<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-29T14:02:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்புரவுக் கருவி மூலம் மனைவியை வேவு பார்த்த கணவனுக்கு தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/taiwan-husband-punished-photographing-wife-affair-1788006318"></link>
            <id>https://jvpnews.com/article/taiwan-husband-punished-photographing-wife-affair-1788006318</id>
            <summary type="text">தாய்வானில், மனைவியின் சமூக பிறழ்வான நடத்தை தொடர்பான ஆதாரத்தை ரோபோ வெற்றிடத் துப்புரவுக் கருவி மூலம் சேகரித்த கணவருக்கு, ஐந்து மாத சிறைத்தண்டனை விதிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்வானில், மனைவியின் சமூக பிறழ்வான நடத்தை தொடர்பான ஆதாரத்தை ரோபோ வெற்றிடத் துப்புரவுக் கருவி மூலம் சேகரித்த கணவருக்கு, ஐந்து மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.</p><p>

 வீட்டில் கிடைத்த பயன்படுத்தப்பட்ட பல் துலக்கும் தூரிகை மற்றும் கண்காணிப்பு காட்சிகளில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தென்பட்டமை அவரது சந்தேகத்தை மேலும் அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4491a569-0ff4-4039-9502-7eacced884dc/26-6a92cfafc7e29.webp' /></p><h2>கணவருக்கு எதிராக தீர்ப்பு</h2><p>

இதையடுத்து, சுமார் மூன்று மாதங்களுக்குப் பின்னர், அந்த வீட்டில் இருந்த ரோபோ துப்புரவுக் கருவியை செயலி மூலம் தொலைதூரத்திலிருந்து இயக்கியுள்ளார்.</p><p>

அதிலிருந்த நேரலைக் காட்சி மூலம், தனது மனைவி மற்றொரு ஆணுடன் நெருக்கமாக இருப்பதைப் பார்த்த அவர், அந்தக் காட்சியை பதிவு செய்துள்ளார்.

பின்னர், தனது மனைவி மற்றும் குறித்த ஆணுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த கணவர், 20 இலட்சம் தாய்வான் டொலரை இழப்பீடாகக் கோரியுள்ளார்.</p><p></p><p>
</p><p>
இந்த வழக்கில், இருவரும் திருமண உறவின் எல்லையை மீறியதாக நீதிமன்றம் தீர்மானித்து, மனைவிக்கு 5 இலட்சம் தாய்வான் டொலரை இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது.
</p><p>
எனினும், மனைவியின் அனுமதியின்றி அவரது தனிப்பட்ட காட்சிகளைப் பதிவு செய்ததாகத் தொடரப்பட்ட மற்றொரு வழக்கில், கணவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது.</p><p>

சிவில் வழக்கில் அந்தக் காணொளி ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும், அது தனியுரிமையை மீறி பதிவு செய்யப்பட்ட செயலை நியாயப்படுத்தாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p></p><p>

இதையடுத்து, சட்டவிரோதமாக தனிப்பட்ட காட்சிகளைப் பதிவு செய்த குற்றத்திற்காக கணவருக்கு ஐந்து மாத சிறைத்தண்டனையும், 1.5 இலட்சம் தாய்வான் டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

தாய்வான் சட்டத்தின்படி, மற்றொருவரின் தனிப்பட்ட அல்லது நெருக்கமான நடவடிக்கைகளை அவர்களின் அனுமதியின்றி ரகசியமாகப் பதிவு செய்வதற்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-29T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக் பாஸ் 10க்கு வரும் சர்ச்சை பிரபலம்.. யார் பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/is-joy-crizildaa-entering-bigg-boss-10-tamil-1788011365"></link>
            <id>https://cineulagam.com/article/is-joy-crizildaa-entering-bigg-boss-10-tamil-1788011365</id>
            <summary type="text">பிக் பாஸ் தொடங்குகிறது என்றாலே அதற்கு பல வாரங்களுக்கு முன்பு இருந்து உத்தேச போட்டியாளர்கள் லிஸ்ட் என தகவல்கள் வலம் வர தொடங்கி விடும்.போட்டியாளர்களாக ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக் பாஸ் தொடங்குகிறது என்றாலே அதற்கு பல வாரங்களுக்கு முன்பு இருந்து உத்தேச போட்டியாளர்கள் லிஸ்ட் என தகவல்கள் வலம் வர தொடங்கி விடும்.</p><p>போட்டியாளர்களாக யாரெல்லாம் வரப்போகிறார்கள் என பிரபலங்களின் பெயர்கள் அந்த பட்டியலில் கிசுகிசுக்கப்படும்.
</p><p>அப்படி கிசுகிசுக்கப்படும் பெயர்களில் பலர் வராமல் போவதும் உண்டு.
</p><p>அப்படி விஜய் டிவியில் விரைவில் தொடங்க இருக்கும் பிக் பாஸ் 10வது சீசனில் வரவிருக்கும் போட்டியாளர்கள் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d44165ad-4c56-4436-95df-7a489ee9087a/26-6a92e36755549.webp' /></p><p>
</p><h2>ஜாய் கிரிஸில்டா?</h2><p>
பிரபல ஆடை வடிவமைப்பாளரும், செப் மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவியுமான ஜாய் கிரிஸில்டா பிக் பாஸ் 10ல் போட்டியாளராக வர இருக்கிறார் என தகவல் பரவி வருகிறது.
</p><p>மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார் என அவர் நீதிமன்றம் வரை சென்று போராடி, குழந்தைக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து நிரூபித்து, தற்போது தான் கணவருடன் இணைந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>மேலும் அவரது குழந்தைக்கு இன்னும் ஒரு வயது கூட ஆகவில்லை. சமீபத்தில் தான் குழந்தைக்கு மொட்டை அடித்து இருந்த புகைப்படங்களையும் ஜாய் வெளியிட்டு இருந்தார்.
</p><p>ஒரு வயது வயது கூட ஆகாத குழந்தையை விட்டுவிட்டு ஜாய் கிரிஸில்டா பிக் பாஸ் வருவாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80ddd858-39e2-4b3c-a78a-77eec5981661/26-6a92e368d062e.webp' /></p>]]></content>
            <updated>2026-08-29T13:49:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாஞ்சில் விஜயன் மனைவியை பிரிந்த விவகாரம்: திருநங்கை வைஷு வெளியிட்ட வீடியோ வைரல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/nanjil-vijayan-family-problem-vaishu-post-viral-1788009909"></link>
            <id>https://manithan.com/article/nanjil-vijayan-family-problem-vaishu-post-viral-1788009909</id>
            <summary type="text">சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன், தனது மனைவியைப் பிரிந்துவிட்டதாக சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த நிலையில், அந்தப் பதிவுக்கு பதிலளிக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன், தனது மனைவியைப் பிரிந்துவிட்டதாக சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த நிலையில், அந்தப் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் திருநங்கை வைஷுலிசா வெளியிட்டுள்ள காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
</p><h2>நாஞ்சில் விஜயன்
</h2><p>விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். குறிப்பாக, பெண் வேடமிட்டு நகைச்சுவையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddc436c9-6b54-4602-9310-772f16439425/26-6a92e2c5710a1.webp' /></p><p> </p><p>தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, மேடைப் பேச்சுகள் மற்றும் சொந்த தொழில் என தொடர்ந்து பிஸியாக இயங்கி வந்தார்.
</p><p>
இந்த நிலையில், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பான பதிவு ஒன்று ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d00d7a02-f149-41cc-b40f-b432045bc9d5/26-6a92e2c627266.webp' /></p><p>
</p><p><b>மனைவியை பிரிந்ததாக நாஞ்சில் விஜயன் பதிவு</b></p><p>
நாஞ்சில் விஜயன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், மனைவியைப் பிரிந்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். மேலும், திருநங்கை சகோதரி வைஷ்ணவி தொடர்பாக தன்னைப் பற்றியும் தனது மனைவியையும் இணைத்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்ட போதிலும், தனது மனைவி தன்னுடன் உறுதியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஆனால், தங்களுக்குள் ஏற்பட்ட ஒரு சிறிய சண்டை காரணமாக தற்போது மனைவியைப் பிரிந்துவிட்டதாக அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/668ad8b4-bb72-49d7-b938-d52b418c0bb1/26-6a92e2c6d1696.webp' /></p><p></p><p>இதனிடையே, நாஞ்சில் விஜயன் தொடர்பாக திருநங்கை வைஷுலிசா கடந்த காலத்தில் முன்வைத்திருந்த குற்றச்சாட்டுகளும் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.</p><p>

நாஞ்சில் விஜயன் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னுடன் பாலியல் ரீதியான தொடர்பில் இருந்ததாகவும், ஒரு கட்டத்தில் மனைவியைப் போல அவருடன் வாழ்ந்ததாகவும் வைஷுலிசா முன்பு புகார் அளித்திருந்தார்.இந்த விவகாரம் கடந்த ஆண்டு சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டது.</p><h2>

நாஞ்சில் விஜயனுக்கு வைஷுலிசா பதிலடி</h2><p>
இந்நிலையில், நாஞ்சில் விஜயன் தனது மனைவியைப் பிரிந்தது தொடர்பாக வெளியிட்ட பதிவுக்கு வைஷுலிசா தற்போது பதிலளித்துள்ளார்.
</p><p>
அவர் வெளியிட்டுள்ள காணொளியில், “என்னுடைய சாபத்தால்தான் மனைவியைப் பிரிந்துவிட்டேன் என்று கூறுகிறார். ஆனால், கடவுள் மீது சத்தியமாக சொல்கிறேன், நான் எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் போராடினேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2120a6d-3f64-4bfd-9b24-c71439638e4b/26-6a92e2c7863ae.webp' /></p><p></p><p> கணவன்-மனைவி இருவரும் பிரிய வேண்டும் என்று நான் ஒருபோதும் சாபமிடவில்லை” எனக் கூறியுள்ளார்.

மேலும், தான் கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்றதும், நாஞ்சில் விஜயனிடம் தனது தரப்பில் கேட்டதும், அனைத்துமே அவருடன் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
“நீங்கள் இருவரும் பிரிந்து செல்ல வேண்டும் என்று நான் சத்தியமாக எதையும் செய்யவில்லை” என்றும் வைஷுலிசா தனது காணொளியில் தெரிவித்துள்ளார்.</p><p>

நாஞ்சில் விஜயனின் இன்ஸ்டாகிராம் பதிவு மற்றும் அதற்கு வைஷுலிசா அளித்துள்ள இந்த பதில் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcmMWYOTT3y/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcmMWYOTT3y/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcmMWYOTT3y/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Vaishulisa vallal (@vj_vaishu_143)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">&nbsp;&nbsp;</a><b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T13:49:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க தவெக அரசு முயற்சியா? எதிர்க்கட்சிகள் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/opposition-questions-tvk-govt-plan-ban-jallikattu-1788010817"></link>
            <id>https://ibctamilnadu.com/article/opposition-questions-tvk-govt-plan-ban-jallikattu-1788010817</id>
            <summary type="text">opposition parties questions tvk-govt plans to ban jallikattu&quot; தவெக எம்எல்ஏ கருப்பையா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், ஜல்லிக்கட்டுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>opposition parties questions tvk-govt plans to ban jallikattu" தவெக எம்எல்ஏ கருப்பையா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க தவெக அரசு முயற்சிகிறதா என கேள்வி எழுப்பியுள்ளன. </p><h3>

ஜல்லிக்கட்டு குறித்து தவெக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு </h3><p>

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு தமிழர்களின் பல்லாயிரம் ஆண்டுகாலப் பண்பாட்டு அடையாளமாகவும், வீரத்தின் வெளிப்பாடாகவும், நாட்டு மாடுகளைக் காக்கும் மரபின் நீட்சியாகவும் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2537bbea-9f15-4301-a636-b74019e0ee19/26-6a92e2f380a17.webp' /></p><p>

2017 ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் பல லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட போராட்டம் நடைபெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67d19a5b-436e-4352-8bc3-669940ba4ec5/26-6a92e2f433aee.webp' /></p><p> 

இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய தவெக எம்எல்ஏ கருப்பையா, "அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 10 ஆண்டு காலமாக மூடப்பட்டு இருக்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc0737ef-5dbc-400c-8741-24887fc8879f/26-6a92e14267752.webp' /></p><p>

ரூ.50 கோடி நிதி இருந்திருந்தால் அந்த சர்க்கரை ஆலையை திறந்து இருக்கலாம், இளைஞர் சமுதாயத்தை சீரழிக்க கூடிய ஒரு ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு அவ்வளவு பணம் செலவழிப்பதற்கு பதிலாக, சர்க்கரை ஆலைக்கு கொடுத்து இருக்கலாம்" என கூறினார். </p><p>

அவரது பேச்சுக்கு திமுக, அதிமுக, நாம்தமிழர், அமமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. </p><h3> 

அதிமுக கண்டனம்</h3><p> 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக, "தமிழரின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பற்றி இழிவாக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5181af7-7b02-4be9-b5b4-4a27013e95b0/26-6a92e143c4619.webp' /></p><p>
ஜல்லிக்கட்டிற்கு உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூரை தனது தொகுதியில் வைத்துள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினர் இப்படி பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சியும் பல சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது.
</p><p>
சங்க காலம் தொட்டே தமிழர்களுக்கும் மாடுகளுக்குமான உறவை பறைசாற்றும் இந்த “ஏறு தழுவுதல்” பற்றி புரிதல் இல்லாமலா அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இருப்பார்?
</p><p>
ஜல்லிக்கட்டிற்கு தடை கொண்டு வர வேண்டும் என்று இன்றைய பொய்க்கால் குதிரை அரசு நினைத்து, அதற்கான First Look-ஆக தனது MLA-வை பேச வைத்துள்ளாரா இன்றைய முதல்வர்? என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு வலுவாக எழுகிறது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழரின் பாரம்பரியமான <a href="https://x.com/hashtag/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ஜல்லிக்கட்டு</a> விளையாட்டைப் பற்றி இழிவாக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.<br><br>ஜல்லிக்கட்டிற்கு உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூரை தனது தொகுதியில் வைத்துள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினர் இப்படி…</p>&mdash; AIADMK (@AIADMKOfficial) <a href="https://x.com/AIADMKOfficial/status/2093554912043085899?ref_src=twsrc%5Etfw">August 29, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
தனது MLA பேசிய பேச்சிற்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்! ஜல்லிக்கட்டு குறித்த இந்த அரசின் நிலைப்பாட்டை சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும்!</p><p>

(பி.கு. : Incase you have forgotten, 2017-ல் “இதுக்கு காரணமான அமைப்பை வெளியே அனுப்’பீட்டா’ ” என்று நீங்கள் வெளியிட்ட வீடியோவை மீண்டும் ஒரு முறை பார்க்கவும் விஜய் !)" என தெரிவித்துள்ளது.</p><h3> 

திமுக கண்டனம்</h3><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e91986fa-44c1-4228-bebd-9cb9bbf09623/26-6a92e14476a74.webp' /></p><p>இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக ஐடி விங் செயலளார் டி.ஆர்.பி.ராஜா, "தமிழர் பண்பாட்டின் அடையாளமாகவும், நமது இளைஞர்களின் உணர்வோடு கலந்த பாரம்பரியமாகவும் இருக்கும் ஜல்லிக்கட்டை இப்போது “இளைஞர்களைச் சீரழிக்கும் ஒன்று” என்று சித்தரிக்கத் தொடங்கிவிட்டார்களா?&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழர் பண்பாட்டின் அடையாளமாகவும், நமது இளைஞர்களின் உணர்வோடு கலந்த பாரம்பரியமாகவும் இருக்கும் ஜல்லிக்கட்டை இப்போது “இளைஞர்களைச் சீரழிக்கும் ஒன்று” என்று சித்தரிக்கத் தொடங்கிவிட்டார்களா?<a href="https://x.com/hashtag/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ஜல்லிக்கட்டு</a> இளைஞர்களைச் சீரழிக்கிறது என்பதுதான் தவெகவின் நிலைப்பாடா?<br><br>ஜல்லிக்கட்டுக்காக… <a href="https://t.co/7xwm3UPRxQ">pic.twitter.com/7xwm3UPRxQ</a></p>&mdash; Dr. T R B Rajaa (@TRBRajaa) <a href="https://x.com/TRBRajaa/status/2093339055933321217?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
ஜல்லிக்கட்டு இளைஞர்களைச் சீரழிக்கிறது என்பதுதான் தவெகவின் நிலைப்பாடா? என கேள்வி எழுப்பியுள்ளார்.</p><h3> 

மது அருந்தும் இளைஞர்கள் சீரழியவில்லையா?</h3><p>

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "தமிழர்களின் பல்லாயிரம் ஆண்டுகாலப் பண்பாட்டு அடையாளமாகவும், வீரத்தின் வெளிப்பாடாகவும், திகழும் ஏறுதழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு, இளைஞர்களைச் சீரழிக்கும் விளையாட்டு என்று தமிழ்நாடு சட்டப்பேரவையிலேயே சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/250548fb-52b8-4f78-b94c-139191cbdb69/26-6a92e145294b4.webp' /></p><p>

உழவர்களின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடைய சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் தமிழர் கட்சியும் முழுமையாக ஆதரிக்கிறது. ஆனால், சர்க்கரை ஆலைக்கு நிதி கேட்டுப் பெறுவதற்காக ஜல்லிக்கட்டை இழிவுபடுத்தி பேச வேண்டிய தேவை என்ன?
</p><p>
தமிழ்நாட்டு தெருக்கு தெரு இருக்கும் சாராயக்கடைக்கு சென்று மது அருந்தும் இளைஞர்கள் சீரழியவில்லையா? அலங்காநல்லூர் வாடிவாசலில் காளையைத் தழுவி வீரத்தைக் காட்டும் இளைஞர்கள்தான் சீரழிகிறார்களா?&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழர்களின் வீரக்கலையான ஏறுதழுவுதலை (ஜல்லிக்கட்டு) ‘இளைஞர்களைச் சீரழிக்கும் விளையாட்டு’ என இழிவுபடுத்துவதா?<br>சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா கருத்தைத் திரும்பப்பெற்று மன்னிப்புக் கோர வேண்டும்!<a href="https://x.com/CMOTamilnadu?ref_src=twsrc%5Etfw">@CMOTamilnadu</a><a href="https://x.com/TVKVijayHQ?ref_src=twsrc%5Etfw">@TVKVijayHQ</a><br><br>தமிழர்களின் பல்லாயிரம் ஆண்டுகாலப் பண்பாட்டு…</p>&mdash; செந்தமிழன் சீமான் (@Seeman4TN) <a href="https://x.com/Seeman4TN/status/2093375699717599596?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

ஏறுதழுவுதலை “இளைஞர்களையும் சமூகத்தையும் சீரழிக்கும் விளையாட்டு” என்று சட்டப்பேரவையில் பேசிய சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு. கருப்பையா அவர்கள் தனது கருத்தை உடனடியாகத் திரும்பப்பெற்று, தமிழ்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.</p><h3>

ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா?
</h3><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/396ab28c-d2ca-44c2-a459-ef99e3a207fc/26-6a92e145d0452.webp' /></p><p>இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன், "ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு உலக அளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூரை உள்ளடக்கிய சோழவந்தான் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரை வைத்தே இத்தகைய இழிவான பேச்சைச் சட்டமன்றத்தில் பதிவு செய்திருப்பதன் மூலம்,&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழர்களின் பாரம்பரியத்தோடும், பண்பாட்டோடும் பின்னிப் பிணைந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் இளைஞர் சமுதாயத்தைச் சீரழிக்கின்றன என்ற சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. கருப்பையா அவர்களின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.<br><br>சட்டமன்ற உறுப்பினர்களைத் தக்கவைத்துக்…</p>&mdash; TTV Dhinakaran (@TTVDhinakaran) <a href="https://x.com/TTVDhinakaran/status/2093585907505115183?ref_src=twsrc%5Etfw">August 29, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

வருங்காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா? என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுந்திருக்கிறது" என தெரிவித்துள்ளார். </p><h3>

எம்.எல்.ஏ கருப்பையா விளக்கம் </h3><p>

இதற்கு விளக்கமளித்துள்ள தவெக எம்.எல்.ஏ கருப்பையா, "ஜல்லிக்கட்டுக்கு எதிராக நான் ஏன் பேச வேண்டும்? நான் ஜல்லிக்கட்டுக்கு கோடிகளை கொட்டி மைதானம் கட்டியதைத்தான் எதிர்த்து பேசினேன்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f324be7-79a4-4c36-8658-a621982256ec/26-6a92e1431af3b.webp' /></p><p>
பாரம்பரியம் மாறாமல் வாடிவாசலில் இருந்து பாய்ந்து வரும் காளையை இளைஞர்கள் திமிலை பிடித்து அடக்குவதுதான் வீரம். இவர்கள் அதை உணராமல் ஐரோப்பிய நாடுகளில் நடப்பதை போல வட்ட வடிவில் மைதானம் கட்டி வைத்திருக்கிறார்கள். அது இளைஞர்களின் வீரத்தை அவமதிக்கும் வகையில் இருக்கிறது.</p><p>

நானே ஒரு மாடுபிடி வீரன்தான். இளம் வயதில் பல ஜல்லிக்கட்டு ஆட்டங்களில் கலந்திருக்கிறேன். மாடு குத்தி கிழித்து போட்டுக் கொண்ட தையலெல்லாம் வீரத் தழும்பாக உடம்பில் இன்னமும் இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-29T13:47:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! அமைச்சர் பிமலிடம் மனோ வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/transform-the-north-into-a-global-trade-hub-1788010354"></link>
            <id>https://tamilwin.com/article/transform-the-north-into-a-global-trade-hub-1788010354</id>
            <summary type="text">வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி
சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்
மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி
சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்
முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.</p><p>

இந்த இரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உட்கட்டமைப்புத் திட்டங்களின்
வளர்ச்சிக்கு இந்தியா நிதி உதவி வழங்கத் தயாராகவுள்ள நிலையில், அதனைப்
பயன்படுத்தி வடக்கை ஒரு புதிய வர்த்தக, முதலீட்டு, பொருளாதார மையமாக மாற்றும்
வாய்ப்புகளுக்கு வடக்கு மாகாணத்தின் அரச பொறுப்பாளராகப் பணியாற்றும் அமைச்சர்
பிமல் ரத்நாயக்க முட்டுக்கட்டை போடக் கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><h2>இந்தியா நிதி உதவி</h2><p>
</p><p>
பலாலி மற்றும் காங்கேசன்துறை ஆகிய இரு தேசிய உட்கட்டமைப்புத் திட்டங்களையும்,
பொருளாதார ரீதியாக எதிர்பார்த்த பலனைத் தராத மத்தல வானூர்தி நிலையம் மற்றும்
அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகிய தோல்வியடைந்த திட்டங்களுடன் மறைமுகமாக
ஒப்பிடுவது அறிவீனமானது என்றும், பலாலியும் காங்கேசனும் மத்தல,
அம்பாந்தோட்டையை விடப் பழமையானவை என்பதை அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்
என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

அமைச்சர் தன்னை இனவாதத்துக்கு எதிரானவர் என்று கூறிக்கொண்டாலும், வடக்கு
எப்போதும் கொழும்பையே சார்ந்திருக்க வேண்டும் என்ற மனப்பான்மை அவரிடம் ஆழமாக
இருக்கின்றது என்றும், இது அப்பட்டமான அரசியல் இரட்டை வேடம் என்றும் மனோ
கணேசன் விமர்சித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bb5079c-7dae-43e8-8cab-9bfe892c53cd/26-6a92e26c4e631.webp' /></p><p>

இந்தியா நிதி உதவி வழங்கத் தயாராக உள்ள நிலையில், பலாலி வானூர்தி நிலையம்
மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் அபிவிருத்தியைத் தாமதிக்காமல்
முன்னெடுக்குமாறும் அவர் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>
வட இலங்கையைக் கொழும்பைச் சார்ந்திருக்கும் ஒரு பிராந்தியமாக மாத்திரம்
மட்டுப்படுத்தாமல், உலகளாவிய வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார
அபிவிருத்தியுடன் நேரடியாக இணைந்த புதிய பொருளாதார மையமாக மாற்ற வேண்டும்
என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
உலகம் முழுவதும் பரந்துவாழும் புலம்பெயர் தமிழர்கள் வடக்குக்கு நேரடியாகப்
பயணிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும், வடக்கின்
வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த இலங்கையின் வளர்ச்சி என்பதை மறக்கக் கூடாது
என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T13:45:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல் வீதித் தடையை மீறி சென்ற வாகனம்: துப்பாக்கி சூட்டில் முறியடிக்கப்பட்ட கடத்தல் முயற்சி - இளம் பெண் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/abducted-woman-rescued-in-colombo-shooting-1788010161"></link>
            <id>https://ibctamil.com/article/abducted-woman-rescued-in-colombo-shooting-1788010161</id>
            <summary type="text">கொழும்பில் கடத்தப்பட்ட இளம் பெண் ஒருவர் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

கடத்தப்பட்ட 26 வயதுடைய பெண்ணே இவ்வாறு காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் கடத்தப்பட்ட இளம் பெண் ஒருவர் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார்.
</p><p>
கடத்தப்பட்ட 26 வயதுடைய பெண்ணே இவ்வாறு காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த சம்பவம் இன்று (29-08-2026) இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நாரஹேன்பிட்டி, நாவல வீதியிலுள்ள காவல் வீதித் தடையை மீறி செல்ல வாகனம் ஒன்று முற்பட்டுள்ளது.</p><p>

இதையடுத்து, குறித்த வாகனம் மீது காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00d5527b-de96-4718-aaa9-b49118bb1b45/26-6a92e10d343ca.webp' /></p><p>இந்நிலையில் சம்பவ இடத்தில் வாகனத்தையும் பெண்ணையும் கைவிட்டு கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
</p><p>
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் குறித்த பெண் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் வைத்து கடத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
</p><p>
தப்பிச் சென்ற நபர்களை கைது செய்யும் விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-29T13:39:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய் மண்ணுக்கு பெருமை சேர்த்த ReeCha ; பிரபலம் பகிர்ந்த பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/reecha-park-kilinochchi-tourism-b-h-abdul-hameed-1788003856"></link>
            <id>https://jvpnews.com/article/reecha-park-kilinochchi-tourism-b-h-abdul-hameed-1788003856</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஈழத்தின் வடபுலத்தே புலமபெயர் தமிழ் தொழில் அதிபரின் பெரும் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள ReeCha சுற்றுலாதலம் , இலங்கையில் மட்டுமன்றி புலம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஈழத்தின் வடபுலத்தே புலமபெயர் தமிழ் தொழில் அதிபரின் பெரும் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள ReeCha சுற்றுலாதலம் , இலங்கையில் மட்டுமன்றி புலம்பெயர் தேசத்திலும் மிகவும் பிரசித்தி பெற்றது.
</p><p>நாட்டுக்கு வரும் சுற்ருலா பயணிகள் முதல், எமது தாயகத்தில் வாழும் உறவுகளும் விரும்பி செல்லும் இடமாக ReeCha சுற்றுலாதலம் அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/056a2d3c-4ef0-4969-bd51-cd2ed7dacfb5/26-6a92c613a52bc.webp' /></p><h2>40 ஆண்டுகள் கழித்து ஆசை நிறைவேறியுள்ளது</h2><p>

இன்னிலையில் இலங்கையின் பிரபல அறிவிப்பாளரான B.H. அப்துல் ஹமீத் அவர்கள் ReeCha சென்ற நிலையில் தனது மகிழ்ச்சியை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில்,</p><p> 

1985ம் ஆண்டு, நெதர்லாந்தில்(Holland)ஒலிபரப்புத்துறைப் பயிற்சிக்காக சென்றிருந்த போது,The Hagueல் உள்ள-Madurodam-miniature parkல், உலக அதிசயங்கள், மற்றும் உலகப்புகழ்மிகு கட்டிடங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் சின்னஞ்சிறு வடிவங்களில் அற்புதமாக படைக்கப் பட்டிருந்ததைப் பார்த்து வியந்தபோது, என்நெஞ்சில் ஒரு ஆசை எழுந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f622484a-aaeb-488e-85bd-7129964a10dd/26-6a92c612e87a2.webp' /></p><p> </p><p>உலகச்சின்னங்களைக் காண ஒவ்வொரு நாட்டுக்கும் பயணம்செய்ய இயலாதவர்கள் அவற்றின் மாதிரிகளை ஒரே இடத்தில் கண்டு குதூகலிக்க ஒரு வாய்ப்பளிக்கும் இதுபோன்ற ஒரு அமைப்பினை இலங்கையிலும் உருவாக்க மாட்டார்களா! என்று.</p><p> 
40 ஆண்டுகள் கழித்து அந்த ஆசை நிறைவேறியுள்ளது.
நேற்று யாழ் மண்ணிலிருந்து திரும்பும் வழியில், என்மீது பேரன்பு வைத்துள்ள சகோதரர், கரன்(IBCபாஸ்கரன்)அவர்களது அன்பு அழைப்பினை ஏற்று, ‘இயக்கச்சி’யில், அவர் உருவாக்கியுள்ள புதிய பூமியாம் “ReeCha”- இயற்கை வேளாண் கருத்துக்கருப் பூங்காவுக்குப் போயிருந்தேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a05da5c6-a479-45b3-9998-8f5a93bc5a17/26-6a92c61238e4e.webp' /></p><p> </p><p>
தரிசு நிலமாய்க் கடந்த ஒரு நிலப்பகுதியை பசுமை பொங்கும் வேளாண் பூங்காவாக மாற்றியுள்ள அன்புச் சகோதரர் கரனின் உழைப்பையும், விடாமுயற்சியையும், தாய் மண்ணின் மீது கொண்டுள்ள பற்றையும் எண்ணி வியந்தேன். </p><p>
வெறுமனே ஒரு கேளிக்கைப் பூங்காவாக மட்டும் அன்றி, உலக அதிசயச் சின்னங்களைப் பற்றிய அறிவினை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் ஒரு பொது அறிவுத் தளமாகவும், வீட்டுத் தோட்ட முயற்சிகளில் ஆர்வமுள்ளோருக்கு வேளாண்துறை பற்றிய அறிவை ஊட்டும் ஒரு திறந்த பல்கலைக் கழகமாகவும்,</p><p> தேச எல்லைகள் கடந்து வருவோருக்கு இந்த மண்ணின் வாழ்வியலை அறிமுகப்படுத்தும் ஒரு பண்பாட்டு மையமாகவும், ஐந்து நட்சத்திர விடுதிகளில் தனித்தனி அறைகளில் அடைபட்டுக் கிடக்காமல் இயற்கை எழில் நிறைந்த பூமியில் சுத்தமான காற்றைச் சுவாசித்துக்கொண்டு தங்கியிருக்கக் கூடிய இல்லங்களைக் கொண்ட சுற்றுலாத் தலமாகவும், </p><p>குடும்பத்தோடு வந்து குதூகலிக்கக் கூடிய கேளிக்கை அம்சங்கள் பல நிறைந்த பொழுது போக்குப் பூங்காவாகவும் ‘ReeCha’ Organic Agricultural Theme Park திகழ்வதை, சில நிமிடத்துளிகள் அங்கு சுற்றி வந்ததில் அனுபவித்து அறிந்தேன். 
வெகு விரைவில் யாழ் மண்ணின் தனித்துவ அடையாளச் சின்னங்களில் ஒன்றாய் ReeCha மாறவேண்டுமென&nbsp; பதிவிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-29T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகை உலுக்கிய பேரழிவு; உடல்களை அடக்கம் செய்யவுள்ளதாக நேபாள அரசு அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nepa-announces-plans-to-bury-the-bodies-flood-1788007730"></link>
            <id>https://canadamirror.com/article/nepa-announces-plans-to-bury-the-bodies-flood-1788007730</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நேபாள வெள்ளத்தில் பலியாகி இதுவரை அடையாளம் கண்டறியபடாத நபர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக நேபாள அரசு அறிவித்துள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நேபாள வெள்ளத்தில் பலியாகி இதுவரை அடையாளம் கண்டறியபடாத நபர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக நேபாள அரசு அறிவித்துள்ளது.
</p><p>


திபெத் எல்லையில் அமைந்துள்ள நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோஷி ஆற்றில், கடந்த 26 ஆம் திகதி திடீரென பெரு வெள்ளம் ஏற்பட்டதில் 600 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததுடன் 2000 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2a68e27-d0bf-4e15-92e3-5392bcdef3a8/26-6a92d5340c906.webp' /></p><h2>600 க்கும் மேற்பட்ட உயிரிழப்பு</h2><p>
</p><p>


காணாமல் போயுள்ள ஆயிரக்கணக்கானோரைத் தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
</p><p>


இந்த நிலையில், நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் இன்று (29) காலை 10 மணி நிலவரப்படி 626 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அதிகப்படியாக சித்வான் பகுதியில் மட்டும் 233 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>



இதையடுத்து, மீட்கப்படும் உடல்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு சித்வான் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் போதிய இடவசதியும் கட்டமைப்பு வசதியும் இல்லை எனக் கூறப்படுகிறது.</p><p> மேலும், மீட்கப்பட்டு வரும் உடல்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், உடல்கள் சிதைவடைவதைத் தடுப்பது மிகுந்த சிரமம் என்றும் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>


இதனால், சுகாதார பாதிப்புகள் ஏற்பட்டு புதிய தொற்றுகள் உருவாகக் கூடும் என்பதால் அடையாளம் காணப்படாத உடல்களை தேவ்காட் பகுதியில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் அடக்கம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-29T13:23:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காரில் கடத்தப்பட்ட யுவதி ; பொலிஸார் துப்பாக்கிச் சூடு; கொழும்பில் பரபரப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-woman-abducted-in-car-police-open-fire-1788007060"></link>
            <id>https://jvpnews.com/article/young-woman-abducted-in-car-police-open-fire-1788007060</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; யுவதி ஒருவரைக் கடத்திச் சென்ற கார் ஒன்றின் மீது நாரஹேன்பிட்டி பொலிஸ் வீதித் தடையருகில் வைத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள சம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; யுவதி ஒருவரைக் கடத்திச் சென்ற கார் ஒன்றின் மீது நாரஹேன்பிட்டி பொலிஸ் வீதித் தடையருகில் வைத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இன்று (29) பகல் பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் குழுவொன்று குறித்த வீதித் தடையருகில் காரை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4df705b5-6706-4077-82ed-fec065e9fa62/26-6a92d295e8810.webp' /></p><h2>26 வயதான குறித்த யுவதி</h2><p> </p><p>

எனினும், கார் நிற்காமல் சென்றதையடுத்து, பொலிஸ் உத்தியோகத்தர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி காரை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p> 

அந்தச் சந்தர்ப்பத்தில் காரைச் செலுத்திய நபர், கடத்தப்பட்ட யுவதியையும் காரையும் அங்கேயே விட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். 

26 வயதான குறித்த யுவதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் வைத்துக் கடத்தப்பட்டுள்ளமை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p> 

தப்பிச் சென்ற சந்தேகநபரைத் தேடிப் கறுவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-29T13:23:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா கெடுபிடிக்கு மத்தியில் சாதனை படைத்த ஈரான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-oil-achieves-a-milestone-amidst-us-pressure-1788009829"></link>
            <id>https://canadamirror.com/article/iran-oil-achieves-a-milestone-amidst-us-pressure-1788009829</id>
            <summary type="text">அமெரிக்காவின்&amp;nbsp; கடல்சார் போக்குவரத்து கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் ஈரான் தனது எண்ணெய் வருவாய் மற்றும் வரவுசெலவுத் திட்ட இலக்குகளை உறுதிசெய்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின்&nbsp; கடல்சார் போக்குவரத்து கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் ஈரான் தனது எண்ணெய் வருவாய் மற்றும் வரவுசெலவுத் திட்ட இலக்குகளை உறுதிசெய்துள்ளது.
</p><p>


கடல்சார் போக்குவரத்து தடைகள் எதுவாக இருப்பினும், தமது வரவுசெலவுத் திட்டத்திற்கு (Budget) தேவையான நிதியைத் திரட்டுவதற்குப் போதுமான அளவு எண்ணெய் விற்பனைக்குக் கிடைப்பதாக ஈரானின் ஃபார்ஸ் (Fars) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef023197-83e4-426c-a465-1c3c990a89b7/26-6a92dd66883c4.webp' /></p><p>
</p><p>


பெட்ரோலிய அமைச்சகத்தின் தரவுகளின்படி, நடப்பு ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் வரவுசெலவுத் திட்டத்திற்காக எதிர்பார்க்கப்பட்ட எண்ணெய் வருவாயில் 99 சதவீதம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



குறித்த ஆரம்ப மாதங்களில் எண்ணெய் மூலம் ஈட்டப்பட்ட 7.5 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான அந்நியச் செலாவணி வருவாயை பெட்ரோலிய அமைச்சகம் ஏற்கனவே மத்திய வங்கியிடம் ஒப்படைத்துள்ளது.</p><p>&nbsp; இது எதிர்வரும் ஜனவரி மாதம் வரையிலான அரசாங்கத்தின் அந்நியச் செலாவணிச் செலவுகளை ஈடுசெய்யும் என்றும் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-29T13:20:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டைவிட்டு ஓடிய 236 பேருக்கு எதிராகச் சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/interpol-red-notice-236-individuals-fled-country-1788009543"></link>
            <id>https://jvpnews.com/article/interpol-red-notice-236-individuals-fled-country-1788009543</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல சம்பவங்களுடன் தொடர்புடைய, இலங்கையிலிருந்து தப்பிச் சென்றுள்ள 236 பேருக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல சம்பவங்களுடன் தொடர்புடைய, இலங்கையிலிருந்து தப்பிச் சென்றுள்ள 236 பேருக்கு எதிராகச் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

அவர்களில் 96 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3162ea02-bd30-472d-861a-a03e08f186d0/26-6a92dc48b149d.webp' /></p><p> </p><p>

அதேவேளை, 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் இதுவரையிலான காலப்பகுதியில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 37 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.</p><p> 

இது தவிர, சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் 42 பேர் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p>]]></content>
            <updated>2026-08-29T13:16:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சட்டவிரோதமாக இறைச்சியாக்க தாயார் நிலையில் இருந்த மாடுகள் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/illegal-slaughterhouse-raided-in-jaffna-1-arrested-1788007833"></link>
            <id>https://ibctamil.com/article/illegal-slaughterhouse-raided-in-jaffna-1-arrested-1788007833</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கொல்களம் காவல்துறையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.இதன்போது 03
பசு மாடுகள் உட்பட நான்கு மாடுகள் உயிரிடன் மீட்கப்பட்டுள்ளதுடன...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கொல்களம் காவல்துறையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.</p><p>இதன்போது 03
பசு மாடுகள் உட்பட நான்கு மாடுகள் உயிரிடன் மீட்கப்பட்டுள்ளதுடன் 58&nbsp;கிலோ மாட்டிறைச்சியும் கைப்பற்றப்பட்டுள்ளது</p><p>குறித்த சட்டவிரோத கொல்களத்தினை நடாத்தி வந்த குற்றத்தில் நபர் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p></p><h2>மாடுகள் இறைச்சி</h2><p>இது குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகில் சட்டவிரோத கொல்களம் இயங்கி வருவதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்றைய தினம் (29-08-2026) குறித்த இடத்தினை காவல்துறையினர் முற்றுகையிட்டனர்.
</p><p>
அதன் போது மூன்று பசு மாடுகள் உள்ளிட்ட நான்கு மாடுகள் இறைச்சியாக்க தயாராக
கட்டப்பட்டிருந்த நிலையிலும் ஏற்கனவே இறைச்சியாக்கப்பட்ட மாட்டின் 58 கிலோ
இறைச்சியையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60ba3306-1388-454e-9f64-a7ce491dcf30/26-6a92d982022b9.webp' /></p><p> அத்துடன் அங்கிருந்த 43 வயதான நபரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன் கைது அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p>மீட்கப்பட்ட மற்றும் இறைச்சியாக்கப்பட்ட மாடுகள் திருடப்பட்ட மாடுகளாக என்பது
தொடர்பிலும் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>[LCW3R6Fஸ</p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-29T13:12:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் இருந்து யாழ் சென்ற லொறி; நெல் உமிக்குள் பிடிபட்ட பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/timber-smuggled-inside-paddy-husks-in-kilinochchi-1788000408"></link>
            <id>https://jvpnews.com/article/timber-smuggled-inside-paddy-husks-in-kilinochchi-1788000408</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் நெல் உமிக்குள் சூட்சுமமான முறையில் பாலை மரக் குற்றிகளை மறைத்து யாழ்ப்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் நெல் உமிக்குள் சூட்சுமமான முறையில் பாலை மரக் குற்றிகளை மறைத்து யாழ்ப்பாணத்திற்கு கடத்த முயன்ற லொறியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். </p><p>

நேற்று பிற்பகல் (28) பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, 15 இலட்சத்திற்கும் அதிகமான ரூபாய் பெறுமதியான மரக் குற்றிகளைக் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29900b72-f0c4-432f-a67d-02311ae79df8/26-6a92b899eb1fa.webp' /></p><p></p><p> </p><p>

இச்சம்பவத்தின் போது பார ஊர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், சாரதி மற்றும் கைப்பற்றப்பட்ட மரக் குற்றிகள் ஆகியவற்றை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம். திசாநாயக்க தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-29T13:10:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பட்டப்பகலில் நடந்த பரபரப்பு - மர்ம கும்பலால் கடத்தப்பட்ட பெண் - பொலிஸார் துப்பாக்கி சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-open-fire-on-van-with-abducted-young-woman-1788006346"></link>
            <id>https://tamilwin.com/article/police-open-fire-on-van-with-abducted-young-woman-1788006346</id>
            <summary type="text">கொழும்பில் வைத்து இன்று(29) இளம் பெண் ஒருவர் நபர்களால் கடத்தப்பட்ட நிலையில், பொலிஸாரினால் அதிரடியாக மீட்கப்பட்டுள்ளார். 

நாரஹேன்பிட்டி, நாவல வீதியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் வைத்து இன்று(29) இளம் பெண் ஒருவர் நபர்களால் கடத்தப்பட்ட நிலையில், பொலிஸாரினால் அதிரடியாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p> 

நாரஹேன்பிட்டி, நாவல வீதியிலுள்ள பொலிஸ் வீதித் தடையை மீறி செல்ல முற்பட்ட வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
</p><p>
இந்நிலையில் சம்பவ இடத்தில் வாகனத்தையும் பெண்ணையும் கைவிட்டு கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.</p><h2><b>இளம் பெண் கடத்தல்</b></h2><p> 

கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் வாகனத்தை அவ்விடத்திலேயே விட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20475d14-ca28-4f88-a6d8-f3b49559b8c4/26-6a92d25280264.webp' /></p><p>பொலிஸாருக்கு இன்று பிற்பகல் கிடைத்த தகவலுக்கு அமைய, நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையக் குழுவினர் குறித்த வாகனத்தை வீதித் தடையில் நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.</p><p>

எனினும், வாகனம் நிறுத்தப்படாமல் தொடர்ந்து சென்றமையால், பொலிஸார் அதன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
</p><p>
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், 26 வயதான குறித்த பெண் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் வைத்து கடத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
</p><p>
தப்பிச் சென்ற நபர்களை கைது செய்யும் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p> 
</p>]]></content>
            <updated>2026-08-29T13:01:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆலய வளாகத்தில் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் – புலம்பெயர் தமிழர் மீது முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-complaint-against-expatriate-tamil-1788007689"></link>
            <id>https://tamilwin.com/article/police-complaint-against-expatriate-tamil-1788007689</id>
            <summary type="text">யாழ்.வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த
பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க
முய...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்.வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த
பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க
முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர் மீது வல்வெட்டித்துறைப் பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
ஆலய தீர்த்த உற்சவ தினமான நேற்று பல தாக சாந்தி நிலையங்கள்
அமைக்கப்பட்டிருந்தன.</p><h2>புலம்பெயர் தமிழர்</h2><p> இந்நிலையில், சுகாதாரத்தை உறுதி செய்யப்படாத நீரில்
தயாரிக்கப்பட்ட ஐஸ் கட்டிகளைக் குளிர்பானங்களுக்குப் பயன்படுத்தத் தடை விதித்த
பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள், அங்குள்ள 20 பரல் ஐஸ் கட்டிகளைக் கைப்பற்றி
உழவு இயந்திரத்தில் ஏற்றிச் செல்ல முற்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54cbacc6-793f-4d4c-ae92-86e1a9051a7d/26-6a92d818ee265.webp' /></p><p>
</p><p>
அப்போது தாக சாந்தி நிலையத்தை நடாத்தியவரான புலம்பெயர் தமிழர் ஒருவர்,
பிறிதொரு வாகனம் மூலம் உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்தியதுடன்
அவர்களின் கடமைக்கும் இடையூறு விளைவித்துள்ளார்.
</p><p>
தமக்கு அச்சுறுத்தல் விடுத்துக் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில்
பாதிக்கப்பட்ட பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் வல்வெட்டித்துறைப் பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T13:01:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயினில் டூபீஸ் ஆடையில் சுற்றும் நடிகை நோரா ஃபதேஹி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/nora-fatehi-spain-vocation-photos-post-viral-1788008977"></link>
            <id>https://viduppu.com/article/nora-fatehi-spain-vocation-photos-post-viral-1788008977</id>
            <summary type="text">நோரா ஃபதேஹிநடிகர் பிரபாஸ் நடித்த பாகுபலி படத்தின் மனோஹரி பாடலுக்கு கிளாமர் ஆட்டம் போட்டு பிரபலமானவ தான் நடிகை நோரா ஃபதேஹி. கனேடிய நடனக்கலைஞரும் நடிகைய...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நோரா ஃபதேஹி</h2><p>நடிகர் பிரபாஸ் நடித்த பாகுபலி படத்தின் மனோஹரி பாடலுக்கு கிளாமர் ஆட்டம் போட்டு பிரபலமானவ தான் நடிகை நோரா ஃபதேஹி. கனேடிய நடனக்கலைஞரும் நடிகையுமான நோரா, 1992ல் கனடாவின் மாண்ட்ரீலில் பிறந்தவர். இந்தியாவை பூர்வமாக கொண்ட நோரா, சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இந்தியா வந்துள்ளார். </p><p>நடன கலைஞராக அறியப்பட்டப்பின் ரோர்: டைகர்ஸ் ஆஃப் தி சுந்தர்பன்ஸ் என்ற இந்தி படத்தில் நடித்து பிரபலமானர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/245a8ef5-2481-4d94-b888-73643169eda2/26-6a92da1a17207.webp' /></p><p>
</p><p>
பாகுபலி படத்தில் மனோஹரி, டெம்பர் படத்தில் இட்டகே ரெச்சிபோடம், கிக் 2வில் இல் கிருகு கிக், ஷேர் படத்தில் நாபேரே பிங்கி, லோஃபர் படத்தில் நேப்பே தோச்சே போன்ற பாடல்களில் ஆட்டம் போட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
</p><p>
பின்னணி பாடகியாகவும் திகழும் நோரா, ஆல்பம் பாடல்களுக்கு கிளாமர் லுக்கில் ஆட்டம் போட்டும் வருகிறார். தற்போது ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள நோரா, டூபீஸ் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-29T13:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பெருவெள்ளத்தில் மாயமான பிரித்தானியர்கள்: சில தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/families-of-33-missing-britons-rush-to-nepal-1788005513"></link>
            <id>https://news.lankasri.com/article/families-of-33-missing-britons-rush-to-nepal-1788005513</id>
            <summary type="text">Families of 33 missing Britons rush to Nepal: நேபாள பெருவெள்ளத்தில் மாயமான பிரித்தானியர்களைத் தேடி அவர்களுடைய குடும்பத்தினர் பலர் நேபாளத்துக்குப் புறப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Families of 33 missing Britons rush to Nepal: நேபாள பெருவெள்ளத்தில் மாயமான பிரித்தானியர்களைத் தேடி அவர்களுடைய குடும்பத்தினர் பலர் நேபாளத்துக்குப் புறப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b57ce4c-24d5-4bd3-aa6d-8410329f92a1/26-6a92cc8ab331b.webp' /></p><p>புனித யாத்திரைக்காகவும், சுற்றுலாவுக்காகவும் ஏராளமான மக்கள் நேபாளத்துக்குச் சென்றிருந்த நிலையில், நேபாள திபெத் எல்லையில் ஏற்பட்ட பெருவெள்ளம், அவர்களில் பலருடைய நிலைமையை தலைகீழாக மாற்றிப்போட்டுவிட்டது.</p><h3>

மாயமான பிரித்தானியர்கள்
</h3><p>
நேபாள பெருவெள்ளத்தில் சுமார் 600 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், 1,500 பேருக்கும் மேலானவர்களைக் காணவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e96a24ca-c713-405a-ab50-16fcf08be9a1/26-6a92cc8b66a77.webp' /></p><p>அவர்களில் 33 பிரித்தானியக் குடிமக்களும் அடங்குவர். விடயம் என்னவென்றால், தங்கள் உறவினர்கள் நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கிய விடயம் அவர்களை விட்டு தொலைவில் இருக்கும் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அதே நேரத்தில், அவர்களில் மாயமானவர்கள் நிலை என்ன என்னும் விடயம் கூடுதல் கவலையை உருவாக்கியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/170897e9-959a-4557-88fd-39a0641897fe/26-6a92cc8c1a79d.webp' /></p><p>விடயம் என்னவென்றால், காணாமல் போனவர்களில் யாரும் கண்டுபிடிக்கப்பட்டதாக இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை.&nbsp;</p><p></p><p>
என்றாலும், சசெக்ஸில் நேபாள உணவு நிறுவனம் ஒன்றை நடத்திவரும் ப்ரமோத் (Pramod Poudel) என்பவர், தன் தந்தையாகிய புருசோத்தம் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக டெய்லி மெயில் ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/544073bd-d555-4e74-bbd4-f46043a25c96/26-6a92cc8cc2843.webp' /></p><p>அதே நேரத்தில், எசெக்ஸில் செவிலியராக பணியாற்றும் ராஜேந்திரா (Rajendra Pudasaini) என்பவரோ, தனது குடும்பத்தில் பலர் காணாமல் போய்விட்டதாகவும், தனது ஞானக்குழந்தையின் உடல் மட்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c030c5c0-33bd-471c-b257-99e3bf3f37b2/26-6a92cc8d77c3c.webp' /></p><p>பிரச்சினை என்னவென்றால், மின்சாரமும் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதால் தங்கள் உறவினர்களுக்கு என்ன ஆனது என்பது தெரியாமல் திகைத்துப்போயிருக்கிறார்கள் பலரும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa95d2ab-e552-48b9-b3ef-66106f89c7bd/26-6a92cc8e2b2b0.webp' /></p><p>இதற்கிடையில், தங்கள் உறவினர்களின் நிலை அறிவதற்காக மாயமான பிரித்தானியர்களின் உறவினர்கள் நேபாளத்துக்கே புறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T12:55:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் Kyiv மீது ரஷ்யா சரமாரி ட்ரோன் தாக்குதல்; பலர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russia-launches-barrage-of-drone-attacks-on-kyiv-1788008271"></link>
            <id>https://canadamirror.com/article/russia-launches-barrage-of-drone-attacks-on-kyiv-1788008271</id>
            <summary type="text">&amp;nbsp; உக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) நகருக்கு அருகிலுள்ள ஒரு சேமிப்புக் கிடங்கில் ரஷ்ய ட்ரோன் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; உக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) நகருக்கு அருகிலுள்ள ஒரு சேமிப்புக் கிடங்கில் ரஷ்ய ட்ரோன் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
</p><p>


துரதிர்ஷ்டவசமாக, தற்போது வரை 27 பேர் உயிரிழந்துள்ளதாகக் தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கீவ் பிராந்திய இராணுவ நிர்வாகத்தின் தலைவர் தைமூர் தகாச்சென்கோ (Tymur Tkachenko) தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ecdacf6-6496-4b82-a5d7-33f5d5da2761/26-6a92d751804b5.webp' /></p><p>
</p><p>


உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.</p><p>



ரஷ்ய ட்ரோன்கள் ஒரு சேமிப்புக் கிடங்கைத் தாக்கியதால் ஏற்பட்ட வெடிப்பு, அப்பகுதி முழுவதும் பரவலான சேதத்தை ஏற்படுத்தியதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.</p><p>



இதேவேளை, ட்ரோன் தயாரிக்கும் உபகரணங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஆயுதக் கிடங்கைத் தமது படைகள் தாக்கியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-29T12:55:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[போரினால் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் தலைவர்கள் ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-leaders-approve-iran-economy-1788007144"></link>
            <id>https://tamilwin.com/article/iran-leaders-approve-iran-economy-1788007144</id>
            <summary type="text">அமெரிக்காவுடனான ஆறு மாத காலப் போரினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு
ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகளை ஈரானியத் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதுடன்,
பொருளாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடனான ஆறு மாத காலப் போரினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு
ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகளை ஈரானியத் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதுடன்,
பொருளாதார நெருக்கடிகளைச் சமாளித்து இராஜதந்திரம் மற்றும் பாதுகாப்பைப்
பலப்படுத்தப் போவதாக உறுதியளித்துள்ளனர்.
</p><p>
அமெரிக்காவின் தடைகள் மற்றும் கடற்படை முற்றுகை காரணமாக நாட்டின் ஏற்றுமதி
மற்றும் இறக்குமதிகள் சுமார் 35 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஈரானிய
ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.</p><h2>அமெரிக்காவின் அழுத்தங்கள்</h2><p>
</p><p>
எனினும், அமெரிக்காவின் அழுத்தங்களுக்குப் பணியப் போவதில்லை என்றும், ஹோர்முஸ்
நீரிணையின் கட்டுப்பாட்டைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளப் போவதாகவும் ஈரான்
அரசாங்கம் அறிவித்துள்ளது.
</p><p>
அதிகரித்து வரும் பணவீக்கம், வேலையின்மை மற்றும் பொருட்கள்-சேவைகளுக்கான விலை
உயர்வைச் சீரமைப்பதில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என ஈரானின்
உச்ச தலைவர் அயதுல்லா முஜ்தபா காமேனி வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4393b401-1c59-4899-a303-3780af071d42/26-6a92d59dde8c0.webp' /></p><p>

அந்நாட்டில் கடந்த மாதத்தில் நுகர்வோர் பணவீக்கம் 66 சதவீதமாகப்
பதிவாகியுள்ளதுடன், அன்றாட வாழ்க்கைச் செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ளதாகத்
தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>இராஜதந்திரம் மற்றும் தற்காப்பு&nbsp;</h2><p>
</p><p>
இதேவேளை, நாட்டின் எல்லைகளையும் நலன்களையும் பாதுகாக்க இராஜதந்திரம் மற்றும்
தற்காப்பு ஆகிய இரண்டு வழிகளையும் அரசாங்கம் சம அளவில் முன்னெடுக்கும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், கத்தார் நாட்டின் பிரதமருடன் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியின் கப்பல்
போக்குவரத்தை மீண்டும் வழமைக்குக் கொண்டு வருவது தொடர்பில் ஈரானியத் தலைவர்கள்
பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T12:51:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டிலேயே ரெஸ்டாரன்ட் சுவையில் பட்டர் சிக்கன் – கொத்தமல்லி சாதம்! பண்ணலாமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/restaurant-style-butter-chicken-and-coriander-rice-1788006436"></link>
            <id>https://manithan.com/article/restaurant-style-butter-chicken-and-coriander-rice-1788006436</id>
            <summary type="text">வீட்டில் வழக்கமாக செய்யும் சிக்கன் குழம்பிலிருந்து சற்று வித்தியாசமாகவும், ரெஸ்டாரன்ட்டில் பரிமாறப்படும் உணவின் சுவையையும் மணத்தையும் வீட்டிலேயே அனுபவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வீட்டில் வழக்கமாக செய்யும் சிக்கன் குழம்பிலிருந்து சற்று வித்தியாசமாகவும், ரெஸ்டாரன்ட்டில் பரிமாறப்படும் உணவின் சுவையையும் மணத்தையும் வீட்டிலேயே அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த&nbsp; பட்டர் சிக்கள் மற்றும் கொத்தமல்லி சாதம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.&nbsp;</p><h2>பட்டர் சிக்கன் – கொத்தமல்லி சாதம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3153170a-6a7e-47c0-852b-2b15201a904c/26-6a92d54253cd0.webp' /></p><p></p><p>க்ரீமி தன்மை கொண்ட பட்டர் சிக்கனும், புதிதாக அரைத்த கொத்தமல்லியின் நறுமணம் நிறைந்த சாதமும் இணையும் இந்த காம்பினேஷன், சாதாரண மதிய உணவையே ஒரு சிறப்பு விருந்தாக மாற்றிவிடும்.
</p><p>
மென்மையாக வேகவைக்கப்பட்ட சிக்கன் துண்டுகள், தக்காளியின் புளிப்பும், மசாலாக்களின் மணமும், பட்டரின் ருசியும், க்ரீமியின் மென்மையான சுவையும் ஒன்றாக கலந்து உருவாகும் இந்த கிரேவியுடன்&nbsp; கொத்தமல்லி சாதத்தை சாப்பிட்டால் மீண்டும் மீண்டு செய்து தர சொல்லி கேட்க தோன்றும்.</p><p>அந்தளவுக்கு அதன் சுவையும் மணமும் பக்காவாக இருக்கும். வீட்டில் கிடைக்கும் எளிய பொருட்களைக் கொண்டே இந்த உணவைத் தயாரிக்க முடியும் என்பதுதான் இதன் சிறப்பு. எளிய முறையில் இந்த ரெசிபியை எவ்வாறு செய்யலாம் என இந்த காணொளி மூலம் காணலாம்.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gPNl4ljQ85E" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T12:49:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடன் வர்த்தகப்போர்; கனடாவை எச்சரிக்கும் வல்லுனர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trade-war-with-the-us-experts-warn-canada-1787990920"></link>
            <id>https://canadamirror.com/article/trade-war-with-the-us-experts-warn-canada-1787990920</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா மீது ஆரம்பித்துள்ள வர்த்தகப் போர் இரண்டு நாடுகளின் வணிகங்களையும் பாதிக்கும் எனவும், இதில் , கனேடியப் பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா மீது ஆரம்பித்துள்ள வர்த்தகப் போர் இரண்டு நாடுகளின் வணிகங்களையும் பாதிக்கும் எனவும், இதில் , கனேடியப் பொருளாதாரம் கடுமையான மந்தநிலையைச் சந்திக்கும் அபாயம் உள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p>

 அமெரிக்கா - கனடா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா, கனடாவின் 20 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்கள் மீது 50 சதவீத வரியை விதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cca8eaa8-5272-4bb9-b034-e571ca00f6f7/26-6a929389e49a5.webp' /></p><h2>&nbsp;20 பில்லியன் டொலர் மதிப்பிலான பழிவாங்கல் வரி</h2><p>
</p><p>
ஜனவரி 1 முதல் அனைத்து சிற்றுந்து தயாரிப்புகள் மீதும் 50 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார் .</p><p>அதேநேரம், அமெரிக்காவின் நடவடிக்கைக்குப் பதிலடியாக, கனேடியப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), 700-க்கும் மேற்பட்ட அமெரிக்கப் பொருட்கள் மீது 15, 25 மற்றும் 50 சதவீத அடிப்படையில் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான பழிவாங்கல் வரிகளை அறிவித்துள்ள நிலையில் இந்த வரிகள் எதிர்வரும் செப்டம்பர் 8 முதல் அமுலுக்கு வரவுள்ளன.</p><p>

இதற்கிடையில், அமெரிக்காவைக் காட்டிலும் கனடாவின் பொருளாதாரம் பத்தில் ஒரு பங்கு மட்டுமே உள்ளதாலும், தனது ஏற்றுமதியில் 70 சதவீதத்தை அமெரிக்காவிற்கே அனுப்புவதாலும் கனடா இந்த வர்த்தகப் போரால் அதிகம் பாதிக்கப்படக்கூடும்.
</p><p>
அதன்படி ஒன்ராறியோ, கியூபெக், பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் நியூ பிரன்சுவிக் மாகாணங்களைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவர்.</p><p>

இந்த வர்த்தகப் போரால் கனடாவில் 100,000-க்கும் மேற்பட்ட வேலைகள் இழக்கப்படலாம் என சர்வதேச வர்த்தக ஆலோசகர்கள் அஞ்சுகின்றனர்.</p><p>

இதேவேளை, கனடாவிற்கு எதிரான தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக, ஒன்ராறியோ ஏரியை (Lake Ontario) இனி அமெரிக்க அரசு "அமெரிக்கா ஏரி" (Lake America) என்று அழைக்கும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
</p><p>
இதற்குப் பிரதமர் மார்க் கார்னி மற்றும் மனிட்டோபா மாகாணத்தின் முதல்வர் வாப் கினே (Wab Kinew) ஆகியோர் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-29T12:47:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆரம்பக்கட்ட தாமதே ஈஸ்டர் தாக்குதலுக்கு மூலகாரணம்!வெளியிடப்படாத பல சர்ச்சைகள் அம்பலம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-attorney-general-department-1788007238"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-attorney-general-department-1788007238</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதலை தடுப்பது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் விட்ட தவறை யாரும் இதுவரை பேசவில்லை என்றே தோன்றுகிறது.பூஜித் மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதலை தடுப்பது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் விட்ட தவறை யாரும் இதுவரை பேசவில்லை என்றே தோன்றுகிறது.</p><p>பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு கடமை தவறியமை மற்றும் அலட்சியப் போக்கு காரணமாக மரண தண்டனை விதிக்கப்படுமானால் சட்டமா அதிபர் திணைக்களத்தின்அலட்சிய போக்குக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? இவற்றை நாம் கேள்விக்குட்படுத்தக் கூடாதா? என சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதல் தொடர்பில் மயிர்க் கூச்செறியும் தகவல் ஒன்றை அவர் வெளியி்ட்டுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்ட தகவல்கள்..
</p><h2>
</h2><p></p><h2>சட்டமா அதிபரிடம் கோரப்பட்ட ஆலோசனை</h2><p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் சட்டமா அதிபரின் ஆலோசனைக் கோரி அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் சரியான மேற்பார்வையும் ஆர்வமும் காட்டவில்லை என்பதை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையிலான விசாரணை ஆணைக்குழு ஆராய்ந்தது அறிக்கை வெளியிட்டுள்ளது.
</p><p>அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு:
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு 2017 ஜூன் 07 திகதியிட்ட கடிதம் மூலம் C18/2017 எனும் கோப்பைச் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. </p><p>அதில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு சட்டமா அதிபரிடம் கேட்டுக் கொண்ட ஆலோசனையானது: "தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் இணையத்தளம் மற்றும் சமூக ஊடகக் கணக்குகளைத் தடை செய்ய முடியுமா மற்றும் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்து விசாரணை நடத்த முடியுமா?" என்பதாகும்.
</p><p>அப்போது அந்தப் துறைக்கு பொறுப்பான மேற்பார்வை அதிகாரியாக இருந்த சிரேஷ்ட அரச சட்டத்தரணி அசாத் நவாமிக்கு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பல கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65b2fb36-e143-4932-a9d4-840ccc352878/26-6a92d348e1528.webp' /></p><p>ஆனால் 15 ஜூன் 2017 ஆகும் போதே இந்தக் கோப்பு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற நிலையில் அசாத் நவாமி அதை அராய்ந்து பார்க்குமாறு அரச சட்டத்தரணி மலிக் அஸீசுக்கு குறிப்பொன்றை இட்டு பாரப்படுத்தியுள்ளார்.
</p><p>மீண்டும் (TID) 2018 ஜூன் 14 ஆம் திகதியிட்ட குறுந்தகடு (CD) மற்றும் மற்றொரு ஆவணத் தொகுப்பை அனுப்பும் வரை இந்தக் கோப்பு குறித்து எந்தவொரு கவனமும் செலுத்தப்பட்டதாக குறிப்பில்லை. </p><p>அப்படியானால், 15 ஜூன் 2017 அன்று கிடைத்த கோப்பு, 14 ஜூன் 2018 வரை எந்தவொரு கவனமும் செலுத்தப்படாமல் இருந்துள்ளது என்பது விசாரணை ஆணைக்குழுவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. </p><p>
மேலும் அரச சட்டத்தரணி மலிக் அஸீஸ் (TID)யால் அனுப்பப்பட்ட கோப்புக்கு முதலாவது குறிப்பு 12 மார்ச் 2019 அன்றே இடப்பட்டுள்ளது. </p><h2>தாமதத்திற்கான காரணங்கள்</h2><p>அதற்குள் கோப்பு சட்டமா அதிபர் திணைக்களத்திற்குக் கிடைத்து ஒன்றரை வருடங்களுக்கும் அதிகமான காலம் கடந்துவிட்டது. 
இந்த அத்தியாயத்தைப் படிக்க முடியாதவர்களுக்காகவே நான் இதனைக் கூறுகிறேன்: </p><p>இந்தக் கோப்பைக் கையாள்வதில் அரச சட்டத்தரணி அஸீஸ் தரப்பில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக விசாரணை ஆணைக்குழுவின் முன் உள்ள சாட்சியங்களிலிருந்து தெரியவருகிறது.</p><p><span style="color: inherit;">அரச சட்டத்தரணி அஸீஸின் சாட்சியம் மற்றும் ஆணைக்குழுவின் முன் உள்ள சாட்சியங்களைக் கருத்திற்கொண்டு,அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்துப் பரிசீலிக்குமாறு அரச சேவை ஆணைக்குழுவிற்குப் (Public Service Commission) பரிந்துரைக்கப்பட்டுள்து.</span></p><p>அதேபோல், C18/2017 கோப்பை அஸீஸிடம் ஒப்படைத்த பிறகு அக்கோப்பு தனக்குக் கிடைக்கவில்லை என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அசாத் நவாமி கூறுகிறார். </p><p>ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இக்கோப்பு பற்றி அவர் அறிந்துள்ளாராம். 
சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள இந்த ஆரம்பக்கட்ட தாமதத்தை நாம் ஈஸ்டர் விசாரணையில் எங்குமே காணவில்லை.
</p><p>தாக்குதல் நடப்பதற்கு முன்னரே நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஏனெனில், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு தாக்குதல் நடப்பதற்கு முன்னரே அந்த நபர்களைக் கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்தவே ஆலோசனை கேட்டிருந்தது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T12:46:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சென்னையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி முன்பதிவுக்கு அரசு வெளியிட உள்ள செயலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cumta-to-launch-app-for-autos-and-taxis-in-chennai-1788007299"></link>
            <id>https://news.lankasri.com/article/cumta-to-launch-app-for-autos-and-taxis-in-chennai-1788007299</id>
            <summary type="text">CUMTA to launch app for autos and taxis in chennai: சென்னையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி முன்பதிவு செய்ய அரசு தரப்பில் செயலி வெளியிடப்பட உள்ளது.

ஆட்டோ ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>CUMTA to launch app for autos and taxis in chennai: சென்னையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி முன்பதிவு செய்ய அரசு தரப்பில் செயலி வெளியிடப்பட உள்ளது.</p><h3>

ஆட்டோ டாக்ஸிக்கு அரசு செயலி </h3><p>

சென்னையில் ஆட்டோ, டாக்சி போன்றவற்றை முன்பதிவு செய்து பயணிக்க Rapido, uber போன்ற தனியார் நிறுவனங்களின் செயலிகள் உள்ளன.</p><p>

அதில் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் நிறுவனங்கள் அதிக கமிஷன் தொகை வசூலிப்பதாகவும், தங்களுக்கு போதிய வருமானம் இல்லை எனவும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e23eb160-d6e7-473d-a592-ed297c2b10c6/26-6a92d3866f6a5.webp' /></p><p>
இதே போல் பயணிகளும் சில ஓட்டுனர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் தெரிவித்து வந்தனர்.&nbsp;</p><p></p><p> 

இந்நிலையில் சட்டமன்றத்தில் பேசிய வீட்டு வசதித் துறை அமைச்சர் ராஜ்குமார், சென்னையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், பயணிகளுக்கு நியாயமான பயணக்கட்டணத்தை உறுதி செய்யவும் டிஜிட்டல் மீட்டர் உள்ளடக்கிய புதிய செயலி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f6ca121-c984-4b4f-a545-882d2d798a76/26-6a92d38511cc8.webp' /></p><p> 

இந்த செயலி சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து அதிகார அமைப்பால் (CUMTA) உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படும். </p><p>

இதில், பயணிகள் ஆட்டோவை முன்பதிவு செய்யவும், ஓட்டுநர்கள் முன்பதிவுகளை ஏற்கவும் வழிவகுக்கும்.
</p><p>
இதில் பயணத்தின் போது டிஜிட்டல் மீட்டர் இயக்கப்பட்டு, அதில் தூரம், நேரம் அதற்கான கட்டணம் காண்பிக்கப்படும். </p><p>

இதில், ஓட்டுநர்களுக்கு நேரடியாக ரொக்கமாகவோ/UPI மூலமாகவோ அல்லது செயலியில் உள்ள UPI தளங்கள் மூலமாகவோ பணம் செலுத்தலாம். </p><p>

மேலும், செயலி மூலமாகவோ அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமாகவோ பயணிகள் புகார்களை பதிவு செய்யலாம்.</p><p>

எரிபொருள் விலைக்கு ஏற்ப, அரசால் அவ்வப்போது கட்டணங்களை புதுப்பிக்க முடியும். </p><h3>

கட்டணங்களை உயர்த்த கோரிக்கை </h3><p>

போக்குவரத்துறை மானிய கோரிக்கையில் ஆட்டோ கட்டண உயர்வை அரசு அறிவிக்க வேண்டுமென ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.</p><p> 

இது தொடர்பாக தவெக ஆட்சி அமைந்த பிறகு அரசு மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கங்கள் இடையே 3 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d869bd64-baa6-49d2-bd7a-6c4db98ecc2a/26-6a92d385bc8e9.webp' /></p><p>

இதில், முதல் 1.5 கிலோமீட்டருக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.60ம், அதற்கடுத்த ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.30ம் கோரியுள்ளனர். </p><p>

மேலும், நிமிடத்திற்கு ரூ.1 காத்திருப்புக் கட்டணமும், சாதாரண கட்டணத்தைப்போல் ஒன்றரை மடங்கு இரவு நேரக் கட்டணமும் விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T12:42:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல மில்லியன் ரூபாய் ஊழல்..! ரணிலின் உறவினர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-s-nephew-accused-over-liquor-licence-deal-1787987635"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-s-nephew-accused-over-liquor-licence-deal-1787987635</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உறவினர் ஒருவருக்கு வழங்கப்பட்ட மதுபான உற்பத்தி உரிமம் தொடர்பில்&amp;nbsp; குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உறவினர் ஒருவருக்கு வழங்கப்பட்ட மதுபான உற்பத்தி உரிமம் தொடர்பில்&nbsp; குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
குறித்த நபர் அந்த உரிமத்தை தனது நண்பர்கள் இருவருக்கு விற்பனை செய்து பல மில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டியதாக சிவில் புலனாய்வு முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சய மகாவத்த குற்றம் சாட்டியுள்ளார்.</p><h2>ரணிலின் சகோதரரின் மகன்</h2><p>
</p><p>
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சஞ்சய மகாவத்த இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். </p><p>

நாட்டில் மதுபான உற்பத்தி உரிமங்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலேயே உள்ளதாகவும், தற்போது 13 உரிமங்கள் மட்டுமே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d07e1fc4-a333-4086-bbf3-a473d80cdf49/26-6a928b18192b7.webp' /></p><p> 

இவ்வாறான பெறுமதிமிக்க உரிமத்தைப் பெறுவதற்கு பொதுவாக பெருமளவு நிதி முதலீடு தேவைப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
முன்னாள் ஜனாதிபதியின் உறவினருக்கு இவ்வாறான உரிமம் வழங்கப்பட்டமை, இதன் பின்னணியில் பாரிய ஊழல் இடம்பெற்றிருக்கலாம் என்பதற்கான அறிகுறியாகும் எனவும் மகாவத்த தெரிவித்தார்.</p><p>இந்த விவகாரம் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) எதிர்வரும் வாரத்தில் முறையான முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><h2>நெருங்கிய தொடர்பு</h2><p>
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் எதிர்க்கட்சி உறுப்பினர் நிரஞ்சன் குமாரவும் கலந்துகொண்டார்.</p><p> 

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கும் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கும் இடையிலான நெருங்கிய தொடர்புகளை அவர் விமர்சித்ததுடன், அதனை உறுதிப்படுத்தும் வகையில் புகைப்பட ஆதாரங்களையும் முன்வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a66e42a-7f9c-4ac1-bd74-3782e1efea05/26-6a928b18eb92e.webp' /></p><p>
</p><p>
மேலும், மாஃபியா உறுப்பினர்களிடமிருந்து இலஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்படும் மூன்று சட்டத்தரணிகள் தொடர்பிலும் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.</p><p> 

அவர்கள் மீது இதுவரை சட்டத்தரணிகள் சங்கம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் நிரஞ்சன் குமார கேள்வி எழுப்பினார்.
</p><p>
இந்த ஊழல் மற்றும் திறமையின்மை குறித்த குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு வெளிப்படுத்துவதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.</p><p></p><p><br><br><b><i>you may like this..<br></i></b></p><p><b><i><br><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/0DVCSpZFM30" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-08-29T12:42:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு அருகில் 20 ஈரானிய கப்பல்கள் ; தாக்குதல் நடத்தப்படும் அபாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/20-iranian-ship-near-sri-lanka-water-1787992534"></link>
            <id>https://jvpnews.com/article/20-iranian-ship-near-sri-lanka-water-1787992534</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையின் பிரத்யேகப் பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாகக் கூறப்படும் கப்பல்கள் குறித்து அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாக வெளியுற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையின் பிரத்யேகப் பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாகக் கூறப்படும் கப்பல்கள் குறித்து அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாக வெளியுறவு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.</p><p>

இருப்பினும், குறித்த கப்பல்கள் இலங்கைக்குச் சொந்தமான நிலப்பரப்பிற்கு வெளியே இருப்பதால், அவை தொடர்பாக இலங்கைக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்றும், அக்கப்பல்களுக்கு எந்தவொரு வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4610db40-882b-4585-aa1a-05ff04d444cc/26-6a9299d81fc6d.webp' /></p><h2>தாக்குதல் நடத்தப்படும் அபாயம்</h2><p> 

 ஈரான் துறைமுகங்களை நோக்கி பயணிக்க முடியாமல் சுமார் 20 ஈரானிய எரிபொருள் கடற்போக்குவரத்து கப்பல்கள் தற்போது இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாக 'TankerTrackers' இணையதளம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>

அமெரிக்கா விதித்துள்ள கடற்படைத் தடை காரணமாகவே குறித்த கப்பல்களால் ஈரானிய துறைமுகங்களை நோக்கி பயணிக்க முடியாமல் போயுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.</p><p></p><p> </p><p>

இப்பின்னணியில், ஈரான் கொடியுடனான சுமார் 13 எரிபொருள் கடற்போக்குவரத்து கப்பல்களும், தடைகளைத் தவிர்க்கும் நிழற்படை ('Shadow Fleet') கப்பல்கள் சிலவும் பாதுகாப்புத் தேடி இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்திற்கு அருகில் தற்போது நங்கூரமிட்டுள்ளதாக 'TankerTrackers' இணையதளம் கூறுகிறது.</p><p></p><p> 

எனினும், அந்த இணையதளம் சுட்டிக்காட்டுவது யாதெனில், குறித்த கப்பல்களில் தற்போது எரிபொருள் எதுவும் இல்லை என்பதாகும். </p><p>

அதேவேளை கடந்த மார்ச் மாதம் இலங்கை கரைக்கு 19 கடல் மைல் தொலைவில் இருந்த 'ஐரிஷ் டேனா' (Iris Dena) கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தி மூழ்கடித்த பின்னணியில், தற்போது இலங்கையை ஒட்டி நங்கூரமிட்டுள்ள கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் உள்ளதாக&nbsp; &nbsp;தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> 

இருப்பினும், சர்வதேச சட்டத்தின் கீழ் நடுநிலை நாட்டின் கடற்கரையில் இருந்து 12 கடல் மைல்கள் வரை பரந்துள்ள அந்நாட்டின் பிராந்திய கடல் எல்லைக்குள் தங்கியிருக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவிற்கு அனுமதி இல்லை என்றும் 'TankerTrackers' இணையதளம் குறிப்பிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-29T12:36:10+00:00</updated>
        </entry>
    </feed>
