<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-12T19:17:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலந்தில் அவசர எச்சரிக்கை! ஐரோப்பா முழுவதும் விரைந்த நேட்டோ இராணுவ விமானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nato-military-aircraft-scrambled-across-europe-1789239900"></link>
            <id>https://ibctamil.com/article/nato-military-aircraft-scrambled-across-europe-1789239900</id>
            <summary type="text">உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள இலக்குகள் மீது ரஷ்ய ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்திய நிலையில், போலந்து குடியரசின் வான்பாதுகாப்பு அமைப்பின் தேர்ந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள இலக்குகள் மீது ரஷ்ய ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்திய நிலையில், போலந்து குடியரசின் வான்பாதுகாப்பு அமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட படையணிகள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதாக ஐரோப்பிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>போலந்தின் ஆயுதப்படைகளின் செயல்பாட்டுக் கட்டளை இதனைத் தெரிவித்துள்ளதுடன், நிலைமையை கண்காணித்து போலந்து வான்பரப்பின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று வானில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய தரப்புகள் தெரிவித்துள்ளன.</p><p>

இந்த நடவடிக்கைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக மேற்கொள்ளப்படுவதாகவும், குறிப்பாக ரஷ்ய தாக்குதல்களுக்கு உள்ளாகும் பகுதிகளுக்கு அருகிலுள்ள போலந்து வான்பரப்பின் பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் நோக்கம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>அவசர எச்சரிக்கை</h2><p>
</p><p>
இதனிடையே, கிழக்கு போலந்தின் லுப்லின் மற்றும் போட்கார்பாக்கி மாகாண மக்களுக்கு அரசாங்க பாதுகாப்பு மையம் அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67f07e43-c650-4b0e-ae82-7486c537ebde/26-6aa5a25e86497.webp' /></p><p>

“உக்ரைனில் ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல் இடம்பெற்று வருகிறது. நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. போலந்து வான்பரப்பில் வான்படை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. தொடர்ந்து வெளியாகும் அறிவிப்புகளைப் பின்பற்றுங்கள்” என அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

ரஷ்ய ட்ரோன் தாக்குதல்களின் தீவிரம் காரணமாக, கடந்த செப்டெம்பர் 10ஆம் திகதியும் போலந்து தனது போர் விமானங்களை வானில் களமிறக்கியிருந்தது.</p><p>மேலும், கடந்த மூன்று நாட்களுக்குள் இரண்டாவது முறையாக அந்நாடு இவ்வாறான வான்பாதுகாப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T19:05:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் திமிங்கில வாந்தியுடன் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-arrested-with-whale-vomit-in-tamil-area-1789239661"></link>
            <id>https://jvpnews.com/article/two-arrested-with-whale-vomit-in-tamil-area-1789239661</id>
            <summary type="text">மன்னார் சௌத் பார் கடற்கரைப் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, தடை செய்யப்பட்ட ஆம்பர் கிரீஸ் (Ambergris) தொகையுடன் இரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் சௌத் பார் கடற்கரைப் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, தடை செய்யப்பட்ட ஆம்பர் கிரீஸ் (Ambergris) தொகையுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><p>தாவர மற்றும் விலங்கின பாதுகாப்புச் சட்டத்தின் பிரகாரம் வர்த்தக ரீதியான பயன்பாட்டுக்காகக் கொண்டு வரப்பட்ட, பல இலட்சம் ரூபாய் பெறுமதியான 67 கிலோ எடையுடைய திமிங்கலத்தின் எச்சமான ஆம்பர் கிரீஸ் கைப்பற்றப்பட்ட நிலையிலேயே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d42cdcb-7e51-4900-8e2a-d44d366d3dde/26-6aa5a16f5fc53.webp' /></p><p>
</p><p>
 

வடமத்திய கடற்படை கட்டளையின் 'இலங்கை கடற்படை கப்பல் கஜபா' பிரிவினரால் மன்னார் சௌத் பார் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாகச் சேகரிக்கப்பட்டுக் கடத்தப்படவிருந்த 67 கிலோகிராமுக்கும் அதிகமான திமிங்கலத்தின் ஆம்பர் கிரீஸ் தொகையுடன் இரு சந்தேக நபர்கள் கடற்படையினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
</p><p>
 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25 மற்றும் 36 வயதுடைய மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். </p><p>

 

சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட ஆம்பர் கிரீஸ் தொகையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T19:01:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/north-korea-conducts-another-missile-test-1789239260"></link>
            <id>https://canadamirror.com/article/north-korea-conducts-another-missile-test-1789239260</id>
            <summary type="text">வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.&amp;nbsp;அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதன...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p>அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா.</p><p>

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12a60d84-102e-412e-bd00-31330abb4b39/26-6aa59fddc1f72.webp' /></p><p>தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. </p><p>மேலும், தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரித்து வருகிறது.</p><p> நடப்பு ஆண்டில் வடகொரியா பல முறை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில், வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. </p><p>வடகொரியாவின் வன்சன் பகுதியில் இருந்து ஜப்பான் கடல் பகுதி நோக்கி இந்த பல ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. இன்று அதிகாலை 5.20 மணிக்கு இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.
</p><p>
அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா இணைந்து கடந்த 5 நாட்களாக கூட்டு ராணுவ பயற்சி நடத்தியது.</p><p> இந்த கூட்டு ராணுவ பயிற்சி நேற்று நிறைவடைந்த நிலையில் வடகொரியா இன்று அதிகாலை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. </p><p>கூட்டு ராணுவ பயிற்சிக்கு பதிலடியாக இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-12T18:54:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[2 நாட்களாக கடலில் தத்தளித்த 15 வயது சிறுவன்: அமெரிக்க படையின் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/15-year-old-boy-adrift-at-sea-for-two-days-1789238967"></link>
            <id>https://ibctamil.com/article/15-year-old-boy-adrift-at-sea-for-two-days-1789238967</id>
            <summary type="text">அமெரிக்காவின் அலாஸ்கா அருகில் உள்ள பெரிங் கடலில் படகு ஒன்று கவிழ்ந்த நிலையில், 2 நாட்களாக கடலில் தத்தளித்த 15வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் அலாஸ்கா அருகில் உள்ள பெரிங் கடலில் படகு ஒன்று கவிழ்ந்த நிலையில், 2 நாட்களாக கடலில் தத்தளித்த 15வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
</p><p>
 செயிண்ட லாரன்ஸ் தீவில் உள்ள சவோங்கா கிராமத்தை சேர்ந்த டெரெக் பார்க்கர் அக்னாங்கா என்ற 15 வயது சிறுவன் படகில் உறவினர்களுடன் மீன்பிடிக்க சென்ற போது அவரது படகு எதிர்பாராத விதமாக கடலில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
கடலில் நீரின் வெப்பநிலையானது வெறும் 10 செல்சியஸ் மட்டுமே இருந்த நிலையில், கவிழ்ந்த படகை இறுக்கமாக பிடித்துக் கொண்டு இரவு பகலாக உயிருக்கு போராடியுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p></p><h2>3 பேர் மாயம்</h2><p>கடலுக்கு சென்ற 3 பேரை காணவில்லை என உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்ததும், அமெரிக்க கடலோரக் காவல்படை தீவிர தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff4c920e-86f2-46ed-9a69-95398ae42259/26-6aa59eb8f0b4f.webp' /></p><p>
இதில் சிறுவனுடன் சென்ற மற்ற இரண்டு பேர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில் கடலில் உயிருக்காக 2 நாட்களாக போராடிய சிறுவன் சுமார் 2 நாட்களுக்கு பிறகு செயிண்ட் லாரன்ஸ் தீவுக்கு அருகே மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T18:50:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய் கார் ரேஸை பார்த்து ரசித்து கொண்டிருந்த போது, திடீரென என்ட்ரி கொடுத்த திரிஷா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/trisha-enjoyed-ajith-s-car-race-alongside-vijay-1789238738"></link>
            <id>https://jvpnews.com/article/trisha-enjoyed-ajith-s-car-race-alongside-vijay-1789238738</id>
            <summary type="text">இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்ற ‘லீ மான்ஸ் கப்’ கார் பந்தயத்தை காண்பதற்காக நடிகை திரிஷா நேரில் சென்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்ற ‘லீ மான்ஸ் கப்’ கார் பந்தயத்தை காண்பதற்காக நடிகை திரிஷா நேரில் சென்றுள்ளார்.</p><p></p><p>

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் விஜய் பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், நடிகரும் சர்வதேச கார் பந்தய வீரருமான அஜித்குமார் பங்கேற்கும் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை அவர் இன்று பச்சைக்கொடியசைத்து தொடங்கி வைத்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5925547d-9bdb-42e0-9590-056855760a79/26-6aa59dd45056b.webp' /></p><p>அஜித்குமாரின் அழைப்பின் பேரில் முதலமைச்சர் விஜய் பந்தயத் தளத்துக்கு சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>அங்கு அஜித்குமாரை சந்தித்த விஜய், அவரை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார். இருவரும் இணைந்து புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.</p><p>

அப்போது அஜித்குமாரின் பந்தயக் காரின் மீது அமர்ந்தும் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், பின்னர் அஜித்குமாருக்கு கைகொடுத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.</p><p> இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில், கார் பந்தயம் நடைபெறும் தளத்திற்கு நடிகை திரிஷாவும் நேரில் வருகை தந்துள்ளார். </p><p>நடிகை ராதிகாவுடன் பிரிட்டனில் திரிஷா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் நேற்று வெளியாகியிருந்த நிலையில், இன்று அவர் சில்வர்ஸ்டோன் பந்தயத் தளத்தில் தோன்றியுள்ளார்.

அஜித்குமாரின் அழைப்பின் பேரிலேயே திரிஷா பந்தயத்தை காண வந்ததாக கூறப்படுகிறது.
</p><p>
முதலமைச்சர் விஜய் கார் பந்தயத்தை நேரில் பார்த்து ரசித்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த திரிஷாவும் அவருடன் இணைந்து பந்தயத்தை கண்டு ரசித்தார்.
</p><p>
விஜய்யும் திரிஷாவும் இணைந்து சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை பார்வையிடும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனம் பெற்றுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T18:45:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏமனில் தீவிரமடைந்துள்ள மோதல்! 76,000-ஐத் தாண்டிய இடம்பெயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/displacement-in-yemen-exceeds-76-000-1789237707"></link>
            <id>https://ibctamil.com/article/displacement-in-yemen-exceeds-76-000-1789237707</id>
            <summary type="text">ஏமனில் மோதலானது தீவிரமடைந்துள்ள நிலையில், இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 76,000-ஐத் தாண்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.யேமனின் நிலை ஒவ்வொர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏமனில் மோதலானது தீவிரமடைந்துள்ள நிலையில், இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 76,000-ஐத் தாண்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.</p><p>யேமனின் நிலை ஒவ்வொரு மணி நேரமும் மிக வேகமாக மோசமடைந்து வருவதாகவும், இடம்பெயர்வு நெருக்கடி அதிகமாகுவதாகவும் ஐ.நா.வின் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) எச்சரித்துள்ளது.
</p><p>
ஜூலை மாதம் முதல் குறைந்தது 76,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும், இந்த எண்ணிக்கை ஒரே இரவில் கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது என்றும் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது.</p><p></p><h2>கடுமையான பாதிப்பு</h2><p> </p><p>“சில நாட்களுக்கு முன்பு இந்த மொத்த எண்ணிக்கை 46,000 ஆக இருந்தது.

முழு குடும்பங்களும், பெரும்பாலும் இரவில், இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/514d69f9-108e-4842-b3fa-9004ac780faa/26-6aa59b2d80b4d.webp' /></p><p>அவர்களுக்குச் செல்வதற்குப் பாதுகாப்பான இடம் எதுவும் இல்லை என்றும், ஏமனின் தென்மேற்கில் உள்ள தைஸ் பகுதி மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.</p><p>அங்கு கிட்டத்தட்ட 50,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும், தெற்கில் உள்ள லஹ்ஜ் நகரில் கிட்டத்தட்ட 17,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>தகவல் தொடர்புகள் பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் சண்டைகள் காரணமாக சாலைகள் பயணிக்க முடியாதவையாக மாறி வருகின்றன.
</p><p>12 ஆண்டுகால மோதலின்போது, ​​இந்தக் குடும்பங்களில் பல இதற்கு முன்பும், சில குடும்பங்கள் பலமுறை இடம்பெயர்ந்துள்ளன,.</p><p>நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. மற்றும் நிலையற்றதாகவும் கணிக்க முடியாததாகவும். நீடிக்கிறது” என&nbsp;IOM அறிக்கையில் கூறியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T18:36:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை உயருமா? பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/information-released-by-the-petroleum-corporation-1789237561"></link>
            <id>https://jvpnews.com/article/information-released-by-the-petroleum-corporation-1789237561</id>
            <summary type="text">சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ள போதிலும், இலங்கையில் உள்நாட்டு எரிபொருள் விலையை உடனடியாக அதிகரிக்கப் போவதில்லை என இலங்கை பெற்றோலிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ள போதிலும், இலங்கையில் உள்நாட்டு எரிபொருள் விலையை உடனடியாக அதிகரிக்கப் போவதில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><h3>பெற்றோலியக் கூட்டுத்தாபனம்&nbsp;</h3><p>எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பின்னர், விலை அதிகரிக்கப்படுமா என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f65608f5-6ec1-4bb9-ba7d-38410e35b5b2/26-6aa5993b027a2.webp' /></p><p>மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்ற நிலை மற்றும் செங்கடல், பாப் அல்-மந்தப் நீரிணை தொடர்பான சமீபத்திய நிலவரங்கள் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 அமெரிக்க டொலருக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.</p><p>

இதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 104.06 அமெரிக்க டொலராகவும், WTI ரக மசகு எண்ணெய் சுமார் 100 அமெரிக்க டொலராகவும் விற்பனையாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இலங்கையில் எரிபொருள் விலைகள் இந்த மாத இறுதியில் மீண்டும் திருத்தப்பட உள்ளன.
</p><p>
இதேவேளை, சில தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்கள் டீசல் விற்பனையை மட்டுப்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், பெற்றோலிய கூட்டுதாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ராஜகருணா தெரிவித்துள்ளார்.</p><p>[M1TSWYM
]</p>]]></content>
            <updated>2026-09-12T18:26:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெடுக்குநாறிமலையில் மீண்டும் புத்தர் சிலை! சந்தபோதி தேரரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vedukkunari-hill-temple-1789236169"></link>
            <id>https://tamilwin.com/article/vedukkunari-hill-temple-1789236169</id>
            <summary type="text">வெடுக்குநாறிமலை பௌத்த வழிபாட்டுத் தலம் எனவும், அங்கு முன்னர் 11 அடி உயரமான புத்தர் சிலை ஒன்று இருந்ததாகவும் சந்தபோதி தேரர் தெரிவித்துள்ளார்.

வவுனிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெடுக்குநாறிமலை பௌத்த வழிபாட்டுத் தலம் எனவும், அங்கு முன்னர் 11 அடி உயரமான புத்தர் சிலை ஒன்று இருந்ததாகவும் சந்தபோதி தேரர் தெரிவித்துள்ளார்.
</p><p>
வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்புக்கு மத்தியில், சுமார் 25 சிங்கள மக்களுடன் சந்தபோதி தேரர் தலைமையிலான குழுவினர் இன்று (12) காலை சென்றிருந்தனர்.</p><h2>&nbsp;பௌத்த வழிபாட்டுத் தலம்</h2><p>

அங்கு சென்ற குழுவினர், சூலம் அமைந்திருந்த பகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரம் பிரித் ஓதி பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.</p><p>

இதன்போது, சைவ மக்கள் மலை உச்சிக்கு செல்ல வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c71c921f-339d-43a4-82d2-1d53af89a763/26-6aa595c40fb51.webp' /></p><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சந்தபோதி தேரர், 2012ஆம் ஆண்டுக்கு முன்னர் வெடுக்குநாறிமலையில் 11 அடி உயரமான புத்தர் சிலை ஒன்று இருந்ததாகவும், அந்த சிலை தற்போது தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
</p><p>
மேலும், அந்த புத்தர் சிலையை மீண்டும் வெடுக்குநாறிமலையில் நிறுவவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
அத்துடன், வெடுக்குநாறிமலையில் சைவ வழிபாடு 2013ஆம் ஆண்டுக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட்டதாகவும், தமிழர்கள் போலியான நம்பிக்கையின் அடிப்படையில் வழிபாடுகளில் ஈடுபடுவதாகவும் சந்தபோதி தேரர் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T18:24:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதலியின் நடத்தையில் சந்தேகம் ; கழுத்தை நெரித்து கொலை செய்த கள்ளக்காதலன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/doubt-illicit-lover-strangles-partner-to-death-1789236955"></link>
            <id>https://jvpnews.com/article/doubt-illicit-lover-strangles-partner-to-death-1789236955</id>
            <summary type="text">இந்தியாவில் திருப்பூரில், செல்போனில் வேறு ஒருவருடன் பேசியதாக சந்தேகமடைந்து பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகக் கூறப்படும் அவரது காதலனை பொலிஸார் கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் திருப்பூரில், செல்போனில் வேறு ஒருவருடன் பேசியதாக சந்தேகமடைந்து பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகக் கூறப்படும் அவரது காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடியைச் சேர்ந்த ராதிகா (36) என்பவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூருக்கு வந்துள்ளார். அவரது மகன் மற்றும் மகள் தாயாரின் பராமரிப்பில் இருந்து வருகின்றனர்.</p><p>
திருப்பூர் பெரிச்சிப்பாளையம் மாரியம்மன் கோவில் பின்புறம் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த ராதிகா, அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனமொன்றில் தையல் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ec36bfb-75a3-4fc5-abd5-f4cee8948e07/26-6aa596dd263a7.webp' /></p><p>அதே நிறுவனத்தில் பணியாற்றிய திருப்பூர் வெள்ளியங்காட்டைச் சேர்ந்த அருண்குமார் (36) என்பவருக்கும் ராதிகாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்தப் பழக்கம் காதலாக மாறியதுடன், இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ராதிகா செல்போனில் வேறு ஒருவருடன் அடிக்கடி பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அருண்குமாருக்கும் ராதிகாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
</p><p>
சம்பவத்தன்று இரவு இருவரும் செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நள்ளிரவில் ராதிகாவின் வீட்டுக்குச் சென்ற அருண்குமார், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அருண்குமார் ராதிகாவின் கழுத்தை நெரித்து கீழே தள்ளியதாகவும், அப்போது கட்டிலில் தலை மோதியதில் அவர் மயங்கி விழுந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அருண்குமார் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். </p><p>வீட்டிலிருந்து சத்தம் கேட்டதைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு திறந்த நிலையில் ராதிகா உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.</p><p>

இதுகுறித்து திருப்பூர் தெற்கு பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.</p><p>

ராதிகாவின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
</p><p>
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில், ராதிகாவின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அருண்குமார் அவரைத் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது.
</p><p>
இதையடுத்து தலைமறைவாக இருந்த அருண்குமாரை பொலிஸார் கைது செய்துள்ளனர். </p><p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T18:16:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டுவின் அனுராதபுர கூட்டத்தில் தேடப்படும் பல நபர்கள் : ஜனாதிபதி அனுர பரபரப்பு தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-sympathy-for-anyone-must-face-the-law-anura-1789229684"></link>
            <id>https://ibctamil.com/article/no-sympathy-for-anyone-must-face-the-law-anura-1789229684</id>
            <summary type="text">&amp;nbsp;அனுராதபுரத்தில் நடைபெற்ற SLPP தலைமையிலான பேரணியில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகத் தேடப்படும் பல நபர்கள் காணப்படலாம் என்றும் &quot;குற்றப் புலனாய்வுத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அனுராதபுரத்தில் நடைபெற்ற SLPP தலைமையிலான பேரணியில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகத் தேடப்படும் பல நபர்கள் காணப்படலாம் என்றும் "குற்றப் புலனாய்வுத் துறை (CID) அங்கு சென்றால், அவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் பிடித்துவிடலாம்," என்று ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>சனிக்கிழமையன்று (12) பொலனறுவையில் நடைபெற்ற NPP விவசாயிகளின் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி, ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்துப் பேசுகையில் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.</p><p>&nbsp;குடும்ப உறவுகளைப் பொருட்படுத்தாமல் சட்டம் அனைவருக்கும் சமமாகப் பொருந்தும் என்று கூறினார்.</p><h2>திருடக்கூடாது என பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கவேண்டும்</h2><p>"இப்போது அழுது புலம்புவதற்குப் பதிலாக, திருடக்கூடாது என்று தந்தை அவர்களுக்கு முன்பே சொல்லியிருக்க வேண்டும். தாயாக இருந்தாலும் சரி, பாட்டியாக இருந்தாலும் சரி, சட்டம் அனைவருக்கும் பொருந்தும். பொதுப் பணத்தைத் திருடிய எவர் மீதும் எங்களுக்கு எந்த அனுதாபமும் இல்லை," என்று ஜனாதிபதி திஸாநாயக்க தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1946d6e5-7938-45e8-8f84-106c251e7575/26-6aa581ab5d4c2.webp' /></p><p>அனுராதபுரப் பேரணியானது பொது நலனுக்காக நடத்தப்படவில்லை என்றும், மாறாக ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்பவர்கள் சட்டத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மேற்கொள்ளும் முயற்சி என்றும் ஜனாதிபதி திஸாநாயக்க குற்றம் சாட்டினார்.</p><p></p><h2>நாமல் ராஜபக்ச விளக்கமறியலில்</h2><p>&nbsp;முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் கட்சியின் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்ட SLPP-யின் பிரமாண்டமான அரசியல் பேரணி அனுராதபுரத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் அவரது இந்தக் கருத்துக்கள் வெளியாகின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f70aef5a-baf6-4a96-aaf7-39bf48e4efb3/26-6aa581ac13b46.webp' /></p><p>&nbsp; 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' (SriLankan Airlines) நிறுவனத்திற்கான பெரிய ரக விமானங்களை கொள்முதல் செய்தது தொடர்பான விசாரணையில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் (CIABOC) கைது செய்யப்பட்ட SLPP-யின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் பேரணி நடைபெறுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T18:06:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[75 ஆண்டுகளில் இல்லாத மாற்றம் ; எல் நினோ பாதிப்பு குறித்து புதிய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-warning-regarding-el-ni-o-impact-1789235497"></link>
            <id>https://jvpnews.com/article/new-warning-regarding-el-ni-o-impact-1789235497</id>
            <summary type="text">கடந்த 75 ஆண்டுகளில் இல்லாதவாறு, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் &#039;எல் நினோ&#039; (El Niño) காலநிலையில் மாற்றம் ஏற்படும் சாத்தியக்கூறு 98 வீதம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 75 ஆண்டுகளில் இல்லாதவாறு, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 'எல் நினோ' (El Niño) காலநிலையில் மாற்றம் ஏற்படும் சாத்தியக்கூறு 98 வீதமாக அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜயமான தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>முன்னதாக 95 வீதமாக இருந்த இந்த முன்னறிவிப்பு தற்போது 98 வீதமாக அதிகரித்துள்ளதாக பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39776b45-7bf4-4620-940d-79e859a9787e/26-6aa5912a8f78b.webp' /></p><p>

வளிமண்டலவியல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
</p><p>
இருப்பினும், எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
</p><p>
அத்துடன், பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சில பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவக்கூடும் என்றும் பணிப்பாளர் நாயகம் மேலும் கூறினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T17:51:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையிலிருந்து நாமல் ஆதரவாளர்களுக்கு விடுத்துள்ள செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-turns-to-mandela-s-words-in-message-1789233170"></link>
            <id>https://tamilwin.com/article/namal-turns-to-mandela-s-words-in-message-1789233170</id>
            <summary type="text">சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆதரவாளர்களுக்கு விசேட செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆதரவாளர்களுக்கு விசேட செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
</p><p>அநுராதபுரத்தில் நடைபெற்ற கட்சியின் "ஜன சதன" பேரணியில் கலந்துகொண்டுள்ள ஆதரவாளர்களுக்கு அவர் இவ்வாறு செய்தி அனுப்பி வைத்துள்ளார்.</p><h2>அரசியல் அழுத்தங்கள்</h2><p>
</p><p>அரசாங்கத்தின் அரசியல் அழுத்தங்களுக்குத் தாம் ஒருபோதும் பணியப்போவதில்லை என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbb62c33-f760-40b2-8dcc-59333f3268df/26-6aa58813dae07.webp' /></p><p>
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து அனுப்பப்பட்டுள்ள இந்தச் செய்தியில், தமது ஆதரவாளர்களின் ஒற்றுமை மற்றும் ஆதரவுக்கு நாமல் ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார். </p><p>
அத்துடன் அநுராதபுர பேரணியானது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அரசியல் பயணத்தில் ஒரு "தீர்மானமிக்க புதிய தொடக்கம்" என்றும் அவர் வர்ணித்துள்ளார்.</p><p> 
"கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் இரும்புக் கம்பிகளுக்குப் பின்னால் இருந்து நான் உங்களைப் பார்க்கிறேன். இங்கிருந்து, நீங்கள் எனக்குக் காட்டும் சகோதரத்துவத்தின் கதகதப்பை என்னால் உணர முடிகிறது" என்று நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><h2>கடுமையான விமர்சனம்</h2><p>
</p><p>தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின், "கடினமான சூழ்நிலைகள் சில மனிதர்களை உடைத்தெறிகின்றன; ஆனால் சிலரை உருவாக்குகின்றன" என்ற வார்த்தைகளை நாமல் மேற்கோள் காட்டியுள்ளார்.
</p><p>சவால்கள் தமது அரசியல் இயக்கத்தைப் பலப்படுத்தியுள்ளதாகவும், துன்பங்களை எதிர்கொள்ளும்போது மேலும் பலமடைவதற்குக் கற்றுக்கொடுத்தவர் தனது தந்தை என குறிப்பிட்டுள்ளார். </p><p>
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5f7f6f3-4040-4a75-a9e2-3b5722cc9e4e/26-6aa59511e7403.webp' /></p><p>
</p><p>மேலும், வாழ்க்கைச் செலவு மற்றும் வரிச் சுமையினால் சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள், விவசாயிகள்,&nbsp; கடற்றொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் அழுத்தங்களுக்கு உள்ளாகியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>அரசாங்கம் அரச விசாரணை நிறுவனங்களை அரசியல்மயமாக்குவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
 அரசாங்கத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நியாயமாக விசாரிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.</p><h2>ஆதரவாளர்களுக்கு கோரிக்கை</h2><p> </p><p>அரசியலமைப்பு சீர்திருத்தங்கள், மாகாண சபை தேர்தல்கள் தாமதமடைவது மற்றும் வேலைவாய்ப்புச் சந்தையில் நுழையும் இளைஞர்களுக்கான வாய்ப்புகள் இல்லாமை குறித்தும் அவர் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da2e53cb-87ba-4388-abfd-f0ab9182ac2f/26-6aa5951104d5c.webp' /></p><p>
</p><p>தமது செய்தியின் நிறைவில், அரசாங்கத்தின் "அரசியல் அதிகாரத்திற்கு" தாம் சரணடையப் போவதில்லை என்றும், தாம் அஞ்சப்போவதில்லை என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>"எமது மன உறுதியை சிறைவைக்க முடியாது" எனக் குறிப்பிட்ட அவர், சட்டத்திற்கு மதிப்பளித்து, அமைதியாகவும் ஒழுக்கத்துடனும் செயற்படுமாறு ஆதரவாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>தற்போது இடம்பெற்று வரும் விசாரணை ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T17:45:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கம்பஹாவில் வான் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு: சாரதி படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-open-fire-on-van-in-gampaha-1789233560"></link>
            <id>https://tamilwin.com/article/police-open-fire-on-van-in-gampaha-1789233560</id>
            <summary type="text">கம்பஹா, அஸ்கிரிய பகுதியில் வான் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

 

இந்த சம்பவத்தில் காயமடைந்த சாரதி கைது செய்யப்பட்டு வைத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா, அஸ்கிரிய பகுதியில் வான் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
 

இந்த சம்பவத்தில் காயமடைந்த சாரதி கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><h2>துப்பாக்கிச் சூடு</h2><p>பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வாகனத்தின் மீதே&nbsp; துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8b7e7c3-261d-498d-8600-c56223755ece/26-6aa58bf89fef8.webp' /></p><p>மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T17:29:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் 2 நாட்களாக தத்தளித்த 15 வயது சிறுவன்: கவிழ்ந்த படகை பிடித்துக் கொண்டு உயிர் பிழைத்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/15-year-old-boy-survives-two-days-in-bering-sea-1789234034"></link>
            <id>https://news.lankasri.com/article/15-year-old-boy-survives-two-days-in-bering-sea-1789234034</id>
            <summary type="text">15-year-old-boy-survives-two-days-in-bering-sea: 2 நாட்களாக கடலில் தத்தளித்த 15 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.கடலில் உயிருக்கு போராடிய 15 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>15-year-old-boy-survives-two-days-in-bering-sea: 2 நாட்களாக கடலில் தத்தளித்த 15 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.</p><h2>கடலில் உயிருக்கு போராடிய 15 வயது சிறுவன்</h2><p>

அமெரிக்காவின் அலாஸ்கா அருகில் உள்ள பெரிங் கடலில் படகு ஒன்று கவிழ்ந்த நிலையில், 2 நாட்களாக கடலில் தத்தளித்த 15வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p> &nbsp;செயிண்ட லாரன்ஸ் தீவில் உள்ள சவோங்கா கிராமத்தை சேர்ந்த டெரெக் பார்க்கர் அக்னாங்கா என்ற 15 வயது சிறுவன் படகில் உறவினர்களுடன் மீன்பிடிக்க சென்ற போது அவரது படகு எதிர்பாராத விதமாக கடலில் கவிழ்ந்தது.</p><p>கடலில் நீரின் வெப்பநிலையானது வெறும் 10 டிகிரி செல்சியஸ் மட்டுமே இருந்த நிலையில், கவிழ்ந்த படகை இறுக்கமாக பிடித்துக் கொண்டு இரவு பகலாக உயிருக்கு போராடியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/594c2f50-a0e6-43f1-b91f-0cecd20798d9/26-6aa58b7424b8c.webp' /></p><p></p><h2> மீட்பு மற்றும் தேடுதல் பணி</h2><p>

கடலுக்கு சென்ற 3 பேரை காணவில்லை என உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்ததும். அமெரிக்க கடலோரக் காவல்படை தீவிர தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.</p><p> இதில் சிறுவனுடன் சென்ற மற்ற இரண்டு பேர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> கடலில் உயிருக்காக 2 நாட்களாக போராடிய சிறுவன் சுமார் 2 நாட்களுக்கு பிறகு செயிண்ட் லாரன்ஸ் தீவுக்கு அருகே மீட்கப்பட்டார்.</p><p> மீட்கப்பட்ட சிறுவன் உடனடியாக கரைக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர்.</p><p> 15 வயது சிறுவன் 2 நாட்களாக கடலில் மிதந்த படி உயிருடன் இருந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T17:27:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் காருக்கு அர்ச்சுனாதான் சாரதி...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archchuna-changes-course-on-mahinda-s-stage-1789232715"></link>
            <id>https://ibctamil.com/article/archchuna-changes-course-on-mahinda-s-stage-1789232715</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆளுமைமிக்க தலைமையின் கீழ் மட்டுமே தமிழ் - சிங்கள சமூகங்களையும் உண்மையாக ஒன்றிணைக்க முடியும் என&amp;nbsp;யாழ். மாவட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆளுமைமிக்க தலைமையின் கீழ் மட்டுமே தமிழ் - சிங்கள சமூகங்களையும் உண்மையாக ஒன்றிணைக்க முடியும் என&nbsp;யாழ். மாவட்ட சுயேச்சை குழு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.</p><p> அநுராதபுரம் மாநகர சபை மைதானத்தில் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் மகா ஜன பேரணியில்&nbsp; (Janasatana Rally) அவர் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார்.</p><p>
அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான சிங்கள மக்கள் மத்தியில், முற்றிலும் சிங்கள மொழியிலேயே தனது உரையை நிகழ்த்திய அர்ச்சுனா, டயஸ்போரா நிதி விவகாரம், இன நல்லிணக்கம் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பல கதைகளை பகிர்ந்து கொண்டார்.</p><p></p><h2>வடக்கின் அரசியல்</h2><p>மேடையில் உரையைத் தொடங்கிய அர்ச்சுனா, வடக்கு மாகாணத்தில் தேர்தல்களின் போது பின்னணியில் நிதிப் பரிமாற்றங்கள் இடம்பெறுகிறது என சுட்டிக்காட்டிய அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்</p><p> "யாழ்ப்பாணத்திலும் வடக்கிலும் அரசியல் செய்யும் பலருக்கு எங்கிருந்து பணம் வருகிறது? வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் (Tamil Diaspora), தமிழ் சமூகத்தினரும்தான் தேர்தல்களை இலக்கு வைத்து கோடிக்கணக்கான நிதியை அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு அனுப்புகிறார்கள்.</p><p>தமிழ் புலம்பெயர் சமூகத்தினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை தலைவராக உருவாக்குவதற்காக பல பில்லியன் ரூபா பணத்தை வழங்கியுள்ளனர்.</p><p>

ஆனால் தற்போது தமிழ் மக்களே தங்களது முடிவு குறித்து வருந்துகின்றனர். நான் எனது தமிழ் மக்களினதும் தமிழ் புலம்பெயர் சமூகத்தினதும் செய்தியை எடுத்துக்கொண்டு இங்கு வந்துள்ளேன்.</p><p>சிங்கள மக்களுடன் தாங்கள் எப்போதும் ஒற்றுமையாக வாழ்வோம் என்றும், அநுர குமார திசாநாயக்கவினால் தாங்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாகவும், இதனை அனைத்து சிங்கள மக்களிடமும் தெரிவிக்குமாறு அவர்கள் என்னிடம் கூறியுள்ளனர்.</p><p>தெற்கில் உள்ள சிங்கள மக்களுக்கும் வடக்கில் உள்ள தமிழ் மக்களுக்கும் இடையில் உண்மையான நல்லிணக்கம் ஏற்பட வேண்டும்.</p><p>“காட்டில் சிங்கத்திற்கும் எல்லை உண்டு, புலிக்கும் எல்லை உண்டு. தேசியக் கொடியில் சிங்கம் இருக்கிறது, வடக்கில் புலியை அடையாளமாகக் காட்டினார்கள். ஆனால், காடு என்று வரும்போது இரண்டும் ஒரே காட்டிற்குள்தான் வாழ வேண்டும்.</p><p></p><h2>நாமல் ராஜபக்சவிற்கு நன்றி</h2><p> </p><p>அதேபோல, இந்த இலங்கை என்கிற தேசத்திற்குள் சிங்கங்களாகிய சிங்கள மக்களும் புலிகளாகிய தமிழ் மக்களும் பிரிந்து மோதாமல், ஒன்றிணைந்து வாழ பழகிக்கொள்ள வேண்டும்.</p><p>கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து இரு சமூகங்களும் கைகோர்க்க வேண்டும்.</p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் ஆளுமைமிக்க தலைமையின் கீழ் மட்டுமே இந்த இரு சமூகங்களையும் உண்மையாக ஒன்றிணைக்க முடியும்.</p><p>ஒருபோதும் எனக்கு தமிழீழம் தேவையில்லை. எனக்கு வேண்டியது சிங்கள மக்களே. நான் மரணிக்கும் வரைக்கும் தமிழீழத்தை கோரப்போவதில்லை.</p><p>மேடையில் தன்னை வடக்கின் எதிர்காலத் தலைவர் என அறிமுகப்படுத்தியமைக்காக நாமல் ராஜபக்சவிற்கு நன்றி. நாமலிடம் நான் ஒரு வாக்குறுதியை வழங்கியுள்ளேன்.நாமல் ஜனாதிபயானால் அவரின் வாகனத்துக்கு சாரதிகாக வருவதாக கூறியுள்ளேன்.</p><p>அண்மைக் காலமாக நாடாளுமன்றத்தில் தமக்கு எதிராக அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகிறது. வைத்தியராக இருந்த காலத்தில் எனக்கு எதிராக எந்த வழக்குகளும் இல்லை.</p><p>ஆனால் இந்த கொத்தமல்லி ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தவுடன் தனக்கு எதிராக அதிக வழக்குகள் தாக்கல் செய்துள்ளார். 29 வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.</p><p>சட்டம் என்பது ஏழைக்கும் அரசியல்வாதிக்கும் பொதுவாக இருக்க வேண்டும்.</p><p></p><h2>அநுரவுக்கு பில்லியன் டொலர் உதவி</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் அறைக்குள் செல்வதற்கு அஞ்சுகின்றனர். அங்கு தாங்கள் என்ன பார்க்க நேரிடும் என்ற அச்சம் அவர்களிடத்தில் இருக்கிறது.</p><p>சில நேரங்களில் ஒரு பொது சுகாதார பரிசோதகர் (PHI) சபாநாயகருக்கு உணவு ஊட்டுகிறார். அல்லது அதற்கு நேர்மாறாக நடக்கிறது. </p><p>அவரது அறைக்குள் சென்றால் நாம் என்ன பார்க்க நேரிடும் என்ற அச்சம் எங்களுக்கு உள்ளது.</p><p>அநுர குமார திசாநாயக்கவை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்துள்ளீர்கள். ஆனால் அவர் ஒரு தந்திரமான நரி. ” என்றார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T17:19:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் அஜித் பங்கேற்கும் சிற்றூந்து பந்தயத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதலமைச்சர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/chief-minister-vijay-flagged-off-mini-vehicle-race-1789233383"></link>
            <id>https://canadamirror.com/article/chief-minister-vijay-flagged-off-mini-vehicle-race-1789233383</id>
            <summary type="text">இங்கிலாந்தின் லண்டன் சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்ற ‘லீ மான்ஸ் கப்’ கார் பந்தயத்தை தமிழக முதலமைச்சர் விஜய் பச்சைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்தின் லண்டன் சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்ற ‘லீ மான்ஸ் கப்’ கார் பந்தயத்தை தமிழக முதலமைச்சர் விஜய் பச்சைக்கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.</p><p>
</p><p></p><p>தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் விஜய் பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தயத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
</p><p>
நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் ‘லீ மான்ஸ் கப்’ தொடரின் சில்வர்ஸ்டோன் சுற்றுப் போட்டியையே முதலமைச்சர் விஜய் இன்று பச்சைக்கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார். இலங்கை நேரப்படி இரவு 9.45 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டி இரவு 11.45 மணிக்கு நிறைவடைய உள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/028e2d7b-185a-47e1-8112-68d69405e5d3/26-6aa588e96a348.webp' /></p><p>பந்தயத்திற்கு முன்னதாக முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகர் அஜித்குமார் இருவரும் சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். அப்போது அஜித்குமாரின் பந்தயக் காரின் மீது அமர்ந்தும் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார். </p><p>பின்னர் அஜித்குமாருக்கு கைகொடுத்து தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இருவரின் சந்திப்பு மற்றும் பந்தயத்தை விஜய் தொடங்கி வைத்த காட்சிகள் தொடர்பான காணொலிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. </p><p>இதனால் இருவரது ரசிகர்களும் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.
</p><p>
இதனிடையே, முதலமைச்சர் விஜய்யின் வருகை குறித்து நடிகர் அஜித்குமார் கூறுகையில், தனது பிஸியான பணிகளுக்கு மத்தியிலும் நேரம் ஒதுக்கி லண்டனுக்கு வந்தமை மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.
</p><p>
மேலும், தானும் விஜய்யும் ஒரே துறையில் 34 ஆண்டுகளாக பணியாற்றி வருவதாகவும், விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்றதில் தமக்கு மிகுந்த மகிழ்ச்சி இருப்பதாகவும் அஜித்குமார் குறிப்பிட்டார்.
</p><p>
விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்காக விஜய் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், தனது அழைப்பை ஏற்று லண்டனுக்கு வந்து பந்தயத்தை தொடங்கி வைத்தமை மகிழ்ச்சியளிப்பதாகவும் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
</p><p>
சர்வதேச மோட்டார் பந்தயக் களத்தில் நடைபெற்ற இந்த விஜய்–அஜித் சந்திப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T17:16:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவை அதிர வைத்த 9/11 - 25 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த இரகசியங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-intelligence-know-before-the-9-11-attacks-1789231346"></link>
            <id>https://tamilwin.com/article/us-intelligence-know-before-the-9-11-attacks-1789231346</id>
            <summary type="text">அமெரிக்காவில் இடம்பெற்ற செப்டெம்பர் 11 தாக்குதல்களின் 25 வது ஆண்டு நினைவை
முன்னிட்டு, ஒசாமா பின்லேடன் மற்றும் அல்-கொய்தா அமைப்பு குறித்து
சேகரிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் இடம்பெற்ற செப்டெம்பர் 11 தாக்குதல்களின் 25 வது ஆண்டு நினைவை
முன்னிட்டு, ஒசாமா பின்லேடன் மற்றும் அல்-கொய்தா அமைப்பு குறித்து
சேகரிக்கப்பட்ட பல டஜன் இரகசிய உளவுத்துறை ஆவணங்களை அமெரிக்க மத்திய புலனாய்வு
முகவரகமான சிஐஏ (CIA) பகிரங்கப்படுத்தியுள்ளது.
</p><p>
3,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளுக்குக் காரணமான 9/11 தாக்குதலுக்கு
முன்னர், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் உள்ளிட்ட நாட்டின்
உயர் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட தினசரி இரகசிய உளவு அறிக்கைகளே இவ்வாறு
வெளியிடப்பட்டுள்ளன.</p><h2>இரகசிய ஆவணங்கள்</h2><p>
</p><p>
சிஐஏ இயக்குநர் ஜான் ரட்க்ளிஃப் இதனைத் தனது அமைப்பின் வெளிப்படைத்தன்மைக்கான
முக்கிய நகர்வாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9a9df96-2d08-4884-a335-46a1170d0dcb/26-6aa588348cec8.webp' /></p><p>
</p><p>
வெளியிடப்பட்டுள்ள ஆவணங்களில் 1998 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்றில்,
பின்லேடனின் முக்கிய இலக்கு அமெரிக்க மண்ணில் உள்ள வொஷிங்டன் நகரைத் தாக்குவதே
என்றும், வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட விமானமொன்றை அமெரிக்க நகரம் மீது மோதித்
தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.</p><p>

அத்துடன், ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்த பின்லேடனை ஒப்படைக்க தலிபான்கள்
மறுத்தமை, நியூயோர்க் விமான நிலையத்தில் சந்தேகநபர்கள் மேற்கொண்ட பாதுகாப்புப்
சோதனை ஒத்திகைகள் மற்றும் கதிரியக்கப் பொருட்களைப் பயன்படுத்தி குண்டுகளைத்
தயாரிக்கும் முயற்சிகள் குறித்த முக்கிய தகவல்களும் இந்த ஆவணங்கள் மூலம்
வெளிச்சத்திற்கு வந்துள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T17:13:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஜித்தை ஆரத்தழுவி முத்தமிட்ட தமிழக முதலமைச்சர் விஜய் ; இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சிக் காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vijay-warmly-embraced-and-kissed-ajith-goes-viral-1789232768"></link>
            <id>https://jvpnews.com/article/vijay-warmly-embraced-and-kissed-ajith-goes-viral-1789232768</id>
            <summary type="text">இங்கிலாந்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில், தமிழக முதலமைச்சர் விஜய்யும் பிரபல நடிகர் அஜித்குமாரும் நேரில் சந்தித்து அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில், தமிழக முதலமைச்சர் விஜய்யும் பிரபல நடிகர் அஜித்குமாரும் நேரில் சந்தித்து அன்பைப் பரிமாறிக்கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>2026ஆம் ஆண்டுக்கான 'மிச்செலின் லீ மான்ஸ் கிண்ண' பந்தயத் தொடரின் 5 ஆவது சுற்று லண்டன் சில்வர்ஸ்டோன் மைதானத்தில் நடைபெறுகிறது.
</p><p>
44 பந்தய சிற்றூந்துகள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்டப் போட்டியை, ஆசியப் பிரதிநிதியாகவும் சிறப்பழைப்பாளராகவும் பங்கேற்றுள்ள தமிழக முதலமைச்சர் விஜய் பச்சைக் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cda3dff-25ba-4a41-a9bd-fd9f19d002cb/26-6aa5868242ffa.webp' /></p><p>சர்வதேசப் பந்தய வீரராக இந்தப் போட்டியில் களமிறங்கும் நடிகர் அஜித் குமார், LMP3 Pro/Am பிரிவில் 'Ajith RedAnt by Virage' அணியின் சார்பில் 16 ஆம் எண் கொண்ட 'Ligier' பந்தய சிற்றூந்தை இயக்கவுள்ளார்.
</p><p>
இந்தநிலையில், பந்தய மைதானத்துக்கு வருகை தந்த நடிகர் அஜித்தைக் கண்டதும், முதலமைச்சர் விஜய் விரைந்து சென்று அவரை நெகிழ்ச்சியுடன் ஆரத்தழுவி, அன்பு முத்தமிட்டுத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
</p><p>
தமிழ் திரையுலகில் 34 ஆண்டுகளுக்கும் மேலாக இரு துருவங்களாகக் கருதப்பட்ட இரு பெரும் நட்சத்திரங்கள், சர்வதேச விளையாட்டுக் களம் ஒன்றில் இணைந்து நின்று அன்பைப் பரிமாறிக்கொண்ட காட்சி உலகெங்கிலும் உள்ள தமிழர்களையும் ரசிகர்களையும் பேரானந்தத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><p></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">CM Vijay X Racer Ajith! https://t.co/kYlJBpF7C2</p>&mdash; AndhraBoxOffice.Com (@AndhraBoxOffice) <a href="https://x.com/AndhraBoxOffice/status/2098788805801320925?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-09-12T17:06:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அயர்லாந்து இணைப்பு குறித்த ட்ரம்பின் கருத்துக்கு பிரித்தானியா பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/britain-responds-to-trump-s-remarks-on-the-ireland-1789230957"></link>
            <id>https://tamilwin.com/article/britain-responds-to-trump-s-remarks-on-the-ireland-1789230957</id>
            <summary type="text">பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள வட அயர்லாந்து, அயர்லாந்து குடியரசுடன்
இணைவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள வட அயர்லாந்து, அயர்லாந்து குடியரசுடன்
இணைவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்கள்
குறித்து பிரித்தானிய பிரதமர் அலுவலகம் தனது விளக்கத்தை அளித்துள்ளது.</p><p>

டப்ளினில் அயர்லாந்து பிரதமரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், அயர்லாந்து குடியரசும் வட அயர்லாந்தும்
ஒன்றிணைவதை தான் விரும்புவதாகவும், அது காலப்போக்கில் நடக்கும் என்றும்
குறிப்பிட்டிருந்தார்.</p><h2>புதிய வாக்கெடுப்பு&nbsp;</h2><p>

ட்ரம்பின் இந்தக் கருத்தைத் தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள பிரித்தானிய
பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமின் ஊடகப் பேச்சாளர், வட அயர்லாந்தின் அரசியல்
நிலைப்பாடு தொடர்பில் பிரித்தானிய அரசாங்கத்தின் கொள்கையில் எவ்வித மாற்றமும்
ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4869f4a8-5779-44cc-8b0a-305cf2a5af1a/26-6aa584c862ccc.webp' /></p><p>
</p><p>
முன்னதாக பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரித்தானிய பிரதமர், வட அயர்லாந்தில்
மற்றுமொரு எல்லைக் வாக்கெடுப்பை நடத்துவதற்குப் பெரும்பாலான மக்களின் ஆதரவு
இருப்பதாகத் தெரியவில்லை என்றும், மக்கள் விருப்பத்தில் மாற்றம் ஏற்படும் வரை
புதிய வாக்கெடுப்பு எதுவும் நடத்தப்படமாட்டாது என்றும் தெளிவுபடுத்தியிருந்தமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T16:59:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-open-fire-on-van-that-defied-orders-to-stop-1789231996"></link>
            <id>https://jvpnews.com/article/police-open-fire-on-van-that-defied-orders-to-stop-1789231996</id>
            <summary type="text">கம்பஹா, அஸ்கிரிய பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த வேன் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா, அஸ்கிரிய பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த வேன் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p></p><p>சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d277f041-fd4a-44c5-b406-ec6bf577ab2f/26-6aa5837debe3b.webp' /></p><p>பொலிஸாரின் கட்டளைக்கு அமைய வேனை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்ட போதிலும், அதன் சாரதி கட்டளையை மீறி வேனை முன்னோக்கிச் செலுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதனையடுத்து, குறித்த வேனை நிறுத்தும் நோக்கில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
</p><p>
துப்பாக்கிச் சூட்டில் வேன் சாரதி காயமடைந்த நிலையில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>பின்னர் அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணம் மற்றும் வேன் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்றமை தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T16:53:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dehiwela-attack-condemn-by-un-1789231593"></link>
            <id>https://tamilwin.com/article/dehiwela-attack-condemn-by-un-1789231593</id>
            <summary type="text">&amp;nbsp;தெஹிவளைப் பகுதியில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ளது.இலங...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தெஹிவளைப் பகுதியில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ளது.</p><p>இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே, இரு சிறுவர்களின் உயிரைப் பறித்த இச்சம்பவம் குறித்துத் தாம் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>இவ்வாறான வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய தரப்பினர் அதற்குப் பதிலளிக்க வேண்டும் என்று தனது 'எக்ஸ்' (X) சமூக வலைத்தளப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ac02d5e-2e3e-4a0a-a0c8-d686d30fd29b/26-6aa581eb2ce94.webp' /></p><p>
</p><p>தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையிலுள்ள வீடு ஒன்றின் மீது நேற்று (11) அதிகாலை இனந்தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில், வீட்டிலிருந்த இரண்டு சிறுவர்கள் உயிரிழந்ததுடன், அவர்களின் தந்தை படுகாயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.</p><p>
தாக்குதல் நடத்துவதற்காகச் சந்தேகநபர்கள் வந்ததாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி நேற்று பாதுக்கை, பஹல போபே பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட போதிலும், சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
</p><p>இதனிடையே, இந்த குண்டுத்தாக்குதல் இலக்கு மாறி நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
</p><p>தாக்குதலில் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும், உயிரிழந்த சிறுவர்களின் தந்தையுடைய சகோதரரின் வீட்டை இலக்கு வைத்தே குற்றவாளிகள் வந்துள்ளதாகவும், வீடு மாறியதாலேயே இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளதாகவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
</p><p>சம்பவத்தில் உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் சடலங்களும் இன்று (12) பிற்பகல் அவர்களின் உறவினர் வீட்டிற்கு எடுத்து வரப்பட்டதாக 'அட தெரண' செய்தியாளர் தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T16:47:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக வலைத்தள அவதூறு விவகாரம் ; யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட 14 மனுதாரர்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/social-media-case-hearing-against-14-respondents-1789230047"></link>
            <id>https://jvpnews.com/article/social-media-case-hearing-against-14-respondents-1789230047</id>
            <summary type="text">சமூக வலைத்தளங்கள் ஊடாக அவதூறான தகவல்களைப் பரப்பியதாகவும், அவ்வாறான செயற்பாடுகளுக்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றஞ்சாட்டி, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக வலைத்தளங்கள் ஊடாக அவதூறான தகவல்களைப் பரப்பியதாகவும், அவ்வாறான செயற்பாடுகளுக்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றஞ்சாட்டி, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறைப் பேராசிரியரும், முன்னாள் கலைப்பீடாதிபதியுமான பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராமால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, எழுத்துமூல சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>இந்த வழக்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உள்ளிட்ட 14 பேர் எதிர்மனுதாரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
</p><p>
சமூக வலைத்தளங்கள் ஊடாக தமக்கு எதிராக அவதூறான தகவல்கள் மற்றும் கருத்துக்கள் பரப்பப்பட்டதாகவும், அவ்வாறான தகவல்களைப் பரப்புவதற்கு சிலர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உடந்தையாக இருந்ததாகவும் மனுதாரர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4e1018b-4d43-4965-9083-25bd110bbc75/26-6aa57cb84f26a.webp' /></p><p>இதனையடுத்து, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
</p><p>
வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தரப்பினரின் எழுத்துமூல சமர்ப்பணங்களைப் பெறுவதற்காக மேலதிக கால அவகாசம் வழங்கப்பட்டது.</p><p>இதன்படி, வழக்கின் மேலதிக நடவடிக்கைகள் நவம்பர் மாதத்தில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையின்போது, தரப்பினரின் எழுத்துமூல சமர்ப்பணங்கள் பரிசீலிக்கப்பட்ட பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T16:41:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் ஆசிரிய மாணவி தற்கொலை விவகாரம் ; உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு அர்ச்சுனா கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/student-suicide-case-arjuna-s-appeal-to-government-1789231204"></link>
            <id>https://jvpnews.com/article/student-suicide-case-arjuna-s-appeal-to-government-1789231204</id>
            <summary type="text">யாழ் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவியை தற்கொலைக்கு தூண்டிய விரிவுரையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளும...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவியை தற்கொலைக்கு தூண்டிய விரிவுரையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை முன்வைத்தார்.</p><p> </p><p></p><p>மேலும் தெரிவிக்கையில் 

யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரியர் மாணவி ஒருவரை அங்கு கடமையாற்றும் விரிவுரையாளர் ஒருவர் பாலியல் ரீதியான வார்த்தை பிரயோகத்தால் உளநீதியாக தாக்கம் அடைந்த நிலையில் தற்கொலைக்கு முயன்று உயிர் தப்பியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f42a57e7-9d08-46e4-925f-21f901b7eb10/26-6aa58065d40af.webp' /></p><p>குறித்த மாணவி குறித்த விரிவுரையாளர் தொடர்பில் கல்லூரி நிர்வாகத்திற்கு எழுதிய கடிதம் வெளியாகி இருக்கிறது.
</p><p>
குறித்த மாணவி விரிவுரையாளரால் உளநீதியாக தாக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார் ஆனால் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.</p><p> 

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் உணவு வழங்கலில் பெரிய முறைகேடு இருப்பது உள்ளகக் கணக்காய்வு அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்ற நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. </p><p>

ஆகவே குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சர் கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டு இருக்கிறார் அதனை நான் வரவேற்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T16:40:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கவுக்கு எதிரான ஈரானிய நகர்வு! இந்தியாவுடன் விசேட பேச்சுவார்த்தையில் பெஷெஷ்கியன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-s-move-against-the-us-talks-with-india-1789230456"></link>
            <id>https://ibctamil.com/article/iran-s-move-against-the-us-talks-with-india-1789230456</id>
            <summary type="text">ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியனுக்கும் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கும் இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று&amp;nbsp;புதுடெல்லியில் இடம்பெற்றுள்ளது.இருத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியனுக்கும் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கும் இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று&nbsp;புதுடெல்லியில் இடம்பெற்றுள்ளது.</p><p>இருதரப்பு இராஜதந்திரம், மற்றும் பொருளாதாரம் குறித்து இந்த கலந்துரையாடலில் கருத்துக்கள் பகிரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>அமெரிக்காவுக்கு எதிரான போர் ஈரானுக்கு பெரும் சவாலாக மாறியுள்ள நிலையில் இந்த பேச்சுவார்த்தையின் முக்கியத்துவம் பெற்றுள்ளது.</p><p></p><h2>இந்திய சகாவுடன் நடத்திய சந்திப்பு</h2><p>புதுடெல்லியில் தனது இந்திய சகாவுடன் நடத்திய சந்திப்பில், இரு நாடுகளும் தங்களது பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதற்கான ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு பெஷெஷ்கியன் விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e87a1c1-fe1f-4464-8ccc-74e7e9a50208/26-6aa57ef901043.webp' /></p><p>
சமீபத்திய மாதங்களில் ஈரான் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் குற்றச் செயல்களுக்குச் சாட்சியாக இருந்தது என்றும், ஆனால் ஈரானிய மக்கள் தங்கள் முழு பலத்துடன் எதிர்த்து நின்று, அவர்களின் மிரட்டல்களை எதிர்த்து நின்றனர் என்றும் பெஷேஷ்கியன் திரௌபதி முர்முவிடம் கூறியுள்ளார்.</p><p>ஈரான் ஆக்கிரமிப்பாளர்கள் அல்ல, மாறாக நாங்கள் எதிரியின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நின்றோம் என்று அவர் மேலும் அவர் விலக்கியுள்ளார்.</p><p>மேலும், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் மூலம் நீடித்த அமைதியை அடைவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை முர்மு மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T16:34:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே நேரத்தில் முடங்கிய முக்கிய எண்ணெய் வழித்தடங்கள்! சவூதி எடுத்த அதிரடி முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/saudi-arabia-shuts-down-its-main-oil-pipeline-1789230091"></link>
            <id>https://tamilwin.com/article/saudi-arabia-shuts-down-its-main-oil-pipeline-1789230091</id>
            <summary type="text">ஈராக்கில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, சவூதி அரேபியா தனது
பிரதான கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய் பாதையின் செயல்பாடுகளை தற்காலிகமாக
இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈராக்கில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, சவூதி அரேபியா தனது
பிரதான கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய் பாதையின் செயல்பாடுகளை தற்காலிகமாக
இடைநிறுத்தியுள்ளது.</p><p> இது உலகளாவிய சக்தி வள சந்தையில் பெரும் தாக்கத்தை
ஏற்படுத்தியுள்ளது.</p><h2>சவூதி அரேபியா</h2><p>
</p><p>
சவூதி அரேபியாவின் அப்கேக் எண்ணெய் வயலிலிருந்து செங்கடலின் யான்பு துறைமுகம்
வரை 1,200 கிலோமீட்டர் தூரம் வரை பரந்து விரிந்துள்ள இந்த எண்ணெய் குழாய்
தொகுதி, ரியாத் மற்றும் மதினா பகுதிகளில் வைத்து தாக்குதலுக்கு
இலக்காகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dc1a216-b841-4075-8792-90c3a895f481/26-6aa57e7d431e0.webp' /></p><p>

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதன் செயல்பாடுகள் தற்காலிகமாக
நிறுத்தப்பட்டுள்ளதாக சவூதி ஆற்றல் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>

ஈராக்கின் மைசான் மாகாணத்திலிருந்தே இந்த ட்ரோன்கள் ஏவப்பட்டதாக ஈராக் பிரதமர்
அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், தனது எல்லைப் பகுதியை
தாக்குதல்களுக்கு பயன்படுத்த அனுமதித்த குற்றச்சாட்டில் அப்பகுதி இராணுவத்
தளபதியை ஈராக் அரசு பதவி நீக்கம் செய்துள்ளதுடன், ஈரான் எல்லையையும்
மூடியுள்ளது.
</p><h2>ஹோர்மூஸ் நீரிணை</h2><p>
சவூதியின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 4 முதல் 5 சதவீதம் வரை இந்த
குழாய் பாதை மூலமே கொண்டு செல்லப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbc72110-1034-4e6f-9fb0-888b0bfedfd7/26-6aa57e7c8fa30.webp' /></p><p>

ஹோர்மூஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ள நிலையில், சவூதி அரேபியா பயன்படுத்திய
பிரதான மாற்றுப் பாதையான இதுவும் தற்போது மூடப்பட்டுள்ளதால், உலக சந்தையில்
பிரெண்ட் மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 104 டொலர்களைக் கடந்து
உயர்ந்துள்ளதுடன், உலகளாவிய எரியபொருள் விநியோகத்தில் பெரும் நெருக்கடி
உருவாகியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T16:32:11+00:00</updated>
        </entry>
    </feed>
