<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-31T23:52:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டெம்பர் 22இல் இறுதித் தீர்ப்பு..! வியப்பில் ஆழ்த்திய மைத்திரிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/maithri-pala-sirisena-crown-president-of-happy-era-1788203211"></link>
            <id>https://tamilwin.com/article/maithri-pala-sirisena-crown-president-of-happy-era-1788203211</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு “மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி” என்ற கௌரவப் பட்டம் வழங்கப்பட்ட விடயம் அரசியல் பரபரப்பில் பேசுபொருளாகியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு “மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி” என்ற கௌரவப் பட்டம் வழங்கப்பட்ட விடயம் அரசியல் பரபரப்பில் பேசுபொருளாகியுள்ளது.&nbsp;</p><p>
கொழும்பிலுள்ள அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிலேயே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்த கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.
</p><p>மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி என அவர் கௌரவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பல கொடூர சம்பவங்கள் மற்றும் குற்றச் செயல்க்ள தொடர்பில் அரசியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.&nbsp;</p><p>குறிப்பாக, பல உயிர்களை பறித்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்&nbsp;மைத்திரிபாலவின் ஆட்சிக்காலத்திலேயே நடந்தேறியது.&nbsp;</p><p>இது தொடர்பில் அவர் மீது பல குற்றச்சாட்டுக்களும் உள்ள நிலையில், இந்த தாக்குதல்கள் தொர்பிலான வழக்கு விசாரணையின் தீர்ப்பு எதிர்வரும் 22ஆம் திகதி வழங்கப்பட உள்ளது.</p><p>&nbsp;இவ்வாறிருக்கையில், அவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அங்கீகாரம் பல கேள்விகளை எழுப்புகின்றது எனலாம்.&nbsp;</p><p>நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/sgq8jMiHzoc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T23:46:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இதை செய்தால் வரிகள் இல்லை ; ட்ரம்பின் மற்றொரு அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-s-latest-shock-announcement-1788219362"></link>
            <id>https://canadamirror.com/article/trump-s-latest-shock-announcement-1788219362</id>
            <summary type="text">அமெரிக்க-கனடா வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள கனடியப் பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீதம் வரி வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க-கனடா வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள கனடியப் பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்தது. இந்த வரிகள் 2027-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.


</p><p>
பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாததால் 2 நாடுகளும் ஒன்றையொன்று குற்றம்சாட்டின. அமெரிக்காவுடன் மோதலுக்குத் தங்கள் நாடு தயாராக இருப்பதாக கனடா அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/590f874a-d51d-44c7-9878-8f6aae7c3440/26-6a960fe45a461.webp' /></p><p>

புதிதாக விதிக்கப்பட்டு உள்ள வரிகளைத் தவிர்ப்பதற்காக, கனடிய நிறுவனங்கள் தங்கள் தலைமையகங்களையும் உற்பத்தி வசதிகளையும் அமெரிக்காவுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
</p><p>

இதுதொடர்பாக அவர் சமூகவலைதள பதிவில் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து கனடிய நிறுவனங்களும் உடனடியாக அமெரிக்காவிற்கு இடம் பெயரட்டும்.</p><p>

அவற்றுள் பல, அமெரிக்காவின் முட்டாள்தனமான தலைமை காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியேறிய நிறுவனங்களாகும்.

நீங்கள் திரும்பி வரும்போது, ​​சுங்க வரிகள் எதுவும் இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார். </p><p>மற்றொரு பதிவில், கனடா அமெரிக்காவின் 2-வது பெரிய வர்த்தகப் பங்காளியாக இருந்தபோதிலும், அது அமெரிக்காவின் மிக மோசமான வர்த்தகப் பங்காளிகளில் ஒன்றாகும் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.</p><p>


அமெரிக்கப் பொருளாதாரம் கனடாவைவிடப் பல மடங்கு பெரியது. கனடாவின் ஏற்றுமதியில் சுமார் 70 சதவீதம் அமெ ரிக்காவிற்கே செல்கிறது. </p><p>அதே நேரத்தில் பல அமெரிக்க மாநிலங்களுக்கு மிக முக்கிய வாடிக்கையாள ராகக் கனடா விளங்குறது என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-31T23:36:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல நோய்களை தவிடுபொடியாக்கும் சின்ன வெங்காயம் ; நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/small-onions-may-help-fight-many-illnesses-1788218062"></link>
            <id>https://jvpnews.com/article/small-onions-may-help-fight-many-illnesses-1788218062</id>
            <summary type="text">&amp;nbsp;சின்ன வெங்காயத்தை உரிப்பது நேரம் எடுக்கும் என்பதாலும் அதை உறிக்கும் போது கண்ணில் நீரை வரவழைக்கும் என்பதாலும் இப்போதெல்லாம் பெரும்பாலான பெண்கள் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;சின்ன வெங்காயத்தை உரிப்பது நேரம் எடுக்கும் என்பதாலும் அதை உறிக்கும் போது கண்ணில் நீரை வரவழைக்கும் என்பதாலும் இப்போதெல்லாம் பெரும்பாலான பெண்கள் பெரிய வெங்காயத்தையே சமையலில் பயன்படுத்த தொடங்கி விட்டனர். </p><p style="text-align: justify;">ஆனால் சின்ன வெங்காயத்தில் இருக்கும் சத்துக்களை பற்றி பலரும் அறிவதில்லை.அதுபற்றி இங்கே பார்ப்போம்</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5cf95ec-6031-4d4c-a1ee-812430c56119/26-6a960acfd1be3.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;அருமருந்து&nbsp;</h2><p style="text-align: justify; ">
ஜலதோஷம், இதய நோய் பிரச்சனை இருப்பவர்கள், சின்ன வெங்காயத்தை மென்று சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறைவதோடு தும்மலும் நின்றுவிடும். </p><p style="text-align: justify; ">சின்ன வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி சாப்பிட்டால் ரத்த கொதிப்பு குறைவதோடு இதயமும் பலமாகும். இதய நோய் மற்றும் மாரடைப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை சாப்பிட வேண்டும்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16273137-6d0f-46d4-a1f7-0539ff22cbeb/26-6a961171a2695.webp' /></p><p>
</p><p style="text-align: justify;">
அதேபோல் மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கும் சின்ன வெங்காயம் ஒரு அருமருந்து. </p><p style="text-align: justify;">மேலும் பொடுகு தொல்லை, முடி கொட்டுதல் வழுக்கை போன்ற பிரச்சனைகளும் சின்ன வெங்காயம் நல்ல மருந்தாக இருக்கிறது. வழுக்கை விழுந்த இடங்களில் சின்ன வெங்காயத்தை தேய்ப்பதன் மூலம் முடி வளரவும் வாய்ப்பிருக்கிறது.
</p><p style="text-align: justify;">
தேள் கொட்டிய இடத்தில் சின்ன வெங்காயம் சாறை தேய்த்தால் உடலில் விஷம் ஏறாது. மேலும் சின்ன வெங்காயத்துடன் சிறிது வெல்லத்தை சார்ந்து சாப்பிடும் பொழுது பித்தம் குறையும்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> தலைவலி பிரச்சினை இருப்பவர்கள் வெங்காய நெடியி சுவாசித்தால் நிவாரணம் கிடைக்கும்.


அதேபோல் உடல் உஷ்ணத்தால் ஏற்படும் ஆசன கடுப்பு, மூல பிரச்சினைகளும் நீங்கும்.</p><p style="text-align: justify; ">குறிப்பாக சின்ன வெங்காயத்தில் இன்சுலின் சத்துக்கள் அதிகமாக உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் சின்ன வெங்காயத்தை தவறாமல் சாப்பிட வேண்டும்.. சின்ன வெங்காயத்தை சாறு எடுத்து உண்பதால் உடல் உள்ள கொழுப்புகள் கரையும்.</p><p style="text-align: justify;"> தொடர்ந்து 48 நாட்கள் சின்ன வெங்காயத்தை சாப்பிடும் போது உடல் குளிர்ச்சியடையும். மூளைக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-31T23:14:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் நாயிறைச்சி விற்பனை? பொதுமக்களுக்கு வெளியான அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dog-meat-sold-in-tamil-area-public-notice-issued-1788196771"></link>
            <id>https://jvpnews.com/article/dog-meat-sold-in-tamil-area-public-notice-issued-1788196771</id>
            <summary type="text">சாய்ந்தமருது பிரதேசத்தில் ‘நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக’ சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வரும் தகவல்களில் எவ்வித உண்மைத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சாய்ந்தமருது பிரதேசத்தில் ‘நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக’ சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வரும் தகவல்களில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை எனச் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெளிவுபடுத்தியுள்ளது.
</p><p style="text-align: justify; ">
கடந்த 29ஆம் திகதி சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் கீழ் உள்ள பிரதான வீதிப் பகுதியில், சுகாதார வைத்திய அதிகாரியும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் இணைந்து வழக்கமான உணவுப் பாதுகாப்புப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5fe5334-0328-487f-a701-424611da2bdf/26-6a95b7a4cf9ac.webp' /></p><h2 style="text-align: justify; ">பரிசோதனை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதன்போது, அப்பகுதியிலுள்ள ஆட்டிறைச்சிக் கடையொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஆட்டிறைச்சி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. </p><p style="text-align: justify; ">குறித்த இறைச்சியானது உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமலும், அங்கீகரிக்கப்பட்ட கால்நடை வைத்தியரின் பரிசோதனைச் சான்றிதழைப் பெறாமலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.</p><p style="text-align: justify; ">

இதனையடுத்து, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் குறித்த ஆட்டிறைச்சி உடனடியாகக் கையகப்படுத்தப்பட்டு, கடை உரிமையாளரின் அனுமதியுடன் அழிக்கப்பட்டதுடன், சுகாதார நடைமுறையைப் பின்பற்றாத கடை உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
எனினும், இச்சம்பவத்தைத் தவறாகச் சித்தரித்து, சாய்ந்தமருது பகுதியில் நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாகவும், அதனைப் பரிசோதகர்கள் பறிமுதல் செய்ததாகவும் சிலர் உள்நோக்கத்துடன் சமூக ஊடகங்களில் பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; ">

இது குறித்துச் சுட்டிக்காட்டியுள்ள சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் நோக்கிலேயே இத்தகைய வதந்திகள் பரப்பப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
எனவே, பொதுமக்கள் இந்த உண்மைக்குப் புறம்பான தகவல்களை நம்பவோ அல்லது சமூக வலைத்தளங்களில் பகிரவோ வேண்டாம் என்றும், இது தொடர்பில் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் கேட்டுக்கொண்டுள்ளது</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 </p>]]></content>
            <updated>2026-08-31T23:05:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க பயணங்களை கணிசமாகக் குறைத்த கனடியர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadians-are-keeping-travel-money-home-1788185258"></link>
            <id>https://canadamirror.com/article/canadians-are-keeping-travel-money-home-1788185258</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கனடா பயணிகள் அமெரிக்காவிற்கான தங்கள் பயணங்களையும் செலவுகளையும் கணிசமாகக் குறைத்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கனடா பயணிகள் அமெரிக்காவிற்கான தங்கள் பயணங்களையும் செலவுகளையும் கணிசமாகக் குறைத்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட தேசிய சுற்றுலா சர்வே தரவுகள் தெரிவிக்கின்றன.
</p><p>2025ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுடன் ஒப்பிடுகையில், 2026 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் கனடாவாசிகள் அமெரிக்காவிற்கு மேற்கொண்ட பயணங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம் குறைந்துள்ளது.
</p><p>பயணங்களின் எண்ணிக்கை குறைந்ததால், அமெரிக்காவில் கனடாவாசிகள் செய்த செலவு சுமார் 800 மில்லியன் டொலர் வரை சரிவடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00773107-b6ec-4d0c-9c05-274134e87139/26-6a958aabc6735.webp' /></p><p> </p><p>இதில் விமானக் கட்டணம் மற்றும் கனடாவில் பயணத்திற்காகச் செய்யப்பட்ட ஆரம்பச் செலவுகளும் அடங்கும்.</p><p>
அமெரிக்க பயணங்களைத் தவிர்த்து கனடாவாசிகள் தங்கள் சொந்த நாட்டின் சுற்றுலாத் துறையை ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர்.
</p><p>2025 முதல் காலாண்டில் 13.8 பில்லியன் டொலராக இருந்த கனடாவின் உள்நாட்டுச் சுற்றுலாச் செலவு, 2026 முதல் காலாண்டில் 14.5 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.
</p><p>இதேவேளை, கனடாவாசிகள் அமெரிக்கப் பயணத்தைக் குறைத்துக் கொண்டபோதிலும், அமெரிக்கர்களிடையே கனடாவிற்குச் செல்லும் ஆர்வம் குறையவில்லை.
</p><p>2026 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் கனடாவில் சுமார் 3 பில்லியன் டொலர் செலவிட்டுள்ளனர்.
</p><p>இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட சுமார் 500 மில்லியன் டொலர் அதிகமாகும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T23:05:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பெருவெள்ளத்திற்கான உண்மையான காரணம் வெளியானது! விஞ்ஞானிகளின் புதிய அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-real-cause-of-the-nepal-floods-1788213714"></link>
            <id>https://ibctamil.com/article/the-real-cause-of-the-nepal-floods-1788213714</id>
            <summary type="text">நேபாளத்தின் லங்டாங் லிரங் (Langtang Lirung) சிகரத்தில் ஏற்பட்ட பிரம்மாண்ட பனிப்பாறை சரிவே அண்மையில் நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் பேரழிவை ஏற்படுத்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தின் லங்டாங் லிரங் (Langtang Lirung) சிகரத்தில் ஏற்பட்ட பிரம்மாண்ட பனிப்பாறை சரிவே அண்மையில் நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கிற்கு முக்கியக் காரணம் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.</p><p> 

ஆரம்பத்தில் இந்தத் பேரிடருக்கு நிலநடுக்கமோ அல்லது பனியாற்று ஏரி உடைப்போ (GLOF) காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.
</p><p>
எனினும், செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்த நேபாள விஞ்ஞானிகள் குழு, அங்கு ஏரி உடைப்போ அல்லது நிலநடுக்கமோ நிகழவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p></p><h2>நிலநடுக்கத்திற்கு இணையான அதிர்வு</h2><p>

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சுமார் 5,200 மீற்றர் உயரத்தில் இருந்த பனி மற்றும் பாறைகள் அடங்கிய பெரும் பகுதி திடீரெனச் சரிந்து, சுமார் 2,900 மீற்றர் உயரத்திற்குச் செங்குத்தாகக் கீழே விழுந்துள்ளது. 

இதுவே ரிக்டர் அளவில் 5.2 நிலநடுக்கத்திற்கு இணையான அதிர்வை உருவாக்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/800b1e53-49ed-45a2-bc20-b3fb963cebc7/26-6a95f9d40695e.webp' /></p><p>
</p><p>
வெறும் 7 நிமிடங்களுக்குள் மணித்தியாலத்திற்குச் சராசரியாக 167 கிலோமீற்றர் வேகத்தில் பாய்ந்து வந்த இந்த சிதைவுகள் 22 கிலோமீற்றர் தொலைவைக் கடந்து அஸ்வகந்தா பகுதியை அடைந்துள்ளன.</p><h2>3,000-க்கும் மேற்பட்டோர் மாயம்</h2><p>
</p><p>
இவ்வாறு சரிந்து விழுந்த பாறைகளும் பனிக்கட்டிகளும் ஆற்றின் குறுக்கே தடைகளை ஏற்படுத்தியதால் புதிய தற்காலிக ஏரிகள் உருவாகி ஆற்றின் இயல்பான பாதையே மாறியிருப்பதாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4db9c90c-6783-493c-9134-14792db6c3fb/26-6a95f9d4b5ea4.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் இதுவரை 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 3,000-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T23:00:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நமீபியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி ஈட்டிய சிம்பாப்வே அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/zimbabwe-team-wins-match-against-namibia-1788210781"></link>
            <id>https://tamilwin.com/article/zimbabwe-team-wins-match-against-namibia-1788210781</id>
            <summary type="text">நமீபியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில்
நமீபியாவுக்கு எதிரான போட்டியில் சிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்
இழப்பிற்கு 195...</summary>
            <content type="html"><![CDATA[<p>நமீபியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில்
நமீபியாவுக்கு எதிரான போட்டியில் சிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்
இழப்பிற்கு 195 ஓட்டங்கள் குவித்து, 196 ஓட்டங்களை வெற்றி இலக்காக
நிர்ணயித்துள்ளது.
</p><p>
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நமீபியா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு
செய்தது.</p><h2>சிம்பாப்வே அணி வெற்றி</h2><p>

இதேவேளை ரியான் பர்ல் அதிரடியாக விளையாடி 32 பந்துகளில்;(7 பவுண்டரிகள், 1
சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.</p><p> பென் கரண் 38 ஓட்டங்களும், பிராட்
ஈவன்ஸ் ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்கள், பிரையன் பென்னட் 32 ஓட்டங்களும்
எடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31375803-a84b-4ebe-b5e3-8ef492d88b58/26-6a95f0ac3ed41.webp' /></p><p>

இதனையடுத்து கேப்டன் கெர்ஹார்டு எராஸ்மஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பெர்னார்டு, ஜேஜே ஸ்மித் மற்றும் மேக்ஸ் ஹெய்ங்கோ தலா ஒரு விக்கெட்டைப்
பெற்றனர்.</p><p>

இந்த நிலையில் தற்போது நமீபியா அணி 196 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற
இலக்குடன் விளையாடி வருகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T22:45:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருப்பு நிறப் பைக்குள் கிடந்த மூதாட்டியின் சடலம்: பிரித்தானிய பூங்காவில் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/woman-body-discovered-inside-black-bag-at-stanley-1788209262"></link>
            <id>https://news.lankasri.com/article/woman-body-discovered-inside-black-bag-at-stanley-1788209262</id>
            <summary type="text">Woman body discovered inside black bag at Liverpool: பிரித்தானியாவின் லிவர்பூல் பூங்காவில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Woman body discovered inside black bag at Liverpool: பிரித்தானியாவின் லிவர்பூல் பூங்காவில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> பிளாஸ்டிக் பைக்குள் மூதாட்டியின் சடலம்</h2><p>
லிவர்பூல் நகரின் ஸ்டான்லி பூங்காவில் மூதாட்டி ஒருவரின் சடலம் கருப்பு நிற பிளாஸ்டிக் பைக்குள் திணிக்கப்பட்டிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.</p><p> வெள்ளிக்கிழமை மாலை சுமார் 5.25 மணிக்கு பொதுமக்களில் ஒருவர் அளித்த தகவலின் படி, அன்பீல்ட்(Anfield Stadium) மற்றும் எவர்டன் குட்டிசன்(Goodison Park) இடைப்பட்ட பகுதிக்கு அவசர சேவை பிரிவினர் விரைந்தனர்.</p><p> பின்னர் அப்பகுதியில் நடத்திய சோதனையில் பூங்காவின் சுற்றுச்சுவர் உள்ள தோட்டப் பகுதிக்கு அருகில் கருப்பு நிற பிளாஸ்டிக் பைக்குள் சடலம் ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7bc9572-9602-407f-9242-71de60f46dab/26-6a95e870193bb.webp' /></p><p>இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மூதாட்டியின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று திங்கட்கிழமை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p>அத்துடன் பிரேத பரிசோதனைகளுக்கு பிறகும், விசாரணை காரணங்களுக்காக விவரங்களை ரகசியமாக வைத்து இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.</p><p> ஆனால், கைப்பற்றப்பட்ட உடல் தோராயமாக 70 வயதுடைய பெண் உடல் என்றும், சுமார் 5 அடி 2 அங்குலம் உயரமும் சிறிய உடலமைப்பும் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> மேலும் பல வாரங்களாக அந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.</p><h2> பொலிஸார் வேண்டுகோள்</h2><p>காணாமல் போனவர்கள் குறித்த தரவு தளங்களில் உள்ள விவரங்களுடன் சரிபார்த்த போது கண்டெடுக்கப்பட்ட சடலத்துடன் பொருந்த கூடிய நபர் யாரும் இல்லை என்று அதிகாரி ரேச்சல் வில்சன் தெரிவித்துள்ளார்.</p><p> இந்நிலையில் மேல் குறிப்பிட்ட விவரங்களுடன் சமீபத்தில் காணாமல் போனவர்கள் குறித்த விவரங்கள் ஏதேனும் தெரிந்து இருந்தால் உடனடியாக பொலிஸாரிடம் தெரிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி W<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">HATSAPP CHANNE</a>L இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T22:28:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிரீஸ் – இஸ்ரேல் ஆயுத ஒப்பந்தம்: மாறுபட்ட அபிப்பிராயங்கள் வெளிவரக்கூடும் என எதிர்பார்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/greece-israel-arms-deal-1788208852"></link>
            <id>https://tamilwin.com/article/greece-israel-arms-deal-1788208852</id>
            <summary type="text">கிரீஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே எட்டப்பட்டுள்ள ஆயுதக்
கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பில் பிராந்திய நாடுகளிடையே மாறுபட்ட எதிர்வினைகள்
தோன்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிரீஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே எட்டப்பட்டுள்ள ஆயுதக்
கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பில் பிராந்திய நாடுகளிடையே மாறுபட்ட எதிர்வினைகள்
தோன்றுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக ஏதென்ஸ் நகரில் இருந்து
வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>குறிப்பாக, இந்த ஒப்பந்தம் குறித்து துருக்கியிடம் இருந்து நேர்மறையான
கருத்துக்கள் வெளிவர வாய்ப்பில்லை எனக் கருதப்படுகிறது.</p><h2>வான் பாதுகாப்பு உதவி</h2><p>
</p><p>
இஸ்ரேலிடமிருந்து ஆயுதங்களை கொள்முதல் செய்வதன் மூலம், ஆக்கிரமிக்கப்பட்ட
மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொள்ளும் அனைத்து
நடவடிக்கைகளுக்கும் கிரீஸும் கூட்டுப் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும் என
துருக்கிய ஊடகப் பகுப்பாய்வாளர்கள் சுட்டிக்காட்டத் தொடங்கியுள்ளனர்.
</p><p>இருப்பினும், பல்கேரியா, வட மெசிடோனியா மற்றும் அல்பேனியா போன்ற
நாடுகளிடமிருந்து இதற்கு சாதகமான பதிலளிப்புகள் கிடைக்கக்கூடும் என
எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3d53887-d2c5-419b-9462-483964cc1735/26-6a95ed68ddda4.webp' /></p><p>தற்போதைய போர்க் காலத்தில் பல்கேரியா கிரீஸிடம் வான் பாதுகாப்பு உதவியைக்
கோரியிருந்த நிலையில், பல்கேரிய வான்வெளியைப் பாதுகாப்பதற்காக கிரீஸ் தனது
'பேட்ரியாட்' வான் பாதுகாப்பு அமைப்புகளை அங்கு நகர்த்தியிருந்தது. இதேபோன்று சவூதி அரேபியாவிலும் கிரீஸ் இத்தகைய வான் பாதுகாப்பு அமைப்புகளை
நிலைநிறுத்தியுள்ளது.</p><p>
இதன் காரணமாக, கிரீஸ் மற்றும் துருக்கி இடையிலான பாரம்பரிய போட்டித்தன்மை
காரணமாக அங்காராவிலிருந்து எதிர்மறையான விமர்சனங்கள் எழக்கூடும் அதேவேளை,
நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய நட்பு நாடுகளிடமிருந்து இதற்கு
ஆதரவான கருத்துக்கள் வெளிவரக்கூடும் எனக் கருதப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T22:10:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் மிகப் பெரிய ட்ரோனை சுட்டு வீழத்திய ஈரான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/irgc-claim-it-shot-down-a-us-mq-9-drone-1788206784"></link>
            <id>https://ibctamil.com/article/irgc-claim-it-shot-down-a-us-mq-9-drone-1788206784</id>
            <summary type="text">ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) ஹோர்மூஸ் நீரிணையின் கிழக்குப் பகுதியில் அமெரிக்காவின் MQ-9 ட்ரோனை தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் சுட்டு வீழ்த்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) ஹோர்மூஸ் நீரிணையின் கிழக்குப் பகுதியில் அமெரிக்காவின் MQ-9 ட்ரோனை தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. </p><p>

புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தி இந்த ட்ரோன் தகர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>உரிய பதிலடி&nbsp;</h2><p> 

முன்னதாக, ஜோர்டானில் உள்ள அமெரிக்கப் படைகள் மீதான ஈரானின் தாக்குதல்களுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/777f594b-eac9-4394-95c9-718baabcd19b/26-6a95e52b0de76.webp' /></p><p><i>Image Credit:&nbsp;defensenews</i></p><p>இதனைதொடர்ந்து, மேற்படி ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், அதனை ஈரானின் புரட்சிகர காவல் படை முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>ஹோர்மூஸ் நீரிணையில் உள்ள லாராக் தீவு மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஜோர்டானில் உள்ள இரண்டு வான்படை தளங்கள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) அமெரிக்கப் படைகள் அமைந்துள்ள ஒரு தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<i><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></i>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T22:07:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது அழுத்தத்தை பிரயோகிக்க நாடுகளுடன் இணைந்து செயற்பட ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eu-g7-unite-to-pressure-iran-1788207783"></link>
            <id>https://tamilwin.com/article/eu-g7-unite-to-pressure-iran-1788207783</id>
            <summary type="text">ஈரான் மீது தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகிப்பதற்காக அமெரிக்கா மற்றும் ஜி-7
அமைப்பின் ஏனைய உறுப்பு நாடுகளுடன் இணைந்து நெருக்கமாக செயற்படவுள்ளதாக
ஐரோப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகிப்பதற்காக அமெரிக்கா மற்றும் ஜி-7
அமைப்பின் ஏனைய உறுப்பு நாடுகளுடன் இணைந்து நெருக்கமாக செயற்படவுள்ளதாக
ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
</p><p>
ஈரானின் அணுசக்தி திட்டம், பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் மற்றும் வலயத்தில்
அச்சுறுத்தலை ஏற்படுத்தும் செயற்பாடுகளை அந்த நாடு உடனடியாகக் கட்டுப்படுத்த
வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில்
வலியுறுத்தியுள்ளது.</p><h2>ஐரோப்பிய ஒன்றியத்தின் எச்சரிக்கை</h2><p>

குறிப்பாக ரஷ்யாவின் உக்ரைன் மீதான போருக்கு ஈரான் வழங்கி வரும் இராணுவ ஆதரவு
மற்றும் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளை
நிறுத்துமாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0a1d651-9a0e-4168-9383-4d3438f33df2/26-6a95e4d3ceb1f.webp' /></p><p>அத்துடன், ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை
உறுதிப்படுத்தவும், பிராந்திய பாதுகாப்பு மற்றும் நன்மைகளைப் பாதுகாக்கவும்
தேவை ஏற்படின் மேலதிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கப்போவதில்லை
என்றும் ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T22:00:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[காருக்குள் இளைஞன் அரங்கேற்றிய செயல் ; சோதனையில் அதிர்ந்த பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-s-shocking-act-inside-car-1788210320"></link>
            <id>https://jvpnews.com/article/youth-s-shocking-act-inside-car-1788210320</id>
            <summary type="text">ஹோகந்தர, வனகுரு மாவத்தை பகுதியில் காரில் 2 கிலோ கிராமிற்கும் அதிகமான &#039;குஷ்&#039; போதைப்பொருளைக் கடத்திச் சென்று கொண்டிருந்த நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஹோகந்தர, வனகுரு மாவத்தை பகுதியில் காரில் 2 கிலோ கிராமிற்கும் அதிகமான 'குஷ்' போதைப்பொருளைக் கடத்திச் சென்று கொண்டிருந்த நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; "> 

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து 'குஷ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9316f564-353d-495a-b035-9500243558c9/26-6a95ec91d2ea5.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதன்போது போதைப்பொருளுடன் சந்தேகநபரிடமிருந்த 39,290 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

கைது செய்யப்பட்டவர் கலல்கொட பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மாலபே பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-31T22:00:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக பொருளாதாரத்திற்கு செயற்கை நுண்ணறிவால் அச்சுறுத்தல்: இங்கிலாந்து வங்கி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ai-poses-global-economic-threats-1788212704"></link>
            <id>https://news.lankasri.com/article/ai-poses-global-economic-threats-1788212704</id>
            <summary type="text">AI Poses Global Economic Threats: உலகளாவிய பொருளாதாரத்திற்கு செயற்கை நுண்ணறிவு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஒன்று என இங்கிலாந்து வங்கி ஆளுநர் எச்சரித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>AI Poses Global Economic Threats: உலகளாவிய பொருளாதாரத்திற்கு செயற்கை நுண்ணறிவு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஒன்று என இங்கிலாந்து வங்கி ஆளுநர் எச்சரித்துள்ளார்.</p><h2> இங்கிலாந்து வங்கி ஆளுநர் எச்சரிக்கை</h2><p>
வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது, சர்வதேச பொருளாதாரத்தில் மந்த நிலையை ஏற்படுத்தும் என்று இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் ஆண்ட்ரூ பெய்லி கடுமையாக எச்சரித்துள்ளார்.</p><p> அமெரிக்காவில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில், எதிர்காலத்தில் சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் கடுமையான திருத்தங்கள் குறித்து&nbsp; இங்கிலாந்து வங்கி ஆளுநர் ஆண்ட்ரூ பெய்லி கடிதம் வாயிலாக சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bed1675e-431c-41ad-adba-a3aaad663e50/26-6a95f5e285624.webp' /></p><p></p><p> அதில், வேகமாக வளரும் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் திடீரென வீழ்ச்சியடைந்தால் அது உலக பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், நிதி நெருக்கடியை உருவாக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.</p><p> இங்கிலாந்து மத்திய வங்கி கடந்த ஜூலையில் உலக அளவிலான சர்வதேச நிதி ஸ்திரத்தன்மை குறித்து கவலை தெரிவித்து இருந்ததை தொடர்ந்து இந்த புதிய எச்சரிக்கை வந்துள்ளது.</p><p> தொழில்நுட்ப வளர்ச்சியால், பங்குச் சந்தை குமிழ்கள், சைபர் பாதுகாப்பு அபாயங்கள், மற்றும் நிறுவனங்களின் கடன் சுமை ஆகியவை 3 முக்கிய ஆபத்துகள் நிதி ஸ்திரத்தன்மைக்கு இருப்பதாக மத்திய வங்கி குறிப்பிட்டிருந்தது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T21:45:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுக்கு உதவும் அண்டை நாடுகளுக்கு ஈரானின் இறுதி எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-warns-regional-countries-that-helping-america-1788211511"></link>
            <id>https://ibctamil.com/article/iran-warns-regional-countries-that-helping-america-1788211511</id>
            <summary type="text">அமெரிக்கப் படைகள் தனது நாட்டின் மீது தாக்குதல் நடத்த பிராந்திய நாடுகளின் மண்ணையோ அல்லது ராணுவத் தளங்களையோ பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று அண்டை நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கப் படைகள் தனது நாட்டின் மீது தாக்குதல் நடத்த பிராந்திய நாடுகளின் மண்ணையோ அல்லது ராணுவத் தளங்களையோ பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று அண்டை நாடுகளுக்கு ஈரானின் ராணுவம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
 மீறி அனுமதித்தால், கடும் பதிலடியை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளது.</p><p>

அண்டை நாடுகளின் தேசிய இறையாண்மையை மதிப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஈரான் ராணுவம், எந்தவொரு ஆக்கிரமிப்பையும் தங்களால் சகித்துக் கொள்ள முடியாது என்றும், அதற்கு மிகக் கடுமையான முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.</p><p></p><h2>ஈரான் ஆயுதப்படைகளின் உறுதி</h2><p>அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு உதவி செய்பவர்கள் யாராக இருந்தாலும், ஈரானின் ஆயுதப்படைகளான&nbsp; புரட்சிகர காவல் படை மற்றும் ராணுவம் இணைந்து, தாக்குதலுக்குக் காரணமான இடங்களை துல்லியமாக இலக்கு வைக்கும் என்றும் எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a221be4b-6745-44c0-b5fb-b803ae65c386/26-6a95f54cb5184.webp' /></p><p>
</p><p>அதன்போது தனது இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ள ஈரான், "எங்கள் ஆயுதப்படைகளின் உறுதியையும், எங்கள் மக்களின் சகிப்புத்தன்மையையும் மீண்டும் மீண்டும் சோதித்துப் பார்க்காதீர்கள்" எனத் தெரிவித்து உள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T21:42:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்து இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspect-arrest-in-shooting-at-swiss-music-concert-1788207149"></link>
            <id>https://tamilwin.com/article/suspect-arrest-in-shooting-at-swiss-music-concert-1788207149</id>
            <summary type="text">&amp;nbsp;சுவிட்சர்லாந்தின் ஆராவ் நகரில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் நடத்தப்பட்ட
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 43 வயதான சுவிஸ் நாட்டவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சுவிட்சர்லாந்தின் ஆராவ் நகரில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் நடத்தப்பட்ட
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 43 வயதான சுவிஸ் நாட்டவர்
ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
சூரிச் நகருக்கு மேற்கே அமைந்துள்ள குதிரைப் பந்தய திடலில் இடம்பெற்ற இசை
நிகழ்ச்சியின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், 22 வயதான
இத்தாலியப் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.</p><h2>பொலிஸ்&nbsp;விசாரணை</h2><p>
</p><p>
சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட 24 மணி நேர தீவிர தேடுதலின் பின்னரே
சந்தேகநபர் நேற்று(31) அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e078085d-a79e-467b-8505-b2cfca1efa1a/26-6a95e2386ffeb.webp' /></p><p>

சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார்,
இந்தத் தாக்குதலைத் தனி நபர் ஒருவரே நடத்தியிருக்கலாம் எனக் கருதுவதுடன்,
தாக்குதலுக்கான பின்னணி மற்றும் காரணம் குறித்து மேலதிக விசாரணைகளை
முடுக்கிவிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T21:27:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தூய கன்னிமரியாளின் பிறப்பு விழாவை முன்னிட்டு நெதர்லாந்தில் திருயாத்திரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/netherlands-pilgrimage-marks-mary-s-nativity-feast-1788205803"></link>
            <id>https://tamilwin.com/article/netherlands-pilgrimage-marks-mary-s-nativity-feast-1788205803</id>
            <summary type="text">தூய கன்னிமரியாளின் பிறப்பு விழாவை முன்னிட்டு, நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம் முன்னெடுக்கும் 24ஆவது ஆண்டு தமிழர் திருயாத்திரை, நெதர்லாந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தூய கன்னிமரியாளின் பிறப்பு விழாவை முன்னிட்டு, நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம் முன்னெடுக்கும் 24ஆவது ஆண்டு தமிழர் திருயாத்திரை, நெதர்லாந்தில் அமைந்துளள சிறிய லூர்து அன்னை திருத்தலத்தை நோக்கி நடைபெறவுள்ளது.</p><p>இந்தப் புனித யாத்திரையானது எதிர்வரும் (06.09.2026)ஆம் திகதி அன்று இடம்பெறவுள்ளது.</p><h2>யாத்திரை தொடர்பான விபரம்</h2><p>
</p><p>குறித்த திருத்தலத்தின் முகவரி்: Kloosterstraat 1, 5865 AA Tienray, Netherlands&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0aa33dc-3233-4d59-a62a-c40ff829efd3/26-6a95ddc3f35b1.webp' /></p><p>
நிகழ்ச்சி நிரல்:&nbsp; காலை 11.00 மணிக்கு திருநாள் திருப்பலி</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;: தொடர்ந்து நற்கருணை ஆசீர்வாதம்</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;: அதனைத் தொடர்ந்து அன்னையின் திருசொரூப பவனி </p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;: சிறிய லூர்து கெபியில் இறுதி ஆசியுடன் விழா நிறைவு
</p><p>
இந்தத் திருயாத்திரையில் அனைவரும் கலந்துகொண்டு இறை அருளைப் பெற்று, விழாவை சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கப்படுகின்றனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T21:27:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 600 உயிர்களை காப்பாற்ற போராடும் மீட்புக்குழுவினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nepal-rescuers-blast-hillside-search-families-1788209970"></link>
            <id>https://tamilwin.com/article/nepal-rescuers-blast-hillside-search-families-1788209970</id>
            <summary type="text">நேபாளத்தின் திரிசூலி ஆற்றுப் பகுதியில் அமைந்துள்ள திரிசூலி-3ஏ நீர்மின் திட்டச் சுரங்கப்பாதையில், சேறு மற்றும் சகதி நிறைந்த பகுதிக்குள் 600க்கும் மேற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தின் திரிசூலி ஆற்றுப் பகுதியில் அமைந்துள்ள திரிசூலி-3ஏ நீர்மின் திட்டச் சுரங்கப்பாதையில், சேறு மற்றும் சகதி நிறைந்த பகுதிக்குள் 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில், அவர்களை உயிரோடு மீட்கும் தீவிர நடவடிக்கைகளில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p> திங்கட்கிழமை வரை நீடித்த இந்த மீட்புப் பணியில், மலைப் பகுதியை வெடிவைத்துத் தகர்த்துச் சுரங்கத்தினுள் காற்றைச் செலுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>

நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 939 ஆக உயர்ந்துள்ளதுடன், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 3,925 ஆகப் பதிவாகியுள்ளது.</p><h2>மீட்புப் பணிகள்</h2><p> இதில் 592 பேர் வெளிநாட்டவர்கள் ஆவர். காணாமல் போனவர்களில் ஏழில் ஒருவர் நீர்மின் நிலையத் தொழிலாளி எனக் கருதப்படும் நிலையில், இதுவரை நீர்மின் நிலையங்களிலிருந்து 279 பேர் மீட்கப்பட்டுள்ளதாக நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91c07fa2-c4a1-4f7f-ac41-b1f978d20595/26-6a95f0e45dc0c.webp' /></p><p>
</p><p>
நேபாள மற்றும் சீன இராணுவத்தின் கூட்டுத் தலைமையில், இந்தியா, கொரியா மற்றும் அவுஸ்திரேலிய நிபுணர்களின் பங்களிப்புடன் இந்த மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>சுரங்கத்திற்குள் பிராணவாயு அமைப்பு உள்ளதால் தங்கள் உறவினர்கள் உயிரோடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கையில் குடும்பத்தினர் காத்திருக்கின்றனர். அதேவேளை, தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் தங்களது நம்பிக்கை குறைந்து வருவதாக உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p> இதுவரை 11,379 பேர் ஒட்டுமொத்தமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தால் 11 நீர்மின் திட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T21:26:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தீவிரமெடுக்கும் வறட்சி ; பாதிக்கப்பட்டோருக்கு குடிநீர் விநியோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-faces-intensifying-drought-crisis-1788208701"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-faces-intensifying-drought-crisis-1788208701</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 25,647 குடும்பங்களைச் சேர்ந்த 81,929 பேருக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக தேசிய அனர்த்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 25,647 குடும்பங்களைச் சேர்ந்த 81,929 பேருக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">

வறட்சியால் மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/293f0220-50f6-4f1b-a025-5b79d6c256dc/26-6a95e63f3db3e.webp' /></p><h2 style="text-align: justify; ">குடிநீர் தட்டுப்பாடு&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify; ">
இதற்கு மேலதிகமாக அம்பாறை, பதுளை, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

எதிர்வரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் எச்சரித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தமது தேவைகள் தொடர்பில் கிராம உத்தியோகத்தர் அல்லது பிரதேச செயலாளருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-31T21:15:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் கண்ணிவெடிகளில் சிக்கிய பாரிய எண்ணெய் தாங்கி கப்பல்! மறுத்தது அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/centcom-denied-supertanker-hit-by-two-mines-1788208925"></link>
            <id>https://ibctamil.com/article/centcom-denied-supertanker-hit-by-two-mines-1788208925</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் ஒரு மிகப்பெரிய எண்ணெய் தாங்கி கப்பல் இரண்டு கண்ணிவெடிகளால் தாக்கப்பட்டதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) கூறிய குற்றச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் ஒரு மிகப்பெரிய எண்ணெய் தாங்கி கப்பல் இரண்டு கண்ணிவெடிகளால் தாக்கப்பட்டதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) கூறிய குற்றச்சாட்டுகளை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) திட்டவட்டமாக மறுத்துள்ளது.
</p><p>
அப்பகுதியில் எந்தவொரு கப்பலும் கண்ணிவெடிகளில் சிக்கவில்லை என்று CENTCOM தனது X பதிவில் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p></p><h2>IRGC - இன் முயற்சி</h2><p>
</p><p>“ஹோர்முஸ் நீரிணையில் எந்தவொரு கப்பலும் கண்ணிவெடிகளில் சிக்கவில்லை. பொய்ப் பிரச்சாரங்கள் மற்றும் தவறான தகவல்கள் மூலம் பிராந்திய வர்த்தகக் கப்பல் போக்குவரத்தை அச்சுறுத்துவதற்காக IRGC மேற்கொண்டுள்ள மற்றொரு முயற்சியே இது" என்று CENTCOM பதிவிட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">🚫 CLAIM: Iran’s Islamic Revolutionary Guard Corps (IRGC) claims that a supertanker passing through the southern route of the Strait of Hormuz struck two mines and was brought to a complete stop. This is FALSE.<br><br>✅ FACT: No ships have hit mines in the Strait of Hormuz. This is… <a href="https://t.co/spkaogBx81">pic.twitter.com/spkaogBx81</a></p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2094411076729262413?ref_src=twsrc%5Etfw">August 31, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>விதிமுறைகளை மீறிச் சென்ற எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று இரண்டு கண்ணிவெடிகளால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அது ஹோர்முஸ் நீரிணையில் முழுமையாக இயக்கமற்று நிறுத்தப்பட்டதாக IRGC திங்களன்று உரிமை கோரியிருந்ததமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNE</a></b>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T21:14:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடகொரிய ஜனாதிபதியின் அதிரடி ; பதவியிலிருந்து நீக்கப்பட்ட முக்கிய புள்ளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/north-korean-president-s-move-1788209796"></link>
            <id>https://canadamirror.com/article/north-korean-president-s-move-1788209796</id>
            <summary type="text">வடகொரியாவில் அதன் தலைவர் கிம் ஜாங் அன் தலைமையில்&amp;nbsp; ஆட்சி நடந்து வருகிறது.&amp;nbsp;அந்த நாட்டின் முக்கியமான பொறுப்புகளில் ஒன்றான பாதுகாப்பு அமைச்சர் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடகொரியாவில் அதன் தலைவர் கிம் ஜாங் அன் தலைமையில்&nbsp; ஆட்சி நடந்து வருகிறது.&nbsp;</p><p>அந்த நாட்டின் முக்கியமான பொறுப்புகளில் ஒன்றான பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்த அவர் முன்னணி ராணுவ அதிகாரியும் அரசியல் தலைவராக செயல்பட்டுவந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b3231c9-89f9-4ba6-8590-2810756a4091/26-6a95ea8617c1d.webp' /></p><p> </p><p>வடகொரியாவின் அதிநவீன ஏவுகணைகள், அணு ஆயுத திட்டங்கள் மற்றும் புதிய போர் ஆயுத அமைப்புகளை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றி பல லட்சம் வீரர்கள் கொண்ட மக்கள் ராணுவத்தை நிர்வகித்து வந்தார்.</p><p>&nbsp;வடகொரியாவில் ராணுவ தலைமையை மாற்றியமைக்கும் நடவடிக்கை யின் ஒரு பகுதியாக, அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் நோ குவாங் சோல், பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். </p><p>இதன் அடிப்படையில், பாதுகாப்பு மந்திரியாக இருந்த நோ குவாங் சோல், பதவியில் இருந்து நீக்கப்பட்டு, வெடிமருந்து தொழில் துறையின் முதலாவது துணை இயக்குனராக பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கூட்டு போர்ப்பயிற்சி
அவருக்கு பதிலாக, கொரிய மக்கள் ராணுவத்தின் பொது அரசியல் பிரி வின் இயக்குனரான கிம் சோங் கி புதிய பாதுகாப்பு அமைச்சரக நியமிக்கப்பட்டுள்ளார். </p><p>மேலும், பாதுகாப்பு ஆலோசகரான பாக் ஜோங் சோன், மத்திய ராணுவ ஆணையத்தின் துணைத் தலைவராகவும், அரசியல் பிரிவு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T20:56:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்று முறை சீ.வி.கேவின் வீடு தேடி சென்ற தாய் வெளியிட்ட பகீர் தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-party-ignores-tamils-pain-public-slams-1788203330"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-party-ignores-tamils-pain-public-slams-1788203330</id>
            <summary type="text">இலங்கையின் படை தரப்பினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவகளுக்காக நீதி கோரி போராட்டமும் மகாநாடும் கடந்த ஆவணி மாதம் 30ஆம் திகதி தமிழர் பகுதிகளில் உணர்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் படை தரப்பினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவகளுக்காக நீதி கோரி போராட்டமும் மகாநாடும் கடந்த ஆவணி மாதம் 30ஆம் திகதி தமிழர் பகுதிகளில் உணர்ச்சிபூர்வமாக முன்னெடுக்கப்பட்டிருந்தன.
</p><p>
இந்த நியாயவழி போராட்டத்திற்கு தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று சிறுபிள்ளைதனமான காரணத்தை கூறி இலங்கை தமிழரசுக் கட்சி போராட்டம் மற்றும் மகா நாட்டை புறக்கணித்துள்ளது.</p><p>இது தொடர்பில் கட்சியின் பதில் தலைவர் சி. வி. கே. சிவஞானமும் பதில் செயலாளர் எம். ஏ. சுமந்திரனும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.</p><p>
ஒட்டுமொத்த தமிழினத்தின் நீதிக்கான குரலை மழுங்கடிக்கும் வகையில் அமைந்திருந்த இந்த அறிக்கை மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

கடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பான போராட்டங்களுக்கு அரசு தரப்பில் பல தடைகள் விதிக்கப்பட்டன. </p><p>ஆனால் தற்பொழுது தமிழ் கட்சிகள் தரப்பே இவ்வாறான காரணங்களை கூறி தமிழர்களின் உணர்வுபூர்மான போராட்டங்களை புறக்கணிக்கின்றன.</p><p>இவ்வாறிருக்கையில், வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் உபதலைவி அமலநாயகி, சி. வி. கே. சிவஞானத்தை சந்திக்க பலமுறை முயற்சித்தமை தொடர்பில் தகவல்களை வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p> </p><p>

இது தொடர்பில் இன்னும் பல விடயங்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியின் ஊடாக விரிவாகப் பார்க்கலாம்..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/adOL5hITeAk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T20:24:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாயுடன் சென்றவர்களுக்கு நேர்ந்த அவலம் ; சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragedy-for-those-who-went-with-mother-1788207469"></link>
            <id>https://jvpnews.com/article/tragedy-for-those-who-went-with-mother-1788207469</id>
            <summary type="text">ஜா-எல, பமுனுகம எப்பாமுல்ல கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த 13 வயது சிறுவனின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 

நேற்று முன் தினம் (30) பிற்பகல் கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜா-எல, பமுனுகம எப்பாமுல்ல கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த 13 வயது சிறுவனின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

நேற்று முன் தினம் (30) பிற்பகல் குறித்த கடற்கரை பகுதியில் பெண்ணொருவர் தனது மகள் மற்றும் மேலும் இரு சிறுவர்களுடன் இராட்சத அலையில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/877ddefd-ada5-4a4c-ad5e-edcc91d054af/26-6a95e16e92a29.webp' /></p><p>இவ்வாறு கடலில் நீராடச் சென்று காணாமல் போனவர்களில் பெண்ணின் சடலமும் இரண்டு சிறுமிகளின் சடலங்களும் இன்று காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p>
</p><p>
 

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 35 வயதுடைய பெண்ணொருவர், 04 மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகள் மற்றும் 13 வயதுடைய சிறுவன் ஆவர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T20:19:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிஸில் இரவு பார்ட்டியில் நடந்த துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் கைது செய்த பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-police-arrest-suspect-of-rave-shooting-1788200120"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-police-arrest-suspect-of-rave-shooting-1788200120</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தின் ஆராவ் நகரில் நகரில்&amp;nbsp; நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சுவிஸ் நகரில் துப்பாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தின் ஆராவ் நகரில் நகரில்&nbsp; நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2> சுவிஸ் நகரில் துப்பாக்கிச்சூடு</h2><p>
வடக்கு சுவிட்சர்லாந்தில் சூரிச்சின் மேற்கே உள்ள ஆராவ் நகரில் இரவு நேர இசை மற்றும் நடன விருந்து ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். அத்துடன் 5 பேர் வரை காயமடைந்தனர்.</p><p>அதிகாலை 3 மணிக்கு முன்னதாக 'ஆராவர் ரேவ்' (Aarauer Rave) நிகழ்வின் ஒரு பகுதியாக நடந்த இந்த நிகழ்ச்சியின்போது துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e975aaa-5dc3-453d-9a0e-91053e4b3d0a/26-6a95c4ba1d333.webp' /></p><p> இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் இத்தாலியை சேர்ந்த 22 வயது பெண் என்று தெரியவந்துள்ளது.</p><h2>சந்தேக நபர் கைது</h2><p>நிகழ்ச்சி அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்த பிறகும் சம்பவ இடத்தில் 100க்கும் மேற்பட்டோர் கூடியிருந்த போதே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.</p><p> இந்நிலையில் ஜேர்மன் நாட்டு காவல்துறையின் உதவியுடன்&nbsp; நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த சந்தேக நபரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46430c0f-6047-4f67-88a4-a497155602f7/26-6a95c4bac6476.webp' /></p><p> இந்த தாக்குதலை கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தனி ஆளாக நடத்தியதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.</p><p> எனினும் இந்த தாக்குதலுக்கான உண்மையான காரணம் குறித்து பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p> சம்பவம் நடைபெற்ற இடத்தில் அதிகாரிகள் இரண்டு வகையான குண்டுகளை கைப்பற்றியுள்ள நிலையில், தாக்குதல்தாரி கைத்துப்பாக்கி மற்றும் தாக்குதலுக்கு உரிய பெரிய ரக துப்பாக்கியை பயன்படுத்தி இருக்கலாம் என்று தடயவியல் அதிகாரிகள் கருதுகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T20:16:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ஜென்டினாவின் கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி ஓய்வை அறிவித்தார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/argentina-lionel-messi-announces-retirement-1788202966"></link>
            <id>https://jvpnews.com/article/argentina-lionel-messi-announces-retirement-1788202966</id>
            <summary type="text">அர்ஜென்டினாவின் நட்சத்திரக் கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

 

இது &quot;வேதனைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அர்ஜென்டினாவின் நட்சத்திரக் கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். </p><p>

 

இது "வேதனையான" ஒரு முடிவு என்றாலும், "அதற்கான நேரம் வந்துவிட்டது" என்பதைத் தான் புரிந்து கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d65c2e9c-f234-4722-8660-c0019aebbd26/26-6a95cfd7e1abb.webp' /></p><h2>இனி வழங்குவதற்கு எதுவும் இல்லை..</h2><p>

 

2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெற்ற உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணிக்குத் தலைமை தாங்கி சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த 39 வயதான மெஸ்ஸி, தனது நாட்டுக்காக 207 போட்டிகளில் விளையாடி 125 கோல்களை அடித்துள்ளார். </p><p>

 

இதன் மூலம் அர்ஜென்டினா அணியின் அதிக கோல்களை அடித்த வீரர் மற்றும் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார்.</p><p></p><p>
</p><p>
 

இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய அணிக்காகத் தனது முழு உழைப்பையும் வழங்கிவிட்டதாகவும், இனி "வழங்குவதற்கு எதுவும் இல்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T20:02:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோவில் திருவிழாக்களில் கவர்ச்சி நடனங்களை நடாத்துவது சில புலம்பெயர் மக்களின் சதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/diaspora-plot-behind-sexy-temple-dances-1788200948"></link>
            <id>https://tamilwin.com/article/diaspora-plot-behind-sexy-temple-dances-1788200948</id>
            <summary type="text">தமிழர் பகுதியில் நடைபெற்றிருந்த திருவிழா ஒன்றில் இந்தியாவிலிருந்து நடனக்கலைஞர்கள் அழைத்துவரப்பட்டு சில கவர்ச்சி நடனங்கள் இடம்பெற்றிருந்தமை சமூக வலைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழர் பகுதியில் நடைபெற்றிருந்த திருவிழா ஒன்றில் இந்தியாவிலிருந்து நடனக்கலைஞர்கள் அழைத்துவரப்பட்டு சில கவர்ச்சி நடனங்கள் இடம்பெற்றிருந்தமை சமூக வலைக்களங்களில் காணக்கூடியதாக இருந்தது .
</p><p>
இந்த விடயம் தொடர்பில் எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி லங்காசிறியின் நேருக்கு நேர் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில், இது புலம்பெயர் தமிழர்கள் செய்யும் ஒருவகையான சதியாகும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு காலத்தில் வேங்கைகளால் வளர்க்கப்பட்ட மந்தைகள் தற்பொழுது நரிகளாலும் குள்ளநரிகளாலும் வளர்க்கப்படுகின்றனர். இவ்வாறானவர்களால் இந்த சமூகம் சீர்குழைக்கப்படுகிறது.
</p><p>
இது தொடர்பில் மக்கள் மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும். இவ்வாறானவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதுடன் குறித்த கோயில் நிர்வாகத்தினர் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.</p><p>கோயில்களிலும் தேவாலயங்களிலும் இவ்வாறான விடயங்கள் நடைபெறுவது என்பது பிழையான ஒரு விடயமாகும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>இது குறித்து மேலதிக தகவல்களை&nbsp;நேருக்கு நேர் நேர்காணல் நிகழ்ச்சியின் ஊடாக&nbsp; விரிவாகப் பார்ப்போம்..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Z9FgzuDkV8o" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T19:55:24+00:00</updated>
        </entry>
    </feed>
