<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-14T02:38:42+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கையில் நடந்த பயங்கரம் - இளைஞர்கள் மீது தீ வைப்பு - பிரதேச மக்கள் அடாவடித்தனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-were-set-on-fire-couple-arrested-1786673096"></link>
            <id>https://tamilwin.com/article/youth-were-set-on-fire-couple-arrested-1786673096</id>
            <summary type="text">களுத்துறை, புலத்சிங்கல பகுதியில் வீடு ஒன்றின் அருகில் வைத்து இரு இளைஞர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பில் கணவன், மனைவி உள்ளிட்ட மூவரை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை, புலத்சிங்கல பகுதியில் வீடு ஒன்றின் அருகில் வைத்து இரு இளைஞர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பில் கணவன், மனைவி உள்ளிட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். </p><p>

கடந்த 10 ஆம் திகதி இரவு இடம்பெற்ற இத்தாக்குதலில் இரு இளைஞர்களும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
பெண் ஒருவரை இளைஞர்கள் கேலி செய்தமையால் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2><b>இளைஞர்கள் மீது தீ வைப்பு</b></h2><p>

புலத்க்சிங்ஹல பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/880ff035-d55a-4e81-8490-1957e4d60f55/26-6a7e7c3de02ab.webp' /></p><p>சம்பவம் தொடர்பாக 29 வயதுடைய கணவன், மனைவி மற்றும் அவர்களின் 19 வயதுடைய சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்ட தம்பதியில் பெண் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருகின்றனர். </p><p>

கடந்த 10 ஆம் திகதி இரவு பெண் பணியை முடித்துவிட்டு பேருந்தில் இறங்கி கணவருடன் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இளைஞர்கள் கேலி செய்துள்ளனர். </p><p>

இதனால் கோபமடைந்த கணவன் அந்த இளைஞர்களைத் எச்சரித்து விட்டு சென்றுள்ளார். </p><h3><b>வீட்டின் மீது தாக்குதல் </b></h3><p>குறித்த இளைஞர்கள் அந்த பெண்ணின் வீட்டிற்கு அருகில் சென்றுள்ளனர். 

இதன்போது இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து, தம்பதி இளைஞர்களை நோக்கி பெட்ரோல் போத்தலை வீசியதுடன் தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53a81398-397f-4878-ba63-ffad96e66670/26-6a7e7d2d851d2.webp' /></p><p>தாக்குதலில் படுகாயமடைந்த இரண்டு இளைஞர்களும் முதலில் ஹொரணை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைக்காக பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். </p><p>

இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் சந்தேகநபர்களின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளனர்.
</p>]]></content>
            <updated>2026-08-14T02:29:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் பொது வைத்தியசாலை முன்பாக வாகனங்கள் நிறுத்த தடை! வாகன உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/parking-front-of-mannar-general-hospital-1786673767"></link>
            <id>https://tamilwin.com/article/parking-front-of-mannar-general-hospital-1786673767</id>
            <summary type="text">மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக ‘வாகனம் நிறுத்த தடை’ (No
Parking) என அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் வாகனங்களை முறையற்ற விதத்தில்
நிறுத்தும் நடவடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக ‘வாகனம் நிறுத்த தடை’ (No
Parking) என அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் வாகனங்களை முறையற்ற விதத்தில்
நிறுத்தும் நடவடிக்கைக்கு எதிராக போக்குவரத்து பொலிஸார் விசேட
நடவடிக்கையை முன்னெடுத்தனர்.</p><p>
வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள், பொதுமக்கள் மற்றும் ஏனைய வாகனப்
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதாக
கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><h2>வாகன உரிமையாளர்களுக்கு எதிராக தண்டப்பணம்&nbsp;</h2><p>
இதன்போது, முறையற்ற விதத்தில் வாகனங்களை நிறுத்திய வாகன உரிமையாளர்களுக்கு
எதிராக தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff28c209-a5d4-4186-b627-cf54391f6857/26-6a7e7c313135b.webp' /></p><p>குறித்த பகுதியில் வாகனங்களை
நிறுத்துவதற்கு கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

வைத்தியசாலை வளாகத்திற்கு முன்பாக போக்குவரத்து ஒழுங்கை பேணுவதற்கும்,
நோயாளர்களின் அவசரப் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையிலும்
இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>

எனவே, குறித்த பகுதியில் வாகனங்களை நிறுத்தாமல், போக்குவரத்து பொலிஸாரின்
அறிவுறுத்தல்களையும், வீதிப்போக்குவரத்து விதிகளையும் பொதுமக்கள்
கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e141cdd0-765c-484e-9e0b-57441b82c33e/26-6a7e7ca9ec3ed.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff28c209-a5d4-4186-b627-cf54391f6857/26-6a7e7c313135b.webp' /></p>]]></content>
            <updated>2026-08-14T02:23:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அதிகூடிய வெப்ப அலை! பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heat-warning-for-districts-1786672612"></link>
            <id>https://tamilwin.com/article/heat-warning-for-districts-1786672612</id>
            <summary type="text">நாட்டின் பல மாவட்டங்களில் இன்று (14) மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அதிகரித்த நிலையில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல மாவட்டங்களில் இன்று (14) மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அதிகரித்த நிலையில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>இதன்படி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் கூறியுள்ளது.</p><h2>பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்</h2><p>
</p><p>
இந்த மாவட்டங்களில் வெப்பநிலை 39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aee4b508-996d-4cae-bb33-1952b7029ad5/26-6a7e767101440.webp' /></p><p>
</p><p>
அதன்படி, கடினமான வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்ளவும், போதுமான அளவு தண்ணீர் அருந்தவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>இதேவேளை, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T02:00:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பெண்ணிடம் பல கோடி ரூபா சொத்து பறிமுதல் - விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/women-arrested-with-millions-worth-property-1786671673"></link>
            <id>https://tamilwin.com/article/women-arrested-with-millions-worth-property-1786671673</id>
            <summary type="text">கொழும்பில் பெரிய அளவிலான போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த தொட்டலங்க பொட்டி எனப்படும் பெண், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் நேற்று க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் பெரிய அளவிலான போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த தொட்டலங்க பொட்டி எனப்படும் பெண், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

போதைப்பொருள் வர்த்தகம் மூலம் முறையற்ற விதத்தில் சுமார் எட்டுக் கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் மற்றும் சொத்துக்களைச் சம்பாதித்தமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> இந்த பெண்ணிடம் உள்ள சொத்துக்களில் இதுவரை 8.25 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><h2><b>சொத்துக்களின் பெறுமதி&nbsp;</b></h2><p> அத்துடன், அவரிடம் உள்ள சொத்துக்களின் பெறுமதி மேலும் பல கோடி ரூபாய் இருக்கும் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aced6599-0dd0-431b-b49b-93fffd2a165c/26-6a7e74c594a2b.webp' /></p><p>தொட்டலங்க பொட்டி வசம் உள்ள ஏனைய சொத்துக்களைக் கண்டுபிடிப்பதற்காக விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர். </p><p>கொழும்பின் பிரதான போதைப்பொருள் வர்த்தகர்களில் ஒருவரான தொட்டலங்க பொட்டி, பொலிஸாரை ஏமாற்றி நீண்ட காலமாக தலைமறைவாக செயற்பட்டுள்ளார். </p><p>போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த அவரிடம் உள்ள சொத்துக்கள் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு சில மாதங்களுக்கு முன்பிருந்து விரிவான விசாரணைகளை ஆரம்பித்திருந்தது. </p><p>அதற்கமைய, போதைப்பொருள் வர்த்தகம் மூலம் தொட்டலங்க பொட்டி ஈட்டிய பணத்தைச் செலவிட்டு கொள்வனவு செய்திருந்த வீடுகள், கட்டடங்கள், கடை அறைகள், தங்க நகைகள் உள்ளிட்ட பல பெறுமதியான சொத்துக்களைச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு கைப்பற்றியுள்ளது. </p><p>இது தவிர, அவருக்குச் சொந்தமான பல வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்தினையும் புலனாய்வாளர்களால் கண்டுபிடித்துள்ளனர். தொட்டலங்க பொட்டி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
</p>]]></content>
            <updated>2026-08-14T01:52:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொழில் அழுத்தம் காரணமாக பணியை கைவிடும் அரச தாதியர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-nures-giving-up-their-jobs-1786671913"></link>
            <id>https://tamilwin.com/article/govt-nures-giving-up-their-jobs-1786671913</id>
            <summary type="text">தொழில் அழுத்தம் காரணமாக அரச சேவையில் இணைந்துள்ள தாதியர் பணியை கைவிடும் நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசு மருத்துவமனைகளில் நிலவும் கடும...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொழில் அழுத்தம் காரணமாக அரச சேவையில் இணைந்துள்ள தாதியர் பணியை கைவிடும் நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
அரசு மருத்துவமனைகளில் நிலவும் கடுமையான பணிச்சுமையைத் தாங்க முடியாமல் இதுவரை சுமார் 4,600 தாதியர் தமது சேவையை கைவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>அரசு தாதியர் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be47c60d-6534-494b-b579-6106f6a11af4/26-6a7e732ba7d91.webp' /></p><p>
</p><p>நாடு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான பின்னர், அரசு ஊழியர்கள் விடுமுறை பெற்று வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு அரசு வழங்கிய வாய்ப்பைப் பயன்படுத்தி, சுமார் 2,000 தாதியர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அரசு மருத்துவமனைகளில் தாதியர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாகவே இவ்வாறு அவர்கள் தமது அரசுப் பணியை கைவிட்டுச் சென்றுள்ளதாக சமன் ரத்னப்பிரிய மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T01:45:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடந்த 08 மாதங்களில் பாதாள உலகக் குழு துப்பாக்கிச் சூடுகளில் 18 பேர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/18-killed-in-underworld-shooting-1786671169"></link>
            <id>https://tamilwin.com/article/18-killed-in-underworld-shooting-1786671169</id>
            <summary type="text">கடந்த எட்டு மாத காலப் பகுதியில் நாட்டில் இடம்பெற்ற பாதாள உலகக் குழுக்களின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த எட்டு மாத காலப் பகுதியில் நாட்டில் இடம்பெற்ற பாதாள உலகக் குழுக்களின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
மித்தேனிய பகுதியில் நேற்று முன்தினம் மாலை 'பெக்கோ சமன்' என்ற பாதாள உலகக் குழுத் தலைவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பலியானோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
</p><p>பாதாள உலக ஆயுதமேந்திய குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை இதுவரை 28 ஆக அதிகரித்துள்ளதுடன், இந்தத் தாக்குதல்களில் 11 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0080cc9c-3f4c-4eb1-8aa0-1777f9fbec2c/26-6a7e704298f32.webp' /></p><p>
</p><p>பாதாள உலகக் குழு செயற்பாடுகளை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T01:32:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 67ஆக உயர்த்த கோரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/all-govt-servents-penstion-age-must-be-increaed-1786670119"></link>
            <id>https://tamilwin.com/article/all-govt-servents-penstion-age-must-be-increaed-1786670119</id>
            <summary type="text">உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 67 ஆக உயர்த்த அரசியலமைப்புத் திருத்தம் செய்யப்படுமாயின், ஏனைய அரச ஊழியர்களின் ஓய்யு பெறும் வயது எல்லையும் உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 67 ஆக உயர்த்த அரசியலமைப்புத் திருத்தம் செய்யப்படுமாயின், ஏனைய அரச ஊழியர்களின் ஓய்யு பெறும் வயது எல்லையும் உயர்த்தப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.</p><p>
அனைத்து அரசு மற்றும் அரை-அரசுத் துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதையும் 67 ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
</p><p>தொழற்சங்கங்கள் மற்றும் தொழில்வல்லுநர்களின் தேசிய பேரவை நேற்று தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61e4406c-6698-44f9-9f28-9f3611787413/26-6a7e6c298b893.webp' /></p><p>
இந்தக் கோரிக்கையடங்கிய யோசனையில் உலப்பனே சுமங்கல தேரர், சமன் ரத்னப்பிரிய, ரவி குமுதேஷ், ஆனந்த பாலித, உதேனி திசாநாயக, சிந்தக்க பண்டார, பந்துல சமன் குமார, சுபுன் களுகோட்டகே, கயாமல் சுமனரத்ன, சுமேத சோமரத்ன மற்றும் சுபாஷ் கருணாரத்ன ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.
</p><p>சுமார் 15 லட்சம் அரசு ஊழியர்களில் ஒரு குறிப்பிட்ட சேவைப் பிரிவினருக்கு மட்டும் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது அரசியலமைப்பை மீறும் செயலாகும் எனம் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பு தொடர்பில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T01:15:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தரப் பரீட்சை வினாத்தாள் பாதுகாப்பில் ஏற்பட்ட குழப்பம்..! பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-a-l-exam-paper-leak-rumours-denied-1786669426"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-a-l-exam-paper-leak-rumours-denied-1786669426</id>
            <summary type="text">கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் இன்று (14) நடைபெறவுள்ள பாடத்திற்கான வினாத்தாள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கசியவில்லை என இலங்கை பரீட்சைகள் தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் இன்று (14) நடைபெறவுள்ள பாடத்திற்கான வினாத்தாள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கசியவில்லை என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>

எனவே, பரீட்சார்த்திகள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும், திட்டமிட்டபடி பரீட்சை நடைபெறும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><h2>பௌதிகவியல் முதலாம் வினாத்தாள்</h2><p>

இந்நிலையில், அம்பாந்தோட்டை மாவட்டம் அம்பாலாந்தோட்டையில் உள்ள உயர்தரப் பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையமொன்றில், இன்று நடைபெறவுள்ள பௌதிகவியல் முதலாம் வினாத்தாள் அடங்கிய 6 பொதிகள் தவறுதலாக வேறு வினாத்தாள் பொதிகளுடன் வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c068379-84dc-4e39-893d-5159788586f8/26-6a7e6b2c66a9f.webp' /></p><p>

நேற்று(13) நடைபெற்ற இசை, நடனம் மற்றும் விவசாய அறிவியல் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள் பொதிகள் அடங்கிய பெட்டியிலிருந்தே, இன்று(14) பௌதிகவியல் முதலாம் வினாத்தாள் அடங்கிய 6 பொதிகள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எவ்வாறாயினும், குறித்த வினாத்தாள் பொதிகள் திறக்கப்படவோ அல்லது வெளிப்படுத்தப்படவோ இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி முன்னதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
</p><h2>உடனடி விசாரணை</h2><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b8ff826-6ff8-418e-8400-c3048082a8cf/26-6a7e6b2d19093.webp' /></p><p>
</p><p>
மேலும், குறித்த வினாத்தாள்கள் பாதுகாப்பாக முத்திரையிடப்பட்டுள்ளதால், பரீட்சார்த்திகள் தேவையற்ற விதத்தில் அச்சம் கொள்ள வேண்டாம் என பரீட்சைகள் திணைக்களம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
</p><p>
தற்போது கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-14T01:11:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலகக் குழுக்களின் குடும்பங்களை இலக்கு வைத்து தொடரும் பழிவாங்கும் நடவடிக்கைகள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-underworld-feuds-escalate-amid-crackdown-1786668573"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-underworld-feuds-escalate-amid-crackdown-1786668573</id>
            <summary type="text">பாதாள உலகக் குற்றவாளிகளை கைது செய்வதற்காக பொலிஸார் வெளிநாடுகளுக்குச் சென்று, சர்வதேச பொலிஸ் ஒத்துழைப்புடன் அவர்களைக் கைது செய்து இலங்கைக்கு அழைத்து வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலகக் குற்றவாளிகளை கைது செய்வதற்காக பொலிஸார் வெளிநாடுகளுக்குச் சென்று, சர்வதேச பொலிஸ் ஒத்துழைப்புடன் அவர்களைக் கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருகின்றனர்.</p><p>

“நீந்துவதற்குத் தண்ணீரில் இறங்கத்தான் வேண்டும்” என உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த நிலையில், பாதாள உலகக் குழுக்களின் தலைவர்களுக்கிடையிலான மோதல்கள் தற்போது பழிவாங்கும் சம்பவங்களாக மாறி வருவதாகக் கூறப்படுகிறது.
</p><p>
இதற்கு உதாரணமாக, பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த பெக்கோ சமனின் தாயார் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்.
</p><p>
அண்மையில், கஞ்சிபானி இம்ரானின் மாமாவும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

எனவே, பொலிஸாரின் அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்தாலும், பாதாள உலகக் கும்பல்களின் பழிவாங்கும் கலாசாரமும் ஆயுதப் பயன்பாடும் தொடர்ந்து வருகின்றன.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகிறது லங்காசிறியின் “நாட்டு நடப்பு” நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LgG1a8QZ_6I" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-14T00:53:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் ஜனாதிபதிக்கு உயிரச்சுறுத்தல்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-judiciary-reforms-anura-takes-risk-1786666370"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-judiciary-reforms-anura-takes-risk-1786666370</id>
            <summary type="text">நீதித்துறை சீர்திருத்தங்கள் மற்றும் அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து நாட்டில் நிலவும் விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விளக்கமளித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதித்துறை சீர்திருத்தங்கள் மற்றும் அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து நாட்டில் நிலவும் விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விளக்கமளித்துள்ளார்.
</p><p>
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 11இலிருந்து 17 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 12இலிருந்து 20 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த நீதித்துறை மாற்றங்களுக்கு மிக முக்கிய காரணம், கடந்த 5 ஆண்டுகளாக இழுபறியில் உள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைதான் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
நீதிபதிகள் ஓய்வு பெறுவதால் இந்த வழக்கு மீண்டும் ஆரம்பத்திலிருந்து விசாரிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே, பதவிக்கால நீடிப்பு மற்றும் நீதித்துறை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இது எந்தவொரு தனிப்பட்ட நீதிபதிக்கோ அல்லது குறிப்பிட்ட நபருக்கோ வழங்கப்படும் சலுகையல்ல என்றும், மாறாக ஒட்டுமொத்த நீதித்துறையையும் வலுப்படுத்துவதற்கான ஒரு “அமைப்புமுறை மாற்றம்” என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால், தனது தனிப்பட்ட பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்படக்கூடும் என்பதை ஜனாதிபதி உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இருந்தபோதிலும், நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தேவையானால் அந்த ஆபத்தை ஏற்கத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதற்காக தனது பதவிக்கே ஆபத்து ஏற்பட்டாலும் அதனை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.</p><p>

நாட்டு மக்களின் பொதுநலனுக்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும் எந்தவொரு ஆபத்தையும் ஏற்கத் தயாராக இருப்பதாகவும், தனது பதவியை இழந்தாலும் அதைப் பற்றி கவலைப்படப் போவதில்லை என்றும் ஜனாதிபதி தனது உறுதியான நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது NewsInsightTamil நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/8ZMqGKOf2IA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-14T00:46:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-a-l-question-papers-leaked-examination-dept-1786636339"></link>
            <id>https://ibctamil.com/article/no-a-l-question-papers-leaked-examination-dept-1786636339</id>
            <summary type="text">கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் இன்று (14-08-2026) இடம்பெறவுள்ள பாடத்திற்கான வினாத்தாள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கசியவில்லை என உறுதிப்படுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் இன்று (14-08-2026) இடம்பெறவுள்ள பாடத்திற்கான வினாத்தாள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கசியவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இலங்கை பரீட்சைகள் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p> 

எனவே பரீட்சார்த்திகள் தேவையற்ற விதத்தில் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் வழமை போல் அந்தப் பரீட்சை இடம்பெறும் எனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p> </p><p></p><h2>பரீட்சை வினாத்தாள்&nbsp;</h2><p>இதனிடையே அம்பாலாந்தோட்டையிலுள்ள உயர்தரப் பரீட்சை மையமொன்றில் பரீட்சை வினாத்தாள் பெட்டியொன்றிலிருந்து நாளை (14-08-2026) நடைபெறவிருந்த பௌதிகவியல் முதலாம் வினாத்தாள் அடங்கிய 06 பொதிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ddffd01-e66b-4881-bcc1-e578b82779b8/26-6a7dfc2768bfe.webp' /></p><p>எவ்வாறாயினும், அந்த வினாத்தாள்கள் அடங்கிய பொதிகள் திறக்கப்படவோ அல்லது வெளிப்படுத்தப்படவோ இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி முன்னதாக உறுதிப்படுத்தினார்.</p><p> 

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தற்போது நடைபெற்று வருகின்றது.</p><p></p><h2>பரீட்சைகள் திணைக்களம்</h2><p> 

இவ்வாறான பின்னணியில், உயர்தர ஒருங்கிணைப்பு மையமான அம்பாலாந்தோட்டையிலுள்ள பாடசாலையொன்றில், இன்று நடைபெறும் பாடங்களுக்குப் புறம்பாக நாளை நடைபெறவிருந்த பாடத்தின் 6 வினாத்தாள் பொதிகள் பெட்டியொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருந்தன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5311e45-2b34-47c1-a854-c6068355a147/26-6a7dfc281c1bc.webp' /></p><p>இன்று நடைபெறவுள்ள இசை, நடனம் மற்றும் விவசாய அறிவியல் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள் பொதிகள் அடங்கிய பெட்டியில் இருந்தே, நாளை நடைபெறவிருந்த பௌதிகவியல் முதலாம் வினாத்தாள் அடங்கிய 6 பொதிகள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

எவ்வாறாயினும், அந்த வினாத்தாள்கள் பாதுகாப்பாக முத்திரையிடப்பட்டுள்ளதாகவும், இது குறித்து பரீட்சார்த்திகள் தேவையற்ற விதத்தில் அச்சம் கொள்ள வேண்டாம் எனவம் பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T00:39:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1786665550"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1786665550</id>
            <summary type="text">மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (14-08-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனடிப்படையில் மேற்படி பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ.க்கு மேல் ஓரளவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது



</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு மேல் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86a383ac-6ec2-4ea0-9b44-6f00af636c71/26-6a7e5a5050e92.webp' />&nbsp;&nbsp;</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T00:39:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டுள்ளது ; ஈரான் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/strait-of-hormuz-completely-closed-iran-announces-1786662961"></link>
            <id>https://canadamirror.com/article/strait-of-hormuz-completely-closed-iran-announces-1786662961</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை தடையின்றி இயங்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டுள்ளதாக ஈரானிய இஸ்லாமிய புரட்சிகரக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை தடையின்றி இயங்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டுள்ளதாக ஈரானிய இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையின் (IRGC) கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் அலி அஸ்மாய் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையில் நடைபெறும் அனைத்து நகர்வுகளையும் IRGC கடற்படை முழுமையாகக் கண்காணித்து வருவதாகவும், தமது அனுமதியின்றி எந்தவொரு கப்பலும் அந்தப் பாதையில் சுதந்திரமாக இயங்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.</p><p>இதேவேளை, ஹோர்முஸ் நீரிணை திறந்திருப்பதாகவும், அமெரிக்க கடற்படை அந்தப் பகுதியில் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாத்து வருவதாகவும் அமெரிக்க தரப்பு தொடர்ந்து தெரிவித்து வருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/741d1d6b-5ac2-4457-8af1-a300988f45bf/26-6a7e50338372c.webp' /></p><p>அண்மைய தகவல்களின்படி, அமெரிக்கக் கட்டுப்பாட்டில் உள்ள பாதையில் வணிகக் கப்பல்களின் போக்குவரத்து மிகவும் குறைந்த அளவிலேயே இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனிடையே, ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பதற்கு முன்னர் அமெரிக்காவின் கடற்படை முற்றுகை முடிவுக்கு வருதல், பொருளாதாரத் தடைகள் நீக்கப்படுதல் உள்ளிட்ட பல நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. </p><p>ஈரான் மற்றும் ஓமான் இடையே கப்பல் போக்குவரத்துக்கான பாதுகாப்பான வழித்தடம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்ற போதிலும், அந்த உடன்பாடு மட்டும் நீரிணையை முழுமையாகத் திறப்பதற்கு போதுமானதல்ல என ஈரான் தெரிவித்துள்ளது.
</p><p>
ஹோர்முஸ் நீரிணை உலகின் மிக முக்கியமான எரிசக்தி வர்த்தகப் பாதைகளில் ஒன்றாகும். </p><p>இதன் ஊடான கப்பல் போக்குவரத்து பெருமளவில் குறைந்துள்ளமை உலகளாவிய எண்ணெய் விநியோகம் மற்றும் எரிசக்தி சந்தைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

எனவே, “நீரிணை முழுமையாக மூடப்பட்டுள்ளது” என்ற ஈரானின் நிலைப்பாட்டுக்கும், “நீரிணை திறந்துள்ளது” என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கும் இடையே தொடர்ந்தும் முரண்பாடு நிலவி வருகிறது. </p><p>நடைமுறையில், நீரிணை வழியாக கப்பல்கள் செல்வது முற்றிலும் நிறுத்தப்படவில்லை என்றாலும், வழக்கமான அளவுடன் ஒப்பிடுகையில் போக்குவரத்து கடுமையாகக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது</p>]]></content>
            <updated>2026-08-14T00:24:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[குப்பைத் தொட்டியிலும்... ட்ரம்ப் விமானத்தை மாற்றியதை கேலி செய்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-mocks-trump-plane-switch-1786667223"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-mocks-trump-plane-switch-1786667223</id>
            <summary type="text">Iran Mocks Trump&#039;s Plane Switch: துருக்கி பயணத்தின்போது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது விமானத்தை ரகசியமாக மாற்றிக்கொண்டதை ஈரானின் அரசு ஊடகம் கேலி செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran Mocks Trump's Plane Switch: துருக்கி பயணத்தின்போது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது விமானத்தை ரகசியமாக மாற்றிக்கொண்டதை ஈரானின் அரசு ஊடகம் கேலி செய்துள்ளது.
</p><p>இஸ்லாமியக் குடியரசின் வலிமையைக் கண்டு அவர் எவ்வளவு பதற்றமடைந்துள்ளார் என்பதை இது காட்டுவதாகவும் கூறியுள்ளது.</p><h2>ராணுவ வலிமை</h2><p> </p><p>மீண்டும் ஒரு புதிய சர்ச்சையின் மூலம், தற்போதைய அமெரிக்க ஊடகங்களில் ட்ரம்ப் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளார். ஈரான் நாட்டின் ராணுவ வலிமை குறித்த அச்சத்திலிருந்தே இந்த சர்ச்சை எழுந்துள்ளது; அந்த வலிமைதான்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/700dcfab-24b7-495a-a72e-05f430e9655d/26-6a7e60d98febb.webp' /></p><p> </p><p>கடந்த மாதம் துருக்கியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது ட்ரம்ப் தனது விமானத்தை ரகசியமாக மாற்றிக்கொள்ளும் நிலையை ஏற்படுத்தியது என ஈரானிய செய்தி ஊடகம் குறிப்பிட்டுள்ளது. </p><p>ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் தோளில் வைத்துச் சுடும் ஏவுகணையால் குறிவைக்கப்படலாம் என்ற அச்சுறுத்தலைத் தொடர்ந்து, ரகசிய சேவைப் பிரிவு ட்ரம்ப்பை இரகசியமாக ஒரு சிறிய ராணுவ விமானத்திற்கு மாற்றியது என்ற தகவல் வெளிச்சத்திற்கு வந்தது. </p><p>ஈரான் மீதான அமெரிக்காவின் போர் நடவடிக்கை காரணமாக பதற்றம் நிலவி வரும் சூழலில், நேட்டோ உச்சிமாநாட்டிற்காக அங்காராவுக்கு டிரம்ப் மேற்கொண்டிருந்த பயணத்தின் இறுதி நாளன்று இந்த அச்சுறுத்தல் உருவானதாக தகவல் கசிந்தது.</p><h2>அதிகாரிகள் அதிர்ச்சி</h2><p> </p><p>மேலும், அங்காராவில் ட்ரம்ப் தங்கியிருந்த ஹொட்டலின் சரியான தளம் உட்பட, அவர் எங்கு தங்கியிருந்தார் என்பது ஈரானியர்களுக்குத் தெரிந்திருந்தது கண்டு அமெரிக்க அதிகாரிகள் அதிர்ச்சியடைந்ததாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. </p><p>இந்த விவகாரம் தொடர்பில் ஈரான் அரசாங்கம் இதுவரை கருத்தேதும் தெரிவிக்கவில்லை. வெள்ளை மாளிகையும் விளக்கமளிக்கவில்லை.</p><p></p><p> </p><p>அமெரிக்காவின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியாக அப்போது இருந்த ட்ரம்ப்பை படுகொலை செய்ய ஈரானின் புரட்சிகரப் படை உத்தரவிட்டதாகக் கூறப்படும் சதித்திட்டம் தொடர்பாக, 2024-ல் ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் மீது அமெரிக்க நீதித்துறை குற்றஞ்சாட்டியது. </p><p>ஆனால், செப்டம்பர் 2024-ல் ஈரான் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தது. இந்த நிலையிலேயே அச்சுறுத்தல் என்றால், குப்பைத் தொட்டியிலும் ட்ரம்ப் ஒளிந்துக் கொள்வார் என ஈரான் கேலி செய்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T00:24:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்கள் கழிப்பறையில் ரகசிய கேமரா ; அதிர்ச்சியில் உறைந்த பெண்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hidden-camera-in-the-women-s-toilet-1786648715"></link>
            <id>https://jvpnews.com/article/hidden-camera-in-the-women-s-toilet-1786648715</id>
            <summary type="text">இரத்தினபுரியில் உள்ள நிதி நிறுவனமொன்றில் பணிபுரியும் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை ரகசியமாக எடுத்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் இரத்தினபுரி பொலிஸார...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரியில் உள்ள நிதி நிறுவனமொன்றில் பணிபுரியும் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை ரகசியமாக எடுத்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் இரத்தினபுரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குறித்த நிதி நிறுவனத்தில் பெண்கள் பயன்படுத்தும் கழிப்பறையில், அவர்கள் கவனிக்காத வகையில் கைபேசி ஒன்றை மறைத்து பொருத்தி, நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காட்சிகளை பதிவு செய்ததாக சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50f0bf14-26d9-4bc3-b73a-68f6f5e7d159/26-6a7e188d79c18.webp' /></p><p>இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நான்கு பெண்கள் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.</p><p> அதன் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்நிலையில், குறித்த பெண்களில் ஒருவர் கழிப்பறைக்கு அருகில் இரண்டு துளைகள் காணப்பட்ட காகிதத் துண்டொன்றை அவதானித்துள்ளார். </p><p>அதனை பரிசோதித்தபோது, காகிதத்திற்குள் கைபேசி ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனையடுத்து குறித்த கைபேசியை எடுத்துச் சென்ற அவர், சம்பவம் தொடர்பில் ஏனைய பெண்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.
</p><p>
பின்னர், குறித்த கைபேசியில் இருந்த சிம் அட்டையை அகற்றி தனது தனிப்பட்ட மடிக்கணினியில் பயன்படுத்திப் பார்த்தபோது, அதில் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>

இதனைத் தொடர்ந்து இரத்தினபுரி பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இரத்தினபுரி நீதவான் சமன் டி.கே. பரணாலியனகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
</p><p>
குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்படும் சந்தேகநபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T00:24:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் ட்ரூத் சோஷியல் செயலி சேவைக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/lawsuit-filed-us-agains-trump-truth-social-service-1786665299"></link>
            <id>https://canadamirror.com/article/lawsuit-filed-us-agains-trump-truth-social-service-1786665299</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் Truth Social சமூக வலைத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை ஏனைய பயனர்களைவிட மிக வேகமாகப் பெறுவதற்கு கட்டணம் வசூலிக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் Truth Social சமூக வலைத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை ஏனைய பயனர்களைவிட மிக வேகமாகப் பெறுவதற்கு கட்டணம் வசூலிக்கும் ‘Truth API’ சேவைக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
</p><p>
நியூயோர்க் மன்ஹாட்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் The Intercept மற்றும் Freedom of the Press Foundation ஆகிய ஊடக அமைப்புகள் இணைந்து இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளன.
</p><p>
Trump Media &amp; Technology Group (TMTG) அறிமுகப்படுத்தியுள்ள இந்தச் சேவை, ட்ரம்ப் உள்ளிட்ட Truth Social இன் செல்வாக்குமிக்க கணக்குகளில் வெளியாகும் பதிவுகளை நிறுவன வாடிக்கையாளர்களுக்கு மிகக் குறைந்த தாமதத்துடன் வழங்குகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3de1421d-9259-48ff-b740-2446bbb0b308/26-6a7e595626e15.webp' /></p><p>குறிப்பாக நிதி நிறுவனங்கள் மற்றும் அதிவேக வர்த்தக நிறுவனங்களை இலக்காகக் கொண்டு இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சேவைக்கு மாதாந்தம் 60,000 முதல் 100,000 அமெரிக்க டொலர் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>இதன் மூலம் ட்ரம்பின் கொள்கை அறிவிப்புகள் அல்லது சந்தையைப் பாதிக்கக்கூடிய பதிவுகளை மற்றவர்களுக்கு முன்னதாகவே சில நிறுவனங்கள் அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படுவதாக மனுதாரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
</p><p>
குறித்த நடைமுறை அமெரிக்க அரசியலமைப்பின் முதல் மற்றும் ஐந்தாவது திருத்தங்களுக்கு முரணானது எனவும், அரசாங்க தகவல்களை பணம் செலுத்தக்கூடியவர்களுக்கு முன்னுரிமையுடன் வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் மனுதாரர்கள் வாதிட்டுள்ளனர்.
</p><p>
இதனிடையே, Trump Media &amp; Technology Group இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது. </p><p>பொதுமக்களுக்கு ஏற்கனவே கிடைக்கும் Truth Social பதிவுகளை வேகமாகவும் நேரடியாகவும் வழங்கும் தரவு சேவையே Truth API என அந்த நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
</p><p>
இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்களிடையேயும் முன்னதாக கவலைகள் எழுந்திருந்தன. </p><p>Truth API மூலம் ட்ரம்பின் சந்தையைப் பாதிக்கக்கூடிய பதிவுகளை மிக வேகமாகப் பெறுவதால், முதலீட்டாளர்களுக்கு சமமற்ற தகவல் முன்னிலை கிடைக்கக்கூடும் எனக் கூறி அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடம் (SEC) விசாரணை நடத்துமாறும் கோரப்பட்டிருந்தது.
</p><p>
இந்நிலையில், இந்த வழக்கு அமெரிக்க ஜனாதிபதியின் சமூக ஊடகப் பதிவுகளை வர்த்தக ரீதியாகப் பயன்படுத்துவது தொடர்பான சட்ட மற்றும் நெறிமுறை விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-13T23:55:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் ட்ரூத் சோஷியல் செயலி மீது பாய்ந்தது வழக்கு...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/lawsuit-filed-against-trump-s-truth-api-1786654848"></link>
            <id>https://ibctamil.com/article/lawsuit-filed-against-trump-s-truth-api-1786654848</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில், அவரது பதிவுகளை மற்றவர்களுக்கு முன்பாகவே நொடிப் பொழுதில் பெறும் Truth API எனும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில், அவரது பதிவுகளை மற்றவர்களுக்கு முன்பாகவே நொடிப் பொழுதில் பெறும் Truth API எனும் புதிய சேவைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
</p><p>
நியூயோர்க் கூட்டாட்சி நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.</p><p>

தி இன்டர்செப்ட் (The Intercept) மற்றும் ஃபிரீடம் ஒஃப் தி பிரஸ் ஃபவுண்டேஷன் (Freedom of the Press Foundation) ஆகிய இரண்டு அமெரிக்க ஊடக அமைப்புகள் இணைந்து இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளன.</p><p></p><h2>அரசியலமைப்புச் சட்டம்</h2><p>

மாதத்திற்கு 100,000 டொலர் (சுமார் 74,000 பவுண்டுகள்) வரை கட்டணம் வசூலிக்கும் இந்தச் சேவையின் மூலம் சந்தைப் பொருளாதாரத்தை பாதிக்கும் ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்புகள் சிலருக்கு மட்டும் முன்கூட்டியே கிடைப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது மிகவும் ஊழல் நிறைந்தது மற்றும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்றும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ebbee50-3ef0-4bc6-b762-0629f574f8f1/26-6a7e30825cd07.webp' /></p><p>

இதற்கு பதிலளித்துள்ள ட்ரம்ப் மீடியா எண்ட் டெக்னாலஜி குரூப் (TMTG), ஜனாதிபதியை தணிக்கை செய்யும் நோக்கத்துடன் இடதுசாரி செயற்பாட்டாளர்கள் நீதிமன்றத்தை தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டியுள்ளது.</p><p>

தற்போது வரை 10 இற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த அதிவேக சேவைக்கு சந்தா செலுத்தியுள்ள நிலையில், வெள்ளை மாளிகை தரப்பில் இதுவரை இதற்கான அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-13T23:54:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் வர்த்தக பற்றாக்குறை பெருமளவு அதிகரிப்பு! வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-s-trade-deficit-increases-significantly-1786661685"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-s-trade-deficit-increases-significantly-1786661685</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை (Trade Deficit) பெருமளவில் விரிவடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை (Trade Deficit) பெருமளவில் விரிவடைந்துள்ளது.
</p><p>
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அண்மைக்கால வாராந்த பொருளாதார குறிகாட்டிகள் அறிக்கையின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 3,270 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த வர்த்தக பற்றாக்குறை, 2026 ஆம் ஆண்டின் முறையான காலப்பகுதியில் 5,489 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை உயர்ந்துள்ளது.</p><p>
</p><p></p><h2>ஏற்றுமதி வருவாய்</h2><p>ஏற்றுமதி வருவாயை விட இறக்குமதி செலவினங்கள் வேகமாக அதிகரித்தமையே இதற்கு முதன்மையான காரணமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5fae5d9-28ac-4040-83bd-a091c2433f42/26-6a7e5746b5b0e.webp' /></p><p>

2026 ஜூன் மாத நிலவரப்படி, இறக்குமதி செலவினம் 12,392 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளதுடன், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 26.9 சதவீத வளர்ச்சியாகும்.</p><p>

நடப்பாண்டில் இதுவரை அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 7.6 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.</p><p>
</p><p>[PJ4IZBN
]</p><h2>சுற்றுலாத் துறை</h2><p>சுற்றுலாத் துறையிலும் சில பின்னடைவுகள் காணப்படுவதுடன், 2025 ஜூலை மாதத்தில் 200,244 ஆக இருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை, 2026 ஜூலை மாதத்தில் 196,845 ஆகக் குறைந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b311def7-cb52-4ff0-ae94-8f30bf275920/26-6a7e574775a40.webp' /></p><p>இதற்கு மேலதிகமாக, வணிக வங்கிகளால் முன்னணி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடன் வட்டி வீதம் (Prime Lending Rate) கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் உயர்ந்து 10.76 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.</p><p>
புறக்கோட்டை மொத்த சந்தைத் தரவுகளின்படி, கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் பல வகையான காய்கறிகளின் விலைகளும் கணிசமாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T23:49:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலியர்கள் முற்றுகை... பாலஸ்தீனியர்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/israeli-settlers-besieged-1786664155"></link>
            <id>https://news.lankasri.com/article/israeli-settlers-besieged-1786664155</id>
            <summary type="text">Israeli settlers besieged houses: இஸ்ரேலிய குடியேறிகள் முற்றுகையிட்ட கிராமத்தில், பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Israeli settlers besieged houses: இஸ்ரேலிய குடியேறிகள் முற்றுகையிட்ட கிராமத்தில், பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
</p><p>ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஒரு கிராமத்தில், சுமார் ஒரு டசின் பாலஸ்தீனக் குடும்பங்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டன.</p><h2>ராணுவப் பகுதியாக</h2><p>
</p><p>இஸ்ரேலியக் குடியேறிகளை வெளியேற்றுவதற்கான இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கையின் ஒருபகுதி என்றே விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல், அப்பகுதியில் உள்ள மூன்று வீடுகளில் வசிப்பவர்களைக் குடியேறிகள் முற்றுகையிட்டு, அவர்களின் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகத்தைத் துண்டித்திருந்தனர். </p><p>குஸ்ரா மேயர் அப்தெல் அசிம் வாடி தெரிவிக்கையில், அவரது கிராமம் தடைசெய்யப்பட்ட ராணுவப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், காலி செய்யப்பட்ட சில பாலஸ்தீனிய வீடுகளை இஸ்ரேலியப் படைகள் ராணுவத் தங்குமிடங்களாகப் பயன்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edae4a7c-4e4c-4d9d-9577-dd0f0578f071/26-6a7e54dda9886.webp' /></p><p> </p><p>ஆனால் குடிமக்களைப் பாதுகாப்பதே நோக்கம் என்று இஸ்ரேலிய ராணுவம் கூறியது. இந்த நிலையில், குடியேறிகளின் செயல் கண்டிக்கத்தக்கதும் ஏற்றுக்கொள்ள முடியாததும் ஆகும்; இதற்குப் பொறுப்பானவர்களை அரசு விசாரித்து கைது செய்யும் என இஸ்ரேல் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.</p><p> தற்போதைய இஸ்ரேலிய அரசாங்கத்தின் கீழ் குடியேற்றங்கள் வேகமாக விரிவடைந்து வருவதால், குடியேறிகள் தைரியம் அடைந்துள்ளனர். இதன் விளைவாக, அவர்கள் பாலஸ்தீனியர்களை அவர்களின் நிலங்களிலிருந்து விரட்டியடிக்க முயற்சிப்பதால், குடியேறிகளின் வன்முறை வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது. </p><p>சர்வதேச சட்டத்தின் கீழ் அனைத்துக் குடியேற்றங்களும் சட்டவிரோதமானவை என அடையாளப்படுத்தப் பட்டாலும், இஸ்ரேல் அரசாங்கம் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.</p><h2>சூறையாடப்பட்ட நிலை</h2><p> </p><p>கிராமத்தின் பிற பகுதிகளில், மேலும் 11 வீடுகளில் வசிப்பவர்களையும் வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்தியிருந்தது. பாலஸ்தீன மக்களை வீடுகளில் இருந்து வெளியேற்றும் ராணுவம், பின்னர் மொத்தமாக சூறையாடப்பட்ட நிலையிலேயே வீடுகளை மீண்டும் ஒப்படைப்பதாக கூறுகின்றனர்.</p><p> ஒருவர் தமது வீட்டில் இருந்த 1,500 டொலர் தொகை திருடு போனதையும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இஸ்ரேல் ராணுவம் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்க முன்வரவில்லை. </p><p>ஐ.நா.வின் புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகளாலோ அல்லது குடியேறிகளாலோ 18 குழந்தைகள் உட்பட 76 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.</p><p></p><p> </p><p>அதே நேரத்தில், மேற்குக் கரையில் பாலஸ்தீனியர்களுடனான மோதல்களிலும், ஒரு பாலஸ்தீனியர் நடத்தியதாகக் கூறப்படும் வாகன மோதல் தாக்குதலிலும், மூன்று இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். </p><p> 2023 ஜனவரி முதல், மேற்குக் கரையில் உள்ள 127 பாலஸ்தீனிய சமூகங்கள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இடம்பெயர்ந்துள்ளன; இதில் 47 சமூகங்கள் முற்றிலுமாக இடம்பெயர்ந்துள்ளன. </p><p>இதனால் 6,390-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. தெரிவிக்கிறது. குடியேற்றக்காரர்களின் வன்முறை, இடிப்புப் பணிகள் மற்றும் வெளியேற்றங்கள் காரணமாக, 2026-ஆம் ஆண்டில் சுமார் 3,800 பாலஸ்தீனியர்கள், அவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் குழந்தைகள், இடம்பெயர்ந்துள்ளனர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T23:33:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சனி நட்சத்திர பெயர்ச்சி ; இந்த ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sani-peyarchi-kastam-mudivukku-varum-rasi-1786656386"></link>
            <id>https://jvpnews.com/article/sani-peyarchi-kastam-mudivukku-varum-rasi-1786656386</id>
            <summary type="text">சனி பகவான் மற்ற கிரகங்களை விட அதிகமாக ஒரு ராசியிலும், நட்சத்திரத்திலும் பயணித்து வரக்கூடியவர். அதில் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ராசியை மாற்றும் சனி ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சனி பகவான் மற்ற கிரகங்களை விட அதிகமாக ஒரு ராசியிலும், நட்சத்திரத்திலும் பயணித்து வரக்கூடியவர். அதில் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ராசியை மாற்றும் சனி பகவான், 5-6 மாதங்களுக்கு ஒருமுறை நட்சத்திரத்தை மாற்றுவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3890b4d-7fe1-4611-bd7b-95f3d0aeb98e/26-6a7e368498356.webp' /></p><p>இப்படி சனி பகவானின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.&nbsp;இந்நிலையில் ஆகஸ்ட் 20 ஆம் திகதி சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்குள் நுழையவுள்ளார். இங்கு அக்டோபர் 09 ஆம் திகதி வரை இருப்பார்.&nbsp;இப்போது சனி நட்சத்திர பெயர்ச்சியால் வாழ்வில் நல்ல மாற்றத்தைக் காணப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff81b099-2797-4434-b616-3099253b6912/26-6a7e3685508b3.webp' /></p><h3>ரிஷபம்</h3><p>
சனியின் நட்சத்திர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். அதுவும் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. எதிர்பாராத சில நல்ல செய்திகளைப் பெறக்கூடும். நிதி நிலைமை மேம்படும். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்குஙம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dda8fb47-997c-4615-af77-082bd258e747/26-6a7e36862092f.webp' /></p><h3>மிதுனம்</h3><p>
சனி நட்சத்திர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களின் வாழ்வில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும். பல வழிகளில் இருந்து நல்ல செய்திகள் தேடி வரும். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் இக்காலத்தில் கைக்கு வந்து சேரும். பணியிடத்தில் சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57bfbe67-aec4-4652-aaf0-fb7736d1c422/26-6a7e3686e240f.webp' /></p><h3>கன்னி
</h3><p>சனி நட்சத்திர பெயர்ச்சியானது கன்னி ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் சிறப்பானதாக இருக்கப் போகிறது. முக்கியமாக மன அழுத்தம் குறைந்து, மனதில் மகிழ்ச்சி பெருகும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். நீண்ட காலமாக ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து வந்திருந்தால், இப்பெயர்ச்சிக்கு பின் ஆரோக்கியம் மேம்படும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2aa191a2-f585-4a6e-9b60-8151c8f1695a/26-6a7e368798079.webp' /></p><h3>துலாம்</h3><p>
சனி நட்சத்திர பெயர்ச்சியானது துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறது. அதுவும் இந்த மாற்றமானது எதிர்பார்த்த ஒன்றாக இருக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். நல்ல நிதி முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மற்றும் குடும்ப சூழல் இனிமையாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd7b2a4c-ba81-4438-9974-5b8816bdecd1/26-6a7e36884af87.webp' /></p>]]></content>
            <updated>2026-08-13T23:30:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அழகியே அழகியே என ரசிகர்களின் கமெண்ட்டுகளால் பொங்கும் டிடியின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/anchor-dd-latest-saree-attire-photoshoot-1786628383"></link>
            <id>https://cineulagam.com/article/anchor-dd-latest-saree-attire-photoshoot-1786628383</id>
            <summary type="text">தொகுப்பாளினி டிடி20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் டிடி.&amp;nbsp;விஜய் தொலைக்காட்சியில் இவர் நடத...</summary>
            <content type="html"><![CDATA[<h2>தொகுப்பாளினி டிடி</h2><p>20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் டிடி.&nbsp;</p><p>விஜய் தொலைக்காட்சியில் இவர் நடத்திய நிகழ்ச்சிகள் ஏராளம், ஆனால் இப்போதெல்லாம் தொலைக்காட்சி பக்கம் வருவதில்லை. மாறாக தனியாக நிகழ்ச்சிகள், யூடியூப் பேட்டிகள் என நடத்தி வருகிறார்.</p><p>அதேசமயம் நிகழ்ச்சி பணிகளுக்கு இடையில் போட்டோ ஷுட்களும் செய்கிறார். அப்படி அண்மையில் லட்சணமாக புடவை அணிந்து டிடி வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அழகியே அழகியே கமெணட் செய்து வருகிறார்கள்.</p><p>இதோ அவரது லேட்டஸ்ட் போட்டோஸ்,</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T23:30:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமைச்சர் சந்திரசேகர் தலைமையில் திருகோணமலையில் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fisheries-development-committee-meeting-trinco-1786662262"></link>
            <id>https://tamilwin.com/article/fisheries-development-committee-meeting-trinco-1786662262</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்டத்தில் கடற்றொழில்துறை சார்ந்த பிரச்சினைகள் மற்றும்
அவற்றுக்கான சாத்தியமான தீர்வுகள் தொடர்பான மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் நேற்றை...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்டத்தில் கடற்றொழில்துறை சார்ந்த பிரச்சினைகள் மற்றும்
அவற்றுக்கான சாத்தியமான தீர்வுகள் தொடர்பான மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் நேற்றையதினம் (13) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில்
நடைபெற்றது.
</p><p>குறித்த கூட்டம், மாவட்ட செயலாளர்
W. G. H. ஹேமந்தகுமாரவின் ஒருங்கிணைப்பில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்
வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.</p><h2>ஒருங்கிணைப்புக் குழு</h2><p>

இதில் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், வெளிவிவகார
மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா
மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன ஆகியோர்
கலந்துகொண்டு, கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் மற்றும் தேவைகள்
குறித்துத் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6edc8961-1c47-4d37-9cf5-1d9f3f6b2504/26-6a7e4e6ef3a2f.webp' /></p><p>
</p><p>
கூட்டத்தின் தொடக்கத்தில், இந்நிகழ்வின் நோக்கம் மற்றும் இதன் மூலம்
எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள் குறித்து அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
விரிவாக விளக்கமளித்தார்.</p><p>

அதனைத் தொடர்ந்து, கடந்த மாவட்ட கடற்றொழிலாளர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்
முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்து விரிவாக
ஆராயப்பட்டது.
</p><p>
குறிப்பாக, திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர்கள் அன்றாடம் எதிர்நோக்கும்
சிக்கல்களுக்கு விரைவான மற்றும் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளைப்
பெற்றுக்கொடுப்பது குறித்து இக்கூட்டத்தில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
</p><p>
இந்தக் கூட்டத்தில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின்
செயலாளர், திருகோணமலை மாவட்ட மீன்பிடி கூட்டுத்தாபன அதிகாரிகள், பிரதேச
செயலாளர்கள், மாவட்ட மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-08-13T23:12:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் 3 பேருக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/three-people-executed-same-day-us-after-16-years-1786661874"></link>
            <id>https://canadamirror.com/article/three-people-executed-same-day-us-after-16-years-1786661874</id>
            <summary type="text">அமெரிக்காவில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே நாளில் மூன்று கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டென்னசி, அலபாமா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே நாளில் மூன்று கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> டென்னசி, அலபாமா மற்றும் ஓக்லஹோமா ஆகிய மூன்று மாகாணங்களில் இந்த மரண தண்டனைகள் திட்டமிடப்பட்டிருந்தன.
</p><p>
டென்னசியில் 66 வயதான அந்தோணி டேரல் ஹைன்ஸ், ஹோட்டல் பணியாளரான கேத்தரின் ஜென்கின்ஸை 1985ஆம் ஆண்டு கொலை செய்த வழக்கில் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3945751-b01e-4871-8b93-7a8505628f53/26-6a7e4bf59af0e.webp' /></p><p>ஓக்லஹோமாவில் 70 வயதான கார்லோஸ் குயெஸ்டா-ரோட்ரிக்ஸ், 2003ஆம் ஆண்டு தனது காதலியை கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.</p><p>

அலபாமாவில் 42 வயதான ஜெரமி வில்லியம்ஸ், 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்த வழக்கில் மரண தண்டனைக்கு தீர்ப்பளிக்கப்பட்டிருந்தார். </p><p>இந்த மூவருக்கும் மரண தண்டனை விஷ ஊசி மூலம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டது.</p><p>

அமெரிக்காவில் இதற்கு முன்னர் 2010ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் திகதி ஒரே நாளில் மூன்று மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருந்தன. </p><p>அதன்பின்னர் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வாறான மூன்று மரண தண்டனைகள் ஒரே நாளில் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-13T22:58:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை வைத்தியசாலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஆடை விவகாரம்..! யாரும் அறியாத திடுக்கிடும் தகவல்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hijab-at-kalmunai-hospital-issue-1786648877"></link>
            <id>https://tamilwin.com/article/hijab-at-kalmunai-hospital-issue-1786648877</id>
            <summary type="text">கல்முனை ஆதார வைத்தியசாலையில் (Base Hospital Kalmunai) அண்மையில் ஏற்பட்ட உடை தொடர்பான சர்ச்சை தற்போது பேசுபொருளாகியுள்ளது.
 
இந்த நிலையில், அரசு ஊழிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை ஆதார வைத்தியசாலையில் (Base Hospital Kalmunai) அண்மையில் ஏற்பட்ட உடை தொடர்பான சர்ச்சை தற்போது பேசுபொருளாகியுள்ளது.
</p><p> 
இந்த நிலையில், அரசு ஊழியர்கள் தங்கள் கடமையின் போது அனுமதிக்கப்பட்ட சீருடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்று,&nbsp; 2012-ம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், அம்பாறை மாவட்டத்தில் இரண்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைகள் (RDHS) இருப்பதன் சட்டப்பூர்வத்தன்மை மற்றும் வைத்தியசாலைப் பெயர்களில் உள்ள மாற்றங்கள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.</p><p>

இந்த விவாதம் எந்த ஒரு மதத்திற்கும் அல்லது இனத்திற்கும் எதிரானது அல்ல என்றும், சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுவதே அவசியம் எனவும் சமூக மட்டங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
அரச ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சீருடைகளை (Uniform) மட்டுமே பணி நேரத்தில் அணிய வேண்டும் என்று இலங்கையின் பொது நிர்வாக மற்றும் சுகாதார அமைச்சின் சுற்றறிக்கைகள் வலியுறுத்துகின்றன.

 குறிப்பாக 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை (கடித இலக்கம்: 2/176/212), சுகாதாரப் பணி உதவியாளர்கள் மற்றும் கனிஷ்ட தர ஊழியர்கள் முழங்கால் வரை இருக்கும் ஆடைகளை (Cream colour gown) அணிய வேண்டும் என்பதை மிகத் தெளிவாக வரையறுத்துள்ளது.</p><p>

 எந்தவொரு மத அல்லது இன ரீதியான அடையாளங்களையும் அல்லது உடைகளையும் பணி நேரத்தில் அணிய அனுமதி இல்லை என்றும், அரசியலமைப்பு மத சுதந்திரத்தை வழங்கினாலும், அரச கடமைகளில் சீருடை தொடர்பான விதிகளைப் பின்பற்றுவது கட்டாயம் என்றும் இதில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 குறித்த சீருடைகளை அணியத் தவறும் ஊழியர்களுக்கு எதிராக அரச நிறுவனங்களின் தலைவர்கள் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது இந்தச் சுற்றறிக்கையின் கட்டாய விதிமுறையாக உள்ளது.
</p><p>
இந்த விதிமுறைகள் இலங்கையில் உள்ள அனைத்து மாவட்ட வைத்தியசாலைகளுக்கும் பொதுவானவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mqj0Hav3DsQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-13T22:55:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டர் ; 2 வீரர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/military-helicopter-crashes-us-2-soldiers-killed-1786660731"></link>
            <id>https://canadamirror.com/article/military-helicopter-crashes-us-2-soldiers-killed-1786660731</id>
            <summary type="text">அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இடம்பெற்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

டெக்சாஸ் மாநிலம் சலாடோ பகுதிக்கு அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இடம்பெற்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.</p><p>

டெக்சாஸ் மாநிலம் சலாடோ பகுதிக்கு அருகே அமெரிக்க ராணுவத்துக்குச் சொந்தமான தாக்குதல் வகை அபாச்சி ஹெலிகாப்டர் ஒன்று பறந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென வயல்வெளியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fd11f62-791a-4f4e-8295-6dd88e805f0b/26-6a7e477ccea8f.webp' /></p><p>

விபத்தைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் தீப்பற்றி வெடித்துச் சிதறியதுடன், வயல்வெளியில் இருந்த புற்களிலும் தீ பரவியுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். </p><p>எனினும், தீ சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹெலிகாப்டரில் பயணித்த இரண்டு ராணுவ வீரர்களும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. </p><p>அதேவேளை, இந்த விபத்தில் வேறு எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. </p><p>விபத்துக்கான காரணத்தை கண்டறியும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
இந்நிலையில், உயிரிழந்த இரு வீரர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-13T22:38:57+00:00</updated>
        </entry>
    </feed>
