<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-19T06:34:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/one-person-dies-by-drowning-1784442645"></link>
            <id>https://jvpnews.com/article/one-person-dies-by-drowning-1784442645</id>
            <summary type="text">நொச்சியாகம, அந்தரவெவ பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு உயிரிழந்தவர் அந்தரவெவ பகுதியை சேர்ந்த 62 வயது...</summary>
            <content type="html"><![CDATA[<p>நொச்சியாகம, அந்தரவெவ பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>இவ்வாறு உயிரிழந்தவர் அந்தரவெவ பகுதியை சேர்ந்த 62 வயதுடையவர் ஆவார்.</p><p>குறித்த நபர் கடந்த 17ஆம் திகதி இரவு தனது வீட்டிற்கு அருகில் உள்ள கல் குவாரி குட்டை ஒன்றில் மீன் பிடிக்கச் சென்றிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.</p><p>உயிரிழந்தவரின் சடலம் அந்த கல் குவாரிக் குட்டையிலிருந்த மீன்பிடி வலையொன்றில் சிக்கியிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-19T06:30:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டாவது திருமணம் குறித்து ரச்சிதாவிடம் கேட்க, அவர் கூறிய அதிரடி பதிலை பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/rachitha-mahalakshmi-about-second-marriage-1784428500"></link>
            <id>https://viduppu.com/article/rachitha-mahalakshmi-about-second-marriage-1784428500</id>
            <summary type="text">ரச்சிதா சீரியல் உலகின் நயன்தாரா என புகழப்பட்டவர் . சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களுக்கு அறியப்பட்டவர். இவர் சீரியல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரச்சிதா சீரியல் உலகின் நயன்தாரா என புகழப்பட்டவர் . சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களுக்கு அறியப்பட்டவர். </p><p>இவர் சீரியல் நடிகட் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a633054c-eb2b-4e46-ac7d-36fc392f6e8d/26-6a5c37d74a76d.webp' /></p><p> </p><p>இந்நிலையில் ரச்சிதாவிடம் சமீபத்தில் நீங்கள் இரண்டாம் திருமணம் செய்துகொள்வீர்களா என கேட்க, நான் நிறைய நல்லது செய்ய வேண்டும்.</p><p> அதோடு நிறைய குழந்தைகளை தத்தெடுத்து அவர்களை நன்றாக படிக்க வைக்க வேண்டும், அவர்களுக்கு நல்ல பரிசுகளை கொடுக்க வேண்டும், இப்படி நிறைய ஆசைகள் உள்ளது இது அனைத்தும் நான் சிங்கிள் ஆக இருந்தால் தான் முடியும் என கூறியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-19T06:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டாரில் இலங்கையர்கள் மூவர் திடீர் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sudden-death-of-three-sri-lankans-in-qatar-1784442433"></link>
            <id>https://jvpnews.com/article/sudden-death-of-three-sri-lankans-in-qatar-1784442433</id>
            <summary type="text">கட்டாரில் ஹட்டன், மடவளை மற்றும் பொலன்னறுவைச் சேர்ந்த மூவர், திடீர் சுகயீனம் காரணமாக கட்டாரில் மரணமடைந்துள்ளனர்.கண்டி, மடவளை பிரதேசத்தை சேர்ந்த முஹம்மத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டாரில் ஹட்டன், மடவளை மற்றும் பொலன்னறுவைச் சேர்ந்த மூவர், திடீர் சுகயீனம் காரணமாக கட்டாரில் மரணமடைந்துள்ளனர்.</p><p>கண்டி, மடவளை பிரதேசத்தை சேர்ந்த முஹம்மத் அன்சார் முஹம்மத் தாஹிர் (35 வயது), ஹட்டன் பகுதியைச் சேர்ந்த யோகனேஸ்வரன் கணபதி ராமேஸ்வரன் (35 வயது) மற்றும் பொலன்னறுவை, கட்டுவன்வில மௌலவி அல் ஹாபிழ் முனீர் உசனார் (28 வயது) ஆகியோரே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T06:27:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம்..! இறுதி முடிவு தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-former-igp-c-t-wickramaratne-investigation-1784438049"></link>
            <id>https://tamilwin.com/article/death-former-igp-c-t-wickramaratne-investigation-1784438049</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா போன்ற விடயங்கள் அரச இரசாயன பகுப்பாய்வின் பின்னரே முடிவாகும் என&amp;nbsp;பொதும...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா போன்ற விடயங்கள் அரச இரசாயன பகுப்பாய்வின் பின்னரே முடிவாகும் என&nbsp;பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p><p>முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p></p><h2>நெருக்கமானவர்களிடத்தில் வாக்குமூலங்கள்&nbsp;</h2><p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன்,அவரது மெய்பாதுகாவலர், மனைவி, மகன் உள்ளிட்ட நெருக்கமானவர்களிடத்தில் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98260112-8798-44c7-999c-c9b6bcee4de4/26-6a5c676f85fdd.webp' /></p><p>


அத்துடன் துப்பாக்கிரப்பிரயோகத்தின் மூலம் அவர் உயிரிழந்துள்ளார் என்பது திறந்த நீதிவான் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கமைய, அவர் உயிரிழந்த இடத்தில் மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள் அனைத்தும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள.</p><p>இந்த நிலையில் அவரது மரணம் கொலையா, தற்கொலையா என்பது குறித்து அரச இரசாயனப் பகுப்பாய்வாளரின் அறிக்கை வெளிவந்த பின்னரே இறுதியான முடிவினை கூறமுடியும் என்றும் விளக்கமளித்துள்ளார்.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T06:22:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக கோல் அடித்து வரலாறு படைத்த பிரான்ஸ் வீரர்; தங்கப் பாதணி யாருக்கு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/golden-boot-football-history-france-kylian-mbapp-1784436553"></link>
            <id>https://canadamirror.com/article/golden-boot-football-history-france-kylian-mbapp-1784436553</id>
            <summary type="text">உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே படைத்துள்ளார்.மியாமி நகரில் இங்கிலாந்துக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே படைத்துள்ளார்.</p><p>மியாமி நகரில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில், தனது 22வது கால்பந்து கோலை அடித்து எம்பாப்பே புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.</p><p>விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 6-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி, கால்பந்து உலகக் கிண்ணத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.</p><p>&nbsp;2026 உலகக் கிண்ணத்தின் தங்கப் பாதணி (Golden Boot) போட்டியில், எம்பாப்பே இதுவரை 10 கோல்களை அடித்து, பட்டியலில்&nbsp; முதலிடத்தில் உள்ளார்.</p><p>அவரைத் தொடர்ந்து லயோனல் மெஸ்ஸி 8 கோல்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.</p><p>அதேநேரம் உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றில் லயோனல் மெஸ்ஸி இதுவரை 21 கோல்களை அடித்துள்ளார்.</p><p>அதேவேளை&nbsp; ஸ்பெயினுக்கு எதிரான இறுதிப்போட்டியில் மெஸ்ஸி விளையாடும்போது, இந்த தங்கப் பாதணி (Golden Boot) விருதுக்கான போட்டி மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T06:20:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரிலீஸுக்கு இன்னும் 4 நாட்கள் தான்.. முன்பதிவில் ஜனநாயகன் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vijay-jananayagan-movie-pre-booking-box-office-1784440943"></link>
            <id>https://cineulagam.com/article/vijay-jananayagan-movie-pre-booking-box-office-1784440943</id>
            <summary type="text">ஜனநாயகன்&amp;nbsp;தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக வலம் வந்த நடிகர் விஜய் தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகியுள்ளார். இவருடைய கடைசி படமான ஜனநாயகன் கடந்த ஜன...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜனநாயகன்&nbsp;</h2><p>தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக வலம் வந்த நடிகர் விஜய் தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகியுள்ளார். இவருடைய கடைசி படமான ஜனநாயகன் கடந்த ஜனவரி மாதம் வெளியாகவிருந்த நிலையில், சென்சார் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad964994-c8fd-4d8d-813a-82862b98b5f3/26-6a5c6872b1885.webp' /></p><p> 

ஒருவழியாக 6 மாதங்களுக்கு பின் சென்சார் சான்றிதழ் கிடைக்க, ஜூலை 23-ஆம் தேதி ஜனநாயகன் ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.</p><p></p><h2>முன்பதிவு&nbsp;</h2><p> </p><p>

ரிலீஸுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தின் முன்பதிவு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இதுவரை முன்பதிவில் ரூ. 9 கோடிக்கும் மேல் வசூல் வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/064ea648-8820-41da-a40c-44ec82bc05b7/26-6a5c687205b49.webp' /></p><p>இது விஜய்யின் திரைப்படங்களுக்கு முன்பதிவில் கிடைத்துள்ள குறைவான வசூலாக பார்க்கப்படுகிறது. ரிலீஸுக்கு முன் மொத்தமாக முன்பதிவில் ஜனநாயகன் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T06:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். நல்லூர் ஆலய திருவிழாவின் போது ஐந்து விடயங்களுக்கு தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ban-on-anti-cultural-events-at-nallur-temple-1784438912"></link>
            <id>https://ibctamil.com/article/ban-on-anti-cultural-events-at-nallur-temple-1784438912</id>
            <summary type="text">வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் போது இம்முறை ஐந்து விடயங்களுக்கு இறுக்கமான தடைகள் விதிக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் போது இம்முறை ஐந்து விடயங்களுக்கு இறுக்கமான தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார்.</p><p>நல்லூர் கந்தசுவாமி ஆலய&nbsp;வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.</p><p>இந்தநிலையில் திருவிழாவிற்கான முன்னாயத்த ஏற்பாடுகள் குறித்த ஆரம்பகட்ட பூர்வாங்க கலந்துரையாடல் நேற்று (18) யாழ் மாநகர முதல்வர்&nbsp; தலைமையில் யாழ்ப்பாண மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது.</p><p></p><h2>ஐந்து இறுக்கமான தடைகள்</h2><p>இங்கு கருத்து தெரிவித்த மாநகர முதல்வர்,&nbsp;கடந்த காலங்களில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய இம்முறை ஐந்து இறுக்கமான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4f649cb-7e16-4b27-b753-18e03497917a/26-6a5c6a9724de9.webp' /></p><p>
</p><p>

1.உற்சவ காலங்களில் வியாபார நிலையங்களில் சினிமா பாடல்களை ஒலிக்க விடுதல், ஆடல் பாடல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு விதிமுறைகளை மீறுவோரின் ஒலி, ஒளி சாதனங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும்.
</p><p>
2. உற்சவ காலத்தில் தெய்வீக நிகழ்வுகள் சாராத காட்சிகள், காணொளிகள், விளம்பரங்களை திரையிடுதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.</p><p>
3. உற்சவ காலத்தில் ஆலய சுற்றாடலில் படப்பிடிப்பில் ஈடுபடுபவர்கள் சமய பண்பாட்டு மற்றும் கலாசார நிகழ்வுகளைத் தவிர தனிநபர்களின் புகைப்படங்களை அல்லது காணொளிகளை பதிவு செய்தல் மற்றும் அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவதை முற்றாக தவிர்க்க வேண்டும்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">&nbsp;</span></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">ட்ரோன் கமரா பறக்கவிடுதல்&nbsp;&nbsp;</span></h2><p>4. ஆலய சுற்றாடலில் ட்ரோன் கமரா பறக்க விடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. இவ்விடயம் வர்த்தமானி அறிவித்தலின் மூலமும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. அதனை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd30913c-24bc-4c9a-8eac-ef8ae69372b2/26-6a5c6a97cb6d0.webp' /></p><p>

5. சிவப்பு வெள்ளை நிறத்தால் குறிக்கப்பட்டுள்ள உற்சவ பகுதிக்குள் வியாபாரம் செய்தல் மற்றும் யாசகம் பெறுதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. விதிமுறையை மீறுவோரின் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.” என தெரிவித்தார்.</p><p>
</p><p>இக் கலந்துரையாடலில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினர், யாழ் மாநகர சபை ஆணையாளர்,
யாழ் மாநகரசபை உறுப்பினர்கள், துறைசார் அதிகாரிகள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட
பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T06:11:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[305 மெட்ரிக் தொன் நெல் கொள்முதல்! அரசாங்கத்தின் துரித நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-purchases-tons-of-paddy-from-farmers-1784440074"></link>
            <id>https://ibctamil.com/article/govt-purchases-tons-of-paddy-from-farmers-1784440074</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் கொள்முதல் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 305 மெட்ரிக் தொன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் கொள்முதல் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 305 மெட்ரிக் தொன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை (PMB) தெரிவித்துள்ளது.
</p><p>
கடந்த ஜூலை 13 முதல் ஜூலை 17 வரையான நான்கு நாட்களுக்குள் இந்த மொத்த அளவும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார். </p><p>

இதில் அதிகளவிலான நெல் அம்பாறை மாவட்டத்தில் இருந்தே கொள்முதல் செய்யப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்தும் கணிசமான அளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>கொள்முதல் விலை&nbsp;</h2><p>
</p><p>
இந்த சிறுபோக நெல் கொள்முதல் திட்டமானது கடந்த ஜூலை 13 அன்று ஆரம்பிக்கப்பட்டதுடன், விவசாயிகளின் வசதிக்காக பிரதான அறுவடைப் பகுதிகளில் உள்ள நெல் களஞ்சியசாலைகளை நெல் சந்தைப்படுத்தல் சபை திறந்து வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a34434b7-0991-46aa-9e5b-79ba759ae239/26-6a5c68f5d3157.webp' /></p><p> 

முன்னதாக அறிவிக்கப்பட்ட அரசாங்கத்தின் உத்தரவாத விலையின் கீழ், ஒரு கிலோகிராம் நாடு நெல் 120 ரூபாவிற்கும், சம்பா நெல் 130 ரூபாவிற்கும், கீரி சம்பா நெல் 140 ரூபாவிற்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.
</p><p>
அங்கீகரிக்கப்பட்ட இந்த விலை திட்டத்தின் கீழ், தற்போது நாடு முழுவதும் உள்ள 143 நெல் கொள்முதல் மையங்களில் இந்த நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T06:04:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீவ் நகரை குறிவைத்து சக்தி வாய்ந்த ஏவுகணை தாக்குதல்: ரஷ்ய படைகள் கொடுத்த பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-massive-ballistic-missile-attack-on-kyiv-1784440363"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-massive-ballistic-missile-attack-on-kyiv-1784440363</id>
            <summary type="text">உக்ரைனிய தலைநகர் கீவ்வை குறிவைத்து ரஷ்ய படைகள் சக்திவாய்ந்த ராக்கெட் தாக்குதலை முன்னெடுத்துள்ளது. குறிவைக்கப்பட்ட கீவ் நகரம்ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உக...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனிய தலைநகர் கீவ்வை குறிவைத்து ரஷ்ய படைகள் சக்திவாய்ந்த ராக்கெட் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.</p><h2> குறிவைக்கப்பட்ட கீவ் நகரம்</h2><p>ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உக்ரைன் தலைநகரான கீவ்வை குறிவைத்து ரஷ்ய படைகள் சக்தி வாய்ந்த ஏவுகணை தாக்குதலை நடத்தி இருப்பதாக உக்ரைனிய விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது.</p><p> இந்த தாக்குதலின் போது தலைநகரின் பல பகுதிகளில் வெடி சத்தங்கள் கேட்டதாகவும், தொடர்ந்து வான் தாக்குதலுக்கான சைரன் ஒலிகள் கேட்டதாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d890367f-9377-463e-aca6-43da01d5cf67/26-6a5c662ccb027.webp' /></p><p> இதில், வணிக வளாகங்கள், குடியிருப்பு கட்டிடங்கள் என பல இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாக கீவ் நகர மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.</p><p>ரஷ்ய படைகளின் ஏவுகணை தாக்குதலில் 7 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p> கீவ் நகர மேயர் வெளியிட்ட தகவலில், இந்த தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உக்ரைனிய ராணுவ நிர்வாகம் டெலிகிராம் பக்கத்தில் வெளியிட்ட முதற்கட்ட தகவலில் ஒருவர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> இந்த சம்பவத்திற்கு முந்தைய நாள், ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ மற்றும் தம்போவ் பகுதிகளில் உள்ள இ-காமர்ஸ் கிடங்குகளை உக்ரைனிய படைகள் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தினர்.</p><p> இதில் 8 பேர் உயிரிழந்ததுடன் பல உள்கட்டமைப்புகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T05:52:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து - இளைஞர்கள் இருவர் பரிதாபமாக பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/horona-motor-cycle-and-lorry-accident-1784438717"></link>
            <id>https://tamilwin.com/article/horona-motor-cycle-and-lorry-accident-1784438717</id>
            <summary type="text">ஹொரணை - மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (19) அதிகாலை சுமார் 2.30 மணியளவில் அதிவேகமாக சென்ற மோட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹொரணை - மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.</p><p>

இன்று (19) அதிகாலை சுமார் 2.30 மணியளவில் அதிவேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் லொரி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
</p><p>
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு இளைஞர்களும் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.</p><p></p><h2>விபத்திற்கான காரணம்</h2><p>
உயிரிழந்தவர்கள் பன்னிப்பிட்டிய மற்றும் கிரிவத்துடுவவை சேர்ந்த, 25 மற்றும் 17 வயதுடைய தில்ஷான் மதுசர செனவிரத்ன மற்றும் உதீஷா சித்மின என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6aad00f-2cd8-444e-aca0-c5dd765f0b8b/26-6a5c659a08edb.webp' /></p><p>

ஹொரணை பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><p>

ஹொரணையிலிருந்து அதிவேகமாக சென்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்களும், கனன்வில வளைவில் திரும்ப முயன்றபோது, ​​கட்டுப்பாட்டை இழந்து வலதுபுறப்பாதைக்குள் விலகியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>

இந்த விபத்தை தொடர்ந்து டிப்பர் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T05:50:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய விருதுகளை வென்ற தமிழ் திரைப்படங்கள்.. வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/cm-vijay-congratulated-winners-of-national-awards-1784439123"></link>
            <id>https://cineulagam.com/article/cm-vijay-congratulated-winners-of-national-awards-1784439123</id>
            <summary type="text">72-வது தேசிய விருதுகள்

நேற்று 2024-ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன.&amp;nbsp;இதில், தமிழ் திரைய...</summary>
            <content type="html"><![CDATA[<h2>72-வது தேசிய விருதுகள்
</h2><p>
நேற்று 2024-ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/873baa14-8463-432d-ba44-11f346ea82f1/26-6a5c6156cde4b.webp' /></p><p>இதில், தமிழ் திரையுலகில் இருந்து, நடிகர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள 'ராயன் திரைப்படத்திற்கு சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருது கிடைத்தது. மேலும், தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு தேசிய, சமூக மற்றும் சுற்றுசூழல் விழுமியங்களை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படத்திற்காக விருது கிடைத்தது. அப்படத்தில் நடித்த நடிகர் தனுஷுக்கு சிறப்பு பிரிவில் சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்துள்ளது.</p><p>மேலும் அமரன் திரைப்படத்திற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு சிறந்த இயக்குநருக்கான விருது, ஆர். கலைவாணனுக்கு சிறந்த படத்தொகுப்புக்கான விருது மற்றும் ஜி.வி. பிரகாஷுக்கு சிறந்த பின்னணி இசைக்கான விருதும் கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da780e73-972e-466c-a86f-2657db5ff61a/26-6a5c615783520.webp' /></p><p>
</p><p>மகாராஜா திரைப்படத்திற்காக அனல் அரசுக்கு சிறந்த சண்டை பயிற்சிக்கான விருது மற்றும் அப்படத்தில் விஜய் சேதுபதி மகளாக நடித்த நடிகை சாச்சனாவிற்கு சிறந்த துணை நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மெய்யழகன் திரைப்படத்திற்காக சுரேன் ஜி என்பவருக்கு சிறப்பு பிரிவில் சிறந்த ஒலிக்கலவைக்கான விருதும், ப்ளூ என்கிற குறும்படத்திற்காக டி.எஸ். ஹரிஹர சுதனுக்கு சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>விமர்சனம்
</h2><p>
72-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் தரப்பில் இருந்து பல கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. தகுதியுள்ள பல திரைப்படங்களுக்கு தேசிய விருதில் அங்கீகாரம் கிடைக்கவில்லை என நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களையும் முன் வைத்து வருகிறார்கள்.&nbsp;&nbsp;</p><h2>முதலமைச்சர் வாழ்த்து
</h2><p>
இந்த நிலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் அவர்கள், 10 தேசிய விருதுகளை வென்றுள்ள தமிழ் திரையுலகிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதோ&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faa3a2c6-35a3-43d4-80b2-7436f144f73a/26-6a5c615836b45.webp' /></p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ள தமிழ்த் திரையுலக கலைஞர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வாழ்த்து<a href="https://x.com/hashtag/CMJosephVijay%E2%80%8C?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CMJosephVijay‌</a> <a href="https://t.co/dRAZrnVLXS">pic.twitter.com/dRAZrnVLXS</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2078702459489509634?ref_src=twsrc%5Etfw">July 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-07-19T05:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராகு-கேது பிடியில் இருந்து விடுபடும் கிரகங்கள்: இனி இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/six-planets-released-from-rahu-ketu-who-get-luck-1784391079"></link>
            <id>https://manithan.com/article/six-planets-released-from-rahu-ketu-who-get-luck-1784391079</id>
            <summary type="text">ஜோதிடக் கணிப்பின்படி, ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரிக்கின்றனர். சூரியன், குரு, சந்திரன் கடகத்திலும், செவ்வாய் ரிஷபத்திலும், புதன் மிதுன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடக் கணிப்பின்படி, ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரிக்கின்றனர். சூரியன், குரு, சந்திரன் கடகத்திலும், செவ்வாய் ரிஷபத்திலும், புதன் மிதுனத்திலும், சுக்கிரன் சிம்மத்திலும், சனி மீனத்திலும் உள்ளனர்.
</p><p>
தற்போது கிரகங்கள் ராகு-கேதுவுக்கு இடையில் பயணிப்பதால், சில ராசிக்காரர்களுக்கு தடைகள் மற்றும் எதிர்பாராத சவால்கள் ஏற்பட்டிருக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0076fc43-8cab-468f-a536-a2c286f1335c/26-6a5bac65165e4.webp' /></p><p>இந்நிலையில், ஜூலை 19ஆம் தேதி சந்திரன் சிம்மத்திலிருந்து கன்னிக்கு பெயர்ச்சி அடைவதால் ராகு-கேதுவின் தாக்கம் குறையும் எனக் கூறப்படுகிறது.</p><p>

இந்த சந்திரப் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும் நிலையில், சில ராசிக்காரர்களுக்கு தொழில் முன்னேற்றம், நிதி வளர்ச்சி மற்றும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது. ஜூலை 19 முதல் ராகு-கேதுவின் தாக்கத்திலிருந்து விடுபட்டு பலன் பெறும் ராசிக்காரர்கள் யார் என்பதை பார்க்கலாம்.</p><p></p><h2>மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cee242bd-afc2-475d-8ddd-882c969c482d/26-6a5bac65bbd0d.webp' /></p><h2>
</h2><p>ராகு-கேதுவின் தாக்கத்தில் இருந்து சந்திரன் விலகுவதால், இதுவரை பேச்சு தொடர்பாக ஏற்பட்டுவந்த பிரச்சனைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.</p><p>பணியிடத்தில் மனக்குழப்பம் இல்லாமல் தெளிவான முடிவுகளை எடுத்து, செயல்பட முடியும். உடன்பிறந்தவர்களுடனான உறவு மேலும் வலுப்படும். குறிப்பாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.</p><p> தொழில் துறையில் நல்ல முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் காணக்கூடிய காலமாக அமையும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவான சிந்தனை ஏற்படும்.
</p><h2>
கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0d20465-c640-4fb8-9401-01bd77c19d85/26-6a5bac666ce7a.webp' /></p><h2>
</h2><p>ராகு-கேதுவின் பிடியில் இருந்து சந்திரன் வெளியே வருவதால், இதுவரை மன அழுத்தம் மற்றும் குழப்பங்களை சந்தித்து வந்த கடக ராசிக்காரர்களுக்கு நிம்மதி கிடைக்கும். </p><p>குடும்ப உறுப்பினர்களுடனான உறவில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். முடிவுகளை எடுப்பதில் இருந்த தயக்கம் நீங்கி, இனி தெளிவாகவும் தைரியமாகவும் செயல்படுவீர்கள்.</p><p>பணியிடத்தில் உங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளை பெறுவீர்கள். புதிய வழிகளில் வருமானம் பெறுவதற்கான வாய்ப்புகள் தானாக உருவாகும்.&nbsp;</p><h2>
மீனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21802827-0f56-4182-bbfa-3af3da06f6ca/26-6a5bac671d664.webp' /></p><p></p><p>
ராகு-கேதுவின் தாக்கத்தில் இருந்து சந்திரன் விலகுவதால், பணியிடத்தில் இதுவரை எதிர்கொண்ட சிரமங்கள் குறையும். </p><p>மன அழுத்தம் நீங்கி, நிம்மதி அதிகரிக்கும். குடும்பம் மற்றும் வேலை சார்ந்த பொறுப்புகளை திறம்பட கையாளும் திறன் அதிகரிக்கும்.</p><p>பணம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து, வருமான வாய்ப்புகள் மேம்பட்டு நிதிநிலை சிறப்பாகும். நீண்ட கால கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T05:39:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-on-coffin-tehran-billboard-controversial-1784432851"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-on-coffin-tehran-billboard-controversial-1784432851</id>
            <summary type="text">ஈரானில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் சவப்பெட்டி இருப்பது போன்ற விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் சவப்பெட்டி இருப்பது போன்ற விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> தெஹ்ரானில் வைக்கப்பட்ட விளம்பரப் பதாகை</h2><p>
ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தங்கள் நீர்த்துப் போனதை அடுத்து ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தொடர் தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.</p><p> இந்நிலையில் ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் “ரத்தத்திற்கு ரத்தம்” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாகை ஒன்று வைக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c6e097e-ddfb-4b7e-98fb-79b353872e31/26-6a5c48d48603f.webp' /></p><p> தெஹ்ரானின் பாலஸ்தீன சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த விளம்பர பதாகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலனியா, அவர்களது பிள்ளைகளான இவான்கா, டொனால்ட் டிரம்ப் ஜூனியர், எரிக், டிஃப்பனி மற்றும் பாரோன் ஆகியோரின் புகைப்படங்கள் சவப்பெட்டியின் மீது வைக்கப்பட்டது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> பொதுவாக தெஹ்ரானில் அமைக்கப்படும் மிகப்பெரிய சுவரோவியங்கள் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினரின் ஓவ்ஜ் கலை மற்றும் ஊடக அமைப்பினால் வடிவமைக்கப்பட்டவை ஆகும்.</p><p>இந்த விளம்பர பலகை சர்வதேச அளவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஈரான் தன்னை கொலை செய்ய சதி செய்து வருவதாக டிரம்ப் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p style="margin-left: 25px;"><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Iran has installed a billboard in the capital Tehran showing US President Donald Trump lying in a coffin. <br><br>A statue nearby depicts the fist of late Supreme Leader Ayatollah Ali Khamenei, who was assassinated at the start of the US-Israeli war on Iran. <a href="https://t.co/ILvE0RAXrF">pic.twitter.com/ILvE0RAXrF</a></p>&mdash; Al Jazeera Breaking News (@AJENews) <a href="https://x.com/AJENews/status/2077462033662947605?ref_src=twsrc%5Etfw">July 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>மேலும் இதற்கு முன்னதாக தெஹ்ரானில் ஏங்கெலாப் சதுக்கத்தில் வைக்கப்பட்ட மற்றொரு விளம்பர பலகையில் டிரம்பை நாங்கள் கொல்லுவோம் என்று பாரசீக மற்றும் ஆங்கில மொழியில் எழுதப்பட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.</p><p> அத்துடன் அதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திறந்த கருப்பு நிற சவப்பெட்டியில் படுத்து இருப்பது போன்று சித்தரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T05:36:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கில் சினிமா பாடல்கள்,ஆடல்களுக்கு தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ban-on-cinema-songs-and-dances-nallur-festival-1784434481"></link>
            <id>https://jvpnews.com/article/ban-on-cinema-songs-and-dances-nallur-festival-1784434481</id>
            <summary type="text">வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.&amp;nbsp;நல்லூர் கந...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.</p><p>&nbsp;நல்லூர் கந்தசுவாமி திருவிழாவிற்கான முன்னாயத்த ஏற்பாடுகள் குறித்த ஆரம்பகட்ட பூர்வாங்க கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">கலாசார விரோத நிகழ்வுகளுக்கு தடை</span></p><p>யாழ்ப்பாண மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தலைமையில், யாழ்ப்பாண மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.</p><p>இந்த கூட்டத்தில் நல்லூர் கந்தசுவாமி ஆலயப் பிரதிநிதிகள், யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர், மாநகர சபை உறுப்பினர்கள், துறைசார் அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, பக்தர்களின் வசதிக்கான சுகாதார மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடினர்.</p><p>இந்த நிலையில், சினிமா பாடல்கள், ஆடல், பாடல்கள் உட்பட ஐந்து கலாசார விரோத நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகர முதல்வர் அறிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-19T05:34:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் இரு அமெரிக்க வீரர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/american-soldiers-killed-in-iranian-missile-attack-1784439172"></link>
            <id>https://canadamirror.com/article/american-soldiers-killed-in-iranian-missile-attack-1784439172</id>
            <summary type="text">ஜோர்தான் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு அமெரிக்க சிப்பாய்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காணாமல் போயுள்ளார்.ஈரான் நடத்திய பாலிஸ்டிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோர்தான் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு அமெரிக்க சிப்பாய்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காணாமல் போயுள்ளார்.</p><p>ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாகவே இந்த இரு சிப்பாய்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், இவர்களது மரணத்தை அமெரிக்க மத்திய கட்டளையகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>மேலும், இத்தாக்குதல்களில் அமெரிக்க இராணுவ சேவையைச் சேர்ந்த மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-19T05:32:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜி.எஸ்.பி. பிளஸ் விவகாரம் : பிரான்ஸுடன் பேசிப் பயனில்லை - முன்னாள் ஜனாதிபதி ரணில் வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gsp-plus-issue-ranil-s-advice-1784438457"></link>
            <id>https://tamilwin.com/article/gsp-plus-issue-ranil-s-advice-1784438457</id>
            <summary type="text">இலங்கைக்கு மிகவும் அவசியமான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ்
வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்வது தொடர்பான பேச்சுகளை, பிரான்ஸுடன்
நடத்துவதில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு மிகவும் அவசியமான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ்
வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்வது தொடர்பான பேச்சுகளை, பிரான்ஸுடன்
நடத்துவதில் பயனில்லை என்றும், அது குறித்து பிரஸ்ஸல்ஸ் நகருடனேயே பேச
வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>அரசியல் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>"ஜி.எஸ்.பி. பிரச்சினை குறித்து பிரான்ஸுடன் பேசிப் பயனில்லை. இது குறித்து
பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரிலேயே பேச வேண்டும். அதேபோன்று இங்கிலாந்துடனும்
பேச்சு நடத்தப்பட வேண்டும்.</p><p></p><h2>மீண்டும் விண்ணப்பிக்கவுள்ள இலங்கை&nbsp;&nbsp;</h2><p> ஏனெனில், ஐரோப்பிய ஒன்றியம் பின்பற்றும்
முறைமையின்படியே இங்கிலாந்தும் ஜி.எஸ்.பி. சலுகையை வழங்குகின்றது. எனவே,
பிரஸ்ஸல்ஸ் நகருக்குச் செல்லாமல் பிரான்ஸுக்குச் செல்வதால் எவ்விதப் பலனும்
கிடைக்காது.&nbsp; இது முற்றிலும் பிரஸ்ஸல்ஸ் சார்ந்த ஒரு விடயமாகும்"&nbsp; என்று
குறிப்பிட்டுள்ளார். </p><p>இலங்கையின் ஏற்றுமதித் துறைக்கு பெரும் உந்துசக்தியாக விளங்கும் ஜி.எஸ்.பி.
பிளஸ் வரிச்சலுகை, கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி ஐரோப்பிய
ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cb97b9a-57f6-4556-a23d-c14062578cd3/26-6a5c613347138.webp' /></p><p> </p><p>மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள்,
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி உள்ளிட்ட 27 சர்வதேச
உடன்படிக்கைகளை இலங்கை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையின்
அடிப்படையிலேயே இந்தச் சலுகை வழங்கப்படுகின்றது.
</p><p>
முன்னதாக, 2010 ஆம் ஆண்டில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளால்
நிறுத்தப்பட்ட இந்தச் சலுகை, பின்னர் 2017 இல் மீண்டும் வழங்கப்பட்டது.</p><p>இலங்கையின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளியாக ஐரோப்பிய ஒன்றியம்
திகழ்கின்றது. 2025 ஆம் ஆண்டின் தரவுகளின்படி, இருதரப்புக்கும் இடையிலான மொத்த
வர்த்தகம் 3.9 பில்லியன் யூரோக்களாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c41078bb-ae77-4ac2-959a-0c51cc12d2de/26-6a5c613297635.webp' />&nbsp;&nbsp;</p><p>இதில் இலங்கையின் ஏற்றுமதியில்
பாதிக்கும் மேற்பட்டவை ஆடைத் துறையைச் சார்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>
தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய விதிமுறைகளுக்கு அமைய, இலங்கை இந்தச்
சலுகைக்கு மீண்டும் விண்ணப்பிக்கத் தயாராகி வரும் பின்னணியில், பயங்கரவாதத்
தடுப்புச் சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் போன்றவற்றை சர்வதேசத்
தரத்துக்கு ஏற்ப மாற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையைத் தொடர்ந்து
வலியுறுத்தி வருகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T05:31:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல பாலிவுட் நடிகர் மகனை காதலிக்கிறாரா ஐஸ்வர்யா லட்சுமி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/aishwarya-lekshmi-dating-rumors-with-kayoze-irani-1784427838"></link>
            <id>https://viduppu.com/article/aishwarya-lekshmi-dating-rumors-with-kayoze-irani-1784427838</id>
            <summary type="text">ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் ஜகமே தந்திரம் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர். ஆனால், கட்டா குஸ்தி படம் தான் இவருக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் ஜகமே தந்திரம் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர். ஆனால், கட்டா குஸ்தி படம் தான் இவருக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி கொடுத்தது.</p><p>அதோடு சமீபத்தில் வந்த கட்டா குஸ்தி 2 ஐஸ்வர்யா லட்சுமிக்கு மேலும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19ecb7a5-22e6-49e6-810e-398debcfdfd8/26-6a5c3541d686d.webp' /></p><p> </p><p>இந்நிலையில் ஐஸ்வர்யா சமீபத்தில் திருமணம் எதற்கு அதை பற்றி யோசிக்க வேண்டும் என கூறினார், இந்த நிலையில் இணையத்தில் இவர் பாலிவுட் நடிகர் போமன் இரானியின் மகனை காதலிப்பதாக சில வதந்திகளை கிளப்பி விட்டுள்ளனர்.</p><p>இருவரும் சமீபத்தில் ஒரு திருமண நிகழ்வுக்கு போக இப்படி செய்திகள் வருகிறது மற்றப்படி இருவருமே இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12bdbb86-4daa-4308-a7d0-daa55c80f28e/26-6a5c354288bb4.webp' /></p>]]></content>
            <updated>2026-07-19T05:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் மரியாதைகளுடன் விக்கிரமரத்னவின் இறுதிச் சடங்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/igp-c-d-wickramaratne-funeral-with-police-honours-1784438840"></link>
            <id>https://jvpnews.com/article/igp-c-d-wickramaratne-funeral-with-police-honours-1784438840</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் இறுதிச் சடங்குகள் எதிர்வரும் 20ஆம் திகதி பொலிஸ் மரியாதைகளுடன் நடைபெறவுள்ளன.&amp;nbsp;&amp;nbsp;ஓய்வுபெற்ற பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் இறுதிச் சடங்குகள் எதிர்வரும் 20ஆம் திகதி பொலிஸ் மரியாதைகளுடன் நடைபெறவுள்ளன.&nbsp;&nbsp;</p><p>ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் ஒருவர் காலமானால் வழங்கப்படும் அனைத்து பொலிஸ் உயரிய மரியாதைகளும் அவருக்கும் வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p>அதன்படி,&nbsp; அவரது உடல் கொழும்பிலுள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நாளை (19) முதல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p>இலங்கையின் 35ஆவது பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய சி.டி. விக்கிரமரத்ன,&nbsp; (17)&nbsp; ஆம் திகதிஅவரது இல்லத்தில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.</p><p>பிரேத பரிசோதனையின் பின்னர் சட்ட வைத்திய அதிகாரி திறந்த தீர்ப்பை வழங்கியுள்ளதுடன், உடலப் பாகங்கள் மற்றும் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கி ஆகியவை மேலதிக பரிசோதனைக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பப்பட்டுள்ளன.</p><p>மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரும் மாலபே பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p>விசாரணையின் ஒரு பகுதியாக, அவரது மனைவி மற்றும் மூன்று பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-19T05:27:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருந்தொகை போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrested-with-quantity-drugs-in-kiribathgoda-1784434700"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrested-with-quantity-drugs-in-kiribathgoda-1784434700</id>
            <summary type="text">கிரிபத்கொடையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்ப்பட்டுள்ளார்.கைது செய்யபட்ட நபர்&amp;nbsp; கிரிபத்கொடை, திப்பிட்டிகொட பகுதியைச் சே...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிரிபத்கொடையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்ப்பட்டுள்ளார்.</p><p>கைது செய்யபட்ட நபர்&nbsp; கிரிபத்கொடை, திப்பிட்டிகொட பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>குறித்த நபர்&nbsp;கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><h2>கைது செய்யபட்ட நபர்</h2><p>
சந்தேக நபரிடமிருந்து 6 கிலோவிற்கும் அதிக நிறையுடைய ஐஸ் போதைப்பொருள், 2 கிலோவிற்கும் அதிக நிறையுடைய ஹெரோயின், 5,000 போதை மாத்திரைகள் கைப்பற்றபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73757a5a-3ac3-498a-91f3-4eb3486a87c5/26-6a5c5e6b39fd0.webp' /></p><p>
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T05:24:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்புமில்லை : மொஜ்தபா கமேனி பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-s-signature-is-worthless-mojtaba-khamenei-1784436370"></link>
            <id>https://ibctamil.com/article/trump-s-signature-is-worthless-mojtaba-khamenei-1784436370</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை என்றும், அது நம்பகத்தன்மையற்றது என்றும் ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேன...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை என்றும், அது நம்பகத்தன்மையற்றது என்றும் ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.&nbsp;</p><p>மொஜ்தபா கமேனி நேற்று (18) சனிக்கிழமை வெளியிட்டுள்ள எழுத்துப்பூர்வ அறிக்கை ஒன்றில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை டொனால்ட் டரம்ப் மீண்டும் மீண்டும் மீறி வருவதாக மொஜ்தபா கமேனி அங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>போர்நிறுத்த உடன்படிக்கை</h2><p>அத்துடன் ஈரான் மற்றும் அதன் பிராந்திய கூட்டாளிகளிடமிருந்து அமெரிக்கா மறக்க முடியாத பாடங்களைக் கற்றுக்கொள்ளும் என்று ஈரானின் உச்ச தலைவர் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6dbcf27-2fba-464b-bedb-f12a563d9311/26-6a5c5cfc1b980.webp' /></p><p>
</p><p>
 

போர்நிறுத்த உடன்படிக்கை முறிந்ததை அடுத்து, கடந்த வாரம் முதல் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பரஸ்பர தாக்குதல்கள் ஆரம்பமாகியுள்ளன.</p><p>இந்த நிலையில்&nbsp;பாலங்கள், தொடருந்து பாதைகள் மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்களின் உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து, அமெரிக்கா இந்த வாரம் ஈரான் மீதான தனது தாக்குதல்களை அதிகரித்துள்ளது. </p><p>இதற்குப் பதிலடியாக, ஈரான் குவைத்தில் உள்ள பொதுமக்களின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T05:22:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாணக்கியர் சொல்லும் இந்த ஒரு குணங்கள் இருந்தால் செல்வம் தானாக வரும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/chanakya-said-this-quality-more-power-than-money-1784436132"></link>
            <id>https://manithan.com/article/chanakya-said-this-quality-more-power-than-money-1784436132</id>
            <summary type="text">சாணக்கியர் இந்திய வரலாற்றின் தலைசிறந்த தத்துவஞானிகளில் ஒருவராக மட்டுமல்லாமல், சிறந்த அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகராகவும் விளங்கியவர்.&amp;nbsp;சந்திரகு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாணக்கியர் இந்திய வரலாற்றின் தலைசிறந்த தத்துவஞானிகளில் ஒருவராக மட்டுமல்லாமல், சிறந்த அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகராகவும் விளங்கியவர்.&nbsp;</p><p>சந்திரகுப்த மௌரியரும் சாணக்கியரும் இணைந்து செயல்பட்ட காலகட்டமே மௌரியர்களின் பொற்காலம் என்று வரலாற்றில் போற்றப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/915b274e-1b82-457f-a890-ede486b4be31/26-6a5c5cfe2e365.webp' /></p><p>
</p><p>
ஆச்சார்ய சாணக்கியரின் கருத்துப்படி, ஒருவரிடம் போதுமான செல்வம் இருந்தால், வாழ்க்கையில் ஏற்படும் பல பெரிய சவால்களையும் தன்னம்பிக்கையுடன் சமாளிக்க முடியும். </p><p>ஆனால், பணம் மட்டும் வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயிப்பதில்லை. அதனுடன் சேர்த்து, ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய சில உயர்ந்த குணங்களும் அவசியம் என்கின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b563807b-d471-4302-9231-7e42881f9274/26-6a5c5cfed5f06.webp' /></p><p>
சாணக்கியரின் போதனைகளின்படி, குறிப்பாக பணம் மற்றும் செல்வம் தொடர்பான விஷயங்களில் ஒவ்வொருவரும் ஒரு முக்கியமான பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். </p><p>அந்த ஒரு சிறப்பான குணமே ஒருவரை பொருளாதார ரீதியாக முன்னேறச் செய்து, அதிக செல்வத்தை ஈட்டுவதற்கான அடித்தளமாக அமையும்.சாணக்கியர் வலியுறுத்திய அந்த அரிய குணங்கள் என்ன என்பதை இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/557778df-4b6e-40dc-b360-e9d502ff2c15/26-6a5c5d003b57f.webp' /></p><p></p><h2>அந்த முக்கிய குணங்கள் என்னென்ன?&nbsp;</h2><p><b>அறிவு&nbsp;</b></p><p>
"அறிவே ஒருவரிடம் இருக்கும் மிகப்பெரிய செல்வம்" என்று சாணக்கிய நீதி கூறுகிறது. அறிவை எவ்வளவு பகிர்ந்தாலும் அது ஒருபோதும் குறையாது; மாறாக மேலும் வளர்ந்துகொண்டே இருக்கும்.</p><p>இதை விளக்குவதற்காக சாணக்கியர் அறிவை காமதேனுவுடன் ஒப்பிடுகிறார். காமதேனு பசு எப்போதும் குறைவில்லாமல் பால் தருவது போல, அறிவும் பகிர்ந்துகொண்டால் குறையாது. அதனால் முடிந்தவரை தன்னிடம் உள்ள அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.</p><p><b>

சிக்கல்களுக்கு அறிவே தீர்வு

</b></p><p> கருத்துப்படி, அறிவு என்பது தனது குழந்தையை எந்தச் சூழலிலும் காக்கும் தாயைப் போன்றது. அறிவின் துணையால் வாழ்க்கையில் வரும் பல்வேறு சவால்களையும் சிக்கல்களையும் எளிதாக சமாளிக்க முடியும். ஒருவரின் வாழ்க்கையில் எத்தனை பிரச்சினைகள் வந்தாலும், தனது அறிவையும் சிந்தனைத் திறனையும் பயன்படுத்தி அதற்கான தீர்வைக் கண்டுபிடிக்க முடியும் என்று சாணக்கியர் கூறுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a522cbaa-ca58-49bc-a461-67e8cd3f5dbe/26-6a5c5d00e1382.webp' /></p><p></p><p><b>அறிவு ஏன் ரகசியச் செல்வம்?</b></p><p>

சாணக்கியரின் பார்வையில், அறிவு என்பது ஒருபோதும் தீர்ந்துபோகாத ரகசியச் செல்வம். அது இக்கட்டான காலங்களிலும் மனிதனுக்கு துணையாக இருந்து, இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வழிகாட்டும் ஆற்றல் கொண்டது.</p><p> ஒருவரின் அறிவு எப்போதும் வெளிப்படையாகத் தெரியாது; ஆனால் சரியான தருணத்தில் அதன் உண்மையான மதிப்பு வெளிப்படும்.அதனால்தான் அறிவை அவர் "ரகசியச் செல்வம்" என்று குறிப்பிடுகிறார்.</p><p><b>
அறிவை பகிர்ந்தால்தான் அதன் மதிப்பு உயரும்
</b></p><p>
அறிவு தனிநபருக்குச் சொந்தமானதாக இருந்தாலும், அதை தனக்குள் மட்டுமே வைத்துக்கொள்வது சரியல்ல. அந்த அறிவை மற்றவர்களுடன் பகிர்வதன் மூலம் சமூகமும் முன்னேறும். கல்வியும் அறிவும் ஒருவரின் வாழ்க்கையை மட்டுமல்ல, பல தலைமுறைகளின் எதிர்காலத்தையும் மாற்றும் வல்லமை கொண்டவை. </p><p>அறிவைப் பகிர்ந்துகொள்ளும் போதுதான் அதன் உண்மையான பயன் வெளிப்படும்.

சமூகத்தில் பணம் உள்ளவர்கள் மதிக்கப்படலாம். ஆனால் அறிவுச் செல்வம் கொண்டவர்களே மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாகவும், நீண்ட காலம் நினைவுகூரப்படும் மனிதர்களாகவும் திகழ்வார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T05:19:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய முன்னாள் சிப்பாய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-soldier-caught-with-ice-drugs-1784437241"></link>
            <id>https://tamilwin.com/article/former-soldier-caught-with-ice-drugs-1784437241</id>
            <summary type="text">கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் போதைப்பொருள் வைத்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p>சந்தேகநபர் போதைப்பொருள் வைத்துள்ளதாக நேற்று (18) கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><h2>போதைப்பொருள் கைப்பற்றல்</h2><p>இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய நபர் என அடையாளம்
காணப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d7034fd-ce07-427c-8213-6493c1ca63bf/26-6a5c5ba17bc13.webp' />&nbsp;</p><p>இதன்போது கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 120 கிராம் ஐஸ் போதைப்பொருள்
கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-19T05:09:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் விபத்தில் பறிபோன இளைஞனின் உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-man-loses-his-life-in-jaffna-accident-1784437535"></link>
            <id>https://jvpnews.com/article/young-man-loses-his-life-in-jaffna-accident-1784437535</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுட்டுவீரம் பகுதியில்&amp;nbsp; இடம்பெற்ற விபத்தில், பருத்தித்துறை, தும்பளைப் பகுதியைச் சேர்ந்த&amp;nbsp; 29 வய...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுட்டுவீரம் பகுதியில்&nbsp; இடம்பெற்ற விபத்தில், பருத்தித்துறை, தும்பளைப் பகுதியைச் சேர்ந்த&nbsp; 29 வயது&nbsp; &nbsp;இளைஞன் உயிரிழந்துள்ளார்.</p><p>கொடிகாமத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.</p><p>விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட இளைஞன், உடனடியாகப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.&nbsp;</p><p>அங்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.</p><p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p>உயிரிழந்தவரின் சடலம் தற்போது வைத்தியசாலைப் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-19T05:05:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கர்ப்பமாக இருக்கும் ரோகிணி.. மாட்டிக்கொண்ட மனோஜ்! சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/rohini-pregnant-in-siragadikka-aasai-serial-1784437371"></link>
            <id>https://cineulagam.com/article/rohini-pregnant-in-siragadikka-aasai-serial-1784437371</id>
            <summary type="text">சிறகடிக்க ஆசைவிஜய் டிவியின் டாப் 5 சீரியல்களில் ஒன்றான சிறகடிக்க ஆசை சீரியலில், தற்போது மனோஜ் - ரோகிணி விவாகரத்து கதைக்களம் பரபரப்பான சூழலுக்கு வந்துள...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சிறகடிக்க ஆசை</h2><p>விஜய் டிவியின் டாப் 5 சீரியல்களில் ஒன்றான சிறகடிக்க ஆசை சீரியலில், தற்போது மனோஜ் - ரோகிணி விவாகரத்து கதைக்களம் பரபரப்பான சூழலுக்கு வந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b122cb02-eab6-449d-904c-ff0d9a89c67a/26-6a5c5a7e37f4f.webp' /></p><p>தான் கொடுத்த ரூ. 5 லட்சத்தை திருப்பி கொடுத்துவிட்டால் உடனடியாக விவாகரத்து தந்துவிடுகிறேன் என ரோகிணி கூறியிருந்தார். இதனால் அந்த பணத்தை ஏற்பாடு செய்யும் முயற்சியில் மனோஜ் இறங்கினார்.</p><p> </p><p></p><p>அதற்காக பணக்கார வீட்டு பெண்ணான ஸ்வேதாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்டால் ரூ. 10 லட்சம் கிடைக்கும் என்பதற்காக அதையும் செய்தார். 

முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து கிடைக்காத நிலையில், மனோஜ் இரண்டாம் திருமணம் செய்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c88863f7-8adf-4fe2-9b54-983e381d6ef1/26-6a5c5a7ee1103.webp' /></p><p>இதன்பின் ரூ. 10 லட்சம் தனது கைக்கு கிடைக்க, அதில் ரூ. 5 லட்சத்தை ரோகிணியிடம் கொடுத்து விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட சொல்கிறார் மனோஜ்.</p><h2>கர்ப்பமாக இருக்கும் ரோகிணி</h2><p>
</p><p>
இந்த நிலையில், வரும் வாரம் <a href="https://www.youtube.com/watch?v=HvgtwfkLAog" target="_blank">சிறகடிக்க ஆசை</a> சீரியலில் நடக்கப்போகும் விஷயங்கள் குறித்து ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில், விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடும்போது திடீரென ரோகிணி மயங்கி விழுந்துவிடுகிறார். மருத்துவர் அவரை சோதித்து பார்த்துவிட்டு, ரோகிணி கர்ப்பமாக இருக்கிறார் என கூற, மொத்த குடும்பமும் அதிர்ச்சியடைகிறது. குறிப்பாக விஜயாவும், மனோஜும் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5a2f310-d0c1-46bf-b7ac-ab529865700e/26-6a5c5a7f917e3.webp' /></p><p>பணத்தை திருப்பி தர இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனோஜ், தற்போது முதல் மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்பதை கேட்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார். இனி அடுத்து என்னென்ன திருப்பங்கள் நிகழப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/HvgtwfkLAog" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-19T05:02:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சி.டி. விக்ரமரத்னவுக்கு தொடர் பதவி உயர்வு வழங்கிய மறைகரங்களுக்கு சிக்கல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/investigation-into-who-promoted-c-d-wickramaratne-1784436696"></link>
            <id>https://ibctamil.com/article/investigation-into-who-promoted-c-d-wickramaratne-1784436696</id>
            <summary type="text">முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உயிரிழப்பு அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் மீண்டும் ஒரு சர்ச்சையான சூழ்நிலையை உருவாக்கியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உயிரிழப்பு அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் மீண்டும் ஒரு சர்ச்சையான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.</p><p>

இந்த நிலையில், 2023-ஆம் ஆண்டிலும் அவருக்குத் தொடர்ந்து பணி நீட்டிப்புகளை வழங்கிய மறைகரம் குறித்து ஒரு சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p>

2019-ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, அப்போதைய காவல்துறை மா அதிபர் புஜித் ஜெயசுந்தர கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு, சி.டி. விக்ரமரத்ன பதில் காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டார்.</p><p></p><h2>விசாரணைகள்</h2><p>

இதனைதொடர்ந்து, அவர் 2020 நவம்பர் 25 அன்று காவல்துறை மா அதிபராக உறுதிப்படுத்தப்பட்டு, 2023 நவம்பர் 25 வரை இலங்கை காவல்துறையின் 35வது காவல்துறை மா அதிபாக பணியாற்றினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f36b4c71-cde9-4549-a9d3-9921c8fe2744/26-6a5c5a6c6d056.webp' /></p><p>

இவ்வாறானதொருபின்னணியில், அவர் 2023 மார்ச் 26 அன்று ஓய்வு பெறவிருந்த நிலையில், அக்காலத்தில் இருந்த அதிகாரிகள் பலமுறை அவரது சேவையை பல மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. இது அக்காலத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>

இதன்படி, அவருக்குத் தொடர்ந்து பணி நீட்டிப்புகளை வழங்கிய முக்கிய புள்ளிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு்ளளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-19T05:02:39+00:00</updated>
        </entry>
    </feed>
