<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-15T17:32:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய கைதி தப்பியோட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/federal-offender-known-to-frequent-the-gta-wanted-1789482824"></link>
            <id>https://canadamirror.com/article/federal-offender-known-to-frequent-the-gta-wanted-1789482824</id>
            <summary type="text">கனடாவின் டொராண்டோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக நடமாடக்கூடிய &#039;பிராட்லி எலியட்&#039; (42) என்ற குற்றவாளியைப் பிடிக்க, பொலிஸார் நாடு தழுவிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் டொராண்டோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக நடமாடக்கூடிய 'பிராட்லி எலியட்' (42) என்ற குற்றவாளியைப் பிடிக்க, பொலிஸார் நாடு தழுவிய பிடியாணை பிறப்பித்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>தனது சட்டப்பூர்வ விடுதலையின் போது விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறித் தப்பியோடியுள்ள இவர், 42 வயதுடைய வெள்ளை இனத்தவர் ஆவார். இவர் 5 அடி 9 அங்குலம் உயரமும், 75 கிலோ எடையும், பழுப்பு நிறக் கூந்தலும், ஹேசல் நிறக் கண்களும் கொண்டவர்.
காவல்துறையின் தகவல்படி, இவரது உடலில் பல இடங்களில் அடையாளப் பச்சைகள் குத்தப்பட்டுள்ளன. </p><p>
குறிப்பாக, இவரது வலது மேல் கையில் முள்வேலி, “HAWK” இதயம் மற்றும் சிலுவை அடையாளங்களும், இடது மேல் கையில் சிலுவை மற்றும் “Mom” என்ற வார்த்தையும் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2760b585-ee86-4171-8ae3-43b52c41e6ef/26-6aa9574a4f858.webp' /></p><p> 
மேலும், வலது முன்கையில் “Crystal”, கழுத்தில் “Bush”, இடது கையில் பிறந்த திகதியுடன் கூடிய “Jayden”, இடது முன்கையில் “Nanette” மற்றும் முதுகின் நடுப்பகுதியில் “ELLIOTT” என்ற பெயர் மற்றும் இரண்டு கைப்பாக்கிகளின் படங்களும் பச்சை குத்தப்பட்டுள்ளன.
</p><p>அடையாள மோசடி செய்து சொத்துக்களைக் கைப்பற்றுதல், குற்றங்கள் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை வைத்திருத்தல், அதிகாரிகளின் பணிக்கு இடையூறு செய்தல், அபாயகரமான முறையில் வாகனம் இயக்குதல், வாகனத் திருட்டு, அனுமதியின்றித் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை வைத்திருத்தல், ஆயுதத்தால் தாக்குதல் மற்றும் காவலர் போல் ஆள்மாறாட்டம் செய்தல் உள்ளிட்ட பல வழக்குகளில் இவருக்கு 4 ஆண்டுகள் 1 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
</p><p>பொதுமக்கள் இவரைப் பற்றியோ அல்லது இவரது இருப்பிடம் குறித்தோ ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக 416-808-5900 அல்லது 1-866-870-7673 ஆகிய எண்களிலோ, 'க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' அமைப்பின் மூலமாகவோ காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T17:30:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இவர்களுக்கு இனி அரசாங்க வேலை கிடையாது ; வெளியான அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/child-crime-accused-face-government-job-ban-1789492659"></link>
            <id>https://jvpnews.com/article/child-crime-accused-face-government-job-ban-1789492659</id>
            <summary type="text">அரச சேவையில் நுழையும், குறிப்பாகச் சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய பணிகளுக்கு ஆட்களைச் சேர்க்கும்போது, அவர்கள் சிறுவர் குற்றங்களில் குற்றஞ்சாட்டப்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அரச சேவையில் நுழையும், குறிப்பாகச் சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய பணிகளுக்கு ஆட்களைச் சேர்க்கும்போது, அவர்கள் சிறுவர் குற்றங்களில் குற்றஞ்சாட்டப்படாதவர்கள் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழைப் பெறுவதற்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ், இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e69c6493-0607-4c30-8da0-0513507f0138/26-6aa97db4ef1ae.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதற்கமைய, பொலிஸார் அல்லது தொடர்புடைய உத்தியோகபூர்வ நிறுவனங்கள் மூலம் இந்தச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன், தற்போது அரச சேவையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளும் தங்களது சேவைத் தேவைகள் மற்றும் சம்பள உயர்வுகளைப் பெறும்போது, குறித்த காலப்பகுதியில் தாங்கள் சிறுவர் குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதற்கான இந்தச் சான்றிதழை புதுப்பித்து வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-15T17:22:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cabinet-approval-appropriation-bill-for-year-2027-1789491202"></link>
            <id>https://tamilwin.com/article/cabinet-approval-appropriation-bill-for-year-2027-1789491202</id>
            <summary type="text">எதிர்வரும் 2027 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைத் தய...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 2027 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.</p><p>

2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு 2026 ஜூன் 30 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது.
</p><p>
அதனையடுத்து சட்ட வல்லுனர்களால் தயாரிக்கப்பட்ட, இந்தச் சட்டமூலம் தற்போது சட்ட மா அதிபரின் அனுமதியைப் பெற்றுள்ளது.
</p><h2>நாடாளுமன்றத்தில் முறையாகச் சமர்ப்பிக்க</h2><p>
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அங்கீகாரம் கோரி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d073db3d-8e5d-48c3-bff3-2ebf727477ed/26-6aa97e68032fe.webp' /></p><p>
தற்போதைக்கு குறித்த சட்டமூலம் அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுள்ளதைத் தொடர்ந்து மிகவிரைவில் 2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைப் நாடாளுமன்றத்தில் முறையாகச் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T17:22:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றின் இரகசியத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எப்படித் தெரிந்தது..! சஜித் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/how-anura-know-court-decision-1789488853"></link>
            <id>https://tamilwin.com/article/how-anura-know-court-decision-1789488853</id>
            <summary type="text">&amp;nbsp;22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக நீதிமன்றம் வழங்கியதாகக் கூறப்படும் இரகசியத் தீர்ப்பு குறித்து ஜனாதிபதிக்கு எவ்வாறு தெரியவந்தது என எதிர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக நீதிமன்றம் வழங்கியதாகக் கூறப்படும் இரகசியத் தீர்ப்பு குறித்து ஜனாதிபதிக்கு எவ்வாறு தெரியவந்தது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார். </p><p>
மேல் மாகாணத்தின் களுத்துறை, கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுடன் ஐக்கிய மக்கள் சக்தி கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p><h2>22வது அரசியலமைப்புத் திருத்தம்</h2><p>
</p><p>22வது அரசியலமைப்புத் திருத்தத்தையும் நீதித்துறைத் திருத்தச் சட்டமூலத்தையும் ஒன்றாகவே பரிசீலிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p> இந்தத் திருத்தங்கள் மூலம் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c80c4ce2-2584-4464-b1e8-6463c75d53be/26-6aa96ed6c5c43.webp' /></p><p>
</p><p>இதன் மூலம் நாட்டின் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு பலத்த பாதிப்பு ஏற்படுவதுடன், சட்டவாக்கம், நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை ஆகிய முத்தரப்புகளுக்கு இடையிலான அதிகாரப் பங்கீடு மற்றும் சமநிலை முறையும் சீர்குலையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>
மேலும், அரசியலமைப்பின் 3, 4, 83 மற்றும் 107 ஆகிய பிரிவுகளுடன் 22வது திருத்தத்தைப் பரிசீலிக்கும்போது, இது மக்களின் இறையாண்மையை பாதிக்குமானால், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் மேலதிகமாகச் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டியது அவசியமாகலாம் என சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
ஜனநாயகத்தைச் சுருக்கி, ஒற்றைக் கட்சி ஆட்சியை நிறுவுவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் எனக் குற்றம்சாட்டிய அவர், மாகாண சபை தேர்தல்களை ஒத்திவைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் ஜனநாயக உரிமைகள் முடக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.</p><p>
எனவே, வரும் செப்டம்பர் 24 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள அமைதியான போராட்டப் பேரணியில் இணைந்து ஜனநாயக நிறுவனங்களைப் பாதுகாக்க முன்வருமாறு பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T17:14:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் குறித்து சஜித்திடம் வாக்கு மூலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-sajith-will-be-questioned-1789492296"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-sajith-will-be-questioned-1789492296</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் வாக்கு மூலம் பதிவு செய்ய உள்ளதாக நீதிமன்றில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் வாக்கு மூலம் பதிவு செய்ய உள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>பிரதி சொலிசுட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இந்த விடயத்தை நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.</p><p>
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே உள்ளிட்டவர்கள் பிரதான சூத்திரதாரிகளை பாதுகாப்பதாக தாம் முதலில் கூறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bf080a2-54e3-49ba-8cc6-206d3f0cbcbb/26-6aa97c4983a1c.webp' /></p><p>
தமக்கு முன்னதாகவே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் கூறியிருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>எதிர்காலத்தில் இந்த விவகாரம் தொடர்பில் அவர்களிடமும் வாக்கு மூலங்கள் பதியப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>மேலும், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக முன்கூட்டியே அறிந்திருந்தும், இராணுவப் புலனாய்வுத் துறையினர் அனைத்துத் தகவல்களையும் சதித்திட்டமாக மறைத்து, தாக்குதல் நடப்பதற்கு அனுமதித்து அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
</p><p>மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.</p><p>
சுரேஷ் சலே, தேசிய வைத்தியசாலையை ஓய்வு விடுதியாக மாற்றிக் கொண்டு ஓய்வெடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.&nbsp;</p><p>இந்த வழக்கு எதிர்வரும் 22ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-15T17:11:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் சைபர் தாக்குதல்! உளவுத்திட்ட நகர்வு குறித்து அமெரிக்கா - பிரித்தானியா எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-and-uk-warn-of-iranian-intelligence-operation-1789491804"></link>
            <id>https://ibctamil.com/article/us-and-uk-warn-of-iranian-intelligence-operation-1789491804</id>
            <summary type="text">ஈரான் அரசுடன் தொடர்புடைய சைபர் குழுக்கள், தங்களுக்கு எதிராக செயல்படும் அதிருப்தியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களைக் கண்காணித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் அரசுடன் தொடர்புடைய சைபர் குழுக்கள், தங்களுக்கு எதிராக செயல்படும் அதிருப்தியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களைக் கண்காணித்து உளவு பார்க்க 'ஸ்பைவேர்' (Spyware) எனப்படும் உளவு மென்பொருளைப் பயன்படுத்தியுள்ளதாக பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளன.</p><p>பிரித்தானியாவின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் (NCSC) வெளியிட்டுள்ள இந்த கூட்டு அறிக்கையின்படி, </p><p>“ஈரான் அரசு ஆதரவு பெற்ற சைபர் தாக்குதல்தாரர்கள் "CHOSEN BRICK" எனப்படும் அதிநவீன உளவு மென்பொருளைப் பயன்படுத்தியுள்ளனர்.</p><p></p><h2>திருடப்பட்ட&nbsp;மின்னஞ்சல்கள்</h2><p>WhatsApp மற்றும் டெலிகிராம் (Telegram) போன்ற குறுஞ்செய்தி செயலிகள் மூலமாக, குறிப்பிட்ட நபர்களை ஏமாற்றித் தாக்கும் 'ஸ்பியர்-ஃபிஷிங்' (Spear-phishing) பிரச்சாரங்களை மேற்கொண்டு, அவர்களின் மின்னஞ்சல்கள், தனிப்பட்ட செய்திகள் மற்றும் இதர முக்கியமான இரகசியத் தகவல்களை இக்குழுவினர் திருடியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32310355-c360-43ee-863d-e8f5853a4c01/26-6aa97bfdd906e.webp' /></p><p>பிரித்தானியா உட்பட உலகம் முழுவதும் வாழும், ஈரானிய ஆட்சிக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் அதிருப்தியாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களே இந்த உளவுத் தாக்குதலின் முக்கிய இலக்காக இருந்துள்ளனர்.</p><p>ஈரானிய ஆட்சிக்கு அச்சுறுத்தலாகத் கருதப்படும் தனிநபர்களை ஒடுக்குவதற்கும், அவர்களைக் கண்காணிப்பதற்கும் ஈரான் இத்தகைய சைபர் தாக்குதல் நடவடிக்கைகளை உறுதியாகப் பயன்படுத்துகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T17:11:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு - வெளியானது அவசர தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/important-announcement-for-sri-lankans-in-saudi-1789491793"></link>
            <id>https://tamilwin.com/article/important-announcement-for-sri-lankans-in-saudi-1789491793</id>
            <summary type="text">சவூதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் உருவாகி வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஜித்தா துணைத் தூதரகம் அப்பகுதியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஒரு சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் உருவாகி வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஜித்தா துணைத் தூதரகம் அப்பகுதியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><p>

இதற்கமைய, தங்கள் கைபேசிகளில் அவசரகால எச்சரிக்கை வந்தால், பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
</p><h2>
அவசரகால அறிவிப்பு</h2><p>
மேலும், அவசரகால சூழ்நிலைகளில், மக்கா மற்றும் மதீனா பகுதிகளில் 911 என்ற அவசரகால சேவை எண்ணையும், மற்ற பகுதிகளில் 998 என்ற எண்ணையும் அழைக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ba170f6-14b3-4be5-9889-0abd3c681f31/26-6aa97b164cdd0.webp' /></p><p>
</p><p>
துணைத் தூதரகத்தின் அவசரகால தொடர்பு எண்ணான 056 098 6671ஐயும் அழைக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T17:07:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் அழைப்பை நிராகரித்து பேச்சுவாரத்தைக்கான கதவை மூடியது ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-talks-with-the-us-iran-rejects-trumps-offer-1789490467"></link>
            <id>https://ibctamil.com/article/no-talks-with-the-us-iran-rejects-trumps-offer-1789490467</id>
            <summary type="text">ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், ஈரானின் பாதுகாப்புத் துறை அமெரிக்காவுடனான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், ஈரானின் பாதுகாப்புத் துறை அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை நிராகரித்துள்ளது.</p><p>

ட்ரம்ப்பின் அழைப்பு தொடர்பாக ஈரானின் தேசிய பாதுகாப்புத் துறை செயலாளர் மொஹ்சென் ரெஸாயி தனது எக்ஸ் பதிவில், “இனி பேச்சுவார்த்தை கிடையாது என்பதிலிருந்து நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம் என்பது வரை அமெரிக்க ஜனாதிபதியின் முரண்பாடான சமிக்ஞைகளைக் கண்டு யாரும் திசைதிரும்ப வேண்டாம்.</p><h2>ஈரானின் கோரிக்கைகளை நிறைவேற்றினாலே பேச்சு</h2><p>எண்ணெய் வர்த்தகம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை சார்ந்த சூழல் மாறிவிட்டது. சேதத்தைக் குறைக்க எடுக்கும் நடவடிக்கைகளால் வரப்போகும் நிகழ்வுகளைத் தடுக்க முடியாது. ஈரானின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக அமெரிக்கா வாக்குறுதி கொடுக்கும் வரை அவர்களுடன் பேச்சுவார்த்தை இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb050ff8-b200-45c6-92ca-ca6dbe9d1ada/26-6aa97a66a6264.webp' /></p><p>போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள இது மிகவும் ஆரம்பநிலை என்று பல நாள்களாகக் கூறி வந்த ட்ரம்ப், நேற்று தனது சமூக ஊடகப் பதிவில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகக் கூறினார்.</p><p></p><h2>பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம்</h2><p>
</p><p>
அந்தப் பதிவில், "வீழ்ச்சியடைந்து வரும் ஈரான், மிக விரைவாகவும் தீவிரமாகவும் ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புகிறது. அமெரிக்கா இதில் ஈடுபட வேண்டுமா வேண்டாமா என்பதை நான் தீர்மானிப்பேன். ஆனால், அப்படியான பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக உள்ளோம்” என தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07fe01a6-50e6-47ac-8435-5ae5867af26a/26-6aa97a675c4f8.webp' /></p><p>போர் நிறுத்தம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை மீதான முற்றுகையை விலக்கிக் கொள்ள,போரில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு மற்றும் பொருளாதாரத் தடைகளை நீக்குவது போன்ற கோரிக்கைகளை அமெரிக்காவிடம் ஈரான் வலியுறுத்தியுள்ளது. ஆனால், அமெரிக்கா இந்த கோரிக்கைகளை ஏற்க மறுத்து வருகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T17:04:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு வருகை தந்த வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-information-on-foreign-tourists-1789491436"></link>
            <id>https://jvpnews.com/article/new-information-on-foreign-tourists-1789491436</id>
            <summary type="text">இவ்ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16 இலட்சத்தைக் கடந்துள்ளது.

 

சுற்றுலா அபிவிருத்தி அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இவ்ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16 இலட்சத்தைக் கடந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, ஜனவரி 01 ஆம் திகதி முதல் செப்டம்பர் 14 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1,609,759 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/975e8e36-1723-4bde-bc46-9c4daff7144f/26-6aa978edc8618.webp' /></p><h2 style="text-align: justify; ">சுற்றுலாப் பயணிகள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

அத்துடன், செப்டம்பர் 01 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 74,637 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

இவ்வாண்டில் இதுவரை அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 408,024 ஆகும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

இதற்கு மேலதிகமாக, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 155,798 பேரும், சீனாவிலிருந்து 105,294 பேரும், ஜெர்மனியிலிருந்து 94,007 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

செப்டம்பர் மாதத்தின் முதல் 14 நாட்களில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அதற்கமைய இந்தியாவிலிருந்து 22,541 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-15T17:02:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் கொரியாவுக்கு வேலைக்குச் சென்ற இலங்கை இளைஞர்கள் அதிரடி கைது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-youths-arrested-in-south-korea-1789491106"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-youths-arrested-in-south-korea-1789491106</id>
            <summary type="text">தென் கொரியாவில் போதைப் பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் இலங்கையர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து தென்கொரியாவிற்கு வேல...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் கொரியாவில் போதைப் பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் இலங்கையர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது.</p><p>

இலங்கையில் இருந்து தென்கொரியாவிற்கு வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்றுள்ள இளைஞர் குழுவொன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><h2>
கஞ்சாவை பயன்படுத்தி போதைப்பொருள் தயாரிப்பு</h2><p>
குறித்த இலங்கை இளைஞர்கள் குழு, கஞ்சாவை பயன்படுத்தி ஹஷிஷ் போதைப்பொருளை தயாரித்து தென் கொரியாவில் விற்பனை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5eca14c0-d165-4e0d-93e5-01651f627e9b/26-6aa977f698c3e.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் தென்கொரியப் பொலிஸார் இளைஞர்கள் குழுவைக் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஹஷிஷ் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T16:53:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளை குண்டுவெடிப்பு: விசாரணையில் சிக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mistakenly-bombed-to-another-house-1789487955"></link>
            <id>https://tamilwin.com/article/mistakenly-bombed-to-another-house-1789487955</id>
            <summary type="text">தெஹிவளை பகுதியில் இரு சிறுவர்கள் உயிரிழக்கக் காரணமான கைக்குண்டுத் தாக்குதலில், ஒரே ஒரு சுவர் இடைவெளியால் தவறான வீடு இலக்கு வைக்கப்பட்டதாகக் கைது செய்ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை பகுதியில் இரு சிறுவர்கள் உயிரிழக்கக் காரணமான கைக்குண்டுத் தாக்குதலில், ஒரே ஒரு சுவர் இடைவெளியால் தவறான வீடு இலக்கு வைக்கப்பட்டதாகக் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபர் பொலிஸாரிடம் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
</p><p>கடந்த செப்டம்பர் 11 ஆம் திகதி அதிகாலை, தெஹிவளை சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடு ஒன்றின் மீது வீசப்பட்ட கைக்குண்டு வெடித்ததில் 11 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><h2>தெஹிவளை குண்டுத்தாக்குதல்</h2><p>இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அவர்களின் தந்தையின் ஒரு கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாகக் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.</p><p>தாக்குதலுக்குத் திட்டமிடப்பட்ட வீடும், தாக்குதலுக்கு உள்ளான வீடும் ஒரே ஒரு சுவரால் மட்டுமே பிரிக்கப்பட்டிருந்ததால், தவறுதலாக இந்த குடும்பத்தின் மீது குண்டு வீசப்பட்டதாகக் கைதான நபர் ஒப்புக்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2e4b3ef-bd2a-4719-bd5a-257825de39e8/26-6aa975591622a.webp' /></p><p>பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த “கொஸ் மல்லி” என்ற தனது உறவினர் மற்றும் போதிய வத்த பகுதியைச் சேர்ந்த “அவிஷ்கா” ஆகியோரின் தூண்டுதலின் பேரிலேயே இந்த தாக்குதலை நடத்தியதாகச் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.</p><p>தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியின் நிறத்தை மாற்றுவதற்காகக் கேரேஜ் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்பட்டதைக் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.</p><h2>விசாரணையில் வெளிவந்த இரகசியம்</h2><p> 
வாகனத்தைக் கேரேஜில் ஒப்படைத்த நபர் மற்றும் கேரேஜ் உரிமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
செப்டம்பர் 10 இரவு 9 மணியளவில், களுபோவில சரணங்கர வீதியைச் சேர்ந்த ஹிருத்ம ஷாஷ்மிக என்ற “ஹிரு மல்லி” மற்றும் தாக்குதலை நடத்திய மதுஷ்க ரேணுக பெர்னாண்டோ என்ற “மது” ஆகியோர் அந்த முச்சக்கர வண்டியை எடுத்துச் சென்றதாகக் கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c30a4f8-6b98-405b-98b7-539292286b0d/26-6aa97559bff30.webp' /></p><p> </p><p>
மேலும், ஆகஸ்ட் 1 ஆம் திகதி இரத்மலானை கண்டவல வீதியில் “ஜதுங்க பிரியந்த” என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திலும் மது என்பவரே துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் என்பதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. </p><p>
தற்போது தாக்குதலை நடத்திய நபர் மற்றும் முச்சக்கர வண்டி சாரதி ஆகிய இருவரை மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு பொலிஸார் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர். 
இவர்கள் இருவரும் விரைவில் நீதிமன்ற அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T16:42:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோவால் எங்கே மழை, வறட்சி, வெப்பம் ஏற்படும்... விரிவான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/el-nino-reaches-super-status-1789490452"></link>
            <id>https://news.lankasri.com/article/el-nino-reaches-super-status-1789490452</id>
            <summary type="text">Where will it bring rain, drought and heat? எல் நினோ எங்கே மழையையும், வறட்சியையும், வெப்பத்தையும் கொண்டு வரும்?
பசிபிக் பெருங்கடலில் ஒரு வலிமையான &#039;எல...</summary>
            <content type="html"><![CDATA[<p>Where will it bring rain, drought and heat? எல் நினோ எங்கே மழையையும், வறட்சியையும், வெப்பத்தையும் கொண்டு வரும்?
</p><p>பசிபிக் பெருங்கடலில் ஒரு வலிமையான 'எல் நினோ' உருவாகி வரும் நிலையில், இது உலகம் முழுவதும் வானிலையில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.</p><h2>மிகவும் தீவிரமான நிலை</h2><p>
எல் நினோ என்பது மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் நீர் வழக்கத்தை விட வெப்பமாக இருப்பதன் காரணமாக ஏற்படும் ஒரு இயற்கையான காலநிலை நிகழ்வாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0c125cc-9f33-4161-8703-33c2c95bd571/26-6aa97516b5f8c.webp' /></p><p>
</p><p>செப்டம்பர் 14, 2026 அன்று வெளியிடப்பட்ட அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (NOAA) தரவுகள், எல் நினோ (El Nino) நிகழ்வானது 2 டிகிரி செல்சியஸ் (3.6°F) என்ற வெப்பநிலை உயர்வு வரம்பைக் கடந்து, மிகவும் தீவிரமான நிலையை எட்டியுள்ளதைக் காட்டுகின்றன; இது 'சூப்பர் எல் நினோ' என்று அழைக்கப்படுகிறது. </p><p>இந்த ஆண்டிற்கான எல் நினோ நிகழ்வு 2026 ஜூன் மாதத்தில் உருவாகத் தொடங்கியது; இது 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இதுவரை பதிவானவற்றிலேயே மிகத் தீவிரமான நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p></p><p> </p><p>இது 2027-ஆம் ஆண்டு மார்ச் முதல் மே மாதம் வரையிலும் நீடிக்கும் என்று NOAA-வின் காலநிலை முன்னறிவிப்பு மையம் எதிர்பார்க்கிறது. எல் நினோ பொதுவாக மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையே தொடங்கி, நவம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையே உச்சத்தை அடைகிறது; மேலும் இது 18 மாதங்கள் வரை நீடிக்கக்கூடும்.
</p><p>மிகவும் வலுவான எல் நினோ, கிழக்கு ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்காவிற்கு அதிக மழையையும், தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா, அவுஸ்திரேலியா மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவிற்கு வறட்சியையும், அத்துடன் ஏறக்குறைய எல்லா இடங்களிலும் வெப்பமான காலநிலையையும் கொண்டுவருகிறது. </p><p>எல் நினோ பொதுவாக கிழக்கு ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளில் அதிக மழையைக் கொண்டுவருகிறது.
</p><p>எல் நினோ பொதுவாக தென் அமெரிக்கா மற்றும் அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளுக்கு அதிக மழையைக் கொண்டுவருகிறது; 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஈக்வடார் மற்றும் வடக்கு பெருவின் கடற்கரைப் பகுதிகளில் அதிக மழைப்பொழிவு நிலவும் என்றும், பின்னர் செப்டம்பர் 2026 முதல் ஜனவரி 2027 வரையிலான காலத்தில் இப்பகுதி தெற்கு பிரேசில், உருகுவே மற்றும் வடகிழக்கு அர்ஜென்டினா வரை பரவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>காட்டுத்தீ அபாயம்</h2><p>
</p><p>எல் நினோ பொதுவாக தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா, அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலையை ஏற்படுத்துகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தானில் கோடைக்காலப் பருவமழை பற்றாக்குறையாகவே இருந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86213088-4e94-4c34-ba65-7ed911488c29/26-6aa97517699be.webp' /></p><p> </p><p>இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தகவலின்படி, ஜூன் 1 முதல் செப்டம்பர் 9 வரையிலான காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பதிவான மழைப்பொழிவு சராசரியை விட 15 சதவீதம் குறைவாக இருந்தது. </p><p>இந்தோனேசியா வறண்ட பருவத்தையும், அதிக காட்டுத்தீ அபாயத்தையும் எதிர்கொள்கிறது. அதன் வானிலை ஆய்வு நிறுவனமான BMKG, ஜூலை மாத இறுதியில் 5,019 அபாயப் பகுதிகளைப் பதிவு செய்துள்ளது; இதில் சுமத்ரா மற்றும் கலிமந்தான் ஆகியவை அதிகபட்ச அபாயத்தில் உள்ளன.</p><p> அவுஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம், நாட்டின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சராசரிக்கும் குறைவான மழையே பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கிறது; அதேவேளையில், வெப்பமான வானிலை காட்டுத்தீ அபாயத்தை அதிகரிக்கிறது. </p><p>இந்த நிலையில், 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் எல் நினோ நிகழ்வால் மேலும் குறைந்தது 49 மில்லியன் மக்கள் கடுமையான பட்டினிக்குத் தள்ளப்படலாம் என உலக உணவுத் திட்டம் (WFP) எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4038b53-efc5-4a51-b9c2-dd05ef738494/26-6aa975181d71d.webp' /></p><p>
</p><p>மக்காச்சோளம், அரிசி மற்றும் பிற மானாவாரிப் பயிர்களே அதிக ஆபத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவிக்கிறது.</p><p> தென்னாப்பிரிக்கா மற்றும் சஹேல் முதல் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா வரையிலான பகுதிகளில் நிலவும் வறண்ட வானிலை, பயிர் அறுவடைக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
</p><p>எல் நினோ நிகழ்வு பொதுவாகப் பூமியை வெப்பமடையச் செய்கிறது; இது உருவான அடுத்த ஆண்டில் இதன் தாக்கம் மிக அதிகமாக உணரப்படுகிறது. மேலும், இப்போதிருந்து 2030-ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் ஒரு வருடமாவது, இதுவரை பதிவான ஆண்டுகளில் மிகவும் வெப்பமான ஆண்டாக 2024-ஐ மிஞ்சுவதற்கு 86 சதவீத வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
</p><p>வலுவான எல் நினோ பொதுவாக அட்லாண்டிக் சூறாவளிப் பருவத்தை மொத்தமாக அமைதிப்படுத்துகிறது. இதனால் சூறாவளிகள் உருவாவது எல் நினோவால் தடுக்கப்படுகிறது என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-15T16:37:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் மீண்டும் டெங்கு நோய் அதிகரிக்க வாய்ப்பு ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-cases-may-rise-again-in-sri-lanka-1789489964"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-cases-may-rise-again-in-sri-lanka-1789489964</id>
            <summary type="text">ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு பரிசோதனை திட்டங்களின் மூலம் டெங்கு நுளம்புகள் உருவாகும் இடங்கள் கண்டறியப்பட்டு வருவதா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு பரிசோதனை திட்டங்களின் மூலம் டெங்கு நுளம்புகள் உருவாகும் இடங்கள் கண்டறியப்பட்டு வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கண்ணங்கர தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

 

நேற்று (14) முதல் ஒரு வார காலத்திற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள டெங்கு கட்டுப்பாட்டு திட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f78c187-eb5e-4f83-8d85-9f53b16d156c/26-6aa9732e6f31f.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;மீண்டும்&nbsp;டெங்கு நோய்</h2><p style="text-align: justify; ">

 

இருப்பினும், கடந்த காலத்தில் ஏற்பட்ட டெங்கு அதி-அபாயகரமான சூழ்நிலையில் ஓரளவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், சுகாதாரத் துறையினர் மற்றும் மக்களின் அர்ப்பணிப்பாலேயே இதனை சாதிக்க முடிந்தது என்றும் கூறினார்.</p><p style="text-align: justify; ">

 

எனினும், ஒரு வார கால டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்குக் காரணம், வரவிருக்கும் மழைக்கால சூழ்நிலையால் டெங்கு நோய் மீண்டும் தலைதூக்குவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதே என அவர் சுட்டிக்காட்டினார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 

அதற்கமைய, நோய் மீண்டும் தீவிரமடைவதைத் தடுப்பதற்காகவே இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியர் மேலும் தெரிவித்தார்.
</p><p style="text-align: justify; ">
 

இத்திட்டம் 6 மாகாணங்கள் மற்றும் 15 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படுவதோடு, அதற்கு இணையாக கொழும்பு மாநகர எல்லைக்குள்ளும் முன்னெடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p style="text-align: justify; ">
 

அதன்படி, இத்திட்டத்திற்காக ஒவ்வொரு சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவிற்கும் தலா 10 குழுக்கள் வீதம் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்தக் குழுக்களில் சுகாதார ஊழியர் ஒருவர், இராணுவ அதிகாரி ஒருவர், பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றும் தன்னார்வலர்கள் அடங்குவர் என்றும் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-15T16:34:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவனை கைவிட்டு காதலியுடன் ஓட்டமெடுத்த மனைவி; ஷாக்கில் உறவினர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wife-abandons-husband-with-female-lover-1789476143"></link>
            <id>https://jvpnews.com/article/wife-abandons-husband-with-female-lover-1789476143</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியாவில் திருமணமான பெண் ஒருவர் தனது கணவை கைவிட்டு நண்பியுடன் வாழ அடம்பிடிப்பதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியாவில் திருமணமான பெண் ஒருவர் தனது கணவை கைவிட்டு நண்பியுடன் வாழ அடம்பிடிப்பதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

உத்தரப் பிரதேச மாநிலம், காஸியாபாத் மாவட்டம் கோடா பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திடீரென மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80e92c4a-5039-4f12-a7d6-7fa5735001de/26-6aa93d30c42c0.webp' /></p><h2>&nbsp;ஒரு மாதத்திற்கு முன்பு திடீரென மாயமான பெண்</h2><p> 

மனைவியைக் காணாமல் தவித்து வந்த கணவர், அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்துவிட்டு இறுதியாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
</p><p>
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், காணாமல் போன பெண்ணைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், ஒரு மாதப் போராட்டத்திற்குப் பிறகு அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.</p><p></p><p> </p><p>ஆனால், காவல்துறையினர் விசாரணையில் கண்டறிந்த உண்மை அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பெண் கடத்தப்படவோ அல்லது வேறு எந்த ஆபத்திலும் சிக்கவோ இல்லை.
</p><p>
மாறாக, தனது நெருங்கிய பெண் தோழியுடன் சென்று அவருடன் வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது.</p><p> காவல் நிலையத்திற்கு இருவரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது, அந்தப் பெண் தனது கணவருடன் மீண்டும் வாழ முடியாது என்றும், தனது பெண் தோழியுடன்தான் சேர்ந்து வாழ்வேன் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்து அடம்பிடித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
குடும்பத்தினரும் காவல்துறையினரும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், இரு பெண்களும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய முற்றிலும் மறுத்துவிட்டனர். </p><p>இளம் வயதிலேயே திருமணமான பெண்ணின் இந்த அதிரடி முடிவு, கணவர் மற்றும் இரு வீட்டாரையும் பெரும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.</p><p></p><p>

சட்டபூர்வமாகப் பெரியவர்களுடன் பேசித் தீர்வு காணக் காவல்துறையினர் முயன்றபோதும், இரு பெண்களும் தங்கள் முடிவில் உறுதியாக நிற்பதாக கூறப்படுகின்றது . </p><p>உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறிய இந்த விசித்திர காதல் மற்றும் நட்புப் பின்னணி விவகாரம், தற்போது சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-15T16:31:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோடைக்கால முகாமில் சிறுவனுடன் தகாத செயலில் ஈடுபட்ட 46 வயது பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/cook-charged-for-sexually-assaulting-youth-1789482285"></link>
            <id>https://canadamirror.com/article/cook-charged-for-sexually-assaulting-youth-1789482285</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில், 16 வயதிற்குட்பட்ட சிறுவனுடன் தகாத செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 46 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில், 16 வயதிற்குட்பட்ட சிறுவனுடன் தகாத செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 46 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளார்.</p><p>
நியூ பிரன்சுவிக் மாகாணத்தில் உள்ள ஜான்ஸ்டன் பாயிண்ட் பகுதியில் இயங்கி வந்த கோடைக்கால முகாம் ஒன்றில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர், அங்கிருந்த சிறுவனுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக ஆகஸ்ட் 24ம் திகதி பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>
இதுதொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், செப்டம்பர் 8 அன்று போர்ட் எல்கின் பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் வைத்து ஜெனிஃபர் காலன் அபோட் என்ற பெண்ணைக் கைது செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6db9d871-8468-49c5-a27a-4219bc0fc88e/26-6aa9552ef232e.webp' /></p><p> </p><p>
செப்டம்பர் 9 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெனிஃபர் மீது மூன்று முக்கியப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>
பாலியல் தாக்குதல், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் தலையீடு, 16 வயதிற்குட்பட்ட சிறுவர் முன் அநாகரீகமாக நடந்துகொள்ளுதல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
</p><p>தற்போது சில நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இவர், அக்டோபர் 7 அன்று மாங்க்டன் மாகாண நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>
இந்தச் சம்பவத்தில் வேறு ஏதேனும் சிறுவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாகவும், பாலியல் தொல்லைகள் குறித்த புகார்களை எந்த நேரத்திலும் பொதுமக்கள் காவல்துறைக்குத் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>இச்சம்பவம் தொடர்பான தகவல்கள் அறிந்தவர்கள் உள்ளூர் காவல்துறையையோ அல்லது 'க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' (1-800-222-8477) அமைப்பையோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T16:30:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[இது நல்லா இருக்கே.. தனுஷ் - தமிழரசன் பச்சமுத்து இணையும் பட டைட்டில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/is-this-the-title-of-dhanush56-1789489236"></link>
            <id>https://cineulagam.com/article/is-this-the-title-of-dhanush56-1789489236</id>
            <summary type="text">தனுஷ் அடுத்து லப்பர் பந்து பட புகழ் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறார்.அந்த படத்தை தனுஷ்56 என தற்காலிகமாக அழைத்து வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனுஷ் அடுத்து லப்பர் பந்து பட புகழ் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறார்.</p><p>அந்த படத்தை தனுஷ்56 என தற்காலிகமாக அழைத்து வருகிறார்கள். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் மதுரையில் தொடங்க இருக்கிறது.</p><p>இன்னும் ஒரு சில தினங்களில் படத்தின் பூஜை நடைபெற இருப்பதாக தகவல் வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/195930ad-81ca-437d-8f34-6e69b4bbfc9f/26-6aa970576cb68.webp' /></p><h2>டைட்டில் </h2><p>
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் என்ன என்பது பற்றி ஒரு தகவல் கசிந்து இருக்கிறது. அந்த படத்திற்கு "படையல்" என டைட்டில் வைத்திருப்பதாக ட்விட்டரில் ஒரு நபர் பதிவிட, அந்த டைட்டில் நன்றாக இருக்கிறதே என இயக்குனர் ரிப்ளை செய்திருக்கிறார்.
</p><p><b>"படையல் நல்லா இருக்கே.. நான் ஏன் யோசிக்காமல் போனேன்.. சரி ஓகே பேசாம 'எ தமிழரசன் பச்சமுத்து படையல்'-ன்னு போட்டு விடுறேன். நன்றி"</b> என அந்த நபருக்கு தமிழரசன் பச்சமுத்து பதில் அளித்து இருக்கிறார். அவரது பதிவு இதோ.</p><p>&nbsp;</p><p>
</p><p>
</p>]]></content>
            <updated>2026-09-15T16:20:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் ஜோதிடரிடம் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் இழந்த பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/woman-devastated-after-losing-96k-in-1789481669"></link>
            <id>https://canadamirror.com/article/woman-devastated-after-losing-96k-in-1789481669</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் டொராண்டோ நகரைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் கடுமையான உடல்நலப் பாதிப்பிலும் குடும்ப உறுப்பினர்களின் இழப்பிலும் தவித்த தருணத்தைப் பயன்படுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் டொராண்டோ நகரைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் கடுமையான உடல்நலப் பாதிப்பிலும் குடும்ப உறுப்பினர்களின் இழப்பிலும் தவித்த தருணத்தைப் பயன்படுத்தி, ஜோதிடர் ஒருவர் தன்னிடம் இருந்து சுமார் 96,000 டாலர்களை ஏமாற்றிவிட்டதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
</p><p>தன் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத அந்தப் பெண், தன்னை 'நேன்சி' என்ற பெயரில் ஊடகத்திடம் தனது துயரத்தைப் பகிர்ந்துள்ளார்.
</p><p>இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கடுமையான இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்த நேன்சி, அதே காலகட்டத்தில் தனது தந்தை மற்றும் சகோதரரை அடுத்தடுத்து இழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3c8cbb6-aed5-4504-b8c5-e986bb822035/26-6aa952c7685b1.webp' /></p><p> </p><p>
இதனால் கடும் மன உளைச்சலில் இருந்தபோது, இன்ஸ்டாகிராமில் வெறும் 30 கட்டணத்தில் ஜோதிடம் பார்க்கப்படும் என்ற விளம்பரத்தைப் பார்த்து அந்த ஜோதிடரை அணுகியுள்ளார்.</p><p>
ஜோதிடத்தைச் சந்தித்தபோது, நேன்சியைச் சுற்றிப் பொல்லாத ஆவிகளும், கடுமையான பில்லி சூனியமும் இருப்பதாக அச்சமூட்டப்பட்டுள்ளது.
</p><p>இந்தச் சூனியத்தினால் விரைவில் நீங்கள் முடங்கி, சக்கர நாற்காலியில் அமர நேரிடும்; இறுதியில் உயிரிழப்பீர்கள்" என்று ஜோதிடர் அச்சுறுத்தியுள்ளார்.</p><p>
ஒரு துர்சக்தியை பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து ஏரியில் புதைக்க 25,000 டொலர் வேண்டும் எனக் கேட்டுப் பெற்றுள்ளார்.
</p><p>அதன் பின்னர் மேலும் 7 துர்சக்திகள் இருப்பதாகக் கூறி, சிறுகச் சிறுக நேன்சியின் வாழ்நாள் சேமிப்பான மொத்தம் 96,000 டெலாலர்களை பறித்துள்ளார்.</p><p>
தனது சேமிப்பு முழுவதையும் கொடுத்த பிறகும் நேன்சியின் உடல்நலத்திலோ பிரச்சினைகளிலோ எந்த மாற்றமும் ஏற்படவில்லை.</p><p> "இறுதியில் எதுவுமே நடக்கவில்லை. நான் மிகப்பெரிய முட்டாள்தனம் செய்துவிட்டேன். தினமும் அழுதுகொண்டிருக்கிறேன்" என நேன்சி கதறியுள்ளார்.
</p><p>இத்தகைய ஜோதிட மோசடிகள் பயம், அச்சுறுத்தல் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான சூழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டவை என கனடா மோசடி எதிர்ப்பு மையம் எச்சரித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T16:07:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-western-province-transport-chief-arrested-1789488271"></link>
            <id>https://jvpnews.com/article/former-western-province-transport-chief-arrested-1789488271</id>
            <summary type="text">மேல் மாகாண வீதி மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவரான பிரசன்ன சஞ்சீவ, இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மேல் மாகாண வீதி மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவரான பிரசன்ன சஞ்சீவ, இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify;">
 

டெண்டர் நடைமுறைகளுக்குப் புறம்பாக பயணிகள் போக்குவரத்து அனுமதிகளை வழங்கி அரசுக்கு 4,160,000 ரூபா இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின்கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35475656-3b18-4ed0-9fa4-03eff4ba0c73/26-6aa96c90c1398.webp' /></p><h2 style="text-align: justify; ">இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு</h2><p style="text-align: justify; ">மேல் மாகாண வீதி மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை சட்ட மீறலாக, உரிய டெண்டர் முறையைத் தவிர்த்து குறித்த அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">
 

இதன் மூலம் வெளித் தரப்பினருக்கு பயனளித்து, 'ஊழல்' எனும் குற்றத்தைச் செய்துள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் பிரசன்ன சஞ்சீவ இன்று (15) காலை 9.50 மணியளவில் கைது செய்யப்பட்டார்</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-15T16:04:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : பெண்கைதிகள் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/female-inmates-suspected-in-negombo-prison-clash-1789477855"></link>
            <id>https://ibctamil.com/article/female-inmates-suspected-in-negombo-prison-clash-1789477855</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 25 பெண் கைதிகளை, வரும் 17ஆம் திகதி நீதிமன்றத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 25 பெண் கைதிகளை, வரும் 17ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீர்கொழும்பு பிரதம நீதவான் ஷிலானி பெரேரா இன்று குற்றப் புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்டார்.
</p><p>
சந்தேக எண்கள் 61 முதல் 81 வரை பெயரிடப்பட்ட சந்தேக நபர்களின் அடையாள அணிவகுப்பிற்காக வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.</p><h2>பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் பெண் சந்தேக நபர்கள் மீது வழக்கு&nbsp;</h2><p>&nbsp;அன்றைய தினம் அடையாள அணிவகுப்பிற்காக 25 பெண் சந்தேக நபர்களையும் முற்படுத்துமாறு நீதவான்&nbsp; உத்தரவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/109a8f7e-aef8-4625-92f2-caa60ca29784/26-6aa9493d2650f.webp' /></p><p>

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் பெண் சந்தேக நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து, வழக்கு முடியும் வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு குற்றப் புலனாய்வுத் துறை கோரியது.</p><p></p><p>
</p><p>
</p><h2>சந்தேக நபர்களாக 106 பேர்</h2><p>அதன்படி, இதுவரை 106 சந்தேக நபர்கள் பெயரிடப்பட்டுள்ளனர், அவர்களில் 81 பேர் ஆண்கள் மற்றும் 25 பேர் பெண்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்,மேலும் 81 சந்தேக நபர்கள் அடையாள அணிவகுப்பிற்காக முற்படுத்தப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6eb1d520-766a-486f-942f-5ebe3bb0a850/26-6aa9493dd1c09.webp' /></p><p>

நீர்கொழும்பு தலைமை நீதவான் ஷீலானி பெரேரா முன்னிலையில் இன்று நடைபெற்ற அடையாள அணிவகுப்பில், 30 சந்தேக நபர்கள் (சந்தேக எண்கள் 31 முதல் 60 வரை) முற்படுத்தப்பட்டு, சாட்சிகளாக ஆஜரான சிறை அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டனர்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T16:00:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை தொடர்பில் தொடர்ந்தும் முதலிடம் வகிக்கும் இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tourist-arrivals-exceed-16-million-so-far-1789486687"></link>
            <id>https://ibctamil.com/article/tourist-arrivals-exceed-16-million-so-far-1789486687</id>
            <summary type="text">இவ்ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16 இலட்சத்தைக் கடந்துள்ளது.

 

சுற்றுலா அபிவிருத்தி அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இவ்ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16 இலட்சத்தைக் கடந்துள்ளது.

 

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, ஜனவரி 01 ஆம் திகதி முதல் செப்டம்பர் 14 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1,609,759 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.&nbsp;</p><p>இவ்வாண்டில் இதுவரை அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 408,024 ஆகும்.</p><h2>முதலிடத்தில் இந்தியா</h2><p>செப்டம்பர் மாதத்தின் முதல் 14 நாட்களில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அதற்கமைய இந்தியாவிலிருந்து 22,541 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b8193ee-f953-403c-94c5-78c5b6ace360/26-6aa96b85727f4.webp' /></p><p>அத்துடன், செப்டம்பர் 01 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 74,637 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;இதர நாடுகளில் இருந்து வந்தவர்கள்</h2><p>

 

இதற்கு மேலதிகமாக, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 155,798 பேரும், சீனாவிலிருந்து 105,294 பேரும், ஜெர்மனியிலிருந்து 94,007 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7b0463a-cbaa-4101-9690-00abe878a3d1/26-6aa96b8626d84.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T16:00:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்வேயில் முக்கிய அமைச்சு பதவியை பொறுப்பேற்றுள்ள ஈழத்தமிழ் பெண் - அநுர அரசாங்கம் வாழ்த்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kamzy-gunaratnam-appointed-transport-minister-1789484262"></link>
            <id>https://tamilwin.com/article/kamzy-gunaratnam-appointed-transport-minister-1789484262</id>
            <summary type="text">நோர்வேயின் புதிய போக்குவரத்து அமைச்சராக ஈழத்தமிழ் பெண் கம்சி குணரத்னம் பொறுப்பேற்றுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. 

வெளிந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வேயின் புதிய போக்குவரத்து அமைச்சராக ஈழத்தமிழ் பெண் கம்சி குணரத்னம் பொறுப்பேற்றுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.</p><p> 

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.</p><p> 

“<i><b>நோர்வேயின் போக்குவரத்து அமைச்சராக பதவியேற்றுள்ள அமைச்சர் கம்சி குணரத்தினத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். பகிரப்பட்ட பாரம்பரியத்தைக் கொண்ட நோர்வே வாழ் இலங்கைச் சமூகத்தினருக்கு பெருமைக்குரிய தருணம் இதுவாகும். அமைச்சர் கம்சி குணரத்னம் தனது அமைச்சு பதவியை வெற்றிகரமான முன்னெடுக்க வாழ்த்துகிறேன்</b></i>” என அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Heartiest congratulations to Minister Kamzy Gunaratnam on taking oaths as the Minister of Transport of Norway. A proud moment for Sri Lankan community in Norway given the shared heritage. I wish Minister Gunaratnam every success in leading her Ministry.</p>&mdash; Vijitha Herath (@HMVijithaHerath) <a href="https://x.com/HMVijithaHerath/status/2098377957895225542?ref_src=twsrc%5Etfw">September 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2><b>முதலாவது தமிழ்&nbsp;பெண்</b></h2><p>

யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட 38 வயதான கம்சி குணரத்னம், நோர்வேயில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட முதலாவது தமிழ் பெண்ணாகும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b76f8fff-057d-4be3-8f5d-3976bcf16d81/26-6aa9630584a9a.webp' /></p><p>கடந்த 11ஆம் திகதி தனது அமைச்சினை பொறுப்பெற்றுக் கொண்ட நிலையில், தமிழ் மக்களின் வாழ்த்தினை பெற்று வருகிறார்.</p><p> 

போக்குவரத்து அமைச்சர் என்ற முறையில், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து கொள்கைகள், அத்துடன் அஞ்சல் சேவைகள் தொடர்பான பொறுப்புகளுக்கு இவர் தலைமை தாங்குவார்.
</p><p>
1988ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் கம்சாயினி குணரத்னம் என்ற பெயரில் பிறந்த இவர், யுத்த சூழ்நிலை காரணமாக சிறு வயதில் பெற்றோருடன் நோர்வேக்கு சென்றிருந்தார்.</p><p> </p><h3><b>

பிரதான அமைச்சு பதவி</b></h3><p>தனது 19 வயது முதல் தொழிலாளர் கட்சியின் மூலம் அரசியல் பயணத்தை ஆரம்பித்த கம்சி, சமகாலத்தில் பிரதான அமைச்சு பதவியை பொறுப்பேற்றுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17ce473e-195f-4d51-8a97-825bb5037c46/26-6aa96306382ba.webp' /></p><p>ஒஸ்லோவின் நகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு, பின்னர் ஒஸ்லோவின் துணை மேயர், நாடாளுமன்ற உறுப்பினர் என படிப்படியாக அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். </p><p>

இலங்கையில் போர் காரணமாக காணாமல் போனவர்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் நோர்வே நாடாளுமன்றத்தில் கம்சி குணரட்னம் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
</p>]]></content>
            <updated>2026-09-15T15:57:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸ் 10 பரபரப்பாகும் நிலையில்… கம்ருதீன் -பாரு வீடியோவுக்கு குவியும் லைக்குகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/bb-kamurudin-celebrates-his-birthday-with-vj-paru-1789486171"></link>
            <id>https://manithan.com/article/bb-kamurudin-celebrates-his-birthday-with-vj-paru-1789486171</id>
            <summary type="text">ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் பெற்ற விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சியாக பிக்பாஸ் திகழ்கிறது.

பிக்பாஸ் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் பெற்ற விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சியாக பிக்பாஸ் திகழ்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசன் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி 19 போட்டியாளர்களுடன் பிரம்மாண்டமாக தொடங்கியது. </p><p>நிகழ்ச்சி ஆரம்பித்த முதலே போட்டியாளர்களுக்கு இடையிலான போட்டி, கருத்து வேறுபாடுகள் மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்கள் என பிக்பாஸ் வீடு பரபரப்பாகவே காணப்படுகிறது.

இந்நிலையில், நிகழ்ச்சியில் அண்மையில் ஆனந்த் வைல்ட் கார்டு என்ட்ரியாக களமிறங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7fd8a88-400c-4a06-abb3-3d14cadabae0/26-6aa967fe34291.webp' /></p><p></p><p>ஏற்கெனவே விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளரின் வருகை மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.</p><p>
பிக்பாஸ் 10வது சீசனில் இந்த முறை யார் வெற்றியாளராக உருவெடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b6b47e2-d6af-42be-9d0e-8da9477ad586/26-6aa967fee2f03.webp' /></p><p>
</p><h2>வைரலாகும் கம்ருதீன் பிறந்தநாள் கொண்டாட்டம்&nbsp;</h2><p>இதற்கிடையில், கடந்த 9வது சீசனில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த போட்டியாளர்களில் ஒருவரான கம்ருதீனின் பிற்நத நாள் கொண்டாட்ட காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a71b412-55b7-4df1-8759-9a64870fa0c9/26-6aa967ff9b30a.webp' /></p><p></p><p>

கடந்த சீசனில் சர்ச்சைக்குரிய வகையில் நடந்து கொண்டதாகக் கூறப்பட்ட நிலையில், கம்ருதீனுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், கம்ருதீன் தனது பிறந்தநாளை பார்வதி மற்றும் அவரது குடும்பத்தினருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். </p><p>இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான காணொளியே தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

குறித்த காணொளியைப் பார்த்த ரசிகர்கள் கம்ருதீனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DdRSuKnxms6/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DdRSuKnxms6/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DdRSuKnxms6/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Paarudin✨ (@kamrupaaru_addictz)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> </a><b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">&nbsp;&nbsp;</a></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T15:46:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவின் வேலையை தொடரும் நாமல்! பிள்ளையான் - கருணாவைத் தொடர்ந்து அர்ச்சுனா..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/it-was-mahinda-rajapaksa-who-reformed-pillaiyan-1789459450"></link>
            <id>https://tamilwin.com/article/it-was-mahinda-rajapaksa-who-reformed-pillaiyan-1789459450</id>
            <summary type="text">
நாமல் ராஜபக்சவின் தந்தை மகிந்த ராஜபக்சதான், தடை செய்யப்பட்ட அமைப்பில் இருந்த பிள்ளையானையும், கருணாவையும் மாற்றினார். அதேபோல, அர்ச்சுனாவை நாமல் ராஜபக...</summary>
            <content type="html"><![CDATA[<p>
நாமல் ராஜபக்சவின் தந்தை மகிந்த ராஜபக்சதான், தடை செய்யப்பட்ட அமைப்பில் இருந்த பிள்ளையானையும், கருணாவையும் மாற்றினார். அதேபோல, அர்ச்சுனாவை நாமல் ராஜபக்ச மாற்றியுள்ளார் என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.</p><p> 

இன்றையதினம்(15.09.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தடை செய்யப்பட்ட அமைப்பை பிரசாரம் செய்வது அவருக்கே நல்லதல்ல.</p><h2>அர்ச்சுனாவின் உறுதி மொழி&nbsp;</h2><p> 

ஏனெனில், தடை செய்யப்பட்ட அமைப்பொன்றின் சார்பாக அவர் நாடாளுமன்றத்தில் செயற்பட மாட்டேன் என்றும், அரசுக்கு எதிராக சதி செய்யமாட்டேன் என்றும்&nbsp; உறுதி செய்திருக்கின்றார்.</p><p>

அதையும் மீறி, தடை செய்யப்பட்ட அமைப்பொன்று தொடர்பில் அவர் பிரசாரம் செய்வாரெனில் அது அவருக்குத்தான் நல்லதல்ல.</p><p> 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அநுராதபுரத்தில் இடம்பெற்ற கூட்டத்தின்போது, அந்த மேடையில் இருந்தவன் என்ற வகையில், அர்ச்சுனா இராமநாதனின் அன்றைய முழு உரையிலும் நான் கண்டுகொண்ட விடயம், வடக்கையும் தெற்கையும் இணைப்பதற்கு அவர் ஒரு முயற்சி செய்து வருகின்றார் என்பது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c4d5294-e75e-4f1b-b4db-6fc0395549d2/26-6aa9046a5b4fc.webp' /></p><p> 

தமிழ் மக்களும், சிங்கள மக்களும் சகோதரர்களைப் போல வாழ வேண்டும் என்பதற்காக, அதற்குரிய ஏதுவான ஒரு சூழலை உருவாக்குவதற்காக அர்ச்சுனா இராமநாதன் முயற்சி செய்து வருகின்றார்.</p><p>

இந்த நாட்டைப் பிரிக்க எண்ணுபவர்களுக்கு இந்த நடவடிக்கை கண்ணை குத்துகிறது போலும்.</p><p>

ஆனால், அர்ச்சுனாவின் கடந்த கால வரலாற்றையும், அவர் நாடாளுமன்றத்திற்கு வந்த விதத்தினையும் நோக்கும் போது, அவரின் இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழும்.
</p><p>
நிச்சயமாக அவருடைய இந்த மாற்றத்திற்கு ஒரே காரணம், நாமல் ராஜபக்ச தான். வேறு யாரும் இல்லை.
அவர்தான் அர்ச்சுனாவை மாற்றியிருக்கின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89794755-dd61-4190-989e-d18612429dbe/26-6aa9046b230e7.webp' /></p><p>

அதேபோல, கருணாவையும், பிள்ளையானையும் மாற்றி அவர்களை அரசியலுக்குள் கொண்டு வந்து, அவர்களுடைய மக்களுக்கு அபிவிருத்தியைக் காட்டியது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான்.
</p><p>
ஆனால் ஒருபோதும் கருணாவோ, பிள்ளையானோ, ஆட்சி மாற்றத்தைக் கோரவோ, கிழக்கு மாகாணத்தைப் பிரித்து தனி மாகாணமாக அறிவிக்க வேண்டும் என்றோ கோரியதில்லை.
</p><p>
இப்போது அர்ச்சுனாவும் வடக்கை தனியாகப் பிரித்துத் தர வேண்டும் என்று கேட்கப் போவதில்லை. அந்த நிலையை எற்படுத்தியது நிச்சயமாக நாமல் ராஜபக்சதான். இது ஒரு பாரிய வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.<br></p>]]></content>
            <updated>2026-09-15T15:42:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாரியம்மன் ஆலயத்திற்காக விறகு தேட சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த கதி - 5 நாட்களுக்கு பின் வந்த தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/41-youths-arrested-in-trincomalee-1789486736"></link>
            <id>https://tamilwin.com/article/41-youths-arrested-in-trincomalee-1789486736</id>
            <summary type="text">திருகோணமலை - தம்பலகாமம், சம்மாந்துறை மாரியம்மன் ஆலயத்தில்
நடைபெற இருக்கும் தீ மிதிப்பு பூஜைக்கு விறகு சேகரிப்பதற்காக சென்ற இளைஞர்கள் வனவிலங்கு பாதுகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - தம்பலகாமம், சம்மாந்துறை மாரியம்மன் ஆலயத்தில்
நடைபெற இருக்கும் தீ மிதிப்பு பூஜைக்கு விறகு சேகரிப்பதற்காக சென்ற இளைஞர்கள் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p><p> 

சம்மாந்துறை மாரியம்மன் ஆலயத்தில்
நடைபெற இருக்கும் தீ மிதிப்பு பூஜைக்கு விறகு சேகரிப்பதற்காக 41 இளைஞர்கள் காட்டுப் பகுதிக்குள் சென்றுள்ளனர்.
</p><h2>
41 பேர் கைது</h2><p>
இதன்போது, வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் 41 பேரும் கைது செய்யப்பட்டனர். 

அத்துடன், அவர்கள் ஏற்றி சென்ற பெட்டியுடனான இரண்டு உழவு
இயந்திரங்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7831240b-6f3e-47b1-aa89-a4bb93132e3b/26-6aa966c369de0.webp' /></p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட அனைவரும் கந்தளாய் நீதவான் நீதிமன்றினால் சொந்த பிணையில்
கடந்த வியாழக்கிழமை விடுவிக்கப்பட்ட நிலையில், இன்றயதினம் (15/09/2026) குறித்த
வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு உழவு இயந்திரங்களும் நீதவான் மன்றினால்
உரிமையாளர்களிடம் விடுவிக்கப்பட்டது.</p><p>பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணி துஷ்யந்தன் மற்றும் சட்டத்தரணி நிருஷ்
ஆகியோர் முன்னிலையாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T15:40:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய விதிமுறைக்கு அனுமதி ; 20 ஆம் திகதி முதல் கட்டாயமாகும் நடைமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mandatory-procedure-effective-from-20th-1789486800"></link>
            <id>https://jvpnews.com/article/mandatory-procedure-effective-from-20th-1789486800</id>
            <summary type="text">அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து இருக்கைகளிலும் பயணிக்கும் பயணிகள் வாகன ஆசன பட்டி அணிவதை வரும் செப்டம்பர் 20 ஆம் திகதி முதல் கட்டாயமாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து இருக்கைகளிலும் பயணிக்கும் பயணிகள் வாகன ஆசன பட்டி அணிவதை வரும் செப்டம்பர் 20 ஆம் திகதி முதல் கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

 

வாகன உற்பத்தியாளரால் வாகன பட்டி பொருத்தப்படாத இருக்கைகளுக்கு அவற்றை பொருத்திக்கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த அவகாசத்தை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு வெளியிடப்பட்ட, 2026 ஜூன் 17 ஆம் திகதியிடப்பட்ட 2493/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் உத்தரவுகளுக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aba2651e-f655-43a5-af97-f7c2bc46ee1c/26-6aa966d238b4f.webp' /></p><h2 style="text-align: justify; ">வர்த்தமானி அறிவித்தல்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை ஆலோசனைக்குழு கூட்டத்தில் இது குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

 

நாளாந்தம் அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக 2011.08.03 ஆம் திகதி 1717/14 ஆம் இலக்க மோட்டார் வாகன (அதிவேக வீதிகள்) விதிகளைத் திருத்தி, 2025.09.25 ஆம் திகதி 2455/29 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஆசன பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

பின்னர் ஆசன பட்டிகளை பொருத்திக் கொள்வதற்காக 03 மாத கால அவகாசம் வழங்கப்பட்டதுடன், இந்தக் கால அவகாசம் 2025.12.25 அன்றுடன் நிறைவடைந்தது.
</p><p style="text-align: justify; ">
 

எனினும், பொதுமக்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அந்தக் காலம் 2026.03.20 முதல் 2026.06.19 வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-15T15:40:10+00:00</updated>
        </entry>
    </feed>
