<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-24T14:48:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு துறைமுக நகர வன்முறை மோதல்! கொலைச் சம்பவ விசாரணையில் அம்பலமாகும் இணைய மோசடி சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/violent-clash-at-colombo-port-city-1784902266"></link>
            <id>https://ibctamil.com/article/violent-clash-at-colombo-port-city-1784902266</id>
            <summary type="text">கொழும்பு துறைமுக நகரில் சீன பிரஜைகள் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வன்முறை மோதல் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கொலைச் சம்பவம், சர்வதேச இணையவழி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுக நகரில் சீன பிரஜைகள் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வன்முறை மோதல் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கொலைச் சம்பவம், சர்வதேச இணையவழி மோசடி வலையமைப்புகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பாரிய குற்றவியல் விசாரணையாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
</p><p>
இந்த மோதலின் போது கடத்தப்பட்டு பின்னர் எஹெலியகோடா பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சீன பிரஜை, கணினி மற்றும் இணையவழி மோசடி நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
விசாரணைகளின் போது, சம்பவத்தில் தொடர்புடைய சீன பிரஜைகள் இலங்கையில் எந்தவொரு சட்டபூர்வமான தொழிலிலும் ஈடுபடவில்லை என்பதும், அவர்கள் சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னரே நாட்டிற்கு வந்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p></p><h2>குற்றப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை</h2><p>
</p><p>இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சீன சந்தேக நபர்களிடம் கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/509afbd9-afc9-4d0e-be8b-d239d229e56f/26-6a63727d568a3.webp' /></p><p>

சிங்கப்பூருக்குச் செல்லும் விமானத்தில் ஏற முயன்றதாகக் கூறப்படும் குறித்த இரு சந்தேக நபர்களும் நேற்று பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். </p><p>பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர்களை 48 மணி நேரம் காவலில் வைத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டது.
</p><p>விசாரணைகளின் படி, கடந்த வியாழக்கிழமை (23) அதிகாலை கொழும்பு துறைமுக நகரில் இரண்டு சீன குழுக்களுக்கிடையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

காவல்துறை தகவல்களின் படி, சம்பவத்திற்கு முந்தைய நாள் இரவு சுமார் 11 மணியளவில் மூன்று சீன பிரஜைகள் மீன்பிடி நடவடிக்கைக்காக துறைமுக நகரில் உள்ள தொங்கு பாலம் பகுதிக்குச் சென்றுள்ளனர்.
</p><p>
இதன்போது அதிகாலை 2 மணியளவில் சுமார் 20 சீன பிரஜைகள் அடங்கிய மற்றொரு குழு அங்கு வந்து, குறித்த மூவரையும் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி தாக்கியதுடன், கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
</p><p>
கடத்தப்பட்டவர்களில் இருவர் பின்னர் துறைமுக நகருக்குள் உள்ள ஒரு வாகனத்தில் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டனர்.</p><p></p><h2>சடலத்தை மறைக்கும் முயற்சி</h2><p> </p><p>மூன்றாவது நபர் வேறு இடமொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5607a995-cdac-429d-8a25-a1a27282e53b/26-6a63727ca2d8f.webp' /></p><p>
</p><p>
சில மணிநேரங்களின் பின்னர், கடத்தப்பட்ட சீன பிரஜையின் சடலம் எஹெலியகோடா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

அவரது உடலில் பலத்த காயங்கள் காணப்பட்டதாகவும், கைகள், கால்கள் மற்றும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p> மேலும், சடலத்தை மறைக்கும் முயற்சியாக அதன் மீது கற்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் தற்போது அவிசாவளை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
</p><p>கடத்தல் மற்றும் கொலைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாகனம் ஒன்று எஹெலியகோடா பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், குற்றச் செயலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒரு சொகுசு ஜீப் வாகனமும் பண்டாரகம, பஹல போப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்த விசாரணை தற்போது கொழும்பு குற்றப் பிரிவின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p></p><h2>விசாரணை தொடர்பான அறிக்கை</h2><p>

விசாரணை தொடர்பான அறிக்கை காவல்துறை மா அதிபருக்கும் இலங்கையில் உள்ள சீன தூதரகத்திற்கும் சமர்ப்பிக்கப்படும் என காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72b8e335-4f7a-4440-9de1-84991ee3ef31/26-6a63727bee22f.webp' /></p><p>சமீப காலங்களில் இலங்கையில் இடம்பெற்றுவரும் இணையவழி குற்றங்கள் மற்றும் நிதி மோசடி சம்பவங்களின் பின்னணியில் இந்த சம்பவம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.</p><p>

இலங்கையின் பல பகுதிகளில் கண்டறியப்பட்டதாக கூறப்படும் மோசடி மையங்கள், சீன பிரஜைகளால் ஒருங்கிணைக்கப்பட்டதாக அதிகாரிகள் முன்னர் தெரிவித்திருந்தனர்.</p><p>

சர்வதேச ரீதியில் செயற்படும் சீன ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்புகளுடன் தொடர்புடைய இணையவழி மோசடி நடவடிக்கைகள் பல நாடுகளில் இடம்பெற்று வருவதாகவும் விசாரணையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
ஐக்கிய அரபு அமீரகம், மியான்மர், லாவோஸ் மற்றும் கம்போடியா உள்ளிட்ட நாடுகளை மையமாகக் கொண்டு இயங்கியதாக கூறப்படும் சில குற்றக் குழுக்கள், முதலீட்டு மற்றும் காதல் மோசடிகளை உள்ளடக்கிய இணைய மோசடி முறையை பயன்படுத்தியதாக சர்வதேச விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
அதேபோன்ற மோசடி நடவடிக்கைகள் இலங்கையிலும் இடம்பெற்றிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
</p><p>சீன டிரையாட்ஸ் என அழைக்கப்படும் நாடுகடந்த குற்ற வலையமைப்புகளும் இதுபோன்ற இணையவழி மோசடி நடவடிக்கைகளுடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>

சந்தேக நபர்கள் நாட்டை விட்டு வெளியேற முயன்றமை, சம்பவத்தின் திட்டமிடப்பட்ட தன்மை மற்றும் சர்வதேச இணைய குற்றச் செயல்களுடன் காணப்படும் ஒற்றுமைகள் ஆகியவை, இலங்கை சர்வதேச குற்ற வலையமைப்புகளின் புதிய செயற்பாட்டு தளமாக மாறுகின்றதா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளன.
</p><p>
இதனைத் தொடர்ந்து, கொழும்பு துறைமுக நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வசிக்கும் சீன பிரஜைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T14:37:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொஞ்சமாவது கூச்ச நாச்சம் இருக்கா? நீட் விவகாரத்தில் தேவதர்ஷினியை வெளுக்கும் பிரபலம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/devadarshini-faces-criticism-over-alleged-1784897509"></link>
            <id>https://viduppu.com/article/devadarshini-faces-criticism-over-alleged-1784897509</id>
            <summary type="text">நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராடி வருகிறார்கள். தமிழகத்தில் ஒருசில படங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நில...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராடி வருகிறார்கள். தமிழகத்தில் ஒருசில படங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் சென்னை தி.நகரில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் CJP மாணவர்கள் சங்கம் சார்பில் தொடர் முழக்கப்போராட்டம் நடைபெற்று வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a72f8c6-27f5-4020-9cd6-f0fc74ce58f9/26-6a635fe8686ee.webp' /></p><p> </p><h2>தேவதர்ஷினி</h2><p>அதில் கலந்து கொண்ட நடிகை தேவதர்ஷினி, இந்த காலத்து மாணவர்களை பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை ஒரு தாயாக பார்த்தபோது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. என் மகளும் பல விஷயங்களுக்காக ஆர்பாட்டத்தில் ஈடுபடுவாள். அப்படி இருக்கும்போது அவளது பாதுகாப்பு என்னவாகும் என்று யோசித்தபோது உண்மையில் என் வயிறெல்லாம் கலங்கிவிட்டது. </p><p>தேவதர்ஷினியின் வீடியோ இணையத்தில் பரவிய சில மணி நேரத்தில் அரசியல் விமர்சகர் கிஷோர் கே சாமி தன்னுடைய எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். </p><p>அதில், நடிகை தேவதர்ஷினி ஒரு பிரபல நீட் கோச்சிங் அகாடமி விளம்பரத்தில் நடித்து, மாணவர்களை நீட் தேர்வுக்கு தயாராகும்படி விளம்பரப்படுத்தியிருக்கிறார். அந்த பழைய வீடியோவை பதிவிட்டு, இவங்களுக்கு எல்லாம் கொஞ்சமாவது கூச்ச நாச்சமே இருக்காதா? என்ற கேள்வியையும் கேட்டுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ta" dir="ltr">இதுங்களுக்கு கொஞ்சம் கூட கூச்ச நாச்சமே இருக்காது <a href="https://t.co/NwS8PlulB3">pic.twitter.com/NwS8PlulB3</a></p>&mdash; kishore k swamy 🇮🇳 (@sansbarrier) <a href="https://x.com/sansbarrier/status/2080586729044787617?ref_src=twsrc%5Etfw">July 24, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-07-24T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிந்த காதலர்களை மீண்டும் சேர்த்து வைப்பதாக நூதன மோசடி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/relationship-recovery-lost-love-scam-china-1784897047"></link>
            <id>https://jvpnews.com/article/relationship-recovery-lost-love-scam-china-1784897047</id>
            <summary type="text">&amp;nbsp; சீனாவில் பிரிந்த காதலர்களை மீண்டும் சேர்த்து வைப்பதாகக் கூறி ஆயிரக்கணக்கான யுவான்களைப் பறிக்கும் ஓன்லைன் சேவைகள் அதிகரித்து வருவதாகச் சர்வதேச ஊ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சீனாவில் பிரிந்த காதலர்களை மீண்டும் சேர்த்து வைப்பதாகக் கூறி ஆயிரக்கணக்கான யுவான்களைப் பறிக்கும் ஓன்லைன் சேவைகள் அதிகரித்து வருவதாகச் சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>

'உறவியல் வல்லுநர்கள்' (Relationship coaches) எனத் தங்களை அழைத்துக்கொள்பவர்கள், பாதிக்கப்பட்ட பெண்களின் மன உளைச்சலைப் பயன்படுத்தி இத்தகைய பயிற்சிகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd471ede-53e5-408a-bcb1-57dd4be90261/26-6a635e1892485.webp' /></p><p></p><h2>ஆயிரக்கணக்கான யுவான்கள் கட்டணம்</h2><p>
</p><p>
பிரிந்த காதலனை மீட்டெடுப்பதற்கான முதல் விதியாக, 21 நாட்களுக்கு அவனுடன் எந்தவொரு தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.</p><p>

தோற்றத்தை மாற்றுவது, உரையாடல் நுட்பங்களைக் கற்றுக்கொடுப்பது மற்றும் சமூக வலைதளங்களில் தங்களது முன்னேற்றத்தைக் காட்டுவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு, 90% வெற்றி நிச்சயம் என உறுதியளித்து ஆயிரக்கணக்கான யுவான்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றன.</p><p></p><p>


இத்தகைய ஆலோசனைகளைப் பின்பற்றிய பின்னரும், முன்னாள் காதலர்கள் தங்களை நிரந்தரமாகத் துண்டித்துக்கொண்டதாகப் (Block) பல பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ddfee4a-6d61-4388-91eb-223281a032db/26-6a635e1946e7c.webp' /></p><p>
</p><p>
இதில் தோல்வியடையும் பட்சத்தில், உயர்நிலை நிபுணர்களைக் கொண்டு பயிற்சி அளிப்பதாகக் கூறி மீண்டும் அதிக அளவில் பணம் பறிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
</p><p>
 அதேசமயம் சீனாவில் இது போன்ற உளவியல் ஆலோசனை நிறுவனங்களின் எண்ணிக்கை 2016-ஆம் ஆண்டில் 18,000 ஆக இருந்த நிலையில், தற்போது 1,60,000 ஆகக் கணிசமாக அதிகரித்துள்ளது.</p><p></p><p>

 மேலும் , பயனர்கள் குறைதீர்க்கும் தளங்களில் இத்தகைய போலி ஆலோசனைகள் குறித்து ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் குவிந்து வருகின்றதாகவும் கூறப்படுகின்றது .</p><p>இது, இந்த துறைக்கான முறையான ஒழுங்குமுறைகள் மற்றும் சட்டதிட்டங்கள் இல்லாமையை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-24T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் நுழையும் மர்ம கும்பல் - அநுர அரசுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/katunayake-airport-officers-to-be-transfer-1784871965"></link>
            <id>https://tamilwin.com/article/katunayake-airport-officers-to-be-transfer-1784871965</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தில் மிகவும் சிறப்பாக செயற்பட்ட சிரேஷ்ட மற்றும் அனுபவமிக்க சுங்க அதிகாரிகள் குழுவை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யத் தயாராகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் மிகவும் சிறப்பாக செயற்பட்ட சிரேஷ்ட மற்றும் அனுபவமிக்க சுங்க அதிகாரிகள் குழுவை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
 போதைப்பொருட்கள், வெளிநாட்டு சிகரட்டுகள், சட்டவிரோத மதுபானங்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை நாட்டுக்குள் கடத்த முயற்சித்ததை வெற்றிகரமாக முறியடித்து, அரச வருமானத்தை பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அதிகாரிகளே இவ்வாறு மாற்றப்படவுள்ளனர். </p><p>அண்மையில் பதவியேற்ற சுங்கப் பணிப்பாளர், சில சுங்க தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் குறுகிய நோக்கங்களைக் கொண்ட சில நபர்களின் அழுத்தங்களே இதற்கு காரணமாக கூறப்படுகின்றது.</p><p></p><h2>முக்கிய நோக்கம்&nbsp;</h2><p> </p><p>அத்துடன் திசை திருப்பல்கள் காரணமாக இந்த இடமாற்றங்களுக்கான பின்னணி தயாரிக்கப்பட்டு வருவதாக சுங்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.</p><p> அண்மைக் காலமாக பெருமளவிலான கடத்தல்காரர்களை சட்டத்தின் பிடியில் சிக்கவைத்து மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்த அதிகாரிகள் செயற்பட்டுள்ளனர். </p><p>குறித்த அதிகாரிகளை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்துவிட்டு, அதற்குப் பதிலாக இதற்கு முன்னர் பல்வேறு வணிக மற்றும் தனிப்பட்ட உறவுகளுடன் செயற்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட சில அதிகாரிகளை மீண்டும் இந்த பதவிகளில் நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bb82d75-a8fe-4036-b8fe-af67d3d3a150/26-6a6351c99b008.webp' /></p><p> </p><p>கடந்த காலங்களில் விமான நிலையத்திற்குள் செயற்பட்ட ஊழல் முறைகள் மற்றும் சட்டவிரோத கடத்தல்களுக்கு மீண்டும் இடமளிப்பதே இந்த நடவடிக்கை பின்னணியில் உள்ள முக்கிய நோக்கமாக இருக்குமா என்ற வலுவான சந்தேகமும் எழுந்துள்ளது.</p><p> அரச வருமானத்தை அதிகரித்தல், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் அரச நிறுவனங்களுக்குள் நிலவும் ஊழலை ஒழித்தல் என்பவற்றுக்கு தற்போதைய அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருகின்றது. </p><p>இவ்வாறான பின்னணியில், இடம்பெறவுள்ள இவ்வாறான இடமாற்றங்களால் ஒட்டுமொத்த சுங்க அமைப்பின் நேர்மையான அதிகாரிகளின் சேவை ஊக்கம் வீழ்ச்சியடையக்கூடும் எனத் துறைசார் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T14:14:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 இல் 2 கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அரசு - பேச்சுவார்த்தைக்கு பின் CJP தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/govt-ready-for-2-demand-in-3-round-2-talk-with-cjp-1784902309"></link>
            <id>https://news.lankasri.com/article/govt-ready-for-2-demand-in-3-round-2-talk-with-cjp-1784902309</id>
            <summary type="text">மத்திய அரசு, 3 இல் 2 கோரிக்கைக்கு கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக பேச்சுவார்த்தைக்கு பின் CJP தெரிவித்துள்ளது.

மத்திய அரசுடன் CJP பேச்சுவார்த்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய அரசு, 3 இல் 2 கோரிக்கைக்கு கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக பேச்சுவார்த்தைக்கு பின் CJP தெரிவித்துள்ளது.
</p><h3>
மத்திய அரசுடன் CJP பேச்சுவார்த்தை
</h3><p>
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி(CJP) கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba53235f-e919-4129-af6e-6e6103765de9/26-6a6372a882753.webp' /></p><p>

போராடியவர்கள் மீது தடியடி நடத்திய பின்னர், இந்த போராட்டம் தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவடைந்துள்ளது. </p><p>

இந்நிலையில், இன்று அரசுடன் CJP பிரதிநிதிகள் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21b0d33c-707e-486b-8e9d-97bd52bd85e4/26-6a6372a675b91.webp' /></p><p> 

இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அரசு தரப்பில் அமைச்சர்கள் ஜே.பி.நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் கலந்து கொண்டனர். CJP தரப்பில், அதன் செய்தித் தொடர்பாளர்களான சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா பங்கேற்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39aa0948-316d-45f8-80c1-125b029831b8/26-6a6372a7299b8.webp' /></p><p> 

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், 3 கோரிக்கைகள் மற்றும் 5 சீர்திருத்த பரிந்துரைகளையும் அரசிடம் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><h3>

3 கோரிக்கை என்ன?</h3><p>

இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய CJP செய்தித் தொடர்பாளர்கள்,"எங்களது 3 கோரிக்கைகளை அரசிடம் தெரிவித்துள்ளோம்.</p><p>

சமரசத்திற்கு இடமில்லாத முதல் கோரிக்கை என்னவென்றால், தர்மேந்திர பிரதான் ஒன்று ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அரசு அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8752100-d403-4885-9bc4-f7bde6e9d951/26-6a6372a7ce6bc.webp' /></p><p>
நீட் வினாத்தாள் கசிவு காரணமாக உயிரிழந்த மாணவர்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவது, போராடியவர்கள் மீது பதியப்பட்ட FIR மற்றும் வழக்குகளை திரும்ப பெறுவது ஆகிய 2 மற்ற கோரிக்கைகளுக்கு அரசு கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளது.</p><p> 

தர்மந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற எங்கள் கோரிக்கைக்கு, நாளை மதியம் வரை அரசு அவகாசம் கோரியுள்ளது. அவரை விரைவில் பதவியிலிருந்து நீக்கும் என நம்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T14:12:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் தீவிரமடையும் காட்டுத்தீ: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wildfires-in-france-spain-40-000-people-evacuated-1784902224"></link>
            <id>https://tamilwin.com/article/wildfires-in-france-spain-40-000-people-evacuated-1784902224</id>
            <summary type="text">தென்மேற்கு பிரான்ஸின் &#039;காப் ஃபெரெட்&#039; தீபகற்ப பகுதியில் காட்டுத்தீ மிக
வேகமாகப் பரவி வருவதால், பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு
வருகின்றனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்மேற்கு பிரான்ஸின் 'காப் ஃபெரெட்' தீபகற்ப பகுதியில் காட்டுத்தீ மிக
வேகமாகப் பரவி வருவதால், பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு
வருகின்றனர்.
</p><p>
இதுவரை 10,000 ஹெக்டேயர் பரப்பளவிலான அடர்ந்த வனப்பகுதிகள் தீயில் முழுமையாக
எரிந்து சாம்பலாகியுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

தீயின் அச்சுறுத்தலால் சுமார் 40,000 மக்கள் படகுகள் மற்றும் சாலைகள்
வழியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>காட்டுத்தீ</h2><p>
</p><p>
இதேபோல் ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட் அருகிலும் காட்டுத்தீ பரவி
வருவதால், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் அவசரநிலையை அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06790fdf-fb83-46a9-a80e-efa2116568a2/26-6a637252a9a59.webp' /></p><p>
</p><p>
மணிக்கு 50 கி.மீ வேகத்தில் வீசும் காற்றும், 37 பாகை செல்சியஸ் வெப்பமும்
தீயைக் கட்டுப்படுத்துவதில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.
</p><p>
ஐரோப்பாவில் அதிகரித்து வரும் வெப்ப அலை காரணமாகக் காட்டுத்தீ
தீவிரமடைந்துள்ளதால், ஐரோப்பிய ஒன்றியம் விசேட தீயணைப்பு விமானங்களை அனுப்பி
உதவி வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T14:11:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயகன் பார்க்க வந்தாரா சங்கீதா? வைரலான வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/did-cm-vijay-sangeetha-came-to-watch-jana-nayagan-1784887709"></link>
            <id>https://manithan.com/article/did-cm-vijay-sangeetha-came-to-watch-jana-nayagan-1784887709</id>
            <summary type="text">முதல்வர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள கடைசி திரைப்படம் ஜனநாயகன். 

ஹெச். வினோத் இயக்கியுள்ள இந்தப் படம், கடந்த ஜனவரி மாதமே வெளியாக வேண்டிய நிலையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதல்வர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள கடைசி திரைப்படம் ஜனநாயகன். </p><p>

ஹெச். வினோத் இயக்கியுள்ள இந்தப் படம், கடந்த ஜனவரி மாதமே வெளியாக வேண்டிய நிலையில், சென்சார் சான்றிதழ் தொடர்பான பிரச்சனை காரணமாக படத்தின் வெளியீடு தாமதமானது.

</p><p>ஜனநாயகன் திரைப்படத்தை திரையரங்கில் வந்து பார்த்த பல்வேறு பிரபலங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a839d5b-758d-4f91-9754-45aef06476bf/26-6a633a80e6c4e.webp' /></p><p>இந்நிலையில், விஜய்யின் மனைவி சங்கீதா ஜனநாயகன் திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க திரையரங்கிற்கு வந்ததாகக் கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p><p>அந்த வீடியோவில் முதலில் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்கும், அங்கு வைக்கப்பட்டுள்ள பேனர்களும் காட்டப்படுகின்றன.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ta" dir="ltr">அண்ணனின் <a href="https://x.com/hashtag/jananayagan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#jananayagan</a> படம் பார்க்க வந்தா <br><br>அண்ணி சங்கீதா அவர்கள் <a href="https://t.co/GFVv7xah6t">pic.twitter.com/GFVv7xah6t</a></p>&mdash; 𝚃𝚊𝚖𝚒𝚕 𝚜𝚎𝚕𝚟𝚊𝚗 𝚃𝚅𝙺 (@Selvatvk6kb) <a href="https://x.com/Selvatvk6kb/status/2080240829327925332?ref_src=twsrc%5Etfw">July 23, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>&nbsp;&nbsp;</p><p>

பின்னர், முகக்கவசம் அணிந்தபடி ஒரு காரின் அருகில் சங்கீதா நிற்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதன்பிறகு, அவர் காருக்குள் ஏறும் காட்சியும் காட்டப்படுகிறது.
</p><p>
ஆனால், இந்த வீடியோ உண்மையானது அல்ல என்பது தெரியவந்துள்ளது. </p><p>

சங்கீதா ஏற்கனவே வேறு ஒரு திரைப்படத்தை பார்க்க சென்றபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை, ஜனநாயகன் படத்தின் பேனர்களுடன் இணைத்து எடிட் செய்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-24T14:07:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு தற்காலிகமாக நிறுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/third-phase-excavation-work-at-chemmani-mass-grave-1784900858"></link>
            <id>https://ibctamil.com/article/third-phase-excavation-work-at-chemmani-mass-grave-1784900858</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 42ஆவது நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 42ஆவது நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, புதிதாக 01 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஒரு என்புகூட்டு குவியலும் அடையாளம் காணப்பட்டுள்ளது. </p><p>இதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 15 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p>அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மூன்று என்புக் கூட்டு குவியல்களும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>தற்காலிக நிறுத்தம்</h2><p> </p><p>மேலும், 437ஆவது என்புக்கூட்டின் வலது பக்க மூன்று விலா எலும்புடன் தொடுகையுற்றவாறு இரும்பு தகடு அடையாளம் காணப்பட்டதுடன், சில ஆணிகளும் சான்று பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/063e4ba8-365a-4182-8e53-5af5d0014364/26-6a63713b7becc.webp' /></p><p> </p><p>அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 96 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 480 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 479 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. </p><p>அதேவேளை செம்மணி அகழ்வு பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமையுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு , எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 04ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T14:07:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வெளியான விசேட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-announcement-for-students-al-examination-1784899986"></link>
            <id>https://tamilwin.com/article/special-announcement-for-students-al-examination-1784899986</id>
            <summary type="text">2026 கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையானது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள 2,532 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையானது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இதனை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p></p><p> </p><h2>பாடசாலை விண்ணப்பதாரர்கள்</h2><p>

இம்முறை பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை விண்ணப்பதாரர்களின் பரீட்சை அனுமதி அட்டைகள் (Admission Cards) ஏற்கனவே உரிய வலையக் கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.</p><p>

அனைத்து அதிபர்களும் தமது பாடசாலைக்குரிய வலையக் கல்வி அலுவலகத்தின் பரீட்சைப் பாடத்திற்குப் பொறுப்பான பிரதி அல்லது உதவிக்கல்விப் பணிப்பாளரிடமிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2853c03c-c76b-4a2e-a3c8-5eee37b0bc40/26-6a637102c49d9.webp' /></p><p> 

தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்குத் தபால் மூலம் அனுப்பிவைக்கப் பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. </p><p>

பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகளில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பின், அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொல்லைப் (Password) பயன்படுத்தி இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசித்து அத்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.</p><p></p><h2>விசேட அறிவிப்பு</h2><p> 

தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் தமது அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் இருப்பின், மேற்கூறிய இணையத்தளத்திற்குப் பிரவேசித்து, தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்வதன் மூலம் அவற்றை இணையவழியில் (Online) திருத்திக்கொள்வதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/363d0e8a-ce5e-49b2-8cae-7ce11d33a721/26-6a63710374dee.webp' /></p><p> 

இந்த அனுமதி அட்டைத் திருத்தப் பணிகளை மேற்கொள்ளும் காலம் ஓகஸ்ட் மாதம் 03ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையும் என்பதுடன், அந்தத் திருத்தக் காலம் எக்காரணம் கொண்டும் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என்றும் பரீட்சைத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. </p><p>

இந்தப் பரீட்சை தொடர்பில் ஏதேனும் விசாரணைகள் இருப்பின், 1911 என்ற உடனடி அழைப்பு இலக்கம், 011-2784208 அல்லது 011-2784537 ஆகிய தொலைபேசி இலக்கங்கள், 011-2784422 என்ற தொலைநகல் (Fax) இலக்கம் மற்றும் gcealexamsl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் பரீட்சைத் திணைக்களத்திடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T14:04:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க குண்டுவீச்சு விமானங்களுக்கு அனுமதி அளித்தால் தாக்குதல்: பிரித்தானியாவுக்கு ஈரான் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attack-if-permission-granted-to-us-bombers-iran-uk-1784901596"></link>
            <id>https://tamilwin.com/article/attack-if-permission-granted-to-us-bombers-iran-uk-1784901596</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிரான தாக்குதல்களுக்கு அமெரிக்காவின் B-52 குண்டுவீச்சு
விமானங்கள் பிரித்தானியத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி அளிக்கக் கூடாது என
ஈரான் எச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான தாக்குதல்களுக்கு அமெரிக்காவின் B-52 குண்டுவீச்சு
விமானங்கள் பிரித்தானியத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி அளிக்கக் கூடாது என
ஈரான் எச்சரித்துள்ளது.</p><p>

இங்கிலாந்தின் 'ஆர்.ஏ.எஃப் ஃபேர்ஃபோர்டு' தளத்திலிருந்து அமெரிக்க விமானங்கள்
இயங்கினால், அந்த தளங்கள் தங்களின் தாக்குதலுக்கு உரிய இலக்காகும் என ஈரான்
கூறியுள்ளது.</p><p>

இதற்குக் பதிலளித்த பிரித்தானியா, உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ தங்கள் மீது
நடத்தப்படும் எந்தத் தாக்குதலையும் எதிர்கொள்ள ஆயுதப் படைகள் தயார் நிலையில்
இருப்பதாகக் கூறியுள்ளது.</p><p></p><h2>ஈரான் எச்சரிக்கை</h2><p>
</p><p>
ஹோர்முஸ் நீரிணையில் சர்வதேசக் கப்பல்களைப் பாதுகாக்க, அமெரிக்காவுடனான
தற்காப்பு ஒப்பந்தங்களின்படி தொடர்ந்து செயல்படுவோம் என பிரித்தானிய அரசு
தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54aa064d-c904-4e69-b28d-b2fe078085ce/26-6a6370aa75869.webp' /></p><p>
</p><p>
ஏற்கனவே இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க-பிரித்தானியக் கூட்டுத் தளமான
'டியாகோ கார்சியா' மீது ஈரான் ஏவுகணை வீசித் தாக்குதல் நடத்தியிருந்தது.</p><p>

அரசு ஆதரவு பெற்ற மறைமுகக் குழுக்களின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளக்
கொண்டுவரப்பட்ட புதிய சட்டப் அதிகாரங்களைப் பயன்படுத்தி, ஈரானின் புரட்சிகர
காவல்படைக்கு ஆதரவு அளிப்பதை பிரித்தானியா இந்த மாதத்தில் அதிகாரப்பூர்வமாகத்
தடை செய்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T14:03:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி அகழ்வு பணிகள் இன்றுடன் நிறுத்தம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chemmani-excavation-work-halted-as-of-today-1784897923"></link>
            <id>https://jvpnews.com/article/chemmani-excavation-work-halted-as-of-today-1784897923</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி அகழ்வு பணிகள் இன்றைய தினத்துடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு , எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 04ஆம் திகதி மீள ஆர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி அகழ்வு பணிகள் இன்றைய தினத்துடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு , எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 04ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.</p><p>


செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 42ஆவது நாளான இன்றைய தினம் , புதிதாக 01 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , ஒரு என்புகூட்டு குவியலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4a92e58-996e-4c22-83c8-b9aa4b646ab3/26-6a63618491c41.webp' /></p><p>

அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 15 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மூன்று என்புக் கூட்டு குவியல்களும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
மேலும் 437ஆவது என்புக்கூட்டின் வலது பக்க மூன்று விலா எலும்புடன் தொடுகையுற்றவாறு இரும்பு தகடு அடையாளம் காணப்பட்டதுடன், சில ஆணிகளும் சான்று பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>
அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 96 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 480 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 479 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/semmani-excavation-work-temporarily-suspended-1784899267"></link>
            <id>https://tamilwin.com/article/semmani-excavation-work-temporarily-suspended-1784899267</id>
            <summary type="text">செம்மணி அகழ்வு பணிகள் இன்றைய தினத்துடன்(24.7.2026) தற்காலிகமாக நிறுத்தப்பட்டு , எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 04ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.&amp;nbsp;செம...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி அகழ்வு பணிகள் இன்றைய தினத்துடன்(24.7.2026) தற்காலிகமாக நிறுத்தப்பட்டு , எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 04ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.&nbsp;</p><p>செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 42ஆவது நாளான இன்றைய தினம்
வெள்ளிக்கிழமை, புதிதாக 01 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , ஒரு
என்புகூட்டு குவியலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p>

அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 15 என்புக்கூடுகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மூன்று என்புக்
கூட்டு குவியல்களும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>அகழ்வு பணிகள்</h2><p>
</p><p>
மேலும் 437ஆவது என்புக்கூட்டின் வலது பக்க மூன்று விலா எலும்புடன்
தொடுகையுற்றவாறு இரும்பு தகடு அடையாளம் காணப்பட்டதுடன், சில ஆணிகளும் சான்று
பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9eca330b-1f1a-4027-9e6a-5615e0f52840/26-6a636e1634c39.webp' /></p><p>
</p><p>
அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம்
கட்டம் என இதுவரையில் 96 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ,
480 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 479 என்பு கூடுகள் முற்றாக
அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T13:52:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நீதிமன்ற அனுமதியுடன் எரிக்கப்பட்ட 600 கிலோ கேரளக் கஞ்சா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kerala-cannabis-burned-with-jaffna-1784900777"></link>
            <id>https://ibctamil.com/article/kerala-cannabis-burned-with-jaffna-1784900777</id>
            <summary type="text">ஊர்காவற்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சுருவில் - மெலிஞ்சிமுனை மயானத்துக்கு
அண்மையில் இன்றையதினம் 600 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சாவானது எரித்தழிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊர்காவற்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சுருவில் - மெலிஞ்சிமுனை மயானத்துக்கு
அண்மையில் இன்றையதினம் 600 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சாவானது எரித்தழிக்கப்பட்டது.
</p><p>
கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு
திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில் அது குறித்து ஊர்காவற்துறை நீதிமன்றத்தில்
வழக்குகள் நடைபெற்று வந்து, அந்த வழக்குகள் நிறைவடைந்த நிலையில் குறித்த
கஞ்சாப் பொதிகள் இன்றையதினம் எரிக்கப்பட்டன.
</p><p>
இதன்போது நீதிவான், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் போதைத்தடுப்பு காவல்துறை , உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார
பரிசோதகர்கள் முன்னிலையில் இந்த கஞ்சா பொதிகள் எரியூட்டப்பட்டுள்ளன.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p> </p>]]></content>
            <updated>2026-07-24T13:49:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வைரலாகும் வினோத திருமணம்: ஒரே மணமகனை மணந்த மூன்று சகோதரிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/three-sisters-married-one-man-1784891157"></link>
            <id>https://manithan.com/article/three-sisters-married-one-man-1784891157</id>
            <summary type="text">இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரே இளைஞரை மூன்று சகோதரிகள் திருமணம் செய்துகொண்டதாக வெளியாகியுள்ள தகவல், சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரே இளைஞரை மூன்று சகோதரிகள் திருமணம் செய்துகொண்டதாக வெளியாகியுள்ள தகவல், சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
அம்ரோகா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள்களான சரோஜ், சாவித்ரி மற்றும் சந்தோஷி ஆகிய மூவரும், ஒரே இளைஞரைத் திருமணம் செய்ய இணைந்து முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ba86c77-c65a-4cde-bbb3-16498318715f/26-6a634b4fc4530.webp' /></p><p>
</p><p>
இதன்படி, அப்பகுதியில் உள்ள சாமுண்டா கோயிலில் நடைபெற்ற திருமண நிகழ்வில், மூன்று சகோதரிகளும் அந்த இளைஞருடன் திருமண பந்தத்தில் இணைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

திருமணச் சடங்குகளின் போது, மணமக்கள் அக்னியை வலம் வந்து, பாரம்பரிய சடங்குகளை நிறைவேற்றியதுடன், பெரியவர்களிடம் ஆசீர்வாதமும் பெற்றுக்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8af07bbc-8b5c-4945-b073-e275b5ac7152/26-6a634b4f15719.webp' /></p><p>
</p><p>குறித்த வினோத திருமணத்தின் காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, அவை வேகமாக வைரலாகி பலரின் கவனத்தை ஈர்த்தன.

ஆரம்பத்தில், இது சமூக வலைதளங்களுக்காக உருவாக்கப்பட்ட காட்சிப் பதிவு மட்டுமே என பலரும் நினைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21d558fb-926a-4f58-bc16-65baca79fb03/26-6a634b508d761.webp' /></p><p> </p><p>ஆனால், பின்னர் அந்தத் திருமணம் உண்மையில் நடைபெற்றதுதான் என சம்பந்தப்பட்டவர்கள் உறுதிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

மேலும், திருமணமான நால்வரும் தங்களது சமூக வலைதளக் கணக்குகள் மூலம் காணொளிகளை வெளியிட்டு, இந்தத் திருமணம் உண்மையானது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>
இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் தீவிர விவாதத்திற்கும், கலவையான விமர்சனங்களுக்கும் உட்பட்டு படு வைரலாகி வருகின்றது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr">BREAKING <br>UP के अमरोहा में 3 सगी बहनों ने एक ही लड़के से शादी कर ली है <br><br>यह बहने वीडियो कंटेंट बनाती थी और लड़का उनके पति का रोल निभाता था। रील बनाते बनाते रियल पति बन गया विक्‍कू। <br><br>विकास उर्फ विक्‍कू ने मंदिर में सरोज, सावित्री और संतोष के साथ सात फेरे लिए <br><br>उनकी मांग में… <a href="https://t.co/fTINEFyqVL">pic.twitter.com/fTINEFyqVL</a></p>&mdash; Sunil Yadav (@sunilyadav21) <a href="https://x.com/sunilyadav21/status/2080240728643420340?ref_src=twsrc%5Etfw">July 23, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T13:49:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பிரதேசத்தில் துயரத்தை ஏற்படுத்திய முன்னாள் பெண் போராளியின் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-female-combatant-dies-of-cancer-1784899272"></link>
            <id>https://jvpnews.com/article/former-female-combatant-dies-of-cancer-1784899272</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முல்லைத்தீவு -விசுவமடு பிரதேசத்தில் முன்னாள் பெண் போராளி ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழத சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முல்லைத்தீவு -விசுவமடு பிரதேசத்தில் முன்னாள் பெண் போராளி ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழத சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

சம்பவத்தில் புன்னைநீராவி விசுவமடு பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான பத்மாவதி சந்திரசேகர் என்பவரே கடந்த 22 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d082798-ee7c-4d71-8f24-2836c3cb51b5/26-6a6366c9d8eeb.webp' /></p><p>

இந் நிலையில்&nbsp; முன்னாள் பெண் போராளியின் மரணத்திற்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T13:39:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோவில் துப்பாக்கிச் சூடு: பெண் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/woman-shot-dead-in-etobicoke-toronto-1784900304"></link>
            <id>https://canadamirror.com/article/woman-shot-dead-in-etobicoke-toronto-1784900304</id>
            <summary type="text">கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள எட்டோபிகோக் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள எட்டோபிகோக் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>ஹம்பர்வுட் மற்றும் ரெக்ஸ்டேல் புலிவார்ட்ஸ் சந்திப்புக்கு அருகிலுள்ள குடியிருப்பு வீதியொன்றில் காலை 7:00 மணியளவில் இத்துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
</p><p>தகவலறிந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் காணப்பட்ட பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c057ffe7-db27-4da3-8b46-141d4427b222/26-6a636ad20cd97.webp' /></p><p>உயிரிழந்த பெண்ணின் வயது அல்லது இச்சம்பவத்திற்கு வழிவகுத்த காரணம் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
பொலிஸார் வருவதற்கு முன்னரே சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். </p><p>அவர் குறித்த அடையாளங்களோ அல்லது விவரங்களோ இதுவரை வெளியிடப்படவில்லை.</p><p>
இக்கொலை வழக்கை கொலை வழக்கு விசாரணைப் பிரிவு ஏற்று தீவிரமாக விசாரித்து வருகிறது.
விசாரணைகள் காரணமாக மார்னிங் ஸ்டார் டிரைவ் மற்றும் ரெக்ஸ்டேல் புலிவார்ட் இடையேயான ஹம்பர்வுட் புலிவார்ட் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.</p><p>
இச்சம்பவம் தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்தால், 416-808-2222 என்ற எண்ணில் பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T13:37:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ள சம்பந்தமுடைய ஒரு இராணுவத் தளபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/former-army-commander-in-court-easter-attack-case-1784891046"></link>
            <id>https://ibctamil.com/article/former-army-commander-in-court-easter-attack-case-1784891046</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் அதில் இருந்து பெறப்பட்ட ஆதாரங்களின்படி, சிவனேசத்துரை சந்திரகாந்தனுடன் (பிள்ளையன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் அதில் இருந்து பெறப்பட்ட ஆதாரங்களின்படி, சிவனேசத்துரை சந்திரகாந்தனுடன் (பிள்ளையன்) தொடர்புடைய ஒரு குழுவிற்கும் இராணுவப் புலனாய்வுத் துறையின் சில பிரிவுகளுக்கும் இடையே தொடர்பு உள்ளது என்பது நீதிமன்றில் அம்பலமாகியுள்ளது.</p><p> 

அண்மையில் உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்த வழக்கு விசாரணையில் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இதனை வெளியிட்டுள்ளார். </p><p> 

சட்டபூர்வமான அரச பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பதிலாக, அரசியல் படுகொலைகளுக்கும் அரசியல் எதிரிகளுக்கு எதிரான பழிவாங்கலுக்கும் இந்தத் தொடர்பு பயன்படுத்தப்பட்டதாக திலீப பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p></p><h2>மௌலானா கூறிய&nbsp;வாக்குமூலம்</h2><p>
மேலும், அப்போது சுமார் ஆறு மாத கால அவகாசத்தில் இருந்த தேர்தலுக்கு முன்பு, இந்தத் தகவலை மூடிமறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் நீதிமன்றில் விளக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc61374b-2404-4827-9ebc-de66cc37fe32/26-6a634befeef74.webp' /></p><p>
</p><p>
ஹன்சிர் ஆசாத் மௌலானா கூறியதாகக் கூறப்படும் ஒரு வாக்குமூலத்தை மேற்கோள் காட்டி, தற்போது விசாரணையில் உள்ள குழுவானது கடந்த காலத்தில் நடந்த பல சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது என்று மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p> 

பத்திரிகையாளர் பிரகீத் எக்னலிகொடவின் கடத்தல், பத்திரிகையாளர்கள் கீத் நோயர் மற்றும் உபாலி தென்னக்கூன் மீதான தாக்குதல், மற்றும் லசந்த விக்ரமசிங்கவின் கொலை ஆகியவை இவற்றில் அடங்கும்.</p><p> 

இருப்பினும், இவை நீதிமன்றத்தின் முன் உள்ள குற்றச்சாட்டுகள் மட்டுமே, இன்னும் இவற்றின் மீது தீர்ப்பு வழங்கப்படவில்லை என்றும் நீதிமன்றில் தனது உண்மைகளை முன்வைத்துள்ளார்.
</p><p>
பிள்ளையன் குழுவுடன் தொடர்புடைய 2,000-க்கும் மேற்பட்டோர் இராணுவ உளவுத்துறை மூலம் பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், இந்தப் பணம் தேசியப் பாதுகாப்பு நோக்கங்களுக்காக அல்லாமல், அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டதாகவும் இதன் மூலம் தெரியவந்துள்ளது.</p><p>
தகவல்களை மறைக்கும் செயல் தொடர்ந்தால், சம்பந்தப்பட்ட இராணுவத் தளபதியை ஒரு சந்தேக நபராக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டியிருக்கும் என்றும் நீதிமன்றத்திற்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><h2>சலேயின் உயிருக்கு அச்சுறுத்தல்</h2><p>

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற சுரேஷ் சலே, ஆசாத் மௌலானாவின் குடும்பத்தினரை அஹுங்கல்லேவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று, தூதரகத்தில் ஒரு பதவி வாங்கித் தருவதாக உறுதியளித்திருந்தார் என்று மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்த்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4233a4c9-d72d-4540-a1d2-3df925a77819/26-6a634bf0cc0e5.webp' /></p><p>
</p><p>
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, புலனாய்வாளர்கள் அந்த ஹோட்டலின் பதிவேடுகளைக் கைப்பற்றியுள்ளனர்.
</p><p>
இதன்படி தற்போது காவலில் உள்ள சுரேஷ் சலேயின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், விசாரணையைச் சீர்குலைக்க ஒரு திட்டமிட்ட முயற்சி நடைபெறுவதாகவும் கூறி, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், சலேவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் பிறப்பித்த உத்தரவைத் திரும்பப் பெறுமாறும் அவர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.</p><p>

மேலும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு முன்னர், வடக்கு மாகாணத்தில் இராணுவத்துடன் தொடர்புடைய ஒரு குழுவைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தவோ அல்லது தெற்கில் தாக்குதல் நடத்தவோ ஆரம்பத் திட்டங்கள் தீட்டப்பட்டதாகவும், ஆனால் பின்னர் அவை கைவிடப்பட்டு இந்தத் தாக்குதல் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் தகவல் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அப்போது நடைபெறவிருந்த தேர்தல்களை இலக்குவைத்து , சலே அமைப்பின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற முக்கிய பிரமுகர்களை நீதிமன்றத்தின் முன் கொண்டு வருவதற்கான மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T13:33:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் திருமணத்தின் மின்சார கட்டணம்! மனு விசாரணைக்கு திகதி அறிவித்த உயர் நீதிமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/petition-against-namal-not-paying-electricity-bill-1784894840"></link>
            <id>https://ibctamil.com/article/petition-against-namal-not-paying-electricity-bill-1784894840</id>
            <summary type="text">2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்தின் போது பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணம் செலுத்தப்படாமை தொடர்பில் தாக்கல் செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்தின் போது பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணம் செலுத்தப்படாமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணையை எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.</p><p>

உயர் நீதிமன்ற நீதிபதிகளான ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று (24) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. </p><p>

இலங்கை மின்சார சபை தற்போது மறுசீரமைப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், அதற்குரிய வாரிசு நிறுவனத்தை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு மனுதாரருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.</p><p></p><h2>அடிப்படை உரிமை மீறல்</h2><p>

விஜித்த குமார என்ற சட்டத்தரணியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இம்மனுவில், 2019 செப்டம்பர் 12 முதல் 15 வரை வீரகெட்டியவில் உள்ள மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நடைபெற்ற நாமல் ராஜபக்சவின் திருமணத்திற்கு பயன்படுத்தப்பட்ட 2,682,246.57 ரூபா மின்சாரக் கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9231012-32e2-488b-a605-011baf8576f9/26-6a6358ac0e01c.webp' /></p><p>
</p><p>
தான் 7,390 ரூபா மாதாந்த மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தத் தவறியதற்காகத் தனது வீட்டின் மின் இணைப்பைத் துண்டித்த மின்சார சபை, லட்சக்கணக்கான ரூபா கட்டண நிலுவையை வைத்துள்ள வீரகெட்டிய இல்லத்தின் மின்சாரத்தைத் துண்டிக்காமல் இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றுவது அரசியலமைப்பின் 12(1) பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என மனுதாரர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இருப்பினும், நாமல் ராஜபக்சவின் திருமண மின்சாரக் கட்டணம் ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டதாக மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிருடன் இருந்தபோது ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T13:33:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க வர்த்தகப் போர் தொடர்பில் -கனடிய பிரதமர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/verything-is-on-the-table-in-us-trade-talks-pm-1784899697"></link>
            <id>https://canadamirror.com/article/verything-is-on-the-table-in-us-trade-talks-pm-1784899697</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் விவகாரத்தில் எல்லா வாய்ப்புகளும் மேசையில் உள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
நாட்டின் குடும்பங...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் விவகாரத்தில் எல்லா வாய்ப்புகளும் மேசையில் உள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
நாட்டின் குடும்பங்கள், தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களைப் பாதுகாக்க கனடா என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யும் என உறுதியளித்துள்ளார்.
</p><p>சார்லட்டவுனில் வியாழக்கிழமை நடைபெற்ற மாகாண மற்றும் பிராந்திய முதல்வர்களின் வருடாந்தக் கூட்டத்தின் இறுதி நாளில் கலந்துகொண்ட பின்னர், ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
</p><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடியப் பொருட்கள் மீது புதிய வரிகளை விதிப்பதாக அச்சுறுத்தி வரும் நிலையில், அடுத்த மாதம் புதிய வரிகள் அமலுக்கு வரும் முன் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் அமெரிக்காவிற்கு எதிரான பதிலடி நடவடிக்கைகளை அவர் மறுக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fefba37e-ae6f-4644-afe3-f27e77fb85fd/26-6a63687654127.webp' /></p><p>
</p><p>கனடா எவ்வாறு பதிலளிக்கிறது என்பதில் தெளிவாக இருப்போம். வரி தொடர்பான அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய ஒரு விரிவான ஒப்பந்தத்தை எட்டும் நோக்கில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை நாங்கள் தீவிரப்படுத்தியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.</p><p>
பழிவாங்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில், எங்களிடம் முழுமையான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், முன்கூட்டியே பதிலடி கொடுப்பது தற்போதைய சூழலில் எதிர்மறையான விளைவையே தரும். மாகாண முதல்வர்கள் அனைவரும் இந்த விவகாரத்தில் ஒரே திசையிலும், ஒரே நோக்கத்திலும், தீவிரமான உறுதியுடனும் கைகோர்த்துள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அமெரிக்காவின் 30 நாள் கெடு தொடர்பாகக் கேட்டபோது, அது ஒரே நேரத்தில் "அழுத்தக் காரணியாகவும் வாய்ப்பாகவும்" உள்ளது எனப் பிரதமர் குறிப்பிட்டதுடன், நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதும், வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஒற்றுமையைப் பேணுவதுமே முக்கிய இலக்கு என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T13:31:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வத்தளை துப்பாகிச்சூட்டு; பெண் உட்பட நால்வர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wattala-shooting-four-arrested-including-a-woman-1784899863"></link>
            <id>https://jvpnews.com/article/wattala-shooting-four-arrested-including-a-woman-1784899863</id>
            <summary type="text">&amp;nbsp; வத்தளையில், கதிரானை பாலத்திற்கு அருகிலுள்ள விடுதியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வத்தளையில், கதிரானை பாலத்திற்கு அருகிலுள்ள விடுதியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸார்&nbsp; தெரிவித்துள்ளனர்.</p><p>


கைது செய்யப்பட்டவர்கள், துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திற்கு உதவி மற்றும் ஒத்துழைப்பு வழங்கியதாகச் சந்தேகிக்கப்படுவதாகக் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/018fb4df-cbcf-455f-a91f-38c6db9cc812/26-6a63691890d1a.webp' /></p><p>
</p><p>
 வத்தளை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T13:31:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் படுதோல்வி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/motion-against-justice-minister-crushed-1784898731"></link>
            <id>https://ibctamil.com/article/motion-against-justice-minister-crushed-1784898731</id>
            <summary type="text">

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் தோற்கடிக்கப்பட்டு, அரசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் தோற்கடிக்கப்பட்டு, அரசாங்கம் அமைச்சருக்கான தனது பலத்தை நிரூபித்துள்ளது.
</p><p>
இத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், அதற்கு எதிராக 152 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஆதரவாக 36 உறுப்பினர்களும் வாக்களித்தனர். </p><p>

இதன்போது எவரும் வாக்களிக்காமல் இருக்கவிலை என தெரியவருகிறது.</p><p></p><h2>பதவியிலிருந்து நீக்கும் முயற்சி</h2><p>

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தையடுத்து, நாட்டின் சிறைச்சாலை அமைப்பின் நிர்வாகம் மற்றும் மேற்பார்வையில் குறைபாடுகள் நிலவுவதாகவும், அந்த மோதலைத் தடுக்க நீதி அமைச்சர் தவறிவிட்டார் என்றும் குற்றம் சாட்டி எதிர்க்கட்சிகளால் சபாநாயகரிடம் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கையளிக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd20a8e7-d53c-4ffb-b0e6-8f6cc1c5307c/26-6a63683cd6b37.webp' /></p><p>
</p><p>
எனினும், எதிர்க்கட்சியின் இந்த முயற்சியை பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்ததன் மூலம், ஹர்ஷன நாணயக்காரவை பதவியிலிருந்து நீக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T13:27:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே இளைஞரை திருமணம் செய்த மூன்று சகோதரிகள் ; நெட்டிசன்கள் ஷாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-sisters-married-the-same-young-man-1784881646"></link>
            <id>https://jvpnews.com/article/three-sisters-married-the-same-young-man-1784881646</id>
            <summary type="text">இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரே இளைஞரை மூன்று சகோதரிகள் திருமணம் செய்துகொண்டதாக வெளியான தகவல், சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரே இளைஞரை மூன்று சகோதரிகள் திருமணம் செய்துகொண்டதாக வெளியான தகவல், சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
</p><p>
அம்ரோகா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள்களான சரோஜ், சாவித்ரி மற்றும் சந்தோஷி ஆகிய மூவரும் ஒரே இளைஞரைத் திருமணம் செய்ய முடிவுசெய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7839559-8e26-48f3-a2ec-a058adffd97a/26-6a6322975572e.webp' /></p><p></p><h2>சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ள&nbsp;&nbsp;திருமணம்</h2><p>&nbsp;சரோஜ்(20), சாவித்ரி(19), சந்தோஷ் கடக்வன்ஷி(18) ஆகிய மூன்று பெண்களும் தங்களின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர்கள். அவர்களுக்கு கேமராமேனாக கடந்த ஆறு மாதங்களாக பணிபுரிந்து வந்த விகாஸ் என்பவரையே தற்போது அவர்கள் மூவரும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.&nbsp;</p><p>
</p><p>
அதன்படி, அந்த பகுதியில் உள்ள சாமுண்டா கோயிலில் நடைபெற்ற நிகழ்வில் மூன்று சகோதரிகளும் அந்த இளைஞரைத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.</p><p></p><p>

திருமணச் சடங்குகளின்போது அவர்கள் அக்னியை வலம்வந்ததோடு, ஒருவருக்கொருவர் குங்குமம் வைத்து, பெரியவர்களிடம் ஆசீர்வாதமும் பெற்றுக்கொண்டனர்.

இந்தத் திருமண நிகழ்வின் காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகப் பரவின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02f66994-f86e-4875-842d-ecec7a31db9f/26-6a63229836f8d.webp' /></p><p>
</p><p>
ஆரம்பத்தில் இது சமூக வலைதளப் பதிவிற்காக உருவாக்கப்பட்ட காணொளி எனப் பலர் கருதிய நிலையில், பின்னர் அந்த திருமணம் உண்மையில் நடைபெற்றதுதான் எனச் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>சிறு வயது முதலே நாங்கள் மூவரும் சகோதரிகளாகவும், தோழிகளாகவும் இருக்கிறோம். பெற்றோர் பார்த்த யாரையோ திருமணம் செய்து கொண்டு எங்களால் பிரிந்து வாழ முடியாது.

 அதனால்தான் நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து முடிவெடுத்து விகாசை திருமணம் செய்து கொண்டோம்’ என அந்த பெண்கள் சொல்லியிருக்கிறார்கள்</p><p>&nbsp;இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்துச் சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களும் காரசார விவாதங்களும் எழுந்துள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T13:20:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஜித் பிரேமதாச -சட்டத்தரணிகள் சங்கத் தலைவருக்கிடையில் இரகசிய ஒப்பந்தம்: நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்திய அரச தரப்பு எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rajeev-amarasuriya-sajith-basl-1784888109"></link>
            <id>https://tamilwin.com/article/rajeev-amarasuriya-sajith-basl-1784888109</id>
            <summary type="text">எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய ஆகியோருக்கிடையில் நடைபெற்ற இரகசிய பேச்சுவார்த்தையில் கொடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய ஆகியோருக்கிடையில் நடைபெற்ற இரகசிய பேச்சுவார்த்தையில் கொடுக்கல் வாங்கல் ஒன்று அதாவது டீல் ஒன்று நடந்துள்ளதாக அரசாங்க தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன எகொடவிதான இன்று (24.07.2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.</p><p>அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்
நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லை நீடிப்பு விவகாரத்தில் தங்களுக்கு உதவி செய்யுமாறு நடத்தப்பட்ட இரகசி கலந்துரையாடலில் வரவிருக்கும் மாகாண சபைத் தேர்தலின் போது மேல் மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளர் பதவியை வழங்குவதாக சஜித் பிரேமதாச ரஜீவ் அமரசூரியவுக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.
</p><h2>
</h2><p></p><h2>கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயம்</h2><p>இந்த கலந்துரையாடல் கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது.இந்த சட்டத்தரணிகள் சங்கம் ஷிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடாத்தான தலையீட்டிற்கு எதிராக, </p><p>அதாவது ராஜபக்ச ஆட்சியில் முழு நீதிமன்ற அமைப்பையும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் பிரதம நீதியரசரை வெளியேற்ற முற்பட்ட போது, அதற்கு எதிராக நிமிர்ந்து நின்ற ஒரு சட்டத்தரணிகள் சங்கம் அன்று இருந்தது. </p><p>அதேபோல் தான், 'அரகலய' போராட்ட காலத்திலும் இந்நாட்டின் இலட்சக்கணக்கான பொது மக்களுக்காக நின்ற சங்கம் அது.
ஆனால் இன்று, அதன் தற்போதைய தலைவர் ஒரு சிறிய குழுவுடன் சேர்ந்து, முதலமைச்சர் பதவிக்காக முழுச் சட்டத்தரணிகள் சங்கத்தின் நோக்கத்தையும் காட்டிக்கொடுத்து, சஜித் பிரேமதாசவுக்கு பக்கச் சார்பாக செயற்பட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/143a6df2-3bc5-4774-9cf2-1fd937cb58e6/26-6a633b2fd16fe.webp' /></p><p>சட்டத்தரணிகள் சங்கத்தில் உள்ள சகோதர சட்டத்தரணிகளிடம் நாம் கேட்டுக்கொள்வது என்னவென்றால்: உங்களுக்குப் புகழ்பெற்ற ஒரு வரலாறு உள்ளது. </p><p>நீங்கள் அநீதிக்கும் அநியாயத்திற்கும் எதிராக எப்போதும் நிமிர்ந்து நின்ற ஒரு சட்டத்தரணிகள் சங்கம். எனவே, தலைவரின் அடுத்த முதலமைச்சர் கனவுக்காக ஒரு சிலரின் நலனுக்காக உங்களின் அந்த கௌரவமிக்க சட்டத்தரணி பதவியை காட்டிக் கொடுக்காதீர்கள்.</p><p>&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T13:19:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[என் மனைவி பாதி இந்தியர்... எலான் மஸ்க் கூறியுள்ள விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/musk-says-i-am-not-racist-my-partner-half-indian-1784898952"></link>
            <id>https://news.lankasri.com/article/musk-says-i-am-not-racist-my-partner-half-indian-1784898952</id>
            <summary type="text">உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க், தன் துணைவி பாதி இந்தியர் என்றும், தன் பிள்ளைகளில் ஒருவருக்கு பிரபல இந்திய அறிவியலாளரின் பெயரை சூட்டியுள்ளதாகவும் தெரிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க், தன் துணைவி பாதி இந்தியர் என்றும், தன் பிள்ளைகளில் ஒருவருக்கு பிரபல இந்திய அறிவியலாளரின் பெயரை சூட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><h3>
எலான் மஸ்கிடம் எழுப்பப்பட்ட கேள்வி
</h3><p>
கோடீஸ்வரர் எலான் மஸ்கிடம் நீங்கள் இனவெறுப்பாளரா என கேள்வி எழுப்பப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d1e0afd-f84d-4edb-8cb1-3930dc1561d3/26-6a636589b0bd6.webp' /></p><p>
அதற்கு பதிலளிக்கும்போது, தன் துணைவி பாதி இந்தியர் என்றும், தனக்கும் அவருக்கும் நான்கு பிள்ளைகள் இருப்பதாகவும், தன் பிள்ளைகளில் ஒருவருக்கு பிரபல இந்திய இயற்பியலாளரான சுப்ரமணியம் சந்திரசேகரின் நினைவாக சேகர் என பெயர் சூட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் எலான் மஸ்க்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bcea793-c96c-454f-9014-c50e104533d1/26-6a63658a61e54.webp' /></p><p>
எலான் மஸ்கின் துணைவியான ஷிவோன் ஸிலிஸ் (Shivon Zilis) கனடாவில் பிறந்தவர். அவரது தாய், இந்தியாவின் பஞ்சாப் பின்னணி கொண்டவர்.&nbsp;</p><p></p><p>

ஆகவேதான், தன் துணைவி பாதி இந்தியர் என்று கூறியுள்ளார் எலான் மஸ்க்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca0951cf-9cf7-47f0-ac00-74cc058930b2/26-6a63658b13659.webp' /></p><p>
அத்துடன், நான் ஒரு இனவெறுப்பாளர் அல்ல என்று கூறுவேன் என்று கூறியுள்ள எலான் மஸ்க், எனது நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களைப் பார்த்தால், அவர்களில் அனைத்து இனங்களையும் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் உள்ளதைக் காணலாம்.
</p><p>
அங்கே எந்த இனவெறுப்பும் இருப்பதாக நான் நினைக்கவில்லை என்றும் கூறியுள்ளார் எலான் மஸ்க்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T13:16:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சினிமாவுக்காக IT கம்பெனியை உதறிய நடிகர், நடிகைகள்!! யார் யார் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/actors-worked-it-companies-before-entering-cinema-1784895681"></link>
            <id>https://viduppu.com/article/actors-worked-it-companies-before-entering-cinema-1784895681</id>
            <summary type="text">IT கம்பெனிநடிகர், நடிகைகள் பலர் சினிமாவிற்கு வருவதற்கு முன் அவர்கள் படித்த படிப்பிற்கான வேலைகளை பார்த்து வந்தனர். அப்படி டாக்டர் படிப்பை பாதியிலேயே நி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>IT கம்பெனி</h2><p>நடிகர், நடிகைகள் பலர் சினிமாவிற்கு வருவதற்கு முன் அவர்கள் படித்த படிப்பிற்கான வேலைகளை பார்த்து வந்தனர். அப்படி டாக்டர் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சினிமாவிற்கு வந்த நடிகைகள் தெரிந்த ஒன்றுதான். ஆனால் சினிமாவுக்கு வருவதற்கு முன் ஐடி கம்பெனியில் வேலை பார்த்த நடிகர்கள்? எந்த ஐடி கம்பெனி? என்ற விவரம் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee5a1b69-9e10-4421-bdc4-13d5eeba2d7b/26-6a6358c3236a4.webp' /></p><p>தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக் அதிகழ்ந்து வரும் நடிகை கயாடு லோஹர், திரை பயணத்திற்கு முன் கான்சென்ட்ரிக்ஸ்(Concentrix) என்ற ஐடி நிறுவனத்தில் வேலை செய்துள்ளார். தெலுங்கு நடிகை அனன்யா நாகல்லா, இன்ஃபோசிஸ் என்ற ஐடி கம்பெனியில் பணியாற்றி பின் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee5a1b69-9e10-4421-bdc4-13d5eeba2d7b/26-6a6358c3236a4.webp' /></p><p>
நடிகர் பசி ஜோசப் சினிமாவுக்கு முன் இன்ஃபோசிஸ் கம்பெனியில் வேலை பார்த்துள்ளார். நடிகர் டோவினா தாமஸ் காக்னிசண்ட் கம்பெனியில் வேலை பார்த்தவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c5e458f-1bb8-49b5-bf15-01d07b0d8f82/26-6a6358c47ab53.webp' /></p><p>

மலையாள நடிகர் நிவின் பாலி இன்ஃபோசிஸ் கம்பெனியில் பணியாற்றி பின் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார்.

நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க வருவதற்கு முன் ஆக்சென்ச்சர் என்ற ஐடி கம்பெனியில் பணியாற்றியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a18ea050-af39-48c8-9c85-abe7f5460aff/26-6a6358c52c6b3.webp' /></p>]]></content>
            <updated>2026-07-24T13:15:00+00:00</updated>
        </entry>
    </feed>
