<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-30T05:22:42+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருநங்கையாக மாறிய இந்திய கிரிக்கெட் வீரரின் மகன் : அவுஸ்திரேலியாவில் விளையாட அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/australia-approve-transgender-anaya-bangar-to-play-1788065858"></link>
            <id>https://manithan.com/article/australia-approve-transgender-anaya-bangar-to-play-1788065858</id>
            <summary type="text">trans cricketer anaya bangar to play in australia: திருநங்கையாக மாறிய அனயா பங்கர் கிரிக்கெட் விளையாட அவுஸ்திரேலியா&amp;nbsp; அனுமதி வழங்கியுள்ளது.அனயா பங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>trans cricketer anaya bangar to play in australia: திருநங்கையாக மாறிய அனயா பங்கர் கிரிக்கெட் விளையாட அவுஸ்திரேலியா&nbsp; அனுமதி வழங்கியுள்ளது.</p><h2>அனயா பங்கர்</h2><p>இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் பங்கர், தற்போது அனயா பங்கர் என்ற பெயரில் திருநங்கை பெண்ணாக மகளிர் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான புதிய பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5654ddb1-a21d-492f-aa2b-adc3cda1b15f/26-6a93bd8717103.webp' /></p><p></p><p>
</p><p>
மகளிர் கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (BCCI) அனுமதி கோரியிருந்த நிலையில், அங்கிருந்து பதில் கிடைக்காததால் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பை அவர் அணுகியுள்ளார்.</p><p> இதையடுத்து, அவுஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அனயாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd1066d8-3c5a-47a7-959c-be9ae8609830/26-6a93bd87bd400.webp' /></p><p>

கிரிக்கெட்டில் இருந்து பாலின மாற்றப் பயணம்
2001 முதல் 2004ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய சஞ்சய் பங்கரின் மகனான ஆர்யன், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மும்பை மற்றும் புதுச்சேரி அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
</p><p>
2023ஆம் ஆண்டு, தான் பெண்ணாக மாற விரும்புவதாக வெளிப்படையாக தெரிவித்த அவர், அதற்கான ஹார்மோன் சிகிச்சையை மேற்கொண்டார். தொடர்ந்து பாலின மாற்ற சிகிச்சைகளை மேற்கொண்டு, தனது பெயரையும் அனயா பங்கர் என மாற்றிக்கொண்டார்.</p><p>

இதையடுத்து மகளிர் கிரிக்கெட்டில் தனது கிரிக்கெட் பயணத்தைத் தொடரும் நோக்கில் அவர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20800c02-f590-4eea-b149-d3c957776424/26-6a93bd886e244.webp' /></p><p>

அவுஸ்திரேலியாவில் புதிய வாய்ப்பு
மகளிர் கிரிக்கெட்டில், குறிப்பாக அவுஸ்திரேலியாவின் பிரீமியர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு அனயா விருப்பம் தெரிவித்திருந்தார். </p><p>இதற்கான அனுமதியை அவுஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு தற்போது வழங்கியுள்ளது.

எனினும், சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான தகுதி தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) விதிமுறைகள் தொடர்ந்து அமலில் உள்ளன.
</p><p>
ஆண் பருவமடைதலை அடைந்த திருநங்கை பெண்கள், உயர்மட்ட மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்பதைத் தடுக்கும் விதிமுறைகளை ஐசிசி 2023ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bedfbd37-9168-4dbe-96fc-f40609ebb5f4/26-6a93bd891fb77.webp' /></p><p></p><p>
</p><p>
டெஸ்டோஸ்டிரோன் அளவு முக்கியம்
ஐசிசி விதிமுறைகளின்படி, உயர்மட்ட மகளிர் கிரிக்கெட்டில் விளையாடுவதற்குத் தகுதி பெற, சம்பந்தப்பட்ட வீராங்கனையின் இரத்தத்தில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைந்தது 12 மாதங்களுக்கு 10 nmol/L-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
</p><p>
அனயாவின் உயர்மட்ட கிரிக்கெட் தகுதி தொடர்பான முடிவு, அவரது டெஸ்டோஸ்டிரோன் பரிசோதனை முடிவுகளைப் பொறுத்தே அமையும்.

இதுகுறித்து கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் நேர்மை பிரிவுத் தலைவர் ஜாக்கி பார்ட்ரிட்ஜ் கூறுகையில், 2027 மார்ச் மாதத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் டெஸ்டோஸ்டிரோன் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே அனயாவின் உயர்மட்ட கிரிக்கெட் தகுதி தீர்மானிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
</p><p>
அதேவேளை, 2027 மார்ச் மாதம் வரை அவுஸ்திரேலியாவின் மாநிலங்கள் அல்லது பிராந்தியங்களில் நடைபெறும் பிரீமியர் கிரிக்கெட் போட்டிகளில் அனயா தொடர்ந்து பங்கேற்கத் தகுதியுடையவராக இருப்பார்.
</p><p>
இதன் மூலம், இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடிய ஆர்யன் பங்கர், அனயா பங்கர் என்ற புதிய அடையாளத்துடன் மகளிர் கிரிக்கெட்டில் தனது அடுத்த அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T05:20:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[DJ பிளாக் திருமணம்; குவிந்த விஜய் டிவி பிரபலங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vijay-tv-celebrities-in-dj-black-marriage-1788065526"></link>
            <id>https://cineulagam.com/article/vijay-tv-celebrities-in-dj-black-marriage-1788065526</id>
            <summary type="text">விஜய் டிவி பல திறமையானவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. 

அந்த வகையில் யாருமே எதிர்பார்க்காதபடி திரைக்கு பின்னால் இருக்கும் ஒருவரையும் விஜய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஜய் டிவி பல திறமையானவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. </p><p>

அந்த வகையில் யாருமே எதிர்பார்க்காதபடி திரைக்கு பின்னால் இருக்கும் ஒருவரையும் விஜய் டிவி வளர்த்து விட்டது. </p><p>

அவர் வேறு யாருமில்லை, டிஜே பிளாக் அவர்கள் தான், அவர் போடும் கவுண்டர் பாடல்களுக்கு என பல ரசிகர்கள் உள்ளனர், இந்நிலையில் சமீபத்தில் தான் இவரின் திருமணம் நடந்து முடிந்தது.
</p><p>
இந்த திருமண நிகழ்வில் பல விஜய் டிவி பிரபலங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர், அதில் முக்கியமாக டிடி, பிரியங்கா போன்ற தொகுப்பாளர்களும் வந்து டிஜே பிளாக்கை வாழ்த்தி சென்றனர்.

இதோ..</p>]]></content>
            <updated>2026-08-30T05:16:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[Meal Maker Biriyani: மட்டன் பிரியாணியை மிஞ்சும் மீல்மேக்கர் பிரியாணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/how-to-prepare-easy-recipe-meal-maker-1787915668"></link>
            <id>https://news.lankasri.com/article/how-to-prepare-easy-recipe-meal-maker-1787915668</id>
            <summary type="text">Meal Maker Biriyani: சைவ உணவு பிரியருக்கு மட்டன் சிக்கன் பிரியாணி அளவிற்கு சுவையை தரக்கூடிய ஒரு பிரியாணி இருக்கிறது. அதுதான் மீல்மேக்கர் பிரியாணி.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>Meal Maker Biriyani: சைவ உணவு பிரியருக்கு மட்டன் சிக்கன் பிரியாணி அளவிற்கு சுவையை தரக்கூடிய ஒரு பிரியாணி இருக்கிறது. அதுதான் மீல்மேக்கர் பிரியாணி.</p><p>

 இன்னும் சொல்லப்போனால் மட்டன் சிக்கன் விரும்பி சாப்பிடுபவர்கள் கூட இந்த பிரியாணியை விரும்பி சாப்பிடுவார்கள். அதை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம். இந்த பிரியாணியை நம் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கும் பொழுது அவர்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b77b2e7-0c16-4b52-96ed-411068104281/26-6a916d9697ea7.webp' /></p><p></p><p> </p><h3>

தேவையான பொருட்கள் :
</h3><p>மீல்மேக்கர் - 1 கப்
</p><p>பாஸ்மதி அரிசி - 1 கப்</p><p>
பெரிய வெங்காயம் - 1
</p><p>தக்காளி - 1</p><p>
பச்சை மிளகாய் - 2</p><p>
இஞ்சி பூண்டு விழுது - 1/2 </p><p>டீஸ்பூன்
நெய் - 2 </p><p>டேபிஸ்பூன்
எண்ணெய் - 2</p><p> டேபிஸ்பூன்
பிரிஞ்சி இலை - 2</p><p>
சீரக தூள் - 1/4</p><p> டீஸ்பூன்
சோம்பு தூள் - 1/4</p><p> டீஸ்பூன்
கருப்பு மிளகு தூள் - 1/4 </p><p>டீஸ்பூன்
கிராம்பு தூள் - 1/4</p><p> டீஸ்பூன்
பட்டை தூள் - 1/4 </p><p>டீஸ்பூன்
புதினா - 1 </p><p>கைப்பிடி
கொத்தமல்லி இலை - 1</p><p> கைப்பிடி
உப்பு - தேவையான அளவு</p><h3>
செய்முறை:
</h3><p> இந்த பிரியாணி செய்வதற்கு பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி கொதித்ததும் மீல்மேக்கர் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும். </p><p>மீல்மேக்கர் நன்கு ஊறிய பிறகு நார்மல் தண்ணீரில் போட்டு அலசி பிழிந்து எடுத்து தனியே வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக, அடுப்பில் பிரஷர் குக்கர் வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1aa7169e-ede2-4d84-b51a-d7a56cab8f16/26-6a916d975390c.webp' /></p><p></p><p> </p><p>வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் கலந்து வதக்கி அதன் பச்சை வாசனை போனவுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்துக் கொள்ள வேண்டும். தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும் நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லி இலையை போட்டு கலந்து பிறகு அதில் பட்டை தூள், சீரகத்தூள், சோம்பு தூள் மிளகுத்தூள் மற்றும் கிராம்புத்தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். </p><p>மசாலாக்களின் பச்சை வாசனை போன பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து பாஸ்மதி அரிசி மீல்மேக்கர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவைக்க விட வேண்டும். பின்னர் பிரஷர் குக்கரை மூடி ஒரு விசில் வரும் வரை விட்டு அடுப்பை அணைத்துக்கொள்ள வேண்டும். </p><p>குக்கரில் பிரஷர் தானாக அடங்கியதும் மூடியை திறந்து பார்த்தால் சுவையான மீல் மேக்கர் தயார். இந்த மீல் மேக்கர் பிரியாணியுடன் சேர்ந்து வெங்காயம் தயிர் பச்சடியுடன் சாப்பிட்டால் மட்டன் பிரியாணி விட சுவை அசத்தலாக இருக்கும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T05:15:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் சட்டவிரோத மீன்பிடி: இருவருக்கு அபராதம்; ஒருவருக்கு ஆயுட்காலத் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/lifetime-ont-fishing-ban-4k-in-fines-1788065878"></link>
            <id>https://canadamirror.com/article/lifetime-ont-fishing-ban-4k-in-fines-1788065878</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக ஆண்டுமுழுவதும் மீன்பிடிக்கத் தடைசெய்யப்பட்ட ஆற்றில் சட்டவிரோதமாக மீன்பிடித்த இருவரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக ஆண்டுமுழுவதும் மீன்பிடிக்கத் தடைசெய்யப்பட்ட ஆற்றில் சட்டவிரோதமாக மீன்பிடித்த இருவருக்கு 4,000 கனடிய டொலர்களுக்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>
2025 செப்டம்பர் 18 அன்று 'பிளாக் ஸ்டர்ஜன்' ஆற்றுப்பகுதியில் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டபோது, ஸ்கார்பரோவைச் சேர்ந்த சுன்யாங் லியூ மற்றும் ஈஸ்ட் க்வில்லிம்பரியைச் சேர்ந்த மிஃபெங் லீ ஆகியோர் சட்டவிரோதமாக 'வாலி' ரக மீன்களைப் பிடித்துக்கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.</p><p>
சோதனையின் போது மிஃபெங் லீ அங்கிருந்து தப்பியோடிய போதிலும், பொலிஸாரின் உதவியுடன் பின்னர் கைது செய்யப்பட்டார். 
தடைசெய்யப்பட்ட காலத்தில் மீன்பிடித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட லியூவுக்கு 1,050 டொலர் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அவர் பிடித்த மீன்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் நிரந்தரமாக அரசுடமையாக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d38dbab-8b1d-4e56-9615-ee3744735a3e/26-6a93b857acd65.webp' /></p><p> </p><p>
அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடித்தல், அதிகாரிக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் தப்பியோடிய குற்றங்களுக்காக லீக்கு 2,990 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.</p><p> 
மேலும், 2 ஆண்டுகள் கண்காணிப்பு உத்தரவுடன், ஒன்ராறியோ மாநிலத்தில் மீன்பிடிப்பதற்கு அவருக்கு ஆயுட்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p> 
'லேக் சுப்பீரியர்' ஏரிப் பகுதியில் வாலி மீன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவற்றைப் பாதுகாக்கவும் 'பிளாக் ஸ்டர்ஜன்' ஆற்றில் ஆண்டுமுழுவதும் மீன்பிடிக்க முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T05:11:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bc-premier-calls-byelection-in-riding-1788066414"></link>
            <id>https://canadamirror.com/article/bc-premier-calls-byelection-in-riding-1788066414</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் &#039;அபோட்ஸ்போர்ட்-மிஷன்&#039; தொகுதிக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அம்மாநில முதல்வர் டேவிட் ஈப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 'அபோட்ஸ்போர்ட்-மிஷன்' தொகுதிக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அம்மாநில முதல்வர் டேவிட் ஈபி அறிவித்துள்ளார். </p><p>
எதிர்வரும் செப்டம்பர் 26 ஆம் திகதி வாக்களிப்பு நடைபெறவுள்ள இந்த இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்னாள் விவசாயத்துறை அமைச்சரும் முன்னாள் மேயருமான பாம் அலெக்சிஸ் போட்டியிடுகிறார்.</p><p> 
கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரான கெர்ரி-லின் ஃபின்ட்லே சட்டமன்றத்தில் உறுப்பினராவதற்காக இத்தொகுதியில் போட்டியிடுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63ac6fc6-44d7-46d0-8388-60a0f06baf3d/26-6a93ba6fdf43b.webp' /></p><p> ஃபின்ட்லே போட்டியிடுவதற்கு வழிவிடும் வகையில், அத்தொகுதியின் கன்சர்வேடிவ் சட்டமன்ற உறுப்பினர் ரியான் காஸ்பர் தனது பதவியை ராஜினாமா செய்தார். 
கடந்த மே மாதம் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபின்ட்லேவின் தலைமையின் கீழ் கட்சியில் கடும் குழப்ப நிலை நிலவி வருகிறது.</p><p> இந்த மாதத்தில் மட்டும் 6 சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகி சுயேச்சையாக மாறியுள்ளனர்.</p><p>
 அத்துடன் கட்சியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் போன்ற முக்கிய அதிகாரிகளும் விலகியுள்ளனர். 
கட்சியிலிருந்து விலகிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான பீட்டர் மிலோபார் மற்றும் ஐயன் பேட்டன் ஆகியோர் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டு வருகின்றனர்.</p><p> 
எனினும், இடைத்தேர்தல் விரைவாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இத்தேர்தலில் தங்களால் வேட்பாளரை நிறுத்த முடியாது என மிலோபார் தெரிவித்துள்ளார்.</p><p> 
இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 5 ஆம் திகதியுடன் நிறைவடையும் எனவும், முன்கூட்டிய வாக்களிப்பு செப்டம்பர் 18 முதல் 23 வரை நடைபெறும் எனவும் 'எலக்சன்ஸ் பி.சி' அறிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T05:11:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதியின் காதை வெட்டிய சக கைதி ; களுத்துறை சிறைச்சாலையில் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fellow-inmate-cuts-fellow-prisoner-s-ear-1788066655"></link>
            <id>https://jvpnews.com/article/fellow-inmate-cuts-fellow-prisoner-s-ear-1788066655</id>
            <summary type="text">பதுளை சிறைச்சாலையிலிருந்து களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவரின் காதுப் பகுதியை, அங்கிருந்த மற்றொரு கைதி கூர்மையான ஆயுதத்தால் வெட்டியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பதுளை சிறைச்சாலையிலிருந்து களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவரின் காதுப் பகுதியை, அங்கிருந்த மற்றொரு கைதி கூர்மையான ஆயுதத்தால் வெட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p style="text-align: justify; ">

தாக்குதலுக்கு இலக்காகிக் காயமடைந்த கைதி உடனடியாகக் களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05c289e6-8bc6-42d3-92b9-b7b8841cdd32/26-6a93bb60cc038.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;அறுவை சிகிச்சை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அங்கு அவருக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தற்போது பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
</p><p style="text-align: justify; ">
காயமடைந்த கைதி இன்று ஞாயிற்றுக்கிழமை (30) காலை சட்ட வைத்திய அதிகாரி முன் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

</p><p style="text-align: justify; ">அதன் பின்னரே அவர் வைத்தியசாலையிலிருந்து மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுவது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-30T05:11:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு மாகாண கல்வித்துறை சவால்கள்: ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/education-probes-face-challenges-due-to-delays-1788063255"></link>
            <id>https://tamilwin.com/article/education-probes-face-challenges-due-to-delays-1788063255</id>
            <summary type="text">கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும்
சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்துதல் தொடர்பில்&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும்
சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்துதல் தொடர்பில்&nbsp; கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.</p><p>
</p><p>இந்தக் கலந்துரையாடலானது நேற்று(29.08.2026) வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.</p><h2>கல்வித்துறை விசாரணைகள்</h2><p>

இதன்போது, கடந்த கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட
நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து முதலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
</p><p>
குறிப்பாக, கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம்
அடைவதால் ஏற்படும் சவால்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.</p><p>கடந்த
காலங்களுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றம் காணப்பட்டாலும், எதிர்பார்க்கப்பட்ட
அளவுக்கு முன்னேற்றத்தை எட்ட முடியாத நிலை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டதுடன், இதற்குத் தீர்வாக தனியான விசாரணைக் குழு உறுப்பினர்களை உருவாக்கும்
யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1546ec6f-2303-44da-98dd-d976498c7986/26-6a93b3175f833.webp' /></p><p>ஆசிரியர் மற்றும் அதிபர் இடமாற்றக் கொள்கை தொடர்பிலும் விரிவாக
கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் மாகாணங்களுக்கு இடையிலான இடமாற்றங்கள் மற்றும் பாட
மாற்றங்கள் தொடர்பாக ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
</p><p>
அதேவேளை, வலயங்களுக்கு இடையிலான இடமாற்றங்கள் வெளிப்படைத்தன்மையுடனும்
நியாயமான நடைமுறையுடனும் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
உரிய காலத்தில் ஓய்வூதியங்கள் வழங்குவதற்கு ஏதுவாக, ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு
அமைவாக நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின்
செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>பாடசாலை அபிவிருத்தி</h2><p>
</p><p>
மேலும், ஆசிரியர்களுக்கு ஆபத்துக் கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றமை , கஷ்ட
மற்றும் அதி கஷ்ட பிரதேசங்களிலிருந்து சில பாடசாலைகள் நீக்கப்பட்டமை தொடர்பாக
கடிதம் அனுப்பப்பட்டுள்ளமை குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
</p><p>
ஆசிரியர்களின் சம்பள உயர்வுடன் தொடர்புடைய மேலதிக கோரிக்கைகள் குறித்தும்
கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளதுடன் வட மாகாணத்தில் 19 பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் தொடர்பில்
வலயக் கல்விப் பணிப்பாளர்களிடம் யோசனைகள் கோரப்பட்டுள்ளமை குறித்தும்
ஆராயப்பட்டுள்ளது.</p><p>

மேலும், கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்ததைப் போன்று வலய மற்றும் மாகாண
மட்டங்களில் வருடாந்த நாட்காட்டியை தயாரிப்பது தொடர்பிலும்
கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96a381ce-96af-4fd2-afcf-3efac5a595cb/26-6a93b31646fae.webp' /></p><p>அத்துடன் பரீட்சைகள் மற்றும் போட்டிகள் ஒரே நாளில் அமையாத வகையில் கல்வி நடவடிக்கைகளை
முறையாக திட்டமிடுவதற்கு இந்த நாட்காட்டி உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>மேலும் வட மாகாணத்தின் கல்வி துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு நடைமுறை தீர்வுகளை வழங்குவதற்காக அனைத்து தரப்பினரும் தொடர்ச்சியான கலந்துரையாடல்களின் ஊடாக இணைந்து செயற்பட வேண்டும் எனவும், ஆசிரியர்கள் மற்றும்
அதிபர்களின் சேவை நலன்களுடன் மாணவர்களின் கல்வி நலனும் சம அளவில் கவனத்தில்
கொள்ளப்பட வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p>

இந்தக் கலந்துரையாடலில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளரும்
பிரதியமைச்சருமான மகிந்த ஜயசிங்க, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப
தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ம.ஜெகதீஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநரின்
செயலாளர் எஸ்.சத்தியசீலன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக்
டிறஞ்சன், வடக்கு மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளர் கந்தையா பிரட்லி ஜேனட்
மற்றும் வடக்கு மாகாணத்தின் அனைத்து கல்வி வலயங்களினதும் கல்விப்
பணிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T05:08:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/husband-kills-wife-by-attacking-with-sharp-weapon-1788064696"></link>
            <id>https://tamilwin.com/article/husband-kills-wife-by-attacking-with-sharp-weapon-1788064696</id>
            <summary type="text">நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொரலாந்த, விநாயகபுரம் பகுதியில்&amp;nbsp;கூரிய ஆயுதத்தால் தனது மனைவியை தாக்கி கணவர் கொலை செய்துள்ளார்.இதனையடுத்து கணவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொரலாந்த, விநாயகபுரம் பகுதியில்&nbsp;கூரிய ஆயுதத்தால் தனது மனைவியை தாக்கி கணவர் கொலை செய்துள்ளார்.</p><p>இதனையடுத்து கணவர் நேற்று மாலை (29) பிற்பகல் நுவரெலியா பொலிஸில் சரணடைந்துள்ளார்.

</p><p>குடும்ப தகராறை தொடர்ந்து, 43 வயதுடைய சித்ரா தேவி என்ற
பெண், அவரது கணவரால் கோடரியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் அவரை
மீட்டு சிகிச்சை பெறுவதற்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.</p><h2>கணவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைவு</h2><p>இந்த சம்பவத்தையடுத்து, குறித்த பெண்ணின் 32 வயதுடைய கணவர், தான் மனைவி மீது கூரிய
ஆயுதத்தால் கடுமையாக தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்து நுவரெலியா பொலிஸ்
நிலையத்தில் தானாகவே சரணடைந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78cce7d1-e774-4aae-8a6f-985912192838/26-6a93b86f658b6.webp' /></p><p>
</p><p>தனிப்பட்ட குடும்பத்தகராறு காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு
இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p>
சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் குற்றப்புலனாய்வுப்பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>இந்த தாக்குதலை மேற்கொண்டதாக ஒப்புக்கொண்டு நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் தானாகவே
சரணடைந்த சந்தேகநபரை இன்று (30) நுவரெலியா மாவட்ட நீதிவான்
நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
</p><p>இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிணவறையில்
வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T04:59:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் இளம் உத்தியோகத்தரின் உயிரை பறித்த சம்பவம் ; துயரில் கதறும் உறவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incident-claims-the-life-of-a-young-officer-1788065772"></link>
            <id>https://jvpnews.com/article/incident-claims-the-life-of-a-young-officer-1788065772</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (29) சனிக்கிழமை சீமெந்து குழைக்கும் கனரக வாகனத்துடன், மோட்டார் சைக்கிள் மோதியதில...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (29) சனிக்கிழமை சீமெந்து குழைக்கும் கனரக வாகனத்துடன், மோட்டார் சைக்கிள் மோதியதில் அதில் பயணித்த இளைஞர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">

குறித்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது,</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17a06cfc-3c34-47dd-88f7-05142e5f6f77/26-6a93b7edeabe6.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">வ்வாறு உயிரிழந்த இளைஞர் தம்பலாகாமம், பட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் எனவும், தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரிபவர் எனவும் விசாரணையில் தெரியவருகிறது.</p><p style="text-align: justify; ">

உயிரிழந்தவரின் சடலம் தற்போது கந்தளாய் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் தம்பலகாமம் பொலிஸார் ஈடுப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-30T04:56:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிகிரியா அருகே இரவு நேரத்தில் சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3-men-arrested-illegal-excavation-near-sigiriya-1788063934"></link>
            <id>https://ibctamil.com/article/3-men-arrested-illegal-excavation-near-sigiriya-1788063934</id>
            <summary type="text">சிகிரியா பாறைக்கு அருகிலுள்ள&amp;nbsp; பாதுகாப்புப் பகுதியில், இரவு நேரத்தில் ஹேமர் இயந்திரத்தைப் பயன்படுத்தி நிலத்தைத் தோண்டிக்கொண்டிருந்த மூவர் சிகிரியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிகிரியா பாறைக்கு அருகிலுள்ள&nbsp; பாதுகாப்புப் பகுதியில், இரவு நேரத்தில் ஹேமர் இயந்திரத்தைப் பயன்படுத்தி நிலத்தைத் தோண்டிக்கொண்டிருந்த மூவர் சிகிரியா வனவிலங்கு அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
இவர்களில் இருவர் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஊழியர்கள் எனவும், மற்றையவர் குறித்த காணியின் உரிமையாளர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, நீர் வழங்கல் சபையின் அரச இலட்சினை பொருத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மூவர் கைது</h2><p> </p><p>விசாரணையின்போது சந்தேகநபர்கள் தாம் அருகிலுள்ள வீடொன்றுக்கு நீர் இணைப்பு வழங்குவதற்காக நிலத்தைத் தோண்டியதாக தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c6c2552-db00-4b88-ab74-64efb4a76b59/26-6a93b5827d82b.webp' /></p><p>

எனினும், நள்ளிரவு வேளையில் அதி உணர்திறன் கொண்ட பகுதியில் இவ்வாறு அகழ்வுப் பணியில் ஈடுபட்டமை தொடர்பில் திருப்திகரமான விளக்கம் வழங்கப்படாததால், அவர்களிடமிருந்த அகழ்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் ஹேமர் இயந்திரமும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
கைது செய்யப்பட்ட மூவரையும், முச்சக்கர வண்டி மற்றும் கைப்பற்றப்பட்ட உபகரணங்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T04:53:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் மதுபான விற்பனை நிலையத்தை மாற்றுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/public-opposit-relocation-liquor-outlet-vavuniya-1788061589"></link>
            <id>https://tamilwin.com/article/public-opposit-relocation-liquor-outlet-vavuniya-1788061589</id>
            <summary type="text">வவுனியா தொடருந்து நிலைய வீதியில் தற்போது அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையம்
ஒன்றை, அதே வீதியில் குட்செட் வீதி சந்திப் பகுதியில் மாற்றுவதற்கு அந்தப் பக...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா தொடருந்து நிலைய வீதியில் தற்போது அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையம்
ஒன்றை, அதே வீதியில் குட்செட் வீதி சந்திப் பகுதியில் மாற்றுவதற்கு அந்தப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை
தெரிவித்துள்ளனர். </p><p>குறித்த பகுதி பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ஒரு இடமாக
உள்ளதுடன் வாகனப் போக்குவரத்து அதிகம் காணப்படும் முக்கிய பகுதியாக காணப்படுவதனாலேயே அவர்கள் இந்த மாற்றுத் திட்டத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.</p><h2>மக்கள் எதிர்ப்பு</h2><p>

எனவே, அங்கு மதுபான விற்பனை நிலையம் அமைக்கப்பட்டால் பல்வேறு சமூகப்
பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.</p><p>அத்துடன் போக்குவரத்து நெரிசல், பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் பாதுகாப்பு தொடர்பான
பிரச்சினைகள் ஏற்படக்கூடும் எனவும் பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/282c419a-f664-409a-b4d6-ad3c7d51a55c/26-6a93ac7002330.webp' /></p><p> இது
தொடர்பாக வைரவபுளியங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தில் ஒரு கலந்துரையாடல்
இடம்பெற்ற நிலையில் அதிகமான பொதுமக்கள் இந்த நடவடிக்கைக்கு எதிரான
நிலைப்பாட்டில் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
</p><p>
எனவே, பொதுமக்களின் நலன் கருதி, குறித்த இடத்தில் மதுபான விற்பனை நிலையத்தை
மாற்றுவதற்கான நடவடிக்கையை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்
பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T04:53:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவின் ஆயுத நிறுவனங்களுக்கு ரஷ்ய உளவு அமைப்புகளால் அச்சுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/defence-firms-russian-spy-threat-1788065608"></link>
            <id>https://news.lankasri.com/article/defence-firms-russian-spy-threat-1788065608</id>
            <summary type="text">Britain&#039;s defence firms are warned of Russian spy threat: பிரித்தானியாவின் ஆயுத நிறுவனங்களுக்கு ரஷ்ய உளவு அமைப்புகளால் அச்சுறுத்தல்.
உக்ரைனுக்கு ஆயுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Britain's defence firms are warned of Russian spy threat: பிரித்தானியாவின் ஆயுத நிறுவனங்களுக்கு ரஷ்ய உளவு அமைப்புகளால் அச்சுறுத்தல்.
</p><p>உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் பிரித்தானியாவின் ஆயுத நிறுவனங்களின் தலைவர்கள், ரஷ்ய உளவாளிகளின் இலக்காக மாறும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>உக்ரைனுக்காக ட்ரோன்</h2><p>
</p><p>கோடையின் தொடக்கத்தில் மூத்த அரசு அதிகாரிகளுக்கும் தலைமைச் செயல் அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற வட்டமேசை சந்திப்பின்போது, ​​ரஷ்யாவிடமிருந்து தாங்களும் தங்கள் ஊழியர்களும் எதிர்கொள்ளும் அதிகரித்த அச்சுறுத்தல்கள் குறித்து நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54cb2d10-669a-45d9-9ad6-dfbc3428915d/26-6a93b74a8dbe3.webp' /></p><p> </p><p>குறிப்பிட்ட எந்தெந்த நிறுவனத் தலைவர்கள் அங்கு இருந்தனர் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை; இருப்பினும், உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் ட்ரோன்களை வழங்கும் நிறுவனங்களின் தலைவர்களே அவர்கள் என்று கருதப்படுகிறது. </p><p>பல ஆயுத நிறுவனங்கள் தங்களின் ஆயுத விற்பனையின் காரணமாக ஏற்கனவே முக்கியத்துவம் பெற்றுள்ளன. மேற்கு சஃபோக்கில் உள்ள RAF மில்டன்ஹாலுக்கு அருகில் அமைந்துள்ள, உக்ரைனுக்காக ட்ரோன்களைத் தயாரிக்கும் உக்ர்ஸ்பெக் சிஸ்டம்ஸ் நிறுவனமும், </p><p>ரஷ்யாவின் உட்பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்க சமீபத்தில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன்களை வழங்கிய BAE சிஸ்டம்ஸின் துணை நிறுவனமான காலன்-லென்ஸும் அவற்றில் அடங்கும்.</p><p></p><p> மட்டுமின்றி, ரஷ்யாவைத் தாக்க
 உக்ரைன் பயன்படுத்தும் ஸ்டார்ம் ஷேடோ ஏவுகணைகளைத் தயாரிக்கும் MBDA நிறுவனமும் முக்கியத்துவம் வாய்ந்தது.</p><p> இதனிடையே, இரண்டு ஜேர்மானிய ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்களின் தலைவர்களைக் கொல்ல ரஷ்யா தீட்டிய சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 'ஃபாரின், காமன்வெல்த் அண்ட் டெவலப்மென்ட் ஆபீஸ்' (Foreign, Commonwealth &amp; Development Office) கூட்டம் நடைபெற்றது.
</p><p>அவர்களில் ஒருவர், உக்ரேனியப் படைகளுக்கு பீரங்கி குண்டுகளை வழங்குவதற்கான 4.2 பில்லியன் பவுண்டு மதிப்புள்ள ஒப்பந்தத்தைக் கொண்டிருந்த பாதுகாப்புத் துறை நிறுவனமான 'ரைன்மெட்டல்' (Rheinmetall)-இன் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்மின் பாப்பர்கர் ஆவார். </p><p>இந்த நிலையில், பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பாதுகாப்புத் துறை நிறுவனங்களின் தலைவர்கள், தங்கள் சொந்தப் பாதுகாப்பு மற்றும் தங்கள் நிறுவனங்களின் கட்டமைப்புகளின் பாதுகாப்பு குறித்துச் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர் என்றே தகவல் கசிந்துள்ளது. </p><p>மேலும், பாதுகாப்புத் துறையில் ஈடுபட்டுள்ள அனைவரும் தற்போது ரஷ்யர்களின் முறையான இலக்காகக் கருதப்படுகிறார்கள் என்பதை ரஷ்யா உணர்த்துகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T04:50:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கூரிய ஆயுதத்தால் மனைவியைத் தாக்கி கொன்ற கணவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/huband-murder-wife-1788065138"></link>
            <id>https://jvpnews.com/article/huband-murder-wife-1788065138</id>
            <summary type="text">கூரிய ஆயுதத்தால் தனது மனைவியைத் தாக்கி கொலை செய்த கணவர் நேற்று சனிக்கிழமை (29) பிற்பகல் நுவரெலியா பொலிஸில் சரணடைந்துள்ளார்.

நுவரெலியா பொலிஸ் பிரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கூரிய ஆயுதத்தால் தனது மனைவியைத் தாக்கி கொலை செய்த கணவர் நேற்று சனிக்கிழமை (29) பிற்பகல் நுவரெலியா பொலிஸில் சரணடைந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொரலாந்த விநாயகபுரம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற குடும்பத் தகராறைத் தொடர்ந்து, 43 வயதுடைய பெண், அவரது கணவரால் கோடரியால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் அவரை மீட்டு சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><span style="text-align: left;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2dc1e304-c173-48fd-9b12-64a74ffe6d8a/26-6a93b5ebe1703.webp' /></span></p><p style="text-align: justify; "><h2>கடுமையாக தாக்குதல்</h2>சம்பவத்தையடுத்து, குறித்த பெண்ணின் 32 வயதுடைய கணவர், தான் மனைவியை கூரிய ஆயுதத்தால் கடுமையாக தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்து நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் தானாகவே சரணடைந்துள்ளார்.</p><p style="text-align: justify; ">


தனிப்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
</p><p style="text-align: justify; ">
சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று மேலதிக விசாரணைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; ">
மேலும், தாக்குதலை மேற்கொண்டதாக ஒப்புக்கொண்டு, நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் தானாகவே சரணடைந்த சந்தேக நபரை இன்று (30) நுவரெலியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; ">

சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-30T04:45:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிமாவட்டங்களில் இருந்து கொழும்பிற்கு செல்வோருக்கு விசேட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bus-train-service-for-those-returning-to-colombo-1788062376"></link>
            <id>https://tamilwin.com/article/bus-train-service-for-those-returning-to-colombo-1788062376</id>
            <summary type="text">வெளிமாவட்டங்களில் உள்ள பொது மக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தொடருந்து திணைக்களம் என்பன இன்று (30.08.2026) முத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிமாவட்டங்களில் உள்ள பொது மக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தொடருந்து திணைக்களம் என்பன இன்று (30.08.2026) முதல் சிறப்புப் போக்குவரத்து சேவைகளை ஆரம்பித்துள்ளன.</p><p>நீண்ட விடுமுறை முடிவடைந்துள்ள நிலையில் இவ்வாறு சிறப்புப் போக்குவரத்து சேவைகள் ஆரம்பித்துள்ளன.&nbsp; &nbsp;</p><h2>கொழும்பிற்கு திரும்பும் பயணிகள்</h2><p>
மாத்தறை, காலி மற்றும் கண்டி உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் இருந்து கொழும்பிற்கு திரும்பும் பயணிகளின் தேவையை கருத்திற் கொண்டு மேலதிக பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் குறித்து அனைத்து பிராந்திய அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e93c8d36-0d7e-422d-9924-1eaf09d5f46b/26-6a93affd0013f.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் வாகனங்களை இயக்கும் பேருந்து சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் எச்சரித்துள்ளார்.</p><h2>சோதனை முன்னெடுப்பு</h2><p>
</p><p>
நீண்ட விடுமுறையின் தொடக்கத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில், கணிசமான எண்ணிக்கையிலான பேருந்து சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது தெரியவந்ததை அடுத்து இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, பயணிகளின் வசதிக்காக அநுராதபுரத்தில் இருந்து மாத்தறை வரை இன்று சிறப்பு தொடருந்து சேவையும் இயக்கப்படுவதாக தொடருந்து ஊடகப் பேச்சாளர் அசாங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T04:30:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் இளைஞனின் உயிரை காவு வாங்கிய மோட்டார் சைக்கிள் விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trinco-bike-accident-1788049007"></link>
            <id>https://ibctamil.com/article/trinco-bike-accident-1788049007</id>
            <summary type="text">திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்&amp;nbsp;இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.சீமெந்து குழைக்கும்
கன...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்&nbsp;இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>சீமெந்து குழைக்கும்
கனரக வாகனத்துடன், குறித்த இளைஞன் பயணித்த&nbsp;மோட்டார் சைக்கிளில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p>குறித்த சம்பவம் நேற்று (29.08.2026) மாலை இடம் பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த இளைஞன் (24)&nbsp;தம்பலாகாமம், பட்டிமேடு பகுதியை சேர்ந்தவர்
எனவும் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரிபவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>குறித்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிள் மூலம்
திருகோணமலை நோக்கி சென்ற இளைஞனே இவ்வாறு கனரக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி
விபத்துக்குள்ளக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92046001-75d9-4ba3-80e6-5594a878f809/26-6a93767204cd8.webp' /></p><p>
</p><p>இந்த விபத்து சம்பவம் திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் தம்பலகாம
பிரதேசத்துக்குட்பட்ட ஜெயபுர என்னும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.</p><p>
உயிரிழந்தவரின் சடலம் தற்போது கந்தளாய் வைத்தியசாலையின் பிரேத அறையில்
வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T04:21:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக் பாஸ் 10 போட்டியாளர்கள் இவர்கள் தானா? லிஸ்ட் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/bigg-boss-10-contestants-list-1788063354"></link>
            <id>https://cineulagam.com/article/bigg-boss-10-contestants-list-1788063354</id>
            <summary type="text">வருகிற செப்டம்பர் 6-ஆம் தேதி தொடங்கவுள்ள பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகும் போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 10 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வருகிற செப்டம்பர் 6-ஆம் தேதி தொடங்கவுள்ள பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகும் போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><h2>

பிக் பாஸ் </h2><p>10 

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க வருகிற செப்டம்பர் 6-ஆம் தேதி பிக் பாஸ் 10 தொடங்கவுள்ளது. இந்த நிலையில், காமென் மேன் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, அதற்கான போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இதிலிருந்து முனியம்மா, ஜேசன் மற்றும் கரிஷ்மா ஆகிய மூன்று நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23253e0b-e36d-4fa2-a9b7-e54f3ebc0974/26-6a93ae7d817fe.webp' /></p><h2>

பிக் பாஸில் கலந்துகொள்ளும் பிரபலங்கள்</h2><p>

இந்நிலையில், பிக் பாஸ் 10-ல் கலந்துகொள்ள போகும் பிரபலங்கள் குறித்த தகவல் ஒன்றின் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. 

இதில், சீரியல் நடிகைகள் ஜனனி அசோக் குமார், ஹேமா ராஜ்குமார், ஆல்யா மானசா, அக்ஷிதா அசோக் மற்றும் ஷபானா ஆகியோர் கலந்துகொள்ளப்போவதாக கூறப்படுகிறது.</p><p>
</p><p>
மேலும், சீரியல் நடிகர்கள் நவீன் குமார், வினோத் பாபுவும் இதில் பங்குபெற போகிறார்களாம். இவர்களுடன் குக் வித் கோமாளி பிரபலம் டாலியும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி தரப்போவதாக பேச்சு அடிபடுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75b4cf02-235e-4bbf-81da-26ce014e038d/26-6a93ae7e3acbf.webp' /></p><p>

அனைத்திற்கும் மேலாக சர்ப்ரைஸ் என்னவென்றால், ஓய்வுபெற்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் இப்போட்டியில் பங்குபெற போவதாகவும் கூறப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T04:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென காணாமல்போயுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்! தீவிரமடையும் தேடுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/missing-police-officer-1788062365"></link>
            <id>https://tamilwin.com/article/missing-police-officer-1788062365</id>
            <summary type="text">தங்காலை - கிரிந்த பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் கடந்த சில நாட்களாக காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிரிந்த அருகே த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தங்காலை - கிரிந்த பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் கடந்த சில நாட்களாக காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
கிரிந்த அருகே தெபரவெவ பிரதேசத்தில் வசித்து வந்த 43 வயதுடைய பொலிஸ் சார்ஜண்ட் ஒருவரே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு</h2><p>
கடந்த 23 ஆம் திகதி அதிகாலையில் தனது வீட்டில் இருந்து கடமைக்காக புறப்பட்டுச்சென்ற அவர், அதன் பின்னர் காணாமல்போயுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74cf4c46-3c0f-4ec4-8a42-1489c5db5c8b/26-6a93ae6c7cd39.webp' /></p><p>
</p><p>
அவரைப் பற்றி இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றும் கிரிந்த பொலிஸ் நிலையத்தில் தற்போது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
காணாமல்போயுள்ள பொலிஸ் உத்தியோகத்தரை தேடிக் கண்டறியும் வகையில் கிரிந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T04:16:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகள் குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bread-and-bakery-item-prices-will-hike-1788063048"></link>
            <id>https://tamilwin.com/article/bread-and-bakery-item-prices-will-hike-1788063048</id>
            <summary type="text">பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகள் தொடர்பில் நாளைய தினம் தீர்மானிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
 கோதுமை மாவின் விலை உயர்த்தப்பட்டதைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகள் தொடர்பில் நாளைய தினம் தீர்மானிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.</p><p>
 கோதுமை மாவின் விலை உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.</p><h2>இறுதி முடிவு</h2><p> 
பிரீமா மற்றும் செரண்டிப் ஆகிய நிறுவனங்கள் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை நேற்று&nbsp; முதல் அமலுக்கு வரும் வகையில் 17 ரூபாவினால் உயர்த்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3db67b0-ca56-4d60-87a0-387f37355290/26-6a93ad498b37e.webp' /></p><p>
</p><p>மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, கடந்த பெப்ரவரி மாதம் முதல் கப்பல் கட்டணங்கள், காப்பீட்டுக் கட்டணங்கள் மற்றும் தானியங்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால் இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
மாவின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பேக்கரி உற்பத்திகளின் விலைகளை உயர்த்துவது தொடர்பான இறுதி முடிவு நாளை ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.</p><p>
கோதுமா மாவின் விலை உயர்வினைத் தொடர்ந்து ஏற்கனவே சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T04:15:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாளவ்ய ராஜயோகம் தரும் சுக்கிரன்: இந்த ராசிகளின் செல்வம் இரட்டிப்பாகப்போகுது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/venus-transit-in-libra-who-get-huge-luck-1788014210"></link>
            <id>https://manithan.com/article/venus-transit-in-libra-who-get-huge-luck-1788014210</id>
            <summary type="text">வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மாற்றம் செய்து, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் அசுரர்களி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மாற்றம் செய்து, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. </p><p>அந்த வகையில் அசுரர்களின் குருவாகவும், அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பின் காரணியாகவும் கருதப்படுபவர் சுக்கிரன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e0ddfae-fda8-4ab1-8ef5-923cf56a8313/26-6a92f801a43b3.webp' /></p><p>
</p><p>
சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசி மாறுவதுடன், ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாகவும் உள்ளார். இந்நிலையில், செப்டம்பர் 2ஆம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழைகிறார். </p><p>இதனால் பஞ்சமகா புருஷ ராஜயோகங்களில் ஒன்றான மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது.

இந்த சுக்கிர பெயர்ச்சியின் தாக்கத்தால் சில ராசிக்காரர்களின் நிதிநிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதுடன், தொழிலிலும் சிறப்பான வளர்ச்சியை அடையவுள்ளனர் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p>அப்படி செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சியால் தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89f8d3e0-d97a-4171-bcba-2885dcf7f317/26-6a92f8025f7a4.webp' /></p><p>
சிம்ம ராசியின் 10 மற்றும் 3ஆம் வீட்டின் அதிபதியான சுக்கிரன் 3ஆம் வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். </p><p>குறிப்பாக, சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ள புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். </p><p>வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும். அவற்றைத் திறம்பட பயன்படுத்திக் கொண்டால், தொழிலில் நல்ல உச்சத்தைத் தொடலாம். குறிப்பாக, வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.</p><p></p><p>
</p><h2>
மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71609054-af7a-448b-8312-c5732b89fce4/26-6a92f80313f8f.webp' /></p><h2>
</h2><p>மேஷ ராசியின் 7 மற்றும் 2ஆம் வீட்டின் அதிபதியான சுக்கிரன் 7ஆம் வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள்.நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நிறைவடையும்.</p><p>பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவீர்கள்.</p><h2>
விருச்சிகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/864b8c71-cda6-4448-aaab-b2a449ee4076/26-6a92f803bd12e.webp' /></p><h2>
</h2><p>விருச்சிக ராசியின் 12ஆம் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார்.இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புள்ளது. </p><p>போட்டிகள் மற்றும் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும்.தொழில் ரீதியாக சிறப்பான காலமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.</p><h2>
மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4c7320e-ece2-452e-a021-5132c25ede53/26-6a92f80475c3f.webp' /></p><p></p><h2>
</h2><p>மிதுன ராசியின் 5ஆம் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இக்காலம் அற்புதமாக இருக்கும். </p><p>குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முதலீடுகளில் இருந்து எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும் பிணைப்பும் அதிகரிக்கும். </p><p>எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதுடன், இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp;</b> &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T04:11:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு! செப்டெம்பர் 7ஆம் திகதி வரை இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1788060439"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1788060439</id>
            <summary type="text">சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு காரணமாக கடந்த ஆகஸ்ட் 28ஆம் திகதி முதல் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை இலங்கைக்கு அண்மையில் உள்ள அட்சரேகைகளுக்கு நேரடியாக ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு காரணமாக கடந்த ஆகஸ்ட் 28ஆம் திகதி முதல் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை இலங்கைக்கு அண்மையில் உள்ள அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலாக சூரியன் உச்சம் கொடுத்து வருகிறது. </p><p>

அதன்படி, இன்று (30.08.2026) நண்பகல் 12.11 மணியளவில் மன்னார், பெரியமடு, புளியங்குளம், வெலிஓயா மற்றும் புல்மோட்டை ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.</p><h2>இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்&nbsp;</h2><p>
</p><p>
இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9512e82-8fc7-430d-bef7-0678ba3891b7/26-6a93a99d038b3.webp' /></p><p> </p><p>

அதன்படி, ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதேவேளை, சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.</p><h2>வறண்ட வானிலை</h2><p> </p><p>மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்பதுடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebcdfd88-935e-4196-90fe-75d8b60d6527/26-6a93a99dcc2c1.webp' /></p><p> </p><p>

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், அத்துடன் திருகோணமலை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். 

எனவே, இதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T03:55:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பணச்சலவையை கட்டுப்படுத்தும் மத்திய வங்கியின் வேலைத்திட்டம்! ஹர்ஷ டி சில்வா வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/central-bank-not-have-planl-money-launder-harsha-1788060415"></link>
            <id>https://tamilwin.com/article/central-bank-not-have-planl-money-launder-harsha-1788060415</id>
            <summary type="text">இலங்கையில் நடைபெறும் பணச்சலவை தொடர்பான சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையிலான தெளிவான வேலைத்திட்டமொன்று மத்திய வங்கியிடம் இல்லை என நாடாளுமன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நடைபெறும் பணச்சலவை தொடர்பான சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையிலான தெளிவான வேலைத்திட்டமொன்று மத்திய வங்கியிடம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா விமர்சித்துள்ளார்.</p><p>இதுவரையில் நாட்டில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத முயற்சிகளைத் தடுக்க முறையான நடவடிக்கை எதுவும் அரசு எடுக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட திருத்தங்கள்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், இதுபோன்ற நிதிக் குற்றங்களைத் தடுக்க, தற்போதுள்ள சட்டங்களை முறையாக நடைமுறைபடுத்த வேண்டிய அவசரத் தேவை உள்ளது.</p><p>இதற்கிடையே இந்த நிலையை சரிசெய்ய புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதி நிதிஅமைச்சர் அனில் ஜயந்த அண்மையில் தெரிவித்திருந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48a945ed-d602-41d1-b7ca-70e9b23c0499/26-6a93a6e037ab6.webp' /></p><p>தற்போதுள்ள சட்டங்கள் குற்றவாளிகளுக்கு அபராதம் மட்டுமே விதிக்க முடியும் என்பதால், இந்தக் குற்றத்தை ஒரு குற்றமாக வகைப்படுத்தி, குற்றவாளிகளுக்கு அதற்கேற்ற தண்டனையை வழங்க புதிய சட்டங்கள் அவசியம்.
</p><p>எனினும் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த முயற்சிப்பதற்குப் பதிலாக, 2019-ல் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட திருத்தங்களைச் செயல்படுத்துவதில் தற்போதைய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.</p><h2>சட்டத்திற்கான&nbsp;வரைவுத் திருத்தம்</h2><p>&nbsp;மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு, 2024ஆம் ஆண்டு முதல் சந்தை வழியாக நடைபெறும் பணச்சலவை கும்பல்கள் குறித்த நடவடிக்கை எடுக்கக்கூடிய உளவுத் தகவல்களை வழங்கியிருந்தபோதிலும், இதுபோன்ற சட்டவிரோத முயற்சிகளைத் தடுக்க முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.</p><p>
</p><p>
அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்ற, சட்டத்திற்கான தொடர்புடைய வரைவுத் திருத்தம், தயாரிப்பிற்காக சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டிருந்தாலும், கடந்த ஆறு ஆண்டுகளாக சட்ட மா அதிபர் திணைக்கள அலுவலகம் அதை பூர்த்தி செய்யத் தவறிவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1eb68be4-1263-474f-9c09-a0ac176555ee/26-6a93a71d632fb.webp' /></p><p>கேசினோக்களை ஒழுங்குபடுத்துவதற்காக ஒரு நிறுவனம் நிறுவப்பட்டிருந்தாலும், அவற்றை இயக்குவதற்கான முறையான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் இல்லாததால் அவை முறையாகக் கட்டுப்படுத்தப்படவில்லை.</p><p>

இறக்குமதித் துறையில் ஈடுபட்டுள்ள சுமார் 500 நிறுவனங்களிடம் நிறுவனப் பதிவுக்கு அவசியமான சரிபார்க்கப்பட்ட முகவரிகள் மற்றும் சங்க விதிகள் இல்லை என்பதைத் தனது குழுவின் விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளது.
</p><p>
அத்துடன் பந்தய சேவைகளில் ஈடுபட்டுள்ள சில கேசினோ நிறுவனங்கள் எந்த வரிகளையும் செலுத்தவில்லை என்று உள்நாட்டு இறைவரி திணைக்களம் வெளிப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.</p><p>[JQPBR3J</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T03:55:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆயுதங்களுடன் சிக்கிய போதைப்பொருள் வர்த்தகர்! பொலிஸார் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drug-dealer-arrested-with-weapons-1788061517"></link>
            <id>https://tamilwin.com/article/drug-dealer-arrested-with-weapons-1788061517</id>
            <summary type="text">மொனராகலை அருகே ஆயுதங்களுடன் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனமல்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கங்கேயாய பகுதியில் நடத்தப்பட்ட சோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொனராகலை அருகே ஆயுதங்களுடன் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
தனமல்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கங்கேயாய பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​35 வயதுடைய நபர் ஒருவர் துப்பாக்கி மற்றும் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>போதைப்பொருள் தொடர்பான வழக்குகள்&nbsp;</h2><p>
</p><p>
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 குழல் தோட்டாக்களைப் பயன்படுத்தக்கூடிய துப்பாக்கி ஒன்றும், 5 கிராம் மற்றும் 370 மில்லிகிராம் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருளும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b948112c-d013-4dcc-a835-ae4e144a656d/26-6a93a88c67f9c.webp' /></p><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அதே பகுதியை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகின்றது. </p><p>சந்தேகநபர் மீது ஏற்கனவே குற்றவியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் உள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
</p><p>
சந்தேகநபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளதுடன், தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T03:50:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் சினிமா BookMyShow மூலம் அதிக டிக்கெட் விற்ற டாப் 10 படங்கள் லிஸ்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/highest-ticket-sales-tamil-films-in-bookmyshow-1788059294"></link>
            <id>https://cineulagam.com/article/highest-ticket-sales-tamil-films-in-bookmyshow-1788059294</id>
            <summary type="text">வசூல் 

தமிழ் சினிமா தற்போது மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி செல்கிறது. தமிழகத்திலேயே ரூ. 200 கோடிகளுக்கு மேல் வசூல் வரும் நிலையில் தமிழ் சினிமா வளர்ந்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>வசூல் </h2><p>

தமிழ் சினிமா தற்போது மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி செல்கிறது. தமிழகத்திலேயே ரூ. 200 கோடிகளுக்கு மேல் வசூல் வரும் நிலையில் தமிழ் சினிமா வளர்ந்து உள்ளது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a6a14c5-7a7a-4eff-a5aa-f6903ad2babc/26-6a939ea1f18f8.webp' /></p><p></p><p>

இந்நிலையில், முன்பு போல் வசூல் விவரங்கள் கிடைப்பது தற்போது கஷ்டமில்லை; அனைத்து ஏரியாக்களும் 90% ட்ராக் செய்யும்படி தான் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cea3512a-db14-4fa1-8e89-f7a6cd0bbca2/26-6a939ea2aa173.webp' /></p><p> </p><h2>

Book My Show
</h2><p>
அந்த வகையில் Book My Show App மூலமாகவே எத்தனை டிக்கெட்டுகள் விற்றுள்ளது என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம், தற்போது இந்த ஆப் மூலம் அதிக டிக்கெட் விற்ற டாப் 10 படங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.</p><p>ஜெய்லர் - 9+ மில்லியன்
</p><p>லியோ - 7+ மில்லியன்
</p><p>கூலி - 6+ மில்லியன்
</p><p>அமரன் - 4.6 மில்லியன்
</p><p>கோட் - 4.51 மில்லியன்
</p><p>கருப்பு - 4.5 மில்லியன்
</p><p>ஜனநாயகன் - 4+ மில்லியன்</p><p>
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் - 2.9 மில்லியன்(ஓடிகொண்டு இருக்கிறது)
</p><p>வேட்டையன் - 2.7 மில்லியன்
</p><p>குட் பேட் அக்லி - 2.6 மில்லியன்&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T03:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் அமெரிக்கப் பொருட்களைப் புறக்கணிக்கத் தொடங்கிய கனேடிய மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canadians-on-boycotting-america-1788060909"></link>
            <id>https://news.lankasri.com/article/canadians-on-boycotting-america-1788060909</id>
            <summary type="text">Canadians on boycotting Trump’s America: கனேடிய மக்கள் மீண்டும் ட்ரம்பின் அமெரிக்காவைப் புறக்கணிக்கத் தொடங்கியுள்ளனர்.
கடந்த வார இறுதியில் இரு நாடுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canadians on boycotting Trump’s America: கனேடிய மக்கள் மீண்டும் ட்ரம்பின் அமெரிக்காவைப் புறக்கணிக்கத் தொடங்கியுள்ளனர்.
</p><p>கடந்த வார இறுதியில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, கனடாவின் 20 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான சரக்குகள் மீது அமெரிக்கா இந்த வாரம் 50 சதவீத சுங்க வரியை விதித்துள்ளது;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a37bd6de-0094-4b46-af55-7331a14b70d5/26-6a93a4ef32d29.webp' /></p><p> </p><p>இதற்குப் பதிலடியாக அதே அளவுக்கு வரி விதிக்கப்படும் என்று கனடியப் பிரதமர் மார்க் கார்னி உறுதியளித்துள்ளார். இதனையடுத்து, வியாழக்கிழமையன்று, டொனால்ட் ட்ரம்ப், ஒன்ராறியோ ஏரிக்கு அமெரிக்கா ஏரி எனப் பெயர் மாற்றுமாறு ஃபெடரல் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுப் பதிலடி கொடுத்தார். </p><p>அமெரிக்க ஜனாதிபதியின் வர்த்தகப் போர் மற்றும் கனடாவை இன்னொரு மாகாணமாக இணைத்துக்கொள்வது குறித்த அச்சுறுத்தல்களுக்குப் பதிலடியாக, கடந்த ஆண்டின் தொடக்கத்தில் கனடியர்களிடையே தொடங்கிய அமெரிக்கப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பரவலான புறக்கணிப்பு நடவடிக்கைகளுக்கு இத்தகைய செயல்கள் மேலும் வலுசேர்த்துள்ளன. </p><p>இந்த நிலையில், அமெரிக்க நிர்வாகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைப்பாட்டிற்கு எதிர்வினையாகத் தங்கள் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்களைச் செய்துகொண்டார்கள் என்பதை, கனடா முழுவதிலும் உள்ள 3,500-க்கும் மேற்பட்டோர் The Guardian நாளேடு நடத்திய இணையவழி அழைப்பின் வாயிலாகப் பகிர்ந்துகொண்டனர். </p><p>பலர் ஆழ்ந்த கோபத்தையும் துக்கத்தையும் வெளிப்படுத்தியபோதிலும், இது ஒரு புதிய வாழ்க்கை முறைதான் என்பதில் உறுதியாக இருந்தனர்.</p><p></p><p> </p><p>புதிய விளைபொருட்கள் உட்பட கனடிய மளிகைப் பொருட்களை மட்டுமே வாங்குவது மற்றும் எல்லைக்குத் தெற்கே (அமெரிக்காவிற்குள்) பயணம் செய்வதைப் புறக்கணிப்பது ஆகியவை பதிலளித்தவர்களிடம் அதிகம் காணப்பட்ட நடவடிக்கைகளாக இருந்தன. </p><p>அமெரிக்கத் தொழில்நுட்பம், Netflix, AmazonPrime, AppleTV மற்றும் Disney+ போன்ற ஸ்ட்ரீமிங் சேவைகள், பெட்ரோல், டெஸ்லா (Tesla) போன்ற வாகனங்கள் மற்றும் Jack Daniel’s உள்ளிட்ட விஸ்கி வகைகளுக்கான செலவுகளைச் செய்வதை கனடிய மக்கள் நிறுத்தியுள்ளனர். </p><p>எக்ஸ், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகத் தளங்களும் தவிர்க்கப்பட்டு வந்தன. ஜூலை மாதம், ஆங்கஸ் ரீட் நடத்திய ஒரு கணக்கெடுப்பில், மளிகைப் பொருட்கள் வாங்குபவர்களில் 40 சதவீதம் பேர், பொருட்கள் எங்கிருந்து வருகின்றன என்பதைத் தீவிரமாகச் சரிபார்ப்பதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் முடிந்தவரை அமெரிக்கப் பொருட்களைத் தவிர்ப்பதாகவும் கண்டறியப்பட்டது. </p><p>இதனிடையே, மளிகைக் கடைகள் மெக்சிகோ, பெரு, குவாத்தமாலா, சிலி மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் விளைபொருட்களை அதிகளவில் வழங்கி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e83598f6-b939-4109-9537-408c46b4801f/26-6a93a4efdb709.webp' /></p><p> </p><p>ரொறன்ரோவில் வசிக்கும் மற்றும் ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரியும் 51 வயதான விக்ரம், அமெரிக்காவில் தனது குடும்பத்தினர் இருந்தபோதிலும் அங்கு செல்ல மறுத்துவிட்டதாகக் கூறினார். அதற்குப் பதிலாக அவர்கள் அவரைச் சந்திக்கிறார்கள். </p><p>அவரும் அமெரிக்கத் தயாரிப்புகளைத் தவிர்ப்பதுடன், தற்போது அமேசான் சேவைகளைப் புறக்கணித்து வருகிறார். ஆல்பர்ட்டாவின் கால்கரியில் வசிக்கும் ஓய்வுபெற்ற பொறியாளரான 61 வயது கர்ட், அமெரிக்க விஸ்கிகளைச் சுவைக்கும் தனது குழுவினர் ஆண்டுதோறும் அதற்காகப் பெருந்தொகையை – அதாவது சுமார் 10,000 அமெரிக்க டொலர்களை – செலவிடுவதாகக் கூறினார். </p><p>மேலும், ட்ரம்பின் விடுதலை நாள் மற்றும் முதல் கட்ட வரிவிதிப்புகளுக்குப் பிறகு, எங்கள் வெறுப்பை வெளிப்படுத்தும் ஒரு வழி, அமெரிக்க விஸ்கிகளை வாங்காமல் இருப்பதுதான் என்று நாங்கள் முடிவு செய்தோம், என்றார் அவர். </p><p>அதனால், அன்று முதல் நாங்கள் ஒரு அமெரிக்க டொலர் கூட செலவழிக்கவில்லை என்றார். அவரது மனைவியும் இனி கலிபோர்னியா ஒயினை அருந்துவதில்லை என புறக்கணித்து வருகிறார்; </p><p>மேலும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவிற்குத் தொடர்ந்து சென்று வந்த போதிலும், 2025 ஜனவரிக்குப் பிறகு தாங்கள் அங்கு செல்லவில்லை என்று கர்ட் கூறியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T03:32:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை நாடாளுமன்றத்தின் சைபர் பாதுகாப்பிற்கு தீவிர அச்சுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/parliment-on-high-risk-of-cyber-attack-1788060649"></link>
            <id>https://tamilwin.com/article/parliment-on-high-risk-of-cyber-attack-1788060649</id>
            <summary type="text">இலங்கை நாடாளுமன்றத்தின் தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பில் பெரும் அபாயகரமான சூழ்நிலை நிலவுவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு மேற்கொண்ட மதிப்பீட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை நாடாளுமன்றத்தின் தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பில் பெரும் அபாயகரமான சூழ்நிலை நிலவுவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு மேற்கொண்ட மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது.
</p><p>2025 ஆம் ஆண்டிற்கான செயல்திறன் குறித்த மதிப்பாய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>சைபர் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீடு</h2><p>
2025 ஆம் ஆண்டில் இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவினால் நாடாளுமன்றத்தின் தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b861472-8b59-44d8-a895-acba8c660619/26-6a93a3eb377e9.webp' /></p><p> 
இதன்போது பரிசோதிக்கப்பட்ட 56 முக்கிய அம்சங்களில், 46 அம்சங்களில் உயர் மட்டத்திலான பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவுவது கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>சைபர் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி, டிஜிட்டல் அமைப்புகளுக்குள் அத்துமீறி நுழைந்து முக்கியமான ரகசியத் தகவல்களைத் திருடுதல், நாடாளுமன்றத்தின் அன்றாட செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் அதிகாரப்பூர்வ இணையதள உள்ளடக்கங்களைச் சிதைத்து நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துதல் போன்ற ஆபத்துகள் நிலவுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>
இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற நிர்வாகம் உடனடியாகத் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும் என அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T03:30:55+00:00</updated>
        </entry>
    </feed>
