<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-03T23:44:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[என் மீது வழக்கு செல்லாது ; அமெரிக்க நீதிமன்றத்தில் வெனிசுவேலா முன்னாள் ஜனாதிபதி மதுரோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/maduro-case-against-me-is-invalid-in-us-court-1788478697"></link>
            <id>https://canadamirror.com/article/maduro-case-against-me-is-invalid-in-us-court-1788478697</id>
            <summary type="text">ஒரு இறையாண்மை நாட்டின் தலைவராக தன் மீது அமெரிக்காவில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் செல்லாது எனக் கூறி, அவற்றை தள்ளுபடி செய்யுமாறு அமெரிக்க நீதிமன்றத்தில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரு இறையாண்மை நாட்டின் தலைவராக தன் மீது அமெரிக்காவில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் செல்லாது எனக் கூறி, அவற்றை தள்ளுபடி செய்யுமாறு அமெரிக்க நீதிமன்றத்தில் வெனிசுவேலா முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மனு தாக்கல் செய்துள்ளாா்.</p><p>

அமெரிக்காவில் தொடரப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வழக்கின் அடிப்படையில், வெனிசுவேலா தலைநகரில் அமெரிக்க ராணுவம்&nbsp; நடத்திய அதிரடி நடவடிக்கையின்மூலம் நிக்கோலஸ் மதுரோ சிறைபிடிக்கப்பட்டாா்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e9bf4f8-f293-47fd-be23-149fdf2405c2/26-6a9a04eb335a5.webp' /></p><p> </p><p>தற்போது புரூக்ளின் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவா், தன் மீதான குற்றச்சாட்டுகளைத் தொடா்ந்து மறுத்து வருகிறாா். </p><p>இந்நிலையில், நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி, அவரின் வழக்குரைஞா் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் தலைவராக, பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் சா்வதேச சட்டங்களின்படி இத்தகைய வழக்குகளில் இருந்து நிக்கோலஸ் மதுரோவுக்கு முழு சட்டப் பாதுகாப்பு விலக்கு உள்ளது. </p><p>மேலும், நிக்கோலஸ் மதுரோ மீது தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன’ என்று வாதிட்டப்பட்டுள்ளது.

இந்த மனு மீது அமெரிக்க அரசுபதிலளிக்க உத்தரவிட்டுள்ள நீதிபதி, வழக்கு விசாரணையை நவ. 17-க்கு ஒத்திவைத்துள்ளாா்.</p><p> கடந்த 2019 முதல் நிக்கோலஸ் மதுரோவை வெனிசுவேலாவின் அதிபராக அமெரிக்கா அங்கீகரிக்காத நிலையில், அவா் தரப்பின் இந்த வாதம் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வாய்ப்பு குறைவு எனச் சட்ட வல்லுநா்கள் கருதுகின்றனா்.</p><p> அந்தவகையில், வழக்கு நிராகரிக்கப்பட்டால் அடுத்தாண்டு ஜூன் முதல் நிக்கோலஸ் மதுரோ மீதான நேரடி விசாரணை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நிக்கோலஸ் மதுரோ சிறைபிடிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அந்நாட்டின் துணை அதிபா் டெல்சி ரோட்ரிகஸ் பொறுப்பேற்று, அமெரிக்காவுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து வருகிறாா். </p><p>அண்மையில், இருநாடுகளுக்கு இடையே முக்கிய எண்ணெய் ஒப்பந்தமும் கையொப்பமானது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-03T23:38:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாலை 6 மணிக்கு மேல் இந்த உணவுகளை மறந்தும் கூட சாப்பிடாதிங்க ; காத்திருக்கும் ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/never-eat-these-foods-after-6-pm-1788477458"></link>
            <id>https://jvpnews.com/article/never-eat-these-foods-after-6-pm-1788477458</id>
            <summary type="text">பொதுவாகவே பலருக்கும் வீட்டில் சாப்பிடுவது போதாமல் வெளியே சென்று ஸ்னேக்ஸ்களை சாப்பிடும் பழக்கம் நிறைய பேரிடம் இருக்கிறது. குறிப்பாக&amp;nbsp; 6:00 மணிக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாகவே பலருக்கும் வீட்டில் சாப்பிடுவது போதாமல் வெளியே சென்று ஸ்னேக்ஸ்களை சாப்பிடும் பழக்கம் நிறைய பேரிடம் இருக்கிறது. </p><p>குறிப்பாக&nbsp; 6:00 மணிக்கு மேல் போண்டா, பஜ்ஜி, சமோசா, பர்கர், பீட்சா போன்ற உடலுக்கு கெடுதலை விளைவிக்கும் சிற்றுண்டிகளை பலரும் சாப்பிடுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/789aec63-b26e-4d87-9a16-6ac59c52fbeb/26-6a9a0014b434b.webp' /></p><h2>&nbsp;என்னென்ன உணவுகளை சாப்பிடக்கூடாது</h2><p> </p><p>ஆனால் இவை எல்லாமே உடலின் செரிமானத்தை கடுமையாக பாதிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். மாலை 6 மணிக்கு மேல் நாம் சாப்பிடும் வடை, பஜ்ஜி, சமோசா, பக்கோடா போன்ற உணவுகள் செரிமானத்தை பாதிப்பதோடு, உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை மோசமாக பாதிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.</p><p>அதேபோல் உடலில் கொழுப்பும் அதிகரிக்கும் என்கிறார்கள். எனவே, மாலை 6 மணிக்கு மேல் என்னென்ன உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
</p><p>&nbsp;பீட்சா, பாப்கான் அதிக சக்கரை கொண்ட இனிப்பு தின்பண்டங்கள், பானி பூரி, பேல் பூரி போன்ற தெரு உணவுகள் ஆகியவற்றை சாப்பிடுவதால் உடம்பில் இன்சுலின் எதிர்ப்பை அதிகரித்து ரத்த சக்கரை அளவு சீர்குலைத்து விடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8db8aeeb-24cc-4cfb-9b97-52dce23fa55c/26-6a9a0013f294a.webp' /></p><p> </p><p>இந்த உணவுகள் உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழித்து கெட்ட கொழுப்புகளை உற்பத்தி செய்யும்.</p><p>

அப்படியெனில், மாலையில் என்ன உணவுதான் சாப்பிடலாம் என்கிற கேள்வி எல்லோருக்கும் வரும் அதையும் பார்ப்போம்.</p><p></p><p>
</p><p>

எண்ணெய் இல்லாமல் பொரித்த மக்கனா உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. வேக வைத்த இனிப்பு சோளம், சூடான காய்கறி சூப், மசாலா கொண்டை கடலை, மைதாவுக்கு பதிலாக கோதுமை மாவில் வேக வைத்த மோமக்கள் ஆகியவற்றை சாப்பிடலாம். </p><p>இதைவிட்டுவிட்டு எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடுவதாலும், ஜங்க் ஃபுட்களை சாப்பிடுவதாலும் உடலில் செரிமானத்தை பாதிப்பதோடு இரவில் தூக்கத்தையும் கெடுத்துவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T23:17:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர்ந்து தங்கத்தை வாங்கி சேமிக்கும் சீனா., விற்கும் நிலையில் ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-leads-global-gold-buying-in-july-1788476098"></link>
            <id>https://news.lankasri.com/article/china-leads-global-gold-buying-in-july-1788476098</id>
            <summary type="text">China leads global gold buying in July: சீனா தொடர்ந்து தங்கத்தை வாங்கி கையிருப்பை அதிகரித்துவருகிறது.

 சீன&amp;nbsp;மத்திய வங்கிஉலகின் பல மத்திய வங்கிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>China leads global gold buying in July: சீனா தொடர்ந்து தங்கத்தை வாங்கி கையிருப்பை அதிகரித்துவருகிறது.
</p><h2>
 சீன&nbsp;மத்திய வங்கி</h2><p>உலகின் பல மத்திய வங்கிகள், குறிப்பாக சீனாவின் People’s Bank of China (PBoC), ஜூலை மாதத்திலும் தொடர்ந்து தங்கத்தை வாங்கியுள்ளதாக World Gold Council (WGC) தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ce3ee1a-9169-4634-9300-9bf9454d0fec/26-6a99fac3bc987.webp' /></p><h2>&nbsp;20 டன் தங்கம்</h2><p>ஜூலையில் மொத்தமாக 23 டன் தங்கம் வாங்கப்பட்டதாக அறிக்கை கூறுகிறது. அதில் சீனா மட்டும் 20 டன் தங்கம் வாங்கியுள்ளது.
</p><p>
மே 2026 முதல் சீனாவின் தங்க வாங்கும் நடவடிக்கை வேகமடைந்துள்ளது. தொடர்ந்து 21 மாதங்களாக சீனா தங்கத்தை தனது கையிருப்பில் சேர்த்துக் கொண்டிருக்கிறது.
</p><p>
தற்போது, சீனாவின் தங்க கையிருப்பு 2,366 டன்களாக உயர்ந்துள்ளது. இது உலகளவில் ஆறாவது பெரிய கையிருப்பு ஆகும்.</p><p></p><h2>மற்ற நாடுகள்</h2><p>

போலந்து 8 டன் தங்கம் வாங்கி, இந்த ஆண்டில் மொத்தமாக 90 டன் சேர்த்துள்ளது. போலந்து தனது இலக்கான 700 டன் கையிருப்பை அடைய முயற்சிக்கிறது.
</p><p>
மற்ற நாடுகளில், கசகஸ்தான், மலேசியா, போலிவியா ஆகியவை தலா 1 டன் தங்கம் வாங்கியுள்ளன. கசகஸ்தான் தனது மொத்த கையிருப்பில் 75 சதவீதம் தங்கமாக வைத்துள்ளது.
</p><p></p><h2>தொடர்ந்து தங்கத்தை விற்பனை செய்து வரும் ரஷ்யா </h2><p>ஆனால், ரஷ்யா தொடர்ந்து தங்கத்தை விற்பனை செய்து வருகிறது. ஜூலையில் 6 டன் தங்கத்தை விற்றுள்ளது. இதுவரை 2026-இல் 50 டன் தங்கத்தை விற்றுள்ளது. ரஷ்யாவின் மொத்த கையிருப்பு 2,277 டன்களாக குறைந்துள்ளது. </p><p>துருக்கி மற்றும் உஸ்பெகிஸ்தான் தலா 1 டன் தங்கத்தை விற்றுள்ளன.

உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைகள் தங்க சந்தையை பாதித்துள்ளன. </p><p>2024 முதல் மத்திய வங்கிகளின் தங்க வாங்குதல் தங்க விலையை உயர்த்தியது. ஆனால், ஈரான் போருக்குப் பிறகு தங்கத்தின் விலை 20 சதவீதம் குறைந்துள்ளது.
</p><p>
ஜூலை மாத இறுதியில் தங்கம் ஒரு அவுன்ஸ் 4,444 டொலர் விலையில் விற்பனையாகியது. அமெரிக்கா-ஈரான் மோதல், வட்டி விகித உயர்வு, மற்றும் எரிசக்தி பொருட்களில் முதலீடு ஆகியவை தங்க விலையை பாதித்துள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T22:52:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவிற்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - நிபுணர்கள் எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/new-hazards-nepal-disaster-highlights-emerging-1788446835"></link>
            <id>https://canadamirror.com/article/new-hazards-nepal-disaster-highlights-emerging-1788446835</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட பாறை மற்றும் பனிப்பாறை சரிவு காரணமாக உண்டான பேரழிவு, கனடாவின் மாறுபடும் மலைப்பகுதிகளிலும் இத்தகைய ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்ற அச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்ட பாறை மற்றும் பனிப்பாறை சரிவு காரணமாக உண்டான பேரழிவு, கனடாவின் மாறுபடும் மலைப்பகுதிகளிலும் இத்தகைய ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தை அதிகரித்துள்ளது. </p><p>
புவி வெப்பமயமாதல் காரணமாக பனிப்பாறைகள் உருகுவதும், உறைபனி நிலம் தளர்வதும் புதிய இயற்கை பேரிடர்களை உருவாக்கி வருவதாகக் கனடாவின் முன்னணி ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p> 
சஸ்காட்செவன் பல்கலைக்கழகத்தின் 'க்ளோபல் வாட்டர் ஃபியூச்சர்ஸ் அப்சர்வேட்டரீஸ்' திட்டத்தின் இயக்குனர் ஜான் பொமரோய் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cfad184-9b0c-4d04-a78c-10e59fff7101/26-6a99887554bee.webp' /></p><p> 
உலகில் அதிக பனிப்பாறைகளையும், பரந்த உறைபனி நிலங்களையும் கொண்ட நாடான கனடாவில் பனி உருகும் வேகம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாகவும், இதுவரை கண்டிராத புதிய ஆபத்துகள் உருவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p> 
நேபாளம் மற்றும் திபெத் எல்லையோரப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 1,100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோரைக் காணவில்லை. </p><p>
இமயமலையில் உறைந்த நிலையில் இருந்த பாறைப் பாளம் உடைந்து, பனிப்பாறையோடு சேர்ந்து சுமார் 1 கிலோமீட்டர் ஆழப் பள்ளத்தாக்கில் விழுந்தது. </p><p>
இதனால் பனியில் தேங்கியிருந்த நீர் வெளியாகி, பாறை மற்றும் படிவுகளுடன் சேர்ந்து மணிக்கு 160 கி.மீ-க்கும் அதிகமான வேகத்தில் பாய்ந்தது.</p><p> சில இடங்களில் 50 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலை போல வெள்ளம் சீறிப்பாய்ந்து எல்லையோரச் சாவடிகளை அழித்தது.
கனடாவிலும் இத்தகைய ஆபத்துகள் ஏற்கெனவே சிறிய அளவில் தொடங்கிவிட்டதாக பொமரோய் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>ஆற்று நீர்மட்டத்தை அளவிடும் வழக்கமான அமைப்புகளைத் தாண்டி, ஆபத்தான மலைப்பகுதிகளைக் கண்காணிக்க புதிய செயற்கைக்கோள் தொழில்நுட்பங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T22:51:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள அனர்த்தத்தை முன்பே கணித்த கிறிஸ்தவ பாதிரியார்; வைரலாகும் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/priest-who-predicted-nepal-disaster-1788475887"></link>
            <id>https://canadamirror.com/article/priest-who-predicted-nepal-disaster-1788475887</id>
            <summary type="text">நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் எனப் பேரிடருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கணித்துள்ள விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் எனப் பேரிடருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கணித்துள்ள விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><p style="text-align: justify; ">



திபெத்தில் ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பால், நேபாளத்தின் வடக்கு ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோஷி ஆற்றில் கடந்த ஒகஸ்ட் 26 ஆம் திகதி மாபெரும் வெள்ளம் ஏற்பட்டு அங்குள்ள கட்டமைப்புகள் மற்றும் கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டன.</p><p style="text-align: justify; "><br></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இந்தப் பேரிடரில், இதுவரை 1,200-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் உட்பட சுமார் 4,200 பேர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">


 

 

இந்த நிலையில்,&nbsp; யூடியூப் பக்கத்தில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட விடியோவில், நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படப் போவதாகக் கணித்துக் கூறியுள்ளார்.
</p><p style="text-align: justify; ">


இதுபற்றி, கடந்த ஜூன் 12 ஆம் திகதி அவர் வெளியிட்டுள்ள விடியோவில்,



“இன்று ஜூன் 12 2026. நேபாளத்தில் ஒரு பெரிய காட்டுத் தீ எரிவதை நான் பார்க்கிறேன். நேபாளத்தின் வனப்பகுதிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்.</p><p style="text-align: justify; "> நேபாளத்தைத் தாக்கும் நிலநடுக்கங்களை நான் பார்க்கிறேன். இந்த நிலநடுக்கம் 7 முதல் 8 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்தவையாக இருக்கும். இதனால், சிலர் பலியாவதையும் நான் பார்க்கிறேன்.</p><p style="text-align: justify; ">

நான் வெள்ளத்தைப் பார்க்கிறேன், தண்ணீரைப் பார்க்கிறேன் நேபாளத்தின் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. நேபாளத்துக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” எனக் கூறியுள்ளார்.
</p><p style="text-align: justify; ">


இந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்டி வரும் நிலையில், வெள்ளம் ஏற்படுவதை முன்கூட்டியே கணித்த பாதிரியாரின் விடியோ இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-03T22:51:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிறுத்தப்படுமா புலமைப்பரிசில் பரீட்சை - தீவிர ஆலோசனையில் அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/scholarship-exam-results-2026-1788474918"></link>
            <id>https://tamilwin.com/article/scholarship-exam-results-2026-1788474918</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இந்த பரீட்சை 10 வயது சிறுவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை உருவாக்குகிறது....</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இந்த பரீட்சை 10 வயது சிறுவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை உருவாக்குகிறது. </p><p>இது பல வீடுகளில் 'பெற்றோர்களுக்கான பரீட்சையாக' மாறி, பிள்ளைகளை அதிக நேர வகுப்புகளில் ஈடுபட வைப்பதாகக் கூறப்படுகிறது

 இதனால், கல்வி அமைச்சு மற்றும் அரசாங்கம் மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்கும் வகையில் மாற்று முறைகளை ஆராய்ந்து வருகிறது.
</p><p>
 2028-ல் ஆய்வு செய்யப்பட்டு, 2029 அல்லது 2030-ல் கொள்கை மாற்றங்கள் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>
 பரீட்சையை முழுமையாக ரத்து செய்வதற்குப் பதிலாக, அதன் அணுகுமுறையை மாற்றி, மேலதிக வகுப்புகளின் சுமையைக் குறைப்பதும், மாணவர்களிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதும் அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது.
</p><p>
 பரீட்சை முடிவுகளைக் காரணம் காட்டி பிள்ளைகளை உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ துன்புறுத்தும் பெற்றோர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு எச்சரித்துள்ளது.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RV4fNTh4Cps" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T22:42:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திரை பிரபலங்கள் வெளியிட்ட ‘துரோகம் பழகு’ முதல் பார்வை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/celebrities-about-dhrogam-pazhagu-movie-1788442860"></link>
            <id>https://cineulagam.com/article/celebrities-about-dhrogam-pazhagu-movie-1788442860</id>
            <summary type="text">துரோகம் பழகுமகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. Beaula Magizh தயாரிப்பில், இயக்குநர் சீயோன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘துரோகம் பழகு’....</summary>
            <content type="html"><![CDATA[<h2>துரோகம் பழகு</h2><p>மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. Beaula Magizh தயாரிப்பில், இயக்குநர் சீயோன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘துரோகம் பழகு’.
</p><p>
இப்படத்தின் முதல் பார்வையை இயக்குநர் எஸ்.வி. சேகர், FEFSI தலைவர் ஆர்.கே. செல்வமணி,நடிகர் நட்டி நட்ராஜ், நடிகர் ராம்கி, நடிகை பூனம் பாஜ்வா, நடிகை இனியா,நடிகை நந்திதா ஸ்வேதா, மற்றும் அஷ்மிதா சிங் ஆகிய திரையுலகப் பிரபலங்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் இணைந்து வெளியிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29e893e7-9894-4aa1-bb15-559394d2f134/26-6a9979b260ab0.webp' /></p><p>
</p><p>
வெளியான முதல் பார்வை ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

இப்படத்தில் தக்க்ஷன் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். </p><p>அவருடன் லொள்ளு சபா ஜீவா, ‘வாழை’ ஜானகி அம்மா, வனிதா விஜயகுமார், ஜி. எம். குமார், கஞ்சா கருப்பு, விஜய் டிவி புகழ் திவாகர், அமுதவாணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
</p><p>
MAGIZH Productions சார்பில் C. Beaula Magizh தயாரிக்கும் இப்படம், இயக்குநர் சீயோன் ராஜாவின் வித்தியாசமான கதை சொல்லும் பாணியிலும், கதாநாயகன் தக்க்ஷன் விஜயின் நடிப்பிலும் முக்கியத்துவம் பெறும் படைப்பாக உருவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b4702f1-de16-4af0-8987-94544599ce54/26-6a9979b352a69.webp' /></p><p>
</p><p>
துரோகம், நம்பிக்கை, உறவுகள் மற்றும் மனித உணர்வுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, சாதாரண மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும், அவர்களுக்குள் ஏற்படும் உணர்வுப் போராட்டங்களையும் இப்படம் பேசுகிறது.

“சில காயங்கள் ஒருபோதும் மன்னிக்கப்படுவதில்லை…”

என்ற அழுத்தமான ஒன்-லைனுடன் வெளியாகியுள்ள ‘துரோகம் பழகு’ முதல் பார்வை, படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.
</p><p>
புதுமுகம் பாலா மற்றும் ராஜா இருவரும் சேர்ந்து இசையமைத்துள்ளார்கள்.இப்படத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். படத்தின் அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்து, படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/796655eb-6765-43b0-ae56-2da0ad30c41f/26-6a9979b41fb9f.webp' /></p><p>
</p><p>
தக்க்ஷன் விஜய் இப்படத்தில் தனது நடிப்பு மற்றும் சண்டைக் காட்சிகளில் சிறப்பான பயிற்சியுடன், கதாபாத்திரத்திற்கு தேவையான உணர்வுகளையும் ஆக்‌ஷனையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்,அனைத்து தரப்பு ரசிகர்களையும், குறிப்பாக இளைஞர்களையும் கவரும் படமாக ‘துரோகம் பழகு’ உருவாகியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T22:30:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/good-news-for-those-planning-to-go-abroad-1788473907"></link>
            <id>https://jvpnews.com/article/good-news-for-those-planning-to-go-abroad-1788473907</id>
            <summary type="text">அரசாங்க வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் ஊடாக ஜப்பான், தென்கொரியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க புதி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அரசாங்க வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் ஊடாக ஜப்பான், தென்கொரியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">அத்துடன் நிவாரண திட்டத்தில் விமான டிக்கட்டுகளை கொள்வனவு செய்யும் வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் தலைவர் லால் ஹெட்டியாராய்ச்சி தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75dec98f-1725-4159-80d3-77f21267d038/26-6a99f2b355b06.webp' /></p><h2 style="text-align: justify;">வேலைவாய்ப்பு</h2><p style="text-align: justify;">இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify;">

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,


உலகிலுள்ள பல நாடுகளில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட ஒரேயொரு வேலைவாய்ப்பு முகவர் நிலையமான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தினால் புதிய வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">அதற்கமைய, மத்திய கிழக்கு, ஜப்பான், தென்கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் பல வேலைவாய்ப்புகளுக்கான ஆள்சேர்ப்புப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">இந்தத் திட்டத்தின் கீழ் நிர்மாணம், தொழிற்துறை மற்றும் திறமைசார் வேலைவாய்ப்புகள், சுகாதார சேவைகள், தகவல் தொழில்நுட்பம், பொறியியல், போக்குவரத்து, விவசாயம், ஆடை உற்பத்தி மற்றும் தொழிற்சேவைகள் உள்ளிட்ட பல துறைகளில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.</p><p style="text-align: justify;">குறைந்த கட்டணங்களின் கீழ் இந்த வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தினால் வழங்கப்படும் ஜப்பானிய வேலைவாய்ப்புகளில், குறிப்பாக ட்ரக் சாரதி வேலைவாய்ப்புகளுக்காக பாடசாலைகளை விட்டு விலகிய இளைஞர்களும் விண்ணப்பிக்கலாம். </p><p style="text-align: justify;">எனினும், அவர்களுக்கு ஜப்பானிய மொழித் திறமை அவசியமாகும்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

</p><p style="text-align: justify;">வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்கள் விண்ணப்பிப்பது மற்றும் மேலதிக விபரங்களைப் www.slfea.lk என்ற உத்தியோகபூர்வ வலைத்தளத்திற்கு சென்று அறிந்துகொள்ளலாம். </p><p style="text-align: justify;">

மேலும் பயிற்சி பெற்ற, அரைவாசி பயிற்சி பெற்ற மற்றும் தொழில்சார் நிபுணத்துவம் வாய்ந்த தொழிலாளர்களை இந்த வேலைவாய்ப்புகளுக்காக உள்வாங்க எதிர்பார்க்கிறோம். </p><p style="text-align: justify;">சர்வதேச தொழிலாளர் சந்தையில் இலங்கையின் நிலையை மேலும் வலுப்படுத்துவதுடன், திறமையான தொழிலாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு அதிகம் ஈடுபடுத்துவதை மேம்படுத்தும் நோக்கத்திலேயே இந்த வேலைவாய்ப்புகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்தோம்.
</p><p style="text-align: justify;">
இதற்கு மேலதிகமாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தினால் விமான டிக்கெட் விற்பனை நிலையம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக புறப்படும் தொழிலாளர்கள், சந்தையில் காணப்படும் விலையை விடக் குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகளைக் கொள்வனவு செய்வதற்கான வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.</p>]]></content>
            <updated>2026-09-03T22:18:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க ஆயுத கையிருப்பில் பற்றாக்குறை! முற்றாக மறுக்கும் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-denies-us-arms-shortage-reports-1788465899"></link>
            <id>https://ibctamil.com/article/trump-denies-us-arms-shortage-reports-1788465899</id>
            <summary type="text">அமெரிக்க இராணுவத்திடம் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதாகக் கூறும் பல செய்தி அறிக்கைகளையும் சுயாதீன ஆய்வுகளையும் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க இராணுவத்திடம் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதாகக் கூறும் பல செய்தி அறிக்கைகளையும் சுயாதீன ஆய்வுகளையும் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முற்றாக மறுத்துள்ளார்.
</p><p>பிரபல வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் பல அமெரிக்க ஊடகங்கள், டோமாஹாக்ஸ், பேட்ரியாட் ஏவுகணைகள் மற்றும் 'தாட்' (THAAD) ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு உள்ளிட்ட சக்திவாய்ந்த ஆயுதங்கள் அமெரிக்காவிடம் தீர்ந்து வருவதாகச் சமீபத்தில் செய்திகளை வெளியிட்டிருந்தன. </p><p>

இதற்குப் பதிலளிக்கும் விதமாகத் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், இந்த அறிக்கைகள் முற்றிலும் தவறானவை என்றும், அமெரிக்க இராணுவத்திடம் நடுத்தர மற்றும் உயர் தரத்திலான ஆயுதங்கள் அளவற்ற அளவில் கையிருப்பில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>விரைவில் ஆயுத விற்பனை</h2><p>
</p><p>
மேலும், அமெரிக்கா தற்போது ஆயுத உற்பத்தியைத் தீவிரப்படுத்தி வருவதாகவும், தனது நட்பு நாடுகளுக்கான ஆயுத விற்பனை விரைவில் மீண்டும் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><iframe src="https://truthsocial.com/@realDonaldTrump/117207685733693672/embed" class="truthsocial-embed" style="max-width: 100%; border: 0" width="600" allowfullscreen="allowfullscreen"></iframe><script src="https://truthsocial.com/embed.js" async="async"></script></p><p> 

ஈரானுக்கு எதிரான போர் பதற்றங்கள் மற்றும் இராணுவத் தேவைகள் காரணமாகச் சுவிட்சர்லாந்து மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கான ஆயுத விநியோகம் பல மாதங்களாகத் தாமதமாகியிருந்த நிலையில் ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T22:18:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று கைது செய்யப்படுவாரா நாமல்..! பாதுகாப்புக்காக கொழும்பில் கூடப்போகும் ஆதரவாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-appear-ciaboc-over-srilankan-airlines-probe-1788472812"></link>
            <id>https://tamilwin.com/article/namal-appear-ciaboc-over-srilankan-airlines-probe-1788472812</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று(4) காலை 9 மணிக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

 இதேவேளை, நாமல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று(4) காலை 9 மணிக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.</p><p>

 இதேவேளை, நாமல் ராஜபக்ச
தனக்கு எதிராக 12-ஆம் திகதிக்கு முன்னர் கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் என முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.
</p><p>
இலங்கை விமான சேவை தொடர்பான மோசடி அல்லது அவுஸ்திரேலிய ஊடகமொன்று வெளியிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் (அம்பாந்தோட்டை வைத்தியசாலை திட்டம்) தொடர்பாக விசாரணைகள் இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகும்போது பதற்றமான சூழல் நிலவக்கூடும் என்றும், அவருடைய ஆதரவாளர்கள் கொழும்பில் கூடத் தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

அவுஸ்திரேலியாவின் ஊடகத்தின் Four Corners ஆவணப்படத்தில், அம்பாந்தோட்டை வைத்தியசாலை கட்டுமானத் திட்டத்தில் பெரும் நிதி முறைகேடுகள் இடம்பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

 இதில் பல மில்லியன் டொலர் பணப்பரிமாற்றங்கள் முறையற்ற வகையில் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.</p><p>

 நிமல் பெரேரா (Nimal Perera) என்பவரிடமிருந்து 60 மில்லியன் ரூபாயைப் பெற்ற விவகாரம் தொடர்பாக நாமல் ராஜபக்ஷ மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.</p><p> ரக்பி போட்டித் தொடரை நடத்துவதற்காக இந்தப் பணம் பெறப்பட்டதாக அவர் கூறினாலும், அதில் முறைகேடுகள் நடந்ததாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
</p><p>

நீதிமன்ற வழக்குகள்: கடந்த காலங்களில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி வந்துள்ளார்.</p><p>

நாமல் ராஜபக்ச இந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்து வருவதுடன், இவை அரசியல் பழிவாங்கும் நோக்கம் கொண்டவை என்றும் கூறி வருகிறார்.</p><p>

இன்று(4) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் அவர் முன்னிலையாகவுள்ள சூழலில், இவை மீண்டும் பேசுபொருளாகியுள்ளன.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பான முழுமையான விடயங்களை எடுத்து வருகின்றது NewsInsightTamil நிகழ்ச்சி..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tmeEO-Dq2ww" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T22:14:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் உறவுகளின் போராட்டத்திற்கு வெற்றிலைத் தட்டோடு அழைப்பிதழா: பதில் தலைமைகளின் போலி அரசியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/missing-persons-day-tamil-protest-1788435678"></link>
            <id>https://tamilwin.com/article/missing-persons-day-tamil-protest-1788435678</id>
            <summary type="text">சிறிலங்கா படைத்தரப்புக்களால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளின் கண்ணீரும், வலியும் போராட்டமும், மாநாடும் கடந்த (30.08.2026) அன்று உணர்வெழுச்சிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கா படைத்தரப்புக்களால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளின் கண்ணீரும், வலியும் போராட்டமும், மாநாடும் கடந்த (30.08.2026) அன்று உணர்வெழுச்சியோடு நடந்து முடிந்துள்ளது.</p><p> ஆனால், இந்தப் புனிதமான மக்கள் போராட்டக்களத்திற்கு 'எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை' என்று சிறுபிள்ளைத்தனமான காரணத்தைக் கூறிப் போராட்டம் மற்றும் மாநாட்டைப் புறக்கணிப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானமும் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனும் அறிக்கை வெளியிட்டு அறிவித்திருந்தனர். </p><p>ஒட்டுமொத்தத் தமிழினத்தின் நீதிக்கான குரலை மழுங்கடிக்கும் வகையில் அமைந்த இந்த அறிக்கை மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>போராட்டம்</h2><p> </p><p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் என்பது திருவிழாவா அல்லது விளையாட்டு விழாவா, வெற்றிலை பாக்கு வைத்துத் தட்டோடு வந்து அழைப்பதற்கு இது என்ன கல்யாண வீடா, இது ஓர் இனத்திற்கு நீதி வேண்டிய போராட்டம். உணர்விருப்பவர்கள் பங்குகொள்வார்கள், உணர்வற்றவர்கள் ஒதுங்கியிருப்பார்கள்.</p><p>தமிழினப் படுகொலைக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கும் எதிராக உள்ளத்தில் உணர்வில்லையெனில், காணாமல் ஆக்கப்பட்ட விடயத்தில் சிறிலங்கா அரசைப் பன்னாட்டு அரங்கில் பொறுப்புக் கூற வைப்பதற்குத் திராணியில்லையெனில், அன்று முதல் இன்றைய அநுர அரசு வரையுள்ள சிறிலங்கா அரசைக் காப்பாற்றும் உள்நோக்கத்தோடு பச்சைத் துரோகம் செய்யும் எண்ணம் இருப்பின், தாராளமாக ஒதுங்கியிருங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d15b075-f24b-42b8-9484-3125f860dd30/26-6a996363f3f35.webp' /></p><p> அதைவிட்டுவிட்டு, மக்கள் திரளும் போராட்டக்களத்தைப் பார்த்து 'எங்களை யாரும் கூப்பிடவில்லை' என்று அறிக்கை விடுவது என்ன நியாயம்.</p><p>தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம், தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயகப் போராளிகள் கட்சி எனப் பல கட்சிகளும் எந்தவித கட்சி வேறுபாடுகளுமின்றி மக்களோடு மக்களாகக் களத்தில் நின்று பங்கெடுத்திருந்தன. அவர்களுக்கு யார் வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பிதழ் கொடுத்தார்கள், மக்களுக்காக நிற்க வேண்டும், போராட வேண்டும் என்ற இன உணர்வு இருந்ததால் அவர்கள் மனமுவந்து பங்குகொண்டார்கள். </p><p>இதைவிட முக்கியமாக, தமிழரசுக் கட்சியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் இந்த வெற்று அறிக்கையைக் கண்டுகொள்ளாமல் மக்களோடு களத்தில் பங்குகொண்டது தான் இங்கு கவனிக்கத்தக்க கூடுதல் விடயமாகும். </p><h2>பதில் தலைவர்கள்</h2><p>தமிழரசுக் கட்சி என்ற பெயரில் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டு அறிக்கையை விட்டவர்கள் யார், கட்சியின் பொதுக்குழுவா, மத்திய குழுவா, அரசியற்குழுவா, இவை எதுவுமே இல்லை. </p><p>அறிக்கை விட்ட இருவரும் மக்கள் மன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களா அல்லது கட்சியில் கட்சி உறுப்பினர்களால் முறைப்படி பதில் பொறுப்புக்களிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களா என்றால் அதுவும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae77ab3d-b5ec-4855-82c8-86000503d369/26-6a9963657cb54.webp' /></p><p> தம்மிடம் சட்டம் இருக்கிறது என்பதற்காகச் சட்டத்தின் குறுக்குச் சந்துகள் ஊடாகப் பொறுப்புக்களைக் கைப்பற்றி நாற்காலிகளில் ஒட்டிக்கொண்டிருப்பவர்கள். </p><p>மக்கள் பிரதிநிதிகளின் வெளிப்படையான பதிலடி இந்த போலியான புறக்கணிப்பு அறிக்கையையும் மீறி, தமிழரசுக் கட்சியின் வடக்கு கிழக்குத் தாயகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டதை போராட்ட மற்றும் மாநாட்டு ஒளிப்படங்கள் தெளிவாக உறுதி செய்கின்றன.</p><h2>தமிழரசுக் கட்சி</h2><ol><li>யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் (தமிழரசுக் கட்சியின் தெரிவுநிலைத் தலைவர்)</li><li> மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன் </li><li>மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத் </li><li>வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் </li><li>அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் </li><li>திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் ஆகியோர் (யாழில் நடைபெற்ற மாநாட்டிற்கு நேரில் வருகை தர இயலாத போதும், ஊடக சந்திப்பினை நிகழ்த்தித் தனது ஆதரவை வெளிப்படுத்தியதோடு, அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்விலே நேரில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடததக்கது)</li></ol><p>தமிழரசுக் கட்சியிலே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் எவருமே வெற்று அறிக்கையைப் பொருட்படுத்தாது பங்கெடுத்துள்ளனர். இதிலிருந்தே கட்சி யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்பது வெட்டவெளிச்சமாகிறது. சட்டத்தின் ஓட்டைகள் வழியே தமிழரசுக் கட்சியின் பதவிகள் மட்டுமே அவர்களிடம் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3e379b0-a0ef-4f83-94c1-00c0fe4ee9f1/26-6a996364c5c77.webp' /></p><p> ஆனால் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களும் மக்களும் யார் பக்கம் நிற்கிறார்கள் என்பது நேற்றைய நிகழ்வில் முழுமையாகத் தெளிவாகிவிட்டது. </p><p>சனநாயகப் பாரம்பரியத்தின் சீரழிவு மக்கள் என்று வந்துவிட்டால் வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும் போராட்டக்களத்தில் முன்னிற்பதுதான் ஓர் அரசியல் கட்சியின் அடிப்படைப் பண்பு. ஓர் அரசியல் கட்சி மக்களை அரசியற்படுத்தி அணிதிரட்ட வேண்டும். அந்த குறைந்தபட்ச அரசியல் சனநாயகப் பண்புகூட இல்லாத நிலையில்தான் தற்போதைய தமிழரசுக் கட்சி உள்ளது. </p><p>அழைப்பிதழ் வைத்தால் மட்டுமே போராட வருவோம் என்பது என்ன மனநிலை, இவர்கள் யாருக்கானவர்கள், இவர்கள் செய்யும் அரசியல் யாருக்கானது.</p><p>வழக்கறிஞர் என்பதால் சிறிலங்காவின் நீதிமன்றங்களுக்குள் மட்டும் தனது சட்ட வித்துவத்தைக் காட்டுவதுதான் அரசியல் என்று எண்ணுபவர்களின் கைகளில் ஒரு சனநாயக இயக்கம் சிக்கியுள்ளது.</p><p> தார்மீக உரிமையற்று, அடிப்படை சனநாயகத்திற்கு முரணாகச் சிக்கித் தனது நீண்ட நெடிய சனநாயகப் பாரம்பரியத்தை தமிழரசுக் கட்சி இழந்து கொண்டிருக்கின்றது என்பதைத் தவிர சொல்வதற்கு ஏதுமில்லை.</p><h2>ஐ.நா. மனித உரிமைகள் பேரவை</h2><p> </p><p>மக்களின் வலியை உணராதவர்கள் யாருக்கானவர்கள், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 'இனப்படுகொலைக்குச் சான்று இல்லை', 'புலிகளையும் விசாரிக்க வேண்டும்' என்று சிறிலங்கா அரசாங்கத்தை உலக அரங்கில் பிணையெடுக்கத் திரிந்து கொண்டிருந்த சின்னக் கதிர்காமருக்கு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நீதிக்கான போராட்டத்தின் வலி எப்படிப் புரியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a137a43-5c34-424a-9f43-cce45144fe4c/26-6a9963662f15b.webp' /></p><p>வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்கள் நடக்கும் போதும், நடந்த பின்னரும் மக்கள் முகாம்கள் மற்றும் ஐ.நா. அலுவலகங்கள் தோறும் கால்கடுக்க நடந்து திரிந்த துயரக் காலங்களில், தமிழினப்படுகொலைப் போரை முன்னின்று நடத்திய மகிந்த ராஜபக்ச, பிள்ளையான், கருணாவின்&nbsp; படங்களுடன் தேர்தல் வாக்குக் கேட்ட மட்டக்களப்பின் இளம் இரத்தத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வலி எப்படிப் புரியும்.</p><p>தென்னிலங்கையில் ஏதேனும் ஒரு சிறு சனநாயக உரிமை மீறல் என்றால் கூட 'சர்வஜன நீதி' என்ற பெயரில் சிங்கள செயற்பாட்டாளர்களுடன் இணைந்து களமிறங்கி அறிக்கை விடும் தமிழரசுக் கட்சியின் மேலாதிக்க சிந்தனையாளர்களுக்கு, சொந்தத் தமிழ் மக்களின் இனப்படுகொலையின் வலியும்.</p><p> நீதிக்கான போராட்டத்தின் வலியும் புரியாமல் இருக்கிறது என்றால் இவர்கள் யாருக்காக அரசியல் செய்கிறார்கள் அது அவர்கள் தவறல்ல அதை உணர்ந்த தமிழ் மக்கள் அவர்களை மக்கள் மன்றத்திலிருந்து ஏற்கனவே அகற்றிவிட்டார்கள். அதை உணர்ந்த தமிழரசுக் கட்சியினரும் கட்சித் தலைவர் தேர்தலின் ஊடாக அவர்களை ஓரங்கட்டிவிட்டார்கள்.</p><p> தமிழ் மக்கள் எப்போதும் தெளிவானவர்கள். இதற்குப் பிறகும் அவர்களை அந்தப் பதில் பொறுப்புக்களில் நீடிக்க விடுவதா இல்லையா என்பதை தமிழரசுக் கட்சியினரின் முடிவுக்கே விட்டுவிடுவோம்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T22:06:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடிவு நெருங்கிவிட்டது.. விரைவில் வீழ்ச்சியடையவுள்ள ஈரானின் ஆட்சி - நெதன்யாகு அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/netanyahu-says-iran-weaker-than-ever-1788465776"></link>
            <id>https://tamilwin.com/article/netanyahu-says-iran-weaker-than-ever-1788465776</id>
            <summary type="text">ஈரானின் இஸ்லாமிய குடியரசு விரைவில் வீழ்ச்சியடையக்கூடும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். 

அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் இஸ்லாமிய குடியரசு விரைவில் வீழ்ச்சியடையக்கூடும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். </p><p>

அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியுள்ள நிலையில், ஈரான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பலவீனமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>ஈரானின் இஸ்லாமிய குடியரசு</h2><p>

இஸ்ரேலிய இராணுவத் தலைவர்களுடனான நிகழ்வொன்றில் உரையாற்றிய நெதன்யாகு, இந்த ஆட்சி தற்போது தடுமாறிக் கொண்டிருக்கிறது. இது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பலவீனமாக உள்ளது.தனது உயிர்வாழ்வுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறது எனத் தெரிவித்தார்.</p><p>
மேலும், இந்த அச்சுறுத்தலை ஒருமுறை மற்றும் நிரந்தரமாக அகற்ற முடியும் என நான் உறுதியாக நம்புகிறேன். அதாவது, இந்த ஆட்சியை வீழ்த்த முடியும்.

 அதுதான் எமக்கு இன்னும் முன்னால் இருக்கும் முக்கியப் பணியாகும். ஆனால் அது மிக அருகில் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c56e4fed-8e0b-4d3e-8254-c03f0fa1dbc7/26-6a99d55e7a213.webp' /></p><p> </p><p>அது சாத்தியமற்றதல் எமது கட்டுக்குள் உள்ளது என அவர் கூறினார்.

இந்நிலையில், கடந்த பெப்ரவரி இறுதியில் அமெரிக்காவுடன் இணைந்து ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்தது. எனினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏப்ரல் மாதத்தில் திடீரென போர் நிறுத்தத்தை அறிவித்தார்.
</p><p>
தற்போது அமெரிக்கா ஈரான் மீது மேலதிக பொருளாதார அழுத்தங்களை விதித்துள்ளதுடன், இந்த வாரம் மீண்டும் தாக்குதல்களையும் ஆரம்பித்துள்ளது.</p><h2>இஸ்ரேல் மீது தாக்குதல்&nbsp;</h2><p> 

இதற்குப் பதிலடியாக ஈரான், வளைகுடா நாடுகள், ஜோர்தான் மற்றும் ஈராக்கின் தன்னாட்சி குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் கூட்டாளிகளைத் தாக்கியுள்ளது. </p><p>எனினும், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தவில்லை. அவர்கள் எங்களைத் தாக்கவில்லை என்றால், அது தற்செயலானது அல்ல. அவர்கள் அனைவரையும் தாக்குகிறார்கள், ஆனால் எங்களைத் தாக்கவில்லை என நெதன்யாகு தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e62b7932-5b42-4bd0-b9b3-66d946449821/26-6a99d55f2ea98.webp' /></p><p>எமது சக்தியையும், எமது ஆயுதங்களின் வலிமையையும், எமது உறுதியையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

ஒக்டோபர் 27ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நெதன்யாகுவின் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.</p><p> 

சில கருத்துக்கணிப்புகளில் அவர் பின்னடைவைச் சந்தித்து வருவதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், ஈரான் விவகாரத்தில் நெதன்யாகு தோல்வியடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T21:42:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் திட்டங்கள்! துணை ஜனாதிபதி வான்ஸின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vance-said-possible-measures-against-iran-1788470211"></link>
            <id>https://ibctamil.com/article/vance-said-possible-measures-against-iran-1788470211</id>
            <summary type="text">இனிவரும் காலங்களில் ஈரானுக்கு எதிராக பொருளாதார, இராணுவ, இராஜதந்திர மற்றும் மறைமுக அழுத்தங்கள் உட்பட சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் பரிசீலனையில் இரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இனிவரும் காலங்களில் ஈரானுக்கு எதிராக பொருளாதார, இராணுவ, இராஜதந்திர மற்றும் மறைமுக அழுத்தங்கள் உட்பட சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் பரிசீலனையில் இருப்பதாக அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.</p><p> 

ஹோர்முஸ் நீரிணைியில் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களை தெஹ்ரான் நிறுத்தாத வரை, ஈரானுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்த அமெரிக்கா திட்டமிடவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p></p><h2>போரின் முடிவு</h2><p>
</p><p>
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான காலக்கெடு குறித்துச் செய்தியாளர்கள் கேட்டபோது, அதுகுறித்து ஈரானிடமே கேட்க வேண்டும் என அவர் பதிலளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc87a8e6-e5c7-43ce-afe4-062b3cca89dd/26-6a99e8a1a0eb8.webp' /></p><p><i>Image Credit: BBC</i></p><p>
</p><p>
மேலும், ஈரானியர்கள் நாளுக்கு நாள் தங்களது இராணுவ மற்றும் தற்காப்புத் திறன்களை இழந்து வருவதாகக் குறிப்பிட்ட வான்ஸ், ஹோர்முஸ் நீரிணை மீதான அவர்களின் கட்டுப்பாடு தற்போது முற்றிலுமாக இல்லாமல் போயுள்ளதை அவர்களும் உணர்ந்து வருவதாகக் கூறியுள்ளார்.
</p><h2>எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம்</h2><p>
மூன்று மாதங்களுக்கு முன்பு ஈரானின் அச்சுறுத்தல்களால் அந்த நீரிணை வழியிலான எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் கிட்டத்தட்ட முடங்கியிருந்த போதிலும், தற்போது அது மோதல் தொடங்குவதற்கு முன்பு இருந்த இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03e366f6-d7fb-4a3c-bff8-3b34fabecb8e/26-6a99e8a265791.webp' /></p><p><i>Image Credit:&nbsp;thedailyaus</i></p><p> </p><p>

எனவே, வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்திவிட்டு பொறுப்புடன் செயல்படுமாறு ஈரானுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T21:37:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தம் குறித்து ஐ.நா. பிரதிநிதி – நீதி அமைச்சர் முக்கிய கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/un-representative-holds-talk-with-justice-minister-1788466404"></link>
            <id>https://tamilwin.com/article/un-representative-holds-talk-with-justice-minister-1788466404</id>
            <summary type="text">பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தம் மற்றும் காணாமல்போனோர் பற்றிய
அலுவலகத்தின் பணிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிராஞ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தம் மற்றும் காணாமல்போனோர் பற்றிய
அலுவலகத்தின் பணிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிராஞ்ச், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுடன் விரிவாகக்
கலந்துரையாடியுள்ளார்.
</p><p>இவர்கள் இருவருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று(03.09.2026) கொழும்பில் நடைபெற்றுள்ளது.</p><h2>மறுசீரமைப்புத் திட்டங்கள்</h2><p>

இந்தச் சந்திப்பின்போது பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தம், சிறைச்சாலைகள்
மறுசீரமைப்பு, காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான
அலுவலகத்தின் பணிகள் என்பன உள்ளடங்கலாக சட்ட ஆட்சி சார்ந்த மறுசீரமைப்புக்கள்
குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி
தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7afb8180-2f0b-47fc-b7c5-69d7728deaa0/26-6a99d5e093b87.webp' /></p><p>அதுமாத்திரமன்றி பாதிக்கப்பட்டோர் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, சட்டத்தின்
ஆட்சியை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவு வழங்கத் தயாராக
இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T21:36:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[காட்ஸில்லா அளவில் வளர்கிறது... எல் நினோ வேகமாக நெருங்குவதாக ஐநா எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/un-warns-el-ni-o-approaching-1788431579"></link>
            <id>https://news.lankasri.com/article/un-warns-el-ni-o-approaching-1788431579</id>
            <summary type="text">UN warns of record El Niño approaching: எல் நினோ நெருங்கி வருவதாக ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.
எல் நினோ (El Niño) காலநிலை நிகழ்வு நம் கண்முன்னே மிகப...</summary>
            <content type="html"><![CDATA[<p>UN warns of record El Niño approaching: எல் நினோ நெருங்கி வருவதாக ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>எல் நினோ (El Niño) காலநிலை நிகழ்வு நம் கண்முன்னே மிகப்பெரிய அளவில் வலுவடைந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d28f29d8-839b-416f-855a-ca306b18dbf4/26-6a994cdd82a82.webp' /></p><p>
</p><p>சமீபத்திய கணிப்புகளின் அடிப்படையில், எல் நினோ வெப்பநிலை தொடர்பான சாதனைகளை முறியடிப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. </p><p>குறைந்தது 1,000 ஆண்டுகளில் ஏற்படக்கூடிய மிகப்பெரிய 'எல் நினோ' நிகழ்வாக இது இருக்கக்கூடும்; புவி வெப்பமடைதலால் வெப்பநிலை ஏற்கனவே வேகமாக அதிகரித்து வரும் சூழலில், இது வளிமண்டலத்தில் கூடுதல் வெப்பத்தைச் சேர்க்கும்.</p><p></p><p> </p><p>இந்தக் காரணிகளின் ஒருங்கிணைப்பால், 2027-ஆம் ஆண்டு முந்தைய சாதனையை முறியடித்து, இதுவரை பதிவான ஆண்டுகளிலேயே மிக வெப்பமான ஆண்டாக அமையவுள்ளது. </p><p>எல் நினோ நிகழ்வால் ஏற்படும் வெப்ப அதிகரிப்பு ஏற்கனவே தாக்கங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது; இந்தோனேசியாவில் காட்டுத்தீ தீவிரமடைவது முதல் இந்தியாவில் மிக முக்கியமான பருவமழை பொழிவு குறைவது வரை இதன் விளைவுகள் காணப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a96b4357-90ea-4941-a643-40cfdfb96412/26-6a994cde39ef1.webp' /></p><p> </p><p>அவுஸ்திரேலியாவில் அதிகரித்த காட்டுத்தீ அபாயம் முதல் தென் அமெரிக்காவில் தீவிரமான வெள்ளப்பெருக்கு வரை, இதன் தாக்கங்கள் உலகம் முழுவதும் பரவும். எல் நினோ நிகழ்வு சுமார் 5 கோடி மக்களைக் கடுமையான பஞ்சத்திற்குத் தள்ளக்கூடும் என்று உலக உணவுத் திட்டம் ஆகஸ்ட் மாதத்தில் தெரிவித்தது.</p><p> புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் மாசுபாட்டினால் உருவாகியுள்ள பருவநிலை நெருக்கடி, தீவிர வானிலை நிகழ்வுகளின் தீவிரத்தை ஏற்கனவே அதிகரித்துள்ளதுடன் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது; குறிப்பாக, இந்த கோடையில் ஐரோப்பாவில் பதிவான மிகத் தீவிரமான வெப்ப அலை குறைந்தது 35,000 பேரின் மரணத்திற்குக் காரணமாகியுள்ளது. </p><p>எல் நினோ நிகழ்வின் தாக்கம் மேலும் தீவிரமடையும்; இந்நிகழ்வின் அளவானது உண்மையிலேயே மலைக்க வைப்பதாகவும், 'காட்ஸில்லா' (Godzilla) அளவிலான ஒரு நிகழ்வாகவும் இருக்கும் என்று விவரிக்கப்பட்டுள்ளது. </p><p>திங்கட்கிழமையன்று பெறப்பட்ட மிகச் சமீபத்திய தரவுகளில், எல் நினோ நிகழ்வின் மையப்பகுதியில் உள்ள கடல் நீரின் வெப்பநிலை, கடந்த 30 ஆண்டுகளின் சராசரி அளவை விட 2.6 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருப்பதைக் காட்டுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05230e15-b852-4b6f-bb66-8b5ac505f839/26-6a994cdee2463.webp' /></p><p> </p><p>செயற்கைக்கோள் தரவுப் பதிவுக் காலத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த மாறுபாடான 3.1 டிகிரி செல்சியஸ் (2015-இல் பதிவானது) என்ற அளவை இது ஏற்கனவே நெருங்கிவிட்டது; அதேவேளையில், உச்சநிலை எட்டப்படுவதற்கு இன்னும் சில மாதங்கள் உள்ளன. </p><p>வியாழக்கிழமையன்று வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின் அடிப்படையில், 'எல் நினோ' நிலைமை உறுதியாக நிலைபெற்றுள்ளது; இது வரும் மாதங்களில் மிகவும் தீவிரமான நிகழ்வாக வலுவடையக்கூடும் என்பதோடு, வெள்ளம், வறட்சி மற்றும் கடும் வெப்பம் போன்ற பெரும் தாக்கங்கள் 2027-ஆம் ஆண்டு முழுவதும் நீடிக்கும். </p><p>சில பகுதிகளில், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் கடல் மேற்பரப்புக்குக் கீழே உள்ள நீரின் வெப்பநிலை சராசரியை விட 8 டிகிரி செல்சியஸ் என்ற அசாதாரணமான அளவுக்கு அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T21:32:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கெய்ர் ஸ்டார்மரின் இடத்தைப் பிடிக்க போட்டியிடும் நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/polanski-bid-to-replace-starmer-in-parliment-1788432126"></link>
            <id>https://news.lankasri.com/article/polanski-bid-to-replace-starmer-in-parliment-1788432126</id>
            <summary type="text">Green Party leader Zack Polanski launches bid to replace Keir Starmer in parliament: கிரீன் கட்சித் தலைவரான ஸாக் போலன்ஸ்கி, கெய்ர் ஸ்டார்மரின் இடத்தைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Green Party leader Zack Polanski launches bid to replace Keir Starmer in parliament: கிரீன் கட்சித் தலைவரான ஸாக் போலன்ஸ்கி, கெய்ர் ஸ்டார்மரின் இடத்தைப் பிடிப்பதற்கான முயற்சிகளைத் துவக்கியுள்ளார்.</p><p>


பிரித்தானியாவின் முன்னாள் பிரதமரான சர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்தது அனைவரும் அறிந்ததே.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a8bd4d4-cdcd-4ba5-9401-a5bd82e8b1e0/26-6a994f00b244c.webp' /></p><p>

அதுமட்டுமின்றி, அவர் சமீபத்தில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.
</p><h3>
கெய்ர் ஸ்டார்மரின் இடத்தைப் பிடிக்க...
</h3><p>
கெய்ர் ஸ்டார்மர், இங்கிலாந்திலுள்ள Holborn and St Pancras தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
</p><p>
அவர் தனது நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால், அந்தத் தொகுதி காலியாக உள்ளது.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், அந்தத் தொகுதியைக் கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் கிரீன் கட்சித் தலைவரான ஸாக் போலன்ஸ்கி.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2d43d45-51d7-4877-9123-4e7b814ffb2e/26-6a994f000b16a.webp' /></p><p>

நான் இந்த பகுதியில் நீண்ட காலமாக வாழ்ந்துவருகிறேன் என்று கூறியுள்ள போலன்ஸ்கி, எனக்கு இப்பகுதியைக் குறித்து நன்றாகத் தெரியும் என்றும், அது எனக்கு பிடித்த இடம் என்றும், நாடாளுமன்றத்தில் இந்த தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்த ஆவலாக உள்ளேன் என்றும் கூறியுள்ளார்.
</p><p>
விடயம் என்னவென்றால், கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, Holborn and St Pancras தொகுதியில் இதுவரை இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T21:31:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த மாதம் திருமணம்..கனடாவில் தமிழக மாணவர் மர்மமான முறையில் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/29-year-old-tamil-guy-died-who-studying-canada-1788436664"></link>
            <id>https://news.lankasri.com/article/29-year-old-tamil-guy-died-who-studying-canada-1788436664</id>
            <summary type="text">Tamilnadu guy died in canada: இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர், கனடாவில் இருந்து புறப்பட இருந்தபோது உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>Tamilnadu guy died in canada: இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர், கனடாவில் இருந்து புறப்பட இருந்தபோது உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
தமிழ்நாட்டின் ஊட்டியைச் சேர்ந்த அரவிந்தன் என்ற மாணவர், கனடாவில் இருந்து இந்தியாவிற்கு புறப்பட இருந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. </p><h2>கனடாவில் உயர் கல்வி 
</h2><p>
நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் அரவிந்தன். இவர் கனடாவில் உயர் கல்வி பயின்று வந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8b544bc-1044-4267-88d7-3c4001288cb5/26-6a9966cb236c7.webp' /></p><p></p><p> 

அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், நேற்றைய தினம் அரவிந்தன் இந்தியாவிற்கு புறப்பட இருந்தபோது உயிரிழந்துள்ளார்.
</p><p>
அரவிந்தனின் பெற்றோரை தொடர்புகொண்ட கனேடிய பொலிஸார், அவர் 18வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.</p><p> 

இந்த நிலையில், அரவிந்தனின் பெற்றோர் தங்கள் மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், உடலை உடனடியாக இந்தியாவிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T21:31:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பெருவெள்ளத்தில் மாயமான குடும்பம்: தொலைபேசியின் அருகிலேயே காத்திருக்கும் சகோதரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/brother-of-uk-person-missing-nepal-wait-by-phone-1788438192"></link>
            <id>https://news.lankasri.com/article/brother-of-uk-person-missing-nepal-wait-by-phone-1788438192</id>
            <summary type="text">Brother of British person missing in Nepal waiting by phone for updates: நேபாள பெருவெள்ளத்தில் மாயமான நபர் ஒருவரின் சகோதரர், அவரைக் குறித்து ஏதாவது தக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Brother of British person missing in Nepal waiting by phone for updates: நேபாள பெருவெள்ளத்தில் மாயமான நபர் ஒருவரின் சகோதரர், அவரைக் குறித்து ஏதாவது தகவல் கிடைக்காதா என தொலைபேசியின் அருகிலேயே காத்திருக்கிறார்.
</p><p>

நேபாளப் பெருவெள்ளம் 1,240 உயிர்களை பலிகொண்டுவிட்ட நிலையில், இன்னமும் ஆயிரக்கணக்கானவர்களைக் காணவில்லை.
</p><p>
அப்படி என்ன ஆனார்கள் என்றே தெரியாத ஆயிரக்கணக்கானவர்களில் பிரித்தானியர்களும் அடங்குவர்.
</p><h3>
தொலைபேசியின் அருகிலேயே காத்திருக்கும் சகோதரர்
</h3><p>
கடந்த வாரம், சந்தோஷ் சாஹு, அவரது மனைவியான சுரபி பதி, தம்பதியரின் பிள்ளைகளான ஸ்பாண்டன் மற்றும் சாய்னா குமாரி ஆகியோர் பிரித்தானியாவிலிருந்து கைலாச மலைக்கு ஒரு குழுவாக புனித யாத்திரை சென்றிருந்தார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2a45d8e-901c-4694-aa16-45755c002bae/26-6a9966b18839a.webp' /></p><p>

அவர்கள் நேபாளத்திலிருக்கும்போதுதான் அந்த பயங்கர பெருவெள்ளம் ஆயிரக்கணக்கானோரை வாரிச் சென்றது.
</p><p>
பெருவெள்ளத்துக்குப் பின், சந்தோஷ் குடும்பத்துடனான வாட்ஸ் ஆப் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கிறார் அவரது சகோதரரான முரளி.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், பிரித்தானியக் குடிமகனான சந்தோஷின் சகோதரர் முரளி, தன் சகோதரர் குடும்பம் குறித்து ஏதேனும் தகவல் கிடைக்காதா என தான் தொலைபேசியின் அருகிலேயே காத்திருப்பதாகத் தெரிவிக்கிறார்.
</p><p>
சகோதரரின் குரலைக் கேட்கவேண்டும், அவர் என் பெயரைக் கூறி என்னை அழைப்பதைக் கேட்கவேண்டும் எனக்கூறும் முரளி, அண்ணா நான் உங்களை நேசிக்கிறேன் என்று கூறும்போது, அவரது குரல் தழுதழுக்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49f8c72d-e8fb-44f4-83fb-6a99ae682474/26-6a9966b23a7df.webp' /></p><p>
என் சகோதரர் குடும்பத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு ஒரு வாரம் ஆகிறது. இதுவரை எந்த தகவலும் இல்லை, தூதரகம் உதவியாக உள்ளதை மறுப்பதற்கில்லை, என்றாலும், உதவிகரமான எந்த தகவலும் இல்லை என்கிறார் முரளி.
</p><p>
இதற்கிடையில், தங்கள் உறவினர்கள் நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கிக்கொண்டார்கள் என்னும் செய்தி ஏற்படுத்திய அதிர்ச்சியைவிட, அவர்கள் என்ன ஆனார்கள், உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது தெரியாமல் தவிக்கும் விடயம்தான் கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என மாயமான பலருடைய உறவினர்களும் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T21:31:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியொன்றில் பிடிபட்ட கொழும்பு இளைஞன் ; சிக்க வைத்த இரகசியத் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/colombo-youth-arrested-in-tamil-area-1788469134"></link>
            <id>https://jvpnews.com/article/colombo-youth-arrested-in-tamil-area-1788469134</id>
            <summary type="text">திருகோணமலை, சீனன்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மனையாவெளி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, 1 கிராம் 100 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை, சீனன்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மனையாவெளி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, 1 கிராம் 100 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் திருகோணமலை முகாம் அதிகாரிகளுக்குபுதன்கிழமை (02) கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c1b5122-bedb-4cb8-8d34-66deef2b525e/26-6a99df907cb3a.webp' /></p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வத்தளை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என பொலிஸாரால் அடையாளங் காணப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகச் சீனன்குடா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் சீனன்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T21:30:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆப்பிள் பழங்களை வைத்து குட்டை உடையில் நடிகை பார்வதி எடுத்த போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-parvathy-nair-latest-photoshoot-1788430303"></link>
            <id>https://cineulagam.com/article/actress-parvathy-nair-latest-photoshoot-1788430303</id>
            <summary type="text">நடிகை பார்வதிகடந்த 2012ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பாப்பின்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். தமிழில் உத்தம வில...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகை பார்வதி</h2><p>கடந்த 2012ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பாப்பின்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர்.</p><p> தமிழில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் பிஸியாக நடித்து வந்தவர் தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவருடன் திருமணம் செய்துகொண்டார். </p><p>அண்மையில் இவர் வெள்ளை நிற குட்டை உடையில் ஆப்பிள் பழங்களை வைத்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இதோ அந்த போட்டோஸ்,</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T21:30:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானில் காணாமல் போன பிரித்தானிய ஓட்டப்பந்தய வீரர்: மலைப்பாதையில் உடல் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/british-runner-body-found-in-musa-ka-musalla-1788444857"></link>
            <id>https://news.lankasri.com/article/british-runner-body-found-in-musa-ka-musalla-1788444857</id>
            <summary type="text">பாகிஸ்தானின் மூசா கா முசல்லா மலையில் பிரித்தானிய ஓட்டப்பந்தய வீரர் அலெக்சாண்டர் ஹாரிஸின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பிரித்தானிய ஓட்டப்பந்தய வீரர் உடல் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தானின் மூசா கா முசல்லா மலையில் பிரித்தானிய ஓட்டப்பந்தய வீரர் அலெக்சாண்டர் ஹாரிஸின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.</p><h2> பிரித்தானிய ஓட்டப்பந்தய வீரர் உடல் மீட்பு</h2><p>
பாகிஸ்தானின் புகழ்பெற்ற மூசா கா முசல்லா(Musa Ka Musalla) மலையில் 30 வயதுடைய பிரித்தானிய ஓட்டப்பந்தய வீரரும், மலையேற்ற வீரருமான அலெக்சாண்டர் ஹாரியின்(Alexander Harris) உடல் பல நாள் தேடுதலுக்கு பிறகு பள்ளத்தாக்கு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a115ddca-b7d2-4272-aa02-3d767aedb15c/26-6a9980bb3c5aa.webp' /></p><p> ஹாரிஸ் கடந்த சனிக்கிழமை கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள 4000 மீட்டர் உயரம் உள்ள மலையில் நடை பயிற்சி செய்து கொண்டிருந்த போது காணாமல் போனார்.</p><p> வானிலை மோசமானதை அடுத்து அவரது பார்வை திறன் குறைந்துள்ளது. இதனால் தவறான பாதைக்கு சென்ற ஹாரிஸ் பள்ளத்தாக்கில் இருந்து தவறி விழுந்துள்ளார் என அதிகாரிகள் நம்புகின்றனர்.</p><p></p><p> அதிகாரிகளின் தகவல் படி, சனிக்கிழமை அதிகாலை 5.40 மணியளவில் ஹாரிஸ் அவரது மலையேற்ற தோழர்களிடம் இருந்து பிரிந்து சென்றுள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DcxvKyrMUkK/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DcxvKyrMUkK/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DcxvKyrMUkK/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Margalla Trail Runners (@margallatrailrunners)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p> அலெக்சாண்டர் ஹாரிஸை தேடும் பணியில் காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் என 250க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர்.</p><p> கடினமான பகுதியில் தேடுதல் வேட்டையை நடத்த ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.</p><p> தேடுதல் படையினர் இறுதியில் அலெக்சாண்டரின் உடலை காட்டு பாதையின் ஓரத்தில் கண்டுபிடித்தனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T21:30:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் போலி லேபிள் உணவுப் பொருட்கள் - கனடா இறக்குமதி அபாயம் குறித்து மதிப்பீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-probes-india-food-label-fraud-risk-1788463109"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-probes-india-food-label-fraud-risk-1788463109</id>
            <summary type="text">Canada probes India food label fraud risk: இந்தியாவில் போலி லேபிள் உணவுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், கனடா அரசு தேவையான பாதுகாப்பு நடவடிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada probes India food label fraud risk: இந்தியாவில் போலி லேபிள் உணவுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், கனடா அரசு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.</p><h2>

போலி லேபிள் உணவுப் பொருட்கள்</h2><p>மும்பையில் நடந்த உணவுப் பொருள் சோதனையில், போலியான ஊட்டச்சத்து தகவல்கள் மற்றும் காலாவதி திகதிகள் ஒட்டப்பட்ட உணவுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கனடா அரசு தனது இறக்குமதி அபாயங்களை மதிப்பீடு செய்யத் தொடங்கியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4eb8899e-19f4-4806-9a06-1313a0885bcf/26-6a99c80702784.webp' /></p><p>மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) நடத்திய சோதனையில், PepsiCo, Nestlé, Coca-Cola, Unilever போன்ற நிறுவனங்களின் பொருட்கள், போலி லேபிள்களுடன் கிடங்கில் சேமிக்கப்பட்டிருந்தன. </p><p>சுமார் 80,000 டொலர் மதிப்புள்ள பொருட்கள், ரசாயனங்கள் மற்றும் அச்சுப்பொறிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
</p><p></p><h2>கனடாவிற்கு ஏற்றுமதி?</h2><p>இந்த போலி லேபிள்களில், கனடாவில் பயன்படுத்தப்படும் இருமொழி (ஆங்கிலம்-பிரெஞ்சு) ஊட்டச்சத்து தகவல்கள் இடம்பெற்றிருந்தன. 

இது, பொருட்கள் கனடாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்காக மாற்றப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
</p><p>
கனடாவின் Food Inspection Agency (CFIA), “இந்த சம்பவம் கனடா இறக்குமதிக்கு அபாயம் ஏற்படுத்துகிறதா என்பதை நாங்கள் கண்காணித்து வருகிறோம். இதுவரை, இந்த போலி பொருட்கள் கனடாவுக்கு வந்ததாக எந்த ஆதாரமும் இல்லை” என தெரிவித்துள்ளது.</p><p>

மேலும், “போலி திகதிகள், தவறான ஊட்டச்சத்து தகவல்கள், தவறான மூல நாடு குறிப்பு போன்ற உணவு மோசடிகளை மிகக் கடுமையாக எடுத்துக் கொள்ளப்படும்” என்பதையும் தெரிவித்துள்ளது.
</p><p></p><p>இந்த சோதனை, இந்தியாவில் உணவு பாதுகாப்பு சட்டங்களை கடுமையாக அமுல்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும். பல இடங்களில் சுகாதார விதிமுறைகள் மீறப்பட்டால் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
</p><p>
PepsiCo நிறுவனம், “இந்த ஏற்றுமதி நிறுவனங்களுடன் எங்களுக்கு எந்த வணிகத் தொடர்பும் இல்லை. இந்தியாவில் தயாரிக்கப்படும் எங்கள் பொருட்கள், இந்திய சந்தைக்காக மட்டுமே” என்று விளக்கம் அளித்துள்ளது.
</p><p>
இந்த சம்பவம், உலகளாவிய உணவு பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதி தரநிலைகள் குறித்து புதிய கவலைகளை எழுப்பியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><p>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</p></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T21:29:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட மூவருக்கு ஒரே நாளில் கடூழிய சிறைத் தண்டனை: வவுனியா மேல் நீதிமன்றம் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vavuniya-high-court-delivers-swift-verdict-1788464456"></link>
            <id>https://tamilwin.com/article/vavuniya-high-court-delivers-swift-verdict-1788464456</id>
            <summary type="text">16 வயதுக்குக் குறைவான சிறுமிகள் மீது பாலியல் வன்புணர்வு மற்றும் பாரிய பாலியல் துர்நடத்தைகளை மேற்கொண்ட மூன்று நபர்களுக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>16 வயதுக்குக் குறைவான சிறுமிகள் மீது பாலியல் வன்புணர்வு மற்றும் பாரிய பாலியல் துர்நடத்தைகளை மேற்கொண்ட மூன்று நபர்களுக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.</p><p>

2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் செலலிஹிணிகம பகுதியில் உள்ள தனது வீட்டில் வைத்து, 14 வயது சிறுமியை பாரிய பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>கடூழிய சிறைத் தண்டனை</h2><p>
</p><p>
இதனுடன் 50,000 ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபாய் நஷ்டஈடும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, 2020 ஆம் ஆண்டு நந்திமித்த கிராமத்தில் உள்ள சந்தேகநபரின் வீட்டில் தங்கியிருந்த 10 வயது சிறுமியை பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்தியமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3da52002-2c23-4e00-af03-7d18cf702b10/26-6a99e10f057d4.webp' /></p><p>
</p><p>
இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது மற்றும் அவருக்கு ஏற்பட்ட பாதிப்புகளை கருத்திற்கொண்டு, மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 அத்துடன், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 50,000 ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபாய் நஷ்டஈடும் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><h2>மூன்று குற்றவாளிகள்</h2><p>

மூன்றாவது சம்பவத்தில், 14 வயது சிறுமியை இரண்டு சந்தர்ப்பங்களில் பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளன.</p><p>

2022 ஆம் ஆண்டு கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவங்கள் தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட நபருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eee9f314-d77c-43f7-842d-1a3b2944865a/26-6a99e10fe6ff1.webp' /></p><p>

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>

சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இவ்வாறான கடுமையான தண்டனைகள் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு அச்சத்தை ஏற்படுத்துவதுடன், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T21:17:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதுமாப்பிள்ளைக்கு நடத்தப்பட்ட சம்பவம் ; இளம் பொறியிலாளருக்கு மனைவி கண் முன்னே நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-engineer-meets-tragic-fate-before-wife-1788458718"></link>
            <id>https://jvpnews.com/article/young-engineer-meets-tragic-fate-before-wife-1788458718</id>
            <summary type="text">தூத்துக்குடியில் வீடுபுகுந்து வாலிபரை அவரது மனைவி கண்முன்னே சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய 4 பேர் கொண்ட முகமூடிக் கும்பலை பொலிசார் வலைவீச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தூத்துக்குடியில் வீடுபுகுந்து வாலிபரை அவரது மனைவி கண்முன்னே சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய 4 பேர் கொண்ட முகமூடிக் கும்பலை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
</p><p style="text-align: justify; ">தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பெரிய தெப்பக்குளம் அருகேயுள்ள வடக்கு ரதவீதியைச் சேர்ந்த மெக்கானிக்கல் பொறியியலாளர்.&nbsp;</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27402e49-8c00-4441-ba7e-d9b22b6c42a0/26-6a99b6df9b926.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;தீவிர சிகிச்சை</h2><p style="text-align: justify; ">இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.&nbsp; குறித்த பொறியியலாளர் தினமும் மதியம் உணவருந்த வீட்டிற்கு வருவது வழக்கம். </p><p style="text-align: justify; ">அந்த வகையில் நேற்று மதியம் அவர் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்தபடி வந்த 4 பேர் கொண்ட கும்பல், கண்இமைக்கும் நேரத்தில்&nbsp; உணவருந்திக் கொண்டிருந்த முத்துக்கணேசனை அரிவாளால் சரமாரியாக வெட்டியது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி கதறி கூச்சலிட்டார்.

வாலிபருக்கு தீவிர சிகிச்சை
உடல் முழுவதும் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் முத்துக்கணேசன் உயிருக்குப் போராடினார்.&nbsp;</p><p style="text-align: justify; ">அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த முத்துக்கணேசனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
</p><p style="text-align: justify; ">&nbsp; </p>]]></content>
            <updated>2026-09-03T21:02:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாரிகளை மிரள வைத்த இளைஞனின் சூட்சமம் ; வசமாக பிடிபட்ட சந்தேக நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-man-s-trick-that-shocked-authorities-1788463953"></link>
            <id>https://jvpnews.com/article/young-man-s-trick-that-shocked-authorities-1788463953</id>
            <summary type="text">பதுளை, ஹிதகொட பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், போதைப்பொருள் பக்கற்றுகளை பல்வேறு இடங்களில் வைத்து செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், எல்ல ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதுளை, ஹிதகொட பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், போதைப்பொருள் பக்கற்றுகளை பல்வேறு இடங்களில் வைத்து செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், எல்ல பகுதியில் வைத்து பண்டாரவளை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>


மஹியங்கனை, பிபில மற்றும் மெதகம ஆகிய பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட இடங்களுக்கு போதைப்பொருள் பக்கற்றுகளை வைத்துச் சென்ற பின்னர், எல்ல மற்றும் பண்டாரவளை பகுதிகளில் உள்ள இடங்களுக்கு பக்கற்றுகளை எடுத்துச் செல்லும் நோக்கில் பயணித்தபோதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/571fa665-bdeb-4fb9-9fcd-1fa3c6fa3a5b/26-6a99cb52d1966.webp' /></p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 40 போதைப்பொருள் பக்கற்றுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>
மேலும், சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T21:00:44+00:00</updated>
        </entry>
    </feed>
