<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-02T12:51:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாணவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தக் கோரி யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்கள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-university-teachers-protest-1788353141"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-university-teachers-protest-1788353141</id>
            <summary type="text">மாணவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதுடன், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணுமாறு கோர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாணவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதுடன், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணுமாறு கோரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் இன்று புதன்கிழமை அடையாள கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் ஏற்பாட்டில், நாடளாவிய ரீதியில் அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களிலும் மதிய உணவு இடைவேளையின்போது இந்த அடையாளப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.</p><p>

இதன் ஒரு பகுதியாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரும் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.</p><p></p><h2>பல்கலைக்கழக மாணவர்களின் உரிமை</h2><p> இதில் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் பங்கேற்று, தமது கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாதைகள் மற்றும் கோச அட்டைகளை ஏந்தியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f9787ff-cd2a-4e0f-9625-dbdd7ce56ad0/26-6a981a7699821.webp' /></p><p>

பல்கலைக்கழக மாணவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துதல், மாணவர்கள் எதிர்நோக்கும் அடிப்படை வசதிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல், அத்துடன் விரிவுரையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் முன்வைக்கப்பட்டன.
</p><p>
போராட்டத்தில் கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் கலாநிதி விக்னேஸ்வரன், தற்போது பல்கலைக்கழகங்களில் ஐந்து அணிகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்று வரும் நிலையில், மேலும் இரண்டு அணிகளை உள்வாங்குவது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார்.
</p><p>
மாணவர்களுக்கான தங்குமிட வசதிகள், விரிவுரை மண்டபங்கள் மற்றும் ஆய்வுகூடங்கள் உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் போதியளவில் ஏற்படுத்தப்படாத நிலையில், மேலதிக மாணவர்களை இணைத்துக் கொள்வது உயர்கல்வியின் தரத்தைப் பாதிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
எனவே, பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்துவதுடன், மாணவர் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fced8e2-87a6-44ae-a771-e9ceb4157aa0/26-6a981b0c61d5b.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29eb13d8-fbf6-4e3c-93dd-944f8ba16d7e/26-6a981b0d30355.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efb51334-be7d-4d80-82b5-ce67c4ee9672/26-6a981b0de6459.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20d92ee4-5fa4-4761-99be-e1432e041775/26-6a981b0ea93be.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T12:48:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் M.K.சிவாஜிலிங்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/m-k-sivajilingam-in-intensive-care-unit-hospital-1788351460"></link>
            <id>https://jvpnews.com/article/m-k-sivajilingam-in-intensive-care-unit-hospital-1788351460</id>
            <summary type="text">&amp;nbsp;முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், தற்போதைய வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமாகிய கௌரவ M.K.சிவாஜிலிங்கம் இன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், தற்போதைய வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமாகிய கௌரவ M.K.சிவாஜிலிங்கம் இன்று அதிதீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
கடந்தவாரம் முதல் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிதீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa3aa8a1-f383-4f88-9ad9-401a7a4fa734/26-6a9813e59fc57.webp' /></p><p>

M.K.சிவாஜிலிங்கம் கடந்த 11.06.2026 வியாழக்கிழமை அன்று கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை நடைபெற்று அவருக்கான சிகிச்சைகளைத் தொடர்ந்து கொழும்பில் தங்கியிருந்து சிகிச்சை மேற்கொண்டிருந்தார்.</p><p>

இந்த நிலையில் அவர் அதிதீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-09-02T12:43:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அது ரகசியம்... பிரித்தானியா மீதான தாக்குதல் குறித்த கேள்விக்கு புடின் அளித்த பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/putin-says-it-secret-whether-russia-strike-britain-1788353001"></link>
            <id>https://news.lankasri.com/article/putin-says-it-secret-whether-russia-strike-britain-1788353001</id>
            <summary type="text">Putin says, it&#039;s a military secret, whether Russia will strike Britain: ரஷ்யா பிரித்தானியா மீது தாக்குதல் நடத்துமா என்பது ஒரு ராணுவ ரகசியம் என்று கூறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Putin says, it's a military secret, whether Russia will strike Britain: ரஷ்யா பிரித்தானியா மீது தாக்குதல் நடத்துமா என்பது ஒரு ராணுவ ரகசியம் என்று கூறியுள்ளார் புடின்.</p><p>


ரஷ்யாவுக்கு எதிராக போராடிவரும் உக்ரைனில், பிரித்தானிய படைகள் இருக்குமானால், அவர்களும் தாக்குதலுக்குள்ளாவார்கள் என்று கூறியுள்ளார் ரஷ்ய ஜனாதிபதியான புடின்</p><p>
</p><h3>
அது ராணுவ ரகசியம்...
</h3><p>
ரஷ்ய உக்ரைன் போரில், உக்ரைனுக்கு பிரித்தானியா உதவி வருவது குறித்து புடினிடம் கேள்வி எழுப்பினார்கள் ஊடகவியலாளர்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffeb5f9f-4512-4a09-bbe5-d0d37bcc15be/26-6a9819eb293d0.webp' /></p><p>
அவர்களுக்கு பதிலளித்த புடின், பிரித்தானியா மட்டும் அல்ல, உக்ரைனில் ரஷ்யாவுக்கெதிராக போராடும் எந்த நாட்டுப் படைவீரர்களும் நமது இலக்குதான் என்று கூறினார்.
</p><p>
அப்போது, ரஷ்யா பிரித்தானியாவைத் தாக்குமா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்க, ’அது ரகசியம், அது ஒரு ராணுவ ரகசியம்’ என சீரியஸாக பதிலளித்த புடின், பின் ஒரு மர்மப் புன்னகை புரிவதை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcxYwVSj8wN/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcxYwVSj8wN/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcxYwVSj8wN/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Firstpost (@firstpost)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>
சமீபத்தில், உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கு பிரித்தானியாவின் ஆதரவைத் தெரிவிப்பதற்காக உக்ரைன் சென்றிருந்தார், பிரித்தானிய பிரதமரான ஆன்டி பர்னாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a3d8c36-f4ba-4824-925e-779049424229/26-6a9819ebd3127.webp' /></p><p>
அப்போது அவர், நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளுக்கான திட்டங்களை ஜெலன்ஸ்கிக்குக் கொடுத்ததைத் தொடர்ந்தே, பிரித்தானிய தாக்குதல் குறித்து புடின் மிரட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T12:43:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவெக ஆட்சியில் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கு ரத்தாகுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/will-cases-filed-against-farmers-be-withdrawn-1788352669"></link>
            <id>https://ibctamilnadu.com/article/will-cases-filed-against-farmers-be-withdrawn-1788352669</id>
            <summary type="text">தவெக ஆட்சியில் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுமா என திமுக எம்எல்ஏ எம்ஆர்கே பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.

முந்தைய ஆட்சியில் ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தவெக ஆட்சியில் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுமா என திமுக எம்எல்ஏ எம்ஆர்கே பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.
</p><p>
முந்தைய ஆட்சியில் ஜனநாயக உரிமைகளுக்காக போராடிய ஆசிரியர்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.
</p><p>
முந்தைய ஆட்சி, 110 விதியின் கீழ் என கூறியதற்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்கவே விதிக்கு புறம்பாக எதுவும் இல்லை என பேரவை தலைவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13de018e-2ef2-4258-812f-c9f3fa181291/26-6a9818e73bcb2.webp' /><br></p><p>
</p><p>
இந்நிலையில் திமுக எம்எல்ஏ எம்ஆர்கே பன்னீர்செல்வம், போராட்டம் செய்த விவசாயிகள் மீதான வழக்குகள் ரத்து என முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.</p><p>

தவெக-வின் 100 நாள் ஆட்சியில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்படுமா?
</p><p>
அவர்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தார்கள், அந்த வழக்கையும் தள்ளுபடி செய்வீர்களா? என கேள்வி எழுப்பினார்.
</p><p>
இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட அதிகாரம் இருக்கிறது, அதனை மாற்றி வேறு வழியில் திருப்புவது சரியாக இருக்காது என பதிலளித்தார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/G_D_dTthsQo" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-02T12:39:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈழத் தமிழர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த Trailer - இன்று வெளியானது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/poraattam-movie-trailer-released-1788352535"></link>
            <id>https://tamilwin.com/article/poraattam-movie-trailer-released-1788352535</id>
            <summary type="text">ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள “போராட்டம்” திரைப்படத்தின் முன்னோட்டம்(Trailer) இன்று(02.09.2026) வெளியாகவுள்ளது.

ஈழத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள “போராட்டம்” திரைப்படத்தின் முன்னோட்டம்(Trailer) இன்று(02.09.2026) வெளியாகவுள்ளது.</p><p>

ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியாகவுள்ளது.
</p><p>
இந்த திரைப்படத்தை ராஜ் சிவராஜ் இயக்கியுள்ளதுடன், பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.
</p><h2>
போராட்டம் திரைப்படம்</h2><p>

திரைப்படத்தை தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபரான ஐபிசி கந்தையா பாஸ்கரன் தயாரித்துள்ளார். 

“போராட்டம்” திரைப்படத்தின் மூலம் பாஸ்கரன் றீகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
</p><p>
போராட்டம்’ திரைப்படத்திற்கு U சான்றிதழ் கிடைத்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2de57758-5d90-4ccc-a34f-47219cdd1b62/26-6a98185641a93.webp' /></p><p> 

ஈழ சினிமாவில் இதுவரை வெளியாகியுள்ள திரைப்படங்களில் நீளமான திரைப்படமாக “போராட்டம்” உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.</p><h2>
புலம்பெயர் தமிழர்களின் எதிர்பார்ப்பபு</h2><p>
ஈழ சினிமாவில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் முயற்சியாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் இலங்கையில் மட்டுமன்றி புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
“போராட்டம்” திரைப்படம் ஐபிசி தமிழின் தயாரிப்பில் வெளியாகும் நான்காவது முழுநீள திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p> 

ஈழத்து கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகியுள்ள ‘போராட்டம்’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/IcgPF0UtlUc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T12:36:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானிலிருந்து முதல்வர் விஜய் போல் AI வீடியோ உருவாக்கி மோசடி - காவல்துறை எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/police-warns-cm-vijay-deepfake-video-from-pakistan-1788352324"></link>
            <id>https://news.lankasri.com/article/police-warns-cm-vijay-deepfake-video-from-pakistan-1788352324</id>
            <summary type="text">police warns cm&amp;nbsp; vijay deepfake video முதல்வர் விஜய் போல் AI மூலம் போலியான வீடியோக்களை உருவாக்கி மோசடி நடைபெறுவது குறித்து காவல்துறை எச்சரிக்கை வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>police warns cm&nbsp; vijay deepfake video முதல்வர் விஜய் போல் AI மூலம் போலியான வீடியோக்களை உருவாக்கி மோசடி நடைபெறுவது குறித்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. </p><h3>

முதல்வர் விஜய்யை வைத்து மோசடி</h3><p> 

தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்னர், முதல்வர் விஜய் தமிழ்நாட்டில் செயல்படுத்தியுள்ளதாக பல்வேறு போலி செய்திகளை வட இந்தியாவில் உள்ள சமூக ஊடக பக்கங்கள், பிரபலங்கள் பரப்பி வ்ருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1310e70b-61fc-4121-ad51-df6ed892ed4b/26-6a9817464e6f4.webp' /></p><p>

சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பெயரில் விஜய் பவுண்டேஷன் செயல்படுவதாக கூறி அதன் மூலம் நிதியுதவி, கடன் வழங்குவதாக பதிவுக்கட்டணம், சரிபார்ப்பு கட்டணம் என பல்வேறு வகையாக கட்டணங்களை வங்கி கணக்குக்கு அனுப்ப சொல்லி கடன் வழங்காமல் சிலர் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.&nbsp;</p><p></p><h3> 

தமிழ்நாடு காவல்துறையினர் எச்சரிக்கை</h3><p>

இந்நிலையில், முதல்வர் விஜய் போல் AI மூலம் DeepFake வகையிலான போலி வீடியோக்களை உருவாக்கி மோசடி நடைபெறுவது குறித்து தமிழ்நாடு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p> 

இது குறித்து வெளியான அறிக்கையில், "சிபிசிஐடி சைபர் க்ரைம் செல், ஆய்வாளர் அவர்கள் சமூக வலைதளங்களில் சைபர் குற்றம் தொடர்பாக கண்காணித்து கொண்டிருந்தபோது, பொதுமக்களை ஏமாற்றும் நோக்கத்தில் முகநூல் மற்றும் பிற சமூக ஊடகத் தளங்களில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பேசுவதுபோல் Al மூலம் உருவாக்கப்பட்ட காணொளி ஒன்று இந்தி மொழியில் இருப்பது கண்டறியப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/748514f5-5828-4afd-a195-1ec9733fa5b2/26-6a98174599208.webp' /></p><p> 

அந்தக் காணொளியில், பொதுமக்கள் ஏதேனும் பண உதவி தேவைப்பட்டால் ஒரு வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கபட்டிருந்தது.</p><p> 

மேற்படி சந்தேகத்திற்கிடமான மோசடி காணொளி குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக ஆய்வாளர் சமர்பித்த அறிக்கையின் அடிப்படையில், சி.பி.சி.ஐ.டி சைபர் கிரைம் பிரிவில் 01.09.2026-ம் தேதியன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. </p><p>

பொய்யாக உருவாக்கப்பட்ட அந்த காணொளி தொடர்பான போலியான ID மற்றும் அது தொடர்பான பதிவுகள் (logs) குறித்த தகவல்களைப் பெற Meta நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், இப்போலி காணொளியை சமூக ஊடகங்களில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>

முதற்கட்ட விசாரணையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தோற்றத்தில் உருவாக்கப்பட்ட இதுபோன்ற பல Al காணொளிகள் பேஸ்புக் மட்டுமின்றி, மற்ற சமூக ஊடக தளங்களிலும் பரப்பப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. </p><p>மேலும், இக்காணொளிகளில் பல பாகிஸ்தானைச் சேர்ந்த பேஸ்புக் ID-களிலிருந்து பகிரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
</p><p>
இவ்விவகாரத்தில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைவாக அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும், சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் இதுபோன்ற போலி காணொளிகளை அகற்றவும் துரிதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
</p><p>
இதுபோன்ற மோசடி காணொளிகளில் குறிப்பிடப்படும் தொலைபேசி எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அவற்றில் பகிரப்படும் WhatsApp குழுக்களில் இணையவோ அல்லது அவற்றின் மூலம் கூறப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவோ வேண்டாம்.
</p><p>
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் "Deep Fake" காணொளிகளில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைப் போன்று ஆள்மாறாட்டம் செய்து வெளியிடப்படும் போலியான பதிவுகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு தமிழ்நாடு காவல்துறை கேட்டுக்கொள்கிறது.
</p><p>
மேலும், இதுபோன்ற இணையவழி மோசடிகளிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாதுகொள்ளும் வகையில், தங்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரிடமும் இத்தகவலை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் தமிழ்நாடு காவல்துறை கேட்டுக்கொள்கிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T12:33:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய் மீது கடுப்பான ஜி.வி.பிரகாஷ் குமார்!! நடிக்க வரும் முன் நடந்த சம்பவம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/gv-prakash-kumar-shared-his-memories-vijay-1788351045"></link>
            <id>https://viduppu.com/article/gv-prakash-kumar-shared-his-memories-vijay-1788351045</id>
            <summary type="text">ஜி.வி.பிரகாஷ் குமார்வெயில் படத்தின் மூலம் தன் இசைப்பயணத்தை ஈர்த்தவர் தான் ஜி வி பிரகாஷ்குமார். முன்னனி நடிகர்கள் முதல் இளம் ஹீரோக்கள் படங்கள் வரை தன் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜி.வி.பிரகாஷ் குமார்</h2><p>வெயில் படத்தின் மூலம் தன் இசைப்பயணத்தை ஈர்த்தவர் தான் ஜி வி பிரகாஷ்குமார். முன்னனி நடிகர்கள் முதல் இளம் ஹீரோக்கள் படங்கள் வரை தன் இசை மூலம் தேசிய விருதுகளையும் பெற்று வந்தார். </p><p>தற்போது இம்மோர்டல் படத்தில் நடித்துள்ள ஜி. வி, தலைவா படத்தில் விஜய்யுடன் டான்ஸ் ஆடியது பற்றி பகிர்ந்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8402668-623d-4870-9598-b32c0f07c47c/26-6a98124874058.webp' /></p><p>அதில், நான் அந்த பாடலில் விஜய்யுடன் ஆடுவதற்கு அவரைப்போலவே ஜீன்ஸ், சட்டை கேட்டேன், ஆனால் ரொம்ப கடுப்பாக இருந்தது. அந்த நடன அசைவும் கடினமாக இருந்தது. அதையே நான் தனியாக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்ததை சேர் போட்டு விஜய் பார்த்துக் கொண்டிருந்தார். பின் என்னிடம் நீ நல்லா பிராக்டிஸ் பண்ற என்று சொல்லி பாராட்டினார். </p><p>விஜய்யுடன் இருக்கும்போது ஜாலியாக இருக்கும். நாங்கள் நிறைய நேரம் செலவிட்டுள்ளோம், நான் மீண்டும் விஜய்யுடன் தெறி படத்தில் வேலை பார்த்தேன். இயக்குநர் அட்லீயை ஷங்கரின் உதவியாளராக இருக்கும்போதே எனக்கு பழக்கம், என்னோட, மயக்கம் என்ன படத்தின் இசையைக் கேட்டுவிட்டு ராஜா ராணி படத்தில் மியூசிக் போட வேண்டும் என்று கேட்டு வந்தார். அந்த படம் சிறப்பாக வந்தது. இன்று வரை ராஜா ரானி படம் இசை பேசப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db8a3371-dcd1-421f-8eea-1c793063b9d3/26-6a981247be325.webp' /></p><p> </p><p>அதன்பின் என் 50வது படமாக மாறி அமைந்தது. அட்லியுடன் வேலை செய்யவே சூப்பரா இருக்கும். தெறி படத்தின் பாடல்கள், பின்னணி இசை எல்லாமே சிறபபக இருந்தது. என் மிகப்பெரிய கமர்ஷியல் படமாக தெறி அமைந்தது. </p><p>எனக்கு விஜய்யுடன் பணியாற்ற சரியான நேரம் அமையவில்லை, சுதா கொங்கரா, வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் ஒரு படம் நடிக்க, அதற்கு நான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் இருவரும் படத்தின் திரைக்கதையை ஒரு வருடம் தேவை என்ற சூழலில் தான் விஜய் பீஸ்ட் படத்தில் நடிக்க சென்றார். சுதா கொங்கரா விஜய்க்கு சொன்னக்கதை உண்மையிலேயே சிறந்தது. ஆனால் அதை தொடர முடியாதது துரதிஷ்டவசமானது. அதே கதையில் மகேஷ்பாபு நடிப்பதாக இருந்தது, ஆனால் அதுவும் கைவிடப்பட்டது என்று ஜி. வி. பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-02T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் 4-ஆம் திகதி கிருஷ்ண ஜெயந்தி ; குறையாத செல்வங்களை வாரித் தரும் விரதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/september-4th-is-krishna-janmashtami-wealth-1788340646"></link>
            <id>https://jvpnews.com/article/september-4th-is-krishna-janmashtami-wealth-1788340646</id>
            <summary type="text">&amp;nbsp; 2026-ஆம் ஆண்டுக்கான கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது

கிருஷ்ண ஜெயந்தி விரதம் இருப்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 2026-ஆம் ஆண்டுக்கான கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது

கிருஷ்ண ஜெயந்தி விரதம் இருப்பது குடும்பத்தில் குறையாத செல்வங்களையும் பல கோடி யாகங்கள் செய்த நற்பலன்களையும் தரும்.
</p><p>
 

இது தென்னிந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. விஷ்ணுவின் தசாவதாரங்களில் 9வது அவதாரமாக கிருஷ்ண அவதாரம் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c17396f0-c553-4d25-9d4d-12f21625fc38/26-6a97e9a841e19.webp' /></p><h2>கிருஷ்ணர் பிறந்த&nbsp; கிருஷ்ண ஜென்மாஷ்டமி&nbsp;</h2><p>
</p><p>
 அதர்மம் எங்கெல்லாம் தலை தூக்குகிறதோ, அங்கெல்லாம் நீதியை நிலைநாட்ட கிருஷ்ண பகவான் தோன்றுவார் என்ற அடிப்படை கருத்தின் அடிப்படையில் கிருஷ்ணர் பிறந்த இந்த கிருஷ்ண ஜென்மாஷ்டமி மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.</p><p> 

வாசுதேவர் – வாசுகி தம்பதியினரின் 8வது மகனாக கிருஷ்ணர் பிறந்தார். இவர் அவரது மாமனான கம்சன் மன்னரின் அழிவுக்கு காரணமாக இருப்பான் என அசரீரி ஒலித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90834654-d955-4e39-964e-8965b1ae9506/26-6a97e9e795538.webp' /></p><p> 

இதனால் நிறைமாத கர்ப்பிணியான வாசுகி – வசுதேவர் இருவரையும் கம்சன் சிறையில் அடைத்தான். ஆவணி மாதம் தேய்பிறையில் வரும் அஷ்டமி நாளில் ரோகிணி நட்சத்திரத்தில் சிறையில் நள்ளிரவில் கிருஷ்ணர் பிறந்தார்.</p><h3>விரத வழிபாடு, சிறப்பு பூஜை&nbsp;</h3><p>

 இந்நாள் வெகுவிமரிசையாக விரத வழிபாடு, சிறப்பு பூஜை, பல்வேறு நிகழ்ச்சிகள் என கொண்டாடப்படுகிறது.</p><p>&nbsp; காலையில் எழுந்து நீராடி, திலகம் அணிந்து கிருஷ்ணரை மனதார வழிபட வேண்டும்.&nbsp; குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரம் (மூன்றே முக்கால் நாளிகை) அல்லது நாள் முழுதும் விரதம் இருப்பது நல்லது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faeda2b1-72ef-4327-a203-e02eb854cc2c/26-6a97e9a8ee6ca.webp' /></p><p> முழுமையாக உணவு உட்கொள்ளாமல் இருக்க இயலாதவர்கள், அரிசி உணவைத் தவிர்த்து பழங்கள் மற்றும் பழச்சாறுகளை உட்கொள்ளலாம்.</p><p>கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக ஐதீகம் என்பதால், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மாலை அல்லது இரவில் பூஜை செய்வது சிறந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf255e99-34d6-43bf-a128-9a6aa19f6918/26-6a97e9a9aac01.webp' /></p><p>
</p><p><b>
பாத கோலம்: </b>வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரை அரிசி மாவால் கிருஷ்ணரின் சிறிய பாதச் சுவடுகளை வரைய வேண்டும்.</p><p><b>அலங்காரம்:</b> கிருஷ்ணர் படத்திற்கு மஞ்சள் மலர்கள் மற்றும் துளசி இலைகளைச் சாற்றி வழிபட வேண்டும்.</p><p><b>நைவேத்தியம்:</b> கண்ணனுக்குப் பிடித்தமான வெண்ணெய், அவல், மற்றும் பலகாரங்களைப் படைக்க வேண்டும்.</p><p><b>சிறப்பு நிகழ்வு:</b> வீடுகளில் குழந்தைகளைக் கிருஷ்ணர் மற்றும் ராதை போல அலங்கரித்து மகிழலாம்</p>]]></content>
            <updated>2026-09-02T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் வீதிக்கிறங்கிய பல்கலைக்கழக ஆசிரியர்கள்...! முன்னெடுக்கப்பட்ட போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vavuniya-university-teachers-stage-gate-protest-1788349529"></link>
            <id>https://ibctamil.com/article/vavuniya-university-teachers-stage-gate-protest-1788349529</id>
            <summary type="text">வவுனியா பல்கலைக்கழக
ஆசிரியர் சங்க கிளையினரால்&amp;nbsp;கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா பல்கலைக்கழக
ஆசிரியர் சங்க கிளையினரால்&nbsp;கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டங்களின் ஒரு அங்கமாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த போராட்டம் இன்று (02-09-2026) பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>நியாயமான கோரிக்கை</h2><p>பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட பல்வேறு
நியாயமான கோரிக்கைகளுக்கு இதுவரை உரிய தீர்வு வழங்கப்படாததை சுட்டிக்காட்டியே
குறித்த ஆர்ப்பாட்டமானது இடம்பெற்றிருந்தது.
</p><p>
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக ஆசிரியர்கள் அடுத்த
தலைமுறையின் கல்விக்கான வை அழிக்காதே, கல்விசார் பணியாளர்களின்
பற்றாக்குறைக்கு உடன் தீர்வு காணுங்கள், கல்விக்கான நிதியினை அதிகரிக்கவும்
பல்கலைக்கழகங்களை பாதுகாக்கவும் என்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை
ஏந்தியவாறு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db7b5468-71ff-4ada-b935-b777bab9392b/26-6a98115e26e26.webp' /></p><p>ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், “இன்றைய தினம் இலங்கை அனைத்துப் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின்
சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்படுகின்ற இந்த மதிய நேர போராட்டமானது
பிரதானமாக இலங்கை அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின்
சம்மேளனத்தினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட
பல்வேறுபட்ட கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.</p><p>

அது பிரதானமாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அதிகரித்த மாணவர் உள்வாங்கை,
அதுதவிர்த்த பல்கலைக்கழக ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள், மேலும்
உயர்கல்விக்குரிய ஒதுக்கீடுகள் சம்பந்தமான கோரிக்கைகள் என்பவற்றை
அடிப்படையாகக் கொண்டு இன்றைய தினம் இலங்கையிலுள்ள அனைத்துப்
பல்கலைக்கழகங்களினதும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் வந்து இந்த மதிய நேர
இந்த போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றன.</p><p>


அந்த வகையிலே, வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் அந்தப் போராட்டத்தில்
இணைந்து கொண்டு எங்களுடைய அதிருப்தியை வெளியிட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-02T12:29:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீதான அமெரிக்காவின் கொடூர தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-strike-on-wedding-event-in-sirik-city-5-killed-1788347375"></link>
            <id>https://ibctamil.com/article/us-strike-on-wedding-event-in-sirik-city-5-killed-1788347375</id>
            <summary type="text">தெற்கு ஈரானின் சீரிக் பகுதியில் அமைந்துள்ள பண்டார் கூஹெஸ்டாக் என்ற இடத்தில் திருமண நிகழ்வொன்று நடைபெற்ற மண்டபத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு ஈரானின் சீரிக் பகுதியில் அமைந்துள்ள பண்டார் கூஹெஸ்டாக் என்ற இடத்தில் திருமண நிகழ்வொன்று நடைபெற்ற மண்டபத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.</p><p>இந்த தாக்குதலில், 4 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்னர்.</p><p>

இந்தத் தாக்குதலை ஈரானிய வெளிவிவகார அமைச்சு கடுமையாகக் கண்டித்துள்ளதுடன் இதனை “அமெரிக்க இராணுவத்தின் கொடூரமான குற்றம்” என ஈரான் தரப்பு சாடியுள்ளது.</p><p></p><h2>அமெரிக்க இராணுவத்தின் கொடூரமான குற்றம்</h2><p>
</p><p>
ஈரான் மீது அமெரிக்கப் படைகள் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cae59a7-e1e7-4b52-98dc-373c9355de7c/26-6a98133a80917.webp' /></p><p>ஈரானின் வான் பாதுகாப்புத் தளங்கள், ரேடார் அமைப்புகள், கடற்படை உள்கட்டமைப்புகள், கண்ணிவெடி வைக்கும் வசதிகள் மற்றும் தொலைத்தொடர்பு மையங்கள் உள்ளிட்ட இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><p>

இதற்குப் பதிலடியாக, ஈரானிய புரட்சிகரக் காவல் படைகள் ஜோர்தான், ஈராக் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்கு வைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஜோர்தானிய வான்வெளியில் நுழைந்த 13 பாலிஸ்டிக் ஏவுகணைகளில் 10 ஏவுகணைகளை தமது வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியதாக ஜோர்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.</p><p>

பஹ்ரைனில் ஈரானிய ட்ரோன்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கு ஈராக்கின் அர்பில் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை ஏவுகணைகள் மூலம் தாக்கியதாக ஈரானிய புரட்சிகரக் காவல் படைகள் அறிவித்துள்ளன.
</p><p>
கடந்த ஜூலை மாதத்துக்குப் பின்னர் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் இடம்பெற்றுள்ள மிக மோசமான நேரடி இராணுவ மோதலாக இது கருதப்படுகிறது. இதனால் மேற்காசியாவில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T12:22:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[துருக்கி அருகே இரு சரக்குக் கப்பல்கள் மோதி விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-cargo-ships-collide-near-turkey-1788351899"></link>
            <id>https://canadamirror.com/article/two-cargo-ships-collide-near-turkey-1788351899</id>
            <summary type="text">&amp;nbsp; துருக்கியின் இஸ்தான்புல் நகரின் சிலிவ்ரி மாவட்டக் கடற்பகுதியில் இன்று அதிகாலை இரு சரக்குக் கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானதில், 10 மாலுமிகள் கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; துருக்கியின் இஸ்தான்புல் நகரின் சிலிவ்ரி மாவட்டக் கடற்பகுதியில் இன்று அதிகாலை இரு சரக்குக் கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானதில், 10 மாலுமிகள் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
</p><p>


கோகோவெலியில் இருந்து அலியாகா நோக்கிச் சென்ற ‘அல்சு’ என்ற கப்பலும், இஸ்கெண்டருன் துறைமுகத்திலிருந்து கராடெனிஸ் எரேக்லி நோக்கிச் சென்ற ‘துக்பெர்க் இமாமோக்ளு’ என்ற கப்பலும் அதிகாலை 3 மணியளவில் மோதியதாக இஸ்தான்புல் ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/740158ce-ddf7-4def-b0f2-d06a692f809b/26-6a98159db3a90.webp' /></p><p>



மோதலில் ‘அல்சு’ கப்பலுக்கு சிறியளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ‘துக்பெர்க் இமாமோக்ளு’ கப்பல் குறிப்பிடத்தக்க அளவில் சேதமடைந்துள்ளது. அதில் இருந்த 10 மாலுமிகளே தற்போது காணாமல் போயுள்ளனர்.</p><p>



கடலோர பாதுகாப்புப் படையினரின் கப்பல்கள் மற்றும் கடற்படை ஹெலிகாப்டர் உதவியுடன் காணாமல் போன மாலுமிகளைத் தேடும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-02T12:22:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்.. 56,000 மாணவர்களின் சாதனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grade-5-scholarship-exam-results-doenets-lk-1788344756"></link>
            <id>https://tamilwin.com/article/grade-5-scholarship-exam-results-doenets-lk-1788344756</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சுமார் 56,000 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை விட (Cut-off Mark) அதிக மதிப்பெண்களைப் பெற...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p><span style="font-size: 14px;">2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சுமார் 56,000 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை விட (Cut-off Mark) அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
</span></p><p>மேலும், இப்பரீட்சைக்கு மொத்தம் 294,132 மாணவர்கள் விண்ணப்பித்திருந்ததாகவும் அவர்களில் 289,867 மாணவர்கள் மாத்திரமே பரீட்சைக்குத் தோற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>இரண்டாம் இணைப்பு&nbsp;&nbsp;<span style="font-size: 14px;"></span></h2><p><span style="color: inherit;">2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.</span></p><h2>முதலாம் இணைப்பு&nbsp; &nbsp;</h2><p>2026 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p>
இது தொடர்பான அறிவிப்பு இன்று(02.09.2026) வெளியிடப்பட்டுள்ளது</p><h3>



பரீட்சைக்கான முடிவுகள்</h3><p>
இதற்கமைய, <a href="www.doenets.lk" target="_blank"><b>www.doenets.lk</b></a> அல்லது <a href="http://www.results.exams.gov.lk/home.htm" target="_blank"><b>www.results.exams.gov.lk</b></a> ஆகிய பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களுக்குச் சென்று புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eda0bf8d-2bb9-4d35-8afd-566baf2a7d38/26-6a98015dc06e8.webp' /></p><p> 

இந்த ஆண்டுக்கான புலமைப்பரிசில் தேர்வு ஒகஸ்ட் 9 ஆம் திகதி நாடு முழுவதும் 2,723 தேர்வு மையங்களில் இடம்பெற்றுள்ளன.</p><p> 

சிங்கள மொழியில் 220,366 மாணவர்களும், தமிழ் மொழியில் 73,723 மாணவர்களும் உட்பட மொத்தம் 294,089 மாணவர்கள் இந்தப் பரீட்சையில் பங்கேற்றனர்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mc60PmHrlxM" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T12:20:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொள்ளை கொள்ளும் அழகில் நடிகை அனுபமா பரமேஸ்வரன், லேட்டஸ்ட் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/anupama-parameswaran-recent-elegant-photoshoot-1788346860"></link>
            <id>https://cineulagam.com/article/anupama-parameswaran-recent-elegant-photoshoot-1788346860</id>
            <summary type="text">ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் சமீபத்தில் தனது காதல் தோல்வி குறித்து கூறியது பெரும் வைரலானது. மேலும், தான் ஒரு டாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் சமீபத்தில் தனது காதல் தோல்வி குறித்து கூறியது பெரும் வைரலானது. மேலும், தான் ஒரு டாக்சிக் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் கூறினார். </p><p>

நடிகை அனுபமா பரமேஸ்வரன் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஒருவர். இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும். இந்நிலையில், தற்போது கொள்ளை கொள்ளும் அழகில் சமீபத்தில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். </p><p>

இதோ பாருங்க:</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T12:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : சாதனை படைத்த 56000 மாணவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grade-5-scholarship-exam-cut-off-mark-above-56000-1788350256"></link>
            <id>https://tamilwin.com/article/grade-5-scholarship-exam-cut-off-mark-above-56000-1788350256</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி 56,000 மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதாக இலங்கை பரீட...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி 56,000 மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
ஆகஸ்ட் 9 ஆம் திகதி நடைபெற்ற இந்த பரீட்சையில் மொத்தம் 294,132 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்திருந்தனர், </p><p>இவர்களில் 289,867 மாணவர்கள் பரீட்சையில் பங்கேற்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be94974e-cbf4-4af4-afef-17c6029bd243/26-6a9812a7dccb4.webp' /></p><p>
</p><p>
அதன்படி, வெளியிடப்பட்ட பரீட்சை முடிவுகளில், 56,000 மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T12:15:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளியானது போராட்டம் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/official-trailer-of-eelam-film-porattam-today-1788337266"></link>
            <id>https://ibctamil.com/article/official-trailer-of-eelam-film-porattam-today-1788337266</id>
            <summary type="text">ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள போராட்டம் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் இன்று வெளியாகவுள்ளது.&amp;nbsp;ஈழத்து கலைஞர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள போராட்டம் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் இன்று வெளியாகவுள்ளது.&nbsp;</p><p>ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ராஜ் சிவராஜ் இயக்கியுள்ளதுடன் பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.</p><p> திரைப்படத்தை தயாரிப்பாளரும் தொழிலதிபருமான ஐபிசி கந்தையா பாஸ்கரன் தயாரித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>முழுநீளத் திரைப்படம்</h2><p>போராட்டம் திரைப்படத்தின் மூலம் பாஸ்கரன் றீகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.</p><p></p><p>திரைப்படத்திற்கு U சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் அதன் முதல் பார்வையில் (First Look) அவர் உதைப்பந்தாட்ட வீரராக தோன்றியமை ரசிகர்கள் மத்தியில் திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.</p><p>
ஈழ சினிமாவில் இதுவரை வெளியாகியுள்ள திரைப்படங்களில் நீளமான முழுநீளத் திரைப்படமாக போராட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><h2>பாடல்கள் ரசிகர்கள்&nbsp;</h2><p>இந்நிலையில், ஏற்கனவே திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இன்று வெளியாகவுள்ள ட்ரெய்லர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
</p><p>
ஈழ சினிமாவில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் முயற்சியாக உருவாகியுள்ள போராட்டம் திரைப்படம் இலங்கையில் மட்டுமன்றி புலம்பெயர் நாடுகளிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4512295f-84e3-4569-ba76-c2c1f343b5c5/26-6a97e9e325341.webp' /></p><p>
</p><p>
ஐபிசி தமிழின் தயாரிப்பில் வெளியாகும் நான்காவது முழுநீள திரைப்படமான போராட்டம், எதிர்வரும் ஒக்டோபர் இரண்டாம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
</p><p>
இந்நிலையில், திரைப்படத்தின் கதை, கதாபாத்திரங்கள் மற்றும் காட்சிகள் தொடர்பான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் இன்று வெளியாகவுள்ள அதிகாரப்பூர்வ ட்ரெய்லருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/IcgPF0UtlUc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-02T12:07:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/urgent-grade-5-scholarship-examination-results-1788346131"></link>
            <id>https://jvpnews.com/article/urgent-grade-5-scholarship-examination-results-1788346131</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பெறுபேறுகள் வெளியானதும்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>பெறுபேறுகள் வெளியானதும், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான <a href="https://www.doenets.lk/examresults" target="_blank">https://www.doenets.lk/</a> ஊடாக மாணவர்கள் தமது பெறுபேறுகளை பார்வையிட முடியும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97e2e025-c45e-454e-9cb6-82c9a496b988/26-6a97ff14b5b22.webp' /></p><p>2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஆகஸ்ட் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T12:07:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளியான 5 ஆம் தர பரீட்சை பேறுபேறுகள் ; 56,000 மாணவர்கள் சித்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2026-grade-5-exam-results-56-000-students-passed-1788350978"></link>
            <id>https://jvpnews.com/article/2026-grade-5-exam-results-56-000-students-passed-1788350978</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வௌியாந நிலையில் 56,000 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதாக இலங்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;2026 ஆம் ஆண்டுக்கான<a href="https://jvpnews.com/article/urgent-grade-5-scholarship-examination-results-1788346131" target="_blank"> 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் </a>சற்று முன்னர் வௌியாந நிலையில் 56,000 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p> 

பெறுபேறுகளை https://www.doenets.lk/ என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு சென்று பார்வையிட முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f841452f-c86d-474d-9535-cca8af70ef88/26-6a981203c284a.webp' /></p><p></p><h2>&nbsp;பரீட்சைக்கு தோற்றிய&nbsp; 289,867&nbsp; மாணவர்கள்</h2><p> 

இந்நிலையில் குறித்தப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 56,000 பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>

இந்தப் பரீட்சைக்கு 294,132 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 289,867 பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.&nbsp; &nbsp; &nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T12:06:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரும் வறட்சியை நோக்கி நகரும் மட்டக்களப்பு மாவட்டம்: அரசாங்கத்தின் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/batticaloa-moving-towards-severe-drought-1788349649"></link>
            <id>https://ibctamil.com/article/batticaloa-moving-towards-severe-drought-1788349649</id>
            <summary type="text">தற்போது எல் நினோ தாக்கத்தால் ஏற்பட்ட வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறை மற்றும் மாவட்டத்தின் மக்களின் குடிநீரை நிரந்தரமாக பூர்த்தி செய்வதற்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது எல் நினோ தாக்கத்தால் ஏற்பட்ட வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறை மற்றும் மாவட்டத்தின் மக்களின் குடிநீரை நிரந்தரமாக பூர்த்தி செய்வதற்கான முழு நடவடிக்கையும் வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
</p><p>வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க உடனான விசேட கலந்துரையாடல், மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்றது. </p><p>

இதன்போது குடிநீர் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>குடிநீர் பற்றாக்குறை</h2><p>
</p><p>
மேலும் கருத்து தெரிவித்த அவர், 

''எல் நினோ தாக்கத்தினால் மொனராகலை, மற்றும் மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd11efc3-3e03-42c3-92a0-ff5b0be9f301/26-6a9810a48cf9c.webp' /></p><p>
</p><p>
இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர் வழங்கும், பிரதானமாக உன்னிச்சைக் குளத்தில் இருந்து வருகின்ற நீர் படிப்படியாக குறைந்து வருகிறது.
</p><p>
இந்தநிலையில் மழைவீழ்ச்சி இரண்டு மாதங்களுக்குள் கிடைக்கும் என வானிலை அவதான நிலையத்தின் ஊடாக பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் குடிநீர் பற்றாக்குறையை எதிர் காலத்தில் தடுத்துக் கொள்வதற்காகவும் மக்களின் குடிநீர் பிரச்சனையை பூர்த்தி செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.</p><p>

இதில்பிரதேச சபைகள் ஊடாக பவுசர் மூலம் வழங்கப்படுகின்ற தண்ணீருக்கு செலவழிக்கும் நிதிகளை மீள் அழிப்பது தொடர்பாகவும் இருக்கும் சுற்றுநிருபத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதாகும். </p><p>

பிரதேச சபைகள் ஊடாக வழங்குகின்ற நீரை தொடர்ச்சியாக வழங்குவதற்கும் அதற்கான நிதியை அரசின் ஊடாக வழங்கப்படும்" என கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T12:04:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு எதிராக நீதிமன்ற படியேறிய மாணவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/student-asks-colombo-uni-for-5-million-rupees-1788349172"></link>
            <id>https://ibctamil.com/article/student-asks-colombo-uni-for-5-million-rupees-1788349172</id>
            <summary type="text">கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதிப் பீடத்தின் உயர் டிப்ளோமா கற்கை நெறி மாணவர் ஒருவர், பரீட்சை முறைகேடுகள் காரணமாக தனக்கு ஏற்பட்ட கால...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதிப் பீடத்தின் உயர் டிப்ளோமா கற்கை நெறி மாணவர் ஒருவர், பரீட்சை முறைகேடுகள் காரணமாக தனக்கு ஏற்பட்ட கால விரயம் மற்றும் பாதிப்புக்களுக்காக 5 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.</p><p>


நுகேகொடை மாவட்ட நீதிபதி ஆர்.ஏ.என். ராஜபக்சவின் உத்தரவுக்கு அமைய, கொழும்பு பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர், முன்னாள் துணைவேந்தர், பீடாதிபதி, திணைக்களத் தலைவர் மற்றும் விரிவுரையாளர்கள் உள்ளிட்ட எட்டு பேருக்கு எதிர்வரும் செப்டம்பர் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>நீதிபதியின் உத்தரவு</h2><p>குறித்த கற்கை நெறியின் சில பாடங்களில் சித்தியடையவில்லை என அறிவிக்கப்பட்ட மாணவர்கள், எந்தவித மீள் பரீட்சையும் இன்றி பின்னர் எவ்வாறு சித்தியடைந்ததாக மாற்றப்பட்டனர் என்பது தொடர்பில் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளதுடன், இது குறித்த விளக்கங்களை மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b353348-d356-4c8f-8611-c9175e3b7a25/26-6a980e77e20e8.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T11:56:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நியூயார்க் சதுக்கத்தில் கத்திக்குத்து: பேங்க் ஆப் அமெரிக்காவின் துணைத் தலைவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bank-of-america-vice-head-killed-in-times-square-1788350079"></link>
            <id>https://news.lankasri.com/article/bank-of-america-vice-head-killed-in-times-square-1788350079</id>
            <summary type="text">Bank of America Vice President Killed in Times Square: டைம்ஸ் சதுக்கத்தில் கொல்லப்பட்டது பேங்க் ஆப் அமெரிக்காவின் துணைத் தலைவர் எரின் பியாசென்டி என அட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Bank of America Vice President Killed in Times Square: டைம்ஸ் சதுக்கத்தில் கொல்லப்பட்டது பேங்க் ஆப் அமெரிக்காவின் துணைத் தலைவர் எரின் பியாசென்டி என அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><h2> கொலை செய்யப்பட்ட பேங்க் ஆப் அமெரிக்காவின் துணைத் தலைவர்</h2><p>நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த திடீர் கத்திக்குத்து தாக்குதலில் மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பி இருந்த பேங்க் ஆப் அமெரிக்காவின் துணைத் தலைவர் எரின் பியாசென்டி(Erin Piacenti:, 32 வயது) பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளார்.</p><p> டைம்ஸ் சதுக்கத்தின் காவல் நிலையம் அமைந்துள்ள பாதுகாப்பு நிறைந்த இடத்தில், குயின்ஸ் பகுதியை சேர்ந்த 49 வயது சிஸ்னெரோஸ் என்ற பெண் தன்னுடைய ஷாப்பிங் பையில் இருந்த இரண்டு கத்தியை எடுத்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0319bc72-8cb1-40f2-9d81-4ed1c52652fa/26-6a980e809c0b4.webp' /></p><p></p><p> முதலில் 68 வயது முதியவரை தாக்கிய சிஸ்னெரோஸ், பின்னர் எரின் பியாசென்டி மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.</p><p> காவல்துறையினர் மின் அதிர்ச்சியை பயன்படுத்தி தாக்குதல்தாரியை கட்டுப்படுத்த முயன்றனர்.</p><p> இருப்பினும் அந்த பெண் கத்தியை கீழே போட மறுத்ததால் பாதுகாப்பிற்காக இரண்டு பொலிஸார் தாக்குதல்தாரியான சிஸ்னெரோஸை சுட்டுக் கொன்றனர்.</p><p> இந்த சம்பவத்தில் தாக்குதல்தாரிக்கு எந்தவொரு பின் நோக்கங்களும் இல்லை என்றும், அவர் நீண்ட நாட்களாக மனநல பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்ததாகவும் காவல்துறையினர் மற்றும் அவரது குடும்பத்தினர் விளக்கியுள்ளனர்.</p><p> இந்த தாக்குதலில் காயமடைந்த 68 வயது முதியவர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.</p><h2> பணி திரும்பிய துணைத் தலைவர்</h2><p>இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்த பேங்க் ஆப் அமெரிக்காவின் துணைத் தலைவர் எரின் பியாசென்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தன்னுடைய 5 மாத மகப்பேறு விடுமுறையை முடித்துவிட்டு பணிக்கு திரும்பியுள்ளார்.</p><p> சமீபத்திய தன்னுடைய மகளின் ஞானஸ்நானம் மற்றும் தங்களுடைய இரண்டாவது திருமண நாள் கொண்டாட்டம் தொடர்புடைய மகிழ்ச்சியான குடும்ப புகைப்படம் ஒன்றை எரின் பியாசென்டி வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-02T11:54:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக் பாஸ் தி காமன் மேன் ஆடிஷனில் நடந்தது என்ன? உண்மையை உடைத்த நிவ்யா மாறன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/bigg-boss-common-man-nivya-maran-interview-1788348652"></link>
            <id>https://manithan.com/article/bigg-boss-common-man-nivya-maran-interview-1788348652</id>
            <summary type="text">பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்ற கனவுடன் வரும் காமன் மேன்களுக்கு, அதற்கான முதல் வாய்ப்பாக அமைந்துள்ளது ‘பிக் பாஸ் தி காமன் மேன்’ நிகழ்ச்சி. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்ற கனவுடன் வரும் காமன் மேன்களுக்கு, அதற்கான முதல் வாய்ப்பாக அமைந்துள்ளது ‘பிக் பாஸ் தி காமன் மேன்’ நிகழ்ச்சி. இதில் நடைபெறும் ஆடிஷனில் போட்டியாளர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு, அவர்களின் பதில் மற்றும் மனநிலை சோதிக்கப்படுகிறது.
</p><p>
இந்த நிகழ்ச்சியில் நடிகர் மாறனின் மகள் நிவ்யா மாறனும் கலந்து கொண்டுள்ளார். ஆனால், நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய சிலர் தங்களது அனுபவங்களைப் பற்றி தொடர்ந்து நெகட்டிவாக பேசி வரும் நிலையில், நிவ்யா மாறன், இந்த நிகழ்ச்சி குறித்த பல்வேறு உண்மைகளை வெளிப்படையாக பேசியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1987a2a3-b03a-45d9-812f-a23de4f6ecd0/26-6a980c6d38697.webp' /></p><p></p><p>மேலும்&nbsp; நடுவர்களாக பங்கேற்கும் ஆரி அர்ஜுனன், ராஜு ஜெயமோகன், ஓவியா ஆகியோரும்&nbsp; தொகுத்து வழங்கும் மாயாவும் வேண்டும் என்றே போட்டியாளர்களின் கோபத்தை தூண்டவேண்டும் என்ற நோக்கில் வார்த்தைகளை பிரயோகிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.&nbsp;</p><p>உண்மையில்&nbsp;பிக் பாஸ் தி காமன் மேன் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் படி தான் நடக்கின்ற என்ற வகையில் பல உண்மைகளை சமீபத்திய பேட்டியில் வெளிபபடையாக பேசியுள்ளார். இது குறித்த முமுமையாக இந்த காணொளியில் காணலாம்.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/32t7NSKOIgo" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://chat.whatsapp.com/KPaiG8NNYogL3W9EipSjKP" target="_blank"> FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T11:50:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த வருடம் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/top-5-highest-grossing-movies-in-tamilnadu-in-2026-1788345491"></link>
            <id>https://cineulagam.com/article/top-5-highest-grossing-movies-in-tamilnadu-in-2026-1788345491</id>
            <summary type="text">2026தமிழ் சினிமாவிற்கு இந்த வருடம் ஆரோக்கியமான ஆண்டாகவே அமைந்துள்ளது. ஆரம்பம் முதலே தற்போது வரை பல சிறு பட்ஜெட் படங்கள் ஹிட் அடித்துள்ளன. அதிலும் தாய்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>2026</h2><p>தமிழ் சினிமாவிற்கு இந்த வருடம் ஆரோக்கியமான ஆண்டாகவே அமைந்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c6f4d2d-d605-4ed8-86a7-20d456e10e8f/26-6a97fc97da165.webp' /></p><p>ஆரம்பம் முதலே தற்போது வரை பல சிறு பட்ஜெட் படங்கள் ஹிட் அடித்துள்ளன. அதிலும் தாய்க்கிழவி, யூத் போன்ற படங்கள் ஏதோ பெரிய பட்ஜெட் படங்கள் போல் வசூலை வாரி வழங்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5596c5d1-c10f-4356-9e56-098be015e984/26-6a97fc96df3db.webp' /></p><p></p><h2>லிஸ்ட்&nbsp;</h2><p> </p><p>

அந்த வகையில் இந்த வருடம் அதிகம் தமிழகத்தில் வசூல் செய்த படங்களின் லிஸ்ட் பார்ப்போம்...
</p><p>
கருப்பு - ரூ. 170 கோடி
</p><p>ஜனநாயகன் - ரூ. 150 கோடி
</p><p>விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் - ரூ. 60+ கோடி
</p><p><a href="https://www.youtube.com/watch?v=3YJe2bdpVX8" target="_blank">தாய்கிழவி </a>- ரூ. 56 கோடி
</p><p>பராசக்தி - ரூ. 55 கோடி
</p><p>ஸ்பைடர் மேன் ப்ராண்ட் நியு டே - ரூ. 53 கோடி</p><p>
யூத் - ரூ. 51 கோடி</p><p>
கட்டா குஸ்தி - ரூ. 45 கோடி
</p><p>TT T- ரூ. 35 கோடி</p>]]></content>
            <updated>2026-09-02T11:50:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆல்பர்ட்டா மாகாண உணவு வங்கிகளின் மோசமான நிலைமை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/empty-shelves-at-alberta-food-banks-1788349364"></link>
            <id>https://canadamirror.com/article/empty-shelves-at-alberta-food-banks-1788349364</id>
            <summary type="text">Bare shelves at Alberta food banks making the organizations anxious: கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில், உணவு வங்கிகள் வெறுமையாக உள்ளதால் அவற்றின் நிர்வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Bare shelves at Alberta food banks making the organizations anxious: கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில், உணவு வங்கிகள் வெறுமையாக உள்ளதால் அவற்றின் நிர்வாகிகள் கவலையடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.
</p><p>
ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள உணவு வங்கிகளின் சேமிப்பகங்களில், உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தட்டுகள் உயரமாக அடுக்கப்பட வேண்டிய இடங்களில், அலமாரிகள் காலியாக இருக்கின்றன.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f660bef-7388-484b-9c8e-4714ed13b364/26-6a980bb5c451d.webp' /></p><p>
வழக்கமாக, ஸ்பான்சர்கள் மற்றும் ஆதரவாளர்களிடமிருந்து நன்கொடை பெற்று அவற்றை கிளை உணவு வங்கிகளுக்கு அனுப்புவோம். </p><p>ஆனால், இப்போது சேமிப்பகங்கள் வெறுமையாக உள்ளன என்கிறார் Food Banks Alberta அமைப்பின் எக்சிகியூட்டிவ் இயக்குநரான டேரில் பர்ரி.
</p><p>
இந்த அமைப்பு, ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள 112 கிளை உணவு வங்கிகளுக்கு பொருட்களை அனுப்புகிறது.
</p><p>
2025ஆம் ஆண்டு, இந்த அமைப்பு 3.36 மில்லியன் பவுண்டுகள் அளவுடைய பொருட்களை மாகாணம் முழுவதற்கும் அனுப்பியது.
</p><p>
இந்த ஆண்டிலோ, தேவை அதிகரித்துள்ளதால், ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே முந்தைய ஆண்டு அனுப்பிய அளவில் 90 சதவிகிதத்தை அனுப்பியாயிற்று.
</p><p>
விடயம் என்னவென்றால், பண்டிகை நாட்கள் நெருங்கிவரும் நிலையில், சேமிப்பகங்கள் காலியாக உள்ளதால், என்ன செய்வதென தெரியாமல் கவலையடைந்துள்ளனர் உணவு வங்கிகளின் நிர்வாகிகள்.</p><p>

அதாவது, 2025ஆம் ஆண்டு நிலவரப்படி, மாதம் ஒன்றிற்கு சராசரியாக 210,000 பேர் உணவு வங்கிகளுக்கு வந்து உணவுப்பொருட்களைப் பெற்றுச் சென்றுள்ளார்கள்.
</p><p>
இது முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 22 சதவிகிதம் அதிகம்.
</p><p>
அப்படியானால், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே ஏராளமானோர் உனவு வங்கிகளைப் பயன்படுத்தியுள்ளார்கள்.
</p><p>
அதாவது, தங்கள் அன்றாடத் தேவைகளுக்காக உணவு வங்கிகளை நாடும் மக்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்பது இதன் பொருள் ஆகும்!&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T11:42:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி நபர் ஒருவர் படுகாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/car-hits-cyclist-on-a9-road-in-kilinochchi-1788345480"></link>
            <id>https://ibctamil.com/article/car-hits-cyclist-on-a9-road-in-kilinochchi-1788345480</id>
            <summary type="text">கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.கிளிநொச்சி காவல் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி, விளாவோடை பகுதியில் இன்று (02-09-2026) இந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.</p><p>கிளிநொச்சி காவல் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி, விளாவோடை பகுதியில் இன்று (02-09-2026) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p>விபத்தில் காயமடைந்த நபர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த
நபர் மீது, கிளிநொச்சி பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதிவேகமாகச் சென்ற
மகிழுந்து (கார்) மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/565a91f5-86cb-47ae-9c08-ab7f2a7e8d64/26-6a980a1fadd69.webp' /></p><p>இந்த விபத்தில் பலத்த காயமடைந்த துவிச்சக்கர வண்டி ஓட்டுநர் உடனடியாக மீட்புக்
குழுவினரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-02T11:39:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் கைது... அமெரிக்காவில் விசாரணை; கதை அளந்துவிடும் சீமான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/arrested-in-canada-questioned-in-the-us-seeman-1788349355"></link>
            <id>https://jvpnews.com/article/arrested-in-canada-questioned-in-the-us-seeman-1788349355</id>
            <summary type="text">&amp;nbsp; மதுரையில் நடந்த நினைவேந்தல் கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்&amp;nbsp;,அமெரிக்காவில் தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மதுரையில் நடந்த நினைவேந்தல் கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் <a href="https://jvpnews.com/article/jaffna-boy-speech-goes-viral-sannathi-murugan-1787564643" target="_blank">சீமான்</a>&nbsp;,அமெரிக்காவில் தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுப் பேசியுள்ளமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.</p><p>
சமீபத்தில் மதுரையில் பேசிய சீமான், அமெரிக்கா சென்றபோது விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், அங்கு அதிகாரிகள் தன்னை "பாஸ்" (Boss) என்று அழைத்ததாகவும் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbdc1c25-d8b5-40cb-84aa-b3ec620a9644/26-6a980baca6379.webp' /></p><h2>அளந்துவிடும் கதைகள்</h2><p> </p><p>அத்துடன் தன்னிடம்&nbsp; முறையான விசா இருந்தபோதிலும் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாகவும் சீமான தெரிவித்தார் .</p><p></p><p>அதேவேளை&nbsp; 2009-ஆம் ஆண்டு கனடாவில் நடைபெற்ற தமிழ் சமூகக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றபோது,&nbsp;விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறி &nbsp; கனடா எல்லைச் சேவை முகமை (CBSA) அதிகாரிகளால் அவர் காவலில் வைக்கப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>அதேவேளை&nbsp; கடந்த காலங்களில்&nbsp; &nbsp;மக்கள் மத்தியில் பெரும்&nbsp; செல்வாக்கு&nbsp; பெற்ற&nbsp; நபராக இருந்த&nbsp; நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்&nbsp; சீமான் தற்போது&nbsp; அவரது&nbsp; அளந்துவிடும் கதைகளால்&nbsp; கடுமையாக&nbsp; விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றமை&nbsp; குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-02T11:39:42+00:00</updated>
        </entry>
    </feed>
