<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-14T11:51:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் பயணிகள் ரயிலின் மீது ரஷ்ய இராணுவம் ட்ரோன் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russian-drone-attack-ukrainian-passenger-train-1786708007"></link>
            <id>https://canadamirror.com/article/russian-drone-attack-ukrainian-passenger-train-1786708007</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தில் பயணிகள் ரயிலின் இயந்திரம் மீது ரஷ்ய இராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தில் பயணிகள் ரயிலின் இயந்திரம் மீது ரஷ்ய இராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



இந்தத் தாக்குதலில் ரயிலின் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15813f35-526a-45f7-8771-59e239e9f9b3/26-6a7f00289c006.webp' /></p><p>



தாக்குதலையடுத்து ரயிலின் முன்பகுதி தீப்பற்றி எரிந்த நிலையில், அதிலிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-14T11:44:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் நீராடிக்கொண்டிருந்த இந்திய பிரஜை மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-national-missing-after-drowning-1786704972"></link>
            <id>https://tamilwin.com/article/indian-national-missing-after-drowning-1786704972</id>
            <summary type="text">காலி பெந்தொட்டை கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த இந்திய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெந்தொட்டை கடற்கரைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி பெந்தொட்டை கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த இந்திய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
பெந்தொட்டை கடற்கரையில் நேற்று(13.08.2026) பிற்பகல் நீராடிக் கொண்டிருந்தபோதே அவர் எதிர்பாராத விதமாக கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். </p><p>இவர் 24 வயதுடைய இந்திய பிரஜை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><h2>தொடர் தேடுதல் நடவடிக்கை</h2><p>
காணாமல் போயுள்ள நபர் தனது நண்பர் ஒருவருடன் பெந்தொட்டை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளதுடன், குறித்த ஹோட்டலின் பின்னால் உள்ள கடற்கரையில் அவர் நீராடிக்கொண்டிருந்தபோது காணாமல் போயுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b850ab6d-781b-45e5-bc3b-209ff68710e3/26-6a7efccd183a8.webp' /></p><p>

காணாமல்போயுள்ள நபரை மீட்பதற்காக பொலிஸார் கடற்படையினரின் உதவியுடன் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T11:36:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் ஆரம்பமாகும் எதிர்தரப்பு சாட்சிய விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/opposition-testimony-begins-in-easter-attack-case-1786701100"></link>
            <id>https://ibctamil.com/article/opposition-testimony-begins-in-easter-attack-case-1786701100</id>
            <summary type="text">ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற வழக்கில் எதிர்தரப்பு சாட்சிய விசாரணையை எதிர்வரும் திங்கட்கிழமை (17) முதல் தினசரி நடத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற வழக்கில் எதிர்தரப்பு சாட்சிய விசாரணையை எதிர்வரும் திங்கட்கிழமை (17) முதல் தினசரி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
</p><p>
வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரதிவாதிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான அவர்களது எதிர்வாத நிலைப்பாடுகள் நேற்று (13) நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டதுடன், அவர்களுக்கு அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டதாக வழக்கு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இதனையடுத்து இன்று (14) வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஒவ்வொரு பிரதிவாதியும் எதிர்வரும் விசாரணைகளில் கடைப்பிடிக்கவுள்ள தமது எதிர்வாத நிலைப்பாடு தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.</p><p></p><h2>பிரதிவாதிகளின் நிலைப்பாடு</h2><p>

அதன்படி, சில பிரதிவாதிகள் குற்றவாளிக் கூண்டில் இருந்து தமது வாக்குமூலத்தை வழங்குவதுடன், தமது தரப்பில் மேலதிக சாட்சிகளையும் அழைக்கத் தீர்மானித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23247fe4-025f-46ec-99c7-ad94a1c00b43/26-6a7ef2d3c0bd1.webp' /></p><p> </p><p>மேலும் சில பிரதிவாதிகள் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கவுள்ளதாகவும், ஆனால் தமது தரப்பில் வேறு சாட்சிகளை அழைக்கப் போவதில்லை என்றும் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.</p><ol><li>

முதலாம் பிரதிவாதியான நௌஃபர் மௌலவி, குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன், அவருக்காக மேலதிக சாட்சிகளையும் அழைக்கவுள்ளதாக நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
</li><li>
இரண்டாம் பிரதிவாதியான மொஹமட் சரீபுத் ஆதம் லெப்பை (ஹஜ்ஜி மாமா) குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கவுள்ள போதிலும், அவரது தரப்பில் வேறு சாட்சிகள் எவரையும் அழைக்கப் போவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</li><li>
மூன்றாம் பிரதிவாதியான ஹயாத்து மொஹமட் அஹமட் மில்ஹான் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன், அவருக்காக மேலதிக சாட்சிகளையும் அழைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</li><li>

நான்காம் பிரதிவாதியான மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா மற்றும் ஐந்தாம் பிரதிவாதியான மொஹமட் இப்ராஹிம் சாஹிட் அப்துல் ஹக் ஆகியோரும் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன், தமது தரப்பில் மேலதிக சாட்சிகளை அழைக்கத் தீர்மானித்துள்ளனர்.</li><li>

ஆறாம் பிரதிவாதியான மொஹமட் அன்வர் மொஹமட் ரிஸ்கான் குற்றவாளிக் கூண்டில் அமைதியாக இருப்பதாகவும், அவரது தரப்பில் வேறு சாட்சிகள் எவரையும் அழைக்கப் போவதில்லை என்றும் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
</li><li>
ஏழாம் பிரதிவாதியான மொஹமட் மன்சூர் மொஹமட் சனூஸ்தீன் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கவுள்ள போதிலும், அவரது தரப்பில் வேறு சாட்சிகள் அழைக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</li><li>
எட்டாம் பிரதிவாதியான அப்துல் மனாஃப் மொஹமட் ஃபர்தௌஸ் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன், அவரது தரப்பில் மேலதிக சாட்சிகளையும் அழைக்கவுள்ளார்.
</li><li>
ஒன்பதாம் பிரதிவாதியான மொஹமட் ரமீஸ் மொஹமட் சாஜித் மற்றும் 10ஆம் பிரதிவாதியான அப்துல் லத்தீப் மொஹமட் சாஃபி ஆகியோரும் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். </li><li>எனினும், 10ஆம் பிரதிவாதி சார்பில் மேலதிக சாட்சிகள் அழைக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</li><li>
11ஆம் பிரதிவாதி குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன், அவரது தரப்பில் மேலதிக சாட்சிகளையும் அழைக்கவுள்ளதாக வழக்கு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</li><li>
12ஆம் பிரதிவாதியான மொஹமட் சவாஹிர் மொஹமட் ஹசன் மற்றும் 13ஆம் பிரதிவாதியான மொஹமட் இஃப்திகார் மொஹமட் இன்சாஃப் ஆகியோரும் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன், தமது தரப்பில் மேலதிக சாட்சிகளை அழைக்கவுள்ளதாக நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.</li><li>

14ஆம் பிரதிவாதி குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அவரது தரப்பில் வேறு சாட்சிகள் அழைக்கப்படமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</li><li>

15ஆம் பிரதிவாதி குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன், அவரது தரப்பில் மேலதிக சாட்சிகளும் அழைக்கப்படவுள்ளனர்.
</li><li>
16ஆம் பிரதிவாதியும் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கவுள்ள போதிலும், அவரது தரப்பில் வேறு சாட்சிகள் அழைக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</li><li>
இதற்கிடையில், 18ஆம் பிரதிவாதி உயிரிழந்துள்ளதாக வழக்கு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</li><li>
19ஆம் பிரதிவாதி குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன், அவரது தரப்பில் மேலதிக சாட்சிகளையும் அழைக்கவுள்ளதாக நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</li><li> 20ஆம் பிரதிவாதி வாக்குமூலம் வழங்கவுள்ள போதிலும், அவரது தரப்பில் வேறு சாட்சிகள் அழைக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</li><li>
21 மற்றும் 22ஆம் பிரதிவாதிகளும் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கவுள்ளதுடன், தமது தரப்பில் மேலதிக சாட்சிகள் எவரையும் அழைக்கப் போவதில்லை என நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.</li><li>

23ஆம் பிரதிவாதியும் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கவுள்ள போதிலும், அவரது தரப்பில் வேறு சாட்சிகள் அழைக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</li><li>
24 மற்றும் 25ஆம் பிரதிவாதிகளும் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்கத் தீர்மானித்துள்ள போதிலும், அவர்களது தரப்பில் மேலதிக சாட்சிகள் அழைக்கப்படமாட்டார்கள் என வழக்கு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.</li></ol><p></p><h2>எதிர்வாத நிலைப்பாடு </h2><p>
இவ்வாறு ஒவ்வொரு பிரதிவாதியும் தமது எதிர்வாத நிலைப்பாட்டை நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ள நிலையில், சிலர் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதுடன் மேலதிக சாட்சிகளையும் முன்வைக்கவுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7aa1ded2-9de4-4d11-b0e0-da6e35fbd033/26-6a7ef2e9b3a63.webp' /></p><p> மற்றுமொரு தரப்பினர் குற்றவாளிக் கூண்டில் இருந்து வாக்குமூலம் வழங்குவதற்கு மாத்திரம் தீர்மானித்துள்ளனர்.

அனைத்து பிரதிவாதிகளுக்கும் அவர்களுக்குரிய அரசியலமைப்பு உரிமைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்ட பின்னர், அவர்கள் எதிர்வாத விசாரணையின்போது கடைப்பிடிக்கவுள்ள நடவடிக்கைகளை நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.
</p><p>
இதனையடுத்து, ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான இந்த விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற வழக்கின் எதிர்தரப்பு சாட்சிய விசாரணை 2026 ஆகஸ்ட் 17ஆம் திகதி திங்கட்கிழமை முதல் தினசரி நடைபெறவுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T11:36:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[எனக்கு 3 குழந்தைகள்..தூக்கமே இல்ல..ஒரே போராட்டமா இருக்கு!! யோகி பாபு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/yogi-babu-s-funny-reply-about-his-three-kids-1786706191"></link>
            <id>https://viduppu.com/article/yogi-babu-s-funny-reply-about-his-three-kids-1786706191</id>
            <summary type="text">யோகி பாபுவிஜய் டிவியில் 90ஸ் காலக்கடத்தில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் லொள்ளு சபா. இந்நிகழ்ச்சியில் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கிவர் தான் யோ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>யோகி பாபு</h2><p>விஜய் டிவியில் 90ஸ் காலக்கடத்தில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் லொள்ளு சபா. இந்நிகழ்ச்சியில் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கிவர் தான் யோகி பாபு. தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் காமெடி நடிகராக திகழ்ந்து வருகிறார். பாலிவுட் படங்களிலும் நடித்து வரும் யோகி பாபு, முக்கிய ரோலில் நடித்தும் வருகிறார்.</p><p>இயக்குநர் இளன் இயக்கி நடித்துள்ள பியார் பிரேமா கல்யாணம் படத்திலும் யோகி பாபு நடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84ae887e-27a1-4322-b70d-86313bafbd47/26-6a7ef91195233.webp' /></p><p> </p><p>சமீபத்திய இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு யோகியிடம் இளன், திருமணத்திற்கு பின் உங்கள் மனைவி கொடுத்த சூப்பர் கிஃப்ட் எது என்று கேட்டார். </p><p>அதற்கு பதிலளித்த யோகி பாபு, 3 குழந்தைகளை கொடுத்திருக்கிறார்கள், அதுவே கிஃப்ட் தான் என்று சொல்ல அடுத்து எப்போ சார் என்று இளன் கேட்டுள்ளார். அதற்கு யோகி, போதும் ப்பா..இதுக்கே என்னால் தூங்க முடியல, குழந்தைகளோடு போராட்டமா இருக்கும் என்று கலகலப்பாக பேசியுள்ளார் யோகி.</p>]]></content>
            <updated>2026-08-14T11:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டி எசல பெரஹேராவை முன்னிட்டு விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kandy-esala-perahera-special-traffic-and-security-1786704099"></link>
            <id>https://ibctamil.com/article/kandy-esala-perahera-special-traffic-and-security-1786704099</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹேராவை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பையும் சீரான போக்குவரத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் விசேட பாதுகாப்பு ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹேராவை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பையும் சீரான போக்குவரத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைபடுத்த காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.&nbsp;</p><p>எசல பெரஹரவின் முக்கியத்துவமிக்க நிகழ்வுகளான கும்பல் பெரஹேரா ஆகஸ்ட் 18 முதல் 22 வரையிலும், ரந்தோலி பெரஹேரா ஆகஸ்ட் 23 முதல் 27 வரையிலும், 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ளன.</p><p>இந்தப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், சாலைத் தடுப்புகளில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்படுவதுடன், வாகனங்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான நபர்களைச் சோதனையிடுதல், சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் வாகனங்களுக்கான விசேட தரிப்பிடங்களை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p></p><h2>கண்டி எசல பெரஹேரா</h2><p>பெரஹேராவின் போது பாதுகாப்புப் பணிகளுக்காக, மொத்தம் 6,200 காவல்துறைப் பணியாளர்கள், காவல்துறை சிறப்பு அதிரடிப் படையைச் (STF) சேர்ந்த 564 பணியாளர்கள், முப்படைகளைச் சேர்ந்த 1,200 பணியாளர்கள் மற்றும் குடிமைப் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த 29 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d528e323-16db-407b-8f83-1eb81e1ea48e/26-6a7efa7490c57.webp' /></p><p>

 

மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக காவல்துறை கே9 (K9) பிரிவைச் சேர்ந்த மோப்ப நாய்களும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.</p><p>பெரஹேரா காலப்பகுதியில் கண்டி நகருக்குள் நுழையும் 14 பிரதான நுழைவாயில்களிலும் சாலைத் தடுப்புகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் மற்றும் நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p>பெரஹேராவில் கலந்துகொள்ள வரும் பொதுமக்களின் வாகனங்களுக்காக 13 விசேட வாகனத் தரிப்பிடங்கள் ஒதுக்கப்படவுள்ளன.

இதில் இலகுரக வாகனங்களுக்காக 6 தரிப்பிடங்களும், கனரக வாகனங்களுக்காக 7 தரிப்பிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.</p><p>
 

பெரஹேரா காலத்தில் கண்டி நகரைத் தவிர்க்க விரும்பும் வாகன சாரதிகளுக்காக காவல்துறையினரும் மாற்று வழிகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.</p><p>

 

வாகன சாரதிகள் இந்த மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும், பெரஹேராவின் போது நடைமுறையில் உள்ள சிறப்புப் போக்குவரத்து ஏற்பாடுகளுக்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T11:29:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அநுரவுக்கு ரணில் வழங்கியுள்ள அவசர அறிவுரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amendment-anura-government-ranil-1786704361"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amendment-anura-government-ranil-1786704361</id>
            <summary type="text">அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் மக்கள் தீர்ப்பு ஒன்றினை நடத்துமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், எதிர்க்கட்சியினர் ஜனாதிபதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் மக்கள் தீர்ப்பு ஒன்றினை நடத்துமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், எதிர்க்கட்சியினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளனர்.&nbsp;</p><p>இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
</p><p>
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 107(5) ஆம் உறுப்புரைக்கான திருத்தங்கள் தொடர்பில் மக்களின் விருப்பத்தை அறிந்துகொள்ள அரசியலமைப்பின் 13ஆவது அத்தியாயத்திற்கு அமைவாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;22ஆவது திருத்தம்&nbsp;</h2><p> </p><p>மேலும், இலங்கைக் குடியரசில் இறையாண்மை மக்களிடமே உள்ளதுடன் அதனை பிரிக்க முடியாது என்ற அரசியலமைப்பின் 3ஆவது உறுப்புரையே இதன் அடிப்படையாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2face0c9-4a84-40ce-9694-1f01320a6905/26-6a7efab2d1e36.webp' /></p><p>
அரசியலமைப்பின் 3 மற்றும் 4 ஆகிய உறுப்புரைகள் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.&nbsp;</p><p> நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம் செய்யும் எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தமும் நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதிப்பதுடன் அரசியலமைப்பின் 3ஆவது உறுப்புரையை மீறும் செயலாகும் என்றும், இதற்குச் சர்வஜன வாக்கெடுப்பு கட்டாயம் தேவை என்றும் 2022ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள்காட்டி குறிப்பிட்டுள்ளனர்.</p><p>
சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சிவில் சமூகத்தினருடன் எவ்வித கலந்துரையாடல்களும் இன்றி, வெளிப்படைத்தன்மையற்ற முறையில் இந்தத் திருத்தங்கள் கொண்டுவரப்படுவது குறித்துக் கவலை வெளியிட்டுள்ள அவர்கள், நீதித்துறை சார்ந்த இந்த விடயத்தில் சார்புத்தன்மை அல்லது பாரபட்சம் ஏற்படுவதைத் தவிர்க்க சர்வதேச நீதித்துறை தரநிலைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
</p><p>
எனவே, மக்களின் இறையாண்மையைப் பாதுகாக்கும் ஒரே சட்டப்பூர்வமான வழிமுறையாகச் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ள கூட்டு எதிர்க்கட்சியினர், அரசியலமைப்பின் 85(1) உறுப்புரைக்கு அமைவாக இந்தச் சட்டமூலத்தைச் சர்வஜன வாக்கெடுப்பிற்குச் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சரவை ஊடாக எடுக்குமாறு ஜனாதிபதியைக் கோரியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T11:26:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் சட்டமூலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/amendment-to-increase-judges-retirement-age-1786705447"></link>
            <id>https://ibctamil.com/article/amendment-to-increase-judges-retirement-age-1786705447</id>
            <summary type="text">இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயகார தெரிவித்துள்ளார்.</p><p>அத்துடன் அன்றைய தினமே நீதிமன்ற ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலமும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் ஊடகமொன்றுக்கு&nbsp; குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்ததுடன், இதற்கு ஆரம்பக்கட்டத்திலிருந்தே முன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் மற்றும் பல சர்வதேச அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தன.</p><p></p><h2>வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை&nbsp;</h2><p> </p><p>

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கான 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் கடந்த 7ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5598a448-7e77-44f6-926d-2b7b40e7e997/26-6a7efb29dd624.webp' /></p><p> </p><p>

இதற்கிடையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதும், இந்தத் திருத்தத்தைச் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இருந்தார்.</p><p></p><h2>நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்</h2><p> </p><p>

இத்தகைய பின்னணியில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64c0536a-dd1b-4266-9be8-91bab00ceccf/26-6a7efb2add399.webp' /></p><p> </p><p>இலங்கையின் நாடாளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு, அதை உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவதற்கு அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. </p><p>

அந்த மனுவை விசாரித்து 3 முதல் 21 நாட்களுக்குள் உயர்நீதிமன்றம் தனது தீர்மானத்தை நாடாளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும்” என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T11:24:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய பிரதமரின் நிபுணர் ஆலோசகராக தமிழ் வம்சாவளி - யார் இந்த கெளதம் ரங்கராஜன்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tamil-gautam-rangarajan-as-uk-andy-burnham-advisor-1786706354"></link>
            <id>https://news.lankasri.com/article/tamil-gautam-rangarajan-as-uk-andy-burnham-advisor-1786706354</id>
            <summary type="text">gautam rangarajan appointed as uk pm advisor: தமிழ் வம்சாவளியான கெளதம் ரங்கராஜனை கட்டமைப்பு மற்றும் செயல்முறைக்கான புதிய நிபுணர் ஆலோசகராகத் தனது நிர்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>gautam rangarajan appointed as uk pm advisor: தமிழ் வம்சாவளியான கெளதம் ரங்கராஜனை கட்டமைப்பு மற்றும் செயல்முறைக்கான புதிய நிபுணர் ஆலோசகராகத் தனது நிர்வாகத்தில் சேர்த்துள்ளார் பிரித்தானிய பிரதமர் ஆன்டி பர்னாம்.</p><p>பிரித்தானிய பிரதமராக பதவியேற்றுள்ள ஆன்டி பர்னாம், அமைச்சரவை மற்றும் நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.</p><p>

அதன்படி, பிரித்தானியாவில் வசித்து வரும் தமிழ் வம்சாவளியான கெளதம் ரங்கராஜனை கட்டமைப்பு மற்றும் செயல்முறைக்கான புதிய நிபுணர் ஆலோசகராகத் தனது நிர்வாகத்தில் சேர்த்துள்ளார் ஆன்டி பர்னாம்.</p><p><span style="color: inherit; font-size: 1.5rem;">கெளதம் ரங்கராஜன்</span></p><p>கெளதம் ரங்கராஜன், தமிழ்நாட்டின் கும்பகோணத்தை பூர்விகமாக கொண்ட முன்னாள் இந்திய தூதரக அதிகாரியான என்.எல் ரங்கராஜன் என்பவரின் மகன் ஆவார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e946d9ba-1bd8-4453-bb15-03896e390139/26-6a7ef9b3a683e.webp' /></p><p>

1971 ஆம் ஆண்டில் பிறந்த ரங்கராஜன், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இசையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். </p><p></p><p>

1993 ஆம் ஆண்டில் பிபிசியில் பயிற்சித் தயாரிப்பாளராகத் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், குழும வியூகம், செயல்திறன் இயக்குநர் என 30 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
</p><p>
மேலும், தொழில்முறை குழுப் பாடகராகவும் இசைத் தயாரிப்பாளராகவும் உள்ளார்.&nbsp; &nbsp; &nbsp;</p><p>ரங்கராஜனின் பொறுப்புகளின் குறிப்பிட்ட விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. </p><p>

இருப்பினும், பெருநிறுவன உத்தி மற்றும் உருமாற்றத்தில் அவருக்கிருக்கும் பின்னணியை இந்த நியமனம் பயன்படுத்திக்கொள்ளும் என்று பிரித்தானிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T11:19:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களின் வாழ்வாதாரங்களை சிதைக்கும் காலநிலை மாற்றம் - 68,041 பேர் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/68-041-people-affected-by-dry-weather-1786704653"></link>
            <id>https://tamilwin.com/article/68-041-people-affected-by-dry-weather-1786704653</id>
            <summary type="text">வறண்ட வானிலை காரணமாக இதுவரையில் 68,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் நிவாரண சேவைகள் மையம்(NDRSC)அறிவித்துள்ளது.


நான்கு மாவட்டங்களில் உள...</summary>
            <content type="html"><![CDATA[<p>வறண்ட வானிலை காரணமாக இதுவரையில் 68,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் நிவாரண சேவைகள் மையம்(NDRSC)அறிவித்துள்ளது.
</p><p>

நான்கு மாவட்டங்களில் உள்ள 17 கிராம அலுவலர் பிரிவுகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரகீத் தனன்சூரிய தெரிவித்துள்ளார்.
</p><h2>

நான்கு மாவட்டங்கள் பாதிப்பு</h2><p>
இதற்கமைய, மட்டைக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் இரத்தினபுர மாவட்டங்களில் உள்ள மக்கள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96a6dc84-0d58-4c67-abab-aecc22d116bb/26-6a7ef9053be49.webp' /></p><p>
</p><p>
இதுவரை வெளியான தரவுகளின் அடிப்படையில், 21,873 குடும்பங்களைச் சேர்ந்த 68,041 பேர் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். </p><p>

அத்துடன், குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் 3,495 குடும்பங்களைச் சேர்ந்த 12,291 பேருக்குத் தேவையான குடிநீர் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.</p><p>

இவ்வாறு, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்காக உள்ளூராட்சி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரகீத் தனன்சூரிய மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T11:16:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மவுண்ட் எட்னா எரிமலை வெடிப்பு: 700க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/italy-mount-etna-eruption-700-flights-cancelled-1786706059"></link>
            <id>https://news.lankasri.com/article/italy-mount-etna-eruption-700-flights-cancelled-1786706059</id>
            <summary type="text">சிசிலியில் மவுண்ட் எட்னா எரிமலை வெடிப்பு காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மவுண்ட் எட்னா எரிமலை வெடிப்புஐரோப்பாவின் மிக உயரம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிசிலியில் மவுண்ட் எட்னா எரிமலை வெடிப்பு காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.</p><h2> மவுண்ட் எட்னா எரிமலை வெடிப்பு</h2><p>ஐரோப்பாவின் மிக உயரமான மற்றும் தீவிரமான எரிமலையாக கருதப்படும் மவுண்ட் எட்னா(Mount Etna) தொடர்ச்சியாக வெடித்து வருவதால் அப்பகுதியை சுற்றிய விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.</p><p> ஆகஸ்ட் 6ம் திகதி முதல் இத்தாலியின் சிசிலி(Sicily) தீவில் தொடங்கிய இந்த எரிமலை வெடிப்பு நடவடிக்கையால், எரிமலையை சுற்றிய வான் பரப்பில் எரிமலை சாம்பல்கள் பெருமளவு பரவியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de6386b0-412d-496c-9abe-0fdab86bfaf4/26-6a7ef88d13522.webp' /></p><p></p><h2>விமான நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்பு</h2><p>மவுண்ட் எட்னா எரிமலை வெடிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள சாம்பல் புகை மூட்டத்தினால் சிசிலி தீவில் உள்ள கட்டானியா பொன்டாரோசா விமான நிலையம்(Catania Fontanarossa Airport) தன்னுடைய விமான சேவைகளை முழுவதுமாக நிறுத்தியுள்ளது.</p><p>விமான நிலைய அறிக்கைப்படி, சனிக்கிழமை அதிகாலை 2 மணி வரை இங்கிருந்து எந்தவொரு விமானங்களும் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> ஆகஸ்ட் 8ம் திகதி முதல் 11ம் திகதி வரை மட்டும் கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட விமானங்களின் புறப்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c90abbc-916e-4d33-8fa2-94f576012d77/26-6a7ef88dbdacc.webp' /></p><p> புதன்கிழமை மேலும் 52 விமானங்களின் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன.</p><p> விமான நிலையத்திற்கான வருகை மற்றும் இங்கிருந்து புறப்படும் விமானங்கள் என கிட்டத்தட்ட 700 விமானங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p>மவுண்ட் எட்னா எரிமலை வெடிப்பு வழக்கமான நிகழ்வுகளில் ஒன்று தான் என்றாலும், இந்த முறை ஏற்பட்டுள்ள வெடிப்பு வழக்கத்திற்கு மாறானது என வல்லுநர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> இந்த முறை எரிமலை வெடிப்பான சிசிலியின் மற்றொரு விமான நிலையமான கோமிசோ(Comiso) மற்றும் அண்டை நாடான மால்டா வரை கடுமையான நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T11:14:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானில் கனமழை; 6 பேர் பலி... வீடுகளை இழந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/heavy-rains-in-japan-thousand-people-left-homeless-1786706107"></link>
            <id>https://canadamirror.com/article/heavy-rains-in-japan-thousand-people-left-homeless-1786706107</id>
            <summary type="text">&amp;nbsp; ஜப்பானில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் இதுவரை சுமார் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜப்பானில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் இதுவரை சுமார் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>


கனமழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், 20,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9973c2af-c3ce-4a9a-9b04-2c82dcb6dd0b/26-6a7ef8bd9b9cc.webp' /></p><p>
</p><p>


மேலும், மோசமான வானிலை காரணமாக விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. டோக்கியோவின் நரிட்டா சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 7,000 பயணிகள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-14T11:12:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[டாக்சிக் பட நடிகை தாரா சுதாரியாவின் கிளாமர் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-tara-sutaria-glamour-photoshoot-1786704818"></link>
            <id>https://cineulagam.com/article/actress-tara-sutaria-glamour-photoshoot-1786704818</id>
            <summary type="text">யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள டாக்சிக் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 26-ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் யாஷுடன் இணைந்து தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த், நயன...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள டாக்சிக் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 26-ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் யாஷுடன் இணைந்து தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த், நயன்தாரா, ஹுமா குரேஷி, கியாரா அத்வானி ஆகியோர் நடித்துள்ளனர். </p><p>இதில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் தாரா சுதாரியா, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலம் ஆவார். இவர் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்கும். </p><p>இந்நிலையில், டாக்சிக் படத்தின் ப்ரோமோஷன் விழாவில் அணிந்திருந்த ஆடையில் எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ பாருங்க:</p>]]></content>
            <updated>2026-08-14T11:10:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர்ந்து வலுவடையும் இலங்கை ரூபாய்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-rupee-continues-to-strengthen-1786705563"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-rupee-continues-to-strengthen-1786705563</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (13) மேலும் வலுவடைந்துள்ளது.



அமெரிக்க டொலரின் சராசரி கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (13) மேலும் வலுவடைந்துள்ளது.
</p><p>


அமெரிக்க டொலரின் சராசரி கொள்வனவு விலை 329.0389 ரூபாயாகக் குறைந்துள்ளதுடன், அதன் விற்பனை விலையும் 337.9922 ரூபாயாகக் குறைந்து ரூபாயின் மதிப்பு உயர்வடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4502916-52ff-451d-8605-04d0727258d5/26-6a7ef69ca8950.webp' /></p><p>



அமெரிக்க டொலர் தவிர, ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களான அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்க் உள்ளிட்ட ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களின் விற்பனை விலைகளும் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று சற்று ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T11:03:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதியில் அனாதரவாக விடப்பட்ட சிறுமி; தாயாரும் கள்ள காதலனும் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wattegama-abandoned-girl-mother-arrest-1786696101"></link>
            <id>https://jvpnews.com/article/wattegama-abandoned-girl-mother-arrest-1786696101</id>
            <summary type="text">&amp;nbsp; வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமியை முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்று பின்னர் வீதியில் கைவிட்டதாகக் கூறப்படும் சந்தேகநபரும் தாயும் ஹாலிஎல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;<a href="https://jvpnews.com/article/wattegama-abandoned-girl-on-the-road-1786612004" target="_blank"> வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமியை</a> முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்று பின்னர் வீதியில் கைவிட்டதாகக் கூறப்படும் சந்தேகநபரும் தாயும் ஹாலிஎல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>



நேற்று (13) வீதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட சிறுமியை வத்தேகம பொலிஸார் மீட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af3b08f7-5f23-46a7-896a-1d8c3545be6b/26-6a7ed1a7126da.webp' /></p><p>
</p><p>


சிறுமியை தாக்கி வீதியில் கைவிட்டதாக சந்தேகிக்கப்படும் தாயாரையும் அவருடன் தொடர்பில் இருந்த நபரையும் கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.</p><p></p><p>



இந்நிலையில், சந்தேகநபர்கள் இருவரும் இன்று (14) ஹாலிஎல – கெட்டவல வீதியில் முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்தபோது ஹாலிஎல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T10:56:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உணவு லாரியில் ஒழிந்த டிரம்ப்; ஈரானிய ஊடகங்கள் கேலி! அமெரிக்காவிற்கு மாபெரும் அவமானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-hid-in-a-food-truck-iranian-media-mocked-1786691766"></link>
            <id>https://canadamirror.com/article/trump-hid-in-a-food-truck-iranian-media-mocked-1786691766</id>
            <summary type="text">&amp;nbsp; அண்மையில் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சிமாநாட்டின் போது, ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் அச்சுறுத்தலுக்குப் பயந்து அமெரிக்க அதிபர் டொனால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அண்மையில் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சிமாநாட்டின் போது, ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் அச்சுறுத்தலுக்குப் பயந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ (Air Force One) விமானத்திலிருந்து உணவு விநியோக லாரியில் (Catering Truck) ரகசியமாகத் தப்பிச் சென்ற சம்பவத்தை ஈரானிய அரசு ஊடகங்கள் கிண்டலடித்துள்ளன. </p><p>

ஈரானின் ராணுவ வலிமையைக் கண்டு டிரம்ப் அஞ்சி நடுங்குவதையே இந்நிகழ்வு வெளிப்படுத்துவதாகத் தெஹ்ரான் தொலைக்காட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/372b6ac6-7c5c-499f-82e3-e2e8ded6cbce/26-6a7ec0b79d3ce.webp' /></p><h2>அமெரிக்காவிற்கு நேர்ந்த மாபெரும் அவமானம்</h2><p>
</p><p>
துருக்கியில் டிரம்ப் தங்கியிருந்த ஹோட்டல் மற்றும் அவரது விமானத்தின் நடமாட்டங்களை ஈரானிய உளவுத்துறை துல்லியமாகக் கண்காணித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க ரகசியச் சேவை அதிகாரிகள் டிரம்பை உணவு லாரி மூலம் மற்றொரு சிறிய ராணுவ விமானத்திற்கு மாற்றினர். </p><p>

இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்ட ஈரானிய ஊடகங்கள், “ஈரானின் அச்சுறுத்தலால் டிரம்ப் உணவு லாரியில் ஒளிந்து தப்பியுள்ளார், இது அமெரிக்காவிற்கு நேர்ந்த மாபெரும் அவமானம்” எனக் கூறிப் புகைப்படங்கள் மற்றும் மீம்களைப் (Memes) பகிர்ந்து கேலி செய்து வருகின்றன.</p><p>

அதேவேளையில், ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) சர்வதேசக் கடல் பாதையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகக் கூறிவரும் அமெரிக்க அதிபர் டிரம்பின் வாதத்திற்கு ஈரான் கடும் மறுப்புத் தெரிவித்துள்ளது.</p><p>

 அதேசமயம் ஹோர்முஸ் ஜலசந்தி முற்றிலும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது” என்ற டிரம்பின் அறிக்கையைத் தள்ளுபடி செய்துள்ள ஈரானியப் புரட்சிப் படை (IRGC) அதிகாரிகள், அப்பகுதியில் அமெரிக்கக் கடற்படையின் அதிகாரம் செல்லாது என்றும், கடல்சார் வான்வெளியும் கடல் பாதையும் தங்களது முழுக் கண்காணிப்பில் தான் இயங்கி வருகிறது என்றும் பதிலடி கொடுத்துள்ளனர்.</p><p>
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் இந்தச் சொல்லம்புப் போர் உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

இந் நிலையில் டிரம்பின் பாதுகாப்பு விவகாரத்தை ஈரான் சர்வதேச அளவில் பகிரங்கமாகக் கேலி செய்து வருவது, அமெரிக்க அரசு மற்றும் வெள்ளை மாளிகை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-14T10:55:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[30 வருடங்களாக தாம் சகோதரிகள் என தெரியாது பழகிய நண்பிகள்; ஆச்சர்ய செய்தி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/friends-30-years-without-knowing-they-were-sisters-1786698595"></link>
            <id>https://canadamirror.com/article/friends-30-years-without-knowing-they-were-sisters-1786698595</id>
            <summary type="text">30 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து நெதர்லாந்து நாட்டிற்கு தத்து கொடுக்கப்பட்ட மீனா, மினல் என்கிற இரண்டு பெண்கள் கடந்த 30 வருடங்களாக தாங்கள் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>30 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து நெதர்லாந்து நாட்டிற்கு தத்து கொடுக்கப்பட்ட மீனா, மினல் என்கிற இரண்டு பெண்கள் கடந்த 30 வருடங்களாக தாங்கள் சகோதரிகள் என்பது தெரியாமலேயே தோழிகளாக பழகியிருக்கிறார்கள்.</p><p> 

சமீபத்தில் டி.என்.ஏ சோதனையில் அவர்கள் இருவரும் சகோதரிகள் என்பதும் அவர்கள் 30 வருடங்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து தத்துக் கொடுக்கப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8e4c393-5d7f-4b2b-a243-b8ad82ffab3d/26-6a7edb650a4cd.webp' /></p><p>
 

இதையடுத்து இரு தோழிகளும் கட்டியணைத்து, கண்ணீர் மல்க தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

நாங்கள் இருவரும் முப்பது வருடங்களாக சகோதரிகளாகவே இருந்திருக்கிறோம்.</p><p> ஆனால் எங்களுக்கு அது தெரியவில்லை என உணர்ச்சி பொங்க அவர்கள் உள்ளூர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்கள். 

இவர்கள் தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-14T10:55:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருக்கோணேஸ்வரத்தை தொடர்ந்து திருக்கேதீஸ்வரத்திலும் அடாவடி : ஆலய வரலாற்றை மறைக்கும் தொல்லியல் திணைக்களம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archaeology-dept-hide-the-thiruketeeswaram-history-1786703120"></link>
            <id>https://ibctamil.com/article/archaeology-dept-hide-the-thiruketeeswaram-history-1786703120</id>
            <summary type="text">மன்னார் - திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப்பலகையில் ஆலய வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட மகாலிங்கம் தொடர்பாகவும் நந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் - திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப்பலகையில் ஆலய வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட மகாலிங்கம் தொடர்பாகவும் நந்தி தொடர்பாகவும் எதுவும் குறிப்பிடாமல் வரலாறு மறைக்கப்பட்டுள்ளதாக 
நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>

மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று (13) நடைபெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
</p><p>மேலும், ஆலயச்சூழல் தொல்பொருளுடன் தொடர்புடையது என்பதில் மாற்றுக் கருத்தில்லை என குறிப்பிட்ட அவர் ஆலய நிர்வாகத்திற்கு தெரியாமல் குறித்த பெயர்ப்பலகையை நாட்டியது மட்டுமல்லாமல், அந்த பெயர்ப்பலகையில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகங்கள் கூட அந்த ஆலயத்தின் உண்மையான வரலாற்றை மாற்றியமைப்பதாக உள்ளதாக தெரிவித்தார்.
</p><p>
கௌதம புத்தரின் தலையை எடுத்து கொழும்பில் வைத்திருப்பதாக அந்தப் பெயர்ப்பலகையில் சில விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அங்கு கண்டெடுக்கப்பட்ட மகாலிங்கம் மற்றும் நந்தி தொடர்பான வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
இந்த நிலையில் குறித்த பெயர்ப்பலகை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/t7jfv7v-bY8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T10:52:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heat-wave-warning-several-districts-in-sri-lanka-1786704820"></link>
            <id>https://jvpnews.com/article/heat-wave-warning-several-districts-in-sri-lanka-1786704820</id>
            <summary type="text">&amp;nbsp;நாட்டின் பல மாவட்டங்களில் இன்று கவனத்திற்கொள்ள வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நாட்டின் பல மாவட்டங்களில் இன்று கவனத்திற்கொள்ள வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
இதன்படி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இந்த நிலைமை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bec131db-dcdd-4b3e-9790-063be9796180/26-6a7ef3b59edf8.webp' /></p><h2>&nbsp;39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரிக்கக்கூடும்</h2><p>
</p><p>
குறித்த மாவட்டங்களில் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை, சுமார் 39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அதிக வெப்பமான காலநிலை காரணமாக நீரிழப்பு, உடல் சோர்வு மற்றும் வெப்பத்தால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுகாதாரத் தரப்பினர் எச்சரித்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>
இதனால், பகல் நேரங்களில் வெளிப்புறங்களில் மேற்கொள்ளப்படும் கடுமையான உடல் உழைப்பு நடவடிக்கைகளை முடிந்தவரை மட்டுப்படுத்துமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
 உடலில் நீரிழப்பு ஏற்படாத வகையில் போதுமான அளவு தண்ணீர் அருந்துவதுடன், அதிக வெப்பம் நிலவும் நேரங்களில் தேவையற்ற வகையில் வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
இதேவேளை, அதிக வெப்பநிலை தொடர்பில் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹங்சமால் வீரசூரியவும், பொதுமக்கள் தமது உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p>

குறிப்பாக, குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நீண்ட நேரம் வெளிப்புறங்களில் பணியாற்றுபவர்கள் அதிக வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் தரப்பினர் அறிவுறுத்துகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T10:51:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[எனக்கு அறவே பிடிக்காத விடயத்தை செய்ய ஜனாதிபதியே வற்புறுத்தினார்! கே.டி.லால்காந்த பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minister-k-d-lalkantha-election-statement-1786703047"></link>
            <id>https://tamilwin.com/article/minister-k-d-lalkantha-election-statement-1786703047</id>
            <summary type="text">எதிர்காலத்தில் கண்டி மாவட்டத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். 

கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்காலத்தில் கண்டி மாவட்டத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். </p><p>

கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>ஜனாதிபதியின் வற்புறுத்தல்</h2><p> 

மேலும் தெரிவிக்கையில், தாம் தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாகக் கூறினார். 

அத்துடன் நாட்டிற்கு சேவை செய்ய, ஒருவர் நாடாளுமன்றத்திற்குச் சென்று அரசியல் செய்ய வேண்டும். ஜனாதிபதி என்னை அவ்வாறு செய்ய வற்புறுத்தியதால், இந்த முறை நான் கண்டியில் வாக்குகள் கோரினேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cc3ce47-8829-4105-a5fd-5a7ae1a9eabf/26-6a7ef2146418e.webp' /></p><p> </p><p>

எனக்கு வாக்குகள் கேட்கும் வேலை அறவே பிடிக்காது. எனவே, எதிர்காலத்தில் கண்டி மாவட்டத்தில் வாக்குகள் கேட்கும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் நான் கண்டிக்கு சேவை செய்வேன். 

நான் இந்த கட்சியை ஒருபோதும் கைவிட மாட்டேன். இந்த கட்சியை விட்டு எத்தனை பேர் வெளியேறியிருக்கிறார்கள்? நாங்கள் நகரக்கூட இல்லை.</p><h2>அரசாங்கத்தை தொடர்ந்து நிலைநிறுத்தல்</h2><p> அதனால் தான் எங்கள் அரசாங்கம் இந்த நாட்டை தொடர்ந்து ஆண்டு வருகிறது. 

குறைந்தபட்சம் எங்களுக்கு சவால் விட யாராவது வரும் வரை, வேறு வழியில்லை. சரியான எதிர்க்கட்சி இருக்கிறதா? எனவே, இந்த நாட்டில் எங்கள் அரசாங்கத்தை நாங்கள் தொடர்ந்து நிலைநிறுத்த முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/834b3ec2-3844-4505-9b78-61dc4ec41f63/26-6a7ef2153a547.webp' /></p><p> </p><p>சில சமயங்களில் ஜனாதிபதி மாறலாம். 

அதிகாரப்பூர்வ நிலைப்பாடுகள் மாறக்கூடும். ஆனால் எங்கள் அரசாங்கம் மாறாது. அதுதான் உண்மையான நிலைமை. </p><p>கோட்ட எல்லை நிர்ணயப் பிரச்சினை தீர்க்கப்பட்டவுடன், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவோம். 

எதிர்காலத்தில், இந்த மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் பல திட்டங்களை நாங்கள் செயல்படுத்துவோம் என கூறினார்.</p>]]></content>
            <updated>2026-08-14T10:47:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை : 740 பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-arrested-740-suspects-1786701486"></link>
            <id>https://tamilwin.com/article/police-arrested-740-suspects-1786701486</id>
            <summary type="text">நாடு முழுவதும் போதைப்பொருள் பரவலைத் தடுப்பதற்காக இலங்கை பொலிஸாரினால் தொடங்கப்பட்ட &#039;ஒன்றிணைந்த தேசம் - தேசிய இயக்கம்&#039; என்ற பிரசாரத்தின் கீழ், நேற்று(13...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு முழுவதும் போதைப்பொருள் பரவலைத் தடுப்பதற்காக இலங்கை பொலிஸாரினால் தொடங்கப்பட்ட 'ஒன்றிணைந்த தேசம் - தேசிய இயக்கம்' என்ற பிரசாரத்தின் கீழ், நேற்று(13.08.2026) மொத்தம் 740 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.</p><p>

 

கடந்த ஆண்டு அக்டோபர் 30 அன்று தொடங்கப்பட்ட இந்த பிரசாரம், நாடு முழுவதும் போதைப்பொருட்களுக்கான தேவையைக் குறைப்பது, போதைக்கு அடிமையானவர்களை மறுவாழ்வுக்கு உட்படுத்துவது மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தைத் தடுப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
</p><h2>தடுப்புக் காவல் உத்தரவு</h2><p>
 

அதன்படி, பொலிஸார் நேற்று சந்தேக நபர்களைக் கைது செய்ததோடு, இந்த நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு எதிராக சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளும் தொடங்கப்பட்டுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ebf84c3-8831-45bb-86a2-0999852d0af6/26-6a7ef13a9a828.webp' /></p><p>மேலதிக விசாரணைகளை எளிதாக்கும் வகையில் எட்டு சந்தேக நபர்களுக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவுகளைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், மற்ற நான்கு சந்தேக நபர்கள் புனர்வாழ்வுக்காக அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T10:46:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டுக்குள் கடத்தல்காரர் ஒருவர் வருவதாக கிடைத்த தகவல்: சுங்க அதிகாரிகள் கண்ட காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/japan-customs-seized-alligator-lizard-from-mexican-1786704362"></link>
            <id>https://news.lankasri.com/article/japan-customs-seized-alligator-lizard-from-mexican-1786704362</id>
            <summary type="text">ஜப்பானுக்குள் நுழையும் கடத்தல்காரர் ஒருவர் குறித்து சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.


மெக்சிகோ நாட்டவர் ஒருவர் தொடர்பில் ஜப்பான் அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானுக்குள் நுழையும் கடத்தல்காரர் ஒருவர் குறித்து சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
</p><p>

மெக்சிகோ நாட்டவர் ஒருவர் தொடர்பில் ஜப்பான் அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில் சம்பந்தப்பட்ட நபரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.</p><h3>

சுங்க அதிகாரிகள் கண்ட காட்சி</h3><p>

டேனியல் (Daniel Isaac Velasco Baltazar, 23) என்னும் அந்த நபருடைய உடைமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்த நிலையில், அவர் தனது சூட்கேஸ் ஒன்றிற்குள், சட்டைகளுக்குள் எதையோ மறைத்துவைத்திருந்தது தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/137fd4fd-ceab-44e5-8757-341070e34575/26-6a7ef1ec369f8.webp' /></p><p>

அது என்ன என்று பார்க்கும்போது, சட்டைகளுக்குள் சில சாக்ஸ்கள் இருந்துள்ளன. </p><p>அந்த சாக்ஸ்களுக்குள் சுமார் 200 அரிய வகை உயிரினங்களை மறைத்துவைத்து அவர் கொண்டுவந்தது தெரியவந்துள்ளது.
</p><p>
Mexican alligator lizards முதலான அரியவகை பல்லிகளை அவர் மெக்சிகோவிலிருந்து ஜப்பானுக்கு கொண்டுவந்துள்ளார்.&nbsp;</p><p></p><p>
அவற்றை 3 முதல் 4 பவுண்டுகள் கொடுத்து வாங்கியதாகவும், அவை ஜப்பானில் அபூர்வம் என்பதால், 520 பவுண்டுகள் வரை விலை போகும் என்றும் டேனியல் கூறியுள்ளார்.
</p><p>
விடயம் என்னவென்றால், அவற்றில் சில அருகி வரும் நிலையிலுள்ள உயிரினங்கள். அவற்றை எல்லை தாண்டி இன்னொரு நாட்டுக்குக் கொண்டு செல்லவேண்டுமானால், அதற்கு உரிய அனுமதி பெறவேண்டும்.
</p><p>
ஆனால், டேவிட் முறையான அனுமதி இல்லாமல் அவற்றை ஜப்பானுக்குள் கொண்டு செல்ல முயன்றதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T10:46:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[The End of Oak Street: திரை விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/the-end-of-oak-street-movie-review-1786701786"></link>
            <id>https://cineulagam.com/article/the-end-of-oak-street-movie-review-1786701786</id>
            <summary type="text">டைனோசர் படங்கள் என்றாலே சிறுவர்கள் முதல் பெரியர்வர்கள் வரை கொண்டாடக்கூடிய வகையில் இருக்கும்; அந்த வகையில் ஆன்னே ஹாத்வே நடிப்பில் வெளியாகியுள்ள The End...</summary>
            <content type="html"><![CDATA[<p>டைனோசர் படங்கள் என்றாலே சிறுவர்கள் முதல் பெரியர்வர்கள் வரை கொண்டாடக்கூடிய வகையில் இருக்கும்; அந்த வகையில் ஆன்னே ஹாத்வே நடிப்பில் வெளியாகியுள்ள The End of Oak Street ஹாலிவுட் திரைப்படம் நம்மை கவர்ந்ததா என்று பார்ப்போம் வாங்க.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/898e9b5d-3247-4be0-a158-101456f86d62/26-6a7ee7ddc56fb.webp' /></p><h2>கதைக்களம் </h2><p>

1982ஆம் ஆண்டில் நாவலாசிரியரான டெனிஸ் பிளாட் (ஆன்னே ஹாத்வே) தனது கணவர் கிரேக் பிளாட், மகள் ஆட்ரே மற்றும் மகன் பிரையன் ஆகியோருடன் ஓக் வீதியில் வசித்து வருகிறார்.

அவருக்கும் அவரது கணவருக்கு இடையே விரிசல் உள்ளதால், இருவரும் விவாகரத்து குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். </p><p>

இவரது தனது நாவலை தொகுக்க ஹடில்ஸ்டனின் வீட்டிற்கு செல்கிறார். அங்கு நாவல் குறித்த விவாதம் நடந்த பின், தன் வீட்டுத் தோட்டத்தில் மர்மமான செடி ஒன்று முளைத்திருப்பதாக ஹடில்ஸ்டன் டெனிஸிடம் காட்டுகிறார். 

அது இரண்டு நாட்களில் திடீரென இவ்வளவு பெரிதாக வளர்ந்திருப்பதாக அவர் கூற, டெனிஸ் நூலகத்திற்கு சென்று அந்த செடி குறித்த தகவலை தேடுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13f70395-90b1-4f3f-bb86-4de2f4b55233/26-6a7ee7df40525.webp' /></p><p> 

அப்போது அது 20,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று தெரியவர டெனிஸ் குழப்பமடைகிறார். மறுநாள் அவரது பக்கத்துக்கு வீட்டின் தோட்டத்தில் அடையாளம் தெரியாத விலங்குகளின் கழிவுக் குவியல் இருப்பது பிரச்சனையாகிறது.

அதே நேரத்தில் சூரியப் பிழம்புகளின் செயல்பாடு அதிகரித்துள்ளதாக வானொலி ஒலிபரப்புகள் தெரிவிக்க, ஓக் வீதியை ஒரு பெரிய வெள்ளை ஒளி சூழ்ந்துகொள்கிறது.</p><p> 

அதன் விளைவாக இரவில் மின்சாரம் துண்டிப்பாகிறது, ரேடியோ மற்றும் தொலைபேசி வேலை செய்யவில்லை. மறுநாள் டைனோசர்கள் உள்ளிட்ட விசித்திர உயிரினங்கள் அங்கு மனிதர்களை தாக்குகின்றன. 

அந்த டைனோசர்கள் எப்படி வந்தன? அவற்றிடம் இருந்து டெனிஸ் தனது குடும்பத்துடன் எப்படி தப்பித்தார்? என்பதே மீதிக்கதை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcf1acab-7dd1-49d2-ac2b-579c5da3b639/26-6a7ee7dfee381.webp' /></p><h2>படம் பற்றிய அலசல் </h2><p>

It Follows திரைப்படத்தை இயக்கிய டேவிட் ராபர்ட் மிட்செல் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். 

நிதானமாக ஆரம்பிக்கும் திரைக்கதை, சில திகிலான மொமெண்ட்களுடன் வேகமெடுக்கிறது. </p><p>

டைனோசர் எப்போது என்ட்ரி கொடுக்கும் என்று நம்மை ஒரு கட்டம் வரை இயக்குநர் காத்திருக்க வைக்கிறார். 

ஓக் வீதிக்குள் டைனோசர்கள் வந்த பின்னர் மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் காட்சிகள் மிரள வைக்கின்றன. 

கிளைமேக்ஸில் ஹீரோயினின் குடும்பம் எப்படி தப்பித்தது என்பதை காட்டியது செம ஐடியா.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f77c5cbe-8fd7-4f88-9008-b98a082bb133/26-6a7ee8cec016f.webp' /></p><p>விசித்திர உயிரினங்கள் மனிதர்களை வேட்டையாடுவதை இன்னும் இயக்குநர் கட்டியிருக்கலாம்; மாறாக ஹீரோயினின் குடும்பம் மட்டுமே சண்டையிடுவதை காட்சிப்படுத்தியிருக்கிறார்.

மேலும், பாதி படத்திற்கு மேல் ஹீரோயின் மற்றும் அவரது குடும்பத்தினர் புத்திசாலித்தனமாக கையாள்வதாக காட்டியிருக்கலாம். </p><p>

நடிகர்களைப் பொறுத்தவரை ஆன்னே ஹாத்வே படம் முழுக்க கலக்கியிருக்கிறார். எமோஷனல் காட்சிகளில் நெகிழ வைக்கும் அவர், காமெடியிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். 

அவரது கணவராக நடித்திருக்கும் எவன் மெக்கிரெகோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9391da66-24db-46ed-bb0b-f2027dd63c12/26-6a7ee8cf83470.webp' /></p><p></p><p>மைசி ஸ்டெல்லா, கிறிஸ்டியன் கான்வெரி இருவரும் அக்கா, தம்பி பாசத்தை காட்டும் வகையில் நன்றாக நடித்துள்ளனர்.

ஸ்டார்பக் என்கிற அவர்கள் வளர்க்கும் நாய் கூட ஒரு காட்சியில் கைத்தட்டலை பெறுகிறது. குழந்தைகளுடன் பார்க்கக்கூடிய படத்தில் உறுத்தலான காட்சி ஒன்று வருவது நெருடல்.
</p><p>
டெக்னிக்கலாக படம் சிறப்பாகவே உள்ளது; குறிப்பாக சவுண்ட்டிங் பிரமாதம். 1980 காலகட்ட அமெரிக்கர்களின் வாழ்க்கை நேர்த்தியாக காட்டப்பட்டுள்ளது.

ஜான் அலெக்ராட்டின் படத்தொகுப்பு கச்சிதம். மைக்கேல் கியாச்சினோவின் பின்னணி இசை மிரட்டல்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fafd660-1bcb-4302-b2cf-c5b56d27b9be/26-6a7ee8d03af6a.webp' /></p><p><b><u>க்ளாப்ஸ்</u></b></p><p> 

ஆன்னே ஹாத்வேயின் எதார்த்த நடிப்பு </p><p>

நடிகர்களின் பங்களிப்பு</p><p> 

கிளைமேக்ஸ் </p><p>

சவுண்ட் எபெக்ட்ஸ் </p><p><b><u>

பல்ப்ஸ் </u></b></p><p>

இரண்டாம் பாதியில் இன்னும் சுவாரஸ்யமாக எதையாவது காட்சிப்படுத்தியிருக்கலாம்.</p><p>

மொத்தத்தில் The End of Oak Street விசித்திர உலகமாக மிரள வைக்கிறது. திரை அனுபவத்திற்காக கண்டிப்பாக பார்க்கலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e252dc6-b9aa-4c70-a527-71eeb58b9d88/26-6a7ee7de83119.webp' /></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-14T10:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷாய் ஹோப்பின் சரவெடி ஆட்டம்: கயானா அமேசான் வாரியர்ஸ் அபார வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/shai-hope-smashing-56-not-out-guyana-beat-jamaica-1786704094"></link>
            <id>https://news.lankasri.com/article/shai-hope-smashing-56-not-out-guyana-beat-jamaica-1786704094</id>
            <summary type="text">கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில், கயானா அமேசான் வாரியர்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஜமைக்கா கிங்ஸ்மெனை வீழ்த்தியது. 

சபீனா பார்க் மைதானத்தில் நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில், கயானா அமேசான் வாரியர்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஜமைக்கா கிங்ஸ்மெனை வீழ்த்தியது. </p><p>

சபீனா பார்க் மைதானத்தில் நடந்த டி20 போட்டியில், ஷாய் ஹோப்பின் அதிரடி ஆட்டத்தில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜமைக்கா கிங்ஸ்மெனை வீழ்த்தியது.&nbsp;</p><h2>ஹென்ரிக்ஸ் 40 ஓட்டங்கள் </h2><p>

கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் ஜமைக்கா கிங்ஸ்மென் அணிகளுக்கு இடையிலான போட்டி கிங்ஸ்டனின் சபீனா பார்க்கில் நடந்தது. 

முதலில் ஆடிய ஜமைக்கா கிங்ஸ்மென் 117 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a917168-e14e-424a-8a83-c7a44cb98dba/26-6a7ef0e19ba6e.webp' />&nbsp;</p><p></p><p> ரீஸா ஹென்ரிக்ஸ் 40 (32) ஓட்டங்கள் எடுத்தார். 

ரோவ்மன் பௌல் 24 (17) ஓட்டங்களும், கிர்க் மெக்கென்சி 16 ஓட்டங்களும் எடுத்தனர். மொஹம்மது நபி 4 விக்கெட்டுகளும், ஷாமர் ஜோஸப் மற்றும் இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.</p><p> 

பின்னர் ஆடிய கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 14.1 ஓவர்களிலேயே 118 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.</p><p> 

விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் (Shai Hope) ஆட்டமிழக்காமல் 41 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 56 ஓட்டங்கள் விளாசினார்.

4 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன் 19 ஓட்டங்கள் எடுத்த மொஹம்மது நபி ஆட்டநாயகன் விருது பெற்றார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95d054cb-239e-4898-ba9c-9f72754ede43/26-6a7ef0e0e742d.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72da24f3-89a8-46ea-9e0c-f5a25dec8ec3/26-6a7ef21abb580.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T10:39:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[8 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாடப்புத்தகங்கள் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/textbooks-worth-8-lakh-rupees-go-missing-1786704067"></link>
            <id>https://jvpnews.com/article/textbooks-worth-8-lakh-rupees-go-missing-1786704067</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாடப்புத்தகங்கள் மற்றும் பயிற்சிப் புத்தகத் தொகுதி வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாடப்புத்தகங்கள் மற்றும் பயிற்சிப் புத்தகத் தொகுதி விநியோக மையங்களுக்கு உரிய முறையில் ஒப்படைக்கப்படவில்லை எனத் தலங்கம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p> 

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் உயர் பெண் அதிகாரி ஒருவராலேயே இம்முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இசுருபாய கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட முதலாம் தரத்திற்கான 19,892 தமிழ் பயிற்சிப் புத்தகங்கள்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae60d167-f803-464e-8a63-9d03955187e1/26-6a7ef0c558fbc.webp' /></p><p> மற்றும் பாடப்புத்தகங்கள் உரிய முறையில் விநியோக மையங்களுக்கு கையளிக்கப்படாத சம்பவம் தொடர்பில் கடந்த 12 ஆம் திகதி தலங்கம பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.</p><p></p><p> </p><p>

குறித்த புத்தகத் தொகுதியைக் கொண்டு செல்வதற்காக, கல்வி வெளியீட்டுத் திணைக்களத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்ட நிறுவனத்திற்கு எடுத்துச் செல்ல கடந்த மே மாதம் 4 ஆம் திகதி அனுமதி பெறப்பட்டிருந்த போதிலும், அப்புத்தகங்கள் விநியோகிக்கப்படவிருந்த கிழக்கு மாகாணத்திலுள்ள 12 மையங்களுக்கு அவை உரிய முறையில் விநியோகிக்கப்படவில்லை.</p><p></p><p> </p><p>

இவ்வாறு உரிய முறையில் விநியோகிக்கப்படாத புத்தகங்கள் முதலாம் தரத்தின் மூன்றாம் தவணைக்குரிய புத்தகத் தொகுதியாகும் என்பதுடன், இதன் பெறுமதி சுமார் 8 இலட்சம் ரூபாயாகும். 

சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-14T10:38:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்காட்லாந்தில் 3 மாத குழந்தையை ஹேர் ட்ரையர் பயன்படுத்தி கொன்ற தாய்: நீதிமன்றம் விதித்த தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/scotland-mom-killed-his-3-month-old-daughter-1786703857"></link>
            <id>https://news.lankasri.com/article/scotland-mom-killed-his-3-month-old-daughter-1786703857</id>
            <summary type="text">ஸ்காட்லாந்தில் 3 மாத குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தாய்க்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 3 மாத குழந்தையை கொன்ற தாய்
ஸ்காட்லாந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்காட்லாந்தில் 3 மாத குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தாய்க்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2> 3 மாத குழந்தையை கொன்ற தாய்</h2><p>
ஸ்காட்லாந்தின் அபெர்டீன்ஷையர் என்ற பகுதியில் உள்ள பீட்டர்பெத் நகரில் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 30 திகதி நடைபெற்ற சம்பவத்தில் பெற்ற தாயே தன்னுடைய 3 மாத குழந்தையை வீட்டு உபயோக ஹேர் ட்ரையர்(HairDryer) மூலம் அதிக வெப்பத்தை செலுத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef2150b8-e245-4161-b0d7-d57c4cbf7046/26-6a7eeff2a06a6.webp' /></p><p>ஹேர் டிரையர் மூலம் வெளியான அதிகப்படியான வெப்பத்தினால் கைக்குழந்தையான டாலியா ரோஸுக்கு கொடூரமான காயம் ஏற்பட்டு இருந்தது.</p><p>அவசர மருத்துவ பிரிவினர் அளித்த தகவலை அடுத்து ஸ்காட்லாந்து பொலிஸார் கடந்த நவம்பரில் தாய் கோர்ட்னி கார்ட்ஷோர்(Courtney Gartshore) என்ற பெண்ணை கைது செய்து வழக்குப் பதிவு செய்து இருந்தனர்.</p><h2> &nbsp;தண்டனை வழங்கிய நீதிமன்றம்</h2><p>
பல கட்ட விசாரணைக்கு பிறகு ஜூலை மாதம் அபெர்டீன் உயர் நீதிமன்றத்தில் கோர்ட்னி கார்ட்ஷோர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6eb6315-2a29-47d1-b7d3-12654e725008/26-6a7eeff351df6.webp' /></p><p> இதையடுத்து எடின்பர்க் உயர் நீதிமன்றம் அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.</p><p> பாதுகாப்பாக இருக்க வேண்டிய பச்சிளம் குழந்தை தன்னுடைய பெற்றோராலேயே கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக துப்பறியும் ஆய்வாளர் ஜேம்ஸ் காலண்டர் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T10:37:49+00:00</updated>
        </entry>
    </feed>
