<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-17T10:31:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்லை இல்லா வசூல் வேட்டையில் ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே படம்... பல கோடி வசூல் விவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/spider-man-brand-new-day-total-bo-1786958458"></link>
            <id>https://cineulagam.com/article/spider-man-brand-new-day-total-bo-1786958458</id>
            <summary type="text">ஸ்பைடர் மேன்கடந்த சில மாதங்களில் வெளியான ஹாலிவுட் படங்களான தி ஓடிசி, ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே போன்ற படங்களுக்கு இந்தியாவில் மாஸான வரவேற்பு கிடைத்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஸ்பைடர் மேன்</h2><p>கடந்த சில மாதங்களில் வெளியான ஹாலிவுட் படங்களான தி ஓடிசி, ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே போன்ற படங்களுக்கு இந்தியாவில் மாஸான வரவேற்பு கிடைத்துள்ளது.</p><p> இரண்டு படங்களுமே மக்களால் கொண்டாடப்பட்ட தெறிக்கும் வசூல் வேட்டை நடந்துள்ளது. கடந்த ஜலை 30ம் தேதி வெளியான திரைப்படம் தான் ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே. </p><p>டெஸ்டின் டேனியல் க்ரெட்டன் இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தில் டாம் ஹாலண்ட்டும், மிஷெல் ஜோன்ஸ் வாட்சன் கதாபாத்திரத்தில் ஜெண்டயாவும் நடித்திருந்தனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6757ef43-06bd-4805-a1fe-1ca302638ae4/26-6a82d4935a9bd.webp' /></p><h2>பாக்ஸ் ஆபிஸ்</h2><p>
படம் வெளியாகி 17 நாட்கள் ஆகிறது, இப்போதும் படத்தின் வசூல் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5f69b0d-71e1-42d1-8147-3286b2f6057b/26-6a82d4928e797.webp' /></p><p> </p><p>உலகம் முழுவதும் ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே திரைப்படம் மொத்தமாக ரூ. 19,200 கோடி வசூலித்துள்ளதாம். இந்தியாவில் மட்டுமே இப்படம் ரூ. 520 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-17T10:30:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவு! அறிவிக்கப்பட்டது திகதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/payments-to-be-credited-to-bank-accounts-1786960830"></link>
            <id>https://ibctamil.com/article/payments-to-be-credited-to-bank-accounts-1786960830</id>
            <summary type="text">ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் வரும் 19 ஆம் திகதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் வரும் 19 ஆம் திகதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
</p><p>
இது தொடர்பாக நலன்புரி நன்மைகள் சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.</p><p></p><h2>வரவு வைக்கப்படவுள்ள பணம்</h2><p>
அதன்படி, நலன்புரி நிவாரணத் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 999,502 பயனாளிக் குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் 9,241,892,500 ரூபாய் வரவு வைக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20eb64d6-adc2-42f8-8796-45dcc658508c/26-6a82df832c890.webp' /></p><p>

அதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டத்தின் கீழ் 212,955 பயனாளிக் குடும்பங்களுக்கு 2,321,735,000 ரூபாய் தொகையை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T10:28:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியின் ஓலம் - சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நிறைவடைந்த பேரணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rally-that-ended-with-the-cry-of-justice-1786958599"></link>
            <id>https://tamilwin.com/article/rally-that-ended-with-the-cry-of-justice-1786958599</id>
            <summary type="text">&amp;nbsp;“சர்வதேச விசாரணை தேவை” என்ற கோரிக்கையை முன்வைத்து, தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட “நீதியின் ஓலம்” போராட்டத்தின் இறுதி நாள் நிகழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;“சர்வதேச விசாரணை தேவை” என்ற கோரிக்கையை முன்வைத்து, தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட “நீதியின் ஓலம்” போராட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று(17.08.2026) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன. </p><p>

இன்று(17) காலை யாழ்ப்பாணம் பொது நூலகத்திலிருந்து பேரணியாக ஆரம்பமான போராட்டம், வடக்கு - கிழக்கைச் சேர்ந்த மக்களின் பங்கேற்புடன் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. </p><h2>

பேரணியாக சென்று மனு கையளிப்பு</h2><p>
அங்கிருந்து ஆஸ்பத்திரி வீதி ஊடாக கோவில் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் நோக்கி பேரணி சென்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb742c85-9f0d-438e-996e-4cd2fdb65052/26-6a82e0482e09c.webp' /></p><p> </p><p>இதன்போது, கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விவகாரங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு நீதியும் பொறுப்புக்கூறலும் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டன.</p><p>


இதேவேளை, தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி மனுவொன்றும் கையளிக்கப்பட்டது.</p><p>



பல நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட “நீதியின் ஓலம்” போராட்டம், சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை மீண்டும் வலுவாக வெளிப்படுத்திய நிலையில் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/820a7f64-a502-4fa9-a51e-bce8efba5453/26-6a82e049472ac.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d630478c-7af1-4e7b-9b1c-d67e7247935b/26-6a82e04a2294f.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/507fa51d-7ab6-45b8-80d0-b6ec467d18f3/26-6a82e04af0a6d.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T10:20:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[91 ஓட்டங்களுக்கு சுருண்ட சன்ரைசர்ஸ்: முதல் கிண்ணத்தை வென்ற ட்ரெண்ட் ராக்கெட்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trent-rockets-women-won-first-the-hundred-title-1786961595"></link>
            <id>https://news.lankasri.com/article/trent-rockets-women-won-first-the-hundred-title-1786961595</id>
            <summary type="text">2026 The Hundred மகளிர் கிண்ணத்தை முதல் முறையாக ட்ரெண்ட் ராக்கெட்ஸ் வென்றது.

லார்ட்&#039;ஸில் நடந்த The Hundred மகளிர் தொடர் இறுதிப்போட்டியில் வெற்றி பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 The Hundred மகளிர் கிண்ணத்தை முதல் முறையாக ட்ரெண்ட் ராக்கெட்ஸ் வென்றது.
</p><p>
லார்ட்'ஸில் நடந்த The Hundred மகளிர் தொடர் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றது ட்ரெண்ட் ராக்கெட்ஸ் மகுடம் சூடியது.&nbsp;</p><h2>சுருண்ட சன்ரைசர்ஸ் லீட்ஸ் &nbsp;</h2><p>
2026 The Hundred மகளிர் தொடரின் இறுதிப்போட்டியில் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிகள் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f599039e-cb04-431a-95e8-abbc7297fc42/26-6a82e04d0ee6f.webp' />&nbsp;</p><p></p><p>

முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி 91 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக அன்னபெல் சதர்லேண்ட் 25 ஓட்டங்கள் எடுத்தார். </p><p>

கிம் கார்த், சமந்தா பேட்ஸ், சார்லே பிலிப்ஸ் மற்றும் ஜார்ஜியா ஆடம்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
</p><h2>
ட்ரெண்ட் ராக்கெட்ஸ் சாம்பியன் </h2><p>பின்னர் ஆடிய ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணி 54 பந்துகளில் 92 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

சோபியா டங்கலே 41 (23) ஓட்டங்களும், பெத் மூனி 31 (21) ஓட்டங்களும் விளாசினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e1238e6-62e9-4fda-9040-cd10944907bd/26-6a82e04dc3cfc.webp' /></p><p>

இந்த வெற்றியின் மூலம் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணி முதல் முறையாக கிண்ணத்தை வென்று மகுடம் சூடியது.
</p><p>
ஆட்டநாயகி விருதினை ஜார்ஜியா ஆடம்ஸும், தொடர் நாயகி விருதை அன்னபெல் சதர்லேண்டும் பெற்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8aee47f8-83cb-4106-aebe-6ce0bada285d/26-6a82e04e76778.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64ee54e7-f63a-4360-b816-a2d3f92da460/26-6a82e04f2b048.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T10:17:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயின் நாட்டுக்குள் நுழைய படையெடுக்கும் அகதிகள்; படையினர் முறியடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/refugees-storming-into-spain-troops-repel-1786949858"></link>
            <id>https://canadamirror.com/article/refugees-storming-into-spain-troops-repel-1786949858</id>
            <summary type="text">ஸ்பெயின் நாட்டுக்குள் நுழைய படையெடுக்கும் அகதிகள்; படையினர் முறியடிப்பு

 மொராக்கோ நாட்டின் எல்லை வழியாக நூற்றுக்கணக்கான அகதிகள் மற்றும் புலம்பெயர்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயின் நாட்டுக்குள் நுழைய படையெடுக்கும் அகதிகள்; படையினர் முறியடிப்பு

 மொராக்கோ நாட்டின் எல்லை வழியாக நூற்றுக்கணக்கான அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர்கள் ஒரே நேரத்தில் ஸ்பெயின் நாட்டுக்குள் ஊடுருவ முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

ஆப்பிரிக்க கண்டத்தின் வடகோடியில் அமைந்துள்ள ஸ்பெயின் நாட்டின் தன்னாட்சி நகரமான செவுட்டாவிற்குள் (Ceuta),அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர்கள் ஊடுருவ முயன்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02b71a6b-8150-4c2e-9aa7-335cea405b8e/26-6a82b0e3f17d3.webp' /></p><h2>முன்கூட்டியே உளவுத்துறை தகவல்கள்</h2><p> </p><p>

சமூக வலைதளங்கள் வாயிலாகத் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்ட இந்தத் திரளான எல்லைக் கடக்கும் முயற்சியை, மொராக்கோ நாட்டுப் பாதுகாப்புப் படையினர் அதிரடியாகத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.</p><p>

மொராக்கோவின் எல்லை நகரமான ஃபினிடெக் (Fnideq) பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திரண்டு, ஸ்பெயின் எல்லையை நோக்கி முன்னேற முயன்றனர்.</p><p> இதனை முன்கூட்டியே உளவுத்துறை தகவல்கள் மூலம் அறிந்த மொராக்கோ காவல்துறையினர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர், ட்ரோன்கள் மற்றும் நவீன தடுப்புக் காவல்கள் மூலம் ஒட்டுமொத்தப் பகுதியையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
</p><p>
முன்னதாக, ஜூலை மாத இறுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கடல் வழியாக நீந்தியும், தடுப்புச் சுவர்களைக் கடந்தும் செவுட்டாவிற்குள் புகுந்த சம்பவம் பெரும் அரசியல் மற்றும் சமூக நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது.</p><p> 

தொடர்ந்து, ஆகஸ்ட் 15-ஆம் தேதி மீண்டும் மாபெரும் அளவில் எல்லையை முற்றுகையிட்டு ஊடுருவுமாறு சமூக வலைதளங்களில் மர்மக் கணக்குகள் மூலம் பிரசாரம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இரு நாட்டு எல்லைகளிலும் இராணுவ வீரர்களும் காவல்துறையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.</p><p>

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரே ஆப்பிரிக்கப் நில எல்லையாகச் செயல்படும் செவுட்டா மற்றும் மெலில்லா பகுதிகள், சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்குள் நுழைய முனையும் அகதிகளின் முதன்மை இலக்காக இருந்து வருகின்றன. </p><p>அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், சட்டவிரோதக் கடத்தல்களைத் தடுக்கவும் ஸ்பெயின் மற்றும் மொராக்கோ நாடுகள் இணைந்து எல்லைப் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-17T10:15:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமையல் செய்து வீடியோவை வெளியிட்ட ரச்சிதா மகாலட்சுமி!! ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/rachitha-mahalakshmi-cooking-video-post-fans-react-1786960596"></link>
            <id>https://viduppu.com/article/rachitha-mahalakshmi-cooking-video-post-fans-react-1786960596</id>
            <summary type="text">ரச்சிதா மகாலட்சுமிசின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர்கள் ஒருவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் செம பேமஸ் ஆனவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரச்சிதா மகாலட்சுமி</h2><p>சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர்கள் ஒருவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் செம பேமஸ் ஆனவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டார். பிறகு Fire என்ற படத்தின் மூலம் பெரும் சர்ச்சையையும் சந்தித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74f04694-b5de-44f5-8569-4bb5785eb882/26-6a82dad6c96e8.webp' /></p><p>
</p><p>சமீபத்தில் தன்னுடைய ஓம் டூர் பேட்டியொன்றில் தன் வீட்டில் இருந்த மினி பார் குறித்து பகிர்ந்து கொண்டார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா, lollipop sports academy என்ற படத்தில் கமிட்டாகி அப்படத்தின் பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். </p><p>தற்போது, ஞாயிறுகிழமையன்று தன்னுடைய வீட்டில் சிக்கன் குழம்பு செய்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அவரின் அந்த வீடியோவிற்கு பலரும் தங்களின் ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcGRD31v5dJ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcGRD31v5dJ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcGRD31v5dJ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Rachitha Mahalakshmi (@rachitha_mahalakshmi_official)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-17T10:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினையை விசாரிக்க சுயாதீன விசாரணைக் குழு நியமிக்கப்படும் - ஆளுநர் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/northern-governer-n-vethanayahan-statement-1786957717"></link>
            <id>https://tamilwin.com/article/northern-governer-n-vethanayahan-statement-1786957717</id>
            <summary type="text">அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கௌரவம் மற்றும் தொழில்சார் நலன்களைப்
பாதித்துள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில்
சுயாதீனமானதும் பக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கௌரவம் மற்றும் தொழில்சார் நலன்களைப்
பாதித்துள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில்
சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணையை முன்னெடுப்பதற்கான சுயாதீன
விசாரணைக்குழு நியமிக்கப்படும் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்
உறுதியளித்தார்.</p><p>

வடக்கு மாகாணசபை அலுவலக வளாகத்துக்கு முன்பாக இன்று (17.08.2026) காலை போராட்டத்தில் ஈடுபட்ட வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின்
சம்மேளனப் பிரதிநிதிகள், அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து
தமது மனுவை கையளித்தனர்.</p><h2>அனுமதி</h2><p> </p><p>இவர்களில் ஐந்து பிரதிநிதிகளுக்கு ஆளுநரை நேரில்
சந்தித்து தமது கருத்துக்களை முன்வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
</p><p>
அவர்கள் கையளித்த மனுவில், அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கௌரவத்தையும்
தொழில்சார் நலன்களையும் பாதித்ததாகக் குறிப்பிடப்படும் சம்பவம் தொடர்பில்
சுயாதீனமானதும் பக்க சார்பற்றதுமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும்,
சம்பவத்துடன் தொடர்புடைய ஒலி மற்றும் ஒளிப்பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள்
முறையாகப் பாதுகாக்கப்பட்டு பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.</p><p>
மேலும், விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் உரிய நிர்வாக அல்லது
ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்கள்
வலியுறுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad6bf009-a01a-4b57-aa5d-0208be4185e8/26-6a82dd4c1f705.webp' /></p><h2>சுயாதீனமான விசாரணை</h2><p>
</p><p>
இதன்போது, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்வைத்துள்ள கவலைகள் மற்றும்
எதிர்பார்ப்புகளை ஆளுநர் கவனமாக கேட்டறிந்து உள்வாங்கி கொண்டதுடன், விடயம்
தொடர்பில் உண்மைத் தன்மையை நிலைநாட்டும் வகையில் சுயாதீனமான விசாரணை
முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.</p><p>

அத்துடன், அரச சேவையில் பணியாற்றும் எந்தவொரு தரப்பினரின் கௌரவமும் உரிமைகளும்
பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இவ்வாறான
சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட
வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T10:14:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைமன்னாரில் சிதைவடைந்த நிலையில் சடலம் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/decomposed-body-recovered-in-talaimannar-1786961588"></link>
            <id>https://jvpnews.com/article/decomposed-body-recovered-in-talaimannar-1786961588</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுக்குடா மீன்பிடி துறையை அண்டிய கடற்கரை பகுதியில் சிதைவடைந்த நிலையில் அடையாளம் காண முடியாத வகையில் ஆண...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுக்குடா மீன்பிடி துறையை அண்டிய கடற்கரை பகுதியில் சிதைவடைந்த நிலையில் அடையாளம் காண முடியாத வகையில் ஆண் ஒருவரின் சடலம் மீன் பிடியில் வலையினால் சுற்றப்பட்ட நிலையில் இன்று&nbsp; (17) கரை ஒதுங்கியுள்ளது.</p><p>


குறித்த கடற்கரை பகுதியில் உள்ள கடற்படையினர் குறித்த சடலத்தை&nbsp; &nbsp;அவதானித்து தலைமன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் தலைமன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30ad6484-73b6-4115-bacd-30ed345af5be/26-6a82deb6533c1.webp' /></p><p>
</p><p>
குறித்த சடலம் மீட்கப்பட்ட நிலையில் மன்னார் பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் இது குறித்து தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T10:10:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிராக அணுஆயுதங்களை பயன்படுத்தப்போகும் ட்ரம்ப் : உயர்மட்ட கூட்டங்கள் நடப்பதாக முன்னாள் எம்.பி பகீர் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-plans-to-use-nuclear-weapons-against-iran-1786960534"></link>
            <id>https://ibctamil.com/article/trump-plans-to-use-nuclear-weapons-against-iran-1786960534</id>
            <summary type="text">&amp;nbsp;ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ஜனாதிபதி ட்ரம்ப் திட்டமிட்டு வருவதாக அமெரிக்க முன்னாள் பெண் எம்பி மார்ஜோரி டெய்லர் க்ரீன் அதிர்ச்சி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ஜனாதிபதி ட்ரம்ப் திட்டமிட்டு வருவதாக அமெரிக்க முன்னாள் பெண் எம்பி மார்ஜோரி டெய்லர் க்ரீன் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.</p><p>


அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் முடிவுக்கு வருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இருநாடுகளும் பரஸ்பரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், மேற்காசியாவில் நிலவி வரும் பதற்றம் தொடர்ந்து கொண்டே வருகிறது. ஈரான் எளிதில் சரணடைந்து விடும் என்று எதிர்பார்த்திருந்த ட்ரம்புக்கு, ஏமாற்றமே மிஞ்சியது. இதனால், எப்படியாவது ஈரானை வழிக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு முயற்சிகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.&nbsp;</p><h2>முன்னாள் எம்பியின் தகவல்</h2><p>இந்த நிலையில், ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகள் கூட்டங்களை அவர் நடத்தி வருவதாக முன்னாள் அமெரிக்க காங்கிரஸ் பெண் உறுப்பினர் மார்ஜோரி டெய்லர் கிரீன் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">They are discussing using nuclear weapons on Iran in strategy meetings.<br><br>Yes you read that correctly. It’s real. I’m not speculating, I know.<br><br>And it’s pure evil.<br><br>The last time a nuclear weapon was used was August 6th and 9th of 1945 on two cities in Japan, Hiroshima and…</p>&mdash; Former Congresswoman Marjorie Taylor Greene🇺🇸 (@FmrRepMTG) <a href="https://x.com/FmrRepMTG/status/2089069623706603837?ref_src=twsrc%5Etfw">August 16, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>



இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில்; ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவது குறித்து நடத்தப்பட்ட உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் உண்மையானவை. எந்த யூகமும் இல்லை.</p><p></p><h2>ஜப்பான் மீதான அணு ஆயுத தாக்குதலால் ஏற்பட்ட விளைவு</h2><p> </p><p>1945ல் ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டதில், சுமார் 2,14,000 பேர் கொல்லப்பட்டனர். அதுமட்டுமில்லாமல், புற்றுநோய், பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1cbe743-3419-4f0e-bf39-32fd0c90b503/26-6a82dd8569d9f.webp' /></p><p>


ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் சூழலில் இல்லை என்ற அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்காத அமெரிக்க அரசு, இஸ்ரேலுக்கு ஆதரவான செயல்களை செய்வதில் முனைப்பு காட்டி வருகிறது. </p><p>ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்தினால், உலகம் முழுவதும் மாபெரும் மோதல்களையும், துயரங்களையும் சந்திக்க நேரிடும்.


தற்போதைய தலைவர்கள் போரை உடனே நிறுத்த வேண்டும். அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், ஏற்படும் பாதிப்புகளுக்கு இந்த அரசே முழுப் பொறுப்பு, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T10:08:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு : பிரதிவாதிகள் தரப்பு சாட்சியங்களை சமர்ப்பிக்க உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-sunday-attack-court-order-evidence-today-1786958083"></link>
            <id>https://tamilwin.com/article/easter-sunday-attack-court-order-evidence-today-1786958083</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரிக்கும் நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம், இன்று (17.08.2026) முதல் 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரிக்கும் நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம், இன்று (17.08.2026) முதல் 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தரப்பு சாட்சியங்களை அழைக்க உத்தரவிட்டுள்ளது.</p><p>

அரசத் தரப்பு சாட்சியங்கள் நிறைவடைந்ததை அடுத்து, 24 பிரதிவாதிகளுக்கும் எதிராகச் சாட்சியங்களை அழைக்கப் போதுமான காரணங்கள் உள்ளதாக நீதிபதிகள் குழாம் தீர்மானித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><h2>6ஆவது பிரதிவாதி சாட்சியமளிக்கப் போவதில்லை</h2><p>
தலைமை நீதிபதி நவரத்ன மாரசிங்க, சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம், பிரதிவாதிகள் தரப்பு சாட்சியமளிக்க அழைப்பு விடுத்ததுடன், ஒவ்வொரு பிரதிவாதிக்கும் உரிய உரிமைகள் குறித்தும் விளக்கமளித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5009ea65-b232-457d-9cb4-93995cc0deac/26-6a82d8b34da53.webp' /></p><p>அத்துடன், அனைத்துப் பிரதிவாதிகளையும் தமது நிலைப்பாட்டை அறிவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்போது, 6 ஆவது பிரதிாவதியான மொஹமட் ரிஸ்வான், தான் சாட்சியமளிக்கப் போவதில்லை எனவும் மௌனம் காக்கப் போவதாகவும் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
</p><p>
ஏனைய பிரதிவாதிகள் கூண்டிலிருந்து சாட்சியமளிப்பது, கூண்டிலிருந்து அறிக்கை சமர்ப்பிப்பது அல்லது வெளியிலிருந்து சாட்சியங்களைச் சமர்ப்பிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.
</p><p>
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் உல்லாச விடுதிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் சுமார் 224 பேர் கொல்லப்பட்டதுடன் 584 பேர் காயமடைந்தனர்.</p><h2>ஏனைய ஒப்புதல் வாக்குமூலங்கள்&nbsp;</h2><p>இந்த தாக்குதல்களை நடத்திய சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது பயங்கரவாதக் குழுவினரின் செயற்பாடுகள் தொடர்பில் 24 பிரதிவாதிகளுக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/184fc046-e6ba-42ca-b01a-f9cc7cdbeacf/26-6a82d8b442a89.webp' /></p><p>
இதுவரை இடம்பெற்றுள்ள விசாரணைகளில் சுமார் 1,500 சாட்சிகள் சாட்சியமளித்துள்ளதுடன், ஆவணங்கள், குண்டு தயாரிக்கும் பொருட்கள் உள்ளிட்ட 2,076 நீதிமன்றப் பொருட்கள் அரசுத் தரப்பினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.</p><p>

மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீதவான் முன்னிலையில் வழங்கப்பட்ட 10 ஒப்புதல் வாக்குமூலங்களும் விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்டன.
</p><p>
இதில் பிரதிவாதி மொஹமட் பிர்தௌஸ் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் சுயவிருப்பின் அடிப்படையில் வழங்கப்படவில்லை எனக் கூறி அதனை நீதிமன்றம் நிராகரித்தது.
</p><p>
எவ்வாறாயினும், ஏனைய ஒப்புதல் வாக்குமூலங்கள் சுயவிருப்பின் பேரிலேயே வழங்கப்பட்டதாகத் தீர்ப்பளித்த நீதிமன்றம், அவற்றைச் சான்றுகளாக ஏற்க அனுமதித்தது.
</p><p>
ஐந்தாண்டு காலப்பகுதியில் 547 நாட்களுக்கு அரசத் தரப்பு சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன.

இந்த நிலையில் வழக்கில் அரசத் தரப்பு சார்பில் சிரேஷ்ட மேலதிக மன்றாடியார் நாயகம் ஹரிப்பிரியா ஜயசுந்தர, மேலதிக மன்றாடியார் நாயகம் சுதர்ஷன டி சில்வா ஆகியோருடன் அரச சட்டவாதிகளும் முன்னிலையாகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T09:59:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹிருணிகா உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு! நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/date-given-for-calling-hirunika-s-case-1786956071"></link>
            <id>https://ibctamil.com/article/date-given-for-calling-hirunika-s-case-1786956071</id>
            <summary type="text">முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு கொழும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>

2022 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தின் போது, கொழும்பு குருந்துவத்தை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதிகளை மறித்து காவல்துறை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
</p><p>
இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று (17) அழைக்கப்பட்டபோதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>விசாரணைகள் நிறைவு</h2><p>இதன்படி, சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், அது தொடர்பான கோவைகள் தயாரித்து மேலதிக சட்ட ஆலோசனைகளுக்காகச் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குருந்துவத்தை காவல்துறையினர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb1c7413-88a1-4c72-8f5f-e741db2188fa/26-6a82dacb973e3.webp' /></p><p>இந்நிலையில், வழக்கை நவம்பர் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், அன்றைய தினம் சட்டமா அதிபரின் ஆலோசனைகள் மற்றும் வழக்குகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T09:56:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் அடுத்த ஜனாதிபதி ஒரு சிறைக்கைதியாம்.. மகிந்தவும் கோட்டாபயவும் வரிசையில்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-who-will-become-president-from-prison-1786957538"></link>
            <id>https://tamilwin.com/article/namal-who-will-become-president-from-prison-1786957538</id>
            <summary type="text">இலங்கையின் அடுத்த ஜனாதிபதி சிறைக்குள் இருந்து தெரிவாகலாம் என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். 

பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் அடுத்த ஜனாதிபதி சிறைக்குள் இருந்து தெரிவாகலாம் என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். </p><p>

பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சிறைச்சாலையில் அடைக்கப்பட்டாலும் அவரே நாட்டின் அடுத்த ஜனாதிபதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>நாமலே&nbsp; ஜனாதிபதி&nbsp;</h2><p> </p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக நாமல் ராஜபக்சவை மக்கள் தெரிவு செய்வார்கள். அவரை ஜனாதிபதியாக்குவதற்கு பொதுஜன பெரமுன தீவிரமாக செயற்படும். </p><p>


அநுர அரசாங்கம், முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரையும், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சிறையில் அடைக்கும் நோக்கத்துடன் செயற்பட்டு வருகின்றது. எமக்கு அது பிரச்சினையில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bd1e957-3c5b-4d42-a413-d1e54da8d4fb/26-6a82d9c4e0cda.webp' /></p><p>நீதித்துறையின் மீது எங்களுக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. எம்மிடம் எஞ்சியிருப்பது நீதித்துறை மீதான நம்பிக்கை மாத்திரமே.
</p><p>
எனவே, நாமல் ராஜபக்சவையும் சிறையில் அடைத்தாலும் கூட சிறையில் இருந்தே அவரை ஜனாதிபதியாக்குவதற்கு நாங்கள் அயராது பாடுபடுவோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47446bba-8b68-4724-bd64-1e61a563da8a/26-6a82d9c593637.webp' /></p><p>
</p><p>
நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்கும் பிரசாரத்தின் முதல்படியாக, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் மாபெரும் மக்கள் பேரணி ஒன்றை நடத்துவதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம். </p><p> 

யாரும் எதிர்பாராத அளவில் பெருமளவிலான மக்கள் கூட்டத்தை அந்தப் பேரணியில் காண முடியும். இதனூடாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், நாமல் ராஜபக்சவுக்கு அவர்கள் தமது ஆதரவினை வெளிப்படுத்துவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T09:52:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஜித் தான் சிறந்த கணவர், திரிஷா சொன்ன அதிரடி பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/trisha-about-ajith-1786946613"></link>
            <id>https://cineulagam.com/article/trisha-about-ajith-1786946613</id>
            <summary type="text">திரிஷா பதில்அஜித் இந்திய சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் அடுத்து டேர் டேவில் படம் பிரமாண்டமாக தயாராகவுள்ளது. இப்படத்தை அவரே சொந...</summary>
            <content type="html"><![CDATA[<h2>திரிஷா பதில்</h2><p>அஜித் இந்திய சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் அடுத்து டேர் டேவில் படம் பிரமாண்டமாக தயாராகவுள்ளது. இப்படத்தை அவரே சொந்த தயாரிப்பில் தயாரிக்கவுள்ளார். </p><p>இந்நிலையில் அஜித் நடிகை திரிஷாவுடன் ஜி, கிரீடம், மங்காத்தா, விடா முயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் சில வருடங்களுக்கு முன் கொடுத்த பேட்டி ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c21f112-1cee-45a8-bd43-c9c5ae3ed9f1/26-6a82a438e014b.webp' /></p><p>அதில் உங்கள் திரைத்துறையுல் சிறந்த கணவர் யார் என கேட்க, அதற்கு திரிஷா, அஜித் என பதில் அளித்துள்ளார், இந்த பேட்டி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதோடு அஜித் போன் நம்பர் கூட என்னிடம் இல்லை, படத்தின் சமயத்தில் சந்தித்தால் உண்டு அவ்வளவு தான் எங்கள் நட்பு என்றும் பதில் அளித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-17T09:50:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலையான வைப்புத்தொகைகளைக் குறிவைக்கும் புதிய மோசடி: CERT எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-scam-targeting-fixed-deposits-1786959268"></link>
            <id>https://ibctamil.com/article/new-scam-targeting-fixed-deposits-1786959268</id>
            <summary type="text">இலங்கை மத்திய வங்கி மற்றும் பொலிஸ் ஒப்பந்தக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் (FCID) அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்து, வங்கி வைப்பாளர்களிடமிருந்து பணத்தைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மத்திய வங்கி மற்றும் பொலிஸ் ஒப்பந்தக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் (FCID) அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்து, வங்கி வைப்பாளர்களிடமிருந்து பணத்தைத் திருடும் ஒரு நுட்பமான நிதி மோசடி குறித்து இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) பொதுமக்களை எச்சரித்துள்ளது.
</p><p>
இரு நிறுவனங்களின் அதிகாரிகள் போல் நடித்து, போலியான அதிகாரப்பூர்வ கடிதத் தலைப்புகள் மற்றும் பிற ஆவணங்களைப் பயன்படுத்தி, தாங்கள் உண்மையானவர்கள் என்று பாதிக்கப்பட்டவர்களை நம்பவைக்கும் நபர்கள் குறித்துப் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக SLCERT தெரிவித்துள்ளது.
</p><p>
அந்த எச்சரிக்கையின்படி, மோசடிக்காரர்கள் ஆரம்பத்தில் கைபேசிகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்புகொண்டு, சேமிப்புக் கணக்குகள் மற்றும் நிலையான வைப்புக் கணக்குகளில் உள்ள நிதி குறித்து விசாரிக்கின்றனர்.</p><p></p><h2>அச்சுறுத்தப்படுத்தும் விதம் </h2><p>
</p><p>
பாதிக்கப்பட்டவர்களின் வைப்புத்தொகை குறித்த தகவல்கள் தங்களிடம் ஏற்கனவே இருப்பதாகக் கூறி, அந்தப் பணம் மோசடி வழிகளில் பெறப்பட்டதாகப் முறைப்பாடுகள் வந்துள்ளதாக அவர்களிடம் பொய்யாகத் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/180abaab-28a3-4a2e-ac96-d3cffdbda231/26-6a82d8ef93ae6.webp' /></p><p>அதன்பின், பாதிக்கப்பட்டவர்கள் FCID விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என அச்சுறுத்தப்படுகிறார்கள்.
</p><p>
மோசடிக்காரர்கள் பின்னர், போலி மத்திய வங்கி கடிதத் தலைப்புகள், அதிகாரிகளின் கையொப்பங்கள் மற்றும் ரப்பர் முத்திரைகள் அடங்கிய போலிக் கடிதங்களை அனுப்புகின்றனர். </p><p>பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பணத்தை மற்றொரு தனியார் வங்கியில் உள்ள குறிப்பிட்ட கணக்கிற்கு மாற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p>
SLCERT-இன் கூற்றுப்படி, மோசடிக்காரர்கள் அந்தக் கணக்கு ஒரு FCID அதிகாரியுடையது என்று கூறி, ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் வைப்புத்தொகையில் பாதியை மாற்றுமாறு அறிவுறுத்துகின்றனர்.</p><p></p><h2>நுட்பமான முறையில்&nbsp;மோசடி</h2><p> </p><p>பணப் பரிமாற்றம் செய்த பிறகு, பணம் செலுத்தியதற்கான ஆதாரமாக வங்கி வைப்புச் சீட்டை வழங்குமாறு பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad63f473-98de-4eb6-92a9-a9e61a2336fb/26-6a82d8f049bf2.webp' /></p><p>
</p><p>
இந்த மோசடிக்குப் பின்னால் இருப்பவர்கள் மிகவும் நுட்பமான முறையில் செயல்படுவதாகவும், இந்தத் திட்டம் சட்டப்பூர்வமானது போல் தோற்றமளிக்க காவல்துறை சீருடைகள், வங்கி அடையாள அட்டைகள் மற்றும் ரப்பர் முத்திரைகளை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது என SLCERT தெரிவித்துள்ளது.</p><p>ஓய்வூதியதாரர்களும் முதியவர்களும் இந்த மோசடிக்கு குறிப்பாக எளிதில் இலக்காகக்கூடும் என்று எச்சரித்த அந்த அமைப்பு, பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தியது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T09:50:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு பில்லியன் டொலர் பணமோசடி ; 4 தனியார் வங்கி முகாமையாளர்கள் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/four-bank-managers-arrested-usd-1-billion-transfer-1786960058"></link>
            <id>https://jvpnews.com/article/four-bank-managers-arrested-usd-1-billion-transfer-1786960058</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு கோட்டையிலுள்ள தனியார் நாணய மாற்று நிறுவனமொன்று சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு பணப் பரிமாற்றம் செய்த சம்பவம் தொடர்பில், 4 தனியார் வர்த்தக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு கோட்டையிலுள்ள தனியார் நாணய மாற்று நிறுவனமொன்று சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு பணப் பரிமாற்றம் செய்த சம்பவம் தொடர்பில், 4 தனியார் வர்த்தக வங்கிகளின் நான்கு முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
இலங்கைக்கு எந்தவொரு பொருட்களையும் இறக்குமதி செய்யாமல், குறித்த நிறுவனம் ஒன்று சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை பரிமாற்றம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ffc27cb-9d7c-4083-9b6e-a3bfa56fc747/26-6a82d8bb54279.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் காவல்துறை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T09:45:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை விடுமுறை : சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/school-holiday-time-warning-regarding-child-safety-1786952165"></link>
            <id>https://ibctamil.com/article/school-holiday-time-warning-regarding-child-safety-1786952165</id>
            <summary type="text">பாடசாலை விடுமுறைக் காலத்தில்&amp;nbsp;குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாடசாலை விடுமுறைக் காலத்தில்&nbsp;குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் பிரதீப் ரத்னசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>இக்காலப் பகுதியில் பட்டம் விடும் போது ஏற்படும் விபத்துக்கள் அதிகமாக பதிவாகி வருவதால் பெற்றோர்கள் மற்றும் பெரியோர்களிடம் அவர் இவ்வாறு கோரியுள்ளார். </p><p>

வறண்ட வானிலை மற்றும் பாடசாலை விடுமுறை காரணமாக இந்த நாட்களில் சிறுவர்கள் மத்தியில் பட்டம் விடுவது பிரபலமாகியுள்ள நிலையில், கவனக்குறைவாக பட்டம் விடுவதால் பலத்த காயங்கள் மட்டுமன்றி உயிராபத்துகளும் கூட ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>உயர் அழுத்த மின்கம்பிகள்</h2><p> </p><p>

குறிப்பாக உயரமான இடங்களில் இருந்து பட்டம் விட முயற்சிக்கும் போது கீழே விழும் அபாயம் இருப்பதாகவும், குழுக்களாக இணைந்து பட்டம் விடும் போது மோதிக் கொள்வதாலும், கீழே விழுவதாலும் விபத்துக்கள் ஏற்படக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c6ba7a7-e290-4542-85fe-c0d41a077955/26-6a82d4c5e2a96.webp' /></p><p> 

அத்துடன், உயர் அழுத்த மின் கம்பங்களுக்கு அருகில் பட்டம் விடுவது மிகவும் ஆபத்தான செயல் எனவும் இவ்வாறான மின் அதிர்ச்சிகள் காரணமாக கைகள், தோள்பட்டை மற்றும் மார்புப் பகுதியில் உள்ள உடல் திசுக்கள், இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம் என்பதுடன், சில சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் அவர் வலியுறுத்துகிறார். </p><p>

மேலும், மின்கடத்தும் தன்மை கொண்ட நூல்கள் உயர் அழுத்த மின்கம்பிகளுடன் உரசும் போது உடனடியாக உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், மின்கம்பிகள் உள்ள பகுதிகளில் சிறுவர்கள் பட்டம் விடுவதைத் தவிர்க்க பெற்றோர்களும், பெரியவர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அறிவித்துள்ளார்.</p><p> 

சிறுவர்களின் பொழுதுபோக்கு போலவே அவர்களின் உயிர் பாதுகாப்பும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், பட்டம் விடுகையில் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தடுப்பதற்கு ஒட்டுமொத்த சமூகமும் விழிப்புணர்வுடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும்“ எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T09:38:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் மோசடியில் சிக்கி 4,000 யூரோக்களை இழந்த பிரித்தானியப் பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-women-lost-4000-euro-in-france-1786959201"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-women-lost-4000-euro-in-france-1786959201</id>
            <summary type="text">பிரான்சில் வாழ்ந்துவரும் பிரித்தானியப் பெண்ணொருவர் வங்கி மோசடி ஒன்றில் சிக்கி 4,000 யூரோக்களை இழந்துள்ளார்.


தென்மேற்கு பிரான்சிலுள்ள Bordeaux நகர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சில் வாழ்ந்துவரும் பிரித்தானியப் பெண்ணொருவர் வங்கி மோசடி ஒன்றில் சிக்கி 4,000 யூரோக்களை இழந்துள்ளார்.
</p><p>

தென்மேற்கு பிரான்சிலுள்ள Bordeaux நகரில் வாழ்ந்துவருபவர் பிரித்தானியரான Deirdre Rankin (79).
</p><p>
2025ஆம் ஆண்டு ஆகத்து மாதம் அவருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அழைத்தவர் தான் Deirdreயின் வங்கியிலிருந்து அழைப்பதாகக் கூறியுள்ளார்.</p><h3>
பறிபோன 4,000 யூரோக்கள்
</h3><p>
Deirdreயின் வங்கிக்கணக்கை யாரோ ஹேக் செய்துள்ளதாகவும், உடனடியாக அவரது வங்கிக்கணக்கை காப்பாற்றிக்கொள்ளுமாறும் கூறியுள்ளார் அந்த நபர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e43df601-5a7d-42ac-ac54-67436dab9dbb/26-6a82d5627288b.webp' /></p><p>

அதாவது, Deirdreயின் வங்கிக்கணக்கிலிருக்கும் பணத்தைக் காப்பாற்றவேண்டுமானால், அதை உடனடியாக வேறு கணக்குக்கு மாற்றவேண்டும் என அந்த நபர் கூறியுள்ளார்.
</p><p>
அப்படியே Deirdre செய்ய, பிறகு புதிய கணக்கை சோதித்துப் பார்த்தால், அதில் பணம் எதுவும் இல்லை. அந்த நபர் அந்த கணக்கிலிருந்த பணத்தை எடுத்துவிட்டு வங்கிக்கணக்கை மூடிவிட்டார்.&nbsp;</p><p></p><p>
அவ்வளவுதான் Deirdreயின் வங்கிக்கணக்கிலிருந்த 4,000 யூரோக்கள் மாயமாகிவிட்டன.
</p><p>
Deirdre இந்த விடயம் தொடர்பில் புகாரளிக்க, 300 யூரோக்களை மட்டும் திருப்பிக் கொடுத்துள்ளது வங்கி.
</p><p>
விடயம் என்னவென்றால், பிரான்சைப் பொருத்தவரை, வாடிக்கையாளர்கள் மோசடி மூலம் இழந்த பணத்தை வங்கி திருப்பிக் கொடுத்தாகவேண்டும் என்கிற அவசியம் இல்லை.
</p><p>
2025ஆம் ஆண்டு, இதேபோன்றதொரு மோசடி வழக்கில், ஏமாந்த வாடிக்கையாளருக்கு வங்கி பணத்தைத் திருப்பிக் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை என நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துவிட்டது.
</p><p>
மின்னஞ்சல் ஒன்றை நம்பி அந்த நபர் பணத்தை இழந்த நிலையில், அது மோசடி என தெளிவாக புரிய வாய்ப்பிருந்தும் வங்கிக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர் அலட்சியமாக இருந்ததாலேயே அவர் தன் பணத்தை இழந்துள்ளதாகவும் நீதிமன்றம் கூறிவிட்டது.</p><p>

ஆக, யாராவது தொலைபேசியில் அழைத்து வங்கியிலிருந்து அழைப்பதாகக் கூறி, உங்கள் பாஸ்வேர்ட் போன்ற விடயங்களைக் கேட்டால், உடனடியாக தொலைபேசி அழைப்பை துண்டித்துவிடுங்கள் என்று கூறியுள்ள அதிகாரிகள், அப்படி ஏதாவது முக்கிய தகவல்களை நீங்கள் பகிர்ந்துவிட்டதாக கருதினால் உடனடியாக உங்கள் வங்கியை அணுகி நடந்ததைத் தெரியப்படுத்துங்கள் என்றும் கூறுகிறார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T09:35:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேனிலவு சென்றபோது மாதவிடாய்.. மணமகன் செயலால் அதிர்ந்த மணமகள்; காப்பாற்றிய ஹோட்டல் ஊழியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/menstruation-honeymoon-groom-strangles-bride-1786950927"></link>
            <id>https://jvpnews.com/article/menstruation-honeymoon-groom-strangles-bride-1786950927</id>
            <summary type="text">இந்தியா உத்திர பிரதேசத்தை சேர்ந்த புதுமண தம்பதிகள்&amp;nbsp; தேனிலவின்போது மாதவிடாய் ஏற்பட்டதால் தனது கணவர் தன்னைத் தாக்கியதாகப், உத்தரப்பிரதேச மாநிலம் கோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா உத்திர பிரதேசத்தை சேர்ந்த புதுமண தம்பதிகள்&nbsp; தேனிலவின்போது மாதவிடாய் ஏற்பட்டதால் தனது கணவர் தன்னைத் தாக்கியதாகப், உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்த பெண் ஒருவர், பெண் ஒருவர் முறைப்பாடு செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
</p><p>
இதையடுத்து, அவரது கணவர், மாமியார் மற்றும் நாத்தனார் ஆகியோர் மீது போலீஸார் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdf20a8b-52fd-4b95-9f0a-030f61cf05cd/26-6a82b511a9314.webp' /></p><h2>கணவர் மற்றும்&nbsp; குடும்பத்தினர்&nbsp; துன்புறுத்தியதாக பெண் முறைப்பாடு</h2><p> </p><p>

 

கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் நிகில் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின்போது வரதட்சணையாக லட்சக்கணக்கில் பணமும், காரும் கொடுக்கப்பட்ட போதிலும், கூடுதல் வரதட்சனை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை துன்புறுத்தியதாக அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
டெல்லியைச் சேர்ந்த தனது கணவர் நிகில் மிஸ்ரா, தனக்கு மாதவிடாய் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்து தன்னை அறைந்தும், உதைத்தும், குத்தியும் தாக்கியதுடன், கழுத்தை நெரிக்கவும் முயன்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவரது அலறல் சத்தம் கேட்டு ஹோட்டல் ஊழியர்கள் தலையிட்டு தாக்குதலை நிறுத்தியதாக அவர் கூறினார்.

தொடர்ந்து டெல்லிக்கு திரும்பிய பின்னரும் கணவர் மற்றும் மாமியார், நாத்தனார் ஆகியோர் சேர்ந்து அவரை மனரீதியாக தொடர்ந்து சித்திரவதை செய்துள்ளனர்.</p><p></p><p> </p><p>மேலும், திருமணமான 45 நாட்களுக்குள் அதாவது ஜூலை 14 அன்று அவர் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். </p><p>
 
இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்க முயன்றும் பலனளிக்காத நிலையில், கோரக்பூர் மூத்த காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கௌஸ்துப் அவர்களின் தலையீட்டிற்கு பின் கணவர் நிகில் மிஸ்ரா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T09:33:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் முதன்முறையாக பதிவாகியுள்ள சம்பவம்! பிரபல தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fcid-arrests-four-bank-managers-us-dollars-fraud-1786953965"></link>
            <id>https://tamilwin.com/article/fcid-arrests-four-bank-managers-us-dollars-fraud-1786953965</id>
            <summary type="text">நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை வெளிநாடுகளுக்கு கடத்திய சம்பவம் தொடர்பில் தனியார் வங்கிகளின் நான்கு முகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை வெளிநாடுகளுக்கு கடத்திய சம்பவம் தொடர்பில் தனியார் வங்கிகளின் நான்கு முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p> 

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதியியல் குற்றப் விசாரணை பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>விசாரணைகளில் வெளியான தகவல்&nbsp;</h2><p> </p><p>

சந்தேகநபர்கள் நான்கு பேரும் சம்பந்தப்பட்ட தனியார் வங்கிகளுக்குள்ளேயே வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4c0516f-3bd9-4c63-a3f7-da0904ee4284/26-6a82c3500df52.webp' />&nbsp;</p><p> </p><p>

இலங்கையில் இவ்வாறானதொரு கைது நடவடிக்கை இடம்பெற்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவென்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

இந்த மோசடியை நடத்திய முக்கிய சந்தேகநபரால், நான்கு அதிகாரிகளுக்கும் வாராந்தம் 30,000, 50,000 மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் வீதம் பணம் வழங்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதியியல் குற்ற விசாரணை பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T09:32:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ. 33 லட்ச விலை மனித குரங்கு விவகாரம்..சியான் விக்ரம் பின்னணியில் பிரபல தொழிலதிபர்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/vikram-pets-a-35-lakh-lar-gibbon-monkey-on-ecr-1786959637"></link>
            <id>https://viduppu.com/article/vikram-pets-a-35-lakh-lar-gibbon-monkey-on-ecr-1786959637</id>
            <summary type="text">சியான் விக்ரம் சில நாட்களுக்கு லார் கீபன் என்ற அரிய வகை மனித குரங்குடன் எடுத்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து சர்ச்சையில் சிக்கினார். அதற்கு காரணம், இந...</summary>
            <content type="html"><![CDATA[<p>சியான் விக்ரம் சில நாட்களுக்கு லார் கீபன் என்ற அரிய வகை மனித குரங்குடன் எடுத்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து சர்ச்சையில் சிக்கினார். அதற்கு காரணம், இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி பாதுக்கப்பட்ட காட்டு விலகுங்களை வீட்டில் வளர்ப்பதும், சாட்சிப்படுத்துவதும் வர்த்தம் செய்வதும் கடுமையான குற்றமாகும். அதில் இந்த குரங்கு இனமும் ஒன்று.</p><p></p><p> இதுகுறித்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். </p><p>அதில், லார் கீபன் என்பது இந்தியாவில் இயல்பாக வாழும் உயிரினம் கிடையாது. இவை மலேசியா, இந்தோனேசிய நாட்டின் அடர்ந்த மலைக்காடுகளில் 100 முதல் 150 ஆண்டுகள் வரை பழமையான உயர்ந்த மரங்களின் உச்சியில் வாழும் மனிதக்குரங்காகும். உலகளவில் மிகவும் அழிந்து வரும் உயிரினங்களில் லிஸ்ட்டில் இருக்கிறது. </p><p>இயற்கை சூழலில் சுதந்திரமாக உலவ வேண்டிய இவ்வகையான விலங்குகளை நாம் எவ்வளவு வசதியான செயற்கை சூழலில் அடைத்து வைத்தாலும் அதனால் இயல்பாக வாழ முடியாது. மணிப்பூர் எல்லை வழியாக இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக 3 மனித குரங்குகளில் கடத்தி வரப்பட்டதாக கூறப்படுகிறது. </p><p>2 குரங்குகள் ஈரோடு பெருந்துறையிலுள்ள ஒரு தொழிலதிபருக்கும், இன்னொன்று விக்ரமின் சம்மந்தி கெவின் கே சி. கே ரங்கநாதனின் குடும்பத்திற்கும் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஈசிஆர்-ல் உள்ள தன்னுடைய சம்மந்தி வீட்டிற்கு மகளை சென்று பார்க்கும்போது அங்கிருந்த அந்த குரங்குடன் விளையாட்டாக வீடியோ எடுத்து வீடியோவை பதிவிட்டதாகவும் எனக்கு வேறு எதுவும் தெரியாது என்றும் சிக்ரம் கூறினார்.</p><p></p><p> </p><p>பின் அக்கரையிலுள்ள பண்ணை விட்டிற்குள் சென்று வனத்துறையினரும், அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டபோது வீட்டின் உரிமையாளர்கள் யாரும் அங்கில்லை. அங்கிருந்த மேனேஜரிடம் விசாரித்தபோது, வியாபாரி ஒருவர் விற்பனைக்காக இந்த குரங்கை கொண்டு வந்தாரே தவிர, நாங்கள் அதை விலைக்கு வாங்கவில்லை என்று கூறியிருக்கிறார். </p><p>ஆனால் சர்வதேச சந்தையில் சுமார் ரூ. 33 லட்சம் முதல் ரூ. 35 லட்சம் வரை மதிப்பு கொண்ட அரிய உயிரினங்கலை வாங்குவதும் விற்பனை செய்வது சட்டவீரோத வனவிலங்கு வர்த்தப் பிரிவின் கீழ் வரும். கடத்தி வரப்பட்ட 3 குரங்குகளில் ஒன்று இறந்துள்ளதால், இந்த குரங்கு கடத்தி வரப்பட்டது என்று நிரூபித்தால் விக்ரமின் சம்மந்தி கைது செய்யப்படுவார் என்று குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-17T09:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையான் உட்பட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/charge-sheet-filed-against-4-individuals-pillayan-1786958848"></link>
            <id>https://jvpnews.com/article/charge-sheet-filed-against-4-individuals-pillayan-1786958848</id>
            <summary type="text">பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நால்வருக்கு எதிராக பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் குற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நால்வருக்கு எதிராக பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91ebcb60-7ca1-42f0-a8ea-400a164bf0d5/26-6a82d40188286.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T09:25:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்த பேச்சு - திமுகவிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cm-vijay-asks-sorry-in-tamilnadu-assembly-1786958387"></link>
            <id>https://news.lankasri.com/article/cm-vijay-asks-sorry-in-tamilnadu-assembly-1786958387</id>
            <summary type="text">cm vijay asks sorry in assembly : தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயரை குறிப்பிட்டு வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் பேசியதற்காக ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>cm vijay asks sorry in assembly : தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயரை குறிப்பிட்டு வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் பேசியதற்காக முதல்வர் விஜய் மன்னிப்பு கோரியுள்ளார்.
</p><h3>
முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயரை குறிப்பிட்ட அமைச்சர்
</h3><p>
தமிழ்நாடு சட்டமன்றத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.</p><p> 

சட்டமன்றத்தில் பேசிய வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார், முன்னாள் முதல்வர் என்று மட்டும் கூறாமல் கருணாநிதி என பெயரை குறிப்பிட்டு பேசினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3993f93c-dd39-40ee-aec7-30f0a1654631/26-6a82d23566c35.webp' /></p><p> 

பெயரை குறிப்பிடதற்கு, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவை முன்னவர் செங்கோட்டையன், ரஞ்சித்குமாரின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்குமாறு கேட்டுக் கொண்டார்.&nbsp;</p><p></p><p>
இதனையடுத்து பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், "சட்டமன்றத்தில் கண்ணியம் காக்கப்பட வேண்டும். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது ஒரு எம்எல்ஏ சட்டமன்றத்தில் கருணாநிதி என பெயரைக் குறிப்பிட போது அதனை வாபஸ் வாங்க சொல்லி மன்னிப்பு கேட்க சொன்னார்" என குறிப்பிட்டார்.&nbsp;</p><h3> 

மன்னிப்பு கேட்ட முதல்வர் விஜய் </h3><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/033c3551-d789-4868-84ff-7cd65b1695a4/26-6a82d234b76fc.webp' /></p><p>இதன் பின்னர் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிடும்போது பேசிய முதல்வர் விஜய், "உங்கள் தலைவரின் பெயரை குறிப்பிட்டு பேசியது தவறு தான். அவர் சார்பாக நான் sorry கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T09:19:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டுக்கு பரிமாற்றப்பட்டுள்ள பில்லியன் டொலர்கள்! நான்கு வங்கி மேலாளர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/four-managers-from-four-private-banks-arrested-1786953698"></link>
            <id>https://ibctamil.com/article/four-managers-from-four-private-banks-arrested-1786953698</id>
            <summary type="text">




வெளிநாட்டிற்கு பாரிய தொகையொன்றை சந்தேகத்துக்குரிய வகையில் பரிமாற்றம் செய்தது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, நான்கு தனியார் வங்கிகளைச் சே...</summary>
            <content type="html"><![CDATA[<p>




வெளிநாட்டிற்கு பாரிய தொகையொன்றை சந்தேகத்துக்குரிய வகையில் பரிமாற்றம் செய்தது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, நான்கு தனியார் வங்கிகளைச் சேர்ந்த நான்கு மேலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
குறித்த கைது நடவடிக்கையானது, காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (FCID) மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2>1 பில்லியன் அமெரிக்க டொலர்கள்</h2><p>
</p><p>
இலங்கைக்குள் எந்தப் பொருட்களையும் இறக்குமதி செய்யாமலேயே, கோட்டையில் செயல்படும் ஒரு பணப்பரிமாற்ற நிறுவனம் 1 பில்லியன் அமெரிக்க டொலரை வெளிநாட்டிற்குப் பரிமாற்றம் செய்ததாகக் கூறப்படும் சம்பவத்துடன் இந்தக் கைதுகள் தொடர்புடையவை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27c01596-8d32-4b74-b464-0f6901707050/26-6a82c2f463e67.webp' /></p><p>
</p><p>
இதன்படி, பல வங்கி வழிமுறைகள் மூலம் இந்தப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டதாகப் புலனாய்வாளர்கள் நம்புவதால், அதற்குரிய இறக்குமதிகள் ஏதுமின்றி இவ்வளவு பெரிய தொகை எவ்வாறு மாற்றப்பட்டது என்பதைக் கண்டறிய விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-08-17T09:14:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விகாரையில் மரத்தில் தொங்கிய வெளி நாட்டவரின் சடலம் ; நடந்தது என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/foreigner-found-in-a-tree-at-thihagoda-vihara-1786956204"></link>
            <id>https://jvpnews.com/article/foreigner-found-in-a-tree-at-thihagoda-vihara-1786956204</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;திக்கோவிட்ட விகாரையில் 54 வயது ஸ்காட்லாந்து நாட்டவரின் சடலம் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.  

மாத்தறை, திக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;திக்கோவிட்ட விகாரையில் 54 வயது ஸ்காட்லாந்து நாட்டவரின் சடலம் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. </p><p> 

மாத்தறை, திக்கோவிட்ட பலோல்பிட்டியாவில் உள்ள ஒரு விசாரையில், 54 வயதான ஸ்காட்லாந்து நாட்டவர் ஒருவர் வேப்பமரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/995e271b-f3e2-4cc6-aaa1-2e3e548a1b6e/26-6a82c9adb4fec.webp' /></p><h2>மரணம் தற்கொலையா அல்லது கொலையா...</h2><p>

சம்பவ இடத்திற்கு அருகில் ஒரு ஜோடி காலணிகள், ஒரு மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் மற்றும் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு ஸ்கூட்டர் ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளன.</p><p></p><p> 


 ஹம்பாந்தோட்டைக்கு புறப்படுவதற்கு முன்பு, அந்த நபர் வெலிகம, மிடிகமவில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து ​பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T09:13:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய லுக்கில் அய்யனார் துணை சீரியல் நடிகை அட்சயா ராய் வெளியிட்ட போட்டோஸ்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ayyanar-thunai-serial-actress-atchaya-roy-photos-1786945371"></link>
            <id>https://cineulagam.com/article/ayyanar-thunai-serial-actress-atchaya-roy-photos-1786945371</id>
            <summary type="text">அட்சயா ராய்விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பியில் நம்பர் 1 சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது அய்யனார் துணை.இப்போது கதையில் சேரன்-சந்தா திருமண ஏற்பாடுகள் தான் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அட்சயா ராய்</h2><p>விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பியில் நம்பர் 1 சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது அய்யனார் துணை.</p><p>இப்போது கதையில் சேரன்-சந்தா திருமண ஏற்பாடுகள் தான் வேகமாக நடந்து வருகின்றன. இன்றைய எபிசோடில், திருமணத்திற்கு என்னென்ன வாங்கலாம், என்ன பட்ஜெட் போன்ற விஷயங்கள் எல்லாம் பேசப்படுகிறது.</p><p>சீரியல் கதைக்களம் ஒருபக்கம ஜாலியாக செல்ல தற்போது தொடரில் வானதி கதாபாத்திரத்தில் நடிக்கும் அட்சயா ராஜ் புதிய லுக்கில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.</p><p>இதோ அவரது லேட்டஸ்ட் போட்டோ ஷுட்,</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T09:10:44+00:00</updated>
        </entry>
    </feed>
