<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-11T02:30:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை கல்வி முறையில் மாற்றம்! பாடசாலை நேரம் மற்றும் பரீட்சைகளில் அதிரடி மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dramatic-change-in-the-education-system-1789092650"></link>
            <id>https://tamilwin.com/article/dramatic-change-in-the-education-system-1789092650</id>
            <summary type="text">2027ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்புகளுக்கு அமைய, சாதாரண தரப்பரீட்சையை 7 பாடங்களாக மட்டுப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்புகளுக்கு அமைய, சாதாரண தரப்பரீட்சையை 7 பாடங்களாக மட்டுப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.</p><p>கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்ற, புதிய கல்வி மறுசீரமைப்புகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான&nbsp; கூட்டத்திலேயே இந்த விடயம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
</p><p>
 குறித்த கூட்டத்தில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.</p><h2>பாடசாலை நேரம்</h2><p>

அதற்கமைய, புதிய பாடத்திட்டக் கட்டமைப்பின் கீழ், ஒரு பாடவேளை 40 நிமிடங்களாகவும், பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22889417-b6c5-41dd-a247-32936e41a8f3/26-6aa365c9b6065.webp' /></p><p>சாதாரண தரப் பரீட்சை 7 பாடங்களை உள்ளடக்கியதாக அமையும் எனவும், வரலாறு மற்றும் அழகியல் பாடங்களும் இதில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

தாய்மொழி, ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் சமயம் உள்ளிட்ட கட்டாயப் பாடங்களுக்கு தொடர்ச்சியான மற்றும் தொகுப்பு மதிப்பீட்டு முறைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.</p><p>

மேலும், 10 மற்றும் 11ஆம் தரங்களில் தொழிற்கல்விப் பாடங்களை அறிமுகப்படுத்தவும், 12 மற்றும் 13ஆம் தரங்களில் சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் ஒழுக்கநெறி தொடர்பான பாடத் தொகுதிகளை உள்ளடக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T02:22:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[​கொழும்பு - தெகிவளையில் பயங்கரம்.! வீடொன்றின் மீது தாக்குதல் - 2 சிறுவர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-children-killed-in-dehiwala-grenade-attack-1789092407"></link>
            <id>https://ibctamil.com/article/two-children-killed-in-dehiwala-grenade-attack-1789092407</id>
            <summary type="text">வீடு ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். 

குறித்த சம்பவம் தெகிவளை, கவுடான சிறிசகபோ வீதியில் இன...</summary>
            <content type="html"><![CDATA[<p>வீடு ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். </p><p>

குறித்த சம்பவம் தெகிவளை, கவுடான சிறிசகபோ வீதியில் இன்று (11) அதிகாலை&nbsp; இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p>உந்துருளியில் பயணித்த இனந்தெரியாத நபர்கள் வீட்டின் மீது கைக்குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

இந்த தாக்குதலில் அந்த வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் என மூன்று பேர் காயமடைந்த நிலையில் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acf8259e-b08e-4ca0-bdea-766c6603aeb0/26-6aa3656a73a35.webp' /></p><p> 

அவர்களில் 10 மற்றும் 14 வயதுகளையுடைய இரண்டு சிறுவர்களும் உயிரிழந்தனர். </p><p>

அதேநேரம் உயிரிழந்த சிறுவர்களின் 55 வயதுடைய தந்தை தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றார். </p><p>

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T02:21:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சர்களின் கோரமான பக்கத்தை அம்பலப்படுத்திய பாதிக்கப்பட்ட பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/yositha-cheated-a-old-lady-1789089858"></link>
            <id>https://tamilwin.com/article/yositha-cheated-a-old-lady-1789089858</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச வலுக்கட்டாயமாக தன்னிடம் குறைந்த விலைக்கு காணிகளை பெற்றதாக பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச வலுக்கட்டாயமாக தன்னிடம் குறைந்த விலைக்கு காணிகளை பெற்றதாக பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p> 

தங்களது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த, தெஹிவளை காலி வீதி, மிஹிந்து மாவத்தையில் அமைந்துள்ள 163/02 இலக்கமுடைய தமக்கு சொந்தமான வீடு மற்றும் காணிப் பகுதியை யோஷிதவுக்கு வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

14 - 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரதிவாதியான யோசித ராஜபக்சவிற்கு 33 லட்சத்து 80 ரூபாய் போன்ற மிகக் குறைந்த விலைக்கு விற்க நேரிட்டதாகவும், அக்காணி அதைக் காட்டிலும் அதிக பெறுமதியைக் கொண்டாகும்.</p><p> </p><h2><b>

பெண் சாட்சியம்</b></h2><p>குறிப்பிட்ட தொகையை விட மேலதிக தொகையைக் கேட்ட போதிலும் அத்தகைய கூடுதல் தொகை தனக்குக் கிடைக்கவில்லை என 79 வயதுடைய கின்தொட்ட விதானகே ஐரின் சில்வா நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/013967e1-98f3-4c9e-92f9-c1f5e5ff934f/26-6aa360e028400.webp' /></p><p>காணியை விற்பனை செய்வது தொடர்பான ஒப்பந்தத்திலும் காணி கையளிப்புப் பத்திரத்திலும் டெய்சி பொரெஸ்ட் என்பவரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. 

எனினும், பத்திரம் எழுதும்போதோ அல்லது ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போதோ டெய்சி பொரெஸ்ட் அங்கு இருக்கவில்லை. </p><p>தன்னை வாகனமொன்றில் ஏற்றி விஹாரம மாவத்தை அல்லது அவ்வாறான பெயர் கொண்ட ஏதேனும் ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றனர். 

அங்கு குறித்த பத்திரத்திலும் ஒப்பந்தத்திலும் கையெழுத்துப் பெற்றுக் கொண்டனர்.</p><p> </p><h3><b>சொத்து மோசடி</b></h3><p>குறிப்பிட்ட தொகையும் எனக்கு இரு தடவைகளாகவே கிடைத்தது என சாட்சியமளித்த குறித்த பெண் தெரிவித்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21f6d87c-4414-48de-8305-ea0b3f7b5e4c/26-6aa360e0d24f2.webp' /></p><p>வழக்கின் 53ஆவது சாட்சியாக அழைக்கப்பட்டு சாட்சி கூண்டில் நின்ற பெண் கடும் சிரமத்திற்கு மத்தியில் சுமார் 20 நிமிடங்கள் சாட்சியமளித்துள்ளார்.</p><p>700 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை முதலீடு செய்து காணிகள் மற்றும் சொத்துக்களைக் கொள்வனவு செய்யச் சதி செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் யோசிதவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-11T02:01:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளையில் வீடொன்றின் மீது குண்டுத்தாக்குதல்: இருவர் பலி - மற்றுமொருவர் வைத்தியசாலையில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-children-killed-in-hand-grenade-attack-1789086688"></link>
            <id>https://tamilwin.com/article/two-children-killed-in-hand-grenade-attack-1789086688</id>
            <summary type="text">தெஹிவளை - கஹவதன சிறிசங்கபோ மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று (11) அதிகாலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை - கஹவதன சிறிசங்கபோ மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று (11) அதிகாலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p>
இந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் 10 மற்றும் 14 வயதான இரண்டு சிறுவர்கள் உள்ளடங்கியுள்ளனர்.</p><h2>பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்&nbsp;</h2><p>10 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும், 14 வயது சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/840fcab6-4c2c-4897-a82a-6a595f8c435d/26-6aa3563d6d105.webp' /></p><p>
</p><p>இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் 52 வயதான தந்தை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>கைக்குண்டு தாக்குதலில் காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.</p><p>சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T01:54:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரிவுரையாளரின் முறையற்ற நடத்தை குற்றச்சாட்டு ; யாழ். கல்வியற் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drastic-taken-jaffna-college-education-student-1789090182"></link>
            <id>https://jvpnews.com/article/drastic-taken-jaffna-college-education-student-1789090182</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர், மன உளைச்சல் உள்ளாகி தவறான முடிவெடுக்க முயற்சித்துள்ள நிலையில் தற்போது கோப்பாய் வைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர், மன உளைச்சல் உள்ளாகி தவறான முடிவெடுக்க முயற்சித்துள்ள நிலையில் தற்போது கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p></p><p>குறித்த மாணவி, கல்லூரியின் மன்றம் ஒன்றில் செயலாளராகப் பணியாற்றி வருவதாகவும், மன்றத்தின் செயற்பாடு தொடர்பில் அனுமதி கடிதம் கோரி சம்பந்தப்பட்ட விரிவுரையாளரை அணுகியபோது, அவர் முறையற்ற வகையில் பேசியதாகவும் சக மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b385d127-f473-4a66-bb4c-a427c9cff9fd/26-6aa359887c6f6.webp' /></p><p>

விரிவுரையாளர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி மாணவியை இழிவுபடுத்தியதாகவும், இதனால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இந்த சம்பவம் தொடர்பில் கல்லூரி நிர்வாகத்தின் கவனத்துக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்ட போதிலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
</p><p>
இந்நிலையில், விரிவுரையாளரின் முறையற்ற வார்த்தை பிரயோகம் மற்றும் நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக மாணவி மன உளைச்சலுக்கு உள்ளாகியதாகவும், பின்னர் உடல்நலக்குறைவுக்கு ஆளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தி, மாணவியின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T01:29:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1789088786"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1789088786</id>
            <summary type="text">சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் திணைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (11-09-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனடிப்படையில் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 








</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வெப்பச் சுட்டெண் காரணமாக இன்று பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8aa20da-dac2-42df-be4e-6e16195f35c3/26-6aa35413e1a98.webp' />&nbsp;&nbsp;</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T01:06:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் ஐந்து இலட்சத்திற்கு ஏலம் போன மாம்பழம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vavuniya-temple-mango-sold-for-over-rs-5-lakhs-1789088423"></link>
            <id>https://ibctamil.com/article/vavuniya-temple-mango-sold-for-over-rs-5-lakhs-1789088423</id>
            <summary type="text">வவுனியா வேப்பங்குளம் சாஸ்திரிகூழாங்குளம் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின்
வருடாந்த மகோற்சவ திருவிழாவில் மாம்பழம் ஒன்று ஐந்து இலட்சத்திற்கும் அதிக
தொகைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா வேப்பங்குளம் சாஸ்திரிகூழாங்குளம் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின்
வருடாந்த மகோற்சவ திருவிழாவில் மாம்பழம் ஒன்று ஐந்து இலட்சத்திற்கும் அதிக
தொகைக்கு ஏலம் போயிருந்தது.
</p><p>
ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் மாம்பழத் திருவிழா நேற்று (11-09-2026) இடம்பெற்றது.
</p><p>இதன்போது விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று கோவில் வளர்ச்சி நிதிக்காக
ஏலத்தில் விடப்பட்டது.</p><p>
</p><p></p><h2>மகோற்சவ திருவிழா</h2><p>அந்த மாம்பழம் 505000/=( ஐந்து இலட்சத்து ஐந்தாயிரம் ) ரூபாய்க்கு ஏலத்தில்
விற்பனை செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02ee8038-a42a-404c-8d0d-e9b523b4a28e/26-6aa352a8a5b71.webp' /></p><p>

இதன்போது, பலத்த போட்டிக்கு மத்தியில் வவுனியாவை சேர்ந்த இ.மோகனதாஸ்
குடும்பத்தினர் குறித்த தொகையை வழங்கி மாம்பழத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T01:03:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் இன்று அதிகாலை வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hand-grenade-recovered-from-a-house-in-colombo-1789087926"></link>
            <id>https://jvpnews.com/article/hand-grenade-recovered-from-a-house-in-colombo-1789087926</id>
            <summary type="text">கொழும்பு தெஹிவளை - கவுடான சிறிசங்கபோ வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் காய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு தெஹிவளை - கவுடான சிறிசங்கபோ வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe43b2fe-0b65-46c9-a123-0e475e9cefed/26-6aa350b77ac60.webp' /></p><p>மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T00:52:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[காங்கேசன்துறை காவல் நிலையப் பொறுப்பதிகாரியாக காந்தவல நியமனம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/s-m-kanthawala-takes-charge-as-kks-oic-1789087271"></link>
            <id>https://ibctamil.com/article/s-m-kanthawala-takes-charge-as-kks-oic-1789087271</id>
            <summary type="text">காங்கேசன்துறை காவல் நிலையத்தின் தலைமை காவல் அதிகாரியாக பிரதான காவல்துறை பரிசோதகர் S.M காந்தவல&amp;nbsp;பொறுப்பேற்றுள்ளார்.இந்தநிலையில் நேற்று (10-09-2026)...</summary>
            <content type="html"><![CDATA[<p>காங்கேசன்துறை காவல் நிலையத்தின் தலைமை காவல் அதிகாரியாக பிரதான காவல்துறை பரிசோதகர் S.M காந்தவல&nbsp;பொறுப்பேற்றுள்ளார்.</p><p>இந்தநிலையில் நேற்று (10-09-2026) அவர் கடமையினை பொறுப்பேற்றார்.
</p><p>
இதற்கு முன்னர் வெள்ளவத்தை காவல் நிலையத்தின் பிரதான காவல்துறை பரிசோதகராக அவர் கடமையாற்றியுள்ளார்.</p><p>இந்தநிலையிலேயே அவர் காங்கேசன்துறை காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T00:45:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் மேடையேறும் பிரபலங்கள் யார்..! நடுக்கத்தில் பிக்குமார்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-12th-meeting-in-anuradhapura-namal-in-prison-1789070223"></link>
            <id>https://tamilwin.com/article/namal-12th-meeting-in-anuradhapura-namal-in-prison-1789070223</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இலங்கை அரசியல் களம் சூடுபடித்துள்ளது.&amp;nbsp;இந்நிலையில், எதிர்வரும் 12ஆம் திகதி, நாமல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இலங்கை அரசியல் களம் சூடுபடித்துள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில், எதிர்வரும் 12ஆம் திகதி, நாமல் ராஜபக்ச தலைமையில் அனுராதபுரத்தில் இடம்பெறவிருந்த, பொதுஜன பெரமுனவின் கட்சி கூட்டத்தை சீர்குலைக்கும் வகையில் அரசாங்கம் அவரை கைது செய்ததாக நாமலின் ஆதரவாளர்கள் குற்றம் சுமத்தினர்.&nbsp;</p><p>அதேநேரம், நாமல் ராஜபக்ச சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் குறித்த கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டவாறு இடம்பெறும் என அக்கட்சி அறிவித்தது.&nbsp;</p><p>அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நாமலுக்கு பதிலாக அக்கூட்டத்தில் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டது.&nbsp;</p><p>இவ்வாறிருக்கையில் தென்னிலங்கை அரசியல் களத்தில் அரசின் அதிரடி நடவடிக்கையால் அச்சம் ஏற்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.&nbsp;</p><p>நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/iAgQBFo2_cc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T00:43:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா – சீனா வர்த்தக உறவில் புதிய முன்னேற்றம் ; வரிக் குறைப்புக்கு பேச்சுவார்த்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/new-development-in-us-china-trade-relations-1789073989"></link>
            <id>https://canadamirror.com/article/new-development-in-us-china-trade-relations-1789073989</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் சீனா இடையே இறக்குமதி வரிகளைக் குறைப்பது தொடர்பில் இரு நாடுகளும் விரைவில் உடன்பாட்டை எட்டக்கூடும் என சீனா தெரிவித்துள்ளது.

அமெரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் சீனா இடையே இறக்குமதி வரிகளைக் குறைப்பது தொடர்பில் இரு நாடுகளும் விரைவில் உடன்பாட்டை எட்டக்கூடும் என சீனா தெரிவித்துள்ளது.
</p><p>
அமெரிக்கா விதித்துள்ள இறக்குமதி வரிகளைக் குறைப்பது தொடர்பாக இரு தரப்பினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக சீன தரப்பு தெரிவித்துள்ளது.</p><p>

இரு நாட்டு தலைவர்களும் விரைவில் சந்திக்கவுள்ள நிலையில், வரிக் குறைப்பு தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a08221a3-489b-4627-a037-b4344d398c7b/26-6aa31a47f2811.webp' /></p><p>சீன செய்தித் தொடர்பாளர் ஹுவாங் லிங், செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். </p><p>மேலும், சுமார் 30 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளைக் குறைப்பது தொடர்பில் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான இந்த ஆண்டின் மூன்றாவது சந்திப்பு செப்டம்பர் 24ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் வகையில், இந்த சந்திப்பை முன்னிட்டு வரிக் குறைப்பு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கு முன்னர் மே மாதம் பெய்ஜிங்கில் நடைபெற்ற இரு தலைவர்களின் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நிர்வாகத்தை மேம்படுத்த வர்த்தக வாரியம் மற்றும் முதலீட்டு வாரியம் அமைப்பது தொடர்பில் இணக்கம் காணப்பட்டிருந்தது.</p><p>

சீனப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரிகள் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சீனாவும் பதிலடியாக அமெரிக்கப் பொருட்கள் மீதான வரிகளை உயர்த்தியது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a7893e5-501f-4611-9ffd-87b323520e70/26-6aa31a4747470.webp' /></p><p>இதனால் இரு நாடுகளுக்கும் இடையே தீவிரமான வர்த்தகப் போர் உருவானது.

இந்த நிலையில், பதற்றத்தைத் தணித்து வர்த்தக உறவுகளை சீரமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகளில் வரி குறைப்பு முக்கிய அம்சமாக இடம்பெற்றுள்ளது.</p><p>இரு நாடுகளிலும் அதிக வரி விதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட பொருட்களை அடையாளம் கண்டு, அவற்றுக்கான வரிகளை குறைப்பதே பேச்சுவார்த்தைகளின் முக்கிய நோக்கமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதேவேளை, அமெரிக்கா மற்றும் சீனா இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள தற்போதைய தற்காலிக வர்த்தக சமாதான ஒப்பந்தம் நவம்பர் 10ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
</p><p>
இதனிடையே, இரு நாடுகளுக்கும் இடையே விரிவான வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும், அதற்கு பதிலாக குறிப்பிட்ட சில பொருட்களுக்கு மட்டும் வரிக் குறைப்புகள் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாகவும் பார்க்லேஸ் வங்கி தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-11T00:42:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் தப்பியோடிய தமிழ் குடும்பஸ்தரை தேடும் பொலிஸார் ; பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-searching-tamil-family-man-who-fled-london-1789064582"></link>
            <id>https://jvpnews.com/article/police-searching-tamil-family-man-who-fled-london-1789064582</id>
            <summary type="text">லண்டனில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆபத்தானவர் என பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்ட 46 வயதுடைய தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் மேற்கு லண்டனில் பராமரிப்பு ஊ...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டனில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆபத்தானவர் என பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்ட 46 வயதுடைய தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் மேற்கு லண்டனில் பராமரிப்பு ஊழியர்களிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p>

பாலசங்கர் நாராயணன் என்பவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
மேற்கு லண்டனின் சவுத்போல் (Southall) பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் சுமார் 2.00 மணியளவில், பராமரிப்பு ஊழியர்களிடமிருந்து அவர் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8316388-df3e-4551-974d-3a7086e358fc/26-6aa2f587b2c6d.webp' /></p><p>அவர் தற்போது கிழக்கு, மத்திய அல்லது மேற்கு லண்டன் பகுதிகளில் நடமாடக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
</p><p>
பொதுமக்கள் அவரை நேரடியாக அணுகவோ அல்லது தடுத்து நிறுத்த முயற்சிக்கவோ வேண்டாம் எனவும், அவரைக் காணும் பட்சத்தில் உடனடியாக 999 என்ற அவசர உதவி எண்ணுக்கு தகவல் வழங்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
</p><p>
பாலசங்கர் நாராயணன் இதற்கு முன்னரும் பலமுறை பராமரிப்பாளர்களிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
2021 – ஒருமுறை தப்பிச் சென்றுள்ளார்.</p><p>
2023 – இரண்டு முறை தப்பிச் சென்றுள்ளார்.
</p><p>2024 – மீண்டும் ஒருமுறை தப்பிச் சென்றுள்ளார்.
</p><p>
இந்நிலையில், அவர் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவர் என பொலிஸார் எச்சரித்துள்ளதுடன், பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T00:41:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா - அமெரிக்கா வர்த்தக பதட்டங்களுக்கு இடையில், டிரம்ப்- கார்னி நடுவே தொடரும் உரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-and-us-continue-international-dialogue-1789078950"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-and-us-continue-international-dialogue-1789078950</id>
            <summary type="text">வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி இடையே பேச்சுவார்த்தை தொடர்கிறது. பதட்டங்களுக்கு மத்தியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி இடையே பேச்சுவார்த்தை தொடர்கிறது.</p><h2> பதட்டங்களுக்கு மத்தியில் தொடர்பு</h2><p>இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு தடை விதித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சில முக்கிய உத்தரவுகளைப் அறிவித்து இருந்தார்.</p><p>இதனால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக பதற்றமானது அதிகரித்தது. மேலும் இரு நாடுகளுக்கும் இடையே புதிய வரி விதிப்புகளும் தீவிரமடைந்தன.</p><p> இந்த நிலையிலும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்(Donald Trump) மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி(&nbsp;Mark Carney) இருவரும் முக்கிய சர்வதேச விவகாரங்கள் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22d907d8-db67-4cb1-ad90-289411402c4b/26-6aa32da7d538d.webp' /></p><p> கல்கரியில் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கனடா பிரதமர் கார்னி, பொருளாதார முரண்பாடுகளையும், சர்வதேச விவகாரங்களையும் பிரித்து பார்க்கும் திறன் கனடாவிடம் இருப்பதாக தெரிவித்தார்.</p><p></p><p> சர்வதேச விவகாரங்களில் கனடாவின் பங்கை நிறைவேற்றுவது தொடர்பில் அமெரிக்காவுடன் தொடர்ந்து நாங்கள் பணியாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.</p><p> அத்துடன், உக்ரைன் மற்றும் ஈரான் விவகாரங்கள் குறித்தும், முக்கிய புவிசார் அரசியல் குறித்தும் கடந்த சில நாட்களில் மட்டும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் பலமுறை கலந்துரையாடி இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p> ஏனென்றால் இது தங்களின் பொறுப்புகளில் ஒன்று என்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி குறிப்பிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T00:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sani-bhagavan-nanmai-anubavikkum-rasi-1789075573"></link>
            <id>https://jvpnews.com/article/sani-bhagavan-nanmai-anubavikkum-rasi-1789075573</id>
            <summary type="text">நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரும் கிரகமென்றால் சனிபகவான்தான். ஜோதிடத்தில், சன பகவான் ஒழுக்கம், கடின உழைப்பு மற்றும் நீதி ஆகியவற்றுடன் தொடர்புடையவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரும் கிரகமென்றால் சனிபகவான்தான். ஜோதிடத்தில், சன பகவான் ஒழுக்கம், கடின உழைப்பு மற்றும் நீதி ஆகியவற்றுடன் தொடர்புடையவர். எனவே சனிபகவானின் கிரக மாற்றங்களும், நட்சத்திர மாற்றங்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.</p><p>சொந்த நட்சத்திரத்திற்குள் சனிபகவான் நுழைவது சில ராசிக்காரர்களுக்குத் தொழில் மற்றும் நிதிரீதியாகச் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரக்கூடும். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37c70010-3262-4604-a5e9-f6f57e0bdaba/26-6aa32077cf659.webp' /></p><h4>ரிஷபம்
</h4><p>ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் தொழில் மற்றும் நிதி விவகாரங்களில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது. நீண்ட காலமாக தடைப்பட்டிருந்த பணிகள் இப்போது முன்னேற்றம் காணக்கூடும். அதேவேளையில், வேலையில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகளோ அல்லது பதவி உயர்வுக்கான வாய்ப்புகளோ கிடைக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9eb49ac-b99b-458e-9298-187c0956148d/26-6aa320788925b.webp' /></p><h4>துலாம்
</h4><p>துலாம் ராசிக்காரர்களுக்கு சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைவது நிதி ரீதியாகச் சாதகமானதாகக் கருதப்படுகிறது. நீண்டகாலமாக நிதிச் சிக்கல்களை எதிர்கொண்டு வருபவர்களுக்குச் சிறிது நிவாரணம் கிடைக்கலாம். இந்த காலகட்டத்தில் அவர்களின் வருமானம் இரட்டிப்பாக வாய்ப்பு உள்ளது. கடந்த காலங்களில் செய்த முதலீடுகளில் இருந்து பெரிய லாபம் கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8f734ff-2b9f-4d1d-91c5-f6352ead2986/26-6aa320793cb48.webp' /></p><h4>மகரம்
</h4><p>மகர ராசியின் அதிபதியாக சனிபகவான் இருப்பதால், இது அவர்களுக்கு மிகவும் முக்கியமான காலகட்டமாக இருக்கும். இந்த காலகட்டத்தில், மகர ராசியினர் தங்கள் தொழில் வாழ்க்கையில் அதிக ஸ்திரத்தன்மையையும், பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வுக்கான வாய்ப்புகளையும் பெறக்கூடும். அவர்களின் நிதிநிலை எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். நீண்ட கால முதலீடுகளுக்கு இது சிறந்த நேரமாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30c62504-0b28-45da-a967-989e81c1b104/26-6aa32079e424f.webp' /></p><h4>கும்பம்</h4><p>
கும்ப ராசிக்காரர்களுக்கு, சனிபகவான் தனது நட்சத்திரத்தை மாற்றுவது தொழில் மற்றும் நிதி விவகாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் தங்கள் துறைகளில் பெரும் நன்மைகளைப் பெறலாம். திடீர் பண ஆதாயங்களால் நிதி நிலைமை மேம்படும். அவர்களின் கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும், மேலும் அவர்களின் முயற்சிகள் அனைவராலும் பாராட்டப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf8b0406-3dc0-41d5-bdcb-0aa6e7a15754/26-6aa3207a9677d.webp' /></p>]]></content>
            <updated>2026-09-11T00:39:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு மாநகரசபையை எங்களிடம் தாருங்கள்! தேசிய மக்கள் சக்தி கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/npp-demands-handover-of-batticaloa-council-1789086819"></link>
            <id>https://ibctamil.com/article/npp-demands-handover-of-batticaloa-council-1789086819</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாநகரசபை தமிழரசு கட்சி பொறுப்பேற்று ஒன்றரை வருடமாகியும் மாநகர சபையின் செயற்பாடுகள் எதுவும்
செய்யவில்லை எனவே மாநகர சபை வழி நடத்த முடியாவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாநகரசபை தமிழரசு கட்சி பொறுப்பேற்று ஒன்றரை வருடமாகியும் மாநகர சபையின் செயற்பாடுகள் எதுவும்
செய்யவில்லை எனவே மாநகர சபை வழி நடத்த முடியாவிட்டால் எங்களிடம்
ஒப்படைக்கவும் என தேசிய மக்கள் சக்தி மாநகரசபை உறுப்பினர்கள் கூட்டாக
கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>

மாநகரசபையின் 17 வது சபை அமர்வு நேற்று (10-09-2026) மாநகரசபை முதல்வர்
சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்றது.</p><p>

 இதன் பின்னர் மாநகரசபையின்
எதிர்க்கட்சியான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களான முத்துலிங்கம்
துதீஸ்வரன், முனுசாமி உதயராஜ், பிரேம்குமார், ஜெம்ஸ் மற்றும் லதீப் ஆகியோர்
ஒன்றிணைந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தனர்.</p><p>
</p><p></p><h2>கடும் விசனங்கள்</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்கள், </p><p>“இன்று மாநகர சபையின் 17 வது சபை அமர்வு இடம்பெற்றுள்ளது, இந்த மாநகர சபை
ஆட்சியை தமிழரசு கட்சி பொறுப்பேற்று ஒன்றரை வருடமாக இந்த முதல்வருடன்
எதிர்கட்சி இல்லாமல் அனைத்து வேலைகளுக்கும் நாங்கள் ஆதரவு வழங்கி வந்தோம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb4ad2a4-b7d9-4683-8cba-ed19f886e686/26-6aa34c653f82d.webp' /></p><p>இருந்தபோதும் கருவறை தொடங்கி கல்லறை வரை என்ற பழமொழி கமைய மாநகரசபையின்
செயற்பாடுகள் எதவுமே செயல்படுத்தப்படவில்லை.
</p><p>
நீங்களும் சபையில்
இருக்கின்றீர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா என மக்கள் கடும் விசனங்கள்
தெரிவித்து வருகின்றனர்.</p><p>

மாநகர சபை எல்லைக்குள் இருக்கும் வீதிகள், கழிவகற்றல், வீதி மின்விளக்கு,
வடிகான் பிரச்சினை உட்பட பிரச்சினைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம் ஆனால் எதுவும் நடை முறைப்படுத்தப்படவில்லை.</p><p></p><h2>பல தீர்மானங்கள்</h2><p>இன்று எமது மாநகரசபை எல்லையான திருகோணமலை வீதியிலுள்ள லங்காமாதா ஆலையத்தில்
இருந்து காத்தான்குடி வரைக்கும் எந்தவொரு மின்விளக்கும் ஒளிர்வதில்லை இதற்கான
காரணத்தை கேட்டால் தினம் தினம் ஒவ்வொரு காரணங்களை சொல்கின்றார்.</p><p>

இந்த வீதி மின்விளக்கு ஒளிராததால் இன்று வீதி விபத்துக்கள் மற்றும் பல
அசம்பாவிதங்கள் இடம்பெற்று வருகின்றது கட்டாகாலி மாடுகள் தொல்லை தொடர்பாக
எதுவும் நடைபெறவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ef79072-cd44-418e-8c9f-89759ff38347/26-6aa34c66305e5.webp' /></p><p>

இந்த மாநகர சபை அமர்வில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டபோது எதுவும் முற்றுப்
பெறவில்லை கடந்த வருடம் மாநகர சபை உட்பட்ட பிரதேசங்கள் பல மழை வெள்ளத்தில்
மூழ்கியது காரணம் வடிகான்கள் துப்பரவு செய்யவில்லை இது தொடர்பாக கடந்த
காலத்தில் முதல்வரிடம் பலமுறை தெரிவித்தோம் பயனில்லை.
</p><p>
இந்த வருடம் மாநகரசபை பகுதிகளில் உள்ள பிரதேசம் பல மழை வெள்ளத்தில் மூழ்கப்
போகிறது எனவே அதற்கான முழு பொறுப்பும் முதல்வர்
எடுக்க வேண்டும்.
</p><p>
மட்டு மாநகர சபைக்கு சொந்தமான மஞ்சம் தொடுவாய் பிரதேசம் அதனை காத்தான்குடி
நகரசபை அத்துமீறி அபகரித்து வருகிறது இதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதாக
தெரிவித்து இதுவரை ஒன்றும் செய்யவில்லை.</p><p></p><h2>சிறந்த சேவை</h2><p>
</p><p>
அவ்வாறே பணம் படைத்தவர்கள் காணிகளை பிடித்து அடைத்துள்ளனர் ஏழைகள்
துன்பப்படுகின்றனர். </p><p>

குறுக்கு வீதிகள் 10 அடி அகலம் கொண்டதாக நில அளவீடு
செய்திருந்த போதும் பணம் உள்ளவர்கள் அதை அபகரித்துள்ளனர் இதனால் அந்த
வீதியில் உள்ள ஏனைய மக்கள் சடலத்தை கூட கொண்டு வர முடியாத அளவிற்கு
ஆக்கிரமித்துள்ளனர்.</p><p> மாநகரசபை சட்டத்தை ஏன் பயன்படுத்த முடியாமல் உள்ளனர் ?

காந்தி பூங்கா அதனை அண்டிய நீதிமன்ற பகுதி வாகன தரிப்பிடத்தில் மோட்டார்
சைக்கிளுக்கு 100 ரூபாவும் தலைகவசம் வைப்பதற்கு 100 ரூபாவுமாக 200 ரூபா
அளவிடுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd646d76-c3cb-4d80-b77d-0e12ec66d196/26-6aa34c670ec6f.webp' /></p><p> 

இந்த வாகன தரிப்பிடம் தனிப்பட்ட ரீதியில் குத்தகைக்கு
வழங்கப்பட்டுள்ளதா ? இது தொடர்பாக பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை இதை
வன்மையாக கண்டிக்கின்றோம்.</p><p>&nbsp;எனவே இந்த மாநகர சபை வழி நடத்த முடியாவிட்டால் தேசிய மக்கள் சக்தியிடம்
ஒப்படைத்தால் 6 மாதத்துக்கு வீண் விரயங்களை நிறுத்தி நாட்டைகட்டியொழுப்பிய
மாதிரி இந்த மாநகரசபையையும் கட்டியொழுப்புவோம். </p><p>

இது மக்கள் அரசாங்கம் மக்கள்
ஆணையின்படி மக்களுக்கு சிறந்த சேவையை செய்வோம்” என தெரிவித்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T00:35:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிக் கொடுக்கல் வாங்கல்கள் குறித்து கோட்டாவிடம் இன்று விசாரணை !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gota-will-appear-fcid-today-1789086232"></link>
            <id>https://tamilwin.com/article/gota-will-appear-fcid-today-1789086232</id>
            <summary type="text">மிக் விமானக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராபக்சவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
இந்த விசாரணைகளுக்காக நிதிக் குற்றவியல் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மிக் விமானக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராபக்சவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.</p><p>
இந்த விசாரணைகளுக்காக நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் இன்று முன்னிலையாகுமாறு கோட்டாபயவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
இதன்படி இன்றைய தினம் கோட்டாப ராஜபக்சவிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு விசாரணை நடத்த உள்ளது.
கடந்த 2006 – 2007ம் ஆண்டு காலப் பகுதியில் நான்கு மிக்27 ரக தாக்குதல் விமானங்கள் கொள்வனவின் போது மோச இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e65a0681-7d2c-4910-bae2-b909f1f62ed1/26-6aa34a19f0c42.webp' /></p><p>
</p><p>இந்தக் கொடுக்கல் வாங்கல்களின் போது மோசடி, சட்டவிரோதமான முறையில் தரகு பெற்றுக் கொள்ளப்பட்டமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
</p><p>இந்த கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்ற காலத்தில் கோட்டாபய ராஜபக்ச நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் பதவியை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T00:26:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தம்பலகாமத்தில் திருவிழாவில் 41 இளைஞர்கள் கைது! எழுந்துள்ள கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/41-arrested-over-temple-firewalk-firewood-1789085102"></link>
            <id>https://ibctamil.com/article/41-arrested-over-temple-firewalk-firewood-1789085102</id>
            <summary type="text">திருகோணமலை தம்பலகாமம் மாரியம்மன் கோவில் திருவிழாவின் தீமிதிப்பு
நிகழ்வுக்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக விறகு சேகரிக்கச் சென்றதாகக்
கூறப்படும் 41 இளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை தம்பலகாமம் மாரியம்மன் கோவில் திருவிழாவின் தீமிதிப்பு
நிகழ்வுக்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக விறகு சேகரிக்கச் சென்றதாகக்
கூறப்படும் 41 இளைஞர்கள் வனவள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக
வெளியாகியுள்ள செய்தி கவலையையும் பல முக்கியமான கேள்விகளையும் எழுப்பியுள்ளது
என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஆயுள் கால உறுப்பினர் குமார் ஜெயக்குமரன்
தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் நேற்று (10-11-2026) ஊடக அறிக்கையொன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
</p><p>
குறித்த அறிக்கையில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p><p></p><h2>வழிபாட்டு நடைமுறை</h2><p>
“கிடைக்கப்பெறும் தகவல்களின்படி, குறித்த இளைஞர்கள் காட்டுப் பகுதிக்குச்
செல்வதற்கு முன்னர் உரிய அதிகாரிகளிடம் எழுத்துமூலம் அறிவித்திருந்ததாகத்
தெரிவிக்கப்படுகிறது. </p><p>

இந்நிலையில், சம்பவத்தின் முழுமையான பின்னணி, அனுமதி
நடைமுறைகள் மற்றும் சட்டம் எவ்வாறு பிரயோகிக்கப்பட்டது என்பன தொடர்பில்
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளிப்படையான விளக்கத்தை வழங்குவது அவசியமாகும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c20ff05e-b784-4c00-8268-d0beefc5aeeb/26-6aa34743aeb97.webp' /></p><p>தம்பலகாமம் மாரியம்மன் ஆலயத்தின் திருவிழாவும் அதனுடன் தொடர்புடைய பாரம்பரிய
வழிபாட்டு நடைமுறைகளும் அப்பகுதி மக்களின் நீண்டகால சமய மற்றும் கலாசார
பாரம்பரியத்துடன் நெருங்கிய தொடர்புடையவை. </p><p>

எனவே, சட்டத்தை மதிப்பதுடன்
மக்களின் மத உரிமைகளையும் பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகளையும் பாதுகாப்பதும்
அரசின் முக்கிய பொறுப்பாகும்.</p><p></p><h2>எதிரான நிலைப்பாடு</h2><p>அதேவேளை, எந்தவொரு மதத்தினருக்கும் எதிரான நிலைப்பாடு எமக்கில்லை.&nbsp; &nbsp;</p><p>இலங்கையில்
அனைத்து மதங்களுக்கும் சம உரிமை, சம மரியாதை மற்றும் சமமான சட்டப் பாதுகாப்பு
வழங்கப்பட வேண்டும் என்பதே எமது தெளிவான நிலைப்பாடு.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73f258df-dd0f-4774-ae94-7bea5fc8bca7/26-6aa347449e6ee.webp' /></p><p>ஒரு மதத்தின் பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகள் தொடர்பாக மட்டும் தேவையற்ற
தடைகள் அல்லது அதிகப்படியான கட்டுப்பாடுகள் ஏற்படுகின்றனவா என்ற சந்தேகம்
மக்களிடையே உருவாகாத வகையில், சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் அனைத்து
மதங்களையும் சமமான அணுகுமுறையுடன் கையாள வேண்டும்.
</p><p>

கைது செய்யப்பட்டுள்ள 41 இளைஞர்கள் தொடர்பான சம்பவத்தின் முழுமையான உண்மை
நிலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.
</p><p>
ஆலய நிர்வாகம் மற்றும் பக்தர்களின் பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகள்
சட்டத்திற்கு உட்பட்டு நடைபெறுவதற்குத் தேவையான ஒத்துழைப்பு வழங்கப்பட
வேண்டும்.

வனவளப் பாதுகாப்புச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்போது, மத மற்றும்
கலாசார நிகழ்வுகளின் தன்மையும் உரிய முறையில் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.</p><p>
</p><p></p><h2>பாதுகாப்பு நடைமுறை</h2><p>எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகள் ஏற்படாத வகையில், ஆலய நிர்வாகம், பிரதேச
அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு இடையில்
தெளிவான ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.</p><p>

அனைத்து மதங்களுக்கும் சம உரிமை, சம மரியாதை மற்றும் சமமான சட்டப்
பாதுகாப்பு நடைமுறையில் உறுதி செய்யப்பட வேண்டும்.

நாம் சட்டத்தை மதிக்க வேண்டும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1daba662-3e4a-416e-85e0-d1231952ccf1/26-6aa34745542ac.webp' /></p><p>அதே நேரத்தில், நியாயம், சமத்துவம் மற்றும் மத
உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.</p><p>

தம்பலகாமம் மாரியம்மன் ஆலய திருவிழா போன்ற பாரம்பரிய நிகழ்வுகள் மக்களின் சமய
உணர்வுகளுடன் மட்டுமல்லாமல், அவர்களின் கலாசார அடையாளத்துடனும் தொடர்புடையவை.
</p><p>
எனவே, இந்த விடயத்தை உணர்வுபூர்வமாகவும் நியாயமான முறையிலும் அணுகி,
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதை உறுதி
செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T00:18:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்சவுக்கு தனது குடும்ப பராமரிப்புக்கு கூட பணமில்லையாம்?சந்தேகத்தை ஏற்படுத்துகிறது மாமாவின் கருத்து...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lanka-sportreizen-founder-thilak-weerasinghe-1789085458"></link>
            <id>https://tamilwin.com/article/lanka-sportreizen-founder-thilak-weerasinghe-1789085458</id>
            <summary type="text">&amp;nbsp;நாமல் ராஜபக்ச மற்றும் லிமினி ஆகியோர் தமது இரண்டு பிள்ளைகளுடன் கொழும்பு நெக்ரிஸ் வீதியில் அமைந்துள்ள எனது இரு மாடி வீட்டில் மேல்மாடியிலே வசித்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நாமல் ராஜபக்ச மற்றும் லிமினி ஆகியோர் தமது இரண்டு பிள்ளைகளுடன் கொழும்பு நெக்ரிஸ் வீதியில் அமைந்துள்ள எனது இரு மாடி வீட்டில் மேல்மாடியிலே வசித்து வருவதாக பிரபல தொழிலதிபரும், எல்.எஸ்.ஆர் (LSR) குழுமத்தின் தலைவரும்,லிமினியின் தந்தையுமான திலக் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>நாமலின் குடும்பத்தின் அனைத்து பராமரிப்புச் செலவுகள், உணவுப் பொருட்கள் மற்றும் பிள்ளைகளின் கல்விச் செலவுகள் உள்ளிட்ட அனைத்து அன்றாடச் செலவுகளையும் தனது சொந்தப் பணத்திலிருந்தே செலவிடுவதாகவும் நாமலின் பணம் எதுவும் பெற்றுக் கொள்வதில்லை என்ற தொனியிலே குறிப்பிடுகிறார்.
</p><h2>
</h2><p></p><h2>ராஜபக்ச குடும்பத்துடனான உறவு</h2><p>வலையொளித்தளம் ஒன்றிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.அது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
வீட்டிற்குள் எந்தவொரு அரசியல் கலந்துரையாடலோ அல்லது பிரசார நடவடிக்கைகளோ நடைபெறுவதில்லை. </p><p>நாமல் ராஜபக்ச வீட்டிற்கு வந்ததும் மிகவும் எளிமையான குடும்ப வாழ்க்கையையே வாழ்கிறார் என்றும் தெரிவிக்கிறார். ராஜபக்ச குடும்பத்துடனான ஏற்படுத்திக் கொண்ட உறவின் காரணமாக தனக்கும் தனது தொழில்களுக்கும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோதிலும், </p><p>2015ஆம் ஆண்டு ராஜபக்ச குடும்பத்தினர் அதிகாரத்தில் இல்லாத காலத்தில் நடைபெற்ற இந்தத் திருமணம் பிள்ளைகளின் விருப்பத்தின் பேரில் நடந்ததொன்று என்பதால், அது குறித்து தான் ஒருபோதும் வருந்தவதில்லை என்றும் அவர் கூறுகிறார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71709390-04bf-4a15-ba5c-5ad148ff3581/26-6aa34714dcfc4.webp' /></p><p>ராஜபக்சக்களை மக்கள் திருடர்கள் என்று சொல்கிறார்கள். லிமினியின் தந்தையும் ஒரு திருடன். அப்படியானால் லிமினிக்கும் இதில் ஒரு பங்கு இருக்கிறது என பல கதைகள் கூறப்பட்டாலும் நான் அவ்வாறான எந்த சம்பவத்திற்கு சம்பந்தமில்லை.</p><p>நான் மிகவும் கஷ்டப்பட்டு உருவாக்கியது தான் எனது வியாபாரமாகும். 
திருமணம் என்பதை ஒரே நாளில் செய்துவிட முடியாது. அதற்கு முடிவெடுக்க வேண்டும். இரண்டு குடும்பங்களும் இணைந்து எடுக்கும் முடிவு அது. </p><p>அங்கு அரசியல் ரீதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அது ஒரு குடும்ப முடிவு. மேலும் நாமலை எனக்கு இப்போது மட்டுமல்ல, பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தெரியும். அவர் அசைவம் சாப்பிடாத, மது அருந்தாத ஒரு நல்ல பிள்ளை என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T00:13:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிக் விமான மோசடி விவகாரம்...! விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள கோட்டாபய]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gotabaya-summoned-by-fcid-over-mig-deal-1789073665"></link>
            <id>https://ibctamil.com/article/gotabaya-summoned-by-fcid-over-mig-deal-1789073665</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) அழைக்கப்பட்டுள்ளார்.மிக்-27 (MiG-27) ரக போர் விமானங்களை கொள்முதல் செய்தத...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) அழைக்கப்பட்டுள்ளார்.</p><p>மிக்-27 (MiG-27) ரக போர் விமானங்களை கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பான விசாரணைகளுக்காக அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p>
குறிப்பிட்ட கொள்முதல் இடம்பெற்ற காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பணியாற்றிய கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>நிதி முறைகேடு&nbsp;</h2><p>நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
</p><p>இதே மிக் விமானக் கொள்முதல் விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் விமானப்படைத் தளபதியும், மார்ஷல் ஒஃப் தி எயார்போர்ஸ் கௌரவம் பெற்றவருமான ரொஷான் குணதிலக்க நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f2cf498-ba6f-46a1-bad4-b532cc0db0f0/26-6aa33f930694b.webp' /></p><p>FCID வளாகத்திற்குள் நுழையும் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த முன்னாள் விமானப்படைத் தளபதி, தன்னிடம் விசாரிக்கப்படவுள்ள குறிப்பிட்ட விடயங்கள் குறித்து விசாரணை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னரே கருத்து தெரிவிக்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>மிக்-27 ரக போர் விமானங்களைக் கொள்முதல் செய்த போது கோடிக்கணக்கான ரூபாய் நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) விரிவான மற்றும் தீவிரமான விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T23:47:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியா வந்தடைந்தார் ரஷ்ய ஜனாதிபதி புடின்: முக்கிய பேச்சுவார்த்தைகளுக்கு திட்டமிடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-president-putin-arrives-in-india-1789081118"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-president-putin-arrives-in-india-1789081118</id>
            <summary type="text">Russian President Putin Arrives In India: ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியா வந்து சேர்ந்துள்ளார். இந்தியா வந்தடைந்த புடின்சர்வதேச ஒத்துழைப்பை மை...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russian President Putin Arrives In India: ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியா வந்து சேர்ந்துள்ளார்.</p><h2> இந்தியா வந்தடைந்த புடின்</h2><p>சர்வதேச ஒத்துழைப்பை மையமாக கொண்டு நடத்தப்படும் 18 வது BRICS மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியா வந்திறங்கியுள்ளார்.</p><p> இந்த சுற்றுப்பயணத்தின் முக்கிய பகுதியாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், இந்திய பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Putin steps off plane to red carpet HONOR GUARD in New Delhi <br><br>BRICS Summit 2026 kicks off September 12<br><br>Russian leader in India for summit and KEY talks, including with Indian PM Modi <a href="https://t.co/Pjw5FkNOus">https://t.co/Pjw5FkNOus</a> <a href="https://t.co/uDghfbgcxQ">pic.twitter.com/uDghfbgcxQ</a></p>&mdash; RTRussia (@RT_Russia_) <a href="https://x.com/RT_Russia_/status/2098167214218113483?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> குறிப்பாக இந்தியா - ரஷ்யா இடையிலான உத்திசார் கூட்டாண்மைமை உறுதி செய்வது குறித்து இருநாட்டு தலைவர்களும் அதிகாரப்பூர்வமாக சந்தித்து பேச உள்ளார்.</p><p></p><h2> 18 வது BRICS மாநாடு</h2><p> புவிசார் அரசியல், பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் குறித்து உலகளாவிய விவாதங்களை முன்னெடுத்து செல்ல உலக தலைவர்களை ஒருங்கிணைக்கும் மேடையாக இந்த 18 வது BRICS மாநாடு நடத்தப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91e3b8f2-3b4e-41ee-bbf6-8587cfd3afba/26-6aa33620cd470.webp' /></p><p>18 வது BRICS மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T23:30:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரிவுரையாளர் இழிவுபடுத்தியதால் மனவுளைச்சல்...! மாணவி எடுத்த விபரீத முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-student-hospitalized-after-lecturer-abuse-1789064888"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-student-hospitalized-after-lecturer-abuse-1789064888</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர், தவறான முடிவெடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோப்பாய் வைத்தியசாலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர், தவறான முடிவெடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

கோப்பாய் வைத்தியசாலையில் குறித்த மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
விரிவுரையாளரின் முறையற்ற நடத்தையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகத் தவறான முடிவெடுத்து ஆபத்தான நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>கல்லூரியின் மன்றம்&nbsp;</h2><p>இச்சம்பவம் குறித்து குறித்த கல்லூரின் சக மாணவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,
</p><p>
குறித்த மாணவி கல்லூரியின் மன்றம் ஒன்றில் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.</p><p> 

இதன்போது, மன்றத்தின் தலைவரின் வழிகாட்டலுக்கு அமைய, வேறொரு மன்றத்திலிருந்து பொருள் ஒன்றை எடுத்துப் பயன்படுத்துவதற்காக அனுமதி கடிதம் கோரி சம்பந்தப்பட்ட விரிவுரையாளரை அணுகியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5caa8f2-5402-41c2-998d-394678758e71/26-6aa2f75176c26.webp' /></p><p>அச்சமயத்தில், குறித்த விரிவுரையாளர் மாணவியை மிகத் தகாத வார்த்தைகளால் திட்டி, கடுமையான முறையில் இழிவுபடுத்தியதாகக் கூறப்படுகிறது.</p><p>

இச்சம்பவம் குறித்துக் கல்லூரி நிர்வாகத்தின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், நிர்வாகத் தரப்பிலிருந்து எவ்விதப் பொருத்தமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டப்படுகிறது.
</p><p>
நிர்வாகத்தின் அலட்சியம் மற்றும் விரிவுரையாளரின் அநாகரீகமான பேச்சால் மன உளைச்சலுக்கு ஆளான அம்மாணவி, இறுதியில் இத்தகைய தவறான முடிவை எடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T23:24:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசின் நிலக்கரி இறக்குமதியில் 462 கோடி ரூபா பெறுமதியான நிலக்கரி மாயம்! சபையில் தெரிவித்த நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/120-000-metric-tonnes-coal-rs-4-62-billion-1789078576"></link>
            <id>https://tamilwin.com/article/120-000-metric-tonnes-coal-rs-4-62-billion-1789078576</id>
            <summary type="text">அரசின் பொய் வாக்குறுதிகள், ஊழல்கள் மற்றும் முறைகேடுகளைக் கடுமையாகச் சாடி,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசின் பொய் வாக்குறுதிகள், ஊழல்கள் மற்றும் முறைகேடுகளைக் கடுமையாகச் சாடி,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார்.
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"அரசால் கொண்டுவரப்பட்ட 19 நிலக்கரி கப்பல்களில் சுமார் 1,20,000 மெட்ரிக்
தொன் நிலக்கரி காணாமல் போயுள்ளது. இதன் சந்தை மதிப்பு 462 கோடி ரூபாவாகும்.
</p><p>
இரண்டு நிலக்கரி கப்பல்களின் அளவுக்கு இணையான இந்த இழப்புக்கு யார் பொறுப்பு?
அரசு வாங்கிய பின்னரே நிலக்கரியைச் சாப்பிட்டுள்ளதா?</p><p>

பணவீக்கத்துக்கு ஏற்ப அரச ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும் என்றும், 10
சதவீதம் சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்ட போதிலும்,
இன்று செவனகல தொழிற்சாலையின் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டு, சம்பளம்
குறைக்கப்பட்டு, தொழிற்சாலையே மூடப்பட்டுள்ளது.</p><h2>30 ரூபா கூடுதல் வரி</h2><p>

குறைந்த காலத்தில் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என உறுதியளித்துவிட்டு, 6
ஆயிரம் ரூபாவாக இருந்த கட்டணத்தை தற்போது 8 ஆயிரம் ரூபாவாக உயர்த்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f22c7bf-8895-41a7-8785-07dbe8615508/26-6aa32d03ca2ce.webp' /></p><p>
</p><p>எரிபொருள் மீதான வரிகள் நீக்கப்படும் எனக் கூறிவிட்டு லீற்றருக்கு 30 ரூபா
கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள், மருந்துகள்
மற்றும் பாடசாலை உபகரணங்களுக்கான வற் வரியும் நீக்கப்படவில்லை.
</p><p>
150 ரூபாவுக்கு நெல் கொள்முதல் செய்யப்படும் எனக் கூறிய போதிலும் உரமும்
தண்ணீரும் சரியான நேரத்தில் வழங்கப்படவில்லை. அரிசி இறக்குமதி செய்யப்பட
மாட்டாது எனக் கூறிவிட்டு தற்போது இறக்குமதி செய்யப்படுகின்றது.</p><p>

பட்டதாரிகளுக்கு 35 ஆயிரம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் எனக் கூறி அவர்களை
அரசியல் ரீதியாகப் பயன்படுத்திவிட்டு அரசு கைவிட்டுவிட்டது.

நாட்டின் நிதி அமைச்சிடம் கோடிக்கணக்கில் பணம் இருப்பதாக ஜனாதிபதி
கூறினாலும், கிராமங்களில் எந்தவொரு அபிவிருத்திப் பணிகளும் நடைபெறவில்லை.</p><p>

ஹேக்கர்கள் மூலம் 2.5 மில்லியன் டொலர்கள் காணாமல்போயுள்ளன. துறைமுகத்தில் 323
கொள்கலன்கள் சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டுள்ளன. போதைப்பொருள் கொள்கலனைக்
கைப்பற்றிய பொலிஸ் அதிகாரிக்கு எதிராகவே விசாரணை நடத்தப்படுகின்றது.
</p><p>
அரசின் பொய்கள், ஊழல்கள் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக இன்று கட்சி
பேதமின்றி ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்துள்ளனர். நீதிமன்றம், சிறைச்சாலை
அல்லது அடக்குமுறைகளைக் காட்டி இந்த மக்கள் போராட்டத்தை அரசால் தடுத்து
நிறுத்த முடியாது." என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T23:20:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானத்தின் என்ஜினில் சிக்கிய பறவைகள்: நடுவானில் தீப்பற்றியதால் பீதியடைந்த பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/flight-emergency-landing-in-cardiff-after-birds-1789074858"></link>
            <id>https://news.lankasri.com/article/flight-emergency-landing-in-cardiff-after-birds-1789074858</id>
            <summary type="text">Flight Emergency Landing in Cardiff after Birds Strikes: பறவை கூட்டத்தின் மீது விமானம் மோதி இன்ஜினில் தீ பற்றியதை அடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Flight Emergency Landing in Cardiff after Birds Strikes: பறவை கூட்டத்தின் மீது விமானம் மோதி இன்ஜினில் தீ பற்றியதை அடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.</p><h2> பறவை கூட்டத்தில் சிக்கிய விமானம்</h2><p>TUI விமானம் ஒன்று சைப்ரஸ் நாட்டிற்கு செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பறவை கூட்டத்தில் மோதி இன்ஜினில் தீ பற்றியதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.</p><p> செப்டம்பர் 9ம் திகதி மதியம் கார்டிஃப்பில்(Cardiff) இருந்து பாஃபோஸ்(Paphos) நோக்கி செல்ல திட்டமிட்டிருந்த TOM5TN என்ற விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பறவைகள் மீது மோதியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61618896-53ca-43f1-a305-f4c6bd2d4292/26-6aa31dac8c592.webp' /></p><p> இதனால் விமானத்தின் வலது பக்க இன்ஜினில் தீப்பிடித்தது. விமானத்தில் இருந்து ஆரஞ்சு நிற தீப்பிழம்பு வெளியேறியதை விமானத்தில் இருந்த பயணிகள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.</p><p></p><p>அத்துடன் விமானம் முழுவதும் தீப்பற்றிய வாடை மற்றும் புகை சூழ்ந்ததால் பயணிகள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகினர்.</p><h2>அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்</h2><p>
இதையடுத்து விமானம் அவசர அவசரமாக மீண்டும் கார்டிஃப் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1ec1691-900c-4934-9b02-60f3514fc0b2/26-6aa31dabd3347.webp' /></p><p> அதிர்ஷ்டவசமாக எந்தவொரு உயிர் சேதமும் இல்லாமல் விமானம் தரையிறக்கப்பட்டதாக கார்டிப் விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p>மேலும் விமான நிலைய தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து செயல்பட்டு விமானத்தில் பற்றிய தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.</p><p> இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பயணிகள் அடுத்த நாள் மாற்று விமானத்தில் பாஃபோஸ் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T22:59:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய பாதுகாப்பு அமைச்சரிடம் இலங்கை ஜனாதிபதி நேரில் வாக்குறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-gives-assurance-indian-defence-minister-1789078420"></link>
            <id>https://tamilwin.com/article/anura-gives-assurance-indian-defence-minister-1789078420</id>
            <summary type="text">இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்குப் பாதகமான எந்தவொரு நடவடிக்கைகளுக்கும்
தனது நிலப்பரப்பைப் பயன்படுத்த இலங்கை ஒருபோதும் அனுமதிக்காது என்று ஜனாதிபதி
...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்குப் பாதகமான எந்தவொரு நடவடிக்கைகளுக்கும்
தனது நிலப்பரப்பைப் பயன்படுத்த இலங்கை ஒருபோதும் அனுமதிக்காது என்று ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்க, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியப் பாதுகாப்பு
அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் உறுதியளித்துள்ளார்.
</p><p>
கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை மேற்படி
இருவருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான
உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்து விரிவாகக்
கலந்துரையாடப்பட்டுள்ளன என்றும், இதன்போதே இந்த உறுதிமொழியை இலங்கை ஜனாதிபதி
வழங்கியுள்ளார் என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><h2>முக்கிய திட்டங்கள்..&nbsp;</h2><p>

இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீன ஆக்கிரமிப்பு மற்றும்
இலங்கை மற்றும் அதன் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் பீஜிங்கின் விரிவடைந்து
வரும் ஆதிக்கம் குறித்த கவலைகளுக்கு மத்தியில் இந்தச் சந்திப்பு
முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்ததுள்ளது என்றும் இந்திய ஊடகங்கள்
குறிப்பிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91d88942-a972-43d3-945e-48d26a2bb9ac/26-6aa32b95de34a.webp' /></p><p>
</p><p>
38 ஆண்டுகளுக்குப் பின் இலங்கைக்கு இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மேற்கொண்ட
இந்தப் பயணத்தின் போது, இலங்கை விமானப்படைக்கான எல் - 70 ரக பீரங்கிகளை
மேம்படுத்துவது தொடர்பாகவும், இரு நாடுகளின் தேசிய மாணவர் படையணி மற்றும்
தேசிய பாதுகாப்பு கல்லூரிகளுக்கு இடையே ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துவது
குறித்தும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
</p><p>
இந்திய அரசின் மானியத்தின் கீழ் இலங்கையின் வான் பாதுகாப்பு திறன்களை
வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

"பாரம்பரியமாக சுமுகமான உறவுகள் மற்றும் பரஸ்பர நம்பிக்கையால்
வகைப்படுத்தப்படும், இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முகக் கூட்டாண்மையின் முழு
அளவிலான பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் ஆழமான கலந்துரையாடல்களை
நடத்தினர்" என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சு ஓர் அறிக்கையில்
தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T22:50:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேசுபொருளாகும் 1980களின் ரெட்ரோ புகைப்படங்கள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/80s-trending-chatgpt-edits-users-are-warned-1789066120"></link>
            <id>https://tamilwin.com/article/80s-trending-chatgpt-edits-users-are-warned-1789066120</id>
            <summary type="text">ChatGPT AI தொழில்நுட்பத்தில் 1980களின் ரெட்ரோ பாணி புகைப்பட மாற்றங்கள் வைரலாகி வரும் வேளையில், பயனர்கள் தங்கள் புகைப்படங்களை பதிவேற்றும் முன் தரவு தனி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ChatGPT AI தொழில்நுட்பத்தில் 1980களின் ரெட்ரோ பாணி புகைப்பட மாற்றங்கள் வைரலாகி வரும் வேளையில், பயனர்கள் தங்கள் புகைப்படங்களை பதிவேற்றும் முன் தரவு தனியுரிமை குறித்த விழிப்புணர்வை பெறுவது அவசியம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>நாம் பகிரும் புகைப்படங்கள் தனிப்பட்ட தரவுகளாகக் கருதப்படுவதோடு, அவை எடுக்கப்பட்ட இடம், நேரம் மற்றும் சாதனத்தின் பெயர் போன்ற நுட்பமான எக்சிஃப் (EXIF) தகவல்களையும் கொண்டிருக்கின்றன. </p><p>ChatGPTஇல் ஒரு புகைப்படத்தைப் பதிவேற்றும்போது, அதன் நகல் OpenAI அமைப்புகளில் சேமிக்கப்பட்டு, பயனரின் கணக்கு வரலாற்றின் பகுதியாக மாறுகிறது.</p><h2>சேகரிக்கப்படும் தகவல்கள்..&nbsp;</h2><p> </p><p>பயனர் அந்த உரையாடலை நீக்கினாலும், சட்ட மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தத் தரவுகள் சுமார் 30 நாட்கள் வரை OpenAI சேவையகங்களில் தக்கவைக்கப்படலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a92edf9e-ef75-4c50-a095-08924d0940de/26-6aa304747b32f.webp' /></p><p> </p><p>வணிகக் கணக்குகளுடன் ஒப்பிடும்போது, சாதாரணத் தனிநபர் கணக்குகளின் தரவுக் கொள்கைகள் மாறுபடுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p>

புகைப்படங்கள் மட்டுமன்றி பயனரின் IP முகவரி, சாதன விவரங்கள், இருப்பிடம் மற்றும் உரையாடல் பழக்கவழக்கங்கள் போன்ற பிற தகவல்களும் சேகரிக்கப்படுவதால், AI மூலம் ஒரு நபரின் முழுமையான சுயவிவரத்தை ஊகிக்க முடியும்.</p><p> </p><p>எனவே, மற்றவர்களின் அனுமதி இன்றி அவர்களின் படங்களையோ அல்லது குழந்தைகளின் புகைப்படங்களையோ பதிவேற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.</p><p> மேலும், தனிப்பட்ட ஆவணங்கள் உள்ள படங்களைப் பகிர்வதைத் தவிர்ப்பதுடன், AI மாடல் பயிற்சிக்காக உங்கள் தரவுகள் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அமைப்புகளில் (Settings) 'Data Controls' விருப்பத்தை முடக்குவது பாதுகாப்பானது.</p><p>இந்த ட்ரெண்டுகள் சில நாட்களில் மறைந்துவிட்டாலும், நாம் வழங்கும் தரவுகள் இணைய அமைப்புகளில் நீண்ட காலம் நிலைத்திருக்கும் என்பதை உணர்ந்து எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம் என வலியுறுத்தப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T22:45:21+00:00</updated>
        </entry>
    </feed>
