<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-26T02:32:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலைமை மோசமடையலாம்..! காய்ச்சல் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/emergency-warning-issued-regarding-the-dengu-fever-1785030287"></link>
            <id>https://tamilwin.com/article/emergency-warning-issued-regarding-the-dengu-fever-1785030287</id>
            <summary type="text">காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச்செல்ல பெற்றோர் நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார பிரிவினர் பெற்றோரை வலியுறுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச்செல்ல பெற்றோர் நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார பிரிவினர் பெற்றோரை வலியுறுத்தியுள்ளனர்.</p><p>கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் பிரதீப் ரத்னசேகர பெற்றோரிடம் கோரிக்கை இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp; அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p></p><h2>டெங்கு காய்ச்சல் பாதித்த 50 குழந்தைகள்</h2><p>குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான வாய்ப்பை இழந்து, அவர்களின் உயிரை வீணாக ஆபத்தில் அழுத்த வேண்டாம் என்று பெற்றோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adddc8e8-cb7d-4fe1-9d2a-784a3f89b538/26-6a656e7a65e75.webp' /></p><p>
லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தற்போது சுமார் 50 டெங்கு காய்ச்சல் பாதித்த குழந்தைகள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர்களில் சுமார் கால் பகுதியினர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என்றும், நிலைமை மோசமடைந்தால், வைத்தியசாலையின் கொள்ளளவுப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்றும் கூறினார்.
</p><p>
எனவே, தங்கள் பிள்ளைகளுக்குக் காய்ச்சல் ஏற்பட்டால், தாமதமின்றி அருகிலுள்ள அரசாங்க வைத்தியசாலைக்கு சென்று மருத்துவ ஆலோசனை பெறுமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
</p><p>
மேலும், வீட்டில் தங்கி சுயமாக மருந்து எடுத்துக்கொள்வது குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்கான நேரத்தை வீணடிப்பதாகும் , சுயமாக மருந்து எடுத்துக்கொள்வதைத் தவிர்த்து முறையான மருத்துவ ஆலோசனையைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
</p><p>இந்த நிலைமை மேலும் மோசமடைந்தால், எங்களுக்கு இடவசதிப் பற்றாக்குறை ஏற்படலாம். தூர பகுதியில் உள்ள வைத்தியசாலைக்கு வருவதில் ஏற்படும் தாமதங்களால் பல மரணங்கள் நிகழ்கின்றன.</p><h2>டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை</h2><p>24 மணி நேரத்திற்கும் மேலாக காய்ச்சல் நீடித்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம் என்றும் அறிவுறுத்தப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27a38443-8f88-4345-8641-74f9f55edfe5/26-6a656e7b16f52.webp' /></p><p>இதற்கிடையில், நாட்டின் பல மாவட்டங்களிலிருந்து தினசரி கணிசமான எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகள் பதிவாகி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவிக்கிறது.</p><p>
மேலும், இதுவரை நிகழ்ந்துள்ள 61 டெங்கு மரணங்களில், 47 பேர் பெண்கள் என்றும் வைத்திய நிபுணர் பிரஷில சமரவீர தெரிவித்துள்ளார்.
</p><p>கம்பஹா, கொழும்பு, மாத்தறை, கண்டி, களுத்துறை, இரத்தினபுர, காலி, குருநாகல், கேகாலை, ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலிருந்து பெரும்பாலான நோயாளிகள் பதிவாகியுள்ளனர். </p><p>எனவே, சிக்கல்களின்றி நோயை குணப்படுத்த, பொதுமக்கள் மருத்துவ ஆலோசனையை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம் என&nbsp;அறிவுறுத்தியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T02:18:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் அரசியலமைப்புத் திருத்த மசோதா திங்கட்கிழமை அமைச்சரவையில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/retirement-age-of-judges-1785021767"></link>
            <id>https://tamilwin.com/article/retirement-age-of-judges-1785021767</id>
            <summary type="text">உயர்நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளால் நீடிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்த மசோதா, எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர்நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளால் நீடிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்த மசோதா, எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
</p><p>
குறித்த அரசியலமைப்புத் திருத்த மசோதாவை, திங்கட்கிழமை (27) அமைச்சரவையில் தாக்கல் செய்வதற்கான இறுதி முடிவு நேற்று முன்தினம் இரவு (24) எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பொதுமக்கள் கருத்துக் கணிப்பு</h2><p>
</p><p>
இது தொடர்பில் நேற்று முன்தினம் இரவு (24) பெலவத்தை ஜே.வி.பி. தலைமையகத்தில் ஜனாதிபதியின் தலைமையில் இரண்டு கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன.</p><p>

ஜேவிபி-யின் உயர்மட்டத் தலைவர்களிடையே நடைபெற்ற கலந்துரையாடலில், எந்தவொரு சூழ்நிலைக்கும் முகம் கொடுக்கத் தயார் நிலையுடன், இந்த அரசியலமைப்புத் திருத்தத்தை மேலும் தாமதமின்றி கொண்டுவர வேண்டும் என்று இறுதியாக முடிவு செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36db0c52-ca3a-4ccf-8652-af8d62f51670/26-6a6568c68aa45.webp' /></p><p>அப்போது, ​​அடுத்த ஆண்டின் ஆரம்ப பகுதியில் குறித்த திருத்த மசோதாவைக் கொண்டுவருவது பொருத்தமாக இருக்காதா என்றும் விவாதிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p>பிரதம நீதியரசர் ​​ஓய்வுபெற்ற பிறகு யாரையும் நம்ப முடியாது என்று அதற்குப் பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.</p><p>

அதன்படி, அரசியலமைப்பின் 22வது திருத்தம் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்ற பிறகு அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்படும். </p><p>வர்த்தமானி வெளியிடப்பட்டு குறைந்தபட்சம் 14 நாட்கள் கடந்த பிறகு, அரசியலமைப்பின் 22வது திருத்தம் முதல் வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e00fd709-ada3-4a12-b514-4f14251d38b8/26-6a6568c5d219b.webp' />&nbsp; &nbsp;</p><p> </p><p>நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்ட 7 நாட்களுக்குள், எந்தவொரு பிரஜைக்கும் தொடர்புடைய வரைவை உச்ச நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்குத் தொடர வாய்ப்பு வழங்கப்படும். </p><p>உச்ச நீதிமன்றம் அந்த மனு மீதான தனது கருத்தை 14 நாட்களுக்குள் ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் வழங்க வேண்டும்.</p><p>

அதன்படி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதிலிருந்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வழக்குத் தொடரவும், அது குறித்த அறிவிப்பை வெளியிடவும் சுமார் 35 நாட்கள் ஆகும் என்று கருதப்படுகின்றது. </p><p>அதன் பிறகு, அது குறித்த நாடாளுமன்ற விவாதமும், தேவைப்பட்டால் பொதுமக்கள் கருத்துக் கணிப்பும் மேற்கொள்ளப்படும்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T01:54:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் அதிரடியாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/foreigner-arrested-in-colombo-1785029475"></link>
            <id>https://tamilwin.com/article/foreigner-arrested-in-colombo-1785029475</id>
            <summary type="text">கொழும்பு - கொம்பனி வீதியில் மலேசிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஒரு தொகை சட்டவிரோத சிகரெட்டுகளுடன் குறித்த நபர் நேற்றையதினம் கைது செய்யப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - கொம்பனி வீதியில் மலேசிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>ஒரு தொகை சட்டவிரோத சிகரெட்டுகளுடன் குறித்த நபர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><h2>மேலதிக விசாரணைகள்&nbsp;</h2><p>பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்,&nbsp; கொம்பனி வீதி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட&nbsp; ஒரு உணவகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3a882c3-aea2-4b84-9616-d3441a030bc1/26-6a656693b94d7.webp' /></p><p>அவரிடம் இருந்து, 36,200 சட்டவிரோத சிகரெட்டுக்கள் மற்றும் ஒரு வாடகைக் கார் உள்ளிட்டவற்றை பொலிஸார்&nbsp; பறிமுதல் செய்துள்ளனர்.&nbsp;</p><p>30 வயதுடைய மலேசிய நாட்டவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p>&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T01:45:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றின் மிகப்பெரிய மோசடி! விசாரணைகளில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/individual-who-defrauded-sri-lanka-of-700m-usd-1785028322"></link>
            <id>https://tamilwin.com/article/individual-who-defrauded-sri-lanka-of-700m-usd-1785028322</id>
            <summary type="text">இலங்கையில் புகழ்பெற்ற தனியார் நிறுவனம் ஒன்று, 700 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பணத்தை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி பாரிய மோசடியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் புகழ்பெற்ற தனியார் நிறுவனம் ஒன்று, 700 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பணத்தை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. </p><p>

பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி இந்த பாரிய மோசடி நடவடிக்கையில் குறித்த நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>மீட்கப்பட்ட&nbsp; பணம் மற்றும் கார்&nbsp;</h2><p> </p><p>

இந்த பாரிய அளவிலான நிதி மோசடியின் ஊடாக, நாட்டின் 21 முன்னணி நிறுவனங்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், அவற்றில் 6 நிறுவனங்களின் தொடர்பு ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர். </p><p>

கொழும்பு கோட்டைப் பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தின் இயக்குநராக நடித்து இந்த மோசடியை வழிநடத்தியதாக தெரிவித்து பெஸ்ஸி முகமது என்ற சந்தேக நபர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/113d312f-70d6-47b1-8e6f-1bdef142ea2c/26-6a65620200cda.webp' /></p><p> </p><p>

குறித்த நபரைக் கைது செய்தபோது, அவரிடம் இருந்து பெருந்தொகையான வெளிநாட்டு பணம் மற்றும், 200 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொகுசு கார், தங்கப் பொருட்கள் ஆகியவற்றை குற்றப் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 

இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள 36 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தடவைகளில் வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. </p><p>

எனினும், அந்தப் பணத்தைக் கொண்டு நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட எந்தபொருட்களும் சுங்கப் பதிவேடுளகிழல் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p><br></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T01:25:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொத்து வரி விதிப்பு! IMF - இன் வலியுறுத்தலுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/disagreement-between-the-imf-s-insistence-govt-1785028697"></link>
            <id>https://ibctamil.com/article/disagreement-between-the-imf-s-insistence-govt-1785028697</id>
            <summary type="text">2027-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை முன்மொழிவுகளில் இரண்டாம் நிலை சொத்து வரியை அறிமுகப்படுத்துவது தொடர்பான ஒரு திட்டம் குறித்து, சர்வதேச நாணய நிதியத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை முன்மொழிவுகளில் இரண்டாம் நிலை சொத்து வரியை அறிமுகப்படுத்துவது தொடர்பான ஒரு திட்டம் குறித்து, சர்வதேச நாணய நிதியத்திற்கும் (IMF) அரசாங்கத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக தெரியவருகிறது.</p><p>எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில், கூடுதல் அல்லது இரண்டாம் நிலை குடியிருப்புச் சொத்துக்களை இலக்காகக் கொண்ட சொத்து வரியை அறிமுகப்படுத்த வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைத்துள்ளது. </p><p>ஆனால், பிற வருவாய் ஈட்டும் வழிகள் இருப்பதாலும், வருவாய் இலக்குகள் ஏற்கனவே எட்டப்பட்டுவிட்டதாலும் இந்த வரி தேவையில்லை என்று அரசாங்கம் கருதுவதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><p></p><h2>வரவுசெலவுத் திட்ட கலந்தாய்வு</h2><p>
தற்போதைய வரும் வரவுசெலவுத் திட்ட கலந்தாய்வுகள் குறித்து அறிந்த வட்டாரங்களின்படி, 2023-ஆம் ஆண்டு முதல் இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்திற்கு அடிப்படையாக விளங்கும் பரந்த வருவாய் திரட்டும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இரண்டாவது மற்றும் அதற்குப் பிந்தைய வீடுகளுக்கு வரி விதிக்கும் யோசனையை சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c502dc9-5125-4c77-adb6-37b039722d51/26-6a65605b25bc2.webp' /></p><p>இதன்படி 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்படவுள்ள வருவாய் நடவடிக்கைகள், தேவையான இலக்குகளை அடைவதற்குப் போதுமானவை என்றும், எனவே வரியை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் எழாது என்றும் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், சொத்துரிமை குறித்த முறையான தரவுத்தளம் தேவைப்படும் என்றும், எனவே அத்தகைய தகவல்களைத் தயாரிக்க நேரம் எடுக்கும் என்றும் அரசாங்கம் நம்புகிறது.</p><p>

2027-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை முன்மொழிவுகளில் இந்த வரி நடைமுறைக்கு வராவிட்டாலும் கூட, சர்வதேச நாணய நிதியம் (IMF) அதனை அறிமுகப்படுத்த தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வலுவான சாத்தியக்கூறு இருப்பதாக கூறப்படுகிறது.</p><p> 2023-ஆம் ஆண்டின் உறுதிமொழியானது, 2025-ஆம் ஆண்டுக்குள் ஒரு வழக்கமான நாடு தழுவிய சொத்து வரியை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. </p><p>பெப்ரவரி 2024-இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு தொழில்நுட்பக் குழு, அது இரண்டு காரணங்களால் தடுக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்ததாக கூறப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T01:18:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[700 மில்லியன் டொலரை வெளிநாடுகளுக்கு கடத்திய இலங்கையில் முன்னணி வர்த்தக நிறுவனம்! சி.ஐ.டி விசாரணையில் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/businessman-who-smuggled-700-million-abroad-1785026889"></link>
            <id>https://ibctamil.com/article/businessman-who-smuggled-700-million-abroad-1785026889</id>
            <summary type="text">பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி 700 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணம் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட ஒரு பெரிய அளவிலான மோசடிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி 700 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணம் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட ஒரு பெரிய அளவிலான மோசடியில் இலங்கையின் முன்னணி ஆடை வர்த்தக நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்கள விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>
இந்த மாபெரும் நிதி மோசடி தொடர்பாக நாட்டிலுள்ள 21 முன்னணி நிறுவனங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், அவற்றுள் 6 நிறுவனங்களின் தொடர்பு ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டுவிட்டதாகவும் குற்றப் புலனாய்வுத் துறையின் நிதிக்குற்றப் பிரிவு கொழும்பு பிரதான நீதவானுக்கு தெரிவித்துள்ளது என தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>

கொழும்பு கோட்டைப் பகுதியில் A.Y. Investment என்ற நிறுவனத்தின் இயக்குனர் போல் நடித்து இந்த மோசடியை நடத்தி வந்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். </p><p></p><h2>விளக்கமறியல் உத்தரவு</h2><p>அவரைக் கைது செய்தபோது, ​​குற்றப் புலனாய்வுத் துறையினர் வெளிநாட்டு நாணயங்கள் , 200 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஒரு சொகுசு கார் மற்றும் தங்க நகைகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46be87a0-7b96-49c6-9661-d0a84d144098/26-6a65594b13458.webp' /></p><p>

இந்த மோசடியில் ஈடுபட்ட 36 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில், 10,156 முறை பணம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டிருந்தது தெரியவந்தது.</p><p> இருப்பினும், அந்தப் பணத்துடன் தொடர்புடைய, நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட எந்தப் பொருட்களும் சுங்கப் பதிவேடுகளில் பதிவு செய்யப்படவில்லை என்று விசாரணையில் தெரியவந்தது.
</p><p>
உண்மைகளைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் சந்தேக நபரை அடுத்த மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.</p><p>இந்நிலையில் மேற்குறிப்பிட்ட&nbsp; ஆடை வர்த்தக நிறுவன உரிமையாளர் அண்மையில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது கூறப்படும் சுங்க வரிக் குறைப்பு வழக்கு தொடர்பாக அவரை விளக்கமறியலில் வைத்தது அரசியல் உள்நோக்கம் கொண்டது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்..</p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருடன் தொடர்புடைய வணிகங்கள் குறிவைக்கப்படுவதாகவும், அதே நேரத்தில் தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்களுக்கு நெருக்கமான வணிகங்களுக்குத் தடையின்றி செயல்பட அனுமதிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியும் இருந்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T01:11:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடத்தையில் சந்தேகம் ; இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வாழ்ந்த இளம் தாய்க்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mother-lived-sri-lankan-tamil-rehabilitation-camp-1785025216"></link>
            <id>https://jvpnews.com/article/mother-lived-sri-lankan-tamil-rehabilitation-camp-1785025216</id>
            <summary type="text">இந்தியாவில் ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகிலுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் கணவர் இளம் தாய் ஒருவரை கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகிலுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் கணவர் இளம் தாய் ஒருவரை கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>பவானிசாகர் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த லூர்துகுமார் மற்றும் இந்திரகுமாரி தம்பதியினரின் மகளான ரெபேக்கா (24), ராமேசுவரத்தைச் சேர்ந்த தொழிலாளி பாகபிரகாஷ் (36) என்பவரை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.</p><h3>மேலதிக விசாரணை</h3><p> </p><p>இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

திருமணத்திற்குப் பின்னர் தம்பதியினர் ராமேசுவரத்தில் வசித்து வந்த நிலையில், குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73e56a9b-5e58-4e60-9e17-2b969af0ce81/26-6a6552c27f225.webp' /></p><p>இதையடுத்து, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ரெபேக்கா தனது மூன்று குழந்தைகளுடன் கணவரைப் பிரிந்து, பவானிசாகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்து தங்கியிருந்தார்.
</p><p>
இந்த நிலையில், நேற்று காலை பாகபிரகாஷ் தனது மனைவியைச் சந்திக்க பவானிசாகர் முகாமிற்கு வந்துள்ளார். </p><p>மீண்டும் தன்னுடன் ராமேசுவரத்திற்கு வந்து குடும்ப வாழ்க்கையைத் தொடருமாறு அவர் கேட்டதாகவும், அதற்கு ரெபேக்கா மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
வாக்குவாதம் முற்றிய நிலையில், பாகபிரகாஷ் தன்னிடம் வைத்திருந்த கத்தியால் ரெபேக்காவை பலமுறை குத்தியதாகக் கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த ரெபேக்கா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
</p><p>
அலறல் சத்தம் கேட்டு அங்கு விரைந்த அக்கம்பக்கத்தினர், தப்பிச் செல்ல முயன்ற பாகபிரகாஷை பிடித்து பவானிசாகர் பொலிஸாரஜடம் ஒப்படைத்தனர்.
</p><p>
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், ரெபேக்காவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், சந்தேகநபரான பாகபிரகாஷை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T01:06:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெற்றிமாறனின் அடுத்த படம்.. அரசன், தமிழ்முருகனுக்கு அடுத்து இவருடன் தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vetrimaaran-direct-vijay-sethupathi-after-dhanush-1785027723"></link>
            <id>https://cineulagam.com/article/vetrimaaran-direct-vijay-sethupathi-after-dhanush-1785027723</id>
            <summary type="text">இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் கொடுத்து வரும் இயக்குனர்களில் ஒருவர். அவர் தற்போது சிம்புவை வைத்து அரசன் படத்தை இயக்கி வருகிறார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் கொடுத்து வரும் இயக்குனர்களில் ஒருவர். அவர் தற்போது சிம்புவை வைத்து அரசன் படத்தை இயக்கி வருகிறார்.\</p><p>அடுத்து தனுஷ் நடிக்கும் தமிழ் முருகன் படத்தை அவர் இயக்க போகிறார். மேலும் அவர் ராஜன் வகையறா படத்தையும் இயக்க போவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07dddc19-bdfe-4bd5-9d99-d429157a686d/26-6a655c8d31e68.webp' /></p><h2>விஜய் சேதுபதி உடன் கூட்டணி
</h2><p>இந்நிலையில் வெற்றிமாறன் அடுத்து விஜய் சேதுபதி உடன் ஒரு புது படத்திற்காக கூட்டணி சேர போவதாக தகவல் வந்திருக்கிறது.</p><p>கிராமத்து பின்னணியில் இந்த கதை இருக்கும் எனவும், வெற்றிமாறன் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை முடித்தபின் இந்த படம் தொடங்கும் என தகவல் வந்திருக்கிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T01:02:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[Google Maps-இல் புதிய அப்டேட்., AI அடிப்படையிலான வழிகாட்டி Navigation, Speedometer]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/google-maps-ai-navigation-speedometer-1785027496"></link>
            <id>https://news.lankasri.com/article/google-maps-ai-navigation-speedometer-1785027496</id>
            <summary type="text">Google Maps தனது புதிய AI அடிப்படையிலான வழிகாட்டி (Immersive Navigation) மற்றும் வேகக் கணிப்பான் (Speedometer) வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Google Maps தனது புதிய AI அடிப்படையிலான வழிகாட்டி (Immersive Navigation) மற்றும் வேகக் கணிப்பான் (Speedometer) வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>

இந்த அப்டேட், பயணிகளுக்கு தெளிவான வழிகாட்டுதலையும், பாதுகாப்பான ஓட்டத்தையும் வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
</p><p>
புதிய AI வழிகாட்டி, சாலைகளின் தெளிவான வரைபடங்கள், மேம்பட்ட காட்சிகள் மற்றும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வழிமுறைகளை வழங்குகிறது. இதனால், ஓட்டுநர்கள் தங்கள் பயணத்தை எளிதாக திட்டமிட முடியும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2199cc37-0587-4c7d-a17a-926ad1e59440/26-6a655baa51967.webp' /></p><p>ஆரம்பத்தில் சில பயனர்களுக்கே கிடைத்த இந்த வசதி, தற்போது பரவலாக Android மற்றும் iOS பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும், Android Auto-வில் வேகக் கணிப்பான் சேர்க்கப்பட்டுள்ளது. </p><p>இது, வாகனத்தின் வேகத்தை நேரடியாகக் காட்டும். குறிப்பாக, டிஜிட்டல் டாஷ்போர்டு இல்லாத வாகனங்களில் பயணிக்கும் ஓட்டுநர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
</p><p>
Google, இந்த வசதிகளை server-side update மூலம் வழங்குகிறது. அதனால், பயனர்கள் தனியாக update செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும், சில பகுதிகளில் மற்றும் சில சாதனங்களில் இந்த வசதி படிப்படியாக கிடைக்கும்.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T00:56:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெங் செபத: தன்னைத் தானே பார்த்து மகிந்த கேட்க வேண்டிய ஒரே கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-only-question-mahinda-should-ask-himself-is-1785027322"></link>
            <id>https://ibctamil.com/article/the-only-question-mahinda-should-ask-himself-is-1785027322</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கண்ணாடி முன்னால் நின்று தன்னைத் தானே பார்த்து &#039;&#039;தென் செபத&#039;&#039;(இப்போது நல்லமா) என்ற கேள்வியை தற்போது கேட்டுப் பார்க்க வே...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கண்ணாடி முன்னால் நின்று தன்னைத் தானே பார்த்து ''தென் செபத''(இப்போது நல்லமா) என்ற கேள்வியை தற்போது கேட்டுப் பார்க்க வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
</p><p>
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,</p><p>
மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர்களின் குடும்பத்தார் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், இந்த நாட்டில் பெரிய மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்துள்ளார்கள்.</p><p></p><h2>ராஜபக்சர்களின் தண்டனைக்காக காத்திருக்கும் மக்கள்&nbsp;</h2><p>
</p><p>



கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச அரசாங்கங்கள் நாட்டை சீரழித்தனர் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.

பல அக்கிரமங்களை செய்தமை, சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியமை, நாட்டு மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து கோடீஸ்வரர்களானமை உள்ளிட்ட செயல்களை மகிந்த ராஜபக்ச, அவருடைய சகோதரர்கள், மனைவி மற்றும் பிள்ளைகள் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/714ea0f4-6946-40d6-875a-acde467599e6/26-6a655b5259480.webp' /></p><p>

எனவே, உங்களுடைய அக்கிரமங்களின் காலம் முடிவடைந்து விட்டது. மக்களுக்கான காலம் உருவாகியிருக்கின்றது. இன்னும் சிறிது காலத்திற்கு நீங்கள் சந்தோஷமாக இருந்து கொள்ள முடியும். </p><p>எனினும், மக்கள் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்துள்ளனர்.




ராஜபக்ச குடும்பத்தில் மேலிருந்து கீழ் வரை, குற்றம் புரிந்த அனைவருக்கும் தண்டனை கிடைப்பதை மக்கள் எதிர்பார்த்துள்ளனர். </p><p>இதனால்தான் மக்கள் உங்கள் ஆட்சியை வீழ்த்தி, புதிய அரசாங்கம் ஒன்றை தேர்ந்தெடுத்துள்ளனர்.
</p><p>
மக்களின் பக்கமே எமது ஆதரவு இருக்கும். எனவே, உங்களுடைய பொருட்களெல்லாம் எடுத்துக் கொண்டு தயாராக இருங்கள்.

எப்போதும் எல்லோரையும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. எனவே யதார்த்தத்திற்கு முகம்கொடுக்க தயாராக இருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T00:55:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுயசரிதை எழுதும் சூப்பர்ஸ்டார் ரஜினி.. படமாகிறதா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/rajinikanth-writing-his-biopic-who-will-direct-1785026106"></link>
            <id>https://cineulagam.com/article/rajinikanth-writing-his-biopic-who-will-direct-1785026106</id>
            <summary type="text">நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக தற்போதும் இருந்து வருகிறார். 75 வயதிலும் கைவசம் பல படங்கள் வைத்து கொண்டு பிசியாக நடித்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக தற்போதும் இருந்து வருகிறார். 75 வயதிலும் கைவசம் பல படங்கள் வைத்து கொண்டு பிசியாக நடித்து வருகிறார் அவர்.</p><p>ரஜினி தற்போது அவரது சுயசரிதையை எழுதி வருவதாக கூறப்படுகிறது. கண்டக்டராக இருந்து சூப்பர்ஸ்டார் ஆக வளர்ந்தது, சினிமா அனுபவங்கள், பலருக்கும் தெரியாத பல விஷயங்கள் அவரது சுயர்சரிதை மூலமாக தெரியவரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33fe6602-f6e6-44d7-ae4e-aa264e445d18/26-6a65563cc65a5.webp' /></p><p>
</p><h2>படமாகிறதா?&nbsp;</h2><p>மேலும் அவரது வாழ்க்கையை படமாக எடுக்கவும் இருப்பதாக தெரிகிறது. அதற்காக ரஜினி அவரது நெருங்கிய இயக்குனர்கள் உடன் பேச்சுவார்த்தையில் இருக்கிறாராம். இருப்பினும் ரஜினி தரப்பில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் இது உறுதியாகும்.
&nbsp;</p><p>ரஜினி சுயசரிதையை படமாக்கும் வாய்ப்பு யாருக்கு கிடைக்க போகிறது என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.</p>]]></content>
            <updated>2026-07-26T00:50:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[சரிந்தது ராஜபக்ச இராச்சியம்! கண்ணாடி முன்னால் நின்று மகிந்த கேட்க வேண்டிய ஒரே கேள்வி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-rajapaksa-kingdom-has-collapsed-1785026442"></link>
            <id>https://tamilwin.com/article/the-rajapaksa-kingdom-has-collapsed-1785026442</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கண்ணாடி முன்னால் நின்று தன்னைத் தானே பார்த்து &#039;&#039;தெங் செபத&#039;&#039;(இப்போது நல்லமா) என்ற கேள்வியை தற்போது கேட்டுப் பார்க்க வே...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கண்ணாடி முன்னால் நின்று தன்னைத் தானே பார்த்து ''தெங் செபத''(இப்போது நல்லமா) என்ற கேள்வியை தற்போது கேட்டுப் பார்க்க வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
</p><p>
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>தயாராக இருங்கள்..</h2><p>

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், </p><p>

மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர்களின் குடும்பத்தார் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், இந்த நாட்டில் பெரிய மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்துள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63ab1e82-725f-472d-8c30-7c93d572cd2e/26-6a65593936de4.webp' /></p><p> </p><p>

கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச அரசாங்கங்கள் நாட்டை சீரழித்தனர் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.</p><p>பல அக்கிரமங்களை செய்தமை, சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியமை, நாட்டு மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து கோடீஸ்வரர்களானமை உள்ளிட்ட செயல்களை மகிந்த ராஜபக்ச, அவருடைய சகோதரர்கள், மனைவி மற்றும் பிள்ளைகள் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.</p><p>

எனவே, உங்களுடைய அக்கிரமங்களின் காலம் முடிவடைந்து விட்டது. மக்களுக்கான காலம் உருவாகியிருக்கின்றது. 

இன்னும் சிறிது காலத்திற்கு நீங்கள் சந்தோஷமாக இருந்து கொள்ள முடியும். எனினும், மக்கள் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edfd4fc1-3a36-4cfe-a4d0-04dd6c48f848/26-6a655939db153.webp' /></p><p> </p><p>ராஜபக்ச குடும்பத்தில் மேலிருந்து கீழ் வரை, குற்றம் புரிந்த அனைவருக்கும் தண்டனை கிடைப்பதை மக்கள் எதிர்பார்த்துள்ளனர். 

இதனால்தான் மக்கள் உங்கள் ஆட்சியை வீழ்த்தி, புதிய அரசாங்கம் ஒன்றை தேர்ந்தெடுத்துள்ளனர்.
</p><p>
மக்களின் பக்கமே எமது ஆதரவு இருக்கும். எனவே, உங்களுடைய பொருட்களெல்லாம் எடுத்துக் கொண்டு தயாராக இருங்கள்.</p><p> எப்போதும் எல்லோரையும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. எனவே யதார்த்தத்திற்கு முகம்கொடுக்க தயாராக இருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T00:49:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய கல்வி அமைச்சராக பிரலாத் ஜோஷி நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pralhad-joshi-named-new-education-minister-1785026933"></link>
            <id>https://news.lankasri.com/article/pralhad-joshi-named-new-education-minister-1785026933</id>
            <summary type="text">புது டெல்லியில், கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சராக உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>புது டெல்லியில், கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சராக உள்ள பிரலாத் ஜோஷிக்கு கல்வி அமைச்சின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p>தர்மேந்திர பிரதான், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான போராட்டங்கள் 35 நாட்கள் நீடித்த நிலையில், “மாணவர்களின் நலனுக்காகவும், நாட்டுக்கு எதிரான சக்திகள் இந்த நிலையை பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கவும்” ராஜினாமா செய்ததாக தனது கடிதத்தில் குறிப்பிட்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd85213b-503e-44f9-acf4-8674ffa4d040/26-6a65597649622.webp' /></p><p>அவரின் ராஜினாமா, கரப்பாண்பூச்சி ஜனதா கட்சி (CJP) போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. பிரதான் பதவி விலகிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, CJP போராட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தது.
</p><p>
பிரலாத் ஜோஷி, “இந்த பொறுப்பை கடமை உணர்வுடன் ஏற்றுக்கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், கல்வி துறையில் முன்னேற்றத்தை உறுதி செய்வேன்” என்று தெரிவித்தார். அவர், தேசிய கல்விக் கொள்கை (NEP) மற்றும் பல முக்கிய முயற்சிகளை முன்னெடுத்த தர்மேந்திர பிரதானின் பங்களிப்பை பாராட்டினார்.
</p><p>மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க அரசு எப்போதும் உறுதியாக இருப்பதாகவும், எந்த விதமான தவறுகளுக்கும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜோஷி தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T00:47:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் புதிய கல்வி அமைச்சராக பிரல்ஹாத் ஜோஷி நியமனம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pralhad-joshi-is-india-s-new-education-minister-1785009785"></link>
            <id>https://ibctamil.com/article/pralhad-joshi-is-india-s-new-education-minister-1785009785</id>
            <summary type="text">மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சராக உள்ள
பிரல்ஹாத் ஜோஷி, இந்தியாவின் புதிய கல்வி அமைச்சராகக் கூடுதல்
பொறுப்பேற்றுள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சராக உள்ள
பிரல்ஹாத் ஜோஷி, இந்தியாவின் புதிய கல்வி அமைச்சராகக் கூடுதல்
பொறுப்பேற்றுள்ளார்.</p><p>

பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையை ஏற்று, குடியரசுத் தலைவர் திரௌபதி
முர்மு இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்டுள்ளார்.
</p><p>
பரீட்சை வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பைத்
தொடர்ந்து, முன்னாள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்.</p><p></p><h2>காக்ரோச் ஜனதா கட்சி</h2><p> 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) அமைப்பின் தலைமையில் 'ஜென் ஜி' (Gen Z) இளைஞர்கள்
நடத்திய தீவிரமான போராட்டங்களின் அழுத்தத்தாலேயே இந்தத் திடீர் முடிவு
எட்டப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffaf8f03-09e7-4c58-8c9a-4fca3f84b87e/26-6a65167aaeb1d.webp' /></p><p>

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஒருங்கிணைந்த இளைஞர்களின்
தொடர் எதிர்ப்பால், 36 நாட்களாக நீடித்து வந்த போராட்டம் தற்போது முடிவுக்கு
வந்துள்ளது.
</p><p>
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவரான பிரல்ஹாத் ஜோஷி, இதற்கு
முன்னதாக நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சராகப்
பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
</p><p>
தற்போது உணவு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைகளுடன் சேர்த்து கல்வித்
துறையையும் இவர் கவனித்துக் கொள்வார்.
</p><p>
பரீட்சை முகமைகளின் செயல்பாடுகளைச் சீரமைப்பது, கசிவு விவகாரங்களால்
பாதிக்கப்பட்ட மாணவர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவது மற்றும் வரவிருக்கும்
மாநிலத் தேர்தல்களுக்கு முன் இளைஞர்களின் கொந்தளிப்பைத் தணிப்பது ஆகியவையே
புதிய கல்வி அமைச்சரின் முதன்மைப் பணிகளாக இருக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T00:43:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு போர்ட் சிட்டியில் சீனப் பிரஜை கொலை வழக்கு ; வெளியான அதிர்ச்சி தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/colombo-chinese-national-murder-case-info-released-1785017285"></link>
            <id>https://jvpnews.com/article/colombo-chinese-national-murder-case-info-released-1785017285</id>
            <summary type="text">கொழும்பில் சீனப் பிரஜை ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சம்பவம் குறித்த விசாரணைகளை பாதுகாப்புத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் சீனப் பிரஜை ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சம்பவம் குறித்த விசாரணைகளை பாதுகாப்புத் தரப்பினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><p>
</p><p></p><p>ஆரம்பகட்ட தகவல்களின்படி, உயிரிழந்தவர் ஹாவோ போன் என்ற சீனப் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார். </p><p>அவர் சர்வதேச அளவிலான இணையக் குற்ற வலையமைப்புடன் தொடர்புடையவராக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef58005f-6592-4cce-8b29-301b0a9bcc07/26-6a6533c7b0da7.webp' /></p><p>மேலும், இணையக் குற்றச் செயல்கள் மூலம் சம்பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெருமளவிலான பணம் தொடர்பான தகராறே இந்தக் கொலைக்கான பின்னணியாக இருக்கலாம் என விசாரணைத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
</p><p>
சம்பவம் தொடர்பாக சுமார் 20 சீனப் பிரஜைகள் தொடர்புடையிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
விசாரணைகளில் கிடைத்த தகவல்களின்படி, சம்பவம் நடந்த நாளில், நண்பர்களாக நடித்து இரு சீனப் பிரஜைகள் உயிரிழந்தவரை கொழும்பு துறைமுக நகரிலுள்ள (Port City) ஒரு பாலம் அருகே அழைத்துச் சென்றுள்ளனர்.</p><p> அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட குழுவொன்று அவரைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.
</p><p>
பின்னர், அவரை எஹலியகொட கரதன பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தியதாகவும், அதன் பின்னர் அவர் கொலை செய்யப்பட்டு, உடல் கற்களால் மூடப்பட்ட நிலையில் கைவிடப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
எனினும், மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் விசாரணையின் ஆரம்பகட்டத்தில் வெளியாகியுள்ள தகவல்களாகும். </p><p>சம்பவம் தொடர்பான இறுதி முடிவுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் நீதிமன்ற நடைமுறைகள் மற்றும் அதிகாரப்பூர்வ விசாரணைகளின் அடிப்படையிலேயே உறுதிப்படுத்தப்படும் என பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T00:41:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானிய கப்பல் மீது தாக்குதல் ; உக்ரைனுக்கு ஈரான் கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-strongly-condemns-ukraine-attack-iranian-ship-1785023887"></link>
            <id>https://canadamirror.com/article/iran-strongly-condemns-ukraine-attack-iranian-ship-1785023887</id>
            <summary type="text">ஈரானிய வணிகக் கப்பல் மீது உக்ரைன் இராணுவம் கஸ்பியன் கடலில் மேற்கொண்ட தாக்குதலை ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கடுமையாகக் கண்டித்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய வணிகக் கப்பல் மீது உக்ரைன் இராணுவம் கஸ்பியன் கடலில் மேற்கொண்ட தாக்குதலை ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கடுமையாகக் கண்டித்துள்ளார்.</p><p>

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறைக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸுடன் தொலைபேசியில் உரையாடியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c7b6e85-0f22-4bf1-8001-61dc6814696a/26-6a654d918bedd.webp' /></p><p>இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மற்றும் இதற்கு ஆதரவளித்தவர்கள் மீது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச சமூகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
</p><p>
அதேவேளை, ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்களுக்கு 'இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை' (IRGC) அளித்த இராணுவப் பதிலடியைத் தொடர்ந்து, ஹோர்மூஸ் நீரிணையில் நிலவும் பதற்றத்தைக் குறைப்பதற்கு இராஜதந்திர முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் இரு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-26T00:40:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[90 ஆண்டுகால வரலாற்றில் புதிய அத்தியாயம் ; இரு சீனர்களுக்கு பீல்ட்ஸ் மெடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/a-new-chapter-in-90-years-history-two-chinese-win-1785026340"></link>
            <id>https://canadamirror.com/article/a-new-chapter-in-90-years-history-two-chinese-win-1785026340</id>
            <summary type="text">உலக அளவில் கணிதத் துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் &#039;பீல்ட்ஸ் மெடல்&#039; (Fields Medal) விருது,&amp;nbsp;முதல் முறையாக இரு சீன அறிஞர்கள் வென்று புதிய வரலாற...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக அளவில் கணிதத் துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் 'பீல்ட்ஸ் மெடல்' (Fields Medal) விருது,&nbsp;முதல் முறையாக இரு சீன அறிஞர்கள் வென்று புதிய வரலாறு படைத்துள்ளனர்</p><p>இவ்விழாவானது&nbsp;அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.</p><p>நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை 40 வயதிற்குட்பட்ட சிறந்த கணித அறிஞர்களுக்கு வழங்கப்படும் இந்த விருதை, முதல் முறையாக இரு சீன அறிஞர்கள் வென்று புதிய வரலாறு படைத்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6369c6f7-5195-475f-805c-b684f2227bc7/26-6a65572596460.webp' /></p><p>சீனாவைச் சேர்ந்த யு டெங் மற்றும் சீனாவில் பிறந்த கணிதவியலாளரான ஹாங் வாங் ஆகியோர் இந்த ஆண்டுக்கான பீல்ட்ஸ் மெடல் விருதைப் பெற்றுள்ளனர்.
</p><p>
இதன்மூலம், சுமார் 90 ஆண்டுகால பீல்ட்ஸ் மெடல் விருது வரலாற்றில் இந்த உயரிய விருதைப் பெறும் மூன்றாவது பெண்மணி என்ற பெருமையை ஹாங் வாங் பெற்றுள்ளார்.
</p><p>
1900ஆம் ஆண்டு ஜெர்மன் கணிதவியலாளர் டேவிட் ஹில்பர்ட் முன்வைத்த வாயுக்களின் இயக்கம் தொடர்பான நூற்றாண்டு கால கணிதப் புதிருக்கு யு டெங் தீர்வு கண்டதற்காக இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.</p><p>

அதேபோன்று, 1917ஆம் ஆண்டு ஜப்பானிய கணிதவியலாளர் சோய்ச்சி ககேயா முன்வைத்த கணிதப் பிரச்சினைக்கு முப்பரிமாண வடிவியல் அணுகுமுறையில் தீர்வு கண்டதற்காக ஹாங் வாங் உலகளாவிய பாராட்டைப் பெற்றுள்ளார்.
</p><p>
இந்த ஆண்டுக்கான பீல்ட்ஸ் மெடல் விருதை அமெரிக்காவின் ஜான் பார்டன் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜேக்கப் சிம்மர்மன் ஆகியோரும் பெற்றுள்ளனர்.
</p><p>
கணித ஆராய்ச்சியில் புதிய மைல்கற்களை எட்டிய இந்த அறிஞர்களின் சாதனை, உலக அறிவியல் சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், இளம் ஆராய்ச்சியாளர்களுக்கும் புதிய ஊக்கமாக அமைந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-26T00:39:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்கூட்டிய பொதுத் தேர்தலை நிராகரித்தார் பிரித்தானியாவின் புதிய பிரதமர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/britain-s-new-pm-rules-out-general-election-1785025774"></link>
            <id>https://ibctamil.com/article/britain-s-new-pm-rules-out-general-election-1785025774</id>
            <summary type="text">பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ஆண்டி பர்ன்ஹாம், முன்கூட்டிய பொதுத் தேர்தலை நடத்தும் எண்ணம் தமக்கு இல்லை என்று அறிவித்துள்ளார்.

ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ஆண்டி பர்ன்ஹாம், முன்கூட்டிய பொதுத் தேர்தலை நடத்தும் எண்ணம் தமக்கு இல்லை என்று அறிவித்துள்ளார்.</p><p>

முன்னாள் பிரதமர் கியர் ஸ்டார்மரிடமிருந்து அதிகாரப் பொறுப்பை ஆண்டி பர்ன்ஹாம் கடந்த திங்கட்கிழமை ஏற்றுக்கொண்டார். </p><p>இதையடுத்து, நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிலான மிகப்பெரிய மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக அவர் அறிவித்திருந்தார்.</p><p></p><h2>அணுகுமுறையில் மாற்றங்கள்</h2><p>
</p><p>
இந்த நிலையில், ரீஃபார்ம் யுகே (Reform UK) கட்சியின் தலைவர் நைஜல் ஃபாரேஜ், புதிய பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07fd666e-df06-4c44-923d-bd40b4ad43ae/26-6a6554f0515eb.webp' /></p><p>
</p><p>
இதுகுறித்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் ஆண்டி பர்ன்ஹாம், “நாம் நாடாளுமன்ற ஜனநாயக முறையில் வாழ்கிறோம். 2024 பொதுத் தேர்தலில் மக்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் அறிக்கையின் அடிப்படையிலேயே நான் செயல்படுகிறேன். </p><p>அதற்குள் எனது அணுகுமுறையில் மாற்றங்களை கொண்டு வருகிறேன். ஆனால் இப்போது நாட்டைச் சீராக இயங்கச் செய்வதே மிக முக்கியமான முன்னுரிமையாகும். </p><p>இந்த நேரத்தில் பொதுத் தேர்தலை நடத்துவது அந்த முக்கியப் பணிகளை தாமதப்படுத்தும்,” என்று தெரிவித்துள்ளார்.</p><p>
இந்நிலையில், 2024 பொதுத் தேர்தலில் மக்கள் வாக்களித்தது வேறு தலைவரின் தலைமையிலான கட்சிக்காக என்பதால், புதிய பிரதமர் பொதுமக்களிடம் புதிய ஆணையைப் பெறுவதற்காக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கருத்தும் நாட்டில் பரவலாக நிலவி வருவதாக பிரித்தானிய தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T00:29:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி செயலகத்தின் 26 வாகனங்கள் மாயம் : தணிக்கை அலுவல விசாரணையில் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/26vehicles-belonging-president-secretariat-missing-1785024971"></link>
            <id>https://ibctamil.com/article/26vehicles-belonging-president-secretariat-missing-1785024971</id>
            <summary type="text">ஜனாதிபதி செயலகத்தின் பெயரில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட 26 வாகனங்கள் இருந்ததற்கான தகவல்கள் இதுவரை சரிபார்க்கப்படவில்லை எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி செயலகத்தின் பெயரில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட 26 வாகனங்கள் இருந்ததற்கான தகவல்கள் இதுவரை சரிபார்க்கப்படவில்லை என்று தேசிய தணிக்கை அலுவலகம் வெளிப்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த வாகனங்கள் காணாமல் போனதா அல்லது ஏதேனும் நிறுவனம் அல்லது நபரிடம் ஒப்படைக்கப்பட்டதா குறித்து தணிக்கைத் துறைக்கு எந்த எழுத்துப்பூர்வ அறிக்கையையும் அதிகாரிகள் சமர்ப்பிக்கத் தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதன்படி சம்பந்தப்பட்ட அந்த 26 வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் அவற்றின் தற்போதைய நிலை குறித்து குற்றப் புலனாய்வுத் துறை தற்போது ஒரு சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>குற்றப் புலனாய்வுத் துறை விசாரணை</h2><p>2025 மே 28 அன்று, இந்த வாகனங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளை நடத்தும் என்று ஜனாதிபதி செயலகம் தணிக்கைப் பிரிவுக்குத் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18ef6297-d4c2-40e9-977f-8117e57e9b4c/26-6a6551ccd2865.webp' /></p><p>

எனினும் , இந்த ஆண்டு மார்ச் 19 அன்று கூட அந்த வாகனங்கள் இருந்ததற்கான ஆதாரம் சரிபார்க்கப்படவில்லை என்று தணிக்கை அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T00:16:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றத்தின் அன்றைய வகிப்பகத்தை புறக்கணித்த கும்பலுக்கு வகுப்பெடுக்கவைத்த இன்றைய அச்சப் புலம்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/political-gatherings-lamenting-the-fear-of-justice-1785022008"></link>
            <id>https://ibctamil.com/article/political-gatherings-lamenting-the-fear-of-justice-1785022008</id>
            <summary type="text">நீதித்துறை சுதந்திரம் என்ற பதாகையின் கீழ் ஒன்று திரண்டுள்ள ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP), நாமல் ராஜபக்ச தலைமையிலான ராஜபக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதித்துறை சுதந்திரம் என்ற பதாகையின் கீழ் ஒன்று திரண்டுள்ள ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP), நாமல் ராஜபக்ச தலைமையிலான ராஜபக்ச குடும்ப ஆதரவுக் குழுவும், கடந்த காலங்களில் எண்ணற்ற உயர் நீதிமன்ற உத்தரவுகளை மீறியதன் மூலம் தங்களது அதிகார வேட்கை மனப்பான்மையை வெளிப்படுத்தியுள்ளன.
</p><p>
கடந்த காலத்தை மறந்து, தற்போதைய அரசாங்கம் அனைத்து நீதிமன்றங்களிலும் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதில் கவனம் செலுத்தும் அதே வேளையில், பல்வேறு திரிபுபடுத்தப்பட்ட பிரச்சாரங்களைப் பரப்பி வருகிறது. </p><p>அன்று இரண்டு குழுக்களாகப் பிரிந்திருந்த இந்தக் குழுக்கள், இப்போது ஒரே குழுவாகச் செயல்படுகின்றன.</p><p></p><h2>6 நிகழ்வுகள்</h2><p> கடந்த காலத்தில் இந்த இரண்டு குழுக்களும் எவ்வாறு செயல்பட்டன என்பதை ஒரு சிங்கள மொழி ஊடகம் ஒகஸ்ட் 22, 2024 அன்று விரிவாக வெளிப்படுத்தியிருந்தது.</p><p><b>இலங்கை அரசாங்கங்கள் உயர்&nbsp; நீதிமன்ற உத்தரவுகளை மீறிய 6 நிகழ்வுகள்</b></p><p>
2023 மார்ச் 9 அன்று நடைபெறவிருந்த உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தாததன் மூலம், ஜனாதிபதி , நிதி அமைச்சர் என்ற தனது தகுதியில், மற்றும் தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளனர் என உயர் நீதிமன்றம் இன்று (ஒகஸ்ட் 22) தீர்ப்பளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23af8541-232d-49ec-8be2-645560ac4613/26-6a654e880a12a.webp' /></p><p>
</p><p>
அதன்படி, சம்பந்தப்பட்ட தேர்தலை தாமதமின்றி நடத்த நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
</p><p>
இருப்பினும், அந்த உத்தரவின்படி அரசு உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துமா? இவ்விஷயம் குறித்து அரசு இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.
</p><p>
இதற்கிடையில், அரசாங்கத்தின் சார்பில் முன்னிலையான பிரதமர் தினேஷ் குணவர்தன, அப்போதைய காவல்துறைத் தலைவர் தேசபந்து தென்னக்கோனை அப்பதவியை வகிப்பதைத் தடுத்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.</p><p>

உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்த முடியாது என்று அரசு அறிவிப்பது இது முதல் முறையல்ல. இந்த நாட்டின் வரலாற்றில் இதுபோன்று 6 நிகழ்வுகள் நடந்துள்ளன.</p><p></p><h2>மேஜர் ஜெனரல் பதவி</h2><p>
</p><p><b>
1. பிரிகேடியர் பாரி லியனேஜை மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்த்துவதற்கான ஆணை.</b></p><p>
சர்ச்சைக்குரிய எம்பிலிப்பிட்டிய மாணவர் கொலை வழக்கில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்ட இராணுவ பிரிகேடியர் பாரி லியனகே, தன்னை மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்த்துமாறு பாதுகாப்புச் செயலாளருக்கு இராணுவத் தளபதி அளித்த பரிந்துரையைச் செயல்படுத்தத் தவறியதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதாகத் தீர்ப்பளிக்கக் கோரி, 1999-ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/475030a9-bf98-4bff-a29b-ca4dd8015b13/26-6a654e896bb2c.webp' /></p><p>
</p><p>
அடிப்படை உரிமைகள் மனுவில், பிரிகேடியர் பாரி லியனகே, தன்னை மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்த்துமாறு 1999 மார்ச் 8 அன்று இராணுவத் தளபதி பாதுகாப்புச் செயலாளருக்கு ஒரு பரிந்துரையைச் சமர்ப்பித்திருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
</p><p>
அந்தப் பரிந்துரையின்படி தனக்கு மேஜர் ஜெனரல் பதவிக்கு பதவி உயர்வு அளிக்காததன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுவிட்டதாகக் குற்றம் சாட்டி, தன்னை மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்த்தி உத்தரவிடுமாறு அவர் நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.</p><p>

மனு மீது நீண்ட விசாரணை நடத்திய மூன்று நீதியரசர் கள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, பரி லியனகேவை மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்த்துமாறு பாதுகாப்பு அமைச்சகச் செயலாளருக்கு இராணுவத் தளபதி அளித்த பரிந்துரையைச் செயல்படுத்தத் தவறியது அவரது அடிப்படை மனித உரிமைகளை மீறிய செயல் எனத் தீர்ப்பளித்தது.
</p><p>
அதன்படி, பரி லியனகேவை மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்த்துவதற்கான பரிந்துரையைச் செயல்படுத்துமாறு பாதுகாப்புச் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.</p><p>

இருப்பினும், உயர் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை பாதுகாப்புச் செயலாளர் செயல்படுத்தத் தவறிவிட்டார் என்று பரி லியனகே பின்னர் உயர் நீதிமன்றத்தில் முறைப்பாடு அளித்தார்.</p><p></p><h2>நீதிமன்ற அவமதிப்பு&nbsp;</h2><p>
</p><p>
இதன் மூலம் அரசு நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளது என்று கூறி, பிரிகேடியர் மற்றொரு மனுவைத் தாக்கல் செய்தார்.</p><p>
</p><p>
இருப்பினும், உயர் நீதிமன்றம், உண்மைகளைப் பரிசீலித்த பின்னர், முப்படைகளின் தலைமைத் தளபதி என்ற முறையில் ஜனாதிபதியே தலைவரே சம்பந்தப்பட்ட பதவி உயர்வு குறித்து முடிவெடுப்பதற்கான இறுதி அதிகாரம் கொண்டவர் என்றும், அரசியலமைப்பின்படி மனுதாரர் கோரியது போன்ற ஒரு உத்தரவைப் பிறப்பிக்க முடியாது என்றும் கூறியது.
</p><p>
பின்னர், பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர், அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் சமர்ப்பித்த பரிந்துரையை நடைமுறைப்படுத்த அவர் விரும்பாததாலேயே, அந்தப் பிரிகேடியரால் மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்த்த முடியவில்லை என்று அக்கால ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.</p><p><b>2. தலைமை&nbsp;</b>நீதியரசர்&nbsp;<b>சரத் என். சில்வாவுக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானத்திற்கு எதிரான நீதிமன்றத்தின் தீர்ப்பை நிராகரித்தல்.</b></p><p>2001-ஆம் ஆண்டில், அப்போதைய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் குழு ஒன்று, அப்போதைய தலைமை நீதியரசர் சரத் என். சில்வா தனது பதவிக்குத் தகாத முறையில் நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டி, அவரைப் பதவியிலிருந்து நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் ஒரு பதவி நீக்கத் தீர்மானத்தை முன்வைத்தது.
</p><p>
பதவி நீக்கத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட அப்போதைய சபாநாயகர் அனுர பண்டாரநாயக்க, பிரதம நீதியரசர் சரத் என். சில்வா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு நாடாளுமன்ற தெரிவுக் குழுவையும் நியமித்தார்.
</p><p>
தலைமை நீதியரசர்க்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு தெரிவுக் குழுவை நியமித்த சபாநாயகரின் முடிவு சட்டத்திற்கு முரணானது என்று கூறி, சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் செயல்பாடுகளை இடைநிறுத்தம் செய்ய இடைக்காலத் தடை உத்தரவு கோரி, மூன்று அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
</p><p>
மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​தலைமை சட்டத்தரணிகளான ஆஜரான மூத்த அரசு சட்டத்தரணியும், மனுக்களில் கோரப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிப்பதற்குத் தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
</p><p>
அதன்படி, தலைமை நீதியரசர் சரத் என். சில்வா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க சபாநாயகரால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் நடவடிக்கைகளை இடைநிறுத்தி, உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது.</p><p></p><h2>சந்திரிகா பண்டாரநாயக்க&nbsp;</h2><p>
இந்த இடைக்காலத் தடை உத்தரவு குறித்து சமூகத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.
</p><p>
அரசியலமைப்பில் உள்ள அதிகாரப் பிரிவினைக் கொள்கையின்படி, ஒரு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் நடவடிக்கைகளை இடைநிறுத்தி இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் உயர் நீதிமன்றத்திற்கு இல்லை என்று அப்போதைய மூத்த சட்ட அறிஞர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6693974-45bd-45cf-ab0f-69b66ad8d490/26-6a654e88b7632.webp' /></p><p>

நாடாளுமன்றம் கூடியபோது, ​​எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களும், பிற கட்சிகளின் உறுப்பினர்களும், இந்த உயர் நீதிமன்ற உத்தரவை நிராகரிக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.</p><p>

அதன்படி, சபாநாயகர் அனுர பண்டாரநாயக்க, தமது முடிவை அறிவிக்கையில், நாடாளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்தின் விதிகளையும், முன்னுதாரணங்களையும், முந்தைய வழக்குத் தீர்ப்புகளையும் கருத்தில் கொண்டு, உயர் நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடையாணையை ஏற்க மறுப்பதாகத் தெரிவித்தார்.</p><p>

நாடாளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்தின் விதிகளுக்கு இணங்க, நாடாளுமன்றத்தின் உள் விவகாரங்களில் தலையிட நீதித்துறைக்கு அதிகாரம் இல்லை என்றும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், சபாநாயகரின் முடிவு அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நாடாளுமன்றத்தைக் கலைத்ததால், பதவிநீக்கத் தீர்மானம் காலாவதியானது.
</p><p><b>
3. பெட்ரோல் விலையைக் குறைக்கும் உத்தரவை நிராகரித்தல்</b></p><p>
அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் எரிபொருளைக் கொள்முதல் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு இடர் தவிர்ப்பு ஒப்பந்தத்தின் மூலம் நாடு பெருமளவு அந்நியச் செலாவணியை இழந்து வருவதாகக் குற்றம் சாட்டி, 2008 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.</p><p>

அப்போதைய தலைமை நீதியரசர் சரத் என். சில்வா தலைமையிலான மூன்று நீதியரசர்கள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்பு அந்த மனுக்கள் விசாரிக்கப்பட்டன.
</p><p>
மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​மனுதாரரின் சட்டத்தரணிகள் , இடர் தவிர்ப்பு ஒப்பந்தத்தால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நீண்ட வாதங்களை முன்வைத்தனர்.</p><h2>மறுக்கப்பட்ட பெற்றோல் விலை&nbsp;</h2><p>
</p><p>
உண்மை நிலவரங்கள் மீதான விசாரணையின் போது, ​​தலைமை நீதியரசர் தலைமையிலான மூன்று நீதியரசர்கள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, பெட்ரோலியக் கழகத்திற்கு அக்காலத்தில் நிலவிய விலையை விடக் குறைந்த விலையில் பெட்ரோலை விற்கும் திறன் இருந்தது என்று தீர்ப்பளித்தது.
</p><p>
அப்போதைய நிதி அமைச்சகத்தின் செயலாளராக இருந்த சுமித் அபேசிங்க, இவ்விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாக அழைக்கப்பட்டார்.

அதன்படி, நீதிமன்றத்தில் முன்னிறையாகி நிதி அமைச்சகத்தின் செயலாளரிடம், பெட்ரோலை விற்கக்கூடிய குறைந்தபட்ச விலை குறித்து நீதிமன்றத்திற்குத் தெரிவிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
</p><p>
அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ. 100/-க்கு விற்க முடியும் என்று நிதி அமைச்சகத்தின் செயலாளர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p>

இந்தக் காரணிகளைக் கருத்தில் கொண்ட பிறகு, தலைமை நீதியரசர் சரத் என். சில்வா தலைமையிலான மூன்று நீதியரசர்கள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, பெட்ரோல் விலையை ரூ. 100/- ஆகக் குறைக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது.
</p><p>
இருப்பினும், அரசு அந்தத் தீர்ப்பை நடைமுறைபடுத்த மறுத்ததோடு, உயர் நீதிமன்றம் நிர்ணயித்த விலையில் பெட்ரோல் விற்கப்பட்டால் பெட்ரோலியக் கூட்டுதாபனத்துக்கு நட்டம் ஏற்படக்கூடும் என்றும் கூறியது.
</p><p><b>
4. தலைமை&nbsp;</b>நீதியரசர்&nbsp;<b>ஷிரானி பண்டாரநாயக்க மீதான பதவிநீக்கக் குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்த குழுவின் அறிக்கையைச் செல்லாததாக்கிய தீர்ப்பை நிராகரித்தல்.
</b></p><p>2012-ஆம் ஆண்டில், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம், அப்போதைய பிரதம நீதியரசர் டாக்டர் ஷிரானி பண்டாரநாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஒரு பதவிநீக்கத் தீர்மானத்தை முன்வைத்தது.
</p><p>
அப்போதைய சபாநாயகர் சமல் ராஜபக்சவும், பதவி நீக்கக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை நியமித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6354ea1f-8690-4fab-9974-5e388ed0aed9/26-6a654e8a20339.webp' /></p><p>
</p><p>
தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் விசாரணை சட்டவிரோதமானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி, தலைமை நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்தார்.</p><p>

மனுவை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், தலைமை நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்ற தெரிவுக் குழு அளித்த பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கையைச் செல்லாததாக்கி, 2013 ஜனவரி 7 அன்று தீர்ப்பு வழங்கியது.
</p><p>
இருப்பினும், அப்போதைய அரசாங்கம் அந்த முடிவை நிராகரித்து, தலைமை நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவுக்கு எதிரான தெரிவுக் குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, பதவி நீக்கத் தீர்மானத்தை நிறைவேற்றி, அவரைத் தலைமை நீதியரசர் பதவியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்தது.</p><p><b>

5. உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடையாணையை நிராகரித்தல்.
</b></p><p>2023 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பாக வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளை மேலும் நிறுத்தி வைப்பதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் ஒரு இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்தது.</p><h2>உள்ளூராட்சித் தேர்தல்</h2><p>
</p><p>
உள்ளூராட்சித் தேர்தல்களை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து, சமகி ஜன பலவேகய பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணையை அனுமதித்து, உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
</p><p>
மனுவை நீண்ட நேரம் பரிசீலித்த உயர் நீதிமன்றம், அதை விசாரிக்க அனுமதி அளித்ததுடன், உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டை மேலும் நிறுத்தி வைப்பதைத் தடுக்கும் வகையில் நிதி அமைச்சகச் செயலாளருக்கு இடைக்காலத் தடை உத்தரவையும் பிறப்பித்தது.</p><p>

ஆனால், அரசாங்கம் அந்த இடைக்கால உத்தரவைச் செயல்படுத்தவில்லை.
</p><p>
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, அத்தியாவசியச் செலவுகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகவும், அந்த அமைச்சரவை முடிவில் குறிப்பிடப்பட்டுள்ள 'அத்தியாவசியச் செலவுகள்' என்பதில் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவது தொடர்பான நிதி ஒதுக்கீடுகள் சேர்க்கப்படாததால், தம்மால் அந்த நிதி ஒதுக்கீடுகளை விடுவிக்க இயலவில்லை என்றும் நிதி அமைச்சகத்தின் செயலாளர் தெரிவித்திருந்தார்.
</p><p>
நிதி அமைச்சகத்தின் செயலாளர், சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க செயல்படாததன் மூலம் நீதிமன்ற அவமதிப்பு செய்ததாகக் குற்றம் சாட்டி, சமகி ஜன பலவேகய பொதுச் செயலாளர் மத்தும பண்டார மற்றொரு புகாரைத் தாக்கல் செய்திருந்தார்.

இருப்பினும், புகாரை விசாரித்த உயர் நீதிமன்றம் அதை நிராகரிக்க முடிவு செய்தது.</p><p><b>

6. தேசபந்து தென்னக்கோன் காவல்துறைத் தலைவராகச் செயல்படுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</b></p><p>
கர்தினால் மால்கம் ரஞ்சித் உட்பட ஒன்பது தரப்பினர், தேசபந்து தென்னக்கோனை அரசியலமைப்பு சபை முறையாக நியமிக்காததால், அவரது காவல்துறை தலைமை ஆய்வாளர் நியமனம் சட்டவிரோதமானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.</p><h2>காவல்துறை தலைமை&nbsp;</h2><p>
</p><p>
உண்மைகளை நீண்ட நேரம் பரிசீலித்த பின்னர், மனுக்களை விசாரிக்க முடிவு செய்த உயர் நீதிமன்றம், தேசபந்து தென்னக்கோன் காவல்துறைத் தலைவர் அலுவலகத்தின் அதிகாரங்களையும் கடமைகளையும் செயல்படுத்துவதைத் தடுக்கும் வகையில் ஒரு இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்தது.
</p><p>
இந்த இடைக்காலத் தடை உத்தரவின் காரணமாக, காவல்துறை தலைமை ஆய்வாளரின் கடமைகளைக் கவனிப்பதற்காக, தகுதிவாய்ந்த ஒரு சிரேஷ்ட துணை காவல்துறை தலைமை ஆய்வாளரை தற்காலிக காவல்துறை தலைமை ஆய்வாளராக நியமிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.</p><p>

இருப்பினும், அரசாங்கத்தின் சார்பில் நாடாளுமன்றில் அறிக்கை வெளியிட்ட பிரதமர் தினேஷ் குணவர்தன, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அரசாங்கம் ஏற்காது என்று தெரிவித்தார்.</p><p>

அரசியலமைப்புச் சபை சட்டமன்றத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், அதற்கு எதிராக உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரம் நீதித்துறைக்கு இல்லை என்று பிரதமர் தனது அறிக்கையில் தெரிவித்தார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T00:04:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் அமைதிக்கான அமெரிக்காவின் இராஜதந்திர முயற்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-diplomatic-efforts-for-peace-in-the-middle-east-1785023382"></link>
            <id>https://canadamirror.com/article/us-diplomatic-efforts-for-peace-in-the-middle-east-1785023382</id>
            <summary type="text">கடந்த சில வாரங்களாக அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலாகவே இருந்த மத்திய கிழக்கு பதற்றத்தில், இஸ்ரேல் பெருமளவில் விலகியிருந்து கவனித்து வருகின்றது.


...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த சில வாரங்களாக அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலாகவே இருந்த மத்திய கிழக்கு பதற்றத்தில், இஸ்ரேல் பெருமளவில் விலகியிருந்து கவனித்து வருகின்றது.</p><p>


தெற்கு லெபனானில் ஆயுதங்களைக் குறைக்கும் முன்னோடித் திட்டத்தை தொடங்குவதற்கு லெபனான் மற்றும் இஸ்ரேல் அரசாங்கங்களை ஒப்புக்கொள்ள வைப்பதில் அமெரிக்கா அதிக கவனம் செலுத்தி வருகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d249c837-080f-4e38-934d-c146f17751e7/26-6a654b980b2fb.webp' /></p><p>ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி அமைப்பினரால் மோதல் பிராந்தியத்தின் பிற பகுதிகளுக்குப் பரவுவதை அமெரிக்கா விரும்பவில்லை.
</p><p>
எனவே, இதுகுறித்தும் ஈரான் உடனான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா முக்கிய புள்ளியாக விவாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
</p><p>

பிராந்தியத்தில் போர் விரிவடைவதைத் தடுத்து அமைதியைக் கொண்டுவரவே அமெரிக்கா இந்த இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.</p>]]></content>
            <updated>2026-07-25T23:49:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சனி வக்ர பெயர்ச்சி ; ஏழரை சனி நடக்கும் 3 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/elarai-sani-entha-rasikaluku-eppadi-irukkum-1785020677"></link>
            <id>https://jvpnews.com/article/elarai-sani-entha-rasikaluku-eppadi-irukkum-1785020677</id>
            <summary type="text">ஜோதிடத்தில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். நவகிரகங்களிலேயே சனி பகவான் ஒரு ராசியில் நீண்ட காலம் பயணிக்கக்கூடியர். இதனால் சனி பகவானின் நிலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். நவகிரகங்களிலேயே சனி பகவான் ஒரு ராசியில் நீண்ட காலம் பயணிக்கக்கூடியர். இதனால் சனி பகவானின் நிலையில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டாலும் அது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். </p><p>அந்த வகையில் தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார்.இந்நிலையில் ஜூலை 27 ஆம் திகதி சனி பகவான் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f6adbcd-b07e-471e-86c0-b3a61db9163f/26-6a65410689432.webp' /></p><p> </p><p>சனி பகவான் வக்ரமாகும் போது அதன் தாக்கம் சற்று தீவிரமாக இருக்கும். அதுவும் ஏழரை சனி நடப்பவர்களுக்கு இக்காலம் எப்படி இருக்கும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.</p><p> தற்போது சனி பகவானின் நிலையால் மேஷம், மீனம் மற்றும் கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி நடக்கிறது. இப்போது சனி வக்ரமாவதால் ஏழரை சனி நடக்கும் 3 ராசிக்கும் எப்படி இருக்கும் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dbe9763-917c-4b68-b16e-f06437b76ea4/26-6a65410738c55.webp' /></p><h3>மேஷம்
</h3><p>மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் முதல் கட்டம் நடக்கிறது. இந்நிலையில் சனி வக்ரமாவதால், தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். மனநிலையும் மோசமாக பாதிக்கப்படும். எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாமல் குழப்பமடையக்கூடும். அவசரப்பட்டு எதையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். செய்யும் வேலைகளில் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.</p><h4>

கவனமாக இருக்க வேண்டியவை</h4><p>சனி வக்ர காலத்தில் மேஷ ராசிக்காரர்கள் எதையும் சரியாக ஆராயாமல் நிதி முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். புதிய முதலீடுகளையும் தவிர்க்க வேண்டும். ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0956118-eb7a-4a7f-9434-e116b46693ca/26-6a654107de44a.webp' /></p><h3>கும்பம்
</h3><p>கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் கடைசி கட்டம் நடக்கிறது. இதனால் சனி வக்ரமாவதால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை சற்று ஏற்றஇறக்கத்துடன் இருக்கும். இருப்பினும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடைய வாய்ப்புள்ளது. பண பரிவர்த்தனைகளை செய்யும் போது சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
</p><h4>
கவனமாக இருக்க வேண்டியவை</h4><p> கடன் கொடுப்பதையோ, வாங்குவதையோ தவிர்க்க வேண்டும். எதையும் சரியாகவும் ஒழுக்கமாகவும் செய்ய வேண்டும். முக்கியமாக ஆரோக்கிய விஷயத்தை புறக்கணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3f9005c-54b4-42fc-8d05-0ce1fc48d7a9/26-6a6541093e1df.webp' /></p><h3>மீனம்
</h3><p>மீன ராசிக்கு ஏழரை சனியின் இரண்டாவது கட்டம் நடக்கிறது. இந்நிலையில் சனி வக்ரமாவதால் பணியிடத்தில் பொறுப்புக்களும், மன அழுத்தமும் அதிகரிக்கும். முன்பு எளிதில் முடிக்கப்பட்ட வேலைகள் தற்போது முடிக்க கடினமாக இருக்கலாம் அல்லது தாமதமாகலாம். பழைய பிரச்சனைகள் மீண்டும் தலைத்தூக்க வாய்ப்புள்ளது.
</p><h4>
கவனமாக இருக்க வேண்டியவை</h4><p>பணியிடத்திலோ அல்லது அலுவலகத்திலோ பணிகளை பாதியாக செய்வதைத் தவிர்க்க வேண்டும். எந்த வேலையையும் முழுமையாக செய்து முடிக்க வேண்டும். பேச்சையும், கோபத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54dd0640-fa29-462d-b0ad-ce8731c0da24/26-6a6541088d2b4.webp' /></p>]]></content>
            <updated>2026-07-25T23:39:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் இரு வேறு பகுதிகளில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு பெண்களின் சடலம் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bodies-two-women-found-hanging-two-different-areas-1785022772"></link>
            <id>https://jvpnews.com/article/bodies-two-women-found-hanging-two-different-areas-1785022772</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டத்தின் இரு வேறு பகுதிகளில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இரு பெண்களின் சடலங்களும் மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் நல்லடக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டத்தின் இரு வேறு பகுதிகளில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இரு பெண்களின் சடலங்களும் மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் நல்லடக்கத்திற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
மருதமுனை 6ஆம் பிரிவைச் சேர்ந்த தௌபீக் சினாத் றினா (20) என்ற திருமணமாகாத பெண், கடந்த செவ்வாய்க்கிழமை (21) மாலை தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.</p><p>

இந்த சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் மற்றும் சந்தேகங்கள் வெளியானதைத் தொடர்ந்து, பொலிஸாரும் அம்பாறை மாவட்ட தடயவியல் பிரிவு அதிகாரிகளும் பல கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17d82355-9822-4003-aac7-5cf48a67cc5e/26-6a6549363fcd6.webp' /></p><p>கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.ஆர்.எம். கலீல் சம்பவ இடத்திற்குச் சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டார்.

உயிரிழப்பில் சந்தேகம் காணப்படுவதால், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்புமாறு நீதிவான் உத்தரவிட்டார்.</p><p>

அங்கு சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது, மரணத்திற்கான துல்லியமான காரணத்தை உறுதி செய்வதற்காக சில உயிரியல் மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்பிலுள்ள அரச பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
இதனைத் தொடர்ந்து, சடலம் புதன்கிழமை (22) மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
</p><p>
பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பூபாலசிங்கம் கஜேந்திரன் தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>

இதேவேளை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஜீட்புரம், மல்வத்தை-03 பகுதியைச் சேர்ந்த சிப்னா (28) என்ற ஒரு பிள்ளையின் தாய், வியாழக்கிழமை (23) மாலை தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.</p><p>

இதையடுத்து, வெள்ளிக்கிழமை (24) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் முன்னிலையில் மரண விசாரணைகள் இடம்பெற்றன.
</p><p>
விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் நல்லடக்கத்திற்காக ஒப்படைக்கப்பட்டது.

உயிரிழந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், இந்த மரணத்திற்கான காரணம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T23:39:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[6 தமிழ்க் கட்சியினரும் ஜனாதிபதி அநுரவுடன் 3 ஆம் திகதி சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/6-tamil-party-members-to-meet-with-president-1785022653"></link>
            <id>https://tamilwin.com/article/6-tamil-party-members-to-meet-with-president-1785022653</id>
            <summary type="text">தமிழ் பேசும் மக்களின் ஆறு கட்சிகளினதும் தலைவர்களை எதிர்வரும் மூன்றாம் திகதி
திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சந்திப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் பேசும் மக்களின் ஆறு கட்சிகளினதும் தலைவர்களை எதிர்வரும் மூன்றாம் திகதி
திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சந்திப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
நேரம் ஒதுக்கிக் கொடுத்துள்ளார் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.</p><h2>&nbsp;ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பு&nbsp;</h2><p>
</p><p>
ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் மூன்று பேர் என்ற அடிப்படையில் 18 தலைவர்கள்
வரையில் இந்தச் சந்திப்பில் பங்குபற்றுவர் எனத் தெரியவருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff5b4c93-5fa9-4adf-92b5-5e0016439c0e/26-6a6548bf341f6.webp' /></p><p>
</p><p>
இந்த ஆறு கட்சிகளின் பொது மேடையின் சார்பில் அவற்றின் இணைப்பாளர் ஜனாதிபதியின் செயலாளருக்கு மேற்படி சந்திப்புக்கான
கோரிக்கைக் கடிதத்தை அனுப்பி வைத்திருந்தார் என்றும், அதற்கான பதிலை
ஜனாதிபதியின் செயலாளர் நேற்று உடனடியாகவே இணைப்பாளருக்கு வழங்கினார் என்றும்
ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அந்தப் பதிலிலேயே மேற்படி ஆகஸ்ட் மூன்றாம் திகதி காலை 10 மணிக்கு ஜனாதிபதி
செயலகத்தில் சந்திப்பு நடைபெறும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாக
அறியவந்தது.</p><p></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T23:37:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரணிலும் சஜித்தும் ஒன்றிணைவது அரசாங்கத்திற்குச் சவாலல்ல ; நளிந்த ஜயதிஸ்ஸ அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ranil-and-sajith-s-unity-not-challenge-government-1785022201"></link>
            <id>https://jvpnews.com/article/ranil-and-sajith-s-unity-not-challenge-government-1785022201</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் மீண்டும் ஒன்றிணைவதால் அரசாங்கத்திற்கு எந்தவித சவாலும் இல்லை எனச் சுகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் மீண்டும் ஒன்றிணைவதால் அரசாங்கத்திற்கு எந்தவித சவாலும் இல்லை எனச் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>களுவாஞ்சிகடி பகுதியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னர் இருவரும் ஒன்றாகச் செயற்பட்ட காலத்திலும் சாதனைகளைச் செய்ய முடியாமல் பிரிந்து சென்றதாகவும், தற்போது மீண்டும் இணைவதால் புதிதாக எதனையும் சாதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இது சமமான கூட்டிணைவாகக் கருத முடியாது எனத் தெரிவித்த அமைச்சர், ரணில் விக்ரமசிங்க தன்னை மீண்டும் தலைவராக நிலைநிறுத்திக்கொள்ளவும், சஜித் பிரேமதாசவைத் தனக்குக் கீழ் செயற்படும் ஒருவராக மாற்றவுமே இந்தச் சந்திப்புகள் இடம்பெறுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cb77adb-38fc-4153-8175-01681ecb0747/26-6a6546fb5a744.webp' /></p><p>அத்துடன், சந்திப்புகளின்போது ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தல்களை வழங்குவதும், சஜித் பிரேமதாச அவற்றை குறிப்பெடுத்துக்கொள்வது போன்ற தோற்றமே காணப்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.</p><p>

இந்தச் சந்திப்புகளின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தவர்களில் பலர் வழக்குகள், விசாரணைகள் அல்லது குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
கையூட்டல் ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் எதிர்க்கட்சியினரின் சட்டவிரோதச் செயற்பாடுகள் மற்றும் குற்றப் பின்னணிகள் வெளிச்சத்திற்கு வருவதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.</p><p>


இத்தகைய குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்கும் நோக்கிலும் அச்சத்தின் காரணமாகவுமே சஜித் பிரேமதாச, ரணில் விக்ரமசிங்க மற்றும் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோர் ஒன்றிணைந்து சந்திப்புகளை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T23:30:13+00:00</updated>
        </entry>
    </feed>
