<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-02T02:50:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் நாய்களைக் கட்டுப்பாடின்றி உலாவ விட்ட நபர் விதிக்கப்பட்ட தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bc-man-ordered-to-pay-a-woman-1788314747"></link>
            <id>https://canadamirror.com/article/bc-man-ordered-to-pay-a-woman-1788314747</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், தனது நாய்களை சங்கிலியால் பிணைக்காமல் அழைத்துச் சென்று பெண் ஒருவரைக் கடிக்கக் காரணமான உரிமையாளருக்கு, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், தனது நாய்களை சங்கிலியால் பிணைக்காமல் அழைத்துச் சென்று பெண் ஒருவரைக் கடிக்கக் காரணமான உரிமையாளருக்கு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 1,139 டொலர்களை நஷ்டஈடாக வழங்குமாறு சிவில் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. </p><p>
கடந்த 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் யூசிஃப் தக்லா என்பவர் தனது இரு நாய்களையும் சங்கிலியால் பிணைக்காமல் அழைத்துச் சென்றபோது, வீட்டின் கேட் அருகே நின்றிருந்த வெய்ஷென் வாங் என்ற பெண்ணை அந்த நாய்கள் தாக்கி கடித்தன.</p><p> 
இச்சம்பவத்தினால் காயமடைந்த பெண், ஆம்புலன்ஸ் சேவைக்கட்டணம், வருமான இழப்பு, வடு நீக்கும் சிகிச்சை மற்றும் மன உளைச்சல் என்பவற்றுக்காக மொத்தம் 3,148 டொலர்கள் இழப்பீடு கோரி தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d5bd2c4-2aff-4f11-b406-0275283e04e0/26-6a97847d45d05.webp' /></p><p> </p><p>
நாய்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தவறிய உரிமையாளரின் அலட்சியமே இச்சம்பவத்திற்குக் காரணம் எனத் தீர்ப்பாய உறுப்பினர் ஜெப்ரி ட்ரோஸ்டியாக் டிக்காட்டினார். </p><p>
பாதிக்கப்பட்ட பெண் கோரிய சில தொகைகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாத நிலையில், ஆம்புலன்ஸ் சேவைக்காக 848 டொலர்கள் மற்றும் மன உளைச்சலுக்காக 150 டொலர்கள் உட்பட, தீர்ப்பாயக் கட்டணங்களுடன் சேர்த்து மொத்தம் 1,139 டொலர்களை வழங்குமாறு நாய் உரிமையாளருக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T02:49:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த தரப்பை பழிவாங்கிய அநுர அரசு - ஏமாற்றத்தில் நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-party-s-meeting-in-struggle-1788313085"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-party-s-meeting-in-struggle-1788313085</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணிக்கு மிகப்பெரிய இரண்டு விளையாட்டு மைதானங்களையும் வழங்க அந்தப் பகுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணிக்கு மிகப்பெரிய இரண்டு விளையாட்டு மைதானங்களையும் வழங்க அந்தப் பகுதி ம் மாநகர சபை மறுத்துள்ளது. </p><p>

குறித்த நாட்களில் வேறு தரப்பினரால் வாலிசிங்க ஹரிஸ்சந்திர விளையாட்டு மைதானமும் சல்காது விளையாட்டு மைதானமும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக அன்றையதினம் அவற்றை வழங்க முடியாது என அனுராதபுரம் மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளார். </p><p>

அத்துடன், இதற்கு பொருத்தமான வேறொரு தினத்தை ஒதுக்கிக் கொள்வது தொடர்பில் பரிசீலிக்குமாறும் அறிவித்துள்ளார்.</p><h2><b> 

கோரிக்கை நிராகரிப்பு</b></h2><p>எனினும், சல்காது மைதானத்தை பெறுவதற்காக தங்களால் முன்னரே விண்ணப்பிக்கப்பட்டிருந்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a3e577e-5756-494a-8e88-687ff48045fa/26-6a978e800dd2c.webp' /></p><p>இருந்த போதிலும், விண்ணப்பித்த வேறு ஒரு தரப்பினருக்கு குறித்த மைதானத்தை வழங்குவதற்கு மாநகர சபை செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன் வாலிசிங்க ஹரிஸ்சந்திர விளையாட்டு மைதானமும் மூன்றாவது தரப்பினரால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி தங்களுக்கு வழங்குவது மறுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் குற்றம் சுமத்துகின்றனர். </p><p>

இது தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் மேயரின் அறிவுறுத்தலுக்கமையவே மேற்கொள்ளப்பட்டதாகவும் மொட்டுக் கட்சியின் பிரதிநிதிகள் குற்றம் சுமத்துகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-02T02:48:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கழிவறைக்குள் பிறந்த குழந்தை - தப்பியோட முயன்ற இளம் தாய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/baby-found-in-a-toilet-1788315544"></link>
            <id>https://tamilwin.com/article/baby-found-in-a-toilet-1788315544</id>
            <summary type="text">
கேகாலை, கரவனெல்ல பொதுப் பேருந்து நிலையத்தின் பெண்கள் கழிவறையில், குழந்தை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தையை கைவிட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கேகாலை, கரவனெல்ல பொதுப் பேருந்து நிலையத்தின் பெண்கள் கழிவறையில், குழந்தை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>

புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தையை கைவிட்டுச் செல்ல முயற்சித்ததாக கூறப்படும் 30 வயதுடைய பெண் நேற்று நண்பகல் பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த பெண்ணினால் அந்த குழந்தை நேற்றைய தினம் பிரசவிக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது.</p><h2><b>கழிவறைக்குள் பிறந்த குழந்தை</b></h2><p>

பிரவித்த பச்சிளம் குழந்தையை கழிவறையிலிருந்த நீர் தொட்டிக்குள் வைத்துவிட்டு செல்ல அந்த பெண் முயன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eef86d06-4d73-4b7c-a549-785aa107dead/26-6a978c2aa3c5c.webp' /></p><p>சம்பவத்தை கண்ட பொதுமக்கள் அந்தப் பெண்ணைப் பிடித்து, பின்னர் அவரையும் குழந்தையும் கரவனெல்ல ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
குழந்தை நல்ல உடல் நலத்தில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p>]]></content>
            <updated>2026-09-02T02:38:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srilanka-vehicle-import-current-update-1788315269"></link>
            <id>https://tamilwin.com/article/srilanka-vehicle-import-current-update-1788315269</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான செலவு 241 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான செலவு 241 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;தனிநபர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான வாகனங்களை உள்ளடக்கிய இந்த இறக்குமதி செலவினம், 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பதிவான 182 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடும்போது, ​​ஒரு மாதத்தில் சுமார் 32 சதவீதம் அதிகரித்துள்ளது.</p><h2>வாகன இறக்குமதி&nbsp;செலவு </h2><p>

இதேவேளை, 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான ஒட்டுமொத்த செலவு 1,495 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் இருந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c9a294e-9b5d-4fb2-bd50-6f158cdb650b/26-6a978a80a78fa.webp' />&nbsp;</p><p>
</p><p>
மேலும், மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, ​​2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இறக்குமதி செலவு 19.6 சதவீதம் அதிகரித்து, 2,251 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
</p><p>
இந்த தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டு முழுவதும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான மொத்த செலவு 2.04 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-02T02:31:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[துண்டோடு அலையவிட்டார்கள்...காயப்படுத்திய சம்பவத்தை உடைத்த சூரி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/struggle-painful-incident-actor-soori-mandaadi-1788273295"></link>
            <id>https://viduppu.com/article/struggle-painful-incident-actor-soori-mandaadi-1788273295</id>
            <summary type="text">சூரிகாமெடி நடிகராக திகழ்ந்து தற்போது மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் தான் நடிகர் சூரி. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள மண்டாடி படத்தில் சூரி நடி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சூரி</h2><p>காமெடி நடிகராக திகழ்ந்து தற்போது மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் தான் நடிகர் சூரி. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள மண்டாடி படத்தில் சூரி நடித்துள்ளார். மண்டாடி படம் செப்டம்பர் 4 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e42e85f-bd3e-4c8a-bbeb-1fb158a75059/26-6a96e29165e3a.webp' /></p><p> அதில், ஒரு படத்திற்கு என்னை நடிக்க அழைத்தார்கள், ஒரு பெரிய நகைச்சுவை நடிகருடன் எனக்கு சீன் இருந்தது. ஷாட் எடுத்து முடித்தவுடன் இயக்குநரும், அந்த நடிகரும் சேர்ந்து மானிட்டார் பார்த்து ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தார்கள். பின் அந்த நகைச்சுவை நடிகர் பரிந்துரைத்த ஒருவரை எனக்கு பதிலாக நடிக்க வைத்தார்கள்.</p><p>நான் போட்டு வந்த சட்டையை கழற்றச்சொல்லி, அந்த நடிகருக்கு கொடுத்தார்கள். சட்டை அவருக்கு சேராததால் அதனை காஸ்டியும் குழுவினர் தூக்கி எங்கோ எறிந்துவிட்டார்கள் துண்டை வைத்து உடம்பை மறைத்துக் கொண்டு என் சட்டையை நான் தேடிக் கொண்டிருந்தேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a455a10-3379-4ee4-b82a-4f00b92a3042/26-6a96e292230fe.webp' /></p><p> அப்போது நான் நடிக்க வேண்டிய காட்சியை இன்னொருவர் நடிப்பதை பார்த்து என்னை மிகவும் காயப்படுத்தியது. அந்த அனுபவங்களை கடந்து தொடர்ந்து சினிமாவில் பயணித்ததே இன்று தன்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்ததாக சூரி பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-02T02:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தந்தை செல்வாவின் தூபியை இடித்த விசமிகள் - சி்.வி.கே.சிவஞானம் கடும் சீற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cvk-condemns-demolition-of-father-selva-monument-1788312917"></link>
            <id>https://ibctamil.com/article/cvk-condemns-demolition-of-father-selva-monument-1788312917</id>
            <summary type="text">யாழ். தெல்லிப்பளையில், வல்லை - அராலி வீதியில் இருக்கும் தென் இந்தியத் திருச்சபை இடுகாட்டில் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் நினைவுத் தூபியை அடையாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். தெல்லிப்பளையில், வல்லை - அராலி வீதியில் இருக்கும் தென் இந்தியத் திருச்சபை இடுகாட்டில் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் நினைவுத் தூபியை அடையாளந்தெரியாதோர் இடித்துச் சேதமாக்கியுள்ளனர்.</p><p>இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் தூபி உடைப்பைத் தாம் வன்மையாகக் கண்டிக்கின்றார் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் சி்.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.</p><p>ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">கைது செய்ய நடவடிக்கை</span></p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், "தெல்லிப்பளைப் பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் நினைவுத் தூபி அடையாளந் தெரியாத விஷமிகளால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது.&nbsp; தமிழரசுக் கட்சியைத் தற்போது விமர்சிப்பவர்கள் கூட பெரியவரின் செயலை விமர்சிப்பது கிடையாது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f869bf7a-89e7-415b-ada0-bbf61c9c3617/26-6a978730db372.webp' /></p><p>அத்தகையவரின் தூபியை உடைக்கும் இந்த வன்மச் செயலை மேற்கொண்டமையைத் தமிழரசுக் கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது.</p><p>அரசியல் வேறுபாடுகள் அல்லது முரண்பாடுகள் அரசியலில் இயல்பானவை. இருந்தபோதும் ஒரு நினைவுத் தூபியை இடிக்கும் அளவுக்கு அது இட்டுச் செல்வது ஏற்றுக்கொள்ள முடியாத காரியம் என்பதோடு இந்தச் செயல் அனைவர் நெஞ்சிலும் மற்றுமோர் இடியாகவே அமைகின்றது.
</p><p>
எனவே, இது தொடர்பில் எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கின்றோம். இந்தச் செயலைப் புரிந்த விஷமிகளைக் கைது செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T02:17:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[45 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் கரீனா கபூர்.. Stunning போட்டோஷூட்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/kareena-kapoor-khan-olive-green-pant-suit-photos-1788244855"></link>
            <id>https://cineulagam.com/article/kareena-kapoor-khan-olive-green-pant-suit-photos-1788244855</id>
            <summary type="text">பாலிவுட் திரையுலகில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர் நடிகை கரீனா கபூர் கான். இவர் நடிப்பில் அடுத்ததாக Daayra திரைப்படம் வரும் 18-ஆம் தேதி வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாலிவுட் திரையுலகில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர் நடிகை கரீனா கபூர் கான். இவர் நடிப்பில் அடுத்ததாக Daayra திரைப்படம் வரும் 18-ஆம் தேதி வெளியாகிறது. </p><p>நேற்று இப்படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கரீனா கபூர் கலந்துகொண்ட நிலையில், அவர் அணிந்திருந்த Olive green pant suit உடை அனைவரின் கவனத்தை ஈர்த்தது. இந்த உடையில் Stunning லுக்கில் ரசிகர்களை கவர்ந்த கரீனா கபூர், அந்த போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். </p><p>இதோ அந்த புகைப்படங்கள்:</p>]]></content>
            <updated>2026-09-02T02:07:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-rupee-fallen-against-dollar-1788313975"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-rupee-fallen-against-dollar-1788313975</id>
            <summary type="text">அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி 5.5 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் ஒகஸ்ட் மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி 5.5 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த ஆண்டின் ஒகஸ்ட் மாதம் இறுதி வரையிலான காலகட்டத்தில், இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது.</p><p>

எனினும் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பணவியல், நிதி மற்றும் முன்னெச்சரிக்கை கொள்கை நடவடிக்கைகளின் தாக்கத்தின் காரணமாக, கடந்த சில வாரங்களில் இலங்கை ரூபாயில் ஓரளவு மதிப்பு உயர்வு காணப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.</p><h2><b>

இலங்கை ரூபாவின் பெறுமதி</b></h2><p>இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணயக் கொள்வனவுகள் காரணமாக, சீன மக்கள் வங்கியுடனான வெளிநாட்டு நாணய பரிமாற்ற வசதியும் உள்ளடங்கலாக, மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு தொகையானது 6.6 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்வடைந்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e94c21b0-aa63-481d-b23a-7e7c5cec3cea/26-6a9784693c170.webp' /></p><p>கடந்த ஜுலை மாதம் முடிவடைந்த நிலவரத்திற்கமைய, இந்த தொகை பதிவாகியுள்ளது.
</p><p>
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமைகளின் தாக்கத்தை பிரதிபலிக்கும் வகையில், ஜூலை மாதத்தில் வெளிநாட்டு நடப்புக் கணக்கானது 142 மில்லியன் அமெரிக்க டொலர் பற்றாக்குறையைப் பதிவு செய்துள்ளது.
</p><p>
கடந்த ஜுலை மாதத்திற்காக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட வெளிநாட்டுத் துறைசார் செயற்பாடுகள் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
நடப்புக் கணக்கு தொடர்ச்சியாக இவ்வாறான பற்றாக்குறையைப் பதிவு செய்யும் நான்காவது மாதம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
</p>]]></content>
            <updated>2026-09-02T02:05:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் மற்றும் தங்க நகைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/four-men-robbed-about-6-crore-rupees-1788313110"></link>
            <id>https://tamilwin.com/article/four-men-robbed-about-6-crore-rupees-1788313110</id>
            <summary type="text">கொழும்பு&amp;nbsp; - தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள பயண முகவர் நிலையத்தில்&amp;nbsp;சுமார் 6 கோடி பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடித்து செல்லப்பட்டுள்ளதாக த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு&nbsp; - தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள பயண முகவர் நிலையத்தில்&nbsp;சுமார் 6 கோடி பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடித்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>நேற்று (01) பிற்பகல் மோட்டார் வாகனத்தில் வந்தவர்களே இவ்வாறு கொள்ளையடித்து சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.&nbsp;&nbsp;</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>குறித்த&nbsp;முகவர் நிலையத்திற்கு 4 பேர் வந்திருந்த நிலையில் பின்னர் அங்கிருந்த பணம் மற்றும் தங்கப் பொருட்களைக் கொள்ளை அடித்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1721cacd-d25b-4765-b29f-9c9701cdfdd0/26-6a97817496446.webp' /></p><p>சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T02:02:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 அரசியல் நயவஞ்சகத்தினால் எதிர்க்கட்சிகள் 22ம் திருத்தச் சட்டத்தை எதிர்க்கின்றன]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opposition-afraid-of-22nd-amendmend-1788314363"></link>
            <id>https://tamilwin.com/article/opposition-afraid-of-22nd-amendmend-1788314363</id>
            <summary type="text">&amp;nbsp;அரசியல் நவஞ்சகம் காரணமாக எதிர்க்கட்சிகள் 22ம் திருத்தச் சட்டமூலத்தை எதிர்ப்பதாக ஸ்ரீலங்கா தொழிலாளர் மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
22 ஆவது அரச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அரசியல் நவஞ்சகம் காரணமாக எதிர்க்கட்சிகள் 22ம் திருத்தச் சட்டமூலத்தை எதிர்ப்பதாக ஸ்ரீலங்கா தொழிலாளர் மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
</p><p>22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக நீதிமன்றில் மனுக்களைத் தாக்கல் செய்வது ஜனநாயகத்தையோ அல்லது நீதிமன்றத்தின் சுயாதீனத்தையோ பாதுகாப்பதற்காக அல்ல என முன்னணியின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.</p><p> மாறாக எதிர்க்கட்சியின் சட்டத்தின் முன் சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வரும் என்ற அச்சத்தினாலேயே இந்த சட்ட மூலத்தை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5441d28-04ee-4fbe-8f8a-74d8e3a33ac1/26-6a9782fcefc3a.webp' /></p><p>
</p><p>ஹட்டன் நகரில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அந்த முன்னணியின் இதனைத் தெரிவித்தனர்.</p><p>
ராஜபக்ச குடும்பத்தினர் நிரந்தரமாக ஆட்சியில் இருப்பதற்கு வழியமைத்த 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்ட போது மௌனம் காத்தவர்கள், (01) ஆம் திகதி 22 ஆவது திருத்தத்திற்கு எதிராக ஜனநாயகத்தின் ‘சூப்பர்மேன்களாக’ தோற்றமளிக்க முயல்கின்றனர் எனக் குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>அன்று முழு நாடும் குடும்ப ஆட்சிக்கு உட்படுத்தப்பட்ட போது எந்தவொரு மனுவையும் தாக்கல் செய்யாத ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட தரப்பினர், இன்று நீதிமன்றத்தை நாடுவது மக்களின் சுதந்திரத்திற்காக அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>
ஜனநாயகம் அல்லது மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, தற்போதைய எதிர்க்கட்சியின் சில அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவே செயற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>எதிர்வரும் சில மாதங்களுக்குள் இடம்பெறக்கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறை தண்டனைகளிலிருந்து தப்பிப்பதற்காகவே இத்தரப்பினர் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக இவ்வாறு செயற்படுவதாக சமீர பெரேரா குற்றஞ்சாட்டியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T02:00:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்திற்கு வரி செலுத்த தவறியவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-case-against-those-who-fail-to-pay-taxes-1788313377"></link>
            <id>https://tamilwin.com/article/court-case-against-those-who-fail-to-pay-taxes-1788313377</id>
            <summary type="text">அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்த தவறியவர்களுக்கு எதிராக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்படடுள்ளது. 

அதற்கம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்த தவறியவர்களுக்கு எதிராக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்படடுள்ளது. </p><p>

அதற்கமைய 57 நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராகக் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
</p><p>
உள்நாட்டு இறைவரி ஆணையாளர் 57 வழக்குகளையும் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்திற்குத் தனித்தனியாகக் அனுப்பி வைத்துள்ளார்.
</p><h2><b>
வழக்கு தாக்கல்</b></h2><p>கொழும்பில் உள்ள தொழிலதிபர்கள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் முக்கிய வணிக நிறுவனங்களின் குழுவிற்கு எதிராகவே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/640065d8-b40a-444c-90c4-45efff97df12/26-6a978059f0512.webp' /></p>]]></content>
            <updated>2026-09-02T01:48:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல பாடகர் பிரியங்கர பெரேரா காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/veteran-singer-priyankara-perera-dies-at-64-1788312969"></link>
            <id>https://tamilwin.com/article/veteran-singer-priyankara-perera-dies-at-64-1788312969</id>
            <summary type="text">பிரபல பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேரா தனது 64ஆவது வயதில் காலமானார்.
நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேரா தனது 64ஆவது வயதில் காலமானார்.</p><p>
நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (01) இரவு காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>திரைப்பட நடிகராகவும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இவர், பிரபல பாடகர் மில்டன் பெரேராவின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6af2b6d0-18eb-4f02-af3c-8becbe2f1361/26-6a977d8a8d840.webp' /></p><p>
'சுபுன் சதக்', 'சந்துன் கஸே சமன் வெலக்', 'சிகுருலியா', 'அகாத சாகரயே' போன்ற பல காலத்தால் அழியாத பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம்பெற்றிருந்தார்.
</p><p>திரைப்படங்கள், தொலைக்காட்சி நாகடகங்கள், பாடல்கள் என பல்துறைகளில் திறமைகளை வெளிப்படுத்தியுள்ள பிரியங்கர பெரேரா பல விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>அன்னாரது இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T01:36:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் இரண்டு வயது குழந்தைக்கு நேர்ந்த துயரம்! தொடரும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2-year-old-child-dies-in-batticaloa-1788311032"></link>
            <id>https://ibctamil.com/article/2-year-old-child-dies-in-batticaloa-1788311032</id>
            <summary type="text">மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் இரண்டு வயது குழந்தையொன்று நீர் நிரப்பப்பட்டிருந்த வாளிக்குள் விழுந்து உயிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் இரண்டு வயது குழந்தையொன்று நீர் நிரப்பப்பட்டிருந்த வாளிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளது.</p><p>

நேற்று செவ்வாய்க்கிழமை (01) ஆம் திகதி காலை 10.30 மணியளவில், வீட்டின் வாசலில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பெரிய வாளியின் அருகே குழந்தை விளையாடிக் கொண்டிருந்துள்ளது.</p><p>

இதன்போது, எதிர்பாராதவிதமாக சிறுவன் தலைகீழாக வாளிக்குள் விழுந்ததில் நீரில் மூழ்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.</p><p></p><h2>உயிரிழப்பு</h2><p>
உடனடியாக உறவினர்கள் குழந்தை மீட்டு பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், வழியிலேயே சிறுவன் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a796199e-e206-4f77-8d24-32ad8e2ffa47/26-6a9775fa04832.webp' /></p><p>
</p><p>
சம்பவத்தில் கற்சேனை, முல்லை வீதியைச் சேர்ந்த 2 வயதும் 8 மாதங்களுமான நந்தகோபன் கிசோத் என்ற குழந்தையே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.</p><h2>உறவினர்களிடமும் விசாரணை</h2><p>

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாக திடீர் மரண விசாரணை அதிகாரி வீ.ஆர். மகேந்திரன், பழுகாமம் வைத்தியசாலைக்கு வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்டதுடன், உறவினர்களிடமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30cbd17a-ae0c-49cd-b674-198dec802589/26-6a9778220a7cb.webp' /></p><p>
</p><p>
அதனைதொடர்ந்து, உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக சிறுவனின் சடலம் நேற்று(01) மாலை 6.00 மணியளவில் பழுகாமம் வைத்தியசாலையிலிருந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இச்சம்பவம் குறித்து கொக்கட்டிச்சோலை காவல்துறையினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T01:26:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[முறைகேடாக செயற்பட்ட உயர் அதிகாரியை பணியிலிருந்து அதிரடியாக நீக்கிய அநுர அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/port-managing-director-removed-from-post-1788311394"></link>
            <id>https://tamilwin.com/article/port-managing-director-removed-from-post-1788311394</id>
            <summary type="text">இலங்கை துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் கணக ஹேமச்சந்திர உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் கணக ஹேமச்சந்திர உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.</p><p>

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலகவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. </p><p>

சமகால அநுர அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், துறைமுகங்கள் அமைச்சராகப் பதவியேற்ற விஜித்த ஹேரத், துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளராக கணக ஹேமச்சந்திரவை நியமித்தார். </p><h2><b>பல குற்றச்சாட்டுகள்</b></h2><p>எனினும், திருகோணமலை துறைமுகத்திலிருந்த வழிகாட்டிப் படகை தவறாகப் பயன்படுத்தி 20 கோடி ரூபாய்க்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியமை உட்பட பல குற்றச்சாட்டுகள் துறைமுக தொழிற்சங்கங்களால் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbc508ba-0c9b-434f-819c-d23da84fd9ef/26-6a977a9c48085.webp' /></p><p>இந்நிலையில் கணக ஹேமசந்திர பதிவியில் இருந்து நீக்க எடுத்த முடிவுக்கு துறைமுக கூட்டுத் தொழிற்சங்க கூட்டமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. </p><p>

இத்தீர்மானம் நாட்டின் பொருளாதாரத்திற்கு எடுக்கப்பட்ட நல்லதொரு தீர்மானம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p>]]></content>
            <updated>2026-09-02T01:25:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[கயாடு லோஹர் சேலையில் அழகிய போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/kayadu-lohar-new-cute-photos-in-saree-1788311669"></link>
            <id>https://cineulagam.com/article/kayadu-lohar-new-cute-photos-in-saree-1788311669</id>
            <summary type="text">நடிகை கயாடு லோஹர் சேலையில் அழகிய போட்டோஷூட். ஒரே படத்தில் சென்சேஷன் நடிகையாக மாறிய அவர் பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கு, மலையாளம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை கயாடு லோஹர் சேலையில் அழகிய போட்டோஷூட். ஒரே படத்தில் சென்சேஷன் நடிகையாக மாறிய அவர் பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார்.</p><p>

தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழிகளிலும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
</p><p>
Kayadu Lohar தற்போது செம அழகாக சேலையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T01:14:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் பெண் அரச அதிகாரிக்கு அரங்கேற்றப்பட்ட தகாத செயல் ; முன்னாள் மேயருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incident-involving-female-government-officer-1788309773"></link>
            <id>https://jvpnews.com/article/incident-involving-female-government-officer-1788309773</id>
            <summary type="text">பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் மேயர் எதிர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் மேயர் எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">



சந்தேகநபர் உடல்நலக் குறைவு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால்,&nbsp; நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்தப்படவில்லை.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2eaa7f16-bdfe-47d5-a76c-c01b1c6205f9/26-6a97710ea8765.webp' /></p><h2 style="text-align: justify; ">விளக்கமறியல்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


சிறைச்சாலை அதிகாரிகளின் அறிக்கைகளை பரிசீலித்த நீதிவான், சந்தேகநபரின் விளக்கமறியலை மேலும் நீடிக்க உத்தரவிட்டார்.
</p><p style="text-align: justify; ">


அக்கரைப்பற்று மாநகரசபை மேயராகப் பதவி வகித்த காலத்தில், அங்கு பணியாற்றிய பெண் அரச உத்தியோகத்தர் ஒருவரை திருமணம் செய்வதாகக் கூறி, பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



குறித்த பெண் சமூக வலைத்தள நேரலை மூலம் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.</p><p style="text-align: justify; "> விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
</p><p style="text-align: justify; ">


கடந்த மாதம் 18ஆம் திகதி முதன்முறையாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், பின்னர் ஓகஸ்ட் 19ஆம் திகதி மற்றும் செப்டம்பர் முதலாம் திகதி என தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக செப்டம்பர் 9ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-02T01:13:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சச ராஜயோகத்தில் சனி பகவான் ; உச்சத்திற்கு செல்லப்போகும் ராசிகள் இவர்கள் தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/saturn-in-shasha-rajayoga-1788311536"></link>
            <id>https://jvpnews.com/article/saturn-in-shasha-rajayoga-1788311536</id>
            <summary type="text">&amp;nbsp;நீதி பகவானாக அறியப்படும் சனிபகவானின் மாற்றம் அனைத்து ராசியினருக்குமே தாக்கத்தை ஏற்படுத்தும்.. அதிலும் சச ராஜயோகம் என்றாலே மிகப்பெரிய அதிர்ஷ்டம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;நீதி பகவானாக அறியப்படும் சனிபகவானின் மாற்றம் அனைத்து ராசியினருக்குமே தாக்கத்தை ஏற்படுத்தும்.. அதிலும் சச ராஜயோகம் என்றாலே மிகப்பெரிய அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தம்.</p><p style="text-align: justify; ">சச ராஜயோகத்தில் சனி வலிமை பெறுவதால், நீண்ட காலமாக கஷ்டம், தடைகள், தாமதங்களை சந்தித்து வந்த சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30c3a1b7-892d-407c-bc03-c4ad582df10c/26-6a9777f21db79.webp' /></p><h2 style="text-align: justify; ">எந்தெந்த ராசிகள்</h2><p style="text-align: justify; "><b>ரிஷபம்:
</b>ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் சாதகமான பலன் கொண்டு வந்து சேர்க்கப் போகிறது. நீண்ட நாட்களாக தொழிலில் எதிர்பார்த்த வருமானமும் முன்னேற்றமும் கிடைக்கும். கடன் சுமை குறையும். உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரத்தை பெறுவீர்கள்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "><b>

துலாம்:
</b>துலாம் ராசிக்காரர்களுக்கு சச ராஜயோகம் இவர்களுக்கு தொடர்ந்து சந்தித்து வந்த தாமதங்கள் தடைகளில் இருந்து விடுதலை கொடுக்கப் போகிறது. திடீர் வேலை மாற்றம் வருமானத்தில் உயர்வு ஆகியவை பெறுவீர்கள். சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் உண்டு. எதையும் திட்டமிட்டு செய்வதால் நீங்கள் அதற்குரிய பலன்களை பெறுவீர்கள்.&nbsp;</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "><b>மகரம்:
</b>சனிபகவானுடைய சொந்த ராசியான மகர ராசிக்காரர்களுக்கு சனி பகவான் உடைய வலிமையால் வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கம் கிடைக்கும். கடந்த காலங்களில் சந்தித்த சோதனைகள் உழைப்பின் மதிப்பை உணர்த்தும் வகையில் இவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அவசரப்படாமல் திட்டமிட்டு செய்வதால் நல்ல பலன் உண்டு. பெயர் புகழ் உயரப் போகிறது.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-02T01:12:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரேஞ்ச் ரோவரின் முதல் முழுமையான மின்சார கார் அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/range-rover-debuts-first-electric-suv-1788311556"></link>
            <id>https://news.lankasri.com/article/range-rover-debuts-first-electric-suv-1788311556</id>
            <summary type="text">Range Rover debuts first electric SUV: ரேஞ்ச் ரோவர் தனது முதல் முழு மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது.ரேஞ்ச் ரோவர்&amp;nbsp;மின்சார கார்பிரபல சொகுசு கார...</summary>
            <content type="html"><![CDATA[<p>Range Rover debuts first electric SUV: ரேஞ்ச் ரோவர் தனது முதல் முழு மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது.</p><h2>ரேஞ்ச் ரோவர்&nbsp;மின்சார கார்</h2><p>பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ரேஞ்ச் ரோவர், தனது முதல் முழுமையான மின்சார மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. 
இது, நிறுவனத்தின் மின்சார வாகன உற்பத்தி திட்டத்தில் மிகப்பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1dee748-c232-40d7-91d0-b5d8c5bf3b72/26-6a97780559b42.webp' /></p><p>இந்த புதிய Range Rover Electric மாடல், இங்கிலாந்தின் Solihull தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 10,500 பணியாளர்கள் மின்சார வாகன உற்பத்திக்காக புதிதாகப் பயிற்சி பெற்றுள்ளனர்.</p><p> மேலும், Wolverhampton Electric Propulsion Centre-இல் பேட்டரி மற்றும் மின்சார இயக்கக் கருவிகள் தயாரிக்கப்படுகின்றன.
</p><p></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">REVEALED: The First-Ever All-Electric Range Rover! ⚡<br><br>Range Rover has officially ushered in a new era, revealing its first-ever all-electric flagship luxury SUV!<br><br>⚡️Dual-motor with 542hp &amp; 850 Nm!<br>🚀 0–60 mph in 4.3 seconds!<br>🔋 Up to 372 miles of range!<br>🔌 0–80% in just 22… <a href="https://t.co/cEI6l6YpyF">pic.twitter.com/cEI6l6YpyF</a></p>&mdash; carwow (@carwowuk) <a href="https://x.com/carwowuk/status/2094923594270670853?ref_src=twsrc%5Etfw">September 1, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இந்த வாகனம் 118kWh பேட்டரி கொண்டது. ஒரே சார்ஜில் 530 கி.மீ. வரை பயணம் செய்யும் திறன் கொண்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், 350kW DC fast charging வசதி மூலம் மிக வேகமாக சார்ஜ் செய்ய முடியும்.
</p><p>
ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக், Mercedes-Maybach EQS மற்றும் Lotus Eletre போன்ற சொகுசு மின்சார SUV-களுடன் போட்டியிடும். 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p></p><p>நிறுவனம் கடந்த ஆண்டு சைபர் தாக்குதல் மற்றும் சப்ளை சேன் சிக்கல்கள் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது. அதனால், இந்த மாடல் அறிமுகம் ஒரு வருடம் தாமதமானது. இருப்பினும், புதிய மின்சார மாடல், நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.
</p><p>
ரேஞ்ச் ரோவர் மேலாளர் Martin Limpert கூறியதாவது: “இது பத்து ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சி மற்றும் பொறியியல் முயற்சியின் விளைவு. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும்” என்றார்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T01:09:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை பிரக்யா ஜெய்ஷ்வால் கிளாமர் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/pragya-jaiswal-sizzling-new-glam-stills-1788310982"></link>
            <id>https://cineulagam.com/article/pragya-jaiswal-sizzling-new-glam-stills-1788310982</id>
            <summary type="text">நடிகை பிரக்யா ஜெய்ஷ்வால் தற்போது தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகையாக இருப்பவர். அவர் தொடர்ந்து அதிகம் கிளாமர் காட்டி ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை பிரக்யா ஜெய்ஷ்வால் தற்போது தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகையாக இருப்பவர். அவர் தொடர்ந்து அதிகம் கிளாமர் காட்டி ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
</p><p>
தற்போது பிரக்யா ஜெய்ஷ்வால் ட்ரெண்டி லுக்கில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க.&nbsp;</p><p>ரசிகர்களிடம் இந்த போட்டோக்களுக்கு அதிகம் லைக்குகள் குவிந்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-02T01:03:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு, கிழக்கில் கொட்டித் தீர்க்கப்போகும் இடியுடன் கூடிய மழை! மக்களுக்கு முன்னெச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/thunderstorms-expected-northern-eastern-provinces-1788309482"></link>
            <id>https://ibctamil.com/article/thunderstorms-expected-northern-eastern-provinces-1788309482</id>
            <summary type="text">




வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்துவரும் சில தினங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>




வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்துவரும் சில தினங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
</p><p>
சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று இன்று மதியம் சுமார் 12.10 மணியளவில் ஆனமடு, மொரகொல்லாகம, தம்புள்ளை, மன்னம்பிட்டி மற்றும் வாழைச்சேனை போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

அதன்படி, வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டத்திலும் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p>
</p><p>
எவ்வாறாயினும், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb96d70f-e111-4847-82b6-3ad6c77b1514/26-6a9772939b131.webp' /></p><p>
</p><p>
அத்தோடு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.</p><h2>ஓரளவு பலத்த காற்று</h2><p>
</p><p>
மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 - 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் ஓரளவு கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acb83e34-2848-4ce7-982e-e5ef9198c267/26-6a977292e611c.webp' /></p><p>
</p><p>
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p></p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table></h5>]]></content>
            <updated>2026-09-02T01:01:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுக்கு மறக்க முடியாத பாடம் கற்பிக்கப்படும் ; ஈரான் உச்சத் தலைவரின் எச்சரிக்கையால் அதிரும் உலகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-leader-us-will-be-taught-unforgettable-lesson-1788310819"></link>
            <id>https://canadamirror.com/article/iran-leader-us-will-be-taught-unforgettable-lesson-1788310819</id>
            <summary type="text">அமெரிக்க எதிரிக்கு ஈரான் மறக்க முடியாத பாடங்களைக் கற்பிக்கும் என ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயத்துல்லா மொஜ்தபா கமேனி எச்சரித்துள்ளார். தமது எக்ஸ் (x) த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க எதிரிக்கு ஈரான் மறக்க முடியாத பாடங்களைக் கற்பிக்கும் என ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயத்துல்லா மொஜ்தபா கமேனி எச்சரித்துள்ளார்.</p><p> தமது எக்ஸ் (x) தளத்தில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6924a39-27ad-4627-8647-343b138b12b2/26-6a97752448ac5.webp' /></p><p>
</p><p>
அத்துடன்,அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களுக்கு கடுமையான மற்றும் விரிவான பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் உயர்மட்ட இராணுவக் கட்டளை மற்றும் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p>

இந்தநிலையில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.</p><p>

அமெரிக்கப் படைகள் தங்கியுள்ள தளங்கள் மற்றும் ரேடார் கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.</p><p>

ஜோர்டான் வான்வெளிக்குள் நுழைந்த 13 பெலிஸ்டிக் ஏவுகணைகளில் 10 ஏவுகணைகளை ஜோர்டான் நாட்டு வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்துள்ளன.
</p><p>எனினும், ஜோர்டானில் உள்ள கேம்ப் டிடின் அமெரிக்க முகாம் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் புரட்சிக்கர காவல்படை தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-02T01:00:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் மின் நிலையம் அருகே வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு - மக்கள் வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/explosives-found-near-german-power-plant-1788310770"></link>
            <id>https://news.lankasri.com/article/explosives-found-near-german-power-plant-1788310770</id>
            <summary type="text">Explosives found near German power plant: ஜேர்மனியில் மின் நிலையம் அருகே வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டுகள்..ஜேர்மனியின் சார்லாந...</summary>
            <content type="html"><![CDATA[<p>Explosives found near German power plant: ஜேர்மனியில் மின் நிலையம் அருகே வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
வெடிகுண்டுகள்..</h2><p>ஜேர்மனியின் சார்லாந்து மாநிலத்தில் உள்ள ஒரு மின் நிலையம் அருகே பல வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படைகள் உடனடியாக அந்தப் பகுதியைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03865dd2-7759-4aeb-9bf5-7514e6e76e53/26-6a9774f446351.webp' /></p><h2>சந்தேகத்திற்கிடமான பைகள்</h2><p>அறிக்கைகளின்படி, மின் நிலையத்தின் வெளிப்புற பகுதியில் சந்தேகத்திற்கிடமான பைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் வெடிகுண்டுகள் இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் அழைக்கப்பட்டு, அவற்றை பாதுகாப்பாக அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.</p><p>
இந்த சம்பவம், ஜேர்மனியில் சமீபத்தில் அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சங்கள் மற்றும் அரசியல் பதற்றங்கள் காரணமாக பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p></p><p>மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி உற்பத்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தும் முயற்சிகள், நாட்டின் மின்சார விநியோகத்தையும், பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
</p><p>
ஜேர்மன் உள்துறை அமைச்சகம், “இது மிகக் கடுமையான பாதுகாப்பு பிரச்சினை. சம்பவம் தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெறுகிறது. இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை கண்டறிய முயற்சி நடைபெறுகிறது” என தெரிவித்துள்ளது.
</p><p>
சம்பவம் நடந்த இடம் அருகே உள்ள மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பள்ளிகள், அலுவலகங்கள், போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
</p><p></p><p>ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு அமைப்புகள், ஜேர்மனியுடன் இணைந்து விசாரணை நடத்துகின்றன. “மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவது, நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை குறிவைக்கும் முயற்சி” என அவர்கள் கூறினர்.
</p><p>
இந்த சம்பவம், கடந்த மாதம் ஜேர்மனியில் நடந்த ட்ரோன் தாக்குதல் முயற்சி மற்றும் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு நடந்துள்ளதால், மக்கள் மத்தியில் அச்சத்தை அதிகரித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T00:56:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக் பாஸ் தொகுத்து வழங்க சல்மான் கான் வாங்கும் பிரம்மாண்ட சம்பளம்! இத்தனை கோடியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/salman-khan-bigg-boss-20-salary-1788310540"></link>
            <id>https://cineulagam.com/article/salman-khan-bigg-boss-20-salary-1788310540</id>
            <summary type="text">ஹிந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். கடந்த 17 வருடங்களாக அவர் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.ஒவ்வொரு வருடமும் அவர் சம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹிந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். கடந்த 17 வருடங்களாக அவர் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.</p><p>ஒவ்வொரு வருடமும் அவர் சம்பளம் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. பிக் பாஸ் 19 தொகுத்து வழங்க அவர் 300 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c16bf1f-b043-43b5-bb1c-1e495c890986/26-6a97740d818b6.webp' /></p><p>
</p><h2>பிக் பாஸ் 20
</h2><p>விரைவில் பிக் பாஸ் 20ம் சீசன் ஹிந்தியில் தொடங்குகிறது. </p><p>

அதை தொகுத்து வழங்க சுமார் 150 - 200 கோடி வரை சல்மான் கான் சம்பளமாக பெறலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T00:55:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தை செல்வா தூபி உடைப்பை கண்டிக்கின்றது தமிழரசுக் கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/itak-condemns-the-demolition-of-father-selva-1788308964"></link>
            <id>https://tamilwin.com/article/itak-condemns-the-demolition-of-father-selva-1788308964</id>
            <summary type="text">இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் தூபி உடைப்பைத் தாம்
வன்மையாகக் கண்டிக்கின்றார் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர்
சி்.வி.கே.சிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் தூபி உடைப்பைத் தாம்
வன்மையாகக் கண்டிக்கின்றார் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர்
சி்.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
</p><p>
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>&nbsp;தமிழரசுக் கட்சி</h2><p>
</p><p>
"தெல்லிப்பளைப் பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் நினைவுத் தூபி அடையாளந் தெரியாத விஷமிகளால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது.</p><p>

தமிழரசுக் கட்சியைத் தற்போது விமர்சிப்பவர்கள் கூட பெரியவரின் செயலை
விமர்சிப்பது கிடையாது.

அத்தகையவரின் தூபியை உடைக்கும் இந்த வன்மச் செயலை மேற்கொண்டமையைத் தமிழரசுக்
கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f665f3e-8438-46b4-9d32-d7f6ec3b2a66/26-6a97716084e6f.webp' /></p><p>
</p><p>
அரசியல் வேறுபாடுகள் அல்லது முரண்பாடுகள் அரசியலில் இயல்பானவை. இருந்தபோதும்
ஒரு நினைவுத் தூபியை இடிக்கும் அளவுக்கு அது இட்டுச் செல்வது ஏற்றுக்கொள்ள
முடியாத காரியம் என்பதோடு இந்தச் செயல் அனைவர் நெஞ்சிலும் மற்றுமோர் இடியாகவே
அமைகின்றது. </p><p>எனவே, இது தொடர்பில் எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கின்றோம்.

இந்தச் செயலைப் புரிந்த விஷமிகளைக் கைது செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட
வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T00:44:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலுக்கு சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த கதி - சடலமாக கரையொதுங்கிய நால்வர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/4-family-members-death-in-gampaha-1788308367"></link>
            <id>https://tamilwin.com/article/4-family-members-death-in-gampaha-1788308367</id>
            <summary type="text">கம்பஹா - ஜாஎல, பமுனுகம பகுதியில் அமைந்துள்ள எபமுல்ல கடற்கரையில் நீராடச்
சென்று இராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமான 13 வயது சிறுவனின்
சடலம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா - ஜாஎல, பமுனுகம பகுதியில் அமைந்துள்ள எபமுல்ல கடற்கரையில் நீராடச்
சென்று இராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமான 13 வயது சிறுவனின்
சடலம் மீட்கப்பட்டுள்ளது.</p><p>இந்த சடலமானது நேற்றைய தினம்(01.09.2026) கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>ஒரே குடும்பத்தைச் சேர்ந்த&nbsp;&nbsp;4 பேர்</h2><p> இதன் மூலம் கடலில் அடித்துச்
செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.</p><p>

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேளையில் கடலில் நீராடச் சென்ற ஒரே
குடும்பத்தைச் சேர்ந்த தாயார் மற்றும் அவரது மூன்று பிள்ளைகள் உட்பட 4 பேர்
பலத்த அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/397db5f0-d22a-4a2a-8153-38609100a928/26-6a976de8baf0f.webp' /></p><p>நேற்று முன்தினம் காலை மேற்கொள்ளப்பட்ட தீவிர தேடுதலில் 35
வயதுடைய தாய் மற்றும் 4 வயது, 12 வயதுடைய இரு சிறுமிகளின் சடலங்கள்
மீட்கப்பட்ட நிலையில், தேடப்பட்டு வந்த 13 வயது சிறுவனின் சடலம் நேற்று
செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது. </p><p>சம்பவம் நடந்ததிலிருந்து பொலிஸாரும், கடற்படையினரும், அந்தப் பகுதி கடலோர
மீட்புக் குழுவினரும் இணைந்து எபமுல்ல கடற்கரைப் பகுதி முழுவதும் தீவிர
தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டே அனைத்துச் சடலங்களையும் மீட்டுள்ளனர்.
</p><p>
இந்தப் பகுதியில் கடலில் நீராடும் போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன்
இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T00:37:26+00:00</updated>
        </entry>
    </feed>
