு ஒரு சின்ன ரோலில் நடிக்ககூட அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண முடியுமான்னு கேட்டாங்க. அதை கேட்டு எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. ரெஸ்யூம் கொடுக்கும் போதுகூட அட்ஜஸ்ட்மெண்ட் ஓகாவா என்று ஒரு கேள்வி வைத்திருக்கிறார்கள். அதற்கு நாம் வேண்டாம் என்று சொன்னாலும் மேனேஜர் ஃபோன் செய்து நீங்கள் அட்ஜஸ்ட்மெண்ட் ஓகாவான்னு ஓபனாகவே கேட்பார்.</p><p> எந்தவொரு குற்ற உணர்ச்சியோ அல்லது பயமோ, வருத்தமோ இல்லாமல் அவங்க கேட்பாங்க. அப்போ நான் ரெஸ்யூமில் இல்லை முடியாது என்று சொல்லி இருக்கேனே என்று சொன்னால், அவங்க அப்படியா நாங்க வேலை பிசில கவனிக்கவில்லை, எங்களுக்கு மேல் இடத்தில் இருந்து கேட்டாங்க. அதை சொல்றதுக்காகத்தான் உங்ககிட்ட பேசுறோம் என்று மீண்டும் கேட்பாங்க. நாம முடியாதுன்னு சொன்னா போனை வச்சுடுவாங்க, பின் வாய்ப்பே இல்லாமல் போயிடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd264e75-57b5-4205-813f-844ae5f37420/26-6a69acf7c8197.webp' /></p><p> </p><p>அப்படி ரொம்ப நாள் ஆச்சு அந்த நேரத்துல என் அம்மா தான் எனக்கும், என் குடும்பத்தின் செலவுக்கும் மொத்தமாக கவனிச்சாங்க. ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் வர ஆரம்பித்தது, வெப் தொடர், ஷார்ட் பிலிம், சீரியல்கள் என்று அடுத்தடுத்து வர தொடங்கியது. அதன்பின் இப்போது சீரியல்களில் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தாலும் ஆரம்பத்தில் இந்த அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை எனக்கு பெரிய மன நெருக்கடி கொடுத்தது என்று ரேஷ்மா கூறியிருக்கிறார்.</p>]]></content>
            <updated>2026-07-29T07:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியாவில் தண்டனை ; சிவராசா அனோஜனை விடுவிக்க அரசாங்கத்திடம் வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/punishment-in-saudi-arabia-srilankan-tamil-youth-1785307101"></link>
            <id>https://jvpnews.com/article/punishment-in-saudi-arabia-srilankan-tamil-youth-1785307101</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம், சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் தொடர்பான நிலைமையை ஆழ்ந்த கவலையுடன் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம், சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் தொடர்பான நிலைமையை ஆழ்ந்த கவலையுடன் அவதானித்துள்ளதாக தெரிவித்துள்ளது. </p><p>

அந்த அமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையில் ,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4001cd6-5a28-4214-bc6c-1b146506c298/26-6a699fdf521e9.webp' /></p><h2>மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம் சமூக ஒற்றுமை</h2><p>
</p><p>
எந்தவொரு மதத்தையும், அதன் புனித ஆளுமைகளையும், மத நம்பிக்கைகளையும் அவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்பதை எமது ஒன்றியம் தெளிவாக ஏற்றுக்கொள்வதுடன் அனைத்து மதங்களும் பரஸ்பர மரியாதை, மனித கண்ணியம், சகிப்புத்தன்மை மற்றும் சமாதானத்தை போதிக்கின்றன என்பதனையும் இங்கு வலியுறுத்துகிறோம்.</p><p> 

 எனவே மத வெறுப்பைத் தூண்டும் வகையிலான கருத்துகளுக்கும் செயல்களுக்கும் எமது ஒன்றியம் என்றுமே ஆதரவு வழங்குவதில்லை.</p><p></p><p>
</p><p>
அதேவேளை, குறித்த சம்பவத்தில் சிவராசா அனோஜன் தனது பதிவை குறுகிய நேரத்திலேயே நீக்கி, தனது தவறினை ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கோரியிருந்ததாக அறியமுடிகின்றது.</p><p>


 இந்நிலையிலும், அவரது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் மனவேதனையையும் அவர்களது எதிர்கால வாழ்வாதாரப் பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு, மனிதாபிமான அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்துகிறோம்.
</p><p>
எனவே, இலங்கை அரசாங்கமானது தனது இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக சவூதி அரேபிய அரசாங்கத்துடன் கலந்துரையாடி, சிவராசா அனோஜனுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையிலிருந்து விலக்களிக்க கூடிய வகையில் ஆகக்கக்கூடிய நிவாரணம் ஏதேனும் வழங்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.</p><p></p><p>
</p><p>
அதேவேளை, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அனைவரும் தாம் வசிக்கும் நாடுகளின் சட்டங்கள், கலாசாரங்கள்,பண்பாடுகள்,நம்பிக்கைகள் மற்றும் மத உணர்வுகளுக்கு முழுமையான மதிப்பினைச் செலுத்தி, குறிப்பாக சமூக வலைத்தளங்களை மிகுந்த பொறுப்புடனும் விழிப்புணர்வுடனும் பயன்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம்.</p><p>

மேற்படிச் சம்பவம் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் மேலும் வலுப்படுத்தும் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும் பிரார்த்தனையுமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-29T07:28:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[88 பந்தில் 186 ஓட்டங்கள் எடுத்து வெற்றி! மூவர் சிக்ஸர்மழை..நொறுங்கிய மார்க்ரம் அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sunrisers-leeds-beat-manchester-by-8-wickets-1785310236"></link>
            <id>https://news.lankasri.com/article/sunrisers-leeds-beat-manchester-by-8-wickets-1785310236</id>
            <summary type="text">The Hundred போட்டியில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது.

ஹெட்டிங்லே மைதானத்தில் நடந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>The Hundred போட்டியில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது.</p><p>

ஹெட்டிங்லே மைதானத்தில் நடந்த The Hundred போட்டியில், மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிகள் மோதின.</p><p>

முதலில் ஆடிய மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணியில் ஜோஸ் பட்லர் (Jos Buttler) 33 பந்துகளில் 63 ஓட்டங்களும், கிளாசென் 27 பந்துகளில் 53 ஓட்டங்களும் விளாசினர்.</p><p> 

இதன்மூலம் மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் 181 ஓட்டங்கள் குவித்தது. நேதன் எல்லிஸ் 2 விக்கெட்டுகளும், கார்ஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். </p><p>

 அடுத்து களமிறங்கிய சன்ரைஸர்ஸ் அணியில் ரிக்கெல்டன் 13 ஓட்டங்களில் வெளியேற, மிட்செல் மார்ஷ் (Mitchell Marsh) சிக்ஸர்களை பறக்கவிட்டு 26 பந்துகளில் 63 ஓட்டங்கள் (5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள்) விளாசி அவுட் ஆனார். </p><p>

பின்னர் கைகோர்த்த ஹாரி புரூக், ஜக் கிராவ்லே கூட்டணி வாணவேடிக்கை காட்டியது. 

இவர்களது அதிரடியில் சன்ரைஸர்ஸ் லீட்ஸ் அணி 88 பந்துகளில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
</p><p>
அணித்தலைவர் ஜக் கிராவ்லே (Zak Crawley) 34 பந்துகளில் 56 ஓட்டங்களும் (3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்), ஹாரி புரூக் 17 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 42 ஓட்டங்களும் விளாசினர்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T07:28:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கை கடற்கரையில் படையெடுக்கும் நீல வண்ண ஜெல்லிமீன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/blue-jellyfish-on-panadura-beach-warning-1785301449"></link>
            <id>https://ibctamil.com/article/blue-jellyfish-on-panadura-beach-warning-1785301449</id>
            <summary type="text">பாணந்துறை கடற்கரைப் பகுதியில் நீல வண்ண ஜெல்லிமீன் ( blue bottle jellyfish) எனப்படும் நச்சு உயிரினங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இது குறித்து அவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாணந்துறை கடற்கரைப் பகுதியில் நீல வண்ண ஜெல்லிமீன் ( blue bottle jellyfish) எனப்படும் நச்சு உயிரினங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.</p><p>

</p><p>இது குறித்து அவதானமான இருக்குமாறு பொதுமக்களுக்கு தேசிய நீர்வள திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
கடற்கரைப் பகுதியில் ஜெல்லிமீன்களின் வரத்து அதிகரித்துள்ளதாகப் பாணந்துறை நகராட்சி மன்றத்திடமிருந்து வந்த தகவலை அடுத்து, இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.</p><p></p><h2>நீல வண்ண ஜெல்லிமீன்கள்</h2><p>
நிலைமையை நேரில் ஆய்வு செய்யவும், ஜெல்லிமீன் இனத்தை அடையாளம் காணவும், பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை மதிப்பிடவும் தேசிய நீர்வள திணைக்கள அதிகாரிகள் பாணந்துறை கடற்கரைக்குச் சென்று பார்வையிட்டனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/748f85cd-481b-4bd6-9188-843239e35177/26-6a69a9e8d2485.webp' /></p><p>பாணந்துறை கடற்கரை முழுவதும் நீல வண்ண ஜெல்லிமீன்கள் கரை ஒதுங்குவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
முன்னதாக, பாணந்துறை கடற்கரையில் நீச்சலில் ஈடுபட்ட பல சுற்றுலாப் பயணிகள் ஜெல்லிமீன் கொட்டுக்கு உள்ளாகினர் என்று முறையிடப்பட்டிருந்தது.
</p><p>
இந்தநிலையில், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
</p><p>
நீல வண்ண ஜெல்லிமீன்களின் கொட்டு கடுமையான வலி தரக்கூடியது என்பதாகவும், சில சந்தர்ப்பங்களில் கடுமையான வலி, ஒவ்வாமை மற்றும் சுவாசப் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T07:23:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் கரையோர பிரதேசங்களுக்கு பலத்த காற்று குறித்த எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/weather-advisory-issued-for-strong-winds-1785305663"></link>
            <id>https://ibctamil.com/article/weather-advisory-issued-for-strong-winds-1785305663</id>
            <summary type="text">ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையும், கல்பிட்டியாவிலிருந்து மன்னார், காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையும் உள்ள கடலோரப் பகுதிகளுக்கு பலத்த காற்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையும், கல்பிட்டியாவிலிருந்து மன்னார், காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையும் உள்ள கடலோரப் பகுதிகளுக்கு பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஆம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
 

இன்று (29.07.2026) வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை நாளை (30.072026) காலை 11.00 மணி வரை அழுலில் இருக்கும் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
 

வானிலை ஆய்வு மையத்தின்படி, குறிப்பிட்ட இடங்களில் சுமார் 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>வானிலை அறிக்கை</h2><p>
 

இதன் காரணமாக&nbsp;வானிலை ஆய்வு மையத்தின் அடுத்தடுத்த அறிவுறுத்தல்களை பொதுமக்கள் கவனமாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/007344c7-54c5-4a17-ad27-272665e935cd/26-6a69aa00d22d4.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T07:22:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சினிமா வட்டாரத்தில் மற்றுமொரு சோகம்; பிரபல குணச்சித்திர நடிகர் திடீர் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/actor-v-c-jayamani-has-passed-away-1785301710"></link>
            <id>https://jvpnews.com/article/actor-v-c-jayamani-has-passed-away-1785301710</id>
            <summary type="text">&amp;nbsp; பிரபல குணச்சித்திர நடிகரும் இயக்குநருமான வி.சி. ஜெயமணி ( ஜூலை 29) சென்னையில் மாரடைப்பு காரணமாக காலமானார்.&amp;nbsp;&amp;nbsp;


திருமதி செல்வம், சிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரபல குணச்சித்திர நடிகரும் இயக்குநருமான வி.சி. ஜெயமணி ( ஜூலை 29) சென்னையில் மாரடைப்பு காரணமாக காலமானார்.&nbsp;&nbsp;</p><p>


திருமதி செல்வம், சிறகடிக்க ஆசை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கும் நடிகர் ஜெயமணி திடீர் மரணம் அடைந்திருப்பது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அவரது மறைவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து இருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3ab9fb7-8410-418d-a688-3fdcd18ab786/26-6a698acfc60c2.webp' /></p><p> </p><p> 

முஸ்தபா, லக்கி மேன், சிங்கம் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். 

மேலும், சுமார் 40-க்கும் மேற்பட்ட சீரியல்களை இயக்கியுள்ளார்.</p><p></p><p> இவர் தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் டப்பிங் யூனியனில் உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார்.


அவரது மறைவு தமிழ் திரையுலகினரிடையேயும், சின்னத்திரை ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T07:18:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காட்டுத்தீயால் உருவாகும் மின்னல்: பிரான்சில் ஒரு அரிய நிகழ்வால் ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pyrocumulus-cloud-lead-seveare-wild-fire-in-france-1785309434"></link>
            <id>https://news.lankasri.com/article/pyrocumulus-cloud-lead-seveare-wild-fire-in-france-1785309434</id>
            <summary type="text">பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள் காட்டுத்தீயை அணைக்க போராடிக்கொண்டிருக்கும் நிலையில், அரிய நிகழ்வொன்றால் மேலும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார்கள்.

பிரான்சில...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள் காட்டுத்தீயை அணைக்க போராடிக்கொண்டிருக்கும் நிலையில், அரிய நிகழ்வொன்றால் மேலும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார்கள்.
</p><h3>
பிரான்சில் ஒரு அரிய நிகழ்வால் ஆபத்து
</h3><p>
பொதுவாக, நீர்நிலைகளிலிருந்து எழும் நீராவி உயர சென்று குளிர்ந்து மேகங்களாகும் என நாம் பள்ளியில் படித்திருக்கிறோம்.
</p><p>
இந்நிலையில், பிரான்சில் காட்டுத்தீயால் எழும் புகை, ’தீ மேகம்’ என்னும் ஒரு விடயத்தை உருவாக்கியுள்ளதை கவனித்துள்ளார்கள் பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e229a01-5f3b-4c27-883b-fbba37df316e/26-6a69a8fc601f6.webp' /></p><p>
இந்த தீ மேகம், flammagenitus, pyrocumulus cloud என்றும் அழைக்கப்படுகிறது.
</p><p>
அதாவது, காட்டுத்தீயால் எழும் புகை, ஒரு சிறிய மேகத்தை உருவாக்க, அது மேலும் மேலும் பெரிதாகி பெரிய மேகமாக மாற, இந்த மேகம் தன் பங்குக்கு மின்னலை உருவாக்க, அந்த மின்னல் மேலும் புதிய காட்டுத்தீயை உருவாக்கும் பேரபாயம் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5941cec1-dadc-4e3b-9bf3-0e057d850b7e/26-6a69af783664b.webp' /></p><p>
விடயம் என்னவென்றால், பிரான்சுக்கு இந்த தீ மேகம் என்னும் நிகழ்வு ஒரு புதிய அனுபவம் என்பதால் அதை எதிர்கொள்வது பிரான்ஸ் நாட்டு தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.&nbsp;</p><p>&nbsp;</p><p>
இதற்கிடையில், இப்படிப்பட்ட அபூர்வ நிகழ்வுகளுக்கு, மனிதனால் உருவாக்கப்பட்ட பருவநிலை மாற்றங்களும் காரணம் என்கிறார்கள் சில அறிவியலாளர்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T07:17:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கெளுத்தி மீன்களில் நேரடியாகப் பரவும் புற்றுநோய்! மனிதர்களுக்கு ஆபத்தா? விஞ்ஞானிகள் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/reveals-transmissible-cancer-in-wild-catfish-1785308390"></link>
            <id>https://manithan.com/article/reveals-transmissible-cancer-in-wild-catfish-1785308390</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்கா–கனடா எல்லையில் அமைந்துள்ள மெம்ஃப்ரேமாகோக் (Memphremagog) ஏரியில் வாழும் காட்டு கெளுத்தி மீன்களில், ஒரு மீனிடமிருந்து மற்றொரு மீனுக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்கா–கனடா எல்லையில் அமைந்துள்ள மெம்ஃப்ரேமாகோக் (Memphremagog) ஏரியில் வாழும் காட்டு கெளுத்தி மீன்களில், ஒரு மீனிடமிருந்து மற்றொரு மீனுக்கு நேரடியாகப் பரவும் அரிய வகை புற்றுநோய் இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். </p><p>புகழ்பெற்ற Nature அறிவியல் இதழில் வெளியான இந்த ஆய்வு, நன்னீர் உயிரினங்களில் நேரடியாகப் பரவும் புற்றுநோய் கண்டறியப்பட்ட முதல் நிகழ்வாக பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/133097e9-16c9-4c17-ba47-b1624176f2cf/26-6a69a89c43387.webp' /></p><p>

2012ஆம் ஆண்டு இந்த ஏரியில், உடலில் கருப்பு நிறக் கட்டிகளுடன் காணப்பட்ட கெளுத்தி மீன்களை ஆய்வாளர்கள் கவனிக்கத் தொடங்கினர். சில ஆண்டுகளுக்குள், அங்கு வாழும் 25 முதல் 40 சதவீத மீன்களுக்கு மெலனோமா வகை புற்றுநோய்க் கட்டிகள் உருவானது கண்டறியப்பட்டது.</p><p></p><h2>ஆய்வில் வெளியான தகவல்</h2><p>
</p><p>
ஆரம்பத்தில் ரசாயன மாசுபாடு அல்லது வைரஸ் தொற்று காரணமாக இருக்கலாம் என கருதப்பட்ட நிலையில், மரபணு ஆய்வுகள் வேறு உண்மையை வெளிப்படுத்தின. இந்த நோய் வைரஸ் அல்லது பாக்டீரியாவால் ஏற்படவில்லை; மாறாக, உயிருடன் இருக்கும் புற்றுநோய் செல்களே ஒரு மீனிடமிருந்து மற்றொரு மீனுக்கு நேரடியாகப் பரவும் “குளோனல் கேன்சர்” வகையைச் சேர்ந்தது என நிரூபிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e486f5d-7b91-4d71-a4a1-7406ec20c953/26-6a69a89ce8839.webp' /></p><p>
இதுவரை நாய்கள், டாஸ்மேனியன் டெவில்ஸ் மற்றும் சில கடல் சிப்பி இனங்களில் மட்டுமே இத்தகைய நேரடியாகப் பரவும் புற்றுநோய் கண்டறியப்பட்டிருந்த நிலையில், தற்போது கெளுத்தி மீன்களில் கண்டறியப்பட்டுள்ள இது, உலகில் அறியப்பட்ட நான்காவது வகையாகப் பதிவாகியுள்ளது.</p><p>

இந்தப் புற்றுநோய் மீன்களின் வாய் பகுதி, மீசைகள் மற்றும் தோலில் கட்டிகளாக உருவாகிறது. இதனால் அவற்றின் உணவு தேடும் திறன் பாதிக்கப்பட்டாலும், ஏரியில் போதுமான உணவு கிடைப்பதால் அவை தொடர்ந்து உயிர்வாழ முடிகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4230ed4a-0f4a-4b4a-aa2e-4813f2ff6d28/26-6a69a89d985cb.webp' /></p><p></p><h2>மனிதர்களுக்கு ஆபத்ததா?&nbsp;</h2><p>

தற்போது இந்த நோயின் தாக்கம் மெம்ஃப்ரேமாகோக் ஏரியைத் தாண்டி நியூயார்க், பென்சில்வேனியா உள்ளிட்ட பகுதிகளிலும் காணப்படுகின்றது.மீன் பிடிப்பவர்கள் பயன்படுத்தும் தூண்டில்கள் அல்லது படகுகள் மூலமாக இந்த செல்கள் மற்ற ஏரிகளுக்கும் சென்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதன் பரவலைக் கண்காணிக்க Fishbrain என்ற செயலி மூலம் ஆய்வாளர்கள் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.</p><p> </p><p>இது முற்றிலும் மீன்களுக்கு இடையே மட்டுமே நிகழும் ஒரு உயிரியல் நிகழ்வாகும். உயிரினத் தடை (Species Barrier) மற்றும் மனிதர்களின் நோய் எதிர்ப்புச் சக்தி காரணமாக, இந்த மீன்களைப் பிடிப்பதாலோ அல்லது சமைத்து உண்பதாலோ மனிதர்களுக்குப் புற்றுநோய் பரவாது என்பதை மருத்துவ வல்லுநர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T07:15:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியா, சீனா மீது 100 சதவீத வரி; டிரம்ப் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-senate-passes-100-tariff-on-india-and-china-1785309254"></link>
            <id>https://canadamirror.com/article/us-senate-passes-100-tariff-on-india-and-china-1785309254</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு , 100 சதவீத கூடுதல் வரியை விதிக்கும் முயற்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு , 100 சதவீத கூடுதல் வரியை விதிக்கும் முயற்சியில் டிரம்ப் இறங்கியிருக்கிறார். </p><p>

இது தொடர்பாக புதிய மசோதாவை அமெரிக்க பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7697fa53-446b-4990-b871-ca976749d994/26-6a69a8487389e.webp' /></p><p>
</p><p>
 இந்த புதிய மசோதா அமெரிக்க செனட் சபையின் நடைமுறை வாக்கெடுப்பில் நிறைவேறியிருக்கிறது. </p><p>

அமெரிக்கா சென்ற உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி முன்னிலையில் கொண்டுவரப்பட்ட இந்த மசோதா அமெரிக்காவின் இரு கட்சிகளின் ஆதரவுடன் சட்டமாவதற்கான முதல் படியை எட்டியிருக்கிறது.</p>]]></content>
            <updated>2026-07-29T07:12:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டிற்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள் - முதலிடத்தை பிடித்த நாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-tourist-arrivals-surpass-1-3-million-in-2026-1785308783"></link>
            <id>https://ibctamil.com/article/sl-tourist-arrivals-surpass-1-3-million-in-2026-1785308783</id>
            <summary type="text">இந்த ஆண்டின் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச சுற்றுலா பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1.3 மில்லியனைத் தாண்டியுள்ளது.இந்த விடயம் இலங்கை சுற்றுலா அபிவிரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச சுற்றுலா பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1.3 மில்லியனைத் தாண்டியுள்ளது.</p><p>இந்த விடயம் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அண்மையில் வெளியிடப்பட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஜூலை மாதத்தின் முதல் 26 நாட்களில் 167,401 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.</p><p></p><h2>சுற்றுலா பயணிகள் வருகை</h2><p>
ஆண்டின் தொடக்கமான ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் முறையே 9.7% மற்றும் 16.2% என்ற வலுவான வளர்ச்சி பதிவு செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2eec34f6-99d7-4b49-a673-ae26441e9711/26-6a69a76cbce7e.webp' /></p><p>

ஜூலை மாதத்தில் அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்த நாடாக இந்தியா பதிவாகியுள்ளது.
</p><p>
இந்தக் காலத்தில் மட்டும் இந்தியாவில் இருந்து 38,785 பேர் வருகை தந்துள்ளனர்.

அத்துடன், ஆண்டின் ஒட்டுமொத்த வருகையிலும் 332,468 இந்திய சுற்றுலா பயணிகளுடன் இந்தியா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.
</p><p>
மாதாந்த செயற்பாடுகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட போதிலும், நாட்டின் சுற்றுலாத்துறை தொடர்ந்தும் மீளெழுச்சி பெற்று வருவதை இந்தத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T07:11:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.போதனா வைத்தியசாலையில் பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தரை தாக்கிய ஆண்கள் : பொலிஸ் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attack-female-security-jaffna-teaching-hospital-1785307500"></link>
            <id>https://tamilwin.com/article/attack-female-security-jaffna-teaching-hospital-1785307500</id>
            <summary type="text">யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு
உத்தியோகஸ்தரை தாக்கி, காணொளி பதிவு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்
யாழ்ப்பாண பொலிஸ் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு
உத்தியோகஸ்தரை தாக்கி, காணொளி பதிவு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்
யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>

போதனா வைத்தியசாலைக்கு நேற்றையதினம்(28.07.2026) மாலை யுவதியொருவர் நோய்வாய்ப்பட்ட நிலையில், குடும்பத்தினரால் அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்காக அவசர
சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.</p><p></p><h2>பொலிஸ் விசாரணை முன்னெடுப்பு</h2><p>
நோய்வாய்ப்பட்ட யுவதியுடன், யுவதியின் தாய் உள்ளிட்ட இரு பெண்களும், 5
ஆண்களும் வைத்தியசாலைக்கு வந்திருந்த நிலையில், அவர்களும் அவசர சிகிச்சை
பிரிவின் வாயிலில் பகுதியில் குழுமி இருந்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7a2bb63-4dd8-47a7-a9bc-951070df4b21/26-6a69a761bdbde.webp' /></p><p>அதன்போது அங்கு கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர், யுவதியின்
தாயாரை தவிர ஏனையோரை அங்கிருந்து செல்லுமாறு பணித்துள்ளார்.
</p><p>இந்நிலையில், அங்கிருந்தவர்கள் யுவதியுடன் முரண்பட்டு அதனை தமது தொலைபேசியில் காணொளியையும் பதிவு செய்துள்ளனர். </p><p>அதற்கு பெண்
பாதுகாப்பு உத்தியோகஸ்தர் எதிர்ப்பு தெரிவித்த போது பாதுகாப்பு
உத்தியோகஸ்தரை ஒருவர் அவரை தாக்கியுள்ளார். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.</p><p>

இது தொடர்பில் தாக்குதலுக்கு இலக்கான பெண் பாதுகாப்பு
உத்தியோகஸ்தர் வைத்தியசாலை பணிப்பாளருக்கு அறிவித்ததுடன் , தனது பாதுகாப்பு
சேவை நிறுவனத்திற்கும் அறிவித்த நிலையில் , அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய
பொலிஸ் நிலையத்தில் சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவில் முறைப்பாடு
செய்துள்ளார்.
</p><p>
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் ,
சம்பவத்துடன் தொடர்புடைய ஆண்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T07:10:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.போதனா வைத்தியசாலையில் பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல் : விசாரணைகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/men-attack-female-security-officer-in-jaffna-th-1785305783"></link>
            <id>https://ibctamil.com/article/men-attack-female-security-officer-in-jaffna-th-1785305783</id>
            <summary type="text">யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு
உத்தியோகத்தரை தாக்கி, அதனை காணொளி பதிவு செய்த சம்பவம் தொடர்பில்
யாழ்ப்பாணம் காவல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு
உத்தியோகத்தரை தாக்கி, அதனை காணொளி பதிவு செய்த சம்பவம் தொடர்பில்
யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>இது குறித்து மேலும் தெரியவருகையில், யாழ். போதனா வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் (28) மாலை நோய்
வாய்ப்பட்ட யுவதியொருவர் குடும்பத்தினரால் அழைத்து வரப்பட்டு அவசர
சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>
நோய் வாய்ப்பட்ட யுவதியுடன், யுவதியின் தாய் உள்ளிட்ட இரு பெண்களும் மேலும் 5
ஆண்களும் வைத்தியசாலைக்கு வந்திருந்த நிலையில், அவர்களும் அவசர சிகிச்சைப் பிரிவின் வாயில் பகுதியில் குழுமி இருந்துள்ளனர்.</p><p></p><h2>காணொளி பதிவு&nbsp;</h2><p>

அதன்போது அங்கு கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர், யுவதியின்
தாயாரை தவிர ஏனையோரை அங்கிருந்து செல்லுமாறு பணித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/551c29e6-c671-4f5d-b4ad-20784cc22389/26-6a69a41e73bb9.webp' /></p><p>
</p><p>இந்தநிலையில், அங்கிருந்தவர்கள் யுவதியுடன் முரண்பட்டு அதனை தமது தொலைபேசியில் காணொளியாகவும் பதிவு செய்துள்ளனர். </p><p>இதற்கு பெண்
பாதுகாப்பு உத்தியோகத்தர் எதிர்ப்பு தெரிவித்த போது பாதுகாப்பு
உத்தியோகத்தரை ஒருவர் பின் பக்கமாக இறுக்கி பிடிக்க மற்றுமொருவர்
அவரை தாக்கிவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p>இது தொடர்பில் தாக்குதலுக்கு இலக்கான பெண் பாதுகாப்பு
உத்தியோகத்தர் வைத்தியசாலை பணிப்பாளருக்கு அறிவித்ததுடன், தனது பாதுகாப்பு
சேவை நிறுவனத்திற்கும் அறிவித்த நிலையில், அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய காவல் நிலையத்தில் சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவில் முறைப்பாடு
செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f86e570-f4e1-4b09-81a8-30f2074f311c/26-6a69a41da63f5.webp' /></p><p>குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன்,
சம்பவத்துடன் தொடர்புடைய ஆண்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T07:06:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச மாணவர்கள் வேலை செய்வது தொடர்பில் கனடா வெளியிட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-govt-warn-regard-int-students-working-1785308495"></link>
            <id>https://canadamirror.com/article/canada-govt-warn-regard-int-students-working-1785308495</id>
            <summary type="text">சர்வதேச மாணவர்கள் கனடாவில் வேலை செய்வது தொடர்பில், கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச மாணவர்கள் கனடாவில் வேலை செய்வது தொடர்பில், கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><p>

சமீபத்தில், கனடாவில் படித்து பட்டம் பெற்ற சர்வதேச மாணவர்களுக்கு பணி அனுமதி கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/391752d6-9f29-4181-8558-96e43061869a/26-6a69a5510b6a5.webp' /></p><p>
பணம் செலவு செய்து முறைப்படி கனடாவில் கல்வி கற்றும், தங்களுக்கு பணி அனுமதி கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டதால், மாணவ மாணவியர் உண்ணாவிரதம் இருந்த சம்பங்களும் நடைபெற்றன.
</p><p>
இந்நிலையில், சர்வதேச மாணவர்களுக்கு கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Important information for international students who plan to work while studying:<br>• You can only work in Canada as an international student if your study permit conditions say you can.<br>• If you are eligible to work off campus, you can only work up to 24 hours per week while…</p>&mdash; IRCC (@CitImmCanada) <a href="https://x.com/CitImmCanada/status/2081545178309853251?ref_src=twsrc%5Etfw">July 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
அந்த அறிவிப்பின்படி, சர்வதேச மாணவர்களின் கல்வி அனுமதியில் அவர்களுக்கு வேலை செய்ய அனுமதி உள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே அவர்கள் வேலை செய்ய முடியும்.
</p><p>
தாங்கள் கல்வி கற்கும் கல்லூரி வளாகத்திற்கு வெளியே பணிபுரியத் தகுதியுள்ள மாணவர்கள், வகுப்புகள் நடைபெறும் நாட்களில் மட்டும், வாரத்திற்கு 24 மணி நேரம் வரை மட்டுமே வேலை செய்யலாம்.</p><p>

அனுமதிக்கப்பட்ட வேலை வரம்பை மீறுவது கனடாவில் ஒரு மாணவரின் மாணவர் நிலையை பாதிக்கலாம், எதிர்காலக் கல்வி அல்லது பணி அனுமதி விண்ணப்பங்களைப் பாதிக்கலாம், அத்துடன், அவர்கள் நாட்டை விட்டு வெளியேறவும் கட்டாயப்படுத்தலாம் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

அதாவது, சர்வதேச மாணவர்கள், தங்கள் கல்வி அனுமதியில் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை கவனத்தில் கொள்ளுமாறும், அவற்றை சரியாக பின்பற்றுமாறும் நினைவூட்டப்படுகிறார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T07:01:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்லீவ்லெஸ் புடவையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.. அழகிய புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/anupama-parameswaran-latest-saree-photoshoot-1785303522"></link>
            <id>https://cineulagam.com/article/anupama-parameswaran-latest-saree-photoshoot-1785303522</id>
            <summary type="text">இளைஞர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் டிராகன், பைசன், லாக் டவுன் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இளைஞர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் டிராகன், பைசன், லாக் டவுன் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p> இன்ஸ்டாகிராமில் 16.4 மில்லியன் பின்தொடர்பாளர்களை கொண்டுள்ளார் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் தற்போது ஸ்லீவ்லெஸ் புடவையில் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ பாருங்க:&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T07:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பல பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-regarding-strong-winds-1785307158"></link>
            <id>https://tamilwin.com/article/warning-regarding-strong-winds-1785307158</id>
            <summary type="text">நாட்டின் பல&amp;nbsp;மாவட்டங்களுக்கு பலத்த காற்றுத் தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.அதன்படி, வடக்கு, வட-மத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல&nbsp;மாவட்டங்களுக்கு பலத்த காற்றுத் தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.</p><p>அதன்படி, வடக்கு, வட-மத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், இரத்தினபுரி, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
 

இதன்படி, நாட்டின் மீது நிலவும் தீவிர தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக குறித்த பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cbc7282-2148-42c5-9655-41b4f92bfdd9/26-6a69a3d55e6b6.webp' /></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T06:55:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இளைஞனின் உயிரை பறித்த அளவுக்கு மீறிய போதை பழக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drug-addicted-youth-dies-in-jaffna-1785308046"></link>
            <id>https://jvpnews.com/article/drug-addicted-youth-dies-in-jaffna-1785308046</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான இளைஞன் ஒருவர் மலசல கூடத்திற்குள் மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான இளைஞன் ஒருவர் மலசல கூடத்திற்குள் மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
</p><p>
குறித்த இளைஞன் நேற்றைய தினம் வீட்டில் உள்ள மலசல கூடத்திற்கு சென்ற நிலையில் , நீண்ட நேரமாகியும் வராத நிலையில் வீட்டார் சென்று பார்த்த போது மலசல கூடத்திற்குள் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c32c6ff-c2a7-4bcb-a4d0-57b9d907a9d0/26-6a69a38ff3d55.webp' /></p><p>
</p><p>
அதனை அடுத்து அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
</p><p>
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , மரண விசாரணையின் போது குறித்த இளைஞன் சில காலமாக கடுமையான போதைப்பொருள் பழக்கத்திற்கு உள்ளாகியிருந்தமை தெரிய வந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
அதேவேளை யாழ்ப்பாண இளையோரிடையே போதைப்பழக்கம் அதிகமாக வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-29T06:55:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவழியில் நின்ற யாழ். நோக்கிப் பயணித்த தொடருந்து - மக்கள் அவதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/technical-fault-jaffna-kks-to-colombo-train-delays-1785304820"></link>
            <id>https://ibctamil.com/article/technical-fault-jaffna-kks-to-colombo-train-delays-1785304820</id>
            <summary type="text">கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த விரைவு தொடருந்து, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.இன...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த விரைவு தொடருந்து, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>இன்று பௌர்ணமி தினம் என்பதால், குறித்த தொடருந்தின் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து இன்று (29) காலை 5.45 மணிக்கு காங்கேசன்துறைக்குப் புறப்பட்ட நகரங்களுக்கிடையேயான விரைவு தொடருந்து, காலை சுமார் 8.00 மணியளவில் வெயாங்கொடை தொடருந்து நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>கடும் நெரிசல்</h2><p>


இதையடுத்து, பின்னால் வந்த யாழ் தேவி விரைவு தொடருந்தின் காங்கேசன்துறை தொடருந்தின் பயணிகள் ஏற்றப்பட்டு பயணம் தொடரப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c0eca29-acd3-4317-8a54-236494e1749b/26-6a699958d6207.webp' /></p><p>இதனால், இரு தொடருந்துகளின் பயணிகளும் ஒரே தொடருந்தின் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>


இதற்கிடையில், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட தொடருந்து வெயாங்கொடை நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில், வெயாங்கொடை மற்றும் அதனை அடுத்த நிலையங்களில் இருந்து காங்கேசன்துறைக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக காலை 10.30 மணிக்கு வெயாங்கொடையிலிருந்து மாற்று தொடருந்து சேவை இயக்கப்பட்டதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T06:55:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச மாணவர்களுக்கு கனடா அரசிடமிருந்து ஒரு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-issues-warnings-to-international-students-1785307875"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-issues-warnings-to-international-students-1785307875</id>
            <summary type="text">சர்வதேச மாணவர்கள் கனடாவில் வேலை செய்வது தொடர்பில், கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச மாணவர்கள் கனடாவில் வேலை செய்வது தொடர்பில், கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

</p><h3>சர்வதேச மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு
</h3><p>
சமீபத்தில், கனடாவில் படித்து பட்டம் பெற்ற சர்வதேச மாணவர்களுக்கு பணி அனுமதி கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a551b576-44c0-420f-a1eb-43624c69d10d/26-6a69a2e48fc94.webp' /></p><p>
பணம் செலவு செய்து முறைப்படி கனடாவில் கல்வி கற்றும், தங்களுக்கு பணி அனுமதி கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டதால், மாணவ மாணவியர் உண்ணாவிரதம் இருந்த சம்பங்களும் நடைபெற்றன.
</p><p>
இந்நிலையில், சர்வதேச மாணவர்களுக்கு கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Important information for international students who plan to work while studying:<br>• You can only work in Canada as an international student if your study permit conditions say you can.<br>• If you are eligible to work off campus, you can only work up to 24 hours per week while…</p>&mdash; IRCC (@CitImmCanada) <a href="https://x.com/CitImmCanada/status/2081545178309853251?ref_src=twsrc%5Etfw">July 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
அந்த அறிவிப்பின்படி, சர்வதேச மாணவர்களின் கல்வி அனுமதியில் அவர்களுக்கு வேலை செய்ய அனுமதி உள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே அவர்கள் வேலை செய்ய முடியும்.</p><p>

தாங்கள் கல்வி கற்கும் கல்லூரி வளாகத்திற்கு வெளியே பணிபுரியத் தகுதியுள்ள மாணவர்கள், வகுப்புகள் நடைபெறும் நாட்களில் மட்டும், வாரத்திற்கு 24 மணி நேரம் வரை மட்டுமே வேலை செய்யலாம்.&nbsp;</p><p></p><p>
அனுமதிக்கப்பட்ட வேலை வரம்பை மீறுவது கனடாவில் ஒரு மாணவரின் மாணவர் நிலையை பாதிக்கலாம், எதிர்காலக் கல்வி அல்லது பணி அனுமதி விண்ணப்பங்களைப் பாதிக்கலாம், அத்துடன், அவர்கள் நாட்டை விட்டு வெளியேறவும் கட்டாயப்படுத்தலாம் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

அதாவது, சர்வதேச மாணவர்கள், தங்கள் கல்வி அனுமதியில் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை கவனத்தில் கொள்ளுமாறும், அவற்றை சரியாக பின்பற்றுமாறும் நினைவூட்டப்படுகிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T06:51:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தம்புள்ளை சந்தைக்கு வரும் மரக்கறிகளின் மொத்த வரத்து குறைவு: அதிகரித்த விலைகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vegetable-supply-dambulla-market-drops-by-2laks-kg-1785305068"></link>
            <id>https://ibctamil.com/article/vegetable-supply-dambulla-market-drops-by-2laks-kg-1785305068</id>
            <summary type="text">தம்புள்ளை சந்தைக்கு தினசரி வரும் மரக்கறிகளின் மொத்த வரத்து சுமார் 2 இலட்சம் கிலோகிராமால் குறைந்துள்ளதாக அங்குள்ள பிரத்யேகப் பொருளாதார மண்டலத்தின் வர்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தம்புள்ளை சந்தைக்கு தினசரி வரும் மரக்கறிகளின் மொத்த வரத்து சுமார் 2 இலட்சம் கிலோகிராமால் குறைந்துள்ளதாக அங்குள்ள பிரத்யேகப் பொருளாதார மண்டலத்தின் வர்த்தகர் சங்கத் தலைவர் சி.ஏ. சிறிவர்தன தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>கடுமையான வறட்சி மற்றும் போதுமான உரம் கிடைக்காததால் தான் இவ்வாறான நிலமை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.&nbsp;</p><p>தினசரி 6 இலட்சம் கிலோகிராமுக்கும் அதிகமாக இருந்த மரக்கறி வரத்து நேற்று (28.07.2026) சுமார் 4 இலட்சம் கிலோகிராமாகக் குறைந்துள்ளதாக கூறி உள்ளார்.&nbsp;</p><p></p><h2>மரக்கறிகளின் விநியோகம் குறைவு</h2><p>இதனால், சில மரக்கறிகளின் மொத்த விற்பனை விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2818ed74-b0dc-4147-880b-bef8eee67a41/26-6a69a118ecf80.webp' /></p><p>இதன்படி கறி மிளகாயின் ஒரு கிலோகிராமுக்கான அதிகபட்ச மொத்த விலை ரூ.500 முதல் ரூ.550 வரை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தம்புள்ளை சந்தையில் நேற்றைய மொத்த விற்பனை விலைகளின்படி, கரட் ஒரு கிலோ ரூ.230 - 250, கத்தரிக்காய் ரூ.350, முருங்கைக்காய் ரூ.150 - 200, பூசணிக்காய் ரூ.115, வெண்டைக்காய் ரூ.60 - 70, லீக்ஸ் ரூ.200 மற்றும் பீர்க்கங்காய் ரூ.170 ஆக விற்பனையாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T06:48:52+00:00</updated>
        </entry>
    </feed>
