<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-22T11:31:24+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[vendakkai mor kulambu : ஆரோக்கியம் தரும் வெண்டைக்காய் மோர் குழம்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/tasty-and-healthy-vendakkai-mor-kulambu-recipe-1787393421"></link>
            <id>https://manithan.com/article/tasty-and-healthy-vendakkai-mor-kulambu-recipe-1787393421</id>
            <summary type="text">vendakkai mor kulambu : வெண்டைக்காய் என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அதன் தனித்துவமான சுவை தான் ஆனால், சுவையைத் தாண்டி பல்வேறு ஊட்டச்சத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>vendakkai mor kulambu : வெண்டைக்காய் என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அதன் தனித்துவமான சுவை தான் ஆனால், சுவையைத் தாண்டி பல்வேறு ஊட்டச்சத்துகளையும் கொண்டுள்ள ஒரு காய்கறி இது. </p><p>குறிப்பாக, வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமான அமைப்பின் சீரான செயல்பாட்டிற்கு உதவுவதுடன், மலச்சிக்கலைத் தவிர்த்து குடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் துணைபுரிகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f88ccb5-b128-42a3-aade-133fac6d92c1/26-6a89868178960.webp' /></p><p>
வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட், புரதம், சிறிதளவு கொழுப்பு, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, கால்சியம், இரும்புச்சத்து உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துகள் காணப்படுகின்றன. </p><p>மேலும், நார்ச்சத்து நிறைந்த உணவாக இருப்பதால், வயிறு நிறைந்த உணர்வைத் தருவதற்கும், சமச்சீரான உணவுமுறையின் ஒரு பகுதியாக உடல் எடையை நிர்வகிக்க உதவுவதற்கும் இது பயனுள்ளதாக இருக்கலாம்.</p><p>

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வது இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் எனக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3298bc5a-c9f9-4870-999c-d0ebc54e8418/26-6a8986843ce28.webp' /></p><p></p><p> </p><p>அதே நேரத்தில், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை சீராகப் பராமரிக்க உதவும் உணவுமுறையில் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளுக்கு முக்கிய இடம் உண்டு. </p><p>எனவே, சுவையையும் ஆரோக்கியத்தையும் ஒருசேர விரும்புபவர்கள் வெண்டைக்காயை தங்களது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
</p><p>
இத்தனை சிறப்புகளைக் கொண்ட வெண்டைக்காயை வைத்து, வழக்கமான குழம்புகளுக்கு சற்று வித்தியாசமாகவும், நாவில் நீர் ஊறச் செய்யும் சுவையுடனும் ஒரு அருமையான வெண்டைக்காய் மோர் குழம்பு எப்படி வெய்யலாம் என இந்த பதிவி்ல் பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4f81696-02b8-4c58-a9e3-b4d082b0e6de/26-6a8986822ab04.webp' /></p><h2>தேவையான பொருட்கள்
</h2><p>தயிர் - தேவையான அளவு
</p><p>வெண்டைக்காய் - ¼ கிலோ
</p><p>துருவிய தேங்காய் – தேவையான அளவு</p><p>
புளி – நெல்லிக்காய் அளவு
</p><p>கொத்தமல்லி&nbsp; – சிறிதளவு</p><p>துவரம் பருப்பு – 100 கிராம்
</p><p>கடலைப் பருப்பு – 100 கிராம்</p><p>
பச்சை மிளகாய் – 6
</p><p>இஞ்சி – ஒரு துண்டு
</p><p>வத்தல் – 6
</p><p>சீரகம் – 10 கிராம்</p><p>
மஞ்சள் தூள் – 2 ஸ்பூன்
</p><p>பெருங்காயம் – தேவையான அளவு
</p><p>உப்பு – தேவையான அளவு</p><p><b>
தாளிக்க தேவையானவை
</b></p><p>தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு</p><p>
கடுகு – 1 ஸ்பூன்
</p><p>கருவேப்பிலை – சிறிதளவு</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a547b8c-73d2-45bf-91ae-0781a8ef89a3/26-6a898682d71bd.webp' /></p><h2>
செய்முறை</h2><p>
முதலில் ஒரு பாத்திரத்தில் கொத்தமல்லி விதைகள், கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, சீரகம் மற்றும் வத்தல் ஆகியவற்றை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குறைந்தது 1 மணி நேரம் ஊறவைக்கவும்.</p><p>

நன்றாக ஊறியதும், அவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு, அதனுடன் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் சிறிதளவு பெருங்காயம் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.</p><p>

அடுத்து புளியை சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாகக் கரைத்து, புளிக் கரைசலை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் புளிக் கரைசலை ஊற்றவும்.</p><p>அதனுடன் நறுக்கிய வெண்டைக்காய், சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வெண்டைக்காய் நன்றாக வேகும் வரை சமைக்கவும். வெந்ததும் அதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.</p><p>

இப்போது தயிரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கடைந்து கொள்ளவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96a0a538-7cf6-4d3a-a079-114d1bb1d87c/26-6a89868388a72.webp' /></p><p></p><p>அதில் சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு மற்றும் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தயார் செய்து வைத்துள்ள தயிர் கலவையை ஊற்றவும். அதில் வேகவைத்த வெண்டைக்காயையும் சேர்த்து மிதமான தீயில் சூடாக்கவும்.
</p><p>
மோர் குழம்பு நன்றாக சூடாகி மேலே நுரை வரத் தொடங்கியதும் அடுப்பை அணைத்துவிடவும். மோர் குழம்பை அதிகமாகக் கொதிக்கவிடக்கூடாது.
</p><p>
இறுதியாக, ஒரு சிறிய கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இந்தத் தாளிப்பை மோர் குழம்பில் ஊற்றி நன்றாகக் கலந்துவிட்டு இறக்கினால் அவ்வளவு தான்சுவையான, மணமிக்க வெண்டைக்காய் மோர் குழம்பு தயார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T11:28:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் வியாபாரம் செய்த இளைஞனுக்கு வவுனியா நீதிமன்றம் ஆயுள் தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/life-imprisonment-for-youth-involved-heroin-trade-1787396730"></link>
            <id>https://ibctamil.com/article/life-imprisonment-for-youth-involved-heroin-trade-1787396730</id>
            <summary type="text">வவுனியாவில்&amp;nbsp;2 கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட இளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில்&nbsp;2 கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட இளைஞர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>குறித்த இளைஞன் செய்த குற்றங்கள் நிரூபிக்கப்படதை தொடர்ந்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா நேற்று (21.08.2026) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.&nbsp;</p><p>கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வவுனியா, மெனிக்பாம் பகுதியில் இக் குற்றச்செயல் இடம்பெற்றுள்ளது.</p><p></p><p>
</p><h2>இளைஞனுக்கு ஆயுள் தண்டனை</h2><p>இது தொடர்பான வழக்கின் குற்றச்சாட்டுப் பத்திரம் 2021 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/782de96c-190f-4c06-9c93-924879daae9f/26-6a8986c318c6b.webp' /></p><p>வழக்கு விசாரணையின்போது, எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரை குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.</p><p>நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கிலும், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்ற எச்சரிக்கையை சமூகத்திற்கு வெளிப்படுத்தும் வகையிலும் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், குறித்த வழக்கின் சாட்சியங்களை அரச சட்டவாதி சிவஸ்கந்தஸ்ரீ நெறிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T11:27:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏர்பஸ் விமான நிறுவன வேலை நிறுத்தங்கள்... பணிந்த நிர்வாகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/airbus-allow-staffs-keep-remote-work-after-strike-1787397902"></link>
            <id>https://news.lankasri.com/article/airbus-allow-staffs-keep-remote-work-after-strike-1787397902</id>
            <summary type="text">Airbus lets staff keep working from home after strikes: வீடுகளிலிருந்தவண்ணம் வேலை செய்ய அனுமதிக்கக் கோரி பணியாளர்கள் மேற்கொண்ட தொடர் வேலைநிறுத்தங்களுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Airbus lets staff keep working from home after strikes: வீடுகளிலிருந்தவண்ணம் வேலை செய்ய அனுமதிக்கக் கோரி பணியாளர்கள் மேற்கொண்ட தொடர் வேலைநிறுத்தங்களுக்குப் பணிந்தது ஏர்பஸ் நிறுவனம்.
</p><p>

பிரான்ஸ் முதலான சில நாடுகளில், ஏர்பஸ் விமான நிறுவன பணியாளர்கள் வீடுகளிலிருந்தவண்ணம் வேலை செய்வதற்கு எதிராக உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29ed7862-7375-4998-900f-07ec02b4fb6d/26-6a898710dfeef.webp' /></p><h3>

ஏர்பஸ் நிறுவன வேலை நிறுத்தங்கள்...
</h3><p>
ஏர்பஸ் விமான நிறுவன தலைமை நிர்வாகியான Guillaume Faury என்பவர், வீடுகளிலிருந்தவண்ணம் வேலை செய்வது கோவிட் காலகட்டத்தில் அவசியமான ஒன்றாக இருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3525b7e-a143-477b-a3e4-bd955108e187/26-6a8987103291b.webp' /></p><p>
ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது என்று கூறி, அனைவரும் மீண்டும் அலுவலகங்களுக்குத் திரும்பவேண்டும் என்று ஜூன் மாதம் அறிவித்திருந்தார்.</p><p>

ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் ஸ்பெயின் ஏர்பஸ் பணியாளர்கள் தொடர் வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டார்கள்.&nbsp;</p><p></p><p>
அதனால் பணிகள் பாதிக்கப்படவே, இனி பணியாளர்கள் வாரத்துக்கு இரண்டு நாட்கள் வீட்டிலிருந்தவண்ணம் வேலை செய்யலாம் என ஏர்பஸ் மேலாளர்கள் தற்போது தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T11:25:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுகீஸ்வர பண்டார சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sugeeshwara-bandara-admitted-to-prison-hospital-1787396995"></link>
            <id>https://jvpnews.com/article/sugeeshwara-bandara-admitted-to-prison-hospital-1787396995</id>
            <summary type="text">&amp;nbsp; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.



அவரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
</p><p>


அவரது காலில் ஏற்பட்ட காயம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, நேற்று (21) சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa115cae-32d1-4b1b-9ebc-d88894e0574b/26-6a8983852cbde.webp' /></p><p>அரசாங்கத்துக்குச் சொந்தமான 22 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியமை மற்றும் நம்பிக்கை மோசடி செய்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-22T11:07:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA['மரியாதை செலுத்துவதில்' பிரச்சினை : களனி பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே மோதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kelani-university-clash-due-to-respect-problem-1787394155"></link>
            <id>https://ibctamil.com/article/kelani-university-clash-due-to-respect-problem-1787394155</id>
            <summary type="text">&amp;nbsp; களனி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் நான்காம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஏழு மாணவர்கள் கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; களனி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் நான்காம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஏழு மாணவர்கள் கிரிபத்கொட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p> இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் நான்காம் ஆண்டு மாணவர்கள் மூவரும், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நால்வரும் அடங்குவர்.</p><h2>சிரேஷ்ட மாணவர்களுக்கு மரியாதை</h2><p>
</p><p>





பல்கலைக்கழக உணவகத்திற்கு அருகில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதுடன், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நான்காம் ஆண்டு சிரேஷ்ட மாணவர்களுக்கு உரிய மரியாதை வழங்காததே இந்த அமைதியற்ற நிலைக்குக் காரணம் என காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0fbffd4-fd26-41b0-bbf3-ca37a144d833/26-6a8982a4c5a49.webp' /></p><p> </p><p>சம்பவம் தொடர்பில் இரு தரப்பு மாணவர்களும் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் காவல்துறையினர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
</p><p>
மோதலை சமரசம் செய்ய இரு தரப்பினரும் ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்ததால் சந்தேகநபரான மாணவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படும் வரை காவல்துறை தடுப்புக்காவலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><p></p><h2>மாணவர் மோதல் தொடர்பில் மேலதிக விசாரணை</h2><p> </p><p>இருப்பினும், தடுப்புக்காவலில் இருந்தபோது இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கலந்துரையாடலுக்குப் பிறகு இந்த தகராறை சமரசம் செய்ய அவர்கள் ஒப்புக்கொண்டதுடன், அது குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவித்த பின்னர் சம்பந்தப்பட்ட ஏழு மாணவர்களும் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/439fa007-040a-42d8-9174-96e5d18622d4/26-6a8982a5754fa.webp' /></p><p>
</p><p>





கிரிபத்கொட காவல் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான காவல்துறை பரிசோதகர் கே. ஏ. பி. அபேரத்னவின் பணிப்புரையின் பேரில், பல்வேறு முறைப்பாடுகள் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி, காவல்துறை பரிசோதகர் லியனகே உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் குழுவினால் இந்த மாணவர் மோதல் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T11:06:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பரபரப்பை ஏற்படுத்திய ஆலய சம்பவம் - வீடு திரும்பிய பாதிக்கப்பட்டோர்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/who-suffered-eye-injuries-returned-home-1787396212"></link>
            <id>https://tamilwin.com/article/who-suffered-eye-injuries-returned-home-1787396212</id>
            <summary type="text">பண்டத்தரிப்பு பகுதியில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவைத் தொடர்ந்து கண் பாதிப்புக்குள்ளான 375 பேர் நேற்று(21) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
சிகிச்சை பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பண்டத்தரிப்பு பகுதியில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவைத் தொடர்ந்து கண் பாதிப்புக்குள்ளான 375 பேர் நேற்று(21) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
சிகிச்சை பெற்றனர்.</p><p>

கண் வலி, கண்களில் எரிச்சல் மற்றும் கண்களைத் திறப்பதில் சிரமம் உள்ளிட்டஅறிகுறிகளுடன் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட அவர்களுக்கு தேவையான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.</p><p></p><h2>கண் பாதிப்பு</h2><p>
</p><p>
சிகிச்சையின் பின்னர் கண் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டிருந்த அனைவரும் தற்போதுவீடு திரும்பியுள்ளனர் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22d47127-5a55-4d8b-93ea-7d85619f2ecf/26-6a89826dd7fc6.webp' /></p><p>

வீடு திரும்பியுள்ளவர்கள், வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட கண் மருந்துகளை வைத்திய ஆலோசனைக்கு அமைவாக தொடர்ச்சியாகவும் முறையாகவும் பயன்படுத்துமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரமாகவும் அர்ப்பணிப்புடனும் சிகிச்சை
வழங்கிய கண் சத்திரசிகிச்சை நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட
அனைத்து வைத்தியசாலை ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62a01958-7c96-40f8-81cb-554697bb26a3/26-6a89826eae749.webp' /></p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-22T11:05:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலவும் வறட்சியான காலநிலை : நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/severe-drought-conditions-irrigation-dept-announce-1787395806"></link>
            <id>https://ibctamil.com/article/severe-drought-conditions-irrigation-dept-announce-1787395806</id>
            <summary type="text">இலங்கையில் நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 35.9 சதவீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 35.9 சதவீதமாகக் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>
 

குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் மொணராகலை ஆகிய மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மிகவும் குறைந்தளவை எட்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
</p><p>
 

தற்போது சிறுபோக பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், நிலவும் நீரின் அளவு அந்த பயிர்ச்செய்கைகளுக்கு போதுமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.</p><p></p><h2>அதிக வெப்பநிலை&nbsp;</h2><p>
</p><p>எனினும், அதிக வெப்பநிலை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக, நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் ஆவியாதல் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef222c29-f36a-45fe-acdb-24e99e009555/26-6a8981cd5fcaa.webp' /></p><p>எனவே, அன்றாடத் தேவைகளுக்கும் விவசாய நடவடிக்கைகளுக்கும் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர் முகாமைத்துவ பணிப்பாளர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T11:05:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அன்பே டயானா படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?... வெளிவந்த தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/anbe-diana-ott-release-date-announced-1787394938"></link>
            <id>https://cineulagam.com/article/anbe-diana-ott-release-date-announced-1787394938</id>
            <summary type="text">அன்பே டயானாபாரி இளவழகன் கதை எழுதி, இயக்கி, நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார். இப்போதெல்லாம் மதம், ஜாதி, மாநிலம்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அன்பே டயானா</h2><p>பாரி இளவழகன் கதை எழுதி, இயக்கி, நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார். </p><p>இப்போதெல்லாம் மதம், ஜாதி, மாநிலம், நாடு என எதையும் பார்க்காமல் காதலால் இணை
பழைய விஷயங்களை பின்பற்றும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனின் வாழ்க்கையில் சுதந்திரமான சிந்தனையுடன் வாழும் ஆங்கிலோ-இந்திய பெண் ஒருவர் நுழையும் போது ஏற்படும் எதிர்ப்பாராத மாற்றங்களைச் சொல்கிறது அன்பே டயானா.</p><p> கலாச்சாரம் மற்றும் குடும்ப எல்லைகளைக் கடந்து மலரும் காதலின் சவால்களை அனைவருக்கும் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய விதத்தில் இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e7cb577-f569-4a7b-ae1e-961d29ffe829/26-6a897e2ae70fd.webp' /></p><h2>ஓடிடி ரிலீஸ்</h2><p>
நடிகை ரோஜா, சேத்தன், யூடியூபர் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். </p><p>கடந்த ஜுலை 17ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வந்துள்ளது. வரும் ஆகஸ்ட் 28ம் தேதி சோனி லிவ் ஓடிடியில் அன்பே டயானா படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/1b7erKvajq0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-22T11:00:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் பிரிட்டனில் குடியேறும் இளவரசர் ஹாரி மற்றும் மேகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/prince-harry-and-meghan-to-settle-in-britain-again-1787392516"></link>
            <id>https://canadamirror.com/article/prince-harry-and-meghan-to-settle-in-britain-again-1787392516</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அரசு குடும்பப் பொறுப்புகளிலிருந்து விலகி கணவர் ஹாரியுடன் அமெரிக்காவில் வசித்து வந்த மேகன் மார்க்கிள், சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அரசு குடும்பப் பொறுப்புகளிலிருந்து விலகி கணவர் ஹாரியுடன் அமெரிக்காவில் வசித்து வந்த மேகன் மார்க்கிள், சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முழுநேர நடிப்பு வாழ்க்கைக்குத் திரும்பவுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>

இயக்குநர் காய் ரிச்சியின் (Guy Ritchie) புகழ்பெற்ற ‘தி ஜென்டில்மேன்’ (The Gentlemen)&nbsp; தொடரின் 3-வது சீசனில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/228595fa-63db-4df8-925f-d73996adc2e1/26-6a89720664c75.webp' /></p><h2>நடிப்பை விட்டு விலகியிருந்த மேகனின்&nbsp; திடீர் முடிவு</h2><p>

இந்த தொடரில் பிரபுத்துவக் குடும்பத்து இளவரசர்களைத் தன் அழகால் வசியம் செய்து சிக்கலில் மாட்டிவிடும் ‘அல்டிமேட் டெம்ப்ட்ரஸ்’ (Ultimate Temptress) என்ற மிகவும் சுவாரசியமான மற்றும் சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க மேகனுக்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது.</p><p> ‘சூட்ஸ்’ (Suits) தொடருக்குப் பிறகு அரச குடும்பத்து விதிகளால் நடிப்பை விட்டு விலகியிருந்த மேகனின் இந்தத் திடீர் முடிவு, திரைத்துறையிலும் ராயல் குடும்ப வட்டாரத்திலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
</p><p>
இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ‘தி ஜென்டில்மேன்’ தொடரின் முக்கியப் படப்பிடிப்புகள் பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸுக்குச் சொந்தமான புகழ்பெற்ற ‘ஹைஃபுளோவ் எஸ்டேட்’ (Highgrove Estate) அருகிலேயே நடைபெற்று வருகின்றன. </p><p>அரச குடும்ப உறவில் விரிசல் ஏற்பட்டுப் பிரிந்த மேகன், மன்னரின் இருப்பிடத்திற்கு மிக அருகிலேயே படப்பிடிப்பில் பங்கேற்கவுள்ளது பிரிட்டன் ஊடகங்களில் புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
</p><p>
ஹாரி மற்றும் மேகன் தம்பதியினர் மீண்டும் பிரிட்டனுக்கு இடம்பெயர திட்டமிட்டு வரும் சூழலில், மேகனின் இந்த செய்தி வெளியாகியுள்ளது.</p><p> அரச குடும்பத்தின் முன்னாள் உறுப்பினராக இருந்து மீண்டும் ஹாலிவுட் திரைப்பயணத்தைத் தொடங்கும் மேகனின் இந்தப் புதிய அவதாரம்,&nbsp; ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது</p>]]></content>
            <updated>2026-08-22T10:59:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதையல் தோண்ட முயன்ற 3 சந்தேகநபர்கள் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-suspects-arrested-in-bulathsinhala-1787394534"></link>
            <id>https://ibctamil.com/article/three-suspects-arrested-in-bulathsinhala-1787394534</id>
            <summary type="text">புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வுப் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யபட்டுள்ளனர்.குறிப்பிட்ட நபர்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வுப் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யபட்டுள்ளனர்.</p><p>குறிப்பிட்ட நபர்கள் புலத்சிங்கள பகுதியில் நேற்று (21.08.2026) இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>
புலத்சிங்கள காவல் நிலைய பிரிவுக்குட்பட்ட போதலேகம பகுதியில் புதையல் தோண்டப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>மூவர் கைது</h2><p>

கைது செய்யப்பட்டவர்கள் 37, 52 மற்றும் 67 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் புலத்சிங்கள மற்றும் தொடங்கொட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cd06af6-ae14-4935-a4b6-2fe2b0f8a699/26-6a897fe19b1d6.webp' /></p><p>அகழ்வுப் பணிகளுடன் தொடர்புடைய பொருட்கள் மற்றும் உபகரணங்கள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.&nbsp;</p><p>
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அடிப்படையில், இந்த சட்டவிரோத அகழ்வுப் பணியில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பதும் ஆராயப்பட்டு வருகிறது.</p><p>
</p><p>இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புலத்சிங்கள காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T10:57:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் பொலிஸ் வாகனம் மோதி A66 சாலையில் விபத்து: பலர் உயிரிழந்த சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-a66-road-police-vehicle-crash-1787396260"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-a66-road-police-vehicle-crash-1787396260</id>
            <summary type="text">Uk A66 road police vehicle crash: பிரித்தானியாவின் A66 சாலையில் பொலிஸ் வாகனம் மோதிய சம்பவத்தில் பலர் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. A6...</summary>
            <content type="html"><![CDATA[<p>Uk A66 road police vehicle crash: பிரித்தானியாவின் A66 சாலையில் பொலிஸ் வாகனம் மோதிய சம்பவத்தில் பலர் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> A66 சாலை விபத்து</h2><p>
பிரித்தானியாவின் மிட்வோர்ஸ்பரோ அருகே A66 சாலையில் அதிகாலையில் நடந்த கோர விபத்தில் காவல் வாகனமும், வோக்ஸ்வாகன் பாசாட்(Volkswagen Passat) காரும் மோதிக் கொண்டது.</p><p> இந்த சம்பவம் சவுத் பேங்க் பகுதியில் அதிகாலை சுமார் 3.39 மணிக்கு நடந்த நிலையில் இதில் பலர் பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> விபத்தை தொடர்ந்து அவசர கால மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை முன்னெடுத்ததாக கிளீவ்லேண்ட் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.</p><p> விபத்தை தொடர்ந்து நோர்மான்பி சாலைக்கும் சர்ச் லேன் பகுதிக்கும் இடைப்பட்ட A66 சாலை முழுமையாக அடைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4a62a5d-de0f-45db-9996-3f4d4f661167/26-6a8980a54ff02.webp' /></p><p></p><p> மீட்பு குழுவினர் விரைந்து செயல்பட்டு அனைவரது உயிரையும் காப்பாற்ற தீவிரமாக முயற்சி செய்த நிலையில் பல நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்ட்டுள்ளனர்.</p><p> தற்போது உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> இருப்பினும் உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கையை காவல்துறையினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-22T10:57:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சென்னையை உலுக்கிய பயங்கரம் ; பெண்ணை துண்டாக்கி பிரியாணி சமைத்த கொடுமை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-couple-chennai-woman-brutal-murder-cooked-1787381322"></link>
            <id>https://jvpnews.com/article/young-couple-chennai-woman-brutal-murder-cooked-1787381322</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சென்னையில் பெண்ணை துண்டாக்கி பிரியாணி சமைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொடூர கொலைகார ஜோடியை போலீசார் தேடி வருவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;சென்னையில் பெண்ணை துண்டாக்கி பிரியாணி சமைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொடூர கொலைகார ஜோடியை போலீசார் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, 

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன் இருந்த ஒரு சிவப்பு நிற சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a8e23e5-05b9-41c3-8c16-33af23cf7690/26-6a89464b9aec3.webp' /></p><h2> சிவப்பு நிற சூட்கேஸ் - பெண்ணின்&nbsp; &nbsp;உடல் பாகங்கள்</h2><p> </p><p>அதனுள் ஒரு பெண்ணின் தலை மற்றும் கை கால்கள் மற்றும் உடல் பாகங்கள் கிடந்தன.

 
இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது கண்ணாடி அணிந்த ஒரு இளம் பெண்ணும், குறுந்தாடி வைத்திருந்த ஒரு வாலிபரும் அந்த சிவப்பு நிற சூட்கேசை எடுத்து வந்தது பதிவாகியிருந்தது.</p><p></p><p> </p><p>

அந்த ஜோடி சென்ட்ரல் ஸ்டேசனுக்கு வந்து ஆக்ராவுக்கு செல்லும் ரயில் ஏறி அந்த பெட்டியை வைத்துவிட்டு உடனே இறங்கிவிட்டனர்.</p><p> அதன்பின் கூடுவாஞ்சேரி நோக்கி சென்ற மின்சார ரயில் பயணித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது

300க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ததில் அவர்கள் இருவரும் ஆட்டோவில் கூடுவாஞ்சேரி மசூதி பகுதிக்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவழியாக
அவர்களின் வீட்டை போலீசார் கண்டறிந்து சென்று பார்த்தபோது வெளியே பூட்டப்பட்டிருந்தது</p><p></p><p>.

பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போதுதான் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ஒரு பெண் கொலை செய்யப்பட்டு உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு தடங்களை மறைப்பதற்காக பிரியாணி செய்யும் பெரிய பாத்திரத்தில் போட்டு மைதா மாவு, காய்கறிளை சேர்த்து சமைக்கவும் முயற்சி செய்திருக்கிறார்கள். </p><p>

எஞ்சிய உடல் பாகத்தைத்தான் அவர்கள் சூட்கேசில் வைத்து ரயிலில் வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு அந்த பெண்ணின் தலை இதுவரை கிடைக்கவில்லை.

போலீசாரின் விசாரனையில், கண்ணாடி அணிந்த அந்த பெண்ணின் பெயர் பகவதி பாஜி எனவும், அந்த இளைஞரின் பெயர் மாணிக் லஸ்கர் என்பது தெரியவந்தது.</p><p></p><p> அதோடு, கடந்த 10 நாட்களாக அவர்களுடன் அதே வீட்டில் ஹைதுல் நிஷா என்கிற பெண்ணும் தங்கியிருந்தது தெரிய வந்தது. அவருடன் சண்டை வந்ததால் பகவதி பாஜி மற்றும் மாணிக் லஷ்கர் இருவரும் சேர்ந்து ஹைதுல் நிஷாவை கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.
 

இந்த அளவுக்கு கொடூரமாக கண்டதுண்டமாக வெட்டி பிரியாணி சமைத்த இருவரையும் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். </p><p>தற்போது அவர்கள் ஒடிசாவில் இருப்பதாக தகவல் கிடைத்தநிலையில் இருவரையும் தேடி தனிப்படை போலீசார் ஒடிசா சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-22T10:57:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை பெரும்போகத்தில் 74900 ஹெக்டெயரில் நெற்செய்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/paddy-cultivation-in-batticaloa-district-1787392730"></link>
            <id>https://tamilwin.com/article/paddy-cultivation-in-batticaloa-district-1787392730</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை பெரும்போகத்தில் 74900 ஹெக்டெயரில்
நெற்செய்கை முன்னெடுக்கப்படவுள்ளதுடன் 15 இலட்சத்து 43 ஆயிரத்து 500 கிலோகிராம் உர த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை பெரும்போகத்தில் 74900 ஹெக்டெயரில்
நெற்செய்கை முன்னெடுக்கப்படவுள்ளதுடன் 15 இலட்சத்து 43 ஆயிரத்து 500 கிலோகிராம் உர தேவையினை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை முன்னெடுக்கப்படவுள்ள பெரும்போக நெற்செய்கை
தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் மாவட்ட
விவசாய பணிப்பாளர் சிவனேசனின் ஒருங்கமைப்பில் மாவட்ட அரசாங்க அதிபர்
ஜே.எச்.அருள்ராஜா தலைமையில் நடைபெற்றது.
</p><p>இந்த கூட்டத்தில் மாகாண நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர்கள், மாவட்ட
கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஆர்.யோகராஜன், தேசிய உரச்
செயலகத்தின் மாவட்ட பிரதிப்பணிப்பாளர், விவசாய அமைச்சரின் மாவட்ட இணைப்பாளர்
கே.திலகநாதன் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், துறைசார் அதிகாரிகள், விவசாய
திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fbd5cde-963a-47a4-bc57-16b94b345e5f/26-6a897bd64f4b4.webp' /></p><p>
</p><h2>விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு</h2><p>குறிப்பாக, தற்போதைய எல் நினோ தாக்கம் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய காலநிலை
மாற்றங்களைக் கருத்திற்கொண்டு, விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைக்
குறைப்பதற்கும், அவர்களை வலுப்படுத்தி சிறந்த அறுவடையைப் பெற்றுக்கொள்வதற்கும்
தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
</p><p>அத்துடன், விவசாய அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வங்கிகளினால்
முன்னெடுக்கப்படவுள்ள ஊக்குவிப்பு நடைமுறைகள், விவசாயக் காப்புறுதி, குளங்களை
அபிவிருத்தி செய்தல், மண் அகழ்வு, விவசாய வீதி அபிவிருத்தி செய்தல், மற்றும்
வாய்க்கால் புனர்நிர்மாணம், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் விரிவாக
ஆராயப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a993917-4c9d-496a-991c-309a55b62677/26-6a897bd749543.webp' /></p><p>
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நீர்ப்பாசனத் திட்டங்கள் தொடர்பாகவும்,
மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும்
கலந்துரையாடப்பட்டது.
விதை நெல் வழங்கள், பயிர்ச்செய்கைக்கான உரம் வழங்குதல், யானை மனித மோதல்கள்,
நஷ்டஈடு வழங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவான
கலந்துரையாடப்பட்டதுடன் விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான
பல முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டது.</p><h2>மாவட்டத்தில் நிலவும் வறட்சி</h2><p>
</p><p>மாவட்டத்தில் நிலவும் வறட்சி காரணமாக பல குளங்களின் நீர்மட்டம்
மிகவும் குறைவடைந்துள்ளமை தொடர்பாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டதுடன்,
எதிர்வரும் பெரும்போகச் செய்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான நீர்
முகாமைத்துவ நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.குறிப்பாக எல் நினோ
காலநிலை மாற்றத்தினால் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள சூழல்
மாற்றங்கள், நீரைப்பெற்றுக் கொள்வதற்கான நிலைகள் மற்றும் விவசாயிகள்
எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d033a3c3-547b-446c-a24b-a7384a12976f/26-6a897bd823b85.webp' /></p><p>
</p><p>நீர்பாசன திணைக்களம் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் அவ்றறினால்
விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மை தீமைகள் குறித்தும் எதிர்காலத்தில் நீர்பாசன
திணைக்களத்தின் செயற்பாடுகளை வினைத்திறனாக முன்னெடுப்பது குறித்தும் இதன்போது
ஆராயப்பட்டது.
குறிப்பாக முந்தனையாறு திட்டத்தினை முன்கொண்டு செல்வதற்கு உள்ள தடைகள்
குறித்தும் அதனை திட்டமிட்டு செய்வதற்கான நீர்பாசன திணைக்களத்தின் மந்தகதிய
செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது விவசாயிகளினால் காரசாரமான கருத்துகள்
முன்வைக்கப்பட்டன.</p><p>
இந்த கூட்டத்தில் விவசாயிகளுக்கான நெல் விதைப்பு காலத்தில் எதிர்கொள்ளும்
பிரச்சினைகள் மற்றும் விதைப்பு காலத்தில் தடையின்றி உரத்தினைப் பெற்று கொள்ளுதல் போன்ற விடயங்கள் இதன்போது ஆராயப்படதுடன் அவற்றிற்கான
தீர்வுகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81a6c8fd-be42-43eb-ae9d-0326cef44161/26-6a897d682fba8.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T10:45:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளாமர் போட்டோஷூட் உருவான வீடியோவை வெளியிட்ட பிக்பாஸ் கெமி!! வீடியோ..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/vyishali-kemkar-kemy-recent-photoshoot-bts-video-1787396236"></link>
            <id>https://viduppu.com/article/vyishali-kemkar-kemy-recent-photoshoot-bts-video-1787396236</id>
            <summary type="text">பிரபல வானொலியில் ஆர்ஜேவாக பணியாற்றி அதன்பின் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தான் விஷாலி கெம்கர்.

கெமி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல வானொலியில் ஆர்ஜேவாக பணியாற்றி அதன்பின் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தான் விஷாலி கெம்கர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba21e89f-9d53-4ecd-9f3c-263848a4cc21/26-6a89808ee6fd8.webp' /></p><p>
கெமி என்று அனைவராலும் அழைக்கப்படும் இவர், பிக்பாஸ் சீசன் 9ல் பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

நடிகை, டான்ஸர், பேஸ்கட் பால் வீராங்கனை என்று பன்முகத்திறமை கொண்ட கெமி, இணையத்தில் ஆக்டிவாக இருந்து நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து பலரது கவனத்தையும் ஈர்த்தார்.</p><p>

தற்போது, ரம்பை லுக்கில் எடுத்த கிளாமர் ஷூட்டிங் வீடியோவை பகிர்ந்துள்ளார் கெமி.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcTjYBwPhiJ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcTjYBwPhiJ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcTjYBwPhiJ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Roll In Studio (@rollinstudio_by_arvindraj)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-22T10:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[Paw Patrol: The Dino Movie திரை விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/paw-patrol-the-dino-movie-review-1787394732"></link>
            <id>https://cineulagam.com/article/paw-patrol-the-dino-movie-review-1787394732</id>
            <summary type="text">Paw Patrol கனேடிய பட வரிசையில் மூன்றாவது பாகமாக வெளியாகியுள்ள Paw Patrol: The Dino Movie அனிமேஷன் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க....</summary>
            <content type="html"><![CDATA[<p>Paw Patrol கனேடிய பட வரிசையில் மூன்றாவது பாகமாக வெளியாகியுள்ள Paw Patrol: The Dino Movie அனிமேஷன் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8b9b910-16bd-492f-9c87-58575b6eebda/26-6a897ab03d6ce.webp' /></p><h2>கதைக்களம் </h2><p>

படகில் ஏற்பட்ட தீயில் இருந்து ஒரு குடும்பத்தைக் காப்பாற்றிய பிறகு, Paw Patrol குழுவினர் ஒரு புயலில் சிக்குகின்றனர். 

அதனைத் தொடர்ந்து டைனோசர்கள் வசிக்கும் ஒரு தீவில் அவர்கள் கரை ஒதுங்குகின்றனர். </p><p>

சக்கர நாற்காலியை பயன்படுத்தும் ரெக்ஸ் என்ற நாய்க்குட்டி உட்பட சில நாய்க்குட்டிகள் டைனோசர்களுடன் தொடர்பு கொள்கின்றன. 

அதன் பின்னர் Paw Patrol குழுவினரும், சில ஆராய்ச்சியாளர்களும் அங்கே ஒரு செயல்பாட்டுத் தளத்தை அமைக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0c83355-183c-4c4d-b009-0244a8c81627/26-6a897b1239c60.webp' /></p><p>

அதே சமயம் மார்ஷல் என்ற நாய்க்குட்டி குட்டி டைனோசருடன் நட்புகொண்டு அதற்கு ரூபார்ப் என்று பெயரிடுகிறது. 

இந்த சூழலில், டைனோசர் தீவு குறித்து வெளியுலகத்திற்கு தெரிய வர, மேயர் ஹம்டிங்கர் அந்த தீவில் இருக்கும் வைரங்களை எடுக்க திட்டம் தீட்டுகிறார். </p><p>

அவர் தனது குழுவுடன் டைனோ தீவிற்கு செல்ல, அதன் பின்னர் என்ன ஆனது? Paw Patrol குழு அவர்களின் திட்டத்தை முறியடித்தனரா? என்பதே மீதிக்கதை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87c6dff9-bf10-4a08-bea4-671461704ead/26-6a897b12ebf57.webp' /></p><h2>படம் பற்றிய அலசல்</h2><p>

கால் ப்ரங்கர் என்ற கனேடிய அனிமேஷன் இயக்குநர் தனது அடுத்த படைப்பாக, Paw Patrol சீரிஸின் மூன்றாவது பாகத்தை கொடுத்துள்ளார்.

குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் கவரும் வகையில் கதைக்களமும், திரைக்கதையும் அமைக்கப்பட்டுள்ளன.
</p><p>
கண்ணை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள காட்சிகள் குழந்தைகளை குதூகலிக்க வைக்கின்றன. 
 
மலைகளின் இடுக்கில் சிக்கிக்கொண்ட டைனோசர் ஒன்றை Paw Patrol குழு காப்பற்றும் காட்சி மிகச்சிறப்பாக காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d8ed14c-5206-455a-8c07-baba1a1d4519/26-6a897b1180d5e.webp' /></p><p></p><p>
</p><p>
அதேபோல் குழந்தைகளுக்கு விடாமுயற்சி, பிறருக்கு உதவ வேண்டும் போன்ற நல்ல விஷயங்களை காட்சிகளாக காட்டிய விதம் அருமை. 

அனிமேஷன் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது. </p><p>பின்னணி இசை படத்திற்கு இன்னொரு பலம். 

கார்டனர், ரெயின் ஜன்ஜூவா, மெக்கென்னா கிரேஸ், டெர்ரி கிரேவ்ஸ் போன்றவர்கள் கச்சிதமாக பொருந்தும் வகையில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74867e58-f5b1-48ed-80da-388dd74fc630/26-6a897b13a3a62.webp' /></p><p> </p><p>

முந்தைய பாகங்களைப் போலவே இந்த Paw Patrol படத்தையும் குழந்தைகள் கொண்டாடும் வகையில் சுவாரஸ்யமாக கொடுத்துள்ளார் இயக்குநர்.</p><p><b><u>க்ளாப்ஸ்</u></b></p><p> 

கதை </p><p>

திரைக்கதை </p><p>

காமெடி காட்சிகள் </p><p>

கருத்து </p><p><b><u>

பல்ப்ஸ் </u></b></p><p>

பெரிதாக ஒன்றுமில்லை </p><h5><b>

மொத்தத்தில் இந்த Paw Patrol: The Dino Movie குழந்தைகளுடன் பெரியவர்களும் சேர்த்து கொண்டாடக்கூடிய பயணம்.</b></h5><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/234a1eff-8502-4720-8bdb-a04023b6319d/26-6a897b10ac6f2.webp' /></p>]]></content>
            <updated>2026-08-22T10:35:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக் கடற்பரப்பில் மீன் உற்பத்தியில் வீழ்ச்சி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fish-harvest-in-sri-lankan-waters-declining-1787392672"></link>
            <id>https://ibctamil.com/article/fish-harvest-in-sri-lankan-waters-declining-1787392672</id>
            <summary type="text">இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் மீன் உற்பத்தி குறைவடைந்து வருவதாக தேசிய நீர்வாழ் உயிரின வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (NARA) தெரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் மீன் உற்பத்தி குறைவடைந்து வருவதாக தேசிய நீர்வாழ் உயிரின வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (NARA) தெரிவித்துள்ளது. </p><p>

இது இலங்கைக்கு மாத்திரமன்றி உலகின் பல நாடுகளின் சமுத்திரக் கட்டமைப்புகளுக்கும் தாக்கம் செலுத்தியுள்ள பொதுவான அபாயம் என்று அதன் தலைவர் சனத் ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

இந்த நிலைமை திடீரென உருவானது அல்ல எனவும், 2014 ஆம் ஆண்டு முதல் இலங்கையை அண்டிய கடற்பரப்பில் மீன் உற்பத்தியில் வீழ்ச்சி பதிவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>எல் நினோ நிலைமையின் தாக்கம்&nbsp;</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், மீன் உற்பத்தி குறைவடைந்தமைக்குக் குறிப்பிட்ட எந்தவொரு காரணமும் தாக்கம் செலுத்தவில்லை, உயிரியல் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்களே பிரதான காரணமாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c519abdb-08ba-4214-9b15-149e97fccdaf/26-6a8978fa0ad8c.webp' /></p><p> </p><p>

எனினும், இதற்காக எல் நினோ (El Niño) நிலைமையின் தாக்கம் உள்ளதா என்பது இதுவரை குறிப்பாக அடையாளம் காணப்படவில்லை, அதனால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்படவில்லை.&nbsp;</p><p>

இந்த நெருக்கடி நீண்டகாலமாக வளர்ச்சியடைந்தால் கடற்றொழில் மக்களின் ஜீவனோபாயத்தைப் பாதுகாப்பதற்காக அவர்களை வேறு தொழில் வாய்ப்புகளை நோக்கி மாற்றியமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>மீன் வளர்ப்பிற்கான விசேட வேலைத்திட்டம்&nbsp;</h2><p> </p><p>

இதற்குத் தீர்வாக மீன் வளர்ப்பிற்கான விசேட வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், தற்போதைய முன்னேற்றம் தொடர்பில் திருப்தியடைய முடியாது.” என தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ef6470b-a070-4e37-845f-c639440e2d4e/26-6a8978fab1d03.webp' /></p><p>

இதேவேளை, கடற்பரப்பில் சட்டவிரோத வலைகள் மற்றும் அழிவை ஏற்படுத்தும் உபகரணங்களின் பயன்பாட்டிற்கு எதிரான சட்டங்கள் சரிவர நடைமுறைப்படுத்தப்படாததே மீன் வளம் குறைவடைவதற்கு முக்கிய காரணம் என தேசிய கடற்றொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கத்தின் அழைப்பாளர் ஹெர்மன் குமார குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T10:32:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹரியால் கொடுமைக்கார சித்தி என அழைக்கப்பட்ட ராணி கமீலா: வியப்பூட்டும் ஒரு தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/prince-harry-blames-queen-camilla-cruel-stepmother-1787381755"></link>
            <id>https://news.lankasri.com/article/prince-harry-blames-queen-camilla-cruel-stepmother-1787381755</id>
            <summary type="text">Queen Camilla will be key figure in Harry and Meghan&#039;s return to royal family: ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்துக்குத் திரும்புவதில் ராணி கமீலா ஒரு முக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Queen Camilla will be key figure in Harry and Meghan's return to royal family: ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்துக்குத் திரும்புவதில் ராணி கமீலா ஒரு முக்கியப் பங்கு வகிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>

பிரித்தானிய இளவரசரான ஹரி ராஜ குடும்பத்திலிருந்து வெளியேறியபோது, தன் தந்தையின் இரண்டாவது மனைவியான ராணி கமீலாவை கொடுமைக்கார சித்தி என விமர்சித்திருந்தார்.
</p><p>
ஆனால், அந்த ராணி கமீலா தொடர்பில் ஒரு வியப்பூட்டும் செய்தி வெளியாகியுள்ளது.
</p><h3>
ராஜ குடும்பத்தைவிட்டு வெளியேறிய ஹரி
</h3><p>
இளவரசர் ஹரி ராஜ குடும்ப மரபை மீறி, விவாகரத்தான அமெரிக்க நடிகையான மேகன் மார்க்கலை திருமணம் செய்தது, மற்றும் மேகனால் ராஜ குடும்பத்தில் சமாளிக்க முடியாமல் போனதால் உருவான பிரச்சினைகள், ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்தை விட்டு வெளியேற வழிவகுத்தன.
</p><p>
பின்னர் ராஜ குடும்பத்தை மட்டுமல்ல, பிரித்தானியாவை விட்டே வெளியேறி மனைவியின் நாடாகிய அமெரிக்காவில் குடியேறினார் ஹரி.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4846de5f-459e-4be5-95d5-74d5ea616544/26-6a8947fce62cb.webp' /></p><p>
இந்நிலையில், ஆறு ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் ஹரி தன் குடும்பத்துடன் பிரித்தானியா திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
கொடுமைக்கார சித்தி என அழைக்கப்பட்ட ராணி கமீலா

விடயம் என்னவென்றால், ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறியதுடன் நிற்கவில்லை. </p><p>ராஜ குடும்பத்தைப் பற்றி மோசமாக விமர்சித்தனர், தொலைக்காட்சிகளுக்கு பேட்டிகள் கொடுத்தனர், அதை உலகமே பார்த்தது.
</p><p>
அது போதாதென்று, ஹரி தன் பங்குக்கு ‘ஸ்பேர்’ என்னும் பெயரில் ஒரு சுயசரிதை புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.
</p><p>
அதில் தன் அண்ணன் வில்லியம், அண்ணி கேட் உட்பட அனைவரையும் மோசமாக விமர்சித்திருந்தார் ஹரி.&nbsp;</p><p></p><p>
குறிப்பாக, தன் தந்தையின் இரண்டாவது மனைவியான கமீலாவைக் குறித்து, கமீலா கொடுமைக்கார சித்தியாக இருப்பார் என்றும், ஆகவே அவரை திருமணம் செய்யவேண்டாம் என தான் தன் தந்தையான மன்னர் சார்லசைக் கெஞ்சியதாகவும் குறிப்பிட்டிருந்தார் ஹரி.</p><h3>

வியப்பூட்டும் ஒரு தகவல்
</h3><p>
விடயம் என்னவென்றால், இப்போது ஹரி, மேகன் தம்பதியர் தங்கள் பிள்ளைகளுடன் மீண்டும் பிரித்தானியாவுக்கே திரும்ப முடிவு செய்துள்ள நிலையில், அவர்களை மீண்டும் ராஜ குடும்பத்துக்கு அறிமுகம் செய்வதில் கமீலா முக்கியப் பங்காற்ற இருப்பதாக அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a529847c-2194-4262-8c9d-0b0e6b389cae/26-6a8947fd96614.webp' /></p><p>

கமீலா தன் முன்னாள் கணவரான ஆண்ட்ரூ பார்க்கரைப் பிரிந்தாலும், தன் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் இன்னமும் நெருக்கமான உறவு வைத்துள்ளார்.</p><p>

ஆக, கமீலா குடும்பம் என்னும் விடயத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். </p><p>ஆக, மன்னர் சார்லஸ், ஹரியின் பிள்ளைகளான தன் பேரப்பிள்ளைகளுக்காக ஏங்கும் நிலையில், மீண்டும் ஹரியை தங்கள் குடும்பத்துக்குள் அனுமதிக்க மன்னரைத் தூண்டியதே கமீலாவின் அமைதியை ஏற்படுத்தும் வகையிலான தாக்கம்தான் என்கிறார்கள் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த சிலர்.
</p><p>
அதாவது, ஹரி தன்னை கொடுமைக்கார சித்தி என விமர்சித்தாலும், அதை எல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல், ஹரி மீண்டும் ராஜ குடும்பத்தில் இணைவது தன் கணவரான மன்னர் சார்லசுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமானால், அதை செய்ய அவர் தயாராக உள்ளதாக அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T10:29:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[விழிப்புடன் இருக்கவும்! கடற்பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அம்பர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/amber-alert-for-many-coastal-areas-of-the-country-1787393611"></link>
            <id>https://tamilwin.com/article/amber-alert-for-many-coastal-areas-of-the-country-1787393611</id>
            <summary type="text">இலங்கையின் பல கடற்பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலவக்கூடும் என இயற்கை பேரிடர் முன்னறிவிப்பு மையம் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பல கடற்பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலவக்கூடும் என இயற்கை பேரிடர் முன்னறிவிப்பு மையம் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>சனிக்கிழமை (22) காலை 10:30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு, ஞாயிற்றுக்கிழமை (23) காலை 10:30 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது</p><p>எனவே கடற்படை மற்றும் கடற்றொழில் சமூகத்தினர் விழிப்புடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>கடல் கொந்தளிப்பு</h2><p>காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக சிலாபம் வரையிலான கடல் பகுதிகளிலும், மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளிலும் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6652b19-3dda-4d79-b2a5-29bbb952a5c2/26-6a8979d58f142.webp' /></p><p>குறித்த பகுதிகளில் அவ்வப்போது கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
</p><p>

மேலும், புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் அலைகளின் உயரம் 2.0 முதல் 2.5 மீட்டர் வரை உயரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>எனவே, கடல் பகுதிகளில் பயணிக்கும் கடற்படையினரும், கடற்றொழில் சமூகத்தினரும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T10:28:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கண் பாதிப்புக்குள்ளானவர்கள் வீடு சென்றனர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kovil-suffered-eye-injuries-in-jaffna-return-home-1787394394"></link>
            <id>https://jvpnews.com/article/kovil-suffered-eye-injuries-in-jaffna-return-home-1787394394</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் நடைபெற்ற திருவிழாவைத் தொடர்ந்து, கண் வலி, எரிச்சல் மற்றும் கண்களைத் திறப்பதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகளுடன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம்<a href="https://jvpnews.com/article/temple-incident-in-jaffna-cause-of-eye-injury-1787374243" target="_blank"> பண்டத்தரிப்பு பகுதியில் நடைபெற்ற திருவிழா</a>வைத் தொடர்ந்து, கண் வலி, எரிச்சல் மற்றும் கண்களைத் திறப்பதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் 375 பேர் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.
</p><p>
பாதிக்கபப்டவர்களுக்கு தேவையான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளின் பின்னர், கண் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டிருந்த அனைவரும் தற்போது வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக யாழ் போதனா வைத்திய சாலை பணிப்பாளர் மருத்துவர் சத்திய மூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7908f8f6-9542-4644-8445-5958ecb6a636/26-6a89795c96377.webp' /></p><p>
</p><p>
இன்னிலையில் வீடு திரும்பியவர்கள் வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட கண் மருந்துகளை வைத்திய ஆலோசனைக்கு ஏற்ப தொடர்ச்சியாகவும் முறையாகவும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.</p><p></p><p>
</p><p>
அதேசமயம் சிகிச்சைப் பணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்ட கண் சத்திரசிகிச்சை நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் பணிப்பாளர் மருத்துவர் சத்திய மூர்த்தி நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T10:24:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[34 ஆண்டுகளுக்கு முன் மலையேற்றத்துக்குச் சென்றபோது மாயமான நபர்கள்: புதிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bodies-found-of-34-years-ago-missing-hikers-1787393509"></link>
            <id>https://news.lankasri.com/article/bodies-found-of-34-years-ago-missing-hikers-1787393509</id>
            <summary type="text">Bodies of two hikers missing for years, found after Swiss glacier melts: பல ஆண்டுகளுக்கு முன் சுவிட்சர்லாந்தில் மலையேற்றத்துக்குச் சென்றபோது மாயமான இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Bodies of two hikers missing for years, found after Swiss glacier melts: பல ஆண்டுகளுக்கு முன் சுவிட்சர்லாந்தில் மலையேற்றத்துக்குச் சென்றபோது மாயமான இரண்டு பேருடைய உடல்கள் பனிப்பாறைகள் உருகியதால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
</p><p> 

சுவிட்சர்லாந்துக்கு சமீபத்தில் மலையேற்றத்துக்குச் சென்ற ஒருவர், லோசான் நகருக்கு தெற்கே அமைந்துள்ள Trift பனிப்பாறையில் இரண்டு உடல்களைக் கண்டு, அதிகாரிகளுக்கு தகவலளித்துள்ளார்.
</p><h3>
தசாப்தப் பின்னணி</h3><p>

உடனடியாக அங்கு சென்ற அதிகாரிகள், அந்த உடல்களை மீட்டு, அவற்றை அடையாளம் காண்பதற்காக DNA பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33113baa-cec0-4c19-b20a-dbcd4d6c5a3c/26-6a8975e73302d.webp' /></p><p>
அப்போது, அந்த உடல்கள் பெல்ஜியம் நாட்டவர்கள் இருவரின் உடல்கள் என்பது தெரியவந்தது.
</p><p>
அதாவது, 1992ஆம் ஆண்டு, பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் மலையேற்றத்துக்குச் சென்றபோது மாயமாகியுள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
அவர்களுடைய உடல்கள் பனியில் புதைந்துபோக, சமீபத்தில் பனிப்பாறைகள் உருகியதைத் தொடர்ந்து 34 ஆண்டுகளுக்குப் பின், அந்த உடல்கள் வெளியே தெரியத் துவங்கியுள்ளன.
</p><p>
விடயம் என்னவென்றால், இப்படி பனிப்பாறைகள் உருகுவதால், பல ஆண்டுகளுக்கு முன் காணாமல்போனவர்களின் உடல்கள் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது இதுதான் முதல்முறையாம்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T10:12:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலக குற்றவாளி வெளிநாட்டில் கைது : பிரதேசவாசிகள் மகிழ்ச்சி ஆரவாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/locals-rejoice-as-underworld-criminal-arrested-1787392892"></link>
            <id>https://ibctamil.com/article/locals-rejoice-as-underworld-criminal-arrested-1787392892</id>
            <summary type="text">துபாய் நாட்டில் தலைமறைவாக இருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான லலித் கன்னங்கரா என்ற &#039;பஸ் லலித்&#039; கைது செய்யப்பட்ட நிலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாய் நாட்டில் தலைமறைவாக இருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான லலித் கன்னங்கரா என்ற 'பஸ் லலித்' கைது செய்யப்பட்ட நிலையில் ஹங்வெல்ல, ஹோமாகம மற்றும் கடுவெல ஆகிய பிரதேச மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>கைது செய்யப்பட்ட அவர் நாளைமறுதினம் (24 ஆம் திகதி )இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளார். சந்தேகநபரைப் பொறுப்பேற்று இலங்கைக்கு அழைத்து வருவதற்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட அதிகாரிகள் குழுவொன்று நேற்று அதிகாலை துபாய் புறப்பட்டுச் சென்றுள்ளது.</p><h2>துபாய் காவல்துறையினரால் கைது</h2><p>இந்த சந்தேகநபர் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் வழங்கப்பட்ட விசேட அறிவித்தலின் பேரில் துபாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1652e9a7-c13a-4d5a-bb35-23d608fa6437/26-6a8975d9ba26a.webp' /></p><p>
</p><p>
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான இவர் துபாயில் கைது செய்யப்பட்டதை அடுத்து, ஹங்வெல்ல, ஹோமாகம மற்றும் கடுவெல ஆகிய பிரதேச மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்ததாக 2025 ஒக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. </p><p>பிரதேசவாசிகள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியும், பாதுகாப்புப் படையினர் உட்பட அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தும் அந்தப் பிரதேசங்கள் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T10:11:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுகீஸ்வர பண்டார சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sugiswara-bandara-was-admitted-prison-hospital-1787392100"></link>
            <id>https://ibctamil.com/article/sugiswara-bandara-was-admitted-prison-hospital-1787392100</id>
            <summary type="text">சிறையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

 

அவரது காலில் ஏற்பட்ட காயம் தீவிரமடைந்ததை அடுத்து, நேற்று (21.08.2026) அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
 

இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து சம்பளம் பெற்று, அதன் மூலம் அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, சுகீஸ்வர பண்டார ஜூன் 18 அன்று கைது செய்யப்பட்டார்.</p><p></p><h2>சுகீஸ்வர பண்டார&nbsp;</h2><p>இதற்கிடையில், ஜனாதிபதியின் செலவினத் தலைப்பின் கீழ் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பாக, சிறப்பு ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் ஊழல் தடுப்புக் குழு, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் (CCIB) முறைப்பாடு அளித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec8ec3d4-765b-4bb9-a634-6c56be076b5d/26-6a89753043f63.webp' /></p><p>அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளில், சுகீஸ்வர பண்டார 2022இல் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றியதும், அதே காலகட்டத்தில் ஜனாதிபதி செயலகத்தில் திட்டப் இயக்குனர் பதவியையும் வகித்ததும் தெரியவந்தது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T10:08:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகனப் பதிவிற்கான போலி ஆவணங்கள்! நாரஹேன்பிட்ட பகுதியில் வசமாக சிக்கிய மூவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/three-arrested-fake-vehicle-registration-documents-1787389766"></link>
            <id>https://tamilwin.com/article/three-arrested-fake-vehicle-registration-documents-1787389766</id>
            <summary type="text">நாரஹேன்பிட்ட பகுதியில் வாகனப் பதிவிற்கான ஆவணங்களைப் போலியாகத் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் மூவர் கைதாகியுள்ளனர்.&amp;nbsp;

மோட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாரஹேன்பிட்ட பகுதியில் வாகனப் பதிவிற்கான ஆவணங்களைப் போலியாகத் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் மூவர் கைதாகியுள்ளனர்.&nbsp;</p><p>

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு அருகே வாகனப் பதிவிற்கான ஆவணங்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. </p><p>இதனை தொடர்ந்தே சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர். </p><p>கைது செய்யப்பட்டவர்கள் 39, 52 மற்றும் 56 வயதுடைய நாரஹேன்பிட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/832c37c2-8d52-4c77-9914-140720ed385b/26-6a8974d542d04.webp' /></p><h2>கைப்பற்றப்பட்ட பொருட்கள்</h2><p>
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் லெட்டர்ஹெட்களைக் கொண்ட 2 வருமான உரிம விண்ணப்பப் படிவங்கள், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பெயரைக் கொண்ட போலி ரப்பர் முத்திரை மற்றும் அமைதி நீதியரசர் (JP) ஒருவரின் பெயரைக் கொண்ட போலி ரப்பர் முத்திரை என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>

மேலும், போலி சான்றிதழ்களைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட அடையாள அட்டையின் நிழற்படப் பிரதி , போலித் தயாரிப்பிற்காகப் பயன்படுத்தப்பட்ட லொறி ஒன்றின் வாகனப் பதிவுச் சான்றிதழ் பிரதி, சட்டத்தரணி ஒருவரின் விவரங்களைக் கொண்ட போலி ரப்பர் முத்திரை மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களக் கடிதப் பரிமாற்றங்களுக்குப் பயன்படுத்தப்படும் கோப்புத் தாள்கள் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T10:07:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐபோனால் உயிரிழந்த குடும்பம்; பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/family-lost-lives-due-to-iphone-maharashtra-horror-1787391260"></link>
            <id>https://jvpnews.com/article/family-lost-lives-due-to-iphone-maharashtra-horror-1787391260</id>
            <summary type="text">&amp;nbsp; ஐபோன் வாங்கி தரவில்லை எனக் கூறி தனது பெற்றோரிடம் தற்கொலை மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்த இளைஞரும் அவரை காப்பாற்ற சென்ற அவரின் பெற்றோரும் மலையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஐபோன் வாங்கி தரவில்லை எனக் கூறி தனது பெற்றோரிடம் தற்கொலை மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்த இளைஞரும் அவரை காப்பாற்ற சென்ற அவரின் பெற்றோரும் மலையில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் சத்திரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள கவ்டா மலையில் நடந்திருக்கிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

 
அந்த 18 வயது வாலிபர் மலையில் விளிம்பில் நின்றுகொண்டு தனக்கு Iphone வாங்கி தர வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a509fdb6-3800-4d0d-8ebe-7f151b09ff4b/26-6a896d1dce541.webp' /></p><h2>&nbsp;மலை விளிம்பில் நின்றுகொண்டு&nbsp; மிரட்டல்</h2><p> இல்லையென்றால் குதித்துவிடுவேன் என மூன்று மணி நேரமாக அவரின் பெற்றோரை தற்கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.

 ‘எப்படியாவது உனக்கு ஐபோன் வாங்கி கொடுத்து விடுகிறோம். </p><p>கீழே குதித்துவிடாதே ’ என அவரின் பெற்றோர் கெஞ்சிதுடன், அங்கிருந்த கிராம மக்கள் மற்றும் காவல் அதிகாரிகளும் அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர்.</p><p></p><p> 

ஒரு கட்டத்தில் அந்த இளைஞர் தடுமாற அவரை எப்படியாவது பிடித்து இழுத்து விடலாம் என அவ்ரை பிடிக்க வாலிபரின் தந்தை அருகில் சென்றபோது இருவதுமே மலை உச்சையிலிருந்து கீழே விழுந்தனர்.
</p><p>
அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரின் தாய் இருவரையும் காப்பாற்றி விடலாம் எனக் கூறி அவரும் கீழே குதித்திருக்கிறார். இறுதியில் அவர்கள் மூவருமே கீழே விழுந்து உயிரிழந்துவிட்டனர்.</p><p></p><p> 

இந்த தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்கலில் வெளியாகியுள்ள நிலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-22T10:05:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்சாரம் தாக்கி ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/father-of-one-dies-of-electrocution-1787393244"></link>
            <id>https://jvpnews.com/article/father-of-one-dies-of-electrocution-1787393244</id>
            <summary type="text">அனுராதபுரம் -கெப்பித்திகொள்ளாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லாவ – ஆலங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி 35 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையொருவர் உயிரிழந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் -கெப்பித்திகொள்ளாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லாவ – ஆலங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி 35 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.

 </p><p> துயர சம்பவம் நேற்று (21) வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற நிலையில் 
உயிரிழந்தவர் தௌபீக் முகமட் தாரிக் (35) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87a73718-28c6-4594-b0d1-19436066ae17/26-6a8974dd8e44b.webp' /></p><h2>சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை</h2><p>

விவசாய இயந்திரத்தை கழுவுவதற்காக வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் கொம்ரசர் இயந்திரத்தை இணைத்திருந்த நிலையில், மின்கசிவு ஏற்பட்டதால் மின்சாரம் தாக்கி அவர் மயங்கி விழுந்துள்ளார்.
</p><p>உடனடியாக கஹடகஸ்திகிலிய – ரத்மல்கஹவெவ கிராமிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் உயிரிழந்துள்ளார்.</p><p></p><p>
சம்பவம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
</p><p>சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கெப்பித்திகொள்ளாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-22T10:04:48+00:00</updated>
        </entry>
    </feed>
