<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-27T10:43:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரி கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dmt-officer-arrested-illegal-vehicle-registration-1785143654"></link>
            <id>https://ibctamil.com/article/dmt-officer-arrested-illegal-vehicle-registration-1785143654</id>
            <summary type="text">மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) முன்னாள் முகாமைத்துவச் சேவை அதிகாரி ஒருவரை இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) முன்னாள் முகாமைத்துவச் சேவை அதிகாரி ஒருவரை இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.</p><p>மோட்டார் வாகனமொன்றை சட்டவிரோதமாகப் பதிவு செய்தல் மற்றும் உரிமை மாற்றம் செய்தல் தொடர்பான விசாரணையொன்றின் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.</p><p>

இலங்கைச் சுங்கத்துறையிடமிருந்து அனுமதி பெறாமலும், உரிய சுங்க வரிகளைச் செலுத்தாமலும் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட&nbsp; கார் ஒன்றை பதிவு செய்வதற்கு உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுடின் பேரில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p></p><h2>முன்னாள் (DMT) அதிகாரி கைது</h2><p>ஆணைக்குழுவின் தகவலின்படி, அந்த முன்னாள் அதிகாரி, வாகனத்தின் முதல் உரிமை மாற்றத்திற்குத் தேவையான ஒரு கவுண்டர் எண்ணை வழங்கி, அது தொடர்பான தகவல்களை மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் உள்ளீடு செய்ததாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a673af9c-d825-4da5-ae40-db9a0633050d/26-6a67355aef418.webp' /></p><p>இந்த நிலையில் சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார் என இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T10:41:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[43ஆம் ஆண்டு தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் மன்னாரில் அனுஷ்டிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/commemoration-tamils-massacred-in-welikada-prison-1785147275"></link>
            <id>https://ibctamil.com/article/commemoration-tamils-massacred-in-welikada-prison-1785147275</id>
            <summary type="text">நாடு முழுவதும் திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தின் மீது 1983 ஆம் ஆண்டு ஆடி
மாதம் 23ஆம் திகதி கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல்
வாரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு முழுவதும் திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தின் மீது 1983 ஆம் ஆண்டு ஆடி
மாதம் 23ஆம் திகதி கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல்
வாரத்தின் வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட போராளிகளையும்
பல்லாயிரக் கணக்கான பொது மக்களையும் நினைவுகூரும் நினைவேந்தல் மன்னாரில் இடம்பெற்றது.</p><p>தமிழீழ விடுதலை இயக்கம் கட்சியின் ஏற்பாட்டில் மன்னாரிலுள்ள ரெலோ அலுவலகத்தில் நேற்று (26) மாலை 43 ஆம் ஆண்டு தமிழ் தேசிய வீரர்கள் தின&nbsp; நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.</p><p>கட்சியின் மாவட்ட பொறுப்பாளரும், மன்னார் நகர முதல்வருமான டானியல் வசந்தன்
தலைமையில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கட்சியின்
உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.</p><p></p><h2>அரசியல் கைதிகளுக்கு அஞ்சலி&nbsp;</h2><p>
</p><p>
இதன் போது குட்டிமணி, தங்கத்துரை உள்ளடங்கலாக 53 அரசியல்
கைதிகளுக்கும், பொது மக்களுக்குமான நினைவேந்தல் இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03ec7e27-48aa-4c19-8a9c-63824028a829/26-6a67335acbae3.webp' /></p><p>
</p><p>அந்தவகையில் குட்டிமணி, தங்கத்துரை ஆகிய இருவரின் திருவுருவப்படத்திற்கு மாலை
அணிவித்து சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
</p><p>அத்துடன் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு அஞ்சலி
செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T10:34:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் டாப் 20 அழகான கடற்கரைகள் பட்டியலில் இடம்: ஆனால் அங்கு செல்லமுடியாது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ile-vierge-beach-ranked-beautiful-but-cant-visit-1785148380"></link>
            <id>https://news.lankasri.com/article/ile-vierge-beach-ranked-beautiful-but-cant-visit-1785148380</id>
            <summary type="text">பிரான்சின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரிட்டனியில் ஒரு அழகான கடற்கரை உள்ளது.
ஆனால், அந்தக் கடற்கரைக்குச் செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி கிடைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரிட்டனியில் ஒரு அழகான கடற்கரை உள்ளது.</p><p>
ஆனால், அந்தக் கடற்கரைக்குச் செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி கிடையாது!
</p><h3>
அழகான கடற்கரைகள் பட்டியலில் இடம்</h3><p>

Hellotickets என்னும் இணையதளம் வெளியிட்டுள்ள உலகின் டாப் 20 அழகான கடற்கரைகள் பட்டியலில் பிரிட்டனியில் உள்ள Île Vierge ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43b3020a-8942-4ca0-a027-e9138b653a61/26-6a6733ddae497.webp' /></p><p>
ஆனால், சுற்றுலாப்பயணிகள் அங்கு செல்லமுடியாது. காரணம் என்னவென்றால், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களால் அந்த கடற்கரை மூடப்பட்டுள்ளது.
</p><p>
அந்த பகுதிக்கு சுற்றுலா செல்லும் பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலாப்பயணிகள், அங்குள்ள மலைமுகடுகளில் ஏறுவதால் பாறைகள் பெயர்ந்துவிழும் அபாயம் உள்ளதாலேயே அங்கு செல்ல தடை அறிமுகம் செய்யப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.&nbsp;</p><p></p><p>
அத்துடன், தடைக்கு முன் அங்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் சென்றதால் அப்பகுதியிலுள்ள மண்ணும் தாவரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
</p><p>
ஆக, Île Vierge கடற்கரையை, அனுமதிக்கப்பட்ட பகுதிகளில், தொலைவிலிருந்து மட்டுமே பர்வையிடமுடியும்.
</p><p>
தடையை மீறுபவர்களுக்கு 135 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும் என்பது முக்கியமான தகவல்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T10:33:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான நிலையம் வந்த இளைஞன்; சொக்லேட்களுக்குள் ஒளிந்திருந்த குஷ்; அதிகாரிகள் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-arrested-airport-kush-was-hiding-in-chocolate-1785148140"></link>
            <id>https://jvpnews.com/article/man-arrested-airport-kush-was-hiding-in-chocolate-1785148140</id>
            <summary type="text">தாய்லாந்தில் இருந்து சுமார் 14.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான &#039;குஷ்&#039; போதைப்பொருளுடன் கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்தில் இருந்து சுமார் 14.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளுடன் கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கைதானவர் மொனராகலையைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரென தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து இன்று (27) காலை 9.25 அளவில் நாட்டை வந்தடைந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84780b21-3cd6-40ef-86ce-b04b43fe49d0/26-6a6732edcbb5f.webp' /></p><p>
</p><p>
விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் அவரது பயணப் பையைச் சோதனையிட்டபோது, குறித்த போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
குறித்த போதைப்பொருளானது சொஸேஜஸ் வடிவில், மேலே சொக்லேட் பூசப்பட்டு, பிரபல சொக்லேட் நிறுவனத்தின் பெயரைக் கொண்ட பொதிகளில் அடைக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைதானவர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T10:27:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதலை இன்ஸ்டாகிராமில் வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங்: யார் அந்த நடிகை?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/arshdeep-samreen-kaur-reveals-their-relationship-1785147819"></link>
            <id>https://news.lankasri.com/article/arshdeep-samreen-kaur-reveals-their-relationship-1785147819</id>
            <summary type="text">இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அர்ஷ்தீப் சிங் - சம்ரீன் கவுர் கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.</p><h2> அர்ஷ்தீப் சிங் - சம்ரீன் கவுர் காதல்</h2><p>நடிகையும் மாடலுமான சம்ரீன் கவுர்(Samreen Kaur) உடனான தன்னுடைய காதலை இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p> சமூக ஊடக பக்கத்தில் கடந்த சில மாதங்களாக பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அர்ஷ்தீப் சிங்கின் இந்த பதிவு வெளிவந்துள்ளது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DbQRs1BDbS4/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DbQRs1BDbS4/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DbQRs1BDbS4/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Arshdeep Singh (@_arshdeep.singh__)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p> ஞாயிற்றுக்கிழமை அர்ஷ்தீப் சிங் வெளியிட்ட பதிவில், அவர் தன்னுடைய காதலி சம்ரீனுடன் இருக்கும் 2 புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.&nbsp;</p><p>மேலும் அந்த பதிவிற்கு “My Person” என்ற எளிமையான தலைப்பையும் அதில் குறிப்பிட்டு இருந்தார்.</p><p></p><h2> யார் இந்த சம்ரீன் கவுர்?</h2><p>&nbsp;சமூக ஊடகம், நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் பிரபலமாக விளங்கும் சம்ரீன் கவுர் ஜம்மு காஷ்மீரில் 1999 செப்டம்பரில் 7ம் திகதி பிறந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d524128-10d1-4a6f-bd12-7ee1934020df/26-6a6731acbf754.webp' /></p><p> புனேவில் உள்ள Symbiosis கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் BCom பட்டம் பெற்றுள்ளார்.</p><p> 2018ம் ஆம் ஆண்டு நடைபெற்ற ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பிரதிநிதித்துவம் செய்து இறுதிப்போட்டி வரை சென்றார்.</p><p> மேலும் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியான Nail Polish தொடர் மற்றும் “83” என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T10:23:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணி விடுவிப்பு குறித்து மயிலிட்டி மக்களுடன் கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sritharan-mp-discusses-land-release-with-people-1785143985"></link>
            <id>https://tamilwin.com/article/sritharan-mp-discusses-land-release-with-people-1785143985</id>
            <summary type="text">வலிகாமம் வடக்கு காணி விடுவிப்புத் தொடர்பாக, மயிலிட்டி மக்கள் இலங்கைத் தமிழ்
அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடன் விரிவான
கலந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிகாமம் வடக்கு காணி விடுவிப்புத் தொடர்பாக, மயிலிட்டி மக்கள் இலங்கைத் தமிழ்
அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடன் விரிவான
கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
பலாலி விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை முன்னிறுத்தி, மயிலிட்டி மக்களின்
பூர்வீகக் காணிகளை அரசாங்கம் சுவீகரிப்பதற்காக அண்மையில் அனுப்பப்பட்டுள்ள
எழுத்துமூல அறிவித்தல்கள் தொடர்பில், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நாடாளுமன்ற
உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களிடம் தமது ஆழ்ந்த கவலையை
வெளிப்படுத்தினர்.</p><p></p><h2>தீர்வு காணப்படாத காணிப் பிரச்சினைகள்</h2><p> பல தலைமுறைகளாகத் தாம் வாழ்ந்து வந்த பூர்வீகக் காணிகளே
தங்களது வாழ்வாதாரம், அடையாளம் மற்றும் வரலாற்றுப் பாரம்பரியம் என்றும்,
அவற்றை எந்தவிதத்திலும் இழக்கத் தயாரில்லை எனவும், இதற்கு மாற்றாக வேறு
காணிகளையோ அல்லது நஷ்டஈட்டுத் தொகையையோ வழங்கும் எந்தத் திட்டத்தையும் தாங்கள்
ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என்பதையும் உறுதிபடத் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6267cd4a-98c7-4df3-a8be-51a834800c48/26-6a672bf11cf84.webp' /></p><p>காணி சுவீகரிப்புக்கு எதிராக நீண்டகாலமாக ஜனநாயக மற்றும் சட்டரீதியான
போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையிலும், மீண்டும் காணிகளைப் பறிக்கும்
நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுவது பெரும் அநீதியாகும் எனக் குறிப்பிட்ட
அவர்கள், இவ்விடயத்தில் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்து, தங்களது
உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினரிடம் வலியுறுத்தினர்.
</p><p>
அத்துடன், மயிலிட்டி மக்களின் நியாயமான கோரிக்கைகள் மற்றும் நீண்டகாலமாகத்
தீர்வு காணப்படாத காணிப் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி அவர்களுடன் அவசர
சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து தருமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.</p><p>

மயிலிட்டி வடக்கு கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற இக்
கலந்துரையாடலில் வலி. வடக்கு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சோமசுந்தரம்
சுகிர்தன், வலி. வடக்கு பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் செ. விஜயராஜ், வலி.
மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் சபேசன் மற்றும் காணி
விடுவிப்புச் சார்ந்த அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர்
கலந்து கொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T10:22:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் களஞ்சிய சாலைக்கு அருகில் தீ பரவல் - விரைந்து செயற்பட்ட தீயணைப்பு படையினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-spreads-near-the-barn-road-in-jaffna-1785146718"></link>
            <id>https://tamilwin.com/article/fire-spreads-near-the-barn-road-in-jaffna-1785146718</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலை வளாகத்திற்கு அருகில் உள்ள
வெற்றுக்காணிக்குள் திடீர் தீ பரவல் ஏற்பட்ட நிலையில், நீண்ட முயற்சிக்கு ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலை வளாகத்திற்கு அருகில் உள்ள
வெற்றுக்காணிக்குள் திடீர் தீ பரவல் ஏற்பட்ட நிலையில், நீண்ட முயற்சிக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சம்பவம் இன்று(27.07.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலை வளாகத்திற்கு அருகில் உள்ள
வெற்றுக்காணிக்குள் திடீர் தீ பரவல் ஏற்பட்ட நிலையில் கடற்படையினர், தீயணைப்பு படையினர் தீவிரமாக முயற்சி செய்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.</p><p></p><p>
</p><h2>
பிரதேச சபை விடுத்துள்ள அறிவுறுத்தல்</h2><p>
எரிபொருள் களஞ்சியசாலை வளாகத்திற்கு அருகில் உள்ள வெற்றுக்காணிகள் பராமரிப்பின்றி காணப்படுவதுடன், அந்த காணிகளுக்குள் குப்பைகளும் கொட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2778efbf-e6e0-4d3e-a96c-4b78be47e02d/26-6a672e0fb74aa.webp' /></p><p> </p><p>

இது தொடர்பில் பெற்றோலிய அதிகாரிகளால் வலி.வடக்கு பிரதேச சபைக்கு பல்வேறு
தடவைகள் அறிவிக்கப்பட்ட போதிலும்&nbsp; அது தொடர்பில் எந்தவித நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இன்று(27) தீ பரவல் ஏற்பட்ட போதும், பிரதேச சபைக்கு அறிவித்த போதிலும்
பிரதேச சபையினால் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை குறித்த பகுதிகளில் தீ மூட்ட வேண்டாம் என்ற எச்சரிக்கை
பதாகைகளை காட்சிப்படுத்துமாறு பிரதேச சபையின் காங்கேசன்துறை உப
அலுவலக பொறுப்பதிகாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cde5509d-6d17-4157-b2ca-a2b6730e72d7/26-6a672e108deff.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c303929-8026-4255-a4d1-b9270f6c27cc/26-6a672e11550a5.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T10:13:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்கவில் மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருளுடன் இலங்கை பயணி ஒருவர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-passenger-arrested-at-bia-with-drugs-1785138403"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-passenger-arrested-at-bia-with-drugs-1785138403</id>
            <summary type="text">இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ரூ. 14.8 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருளை வெளியே கடத்த முயன்ற இலங்கை பயணி ஒருவர் கைது செய்யப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ரூ. 14.8 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருளை வெளியே கடத்த முயன்ற இலங்கை பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>குறித்த நபர் இன்று காலை (27.07.2026) காவல்துறை போதைப்பொருள் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>சந்தேக நபர் மொனராகல பகுதியில் வசித்து வரும் 24 வயது ஓவியர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><h2>போதைபொருளுடன் ஒருவர் கைது</h2><p>சந்தேக நபர் காலை 9:25 மணிக்கு தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-403 மூலம் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b5bfbf8-48df-41c7-9012-7120ba7d614e/26-6a672aba561be.webp' /></p><p>குற்றம் சுமத்தப்பட்டவரின் பயணப்பை சோதனை செய்யட்டபோது மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.480 கிலோகிராம் போதைப்பொருளை அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.&nbsp;</p><p> அந்த போதைப்பொருள், சாசேஜ்களைப் போல இயந்திரம் மூலம் வடிவமைக்கப்பட்டு, சாக்லேட்டால் பூசப்பட்டு, வெற்றிடமாக அடைக்கப்பட்டு, ஒரு பிரபலமான சாக்லேட் பிராண்டைப் போலவே பொட்டலமிடப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>

 

இந்த போதைப்பொருள்&nbsp; சாதாரண சாக்லேட்டுகள் மற்றும் டாஃபிகளுக்கு மத்தியில் மறைக்கப்பட்டு 70 சாக்லேட் உறைகளில் கவனமாகப் பொதி செய்யப்பட்டு இருந்துள்ளது.&nbsp;</p><p>இந்த நிலையில் சந்தேக நபர், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன், மேலதிக விசாரணைகளுக்காக இன்று&nbsp; நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T10:12:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீன்கள் வாங்கும் போது இந்த 5 விஷயங்களை கவனித்து வாங்குங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/keep-these-5-things-in-mind-when-buying-fish-1785144612"></link>
            <id>https://jvpnews.com/article/keep-these-5-things-in-mind-when-buying-fish-1785144612</id>
            <summary type="text">கடல் மீன்களை உண்பதால் இதயம் காக்கப்படுவதுடன், மூளை வளர்ச்சி மேம்பட்டு, உடலுக்குத் தேவையான அயோடின் மற்றும் புரதச் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கின்றன....</summary>
            <content type="html"><![CDATA[<p>கடல் மீன்களை உண்பதால் இதயம் காக்கப்படுவதுடன், மூளை வளர்ச்சி மேம்பட்டு, உடலுக்குத் தேவையான அயோடின் மற்றும் புரதச் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கின்றன.</p><p>

அதுமட்டுமல்லாது இதய ஆரோக்கியம்: ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c457fa5-9492-4e93-af52-6e7edc3ea681/26-6a672525a2c56.webp' /></p><p><b>

மூளைத் திறன்:</b> ஞாபக சக்தியை அதிகரித்து, மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டைச் மேம்படுத்துகிறது.
அயோடின் சத்து: தைராய்டு சுரப்பி சீராக இயங்கவும், ஹார்மோன் உற்பசிக்கும் உதவுகிறது.</p><p><b>புரதச் சத்து:</b> தசைகளின் வளர்ச்சிக்கும், உடலின் திசுக்கள் சீரமைக்கப்படுவதற்கும் உயர் தரப் புரதம் தருகிறது.
</p><p><b>
வைட்டமின் டி:</b> எலும்புகளை வலுவாக்கத் தேவையான வைட்டமின் மற்றும் தாதுக்களை வழங்குகிறது .</p><p>ஆனால் பலருக்கும் நல்ல மீன்களை எப்படி தேர்வு செய்வது என்பதில் குழப்பங்கள் இருக்கலாம்.
 மீன்களை வாங்கும் போது அவசியம் பார்க்க வேண்டிய விஷயங்கள் என சில விஷயங்கள் உள்ளன. </p><p>

கீழ்வரும் அந்த 5 விஷயங்களை, நீங்களும் மீன் வாங்க செல்லும் போது கவனித்துப் பாருங்கள். இவை சரியாக இருந்தால்,&nbsp; பயப்படாமல் வாங்குங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/131be870-843e-4ae3-9637-3cf547d7060c/26-6a672526598a6.webp' /></p><p> </p><p><b>முதலில், மீனின் வாசனையை பாருங்கள்,&nbsp;</b> புதிதாக பிடிக்கப்பட்ட மீன்கள் என்றால், கடல் மணமோ ஆற்றின் மணமோ அதில் இருக்கும். அதேபோல அமோனியா வாசனையோ, புளித்தது போன்ற வாசனையோ இருந்தால் அது பழைய மீனாகவோ அல்லது பதப்படுத்தப்பட்ட மீனாகவோ இருக்கக்கூடும். அவற்றை தவிர்ப்பதே நல்லது. </p><p><b>அடுத்தது, மீனின் கண்களை பாருங்கள்,&nbsp;</b>அவை பிரகாசமாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும். ஒருவேளை அவை மங்கலாகவோ, குழி விழுந்தோ காணப்பட்டால் அந்த மீன்களை தவிர்த்துவிடுங்கள். </p><p><b>நீங்கள் வாங்கும் மீன்,</b> அதிக நேரம் ஐஸ் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்தால், அந்த ஐஸ் பாக்ஸ் சுத்தமானதாக இருக்கிறதா என்பதை பாருங்கள். இல்லையெனில், அதன் மூலமாக கூட உங்களுக்கு தொற்றுப் பிரச்சனைகள் வரலாம். மட்டுமில்லாமல் சுத்தமான ஐஸ்களுக்கு மத்தியில் வைக்கப்படும் மீன்கள், நீண்டநேரம் புத்துணர்வோடு இருப்பதுடன், அதன் தரமும் சுவையும் பாதுகாக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcf447c3-5184-4aa4-9c1e-d226bc65f81a/26-6a6727b4953a6.webp' /></p><p> </p><p><b>சிலர் கடைகளுக்கு சென்று மீன் வாங்குவதற்கு பதிலாக,</b> சூப்பர்மார்க்கெட் போன்ற இடங்களிலோ அல்லது ஆன்லைனிலோ பேக் செய்யப்பட்ட மீன்களை வாங்குகின்றனர். அப்படி வாங்கும் போது, மீனில் அதிகப்படியான திரவம் இருந்தால் அதை தவிர்த்துவிடுங்கள். ஏனெனில் மீனின் உறைநிலை நீக்கப்பட்டு, மீண்டும் அவை உறைய வைக்கப்பட்டிருந்தால்தான் அப்படி நடக்கும். இது மீனின் தன்மை மற்றும் சுவையை பாதிக்கும் என்பதால் தவிர்ப்பதே நல்லது. </p><p><b>மீனின் செவுள்களின் நிறத்தை கவனியுங்கள்,&nbsp; </b>அவை நல்ல சிவப்பு நிறத்திலோ அல்லது இளஞ்சிவப்பு நிறத்திலோ இருந்தால், அந்த மீன் புத்துணர்ச்சியோடு இருப்பதாக பொருள். மாறாக, பழுப்பு அல்லது சாம்பல் நிறச் செவுள்கள் இருந்தால் அந்த மீன் புத்துணர்ச்சியுடன் இல்லை என பொருள்.</p>]]></content>
            <updated>2026-07-27T10:09:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் ; 4 சந்தேகநபர்களின் பெயர்கள் நீதிமன்றத்திற்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-prison-clash-4-suspects-submitted-to-court-1785146883"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-prison-clash-4-suspects-submitted-to-court-1785146883</id>
            <summary type="text">&amp;nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக 4 சந்தேகநபர்களின் பெயர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக 4 சந்தேகநபர்களின் பெயர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளன.
</p><p>
அதன்படி, "ஹீனட்டியன சுபுன்" எனப்படும் சுபுன் மதுஷங்க, ஷேன் திலான் சில்வா, "களு மல்லி" எனப்படும் அஷான் பெர்னாண்டோ மற்றும் "பபா" எனப்படும் சமீர சம்பத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/085a59d1-3334-48b6-98b0-3fde4dfa195f/26-6a672e0543f52.webp' /></p><p>
</p><p>
இந்தச் சந்தேகநபர்களை இன்றைய தினம் (27) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T10:06:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதலிக்கு 3,000 கோடி உயில் எழுதிவைத்துவிட்டு இறந்த கோடீஸ்வரர்: யார் அந்த இளம்பெண்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/karyna-shuliak-gf-of-epstein-named-heir-to-3000-cr-1785146678"></link>
            <id>https://news.lankasri.com/article/karyna-shuliak-gf-of-epstein-named-heir-to-3000-cr-1785146678</id>
            <summary type="text">ஏராளம் இளம்பெண்களை சீரழித்த மோசமான குற்றவாளியான அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீனை நினைவிருக்கலாம்.

அந்த நபர், தன் காதலியான ஒரு இளம்பெண்ணுக்கு 1...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏராளம் இளம்பெண்களை சீரழித்த மோசமான குற்றவாளியான அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீனை நினைவிருக்கலாம்.
</p><p>
அந்த நபர், தன் காதலியான ஒரு இளம்பெண்ணுக்கு 100 மில்லியன் டொலர்கள் சொத்தை உயில் எழுதிவைத்துவிட்டுச் சென்றுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
</p><h3>
யார் அந்தப் பெண்?
</h3><p>
பொதுவாக, எப்ஸ்டீனுடைய காதலி என்றாலே, கிஸ்லெய்ன் மேக்ஸ்வெல் என்னும் பெண்ணின் முகம்தான் நினைவுக்கு வரும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd30272a-0863-4ec9-aa47-6da65a172b13/26-6a672d37b0725.webp' /></p><p>ஆனால், எப்ஸ்டீன் 100 மில்லியன் டொலர்கள் சொத்து எழுதிவைத்துள்ளது அந்த மேக்ஸ்வெல்லுக்கு அல்ல!
</p><p>
ஆம், காருண்யா ஷுலியாக் (37) என்னும் இளம்பெண்ணுக்குதான் எப்ஸ்டீன் உயிலில் 100 மில்லியன் டொலர்கள் சொத்து எழுதிவைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0433d0ac-84c6-4c0f-af40-ec2e3d2e0235/26-6a672d385fc07.webp' /></p><p>இந்த காருண்யாவைக் குறித்து பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. பெலாரஸ் நாட்டவரான காருண்யா 2010ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு வந்துள்ளார்.
</p><p>
அவருக்கு 21 வயது இருக்கும்போது 58 வயதான எப்ஸ்டீனை காருண்யா சந்திக்க, காருண்யாவால் ஈர்க்கப்பட்ட எப்ஸ்டீன், அவர் பல் மருத்துவம் படிப்பதற்கு கொலம்பியா பல்கலையில் இடம் வாங்கிக் கொடுத்தது முதல், அவரது குடும்பத்துக்கு பண உதவி செய்தது வரை பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79594366-e9b8-4ade-a05a-f70d19384e36/26-6a672d391044d.webp' /></p><p>2013இல் காருண்யாவின் விசா காலாவதியாகிவிட, உடனடியாக காருண்யாவுக்கும் தனது உதவியாளரான மற்றொரு பெண்ணுக்கும் திருமணம் செய்துவைத்துள்ளார் எப்ஸ்டீன்.
</p><p>
ஒரு பாலின திருமணத்தைக் காரணம் காட்டி அமெரிக்காவிலேயே தங்கி, கிரீன் கார்டு வாங்கிய காருண்யா, 2018இல் அமெரிக்கக் குடியுரிமையும் பெற்ற கையோடு, அந்தப் பெண்ணை விவாகரத்து செய்துவிட்டார்.
</p><p>
பின்னர் முழுமையாக எப்ஸ்டீனுடைய சொத்துக்கள், பணியாளர்கள், வீடு புதுப்பித்தல், மரச்சாமான்கள் வாங்குதல், நிர்வாகம் என அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டுள்ளார் காருண்யா.
</p><p>
இருவரும் காதலித்ததாகவும், திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்ததாகவும் கூட கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4f248c4-9498-42bc-8338-51ce4832a5a9/26-6a672d39b6019.webp' /></p><p>இந்நிலையில், 2019ஆம் ஆண்டு எப்ஸ்டீன் சிறை செல்ல, சரியாக ஒரு மாதம் கழித்து காருண்யாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார் எப்ஸ்டீன்.</p><p>

தனது வழக்கு முடிவடைய நீண்ட காலம் ஆகலாம் என்றும், ஆகவே, தங்குவதற்கு வேறு இடம் பார்த்துக்கொள்ளுமாறும் கூறிய எப்ஸ்டீன், பயப்படாதே, தைரியமாக இரு என்றும் காருண்யாவிடம் கூறியுள்ளார்.
</p><p>
அடுத்த நாள், அதாவது, ஆகத்து மாதம் 10ஆம் திகதி, எப்ஸ்டீன் தன் சிறை அறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததாக தகவல்கள் வெளியாகின.</p><h3>

காதலிக்கு 3,000 கோடி</h3><p>

இந்நிலையில், எப்ஸ்டீன் காருண்யாவுக்கு 100 மில்லியன் டொலர்கள், 33 காரட் எடையுள்ள ஒரு வைர மோதிரம் முதலான பல சொத்துக்களை உயில் எழுதிவைத்துவிட்டுச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cfb7ead-37c2-4811-8326-bb8d9ba75f96/26-6a672d3a6511f.webp' /></p><p>100 மில்லியன் டொலர்கள் என்பது இலங்கை மதிப்பில் 33,54,74,60,000.00 ரூபாய் ஆகும்.
</p><p>
விடயம் என்னவென்றால், எப்ஸ்டீனுக்கு 600 மில்லியன் டொலர்கள் சொத்து என கணக்கிடப்பட்டுள்ள நிலையில், அவரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கியது போக, தற்போது அவருடைய சொத்து மதிப்பு 120 மில்லியன் முதல் 200 மில்லியன் டொலர்கள் மட்டுமே.
</p><p>
ஆக, காருண்யாவுக்கு எதிர்பார்த்தபடி 3,000 கோடி கிடைக்குமா என்பது உறுதியாகத் தெரியவில்லை!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T10:04:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனைத்து அரச அலுவலகங்களிலும் தேசிய நேர்மை வாரம் ஆரம்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/national-integrity-week-begins-in-sl-govt-offices-1785143655"></link>
            <id>https://ibctamil.com/article/national-integrity-week-begins-in-sl-govt-offices-1785143655</id>
            <summary type="text">ஜனாதிபதி செயலகம் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரச அலுவலகங்களிலும் “நேர்மையான கலாசாரம் – க்ளீன் சிறிலங்கா” எனும் தொனிப்பொருளின் கீழ் பிரகடனப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி செயலகம் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரச அலுவலகங்களிலும் “நேர்மையான கலாசாரம் – க்ளீன் சிறிலங்கா” எனும் தொனிப்பொருளின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய நேர்மை வாரம் இன்று (27) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.</p><p>எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த திட்டம்,&nbsp; இன்று காலை 9 மணிக்கு தேசிய நேர்மைப் பிரமாணத்தை ஏற்றுக்கொள்ளல் மற்றும் புதிய ஒழுக்கக் கோவையை அறிமுகப்படுத்தல் ஆகியவற்றுடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
</p><p>
ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் ஊடாக அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், ஜனாதிபதி செயலகம் மற்றும் 'க்ளீன் சிறிலங்கா' திட்டத்தினால் இணைந்து நடைமுறைப்படுத்தப்படுகின்றது.</p><p></p><h2>ஊழலற்ற ஆட்சிமுறை</h2><p>

அரச சேவையின் தரம், செயற்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதுடன், ஊழலற்ற ஆட்சிமுறையை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b79a89a-8429-4c12-b924-364aa55a056b/26-6a672b8ae18b9.webp' /></p><p>
</p><p>
இந்த வாரத்துக்கான நிகழ்ச்சிகள் தினசரி அடிப்படையில் பின்வரும் தொனிப்பொருள்களில் கட்டமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, ஜூலை 27: நிறுவன ரீதியான நேர்மையை ஊக்குவித்தல், ஜூலை 28: நிதியியல், டிஜிட்டல், தொழில்முனைவு மற்றும் தொழில்நுட்ப நேர்மையை ஊக்குவித்தல், ஜூலை 29: ஆன்மீக, ஒழுக்கவியல், கலாசார மற்றும் சமூக நேர்மையை ஊக்குவித்தல்,&nbsp; ஜூலை 30: செயற்பாட்டு, உள்கட்டமைப்பு, சேவை வழங்கல் மற்றும் தொழிலாளர் நேர்மையை ஊக்குவித்தல். ஜூலை 31: சுற்றுச்சூழல், வள முகாமைத்துவம், கிராமப்புற மற்றும் சமூக வலுவூட்டல் நேர்மையை மேம்படுத்தல் என்பனவாகும்.</p><p></p><h2>ஜனாதிபதி ஊடகப்பிரிவு&nbsp;</h2><p>

ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டுதலின் கீழ், ஒவ்வொரு அரச நிறுவனத்திலும் உள்ள உள்நாட்டலுவல்கள் பிரிவுகள் மூலம் ஊழல், துஷ்பிரயோகம் அல்லது நிர்வாகக் குறைபாடுகள் தொடர்பான பொதுமக்களின் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00654d4c-9a6e-46f0-9c0c-16ad60e65cc7/26-6a672b8bc4265.webp' /></p><p>இந்த முறைப்பாடுகளை QR குறியீடு, மின்னஞ்சல், அஞ்சல், தொலைபேசி அல்லது இணையவழிச் செய்தித் தளங்கள் ஊடாகச் சமர்ப்பிக்க முடியும்.</p><p> பொதுமக்கள் அளிக்கும் முறைப்பாடுகள் மீது நிறுவனங்களின் தலைவர்களால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பிரத்தியேக டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்பின் மூலம் கண்காணிக்கப்படும்.
</p><p>எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் தேசிய நேர்மை வாரம் நிறைவடைந்த போதிலும், இந்த திட்டம் அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களிலும் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T10:04:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மெய்வல்லுநர் தெரிவுக் குழு பதவி விலகல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-athletics-selection-committee-resigns-1785144346"></link>
            <id>https://ibctamil.com/article/sl-athletics-selection-committee-resigns-1785144346</id>
            <summary type="text">இலங்கையின் மெய்வல்லுநர் தெரிவுக் குழு உறுப்பினர்கள் தமது பதவிகளிலிருந்து விலக முடிவு செய்துள்ளனர்.

நாட்டில் மெய்வல்லுநர் விளையாட்டு நிர்வாகம் மற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் மெய்வல்லுநர் தெரிவுக் குழு உறுப்பினர்கள் தமது பதவிகளிலிருந்து விலக முடிவு செய்துள்ளனர்.
</p><p>
நாட்டில் மெய்வல்லுநர் விளையாட்டு நிர்வாகம் மற்றும் தேர்வு முறைகளில் நிலவும் பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனடிப்படையில் தங்களது பதவி விலகல் தொடர்பான உத்தியோகபூர்வக் கடிதத்தை விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளனர்.</p><p></p><h2>விளையாட்டு ஆளுமை</h2><p>

குறித்த கடிதம் இன்று (27-07-2026) கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4afa3a7-8883-4792-8a7a-d55eeab8a312/26-6a672b97c2158.webp' /></p><p>

பதவி விலகிய இந்த குழுவில் விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னாள் உதவிப் பணிப்பாளர் D.A. தயாரத்ன, முன்னாள் தேசிய மெய்வல்லுநர் வீரரும் சாதனையாளருமான கேணல் M.K.P. ஜயசேகர மற்றும் அரச பாடசாலைகளுக்கு இடையிலான முன்னாள் மெய்வல்லுநர் சாதனையாளரான ரவி வித்யாலங்கார ஆகிய முன்னணி விளையாட்டு ஆளுமைகளும் அங்கத்துவம் வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T10:03:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகாநதி சீரியல் புகழ் சுவாமிநாதன் இந்த புதிய தமிழ் சீரியலில் நடிக்கிறாரா?... சூப்பர் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/mahanadhi-serial-swaminathan-new-tamil-serial-1785141869"></link>
            <id>https://cineulagam.com/article/mahanadhi-serial-swaminathan-new-tamil-serial-1785141869</id>
            <summary type="text">மகாநதிதமிழ் சின்னத்திரை ரசிகர்கள் கடந்த சில வருடங்களாக கொண்டாடிய சீரியல் மகாநதி. பிரவீன் பென்னட் இயக்கத்தில் சுவாமிநாதன், லட்சுமி ப்ரியா, கம்ருதீன், ர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மகாநதி</h2><p>தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் கடந்த சில வருடங்களாக கொண்டாடிய சீரியல் மகாநதி. </p><p>பிரவீன் பென்னட் இயக்கத்தில் சுவாமிநாதன், லட்சுமி ப்ரியா, கம்ருதீன், ருத்ரன், தாரு, ஸ்வேதா என பல இளம் கலைஞர்கள் நடிக்க ஒளிபரப்பாகி வந்த சீரியல். முதலில் 4 சகோதரிகளின் கதை என தொடங்கப்பட்ட போக போக இது விஜய்-காவேரி ஜோடியின் அழகிய காதல் கதையாக மாறியது. </p><p>சின்னத்திரையில் ஹிட்டான ஜோடிகளில் இவர்கள் டாப் லிஸ்டில் உள்ளார்கள் என்றே கூறலாம். தொடர் முடிவுக்கு வருகிறது என்ற செய்தி கேட்டு ரசிகர்கள் மிகவும் வருந்தினார்கள், ஆனால் முடிந்தேவிட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a58ac6e7-8780-41ba-8062-91f99cfb1fa0/26-6a671ddbe825f.webp' /></p><h2>புதிய சீரியல்</h2><p>
இந்த தொடரில் யமுனாவாக நடித்த ஸ்வேதா இப்போது சின்ன மருமகள் சீரியலில் நடிக்கிறார். </p><p>கங்காவாக நடித்த தாரு இப்போது விஜய் டிவியில் காதல் காதல் காதல் சீரியலில் நடிக்கிறார். விஜய்யாக நடித்த சுவாமிநாதன் ஏற்கெனவே தெலுங்கு சீரியலில் நடித்து வர இப்போது தமிழ் தொடரில் கமிட்டாகியிருப்பதாக தகவல் வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32b24193-d368-449f-aeca-0dc483d35c1a/26-6a671dda5aee0.webp' /></p><p> </p><p>விரைவில் விஜய் டிவியில் Ninna Jothe Nanna Kathe என்ற கன்னட சீரியல் ரீமேக் ஆக இருப்பதாக தகவல் வந்த நிலையில் இந்த தொடரின் மெயின் ரோலில் சுவாமிநாதன் நடிக்க கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த விவரம் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b515203a-0d8a-4571-a277-ffb4f82fd882/26-6a671ddb2e8dc.webp' /></p>]]></content>
            <updated>2026-07-27T10:00:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த புகைப்படத்தில் உள்ள பிரபல நடிகை யார் தெரியுமா? அட இவர் தானா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/south-indian-actress-childhood-photo-viral-1785142971"></link>
            <id>https://cineulagam.com/article/south-indian-actress-childhood-photo-viral-1785142971</id>
            <summary type="text">வைரல் புகைப்படம்&amp;nbsp;திரையுலக பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்களிடையே வைரலாகும். அப்படி தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபலமான...</summary>
            <content type="html"><![CDATA[<h2>வைரல் புகைப்படம்&nbsp;</h2><p>திரையுலக பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்களிடையே வைரலாகும். </p><p>அப்படி தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a384ad3-437c-4750-b6b8-a91247d81735/26-6a671ebd32dda.webp' /></p><p>இவர் தனது சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். விஜய்க்கு தங்கையாக இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><h2>அட இவர் தானா</h2><p>

அவர் வேறு யாருமில்லை, நடிகை நிவேதா தாமஸ் தான். ஆம், ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையான நிவேதா தாமஸின் சிறு வயது புகைப்படம்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bbd1fcd-a8b5-4329-ae8c-a517c1cde2b5/26-6a671ebddbd9f.webp' /></p><p>இந்த சிறு வயது புகைப்படத்தை <a href="https://www.youtube.com/watch?v=KVxgp9KDrd8" target="_blank">நிவேதா</a>வின் தம்பி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-27T10:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியா, நியூசிலாந்து நாடுகளை உள்ளடக்கிய உளவுப்பிரிவு: தொடர்புகொண்ட நபரை கைது செய்த ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-s-fsb-arrest-man-who-spying-for-new-zealand-1785146087"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-s-fsb-arrest-man-who-spying-for-new-zealand-1785146087</id>
            <summary type="text">நியூஸிலாந்து அணிக்காக உளவு பார்த்ததாகக் கூறப்படும் நபரை ரஷ்யா கைது செய்துள்ளது.&amp;nbsp;55 வயதான நபர்&amp;nbsp;கைது 
ரஷ்யாவின் FSB பாதுகாப்பு சேவை திங்களன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நியூஸிலாந்து அணிக்காக உளவு பார்த்ததாகக் கூறப்படும் நபரை ரஷ்யா கைது செய்துள்ளது.&nbsp;</p><h2>55 வயதான நபர்&nbsp;கைது </h2><p>
ரஷ்யாவின் FSB பாதுகாப்பு சேவை திங்களன்று 55 வயதான நபர் ஒருவரை, கபரோவ்ஸ்கில் கைது செய்ததாக தெரிவித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a99a0c20-6f8a-4562-a0ef-a60aa6242b44/26-6a672c167e31c.webp' /></p><p></p><p>அந்த நபர் பிரித்தானியா, கனடா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய the Five Eyes உளவுத் தகவல் பகிர்வு கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்கும் நியூஸிலாந்து உளவுத்துறை சேவைகளை தொடர்பு கொண்டதாக FSB அறிக்கையில் கூறியுள்ளது.</p><h2>உளவுத் தகவல்களை சேகரிப்பதற்காக</h2><p>மேலும், குறித்த நபர் ரஷ்யாவின் தேசியப் பாதுகாப்பிற்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய தகவல்களை சேகரித்து பகிர்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டார்.</p><p>ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடனான ரஷ்யாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த உளவுத் தகவல்களை சேகரிப்பதற்காக, அந்த நபரை நியூஸிலாந்து சேர்த்ததாகவும் FSB கூறியது.&nbsp;</p><p>அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6aaad240-0ed8-488f-84c8-72d0b90bdac5/26-6a672c1764f9d.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T09:58:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் கோர சம்பவம் - தூக்கி வீசப்பட்ட சிறுவன் பலி - தவிக்கும் பெற்றோர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3-years-old-boy-killed-in-the-accident-1785126151"></link>
            <id>https://tamilwin.com/article/3-years-old-boy-killed-in-the-accident-1785126151</id>
            <summary type="text">கொழும்பு, இராஜகிரிய பகுதியில் பெற்றோருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த மூன்று வயது சிறுவன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். 

பெற்றோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, இராஜகிரிய பகுதியில் பெற்றோருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த மூன்று வயது சிறுவன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். </p><p>

பெற்றோருடன் சென்று கொண்டிருந்த வேளையில் மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கி வீசப்பட்டு எதிரே வந்த கார் ஒன்றில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

கடந்த 25ஆம் திகதி அதிகாலை சம்பவித்த விபத்தில் நிசித்து ஹுமெத் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். </p><h2><b>


தூக்கி வீசப்பட்ட சிறுவன்</b></h2><p>உறவினர் வீடொன்றுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே விபத்து சம்பவித்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b03516b7-15b9-49b1-8c12-f1050715405e/26-6a672b28bf8e9.webp' /></p><p>வீதியில் மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் அது வீட்டின் இடது பக்கமாகக் கவிழ்ந்துள்ளது.</p><p> இதன்போது சாரதியான தந்தையும் பின் ஆசனத்தில் இருந்த தாயும் வீட்டின் இடது பக்கத்தில் விழுந்துள்ளனர்.</p><p> 

இந்நிலையில், சாரதி ஆசனத்திற்கு முன்னால் பயணம் செய்த சிறுவன் தூக்கி வீசப்பட்டு, எதிரே வந்த காரின் முன்பக்க வலது சக்கரத்தடியில் சிக்கியுள்ளார்.</p><h3><b> சாரதி&nbsp;கைது </b></h3><p>விபத்தில் பலத்த காயமடைந்த சிறுவன் உடனடியாக ஐ.டி.எச். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சில நிமிடங்களுக்குள் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ba026fe-da94-499f-919f-be5496b981ab/26-6a672b296e68f.webp' /></p><p>இந்த விபத்தின் காரணமாக சிறுவனின் பெற்றோருக்கு எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். </p><p>கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்திய காரின் சாரதியான கொட்டிகாவத்தை, மகா புத்துமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். </p>]]></content>
            <updated>2026-07-27T09:56:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொந்த ராசிக்கு செல்லும் சுக்கிரன்.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sukran-peyarchi-1785144771"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sukran-peyarchi-1785144771</id>
            <summary type="text">நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்ககூடியவர் சுக்கிரன் பகவான்.

இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்ககூடியவர் சுக்கிரன் பகவான்.
</p><p>
இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
</p><p>
இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் சுக்கிரன் தனது சொந்த ராசிக்குள் நுழையப்போகிறார்.
</p><p>
அந்தவகையில், சொந்த ராசிக்கும் செல்லும் சுக்கிரனால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.</p><p></p><h2>ரிஷபம் </h2><ul><li>

வாழ்க்கையில் நேர்மறையான பலன்களை ஏற்படுத்தும். </li><li>பல வாய்ப்புகள் தேடிவரும்.</li><li>கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களை எதிர்பார்க்கலாம். </li><li>அவர்கள் கடனாகக் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும்.</li><li>நிதி நிலைமையை வலுப்படுத்தும். </li><li>அவர்களின் உடல்நலம் சீராக இருக்கும்.</li><li>திருமண வாழ்க்கையில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். </li><li>சில குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்க வாய்ப்புகள் உள்ளன.</li><li>குடும்பத்தினருடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். </li><li>திட்டங்கள் அனைத்தும் வெற்றியைப் பெறும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32446ebf-d27f-4c6a-a38b-b99407df50df/26-6a672ab5b711a.webp' /></p><h2>துலாம் </h2><ul><li>வாழ்க்கையில் பல நன்மைகள் ஏற்படும். </li><li>நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் திறக்கும்.</li><li>வேலையில் செயல்திறனால் பெரிய விஷயங்களை சாதிப்பீர்கள். </li><li>கடின உழைப்புக்கான அங்கீகாரம் தேடிவரும். </li><li>மூதாதையர் சொத்து தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.</li><li>மாணவர்கள் சிறந்த பலன்களை எதிர்பார்க்கலாம். </li><li>பல்வேறு அம்சங்களில் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். </li><li>வாழ்க்கையில் புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கும்.</li><li>ஒட்டுமொத்த பொருளாதார நிலையை அதிகரிக்கும். </li><li>அனைத்து முயற்சிகளுக்கும் ஆரோக்கியம் துணையாக இருக்கும்.</li></ul><h2>மகரம் </h2><ul><li>


பல நன்மைகளை அனுபவிக்கப்போகிறார்கள். </li><li>வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கிடைக்கும்.</li><li>வேலையில் பதவி உயர்வுகளைப் பெறலாம். </li><li>கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.</li><li>வேலை அல்லது வணிகத்தில் முன்னேற்றம் கிடைக்கும். </li><li>நிலுவையில் உள்ள பணிகள் முடியும்.</li><li>பொருளாதாரநிலை வலுப்படும். </li><li>படைப்பாற்றல் மற்றும் சிந்திக்கும் திறன் சிறப்பாக இருக்கும்.</li><li>பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.</li><li>சில மூதாதையர் சொத்துக்களைப் பெற வாய்ப்புள்ளது.</li><li>அவர்களின் நிதி நிலைமையை வலுப்படும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e99c67e0-6af6-4454-a50d-822c7b350287/26-6a672ab74e1fb.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>
&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T09:54:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் கல்வி நிலைய உரிமையாளர் போதைப்பொருளுடன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tuition-centre-owner-arrested-with-crystal-meth-1785145343"></link>
            <id>https://ibctamil.com/article/tuition-centre-owner-arrested-with-crystal-meth-1785145343</id>
            <summary type="text">ஹொரணவில் இயங்கிவரும் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர், &#039;ஐஸ்&#039; (கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன்) எனப்படும் போதைப்பொருளை வைத்திருந்த குற்றத்திற்காகக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹொரணவில் இயங்கிவரும் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர், 'ஐஸ்' (கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன்) எனப்படும் போதைப்பொருளை வைத்திருந்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
ஹொரணநார்த்தனாகலா பகுதியைச் சேர்ந்த 44 வயதான அந்த சந்தேக நபர், அவரது இல்லத்தில் காவல்துறை நடத்திய சோதனையின்போது கைது செய்யப்பட்டார்.</p><h2>சந்தேக நபரிடம் மீட்கப்பட்ட பொருட்கள்</h2><p>சந்தேக நபரிடமிருந்து 15 கிராம் (250 மி.கி) கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், ஒரு கைபேசி, போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு சிம் அட்டை மற்றும் ஒரு மின்னணு எடை அளக்கும் கருவி ஆகியவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1f98f69-fd8e-4d42-8e3d-cfa9e1a527af/26-6a672a30a1331.webp' /></p><p>
</p><p>
விசாரணையாளர்களின் கூற்றுப்படி, காவல்துறை அவரது இல்லத்திற்கு வந்தபோது சந்தேக நபர் தப்பிச் செல்ல முயன்றார், ஆனால் சிறிது நேரத் துரத்தலுக்குப் பிறகு அவர் பிடிபட்டார்.</p><p></p><h2>தொழிலதிபரின் மகன்</h2><p>

ஹொரண பகுதியில் நன்கு அறியப்பட்ட ஒரு தொழிலதிபரின் மகன் தான் அந்த சந்தேக நபர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4539a66-bb7d-46d6-82be-9b004d01f907/26-6a672a2fef9bd.webp' /></p><p> </p><p>அவர் இதற்கு முன்பும் போதைப்பொருள் தொடர்பான பல குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார் என்றும் காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.</p><p>

சந்தேக நபருக்கு ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுடன் தொடர்பு இருந்ததா, அவர் ஒரு பரந்த போதைப்பொருள் விநியோக நடவடிக்கையை நடத்தி வந்தாரா, மேலும் அவரது பயிற்சி வகுப்புகளுக்கு வரும் மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் வழங்கப்பட்டனவா என்பது குறித்தும் காவல்துறை விசாரித்து வருகிறது.&nbsp; </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T09:51:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்னை பதவிநீக்கம் செய்துவிடுங்கள்... ஜேர்மன் போக்குவரத்துத் துறை அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/german-transport-minister-schnieder-seek-dismissal-1785142017"></link>
            <id>https://news.lankasri.com/article/german-transport-minister-schnieder-seek-dismissal-1785142017</id>
            <summary type="text">ஜேர்மன் போக்குவரத்துத் துறை அமைச்சர், தன்னை பதவிநீக்கம் செய்யுமாறு ஜேர்மன் சேன்ஸலரை கேட்டுக்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துத் துறை அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மன் போக்குவரத்துத் துறை அமைச்சர், தன்னை பதவிநீக்கம் செய்யுமாறு ஜேர்மன் சேன்ஸலரை கேட்டுக்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><h3>

போக்குவரத்துத் துறை அமைச்சரின் கோரிக்கை</h3><p>

ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ், அமைச்சரவையில் பல மாற்றங்களைச் செய்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a47f68a-da68-4a5a-8d37-740737316c85/26-6a671b0325e9e.webp' /></p><p>

ஜேர்மன் ரயில் போக்குவரத்து தொடர்பில் நாட்டில் அதிருப்தி நிலவிவருவதைத் தொடர்ந்து, போக்குவரத்துத் துறை அமைச்சரான பேட்ரிக் ஷ்னைடரும் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
</p><p>
ஆனால், இதுவரை சேன்ஸலர் மெர்ஸ் அது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
</p><p>
இதற்கிடையில், ஷ்னைடரும் மாற்றப்படலாம் என தகவல் வெளியான விடயம், அவருடைய சொந்த மாகாணமான Rhineland-Palatinate மாகாணத்தில் கோபத்தை உருவாக்கியுள்ளது.&nbsp;</p><p></p><p>

ஷ்னைடர் கடுமையான உழைப்பாளி, தன் பதவிக்கு தகுதியானவர், அப்படியிருக்கும்போது சேன்ஸலர் மெர்ஸ் ஏன் அவரை பதவிநீக்கம் செய்யவேண்டும், சேன்ஸலரை புரிந்துகொள்ளவே முடியவில்லை என்று கூறியுள்ளார் CDU கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Michael Ludwig.
</p><p>
இந்நிலையில், தன் பெயர் இப்படி அடிடுவதால் விரக்தியடைந்துள்ள ஷ்னைடர், தனது பதவி தொடர்பில் ஒரு கண்ணியமற்ற சூழல் உருவாகியுள்ளதால், தன்னால் வேலையில் கவனம் செலுத்தமுடியவில்லை என்றும், தன்னை பதவிநீக்கம் செய்யுமாறு ஜேர்மன் சேன்ஸலரை கேட்டுக்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T09:47:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[24 வயது கிரிக்கெட் வீரருடன் 33 வயது மிருணாள் தாகூர் டேட்டிங்-ஆ? வைரல் வீடியோ..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/yashasvi-jaiswal-is-dating-mrunal-thakur-now-1785143893"></link>
            <id>https://viduppu.com/article/yashasvi-jaiswal-is-dating-mrunal-thakur-now-1785143893</id>
            <summary type="text">மிருணாள் தாகூர்பாலிவுட் சினிமாவில் தற்போது டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை மிருணாள் தாகூர், டக்கோயிட் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மிருணாள் தாகூர்</h2><p>பாலிவுட் சினிமாவில் தற்போது டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை மிருணாள் தாகூர், டக்கோயிட் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/401bccc8-6c5f-439e-a99b-64d52780a095/26-6a672257358b2.webp' /></p><p> சமீபத்தில் வெளியான வருண் தவான் நடிப்பில் Hai Jawani Toh Ishq Hona Hai படத்தில் நடித்திருந்தார் மிருணாள். தற்போது அவுட்டிங் சென்று வரும் மிருணாள், மும்பை பந்த்ரா மேற்கிலுள்ள பூஜி கஃபேக்கு சென்றுள்ளார். </p><p>அதிலும் 24 வயதான இந்திய கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெயஸ்வாலுடன் அங்கிருந்து வெளியேறிய வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f6c2f1d-718b-49e8-badd-05e5cd9b5eb3/26-6a672257dc4ab.webp' /></p><p> </p><p>ஏற்கனவே தனுஷுடன் டேட்டிங் ரூமரில் சிக்கிய மிருணாள் தாகூர், 11 வயது இளைய கிரிக்கெட்டருடன் டேட்டிங் சென்றுள்ளார் என்ற கிசுகிசு பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="in" dir="ltr">Yashasvi Jaiswal dating Mrunal Thakur?😳 <a href="https://t.co/dnr4FNSaEc">pic.twitter.com/dnr4FNSaEc</a></p>&mdash; Wickets Hitting (@offpacedelivery) <a href="https://x.com/offpacedelivery/status/2081332828508496292?ref_src=twsrc%5Etfw">July 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-07-27T09:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் விமான ஓடுபாதைக்குள் சொகுசு வாகனம் விபத்து: சாரதி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/man-arrested-after-driving-motorhome-onto-1785135908"></link>
            <id>https://canadamirror.com/article/man-arrested-after-driving-motorhome-onto-1785135908</id>
            <summary type="text">கனடாவின் விமான ஓடுபாதை ஒன்றில் சொகுசு வாகனமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள அபோட்ஸ்போர்டு சர்வதேச விமான ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் விமான ஓடுபாதை ஒன்றில் சொகுசு வாகனமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள அபோட்ஸ்போர்டு சர்வதேச விமான நிலையத்தில், நபர் ஒருவர் தனது சொகுசு வாகனத்தை பாதுகாப்பு வேலியை உடைத்துக் கொண்டு இயங்கிக் கொண்டிருந்த விமான ஓடுபாதைக்குள் ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>
சனிக்கிழமை மாலை சுமார் 4:30 மணியளவில் இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b47890f7-85ee-4f05-beea-eaa9f2634df6/26-6a670325db731.webp' /></p><p> </p><p>
பாதுகாப்பு வேலி உடைந்தவுடன் விமான நிலைய ஊழியர்கள் உடனடியாகச் செயல்பட்டனர். மேலும், அங்கு இயங்கிக் கொண்டிருந்த பிற விமானங்களைப் பாதுகாப்பாக வேறு வழிகளில் திருப்பிவிட விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் விரைந்து நடவடிக்கை எடுத்தது. </p><p>
இச்சம்பவத்தால் விமான நிலையச் செயல்பாடுகள் சிறிது நேரம் பாதிக்கப்பட்ட போதிலும், விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பியது. </p><p>அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 
இச்சம்பவம் தொடர்பாக 53 வயதுடைய நபர் ஒருவரைக் காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர். </p><p>
இது குறித்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், ஓட்டுநர் போதையில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.</p><p>
இந்த விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T09:43:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனித மலத்தில் இருந்து மருந்து !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/uk-poop-pills-stool-to-combat-superbugs-infection-1785143014"></link>
            <id>https://canadamirror.com/article/uk-poop-pills-stool-to-combat-superbugs-infection-1785143014</id>
            <summary type="text">&amp;nbsp; ஆண்டிபயாட்டிக் மருந்துகளுக்குக் கட்டுப்படாத &#039;சுப்பர் பக்டீரியா&#039; தொற்றுகளுக்கு எதிராக புதிய சிகிச்சை முறையாக &quot;மல நுண்ணுயிர் உறையுறைகள்&quot; (Poop Pi...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஆண்டிபயாட்டிக் மருந்துகளுக்குக் கட்டுப்படாத 'சுப்பர் பக்டீரியா' தொற்றுகளுக்கு எதிராக புதிய சிகிச்சை முறையாக "மல நுண்ணுயிர் உறையுறைகள்" (Poop Pills) பயன்படுத்தும் ஆய்வு இங்கிலாந்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p>

இந்தச் சிகிச்சைக்காக, ஆரோக்கியமான நபர்களின் மலத்தில் உள்ள பயனுள்ள குடல் நுண்ணுயிரிகள் (Gut Microbiome) சுத்திகரிக்கப்பட்டு, உறையவைக்கப்பட்டு உறையுறை (Capsule) வடிவில் தயாரிக்கப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26bdea3c-1a80-4e97-8c5c-89dca7c34cde/26-6a671ee7ddbf6.webp' /></p><p>
</p><p>
இந்த உறையுறைகள், நோயாளிகளின் குடல் நுண்ணுயிர் சமநிலையை மீட்டெடுத்து, ஆண்டிபயாட்டிக் மருந்துகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட ஆபத்தான பக்டீரியாக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த உதவுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
ஆரம்பகட்ட மருத்துவ ஆய்வுகளில், இந்தச் சிகிச்சை நல்ல முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், இதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை முழுமையாக உறுதிப்படுத்த மேலும் விரிவான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி, இந்த ஆய்வு வெற்றியடைந்தால், ஆண்டிபயாட்டிக் மருந்துகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட தொற்றுநோய்களுக்கு எதிரான சிகிச்சைத் துறையில் இது முக்கிய முன்னேற்றமாக அமையக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-27T09:42:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த பகுதி கடற்கரை செல்வோர் அவதானம்; ஜெல்லிமீன்களால் பலர் காயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/many-injured-by-jellyfish-at-panadura-beach-1785135798"></link>
            <id>https://jvpnews.com/article/many-injured-by-jellyfish-at-panadura-beach-1785135798</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பாணந்துறை கடற்கரையில் ஜெல்லி மீன்கள் நடமாட்டம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜெல்லிமீன்கள் உடலில் பட்டதன் காரணமாக, கடலில் குளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பாணந்துறை கடற்கரையில் ஜெல்லி மீன்கள் நடமாட்டம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜெல்லிமீன்கள் உடலில் பட்டதன் காரணமாக, கடலில் குளித்துக் கொண்டிருந்த பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பாணந்துறை கடற்கரை உயிர் காக்கும் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>


ஜெல்லிமீன்களால் காயமடைந்தவர்களில் 4 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.



நேற்றையதினம் (26) பிற்பகல் பாணந்துரை கடற்கரைக்கு வருகை தந்த மக்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது, உடலில் ஜெல்லிமீன்கள் பட்டதால் இவ்வாறு காயமடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fb64786-ac91-4dfc-8356-cb1d5a49511c/26-6a6702b84c5c2.webp' /></p><h2>300-க்கும் மேற்பட்ட ஜெல்லிமீன்கள் மீன்கள்...</h2><p>
</p><p>


நேற்றுப் பிற்பகல் வேளையில் மட்டும் சிறிய அளவிலான 300-க்கும் மேற்பட்ட ஜெல்லிமீன்கள் மீன்கள் பாணந்துரை கடற்கரைப் பகுதிக்கு ஒதுங்கியுள்ளதாக உயிர்காப்பக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>


ஜெல்லிமீன்கள் உடலில் பட்டவர்களில் சிலர் சிகிச்சைகாகப் பாணந்துரை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன், முதலுதவி பெற்றுக் கொண்டதன் பின்னர் அவர்கள் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.</p><p></p><p>
</p><p>


நிலைமை மேலும் தீவிரமடைவதைத் தவிர்ப்பதற்காகச் செயற்பட்ட பொலிஸ் உயிர்காப்பகப் பிரிவு, கடலில் குளித்துக் கொண்டிருந்த அனைவரையும் உடனடியாகக் கடற்கரைப் பகுதியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>



எனவே கடற்கரைக்கு வருகை தரும் மக்கள் இக்காலப்பகுதியில் கடலில் இறங்கும் போது அதிகக் கவனத்துடன் செயற்படுமாறு பாதுகாப்புப் பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T09:40:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கம் பொய்ப் பிரசாரங்களில் ஈடுபடுவதாக சஜித் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-giving-false-promises-says-sajith-1785144602"></link>
            <id>https://tamilwin.com/article/npp-giving-false-promises-says-sajith-1785144602</id>
            <summary type="text">&amp;nbsp;அரசாங்கம் பொய்ப் பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அரசாங்கம் பொய்ப் பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரான ராஜீவ் அமரசூரியவிற்கு முதலமைச்சர் வேட்பாளர் பதவி உள்ளிட்ட அரசியல் லஞ்சங்களைச் சனநாயக ஐக்கிய முன்னணி வழங்கியதாக தேசிய மக்கள் சக்தி சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்துள்ளார். </p><p>
ரத்தினபுரியில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய பணிமனை திறப்பு விழாவில் உரையாற்றிய சஜித் பிரேமதாச, இக்குற்றச்சாட்டு தேசிய மக்கள் சக்தியின் பொய்யான பிரச்சாரங்களின் மற்றொரு அங்கம் எனவும், தமது கட்சி ஒருபோதும் அரசியல் லஞ்சங்களில் ஈடுபட்டதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1aa3d367-9f50-4e1c-958c-0be64aab0b9f/26-6a67251b851ed.webp' /></p><p>
</p><p>உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் அரசாங்கத்தின் முன்மொழிவை எதிர்க்கும் முயற்சியாகவே முதலமைச்சர் பதவி வாக்குறுதி அளிக்கப்பட்டதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். </p><p>
ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் யாருக்கும் அரசியல் லஞ்சம் கொடுத்ததில்லை எனவும் சுயாதீனமான நீதித்துறைக்காக&nbsp; எப்போதும் உறுதியுடன் நிற்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.</p><p>
பெலவத்தையில் இருந்து கொண்டு நீதித்துறையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முயல்வதாகவும், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த முற்படும் அதே வேளையில் காலியிடங்களை நிரப்பாமல் நீதித்துறையின் சுயாதீனத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
தேநீர், ரப்பர், கருவா மற்றும் இரத்தினக் கற்கள் போன்ற வளங்கள் இலங்கையில் இருந்தும், அவற்றை மேம்படுத்தத் தவறிய அரசாங்கம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி அதிகாரத்தைத் தக்கவைக்கப் பார்ப்பதாக சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>துறைமுக விலையிலேயே எரிபொருள் வழங்கப்படும், மின்சாரக் கட்டணம் 33% குறைக்கப்படும், நெல்லுக்கு 150 ரூபா குறைந்தபட்ச விலை உறுதி செய்யப்படும் போன்ற வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை எனவும், மாறாக நெல் விவசாயிகளுக்கு 17 ரூபா இழப்பை இந்த அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T09:30:22+00:00</updated>
        </entry>
    </feed>
