<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-02T17:43:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 கோடி ரூபா சொத்துகள் சேதம்! மஹர சிறையில் கைதிகள் செய்துள்ள அட்டூழியம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahara-jail-damage-worth-over-rs-15-crore-1785690902"></link>
            <id>https://ibctamil.com/article/mahara-jail-damage-worth-over-rs-15-crore-1785690902</id>
            <summary type="text">மஹர சிறையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் சிறைக்கு ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு ரூ. 15 கோடிக்கும் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் சிறைக்கு ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு ரூ. 15 கோடிக்கும் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

சிறைக்கைதிகள் சிறையில் உள்ள பல சொத்துக்களைச் சேதப்படுத்தியுள்ளதாக சிறைதச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
பல கட்டிடங்களின் ஓடுகள் உடைக்கப்பட்டு, கூரைகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகவும், சிறை மறுவாழ்வுத் திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும் தையல் இயந்திரங்கள் உட்பட பல உபகரணங்களைச் கைதிகள் அழித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>கற்களை வீசி தாக்குதல்&nbsp;</h2><p>
</p><p>
சம்பவம் இடம்பெற்ற நள்ளிரவு வேளையில், சிறைக்கைதிகள் சிறை வளாகத்திற்கு வெளியே கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், சுற்றியுள்ள பல வீடுகளும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bd66349-93cc-4be9-8fb0-38294d981121/26-6a6f8157aebe8.webp' /></p><p>
</p><p>
இவ்வாறானதொரு பின்னணியில், சாத்தான், அசார், பெட்டா மற்றும் மற்றொரு கைதியால் இந்த கலவரம் திட்டமிடப்பட்டது என்று காவல்துறை நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><h2>மாற்றப்பட்ட கைதிகள்</h2><p>
</p><p>
இந்நிலையில், இன்று பிற்பகல், கலவரத்தின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட கைதிகளைச் சிறைச்சாலை திணைக்களம் அடையாளம் கண்டு, அவர்களில் 104 பேரை பூஸ்ஸ உட்பட 7 பிற சிறைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b662a4d-22a0-4fb0-977b-d1e6dd3de6bb/26-6a6f81586530d.webp' /></p><p>
</p><p>
4,100-க்கும் மேற்பட்ட கைதிகளைக் கொண்ட மஹர சிறையில், நேற்று மாலை சுமார் 4 மணியளவில் கலவரம் வெடித்ததையடுத்து, 13 மணி நேரத்திற்கும் மேலான போராட்டத்திற்குப் பிறகு, இன்று காலை சுமார் 6 மணியளவில் பாதுகாப்புப் படையினர் நிலைமையை முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T17:41:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மடு திருத்தலத்திற்கு வந்திருந்த 18 வயது இளைஞனுக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/18-year-old-dies-during-visit-to-madhu-shrine-1785691830"></link>
            <id>https://jvpnews.com/article/18-year-old-dies-during-visit-to-madhu-shrine-1785691830</id>
            <summary type="text">மன்னார் மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடு திருத்தல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

நேற்று (01) இரவு 7.30 மணியளவில்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மன்னார் மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடு திருத்தல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p style="text-align: justify; ">

நேற்று (01) இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22d90b15-5ae7-462d-8c78-9a5757856911/26-6a6f7eb7ca804.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">&nbsp;மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாக உள்ள நிலையில் நூற்றுக்கணக்கான யாத்திரிகர்கள் தற்போது மடு திருத்தலத்தில் வந்து தங்கியுள்ளனர். </p><p style="text-align: justify; ">

அவ்வாறு மடு திருத்தலத்திற்கு வருகை தந்து தங்கியிருந்த முத்தரிப்புத்துறையை சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

பள்ளமடு சந்தி வீதியில் மடுத்திருத்தல பகுதியில் மோட்டார் சைக்கிளை அவர் தலைக்கவசம் அணியாமல் செலுத்தி சென்று கொண்டிருந்த போது, வீதி தடையை கடக்க முற்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. </p><p style="text-align: justify; ">

இதில் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p style="text-align: justify; ">

மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-02T17:30:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவானில் நேருக்கு நேர் மோதிய ஹெலிகாப்டர்கள் ; தீவிரமாகும் மீட்பு பணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/helicopters-collide-mid-air-head-on-1785690660"></link>
            <id>https://canadamirror.com/article/helicopters-collide-mid-air-head-on-1785690660</id>
            <summary type="text">ஐரோப்பிய நாடுகளில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. அதன்படி, இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ், கிரீஸ் உள்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் காட்டுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பிய நாடுகளில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. அதன்படி, இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ், கிரீஸ் உள்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் காட்டுத்தீ பரவி வருகிறது. </p><p>காட்டுத்தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர், ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfcbd55e-359d-41b6-8452-3620910b54cf/26-6a6f7a261302d.webp' /></p><p>
இந்நிலையில், கீரிஸ் நாட்டின் மேற்கு ஏதேன்சில் பசத் பகுதியில் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p> அதில், இன்று காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் நடுவானில் பறந்துகொண்டிருந்த 2 ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதின. இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டர்கள் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கின.</p><p>
இரு ஹெலிகாப்டர்களிம் மொத்தம் 4 பேர் பயணித்த நிலையில் அவர்களின் நிலை என்ன என்று தகவல் வெளியாகவில்லை. </p><p>ஹெலிகாப்டர்கள் வனப்பகுதியில் விழுந்ததால் மீட்புப்பணியில் பொலிசார், ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-02T17:11:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை குறித்து ஈரானின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hormuz-will-not-return-to-pre-war-situation-1785690309"></link>
            <id>https://tamilwin.com/article/hormuz-will-not-return-to-pre-war-situation-1785690309</id>
            <summary type="text">உலகளாவிய ரீதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஹோர்முஸ் நீரிணை விவகாரம் தொடர்பில் ஈரானிய அரசாங்கம் அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
&#039;ஹோர்முஸ் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளாவிய ரீதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஹோர்முஸ் நீரிணை விவகாரம் தொடர்பில் ஈரானிய அரசாங்கம் அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
</p><p>'ஹோர்முஸ் நீரிணை' கடல் வழிப்பாதை இனி ஒருபோதும் போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பப் போவதில்லை என ஈரானிய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>ஓமனுடன் ஈரான் நடத்தி வரும் பேச்சுவார்த்தைக்கும், ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கும் அல்லது மூடுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/205cf024-e1ab-459f-88f1-403f4aa6d896/26-6a6f78ca01110.webp' /></p><p>
</p><p>அமெரிக்காவின் மோசமான நடவடிக்கைகள் மற்றும் ஈரான் மீதான கடற்படை முற்றுகை காரணமாகவே இந்த நீரிணை மூடப்பட்டது என ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.
ஓமனுடனான பேச்சுவார்த்தை இருதரப்பு சார்ந்தது. </p><p>ஈரானின் நலன்களைப் பாதுகாக்கும் ஒரு அமைப்பை ஏற்படுத்துவது தொடர்பான விவாதங்கள் புதியவை அல்ல; அவை நீண்டகாலமாகவே நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது.
</p><p>நாட்டின் நலன்கள் மற்றும் கரிசனைகளை அடிப்படையாகக் கொண்டே இஸ்லாமியக் குடியரசான ஈரான் செயல்படுகிறது எனவும் மற்றவர்களின் அச்சுறுத்தல்கள் அல்லது மிரட்டல்களுக்குப் பயந்து ஈரான் தனது முடிவை மாற்றிக் கொள்ளாது எனவும் தெரிவித்துள்ளது.
</p><p>ஊடகங்களின் அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக ஈரான் தனது உறுதியான நிலைப்பாடுகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்காது என்று இஸ்மாயில் பாகாயி சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T17:05:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மயானத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு ; பிரதான சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/main-suspect-arrested-in-cemetery-shooting-1785690157"></link>
            <id>https://jvpnews.com/article/main-suspect-arrested-in-cemetery-shooting-1785690157</id>
            <summary type="text">வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள &#039;செண்டோ&#039; என்ற குற்றவாளியின் தந்தையை &#039;நிசல செவன&#039; மயானத்தில் வைத்து சுட்டுக் கொல்ல முயன்ற துப்பாக்கிதாரி இன்று (02) கைது செய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள 'செண்டோ' என்ற குற்றவாளியின் தந்தையை 'நிசல செவன' மயானத்தில் வைத்து சுட்டுக் கொல்ல முயன்ற துப்பாக்கிதாரி இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">

மேல் மாகாண தெற்கு குற்றவியல் பிரிவினரால் மிஹிந்தலை பகுதியிலுள்ள வீடொன்றில் தலைமறைவாக இருந்தபோதே இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca54c280-bec9-4e33-bd99-9144f9e6162f/26-6a6f782f6085f.webp' /></p><h2 style="text-align: justify; ">துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்&nbsp;</h2><p style="text-align: justify; "> 

'கொஸ்மல்லி' என்ற குற்றவாளியினால் குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்காக சந்தேகநபருக்கு இரண்டு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

இவர் 2025 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு, கடந்த ஜூலை மாதம் 13ஆம் திகதி பிணையில் வந்தநிலையிலேயே, கடந்த 17 ஆம் திகதி இத்துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதேவேளை, சந்தேகநபர் அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். </p><p style="text-align: justify; ">

இவர் 2015 ஆம் ஆண்டு இராணுவ விசேட படையணியில் இருந்து விலகிய ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-02T17:03:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென வெடித்த மஹர சிறைச்சாலை வன்முறை.. நீதி அமைச்சு எழுப்பும் சந்தேகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rganized-element-may-be-behind-mahara-prison-1785688948"></link>
            <id>https://tamilwin.com/article/rganized-element-may-be-behind-mahara-prison-1785688948</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் பின்னணியில் பின்னணியில் திட்டமிடப்பட்ட சதி ஏதேனும் உள்ளதா என்பது குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாக நீதி அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் பின்னணியில் பின்னணியில் திட்டமிடப்பட்ட சதி ஏதேனும் உள்ளதா என்பது குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>
சிறைச்சாலையில் நிலவும் அதிகளவிலான இடநெருக்கடியும் ஒரு காரணியாக இருக்கலாம் என்ற போதிலும் சதித் திட்டம் குறித்தும் விசாரணை நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.</p><p> 
முதற்கட்டத் தகவல்களின்படி, இந்த மோதல் கைதிகளுக்கும் சிறை நிர்வாகத்திற்கும் இடையே மட்டுமே ஏற்பட்டுள்ளது எனவும் வன்முறையைத் தூண்டுவதற்கு வெளியில் உள்ள ஏதேனும் சக்திகள் பின்னணியில் இயங்கியுள்ளனவா என்பது குறித்தும் அரசாங்கம் விசாரித்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>போதைப்பொருள் புழக்கம்</h2><p>
போதைப்பொருட்களுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கை காரணமாக சிறைகளுக்குள் போதைப்பொருள் புழக்கம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இதுவே கைதிகளிடையே அதிருப்தியையும் இந்த வன்முறையையும் தூண்டியிருக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b69d3045-e8bb-4b89-ba04-9c0a9baf73d8/26-6a6f7375ce182.webp' /></p><p>
சிறைகளில் உள்ள நெரிசலை மட்டுமே இதற்குக் காரணமாகக் கூறிவிட முடியாது என்றாலும், அதனைச் சீரமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
</p><p>போதைப்பொருள் தொடர்பான சிறு குற்றங்களுக்குப் பிணை நடைமுறைகளை விரைவுபடுத்துதல் மற்றும் அரச பகுப்பாய்வாளர் அறிக்கை கிடைப்பதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்த்தல் போன்ற சட்ட சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>
தற்போது சுமார் 23,000 கைதிகள் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சட்ட அமலாக்கத்தின் மூலம் மட்டுமே போதைப்பொருள் பிரச்சினையைத் தீர்க்க முடியாது எனவும், சமூக அளவில் போதைப்பொருளுக்கான தேவைக் குறைப்பைக் கொண்டுவர சமூகத்தின் கூட்டுப் பங்களிப்பு அவசியம் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>மஹர சிறை வன்முறையில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 14 கைதிகள் உடனடியாக வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
</p><p>வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் அதே வேளையில், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இதுபோன்ற சம்பவங்கள் தற்செயலாக நடக்க வாய்ப்பில்லை என்பதால், வெளிச்சதிகளின் பங்களிப்பு குறித்து விரிவான விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T17:02:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப் இன் அறிவிப்பிற்கு மத்தியிலும் இஸ்ரேலுக்கு விரையும் அமெரிக்க விமானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/10-more-us-refueling-aircraft-to-israel-1785686603"></link>
            <id>https://ibctamil.com/article/10-more-us-refueling-aircraft-to-israel-1785686603</id>
            <summary type="text">ஈரான் மீதான தாக்குதலை நிறுத்துவதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில் இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்திற்கு மேலதிகமாக பத்து அமெரிக்க வான்வழி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான தாக்குதலை நிறுத்துவதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில் இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்திற்கு மேலதிகமாக பத்து அமெரிக்க வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்கள் வந்துகொண்டிருப்பதாகவும், இதனால் அங்கு நிறுத்தப்பட்டுள்ள விமானங்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>ஏற்கனவே விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள 30 அமெரிக்க எரிபொருள் நிரப்பும் விமானங்களுடன் இந்த விமானங்களும் இணையும் என எதிர்பார்க்கப்படுவதாக 'தி கல்கலிஸ்ட்' செய்தித்தாள் தெரிவித்துள்ளது.</p><h2>விமான நிலையத்தில் நெருக்கடி</h2><p>வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான இராணுவ விமானங்கள் விமான நிலையத்தின் செயல்பாட்டுச் சுமையை கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், இதனால் சமீப நாட்களில் பயணிகள் விமானங்களில் சுமார் இரண்டு மணி நேர தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், கூடுதல் விமானங்கள் வந்தவுடன் இந்த இடையூறுகள் மேலும் மோசமடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இஸ்ரேல் விமான நிலைய ஆணையம் கூறியதாக அது மேற்கோள் காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10c7238c-589f-4edc-af58-0043de3b17c2/26-6a6f77fd0ac97.webp' /></p><p>பொதுவாக ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் விமான நிலையத்தில் பயணிகளின் வருகை மிகவும் அதிகமாக இருக்கும் என அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.</p><p></p><h2>விமானங்களை மாற்ற உடன்பாடு</h2><p>&nbsp;பென் குரியோன் விமான நிலையத்தில் உள்ள அமெரிக்க எரிபொருள் நிரப்பும் விமானங்களின் எண்ணிக்கையை ஜூலை 21-க்குள் 20 ஆகக் குறைக்கவும், மீதமுள்ள விமானங்களை இஸ்ரேலிய விமானப்படைத் தளங்களுக்கு மாற்றவும் ஒரு உடன்பாடு எட்டப்பட்டதாக இஸ்ரேலின் போக்குவரத்து அமைச்சகம் ஜூலை 15 அன்று அறிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a49c2eb-145c-4318-b00f-3467b5257d48/26-6a6f77fdb188a.webp' /></p><p>&nbsp;பெப்ரவரி 28 அன்று ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் தொடங்கியதிலிருந்து, பென் குரியோன் விமான நிலையம் மற்றும் இஸ்ரேலில் உள்ள பிற இடங்களில் அமெரிக்க எரிபொருள் நிரப்பும் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T17:02:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இரட்டைச் சகோதரிகளின் விபரீத முடிவால் பறிபோன உயிர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/twin-sisters-tragic-decision-claims-lives-1785685953"></link>
            <id>https://jvpnews.com/article/twin-sisters-tragic-decision-claims-lives-1785685953</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் இருவர் தீ மூட்டி உயிரிழந்துள்ளனர்.



நே...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் இருவர் தீ மூட்டி உயிரிழந்துள்ளனர்.</p><p style="text-align: justify;">



நேற்று (01) வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில், குறித்த இருவரும் தமக்கு தாமே தீ மூட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/133b5efb-1b89-4c2d-b156-19c96a864918/26-6a6f67c3779ea.webp' /></p><h2 style="text-align: justify; ">வாழ்வதற்கு விருப்பமில்லை</h2><p>
</p><p style="text-align: justify;">


இதனையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.</p><p style="text-align: justify; "> எனினும், சிகிச்சை பலனின்றி இன்று (02) அதிகாலை இருவரும் உயிரிழந்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify; ">


வாழ்வதற்கு விருப்பமில்லாத காரணத்தினால் இந்த முடிவை எடுத்ததாக, உயிரிழப்பதற்கு முன்னர் அவர்கள் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">


சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-02T16:51:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[படகு விபத்தில் காணாமல் போன ரொறன்ரோ தம்பதியின் உடல்கள் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/damaged-boat-found-two-people-missing-1785657424"></link>
            <id>https://canadamirror.com/article/damaged-boat-found-two-people-missing-1785657424</id>
            <summary type="text">கனடாவின் முஸ்கோக்கா பகுதியில் இடம்பெற்ற படகு மோதல் விபத்தொன்றில் காணாமல் போயிருந்த இருவரின் உடல்களையும் புலனாய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
உயிரிழந்தவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் முஸ்கோக்கா பகுதியில் இடம்பெற்ற படகு மோதல் விபத்தொன்றில் காணாமல் போயிருந்த இருவரின் உடல்களையும் புலனாய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
</p><p>உயிரிழந்தவர்கள் ரொறன்ரோவைச் சேர்ந்த 32 வயது ஆண் மற்றும் 30 வயது பெண் என பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.</p><p>
வெள்ளிக்கிழமை இரவு 10:40 மணியளவில், பேக்கன்ரிக் பே பகுதிக்கு அருகிலுள்ள ரொசோ ஏரியில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f250ee0a-6a1e-4686-8442-5e2ae40f21b5/26-6a6ef85272f70.webp' /></p><p>சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்தபோது, பலத்த சேதமடைந்த நிலையிலிருந்த படகு ஒன்று பாறை விளிம்பில் ஆபத்தான முறையில் சமநிலை இழந்து நின்றதை அவதானித்துள்ளனர்.
</p><p>விபத்து நடந்த இடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையை முன்னெடுத்தனர்.</p><p> சனிக்கிழமை பிற்பகலில் காணாமல் போன இருவரின் உடல்களும் மீட்கப்பட்டன.</p><p>
இச்சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், இது தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாகத் தங்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T16:51:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் ; மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/warning-issued-against-going-out-to-sea-1785688968"></link>
            <id>https://jvpnews.com/article/warning-issued-against-going-out-to-sea-1785688968</id>
            <summary type="text">காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடலுக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை கடற்பயணம் செய்ய வேண்டாம் என வளிமண்டலவியல்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடலுக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை கடற்பயணம் செய்ய வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம், கடற்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. </p><p style="text-align: justify; ">

இன்று (2) மாலை விடுத்துள்ள அறிக்கையொன்றில், இந்த எச்சரிக்கை நாளை (3) பி.ப. 8.00 மணி வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c9e063b-39e1-4e6c-9af6-be4490a507b3/26-6a6f73895d875.webp' /></p><h2 style="text-align: justify; ">எச்சரிக்கை&nbsp;</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது நாளை அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், அப்பகுதிகளிலுள்ள கடல் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் அவ்அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

இதேவேளை, புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடலுக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், அப்பகுதிகளிலுள்ள கடலும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

எனவே, குறித்த கடற்பிரதேசங்களில் நிலவும் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பான நிலைமை குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-02T16:42:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கு ட்ரம்பை சவூதி அரேபியா தூண்டியிருக்கலாம் - அமெரிக்கப் பேராசிரியர் கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/saudi-arabia-encouraged-trump-negotiate-iran-1785688192"></link>
            <id>https://tamilwin.com/article/saudi-arabia-encouraged-trump-negotiate-iran-1785688192</id>
            <summary type="text">அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போரைக் கட்டுப்படுத்தும்
இராஜதந்திர முயற்சிகளில் கட்டார், பாகிஸ்தான், ஓமன் ஆகிய நாடுகளுடன் சவூதி
அரேபி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போரைக் கட்டுப்படுத்தும்
இராஜதந்திர முயற்சிகளில் கட்டார், பாகிஸ்தான், ஓமன் ஆகிய நாடுகளுடன் சவூதி
அரேபியாவும் நேரடியாகக் களம் இறங்கியிருப்பது ஒரு முக்கியமான
திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.</p><h2>முக்கியமான தேவை</h2><p>
</p><p>
சவூதி அரேபியா, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பிடம் தனிப்பட்ட முறையில்
பேசியதன் காரணமாகவே, அவர் போருக்குப் பதிலாக மீண்டும் பேச்சுவார்த்தைக்கான
சாத்தியக்கூறுகளை ஆராயத் தொடங்கியிருக்கலாம் என அமெரிக்காவின்
விஸ்கான்சின்-ஈக்ளேர் பல்கலைக்கழகப் பேராசிரியர் மார்லின் ஹார்டிங்கர்
தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a87b075-215b-455f-be1d-5a749d0746ed/26-6a6f72c87c731.webp' /></p><p>
</p><p>
மத்திய கிழக்கின் மூத்த தலைவர்கள் இந்தப் பிரச்சினையில் முன்னின்று
பொறுப்பேற்பதற்கு சவூதி அரேபியாவின் இந்த முயற்சி வழிவகுத்துள்ளது.</p><p>

பதற்றமான சூழல் நிலவியபோதிலும் இரு தரப்பிற்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சரியான
வார்த்தைகளைப் பயன்படுத்தி பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நடத்துவதே தற்போதைய
இராஜதந்திரத்தின் மிக முக்கியமான தேவையாகும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T16:40:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் எதிர்க்கட்சி கிடையாது – லால்காந்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-opposition-in-srilanka-now-1785687632"></link>
            <id>https://tamilwin.com/article/no-opposition-in-srilanka-now-1785687632</id>
            <summary type="text">நாட்டில் தற்பொழுது எதிர்க்கட்சியொன்று ஒன்று கிடையாது என விவசாய அமைச்சர் கே டி லால் காந்த தெரிவித்துள்ளார்.
நாட்டில் பழைய அரசியல் மீண்டும் உருவாவதற்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தற்பொழுது எதிர்க்கட்சியொன்று ஒன்று கிடையாது என விவசாய அமைச்சர் கே டி லால் காந்த தெரிவித்துள்ளார்.
நாட்டில் பழைய அரசியல் மீண்டும் உருவாவதற்கு வாய்ப்புகள் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
நாட்டு மக்களுக்கு இது பெரும் அதிர்ஷ்டம் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
</p><p>எதிர்க்கட்சியினர் மீண்டும் பழைய அரசியலை உருவாக்க முயற்சிக்கின்றார்கள் எனவும் எனினும் அது நடைபெறாது எனவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99070fbe-a1bb-49dd-91bf-b25c83292d7a/26-6a6f6e5289fe2.webp' /></p><p>
நாட்டில் எதிர்க்கட்சிகள் இல்லாத காரணத்தினால் சில ஊடக நிறுவனங்கள் தங்களை எதிர்க்கட்சிகளாக மாற்றிக் கொள்ள முனைகின்றன என தெரிவித்துள்ளார்.</p><p>
அவ்வாறான சூழ்நிலையில் வங்குரோத்து அடைந்த அரசியல் கட்சிகளின் குணாதிசயங்கள் ஊடகங்களில் ஊடாக வெளிப்படுவதாக தெரிவித்துள்ளார்.
</p><p>எதிர்க்கட்சிகளின் வங்குரோத்து நிலையை வெளிப்படுத்த முனைந்து ஊடகங்கள் வங்குரோத்து அடைந்து விடும் என்பதனை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார்.</p><p>
பழைய அரசியல் கலாச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை சில ஊடக நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
</p><p>பழைய அரசியல் கலாச்சாரத்தின் கோரமுகம் அந்த துர்நாற்றம் சில ஊடகங்களின் வாயிலாக வெளிப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>மக்களினால் தோற்கடிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஊடகங்களின் ஊடாக மீண்டும் தலை தூக்க முயற்சிக்கின்றன ஆனால் அது அவ்வாறு நடக்காது எனவும் பொய்களை ஜோடனை செய்து வெளிப்படுத்த முடியுமே தவிர அரசியல் ரீதியாக வெற்றியடைய முடியாது என அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T16:31:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் இன்றுமாலை கோரவிபத்து : இரண்டு தமிழ் இளைஞர்கள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-tamil-youths-killed-in-accident-in-trincomalee-1785687102"></link>
            <id>https://ibctamil.com/article/two-tamil-youths-killed-in-accident-in-trincomalee-1785687102</id>
            <summary type="text">திருகோணமலை மூதூர் காவல்துறை பிரிவிலுள்ள ஜின்னாநகர் (59ஆம் கட்டை) பகுதியில் ரிப்பர்
வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மூதூர் காவல்துறை பிரிவிலுள்ள ஜின்னாநகர் (59ஆம் கட்டை) பகுதியில் ரிப்பர்
வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில்
பயணித்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக மூதூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p>

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) மாலை
இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><h2>&nbsp;இரண்டு தமிழ் இளைஞர்கள் உயிரிழப்பு</h2><p>விபத்தில் மூதூர் -கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த தமிழ் செல்வன் தனேஸ் வயது
(21), அருணவன் செல்வரெத்தினம் வயது (19)ஆகிய இரண்டு இளைஞர்களே
உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28eb3b3c-3c85-4155-a896-3ec50ff9564a/26-6a6f6eae7a34f.webp' /></p><p>

ரிப்பர் வாகனச் சாரதி மூதூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
</p><p>
உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் சடலங்களும் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத
அறையில் வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் காவல்துறையினர் முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T16:22:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் சட்டமூலம் ; சட்டமா அதிபர் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ag-clears-bill-to-raise-judges-retirement-age-1785687565"></link>
            <id>https://jvpnews.com/article/ag-clears-bill-to-raise-judges-retirement-age-1785687565</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்காக தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது. 

குறிப்பிட்ட சட்டமூலம் தொடர்பிலான ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்காக தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது. </p><p style="text-align: justify; ">

குறிப்பிட்ட சட்டமூலம் தொடர்பிலான சட்டப்பூர்வ விளக்கமளிப்பு நீதி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f07ec23d-0d8e-4379-8e7e-1209a754bb83/26-6a6f6e0f78fec.webp' /></p><h2 style="text-align: justify; ">வர்த்தமானி&nbsp;</h2><p> </p><p style="text-align: justify; ">

இதற்கமைய, நீதி அமைச்சினால் குறித்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வர்த்தமானி மூலம் வெளியிடப்படவுள்ளது.</p><p style="text-align: justify; "> 

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 02 வருடங்களால் நீடிப்பதற்கான முன்மொழிவொன்று அண்மையில் நீதி அமைச்சினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருந்தது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

தற்போது நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் 11 இலட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் தேங்கிக் கிடப்பதால், அவ்வழக்குகளை விரைவாக விசாரித்து முடிப்பதே இத்தீர்மானத்தின் நோக்கமாகும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-02T16:22:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[கெஸ்ட் ரோலில் நடிக்கமாட்டேன்.. ஆனால் ஜெயிலர் 2ல் நடித்தது ஏன்: விஜய் சேதுபதி பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vijay-sethupathi-on-why-he-acted-in-jailer-2-cameo-1785687187"></link>
            <id>https://cineulagam.com/article/vijay-sethupathi-on-why-he-acted-in-jailer-2-cameo-1785687187</id>
            <summary type="text">நடிகர் விஜய் சேதுபதி ஒருகாலத்தில் ஹீரோவாக நடிக்கும் படங்களை விட அவர் கெஸ்ட் ரோலில் நடிக்கும் படங்கள் தான் அதிகம் வரும். அந்த படங்கள் தோல்வி அடைந்தால்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் விஜய் சேதுபதி ஒருகாலத்தில் ஹீரோவாக நடிக்கும் படங்களை விட அவர் கெஸ்ட் ரோலில் நடிக்கும் படங்கள் தான் அதிகம் வரும். அந்த படங்கள் தோல்வி அடைந்தால், அது அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தின.</p><p>அதனால் நான் இனிமேல் கெஸ்ட் ரோலில் நடிக்க மாட்டேன் என அறிவித்தார் விஜய் சேதுபதி. அதன் பிறகு தற்போது ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் கெஸ்ட் ரோலில் அவர் நடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa163b6a-4148-4e34-85a4-b502c9b78848/26-6a6f6c94978a7.webp' /></p><p>
</p><h2>காரணம்</h2><p>அதற்கான காரணத்தை தற்போது ஒரு பேட்டியில் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
</p><p>"நான் cameo நடிப்பதை நிப்பாட்டிட்டேன். ஜெயிலர் 2ல் பண்ணி இருக்கேன். ரஜினி சார் கூட நடிக்கணும் என்ற ஆசைக்காக அதை பண்ணி இருக்கேன். அது என்னடைய சாய்ஸ். </p><p>
ரஜினி சார் உடன் போஸ்டரில் போட்டாலும் நம்மை யாரும் கவனிக்க மாட்டாங்க. ஆனால் மற்ற படங்களில் என் போட்டோவை போஸ்டரில் போடுவது என் மற்ற படங்களை பாதிக்கிறது. அதனால் தான் cameo நடிப்பதில்லை" என விஜய் சேதுபதி கூறி இருக்கிறார்.
&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T16:13:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வன பாதுகாப்புக்கான நிதியை குறைக்கும் சுவிட்சர்லாந்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/switzerland-cuts-forest-climate-funding-1785687298"></link>
            <id>https://news.lankasri.com/article/switzerland-cuts-forest-climate-funding-1785687298</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்து அரசு வன பாதுகாப்புக்கான நிதியை குறைத்துள்ளது.

சுவிட்சர்லாந்து அரசு, வன பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை தழுவிய திட்டங்களுக்கு வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்து அரசு வன பாதுகாப்புக்கான நிதியை குறைத்துள்ளது.
</p><p>
சுவிட்சர்லாந்து அரசு, வன பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை தழுவிய திட்டங்களுக்கு வழங்கப்பட்ட நிதியை 2027 முதல் குறைக்க தீர்மானித்துள்ளது.</p><p>

இந்த முடிவு, நாட்டில் கடும் வெப்ப அலைகள் மற்றும் வறட்சி காரணமாக காடுகள் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் எடுக்கப்பட்டதால், பரவலான எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/283360b1-16f2-4a29-b267-1e786e6ded7e/26-6a6f6d03e884f.webp' /></p><p>2019-இல் சுவிஸ் பாராளுமன்றம், காடுகளை வெப்பம் மற்றும் வறட்சிக்கு எதிராக பாதுகாக்க CHF 100 மில்லியன் நிதியை ஒதுக்கியது.

இதன் மூலம், அதிக வெப்பத்தையும் வறட்சியையும் தாங்கக்கூடிய புதிய மரவகைகள் நடவு செய்யப்பட்டன.</p><p>

2023-இல் இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டாலும், நிதி மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்பட்டது. இப்போது, அரசின் புதிய நிதி திட்டத்தில் இந்த நிதி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.
</p><p></p><p>சுவிஸ் சுற்றுச்சூழல் அமைச்சரான ஆல்பர்ட் ரோஸ்டி, இந்த நிதியை Federal Office for the Environment (FOEN)-இன் நிதி திட்டத்திலிருந்து நீக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், Conference on Forests, Wildlife and Landscape (CFP) அமைப்பு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
</p><h2>
நிபுணர்கள் எச்சரிக்கை</h2><p>

ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளில் வெப்ப அலைகள் அதிகரித்து, காடுகளில் தீப்பற்றும் அபாயம் உயரும் நிலையில், இந்த முடிவு மிகவும் தவறான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
</p><p>
ஸ்டீஃபன் முல்லர், மையக் கட்சியின் உறுப்பினரும் CFP குழுவின் உறுப்பினருமான இவர், “வன மேலாண்மை செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், நிதி குறைப்பு மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்” எனக் கூறியுள்ளார்.
</p><p>
இந்த முடிவு, சுவிட்சர்லாந்தின் காலநிலை மாற்றத்திற்கான முயற்சிகள் மற்றும் வன பாதுகாப்பு திட்டங்கள் மீது எதிர்காலத்தில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T16:12:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் நடைபெற்ற இசை திருவிழா: 17 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/teen-girl-passed-away-at-kendal-music-festival-1785687001"></link>
            <id>https://news.lankasri.com/article/teen-girl-passed-away-at-kendal-music-festival-1785687001</id>
            <summary type="text">பிரித்தானியாவில் நடைபெற்ற இசை திருவிழாவில் 17 வயது சிறுமி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இசை திருவிழாவில் சோகம்லேக் டிஸ்ட்ரிக்ட்(Lake District...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் நடைபெற்ற இசை திருவிழாவில் 17 வயது சிறுமி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> இசை திருவிழாவில் சோகம்</h2><p>லேக் டிஸ்ட்ரிக்ட்(Lake District) பகுதியில் நடைபெற்ற கென்டல் காலிங்(Kendal Calling) இசைத் திருவிழாவில் பங்கேற்ற 17 வயது சிறுமி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மருத்துவக் கோளாறு காரணமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.13 மணிக்கு கும்ப்ரியாவில்(Cumbria) நடைபெற்ற இசைத் திருவிழாவில் ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக அவசர உதவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fcd9500-f5a9-48c5-a241-3b7ae3c6735a/26-6a6f6bdaa42a1.webp' /></p><p> இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் பாதிக்கப்பட்டவரை மீட்டு உரிய மருத்துவ சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p> சிறுமி உயிரிழந்தது குறித்து அவரது குடும்பத்தினருக்கு காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b30e2d1-83f5-4673-8397-189ca341c2eb/26-6a6f6bdb578d0.webp' /></p><p> மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையையும் பொலிஸார் தொடங்கியுள்ளனர்.</p><p>குறிப்பாக, சிறுமி உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட போது மீட்பு பணியாளர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு அழைத்து சென்ற பெண்கள் குழுவினரை தொடர்பு கொள்ள விசாரணை அதிகாரிகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T16:10:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/annual-festival-historic-sri-mamangeswarar-temple-1785685650"></link>
            <id>https://tamilwin.com/article/annual-festival-historic-sri-mamangeswarar-temple-1785685650</id>
            <summary type="text">கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு
ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நாளை(3) கொடியேற்றத்துடன்
ஆரம்பமாகவுள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு
ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நாளை(3) கொடியேற்றத்துடன்
ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று(2) மாலை கொடிச்சீலை கொண்டுசெல்லும் நிகழ்வு
நடைபெற்றது.
</p><p>மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகிய மூன்றையும் ஒருங்கே கொண்ட கிழக்கிலங்கையின்
வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின்
வருடாந்த மஹோற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு வீரகத்திப்பிள்ளையார்
ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று பாரம்பரிய கலாசார கலைஞர்களின் பவனியுடன்
கொடிச்சீலை மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது.</p><p></p><h2>தமிழர்களின் வரலாறு</h2><p>
</p><p>இலங்கையில் தமிழர்களின் வரலாற்றினை உலகுக்கு எடுக்காட்டும் மாமாங்கேஸ்வரர்
ஆலயத்தில் இராம பிரான் வழிபாடுகளை மேற்கொண்டதாக வரலாறுகள் கூறுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/927b6bee-6516-4afe-8703-39cd7553141d/26-6a6f6994a3c9a.webp' /></p><p>
</p><p>இராமபிரானால் தண்டம் ஊன்றி உருவாக்கப்பட்ட தீர்த்தக்குளம் காணப்படுகின்றது.
அதில் உயிர்நீர்த்தவர்களுக்கு பிதிர்கடன்களை நிறைவேற்றும் ஆடிஅமாவாசை
தீர்த்தமாடும் தீர்த்தக்கரையாக மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்குளம் காணப்படுகின்றது.
</p><p>நாளை காலை விசேட பூஜைகள் நடைபெற்று நண்பகல் 12.00மணியளவில் கொடியேற்ற
நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறவுள்ளது.</p><p>
பத்து தினங்கள் நடைபெறவுள்ள ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் 11ஆம் திகதி தேர்
உற்சவம் நடைபெறவுள்ளதுடன் 12ஆம் திகதி ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவம்
நடைபெறவுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T16:00:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இடிந்து விழும் நிலையில் பாடசாலை கட்டிடம் : அலட்சியத்துடன் அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/school-building-in-a-state-of-collapse-1785683553"></link>
            <id>https://ibctamil.com/article/school-building-in-a-state-of-collapse-1785683553</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்டம் திருகோணமலை வலயக்கல்வி பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம்
தி/ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயத்தில் இடிந்து விழும் நிலையில் வகுப்பறை
கட்டிடம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்டம் திருகோணமலை வலயக்கல்வி பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம்
தி/ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயத்தில் இடிந்து விழும் நிலையில் வகுப்பறை
கட்டிடம் காணப்படுவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதன் மூலம் பெரும்
சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.</p><p> இக் கட்டிடத்தின் ஒரு பகுதி ஏற்கனவே
குடைசாய்ந்து காணப்படுகிறது.

இவ்வாறான நிலையில் இது குறித்து உரிய கல்வித்துறை சார் உயரதிகாரிகளுக்கு
அறிவித்தும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என பழைய மாணவர்கள் மற்றும்
பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.</p><h2>இடிந்து விழும் நிலையில்&nbsp;கட்டிடம்</h2><p>இக் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பெரும் அச்சத்துடனேயே
அருகாமையில் உள்ள வகுப்பறை மாணவர்களும் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியுள்ளதாகவும்
தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27359268-7c25-4747-b07b-aab1dcec5f0c/26-6a6f663f9b6f8.webp' /></p><p>
குறித்த பாடசாலையில் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்று வருவதுடன் தரம்
1 தொடக்கம் உயர்தரம் வரை இங்கு காணப்படுகிறது.</p><p>

எனவேமாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு
குறித்த கட்டிடத்தை திருத்தியமைத்தாவது தருமாறும் உரிய தரப்புக்களுக்கு
பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T15:47:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலையின் 104 கைதிகள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/update-on-104-inmates-at-mahara-prison-1785685481"></link>
            <id>https://jvpnews.com/article/update-on-104-inmates-at-mahara-prison-1785685481</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையைச் சேர்ந்த 104 கைதிகள் தும்பறை, வெலிக்கடை, பூஸா, களுத்துறை, பதுளை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மஹர சிறைச்சாலையைச் சேர்ந்த 104 கைதிகள் தும்பறை, வெலிக்கடை, பூஸா, களுத்துறை, பதுளை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் (செயற்பாடுகள்) ஊடகப் பேச்சாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "> 

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், குறித்த கைதிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியல் மஹர சிறைச்சாலையின் வீதித் தடைக்கு அருகில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f241aa13-8cdd-4c35-b2ff-5ce9d48a551e/26-6a6f65eac24bb.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;புனரமைப்புப் பணிகள்&nbsp;</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

மேலும், புனரமைப்புப் பணிகள் காரணமாக மஹர சிறைச்சாலையில் கைதிகளைப் பார்வையிடும் நடவடிக்கை திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாட்களின் பின்னர் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

நேற்று (01) பிற்பகல் மஹர சிறைச்சாலையினுள் கைதிகளால் ஏற்படுத்தப்பட்ட பதற்றமான சூழ்நிலை, சிறைச்சாலை அதிகாரிகள், இலங்கை பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினரால் இணைந்து தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் அறிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-02T15:44:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதிகளின் பாதுகாப்பிற்கு அரசாங்கமே பொறுப்பு - சுமந்திரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-must-take-responsibility-says-sumanthiran-1785685320"></link>
            <id>https://tamilwin.com/article/govt-must-take-responsibility-says-sumanthiran-1785685320</id>
            <summary type="text">&amp;nbsp;சிறைச்சாலைகளுக்கு அரசாங்கமே பொறுப்பு எனவும் இதனால் கைதிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை எனவும் முன்னாள் நாடாளுமன்ற உற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சிறைச்சாலைகளுக்கு அரசாங்கமே பொறுப்பு எனவும் இதனால் கைதிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.</p><p> சிறைச்சாலைகளில் நெரிசல் காரணமாக பிரச்சினைகள் ஏற்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>ஒரு கைதி தடுத்து வைக்கப்பட வேண்டிய இடத்தில் நான்கு கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0f76077-89fd-4423-bfe6-eae59e568db2/26-6a6f654a78a0b.webp' /></p><p>
மஹர சிறைச்சாலையில் நேற்றைய தினம் இடம் பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் உரிய தகவல்கள் இன்னமும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>இந்த மோதல் சம்பவம் தொடர்பில் வருத்தத்தை வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>சிறைச்சாலைகளுக்குள் கைதிகளுக்கு இடையிலோ அல்லது வேறு விதமான மோதல்கள் வெடிப்பது ஆரோக்கியமான விடயம் அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
</p><p>இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.</p><p>
மேலும் இந்த சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T15:42:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கார் விற்பனையில் புதிய சாதனை படைத்த மாருதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/maruti-sets-record-241241-cars-in-july-1785685207"></link>
            <id>https://news.lankasri.com/article/maruti-sets-record-241241-cars-in-july-1785685207</id>
            <summary type="text">இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி ஜூலை 2026-இல் புதிய தொழில் சாதனையை படைத்துள்ளது.

ஒரே மாதத்தில் 2,41,241 வாகனங்களை விற்று, இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி ஜூலை 2026-இல் புதிய தொழில் சாதனையை படைத்துள்ளது.
</p><p>
ஒரே மாதத்தில் 2,41,241 வாகனங்களை விற்று, இந்திய கார் தொழில்துறையின் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
</p><p>
இதில், 2,00,123 வாகனங்கள் உள்நாட்டு சந்தையில் விற்கப்பட்டன. அதில் 1,93,203 பயணிகள் வாகனங்கள் (PV) மற்றும் 3,920 வணிக வாகனங்கள் (CV) அடங்கும். மேலும், 30,056 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6929115c-be03-49e1-ad33-2f7cfc208bd1/26-6a6f64d95f8a9.webp' /></p><p>கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மாருதி 1,80,526 வாகனங்களை விற்றிருந்தது. அதற்கு முன் 2025 ஜூலை மாதத்தில் 1,40,570 வாகனங்கள் மட்டுமே விற்றிருந்தது. இதன் மூலம், மாருதி தொடர்ந்து வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.
</p><p>
மாருதி சுசூகி நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை மூத்த நிர்வாக அதிகாரி பார்த்தோ பானர்ஜி தெரிவித்ததாவது: “தற்போது எங்களிடம் சுமார் 1.60 லட்சம் நிலுவையில் உள்ள முன்பதிவுகள் உள்ளன. புதிய பிரெஸ்ஸா (Brezza) ஃபேஸ்லிஃப்ட் தினமும் சுமார் 2,000 முன்பதிவுகளை பெறுகிறது. அதேசமயம், e-விடாரா (e Vitara) மாதத்திற்கு சுமார் 4,000 முன்பதிவுகளை பெறுகிறது” என்றார்.
</p><p></p><p>இந்த சாதனை, இந்திய கார் சந்தையின் வளர்ச்சி மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. </p><p>மாருதி, தனது புதிய மாடல்கள் மற்றும் மின்சார வாகனங்கள் மூலம் எதிர்காலத்தில் மேலும் விற்பனையில் சாதனைகளை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T15:38:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் நீடிக்கும் கடும் வறட்சி: விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/severe-drought-persists-in-britain-1785682605"></link>
            <id>https://tamilwin.com/article/severe-drought-persists-in-britain-1785682605</id>
            <summary type="text">பிரித்தானியாவில் தொடர்ந்து நிலவி வரும் கடும் வறட்சி சூழல் நீடித்தால்,
நாட்டில் குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும்
என்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் தொடர்ந்து நிலவி வரும் கடும் வறட்சி சூழல் நீடித்தால்,
நாட்டில் குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும்
என்று தேசிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டாம் பிராட்ஷா
எச்சரித்துள்ளார்.</p><p>

இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் வேல்ஸ் முழுவதிலும் வறட்சி
நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2 கோடிக்கும் அதிகமான மக்களுக்குக்
குடிநீர் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.</p><p>

இந்த ஆண்டு கோதுமை மற்றும் ஓட்ஸ் விளைச்சல் மிக மோசமாகப்
பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புல் வளராததால் கால்நடை வளர்ப்போர்
குளிர்காலத்திற்கான தீவனங்களை இப்போதே பயன்படுத்தும் நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளதாகவும் பிராட்ஷா தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>நிதியுதவி</h2><p>
</p><p>
மேலும், காய்கறி உற்பத்தியாளர்களுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காததால்,
உள்நாட்டு உணவு உற்பத்தி குறைந்து, விளைச்சல் செலவும் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec006e8e-ff21-4b53-89ea-412b12ccdaae/26-6a6f5aaf3a3ad.webp' /></p><p>
</p><p>
நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கு நீர் பாதுகாப்பு மிக முக்கியமானது என்பதால்,
மழைநீரைச் சேமிக்க புதிய நீர்த்தேக்கங்களைக் கட்ட அரசு நிதியுதவியும்
வரிவிலக்குகளும் வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><h2>தீவிர வெப்ப அலை</h2><p>

இங்கிலாந்தில் கடந்த ஜூலை மாதத்தில் வெறும் 8 சதவீத மழையே பெய்துள்ளது. இது
1911-ஆம் ஆண்டில் பதிவான குறைந்தபட்ச மழைப்பொழிவு சாதனையை விடவும் மிகக்
குறைவானதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d33b088-43dd-4b95-8a7d-a3b7f66eb94e/26-6a6f5aafe4fc6.webp' /></p><p>
</p><p>
பிரித்தானியா மட்டுமன்றி இத்தாலி உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் தீவிர
வெப்ப அலை மற்றும் வறட்சி காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதுடன், உணவுப்
பொருட்கள் விநியோகமும் பெரும் சவாலாக மாறியுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T15:12:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருவில் சுற்றுலா விமானம் விபத்து: 13 பேர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tourist-plane-crash-in-peru-1785680742"></link>
            <id>https://tamilwin.com/article/tourist-plane-crash-in-peru-1785680742</id>
            <summary type="text">&amp;nbsp;பெரு நாட்டின் புகழ்பெற்ற தொல்பொருள் தளமான நாஸ்கா லைன்ஸ் பகுதியை
வான்வழியாகப் பார்வையிடச் சென்ற சிறிய ரக சுற்றுலா விமானம் ஒன்று
விபத்துக்குள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பெரு நாட்டின் புகழ்பெற்ற தொல்பொருள் தளமான நாஸ்கா லைன்ஸ் பகுதியை
வான்வழியாகப் பார்வையிடச் சென்ற சிறிய ரக சுற்றுலா விமானம் ஒன்று
விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 13 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p>

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை தெற்கு பெருவின் சொகோஸ் பகுதியில் நடந்துள்ளதாக
அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p></p><h2>விமான விபத்து</h2><p>
</p><p>
'எரோடியானா' என்ற உள்ளூர் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான 'செஸ்னா கேரவன்
C-208' ரக சிறிய விமானம், பிஸ்கோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச்
சென்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03a33046-449c-435f-834a-72a14799b11f/26-6a6f5cf2b02e7.webp' /></p><p>

இதில் ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 11
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், 2 விமானப் பணியாளர்களும் இருந்தனர்.</p><p>

மதியம் 1:00 மணியளவில் விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு அவசர நிலை குறித்து
தகவல் தெரிவித்த சில நிமிடங்களிலேயே தொடர்பு துண்டிக்கப்பட்டு, விமானம்
தரையில் மோதி தீப்பிடித்து எரிந்தது.</p><p></p><h2>வறண்ட வானிலை</h2><p>
</p><p>
விபத்து நடந்தவுடன் தீயணைப்பு மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு
விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இருப்பினும், விமானம் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் அதில் இருந்தவர்களைக்
காப்பாற்ற முடியாமல் போனது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa24f144-f42c-4b98-b291-2142ca03ea3a/26-6a6f5cf36e283.webp' /></p><p>
</p><p>
காற்று வீச்சு மற்றும் வறண்ட வானிலை காரணமாக இவ்விபத்து நிகழ்ந்ததா அல்லது
வேறு ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்து பெரு நாட்டின்
போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் தீவிர விசாரணை மேற்கொண்டு
வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-02T15:06:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[18 வயதில் வேலை தேடி சென்ற இந்தியருக்கு UAE Lottery-ல் விழுந்த பரிசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kerala-man-wins-dh30m-uae-lottery-1785683096"></link>
            <id>https://news.lankasri.com/article/kerala-man-wins-dh30m-uae-lottery-1785683096</id>
            <summary type="text">UAE Lottery-இல் இந்தியர் ஒருவர் 30 மில்லியன் திர்ஹாம் பரிசு வென்றுள்ளார்.

சுனில் குமார் சதாசிவன் எனும் இந்தியர், UAE Lottery-ல் 30 மில்லியன் திர்ஹா...</summary>
            <content type="html"><![CDATA[<p>UAE Lottery-இல் இந்தியர் ஒருவர் 30 மில்லியன் திர்ஹாம் பரிசு வென்றுள்ளார்.</p><p>

சுனில் குமார் சதாசிவன் எனும் இந்தியர், UAE Lottery-ல் 30 மில்லியன் திர்ஹாம் பரிசுத்தொகையை வென்றுள்ளார்.
</p><p>
கேரளாவைச் சேர்ந்த இவர், 18 வயதில் இந்தியாவை விட்டு வெளிநாட்டில் வேலை தேடி சென்றார். தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை ஆறு சகோதரிகளின் திருமணத்திற்கும் குடும்ப நலனுக்கும் அர்ப்பணித்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afb9fe41-fe4d-4899-9a87-9fe85b365bca/26-6a6f5c9a735eb.webp' /></p><p>2006-இல் திருமணம் செய்து அமீரகத்திற்கு குடிபெயர்ந்தார். பின்னர் இந்தியாவில் டைல்ஸ் ஒப்பந்தப் பணியில் ஈடுபட்டார். ஆனால் நிதி சிக்கல்கள் காரணமாக மீண்டும் அமீரகத்திற்கு திரும்பி, கடந்த இரண்டு ஆண்டுகளாக பராமரிப்பு தொழில்நுட்ப நிபுணராக பணியாற்றி வருகிறார்.
</p><p>
சுனில் மற்றும் அவரது மனைவி 12 ஆண்டுகள் குழந்தை பெற முடியாமல் போராடினர். பல்வேறு சிகிச்சைகளில் சேமிப்புகளைச் செலவழித்தும், நம்பிக்கையை இழக்கவில்லை. இறுதியில், அவர்களுக்கு ஒரு மகள் பிறந்தார்.</p><p> “அந்தக் காலம் எங்கள் வாழ்க்கையின் மிகக் கடினமான காலம். ஆனால் நம்பிக்கையை விடாமல் இருந்தோம்,” என அவர் கூறினார்.
</p><p></p><p>அவரது மகள், மனைவி மற்றும் தன்னுடைய பிறந்தநாள் திகதிகளி வைத்து வாங்கிய லொட்டரி சீட்டே அவருக்கு 30 மில்லியன் திர்ஹாம் அதிர்ஷ்டத்தை தந்தது.
</p><p>
“பணம் முக்கியமல்ல. என் குடும்பத்துடன் நேரம் செலவிடும் வாய்ப்பு கிடைத்ததே மிகப் பெரிய பரிசு,” என சுனில் தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர் தனது வீட்டை கட்டி முடித்து, மகளின் கல்வியை உறுதி செய்து, பாதுகாப்பற்ற குழந்தைகள் மற்றும் ஏழைகளுக்கு உதவ திட்டமிட்டுள்ளார்.</p><p>

“மக்கள் என்னை நினைவில் கொள்ள வேண்டியது இந்த வெற்றிக்காக அல்ல, நான் செய்த உதவிகளுக்காக,” என அவர் கூறியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T15:02:53+00:00</updated>
        </entry>
    </feed>
