<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-24T06:37:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியா மீது புதிதாக 10% இறக்குமதி வரி: இதற்கு மட்டும் வரியில் இருந்து விலக்கு: அமெரிக்கா அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-sets-10-per-cent-tariffs-on-indian-goods-1784874834"></link>
            <id>https://news.lankasri.com/article/us-sets-10-per-cent-tariffs-on-indian-goods-1784874834</id>
            <summary type="text">இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 10% வரியை விதித்துள்ளது.இந்தியா மீது 10% வரி விதிப்புகட்டாய உழைப்பு மூலம் உற்பத்தி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 10% வரியை விதித்துள்ளது.</p><h2>இந்தியா மீது 10% வரி விதிப்பு</h2><p>கட்டாய உழைப்பு மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மீதான தடையை முழுமையாக நிறைவேற்றாத இந்தியா, சீனா, மற்றும் பிரித்தானியா உட்பட 60 வர்த்தக கூட்டாளி நாடுகள் மீது அமெரிக்கா இறக்குமதி வரியை விதித்துள்ளது.</p><p>இதில் 10% முதல் 12.5% வரையிலான இறக்குமதியை வரியை அமெரிக்கா அரசு விதிக்கவுள்ளது.</p><p>இறக்குமதிகளை சார்ந்து இருக்கும் அமெரிக்கர்களின் தன்மையை குறைக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அடுத்தடுத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30bf6859-29e5-4fca-bffb-6ddb529c7a94/26-6a630754365d2.webp' /></p><p>அதிக ஊதியம் பெறும் அமெரிக்கர்களின் பொருட்களுக்கு பதிலாக கட்டாய உழைப்பும் மூலம் உருவாக்கப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதை தடுக்கும் சட்டங்கள் இல்லாத நாடுகள் மீது புதிய வரியானது விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> அதில் சீனா, பிரித்தானியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு 12.5% வரி விதிப்பை அமெரிக்கா அறிவித்துள்ளது.</p><p> கட்டாய உழைப்பும் மூலம் உருவாக்கப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதை தடுக்கும் சட்டங்கள் கொண்டிருந்தாலும் அவற்றை முறையாக நடைமுறைப்படுத்தாத இந்தியா, இலங்கை மற்றும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு 10% வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அமெரிக்கா-கனடா-மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் வரும் பொருட்கள் மற்றும் எண்ணெய், எரிவாயு பொருட்கள் ஆகியவை இந்த புதிய வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.</p><p>டிரம்பின் உத்தரவு படி, 1974ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வர்த்தக சட்டம் 301-ன் கீழ் 60 நாடுகள் மீதான புதிய வரியை கொண்டு வருவதாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி(USTR) ஜேமிசன் கிரீர் அறிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T06:34:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.மாவட்ட செயலக பழைய கட்டடம் குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protect-jaffna-old-district-secretariat-building-1784872100"></link>
            <id>https://ibctamil.com/article/protect-jaffna-old-district-secretariat-building-1784872100</id>
            <summary type="text">தொன்மை வாய்ந்த யாழ்ப்பாண பழைய மாவட்டச் செயலகக் கட்டடத்தை பாதுகாக்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி அதிகாரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொன்மை வாய்ந்த யாழ்ப்பாண பழைய மாவட்டச் செயலகக் கட்டடத்தை பாதுகாக்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி அதிகாரிகளுக்கு ஆலாசனை வழங்கியுள்ளார்.</p><p>யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நேற்று (23) விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர், பழைய பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள பழைய மாவட்டச் செயலகக் கட்டடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.</p><p>குறித்த புராதனக் கட்டடத்தை பார்வையிட்டதுடன், அதன் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் கட்டடக்கலைப் பெறுமதிகளைப் பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு நடவடிக்கைகள், புனரமைப்பு பணிகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடினர்.</p><p></p><h2>ஆலோசனை வழிகாட்டுதல்</h2><p>
</p><p>
மேலும், குறித்த கட்டடத்தின் பாதுகாப்பு, புனரமைப்பு மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cee821b9-751f-4798-afec-540ad04e6f81/26-6a63055fb4101.webp' /></p><p>
</p><p>
இக் களவிஜயத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் எஸ். கபிலன், தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம், ஆளுநரின் செயலாளர், தொல்பொருள் திணைக்களத்தின் யாழ். மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T06:26:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண் உதவியாளரிடம் அத்து மீறல்; சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை சட்டத்தரணி பதவி நீக்கமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/international-criminal-court-chief-khan-removed-un-1784874286"></link>
            <id>https://jvpnews.com/article/international-criminal-court-chief-khan-removed-un-1784874286</id>
            <summary type="text">&amp;nbsp; சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை சட்டத்தரணி கரீம் கானை பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்குவது தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்கெடுப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை சட்டத்தரணி கரீம் கானை பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்குவது தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்கெடுப்பு இன்று (24) நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெறுகின்றது.
</p><p>


பிரிட்டிஷ் சட்டத்தரணியான கரீம் கான், தனது பெண் உதவியாளரிடம் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கைகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.



தன் மீதான பாலியல் முறைப்பாடுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் கரீம் கான் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e4c040e-af30-458a-9ad9-06a414fa20dc/26-6a63052fedf5b.webp' /></p><h2>குற்றச்சாட்டுகள் அனைத்தையும்&nbsp; &nbsp;திட்டவட்டமாக மறுத்துள்ள&nbsp;கரீம் கான் </h2><p>
</p><p>


அத்துடன், அமெரிக்கா விதித்துள்ள தடைகள் காரணமாக, நியூயோர்க்கில் நடைபெறும் இந்த ஐ.நா கூட்டத்தில் கரீம் கான் நேரடியாகப் பங்கேற்க முடியாத சூழல் நிலவுகின்றது.</p><p>



உலகெங்கிலும் உள்ள தூதுவர்கள் பங்கேற்கும் இந்த வாக்கெடுப்பு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத ஒரு நிகழ்வாகப் பார்க்கப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>


நெருக்கடியில் சிக்கியுள்ள தலைமை சட்டத்தரணி கரீம் கான் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்கப்பட்டு, அவரைப் பதவியிலிருந்து நிரந்தரமாக நீக்குவதா இல்லையா என்பது குறித்து உலக நாடுகளின் பிரதிநிதிகள் வாக்களித்து இறுதி முடிவு எடுக்கவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-24T06:23:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்ததில் இளைஞர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-dies-after-motorcycle-catches-fire-1784866652"></link>
            <id>https://tamilwin.com/article/youth-dies-after-motorcycle-catches-fire-1784866652</id>
            <summary type="text">திருகோணமலை – கபரணை பிரதான வீதியின் கித்துலூத்து, 147ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் கந்தளாயைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை – கபரணை பிரதான வீதியின் கித்துலூத்து, 147ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் கந்தளாயைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் விபத்தின் போது காயமடைந்த இந்தியச் சுற்றுலாப் பயணி ஒருவர் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>
இந்த விபத்தானது நேற்று(23.07.2026) மாலை இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>வாகன விபத்து</h2><p> </p><p>

கித்துலூத்துப் பகுதியிலிருந்து கந்தளாய் நோக்கி அதிவேகமாகப் பயணித்த உயர் ரக ரேசிங் (Racing) மோட்டார் சைக்கிளும், திருகோணமலையிலிருந்து கபரணை நோக்கி பயணித்த இந்தியத் தம்பதியினரின் காரும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. </p><p>காரில் மோதிய மோட்டார் சைக்கிள் பல துண்டுகளாகச் சிதறியதுடன், கணப்பொழுதில் தீப்பற்றி எரிந்து முற்றாகச் சாம்பலாகியுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac8077f9-eead-41c4-a4f8-22388b7fedd7/26-6a62f1ab819f1.webp' /></p><p>இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான கந்தளாயைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர், உடனடியாகக் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதனை அடுத்து மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். </p><p>

அத்துடன், காரை ஓட்டி வந்தவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

காயங்களுக்கு உள்ளான கார் ஓட்டுநரின் மனைவிக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தங்கியிருந்த விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விபத்துக்கான காரணம் குறித்து கல் ஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T06:18:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயகன் இல்ல, ஜவ்வு நாயகன்!! விஜய்யை படுமோசமான கலாய்த்த சாட்டை துரைமுருகன்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/jana-nayagan-is-not-javvu-nayagan-story-saattai-1784874191"></link>
            <id>https://viduppu.com/article/jana-nayagan-is-not-javvu-nayagan-story-saattai-1784874191</id>
            <summary type="text">ஜனநாயகன்தமிழக முதல்வரும் நடிகருமான விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படம் நேற்று ஜூலை 23 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜனநாயகன்</h2><p>தமிழக முதல்வரும் நடிகருமான விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படம் நேற்று ஜூலை 23 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழகத்தில் மட்டும் ஒருநாளில் 9 கோடிக்கும் மேல் வசூலித்து வருகிறது. படத்தை பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களை இணையதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/898c5edb-c5e7-4c82-8b56-db81a5e67036/26-6a6304d1d993a.webp' /></p><p> அந்தவகையில் ஜனநாயகன் படம் எப்படி இருக்கிறது என்று சாட்டை துரைமுருகன் தன் கருத்தை பகிர்ந்துள்ளார். </p><p>அதில், ஜனநாயகன் படத்தின் கதை என்னென்ன 50 லட்சம் பொம்மையை தமிழ்நாட்டுக்குள் வில்லன் அனுப்பி வைக்கிறார். அந்த 50 லட்சம் பொம்மைகளும் 50 லட்சம் துப்பாக்கி இருக்கிறது. அதை பார்த்ததும் நாயகி மமிதாவிற்கு பயம் வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67a6cf91-ddfd-47f3-b3fd-6eac2786bd8f/26-6a6304d13695c.webp' /></p><p> </p><p>அதற்கு காரணம், மமீதா சின்ன பொண்ணாக இருக்கும்போது ஒரு பொம்மைக்குள் துப்பாக்கி இருப்பதை பார்க்கிறாங்க, அதே துப்பாக்கியால் தான் அம்மா இறந்து போறாங்க. அதனால் அம்மா சாவுக்கு காரமான துப்பாக்கியை பார்த்ததும் மமிதாவிற்கு பயம் வந்துவிடுகிறது. அந்த பயத்தை யார் போக்குவாங்க? என்ற கேள்வி தான் எல்லாருக்கும் வருகிறது.</p><h2>&nbsp;ஜவ்வு நாயகன்</h2><p> துப்பாக்கி கலாச்சாரத்தால் இந்து, முஸ்லீம் பிரச்சனை ஏற்பட, அதனால் மக்கள் யாரு வந்து இந்த பிரச்சனையை சரி பண்ணுவாங்க என்று காத்திருக்க அந்த நேரத்துல் விஜய் அங்கே வருகிறார். ராவணன் மகன்டா என்ற பாட்டை போட, அதை பார்க்கும்போது நமக்கு அழுதுகிட்டே பாடுற மாதிரிதான் தோணும். காரணம் ஜனநாயகன் இல்ல, ஜவ்வு நாயகனாகத்தான் இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca18e324-acd2-485f-a828-d0c716a32deb/26-6a6304d28e4f0.webp' /></p><p> </p><p>எல்லா இடத்திலும் ரத்தம் தெரிக்குது, தல துண்டா போகுது, கை துண்டா பறக்குது, இதையெல்லாம் பார்க்கும்போது நம்ம மனசும் தான் துண்டா போகுது. என்ன விடுங்கடா வெளியே போயிடலாம்னு நெனச்சா, வெளியே வர முடியாது. அதனாலதான் 3 மணி நேரம் அத அறுவையை இருந்து பார்க்க வேண்டிய சூழ்நிலை என்று கூறியிருக்கிறார் சாட்டை துரைமுருகன்.</p>]]></content>
            <updated>2026-07-24T06:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொழில் திணைக்களத்திலிருந்து பொதுமக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/special-announcement-public-department-of-labor-1784873658"></link>
            <id>https://jvpnews.com/article/special-announcement-public-department-of-labor-1784873658</id>
            <summary type="text">தொழில் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் அவசியமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், எதிர்வரும் 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் ஊழியர் சேமலாப நித...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொழில் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் அவசியமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், எதிர்வரும் 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் டிஜிட்டல் EPF தொடர்பான அனைத்து பொதுச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>இதன்படி, தலைமை அலுவலகம் உட்பட அனைத்து பிரதேச, மாவட்ட மற்றும் உப தொழிலாளர் அலுவலகங்களிலும் EPF கொடுப்பனவுகள், பதிவுகள் மற்றும் டிஜிட்டல் EPF கட்டமைப்பு சார்ந்த சேவைகள் இந்த இரண்டு நாட்களிலும் வழங்கப்படமாட்டாது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be80e3c6-c5df-4d32-a9ad-02e91573b594/26-6a6302bb66db2.webp' /></p><p>அதேவேளை, குறித்த தினங்களில் சேவைகளைப் பெற முன்கூட்டியே நேரம் ஒதுக்கியவர்கள், அடுத்த ஒரு மாத காலத்திற்குள் ஏதேனும் ஒரு அலுவலக தினத்தில் வருகை தந்து தங்களுக்கான சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T06:14:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கு பதற்றம்! அதிரடியாக அதிகரிக்கும் மசகு எண்ணெய் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/oil-prices-cross-100-on-middle-east-tensions-1784871900"></link>
            <id>https://tamilwin.com/article/oil-prices-cross-100-on-middle-east-tensions-1784871900</id>
            <summary type="text">சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இரு மாத வீழ்ச்சிக்குப் பின்னர் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக, ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இரு மாத வீழ்ச்சிக்குப் பின்னர் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.</p><p>

இதன் காரணமாக, ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலரைக் கடந்து அதிகரித்துள்ளது.
</p><p>
இதன்படி, சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 100.60 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>மத்திய கிழக்கு பிராந்திய பதற்றம்</h2><p>அதேபோன்று, WTI ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் விலையும் அதிகரித்து 92.13 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd19db8b-5300-4510-a57f-c42f15c739c7/26-6a63026dd1f64.webp' /></p><p>மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக இவ்வாறு எண்ணெய் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T06:13:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெதன்யாகுவின் கைது குறித்த வாதங்களில் மீண்டும் திரும்பிய சர்வதேசத்தின் பார்வை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/netanyahu-s-arrest-sparks-international-sensation-1784869729"></link>
            <id>https://ibctamil.com/article/netanyahu-s-arrest-sparks-international-sensation-1784869729</id>
            <summary type="text">சர்வதேச மன்னிப்பு சபையின்&amp;nbsp; ஆராய்ச்சி, ஆதரவு, கொள்கை மற்றும் பிரசாரப் பிரிவின் மூத்த இயக்குநரான எரிக்கா குவேரா ரோசாஸ், இஸ்ரேலிய பிரதமருக்கு எதிரான...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச மன்னிப்பு சபையின்&nbsp; ஆராய்ச்சி, ஆதரவு, கொள்கை மற்றும் பிரசாரப் பிரிவின் மூத்த இயக்குநரான எரிக்கா குவேரா ரோசாஸ், இஸ்ரேலிய பிரதமருக்கு எதிரான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.</p><p>இஸ்ரேல், பலஸ்தீனத்திற்கு எதிராக மேற்கொண்டு வரும் யுத்த குற்றங்களை மேற்கோள்காட்டி இந்த அழைப்பை அவர் விடுத்துள்ளார்.&nbsp;</p><p>சமீபத்தில் நியூயார்க் மேயர் சோஹ்ரான் மம்தானி, நெதன்யாகுவைக் கைது செய்து காவலில் வைக்க அழைப்பு விடுத்திருந்தார்.</p><p></p><h2>நெதன்யாகு எதிரான பிடியாணை</h2><p>இந்நிலையில் இதனைத்தொடர்ந்து வந்துள்ள எரிக்கா குவேராவின் அறிக்கை, வெளிநாட்டு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36d36f15-a3e0-4376-bb1b-60a2d74c05b7/26-6a630081ef88f.webp' /></p><p>

2024-ல் காசா மீது இஸ்ரேல் நடத்திய போரின்போது போர்க்குற்றங்களைச் செய்ததாக நெதன்யாகு மீது குற்றம் சாட்டி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு எதிராகக் கைது ஆணை பிறப்பித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T06:13:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[7 நாள் முடிவில் The Odyssey செய்துள்ள நல்ல வசூல்... எவ்வளவு கலெக்ஷன் பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/7-days-the-odyssey-movie-bo-details-1784872296"></link>
            <id>https://cineulagam.com/article/7-days-the-odyssey-movie-bo-details-1784872296</id>
            <summary type="text">The Odysseyஉலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் கவனிக்கும் ஹாலிவுட் இயக்குனர்களில் ஒருவர் தான் கிறிஸ்டோபர் நோலன். இவரது இயக்கத்தில் கடந்த ஜுலை 17ம் த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>The Odyssey</h2><p>உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் கவனிக்கும் ஹாலிவுட் இயக்குனர்களில் ஒருவர் தான் கிறிஸ்டோபர் நோலன். </p><p>இவரது இயக்கத்தில் கடந்த ஜுலை 17ம் தேதி வெளியான திரைப்படம் தான் தி ஓடிசி.
கிரேக்க காவியம் ஓமரின் கவிதையை மையமாக கொண்டு இப்படம் தயாராகியுள்ளது, படம் முழுக்க முழுக்க ஐமேக்ஸ் கேமராவால் எடுக்கப்பட்டிருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1be33ec4-85eb-4178-8a53-0bae6bc11b9e/26-6a62ff999410c.webp' /></p><p> ரூ. 2 ஆயிரம் கோடிக்கு மேலான அதிக பட்ஜெட்டில் உருவான இந்த தி ஓடிசி படம் இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
</p><p>சினிமா ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ள இப்படம் 7 நாள் முடிவில் ரூ. 3500 கோடிக்கு மேலாக உலகம் முழுவதும் இதுவரை வசூல் வேட்டை செய்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T06:10:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென சென்னை மெரினா கடற்கரைக்கு பூட்டு - டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தின் எதிராலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chennai-marina-beach-has-been-closed-to-the-public-1784871385"></link>
            <id>https://ibctamil.com/article/chennai-marina-beach-has-been-closed-to-the-public-1784871385</id>
            <summary type="text">சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அந்தவகையில், உழைப்பாளர் சிலை முதல் கலங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>அந்தவகையில், உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை அனைத்து நுழைவுகளையும் மூடி, காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
</p><p>
நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகின.</p><p></p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர்வுகள் குளறுபடி தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி&nbsp;விலக வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8e65934-3c55-416b-b1a9-0486ef5dfc1b/26-6a630264c803e.webp' /></p><p>நாடாளுமன்றம் நோக்கிய பேரணியின் போது ஏற்பட்ட வன்முறை மற்றும் தடியடிக்குப் பின்னர், அங்கு காவல்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற&nbsp;நிலையில், தமிழ்நாட்டிலும் இந்த போராட்டங்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினரும் பரவலாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இந்நிலையில், இளைஞர்கள் மெரினா கடற்கரையில் கூடி போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்கும் பொருட்டு, முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T06:09:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டரை கோடி ரூபாய் பெறுமதியான அபூர்வ கல்லுடன் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-arrested-with-rare-stone-worth-rs-2-5-crore-1784871949"></link>
            <id>https://tamilwin.com/article/two-arrested-with-rare-stone-worth-rs-2-5-crore-1784871949</id>
            <summary type="text">கிண்ணியா பகுதியில் இரண்டரை கோடி ரூபாய் (2.5 கோடி) பெறுமதியான அபூர்வ சுலைமான் கல் (இராவண கல்) ஒன்றை விற்பனை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பில் இருவர் கைது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிண்ணியா பகுதியில் இரண்டரை கோடி ரூபாய் (2.5 கோடி) பெறுமதியான அபூர்வ சுலைமான் கல் (இராவண கல்) ஒன்றை விற்பனை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

கிண்ணியா மற்றும் மூதூர் பகுதிகளை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>
</p><p>
நேற்று (2026.07.23) இராணுவப்புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கிண்ணியா - கண்டி வீதியில் அமைந்துள்ள புடவைக்கடை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே இக்கல் மீட்கப்பட்டதுடன், சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff70fdf6-c469-4ebf-a703-bacc72d81263/26-6a630103e07b5.webp' /></p><p>
</p><p>
550 கிராம் நிறை உடைய இந்த கல் 4 அங்குலம் நீளமும், 6 ½ அடி சுற்றளவும் கொண்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களையும் மீட்கப்பட்ட கல்லையும் இன்று ( 24) நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T06:07:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் பழைய கச்சேரி மற்றும் மந்திரிமனையை பாதுகாக்க நடவடிக்கை; அமைச்சர் ஆய்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/preserve-jaffna-old-concert-hall-manthiri-manai-1784873222"></link>
            <id>https://jvpnews.com/article/preserve-jaffna-old-concert-hall-manthiri-manai-1784873222</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் மந்திரி மனை, சங்கிலியன் தோரண வாயில் என்பவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் மந்திரி மனை, சங்கிலியன் தோரண வாயில் என்பவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார். </p><p>

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்ட புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி , </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52927d90-cb91-48f1-ab9e-c48bacb94407/26-6a630107bca34.webp' /></p><p></p><p>பழைய பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள பழைய கச்சேரி கட்டத்தை பார்வையிட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக உள்ள பழைய கச்சேரி கட்டடத்தை பார்வையிட்டேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55a34355-4e1c-47fe-a1f2-ad0a341eb8d6/26-6a630108755c1.webp' /></p><p> </p><p>பழைய கச்சேரி கட்டடம் என்பது யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு மிகப்பெரிய சொத்து.

அதனை மிகவும் விரைவாகப் பாதுகாத்து, நவீன தொழில்நுட்பத்துடன் பாதுகாப்பதற்கான திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடியுள்ளோம்.
</p><p>
அதேபோன்று யாழ்ப்பாணக் கோட்டை, மந்திரி மனை, சங்கிலியன் தோரண வாயில் அமைந்துள்ள வளாகம் என இவை அனைத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T06:05:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு மரணங்கள் 59 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-deaths-rise-to-59-1784871642"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-deaths-rise-to-59-1784871642</id>
            <summary type="text">தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை இன்று (24) நிலவரப்படி 59 ஆக அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை இன்று (24) நிலவரப்படி 59 ஆக அதிகரித்துள்ளது.
</p><p>
டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 80,114 ஆக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
</p><p></p><h2>அதிகளவான நோயாளர்கள்</h2><p>
நேற்றைய (23) நிலவரப்படி, 57 இறப்புகள் பதிவாகியுள்ளன மற்றும் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 79,016 ஆக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93ba1c6b-96c3-4746-933c-0cc4ad330af7/26-6a62fff722a3a.webp' /></p><p>

இருப்பினும், இன்று இறப்பு விகிதம் 0.07வீதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>அறிக்கையின்படி, ஜூன் (21,534) மற்றும் ஜூலை (24,739) மாதங்களில் பதிவான டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.</p><p>அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p> 

 

</p><h2>தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு</h2><p>கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் ஆண்டின் இதுவரையில் 16,950 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். </p><p> 

 

அதற்கு அடுத்ததாக கொழும்பு மாவட்டத்தில் 16,021 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88c21c13-e59d-42fc-a25a-9e977c6ebd49/26-6a62fff7cd18f.webp' /></p><p> 

 

இதுதவிர ஏனைய மாவட்டங்களான மாத்தறையில் 5534 பேரும், கண்டியில் 5437 பேரும், களுத்துறையில் 5245 பேரும் இரத்தினபுரியில் 4482 பேரும், காலியில் 4430 பேரும் டெங்கு நோயினால் அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளனர்.</p><p> 

 

2026 ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தின் முதல் 23 நாட்களில் மாத்திரம் 24,739 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T06:04:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலையை வெட்டினாலும் ஒரு வாரத்திற்கு உயிர் வாழும் உயிரினம்.., எது தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cockroach-survival-without-head-in-tamil-1784872684"></link>
            <id>https://news.lankasri.com/article/cockroach-survival-without-head-in-tamil-1784872684</id>
            <summary type="text">ஒரு உயிரினத்தின் தலை துண்டிக்கப்பட்டால், அது உடனடியாக இறந்துவிடும் என்று பொதுவாக அனைவராலும் நம்பப்படுகிறது.

இருப்பினும், தலை இல்லாமல் ஒரு வாரம் கூட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரு உயிரினத்தின் தலை துண்டிக்கப்பட்டால், அது உடனடியாக இறந்துவிடும் என்று பொதுவாக அனைவராலும் நம்பப்படுகிறது.</p><p>

இருப்பினும், தலை இல்லாமல் ஒரு வாரம் கூட உயிர் வாழக்கூடிய ஒரு உயிரினம் கரப்பான் பூச்சி.
</p><p>
கரப்பான் பூச்சி பொதுவாக நம் வீடுகளில் பெரும்பாலும் சமையலறை, கழிவறைகளில் காணப்படுகிறது.</p><p>
</p><p>
உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காததால், பொதுவாக ஒரு வாரத்திற்குப் பிறகு கரப்பான் பூச்சி இறந்துவிடும். இதற்கு அதன் பரவலான நரம்பு மண்டலம் மற்றும் உடல் அமைப்பே முக்கிய காரணமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e2f5a84-bb8d-4866-9074-0246443e1671/26-6a62feef57ece.webp' /></p><p>
கரப்பான் பூச்சியின் தலை துண்டிக்கப்பட்டாலும், அது அடுத்த ஒரு வாரத்திற்கு தலை இல்லாமல் வாழ முடியும்.</p><p>கரப்பான் பூச்சியின் மூளை அதன் தலையில் மட்டுமல்லாமல் அதன் முழு உடலிலும் பரவியுள்ளது என்று கூறப்படுகிறது.</p><p></p><p>கரப்பான் பூச்சியின் உடலில் திறந்த சுற்றோட்ட அமைப்பு உள்ளது. </p><p>மேலும், அதன் உடலில் உள்ள சிறிய துளைகள் மூலம் சுவாசிக்க முடிவதால், தலை துண்டிக்கப்பட்ட பிறகும் சில காலம் உயிர்வாழ முடிகிறது.</p><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0ecb802-add2-4537-8fa2-d6479304f0a0/26-6a62feeea953f.webp' />
</p><p>
அதன் உடலில் உள்ள திறந்த சுற்றோட்ட அமைப்பு இரத்த அழுத்தத்தை உறுதிப்படுத்தாமல் உடல் முழுவதும் ஆக்ஸிஜனை வழங்குகிறது.</p><p>
</p><p>இதனால் கரப்பான் மூக்கில் மட்டுமல்லாமல் அதன் உடல் முழுவதிலும் சுவாசிக்கின்றன.</p><p> 

தலை இல்லாமல் சாப்பிட முடியாமல் போனாலும் அதன் உடலில் சேமிக்கப்படும் ஆற்றல் அதை உயிருடன் வைத்திருக்கிறது.</p><p>

இருந்தாலும், உணவு மற்றும் தண்ணீர் இல்லாததால் கரப்பான் பூச்சி ஒரு வாரத்திற்குப் பிறகு இறந்துவிடுகிறது.&nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T06:01:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ICC தலைமை சட்டத்தரணிக்கு நெருக்கடி ; கரீம் கான் பதவி குறித்து தீர்மானிக்கும் வாக்கெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/vote-to-decide-karim-khan-s-position-1784872813"></link>
            <id>https://canadamirror.com/article/vote-to-decide-karim-khan-s-position-1784872813</id>
            <summary type="text">சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) தலைமை சட்டத்தரணி கரீம் கானை பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்குவது தொடர்பான முக்கிய வாக்கெடுப்பு இன்று (24) நிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) தலைமை சட்டத்தரணி கரீம் கானை பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்குவது தொடர்பான முக்கிய வாக்கெடுப்பு இன்று (24) நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
</p><p>
பிரிட்டிஷ் சட்டத்தரணியான கரீம் கான், தனது பெண் உதவியாளரிடம் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதாக அசோசியேட்டட் பிரஸ் (Associated Press) வெளியிட்ட அறிக்கைகளில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efdcaa8f-6dd1-4d50-80c6-6f6eb7908c0b/26-6a62ff6ee3dc4.webp' /></p><p>எனினும், தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் முறைப்பாடுகளை கரீம் கான் முழுமையாக மறுத்துள்ளார்.
</p><p>
இந்நிலையில், அமெரிக்கா விதித்துள்ள தடைகள் காரணமாக, நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கரீம் கான் நேரடியாக கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் பங்கேற்கும் இந்த வாக்கெடுப்பு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வரலாற்றில் முன்னெப்போதும் இடம்பெறாத முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
</p><p>
கரீம் கான் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விவாதங்களை முன்னெடுத்து, அவர் தொடர்ந்தும் தலைமை சட்டத்தரணி பதவியில் நீடிக்க வேண்டுமா அல்லது பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட வேண்டுமா என்பது குறித்து உலக நாடுகளின் பிரதிநிதிகள் வாக்களித்து தீர்மானிக்கவுள்ளனர்.
</p><p>
இந்த வாக்கெடுப்பின் முடிவு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் அதன் நம்பகத்தன்மை தொடர்பில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-24T06:00:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நகை வாங்குவோருக்கு குட் நியூஸ்.. இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/july-24th-2026-gold-and-silver-price-in-chennai-1784872177"></link>
            <id>https://ibctamilnadu.com/article/july-24th-2026-gold-and-silver-price-in-chennai-1784872177</id>
            <summary type="text">இன்றைய (ஜூலை 24) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை விரிவாகப் பார்க்கலாம்.

ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் தங்கம் விலை கணிசமாக சரிவைச் சந்தித்தது. அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய (ஜூலை 24) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை விரிவாகப் பார்க்கலாம்.

ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் தங்கம் விலை கணிசமாக சரிவைச் சந்தித்தது.</p><p> அதன்பிறகு சில நாட்கள் விலை ஏற்றம், இறக்கம் என மாறுபட்ட நிலையில் இருந்தது. குறிப்பாக கடந்த வாரம் முழுவதும் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், நேற்று மீண்டும் உயர்வை பதிவு செய்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3537a00-93ab-4de8-90e9-5f116c8f4eed/26-6a62fec84557d.webp' /></p><p> </p><p>இந்த உயர்வு காரணமாக நகை வாங்கத் திட்டமிட்டிருந்தவர்கள் சற்று கவலையடைந்திருந்தனர்.

நேற்றைய வர்த்தக நிலவரப்படி, 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,500 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.1,08,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.</p><h2>இன்றைய நிலவரம்</h2><p>
</p><p>
ஆனால் இன்று (ஜூலை 24) நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. தங்கம் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளதால், நகை வாங்குவோருக்கும் முதலீட்டாளர்களுக்கும் இது மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adfdb0ef-97d1-49b1-aafb-220dabaf0016/26-6a62fec8eb7c9.webp' /></p><p>

இன்றைய விலை நிலவரப்படி, 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.270 குறைந்து ரூ.13,230 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ரூ.1,05,840 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.270 குறைந்து ரூ.11,045 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ரூ.88,360 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/566df31e-8b7e-49ed-ae7c-2c00751da987/26-6a62fec99fa2c.webp' /></p><p>
இதனுடன், வெள்ளி விலையிலும் சரிவு பதிவாகியுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.240 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,40,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-24T05:59:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலில் சடலமாக மீட்கப்பட்ட இந்தியர்: நீடிக்கும் மர்மமான பின்னணி: இளைஞர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-man-found-dead-in-israel-jerusalem-1784872615"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-man-found-dead-in-israel-jerusalem-1784872615</id>
            <summary type="text">இஸ்ரேலின் ஜெருசலேமில் இந்தியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியர் சடலமாக மீட்பு
இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் உள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேலின் ஜெருசலேமில் இந்தியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> இந்தியர் சடலமாக மீட்பு</h2><p>
இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் உள்ள கட்டமோன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பணிபுரிந்து வந்த இந்தியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேலின் செய்தி படி, தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், 40 வயது மதிக்கத்தக்க நபர் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டுபிடித்தனர்.</p><p> மோரியா காவல் நிலையத்தின் தலைவர் யுவால் ரூவன், இந்த சோக சம்பவத்தை உறுதிப்படுத்தி இருப்பதுடன் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதை தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/895b64bc-6846-4312-8502-15e95734fedc/26-6a62fea95605f.webp' /></p><p></p><p> விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதில் குற்றப் பின்னணி இருக்கலாம் என்று Ynetnews செய்தி வெளியிட்டுள்ளது.</p><p> அத்துடன் உயிரிழந்தவரின் அடையாளத்தை இதுவரை அதிகாரிகள் வெளியிடவில்லை.</p><p> அதே சமயம் இந்த சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய நபராக கருதப்படும் எலாட்டைச் சேர்ந்த 31 வயது நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.</p><p> கடந்த அக்டோபர் 2024ம் ஆண்டு நிலவரப்படி, 32,000 இந்திய தொழிலாளர்கள்&nbsp; இஸ்ரேலில்&nbsp; வசித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-24T05:57:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் 19 வயதுப்பெண் கொல்லப்பட்டு குளிர்சாதனப்பெட்டியில்..குப்பைக் கிடங்கில் உடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/melbourne-girl-found-dead-case-foredoomed-fail-1784872023"></link>
            <id>https://news.lankasri.com/article/melbourne-girl-found-dead-case-foredoomed-fail-1784872023</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட நபரின் விடுதலை முயற்சி தோல்வியடைந்தது.குளிர்சாதனப் பெட்டியில் மறைக்கப்பட்டுமெல்போர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட நபரின் விடுதலை முயற்சி தோல்வியடைந்தது.</p><h2>குளிர்சாதனப் பெட்டியில் மறைக்கப்பட்டு</h2><p>மெல்போர்னைச் சேர்ந்த 19 வயதுப்பெண்ணான ஐலா பெல், கடந்த 2024ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6734e07-966b-4d3d-bb93-6e01ee871859/26-6a62fde89691f.webp' />&nbsp;</p><p></p><p> 

அவரது உடல் ஒரு குளிர்சாதனப் பெட்டியில் மறைக்கப்பட்டு, சில வாரங்களுக்குபிறகு ஒரு குப்பைக் கிடங்கில் வீசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p> 

அதன் பின்னர் மராட் கானியேவ் (55) என்பவர் அவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். முதலில் அவர் மீது கொலைக் குற்றம்சாட்டு சுமத்தப்பட்டது.</p><h2>எதிர்பாராத விதமாக 
</h2><p>
ஆனால், அவரது வழக்கு விக்டோரியா உச்ச நீதிமன்றத்திற்கு வந்தபோது அது திட்டமிடாமல் அல்லது எதிர்பாராத விதமாக நடந்த கொலை என்று தரம் குறைக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6734e07-966b-4d3d-bb93-6e01ee871859/26-6a62fde89691f.webp' /></p><p>
மே மாதம் அவர் விசாரணைக்கு ஆஜராக இருந்த சில நாட்களுக்கு முன்பு, அந்தக் குற்றச்சாட்டு திரும்பப் பெறப்பட்டது. </p><p>

அதற்கு பதிலாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் அவர் மீது நீதியின் போக்கைத் திசை திருப்ப முயன்றதாகக் குற்றம் சாட்டினர்.
</p><p>
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அன்று விக்டோரியா உச்ச நீதிமன்ற நீதிபதி, மீதமுள்ள கடைசி குற்றச்சாட்டையும் நீக்க வேண்டும் என்று நம்பவைப்பதில், குற்றம்சாட்டப்பட்டவரின் (கானியேவ்) சட்டக்குழு தோல்வியடைந்ததால் அவர் வெஸ்டர்ன் ப்ளைன்ஸ் சீர்திருத்த மையத்திலேயே தொடர்ந்து இருப்பார் என்று அவரிடம் கூறினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f54b516-0586-4f2e-bbc9-c85e733f2e3b/26-6a62fdea20abc.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T05:52:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனா எம்.பிக்கு பிடியாணை; கோட்டை நீதவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/arrest-warrant-for-mp-arjuna-jaffna-court-order-1784870060"></link>
            <id>https://jvpnews.com/article/arrest-warrant-for-mp-arjuna-jaffna-court-order-1784870060</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
</p><p>


கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3ec64ef-13ac-40b0-a56d-20660208bb90/26-6a62fd5101ee6.webp' /></p><p>



இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதும், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
</p><p>


இதையடுத்து, அர்ச்சுனா இராமநாதனை கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் வகையில் பிடியாணை பிறப்பித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T05:50:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிர்ச்சி கொடுக்கும் பச்சை மிளகாயின் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shocking-green-chilli-prices-1784869654"></link>
            <id>https://tamilwin.com/article/shocking-green-chilli-prices-1784869654</id>
            <summary type="text">சந்தையில் பச்சை&amp;nbsp; மிளகாய் ஒரு கிலோ கிராமின் விலை 1,200 ரூபாவிற்கும் மேல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&amp;nbsp;வறண்ட வானிலை மற்றும் பல்வேறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சந்தையில் பச்சை&nbsp; மிளகாய் ஒரு கிலோ கிராமின் விலை 1,200 ரூபாவிற்கும் மேல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>வறண்ட வானிலை மற்றும் பல்வேறு பூச்சித் தொற்றுக்கள் காரணமாக&nbsp; பச்சை மிளகாயின் சந்தை வரத்து குறைவடைந்துள்ளதால்&nbsp; அதன் விலை சடுதியாக அதிகரித்துள்ளது என்று தம்புத்தேகம பொருளாதார மைய வர்த்தக சங்கத்தின் தலைவர் எல்.எஸ்.கே.லியனகே தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><h2>அதிகரித்த விலை&nbsp;</h2><p>அதிகரித்துள்ள விலையேற்றத்தின்படி,&nbsp; பச்சை மிளகாய் ஒன்றின் விலை 15 ரூபாயை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>மேலும், “தற்போதைய வறட்சியான காலநிலை, அநுராதபுரம்,&nbsp; நொச்சியாகம,&nbsp; கஹடகஸ்திலிய போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மிளகாய் செய்கையை கடுமையாகப் பாதித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d851582-282d-4ee1-b1b8-f575a2ababdc/26-6a62fcb18f8a7.webp' /></p><p>அத்துடன், கல்நேவ, மீகலேவ, எப்பாவல போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மிளகாய் செய்கையிலும் விளைச்சல் அதி குறைவாகவே உள்ளதாகவும்” அவர் சுட்டிக்காட்டினார்.&nbsp;&nbsp;</p><p>இதேவேளை, அதிகமான விவசாயிகள் மிளகாய் செய்கையில் இருந்து படிப்படியாக விலகிச் செல்வதும் மிளகாயின் சந்தை வரத்து குறைவதற்கு&nbsp; காரணமாக இருப்பதாகவும், இதனாலும் மிளகாயின் விலை மிக வேகமாக அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T05:49:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் பதற்றம் எதிரொலி ; ரூ.111 இலட்சம் கோடி இராணுவத் திட்டத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-echo-us-appro-111-lakh-crore-military-project-1784872099"></link>
            <id>https://canadamirror.com/article/iran-echo-us-appro-111-lakh-crore-military-project-1784872099</id>
            <summary type="text">ஈரானுடன் தொடர்ந்து நடைபெற்று வரும் போர் மற்றும் சர்வதேச பதற்றங்களுக்கு மத்தியில், தனது இராணுவ பலத்தை அதிகரிக்க 111 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பிரம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடன் தொடர்ந்து நடைபெற்று வரும் போர் மற்றும் சர்வதேச பதற்றங்களுக்கு மத்தியில், தனது இராணுவ பலத்தை அதிகரிக்க 111 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பிரம்மாண்ட இராணுவ வரவுசெலவுத்திட்ட சட்டமூலத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
</p><p>


இதனால் அமெரிக்காவிற்கு தினசரி சராசரியாக 8,000 கோடி வரை செலவாவதாகவும், இதுவரை மொத்தம் 3 இலட்சம் கோடிக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாகவும், மேலும் அதிநவீன ஏவுகணைகள் மற்றும் ஆயுத இருப்பு கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>இராணுவப் பலத்தை மீட்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ள இந்த சட்டமூலத்தில் சில முக்கிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc0d502b-cd64-4819-b9d2-fd708f6cafaa/26-6a62fca42bd8a.webp' /></p><p>இஸ்ரேலின் உலகப்புகழ் பெற்ற 'அயர்ன் டோம்' பாணியில், அமெரிக்காவைப் பாதுகாக்க 'கோல்டன் டோம்' என்ற புதிய வான்வழி ஏவுகணை தடுப்பு அமைப்பை உருவாக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
</p><p>


அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கு இடையே இராணுவ ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கான திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
</p><p>


அத்துடன், அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு 5 விகிதம் முதல் 7 விகிதம் வரை ஊதிய உயர்வு வழங்கவும் இதில் முன்மொழியப்பட்டுள்ளது.
</p><p>


தற்போது பிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் பெற்றுள்ள இந்த சட்டமூலம், அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் இராணுவ கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T05:48:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருணைக்கொலை நிறுவனத் தலைவர்: சுற்றுலா சென்றபோது நிகழ்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-euthanasia-firm-head-dies-hike-mount-fuji-1784872094"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-euthanasia-firm-head-dies-hike-mount-fuji-1784872094</id>
            <summary type="text">நீண்ட காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, வேதனையில் தவிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், கடைசியாக, நிம்மதியாக தங்கள் வாழ்வை முடித்துக்கொள்வதற்காக ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீண்ட காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, வேதனையில் தவிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், கடைசியாக, நிம்மதியாக தங்கள் வாழ்வை முடித்துக்கொள்வதற்காக நாடி வரும் இடம், சுவிட்சர்லாந்திலுள்ள எக்ஸிட் நிறுவனம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e592758-056e-460d-bd0d-e0d872e5c8d1/26-6a62fc9fcaf76.webp' /></p><p>அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பொறுப்பு வகித்து வந்தவர் பெர்னார்ட் சட்டர் (58).
</p><h3>
சுற்றுலா சென்றபோது நிகழ்ந்த துயரம்</h3><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/672f2c51-dbde-4881-8366-b52047c80df4/26-6a62fca07add3.webp' /></p><p>எக்ஸிட் என்னும் கருணைக்கொலை நிறுவனத்தில் 2007ஆம் ஆண்டு இணைந்த சட்டர், சுவிட்சர்லாந்தின் சூரிக் மாகாணத்தில் வாழ்ந்துவந்தார்.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், தன் குடும்பத்துடன் ஜப்பானுக்கு சுற்றுலா சென்றிருந்த சட்டர், செவ்வாய்க்கிழமை, ஜப்பானின் உயர்ந்த மலையான ஃபூஜி மலையில் ((Mount Fuji) மலையேற்றத்துக்குச் சென்றிருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/530c661e-b60d-4678-98a6-bc4e724308f2/26-6a62fca12bdd4.webp' /></p><p>கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,010 மீற்றர் உயரத்தில் சென்றுகொண்டிருக்கும்போது, திடீரென சட்டரின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
உடனடியாக, மருத்துவ உதவிக்குழுவினர் அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சையளித்து, அவரை மருத்துவமனை ஒன்றிற்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.</p><p>

ஆனால், மருத்துவமனையில் சட்டரின் உயிர் பிரிந்துவிட்டது. அவரது மரணத்துக்கான காரணம் வெளியிடப்படவில்லை.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T05:48:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ள சடலம்! பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-has-been-found-in-a-gampaha-1784869735"></link>
            <id>https://tamilwin.com/article/body-has-been-found-in-a-gampaha-1784869735</id>
            <summary type="text">கம்பஹா - கட்டுகஸ்தர பகுதியில் வீடொன்றிலிருந்து சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு நேற்று (23) கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா - கட்டுகஸ்தர பகுதியில் வீடொன்றிலிருந்து சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
பொலிஸாருக்கு நேற்று (23) கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேடுதலில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>

கட்டுகஸ்தர சேர்ந்த 60 வயதுடையவரே இவ்வாறு சடலமாக காணப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0921b7b7-ed4e-4fc8-88df-4a694ab53d40/26-6a62f8becdf1b.webp' /></p><p>
</p><p>
இதன்போது சடலத்திற்கு அருகில் இரத்தக்கறைகள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதனையடுத்து நீதவானின் விசாரணைக்கு பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் குறித்து கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T05:42:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இடம்பெற்ற அநீதிக்கு சர்வதேச விசாரணை மட்டுமே தீர்வு - யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-university-students-union-1784870074"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-university-students-union-1784870074</id>
            <summary type="text">இலங்கை அரசாங்கமானது ஒருபோதும் இலங்கையில் நடந்த அநீதிக்கு தீர்வினை வழங்காது, ஒரு சர்வதேச நீதிப் பொறிமுறை மூலமே இதற்கு தீர்வு கிட்டும் என யாழ்ப்பாண பல்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசாங்கமானது ஒருபோதும் இலங்கையில் நடந்த அநீதிக்கு தீர்வினை வழங்காது, ஒரு சர்வதேச நீதிப் பொறிமுறை மூலமே இதற்கு தீர்வு கிட்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பொருளாளர் கண்ணதாசன் சுடரோன் தெரிவித்துள்ளார். </p><p>

சித்துப்பாத்தி இந்து மயானத்துக்கு அண்மையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p></p><p> 

இது குறித்து அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த உள்ளப் பொறிமுறை மூலம் இற்றைவரை எமக்கான நீதி கிடைக்கவில்லை. இங்கே செயற்படுகின்ற காணாமல் ஆக்கப்பட்டோரது அலுவலகம் சரி, அரசாங்கத்தின் நீதிப் பொறிமுறைகள் சரி வெறும் தரவுகளை அறிக்கையிடும் வகையிலேயே அமைகிறது.</p><h2>முறையான சர்வதேச பொறிமுறை</h2><p> </p><p>அரசாங்கத்தின் இயந்திரமாக செயல்படும் நீதித்துறையினால் எமது பிரச்சினைகளுக்கான தீர்வினை ஒருபோதும் பெற்றுக் கொடுக்க முடியாது. ஒரு முறையான சர்வதேச பொறிமுறை ஊடாகவே எம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான தீர்வு கிடைக்க முடியும்.</p><p></p><p> </p><p>2010ஆம் ஆண்டு நீக்கப்பட்ட GSP+ வரிச் சலுகை மீண்டும் 2017ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டது. </p><p>அதன்போது பயங்கரவாத தடைச் சட்டமானது நீக்கப்பட வேண்டும் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கையாக இருந்தது. ஆனால் இன்றைக்கு வரை மக்களை அடக்குகின்ற பயங்கரவாத தடைச் சட்டம் உள்ளிட்ட விடயங்கள் நீக்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58d9b832-369e-4fc2-baee-f947f557dcde/26-6a62f95ab56c9.webp' /></p><p> </p><p>இது இவ்வாறு இருக்கையில் ஐரோப்பிய ஒன்றியத்தினர் இங்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களை சரியாக சந்திக்காமல் செல்வது ஒரு கண்துடைப்பு விடயமாகவே பார்க்கப்படுகிறது.</p><p> அந்தவகையில் நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை கேட்பது யாதெனில் இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட அநீதியை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் தட்டிக் கேட்காது. எனவே இதற்கு முறையான ஒரு சர்வதேச பொறிமுறை செயற்படுத்தப்பட வேண்டும் என்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T05:35:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் கொலை குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/man-who-killed-top-democrat-her-husband-sentenced-1784870768"></link>
            <id>https://canadamirror.com/article/man-who-killed-top-democrat-her-husband-sentenced-1784870768</id>
            <summary type="text">அமெரிக்காவின் மின்னசோட்டா மாநில முன்னாள் சபாநாயகரும் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான மெலிசா ஹார்ட்மேன் மற்றும் அவரது கணவர் மார்க் ஹார்ட்மேன் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் மின்னசோட்டா மாநில முன்னாள் சபாநாயகரும் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான மெலிசா ஹார்ட்மேன் மற்றும் அவரது கணவர் மார்க் ஹார்ட்மேன் ஆகியோரைப் படுகொலை செய்த வழக்கில், குற்றவாளியான வான்ஸ் போல்டருக்கு இரட்டை ஆயுள் தண்டனையுடன் மேலதிகமாக 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
</p><p>வியாழக்கிழமை நடைபெற்ற வழக்கின் இறுதி விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், துப்பாக்கிச் சூட்டில் தப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் நீதிமன்றத்தில் உணர்ச்சிப்பூர்வமாக சாட்சியளித்தனர்.
</p><p>கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் 14 அன்று அதிகாலை 3:30 மணியளவில், பொலிஸ் அதிகாரி போல முகமூடி மற்றும் சீருடை அணிந்து வந்த குற்றவாளி போல்டர், மெலிசா ஹார்ட்மேனின் வீட்டின் கதவைத் தட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59fab932-9eea-4f5d-bd33-d064d2a424ff/26-6a62f7722805c.webp' /></p><p> </p><p>கதவைத் திறந்த கணவர் மார்க்கை சுட்டு வீழ்த்திய பின், வீட்டிற்குள் புகுந்து மாடிக்கு ஓடிய நாடாளுமன்ற உறுப்பினர் மெலிசாவையும் சுட்டுக்கொன்றார். </p><p>அவர்களின் செல்லப் பிராணியான நாயையும் அவர் விட்டுவைக்கவில்லை.
இதற்கு முன்பாக, அதே இரவில் மாநில செனட்டர் ஜான் ஹோஃப்மேன் மற்றும் அவரது மனைவி யுவெட் ஆகியோரின் வீட்டிற்குச் சென்று அவர்களைச் சுட்டுப் படுகாயப்படுத்தியுள்ளார்.
மேலும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கும் அவர் சென்றுள்ளார். </p><p>இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததுடன், மாநில வரலாற்றிலேயே மிகப்பெரிய பொலிஸ் தேடுதல் வேட்டைக்கு வழிவகுத்தது.
மரண தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக, குற்றவாளி போல்டர் ஜூன் மாதத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார். </p><p>இதனைத் தொடர்ந்து, அமெரிக்க மாவட்ட நீதிபதி ஜான் ஆர். டன்ஹெய்ம் தீர்ப்பளிக்கும் போது:
"எனது பல ஆண்டுகால நீதித்துறை அனுபவத்தில் ஆயிரக்கணக்கான வழக்குகளை விசாரித்த பிறகு நான் வழங்கும் மிக நீண்ட தண்டனை இதுவாகும்.</p><p> ஆனால் இந்தத் தண்டனை அவருக்கு மிகவும் தகுதியானது தான்" எனக் குறிப்பிட்டார்.
நீதிமன்றத்தில் சாட்சியளித்த மெலிசாவின் மகள் சோஃபி மற்றும் மகன் காலின் ஆகியோர், தங்கள் பெற்றோர் மற்றும் செல்லப் பிராணியை இழந்து வாழும் வேதனையை விவரித்து கண்ணீர் விட்டனர்.
</p><p>செனட்டர் ஜான் ஹோஃப்மேன் மற்றும் அவரது மனைவி கூறுகையில், அந்த கொடூர இரவுக்குப் பிறகு தங்கள் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டதாகவும், பாதுகாப்பிற்காக வீட்டின் கதவுகளை இரும்பால் மாற்றியிருப்பதாகவும், ஒவ்வொரு நாளும் பயத்துடனேயே வாழ்வதாகவும் குறிப்பிட்டனர்.
</p><p>அதேவேளை, வரி செலுத்தும் மக்களின் பணத்தில் குற்றவாளிக்கு ஆயுள் முழுவதும் உணவு அளிப்பதற்குப் பதிலாக அவருக்கு மரண தண்டனை வழங்கப்படாதது குறித்து மார்க் ஹார்ட்மேனின் குடும்பத்தினர் கடும் அதிருப்தி வெளியிட்டனர்.</p><p>
நீதிமன்றத்தில் பேசிய குற்றவாளி போல்டர், "என்னால் இழப்பு, வலி, சோகம் மற்றும் தனிமையைச் சந்தித்த ஒவ்வொரு நபரிடமும் நான் உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T05:32:41+00:00</updated>
        </entry>
    </feed>
