<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-11T14:30:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் கௌதம் அதானி மீதான வழக்கு தள்ளுபடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/case-against-gautam-adani-dismissed-in-the-us-1786453898"></link>
            <id>https://jvpnews.com/article/case-against-gautam-adani-dismissed-in-the-us-1786453898</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியப் பெரும் கோடீஸ்வரரான கௌதம் அதானி மீதான குற்றவியல் வழக்குகளை அமெரிக்க திங்களன்று (10) தள்ளுபடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியப் பெரும் கோடீஸ்வரரான கௌதம் அதானி மீதான குற்றவியல் வழக்குகளை அமெரிக்க திங்களன்று (10) தள்ளுபடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இருப்பினும், மோசடி மற்றும் இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கை கைவிட நீதித்துறை எடுத்த முடிவு கவலைக்குரியது என்றும்&nbsp; நீதிபதி&nbsp; குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f38c8faa-1132-4aa4-bb93-7179c57a1da4/26-6a7b1f8bf1052.webp' /></p><h2>இலஞ்சம் மற்றும் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள்&nbsp;</h2><p>
</p><p>

இலஞ்சம் மற்றும் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து, 2024 நவம்பரில் நியூயோர்க் கூட்டாட்சி நீதிமன்றம் ஒன்றில் அதானி மற்றும் ஏழு பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.</p><p></p><p>
</p><p>
அதேவேளை அதானி குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமங்களில் ஒன்றாகும்.

இது நாட்டின் பொருளாதாரத்தின் முக்கியத் துறைகளான துறைமுகங்கள் முதல் சீமெந்து வரையிலும், எரிசக்தி முதல் ஊடகம் வரையிலும் குறிப்பிடத்தக்க அளவில் தனது இருப்பைக் கொண்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
சூரிய ஆற்றல் விநியோக ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை இலஞ்சமாகக் கொடுத்ததாகவும், பில்லியன் கணக்கான டொலர்களைத் திரட்டுவதற்காக அமெரிக்க முதலீட்டாளர்களையும் வங்கிகளையும் தவறாக வழிநடத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
</p><p>
 மேலும் அமெரிக்க நீதிக்கு இடையூறு விளைவித்ததாகவும் அரசுத் தரப்பு அமெரிக்காவின் சட்த்தரணிகள் குற்றம் சுமத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-11T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[படுகொலையின் பிரதான சூத்திரதாரி செவ்வந்தியா..! சட்ட ரீதியாக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sevwandi-to-face-forensic-for-facial-examination-1786453621"></link>
            <id>https://tamilwin.com/article/sevwandi-to-face-forensic-for-facial-examination-1786453621</id>
            <summary type="text">பாதாள உலக குழுவின் தலைவர்களில் ஒருவரான கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் பிரதான சந்தேக நபராக இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலக குழுவின் தலைவர்களில் ஒருவரான கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் பிரதான சந்தேக நபராக இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். </p><p>

எனினும் குறித்த பெண் உண்மையில் தேடும் செவ்வந்தியா என்பது தொடர்பில் சந்தேகம் நீடித்து வரும் நிலையில், முகத்தை அடையாளம் காணும் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
</p><p>
இவ்வாறான நிலையில் அரச இரசாயன பகுப்பாய்வாளர் மூலம் செவ்வந்தியை அடையாளம் காண பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கொழும்பு குற்றப்பிரிவு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><h2><b>விளக்கமறியலில் வைக்குமாறு&nbsp;உத்தரவு </b></h2><p> 

குறித்த வழக்கு நேற்று கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருஷவிதான முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd6f5516-25ea-4d49-b298-691d62c7d9f2/26-6a7b21863fb1b.webp' /></p><p>இதன்போது, சந்தேக நபரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருக்குவிதாரண உத்தரவு பிறப்பித்தார்.</p><p> 

சுமார் 09 மாதங்கள் கொழும்பு குற்றப்பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட சந்தேக நபர் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.</p><p> </p><h3><b>சிறப்பு முகம் அடையாளம் </b></h3><p>இதன்போது பொலிஸார் சமர்ப்பித்த விடயங்களை பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb56af36-c74a-4bee-bb75-8514aeeece62/26-6a7b21872494a.webp' /></p><p>சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான் அரச இரசாயன பகுப்பாய்வாளர் முன்னிலையில் சிறப்பு முகம் அடையாளம் காணும் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கும் அனுமதி வழங்கினார்.</p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jqSWT_q16G0" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-08-11T14:24:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ் - பின்னணியில் இருக்கும் முக்கிய காரணம் இதுவா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/why-vijay-wife-sangeetha-withdrew-the-divorce-case-1786447879"></link>
            <id>https://manithan.com/article/why-vijay-wife-sangeetha-withdrew-the-divorce-case-1786447879</id>
            <summary type="text">vijay-sangeetha : முதலமைச்சர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற வேண்டும் என அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>vijay-sangeetha : முதலமைச்சர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற வேண்டும் என அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், சமீபத்தில் அந்த மனுவை அவர் வாபஸ் பெற்றிருப்பது பல்வேறு கேள்விகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2>விஜய் - சங்கீதா&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
கடந்த 1992ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான விஜய், தனது விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பால் படிப்படியாக முன்னேறி முன்னணி நடிகராக உயர்ந்தவர். தற்போது தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று சிறப்பாக கடமையாற்றி வருகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a54a235-ddb0-4924-ba4c-55313dc719bd/26-6a7b0df7acd4b.webp' /></p><p>தனது தீவிர ரசிகையான சங்கீதாவையே திருமணம் செய்து கொண்ட அவர், ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்ட நட்சத்திரத் தம்பதிகளில் ஒருவராகவும் திகழ்தனர்.</p><p>ஆனால் எதிர்பாராத விதமாக சங்கீதா, விஜய்யிடம் இருந்து பிரிந்து செல்ல விரும்புவதாகக் கூறி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64444465-c9d8-4068-9637-988e015a6268/26-6a7b0df86c072.webp' /></p><p></p><p> விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக அவர் குற்றம்சாட்டியதாகவும் தகவல்கள் வெளியாகின.

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு இதுவரை மூன்று முறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில்,&nbsp; மூன்றாவது விசாரணையின்போது, நீதிபதி சுஜாதா, சங்கீதாவிடம் சுமார் 20 நிமிடங்கள் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. </p><p>இந்த ஆலோசனைக்குப் பிறகு, தான் தொடர்ந்த விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக சங்கீதா நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.

இந்த திடீர் மனமாற்றத்துக்குப் பின்னால் சில முக்கிய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a15930fe-b398-4e87-8ac7-ce52f946ef56/26-6a7b0df91e170.webp' /></p><h2>சங்கீதாவின் மனமாற்றத்துக்கு இது தான் காரணமா?&nbsp;</h2><p>
</p><p>
முதலாவதாக, சங்கீதாவுடனான திருமண உறவு முறிவதை விஜய் ஆரம்பம் முதலே விரும்பவில்லை என்றும், குடும்பம் மீண்டும் ஒன்றாக வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அதேபோல், அவர்களது மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா ஆகிய இருவரும் பெற்றோர் பிரிவதை விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5b6dd4e-2dd1-4b3f-bf4d-6e34f935749d/26-6a7b0df9c42d6.webp' /></p><p> குறிப்பாக ஜேசன் தனது தந்தையுடனும், திவ்யா பெற்றோர் இருவரிடமும் தொடர்ந்து பேசி, அவர்களுக்குள் ஏற்பட்டிருந்த மனக்கசப்பை போக்க முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

சங்கீதாவின் மனக்கசப்புக்கு சில தவறான நபர்களின் ஆலோசனைகளும் காரணமாக இருந்ததாகவும், அவர்களின் தேவையற்ற பேச்சுகளால் விஜய் மீது அவருக்கு தவறான புரிதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, குடும்பத்தினரின் அறிவுறுத்தலை ஏற்று, அந்த நபர்களுடனான தொடர்பை சங்கீதா முற்றிலுமாக துண்டித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b88a2a30-edc6-4269-b7ee-a09af6fe2e92/26-6a7b0dfa74297.webp' /></p><p>
மேலும், மன அழுத்தத்தில் இருந்த காலகட்டத்தில் சங்கீதா, தங்களது திருமண வீடியோக்கள், சீமந்த புகைப்படங்கள் மற்றும் குழந்தைகளுடன் விஜய் மகிழ்ச்சியாக செலவிட்ட பழைய தருணங்களின் புகைப்படங்களை பார்த்ததாகவும் கூறப்படுகிறது. அந்த நினைவுகள் அவருக்குள் மிகப்பெரிய மனமாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இறுதியில், பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் அவர்களது மனநிலையை கருத்தில் கொண்டு சங்கீதா தனது முடிவை மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த தகவல்கள் சினிமா வட்டாரங்களிலும், குடும்பத்திற்கு நெருக்கமானவர்களிடையேயும் பேசப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48a35897-617d-4ebf-bea8-72a2409a8e0b/26-6a7b0dfb243c1.webp' /></p><p></p><p> விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடிய நிலையில், குறுகிய காலத்திலேயே தனது முடிவை மாற்றிக்கொண்டு சங்கீதா அந்த மனுவை வாபஸ் பெற்றிருப்பது, விஜய் – சங்கீதா தம்பதியினர் மீண்டும் இணைந்திருக்கிறார்களா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T14:21:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் கொலை அச்சுறுத்தல் : உணவு ட்ரக்கில் மறைந்திருந்து சிறிய விமானத்தில் அமெரிக்கா பறந்த ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-hidden-truck-secret-plane-iran-threat-1786454323"></link>
            <id>https://ibctamil.com/article/trump-hidden-truck-secret-plane-iran-threat-1786454323</id>
            <summary type="text">ஈரானின் அச்சுறுத்தலை அடுத்து, கடந்த மாதம் துருக்கியில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டிலிருந்து வெளியேறியபோது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரகசியமாக வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் அச்சுறுத்தலை அடுத்து, கடந்த மாதம் துருக்கியில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டிலிருந்து வெளியேறியபோது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரகசியமாக விமானம் மாறியதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>

ஐரோப்பாவின் நேட்டோ கூட்டமைப்பில் உள்ள ஓரே இஸ்லாமிய நாடு துருக்கி. துருக்கியில் கடந்த ஜூலை 7 நேட்டோ வருடாந்திர மாநாட்டில் ட்ரம்ப் கலந்துகொண்டார்.</p><h2>சந்தேகங்களை ஏற்படுத்திய&nbsp;விமானம் மாறுதல்</h2><p>இதில் பங்கேற்க, கத்தார் பரிசாக வழங்கிய ஏர் போர்ஸ் ஒன் போயிங் 747-8 விமானத்தில் வருகை புரிந்த ட்ரம்ப் அன்றைய தினம் திரும்பிச் செல்லும்போது அந்த புதிய விமானத்தில் ஏறாமல் தனது பழைய ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் ஏறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f88a2a81-2177-4289-98fb-74bc31e590a3/26-6a7b24577138f.webp' /></p><p>

புதிய விமானத்தில் வந்திறங்கி, புறப்படும் போது திடீரென பழைய விமானத்திற்கு மாறியது சந்தேகங்களை ஏற்படுத்தியிருந்தது.
</p><p>

இந்நிலையில் அவர் அன்றைய தினம் அந்த பழைய ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் ஏறுவதுபோல் ஊடகங்களை ஏமாற்றிவிட்டு வேறொரு சிறிய ரக இராணுவ விமானத்தில் துருக்கியில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
</p><p>
ஈரான் போர் உச்சக்கட்டத்தில் இருந்ததும், தான் படுகொலை செய்யப்படுவோம் என்ற அச்சுறுத்தல் காரணமாகவும் ட்ரம்ப் இந்த முறையில் ரகசியமாக பயணித்ததாக கூறப்படுகிறது.</p><p>




' வோஷிங்டன் போஸ்ட்' வெளியிட்டுள்ள செய்தியின்படி, துருக்கி தலைநகர் அங்காராவில் நேட்டோ மாநாட்டை முடித்துக்கொண்டு புறப்பட்ட ட்ரம்ப், கமராக்களுக்கு முன் தனது பழைய ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் ஏறுவது போலக் காண்பிக்கப்பட்டது.</p><p></p><h2>ரகசியமாக வெளியேற்றப்பட்ட&nbsp;ட்ரம்ப் மற்றும் அவரது உதவியாளர்கள்</h2><p>

ஆனால், விமானத்திற்குள் சென்ற சில நிமிடங்களில், ஹைட்ராலிக் வசதி கொண்ட விமான நிலைய உணவு டிரக் மூலம் ட்ரம்ப் மற்றும் அவரது உதவியாளர்கள் ரகசியமாக வெளியேற்றப்பட்டனர்.

அங்கிருந்து அவர் அமெரிக்க இராணுவத்தின் சிறிய C-32A என்ற மாற்று விமானத்திற்கு மாற்றப்பட்டு, இங்கிலாந்தில் RAF Mildenhall விமானத் தளத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/869a80d1-65e5-41d1-be0a-3f70171f1a6e/26-6a7b24582585a.webp' /></p><p> </p><p>அங்கிருந்து அமெரிக்கா சென்றடைந்துள்ளார்.

ட்ரம்ப் இன்றி பழைய ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் பயணித்த பத்திரிகையாளர்கள் மற்றும் சில வெள்ளை மாளிகை ஊழியர்களிடம், விமானத்தின் ஜன்னல் திரைகளை மூடி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
</p><p>


ஈரான் எல்லையை ஒட்டிய துருக்கிக்கு ட்ரம்ப் சென்றிருந்த சமயத்தில், ஈரானின் படுகொலை அச்சுறுத்தல் குறித்த நம்பகமான தகவல் அமெரிக்க உளவுத்துறைக்கு கிடைத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T14:17:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமாருடன் இரகசிய பேச்சுவார்த்தை - முடிவை அறிவித்தது தமிழ்த்தேசிய பேரவை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/request-to-gajendra-kumar-for-party-alliance-1786456973"></link>
            <id>https://tamilwin.com/article/request-to-gajendra-kumar-for-party-alliance-1786456973</id>
            <summary type="text">ஆறு தமிழ் மற்றும் முஸ்லீம் கட்சிகள் இணைந்து அமைத்துள்ள கூட்டணியில் உத்தியோகபூர்வ அழைப்பு வந்தால், தமிழ்த்தேசிய பேரவை மத்திய குழுவில் தீர்மானித்து சேர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆறு தமிழ் மற்றும் முஸ்லீம் கட்சிகள் இணைந்து அமைத்துள்ள கூட்டணியில் உத்தியோகபூர்வ அழைப்பு வந்தால், தமிழ்த்தேசிய பேரவை மத்திய குழுவில் தீர்மானித்து சேர்ந்து பயணிப்பதா இல்லையா என்ற முடிவை எடுக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.</p><p> 



கிளிநொச்சியில் இன்று(11.08.2026) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
</p><h2>


தமிழ் கட்சிகளின் கூட்டணி</h2><p>
தமிழ் கட்சிகள் (ஆறு கட்சிகள் சேர்ந்து) இலங்கையில் உள்ள தமிழ், முஸ்லிம்
மக்களுடைய மற்றும் மலையக மக்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்காக ஒன்று
சேர்ந்திருக்கிறார்கள். அது தொடர்பாக உங்களுக்கு ஏதாவது அழைப்புகள்
விடுக்கப்பட்டிருக்கிறதா? என ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியுள்ளார். </p><p>

அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதிலளிக்கையில், </p><p>“ கடந்த வார நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது, ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸினுடைய தலைவர் ரவூஃப் ஹக்கீம் நாடாளுமன்றத்திலே
என்னை கண்டு “பேசலாமா?” என்று கேட்டு, "நான் இந்த ஆறு கட்சிகளுடைய இந்த
முயற்சியிலே நானும், அதாவது தமிழ் தேசிய பேரவையும், வந்து சேர்ந்து கொள்ள
வேண்டும்" என்ற கருத்தை என்னிடம் கூறியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d315f36e-5805-4054-a079-e09a801ccb8d/26-6a7b2c91377da.webp' /></p><p>
</p><p>
அந்த ஆறு கட்சிகளுக்கும் தான் இந்த விடயத்தைச் சொல்லியிருப்பதாகவும், அந்த
வகையிலே வந்து எவருக்கும் தமிழ் தேசிய பேரவையை இணைத்துக் கொள்வதிலே எதிர்ப்பு இல்லை என்றும், ஆகவே நாங்கள் அதிலே எங்களுடைய அமைப்பு சார்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்திருந்தேன். </p><p>

அந்த இடத்திலே நாடாளுமன்ற உறுப்பினர்
ராதாகிருஷ்ணனனையும் அந்த இடத்திற்கு அழைத்து, "நான்
கஜேந்திரனிடம் அவருடைய கட்சியை இந்த ஆறு கட்சிகளுடைய முயற்சியிலே வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறோம்" என்ற கருத்தை சொல்லியிருந்தார்.
</p><h2>
மத்திய குழுவுடன் பேச்சுவார்த்தை</h2><p>
அப்பொழுது நாங்கள் சொன்னது என்னவென்றால், எங்களுக்கு அந்த அழைப்பு
உத்தியோகபூர்வமாக விடுக்கப்படுகின்ற பொழுது, நாங்களும் எங்களுடைய மத்திய
குழுவுக்கு அதனை தெரிவித்து, எங்களுடைய மத்திய குழு அது சம்பந்தமாக ஒரு
தீர்மானம் எடுக்கும்.

அந்த முயற்சி சம்பந்தமாக நாங்கள் அதிலே உத்தியோகபூர்வமாக இருக்கிறோமோ இல்லையோ என்ற முடிவு அதன் மூலமாக தான் தெரிவிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e3f2e3a-0103-4ef0-a089-420da435e841/26-6a7b2c91de45b.webp' /></p><p>

ஏனென்றால் நாங்கள் அதில் இதுவரைக்கும் இந்த விடயம் சம்பந்தமாக எதுவும்
பேசவில்லை. ஊடகத்திலே தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் பொறுத்தவரையில் எங்களுக்கு எந்தவித தகவலும் வழங்கப்படவில்லை.</p><p>

 
ஆகவே நாங்கள் முதல் அதில் கலந்து கொள்வதா இல்லையா? என்று முடிவு எடுப்பதற்கு முன்னர், எங்களுடைய மத்திய குழு அறிவித்தாலும் கூட, நாங்கள் முதல் அவர்களோடு பேசி, அவர்களுடைய முயற்சியினுடைய நோக்கங்கள் சம்பந்தமாக ஒரு தெளிவடைந்த பின்னரே இது தொடர்பான முடிவுகளை எடுக்கலாம் என நினைக்கின்றோம்” என்றார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9gwcRvWz0D0" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-11T14:07:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் பொலிசார் மீது தாக்குதல்: ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-arrested-for-stabbed-france-police-1786449600"></link>
            <id>https://news.lankasri.com/article/man-arrested-for-stabbed-france-police-1786449600</id>
            <summary type="text">பிரான்சில் பொலிசார் இருவர் மீது தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


தெற்கு பிரான்சிலுள்ள Toulouse நகரில் பொலிசார் இருவர் ரோந்து சென்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சில் பொலிசார் இருவர் மீது தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>

தெற்கு பிரான்சிலுள்ள Toulouse நகரில் பொலிசார் இருவர் ரோந்து சென்றுகொண்டிருந்தபோது, திடீரென ஒருவர் அவர்களைத் தாக்கியுள்ளார்.</p><h3>
பிரான்சில் பொலிசார் மீது தாக்குதல்
</h3><p>
நேற்று, அதாவது, திங்கட்கிழமை மாலை Toulouse நகரிலுள்ள Rue d'Austerlitz என்னுமிடத்தில் பொலிசார் ரோந்து சென்றுகொண்டிருந்தபோது, ஒருவர் அவர்களை கத்தி போன்ற ஒரு ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f08fafa4-a026-438c-b780-0ca6055511ab/26-6a7b0ec2d86eb.webp' /></p><p>

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட நகர மேயரான Jean-Luc Moudenc, தாக்கப்பட்ட பொலிசார் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.</p><p>

இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன என்றும் அவர் கூறியுள்ள நிலையில், காயமடைந்த பொலிசாரின் நிலைமை குறித்து யாரும் தெரிவிக்கவில்லை.&nbsp;</p><p></p><p>
மேலும், பொலிசாரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் Moudenc தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T14:04:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனி: 1,800 பாக்சர் கவச வாகனங்கள்- வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-signs-25-billion-euro-boxer-vehicle-deal-1786434410"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-signs-25-billion-euro-boxer-vehicle-deal-1786434410</id>
            <summary type="text">Germany signs 25 billion euro boxer vehicle deal: ஜேர்மனி 25 பில்லியன் டொலர் மதிப்பில் 1,800 பாக்சர் கவச வாகனங்களை வாங்கவுள்ளது.

வரலாற்றிலேயே மிகப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Germany signs 25 billion euro boxer vehicle deal: ஜேர்மனி 25 பில்லியன் டொலர் மதிப்பில் 1,800 பாக்சர் கவச வாகனங்களை வாங்கவுள்ளது.
</p><h2>
வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒப்பந்தம்</h2><p>ஜேர்மனி தனது தரைப்படை திறனை விரைவாக மேம்படுத்தும் நோக்கில், வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளது.</p><p>

“அர்மினியஸ்” (Arminius) திட்டத்தின் கீழ், சுமார் 1,800 பாக்சர் (Boxer) கவச வாகனங்களை வாங்கும் ஒப்பந்தம் 25 பில்லியன் யூரோ மதிப்பில் கையெழுத்தாக உள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/201f1a24-092e-472e-a6bc-6c4f6df9da0f/26-6a7ad36c74bdd.webp' /></p><p>இந்த வாகனங்கள் பல்வேறு போர் தேவைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளன. அதில் படைவீரர் போக்குவரத்து வாகனங்கள், கட்டளை-கட்டுப்பாட்டு வாகனங்கள், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள், 155mm சக்கர ஹவிட்சர்கள், மருத்துவ அவசர வாகனங்கள், பாலம் அமைக்கும் வாகனங்கள், பயிற்சி வாகனங்கள் உள்ளிட்டவை அடங்கும்.
</p><p>
பாக்சர் வாகனங்கள் 8x8 சக்கர அமைப்புடன், “டிரைவ் மாட்யூல்” மற்றும் “மிஷன் மாட்யூல்” எனும் இரண்டு பகுதிகளைக் கொண்டவை. இதனால், ஒரே வாகனத்தை பல்வேறு போர் சூழல்களுக்கு ஏற்ப மாற்றி அமைக்க முடியும்.
</p><p></p><p>இந்த ஒப்பந்தம் 2026 டிசம்பரில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>மேலும், 2030-2035 காலப்பகுதியில் கூடுதல் வாகனங்களை வாங்கும் விருப்பமும் உள்ளது. இதனால், திட்டத்தின் மொத்த மதிப்பு 50 பில்லியன் யூரோவைத் தாண்டும் வாய்ப்பு உள்ளது.
</p><p>
இத்திட்டத்தில் ரெய்ன்மெட்டல் (Rheinmetall) நிறுவனம் முக்கிய பங்காற்றவுள்ளது. வாகன பராமரிப்பு மற்றும் சேவை ஒப்பந்தம் தனியாக 4 பில்லியன் யூரோ மதிப்பில் கையெழுத்தாகும்.
</p><p>
இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், ஜேர்மன் இரானுவத்தின் திறன் மிகுந்தளவில் விரிவடையும். பாக்சர் வாகனங்கள் எதிர்காலத்தில் ஜேர்மனியின் முக்கியமான போர் தளவாடமாக மாறும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-11T14:02:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் இன்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மனித என்புக்கூட்டு தொகுதிகள் : சான்று பொருட்களும் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1786456371"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1786456371</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியில்
புதிதாக பதினைந்து மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன்
பதினொரு மனித என்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியில்
புதிதாக பதினைந்து மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன்
பதினொரு மனித என்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 49ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்று நடைபெற்றபோதே குறித்த மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு
அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><h2>&nbsp;539 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்</h2><p>யாழ்ப்பாணம் நீதிவான் செ.லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்ற அகழ்வு பணிகளில்
தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய
அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர், தடயவியல் காவல்துறையினர்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் அகழ்வு
பணிகளில் பங்கேற்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cf9a1d8-87af-449b-88dc-e8c521374df9/26-6a7b2b51aa3ba.webp' /></p><p>இதுவரை மொத்தமாக 539 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு 524
மனித என்புக் கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன .

516வது இலக்கமிடப்பட்ட மனித என்பு கூட்டு தொகுதியின் இடுப்பு பகுதியில்
மீட்கப்பட்ட தாயத்து போன்ற ஒன்றும், மணல் குவியலில் இருந்து ஒரு ரூபாய்
நாணயக்குற்றி ஒன்றும் பிற சான்றுப் பொருட்களாக மீட்கப்பட்டது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T14:02:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tourists-flocking-to-sri-lanka-1786455113"></link>
            <id>https://jvpnews.com/article/tourists-flocking-to-sri-lanka-1786455113</id>
            <summary type="text">&amp;nbsp; இந்த மாதத்தின் முதல் 06 நாட்களில் 42,810 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சுற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்த மாதத்தின் முதல் 06 நாட்களில் 42,810 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சு</p><p>ற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அண்மைக்காலத் தரவுகளின்படி, இந்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்தே அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8857fc3-d2f1-4870-ac3e-795ed37e19cf/26-6a7b244b32867.webp' /></p><p>
</p><p>
இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் இந்த மாதத்தின் முதல் 06 நாட்கள் வரை மொத்தமாக 1,386,228 சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளது.
</p><p>
அத்துடன், அவர்களுள் இந்தியாவிலிருந்து 346,057 பேரும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 135,323 பேரும் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-11T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீட் பெல்ட் அணிய மறுத்த குழந்தையால் விமானம் ரத்து - கனடாவில் நடந்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/toddler-refuses-seatbelt-flight-cancelled-1786456558"></link>
            <id>https://news.lankasri.com/article/toddler-refuses-seatbelt-flight-cancelled-1786456558</id>
            <summary type="text">Toddler Refuses Seatbelt Flight Cancelled: கனடாவில், சீட் பெல்ட் அணிய மறுத்த குழந்தையால் விமானம் ரத்தானது.

விமானம் ரத்துகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Toddler Refuses Seatbelt Flight Cancelled: கனடாவில், சீட் பெல்ட் அணிய மறுத்த குழந்தையால் விமானம் ரத்தானது.
</p><h2>
விமானம் ரத்து</h2><p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலம், விக்டோரியா விமான நிலையத்தில் Porter Airlines நிறுவனத்தின் PD444 விமானம், ஒரு சிறு குழந்தை சீட் பெல்ட் அணிய மறுத்ததால் ரத்து செய்யப்பட்டது.</p><p>

விமானம் புறப்பட தயாராக இருந்தபோது, அந்த குழந்தை பயத்தில் இருக்கையின் கீழ் மறைந்துகொண்டது. பெற்றோர் மற்றும் விமான ஊழியர்கள் பலமுறை முயன்றும், குழந்தையை அமைதிப்படுத்தி சீட் பெல்ட் அணியச் செய்ய முடியவில்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c366edbb-2c7f-4258-8747-bf12d5bc5cac/26-6a7b29efee8a9.webp' /></p><p>பாதுகாப்பு விதிகளின்படி, பயணிகள் take-off மற்றும் landing நேரங்களில் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும்.

இதனால் விமானம் மீண்டும் டெர்மினலுக்கு திரும்பி, பயணிகள் அனைவரும் இறங்கினர். குழந்தை மற்றும் பெற்றோர் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.</p><p></p><p> </p><h2>அடுத்த நாள்...</h2><p>ஆனால், இந்த செயல்முறை நீண்டதால், விமானம் 12:30 am curfew-ஐ மீறியது. இதனால் அந்த இரவு விமானம் ரத்து செய்யப்பட்டது.

பயணிகள் அடுத்த நாள் விமானங்களில் மாற்றி அனுப்பப்பட்டனர். சிலர் பெற்றோரை குற்றம் சாட்டினாலும், மற்றவர்கள் குழந்தையின் பயத்தை புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறினர்.
</p><p>
Porter Airlines நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. இந்த சம்பவம், விமானப் பயணங்களில் பாதுகாப்பு விதிகள் எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் வெளிப்படுத்துகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-11T13:53:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விக்ரமின் குரங்கு வீடியோவால் சிக்கலில் சம்பந்தி! வனத்துறை விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/actor-vikram-controversy-with-lar-gibbon-monkey-1786452359"></link>
            <id>https://manithan.com/article/actor-vikram-controversy-with-lar-gibbon-monkey-1786452359</id>
            <summary type="text">
Viral Lar Gibbon Post : நடிகர் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரியவகை ‘லார் கிப்பன்’ (Lar Gibbon) குரங்குடன் விளையாடும் வீடியோவை வெளியிட்டிரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>
Viral Lar Gibbon Post : நடிகர் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரியவகை ‘லார் கிப்பன்’ (Lar Gibbon) குரங்குடன் விளையாடும் வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், குரங்கை மடியில் வைத்துக் கொஞ்சி விளையாடும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றதுடன், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.</p><p>

‘லார் கிப்பன்’ அழிவின் விளிம்பில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு இனமாகும்.சர்வதேச வனவிலங்கு வர்த்தக விதிமுறைகள் மற்றும் இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும் இந்த குரங்கை வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்க அனுமதி உள்ளதா என்ற கேள்வி எழுந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37290774-8323-41da-a553-fbcf38477985/26-6a7b284b52b8a.webp' /></p><p></p><h2>வனதுறையினர் விசாரணை&nbsp;</h2><p>மேலும், அந்த குரங்கு எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, அதை வளர்ப்பதற்கான உரிய ஆவணங்கள் உள்ளனவா என்றும் சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதையடுத்து விக்ரம் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து நீக்கினார். </p><p>இருப்பினும், இந்த விவகாரம் வனத்துறையின் கவனத்திற்குச் சென்ற நிலையில், முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

விக்ரமின் மகள் அக்‌ஷிதாவின் கணவர் மனு ரஞ்சித், ‘கெவின்கேர்’ நிறுவனத் தலைவர் சிகே ரங்கநாதனின் மகன் ஆவார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f1ad087-231a-4e0e-b5a2-05043593ce36/26-6a7b284c14a17.webp' /></p><p></p><p>வீடியோவில் இடம்பெற்ற குரங்கு சிகே ரங்கநாதனின் வீட்டில் வளர்க்கப்படுவதாக கூறப்படும் நிலையில், அவரிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
விசாரணையின்போது, அரியவகை ‘லார் கிப்பன்’ குரங்கை வைத்திருப்பதற்கான உரிய ஆவணங்கள் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அந்த குரங்கு மணிப்பூரில் இருந்து வாங்கி வரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>எனினும், இதுதொடர்பான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விக்ரம் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. அவரிடமும் வனத்துறை விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T13:51:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்: மூன்று பணியாளர்கள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attack-on-cargo-ship-in-the-red-sea-killed-1786454807"></link>
            <id>https://tamilwin.com/article/attack-on-cargo-ship-in-the-red-sea-killed-1786454807</id>
            <summary type="text">செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் அல்-மந்தெப் நீரிணைப்
பகுதியில் சரக்குக் கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அதில்
பயணித்த மூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் அல்-மந்தெப் நீரிணைப்
பகுதியில் சரக்குக் கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அதில்
பயணித்த மூன்று பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக ஏமன் கடலோரப் காவல் படை மற்றும்
இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

தன்சானியக் கொடியுடன் ஓமானின் சலாலா துறைமுகத்திலிருந்து ஜிபூட்டி நோக்கிப்
பயணித்த 'திஹாமா' என்ற சிறிய சரக்குக் கப்பலே இவ்வாறு தாக்குதலுக்கு
உள்ளாகியுள்ளது.
</p><p>
இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த இருவரும் இந்தோனேசியாவைச் சேர்ந்த
ஒருவரும் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.</p><p></p><h2>தாக்குதல்</h2><p>
</p><p>
ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத்
தெரிவிக்கப்படுகின்ற போதிலும், ஹூதி அமைப்பு இதுவரை இதற்கு உத்தியோகபூர்வமாகப்
பொறுப்பேற்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55123ee9-c187-44ef-877a-9f6b9c53a9cc/26-6a7b27ace53d3.webp' /></p><p>
</p><p>சவூதி அரேபியாவிற்கு எதிராக ஹூதி அமைப்பினர் செங்கடலில் கடற்படை முற்றுகையை
அறிவித்திருந்த நிலையில், இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
</p><p>
இதன் காரணமாக செங்கடல் வழியிலான சர்வதேசக் கப்பல் போக்குவரத்தில் மீண்டும்
பதற்றமும் பாதுகாப்பற்ற சூழலும் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T13:46:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலம்பியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 164ஆக அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/powerful-earthquake-hits-colombia-1786455666"></link>
            <id>https://tamilwin.com/article/powerful-earthquake-hits-colombia-1786455666</id>
            <summary type="text">கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இரண்டாவது
நாளாக இன்றும்(11.08.2026) மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுக் கொண்டிருப்பதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இரண்டாவது
நாளாக இன்றும்(11.08.2026) மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 164ஆக உயர்ந்துள்ளதாகவும், 
ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், நாட்டின் பல நகரங்களில்
பாரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>


இதற்கமைய, பெரைரா மற்றும் காலி ஆகிய முக்கிய நகரங்களில் பல மாடி கட்டிடங்கள்
தரைமட்டமாகியுள்ளதுடன், மணிசாலேஸ் நகரிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க
தேவாலயத்தின் கோபுரம் ஒன்றும் கடுமையாகச் சேதமடைந்துள்ளது.</p><h2>

நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம்&nbsp;</h2><p>
காலி நகரில் மட்டும் குறைந்தது 85 பேர் உயிரிழந்துள்ளதுடன், அங்குள்ள பிரதான
வைத்தியசாலை ஒன்றின் மேல் தளங்கள் இடிந்து வீழ்ந்ததால் நோயாளிகள் வீதிகளில்
வைக்கப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdf81dab-3ea3-48cd-b93a-accb2b6507f4/26-6a7b26a6d9ecc.webp' /></p><p>
</p><p>
இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியுள்ளதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை
மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகின்றது.

மீட்புப் பணிகளில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து
செயற்பட்டு வருகின்றனர்.</p><p>

கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டும், பாதுகாப்பை உறுதிப்படுத்தும்
பொருட்டும் காலி மற்றும் பெரைரா ஆகிய நகரங்களில் இரவு நேர ஊரடங்குச் சட்டம்
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிகப் பாதுகாப்புப் படையினரும்
குவிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T13:42:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாஜக - திமுக கூட்டணியா? வானதி சீனிவாசன் சொன்ன பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/vanathi-srinivasan-about-dmk-bjp-alliance-1786455661"></link>
            <id>https://ibctamilnadu.com/article/vanathi-srinivasan-about-dmk-bjp-alliance-1786455661</id>
            <summary type="text">DMK - BJP Alliance: பாஜக - திமுக நெருங்கிறதா என்ற கேள்விக்கு அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை என வானதி சீனிவாசன் பதிலளித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>DMK - BJP Alliance: பாஜக - திமுக நெருங்கிறதா என்ற கேள்விக்கு அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை என வானதி சீனிவாசன் பதிலளித்துள்ளார்.</p><h3> 

பாஜக - திமுக கூட்டணி
</h3><p>
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு தமிழ்நாட்டில் ஆட்சியமைத்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. </p><p>

திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சியமைக்க முயற்சித்ததாக பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால், திமுக மற்றும் அதிமுக அதனை மறுத்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/699cfaae-262b-4922-86a4-2c59a57641df/26-6a7b266fbb47f.webp' /></p><p>

இதே போல், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் பாஜக திமுக கூட்டணி அமைக்கும் என தவெகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். </p><p>

இந்நிலையில், பாஜகவின் தேசிய மகளிரணித் தலைவியாக உள்ள வானதி சீனிவாசனிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.</p><p> 

திமுக - பாஜக நெருங்கிறதா என்ற கேள்விக்கு திமுக எம்பி கனிமொழி சோமு, அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது, நிரந்தர எதிரிகளும் கிடையாது என பதிலளித்துள்ளார். இது குறித்து உங்கள் கருத்து என்ன என கேட்கப்பட்டதற்கு, அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை' என கூறினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ca8ebe9-c252-4b72-b21d-b6a89e9eb6ee/26-6a7b266f155c6.webp' /></p><p>

மேலும், "திமுக - பாஜக கூட்டணி உருவாகும்போது சொல்வார்கள். உருவாகும் முன்பே நீங்களே கூட்டணியை உருவாக்கிவிடுவீர்கள்போல" என்று கூறினார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T13:41:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் 43,000 டொலர் மதிப்பிலான தங்கம், வெள்ளி திருட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ontario-woman-charged-in-alleged-gold-theft-1786447759"></link>
            <id>https://canadamirror.com/article/ontario-woman-charged-in-alleged-gold-theft-1786447759</id>
            <summary type="text">&amp;nbsp;கனடியப் பெண் எல்லையில் கைது
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் 43,000 கனேடிய டொலருக்கும் அதிக மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளியைத் திருடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடியப் பெண் எல்லையில் கைது
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் 43,000 கனேடிய டொலருக்கும் அதிக மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளியைத் திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்ட கனடாவைச் சேர்ந்த பெண் ஒருவர், மீண்டும் கனடாவுக்குத் திரும்ப முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>
கனடாவின் ஒன்ராறியோ, பீம்ஸ்வில் பகுதியைச் சேர்ந்த 25 வயதான கைலீ ஹோகன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார். </p><p>
கடந்த மே 11 அன்று ஃபிலடெல்ஃபியாவிலிருந்து சுமார் 40 நிமிட பயணத் தொலைவில் உள்ள பென்சலேம் டவுன்ஷிப் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f0ab8a1-4cb7-4903-821c-0291bb91a99a/26-6a7b07919341c.webp' /></p><p>
</p><p> பாதிக்கப்பட்ட நபர் தங்கம் மற்றும் வெள்ளி அடங்கிய பார்சல் ஒன்றின் வருகைக்காகக் காத்திருந்தவேளையில், அஞ்சல் ஊழியரிடம் சந்தேகநபர் தாங்களே இதன் உண்மையான உரிமையாளர் எனக் கூறி பார்சலுக்குக் கையொப்பமிட்டுப் பெற்றுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.</p><p>
இதனைப் பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் பார்த்துள்ளார். 
திருடப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் மொத்த மதிப்பு 43,549 கனேடிய டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. </p><p>
சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள், வாகனப் பதிவு எண் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் சந்திப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்த பொலிஸார், சந்தேகநபர் பயன்படுத்திய 'நிசான்' ரக காரைக் கண்டறிந்தனர். </p><p>
விசாரணையில், மே 10 அன்று ஃபிலடெல்ஃபியா விமான நிலையத்தில் உள்ள கார் வாடகை நிறுவனத்திடமிருந்து இந்த காரை ஹோகன் வாடகைக்கு எடுத்ததும், மே 11 அன்று திருட்டை அரங்கேற்றிய கையோடு காரைத் திரும்ப ஒப்படைத்துவிட்டு ஏரிஸோனாவுக்கு விமானத்தில் தப்பிச் சென்றதும் தெரியவந்தது.</p><p> 
இதனைத் தொடர்ந்து ஹோகனுக்கு எதிராகக் கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறையினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.</p><p> 
ஜூலை 5 ம் திகதி, நியூயோர்க்கின் லூயிஸ்டன் பகுதியில் உள்ள எல்லைக் கடப்பு வழியே மீண்டும் கனடாவுக்குள் நுழைய முயன்றபோது, அமெரிக்க விசா அனுமதியில் அங்கு தங்கியிருந்த ஹோகனை எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.இவர் மீது ஆவணப் போலி தயாரித்தல், சட்டவிரோதமாகப் பொருட்களைக் கவர்தல் மற்றும் ஏமாற்றித் திருடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. </p><p>இக்குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. 
கைது செய்யப்பட்ட ஹோகன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, அவருக்குப் பிணைத் தொகை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது பக்ஸ் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T13:40:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாலத்திலிருந்து பாய்ந்த பெண் சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/body-of-woman-who-jumped-from-bridge-recovered-1786455675"></link>
            <id>https://jvpnews.com/article/body-of-woman-who-jumped-from-bridge-recovered-1786455675</id>
            <summary type="text">&amp;nbsp; கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த 3ஆம் திகதி பாலத்திலிருந்து பாய்ந்ததாகக் கூறப்படும் பெண்ணொருவரின் சடலம் இன்று (11) மீட்கப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த 3ஆம் திகதி பாலத்திலிருந்து பாய்ந்ததாகக் கூறப்படும் பெண்ணொருவரின் சடலம் இன்று (11) மீட்கப்பட்டுள்ளது.
</p><p>


கம்பளை பகுதியில் கடந்த 3ஆம் திகதி கடும் மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டிருந்த நிலையில், அன்றைய தினம் மதியம் கம்பளை பாலத்திலிருந்து பெண்ணொருவர் திடீரென பாய்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59e9a4b7-8c87-4071-8cad-559aa9fe05a1/26-6a7b267d3838f.webp' /></p><p>
</p><p>


இந்நிலையில், குறித்த பெண்ணின் சடலம் இன்று கம்பளை – போத்தலாப்பிட்டிய களு பாலத்திற்கு அருகிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
</p><p>


சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மற்றும் குற்றத்தடயப் பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-11T13:39:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் பாடசாலை ஒன்றில் அதிபர் நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக ஆளுநருக்கு கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/letter-to-north-governer-1786452149"></link>
            <id>https://tamilwin.com/article/letter-to-north-governer-1786452149</id>
            <summary type="text">மன்னார் புனித சவேரியார் தேசிய பாடசாலையின் அதிபர் நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றதாகவும், அதிபர் சேவை அதிகாரிகளுக்கான நீதி கோருதல் தொடர்பாகவும் உருத்திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் புனித சவேரியார் தேசிய பாடசாலையின் அதிபர் நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றதாகவும், அதிபர் சேவை அதிகாரிகளுக்கான நீதி கோருதல் தொடர்பாகவும் உருத்திரசேனை அமைப்பின் பிரதிநிதி சுஜீவன் கடிதம் ஒன்றினை வட மாகாண ஆளுநர்
நா.வேதநாயகனுக்கு அனுப்பியுள்ளார். </p><p>அந்த கடிதத்தில்,

மன்னார் புனித சவேரியார் தேசிய பாடசாலையின் (1AB தர தேசிய பாடசாலை) அதிபர்
நியமனம் தொடர்பில் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்தும், அங்கு
கடமையாற்றும் தகுதியான அதிகாரிகளுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி குறித்தும்
தங்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.
</p><p>
பொதுவாக ஒரு தேசிய பாடசாலையில், இலங்கை அதிபர் சேவை தரம் 1ஐச் சேர்ந்த ஒருவரே
அதிபராகப் பதவி வகிக்க வேண்டும். ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக இலங்கை அதிபர் சேவை
தரம் 3இல் உள்ள அருட்சகோதரர் சந்தியோகு என்பவர் அதிபராகப் பணியாற்றி, கடந்த
ஆகஸ்ட் 3ஆம் திகதியுடன் ஓய்வுபெற்றுள்ளார்.</p><h2>பொறுப்பு வழங்கப்பட்ட அதிபர்</h2><p>அவரது ஓய்வைத் தொடர்ந்து, அதே பாடசாலையில் இலங்கை அதிபர் சேவை தரம் 3இல் உள்ள
தகுதியான மூவர் (யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இந்து மதத்தைச் சேர்ந்த இரு ஆண்கள்
மற்றும் மன்னாரைச் சேர்ந்த இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்) கடமையில்
உள்ளனர்.</p><p>இருப்பினும், அவர்களைப் புறக்கணித்துவிட்டு, அதே பாடசாலையில் இலங்கை
ஆசிரியர் சேவை தரம் 3இல் கற்பிக்கும் அருட்சகோதரர் சத்தியன் என்பவருக்கு
அதிபர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/407945e5-3de2-4f52-9a22-7dcc8fe2e046/26-6a7b250675272.webp' />&nbsp; &nbsp;</p><p>வலயக் கல்விப் பணிப்பாளரின்
உத்தியோகபூர்வக் கடிதம் மூலம் இந்நியமனம் வழங்கப்பட்டிருந்தாலும், இது வட
மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் ரஞ்சன் அவர்களின் அறிவுறுத்தலின்
பேரிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
</p><p>
இப்பாடசாலை ஒரு தேசிய பாடசாலையாக இருந்தபோதிலும், "டி லா சால்" (De La Salle)
கிறிஸ்தவ மிஷனரியால் நிர்வகிக்கப்படுவதால், தகுதி வாய்ந்த வேற்று மதத்தவர்கள்
இங்கு அதிபராகப் பதவி வகிக்க முடியாத சூழல் நிலவுகிறது.

எனவே, தாங்கள் தலையிட்டு பின்வரும் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு
கேட்டுக்கொள்கின்றேன்.</p><h2>தகுதிக்கு ஏற்ப நியமனம்</h2><p> தகுதிக்கேற்ற நியமனம்: குறித்த பாடசாலையில் அதிபர் தரத்தில் பணியாற்றும்
தகுதியுடைய இரு இந்து ஆசிரியர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, அவர்களுக்குக்
கீழ்நிலை தரத்தில் (ஆசிரியர் தரம்) உள்ள ஒருவரின் கீழ் பணியாற்றப் பணிப்பது
மிகுந்த அநீதியாகும். </p><p>எனவே, அவர்களின் தகுதிக்கு ஏற்ப யாழ்ப்பாணத்தில் உள்ள
பாடசாலைகளில் அவர்களை அதிபர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு
வேண்டுகின்றேன்.

சமத்துவமான நடைமுறை: கிறிஸ்தவப் பாடசாலைகளில் இந்துக்கள் அதிபராக வர முடியாத
நிலைப்பாடு இருப்பது போல, இந்துப் பாடசாலைகளிலும் ஏனைய மதத்தவர்களுக்கு இதைப்
போன்ற நடைமுறைகளே பின்பற்றப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cdbcf76-0254-4f4d-bac4-027d0e6682a4/26-6a7b25073805f.webp' /></p><p>
</p><p>
நிர்வாகக் கட்டுப்பாடு: குறிப்பாக, வட மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர்
பற்றிக் ரஞ்சன் அவர்களின் இந்துக்கள், இந்து மாணவர்கள் மற்றும் இந்துப்
பாடசாலைகளுக்கு எதிரான மறைமுகச் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தி, நடுநிலையோடு
செயற்பட உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
</p><p>
இவ்விஷயத்தில் ஆளுநர் உடனடியாகத் தலையிட்டு, தகுதியுடைய
அதிகாரிகளுக்கு நீதியைப் பெற்றுத்தர ஆவன செய்யுமாறு மிகத் தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T13:36:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்து வாழ் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித்தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/good-news-sri-lankans-living-switzerland-consular-1786452484"></link>
            <id>https://jvpnews.com/article/good-news-sri-lankans-living-switzerland-consular-1786452484</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; சுவிட்சர்லாந்தின் பேர்ண் (Bern) நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் இலங்கை மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய தூதரகச் சேவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; சுவிட்சர்லாந்தின் பேர்ண் (Bern) நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் இலங்கை மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய தூதரகச் சேவைகளை வழங்கும் பொருட்டு, நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
அதன்படி ஜெனீவாவிலுள்ள இலங்கை கொன்சியூலர் ஜெனரல் அலுவலகத்தால் இரண்டு நாட்கள் கொண்ட நடமாடும் சேவையொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6c6666e-af18-46c0-a79b-3cf13ed7ee0c/26-6a7b1a066b9cc.webp' /></p><h2>நடமாடும் தூதரக&nbsp; சேவை</h2><p>
</p><p>
இந்த நடமாடும் சேவை எதிர்வரும் 29 (சனிக்கிழமை) மற்றும் ஆகஸ்ட் 30 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய திகதிகளில் 'Haus Der Religionen, Europaplatz 1, 3008 Bern' என்ற முகவரியில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.
</p><p>
இந்த சேவையின் ஊடாகக் கடவுச்சீட்டு (Passport) விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல் கடவுச்சீட்டில் பெயர் திருத்தங்களை மேற்கொள்ளுதல், பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுகள், இரட்டைக் குடியுரிமைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படவுள்ளன.</p><p></p><p>
</p><p>
அத்துடன் e-BMD தொகுதியின் ஊடாகப் பெறப்படும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை விநியோகித்தல், சிவில் நிலை உறுதிமொழிப் பத்திரங்களைச் சான்றளித்தல், ஓய்வூதியதாரர்களின் ஆயுள் சான்றிதழ்களை ஏற்றுக்கொள்ளுதல், உறுதிமொழிப் பத்திரங்கள் மற்றும் அதிகாரப் பத்திரங்களைச் சான்றளித்தல் ஆகிய சேவைகளும் இதன்போது முன்னெடுக்கப்படவுள்ளன.
</p><p>
கால அவகாசம் குறைவாக உள்ளமையினால் , இந்தச் சேவைகளைப் பெற விரும்புபவர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு முன்னர் www.lankamission.org/mcs என்ற இணையதள முகவரிக்கு பிரவேசித்து முன்பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
மேலும் , தேவையான ஆவணங்கள் மற்றும் விபரங்களை www.lankamission.org/checklist என்ற முகவரியில் அறிந்துகொள்ள முடியும் என்பதுடன், மேலதிக விசாரணைகளுக்கு slcgs.geneva@lankamission.org என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ அல்லது +41 77 990 6073, +41 77 909 8969 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாகவும் தொடர்பு கொள்ள முடியும் என ஜெனீவாவிலுள்ள இலங்கை கொன்சியூலர் ஜெனரல் அலுவலகம் அறிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T13:34:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[எபோலா தொற்றின் தாக்கம் தீவிரம் - உயிரிழப்பு எண்ணிக்கை சடுதியாக உயர்வு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ebola-outbreak-on-the-rise-1786455085"></link>
            <id>https://tamilwin.com/article/ebola-outbreak-on-the-rise-1786455085</id>
            <summary type="text">கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின்
எண்ணிக்கை 2,011 ஆக உயர்ந்துள்ளதாக அந்த நாட்டின் பொதுச் சுகாதார நிறுவனம்
உறுதிப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின்
எண்ணிக்கை 2,011 ஆக உயர்ந்துள்ளதாக அந்த நாட்டின் பொதுச் சுகாதார நிறுவனம்
உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>
இதுவரை ஐந்து மாகாணங்களில் 4,381 பேருக்குத் தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
வரலாற்றில் மிக வேகமாகவும் தீவிரமாகவும் பரவி வரும் எபோலா தொற்றாக இது
பதிவாகியுள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
</p><h2>
நோய் தொற்றின் தாக்கம் அதிகரிப்பு</h2><p>
தற்போது பரவி வரும் 17 ஆவது எபோலா அலையானது “புண்டிக்புகியோ” வகையைச்
சேர்ந்தது என்றும், இதற்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது
சிகிச்சைகளோ கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6245dcb7-6dcb-4647-a088-c52470fdc307/26-6a7b24b03c4a5.webp' /></p><p>

நோய்த்தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிவதில் ஏற்பட்ட தாமதம், நாட்டின்
உட்கட்டமைப்பு பலவீனம் மற்றும் பாதுகாப்பு அற்ற சூழல் என்பன இந்த வைரஸ்
விரைவாகப் பரவுவதற்குக் காரணங்களாக அமைந்துள்ளன.</p><p>

அண்டை நாடான உகாண்டாவிற்கும் இந்தத் தொற்று பரவியுள்ளதைத் தொடர்ந்து, உலக
சுகாதார நிறுவனம் இதனை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொதுச் சுகாதார
அவசரநிலையாக அறிவித்துள்ளது.
</p><p>
கடந்த காலங்களில் ஏற்பட்ட எபோலா பரவல்களுடன் ஒப்பிடுகையில், இந்த முறை
உயிரிழப்புகளின் எண்ணிக்கை மிகக் குறுகிய காலத்தில் இரட்டிப்படைந்துள்ளமை
மருத்துவ உலகிற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
</p><p>
நிலைமையைக் கட்டுப்படுத்த சுகாதாரப் பொருட்கள் மற்றும் பாதுகாப்பு உதவிகளை
விரைவுபடுத்துமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T13:33:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை வானில் தோன்றவுள்ள அரிய காட்சி; இலங்கையர்களும் காணலாம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/perseid-meteor-shower-in-the-sky-srilanka-1786454487"></link>
            <id>https://jvpnews.com/article/perseid-meteor-shower-in-the-sky-srilanka-1786454487</id>
            <summary type="text">&amp;nbsp;‘பெர்சீட்ஸ்’ (Perseid) எனப்படும் எரிகல் மழை அதன் வருடாந்த உச்ச நிலையை அடையும் அதே வேளையில், ஆறு கோள்கள் வளைவு வடிவில் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;‘பெர்சீட்ஸ்’ (Perseid) எனப்படும் எரிகல் மழை அதன் வருடாந்த உச்ச நிலையை அடையும் அதே வேளையில், ஆறு கோள்கள் வளைவு வடிவில் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கவுள்ளதால் இலங்கையிலுள்ள விண்வெளி ஆர்வலர்கள் ஒரு அரிய வானியல் நிகழ்வைக் காணவுள்ளதாக மொறட்டுவை ஆதர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப மையத்தின் வானியல் பிரிவு அறிவித்துள்ளது.
</p><p>

 நாளை (12) அதிகாலை, சூரிய உதயத்திற்கு முன்னர் கிழக்கு மற்றும் தெற்கு வானத்தில் புதன், செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய ஆறு கோள்கள் பரந்த வளைவு வடிவில் தோன்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c5e2a89-e655-42c3-9d89-5088afe7637e/26-6a7b21d8cd37e.webp' /></p><h2>133 வருடங்களுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றி வரும் 109P/Swift-Tuttle</h2><p>
</p><p>
இலங்கையில் இந்த கோள்களின் அணிவகுப்பை சூரிய உதயத்திற்கு சுமார் 60 முதல் 90 நிமிடங்களுக்கு முன்னதாக, அதாவது அதிகாலை 4.30 மணிக்கும் 5.15 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் பார்வையிட முடியும் என ஆதர் சி. கிளார்க் மையம் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
செவ்வாய் மற்றும் சனி கோள்களை மிகவும் எளிதாக அடையாளம் காண முடியும்.

இருப்பினும், புதன் மற்றும் வியாழன் கோள்கள் அடிவானத்திற்கு மிக அருகில் தோன்றுவதால் அவற்றைப் பார்ப்பது கடினமாக இருக்கலாம்.
</p><p>
யுரேனஸைப் இருநோக்கிப் பெருக்கியையும் (binoculars) நெப்டியூனைப் தொலைநோக்கியையும் (telescope) பயன்படுத்தி பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரிய வகை நிகழ்வினை பார்ப்பதற்கு வானியல் ஆர்வலர்கள் கிழக்கு மற்றும் தென்கிழக்கு அடிவானத்தை நோக்கித் தடைகளற்ற தெளிவான பார்வை கிடைக்கும் இடத்தை தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p></p><p>
</p><p>
சுமார் 133 வருடங்களுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றி வரும் 109P/Swift-Tuttle என்ற வால்நட்சத்திரத்தினால் விட்டுச்செல்லப்பட்ட விண்வெளிப் பொருட்களினாலேயே பெர்சீட்ஸ் எரிகல் மழை உருவாகிறது.
</p><p>
இந்த எரிகற்கள் ‘பெர்சியஸ்’ (Perseus) விண்மீன் தொகுதியிலிருந்து தோன்றுவது போல் காட்சியளிக்கும்.

இம்முறை எரிகல் மழையின் உச்சம் அமாவாசை நாளான நாளை வருவதால், இருண்ட வானம் எரிகற்களைப் பார்ப்பதற்கு மிகவும் சாதகமான சூழலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
</p><p>
தெளிவான வானிலை நிலவினால், ஒரு மணி நேரத்திற்கு 100 எரிகற்கள் வீழ்வதை மக்கள் பார்வையிட முடியும்.</p>]]></content>
            <updated>2026-08-11T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த வயசுல டிராமா செய்வது!! திரிஷா இந்த நடிகைக்குதான் பதிலடி கொடுத்தாரா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/trisha-insta-post-about-vijay-to-kutty-padmini-1786451526"></link>
            <id>https://viduppu.com/article/trisha-insta-post-about-vijay-to-kutty-padmini-1786451526</id>
            <summary type="text">தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா குறித்த செய்திகள் தினமும் பேசப்பட்டு தான் வருகிறது. தன்னைப்பற்றி சர்ச்சையாக பேசுபவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா குறித்த செய்திகள் தினமும் பேசப்பட்டு தான் வருகிறது. தன்னைப்பற்றி சர்ச்சையாக பேசுபவர்களுக்கு மறைமுகமாக சோசியல் மீடியாக்களில் பதிலடியும் கொடுத்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae23c533-cf75-468e-bae7-987d3f2abe6b/26-6a7b1648e4377.webp' /></p><p> </p><p>அந்தவகையில் நடிகை திரிஷா இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில், நான் வேண்டிய வாழ்க்கையை வாழ்கிறேன் என்று முதல் ஸ்டோரியில் கூறியுள்ளார்.</p><p> அதாவது, ஒரு காலத்தில் நாம் வேண்டிக்கொண்ட வாழ்க்கையே இன்று நம்ம வியக்க வைக்கும் அளவுக்கு நிறைவாக இருப்பது ஒரு பாக்கியம் என்ற அர்த்தத்தில் பதிவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a720d01-cffc-4621-9d11-3c606b013a2d/26-6a7b16499acf8.webp' /></p><h2>இந்த வயசுல டிராமா&nbsp;</h2><p> அதனையடுத்து, Drama at this age is embarrassing... Go make some money and find peace என்ற வசனத்தை பகிர்ந்துள்ளார். அதாவது, இந்த வயதில் டிராமா செய்வது சங்கடமாக இருக்கிறது. போய் கொஞ்சம் பணம் சம்பாதித்து மன அமைதியை தேடுங்கள் என்ற அர்த்ததில் பதிவிட்டார். இந்த பதிவு யாருக்காக போட்டிருப்பார் என்று பலரும் கேள்வி எழுந்து வந்தது. சிலர் நடிகை குட்டி பத்மினிக்கு தான் இப்படி போட்டுள்ளார் என்று கூறி வருகிறார்கள்.</p><p>அதாவது சமீபத்தில் திரிஷா - விஜய் குறித்து குட்டி பத்மினி பேட்டியொன்றில், திரிஷா நல்ல பெண், அவரைப்பற்றி தேவையில்லாமல் பேச வேண்டாம். விஜய்யும் அவருடைய மனைவி சங்கீதாவும் பிரிந்ததற்கு காரணம் திரிஷா தான் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் இருவருக்கும் இப்போது ஈர்ப்பு இருக்கிறதா? இல்லையா? என்று தெரியாது, ஆனால் ஆரம்பத்தில் கில்லி சமயத்தில் இருவருக்குள் நல்ல புரிதல், மனப்பூர்வமான காதல் இருந்தது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d612a0f1-8a34-4bbf-8d77-680a3d793e47/26-6a7b164a4d5d5.webp' /></p><p>அச்சமயத்தில் எஸ் ஏ சந்திரசேகருக்கு பிடிக்கவில்லை, அவர்தான் அப்போது சங்கீதாவை விஜய்க்கு கல்யாணம் பண்ணி வைத்தார். அதன்பின் விஜய் வாழ்க்கை வேறுமாதிரி போய்விட்டது. திரிஷாவின் வாழ்க்கை வேறுமாதிரியாகிவிட்டது. பின் இருவரும் கோட் சமயத்தில்தான் சந்தித்தார்கள். ஆனால் அதற்குமுன் விஜய், சங்கீதா பிரிந்துவிட்டார்கள்.</p><p> இப்படி இருக்கும்போது இதில் திரிஷாவை தொடர்புப்படுத்தி சொல்வது என்ன நியாயம்? ஒருவேளை அவர்கள் இருவரும் நல்ல நட்பு மட்டுமே இருக்கலாம், அதைக்கூட இவர்கள் தவறாக பேசுவது தப்பு என்று கூறியிருந்தார். அவர் திரிஷாவிற்கு சப்போர்ட் செய்கிறாரா? கேவலப்படுத்துகிறாரா? என்று கேள்வி கேட்டனர். அதை வைத்து தான் திரிஷா இந்த ஸ்டோரியை போட்டுள்ளாரா? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-11T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/optimism-youth-unemployment-is-falling-across-1786446141"></link>
            <id>https://canadamirror.com/article/optimism-youth-unemployment-is-falling-across-1786446141</id>
            <summary type="text">கனடாவில் இளைஞர்களிடையேயான வேலைவாய்ப்பின்மை விகிதம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக குறைந்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய வேலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் இளைஞர்களிடையேயான வேலைவாய்ப்பின்மை விகிதம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக குறைந்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>
15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம், கடந்த 2025 ஜூலையில் 14.6 சதவீதமாக இருந்த நிலையில், 2026 ஜூலை மாதத்தில் 12.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. </p><p>
அதேபோல, கோடைகாலப் பணிகளில் ஈடுபடும் மாணவர்களின் வேலைவாய்ப்பின்மை விகிதமும் 17.5 சதவீதத்திலிருந்து 15.1 சதவீதமாகச் சரிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ff4506f-4878-4a5c-9739-4b0340772efa/26-6a7b013f06ee1.webp' /></p><p>
</p><p>அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் மற்றும் வரிகள் குறித்த ஆரம்பக்கட்ட பொருளாதார பயம் தணிந்துள்ளதால், வர்த்தக நிறுவனங்கள் மீண்டும் நம்பிக்கையுடன் இளைஞர்களைப் பணியில் அமர்த்தத் தொடங்கியுள்ளன.
</p><p>கனடிய மத்திய வங்கி தனது கொள்கை வட்டி விகிதத்தை 2.25 சதவீதமாகக் குறைத்ததைத் தொடர்ந்து, நாட்டின் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டு நுகர்வோர் செலவழிப்பது அதிகரித்துள்ளது.</p><p>
சுற்றுலாத் துறை, உணவகங்கள், சில்லறை வர்த்தகம் மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் கோடைகால வேலைவாய்ப்புகள் மீண்டும் அதிகரித்துள்ளன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசுக்கு கிடைத்த இரகசிய தகவல் - விரைவில் காத்திருக்கும் பெரும் ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/secret-information-received-the-anura-government-1786454301"></link>
            <id>https://tamilwin.com/article/secret-information-received-the-anura-government-1786454301</id>
            <summary type="text">கடந்த 3 வாரங்களில் பல சிறைகளில் கைதிகள் கிளர்ச்சியில் ஈடுபட்டதால் சிறைகளுக்குள் நிலைமை மோசமடைந்து வருவதாகவும் 
இனிவரும் வாரங்களில் இது போன்ற சம்பவங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 3 வாரங்களில் பல சிறைகளில் கைதிகள் கிளர்ச்சியில் ஈடுபட்டதால் சிறைகளுக்குள் நிலைமை மோசமடைந்து வருவதாகவும் 
இனிவரும் வாரங்களில் இது போன்ற சம்பவங்கள் மேலும் இடம்பெறலாம் என இலங்கையின் உள்ளகத் தகவல்கள் தெரிவிப்பதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவங்களுக்கு பின்னால் சில சதி இருப்பதாக மூத்த அரச அதிகாரிகள் தெரிவிப்பதாகவும் அரசாங்கம் இது தொடர்பில் வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தாலும் உள்ளகத்தில் ஒரு பதற்றத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
ஆனால் அதன் பின்னணியை பார்க்கும் போது இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளை உடைக்க சிலர் முற்படுவதாகவும் அங்குள்ள குற்றவாளிகளை வெளியேற்றி தென்னிலங்கையில் ஒரு கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்....&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9TM-LHWgTAI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T13:29:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலி மணப்பெண்களால் ஏமாற்றப்படும் சீன ஆண்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/chinese-men-deceived-by-fake-brides-1786454858"></link>
            <id>https://canadamirror.com/article/chinese-men-deceived-by-fake-brides-1786454858</id>
            <summary type="text">&amp;nbsp; சீனாவில் திருமணத்துக்குப் பெண் கிடைக்காமல் ஏமாற்றமடையும் ஆண்களை இலக்கு வைத்து &#039;உடனடித் திருமணம்&#039; (Flash Marriage) செய்து வைப்பதாகக் கூறி பல கோட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சீனாவில் திருமணத்துக்குப் பெண் கிடைக்காமல் ஏமாற்றமடையும் ஆண்களை இலக்கு வைத்து 'உடனடித் திருமணம்' (Flash Marriage) செய்து வைப்பதாகக் கூறி பல கோடி ரூபாய் பணத்தைச் சூறையாடும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன.
</p><p>திருமணம் முடிந்த சில நாட்களிலேயே அந்தப் பெண்கள் பணத்துடன் தப்பிச் செல்வதாகவும், தங்களின் உண்மைப் பின்னணி, வயது, கடன் விபரங்கள் மற்றும் முந்தைய திருமணங்களை மறைத்துப் பொய்யான தகவல்களை வழங்கி அவர்கள் ஏமாற்றியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட ஆண்கள் கவலை வெளியிடுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4701708b-4d9d-4bc8-8cd9-efff43953490/26-6a7b234ba86b0.webp' /></p><h2>பாதிக்கப்பட்ட ஆண்கள் கவலை&nbsp;</h2><p>
</p><p>
சீனாவில் பல தசாப்தங்களாக நடைமுறையிலிருந்த 'ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை' கொள்கை மற்றும் ஆண் குழந்தைகளுக்கான முன்னுரிமை காரணமாக, பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை சுமார் 30 மில்லியனால் அதிகரித்துள்ளது.</p><p>

இதனால், கிராமப்புறங்கள் மற்றும் சிறிய நகரங்களில் வாழும் ஆண்களுக்குப் பெண் கிடைப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது.

இதனைப் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சில திருமணத் தரகு முகவர் நிலையங்கள், 'குறைந்த செலவில், குறுகிய காலத்தில் சிறந்த பெண்ணைத் திருமணம் செய்து வைக்கிறோம்' என விளம்பரம் செய்து ஆண்களைக் கவர்கின்றன.</p><p>

தென்மேற்கு மாகாணமான கைசூவில் (Guizhou) இயங்கும் இவ்வாறான முகவர் நிலையங்களை நம்பிச் செல்லும் ஆண்கள், சில நாட்களிலேயே பெண்களுக்கு பெருந்தொகைப் பணத்தை வழங்கி அவசரத் திருமணம் செய்து கொள்ளும் நிலையில், திருமண்ம் ஆனதும் பெண்கள் , பணத்துடன் தப்பிச் செல்வதாக கூறப்படுகின்றது.
</p><p> 

இவ்வாறான பல மில்லியன் யுவான் மோசடிகள் குறித்து முறைப்பாடுகள் குவிந்து வரும் நிலையில், சீனக் காவல்துறை மற்றும் சட்டத்துறை அதிகாரிகள் இணைந்து இத்தகைய போலியான திருமணத் தரகு முகவர் நிலையங்களுக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் கடுமையான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-11T13:25:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத் தேர் திருவிழாவில் பெண்ணின் தங்க சங்கிலி அறுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chain-snatched-woman-mamangeswarar-temple-1786453350"></link>
            <id>https://tamilwin.com/article/chain-snatched-woman-mamangeswarar-temple-1786453350</id>
            <summary type="text">மட்டக்களப்பு- அமிர்தகளி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த தேர் திருவிழாவின்
போது பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தங்க சங்கிலி இனம் தெரியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு- அமிர்தகளி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த தேர் திருவிழாவின்
போது பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தங்க சங்கிலி இனம் தெரியாதோரால் அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக
பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>குறித்த சம்பவமானது இன்றையதினம்(11.8.2026) இடம்பெற்றுள்ளது.</p><p>

குறித்த ஆலயத்தின் வருடாந்த தேர்திருவிழா சம்பவ தினமான இன்று காலை 8:30
மணியளவில் ஆலயத்தில் தேர் வீதி உலாவின் போது, ஆயிர்க்கணக்கான மக்கள்
திரண்டிருந்த நிலையில் அதனை தரித்துக் கொண்டிருந்த மூதூரைச் சேர்ந்த 63 வயது
பெண்ணின் கழுத்தில் இருந்த (2½) பவுண் தங்க சங்கிலியை இனம்தெரியாதோரால்
அறுத்துச் செல்லப்பட்டுள்ளது.</p><p></p><h2>தீவிர விசாரணை</h2><p>இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாட்டையடுத்து பொலிசார் தீவிர
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9165e7e-5721-4eae-bfe4-1fe3b5183152/26-6a7b220d380d6.webp' /></p><p>இதேவேளை, ஆலயப் பெருவிழா நாட்களில் பெருந்திரளான பக்தர்கள் வருகை தருவதால்,
பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தமது ஆபரணங்கள், பணப்பைகள் உள்ளிட்ட உடைமைகளின்
பாதுகாப்பு குறித்து மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் இருக்குமாறு
மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T13:22:42+00:00</updated>
        </entry>
    </feed>
