<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-24T06:40:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நியூசிலாந்திலும் சிறுவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/new-zealand-consider-ban-on-social-media-children-1787553429"></link>
            <id>https://canadamirror.com/article/new-zealand-consider-ban-on-social-media-children-1787553429</id>
            <summary type="text">&amp;nbsp; 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையிலான புதிய சட்டமூலம் ஒன்றை நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையிலான புதிய சட்டமூலம் ஒன்றை நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக அந்தநாட்டின் பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் அறிவித்துள்ளார்.
</p><p>
இந்த சட்ட விதிமுறைகளை பின்பற்றத் தவறும் சமூக ஊடக நிறுவனங்களின் சர்வதேச வருவாயில் (Global Revenue) 10% வரை அபராதமாக விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be088d30-06fb-4024-a00c-faf8d066eddf/26-6a8be6975788f.webp' /></p>]]></content>
            <updated>2026-08-24T06:34:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சமிந்த விஜேசிறிக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bail-granted-to-wijesiri-who-sentenced-to-prison-1787553202"></link>
            <id>https://jvpnews.com/article/bail-granted-to-wijesiri-who-sentenced-to-prison-1787553202</id>
            <summary type="text">பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.</p><p> </p><p></p><p>தண்டனைக்கு எதிராகத் தனது சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீடு செய்து, பதுளை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை இன்று (24) பரிசீலித்த பின்னரே அவர் இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1910407-30c6-4f0e-87d0-98053942c08e/26-6a8be5b436ad4.webp' /></p><p>இதன்போது, சமிந்த விஜேசிறியை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p> 

அத்துடன், நீதிமன்றத்தின் அனுமதியின்றி நாடாளுமன்ற உறுப்பினர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T06:33:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமிந்த விஜேசிறி எம்.பிக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mp-chaminda-wijesiri-granted-bail-1787552150"></link>
            <id>https://tamilwin.com/article/mp-chaminda-wijesiri-granted-bail-1787552150</id>
            <summary type="text">2019ஆம் ஆண்டு இரண்டு பொலிஸ் அதிகாரிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்து, அவர்களைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019ஆம் ஆண்டு இரண்டு பொலிஸ் அதிகாரிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்து, அவர்களைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு பதுளை மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.</p><p>


தனக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை பரிசீலித்த பதுளை மேல் நீதிமன்றம் இந்த பிணை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae788241-1deb-4379-8cc7-37825d7a440c/26-6a8be566c306a.webp' /></p><p>இருப்பினும், பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும், நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி வெளிநாடு செல்ல அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T06:33:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருவுக்கு உருவாகும் சந்தேகம்.. உச்சக்கட்ட பதற்றத்தில் கவிதா.. திருமாங்கல்யத்தில் இன்று!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/zee-tamizh-thirumangalyam-serial-latest-episode-1787550271"></link>
            <id>https://cineulagam.com/article/zee-tamizh-thirumangalyam-serial-latest-episode-1787550271</id>
            <summary type="text">திருமாங்கல்யம்&amp;nbsp;தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் திர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>திருமாங்கல்யம்&nbsp;</h2><p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் திருமாங்கல்யம். </p><p>கடந்த எபிசோடில், மகாவின் அறிவுரையை ஏற்றுக்கொண்ட திவ்யா, காஞ்சனாவிடம் மனம் திறந்து பேச முடிவெடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று நடைபெறவுள்ள பரபரப்பான திருப்பங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e17f927-a478-4e29-bd44-7f5f29a94b9e/26-6a8bda41544a1.webp' /></p><p>
</p><p>
இன்றைய எபிசோடில், காஞ்சனா திவ்யாவை வீட்டிற்கு வருமாறு அழைக்கிறார். ஆனால் திவ்யா, "நான் நாளைக்கு வருகிறேன்" என்று கூறுகிறார். அதற்கான காரணத்தை காஞ்சனா கேட்க, அலுவலகத்தில் நடந்த தீ விபத்துக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க சித்தியுடன் செல்ல இருப்பதாக திவ்யா தெரிவிக்கிறார். இதைக் கேட்டு கவிதா அதிர்ச்சியடைகிறார்.
</p><p>
அந்த நேரத்தில் திரு, அலுவலக வேலைகளை பின்னர் கவனிக்கலாம் என்றும், முதலில் வீட்டிற்கு செல்லுமாறும் திவ்யாவிடம் கூறுகிறார். இதையடுத்து திவ்யா, காஞ்சனாவுடன் வீட்டிற்குப் புறப்படுகிறார். மறுபக்கம், அம்பிகா மகாவிடம் மறுநாள் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று கூறுகிறார்.
</p><p>
இதற்கிடையில் திரு, கவிதாவை சந்தித்து அலுவலகத்தில் செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து விசாரிக்கிறார். அனைத்தும் தயாராக இருப்பதாக கவிதா பதிலளிக்கிறார். மேலும், திவ்யா அலுவலகத்திற்கு வரப்போவதாக கூறியிருப்பதால் என்ன செய்வது என்று தெரியவில்லை என திரு தனது கவலையை வெளிப்படுத்துகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8c9ec21-1409-443e-8740-be79982c8cf0/26-6a8bda4208933.webp' /></p><p>
</p><p>
பின்னர் திரு ஏற்பாடு செய்த டிடெக்டிவ், அலுவலகத்தில் நடந்த தீ விபத்துக்கும், மகாவை கொலை செய்ய முயன்ற சம்பவத்துக்கும் ஒரே நபர்தான் காரணம் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவிக்கிறார். இந்த தகவலைக் கேட்டு கவிதா கடும் பதற்றமடைகிறார். </p><p>அதேசமயம், இந்த சம்பவங்களின் பின்னணியில் கௌதம் இருக்கக்கூடும் என்ற சந்தேகமும் திருவின் மனதில் வலுப்பெறுகிறது.

நிலைமை மோசமாகி வருவதை உணரும் கவிதா, உடனடியாக கௌதமுக்கு போன் செய்து, திரு அனுப்பிய டிடெக்டிவ் உண்மைக்கு மிக அருகில் வந்துவிட்டதாக எச்சரிக்கிறார். </p><p>அதற்கு கௌதம், "எல்லாவற்றுக்கும் காரணமான மகாவை நான் சும்மா விட மாட்டேன். அவள் என்னை மிகவும் அவமானப்படுத்திவிட்டாள்" என்று கோபத்துடன் பேசுகிறான்.

இந்நிலையில் அம்பிகாவும் மகாவும் கோவிலுக்கு வருகிறார்கள்.&nbsp;</p><p>அங்கே என்ன நடக்கப்போகிறது? கௌதம் தனது அடுத்த திட்டத்தை செயல்படுத்துவானா? திருவின் சந்தேகம் உண்மையை நோக்கிச் செல்லுமா? என்ற பரபரப்பான கேள்விகளுக்கான பதில்கள் இன்றைய திருமாங்கல்யம் எபிசோடில் தெரியவரும்.

தவறாமல் Zee தமிழ் தொலைக்காட்சியில் இரவு 7.30 மணிக்கு காணுங்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T06:30:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[SJB நாடாளுமன்ற உறுப்பினருக்கு வெளிநாடு செல்ல தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sjb-mp-chaminda-wijesiri-granted-bail-1787552490"></link>
            <id>https://ibctamil.com/article/sjb-mp-chaminda-wijesiri-granted-bail-1787552490</id>
            <summary type="text">ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.2019 ஆம் ஆண்டில் இரண்டு காவல்துறை அதிகாரிகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.</p><p>2019 ஆம் ஆண்டில் இரண்டு காவல்துறை அதிகாரிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்தது மற்றும் அவர்களைத் தாக்கியதற்காக பதுளை உயர் நீதிமன்றத்தால் ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.</p><p>அந்தவகையில், குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு பதுளை உயர் நீதிமன்றம் 2026இ ஜூலை 28 அன்று ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.</p><p></p><h2>வெளிநாடு செல்வதற்கும் தடை</h2><p>இந்நிலையில் தண்டனைக்கு எதிராகத் தனது சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீடு செய்து, பதுளை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை இன்று (24) பரிசீலித்த பின்னரே அவர் இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db742e82-1fc8-491c-aedd-e047a0526fec/26-6a8be4be0a673.webp' /></p><p>இதன்போது, சமிந்த விஜேசிறியை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன், நீதிமன்றத்தின் அனுமதியின்றி நாடாளுமன்ற உறுப்பினர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T06:29:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டவர்களில் 31 பேர் கண்டுபிடிப்பு : வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/23-352-complaints-received-at-the-jaffna-omp-1787547050"></link>
            <id>https://ibctamil.com/article/23-352-complaints-received-at-the-jaffna-omp-1787547050</id>
            <summary type="text">இதுவரை காணாமல் போனோர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 31 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக&amp;nbsp;காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் தலைவரும் ஓய்வு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இதுவரை காணாமல் போனோர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 31 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக&nbsp;காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.</p><p>யாழ்ப்பாணத்தில் நேற்று (23) ஊடகவியலாளர்களை சந்தித்தபோது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்திற்கு இதுவரை 23,352
விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அவற்றில் 16,966 விண்ணப்பங்கள்
பரிசீலிக்கப்பட்டு, 9,819 முறைப்பாடுகளுக்கான பூர்வாங்க விசாரணைகள்
நிறைவடைந்துள்ளன.</p><p>&nbsp;</p><h2>விசாரணைகள் நிறைவடைந்தன&nbsp;</h2><p>பூர்வாங்க விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில்,
2,000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் மேலதிக தகவல்கள் மற்றும்
ஆவணங்கள் கோரப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c97ce9b7-916a-4453-953a-93bfcf026a8e/26-6a8be397cdee7.webp' /></p><p>
</p><p>விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் பாதுகாப்புத் தரப்பினர் உள்ளிட்ட 800
பேருக்கு விளக்கக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன், 7,726 பேருக்கு
அவர்களது சம்மதத்துடன் இடைக்கால கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு அனுமதி
வழங்கப்பட்டுள்ளது.</p><p>இதுவரை காணாமல் போனோர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 31 பேர்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.</p><p> </p><p></p><h2>இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள்&nbsp;</h2><p>அவர்களில் வெளிநாடுகளில் இருந்து 3 பேரும், யாழ்ப்பாணத்தில் 4 பேரும்,
மட்டக்களப்பில் 3 பேரும், கம்பஹாவில் 2 பேரும், திருகோணமலையில் ஒருவரும்,
அனுராதபுரத்தில் ஒருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac7b12cf-8ee3-4890-a77e-c6a956e832df/26-6a8be39886075.webp' /></p><p>
</p><p>மேலும் களுத்துறை, அம்பாந்தோட்டை, வவுனியா, குருநாகல், மாத்தறை மற்றும்
புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் சிலர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.</p><p>எனினும், இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக அல்லது இராணுவத்தினரால் அழைத்துச்
செல்லப்பட்டதாகக் கூறப்படும் காணாமல் போனவர்களில் இதுவரை எவரும்
கண்டுபிடிக்கப்படவில்லை“ என தெரிவித்துள்ளார்.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jh8Ai2PhXk0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T06:28:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு மத்திய பேருந்து தரிப்பிடத்தில் ஹட்டன் செல்ல மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hatton-passengers-stranded-at-colombo-bus-stand-1787551247"></link>
            <id>https://ibctamil.com/article/hatton-passengers-stranded-at-colombo-bus-stand-1787551247</id>
            <summary type="text">கொழும்பு மத்திய பேருந்து தரிப்பிடத்தில் இருந்து ஹட்டன் நோக்கிப் பயணம் செய்யவுள்ள பொதுமக்கள், போதிய பேருந்து வசதிகள் இன்றி நீண்ட நேரம் காத்திருக்கும் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மத்திய பேருந்து தரிப்பிடத்தில் இருந்து ஹட்டன் நோக்கிப் பயணம் செய்யவுள்ள பொதுமக்கள், போதிய பேருந்து வசதிகள் இன்றி நீண்ட நேரம் காத்திருக்கும் அவல நிலை தொடர்கிறது.
</p><p>
இன்றைய தினம் (24-08-2026) கொழும்பில் இருந்து ஹட்டன் செல்வதற்காக 300 இற்கும் மேற்பட்ட பயணிகள் வருகை தந்துள்ள நிலையில், அரை மணி நேரத்திற்கு மேலாக அடுத்தடுத்த பேருந்துகள் எதுவும் இயக்கப்படாமல் பயணிகள் நீண்ட வரிசையில் தவித்து வருகின்றனர்.
</p><p>பயணிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள போதிலும், நிலைமையைச் சமாளிக்க மேலதிக பேருந்துகளை உடனடியாக இயக்க போக்குவரத்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><p></p><h2>கடும் நெரிசல்</h2><p>
</p><p>இன்றைய தினம் மட்டுமன்றி, வழக்கமாகவே கூட்டம் அதிகமாக இருக்கும் வேளைகளில் அடுத்தடுத்து பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. </p><p>இதனால் பயணிகள் மணிக்கணக்கில் காத்திருந்து, கடும் நெரிசலுக்கு மத்தியிலேயே பயணம் செய்ய வேண்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a637a89f-0f51-49bc-876f-8fa8b15f8a46/26-6a8bdfb02c74a.webp' /></p><p>கொழும்பு மத்திய பேருந்து தரிப்பிடத்தில் மட்டுமன்றி, ஹட்டன் பேருந்து தரிப்பிடத்திலும் கொழும்பு நோக்கி வருவதற்கான பேருந்து சேவைகள் இதேபோன்று போதியளவில் வழங்கப்படுவதில்லை.</p><p>இலங்கை அரசாங்க போக்குவரத்து துறைக்கு அதிக வருமானத்தை&nbsp;ஹட்டன் டிப்போ பெற்றுக்கொடுக்கும் சந்தர்ப்பத்தில் இவ்வாறான கவனிப்பாறற்ற நிலைமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p>இந்தநிலையில் மலையகத்திற்குப் பயணிக்கும் பொதுமக்கள் தினமும் எதிர்கொள்ளும் இந்த சிரமங்களைக் கருத்திற்கொண்டு, கொழும்பு - ஹட்டன் இரு மார்க்கங்களிலும் உச்ச நேரங்களில் கூடுதல் பேருந்துகளை தொடர்ச்சியாக இயக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T06:21:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இடம்பெற்ற விபத்தில் இளம் பொறியியலாளர் பலி! வெளியான மேலதிக தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/accident-in-jaffna-nallur-engineer-dies-jaffna-th-1787547668"></link>
            <id>https://ibctamil.com/article/accident-in-jaffna-nallur-engineer-dies-jaffna-th-1787547668</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - நல்லூர்ப் பகுதியில் சனிக்கிழமை (22) நள்ளிரவில் இடம்பெற்ற வீதி விபத்தில்
படுகாயமடைந்த இளம் பொறியியலாளர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - நல்லூர்ப் பகுதியில் சனிக்கிழமை (22) நள்ளிரவில் இடம்பெற்ற வீதி விபத்தில்
படுகாயமடைந்த இளம் பொறியியலாளர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p>யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிக்சை பெற்று வந்த குறித்த&nbsp;பொறியியலாளர் நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> </p><p>கரவெட்டி கிழக்கைப் பூர்வீகமாகவும் - வவுனிக்குளத்தை வதிவிடமாகவும்
கொண்ட கந்தசாமி கோகுலதாஸ் (கோபு) என்ற 32 வயதான இளம் பொறியியலாளரே இந்த விபத்தில் உயிரிழந்தவராவார்.</p><p></p><h2>யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை</h2><p>இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று முன்தினம் நள்ளிரவு வேளையில் உயிரிழந்த பொறியியலாளர் தனது நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது நல்லூர்ப் பகுதியில் வைத்து எதிரே வந்த காருடன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3abbcb04-a2ea-425c-83fa-deef830e2651/26-6a8bdb2a80c60.webp' /></p><p>இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும், காரைச் செலுத்தி வந்தவரும் தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்த நிலையில் மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டனர்.</p><p>எனினும், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பொறியியலாளரான கோகுலதாஸ் சிகிச்சை பலனின்றி நேற்று (23) உயிரிழந்த நிலையில் ஏனைய இருவரும் தொடர்ந்து அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>உயிரிழந்த பொறியியலாளரின் மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி வின்சன் அன்ரலா மேற்கொண்டுள்ளார்.</p><p></p><h2>கிளிநொச்சி வைத்தியசாலை</h2><p>இதேவேளை கிளிநொச்சி - பளைப் பகுதியில் நேற்று முன்தினம் (23) சனிக்கிழமை மாலை நிகழ்ந்த விபத்தில் 18 வயதான இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே&nbsp;பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b448bcdc-3d47-4a55-ac0e-d215c3797bdb/26-6a8bdb2b3d6db.webp' /></p><p> </p><p>குறித்த இளைஞரின் மோட்டார் சைக்கிளும் எதிரே வந்த இன்னொரு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
</p><p>இந்த விபத்தில் பளையில் வசித்து வந்த, வடமராட்சி வடக்கு, அல்வாய் நக்கீரன் பகுதியைச் சேர்ந்த 18 வயதான பிரதீபன் சகீன் என்ற இளைஞரே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தவராவார். </p><p>உயிரிழந்த இளைஞரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T06:18:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-electric-trains-for-colombo-suburbs-to-begin-1787551073"></link>
            <id>https://ibctamil.com/article/new-electric-trains-for-colombo-suburbs-to-begin-1787551073</id>
            <summary type="text">கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளை உள்ளடக்கிய மின்சார தொடருந்து திட்டத்தின் பணிகள் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளது. மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளை உள்ளடக்கிய மின்சார தொடருந்து திட்டத்தின் பணிகள் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளது.</p><p> மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் ருவன் செனரத், இப்புதிய மின்சார தொடருந்து திட்டத்தின் ஆரம்பகட்ட திட்டமிடல் நிறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><h2>புதிய மின்சார தொடருந்து சேவை&nbsp;</h2><p>
மேலும் அவர் தெரிவிக்கையில்,

புதிய மின்சார தொடருந்து சேவை மருதானையிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1e6873c-0760-4bb3-a55b-800e2068bec5/26-6a8be1e370870.webp' /></p><p> முன்மொழியப்பட்ட திட்டத்துக்கு அமைவாக ருஹுணு குமாரி தொடருந்தில் பயணிக்கும் பயணிகள் பாணந்துறையில் இறங்கி, ஆரம்பிக்கப்படவுள்ள புதிய மின்சார தொடருந்தில் பயணிக்க முடியும் என பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.
</p><p>
நாட்டின் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகளில் தற்போது செயற்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து உரையாற்றிய பிரதி அமைச்சர், அரச போக்குவரத்தை வலுப்படுத்தும் விதமாக “மெட்ரோ பேருந்து சேவை”யை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T06:17:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீன ஹியூமனாய்டு ரோபோ புதிய உலக சாதனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/chinese-humanoid-robot-sets-a-new-world-record-1787552356"></link>
            <id>https://canadamirror.com/article/chinese-humanoid-robot-sets-a-new-world-record-1787552356</id>
            <summary type="text">&amp;nbsp; சீனா பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் உலக ஹியூமனாய்டு ரோபோ போட்டிகளில், சீனாவின் அதிநவீன ‘தியாங்காங் அல்ட்ரா’ (Tiangong Ultra) என்ற ரோபோ 100 மீட்டர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சீனா பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் உலக ஹியூமனாய்டு ரோபோ போட்டிகளில், சீனாவின் அதிநவீன ‘தியாங்காங் அல்ட்ரா’ (Tiangong Ultra) என்ற ரோபோ 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை வெறும் 9.39 வினாடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.
</p><p>
 ஜமைக்காவின் புகழ்பெற்ற தடகள வீரர் உசேன் போல்ட் 2009 ஆம் ஆண்டில் படைத்த 9.58 வினாடி சாதனையை விட இது வேகமானது என்பதால், சர்வதேச அளவில் தொழில்நுட்ப வல்லுநர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6369bc5-fb1a-44e8-9a5e-422b28db0bf4/26-6a8be265e29e6.webp' /></p><h2>உசேன் போல்ட்டின் மனித சாதனையை முறியடித்தது</h2><p>
</p><p>

பெய்ஜிங் ஹியூமனாய்டு ரோபோ கண்டுபிடிப்பு மையத்தால் உருவாக்கப்பட்ட இந்த தியாங்காங் அல்ட்ரா ரோபோ, தனக்கான முதன்மை சுற்றில் ‘ஆனர்’ நிறுவனத்தின் ‘லைட்னிங்’ (Lightning) என்ற ரோபோவுடன் தீவிரமாகப் போட்டியிட்டது.</p><p> 

பந்தயத்தின் தொடக்கத்தில் லைட்னிங் ரோபோ முன்னிலையில் இருந்தபோதிலும், இலக்குக் கோட்டின் அருகே தியாங்காங் அல்ட்ரா அதிவேகமாக அதை முந்தி முதலிடம் பிடித்தது. </p><p>லைட்னிங் ரோபோவும் 9.47 வினாடிகளில் பந்தயத்தை முடித்து, உசேன் போல்ட்டின் மனித சாதனையை முறியடித்தது .

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வேகப் பதிவு பார்வையாளர்களைப் பரவசப்படுத்திய போதிலும், பந்தயத்தின் முடிவு பகுதி சற்றே பரபரப்பாக அமைந்தது. </p><p>பந்தயத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இரு ரோபோக்களும் இலக்கில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு மெத்தைகள் மீது மோதி விழுந்தன. இதில் தியாங்காங் அல்ட்ரா நிலைகுலைந்து பார்வையாளர்கள் பகுதி வரை சென்று நின்ற நிலையில், லைட்னிங் ரோபோ மைதானத்திலேயே சுருண்டு விழுந்து தூக்கிச் செல்லப்பட்டது.
</p><p>
கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் 100 மீட்டரை 21.50 வினாடிகளில் கடந்த தியாங்காங் அல்ட்ரா, ஒரே ஆண்டில் தனது வேகத்தை 12 வினாடிகளுக்கும் அதிகமாகக் குறைத்து மாபெரும் தொழில்நுட்பப் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது. </p><p>செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் துறையை நாட்டின் முக்கிய உத்தி சார்ந்த தொழிலாக மாற்றி வரும் சீனாவின் இந்த அசுர வளர்ச்சி, வருங்காலத்தில் தொழில்துறை மற்றும் மனித வாழ்க்கையில் ரோபோக்களின் ஆதிக்கத்தை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-24T06:17:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி - வெளியாகவுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-licenses-issued-for-oil-and-gas-exploration-1787550895"></link>
            <id>https://tamilwin.com/article/new-licenses-issued-for-oil-and-gas-exploration-1787550895</id>
            <summary type="text">இலங்கை பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபை (PDASL)இலங்கையின் கடலோர பகுதிகளில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை ஆய்வு செய்து உற்பத்தி செய்வதற்காக உலகளாவிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபை (PDASL)இலங்கையின் கடலோர பகுதிகளில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை ஆய்வு செய்து உற்பத்தி செய்வதற்காக உலகளாவிய எரிசக்தி நிறுவனங்களை அழைக்கும் புதிய உரிமச்சுற்றை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
</p><p>
நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிசெய்யவும், தொழில்துறை வளர்ச்சியை விரைவுபடுத்துவதையும் நோக்கமாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>சட்ட கட்டமைப்பை புதுப்பிக்கும் நடவடிக்கை</h2><p>

மேற்கு கடலோரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப்பணிகள், வணிக ரீதியான இயற்கை எரிவாயு இருப்புகள் இருப்பதை உறுதி செய்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/416bf62a-015c-4dd1-96f4-b2f92ba4abb1/26-6a8be1cfc04af.webp' /></p><p>

இவை எரிபொருள் இறக்குமதியை நாடு பெருமளவில் சார்ந்திருப்பதை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
</p><p>
புதிய உரிமச்செயல்முறை தொடர்பான மேலதிக விபரங்கள் பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபையால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.</p><p>

2021 ஆம் ஆண்டின் பெட்ரோலிய வளங்கள் சட்டம் எண் 21 இன் கீழ் சட்டக் கட்டமைப்பைப் புதுப்பிக்கும் நடவடிக்கைகளை விரிவுபடுத்த அரசாங்கம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T06:16:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் நடவடிக்கை விரக்தியின் அறிகுறி ; ஈரான் மீது வரலாற்றிலேயே கடுமையான தடைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/america-s-move-is-a-sign-of-desperation-1787540146"></link>
            <id>https://canadamirror.com/article/america-s-move-is-a-sign-of-desperation-1787540146</id>
            <summary type="text">ஈரானின் மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான தடைகளை இன்று விதிக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

இந்த புதிய தடைகள் குறித்த அறிவிப்பை அமெரிக்க நேரப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான தடைகளை இன்று விதிக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. </p><p>

இந்த புதிய தடைகள் குறித்த அறிவிப்பை அமெரிக்க நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு அறிவிக்கவுள்ளதாக அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.</p><p> 

எனினும் இந்த புதிய அமெரிக்கத் தடைகள் குறித்த அச்சுறுத்தலை ஒரு விரக்தியின் அறிகுறியாக பார்ப்பதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி குறிப்பிட்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2193e00-320e-466a-86b9-ddb47e6ea66d/26-6a8bb2b3c4334.webp' /></p><p>இவ்வாறான புதிய நடவடிக்கைகள் ஈரானை வீழ்த்துவதில் இருந்து தோல்வியடையும் என்றும் அவர் கூறியுள்ளார். </p><p>

அமெரிக்கத் தலைவர்கள் இராணுவ நடவடிக்கைகளிலிருந்து விலகி, அதே பழைய திட்டங்களை மீண்டும் கொண்டு வந்திருப்பது அவர்களது விரக்தியை பிரதிபலிப்பதாக காட்டுகிறது. </p><p>

நீதி மற்றும் கண்ணியத்தின் அடிப்படையிலான ஒரு தீர்வைக் காண அமெரிக்கா, ஈரானுடன் கலந்துரையாட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.</p><p> 

சர்வதேசத் தடைகளால் ஈரானின் பொருளாதாரம் ஏற்கனவே பெரும் நெருக்கடியில் உள்ளது. 

பெப்ரவரி 28 ஆம் திகதியன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களைத் தொடங்கியதில் இருந்து, அதன் உட்கட்டமைப்புகள் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டுள்ளன. </p><p>

மேலும் இஸ்லாமியக் குடியரசின் மீதான வான்வழித் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

ஆனால் சுமார் ஆறு மாத காலப் போருக்குப் பின்னரும் தெஹ்ரான் விட்டுக் கொடுக்காமல் உறுதியாக போரிட்டு வருகின்றது. </p><p>

உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கியமான நீர்வழியான ஹோர்முஸ் நீரிணையில் அனுமதியற்ற எண்ணெய் கப்பல்களைப் பயணிக்க அனுமதிக்க மறுத்து, கப்பல் போக்குவரத்தை அது முடக்கியுள்ளது.</p><p> 

நீரிணையில் ஏற்பட்டுள்ள இந்தத் தடையால் உலகளாவிய எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-24T06:14:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதித்துறை சீர்திருத்த விவகாரத்தில் மௌனம் கலைத்த சாலிய - மகிந்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/saliya-mahinda-broke-the-silence-of-the-judges-1787550693"></link>
            <id>https://ibctamil.com/article/saliya-mahinda-broke-the-silence-of-the-judges-1787550693</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) முன்னாள் தலைவரான சாலிய பீரிஸும், அரசியலமைப்பின் 22வது திருத்தம் உள்ளிட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) முன்னாள் தலைவரான சாலிய பீரிஸும், அரசியலமைப்பின் 22வது திருத்தம் உள்ளிட்ட நீதித்துறை சீர்திருத்த முன்மொழிவுகள் குறித்து தமது கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.
</p><p>
இருவரும் இதுவரை பகிரங்கமாகத் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்காத நிலையில், அந்த மௌனம் தற்போது கலைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன்படி இக்காலத்தில் அரசியலமைப்பைத் திருத்துவது பொருத்தமானதல்ல என்று மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>சேர்க்கப்பட்ட&nbsp;திருத்தங்கள் </h2><p>மேலும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மற்றும் பலர் செய்தியாளர் சந்திப்பு நடத்தி தங்கள் நிலைப்பாடுகளை தெரிவித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12419992-9925-4114-a4b9-0c5c81e851e9/26-6a8be11fe3796.webp' /></p><p>

ஆரம்பத்தில் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது மட்டுமே முன்மொழியப்பட்டதாக சாலிய பீரிஸ் கூறியிருந்தார்.</p><p> 

பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் மற்ற திருத்தங்கள் சேர்க்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். </p><p>

இருப்பினும், உண்மையான நிலைப்பாடானது , சம்பந்தப்பட்ட திருத்தங்கள் பல சந்தர்ப்பங்களில் விவாதிக்கப்பட்டு, பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்த பின்னரே இறுதி வரைவுகள் தயாரிக்கப்பட்டதாக அரசாங்க தரப்புக்கள் சுட்டிக்காட்டி வருகின்றன.</p><p></p><h2>நீதித்துறையில் செல்வாக்கு</h2><p>
</p><p>
இருப்பினும், பிரதம நீதியரசரின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதன் மூலம் அரசாங்கம் நீதித்துறையில் செல்வாக்கு செலுத்தத் தயாராகி வருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில அதிகாரிகள் ஆரம்பத்தில் கூட்டாகக் கூறியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b9e9cfb-eaa3-4ae8-8685-d3e50acf6634/26-6a8be1209b790.webp' /></p><p> </p><p>

இதன்படி சாலிய பீரிஸ் தற்போது திரிபுபடுத்தப்பட்ட பிரசாரத்துடன் இதே போன்ற கருத்துக்களை வெளிப்படுத்துவதில் இணைந்துள்ளார் என சில தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
</p><p>
ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்ற இளைஞர்களின் முழக்கத்துடன் 2022 பொதுப் போராட்டத்தில் அங்கம் வகித்த சாலிய பீரிஸ் தற்போது இவ்வாறு முன்வைப்பது குறித்து அரசாங்க தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T06:14:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு : 76 அதிக அபாய பிரிவுகள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-patients-has-exceeded-94000-1787549424"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-patients-has-exceeded-94000-1787549424</id>
            <summary type="text">நாட்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 94,037 ஆக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டின் அதிகபட்ச டெங்கு பாதிப்பு எண்ணிக்கை ஜூலை மாதத்தில் 29,96...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 94,037 ஆக அதிகரித்துள்ளது.
</p><p>
இந்த ஆண்டின் அதிகபட்ச டெங்கு பாதிப்பு எண்ணிக்கை ஜூலை மாதத்தில் 29,962 ஆகப் பதிவாகியுள்ளது.

மேலும், ஜூன் மாதத்தில் 21,533 டெங்கு நோயாளிகளும், ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை 8,701 டெங்கு நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்.
</p><h2>மேல் மாகாணத்தைச் சேர்ந்த</h2><p>நாட்டில் பதிவான மொத்த டெங்கு பாதிப்புகளில் 52.93 சதவீதம், அதாவது 49,771 நோயாளிகள், மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98b536c7-1d3c-4db1-951b-d251d6dd2e38/26-6a8bded512b8f.webp' /></p><p>
மேலும், தெற்கு மாகாணத்திலிருந்து 13,763 நோயாளிகளும், மத்திய மாகாணத்திலிருந்து 8,519 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர். </p><p>

மாவட்ட அளவில், கம்பஹா மாவட்டத்தில் இருந்து அதிகபட்சமாக 20,034 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
</p><p>
கொழும்பு மாவட்டத்தில் 18,652 நோயாளிகளும், கொழும்பு மாநகர சபைப் பகுதியில் மட்டும் 3,787 நோயாளிகளும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>அதிக அபாயம் உள்ள சுகாதார மருத்துவ பிரிவுகள்</h2><p>

இதேபோல், கண்டி மாவட்டத்தில் 6,818 நோயாளிகளும், களுத்துறை மாவட்டத்தில் 6,093 நோயாளிகளும், காலி மாவட்டத்தில் 6,079 நோயாளிகளும், இரத்தினபுர மாவட்டத்தில் 5,160 நோயாளிகளும், மாத்தறை மாவட்டத்தில் 5,003 நோயாளிகளும், கேகாலை மாவட்டத்தில் 2,713 நோயாளிகளும், குருநாகல் மாவட்டத்தில் 2,651 நோயாளிகளும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 2,510 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65b33307-2c34-4ce6-9080-92605d8cfd24/26-6a8bded5d5320.webp' /></p><p>

நாடு முழுவதும் 76 அதிக அபாயம் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரிப் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
</p><p>
டெங்கு நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களைத் தவறாமல் சுத்தம் செய்யுமாறும், காய்ச்சல் ஏற்பட்டால் மருத்துவரிடம் உடனடியாக சிகிச்சை பெறுமாறும் சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்திிிியுள்ளள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T06:13:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலனாய்வுத்துறையின் இரகசிய தகவல்! காட்டுப் பகுதியில் சிக்கிய இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/illegal-liquor-production-two-arrested-1787550817"></link>
            <id>https://tamilwin.com/article/illegal-liquor-production-two-arrested-1787550817</id>
            <summary type="text">யாழ். துன்னாலை காட்டுப் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் நெல்லியடி பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. 

அரச புலனாய்வுதுறையின் தகவலிற்கமைய, மேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். துன்னாலை காட்டுப் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் நெல்லியடி பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. </p><p>

அரச புலனாய்வுதுறையின் தகவலிற்கமைய, மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது குறித்த கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த சுற்றிவளைப்பில் 20,000 மில்லிலீற்றர் கசிப்பு, 540,000 மில்லிலீற்றர் கோடா, கசிப்பு உற்பத்திக்கான உபகரணங்கள் மற்றும் மோட்டார் வாகனம் என்பன இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.</p><h2>சந்தேகநபர்கள் கைது</h2><p>
</p><p>
சம்பவம் தொடர்பில் துன்னாலை பிரதேசத்தை சேர்ந்த இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98e244c5-8630-482c-b9ce-c38bf9afb680/26-6a8be0ca9cb71.webp' /></p><p>

அத்துடன் அங்கிருந்து தப்பியோடிய மிகுதி சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கையை நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்து வந்துள்ளனர்.</p><p>

இதேவேளை அண்மைக்காலங்களாக வடமராட்சி பிரதேசத்தில் கசிப்பு விற்பனை அதிகரித்துள்ளதாக பிரதேசவாசிகள் விசனம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T06:13:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய நாடொன்றில் அகதிகள் முகாமில் வெடித்த மோதல்: தப்பியோடிய 35 கைதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/unrest-at-greece-detention-facility-35-escaped-1787551898"></link>
            <id>https://news.lankasri.com/article/unrest-at-greece-detention-facility-35-escaped-1787551898</id>
            <summary type="text">கிரீஸ் உள்ள புலம்பெயர்வோர் முகாமில் ஏற்பட்ட மோதலின் போது கைது தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புலம்பெயர்வோர் முகாமில் மோதல்
வடக்கு க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிரீஸ் உள்ள புலம்பெயர்வோர் முகாமில் ஏற்பட்ட மோதலின் போது கைது தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>புலம்பெயர்வோர் முகாமில் மோதல்</h2><p>
வடக்கு கிரீஸ் நாட்டின் தற்காலிக புலம்பெயர்வோர் முகாமில் வார இறுதியில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து பல கைதுகள் அங்கிருந்து தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>பல்கேரிய நாட்டின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இந்த முகாமின் வெளிப்புற வேலியை அறுத்துக் கொண்டு கிட்டத்தட்ட 35 கைதிகள் தப்பியோடியதாக உள்ளூர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff3e3817-15d9-40ed-9f61-150b32f0580a/26-6a8be09bbdba9.webp' /></p><p> இந்த சம்பவத்தை தொடர்ந்து விரைந்து செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் தப்பியோடியவர்களில் பாதி பேரை மீண்டும் கைது செய்து முகாமில் அடைத்தனர்.</p><p> &nbsp;மீதமுள்ளவர்களை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டையானது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p></p><h2> &nbsp;காவல்துறையினர் மீது தாக்குதல்</h2><p>சிண்டிகி(Sintiki) என்ற பகுதியில் அமைந்துள்ள இந்த முகாமில் தஞ்சம் கோரி வந்த விண்ணப்பத்தாரர்கள் சுமார் 450 பேர் அரசின் முடிவுக்காக நீண்ட காலமாக காத்திருக்கின்றனர்.</p><p> இந்நிலையில் வார இறுதியில் முகாமில் இருந்தவர்கள் காவல் துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர்.</p><p> நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை அதிகாரிகள் தீவிரமாக போராடினர். மேலும் இந்த மோதலின் போது கண்ணீர் புகை மற்றும் ஒலி குண்டுகளை காவல்துறையினர் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T06:11:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கசிப்பு உற்பத்திக்கு முற்றுகை ; 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-crackdown-liquor-production-two-arrested-1787551791"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-crackdown-liquor-production-two-arrested-1787551791</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் கசிப்பு கோட்டை ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு , 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வடமராட்சி துன்னாலை கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் கசிப்பு கோட்டை ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு , 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><p> 

வடமராட்சி துன்னாலை காட்டு பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , குறித்த பகுதியை பொலிஸார் இன்றைய தினம் முற்றுகையிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2dae106c-32a2-455b-aba5-9cbb2c3c49f8/26-6a8be0312634f.webp' /></p><p>

அதன் போது அங்கிருந்தநபர்கள் தப்பியோடிய நிலையில் , இருவரை பொலிஸார் மடக்கி பிடித்ததுடன் , 20 லீட்டர் கசிப்பு , 540 லீட்டர் கோடா , கசிப்பு உற்பத்தி உபகரணங்கள் , மோட்டார் சைக்கிள் என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.</p><p>

மீட்கப்பட்ட பொருட்கள் மற்றும் , கைது செய்யப்பட்ட இருவரையும் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் தப்பியோடிய ஏனையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T06:10:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெர்மன் அரசியல்வாதியின் சர்ச்சை ; நிர்வாண,சல்லாப சொர்க்கமாக மாற்றத் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/plan-to-turn-germany-into-a-nudist-gay-paradise-1787551287"></link>
            <id>https://canadamirror.com/article/plan-to-turn-germany-into-a-nudist-gay-paradise-1787551287</id>
            <summary type="text">ஜெர்மனியின் மான்ஹெய்ம் நகரை நிர்வாண மற்றும் சல்லாப சுற்றுலா மையமாக மாற்றும் சர்ச்சைக்குரிய திட்டத்தை அந்நாட்டு நகர சபை உறுப்பினர் ஜூலியன் ஃபெராட் முன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜெர்மனியின் மான்ஹெய்ம் நகரை நிர்வாண மற்றும் சல்லாப சுற்றுலா மையமாக மாற்றும் சர்ச்சைக்குரிய திட்டத்தை அந்நாட்டு நகர சபை உறுப்பினர் ஜூலியன் ஃபெராட் முன்வைத்துள்ளார்.
</p><p>
இதன் ஒரு பகுதியாக மான்ஹெய்ம் நகர மண்டபத்திலேயே சல்லாப விருந்தொன்றை நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>
T
The Telegraph
+1

35 வயதான ஃபெராட், ‘Die Mannheimer’ அரசியல் அமைப்பின் சார்பில் 2024ஆம் ஆண்டு மான்ஹெய்ம் நகர சபைக்கு தெரிவானவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6facc4d-91bb-42d1-839f-ee7eba1755a0/26-6a8bde392df4e.webp' /></p><p> அரசியல் செயற்பாடுகளில் சர்ச்சைக்குரிய மற்றும் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளுக்காக அவர் ஏற்கனவே கவனம் பெற்றுள்ளார்.
</p><p>
மான்ஹெய்ம் நகர மண்டபம் மத்திய பகுதியில் அமைந்துள்ளதால் இத்தகைய நிகழ்வுக்கு பொருத்தமான இடமாக இருக்கும் எனக் கூறியுள்ள அவர், நகர மண்டபத்தில் சல்லாப விருந்துகளை வெளிப்படையாகத் தடை செய்யும் நகராட்சி விதிமுறை எதுவும் இல்லை என்றும் வாதிட்டுள்ளார்.</p><p> 
B
Berliner Zeitung
+1

இந்த நிகழ்வுக்கு இதுவரை சுமார் 50 பேர் ஆர்வம் தெரிவித்துள்ளதாக ஃபெராட் கூறியுள்ளார். </p><p>நிகழ்வை அரசியல் ரீதியாகவும் பயன்படுத்தி, அரசியல்வாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான நெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் இதனை முன்னெடுக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், பிரான்ஸின் பிரபல நிர்வாண சுற்றுலாத் தலமான காப் டி அஜ்ட் (Cap d’Agde) போன்று மான்ஹெய்ம் நகரையும் நிர்வாண மற்றும் சல்லாப சுற்றுலா மையமாக மாற்றுவதன் மூலம் நகரின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். </p><p>
N
n-tv.de
+1

எவ்வாறாயினும், இந்தத் திட்டத்திற்கு மான்ஹெய்ம் நகர நிர்வாகம் இதுவரை அனுமதி வழங்கவில்லை.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81e48c27-2e2e-416a-af2c-1f5310bb838d/26-6a8bde39e15e5.webp' /></p><p>நிகழ்வுக்கான திகதி, பயன்படுத்தப்படவுள்ள இடம் மற்றும் அது அவரது நகர சபை உறுப்பினர் பதவியுடன் எவ்வாறு தொடர்புபடுகிறது என்பன உள்ளிட்ட முக்கிய தகவல்கள் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதனால், திட்டத்தின் சட்டபூர்வத்தன்மை மற்றும் நடைமுறை சாத்தியம் குறித்து குறிப்பிடத்தக்க சந்தேகங்கள் இருப்பதாக நகர நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது. </p><p>மேலும், நிகழ்வை நடத்துவதற்கான உத்தியோகபூர்வ விண்ணப்பமும் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 
T
tagesschau.de
+1

நகர மண்டபத்தில் நிகழ்வை நடத்துவதற்கு அனுமதி கிடைக்காவிட்டால், சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், மாற்று ஏற்பாடாக தனியார் இடத்தில் நிகழ்வை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக ஃபெராட் தெரிவித்துள்ளார்.</p><p>
B
Berliner Zeitung

குறிப்பாக, கடந்த 2025ஆம் ஆண்டிலும் காப் டி அஜ்ட் பகுதிக்கு ‘அரசியல் கல்விச் சுற்றுலா’ என்ற பெயரில் பயணமொன்றை ஃபெராட் ஏற்பாடு செய்திருந்தார். அந்த முயற்சியும் அப்போது ஜெர்மனியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது</p>]]></content>
            <updated>2026-08-24T06:01:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[All time disaster ஆன மகுடம், அதிர்ச்சி கொடுத்த இறுதி வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/magudam-movie-final-box-office-1787537993"></link>
            <id>https://cineulagam.com/article/magudam-movie-final-box-office-1787537993</id>
            <summary type="text">மகுடம்&amp;nbsp;விஷால் நடித்து இயக்கிய முதல் படம் மகுடம். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஒரு டீசண்ட் எதிர்பார்ப்பு இருந்தது. ஏனெனில் விஷால் முதன் முறையாக ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மகுடம்</h2><p>&nbsp;விஷால் நடித்து இயக்கிய முதல் படம் மகுடம். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஒரு டீசண்ட் எதிர்பார்ப்பு இருந்தது. </p><p>ஏனெனில் விஷால் முதன் முறையாக இயக்கி நடிப்பதால். அதனால் கண்டிப்பாக இந்த படம் நன்றாக வரும் என நினைத்தார்கள். ஆனால், படம் வெளியாகிய இரண்டே வாரத்தில் இப்படத்தை ரசிகர்கள் முற்றிலுமாக ஒதுக்கி வைத்துவிட்டனர் என்பது கோலிவுட்டே அதிர்ச்சியாகியுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/998761cb-ac7a-4161-9645-01c8116bead5/26-6a8baa4cb191c.webp' /></p><p>இதுவரை இந்த படம் ரூ 3+ கோடிகள் தான் மொத்த வசூலே வந்திருக்கும், அந்தளவிற்கு இந்த படத்தை ரசிகர்கள் ஒதுக்கிவிட்டார்கள் என தெரிகிறது. அதோடு விஷால் திரைப்பயணத்திலேயே மிக குறைந்த வசூல் கொடுத்த படம் இந்த மகுடம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. </p><p>ஆம், விஷால் படம் என்றாலே மினிமம் கேரண்டி என்பது போக இத்தகைய வசூல் விஷால் மட்டுமின்றி விநியோகஸ்தர்கள் பலருக்கும் கடும் அதிர்ச்சி தான். கண்டிப்பாக விஷால் இதிலிருந்து மீண்டு வர வேண்டும், அவர் பல தோல்விகளை சந்தித்து வெற்றி பெற்றவர், இந்த தோல்வியில் இருந்து மீண்டு வெற்றி பெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்.</p>]]></content>
            <updated>2026-08-24T06:00:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/brits-warned-for-apply-asylum-for-australia-1787551149"></link>
            <id>https://news.lankasri.com/article/brits-warned-for-apply-asylum-for-australia-1787551149</id>
            <summary type="text">British people trying back door route to stay in Australia by applying for asylum have been warned: அவுஸ்திரேலியாவில் தங்குவதற்காகப் புகலிடம் கோரி விண...</summary>
            <content type="html"><![CDATA[<p>British people trying back door route to stay in Australia by applying for asylum have been warned: அவுஸ்திரேலியாவில் தங்குவதற்காகப் புகலிடம் கோரி விண்ணப்பிக்கும் மறைமுக வழியை முயற்சிக்கும் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.</p><p>


230க்கும் அதிகமான பிரித்தானியர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><h3>
பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிகை
</h3><p>
அதாவது, அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் காலகட்டத்தை நீட்டிப்பதற்காக சிலர் இந்த முறையை பின்பற்றுவதாக கூறப்படுகிறது.&nbsp;</p><p>
ஆகவே, அப்படி அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் காலகட்டத்தை நீட்டிப்பதற்காக புகலிடம் கோரி விண்ணப்பிக்கும் பிரித்தானியர்கள் அப்படிச் செய்வதை நிறுத்துமாறு அவுஸ்திரேலிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11d8674b-7f6e-4743-ba2e-148649fda52f/26-6a8bddae6c46c.webp' /></p><p>
அத்தகைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் பிரித்தானியர்களும் அயர்லாந்து நாட்டவர்களும், அவுஸ்திரேலியாவில் தாங்கள் தங்கியிருக்கும் காலகட்டத்தை நீட்டிக்க விரும்பினால், புகலிடம் கோரி விண்ணப்பிக்குமாறு சமூக ஊடகங்களில் ஆலோசனை வழங்கப்படுவதை கவனித்துவருவதாக அவுஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ள நிலையில், அது மிக மோசமான ஆலோசனை என உள்விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p>

மேலும், இப்படி மோசடி செய்து அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பவர்களைக் கண்டறிந்து, அவர்களை நாடுகடத்துவதற்காக, கூடுதல் புலம்பெயர்தல் அலுவலர்களை பணியிலமர்த்துவது தொடர்பில், அவுஸ்திரேலிய உள் விவகாரங்கள் அமைச்சரான டோனி பர்க் திட்டமிட்டுவருவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T05:59:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலி மருத்துவர்கள் இருவருக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-quacks-sentenced-to-prison-1787551247"></link>
            <id>https://jvpnews.com/article/two-quacks-sentenced-to-prison-1787551247</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; நீண்டகாலமாக மருத்துவர்கள் என தங்களை அடையாளம் காட்டி நோயாளர்களுக்கு சிகிச்சையளித்து மோசடியில் ஈடுபட்டு வந்த இருவர், குற்றத்தை ஒப்புக்கொண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; நீண்டகாலமாக மருத்துவர்கள் என தங்களை அடையாளம் காட்டி நோயாளர்களுக்கு சிகிச்சையளித்து மோசடியில் ஈடுபட்டு வந்த இருவர், குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத கால சிறைத்தண்டனை விதித்து, களுத்துறை மேலதிக நீதிவான் நுத்தினன் ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
அத்துடன், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

பேருவளை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இருவருக்கே இவ்வாறு தண்டப்பணம் மற்றும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f23e899-fca2-4dcd-9582-0239c5610e17/26-6a8bde10ade7f.webp' /></p><h2>பதிவு செய்யப்படாமல் சட்டவிரோத தொழில்</h2><p>
</p><p>
அளுத்கம, தர்கா நகர் பகுதியில் சிகிச்சை நிலையங்களை நடத்திச் சென்ற இவர்கள், களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே கைது செய்யப்பட்டனர்.</p><p></p><p>

இவர்கள் இலங்கை மருத்துவ பேரவையில் (SLMC) பதிவு செய்யப்படாமல் சட்டவிரோதமாக மருத்துவத் தொழிலில் ஈடுபட்டு வந்தமை இதன்போது வெளிச்சத்துக்கு வந்தது.</p><p></p><p>
</p><p>
களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகத்தின் பிரதிப் பணிப்பாளர் (களச் சேவைகள்) சமூக மருத்துவ நிபுணர் சரித் ஹெட்டிஆரச்சி மற்றும் அளுத்கம சுகாதார மருத்துவ அதிகாரி சம்பத் நிரோஷன ஆகிய அதிகாரிகளுடன், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளும் இணைந்தே இந்தச் சோதனையை முன்னெடுத்திருந்தனர்.</p>]]></content>
            <updated>2026-08-24T05:58:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2-year-old-dies-after-falling-into-canal-galnewa-1787549074"></link>
            <id>https://ibctamil.com/article/2-year-old-dies-after-falling-into-canal-galnewa-1787549074</id>
            <summary type="text">கல்னேவ - கலேவேவா வீதிப் பகுதியில் உள்ள கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தையொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.&amp;nbsp;உயிரிழந்த குழந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்னேவ - கலேவேவா வீதிப் பகுதியில் உள்ள கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தையொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>உயிரிழந்த குழந்தை&nbsp;கல்நேவா பகுதியைச் சேர்ந்த குழந்தை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p><p></p><h2>கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தை </h2><p>
</p><p>
குழந்தை வீட்டிலிருந்து காணாமல் போனதாக தந்தை கல்நேவ காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/900d1795-48ce-4b5f-a00c-023c4f5aee9f/26-6a8bdd40c5887.webp' /></p><p>இதை தொடர்ந்து, குழந்தையைத் தேடும் நடவடிக்கையை நேற்று (23.08.2026) ஆரம்பிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p>தேடுதல் நடவடிக்கையின்போது, வீட்டிற்கு அருகே செல்லும் கால்வாயின் குறுக்கே அமைந்துள்ள பாலத்திற்கு அருகில் குழந்தை சிக்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.</p><p>இதனையடுத்து உடனடியாக குழந்தை கல்நேவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.</p><p>இந்த நிலையில் சடலம் கல்நேவ மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்நேவ காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T05:57:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பாரிய மனிதப் புதைகுழி: 110 நாள் அகழ்வுக்கு 5.79 கோடி செலவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-mass-grave-in-chemmani-near-jaffna-1787548313"></link>
            <id>https://ibctamil.com/article/a-mass-grave-in-chemmani-near-jaffna-1787548313</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்று கட்டங்களாக சுமார் 110
நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 5 கோடியே 79
இல...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்று கட்டங்களாக சுமார் 110
நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 5 கோடியே 79
இலட்சத்து 68 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.</p><p>குறித்த விடயத்தை காணாமல் போனோர் பற்றிய
அலுவலகத்தின் (OMP) தலைவர், ஓய்வுபெற்ற நீதிபதி மகேஷ் கட்டுலந்த
தெரிவித்துள்ளார்.</p><p>
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p><p></p><p>
</p><h2>செம்மணி மனிதப் புதைகுழி</h2><p>செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது இதுவரை 584 மனித எச்சங்கள்
அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb5e0fe8-d009-4889-b9ef-8c382dc52adc/26-6a8bdc4f214e1.webp' /></p><p>
மீட்கப்பட்ட மனித எச்சங்களுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் நோக்கில்,
அவர்களது உறவினர்களிடமிருந்து இரத்த மாதிரிகளைச் சேகரித்து மரபணு பரிசோதனைகளை
மேற்கொள்ளும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கு விசேட கவனம் செலுத்தப்படும்
எனவும் மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.
.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T05:53:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான விசாரணை செலவுகளுக்கு 375 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/investigation-conduct-occasion-day-of-disappeared-1787541604"></link>
            <id>https://tamilwin.com/article/investigation-conduct-occasion-day-of-disappeared-1787541604</id>
            <summary type="text">சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்துக்கு ஆதரவு கோரிய காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம், குடும்பங்களுக்கான உதவிகளையும் விசாரணைகளையும் தொடர்ந்தும் முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்துக்கு ஆதரவு கோரிய காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம், குடும்பங்களுக்கான உதவிகளையும் விசாரணைகளையும் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>
</p><p>இது குறித்து விளக்கமளிக்கும் விசேட ஊடக சந்திப்பு நேற்று(23) ஆளுநர் அலுவலக மாநாட்டு
மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.</p><h2> சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்</h2><p>
</p><p>
இந்த ஊடக சந்திப்பில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ்
கட்டுலந்த, நிர்வாகக் குழு உறுப்பினர்களான தம்பையா யோகராஜா, மிராக் ரஹீம்
ஆகியோர் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளனர்.</p><p>

இந்த சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர்கள்,

வழமையாக ஓகஸ்ட் 30ஆம் திகதி சர்வதேச ரீதியாக கடைப்பிடிக்கப்படும் இந்த தினம்,
இந்தமுறை யாழ்ப்பாணத்தில் ஓகஸ்ட் 25ஆம் திகதி கடைப்பிடிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d088e45a-3a79-4695-8ec5-7eac9e08812f/26-6a8bd4f0a4e64.webp' /></p><p> </p><p>கடந்த வருடங்களில் இந்த நிகழ்வு அலரி மாளிகையிலும்
கம்பனித்தெரு ஞாபகார்த்த மண்டபத்திலும் நடைபெற்றிருந்தன. இந்தமுறை நாங்கள்
யாழ்ப்பாணத்தில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை கடைப்பிடிக்கவுள்ளோம்.
</p><p>
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் 'எமக்குக் கிடைக்கப்பெற்ற 23,352
விண்ணப்பங்களில், முப்படையினர் மற்றும் இரட்டிப்பான விண்ணப்பங்களைத் தவிர்த்து
16,966 விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. </p><p>இவற்றில்
இதுவரை 9,819 முறைப்பாடுகளுக்குரிய பூர்வாங்க விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.
மேலதிக விசாரணைகளுக்காகக் கோரப்பட்ட சுமார் 2,000 விண்ணப்பங்கள் எமது தலைமை
அலுவலகத்தில் உள்ள தேடுதல் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.</p><h2>இடைக்கால நிவாரணம்&nbsp;</h2><p> </p><p>இவற்றில்
ஏறத்தாழ 800 விண்ணப்பங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குக்
கடிதங்கள் மூலம் அனுப்பி விவரங்கள் தேடப்பட்டு வருகின்றன. </p><p>அதேவேளை, எமக்குக்
கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இதுவரை 31 பேரை நாம் நேரடியாகக்
கண்டுபிடித்துள்ளோம்' எனத் தெரிவித்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0afacfda-7d36-4e75-9bec-f7970804fc60/26-6a8bd636404ff.webp' /></p><p>இடைக்கால நிவாரணம் வழங்குவதற்காக இதுவரை 7,726 முறைப்பாடுகள் இழப்பீட்டு
அலுவலகத்துக்குச் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுடன், 5,540 விண்ணப்பதாரிகளுக்கு
இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. </p><p>வழங்கப்படும் இரண்டு இலட்சம் ரூபா
கொடுப்பனவானது இழப்பீடு அல்ல, அது காணாமல் போன ஆட்களில்
தங்கியிருப்பவர்களுக்கான வாழ்வாதார உதவியாகும்.</p><p> உரிய இழப்பீட்டை வழங்குவது
தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக தற்போதைய அரசாங்கமும் நீதி
அமைச்சரும் இணைந்து விசேட குழுவொன்றை நியமித்துள்ளனர்.</p><h2>375 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு</h2><p> </p><p>அந்தக்குழுவின்
பரிந்துரைகள் கிடைத்த பின்னர் இழப்பீடு வழங்கும் முறை குறித்துத்
தீர்மானிக்கப்படும்' எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை காணாமல் போன ஆட்கள் தொடர்பான விடயங்களில் தற்போதைய அரசாங்கம் அதிக
அக்கறையுடன் செயற்பட்டு வருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf52eb85-dc21-41de-a594-ccafec572356/26-6a8bd4f15642a.webp' /></p><p>இதற்கான விசாரணைகள் மற்றும் ஏனைய
செலவுகளுக்காக இந்த வருடம் 375 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அரசாங்க நியமனங்களுக்குத் தடை உள்ள நிலையிலும், பிரதமரின்
செயலாளரின் விசேட அனுமதியுடன் எமது அலுவலகத்துக்கு 69 புதிய உத்தியோகத்தர்களை
இணைத்துக்கொள்ள அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. </p><p>இதற்கமைவாக தற்போது 47 பேர்
சேவையில் இணைந்துள்ளதுடன், எஞ்சியோருக்கான நியமனங்கள் அடுத்தடுத்த வாரங்களில்
வழங்கப்படவுள்ளன என குறிப்பிட்டுள்ளனர்.&nbsp;</p><h2>110 நாட்கள் அகழ்வுப் பணிகள்</h2><p>இந்த ஊடக சந்திப்பில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த கருத்து தெரிவிக்கையில், செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்று கட்டங்களாக சுமார் 110
நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 5 கோடியே 79
இலட்சத்து 68 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f808365e-c895-4546-a5b4-524a6e3da79d/26-6a8bd2b217f04.webp' /></p><p>செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது இதுவரை 584 மனித எச்சங்கள்
அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. </p><p>மீட்கப்பட்ட மனித எச்சங்களுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் நோக்கில்,
அவர்களது உறவினர்களிடமிருந்து இரத்த மாதிரிகளை சேகரித்து மரபணு பரிசோதனைகளை
மேற்கொள்ளும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கு விசேட கவனம் செலுத்தப்படும்
என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p>

</p>]]></content>
            <updated>2026-08-24T05:45:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அது நான் இல்லை ....இருந்தாலும் தவறு இல்லை; அமைச்சர் கீர்த்தனா பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/social-media-video-retorted-minister-keerthana-1787548572"></link>
            <id>https://jvpnews.com/article/social-media-video-retorted-minister-keerthana-1787548572</id>
            <summary type="text">&amp;nbsp; முதலமைச்சர் விஜய் தலமையிலான தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா என கூறி , சமூக வலைத்தளங்களில் வைரலான பெண்ணின் காணொளி ஒன்று தொடர்பாக அமைச்சர் கீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முதலமைச்சர் விஜய் தலமையிலான தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா என கூறி , சமூக வலைத்தளங்களில் வைரலான பெண்ணின் காணொளி ஒன்று தொடர்பாக அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளித்துள்ளார்.
</p><p>
சிற்றுந்து இருந்து நவீன உடையில் பெண் ஒருவர் இறங்கிச் செல்லும் காணொளி ஒன்று அதிகமாக இணையங்களில் பகிரப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b122ff0a-0fcf-42f2-9459-19d3404a2507/26-6a8bd39e46e46.webp' /></p><h2>பெண்களின் உடை, தோற்றம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை</h2><p>

இந்தநிலையில் சிற்றுந்தில் இருந்து இறங்கிச் செல்லும் அந்த பெண் தோற்றத்தில் அமைச்சர் கீர்த்தனாவை போன்று இருப்பதால், அது அமைச்சர் கீர்த்தனா என சமூக வலைத்தளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.
</p><p>
இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் கீர்த்தனா, “அந்த காணொளியில் இருப்பது தாம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை அது தாமாக இருந்தாலும்கூட, அதில் என்ன பிரச்சனை?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p></p><p>

பெண்களின் உடை, தோற்றம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பொது விவாதமாக்குவது பிற்போக்குத்தனமான மனநிலையை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும், தனது நிர்வாகம் மற்றும் கொள்கைகளை விமர்சிக்க முடியாதவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக வதந்திகளை பரப்புவதாகவும் அமைச்சர் கீர்த்தனா விசனம் வெளியிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T05:43:28+00:00</updated>
        </entry>
    </feed>
