<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-16T09:07:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா பிரதமருக்கு யூடியூபில் கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/youtuber-charged-with-threatening-prime-minister-1789545579"></link>
            <id>https://canadamirror.com/article/youtuber-charged-with-threatening-prime-minister-1789545579</id>
            <summary type="text">&amp;nbsp;கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு யூடியூப் காணொளி ஊடாக கொலை மிரட்டல் விடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட கல்கரியைச் சேர்ந்த நபர் தொடர்ந்து காவலில் வைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு யூடியூப் காணொளி ஊடாக கொலை மிரட்டல் விடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட கல்கரியைச் சேர்ந்த நபர் தொடர்ந்து காவலில் வைக்கப்படவுள்ளார்.
31 வயதான ஜேமி டா கோஸ்டா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p> டா கோஸ்டா தற்போது கல்கரி தடுப்புக் காவல் மையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>கனடிய குற்றவியல் சட்டத்தின் 264.1(1)(a) பிரிவுக்கு அமைவாக, "கனடா பிரதமர் மார்க் கார்னியை கொலை செய்யும் வகையில் மிரட்டல் விடுத்தமை" தொடர்பில் டா கோஸ்டா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9782ed4-56d5-431c-9b4c-c294cbdbaa34/26-6aaa4c6d361d5.webp' /></p><p>
</p><p>ஜூலை 28 அன்று, யூடியூப் கணக்கு ஒன்றில் பிரதமர் மார்க் கார்னியைக் கொலை செய்வதற்கான மிரட்டல்கள் பதிவிடப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்ததாக கனடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
இச்சம்பவம் ஜூலை 25 மற்றும் 26 ஆகிய திகதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்றுள்ளதாக நீதிமன்ற ஆவணங்கள் காட்டுகின்றன.
</p><p>கனடிய தலைவருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுமாறும் ஒட்டாவாவிற்குப் பயணம் செய்யுமாறும் தூண்டும் வகையிலான காணொளி ஒன்று ஜேமி டா கோஸ்டாவின் பெயரிலுள்ள யூடியூப் பக்கத்தில் இன்னமும் உள்ளது. </p><p>
இதில் பிரதமரின் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகவும் வன்முறையைத் தூண்டும் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
பிரதமர் கார்னி தொடர்பான வழக்கு தவிர, டா கோஸ்டா மேலும் பல குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T09:00:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[6 நாளில் மோசமான பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் செய்துள்ள கார்த்தியின் சர்தார் 2... தமிழகத்தில் இவ்வளவுதானா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/6-days-actor-karthi-sardar-2-movie-bo-1789544273"></link>
            <id>https://cineulagam.com/article/6-days-actor-karthi-sardar-2-movie-bo-1789544273</id>
            <summary type="text">சர்தார் 2சர்தார், முதல் பாகம் நன்றாக ஓட நடிகர் கார்த்தி நடித்த இரண்டாம் பாகம் தான் சர்தார் 2. கடந்த 2022ம் ஆண்டு பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி ந...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சர்தார் 2</h2><p>சர்தார், முதல் பாகம் நன்றாக ஓட நடிகர் கார்த்தி நடித்த இரண்டாம் பாகம் தான் சர்தார் 2. </p><p>கடந்த 2022ம் ஆண்டு பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்த முதல் பாகம் செம ஹிட்டானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/970e9122-0516-4e20-9ff6-46c15f370632/26-6aaa4f3ec39eb.webp' /></p><p> </p><p>இதையடுத்து மீண்டும் இந்திய உளவாளி பற்றிய கதையாக எழுதப்பட்ட சர்தார் 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு மற்றும் ரஜீஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். </p><p>இப்படம் செப்டம்பர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.</p><p></p><h2>
பாக்ஸ் ஆபிஸ் </h2><p>
பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் வசூலில் படம் சொதப்பியது. </p><p>ரூ. 80 கோடிக்கும் மேலான பட்ஜெட்டில் உருவான இப்படம் இதுவரை மொத்தமாக ரூ. 21 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் படம் 6 நாள் முடிவில் ரூ. 10 கோடி தான் வசூலித்துள்ளதாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af12e3cd-03ec-4325-bb76-1100486742e9/26-6aaa4f3dbd907.webp' /></p>]]></content>
            <updated>2026-09-16T09:00:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு மீண்டும் சிறை! சற்று முன்னர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-to-appear-in-court-today-1789524245"></link>
            <id>https://tamilwin.com/article/namal-to-appear-in-court-today-1789524245</id>
            <summary type="text">புதிய இணைப்புஎதிர்வரும் 23ஆம் திகதி வரை நாமல் ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.மூன்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>எதிர்வரும் 23ஆம் திகதி வரை நாமல் ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.</p><h2>மூன்றாம் இணைப்பு</h2><p>சர்ச்சைக்குரிய எயார்பஸ் விமான கொள்முதல் வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்றுமுன்னர் சிறை அதிகாரிகளால் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.</p><p>குறித்த வழக்கு இன்று (16) கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/dKwGvNWM_k4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>இரண்டாம் இணைப்பு</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சஇன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், நீதிமன்ற வளாகத்தை சுற்றி பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.</p><p>சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.</p><p>நீதிமன்ற வளாகத்துக்கு அருகாமையில் மேலதிக பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
</p><p>
கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேனவினால் கொழும்பு காவல் சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு வழங்கப்பட்ட உத்தரவின்படி முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.</p><h2>சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல்&nbsp;</h2><p>
</p><p>
சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்த பின்னர் (04) திகதி கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/054778a2-ae82-4d7a-afef-871a00c2411c/26-6aaa09826bcb0.webp' /></p><p>இதனையடுத்து எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p>

இந்நிலையில், 2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் ரக வானூர்திகளைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு மற்றும் நிதித்தூய்தாக்கல் விவகாரம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்தேகநபராகப் பெயரிடுமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு (CID) அறிவுறுத்தியுள்ளார்.</p><h2>நீதிமன்றத்திற்கு அறிக்கை </h2><p>

இதற்கமைய, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை இது தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.</p><p>

இதற்கமைய, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை இன்று 16ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T09:00:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச எல்லையில் இந்திய கப்பலுடன் பாகிஸ்தான் போர் கப்பல் மோதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-summons-pak-ship-collides-with-indian-navy-1789548296"></link>
            <id>https://news.lankasri.com/article/india-summons-pak-ship-collides-with-indian-navy-1789548296</id>
            <summary type="text">india summons pakistan envoy for pakistan ship collides with indian navy ship: சர்வதேச எல்லையில் இந்திய போர் கப்பலுடன் பாகிஸ்தான் போர் கப்பல் மோதலில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>india summons pakistan envoy for pakistan ship collides with indian navy ship: சர்வதேச எல்லையில் இந்திய போர் கப்பலுடன் பாகிஸ்தான் போர் கப்பல் மோதலில் ஈடுபட்ட சம்பவத்திற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. </p><h3>

இந்திய கப்பல் மீது மோதிய பாகிஸ்தான் போர் கப்பல்</h3><p>

நேற்று மாலை வடக்கு அரபிக்கடலில் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையின் முன்னணிப் போர்க்கப்பல் ஒன்றின் மீது பாகிஸ்தான் கடற்படை கப்பல் ஒன்று மோதலில் ஈடுபட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dd492f0-d455-42cf-bd9a-d5d3b3dc99c2/26-6aaa570a14d69.webp' /></p><p>

சர்வதேச கடல் எல்லையில் நடந்த இந்த மோதல் சம்பவத்தில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றாலும், பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. </p><p>

பாகிஸ்தான் தூதர் சாத் அகமது வர்ரைச் டெல்லியில் உள்ள இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு அழைத்து, பாகிஸ்தான் கடற்படைப் பிரிவுகளின் "ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் தொழில்முறையற்ற நடத்தை" காரணமாக இந்த மோதல் ஏற்பட்டதாகக் கூறி இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p> 

இராணுவப் பயிற்சிகள், இராணுவ அணிவகுப்புகள் மற்றும் படை நகர்வுகள் குறித்த முன் அறிவிப்பு வழங்குவது தொடர்பான, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான 1991 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் 10வது பிரிவை பாகிஸ்தானிய கடற்படை கப்பலின் செயல்பாடு நேரடியாக மீறியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. </p><p> 

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் பொருட்டு, அனைத்து இராணுவப் பிரிவுகளும் உரிய கவனத்துடன் செயல்படவும், இரு தரப்புக்கும் இடையிலான தொடர்புடைய ஒப்பந்தங்களின் விதிகளை மதிக்கவும் வேண்டியதன் அவசியத்தை சம்பந்தப்பட்ட பாகிஸ்தான் அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறு பாகிஸ்தானின் தூதருக்கு அறிவுறுத்தப்பட்டது. </p><p>

மேலும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திடம் இதேபோன்ற ஒரு கண்டனத்தைப் பதிவு செய்யுமாறு, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகப் பொறுப்பாளருக்கும் வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
</p><p>
இந்த சம்பவத்தை மோதல் என வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டாலும், இந்திய கப்பலைகளை நோக்கி அதிவேகமாக பாதுகாப்பற்ற முறையில் பாகிஸ்தான் கடற்படை கப்பல் நெருங்கி வந்ததாகவே தகவல் வெளியாகியுள்ளது. </p><p>

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கைக்குப் பிறகு, இந்திய மற்றும் பாகிஸ்தான் இராணுவச் சொத்துக்களுக்கு இடையே நடந்த முதல் மோதல் இதுவாகும்.</p>]]></content>
            <updated>2026-09-16T08:48:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலச்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள்! பெரும் ஆபத்தில் 30,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nbro-warns-of-new-risk-landslide-1789544826"></link>
            <id>https://tamilwin.com/article/nbro-warns-of-new-risk-landslide-1789544826</id>
            <summary type="text">‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட சில இடங்களில் நிலச்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட சில இடங்களில் நிலச்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.</p><p>இதன் சிரேஷ்ட விஞ்ஞானி கலாநிதி வசந்த சேனாதீர இன்று (16) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ,இதனை தெரிவித்துள்ளார்.</p><p>கடந்த சில நாட்களாக நிலவிய மழையுடனான வானிலை காரணமாகவே சில இடங்களில் இவ்வாறான ஆபத்து அறிகுறிகள் தென்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.</p><h2>பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும்</h2><p>எதிர்வரும் நாட்களில் எதிர்பார்க்கப்படுவதுடன், நிலச்சரிவு அபாயம் காரணமாக தற்போது 30,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அதிக அபாயகரமான நிலையில் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8293b79b-2e78-4fda-b4a3-5196768597ad/26-6aaa57513a636.webp' /></p><p>எனவே நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், கூடிய விரைவில் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் என்றும்அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>மேலும், நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களைப் பார்வையிடுவதற்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும்அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>&nbsp;'டித்வா' சம்பவத்துடன் மேலும் 16,793 குடும்பங்கள் அதிக அபாய நிலையில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 30,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அதிக அபாய நிலையில் உள்ளன.</p><p>எனவே வெளியிடப்படும் அனைத்து அறிவிப்புகளையும் கவனத்தில் கொள்ளுமாறும், சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலிப் பிரசாரங்களை நம்ப வேண்டாம் என்றும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T08:46:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடைக்கப்பட்ட ரூமேஷின் ஈட்டிகள்: துருக்கி ஏர்லைன்ஸ் வருத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/turkish-airlines-has-expressed-regret-1789546310"></link>
            <id>https://ibctamil.com/article/turkish-airlines-has-expressed-regret-1789546310</id>
            <summary type="text">World Athletics Ultimate Championship போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்த உலக சாம்பியன் ருமேஷ் தரங்கவின...</summary>
            <content type="html"><![CDATA[<p>World Athletics Ultimate Championship போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்த உலக சாம்பியன் ருமேஷ் தரங்கவின்&nbsp;விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் Turkish Airlines நிறுவனத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>குறித்த விசாரணை தொடர்பான கலந்துரையாடல் நேற்று (15.09.2026) சிவில் விமான சேவைகள் அதிகார சபை வளாகத்தில் நடைபெற்றது.</p><p>இதில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடிதுவக்கு தலைமையில் உள்ளிட்ட பல துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.&nbsp;</p><p></p><h2>Turkish Airlines நிறுவனம்</h2><p>
இதன்போது, ருமேஷ் தரங்கவின் விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் Turkish Airlines நிறுவனத்தின் பிரதிநிதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12ba22dd-78ee-43b3-80a4-c3c93f1af088/26-6aaa5711e12eb.webp' /></p><p>மேலும், சம்பவம் தொடர்பில் நிறுவன ரீதியான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றர்.</p><p>இந்த நிலையில் விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தை உரிய முறையில் மதிப்பீடு செய்து, அதற்கான இழப்பீட்டை விரைவாக வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T08:45:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பாவில் ஆக்கிரமிப்பு ; டென்மார்க் உலங்கு வானூர்தி மீது ரஷ்ய தாக்குதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russian-attack-on-danish-army-helicopter-1789538033"></link>
            <id>https://canadamirror.com/article/russian-attack-on-danish-army-helicopter-1789538033</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;டென்மார்க் இராணுவ உலங்கு வானூர்தி ஒன்றை நோக்கி ரஷ்ய போர்க்கப்பல் ஒன்று இரண்டு தீப்பொறிக் கீற்றுகளை வீசியதாகவும், அவற்றில் ஒன்று அந்த விமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;டென்மார்க் இராணுவ உலங்கு வானூர்தி ஒன்றை நோக்கி ரஷ்ய போர்க்கப்பல் ஒன்று இரண்டு தீப்பொறிக் கீற்றுகளை வீசியதாகவும், அவற்றில் ஒன்று அந்த விமானத்திற்கு மிக அருகில் கடந்து சென்றதாகவும் டென்மார்க்கின் ஆயுதப் படைகள் செவ்வாய்க்கிழமை (15) தெரிவித்தன.
</p><p>
உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போரின்போது ​​நேட்டோவின் கிழக்கு எல்லையில் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ள சூழலில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/363f66c0-fe3e-474c-b1c0-29feec1adc7a/26-6aaa2ef2d6abc.webp' /></p><h2>ஐரோப்பாவில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புத் தன்மை</h2><p>
</p><p>

ஐரோப்பாவில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புத் தன்மை அதிகரித்து வரும் ஒரு பரந்த போக்கின் ஒரு பகுதியாகவே இந்தச் சம்பவம் அமைந்துள்ளது என்று டேனிஷ் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் கூறினார் .
</p><p>
ரஷ்யா தனது ஐரோப்பாவிற்கு எதிரான கலப்புப் போரை தீவிரப்படுத்துவதாகவும், நேட்டோவை சோதித்து சவால் விடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
</p><p>
பால்டிக் கடலில் நேற்று வழக்கமான வான்வழிப் பயணத்தின் போது டென்மார்க் இராணுவத்தின் மீது ரஷ்யா மேற்கொண்ட பொறுப்பற்ற நடவடிக்கை. ரஷ்யாவின் நடவடிக்கைகள் அச்சுறுத்துவதையும் பிளவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டவை.</p><p> 

அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள். நாங்கள் பின்வாங்க மாட்டோம் என்று ஃபிரடெரிக்சன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.</p>]]></content>
            <updated>2026-09-16T08:39:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டைவிட்டு ஓடிய மஹிந்த பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ; சம்பந்தியும் ஓட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shiranthi-rajapaksa-flees-the-country-1789534301"></link>
            <id>https://jvpnews.com/article/shiranthi-rajapaksa-flees-the-country-1789534301</id>
            <summary type="text">&amp;nbsp; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
</p><p>

ஷிரந்தி ராஜபக்ஷவுடன் ரோஹித ராஜபக்ஷவின் மாமியாரான ஏன் டி லிவேராவும் புறப்பட்டுச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70ff3201-30f0-4bb3-80d2-527b725430ff/26-6aaa205edf994.webp' /></p><p>
</p><p>

இவர்கள் இன்று அதிகாலை 1.10 மணிக்கு சிங்கப்பூர் எயார்லைன்ஸ் சேவைக்குச் சொந்தமான SQ-469 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>

அதேவேளை முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ வரும் செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகவுள்ள நிலையில் நாட்டைவிட்டு வேளியேரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T08:37:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ ; 10 நாட்களில் நாடு முழுவதும் கொட்டப்போகும் மழை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/el-ni-o-rain-rainfall-across-srilanka-in-10-days-1789546591"></link>
            <id>https://jvpnews.com/article/el-ni-o-rain-rainfall-across-srilanka-in-10-days-1789546591</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இன்னும் 10 நாட்களில் நாடு முழுவதும் பரவலான மழையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இன்று (16) நடைபெற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இன்னும் 10 நாட்களில் நாடு முழுவதும் பரவலான மழையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
 

இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன இதனைத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba07ac88-fc93-4f3e-8376-00a1f3a44d18/26-6aaa5060a6c10.webp' /></p><p>
</p><p>
 

தற்போது எல் நினோ (El Niño) நிலைமையை எதிர்கொள்வதற்கு அனைத்தும் தயார்படுத்தப்பட்டுள்ள போதிலும், இனிவரும் நாட்களில் பலத்த மழை, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்ற கணிப்பிற்கு அமைய நடவடிக்கைகளை தயார்படுத்த வேண்டும் என அவர் கூறினார்.</p><p></p><h2>மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும்</h2><p>

 

ஒக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும், இதனால் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் ஏற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.</p><p>

ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வங்காள விரிகுடாவில் தொடர்ச்சியாக கலக்க நிலைமைகள் ஏற்படும் காலம் என்பதால், எல் நினோ நிலைமையின் கீழ் இது தீவிரமடையக்கூடும் என்றும் அஜித் விஜேமான்ன கூறினார்.</p><p></p><p>

 

இது குறித்து மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும், டிசம்பர் மாதத்தில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் அதிக மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>

 

அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சாதாரண மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகக் கூறிய அவர், சில வேளைகளில் IOD நிலைமையினால் அப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு கூட ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.</p><p></p><p>
</p><p>
 

அடுத்த வருடம் பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெப்பநிலை அதிகரித்து, மழைவீழ்ச்சி குறைவடையும் வானிலை எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T08:36:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-appearance-fort-court-security-tightened-1789534452"></link>
            <id>https://ibctamil.com/article/namal-appearance-fort-court-security-tightened-1789534452</id>
            <summary type="text">புதிய இணைப்புசர்ச்சைக்குரிய எயார்பஸ் (Airbus) விமான கொள்முதல் வழக்கில் சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>சர்ச்சைக்குரிய எயார்பஸ் (Airbus) விமான கொள்முதல் வழக்கில் சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p>நீதிமன்றம் பிறப்பித்த முந்தைய உத்தரவுக்கமைய, சிறைச்சாலை அதிகாரிகள் நாமல் ராஜபக்சவை சற்றுமுன்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.</p><p>இந்தநிலையில் குறித்த வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ae61fa9-31f7-4d9b-a00e-1185dd69ebbc/26-6aaa568057a52.webp' /></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><h5>நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நாமல் : பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு</h5><p>கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
</p><p>தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று (16) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையிலேயே இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
 

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.</p><p></p><h2>கோட்டை நீதவான் நீதிமன்றம்</h2><p>இந்தநிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச&nbsp;கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8914347-9d7c-4b3a-945b-c5bf9b61d736/26-6aaa28e5b7e1c.webp' /></p><p>இதேவேளை சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் ரக வானூர்திகளைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு மற்றும் நிதித்தூய்தாக்கல் விவகாரம் தொடர்பில்,நாமல் ராஜபக்சவை சந்தேகநபராகப் பெயரிடுமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Ud1LZwQnssE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T08:30:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் எரிபொருள் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-inflation-hits-3-1-pct-as-fuel-prices-surge-1789547265"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-inflation-hits-3-1-pct-as-fuel-prices-surge-1789547265</id>
            <summary type="text">UK inflation hits 3.1 Percent as fuel prices surge: பிரித்தானியாவில் எரிபொருள் விலை உயர்வால் பணவீக்கம் 3.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பிரித்தானியாவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK inflation hits 3.1 Percent as fuel prices surge: பிரித்தானியாவில் எரிபொருள் விலை உயர்வால் பணவீக்கம் 3.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.</p><h2>

பிரித்தானியாவில் பணவீக்கம்</h2><p>பிரித்தானியாவில் ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 3.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில் இது 2.9 சதவீதமாக இருந்த நிலையில், எரிபொருள் விலை கிட்டத்தட்ட 23 சதவீதம் அதிகரித்ததால் பணவீக்கம் மீண்டும் உயர்ந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f57b2d84-45d5-4d49-b2ba-73557d79fea8/26-6aaa530364b09.webp' /></p><p>தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.1 பென்ஸ் உயர்ந்து 161.3 பென்ஸ் ஆகியுள்ளது. டீசல் விலை 14.2 பென்ஸ் உயர்ந்து 181.8 பென்ஸ் ஆகியுள்ளது. </p><p>இதனால் பொதுமக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்து, குடும்பங்களும் வணிகங்களும் கடுமையான அழுத்தத்தை சந்தித்து வருகின்றன.

மேலும், விமான கட்டணங்களும் 6.2 சதவீதம் உயர்ந்துள்ளன. </p><p>எரிபொருள் விலை உயர்வு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் பொருட்களின் விலையையும் அதிகரித்துள்ளது.
</p><p></p><h2>போரின் தாக்கம்</h2><p>மத்திய கிழக்கில் நடைபெறும் போரின் தாக்கம் காரணமாக எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 108 டொலருக்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால் உலகளாவிய நிதி சந்தைகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
</p><p>
இங்கிலாந்து வங்கி வட்டி விகிதம் குறித்த முக்கிய முடிவை எடுக்கத் தயாராகி வருகிறது. அதிகரித்து வரும் பணவீக்கம், கடன் வாங்கும் செலவுகள், மற்றும் அரசின் பட்ஜெட் திட்டங்கள் மக்கள் வாழ்வில் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.</p><p>
</p><p></p><p>பிரித்தானியாவின் சேன்சலர் ஜான் ஹீலி, மின்சார கட்டண வரி குறைப்பு, பஸ் கட்டணத்தை 2 பவுண்டாக நிர்ணயம் செய்தல், மற்றும் சமூக இடங்களுக்கு வரி சலுகை அளித்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் குடும்பங்களுக்கு உதவுவதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
பிரித்தானிய பொருளாதாரம் சவால்களை எதிர்கொண்டு கொண்டிருந்தாலும், அரசு வளர்ச்சியை உறுதியாக முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T08:24:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[திரிஷா இடத்தில் நான் இருந்தால் இதை தான் செய்திருப்பேன்- பிரபல நடிகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/famous-80s-actress-about-vijay-trisha-1789525077"></link>
            <id>https://cineulagam.com/article/famous-80s-actress-about-vijay-trisha-1789525077</id>
            <summary type="text">விஜய்- திரிஷாமுதல்வர் விஜய் சமீபத்தில் அஜித் பங்கேற்ற கார் ரேஸ் பார்க்க லண்டன் சென்றார். அங்கு அவர் சென்று அஜித்தை பார்த்து கட்டி தழுவி அன்பை பறிமாறிய...</summary>
            <content type="html"><![CDATA[<h2>விஜய்- திரிஷா</h2><p>முதல்வர் விஜய் சமீபத்தில் அஜித் பங்கேற்ற கார் ரேஸ் பார்க்க லண்டன் சென்றார். அங்கு அவர் சென்று அஜித்தை பார்த்து கட்டி தழுவி அன்பை பறிமாறிய வீடியோக்கள், போட்டோக்கள் என அனைத்தையும் பார்த்து ரசிகர்கள் கொண்டாடி விட்டனர்.</p><p> ஆனால், அதே நிகவுக்கு நடிகை திரிஷாவும் வந்து இருந்தார், அவர் வீடியோவில் வந்தபோது முதல்வர் விஜய் உடனே தன் முகத்தை திருப்பிகொண்டார். </p><p>இந்நிலையில் இதுக்குறித்து நடிகை அம்பிகா பேசுகையில், திரிஷா தன் நண்பருடன் ஒரு இடத்திற்கு சென்றுள்ளார், யார் என்ன சொன்னாலும் தன் நட்பை வெளிகாட்டிகொள்ள அவர் நினைக்கலாம், ஆனால், இன்று விஜய் அவர்கள் இருக்கும் இடமே வேறு, அவர் ஒரு மதிக்கத்தக்க ஒரு இடத்தில் இருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/961abf8e-9b75-47d9-a803-f62df9071909/26-6aa9fc587c12a.webp' /></p><p>இதே நான் அவர் இடத்தில் இருந்தேன் என்றால் என்னால் அவர் பெயருக்கு கலங்கம் வரக்கூடாது, என்னால் அவருக்கு தர்மசங்கடம் வரக்கூடாது என்றே நினைப்பேன், ஒதுங்கி கொள்வேன் என அம்பிகா கூறியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-16T08:20:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்ந்துவரும் எரிபொருள் விலைகள்... ஜேர்மன் சேன்ஸலர் அளித்துள்ள உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/merz-promises-relief-plan-fuel-prices-hit-record-1789546520"></link>
            <id>https://news.lankasri.com/article/merz-promises-relief-plan-fuel-prices-hit-record-1789546520</id>
            <summary type="text">German Chancellor promises relief plan soon as pump prices hit record: ஜேர்மனியில் எரிபொருள் விலைகள் உயர்ந்துவரும் நிலையில், விரைவில் உதவி வருவதாக உறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>German Chancellor promises relief plan soon as pump prices hit record: ஜேர்மனியில் எரிபொருள் விலைகள் உயர்ந்துவரும் நிலையில், விரைவில் உதவி வருவதாக உறுதியளித்துள்ளார் ஜேர்மன் சேன்ஸலர்.
</p><p>

ஜேர்மன் தலைநகர் பெர்லினில், செப்டம்பர் மாதம் காலை நிலவரப்படி, பெட்ரோல் விலை யூரோக்களாகவும் 2.25 டீசல் விலை 2.37 யூரோக்களாகவும் இருந்தது, மதியம் மேலும் அதிகரித்துள்ளது.
</p><h3>
ஜேர்மன் சேன்ஸலர் அளித்துள்ள உறுதி
</h3><p>
இந்நிலையில், எரிபொருள் விலைகள் தொடர்பில் விரைவில் உதவி வருவதாக உறுதியளித்துள்ளார் ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/990ce9cf-3f5d-4943-97ba-95f1be954a6d/26-6aaa501a4e7d7.webp' /></p><p>
பொதுமக்கள் பலர் தங்கள் அன்றாட தேவைகளுக்காக கார்களை பயன்படுத்திவரும் நிலையில், இதற்கு மேல் எரிபொருளுக்கு செலவு செய்யமுடியாது என்னும் ஒரு நிலையை அவர்கள் எட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் மெர்ஸ்.
</p><p>
ஆகவே, மக்களுக்கு உதவும் வகையில் விரைவில் திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட இருப்பதாகத் தெரிவித்துள்ளார் மெர்ஸ்.&nbsp;&nbsp;</p><p></p><p>

அது தொடர்பில் 16 மாகாணங்களுடனும், கூட்டணிக்கட்சிகளுடனும் ஆலோசனைகள் மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார் மெர்ஸ். </p><p>என்றாலும், அது என்ன திட்டம் என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை!&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T08:15:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் 8 மாடி இருதய சிகிச்சை வளாகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/8-storey-cardiac-treatment-complex-in-trinco-1789546379"></link>
            <id>https://tamilwin.com/article/8-storey-cardiac-treatment-complex-in-trinco-1789546379</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் 8 மாடிகளைக் கொண்ட நவீன இருதய
சிகிச்சை வளாகம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு
ஜனாதிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் 8 மாடிகளைக் கொண்ட நவீன இருதய
சிகிச்சை வளாகம் நிர்மாணிக்கப்படவுள்ளது. </p><p>இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பங்கேற்புடன் இன்று (16) நடைபெற்றது.
</p><p>
திருகோணமலை மாவட்ட மக்களுக்கு நவீன மற்றும் தரமான இருதய சிகிச்சை சேவைகளை
மாவட்டத்திலேயே பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்தப் புதிய இருதய சிகிச்சை
வளாகம் நிர்மாணிக்கப்படவுள்ளது.</p><h2>இருதய சிகிச்சை சேவை</h2><p>
</p><p>
சுமார் 2,403 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த 8 மாடிக்
கட்டிடத் தொகுதியில், இருதய நோய்களைக் கண்டறிதல், சிகிச்சையளித்தல் மற்றும்
அவசரகால மருத்துவப் பராமரிப்பு உள்ளிட்ட விரிவான சேவைகளை வழங்குவதற்கான நவீன
வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b7ccc78-4add-4c6f-8041-f758a7dfd2d4/26-6aaa4f8d89b5d.webp' /></p><p>
</p><p>
இதற்கமைய, தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (ICU), கெத் லேப் (Cath Lab),
ஆய்வகங்கள், எக்ஸ்-ரே சேவைகள், நூலகம் மற்றும் கேட்போர் கூடம் உள்ளிட்ட
பல்வேறு வசதிகள் இந்த வளாகத்தில் அமைக்கப்படவுள்ளன.

கிழக்கு மாகாணத்தின் சுகாதார உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், பிராந்திய
மட்டத்தில் இருதய சிகிச்சை மற்றும் அவசர மருத்துவ சேவைகளை விரிவுபடுத்தும்
நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
</p><p>
இதன் மூலம் திருகோணமலை மாவட்டம் மட்டுமன்றி, கிழக்கு மாகாணத்தின் தூரப்
பிரதேசங்களில் வாழும் மக்களும் தமது சொந்தப் பிரதேசத்திற்கு அண்மையிலேயே
உயர்தர இருதய சிகிச்சை சேவைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T08:13:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ருமேஷ் தரங்கவின் சாம்பியன் ஈட்டிகள் சேதம்! விரைவில் இழப்பீடு வழங்க நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/turkish-airlines-promises-action-and-compensation-1789545665"></link>
            <id>https://tamilwin.com/article/turkish-airlines-promises-action-and-compensation-1789545665</id>
            <summary type="text">துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இலங்கை விமானப் போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய கலந்துரையாடலின் பின்னர், உலக சாம்பியன் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இலங்கை விமானப் போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய கலந்துரையாடலின் பின்னர், உலக சாம்பியன் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்கவின் விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பீடு செய்து, அதற்கான இழப்பீட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
உலக தடகளத்தின் Ultimate Championship போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த இலங்கை வீரர் ருமேஷ் தரங்க, நாடு திரும்பியபோது அவரது விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்தமை தொடர்பில் எழுந்த கவலைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதம்</h2><p>
</p><p>
துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் தகவலின்படி, நேற்று (15) சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை வளாகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac13ff06-1d51-4225-bc54-c08595d2bda6/26-6aaa4eedc7835.webp' /></p><p>

துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடித்துவக்கு தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ். மங்கள, சிவில் விமானப் போக்குவரத்து பணிப்பாளர் நாயகம் கெப்டன் தமிந்த ரம்புக்வெல்ல, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற கேணல் ரஞ்சித் ராஜசிங்க மற்றும் துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
</p><p>
இதன்போது, ருமேஷ் தரங்கவின் விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் துருக்கி ஏர்லைன்ஸ் பிரதிநிதிகள் தமது வருத்தத்தைத் தெரிவித்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் நிறுவன ரீதியான விசாரணைகளை முன்னெடுக்கவும் அவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.</p><h2>&nbsp;இழப்பீடு வழங்க நடவடிக்கை</h2><p>
</p><p>
சேதமடைந்த உபகரணங்களுக்கான இழப்பை முறையாக மதிப்பீடு செய்து, வீரருக்கு ஏற்பட்ட இழப்புக்கு விரைவாக இழப்பீடு வழங்குவதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1d80700-a170-4568-ac83-128c5745ffcb/26-6aaa4eee81710.webp' /></p><p>
</p><p>உலகின் முன்னணி ஈட்டி எறிதல் வீரராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும், சர்வதேச போட்டிகளில் வெற்றிகளைப் பெறவும் ருமேஷ் தரங்க பயன்படுத்திய ஈட்டிகள் சிலவும் போக்குவரத்தின்போது சேதமடைந்தமை தெரியவந்ததைத் தொடர்ந்து இந்த சம்பவம் சர்வதேச கவனத்தை ஈர்த்தது.

பல சர்வதேச பட்டங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பின்னர் அவர் அண்மையில் இலங்கை திரும்பியிருந்தார். </p><p>அவரது இந்த வெற்றிகள் எதிர்வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள், உலக தடகளப் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையின் வெற்றி வாய்ப்புகள் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T08:10:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல பிரதேசங்களுக்கு மின்னல் எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lightning-warning-for-several-regions-srilanka-1789546107"></link>
            <id>https://jvpnews.com/article/lightning-warning-for-several-regions-srilanka-1789546107</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதால், வளிமண்டல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதால், வளிமண்டலவியல் திணைக்களம் 'அம்பர்' எச்சரிக்கையை விடுத்துள்ளது.
</p><p>


இன்று (16) காலை 10.30 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, இரவு 11.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd2b1e26-5bcd-48ea-8633-c1fe048e3440/26-6aaa4e7d10f8c.webp' /></p><p>



இதன்படி, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல இடங்களில் கடும் மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
</p><p>


இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>


மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-16T08:05:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் சச்சின் மகள் சாரா டெண்டுல்கர்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/sara-tendulkar-for-ambani-s-ganpati-celebration-1789545852"></link>
            <id>https://viduppu.com/article/sara-tendulkar-for-ambani-s-ganpati-celebration-1789545852</id>
            <summary type="text">மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் - சான்யா திருமணம் கடந்த மார்ச் 5 ஆம்தேதி பிரமாண்டமான முறையில் மும்பையில் நடந்து முடிந்தது.சாரா டெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் - சான்யா திருமணம் கடந்த மார்ச் 5 ஆம்தேதி பிரமாண்டமான முறையில் மும்பையில் நடந்து முடிந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06e202f1-07e1-4957-8f8b-a3808303659c/26-6aaa4d8236913.webp' /></p><h2>சாரா டெண்டுல்கர்</h2><p> </p><p>திருமணத்தில் மணமக்களைவிட அதிகமாக கவனத்தை ஈர்த்தவர்தான் சச்சினின் மகள் சாரா டெண்டுல்கர்.

தனது திறமையால் பல தொழில்களை ஆரம்பித்து வருமானம் ஈட்டி வருகிறார் சாரா.</p><p> சமீபத்தில் நடந்த அம்பானி இல்ல விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிக்கு சச்சின் தன் குடும்பத்துடன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் வியக்க வைக்கும் அளவில் சேலையில் சென்றுள்ளார் சாரா. பாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அழகில் அவரது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வியந்து வருகிறார்கள்.</p>]]></content>
            <updated>2026-09-16T08:04:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹாரி ப்ரூக் சாதனை சதம்; இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்த இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/harry-brook-record-ton-england-beat-sri-lanka-1789545715"></link>
            <id>https://news.lankasri.com/article/harry-brook-record-ton-england-beat-sri-lanka-1789545715</id>
            <summary type="text">harry brook record ton leads england beat srilanka by 119 runs: ஹாரி ப்ரூக் சாதனை சதத்தில் முதல் T20 போட்டியில் இலங்கை அணி இங்கிலாந்திடம் படுதோல்வியடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>harry brook record ton leads england beat srilanka by 119 runs: ஹாரி ப்ரூக் சாதனை சதத்தில் முதல் T20 போட்டியில் இலங்கை அணி இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்துள்ளது. </p><h3>

இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்த இலங்கை</h3><p>
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 T20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0807f44b-2fed-4ed9-a217-7d81988ba032/26-6aaa4cf61c181.webp' /></p><p>

நேற்று சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற முதல் T20 போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. </p><p>

இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 254 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e50c26a0-c6cd-42d3-ba4c-24af2fe0915f/26-6aaa4cf4a7b9c.webp' /></p><p>

அதிகபட்சமாக இங்கிலாந்து அணி தலைவர் ஹாரி ப்ரூக் அதிரடியாக ஆடி 49 பந்துகளில் 10 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் உட்பட 114 ஓட்டங்கள் குவித்தார்.</p><p> 

தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் 44 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 80 ஓட்டங்கள் குவித்தார்.&nbsp;</p><p></p><p>

இதனையடுத்து, 255 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 19 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 135 ஓட்டங்கள் மட்டுமே குவித்து ஆல் அவுட் ஆனது.</p><p> 

இதன் மூலம், 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. </p><h3> 

ஹாரி ப்ரூக் சாதனை</h3><p>

இங்கிலாந்து அணிக்காக சர்வதேச T20 போட்டிகளில் புரூக் அடித்த இரண்டாவது சதம் இதுவாகும். </p><p>

இதன் மூலம், சர்வதேச T20 போட்டிகளில், ஒரே ஆண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட சதமடித்த டெஸ்ட் விளையாடும் அணியை சேர்ந்த முதல் அணித்தலைவர் என்ற பெருமையை ஹாரி ப்ரூக் பெற்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c97c996d-2e84-4ec1-8d94-9bc8e84db5fa/26-6aaa4cf55ec64.webp' /></p><p>

முன்னதாக ஈஸ்வதினியின் அடில் பட் மற்றும் சுவிட்சர்லாந்தின் ஃபஹீம் நசீர் ஆகிய 2 அணித்தலைவர்கள் மட்டுமே ஒரு வருடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சர்வதேச T20சதங்களை அடித்திருந்தனர். </p><p>

இதே போல், சர்வதேச T20 சதங்கள் அடித்த டெஸ்ட் விளையாடும் அணித்தலைவர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அசாம் மற்றும் மற்றும் இந்தியாவின் ரோஹித் ஷர்மாவிற்கு அடித்ததாக புரூக் இணைந்துள்ளார். பாபர் அசாம் மற்றும் ரோஹித் ஷர்மா தலா 3 சதங்கள் அடித்துள்ளனர்.</p><p>

மேலும், இது இலங்கைக்கு எதிராக அடிக்கப்பட்ட இரண்டாவது அதிவேக T20 சதம் ஆகும். முன்னதாக 2017 ஆம் ஆண்டில் இந்தூரில் ரோஹித் சர்மா 35 பந்துகளில் அடித்த சதமடித்து முதலிடத்தில் உள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T08:03:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மும்பை: ரூபாய் 5000 கோடி சொத்து இருந்தாலும் தெருவில் பிச்சை எடுத்த எம்.எல்.ஏ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/why-bjp-mla-parag-shah-turns-begger-for-3-hours-1789544449"></link>
            <id>https://ibctamilnadu.com/article/why-bjp-mla-parag-shah-turns-begger-for-3-hours-1789544449</id>
            <summary type="text">மும்பையில் 5000 கோடி அதிகமாக மதிப்பு கொண்ட கோடீஸ்வர பாஜக எம்எல்ஏ ஒருவர் திடீரென ஒரு கிழிந்த ஆடைகளுடன் தெருவில் இறங்கி பிச்சை எடுத்த அந்த விசித்திரமான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மும்பையில் 5000 கோடி அதிகமாக மதிப்பு கொண்ட கோடீஸ்வர பாஜக எம்எல்ஏ ஒருவர் திடீரென ஒரு கிழிந்த ஆடைகளுடன் தெருவில் இறங்கி பிச்சை எடுத்த அந்த விசித்திரமான நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
</p><p>
 மராட்டிய மாநிலத்தின் மிக முக்கிய கோடீஸ்வர அரசியல்வாதிகளில் ஒருவரான பராக் ஷா இவர் மும்பை காட்கோபர் கிழக்கு தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருக்கிறார். தொழிலதிபரான இவருக்கு பல ஆயிரம் கோடிகள் மதிப்பிலான சொத்துக்கள் இருக்கிறது. </p><p>இவ்வளவு ஆடம்பர வசதிகள் இருந்தாலும் அவர் ஏன் பிச்சைக்காரராக மாறினார் என்கின்ற கேள்வி எல்லோருக்கும் எழுந்திருக்கிறது. ஜெயின் சமூகத்தை சேர்ந்த இவர் தங்களுடைய புனித கால வழிபாட்டின் பொழுது தன்னுடைய ஆன்மீக குருவான நம்ரமுனி மகாராஜாவை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றிருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b8b3aac-3624-4159-b618-7a7e80bdb7f6/26-6aaa480342971.webp' /></p><p> அப்போது அவரது குரு வாழ்க்கையில் எதார்த்தமான நிலையையும், ஏழை மக்களுடைய கஷ்டங்களையும், மனிதர்களுடைய உண்மையான முகங்களையும் நேரில் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திருக்கிறார்.</p><p>

 அவ்வாறு குருவினுடைய கட்டளையின் படி தன் வசம் இருந்த சொகுசு கார்கள் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் விலை உயர்ந்த ஆடைகள் என எல்லாவற்றையும் ஒரு நாள் முழுவதும் துறந்து வாழ எண்ணினார்.</p><p></p><p>இதை அடுத்து மக்கள் யாரும் அவரை அறிந்து கொள்ள முடியாத அளவு முகத்தில் அழுக்குகளை பூசிக்கொண்டு கிழிந்த ஆடைகளை அணிந்தபடி பராக் ஷா மும்பை காட் கோபர் வீதிகளில் பிச்சைக்காரராக வலம் வருகிறார். வீதியோரம் அமர்ந்து கையேந்தி யாசகம் பெறுகிறார். சொந்த செக்யூரிட்டியே விரட்டி இருக்கிறார். </p><p>இந்த ஒரு நாள் பிச்சைக்கார வாழ்க்கையில் அவருக்கு பல வகையான அதிர்ச்சிகரமான அனுபவங்கள் கிடைத்திருக்கிறது. இது குறித்து அவர் கூறுவது, தான் ஒரு பிச்சைக்காரர் வேடம் அணிந்து தன்னுடைய சொந்த அலுவலக குடியிருப்பு வளாகத்திற்குள் செல்கின்ற பொழுது அங்கு வேலை பார்க்கக் கூடிய அவரது சொந்த செக்யூரிட்டியே என்னை அடையாளம் தெரியாமல் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார் என்கிறார்.</p><p>ஆனால், எப்போதும் உதவி செய்யக்கூடிய நெருங்கிய நண்பர் ஒருவரிடம் கையேந்தி நின்று இருக்கிறார். ஆனால், அவரும் அடையாளம் தெரியாமல் விரட்டி இருக்கிறார். ஆனால், அதே நேரத்தில் மும்பை வீதியில் சில இளைஞர்கள் அவருடைய நிலையை கண்டு பரிதாபம் அடைந்து உணவும், இருபது ரூபாய் பணமும் கொடுத்து இருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cca96eb2-ed44-484b-ad5c-ff452daba9c9/26-6aaa4803f1f86.webp' /></p><p> அங்கு இருக்க கூடிய சமோசா வியாபாரி எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் அவருக்கு இலவசமாக சமோசா கொடுத்து உபசரித்து இருக்கிறார். பணம் பதவி புகழ் எல்லாம் மனிதர் வாழ்க்கையில் அகங்காரத்தை உண்டாக்கி விடுகிறது.</p><p> இந்த பிச்சைக்காரர் அனுபவம் அவருக்கு அகங்காரத்தை அழித்து விட்டதாகவும் இவர் பதவியில் இருக்கின்ற பொழுது பல மணி நேரம் காத்திருந்தவர்கள் இவருடைய தகுதியை இழந்து ஏழையாக நின்றபொழுது அவர்களை விட உயர்ந்தவர்களாக நினைத்து விரட்டி இருக்கிறார்கள்.</p><p></p><p> </p><p>அவர் இறுதியாக கூறுவது, இந்த சமோசா வியாபாரி போன்ற எளிய மனிதர்களிடம் தான் உண்மையான அன்பு இருக்கிறது என்றும், இந்த சமூகம் மனிதர்களை மதிப்பதே இல்லை என்றும், ஒருவரிடம் இருக்கக்கூடிய பணம் மற்றும் பதிவியை மட்டும் தான் வைத்து அவர்களை மதிக்கிறார் என்றும், அவருடைய அந்த பிச்சைக்காரர் வாழ்க்கை அவருக்கு புரிய வைத்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். </p><p>கோடீஸ்வரர் எம்எல்ஏ ஒருவர் இவ்வாறு பிச்சைக்காரராக மாறி வலம் வந்த இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீயாகப் பரவி பொதுமக்கள் இடையே பெரும் மகிழ்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T08:00:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் தீப்பற்றி எரிந்த வாகனத்திற்குள் சடலம் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/victoria-police-investigating-after-body-found-1789544619"></link>
            <id>https://canadamirror.com/article/victoria-police-investigating-after-body-found-1789544619</id>
            <summary type="text">கனடாவின் விக்டோரியா நகரில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாகனம் தீப்பற்றிய சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புலனாய்வு அதிகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் விக்டோரியா நகரில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாகனம் தீப்பற்றிய சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>காலை 7 மணியளவில் விக்டோரியா பொலிஸ் திணைக்கள அதிகாரி ஒருவர் பணிக்குச் சென்று கொண்டிருந்தபோதே, குயின்ஸ் அவென்யூவின் 700 ஆவது பகுதியில் வாகனம் ஒன்று தீப்பற்றி எரிவதைக் கண்டுள்ளார். </p><p>
உடனடியாக அவர் 911 என்ற அவசர இலக்கத்திற்கு அழைப்பு விடுத்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் சில நிமிடங்களில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32e6979f-0cd7-40a7-908d-d0796e14aabd/26-6aaa48ad1fff7.webp' /></p><p> </p><p>எனினும், அந்த வாகனத்திற்குள் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். 
பாதிக்கப்பட்டவர் குறித்தோ அல்லது தீப்பற்றிய வாகனம் குறித்தோ மேலதிக விவரங்கள் எதையும் பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.</p><p>
விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால், விசாரணையின் நேர்மையைப் பாதுகாக்கும் பொருட்டு தற்போது மேலதிக விவரங்களை வெளியிட முடியாது பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>சம்பவம் தொடர்பில் அதிகாலை 3 மணி முதல் காலை 7 மணி வரையான காலப்பகுதியில், டக்ளஸ் அல்லது பிளான்ஷார்ட் வீதிகள் வழியாகச் சென்ற வாகனங்களின் கேமரா பதிவுகள் அல்லது தகவல்கள் வைத்திருப்போர் உடனடியாக புலனாய்வாளர்களைத் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p> 
இச்சம்பவத்தைத் தொடர்ந்து புலனாய்வாளர்கள் சோதனைகளை மேற்கொண்டதால், அப்பகுதியில் பல மணிநேரம் போக்குவரத்து முழுமையாகத் தடைப்பட்டிருந்தது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T07:59:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த மின்னல் குறித்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/warning-regarding-severe-lightning-1789544573"></link>
            <id>https://ibctamil.com/article/warning-regarding-severe-lightning-1789544573</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, ஊவா, கிழக்கு, மத்திய மற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
இதன்படி, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
</p><p>
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் குறித்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பலத்த மின்னலு்ககான எச்சரிக்கை</h2><p>

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/942826b7-5733-444d-934b-5ffe35cfed96/26-6aaa4c3a1172b.webp' /></p><p>

இன்று (16.09.2026) முற்பகல் 10.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T07:59:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கு நீதிமன்றத்தில் வழக்கு இல்லையா: விமல் வீரவன்ச கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vasantha-samarasinghe-mp-court-case-wimal-1789544254"></link>
            <id>https://tamilwin.com/article/vasantha-samarasinghe-mp-court-case-wimal-1789544254</id>
            <summary type="text">எதிர்த்தரப்பில் உள்ளவர்கள் எல்லோரும் நீதிமன்ற வழக்குகளில் பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் என்றால் அமைச்சர் வசந்த சமரசிங்கவின் நிலை என்ன என்று விமல் வீர...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்த்தரப்பில் உள்ளவர்கள் எல்லோரும் நீதிமன்ற வழக்குகளில் பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் என்றால் அமைச்சர் வசந்த சமரசிங்கவின் நிலை என்ன என்று விமல் வீரவன்ச கேள்வியெழுப்பியுள்ளார்.
</p><p>
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இந்தக் கேள்வியொன்றை முன்வைத்துள்ளார்.</p><p>

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் என்று அரசாங்கம் குற்றம் சாட்டுகின்றது.</p><h2>விசாரணை&nbsp;</h2><p>
</p><p>
அரசாங்கத்தின் பேரணி ஒன்றில் ஜனாதிபதிக்கு பின்னால் அமைச்சர் வசந்த சமரசிங்க நின்றார். அவ்வாறெனில் அமைச்சர் வசந்த சமரசிங்க பிணையில் இருப்பவரா அல்லது சந்தேகத்திற்குரியவரா என்ற கேள்வி எழுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9601749-fd36-4007-af79-16131d1262f2/26-6aaa496d7502b.webp' /></p><p>
</p><p>
தங்களுக்கு சவால் விடுக்கக்கூடியவர்களைப் பல்வேறு சம்பவங்களில் சிக்கவைத்து சிறையிலடைக்க தற்போதைய அரசாங்கம் முயற்சிக்கின்றது.
</p><p>
மேலும், தற்போதைய அரசாங்கத்தின் 'கிரிப்டோகரன்சி சொத்துக்கள்' மற்றும் 'மூன்று மாடி வீடுகள்' குறித்து, அடுத்து ஆட்சிக்கு வரும் அரசாங்கமே விசாரணை நடத்த வேண்டியிருக்கும் என்றும் விமல் வீரவன்ச தொடர்ந்தும் குறிப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T07:51:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவரின் சிறிய தவறால் லொட்டரியில் ரூ.4.5 கோடி வென்ற பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/michigan-couple-wins-136000-dollar-lottery-mistake-1789542874"></link>
            <id>https://news.lankasri.com/article/michigan-couple-wins-136000-dollar-lottery-mistake-1789542874</id>
            <summary type="text">Michigan couple wins 136000 dollars lottery mistake: கணவரின் சிறிய தவறால் தம்பதிக்கு லொட்டரியில் ரூ.4.5 கோடி பரிசு கிடைத்தது.

தம்பதிக்கு&amp;nbsp;அதிர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Michigan couple wins 136000 dollars lottery mistake: கணவரின் சிறிய தவறால் தம்பதிக்கு லொட்டரியில் ரூ.4.5 கோடி பரிசு கிடைத்தது.</p><h2>

தம்பதிக்கு&nbsp;அதிர்ஷ்டம் </h2><p>அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் வாழும் ஒரு தம்பதிக்கு, ஒரு சிறிய தவறால் பெரிய அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது.
</p><p>
78 வயதான வாஷ்டெனாவ் கவுண்டி பெண், தனது கணவருடன் ஒரு உணவகத்தில் Club Keno லொட்டரி விளையாடியபோது, எதிர்பாராத சம்பவம் நடந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b0aaab5-4c17-4f8e-b658-ffd4ee8b8628/26-6aaa41dbd2852.webp' /></p><p>
</p><h2>
தவறுதலாக...</h2><p>அவர்கள் இருவரும் தனித்தனியாக டிக்கெட் வாங்கியிருந்தனர். பின்னர் மற்றொரு பார் சென்றபோது, கணவர் தவறுதலாக தனது டிக்கெட்டுக்கு பதிலாக மனைவியின் டிக்கெட்டை மீண்டும் replay செய்தார்.

அந்த டிக்கெட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 07-16-19-23-25-46-55-68-74 என்ற எண்கள், Club Keno-வின் 20 எண்களில் 9 எண்களுடன் பொருந்தின.
</p><p>
இதன் மூலம் அவர்கள் 136,660 டொலர் (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.4.52 கோடி) பரிசை வென்றனர்.
</p><p></p><p>“இது முற்றிலும் எதிர்பாராத ஒன்று. இந்த பணம் எங்களுக்கு இருக்கும் நெருக்கடியை தளர்த்தி சுவாசிக்க உதவும்,” என்று அந்த பெண் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.</p><p>

தம்பதியினர், இந்த வெற்றிப் பணத்தின் ஒரு பகுதியை தங்கள் பேரக்குழந்தைகளின் கல்லூரி கல்விக்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
</p><p>
இந்த சம்பவம், லொட்டரி விளையாட்டில் ஒரு தவறான நடவடிக்கையும் வாழ்க்கையை மாற்றக்கூடிய அதிர்ஷ்டத்தை தரலாம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T07:50:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[6 நாட்களில் தமிழகத்தில் பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடும் நடிகர் சூரியின் மண்டாடி... வசூல் விவரம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actor-soori-mandaadi-movie-tamilnadu-box-office-1789535861"></link>
            <id>https://cineulagam.com/article/actor-soori-mandaadi-movie-tamilnadu-box-office-1789535861</id>
            <summary type="text">மண்டாடிஅறிமுக இயக்குனர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் கடந்த செப்டம்பர் 10ம் தேதி வெளியான திரைப்படம் மண்டாடி. சூரியுடன், மஹிமா நம்பியார...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மண்டாடி</h2><p>அறிமுக இயக்குனர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் கடந்த செப்டம்பர் 10ம் தேதி வெளியான திரைப்படம் மண்டாடி. </p><p>சூரியுடன், மஹிமா நம்பியார், சத்யராஜ், சுஹாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க ஆர்எஸ் இன்போடெயின்மென்ட் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.</p><p>
படகு போட்டியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் நடிக்க சூரிக்கு ரூ. 20 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது, அதேபோல் நாயகியாக நடித்த மஹிமா நம்பியாருக்கு ரூ. 1 கோடி சம்பளம் என்றும் தகவல்கள் வருகின்றன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30ca2efc-5281-4b5b-8a19-df57e02a669e/26-6aaa43f037d93.webp' /></p><h2>பாக்ஸ் ஆபிஸ்</h2><p>
இப்படம் வெளியாகி 6 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 65 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/160021ff-4d05-4fe6-800c-b0b615490552/26-6aaa4300add4d.webp' /></p><p> </p><p>தமிழகத்தில் மட்டுமே இப்படம் இதுவரை ரூ. 42 கோடிகளுக்கு மேல் வசூல் வேட்டை செய்து சூப்பர் ஹிட்டான படமாகியுள்ளது.</p><p> நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து வரும் நிலையில் விரைவில் படம் ரூ. 100 கோடிக்கு மேலான வசூல் வேட்டை செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/OjEDDh_zehU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-16T07:40:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/value-of-the-rupee-against-the-dollar-1789542164"></link>
            <id>https://ibctamil.com/article/value-of-the-rupee-against-the-dollar-1789542164</id>
            <summary type="text">செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (16.09.2026) இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (16.09.2026) இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
</p><p>
இதன்படி, சில வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336 ரூபாயைத் தாண்டியுள்ளது.</p><p>

சேலான் வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 325.15 ரூபாயிலிருந்து 325.75 ரூபாயாகவும், விற்பனை விலை 334.40 ரூபாயிலிருந்து 335.00 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.</p><p></p><h2>டொலரின் கொள்வனவு</h2><p>
</p><p>
NDB வங்கியில் கொள்வனவு விலை 325.00 ரூபாயிலிருந்து 327.50 ரூபாயாகவும், விற்பனை விலை 334.00 ரூபாயிலிருந்து 336.50 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/339d94be-3598-49b3-ba3c-bbe0140af9b6/26-6aaa43abc12a2.webp' /></p><p>
</p><p>
மக்கள் வங்கியில் கொள்வனவு விலை 325.93 ரூபாயிலிருந்து 327.91 ரூபாயாகவும், விற்பனை விலை 334.01 ரூபாயிலிருந்து 336.04 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.</p><p>

கொமர்ஷல் வங்கியில் கொள்வனவு விலை 323.35 ரூபாயிலிருந்து 326.08 ரூபாயாகவும், விற்பனை விலை 333.25 ரூபாயிலிருந்து 336.00 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.</p><p>

சம்பத் வங்கியில் கொள்வனவு விலை 326.00 ரூபாயிலிருந்து 328.00 ரூபாயாகவும், விற்பனை விலை 334.00 ரூபாயிலிருந்து 336.00 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T07:39:40+00:00</updated>
        </entry>
    </feed>
