<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-20T12:32:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[48 கடவுச்சீட்டுகளுடன் 70 வயது முதியவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/70-year-old-man-arrested-with-48-passports-1789906948"></link>
            <id>https://ibctamil.com/article/70-year-old-man-arrested-with-48-passports-1789906948</id>
            <summary type="text">நவகமுவ காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை குழுவினர், நவகமுவ காவல் பிரிவின் மேல் பொமிரியா பகுதியில் நேற்று இரவு (19) நடத்திய சோதனையில், போலி ஆவணங்களைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகமுவ காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை குழுவினர், நவகமுவ காவல் பிரிவின் மேல் பொமிரியா பகுதியில் நேற்று இரவு (19) நடத்திய சோதனையில், போலி ஆவணங்களைத் தயாரித்ததாக தெரிவித்து சந்தேக நபர் ஒருவரை கைது செய்தனர்.</p><p>

சந்தேக நபர், மேல் பொமிரியா பகுதியின் கடுவெல பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஆவார்.&nbsp;</p><h2>சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள்</h2><p>&nbsp;சந்தேக நபரிடமிருந்து 48 கடவுச்சீட்டுகள், ஒரு போலி கண்டறியும் கருவி மற்றும் ஒரு கைபேசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70dde76d-2894-41e9-9537-5dd5a886b58e/26-6aafd005ead7f.webp' /></p><p>
</p><p>
நவகமுவ காவல்துறையினர் இதுகுறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T12:23:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>T.thibaharan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆழ்கடலின் ஆழத்தில் புதைந்துள்ள ஈழத்தமிழர் விடுதலை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/liberationof-eelam-tamils-buried-depths-deep-sea-1789904264"></link>
            <id>https://tamilwin.com/article/liberationof-eelam-tamils-buried-depths-deep-sea-1789904264</id>
            <summary type="text">இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன வன்முறை என்பது எழுமாற்றாக நடந்தேறியதோ, அல்லது தற்செயலான சம்பவங்களினால் நடந்ததேறியதோ அல்லவெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன வன்முறை என்பது எழுமாற்றாக நடந்தேறியதோ, அல்லது தற்செயலான சம்பவங்களினால் நடந்ததேறியதோ அல்லவென்றும், அது இலங்கையின் வரலாற்றில் சிங்கள பௌத்தமத எழுச்சியும், மகாவம்சம் என்ற சிங்களவர்களுடைய புனித நூலின் விருப்புவாதமாகிய "தம்மதீப" கோட்பாட்டை அடித்தளமாகக் கொண்டு திட்டமிட்ட முறையில் ஈழத் தமிழர்களை படிப்படியாக இலங்கைத் தீவில் அழிக்கின்ற செயல்முறையே என்பதை அழுத்தம் திருத்தமாக மு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய “கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை“ என்ற நூல் வரையறை செய்கிறது.</p><p>

இலங்கைத் தீவின் வரலாற்றில் மொழிவழி தேசிய இனங்கள் இரண்டும் தமக்கான அரசை பதினாறாம் நூற்றாண்டு வரை வைத்திருந்தனர். இலங்கைத்தீவின் மீது இந்திய பேரரசர் அசோகர் பௌத்த மதப் படையெடுப்பை செய்தபோதும், வட-கிழக்கு தமிழர்கள் அதற்கு எதிராக போர்க்கொடி தூக்கவில்லை.</p><h2>தமிழ் இனப்படுகொலை</h2><p> பௌத்தத்தை வடக்கிலே வரவேற்று அதனை தெற்கே அனுராதபுர அரசுக்கு செல்வதற்கு வழிவிட்டார்கள். அதன் மூலம் பௌத்தம் சிங்கள தேசத்தில் பரவி நிலைபெற்றது. </p><p>அதேபோல பின்னாட்களிலே சேர, சோழர், பாண்டிய, கலிங்கர்கள் படையெடுத்தபோதும் அந்த இந்திய மன்னர்களுக்கு எதிராக ஈழத்தமிழ் மன்னர்கள் வாளேந்தவில்லை. மாறாக அவர்களை வரவேற்று தென்னிலங்கை நோக்கிச் செல்ல வழிகாட்டி அனுப்பினர். இலங்கை வரலாற்றில் தமிழ் மன்னர்கள் யாரும் இந்திய மன்னர்களுடன் போரிட்ட வரலாறு இல்லை.</p><p> 

 தென்னிந்திய மன்னர்களுடன் ஈழத்தமிழர்கள் போரிடாமையும், அவர்களுடன் நட்புரிமை பாராட்டியமையும்தான் மகாநாம தேரர் இந்தியர்களை எதிர்ப்பதோடு, இந்தியப் படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் நட்பு உறவு கொண்ட ஈழத் தமிழர்களையும் சிங்களவர்களுடைய பொது எதிரியாக வகைப்படுத்தினார். </p><p>இந்திய ஆக்கிரமிப்பாளர்களின் கருவிகளாக ஈழத் தமிழர்கள் உள்ளார்கள் என்று மகாநாமதேரர் கருதியமையினால் தமிழர்களை இலங்கைத் தீவிலிருந்து அகற்ற வேண்டும் என்ற இலட்சிவாத நோக்கிலேயே மகாவம்சம் என்ற நூலை எழுதினார். 


தமிழின எதிர்ப்புத்தான் மகாவம்ச நுாலிலே “தம்மதீபக்“ கோட்பாடாக இனக்குரோத மனப்பாங்கோடு எழுதப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd21b256-b823-40ea-b52b-5958bc561fdd/26-6aafcfa51f678.webp' /></p><p> </p><p>இலங்கைத்தீவு பௌத்தத்தை பாதுகாப்பதற்காக புத்தபிரானால் தேர்ந்தெடுக்கப்பட்ட தீவு, இலங்கைத்தீவு விஜயனும் அவனுடைய சந்ததிகளுக்கே சொந்தமானது, இலங்கை அரசு சிங்கள பௌத்தர்களுக்கே உரித்தானது என்ற மகாநாமதேரரின் விருப்பு வாதத்தை இலட்சிய வாதமாக மகாவம்ச நுாலினுாடாக சிங்கள மக்களின் மனதிலே பதிய வைத்துவிட்டார்.</p><p> இதன் விளைவாகவே சிங்களதேசம் இந்தியாவுக்கு எதிரான யுத்தத்தையே ஈழத்தமிழர் மீது திணித்து தமிழ் இனப்படுகொலையை நடாத்துகிறது.</p><h2>ஈழத்தமிழருடைய இறையாண்மை</h2><p> </p><p>சிங்களதேசத்தின் இந்தியாவுக்கு எதிரான யுத்தத்தையே ஈழத்தமிழர்கள் எதிர்கொண்டு அழிந்துவருகின்றனர் என்பதையும் இந்த நுால் கோடிட்டுக் காட்டுகிறது.</p><p> 

ஈழத்தமிழர்களைப் பொறுத்தளவில் இந்துசமுத்திரம் என்பதும், பாக்குநீரணை என்பதும் வெறும் மீன்பிடிக் கடலாகவும், இலங்கைக்கும் இந்தியாவுக்குமான கடல் போக்குவரத்து மற்றும் ஆள், பொருள், கள்ளக்கடத்தல் கடலாகவுமே இன்றுவரை பார்க்கப்படுகிறது. அதனை ஒரு அரசியல் கடலாக தமிழர்கள் ஒருபோதும் பார்க்கவில்லை. </p><p>ஏன் தமிழீழ விடுதலைக்காக போராடப் புறப்பட்ட எந்த ஒரு போராட்ட இயக்கங்களும் அதனை அரசியல்க் கடலாக பார்க்கவில்லை, தெரிந்திருக்கவுமில்லை. </p><p>அத்தகைய ஒரு கருத்து மண்டலம்தான் ஈழத் தமிழர்கள் மத்தியில் இன்றுவரையும் நிலை பெற்றிருக்கிறது.

ஈழத்தமிழரின் இறுதி அரசான யாழ்ப்பாண நல்லுார் இராசதனியின்மீது 1560, 1591, 1619 ஆகிய மூன்று காலகட்டங்களிலும் போர்த்துக்கேயர்களினால் மேற்கொள்ளப்பட்ட முற்றுகைப் போர்களின்போதும், தென்னிந்திய நிலத்திலிருந்து பாக்குநீரிணை ஊடாக சேதுபதி மன்னர்களும், குஞ்செலி மரக்காயர்களும், மதுரை நாயக்கர்களும், கரையார்படைகளும்(மறவர்படை) ஈழத் தமிழர்களுக்கு கைகொடுக்க படைகளை அனுப்பினார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/681cdfb2-e130-4e34-b30f-6e47c18d8d10/26-6aafcfa5c85e2.webp' /></p><p> ஆயினும் தொடர்ந்து யாழ்ப்பாண இராச்சியத்திற்கு படை உதவி வழங்கல்களை செய்வதற்கு போர்த்துக்கீச கடற்படை பாக்குநீரிணையில் தரித்து நின்று தென்னிந்திய தொடர்பை துண்டித்தமையே நல்லுார் இராச்சியம் வீழ்ச்சியடைந்தமைக்கான பிரதானமான காரணமாகும்.
</p><p>
அவ்வாறே 1619ல் நல்லுார் கைப்பற்றப்பட்ட பின்னரும் போத்துக்கேய ஆட்சியை வீழ்த்தி மீண்டும் நல்லுார் அரசை நிறுவற்காக 1620-1621 காலப்பகுதியில் யாழ்ப்பாண உள்ளூர் தலைவர்கள், வல்வெட்டித்துறை கரையார் தலைவர்கள், மற்றும் தஞ்சாவூர் நாயக்கர் படைகள் இணைந்து யாழ்ப்பாண அரியணைக்கு உள்ளூர் இளவரசரை மீண்டும் அமர்த்த பலமுறை கிளர்ச்சிகளை மேற்கொண்டனர்.</p><p> ஆயினும் போர்த்துக்கீச கடற்படை பாக்குநீரிணையில் தரித்து நின்று தென்னிந்திய கடல்வழி வழங்கல்களை துண்டித்தமையே நல்லுார் இராச்சியத்தை மீள்நிறுவ முடியாமைக்கான காரணமாகும். </p><p>ஆகவே தமிழர்களுடைய இறைமை தோற்கடிக்கப்பட்டது தரையில் அல்ல கடலிலேதான். ஈழத்தமிழருடைய இறையாண்மை பாக்கு நீரிணையின் அடியாளத்திலேயே வீழ்த்தப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது.</p><p> எங்கு ஈழத்தமிழனுடைய இறையாண்மை புதைக்கப்பட்டுள்ளதோ, எங்கு வீழ்த்தப்பட்டதோ அந்த பாக்குநீரிணை அரசியலில் இருந்துதான் ஈழத்தமிழரின் இறையாண்மையை மீட்டெடுக்க வேண்டும்.

இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாய் ஜனநாயக அரசியலில் தொடர்ந்து தோல்வி அடைவதற்கான காரண காரியங்களை தெரிந்து கொள்ளாமல் வரலாற்றை வெற்றிகரமான பாதையில் ஒருபோதும் இட்டுச் செல்ல முடியாது.</p><h2>முள்ளிவாய்க்கால் மண்</h2><p> </p><p>" வரலாறு வெற்றி பெற்றவர்களால் எழுதப்படுகிறது" ("History is written by the victors") என்பதற்கிணங்க தொடர் தோல்விகளில் இருந்து விடுபட்டு வெற்றியடைவதற்கான பாதையை ஈழத் தமிழினம் உடனடியாக கண்டறிய வேண்டிய இறுதிக் காலகட்டம் இது.</p><p> கடந்த நான்கு நூற்றாண்டுகளுக்கு மேலாய் கடலின் அடியாளத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழினத்தின் இறையான்மையை தரையில் தேடும் அறிவீனமே இன்றுவரையான ஈழத்தமிழினத்தின் அரசியலாய் உள்ளது.
</p><p>

ஈழத் தமிழர்களின் இறையாண்மை வீழ்ச்சியையும், விடுதலைப் போராட்ட தோல்வியையும் கடலிற்தான் தேடவேண்டும் என்றும், இலங்கைத்தீவை ஆக்கிரமித்து, ஆளவந்த அந்நியர்களும், தற்போது ஆண்டு கொண்டிருக்கும் சிங்கள பௌத்த பேரினவாதிகளும் தமிழ் மக்களுடைய உரிமைகளை கடலிலே புதைத்து விட்டார்கள் என இந்நுால் கூறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44691107-0ef3-45bb-9316-652420315350/26-6aafcfa681866.webp' /></p><p> </p><p>புவியியல் எதார்த்தத்தில் காணப்படும் கடல்சார் அரசியலின் ஆணிவேரிலிருந்து முற்றிலும் அறிவார்ந்த வகையில் ஈழத் தமிழரின் கடந்தகால தோல்விகளுக்கான அடிச்சுவடுகளையும், எதிர்கால வெற்றிகளுக்கு தகுந்த வழிவரை படத்தையும் இந்நுாலில் வரையப்பட்டுள்ளது.</p><p> இந்நூலாசிரியரின் கடந்த 40 ஆண்டு கால எழுத்துக்கள் அனைத்திலும் இந்த கடல் சார்ந்த அரசியல் நீரோட்டம் அப்படியே தெளிவாய் தொடர்ந்து ஓடுகிறது.

கடலிலே புதைக்கப்பட்ட தமிழர்களுடைய இறையாண்மையையும், சுதந்திரத்தையும், இனவிடுதலையையும் குறிப்பாக பாக்குநீரிணைக் கடலிலேதான் தேடவேண்டும் என்கிறாது இந்நுால். </p><p>அறிஞர்களுடைய நூல்களில் எழுதப்பட்ட வரிகளைவிட அந்த எழுதப்பட்ட வரிகளுக்கிடையே தெறித்துக்கொண்டு தொக்குநிற்கும் எழுதப்படாத வரிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும் என்பர்.</p><p> அவ்வாறே இந்நுாலும் எழுதப்பட்டவைகளுக்கு இடையே தொக்குநிற்கும் எழுதப்படாத வரிகள் ஆய்வு கலையின் மிகமுக்கியத்துவம் வாய்ந்த அறிவியல் பிரயோகம்.

ஈழத்தமிழர்கள் பாக்குநீரிணையில் இழந்துபோன இறைமையை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தை தெரிந்தோ, தெரியாமலோ பாக்கு நீரிணை ஊடாகவே ஆரம்பித்தனர். </p><p>ஆயினும் ஈழத் தமிழர்கள் பாக்குநீரிணையின் முக்கியத்துவத்தை தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில் சிறிதும் கவனம் செலுத்தவில்லை என்ற துயரகரமான உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.</p><p> அந்தப் புரிதல் ஈழத் தமிழர்களுக்கு ஏற்படாததன் விளைவுதான் தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்தது. ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்தது என்பது முள்ளிவாய்க்கால் மண்ணிலல்ல. </p><p>போராட்டம் தோல்வி அடைந்தது முதலாவது பாக்கு நீரிணையில், இறுதியாக தோல்வியடைந்தது இந்து சமுத்திரத்தில். ஆக மொத்தத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டம் தோல்வி அடைந்தது தரையிலல்ல அது கடலில்த்தான்.</p><p> இந்த தத்துவார்த்த உண்மை புரியாத வரைக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தோல்வியிலிருந்து மீட்டெடுக்க முடியாது என இந்நுால் கூறுகிறது. 

தமிழீழ விடுதலைப் போராட்டம் அதன் பின்தளமாக ஆரம்ப காலத்தில் தமிழகமே இருந்து வந்தது. தமிழகத்தின் பிந்தளத்தை ஈழத்தமிழர்கள் இழந்த பின்னரும் பாக்குநீரிணையின் முக்கியத்துவம் கருத்திற் கொள்ளப்படவில்லை. </p><p>மாறாக இந்து சமுத்திரம் எங்கள் கையில் உள்ளது என்று ஈழத் தமிழர்கள் நம்பினர். ஆயினும் மாறிவரும் உலக அரசியல் ஒழுங்கில் இந்துசமுத்திரத்தில் ஈழத்தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை 2002ம் ஆண்டு சமாதான உடன்படிக்கையிலிருந்து 2006 வரையான நான்கு ஆண்டுகளில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான ஆயுத வழங்களைச் செய்த விடுதலைப் போராட்டத்திற்கு சொந்தமான 9 கப்பல்கள் இந்து சமுத்திரத்திலே தாக்கி அழிக்கப்பட்டன. அவற்றில் மூன்று கப்பல்களைத் தவிர ஏனைய கப்பல்கள் உலகின் பலம் வாய்ந்த நாடுகளின் தாக்குதல்களினாலேயே அழிக்கப்பட்டன.</p><h2>ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு</h2><p> மூன்று கப்பல்கள் மாத்திரமே இலங்கை கடற்படையால் அழிக்கப்பட்டது என்ற உண்மையை ஈழத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழிழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தின் தோல்வி என்பது கடலிலே என்றால் நாம் அந்த கடலை எவ்வாறு கையாள வேண்டும்? என்பதைப் பற்றி நாம் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும்.</p><p> விடுதலைப் போராட்டம் இந்து சமுத்திரத்தின் அடியாழத்தில் புதைக்கப்பட்டுவிட்டது என்றால் அங்கிருந்துதான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மீட்டெடுக்க வேண்டும். ஆகவே ஈழத் தமிழர்கள் கடலை கையாள கற்றுக்கொள்ளவில்லை என்றால், வெற்றிக்கான பாதையை நாம் கண்டறியவில்லை என்பதே அர்த்தமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be6cfefa-a886-4f54-b28b-4809d55ad3c5/26-6aafcfa737e25.webp' /></p><p> 


ஈழத் தமிழர்களின் விடுதலைக்கு பாக்குநீரிணையும், இந்துசமுத்திர அரசியலும் அச்சாணியாக உள்ளது என்பதனால் அந்த பார்க்குநீரிணையையும், இந்துசமுத்துவத்தையும் இணைத்த ஒருங்கிணைந்த கடல்சார் அரசியலை தமிழ் மக்கள் முன்னெடுப்பதுதான் விடுதலைக்கான ஒரேவழி. “கடலை நம்மால் கையாளமுடியவில்லை என்றால் ஈழத் தமிழர்களுக்கு இலங்கை தீவில் எதுவும் மிஞ்சாது“ என்ற எழுதப்படாத அந்த தொக்குநிற்கும் வரிகளை அடிநாதமாக கொண்டிதிருப்பதுதான் இந்நூலின் விசேட பண்பாகும்.</p><p>

இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் எவ்வாறு கட்டமைக்கப்பட்ட ரீதியில் இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள் என்பதை மிகத் தெளிவாக தத்துவார்த்த ரீதியில், வரலாற்றுப் போக்கில் நிகழ்ந்த அத்தனை விடயங்களையும் உள்ளடக்கி இந்நுாலில் பதிவுசெய்கிறது. மாக்ஸியத்தை புரிந்துகொள்வதற்கு மாக்ஸ்சை பற்றி புரிந்து கொள்ளவேண்டும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். </p><p>அதேபோல இந்த நூலை புரிந்து கொள்வதற்கு மு.திருநாவுக்கரசு அவர்களின் ஈழப் போராட்டம் சார்ந்த அவரின் வகிபாகமும், அவருடைய ஈழப் போராட்டம் சார்ந்த தரிசனங்களை தத்துவார்த்த ரீதியிலும், வரலாற்று ரீதியிலும், தீர்க்க தரிசனத்தோடு அவர் எழுதிய 20க்கு மேற்பட்ட நூல்களைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியமானது.</p><p>

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சார்ந்தும், ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு சார்ந்தும் தீர்க்கமான முடிவுகளை சொல்லவல்ல இந்நுாலாசிரியர் ஈழப் போராட்டம் காலத்திற்குகாலம் சந்தித்த பல்வேறு நெருக்கடிகளுக்கு அக்காலகட்டத்திலேயே அவற்றிற்கான தீர்வுகளை மிகத்தீர்க்கமாக முன்வைத்ததில் முதன்மையானவர்.</p><h2>&nbsp;மத்திய கிழக்கின் யுத்தம்</h2><p> </p><p>ஈழத்தமிழ் மக்களின் நீண்ட போராட்ட வரலாற்றில் போராட்டம் நெருக்கடிகளை சந்தித்த காலங்களில் எல்லாம் நெருக்கடிகளை தீர்க்கவல்ல அறிவியல் சார்ந்தும், தத்துவார்த்தம் சார்ந்தும் தனது முடிவுகளை அவரது நூல்களின் மூலமாக வெளிப்படுத்தியவர். 

இலங்கையின் இனப்பிரச்சினை சார்ந்து அறிய வேண்டுமானால், ஆய்வு செய்ய வேண்டுமானால் திருநாவுக்கரசை கடந்து அல்லது அவரை தவிர்த்து, அவர்களுடைய நூல்களை வாசித்தறியாமல் ஈழப் பிரச்சனை பற்றி முழுமையாக ஆய்வு செய்திட முடியாது.</p><p> அத்தகைவரால் எழுதப்பட்ட கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை என்ற இந்நூலினுாடாக ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு வழிமுறையை அழுத்தம் திருத்தமாக தமிழ்ச் சமூகத்திடம் கையளித்துள்ளார்.</p><p> இதனை குத்தச்சாக் கொண்டே ஈழத் தமிழரின் விடிவுக்கான அரசியல் ஒளிவட்டத்தை தரிசிக்க வேண்டும் என்பதில் அணு அளவும் சந்தேகமில்லை. 

இற்றைக்கு 2400 வருடங்களுக்கு முன்னர் கிரேக்கத்தில் பிளேட்டோ எழுதிய குடியரசு நூல் உலகளாவிய கண்ணோட்டத்தில் பிரபஞ்சம் தழுவிய ரீதியில் மனிதன் பற்றிய பார்வையை மிகத் தெளிவாகச் சொல்கிறது. தொடர்ந்து காலத்துக்கு காலம் பல்வேறு நூல்கள் உலகம், பிரபஞ்சம், மனிதன் பற்றியய நோக்கில் எழுந்திருக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b09d05d4-17be-4fea-bc89-e98c2f0b9903/26-6aafcfa89c86d.webp' /></p><p> </p><p>அந்த அடிப்படையில் இருபதாம் நூற்றாண்டில் ராகுல சங்குத்தியா எழுதிய “வொல்கா முதல் கங்கை வரை“ என்ற நூல் ஒரு முழுநீள மனிதகுல வரலாற்றை சொல்கிறது. </p><p>அவ்வாறே அண்மைய காலங்களில் பிரான்சிஸ் புக்குஜாமா(Francis Fukuyama) எழுதிய The Origins of Political Order (2011). இதன் தொடர்ச்சியாக Political Order and Political Decay (2014) ஆகிய இரண்டும் நூல்களிலும் பிரபஞ்சம் தழுவிய மனிதகுல அரசியல் ஆதிக்க வரலாற்று வளர்ச்சியை விரிவாகப் பார்க்கலாம். 

அத்தகை உலகப்பிரசித்தி பெற்ற நுால்களுக்கு சற்றும் குறைவின்றி காத்திரமான வகிவாகத்தை கொண்டதாக 2015ல் மு.திருநாவுக்குக்கரசு எழுதிய “பூகோள வாதமும் புதியதேசியவாதமும்“ என்ற நூல் அமைகிறது. </p><p>இலங்கைத் தீவில் ஈழத்தமிழரின் போராட்ட நோக்கு நிலையில் இருந்துகொண்டு, உலகம் தழுவிய பார்வையில் அண்டப் பிரபஞ்ச உணர்வோடும், மனித குலவரலாற்றுப் படிமங்களோடும், வரலாற்றையும், தத்துவங்களையும், கோட்பாடுகளையும், மனித குலத்தின் வெற்றிகளையும், தோல்விகளையும், உயர்வுகளையும், தாழ்வுகளையும், சீரழிவுகளையும், நீதி நியாயங்களையும் மனிதகுலம் கடந்து வந்த பாதையில் அதன் எழுச்சிகளை, வீழ்ச்சிகளை, நல்லவைகள், கெட்டவைகள் அனைத்தையும் மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கான பாதைக்கு வழிசமைக்கும் நோக்கில் உலகம் தழுவிய பார்வையில் மனிதகுல வரலாற்றையும் அந்த வரலாற்றுக்குள் அடங்குகின்ற ஈழத் தமிழர் போராட்டத்தையும் ரத்தமும் சதையுமாக நடைமுறை சார்ந்து ஈழப் போராட்டத்தின் நோக்கு நிலையில் இருந்து கொண்டு தமிழ் மக்களிடம் “புதிய தேசியவாத“ என்ற கருத்தியலை துணிந்து முன் வைத்துள்ளார். </p><p>இந்நூல் ஈழத் தமிழர்களுடைய அறிவியல் வளர்ச்சியின் முதிர்ச்சிக்கு சான்றாகவும் அமைந்துள்ளது.
</p><p>
அதேபோன்று “ஒற்றைமைய உலகில் போரும் சமாதானமும்“ என்ற நூல் கடந்த ஒரு நூற்றாண்டு கால தத்துவம், அரசியல், பொருளாதாரம், யுத்தம் என்பவற்றை முற்றிலும் தத்துவார்த்த கண்ணோட்டத்தில் நடைமுறை சார்ந்த ரீதியில் “மத்திய கிழக்கில் மேற்குலகின் அழித்தொழிப்பு யுத்தம்“ என துணிந்து தன் கருத்துக்களை தீர்க்கதரிசனத்தோடு முன்வைத்திருக்கிறார். குறிப்பாக இன்றைய மத்திய கிழக்கின் யுத்தத்தை 20 ஆண்டுகளுக்கு முன்னரே அந்த நூலில் நுண்மான் நுழைபுலனோடு முன்வைத்திருக்கிறார்.</p><p>விருப்பு வெறுப்புகளை கடந்து மார்க்சிசத்தையும் கம்யூனிசியத்தையும் சரிவர எடை போடுவதோடு அவற்றிடையே உள்ள குறைபாடுகளை துணிந்து சொல்கிறது. கால் மார்க்ஸ் இந்த பிரபஞ்சத்தின் தன்னிகரற்ற தத்துவ ஞானிதான் ஆயினும் அவருடைய தத்துவத்தில் உள்ள சரி-பிழைகளை, குறைபாடுகளை நடைமுறை சார்ந்து முன்வைக்கிறது. </p><p>இத்தகைய மிக காத்திரமான அந்த நூல் பலராலும் வாசிக்கப்பட்டாலும் அது பற்றி பொதுவெளியில் பெரியளவில் பேசப்படாமல் உள்ளது என்பது ஈழத் தமிழர் சார்ந்த அறிவியலின் துரதிஷ்டமான பக்கங்களே. ஆயினும் அந்த நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால் அதன் கனதியும் காத்திரமும் அதிகரிக்கும் என நம்பலாம்.</p><h2>இந்துமாகடலின் அடி ஆழம்</h2><p> </p><p>இத்தகைய ஒர் அறிய நூலை எழுதியவர்தான் தற்போது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை என்ற இந்நூலை எழுதுகின்ற போது அதற்கான பார்வையும், பரிமாணமும், தனித்துவமும், கனதியும் கனகாத்திரமாக இருக்கும் என நம்பலாம்.

"ஒரு சமூகத்தின் அறிவியல் கொள்ளளவு என்னவோ அதற்குள் இருந்துதான் அச்சமுகத்தினுடைய சமூக பிரதிநிதிகளும், தலைவர்களும் தோன்றுவர். </p><p>ஒரு சமூகத்தின் அறிவியல் மட்டம் என்னவோ அந்த மட்டத்துக்கு உட்பட்டுதான் அச்சமுகத்தினுடைய அறிஞர்களும், ஞானிகளும், தீர்க்கதரிசிகளும் தோன்றுவர். விதிவிலக்காக தமிழினத்திலும் இந்நுாலாசிரியர் போன்று ஓரிருவர் அந்த கொள்ளளவை தாண்டியும், விஞ்சியும் தோன்றியிருக்கிறார்கள். ஆயினும் அறிவியல் மடடத்தை விஞ்சித் தோன்றுவது என்பதும் அரிதினும் அரிதே.</p><p> கடந்துபோன இறந்தகாலத்தை போற்றிப் புகழ்ந்து பேசி காலத்தைக் கழிக்கும் ஒரு இனத்திலிருந்து எப்படி முற்போக்கு சிந்தனையை எதிர்பார்க்க முடியும்? எப்படி எதிர்காலத்தைப் பற்றி அவர்களால் சிந்திக்க முடியும்? அறிவியலையும், சிந்தனையையும் கடந்தகாலம் புகழ்ச்சியினால் காயடிக்கும் தமிழ்ச்சமூகம் அறிவியலில் முன்னேறுவது மிகக்கடினமானது. </p><p>

அறிவியல் வளர்ச்சி எதிர்க்கணிய வளர்ச்சியடைந்து அறிவியலில் வறுமைப்பட்ட தமிழ்ச் சமுகத்தை தலைமைதாங்க எந்த ஒரு அறிவார்ந்த முற்போக்காளனும் முன்வரமாட்டான் என்பது மட்டுமல்ல அதற்கு அந்த சமூகத்தின் முட்டாள் பிரமுவர்களும் அனுமதிக்க மாட்டார்கள். </p><p>அதையும் மீறி தமிழ்ச் சமூகத்தை அறிவியல் மயப்படுத்த முனையும் முற்போக்காளர்களை தமிழ்ச் சமூகத்தின் பிற்போக்குத்தனங்களினால் களத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுவிடுவர். இத்தகைய சூழ்நிலையில் ஓடுகாலிகளே தலைமை தாங்க முன்வருவர். அந்த ஓடுகாலிகளுக்கு புகழாரம் சூட்டி புகழ்ந்து பேசுவதற்கு ஆயிரம் முட்டாள்கள் ஒன்று சேர்வர். அந்த முட்டாள் கூட்டம் அறிவியளாலர்கள் மீது கல்லெறிந்து சமூகத்திலிருந்து தூரத்தூரத்திவிடுவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70358a82-34ba-4d6b-adeb-3ade34fe0d3e/26-6aafcfa7e4b94.webp' /></p><p> அத்தகைய போக்கைக் கொண்ட ஈழதமிழர்களை தோல்வியடைந்த சமூகமாக உலகம் அடையாளப்படுத்துவதில் தவறில்லைத்தான்.</p><p>

இன்று ஈழத்தமிழர்களால் பேசப்படக்கூடிய ஆயிரம் பெருமகளுக்கும் புகழ்ச்சிகளுக்கும் அப்பால் நிஜவாழ்வில் எதிரிகளின் காலடிகளில் அடிமைகளாக வீழ்ந்து கிடப்பதற்கு அப்பால் தமிழ் மக்களுக்கு வெற்றிகளை தேடிக்கொடுத்த தலைவர் என்று கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாய் எவரும் இல்லை என்பதே நடைமுறை உண்மையாகும்.
</p><p>
இந்துமாகடலின் அடி ஆழத்துக்குள் மூழ்கிப் புதைந்துபோன துயரகரமான தோல்விகளிலிருந்து பாடங்களை கற்றக்கொள்ளாமல் ஒருபோதும் தமிழ் மக்களின் விடுதலைக்கான பாதையை கண்டறிய முடியாது என்பதை இந்த நூல் முற்றிலும் அறிவார்ந்த வகையில் படம்பிடித்துக் காட்டுகிறது. </p><p>அளவால் சிறிதாக இருந்தாலும் இந்நூல் முன்வைக்கும் ஆழமான பார்வையையும், கடல்சார் அரசியல் வழிகாட்டலையும் பின்பற்றாமல் ஈழத்தமிழர்களுக்கு விடுதலைக்கான வேறு மார்க்கங்கள் எதுவுமே இல்லை என்பதை திடசித்தத்துடன் கூறிட முடியும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T12:21:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசின் பேரழிவு அரசியல்... அழிவின் விளிம்பில் ஈழத்தமிழர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jvp-attempting-to-introduce-a-racist-structure-1789906064"></link>
            <id>https://ibctamil.com/article/jvp-attempting-to-introduce-a-racist-structure-1789906064</id>
            <summary type="text">ஜேவிபி இனவாதம் இல்லை என்று பேசிக்கொண்டு ஒரு இனவாத தரப்பை மிக பலமான ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வருவதற்கு மறைமுகமாக உதவுகிறது என்று யாழ்ப்பாண பல்கலைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேவிபி இனவாதம் இல்லை என்று பேசிக்கொண்டு ஒரு இனவாத தரப்பை மிக பலமான ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வருவதற்கு மறைமுகமாக உதவுகிறது என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் துறை பேராசிரியர் கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.</p><p>ஈழத்தமிழர்கள் எல்லா வகையான தளத்திலும் கபளீகரம் செய்யப்படுகிறார்கள் எனவும் ஈழ தமிழர்களை பொறுத்தவரையில் அவர்களுக்கு ஆரோக்கியமான அரசியல் இருப்பு இல்லை என்ற ஒரு தேக்க நிலைக்குள் அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p>
</p><p>
ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், 

அநுராதபுர சந்திப்பை பார்க்கின்ற போது தமிழ் மக்களை பொறுத்தவரையில் அச்சப்பட வேண்டிய ஒரு சூழலுக்குள்ளே தான் இருக்கிறார்கள்.
</p><p>
எதிர்காலத்தில் பொதுஜன பெரமுனவினுடைய வேட்பாளர் யாராவது ஜனாதிபதியாக வருவதற்குரிய வாய்ப்பை அதீதமாக கொண்டிருக்கின்ற ஒரு இருப்பு தென்னிலங்கையில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. இலங்கை தீவை பொறுத்தவரையில் இந்த மேல்தட்டு வர்க்கத்தினுடைய அரசியல் நலன்களுக்குள்ளால் தான் அது கட்டமைக்கப்பட்டிருக்கிறது.</p><p> 

ஜேவிபி இனவாதம் இல்லை என்று பேசிக்கொண்டு ஒரு இனவாத தரப்பை மிக பலமான ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வருவதற்கு அது மறைமுகமாக உதவுகிறது. இலங்கையை பொறுத்தவரையில் எதிர் துருவங்கள் ஒன்று என்ற ஒன்று கிடையாது.</p><p> அதுவும் குறிப்பாக இலங்கை தமிழருக்கு எதிரான ஒரு அரசியலை அவர்கள் நகர்த்துகின்ற போது அவர்கள் ஒருபோதும் எதிர் துருவங்களாக தங்களை காட்டிக் கொள்ளவில்லை.” என தெரிவித்தார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/toUCR-sCchQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T12:21:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதியில் மரண தண்டனை; அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி தீபமேந்தி பிரார்த்தனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sentence-in-saudi-candlelight-prayer-urging-anojan-1789906482"></link>
            <id>https://jvpnews.com/article/sentence-in-saudi-candlelight-prayer-urging-anojan-1789906482</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரைப் பாதுகாப்பாக விடுதலை செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரைப் பாதுகாப்பாக விடுதலை செய்யக் கோரி சம்மாந்துறை – வளத்தாப்பிட்டி பகுதியில் பொதுமக்கள் ஒன்றுகூடித் தீபமேந்தி விசேட பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.</p><p>&nbsp;நிகழ்வில்,&nbsp; ஏராளமான பொதுமக்கள் கைகளில் தீபங்களை ஏந்தி அனோஜனின் உயிரைக் காப்பாற்றவும், சவூதி அரசு அவருக்கு மன்னிப்பு வழங்கவும் மனமுருகிப் பிரார்த்தனை செய்தனர்.</p><p>அத்துடன், அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி இலங்கை அரசாங்கத்திற்கும் சவூதி தூதரகத்திற்கும் அனுப்பி வைப்பதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுள்ள அவசர மகஜரிலும் மக்கள் திரளாகக் கையொப்பமிட்டு வருகின்றனர்.</p><p>இதேவேளை, அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரை நாட்டிற்கு மீட்டு வர வேண்டும் என வலியுறுத்தி கல்முனை, நற்பிட்டிமுனை உட்பட நாட்டின் பல்வேறு பாகங்களிலும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து பல்வேறு மனிதாபிமான நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-20T12:15:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய்யுடன் யார் எட்டிப் பார்த்தா என்ன..தேவையில்லாதது!! அண்ணாமலை கருத்து..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/annamalai-urges-vijay-prioritize-local-investment-1789904867"></link>
            <id>https://viduppu.com/article/annamalai-urges-vijay-prioritize-local-investment-1789904867</id>
            <summary type="text">தமிழ்நாடு முதல்வர் விஜய், முதலீடுகலை ஈர்க்க லண்டனுக்கு 6 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து, அஜித்தின் கார் ரேஸையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின் ஒரே ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாடு முதல்வர் விஜய், முதலீடுகலை ஈர்க்க லண்டனுக்கு 6 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து, அஜித்தின் கார் ரேஸையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/906ff684-625a-467e-b1c3-5da68c4ed903/26-6aafc7e64bd48.webp' /></p><p> </p><p>பின் ஒரே நாளில் முதலீட்டாளர்களை சந்தித்து ரூ. 15 ஆயிரம் கோடி ஈர்த்தார். தொழில்துறை அமைச்சர், தொழில்துறை செயலாளர் இல்லாமல் முதலீட்டாளர்களை விஜய் சந்தித்த விஷயம் பேசுபொருளானது.</p><p> இந்நிலையில் வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை இதுகுறித்து பேசியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4eacabd4-7b3f-41e4-9180-d1088b543e4d/26-6aafc7e5993e0.webp' /></p><h2>அண்ணாமலை</h2><p> </p><p>இந்தியா 4.1 டிரில்லியன் பொருளாதாரத்துடன் இருக்கிறது. இங்கிலாந்து 3.4 டிரில்லியன் பொருளாதாரம் இருக்கும் நாடு. அந்நாட்டிடம் சென்று பெரிய கூட்டத்தை கூட்டிக்கொண்டு சென்றுவிட்டு, அவரை பார்த்தாரா, இவங்க எட்டி பார்த்தாங்களா, அவரு உள்ள போனாரா என்று எதற்கு இந்த வேலையெல்லாம், இதெல்லாம் தேவையில்லாதது. </p><p>முதல்வர் விஜய் லண்டனுக்கு போனது பற்றி பேச விரும்பவில்லை, அவர் லண்டனுக்கு போக வேண்டாம், அதுவொரு டெட் எகானமி என்று கூறியிருக்கிறார்.</p>]]></content>
            <updated>2026-09-20T12:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐக்கிய அரபு அமீரகத் தூதரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-meet-khaled-nasser-sulaiman-alameri-1789904227"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-meet-khaled-nasser-sulaiman-alameri-1789904227</id>
            <summary type="text">எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய அரபு அமீரகத்தின் இலங்கைக்கான
தூதுவர் காலித் நசார் சுலைமான் அல்அமெரியைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.க...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய அரபு அமீரகத்தின் இலங்கைக்கான
தூதுவர் காலித் நசார் சுலைமான் அல்அமெரியைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.</p><p>கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(20.9.2026)இந்தச் சந்திப்பு
நடைபெற்றது.</p><p>

இலங்கைக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே நிலவும் வரலாற்று ரீதியான
இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்தச் சந்திப்பின் போது
விசேட கவனம் செலுத்தப்பட்டது.</p><h2>புதிய துறை</h2><p>
</p><p>
வர்த்தகம், முதலீட்டு ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் இரு நாடுகளும்
இணைந்து செயற்படக்கூடிய புதிய துறைகளைக் கண்டறிவது குறித்தும் விரிவாக
ஆராயப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c82ad19-aa94-4603-a6e6-329d8341de59/26-6aafc85f3bd7d.webp' /></p><p>
</p><p>
சுற்றுலா மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளில் நிலவும் ஒத்துழைப்பைக்
கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகள் குறித்தும், அண்மைக் காலத்தில் நடைபெற்ற
பேச்சுகள் ஏற்படுத்தியுள்ள விரிவான பொருளாதார ஒத்துழைப்புக்கான சாத்தியங்கள்
குறித்தும் இதன்போது பேசப்பட்டன.
</p><p>
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல், எண்ணெய் விநியோகம் மற்றும் எரிசக்தி
விலைகளில் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்தும், அது இலங்கையின்
பொருளாதாரத்துக்கும் நுகர்வோருக்கும் எந்த வகைகளில் தாக்கங்களைச் செலுத்தும்
என்பது குறித்தும் இரு தரப்பினரும் ஆழ்ந்த கவனம் செலுத்தினர்.</p><h2>பொருளாதார வாய்ப்பு</h2><p>
</p><p>
பிராந்தியத்தில் எழுந்துள்ள தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளுக்கு மத்தியில்,
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றும் இலங்கைப் பிரஜைகளின் பாதுகாப்பு மற்றும்
அவர்களின் சீரான வாழ்வுரிமை தொடர்பாகவும் பல முக்கிய கருத்துக்கள் பரிமாறிக்
கொள்ளப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/237c5851-323b-4ad7-8352-ea27a5d4825d/26-6aafc85e67a4a.webp' /></p><p>
</p><p>
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றும் கணிசமான அளவிலான இலங்கைச் சமூகம் அந்த
நாட்டின் பொருளாதாரத்துக்கு ஆற்றிவரும் பங்களிப்புகளும் இதன்போது
பாராட்டப்பட்டன.
</p><p>
இரு நாடுகளுக்கும் அதிக பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய வகையில்
நெருக்கமான உறவுகளைப் பேணுவதன் மற்றும் புதிய ஒத்துழைப்பு வழிகளைக் கண்டறிவதன்
அவசியத்தை இரு தரப்பினரும் இதன்போது வலியுறுத்தினர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T12:10:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[9 சிக்ஸர்களுடன் 49 பந்துகளில் 100 ஓட்டங்கள்! ஷபாலி வெர்மாவின் மிரட்டலில்..இந்தியா அபார வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/shafali-verma-century-vs-bangladesh-asian-games-1789905857"></link>
            <id>https://news.lankasri.com/article/shafali-verma-century-vs-bangladesh-asian-games-1789905857</id>
            <summary type="text">Shafali verma 100 runs in 49 balls in asian games 2026: வங்காளதேச மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் 114 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Shafali verma 100 runs in 49 balls in asian games 2026: வங்காளதேச மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் 114 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.</p><p></p><p>
மகளிர் ஆசிய கிண்ணப் போட்டியில் இந்திய அணி 114 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. </p><p></p><h2>மந்தனா,&nbsp;ஷபாலி&nbsp;அதிரடி</h2><p>இந்தியா மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையிலான மகளிர் ஆசிய கிண்ண அரையிறுதிப்போட்டி நிஸ்ஷினில் நடந்தது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5e519d8-4fca-4301-b378-5c4f6cd00a5a/26-6aafcf6c5894a.webp' /></p><p></p><p>
முதலில் களமிறங்கிய இந்திய அணியில், ஸ்ம்ரிதி மந்தனா (Smriti Mandhana) அதிரடியாக 19 பந்துகளில் 37 ஓட்டங்கள் (2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்) விளாசி ஆட்டமிழந்தார். </p><p>

அடுத்து வந்த கமலினி 3 ஓட்டங்களில் வெளியேற, ஹர்மன்ப்ரீத் கவுர் நிதான ஆட்டத்தை கடைபிடித்தார். 

மறுமுனையில் ஷபாலி வெர்மா (Shafali Verma) சிக்ஸர்மழை பொழிந்தார். </p><p>இறுதிவரை களத்தில் நின்று ஷபாலி சதம் விளாசினார்.

இதன்மூலம் இந்திய அணி 195 ஓட்டங்கள் குவித்தது. ஷபாலி வெர்மா 49 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29a62c29-3049-49ac-aae7-96faa1fffcef/26-6aafcc9c661f6.webp' />&nbsp;</p><h2>இந்தியா இமாலய வெற்றி </h2><p>

ஹர்மன்ப்ரீத் கவுர் 33 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 40 ஓட்டங்கள் எடுத்தார். மருஃபா, ஷான்ஜிதா, ரபேயா மற்றும் நஹிதா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55cb1b50-51a7-4e93-b692-d5b9e39afef1/26-6aafcf6d50a60.webp' /></p><p>
பின்னர் ஆடிய வங்காளதேச அணி 15.4 ஓவர்களில் 81 ஓட்டங்களுக்கு சுருண்டதால், இந்தியா 114 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
</p><p>
அதிகபட்சமாக திலரா அக்தர் 27 ஓட்டங்கள் எடுத்தார். நந்தனி ஷர்மா மற்றும் தீப்தி ஷர்மா தலா 3 விக்கெட்டுகளும், ஸ்ரீ சரணி 2 விக்கெட்டுகளும், ஷ்ரேயங்கா பாட்டீல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f830c8e0-2b36-43b0-88ea-2127dd666dc9/26-6aafcc9b9f22e.webp' /></p>]]></content>
            <updated>2026-09-20T12:05:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாவூறும் சுவையில் காராமணி வடை.., எப்படி செய்வது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/karamani-vadai-recipe-in-tamil-1789905828"></link>
            <id>https://news.lankasri.com/article/karamani-vadai-recipe-in-tamil-1789905828</id>
            <summary type="text">&amp;nbsp;Karamani Vadai Recipe In Tamil-&amp;nbsp;வடை என்றால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

காரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;Karamani Vadai Recipe In Tamil-&nbsp;வடை என்றால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
</p><p>
காராமணி சாப்பிடுவதால் உடல் எடையைக் குறைப்பது, ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது, மற்றும் செரிமானத்தை மேம்படுத்துவது போன்ற பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
</p><p>
அந்தவகையில், நாவூறும் சுவையில் சத்தான காராமணி வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.</p><p></p><h2>தேவையான பொருட்கள்</h2><ul><li> 

காராமணி- 1 கப் </li><li>
உப்பு- 1 ஸ்பூன்
</li><li>வெங்காயம்- 1
</li><li>இஞ்சி- 1 துண்டு </li><li>
பச்சை மிளகாய்- 2 </li><li>
கறிவேப்பிலை- 1 கொத்து</li><li> 
சீரகம் - 1 ஸ்பூன்</li><li> 
பெருங்காயத்தூள்- ½ ஸ்பூன்</li><li> 
எண்ணெய் - தேவையான அளவு </li></ul><h2>

செய்முறை
</h2><p>
முதலில் காராமணியை 3 மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
</p><p>
பின் காராமணி பாதியளவு அரைத்த பிறகு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80d394b9-5cdf-42cc-a670-546c441cef9e/26-6aafcba6c4867.webp' /></p><p>அடுத்து அரைத்த காராமணியுடன் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.</p><p>

இதற்கடுத்து அடுப்பில் வேனல் வைத்து சூடானதும் எண்ணெய்யை ஊற்றி சூடுபடுத்தவும்.</p><p>

இதற்கடுத்து வடை மாவை சிறிதளவு எடுத்து தட்டி சூடான எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p>

</p>]]></content>
            <updated>2026-09-20T12:04:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி வசாவிளானில் போராட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-release-of-lands-under-military-control-1789904481"></link>
            <id>https://ibctamil.com/article/protest-release-of-lands-under-military-control-1789904481</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வசாவிளான் பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.வசாவிளான் மக்கள் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வசாவிளான் பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.</p><p>வசாவிளான் மக்கள் இன்று (20) நான்காவது வாரமாகவும் இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.</p><p>
</p><p>
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தமது பூர்வீக நிலங்களை இழந்த மக்கள் யுத்தம்
நிறைவடைந்த பின்னர் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.</p><p></p><h2>மக்கள் குற்றச்சாட்டு</h2><p>

புதிய அரசாங்கம் பொது மக்களின் காணிகள் பொதுமக்களுக்கே வழங்கப்படும் என
வாக்குறுதிகளை வழங்கிய போதும் இதுவரை அவ்வித நடவடிக்கை முன்னெடுக்கவில்லை என
மக்கள் குற்றம் சாட்டினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9f6b0b7-1884-43e1-a993-ffe436e1a257/26-6aafca7a9aefe.webp' /></p><p>
</p><p>
தற்போது அனுமதி இன்றி மிகப்பெரிய அளவில் இராணுவத்தின் வைத்தியசாலை
அமைக்கப்பட்டு வருவதாகவும் அது பொது மக்களின் காணிகளில் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>இந்தநிலையில் தமது காணிகளை விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் மக்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T11:59:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக் பாஸ் சட்டசபை; பல்டி அடித்த விஜய் சேதுபதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bigg-boss-assembly-vijay-sethupathi-controversial-1789901988"></link>
            <id>https://jvpnews.com/article/bigg-boss-assembly-vijay-sethupathi-controversial-1789901988</id>
            <summary type="text">சில நாட்களுக்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி லீடர்ஷிப் குவாலிட்டி குறித்து பேசிய சில கருத்துக்கள் விஜய் ரசிகர்களுக்கும், தவெகவின...</summary>
            <content type="html"><![CDATA[<p>சில நாட்களுக்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி லீடர்ஷிப் குவாலிட்டி குறித்து பேசிய சில கருத்துக்கள் விஜய் ரசிகர்களுக்கும், தவெகவினருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.&nbsp;</p><p>அவர் மறைமுகமாக தமிழக முதல்வர் ஜோசப் விஜயைத்தான் விமர்சிக்கிறார் என நினைத்த அவர்கள் விஜய் சேதுபதி முகம் தரக்குறைவாக சமூக வலைத்தளங்களில் விமர்சித்தனர்.</p><p>விஜய் சேதுபதி திமுகவின் ஆதரவாளர் கடந்த திமுக ஆட்சியில் அவர் எதுவுமே வாய்ஸ் பேசவில்லை ஆனால் தற்போது பேசுகிறார் என அவர்கள் கருத்து தெரிவித்தனர் .</p><p>சில தவெக எம்.எல்.ஏக்களும் விஜய் சேதுபதிக்கு எதிராக கருத்து கூறியிருந்தனர்.</p><p>இந்நிலையில், இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியில் இது தொடர்பாக விளக்கமளித்துள்ள விஜய் சேதுபதி ‘நான் பேசும் கருத்துக்கள் இந்த வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.. வெளியில் இருக்கும் ஒரு தனி நபரையோ, அல்லது அமைப்பையோ சாராது.</p><p>நான் சொல்லாமலே இது மக்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைத்தேன்.&nbsp; ஆனால் தற்போது சொல்ல வேண்டிய அவசியம் வந்துவிட்டது’ என்று கூறியிருக்கிறார்.</p>]]></content>
            <updated>2026-09-20T11:42:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fuel-prices-hiked-again-1789904535"></link>
            <id>https://jvpnews.com/article/fuel-prices-hiked-again-1789904535</id>
            <summary type="text">உலகச் சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்துள்ளமையைக் கருத்திற் கொண்டு, செப்டெம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலைத் திருத்தம் இடம்பெறக்கூடும் என ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகச் சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்துள்ளமையைக் கருத்திற் கொண்டு, செப்டெம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலைத் திருத்தம் இடம்பெறக்கூடும் என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>தற்போது எரிபொருள் விலையானது ஏற்கனவே உயர்வான மட்டத்தில் காணப்படுகின்ற நிலையில், மேலும் ஒரு விலை அதிகரிப்பை மக்களால் தாங்கிக்கொள்ள முடியுமா என்பது தொடர்பில் அரசாங்கத்திற்குள் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>மத்திய கிழக்கு யுத்தம் ஆரம்பமானதோடு உலகின் வலுசக்தி சந்தையில், குறிப்பாக எரிபொருள் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது.&nbsp;</p><p>மார்ச், ஏப்ரல் மாதங்களில், உலகச் சந்தைக்கு நிகராக இல்லாவிட்டாலும், உள்நாட்டுச் சந்தையிலும் ஓரளவு எரிபொருள் விலையை அதிகரிக்க எமக்கு நேரிட்டது.&nbsp;</p><p>பின்னர் உலகச் சந்தையில் எரிபொருள் விலை குறைந்த போது, உள்நாட்டுச் சந்தையிலும் எரிபொருள் விலையைக் குறைக்க நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்.&nbsp;</p><p>ஆனால் துரதிர்ஷ்டவசமாக மீண்டும் ஒருமுறை யுத்தம் தீவிரமடைந்தமையினால் உலகில் எரிபொருள் விலை மீண்டும் உயர்ந்து காணப்படுகிறது.&nbsp;</p><p>எனவே வழமையாக நாம் ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும், அந்த மாதத்தின் சராசரி பெறுமதியைப் பார்த்து, எமக்கு எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு எவ்வளவு செலவானது என்று ஆராய்ந்து பார்த்துதான் நாம் எரிபொருள் விலையை மீளாய்வு செய்கிறோம்.&nbsp;</p><p>அந்தவகையில் செப்டெம்பர் மாத இறுதியிலும் இந்த மீளாய்வைச் செய்ய நாம் எதிர்பார்க்கிறோம்.&nbsp;</p><p>ஆனாலும், ஏற்கனவே எமது எரிபொருள் விலை கணிசமான அளவு உயர்வாகவே காணப்படுவதாக நாம் கருதுகிறோம்.&nbsp;</p><p>அதேபோல, பிரச்சினை நிலவுவது எரிபொருள் விநியோகிக்கும் ஒருசில தனியார் நிறுவனங்களுக்குத்தான். அவர்கள் தான் இதில் ஏற்படும் நட்டத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது என்ற பிரச்சினையை முன்வைத்து, குறிப்பாக டீசலை சந்தைக்கு விநியோகிப்பதை மட்டுப்படுத்தியுள்ளார்கள்.&nbsp;</p><p>ஆகவே, சட்டரீதியான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து பார்த்து, ஏதாவது ஒரு உயர் மற்றும் குறைந்த விலையெல்லைகளுக்குள் அந்த நிறுவனங்களுக்குத் தங்களுடைய விலையிலேயே எரிபொருளை விற்பனை செய்ய சந்தர்ப்பம் வழங்க முடியுமா என்று நாங்கள் ஆராய்ந்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.</p><p><br></p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T11:42:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு வெளியே சக்திவாய்ந்த தமிழ் புலம்பெயர் சமூகம்! தோல்வியை பகிரங்கமாக வெளிப்படுத்திய மொட்டுக்கட்சி முக்கியஸ்தர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/geneva-human-rights-convention-2026-slpp-1789864461"></link>
            <id>https://tamilwin.com/article/geneva-human-rights-convention-2026-slpp-1789864461</id>
            <summary type="text">இலங்கைக்கு வெளியே மிகப்பெரிய, சக்திவாய்ந்த ஒரு தமிழ் புலம்பெயர் சமூகம் (Diaspora) இருக்கின்றது. அதாவது இலங்கை அரசாங்கத்தை விடவும் சக்திவாய்ந்த சமூகமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு வெளியே மிகப்பெரிய, சக்திவாய்ந்த ஒரு தமிழ் புலம்பெயர் சமூகம் (Diaspora) இருக்கின்றது. அதாவது இலங்கை அரசாங்கத்தை விடவும் சக்திவாய்ந்த சமூகமாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பானவர்கள் திகழ்கிறார்கள் என நாமல் ராஜபக்சவின் விடுதலைக்காக ஜெனீவா சென்றதாக பேசப்பட்ட மொட்டுக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும் நாமலின் நெருங்கிய நண்பருமான மிலிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>ஜெனீவா சென்று வந்த பின்னர் வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அதில் அவர் தொடர்ந்து பேசியதாவது. </p><h2> 
</h2><p></p><h2>ஜெனீவாவில் நடந்த பெனல் கலந்துரையாடல்</h2><p>தமிழின படுகொலை மற்றும் தமிழீழத்திற்கான போராட்டத்தில் அவர்களின் பெரும் முயற்சியை நான் ஜெனீவாவில் 2022 இலும் பார்த்தேன். அந்த விடயத்தில் நாம் இப்போது தோற்றுப்போயிருக்கிறோம். </p><p>நான் கலந்துகொண்ட ஒரு விவாத அரங்கில் (Panel Discussion), "துர்கா" என்ற பெண் தமிழின படுகொலை தொடர்பில் பேசினார். அவர் மிகவும் புத்திசாலி, அவுஸ்திரேலியாவில் கல்வி கற்றவர். </p><p>அவரைப் போல மூன்று நான்கு தமிழ் யுவதிகள் பேசினார்கள். அவர்கள் ஒரு வகையில் "சிறிய லக்ஷ்மன் கதிர்காமர்" போன்றவர்கள் அவர்கள் கொண்டிருக்கும் நிலைப்பாட்டில் அதாவது பிரிவினைவாத கோட்பாட்டில்.
</p><p>அவர்களுடன் போட்டியிட அல்லது மோத வேண்டுமானால், நமது தேசியவாதக் முகாமிலிருந்தும் (Nationalist camp) ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ், லண்டன் பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம் போன்ற சிறந்த இடத்தில் பயின்ற, திறமையான, புத்திசாலித்தனமான, இந்த கருத்தியலைச் சரியாகப் புரிந்துகொண்ட இளைஞர்களை உருவாக்க வேண்டும். </p><p>அது உடனடியாக நடக்கக்கூடிய ஒன்றல்ல.
ஏனெனில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இருந்தே அவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் சில ஆளுமைகளை உருவாக்கினார்கள் . </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf9e17d5-ef51-40e3-9084-61b7ad08f1b5/26-6aaf2a0f8db0a.webp' /></p><p>உதாரணமாக இப்போது கனடாவில் கெரி ஆனந்தசங்கரி அமைச்சராக இருக்கிறார். 
இப்போது அவர்கள் இருக்கும் நாட்டில் இரண்டு மூன்று அரசியல் கட்சிகள் இருந்தால், அந்த எல்லா கட்சிகளிலுமே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானர்கள் இருக்கிறார்கள். </p><p>அதனால் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் அவர்களுக்குப் பிரச்சினையில்லை. 
எனவே இது மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட (Organized) ஒரு விடயம். </p><p>இதற்கு முகங்கொடுப்பது எப்படி என்பது குறித்து நாம் தனியாகப் பேச வேண்டும். பல்கலைக்கழகங்களில் பயின்ற, தேசியவாதச் சிந்தனையுள்ள புத்திசாலி இளைஞர்களாகிய உங்களுக்கு இதை முன்னெடுத்துச் செல்வதில் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது.</p><p>இலங்கையின் மனித உரிமைகள் அறிக்கை என்பது ஒவ்வொருவரும் நிச்சயமாகப் பார்க்க வேண்டிய ஒரு விடயமாகவே நான் பார்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T11:40:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பாவை அடுத்து... இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்திய சவுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/saudi-stops-crude-supplies-1789900961"></link>
            <id>https://news.lankasri.com/article/saudi-stops-crude-supplies-1789900961</id>
            <summary type="text">Saudi Aramco stops crude supplies to India: சவுதி அராம்கோ இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்தியது.
சவுதி அரேபியாவின் முக்கிய கிழக்கு-மேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>Saudi Aramco stops crude supplies to India: சவுதி அராம்கோ இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்தியது.
</p><p>சவுதி அரேபியாவின் முக்கிய கிழக்கு-மேற்கு குழாய்வழித்தடத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, சவுதி அரம்கோ நிறுவனம் இந்திய சுத்திகரிப்பு ஆலைகளுக்கு கச்சா எண்ணெய் வழங்குவதை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தியுள்ளது.</p><h2>கிழக்கு-மேற்கு</h2><p>
</p><p>சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைகள் மற்றும் சரக்குக் கட்டணங்கள் உயர்ந்துள்ள நிலையில், மாற்று விநியோகத்தை நாடும் இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு, கச்சா எண்ணெய் கொள்முதல் செலவுகள் அதிகரிக்கக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f8c74c0-3530-4e7f-9bbe-04d22542eb4e/26-6aafb8a37b3ea.webp' /></p><p> </p><p>வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், ஈராக் ஆயுதக் குழுவொன்றால் இயக்கப்படும் ட்ரோன்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், கடந்த வார இறுதியில் 'கிழக்கு-மேற்கு' குழாய் வழித்தடம் மூடப்பட்டது. </p><p>ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் இடையூறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கச்சா எண்ணெயை விநியோகிப்பதற்கான சவுதி அரேபியாவின் முக்கிய மாற்றுப் பாதையாக இந்தப் குழாய் வழித்தடம் உருவெடுத்தது.</p><p></p><p> </p><p>இந்த நிலையில், செங்கடல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி ஆகிய இரண்டும் வழியாக இந்தியாவிற்கு வழங்குவதை அரம்கோ நிறுத்தியுள்ளது. குழாய்வழித் தாக்குதலுக்கு முன்பே ஹார்முஸ் வழியாக விநியோகம் மிகவும் குறைந்த நிலைக்குச் சரிந்திருந்தது. </p><p>கச்சா எண்ணெய் விலைகள் ஏற்கனவே உயர்ந்துள்ள நேரத்தில் இந்த இடையூறு ஏற்பட்டுள்ளது. சமீபத்திய சந்தை நிலவரத்தில், பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 1.36 டொலர் அல்லது 1.30 சதவீதம் சரிந்து 103.46 டொலர் ஆகவும், WTI கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 0.85 டொலர் அல்லது 0.83 சதவீதம் சரிந்து 101.06 டொலர் ஆகவும் இருந்தது. </p><p>சவுதி அரேபியா இந்தியாவுக்கு கச்சா எண்ணெயை வழங்கும் முக்கிய நாடாகத் திகழ்கிறது. போர் தொடங்கியதிலிருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 9 சதவீதத்தை 'அராம்கோ' (Aramco) நிறுவனம் வழங்கியுள்ளது. </p><p>இந்த நிலையில், இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் தற்போது சவுதி அரேபியாவிலிருந்து தங்களது ஒப்பந்தம் செய்யப்பட்ட காலவரையறைக்குட்பட்ட விநியோகத்தைப் பெறவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>சமீபத்திய இடையூறு</h2><p>
</p><p>அராம்கோ பொதுவாக இந்தியா மற்றும் பிற வாடிக்கையாளர்களுக்கு, 'ஸ்பாட்' சந்தை (spot market) மூலமாக அல்லாமல், அதிகாரப்பூர்வ விற்பனை விலையிலான வருடாந்திர ஒப்பந்தங்கள் மூலமாகவே கச்சா எண்ணெயை விநியோகம் செய்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e7ad875-6ac6-47d7-b43a-acb233cedf9a/26-6aafb8a42f4d1.webp' /></p><p> </p><p>இதனால், மாற்று விநியோக வழிகளைக் கண்டறிய வேண்டிய நிலையில் உள்ள இந்தியச் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு, ஏற்பட்டுள்ள இந்தச் சமீபத்திய இடையூறு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. </p><p>இருப்பினும், மாற்றுக் கச்சா எண்ணெயைக் கண்டறிவது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>இந்திய சுத்திகரிப்பாளர்கள் மாற்று கச்சா எண்ணெய் விநியோகத்தைக் கண்டறிவதில் நம்பிக்கையுடன் உள்ளனர், ஆனால் சர்வதேச எண்ணெய் அளவுகோல்கள் உயர்ந்துள்ளதாலும், ரஷ்ய கச்சா எண்ணெய் மீதான தள்ளுபடிகள் மறைந்துவிட்டதாலும், அந்த பீப்பாய்களின் விலை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-20T11:30:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீரிமலையில் கொட்டப்பட்டிருந்த ஆபத்தான மருத்துவக் கழிவுகள்: எடுக்கப்பட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/disposal-of-hazardous-medical-waste-keerimalai-1789902589"></link>
            <id>https://tamilwin.com/article/disposal-of-hazardous-medical-waste-keerimalai-1789902589</id>
            <summary type="text">வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட கீரிமலையில்
கொட்டப்பட்டிருந்த ஆபத்தான மருத்துவக் கழிவுகளை உடனடியாக அகற்றுமாறு வடக்கு
மாகாண உள்ளூராட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட கீரிமலையில்
கொட்டப்பட்டிருந்த ஆபத்தான மருத்துவக் கழிவுகளை உடனடியாக அகற்றுமாறு வடக்கு
மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலைத் தொடர்ந்து,
குறித்த மருத்துவக் கழிவுகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளது.</p><p>கீரிமலையில் ஆபத்தான மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டமை தொடர்பில்
முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதுடன், அது தொடர்பான தகவல்கள் சமூக
வலைத்தளங்களிலும் வெளியாகியிருந்தன.
</p><p>
இதனையடுத்து, வடக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தால் நேற்று (19.09.2026)
சனிக்கிழமை, குறித்த பகுதியில் கொட்டப்பட்டிருந்த ஆபத்தான மருத்துவக் கழிவுகளை
அன்றைய தினத்துக்குள் அகற்றுமாறும், அவை தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட
நடவடிக்கைகள் குறித்து முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் வலிகாமம்
வடக்கு பிரதேச சபையிடம் கோரப்பட்டிருந்தது.</p><h2>மருத்துவக் கழிவுகள்</h2><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, குறித்த பகுதியில் கொட்டப்பட்டிருந்த மருத்துவக் கழிவுகள்
அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டுள்ளதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின்
செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவித்துள்ளார்.
</p><p>
சுகாதாரத் துறை சார்ந்த கழிவுகளை முறையற்ற வகையில் கையாளுதல் என்பது பொதுச்
சுகாதாரத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதாக
இருப்பதால், அவற்றை முறையான வகையில் சேகரித்து, பிரித்து, பாதுகாப்பாகக்
கையாள்வதும் இறுதியாக உரிய முறையில் அகற்றுவதும் அவசியமானதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bd37c2a-2c60-4b3c-91fd-50e2e5799034/26-6aafc3084c393.webp' /></p><p> </p><p>இலங்கை
சுகாதார அமைச்சின் தேசிய சுகாதாரக் கழிவு முகாமைத்துவத் திட்டமும், சுகாதாரக்
கழிவுகளை முறையாகக் கையாளாதது நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள், பொதுமக்கள்
மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் குறிப்பிடுவதுடன்,
கழிவுகளைப் பிரித்தல், பொதியிடுதல், கையாளுதல், சேமித்தல், சிகிச்சையளித்தல்
மற்றும் அகற்றுதல் ஆகியவை முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது.
</p><p>
மேலும், சுகாதார நிலையங்களால் உருவாக்கப்படும் மருத்துவக் கழிவுகள் இறுதி
அகற்றல் வரை முறையாக நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதும் சுகாதார அமைச்சின்
வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T11:29:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூமியின் எல்லை என்று அழைக்கப்படும் இடம்..., எது தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/which-place-is-called-as-the-end-of-the-earth-1789903688"></link>
            <id>https://news.lankasri.com/article/which-place-is-called-as-the-end-of-the-earth-1789903688</id>
            <summary type="text">which place is called as the end of the earth-&amp;nbsp;நாம் வாழும் பூமி சுமார் 510 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. 

நாம் வாழும் பூமியில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>which place is called as the end of the earth-&nbsp;நாம் வாழும் பூமி சுமார் 510 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. </p><p>

நாம் வாழும் பூமியில் சுமார் 800 கோடி மக்கள் மற்றும் 195 நாடுகள் உள்ளன.&nbsp; </p><p>இந்நிலையில், பூமியின் எல்லை என்று அழைக்கப்படும் இடம் குறித்து பார்க்கலாம்.
</p><p>
வட ஐரோப்பாவில் அமைந்துள்ள நார்த் கேப், கடற்கரை மற்றும் பனிப்பாறைகளுடன் கூடிய இயற்கை காட்சிகளை கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/240307da-f14f-4b3d-ae60-b2cdd40e5b64/26-6aafc34c9a6c9.webp' /></p><p>இந்த இடத்திற்குச் E-69 என்ற நெடுஞ்சாலை வழியாக சொல்லலாம்.</p><p>

நார்வேயில் உள்ள E-69 நெடுஞ்சாலை, ஐரோப்பாவின் வடகோடி முனையான நார்த் கேப் பகுதிக்குச் செல்கிறது. </p><p>

இந்த சாலை உலகின் கடைசி சாலை என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.
</p><p>
இந்த நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது, கடல் மற்றும் பனி நிரம்பிய நிலப்பரப்புகளை காணலாம்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6db5474d-9b97-4d98-ab6e-a4c8f320abda/26-6aafc34b2c974.webp' /></p><p>நார்த் கேப் பகுதி இந்தியாவிலிருந்து சுமார் 6,900 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
</p><p>
விமானப் பயணத்தின் மூலம் நார்வே சென்ற பிறகு, E-69 நெடுஞ்சாலை வழியாக இந்த இடத்திற்கு செல்லலாம்.
</p><p>
மேலும், ஆர்க்டிக் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளதால், நார்த் கேப்பில் கடுமையான குளிர் நிலவுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/481159f5-468f-4a19-8fa5-8e5d49693c19/26-6aafc34bde70c.webp' /></p><p>குளிர்காலத்தில் வெப்பநிலை -45°C வரை குறையக்கூடும். கோடைக்காலத்திலும் இங்கு குளிர்ச்சியான வானிலை காணப்படும்.&nbsp;</p><p>இந்த பகுதியில் கோடைக்காலத்தில் நீண்ட நேரம் சூரியன் மறையாமல் இருக்கும் இயற்கை நிகழ்வை காணலாம்.</p><p> 

இதனால், உலகம் முழுவதும் இருந்து சாகசப் பயணிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை நார்த் கேப் பகுதிக்கு வருகின்றார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-09-20T11:28:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றத்தில் வெளியாகும் 22ஆவது திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/supreme-court-s-determination-22nd-amendment-bill-1789902865"></link>
            <id>https://tamilwin.com/article/supreme-court-s-determination-22nd-amendment-bill-1789902865</id>
            <summary type="text">அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீதான
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நேற்றுமுன்தினம்(18) வெள்ளிக்கிழமை சபாநாயகருக்கு
அனுப்பி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீதான
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நேற்றுமுன்தினம்(18) வெள்ளிக்கிழமை சபாநாயகருக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p>

உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் அடங்கிய இந்தத் தீர்ப்பைச் சபாநாயகர் ஜகத்
விக்ரமரத்ன நாளைமறுதினம்(22) செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில்
உத்தியோகபூர்வமாகப் பகிரங்கப்படுத்துவார்.</p><h2>&nbsp;22 ஆவது திருத்தச் சட்டமூலம்&nbsp;</h2><p>

இதனைத் தொடர்ந்து, 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதமானது எதிர்வரும்
செப்டெம்பர் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் (வியாழன், வெள்ளி) நாடாளுமன்றத்தில்
நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/163b59fc-61dc-4d31-b22a-2e9167283726/26-6aafc32ba7759.webp' /></p><p>

இதேவேளை, ஊழல் ஒழிப்புச் சட்டத் திருத்தங்கள் தொடர்பான மனுக்கள் மீதான
தீர்ப்பும் உயர்நீதிமன்றத்தால் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று
தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T11:27:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாக்களிக்கவிருக்கும் இரண்டு ஜேர்மன் மாகாணங்கள்... AfD-யின் மற்றொரு வெற்றி குறித்து அச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/german-voters-go-to-the-polls-1789903745"></link>
            <id>https://news.lankasri.com/article/german-voters-go-to-the-polls-1789903745</id>
            <summary type="text">German voters go to the polls in state elections: ஜேர்மன் வாக்காளர்கள் மாகாணத் தேர்தல்களில் வாக்களிக்கின்றனர்.
ஜேர்மனியில் இரண்டு மாகாணத் தேர்தல்களுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>German voters go to the polls in state elections: ஜேர்மன் வாக்காளர்கள் மாகாணத் தேர்தல்களில் வாக்களிக்கின்றனர்.
</p><p>ஜேர்மனியில் இரண்டு மாகாணத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில்; இதில் தீவிர வலதுசாரி மற்றும் தீவிர இடதுசாரி அமைப்புகள் பெறும் முன்னேற்றம் நாட்டில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தி, அரசாங்கத்தையே உலுக்கக்கூடும்.</p><h2>அவசரக் கூட்டம்</h2><p>
</p><p>ஜேர்மன் சேன்ஸலர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், பெர்லின் மற்றும் மெக்லென்பர்க்-வெஸ்டர்ன் பொமரேனியா ஆகிய பிராந்தியத் தேர்தல்களிலிருந்து வெளியாகி வரும் ஆரம்பக்கட்ட முடிவுகள் குறித்து விவாதிக்க, தனது மைய-வலதுசாரி சிடியு (CDU) கட்சியின் தலைமைக்கான அவசரக் கூட்டத்தை கூட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3aec8231-027e-4181-8fb0-f0d842b11ac0/26-6aafc3832d088.webp' /></p><p> </p><p>16 மாதங்களாகப் பதவியில் இருக்கும் மெர்ஸ், வாக்கெடுப்பின் விளைவாக ஏற்படக்கூடிய தாக்கங்களைக் கையாள்வதற்காக, அடுத்தடுத்த நாட்களுக்கான தனது பணிகளை ஒத்திவைத்ததுடன், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான பயணத்தையும் ரத்து செய்துள்ளார்.
</p><p>இரண்டு வாரங்களுக்கு முன்பு Saxony-Anhalt மாகாணத்தில், தீவிர வலதுசாரி, ட்ரம்ப் ஆதரவு மற்றும் ரஷ்ய நட்புறவு கொண்ட AfD கட்சியானது, அவரது CDU கட்சிக்கு ஒரு பெரும் தோல்வியைக் கொடுத்தது.</p><p></p><p> </p><p>இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தேர்தல்களில் AfD கட்சி கூடுதல் ஆசனங்களைக் கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன; </p><p>இருப்பினும், Saxony-Anhalt மாகாணத்தில் தனிப்பெரும்பான்மைக்குச் சில ஆசனங்களே குறைவாக இருந்ததைப் போலன்றி, இம்முறை எந்தவொரு மாகாணத்திலும் அக்கட்சி ஆட்சியமைக்கும் நிலையை எட்ட வாய்ப்பில்லை என்றே தெரிய வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d98c1375-3a09-45ec-a2a5-0357ed9e0a22/26-6aafc383d3a6c.webp' /></p><p> </p><p>ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள வாக்குப் பதிவில், அந்தந்தப் பகுதிகளுக்கே உரித்தான தனித்துவமான சவால்களை CDU எதிர்கொள்கிறது.
</p><p>வடகிழக்குக் கடற்கரை மாகாணமான மெக்லென்பர்க்-வெஸ்டர்ன் பொமரேனியாவில், பிரபலமான மாகாண முதலமைச்சர் மனுவேலா ஷ்வெசிக் தலைமையிலான SPD கட்சிக்கும் AfD கட்சிக்கும் இடையிலான முக்கியப் போட்டியை மெர்ஸின் கட்சி வெறும் பார்வையாளராகவே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.</p><h2>AfD தேர்தல் வெற்றி</h2><p>
</p><p>அரசு ஒளிபரப்பு நிறுவனமான ZDF-இன் தரவுகளின்படி, SPD கட்சி 37 சதவீத ஆதரவைப் பெற்றிருந்த நிலையில் AfD கட்சி 36 சதவீத ஆதரவைப் பெற்றிருந்தது; அதேவேளையில், மெர்ஸின் CDU கட்சி வெறும் 6 சதவீத ஆதரவுடன், மாகாண நாடாளுமன்றத்தில் நீடிப்பதற்குத் தேவையான 5 சதவீதக் குறைந்தபட்ச ஆதரவு அளவைத் தவறவிடும் அபாயகரமான நிலைக்கு மிக அருகில் இருந்தது. </p><p>கடந்த ஆண்டு மே மாதம் மெர்ஸ் பதவியேற்றபோது, ​​மந்தமடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், ரஷ்யாவை எதிர்கொள்ளும் வகையில் ராணுவத்தை வலுப்படுத்தவும், வாக்காளர்களின் அச்சத்தைப் போக்கி அவர்களை AfD கட்சியிலிருந்து ஈர்க்கும் வகையில் முறையற்ற குடியேற்றத்தைக் குறைக்கவும் அவர் உறுதியளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f1d5bac-3b88-4aac-acd8-7981305f266e/26-6aafc384863ed.webp' /></p><p> </p><p>ஆனால், தற்போது நாடு தழுவிய கருத்துக்கணிப்புகளில் AfD கட்சி முன்னிலையில் உள்ளது; அதேவேளையில், மெர்ஸின் தனிப்பட்ட செல்வாக்கு விகிதம் 10 சதவீதத்திற்குச் சற்று அதிகமாகவே உள்ளது—அவரது அவ்வப்போதான வெளிப்படையான மற்றும் கடுமையான கருத்துகளும் இதற்கு உதவவில்லை. </p><p>இந்த மாதத் தொடக்கத்தில் ஜேர்மனியில் AfD கட்சி பெற்ற தேர்தல் வெற்றி, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களிடையே கவலையை ஏற்படுத்தியது. தீவிர வலதுசாரிகள் அதிகாரத்திற்கு வருவதைத் தடுப்பதற்காக ஒரு 'கூட்டணியை' அமைக்குமாறு பிரான்ஸின் இமானுவல் மேக்ரானின் ஆதரவாளர்கள் அழைப்பு விடுத்தனர். </p><p>மேலும், உலகம் முழுவதும் தீவிர வலதுசாரி அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக ஸ்பெயினின் சோசலிசப் பிரதமர் பெட்ரோ சான்செஸ் திங்களன்று எச்சரித்தார்.</p>]]></content>
            <updated>2026-09-20T11:25:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட புதிய பூனை இனம்! ஆய்வில் தெரியவந்த உண்மை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/new-wild-cat-species-discovered-after-100-years-1789901925"></link>
            <id>https://manithan.com/article/new-wild-cat-species-discovered-after-100-years-1789901925</id>
            <summary type="text">100 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர், அறிவியலுக்கு இதுவரை அறியப்படாத புதிய பூனை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>100 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர், அறிவியலுக்கு இதுவரை அறியப்படாத புதிய பூனை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.பொலிவியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த ஆச்சரியமான கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது.</p><p>தென்அமெரிக்கா நாடான பொலிவியாவில், கடந்த 2017-ஆம் ஆண்டு, காட்டுப்பகுதி அருகே சாலையோரத்தில் இருந்த குட்டி பூனையை உள்ளூர் வாசி ஒருவர் வீட்டிற்கு கொண்டு சென்று வளர்த்தார். ஒரு சில நாட்களிலேயே அதன் செயல்பாடுகளில் சந்தேகம் அடைந்த உள்ளூர் வாசி, பூனை குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/baeb3775-1d8d-488c-913e-c248efdf1f96/26-6aafc1b605a56.webp' /></p><p> </p><p>அதனை தொடர்ந்து, பொலிவியாவில் பணியாற்றிய உயிரியல் நிபுணரும் National Geographic Explorer-ஆகவும் இருந்த பவுலா நோகலெஸ்-அஸ்கர்ருன்ஸுக்கு, அங்குள்ள உள்ளூர் வனவிலங்கு சரணாலயத்தில் வித்தியாசமான தோற்றம் கொண்ட பூனை ஒன்று இருப்பதாக தகவல் கிடைத்தது.</p><p></p><p>
</p><p>
சுமார் ஒரு வருடத்துக்குப் பின்னர், அது காட்டுப் பூனை என்பதை உறுதி செய்த அவர், அந்த விலங்கை வனவிலங்கு சரணாலயத்தில் ஒப்படைத்தார். </p><p>அதனை நேரில் பார்வையிட்டபோது, ஏற்கனவே அறியப்பட்ட காட்டுப் பூனைகளிலிருந்து அதன் தோற்றம் குறிப்பிடத்தக்க வகையில் மாறுபட்டிருப்பதை அவர் கவனித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf31a41f-8cc1-4f9b-afe2-2915b68da658/26-6aafc1b6adbce.webp' /></p><p>
</p><p>
சிறிய சுருங்கிய முகம், குட்டையான வட்டமான காதுகள், நீண்ட மீசைகள் மற்றும் சிறுத்தையைப் போன்ற உடல் புள்ளிகள் என பல தனித்துவமான அம்சங்கள் அந்தப் பூனைக்கு இருந்தன. இதனால் ஆச்சரியமடைந்த நோகலெஸ்-அஸ்கர்ருன்ஸ், அந்தப் பூனையை சுமார் 100 புகைப்படங்கள் எடுத்ததாக தெரிவித்துள்ளார்.
</p><h2>
ஆரம்பத்தில் ஏற்பட்ட குழப்பம்
</h2><p>முதற்கட்ட ஆய்வுகளில், இந்தப் பூனை ஏற்கனவே அறிவியலால் அடையாளம் காணப்பட்ட Leopardus tigrinus இனத்தைச் சேர்ந்ததாகவே விஞ்ஞானிகள் கருதினர். </p><p>இந்த இனத்திற்கு Tigrina, Oncilla, Tigrillo மற்றும் Little Spotted Cat உள்ளிட்ட பல பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வுகள் மற்றும் மரபணு பகுப்பாய்வுகளின் பின்னர், இந்தப் பூனை ஏற்கனவே அறியப்பட்ட இனத்தைச் சேர்ந்ததல்ல என்பது தெரியவந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6ee9bb7-7ae9-4719-80f2-03cbac042ee5/26-6aafc1b761d1f.webp' /></p><p>
</p><p>
இதையடுத்து, இது அறிவியலுக்கு இதுவரை அறியப்படாத தனித்துவமான புதிய பூனை இனமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
</p><h2>ஆய்வில் வெளியான தகவல்</h2><p>பூனை குடும்பத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலான காலப்பகுதியில் புதிய இனமாக அறிவிக்கப்படும் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பாக இது அமைந்துள்ளது. </p><p>இதன் மூலம், உலகின் பல பகுதிகளில் இன்னும் அறிவியலால் முழுமையாக அடையாளம் காணப்படாத வனவிலங்குகள் இருக்கக்கூடும் என்பதும் மீண்டும் வெளிப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0bbb315-90e6-4a4c-b99b-d4df6c6fdafc/26-6aafc1b8157d3.webp' /></p><p></p><p>
</p><p>
இந்த புதிய பூனை இனம் தொடர்பான ஆய்வு Current Biology என்ற சர்வதேச அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>
நூற்றாண்டுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு அறிவியலுக்கே புதிதான ஒரு பூனை இனம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, வனவிலங்கு ஆராய்ச்சித் துறையில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T11:21:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அநுர தமைமையில் நடைபெறும் மாபெரும் மக்கள் பேரணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/npp-s-mass-rally-today-under-anura-s-patronage-1789902580"></link>
            <id>https://ibctamil.com/article/npp-s-mass-rally-today-under-anura-s-patronage-1789902580</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மக்கள் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.&quot;எமத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மக்கள் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>"எமது அரசாங்கம் – இரண்டு ஆண்டுகள். நாட்டிற்கு ஆசிர்வாதம்" என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த மக்கள் பேரணி இன்று (20)&nbsp;மாத்தறை - அக்குரஸ்ஸ பகுதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றுவருகின்றது.</p><p>தற்போதைய அரசாங்கத்தின் இரண்டு ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் ஆற்றிய சேவைகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்துவதையும், எதிர்கால அபிவிருத்தி திட்டங்களை மக்கள் மயப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த மக்கள் சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.</p><p>இந்த மக்கள் பேரணியில் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.</p><p>
</p><p>
இதற்கு முன்னதாக களுத்துறை மாவட்டம் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கியதாக ஜனாதிபதியின் மக்கள் பேரணி அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4l-ip0cLvNk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T11:21:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவர் விக்னேஷ் பர்த்டே அவுட்டிங்!! மாலத்தீவு பீச்சில் நடிகை நயன்தாரா..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/nayanthara-post-beach-photo-her-husband-birthday-1789902285"></link>
            <id>https://viduppu.com/article/nayanthara-post-beach-photo-her-husband-birthday-1789902285</id>
            <summary type="text">தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி தற்போது பாலிவுட் படங்களில் நடித்து டாப் நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நாயகியாகவும் திகழ்ந்து வருபவர் தான் நடிகை...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி தற்போது பாலிவுட் படங்களில் நடித்து டாப் நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நாயகியாகவும் திகழ்ந்து வருபவர் தான் நடிகை நயன்தாரா.

பல சர்ச்சைகளையும் சந்தித்து வரும் நயன் தாரா, டாக்சிக் படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa996240-3b90-4e90-a8c4-2d4123ddf7a4/26-6aafbdd3ea0af.webp' /></p><p>கடந்த மாதம் நயன்தாரா நடிப்பில் டாக்சிக், Hi படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, மூக்குத்தி அம்மன் 2 படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய ஆதரவை பெற்றார் நடிகை நயன்தாரா.</p><p> தற்போது தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளுக்கு மாலத்திவிற்கு சென்றுள்ளார். அங்குள்ள கடற்கரையில் கையில் செருப்புடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-20T11:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fuel-price-in-sri-lanka-1789901243"></link>
            <id>https://tamilwin.com/article/fuel-price-in-sri-lanka-1789901243</id>
            <summary type="text">செப்டெம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலை திருத்தம் நடைபெறலாம் என என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.&amp;nbsp;உலக சந்தையில் எரிபொருள் வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>செப்டெம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலை திருத்தம் நடைபெறலாம் என என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>உலக சந்தையில் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, செப்டெம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலைகள் திருத்தி அமைக்கப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

காலி பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், எரிபொருள் விலை இன்னும் அதிகமாக இருப்பதால், மேலும் விலை உயர்வை மக்களால் தாங்க முடியுமா என்பது குறித்து அரசாங்கத்திற்குள் விவாதம் நடைபெற்று வருவதாக மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T11:13:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்ச குடும்பத்திலிருந்து ஒரு புதிய அரசியல் தலைவர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-new-political-figure-from-the-rajapaksa-family-1789900660"></link>
            <id>https://ibctamil.com/article/a-new-political-figure-from-the-rajapaksa-family-1789900660</id>
            <summary type="text">ராஜபக்ச குடும்பத்தில் அரசியலில் ஈடுபட்டுள்ள பல சக்திவாய்ந்த உறுப்பினர்களுக்கு எதிரான கடுமையான ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், ராஜபக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராஜபக்ச குடும்பத்தில் அரசியலில் ஈடுபட்டுள்ள பல சக்திவாய்ந்த உறுப்பினர்களுக்கு எதிரான கடுமையான ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், ராஜபக்ச குடும்பம் தனது அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாக்க ஒரு புதிய மூலோபாய முடிவை நோக்கி நகர்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p> குடும்பத்தின் பல தலைவர்களும் செயலர்களும் சிறைத்தண்டனை அபாயத்தை எதிர்கொண்டுள்ள சூழலில், அரசியல் நடவடிக்கைகளைத் தொடர, எந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுபட்ட ஒரு புதிய நபரை முன்னிறுத்துவதில் அவர்களின் கவனம் குவிந்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.</p><p>இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p><h2>அனைத்து ராஜபக்சக்கள் மீதும் குற்றச்சாட்டு</h2><p>
</p><p>
ராஜபக்ச குடும்பத்தின் பல முக்கிய உறுப்பினர்களின் பங்கேற்புடன் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு சிறப்பு கலந்துரையாடலில் இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25b601ae-b3ef-4944-8f19-72fb5f0bfce6/26-6aafbf5ceb1c7.webp' /></p><p>
</p><p>
தற்போது அரசியலில் ஈடுபட்டுள்ள அனைத்து ராஜபக்சக்களும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளதால், மக்களிடையே எவ்வித சர்ச்சையுமற்ற, எந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாத ஒரு புதிய முகத்தை குடும்பத்திற்குள்ளேயே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
</p><h2>ஊழலற்ற புதிய முகம்</h2><p>இந்த நெருக்கடியான சூழ்நிலையைச் சமாளிப்பதற்காக, எதிர்கால அரசியல் செயல்பாடுகளையும் தலைமைத்துவத்தையும் அந்தப் புதிய நபரிடம் ஒப்படைக்க கலந்துரையாடலில் பங்கேற்ற அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5657c2ad-6a28-4819-bf5d-9cfa53b9dc8a/26-6aafbf5da193b.webp' /></p><p>
</p><p>
பொதுமக்களின் அதிருப்தியை எதிர்கொண்டு, குடும்பத்தின் பாரம்பரியத் தலைவர்கள் பின்வாங்கி, பின்னணியில் இருந்து வழிநடத்தும் அதே வேளையில், முன்னணியில் இருந்து தூய்மையான பிம்பத்துடன் ஒரு புதிய தலைமையை உருவாக்குவதே இதன் நோக்கம் என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T11:11:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொட்டாஞ்சேனையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்! மூவர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kotahena-murder-three-arrested-with-drugs-1789897522"></link>
            <id>https://tamilwin.com/article/kotahena-murder-three-arrested-with-drugs-1789897522</id>
            <summary type="text">கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் &#039;ஐஸ்&#039; போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கடந்த செப்டம்பர் 14 ஆம் திக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் 'ஐஸ்' போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

 

கடந்த செப்டம்பர் 14 ஆம் திகதி கொட்டாஞ்சேனை பகுதியில் நபரொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>பொலிஸாருக்கு கிடைத்த தகவல்&nbsp;</h2><p>பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கிரேன்ட்பாஸ், கொலன்னாவை மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதே மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/297e803a-1910-4394-9a0a-3c5af0b52e15/26-6aafbcfa51686.webp' /></p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 28 கிராம் 600 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.</p><p>
 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்குளி, கொழும்பு 14 மற்றும் கொலன்னாவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 19, 25 மற்றும் 39 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளதுடன்,&nbsp; குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p>சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T11:01:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீசைய முறுக்கு 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/meesaya-murukku-2-movie-first-review-1789900389"></link>
            <id>https://cineulagam.com/article/meesaya-murukku-2-movie-first-review-1789900389</id>
            <summary type="text">Hiphop tamizha Meesaya murukku 2 first review: ஹிப் ஹாப் தமிழா இயக்கி ஹீரோவாக நடித்துள்ள மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>Hiphop tamizha Meesaya murukku 2 first review: ஹிப் ஹாப் தமிழா இயக்கி ஹீரோவாக நடித்துள்ள மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது; படம் எப்படி உள்ளது என்பதை இந்த முதல் விமர்சனத்தில் பார்க்கலாம், வாங்க.</p><p></p><h2>

மீசைய முறுக்கு</h2><p>

பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஹிப் ஹாப் தமிழா ஆதி, இயக்கி ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் மீசைய முறுக்கு. தன்னுடைய வாழ்க்கையை வைத்து இப்படத்தை எடுத்திருப்பார். 2017-ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/290a8a27-49c4-415e-b868-a6cc045fa30c/26-6aafb66a5e18c.webp' /></p><p></p><p>
</p><h3>
மீசைய முறுக்கு 2
</h3><p>
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 9 வருடங்களுக்கு பின் <a href="https://x.com/kbsriram16/status/2101564336347185492" target="_blank">மீசைய முறுக்கு</a> 2 திரைப்படம் தற்போது உருவாகியுள்ளது. இப்படத்தையும் ஆதி இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் ஹர்ஷத் கான், சைத்ரா அச்சர், கெத்திகா ஷர்மா, ரம்யா ரங்கநாதன், கருணாஸ், பாபா பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வருகிற 25-ஆம் தேதி மீசைய முறுக்கு 2 திரையரங்குகளில் வெளியாகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df6668f3-fd1e-46bd-9bb4-720fee07131d/26-6aafb668d08c5.webp' /></p><p></p><p>இந்த நிலையில், மீசைய முறுக்கு திரைப்படத்தை பார்த்த கிரியேட்டிவ் தயாரிப்பாளர் ஒருவர் தனது X பக்கத்தில் படம் குறித்த விமர்சனத்தை பதிவிட்டுள்ளார்.</p><h3> 

முதல் விமர்சனம் </h3><p>"நேற்று இரவு மீசைய முறுக்கு 2 படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது; படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஹிப் ஹாப் தமிழாவின் நடிப்பு அபாரம் மற்றும் பாடல்களும் மிக சிறப்பாக இருந்தன. "கலைவாணியே" பாடல் மனதை தொட்டுவிட்டது. முதல் பாதி இன்றைய தலைமுறையினரை வெகுவாக கவரும் வகையில் அமைந்துள்ளது; இரண்டாம் பாதி உணர்ச்சிகரமான தருணங்களால் நிறைந்துள்ளது. குறிப்பாக, தந்தை-மகன் இடையிலான உறவை மிக அழகாக காட்சியமைக்கப்பட்டு, பார்வையாளர்களின் மனதை நெகிழ வைக்கிறது. ரம்யா ரங்கநாதனுக்கு இதில் வலிமையான கதாபாத்திரம் கிடைத்துள்ளது, பாராட்டுகள். மீசைய முறுக்கு 2 
திரைப்படம் தமிழகம் முழுவதும் நிச்சயம் ஒரு மிகப்பெரிய வரவேற்பைப் பெறும்" என கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efd4ca6d-be85-40f8-a07f-3a1e206d9c5f/26-6aafb6698e2e1.webp' /></p><p></p><p>

இவருடைய இந்த விமர்சனத்தின் மூலம் மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 25-ஆம் தேதி ரசிகர்கள் இப்படத்திற்கு என்ன விமர்சனம் தரப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Happened to watch <a href="https://x.com/hashtag/MeesayaMurukku2?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#MeesayaMurukku2</a> last night, and I absolutely loved it! 🔥<a href="https://x.com/hiphoptamizha?ref_src=twsrc%5Etfw">@hiphoptamizha</a> ‘s performance is fabulous, and the songs are fantastic! 🎶🔥<br><br>“Kalaivaniye” is a mind-blowing melody ❤️🎵<br><br>1st half is full of Gen Z Connect, and the 2nd half is packed with emotions,… <a href="https://t.co/cMccd1jstK">pic.twitter.com/cMccd1jstK</a></p>&mdash; Sriram (@kbsriram16) <a href="https://x.com/kbsriram16/status/2101564336347185492?ref_src=twsrc%5Etfw">September 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-09-20T11:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலைத் திருத்தம் குறித்து அரச தரப்பின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fuel-price-revision-at-the-end-of-september-in-sl-1789900358"></link>
            <id>https://ibctamil.com/article/fuel-price-revision-at-the-end-of-september-in-sl-1789900358</id>
            <summary type="text">இலங்கையில் செப்டெம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலைத் திருத்தம் இடம்பெறக்கூடும் என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.உலக சந்தையில் எரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் செப்டெம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலைத் திருத்தம் இடம்பெறக்கூடும் என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.</p><p>உலக சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்துள்ளமையைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p>

காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">மத்திய கிழக்கு யுத்தம்</span></h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய கிழக்கு யுத்தம் ஆரம்பமானதோடு உலகின் வலுசக்தி சந்தையில், குறிப்பாக எரிபொருள் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bec81d6-4327-4eb0-95e5-a865c9048342/26-6aafbbfc3dd64.webp' /></p><p>

மார்ச், ஏப்ரல் மாதங்களில், உலகச் சந்தைக்கு நிகராக இல்லாவிட்டாலும், உள்நாட்டுச் சந்தையிலும் ஓரளவு எரிபொருள் விலையை அதிகரிக்க எமக்கு நேரிட்டது. </p><p>

பின்னர் உலகச் சந்தையில் எரிபொருள் விலை குறைந்த போது, உள்நாட்டுச் சந்தையிலும் எரிபொருள் விலையைக் குறைக்க நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மீண்டும் ஒருமுறை யுத்தம் தீவிரமடைந்தமையினால் உலகில் எரிபொருள் விலை மீண்டும் உயர்ந்து காணப்படுகிறது.</p><p>

எனவே வழமையாக நாம் ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும், அந்த மாதத்தின் சராசரி பெறுமதியைப் பார்த்து, எமக்கு எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு எவ்வளவு செலவானது என்று ஆராய்ந்து பார்த்துதான் நாம் எரிபொருள் விலையை மீளாய்வு செய்கிறோம்.</p><p></p><h2>டீசலை சந்தைக்கு விநியோகித்தல்&nbsp;</h2><p> 

அந்தவகையில் செப்டெம்பர் மாத இறுதியிலும் இந்த மீளாய்வைச் செய்ய நாம் எதிர்பார்க்கிறோம். 

ஆனாலும், ஏற்கனவே எமது எரிபொருள் விலை கணிசமான அளவு உயர்வாகவே காணப்படுவதாக நாம் கருதுகிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4642f53e-fbeb-4971-bf1e-ae517d40a212/26-6aafbbfd07edd.webp' /></p><p> 

எனவே, மேலும் ஏற்படும் விலை அதிகரிப்பை எரிபொருள் பாவனையாளர்களால் தாங்கிக்கொள்ள முடியுமா என்பது குறித்து அரசாங்கத்திற்குள் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது. </p><p>

அதேபோல, பிரச்சினை நிலவுவது எரிபொருள் விநியோகிக்கும் ஒருசில தனியார் நிறுவனங்களுக்குத்தான். அவர்கள் தான் இதில் ஏற்படும் நட்டத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது என்ற பிரச்சினையை முன்வைத்து, குறிப்பாக டீசலை சந்தைக்கு விநியோகிப்பதை மட்டுப்படுத்தியுள்ளார்கள்.</p><p> 

ஆகவே, சட்டரீதியான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து பார்த்து, ஏதாவது ஒரு உயர் மற்றும் குறைந்த விலையெல்லைகளுக்குள் அந்த நிறுவனங்களுக்குத் தங்களுடைய விலையிலேயே எரிபொருளை விற்பனை செய்ய சந்தர்ப்பம் வழங்க முடியுமா என்று நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்“ என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T10:55:28+00:00</updated>
        </entry>
    </feed>
