<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-05T01:28:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலமைப்பரிசில் பரீட்சை - உயர்தர பரீட்சை தொடர்பாக விசேட கூட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/special-meeting-scholarship-exam-al-examination-1785887464"></link>
            <id>https://ibctamil.com/article/special-meeting-scholarship-exam-al-examination-1785887464</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, எதிர்வரும் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சை தொடர்பாக விச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, எதிர்வரும் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சை தொடர்பாக விசேட ஆலோசனைக் கூட்டம் இன்று (05) நடைபெறவுள்ளது.
</p><p>
இக்கூட்டத்தில் வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மழையுடனான காலநிலை</h2><p>
</p><p>
தற்போது நிலவும் மழையுடனான காலநிலையை முன்னிட்டு, பரீட்சைகளை நடத்துவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன நேற்றைய ஊடக சந்திப்பில் சுட்டிக்காட்டி இருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78b00860-cc4b-478d-88b7-0cea4175253f/26-6a727aeaddd0d.webp' /></p><p>இதன்படி இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவுகளின் அடிப்படையில், பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறுமா அல்லது மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T01:22:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதன் பெயர்ச்சி ; சில ராசிகளுக்கு காத்திருக்கும் ராஜயோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mercury-transit-brings-rajayoga-for-these-signs-1785892107"></link>
            <id>https://jvpnews.com/article/mercury-transit-brings-rajayoga-for-these-signs-1785892107</id>
            <summary type="text">தற்போது புதன் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த புதன் ஆகஸ்ட் 05 ஆம் திகதி கடக ராசிக்குள் நுழையவுள்ளார். புதன் சந்திரனின் ராசிக்கு செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது புதன் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த புதன் ஆகஸ்ட் 05 ஆம் திகதி கடக ராசிக்குள் நுழையவுள்ளார். புதன் சந்திரனின் ராசிக்கு செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். </p><p>


முக்கியமாக கடக ராசியில் புதன் நுழையும் போது அந்த ராசியில் உள்ள சூரியனுடன் சேர்ந்து புதாதித்ய ராஜயோகமும் உருவாவதால், 3 ராசிக்காரர்கள் நேர்மறையான பலன்களைப் பெறவுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd8b3771-aa34-47c9-89e5-f8d64fc29063/26-6a728d0c84be6.webp' /></p><h2>அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்&nbsp;</h2><p> </p><p><b>


ரிஷபம் : </b>ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திடீர் பண வரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது.</p><p></p><p> </p><p><b>

கடகம்:</b> கடக ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் தொழில் மற்றும் வியாபாரத்தில் முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். பணியிடத்தில் செயல்திறன் அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நிதி நிலைமை மேம்படும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வேலைகள் ஒவ்வொன்றும் திட்டமிட்டபடி நடக்கும்.</p><p></p><p><b>

சிம்மம்: </b>சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்புள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T01:18:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பௌத்த அறநெறி பாடசாலை விழாவில் சர்ச்சை ; அரை ஆடையுடன் பெண் உருவம் கொண்ட நினைவுப் பரிசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/controversy-erupts-at-buddhist-school-event-1785891290"></link>
            <id>https://jvpnews.com/article/controversy-erupts-at-buddhist-school-event-1785891290</id>
            <summary type="text">அனுராதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய அறநெறி பாடசாலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசில், அரை ஆடையுடன் நடனமாடும் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அனுராதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய அறநெறி பாடசாலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசில், அரை ஆடையுடன் நடனமாடும் பெண் உருவம் இடம்பெற்றிருந்ததாகக் கூறி சில பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify;">
கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) அனுராதபுரத்தில் பாடசாலையொன்றில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பல முக்கிய பிரமுகர்கள் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4a05cc9-c0c2-4f13-a034-d0e3ce6e6c44/26-6a7289dc506b6.webp' /></p><h2 style="text-align: justify; ">நினைவுப் பரிசு</h2><p>
</p><p style="text-align: justify;">
அனுராதபுரம் மாவட்ட சாசனரக்ஷக பலமண்டலப் பகுதிகளிலுள்ள தர்மப் பாடசாலை மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றிருந்த நிலையில், வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
</p><p style="text-align: justify; ">
இந்த விவகாரம் தொடர்பாக அனுராதபுரம் மாவட்ட சாசனரக்ஷக பலமண்டலத்தின் பிரதம செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

அதன்படி, இசைக் கருவி வாசிக்கும் பெண் உருவம் இடம்பெற்ற அந்த நினைவுப் பரிசு, நாடகம் மற்றும் இசைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டதாகவும், அது அந்தப் போட்டிகளின் கருப்பொருளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
மேலும், அந்த நினைவுப் பரிசின் உண்மையான நோக்கத்தை பெற்றோர் சரியான முறையில் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-05T01:18:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தர பரீட்சை தொடர்பில் இன்று எடுக்கப்படவுள்ள முக்கிய தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/key-decision-today-on-a-level-exams-1785888827"></link>
            <id>https://jvpnews.com/article/key-decision-today-on-a-level-exams-1785888827</id>
            <summary type="text">கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை நடத்துவது தொடர்பில் இன்று புதன்கிழமை (5) இடம் பெறும் உயர் மட்ட கலந்துரையாடலின் பின்னர் தீர்மானிக்க பண்பாடும் என கல...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை நடத்துவது தொடர்பில் இன்று புதன்கிழமை (5) இடம் பெறும் உயர் மட்ட கலந்துரையாடலின் பின்னர் தீர்மானிக்க பண்பாடும் என கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.</p><p>நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (4) இடம்பெற்ற இந்த வருடத்துக்கான அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான எழுபத்தோராயிரத்து எழுநூறு மில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dead0a36-187c-44cb-85fb-4f9ed0447300/26-6a72803ccdae1.webp' /></p><h2>விசேட கலந்துரையாடல்</h2><p>
</p><p>
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையை நடத்துவது தொடர்பில் உயர்மட்ட விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெறவுள்ளது.
</p><p>

இந்த உயர்மட்ட கலந்துரையாடலில் வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
நிலவும் மோசமான காலநிலை காரணமாக பரீட்சை நடத்துவதில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு, குறிப்பாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உயர்தரப் பரீட்சையை திட்டமிட்டபடி நடத்துவதா அல்லது மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்வதா என்பது தொடர்பில் அதன் போது இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T01:18:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த பிரச்சினைகள் இருப்பவர்கள் பப்பாளியை தொட்டுக்கூட பார்க்க கூடாது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/avoid-papaya-if-you-have-these-health-issues-1785886828"></link>
            <id>https://jvpnews.com/article/avoid-papaya-if-you-have-these-health-issues-1785886828</id>
            <summary type="text">பப்பாளியில் வைட்டமின் ஏ, சி, நார்ச்சத்து மற்றும் பல ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இது செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பப்பாளியில் வைட்டமின் ஏ, சி, நார்ச்சத்து மற்றும் பல ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இது செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. </p><p style="text-align: justify; ">இருப்பினும் பப்பாளியை உட்கொள்வது சிலருக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அதன் நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3417d516-4752-4544-9fc8-39a3bfddd17b/26-6a7278735955d.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;நன்மை, தீமைகள்</h2><p style="text-align: justify; ">
கர்ப்ப காலத்தில் பச்சையாகவோ அல்லது பாதி பழுத்த பப்பாளியையோ சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதில் லேடெக்ஸ் மற்றும் பாப்பைன் எனப்படும் கூறுகள் உள்ளன, அவை கருப்பையில் சுருக்கங்களை ஏற்படுத்தக்கூடும். இது கருச்சிதைவு அல்லது குறைமாதப் பிரசவத்தின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். எனவே, முதலில் மருத்துவரை அணுகுவது அவசியம்.</p><p style="text-align: justify; ">

 லேடெக்ஸ் ஒவ்வாமை இருந்தால், பப்பாளி பழத்திருந்தாலும் ஒவ்வாமை ஏற்படலாம். அத்தகையவர்களுக்கு பப்பாளி சாப்பிட்ட பிறகு தோல் வெடிப்பு, அரிப்பு, வீக்கம் அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம். பப்பாளி சாப்பிட்ட பிறகு இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06a225b4-fdb5-494e-be08-da2d89c06619/26-6a7278e93654f.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
பப்பாளி பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, ஆனால் அதிகப்படியான எதுவும் தீங்கு விளைவிக்கும். பப்பாளியை அதிகமாக சாப்பிடுவதால் வாயு, வீக்கம், வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றில் அசௌகரியம் ஏற்படும். </p><p style="text-align: justify; ">அதிகப்படியான வயிற்றுப்போக்கு நீரிழப்பு அபாயத்தையும் அதிகரிக்கும். இது குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும்.

பப்பாளி பழம் இரத்த சர்க்கரை அளவை பாதிக்கும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">நீரிழிவு நோய்க்கான மருந்துகள் அல்லது இன்சுலின் உட்கொள்பவர்கள் பப்பாளியை அதிக அளவில் உட்கொள்ளும் முன் மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் சில சமயங்களில் இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்படலாம். அப்படிப்பட்டவர்களுக்கு சீரான உணவு மற்றும் வழக்கமான பரிசோதனைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.</p><p style="text-align: justify; ">பப்பாளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது, ஆனால் அதிகமாக உட்கொள்வது சிலருக்கு ஆக்சலேட் உருவாக வழிவகுக்கும்.ஏற்கனவே சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளியை உணவில் தாங்களாகவே சேர்த்துக் கொள்ளக் கூடாது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள் பச்சை பப்பாளியை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இது சில மருந்துகளின் செயல்திறனை பாதிக்கும் மற்றும் இரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கும். </p><p style="text-align: justify; ">தீவிர நோய்க்கு நீங்கள் வழக்கமான மருந்துகளை எடுத்துக்கொண்டால், உணவுமுறை மாற்றங்களைச் செய்வதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகவும்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-05T01:17:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீழே தவறி விழுந்த 16 வயது மாணவிக்கு பிரசவம் ; சிசுவுக்கு நேர்ந்த கதி ; காதலன் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/16-year-old-gives-birth-after-fall-1785871666"></link>
            <id>https://jvpnews.com/article/16-year-old-gives-birth-after-fall-1785871666</id>
            <summary type="text">&amp;nbsp;கீழே தவறி விழுந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு பிரசவம் ஏற்பட்டு வயிற்றில் இருந்த சிசு இறந்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;அந்த மாணவியை கர்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;கீழே தவறி விழுந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு பிரசவம் ஏற்பட்டு வயிற்றில் இருந்த சிசு இறந்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p style="text-align: justify;">அந்த மாணவியை கர்ப்பமாக்கிய காதலன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a993d927-4ff2-4c11-915f-69a0cffb3277/26-6a723d341c819.webp' /></p><h2 style="text-align: justify; ">வழக்குப்பதிவு</h2><p>
</p><p style="text-align: justify;">

விருதுநகர் மாவட்டம் ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் வசித்து வந்ததுடள் மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 25 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார்.</p><p style="text-align: justify;">சம்பவத்தன்று பள்ளியில் இருந்து மாணவி வீடு திரும்பியபோது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மாணவியின் வயிற்றில் கடும் வலி ஏற்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"> இதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify; ">இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மாணவியை வீட்டுக்கு அழைத்து வந்த நிலையில் வீட்டில் வைத்து மாணவிக்கு பிரசவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. </p><p style="text-align: justify; ">

இதை தொடர்ந்து வீட்டில் உள்ளவர்கள் மாணவியையும், சிசுவையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிசு உயிரிழந்தமை பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

மாணவியின் காதலன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-05T01:17:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் ; ஆரம்பமான பணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/good-news-announced-for-government-employees-1785859801"></link>
            <id>https://jvpnews.com/article/good-news-announced-for-government-employees-1785859801</id>
            <summary type="text">அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் பணிகள், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தலைமையில் இன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் பணிகள், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தலைமையில் இன்று (04) ஆணைக்குழு அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
</p><p style="text-align: justify; ">
 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் 2026 வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக இந்த ஆணைக்குழு நிறுவப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abf3f41b-c171-45d3-8b55-96b250519f5d/26-6a720edb3fed9.webp' /></p><h2 style="text-align: justify; ">அதிவிசேட வர்த்தமானி</h2><p> </p><p style="text-align: justify; ">இது தொடர்பான அறிவித்தல் 2026 ஜூன் 22ஆம் திகதியிடப்பட்ட 2494/05 எனும் இலக்கமுடைய அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டிருந்தது.</p><p style="text-align: justify; ">

 

ஓய்வுபெற்ற அமைச்சுச் செயலாளர் அசோக்க பீரிஸ் தலைவராகவும், நாலக திசாநாயக்க செயலாளராகவும் கடமையாற்றும் இந்த ஆணைக்குழுவில் 15 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
 

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, அரசு ஊழியர்களின் தொழில்முறைத் திறனை உயர்த்துவது, புதிய தொழில்நுட்ப மற்றும் உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப அரச சேவை எவ்வாறு கட்டமைப்பு ரீதியாக சீர்திருத்தப்பட வேண்டும் என்பது குறித்து பரிந்துரைகளை வழங்குவது ஆகியவை இந்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளாகும்.</p><p style="text-align: justify; ">

 

இங்கு உரையாற்றிய அமைச்சர் சந்தன அபேரத்ன, அரசு ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக 20 ஆண்டுகளுக்குப் பிறகே இவ்வாறானதொரு ஆணைக்குழு நிறுவப்படுவதாகவும், ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஆணைக்குழுவொன்று நிறுவப்படுவது இதுவே முதல் முறை என்றும் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

நாட்டை அபிவிருத்தி செய்து முன்னோக்கி கொண்டு செல்வதில் அரசு ஊழியர்களுக்கு பெரும் பங்கு உள்ளதால் அரச சேவையை வலுப்படுத்த வேண்டும் என்றும், அதில் அரச சேவையில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பது மிகவும் முக்கியமானது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
</p><p style="text-align: justify; ">
 

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளப் பிரச்சினைகள் குறித்து நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வந்த போதிலும், இதுவரை அதற்கான அறிவியல் பூர்வமான திட்டங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-05T01:17:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் மற்றொரு சம்பவம் ; சடலமாக மீட்கப்பட்ட இளம் நாதஸ்வர வித்துவான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nadaswaram-musician-found-dead-in-jaffna-1785890031"></link>
            <id>https://jvpnews.com/article/nadaswaram-musician-found-dead-in-jaffna-1785890031</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் நாதஸ்வர வித்துவான் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

கோண்டாவில் காளி கோவிலடி பகுதியில் இந்த சம்பவம் இடம...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் நாதஸ்வர வித்துவான் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். </p><p>

</p><p>கோண்டாவில் காளி கோவிலடி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fc55cc4-5761-4ed5-9413-0ec5ed88a383/26-6a728582d1f23.webp' /></p><p>கோண்டாவில் காளி கோவிலடி பகுதியை சேர்ந்த 32 வயதுடையவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p> 

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T01:15:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தோல்வியடைந்த ட்ரம்பின் போர் நிறுத்த முயற்சிகள் ; மாறிமாறி நடத்தப்பட்ட தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-s-ceasefire-efforts-end-in-failure-1785878602"></link>
            <id>https://canadamirror.com/article/trump-s-ceasefire-efforts-end-in-failure-1785878602</id>
            <summary type="text">உக்ரைன் , ரஷ்யா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் , ரஷ்யா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae61f4ae-65cf-4900-8623-410a6ad2d86d/26-6a72584c53a01.webp' /></p><p> போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மேற்கொண்டார். ஆனால் முயற்சி தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

</p><p>
இந்நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்யா நேற்று மாறிமாறி ஏவுகணை, டிரோன் மூலம் தாக்குதல் நடத்தின. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடத்தப்பட்ட உக்ரைன் ஏவுகணை தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். </p><p>அதேபோல், உக்ரைனின் சுமி நகர் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.</p><p> இதன் மூலம் இரு தரப்பு மோதலில் மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். அதேபோல், 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.</p>]]></content>
            <updated>2026-08-05T01:15:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறை மோதல்கள் அலையாக மாறுமா..! நீதி அமைச்சர் ஹர்ஷன அதிர்ச்சித் தகவல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prisons-attacks-harshna-nanayakara-1785891790"></link>
            <id>https://tamilwin.com/article/prisons-attacks-harshna-nanayakara-1785891790</id>
            <summary type="text">சிறைச்சாலை மோதல்கள் அலையாக உருவெடுக்குமா என்பது குறித்து விசேட அவதானம்
செலுத்தப்பட்டுள்ளது என்றும், சிறைச்சாலை கட்டமைப்பைத் திட்டமிட்ட வகையில்
பலவீன...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலை மோதல்கள் அலையாக உருவெடுக்குமா என்பது குறித்து விசேட அவதானம்
செலுத்தப்பட்டுள்ளது என்றும், சிறைச்சாலை கட்டமைப்பைத் திட்டமிட்ட வகையில்
பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது
என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
தெரிவித்தார்.
</p><p>
நாடாளுமன்றத்தில்&nbsp; நடைபெற்ற அமர்வில் மஹர சிறைச்சாலை
மோதல் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.</p><p></p><h2>மஹர சிறைச்சாலை</h2><p>

அவர் மேலும் உரையாற்றுகையில்,
</p><p>
"மஹர சிறைச்சாலையில் கடந்த 1 ஆம் திகதி மாலை 3.45 மணியளவில் மூன்று கைதிகள்
சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறி கூச்சலிட்டுப் போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e96f012-262e-4b23-9dc2-cc6dbaffe304/26-6a728e105b1bc.webp' /></p><p> </p><p>சிறைச்சாலை அதிகாரி அங்கு சென்று அவர்களுடன் பேச்சு நடத்திய
போதிலும், ஒரே நேரத்தில் சுமாராக ஆயிரம் கைதிகள் ஒன்றுகூடி கலகம் ஏற்படுத்தும்
வகையில் செயற்பட்டுள்ளனர்.
</p><p>
இதனைக் கட்டுப்படுத்த சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் ஆயுதங்களைப் பாதுகாப்பாக
மறைத்துவிட்டு பிரதான இரும்பு வாசல்களை மூடியுள்ளனர். எனினும், கைதிகள்
கதவுகள் மீது கற்களால் தாக்குதல் நடத்தியதுடன், சமையலறை, உணவு உண்ணும் இடம்,
வைத்தியசாலை, பதிவுப் பிரிவு மற்றும் அலுவலகப் பகுதிகளைச் சேதப்படுத்தியும் தீ
வைத்தும் அழித்துள்ளனர். </p><p>பின்னர், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும்
இராணுவத்தின் ஒத்துழைப்புடன் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.</p><p></p><h2>நீர்கொழும்பு சிறைச்சாலை</h2><p>
</p><p>
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் கைதிகளுக்கு இடையிலான முரண்பாடாக
இருந்தபோதிலும், மஹர சிறைச்சாலையில் அவ்வாறான தன்மை காணப்படவில்லை. ஒரே
கட்டத்தில் ஆயிரம் பேர் ஒன்றுகூடியமை சந்தேகத்துக்குரியது.
</p><p>
கைதிகள் கூண்டுகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தப்படவில்லை. மாறாக,
சமையலறை, உணவு உண்ணும் இடம் மற்றும் வைத்தியசாலை போன்றவையே திட்டமிட்டுத்
தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6a0b578-0d18-40a3-b784-997e8b4e5bd6/26-6a728e0fa6895.webp' /></p><p>
</p><p>
மஹர சிறைச்சாலை மோதலுக்கு வெளியாள்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளதா
என்பது தொடர்பில் பல்வேறு கோணங்களில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன. </p><p>தற்காலிக ஏற்பாடாக வேறு சிறைச்சாலைகளில் உணவு சமைக்கப்பட்டு மஹர
சிறைக் கைதிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.</p><p></p><p>
</p><h2>நெருக்கடிகளுக்குத் தீர்வு&nbsp;</h2><p>
சிறைச்சாலையின் சொத்துகளுக்குத் தீ வைத்து அழிக்கப்பட்டமை மக்களின்
வரிப்பணத்தையே பாதிக்கின்றது என்பதைக் கைதிகளின் உறவினர்கள் புரிந்துகொள்ள
வேண்டும்.

சிறைச்சாலை கட்டமைப்பில் நிலவும் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண எனது
தலைமையில் அமைச்சரவைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e0a892e-6c3c-4187-9f41-1b1fa527f30e/26-6a728e110e1ce.webp' /></p><p>
</p><p>
மேலும், சிறைச்சாலை மோதல்கள் அலையாக உருவெடுக்குமா என்பது குறித்து அவதானம்
செலுத்தப்பட்டுள்ளது.</p><p> மூன்று சிறைச்சாலைகள் தொடர்பில் விசேட தகவல்கள்
கிடைக்கப்பெற்றுள்ளன. அதற்கமைய சிறைச்சாலைகளில் பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-05T01:12:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசமான வானிலை காரணமாக நாட்டில் 11,832 பேர் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/11832-people-affected-bad-weather-in-the-country-1785891507"></link>
            <id>https://ibctamil.com/article/11832-people-affected-bad-weather-in-the-country-1785891507</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளைப் பாதித்த மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளனர் என பேரிடர் மேலாண...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளைப் பாதித்த மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளனர் என பேரிடர் மேலாண்மை மையம் (DMC) வெளியிட்டுள்ள சமீபத்திய நிலவர அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p>

 

கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஒன்பது மாவட்டங்களில் உள்ள 3,014 குடும்பங்களைச் சேர்ந்த 11,832 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதுடன், மொத்தம் 3,538 பேர் 51 பாதுகாப்பு மையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
</p><p></p><h2>75 மி.மீ.க்கு மேல் கனமழை</h2><p>
 

மோசமான வானிலையால் சொத்து சேதமும் ஏற்பட்டுள்ளது, ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 290 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது. இதில் நுவரெலியா மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9002e661-a4d7-44be-b820-07fd1f2d0fd3/26-6a728df95ac2b.webp' /></p><p>மேலும், மாவட்டத்தில் மட்டும் 5,445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், ஆறு பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 115 வீடுகள் சேதமடைந்துள்ளன எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>
 

இதற்கிடையில், மேல், சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டளவியல் திணைக்களம் கணித்துள்ளது.
</p><p>
 

இந்தப் பகுதிகளில் மேகமூட்டமான வானம் நிலவும் என்றும், சபரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீ.க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T01:12:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கஞ்சிபானி இம்ரானைப் கைது செய்ய வெளிநாடொன்றில் விசேட நடவடிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mission-to-arrest-kpi-1785891497"></link>
            <id>https://tamilwin.com/article/mission-to-arrest-kpi-1785891497</id>
            <summary type="text">&amp;nbsp;மலேசியாவில் தலைமறைவாகியுள்ளதாக சந்தேகிக்கப்படும் சர்வதேச போதைப் பொருள் வர்த்தகரும், பாதாள உலகக் குழுத் தலைவருமான &#039;கஞ்சிபானி இம்ரான்&#039; என்பவரைக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மலேசியாவில் தலைமறைவாகியுள்ளதாக சந்தேகிக்கப்படும் சர்வதேச போதைப் பொருள் வர்த்தகரும், பாதாள உலகக் குழுத் தலைவருமான 'கஞ்சிபானி இம்ரான்' என்பவரைக் கைது செய்வதற்காக, உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் ரோஹான் ஓலுகல தலைமையில் விசேட பொலிஸ் குழுவொன்று பாரிய கூட்டு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
</p><p>மலேசிய பொலிஸாரால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள கஞ்சிபானி இம்ரான் ஒளிந்திருப்பதாக சந்தேகிக்கப்படும் பல இடங்களை இலக்கு வைத்து அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.</p><p></p><h2>பொலிஸார் விசேட நடவடிக்கை</h2><p>
</p><p>கஞ்சிபானி இம்ரான் மலேசியாவிலிருந்து தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில், சர்வதேச பொலிஸாருடன் இணைந்து நாட்டின் அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் கடல்வழிப் பாதைகளில் மலேசிய பொலிஸார் விசேட நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe9f39d3-9bfa-425c-8364-45086caa9019/26-6a728aab6a47c.webp' /></p><p>மலேசியாவில் அவருக்கு உள்ள தொடர்புகள் மற்றும் அவரது கும்பலைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
</p><p>தற்போது மலேசிய பொலிஸாரின் காவலில் உள்ள கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய கூட்டாளியான 'ரத்மலானே சீமா' உட்பட மூன்று குற்றவாளிகளிடம் பொலிஸ் உதவி ஆணையர் ரோஹான் ஓலுகல மற்றும் மலேசிய பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>இதன் மூலம் கஞ்சிபானி இம்ரான் மற்றும் அவரது பின்னணி குறித்த பல முக்கிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.</p><p></p><h2>&nbsp;பாதாள உலகக் தலைவர்</h2><p>
இந்த பாதாள உலகக் குழுத் தலைவரைக் கைது செய்யும் புலனாய்வு நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோர் தங்களது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளனர்.
</p><p>பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட ஆகியோரும் இந்த நடவடிக்கையில் நேரடியாகப் பங்களித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85877dc2-b424-41d7-b9d5-bf0b00e20ada/26-6a728f841575d.webp' /></p><p>
</p><p>கஞ்சிபானி இம்ரானின் பிரதான சகாவான ரத்மலானே சீமா மலேசியாவில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்ட செய்தி வெளியானதைத் தொடர்ந்து, கஞ்சிபானி இம்ரான் தனது மறைவிடத்தை மாற்றி வேறு பகுதிக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
எப்படியாவது இந்த பாதாள உலகக் தலைவரைக் கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவதற்காக, சிரேஷ்ட அதிகாரிகள் தொடர்ச்சியாக முன்னேற்றங்களை ஆய்வு செய்து தேவையான வழிகாட்டல்களை வழங்கி வருகின்றனர் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T00:58:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த அரசாங்கத்தின் முன்னாள் எம்.பிக்கு எதிராக ச.ஐ.டியில் முறைபாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/complaint-filed-against-susantha-punchinilame-cid-1785891245"></link>
            <id>https://ibctamil.com/article/complaint-filed-against-susantha-punchinilame-cid-1785891245</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினருமான சுசந்த புஞ்சிநிலமே,&amp;nbsp;2008ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தி வந்த அரச உத்தியோகபூர்வ இல்லத்திற்கான வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினருமான சுசந்த புஞ்சிநிலமே,&nbsp;2008ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தி வந்த அரச உத்தியோகபூர்வ இல்லத்திற்கான வாடகை, நீர் கட்டணம் மற்றும் மின்சார கட்டணம் எதனையும் செலுத்தவில்லை என வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.</p><p>அரசியல் நடவடிக்கைகளுக்காக இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து திருகோணமலை மாவட்டத்திற்கு வந்த முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுன (பொஹொட்டுவ) கட்சி உறுப்பினருமான சுசந்த புஞ்சிநிலமே குறித்த இந்த குற்றச்சாட்டை நேற்று (04.08.2026) நாடாளுமன்றத்தில் அருண் ஹேமச்சந்திரா முன்வைத்தார்.</p><p>இந்த நிலுவைத் தொகைகளை மீளப் பெறுவதற்காக அனைத்து மாவட்ட செயலாளர்களும் நடவடிக்கை எடுத்திருந்த போதிலும், இதுவரை எந்தவொரு தொகையும் செலுத்தப்படவில்லை எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>திருட்டு, மோசடி மற்றும் ஊழல்கள்</h2><p>
இதனால், இது தொடர்பான அனைத்து ஆவணங்களும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கும் (CID), அரச கணக்குகள் பற்றிய குழுவான கோபா குழுவிற்கும் (COPE) ஒப்படைக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81a1569f-0846-4a1f-ba7c-91e60a8a5225/26-6a7289aed991a.webp' /></p><p>மேலும், முன்னாள் மாகாண சபை உறுப்பினராக இருந்த பிரியந்த பத்திரண பிரேமகுமார என்பவருக்கும் பேதுருகொட்டுவ பகுதியில் அரச உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டிருந்ததாகவும், அதற்கான வாடகை எதுவும் செலுத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.</p><p>

கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் திருட்டு, மோசடி மற்றும் ஊழல்களுக்கு இடமளித்து அவற்றை கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும், அரச அதிகாரிகள் தமது கடமைகளை நிறைவேற்ற முயன்ற போதிலும் அரசியல் அதிகாரம் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டதாகவும் பிரதி அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T00:54:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை வந்தடைந்த இந்திய அணி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/team-india-have-arrived-in-sri-lanka-1785890470"></link>
            <id>https://tamilwin.com/article/team-india-have-arrived-in-sri-lanka-1785890470</id>
            <summary type="text">2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி நேற்று (04) மாலை இலங்கை வந்தடைந்துள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி நேற்று (04) மாலை இலங்கை வந்தடைந்துள்ளது.
</p><p>
 
இதன் முதலாவது போட்டி வரும் ஓகஸ்ட் 15 முதல் 19 ஆம் திகதி வரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.</p><p></p><h2>இலங்கை கிரிக்கெட்</h2><p>
</p><p>
 இரண்டாவது போட்டி வரும் ஓகஸ்ட் 23 முதல் 27 ஆம் திகதி வரை கொழும்பு எஸ்.எஸ்.சி (S.S.C.) மைதானத்தில் நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11998204-820f-4ecc-b6a8-849aa6dc7216/26-6a72886452b57.webp' /></p><p>
</p><p>
 உலக டெஸ்ட் தரவரிசையில் இந்தியா 5ஆவது இடத்திலும், இலங்கை 6ஆவது இடத்திலும் உள்ளதால், இரு அணிகளுக்கும் இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் மிகவும் முக்கியமானவை ஆகும்.
</p><p>
 
இந்த டெஸ்ட் போட்டிகளுக்கு ஆயத்தமாகும் வகையில், ஆகஸ்ட் 07 முதல் 10 ஆம் திகதி வரை கொழும்பு என்.சி.சி (N.C.C.) மைதானத்தில் பயிற்சிப் போட்டியொன்றை நடத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T00:48:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயினில் அகதிகளுடன் நடு கடலில் கவிழ்ந்த படகு ; பலர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/migrant-boat-capsizes-off-spain-many-dead-1785890610"></link>
            <id>https://canadamirror.com/article/migrant-boat-capsizes-off-spain-many-dead-1785890610</id>
            <summary type="text">பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்பிரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்பிரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.</p><p> இந்த பயணத்தின் போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a6ecc52-a7e7-4869-bae4-63c4c48076c9/26-6a7287345d824.webp' /></p><p>
</p><p>இந்நிலையில், ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த 19 பேர் மத்திய தரைக்கடல் வழியாக அகதிகள் நேற்று முன் தினம் ஸ்பெயினுக்குள் படகு மூலம் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்தனர். </p><p>ஸ்பெயினின் மல்ரோகா தீவு அருகே சென்றபோது அகதிகள் படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.</p><p>

இந்த விபத்தில் படகில் பயணித்த சட்டவிரோத அகதிகள் 17 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். எஞ்சிய 2 பேர் நீந்தி அருகில் உள்ள தீவுக்குள் நுழைந்து உயிர் தப்பினர். </p><p>இந்த சம்பவம் தொடர்பாக ஸ்பெயின் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-05T00:43:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை விட்டு தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதியின் மகனும் அவர் மனைவியும்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-president-son-fled-the-country-and-his-wife-1785873297"></link>
            <id>https://tamilwin.com/article/former-president-son-fled-the-country-and-his-wife-1785873297</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகன் அவரது மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

கடந்த நாட்களில் அவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகன் அவரது மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
</p><p>
கடந்த நாட்களில் அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிடப்பட்டது.
</p><p>
இந்தநிலையில்,முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவும் மற்றும் அவரது மனைவியும் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக புலனாய்வு ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>

தஹாம் சிறிசேன மற்றும் அவரது மனைவியின் குடும்பத்தினருக்கு எதிராக 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான வரி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
தஹாம் திருமணம் செய்துகொண்ட குடும்பத்தின் வணிக நிறுவனமான எல்காடோ (Elcato), ஆரம்பத்தில் நுழைவாயில்கள் (gates) தயாரிக்கும் நிறுவனமாக இருந்து, பின்னர் வாகன இறக்குமதி தொழிலில் ஈடுபட்டு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, அகில ரவிநக வீரரத்ன மற்றும் அஸ்வினி டயஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குடும்ப உறுப்பினர்களுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது NewsInsightTamil நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/BCAwXNr7v-g" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T00:41:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடமராட்சியில் சிறுவனுக்கு அதிக கட்டணம் அறவீடு செய்த தனியார் பேருந்து நடத்துனர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/privat-bus-conductor-suspended-1-week-overcharging-1785889547"></link>
            <id>https://tamilwin.com/article/privat-bus-conductor-suspended-1-week-overcharging-1785889547</id>
            <summary type="text">வடமராட்சி கிழக்கு தனியார் போக்குவரத்து சங்கத்தைச் சேர்ந்த பேருந்து நடத்துனர் ஒருவருக்கு ஒரு வார பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

10 வயதிற்கு உட்பட்ட ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடமராட்சி கிழக்கு தனியார் போக்குவரத்து சங்கத்தைச் சேர்ந்த பேருந்து நடத்துனர் ஒருவருக்கு ஒரு வார பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
10 வயதிற்கு உட்பட்ட சிறுவனிடம் முழு பயணக் கட்டணம் அறவிட்டதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஒரு வார பணித்தடை</h2><p>

குடத்தனையிலிருந்து மருதங்கேணி சென்ற சிறுவனிடம் வயது வந்தோருக்கான முழு கட்டணம் அறவிடப்பட்டதாக அவரது தந்தை சங்கத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><p>

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், நடத்துனர் விதிமுறைகளை மீறி முழு கட்டணம் பெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f0a7f42-1b4b-4c5e-a1d8-61960f820eb0/26-6a7283f769a5e.webp' /></p><p>

இதனையடுத்து குறித்த நடத்துனருக்கு ஒரு வாரம் பணியில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் மருதங்கேணியிலிருந்து குடத்தனை வரையான பயணத்திற்கு பெரியவர்களுக்கு 108 ரூபாயும், சிறுவர்களுக்கு 54 ரூபாயும் அறவிடப்படுகிறது.</p><p>

ஆனால் தனியார் பேருந்துகளில் இதே தூரத்திற்காக 140 ரூபாய் கட்டணம் அறவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T00:29:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/4-more-human-skeletons-identified-in-semmani-1785889651"></link>
            <id>https://ibctamil.com/article/4-more-human-skeletons-identified-in-semmani-1785889651</id>
            <summary type="text">செம்மணி புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழாய்வுப் பணிகளின் 43ஆவது நாளான நேற்று, மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழாய்வுப் பணிகளின் 43ஆவது நாளான நேற்று, மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழாய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த 2 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் ஒரு மனித எலும்புக்கூட்டுத் தொகுதியும் கண்டறியப்பட்டுள்ளது.</p><p></p><h2>97 நாட்கள் அகழாய்வுப் பணி</h2><p>
</p><p>
செம்மணி புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக இதுவரை 97 நாட்கள் அகழாய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f846a71-72bd-402d-8ec7-823a8f06463b/26-6a72837599922.webp' /></p><p>
</p><p>
இதுவரை மொத்தமாக 483 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 481 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T00:27:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவுதிகளால் சேவையை நிறுத்திய சவுதி அரேபிய விமான நிலையம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/airport-in-saudi-suspends-service-1785885126"></link>
            <id>https://news.lankasri.com/article/airport-in-saudi-suspends-service-1785885126</id>
            <summary type="text">ஹவுதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து சவுதி அரேபியாவில் உள்ள விமான நிலையம் தனது சேவையை நிறுத்தியது.
ஏமனில் உள்ள ஹவுதிகள் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு விமான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹவுதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து சவுதி அரேபியாவில் உள்ள விமான நிலையம் தனது சேவையை நிறுத்தியது.
</p><p>ஏமனில் உள்ள ஹவுதிகள் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு விமான நிலையத்தைத் தாக்கியதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அங்கு விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>எதிரியின் முக்கிய இலக்கு</h2><p>
</p><p>கடந்த மாதம், உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியா மீது ஹவுதிகள் கடல்வழி முற்றுகையை அறிவித்தனர்; அதன்பின்னர், எண்ணெய் கப்பல்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீதான பல தாக்குதல்களுக்குத் தாங்களே காரணம் என்றும் அவர்கள் உரிமை கோரியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4acafeb4-633b-41e1-9346-95df56a93bd6/26-6a7271c884028.webp' /></p><p> இதனையடுத்து ஹவுதி நிலைகளை குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதன் மூலம் சவுதி அரேபியா பதிலடி கொடுத்துள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரீ, செவ்வாய்க்கிழமையன்று, ட்ரோன் ஒன்றைப் பயன்படுத்தி நஜ்ரான் விமான நிலையத்தில் உள்ள சவுதி எதிரியின் முக்கிய இலக்கு ஒன்றை வெற்றிகரமாகத் தாக்கியதாகத் தெரிவித்தார். </p><p>சவுதி எதிரி தரப்பு ட்ரோன்களைப் பயன்படுத்தி சாதா மற்றும் ஹஜ்ஜா மாகாணங்களின் வான்வெளியை மீறியதற்குப் பதிலடியாகவே தெற்குப் பகுதியில் உள்ள விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.</p><p></p><p> </p><p>விமான நிலையத்தின் முக்கிய ரேடார் தாக்கப்பட்டதால், செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த சில நாட்களுக்குத் திட்டமிடப்பட்ட விமானங்களின் நிலையை விமான நிலைய இணையதளம் 'தெரியவில்லை' என்று குறிப்பிட்டிருந்தது.</p><h2>இதுவே முதல் முறை</h2><p> </p><p>யேமன் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள அந்தச் சிறிய விமான நிலையத்தில் ஒரே ஒரு முனையம் மட்டுமே உள்ளது; இது நாளொன்றுக்குச் சில விமானங்களை மட்டுமே கையாளுகிறது. </p><p>கடந்த மாதம் மோதல்கள் வெடித்த நிலையில்; 2022-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, சவுதி அரேபியாவும் ஹவுதிகளும் கடுமையான தாக்குதல்களில் ஈடுபட்டது இதுவே முதல் முறையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0abec206-f46e-4b1c-b900-4c3c5f40b666/26-6a7271c9378ee.webp' /></p><p> </p><p>ஹவுதிகள் ஏமன் தலைநகர் சனாவைக் கைப்பற்றி, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தை வெளியேற்றியதைத் தொடர்ந்து, 2015 முதல் சவுதி தலைமையிலான இராணுவக் கூட்டணி ஒன்று ஹவுதிகளுடன் போரில் ஈடுபட்டு வந்தது. </p><p>சவுதி அரேபியாவுக்கும் ஹவுதிகளுக்கும் இடையே மீண்டும் வெடித்துள்ள மோதல்கள், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் எவ்வாறு பரவியுள்ளது என்பதற்கு ஒரு உதாரணமாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T00:27:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[காஸாவில் மூன்று வருடங்களின் பின்னர் மீட்கப்பட்ட 112 பேரின் உடல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/112-bodies-recovered-in-gaza-after-three-years-1785889296"></link>
            <id>https://canadamirror.com/article/112-bodies-recovered-in-gaza-after-three-years-1785889296</id>
            <summary type="text">காஸா நகரின் சப்ரா பகுதியில் கடந்த 2023 நவம்பரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த 112 பாலஸ்தீனா்களின் உடல...</summary>
            <content type="html"><![CDATA[<p>காஸா நகரின் சப்ரா பகுதியில் கடந்த 2023 நவம்பரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த 112 பாலஸ்தீனா்களின் உடல்கள் நீண்ட தேடுதலுக்குப் பிறகு மீட்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை கூட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது.
</p><p>
மோதல் தொடங்கிய சில வாரங்களிலேயே குடியிருப்புகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 300-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த நிலையில், அப்போது சுமாா் 40 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40ecb293-9abd-4d1c-9298-2fbdeddcacce/26-6a728211d231a.webp' /></p><p>தற்போதைய தற்காலிக போா்நிறுத்தத்தைத் தொடா்ந்து, ஹமாஸ் உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் மீட்புக்குழுவினா் கடந்த வார இறுதியில் தீவிர தேடுதல் பணிகளில் ஈடுபட்டனா். </p><p>அப்போது, 40 குழந்தைகள் உள்பட 112 பேரின் உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டது.
</p><p>
பாலஸ்தீன கொடிகள் போா்த்தப்பட்ட இந்த உடல்களுக்கு, நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு கண்ணீா்மல்க இறுதி அஞ்சலி செலுத்தினா். </p><p>பின்னா், இறுதிப் பிராா்த்தனைக்குப் பிறகு அருகிலுள்ள கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும், 157 பேரின் உடல்களைத் தேடும் பணி தொடா்கிறது.</p>]]></content>
            <updated>2026-08-05T00:21:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான 5 ஊழல் வழக்குகள்! ஆரம்பமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/5-corruption-cases-against-johnston-fernando-1785889101"></link>
            <id>https://ibctamil.com/article/5-corruption-cases-against-johnston-fernando-1785889101</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஐந்து வழக்குகளை மீண்டும் விசாரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஐந்து வழக்குகளை மீண்டும் விசாரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>கூட்டுறவு மொத்த விற்பனைச் சங்கத்தின் (CWE) ஊழியர்களை அரசுப் பணியுடன் தொடர்பில்லாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி, அவர்களுக்கான சம்பளம் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவுகளை அரசுப் பணத்தில் வழங்கியதன் மூலம் அரசுக்கு சுமார் 60 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் வழக்குகள் தொடர்பில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.</p><p>

இந்த ஐந்து வழக்குகளும் உயர்நீதிமன்றத்தில் (High Court) மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என ஐவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் குழு நேற்று (04) உத்தரவிட்டது.</p><p></p><h2>விடுதலை தீர்ப்பும் இரத்து</h2><p>

நீதியரசரகளான பி. குமாரத்னம், தமித் தொட்டவத்த, கே.எம்.எஸ். திஸாநாயக்க, பிரியந்த பெர்னாண்டோ மற்றும் ஏ. பிரேமசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வே இந்த உத்தரவைப் பிறப்பித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11f2fb46-29f4-4108-834c-4bb3fd22e926/26-6a72814fa0290.webp' /></p><p>
</p><p>
அத்துடன், வழக்குகளில் ஒன்றில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை விடுதலை செய்து வழங்கியிருந்த தீர்ப்பையும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.
</p><p>
வழக்கின் தொடக்கத்தில் பாதுகாப்புத் தரப்பு முன்வைத்த ஆரம்ப எதிர்ப்பை ஏற்று, குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
</p><p>
இவ்வழக்குகள் தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் சட்டத்தரணிகளும் தாக்கல் செய்திருந்த ஐந்து மேன்முறையீட்டு மனுக்களையும் பரிசீலித்த பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
</p><p>
சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுடன், ச.தொ.ச முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பணிப்பாளர் மொஹமட் ஷகீர் ஆகியோருக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் இனி மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T00:19:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வேண்டும்... உக்ரைனிடம் கோரிய ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-planned-strikes-on-ukraine-1785889255"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-planned-strikes-on-ukraine-1785889255</id>
            <summary type="text">உக்ரைன் மீது மூன்று தாக்குதல்களை நடத்த திட்டமிட்ட ஈரான், ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு கோரியுள்ளது.
உக்ரைனைத் தாக்கும் திட்டத்தில் இருந்த ஈரான், கடைசி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் மீது மூன்று தாக்குதல்களை நடத்த திட்டமிட்ட ஈரான், ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு கோரியுள்ளது.
</p><p>உக்ரைனைத் தாக்கும் திட்டத்தில் இருந்த ஈரான், கடைசி நேரத்தில் விடுக்கப்பட்ட ஒரு மன்னிப்பு, தாக்குதலை நிறுத்தும்படி அவர்களைக் கட்டாயப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>மன்னிப்பு</h2><p>
</p><p>காஸ்பியன் கடலில் ராணுவத் தளவாடங்களை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் கப்பல் ஒன்றின் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, மூன்று இடங்கள் மீது தாக்குதல் நடத்த ஈரான் ஆயுதப் படைகள் தயாராகி வந்ததாக மொஹ்சென் ரெசாய் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98854827-71e4-4ccf-9eb2-1eace9ee3920/26-6a7281e99919d.webp' /></p><p> </p><p>உக்ரைனில் மூன்று இடங்களைத் தாக்கத் திட்டமிட்டிருந்தோம், ஆனால் உக்ரைன் மன்னிப்பு கோரியதைத் தொடர்ந்து அந்தத் தாக்குதலை ரத்து செய்தோம் என்று ரெசாய் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இது உண்மையாக இருந்தால், அண்மைக்காலத்தில் இவ்விரு நாடுகளும் ஒன்றுடன் ஒன்று போரிடும் நிலைக்கு எவ்வளவு ஆபத்தான வகையில் நெருங்கி வந்துள்ளன என்பதை இது காட்டுகிறது.</p><p> மேலும், இந்த மோதல்கள் இன்னும் நேரடியாக ஒன்றிணைந்தால், அதன் விளைவு பேரழிவை ஏற்படுத்துவதாக அமையலாம்; இது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கக்கூடும் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.</p><p></p><p> </p><p>இதனிடையே, ஈரானால் நிர்ணயிக்கப்பட்ட வழித்தடத்திற்கு வெளியே, ஹார்முஸ் நீரிணை வழியாக எந்தவொரு கடல்வழிப் போக்குவரத்தையும் ஈரான் அனுமதிக்காது என்றும் ரெசாய் எச்சரித்தார்.</p><h2>ஈரானுக்கு இழப்பீடு</h2><p> </p><p>அத்துடன், சட்டவிரோதப் பாதையைப் பயன்படுத்த முயற்சிக்கும் எந்தவொரு எதிரிக் கப்பலும் குறிவைக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார். </p><p>ஜூலை 25 அன்று நடைபெற்ற, முன்னெப்போதும் இல்லாத அந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அவரது கருத்துகள் வெளியாகின; அத்தாக்குதலில் ஒரு ஊழியர் கொல்லப்பட்டதுடன், அந்த ஈரானியக் கப்பலும் அழிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/654c0b46-fb62-483c-a008-0c8fb11c310c/26-6a7281ea4e907.webp' /></p><p> </p><p>தாக்குதலால் ஏற்பட்ட சேதத்திற்கு உக்ரைன் ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி உக்ரைனிய வெளிவிவகார அமைச்சரான ஆண்ட்ரி சிபிஹாவிடம் கூறினார். </p><p>ஆனால், உக்ரைனின் நடவடிக்கைகள் ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து தங்களது நாட்டைப் பாதுகாப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டவை என்றும், அவை ஒருபோதும் பொதுமக்களின் கப்பல்களையோ அல்லது மக்களையோ குறிவைக்கும் நோக்கம் கொண்டவை அல்ல என்றும் சிபிஹா பதிலளித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T00:19:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ தாக்கம்: இலங்கையில் 2.5 இலட்சம் பேர் பாதிக்கப்படும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2-5-lakh-people-sri-lanka-at-risk-being-affected-1785888180"></link>
            <id>https://ibctamil.com/article/2-5-lakh-people-sri-lanka-at-risk-being-affected-1785888180</id>
            <summary type="text">எல் நினோ காலநிலை தாக்கத்துடன் வலுப்பெற்று வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக, இலங்கையில் சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் பேர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகு...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ காலநிலை தாக்கத்துடன் வலுப்பெற்று வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக, இலங்கையில் சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் பேர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக அரசாங்கத்தின் மதிப்பீடுகளை மேற்கோள் காட்டி இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அதேவேளை, இந்த பருவமழை நிலைமையால் குறைந்தபட்சம் 1 இலட்சத்து 50 ஆயிரம் பேர் நேரடியாக பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
எனினும், உருவாகி வரும் இந்த அனர்த்த நிலைமையை எதிர்கொள்வதற்காக இலங்கை அரசோ அல்லது வேறு எந்தத் தரப்போ இதுவரை சர்வதேச உதவியை கோரவில்லை என்றும் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p></p><h2>பிராந்திய காலநிலை கணிப்பு</h2><p>
தற்போதைய பருவகால வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் பிராந்திய காலநிலை கணிப்புகளின்படி, இந்த ஆண்டின் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் நாட்டிற்கு வழக்கமான அளவுக்கு நெருக்கமான அல்லது அதைவிட சற்றுக் குறைவான மழைவீழ்ச்சி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/897c9829-b152-464a-a508-f640df20ed9c/26-6a727db7e9433.webp' /></p><p>

இருப்பினும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழையின் அளவும் தீவிரமும் மாறுபடக்கூடும் என்பதால், வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட அனர்த்த அபாயங்கள் தொடர்பில் பொதுமக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T00:03:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரியலில் மட்டும் ஹோம்லி.. தர்ஷனா ஸ்ரீபால் தாராள கவர்ச்சி போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/dharshna-sripal-sizzling-glamour-photoshoot-1785885091"></link>
            <id>https://cineulagam.com/article/dharshna-sripal-sizzling-glamour-photoshoot-1785885091</id>
            <summary type="text">சின்னத்திரையில் பிரபல நடிகைகளில் ஒருவர் தர்ஷனா ஸ்ரீபால். அவர் சீரியல்களில் ஹோம்லியாக தான் நடித்து வருகிறார்.

தற்போது Resort வெப் சீரிஸில் அவர் முக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சின்னத்திரையில் பிரபல நடிகைகளில் ஒருவர் தர்ஷனா ஸ்ரீபால். அவர் சீரியல்களில் ஹோம்லியாக தான் நடித்து வருகிறார்.
</p><p>
தற்போது Resort வெப் சீரிஸில் அவர் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். அதற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
</p><p>
சீரியலில் ஹோம்லியாக நடிக்கும் தர்ஷனா நிஜத்தில் அப்படியே opposite தான். அவர் உச்சகட்ட கவர்ச்சியாக இலங்கையில் வலம் வந்த ட்ரிப் புகைப்படங்களை பாருங்க.</p>]]></content>
            <updated>2026-08-05T00:00:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குறைநிரப்பு மதிப்பீடுகள் தொடர்பில் சண்முகம் குகதாசன் எம்.பி நாடாளுமன்றில் முன்வைத்த முக்கிய பரிந்துரைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kugathasan-mp-supplementary-assessment-proposals-1785883314"></link>
            <id>https://tamilwin.com/article/kugathasan-mp-supplementary-assessment-proposals-1785883314</id>
            <summary type="text">எதிர்பாராத அரச கடப்பாடுகள், பேரிடர் சார்ந்த செலவுகள் மற்றும் ஒப்பந்தக் கடன்களைச் சரிசெய்தல் ஆகியன ஆண்டின் இடையில் குறைநிரப்பு ஒதுக்கீடுகளை கோரவைக்கின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்பாராத அரச கடப்பாடுகள், பேரிடர் சார்ந்த செலவுகள் மற்றும் ஒப்பந்தக் கடன்களைச் சரிசெய்தல் ஆகியன ஆண்டின் இடையில் குறைநிரப்பு ஒதுக்கீடுகளை கோரவைக்கின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்வேலு சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.
</p><p>
நேற்று(04.08.2026) நாடாளுமன்றில் ஆற்றிய உரையின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>அரசின் நிதி ஆளுமை</h2><p>
</p><p>

நாடாளுமன்றம் மேற்பார்வையை வலுப்படுத்தவும், அரசின் நிதி ஆளுமையில்
பொதுமக்களின் நம்பிக்கையைப் பேணவும் அவர் பல முக்கிய பரிந்துரைகளை 
முன்வைத்துள்ளார்.
</p><p>
அவர் முன்வைத்த பரிந்துரைகளாக, அனைத்து குறைநிரப்பு மதிப்பீடுகளும் அரசியலமைப்புத்
தீர்மானங்களும் விவாதத்துக்கு எடுக்கப்படுவதற்கு 14
நாட்களுக்கு முன்னர் விரிவான நிதியியல் அறிக்கைகளோடு பொது நிதி பற்றிய
குழுவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f877aabe-6aa7-4da1-bec8-e5f346f7bad4/26-6a726ebb84fe0.webp' /></p><p>தேசிய பாதீட்டுத் திணைக்களமானது ஒவ்வொரு குறைநிரப்பு
கோரிக்கையோடும் சரியாக ஈடுசெய்யும் சேமிப்புகளை அடையாளம் காட்டும் ‘நிதி
நடுநிலைமை அறிக்கையை’ இணைக்க வேண்டும்.
</p><p>
நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு முன்னதாக ஒவ்வொரு இடைக்கால நிதித்
தீர்மானம் குறித்தும், தேசிய கடன் போக்குகள் மற்றும் பணவீக்கத்தின் மீதான அதன்
தாக்கத்தை மாதிரியாகக் கொண்ட, ஒரு சுதந்திரமான, பக்கச் சார்பற்ற பொருண்மிய
மதிப்பீட்டை வெளியிடும் பொறுப்பை நாடளுமன்றப் பாதீட்டு அலுவலகத்திடம்
ஒப்படைக்க வேண்டும்.</p><p>

ஒப்புதல் அளிக்கப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகளின் வழங்கல்
மற்றும் செயல்திறனைக் கண்காணிக்க, பொதுமக்கள் அணுகக்கூடிய வெளிப்படைத்தன்மையை
உறுதிசெய்யும் மற்றும் தலைமைத் தணிக்கையாளரால் ஒரே நேரத்தில் தணிக்கை செய்ய
வழிவகை செய்யும் ஒரு நிகழ்நேர எண்மிய கண்காணிப்பு வலைதளத்தை (Portal) நிதி
அமைச்சு நிறுவ வேண்டும் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T23:26:11+00:00</updated>
        </entry>
    </feed>
