<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-02T15:59:05+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த ராசியினர் இருக்கும் இடத்தில் சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது! ஏன்னு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/zodiac-signs-who-make-everyone-laugh-1788361518"></link>
            <id>https://manithan.com/article/zodiac-signs-who-make-everyone-laugh-1788361518</id>
            <summary type="text">வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும். ஆனால் அது எத்தனை பேருக்கு நிஜமாகிறது என்றால், வெகு சிலருக்கே. சிரிப்பு மனித வாழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும். ஆனால் அது எத்தனை பேருக்கு நிஜமாகிறது என்றால், வெகு சிலருக்கே. சிரிப்பு மனித வாழ்க்கையின் முக்கிய அம்சங்களில் ஒன்று. சிலர் எப்போதும் மற்றவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் அசாத்திய திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.</p><p>

ஒருவரின் பிறந்த ராசி, அவர்களின் ஆளுமை மற்றும் குணாதிசயங்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதில் நகைச்சுவை உணர்வும் முக்கிய இடம் வகிக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f860bbb-041d-45bb-b538-731049fae25c/26-6a98432d38e52.webp' /></p><p></p><p> ஜோதிடத்தின் படி, சில ராசிகளில் பிறந்தவர்கள் இயற்கையாகவே அதிக நகைச்சுவை உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். அவர்களைச் சுற்றியிருப்பவர்களின் முகத்திலும் புன்னகை நிறைந்திருக்கும் படி பார்த்துக்கொள்வார்கள்.&nbsp;</p><p>அப்படி இருக்கும் இடத்தில் அனைவரையுமே சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5698a06b-0979-4496-acd1-bcc3a5152622/26-6a98432de36de.webp' /></p><h2>
</h2><p>மிதுன ராசிக்காரர்கள் புத்திக்கூர்மை மற்றும் தகவல் தொடர்பின் அதிபதியான புதனால் ஆளப்படுகிறார்கள். அவர்களின் புத்திசாலித்தனம் நகைச்சுவை உணர்விலும் வெளிப்படும்.</p><p> விரைவாகச் சிந்திக்கும் இவர்கள், வார்த்தை விளையாட்டுகள் மற்றும் சுவாரஸ்யமான கதைகள் மூலம் எந்தச் சூழலையும் வேடிக்கையாக மாற்றி அனைவரையும் சிரிக்க வைப்பார்கள். </p><p>அவர்களின் நகைச்சுவை புத்திசாலித்தனமாகவும் இலகுவாகவும் இருப்பதால், மற்ற ராசிகளை விட வேடிக்கையானவர்களாகத் திகழ்கிறார்கள்.</p><h2>

சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/355fd10f-9a42-4c4c-ada7-9daaeb834472/26-6a98432e9bfcd.webp' /></p><h2>
</h2><p>சிம்ம ராசிக்காரர்கள் கிரகங்களின் ராஜாவான சூரியனால் ஆளப்படுவதால், பிரகாசமான மற்றும் கவர்ச்சியான ஆளுமை கொண்டவர்கள். </p><p>மக்களைச் சிரிக்க வைத்து கவனத்தை ஈர்ப்பதையும், மற்றவர்களை மகிழ்விப்பதையும் விரும்புவார்கள். இவர்களுக்கு மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் எந்த செயலும் மிகவும் பிடித்தாகவே இருக்கும்.&nbsp;</p><p> குறும்பு கலந்த நகைச்சுவை உணர்வு கொண்ட இவர்கள், உடல் மொழி மற்றும் கதை சொல்லும் திறன் மூலம் அனைவரையும் சிரிக்க வைப்பார்கள்.</p><h2>

தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e31ee235-e01c-478d-b1ce-fcfd8144b7dc/26-6a98432f4baec.webp' /></p><p></p><h2>
</h2><p>தனுசு ராசிக்காரர்கள் வேடிக்கையாகவும் சாகசமாகவும் இருக்க விரும்புவார்கள். நகைச்சுவையாகப் பேசத் தயங்காத இவர்களின் நகைச்சுவை வெளிப்படையானதாகவும், மற்றவர்களைப் புண்படுத்தாத வகையிலும் இருக்கும். </p><p>மற்றவர்கள் சொல்லத் தயங்கும் விஷயங்களைக்கூட சிரிக்க வைக்கும் விதத்தில் வெளிப்படையாகச் சொல்வதில் இவர்கள் கில்லாடிகளாக இருப்பார்கள்.</p><p>அவர்களின் பரந்த மனப்பான்மையும் விளையாட்டுத்தனமான குணமும் நகைச்சுவையை இயல்பாகவும் உற்சாகமாகவும் மாற்றுகின்றது.&nbsp;</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T15:39:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளியான பெறுபேறுகள் ; பெற்றோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ; சட்ட நடவடிக்கை நிச்சயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/exam-results-released-parents-beware-1788362871"></link>
            <id>https://jvpnews.com/article/exam-results-released-parents-beware-1788362871</id>
            <summary type="text">தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பிள்ளைகளைத் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என பெண்கள் மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பிள்ளைகளைத் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பிள்ளைகளைத் தண்டிப்பது அல்லது மனரீதியாகத் துன்புறுத்துவதைத் தவிர்க்குமாறு அந்த அறிக்கை ஊடாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4c72dbe-8b94-445c-b60d-498d22578936/26-6a984078e6284.webp' /></p><h2 style="text-align: justify; ">தண்டனைக்குரிய குற்றம்</h2><p style="text-align: justify; "> 

அத்துடன், பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பிள்ளைகள் அசௌகரியத்திற்குள்ளாகும் வகையில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரப்புரைகளை மேற்கொள்வதையும் தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

மேற்கூறியவாறு செயற்படுவது சிறுவர் துன்புறுத்தலின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதால், அவ்வாறு செய்பவர்களுக்கு எதிராக அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-02T15:27:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய டி20 போட்டியில் 2 ஓட்டங்களில் சதத்தை தவறவிட்ட வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jj-smuts-98-runs-in-60-balls-vs-belfast-wolves-1788362947"></link>
            <id>https://news.lankasri.com/article/jj-smuts-98-runs-in-60-balls-vs-belfast-wolves-1788362947</id>
            <summary type="text">பெல்ஃபாஸ்ட் வோல்வ்ஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஜேஜே ஸ்முட்ஸ் 98 ஓட்டங்கள் விளாசினார்.

பெல்ஃபாஸ்ட் வோல்வ்ஸ் அணிக்கு எதிரான ஐரோப்பிய டி20 போட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெல்ஃபாஸ்ட் வோல்வ்ஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஜேஜே ஸ்முட்ஸ் 98 ஓட்டங்கள் விளாசினார்.
</p><p>
பெல்ஃபாஸ்ட் வோல்வ்ஸ் அணிக்கு எதிரான ஐரோப்பிய டி20 போட்டியில் எடின்பர்க் வீரர் ஜேஜே ஸ்முட்ஸ் 60 பந்துகளில் 98 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;</p><h2>ஜேஜே ஸ்முட்ஸ்</h2><p>
எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் மற்றும் பெல்ஃபாஸ்ட் வோல்வ்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐரோப்பிய டி20 போட்டி வூர்பர்க்கில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19f0f008-f20e-47c0-b2ae-e35670223220/26-6a98412b40437.webp' />&nbsp;</p><p></p><p>
நாணய சுழற்சியில் வென்ற பெல்ஃபாஸ்ட் வோல்வ்ஸ் அணி பந்துவீச்சை தெரிவு செய்ய, எடின்பர்க் கேஸல் துடுப்பாட்டத்தைத் தொடங்கியது.
</p><p>
ரோஸ் அடைர் 9 ஓட்டங்களிலும், கோஸ் 14 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க, ஜேஜே ஸ்முட்ஸ் (JJ Smuts) அதிரடி ஆட்டத்தில் மிரட்ட அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.</p><p>

மறுமுனையில் பிரண்டன் மெக்முல்லன் 16 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 30 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.</p><h2> 

189 ஓட்டங்கள் குவிப்பு </h2><p>அணியின் ஸ்கோர் 171 ஓட்டங்களாக உயர்ந்தபோது ஜேஜே ஸ்முட்ஸ் 98 (60) ஓட்டங்களில் (3 சிக்ஸர், 11 பவுண்டரிகள்) ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். </p><p>

அணித்தலைவர் மிட்செல் சான்ட்னர் 13 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 25 ஓட்டங்கள் விளாச, எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் அணி 189 ஓட்டங்கள் குவித்தது. </p><p>

மார்க் அடைர், ஃப்ரெட் கிளாசென் தலா 2 விக்கெட்டுகளும், சௌரப் நெத்ரவால்கர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbf99c15-f766-4bc9-b86d-bf919fbc993c/26-6a98412c132ba.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T15:27:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் நீண்டகால கால்நடை திருடன் சிக்கினான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/long-time-cattle-thief-caught-in-batticaloa-1788361372"></link>
            <id>https://ibctamil.com/article/long-time-cattle-thief-caught-in-batticaloa-1788361372</id>
            <summary type="text">&amp;nbsp;மட்டக்களப்பில் நீண்டகாலமாக கால் நடைகளை திருடி வந்த திருடன் ஒருவரை நேற்று
செவ்வாய்க்கிழமை (01) கைது செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மட்டக்களப்பில் நீண்டகாலமாக கால் நடைகளை திருடி வந்த திருடன் ஒருவரை நேற்று
செவ்வாய்க்கிழமை (01) கைது செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் மீட்டுள்ளதாக மட்டு தலைமையக
காவல்துறையினர் தெரிவித்தனர்.
</p><p>
மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியைச் சேர்ந்தவரே கைது செய்யப்பட்டவராவார்.&nbsp;</p><p>&nbsp;கடந்த மாதம் 18 ம் திகதி இருதயபுரம் பகுதியில் உள்ள வீதி ஒன்றின் ஓரமாக
மேய்ச்சலில் 5 ஆடுகள் ஈடுபட்ட நிலையில் சிறிய ரக வான் ஒன்றில் சென்ற
திருடன் மேய்ச்சலில் ஈடுபட்ட ஆடு ஒன்றை பிடித்து வானில் ஏற்றி கடத்திச்
சென்றுள்ளார்.
</p><p>
</p><h2>ஆட்டின் உரிமையாளர் காவல் நிலையத்தில் முறைப்பாடு</h2><p>இதனையடுத்து ஆட்டின் உரிமையாளர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து
காவல் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர்
வை. விஜயராஜ் தலைமையிலான காவல்துறை குழுவினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில்
சிசிடிவி கமரா மூலம் ஆட்டை கடத்திய வாகனத்தினை அடையாளம் கண்டு கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d192bd95-a59d-4ce9-b35f-3022f3b3e299/26-6a984000385e6.webp' /></p><p>
</p><p>&nbsp;நேற்று ஆட்டை கடத்திச் சென்ற திருடனை
காத்தான்குடியில் வைத்து கைது செய்ததுடன் ஆட்டை கடத்திய சிறிய ரக வானையும்
மீட்டதுடன் கைது செய்யப்பட்ட திருடன் நீண்ட காலமாக வாகனங்களில் ஆடு, மாடுகளை
திருடி கடத்தி சென்று வருவதாக காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணையில்
தெரியவந்துள்ளது</p><p></p><h2>நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை</h2><p>
</p><p>கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு
பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c2c49d9-39d3-44e9-91ca-72fafa1cba6b/26-6a98400106763.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T15:26:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[2 வாரத்தில் இருமுடி செய்த அதிகாரபூர்வ வசூல்.. ரவி தேஜா கெரியரில் இது முதல் முறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ravi-teja-irumudi-crosses-200-crs-in-box-office-1788360993"></link>
            <id>https://cineulagam.com/article/ravi-teja-irumudi-crosses-200-crs-in-box-office-1788360993</id>
            <summary type="text">ரவி தேஜா நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி இருமுடி படம் ரிலீஸ் ஆகி இருந்தது. சிவ நிர்வாணா இயக்கத்தில் இந்த படத்தை மைத்ரி நிறுவனம் தயாரித்து இருந்தது.மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரவி தேஜா நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி இருமுடி படம் ரிலீஸ் ஆகி இருந்தது. சிவ நிர்வாணா இயக்கத்தில் இந்த படத்தை மைத்ரி நிறுவனம் தயாரித்து இருந்தது.</p><p>முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் வந்துகொண்டிருந்த நிலையில் தற்போது புது சாதனையை படம் படைத்து இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f055c04-933b-407c-b568-a0976aefb9b5/26-6a9839250aee3.webp' /></p><p>
</p><h2>200 கோடி
</h2><p>இரண்டு வாரங்களில் இருமுடி படம் 200 கோடி ரூபாய் என்ற வசூல் சாதனையை தொட்டு இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
</p><p>
ரவி தேஜா கெரியரில் இது முதல் 200 கோடி வசூல் படம் என்பதால் ரசிகர்களும் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T15:02:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த தரப்பை பழிவாங்கிய அநுர அரசு - ஏமாற்றத்தில் நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-party-s-meeting-in-struggle-1788313085"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-party-s-meeting-in-struggle-1788313085</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணிக்கு மிகப்பெரிய இரண்டு விளையாட்டு மைதானங்களையும் வழங்க அந்த பகுதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணிக்கு மிகப்பெரிய இரண்டு விளையாட்டு மைதானங்களையும் வழங்க அந்த பகுதி மாநகர சபை மறுத்துள்ளது. </p><p>

குறித்த நாட்களில் வேறு தரப்பினரால் வாலிசிங்க ஹரிஸ்சந்திர விளையாட்டு மைதானமும் சல்காது விளையாட்டு மைதானமும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக அன்றைய தினம் அவற்றை வழங்க முடியாது என அனுராதபுரம் மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளார். </p><p>

அத்துடன், இதற்கு பொருத்தமான வேறொரு தினத்தை ஒதுக்கிக்கொள்வது தொடர்பில் பரிசீலிக்குமாறும் அறிவித்துள்ளார்.</p><h2><b> 

கோரிக்கை நிராகரிப்பு</b></h2><p>எனினும், சல்காது மைதானத்தை பெறுவதற்காக தங்களால் முன்னரே விண்ணப்பிக்கப்பட்டிருந்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. </p><p>இருந்த போதிலும், விண்ணப்பித்த வேறு ஒரு தரப்பினருக்கு குறித்த மைதானத்தை வழங்குவதற்கு மாநகர சபை செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/SIg-Zv7vr2I" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p><p>

அத்துடன் வாலிசிங்க ஹரிஸ்சந்திர விளையாட்டு மைதானமும் மூன்றாவது தரப்பினரால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி தங்களுக்கு வழங்குவது மறுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் குற்றம் சுமத்துகின்றனர். </p><p>

இது தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் மேயரின் அறிவுறுத்தலுக்கமையவே மேற்கொள்ளப்பட்டதாகவும் மொட்டுக்கட்சியின் பிரதிநிதிகள் குற்றம் சுமத்துகின்றனர்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T15:01:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[இயக்குநர் சுந்தர்ராஜன் மன்னிப்பு கேட்கவேண்டும்!! வானதி சீனிவாசன் கண்டனம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/vanathi-srinivasan-condemn-director-sundarrajan-1788355326"></link>
            <id>https://viduppu.com/article/vanathi-srinivasan-condemn-director-sundarrajan-1788355326</id>
            <summary type="text">இயக்குநரும் நடிகருமான சுந்தர்ராஜன், ராஜாதி ராஜா, வைதேகி காத்திருந்தாள், மெல்லத்திறந்தது கதவு, திருமதி பழனிசாமி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். சமீபத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இயக்குநரும் நடிகருமான சுந்தர்ராஜன், ராஜாதி ராஜா, வைதேகி காத்திருந்தாள், மெல்லத்திறந்தது கதவு, திருமதி பழனிசாமி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.</p><p> சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சுந்தர்ராஜன், கோவை குண்டிவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளது பலரது கண்டனங்களை பெற்று வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a381c68-d2b8-4aad-ab32-c65102dcfd94/26-6a98230061bf4.webp' /></p><p> </p><h2>சுந்தர்ராஜன்</h2><p>அவர் பேசுகையில், கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் அப்பாவி செத்துப் போயிட்டார்கள் என்பார்கள். அப்பாவியாக இருப்பதை காட்டிலும் செத்துப் போயிடு என்று சொல்கிறேன்.</p><p> யாருங்க அப்பாவி, நீங்க பஸ்ல உக்காரப்போங்க, ப்ரதர் இது என் சீட்டுனு சொல்லி தினத்தந்தி பேப்பரையோ, தினகரன் பேப்பரையோ போட்டு வச்சுட்டு என் சீட்டுனு சொல்லுவான். செருப்பை வச்சுட்டு போவாங்க, கைக்குட்டை வச்சுட்டுப் போவாங்க, இது என் சீட்டுனு சொல்வாங்க, அவன் ஏமாளியா? என்று பேசியிருக்கிறார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/826fedbc-cf48-4dc8-b3e2-3961c0e35766/26-6a98230113f72.webp' /></p><p>இதுகுஈர்த்து பலரும் கண்டனம் செலுத்தி வந்த நிலையில், பாஜகவின் முன்னாள் எம் எல் ஏ வும் முக்கிய தலைவர்களில் ஒருவருமான வாந்தி சீனிவாசன் தன்னுடைய கண்டனத்தை கூறியிருக்கிறார். கொச்சைப்படுத்தி பேசிய அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">திரைப்பட நடிகர், இயக்குனர் சுந்தர்ராஜன் திரைப்பட இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களை கொச்சைப்படுத்தி பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.<br><br>1998ல் இந்தியாவே அதிர்ந்த கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 58 பேர் உரிழந்த சம்பவம் இன்னும் மனதை… <a href="https://t.co/3eG7rXAQFA">pic.twitter.com/3eG7rXAQFA</a></p>&mdash; Vanathi Srinivasan (@VanathiBJP) <a href="https://x.com/VanathiBJP/status/2094297432863777006?ref_src=twsrc%5Etfw">August 31, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-09-02T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு ஏழு தாழ்வான தள பேருந்துகள் நன்கொடை வழங்க்கிய ஜப்பான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/japan-donated-seven-low-floor-buses-to-sri-lanka-1788354634"></link>
            <id>https://jvpnews.com/article/japan-donated-seven-low-floor-buses-to-sri-lanka-1788354634</id>
            <summary type="text">&amp;nbsp; ஜப்பானிய அரசாங்கம் இலங்கைக்கு ஏழு தாழ்வான தள அமைப்பு கொண்ட (low-floor) பேருந்துகள் நன்கொடையாக வழங்கியுள்ளது.


இரு நாடுகளுக்கும் இடையிலான தற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜப்பானிய அரசாங்கம் இலங்கைக்கு ஏழு தாழ்வான தள அமைப்பு கொண்ட (low-floor) பேருந்துகள் நன்கொடையாக வழங்கியுள்ளது.
</p><p>

இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய அபிவிருத்தி ஒத்துழைப்பின் கீழ், நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்காக ஏழு தாழ்வான தள அமைப்பு கொண்ட (low-floor) பேருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45809b8a-df37-48ea-ba0b-7e194068c36b/26-6a98204c565ae.webp' /></p><p>

ஜப்பானிய அரசாங்கம் மற்றும் ஜப்பானின் யோகோஹாமா நகர மக்களால் கூட்டாக அன்பளிப்பாக வழங்கப்பட்ட இந்த ஏழு புதிய பேருந்துகளையும் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு, இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் மேன்மைதங்கிய அகியோ இசொமாட்டாவின் (Akio Isomata) பங்குபற்றலுடன் இடம்பெற்றது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - ஈரான் இடையே தீவிரமடையும் போர் தாக்குதல்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் உச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/escalating-hostilities-between-the-us-and-iran-1788358526"></link>
            <id>https://tamilwin.com/article/escalating-hostilities-between-the-us-and-iran-1788358526</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே கடந்த ஜூலை மாதத்திற்குப் பின்னர்
மிகப்பாரிய அளவிலான நேரடி வான் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள்
இடம்பெற்றுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே கடந்த ஜூலை மாதத்திற்குப் பின்னர்
மிகப்பாரிய அளவிலான நேரடி வான் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள்
இடம்பெற்றுள்ளதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் போர்
தீவிரமடைந்துள்ளது.
</p><p>
ஈரானிய புரட்சிகரக் காவல் படையின்(IRGC) வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார்
நிலையங்கள், தொடர்பாடல் மையங்கள் மற்றும் கடல்சார் கடற்படை இலக்குகளை இலக்கு வைத்து அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.
</p><p>
இந்த தாக்குதலில் தெற்கு ஈரானின் சீரிக் பகுதியில் திருமண நிகழ்வொன்று
இடம்பெற்ற வீடு தாக்கப்பட்டதில் சிறுவன் ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்ததுடன்,
68 பேர் காயமடைந்துள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
</p><h2>
ஈரான் ஏவுகணை தாக்குதல்..</h2><p>
இதற்குப் பதிலடியாக பஹ்ரைன், ஜோர்தான், குவைத் மற்றும் ஈராக்கில் உள்ள
அமெரிக்க இராணுவ முகாம்கள் மற்றும் இலக்குகள் மீது ஈரான் ஏவுகணை மற்றும்
ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7c39277-2ebb-4594-a963-5a7708f392c1/26-6a98397f405ae.webp' /></p><p>
</p><p>
 அமெரிக்கப் படைகளை பிராந்தியத்தில்
இருந்து முற்றாக வெளியேற்றுவதே தமது முதன்மை நோக்கம் என ஈரானிய இராணுவத் தலைமை அறிவித்துள்ளது.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை ஈரான் முடக்கியுள்ள நிலையில்,
அமெரிக்காவால் வழிநடத்தப்பட்ட இரு எண்ணெய்க் கப்பல்கள் கடலில் வீசப்பட்ட
கண்ணிவெடிகளில் சிக்கி சேதமடைந்துள்ளன.</p><p>

இந்த தீவிரப் போர்ச் சூழல் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள்
மீண்டும் உச்சமடைந்துள்ளதுடன், ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும்
கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p>YOU MAY LIKE THID VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/HWFRn2b_AbA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-02T14:58:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் விசாரணை நிறைவு - உயர் நீதியரசர்கள் குழாம் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-constitutional-amendment-concluded-1788360704"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-constitutional-amendment-concluded-1788360704</id>
            <summary type="text">அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான பர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான பரிசீலனை நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இது தொடர்பான அறிவிப்பு இன்று(02.09.2026) உயர் நீதிமன்றத்தால் வெளியிடப்பட்டுள்ளது. </p><p>

இதனையடுத்து, சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை தொடர்பான வியாக்கியானத்தை நாடாளுமன்ற சபாநாயகருக்கு, அனுப்பி வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான ஐந்து நீதியரசர்களைக் கொண்ட ஆயம் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
</p><h2>
உயர் நீதிமன்றத்தின் முடிவு</h2><p>

சட்டமூலத்திற்கு எதிராகவும், அதற்கு ஆதரவாகவும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களையும், சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் சமர்ப்பணங்களையும் பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2e52ff3-aa9b-4d59-bb12-cb05cfce5c5c/26-6a98386e12d81.webp' /></p><p>
</p><p>
மேலும், மனுக்கள் தொடர்பில் ஏதேனும் எழுத்துமூல சமர்ப்பணங்கள் இருந்தால், அவற்றை நாளை பிற்பகல் 3 மணிக்கு முன்னர் நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
</p><p>
இதேவேளை, நாட்டின் நீதித்துறை நடவடிக்கைகளை விரிவுபடுத்தி, நீதிமன்ற செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதுடன், நிலுவையில் உள்ள வழக்குகளை துரிதமாக விசாரித்து முடிக்கும் நோக்கிலேயே 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலமும், நீதித்துறை அமைப்பு தொடர்பான திருத்தச் சட்டமூலமும் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளதாக சட்ட மாஅதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><h2>

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம்</h2><p>
சட்ட மாஅதிபர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான மன்றாடியார் நாயகம் விராஜ் தயரத்ன இந்த விடயங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d3326fe-3318-48b3-aee3-4572bb05d56a/26-6a98386edca35.webp' /></p><p>
</p><p>
குறித்த சட்டமூலங்கள் தொடர்பான மனுக்கள் மீதான பரிசீலனை உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற நிலையில், இன்று(02) விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.
</p><p>
இந்த நிலையில், உயர் நீதிமன்றம் சபாநாயகருக்கு அனுப்பவுள்ள இரகசிய வியாக்கியானம், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் அடுத்தகட்ட நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு முக்கியமானதாக அமையவுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T14:53:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்ச ஆணைக்குழு நாமல் ராஜபக்சவிற்கு அழைப்பாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-rajapaksa-summoned-to-bribery-on-4th-1788359476"></link>
            <id>https://ibctamil.com/article/namal-rajapaksa-summoned-to-bribery-on-4th-1788359476</id>
            <summary type="text">சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) முன் வெள்ளிக்கிழமை (4) முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>

ராஜபக்சவின் வழக்கறிஞர், முதித ஆர். லொகுமுதலி, தனது கட்சிக்காரருக்கு காலை 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு CIABOC எழுத்துபூர்வமாக முறைப்படி அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார்.&nbsp;</p><h2>ஆணைக்குழு முன் முன்னிலையாவார்</h2><p>வழக்கறிஞரின் தகவலின்படி, ராஜபக்ச அழைப்பாணைக்கு இணங்க ஒப்புக்கொண்டுள்ளார், மேலும் கோரப்பட்டபடி ஆணைக்குழுவின் முன் முன்னிலையாவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17c0d651-d60f-4dad-923f-bc5b0d522691/26-6a9836921ca5e.webp' /></p><p>

செப்டம்பர் 4 ஆம் திகதி CIABOC முன் முன்னிலையாக வேண்டும் என்று நாமல் ராஜபக்சவுக்கு திங்கட்கிழமை முதலில் தெரிவிக்கப்பட்டது.

அழைப்பாணைக்கான காரணம் வெளியிடப்படவில்லை.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T14:45:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரில் பில் செலுத்தவில்லை; இளம்பெண்ணுக்கு ''மொட்டை அடித்த' நிர்வாகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/thailand-bar-shaves-the-head-woman-failed-pay-bill-1788353902"></link>
            <id>https://jvpnews.com/article/thailand-bar-shaves-the-head-woman-failed-pay-bill-1788353902</id>
            <summary type="text">&amp;nbsp; தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், மது அருந்திவிட்டு பணம் செலுத்தாத காரணத்திற்காக வாடிக்கையாளரின் தலையை மதுபான விடுதி ஊழியர் ஒருவர் பெண்ணின் தலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், மது அருந்திவிட்டு பணம் செலுத்தாத காரணத்திற்காக வாடிக்கையாளரின் தலையை மதுபான விடுதி ஊழியர் ஒருவர் பெண்ணின் தலையை மொட்டொ போட்ட சம்பவம் சமூக ஊடங்களில் வெளியான நிலையில் பெரும் விவாத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

 ஆகஸ்ட் 25 ஆம் திகதி 18 வயதுப் பெண் ஒருவர் போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி பிங்க்லாவ் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான மதுபான விடுதிக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0ad2ed2-e2e5-44bb-966a-63b48c5d0b45/26-6a981d6fb9f63.webp' /></p><h2>பெரிய தொகை பில்</h2><p> </p><p>

 பாரில் பெண் உணவருத்தியதுடன் , குடித்த செலவு சுமார் 60,000 தாய் பாட் ($1,800 அமெரிக்க டொலர்) என்ற பெரிய தொகை பில் வந்துள்ளது. </p><p>

 அந்தப் பெண் பணம் செலுத்தாமல் வெளியேற முயல்வதை ஊழியர்கள் உணர்ந்த காரணத்தினால் பொலிஸார் ஈடுபடுத்துவதற்குப் பதிலாக, பெண்ணிற்கு மொட்டையடித்துள்ளனர்.</p><p></p><p> </p><p>
 
செலுத்தப்படாத கணக்கின் ஒரு பகுதியைத் தீர்ப்பதற்காக, முறைசாரா முடி வாங்கும் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளுமாறு பார் ஊழியர்கள் பெண்ணை வற்புறுத்தி இருக்கின்றனர்.</p><p> 

 இதனையடுத்து கட்டணத்திற்காக தன்னுடைய முடியை மழிக்க அந்த பெண் ஒப்புக்கொண்டதாகவும் அதன்பிறகே மொட்டை அடித்தாகவும் பார் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>

எலக்ட்ரிக் ‘ரேசர்’ மூலம் மொட்டையடிக்கப்பட்டதாகவும், அப்போது வீடியோ எடுத்த நபர், ‘நாங்கள் உன்னை ஏமாற்றவில்லை, தலைமுடிக்கு உரிய சந்தை விலையை பில் தொகையில் ஈடுகட்ட கழிக்கிறோம்’ என்று பேசியுள்ளார். </p><p>

பெண்ணிற்கு மொட்டை அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதையடுத்து, தாய்லாந்து சமூக மேம்பாடு மற்றும் மனித பாதுகாப்பு அமைச்சகம் இதுகுறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.&nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[9 வயது சிறுமியை கடத்திய சொந்த மாமா: ரூ.60 லட்சம் கேட்டு மிரட்டல்: பொலிஸார் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/9-years-old-kidnapped-in-assam-2-arrested-1788359326"></link>
            <id>https://news.lankasri.com/article/9-years-old-kidnapped-in-assam-2-arrested-1788359326</id>
            <summary type="text">அசாம் மாநிலத்தில் குடும்ப உறுப்பினர்களால் 9 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடத்தப்பட்ட 9 வயது சிறுமி
அசாம் மாநிலத்தின...</summary>
            <content type="html"><![CDATA[<p>அசாம் மாநிலத்தில் குடும்ப உறுப்பினர்களால் 9 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> கடத்தப்பட்ட 9 வயது சிறுமி</h2><p>
அசாம் மாநிலத்தின் ஜோர்காட் மாவட்டத்தில் 9 வயது சிறுமி உறவினர்களால் கடத்தப்பட்ட நிலையில், சிறுமியை காவல்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.</p><p> மாரியானி பகுதியில் கடத்தப்பட்ட 9 வயது சிறுமி காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையால் தேர்கான் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளார்.</p><h2> என்ன நடந்தது?</h2><p>
பொலிஸார் வெளியிட்ட தகவலின் படி, சிறுமியின் தாய் மாமா சாகர் கோஷ் மற்றும் அவரது மனைவி மனிஷா கோஷ் தம்பதி மாரியானி உள்ள லோக்நாத் பவனில் அறையை வாடகை எடுத்து மூன்று நாட்கள் தங்கியுள்ளனர்.</p><p> அங்கிருந்து உறவினர் வீட்டிற்கு சென்ற அந்த தம்பதி, பொய்யான காரணங்களை கூறி சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்றுள்ளனர்.</p><p> சிறுமி பல மணி நேரங்கள் ஆகியும் வீடு திரும்பாததை அடுத்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மாலை 5 மணியளவில் குடும்பத்தை தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள் ரூ.60 லட்சம் பிணைத் தொகையாக கேட்டு மிரட்டியுள்ளனர்.</p><p> இதனை காவல் துறையினருக்கு தெரிவித்தால் சிறுமியை கொன்று விடுவதாகவும், பணத்தை இரவு 8 மணிக்குள் கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/394f5caf-7269-4a46-b51e-95c5e47663e9/26-6a98329fb7636.webp' /></p><p></p><h2> காவல்துறையினர் அதிரடி</h2><p>
கடத்தல்காரரின் மிரட்டல்களுக்கு பயப்படாமல் தந்தை உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.</p><p> உடனே விரைந்து செயல்பட்ட காவல் துறையினர், தேர்கான் பகுதியில் உள்ள இஸ்லாம்கர் பகுதியில் இருந்து இரவு 2 மணியளவில் சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p> மேலும் சிறுமியின் மாமா சாகர் கோஷ் கொய்லகடாவிலும், அவரது கூட்டாளி வாசிம் ரஹ்மான் இஸ்லாம்கரிலும் வைத்து&nbsp; பொலிஸார் கைது செய்தனர்.</p><p> அத்துடன் தலைமறைவாக உள்ள குற்றவாளியை கைது செய்ய பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-02T14:29:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளியான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு : சிறுவர்களை தண்டித்தால் சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dont-punish-children-over-scholarship-results-1788356433"></link>
            <id>https://ibctamil.com/article/dont-punish-children-over-scholarship-results-1788356433</id>
            <summary type="text">&amp;nbsp;தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியான நிலையில், பெறுபேறுகளின் அடிப்படையில் சிறுவர்களை உடல் ரீதியாகத் தண்டிக்கும் அல்லது மனரீதியாகத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியான நிலையில், பெறுபேறுகளின் அடிப்படையில் சிறுவர்களை உடல் ரீதியாகத் தண்டிக்கும் அல்லது மனரீதியாகத் துன்புறுத்தும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர்கள் நல அமைச்சகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியான நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
</p><h2>உடல், உள ரீதியாக தண்டிக்காதீர்கள்</h2><p>பரீட்சை முடிவுகளுக்காக குழந்தைகளைத் தண்டிப்பதையோ அல்லது அவர்களை மனரீதியாகத் துன்புறுத்துவதையோ தவிர்க்குமாறு பெற்றோர்களையும் பாதுகாவலர்களையும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/419c0f3a-2ba9-4c4e-a90e-ad27d28c7231/26-6a98311fa1e57.webp' /></p><p>
</p><p>
மேலும், பரீட்சை முடிவுகள் தொடர்பான உள்ளடக்கங்களை, குழந்தைகளுக்கு சங்கடத்தையோ, மன உளைச்சலையோ அல்லது அசௌகரியத்தையோ ஏற்படுத்தும் வகையில் வெளியிடுவதற்கும் பரப்புவதற்கும் எதிராக ஊடக நிறுவனங்களையும் சமூக ஊடகப் பயனர்களையும் அது எச்சரித்துள்ளது.</p><p></p><p>

</p><h2>அதிகபட்ச சட்ட நடவடிக்கை</h2><p>இத்தகைய நடத்தை சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றங்களாக அமையக்கூடும் என்றும், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சகம் எச்சரித்துள்ளது.&nbsp; </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9a07dd7-7c6e-404a-a4cc-b6592e567a2a/26-6a98312052854.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T14:22:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொள்கை அற்ற கட்சிகள் வரும், போகும்; சூரியன்தான் நிரந்தரம் - மு.க.ஸ்டாலின் பேச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/mk-stalin-says-sun-only-is-permanent-1788358690"></link>
            <id>https://ibctamilnadu.com/article/mk-stalin-says-sun-only-is-permanent-1788358690</id>
            <summary type="text">mk stalin says sun only is permanent: கொள்கை அற்ற கட்சிகள் வரும், போகும், சூரியன்தான் நிரந்தரம் என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 

மு.க.ஸ்டாலின் திமுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>mk stalin says sun only is permanent: கொள்கை அற்ற கட்சிகள் வரும், போகும், சூரியன்தான் நிரந்தரம் என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். </p><h3>

மு.க.ஸ்டாலின் திமுக நிர்வாகிகளிடம் பேச்சு</h3><p> 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மறுசீரமைப்பு பிரதிநிதிகள் கூட்டம் இன்று காணொலி வாயிலாக நடைபெற்றது.</p><p> 

இதில் பேசிய மு.க.ஸ்டாலின், " நாட்டிலேயே முதன்முதலில் ஆட்சியைக் பிடித்த மாநிலக் கட்சி, சாதனைகள் பல படைத்த கட்சி என்ற பெருமை நம்முடைய திராவிட முன்னேற்ற கழகத்திற்கு உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b72d160-bb47-4382-bfec-ba62ecfcf231/26-6a9830241065e.webp' /></p><p>

அதற்குக் காரணம், அப்படியே தேங்கி நின்றுவிடாமல், காலத்திற்கு ஏற்ற மாதிரி நாம் அப்டேட் ஆகி, அப்கிரேடு ஆகிறது தான்.
</p><p>
மாற்றங்கள் நம்மிலிருந்துதான் தொடங்க வேண்டும்’ என்று சொல்லி, திமுக 2.0-விற்கான பயணத்தை இப்போது நாம் தொடங்கியிருக்கிறோம்.</p><p>

நடந்து முடிந்த தேர்தலில் நமக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்து, வெற்றிப் பாதைக்கு நாம் திரும்ப வேண்டும் என்று பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்துக் கொண்டு இருக்கிறோம். </p><p>

முதலில், கள ஆய்வுக் குழுவை அனுப்பி, நிர்வாகிகளிடம் கருத்து கேட்டோம். ஆன்லைனில் தொண்டர்களிடம் கருத்து கேட்டோம். </p><p>அதில் வந்த அறிக்கையையெல்லாம் நான் முழுமையாகப் படித்தேன்.

அதில் வந்த கருத்துகளின் அடிப்படையில், கட்சியின் கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்புகளைப் பரிந்துரை செய்ய, கட்சி மறுசீரமைப்புக் குழுவை அமைத்தோம். </p><p>

அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், செயற்குழுவில் பல்வேறு தீர்மானங்களைக் கொண்டு வந்தோம்.

அதன் தொடர்ச்சியாக, கடந்த 28-ஆம் தேதி 110 மாவட்டங்களை அறிவித்தோம். </p><p>இந்தச் செயல்பாட்டின் அடுத்த கட்டப் பணியைச் சிறப்பாகச் செய்ய நேற்று முன்தினம், தலைமைக் கழகப் பிரதிநிதிகளாக உங்கள் அனைவரையும் அறிவித்திருக்கிறோம்.</p><p>

கழக மறுசீரமைப்புக்கான தலைமைக் கழகப் பிரதிகளாக நியமிக்கப்பட்டிருக்கின்ற நீங்கள், என்னுடைய கண்களாகவும், காதுகளாகவும் மாவட்டங்களுக்குச் சென்று, எந்தவித பாகுபாடுகளும் பார்க்காமல் கொடுக்கப்பட்டிருக்கின்ற பணிகளைச் சரியாகச் செய்துவிட்டு வர வேண்டும். </p><p>

முக்கியமாக நீங்கள் சென்று முதலில் சொல்ல வேண்டியது என்னவென்றால்,“கிளை முதல் தலைமை வரைக்குமான பொறுப்புகளுக்குத் தேர்தல்தான் நடக்கப்போகிறது என்று தலைவர் சொல்லிவிட்டார். அது அனைத்துமே சுதந்திரமான, நேர்மையான தேர்தலாகத்தான் நடைபெறும்.
</p><p>
அப்போதுதான் புதிய நிர்வாகிகள், இளைஞர்கள் பொறுப்புகளுக்கு வருவார்கள். அப்போதுதான் நாம் அனைவரும் சேர்ந்து பாடுபட்டு வளர்த்த கட்சியை, அடுத்த நூறு ஆண்டுகளுக்குக் கொண்டு செல்ல முடியும்” என்று சொல்ல வேண்டும். </p><p>அதேபோல், செயற்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களின் அடிப்படையில், வயது வரம்பு காரணமாகவும், ஒருவர் எத்தனை முறை பதவியில் இருக்கலாம் என்ற வரம்பு காரணமாகவும் பலருக்கும் இப்போது இருக்கும்பொறுப்புகள் பறிபோகும்.
</p><p>
“அவர்கள் யாரையும் தலைவர் கைவிடப் போவதில்லை. அவர்கள் அனைவருக்கும் அவர்கள் தகுதிக்கேற்ற வேறு பொறுப்புகளை வழங்கும் வகையில் தலைவர் முடிவெடுப்பார்” என்பதையும் மாவட்டச் செயற்குழுக் கூட்டங்களில் எடுத்துச் சொல்லுங்கள்.
</p><p>
வேர்கள் வலிமையாக இருந்தால்தான் ஆலமரம் உறுதியாக நிற்கும். அதுபோல நம்முடைய கழகக் கட்டமைப்புதான் நம்மைத் தாங்கி நிற்கும். அந்த ஆணிவேரைப் பலப்படுத்தும் பெரும் பொறுப்பு உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
</p><p>
கொள்கை அற்ற, கட்டமைப்பு அற்ற கட்சிகள் வரும், போகும். மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது; சூரியன்தான் நிரந்தரம்! நிலைத்து நிற்கும்" என பேசியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T14:18:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வினின் அணியை சம்பவம் செய்த பாப் டூ ப்ளெஸ்ஸிஸ்: அனல் பறந்த ஆட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rotterdam-dockers-win-by-7-wickets-in-european-t20-1788357889"></link>
            <id>https://news.lankasri.com/article/rotterdam-dockers-win-by-7-wickets-in-european-t20-1788357889</id>
            <summary type="text">Rotterdam Dockers win by 7 wickets: ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் போட்டியில் ரோட்டர்டாம் டக்கர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>Rotterdam Dockers win by 7 wickets: ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் போட்டியில் ரோட்டர்டாம் டக்கர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
</p><p>
டப்ளின் கார்டியன்ஸ் அணிக்கு எதிரான ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் போட்டியில், ரோட்டர்டாம் டக்கர்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. </p><h2>ஜேம்ஸ் வின்ஸ் 95 ஓட்டங்கள்&nbsp;&nbsp;</h2><p>
ரோட்டர்டாம் டக்கர்ஸ் மற்றும் டப்ளின் கார்டியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் போட்டி வூர்பர்க்கில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ace58cf-5c0a-4a27-b0b9-cb7a37b9e595/26-6a982d044ad1d.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய டப்ளின் கார்டியன்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ஓட்டங்கள் எடுத்தது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேம்ஸ் வின்ஸ் (James Vince) ஆட்டமிழக்காமல் 95 (54) ஓட்டங்கள் விளாசினார்.
</p><p>
சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி 26 (17) ஓட்டங்களும், விஜய் ஷங்கர் 26 (13) ஓட்டங்களும் எடுத்தனர். மெர்வ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
</p><p>
பின்னர் ஆடிய ரோட்டர்டாம் டக்கர்ஸ் அணியில் மைக்கேல் லேவிட் 14 பந்துகளில் 35 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.&nbsp;</p><h2>பாப் டூ பிளெஸ்ஸிஸ்&nbsp;ஆட்டநாயகன் </h2><p>
அடுத்து களமிறங்கிய விக்ரம்ஜித் சிங் 18 ஓட்டங்களில் வெளியேற, அணித்தலைவர் பாப் டூ பிளெஸ்ஸிஸ் (Faf du Plessis) அதிரடியாக 51 பந்துகளில் 79 ஓட்டங்கள் விளாசினார்.</p><p>


ஹெய்ன்ரிச் கிளாசென் ஆட்டமிழக்காமல் 34 (28) ஓட்டங்கள் விளாச, ரோட்டர்டாம் டக்கர்ஸ் 18.4 ஓவர்களில் 179 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. </p><p>

ஜோஷுவா லிட்டில் 2 விக்கெட்டுகளும், ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பாப் டூ பிளெஸ்ஸிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24ff2dec-595e-4a0a-ab76-1789b63e9faa/26-6a982edbc605c.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08ed0ec0-be3a-412c-afbb-68eb3abea356/26-6a982edca25ae.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T14:09:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம ஸ்டைலிஷ் லுக்கில் சீரியல் நடிகை ஆல்யா மானசா வெளியிட்ட சூப்பர் போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/serial-actress-alya-manasa-latest-photoshoot-1788355427"></link>
            <id>https://cineulagam.com/article/serial-actress-alya-manasa-latest-photoshoot-1788355427</id>
            <summary type="text">ஆல்யா மானசாதமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் கொண்டாடும் பிரபல சீரியல் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஆல்யா மானசா. விஜய்யில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் ம...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஆல்யா மானசா</h2><p>தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் கொண்டாடும் பிரபல சீரியல் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஆல்யா மானசா. </p><p>விஜய்யில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் தொடர்ந்து ராஜா ராணி 2, இனியா இப்போது பாரிஜாதம் என சீரியல்கள் நடித்த வண்ணம் உள்ளார். </p><p>சீரியல்களை தாண்டி ஆல்யா மானசா போட்டோக்களுக்கு என்றே தனி ரசிகர்கள் வட்டாரம் உள்ளது என்றே கூறலாம். சமீபத்தில் நடிகை ஆல்யா மானசா செம ஸ்டைலிஷ் உடையில் வெளியிட்ட புகைப்படங்களை காண்போம்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T14:00:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழிலிருந்து சுற்றுலா சென்ற கார்; நித்திரைக் கலக்கத்தால் 10 அடி பாய்ந்தது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/car-accident-involving-tourists-from-jaffna-1788353108"></link>
            <id>https://jvpnews.com/article/car-accident-involving-tourists-from-jaffna-1788353108</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணத்தில் இருந்து சுற்றுலா சென்ற கார் ஒன்று, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் செனன் பகுதியில் சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணத்தில் இருந்து சுற்றுலா சென்ற கார் ஒன்று, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் செனன் பகுதியில் சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><p>


இன்று (02) பிற்பகல் 2.15 மணியளவில் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fba6efc-ced0-4446-a299-2cb0140dbe8d/26-6a981a55c0eea.webp' /></p><p>
</p><p>


யாழ்ப்பாணத்தில் இருந்து சுற்றுலா சென்றுகொண்டிருந்தபோது, சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கம் காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p>



விபத்தின் போது காரில் பயணித்த இருவரும் எவ்வித காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ள நிலையில் , கார் பலத்த சேதமடைந்துள்ளது.


விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம் - சுரங்கங்களில் சிக்கியவர்களை மீட்க போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/struggle-to-rescue-people-trapped-in-mines-nepal-1788356592"></link>
            <id>https://tamilwin.com/article/struggle-to-rescue-people-trapped-in-mines-nepal-1788356592</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து,
காணாமல் போன ஆயிரக்கணக்கானோரைத் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், திப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து,
காணாமல் போன ஆயிரக்கணக்கானோரைத் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், திபெத்தின் பேரழிவுப் பகுதிக்கு செல்லும் பிரதான பாதையை சீனா மீண்டும்
திறந்துள்ளது.
</p><p>
இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பு காரணமாக உருவான
வெள்ளப்பெருக்கில் இதுவரை 1,114 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், சுமார்
4,000 பேர் வரை காணாமல் போயுள்ளனர்.
</p><h2>
தீவிரப்படுத்தப்படும் மீட்பு நடவடிக்கை</h2><p>

எனினும், நீர்மின் திட்டங்களின் சுரங்கப் பாதைகளுக்குள் சிக்கியுள்ள பல
நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில்
மீட்புக் குழுவினர் தேடுதல் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f32614a1-122b-475a-8d1b-e384db973aec/26-6a982865f10f7.webp' />&nbsp;&nbsp;</p><p>

சுரங்கங்களுக்குள் தேவையான காற்று, உணவு மற்றும் நீர் வசதிகள் இருக்கும்
என்பதால் அவர்கள் உயிருடன் மீட்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள்
தெரிவிக்கின்றனர்.</p><p>இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சிறப்பு மீட்புக் குழுக்கள் இந்த
அபாயகரமான மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.</p><h2>
 திபெத் பேரழிவில் சிக்கிய நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள்</h2><p>
இதனிடையே, எல்லையோரப் பகுதியான கிராங் கணவாய்க்கான பிரதான வீதியை சீனா
திறந்துள்ளதைத் தொடர்ந்து, கனரக இயந்திரங்கள் மற்றும் உயிர்மீர்ப்பு
சாதனங்களுடன் மீட்புக் படையினர் திபெத் பேரழிவுப் பகுதிக்குச் சென்றுள்ளனர்.</p><p>

திபெத் பகுதியில் மாத்திரம் 104 இந்தியர்கள், 49 நேபாளிகள் உட்பட
நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக சீன அதிகாரப்பூர்வத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5cd4a08-d9d3-4c72-9051-3c4790044a4f/26-6a982866a5132.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, பேரழிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொலைத்தொடர்பு மற்றும் மின்சார விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார்.
</p><p>
எவ்வாறாயினும், பேரழிவின் நினைவுகளினாலும் இழப்புகளினாலும் பாதிக்கப்பட்ட
பகுதிகளில் உள்ள சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் உளவியல் பாதிப்புகளுக்கு
உள்ளாகியிருப்பதாக சர்வதேச தன்னார்வ நிறுவனங்கள் கவலை வெளியிட்டுள்ளன.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T13:45:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தள்ளிவிட்ட வாடிக்கையாளரை ரோபோ தாக்க முயன்றதால் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/robot-trying-to-attack-human-in-russian-shop-1788356578"></link>
            <id>https://news.lankasri.com/article/robot-trying-to-attack-human-in-russian-shop-1788356578</id>
            <summary type="text">robot trying to attack customer in russia shop: தள்ளிவிட்ட வாடிக்கையாளரை ரோபோ தாக்க முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

வாடிக்கையாளரை தாக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>robot trying to attack customer in russia shop: தள்ளிவிட்ட வாடிக்கையாளரை ரோபோ தாக்க முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><h3> 

வாடிக்கையாளரை தாக்க முயன்ற ரோபோ </h3><p>

உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மனித வடிவிலான ரோபோட்கள் கடந்த சில ஆண்டுகளாகவே பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளது. </p><p>எதிர்காலத்தில் ரோபோக்கள் மனிதர்களின் கட்டுப்பாடு இல்லாமல் செயல்பட வாய்ப்புள்ளது என்ற அச்சமும் மனிதர்களிடையே நிலவி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2ca321c-ef87-4883-accf-7d142226e81e/26-6a9827e4dd5ed.webp' /></p><p> 

அதற்கு வலுசேர்க்கும் வகையில் கடையில் வாடிக்கையாளரை தாக்க முயற்சித்த ரோபோவின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

ரஷ்யாவில் உள்ள மின்னணு சாதன கடை ஒன்றில் வாடிக்கையாளர் அங்கிருந்த ரோபோவிடம் கை குலுக்க கையை நீட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p>

ஆனால் ரோபோ கையை நீட்டாததால் கோபத்தில் ரோபோவை லேசாக தள்ளியுள்ளார். 

உடனே ரோபோ அவரை தாக்க முயற்சித்துள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">A robot got VERY aggressive after being pushed<br><br>It’s so over<br><br>Writer: Sol<a href="https://t.co/gVWd9rFpqI">pic.twitter.com/gVWd9rFpqI</a></p>&mdash; Mario Nawfal (@MarioNawfal) <a href="https://x.com/MarioNawfal/status/2094987427933049235?ref_src=twsrc%5Etfw">September 2, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>அங்கிருந்த ஊழியர்கள் அதனை கட்டுப்படுத்த முயற்சித்த போது அவர்களையும் தாக்க முயற்சித்தது. 

அதன் பிறகு அந்த ரோபோவின் இயக்கத்தை நிறுத்தினர்.</p><p> இந்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் பலரும் இதனை டெர்மினேட்டர், இயந்திரன் என கருத்து தெரிவித்துள்ளனர். </p><p>

ஆனால் இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பிய சிலர், இந்த ரோபோ ரிமோட் மூலம் இயக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T13:45:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேக்கப் இல்லாமல் வீடியோ வெளியிட்ட நடிகை ரேஷ்மா!! ரீல்ஸ்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/reshma-pasupuleti-recent-unmakeup-reels-video-1788354869"></link>
            <id>https://viduppu.com/article/reshma-pasupuleti-recent-unmakeup-reels-video-1788354869</id>
            <summary type="text">ரேஷ்மா பசுபுலடிவாணி ராணி, வம்சம், மரகத வீணை, என் இனிய தோழியே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலடி. அமெரிக்க செய்தியாளர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரேஷ்மா பசுபுலடி</h2><p>வாணி ராணி, வம்சம், மரகத வீணை, என் இனிய தோழியே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலடி. அமெரிக்க செய்தியாளராக திகழ்ந்து இந்தியா பக்கம் வந்து சின்னத்திரை வெள்ளித்திரை என நடித்து வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c791b5c-345f-4d74-85f1-59e25547c68c/26-6a982137e9f65.webp' /></p><p>

கடந்த ஆண்டு பாக்கியலட்சுமி சீரியல் முடிந்தப்பின் தற்போது, கார்த்திகை தீபம், மகளே என் மருமகளே என்ற சீரியல்களில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் ரேஷ்மா.</p><p>

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா, அடக்கவுடக்காமன சேலையணிந்தும், மாடர்ன் ஆடையணிந்தும் புகைப்படங்கள், ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருவார். தற்போது மேக்கப் இல்லாத வீடியோவை பகிர்ந்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcyMB7ntIit/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcyMB7ntIit/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcyMB7ntIit/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-02T13:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலமைப்பரிசில் பரீட்சை : தமிழ் மொழியில் தேசிய ரீதியில் யாழ் மாவட்டம் முதலிடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-district-first-nationally-scholarship-exam-1788354368"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-district-first-nationally-scholarship-exam-1788354368</id>
            <summary type="text">2026 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, சிங்கள மொழி மூலம் பெற்றுக்கொண்ட அதிகூடிய புள்ளியாக 193 (குருநாகல்) மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, சிங்கள மொழி மூலம் பெற்றுக்கொண்ட அதிகூடிய புள்ளியாக 193 (குருநாகல்) மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. </p><p>

அதேவேளை தமிழ் மொழி மூலமாக அதிகூடிய புள்ளியாக 188 பதிவாகியுள்ளதுடன், யாழ்ப்பாண மாவட்டத்திலேயே இந்த புள்ளி பெறப்பட்டுள்ளது&nbsp;</p><h2>பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் அறிவிப்பு</h2><p>இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாக இன்று (02) பிற்பகல் பரீட்சைத் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே இதனைத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9125c8d-c35b-4090-83d0-6c49485087c5/26-6a982241d994a.webp' /></p><p> </p><p>



இம்முறை பரீட்சையில் விசேட தேவையுடைய 1,018 மாணவர்கள் தோற்றினர்.</p><p></p><p> </p><p>

</p><h2>56,000 மாணவர்களுக்கு வெட்டுப்புள்ளியை விடவும் அதிக புள்ளி</h2><p>அதேபோல், இம்முறை அதிகூடிய வெட்டுப்புள்ளியாக 139 அமைந்துள்ளதுடன், பெறுபேறுகளுக்கு அமைய 56,000 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை விட அதிக புள்ளிகளைப் பெற முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/802fbd29-c285-44a2-a295-6b4b7e3760f2/26-6a9822428cbd3.webp' /></p><p> </p><p>

கடந்த ஒகஸ்ட் 09ஆம் திகதி நடைபெற்ற இந்த பரீட்சைக்காக 294,132 விண்ணப்பதாரர்கள் பதிவாகியிருந்த நிலையில், அவர்களில் 289,867 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T13:43:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கச்சத்தீவுக்கு பதிலாக இந்தியாவின் கைகளுக்கு சென்ற பெட்ரோலியம் வளமிக்க கடல் மேடை! போட்டுடைத்த காங்கிரஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/petroleum-seaplatform-given-india-for-katchatheevu-1788355261"></link>
            <id>https://ibctamil.com/article/petroleum-seaplatform-given-india-for-katchatheevu-1788355261</id>
            <summary type="text">கச்சத்தீவு 285 ஏக்கர் பரப்பளவுள்ள தீவு. 


காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கிவிட்டு அதற்கு பதிலாக நீருக்கடியில் உள்ள பெட்ரோலிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கச்சத்தீவு 285 ஏக்கர் பரப்பளவுள்ள தீவு. 


காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கிவிட்டு அதற்கு பதிலாக நீருக்கடியில் உள்ள பெட்ரோலியம் வளமிக்க மேடைக் கடற்பகுதி இந்தியாவுக்கு வழங்கப்பட்டதாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
கச்சதீவு விவகாரம் தொடர்பில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று இடம்பெற்ற கடும் வாக்குவத்தின்போது காங்கிரஸ் தரப்பில் இந்த கருத்து முன்வைக்கப்பட்டது.</p><p>

இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்ட, காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் தாரகை கத்பர்ட்,</p><p></p><h2>25 லட்சம் ஏக்கர் பரப்பளவுள்ள&nbsp;பகுதி</h2><p>
</p><p>
கச்சத்தீவு 285 ஏக்கர் பரப்பளவுள்ள தீவு. அதைக் கொடுத்துவிட்டு, 25 லட்சம் ஏக்கர் பரப்பளவுள்ள வாட்ஜ் பேங்க் கடற்பகுதியில் இந்தியாவுக்கான உரிமையைப் பெற்றிருக்கிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67e0ca6c-d5bb-40b7-a3c5-b523550c4861/26-6a9826a171225.webp' /></p><p>
</p><p>
இன்று அந்த வாட்ஜ் பேங்க் பகுதியில் உள்ள பெட்ரோலியம் உள்ளிட்ட வளங்களுக்கான உரிமைகள் யாரிடம் இருக்கின்றன? 

மத்திய அரசிடம்தானே இருக்கின்றன? அதன்மூலம் கிடைக்கும் வருமானம் யாருக்குச் செல்கிறது?</p><p>
285 ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு தீவைக் கொடுத்துவிட்டு, இந்தியாவுக்காக 25 லட்சம் ஏக்கர் கடற்பகுதியின் உரிமையைப் பெற்றிருக்கிறோம். </p><p>

இதுதான் வரலாறு. முதல் ஒப்பந்தத்தை மட்டும் பேசுபவர்கள் ஏன் 2-வது ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசுவதில்லை? இந்தியாவின் பொருளாதார மண்டலத்தைப் பற்றி ஏன் பேசுவதில்லை?</p><p>

இதையும் இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன். கச்சத்தீவைக் கொடுத்திருந்தாலும், அதற்குப் பதிலாக மிகப்பெரிய கடற்பகுதியின் உரிமையை இந்தியா பெற்றது என்பதுதான் வரலாறு.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T13:37:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூண்டு யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? மருத்துவர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-people-should-not-eat-garlic-1788353018"></link>
            <id>https://manithan.com/article/which-people-should-not-eat-garlic-1788353018</id>
            <summary type="text">இந்திய சமையலில் முக்கிய இடம் பிடிக்கும் பூண்டு தொன்று தொட்டு, உணவின் சுவையை அதிகரிக்க சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு உணவுப் பொருளாக திகழ்கின்றது.. இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய சமையலில் முக்கிய இடம் பிடிக்கும் பூண்டு தொன்று தொட்டு, உணவின் சுவையை அதிகரிக்க சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு உணவுப் பொருளாக திகழ்கின்றது.. இந்த பூண்டு ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது என்பது அனைவரும் அறிந்தது தான்.&nbsp;</p><p> அதுவும் இதில் அல்லிசின் உடலில் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பெரிதும் உதவுகிறது. ஆனால் என்ன தான் பூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும், ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள் பூண்டு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும்&nbsp; என மருத்துவ நிபுணர் பிள்ளை தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/278d1bad-1db9-4f8a-b4ac-66d36312ce16/26-6a98232e8c3db.webp' /></p><p></p><p>இது குறித்து மருத்துவர் பிள்ளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளியொன்றை வெளியிட்டு முழுழுமையான விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.&nbsp;</p><h2>யாரெல்லாம் பூண்டை அதிகமாகத் தவிர்க்க வேண்டும்?</h2><p><b>
இரத்தத்தை மெலிதாக்கும் மருந்து எடுத்துக்கொள்பவர்கள்: </b>பூண்டு அதிகமாக உட்கொள்வது இரத்தக்கசிவு அபாயத்தை அதிகரிக்கலாம். மூக்கு, ஈறுகளில் இரத்தக்கசிவு அல்லது சிறிய காயத்திற்கே அதிகமாக இரத்தம் வெளியேறுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fa809c7-b4f1-4d0a-9121-8286192c6216/26-6a98232f43608.webp' /></p><p>
</p><p><b>
குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள்:</b> பூண்டு இரத்த நாளங்களைத் தளர்த்தி, ரத்த அழுத்தத்தை மேலும் குறைக்கக்கூடும். இதனால் தலைச்சுற்றல், மயக்கம் போன்றவை ஏற்படலாம்.
</p><p><b>
அல்சர், அசிடிட்டி அல்லது வயிற்று எரிச்சல் உள்ளவர்கள்: </b>குறிப்பாக பச்சைப் பூண்டை அதிகமாக சாப்பிடுவது வயிற்றுப் பிரச்சனைகளை தீவிரப்படுத்தலாம். உணவில் சிறிதளவு சேர்த்து சமைத்து சாப்பிடுவது நல்லது.
</p><p><b>
IBS உள்ளவர்கள்: </b>பூண்டில் உள்ள fructans சிலருக்கு வயிற்றுவலி, வீக்கம் மற்றும் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தலாம்.

பூண்டு ஒவ்வாமை உள்ளவர்கள்: அரிப்பு, உதடு வீக்கம் அல்லது மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் பூண்டைத் தவிர்க்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b824f01-6415-43a6-b83c-0de55884d6da/26-6a98232fee342.webp' /></p><p></p><p>
</p><p><b>
பாலூட்டும் தாய்மார்கள்: </b>அதிக அளவு பூண்டு சாப்பிடுவது தாய்ப்பாலின் வாசனையை மாற்றி, சில குழந்தைகளுக்கு தாய்ப்பால் குடிப்பதில் தயக்கத்தை ஏற்படுத்தலாம்.
</p><p><b>
பூண்டுடன் எதில் கவனம் தேவை?
</b></p><p>மது, ஒமேகா-3 மற்றும் வைட்டமின் E சப்ளிமெண்ட்டுகள் எடுத்துக்கொள்பவர்கள் பூண்டை அதிகமாக சேர்த்துக்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.</p><p>அதேபோல், அதிக காரமான உணவுகளுடன் பூண்டை அதிகமாக சேர்ப்பதும் அசிடிட்டியை அதிகரிக்கலாம்.

பூண்டு நல்லதுதான என்றாலும், உங்கள் உடல்நிலை அல்லது மருந்துகளைப் பொறுத்து, பூண்டின் அளவை கவனமாகத் தேர்வு செய்வதே சிறந்தது என மருத்துவர் குறிப்பிள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Db-uVnDhsRi/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Db-uVnDhsRi/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Db-uVnDhsRi/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Ask Doctor Pillai Tamil (@doctor.pillai)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T13:32:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் பெற்றோர் மாயம்; கண்ணீருடன் நீட் தேர்வு எழுதிய மாணவி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nepal-floods-parents-missing-tanvi-write-neet-exam-1788341775"></link>
            <id>https://jvpnews.com/article/nepal-floods-parents-missing-tanvi-write-neet-exam-1788341775</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாளத்தில் இயற்கை பேரழிவு ஏற்படுத்திய திடீர் வெள்ளத்தில் தனது பெற்றோர் மாயமான நிலையில், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவி ஒருவர் கண்ணீருடன் நீட் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேபாளத்தில் இயற்கை பேரழிவு ஏற்படுத்திய திடீர் வெள்ளத்தில் தனது பெற்றோர் மாயமான நிலையில், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவி ஒருவர் கண்ணீருடன் நீட் தேர்வை எழுதிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
கடந்த ஆகஸ்ட் 26ஆம் திகதி சீனா – நேபாள எல்லைப் பகுதியில் பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6ddf6f9-88f2-4f78-a480-d5a5b481560e/26-6a97ee112d314.webp' /></p><h2>பெற்றோர் நிச்சயம் திரும்பி வருவார்கள் என நம்பிக்கை</h2><p>
</p><p>
 சுமார் 3,900 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.</p><p>

இந்நிலையில், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த 67 பேர் கொண்ட குழுவொன்று கயிலாய யாத்திரைக்காக சென்றிருந்த நிலையில், அவர்களும் வெள்ளத்தில் சிக்கிக் காணாமல் போயுள்ளனர்.</p><p></p><p>

அவர்களில் வெங்கட்ராம் அன்னம்தேவரா மற்றும் அனகா அன்னம்தேவரா தம்பதியும் அடங்குகின்றனர். இவர்களின் மகளான தன்வி, பெற்றோர் காணாமல் போன சோகத்திலும் கடந்த ஆகஸ்ட் 30ஆம் திகதி நடைபெற்ற இளநிலை நீட் தேர்வை எழுதியுள்ளார்.
</p><p>
 பெற்றோர் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பது தெரியாத நிலையிலும், தனது தந்தையின் விருப்பத்திற்காக தேர்வை எழுதச் சென்றதாகத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
தேர்வுக்கு முன்னதாக அனுமதி அட்டையிலிருந்த தனது நிழற்படத்தைப் பார்த்தபோது தந்தையின் நினைவு ஏற்பட்டதாகவும், அந்த நிழற்படத்தைத் தனது தந்தையே எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
 தான் அழுதுகொண்டே இருந்ததாகவும், கண்ணீர் காரணமாக சில நேரங்களில் கேள்விகளைப் படிப்பதற்கும் சிரமமாக இருந்ததாகவும் தன்வி குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>
தேர்வுக்கு முன்னர் தனது தாய் வழக்கமாக தயிரும் சீனியும் வழங்குவதுடன், தந்தை வாழ்த்துவார் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
தனது பெற்றோர் நிச்சயம் திரும்பி வருவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ள தன்வி, அவர்கள் பாதுகாப்பாக மீண்டும் தன்னிடம் திரும்ப வேண்டும் என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T13:30:00+00:00</updated>
        </entry>
    </feed>
