<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-06T08:59:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் 800 பேரல் கின்னஸ் பீர் கொள்ளை: திருடப்பட்டது எப்படி?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/800-barrels-of-guinness-beer-stolen-in-england-1788685038"></link>
            <id>https://news.lankasri.com/article/800-barrels-of-guinness-beer-stolen-in-england-1788685038</id>
            <summary type="text">பிரித்தானியாவில் சினிமா பாணியில் சுமார் 800 பேரல் பீர் திருடப்பட்டுள்ளது.800 பேரல் பீர் திருட்டுபிரித்தானியாவின் ரன்கோர்ன்(Runcorn) நகரில் அமைந்துள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் சினிமா பாணியில் சுமார் 800 பேரல் பீர் திருடப்பட்டுள்ளது.</p><h2>800 பேரல் பீர் திருட்டு</h2><p>பிரித்தானியாவின் ரன்கோர்ன்(Runcorn) நகரில் அமைந்துள்ள தொழில்துறை வளாகத்தில் இருந்து கிட்டத்தட்ட 800 பேரல் கின்னஸ் பீர்(Guinness Beer) கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த திருடப்பட்ட பீர் ஆனது சுமார் 70,000 பைண்ட்(pints) அளவுக்கு சமமானது ஆகும்.</p><p> அத்துடன் இதன் மதிப்பு கிட்டத்தட்ட 115,000 பவுண்டுகள்(இந்திய ரூபாய் மதிப்பில் 1.56 கோடியாகும்) என்று செஷயர் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f20e89d4-f36c-40a1-bd7b-9abaa45d33b9/26-6a9d2af04952b.webp' /></p><p> சேமித்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பீர் பேரல்களும் அப்பகுதியில் உள்ள மதுபான விடுதிகளுக்கு விநியோகிக்கப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><h2> கொள்ளையடிக்கப்பட்டது எப்படி?</h2><p>
மாலை நேரத்து இருளை பயன்படுத்தி கொண்ட திருடர்கள் இரண்டு கனரக சரக்கு டிரக்குகளை பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.</p><p> இரவு சுமார் 7.45 மணிக்கு இந்த வாகனம் மெர்சி கேட்வே பாலம் வழியாக முதல் லொறியானது வெளியேறியது கண்டறியப்பட்டுள்ளது.</p><p>அதிலிருந்து 2 மணி நேரம் கழித்து(இரவு 9.30) இரண்டாவது லொறியானது ரெய்ன்ஹில் மற்றும் வாட்கின்சன் வே திசையை நோக்கி சென்றுள்ளது.</p><p> முதல் லொறியை ஓட்டி வந்தவர் சிறிய தாடி, பீனி தொப்பி அணிந்த வெள்ளையர் என்றும், இரண்டாவது லொறியை ஓட்டி வந்தவர் கேப் அணிந்து இருந்ததாக மட்டும் தெரியவந்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T08:57:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாம்புக்கடிக்கு இலக்கான தமிழ் குடும்ப பெண்ணுக்கு நேர்ந்த சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragedy-strikes-tamil-woman-bitten-by-snake-1788684972"></link>
            <id>https://jvpnews.com/article/tragedy-strikes-tamil-woman-bitten-by-snake-1788684972</id>
            <summary type="text">புசல்லாவை, கலுகள்ள தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 42 வயதுடைய பெண் ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.


...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">புசல்லாவை, கலுகள்ள தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 42 வயதுடைய பெண் ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">


இந்த&nbsp; சம்பவம் நேற்று (05.09.2026) காலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83eeb455-5428-4afc-8bc2-8c71e7c42b5a/26-6a9d2aad782ce.webp' /></p><h2 style="text-align: justify; ">பாம்பு கடி</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


தேயிலை மலையில் தொழிலில் ஈடுபட்டிருந்த குறித்த பெண், பாம்பு கடிக்கு இலக்கான நிலையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோதும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">


பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பாம்பு கடி, குளவி கொட்டு, சிறுத்தை தாக்குதல் மற்றும் யானை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு ஆபத்துகளுக்கு மத்தியில் பணியாற்றி வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



இந்நிலையில், இவ்வாறான சம்பவங்களில் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு உரிய நட்டஈடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் வழங்கப்படுவதில்லை என தொழிலாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">


எனவே, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-06T08:56:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆதாரமின்றி கைது செய்யப்படும் பெரும் புள்ளிகள்.. ரணில் வெளியிட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrested-ranil-blames-anura-government-1788681579"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrested-ranil-blames-anura-government-1788681579</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசாங்கமானது நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு மற்றும் எதிர்க்கட்சிகளை அடக்குவதை நோக்கமாகக் கொண்ட செயன்முறையொன்றில் ஈட...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசாங்கமானது நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு மற்றும் எதிர்க்கட்சிகளை அடக்குவதை நோக்கமாகக் கொண்ட செயன்முறையொன்றில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். </p><p>இது தொடர்பில் அவர்&nbsp; மேலும், "அரசாங்கம் தற்போது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL), வைத்தியர்கள் மற்றும் பௌத்த துறவிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளதுடன், அரசியல் கட்சிகள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் அச்சுறுத்தல்களையும் மேற்கொண்டு வருகின்றது.&nbsp;</p><p> மேலும், அரசியல்வாதிகள் போதிய ஆதாரங்களின்றி கைது செய்யப்படுகின்றனர், இந்நடவடிக்கைகள் ஜனநாயகம், எதிர்க்கட்சிகள் மற்றும் சுயாதீன தொழிற்சங்கங்களை அடக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.&nbsp;</p><h2>அரசாங்கத்தின் இலக்கு..&nbsp;</h2><p>இன்று மேற்கொள்ளப்படும் அனைத்தும் நாட்டின் ஜனநாயக அமைப்பையும் எதிர்க்கட்சியையும் அழிப்பதை நோக்கமாகக் கொண்டவை. அத்துடன் சுயாதீன தொழிற்சங்கங்களை ஒழிக்கும் முயற்சியும் இடம்பெறுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b840e241-28a9-4c18-8692-a06b7fa40e21/26-6a9d290dbac1b.webp' /></p><p>

அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 22வது திருத்தத்தில் அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்புக்கான ஏற்பாட்டைச் சேர்க்காததால் ஐக்கிய தேசியக் கட்சி அதனை எதிர்த்தது.</p><p>எனவே, இதன் சட்டபூர்வ தன்மையை உறுதிப்படுத்துவதற்காகத் தமது கட்சி நீதிமன்றம் ஊடாக சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியுள்ளது.</p><p>
அத்துடன், சட்டத்தரணிகள் மற்றும் வைத்தியர்கள் உள்ளிட்ட தொழில்முறை அமைப்புகளை அரசாங்கம் இலக்கு வைக்கின்றது. பௌத்த துறவிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரசாரங்கள் கவலையளிக்கின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efc31d59-37d9-4088-b253-fbfa50687b39/26-6a9d290e8a6c3.webp' /></p><p> இவ்வாறான செயற்பாடுகள் அரசியலமைப்பையும் மக்களின் இறையாண்மையையும் சீர்குலைக்கும். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்குப் பேசுவதற்குப் போதிய சந்தர்ப்பங்கள் மறுக்கப்படுகின்றன.&nbsp;</p><p>எதிர்க்கட்சித் தலைவரால் அழைக்கப்பட்ட போதிலும் ராஜீவ் அமரசூரிய நாடாளுமன்றத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

</p><p>இந்த மாற்றங்களைச் சீர்தூக்கிப் பார்க்கும்போது, இந்நாடு நாடாளுமன்றத்தில் இருந்தா அல்லது பெலவத்தையில் இருந்தா ஆட்சி செய்யப்படுகிறது என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டியுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T08:53:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவேகமாக 300 கோல்கள்! மெஸ்ஸிக்கு அடுத்து 26 வயது வீரர் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/erling-haaland-fastest-300-club-goals-after-messi-1788684655"></link>
            <id>https://news.lankasri.com/article/erling-haaland-fastest-300-club-goals-after-messi-1788684655</id>
            <summary type="text">Erling Haaland fastest 300 club goals: கால்பந்து கிளப் போட்டிகளில் மெஸ்ஸிக்கு அடுத்து, அதிவேகமாக 300 கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை எர்லிங் ஹாலண்ட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Erling Haaland fastest 300 club goals: கால்பந்து கிளப் போட்டிகளில் மெஸ்ஸிக்கு அடுத்து, அதிவேகமாக 300 கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை எர்லிங் ஹாலண்ட் படைத்துள்ளார்.</p><p>

நார்வேயின் எர்லிங் ஹாலண்ட், கால்பந்து கிளப் போட்டிகளில் மெஸ்ஸிக்கு அடுத்து அதிவேகமாக 300 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.&nbsp;</p><h2>எர்லிங் ஹாலண்ட்&nbsp;</h2><p>
மான்செஸ்டர் சிட்டி அணிக்காக விளையாடி வரும் நார்வேயின் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் (Erling Haaland).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/644185a9-9978-4cf8-966b-7fefaeab9178/26-6a9d2a04bb7df.webp' />&nbsp;</p><p></p><p>

26 வயதான எர்லிங் ஹாலண்ட், நேற்று நடந்த பிரீமியர் லீக் தொடரின் கவென்ட்ரி அணிக்கு எதிரான போட்டியில் கோல் அடித்து மான்செஸ்டர் சிட்டியை வெற்றி பெற வைத்தார்.</p><p>

அவர் அடித்த கோல் கிளப் போட்டிகளில் 300வது கோல் ஆகும். இதன்மூலம் லியோனல் மெஸ்ஸிக்கு அடுத்து அதிவேகமாக 300 கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ஹாலண்ட் படைத்தார்.&nbsp;</p><h2>165 கோல்கள்</h2><p>

மெஸ்ஸி 365 போட்டிகளில் இந்த சாதனை செய்த நிலையில், ஹாலண்ட் 368 போட்டிகளில் மைல்கல்லினை எட்டியுள்ளார்.</p><p> 

இவர்களுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் பிரான்ஸின் கிலியன் எம்பாப்பே (398 போட்டிகள்) உள்ளார்.
</p><p>
எர்லிங் ஹாலண்ட் மான்செஸ்டர் சிட்டி அணிக்காக மட்டும் 165 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f323c786-65c2-4028-8085-d99754366e6d/26-6a9d2a058adb3.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7cfb31e-17ae-42a5-b1ff-9f916f4266d4/26-6a9d2b60c54ae.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T08:50:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் முதல் முறையாக ஆட்சி அதிகாரத்திற்கு வரும் ஒரு தீவிர வலதுசாரிக் கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/afd-bids-first-taste-of-power-1788678540"></link>
            <id>https://news.lankasri.com/article/afd-bids-first-taste-of-power-1788678540</id>
            <summary type="text">AfD bids for first taste of power: தீவிர வலதுசாரிக் கட்சியான AfD முதல் முறையாக ஆட்சி அதிகாரத்திற்கு வருகிறது.
ஜேர்மனியின் கிழக்குப் பகுதியில் இந்த வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>AfD bids for first taste of power: தீவிர வலதுசாரிக் கட்சியான AfD முதல் முறையாக ஆட்சி அதிகாரத்திற்கு வருகிறது.
</p><p>ஜேர்மனியின் கிழக்குப் பகுதியில் இந்த வார இறுதியில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தக்கூடிய தேர்தல் நடைபெறவிருப்பதால், ஜேர்மானிய மக்கள் மூச்சைப் பிடித்துக் காத்திருக்கின்றனர்.</p><h2>அதிகாரத்தைக் கைப்பற்றும்</h2><p>
</p><p>தீவிர வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி, Saxony-Anhalt மாகாண நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற இலக்கு வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d844e108-7e56-4084-a548-00f8c7c12647/26-6a9d118e567f3.webp' /></p><p> </p><p>பெரும்பான்மையுடன் வெற்றி கிடைத்தால், போருக்குப் பிந்தைய காலத்தில் ஜேர்மனியில் மாகாண அளவிலான அதிகாரத்தை ஒரு தீவிர வலதுசாரிக் கட்சி கைப்பற்றுவது இதுவே முதல் முறையாக அமையும். </p><p>AfD-யின் எதிர்ப்பாளர்களைப் பொறுத்தவரை, இது தீவிர ஆபத்து நிறைந்த ஒரு விடயமாகும். ஆனால், AfD-ஐ பொறுத்தவரை நாடு தழுவிய அளவில் அதிகாரத்தைக் கைப்பற்றும் தனது கனவை நோக்கிய ஒரு படிக்கல்லாகவே அக்கட்சி இதைப் பார்க்கிறது. </p><p>இது ஜேர்மனியின் வரலாற்றையே மாற்றக்கூடிய ஒரு தேர்தல் என்றே கூறுகின்றனர். மட்டுமின்றி, தனது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்வாரா என்பது குறித்த வதந்திகள் நீடிப்பதால், நெருக்கடியில் சிக்கியுள்ள கன்சர்வேடிவ் (சிடியு) கட்சியின் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸுக்கு இந்த முடிவு புதிய சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.</p><p></p><p> </p><p>சமீபத்திய பொதுக் கூட்டங்களின்போது கூச்சலிட்டு வரவேற்கப்பட்டதால், மெர்ஸ் ஒரு தேர்தல் பலமாகப் பார்க்கப்படவில்லை. தீவிர வலதுசாரிகளின் எழுச்சியைத் தடுப்பதாக அளித்த வாக்குறுதிக்கு நேர்மாறான நிலை ஏற்பட்டுள்ளதால், அனேகமாக மெர்ஸ் தற்போது வருத்தப்படலாம் என்றே கூறுகின்றனர்.</p><p> ஆனால் இதற்கு மாறாக AfD-யின் வேட்பாளர் Ulrich Siegmund விவாதத்திலும் ஊடகச் செய்திகளிலும் ஆதிக்கம் செலுத்தியதாகத் தெரிகிறது. 35 வயதேயான அவர் சமூக ஊடகங்களில் கவனம் ஈர்த்து வருகிறார். </p><p>புலம்பெயர்ந்தோர், பொதுப் பாதுகாப்பு, ஜேர்மனியின் தள்ளாடும் பொருளாதாரம், அதிக எரிசக்தி செலவுகள் மற்றும் உக்ரைன் போன்ற நாடுகளுக்கு அனுப்பப்படும் உதவிகள் ஆகியவை குறித்து வாக்காளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.</p><h2>சர்ச்சைக்குரியவையாக</h2><p> </p><p>மக்களும் Ulrich Siegmund மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது. மற்ற ஆதரவாளர்கள் அவ்வளவு உறுதியாக இல்லை, ஆனால் பல தசாப்தங்களாக அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிரதான கட்சிகள் மீது தங்களுக்கு நம்பிக்கை போய்விட்டதாகக் கூறுகிறார்கள். </p><p>இருப்பினும் Saxony-Anhalt மாகாணத்தில் AfD அளித்துள்ள வாக்குறுதிகள் ஜேர்மனிக்குள் மிகுந்த சர்ச்சைக்குரியவையாக உள்ளன. இயல்பான குடும்பக் கட்டமைப்புகளை விட, பாலியல் பிறழ்வுகள் மற்றும் இனப்பெருக்க நோக்கமற்ற வாழ்க்கை முறைகள் தீவிரமாக ஊக்குவிக்கப்படுவதாக அதன் தேர்தல் அறிக்கையில் கூறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e192ecdd-6193-4449-b8a7-7cf661ec1236/26-6a9d118f0aa23.webp' /></p><p> </p><p> பாடசாலைகளில் LGBT வானவில் கொடிகள் பறக்கவிடப்படுவதற்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு நாஜிக்களைப் பற்றி குறைவாகவும், ஜேர்மானிய வரலாற்றின் நேர்மறையான அம்சங்களைப் பற்றி அதிகமாகவும் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் அந்தக் கட்சி வாதிடுகிறது.</p><p> குடியேற்றம் தொடர்பான விவகாரத்தில், மாகாணத்தில் வதிவிட உரிமையை இனி கொண்டிராத குடியேறிகளை கைது செய்து வெளியேற்றும் திட்டங்களின் ஒரு பகுதியாக, ஒரு சிறப்புப் பணிக்குழு அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T08:50:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் நகரின் நுழைவுப்பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகள்... நடவடிக்கை எடுக்குமா நல்லூர் பிரதேசசபை....]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/garbage-piled-up-at-the-entrance-to-jaffna-city-1788683602"></link>
            <id>https://ibctamil.com/article/garbage-piled-up-at-the-entrance-to-jaffna-city-1788683602</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் நகரின் முக்கிய நுழைவுப் பகுதிகள் மற்றும் வைத்தியசாலை வீதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கி கிடக்கும் குப்பைகள், அசுத்தமான வடிகால்கள் மற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் நகரின் முக்கிய நுழைவுப் பகுதிகள் மற்றும் வைத்தியசாலை வீதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கி கிடக்கும் குப்பைகள், அசுத்தமான வடிகால்கள் மற்றும் துர்நாற்றம் தொடர்பாக பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p>நல்லூர் பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட யாழ் நகரத்தினுடைய நுழைவு பகுதியாக காணப்படுகின்ற செம்மணியினுடைய வளைவு பகுதியை அண்மித்திருக்கக்கூடிய அரியாலை பிரதேசத்தை நோக்கி நகர்வதற்கான வீதியினுடைய
இருமருங்கிலும் தொடர்ச்சியாக அதிகளவிலான குப்பை கூளங்களை அவதானிக்க கூடியதாக உள்ளது.</p><p>

யாழ் நகருக்குள் ஒருவர் வருகை தருகின்ற போது இவற்றை அவதானித்த பின்பு நகருக்குள் பிரவேசிக்கிறார்கள். இதனை நகரத்தினுடைய பரிபாலனத்தை மேற்கொள்கின்ற உள்ளூராட்சி நிறுவனங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. இந்த பிரதேசத்தினுடைய பராமரிப்புக்கு பொறுப்பான சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு உலகின் பல பகுதிகளிலிருந்தும் யாழ்ப்பாணத்திற்கு மக்கள் வருகை தரும் நிலையில், நகரின் மத்தியில் காணப்படும் இந்த அசுத்தமான சூழலினால் துர்நாற்றத்தை சகிக்க முடியாத மக்கள் மூக்கை முடிச் செல்லும் நிலை காணப்படுகின்றது.</p><p>

ஐபிசி தமிழ் ஊடாக விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து சில பகுதிகளில் குப்பைகள் அகற்றப்பட்டு, வடிகால்கள் சுத்தம் செய்யப்பட்டமை வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், பணிகள் இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். </p><p>

குறிப்பாக யாழ்ப்பாண நகரின் நுழைவுப் பகுதிகளில் தொடர்ந்தும் காணப்படும் குப்பைகளை உடனடியாக அகற்றி துர்நாற்றம் வீசுவதை தடுப்பதற்கு யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p><b>
இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க...&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/qLHT3OyKhD0" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p></p><p></p><p></p><p><b></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-06T08:49:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலைக் காப்பாற்றத் துடிக்கும் ஐ.தே.க! ஆளும் தரப்பு பகிரங்க குற்றாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nalinda-slams-unp-over-response-to-namal-remand-1788682192"></link>
            <id>https://ibctamil.com/article/nalinda-slams-unp-over-response-to-namal-remand-1788682192</id>
            <summary type="text">ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளவர்களை பாதுகாக்க ஐக்கிய தேசியக்கட்சி முயற்சிப்பதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கடுமையாக விமர்சித்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளவர்களை பாதுகாக்க ஐக்கிய தேசியக்கட்சி முயற்சிப்பதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கடுமையாக விமர்சித்துள்ளார்.
</p><p>சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கையொன்றை வெளியிட்டது.</p><p>இந்த அறிக்கையை சுட்டிக்காட்டியே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>வானூர்திக் கொள்முதல்</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,&nbsp; நாமல் ராஜபக்ச மீது குற்றஞ்சாட்டப்படுவதோ அல்லது அவர் விளக்கமறியலில் வைக்கப்படுவதோ புதிதல்ல

ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்திலேயே அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>ஏர்பஸ் வானூர்திக் கொள்முதல் விவகாரத்தில் 100 மில்லியன் ரூபாய் கையூட்டல் பெறப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளின் அடிப்படையிலேயே, நீதிமன்றமே நாமல் ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b00ca23-60af-48dd-9706-9b9e2198a225/26-6a9d26453106a.webp' /></p><p>இந்தநிலையில், நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டதை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்ட அறிக்கை அந்தக் கட்சியின் தற்போதைய நிலையைத் தெளிவுபடுத்துகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

ஐக்கிய தேசியக்கட்சியை உண்மையாக நேசிப்பவர்களும் அந்தக் கட்சிக்காக நீண்டகாலம் உழைத்தவர்களும் கூட இந்த அறிக்கையைப் பார்த்து அதிர்ச்சியடைவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T08:49:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[‘Ordinary Man’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறாரா கெனிஷா? - வெளியான அப்டேட்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/kenishaa-join-ravi-mohans-ordinary-man-moive-1788681784"></link>
            <id>https://manithan.com/article/kenishaa-join-ravi-mohans-ordinary-man-moive-1788681784</id>
            <summary type="text">தமிழ் திரையுலகில் நடிகராக அறியப்பட்ட ரவி மோகன், தற்போது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என திரைத்துறையில் தனது அடுத்தகட்ட பயணத்தை தொடங்கியுள்ளார். தனது...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் திரையுலகில் நடிகராக அறியப்பட்ட ரவி மோகன், தற்போது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என திரைத்துறையில் தனது அடுத்தகட்ட பயணத்தை தொடங்கியுள்ளார். </p><p>தனது நீண்ட நாள் கனவாக இருந்த தயாரிப்பு நிறுவனத்தை ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற பெயரில் தொடங்கியுள்ள அவர், அதன் முதல் தயாரிப்பாக ‘Ordinary Man’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e89cda12-1724-4b9b-a82d-c08f886180a6/26-6a9d26591e6e7.webp' /></p><p></p><h2>‘Ordinary Man’&nbsp;</h2><p>

ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில், நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்து வருகிறார். அன்றாட வாழ்க்கையில் ஒரு சாதாரண மனிதன் எதிர்கொள்ளும் சம்பவங்கள் மற்றும் உணர்வுகளை மையப்படுத்தி கதை நகரும் என கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/411260d9-58b4-49db-8000-8910c3e0f082/26-6a9d2659d4259.webp' /></p><p> </p><p>இதனால் படத்தில் நகைச்சுவையுடன், பார்வையாளர்களை உணர்வுபூர்வமாக கவரும் பல்வேறு அம்சங்களும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ‘Ordinary Man’ படத்தின் இசையமைப்பாளர் தொடர்பாக தற்போது புதிய தகவல் ஒன்று சினிமா வட்டாரங்களில் வெளியாகியுள்ளது. </p><p>இப்படத்திற்கு ஆரம்பத்தில் ஹைட்ரோ இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஆனால், தற்போது பாடகி கெனிஷா பிரான்சிஸ் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5be5c5a1-7796-44fd-a50d-43dbe0a8a9b9/26-6a9d265a8ecac.webp' /></p><h2>இசையமைப்பாளர் கெனிஷாவா?</h2><p> மேலும், அவர் படத்திற்கான இசைப் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது. இது உறுதி செய்யப்பட்டால், பாடகியாக ரசிகர்களுக்கு அறிமுகமான கெனிஷா, ‘Ordinary Man’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் புதிய பரிமாணத்தில் பயணத்தை தொடங்குவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a1b67b9-a9db-40db-9b4b-7daf2bcd00ec/26-6a9d2872f05e5.webp' /></p><p></p><p>
இருப்பினும், கெனிஷா பிரான்சிஸ் இப்படத்தின் இசையமைப்பாளராக அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்து நடிகரும் இயக்குநருமான ரவி மோகன் அல்லது படக்குழுவினர் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
</p><p>
எனவே, படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை கெனிஷா இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் என்ற தகவலை உறுதி செய்ய முடியாது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், ‘Ordinary Man’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்கும் என சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u>FOLLOW NOW</u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T08:46:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக சுகாதார அமைப்பின் பிராந்திய மாநாட்டில் பங்கேற்க திமோர்-லெஸ்டே பயணமாகிறார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nalinda-jayatissa-leaves-for-timor-leste-1788683424"></link>
            <id>https://tamilwin.com/article/nalinda-jayatissa-leaves-for-timor-leste-1788683424</id>
            <summary type="text">உலக சுகாதார அமைப்பின் (WHO) தென்கிழக்கு ஆசிய பிராந்தியக் குழுவின் 79வது
அமர்வில் பங்கேற்பதற்காக, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மருத்துவர்
நள...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக சுகாதார அமைப்பின் (WHO) தென்கிழக்கு ஆசிய பிராந்தியக் குழுவின் 79வது
அமர்வில் பங்கேற்பதற்காக, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மருத்துவர்
நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையிலான இலங்கைத் தூதுக்குழு இன்று (செப்டம்பர்) 6 ஆம்
திகதி திமோர் - லெஸ்டேயின் திலி நகருக்குப் புறப்படுகிறது.

​</p><p>செப்டம்பர் 7 முதல் 10 வரை நான்கு நாட்கள் நடைபெறும் இந்த உயர்மட்ட
மாநாட்டில், உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் டெட்ரோஸ்
அதானோம் கெப்ரேயஸ், பிராந்திய நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட
அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.</p><h2>தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்</h2><p>
</p><p>
மேலும் ​2025ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற 78வது அமர்வில் தலைவராகத்
தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, புதிய தலைவர்
தேர்ந்தெடுக்கப்படும் வரை இந்த அமர்விலும் தலைவராகச் செயல்படுவார்.
</p><p>
அத்துடன் ​இலங்கைத் தூதுக்குழுவில் சுகாதார அமைச்சகச் செயலாளர் மருத்துவர்
அனில் ஜசிங்க உட்பட அமைச்சகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் மருத்துவ
நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்.
​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/501725a8-4bf5-4863-b3b9-9927aa4e0bc7/26-6a9d2832264d3.webp' /></p><p>இந்த நிலையில் ​ சிறப்பு மருத்துவச் சேவைகளுக்கான சமமான அணுகலை உறுதி
செய்யும் ‘திலி பிரகடனத்தை’ ஏற்றுக்கொள்வது குறித்து இம்மாநாட்டில்
பரிசீலிக்கப்படுவதுடன்
​ சுகாதாரப் பணியாளர்களை வலுப்படுத்துதல், உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு,
எண்ணிம சுகாதாரம் (Digital Health), செயற்கை நுண்ணறிவு, மீள்திறன் கொண்ட
சுகாதார வசதிகள் மற்றும் காசநோய் உள்ளிட்ட நோய்களை ஒழிப்பது குறித்து
ஆலோசிக்கப்படும்.

​</p><h2>பிராந்திய ஒத்துழைப்பு</h2><p>மேலும் நாட்டின் இலவச சுகாதாரச் சேவை அனுபவங்களையும் பிராந்திய
ஒத்துழைப்புக்கான முன்மொழிவுகளையும் இலங்கை முன்வைக்கும்.
​ </p><p>இந்த பயணத்தின் போது இந்தியா, மாலைத்தீவுகள், பங்களாதேஷ் பூட்டான்,
இந்தோனேசியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடனும், WHO
பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸுடனும் அமைச்சர் தனிப்பட்ட இருதரப்புப்
பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T08:45:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாடர்ன் லுக்கில் அசத்தும் நடிகை பிரியா பவானி சங்கர்!! புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/priya-bhavani-shankar-recent-modern-look-photos-1788684724"></link>
            <id>https://viduppu.com/article/priya-bhavani-shankar-recent-modern-look-photos-1788684724</id>
            <summary type="text">பிரியா பவானி சங்கர்செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சின்னத்திரை நடிகையாக திகழ்ந்து தற்போது தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிரியா பவானி சங்கர்</h2><p>செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சின்னத்திரை நடிகையாக திகழ்ந்து தற்போது தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். </p><p>ரவி தேஜா நடிப்பில் வெளியான இருமுடி படத்தில் படத்தில் முக்கிய ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் பிரியா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9697ed6-9561-42cb-b23a-17030b0388cd/26-6a9d29b91ee7a.webp' /></p><p> ஏற்கனவே தன்னுடைய நீண்டநாள் காதலர் ராஜ்வேலுடன் ரிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வரும் பிரியா, காதலருடன் வெளிநாட்டிற்கு அவ்வப்போது சென்று வருவார்.</p><p> இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி, ரீசெண்ட் மாடர்ன் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-06T08:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாக்குதல்களால் அதிரும் மத்திய கிழக்கு ; தகர்க்கப்பட்ட எண்ணெய் தாங்கிக் கப்பல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/middle-east-shaken-by-attacks-1788672405"></link>
            <id>https://canadamirror.com/article/middle-east-shaken-by-attacks-1788672405</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக மீண்டும் தீவிரமடைந்துள்ள மோதலில், சனிக்கிழமையன்று இரு நாடுகளும் பரஸ்பரம் கப்பல்கள் மீது ஏவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக மீண்டும் தீவிரமடைந்துள்ள மோதலில், சனிக்கிழமையன்று இரு நாடுகளும் பரஸ்பரம் கப்பல்கள் மீது ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
</p><p>
அமெரிக்க மத்திய கட்டளையகம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின்படி,

ஈரானின் 'கார்க் தீவு' அருகே ஒன்று, ஜாஸ்க் பகுதிக்கு அருகே ஒன்று மற்றும் ஓமன் வளைகுடாவில் ஒன்று என ஈரானுடன் தொடர்புடைய 03 மசகு எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் முற்றிலுமாக முடக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34c20753-4313-4dd6-a522-6b2689856309/26-6a9cf99a97389.webp' /></p><p>

முன்னதாக அமெரிக்கப் படைகளின் போர் விமானம் தாங்கி கப்பல் மற்றும் ஏவுகணை அழிப்புக் கப்பலைக் குறிவைத்து ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><p>ஈரானின் தாக்குதலில் அமெரிக்கப் படைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. </p><p> அழிக்கப்பட்ட கப்பல்கள் ஈரானிய புரட்சிகர காவல் படையின் நிதியுதவிக்காகப் பயன்படுத்தப்படும் நிழல் அமைப்பைச் சேர்ந்தவை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. </p><p> 

ஈரானின் அரசு ஊடகமான ஐஆர்ஐபி மற்றும் ஐஆர்ஜிசி வெளியிட்ட தகவலின்படி,

அமெரிக்கத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஓமர்ன் வளைகுடா மற்றும் ஹோர்மூஸ் நீரிணைப் பகுதிகளில் அமெரிக்க தொடர்புடைய 3 கப்பல்கள் மற்றும் "அனுமதிக்கப்படாத பாதையில்" பயணித்த 3 எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.</p><p>

கார்க் தீவு அருகே அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கப்பலில் இருந்த ஊழியர்கள் மீட்கப்பட்டதால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-06T08:44:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் அதிகாரிகளை மிரள வைத்த 50 வயது பெண் ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/50-year-old-woman-who-shocked-officials-1788683454"></link>
            <id>https://jvpnews.com/article/50-year-old-woman-who-shocked-officials-1788683454</id>
            <summary type="text">திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில் சட்டவிரோதமான முறையில் வைத்திருந்ததாகக் கூறப்படும் பெருமளவிலான மதுபானங்களை சூரியபுர வி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில் சட்டவிரோதமான முறையில் வைத்திருந்ததாகக் கூறப்படும் பெருமளவிலான மதுபானங்களை சூரியபுர விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது, ஆலங்கேணி பகுதியில் உள்ள வீடொன்றை சோதனையிட்ட போது குறித்த மதுபானங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d98e7d1-1543-49c4-bc43-cf3cd025ba38/26-6a9d24c0392c1.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இதன்போது, சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் 50 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">


கைப்பற்றப்பட்ட மதுபானங்களில் 42 பியர் போத்தல்கள், 50 கால் போத்தல் சாராயம் மற்றும் 15 அரை போத்தல் சாராயம் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">


கைது செய்யப்பட்ட பெண்ணும் கைப்பற்றப்பட்ட மதுபானங்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify; ">&nbsp;சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-06T08:31:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொது இடத்தை பறிக்க வேண்டாம்! கொட்டகலை - ரொப்கில் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/public-space-lokhill-estate-residents-protest-1788680875"></link>
            <id>https://tamilwin.com/article/public-space-lokhill-estate-residents-protest-1788680875</id>
            <summary type="text">கொட்டகலை - ரொப்கில் தோட்டப் பகுதியில் பொதுமக்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி
வரும் பொது இடத்தை தனியார் தேவைக்காக வழங்கி, மரப்பலகை ஆலை அமைக்க நடவடிக்கை
எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொட்டகலை - ரொப்கில் தோட்டப் பகுதியில் பொதுமக்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி
வரும் பொது இடத்தை தனியார் தேவைக்காக வழங்கி, மரப்பலகை ஆலை அமைக்க நடவடிக்கை
எடுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் (06.09.2026) பொதுமக்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>
ரொப்கில் தோட்டத்திற்குச் செல்லும் பிரதான நுழைவாயில் பகுதியில் இந்த
ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><h2>பொதுத் தேவைக்காக பயன்படுத்தப்படும் இடம்</h2><p>
</p><p>ரொப்கில் தோட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவிக்கையில், குறித்த இடம் கடந்த
பல வருடங்களாக தங்களின் பொதுத் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக
தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d98c083b-60c1-4660-b888-51e56a722d33/26-6a9d23622648d.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக, அப்பகுதியில் அமைந்துள்ள இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களின் விசேட
நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக நிகழ்வுகள் குறித்த
இடத்தில் இடம்பெற்று வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
</p><p>
அத்துடன், சீரற்ற காலநிலையின்போது வெள்ளப்பெருக்கு ஏற்படும் சந்தர்ப்பங்களில்,
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நலன்புரி நடவடிக்கைகளையும் குறித்த இடத்திலிருந்தே
முன்னெடுத்து வந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1856f74-acb8-46fe-9e32-2f14b7d2a742/26-6a9d2363dcd9b.webp' /></p><h2>ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு</h2><p>
</p><p>
இந்நிலையில், தாங்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வரும் இந்த பொது இடத்தை தோட்ட
நிர்வாகம் தனியாருக்கு வழங்கி, அங்கு மரப்பலகை ஆலை ஒன்றை அமைப்பதற்கான
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த
ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
</p><p>
இந்த ஆர்ப்பாட்டத்தில் தோட்ட இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என
300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/181feb48-7dd0-4c7b-8def-918fd006d088/26-6a9d2364c33ab.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c24f7b1c-441f-47b0-b6d1-42380a69dd17/26-6a9d23659bf5a.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T08:26:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டைமண்ட் லீக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் சாதனை படைத்த இலங்கை வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/diamond-league-mens-javelin-throw-competition-1788682955"></link>
            <id>https://tamilwin.com/article/diamond-league-mens-javelin-throw-competition-1788682955</id>
            <summary type="text">டைமண்ட் லீக் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இலங்கையை சேர்ந்த ருமேஷ் தரங்க பத்திரகே சாதனைப் படைத்துள்ளார்.

இந்தப் போட்டி நேற்று (05.09.2026) ...</summary>
            <content type="html"><![CDATA[<p>டைமண்ட் லீக் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இலங்கையை சேர்ந்த ருமேஷ் தரங்க பத்திரகே சாதனைப் படைத்துள்ளார்.
</p><p>
இந்தப் போட்டி நேற்று (05.09.2026) நடைபெற்றுள்ளது.
</p><p>
இதில் ருமேஷ் தரங்க பத்திரகே 89.04 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்துள்ளார்.
</p><h2>
சாதனை படைத்த வீரர்</h2><p>
உலகின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர்களில் ஒருவரான ருமேஷ் தரங்க, போலந்தின் டேவிட் வெக்னரை விட 1.57 மீற்றர் அதிக தூரம் எறிந்து இந்த வெற்றியை உறுதி செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43143bbc-31c7-4a6e-8dd7-c88880446421/26-6a9d22f98d5dd.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, கடந்த ஜூன் 4ஆம் திகதி ரோமில் நடைபெற்ற போட்டியில் 92.62 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்ததே, இந்த ஆண்டில் உலகளவில் பதிவான சிறந்த பெறுபேறாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T08:23:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய உலக வரைபடம் உருவாக்க ஐ.நா. தீர்மானம்; விமர்சிக்கும் அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/un-resolution-to-create-a-new-world-map-1788682844"></link>
            <id>https://canadamirror.com/article/un-resolution-to-create-a-new-world-map-1788682844</id>
            <summary type="text">தற்போதைய உலக வரைபடத்தில் காணப்படும் தவறுகளைத் திருத்தி, துல்லியமான புதிய உலக வரைபடத்தை உருவாக்கக் கோரும் ஐ.நா. பொதுச் சபைத் தீர்மானத்துள்ளது.



ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய உலக வரைபடத்தில் காணப்படும் தவறுகளைத் திருத்தி, துல்லியமான புதிய உலக வரைபடத்தை உருவாக்கக் கோரும் ஐ.நா. பொதுச் சபைத் தீர்மானத்துள்ளது.
</p><p>


டோகோ முன்மொழிந்த இந்தத் தீர்மானத்துக்கு 164 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f77c193-852d-4493-82dc-b0c60b998edb/26-6a9d225de5ace.webp' /></p><p> ஆறு நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்த நிலையில், அமெரிக்கா மட்டும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்துள்ளது.</p><p>



16ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட தற்போதைய வரைபடம், பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள நாடுகளை சிறியதாகவும், தொலைதூரப் பகுதிகளை பெரிதாகவும் காட்டுவதாகத் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>



இதனால் ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளின் உண்மையான பரப்பளவு சரியாகப் பிரதிபலிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


புதிய வரைபடம் கண்டங்கள் மற்றும் பிராந்தியங்களின் உண்மையான பரப்பளவை துல்லியமாக பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட வேண்டும் என இந்தியா தெரிவித்துள்ளது.
</p><p>


எனினும், இத்தகைய விடயங்களில் கவனம் செலுத்துவது ஐ.நா. மீதான நம்பகத்தன்மையை மேலும் பாதிக்கும் என அமெரிக்கா விமர்சித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-06T08:21:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[36 வருடங்களாக போராடும் யாழ். மக்கள் - அமைச்சர்கள் கொடுத்த வாக்குறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-palali-1788682316"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-palali-1788682316</id>
            <summary type="text">வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி 12 வாரமாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த போராட்டமானது, இன்று(06.09.2026) பலாலி சந்தியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி 12 வாரமாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>
இந்த போராட்டமானது, இன்று(06.09.2026) பலாலி சந்தியில் இடம்பெற்றுள்ளது. </p><p>

இதன்போது, கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். </p><h2>

36 வருடங்களாக போராடும் மக்கள்</h2><p>
தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை
அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில், தாம் நீண்ட காலமாக
நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் காணிகளை
விடுவிக்க வேண்டும் என்றும் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/192f36d5-b1e3-4549-820a-7833b5e4ed1b/26-6a9d20987a3c9.webp' /></p><p> </p><p>

இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர்களான பிமல் ரத்னாயக்க மற்றும் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர், பலாலி கிழக்கு உள்ளிட்ட பகுதிகளை இந்த மாதத்திற்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ade5600a-750a-4e2c-a8be-dd3f90e1314d/26-6a9d20998e739.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T08:13:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் போதைப்பொருள் வியாபாரியை விடுவிக்க மனைவியை பாலியல் இலஞ்சம் கோரிய உயரதிகாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/officer-sought-sex-bribe-to-free-dealer-1788669087"></link>
            <id>https://jvpnews.com/article/officer-sought-sex-bribe-to-free-dealer-1788669087</id>
            <summary type="text">திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்காகப் பணத்தையும், அவரது மனைவியை பாலியல் இலஞ்சமாகவும் கோரிய குற்றச்சாட்டில...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்காகப் பணத்தையும், அவரது மனைவியை பாலியல் இலஞ்சமாகவும் கோரிய குற்றச்சாட்டில் மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உப பரிசோதகர் ஒருவர் சனிக்கிழமை (05) முதல் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்தல் விடுத்துள்ளதாகப் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8df261ca-b115-4766-bad6-4ad83012bcaa/26-6a9cece6255e2.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;விசாரணைகள்&nbsp;</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கடந்த 2021ஆம் ஆண்டு குறித்த உத்தியோகத்தர் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட வியாபாரி ஒருவரை விடுவிப்பதற்குப் பெருந்தொகை பணத்தையும், அவரின் மனைவியிடம் பாலியல் இலஞ்சத்தையும் கோரியுள்ளார்.
</p><p style="text-align: justify; ">

இச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட வியாபாரி திருகோணமலை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் அளித்த முறைப்பாட்டின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
</p><p style="text-align: justify; ">
விசாரணைகள் நிலுவையில் இருந்த காலத்தில் இவர் திருகோணமலையிலிருந்து வாழைச்சேனை, கந்தளாய் மற்றும் சில வாரங்களுக்கு முன்னர் கல்குடா பொலிஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.</p><p style="text-align: justify; ">

இந்நிலையில், பொலிஸ் தலைமையகத்தின் உத்தரவிற்கமைய அவர் தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-06T08:04:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[EZ Cash ஊடாக போதைப்பொருள் கடத்தல்! 15 மில்லியன் ரூபா பெறுமதியான வீடு முடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rs-15mn-weligama-house-frozen-over-drug-racket-1788679703"></link>
            <id>https://ibctamil.com/article/rs-15mn-weligama-house-frozen-over-drug-racket-1788679703</id>
            <summary type="text">EZ Cash முறையைப் பயன்படுத்தி சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வெலிகம, பாதேகம ...</summary>
            <content type="html"><![CDATA[<p>EZ Cash முறையைப் பயன்படுத்தி சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
வெலிகம, பாதேகம பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் தொடர்பிலேயே இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
காவல்துறை மா அதிபருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய மேற்படி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சட்டவிரோத சொத்துக்கள்</h2><p>

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் இணையவழி மோசடி விசாரணைப் பிரிவு, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
</p><p>
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்ட சொத்து, முடக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/892ca34b-8cf0-4c0c-bf25-035e26caa19f/26-6a9d1d6817b2c.webp' /></p><p>இதனடிப்படையில் வெஹேன, பாதேகம பகுதியில் அமைந்துள்ள 150 இலட்சம் ரூபாவிற்கும் (15 மில்லியன்) அதிக பெறுமதியுடைய வீடு ஒன்று இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது.</p><p>
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 2026 செப்டம்பர் 04 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 14 நாட்களுக்கு இந்த வீட்டைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முடக்க உத்தரவைச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு பிறப்பித்துள்ளது.
</p><p>
இச்சம்பவம் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T08:00:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய கிரிக்கெட் போட்டிகள்.. பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/disable-people-cricket-chathuranga-abeysinga-1788681053"></link>
            <id>https://tamilwin.com/article/disable-people-cricket-chathuranga-abeysinga-1788681053</id>
            <summary type="text">கொழும்பில் இலங்கை பார்வையற்றோர் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட “எல்லைகளைக்
கடந்து” அனைவரையும் உள்ளடக்கிய கிரிக்கெட் நிகழ்வில், பிரதி அமைச்சர் சதுரங்க
அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் இலங்கை பார்வையற்றோர் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட “எல்லைகளைக்
கடந்து” அனைவரையும் உள்ளடக்கிய கிரிக்கெட் நிகழ்வில், பிரதி அமைச்சர் சதுரங்க
அபேசிங்க கலந்துகொண்டு பார்வையற்றோர் கிரிக்கெட்
விளையாடிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.</p><p>கிரிக்கெட் இலங்கையின் மிகவும் விரும்பப்படும் விளையாட்டு
என்றும், அதில் மாற்றுத்திறனாளிகள் பின்தங்கிவிடக் கூடாது என்றும்,
இவ்விளையாட்டு தடைகளை உடைத்து அனைவரையும் உள்ளடக்க உதவுகிறது என்றும் பிரதி
அமைச்சர் குறிப்பிட்டார்.</p><h2>பார்வையற்றோரின் திறமை&nbsp;</h2><p>
</p><p>
அத்துடன் பந்து இயக்கத்தைக் கண்காணிக்க உதவும் சத்தத்தை எழுப்பும் கடினமான
பிளாஸ்டிக் பந்துகள் மற்றும் ஒலி எழுப்பும் எஃகு விக்கெட்டுகள் இதில்
பயன்படுத்தப்படுகின்றன.

இதேவேளை பந்துவீச்சு அண்டர்ஆர்ம் (Underarm) முறையில் செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a26ab51d-ed19-40c6-9653-dabafd3429e8/26-6a9d1cb796a4b.webp' /></p><p>

இதற்கமைய முற்றிலும் பார்வையற்றவர்கள் (இவர்கள் எடுக்கும் ஒட்டங்களுக்கு
கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும்).

மிகவும் குறைந்த பார்வை கொண்டவர்கள்.
</p><p>அதிக பார்வை வசதியும் குறைந்த தெளிவும் கொண்டவர்கள் என 11 பேர் கொண்ட அணியில்
3 B1, 4 B2 மற்றும் 4 B3 வீரர்கள் இடம்பெறுவர்.
</p><p>
மேலும் வீரர்களின் தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் வியப்பளிப்பதாகக் கூறிய
பிரதி அமைச்சர், இலங்கையின் முதல் பார்வையற்ற பாராளுமன்ற உறுப்பினரான சுகத்
வசந்தா போன்றவர்கள் கொள்கை மாற்றங்களுக்கும் சமூக உள்ளடக்குதலுக்கும்
ஆற்றிவரும் பங்களிப்பையும் சுட்டிக்காட்டினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T07:56:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் கந்தசுவாமி ஆலய 21ஆம் நாள் திருவிழா நிறைவு - நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nallur-kandaswamy-temple-21st-day-festival-1788681284"></link>
            <id>https://tamilwin.com/article/nallur-kandaswamy-temple-21st-day-festival-1788681284</id>
            <summary type="text">&amp;nbsp;நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21ஆம் நாள் திருவிழா இன்று(06.09.2026) சிறப்பாக இடம்பெற்றுள்ளது. 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21ஆம் நாள் திருவிழா இன்று(06.09.2026) சிறப்பாக இடம்பெற்றுள்ளது.</p><p> 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கான சிறப்பு பூஜைகள் இடம்பெறும் நிலையில், இன்று(06) கஜவள்ளி மஹாவள்ளி உற்சவம் நடைபெற்றுள்ளது. </p><p>

காலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து, அன்னப்பட்சி வாகனத்தில் கஜவல்லி மஹாவள்ளி எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
</p><p>
அதேவேளை, இன்று மாலை தங்க ரத உற்சவமும், நாளைய தினம்
காலை மாம்பழத் திருவிழாவும், மாலை ஒருமுக திருவிழாவும்
இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T07:56:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுதாரக்கவின் நெருங்கிய சகா போதைப்பொருளுடன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sutharak-s-close-associate-arrested-with-drugs-1788681402"></link>
            <id>https://jvpnews.com/article/sutharak-s-close-associate-arrested-with-drugs-1788681402</id>
            <summary type="text">இரத்தமலானை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் கூரிய ஆயுதத்துடன் வெளிநாடு சென்று தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான சுதாரக்கவின் நெருங்கிய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இரத்தமலானை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் கூரிய ஆயுதத்துடன் வெளிநாடு சென்று தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான சுதாரக்கவின் நெருங்கிய ஆதரவாளர் ஒருவர் கல்கிஸை வலய குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இரத்தமலானை, கொளுமட சந்தை பகுதியில் கல்கிஸை வலய குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின்போதே மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afa297a4-3e26-4e40-9ecd-a6368456adc1/26-6a9d1cbb51ad8.webp' /></p><h2 style="text-align: justify; ">ஆரம்பகட்ட விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதன்போது அவரிடமிருந்து 6,000 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வாள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify; ">


இரத்தமலானை, பங்களாவத்தை, ரஸ்டம் வத்தை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கைதான சந்தேகநபர், தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ‘படோவிட்ட அஸங்க’ என்பவருக்காக வெளிநாட்டிலிருந்து போதைப்பொருள் கடத்தலை வழிநடத்தி வரும் 'சுதாரக்க' என்பவரின் நெருங்கிய ஆதரவாளர் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
மேலும், சம்பவம் தொடர்பில் கல்கிஸை வலய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-06T07:56:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் அதிகரிப்பு - 6 இலட்சம் பெறுமதியான வலைகள் இழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/encroachment-by-tamil-nadu-fishermen-1788680808"></link>
            <id>https://tamilwin.com/article/encroachment-by-tamil-nadu-fishermen-1788680808</id>
            <summary type="text">தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடல் பகுதியில், இலங்கை கடல் எல்லையில்
இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன்
பிடிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடல் பகுதியில், இலங்கை கடல் எல்லையில்
இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன்
பிடிப்பதாக உள்ளூர் கடற்றொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். </p><p>

இந்த சம்பவம் நேற்றைய தினம்(05.09.2026) இடம்பெற்றுள்ளது. </p><h2>

6 இலட்சம் பெறுமதியான வலை சேதம்</h2><p>
தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடல் பகுதியில், இந்திய கடற்றொழிலாளர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக இலங்கை கடற்றொழிலாளர்களின் சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce143b9e-f045-41dd-b50b-50191dc86bfe/26-6a9d1a9aa1619.webp' /></p><p> </p><p> 

அதே போன்று, வலைகளை இந்திய கடற்றொழிலாளர்கள் திருடிச் சென்றுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். </p><p>


 குறித்த சம்பவம் தொடர்பில், தலைமன்னார் கடற்படையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கடற்றொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p> 


இந்திய விசைப்படகுகளின் அத்துமீறலைத் தடுக்கவும், இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T07:47:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கலிபோர்னியாவில் தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்: இருவர் பலி, 2 பேர் கவலைக்கிடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/california-small-plane-crash-two-dead-1788680733"></link>
            <id>https://news.lankasri.com/article/california-small-plane-crash-two-dead-1788680733</id>
            <summary type="text">California small plane crash Two Dead: கலிபோர்னியாவில் நடந்த சிறிய ரக விமான விபத்தில் 2 பேர் வரை உயிரிழந்துள்ளனர். கலிபோர்னியாவில் விமான விபத்து
சனிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>California small plane crash Two Dead: கலிபோர்னியாவில் நடந்த சிறிய ரக விமான விபத்தில் 2 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><h2> கலிபோர்னியாவில் விமான விபத்து</h2><p>
சனிக்கிழமை பிற்பகலில் கலிபோர்னியாவின் நார்த்வெஸ்ட் ப்ரெஸ்னோ(Northwest Fresno) பகுதியில் நடந்த சிறிய ரக விமான விபத்தில் இரண்டு பேர் வரை உயிரிழந்துள்ளனர்.&nbsp;
மேலும் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">CALIFORNIA | Plane crash reported in Northeast Fresno <a href="https://t.co/9fRf0CZIEo">https://t.co/9fRf0CZIEo</a> <a href="https://t.co/N2vMOER4eK">pic.twitter.com/N2vMOER4eK</a></p>&mdash; Breaking X (@BreakingXAlerts) <a href="https://x.com/BreakingXAlerts/status/2096373297927643540?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> பிளைத் அவென்யூவில் உள்ள சியாரா ஸ்கை பார்க் விமான நிலையத்திற்கு அருகே இந்த சிறிய ரக விமான விபத்தானது ஏற்பட்டுள்ளது.</p><p>விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், உள்ளூர் மற்றும் மத்திய விமான துறை அதிகாரிகள் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.</p><p> விமான விபத்தை தொடர்ந்து அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிறிது நேரம் மின் தடை ஏற்பட்டது. ஆனால் விரைவாக செயல்பட்ட மின்வாரிய ஊழியர்கள் மின் தடையை உடனடியாக சரி செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e70fc691-57e4-4f0b-a214-d89190d2b4d2/26-6a9d1a1ee007a.webp' /></p><p></p><p> இந்நிலையில், இந்த விமான விபத்தானது எதிர்பாராத மற்றும் பேரதிர்ச்சியான துயரம் என்று ப்ரெஸ்னோ நகர மன்ற உறுப்பினர் மைக் கார்பாசி குறிப்பிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T07:45:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை சைத்ரா ஜே அச்சாரின் ரீசெண்ட் போட்டோஷூட்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/chaithra-j-achar-photos-saree-look-1788679967"></link>
            <id>https://viduppu.com/article/chaithra-j-achar-photos-saree-look-1788679967</id>
            <summary type="text">மஹிரா, ஆ த்ருஷ்யா, கில்கி, தோபி, பிளிங்க் போன்ற கன்னட மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சைத்ரா ஜே அச்சார். கடந்த ஆண்டு வெளியான 3BHK என்ற ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹிரா, ஆ த்ருஷ்யா, கில்கி, தோபி, பிளிங்க் போன்ற கன்னட மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சைத்ரா ஜே அச்சார். கடந்த ஆண்டு வெளியான 3BHK என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பலரது கவனத்தையும் ஈர்த்தார் சைத்ரா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfad3ee9-3501-4fcf-9624-71f38e917a2c/26-6a9d172a58464.webp' />]</p><p>
</p><p>
இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான மை லார்ட் படத்தில் சுசிலா என்ற ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். நடிப்பை தாண்டி பாடகியாகவும் விளங்கி வரும் சைத்ரா, பல பாடல்களை பாடியிருக்கிறார்.
</p><p>
மீசையமுறுக்கு படத்திலும் நடித்துள்ள சைத்ரா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் லுக் போட்டோஷூட்டை பகிர்வார். தற்போது சேலையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-06T07:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொண்டாட்டத்தில் ரணில் தலைமையிலான குழு - ஒரே இடத்தில் ஒன்றுகூடிய பல அரசியல் முக்கியஸ்தர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-led-group-at-the-celebration-1788678892"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-led-group-at-the-celebration-1788678892</id>
            <summary type="text">ஐக்கிய தேசியக் கட்சியின் 80வது ஆண்டு விழா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று காலை (06) சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் நடைபெற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய தேசியக் கட்சியின் 80வது ஆண்டு விழா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று காலை (06) சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.</p><p>
முன்னாள் பிரதமர் மேதகு டி.எஸ்.சேனநாயக்க மற்றும் பிற தலைவர்களால் 1946 செப்டெம்பர் 6 அன்று நிறுவப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி, இன்று தனது 80வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது.</p><h2>நினைவு விழா</h2><p>
</p><p>இதனை முன்னிட்டு பிட்டகோட்டையில் உள்ள சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் இன்று காலை நினைவு விழா நடைபெற்றுள்ளது.</p><p>

இந்த நிலையிலை குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T07:43:40+00:00</updated>
        </entry>
    </feed>
