<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-24T22:16:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட நறுமணப் பொருட்கள் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/illegally-imported-spices-seized-in-sri-lanka-1787606968"></link>
            <id>https://jvpnews.com/article/illegally-imported-spices-seized-in-sri-lanka-1787606968</id>
            <summary type="text">இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 264 கிலோகிராம் உலர்ந்த இஞ்சி மற்றும் 69 கிலோகிராம் ஏலக்காய் தோல்கள் உள்ளிட்ட நறுமணப் பொருட்கள் கற்பிட்டி, பத்தல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 264 கிலோகிராம் உலர்ந்த இஞ்சி மற்றும் 69 கிலோகிராம் ஏலக்காய் தோல்கள் உள்ளிட்ட நறுமணப் பொருட்கள் கற்பிட்டி, பத்தலங்குண்டுவ – சின்ன குண்டு கடற்கரைப் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>


இலங்கை கடற்படையினர்&nbsp; மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்தப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef8283d8-08e6-410b-a8fb-15b74ae534e7/26-6a8cb7bde665b.webp' /></p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>


வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் செயற்படும் இலங்கை கடற்படைக் கப்பலால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நிலையில் காணப்பட்ட 13 பொதிகள் சோதனையிடப்பட்டன.
</p><p>


இதன்போது, அவற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 264 கிலோகிராம் உலர்ந்த இஞ்சி மற்றும் 69 கிலோகிராம் ஏலக்காய் தோல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>


சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட நறுமணப் பொருட்கள் மீட்புசட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட நறுமணப் பொருட்கள் மீட்புகைப்பற்றப்பட்ட நறுமணப் பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T22:00:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு ஆண்டுத் திட்டம் தயார்... ட்ரம்பின் திட்டம் தோல்வி: ஈரான் வெளிப்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/to-counter-us-sanctions-1787608940"></link>
            <id>https://news.lankasri.com/article/to-counter-us-sanctions-1787608940</id>
            <summary type="text">Two-Year Plan To Counter US Sanctions: அமெரிக்கத் தடைகளை எதிர்கொள்ள இரண்டு ஆண்டுத் திட்டம் உள்ளது என ஈரான்.
அமெரிக்கா மற்றொரு தோல்வியை எதிர்பார்க்கலா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Two-Year Plan To Counter US Sanctions: அமெரிக்கத் தடைகளை எதிர்கொள்ள இரண்டு ஆண்டுத் திட்டம் உள்ளது என ஈரான்.
</p><p>அமெரிக்கா மற்றொரு தோல்வியை எதிர்பார்க்கலாம் என ஈரான் பொருளாதார அமைச்சர் அலி மதனிசாதே திங்களன்று கணித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/266d5c24-45a7-4b19-9440-d60a75613c96/26-6a8cbf6e405eb.webp' /></p><p>
</p><p>அமெரிக்காவின் புதிய தடைகளை எதிர்கொள்வதற்கு ஈரான் நிர்வாகம் ஒரு ஈராண்டுத் திட்டத்தை வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். </p><p>ஈரானிய மக்கள் மற்றும் அதிகாரிகளின் உறுதியைச் சோதிக்க அவர்களால் முடிந்த அனைத்தையும் செய்தார்கள், ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்கள் தோல்வியுற்றார்கள். </p><p>அவர்கள் மற்றுமொரு தோல்வியைச் சந்திக்க விரும்பியது போல் தெரிகிறது என்று மதனிசாதே அரசு தொலைக்காட்சியிடம் கூறினார். </p><p>மேலும், நாங்கள் இந்தத் தடைகள் தொடர்பில் நீண்ட காலமாக காத்திருந்தோம், மட்டுமின்றி இந்த நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இருந்ததுடன், ஒரு இரண்டாண்டுத் திட்டத்தையும் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.</p><p></p><p> </p><p>எண்ணெய் ஏற்றுமதி மீதான அமெரிக்காவின் தடையால் ஏற்பட்ட மிகையான பணவீக்கம் மற்றும் அந்நியச் செலாவணி வருவாய் பற்றாக்குறை ஆகியவற்றின் விளைவாக, ஈரானின் பொருளாதாரம் மீண்டும் ஒருமுறை சரிவின் விளிம்பில் இருப்பதாக வெள்ளை மாளிகை கருதுகிறது. </p><p>கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி ஈரானுக்கு எதிராகக் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்ததிலிருந்து 4.5 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ள ரியால் நாணயம், திங்களன்று கட்டுப்பாடற்ற சந்தையில் ஒரு டொலருக்கு 1.992 மில்லியன் என்ற விகிதத்தில் வர்த்தகமானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52b866fd-5dfd-48fb-9de4-cc0d3cf04e79/26-6a8cbf6ee5d27.webp' /></p><p> </p><p>இதனிடையே, ஈரான் முற்றிலுமாகச் சரிந்து கொண்டிருக்கிறது என ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். ஆனால், ஈரான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏதோ ஒரு வகையான அமெரிக்காவின் உச்சபட்ச பொருளாதார அழுத்தத்தின் கீழ் இருந்து வந்துள்ளதுடன், இதுவரை அந்த நாடு தப்பிப் பிழைத்துள்ளது. </p><p>இந்த நிலையில், அமெரிக்கா இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்தால், பூகம்பம் போன்ற பதிலடியுடன் ஈரான் பதிலளிக்கும் என்று அந்நாட்டின் பாதுகாப்புத் தலைவர் மொஹ்சென் ரெஸாயி கூறியுள்ளார். </p><p>அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் நடவடிக்கையில் சேர வேண்டாம் என ஈரானின் வளைகுடா அண்டை நாடுகளுக்கும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T21:59:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்ரான் கானுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க கிரிக்கெட் முன்னோடிகள் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imran-khan-not-shifted-to-private-hospital-1787604095"></link>
            <id>https://tamilwin.com/article/imran-khan-not-shifted-to-private-hospital-1787604095</id>
            <summary type="text">பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் தலைவருமான
இம்ரான் கானிற்கு மனிதநேய அடிப்படையிலான சிகிச்சையும் முறையான மருத்துவப்
பரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் தலைவருமான
இம்ரான் கானிற்கு மனிதநேய அடிப்படையிலான சிகிச்சையும் முறையான மருத்துவப்
பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள்
தலைவர்கள் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 21 முன்னாள் கிரிக்கெட் தலைவர்கள்
கையொப்பமிட்டு பாகிஸ்தான் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், சிறையிலுள்ள
73 வயதான இம்ரான் கானின் உடல்நிலை குறித்து கவலை வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>கடிதத்தில் கையெழுத்திட்ட முன்னாள் வீரர்கள்&nbsp;</h2><p>

சுயாதீன மருத்துவக் குழு மூலம் அவரது உடல்நிலையை பரிசோதிக்க அனுமதிப்பதுடன்,
அவரது குடும்பத்தினர் அவரை வாராந்தம் சந்திப்பதற்கான வாய்ப்பை தடையின்றி வழங்க
வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p>இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான சுனில் கவாஸ்கர், கபில் தேவ்,
திலீப் வெங்சர்க்கார் மற்றும் இலங்கையின் முன்னாள் அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க
உட்பட பல முன்னணி சர்வதேச வீரர்கள் இந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13e77c0d-046a-4d2d-b4b5-ca1d09fe7005/26-6a8cac815556d.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் எவரும் இதில்
கையொப்பமிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>
பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கடந்த மூன்று வருடங்களாக சிறை
வைக்கப்பட்டுள்ள இம்ரான் கானை, இஸ்லாமாபாத்திலுள்ள தனியார் வைத்தியசாலை
ஒன்றிற்கு மாற்றுமாறு அந்நாட்டு உயர் நீதிமன்றம் அண்மையில்
உத்தரவிட்டிருந்தது.
</p><p>
எனினும், அவர் அரசு வைத்தியசாலை ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும்
சிறைக்கு அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T21:41:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடிய இறக்குமதி வாகனங்கள் அனைத்திற்கும் 50 வீத வரி! ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-threat-impose-tariffs-on-all-canada-vehicles-1787605959"></link>
            <id>https://ibctamil.com/article/trump-threat-impose-tariffs-on-all-canada-vehicles-1787605959</id>
            <summary type="text">கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து கார்கள், இலகுரக மற்றும் கனரக லொரிகள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் உலோகங்கள்(எஃகு) மீதான அமெரிக்க இறக்குமத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து கார்கள், இலகுரக மற்றும் கனரக லொரிகள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் உலோகங்கள்(எஃகு) மீதான அமெரிக்க இறக்குமதி வரியை 2027 ஜனவரி 1 முதல் 50 வீதமாக உயர்த்தப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
</p><p>
கடந்த வாரம் அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்து வருகிறது.
</p><p>
இந்நிலையில், அமெரிக்காவில் வாகனங்களை உற்பத்தி செய்தால் பூஜ்ஜிய வீத வரியே விதிக்கப்படும் என்றும், கனடாவை இனி ஒரு மாநிலத்தைப் போல அமெரிக்கா நடத்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். &nbsp;</p><p></p><h2>ஒப்பந்த முறிவு</h2><p> 

முன்னதாக முன்வைக்கப்பட்டிருந்த ஒப்பந்தத்தில், கனடிய கார்கள் மற்றும் இலகுரக லொரிகள் மீதான வரியை 25 வீதத்திலிருந்து 15 வீதமாக குறைக்கவும், அலுமினியம் மற்றும் எஃகு மீதான வரியை 50 வீதத்திலிருந்து 25% வீதமாக குறைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6bc8f49-7954-423c-827c-b05baae85f6b/26-6a8cba5a3b8c9.webp' /></p><p> </p><p>

இருப்பினும், நடுத்தர மற்றும் கனரக லொரிகளுக்கான வரி விலக்குகள் உள்ளிட்ட பல கருத்து வேறுபாடுகள் காரணமாக வெள்ளிக்கிழமை அன்று பேச்சுவார்த்தை முறிந்தது.</p><p>அதனை தொடர்ந்து ஃபோர்டு, ஸ்டெல்லாண்டிஸ், ஜெனரல் மோட்டார்ஸ், டொயோட்டா மற்றும் ஹோண்டா போன்ற முக்கிய நிறுவனங்களின் பங்குகள் பங்குச் சந்தையில் சரிவைக் கண்டன.</p><h2>கனடாவின் பதிலடி</h2><p>
</p><p>
இவ்வாறானதொரு பின்னணியில், ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடியாக, செப்டம்பர் 8 முதல் $20 பில்லியன் மதிப்பிலான சில அமெரிக்கப் பொருட்கள் மீது இறக்குமதி வரிகளை விதிக்க கனடாவும் முடிவு செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d580cbde-68ab-4f97-b0fd-09a7f40ce384/26-6a8cba5ae6e9e.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, அமெரிக்கர்கள் கனடாவின் இறையாண்மையை மதித்தால் மட்டுமே மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு வர முடியும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank" style=""><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T21:40:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாழ்நாள் முழுவதும் பிச்சை எடுத்த மூதாட்டி ; இறந்த பின்னர் வீட்டிற்குள் காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lifelong-beggar-dies-shocking-discovery-found-1787595366"></link>
            <id>https://jvpnews.com/article/lifelong-beggar-dies-shocking-discovery-found-1787595366</id>
            <summary type="text">கர்நாடக மாநிலம் மந்தியா மாவட்டத்தில் வசித்து வந்தவர் நூர் என்கிற மூதாட்டி. இவர் கடந்த பல வருடங்களாகவே அந்த பகுதி மக்களிடம் பிச்சை எடுத்து வந்தார். 68 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கர்நாடக மாநிலம் மந்தியா மாவட்டத்தில் வசித்து வந்தவர் நூர் என்கிற மூதாட்டி. இவர் கடந்த பல வருடங்களாகவே அந்த பகுதி மக்களிடம் பிச்சை எடுத்து வந்தார்.</p><p> 68 வயதான நிலையில் வயது மூப்பு காரணமாக அவர் சமீபத்தில் மரணமடைந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/969e4dca-ff83-41c3-a094-f2c4f371105e/26-6a8c8a67b1daf.webp' /></p><h2>&nbsp;கோடிக்கணக்கில் பணம்?&nbsp;</h2><p>இவர் மரணமடைந்த பின் அவரின் வீட்டில் 30க்கும் மேற்பட்ட சாக்களில் நிறைய பணங்களை அவர் வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.</p><p> எண்ணிப் பார்த்ததில் அந்த தொகை ரூ.8.4 லட்சம் இருந்துள்ளது. தற்போது அந்த பணம் அவருடைய இரு சகோதரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

சகோதரர்களில் ஒருவர் 6 லட்சத்தை எடுத்துக்கொண்டார். மற்றவருக்கு கொடுத்த 2.40 லட்சத்தை அவர் மசூதிக்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறார். </p><p>மூதாட்டியின் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் இருந்ததாக முதலில் சமூகவலைத்தளங்களில் செய்தி பரவியது.</p><p> ஆனால், அது உண்மை இல்லை. சில்லறை, பணம் என மொத்தமாக சேர்த்து 8.40 லட்சம் இருந்ததாக தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T21:31:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு சமூக மறுவாழ்வுத்திட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/social-rehabilitation-program-for-drug-users-1787604941"></link>
            <id>https://tamilwin.com/article/social-rehabilitation-program-for-drug-users-1787604941</id>
            <summary type="text">போதைப்பொருள் பாவனையாளர்களை கைது செய்து சிறையில் அடைப்பதற்குப்பதில் அவர்களுக்கு சமூக மறுவாழ்வுத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் பாவனையாளர்களை கைது செய்து சிறையில் அடைப்பதற்குப்பதில் அவர்களுக்கு சமூக மறுவாழ்வுத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
</p><p>
இலங்கையின் சிறைச்சாலைகளில் அதிகரித்து வரும் நெரிசலைக் குறைப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில், பொலிஸ் திணைக்களத்தின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெறுவதற்கு நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழு கவனம் செலுத்தியுள்ளது.
</p><p>
நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், போதைப்பொருள் தொடர்பான கைது முதல் வழக்குத் தாக்கல் செய்வது வரையிலான செயல்முறைகளில் காணப்படும் தாமதங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><h2>மறுவாழ்வுத்திட்டம்</h2><p>

குறிப்பாக, அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகளைப் பெறுவதில் ஏற்படும் தாமதம் காரணமாக சந்தேகநபர்கள் நீண்ட காலம் விளக்கமறியலில் வைக்கப்படுவதும், இதனால் சிறைச்சாலைகளில் நெரிசல் அதிகரிப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7610d812-0422-4f2d-b88e-e336d7d7c1a4/26-6a8cb10cddda4.webp' /></p><p>

போதைப்பொருள் விற்பனையாளர்களை கைது செய்வதுடன் மட்டுப்படாமல், கடத்தல் வலைப்பின்னல்கள் மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றங்களைக் கண்டறிய நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p>

அதேவேளை, போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக சமூக அடிப்படையிலான மறுவாழ்வுத் திட்டங்களை வலுப்படுத்த வேண்டும் எனவும் ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T21:29:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்ற உணவுச் செலவு ரூபாய் 24 கோடி ; அநுர அரசிற்கு வலுக்கும் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/parliament-food-expenses-rise-1787606311"></link>
            <id>https://jvpnews.com/article/parliament-food-expenses-rise-1787606311</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர்களின் உணவு மற்றும் பானங்களுக்கான செலவினங்கள் 48 சதவீதத்தால் அதிகரித்துள்ளபோதிலும், அரசாங்கமும் அதனுடன் தொடர்புடைய அமைச்சர்களும் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர்களின் உணவு மற்றும் பானங்களுக்கான செலவினங்கள் 48 சதவீதத்தால் அதிகரித்துள்ளபோதிலும், அரசாங்கமும் அதனுடன் தொடர்புடைய அமைச்சர்களும் எந்தவித பதிலும் அளிக்காமல் மௌனம் காத்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>

கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e618164-3322-4b07-84f2-8a4975a363b6/26-6a8cb5290b83a.webp' /></p><h2>வருடாந்த செயல்திறன் அறிக்கை</h2><p>


2025ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத்தின் வருடாந்த செயல்திறன் அறிக்கையின்படி, உணவு மற்றும் பானங்களுக்கான செலவு 48 சதவீதத்தால் அதிகரித்து, 24.7 கோடி ரூபாயைக் கடந்துள்ளது.</p><p>

இதில் குடிநீர் போத்தல்களுக்காக மட்டும் சுமார் 2 இலட்சம் ரூபா வரை செலவிடப்பட்டுள்ளது.</p><p> தினசரி உணவு உட்கொள்பவர்களின் எண்ணிக்கை 1,200 வரை உயர்ந்துள்ளதுடன், விருந்தினர்களுக்கான உணவுச் செலவு 109 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.</p><p></p><p>
</p><p>&nbsp;தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாடாளுமன்ற உணவகத்தை மூடிவிட்டு, வீட்டிலிருந்தே உணவுப் பொட்டலங்களைக் கொண்டுவந்து உட்கொள்வோம் என்றும் மக்கள் பணத்தைச் சேமிப்போம் என்றும் கூறினார்கள்.</p><p> ஆனால் இன்று அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது 24.7 கோடி ரூபாவை நாடாளுமன்ற உணவுக்காகச் செலவிட்டிருப்பது எந்த வகையில் நியாயமாகும்? என கேள்வியெழுப்பினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T21:18:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு- கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்ய திட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/plan-to-develop-colombo-fort-as-a-tourism-zone-1787603403"></link>
            <id>https://tamilwin.com/article/plan-to-develop-colombo-fort-as-a-tourism-zone-1787603403</id>
            <summary type="text">இலங்கை சுற்றுலாத்துறை மேம்பாட்டின் ஒரு அம்சமாக கொழும்பு கோட்டையை புதிய சுற்றுலா வலயமொன்றாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சுற்றுலாத்துறை மேம்பாட்டின் ஒரு அம்சமாக கொழும்பு கோட்டையை புதிய சுற்றுலா வலயமொன்றாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
</p><p>
உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் செயல்படுத்தப்படும் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
</p><p>
இந்நிலையில், கொழும்பு கோட்டை சுற்றுலா வலய அபிவிருத்தி மற்றும் இந்நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் ஆகியவை தொடர்பாக, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உலக வங்கியின் முகாமையாளர் Gevorg Sargsyan உட்பட தூதுக்குழுவினருக்கும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.</p><h2>சுற்றுலாத் துறை</h2><p>

கொழும்பு கோட்டையின் வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதுடன், சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பாக, இதற்கு முன்னர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஆராய்ந்த விடயங்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54e5c1bc-f5ba-47fb-9c8c-30dd0e35b424/26-6a8cad60999c8.webp' /></p><p>
</p><p>
இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கும் விவசாயம், துறைமுகங்கள், விநியோக சேவைகள் மற்றும் வலுசக்தி ஆகிய துறைகளில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைவதற்கும் தேவையான ஆதரவை வழங்கத் தயாராக உள்ளதாக உலக வங்கியின் பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்தனர்.
</p><p>
மேலும், கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் குறித்தும், இயற்கை அழகை அடிப்படையாகக் கொண்ட சுற்றுலாத்துறையை பிரபல்யப்படுத்துவதற்கும், வடக்கு மற்றும் கிழக்கில் சுற்றுலாத்துறையை முன்னேற்றுவதற்கும் வழங்கக்கூடிய பங்களிப்பு குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T20:47:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுடன் பொருளாதாரத் தொடர்புகளைக் கொண்ட நாடுகள் மீது நடவடிக்கை: அமெரிக்கா அச்சுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/countries-with-economic-ties-to-iran-1787604511"></link>
            <id>https://news.lankasri.com/article/countries-with-economic-ties-to-iran-1787604511</id>
            <summary type="text">US threatens severe sanctions: ஈரானுடன் பொருளாதாரத் தொடர்புகளைக் கொண்ட நாடுகள் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக அமெரிக்கா.
ஈரானுடன் பொருளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>US threatens severe sanctions: ஈரானுடன் பொருளாதாரத் தொடர்புகளைக் கொண்ட நாடுகள் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக அமெரிக்கா.
</p><p>ஈரானுடன் பொருளாதார உறவுகளைப் பேணிவரும் எந்தவொரு நாடு அல்லது அமைப்பு மீதும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1c6ebbb-fe6e-43d2-858c-d697ee2657a2/26-6a8cae222624c.webp' /></p><p>
</p><p>இதுவரை இராணுவ நடவடிக்கைகளால் சாதிக்க முடியாததை, பொருளாதார நடவடிக்கைகளின் மூலம் சாதிக்க முடியும் என ட்ரம்ப் நிர்வாகம் நம்புகிறது.</p><p> இருப்பினும், தனது நட்பு நாட்டுடனான தொடர்புகளைத் துண்டிக்குமாறு அமெரிக்கா கொடுக்கும் பொருளாதார அழுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள, ஈரானின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியான சீனாவை எதிர்கொள்வதில், ட்ரம்ப் நிர்வாகம் எந்த அளவிற்குத் தயாராக உள்ளது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. </p><p>இதற்கிடையில், அமெரிக்கா தலைமையிலான தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் பங்கேற்கும் எந்தவொரு நாட்டிற்கும் பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் சூளுரைத்துள்ளது.</p><p></p><p> </p><p>இதனிடையே, கடந்த ஆண்டு ஈரான் ஏற்றுமதி செய்த எண்ணெயில் சுமார் 80 சதவீதத்தை வாங்கிய சீனாவிற்கு எதிராகத் தடைகள் விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட்,
 அமெரிக்காவின் தடைகளுக்கு அப்பாற்பட்டவர் யாரும் இல்லை என்பதை இன்று நாங்கள் தெளிவாகத் தெரிவிக்க விரும்புகிறோம் என்றார். </p><p>ஈரானுக்கு பொருளாதார ரீதியாக உதவும் எந்த நாடும் குறிவைக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஈரானுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்பவர்களை அமெரிக்கா அடையாளம் கண்டுள்ளதாகவும், மீறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் உறவுகளைத் துண்டித்துக்கொள்ள காலக்கெடு வழங்கப்படும் அல்லது அமெரிக்கத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் பெசென்ட் கூறினார். </p><p>விதிக்கப்படும் காலக்கெடு நாடுகளின் தனிப்பட்ட சூழ்நிலைகளைப் பொறுத்து அமையும் என்று அவர் கூறியுள்ளார். மேலும், ஈரானுடனான தொடர்புகளை நிறுத்திக்கொள்ளுமாறு குறிப்பிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, உலகத் தலைவர்களுக்கு டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு வருவதாக பெசென்ட் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c42c17f4-088c-451e-b388-a850e252081b/26-6a8cae22d2403.webp' /></p><p> </p><p>ஆனால், சீனாவிடம் கோரிக்கை வைத்தாரா என்பது குறித்து பெசென்ட் விளக்கமளிக்க மறுத்துள்ளார். இதனிடையே, வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகம் செய்தியாளர்களிடம் கூறுகையில், </p><p>ஈரான் விவகாரத்தைப் பொறுத்தவரை, தடைகளும் அழுத்தங்களும் இப்பிரச்சினையைத் தீர்க்க உதவாது. சம்பந்தப்பட்ட தரப்பினர் பொறுப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அரசியல் மற்றும் இராஜதந்திர வழிகள் மூலம் இப்பிரச்சினையைத் தீர்க்கவும் சீனா அழைப்பு விடுக்கிறது என தெரிவித்துள்ளது.
</p><p>ஈரானின் உயர் தலைவர் அலி கமேனியின் மரணத்திற்குக் காரணமான தாக்குதலை அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது நடத்தி ஏறக்குறைய ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஈரான் மீதான இரண்டாம் நிலைத் தடைகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T20:45:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/illegal-sea-cucumber-smuggler-arrested-1787603916"></link>
            <id>https://jvpnews.com/article/illegal-sea-cucumber-smuggler-arrested-1787603916</id>
            <summary type="text">கிளிநொச்சி, கிரஞ்சி கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர், சுமார் 380 கடல் அட்டைகள் மற்றும் தெப்பப்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கிளிநொச்சி, கிரஞ்சி கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர், சுமார் 380 கடல் அட்டைகள் மற்றும் தெப்பப் படகுடன் நேற்று (24) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">


வடமத்திய கடற்படை கட்டளைக்கு உட்பட்ட இலங்கை கடற்படைக் கப்பலால் கிரஞ்சி கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab23d71b-71d8-4dcf-9638-f1e8a4c53c86/26-6a8cabce5182c.webp' /></p><h2 style="text-align: justify; ">சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p style="text-align: justify; ">






இதன்போது, கிரஞ்சி கடற்கரையை நோக்கி வந்த தெப்பப் படகொன்றை கடற்படையினர் சோதனையிட்டுள்ளனர். </p><p style="text-align: justify; ">அதில் அனுமதியின்றி கடல் அட்டைகளை தரைப்பகுதிக்கு கடத்திச் சென்ற 34 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், சுமார் 380 கடல் அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-24T20:45:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு பேரிடி! கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்த அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-announced-economic-sanctions-against-iran-1787603118"></link>
            <id>https://ibctamil.com/article/us-announced-economic-sanctions-against-iran-1787603118</id>
            <summary type="text">ஈரான் மற்றும் அதற்குத் துணைபுரியும் அமைப்புகளுக்கு எதிராகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் அறிவித்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மற்றும் அதற்குத் துணைபுரியும் அமைப்புகளுக்கு எதிராகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் அறிவித்துள்ளார்.</p><p>

உலகெங்கிலும் உள்ள ஈரானின் நிதித் தொடர்புகளுக்கு எதிராகப் பொருளாதாரத் தாக்குதலைத் தொடங்குவதாகவும், அந்த ஆட்சியைத் தாங்கிப் பிடிக்கும் ஒவ்வொரு பொருளாதார உயிர்நாடியையும் துண்டிப்பதே தங்களின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

ஈரான் அரசு தனது பொருளாதாரத்தைத் தக்கவைக்கப் பயன்படுத்தும் டிஜிட்டல் சொத்துக்கள், தொழில்நுட்பம், தங்கம், வான்வழிப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகிய ஐந்து முக்கியத் துறைகளைக் குறிவைத்து இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>அமெரிக்காவின் நிலைப்பாடு</h2><p>
</p><p>
மேலும், சுமார் 60 நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் கப்பல்கள் மீதும் அமெரிக்க திறைசேரி திணைக்களம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a11dd09-1958-49e2-b532-37e9c719a583/26-6a8cac151ec74.webp' /></p><p><i>Image Credit: Bloomberg</i></p><p>

இந்த மோதலில் தெளிவற்ற பகுதிகளில் இயங்குவது இனி ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்த பெசென்ட், அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்தவிதக் குழப்பமும் இருக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.</p><p>

ஈரானுடன் மேற்கொள்ளப்படும் எந்தவொரு பொருளாதார ஈடுபாடும், அதற்குப் பொறுப்பானவர்களை அமெரிக்க அதிகாரத்தின் முழுமையான நடவடிக்கைக்கு உட்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T20:45:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க ஒப்பந்தம் கனடாவிற்குப் பயனளித்திருக்காது –மார்க் கார்னி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/carney-says-canada-could-not-accept-1787590987"></link>
            <id>https://canadamirror.com/article/carney-says-canada-could-not-accept-1787590987</id>
            <summary type="text">அமெரிக்காவுடன் முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் கனேடிய மக்களுக்குப் எவ்வித பயனையும் அளித்திருக்காது என்பதால், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என கனேடியப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடன் முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் கனேடிய மக்களுக்குப் எவ்வித பயனையும் அளித்திருக்காது என்பதால், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என கனேடியப் பிரதமர் மார்க் கார்னி மீண்டும் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>கியூபெக்கின் லெவிஸ் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை வலியுறுத்தினார்.
</p><p>அமெரிக்காவுடனான எங்களது வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் முக்கிய நோக்கமே கனேடிய மக்களுக்கு மிகவும் பயனுள்ள மற்றும் சிறந்த ஒப்பந்தத்தைப் பெற்றுத் தருவதுதானே தவிர, எந்தவொரு காலக்கெடுவுக்குள்ளும் அல்லது எந்த நிபந்தனையிலும் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்வது அல்ல என தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f26eb10-0674-4779-82d3-cc13ce389a8a/26-6a8c79508b3a9.webp' /></p><p>
</p><p>கடந்த சில வாரங்களில் பேச்சுவார்த்தைகளில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்ட போதிலும், இறுதியில் அந்த வேகம் தலைகீழாக மாறியது. </p><p>அமெரிக்கா முன்வைத்த நிபந்தனைகளை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனதுடன், அவர்கள் கேட்ட சலுகைகளையும் எங்களால் வழங்க முடியாமல்போனது என பிரதமர் கார்னி தெளிவுபடுத்தினார்.
</p><p>அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 50 சதவீத வரி விதிப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, கனடாவின் தேசிய நலன்களை விட்டுக்கொடுக்க முடியாது என்ற தனது அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டை பிரதமர் மார்க் கார்னி இதன் மூலம் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T20:42:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முஸ்லிம் தலைமைத்துவத்தில் ஏற்பட்ட பலவீனமே கல்முனை வைத்தியசாலை குழப்பத்திற்கு காரணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kalmunai-hospital-issue-tamil-muslim-politics-1787589172"></link>
            <id>https://tamilwin.com/article/kalmunai-hospital-issue-tamil-muslim-politics-1787589172</id>
            <summary type="text">கல்முனை பிராந்திய கணக்காய்வு மற்றும் வைத்தியசாலை நிர்வாக எல்லைப்பிரிப்பு விவகாரத்தை சரியாக கையாள்வதில் ஏன் தவறு ஏற்பட்டது என்பது குறித்து 6 முஸ்லிம் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை பிராந்திய கணக்காய்வு மற்றும் வைத்தியசாலை நிர்வாக எல்லைப்பிரிப்பு விவகாரத்தை சரியாக கையாள்வதில் ஏன் தவறு ஏற்பட்டது என்பது குறித்து 6 முஸ்லிம் கட்சிகளின் கூட்டணி பதில் சொல்ல வேண்டும் என அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்ணம் தெரிவித்துள்ளார்.</p><p>அத்தோடு, இரு இனங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை தீர்பதற்கு முடியாத குறித்த அமைப்பினரால் எப்படி ஏனைய விவகாரங்களை கையாள முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், 6 கட்சிகளின் கூட்டு&nbsp; உருவாக்கப்பட்டதன் நோக்கம் சிதைக்கப்பட்டு விட்டது.சுமந்திரன் குறித்த கூட்டணியில் இணைந்ததன்&nbsp; நோக்கம் மாகாண சபைத் தேர்தல் ஒன்று நடைபெற்றால் இலங்கையில் தமிழர்களும், முஸ்லிம்களும் இணைந்து ஆட்சியை அமைப்பதாகும்.</p><p>ஆகவே, கிழக்கில் முரண்பாட்டை வளர்த்து விட்டு பிறகு எவ்வாறு இணைந்து ஆட்சியை உருவாக்கப் போகின்றீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>மேலும், முன்னாள் ஜனாதிபதி ரணிலும், சுமந்திரனும் கொண்டு வந்த எல்லை நிர்ணயத்தின் பின்னர் தேர்தல் என்கின்ற சட்டவரைபு தான் இன்று வரை மாகாண சபைத் தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை ஊடறுப்பு நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/XFtjdc0Sz_c" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T20:29:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொனால்ட் ட்ரம்பின் புதிய உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/donald-trump-s-new-order-1787599636"></link>
            <id>https://tamilwin.com/article/donald-trump-s-new-order-1787599636</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சிறுவர்களுக்கான தடுப்பூசி எண்ணிக்கையைக்
குறைக்கும் வகையில் இந்த மாதம் புதிய நிர்வாக உத்தரவு ஒன்றைப்
பிறப்பித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சிறுவர்களுக்கான தடுப்பூசி எண்ணிக்கையைக்
குறைக்கும் வகையில் இந்த மாதம் புதிய நிர்வாக உத்தரவு ஒன்றைப்
பிறப்பித்துள்ளார்.
</p><p>
ஒட்டிசம் குறைபாட்டிற்கு தடுப்பூசிகளே சாத்தியமான காரணி என்ற தமது
எண்ணத்திற்கு நிர்வாகம் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற ட்ரம்பின்
அதிருப்தியே இந்த உத்தரவுக்கு பிரதான காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இருப்பினும், இந்த ஒரு உத்தரவு மட்டும் அமெரிக்காவின் தடுப்பூசிக் கொள்கையில்
பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்றும், சுகாதாரச் செயலாளர் ரோபர்ட் எஃப்.
கென்னடி ஜூனியரின் 'அமெரிக்காவை மீண்டும் ஆரோக்கியமாக்குவோம்' (MAHA) அரசியல்
ஆதரவாளர்களை திருப்திப்படுத்தாது என்றும் தற்போதைய மற்றும் முன்னாள்
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>மருத்துவ நிபுணர்களும் விஞ்ஞானிகளும் பல ஆண்டுகளாக மில்லியன் கணக்கான
சிறுவர்களை ஆய்வு செய்து, தடுப்பூசிகளுக்கும் ஒட்டிசத்திற்கும் எந்தத்
தொடர்பும் இல்லை என நிரூபித்துள்ளனர்.</p><h2>புதிய உத்தரவு</h2><p>

இருப்பினும், கென்னடியும் அவரது ஆதரவாளர்களும் தடுப்பூசிகளின் ஆபத்துகள்
மற்றும் ஒட்டிசம் உடனான தொடர்புகள் குறித்து கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட
ஆய்வுகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.</p><p>
ட்ரம்பின் இந்த புதிய உத்தரவு, மத்திய அரசின் சிறுவர்களுக்கான தடுப்பூசி
அட்டவணையில் உள்ள 17 தடுப்பூசிகளை 11 ஆகக் குறைக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/029afcd6-1624-4b0e-b437-db49eaffa1fd/26-6a8ca89fa9dbf.webp' /></p><p>
</p><p>
மேலும், தட்டம்மை, அம்மைக்கட்டு மற்றும் ருபெல்லா (MMR) ஆகிய மூன்றிற்குமான
ஒரே தடுப்பூசியைப் பிரித்து மூன்று தனித்தனி ஊசிகளாக வழங்குமாறும்
உத்தரவிடுகிறது.</p><p>

அத்துடன், பாடசாலைகளுக்குச் செல்லும் சிறுவர்களுக்கான மாநில அளவிலான கட்டாயத்
தடுப்பூசி விதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நீதித்
திணைக்களத்திற்கு ட்ரம்ப் பணித்துள்ளார்.
</p><p>
மருத்துவ அமைப்புகள் பலவும் ட்ரம்பின் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்புத்
தெரிவித்துள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் பெற்றோரிடையே பெரும் குழப்பத்தையும்
தடுப்பூசி தயக்கத்தையும் அதிகரித்து, தடுப்பூசிகள் மூலம் தடுக்கக்கூடிய
நோய்களால் சிறுவர்கள் பாதிக்கப்படும் அபாயத்தை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6be19ed4-3dbb-4c45-a68a-5de480e8bb0a/26-6a8ca8a05fb23.webp' /></p><p>
</p><p>
நீண்டகாலமாக தடுப்பூசி எதிர்ப்பு கருத்துக்களைத் தெரிவித்து வரும் கென்னடி,
ஒட்டிசம் குறைபாட்டிற்கான காரணங்களைக் கண்டறிவதாக உறுதியளித்திருந்தார்.

இதற்காக அவர் அளித்த கெடு காலங்கள் முடிவடைந்த நிலையிலும் புதிய முடிவுகள்
எதுவும் வெளியாகாததால், ஓவல் அலுவலக சந்திப்புகளிலும் தொலைபேசி அழைப்புகளிலும்
ட்ரம்ப் கென்னடிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளார்.
</p><p>
அமெரிக்க சுகாதாரத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்படும் இந்த ஆய்வுகள் நிறைவடைய
பல மாதங்கள் அல்லது அதற்கு மேல் ஆகலாம் எனக் கூறப்படும் நிலையில், இந்த
மெதுவான போக்கு ட்ரம்பின் அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T20:25:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[காங்கோவில் தீவிரமடையும் எபோலா வைரஸ் ; அதிகரித்த பலி எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ebola-virus-outbreak-intensifies-in-congo-1787602924"></link>
            <id>https://canadamirror.com/article/ebola-virus-outbreak-intensifies-in-congo-1787602924</id>
            <summary type="text">மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், காங்கோவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


இந்நிலையில், காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,642 ஆக அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e32323b-648d-425f-9973-b532e2c52009/26-6a8ca7efd70b8.webp' /></p><p>
</p><p>


அத்துடன், எபோலா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,515 ஆக அதிகரித்துள்ளது.&nbsp;</p><p> காங்கோவில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வைரசை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு சுகாதாரத்துறை திணறி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>


இதையடுத்து எபோலா வைரசை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு காங்கோவுக்கு 16 ஆயிரம் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-24T20:22:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் சிக்கிய NPP நகர சபை உறுப்பினரின் மகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/npp-council-member-s-son-arrested-1787602136"></link>
            <id>https://jvpnews.com/article/npp-council-member-s-son-arrested-1787602136</id>
            <summary type="text">பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகர சபை உறுப்பினர் ஒருவரின் மகன் உ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகர சபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">



கொலன்னாவ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஒருவரை பொலிஸார் சோதனையிட்டபோது, அவர் மற்றொரு நபரிடமிருந்து போதைப்பொருளைப் பெற்றுக்கொள்வதற்காக அங்கு வந்திருந்தமை தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f53bd77a-169c-4560-b3af-16d7499ef768/26-6a8ca4da60094.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருள் விற்பனை</h2><p style="text-align: justify; ">



இதனையடுத்து, பொலிஸார் குறித்த நபரின் ஊடாக போதைப்பொருள் விற்பனையாளரை தொடர்புகொண்டு வரவழைத்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


இதன்போது 5 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் வந்ததாகக் கூறப்படும் போதைப்பொருள் விற்பனையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">



அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, அவரது வீட்டை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இதன்போது வீட்டிலிருந்து மேலும் 75 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


கைது செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனையாளர், தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகர சபை உறுப்பினர் ஒருவரின் மகன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">


கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-24T20:09:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுக்கு ஈரானின் புரட்சிகர காவல் படை விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-s-warning-to-the-us-1787600564"></link>
            <id>https://ibctamil.com/article/iran-s-warning-to-the-us-1787600564</id>
            <summary type="text">ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அமெரிக்காவின் முக்கிய நலன்கள் மற்றும் எரிசக்தித் தடைப் புள்ளிகள் மீது பலத்த பதிலடித் தாக்குதல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அமெரிக்காவின் முக்கிய நலன்கள் மற்றும் எரிசக்தித் தடைப் புள்ளிகள் மீது பலத்த பதிலடித் தாக்குதல்கள் நடத்தப்படும் ஈரான் எச்சரித்துள்ளது.
</p><p>
குறித்த எச்சரிக்கையை ஈரானின் புரட்சிகர காவல் படையின் (IRGC) செய்தித் தொடர்பாளர் ஹொசைன் மொஹெப்பி வெளியிட்டுள்ளார்.
</p><p>
ஈரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB வழியாக அவர் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>எதிரிகளின் தவறான கணிப்பு</h2><p>
</p><p>
ஈரானின் ஆயுத உற்பத்தி தடையின்றித் தொடர்ந்து நடைபெற்று வருவதால், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது உள்ளிட்ட அமெரிக்காவின் இலக்குகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a204caaf-0eb2-4947-ab56-1e9efa7da794/26-6a8ca1f230b59.webp' /></p><p>

மேலும், ஈரானிய இராணுவத்திடம் குறைந்த அளவிலான ஆயுதக் கையிருப்பே உள்ளது என்ற எதிரிகளின் தவறான கணிப்புக்கு மாறாக, நாட்டின் அதிநவீன மற்றும் வழிகாட்டப்பட்ட ஏவுகணைகளின் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T19:57:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொலைபேசி கம்பிகளை அறுத்து செப்பு கம்பிகளை திருடியவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/arrested-for-stealing-copper-wires-from-cables-1787599505"></link>
            <id>https://jvpnews.com/article/arrested-for-stealing-copper-wires-from-cables-1787599505</id>
            <summary type="text">நுவரெலியா நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொலைபேசி இணைப்பு கம்பிகளை அறுத்து, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை அகற்றி திருடும் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொலைபேசி இணைப்பு கம்பிகளை அறுத்து, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை அகற்றி திருடும் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
 

நேற்று (23) நுவரெலியா பொலிஸாரால் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dec2ef2e-eadb-477e-a2a2-5c09fb081647/26-6a8c9a92a5b0f.webp' /></p><h2>விசாரணை</h2><p>
</p><p>
 

நுவரெலியா மேல் ஏரி வீதி மற்றும் சந்ததென்ன உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஐந்து மாத காலப்பகுதியில் தொலைபேசி இணைப்பு கம்பிகளை அறுத்து செப்பு கம்பிகளை திருடியமை தொடர்பில் ஐந்து சந்தர்ப்பங்களில் பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>சந்தேகநபர்களைக் கைது செய்த போது, கம்பிகளிலிருந்து அகற்றப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 கிலோகிராம் செப்பு கம்பிகள், 344 அடி செப்பு அல்லாத கம்பிகள், செப்பு கம்பிகள் அகற்றப்பட்டிருந்த இறப்பர் உறைகளின் தொகுதி மற்றும் கம்பிகளை அறுப்பதற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு கத்திகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>

 

கைது செய்யப்பட்டவர்கள் கந்தப்பளை மற்றும் ஹாலிஎல பிரதேசங்களைச் சேர்ந்த 40 மற்றும் 30 வயதுடைய இருவராவர்.</p><p></p><p>
</p><p>
 

கைப்பற்றப்பட்ட செப்பு மற்றும் செப்பு அல்லாத கம்பிகளின் பெறுமதி இதுவரை கணப்பிடப்படவில்லை என்பதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் அவற்றின் பெறுமதியைக் கணப்பிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் இன்று (24) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், எதிர்வரும் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் புத்திக தர்மதாச உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
 

இச்சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T19:35:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள்! சலேவின் தாயார் முன்வைத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/verdict-in-the-easter-attacks-case-on-september-22-1787594002"></link>
            <id>https://tamilwin.com/article/verdict-in-the-easter-attacks-case-on-september-22-1787594002</id>
            <summary type="text">ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் இடம்பெறும் காலத்தில் தனது மகன் சுரேஷ் சலேவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடுப்புக் காவல் உத்தரவை மேலும் நீட்டிக்க வேண்டா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் இடம்பெறும் காலத்தில் தனது மகன் சுரேஷ் சலேவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடுப்புக் காவல் உத்தரவை மேலும் நீட்டிக்க வேண்டாம் எனக் கோரி, அவரது தாயார் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.</p><p>அத்தோடு, தனது மகன் தொடர்பான எந்தவொரு விசாரணைணையும் நிறுத்துமாறு தான் கோரவில்லை எனவும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>சுரேஷ் சலே மீது குற்றச்சாட்டுக்கள் இருந்தால் அவை முறையாக விசாரிக்கப்பட வேண்டும்.ஆதாரங்கள் இருந்தால் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் எனவும் கூறினார்.</p><p>மேலும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நேரில் சந்திப்பதற்கான அனுமதியினை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>&nbsp;இந்தக் கடிதத்தின் பின்னணி என்ன, சுரேஷ் சலேவின் தாயார் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள் என்ன என்பது தொடர்பான முழுமையான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ZJlN94HPz_M" width="640" height="360" class="note-video-clip"></iframe>&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T19:31:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவால் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது: கார்னி கூறிய விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cant-accept-us-trade-deal-1787599790"></link>
            <id>https://news.lankasri.com/article/cant-accept-us-trade-deal-1787599790</id>
            <summary type="text">Canada can’t accept US trade deal: பிரெஞ்சு மொழியை வலுவிழக்கச் செய்யும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை கனடாவால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மார்க் கார்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada can’t accept US trade deal: பிரெஞ்சு மொழியை வலுவிழக்கச் செய்யும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை கனடாவால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மார்க் கார்னி.
</p><p>கனடாவில் பிரெஞ்சு மொழியை அமெரிக்க வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையாளர்கள் ஒரு தொந்தரவாகக் கருதிய அதே வேளையில், கியூபெக்கில் அது உரிமை என்று மார்க் கார்னி திங்களன்று கூறியுள்ளார்.</p><h2>வர்த்தகப் பேச்சுவார்த்தை</h2><p>
</p><p>நாட்டின் பிரெஞ்சு மொழி பேசும் கலாச்சாரத்தைப் பலவீனப்படுத்துவதாகப் பலராலும் கருதப்பட்ட ஒரு அமெரிக்க வர்த்தக முன்மொழிவை நிராகரித்ததற்காக, அரசியல் தலைவர்களிடமிருந்து பரவலான பாராட்டைப் பெற்ற நிலையில், பிரதமர் கார்னி இந்த விளக்கத்தை அளித்துள்ளார். </p><p>கனடா பல வருடங்களாக அமெரிக்காவைச் சுரண்டி வருவதாகவும், கார்கள் மற்றும் லொறிகள் மீது பொருளாதார ரீதியாகப் பேரிடரை ஏற்படுத்தக்கூடிய புதிய வரிகளை விதிக்கப்போவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக ஊடகங்களில் பதிவிட்டு, இந்த மோதலில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்ற சில மணிநேரங்களுக்குப் பிறகு பிரதமரின் இந்தக் கருத்துக்கள் வெளிவந்தன. </p><p>கடந்த வாரம் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகுமாறு கார்னி தனது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். வார இறுதியில் பல்வேறு கனடியப் பொருட்கள் மீதான வரிகள் அமுலுக்கு வந்தன. </p><p>இது அமெரிக்காவிற்கான கனடாவின் ஏற்றுமதியில் சுமார் 5 சதவீதத்தைப் பாதித்துள்ளது. மேலும், செப்டம்பர் தொடக்கத்தில் பதிலடி கொடுக்கப்படும் என்று கனடா கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b1d6a93-9b03-476a-87c2-9b658dda3a01/26-6a8c9bb0e2d52.webp' /></p><p> </p><p>திங்கட்கிழமை அன்று, கார்னி கியூபெக் முதல்வருடன் ஒரு கப்பல் கட்டும் தளத்தைச் சுற்றிப் பார்த்தார். அப்போது, ​​கடந்த வாரம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, </p><p>பிரெஞ்சு மொழிப் பாதுகாப்புகளை பலவீனப்படுத்தும் வகையிலான முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை கனடாவால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அவர்கள் கேட்டதை தனது அரசாங்கம் வழங்காது என்றும் அங்கு கூடியிருந்தவர்களிடம் அவர் கூறினார். </p><p>அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளைக் கைவிடுவதற்கான பிரதமரின் முடிவு, கனடா தனது நீண்டகால நட்பு நாடான அமெரிக்காவுடன் தற்போது முழுமையாக ஒரு பொருளாதாரப் போரில் இறங்கியுள்ளது என்ற கனடாவின் அரசியல் தலைவர்கள் மற்றும் நிபுணர்களின் கூற்றுகளுக்கு வழிவகுத்தது. </p><p>கனடாவின் பெரும்பான்மையாக பிரெஞ்சு மொழி பேசும் மாகாணமான கியூபெக், ஃபெடரல் அரசாங்கம் மற்றும் கனடிய உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான சாசனத்துடன் முரண்படும் சட்டங்களைக் கொண்டு, தனது தனித்துவமான அடையாளத்தை நீண்ட காலமாகப் பாதுகாக்க முயன்று வருகிறது.</p><p></p><p> </p><p>சமீபத்திய ஆண்டுகளில், அந்த விதிகள் அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன; அவர்கள் அவற்றை வர்த்தகத்திற்கு இடையூறு விளைவிக்கும் அம்சங்களாகவே கருதுகின்றனர். </p><p>உதாரணமாக, மசோதா 96, கியூபெக்கில் விற்கப்படும் பொருட்களுக்கு பிரெஞ்சு விளக்கம் இருக்க வேண்டும் என்றும், பொதுவான சொற்களைப் பயன்படுத்தும் வர்த்தக முத்திரைகள் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்றும் கோருகிறது; </p><p>அதே நேரத்தில், மசோதா 109, நெட்ஃபிளிக்ஸ், ஸ்பாட்டிஃபை மற்றும் ஆப்பிள் போன்ற ஊடகச் சேவைகளை, கியூபெக் பயனர்களுக்காக பிரெஞ்சு உள்ளடக்கத்தை ஊக்குவிக்கவும் அதற்கு முன்னுரிமை அளிக்கவும் கட்டாயப்படுத்துகிறது. </p><p>பிரெஞ்சு மொழி பேசுவோருக்கு அச்சுறுத்தலாக அமையும் வகையில் அமைந்திருந்த பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகியதன் மூலம் கார்னி சரியான முடிவை எடுத்துள்ளார் என்று கியூபெக் மாகாணத்தின் முதல்வர் கிறிஸ்டின் ஃப்ரெஷெட் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d26908ca-44c9-4f96-bd53-61b5f389a729/26-6a8c9bb19adf9.webp' /></p><p> </p><p>இந்த மாதத் தொடக்கத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள், கியூபெக் மாகாணத்தில்தான் ட்ரம்ப் மீதான அதிருப்தி மிக அதிகமாக உள்ளதைக் காட்டுகின்றன.</p><p> அமெரிக்காவால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதாரப் பாதிப்புகளுக்கு மத்தியில், அம்மாகாணத்தில் உள்ள பிரிவினைவாதிகளுக்கான ஆதரவு வெகுவாகக் குறைந்துள்ளது. </p><p>இந்த நிலையில், பிரெஞ்சு மொழிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் விவாதத்திற்கு உட்படுத்தப்படவுள்ளதாக வெளியான செய்திகள் ஒரு வேடிக்கையான, பொய்யான கதை என்று ட்ரம்ப்பின் உயர்மட்ட வர்த்தகப் பிரதிநிதியான ஜேமிசன் கிரியர் திங்களன்று கூறினார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T19:27:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெற்றோருக்கு கிடைத்த சலுகை இனி இல்லை! ஜனாதிபதியாக கனவு காண்பவருக்கு தற்போதைய அமைச்சர் அறிவுரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/current-minister-s-advice-to-sl-next-president-1787597826"></link>
            <id>https://tamilwin.com/article/current-minister-s-advice-to-sl-next-president-1787597826</id>
            <summary type="text">எதிர்காலத்தில் ஆட்சியைக் கைப்பற்ற கனவு காண்பவர்கள், தங்களின் பெற்றோர் ஆட்சிக் காலத்தில் அனுபவித்த பழைய சலுகைகள் இனி ஒருபோதும் கிடைக்காது என்பதை நினைவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்காலத்தில் ஆட்சியைக் கைப்பற்ற கனவு காண்பவர்கள், தங்களின் பெற்றோர் ஆட்சிக் காலத்தில் அனுபவித்த பழைய சலுகைகள் இனி ஒருபோதும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். </p><p>

மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

கடந்த காலங்களில் நாட்டில் நிலவி வந்த பண பலத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்திற்குச் சென்ற பழைய அரசியல் கலாசாரம் இனி நடைபெறாது என்பதை மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.</p><h2>சாதாரண மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை..</h2><p> </p><p>

முன்னைய ஆட்சிகளில் குறிப்பிட்ட சில குடும்பங்களும், அவர்களின் நண்பர்களும் அதிகாரத்தையும், சிறப்புச் சலுகைகளையும் தங்களுக்குள்ளேயே பகிர்ந்து அனுபவித்து வந்ததோடு தாங்கள் செய்த தவறுகளுக்கு ஒருபோதும் சட்டத்தின் முன் தண்டனை கிடைக்காது என்று நம்பியிருந்தனர். </p><p>ஆனால், தற்போது நிலைமை மாறியுள்ளது. நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமாக மாறியுள்ளது. இதனால் எவ்வித தவறும் செய்யாத சாதாரண பொதுமக்கள் சட்டத்தைக் கண்டு அச்சம் கொள்ள வேண்டியதில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8121190-50e1-4eaf-97f5-fa5e6f8bad4f/26-6a8c99bccc10d.webp' /></p><p>

 மாறாக கடந்த காலத்தில், சட்டத்திற்கு அப்பாற்பட்டு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியவர்களும், தவறுகளில் ஈடுபட்டவர்களுமே தற்போதைய நீதித்துறை மற்றும் நீதிபதிகள் மீது தவறான கருத்துக்களை வெளியிட்டும், அச்சமடைந்தும் வருகிறார்கள்.</p><p>

தற்போதைய ஆட்சியில் ஜனாதிபதி, அமைச்சர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் என யாருக்கும் எந்தவித சிறப்புச் சலுகைகளும் வழங்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/837144c2-4a4f-4cf3-8b9a-e951f307f52a/26-6a8c99bd8aefb.webp' /></p><p>
</p><p>
ஜனாதிபதி உட்பட அனைவரும் சாதாரண பொதுமக்களைப் போலவே தங்களது அன்றாடப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>

 எனவே மக்களுக்குப் பொறுப்புக்கூறும் வகையில், தற்போதைய அரசாங்கத்தை விட மிகச் சிறந்த நிர்வாகத்தை வழங்கக்கூடிய ஒரு அரசியல் தரப்பினால் மட்டுமே இனி இலங்கையில் ஆட்சிக்கு வர முடியும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T19:25:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவிலிருந்து உறவினர் வீடொன்றுக்கு வந்த மூன்று வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/girl-dies-drunk-chemical-mistaking-it-for-water-1787598051"></link>
            <id>https://ibctamil.com/article/girl-dies-drunk-chemical-mistaking-it-for-water-1787598051</id>
            <summary type="text">கம்பளை, புப்புரஸ்ஸ - டெல்டாவத்த பகுதியில் உள்ள வீடொன்றுக்கு வவுனியாவிலிருந்து பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் வந்திருந்த மூன்று வயது சிறுமி ஒருவர் தண்ண...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பளை, புப்புரஸ்ஸ - டெல்டாவத்த பகுதியில் உள்ள வீடொன்றுக்கு வவுனியாவிலிருந்து பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் வந்திருந்த மூன்று வயது சிறுமி ஒருவர் தண்ணீர் என நினைத்து திரவமொன்றை குடித்து உயிரிழந்துள்ளார்.</p><p>

குடும்பத்தினர் அனைவரும் நேற்று மதியம் மற்றும் மாலையில் வீட்டிற்கு வெளியே இருந்த சமயத்தில், அச்சிறுமி வீட்டிற்குள் சென்று அங்கு ஜன்னலில் வைக்கப்பட்டிருந்த திரவத்தைத் தண்ணீர் எனத் தவறாக நினைத்துக் குடித்துள்ளார்.</p><p>

இதனை தொடர்ந்து, குறித்த சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
பின்னர், அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பசுவின் பாலைப் பதப்படுத்தப் பயன்படுத்தப்படும் ரசாயனத்தைக் குடித்ததால் சிறுமி உயிரிழந்துள்ளதாக கம்பளை வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8ce647e-3d70-41af-9f02-0e543b4176c7/26-6a8c9689ab44d.webp' /></p><p>இதன்போது, வவுனியாவின் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த தினேஸ்கரன் ஹயனிகா என்ற மூன்று வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p>
</p><p>
இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...! </h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T19:20:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சிறை கைதி வீட்டிற்கு உயிருடன் வந்ததால் பரபரப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prisoner-who-was-declared-dead-came-back-alive-1787593065"></link>
            <id>https://ibctamil.com/article/prisoner-who-was-declared-dead-came-back-alive-1787593065</id>
            <summary type="text">கல்கமுவ, கொஹோபங்குளம் கிராமத்தில் காவல்துறையினரால் அதிகாரப்பூர்வமாக இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நபர் ஒருவர், தனக்காக இறுதிச் சடங்குகள் தயாராகிக் கொண...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்கமுவ, கொஹோபங்குளம் கிராமத்தில் காவல்துறையினரால் அதிகாரப்பூர்வமாக இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நபர் ஒருவர், தனக்காக இறுதிச் சடங்குகள் தயாராகிக் கொண்டிருந்த வீட்டிற்கே உயிருடன் திரும்பி வந்த விசித்திரமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
</p><p>
வாரியபொல சிறையில் அடைக்கப்பட்டிருந்த கொஹோபங்குளத்தைச் சேர்ந்த டி. எம். கீர்த்திசேன என்பவர் சிறையிலேயே உயிரிழந்துவிட்டதாக நன்னேரியா காவல்துறையினர் அவரது உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> 

இந்த அதிர்ச்சிச் செய்தியைக் கேட்ட உறவினர்களும் கிராம மக்களும் உடனடியாக ஒன்றிணைந்து இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கியுள்ளனர்.</p><p></p><h2>திகைப்பில் உறவினர்கள்</h2><p>

கிராமம் முழுவதும் இறுதி அஞ்சலி பதாகைகள் கட்டப்பட்டு, பந்தல்கள் அமைக்கப்பட்டு, தகனக் கிரியைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a70ce782-5e58-45a2-be76-9c48c96d63ae/26-6a8c836506db0.webp' /></p><p>

எனினும், இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட கீர்த்திசேன சிறையில் இருந்து இன்றையதினம் விடுவிக்கப்பட்டு, திடீரென உயிருடன் வீட்டிற்குள் நடந்து வந்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளார்.

த</p><p>னக்காகவே நடத்தப்பட்டு வந்த இறுதிச் சடங்கு வீட்டிற்குள் அவர் உயிருடன் நுழைந்ததைக் கண்டு உறவினர்களும் ஊர் மக்களும் பேரதிர்ச்சியும் பெரும் குழப்பமும் அடைந்ததாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T19:11:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரகசிய தகவலால் பிடிபட்ட இளைஞன் ; சோதனையில் அம்பலமான விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-arrested-following-a-secret-tip-1787595966"></link>
            <id>https://jvpnews.com/article/youth-arrested-following-a-secret-tip-1787595966</id>
            <summary type="text">மஹபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிசரை பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் மேல் மாகாண வட குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிசரை பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் மேல் மாகாண வட குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
ஞாயிற்றுக்கிழமை (23) கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே இக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64a3fc6e-d84e-4a7f-a293-88ec3aebc727/26-6a8c8cc07bc62.webp' /></p><h2>&nbsp;சட்டவிரோத மதுபானம்</h2><p>
</p><p>
இதன்போது 112 லீற்றர் 500 மில்லி லீற்றர் (150 போத்தல்கள்) எடையுடைய சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
</p><p>
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் வெலிசரை, ராகம பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞராவார்.</p><p></p><p>
</p><p>
மேலும், சம்பவம் தொடர்பாக மேல் மாகாண வட குற்றப்பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T19:00:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின் கட்டண ஏற்ற இறக்கங்களை குறைப்பதற்கான வழி! வெளியிடப்பட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/way-to-reduce-electricity-price-fluctuations-1787596776"></link>
            <id>https://ibctamil.com/article/way-to-reduce-electricity-price-fluctuations-1787596776</id>
            <summary type="text">இலங்கை அனல் மின் உற்பத்தியைச் சார்ந்திருப்பத்தைக் குறைத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் பயன்பாட்டை அதிகரித்தால் மின் கட்டண ஏற்ற இறக்கங்களைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அனல் மின் உற்பத்தியைச் சார்ந்திருப்பத்தைக் குறைத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் பயன்பாட்டை அதிகரித்தால் மின் கட்டண ஏற்ற இறக்கங்களைக் குறைக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் கே. பி. எல். சந்திரலால் தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், சமீபத்திய ஆண்டுகளில் மின் கட்டணங்கள் அடிக்கடி மாறுபடுவதற்கு அனல் மின் உற்பத்திக்காகும் அதிக செலவே முக்கிய காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
எனவே, தொடர்ந்து அனல் மின்சாரத்தையே நம்பியிருக்காமல் சூரிய சக்தி உள்ளிட்ட கிடைக்கக்கூடிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களை நாடு அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><h2>மின் உற்பத்திச் செலவு</h2><p>
</p><p>
மேலும், அனல் மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதால், அது நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்புக்குக் கடும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab512068-2454-4fd4-8c32-e47b73d6ed28/26-6a8c9186de15a.webp' /></p><p> </p><p>

உலகச் சந்தையில் எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் இறக்குமதி எரிபொருள் செலவையும், அதன் மூலம் மின் உற்பத்திச் செலவையும் நேரடியாகப் பாதிக்கின்றன.</p><p>

எனவே, நாட்டின் மின்சார உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்களிப்பை அதிகரிப்பது உற்பத்திச் செலவு மாற்றங்களைக் கட்டுப்படுத்தி, மின் கட்டணங்களில் ஒரு நிலையான தன்மையை உறுதிசெய்ய உதவும் என்று அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T18:46:35+00:00</updated>
        </entry>
    </feed>
