<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-11T06:25:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசாரணை வளையத்தில் ஷிரான் பாசிக்கின் தந்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shiran-basik-father-under-ccib-investigation-1789107866"></link>
            <id>https://jvpnews.com/article/shiran-basik-father-under-ccib-investigation-1789107866</id>
            <summary type="text">&amp;nbsp; போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் தற்போது விசாரணை நடத்தி வருவதாகத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் தற்போது விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>



டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஷிரான் பாசிக், கம்பஹா பகுதியில் அமைந்துள்ள ஆடம்பரக் குடியிருப்புத் தொகுதியொன்றில், சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான வீடு ஒன்றை கொள்முதல் செய்துள்ளதாகவும், அது அவரது தந்தையின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66ccd0cf-e7a3-4091-bab5-2517b5fa7f42/26-6aa39e9c5abaa.webp' /></p><p> 



இதற்கமைய, இது தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக, ஷிரான் பாசிக்கின் தந்தையை இன்றைய தினம் (11) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.</p>]]></content>
            <updated>2026-09-11T06:21:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்! பதிவாகியுள்ள புதிய விலை நிலவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1789106815"></link>
            <id>https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1789106815</id>
            <summary type="text">கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் (11.09.2026) தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.சந்தை நிலவரங்களின்படி, நேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் (11.09.2026) தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.</p><p>சந்தை நிலவரங்களின்படி, நேற்றுடன் (10) ஒப்பிடுகையில் நாட்டில் தங்கத்தின் விலை 4000 ரூபா குறைந்துள்ளது.</p><h2>தங்க விலை நிலவரம்</h2><p>
</p><p>
இதன்படி, இன்று (11) காலை 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 343,200 ரூபாவாகக் குறைந்துள்ளது.
</p><p>இதேவேளை நேற்றைய தினம் இதன் விலை 347,000 ரூபாவாக இருந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3df7b03-5297-40aa-8677-bdcedba8b47b/26-6aa39db3e5e9f.webp' /></p><p> அதேவேளை, 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை நேற்று 377,000 ரூபாவாக இருந்த நிலையில், இன்று 373,000 ரூபாவாக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T06:21:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் புதிய சிம் அட்டைகளை வாங்கவுள்ளோரின் கவனத்திற்கு ; வெளியான முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/attention-those-buying-new-sim-cards-in-sri-lanka-1789107231"></link>
            <id>https://jvpnews.com/article/attention-those-buying-new-sim-cards-in-sri-lanka-1789107231</id>
            <summary type="text">சிம் அட்டைகளை விநியோகிப்பது தொடர்பில் புதிய ஒழுங்குமுறை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சிம் அட்டைகளை விநியோகிப்பது தொடர்பில் புதிய ஒழுங்குமுறை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">



அதன்படி, புதிய சிம் அட்டைகளைப் பெறுபவர்கள் தங்களது நேரடிப் புகைப்படத்துடன் சிம் அட்டையைப் பெறும் வகையிலான நடைமுறை பெரும்பாலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் அமுல்படுத்தப்படவுள்ளதாக TRCSL பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2814eb27-94d0-40c6-82a0-52e93ce61ea7/26-6aa39cf50f2af.webp' /></p><h2 style="text-align: justify; ">விதிமுறைகள்</h2><p style="text-align: justify;">நேற்று (10) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">


கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் சிம் அட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோதச் செயல்கள் அதிகரித்துள்ளதாக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களிடமிருந்து கோரிக்கைகள் கிடைத்ததைத் தொடர்ந்து இந்த விதிமுறைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify; ">


மேலும், 2027ஆம் ஆண்டில் தொலைபேசி மற்றும் சிம் அட்டைகளைப் பயன்படுத்தும் அனைத்து பயனாளர்களையும் 100 சதவீதம் அடையாளம் காணக்கூடிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது



இதன் மூலம் சட்டவிரோதச் செயல்களுக்கு சிம் அட்டைகள் பயன்படுத்தப்படுவதை குறைப்பதே நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-11T06:17:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சபாநாயகர் மீது இலஞ்ச - ஊழல் விசாரணை: சிறப்புரிமை மீறல் குறித்த பிரச்சினையை எழுப்பிய தயாசிறி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bribery-and-corruption-probe-against-the-speaker-1789107077"></link>
            <id>https://ibctamil.com/article/bribery-and-corruption-probe-against-the-speaker-1789107077</id>
            <summary type="text">சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு
விசாரணையொன்றை முன்னெடுத்துள்ள நிலையில், சிறப்புரிமை மீறல் குறித்த பிரச்சினையை ஐக்கிய ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு
விசாரணையொன்றை முன்னெடுத்துள்ள நிலையில், சிறப்புரிமை மீறல் குறித்த பிரச்சினையை ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல்
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வெளிப்படுத்தியுள்ளார்.
</p><p>
இதன்படி அவர் நாடாளுமன்றுக்கு தலைமை
தாங்கவோ அல்லது அரசமைப்புச் சபையின் தலைவர் பதவியை வகிக்கவோ 
சட்டப்படியோ
ஒழுக்கவியல் பிரகாரமோ உரிமையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
</p><p>நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை குறித்த சிறப்புரிமை மீறல் பிரச்சினை அவர்
முன்வைத்தார்.
</p><p></p><h2>சட்டபூர்வ நடைமுறை</h2><p>
இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், 

"சபாநாயகர் பதவியை வகித்தல், நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்குதல்
மற்றும் அரசமைப்புச் சபையின் தலைவராகச் செயற்படுதல் தொடர்பில் எழுந்துள்ள
சட்ட, ஒழுக்கவியல் மற்றும் நிறுவன நம்பகத்தன்மை சார்ந்த சிறப்புரிமைப்
பிரச்சினையாக இது அமைகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31b425db-102e-4a76-bcfb-43183058804f/26-6aa39b87f1c0d.webp' /></p><p> </p><p>

1953 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க நாடாளுமன்ற
(அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள்) சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும்
நிலையியல் கட்டளை 29 இன் பிரகாரம் இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சபாநாயகர் பதவிக் காலத்தில் அரச வளங்கள் மற்றும் வசதிகளைப் பயன்படுத்தியதில்
இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பிலேயே ஆணைக்குழு
விசாரித்து வருகின்றது.</p><p> 

ஆணைக்குழு விசாரணை நடத்துவதனால் மாத்திரம் ஒருவர்
குற்றவாளியாக மாட்டார் என்பதையும், சட்டபூர்வ நடைமுறைகள் முடியும் வரை
அவருக்குக் குற்றமற்றவர் என்ற அனுமானம் உண்டு என்பதையும் ஆரம்பத்திலேயே
தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
</p><p></p><h2>நம்பகத்தன்மை தொடர்பில் கேள்வி</h2><p>
சுதந்திரமான ஆணைக்குழுக்களுக்கு உயர் அதிகாரிகளை நியமிக்கும் அரசமைப்புச்
சபையின் தலைவராகவும், விசாரணைக்குத் தேவையான சாட்சியங்களை வழங்கும்
நாடாளுமன்றத்தின் தலைவராகவும் அவர் தொடர்வது நம்பகத்தன்மை தொடர்பில் பல
கேள்விகளை எழுப்புகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05f1973b-58fb-40fb-ad8c-ee3350f3690d/26-6aa39b88a888b.webp' /></p><p>
</p><p>
 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச்
சட்டத்தின் 162 ஆம் பிரிவின் கீழ் சபாநாயகரும் 'அரசு ஊழியர்' என்ற
வரையறைக்குள் அடங்குவதால், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 107 ஆம் பிரிவின்படி
விசாரணைக்கு உட்படுத்தப்படும் நபர் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் தலையிட
முடியாது.
</p><p>
எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ள ஊழல்
எதிர்ப்புச் சட்டத் திருத்தத்துக்கு அரசமைப்பின் 79 ஆம் உறுப்புரையின்படி
சபாநாயகர் தனது கையொப்பத்துடன் சான்றளிக்க வேண்டும். </p><p>

எனினும், தற்போதைய சட்ட
ஏற்பாடுகளின்படி சபாநாயகரால் அந்தச் சான்றிழைப் பதிவு செய்ய முடியாது.</p><p>

மேலும், ஆணைக்குழுவின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட
மதிப்பீடுகளைச் சபையில் சமர்ப்பித்தமை போன்ற நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட
முடியாது.
</p><p>
இது வெறுமனே அரசமைப்புச் சார்ந்த பிரச்சினை மட்டுமல்லாது, நலன் முரண்பாடு
தொடர்பான கடுமையான சட்ட மற்றும் ஒழுக்கவியல் பிரச்சினையாகும்." என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T06:11:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய மக்கள் சக்தி மாநகரசபை உறுப்பினர்கள் கூட்டாக விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/national-people-power-mc-members-joint-request-1789105171"></link>
            <id>https://tamilwin.com/article/national-people-power-mc-members-joint-request-1789105171</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாநகரசபை தமிழரசு கட்சி பொறுப்பேற்று ஒன்றரை வருடமாகியும் கருவறை
தொடக்கம் கல்லறை வரை என்ற பழமொழிக்கு அமைய மாநகர சபையின் செயற்பாடுகள் எதுவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாநகரசபை தமிழரசு கட்சி பொறுப்பேற்று ஒன்றரை வருடமாகியும் கருவறை
தொடக்கம் கல்லறை வரை என்ற பழமொழிக்கு அமைய மாநகர சபையின் செயற்பாடுகள் எதுவும்
செய்யவில்லை. எனவே மாநகர சபை வழி நடத்த முடியாவிட்டால் எங்களிடம்
ஒப்படைக்கவும் என தேசிய மக்கள் சக்தி மாநகரசபை உறுப்பினர்கள் கூட்டாக
கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>

மாநகரசபையின் 17ஆவது சபை அமர்வு நேற்று(10.09.2026) மாநகரசபை முதல்வர்
சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்றது.</p><p>இதன் பின்னர் மாநகரசபையின்
எதிர்க்கட்சியான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களான முத்துலிங்கம்
துதீஸ்வரன், முனுசாமி உதயராஜ், பிரேம்குமார், ஜெம்ஸ், லதீப் ஆகியோர்
ஒன்றிணைந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.</p><h2>எல்லைக்குள் இருக்கும் வீதிகள்</h2><p>

இன்று மாநகர சபையின் 17ஆவது சபை அமர்வு இடம்பெற்றுள்ளது. இந்த மாநகர சபை
ஆட்சியை தமிழரசு கட்சி பொறுப்பேற்று ஒன்றரை வருடமாக இந்த முதல்வருடன்
எதிர்கட்சி இல்லாமல் அனைத்து வேலைகளுக்கும் நாங்கள் ஆதரவு வழங்கி வந்தோம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d98dab5c-fc08-4b0c-ad50-7b7bbd7ab716/26-6aa398f04e862.webp' /></p><p>இருந்தபோதும்; கருவறை தொடங்கி கல்லறை வரை என்ற பழமொழிக்கு அமைய மாநகரசபையின்
செயற்பாடுகள் எவையுமே செயல்படுத்தப்படவில்லை. நீங்களும் சபையில்
இருக்கின்றீர்கள். பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா என மக்கள் கடும் விசனங்கள்
தெரிவித்து வருகின்றனர்.</p><p>
மாநகர சபை எல்லைக்குள் இருக்கும் வீதிகள், கழிவகற்றல், வீதி மின்விளக்கு,
வடிகான் பிரச்சினை உட்பட பல பிரச்சினைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.</p><p>வீதி மின்விளக்கு ஒளிராததால் இன்று வீதி விபத்துக்கள் மற்றும் பல
அசம்பாவிதங்கள் இடம்பெற்று வருகின்றது. கட்டாக்காலி மாடுகள் தொல்லை தொடர்பாக
எதுவும் நடைபெறவில்லை.

இந்த மாநகர சபை அமர்வில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டபோது எதுவும் முற்றுப்
பெறவில்லை.</p><p>கடந்த வருடம் மாநகர சபை உட்பட்ட பிரதேசங்கள் பல மழை வெள்ளத்தில்
மூழ்கியது. காரணம் வடிகான்கள் துப்பரவு செய்யவில்லை. இது தொடர்பாக கடந்த
காலத்தில் முதல்வரிடம் பலமுறை தெரிவித்தும் பயனில்லை.</p><h2>பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை</h2><p>இந்த வருடம்;; மாநகரசபை பகுதிகளில் உள்ள பிரதேசம் பல மழை வெள்ளத்தில் மூழ்கப்
போகிறது. எனவே மழை வெள்ளத்தால் தாண்டால் அதற்கான முழு பொறுப்பும் முதல்வர்
எடுக்க வேண்டும்.</p><p>

மட்டு மாநகர சபைக்கு சொந்தமான மஞ்சம் தொடுவாய் பிரதேசம் அதனை காத்தான்குடி
நகரசபை அத்துமீறி அபகரித்து வருகிறது. இதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதாக
தெரிவித்து இதுவரை ஒன்றும் செய்யவில்லை இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fb8e403-c381-47ff-99db-8477a53aca31/26-6aa398f17b71b.webp' /></p><p>அவ்வாறே பணம் படைத்தவர்கள் காணிகளை பிடித்து அடைத்துள்ளனர். ஏழைகள்
துன்பப்படுகின்றனர். குறுக்கு வீதிகள் 10 அடி அகலம் கொண்டதாக நில அளவீடு
செய்திருந்த போதும் பணம் உள்ளவர்கள் அதை அபகரித்துள்ளனர்.</p><p> இதனால் அந்த
வீதியில் உள்ள ஏனைய மக்கள் சடலத்தை கூட கொண்டு வர முடியாத அளவிற்கு
ஆக்கிரமித்துள்ளனர். மாநகரசபை சட்டத்தை ஏன் பயன்படுத்த முடியாமல் உள்ளனர்.</p><p>இது தொடர்பாக பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதை
வன்மையாக கண்டிக்கின்றோம்.&nbsp; எனவே இந்த மாநகர சபை வழி நடத்த முடியாவிட்டால் தேசிய மக்கள் சக்தியிடம்
ஒப்படைத்தால் 6 மாதத்துக்கு வீண் விரயங்களை நிறுத்தி நாட்டைக் கட்டியெழுப்பிய
மாதிரி இந்த மாநகரசபையையும் கட்டியொழுப்புவோம். </p><p>இது மக்கள் அரசாங்கம் மக்கள்
ஆணையின்படி மக்களுக்கு சிறந்த சேவையை செய்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T06:08:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவின் தனிப்பட்ட ஜோதிடர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/statement-recorded-from-mahinda-s-astrologer-1789105853"></link>
            <id>https://ibctamil.com/article/statement-recorded-from-mahinda-s-astrologer-1789105853</id>
            <summary type="text">
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட ஜோதிடராக பணியாற்றியதாக கூறப்படும் பிரபல ஜோதிடர் சுமனதாச அபேகுணவர்தனவிடம், லஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான...</summary>
            <content type="html"><![CDATA[<p>
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட ஜோதிடராக பணியாற்றியதாக கூறப்படும் பிரபல ஜோதிடர் சுமனதாச அபேகுணவர்தனவிடம், லஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.</p><p>அதன்போது, ஆணைக்குழு நான்கு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி, அவரிடமிருந்து வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>விசாரணை காரணம்&nbsp;</h2><p>

ஆணைக்குழு விடுத்த அறிவித்தலுக்கு இணங்க, அவர் நேற்று(10)முற்பகல் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c83ed3e-1041-4fea-ac5d-22f331b38279/26-6aa39a6034acd.webp' /></p><p>

“சிரிலிய சவிய” அமைப்பு தொடர்பாக ஆணைக்குழு மேற்கொண்டு வரும் விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்த வாக்குமூலம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
</p><p>
அந்தக் காலகட்டத்தில், அவர் தேசிய சேமிப்பு வங்கியின் பணிப்பாளர் ஒருவராகவும் பணியாற்றியிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T06:06:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் ஆலயமொன்றில் ஐந்து இலட்சம் ரூபாய்க்கு ஏலம்போன மாம்பழம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mango-auctioned-five-hundred-thousand-in-vavuniya-1789105344"></link>
            <id>https://tamilwin.com/article/mango-auctioned-five-hundred-thousand-in-vavuniya-1789105344</id>
            <summary type="text">வவுனியா - வேப்பங்குளம், சாஸ்திரிகூழாங்குளம் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின்
வருடாந்த மகோற்சவ திருவிழாவில் மாம்பழம் ஒன்று ஐந்து இலட்சத்திற்கும் அதிக
தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா - வேப்பங்குளம், சாஸ்திரிகூழாங்குளம் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின்
வருடாந்த மகோற்சவ திருவிழாவில் மாம்பழம் ஒன்று ஐந்து இலட்சத்திற்கும் அதிக
தொகைக்கு ஏலம்போயுள்ளது.</p><p>

ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் மாம்பழ திருவிழா நேற்று இடம்பெற்றுள்ளது.</p><h2>கோவில் வளர்ச்சி நிதி</h2><p>
</p><p>இதன்போது விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று கோவில் வளர்ச்சி நிதிக்காக
ஏலத்தில் விடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e81b009-dd22-4ecf-920f-560524aa33ba/26-6aa399fd9bc9a.webp' /></p><p>
</p><p>அந்த மாம்பழம் 505000/=( ஐந்து இலட்சத்து ஐந்தாயிரம் ) ரூபாய்க்கு ஏலத்தில்
விற்பனை செய்யப்பட்டுள்ளது.</p><p>
இதன்போது, பலத்த போட்டிக்கு மத்தியில் வவுனியாவை சேர்ந்த இ.மோகனதாஸ்
குடும்பத்தினர் குறித்த தொகையை வழங்கி மாம்பழத்தை பெற்றுக்கொண்டனர்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e81b009-dd22-4ecf-920f-560524aa33ba/26-6aa399fd9bc9a.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eba441b4-b726-42fd-b9c0-c461dbd83b58/26-6aa399fe718ae.webp' /></p>]]></content>
            <updated>2026-09-11T06:04:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் ; 25 பெண் உட்பட 106 பேருக்கு விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-prison-clash-106-people-remanded-1789106827"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-prison-clash-106-people-remanded-1789106827</id>
            <summary type="text">&amp;nbsp; நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 25 பெண்கைதிகள் புதிதாகச் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 25 பெண்கைதிகள் புதிதாகச் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
</p><p>
குறித்த வழக்கு நீர்கொழும்பு நீதவான் ஷிலானி பெரேரா முன்னிலையில் வியாழக்கிழமை (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/272360c2-8b84-4132-baf3-850e671c20d1/26-6aa39a8ce398a.webp' /></p><h2>ஜூலை 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்&nbsp;</h2><p>
</p><p>
 சம்பவம் தொடர்பில் இதுவரை 81 ஆண்கள் மற்றும் 25 பெண்கள் அடங்கலாக மொத்தம் 106 பேர் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், குறித்த பெண் சந்தேக நபர்களுக்கு எதிராகப் பொதுச்சொத்துச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதால் வழக்கு முடியும் வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.</p><p></p><p>
</p><p>
அத்துடன், புதிதாகப் பெயரிடப்பட்ட பெண் சந்தேக நபர்களையும், 30ஆம் இலக்கம் முதல் 60ஆம் இலக்கம் வரை பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்துவதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறும், சாட்சியாளர்களான 20 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அழைப்பாணை விடுக்குமாறும் அதிகாரிகள் நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர்.
</p><p>
நேற்றைய தினம் 23 சந்தேக நபர்கள் (இலக்கம் 7 முதல் 30 வரை) அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, சாட்சியாளர்களாக ஆஜரான சிறைச்சாலை அதிகாரிகளால் அவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.</p><p></p><p> </p><p>

இதனையடுத்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைகளுக்கு அனுமதி வழங்கிய நீதிவான், சந்தேக நபர்கள் 106 பேரையும் எதிர்வரும் செப்டம்பர் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.
</p><p>
மேலும், அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்தாத ஏனைய சந்தேக நபர்களை நிகழ்நிலை ஊடாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.</p><p></p><p> </p><p>
கடந்த ஜூலை 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 20 சிறைச்சாலை அதிகாரிகளும் 22 கைதிகளும் உயிரிழந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-11T06:03:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ; திருகோணமலையில் கோர விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/motorcycle-trapped-under-bus-wheel-1789106410"></link>
            <id>https://jvpnews.com/article/motorcycle-trapped-under-bus-wheel-1789106410</id>
            <summary type="text">திருகோணமலையில் இன்று (11) காலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். 



துறைமுக பொலிஸ் நிலையத்திற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">திருகோணமலையில் இன்று (11) காலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.</p><p style="text-align: justify; "> 



துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள சுற்றுவட்டப் பகுதியில், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b4085a7-77da-43d3-95d1-0b247bcb096e/26-6aa398ec53030.webp' /></p><p style="text-align: justify; ">



விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


பேருந்தின் பின்புற சக்கரத்தில் மோட்டார் சைக்கிள் சிக்கியதுடன் பலத்த சேதமடைந்துள்ளது. </p><p style="text-align: justify; ">



சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-11T06:01:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஞ்சக்காட்டு மைனாவாக கொஞ்சும் ப்ரியா பவானி ஷங்கர் போட்டோ ஷுட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/priya-bhavani-shankar-yellow-dress-photoshoot-1789102336"></link>
            <id>https://cineulagam.com/article/priya-bhavani-shankar-yellow-dress-photoshoot-1789102336</id>
            <summary type="text">ப்ரியா பவானி ஷங்கர்சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து கலக்கும் பிரபலங்களில் ஒருவர் தான் ப்ரியா பவானி ஷங்கர்.தொகுப்பாளினியாக இருந்து சினிமா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ப்ரியா பவானி ஷங்கர்</h2><p>சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து கலக்கும் பிரபலங்களில் ஒருவர் தான் ப்ரியா பவானி ஷங்கர்.</p><p>தொகுப்பாளினியாக இருந்து சினிமாவிற்குள் நுழைந்தவர் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், பத்து தல, டிமான்டி காலணி 2 ஆகிய வெற்றிப் படங்களில் நடித்துள்ளார், சில தோல்வி படங்களையும் கொடுத்துள்ளார்.
</p><p>கடைசியாக இவர் தெலுங்கில் ரவி தேஜாவுடன் இணைந்து இருமுடி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் செம வசூல் வேட்டை நடத்தி பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகிறது.</p><p>இன்று ப்ரியா பவானி ஷங்கர் மஞ்சள் நிற உடையில் வெளியிட்ட அழகிய புகைப்படங்களை காண்போம்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T06:00:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா - உக்ரைன் இடையே 100 ஆண்டுகால வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/pm-carney-zelenskyy-sign-100-year-partnership-1789100101"></link>
            <id>https://canadamirror.com/article/pm-carney-zelenskyy-sign-100-year-partnership-1789100101</id>
            <summary type="text">&amp;nbsp;கனடிய பிரதமர் மார்க் கார்னி மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையே 100 ஆண்டுகால கூட்டாண்மைப் பிரகடனம் மற்றும் ட்ரோன் உற்பத்திக்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடிய பிரதமர் மார்க் கார்னி மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையே 100 ஆண்டுகால கூட்டாண்மைப் பிரகடனம் மற்றும் ட்ரோன் உற்பத்திக்கான ஒத்துழைப்பு உட்பட பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.</p><p>
வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கனடாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இந்த உறவு கடந்த 100 ஆண்டுகளாகச் செழித்தோங்கியுள்ளது.</p><p> இந்தப்போர் முடிந்த பின்னரும், வரவிருக்கும் நூற்றாண்டிலும் இது மேலும் வலுவடையும்" என பிரதமர் மார்க் கார்னி தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/926e5628-613a-415a-b4f4-a85af10ccba2/26-6aa3804726e72.webp' /></p><p>
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை 'விரிவான மூலோபாயக் கூட்டாண்மையாக' உயர்த்தவும், பாதுகாப்பு மற்றும் முக்கிய கனிமவளத் துறைகளில் இணைந்து செயல்படவும் பிரகடனம் கையெழுத்தாகியுள்ளது.
</p><p>கனடிய ஆயுதப் படைகளுக்காகத் தேசிய ட்ரோன் சந்தை ஒன்றை கனடா தொடங்கவுள்ளது. இதன் மூலம் அடுத்த 2 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான ட்ரோன்களை உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p> இதில் உலகளவில் முன்னணி வகிக்கும் உக்ரைனிய ட்ரோன் நிறுவனங்கள் கனடிய நிறுவனங்களுடன் இணைந்து ட்ரோன்களை உருவாக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
ரஷ்யாவின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில், குறைந்த செலவில் அதிக எண்ணிக்கையிலான ஏவுகணைத் தடுப்புகளை உருவாக்கும் உக்ரைனின் 'புரொஜெக்ட் ஃப்ரேயா' திட்டத்திற்குக் கூடுதல் ராணுவ உதவி வழங்க கனடா உறுதியளித்துள்ளது.</p><p>
2022-இல் போர் தொடங்கியதிலிருந்து கனடா உக்ரைனுக்கு 8.5 பில்லியன் டொலர் ராணுவ உதவியையும், நாட்டின் புனரமைப்புப் பணிகளுக்காக 750 மில்லியன் டாலரையும் வழங்கியுள்ளது. </p><p>அத்துடன் ரஷ்யா மீது 3,500-க்கும் மேற்பட்ட தடைகளையும் கனடா விதித்துள்ளது.
கால்கரி சந்திப்பைத் தொடர்ந்து, பானிஃப் நகரில் நடைபெறும் கனடிய லிபரல் அரசின் அமைச்சரவை திட்டமிடல் மன்றத்தில் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி உரையாற்றுகிறார்.</p><p> பிரான்ஸின் ஏவியான்-லே-பைன்ஸ் நகரில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற G7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் மார்க் கார்னி விடுத்த அழைப்பின் பேரிலேயே ஸெலென்ஸ்கி இதில் பங்கேற்கிறார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T06:00:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆமை மோதிரம் பணத்தை ஈர்க்குமா? தெரிந்துகொள்ள வேண்டிய ஆன்மிக ரகசியங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/how-to-wear-a-tortoise-ring-benefits-who-avoid-1789104268"></link>
            <id>https://manithan.com/article/how-to-wear-a-tortoise-ring-benefits-who-avoid-1789104268</id>
            <summary type="text">Tortoise Ring Benefits: பொதுவாகவே மனிதர்கள் அனைவருக்கும் செல்வ செழிப்புடக் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். ஆனால் சிலர் சிலரால் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>Tortoise Ring Benefits: பொதுவாகவே மனிதர்கள் அனைவருக்கும் செல்வ செழிப்புடக் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். ஆனால் சிலர் சிலரால் எவ்வளவு கடினமாக உழைத்ததாலும் ஆசைப்பட்ட வாழ்க்கையை அடைய முடியாத நிலை இருக்கும்.</p><p>சிலரோ மிக குறைந்த முயற்ச்சியிலேயே வாழ்க்கையில் குறுகிய காலத்தில் முன்னேற்றம் அடைவார்கள் இதற்கு அவர்களின் முயற்ச்சி மிக முக்கிய காரணமாக இருந்தாலும் சில ஆன்மீக வி்டயங்களின் தாக்கமும் இருப்பதாக நம்பப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6833055a-0294-41cc-b107-736c1c10a359/26-6aa3980434134.webp' /></p><p></p><p>அந்தவகையில், சிலர் தங்களது கைகளில் ஆமை வடிவிலான மோதிரத்தை அணிந்திருப்பதை நாம் பார்த்திருக்கலாம். ஆனால், அவர்கள் ஏன் ஆமை மோதிரத்தை அணிந்திருக்கிறார்கள் என்ற கேள்வி பலருக்கும் எழுவது இயல்புதான்.</p><p> இந்த மோதிரத்தை அணிவதற்குப் பின்னால் என்ன காரணம் இருக்கிறது? ஆமைக்கும் செல்வச் செழிப்புக்கும் என்ன தொடர்பு? இதுபற்றி ஆன்மிக மற்றும் ஜோதிட நம்பிக்கைகள் என்ன சொல்கின்றன என்பதைப்&nbsp; இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>ஆமைக்கும் செல்வச் செழிப்புக்கும் என்ன தொடர்பு?</h2><p>
</p><p>
இந்து சமயப் புராணங்களில் ஆமைக்கு முக்கியமான இடம் உள்ளது. திருமாலின் தசாவதாரங்களில் ஒன்றாக கூர்ம அவதாரம் கருதப்படுகிறது. பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தைப் பெறும் நிகழ்வில், மந்தர மலையைத் தாங்குவதற்காக திருமால் ஆமை வடிவம் எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3defe82d-a65d-427e-868b-557f3b968042/26-6aa39804da74f.webp' /></p><p> </p><p>அதாவது, உலகையே தாங்கும் வலிமை, பொறுமை மற்றும் நிலைத்தன்மையின் அடையாளமாக கூர்ம அவதாரம் பார்க்கப்படுகிறது.

மேலும், ஆமை வடிவம் மகாலட்சுமியின் அருள், செல்வம் மற்றும் வளத்துடன் தொடர்புடையதாக சில பாரம்பரிய ஆன்மிக நம்பிக்கைகளில் கருதப்படுகிறது. </p><p>இதன் காரணமாகவே ஆமை வடிவிலான பொருட்களை வீட்டில் வைத்திருப்பதும், ஆமை மோதிரத்தை அணிவதும் செல்வ வளத்தை ஈர்க்கும் என்ற நம்பிக்கை தொன்று தொட்டு காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a037191-19dd-444b-9ebf-1827b968d12c/26-6aa398058ecb3.webp' /></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">ஆமை மோதிரத்தை எப்படி அணிய வேண்டும்?&nbsp;</span></p><p>
ஆமை மோதிரத்தை அணிய விரும்புபவர்கள் அதன் வடிவமைப்பிலும் சில விஷயங்களை கவனிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, ஆமையின் தலைக்குப் பின்புறத்தில் “ஸ்ரீ” என்ற எழுத்து இடம்பெற்றிருப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
</p><p>
“ஸ்ரீ” என்பது செல்வம், வளம் மற்றும் மங்களத்தைக் குறிக்கும் சொல்லாகப் பார்க்கப்படுகிறது. எனவே, ஆமை வடிவத்துடன் “ஸ்ரீ” என்ற எழுத்தும் இடம்பெற்றிருக்கும் மோதிரத்தை அணிவது சிறப்பான பலனைத் தரும் என்பது பாரம்பரிய நம்பிக்கையாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f69930cf-648e-48f2-82cf-f2e669b09abc/26-6aa398064aeb1.webp' /></p><p><b>
எந்த விரலில் அணிய வேண்டும்?</b></p><p>
ஆமை மோதிரத்தை பொதுவாக வலது கையின் நடுவிரல் அல்லது மோதிர விரலில் அணியலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், மோதிரத்தை அணியும் முறையிலும் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது.

அதாவது, மோதிரத்தில் இருக்கும் ஆமையின் தலை நம்மை நோக்கியவாறு இருக்க வேண்டும். </p><p>ஆமையின் தலை வெளிப்புறத்தை நோக்கி இல்லாமல், நம்மை நோக்கியபடி இருப்பது முக்கியம் என்று இந்த நம்பிக்கையைப் பின்பற்றுபவர்கள் கூறுகின்றனர்.

இதற்குக் காரணம், ஆமையின் தலை தன்னை நோக்கி இருப்பது செல்வம், வளம் மற்றும் நேர்மறை ஆற்றல் தன்னை நோக்கி வருவதைக் குறிக்கும் என்ற நம்பிக்கையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b18800b-d006-47d5-b64e-b6417227840c/26-6aa39806f2a91.webp' /></p><p>மேலும் ஆமை மோதிரத்தை வாங்கியவுடன் உடனடியாக அணிவதைவிட, முதலில் அதனை முறையாகச் சுத்தப்படுத்தி, வழிபாட்டுடன் அணிவது சிறந்தது.&nbsp; அதன்படி, முதலில் மோதிரத்தை காய்ச்சாத பால் மற்றும் கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளலாம். பின்னர் மகாலட்சுமியை மனதில் நினைத்து, அவருக்குரிய ஸ்தோத்திரங்களை உச்சரித்து வழிபாடு செய்ய வேண்டும்.
</p><p>
அதன் பிறகு, ஆமையின் தலை நம்மை நோக்கிய நிலையில் இருப்பதை உறுதி செய்து மோதிரத்தை அணிந்து கொள்ளலாம். இவ்வாறு முறையாக வழிபாடு செய்து அணிவதால், மகாலட்சுமியின் அருள் கிடைத்து வாழ்க்கையில் செல்வ வளமும் நன்மைகளும் பெருகும் என்பது நம்பிக்கை.
</p><h2>
ஆமை மோதிரம் அணிந்தால் அதிர்ஷ்டம் வருமா?
</h2><p>ஆமை மோதிரத்தை அணிந்தால் அதிர்ஷ்டம் வரத் தொடங்கும், பணவரவு அதிகரிக்கும், செல்வச் செழிப்பு பெருகும் என்று பலர் நம்புகின்றனர். குறிப்பாக, பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு, பணம் சேரத் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

“பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும்” என்று சொல்லும் அளவுக்கு இந்த மோதிரத்திற்கு சக்தி இருப்பதாகவும் சில ஆன்மிக நம்பிக்கைகளில் குறிப்பிடப்படுகின்றது.</p><p>அதாவது, திடீர் அதிர்ஷ்டம், எதிர்பாராத பணவரவு, தொழிலில் முன்னேற்றம், செல்வ வளம் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பை இது உருவாக்கும் என்று நம்பப்படுகிறது.
</p><p>
மேலும், ஆமை என்பது பொறுமை, அமைதி மற்றும் நிலைத்தன்மையின் அடையாளமாக கருதப்படுவதால், இதனை அணிவதால் மனம் தெளிவடைந்து அமைதியாக இருக்கும் என்றும் சிலர் நம்புகின்றனர்.மனதில் இருக்கும் குழப்பங்கள் குறைந்து, தெளிவாகச் சிந்திக்கும் தன்மை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b38f64dd-3d11-441d-a35a-31c23e1659f5/26-6aa39807a7af8.webp' /></p><p></p><p><b>
எந்த ராசிக்காரர்கள் ஆமை மோதிரத்தை அணியக்கூடாது?</b></p><p>
ஆமை தண்ணீரில் வாழும் உயிரினம் என்பதால், சில ஜோதிட நம்பிக்கைகளில் இதனை நீர் ராசிகளுடன் தொடர்புபடுத்திப் பார்க்கின்றனர்.

அதன்படி, கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் ஆகியவை நீர் ராசிகளாகக் கருதப்படுகின்றன.</p><p> எனவே, இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் ஆமை மோதிரம் சாதகமாக இல்லாமல் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று சில ஜோதிட நம்பிக்கைகள் கூறுகின்றன.இதனால், கடகம், விருச்சிகம் மற்றும் மீன ராசிக்காரர்கள் ஆமை மோதிரத்தை அணிவதைத் தவிர்ப்பது நல்லது.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T05:58:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலை பரபரப்பை ஏற்படுத்திய தெஹிவளை கைக்குண்டு தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dehiwala-bomb-attack-information-released-police-1789093479"></link>
            <id>https://tamilwin.com/article/dehiwala-bomb-attack-information-released-police-1789093479</id>
            <summary type="text">புதிய இணைப்புதெஹிவளை, சிரிசங்கபோ வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இன்று (11) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத்தாக்குதல் திட்டமிடப்பட்ட குற்றக் குழுக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>தெஹிவளை, சிரிசங்கபோ வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இன்று (11) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத்தாக்குதல் திட்டமிடப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையிலான மோதலே காரணமென&nbsp;பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p> </p><p>தவறான இலக்கு காரணமாகவே குறித்த இரு சிறுவர்களும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>அவர்களின் தந்தை (55) களுபோவில போதனா வைத்தியசாலையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><h2>போதைப்பொருள் வலையமைப்பு</h2><p>காயமடைந்த நபரின் சகோதரர், திட்டமிடப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான படோவிட்ட அஸங்கவின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5069f853-508f-4fdd-b139-207331bf889b/26-6aa3980e2132a.webp' /></p><p>மேலும், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘கொஸ்மல்லி’ என்பவரின் நெறிப்படுத்தலின் கீழ் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p>&nbsp;குண்டுத் தாக்குதலை நடத்திய சந்தேகநபர்களை கைது செய்ய இரண்டு பொலிஸ் குழுக்கள் செயல்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93ecd2e0-b149-4e89-b955-65a99900e3bc/26-6aa3980d6037d.webp' />&nbsp;&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>தெஹிவளை - சிரிசங்கபோ மாவத்தை பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.</p><p>இன்று (11) அதிகாலை 3.15 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் கைக்கூண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><h2>தாக்குதலுக்கான காரணம் அல்லது சந்தேகநபர்கள்</h2><p>இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த 55 வயதுடைய நபர் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 11 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed2e9d97-0e0b-4c8c-8a8f-6766da0c7b9e/26-6aa36a66f0f2b.webp' /></p><p>உயிரிழந்தவர்கள் 11 மற்றும் 17 வயதுடைய இரண்டு ஆண் பிள்ளைகள் என பொலிஸ் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இச்சம்பவத்துடன் தொடர்புடைய தாக்குதலுக்கான காரணம் அல்லது சந்தேகநபர்கள் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்நிலையில், சந்தேகநபர்களை கைது செய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p> 
</p>]]></content>
            <updated>2026-09-11T05:56:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொழிநுட்ப ஆளணிப் பற்றாக்குறைக்கு வடக்கில் உடனடித் தீர்வு காண வேண்டும் - ஆளுநர் வேதநாயகன் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/governor-vedanayagam-s-request-1789104161"></link>
            <id>https://tamilwin.com/article/governor-vedanayagam-s-request-1789104161</id>
            <summary type="text">வட மாகாணத்தில் தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள
வீதி உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகளை உரிய காலத்துக்குள் நிறைவு செய்து,
ஒதுக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட மாகாணத்தில் தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள
வீதி உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகளை உரிய காலத்துக்குள் நிறைவு செய்து,
ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகவும் தரமாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்குத்
தடையாக உள்ள தொழிநுட்ப ஆளணிப் பற்றாக்குறைக்கு உடனடித் தீர்வு காணப்பட
வேண்டும் என்று வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.
</p><p>
வட மாகாணத்தில் பல்வேறு நிதி மூலங்களின் கீழ் ஒரே நேரத்தில்
முன்னெடுக்கப்பட்டு வரும் வீதி அபிவிருத்திப் பணிகளில் நிலவும் தொழிநுட்ப
மற்றும் நடைமுறை சவால்களுக்கு தீர்வு காண்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்,
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும்
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் ஆளுநர்
செயலகத்தில் நேற்றைய தினம் (10.09.2026) நடைபெற்றது.</p><h2>பணிச்சுமை</h2><p>
</p><p>
வடக்கு மாகாணத்திற்கு 2026ஆம் ஆண்டில் கிடைக்கப்பெறும் அபிவிருத்தி நிதியும்
பணிச்சுமையும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில்,
உள்ளூராட்சி தொழில்நுட்ப ஆளணியிடம் தற்போது 1034 வேலைத்திட்டங்களுக்கான
சுமார் 7 ஆயிரத்து 6 மில்லியன் ரூபா பெறுமதியிலான பணிச்சுமை காணப்படுவதாகவும்,
இவற்றில் பல்வேறு புதிய நிதித் திட்டங்களின் கீழான வேலைகளும்
உள்ளடங்குவதாகவும் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது.</p><p>

எனினும், இவ்வளவு பெரிய பணிச்சுமைக்கு ஏற்றளவில் தொழில்நுட்ப ஆளணி இல்லாததால்
மதிப்பீடு தயாரித்தல், கேள்விகோரல் நடைமுறை, மேற்பார்வை, சான்றளித்தல் மற்றும்
பணிகளை நிறைவு செய்தல் உள்ளிட்ட பல கட்டங்களில் தாமதங்கள் ஏற்படுவதாகக்
குறிப்பிடப்பட்டது. </p><p>தற்போது அங்கீகரிக்கப்பட்ட 141 தொழில்நுட்பப் பதவிகளில்
129 பேர் மட்டுமே பணியில் இருப்பதுடன், மேலும் 194 தொழில்நுட்ப ஆளணி
தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. வன்னிப் பகுதிகளில் சில தொழில்நுட்ப
உத்தியோகத்தர்கள் பணியிலிருந்து விலகியுள்ளமையும் நிலைமையை மேலும்
சிக்கலாக்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ffc3140-cd84-4c90-84b8-4725ff8501e6/26-6aa397d559df6.webp' /></p><p>
</p><p>
பல வேலைத்திட்டங்கள் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்படுவதால் தொடர்ச்சியான தள
மேற்பார்வையை மேற்கொள்வதிலும் சிரமம் காணப்படுவதாகச்
சுட்டிக்காட்டப்பட்டதுடன், இதனால் எந்தவொரு திட்டத்தின் தரமும் பாதிக்கப்படாத
வகையில் தேவையான கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப மேற்பார்வை உறுதி செய்யப்பட
வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.</p><h2>மனித வளத்தை உறுதிப்படுத்தல்</h2><p>
</p><p>
இதனிடையே, பல்வேறு நிதி மூலங்களிலிருந்து கிடைக்கும் நிதியை மீளச்
செலுத்தாமல், அவற்றை முழுமையாக அபிவிருத்திப் பணிகளாக மாற்றுவதற்கான
மனிதவளத்தை உடனடியாக உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஆளுநர்
வலியுறுத்தினார். </p><p>தொழில்நுட்ப ஆளணி பற்றாக்குறை மற்றும் மூலப்பொருட்களைப்
பெற்றுக்கொள்வதில் உள்ள சிரமங்கள் தொடருமானால், கிடைக்கும் நிதியை உரிய
காலத்தில் பயனுள்ள வகையில் பயன்படுத்துவது சவாலாகும் என்றும் அவர்
சுட்டிக்காட்டினார்.</p><p>

இந்த விடயத்தில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் இ.சந்திரசேகர், மத்திய மற்றும்
மாகாண நிறுவனங்கள் என்ற வேறுபாடுகளைக் கடந்து ஒருங்கிணைந்து செயற்பட்டு
தீர்வுகளை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடலில் எடுக்கப்படும் தீர்மானங்களை விரைவாகத் தேசிய
மட்டத்துக்கு கொண்டு சென்று தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாகவும் அவர்
தெரிவித்தார்.
</p><p>
இதனையடுத்து, தொழில்நுட்ப ஆளணியினரை தற்காலிகமாக அரச நிறுவனங்களுக்கு இடையே
பகிர்ந்து பயன்படுத்துதல் மற்றும் கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும்
தற்போதைய தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு காலவரையறுக்கப்பட்ட சிறப்பு
ஊக்கத்தொகை வழங்குதல் ஆகிய இரு அவசரத் தீர்வுகளை முன்னெடுப்பது தொடர்பில்
கவனம் செலுத்தப்பட்டது.</p><h2>சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பான முன்மொழிவு</h2><p>
</p><p>
தகுதியான பணியாளர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தின் மூன்றில் ஒரு பங்கு அளவில்
சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பான முன்மொழிவும் முன்வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இனிவரும் பணிகளை மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச
செயலகங்களில் உள்ள தொழில்நுட்ப ஆளணியின் ஊடாக முன்னெடுப்பதற்கும்,
மாகாணத்துக்குச் சொந்தமான சில வீதிகளைத் தற்காலிகமாக உரிய நிறுவனங்களுக்கு
கையளித்து பணிகளை மேற்கொண்ட பின்னர் மீளப் பொறுப்பேற்பதற்கும் இணக்கம்
காணப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/219dd915-1a3c-4f76-924a-c5fef6380b49/26-6aa397d643de0.webp' /></p><p>
</p><p>
ஏனைய மாவட்டங்களில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் மேற்கொள்ள வேண்டிய
பணிகளைத் துரிதப்படுத்துவதுடன், தொழில்நுட்ப ஆளணியுடன் இயங்கும் மாகாண வீதி
அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் மாகாண நீர்ப்பாசனத் திணைக்களங்களின்
தொழில்நுட்ப ஒத்துழைப்பையும் பயன்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

எதிர்காலத்தில் வடக்கு மாகாணத்துக்கு மேலும் அதிகளவு அபிவிருத்தி நிதி
கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இத்தகைய சவால்கள் மீண்டும்
ஏற்படாத வகையில் நிரந்தரமான தொழில்நுட்ப மனிதவளத் திட்டமொன்றை உருவாக்குவது
தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. </p><p>இதற்குத் தேவையான சிறப்பு தொழில்நுட்ப
ஊக்கத்திட்டம் மற்றும் தற்காலிக ஆளணி பகிர்வு முறை குறித்து தொடர்புடைய
அமைச்சுக்கள் மற்றும் திறைசேரியுடன் அவசரமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க
வேண்டுமென முன்வைக்கப்பட்டுள்ளது.

மக்களுக்காக ஒதுக்கப்படும் அபிவிருத்தி நிதி மீளச் செல்லாமல், அது தரமான
பணிகளாகவும் பயனுள்ள உட்கட்டமைப்புகளாகவும் காலதாமதமின்றி மக்களைச் சென்றடைவதே
இம்முயற்சிகளின் பிரதான நோக்கமாகும் என்று ஆளுநர் வலியுறுத்தினார்.
</p><p>
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர்,
மாவட்டச் செயலர்கள், பிரதிப் பிரதம செயலாளர் – நிர்வாகம், உள்ளூராட்சி
அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், மாகாண நீர்ப்பாசனப்
பணிப்பாளர், மாகாண வீதி அபிவிருத்திப் பணிப்பாளர், உள்ளூராட்சித் திணைக்களப்
பொறியியலாளர், ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர், யாழ்ப்பாண மாவட்ட
ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T05:56:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெக்சாஸ் பல்கலைக்கு 20 மில்லியன் நன்கொடை வழங்கிய இந்திய தம்பதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indian-couple-donates-20-million-texas-university-1789106187"></link>
            <id>https://canadamirror.com/article/indian-couple-donates-20-million-texas-university-1789106187</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்கா வடக்கு டெக்சாஸ் பல்கலைக்கழகத்திற்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த பொறியாளர் தம்பதியினர் 20 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்கா வடக்கு டெக்சாஸ் பல்கலைக்கழகத்திற்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த பொறியாளர் தம்பதியினர் 20 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். </p><p>

பிராட்காம் நிறுவனத்தின் துணைத் தலைவரான விகாஸ் சின்ஹா மற்றும் அனுராதா சின்ஹா தம்பதியினரின் இந்த வரலாற்று சிறப்புமிக்க நிதியுதவியை கொண்டு, அங்கு புதிய செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வுக் கல்லூரி நிறுவப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a85c3b65-c180-45a8-bf9d-f50299676480/26-6aa3980cabd5e.webp' /></p><h2>மாணவர் கல்வி உதவித்தொகை, பேராசிரியர் பதவிகள் ,ஆராய்ச்சிப் பணி</h2><p> </p><p>
 
 
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் புதிய வாய்ப்புகளை வழங்கும் இந்த கல்லூரிக்கு 'அனுராதா மற்றும் விகாஸ் சின்ஹா செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வு கல்லூரி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.</p><p>
 
பல்கலைக்கழகத்தின் தலைவர் ஹாரிசன் கெல்லர் இவர்களின் உன்னத சேவையை பாராட்டியுள்ளார். தொழில்நுட்பங்களை உருவாக்குவதிலும் பயன்படுத்துவதிலும் இக்கொடை புதிய பாதையை அமைக்கும் என அவர் தெரிவித்தார்.</p><p> 

மேலும், இப்புதிய கல்லூரியானது செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், சைபர் பாதுகாப்பு, சுகாதார இன்ஃபர்மேடிக்ஸ் மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வுத் துறைகளை இணைக்கும் ஒரு முக்கிய கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாக செயல்படும்.</p><p> இந்த நிதியானது மாணவர் கல்வி உதவித்தொகை, பேராசிரியர் பதவிகள் மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
 
அத்துடன் கல்வியே தங்களுக்கு பல கதவுகளை திறந்ததாகவும், மற்றவர்களுக்காக அந்த கதவுகளை திறந்து வைப்பதே தங்கள் நோக்கம் என்றும் விகாஸ் சின்ஹா பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T05:53:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[புடினுக்கு எஞ்சியிருப்பது இரண்டு ஆண்டுகள் மட்டுமே... உக்ரைனின் உளவுத்துறைத் தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/putin-has-two-years-left-1789105109"></link>
            <id>https://news.lankasri.com/article/putin-has-two-years-left-1789105109</id>
            <summary type="text">Putin has two years left to fight: புடினுக்குப் போராடுவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன.
விளாடிமிர் புடினும் ரஷ்யாவும் போரிடுவதற்கு அதிகபட்சம் இன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Putin has two years left to fight: புடினுக்குப் போராடுவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன.
</p><p>விளாடிமிர் புடினும் ரஷ்யாவும் போரிடுவதற்கு அதிகபட்சம் இன்னும் இரண்டு ஆண்டுகளே உள்ளன என உக்ரைனின் உயர்மட்ட உளவுத்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e63b9277-1edc-481e-8ec7-c133046f8a40/26-6aa393d7335aa.webp' /></p><p>
</p><p>படைவீரர்களின் இழப்பு, சரிந்து வரும் மன உறுதி மற்றும் தடுமாறும் பொருளாதாரம் ஆகியவை 2028-ஆம் ஆண்டிற்குள் ரஷ்யாவின் போர் புரியும் திறனைப் பாதிக்கக்கூடும் என்று லெப்டினன்ட் ஜெனரல் ஒலெக் இவாஷ்செங்கோ விளக்கமளித்துள்ளார். </p><p>ரஷ்யா ஒவ்வொரு மாதமும் புதிதாகச் சேர்க்கும் வீரர்களின் எண்ணிக்கையை விட, 6,000-க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்து வருவதாக மேற்கத்திய உளவுத்துறைகள் தெரிவிக்கின்றன. </p><p>இதற்கிடையில், 2022-ஆம் ஆண்டு முதல் ரஷ்யா 15 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களை இழந்துள்ளதாகவும், அவர்களில் 450,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் மதிப்பிடுகின்றன.</p><p></p><p> </p><p>கீவ் நகரில் உள்ள உக்ரேனிய ராணுவத்தின் உளவுப்பிரிவு தலைமையகத்தில் பேசிய இவாஷ்செங்கோ, அடுத்த ஓராண்டுக்குத் தேவையான ராணுவ மற்றும் பொருளாதார வளங்கள் ரஷ்யாவிடம் உள்ளன; ஆனால், அவை 2028-இல் தீர்ந்துவிடும் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம் என டைம் இதழிடம் தெரிவித்துள்ளார்.</p><p> ரஷ்யா தினமும் சுமார் 1,000 பேரையும், சில சமயங்களில் 1,200 பேரையும் படையில் சேர்க்கிறது; ஆனால், இந்த உயிரிழப்பு எண்ணிக்கையைப் பாருங்கள். நேற்று 1,410 பேர், அதற்கு முந்தைய நாள் 1,511 பேர் என உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. </p><p>இவர்களில் சுமார் 60 சதவீதம் பேர் போர்க்களத்தில் கொல்லப்படுகிறார்கள். மேலும் 18 மாதங்களுக்குச் சண்டை தொடர்ந்தால், ரஷ்யத் தரப்பில் கூடுதலாக 7,65,800 பேர் பாதிக்கப்படக்கூடும் என்றும், அவர்களில் 4,59,480 பேர் உயிரிழக்கவும் 3,06,320 பேர் காயமடையவும் வாய்ப்புள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. </p><p>இத்தகைய அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் எல்லைக்கு அப்பால் உள்ள மாஸ்கோவில் போர் முயற்சிகளுக்கான ஆர்வமின்மையை ஏற்படுத்தியுள்ளன என்று இவாஷ்சென்கோ குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3972f1a-6284-47f6-aa4b-67416af1dcae/26-6aa393d7d9686.webp' /></p><p> </p><p>ரஷ்யர்கள் யாருக்கும் சண்டையிட விருப்பம் இல்லாததால் மன உறுதி மிகவும் குறைவாக உள்ளது என்று குறிப்பிட்ட அவர், ரஷ்ய பொதுமக்களின் மன உறுதியும் சரிந்துள்ளது; பெரும்பாலான மக்களுக்கு உண்மையில் போர் வேண்டாம் என்றே கூறுகின்றனர்.</p><p> இத்தகைய சூழலில் போரைத் தொடர்வதற்காக, புடினை இயல்புக்கு மாறானவர் என்று இவாஷ்செங்கோ குறிப்பிட்டுள்ளார். பிறரின் நிலப்பகுதியைக் கைப்பற்றுவதற்காக அவர்களைக் கொல்ல விரும்பும் ஒருவரைப் பற்றி நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள் என்றும் அவர் பதிலளித்துள்ளார். </p><p>இந்த நிலையில், ட்னிப்ரோபெட்ரோவ்ஸ்க் (Dnipropetrovsk) பிராந்தியத்தில் பாவ்லோஹ்ராட் (Pavlohrad) நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றை ரஷ்ய ட்ரோன் தாக்கியதில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும், 67 பேர் காயமடைந்ததாகவும் உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு இவாஷ்செங்கோ இந்தக் கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T05:45:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனித்து விடப்பட்டுள்ள குட்டி இளவரசி: வாழ்வை மாற்றும் மரபுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/princess-charlotte-forced-establish-identity-1789105054"></link>
            <id>https://news.lankasri.com/article/princess-charlotte-forced-establish-identity-1789105054</id>
            <summary type="text">Princess Charlotte is facing a new educational path separate from her older brother: இளவரசி சார்லட், கல்வியில், தன் அண்ணனைப் பிரிந்து தனி வழியை தேர்ந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Princess Charlotte is facing a new educational path separate from her older brother: இளவரசி சார்லட், கல்வியில், தன் அண்ணனைப் பிரிந்து தனி வழியை தேர்ந்தெடுக்கும் நிலையை அடைந்துள்ளார்.
</p><p>

ராஜ குடும்ப வாழ்க்கை வெளியிலிருந்து பார்ப்பதற்கு ஆடம்பரமாகத்தான் இருக்கிறது. என்றாலும், உள்ளே பல மரபுகள், விதிகள்...
</p><h2>
வாழ்வை மாற்றும் மரபுகள்
</h2><p>
இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் சிறு பிள்ளைகளாக இருக்கும்போது, வில்லியம் தன் தாயிடம், அம்மா, எனக்கு மன்னராக ஆசையில்லை என்று கூறுவாராம், உடனே ஹரி, உனக்கு பிடிக்கவில்லையென்றால் விட்டுவிடு, நான் மன்னராகிறேன் என்பாராம்.
</p><p>
அதனால், இளவரசர்களின் தாயான டயானா, ஹரியை, கிரேட் கிங் ஹரி என்றுதான் அழைப்பாராம்.
</p><p>
ஆனால், இன்றைய நிலை? வில்லியம் அடுத்து மன்னராக உள்ளார், ஹரி, நான் மட்டும் ஸ்பேரா? என கோபத்தில் குடும்பத்தையே பிரிந்துவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15b42f18-7ab5-4580-95b8-fb5ab9e1145e/26-6aa3953c6b60b.webp' /><br></p><p>
</p><p>
ஹரியை திருமணம் செய்த மேகனும் அப்படித்தான். ராஜ வாழ்வு சொகுசாக இருக்கும் என்று எண்ணி, திட்டமிட்டு ஹரியை திருமணம் செய்துகொண்டு, ஆனால், மூத்த ராஜ குடும்ப உறுப்பினர்களுக்கு பொறுப்புகள் அதிகம் என்றதும், சமாளிக்க முடியாமல் நாட்டைவிட்டே ஓட்டம் பிடித்தார்.</p><p>

ஆக, ராஜ குடும்பத்தைப் பொருத்தவரை, அது தங்கக்கூண்டில் அடைக்கப்பட்ட கிளியின் வாழ்க்கை போன்றதுதான் எனலாம்.
</p><h2>
தனித்து விடப்பட்டுள்ள குட்டி இளவரசி
</h2><p>
குறிப்பாக, பெண் பிள்ளைகளின் நிலைமை இன்னமும் மோசம். மகாராணியார் எலிசபெத்தின் மூத்த மகன் சார்லஸ். அவரது தங்கை இளவரசி ஆன்.</p><p>

சிறுவயதில் எல்லோரும் இளவரசர்களாகத்தான் வளர்ந்தார்கள். ஆனால், மகாராணியார் மறைந்ததும், அரியணை சார்லசுக்கு, ஆன் ஒதுங்கித்தான் ஆகவேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9514975-f66d-4a59-97c5-7a6ca37f9ed5/26-6aa3953d3cb22.webp' /><br></p><p>
</p><p>
ஆனாலும், அவர் தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை நேர்த்தியாக, முகம் சுளிக்காமல், எந்த வெறுப்போ பொறாமையோ இன்றி நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்.</p><p>

அதேபோலத்தான் இப்போது வில்லியம், கேட் தம்பதியர் குடும்பத்திலும் ஒரு விடயம் நடந்துகொண்டிருக்கிறது.
</p><p>
ஆம், நேற்று வரை ஒரே குடும்பமாக, அப்பாவின் தோளில் ஒருவரும், அம்மாவின் தோளில் ஒருவருமாக கைபோட்டுக்கொண்டு ஆனந்தமாக உலாவிவந்தார்கள் வில்லியம், கேட் தம்பதியரின் பிள்ளைகளான ஜார்ஜ், சார்லட் மற்றும் லூயிஸ்.
</p><p>
மூன்று பேரும் ஒரே பள்ளியில் படிக்க, அப்பா அல்லது அம்மா, தினமும் பிள்ளைகளை பள்ளியில் கொண்டு விட்டு, அழைத்துவந்தார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96e04b90-f80d-4b23-93b9-d46dd2d19361/26-6aa3953e1028a.webp' /><br></p><p>
</p><p>
ஆனால் இன்று, ஜார்ஜ் தனியாக Eton கல்லூரிக்கு படிக்கச் சென்றுவிட்டார். நேற்று அவரை அவருடன் இருந்த தங்கை சார்லட், இனி அவருடன் படிக்கமுடியாது. காரணம், Eton கல்லூரி ஆண்களுக்கான கல்லூரி.</p><p>

ஆக, இனி சார்லட், தன் பாட்டி இளவரசி ஆனைப்போல, தனியாக தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டாகவேண்டும். ஆம், வாழ்வு மாறிவிட்டது!</p><p>

ஆக, இன்று ஹரி ஆத்திரத்திலும் இயலாமையும் புழுங்கிக்கொண்டிருப்பதுபோல, நாளை தங்கள் பிள்ளைகளும் ஆகிவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ள வில்லியம், கேட் தம்பதியர், மூத்த மகனான ஜார்ஜை வருங்கால மன்னராக்கும் வழியிலும், மற்ற பிள்ளைகளை தத்தம் வழியிலும் வழிநடத்திக்கொண்டிருக்கிறார்கள்.</p><p>

அவ்வகையில், சார்லட், தன் தாய் தான் படித்த Marlborough பள்ளியில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
 Marlborough பள்ளியில் தன் பள்ளிப்படிப்பை முடித்த இளவரசி கேட், பின்னர் செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலையில் இணைந்தார். அங்குதான் அவர் வில்லியமை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.<br></p>]]></content>
            <updated>2026-09-11T05:45:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் 5 இலட்சத்துக்கு ஏலம் போன மாம்பழம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mango-sold-for-rs-500-000-in-vavuniya-1789105363"></link>
            <id>https://jvpnews.com/article/mango-sold-for-rs-500-000-in-vavuniya-1789105363</id>
            <summary type="text">வவுனியா - வேப்பங்குளம் சாஸ்திரிகூழாங்குளம் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவில், விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று 5 இலட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வவுனியா - வேப்பங்குளம் சாஸ்திரிகூழாங்குளம் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவில், விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று 5 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">


ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் ஒரு பகுதியாக நேற்று (11) மாம்பழத் திருவிழா இடம்பெற்றது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86c881a2-ea96-45c4-8a5c-c31279dc4e45/26-6aa394d4b1ce5.webp' /></p><h2 style="text-align: justify; ">பலத்த போட்டி</h2><p style="text-align: justify; ">



இதன்போது விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம், ஆலய வளர்ச்சி நிதிக்காக ஏலத்தில் விடப்பட்டது.</p><p style="text-align: justify; ">



மாம்பழத்தை பெற்றுக்கொள்வதற்காக இடம்பெற்ற பலத்த போட்டிக்கு மத்தியில், வவுனியாவைச் சேர்ந்த குடும்பத்தினர் 505,000 ரூபா தொகையை வழங்கி மாம்பழத்தை ஏலத்தில் பெற்றுக்கொண்டனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



ஆலய வளர்ச்சிக்காக நடத்தப்பட்ட இந்த ஏலத்தில் மாம்பழம் 5 இலட்சம் ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்பட்டமை பக்தர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-11T05:45:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்பள்ளி ஆசிரியர்களின் தொழில்முறை தரத்தை மேம்படுத்தல் : பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/weighted-average-marks-method-instead-gpa-system-1789102323"></link>
            <id>https://ibctamil.com/article/weighted-average-marks-method-instead-gpa-system-1789102323</id>
            <summary type="text">புதிய ஆரம்பக் குழந்தைப் பருவ பாடத்திட்டக் கட்டமைப்பு மற்றும் ஆசிரியர் வழிகாட்டி கையேட்டின் அடிப்படையில், 2027ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய ஆரம்பக் குழந்தைப் பருவ பாடத்திட்டக் கட்டமைப்பு மற்றும் ஆசிரியர் வழிகாட்டி கையேட்டின் அடிப்படையில், 2027ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ள முன்பள்ளி அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய கவனம் செலுத்தியுள்ளார்.</p><p>தேசிய கொள்கைக்கு அமைவாக முன்பள்ளி அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தெரிவித்த பிரதமர், முன்பள்ளி ஆசிரியர்களின் தொழில்முறை தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.</p><p>பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்ற, புதிய கல்வி மறுசீரமைப்புகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான நாடாளுமன்ற துணைக்குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><h2>மாணவர்களுக்கான&nbsp;வாய்ப்புகள்</h2><p>அத்துடன் தொழிற்கல்விப் பிரிவுகள், தொழில் வழிகாட்டல் மற்றும் வெளிநாட்டு மொழிகளைக் கற்கும் வாய்ப்புகளும் மாணவர்களுக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da7a382e-e4ee-4f13-86db-2e3688074572/26-6aa38f43f3aa4.webp' /></p><p>மேலும் இதன்போது, தற்போதுள்ள GPA என்ற நிலைப் புள்ளி சராசரி முறைக்கு பதிலாக, ஒவ்வொரு பாடத்தின் தன்மைக்கு ஏற்ப இறுதி பெறுபேற்றை கணக்கிடும் ‘Weighted Average Marks’ எனப்படும் நிறையிடப்பட்ட சராசரி மதிப்பெண் முறையை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>கல்வி அமைச்சுக்கு கிடைத்துள்ளது</h2><p>புதிய கல்வி மறுசீரமைப்புகள், கல்வித்துறையில் உள்ள அனைத்து தொழில்சார் தரப்பினரின் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால், அதன் முழுமையான பயனை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக அனைத்து தரப்பினரும் பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96f8b779-bb81-48f5-9bad-a424c88794bf/26-6aa38f4501d8a.webp' /></p><p>

இதனிடையே, இலங்கையின் பொதுக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு, தேசிய கல்வி ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான கருத்தியல் ஆவணம் மற்றும் பாடசாலை மட்ட மதிப்பீடு மற்றும் சான்றிதழ் வழங்கலுக்கான கட்டமைப்பு ஆகிய கொள்கை ஆவணங்கள் கல்வி அமைச்சுக்கு கிடைத்துள்ளதாகவும், அவை அமைச்சரவை அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T05:39:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனில் உள்ள வணிக வளாகத்தின் மீது ரஷ்ய ஆளில்லா விமானத் தாக்குதல்: 5 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/russian-drone-attack-shopping-mallukraine-5-killed-1789100296"></link>
            <id>https://ibctamil.com/article/russian-drone-attack-shopping-mallukraine-5-killed-1789100296</id>
            <summary type="text">உக்ரைனின் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பாவ்லோஹ்ராட் நகரில் வணிக வளாகமொன்றின் மீது ரஷ்ய ட்ரோன் மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பாவ்லோஹ்ராட் நகரில் வணிக வளாகமொன்றின் மீது ரஷ்ய ட்ரோன் மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 67 பேர் காயமடைந்துள்ளனர்.
</p><p>
மக்கள் அதிகளவில் நடமாடிக் கொண்டிருந்த பகுதியொன்றில் பகல் வேளையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p>

தாக்குதலில் வணிக வளாகம் மட்டுமன்றி, பல வர்த்தக நிலையங்கள் மற்றும் வாகனங்களும் சேதமடைந்துள்ளன.</p><p></p><h2>உக்ரைன் உள்துறை அமைச்சர்&nbsp;</h2><p> தாக்குதல் இடம்பெற்றபோது பாவ்லோஹ்ராட் நகரின் பிரதான வீதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருந்ததாக உக்ரைன் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbb2a656-5972-4436-ad42-495bf1bb3969/26-6aa393d466803.webp' /></p><p>
</p><p>
காயமடைந்த 67 பேரில் 8 சிறுவர்களும் அடங்குவதாக பிராந்திய ஆளுநர் ஒலெக்சாண்டர் ஹன்ஷா தெரிவித்துள்ளார்.</p><p>

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.</p><p> வணிக வளாகங்களுக்கு அருகில் தமது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பொதுமக்களை இலக்காகக் கொண்டு ரஷ்யா ட்ரோன் தாக்குதலை நடத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><h2>வணிக வளாகங்கள்</h2><p>இந்தத் தாக்குதலை உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் அன்ட்ரி சிபிஹா, உக்ரைனுக்கு அழுத்தம் கொடுக்கும் ரஷ்யாவின் உத்தி எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dc3f406-c653-4e01-883e-0d7b13ceee03/26-6aa393d3a8efc.webp' /></p><p>மேலும் அவர் குறிப்பிடுகையில் “பொதுமக்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்துவதன் மூலம் உக்ரைன் மக்களை சோர்வடையச் செய்து, சலுகைகளை வழங்குவதற்கு உக்ரைனை கட்டாயப்படுத்தலாம் என குறிப்பிட்டிருந்தார்.&nbsp;</p><p>
டினிப்ரோ நகருக்கு அருகிலுள்ள முக்கிய விநியோக மையமாக விளங்கும் பாவ்லோஹ்ராட், இதற்கு முன்னரும் ரஷ்ய தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளது. கடந்த மாதம் அங்குள்ள களஞ்சியத் தொகுதி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்திருந்தனர்.
</p><p>
இதேவேளை, இந்த வாரத்தில் சபோரிஷியா மற்றும் சுமி நகரங்களில் உள்ள இரு வணிக வளாகங்களும் ரஷ்ய வான்வழித் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன. </p><p>திங்கட்கிழமை சபோரிஷியாவில் உள்ள வணிக வளாகமொன்று கடுமையாக சேதமடைந்த போதிலும், அது மூடப்பட்டிருந்ததால் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T05:38:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பருத்தித்துறை காணிகளை விடுவிக்கக் கோரி பாரிய போராட்டம்! ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ள மனு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-demanding-release-of-lands-jaffna-1789104034"></link>
            <id>https://ibctamil.com/article/protest-demanding-release-of-lands-jaffna-1789104034</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், வடமராட்சி பருத்தித்துறைப் பகுதியில் இராணுவத்தினராலும் கடற்படையினராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்தியும், ஆயுதப் பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், வடமராட்சி பருத்தித்துறைப் பகுதியில் இராணுவத்தினராலும் கடற்படையினராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்தியும், ஆயுதப் படைகள் அங்கிருந்து வெளியேறக் கோரியும் பிரம்மாண்ட கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதன்போது, தபாலகத்திற்குச் சொந்தமான காணி, நீதிமன்றக் காணி, பருத்தித்துறை நகர சபைக்குச் சொந்தமான காணிகள் மற்றும் பருத்தித்துறை வெளிச்சவீட்டுப் பகுதி ஆகியவற்றை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p>

பருத்தித்துறை நகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போராட்டம், பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் ஆரம்பமாகி, பேரணியாக வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தை
சென்றுடைந்துள்ளது.</p><p></p><h2>கோரிக்கை மனு</h2><p>

அங்கு ஜனாதிபதிக்கான கோரிக்கை மனு கையளிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b9ce9a9-8f27-4543-8d1e-6efb87f42066/26-6aa391aff14b3.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், குறித்த போராட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன், நகர சபை தவிசாளர் வின்சன் டி போல் டக்லஸ் போல், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஷ் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துக் கொண்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T05:34:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை தமிழரை செருப்பால் அடிக்க முயன்ற மறுவாழ்வு முகாம் ஆட்சியர் ; வைரலாகும் காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rehab-official-tries-to-hit-tamil-man-with-slipper-1789096545"></link>
            <id>https://jvpnews.com/article/rehab-official-tries-to-hit-tamil-man-with-slipper-1789096545</id>
            <summary type="text">மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள் சார் ஆட்சியர் அவர்களிடம் விடுப்பு கேட்டு வந்த வந்த இலங்கைத் தமிழரை தகாத வார்த்தையில் பேசி செருப்பால் அடிக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள் சார் ஆட்சியர் அவர்களிடம் விடுப்பு கேட்டு வந்த வந்த இலங்கைத் தமிழரை தகாத வார்த்தையில் பேசி செருப்பால் அடிக்க பாய்ந்த சம்பவம்&nbsp; பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p style="text-align: justify;">

இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள், அகதிகளாக வந்த இலங்கை தமிழர்களை தமிழக அரசு ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cff2c4b-b98a-488a-9130-9655ee8747ed/26-6aa3737ee72ba.webp' /></p><h2 style="text-align: justify; ">லஞ்சம் கோரிய&nbsp;சார் ஆட்சியர் </h2><p> </p><p style="text-align: justify;">

மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 1,500 இற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். </p><p style="text-align: justify; ">

இலங்கை தமிழர்கள் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் உள்ள உறவினர்களை சந்திக்க செல்லவும், வைத்திய சிகிச்சைக்கு செல்லும் போது மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் சார் ஆட்சியரிடம் விடுப்பு பெற வேண்டும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify;">

அதன் அடிப்படையில் இலங்கை தமிழர் ஒருவர் சென்னையில் வைத்திய சிகிச்சைக்கு செல்வதற்காக மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் சார் ஆட்சியரிடம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விண்ணப்பித்துள்ளார். </p><p style="text-align: justify;">

ஆனால் விடுப்பு அளிப்பதற்கு சார் ஆட்சியர் பணம் லஞ்சமாக கேட்டதாக சொல்லப்படுகிறது. </p><p style="text-align: justify;">

பணம் அளிக்காததால் இலங்கைத் தமிழர்க்கு விடுப்பு அளிக்காமல் இருந்து வந்த நிலையில், இன்று மீண்டும் விடுப்பு விண்ணப்பம் குறித்து கேட்க சென்றவரை சார் ஆட்சியர்&nbsp; தகாத வார்த்தையால் பேசி செருப்பால் அடிக்க முயன்ற வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-11T05:31:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஸ்வநாத் &amp; சன்ஸ் வெளிநாட்டு மொத்த வசூல், முழு விவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vishwanath-and-sons-overseas-total-box-office-1789101295"></link>
            <id>https://cineulagam.com/article/vishwanath-and-sons-overseas-total-box-office-1789101295</id>
            <summary type="text">சூர்யா நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் பிரம்மாண்ட எதிர்பார்ப்புடன் வெளிவந்த படம் விஸ்வநாத் &amp;amp; சன்ஸ். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூர்யா நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் பிரம்மாண்ட எதிர்பார்ப்புடன் வெளிவந்த படம் விஸ்வநாத் &amp; சன்ஸ். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதை தொடர்ந்து உலகம் முழுவதும் இப்படம் ரூ 220 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9675a452-bcab-47bc-93c8-42f49956fcb7/26-6aa384f3064d4.webp' /></p><p></p><p>இந்நிலையில் <a href="https://www.nakkheeran.in/cinema/viswanath-and-sons-ott-release-update-12506276" target="_blank">விஸ்வநாத் &amp; சன்ஸ்</a> படத்தின் இறுதி வெளிநாட்டு வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன் விவரங்கள் இதோ...</p><p><b><u>

27 Days</u></b></p><ul><li> 

North America $2.94M </li><li>
UK Europe $1.3M
</li><li>Malaysia $1.15M</li><li>
Middle East $920K
</li><li>Singapore $294K
</li><li>Australia $292K</li><li>
New Zealand $24K
</li><li>Lanka/Rest $190K
</li></ul><p><b>
Total Overseas - $7.11M - இந்திய மதிப்பில் ரூ. 67.9 கோடி.
</b></p><p>
இதன் மூலம் வெளிநாடுகளில் விஸ்வநாத் &amp; சன்ஸ் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது; மேலும் நார்த் அமெரிக்காவில் மெகா பிளாக்பஸ்டர் படமாக அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f227638-f83d-4bcd-88d2-e5fdd1cc1810/26-6aa384f24afb1.webp' /></p><p></p><p> </p><p>

கருப்பு படம் வெளிநாடுகளில் 10 மில்லியன் டாலர் வசூல் செய்ய, விஸ்வநாத் &amp; சன்ஸ் 7 மில்லியன் டாலரை தொட, Scene திரைப்படம் குறைந்தது 15 மில்லியன் டாலர் வசூலிக்கும் என்பதே எல்லோர் எதிர்பார்ப்பும்.</p>]]></content>
            <updated>2026-09-11T05:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு குறித்து மனம் திறந்த மைத்திரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/i-dont-know-about-gnasara-thero-case-1789104336"></link>
            <id>https://tamilwin.com/article/i-dont-know-about-gnasara-thero-case-1789104336</id>
            <summary type="text">அரசியல் அமைப்பின் பிரகாரமே, பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியல் அமைப்பின் பிரகாரமே, பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
</p><p>கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் ஆட்சிக்காலத்தில், பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.
</p><p>இந்த பொது மன்னிப்பானது உரிய விதிகளை பின்பற்றி வழங்கப்படவில்லை என தற்பொழுது நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><h2>மைத்திரியின் பதில்</h2><p>
</p><p>இந்த நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரி&nbsp; இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p>
ஞானசார தேரர் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பற்றி தமக்கு எதுவும் தெரியாது என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>எவ்வாறு எனினும் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பிலான தனது தீர்மானம் அரசியல் அமைப்பிற்கு உட்பட்ட வகையில் அந்தக் காலத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்&nbsp; என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1e89875-0afc-439d-b672-8dc57eb93cd1/26-6aa39936d8f51.webp' /></p><h2>ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கும் நடைமுறை</h2><p>
</p><p>19ஆம் திருத்த சட்டத்தை சட்டத்தின் பிரகாரம் காணப்பட்ட அதிகாரங்களை குறைத்ததாகவும் பதவி காலத்தை குறைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
தனக்கு பின்னர் வந்த அரசாங்கம் 19ஆம் திருத்தச் சட்டத்தில் தம்மால் அகற்றப்பட்ட அதிகாரங்களை மாற்றியமைதத்தாகவும், அதன் பின்னர் மீண்டும் ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>எனவே இந்த நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் தமக்கு எவ்வித கருத்தையும் வெளியிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><hr><p><br></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/PCwqMA0Awjs" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-11T05:28:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்; அடுத்தடுத்து சகோதரிகள் மரணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/batticaloa-tiktok-young-woman-suicide-1789104702"></link>
            <id>https://jvpnews.com/article/batticaloa-tiktok-young-woman-suicide-1789104702</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டக்களப்பில் TikTok இல் வலம்வந்த 18 வயது யுவதி விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த யுவதி தாய் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மட்டக்களப்பில் TikTok இல் வலம்வந்த 18 வயது யுவதி விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
உயிரிழந்த யுவதி தாய் அற்ற நிலையில் தந்தையுடன் வாழ்ந்து வந்த மட்டக்களப்பு ஒந்தாட்சிபடத்தைச் சேர்ந்த குறித்த யுவதி ஏன் இந்த முடிவு எடுத்தார் எனத் தெரியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08a4d0c4-0d3e-4397-9ca3-995ca5d14042/26-6aa3923f9c008.webp' /></p><p>
</p><p> 
அதேவேளை உயிரிழந்த யுவதியின் சகோதரியும் ஏற்கனவே இவ்வாறே தற்கொலை செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.&nbsp; &nbsp;யுவதியின் மரணத்திற்கான&nbsp; காரணம் வெளியாகாத&nbsp; நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக&nbsp; கூறப்படுகின்றது.</p><p>]</p>]]></content>
            <updated>2026-09-11T05:28:36+00:00</updated>
        </entry>
    </feed>
