<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-02T11:43:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தவறான முடிவெடுத்து இரட்டைச் சகோதரிகள் உயிர்மாய்ப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/twin-sisters-death-in-jaffna-1785665953"></link>
            <id>https://ibctamil.com/article/twin-sisters-death-in-jaffna-1785665953</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளனர். சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட
புன்னாலைக்கட்டுவன் பகுதியை...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளனர். </p><p>சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட
புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த இரட்டையர்களே இவ்வாறு உயிர்
மாய்த்துள்ளனர்.</p><p>

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சகோதரிகள் நேற்றையதினம் (01) வீட்டில் யாரும் இல்லாதவேளை தமக்கு தாமே தீ மூட்டியுள்ளனர்.</p><p></p><h2>சுன்னாகம் காவல்துறையினர் விசாரணை</h2><p>
இந்நிலையில் அவர்கள் காப்பாற்றப்பட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக&nbsp; யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccafc711-4952-4981-abd8-1c6f7a924e4a/26-6a6f1ce7df59b.webp' /></p><p>எனினும் சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் இன்று (02) அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
வாழ்வதற்கு விருப்பமில்லாத காரணத்தால் இவ்வாறு செய்ததாக அவர்கள்
உயிரிழப்பதற்கு முன்னர் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இது குறித்து சுன்னாகம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T11:40:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவகார்த்திகேயன் மிகவும் ஒழுக்கமான நடிகர்.. மனம் திறந்து பேசிய நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/bhagyashri-borse-about-actor-sivakarthikeyan-1785664566"></link>
            <id>https://cineulagam.com/article/bhagyashri-borse-about-actor-sivakarthikeyan-1785664566</id>
            <summary type="text">பாக்யஸ்ரீ போர்ஸ்தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான பாக்யஸ்ரீ போர்ஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடன் இணைந்து நடித்து வரும் நடிகர் சி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பாக்யஸ்ரீ போர்ஸ்</h2><p>தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான பாக்யஸ்ரீ போர்ஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடன் இணைந்து நடித்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f1f1ab6-5810-4179-a1e6-0349c28afd82/26-6a6f1438cb4a4.webp' /></p><p>நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தமிழில் காந்தா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதற்கு முன் மிஸ்டர் பச்சன், கிங்டம் ஆகிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான லெனின் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1418c12-6644-442a-8870-7b1d20db1fa1/26-6a6f1439804db.webp' /></p><p></p><p>அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து <a href="https://www.youtube.com/watch?v=X0dE64F82gw&amp;t=1s" target="_blank">சேயோன் </a>திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்க, ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் ரசிகர்களிடையே அதீத எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.</p><h2>மனம் திறந்து பேசிய நடிகை</h2><p>

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தொகுப்பாளினி ஒரு வார்த்தை கேட்க, அதற்கு யார் சரியாக பொருந்திப்போவார் என்பதை நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் கூறி வந்தார். அப்போது, அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினி, 'ஒழுக்கம்' என கேட்க, நடிகர் சிவகார்த்திகேயன் என பாக்யஸ்ரீ கூறினார். இது ரசிகர்களிடையே பரவலாகி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c92c3b45-ef25-4382-a286-8740545cac80/26-6a6f143a39de9.webp' /></p>]]></content>
            <updated>2026-08-02T11:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை மீளத் திறப்பதில் உடன்பாடு இல்லை: ஈரான் மறுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/agreement-reopening-strait-of-hormuz-iran-denies-1785665591"></link>
            <id>https://ibctamil.com/article/agreement-reopening-strait-of-hormuz-iran-denies-1785665591</id>
            <summary type="text">உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணையின் நிலைமை தொடர்பாக சர்வதேச அளவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணையின் நிலைமை தொடர்பாக சர்வதேச அளவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.&nbsp;&nbsp;</p><p>இந்த நிலையில் <a href="https://ibctamil.com/article/body-of-missing-fisherman-recovered-negombo-1785656645" target="_blank">ஹோர்முஸ் நீரிணை</a>யை மீளத் திறப்பது தொடர்பில் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை என தெஹ்ரானின் பேச்சுவார்த்தைக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>ஈரான் மற்றும் ஓமான் இடையே ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக அமெரிக்கா மற்றும் கட்டார் முன்வைத்த யோசனைக்கு ஈரான் வெளிவிவகார அமைச்சர் இணக்கம் தெரிவித்ததாக இஸ்ரேலிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தது.&nbsp;</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>இருப்பினும் குறித்த செய்திகள்&nbsp; உண்மைக்குப் புறம்பானவை என்றும் அந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94aae65c-2944-45f0-ac6d-6b191060cbc7/26-6a6f2ae5800fa.webp' /></p><p>இதற்கிடையில், ஈரானிய இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டு்ள்ளது.</p><p>அதன்படி<a href="https://ibctamil.com/article/namal-says-mahara-unrest-not-isolated-event-1785646566?itm_source=article" target="_blank"> ஈரானின் புரட்சிகர காவல்படை</a>யுடன் ஒருங்கிணைப்பு மேற்கொள்ளாத எந்தவொரு கப்பலுக்கும் ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டே இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T11:39:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[படகு விபத்தில் காணாமல் போன ரொறன்ரோ தம்பதியின் உடல்கள் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/damaged-boat-found-two-people-missing-1785657424"></link>
            <id>https://canadamirror.com/article/damaged-boat-found-two-people-missing-1785657424</id>
            <summary type="text">கனடாவின் முஸ்கோக்கா பகுதியில் இடம்பெற்ற படகு மோதல் விபத்தொன்றில் காணாமல் போயிருந்த இருவரின் உடல்களையும் புலனாய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
உயிரிழந்தவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் முஸ்கோக்கா பகுதியில் இடம்பெற்ற படகு மோதல் விபத்தொன்றில் காணாமல் போயிருந்த இருவரின் உடல்களையும் புலனாய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
</p><p>உயிரிழந்தவர்கள் ரொறன்ரோவைச் சேர்ந்த 32 வயது ஆண் மற்றும் 30 வயது பெண் என பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.</p><p>
வெள்ளிக்கிழமை இரவு 10:40 மணியளவில், பேக்கன்ரிக் பே பகுதிக்கு அருகிலுள்ள ரொசோ ஏரியில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f250ee0a-6a1e-4686-8442-5e2ae40f21b5/26-6a6ef85272f70.webp' /></p><p>சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்தபோது, பலத்த சேதமடைந்த நிலையிலிருந்த படகு ஒன்று பாறை விளிம்பில் ஆபத்தான முறையில் சமநிலை இழந்து நின்றதை அவதானித்துள்ளனர்.
</p><p>விபத்து நடந்த இடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையை முன்னெடுத்தனர்.</p><p> சனிக்கிழமை பிற்பகலில் காணாமல் போன இருவரின் உடல்களும் மீட்கப்பட்டன.</p><p>
இச்சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், இது தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாகத் தங்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T11:38:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று காலைவரை நீடித்த மஹர சிறை கலவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahara-prison-riot-continues-until-morning-today-1785668968"></link>
            <id>https://ibctamil.com/article/mahara-prison-riot-continues-until-morning-today-1785668968</id>
            <summary type="text">நேற்று (02)மாலை நான்கு மணியளவில் மஹர சிறையில் தொடங்கிய கலவரம்,இன்று அதிகாலை ஐந்து அல்லது ஆறு மணி வரை நீடித்தது எனவும் தற்போது நிலைமை கட்டுப்பாட்டிற்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேற்று (02)மாலை நான்கு மணியளவில் மஹர சிறையில் தொடங்கிய கலவரம்,இன்று அதிகாலை ஐந்து அல்லது ஆறு மணி வரை நீடித்தது எனவும் தற்போது நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, அங்கு நிலைமை அமைதியாக உள்ளது எனவும் மேற்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று காலை (02) ஊடகங்களிடம் பேசிய சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர், சிறையில் உள்ள அனைத்து கைதிகளும் தற்போது பாதுகாப்பாக தங்கள் விடுதிகளுக்கு திரும்பிவிட்டனர் என்று கூறினார்.</p><h2>​​மஹர சிறையில் 4,100-க்கும் மேற்பட்ட கைதிகள்</h2><p>நேற்று (01) பிற்பகல் கலவரம் வெடித்தபோது, ​​மஹர சிறையில் 4,100-க்கும் மேற்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcaecf51-36bd-42ee-96d3-2c2c3cbe91b3/26-6a6f2a65cc5b4.webp' /></p><p>
</p><p>
இந்த நிலைமையால் கைதிகள் சிறையின் சொத்துக்களுக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்றும் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் மேலும் கூறினார்.</p><p></p><p>
</p><p>
</p><h2>ஏராளமான சொத்துக்கள் சேதம்</h2><p>அடுத்த சில மணிநேரங்களில் சிறையின் பாதுகாப்பை உறுதிசெய்த பிறகு, மஹர சிறையின் செயல்பாடுகள் இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ed0290a-37c4-4840-8749-94f02346544e/26-6a6f2a64ee00e.webp' /></p><p>


இவர்கள் சிறையில் இருந்த ஏராளமான சொத்துக்களைச் சேதப்படுத்தியுள்ளனர். நீர்கொழும்பு சம்பவத்தின் அனுபவத்தைக் கொண்டு,பாதுகாப்புப் படையினர் அனைவரும் ஒன்றிணைந்து,எந்தவொரு பெரிய அசம்பாவிதமும் இன்றி இந்தச் சூழ்நிலையைக் கையாண்டுள்ளனர். </p><p>அனைத்துக் கைதிகளும் பாதுகாப்பாகத் தங்களது விடுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

மேலும், அவர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் வழங்கப்படுகின்றன.

தற்போது நிலைமை அமைதியாக உள்ளது என மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T11:37:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும ஊழல் மோசடி ; பெண் உத்தியோகத்தர்கள் இருவர் விளக்கமறியலில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ashwesuma-corruption-scandal-two-female-officers-1785670650"></link>
            <id>https://jvpnews.com/article/ashwesuma-corruption-scandal-two-female-officers-1785670650</id>
            <summary type="text">அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த நிலையில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் உத்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த நிலையில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் உத்தியோகத்தர்களையும் எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p> </p><p></p><p>குறித்த சந்தேக நபர்கள் இன்று (02) காலை ஹட்டன் நீதிமன்ற பதில் நீதிவான் நாராயணன் பார்த்திபன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><h3>மேலதிக விசாரணை</h3><p> </p><p>

பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகளில் ஊழல் மற்றும் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகக் கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eacf5786-80a6-49bb-92ae-10b375c80089/26-6a6f2bfb8acbe.webp' /></p><p>கைது செய்யப்பட்ட 33 மற்றும் 30 வயதுடைய இரு பெண் உத்தியோகத்தர்களும் 2025 ஆம் ஆண்டு முதல் இதுவரை 29 இலட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாய் வரை மோசடி செய்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. </p><p>

நோர்வூட் பிரதேச செயலகத்தில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய இவ்விரு அரச ஊழியர்களுக்கும் எதிராகத் தொடர்ச்சியாகக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோனின் நேரடி அறிவுறுத்தலின் பேரில் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.</p><p> 

விசாரணைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இரு அதிகாரிகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டனர். </p><p>அவர்களில் ஒருவர் அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கும், மற்றொருவர் தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கும் இடமாற்றப்பட்டிருந்தனர்.</p><p> </p><p></p><p>அதன்பின்னர் நோர்வூட் பிரதேச செயலாளரினால் ஹட்டன் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், கடந்த வெள்ளிக்கிழமை (31) மாலை இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.</p><p>இச்சம்பவம் தொடர்பில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணிபுரியும் 30க்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்களிடம் இருந்து தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதுடன், உள்ளக கணக்காய்வு அதிகாரிகள் ஊடாகத் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. </p><p>

அத்துடன், அஸ்வெசும திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கணினிகளும் கணக்காய்வு அதிகாரிகளால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.</p><p> 

இச்சம்பவம் குறித்து ஹட்டன் விசேட குற்றவியல் விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T11:37:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஃபிஃபா தலைவர் பதவியை இழக்கும் கியானி இன்ஃபான்டினோ (Gianni Infantino)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/infantino-leadership-challenge-1785663943"></link>
            <id>https://news.lankasri.com/article/infantino-leadership-challenge-1785663943</id>
            <summary type="text">ஃபிஃபா (FIFA) கவுன்சில் உறுப்பினர்களிடமிருந்து கியானி இன்ஃபான்டினோ கடும் எதிர்ப்பை எதிர்கொண்டு வரும் நிலையில், அவர்கள் ஒரு சிறப்புப் பொதுக்கூட்டத்தைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஃபிஃபா (FIFA) கவுன்சில் உறுப்பினர்களிடமிருந்து கியானி இன்ஃபான்டினோ கடும் எதிர்ப்பை எதிர்கொண்டு வரும் நிலையில், அவர்கள் ஒரு சிறப்புப் பொதுக்கூட்டத்தைக் (EGM) கூட்ட வற்புறுத்தி வருகின்றனர்.</p><h2>கவுன்சில் உறுப்பினர்கள்</h2><p>
</p><p>இப்படியான ஒரு பொதுக்கூட்டம் முழு அளவிலான தலைமைத்துவப் போட்டியாக மாறக்கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/973690ee-f8df-4879-b205-e89ab036c50d/26-6a6f12db8cf3a.webp' /></p><p> </p><p>உலகக் கிண்ணம் தொடரின் பங்குகளை விற்பனை செய்வதற்கான இன்ஃபான்டினோவின் (Infantino) முயற்சி தோல்வியடைவதற்கு முன்பே, ஒரு சிறப்புப் பொதுக் கூட்டத்தைக் (EGM) கூட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருந்தன. </p><p>டொனால்ட் ட்ரம்ப் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டதைத் தொடர்ந்து, உலகக் கிண்ணம் தொடரின் போது ஃபோலரின் பலோகுன் (Folarin Balogun) மீதான இடைநீக்க நடவடிக்கையை ரத்து செய்த அந்த முன்னெப்போதும் இல்லாத முடிவின் மீது சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்றும் கவுன்சில் உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர். </p><p>ஃபிஃபா கவுன்சில் என்பது உலகளாவிய நிர்வாக அமைப்பின் முக்கிய முடிவெடுக்கும் மன்றமாகும்; இது ஆறு கூட்டமைப்புகளைச் சேர்ந்த 28 பிரதிநிதிகள், எட்டு துணைத் தலைவர்கள் மற்றும் தலைவர் இன்ஃபான்டினோ ஆகியோரைக் கொண்டதாகும்.</p><p></p><p> </p><p>ஃபிஃபா (FIFA) விதிகளின்படி, 37 கவுன்சில் உறுப்பினர்களில் 50 சதவீதத்தினரோ அல்லது 19 உறுப்பினர்களோ முன்வைக்கும் தீர்மானம் ஒரு சிறப்புப் பொதுக் கூட்டத்தை (EGM) கூட்ட வழிவகுக்கும்.
</p><p>புதிய உலகக் கிண்ணம் செயல்பாட்டு நிறுவனத்தின் 20 சதவீதப் பங்குகளை த்ரைவ் கேப்பிட்டல் நிறுவனத்திற்கு விற்க இன்பான்டினோ ரகசியமாக முன்மொழிந்திருந்தார் என்பது வெளிவருவதற்கு முன்பே, கவுன்சில் உறுப்பினர்கள் ஏற்கனவே இரட்டை இலக்க எண்ணிக்கையை எட்டியிருந்ததாகவே கூறப்படுகிறது. </p><p>த்ரைவ் கேப்பிட்டல் என்பது ஜனாதிபதி ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னரின் தம்பியான ஜோசுவா குஷ்னரால் நிறுவப்பட்ட ஒரு முதலீட்டு நிறுவனமாகும்.</p><p>
Folarin Balogun விவகாரம் குறித்து ஒரு சுதந்திரமான விசாரணைக்கு இன்ஃபான்டினோ ஒப்புதல் அளிக்க மறுத்தால், அவர் பதவி விலக வேண்டும் என்று அதிருப்தியடைந்த கவுன்சில் உறுப்பினர்கள் திட்டமிட்டிருந்தனர்.</p><h2>ஆசியாவின் ஆதரவு தேவை</h2><p> </p><p>இதன் விளைவாக, ட்ரம்பின் அழுத்தத்திற்குப் பணிந்து ஃபிஃபா அரசியல் நடுநிலைமை விதிகளை மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டி, நார்வே கால்பந்து சங்கம் சர்வதேச ஒலிம்பிக் குழுவிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தது. </p><p>இந்த நிலையில், 37 கவுன்சில் உறுப்பினர்களில் 14 பேர் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பதால், இன்ஃபான்டினோ மீது உண்மையான அழுத்தத்தை ஏற்படுத்த ஆசியாவின் ஆதரவு தேவைப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5af80ed6-8558-425e-b954-668f6b85cc29/26-6a6f12dc5a1a1.webp' /></p><p> </p><p>இதனிடையே, இன்ஃபான்டினோ தனது மறுதேர்தல் பிரச்சாரத்தை ஆதரிக்கும் 200-க்கும் மேற்பட்ட ஆதரவுக் கடிதங்களை ஏற்கனவே பெற்றுள்ளார்; இருப்பினும், அந்தக் கடிதங்கள் திரும்பப் பெறப்படலாம் என்பதோடு, போட்டியிட விரும்பும் மற்ற வேட்பாளர்கள் தங்கள் விருப்பத்தை அறிவிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 18 வரை உள்ளது. </p><p>மேலும், இன்ஃபான்டினோவைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான மற்றொரு சாத்தியமான வழி, தலைவர் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பைத் தூண்டுவதற்காக ஒரு அவசர ஃபிஃபா கூட்டத்தைக் கூட்டுவதாகும்; 43 சங்கங்கள் கடிதங்களைச் சமர்ப்பித்தால் இந்த வாக்கெடுப்பு கூட்டப்படலாம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T11:35:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[104 கைதிகள் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றம் - உறவினர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/104-mahara-prisoners-transferred-to-7-prisons-1785669880"></link>
            <id>https://tamilwin.com/article/104-mahara-prisoners-transferred-to-7-prisons-1785669880</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் உள்ள 104 கைதிகள் வெவ்வேறு பகுதிகளில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் ஏ.சி.கஜநாயக்க தெரிவித்துள்ளார். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையில் உள்ள 104 கைதிகள் வெவ்வேறு பகுதிகளில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் ஏ.சி.கஜநாயக்க தெரிவித்துள்ளார். </p><p>

இதற்கமைய, தும்பறை, வெலிக்கடை, புஸ்ஸ, களுத்துறை, பதுளை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை சிறைச்சாலைகளுக்கு கைதிகள் இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>


கைதிகள் இடமாற்றம்</h2><p>
மஹர சிறைச்சாலையின் வீதித் தடைக்கு அருகில் கைதிகளின் பெயர்கள் அடங்கிய ஆவணம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e797be19-aac7-4cee-8cfc-d48e26d00d47/26-6a6f2ab39a2d2.webp' /></p><p>

மேலும், புனரமைப்பு பணிகள் காரணமாக மஹர சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கான பார்வையாளர்கள் காட்சி திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமை ஆகிய இரு தினங்களின் பின்னர் ஆரம்பிக்கப்படவுள்ளது.
</p><p>
நேற்று(01.08.2026) பிற்பகல் மஹர சிறைச்சாலையில் கைதிகளால் ஏற்பட்ட அமைதியின்மையை சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் ஆயுதப்படையினர் இணைந்து கட்டுப்படுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><p> 
</p>]]></content>
            <updated>2026-08-02T11:34:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் விழுந்த 17 கொள்கலன்களில் ஒன்று கரையொதுங்கியது : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-container-that-fell-into-the-sea-washed-ashore-1785668366"></link>
            <id>https://ibctamil.com/article/a-container-that-fell-into-the-sea-washed-ashore-1785668366</id>
            <summary type="text">கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே உள்ள கடல் பகுதியில் வணிகக் கப்பல் ஒன்றிலிருந்து கடலில் விழுந்த 17 வெற்றுக் கொள்கலன்களில் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாகக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே உள்ள கடல் பகுதியில் வணிகக் கப்பல் ஒன்றிலிருந்து கடலில் விழுந்த 17 வெற்றுக் கொள்கலன்களில் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p> பெந்தோட்டை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இந்துருவை - அதுருவெல்ல கடற்கரையில் இன்று (2) காலை குறித்த கொள்கலன் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்தநிலையில் இவ்வாறு கரை ஒதுங்கியுள்ள கொள்கலன் அருகே பொதுமக்கள் யாரும் நெருங்க வேண்டாம் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p><h2>கடற்படையினர் வேண்டுகோள்&nbsp;</h2><p>
</p><p>
கொழும்பு துறைமுகத்திலிருந்து மேற்கு திசையில் சுமார் 17 கடல் மைல் தொலைவில் விழுந்த இந்தக் கொள்கலன்கள், வீசும் காற்று மற்றும் கடல் நீரோட்டத்தின் திசைக்கு ஏற்ப சிலாபம், நீர்கொழும்பு மற்றும் பேருவளை வழியாகக் காலிக்கு அருகிலுள்ள கடல் பகுதிகளை நோக்கித் தெற்கு திசையில் மிதந்து செல்ல அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ac5fdc7-0b36-4b5a-aff5-49b2ac5efa77/26-6a6f27adacfa8.webp' /></p><p>

இதன் காரணமாக, கொழும்பிலிருந்து காலி வரையிலான தெற்கு கடல் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் பயணிக்கும் அனைத்துப் படகுகளும் தீவிர அவதானத்துடன் இருக்குமாறு கடற்படையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
</p><p>
மிதந்து கொண்டிருக்கும் இந்தக் கொள்கலன்கள் படகுகளுடன் மோதினால் பாரிய விபத்துகள் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதால், படகுகளை இயக்கும் போது மிகவும் விழிப்புடன் இருக்குமாறு கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>

மேலும், கடலில் மிதக்கும் கொள்கலன்கள் ஏதேனும் தென்பட்டால், உடனடியாக அது குறித்துக் கடற்றொழில் திணைக்களத்தின் வானொலித் தொடர்பாடல் மையங்களுக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T11:29:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் நடுகடலில் பற்றி எரிந்த பயணிகள் படகு...! 5 பேர் பலி - 41 மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/five-dead-41-missing-indonesia-ferry-catches-fire-1785667296"></link>
            <id>https://ibctamil.com/article/five-dead-41-missing-indonesia-ferry-catches-fire-1785667296</id>
            <summary type="text">இந்தோனேசியாவில் கடலில் பயணித்துக்கொண்டிருந்த பயணியர் படகு திடீரென தீ விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த படகு 271 பயணிகளுடன் பயணித்ததாக சர்வதேச ஊடகங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவில் கடலில் பயணித்துக்கொண்டிருந்த பயணியர் படகு திடீரென தீ விபத்திற்குள்ளாகியுள்ளது.
</p><p>
குறித்த படகு 271 பயணிகளுடன் பயணித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
இந்தநிலையில், விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 41 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><p></p><h2>மீட்புக் குழுவினர்&nbsp;</h2><p>மேலும் தெரியவருகையில், இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய நகரமான கிழக்கு ஜாவாவிலுள்ள சுராபாயாவிலிருந்து (Surabaya), தெற்கு சுலாவெசியிலுள்ள மக்காசர் (Makassar) நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே, மடுராத் தீவுக்கு (Madura island) அருகே கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>
</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/Breaking?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Breaking</a> - At least five people have died and 41 remain missing after the passenger ship KM Mutiara Sentosa 2 caught fire this morning off Madura Island in the Java Sea, near Sumenep Regency, Indonesia. Inaccurate passenger manifests continue to hamper search and rescue… <a href="https://t.co/2D7PzNH0Ij">pic.twitter.com/2D7PzNH0Ij</a></p>&mdash; NEWS WALA (@NEWSWALApy) <a href="https://x.com/NEWSWALApy/status/2083863160243859751?ref_src=twsrc%5Etfw">August 2, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இத்தீ விபத்து குறித்துக் கப்பலின் மாலுமி உடனடி தகவலை வழங்கியதாக இந்தோனேசியாவின் தேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகமை (Basarnas) தெரிவித்துள்ளது.</p><p>

காணாமல் போன 41 பேரைக் கண்டறியும் பணியில் இந்தோனேசிய மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T11:27:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலி சிறையிலிருந்து சந்தேகநபர் தப்பியோட்டம் ; பொலிஸ் குழுக்கள் விசேட தேடுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/escapes-galle-prison-police-teams-conduct-search-1785670040"></link>
            <id>https://jvpnews.com/article/escapes-galle-prison-police-teams-conduct-search-1785670040</id>
            <summary type="text">காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் இன்று (02) அதிகாலை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை அத்தியட்சகர் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் இன்று (02) அதிகாலை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>அம்பலாங்கொடை, குலீகொட, கலகொட பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>


வீடு உடைப்பு மற்றும் திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பில் பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நான்கு வழக்குகளுக்காக குறித்த நபர் கடந்த ஜூன் மாதம் 22ஆம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd613546-b16e-4df7-9086-0528d31bd6a1/26-6a6f299a0fe2d.webp' /></p><p>



இன்று காலை கைதிகளின் எண்ணிக்கை மற்றும் விபரங்கள் பரிசோதிக்கப்பட்டபோது, குறித்த சந்தேகநபர் சிறைச்சாலையின் பாதுகாப்பு மதிலில் ஏறி தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
</p><p>


மேலும், இவர் இதற்கு முன்னரும் அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது மதில் மீது ஏறி தப்பிச் சென்றவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>


தப்பிச் சென்ற சந்தேகநபரை மீண்டும் கைது செய்வதற்காக பல பொலிஸ் குழுக்கள் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T11:27:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[SLS சான்றிதழ் இல்லாத தலைக்கவசங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/strict-action-against-helmets-sls-certification-1785669595"></link>
            <id>https://jvpnews.com/article/strict-action-against-helmets-sls-certification-1785669595</id>
            <summary type="text">SLS தரச்சான்றிதழ் இன்றி மற்றும் தரமற்ற தலைக்கவசங்களை தயாரித்து விற்பனை செய்யும் நபர்களை அடையாளம் காணும் நோக்கில் விசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>SLS தரச்சான்றிதழ் இன்றி மற்றும் தரமற்ற தலைக்கவசங்களை தயாரித்து விற்பனை செய்யும் நபர்களை அடையாளம் காணும் நோக்கில் விசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனம் மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbc8c3d7-04c4-4fbf-914d-b86187f8a511/26-6a6f27dc6d12e.webp' /></p><p> இதன்போது தரமற்ற தலைக்கவசங்களை உற்பத்தி செய்வோர் மற்றும் விற்பனை செய்வோர் கண்டறியப்பட்டால், அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.</p><p>



தரமற்ற தலைக்கவசங்களை அணிவது, தலைக்கவசம் அணியாமல் பயணிப்பதற்கு இணையான ஆபத்தை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>


எனவே, பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக SLS தரச்சான்றிதழ் பெற்ற தரமான தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T11:20:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரண தண்டனைகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிக்கு அச்சம் வந்திருக்கும் ! ஸ்ரீநேசன் எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-sentences-imposed-former-official-srineesan-1785666126"></link>
            <id>https://tamilwin.com/article/death-sentences-imposed-former-official-srineesan-1785666126</id>
            <summary type="text">முன்னான் அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைகள் தொடர்பில் உயிர்த்த
ஞாயிறு தாக்குதலை இயக்கிய சூத்திரதாரியான முன்னாள் ஜனாதிபதிக்கு அச்சம் வந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னான் அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைகள் தொடர்பில் உயிர்த்த
ஞாயிறு தாக்குதலை இயக்கிய சூத்திரதாரியான முன்னாள் ஜனாதிபதிக்கு அச்சம் வந்திருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து
ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மரண தண்டனை
வழங்கப்பட்டுள்ளது. நினைத்தால் வேதனை தான். இதனை நினைத்து அவரது குடும்பம்
மிகவும் வேதனைப்படுவார்கள். </p><p>ஆனால் மற்றைய பக்கம் பார்க்கும்போது உயிர்த்த
ஞாயிறு தாக்குதலின் போதும் 269 அப்பாவி பக்தர்கள்
கொல்லப்பட்டிருக்கின்றார்கள். 500 இற்கும் மேற்பட்டவர்கள்
காயமடைந்திருக்கின்றார்கள். அந்த செயலை அறிந்திருந்தும் தடுத்தவில்லை
என்பதற்காக அவருக்கு அந்த தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது.</p><p></p><h2>தண்டப்பணம்</h2><p> </p><p>ஆகவே ஒரு பக்கம்
அவரையும் அவரது குடும்பத்தையும் நினைத்து சற்று வேதனை பட்டாலும் 269 அப்பாவி
மக்கள் தேவாலயங்களில் வழிபட்டுக் கொண்டிருக்கின்ற பொழுது
கொல்லப்பட்டுள்ளார்கள். அவர் கடமையை சரிவர செய்யவில்லை அதன் காரணமாக அவருக்கு
மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ec362f7-a59b-498a-b66e-664b03836ad4/26-6a6f2659d6809.webp' /></p><p>



இதனைப் பார்த்தவுடன் இன்னும் சிலருக்கு கலக்கம் ஏற்பட்டிருக்கின்றது. அவரோடு
இணைந்து மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்ற முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஏழரைக்
கோடி ரூபாய் தண்டப்பணம் செலுத்தியவர். இந்த பாதுகாப்பு செயலாளர் ஐந்து கோடி
ரூபா தண்டப்பணம் செலுத்தியவர்.</p><p></p><h2>மரண தண்டனை</h2><p> </p><p>இன்னும் ஒருவர் 10 கோடி தாண்ட பணம்
செலுத்தியவர் இருக்கின்றார். அவர் முன்னாள் ஜனாதிபதி அவர் இப்போது
சிந்திப்பார் ஐந்து கோடி செலுத்தியவருக்கும் மரண தண்டனை, ஏழரை கோடி
செலுத்தியவருக்கும் மரண தண்டனை, கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் 10 கோடி
செலுத்திய தமக்கு கிடைக்காமல் இருப்பதற்குரிய வாய்ப்பு குறைவாக இருக்கின்றது
என சிந்திப்பார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0a8f1c5-787a-4af6-afd6-200b115f2988/26-6a6f26592b59f.webp' /></p><p>
</p><p>


அது மாத்திரம் இன்றி உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலுக்கு சூத்திரதாரியாக
இருந்தவர்கள் உள்ளே இரண்டு பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கும் கலக்கம்.
தங்களுக்கும் என்ன நடக்குமோ என்பது பற்றி சிந்திப்பார்கள். தண்டனைக்கான
வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது. </p><p>இதற்கு மேலாக இதனை இயக்கிய ஒரு சூத்திரதாரியான
முன்னாள் ஜனாதிபதி ஒருவரும் இருக்கின்றார். அவருக்கு இப்போது காய்ச்சல்
பிடித்திருக்கும். ஏனையவர்களுக்கு இவ்வாறான தண்டனை என்றால் தமக்கு கிடைக்க
கூடிய வாய்ப்பு இருக்கிறது என சிந்திப்பார் என அவர் இதன்போது தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T11:16:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தான் பனிச்சரிவு... பிரித்தானிய மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா உடல் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nirmal-purja-body-recovered-1785669261"></link>
            <id>https://news.lankasri.com/article/nirmal-purja-body-recovered-1785669261</id>
            <summary type="text">பாகிஸ்தானின் பிராட் பீக் (Broad Peak) மலையில், புகழ்பெற்ற பிரித்தானிய-நேபாள மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜாவின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவின...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தானின் பிராட் பீக் (Broad Peak) மலையில், புகழ்பெற்ற பிரித்தானிய-நேபாள மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜாவின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.</p><h2>புர்ஜாவும் ஒருவர்</h2><p>
</p><p>மலையில் சுமார் 5,700 மீற்றர் உயரத்தில் கண்டெடுக்கப்பட்டதாக பாகிஸ்தானின் 'ஆல்பைன் கிளப்' ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது; அங்கு மேலும் மூன்று உடல்கள் காணப்பட்ட போதிலும், அவற்றின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/098363af-fa96-449e-bfd6-2bfc6c72fa2a/26-6a6f269001198.webp' /></p><p> </p><p>பனிச்சரிவில் சிக்கி மரணமடைந்த 10 பேரில் 43 வயதான புர்ஜாவும் ஒருவர் என்று, அவரின் நிறுவனமான 'எலைட் எக்ஸ்பெடிஷன்ஸ்' (Elite Expeditions) சனிக்கிழமையன்று அவரது இறப்பை அறிவித்தது. </p><p>அவருக்கு அஞ்சலி செலுத்தியவர்களில் வேல்ஸ் இளவரசரும் ஒருவர். நேபாளத்தில் பிறந்து பின்னர் பிரித்தானிய ராணுவத்தில் பணியாற்றிய புர்ஜா, 2019-ஆம் ஆண்டில் உலகின் மிக உயர்ந்த 14 சிகரங்களையும் வெறும் ஆறு மாதங்களுக்குச் சற்று அதிகமான காலத்திற்குள் ஏறி முடித்ததற்காக பிரபலமடைந்தவர்.</p><p></p><p> புர்ஜாவின் இறப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, அவருடன் மலையேற்றப் பயணத்தில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த மல்லோரி கீஸ், ஓமனைச் சேர்ந்த நதிரா அகமது அப்துல்லா அல் ஹார்த்தி மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த புர் பகதூர் குருங் ஆகிய மூவரின் உடல்களும் மீட்கப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2>14 மலைச்சிகரங்கள்</h2><p> </p><p>பாகிஸ்தானின் காரகோரம் மலைத்தொடரில், உலக சாதனையாளர் நிர்மல் புர்ஜா உட்பட ஆறு நேபாளம் நாட்டவர்கள் மற்றும் நான்கு வெளிநாட்டு மலையேற்ற வீரர்கள் மரணமடைந்த துயரச் சம்பவம் தங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா சனிக்கிழமையன்று தெரிவித்தார். </p><p>இதனிடையே, காரகோரம் மலைத்தொடரில் உள்ள 8,047 மீற்றர் உயரமான சிகரத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து, உலகின் 12-வது மிக உயர்ந்த அந்தச் சிகரத்தில் மலையேறியவர்களைத் தேடும் பணியில் பாகிஸ்தானில் உள்ள குழுக்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/079b8e7b-e0d9-41a5-8f3c-58453a5ed9c9/26-6a6f268f4f880.webp' /></p><p> </p><p>பல்நாட்டினரை உள்ளடக்கிய அந்த மலையேற்றக் குழுவை புர்ஜா வழிநடத்தியுள்ளார். 'நிம்ஸ்' என்றும் அழைக்கப்படும் இவர், 2019-ஆம் ஆண்டில் உலகின் 8,000 மீற்றருக்கும் அதிகமான உயரமுள்ள 14 மலைச்சிகரங்கள் அனைத்தையும் வெறும் 189 நாட்களில் ஏறி முடித்து, முந்தைய சாதனையை ஏழு ஆண்டுகளுக்கும் மேலான கால இடைவெளியில் முறியடித்ததன் மூலம் பெரும் புகழ்பெற்றார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T11:12:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[7 மாத குழந்தையை மீட்க நீதிமன்றத்தை நாடிய 13 வயது தாய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/13-year-old-mother-court-rescue-7-month-child-1785668641"></link>
            <id>https://canadamirror.com/article/13-year-old-mother-court-rescue-7-month-child-1785668641</id>
            <summary type="text">பங்களாதேஷில் 13 வயது சிறுமி ஒருவர், தனது 7 மாத குழந்தையை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக நீதிமன்றத்தை நாடிய சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.

தகவல்களின்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பங்களாதேஷில் 13 வயது சிறுமி ஒருவர், தனது 7 மாத குழந்தையை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக நீதிமன்றத்தை நாடிய சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p>

தகவல்களின்படி, குறித்த சிறுமி 11 வயதாக இருந்தபோது, சமூக வலைத்தளமான முகப்புத்தகம் (Facebook) மூலம் 22 வயதுடைய நபருடன் அறிமுகமானதாக கூறப்படுகிறது.</p><p>

பின்னர் அந்த அறிமுகம் திருமணமாக மாறியதாகவும், திருமணமான ஓராண்டுக்குப் பிறகு அவர்களுக்கு குழந்தை பிறந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6e5503d-8201-4e70-9dc4-5ce1bb6eabd7/26-6a6f2422bfbf7.webp' /></p><p>எனினும், குழந்தை பிறந்த சில காலத்திலேயே, சிறுமியை அவரது கணவரும் மாமியாரும் வீட்டை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது.
</p><p>
அப்போது, தனது பச்சிளம் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலையும் அவருக்கு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இதையடுத்து, தனது குழந்தையை மீண்டும் பெறும் நோக்கில் சிறுமி சட்டரீதியான உதவியை நாடினார்.</p><p> வழக்கை விசாரித்த நீதிமன்றம், குழந்தையை தாயிடம் ஒப்படைக்க உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதன் அடிப்படையில், 7 மாத குழந்தை மீண்டும் தனது தாயிடம் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
இந்தச் சம்பவம், குழந்தைத் திருமணத்தின் பாதிப்புகள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து மீண்டும் கவனம் செலுத்த வைத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-02T11:04:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! ரிச்டர் அளவில் 5.9 ஆகப் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/powerful-earthquake-in-new-zealand-1785667880"></link>
            <id>https://tamilwin.com/article/powerful-earthquake-in-new-zealand-1785667880</id>
            <summary type="text">நியூசிலாந்தின் வடக்குத் தீவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இன்று(2) ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிச்டர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நியூசிலாந்தின் வடக்குத் தீவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இன்று(2) ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.</p><p>

இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 5.9 ஆகப் பதிவாகியுள்ளதாக ஜெர்மன்
புவியியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.</p><p></p><h2>நிலநடுக்கம்</h2><p>
</p><p>
இந்த நிலநடுக்கமானது பூமியிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் (6 மைல்) ஆழத்தில்
மையம் கொண்டிருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac1146eb-f404-479a-9542-daab58fd629c/26-6a6f2342e0b8b.webp' /></p><p>
</p><p>
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல்கள்
உடனடியாக வெளியாகவில்லை.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T11:00:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலி சிறைச்சாலை கைதி ஒருவர் தப்பியோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-person-escapes-from-galle-prison-1785667930"></link>
            <id>https://tamilwin.com/article/one-person-escapes-from-galle-prison-1785667930</id>
            <summary type="text">காலி சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இந்த சம்பவம் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. </p><p>

இந்த சம்பவம் இன்று(02.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்து. </p><p>

இவ்வாறு தப்பிச் சென்ற கைதி, அம்பலங்கொட, குளியாபிட்டிய, கலகொட பகுதியைச் சேர்ந்த அகம்போடி திலீபா சம்பத் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p></p><h2> 

சுவரை தாண்டி தப்பியோடிய கைதி</h2><p>
பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புப்பட்ட சந்தேக நபர், கொள்ளை குற்றச்சாட்டுகளின் பேரில் பாலபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நான்கு வழக்குகள் தொடர்பாக, அவர் ஜூன்(22) முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c022d8b0-b885-4798-8f97-d139ac75f0cb/26-6a6f2286164a2.webp' /></p><p> </p><p>

இதனைத் தொடர்ந்து, இன்று(02) காலை கைதிகள் பட்டியலைச் சரிபார்த்தபோது, ​​இந்தக் கைதி சிறையின் பாதுகாப்புச் சுவரைத் தாண்டி குதித்து தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>

மேலும், இந்த நபர் இதற்கு முன்னர் அங்குனகொலப்பலெஸ்ஸா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோதும் சுவரைத் தாண்டி தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த நிலையில், சந்தேக நபரைக் கைது செய்வதற்காக பல பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T10:57:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் சிறையிலிருந்து டசின்கணக்கான கைதிகள் தப்பியோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dozens-of-inmates-escape-from-dr-congo-prison-1785666681"></link>
            <id>https://ibctamil.com/article/dozens-of-inmates-escape-from-dr-congo-prison-1785666681</id>
            <summary type="text">&amp;nbsp;கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கசாய் மாகாணத்தில் உள்ள ஒரு சிறையிலிருந்து குறைந்தது 50 கைதிகள் தப்பி ஓடியுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை(01) இரவு தெரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கசாய் மாகாணத்தில் உள்ள ஒரு சிறையிலிருந்து குறைந்தது 50 கைதிகள் தப்பி ஓடியுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை(01) இரவு தெரிவித்தனர்.</p><p>
நாட்டின் தெற்கு-மத்திய பகுதியில் உள்ள லூபோ சிறையிலிருந்து கைதிகள் வியாழன் இரவு முதல் வெள்ளி அதிகாலை வரை வலுக்கட்டாயமாக வெளியேறினர் என்று பிராந்திய நிர்வாகி ஜீன் ஷியாவுகே வா ஷியாவுகே கூறினார்.</p><h2>&nbsp;திட்டமிடப்பட்ட தப்பித்தல்</h2><p>"சிறை முழுவதும் காலியாகவே இருந்தது. கைதிகள் பூட்டுகளைத் திறக்காததால், இது நன்கு திட்டமிடப்பட்ட தப்பித்தல் ஆகும்," என்று ஷியாவுகே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36d9d329-e27c-4ef8-99a3-6e8a95645725/26-6a6f21892edd5.webp' /></p><p>
</p><p>
அனைத்து கைதிகளும் சிறையை விட்டு வெளியேற அனுமதித்த இந்தத் தப்பித்தலில் பாதுகாப்புப் படையினருக்குத் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.</p><p></p><p>
</p><p>
</p><h2>தேடுதல் வேட்டை ஆரம்பம்</h2><p>தப்பித்தவர்களில் பொதுமக்களுக்கு ஆபத்தானவர்களாகக் கருதப்படும் கைதிகளும் அடங்குவதாகக் கூறி, இந்தச் சம்பவத்தின் பாதுகாப்பு விளைவுகள் குறித்து அந்த அதிகாரி கவலை தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/421705b0-8916-47b8-a371-dcd73d54bba1/26-6a6f21887dbae.webp' /></p><p>
</p><p>
தப்பித்தலின் போது தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளதாகவும், மூன்று துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டதாகவும் ஷியாவுகே கூறினார்.
</p><p>
அப்பகுதியில் தப்பியோடிய கைதிகள் யாரேனும் தென்பட்டால் தகவல் தெரிவிக்குமாறும், அவர்களை மீண்டும் பிடிக்க அதிகாரிகளுக்கு உதவுமாறும் அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T10:53:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுரத்தின் வரலாறு குறித்து மறுபரிசீலனை கோரும் ஆய்வாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/researcher-reconsideration-anuradhapura-history-1785667836"></link>
            <id>https://jvpnews.com/article/researcher-reconsideration-anuradhapura-history-1785667836</id>
            <summary type="text">இலங்கையின் புராதன தலைநகரமான அனுராதபுரத்தின் வரலாறு மற்றும் அதன் இன, மத அடையாளங்கள் தொடர்பாக வரலாற்று ஆய்வாளர் சிவா சின்னப்பொடி எழுதிய ஆய்வுக் கட்டுரை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் புராதன தலைநகரமான அனுராதபுரத்தின் வரலாறு மற்றும் அதன் இன, மத அடையாளங்கள் தொடர்பாக வரலாற்று ஆய்வாளர் சிவா சின்னப்பொடி எழுதிய ஆய்வுக் கட்டுரை சமூக வலைத்தளங்களில் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.</p><p>
</p><p></p><p>2000 ஆம் ஆண்டு தாம் எழுதிய ஆய்வுக் கட்டுரையை தற்போது மீள்பகிர்ந்துள்ள அவர், அனுராதபுரம் தொடர்பாக நிலவி வரும் வரலாற்றுப் புரிதல்களை மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
அந்தக் கட்டுரையில், அனுராதபுரம் சிங்களர்களுக்கே உரித்தான வரலாற்றுத் தலைநகரம் என்ற பார்வை பெரும்பாலும் மகாவம்சம் உள்ளிட்ட பிற்கால வரலாற்று நூல்களை அடிப்படையாகக் கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2a7d783-d4a8-4703-8532-81c11685ed96/26-6a6f20fda767c.webp' /></p><p> மேலும், மகாவம்சம் ஒரு தேரவாத பௌத்தப் பார்வையில் எழுதப்பட்ட நூலாக இருப்பதால், அதிலுள்ள தகவல்களை வரலாற்று ஆதாரங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

அனுராதபுரத்தின் ஆரம்பகால அரசர்கள், அக்கால சமூகத்தின் மொழி, பண்பாடு, வழிபாட்டு முறைகள் மற்றும் அரசியல் அமைப்புகள் தொடர்பாக பல்வேறு வரலாற்று ஆதாரங்களையும் கல்வெட்டுகளையும் மேற்கோள் காட்டியுள்ள ஆசிரியர், அக்கால மக்களின் அடையாளம் குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளார்.
</p><p>
அதேபோல், எல்லாளன் – துட்டகைமுனு போர் குறித்து இன்று பரவலாக நிலவும் "தமிழர் – சிங்களர் மோதல்" என்ற விளக்கத்தை விட, அது பௌத்த அரசியல் மற்றும் மத மேலாதிக்கத்தை மையமாகக் கொண்ட மோதலாகவே புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்ற கருத்தையும் அவர் முன்வைத்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7947af8a-5820-470b-8490-0807549524cb/26-6a6f20fe5a524.webp' /></p><p>பௌத்தம் இலங்கைக்கு வந்த விதம், தேரவாத மற்றும் மகாயான பௌத்தப் பிரிவுகளுக்கிடையேயான முரண்பாடுகள், தமிழகத்துடனான வரலாற்றுத் தொடர்புகள் மற்றும் அனுராதபுரத்தின் அரசியல் பரிணாமம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் கட்டுரையில் விரிவாக ஆராய்ந்துள்ளார்.</p><p>

இலங்கையின் வரலாற்றை இன அடிப்படையில் மட்டுமல்லாது, மதம், மொழி, அரசியல் மற்றும் தொல்பொருள் ஆதாரங்களின் அடிப்படையிலும் மறுஆய்வு செய்ய வேண்டிய தேவை இருப்பதாகவும், அனுராதபுரத்தின் வரலாறு தொடர்பில் மேலும் ஆழமான கல்வியியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சிவா சின்னப்பொடி தனது கட்டுரையில் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

எனினும், இந்தக் கட்டுரையில் இடம்பெறும் கருத்துகள் ஆசிரியரின் வரலாற்று ஆய்வு மற்றும் விளக்கங்களாகும். இவை தொடர்பாக வரலாற்றாசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மத்தியில் பல்வேறு மாற்றுக் கருத்துகளும் கல்வியியல் விவாதங்களும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T10:50:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சைகளுக்கு மத்தியிலும் அசத்தல் குத்தாட்டம் போட்ட ரவி மோகன் - வைரலாகும் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/ravimohan-new-dance-video-goes-viral-1785666522"></link>
            <id>https://manithan.com/article/ravimohan-new-dance-video-goes-viral-1785666522</id>
            <summary type="text">Actor ravimohan dance video : நடிகர் ரவி மோகன் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அவரது மாமியார் சுஜாதா விஜயகுமார் சமீபத்தில் செய்தியாளர் சந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Actor ravimohan dance video : நடிகர் ரவி மோகன் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அவரது மாமியார் சுஜாதா விஜயகுமார் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விடயங்களும் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது. இந்நிலையில் ரவிமோகன் அசத்தல் குத்தாட்டம் போட்டு தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.</p><h2>நடிகர் ரவி மோகன்&nbsp;</h2><p>தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர்&nbsp; நடிகர் ரவி மோகன் தன்னுடைய நடிப்பு திறமையாலும், பல்வேறு வித்தியாசமான கதைக்களங்களில் நடித்த திரைப்படங்களாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/029279a5-0848-4f16-8bbd-56aa145c2de2/26-6a6f208d56ecf.webp' /></p><p></p><p>குறிப்பாக “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரம், அவருக்கு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பரவலான புகழையும் பாராட்டையும் பெற்றுத்தந்தது.&nbsp;</p><p>
ஆனால் சினிமா வாழ்க்கையில் சிறப்பாக இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் சில சிக்கல்களை சந்தித்து வருகின்றார் என்பது அனைவரும் அறிந்தது தான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0830572d-7fc4-4690-aaad-beda579f6e10/26-6a6f208e0e1a0.webp' /></p><p>தனது மனைவி ஆர்த்தியுடனான&nbsp; பிரிவு தொடர்பான செய்திகள் மற்றும் அதனைச் சுற்றிய விவாதங்கள் தொடர்ந்து ஊடகங்களில் பேசுபொருளாக இருந்து வருகின்றன.</p><p>

இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தனது குடும்ப வாழ்க்கை மற்றும் மனைவியைப் பற்றிய சில கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்தால் இணையத்தில் பரப்பபு ஏற்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af4c0de8-4b3a-455c-8bf1-252fa014e0de/26-6a6f208eb4f0b.webp' /></p><p>அதன்பின்னர், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் இவ்வாறு கருத்து தெரிவித்தது சரியானதல்ல என்ற விமர்சனங்களும் எழுந்தன. இதையடுத்து, அவர் தனது கருத்துகளுக்காக மன்னிப்பும் கேட்டு அறிகை வெளியிட்டிந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2d59079-0b58-4f40-a067-6d1313c290bc/26-6a6f208f68487.webp' /></p><p></p><p>இந்நிலையில், தற்போது புதிய சர்ச்சையாக, நடிகர் ரவி மோகனின் மாமியாரும் ஆர்த்தி தரப்பு நியாயங்களையும் சில உண்மைகளையும் வெளிப்படையாக கூறியுள்ளார். தற்போதும் ரவி மோகன் கெனிஷாவுடன் தான் இருக்கின்றார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.&nbsp;</p><p>இந்நிலையில், எதையும் பொருட்படுத்தாமல் ரவிமோகன் அநத்தல் குத்தாட்டம் போட்டு தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Dbh1_6lmh1e/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Dbh1_6lmh1e/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Dbh1_6lmh1e/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Ravi Mohan (@iam_ravimohan)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<a> </a><b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b><a>&nbsp;</a> &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T10:49:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கான் பயிற்சி மையத்தில் புதிய விதிமுறை ; கைபேசிகளுக்கு முழுத் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/new-rule-at-khan-training-center-ban-mobile-phones-1785667176"></link>
            <id>https://canadamirror.com/article/new-rule-at-khan-training-center-ban-mobile-phones-1785667176</id>
            <summary type="text">பிரான்ஸ் தேசிய கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பேயின் தாயார் பைசா லாமாரி, நோர்மண்டி பகுதியில் உள்ள கான் (Caen) கால்பந்து மன்றத்தின் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் தேசிய கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பேயின் தாயார் பைசா லாமாரி, நோர்மண்டி பகுதியில் உள்ள கான் (Caen) கால்பந்து மன்றத்தின் பயிற்சி மையத்தில் இளம் வீரர்களின் கைபேசிப் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளமை விளையாட்டு உலகில் கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>
கான் கால்பந்து மன்றத்தின் பெரும்பான்மை பங்குதாரராக கிலியன் எம்பாப்பே உள்ள நிலையில், மன்றத்தின் நிர்வாக மற்றும் இளம் வீரர்களின் மேம்பாட்டு நடவடிக்கைகளில் அவரது தாயார் பைசா லாமாரி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16aaf11c-83f4-4b17-86f2-1fb6a4342d2f/26-6a6f1e6a318c1.webp' /></p><p>மன்றத்தின் புதிய கால்பந்து இயக்குநரான மாத்தியூ போட்மர், இந்த முடிவை வரவேற்று, இளம் வீரர்களின் ஒழுக்கம் மற்றும் தனிமனித வளர்ச்சிக்கு இது முக்கியமான நடவடிக்கையாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
பிரெஞ்சு ஊடகமான L'Équipe நாளிதழுக்கு வழங்கிய செவ்வியில் அவர், "இளைஞர்களுக்கான திட்டம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. கல்வி, தங்குமிடம், ஊட்டச்சத்து மற்றும் மனிதவள மேம்பாடு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டார்.</p><p>

மேலும், "பயிற்சி மையத்தில் கைபேசிகளுக்கு பைசா லாமாரி தடை விதித்துள்ளார். இது மிகவும் சிறந்த முடிவு. </p><p>இதன் மூலம் இளம் வீரர்கள் ஒருவருடன் ஒருவர் நேரடியாக உரையாடி, குழுவாக இணைந்து வாழவும் பழகுகின்றனர்" என்றும் அவர் தெரிவித்தார்.
</p><p>
ஜூலை 2024 ஆம் ஆண்டு எம்பாப்பே குடும்பம் கான் கால்பந்து மன்றத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, அணி மூன்றாம் நிலை லீக்கிற்கு தரம் தாழ்த்தப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்தன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3cd32ab-3ea4-4a7b-9340-f8ccc1f16ef9/26-6a6f1e6ad89c7.webp' /></p><p>எனினும், அந்த விமர்சனங்கள் நியாயமற்றவை எனக் குறிப்பிட்ட மாத்தியூ போட்மர், எம்பாப்பே குடும்பம் பொறுப்பேற்கும் முன்னரே மன்றம் பல சவால்களை எதிர்கொண்டதாகவும், தற்போது மன்றத்தை மீண்டும் வலுப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
</p><p>
மேலும், கடினமான காலகட்டத்தில் கான் கால்பந்து மன்றத்தில் கிலியன் எம்பாப்பே முதலீடு செய்தமைக்கு தாம் பெரும் மரியாதை கொள்வதாகவும், அவரது பங்களிப்பு மன்றத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
இளம் வீரர்களின் கவனச்சிதறலைக் குறைத்து, ஒழுக்கம், பொறுப்பு மற்றும் குழு உணர்வை வளர்க்கும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, விளையாட்டு உலகில் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-02T10:42:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள்...! ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/anura-orders-use-of-ex-ministers-official-quarters-1785665091"></link>
            <id>https://ibctamil.com/article/anura-orders-use-of-ex-ministers-official-quarters-1785665091</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர்கள் உத்தியோகபூர்வ இல்லங்களாகப் பயன்படுத்திய பங்களாக்கள் மற்றும் வீடுகளைப் பொருளாதார ரீதியாகப் பயனுள்ள நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர்கள் உத்தியோகபூர்வ இல்லங்களாகப் பயன்படுத்திய பங்களாக்கள் மற்றும் வீடுகளைப் பொருளாதார ரீதியாகப் பயனுள்ள நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்கான பணிகளை விரைவுபடுத்துமாறு வலியுருத்தப்பட்டுள்ளது.
</p><p>
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு இந்த அறுவுருத்தலை வழங்கியுள்ளார்.
</p><p>
ஜனாதிபதி செயலகத்தில் அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் முன்னேற்ற ஆய்வுக் கூட்டம் இடம்பெற்றது.</p><p>
</p><p></p><h2>உள்ளூராட்சி அமைச்சு</h2><p>இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
இச்சந்திப்பில், அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிற்கு உட்பட்ட அரச நிர்வாகப் பிரிவு, உள்நாட்டலுவல்கள் பிரிவு மற்றும் உள்ளூராட்சிப் பிரிவுகளுக்காக 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 60,430.04 மில்லியன் ரூபாய் மூலதனச் செலவினம் மற்றும் 706,226.83 மில்லியன் ரூபாய் மீளாவெழும் செலவினங்களின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b5ef826-1919-4b4b-a3a3-06034ad8a4c7/26-6a6f1da07191f.webp' /></p><p>அத்தோடு 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
</p><p>
பிராந்திய ரீதியில் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை எட்டும் வகையில், பிரதேச நிர்வாக அலகுகளை அபிவிருத்தி அலகுகளாக (Development Units) மாற்றுவதற்கான திட்டமொன்றைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி மேலதிக வழிகாட்டல்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T10:36:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Diasa</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சர்கள் போன்று ஆட்சி செய்கின்றாரா அநுர..! காணி சுவீகரிப்புக்கு தொடர் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/continued-struggle-for-land-acquisition-1785666821"></link>
            <id>https://tamilwin.com/article/continued-struggle-for-land-acquisition-1785666821</id>
            <summary type="text">ராஜபக்சர்கள் தமிழர்கள் விடயத்தில் எதைச் செய்தார்களே அதையே அநுர அசாங்கமும் தமிழர்களுக்குச் செய்கின்றது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர்
தியாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராஜபக்சர்கள் தமிழர்கள் விடயத்தில் எதைச் செய்தார்களே அதையே அநுர அசாங்கமும் தமிழர்களுக்குச் செய்கின்றது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர்
தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார். </p><p>

வலிகாமம் - வடக்கு வசாவிளான் மக்கள் தமது மீள் குடியேற்றத்தினை வலியுறுத்தி
ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின், முதல் நாள் போராட்டத்தில் கலந்து கொண்டு
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><h2> 


காணி சுவீகரிப்பு</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தம் என ஆட்சிக்கு வந்த
அரசாங்கம் மக்களின் உரிமைகளை ஏற்க மறுக்கின்றது. தற்போது ஆட்சியில்
இருப்பவர்களும் கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த ராஜபக்சர்களையோ அல்லது மாறி
மாறி ஆட்சிக்கு வந்த ஏனைய அரசாங்களையோ ஒத்ததாக தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை வெளிப்படுத்தி வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e6d7b2e-e9f4-4dfd-b48b-f1a5bb275a4d/26-6a6f1d65719f7.webp' /></p><p>
</p><p>
வசாவிளானில் அமையப் பெறும் இராணுவ வைத்தியசாலை பொதுமக்களின் காணிகளை இராணுவ அதிகாரங்களை பயன்படுத்தி அங்கு வாழ்ந்த பூர்வீக கிராம மக்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றி விட்டு, அவர்களை வீடு இல்லாதவர்கள் போன்று முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். </p><p>

இந்நிலையில் தற்பொது அமைக்கப்பட்டு வரும் சட்டங்கள், ஒழுங்குவிதிகளுக்கு
புறம்பான இந்த இராணுவ வைத்தியசாலையை அகற்ற வேண்டும் என மாவட்ட
அபிவிருத்திக்குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தினை நானே வழிமொழிந்தேன்.
</p><p>இந்த விடயம் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அறிக்கையிலும் எனது பெயரை
கோடிட்டுக்காட்டி சகல திணைக்களங்களுக்கும் அனுப்பப்பட்டது.</p><h2>

ஓய்வு தினங்களிலும் கட்டப்படும் கட்டிடங்கள்</h2><p>
ஆனால் போயா தினங்களில் கூட அங்கு வீரியமான முறையில் கட்டிடம்
அமைக்கப்படுகின்றது. ஆகவே இங்கே நடப்பவற்றை பார்க்கும் போது வாயால் 
அரசாங்கம் பலவற்றை பேசினாலும் செயலளவில் ராஜபக்சர்களை ஒத்ததாகவே
இருக்கின்றது. 

நாட்டில் இலஞ்சத்தினையும் ஊழலையும் ஒழிக்கின்றார்கள் அதனை நாம்
வரவேற்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5973345-95d4-4b1f-9511-a489177fb84f/26-6a6f1d6479195.webp' /></p><p>ஒரு இனத்தின் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட அரச நடவடிக்கைகள், படுகொலைகள், இராணுவ மயமாக்கம் பற்றி நடவடிக்கை எடுக்கவில்லை. </p><p>


இலங்கையில் வாழும் தமிழர்கள் என்றால் எதையும் செய்ய முடியும் என்ற சிங்கள பேரினவாத மனநிலை இன்றைய ஆட்சியாளர்களின் உள்ளங்களுக்குள்ளும் உள்ளதா எனக் கேள்வி எழுப்புகின்றோம்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T10:35:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரையும் கைப்பற்றிய இலங்கை மகளிர்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sri-lanka-women-win-t20-series-vs-pakistan-women-1785666376"></link>
            <id>https://news.lankasri.com/article/sri-lanka-women-win-t20-series-vs-pakistan-women-1785666376</id>
            <summary type="text">இலங்கை மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் வெற்றி பெற்றது.பாகிஸ்தான் 175 ஓட்டங்கள்&amp;nbsp;

பாகிஸ்தான் மற்றும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் வெற்றி பெற்றது.</p><h2>பாகிஸ்தான் 175 ஓட்டங்கள்&nbsp;</h2><p>

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி தம்புள்ளையில் நடந்தது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a308d99-221e-4b26-970d-220fd30c7f61/26-6a6f1d1f1141a.webp' /></p><p></p><p>
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 175 ஓட்டங்கள் குவித்தது. ஷாவால் ஜூல்ஃபிஹர் 48 (35) ஓட்டங்களும், முனீபா அலி 45 (30) ஓட்டங்களும், எய்மான் ஃபாத்திமா 30 (19) ஓட்டங்களும் விளாசினர்.</p><p>

பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 17.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. </p><h2>

தொடரை&nbsp;வென்ற&nbsp;இலங்கை அணி </h2><p>சஞ்சனா கவிந்து 46 (24) ஓட்டங்களும், சமரி அதப்பத்து 40 (15) ஓட்டங்களும், ஹர்ஷிதா சமரவிக்ரமா 37 (22) ஓட்டங்களும் விளாசினர்.</p><p>

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் இலங்கை அணி தொடரை வென்றுள்ளது.
</p><p>
இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி ஆகத்து 4ஆம் திகதி நடைபெற உள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1008b26e-5afe-4406-9bbf-248a82fe39f4/26-6a6f1d1e15656.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<b> <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T10:33:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் வணிக வளாகம் அருகே துப்பாக்கிச் சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shooting-near-a-shopping-mall-in-the-us-1785666005"></link>
            <id>https://tamilwin.com/article/shooting-near-a-shopping-mall-in-the-us-1785666005</id>
            <summary type="text">அமெரிக்காவின் இடாஹோ மாநிலத்தில் உள்ள &#039;ட்வின் ஃபால்ஸ்&#039; நகரத்தில்
அமைந்திருக்கும் ஒரு பரபரப்பான வணிக வளாகப் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்
சூட்டுச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் இடாஹோ மாநிலத்தில் உள்ள 'ட்வின் ஃபால்ஸ்' நகரத்தில்
அமைந்திருக்கும் ஒரு பரபரப்பான வணிக வளாகப் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்
சூட்டுச் சம்பவத்தில், தாக்குதல் நடத்தியவர் உட்பட மூன்று பேர் உயிரிழந்ததுடன்
மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
</p><p>
இடாஹோவின் ட்வின் ஃபால்ஸ் நகரில் உள்ள 'இன்-என்-அவுட் பர்கர்' உணவகம் அருகே
நேற்று(1) சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:30 மணியளவில் இந்தத் தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டது.</p><p></p><h2>துப்பாக்கிச் சூடு</h2><p>
</p><p>
நகர செய்தித் தொடர்பாளர் ஜோஷ் பால்மர் மற்றும் பொலிஸ் தலைவர் மேத்யூ ஹிக்ஸ்
ஆகியோர் இச்சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும்,
இதனால் பொதுமக்களுக்கு இருந்த ஆபத்து முழுமையாக நீங்கிவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4abe5d7e-5371-4b4c-b9b0-b0f775982ed3/26-6a6f1c7cc8078.webp' /></p><p>
</p><p>
தாக்குதல் நடத்தியவரின் அடையாளத்தைக் கண்டறியவும், இந்தத் துப்பாக்கிச்
சூட்டிற்கான பின்னணி மற்றும் நோக்கத்தை ஆராயவும் பொலிஸார் தீவிர விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>

இச்சம்பவத்தைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள
வீதிகளும், அருகில் இருந்த பாலமும் தற்காலிகமாக மூடப்பட்டன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T10:31:28+00:00</updated>
        </entry>
    </feed>
