<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-29T10:07:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு - ரூ.2,983 கோடியுடன் RCB முதலிடம், CSK நிலை என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2026-ipl-brand-value-rcb-tops-csk-in-4th-1785319284"></link>
            <id>https://news.lankasri.com/article/2026-ipl-brand-value-rcb-tops-csk-in-4th-1785319284</id>
            <summary type="text">உலகளாவிய முதலீட்டு வங்கியான ஹூலிஹான் லோக்கி, 2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் பிராண்ட் மதிப்பீட்டு ஆய்வை வெளியிட்டுள்ளது.  

11 சதவீதம் உயர்ந்த ஐபிஎல் மதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளாவிய முதலீட்டு வங்கியான ஹூலிஹான் லோக்கி, 2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் பிராண்ட் மதிப்பீட்டு ஆய்வை வெளியிட்டுள்ளது. </p><h3> 

11 சதவீதம் உயர்ந்த ஐபிஎல் மதிப்பு</h3><p> 

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் வணிக மதிப்பு, 11 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து 20.6 பில்லியன் டொலராக(இந்திய மதிப்பில் ரூ.1.97 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8448ddfd-a39b-48c6-9522-c3ab3c3ba079/26-6a69cf761dc3b.webp' /></p><p>

ஐபிஎல் வணிக மதிப்பில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இரட்டை இலக்க வளர்ச்சி ஏற்பட்டிருப்பதையே இந்த அதிகரிப்பு பிரதிபலிக்கிறது.</p><p>

ஐபிஎல் இன் தனிப்பட்ட பிராண்ட் மதிப்பு கடந்த ஆண்டில் 10.3 சதவீதம் உயர்ந்து, 4.3 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. </p><p>

NFLக்குஅடுத்தபடியாக, உலகின் முதன்மையான விளையாட்டு நிறுவனங்களில் ஒன்றாக ஐபிஎல் உருவெடுத்துள்ளது.&nbsp;</p><p></p><p>

ஜியோஸ்டாரின் கூற்றுப்படி, பார்வையாளர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு 7% அதிகரித்துள்ளது.
</p><h3>
முதலிடத்தில் RCB</h3><p> 

RCB, 2025 ஆம் ஆண்டில் இருந்த 269 மில்லியன் டொலர் மதிப்பிலிருந்து 16.0% அதிகரித்து, 312 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.2,983 கோடி) பிராண்ட் மதிப்புடன் ஐபிஎல் இன் மிகவும் மதிப்புமிக்க அணியாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83a408f4-fac0-413a-80a2-d2eb7476c82c/26-6a69cf76c2a0a.webp' /></p><p>

மேலும், 300 மில்லியன் டொலர் பிராண்ட் மதிப்பு என்ற மைல்கல்லை கடந்த முதல் கிரிக்கெட் அணி என்ற பெருமையை RCB பெற்றுள்ளது.</p><p> 

2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் 9 வது இடத்தை பிடித்திருந்தாலும், 2025 ஆம் ஆண்டில் இருந்த 242 மில்லியன் டொலரிலிருந்து 9.1% அதிகரித்து, 264 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.2,524 கோடி) பிராண்ட் மதிப்பை பதிவு செய்துள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p>
கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 2025 ஆம் ஆண்டில் இருந்த 227 மில்லியன் டொலரிலிருந்து 7.9% அதிகரித்து, 245 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.2,343 கோடி) பிராண்ட் மதிப்பை எட்டியது. </p><p>

CSK 3.8% ஆண்டு வளர்ச்சியுடன், 244 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.2,333 கோடி) பிராண்ட் மதிப்புடன் 4வது இடத்தில் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2eabe9f-7295-4301-8814-ee38f2d450ff/26-6a69cf777656d.webp' /></p><p>

9.1% வளர்ச்சியுடன் 168 மில்லியன் டொலர் பிராண்ட் மதிப்புடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 5வது இடத்திலும், 10.3% வளர்ச்சியுடன் 161 மில்லியன் டொலர் பிராண்ட் மதிப்புடன் ராஜஸ்தான் ராயல்ஸ் 6வது இடத்திலும், 12.1% வளர்ச்சியுடன் 158 மில்லியன் டொலர் பிராண்ட் மதிப்புடன் பஞ்சாப் கிங்ஸ் 7வது இடத்திலும் உள்ளன.
</p><p>
10.6% வளர்ச்சியுடன் 157 மில்லியன் டொலர் பிராண்ட் மதிப்புடன் குஜராத் டைட்டன்ஸ் 8வது இடத்திலும், 2.6% வளர்ச்சியுடன் 156 மில்லியன் டொலர் பிராண்ட் மதிப்புடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் 9வது இடத்திலும், 122 மில்லியன் டொலர் பிராண்ட் மதிப்புடன் மதிப்புடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 10வது இடத்திலும் உள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T10:02:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தின் கழிவுநீரில் விலைமதிப்பற்ற தங்கம், வெள்ளி! ஆண்டுதோறும் 43 கிலோகிராம் தங்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gold-and-silver-in-switzerland-s-wastewater-1785319370"></link>
            <id>https://jvpnews.com/article/gold-and-silver-in-switzerland-s-wastewater-1785319370</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சுவிட்சர்லாந்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வழியாக ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலைம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;சுவிட்சர்லாந்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வழியாக ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலைமதிப்பற்ற உலோகங்கள் கழிவுநீருடன் கலந்து செல்வது Eawag மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.
</p><p>


சுவிட்சர்லாந்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கூட்டாட்சி நிறுவனமான Eawag மேற்கொண்ட ஆய்வில், நாட்டின் 64 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fff8db04-5c4f-4a05-8b30-9816c2902d40/26-6a69cfcce6aac.webp' /></p><h2>ஆண்டுதோறும்&nbsp; 43 கிலோகிராம் தங்கமும், 3,000 கிலோகிராம் வெள்ளியும்</h2><p>
</p><p>


அந்த ஆய்வின் படி, ஆண்டுதோறும் சுமார் 43 கிலோகிராம் தங்கமும், 3,000 கிலோகிராம் வெள்ளியும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை வந்தடைகின்றன. இவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>


வீடுகளில் பயன்படுத்தப்படும் நகைகள் மற்றும் பல்வேறு பொருட்களில் இருந்து வெளியேறும் மிகச் சிறிய உலோகத் துகள்கள் கழிவுநீரில் கலந்து செல்லக்கூடும்.



அதேவேளை, சுவிட்சர்லாந்தின் ஜூரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடிகார உற்பத்தித் தொழிற்சாலைகளும் முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகின்றன.
</p><p>
 இத்தொழில்களில் பயன்படுத்தப்படும் தங்கம், ருத்தேனியம், ரோடியம் உள்ளிட்ட உலோகங்களின் துகள்கள் கழிவுநீருடன் கலந்து சுத்திகரிப்பு நிலையங்களைச் சென்றடைகின்றன.



கழிவுநீரில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும், நாடு முழுவதும் அதை மீட்டெடுப்பது பொருளாதார ரீதியாக லாபகரமானதாக இல்லை எனவும் கூறப்படுகின்றது.
</p><p>


 ஈனெனில் , கழிவுநீரில் இருந்து தங்கம் மற்றும் பிற உலோகங்களைப் பிரித்தெடுப்பதற்கான செலவு, அவற்றின் மதிப்பைவிட அதிகமாக இருக்கக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>


ஆனால் சுவிட்சர்லாந்தின் டிசினோ பகுதியில் கழிவுநீர் சேற்றில் அதிக அளவு தங்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதியில் செயல்படும் தங்க சுத்திகரிப்பு ஆலைகளால், குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தங்கத்தை மீட்டெடுப்பது லாபகரமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>


அதேசமயம் சுவிட்சர்லாந்து மட்டுமல்லாமல், அமெரிக்காவிலும் கழிவுநீர் சேற்றில் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான டொலர்கள் மதிப்புள்ள தங்கம் உள்ளிட்ட விலைமதிப்பற்ற உலோகங்கள் கலந்து செல்வதாக முந்தைய ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-07-29T10:00:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[களுவாஞ்சிகுடியில் மோட்டார் சைக்கிள் திருடிய இளைஞர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/motorcycle-stolen-in-kaluvanchikudy-recovered-1785318143"></link>
            <id>https://tamilwin.com/article/motorcycle-stolen-in-kaluvanchikudy-recovered-1785318143</id>
            <summary type="text">களுவாஞ்சிகுடியில் வைத்து களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமை பகுதியில்
வைத்து பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுவாஞ்சிகுடியில் வைத்து களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமை பகுதியில்
வைத்து பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p>இந்த சம்பவம் தொடர்பில் மேலும்
தெரியவருவதாவது,&nbsp; மட்டக்களப்பு-&nbsp; களுவாஞ்சிகுடி
கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் மோட்டார் வைக்கிள் கடந்த (2026.07.22) அன்று
களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் ஆலயத்தில் வைத்து காணாமல் போயுள்ளது.</p><p> இது தொடர்பில் குறித்த நபர் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப்
பதிவு செய்திருந்தார்.</p><p></p><h2>கைது</h2><p>
</p><p>இதனையடுத்து, நேற்று(28.07.2026) குறித்த மோட்டார் சைக்கிளையும் அதனைக் களவாடிச்
சென்றதாகக் கருதப்படும் சந்தேக நபரையும் பாணமை பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67bf1936-d9fc-4a7e-b830-6af553721786/26-6a69ce8b6061c.webp' /></p><p>&nbsp;இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 25 வயது மதிக்கத்தக்கவர் எனவும்,
மோட்டார் சைக்கிளின் பெறுமதி சுமார் எட்டு இலட்சத்தது தொண்ணூராயிரத்துக்கு மேல்
எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>குறித்த நபர்
மிகவும் சூட்சுமமான முறையில் குறித்த மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்று
இலக்கத் தகட்டையும் மாற்றிவிட்டு கதிர்காமம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த
நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T09:59:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலை புலிகள் காலத்தில் கூடப் பெரஹெராக்கள் பாதுகாப்பாக நடந்தன! அரசாங்கத்தை கடுமையாக சாடிய நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hold-provincial-elections-namal-challenges-govt-1785314375"></link>
            <id>https://ibctamil.com/article/hold-provincial-elections-namal-challenges-govt-1785314375</id>
            <summary type="text">விடுதலை புலிகள் காலத்தில் கூட வரலாற்று ரீதியாகத் தலதா பெரஹரா மற்றும் கதிர்காம பெரஹெராக்கள் பாதுகாப்பாக நடாத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விடுதலை புலிகள் காலத்தில் கூட வரலாற்று ரீதியாகத் தலதா பெரஹரா மற்றும் கதிர்காம பெரஹெராக்கள் பாதுகாப்பாக நடாத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>

கட்சித் தலைமையகத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்தநிலையில், அரசாங்கம் இந்த நாட்டு மக்களின் உண்மையான விருப்ப நிலையை அறிந்துகொள்ள விரும்பினால் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்குப் பணத்தைக் கொடுத்துக் கருத்துக்கணிப்பு அறிக்கைகளைப் பெறுவதைத் தவிர்த்து உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>கருத்துக்கணிப்பு அறிக்கை</h2><p>


அரசாங்கம் பணம் கொடுத்துச் செய்யும் கருத்துக்கணிப்பு அறிக்கைகளிலேயே நாட்டின் 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் பட்டினியால் அவதிப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் ஜனாதிபதியை எத்தனை சதவீத மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதைத் துல்லியமாக அறிய முடியும் என தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b07364b6-5a79-46a8-b0d3-5c6a70c7e4cf/26-6a69c22287a36.webp' /></p><p>மேலும் தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது.</p><p>

இருப்பினும், ஒரு கட்சியாக நாங்கள் எந்த நேரத்திலும் எந்தவொரு தேர்தலையும் சந்திக்கத் தயாராகவே உள்ளோம்.</p><p>
</p><p></p><h2>குழுக்களின் அச்சுறுத்தல்&nbsp;</h2><p>வழக்கறிஞர்கள் சங்கம் (BASL), பொதுநலவாய வழக்கறிஞர்கள் சங்கம், ஆசிய வழக்கறிஞர்கள் சங்கம், சட்டத்தரணிகள் மற்றும் கீழ் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட ஒட்டுமொத்த மக்களின் விருப்பத்திற்கும் எதிராக அரசாங்கம் தன்னிச்சையாக அரசியலமைப்புத் திருத்தங்களைக் கொண்டுவந்து அதிகாரத்தைத் தக்கவைக்க நினைத்தால் அது பெரும் தவறாகும்.</p><p>வரலாற்றில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்ட அரசாங்கங்களுக்கு நேர்ந்த கதியைத் தற்போதைய ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c721733-246d-48aa-9399-9ed8c1cbffc1/26-6a69c223dbb40.webp' /></p><p>பாதாள உலகக் குழுக்களின் அச்சுறுத்தலைக் காரணம் காட்டி கலாச்சாரப் பெரஹராக்களைத் தீர்மானிக்கக் கூடாது. </p><p>

விடுதலைபுலிகள் மற்றும் ஜே.வி.பி அச்சுறுத்தல்கள் மற்றும் குண்டுவெடிப்புகளுக்கு மத்தியிலும் வரலாற்று ரீதியாகத் தலதா பெரஹரா மற்றும் கதிர்காம பெரஹராக்கள் பாதுகாப்பாக நடாத்தப்பட்டன.</p><p> </p><p></p><h2>எதிர்காலக் கூட்டணிகள்&nbsp;</h2><p>எனவே, ஊர்வலத்தில் பங்கேற்கும் நடனக் கலைஞர்கள், யானைகள், நிலமேக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
</p><p>
நாங்கள் மறைமுக அரசியல் செய்யமாட்டோம், எதிர்காலக் கூட்டணிகள் குறித்து யாருடனாவது பேச்சுவார்த்தை நடத்தினால் அதை வெளிப்படையாகவே செய்வோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67c00890-fbef-4100-b14b-29590184baba/26-6a69c2233ad92.webp' /></p><p>

தனிநபர்களின் தேவைகளுக்காக அன்றி, நாட்டின் மற்றும் மக்களின் நலன்களுக்காக மட்டுமே கூட்டணிகள் அமைக்கப்படும்.
</p><p>
கடந்த காலத்தில் பல்வேறு காரணங்களால் பிரிந்து சென்றவர்களையும், புதிதாக இணைந்தவர்களையும் பாதுகாத்து நாட்டின் சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய வலுவானதொரு அரசியல் சக்தியைக் கட்டியெழுப்புவதே எனது முதன்மைப் பொறுப்பாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T09:53:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று உருவாகும் 3 ராஜயோகங்கள்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-3-rajyoga-formed-1785318479"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-3-rajyoga-formed-1785318479</id>
            <summary type="text">இந்த ஆண்டின் குரு பூர்ணிமா ஜூலை 29ஆம் திகதியான இன்று வருகிறது. 

இந்நாளில் சூரியனும், புதனும் சேர்ந்து புதாதித்ய ராஜயோகத்தை உருவாக்குகின்றன. 

அதோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின் குரு பூர்ணிமா ஜூலை 29ஆம் திகதியான இன்று வருகிறது. </p><p>

இந்நாளில் சூரியனும், புதனும் சேர்ந்து புதாதித்ய ராஜயோகத்தை உருவாக்குகின்றன. </p><p>

அதோடு குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசியில் இருப்பதால் ஹன்ஸ் ராஜயோகம் உருவாகியுள்ளது.</p><p> </p><p></p><p>அதுமட்டுமின்றி, சனியின் நிலையால் சச ராஜயோகமும் உருவாகியுள்ளது. </p><p>

இப்படி இந்த 3 ராஜயோகங்களும் குரு பூர்ணிமா நாளில் சுமார் 56 ஆண்டுகளுக்கு பின் உருவாகிறது.
</p><p>
அந்தவகையில், இன்று ஒரே நாளில் உருவாகும் 3 ராஜயோகங்களால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.</p><h2>ரிஷபம் </h2><ul><li>

திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடியும்.</li><li> தொழிலதிபர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்பு கிடைக்கும். </li><li>புதிய முதலீடுகளுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.</li><li> உயர் அதிகாரிகளிடம் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.</li><li> சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/034f3262-823a-41ce-8a6b-c9f13c511e4f/26-6a69cc51df646.webp' /></p><p>
</p><h2>
கும்பம்</h2><ul><li> 

வேலையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.</li><li> இக்காலத்தில் பெரிய வெற்றியைக் காணலாம். </li><li>வருமானத்தில் இருந்த தடைகள் நீங்கும்.</li><li> பல புதிய வழிகளில் இருந்து பண வரவு அதிகரிக்கும். </li><li>தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.</li></ul><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a6df11c-82da-4dd4-968d-54055897eca0/26-6a69cc528d77f.webp' /></p><h2>மகரம் </h2><ul><li>

கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.</li><li> நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
</li><li>முதலீடுகளில் இருந்து நல்ல வருமானம் கிடைக்கும். </li><li>
பணியிடத்தில் வேலைகளை வெற்றிகரமாக செய்வீர்கள்.</li><li> அலுவலகத்தில் பாராட்டைப் பெறுவீர்கள். </li><li>நிதி நிலை வலுவடையும்.&nbsp; &nbsp;&nbsp;</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21770857-ba9b-4d3f-83ab-7cf026626c4f/26-6a69cc533ab24.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T09:49:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈராக் மீது அமெரிக்க - சவூதி வான்வழித் தாக்குதல்; மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/u-s-and-saudi-arabia-strike-iran-backed-in-iraq-1785303129"></link>
            <id>https://canadamirror.com/article/u-s-and-saudi-arabia-strike-iran-backed-in-iraq-1785303129</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஈராக்கில் உள்ள,ஈரான் ஆதரவு இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு தெரிவித்துள்ளது.

கடந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஈராக்கில் உள்ள,ஈரான் ஆதரவு இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
கடந்த 72 மணித்தியாலங்களில் அமெரிக்கப் படைகள் மற்றும் சவூதி எரிசக்தி உட்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு, ஈரான் புரட்சிகரக் காவல்படை 30 க்கும் மேற்பட்ட வான்வழி தாக்குதல்களை நடத்தி இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3796d8ed-8e84-489f-98c4-98d2abf4eea0/26-6a69905b730d7.webp' /></p><p>
</p><p>
இந் நிலையில் அடந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக, ,ஈரான் ஆதரவு இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-29T09:45:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலைத்திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fuel-price-cut-amid-global-oil-decline-cpc-1785312851"></link>
            <id>https://ibctamil.com/article/fuel-price-cut-amid-global-oil-decline-cpc-1785312851</id>
            <summary type="text">உலக சந்தையில் குறைந்து வரும் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் விலைகளின் பலன், அடுத்த எரிபொருள் விலை திருத்தத்தின் போது பொதுமக்களுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக சந்தையில் குறைந்து வரும் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் விலைகளின் பலன், அடுத்த எரிபொருள் விலை திருத்தத்தின் போது பொதுமக்களுக்கு வழங்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.</p><p>

அடுத்த எரிபொருள் விலை திருத்தம் நாளை மறுநாள் (31) நடைபெற உள்ளதாகவும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.</p><p>

தற்போது, ​​பிரித்தானிய சந்தையில் ஒரு பரல் பிரென்ட் ரக கச்சா எண்ணெயின் விலை 86.66 அமெரிக்க டொலராகவும் அமெரிக்க சந்தையில் ஒரு பரல் கச்சா எண்ணெயின் விலை 81.73 அமெரிக்க டொலராகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>கச்சா எண்ணெய் விலை</h2><p>
</p><p>
கடந்த சில வாரங்களாக உலக சந்தை எரிபொருள் விலைகள் ஏற்ற இறக்கத்துடன் இருந்ததாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9130b366-d86b-4a57-9e89-0566f14b1e2a/26-6a69c9fdaa7e6.webp' /></p><p>சமீபத்திய வாரங்களில் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் மிகவும் நிலையற்றதாக இருந்து வருவதாகவும், கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் இரண்டிலும் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதாகவும் கூட்டுத்தாபனம் குறிப்பிட்டது. </p><p>இத்தகைய நகர்வுகள் இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவுகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துவதால், நிலவும் உலகளாவிய நிலைமைகளைப் பிரதிபலிக்கும் வகையில் மாதாந்த அல்லது அவ்வப்போது உள்நாட்டு விலை திருத்தங்கள் அவசியமாகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T09:44:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவின் புதிய மனிதவடிவ ரோபோக்களைத் தடை செய்த ட்ரம்ப் நிர்வாகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-bans-chinese-humanoid-1785318309"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-bans-chinese-humanoid-1785318309</id>
            <summary type="text">அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகக் கூறி, வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட புதிய மனிதவடிவ ரோபோக்களை (humanoid robots) இறக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகக் கூறி, வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட புதிய மனிதவடிவ ரோபோக்களை (humanoid robots) இறக்குமதி செய்வதற்குத் தடை விதிப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><h2>ஆதாரமற்ற காரணங்கள்</h2><p>
</p><p>ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நகர்வு, மனித உருவம் கொண்ட மற்றும் நான்கு கால்களைக் கொண்ட இயந்திரங்கள் உள்ளிட்ட மேம்பட்ட ரோபோக்களுக்குப் பொருந்தும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca452a26-1e12-4234-91ee-141a3653ec90/26-6a69cd4e1437f.webp' /></p><p> </p><p>இந்த மனிதவடிவ ரோபோக்களில் பல சீனாவில் தயாரிக்கப்படுகின்றன; அந்நாடு ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய துறைகளை மேம்படுத்துவதில் அமெரிக்காவுடன் போட்டியிட்டு வருகிறது. </p><p>அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை எனக் கருதப்படும் பவர் இன்வெர்ட்டர்களின் இறக்குமதியையும் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (FCC) தடை செய்துள்ளது. </p><p>இதனிடையே, வர்த்தக விவகாரங்களை அமெரிக்கா அரசியல்மயமாக்குவதையும், ஆதாரமற்ற காரணங்களின் அடிப்படையில் தடைகளை விதிப்பதையும் சீனா நீண்டகாலமாக எதிர்த்து வருவதாக அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>இந்தத் தடை, புதிதாகத் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மேம்பட்ட ரோபோட்டிக் சாதனங்கள் மற்றும் பவர் இன்வெர்ட்டர்களுக்குப் பொருந்தும்; அதேவேளையில், FCC-யால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட தற்போதுள்ள எந்தவொரு மொடலின் விற்பனையையோ அல்லது இறக்குமதியையோ இது தடுக்காது. </p><p>மேலும், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இன்வெர்ட்டர்களின் பயன்பாடு, வெளிநாட்டு நிறுவனங்கள் அவற்றை முடக்குவதற்கும், தரவுகளைத் திருடுவதற்கும், வெளிநாட்டு அரசாங்கத் தரப்பினர் தொலைநிலை அணுகல் மற்றும் கண்காணிப்பை எளிதாக்குவதற்கும், அல்லது இணையவழித் தாக்குதல் மூலம் வேறு விதங்களில் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கும் வழிவகுக்கக்கூடும் என்ற கவலைகளை FCC சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be142c57-584c-4dfa-aa73-eebe90c4bb42/26-6a69cd4d2a410.webp' /></p><p> </p><p>மட்டுமின்றி, அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்பட்ட ரோபோக்களைப் பயன்படுத்துவது, தீய நோக்கமுடையவர்கள் அமெரிக்கர்களைக் கண்காணிக்கவோ, வெளிநாட்டு உளவு அமைப்புகளின் திறன்களை மேம்படுத்தவோ அல்லது அந்த ரோபோக்களைத் தொலைவிலிருந்து தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரவோ வழிவகுக்கக்கூடும் என்றும் FCC மேலும் குறிப்பிட்டுள்ளது. </p><p>உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமான சீனாவுடனான வர்த்தகச் சமநிலையின்மையைச் சரிசெய்ய ட்ரம்ப் நிர்வாகம் முயற்சிக்கும் நிலையில், சீனாவின் ஏற்றுமதிகள் அமெரிக்காவின் தீவிரக் கண்காணிப்புக்கு உள்ளாகியுள்ளன.</p><h2>தடைகளை எதிர்கொள்ளக்கூடும்</h2><p> </p><p>மின்சார வாகனங்களை உலகிலேயே அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடாகத் திகழ்ந்த போதிலும், கடுமையான இறக்குமதி வரி காரணமாக அமெரிக்கச் சந்தையில் சீனாவால் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. </p><p>இதனிடையே, அமெரிக்காவின் அறிவுசார் சொத்துக்களைத் திருடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில், சீன செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனங்கள் தடைகளை எதிர்கொள்ளக்கூடும் என்றும் அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/018c834b-51b4-4476-b5fb-c8feca0c18dc/26-6a69cd4ebfca1.webp' /></p><p> </p><p>இதற்குப் பதிலளிக்கும் விதமாக, சீனாவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டது என்பது சொந்த அர்ப்பணிப்பு மற்றும் முயற்சியின் விளைவு, அத்துடன் சர்வதேச ஒத்துழைப்பின் பலன் என்று சீன அரசாங்கம் கூறியுள்ளது. </p><p>தொழிற்சாலைகள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு சூழல்களில் பயன்படுத்துவதற்காக, சீனத் தொழில்நுட்ப நிறுவனங்கள் மனிதவடிவ ரோபோக்களை (humanoid robots) தீவிரமாக உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T09:43:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை மிருணாள் தாகூரின் அசத்தலான போட்டோஷூட்.. கவனத்தை ஈர்க்கும் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/pan-indian-star-mrunal-thakur-latest-photoshoot-1785309863"></link>
            <id>https://cineulagam.com/article/pan-indian-star-mrunal-thakur-latest-photoshoot-1785309863</id>
            <summary type="text">பான்-இந்தியன் ஸ்டாராக இருக்கும் மிருணாள் தாகூர் தனது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபலம் ஆவார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பான்-இந்தியன் ஸ்டாராக இருக்கும் மிருணாள் தாகூர் தனது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபலம் ஆவார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் இணைப்பில் இருப்பதற்காக, தொடர்ந்து தனது ரீசன்ட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். </p><p>அந்த வகையில், தற்போது அசத்தலான போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகை மிருணாள் தாகூரின் இந்த சமீபத்திய போட்டோஷூட் ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ளது. இதோ அந்த போட்டோஷூட்:</p>]]></content>
            <updated>2026-07-29T09:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி வழங்க பரிந்துரை - அமைச்சர் ராஜ்மோகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/chicken-biryani-may-soon-be-part-of-midday-meals-1785316531"></link>
            <id>https://ibctamilnadu.com/article/chicken-biryani-may-soon-be-part-of-midday-meals-1785316531</id>
            <summary type="text">தனியார் பள்ளிகள் தங்களது கட்டணத்தை குறைக்க முன்வராவிட்டால், கட்டண நிர்ணயக் குழுவை மறுசீரமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துற...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனியார் பள்ளிகள் தங்களது கட்டணத்தை குறைக்க முன்வராவிட்டால், கட்டண நிர்ணயக் குழுவை மறுசீரமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccb5e796-117b-49e5-9464-a25d59102b27/26-6a69c9fcdd1e2.webp' /></p><p> இதில் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை அவர் கேட்டறிந்தார்.

அப்போது பேசிய அமைச்சர்,</p><h2>கல்வித் துறையில் புதிய முயற்சிகள்</h2><p> </p><p>முதலமைச்சரின் அனுமதியைப் பெற்று ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். </p><p>மேலும், ஆசிரியர் சங்கங்களின் மனுக்கள் மற்றும் கோரிக்கைகளை கண்காணிக்கும் வகையில் பிரத்யேக மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் மனுக்களின் நிலை மற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2604d721-4b5d-4a12-adac-efeda1769d21/26-6a69c9fd8c1b7.webp' /></p><p>
</p><p>
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், மாணவர்களின் சத்துணவு திட்டத்தில் புதிய முயற்சியாக வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து முதலமைச்சரிடம் பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தார்.</p><p> மதிய உணவு திட்டத்தை காமராஜர் தொடங்கியதாகவும், அதனை எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டமாக விரிவுபடுத்தியதாகவும், கலைஞர் அதில் முட்டையை சேர்த்ததாகவும் குறிப்பிட்ட அவர், அதே வரிசையில் மாணவர்களுக்கு பிரியாணி வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாக கூறினார்.
</p><p>
மேலும், அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ் தாய் வாழ்த்து தொடர்பாக எழுந்த விவகாரத்தில், தங்களது அரசு தமிழ் தாய் வாழ்த்துக்கு எப்போதும் முன்னுரிமை அளித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-07-29T09:39:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் போதைக்கு அடிமையான இளைஞனுக்கு நேர்ந்த அவலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drug-addicted-youth-dies-in-jaffna-1785317066"></link>
            <id>https://tamilwin.com/article/drug-addicted-youth-dies-in-jaffna-1785317066</id>
            <summary type="text">யாழில் போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவமானது நேற்றையதினம்(28) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் - சிராம்பியடியை சேர்ந்த 26 வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த சம்பவமானது நேற்றையதினம்(28) இடம்பெற்றுள்ளது.</p><p>
யாழ்ப்பாணம் - சிராம்பியடியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>உயிரிழப்பு</h2><p>
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் கடந்த 3 வருடங்களாக போதைவஸ்துக்கு அடிமையாக இருந்ததாக
தெரிவிக்கப்படுகிறது. </p><p>இந்நிலையில் நேற்றுமுன்தினம்(27.7.2026) காலை மலசலகூடம் சென்று
அங்கே மயக்கமுற்றுள்ளார்.

பின்னர் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27a193f6-2b20-4356-81a6-c7002d388cfe/26-6a69c9aab2cb6.webp' /></p><p>
</p><p>இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
</p><p>
அதிகளவான போதைவஸ்து பாவனை காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T09:37:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே மனுவில் மறைக்கப்பட்ட உண்மைகள் : நீதிமன்றில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-saleh-not-disclose-all-the-facts-in-court-1785311428"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-saleh-not-disclose-all-the-facts-in-court-1785311428</id>
            <summary type="text">முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உண்மைகள் எதனையும் மனுதாரரான சுரேஷ் சலே நீதிமன்றில் சமர்ப்பிக்காமல் மறைத்துள்ளார் என பிரதி சொலிசிட்டர் ஜெனர...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உண்மைகள் எதனையும் மனுதாரரான சுரேஷ் சலே நீதிமன்றில் சமர்ப்பிக்காமல் மறைத்துள்ளார் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். </p><p>பேராணை மனுவொன்றின் மூலம் நிவாரணம் பெற வேண்டுமாயின் அனைத்து உண்மைகளையும் நீதிமன்றில் வெளிப்படுத்த வேண்டும். அவர் தூய்மையான கரங்களுடன் நீதிமன்றத்திற்கு வரவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் ரிட் மனுவை சட்டத்தின் முன் எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல முடியும்? என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், மன்றில் கேள்வியெழுப்பியுள்ளார்.
</p><p></p><h2>சாரா ஜாஸ்மின்&nbsp;இந்தியாவுக்கு தப்பிச் செல்ல</h2><p>
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னை கைதுசெய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு மேல்முறையீட்டு நீதிமன்றில் நேற்று(28) மீண்டும் பரிசீலிக்கப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5da76883-fcb6-4937-abc8-0a151c79686c/26-6a69b831eb8ce.webp' /></p><p>
மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹான்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
</p><p>

 குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் மன்றில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், 'உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு மனுதாரரான சுரேஷ் சலே எவ்வாறு இடையூறு விளைவித்தார் என்பது குறித்து, அன்றைய காலகட்டத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றிய பிரசாத் ரணசிங்க வழங்கிய வாக்குமூலத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

2019ஆம் ஆண்டு சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 'சாரா ஜாஸ்மின்' என்ற பெண் உயிரிழக்கவில்லை என்றும், அவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்றும் பேச்சுக்கள் எழுந்தன. </p><h2>சுரேஷ் சலேவின் நிலைப்பாடு</h2><p>இது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சரியாக விசாரணை நடத்தவில்லை என சுரேஷ் சாலே விசாரணைப் மீளாய்வுக் கூட்டங்களில் குற்றஞ்சாட்டிப் பேசினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cab92bf5-c4e7-42c7-b86e-95c27012877f/26-6a69b832bc5db.webp' /></p><p>சாரா ஜாஸ்மின் அந்த இடத்திலேயே உயிரிழந்தார் என்றும், DNA பரிசோதனைகள் சரியாக நடத்தப்படவில்லை என்றும் சுரேஷ் சலே பல சந்தர்ப்பங்களில் குற்றஞ்சாட்டியதாக பிரதிப் பொலிஸ் மா அதிபரின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.</p><p> டி.என்.எ பரிசோதனையை மீண்டும் நடத்த வேண்டும் என்பதே சுரேஷ் சலேவின் நிலைப்பாடாக இருந்ததுடன், அன்றைய ஜனாதிபதி மூலம் அந்தப் பணியை அவர் நிறைவேற்றிக் கொண்டார் என்பதும் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் வாக்குமூலத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/bvS71qDw2ww" width="640" height="360" class="note-video-clip"></iframe></p>]]></content>
            <updated>2026-07-29T09:35:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உடனடி இடைநிறுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sub-inspector-of-police-immediately-suspended-1785317672"></link>
            <id>https://jvpnews.com/article/sub-inspector-of-police-immediately-suspended-1785317672</id>
            <summary type="text">&amp;nbsp; வத்துபிட்டிவல முதலீட்டு வலய பொலிஸ் காவல் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் பணி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வத்துபிட்டிவல முதலீட்டு வலய பொலிஸ் காவல் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் பணி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
</p><p>
கடந்த ஜூலை 23 ஆம் திகதி காலை சுமார் 10.45 மணியளவில், வத்துபிட்டிவல வைத்தியசாலைக்கு அருகிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் முன்பாக உத்தியோகபூர்வ சீருடையில் கடமையாற்றிக் கொண்டிருந்த கு அதிகாரி, </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25073e30-9359-4624-b347-b247abbf42b3/26-6a69c929ec25e.webp' /></p><h2>பொதுமக்களுடன் மிரட்டும் வகையில் தர்க்கம்</h2><p>கடமைக்கு பொருத்தமற்ற வகையில் நடந்து கொண்டு பொதுமக்களுடன் மிரட்டும் வகையிலான வார்த்தைப் பிரயோகங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
 சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த அதிகாரியின் செயற்பாடு இலங்கை பொலிஸின் மற்றும் முழு அரச சேவையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடியதாகக் கருதப்பட்டதால், நிறுவனச் சட்டத் தொகுப்பின் (Establishments Code) தொடர்புடைய விதிகளின் கீழ் அவரது கடமைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>
மேலும், இத்தகைய செயற்பாடுகள் ஏனைய அதிகாரிகளுக்கு தவறான முன்னுதாரணமாக அமையக்கூடும் என்றும், அவரை தொடர்ந்தும் சேவையில் வைத்திருப்பது பொலிஸ் சேவையின் கண்ணியத்திற்கும் நற்பெயருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பொலிஸ் தெரிவித்துள்ளது.
</p><p>
பொதுமக்களின் நம்பிக்கையையும் மரியாதையையும் பெற்ற ஒழுக்கமிக்க பொலிஸ் சேவையை நிலைநிறுத்துவதே தமது அடிப்படை நோக்கம் என வலியுறுத்தியுள்ள இலங்கை பொலிஸ், சட்டத்தையும் ஒழுக்கத்தையும் பாதுகாக்கப் பொறுப்பேற்றுள்ள அதிகாரிகளின் ஒழுங்கற்ற அல்லது பொருத்தமற்ற நடத்தைகள் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
பொதுமக்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்தும் வகையில் நீதியுடனும் பொறுப்புடனும் செயல்படுவதற்கு இலங்கை பொலிஸ் உறுதிபூண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T09:32:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் காதலிக்கு 860 கோடி சொத்து எழுதிய எப்ஸ்டீன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/jeffrey-epstein-assets-860-crore-ex-girlfrien-1785317171"></link>
            <id>https://canadamirror.com/article/jeffrey-epstein-assets-860-crore-ex-girlfrien-1785317171</id>
            <summary type="text">&amp;nbsp; ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தனது முன்னாள் காதலியாக கூறப்படும் பல் மருத்துவர் கரீனா ஷூலியாக் என்பவருக்கு 860 கோடி சொத்து எழுதி வைத்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தனது முன்னாள் காதலியாக கூறப்படும் பல் மருத்துவர் கரீனா ஷூலியாக் என்பவருக்கு 860 கோடி சொத்து எழுதி வைத்துள்ளமை தற்போது பெசுபொருளாகியுள்ளது.
</p><p>
சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க சிறையில் இருந்த போது ஜெஃப்ரி எப்ஸ்டீன் மர்மமான முறையில் இறந்து போனார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73fb806a-823a-4464-bbaa-1b12f3bcdcb1/26-6a69c735174fc.webp' /></p><h2>பல நாடுகளிலும் எப்ஸ்டீன் ஃபைல்ஸ்&nbsp; அதிர்வலை&nbsp;&nbsp;</h2><p> 

அவரது இறப்பின் பின் பல்வேறு உலகை உலுக்கும் பல்வேரு தகவல்&nbsp; வெளியாகி இருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயர் எப்ஸ்டீன் ஃபைல்ஸ்&nbsp; இந்த விவகாரம் அமெரிக்காவில் மட்டுமல்லாது பல நாடுகளிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
</p><p>
அதற்கு காரணம், அமெரிக்காவில் உள்ள பெரும் பணக்காரர்களை தன் வலைக்குள் கொண்டு வந்து கடலுக்கு நடுவில் ஒரு தனித்தீவை உருவாக்கி அங்கு உல்லாச விடுதிகளை கட்டி அங்கு சிறுமிகள் முதல் இளம்பெண்கள் வரை கொண்டு வந்து பணக்காரர்களுடன் உல்லாசமாக இருக்க வைத்து அது தொடர்பான வழக்கில் சிக்கியவர்தான் இந்த எப்ஸ்டீன் (Jeffrey Epstein).</p><p>



Epstein தொடர்பான ஆவணங்கள் Epstein Files என்கிற பெயரில் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வெளியாகி வந்தது. 

அதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ஆகியோர்களின் பெயர்கள் அடிபட்டதோடு, அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் வெளியானது.</p><p>

ஆனால், எப்ஸ்டீனூடன் நட்பாக பழகியதாக மட்டுமே அவர்கள் சொன்னர்கல். </p><p> இந்நிலையில்தான் அமெரிக்க பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனின் உயில் தொடர்பான புதிய ஆவணங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் அவர் முன்னாள் காதலியாக கூறப்படும் பல் மருத்துவர் கரீனா ஷூலியாக் என்பவருக்கு சுமார் ரூ.860 கோடி மதிப்பிலான சொத்தும், 33 காரட் வைர மோதிரமும் கிடைக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-29T09:24:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறை- ரீகல் சந்தியில் விபத்து: பெண் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-at-ampara-regal-junction-woman-injured-1785314097"></link>
            <id>https://tamilwin.com/article/accident-at-ampara-regal-junction-woman-injured-1785314097</id>
            <summary type="text">அம்பாறை- ரீகல் சந்தியில்&amp;nbsp; இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பெண்
ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த விபத்தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை- ரீகல் சந்தியில்&nbsp; இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பெண்
ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>குறித்த விபத்தானது&nbsp;நேற்று(28) மாலை இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p>நேற்று மாலை ரீகல் தெரு சந்திப்புப் பகுதியில் அதிவேகமாக வந்த வாகனம் ஒன்று
திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்
சைக்கிள் மற்றும் கார் மீது பலமாக மோதியுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>

இதன்போது, அந்தப் பகுதியில் நின்றுகொண்டிருந்த பெண் ஒருவர் மீதும் வாகனம்
மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.</p><p> அத்துடன்,
வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வான் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் இந்த
மோதலில் பலத்த சேதமடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1764585b-3f9e-4593-a1d1-1275a3d170fb/26-6a69bdf6b3e13.webp' /></p><p>

காயமடைந்த பெண் உடனடியாக மீட்கப்பட்டு அம்பாறை பொது மருத்துவமனைக்குக் கொண்டு
செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.</p><p>இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T09:19:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசியப் பாதுகாப்பிற்கு அபாயம்; சீன ரோபோக்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-administration-bans-chinese-robots-1785316616"></link>
            <id>https://canadamirror.com/article/trump-administration-bans-chinese-robots-1785316616</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கு ஏற்றுக்கொள்ள முடியாத அபாயங்கள் இருப்பதாகக் கூறி, வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட புதிய மனித உருவ ரோபோக்களை அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கு ஏற்றுக்கொள்ள முடியாத அபாயங்கள் இருப்பதாகக் கூறி, வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட புதிய மனித உருவ ரோபோக்களை அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்வதற்குத் தடை விதிப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் செவ்வாயன்று (28) அறிவித்தது.
</p><p>

இந்த நடவடிக்கை, மனித உருவம் கொண்ட மற்றும் நான்கு கால்களைக் கொண்ட இயந்திரங்கள் உள்ளிட்ட மேம்பட்ட ரோபோக்களுக்குப் பொருந்தும். இவற்றில் பல சீனாவில் தயாரிக்கப்படுபவை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14bb95e6-c9a1-48f3-a392-c90b267b81d1/26-6a69c50a02c72.webp' /></p><p>அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சாதனங்களாக இவை இருக்கக்கூடும் எனக் கூறியே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக FCC தெரிவித்துள்ளது.</p><p>

ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய துறைகளில் வளர்ச்சியை எட்டுவதில் சீனா அமெரிக்காவுடன் போட்டியிட்டு வரும் நிலையில் இந்த தடை உத்தரவு வந்துள்ளது.
</p><p>
அத்துடன், தரவு மையங்கள் மற்றும் சூரிய மின்கலத் தகடுகளில் பயன்படுத்தப்படும் மின்சக்தி மாற்றிகள் (Power Inverters) இறக்குமதிக்கும் அமெரிக்க கூட்டாட்சி தகவல் தொடர்பு ஆணையம் (FCC) தடை விதித்துள்ளது.
</p><p>வொஷிங்டனின் இந்த நடவடிக்கைக்கு பதிலளித்துள்ள சீனத் தூதரகம், வர்த்தக விவகாரங்களை அமெரிக்கா அரசியல்மயமாக்குவதையும், அடிப்படையற்ற காரணங்களை முன்வைத்துத் தடைகள் விதிப்பதையும் பெய்ஜிங் நீண்டகாலமாக எதிர்த்து வருவதாகக் கூறியுள்ளது.</p><p>
அத்துடன், தனது நலன்களுக்குப் பொருள்ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு செயலுக்கும் பதிலடியாக, சீன அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று தூதரகம் கூறியது.</p>]]></content>
            <updated>2026-07-29T09:15:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரியலில் ஆளே காணோம்..ஆனா கிளாமர் ரீல்ஸ்!! எதிர்நீச்சல் தொடர்கிறது அறிவுக்கரசி வீடியோ..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/ethirneechal-arivukarasi-gayathri-rani-reels-video-1785316150"></link>
            <id>https://viduppu.com/article/ethirneechal-arivukarasi-gayathri-rani-reels-video-1785316150</id>
            <summary type="text">சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்று டாப் 5 இடத்தில் இருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது. காயத்ரி ராணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்று டாப் 5 இடத்தில் இருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது. </p><h2>காயத்ரி ராணி</h2><p>இந்த சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை காயத்ரி ராணி. கடந்த இரு வாரங்களுக்கு மேலாக சீரியலில் ஆளே காணாமல் இருந்தார். அறிவுக்கரசி என்ற வில்லி ரோலில் நடித்த் காயத்ரி, கடைசியாக காயத்ரி ராணியின் அப்பா இறந்துவிட்டதால், குணசேகரன் வீட்டிலிருந்து வெளியேறுவது போல் காட்டப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67695543-5383-422a-8950-8cc01e72617b/26-6a69c338a3362.webp' /></p><p> </p><p>அதன்பின் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அவர் சீரியல் பக்கமே வரவில்லை. சீரியல் ஷூட் இல்லாததால் இன்ஸ்டாகிராம் பக்கம் ஆக்டிவாக இருந்து ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.</p><h2>கிளாமர் ரீல்ஸ்</h2><p> </p><p>தற்போது ஸ்லிம்மாக மாறியுள்ள காயத்ரி ராணி ஏய் அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா என்ற பாடலுக்கு ரொமாண்டிக், கிளாமர் லுக்கில் ஆட்டம் போட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbVk9AWop4l/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbVk9AWop4l/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DbVk9AWop4l/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Sri Gayathri Raja (@gayathri___rani)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-07-29T09:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் போதைக்கு அடிமையான இளைஞன் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/drug-addicted-youth-dies-in-jaffna-1785305811"></link>
            <id>https://ibctamil.com/article/drug-addicted-youth-dies-in-jaffna-1785305811</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் சிராம்பியடியை&amp;nbsp;சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் மலசல கூடத்தில் மயங்கி விழுந்து கிடந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.&amp;nbsp;இந்த சம்பவம் நேற்று (28...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் சிராம்பியடியை&nbsp;சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் மலசல கூடத்தில் மயங்கி விழுந்து கிடந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p>இந்த சம்பவம் நேற்று (28.072026) இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>குறித்த இளைஞன் வீட்டில் இருந்த மலசல கூடத்திற்கு நேற்று சென்ற நிலையில் அதிக நேரமாகியும் வரவில்லை என்ற காரணத்தால் வீட்டில் உள்ளவர்கள் சென்று பார்த்த போது அவர் அங்கே மயங்கி கிடந்துள்ளார்.&nbsp;</p><p></p><h2>போதைக்கு அடிமையான இளைஞன்</h2><p>இதன் பின்னர் அந்த இளைஞனை வீட்டில் உள்ளவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcaebef6-4e5b-4651-a24a-b1603467cbf2/26-6a69c3e5d164b.webp' /></p><p> இதன்போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் வைத்தியசாலைக்கு அழைத்து சென்றவர்களிடம் கூறி உள்ளனர்.&nbsp;</p><p>
இதனை தொடர்ந்து உயிரிழந்த இளைஞனின் உடல் பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த விடயம் குறித்த விசாரணையின் போது குறித்த இளைஞன் 3 ஆண்டுகள் காலமாக கடுமையான போதைப்பொருள் பழக்கத்திற்கு உள்ளாகியிருந்தமை தெரியவந்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T09:13:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருவில் இறந்த குழந்தை: பிரித்தானிய தாய்க்கு கிடைத்த பேரதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-mom-got-animal-ashes-instead-her-baby-ash-1785315792"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-mom-got-animal-ashes-instead-her-baby-ash-1785315792</id>
            <summary type="text">பிரித்தானியாவில், கருவிலேயே உயிரிழந்த தன் குழந்தையின் அஸ்தியை மூன்று ஆண்டுகளாக பத்திரமாக வைத்திருந்தார் தாய் ஒருவர்.

ஆனால், அவர் வைத்திருந்தது அவரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில், கருவிலேயே உயிரிழந்த தன் குழந்தையின் அஸ்தியை மூன்று ஆண்டுகளாக பத்திரமாக வைத்திருந்தார் தாய் ஒருவர்.
</p><p>
ஆனால், அவர் வைத்திருந்தது அவரது குழந்தையின் அஸ்தி அல்ல, அது ஒரு விலங்கின் அஸ்தி என தெரியவந்ததால் பேரதிர்ச்சிக்குள்ளானார் அவர்.</p><h3>

கருவில் இறந்த குழந்தை</h3><p>

இங்கிலாந்தில் வாழும் லூசி நெஸ் (Lucy Ness, 28) என்னும் இளம்பெண்ணின் குழந்தை, 2021ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி, அவரது கருவிலேயே உயிரிழந்துவிட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afa7e7d5-9160-489e-86d7-74fcfc24e723/26-6a69c1d1b86e3.webp' /></p><p>
தங்கள் குழந்தையின் உடலை லூசியும் அவரது கணவரான கால்லம் எல்லெர்பியும் (Callum Ellerby), இங்கிலாந்தின் Hull என்னுமிடத்திலுள்ள Legacy Independent Funeral Directors Ltd என்னும் இறுதிச்சடங்கு மையத்தில் ஒப்படைத்துள்ளார்கள்.
</p><p>
மே மாதம் 10ஆம் திகதி, குழந்தையின் உடல் தகனம் செய்யப்பட்டதாகக் கூறி, 11ஆம் திகதி, அஸ்திக்கலசம் ஒன்றை அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர் இறுதிச்சடங்கு மைய அலுவலர்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28384676-1c76-47a0-8771-10d968c15cd6/26-6a69c1d26aaf4.webp' /></p><p>
இந்நிலையில், 2024ஆம் ஆண்டு, மார்ச் மாதம், லூசியின் குழந்தைக்கு இறுதிச்சடங்கு செய்த இறுதிச்சடங்கு மையத்தில் ஒரு பெரிய பிரச்சினை கண்டறியப்பட்டது.&nbsp;</p><p></p><h3>

அதிரவைத்த காட்சி
</h3><p>
ஆம், அந்த இறுதிச்சடங்கு மையத்தில், 30க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படாமலே வைக்கப்பட்டிருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ebed7fe-8b56-4f18-b533-161eabde1bde/26-6a69c1d31e7bd.webp' /></p><p>
அங்கு சென்ற பொலிசார் கண்ட காட்சி அவர்களை அதிரவைத்துள்ளது. ஆம், அங்கு ஏராளமான உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்துள்ளன. அவற்றில் பல அழுகத்துவங்கியிருந்திருக்கின்றன.
</p><p>
அத்துடன், அங்கு சுமார் 100 அஸ்திக்கலசங்களும் இருந்துள்ளன.</p><h3>

பிரித்தானிய தாய்க்கு கிடைத்த பேரதிர்ச்சி</h3><p>

இந்நிலையில், லூசியும் தன் குழந்தையும் அந்த இறுதிச்சடங்கு மையத்தில்தான் தகனம் செய்யப்பட்டது என்பதால் அது குறித்து விசாரித்துள்ளார்.
</p><p>
அவருக்கு கிடைத்த தகவல் அவரை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆம், அவரிடம், அவரது குழந்தையின் அஸ்தி என ஒப்படைக்கப்பட்ட அஸ்தி, ஏதோ ஒரு விலங்குடைய அஸ்தி, அதாவது, ஒரு செல்லப்பிராணியின் அஸ்தி என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.</p><p>

தாங்கள் இதுவரை தங்கள் குழந்தையின் அஸ்தி என நினைத்து பாதுகாத்து வைத்திருந்தது ஒரு விலங்கின் அஸ்தி என தெரியவந்ததால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள் லூசி, கால்லம் தம்பதியர்.</p><p>

இந்நிலையில், அந்த இறுதிச்சடங்கு மைய இயக்குநரான ராபர்ட் புஷ் (48) வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T09:05:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாபா பாணியில் நாவூரும் சுவையில் முட்டை பட்டாணி மசாலா... இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/tasty-egg-pattani-masala-recipe-in-tamil-1785313154"></link>
            <id>https://manithan.com/article/tasty-egg-pattani-masala-recipe-in-tamil-1785313154</id>
            <summary type="text">பொதுவாக அனைவரும் எளிதில் வாங்கக்கூடிய, குறைந்த விலையில் கிடைக்கும் சத்தான உணவுப் பொருட்களின் பட்டியலில் முட்டைக்கு எப்போதும் முக்கியமான இடம் உண்டு. கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக அனைவரும் எளிதில் வாங்கக்கூடிய, குறைந்த விலையில் கிடைக்கும் சத்தான உணவுப் பொருட்களின் பட்டியலில் முட்டைக்கு எப்போதும் முக்கியமான இடம் உண்டு. </p><p>குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் முட்டை, உடலுக்குத் தேவையான உயர்தர புரதச்சத்தை வழங்கும் சிறந்த உணவாக விளங்குகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89a94dfd-6772-4fa4-8782-607523f37284/26-6a69c133bf91b.webp' /></p><p></p><p>
முட்டையில் உள்ள புரதம் உடல் தசைகளின் வளர்ச்சிக்கும், செல்களின் சீரமைப்புக்கும் உதவுவதுடன், உடலின் பல்வேறு முக்கிய செயல்பாடுகளுக்கும் ஆதரவாக அமைகிறது. </p><p>மேலும் இதில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் எலும்புகளின் வலிமை, கூந்தல் வளர்ச்சி, இதய ஆரோக்கியம் மற்றும் சருமப் பொலிவை பாதுகாக்க உதவுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c31101bf-cf85-426c-a976-e0e6eeb55c43/26-6a69c1346d991.webp' /></p><p>
</p><p>அந்தவகையில், அன்றாட உணவில் இடம்பெறும் முட்டையை சற்று வித்தியாசமான முறையில், சுவை நிறைந்த தாபா பாணியில் மசாலா சுவையும் பட்டாணியின் தனித்துவமான சுவையும் இணைந்த முட்டை பட்டாணி மசாலாவை வீட்டிலேயே எளிய முறையில் எப்படி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>தேவையான பொருட்கள்
</h2><p><b>முட்டையை வறுக்க தேவையானவை</b></p><p>6 வேகவைத்த முட்டைகள்</p><p>
1 ஸ்பூன் எண்ணெய்</p><p>
¼ ஸ்பூன் மஞ்சள் தூள்</p><p>
½ ஸ்பூன் காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89ea6c79-3455-40cf-928c-6dfe05c36f86/26-6a69c1351d72b.webp' /></p><p><b>
மசாலா தயாரிக்க தேவையானவை&nbsp;</b></p><p> 2 ஸ்பூன் நெய்
</p><p>2 ஸ்பூன் எண்ணெய்
</p><p>1 கப் நறுக்கிய வெங்காயம்</p><p>
1 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது</p><p>
2 நறுக்கிய பச்சை மிளகாய்</p><p>
1 கப் அரைத்த புதிய தக்காளி விழுது
</p><p>2 ஸ்பூன் மல்லித் தூள்</p><p>
½ ஸ்பூன் மஞ்சள் தூள்</p><p>
1 ஸ்பூன் காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள்
</p><p>½ ஸ்பூன் சீரகத் தூள்
</p><p>தேவையான அளவு உப்பு</p><p>
1 ஸ்பூன் கடலை மாவு</p><p>
½ கப் வேகவைத்த பச்சை பட்டாணி</p><p>
1 ஸ்பூன் கசூரி மேத்தி</p><p>
½ ஸ்பூன் கரம் மசாலா</p><p> தூள்
1 ஸ்பூன் எலுமிச்சை சாறு</p><p>
2 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b446be14-7028-4dab-b87e-298dc2f0b201/26-6a69c135bee5a.webp' /></p><h2>
செய்முறை
</h2><p>முதலில் முட்டைகளை வேகவைத்து, தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். முட்டையின் மேல் கத்தியால் லேசாக சிறிய கீறல்கள் போடவும். இதனால் மசாலாவின் சுவை முட்டைக்குள் நன்றாக ஊறும்.</p><p>

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்த எண்ணெயை ஊற்றி&nbsp; மிதமான தீயில் சூடாக்கி, அதில் மஞ்சள் தூள் மற்றும் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கந்துக்கொள்ள வேண்டும்.</p><p> பின்னர் முட்டைகளைச் சேர்த்து, எல்லா பக்கங்களிலும் லேசாக பழுப்பு நிறமாகும் வரை நன்றாக வறுக்கவும். வறுத்த முட்டைகளை ஒரு தட்டில் எடுத்து வைக்த்துக்கொள்ள வேண்டும்.அதே பாத்திரத்தில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.</p><p>அதில் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் இஞ்சி-பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70861d68-f652-41a8-88d7-5906916ad1dd/26-6a69c1366e7c3.webp' /></p><p></p><p>
</p><p>
அடுத்து அரைத்த தக்காளி விழுதைச் சேர்த்து நன்கு கிளறி, தக்காளி நன்றாக சமைந்து எண்ணெய் பிரியும் வரை வதக்க</p><p>பிறகு மல்லித் தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத் தூள், உப்பு மற்றும் கடலை மாவு சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.</p><p>
மசாலாவின் பச்சை வாசனை நீங்கியதும், வேகவைத்த பச்சை பட்டாணி, வறுத்த முட்டைகள் மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி, மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.</p><p>பின்னர் பாத்திரத்தை மூடி வைத்து, பட்டாணி மென்மையாகும் வரை வேகவிட்டு,&nbsp; இடையிடையே கிளறி விடவும்.</p><p>

இறுதியாக கசூரி மேத்தி, கரம் மசாலா தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும்.&nbsp; நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கினால் அவ்வளவு தான், அசத்தல் சுவையில்,&nbsp; பட்டாணி முட்டை மசாலா தயார்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T09:02:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA['எளிதில் ஏமாந்து போவேன்'.. பலம், பலவீனம் குறித்து பேசிய நடிகை கயாடு லோஹர்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/kayadu-lohar-about-her-strength-and-weakness-1785308736"></link>
            <id>https://cineulagam.com/article/kayadu-lohar-about-her-strength-and-weakness-1785308736</id>
            <summary type="text">கயாடு லோஹர்இளம் சென்சேஷனல் நடிகையாக வலம் வருகிறார் கயாடு லோஹர். இவர் தமிழில் வெளிவந்த டிராகன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படம் இவருக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கயாடு லோஹர்</h2><p>இளம் சென்சேஷனல் நடிகையாக வலம் வருகிறார் <a href="https://www.youtube.com/watch?v=GtkoL4osUG0" target="_blank">கயாடு </a>லோஹர். இவர் தமிழில் வெளிவந்த டிராகன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படம் இவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இதை தொடர்ந்து இவர் நடிப்பில் இதயம் முரளி திரைப்படம் வெளியானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6d92da0-d900-4bb0-ac35-0518f09689ad/26-6a69a6435c815.webp' /></p><p> இதன்பின், இம்மார்ட்டல், மஞ்சணத்தி, சூர்யா 48 என பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும், I'm Game, பாரடைஸ், தாரம் என பிறமொழி திரைப்படங்களும் கயாடு லோஹர் நடிப்பில் வெளியாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><h2>பலம், பலவீனம்</h2><p>
</p><p>
திரையுலக பிரபலங்கள் பேட்டிகளில் பேசும் விஷயங்கள் ரசிகர்களிடையே அவ்வப்போது வைரலாகும். அந்த வகையில், நடிகை கயாடு லோஹர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது பலம் மற்றும் பலவீனம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5ae5da8-40a3-42c3-bd72-018fb69b8578/26-6a69a64413d61.webp' /></p><p> 

"என் நம்பிக்கை தான் என் பலம். பல சூழல்களில் என் நம்பிக்கை மட்டுமே எனக்கு துணையாக நின்றுள்ளது. அதேவேளை நான் எளிதில் ஏமாந்து போவேன். அது என் பலவீனம். இந்த பலவீனத்தால் பல இழப்புகளை எதிர்கொண்டிருக்கிறேன்" என கூறியுள்ளார். 

நடிகை கயாடு லோஹரின் இந்த பேச்சு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.</p>]]></content>
            <updated>2026-07-29T09:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியாவில் தண்டனை ; சிவராசா அனோஜனை விடுவிக்க அரசாங்கத்திடம் வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/punishment-in-saudi-arabia-srilankan-tamil-youth-1785307101"></link>
            <id>https://jvpnews.com/article/punishment-in-saudi-arabia-srilankan-tamil-youth-1785307101</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம், சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் தொடர்பான நிலைமையை ஆழ்ந்த கவலையுடன் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம், சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் தொடர்பான நிலைமையை ஆழ்ந்த கவலையுடன் அவதானித்துள்ளதாக தெரிவித்துள்ளது. </p><p>

அந்த அமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையில் ,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4001cd6-5a28-4214-bc6c-1b146506c298/26-6a699fdf521e9.webp' /></p><h2>மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம் சமூக ஒற்றுமை</h2><p>
</p><p>
எந்தவொரு மதத்தையும், அதன் புனித ஆளுமைகளையும், மத நம்பிக்கைகளையும் அவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்பதை எமது ஒன்றியம் தெளிவாக ஏற்றுக்கொள்வதுடன் அனைத்து மதங்களும் பரஸ்பர மரியாதை, மனித கண்ணியம், சகிப்புத்தன்மை மற்றும் சமாதானத்தை போதிக்கின்றன என்பதனையும் இங்கு வலியுறுத்துகிறோம்.</p><p> 

 எனவே மத வெறுப்பைத் தூண்டும் வகையிலான கருத்துகளுக்கும் செயல்களுக்கும் எமது ஒன்றியம் என்றுமே ஆதரவு வழங்குவதில்லை.</p><p></p><p>
</p><p>
அதேவேளை, குறித்த சம்பவத்தில் சிவராசா அனோஜன் தனது பதிவை குறுகிய நேரத்திலேயே நீக்கி, தனது தவறினை ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கோரியிருந்ததாக அறியமுடிகின்றது.</p><p>


 இந்நிலையிலும், அவரது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் மனவேதனையையும் அவர்களது எதிர்கால வாழ்வாதாரப் பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு, மனிதாபிமான அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்துகிறோம்.</p><p></p><p>
</p><p>
எனவே, இலங்கை அரசாங்கமானது தனது இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக சவூதி அரேபிய அரசாங்கத்துடன் கலந்துரையாடி, சிவராசா அனோஜனுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையிலிருந்து விலக்களிக்க கூடிய வகையில் ஆகக்கக்கூடிய நிவாரணம் ஏதேனும் வழங்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.</p><p></p><p>
</p><p>
அதேவேளை, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அனைவரும் தாம் வசிக்கும் நாடுகளின் சட்டங்கள், கலாசாரங்கள்,பண்பாடுகள்,நம்பிக்கைகள் மற்றும் மத உணர்வுகளுக்கு முழுமையான மதிப்பினைச் செலுத்தி, குறிப்பாக சமூக வலைத்தளங்களை மிகுந்த பொறுப்புடனும் விழிப்புணர்வுடனும் பயன்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம்.</p><p>

மேற்படிச் சம்பவம் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் மேலும் வலுப்படுத்தும் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும் பிரார்த்தனையுமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-29T08:54:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக கட்டணம் வசூலிப்பு; வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/5-lakh-fine-imposed-private-hospital-in-vavuniya-1785313921"></link>
            <id>https://jvpnews.com/article/5-lakh-fine-imposed-private-hospital-in-vavuniya-1785313921</id>
            <summary type="text">&amp;nbsp; இரத்த பரிசோதனைக்காக அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை விட கூடுதல் தொகை அறவிட்ட தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இரத்த பரிசோதனைக்காக அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை விட கூடுதல் தொகை அறவிட்ட தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் ரூ.5 இலட்சம் அபராதம் விதித்துள்ளது.
</p><p>
நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை (CAA) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 67ஆம் இலக்க உத்தரவின் அடிப்படையில், வவுனியா மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை விசாரணை அதிகாரிகளால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0088d4de-014f-4fef-9ee3-6603f47f44a8/26-6a69ba8371594.webp' /></p><p></p><h2>நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகளால் வழக்கு தாக்கல்</h2><p>
</p><p>
கடந்த ஜூலை 14 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, வவுனியா வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள குறித்த தனியார் வைத்தியசாலை, FBC இரத்தப் பரிசோதனைக்காக அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணமான ரூ.400 ஐ விட அதிகமாக ரூ.550 வசூலித்தமை கண்டறியப்பட்டதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p></p><p>
</p><p>
இந்த வழக்கு ஜூலை 28 ஆம் திகதி வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிமன்றம் குறித்த வைத்தியசாலைக்கு ரூ.500,000 அபராதம் விதித்தது.</p><p></p><p>
</p><p>
அதேசமயம் அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை விட கூடுதல் தொகை அறவிடும் தனியார் வைத்தியசாலைகள் அல்லது மருத்துவ ஆய்வகங்கள் தொடர்பான தகவல்களை, அலுவலக நேரங்களில் 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-29T08:53:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனிக்குள்ளேயே சுற்றுலா செல்லும் எக்கச்சக்கமான ஜேர்மானியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-tourists-rise-but-many-are-germans-1785315021"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-tourists-rise-but-many-are-germans-1785315021</id>
            <summary type="text">ஜேர்மனியில், ஒன்லைன் வாயிலாக ஹொட்டல்களில் தங்க முன்பதிவு செய்யும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது.

விடயம் என்னவென்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியில், ஒன்லைன் வாயிலாக ஹொட்டல்களில் தங்க முன்பதிவு செய்யும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது.
</p><p>
விடயம் என்னவென்றால், இப்படி ஹொட்டல்களில் தங்க முன்பதிவு செய்துள்ள சுற்றுலாப்பயணிகளில் அதிகம் பேர் வெளிநாட்டவர்கள் அல்ல, ஜேர்மன் நாட்டவர்கள்!
</p><h3>
ஜேர்மனிக்குள்ளேயே சுற்றுலா செல்லும் ஜேர்மானியர்கள்</h3><p>
2025 ஆம் ஆண்டில், சுற்றுலா செல்வதற்காக, ஒன்லைன் வாயிலாக ஹொட்டல்களில் தங்க முன்பதிவு செய்த சுற்றுலாப்பயணிகள் 68.3 மில்லியன் பேர். </p><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc8807a5-92fe-4b16-9800-ae2a25252272/26-6a69becf30772.webp' /></p><p>அவர்களில் 48.5 மில்லியன் பேரும் ஜேர்மன் மக்கள்தான். 19.8 மில்லியன் பேர்தான் வெளிநாட்டவர்கள்.&nbsp;</p><p></p><p>
என்றாலும், சுற்றுலாவைப் பொருத்தவரை, அது உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் என்றாலும் சரி, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் என்றாலும் சரி, ஹொட்டல்கள் முதலான விருந்தோம்பல் துறைக்கு அதனால் நன்மையே என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T08:51:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[2வது தலைநகரை தேடும் ஜப்பான் - என்ன காரணம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/why-japan-searching-second-capital-outside-tokyo-1785314293"></link>
            <id>https://news.lankasri.com/article/why-japan-searching-second-capital-outside-tokyo-1785314293</id>
            <summary type="text">ஜப்பானில் 2வது தலைநகரை தேர்வு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.

ஜப்பான் 2வது தலைநகர் 

ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்தில் நேற்று 6.8 ரிக்டர் அளவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானில் 2வது தலைநகரை தேர்வு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.
</p><h3>
ஜப்பான் 2வது தலைநகர்</h3><p> 

ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்தில் நேற்று 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8d068e7-9f29-43bf-8943-43687927f155/26-6a69bbf9150a6.webp' /></p><p>

உலகளவில் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக ஜப்பான் உள்ளது.
</p><p>
இந்நிலையில், ஜப்பானில் 2வது தலைநகரை தேர்வு செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87b2d65a-9355-46b7-85e9-60abc5fd24ad/26-6a69bbf6eabe6.webp' /></p><p>
ஆளும் லிபரல் டெமோக்ரடிக் கட்சி (LDP) மற்றும் கூட்டணிக் கட்சியான ஜப்பான் இன்னோவேஷன் கட்சி (JIP) உள்ளிட்ட பல கட்சிகளும் இதற்கு ஆதரவளித்தன.</p><p>

ஜப்பானின் அரசியலமைப்பு ஜனநாயகக் கட்சி, மக்களுக்கான ஜனநாயகக் கட்சி (DPFP), கோமெயிட்டோ, சன்செய்ட்டோ, ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சி (JCP) உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. </p><h3> 

2வது தலைநகரம் ஏன்?
</h3><p>
தலைநகர் டோக்கியோவில் ஒரு பெரிய இயற்கை பேரிடர் ஏற்பட்டால் நாடு தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்வதே இதன் நோக்கம் ஆகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab1b4423-5f27-42ba-b34b-5ff6fad59146/26-6a69bbf86060d.webp' /></p><p>

டோக்கியோவில் அடுத்த 30 ஆண்டுகளுக்குள் ரிக்டர் அளவுகோலில் 7-ஆம் நிலை நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சுமார் 70% வாய்ப்பு இருப்பதாக அரசாங்கம் மதிப்பிடுகிறது. </p><p>

அப்படி நிகழ்ந்தால், தலைநகரில் உள்ள பிரதமர் அலுவலகம், நாடாளுமன்றம், மத்திய அமைச்சகங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பாதிக்கக்கூடும். </p><p>

மேலும், ஜப்பானின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 30% பேர் டோக்கியோவில் வசிக்கின்றனர். உலகளவில் அதிக மக்கள் வசிக்கும் 3வது பெருநகரமாக டோக்கியோ உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b92f0d77-17ad-4fd2-a005-5d4661a2bfb6/26-6a69bbf7af94a.webp' /></p><p>

ஜப்பானின் பொருளாதார உற்பத்தியில் சுமார் ஐந்தில் ஒரு பங்கை உருவாக்குவதோடு, பட்டியலிடப்பட்ட ஜப்பானிய நிறுவனங்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றை கொண்டுள்ளது.</p><p> 

டோக்கியோவில் உள்ள மக்கள் மற்றும் நிறுவன குவிப்பையும் இந்த திட்டம் சரி செய்யும். </p><h3> 

எந்த நகரத்திற்கு வாய்ப்பு?
</h3><p>
2ஆம் தலைநகர், டோக்கியோவை தாக்கும் ஒரு பேரிடரால் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்படுவதற்கான குறைந்த வாய்ப்பை கொண்டிருக்க வேண்டும். </p><p>

மேலும், போதுமான அரசாங்க உள்கட்டமைப்பு, பொருளாதார அளவு, மக்கள்தொகை அளவு மற்றும் நிர்வாகத் திறனையும் கொண்டிருக்க வேண்டும்.</p><p>

எந்த நகரங்கள் தேர்ந்தெடுக்கப்படும் என்பது குறித்த இறுதி முடிவு பிரதமரிடமே உள்ளது. </p><p>ஒசாகா, ஃபுகுவோகா மற்றும் ஐச்சி ஆகிய மாகாணங்களின் ஆளுநர்கள் 2வது தலைநகருக்கான போட்டியில் ஆர்வம் காட்டியுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T08:38:43+00:00</updated>
        </entry>
    </feed>
