<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-09T20:53:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு இந்தியா வழங்கிய மற்றுமொரு அதிரடி உதவி ; 5 பெய்லி பாலங்கள் கையளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/another-big-help-india-srilanka-handover-5-bridges-1786308094"></link>
            <id>https://jvpnews.com/article/another-big-help-india-srilanka-handover-5-bridges-1786308094</id>
            <summary type="text">&#039;டித்வா&#039; சூறாவளி காரணமாகக் கடுமையாகச் சேதமடைந்த கிராமப்புற வீதிகளின் புனரமைப்புப் பணிகளுக்காக இந்தியா மேலும் ஒரு தொகுதி பெய்லி பாலங்களை இலங்கையிடம் உத...</summary>
            <content type="html"><![CDATA[<p>'டித்வா' சூறாவளி காரணமாகக் கடுமையாகச் சேதமடைந்த கிராமப்புற வீதிகளின் புனரமைப்புப் பணிகளுக்காக இந்தியா மேலும் ஒரு தொகுதி பெய்லி பாலங்களை இலங்கையிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளது.</p><p></p><p> 

250 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான எடையுள்ள இந்தப் புதிய பாலத் தொகுதி, இந்தியாவின் 450 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பேரழிவிற்குப் பிந்தைய புனரமைப்புத் திட்டத்தின் மற்றொரு கட்டமாக வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் 'X' சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/659b7178-6f52-4578-b451-0b967df74dda/26-6a78e60000f7c.webp' /></p><p> 

இலங்கைக்கான இந்தியத் பிரதி உயர்ஸ்தானிகர் மைத்ரி கே, இப் பாலத் தொகுதியைச் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.</p><p> 

போக்குவரத்து அமைச்சின் கூற்றுப்படி, இந்தியா இதற்கு முன்னர் வழங்கிய இரண்டு பாலத் தொகுதிகளுக்கு மேலதிகமாக, 5 மில்லியன் டொலர்களுக்கும் அதிக பெறுமதியுடைய 5 மொடுலர் (Modular) பெய்லி பாலங்கள் இந்த மூன்றாவது நன்கொடையில் அடங்கியுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T20:41:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாகசாகி அணு குண்டுவீச்சினால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூர வேண்டும்: ஐ.நா செயலாளர் நாயகம் வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/un-secretary-general-urges-commemoration-nagasaki-1786304908"></link>
            <id>https://tamilwin.com/article/un-secretary-general-urges-commemoration-nagasaki-1786304908</id>
            <summary type="text">ஜப்பானின் நாகசாகி நகர் மீது நடத்தப்பட்ட அணு குண்டுவீச்சினால்
பாதிக்கப்பட்டவர்களையும், அதிலிருந்து உயிர் தப்பியவர்களையும் உலகம் என்றும்
நினைவில் வைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானின் நாகசாகி நகர் மீது நடத்தப்பட்ட அணு குண்டுவீச்சினால்
பாதிக்கப்பட்டவர்களையும், அதிலிருந்து உயிர் தப்பியவர்களையும் உலகம் என்றும்
நினைவில் வைத்திருக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம்
அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>
நாகசாகி மீது அணு குண்டு வீசப்பட்டு 81 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும்
வகையில் வெளியிட்ட பதிவொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>மனிதகுலத்தின் பேரழிவு</h2><p>

81 வருடங்களுக்கு முன்னர் மனிதகுலத்தின் பேரழிவுத் திறனுக்கான அடையாளமாக
நாகசாகி மாறியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

இன்று நாகசாகி நகரம் ஒரு எச்சரிக்கையாகவும் சான்றாகவும் நிற்பதாகத் தெரிவித்த
அவர், அச்சத்தின் மூலம் அல்லாமல், பொதுவான இலக்குகளின் மூலமே அமைதியைப்
பாதுகாக்கும் உலகைக் கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு
விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25c186aa-bd50-42ac-ae80-339a4ccf33b5/26-6a78dd3d1bb36.webp' /></p><p>

இரண்டாம் உலகப் போரின் போது, ஹிரோஷிமா மீதான தாக்குதல் நடத்தப்பட்டு மூன்று
நாட்களின் பின்னர், 1945 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 9 ஆம் திகதி அமெரிக்காவினால்
நாகசாகி மீது அணு குண்டு வீசப்பட்டது.</p><p>
இத்தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததுடன், சில நாட்களின்
பின்னர் ஜப்பான் சரணடைந்ததைத் தொடர்ந்து இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு
வந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T20:34:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள் விற்பனை ; 03 விற்பனை நிலையங்களுக்கு அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/03-outlets-fined-selling-motorcycles-high-prices-1786306826"></link>
            <id>https://jvpnews.com/article/03-outlets-fined-selling-motorcycles-high-prices-1786306826</id>
            <summary type="text">அதிகாரப்பூர்வ விநியோகஸ்தர் விலையை விட அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்த மற்றும் விலைக் காட்சிப்படுத்தாத ஹெட்டிபொல பகுதியிலுள்ள 03 மோட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிகாரப்பூர்வ விநியோகஸ்தர் விலையை விட அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்த மற்றும் விலைக் காட்சிப்படுத்தாத ஹெட்டிபொல பகுதியிலுள்ள 03 மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையங்களுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.</p><p></p><p> 

நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2af77949-a8a1-4702-a9bb-a3abdfa038e9/26-6a78e10c6113a.webp' /></p><p>இதன்போது, குறித்த நிறுவனங்களுக்கு நீதிமன்றத்தால் தலா 25,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. </p><p>

மோட்டார் சைக்கிளையொன்றைக் கொள்முதல் செய்வதற்கு முன்னர் அதன் விலையைச் சரியாகப் பரிசீலிக்குமாறும், நுகர்வோரிடம் அநியாயமாகப் பணம் அறவிடும் அல்லது விலையைக் காட்சிப்படுத்தாத வர்த்தகர்கள் தொடர்பாக 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறும் நுகர்வோர் அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T20:20:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி! மொஜ்தாபா காமேனியின் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mohsen-rezaee-appointed-iran-snsc-secretary-1786303554"></link>
            <id>https://ibctamil.com/article/mohsen-rezaee-appointed-iran-snsc-secretary-1786303554</id>
            <summary type="text">ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தாபா காமேனி, நாட்டின் மிக உயரிய பாதுகாப்புப் பதவியான உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (SNSC) செயலாளராக முன்னாள் ஐ.ஆர்.ஜி.சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தாபா காமேனி, நாட்டின் மிக<a href="https://ibctamil.com/article/netanyahu-rejects-gaza-plan-over-elections-1786291281" target="_blank"> உயரிய பாதுகாப்புப் </a>பதவியான உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (SNSC) செயலாளராக முன்னாள் ஐ.ஆர்.ஜி.சி (IRGC - இஸ்லாமிய புரட்சிகர காவல் படை) தலைவரான மொஹ்சென் ரெசாயை (Mohsen Rezaee) நியமித்துள்ளார்.
</p><p>
இந்த முக்கியப் பொறுப்பில் ரெசாய், உச்சத் தலைவர் காமேனியின் அதிகாரப்பூர்வப் பிரதிநிதியாகச் செயல்படுவார்.
</p><p>
இப்பதவியை வகித்து வந்த அலி லாரிஜானி, கடந்த மார்ச் மாதம் அமெரிக்க - இஸ்ரேலிய<a href="https://ibctamil.com/article/oman-iran-progress-on-hormuz-strait-talks-1786295984" target="_blank"> வான்வழித் தாக்குதலில்</a> கொல்லப்பட்டார்.</p><p></p><h2>அரசியல் ஆலோசகர்</h2><p> 

அவரைத் தொடர்ந்து முகமது பாகர் ஜோல்காதர் (Mohammad Bagher Zolghadr) இப்பதவியைக் கவனித்து வந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22991208-4e72-4cde-87de-84ba69e58bb8/26-6a78de7751a22.webp' /></p><p>இந்த மாற்றத்தைத் தொடர்ந்து, முகமது பாகர் ஜோல்காதரைத் தனது அரசியல் ஆலோசகராக உச்சத் தலைவர் காமேனி நியமித்துள்ளார்.</p><p></p><h2>உயர்மட்ட அமைப்பு&nbsp;</h2><p>

இவர், 1980 களில் நடைபெற்ற ஈரான்-ஈராக் போரின் போது (ஈரானில் இது புனிதப் பாதுகாப்புப் போர் என்று அழைக்கப்படுகிறது) முக்கிய இராணுவத் தளபதியாகச் செயல்பட்டவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b767aef7-36c7-46fe-92c0-5d826dd1387e/26-6a78de78021db.webp' /></p><p>

அத்தோடு ஈரானின் பலம் வாய்ந்த இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) முன்னாள் தலைவராகப் பணியாற்றியவர்.</p><p>

இந்தநிலையில் தற்போது ஈரான் நாடாளுமன்றத்திற்கும் கார்டியன் கவுன்சில் அமைப்பிற்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளைத் தீர்க்கும் உயர்மட்ட அமைப்பான ஈரானின் நன்மதிப்பு நிருணயக் கவுன்சிலின் (Expediency Discernment Council) உறுப்பினராகவும் ரெசாய் இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T20:15:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்வானின் 2027ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு செலவீனம் ட்ரில்லியனாக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/taiwan-s-2027-defense-budget-tops-1-trillion-1786292191"></link>
            <id>https://tamilwin.com/article/taiwan-s-2027-defense-budget-tops-1-trillion-1786292191</id>
            <summary type="text">தாய்வான் அரசாங்கம் தனது 2027ஆம் ஆண்டிற்கான பாதுகாப்புச் செலவீனத்தை 16
சதவீதத்தால் அதிகரிக்கவுள்ளது.அதற்காக முதன்முறையாக 1 ட்ரில்லியன் தாய்வான் டொலர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்வான் அரசாங்கம் தனது 2027ஆம் ஆண்டிற்கான பாதுகாப்புச் செலவீனத்தை 16
சதவீதத்தால் அதிகரிக்கவுள்ளது.</p><p>அதற்காக முதன்முறையாக 1 ட்ரில்லியன் தாய்வான் டொலர்களுக்கும்
அதிகமாக ஒதுக்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு உத்தியோகபூர்வ ஊடகங்கள்
செய்தி வெளியிட்டுள்ளன.</p><h2>வரவு செலவுத் திட்டம்</h2><p>தாய்வானை தனது சொந்தப் பிராந்தியம் என உரிமை கோரி வரும் சீனா, கடந்த சில
வருடங்களாக இராணுவ மற்றும் அரசியல் அழுத்தங்களை அதிகரித்து வரும் நிலையிலேயே
தாய்வான் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.</p><p>
எதிர்வரும் ஓகஸ்ட் 20 ஆம் திகதி அமைச்சரவையினால் முன்வைக்கப்படவுள்ள இந்த வரவு
செலவுத் திட்ட முன்மொழிவில் கடலோரப் பாதுகாப்புப் படை, படைவீரர்களுக்கான
நலன்புரி திட்டங்கள் மற்றும் சிறப்புத் திட்டங்களுக்கான நிதிகள்
உள்ளடங்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a38001e-4872-486f-af3e-59a0047928e8/26-6a78add5de845.webp' /></p><p>

அத்துடன் இந்த நிதியொதுக்கீடு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3
சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
</p><p>
தற்போது தாய்வான் தனது வருடாந்த 'ஹான் குவாங்' இராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டு
வரும் நிலையில், இராணுவத்தை நவீனமயமாக்குவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும்
நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதும் அரசாங்கத்தின் முதன்மை இலக்காக
மாறியுள்ளதாகக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T20:11:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப்பின் 15 அம்ச காசா அமைதித் திட்டத்தை நிராகரித்த இஸ்ரேல் ; நெதன்யாகு அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/israel-rejects-trump-s-15-point-gaza-peace-plan-1786305538"></link>
            <id>https://canadamirror.com/article/israel-rejects-trump-s-15-point-gaza-peace-plan-1786305538</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் &#039;அமைதி சபை&#039; (Board of Peace) தயாரித்த காசாவுக்கான 15 அம்ச அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளதாக அந்த நாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் 'அமைதி சபை' (Board of Peace) தயாரித்த காசாவுக்கான 15 அம்ச அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
</p><p>
ஹமாஸ் இயக்கம் முழுமையாக ஆயுதங்களை ஒப்படைத்து, கலைக்கப்படும் வரை இஸ்ரேலியப் படைகள் காசாவிலிருந்து பின்வாங்காது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d8271c5-848c-4ae7-93ec-adb236144277/26-6a78dc04e373c.webp' /></p><p>இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின்படி, "அமைதி சபையின் 15 அம்ச ஆவணத்தை இஸ்ரேல் மறுக்கிறது. ஹமாஸ் உண்மையிலேயே ஆயுதங்களை ஒப்படைக்கும் வரை ராணுவம் எவ்விதப் பின்வாங்குதலையும் மேற்கொள்ளாது" என நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
</p><p>
போலியான கலைப்பு நடவடிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளாது என்றும், ஹமாஸ் அமைப்பு உண்மையான முறையில் முழுமையாகக் கலைக்கப்படுவதையே இஸ்ரேல் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இது தொடர்பாக அமெரிக்க நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் குறிப்பிட்ட நெதன்யாகு, "அமெரிக்காவிடம் சில யோசனைகள் உள்ளன. அவற்றில் சில எங்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும், சில ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருக்கின்றன" எனத் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-09T19:59:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச குற்றக் கும்பலின் தலைவன் டப்ளினுக்கு நாடு கடத்தல்: யார் இந்த டேனியல் கினஹான்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/danial-kinahan-arrived-at-dublin-special-court-1786304922"></link>
            <id>https://news.lankasri.com/article/danial-kinahan-arrived-at-dublin-special-court-1786304922</id>
            <summary type="text">அயர்லாந்திற்கு நாடு கடத்தப்பட்ட சர்வதேச குற்ற கும்பலின் தலைவனான டேனியல் கினஹான்(Daniel Kinahan) டப்ளின் சிறப்பு கிரிமினல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அயர்லாந்திற்கு நாடு கடத்தப்பட்ட சர்வதேச குற்ற கும்பலின் தலைவனான டேனியல் கினஹான்(Daniel Kinahan) டப்ளின் சிறப்பு கிரிமினல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.</p><h2>டேனியல் கினஹான் நீதிமன்றத்தில் ஆஜர்</h2><p>அயர்லாந்து ராணுவத்தின் விமானம் மூலம் அயர்லாந்துக்கு அழைத்து வரப்பட்ட சர்வதேச குற்ற கும்பலின் தலைவராக கருதப்படும் டேனியல் கினாஹான் பலத்த வாகன பாதுகாப்புடன் டப்ளினில் உள்ள சிறப்பு கிரிமினல் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்.</p><p> டப்ளினின் பால்டோனலில் உள்ள காசெமெண்ட் விமான நிலையத்தில் டேனியல் கினாஹான்(Danial kinahan) வந்து இறங்கிய உடன் பலத்த பாதுகாப்பு கொண்ட வாகனங்கள் அவரை ஏற்றுக் கொண்டு அதிவேகமாக புறப்பட்ட நிலையில் தற்போது அந்த வாகன பேரணி சிறப்பு கிரிமினல் நீதிமன்றத்தை வந்தடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebd1267f-73a4-4ef0-bfc7-1d545a4412f2/26-6a78d99c523cb.webp' /></p><p>டேனியல் கினாஹானை ஏற்றிக் கொண்டு விமானம் துபாயில் இருந்து புறப்பட்டதில் இருந்து கிட்டத்தட்ட 70,000க்கும் மேற்பட்டோர் இந்த விமானத்தை ஆன்லைன் மூலமாக விமானத்தை தீவிரமாக கண்காணித்துள்ளனர்.</p><p></p><h2> யார் இந்த டேனியல் கினாஹான்</h2><p>ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வந்த டேனியல் கினாஹன், சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் கடத்தல் ஆகிய பெரும் குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.</p><p> டேனியல் கினாஹன் மிகப்பெரிய குற்றக் கும்பலின் தலைவன் என்று டப்ளின்&nbsp; உயர்நீதிமன்றத்தால் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p> கடந்த 2015ம் ஆண்டு கினாஹன் கார்டல் கும்பலும், ஹட்சி பிரிவினருக்கும் இடையே வெடித்த அதிகாரப் போட்டியின் போது கிட்டத்தட்ட 18 உயிர்கள் கொல்லப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e98187b-2b7c-4eb4-b337-188576290f48/26-6a78d99b9fe41.webp' /></p><p> அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் இந்த கார்டல் கும்பல்கள் நடத்திய இரக்கமற்ற போரினால் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.</p><p> கடந்த 2022ம் ஆண்டு கூட டேனியல் கினாஹனை கைது செய்ய உதவி செய்பவர்களுக்கு கிட்டத்தட்ட 5 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.’</p><p> &nbsp;கிட்டத்தட்ட அயர்லாந்து, பிரித்தானியா, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த குற்ற கும்பலை அழிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது.</p><p> கொகைன், கஞ்சா, மற்றும் உள்நாட்டு சரக்கு பொருட்கள் ஆகியவற்றை கடத்தி&nbsp; பல கோடிகளுக்கு சட்டப்பூர்வ பணமாக மாற்றியதாக(money laundering) இவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T19:48:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை திறந்தால் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட ட்ரம்ப் தயார்..! வெளியான அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-iran-war-strait-hormuz-trump-started-iran-war-1786297850"></link>
            <id>https://tamilwin.com/article/us-iran-war-strait-hormuz-trump-started-iran-war-1786297850</id>
            <summary type="text">ஈரான் முற்றிலுமாக ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறந்தால், புதிய அணுசக்தி ஒப்பந்தத்தைப் பெறும் முயற்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைவிடத் தயாரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் முற்றிலுமாக ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறந்தால், புதிய அணுசக்தி ஒப்பந்தத்தைப் பெறும் முயற்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைவிடத் தயாராக இருக்கலாம் என The Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
முழுமையான மற்றும் இறுதியான அணுசக்தி ஒப்பந்தத்தை வலியுறுத்துவதற்குப் பதிலாக, முக்கிய எண்ணெய் கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதை அடிப்படையாகக் கொண்டு, பிராந்தியத்தில் முன்னெடுக்கப்படும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வரவும், தற்போதுள்ள போர் நிறுத்தத்தை நீட்டிக்கவும் ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புக்கொள்ளலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>
</p><p>
அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டிய The Wall Street Journal, ட்ரம்ப் கடந்த சில வாரங்களாக இதற்கான சூழலை உருவாக்கி வருவதாகவும், ஈரானுடன் புதிய அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றைப் பெற முடியாவிட்டாலும் அதிலிருந்து விலகிச் செல்லலாம் என அவர் தனது மூத்த ஆலோசகர்களிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.</p><p>

எனினும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஈரான் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a5fd276-8df1-4025-befb-8a2267fae56e/26-6a78c2c00945b.webp' /></p><p> 

இதில் பல பில்லியன் டொலர் நிதி வழங்கல், அமெரிக்க கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வருதல், பிராந்தியத்திலிருந்து அமெரிக்கப் படைகளை வாபஸ் பெறுதல், பொருளாதாரத் தடைகளை நீக்குதல் மற்றும் முடக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துகளை விடுவித்தல் ஆகியவை அடங்குகின்றன.
</p><p>
இந்தக் கோரிக்கைகள் காரணமாக வாஷிங்டனின் இராஜதந்திரத் தெரிவுகள் குறைந்துள்ளதாகவும், விரைவான உடன்பாட்டை எட்டுவதற்குப் பதிலாக நீண்டகால மோதலுக்கு ஈரான் தயாராகி வருவதற்கான அறிகுறிகளாக இவை இருப்பதாகவும் The Wall Street Journal தெரிவித்துள்ளது.</p><p></p><h2>அமெரிக்க போர்க்கப்பல்கள்</h2><p>
</p><p>
ஈரான் மற்றும் ஓமன் இடையே அமைந்துள்ள குறுகிய கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை, ஈரானின் முக்கியமான அழுத்தக் கருவிகளில் ஒன்றாக மாறியுள்ளது.</p><p>

 ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் மூலம் வர்த்தகக் கப்பல் போக்குவரத்தை ஈரான் பாதித்துள்ளதாகவும், இதனால் கப்பல் போக்குவரத்தில் தாமதங்கள் ஏற்பட்டு உலக சந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74d432b0-19ec-48fe-bd37-2c8b08f6e1e6/26-6a78c2c0ba371.webp' /></p><p>

போர் தொடங்கிய பின்னர் பெப்ரவரி மாதத்தில் ஈரான் இந்த நீர்வழிப் பாதையை மூடியதாகவும், அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்ல அனுமதிக்கப்படக்கூடாது என ஈரான் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.</p><p>

அதேவேளை, இந்த நீர்வழிப் பாதையைப் பயன்படுத்தும் வர்த்தகக் கப்பல்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கவும் ஈரான் முயன்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><h2>&nbsp;பெட்ரோல் விலைகள்&nbsp;</h2><p>

எனினும், இந்தக் கட்டுப்பாடுகளையும் ஈரான் விதிக்க முயலும் கட்டண முறையையும் அமெரிக்கா நிராகரித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி The Wall Street Journal தெரிவித்துள்ளது.</p><p>

ஹோர்முஸ் நீரிணை ஏற்கனவே முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாக ட்ரம்ப் சமீப காலங்களில் பலமுறை கூறியிருந்தாலும், அந்தக் கூற்றுகள் தொடர்ந்து முன்கூட்டியதாகவே நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef4bf2c1-d446-4b03-9636-d7d612f9a91a/26-6a78c2c16fbdf.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், பெப்ரவரி இறுதியில் மோதல் தொடங்குவதற்கு முன்பிருந்த நிலையை விட அமெரிக்காவில் பெட்ரோல் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன.</p><p>

மேலும், அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களுக்கு இன்னும் மூன்று மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், இராணுவ நடவடிக்கை தனது இலக்குகளை அடைந்தது என்பதை அமெரிக்க வாக்காளர்களிடம் நிரூபிக்க வேண்டிய அரசியல் அழுத்தத்திலும் ட்ரம்ப் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T19:47:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இத்தாலியிலிருந்து வந்த 200 பயணிகளிடம் ஸ்பெயின் பொலிஸார் தீவிர சோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/spanish-police-searches-200-passengers-from-italy-1786289287"></link>
            <id>https://tamilwin.com/article/spanish-police-searches-200-passengers-from-italy-1786289287</id>
            <summary type="text">சட்டவிரோத குடியேற்றம் தொடர்பான முறுகல் நிலை தீவிரமடைந்துள்ள சூழலில்,
இத்தாலியிலிருந்து வருகை தந்த சுமார் 200 பயணிகளிடம் ஸ்பெயின் எல்லைக்
கட்டுப்பாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோத குடியேற்றம் தொடர்பான முறுகல் நிலை தீவிரமடைந்துள்ள சூழலில்,
இத்தாலியிலிருந்து வருகை தந்த சுமார் 200 பயணிகளிடம் ஸ்பெயின் எல்லைக்
கட்டுப்பாட்டுப் பிரிவினர் தீவிர ஆவண சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
</p><p>நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்ட எல்லைக் கட்டுப்பாட்டு
நடவடிக்கைகளின் முதற்கட்டமாகவே நாட்டின் ஆறு பிரதான விமான நிலையங்களில்
இந்தச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>பொலிஸார் தீவிர சோதனை</h2><p>
</p><p>
மெட்ரிட், பார்சிலோனா, செவில்லே உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு
இத்தாலியிலிருந்து வருகை தந்த 12 விமானங்களைச் சேர்ந்த 199 பயணிகளையே ஸ்பெயின்
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு சோதனைக்கு உட்படுத்தியுள்ளது.
</p><p>
ஸ்பெயினின் வட ஆபிரிக்க பிராந்தியமான செயுட்டாவிற்கு கடந்த ஜூலை இறுதியில்
சுமார் 72,000 சட்டவிரோத குடியேற்றவாசிகள் பிரவேசித்ததைத் தொடர்ந்து, இத்தாலி
ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் ஸ்பெயினுடனான ஷெங்கன் எல்லைப் பயண உடன்படிக்கையை
தற்காலிகமாக இடைநிறுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b4e6338-ec37-422a-b8c5-dc1de8b9f1a7/26-6a789e9ca0385.webp' /></p><p>

இத்தாலியின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடியாகவே, இத்தாலியிலிருந்து வருகை தரும்
விமானங்கள் மற்றும் கப்பல்களுக்கான எல்லைக் கட்டுப்பாடுகளை வரும் செப்டெம்பர்
7 ஆம் திகதி வரை நீடிக்கும் வகையில் ஸ்பெயின் நடைமுறைப்படுத்தியுள்ளது.</p><p>

எனினும், நிலைமை சுமுகமடைந்ததும் எல்லைக் கட்டுப்பாடுகள் விரைவில்
தளர்த்தப்படும் என இத்தாலிய வெளிவிவகார அமைச்சர் அன்டோனியோ தஜானி நம்பிக்கை
வெளியிட்டுள்ளார்.
</p><p>
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஷெங்கன் உடன்படிக்கையின் கீழ் உறுப்பு நாடுகளுக்கு
இடையே கடவுச்சீட்டு அற்ற சுதந்திரமான பயணம் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும்,
பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு காரணங்களுக்காகத் தற்காலிக எல்லைக்
கட்டுப்பாடுகளை விதிக்க உறுப்பு நாடுகளுக்கு உரிமை உண்டு என்பது
குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T19:39:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அயர்லாந்துக்கு நாடுகடத்தப்பட்ட சர்வதேச குற்ற கும்பலின் தலைவர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/daniel-kinahan-extradited-to-ireland-from-dubai-1786299645"></link>
            <id>https://ibctamil.com/article/daniel-kinahan-extradited-to-ireland-from-dubai-1786299645</id>
            <summary type="text">சர்வதேச அளவில் தேடப்பட்டு வந்த பிரபல குற்றவியல் கும்பலின் தலைவர் என சந்தேகிக்கப்படும் டேனியல் கினஹான், ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) கைது செய்யப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச அளவில் தேடப்பட்டு வந்த பிரபல குற்றவியல் <a href="https://ibctamil.com/article/netanyahu-rejects-gaza-plan-over-elections-1786291281" target="_blank">கும்பலின் தலைவர் </a>என சந்தேகிக்கப்படும் டேனியல் கினஹான், ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) கைது செய்யப்பட்டு அயர்லாந்துக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.</p><p>

இந்தநிலையில் அயர்லாந்து அரசுக்கு சொந்தமான சிறப்பு விமானம் மூலம் துபாயிலிருந்து டப்ளின் நகருக்கு அவர் அழைத்து வரப்படவுள்ளார்.</p><p>

போதைப்பொருள் கடத்தல் மற்றும் சர்வதேச குற்றவியல் அமைப்பை வழிநடத்திய குற்றச்சாட்டுகளுக்காக <a href="https://ibctamil.com/article/oman-iran-progress-on-hormuz-strait-talks-1786295984" target="_blank">அங்குள்ள நீதிமன்றத்தில் </a>அவர் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p><p>
</p><p></p><h2>முறைப்படி கைது&nbsp;</h2><p>விமானப் போக்குவரத்து தகவல்களின்படி, கினஹானை ஏற்றிச் சென்ற சிறப்பு விமானம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1:19 மணிக்கு துபாயில் இருந்து புறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a6509e7-053c-4ace-947c-e37e1caae3f8/26-6a78d3ac4ee8e.webp' /></p><p>

டப்ளின் விமான நிலையம் வந்தடைந்ததும் கினஹான் உடனடியாக காவல்துறையினரால் முறைப்படி கைது செய்யப்பட்டு, நடுவர்கள் இல்லாத (Non-Jury) சிறப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் (Special Criminal Court) முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p><p>

கைதியை அழைத்துச் செல்வதற்காக அயர்லாந்து சிறைச்சாலைத் துறை புதிதாக தோட்டாக்கள் மற்றும் வெடிகுண்டுகளால் துளைக்க முடியாத (Bulletproof &amp; Bomb-proof) சிறப்புப் பாதுகாப்பு வாகனத்தைப் பயன்படுத்துகிறது.</p><p>
</p><p></p><h2>பாதுகாப்பு வசதிகள்</h2><p>கினஹானின் வருகையையொட்டி அயர்லாந்து காவல்துறையினர் (Gardaí), ஆயுதம் ஏந்திய சிறப்புப் படையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து மிகப்பெரிய அளவிலான பாதுகாப்பு வளையத்தை அமைத்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aea8f37e-34de-445c-8a6b-86106214971b/26-6a78d3ad00611.webp' /></p><p>விசாரணை முடியும் வரை அவர் அடைக்கப்படவுள்ள மிக உயர்மட்ட பாதுகாப்பு கொண்ட போர்ட்லாயிஸ் (Portlaoise) சிறைச்சாலையின் உள் மற்றும் வெளிப் பாதுகாப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>

கினஹான் மற்றும் அவரது குடும்பத்தினர் சர்வதேச அளவில் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். </p><p></p><h2>பொருளாதாரத் தடைகள்</h2><p>இந்தநிலையில் பல தசாப்தங்களாக நடைபெறும் பல்வேறு கொலைச் சம்பவங்களுக்கும் இவர்களது கும்பலுக்கும் தொடர்புள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp; &nbsp;</p><p>2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்க அரசால் சர்வதேச அளவிலான குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, இவருக்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e61f176-59c9-4572-80ea-a5ac595b5a0e/26-6a78d3ada5ef5.webp' /></p><p>அதேவேளையில், கினஹான் மீதான குற்றச்சாட்டுகளை அவரது வழக்கறிஞர்கள் முற்றிலுமாக மறுத்துள்ளனர்.
</p><p>
இந்தநிலையில் கினஹான் மீது இதுவரை எந்தக் குற்றமும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை எனவும் அவர் ஒரு குற்றவியல் கும்பலின் தலைவர் என்று கூறப்படும் செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T19:33:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஓமான் - ஈரான் தீவிரம்! அமெரிக்காவின் முட்டுக்கட்டை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/oman-iran-progress-on-hormuz-strait-talks-1786295984"></link>
            <id>https://ibctamil.com/article/oman-iran-progress-on-hormuz-strait-talks-1786295984</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) புதிய போக்குவரத்துப் பாதைகளைத் திறப்பது தொடர்பாக ஓமான் (Muscat) மற்றும் ஈரானுக்கு (Tehran) இடையிலான பேச்சுவார்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) புதிய போக்குவரத்துப் பாதைகளைத் திறப்பது தொடர்பாக ஓமான் (Muscat) மற்றும் ஈரானுக்கு (Tehran) இடையிலான பேச்சுவார்த்தைகளில்<a href="https://ibctamil.com/article/oman-iran-progress-on-hormuz-strait-talks-1786295984" target="_blank"> குறிப்பிடத்தக்க முன்னேற்றம்</a> ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த விடயத்தை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் விரிவுரையாளர் ரொக்சேன் ஃபர்மான்ஃபார்மையன் (Roxane Farmanfarmaian) தெரிவித்துள்ளார்.
</p><p>
சர்வதேச ஊடகமொன்றிற்கு <a href="https://ibctamil.com/article/if-iran-opens-hormuz-trump-drop-nuclear-deal-plan-1786289003" target="_blank">வழங்கிய நேர்காணல்</a> ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>பிராந்தியக் கட்டுப்பாடு&nbsp;</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ஹோர்முஸ் நீரிணையில் பிராந்தியக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் ஓமானும் ஈரானும், அமெரிக்கா தன் தடைகளை நீக்கி ஒப்பந்தத்தைப் பின்பற்றியவுடன் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைப்பதே இந்தப் பேச்சுவார்த்தையின் நோக்கம் என விவரித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/054ed12c-19ce-49ec-ba86-88b4e0c785f7/26-6a78c10060945.webp' /></p><p>மிகப்பெரிய பிரச்சினை வாஷிங்டனுடன் தான் உள்ளது என ஃபர்மான்ஃபார்மையன் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>

அமெரிக்கா தனது ஒப்பந்தப் பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றவில்லை என ஈரான் கருதுதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>வெளிநாட்டுச் சொத்துக்கள்&nbsp;</h2><p>ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) குறிப்பிட்டது போல், தற்போது இருநாடுகளுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை எனவும் இடைத்தரகர்கள் மூலம் குறிப்புகள் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்படுகின்றன (Exchange of notes) எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a1739c9-2151-46a6-b737-87a25c827306/26-6a78c0ffaf773.webp' /></p><p>அமெரிக்காவினால் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் வெளிநாட்டுச் சொத்துக்கள் மற்றும் நிதியிருப்புகளை உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும் ஹோர்முஸ் நீரிணையில் வெளிப்பகுதியில் அமெரிக்கா விதித்துள்ள கடற்படைத் தடையை (US Naval Embargo) முற்றிலும் திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T19:17:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டு கட்சிக்கு நாவலப்பிட்டியில் பலத்த அடி ; சர்வஜன அதிகாரம் பக்கம் தாவிய முக்கிய முன்னாள் அமைப்பாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/motu-party-suffers-heavy-blow-in-nawalapitiya-1786302944"></link>
            <id>https://jvpnews.com/article/motu-party-suffers-heavy-blow-in-nawalapitiya-1786302944</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாவலப்பிட்டி தொகுதி முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், &#039;சர்வஜன அதிகாரம்&#039; கட்சியுடன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாவலப்பிட்டி தொகுதி முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், 'சர்வஜன அதிகாரம்' கட்சியுடன் உத்தியோகபூர்வமாக இணைந்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>நாவலப்பிட்டியிலுள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இன்று (09) இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது, சர்வஜன அதிகாரத்தின் தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகம முன்னிலையில் இக்குழுவினர் இம்மாற்றத்தை முறைப்படி அறிவித்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a55ff723-304f-4c22-bb17-ca496be1d885/26-6a78d1e278508.webp' /></p><p>இதன் போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த திலும் அமுனுகம, தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகச் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார்:
</p><p>
அரசாங்கத்தின் பொறுப்புத் துறப்பு: "சிறைச்சாலை மோதல்களுக்கு எதிர்க்கட்சியே காரணம் எனக் கூறுவதானால், நாட்டில் அரசாங்கம் என்ற ஒன்று இயங்கவே தேவையில்லை."</p><p>

சர்வாதிகாரப் போக்கு: "மகாநாயக்க தேரர்களின் எதிர்ப்பையும் மீறி, நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடிக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது தற்போதைய ஆட்சியாளர்களின் சர்வாதிகாரப் போக்கையே வெளிப்படுத்துகிறது."
</p><p>
வளர்ந்து வரும் வாக்கு வங்கி: "நாட்டில் உள்ள ஏனைய அரசியல் கட்சிகள் தங்களின் நிலையான வாக்கு வங்கியை இழந்து வரும் நிலையில், சர்வஜன அதிகாரம் மட்டுமே பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி குறுகிய காலத்தில் மிக வலுவான வாக்கு வங்கியை உருவாக்கியுள்ளது."</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T19:15:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓடுபாதையில் விமானத்தை துரத்திச் சென்ற இரண்டு பெண்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/women-chase-plane-in-moscow-airport-scare-1786290107"></link>
            <id>https://news.lankasri.com/article/women-chase-plane-in-moscow-airport-scare-1786290107</id>
            <summary type="text">Women Chase Plane in Moscow Airport: மாஸ்கோ விமான நிலையத்தில் இரண்டு பெண்கள் விமானத்தை துரத்திச் சென்ற வீடியோ வைரலாகிவருகிறது.

ஓடுபாதையில் இரண்டு ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Women Chase Plane in Moscow Airport: மாஸ்கோ விமான நிலையத்தில் இரண்டு பெண்கள் விமானத்தை துரத்திச் சென்ற வீடியோ வைரலாகிவருகிறது.</p><h2>

ஓடுபாதையில் இரண்டு பெண்கள்</h2><p>ஜூலை 25-ஆம் திகதி, ரஷ்யாவின் ஷெரெமேட்யேவோ சர்வதேச விமான நிலையத்தில் நடந்த விசித்திரமான சம்பவம் தற்போது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>
இரண்டு பெண்கள் தங்கள் Aeroflot விமானத்தை தவறவிட்டதால், விமானம் புறப்படும் தருணத்தில் ஓடுபாதையில் துரத்திச் சென்றனர்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Meanwhile at Moscow&#39;s Sheremetyevo International Airport two passengers who had missed their flight ran onto the tarmac on July 25 and walked directly toward an Aeroflot aircraft in an attempt to board, with one woman dragging a suitcase behind her. <a href="https://t.co/1vmHOeBrhg">pic.twitter.com/1vmHOeBrhg</a></p>&mdash; Breaking Aviation News &amp; Videos (@aviationbrk) <a href="https://x.com/aviationbrk/status/2086052750802952490?ref_src=twsrc%5Etfw">August 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>அவர்கள் ஏற்கனவே பாதுகாப்பு சோதனையை கடந்திருந்தாலும், விமானத்தில் ஏற வேண்டிய நேரத்தை தவறவிட்டனர்.

மீண்டும் டிக்கெட் பதிவு செய்யாமல், நேரடியாக விமானம் நிறுத்தப்பட்டிருந்த apron பகுதியில் நுழைந்தனர். அப்போது விமானம் கேட்டில் இருந்து நகர்த்தப்பட்டு கொண்டிருந்தது.</p><p>

வீடியோ காட்சிகளில், பெண்களில் ஒருவர் தனது சூட் கேஸை இழுத்துக்கொண்டு விமானத்தை நோக்கி ஓடிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. மற்றொருவர் விமானத்தை நோக்கி கைகளை அசைத்து பைலட் கவனத்தை ஈர்க்க முயன்றார்.</p><p>
</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b27100d9-1f99-4417-8c06-ce0c5795bf09/26-6a78a07c654fb.webp' /></p><h2>விமான இயக்கம் நிறுத்தப்பட்டது</h2><p>இந்த சம்பவம் பெரும் பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தியது. apron பகுதி மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட இடமாகும். அங்கு விமானங்கள் நகர்த்தப்படுவதோடு, பல்வேறு வாகனங்கள் மற்றும் பணியாளர்கள் இயங்குகின்றனர்.</p><p>பெண்கள் அங்கு நுழைந்ததால், விமான இயக்கம் உடனடியாக நிறுத்தப்பட்டது.

பின்னர், பணியாளர்கள் அவர்களை தடுத்து, மீண்டும் டெர்மினலுக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் ரஷ்யாவின் Federal Security Service (FSB)-க்கு ஒப்படைக்கப்பட்டனர்.
</p><p>
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு, பயணிகள் விமானத்தை தவறவிட்டால் எவ்வளவு ஆபத்தான முடிவுகளை எடுக்கக்கூடும் என்பதை வெளிப்படுத்தியது.</p><p></p><p>
</p><h2>
மற்றொரு சம்பவம்- 30 பவுண்டுகள் அபராதம்</h2><p>இதேபோன்ற சம்பவம் கடந்த மே மாதத்திலும் நடந்தது. அப்போது, ஒரு பயணி விமான நிலையக் கழிப்பறையில் சிக்கி, விமானத்தை தவறவிட்டார். பின்னர் அவர் ஓடுபாதையில் பாய்ந்து விமானத்தை நிறுத்த முயன்றார். ஆனால், விமானம் புறப்பட்டுவிட்டது. அந்த பயணிக்கு சுமார் 30 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T19:03:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏரியில் தத்தளித்து உயிரிழந்த 19 வயது இளைஞர்: கடலில் மாயமான பெண்: தீவிர தேடுதல் வேட்டை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-19-yrs-old-dies-in-grasmere-lake-1786302177"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-19-yrs-old-dies-in-grasmere-lake-1786302177</id>
            <summary type="text">பிரித்தானியாவில் வார இறுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்த தனித்தனி நீர்நிலை விபத்துகள் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகின்றன. லேக் மாவட்டத்தில் நடந்த சோகம்லேக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் வார இறுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்த தனித்தனி நீர்நிலை விபத்துகள் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகின்றன.</p><h2> லேக் மாவட்டத்தில் நடந்த சோகம்</h2><p>லேக்(Lake) மாவட்டத்தின் கிராஸ்மியர்(Grasmere) ஏரியில் 19 வயது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> சனிக்கிழமை மாலை 4.35 மணியளவில் இளைஞர் ஒருவர் ஏரியில் தத்தளிப்பதாக கிடைத்த தகவலை அடுத்து கும்ப்ரியா காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.</p><p>அங்கிருந்து சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக இளைஞர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69683ad5-c219-4d8c-9996-54f3ac366101/26-6a78cee327c22.webp' /></p><p> இந்த சம்பவத்தில் யார் மீதும் சந்தேகம் இல்லை என்று காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் சிறுவனை காப்பாற்ற உதவிய பொதுமக்களுக்கு கும்ப்ரியா காவல்துறையினர் நன்றி தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2> காணாமல் போன பெண்</h2><p>சனிக்கிழமை இரவு வேமவுத்(Weymouth) கடற்கரைப் பகுதியில் பெண் ஒருவர் கடலுக்குள் சென்றதாக பொதுமக்களில் ஒருவர் இரவு 11.05 மணிக்கு டோர்செட் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.</p><p> கடலுக்கு சென்ற பெண் தனியாக இருந்ததாகவும், பின்னர் அவர் திரும்பி வெளியே வரவில்லை என்றும் நம்பப்படுகிறது.</p><p>காணாமல் போனதாக கூறப்படும் பெண் நடுத்தரமான உடல் அமைப்பு கொண்டவர் என்றும், வெளிர் நிறத்தில் உள்ள நீண்ட ஆடையை அணிந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p> இந்நிலையில் கடலில் இறங்கி காணாமல் போனதாக நம்பப்படும் பெண்ணை கண்டுபிடிப்பதற்காக கடல்வழி மற்றும் வான்வழி மீட்புக் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் களமிறங்கியுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T19:03:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆயுத உற்பத்தியை விரைவுபடுத்துமாறு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு அழுத்தம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/depleted-weapons-stockpiles-due-war-involving-iran-1786301248"></link>
            <id>https://tamilwin.com/article/depleted-weapons-stockpiles-due-war-involving-iran-1786301248</id>
            <summary type="text">&amp;nbsp;ஈரானுடனான போரின் காரணமாக ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்துகளின் கையிருப்பு
பெருமளவில் குறைந்துள்ள நிலையில், ஆயுத உற்பத்தியை விரைவுபடுத்துமாறு அமெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈரானுடனான போரின் காரணமாக ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்துகளின் கையிருப்பு
பெருமளவில் குறைந்துள்ள நிலையில், ஆயுத உற்பத்தியை விரைவுபடுத்துமாறு அமெரிக்க
பாதுகாப்பு அமைச்சான பென்டகன் அந்நாட்டின் பாதுகாப்பு உற்பத்தி
நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.
</p><p>
ஈரானிய வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட
'பேட்ரியட்' மற்றும் 'தாட்' ரக வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் கையிருப்பு
பாதியளவிற்கும் மேலாகக் குறைந்துள்ளதாக சர்வதேச வியூக ஆய்வுகளுக்கான மையம்
(CSIS) சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><h2>ஆயுதக் கையிருப்பு குறைவு</h2><p>
</p><p>
இந்நிலைமை தொடர்ந்தால் அமெரிக்கப் படைகள் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்குப்
பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஆயுத உற்பத்தியை கணிசமான அளவில் அதிகரிப்பதற்கான திட்டங்களை 21 நாட்களுக்குள்
சமர்ப்பிக்குமாறு பென்டகனின் பிரதி பாதுகாப்புச் செயலாளர் ஸ்டீவ் ஃபீன்பெர்க்
பாதுகாப்புத் துறை நிறுவனங்களுக்கு அவசர அறிவித்தல் விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c95017af-b718-4cba-a69f-af1ef8c2ffc0/26-6a78cc97eb255.webp' /></p><p>
</p><p>
வருடக் கணக்கில் நீடிக்கும் ஆயுத அபிவிருத்தி திட்டங்களை ஏற்க முடியாது
எனவும், உற்பத்தி திறனை உடனடியாக அதிகரிக்க வேண்டும் எனவும் அவர்
வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க இராணுவத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த அவசர
நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பென்டகன் பேச்சாளர் சீன் பார்னெல்
உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p>

அதேவேளை, போர்க் காலத்தில் ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வெளியான
செய்திகளை நிராகரித்துள்ள அமெரிக்கக் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,
அமெரிக்காவிடம் போதியளவு ஆயுதங்கள் கையிருப்பில் உள்ளதாகவும், புதிய
உற்பத்திகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T18:59:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[காசா அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு! பின்னணியில் அக்டோபர் தேர்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/netanyahu-rejects-gaza-plan-over-elections-1786291281"></link>
            <id>https://ibctamil.com/article/netanyahu-rejects-gaza-plan-over-elections-1786291281</id>
            <summary type="text">இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) காசா அமைதித் திட்டத்தைப் பகிரங்கமாக நிராகரித்துள்ளமை, நாட்டில் எதிர்வரும் அக்டோபர் மாதம் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) <a href="https://ibctamil.com/article/new-media-spokesperson-prisons-department-1786287045" target="_blank">காசா அமைதித் திட்டத்தைப் </a>பகிரங்கமாக நிராகரித்துள்ளமை, நாட்டில் எதிர்வரும் அக்டோபர் மாதம் வரவிருக்கும் தேர்தல்களுடனேயே பெரிதும் பிணைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நெதன்யாகுவின் முன்னாள் உதவியாளரும் அரசியல் ஆய்வாளருமான மிட்செல் பராக் (Mitchell Barak) இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
இது நெதன்யாகுவின் இறுதி நிலைப்பாடு அல்ல மாறாக அவருடைய<a href="https://ibctamil.com/article/mahinda-samarasinghe-bids-farewell-to-politics-1786279565" target="_blank"> ஆரம்ப நிலைப்பாடு</a> (Opening Position) மாத்திரமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>ஆதரவுத் தளம்</h2><p>

அத்தோடு நெதன்யாகுவின் தற்போதைய தீவிர வலதுசாரி அரசாங்கத்திற்கு நீண்ட காலம் நீடிக்கும் ஆயுள் இல்லை என்பதால், அமைச்சரவைக் கூட்டத்தின் போது இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டது வோஷிங்டனை நோக்கியது அல்ல, மாறாகத் தனது வலதுசாரி அரசியல் ஆதரவுத் தளத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00a8628a-23fa-459c-bd93-6340cffd6933/26-6a78affc316dc.webp' /></p><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், விரைவிலோ அல்லது தாமதமாகவோ இஸ்ரேல் ட்ரம்ப் திட்டத்தை ஏற்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாகப் பராக் தெரிவித்துள்ளார்.</p><p> </p><p></p><h2>ஆயுதக் களைவு&nbsp;</h2><p>இந்த நிராகரிப்பானது ஹமாஸின் ஆயுதக் களைவு தொடர்பான வரிசைமுறை மற்றும் நேரத்தைக் பொறுத்ததே தவிர, அமெரிக்காவுடனான நிரந்தரப் பிரிவு அல்ல என்றும் அவர் விவரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8cf9c7b-4d5f-445c-91dd-9109fd742f27/26-6a78affd11e11.webp' /></p><p>

எதிர்வரும் தேர்தலை நோக்கிச் செல்லும் போது நெதன்யாகுவின் மிகப்பெரிய பலம் ட்ரம்ப்புடனான அவரது உறவே ஆகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

உலகத் தலைவர்களில் எவரையும் விட மிகச் சிறந்த உறவு நெதன்யாகுவுக்கே உள்ளது எனக் குறிப்பிட்ட பராக், அதனை இழக்க நெதன்யாகு விரும்பவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T18:32:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இராணுவ வீரர் படுகொலை : உறவினருக்கு விதிக்கப்பட்டது மரணதண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/death-penalty-for-a-man-who-killed-a-relative-1786300214"></link>
            <id>https://ibctamil.com/article/death-penalty-for-a-man-who-killed-a-relative-1786300214</id>
            <summary type="text">தங்கள் உறவினரான, இராணுவ வீரரைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்குமாற...</summary>
            <content type="html"><![CDATA[<p>தங்கள் உறவினரான, இராணுவ வீரரைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்குமாறு பாலபிட்டிய உயர் நீதிமன்றம் சமீபத்தில் (07) உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இந்தக் கொலை தொடர்பாக பாலபிட்டிய மேல் நீதிமன்றத்தில் அந்த இரு சகோதரர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. முதல் பிரதிவாதிக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி ருசிரா வெலிவத்த, மற்றொரு பிரதிவாதியை விடுவித்து விடுதலை செய்யவும் உத்தரவிட்டார்.</p><h2>முன்னாள் இராணுவ வீரர் கொடூரமாகக் கொலை&nbsp;</h2><p>கடந்த ஜனவரி 07, 2016 அன்று, பாலபிட்டிய மேல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட பிட்டிகலாவில், எல்.எச். மகேஷ் நெரஞ்சன் என்ற முன்னாள் இராணுவ வீரர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02f0d344-0bbb-4f1c-a0d2-5ff4d07ecd52/26-6a78c738e2411.webp' /></p><p>
</p><p>
இந்தக் கொலை குறித்த விசாரணையைத் தொடர்ந்து, இறந்தவரின் உறவினர்களான, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களை காவல்துறை கைது செய்தது.

அதனைத் தொடர்ந்து, சட்டமா அதிபரும் இக்கொலை தொடர்பாக தண்டனைச் சட்டத்தின் 296 ஆம் பிரிவின் கீழ் ஒரு வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்திருந்தார்.</p><p></p><p>
</p><p>
</p><h2>&nbsp;குற்றப்பத்திரிகை&nbsp;தாக்கல்</h2><p>இந்த மரணம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், எல்பிட்டிய ஆதார மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் சத்சர சமரத்ன மற்றும் எல்பிட்டிய ஆதார மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி எஸ்.ஏ.டி. சன்ன பெரேரா ஆகியோர் சாட்சிகளாகப் பெயரிடப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5b9e460-6799-4347-91ac-e0fe2053adb3/26-6a78c73991502.webp' /></p><p>
</p><p>
இக்கொலை தொடர்பான சிறுவரல்லாதோருக்கான பூர்வாங்க விசாரணை எல்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது. மேலும், சட்டமா அதிபர் பிரதிவாதிகளுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்து, மேலதிக விசாரணைக்காக இவ்வழக்கைப் பாலபிட்டிய மேல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைத்தார்.
</p><p>
சட்டமா அதிபர் சார்பில் அரசு வழக்கறிஞர் செனூரி குணதிலக்கவும், பிரதிவாதிகள் சார்பில் வழக்கறிஞர் கயன் மல்லியவடுவும் முன்னிலையானார்கள்

பிட்டிகல காவல்துறையினர் இக்கொலை குறித்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.&nbsp; </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T18:30:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உணவகத்தில் கோடாரியுடன் மிரட்டல் விடுத்த நபர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/axe-wielding-man-arrested-outside-vancouver-1786286796"></link>
            <id>https://canadamirror.com/article/axe-wielding-man-arrested-outside-vancouver-1786286796</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள உணவகம் ஒன்றிற்கு வெளியே கோடாரியைக் காட்டி மக்களை மிரட்டிய 29 வயது இளைஞரை வியாழக்கிழமை அன்று பொலிஸார் கைது செய்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள உணவகம் ஒன்றிற்கு வெளியே கோடாரியைக் காட்டி மக்களை மிரட்டிய 29 வயது இளைஞரை வியாழக்கிழமை அன்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>
மெயின் ஸ்ட்ரீட் மற்றும் 24-வது அவென்யூ பகுதிக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
</p><p>சந்தேக நபரான அந்த இளைஞர், உணவகத்தின் வெளிப்புறப் பகுதியில் அமர்ந்திருந்த மனிதர்களை நோக்கிச் சாப்பிடும் கரண்டிகள் மற்றும் கத்திகளை வீசியும், தட்டுகளை உடைத்தும் கடுமையான அச்சுறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0911a59a-c9a4-4289-b092-9381f739543a/26-6a7892cdee4cc.webp' /></p><p>
கையில் கோடாரியை வைத்துக்கொண்டு அங்கு இருந்த மக்களை வெட்டிவிடுவதாக மிரட்டியுள்ளார்.
</p><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வான்கூவர் பொலிஸார், தங்கள் காவல் துறை நாய் பிரிவின் உதவியுடன் அந்த நபரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.</p><p>
கைது செய்யப்பட்ட நபர் காயமடைந்திருந்ததால், முதலில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>
பின்னர், குறிப்பிட்ட தேதியில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற பிணை நிபந்தனையின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். 
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வான்கூவர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T18:29:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய் குறித்து தவெக எம்.எல்.ஏ.க்கள் அதிரடி பேச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tdp-mlas-make-a-statement-about-vijay-1786300077"></link>
            <id>https://jvpnews.com/article/tdp-mlas-make-a-statement-about-vijay-1786300077</id>
            <summary type="text">தமிழகத்தில் முதல்வர் விஜய் ஊழலற்ற ஆட்சியை வழங்கி வருவதாகவும், அதனை நாடு முழுவதும் உள்ள மக்கள் விரும்புவதால் வரும் காலத்தில் அவர் பிரதமராக வருவார் என ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகத்தில் முதல்வர் விஜய் ஊழலற்ற ஆட்சியை வழங்கி வருவதாகவும், அதனை நாடு முழுவதும் உள்ள மக்கள் விரும்புவதால் வரும் காலத்தில் அவர் பிரதமராக வருவார் என மக்கள் எதிர்பார்ப்பதாகவும் புதுச்சேரி தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்களான சாய் ஜெ.சரவணன்குமார் மற்றும் ராமு ஆகியோர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/616a096e-96e8-4098-be2a-5296aa2d948d/26-6a78c6af46ded.webp' /></p><p>

அவர்கள் குறிப்பிடுகையில், "புதுச்சேரி காவல்துறைக்குக் குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.</p><p> ஆனால், அந்தச் சிறப்பான விழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாதது கண்டிக்கத்தக்கது. </p><p>வருங்காலத்தில் இதுபோன்று நிகழக் கூடாது.

தமிழக முதல்வர் விஜய், அரச விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் எனக் கூறியது போல, புதுச்சேரி அரச விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்.
</p><p>
பிரதமர் கூடத் தமிழ் தான் மூத்த மொழி எனக் கூறியுள்ளார். எனவே, அனைத்து அரச விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வேண்டும்; இல்லையெனில் வீதியில் இறங்கிப் போராடுவோம்.
</p><p>
தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியைத் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்திக் கொண்டிருக்கிறார். </p><p>இதனை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் விரும்புகின்றனர். எனவே, வரும் காலத்தில் அவர் பிரதமராக வருவார் என மக்கள் நினைக்கின்றனர்” என்று தெரிவித்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T18:28:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏழைகளின் பணத்தில் கைவைத்த அதிகாரிகள் ; அஸ்வெசும ஊழலில் தொடரும் அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/officials-who-tampered-with-the-money-of-the-poor-1786298683"></link>
            <id>https://jvpnews.com/article/officials-who-tampered-with-the-money-of-the-poor-1786298683</id>
            <summary type="text">நோர்வூட் பிரதேச செயலகத்தில் ஏழை எளிய மக்களுக்காக ஒதுக்கப்படும் &#039;அஸ்வெசும&#039; நிவாரண நிதியில் 16 மில்லியன் ரூபாய் முறைகேடு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வூட் பிரதேச செயலகத்தில் ஏழை எளிய மக்களுக்காக ஒதுக்கப்படும் 'அஸ்வெசும' நிவாரண நிதியில் 16 மில்லியன் ரூபாய் முறைகேடு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, மேலும் இரண்டு முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர்கள் உடனடியாக அமல்படுத்தப்படும் வகையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் அறிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h3>ஆரம்ப கட்ட விசாரணை</h3><p>குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்குப் போய் சேர வேண்டிய இந்தச் சமூக நலன்புரித் தொகையை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்களது மற்றும் உறவினர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு முறைகேடாகப் பரிமாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08e3e992-d29d-4519-b245-6284a26d8499/26-6a78c13cd83ba.webp' /></p><p>இந்த மாபெரும் நிதிச் சூறையாடலில் மொத்தம் 11 அரச ஊழியர்களுக்குத் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. </p><p>இதில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தைச் சேர்ந்த இரு அதிகாரிகள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், ஹட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த 6 ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை அலுவலக ஊழியர் ஒருவர் குறித்தும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை இரு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய சந்தேகநபர்களுக்கு எதிராக ஹட்டன் காவல்துறையின் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T18:04:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேல் செல்ல விரும்புவோருக்கு முக்கிய அறிவிப்பு ; இலங்கையர்களுக்கான 16,000 பணியிட பதிவுகள் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-announcement-for-those-wishing-israel-1786298016"></link>
            <id>https://jvpnews.com/article/important-announcement-for-those-wishing-israel-1786298016</id>
            <summary type="text">இஸ்ரேலின் உணவகம் (Restaurant) மற்றும் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான தொழிலாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக பதிவுகள் ஸ்ரீலங்கா வெளிநாட்டு வேலைவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேலின் உணவகம் (Restaurant) மற்றும் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான தொழிலாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக பதிவுகள் ஸ்ரீலங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையப்பக்கத்தில் (www.slbfe.lk) நாளை (10) திறக்கப்படவுள்ளன.</p><p>
</p><p></p><p>அதன்படி, உணவகத் துறைக்கான பதிவுகள் நாளை நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், மொத்தம் 4,000 பேர் மட்டுமே பதிவு செய்யப்படவுள்ளனர்.

இதற்கு 25 முதல் 40 வயதுடைய ஆண்கள் விண்ணப்பிக்க முடியும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6aeb73ea-bb86-48c0-bf63-b9592ce7b036/26-6a78bea1c7037.webp' /></p><p>சமையலறையில் குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவம், 8 ஆண்டுகள் பாடசாலைக் கல்வி, நல்ல ஆங்கில அறிவு மற்றும் பாரம் தூக்குதல், நின்று வேலை செய்தல் போன்றவற்றுக்கான உடல் ஆரோக்கியம் என்பன அவசியமாகும்.
</p><p>
மேலும், விண்ணப்பதாரரோ அல்லது அவரது குடும்பத்தினரோ (பெற்றோர், மனைவி, பிள்ளைகள்) இதற்கு முன்னர் இஸ்ரேலில் பணிபுரிந்திருக்கக் கூடாது.
</p><p>
அதேவேளை, புனரமைப்புத் துறைக்கான பதிவுப் பக்கம் நாளை பிற்பகல் 2.00 மணிக்கு திறக்கப்படவுள்ளது. ஜிப்சம் வேலைகள், மின்சாரப் பெட்டிகள் பொருத்துதல் மற்றும் கல் சுவர் கட்டுதல், நிறப்பூச்சு வேலைகள், டைல்ஸ் ஒட்டுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் மொத்தம் 12,000 தொழிலாளர்கள் பதிவு செய்யப்படவுள்ளனர்.
</p><p>
25 முதல் 45 வயதுடைய, 10 ஆண்டுகள் பாடசாலைக் கல்வியும் அடிப்படை ஆங்கில அறிவும் கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். </p><p>முன்னர் புனரமைப்புத் துறைக்கான தேர்வில் தோற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது என்ற போதிலும், பிற துறைகளுக்கு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
</p><p>
தொழிலாளர்களின் திறமைகளை இஸ்ரேலியப் பிரதிநிதிகளே நேரடியாகப் பரிசோதிப்பார்கள் என்பதால், விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு உண்மையிலேயே அனுபவமும் தகுதியும் உள்ள துறைக்கு மட்டுமே விண்ணப்பிக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T17:53:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரியாவில் உள்ள ரஷ்ய இராணுவ தளங்களை மாற்றியமைக்க சிரியா - ரஷ்யா இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/syria-russia-modify-russian-military-bases-syria-1786295465"></link>
            <id>https://tamilwin.com/article/syria-russia-modify-russian-military-bases-syria-1786295465</id>
            <summary type="text">சிரியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ரஷ்யாவின் கிமேமிம் மற்றும் டார்ட்டஸ்
இராணுவ தளங்களின் செயற்பாடுகளை மாற்றியமைப்பது தொடர்பில் சிரியாவுக்கும்
ரஷ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிரியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ரஷ்யாவின் கிமேமிம் மற்றும் டார்ட்டஸ்
இராணுவ தளங்களின் செயற்பாடுகளை மாற்றியமைப்பது தொடர்பில் சிரியாவுக்கும்
ரஷ்யாவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளதாக சிரிய
வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.</p><p>

சுமார் 18 மாத கால தீவிர பேச்சுவார்த்தைகளின் பின்னர் எட்டப்பட்டுள்ள இந்த
உடன்படிக்கையின் கீழ், கிமேமிம் விமான நிலையம் மற்றும் டார்ட்டஸ்
துறைமுகத்தின் நான்காவது வர்த்தக முனையம் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பாட்டு
மையங்களின் நிர்வாகத்தை சிரியா பொறுப்பேற்கவுள்ளது.</p><p></p><h2>புரிந்துணர்வு ஒப்பந்தம்</h2><p>
</p><p>
இந்த மையங்கள் படிப்படியாக சிரியாவின் பொதுமக்கள் நிர்வாக கட்டமைப்பின்கீழ்
கொண்டுவரப்படவுள்ளன.
</p><p>
அத்துடன், குறித்த பகுதிகளில் அமைந்துள்ள இராணுவ தளங்கள் மற்றும் வசதிகள்
கூட்டுப் பயிற்சி மையங்களாக மாற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f14a97ed-fc78-4ebb-aff8-c5644cc56cfe/26-6a78b68f95e8e.webp' /></p><p> இரு
நாடுகளின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில் இந்த புதிய மாற்றங்கள்
செய்யப்பட்டுள்ளன.

இந்த மாற்ற நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்காக அதிகபட்சமாக மூன்று மாத கால
அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், அதன்பின்னரே புதிய நடைமுறைகள் முழுமையாக நடைமுறைக்கு வரும்.
</p><p>
இந்த ஒப்பந்தமானது பேச்சுவார்த்தை தொடங்கியதில் இருந்து எட்டப்பட்ட மிக
முக்கியமான நகர்வு எனவும், இது சிரியா மற்றும் ரஷ்யா இடையிலான உறவில் ஒரு
புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளதாகவும் சிரிய வெளியுறவு அமைச்சு
சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T17:49:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 அம்சத் திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் ஹமாஸ் கோரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hamas-calls-for-full-implementation-of-1786294954"></link>
            <id>https://tamilwin.com/article/hamas-calls-for-full-implementation-of-1786294954</id>
            <summary type="text">காசா அமைதி ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்திற்கான 15 அம்சத் திட்டத்திற்கு தொடர்ந்து கட்டுப்பட்டிருப்பதாகப் பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் தனது &#039;டெலிகிராம...</summary>
            <content type="html"><![CDATA[<p>காசா அமைதி ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்திற்கான 15 அம்சத் திட்டத்திற்கு தொடர்ந்து கட்டுப்பட்டிருப்பதாகப் பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் தனது 'டெலிகிராம்' பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p>
இந்த ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே தங்களின் தற்போதைய முதன்மை நோக்கம் என்றும் ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது.</p><p></p><h2>காசாவின் எல்லை திறப்பு</h2><p>
</p><p>பாலஸ்தீனியர்கள் மீதான தாக்குதல்களை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என கோரியுள்ளது.</p><p>
</p><p>காசா பகுதியிலிருந்து இஸ்ரேலியப் படைகள் முழுமையாகப் பின்வாங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90b4da0f-ae59-4c71-824c-763351dc5a01/26-6a78b2b10c4de.webp' /></p><p>
</p><p>காசாவிற்கான எல்லைகளைத் திறந்து, மக்களுக்குத் தேவையான உணவு, தங்குமிடம் மற்றும் மீள்கட்டமைப்புப் பொருட்களை தடையின்றி அனுமதிக்க வேண்டும் என கோரியுள்ளது.
</p><p>அமைதிச் செயல்பாடுகளைப் பாதிக்கும் வகையில் ஏற்படும் எந்தவொரு விதிமீறல்களையும் அல்லது குளறுபடிகளையும் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு இடைத்தரகர்களுக்கும், உத்தரவாதம் அளித்த நாடுகளுக்கும் உள்ளது என ஹமாஸ் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>
எங்கள் மக்களின் துன்பங்களை முடிவுக்குக் கொண்டுவருவதை உறுதிசெய்யும் வகையில், இந்த ஒப்பந்தத்தை முழுமையாகச் செயல்படுத்த நேர்மறையாகவும் பொறுப்புணர்வுடனும் தொடர்ந்து செயல்படுவோம் என்று ஹமாஸ் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T17:26:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[செயற்பாட்டு அரசியல் குறித்து மஹிந்த சமரசிங்கவின் தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-intention-to-enter-polictics-again-1786296331"></link>
            <id>https://tamilwin.com/article/no-intention-to-enter-polictics-again-1786296331</id>
            <summary type="text">மீண்டும் நேரடி அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு சிறிதும் இல்லை என அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
சுமார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மீண்டும் நேரடி அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு சிறிதும் இல்லை என அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>சுமார் ஐந்து ஆண்டுகள் தூதுவராகப் பணியாற்றிய பின்னர், தனிப்பட்ட காரணங்களுக்காகவே தான் பதவியிலிருந்து விலகியதாகவும், பதவி விலகுமாறு அரசாங்கத்திடமிருந்து எந்தவித அழுத்தமும் இருக்கவில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>அமெரிக்க தூதுவர் பதவியிலிருந்து அண்மையில் விலகிய மஹிந்த சமரசிங்க, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க வரகாகொட ஸ்ரீ ஞானரதன மகாநாயக்க தேரர் மற்றும் மல்வத்து பீடத்தின் மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மகாநாயக்க தேரர் ஆகியோரைச் சந்தித்து ஆசி பெற்றபோதே இக்கருத்துகளை ஊடகங்களிடம் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9af5b8b1-e4fd-433e-8a64-638893955931/26-6a78b80d16a53.webp' /></p><p>
அமெரிக்காவுடனான இருதரப்பு உறவுகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.</p><p>
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்களுக்கு அமெரிக்காவின் ஆதரவைப் பெற்றுத்தர முடிந்தது என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட வரிகளை 10% என்ற வரம்பிற்குள் தக்கவைக்க முடிந்ததுடன், அந்நாட்டிலிருந்து ஒரு கடற்படைக் கப்பல் மற்றும் பல ஹெலிகாப்டர்களை இலங்கைக்குப் பெற்றுத்தர முடிந்தது என தெரிவித்துள்ளார்.
</p><p>27 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகச் சேவையாற்றியுள்ள போதிலும், இனிவரும் காலங்களில் அரசியலில் ஈடுபடப்போவதில்லை எனத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>எனினும், சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் அரசாங்கம் ஏதேனும் உதவி கோரினால், தனது பங்களிப்பையும் ஆதரவையும் வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.</p><p>
மேலும், தான் நேரடி அரசியலில் இருந்து விலகியிருப்பதால், நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>ராஜதந்திர சேவையின் போது மஹிந்த சமரசிங்க ஆற்றிய மிகச்சிறந்த சேவையைப் பாராட்டி, மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் அவருக்குத் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T17:26:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நைஜர் நாட்டில் கடத்தப்பட்ட ஜேர்மன் குடிமகன்: அல்ஜீரிய ராணுவம் எடுத்த அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/algerian-military-rescues-german-citizen-in-niger-1786296265"></link>
            <id>https://news.lankasri.com/article/algerian-military-rescues-german-citizen-in-niger-1786296265</id>
            <summary type="text">நைஜர் நாட்டு எல்லையில் கடத்தப்பட்ட ஜேர்மன் நாட்டவர் அல்ஜீரிய ராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளார்.கடத்தப்பட்ட ஜேர்மன் நாட்டவர்நைஜர் நாட்டின் எல்லை பகுதியில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நைஜர் நாட்டு எல்லையில் கடத்தப்பட்ட ஜேர்மன் நாட்டவர் அல்ஜீரிய ராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளார்.</p><h2>கடத்தப்பட்ட ஜேர்மன் நாட்டவர்</h2><p>நைஜர் நாட்டின் எல்லை பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆயுதம் ஏந்திய குற்ற கும்பலால் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டார்.</p><p> இந்நிலையில் அவர் அல்ஜீரிய ராணுவ படையால் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p> கடந்த வெள்ளிக்கிழமை அன்று கடத்தப்பட்ட ஜேர்மன் குடிமகன் செக்யூரிட்டி போர்சஸ் (பாதுகாப்பு படையினரால்) பாதுகாப்பாக மீட்கப்பட்டு தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக அல்ஜீரிய பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4b97439-1c37-4fb2-bb70-8e3efd4e678a/26-6a78b7caed5aa.webp' /></p><p> மீட்கப்பட்ட ஜேர்மன் குடிமகன் அல்ஜீரியாவின் தென்பகுதியான இன் குஸ்ஸாம் பகுதியில் இருந்து தலைநகருக்கு அருகிலுள்ள பூஃபாரிக்(Boufarik) ராணுவ தளத்திற்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p> மீட்கப்பட்ட ஜேர்மன் நாட்டவரின் உடல் நலம் தற்போது சீராக இருப்பதாகவும், உரிய நேரத்தில் ஜேர்மன் அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>கடத்தப்பட்ட ஜேர்மன் குடிமகன் எவ்வாறு மீட்கப்பட்டார் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்களை அல்ஜீரிய அரசு இன்னும் வெளியிடவில்லை.</p><h2>ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் வழங்கிய தகவல்</h2><p>ஜேர்மன் குடிமகன் கடத்தப்பட்ட விவகாரம் தங்களுக்கு தெரியும் என்றும், வெளிநாடுகளில் கடத்தப்படும் ஜேர்மன் குடிமக்கள் குறித்து எந்தவொரு கருத்தும் அரசாங்கம் தெரிவிப்பதில்லை என்ற கொள்கையை கடைபிடித்து வருவதாகவும் ஜேர்மன் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T17:24:38+00:00</updated>
        </entry>
    </feed>
