<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-07T10:17:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று நாமல்.. நாளை ஹரிணி..! நிமல் பெரேராவுக்கு அரசின் சக்திவாய்ந்த அமைச்சருடன் தொடர்பு - எழுந்துள்ள புதிய சர்ச்சை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-nimal-perera-npp-government-1788772770"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-nimal-perera-npp-government-1788772770</id>
            <summary type="text">நாமல் ராஜபக்வுக்கு எதிராக சாட்சியமளித்த தொழிலதிபர் நிமல் பெரேரா ஒரு ஊழல்வாதி என்றும், தற்போதைய அரசாங்கத்தின் சக்திவாய்ந்த அமைச்சர் ஒருவரே அவரது வியாபா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்வுக்கு எதிராக சாட்சியமளித்த தொழிலதிபர் நிமல் பெரேரா ஒரு ஊழல்வாதி என்றும், தற்போதைய அரசாங்கத்தின் சக்திவாய்ந்த அமைச்சர் ஒருவரே அவரது வியாபார பங்குதாரர் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் டி.வி. சானக்க குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p> நெலும் மாவத்தையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p> நாமல் ராஜபக்வுக்கு எதிராக, 2016ஆம் ஆண்டுக்குப் பின்னரான ஒரேயொரு சாட்சியான நிமல் பெரேரா, தனது சாட்சியத்தை பலமுறை மாற்றியுள்ளதாகவும், சாட்சியின் நம்பகத்தன்மை குறித்து கடுமையான கேள்விகள் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><h2>அமைச்சரின் பங்குதாரர்..&nbsp;</h2><p>"அரசாங்கத்தின் சக்திவாய்ந்த ஒரு அமைச்சரும் நிமல் பெரேராவும் இணைந்து மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் முரண்பாடான சாட்சியங்களை வழங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5fe20ff-4cf5-4de1-85a0-1223e6be8d6d/26-6a9e8b4580553.webp' /></p><p> ஆரம்பத்தில் 50 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாகக் கூறியவர்கள், பின்னர் ஒரு ரூபாய்கூட வழங்கவில்லை என்றும், அதன் பின்னர் 100 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.</p><p> </p><p>பணம் வழங்கப்பட்ட நாள், நேரம் அல்லது அது இலங்கை வந்தடைந்த விதம் குறித்து எந்த ஆதாரமும் இல்லை. </p><p>இந்நிலையில் தான், 2019 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்குப் பதிவின் போது, நிமல் பெரேரா ஒரு பொய்சாட்சி என ஷானி அபேசேகர தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f4864ca-a220-4d8e-aaf8-d1566526bd2e/26-6a9e8b4646931.webp' /></p><p>தற்போது அரசாங்கத்திற்கு எதிரானவர்களை ஒடுக்க இத்தகைய நபர்களை அரசாங்கம் பயன்படுத்துகிறது.

நாளை பிரதமர் ஹரிணி அமரசூரிய 22வது திருத்தச்சட்டத்திற்கு எதிராகத் தனது மனசாட்சிப்படி செயல்பட்டால், பணத்தை நாமலுக்கு அல்ல ஹரிணிக்கே கொடுத்ததாக நிமல் பெரேரா கூறுவார்” என சானக்க விமர்சித்துள்ளார். </p><p>அரசாங்கம் தனக்கு எதிரான குரல்களை ஒடுக்கவும், நெல் கொள்முதல் விலை மற்றும் ஊழல் மோசடிகளை மூடிமறைக்கவும் முற்படுகிறது. </p><p>எனினும், விவசாயிகளின் பிரச்சினைகளை முன்வைத்து நமால் ராஜபக்ச தலைமையில் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள பிரம்மாண்ட பேரணியை எந்த அடக்குமுறையாலும் தடுக்க முடியாது என்றும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவோ அல்லது ராஜபக்ஷக்களோ இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு பயப்படப் போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T10:12:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-man-seriously-injured-in-accident-death-1788774315"></link>
            <id>https://tamilwin.com/article/young-man-seriously-injured-in-accident-death-1788774315</id>
            <summary type="text">விபத்தில் சிக்கி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19
வயது இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு - துண...</summary>
            <content type="html"><![CDATA[<p>விபத்தில் சிக்கி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19
வயது இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p>
முல்லைத்தீவு - துணுக்காய் பகுதியில் கடந்த 04.09.2026 அன்று சைக்கிளில்
பயணித்துக்கொண்டிருந்த இளைஞன் மீது எதிரே அதி வேகமாக வந்த முச்சக்கரவண்டி மோதியதில்
இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின்
அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை
பலனின்றி நேற்றையதினம் (06.09.2026) உயிரிழந்துள்ளார்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>விபத்தில் படுகாயமடைந்த அவர் அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்ததாக
தெரிவிக்கப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16aeea49-a153-4abd-b845-36e6ac3e3373/26-6a9e8d9288077.webp' /></p><p>இந்நிலையில், அவரது மரணம் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள்
மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T10:12:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[யால தேசிய வனத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/yala-national-park-s-temporarily-closed-1788771717"></link>
            <id>https://ibctamil.com/article/yala-national-park-s-temporarily-closed-1788771717</id>
            <summary type="text">யால தேசிய வனத்தின் 01 மற்றும் 02 ஆம் வலயங்களை தற்காலிகமாக மூடுவதற்கு&amp;nbsp;வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தீர்மானித்துள்ளது.நாட்டில் நிலவும் கடுமைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>யால தேசிய வனத்தின் 01 மற்றும் 02 ஆம் வலயங்களை தற்காலிகமாக மூடுவதற்கு&nbsp;வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தீர்மானித்துள்ளது.</p><p>நாட்டில் நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக விலங்குகள் மற்றும் வனவிலங்கு அதிகாரிகளுக்கு ஏற்படும் வெப்ப அழுத்தத்தைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p><p>அதற்கமைய குறித்த இரண்டு வலயங்களையும் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மஞ்சுள அமரரத்ன தெரிவித்தார்.</p><p></p><h2>கடும் வெப்பமான வானிலை</h2><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நிலவும் கடும் வெப்பமான வானிலை காரணமாக விலங்குகளுக்கு நீர் பற்றாக்குறை மற்றும் வெப்ப அழுத்தம் கடுமையாகப் பாதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bc87b7d-3992-43b3-8f5d-b9ab512f75c8/26-6a9e8beb392fa.webp' /></p><p> 

மேலும், அதிகளவிலான சுற்றுலா ஜீப் வண்டிகள் வனத்திற்குள் பயணிப்பதால், தற்போதைய சூழ்நிலையில் வனவிலங்கு அதிகாரிகள் தமது கடமைகளை முன்னெடுப்பதில் அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளன. </p><p>

இலங்கையின் வறண்ட வலயத்தைச் சேர்ந்த யால 1 மற்றும் 2 மட்டுமன்றி, மன்னார் மற்றும் வில்பத்து தேசிய வனங்களை அண்டிய பகுதிகளில் நிலவும் நிலைமை தொடர்பிலும் அதிகாரிகள் அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றனர்.</p><p> 

தேவைப்படும் சந்தர்ப்பங்களில் குறித்த வனங்களை மூடுவதற்கோ அல்லது விலங்குகள் மற்றும் அதிகாரிகளுக்கு வெப்ப அழுத்தம் இன்றி செயற்படுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கோ நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T10:12:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 வயது சிறுமி உட்பட 6 பேர் பலி: 306 ட்ரோன்களை இடைமறித்த ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-said-intercepted-306-ukrainian-drones-1788776005"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-said-intercepted-306-ukrainian-drones-1788776005</id>
            <summary type="text">Russia said intercepted 306 ukrainian drones: உக்ரைனின் ட்ரோன் தாக்குதலில் ரஷ்யா மற்றும் இணைக்கப்பட்ட கிரிமியாவில் 15 வயது சிறுமி உட்பட 6 பேர் பலியாகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russia said intercepted 306 ukrainian drones: உக்ரைனின் ட்ரோன் தாக்குதலில் ரஷ்யா மற்றும் இணைக்கப்பட்ட கிரிமியாவில் 15 வயது சிறுமி உட்பட 6 பேர் பலியாகினர்.</p><p> 

ரஷ்யா மற்றும் இணைக்கப்பட்ட கிரிமியா பகுதிகளை குறிவைத்து, உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் ஆறு பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>உக்ரைன் ட்ரோன் தாக்குதல்</h2><p>
ரஷ்யாவின் பெல்கோரோட் மற்றும் பெர்ம் பிராந்தியங்கள் மற்றும் ரஷ்யாவால் இணைக்கப்பட்ட கிரிமியா ஆகிய பகுதிகளை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

இதில் எல்லை நகரமான Grayvoron-யில் ஒருவர் கொல்லப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31bac478-120f-473a-883d-e63fa26fe882/26-6a9e8e48acffd.webp' /></p><p></p><p> பெல்கோரோட் பிராந்தியத்தில் கார் ஒன்றின் மீது ட்ரோன் மோதியதில் ஒரு ஆணும், பெண்ணும் உயிரிழந்ததாக உள்ளூர் அவசரகால தலைமையகம் தெரிவித்துள்ளது.
</p><p>
அதேபோல் பெர்ம் பிராந்தியத்தில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீது ட்ரோன் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், நான்கு பேர் காயமடைந்ததாகவும் ஆளுநர் டிமிட்ரி மஹோனின் தெரிவித்தார்.&nbsp;</p><h2>15 வயது சிறுமி&nbsp;பலி</h2><p>

இணைக்கப்பட்ட கிரிமியாவில், செவாஸ்டோபோல் துறைமுக நகரில் இரவு நேரத்தில் நடந்த தாக்குதலில் 15 வயது சிறுமியும், ஒரு ஆணும் கொல்லப்பட்டனர்.</p><p>

இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை மாலைக்கும் திங்கட்கிழமை காலைக்கும் இடையில் ரஷ்யா மற்றும் இணைக்கப்பட்ட கிரிமியா முழுவதும் 306 உக்ரேனிய ட்ரோன்களை இடைமறித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ceeba47-b60d-40ad-b8fe-cc9424e8c09e/26-6a9e8e4961911.webp' />&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p><br>]]></content>
            <updated>2026-09-07T10:10:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஞ்சணத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி வைத்த இளையராஜா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/manjanathi-movie-shoot-starts-from-today-1788775808"></link>
            <id>https://cineulagam.com/article/manjanathi-movie-shoot-starts-from-today-1788775808</id>
            <summary type="text">இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மஞ்சணத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

மஞ்சணத்தி

பைசன்: காளைமாடன் திரைப்படத்தின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மஞ்சணத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.</p><p></p><p>
</p><h2>
மஞ்சணத்தி</h2><p>

பைசன்: காளைமாடன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் மஞ்சணத்தி. இப்படத்தை நாவி ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்கந்தா பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/699de753-6754-4a43-b8df-434d6abfde44/26-6a9e8d84a8437.webp' /></p><p>இப்படத்திற்கு இசைஞானி <a href="https://www.instagram.com/p/Dc-bweCiQGT/?img_index=1" target="_blank">இளையராஜா </a>இசையமைக்கிறார்.

இப்படத்தில் கதிர், விது, கயாடு லோஹர், பிரியங்கா மோகன், பூர்ணிமா ரவி ஆகியோர் நடிக்கிறார்கள். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. படப்பிடிப்பை இளையராஜா விளக்கு ஏற்றி தொடங்கி வைத்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc7bdfed-b1ee-49d4-be8c-07f97e18357f/26-6a9e8d833e86f.webp' /></p><p>படப்பிடிப்பு தொடங்கியுள்ளது என்கிற அறிவிப்பு மட்டுமின்றி, மஞ்சணத்தி திரைப்படத்திற்கான புதிய போஸ்டரையும் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், இளையராஜாவிற்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/240e869a-47e8-4397-8585-a01d5787dc9b/26-6a9e8d83ef0fa.webp' /></p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Dc-bweCiQGT/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Dc-bweCiQGT/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Dc-bweCiQGT/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Mari Selvaraj (@mariselvaraj84)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-07T10:10:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்! சர்வதேசத்துக்கு ஐ.நா. அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/volker-turk-s-latest-report-on-sri-lanka-1788771862"></link>
            <id>https://ibctamil.com/article/volker-turk-s-latest-report-on-sri-lanka-1788771862</id>
            <summary type="text">ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளும் ஏனைய நாடுகளும் உண்மை மற்றும் நீதியை உறுதிப்படுத்துவதற்காக திசாநாயக்க அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளும் ஏனைய நாடுகளும் உண்மை மற்றும் நீதியை உறுதிப்படுத்துவதற்காக திசாநாயக்க அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் அழைப்பு விடுத்துள்ளது.</p><p>ஜெனிவா மனித உரிமை பேரவை கூட்டமானது இன்று ஆரம்பமான நிலையில்,&nbsp;ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் <a href="https://www.hrw.org/news/2026/09/07/un-finds-little-progress-on-justice-in-sri-lanka" target="_blank">வோல்கர் டர்க்</a> வெளியிட்ட சமீபத்தய அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைமை தொடர்பான புதிய அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் வோல்கர் டர்க் வெளியிட்டுள்ளார்.</p><p></p><h2>கடந்த கால மனித உரிமை மீறல்</h2><p>

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் 2024 செப்டெம்பரில் பதவியேற்றபோது, கடந்த கால மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்கப்படும் என உறுதியளித்திருந்தது என்பதையும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37f1b7b2-2167-46e8-b013-19a6117d1558/26-6a9e846ad66d3.webp' /></p><p>அறிக்கையின்படி, “சில முக்கிய வழக்குகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் காணப்பட்ட போதிலும், 2009ஆம் ஆண்டு முடிவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின்போது அனைத்து தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச சட்டத்தின் கீழான குற்றங்கள், பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் தீவிர மீறல்கள் தொடர்பில் இதுவரை போதுமான அங்கீகாரமோ பொறுப்புக்கூறலோ ஏற்படுத்தப்படவில்லை.</p><p>
இதேபோன்ற கவலைகளை மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) செப்டெம்பர் 1ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையிலும் பதிவு செய்துள்ளது.
</p><p>
சில முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் வரையறுக்கப்பட்ட முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், நிவாரணப் பணியாளர்கள் கொல்லப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர்கள் இலக்கு வைக்கப்பட்டமை தொடர்பான வழக்குகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>
கடந்த கால மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்காக சுயாதீன பொது அலுவலகத்தை நிறுவுவதாக அரசாங்கம் வழங்கிய உறுதியும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
</p><p>
அதேபோன்று, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான சட்ட மற்றும் கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
</p><p>
கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரிப்பதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் நிறுவப்பட்ட Sri Lanka Accountability Project எனப்படும் பொறிமுறையையும் திசாநாயக்க அரசாங்கம் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.&nbsp;</p><p></p><h2>அடக்குமுறைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்</h2><p> மனித உரிமை பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைத் துன்புறுத்தவும் கைது செய்யவும் இலங்கை அரசாங்கம் இன்னமும் அடக்குமுறைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) பயன்படுத்தி வருவதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9040e5c-d23a-4074-a2c9-5cf1fb80aadc/26-6a9e846b8d299.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அரச புலனாய்வு அமைப்புகளின் கண்காணிப்பு மற்றும் விசாரணைகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வரை, அதன் பயன்பாட்டை இடைநிறுத்துவதற்கான தற்காலிகத் தடை விதிக்குமாறு ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளரால் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>

மேலும், இந்தச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தப்படுகிறது.</p><p> நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சட்ட மற்றும் கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களை இலங்கை அரசாங்கம் அவசரமாக முன்னெடுக்க வேண்டும்.</p><p>
அடக்குமுறை சட்டங்களை நீக்குதல், பாதுகாப்புத் துறையில் விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் மற்றும் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் ஆகியவை அவசியம்.</p><p>
இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், குற்றங்களுக்கான தண்டனையின்மை மேலும் வலுப்பெறுவதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான நம்பிக்கையின்மை மேலும் ஆழமடையும் அபாயம் இருக்கின்றது.</p><p>சர்வதேச குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் முன்னேற்றங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் அலுவலகம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.</p><p>

மேலும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளும் ஏனைய நாடுகளும் உண்மை மற்றும் நீதியை உறுதிப்படுத்துவதற்காக திசாநாயக்க அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T10:06:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெருங்கிய கூட்டாளிகளின் பெயர்களில் கோடிக்கணக்கான சொத்துக்கள்! அதிகாரிகளிடம் சிக்கிய இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/action-to-freeze-the-assets-of-the-two-1788774781"></link>
            <id>https://tamilwin.com/article/action-to-freeze-the-assets-of-the-two-1788774781</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரின் சொத்துக்களை முடக்க சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி, கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரின் சொத்துக்களை முடக்க சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>அதன்படி, கடத்தல்காரர்களில் ஒருவருக்கு எம்பிலிப்பிட்டிய, காந்திசபுர பகுதியில் உள்ள ஏக்கர் நிலம் மற்றும் மூன்று மாடி வீடு ஆகியவற்றின் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. </p><p>மேலும், அதன் மதிப்பு சுமார் 7 கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>பொலிஸார் தீவிர விசாரணை</h2><p>
</p><p>
மேலும், மற்றொரு கடத்தல்காரருக்கு எம்பிலிப்பிட்டிய, நியூ டவுன் பகுதியில் உள்ள 23.7 பேர்ச் நிலம் மற்றும் மூன்று மாடி வீடு ஆகியவற்றின் பயன்பாட்டை முடக்க சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4a5749b-b929-4b59-adcd-19202279c873/26-6a9e8b2f44bd7.webp' /></p><p>

இந்த கடத்தல்காரர்கள் தங்களின் நெருங்கிய கூட்டாளிகளின் பெயர்களில் இந்த சொத்துக்களை வாங்கியிருக்கலாம் என தற்போது சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.</p><p>

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.</p><p> </p><p></p>]]></content>
            <updated>2026-09-07T10:05:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் வாகனங்களில் பாடசாலைக்குச் சென்ற மாணவர்களும் ஆசிரியர்களும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/students-went-to-school-in-police-vehicles-1788775059"></link>
            <id>https://jvpnews.com/article/students-went-to-school-in-police-vehicles-1788775059</id>
            <summary type="text">&amp;nbsp; கொத்மலையில் , இன்று (07) திங்கட்கிழமை பாடசாலைக் குழந்தைகளும் ஆசிரியர்களும் பொலிஸ் வாகனங்களில் பாடசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நெகிழ்ச்சியான ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொத்மலையில் , இன்று (07) திங்கட்கிழமை பாடசாலைக் குழந்தைகளும் ஆசிரியர்களும் பொலிஸ் வாகனங்களில் பாடசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் பதிவாகியுள்ளது.
</p><p>
தித்வா புயல் மற்றும் கடந்த ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் பெய்த கனமழை காரணமாகக் கொத்மலை - கம்பளை பிரதான வீதியின் பனங்கம்மன பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு மற்றும் வீதி வெடிப்புகள் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d03c910-faa4-4ef6-8280-7a6573f4f81a/26-6a9e8a955af4d.webp' /></p><h2>&nbsp;முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ள&nbsp;போக்குவரத்து </h2><p>
</p><p>
பனங்கம்மன பகுதியிலிருந்து கொத்மலை புதுநகரிலுள்ள காமினி திசாநாயக்க பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களும் ஆசிரியர்களும் பேருந்து சேவை இன்மையால் மண்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.</p><p></p><p>
</p><p>
வீதி சேதமடைந்துள்ளதால், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தற்காலிக மரக்கட்டைகளைப் பயன்படுத்தி மிகவும் ஆபத்தான முறையிலேயே மண்சரிவுப் பகுதியைக் கடந்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a882915-a7c5-4c7f-a1a0-067a10609dc9/26-6a9e8a9614614.webp' /></p><p>
</p><p>

இந்நிலையில் , கொத்மலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, ஆய்வாளர் இந்திகா லலித் தலைமையிலான பொலிஸ் குழுவினர் தங்களது இரண்டு பொலிஸ் வாகனங்களைப் பயன்படுத்தி, மண்சரிவுப் பகுதியிலிருந்து மாணவர்களையும் ஆசிரியர்களையும் பாதுகாப்பாகப் பாடசாலைக்குக் கொண்டு சேர்த்து உதவினர்.</p><p></p><p>
</p><p>
இது தொடர்பில் கொத்மலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, இலங்கை போக்குவரத்துச் சபையின் கொத்மலை பணிமனை மேலாளருடன் கலந்துரையாடியுள்ளார். </p><p>

அதற்கமைய, இன்று திங்கட்கிழமை (07) பிற்பகல் முதல் கொத்மலை நியூ டவுனிலிருந்து மண்சரிவு ஏற்பட்ட பகுதி வரை பேருந்து சேவைகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-07T09:54:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழல் குற்றங்களை முடிவுக் கொண்டு வர புதிய முயற்சி - இளைஞர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-effort-to-end-corruption-crimes-1788774511"></link>
            <id>https://tamilwin.com/article/new-effort-to-end-corruption-crimes-1788774511</id>
            <summary type="text">ஊழல் மோசடி, போதைப்பொருள் அற்ற தூய்மையான நாடாக கட்டியெழுப்புவதற்கும் எமது எதிர்கால இளம் சந்ததிகளின் நல்ல எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்வதற்காக
எங்களு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் மோசடி, போதைப்பொருள் அற்ற தூய்மையான நாடாக கட்டியெழுப்புவதற்கும் எமது எதிர்கால இளம் சந்ததிகளின் நல்ல எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்வதற்காக
எங்களுடன் இளைஞர் யுவதிகள் கைகோர்க்குமாறு மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பின் பிரதி தலைவரும் ஊடக பேச்சாளரும் சமூக செயற்பாட்டாளருமான அந்தனிசில்
ராஜ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பின் அங்குராப்பணம் நேற்று(06.09.2026)
பாலமீன்மடுவில் ஆரம்பிக்கப்பட்டது.</p><p>

அதன் தலைவராக ஓய்வு
பெற்ற கிராம உத்தியோகத்தர் முத்துலிங்கம் செயலாளர் ஜேம்ஸ் ரூபசேன, பிரதி
தலைவரும் ஊடக பேச்சாளரும் சமூக செயற்பாட்டாளருமான அந்தனிசில் ராஜ்குமார்
நியமிக்கப்பட்டனர்.</p><p>

 இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>


அமைப்பின் நோக்கம்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், 

மாவட்டத்தில் ஊழல், மோசடி, போதைப்பொருள் வியாபாரம், தொடர்பாக முக்கியமாக
இருக்கும் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வர வேண்டிய தேவையின் அடிப்படையில் இந்த
அமைப்பை உருவாக்கியுள்ளோம்.

எனவே பொது மக்கள் இந்த ஊழல் தொடர்பாக எங்களிடம் முறைப்பாடு செய்வதற்கு வெகு
விரைவில் அலுவலகம் ஒன்றை திறக்கவுள்ளோம். </p><p>இதில் எந்த விதமான அரசியல் சார்ந்த
அரசியல் செயற்பாடுகளும் இல்லை, இது முற்று முழுதாக அரசியலுக்கு அப்பாற்பட்டு
மக்களின் நலன் சார்ந்த ஒரு ஊழல் மோசடிகளை வெளிப்படுத்தி உரிய அதிகாரிகளின்
கவனத்திற்கு கொண்டு வந்து ஊழலை தடுப்பதற்காகவே இந்த அமைப்பை உருவாக்கியுள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23963da5-71a5-4131-82c7-a0cb89eaa163/26-6a9e88c8bc59a.webp' /></p><p>

இன்று இந்த அமைப்பு உருவாக்கி தினமான நேற்று(06) அரச
திணைக்களங்கள் விடுமுறை நாளில் வன பரிபாலன சபை அரச வாகனத்தை எடுத்துக்கொண்டு
மாவட்ட புதிய செயலகத்துக்கு செல்லும் வழியிலே பாலமீன்மடுவில் அமைந்துள்ள ஒரு
தென்னந் தோட்டத்தில் திணைக்களத்தின் சீருடையை அணிந்து கொண்டு இருவர் நடந்து கொண்ட விதம் உயிராபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் இடம்பெற்றுள்ளது.</p><p> 


எனவே அரச வாகனத்தை தங்கள் தேவைக்கு பயன்படுத்தியது மட்டுமல்லாது மதுபோதைக்கு
பயன்படுத்திய இரு அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க
வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்டுக் கொள்கிறோம்.
</p><h2>
ஊழல் குற்றங்களை குறைக்க நடவடிக்கை</h2><p>

இவ்வாறு அரச வாகனத்தை மக்கள் வரிப்பணத்தில் அதற்கு எரிபொருளை நிரப்பி அரச
வாகனத்தில் மதுபானங்களை கொள்வனவு செய்து அரச சொத்தை வீணடித்து வரும் இவ்வாறான
சில அரச திணைக்கள ஊழல் மோசடி, அரச சொத்தை துஷ்பிரயோகம் செய்யும்
உத்தியோகத்தர்கள் தொடர்பாக வெளி கொண்டு வருவதன் மூலம் இந்த மோசடிகளை தடுக்க முடியும் என்பதற்காக இந்த அமைப்பை உருவாக்கியுள்ளோம்.</p><p>&nbsp;இன்று மாவட்டத்தில் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வரும் நிலையில், இதனை தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/240b60b5-0449-4236-b839-b36316c33cfd/26-6a9e88c99276e.webp' /></p><p> </p><p>
அதேவேளை அரசாங்கம் முன்னெடுக்க இருக்கும்
பாடசாலை மாணவர்களின் புத்தக பைகள் பாடசாலைக்குள் நுழையும்போது சோதனையிடும் திட்டத்தை கொண்டு வரவுள்ளது.
</p><p>
எனவே இலங்கையை ஒரு ஊழல் மோசடி போதைப் பொருள் அற்ற தூய்மையான நாடாக
கட்டியெழுப்புவதற்கும் எமது எதிர்கால இளம் சந்ததிகளின் நல்ல எதிர்காலத்திற்கு
அழைத்துச் செல்வதற்காக ஒவ்வொரு பிரதேசத்தில் இருந்து இளைஞர் யுவதிகள் உங்கள்
பிரதேசத்தில் நடக்கும் ஊழல், மோசடி மற்றும் போதை வியாபாரம் போன்ற சட்டவிரோதமான
செயற்பாடுகள் தொடர்பாக தகவல்களை தந்து உதவினால் நாங்கள் பொலிஸாருடன் இணைந்து உரிய சட்ட நடவடிக்கை எடுத்து தீர்வினை பெற்றுத் தருவோம். எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் யுவதிகள் எங்களுடன் கைகோர்க்கலாம் என்றார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T09:50:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிமல் பெரேராவுக்கு உயிரச்சுறுத்தல்! அவுஸ்திரெலியாவில் பதுங்கியுள்ள மற்றுமொரு முக்கிய குற்றவாளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nimalperera-receives-death-threat-namals-arrest-1788763059"></link>
            <id>https://ibctamil.com/article/nimalperera-receives-death-threat-namals-arrest-1788763059</id>
            <summary type="text">சிறிலங்கன் விமான சேவைக்காக ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்த பரிவர்த்தனையில் கிடைத்ததாகக் கூறப்படும் தரகு தொகையிலிருந்து 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கன் விமான சேவைக்காக ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்த பரிவர்த்தனையில் கிடைத்ததாகக் கூறப்படும் தரகு தொகையிலிருந்து 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட விவகாரத்தின் முக்கிய சாட்சியாளரான&nbsp;நிமல் பெரேராவின் பாதுகாப்பு குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p> தொழிலதிபர் நிமல் பெரேரா சமர்ப்பித்துள்ள பிரமான பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சமர்பனங்களை நீதிமன்றில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றில் சமர்ப்பித்த நிலையில் இந்த விடயம் பேசுபொருளாகியுள்ளது.</p><p>இந்த வழக்கின் முக்கிய சாட்சியாளரான&nbsp;நிமல் பெரேரா தற்போது தன்னை பாதுகாத்துக்கொள்ள அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ளார்.</p><p></p><h2>புரூணையில் அமைந்துள்ள நிறுவனம்</h2><p>ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நீதிமன்றத்தில் சான்றிதழொன்றை சமர்ப்பித்திருந்த நிலையில், அதனை நாமல் ராஜபக்சவின் சட்டத்தரணிகள் சவால் செய்யவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a14c99a-6cfd-41d9-95d5-2ed18fe3b600/26-6a9e7b0f6da0a.webp' /></p><p>இதனடிப்படையில் உண்மைகளை கருத்தில்கொண்ட நீதவான் அவரை&nbsp; எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.</p><p>
இலஞ்ச ஆணைக்குழு சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் இலஞ்ச ஆணைக்குழுவும் இணைந்து மேற்கொண்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
</p><p>
அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் சர்வதேச ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு தெரிவித்தது.&nbsp;</p><p>ஏர்பஸ் விமானங்களை கொள்வனவின் நிறுவனத்தின் தாய் நிறுவனம் புரூணையில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><h2>பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க&nbsp;</h2><p>
</p><p>
குறித்த ஏர்பஸ் பரிவர்த்தனையில் ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 1.454 மில்லியன் யூரோக்கள் இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d489fac-acdd-4741-a549-8bd8f0cc3cdd/26-6a9e7b1024656.webp' /></p><p>
</p><p>
‘Biz Solutions’ நிறுவனத்தின் உரிமையாளராகவும் அதன் பணிப்பாளராகவும் பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க செயற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
அவர் ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனின் மனைவி. பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவுடன் தொடர்புடைய நிறுவனமொன்றிலிருந்து ரூ.9 மில்லியன், ரூ.7 மில்லியன், ரூ.2 மில்லியன் மற்றும் ரூ.6 மில்லியன் என நான்கு சந்தர்ப்பங்களில் மொத்தம் ரூ.25 மில்லியன் ஷமீந்திர ராஜபக்ச என்பவரின் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது</p><p>மேலும், அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் நிமல் பெரேராவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் Sabre Vision Holding Ltd நிறுவனத்தின் பெயரில் சிங்கப்பூரில் உள்ள OCBC வங்கிக் கணக்கிற்கு 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
</p><p>
பின்னர், அந்த 8 இலட்சம் அமெரிக்க டொலர்களை நாமல் ராஜபக்சவுக்கு தாம் வழங்கியதாக நிமல் பெரேரா தனது பிரமான பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>2014ஆம் ஆண்டின் நாணய மாற்று விகிதத்தின்படி அந்தத் தொகையின் பெறுமதி சுமார் ரூ.100 மில்லியன் எனவும் இலஞ்ச ஆணைக்குழு தெரிவித்தது.</p><p> இந்த சம்பவம் தொடர்பாக நிமல் பெரேரா அவுஸ்திரேலியாவிலிருந்து சத்தியப்பிரமாணம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.</p><p></p><h2>உயிர் அச்சுறுத்தல்கள்</h2><p> </p><p>தமக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாக அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>
இந்த விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாகவே தாம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல நேரிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>தற்போதும் இலங்கை வந்தார் தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நிமல் பெரேராவிடம் ஏற்கனவே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. </p><p>பணம் பகிர்ந்தளிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க தற்போது அவுஸ்திரேலியாவில் இருப்பதாகவும், அவரை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இலஞ்ச ஆணைக்குழு தெரிவித்தது.</p><p>
மற்றொரு சந்தேகநபரான ஷமீந்திர ராஜபக்ச அமெரிக்காவில் இருப்பதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.</p><p>நாமல் சார்பில் பிணை கோரி ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

தமது வாடிக்கையாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருப்பது நிமல் பெரேராவின் வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என அவர் தெரிவித்தார்.</p><p></p><h2>நிமல் தொடர்பான மற்றொரு வழக்கு&nbsp;</h2><p>
</p><p>
நிமல் பெரேரா நாமலுக்கு பணம் வழங்கியதாக உறுதிப்படுத்துவதற்குப் போதுமான சாட்சியங்கள் முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50e94f58-b76f-494a-87a7-ba822388c535/26-6a9e7b10cf7d6.webp' /></p><p>
</p><p>
நிமல் பெரேரா பல்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளதால், அவரது நம்பகத்தன்மை தொடர்பில் பாரிய சந்தேகங்கள் இருப்பதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி கூறியிருந்தார்.</p><p>

பிரான்ஸ் அதிகாரிகளோ அல்லது ஏர்பஸ் நிறுவன அதிகாரிகளோ நிமல் பெரேராவுக்கு பணம் வழங்கப்பட்டதாகக் கூறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
மேலும், நிமல் பெரேரா தொடர்பான மற்றொரு வழக்கு தற்போது மேல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதாகவும், அது கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பான வழக்கு என்றும் அவர் தெரிவித்தார்.</p><p>

அந்த வழக்கிலும் Sabre Vision Holding Ltd நிறுவனத்தின் கணக்கிற்கு பணம் கிடைத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அந்தக் கணக்கு தமக்குச் சொந்தமானதல்ல என்றும், அது இத்தாலிய நண்பர் ஒருவருக்குச் சொந்தமானது என்றும் நிமல் பெரேரா முன்னர் தெரிவித்திருந்ததாக சட்டத்தரணி குறிப்பிட்டார்.
</p><p>
இதனால், நிமல் பெரேரா ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு விதமான வாக்குமூலத்தையும் மற்றொரு சந்தர்ப்பத்தில் அதற்கு மாறான வாக்குமூலத்தையும் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
</p><p>
2019ஆம் ஆண்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நிமல் பெரேரா வழங்கிய வாக்குமூலங்களை நம்பவில்லை என்றும், அவ்வாறிருக்கும்போது 2026ஆம் ஆண்டு அவரது வாக்குமூலங்களை எவ்வாறு நம்ப முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
</p><p>
இத்தகைய நிலைமையை “தேவை ஏற்படும் போது கபரகொயாவையும் தலகொயாவாக மாற்றும் கோட்பாடு” என வர்ணிக்க முடியும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார்.
</p><p>
எனவே, இந்த விடயங்களை விசேட காரணிகளாகக் கருதி தமது வாடிக்கையாளருக்கு பிணை வழங்குமாறு அவர் நீதிமன்றத்திடம் கோரினார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T09:49:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிஸ் வேர்ல்ட் பட்​டத்தை வென்ற தமிழ் பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/taanusiya-chetty-3rd-won-the-miss-world-2026-1788766152"></link>
            <id>https://canadamirror.com/article/taanusiya-chetty-3rd-won-the-miss-world-2026-1788766152</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மிஸ் வேர்ல்ட் பட்​டத்தை டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா (வயது 24), வென்றுள்ளார்.

 ஸ்பெ​யினைச் சேர்ந்த எலிசபெத் 2 ஆம் இடத்​தை​...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மிஸ் வேர்ல்ட் பட்​டத்தை டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா (வயது 24), வென்றுள்ளார்.

 ஸ்பெ​யினைச் சேர்ந்த எலிசபெத் 2 ஆம் இடத்​தை​யும், மலேசியாவை சேர்ந்த தமிழ்ப் பெண்ணான தனுசியா செட்டி 3 ஆம் இடத்​தை​யும் பிடித்​தனர்.
</p><p>
வியட்​நாமின் காங் ஹோவா மாகாணம், நியா ட்ராங் நகரில் கடந்த ஓகஸ்ட் 8 ஆம் திகதி மிஸ் வேர்ல்டு உலக அழகிப் போட்டி தொடங்​கியது. 

இதில் இந்​தி​யா​வைச் சேர்ந்த நிகிதா போர்​வால் உட்பட 111 நாடு​களைச் சேர்ந்த போட்​டி​யாளர்​கள் பங்​கேற்​றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fb0d005-7f95-47ee-a99a-072ff28aaa91/26-6a9e67ca6bf76.webp' /></p><h2>மலேசியாவை சேர்ந்த தமிழ்ப் பெண்</h2><p> </p><p>அவர்​களுக்கு பல்​வேறு கட்​டங்​களாக போட்​டிகள் நடத்​தப்​பட்​டன.

வியட்​நாமின் நியா ட்ராங் நகரில் நேற்று முன்​தினம் மாலை இறுதிப் போட்டி நடை​பெற்​றது. முதல்​கட்​ட​மாக 111 போட்டியாளர்களில் இருந்து 40 பேர் தேர்வு செய்​யப்​பட்​டனர். இதில் இந்​தி​யா​வின் நிகிதா இடம் பெற்​றிருந்​தார். அதன்​பிறகு 20 பேர் தேர்வு செய்​யப்​பட்​டனர்.</p><p>

ஆனால் அந்​தப் பட்​டியலில் இந்​திய அழகி இடம்​பெற​வில்​லை. அடுத்த கட்​ட​மாக 12 போட்​டி​யாளர்​கள் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டனர். அவர்​களில் இருந்து 6 பேர் தேர்வு செய்யப்​பட்​டனர். நள்​ளிர​வில் முடிவு​கள் அறிவிக்​கப்​பட்​டன.
</p><p>
அப்​போது டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா முதலிடத்​தைப் பிடித்து ‘மிஸ் வேர்ல்​டு’ உலக அழகி பட்​டத்தை வென்​றார்.

 அவருக்கு கடந்த ஆண்டு பட்​டம் வென்ற தாய்​லாந்​தின் ஓபல் சுசாடா மகுடம் சூட்​டி​னார். ஸ்பெ​யின் நாட்டை சேர்ந்த எலிசபெத் ரெய்​னெஸ் (வயது 22) இரண்​டாவது இடம் பிடித்​தார்.

மலேசி​யா​வைச் சேர்ந்த தனுசியா செட்டி (வயது 25) மூன்​றாம் இடத்தைப் பெற்​றார். </p><p>அவரது தாய்​மொழி தமிழ் ஆகும்.

 அவரது தந்தை வீர​பாண்​டியன். 14 வயதில் தாயை இழந்த தனுசியா தந்தை​யின் அரவணைப்​பில் வளர்ந்​தார். அவர் கொடுத்த ஊக்கத்தால் மிஸ் மலேசியா பட்​டம் வென்​று, மிஸ் வேர்ல்டு போட்டி​யில் நுழைந்​தார்.
</p><p>
வியட்​நாமில் நடை​பெற்ற மிஸ் வேர்ல்டு போட்​டி​யின்​போது ஆங்​கிலம், மலாய், மாண்​டரின், தமிழ் ஆகிய 4 மொழிகளில் தனுசியா சரள​மாக பேசி​னார். “மாற்​றம் என்​பது நமக்​குள் இருந்தே தொடங்க வேண்​டும்” என்று அவர் 4 மொழிகளில் பேசிய வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாக பரவி வரு​கிறது.</p>]]></content>
            <updated>2026-09-07T09:47:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் தேர்த்திருவிழா; பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை; மாணவர்கள் மகிழ்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nallur-chariot-festival-holiday-schools-jaffna-1788774236"></link>
            <id>https://jvpnews.com/article/nallur-chariot-festival-holiday-schools-jaffna-1788774236</id>
            <summary type="text">&amp;nbsp; வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் தேர் திருவிழாவன்று யாழ் மற்றும் நல்லூர் கோட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம்<a href="https://jvpnews.com/article/mango-festival-at-nallur-kandaswamy-temple-1788762788" target="_blank"> நல்லூர் தேர் திருவிழா</a>வன்று யாழ் மற்றும் நல்லூர் கோட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, யாழ். நல்லூர் கோட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்குட்பட்ட பொருத்தமான பாடசாலைகளுக்கு நாளைமறுதினம் புதன்கிழமை (09) விடுமுறை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை அறிவுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6e4dc4c-1424-474a-aaf4-b9b45573e17a/26-6a9e875e2fb58.webp' /></p><h2>பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை </h2><p>
</p><p>

நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குமாறு ஆளுநரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து, குறித்த விடயம் தொடர்பில் சாதகமாகப் பரிசீலித்த ஆளுநர், யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்குட்பட்ட பொருத்தமான பாடசாலைகளுக்கு தேர் திருவிழாவான புதன்கிழமை அன்று, விசேட விடுமுறை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.</p><p></p><p>

அதேவேளை, குறித்த விடுமுறை காரணமாக கற்றல் நடவடிக்கைகளில் ஏற்படும் இழப்பை ஈடுசெய்யும் வகையில் பதில் பாடசாலை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-07T09:46:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிடுக்கு பிடியில் சிக்கியுள்ள நாமலின் பின்னணி! திடுக் தகவல்களை வெளியிட்ட பிமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/air-bus-case-proven-in-int-court-1788774281"></link>
            <id>https://tamilwin.com/article/air-bus-case-proven-in-int-court-1788774281</id>
            <summary type="text">எயார் பஸ் கொள்வனவின் போது கையூட்டல் பெற்றுக் கொள்ளப்பட்ட விவகாரம் தொடர்பிலான பல முக்கிய தகவல்களை அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன...</summary>
            <content type="html"><![CDATA[<div>எயார் பஸ் கொள்வனவின் போது கையூட்டல் பெற்றுக் கொள்ளப்பட்ட விவகாரம் தொடர்பிலான பல முக்கிய தகவல்களை அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்டுள்ளார்.
</div><div><br></div><div>ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் சவப்பெட்டிக்கு ஆணி அடித்த சம்பவமாக இந்த ஊழல் மோசடியை சுட்டிக்காட்ட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
</div><div><br></div><div>லண்டன் நீதிமன்றத்தில் இந்த குற்றச்சாட்டுக்கள் நிரூபணம் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.</div><div><br></div><div> </div><div><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ef6ee1f-0563-4f43-955b-96d7032329ba/26-6a9e878b56f53.webp' /></div><div><br></div><div>எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்....</div><div><br></div><div>
 இலங்கைக்கும் இந்தோனேசியாவிற்கும் விமானங்களை விற்பனை செய்யும் போது இடம் பெற்ற முறைகேடுகள் தொடர்பில் லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை செய்யப்பட்டது.
</div><div><br></div><div>எயார் பாஸ் நிறுவனமானது மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல்களின் போது கையூட்டல் கொடுக்கப்பட்டமை லண்டன் மேல் நீதிமன்ற விசாரணைகளில் நிரூபிகக்ப்பட்டுள்ளது.</div><div><br></div><div>
</div><div>இந்த விசாரணைகள் ஏழு எட்டு வருடங்களுக்கு முன்னர் முன்னெடுக்கப்பட்டது.
ஏர்பஸ் கொள்வனவு செய்த போது 16 மில்லியன் டொலர் கையூட்டல் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.</div><div><br></div><div>
</div><div>2016 ஆம் ஆண்டு இந்த கொடுக்கல் வாங்கல்களை ரத்து செய்வதற்காக நட்டஈடாக 110 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளது.
</div><div><br></div><div>இந்த இரண்டு நடவடிக்கைகளின் போதும் ஊழல் மோசடிகள் இடம் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
ஏயார்பஸ் கொள்வனவின் போதும் மோசடி இடம் பெற்றுள்ளது அதேபோன்று இந்த கொள்வனவை ரத்து செய்யும்போதும் மோசடி இடம் பெற்றுள்ளது.
</div><div><br></div><div>இந்த கொடுக்கல் வாங்கல்களின் மூலமே நாட்டின் விமான சேவை நிறுவனம் வீழ்ச்சி அடைந்தது.
ஆசியாவின் மிகவும் பழமையான ஓர் விமான சேவை நிறுவனமாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் கருதப்படுகின்றது எனவே இந்த மோசடிகளின் மூலம் இந்த விமான சேவை நிறுவனத்திற்கு பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டது.
</div><div><br></div><div>இது தேசிய ரீதியான ஓர் குற்றச் செயலாக கருதப்பட வேண்டும், இந்த குற்றச்செயலுடன் தொடர்புடைய ஒன்று, இரண்டு பேருக்கு மட்டுமல்லாமல் தொடர்புடைய சகலரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் இது சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அம்பலமான விடயமாகும்.
</div><div><br></div><div>எனவே இதை நாம் பழிவாங்கல்கள் மேற்கொள்கிறோம் என குற்றம் சுமத்த முடியாது.</div><div><br></div><div>
சர்வதேச நீதிமன்றங்களில் இந்த ஊழல் மோசடி குறித்து வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்ட, பிரான்ஸ் நிறுவனம் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலங்கையில் சாட்சியமளித்துள்ளது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</div>]]></content>
            <updated>2026-09-07T09:44:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் உள்ள நாமல் ராஜபக்ஷவிற்கு, வீட்டிலிருந்து சாப்பாடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/home-cooked-food-for-namal-rajapaksa-in-prison-1788773013"></link>
            <id>https://jvpnews.com/article/home-cooked-food-for-namal-rajapaksa-in-prison-1788773013</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு, வீட்டிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு, வீட்டிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f369d81-f3af-4c06-9df7-e53980a9b2db/26-6a9e82971d242.webp' /></p><h2>&nbsp;விசேட பாதுகாப்புத் திட்டமும் அமுல்&nbsp;&nbsp;</h2><p> 

எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்ததில் இலஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.</p><p></p><p>இதற்கமைய, வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலையில் அவர் தங்கியுள்ள வளாகத்தில் விசேட பாதுகாப்புத் திட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் கூறினார்.</p><p> 

மேலும், அவரைப் பார்ப்பதற்கு நாளொன்றுக்கு மூவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார். 

இதேவேளை, நாமல் ராஜபக்ஷவின் தாயாரான ஷிராந்தி ராஜபக்ஷ இன்று (07) நாமல் ராஜபக்ஷவின் நலனை விசாரிக்க வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றிருந்தார்.</p><p></p><p>

அதேசமயம் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவும் இன்று காலை நாமல் ராஜபக்ஷவைப் பார்ப்பதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T09:41:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepachelvan</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராடுவதும், போராடிப் போராடியே இறப்பதுமாக நீளும் துயரம்…]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ongoing-struggle-of-tamils-in-the-north-and-east-1788771558"></link>
            <id>https://ibctamil.com/article/ongoing-struggle-of-tamils-in-the-north-and-east-1788771558</id>
            <summary type="text">இனவழிப்புப் போரும் ஒடுக்குமுறையும் நிகழ்ந்த ஈழ மண்ணில் நினைவே இன்னமும் எம்மைத் திருகிக்கொண்டிருக்கிறது. முள்ளிவாய்க்கால் போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இனவழிப்புப் போரும் ஒடுக்குமுறையும் நிகழ்ந்த ஈழ மண்ணில் நினைவே இன்னமும் எம்மைத் திருகிக்கொண்டிருக்கிறது. </p><p>முள்ளிவாய்க்கால் போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வருவார்கள், மீள்வார்கள், அவர்கள் பற்றிய உண்மைகள் கிட்டும் என்றும் இன்னும் பலவாறும் நினைவில் சுமந்துகொண்டு வடக்கு கிழக்கு அன்னையர்களும் மக்களும் மிக நீள் பயணத்தில் தொடர்கையில், போராடுவதும் போராடியே இறப்பதுமாக நிர்பந்திக்கப்பட்டிருப்பது எத்தனை அநீதியானது?</p><p>

அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு - கிழக்கு தமிழர் தேசத்தில் இம்முறையும் போராட்டங்கள், ஊடக சந்திப்புகள், கவனயீர்ப்பு நிகழ்வுகள் மற்றும் “நீதிக்கான நீண்ட பயணம்” என்ற தொனிப்பொருளிலான அனைத்துலக மாநாடு எனப் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. </p><p>பல ஆண்டுகளாகத் தமது உறவுகளின் நிலை என்னவென்பதை அறிந்துகொள்ள முடியாமல் போராடிவரும் குடும்பங்கள், மீண்டும் ஒருமுறை உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி தமது குரலை எழுப்பியுள்ளனர்.</p><p></p><h2>நீதிக்கான நீண்ட பயணம்</h2><p>யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற “நீதிக்கான நீண்ட பயணம்” அனைத்துலக மாநாடு, காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினையை மீண்டும் சர்வதேச கவனத்துக்குக் கொண்டு சென்ற முக்கிய நிகழ்வாக அமைந்தது. </p><p>வடக்கு - கிழக்கைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் சமூக பிரதிநிதிகள், அரசியல் தரப்பினர், மதத் தலைவர்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். </p><p>காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது நீண்டகாலப் போராட்டத்தின் அனுபவங்களையும், இலங்கை அரசாங்கத்திடம் முன்வைத்தும் தீர்க்கப்படாத கோரிக்கைகளையும் சர்வதேச பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தனர்.
</p><p>
மாநாட்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பேரணியும் இடம்பெற்றது. காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு குடும்பங்கள் வீதியில் இறங்கினர்.</p><p> ஆண்டுகள் கடந்துவிட்டபோதிலும் அந்தப் புகைப்படங்கள் மாறவில்லை; அவற்றை ஏந்திய கைகளில் மட்டும் தலைமுறை மாற்றம் ஏற்பட்டுள்ளது. சில குடும்பங்களில் போராட்டத்தை ஆரம்பித்த பெற்றோர் உயிரிழந்த நிலையில், அவர்களின் பிள்ளைகள் இன்று அதே கோரிக்கையுடன் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.</p><p></p><h2>ஊடக சந்திப்புக் குரல்கள்</h2><p>&nbsp;இதுவே காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் துயரத்தின் நீளத்தைப் புரிந்துகொள்ளக்கூடிய முக்கியமான நிலையாகும். காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி வீதிக்கு வந்த தாய்மார்கள் பலர், தமது பிள்ளைகளைக் கண்டறிய முடியாமலேயே உயிரிழந்துள்ளனர்.</p><p> கணவரைத் தேடி போராடிய பெண்கள், தமது வாழ்க்கையின் பெரும்பகுதியை அந்தப் போராட்டத்திலேயே கழித்துள்ளனர். இன்று அந்தப் போராட்டத்தை அடுத்த தலைமுறை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
</p><p>
அனைத்துலக தினத்தை முன்னிட்டு வடக்கு – கிழக்கின் பல மாவட்டங்களிலும் ஊடக சந்திப்புகள் நடத்தப்பட்டன. யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற நிகழ்வுகளில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது போராட்டத்தின் தற்போதைய நிலையை வெளிப்படுத்தினர்.</p><p> அரசாங்கங்கள் மாறினாலும் தமது பிரச்சினைக்கான தீர்வு மாறவில்லை என்றும், பல்வேறு ஆணைக்குழுக்கள் மற்றும் அரச பொறிமுறைகள் உருவாக்கப்பட்டபோதும் தமது உறவுகளின் நிலை தொடர்பாக நம்பகமான பதில் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.</p><p></p><h2>அரசின் அநீதியான அணுகுமுறை</h2><p>இதற்கிடையில், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p> தமக்குப் பதில் வேண்டும், நீதியே வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாவட்ட செயலகத்துக்கு வெளியே நின்ற அவர்களை பொலிஸார் இழுத்துச் சென்று அங்கிருந்து வெளியேற்றிய சம்பவமும் விமர்சனத்துக்குள்ளானது.
</p><p>
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அரசாங்கத்திடம் கேட்பது தமது உறவுகள் உயிருடன் உள்ளனரா அல்லது இல்லையா என்பதற்கான உண்மையான பதிலையே. </p><p>அவர்களுக்கு என்ன நடந்தது, எங்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அவர்களின் மரணத்துக்குக் காரணமானவர்கள் யார் என்பன தொடர்பாக நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே அவர்களின் நீண்டகால கோரிக்கை. </p><p>இதற்குப் பதிலாக காலத்தை நீட்டிக்கும் விசாரணைகள், ஆணைக்குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் உருவாக்கப்படுவது குடும்பங்களின் நம்பிக்கையை மேலும் சிதைத்துள்ளது.</p><p></p><h2>ஒரு தலைமுறையைத் தாண்டிய போராட்டம்</h2><p>வடக்கு - கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் இன்று ஒரு தலைமுறையின் வாழ்க்கையைத் தாண்டியுள்ளது. </p><p>போராட்டத்தில் நின்ற பல தாய்மார்கள் இறந்துவிட்டனர். அவர்களுடன் சில பதில்களும் புதைக்கப்பட்டுவிட்டன. ஆனால் அவர்களின் பிள்ளைகள் அந்தப் போராட்டத்தை நிறுத்தவில்லை.</p><p> இதனால் காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை கடந்த காலத்தின் ஒரு விவகாரமாக இல்லாமல், இன்றும் தொடரும் மனித உரிமை மற்றும் நீதிக்கான கேள்வியாகவே உள்ளது. நடந்த இனப்படுகொலை சார்ந்து மறைக்கப்பட்ட பக்கங்களின் ஒருமுகம். </p><p>இதனால் இது சர்வதேச விசாரணைப் பொறிமுறை தேவை என்கிற நிலையை உணர்த்துகிறது.

அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வுகள் இதையே மீண்டும் வெளிப்படுத்தியுள்ளன.</p><p> நீதிக்காகப் போராடுவது மட்டுமல்ல, போராடிப் போராடியே ஒரு தலைமுறை இறந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்குப் பின்னால் நிற்கும் அடுத்த தலைமுறையும் அதே புகைப்படங்களையும் அதே கோரிக்கைகளையும் ஏந்த வேண்டிய நிலை தொடர்கிறது.</p><p> இந்த அவலத்தை நினைக்கையில் பேரதிர்ச்சியே எஞ்சுகிறது.

அதனால் ‘நீதிக்கான நீண்ட பயணம்’ என்பது காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் பல ஆண்டுகளாக கடந்து வந்த அபாயப் பொறிகள் நிறைந்த பெருந்துயரும் இழப்பும் கண்ணீரும் சுரந்த பாதையின் அடையாளம். </p><p>அந்தப் பயணம் எப்போது முடியும் என்பது இன்னமும் தெரியவில்லை என்பதே பெருந்துயரம். ஆனால் உண்மை வெளிப்படுத்தப்பட்டு, பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் வரையில் இந்தப் போராட்டம் முடிவுக்கு வரப்போவதில்லை என்பதையே வடக்கு - கிழக்கில் இடம்பெற்ற அனைத்துலக தின நிகழ்வுகள் மீண்டும் உணர்த்தியுள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-09-07T09:41:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்சாரம் தாக்கி இளம் தாய் உயிரிழப்பு; தவிக்கும் பிள்ளைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bibile-young-mother-dies-of-electrocution-1788765247"></link>
            <id>https://jvpnews.com/article/bibile-young-mother-dies-of-electrocution-1788765247</id>
            <summary type="text">&amp;nbsp; பிபிலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோதம்வள்ளை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில், மின்சாரம் தாக்கி மூன்று பிள்ளைகளின் தாய் ஞாயிற்றுக்கிழமை (06) உயிரிழந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிபிலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோதம்வள்ளை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில், மின்சாரம் தாக்கி மூன்று பிள்ளைகளின் தாய் ஞாயிற்றுக்கிழமை (06) உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>&nbsp;உயிரிழந்தவர் தோதம்வள்ளை ஈதனவத்தையைச் சேர்ந்த பிரசந்திகா மதுமாலி (30) எனப்படும் மூன்று பிள்ளைகளின் தாயாவார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3866da1-34a3-4f22-9f5f-a99400159b39/26-6a9e650645d0a.webp' /></p><h2>&nbsp;சார்ஜரை&nbsp; இணைக்க முற்பட்டவேளை உயிரிழப்பு</h2><p>
 வீட்டில் மின்விளக்கு ஒன்றை மின்னேற்றம் (சார்ஜ்) செய்வதற்காக,&nbsp; சார்ஜரை சுவிட்சில் இணைக்க முற்பட்டவேளை மின்சாரம் தாக்கியுள்ளது.</p><p></p><p>இதனையடுத்து , பிபிலை முஸ்தபா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் முன்பே அவர் உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 மரணம் தொடர்பில் பிபிலை பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.எஸ். ஜகத் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-07T09:41:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஜித் படத்திற்கு பிரம்மாண்ட Audio Launch ஆ? ரசிகர்கள் ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/fans-says-yes-to-ajith-movie-audio-launch-1788774032"></link>
            <id>https://cineulagam.com/article/fans-says-yes-to-ajith-movie-audio-launch-1788774032</id>
            <summary type="text">அஜித்அஜித் தற்போது தன் முழு கவனத்தையும் கார் ரேஸில் தான் காட்டி வருகிறார். அதனாலேயே தன் அடுத்த படத்தை அவரே தயாரிக்க முடிவு செய்துவிட்டார்.
இவர் அடுத்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அஜித்</h2><p>அஜித் தற்போது தன் முழு கவனத்தையும் கார் ரேஸில் தான் காட்டி வருகிறார். அதனாலேயே தன் அடுத்த படத்தை அவரே தயாரிக்க முடிவு செய்துவிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e01e753-db4a-4399-ba20-8db273c60805/26-6a9e86935599a.webp' /></p><p>இவர் அடுத்து ஆதிக் இயக்கத்தில் டேர்டெவில் என்ற படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தை ஷாலினி தயாரிக்கிறார். இதற்கு முன்பு அஜித்தின் கார் ரேஸ் டாக்குமெண்டரி ஒன்று கிளாடியேட்டர் என்ற பெயரில் வெளிவரவுள்ளது. இந்த கிளாடியேட்டர் ட்ரைலர் நேற்று தமிழகம் முழுவதும் பல திரையரங்குகளில் வெளியானது.</p><p></p><h2>Audio Launch</h2><p> </p><p>

இந்த ட்ரைலருக்கு அமோக வரவேற்பு கிடைக்க, அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அவர்களும் ரசிகர்களுடன் இணைந்து இந்த ட்ரைலரை கண்டுகளிக்க, அப்போது அவர் பேசுகையில், 'Audio Launch வச்சுடலாமா' என சொல்ல ரசிகர்கள் என்னது நம்ம AK படத்துக்கு இசை வெளியீட்டு விழாவா என அதிர்ச்சியாக எல்லோரும் வைக்கலாம் என கத்தினர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59e005a0-b73a-4cc3-b7e8-407c55695dbb/26-6a9e86940e1ba.webp' /></p><p>பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என; அஜித் விஜய் போல் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா நடத்தினால் கண்டிப்பாக மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் வரும் என்பதில் எந்த மாற்றுகருத்தும் இல்லை.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="et" dir="ltr">Suresh Chandra : Audio launch panidalama ? <a href="https://x.com/hashtag/Gladiators?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Gladiators</a> <a href="https://x.com/hashtag/AjithKumar?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AjithKumar</a> <a href="https://t.co/ZmHkWazEXc">pic.twitter.com/ZmHkWazEXc</a></p>&mdash; Worldwide Thala Fans (@WorldwideThala) <a href="https://x.com/WorldwideThala/status/2096623401188405750?ref_src=twsrc%5Etfw">September 6, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-09-07T09:40:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல் நாளே சூடுபிடித்த பிக் பாஸ் வீடு : ஷதிகாவால் வெளிநடப்பு செய்த முனியம்மாள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/bigg-boss-10-today-promo-viral-muniyammal-walkout-1788772428"></link>
            <id>https://manithan.com/article/bigg-boss-10-today-promo-viral-muniyammal-walkout-1788772428</id>
            <summary type="text">பிக்பாஸ் சீசன் 10-ன் இன்றைய எபிசோடிற்கான மூன்றாவது Promo வீடியோ வெளியாகி, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 10
ரசிகர்கள் ஆவலுடன் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக்பாஸ் சீசன் 10-ன் இன்றைய எபிசோடிற்கான மூன்றாவது Promo வீடியோ வெளியாகி, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
</p><h2>பிக்பாஸ் சீசன் 10</h2><p>
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி நேற்று மாலை பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த சீசனில் மொத்தம் 19 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ள நிலையில், முதல் நாளிலேயே வீட்டுக்குள் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39c6c081-b1ac-42ad-8cbe-b678cd9e365a/26-6a9e82f625ee4.webp' /></p><p></p><p>முதல் நாளான இன்று கேப்டன் தேர்வு தொடர்பான Promo வீடியோ ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது மற்றும் மூன்றாவது Promo-க்களில் புதிதாக ‘Democracy Room’ என்ற ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p>
ஜனநாயகத்தின் பிரதிபலிப்பாக அமைக்கப்பட்டுள்ள இந்த அறையில், சட்டமன்றத்தில் இருப்பதைப் போலவே ஆளும் அணி – எதிர் அணி என இரு தரப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு தலைவராக ஷதிகா நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>

இந்நிலையில், Democracy Room-ஐ ஷதிகா சற்று Rough-ஆக வழிநடத்துவதாக முனியம்மாள் குற்றம்சாட்டுகிறார். இதற்கு பதிலளித்த ஷதிகா, “உங்கள மாதிரி ஒரு ஆள உட்கார வெச்சிருந்தா, அது மாறத்தான் செய்யும்!” என அதிரடியாக பதிலடி கொடுக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1007bc25-3ad7-4263-a1c9-d08a7d033c8e/26-6a9e82f56f7a7.webp' /></p><p><b>வெளிநடப்பு செய்த முனியம்மாள்</b></p><p>
</p><p>
ஷதிகாவின் இந்த பதிலால் அதிருப்தியடைந்த முனியம்மாள், “நான் Democracy Room-ல இருந்து வெளிநடப்பு செய்கிறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறார்.
</p><p>
முதல் நாளே பிக் பாஸ் வீட்டில் ஆளும் அணி, எதிர் அணி என பிரிவுகள் உருவாகி, அதற்குள் மோதலும் வெடித்துள்ள நிலையில், இன்றைய எபிசோடில் இந்த விவகாரம் எந்த அளவுக்கு பூதாகரமாகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Mqxr4p5HMKw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T09:36:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்தில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிராக திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/protest-against-asylum-seekers-in-portsmouth-1788773765"></link>
            <id>https://news.lankasri.com/article/protest-against-asylum-seekers-in-portsmouth-1788773765</id>
            <summary type="text">Hundreds of protesters gathered in Portsmouth against asylum seekers: போர்ட்ஸ்மௌத் துறைமுகத்தில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிராக திரண்ட ஆர்ப்பாட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Hundreds of protesters gathered in Portsmouth against asylum seekers: போர்ட்ஸ்மௌத் துறைமுகத்தில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிராக திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்களால் பெரும் பரபரப்பு உருவானது.
</p><p>

நேற்றிரவு, சிறுபடகொன்றில் வந்துகொண்டிருந்த சுமார் 140 புகலிடக்கோரிக்கையாளர்களை, அதிகாரிகள், போர்ட்ஸ்மௌத் துறைமுகத்துக்கு அழைத்துவருவதாக செய்தி பரவியுள்ளது.
</p><h3>
துறைமுகத்தில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்</h3><p>

சிறிது நேரத்தில், நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு வந்து குவிந்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da92eda1-1884-46d1-b959-07faac35cc4c/26-6a9e85864f7d0.webp' /></p><p>
அதிகாரிகள் அந்த புகலிடக்கோரிக்கையாளர்களை Manston என்னுமிடத்திலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் பரிசீலனை மையத்துக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள், புகலிடக்கோரிக்கையாளர்கள் பயணிக்கும் வாகனங்கள் நகராமல் தடுத்ததாக கூறப்படுகிறது.</p><p>

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டதாகவும், பொலிஸ் வாகனங்கள் தாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகிவருகின்றன.</p><p></p><p>

பின்னர், அதிகாலை 3.00 மணியளவில், கலைந்துபோக உத்தரவிடும் ஆணையுடன் வந்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்துபோக அதிகாரிகள் உத்தரவிட்டதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்துபோயிருக்கிறார்கள்.
</p><p>
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர்களில், டேனியல் தாமஸ் என்பவரும் ஒருவர்.

சில மாதங்களுக்கு முன், பிரித்தானியாவிலிருந்து சிலர் பிரான்சுக்கே சென்று, அங்கிருந்த சிறுபடகுகளையும், இயந்திரங்களையும் அடித்து நொறுக்கிய சம்பவம் நினைவிருக்கலாம்.</p><p>

அவர்களில், முதன்மையானவர் இதே தாமஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T09:36:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட மாற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/change-in-the-value-of-the-sri-lankan-rupee-1788773682"></link>
            <id>https://jvpnews.com/article/change-in-the-value-of-the-sri-lankan-rupee-1788773682</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் இன்று (07) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது .அமெரிக்க டொலரின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் இன்று (07) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது .</p><p>அமெரிக்க டொலரின் சராசரி கொள்வனவு விலை 323.7691 ரூபாயாகவும், அதன் விற்பனை விலை 332.7567 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4d36dc7-ea36-4d04-9402-5ae1027398e1/26-6a9e853468a79.webp' /></p><p> </p><p>



அமெரிக்க டொலர் தவிர, ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களான அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்க் உள்ளிட்ட ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களின் விற்பனை விலைகளும் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று சற்று ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>


இன்றைய தினத்திற்கான முக்கிய வெளிநாட்டு நாணயங்களின் கொள்வனவு மற்றும் விற்பனை வீதங்கள் பின்வருமாறு:</p>]]></content>
            <updated>2026-09-07T09:31:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் கேப் பிரெட்டனில் கொட்டித் தீர்த்த கனமழை: வெள்ளத்தில் சிக்கிப் பெண் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/woman-dead-following-flooding-in-cape-breton-1788769661"></link>
            <id>https://canadamirror.com/article/woman-dead-following-flooding-in-cape-breton-1788769661</id>
            <summary type="text">கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்திற்குட்பட்ட கேப் பிரெட்டன் பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக மாந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்திற்குட்பட்ட கேப் பிரெட்டன் பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக மாநில முதலமைச்சர் டிம் ஹூஸ்டன் உறுதிப்படுத்தியுள்ளார்.
</p><p>ரிச்மண்ட் கவுண்டி பொலிஸாரின் தகவல்படி, கிளீவ்லேண்ட் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் சனிக்கிழமை காலை காணாமல் போயிருந்தார்.</p><p>
வெள்ள நீரில் மூழ்கிய பாலத்திற்கு அப்பால் அவரது வாகனம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினம் பிற்பகல் 2:30 மணியளவில் அப்பகுதியில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது.</p><p>[WU8TR
]</p><p> </p><p>
இந்த மரணத்தில் சந்தேகத்திற்குரிய காரணங்கள் எதுவும் இல்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
வாரயிறுதியில் கேப் பிரெட்டனின் சில பகுதிகளில் ஒரு மாதத்திற்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.
</p><p>உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் டிம் ஹூஸ்டன், சீரற்ற வானிலை தொடர்வதால் பொதுமக்கள் வீதிப் பயணங்களைத் தவிர்த்துப் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>
அத்துடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் அவசரகாலப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T09:30:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவிற்கான விமான சேவைகளை இரத்து செய்த சிறிலங்கன் எயார்லைன்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/srilankan-airlines-cancels-colombo-jakarta-flights-1788762922"></link>
            <id>https://ibctamil.com/article/srilankan-airlines-cancels-colombo-jakarta-flights-1788762922</id>
            <summary type="text">கொழும்பு மற்றும் இந்தோனேசியாவின் ஜகார்த்தா இடையிலான சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் இன்றைய விமானச் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மற்றும் இந்தோனேசியாவின் ஜகார்த்தா இடையிலான சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் இன்றைய விமானச் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இந்தோனேசியாவின் 'அனக் கிரக்கடோவா' எரிமலையிலிருந்து பரவும் ஆபத்தான சாம்பல் புகைக் கூட்டங்களினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

அதன்படி, கொழும்பில் இருந்து ஜாகர்த்தா செல்லும் UL 364 மற்றும் ஜாகர்த்தாவில் இருந்து கொழும்பு திரும்பும் UL 365 ஆகிய இரு விமானச் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய விமானப் போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது.</p><p>&nbsp;</p><h2>பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது</h2><p>
</p><p>
அனக் கிரக்கடோவாவிலிருந்து சிலிக்கா துகள்கள் மற்றும் பாறை இடிபாடுகளுடன் கூடிய அடர்ந்த சாம்பல் புகை பரவியதால், ஜகார்த்தாவின் சுகார்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட பல விமான நிலையங்களின் செயற்பாடுகளை இந்தோனேசிய விமானப் போக்குவரத்து அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28303d10-d023-42bc-bbfe-a98612fee765/26-6a9e841c1fdfa.webp' /></p><p>
</p><p>
காற்றில் மிதக்கும் இந்த சாம்பல் துகள்கள் விமான எஞ்சின்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளதால், இலங்கை நோக்கிய மேற்கு வான்வழிப் பாதையிலும் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இதேவேளை நேற்று (06) இரவு அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்பேர்ன் நகரங்களில் இருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட இரு சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள், பாதிக்கப்பட்ட வான்வெளியைத் தவிர்ப்பதற்காக மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன.
</p><p>
அத்துடன், அவுஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவிற்கு இடையே சேவைகளை நடத்தும் பல மேற்காசிய விமான நிறுவனங்களும் தங்களது பயணப் பாதைகளை மாற்றியமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T09:28:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதையல் தோண்டும் ஸ்கேனருடன் ஐவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/five-hands-with-a-treasure-hunting-scanner-1788771911"></link>
            <id>https://tamilwin.com/article/five-hands-with-a-treasure-hunting-scanner-1788771911</id>
            <summary type="text">முல்லைத்தீவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக முல்லைத்தீவு
கடற்கரை பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய ஐந்து சந்தேக
நபர்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக முல்லைத்தீவு
கடற்கரை பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய ஐந்து சந்தேக
நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(06.09.2026) இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை</h2><p> கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்


நெலுக்குளம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d5c65b7-c80a-49bc-8b15-5d0b06b24f6e/26-6a9e830578207.webp' /></p><p>கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் புதையல் அகழ்வுக்கு பயன்படுத்தப்படும்
ஸ்கேனர் ஒன்றும் மற்றும் அவர்கள் பயன்படுத்திய வாகனம் ஒன்றும் பொலிஸாரால் பறி
முதல் செய்யப்பட்டுள்ளது.</p><p>குறித்த சம்பவத்தின் தொடர்புடைய சந்தேக நபர்களை இன்று(07.09.2026) முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T09:26:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹிந்தவை தொடர்ந்து சிறைசாலைக்கு சென்ற ஷிராந்தி ராஜபக்ச !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shiranthi-rajapaksa-continued-to-visit-prison-1788768703"></link>
            <id>https://jvpnews.com/article/shiranthi-rajapaksa-continued-to-visit-prison-1788768703</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை பார்ப்பதற்காக அவரது தாயாரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை பார்ப்பதற்காக அவரது தாயாரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியுமான ஷிராந்தி ராஜபக்ச இன்று (07) சிறைச்சாலை வளாகத்திற்கு வந்துள்ளார்.
</p><p>


ஷிராந்தி ராஜபக்ச சற்று முன்னர் அவர் வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/421b0b23-3cec-4cf4-9cce-fb3a4bab3b2c/26-6a9e71c0902ca.webp' /></p><p></p><p>



இதேவேளை, நாமல் ராஜபக்சவை சந்திப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் கடந்த சனிக்கிழமை (05) வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-07T09:21:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[திமுக எம்.பியின் ஹொட்டலில் அடைத்து மிரட்டப்பட்ட 2 எம்.எல்.ஏ.க்கள் - சட்டமன்றத்தில் சொன்ன அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/aadhav-says-2-iuml-mla-s-hostage-in-dmk-mp-hotel-1788772387"></link>
            <id>https://news.lankasri.com/article/aadhav-says-2-iuml-mla-s-hostage-in-dmk-mp-hotel-1788772387</id>
            <summary type="text">minister aadhav arjuna satys2 IUML mla&#039;s hostage in dmk mp hotel: 2 IUML எம்.எல்.ஏ.க்கள் அடைத்து வைக்கப்பட்ட ஹொட்டல் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுடையது என ...</summary>
            <content type="html"><![CDATA[<p>minister aadhav arjuna satys2 IUML mla's hostage in dmk mp hotel: 2 IUML எம்.எல்.ஏ.க்கள் அடைத்து வைக்கப்பட்ட ஹொட்டல் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுடையது என சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார். </p><h3>

ஹொட்டலில் அடைத்து மிரட்டப்பட்ட 2 எம்.எல்.ஏ.க்கள்
</h3><p>
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய வாணியம்பாடி எம்எல்ஏ சையத் பாருக் பாஷா, "திருவண்ணாமலை பொதுக் கூட்டத்தில் ஐயூஎம்எல் எம்எல்ஏக்களை திமுகவினர் மிரட்டி கோடி கோடியாக பணம் கொடுப்பதாகவும் அமைச்சர் பதவி கொடுப்பதாகவும் கூறினர் என நான் கூறியதை திமுகவினர் திரித்து, தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக கூறி வருகிறார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61f06031-df84-42fb-8357-dee01b611687/26-6a9e802657bdf.webp' /></p><p> 

நான் யாரையும் தவறாக பேசவில்லை. மே 7ஆம் தேதி அதிமுக தலைவரை முதல்வராக்க திமுக திட்டமிட்டிருந்தது. அதை எங்கள் தலைவர் காதர் மொய்தீன் ஏற்க மறுத்தார். அவர் பேட்டியில் சொன்னதைதான் நான் எங்கள் கட்சி கூட்டத்தில் சொன்னேன்" என பேசினார்.&nbsp;</p><p></p><p>

இதனைத்தொடர்ந்து பேசிய சிறுபான்மை நலத் துறை அமைச்சர் ஷாஜகான், "இந்த விவகாரத்தில் அதிமுகவுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. மே 7 ஆம் திகதி, அதிமுக தலைவரை முதல்வராக்கலாம் என திமுகவினர் முடிவு செய்து எங்கள் தலைவர் காதர் மொய்தீனிடம் சொன்னது.
</p><p>
அப்போது பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக ஆட்சி செய்ய ஆதரிக்க மாட்டோம் என எங்கள் தலைவர் சொன்னார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f51bbaf0-203f-41ba-9a90-1b1eeafd0c2c/26-6a9e8025a36df.webp' /></p><p>இதையடுத்து முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ.க்கள் இருவரையும் மே 8ஆம் தேதி ஒரு ஹொட்டலில் அடைத்து வைத்திருந்தார்கள்.

எங்களை அடைத்து வைத்தது யார்? மிரட்டி காவல் காத்தது யார், நாங்கள் வெளிப்படையாக பேசினால் யாருமே அரசியல் செய்ய முடியாது. ஆளுநர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதால்தான் தவெகவுக்கு நாங்கள் ஆதரவு அளித்தோம்" என பேசினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71e22161-85d4-4cc0-9214-acc86905dbee/26-6a9e8024eb506.webp' /></p><p> 

இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "IUML எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைக்கப்பட்ட ஹொட்டல் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுடையது. 2 எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்தது குறித்து விசாரணை நடத்தப்படும்" என் பேசியுள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T09:17:51+00:00</updated>
        </entry>
    </feed>
