<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-20T10:31:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணிக்கு சென்ற கனடா தூதுவர் குழுவிற்கு ஏமாற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/canadian-delegation-visited-chemmani-mass-grave-1787207922"></link>
            <id>https://jvpnews.com/article/canadian-delegation-visited-chemmani-mass-grave-1787207922</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியை பார்வையிட சென்ற கனடா நாட்டின் தூதுவர் இசபெல்லா மார்ட்டீன் உள்ளிட்ட குழுவினர் நீதிமன்ற அனுமதி இல்லாததால் , த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியை பார்வையிட சென்ற கனடா நாட்டின் தூதுவர் இசபெல்லா மார்ட்டீன் உள்ளிட்ட குழுவினர் நீதிமன்ற அனுமதி இல்லாததால் , திருப்பி சென்றுள்ளனர்.
</p><p>
யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் செய்திருந்த கனடா தூதுவர் தலைமையிலான குழு செம்மணி அகழ்வாய்வு களத்தை பார்வையிடுவதற்கு சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e887b541-9a1a-4bd3-a7be-2bf9e6feab02/26-6a86a0f44ebfa.webp' /></p><p></p><h2>அனுமதி கிடைக்க காலதாமதம்</h2><p>
</p><p>
அதன் போது அவர்களிடம், அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தவர்கள், நீதிமன்ற அனுமதியினை கோரிய வேளை, தாம் இலங்கை அரசாங்கத்தின் நிர்வாக ரீதியான துறைசார் அமைச்சிடம் அனுமதி கேட்ட நிலையில் , எங்களுக்கான அனுமதி கிடைக்க காலதாமதம் ஏற்பட்டதால், நங்கள் இந்த இடத்தினை நேரில் பார்வையிட்டு , செல்வதற்கு முயற்சி செய்தோம் என கனடா நாட்டின் தூதுக்குழுவினரால் தெரிவிக்கப்பட்டது. </p><p></p><p>

அதன் போது அங்கிருந்த சட்டத்தரணிகள் , செம்மணி அகழ்வாய்வு தளத்தை பார்வையிடுவதற்கு , அனுமதி கோரி நீதிமன்றில் விண்ணப்பம் செய்து , நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டாலே பார்வையிட முடியும் என எடுத்து கூறினார்கள்.</p><p></p><p>
</p><p>
அதனை ஏற்றுக்கொண்டு அவர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக கனடா நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவர் இசபெல்லா மார்ட்டீன் உள்ளிட்ட உயர்மட்ட தூதுக்குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-20T10:25:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெகசின் சிறைச்சாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொதி! பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-package-found-in-the-magazine-prison-1787213001"></link>
            <id>https://tamilwin.com/article/the-package-found-in-the-magazine-prison-1787213001</id>
            <summary type="text">மெகசின் சிறைச்சாலை சுவருக்கு மேல் வீசப்பட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&amp;nbsp;இவ்வாறு வீசப்பட்ட பொதியின...</summary>
            <content type="html"><![CDATA[<p>மெகசின் சிறைச்சாலை சுவருக்கு மேல் வீசப்பட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இவ்வாறு வீசப்பட்ட பொதியினுள் இருந்து 30 கைப்பேசி மின்கலங்கள் (பேட்டரிகள்), 250 கிராம் சுண்ணாம்பு, 50 கிராம் புகையிலை, பாக்கு மற்றும் மாவா ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><h2>சந்தேகநபர் ஒருவரும்&nbsp;கைது &nbsp;</h2><p>இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாகஸ்புர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b68bc405-6d9b-4f5e-9f48-aa37ad60d72d/26-6a86d5f2989a9.webp' />&nbsp;</p><p>இதேவேளை, மெகசின் சிறைச்சாலைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களை வீச முயன்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரும் சாகஸ்புர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T10:24:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொம்பனித் தெரு ஆலயத்தில் களவாடப்பட்ட நகைகள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jewelry-stolen-company-street-murugan-temple-1787221619"></link>
            <id>https://jvpnews.com/article/jewelry-stolen-company-street-murugan-temple-1787221619</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கொழும்பு கொம்பனித் தெருவில் உள்ள ஆலயத்தில், அதன் பிரதான குருக்களினால் திருடி அடகு வைக்கப்பட்ட தங்க நகைகள் அனைத்தும், ஆலய தர்மகர்த்தாக்களி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கொழும்பு கொம்பனித் தெருவில் உள்ள ஆலயத்தில், அதன் பிரதான குருக்களினால் திருடி அடகு வைக்கப்பட்ட தங்க நகைகள் அனைத்தும், ஆலய தர்மகர்த்தாக்களின் நிதி உதவியின் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>

ஆலய தர்மகர்த்தாக்கள் இருவரும் தலா 12.4 மில்லியன் ரூபா தனிப்பட்ட நிதி நன்கொடை வழங்கியதையடுத்து, , அடகு வைக்கப்பட்ட நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/569e86c0-b1f4-47e6-8fff-d74a38b5deb5/26-6a86d67563a0e.webp' /></p><h2>&nbsp;வெளிநாடு செல்ல நீதவான் தடை உத்தரவு&nbsp;</h2><p>
</p><p>
ஆலயத்தில் கடமையாற்றிய பிரதான குருக்கள் நகைப் பெட்டகத்தின் சாவியைப் பயன்படுத்தி நகைத் திருட்டில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p>

 தான் திருடிய நகைகளை, கொட்டாஞ்சேனைப் பகுதியில் உள்ள வங்கி மற்றும் அடகு நிலையங்கள் என மூன்று வெவ்வேறு நிறுவனங்களில் அடகுவைத்து, மொத்தமாகப் பெற்ற சுமார் 2 கோடியே 67 இலட்சம் ரூபாவைச் சூதாட்டத்தில் இழந்துள்ளதாக அறியப்பட்டுள்ளது.
</p><p>

கடந்த மாதம் 29ஆம் திகதி ஆலய உற்சவத்தின்போது நகைப்பெட்டகத்தைத் திறந்தபோதே நகை திருட்டு வெளிச்சத்துக்கு வந்தது. 

அதனையடுத்து ஆலய நிர்வாகத்தினர் கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர். </p><p>

 இது தொடர்பான வழக்கு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தலைமறைவாகியுள்ள சந்தேக நபரான பிரதான குருக்கள், வெளிநாடு செல்ல நீதவான் தடை உத்தரவு பிறப்பித்தார். </p><p>

அத்தோடு, சந்தேக நபரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-20T10:24:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்காக முந்திக்கொண்டு வந்த அர்ச்சுனா! பைத்தியம் என பதில் வழங்கிய மகிந்த ஜெயசிங்கவால் சபையில் வாக்குவாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archchuna-replied-to-namal-1787220425"></link>
            <id>https://ibctamil.com/article/archchuna-replied-to-namal-1787220425</id>
            <summary type="text">நாடாளுமன்றில் இன்றைய பிரேரணை உரையில் தனது விவாதத்தை ஆரம்பித்த பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்கவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனவுக்கும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்றில் இன்றைய பிரேரணை உரையில் தனது விவாதத்தை ஆரம்பித்த பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்கவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனவுக்கும் சிறு வாக்குவாதம் இடம்பெற்றது.
</p><p>
மகிந்த ஜெயசிங்க உரையாற்ற ஆரம்பித்த சந்தர்ப்பத்தில் அவர், மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறித்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.</p><p>

''நாடாளுமன்றிற்கு வருவார், அவரது சந்தர்ப்பத்தில் உரையாற்றுவார், போலியான கதைகளை கூறுவார், பதில் கூறவரும்போது எழுந்து ஓடிவிடுவார்.இதனையே நாமல் தொடர்ந்து முன்னெடுக்கின்றார்" என மகிந்த ஜெயசிங்க தனது கருத்தை வெளிப்படுத்தினர்.</p><p></p><h2>மகிந்த ஜெயசிங்க&nbsp;பதில் </h2><p>
</p><p>இந்த சந்தர்ப்பத்தில் குறுக்கிட்டு அர்ச்சுனா கருத்துக்களை தெரிவிக்க அதற்கு மகிந்த ஜெயசிங்க பின்வருமாறு பதில் வழங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f122184-f2ee-4d71-803e-8358e1c3e4e5/26-6a86d580e186c.webp' /></p><p>
</p><p>''நீங்கள் கதைக்காதீர்கள். நாமலின் நண்பர் அல்லவா நீங்கள். உங்களுக்கு பைத்தியம் இல்லை. நீங்கள் நல்ல வைத்தியர்தான்.</p><p>

உங்கள் பெயரை நான் ஏன் சொல்ல வேண்டும். விமர்சிப்பவர்கள் பெயரை நேரடியாக குறிப்பிடுவேன். எனக்கு முதுகெலும்பு உள்ளது.
 
நாமலுக்காக பதில் சொல்ல உண்மையில் நீங்கள் யார்? </p><p>

உங்களுக்கு பைத்தியம் இல்லை நீங்கள் ஒரு நல்ல வைத்தியர்தான். நீங்கள் முதலில் அமைதியாக இருங்கள்" என கூறினார்.</p><p>இந்நிலையில் மீண்டும் ஒழுங்கு பிரச்சினை குறித்து அர்ச்சுனா கேள்வி எழுப்பிய நிலையில், மகிந்த ஜெயசிங்க காரசாரமாக பதில் வழங்கியிருந்தார்.
</p><p>''அவரை முதலில் அமர செய்யுங்கள். அரசாங்கத்தின் நேரத்தையே கதைப்பதற்க்காக பெற்றுக்கொண்டேன்.

யார் இவர்? இவருக்கு பைத்தியம். அவரை அமர செய்யுங்கள். என்றார்.
</p><p>
இதற்கு பதில் வழங்கிய சபாநாயகர், நிலையியல் கட்டளை என்னை குறிப்பிட்டு கருத்துக்களை முன்வைக்க மகிந்த ஜெயசிங்கவுக்கு தெரியப்படுத்தியிருந்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T10:23:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு போலி மருத்துவர்கள் சிக்கினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-fake-doctors-arrested-in-aluthgama-1787220846"></link>
            <id>https://ibctamil.com/article/two-fake-doctors-arrested-in-aluthgama-1787220846</id>
            <summary type="text">அளுத்கம, தர்கா நகரில் மருத்துவர்கள் போல் நடித்து வந்த இருவரை காவல்துறை கைது செய்துள்ளது.

இப்பகுதியில் சில காலமாக சிகிச்சை மையம் ஒன்றை நடத்தி வந்த இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அளுத்கம, தர்கா நகரில் மருத்துவர்கள் போல் நடித்து வந்த இருவரை காவல்துறை கைது செய்துள்ளது.
</p><p>
இப்பகுதியில் சில காலமாக சிகிச்சை மையம் ஒன்றை நடத்தி வந்த இவர்கள் இருவர் குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.</p><p>&nbsp;இவர்கள் இருவரும் தர்கா நகரைச் சேர்ந்தவர்கள்.

சந்தேக நபர்கள் இன்று (20) நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளனர்.
</p><p>
அளுத்கம காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T10:21:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெல்லிப்பளை வைத்தியசாலையில் தவறுதலாக செய்யப்பட்ட சத்திர சிகிச்சை! நீதி கோரும் பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/woman-treated-in-armpit-instead-of-chest-jaffna-1787220291"></link>
            <id>https://ibctamil.com/article/woman-treated-in-armpit-instead-of-chest-jaffna-1787220291</id>
            <summary type="text">



நெஞ்சுப் பகுதியிலிருந்த கொழுப்புக் கட்டி சத்திரசிகச்சை செய்வதற்காக தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு சென்ற பெண்ணுக்கு தவறுதலாக அக்குள் பகுதியில் சத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>



நெஞ்சுப் பகுதியிலிருந்த கொழுப்புக் கட்டி சத்திரசிகச்சை செய்வதற்காக தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு சென்ற பெண்ணுக்கு தவறுதலாக அக்குள் பகுதியில் சத்திர சிகிச்சை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் - கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண் நெஞ்சுப் பகுதியில் இருந்த கொழுப்புக் கட்டிக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.</p><p></p><h2>சத்திர சிகிச்சை</h2><p>

இதையடுத்து மருத்துவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய அவர் சத்திரசிகிச்சை செய்வதற்காக தெல்லிப்பளை மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.இவ்வாறு சென்ற இடத்திலேயே அவருக்கு அக்குள் பகுதியில் சத்திர சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7dfb62f-fd85-4fec-952e-a465873684fb/26-6a86d4365a1b9.webp' /></p><p>
இதையடுத்து, குறித்த பெண்ணுக்குத் தவறுதலாக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பதை அவதானித்த மருத்துவ நிபுணர்கள் அது தொடர்பில்
தெரியப்படுத்தியுள்ளனர்.</p><h2>முறைப்பாட்டை ஏற்க காவல்துறை மறுப்பு&nbsp;</h2><p>

இந்த விடயம் மருத்துவமனையில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்த நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் தமக்கு நீதிகோரி தெல் லிப்பழை காவல்துறையினரிடம் முறைப்பாடு வழங்கச் சென்றவிடத்து, அந்த முறைப்பாட்டை ஏற்பதற்கு காவல்துறையினர் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5c0f14e-1438-4bcf-b78b-8d2d20742d9c/26-6a86d4372424a.webp' /></p><p>
</p><p>
இதையடுத்து மனித உரிமைகள் ஆணைக்குழு மூலம் நீதியைப் பெறுவதற்கு அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
</p><p>
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த மருத்துவ நிபுணர் இதற்கு முன்னரும் இவ்வாறாகத் தவறான முறையில் சத்திர சிகிச்சைகளை செய்திருந்தார் என்பதும், அது பெரியளவில் சர்ச்சையானது என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T10:21:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹியின் அசத்தலான புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/nora-fatehi-stunning-photoshoot-1787221356"></link>
            <id>https://cineulagam.com/article/nora-fatehi-stunning-photoshoot-1787221356</id>
            <summary type="text">பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நோரா ஃபதேஹி. இவர் நடிப்பை தாண்டி நடனத்திற்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராம் பக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நோரா ஃபதேஹி. இவர் நடிப்பை தாண்டி நடனத்திற்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை நோரா ஃபதேஹி, ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்வார். </p><p>அந்த வகையில் தற்போது அசத்தலான லுக்கில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன. இதோ பாருங்க:</p>]]></content>
            <updated>2026-08-20T10:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் சர்ச்சை - இலங்கைகக்கு ஏற்பட்டுள்ள பேரதிர்ஷ்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-cargo-route-through-sri-lanka-1787219010"></link>
            <id>https://tamilwin.com/article/new-cargo-route-through-sri-lanka-1787219010</id>
            <summary type="text">இலங்கை ஊடாக புதிய சரக்கு போக்குவரத்து பாதையொன்று திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள கடல் போக்குவரத்துத் தடைகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை ஊடாக புதிய சரக்கு போக்குவரத்து பாதையொன்று திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள கடல் போக்குவரத்துத் தடைகள் காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

அதற்கமைய, இத்தாலியில் தயாரிக்கப்பட்ட அதிநவீன லெம்போர்கினி ரகத்தைச் சேர்ந்த 14 சொகுசு கார்கள், இலங்கை ஊடாக டுபாய் மற்றும் கட்டார் நாடுகளுக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.</p><p> </p><h2><b>

ஹோர்முஸ் நீரிணையில் சர்ச்சை</b></h2><p>இத்தாலில் இலிருந்து கடல் மார்க்கமாக அந்த வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f26d691b-7db7-42fc-8ddf-d72249e063bb/26-6a86d214f2cdf.webp' /></p><p>அங்கிருந்து 40 அடி நீளமுடைய 7 கொள்கலன்களில் ஏற்றப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. </p><p>

அதன் பின்னர், இந்த மோட்டார் வாகனங்கள் மிகப்பெரிய சரக்கு விமானத்தில் ஏற்றப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய் மற்றும் கட்டாரின் தோஹா நகரங்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த கார்கள் ஒவ்வொன்றின் குறைந்தபட்ச விலை இலங்கை நாணயத்தில் 50 கோடி ரூபா என தெரிவிக்கப்படுகிறது. </p><p>ஸ்போர்ட்ஸ் பிரிவைச் சேர்ந்த ஒரு காரின் விலை சுமார் 100 கோடி ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதன் மூலம் புதிய சரக்கு போக்குவரத்து பாதை காரணமாக இலங்கைக்கும் பொருளாதார ரீதியாக நன்மை ஏற்படும் நிலை உருவாகி வருவதாக கூறப்படுகிறது.</p><p> 

இந்த மோட்டார் வாகனங்களின் போக்குவரத்துப் பொறுப்பை டென்மார்க்கை சேர்ந்த நிறுவனம் ஒன்று ஏற்றுள்ளது.</p><p> இந்த மோட்டார் வாகனங்கள் சில நாட்களுக்கு முன்னர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தன.</p><p> 

 இந்த மோட்டார் வாகனங்களை ஏற்றிய விமானம் இன்று டுபாய் மற்றும் தோஹா நோக்கி கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-20T10:08:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் நூறு பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/central-african-republic-gold-mine-collapse-1787218046"></link>
            <id>https://ibctamil.com/article/central-african-republic-gold-mine-collapse-1787218046</id>
            <summary type="text">மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் பாரம்பரிய தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் சுரங்கத் தொழிலாளர் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் பாரம்பரிய தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் சுரங்கத் தொழிலாளர் சங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p>மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் கேமரூன் எல்லைக்கு அருகிலுள்ள ஜாம்போயே (Zamboye) கிராமத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் துல்லியமான எண்ணிக்கை உள்ளிட்ட மேலதிக விவரங்கள் இன்னும் சேகரிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசாங்கம் சட்டதரணி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.&nbsp;</p><p></p><h2>அரசு தரப்பு வழங்கறிஞரின் முக்கிய அறிவிப்பு</h2><p>பலர் தொடர்ந்து காணாமல் போயுள்ளதுடன், சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3df3a4c9-d2b6-40cd-93cf-3a149bda1c8f/26-6a86d18a7e6e0.webp' /></p><p> </p><p>சுரங்கங்களில் பணியாற்றி தங்களது குடும்பங்களின் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயன்ற இளம் ஆண்களும் பெண்களும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
இதனிடையே, எல்லையைத் தாண்டி வரும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக கேமரூன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>மேலும் இதுகுறித்த விபத்துக்கான காரணம் மற்றும் சுரங்கத்தை நடத்தி வந்தவர்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசுத் தரப்பு சட்டதரணி தெரிவித்துள்ளார்.</p><p>

ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் சிறிய அளவிலான தங்கம் மற்றும் கனிம அகழ்வுத் தொழில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக இருந்து வருகின்றது. </p><p>எனினும், போதிய கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் இல்லாததால் இதுபோன்ற சுரங்க விபத்துகள் ஏற்பட்டு பெருமளவிலான உயிரிழப்புகள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><br><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T10:06:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச காணியில் தமிழரொருவரால் கட்டப்பட்டுள்ள கட்டடம்! விடுதலைப் புலிகள் பயிற்சி முகாம் குறித்தும் அமைச்சர் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/training-camp-issue-in-palai-anadha-wijepala-1787210675"></link>
            <id>https://tamilwin.com/article/training-camp-issue-in-palai-anadha-wijepala-1787210675</id>
            <summary type="text">அரச காணியில் தியாகராசா குலதீபன் என்பவரால் கற்றாழை மற்றும் காய்கறி பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும், அங்கு ஆடைகள் தயாரிக்கும் நோக்கில் கட்டடம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச காணியில் தியாகராசா குலதீபன் என்பவரால் கற்றாழை மற்றும் காய்கறி பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும், அங்கு ஆடைகள் தயாரிக்கும் நோக்கில் கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன் பளையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியிடப்பட்ட தகவல் முற்றிலும் போலியானது எனவும் அவர் கூறியுள்ளார். </p><p>

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (20.08.2026) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>போலியான தகவல்</h2><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி - பளையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக அண்மையில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்ட தகவல் முற்றிலும் போலியானது.

இந்த போலி செய்தியாளர் சந்திப்பை பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த சங்கீத் ஜெயசேகர என்பவர் நடத்தியதாக விசாரணைகளில் அடையாளம் காணப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
விசாரணைகளின் படி, சந்தேகநபரிடம் இரண்டு போலி அடையாள அட்டைகள் காணப்பட்டதுடன், அவர் 7 வெவ்வேறு முகவரிகளைப் பயன்படுத்தியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், நிதி மோசடி உள்ளிட்ட மூன்று குற்றவியல் வழக்குகளில் அவர் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/849a1c83-930d-46d2-8b0d-36d3cebb357f/26-6a86ba4f5705d.webp' /></p><p> </p><p>தம்மை மருத்துவராக அடையாளப்படுத்தி கொண்டு அவர் பல்வேறு நபர்களை ஏமாற்றி வந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், சந்தேகநபர் முன்னர் சில அமைச்சுக்களின் அதிகாரிகளுக்கு ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார். அந்த நியமனங்கள் தொடர்பிலும் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>

குறித்த செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து கிளிநொச்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், அங்கு விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் இருந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை.</p><h2>திட்டமிட்ட செயல்</h2><p> </p><p>குறித்த இடம் பயிர்ச்செய்கைக்காகப் பயன்படுத்தப்பட்ட நிலப்பகுதி மாத்திரமே. இனங்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் சந்தேகநபர் திட்டமிட்டு பொதுமக்களை தவறாக வழிநடத்தியுள்ளார். குறித்த பகுதியில் எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையும் பதிவாகவில்லை. இனவாதத்தைத் தூண்டும் அல்லது பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கும் வகையிலான எந்தவொரு நடவடிக்கைக்கும் இடமளிக்கப்பட மாட்டாது.
</p><p>
இதனிடையே, குறித்த பகுதி கிளிநொச்சி மாவட்டத்தின் கண்ணகிபுரம், முட்கொம்பன் பகுதியில் அமைந்துள்ள அரச காணி என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்னதாகத் தெரிவித்திருந்தார். இந்த நிலம் 1919ஆம் ஆண்டு வனப்பகுதியாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட அரச காணி எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
</p><p>
தியாகராசா குலதீபன் என்பவரால் குறித்த காணியில் கற்றாழை மற்றும் காய்கறி பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும், அங்கு ஆடைகள் தயாரிக்கும் நோக்கில் மூன்று மாடிக் கட்டடமொன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9949d90-2d21-4fdd-8d0e-c91ab1c84b53/26-6a86ba502756f.webp' /></p><p>
</p><p>
கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் குறித்த காணியிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டிருந்த போதிலும், அந்த உத்தரவை மீறி சட்டவிரோத மணல் அகழ்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, இந்த விவகாரம் அரச காணியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தல், அனுமதியற்ற கட்டுமானம் மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பானதே அன்றி, விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் தொடர்பானது அல்ல எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-20T10:05:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் அடுத்த பிரதமர் விஜய் ; சூடாகி கனிமொழி கூறிய பதில்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cm-vijay-as-india-next-pm-kanimozhi-response-1787218706"></link>
            <id>https://jvpnews.com/article/cm-vijay-as-india-next-pm-kanimozhi-response-1787218706</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியாவின் அடுத்த பிரதமர் விஜய் தான் என்று தமிழக வெற்றிக் கழகத்தினர் தீவிரமாக பேசி வரும் நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் கட்சியினர் தான்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியாவின் அடுத்த பிரதமர் விஜய் தான் என்று தமிழக வெற்றிக் கழகத்தினர் தீவிரமாக பேசி வரும் நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் கட்சியினர் தான் பதில் சொல்ல வேண்டும் என்று திமுக துணை பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி கூறியுள்ளார்.</p><p> 

தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவரிடம், தவெக தரப்பு முன்வைக்கும் இந்த வாதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bec890fd-3f55-44d4-94bd-a514cfb6b05f/26-6a86cb13b1400.webp' /></p><h2>&nbsp;தமிழக அரசியலில் தவெகவின் வளர்ச்சி</h2><p>
</p><p>
இதற்கு பதிலளித்த கனிமொழி, "இந்த விவகாரத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் உள்ள நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் மிக முக்கியமானது. நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதில் எந்த குறிக்கோளும் இல்லை என்றார்.</p><p> 
 
மேலும், கடந்த காலத்தை நினைவுகூர்ந்த அவர், திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகித்தபோது, ராகுல் காந்திதான் பிரதமராக வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக சொல்வதற்கு முன்பே மு.க. ஸ்டாலின் பகிரங்கமாக அறிவித்ததையும் கனிமொழி சுட்டிக்காட்டினார்.</p><p></p><p>
</p><p> 
தற்போது கூட்டணியில் அங்கம் வகிக்கும் சூழலில், இதுபோன்ற புதிய அறிவிப்புகள் வெளியாகும் போது காங்கிரஸ் தரப்புதான் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். </p><p>

இன்னிலையில் கனிமொழியின் இந்த பதில் தமிழக அரசியலில் தவெகவின் வளர்ச்சி மற்றும் தேசிய கட்சிகளின் கூட்டணி நிலைப்பாடு குறித்தான விவாதங்களை இந்தச் சந்திப்பு மேலும் சூடாக்கியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-20T10:00:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாத யாத்திரைக்காக சென்ற குழுவினருக்கு நேர்ந்த கதி - பள்ளத்தில் கிடந்த கார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/car-accident-on-way-to-padayatra-1787219791"></link>
            <id>https://tamilwin.com/article/car-accident-on-way-to-padayatra-1787219791</id>
            <summary type="text">பாத யாத்திரைக்காக வந்திருந்த குழுவினர் பயணித்த கார் ஒன்று நல்லதண்ணி -
மஸ்கெலியா பிரதான வீதியில் இருந்து விலகி மோகினி நீர்வீழ்ச்சிக்கு அருகே
கவிழ்ந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாத யாத்திரைக்காக வந்திருந்த குழுவினர் பயணித்த கார் ஒன்று நல்லதண்ணி -
மஸ்கெலியா பிரதான வீதியில் இருந்து விலகி மோகினி நீர்வீழ்ச்சிக்கு அருகே
கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்த 5 பேர், கடந்த 19ஆம் திகதி
இரவு சுமார் 11.00 மணியளவில் ஸ்ரீபாத யாத்திரைக்காக நல்லதண்ணி பொலிஸ்
நிலையத்திற்கு வந்துள்ளனர்.
</p><p>
எனினும், நிலவிய சீரற்ற வானிலை காரணமாக இரவு நேரத்தில் ஸ்ரீபாத யாத்திரை
செல்வது பாதுகாப்பானதல்ல என பொலிஸார் அறிவுறுத்தியதுடன், மறுநாள் 20ஆம் திகதி
காலை வருமாறும் தெரிவித்துள்ளனர்.
</p><h2>
பள்ளத்தில் விழுந்த கார்</h2><p>
பொலிஸாரின் அறிவுறுத்தலை ஏற்றுக்கொண்ட குழுவினர் தங்குமிடமொன்றைத் தேடி காரில்
திரும்பிச் சென்றபோது, இரவு சுமார் 12 மணியளவில் மோகினி நீர்வீழ்ச்சிக்கு
அருகே வீதியில் இருந்து கார் விலகி கவிழ்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1e2d8f8-2de2-4b54-bfa8-3a16ddc845f4/26-6a86cffc4f6ad.webp' /></p><p>

காரில் 3 ஆண்களும், 2 பெண்களும் பயணித்த நிலையில், விபத்தில் எவருக்கும் காயம்
ஏற்படவில்லை. எனினும், காருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதேவேளை, இதே பகுதியில் கடந்த 22ஆம் திகதி காலை 8.15 மணியளவில்
நல்லதண்ணியிலிருந்து மஸ்கெலியா நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று
விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த பாடசாலை மாணவி உள்ளிட்ட இருவர் உயிரிழந்த
சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
</p><p>
இந்த விபத்துகள் தொடர்பில் நல்லதண்ணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T09:59:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/contraband-thrown-into-the-prison-1787220109"></link>
            <id>https://jvpnews.com/article/contraband-thrown-into-the-prison-1787220109</id>
            <summary type="text">&amp;nbsp; மெகசின் சிறைச்சாலை சுவருக்கு மேல் வீசப்பட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு வீசப்பட்ட பொதியின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மெகசின் சிறைச்சாலை சுவருக்கு மேல் வீசப்பட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. </p><p>

இவ்வாறு வீசப்பட்ட பொதியினுள் இருந்து 30 கைப்பேசி மின்கலங்கள் (பேட்டரிகள்), 250 கிராம் சுண்ணாம்பு, 50 கிராம் புகையிலை, பாக்கு மற்றும் மாவா ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85bb0ff3-be51-49b9-939a-6900e4b66881/26-6a86d08f0bcb1.webp' /></p><p> </p><p>

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாகஸ்புர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-20T09:59:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய் - த்ரிஷா மீண்டும் ஹாட் டாப்பிக்: சமூக வலைதளங்களில் வைரலான முக்கிய 5 தருணங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/trisha-cm-vijay-controversial-public-appearances-1787218385"></link>
            <id>https://manithan.com/article/trisha-cm-vijay-controversial-public-appearances-1787218385</id>
            <summary type="text">தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் த்ரிஷா. சமீப காலமாக பெரிய அளவில் படங்களில் கமிட் ஆகாமல் இருந்தாலும், எந்த சர்ச்சை குறித்தும் வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் த்ரிஷா. சமீப காலமாக பெரிய அளவில் படங்களில் கமிட் ஆகாமல் இருந்தாலும், எந்த சர்ச்சை குறித்தும் வெளிப்படையாக கருத்து தெரிவிக்காமல் இருந்தாலும், மாதத்திற்கு குறைந்தது சில முறையாவது ஊரே பேசும் ஹாட் டாப்பிக்காக மாறிவிடுகிறார்.
</p><p>
அந்த வகையில், சமீபத்தில் முதல்வர் விஜய் பங்கேற்ற சுதந்திர தின விழாவில் த்ரிஷா முன்வரிசையில் அமர்ந்திருந்தது, தற்போது தவெக தொண்டர்கள் மற்றும் த்ரிஷா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b65ce94f-1dc0-49db-9f49-43d4289d9db2/26-6a86ceb0e8da2.webp' /></p><p> இதையடுத்து விஜய்யும் த்ரிஷாவும் ஒன்றாக பொதுவெளியில் தோன்றி பேசுபொருளான முக்கிய நிகழ்வுகளைப் பற்றிய விடயங்கள் இணையத்தில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.&nbsp;</p><h2>த்ரிஷா ஏன் தொடர்ந்து பேசுபொருளாகிறார்?&nbsp;</h2><p><b>

மார்ச் 5&nbsp; திருமண வரவேற்பில் விஜய் - த்ரிஷா</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd130955-5ed4-4219-915c-398885145483/26-6a86ceb19a759.webp' /><b></b></p><p><b>
</b></p><p>
விஜய் முதல்வர் வேட்பாளராக தேர்தலுக்கு முன்பு மனு தாக்கல் செய்த சமயத்தில், அவரது சட்டப்பூர்வ மனைவி சங்கீதா, விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. அந்த மனுவில், விஜய்க்கு வேறு ஒரு நடிகையுடன் திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவு இருப்பதை 2021ஆம் ஆண்டிலேயே தான் கண்டுபிடித்ததாகவும், அந்த நடிகை விஜய்யுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிடுவது தனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.</p><p>

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அடுத்த நாளே கல்பாத்தி எஸ். சுரேஷின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்யும் நடிகை த்ரிஷாவும் ஒன்றாக கலந்து கொண்டனர். அதிலும் இருவரும் ஒரே மாதிரியான தங்க நிற உடையில் வந்திருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது.&nbsp;</p><p></p><p><b>

மே 4&nbsp; வாக்குப்பதிவுக்குப் பிறகு த்ரிஷாவின் பதிவு</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbd8b522-e1ed-4a7a-a451-e0a98dbd4279/26-6a86ceb2f3943.webp' /></p><p>தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முதல்வர் வேட்பாளராக விஜய் களம் கண்டார். தேர்தல் நாளன்று காலையிலேயே தனது தாயாருடன் சென்று வாக்களித்த த்ரிஷா, சில மணி நேரங்களுக்குப் பிறகு சமூக வலைதளத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்தார்.</p><p>அதில், ‘கில்லி’ படத்தின் விசில் மியூசிக்குடன் தான் வாக்களித்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

தொடர்ந்து தேர்தல் முடிவுகள் வெளியாகி, தவெக வெற்றி பெற்றது உறுதியான நிலையில், அன்றைய தினமே விஜய்யை சந்திப்பதற்காக த்ரிஷா அவரது நீலாங்கரை இல்லத்திற்கு சென்றார். அதனால் இணையத்தில் மீண்டும் வைரலானார்.</p><p><b>மே 10&nbsp; பதவியேற்பு விழாவில் உணர்ச்சிவசப்பட்ட த்ரிஷா</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c9ed016-c741-45ab-ae4e-5546efdf43d3/26-6a86ceb249e72.webp' /><b></b></p><p><b>
</b></p><p>
தவெக வெற்றியைத் தொடர்ந்து விஜய் முதல்வராக பதவியேற்றார். அவரது பதவியேற்பு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் விஜய்க்கு நெருக்கமான நண்பர்கள், குடும்பத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது த்ரிஷாவும் தனது தாயாருடன் விழாவில் பங்கேற்றார். </p><p>விஜய், “சி. ஜோசப் விஜய் எனும் நான்...” என உறுதிமொழி எடுத்துக்கொண்டபோது, த்ரிஷா தனது அழுகையை அடக்கிக்கொண்டு பெருமிதத்துடன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகின. </p><p><b>மே 31 – அஜித் தாயார் மறைவு</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/860d616e-36c1-4259-9f09-8ab41330161d/26-6a86ceb3a5d1f.webp' /><b></b></p><p><b>
</b></p><p>விஜய் முதல்வராக பதவியேற்றிருந்த நிலையில், நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.</p><p>

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக விஜய் உடனடியாக அஜித்தின் இல்லத்திற்கு சென்றார். அப்போது அவருடன் நடிகை த்ரிஷாவும் சென்றிருந்தார்.இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.</p><p><b>&nbsp;ஆகஸ்ட் 15 – சுதந்திர தின விழாவில் முன்வரிசையில் த்ரிஷா</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20deb182-ece6-46fc-865c-c8bacb4046e4/26-6a86ceb4576c0.webp' /></p><p></p><p><b></b></p><p><b>
</b></p><p>
ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் மெரினா அருகே, தலைமைச் செயலகத்தை ஒட்டிய பகுதியில் தேசியக் கொடியேற்றம் மற்றும் சுதந்திர தின விழா அணிவகுப்பு நடைபெற்றது.
</p><p>
இந்த விழாவில் நடிகை த்ரிஷா தனது தாயாருடன் கலந்து கொண்டார். அவருக்கு முன்வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. </p><p>விழாவின் போது முதல்வர் விஜய்யை நோக்கி மற்றவர்களுடன் இணைந்து த்ரிஷா சல்யூட் அடித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p><p>

இவ்வாறு, விஜய்யும் த்ரிஷாவும் ஒன்றாகவோ அல்லது ஒரே நிகழ்வில் இடம்பெறும் காட்சிகளோ வெளியாகும் போதெல்லாம், அது ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் மத்தியில் உடனடியாக பேசுபொருளாகி வருகிறது. இது தொடர் நிகழ்வாகவே மாறி வருகின்றது என்றால் மிகையாகாது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T09:57:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இணுவிலில் மதுபானசாலையை உடனடியாக அகற்றக் கோரி மக்கள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-removal-of-a-liquor-store-in-inuvil-1787217021"></link>
            <id>https://tamilwin.com/article/protest-removal-of-a-liquor-store-in-inuvil-1787217021</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக
அங்கிருந்து அகற்றக் கோரி, பிரதேச மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டனப்
போரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக
அங்கிருந்து அகற்றக் கோரி, பிரதேச மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டனப்
போராட்டம் இன்று (20.08.2026) காலை இடம்பெற்றது.
</p><p>இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள குறித்த மதுபானசாலைக்கு முன்பாக
நடைபெற்ற இந்த போராட்டத்தில், “எமது கிராமத்தை மதுபோதையில் இருந்து
காப்பாற்றுவோம்” என்ற பிரதான கோஷம் முன்வைக்கப்பட்டது.</p><p>
போராட்டத்தில் கிராம மக்கள், இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் பிரதேசசபை
உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு, மதுபானசாலை தமது கிராமச் சூழலுக்கு
ஏற்படுத்தும் பாதிப்புகள் தொடர்பில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9dac6e0b-1e68-4166-bce1-9572a4aaa81b/26-6a86cf06693bf.webp' /></p><h2>நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்</h2><p>
</p><p>குறிப்பாக, கிராமத்தில் மதுபான பாவனை அதிகரிப்பதை தடுப்பதுடன், இளைஞர்கள்
மற்றும் சிறுவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் குறித்த
மதுபானசாலையை அப்பகுதியிலிருந்து அகற்றுவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் வலியுறுத்தினர்.
</p><p>மேலும், பொதுமக்களின் நலன் மற்றும் கிராமத்தின் சமூக சூழலை கருத்தில்
கொண்டு, மதுபானசாலை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4b541f8-fb2f-4594-bb60-066f9220fee6/26-6a86cf0744f78.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44aa21f1-a473-477a-a560-194216ca7b34/26-6a86cf0822b98.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T09:56:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[டார்ச் லைட் வெளிச்சத்தில் பிரசவம் - நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தோனேஷிய மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indonesia-woman-gives-birth-in-torchlight-1787219911"></link>
            <id>https://news.lankasri.com/article/indonesia-woman-gives-birth-in-torchlight-1787219911</id>
            <summary type="text">Indonesia Woman Gives Birth in torchlight: இந்தோனேஷியாவில் டார்ச் லைட் வெளிச்சத்தில் பெண்ணிற்கு பிரசவம் நடந்துள்ளது.

torchlight உதவியுடன்&amp;nbsp;பிரச...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indonesia Woman Gives Birth in torchlight: இந்தோனேஷியாவில் டார்ச் லைட் வெளிச்சத்தில் பெண்ணிற்கு பிரசவம் நடந்துள்ளது.
</p><h2>
torchlight உதவியுடன்&nbsp;பிரசவம் </h2><p>இந்தோனேஷியாவில் 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மக்கள் வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது.</p><p> 

மின்சாரம் துண்டிக்கப்பட்ட சூழலில், ஒரு பெண் மருத்துவமனையில் torchlight உதவியுடன் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f21e14c2-ff96-4d18-a91c-e0549d4f57a2/26-6a86cfc9417f6.webp' /></p><h2>பாதுகாப்பாக பிறந்த குழந்தை</h2><p>நிலநடுக்கம் ஏற்பட்டதும் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மருத்துவமனைகளில் அவசர சேவைகள் பாதிக்கப்பட்டன. அந்த நேரத்தில், கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வலியால் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். மின்சாரம் இல்லாததால், மருத்துவர்கள் torchlight-ஐ பயன்படுத்தி பிரசவத்தை மேற்கொண்டனர். குழந்தை பாதுகாப்பாக பிறந்தது.</p><p>
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">As a 7.7-magnitude earthquake tore through eastern Indonesia, Maria Florida Nogo Kelen gave birth to her daughter. Doctors performed emergency surgery by flashlight, fearing a fatal seizure if they did not act <a href="https://t.co/3clqT2yZ5D">https://t.co/3clqT2yZ5D</a> <a href="https://t.co/7GMWysYawH">pic.twitter.com/7GMWysYawH</a></p>&mdash; Reuters (@Reuters) <a href="https://x.com/Reuters/status/2089411943149056060?ref_src=twsrc%5Etfw">August 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இந்த சம்பவம், இயற்கை பேரிடர்களின் போது மருத்துவ சேவைகள் எவ்வளவு சவாலான சூழலில் நடைபெறுகின்றன என்பதை வெளிப்படுத்துகிறது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து, தாயும் குழந்தையும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர்.
</p><p></p><p>நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் சேதமடைந்தன. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். அதிகாரிகள், மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுவதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர உதவிகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.</p><p>இச்சம்பவம், இயற்கை பேரிடர்களின் போது மனிதர்களின் தன்னம்பிக்கை, மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, மற்றும் சமூகத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஒரு உண்மையான உதாரணமாக பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T09:55:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெகசின் சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட மர்மப் பொதி! சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/parcel-that-arrived-above-the-magazine-prison-1787215192"></link>
            <id>https://ibctamil.com/article/parcel-that-arrived-above-the-magazine-prison-1787215192</id>
            <summary type="text">

கொழும்பில் உள்ள மெகசின் சிறைச்சாலையின் சுவருக்கு மேல் தடைசெய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய போதியை வீச முயன்றதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>

கொழும்பில் உள்ள மெகசின் சிறைச்சாலையின் சுவருக்கு மேல் தடைசெய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய போதியை வீச முயன்றதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
அந்த பொதியில் 30 மறு மின்னேற்ற மின்கலங்கள், 250 கிராம் சுண்ணாம்பு, 50 கிராம் புகையிலை, பாக்கு மற்றும் மாவா ஆகியவை இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
இந்நிலையில், சிறைச்சாலையின் சுவருக்கு மேல் பொதி வீசப்பட்ட பின்னர், குறித்த பொருட்கள் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ffc6ab2-204e-4d2c-9afa-0be8e68baa4b/26-6a86cebd01a58.webp' /></p><p>
இதன்படி, சம்பவம் தொடர்பாக சஹாஸ்புர காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-08-20T09:54:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹெரோயினுடன் கைதான உபதவிசாளர் உள்ளிட்ட இருவரும் தொடர்ந்தும் விளக்கமறியலில்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-people-arrested-with-drugs-deputy-speaker-1787217309"></link>
            <id>https://tamilwin.com/article/two-people-arrested-with-drugs-deputy-speaker-1787217309</id>
            <summary type="text">முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய் பொலிஸாரால் கடந்த 15.08.2026 அன்று
கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உள்ளிட்ட 5 பேர் ஹெரோயினுடன்
கைதுச...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய் பொலிஸாரால் கடந்த 15.08.2026 அன்று
கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உள்ளிட்ட 5 பேர் ஹெரோயினுடன்
கைதுசெய்யப்பட்டு 16ஆம் திகதி அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில்
முன்னிலைப்படுத்தப்பட்டனர்.</p><p>
இவர்களில் மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் உப தவிசாளர் உள்ளிட்ட
இருவர் 19.08.2026மும் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தவிட்டது.
</p><h2>சம்பவம் தொடர்பிலான விசாரணை</h2><p>
இந்த நிலையில் இவர்கள் மீதான வழக்கு விசாரணை கடந்த 19.08.2026 அன்று
நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவர்களை 02.09.2026 ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c289cfee-1836-4554-a1dd-067938e6fc87/26-6a86ce4d91d63.webp' /></p><p>அத்துடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக
விசாரணைகளை கொக்கிளாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T09:53:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் புதிய பொருளாதாரத் தடையை விமர்சித்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-criticizes-trump-s-new-economic-sanctions-1787219666"></link>
            <id>https://canadamirror.com/article/iran-criticizes-trump-s-new-economic-sanctions-1787219666</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய பொருளாதாரத் தடை பிரசாரத்தை ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) நிராகரித...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய பொருளாதாரத் தடை பிரசாரத்தை ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) நிராகரித்துள்ளார்.</p><p>



"பொருளாதார டி-டே" (Economic D-Day) என்று அழைக்கப்படும் இந்த நடவடிக்கை, அமெரிக்காவின் உள்நாட்டுப் பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கம் கொண்டது என்று அவர் விமர்சித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3b28073-44ae-463b-bc7d-dd2bc2e8e1b0/26-6a86ced9bd532.webp' /></p><p>
</p><p>


தனது எக்ஸ் (X) தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், வாஷிங்டனின் முன்னெப்போதும் இல்லாத கடன் மற்றும் அதிகரித்து வரும் வட்டிச் செலவுகள் மீதான கவனத்தை திசைதிருப்பவே இந்த நகர்வு வடிவமைக்கப்பட்டுள்ளதாக அராக்சி குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>



தோல்வியடைந்த கொள்கைகளை மீண்டும் பின்பற்றுவது மேலும் தோல்வியைத் மட்டுமே தரும் என்று எச்சரித்த அராக்சி, அமெரிக்காவின் பொருளாதார பயங்கரவாதம் உலகளாவிய பொருளாதாரத்திற்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்றும் மேலும் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-20T09:51:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[காசாவில் 5 வயது சிறுமி கொல்லப்பட்ட விவகாரம்: குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிட்ட இஸ்ரேல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/israel-criminal-probe-into-killing-hind-rajab-1787219271"></link>
            <id>https://news.lankasri.com/article/israel-criminal-probe-into-killing-hind-rajab-1787219271</id>
            <summary type="text">Israel criminal probe into killing 5 years old hind rajab: காசா நகரில் 5 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவியல் விசாரணைக்கு இஸ்ரேலிய ராணு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Israel criminal probe into killing 5 years old hind rajab: காசா நகரில் 5 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவியல் விசாரணைக்கு இஸ்ரேலிய ராணுவம் உத்தரவிட்டுள்ளது.</p><h2>குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிட்ட இஸ்ரேலிய ராணுவம்</h2><p>கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காசாவில் கொல்லப்பட்ட 5 வயது சிறுமி ஹிந்த் ரஜப் மற்றும் 8 பேரின் மரணம் குறித்து இஸ்ரேலிய ராணுவம் முறையான குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.</p><p> பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்க ஆம்புலன்ஸ் இயக்கத்தை ஒருங்கிணைப்பதில் ஏற்பட்ட தோல்விகளே இந்த விசாரணை தொடங்குவதற்கான முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.</p><p> &nbsp;5 வயது சிறுமி ஹிந்த் ரஜப் கொல்லப்பட்டது தொடர்பான இந்த விசாரணை ராணுவக் காவல்துறையின் குற்றவியல் விசாரணைப் பிரிவால் நடத்தப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">💔For over three hours, Hind has desperately pleaded with our teams for rescue from the occupation tanks surrounding her, enduring gunfire and the horror of being alone, trapped among the bodies of her relatives shot by the Israeli forces in front of her eyes. The PRCS heroes… <a href="https://t.co/VT00WJaP1B">pic.twitter.com/VT00WJaP1B</a></p>&mdash; PRCS (@PalestineRCS) <a href="https://x.com/PalestineRCS/status/1753890202467160470?ref_src=twsrc%5Etfw">February 3, 2024</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><h2>2024ம் ஆண்டு நடந்த சம்பவம்</h2><p>கடுமையான மோதல்களுக்கு மத்தியில் காசா நகரின் டெல் அல்-ஹவா(Tel al Hawa) பகுதியில் இருந்து 5 வயது சிறுமி ஹிந்த் மற்றும் ஹமதா குடும்பத்தினர் 6 பேர் தப்பியோட முயன்றனர்.</p><p> அப்போது அவர்கள் பயணித்த வாகனம் மீது இஸ்ரேலிய ராணுவம் நேரடி தாக்குதல் நடத்தியுள்ளது.</p><p>இந்த சம்பவம் தொடர்பாக செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்ட ஆடியோவில் சிறுமி ஹிந்த்தின் கடைசி நேர பரிதவிப்புகள் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63d2b447-e5cc-4d1e-a08a-fae72a774795/26-6a86cd4906c3a.webp' /></p><p> ஹிந்தை காப்பாற்ற யூசப் சீனோ மற்றும் அகமது மத்ஹுன் ஆகிய 2 அவசர ஊர்திப் பணியாளர்கள்&nbsp; அனுப்பப்பட்டனர். அவர்கள் சம்பவ இடத்தை நெருங்கிய போது பலத்த துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. பின்னர் அவர்களுடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டது.</p><p> கிட்டத்தட்ட 12 நாட்களுக்கு பிறகு ஹிந்த் மற்றும் அவரது 6 உறவினர்கள் மற்றும் 2 மருத்துவ பணியாளர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T09:48:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை அதிபர்களுக்கான கொடுப்பனவுகள் குறித்து பிரதமரின் அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/payments-and-promotion-for-school-principals-1787216142"></link>
            <id>https://ibctamil.com/article/payments-and-promotion-for-school-principals-1787216142</id>
            <summary type="text">இலங்கையின் பாடசாலைகளில் பணியாற்றும் அதிபர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் பதவி உயர்வு நிபந்தனைகள் தொடர்பான விரிவான விபரங்களை பிரதம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பாடசாலைகளில் பணியாற்றும் அதிபர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் பதவி உயர்வு நிபந்தனைகள் தொடர்பான விரிவான விபரங்களை பிரதமர் ஹரிணி அமரசூரிய வெளிப்படுத்தியுள்ளார்.</p><p>நாடாளுமன்றத்தில் இன்று (20) உரையாற்றும் போதே பிரதமர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை கல்வி நிர்வாக சேவையில் தேசிய பாடசாலைகளில் 133, மாகாண பாடசாலைகளில் 27 என மொத்தம் 160 பணியிடங்கள் காணப்படுகின்றன.</p><p></p><h2>இலங்கை ஆசிரியர் சேவை</h2><p>
தேசிய பாடசாலைகளில் 139, மாகாண பாடசாலைகளில் 7,125 என மொத்தம் 7,264 அதிபர் சேவை பணியிடங்கள் உள்ளதுடன் மாகாண பாடசாலைகளில் இலங்கை ஆசிரியர் சேவையைச் சேர்ந்த 2,494 பேர் பதில் அதிபர்களாகப் பணிபுரிகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27cceb8b-36bb-41a0-adb7-a41cd9ed8911/26-6a86cc97718b9.webp' /></p><p>
பாடசாலை வகைகளின் அடிப்படையில் 1AB பாடசாலைகளின் அதிபர்களுக்கு 8,000 ரூபாயும், 1C பாடசாலைகளின் அதிபர்களுக்கு 5,500 ரூபாயும், வகை 2 பாடசாலைகளின் அதிபர்களுக்கு 4,500 ரூபாயும், வகை 3 பாடசாலைகளுக்கு 4,000 ரூபாய் கொடுப்பனவும் வழங்கப்படுகின்றன.</p><p>அத்துடன், கஷ்ட மற்றும் அதிகஷ்ட பாடசாலைகளில் பணியாற்றும் அதிபர்களுக்குக் கஷ்டக் கொடுப்பனவுகளும் வழங்கப்படுகின்றன.</p><p></p><h2>எரிபொருள் கொடுப்பனவு</h2><p>

தேசிய பாடசாலைகளில் பணியாற்றும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு எரிபொருள், போக்குவரத்து உள்ளிட்ட கொடுப்பனவுகள் அதிகபட்சமாக 25,000 ரூபாய் வரை வழங்கப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b99fa2e-d676-48b9-8b6e-989bc5e57da2/26-6a86cc08887ca.webp' /></p><p>
</p><p>
3ஆம் தரத்திலிருந்து 2ஆம் தரத்திற்கும், 2ஆம் தரத்திலிருந்து 1ஆம் தரத்திற்கும் பதவி உயர்வு பெறுவதற்கு தலா 6 ஆண்டுகள் சேவைக்காலம் அவசியமாகும்.</p><p>

எனவே 3ஆம் மற்றும் 2ஆம் தரங்களிலிருந்து அடுத்த தரத்திற்குப் பதவி உயர்வு பெறத் தலா 6 ஆண்டுகள் சேவைக்காலம், சம்பள ஏற்றங்கள், மொழி மற்றும் இணைப்புத் திறன் தேர்ச்சிகள் மற்றும் திறன் விருத்தி பயிற்சிகள் என்பன அவசியமாகும்.
</p><p>
மேலும், 1ஆம் தரப் பதவி உயர்வுக்கு முதுகலை கல்வி டிப்ளோமா அல்லது பட்டப்படிப்பு தகுதிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T09:47:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[பள்ளி முதல்வரை குத்திக் கொன்ற 10 வகுப்பு மாணவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/nalgonda-school-murder-case-2-student-arrested-1787218988"></link>
            <id>https://ibctamilnadu.com/article/nalgonda-school-murder-case-2-student-arrested-1787218988</id>
            <summary type="text"> Nalgonda school principal murder case 2 student arrested: தெலுங்கானாவில் பணத்திற்காக பள்ளி முதல்வரை கத்தியால் குத்தி கொலை செய்த மாணவர்கள் கைது செய்யப...</summary>
            <content type="html"><![CDATA[<p> Nalgonda school principal murder case 2 student arrested: தெலுங்கானாவில் பணத்திற்காக பள்ளி முதல்வரை கத்தியால் குத்தி கொலை செய்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>பள்ளி முதல்வர் குத்தி கொலை</h2><p>தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தின் கொடமள்ளேபள்ளி பகுதியில் அமைந்துள்ள நாகார்ஜுனா பப்ளிக் பள்ளியின் முதல்வர் கள்ளூ ரூபா ரெட்டி.</p><p>கடந்த ஆகஸ்ட் 12ம் திகதி ரூபா ரெட்டி அவரது இல்லத்தில் 27 முறை கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் இறந்து கிடந்தார்.</p><p>முன்னதாக ஹைதராபாத்தில் இருந்த அவரது கணவர் ரூபா ரெட்டியிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயன்ற போது பதில் கிடைக்கவில்லை என்பதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை தொடர்பு கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5a2ed94-a2a7-4202-833c-6c635457512f/26-6a86ccc05f4fb.webp' /><br></p><p>இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டிற்கு வந்த பார்த்த ரூபா ரெட்டி உயிரிழந்து கிடப்பதை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.</p><h2>சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட மாணவர்கள்</h2><p> ரூபா ரெட்டி அவரது அத்தையுடன் கடைசியாக பேசிக் கொண்டிருந்த போது பாபு என்ற பெயரை உச்சரித்துள்ளார்.</p><p>இதனை முதன்மையாக கொண்டு விசாரணையை தீவிரப்படுத்திய பொலிஸார் ரூபா ரெட்டி பணியாற்றி வந்த பள்ளியில் 10 வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவரை கைது செய்துள்ளனர்.</p><p> அவர்கள் ரூபா ரெட்டியின் வீட்டுக்குள் நுழைந்து 2.50 லட்சத்தை திருடி விட்டு தப்பிக்க முயன்ற போது ரூபா ரெட்டி அவர்களை அடையாளம் கண்டு கொண்டதால் அந்த மாணவர் ரூபா ரெட்டியை 27 முறை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-20T09:45:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டன் விவகாரத்தில் சிக்கிய ரணில்! வெளியாகவுள்ள முக்கிய ஆதாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-embroiled-in-london-affair-basil-stunned-1787207747"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-embroiled-in-london-affair-basil-stunned-1787207747</id>
            <summary type="text">நாட்டின் முன்னாள் ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல் வாதிகளின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தொடுக்கப்பட்ட வழக்குகளின் விசாரணைகள் தொடர்ச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் முன்னாள் ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல் வாதிகளின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தொடுக்கப்பட்ட வழக்குகளின் விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>இந்த நிலையிலேயே&nbsp;மொட்டுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பசில் ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நிலையில், அவர் முன்பு வழங்கியிருந்த 30 இலட்சம் ரூபாய் பிணைத்தொகையை அரசுடைமையாக்குமாறு மாத்தறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p>அதே சமயம் அரச பணத்தில் 166 இலட்சத்தை தனது தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் தற்பொழுது நிரூபிக்கத்தக்க ஆதாரம் ஒன்று சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

நாட்டில் இடம்பெற்று வருகின்ற இவ்வாறான பல முக்கிய விடயங்களை விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ZJYPtavC8zU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T09:45:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடக மோகம் ; ஆபத்தான சாகசம்.. 5 இளைஞர்கள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/social-media-crash-5-youths-accident-ireland-1787203738"></link>
            <id>https://canadamirror.com/article/social-media-crash-5-youths-accident-ireland-1787203738</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அயர்லாந்தில் சமூக ஊடகங்களில் அதிகப் பார்வையாளர்களைப் பெறுவதற்காக இளைஞர்கள் நெடுஞ்சாலைகளில் தவறான திசையில் வாகனம் செலுத்தும் ஆபத்தான போக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அயர்லாந்தில் சமூக ஊடகங்களில் அதிகப் பார்வையாளர்களைப் பெறுவதற்காக இளைஞர்கள் நெடுஞ்சாலைகளில் தவறான திசையில் வாகனம் செலுத்தும் ஆபத்தான போக்கில் ஈடுபட்டு வருவதாக அயர்லாந்து பொலிஸார் கவலை வெளியிட்டுள்ளனர்.
</p><p>
இந்த நிலையில், டப்ளின் வானூர்தி நிலையத்துக்குப் பயணித்த மற்றுமொரு வாகனத்தின் மீது, தவறான திசையில் அதிவேகமாக வந்த வாகனம் மோதி 5 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/874c637c-e979-42cd-8ebf-19b4449cba24/26-6a86909ba975c.webp' /></p><p>
</p><h2>அயர்லாந்து அரசாங்கம் தீவிர நடவடிக்கை</h2><p>
 விபத்தில் மற்றைய வாகனத்தில் பயணித்த மூன்று பெண்களும் ஒரு குழந்தையும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சோக சம்பவத்தைத் தொடர்ந்து, ஆபத்தான மற்றும் சட்டவிரோதமான வீதிப் பயணங்களை ஊக்குவிக்கும் விதமாக வெளியிடப்படும் காணொளிகளை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்து விளக்கமளிக்குமாறு அயர்லாந்து நாடாளுமன்றக் குழு மற்றும் ஊடக ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு என்பன டிக்டொக் (TikTok) நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.</p><p>

இதேவேளை, விதிகளை மீறும் கணக்குகள் மற்றும் விபத்து தொடர்பான காணொளிகளைத் தீவிரமாகக் கண்காணித்து அகற்றி வருவதாக டிக்டொக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>
இளைஞர்கள் குழுக்களாக இணைந்து , போக்குவரத்து விதிகளுக்கு மாறாக வாகனம் செலுத்தியும் காணொளிகளைப் பதிவிட்டு வருவதைக் கட்டுப்படுத்த அயர்லாந்து அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
</p><p>
நெடுஞ்சாலையில் தவறான திசையில் வாகனம் செலுத்துவதைத் தனிக் குற்றமாக அறிவிக்கவும், காவல்துறைக்கு விசேட வாகனத் துரத்தல் பயிற்சிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-20T09:44:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலுக்கடியில் கிடக்கும் வெடிகுண்டுகளால் புதிய பிரச்சினை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/german-sea-munitions-contaminating-marine-life-1787218890"></link>
            <id>https://news.lankasri.com/article/german-sea-munitions-contaminating-marine-life-1787218890</id>
            <summary type="text">Scientists warn that toxic chemicals from military munitions are contaminating German marine life: ஜேர்மன் கடல் பகுதியில் கிடக்கும் துருப்பிடித்த வெடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Scientists warn that toxic chemicals from military munitions are contaminating German marine life: ஜேர்மன் கடல் பகுதியில் கிடக்கும் துருப்பிடித்த வெடிகுண்டுகள் கடலை மாசுபடுத்துவதாக எச்சரிக்கிறார்கள் அறிவியலாளர்கள்.
</p><p>

முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களின்போது வீசப்பட்ட குண்டுகள், 1945ஆம் ஆண்டுக்குப் பிறகு கடலில் வீசப்பட்ட குண்டுகள் என, ஜேர்மனியை ஒட்டியுள்ள வட கடல் மற்றும் பால்டிக் கடல்களுக்கடியில் கிடக்கும் வெடிகுண்டுகள் துருப்பிடிக்கத் துவங்கியுள்ளன.
</p><h3>
கடலுக்கடியில் கிடக்கும் வெடிகுண்டுகளால் புதிய பிரச்சினை
</h3><p>
சுமார் 1.6 மில்லியன் மெட்ரிக் டன் வெடிகுண்டுகள் கடலுக்கடியில் கிடக்கும் நிலையில், அவற்றால் புதியதொரு பிரச்சினை உருவாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb142664-5783-4b82-923f-a1d633f7d637/26-6a86cbcbc3852.webp' /></p><p>

ஆம், அந்த வெடிகுண்டுகள் துருப்பிடிக்கத் துவங்கியுள்ளதால், அவற்றிலிருந்து வெளியேறும் ரசாயனங்களால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து என்கிறார் Kiel பல்கலை நச்சியல் துறை நிபுணரான Edmund Maser என்பவர்.
</p><p>
இந்த ரசாயனங்கள், நச்சுத்தன்மை கொண்டவை, புற்றுநோயை உருவாக்கக்கூடியவை, அதனால் கடல் வாழ் உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்து என்கிறார் அவர்.&nbsp;</p><p></p><p>
விடயம் என்னவென்றால், வெடிகுண்டுகளில் வெடிப்பொருளாக பயன்படுத்தப்படும் TNT என்னும் ரசாயனம், மீன்கள் உடலில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eaa095bb-da18-4b07-99f2-42539a9a623b/26-6a86cbcc76b21.webp' /></p><p>
என்றாலும், இதுவரை அந்த ரசாயனம், மீன்கள் உடலில் சிறிய அளவிலேயே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மீன்களின் ஆரோக்கியத்தை வெளிப்படையாக பாதிக்கவில்லை.
</p><p>
ஆனால், ஆராய்ச்சிகளில், மீன்களின் கல்லீரலில் கட்டிகள் உருவாகியுள்ளது தெரியவந்துள்ளது.
</p><p>
விடயம் என்னவென்றால், இந்த ரசாயனங்கள் மீன்களிலும் சிப்பிகளிலும் மட்டுமல்ல, திமிங்கலங்கள் உடலிலும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதாவது, இந்த ரசாயனங்கள், கடல் உணவுச் சங்கிலியின் உச்சத்தில் உள்ள விலங்குகள் வரை சென்றடைந்துள்ளது என்பதுதான் சிந்திக்கவைத்துள்ள விடயம்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T09:43:46+00:00</updated>
        </entry>
    </feed>
