<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-18T07:41:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடுமையான மின்னல் தாக்கம் ; இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lightning-strike-warning-issued-to-sri-lankans-1789717045"></link>
            <id>https://jvpnews.com/article/lightning-strike-warning-issued-to-sri-lankans-1789717045</id>
            <summary type="text">நாட்டின் சில இடங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டின் சில இடங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p style="text-align: justify;">

அதன்படி, ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு, பொலன்னறுவை மாவட்டங்களிலும் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1703319-f6ea-4138-af79-2aafbdde6b65/26-6aacea374710c.webp' /></p><h2 style="text-align: justify; ">பலத்த காற்று</h2><p style="text-align: justify;"> 

இன்று (18) காலை 11 மணிக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை இன்றிரவு 11.30 மணி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

மேற்குறிப்பிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழை, மின்னல் ஏற்படும்போது பலத்த காற்றும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify; ">
இதன் காரணமாக இடி, மின்னல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-18T07:39:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள் – மருத்துவர் கூறும் தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/what-are-15-best-breakfast-foods-1789715916"></link>
            <id>https://manithan.com/article/what-are-15-best-breakfast-foods-1789715916</id>
            <summary type="text">ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற விரும்புவோர், காலை உணவில் அதிக கவனம் செலுத்துவது அவசியம்.

காலை உணவாக என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற விரும்புவோர், காலை உணவில் அதிக கவனம் செலுத்துவது அவசியம்.

காலை உணவாக என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் நாம் அக்கறையுடன் இருக்க வேண்டும்.</p><p> ஏனெனில், காலை உணவு நமது உடல் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

பொதுவாக, காலை உணவில் அதிக புரதச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்த்துக்கொள்வது உடல்நலத்திற்கு நன்மை பயக்கும்.உதாரணமாக, வேகவைத்த முட்டை, பயறு, கடலை போன்ற உணவுகளை காலையில் எடுத்துக்கொள்வது சிறந்ததாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05d3f506-fbb2-4c9c-8d44-08b288f000eb/26-6aacea98356f9.webp' /></p><p>
</p><p>
ஆனால், வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்களில், “காலையில் இதைச் சாப்பிடுங்கள்”, “காலையில் அதைச் சாப்பிடுங்கள்” என பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றில் சில தவறான தகவல்களாகவும் இருக்கலாம். </p><p>இதை அறியாமல், அவற்றை உண்மை என நம்பி பலரும் பின்பற்றுகின்றனர்.

எனவே, மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு, டாக்டர் கார்த்திகேயன் அவர்கள் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் சித்த மருத்துவம் மற்றும் நவீன அறிவியல் சார்ந்த தகவல்களின் அடிப்படையில், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டிய 15 உணவுகள் குறித்து பகிர்ந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3afd074-a85c-4b38-a1cf-4f1e394ceee8/26-6aacea98e2d45.webp' /></p><p>அந்தவகையில், காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள மிகச்சிறந்த 15 உணவுகளின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><p><b>1.வெதுவெதுப்பான நீர்:</b> காலையில் எழுந்ததும் முதலில் வெதுவெதுப்பான நீர் குடிப்பது உடலில் நீர்ச்சத்தைச் சீராக்கி, செரிமானத்தை மேம்படுத்த உதவும். வெந்நீர் கொழுப்பைக் குறைக்கும் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லை.
</p><p><b>2.துளசி: </b>துளசி இலைகளை மென்று சாப்பிடலாம் அல்லது நீரில் கலந்து குடிக்கலாம். இது நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதுடன், இரத்த சர்க்கரை மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
</p><p><b>3.கறிவேப்பிலை:</b> 4–5 கறிவேப்பிலைகளை காலையில் மென்று சாப்பிடுவது செரிமானத்திற்கும், இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்தவும் உதவும். தலைமுடிக்கும் நன்மை தரக்கூடியது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/338a48c3-b20a-4742-903f-2f5889ce2641/26-6aacea999869a.webp' /></p><p><b>4.சீரக நீர்:</b> ஒரு ஸ்பூன் சீரகத்தை இரவு ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, காலையில் வடிகட்டி குடிக்கலாம். இது வாயு, அஜீரணம், வயிற்று உப்புசம் போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்கலாம். உடல் எடை மற்றும் கொழுப்பைக் குறைக்க உதவுவதாக ஆரம்பகட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.</p><p><b>5.இஞ்சி நீர்:</b> சிறிதளவு இஞ்சியை வெந்நீரில் கலந்து குடிப்பது குமட்டல், வாந்தி போன்றவற்றைக் குறைக்க உதவும். அல்சர் அல்லது அசிடிட்டி உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
</p><p><b>6.மோர்:</b> தயிர், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்த மோர் செரிமானத்திற்கும் குடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. அசிடிட்டி உள்ளவர்கள் இதை காலை உணவுக்குப் பிறகு குடிக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d7e0014-6697-4dbf-8e5d-83e676f1ea9c/26-6aacea9a49ba4.webp' /></p><p>
</p><p><b>7.முளைக்கட்டிய பச்சைப்பயறு:</b> இதில் புரதம், வைட்டமின் C மற்றும் நார்ச்சத்து உள்ளதால் காலையில் சாப்பிடலாம். வயிற்று உப்புசம் உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் வேகவைத்து சாப்பிடுவது நல்லது.
</p><p><b>8.ஊற வைத்த கொண்டைக்கடலை</b>: இரவு ஊறவைத்த கொண்டைக்கடலையை காலையில் சாப்பிடலாம். இதில் புரதம், நார்ச்சத்து மற்றும் குறைந்த கிளைசீமிக் இன்டெக்ஸ் கொண்ட கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.
</p><p><b>9.ஊற வைத்த பேரிச்சம்பழம்: </b>2–3 பேரிச்சம்பழங்களை இரவு ஊற வைத்து காலையில் சாப்பிடுவதன் மூலம் இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து கிடைக்கும். சர்க்கரை நோயாளிகள் அளவுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf07300a-f744-43af-92db-aa3a6ef7f46b/26-6aacea9af037d.webp' /></p><p>
</p><p><b>10.ஊற வைத்த கருப்பு உலர் திராட்சை:</b> இதில் நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. மலச்சிக்கலுக்கு உதவலாம். சர்க்கரை அதிகம் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.
</p><p><b>11.பப்பாளி: </b>காலையில் ஒரு கப் பப்பாளி சாப்பிடுவது நார்ச்சத்து மற்றும் பப்பாயின் கிடைக்க உதவும். இது செரிமானத்திற்கும் குடல் ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது.
</p><p><b>12.முருங்கை இலை சூப்:</b> சத்தான இந்த சூப் இரத்த சோகை மற்றும் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் இருப்பவர்களுக்கு பயனுள்ளதாகக் கூறப்படுகிறது. இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f7da577-b0e3-48ec-bbb8-43a846e93665/26-6aacea9ba44b4.webp' /></p><p></p><p>
</p><p><b>13.நெல்லிக்காய்: </b>காலையில் நெல்லிக்காய் சாப்பிடுவது நல்லது. கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
</p><p><b>14.வெந்தய நீர்: </b>ஒரு ஸ்பூன் வெந்தயத்தை இரவு ஊற வைத்து, காலையில் நீருடன் உட்கொள்ளலாம். இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது.
</p><p><b>15.ஊற வைத்த பாதாம்: </b>4–6 பாதாமை இரவு ஊற வைத்து காலையில் சாப்பிடலாம். இது சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், எடை மற்றும் கொழுப்பைக் குறைக்கவும் உதவுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b>&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T07:39:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் இந்தப் பகுதியில் நிலநடுக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/earthquake-shakes-residents-in-kootenays-1789709888"></link>
            <id>https://canadamirror.com/article/earthquake-shakes-residents-in-kootenays-1789709888</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள குட்டனேஸ் பிராந்தியத்தில் வியாழக்கிழமை அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
வியாழக்கிழமை அதிகாலை 5:31 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள குட்டனேஸ் பிராந்தியத்தில் வியாழக்கிழமை அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.</p><p>
வியாழக்கிழமை அதிகாலை 5:31 மணிக்கு, நெல்சன் நகரத்திற்கு வடகிழக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராஃபோர்ட் பே சமூகம் அருகே, பூமிக்கு அடியில் 4 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.</p><p>
இந்நிலநடுக்கத்தின் அளவை 'எர்த்குவிக்ஸ் கனடா' அமைப்பு முதலில் ரிக்டர் அளவில் 4.4 ஆகப் பதிவு செய்து, பின்னர் 3.7 ஆகக் குறைத்து திருத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06f6af9f-bf5a-4054-8fa4-4856ef2c0391/26-6aacce4207b06.webp' /></p><p> </p><p>எனினும், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இதனை 4.2 ரிக்டர் அளவாகப் பதிவு செய்துள்ளது.
இந்த அதிர்வுகள் கிரான்புரூக், நெல்சன், காஸ்டில்கர், டிரெயில், கிரெஸ்டன் மற்றும் ஸ்லோகன் வேலி உள்ளிட்ட பல பகுதிகளிலும் உணரப்பட்டதாகப் பொதுமக்கள் தெரிவித்தனர்.
</p><p>இந்த நிலநடுக்கத்தால் கட்டிடப் பாதிப்புகளோ அல்லது பிற சேதங்களோ ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை என்று பிரிட்டிஷ் கொலம்பியாவின் அவசரகால மேலாண்மை அலுவலகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T07:37:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மற்றொரு பெண்ணைச் சந்தித்ததாக காதலனை கொலை செய்த பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/murdered-banker-he-flirted-with-colleague-london-1789714590"></link>
            <id>https://canadamirror.com/article/murdered-banker-he-flirted-with-colleague-london-1789714590</id>
            <summary type="text">&amp;nbsp;பெண் ஒருவர் காதலனை கொலை செய்த்தாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் லண்டனின் ஓல்ட் பெய்லி (Old Bailey) நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பெண் ஒருவர் காதலனை கொலை செய்த்தாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் லண்டனின் ஓல்ட் பெய்லி (Old Bailey) நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது. </p><p> 

மற்றொரு பெண்ணைச் சந்தித்ததாகத் தெரிவித்த தனது காதலனைக் கத்தியால் குத்திக் கொன்றதாகவும், பின்னர் அவர்கள் ஒன்றாக வசித்து வந்த குடியிருப்பிலேயே அவரது உடலை ஒன்பது நாட்களுக்கு மறைத்து வைத்திருந்ததாகவும் பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58f85310-027c-4d9b-986b-d6c60603a25e/26-6aace09fa9908.webp' /></p><h2>பெண் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக&nbsp; மின்னஞ்சல்</h2><p> </p><p>

உயிரிழந்தவர் ஹென்ரிக் ஸ்லோத்சா (Henrik Slothsa) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் சிட்டிபேங்கில் (Citibank) பணியாற்றிய 52 வயதுடைய டேனிஷ் வங்கி அதிகாரி ஆவார்.

 காதலனை கொலை செய்ததாகக் கூறப்படும் காதலி 50 வயதுடைய போலந்து நாட்டவருமான ஜோனா சியர்ப்கா (Joanna Sierpka) ஆவார்.</p><p>
மார்ச் 15 அன்று, குற்றம் சாட்டப்பட்ட பெண் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக் குறிப்பால் உணர்த்தும் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியதைத் தொடர்ந்து, தெற்கு லண்டனில் உள்ள அந்த குடியிருப்பின் கதவை உடைத்துக்கொண்டு போலீசார் உள்ளே நுழைந்தனர். </p><p>

போலீசார் உள்ளே சென்றபோது, ​​அவர் எட்டு அங்குல சமையலறை கத்தியால் தனது கழுத்தை அறுக்க முயன்று கொண்டிருந்தார்.
</p><p>
அதேவேளையில், வீட்டின் படுக்கையறையில் திரு. ஸ்லோத்சாவின் சிதைந்த நிலையில் இருந்த உடலையும் அவர்கள் கண்டெடுத்தனர். அப்போது, ​​உடலுக்கு அருகில் காய்ந்த ரத்தப் படலம் ஒன்றும் காணப்பட்டது.
</p><p>
தனது காதலனைக் கொலை செய்ததில் எந்தவிதமான சர்ச்சையும் இல்லை என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் டேனி ராபின்சன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். தனது மனநிலை காரணமாகவே இச்செயலைச் செய்ததாகக் கூறி 'கொலைக்குற்றமற்ற மரணத்தை' (manslaughter) ஒப்புக்கொண்டாலும், அரசுத் தரப்பு அவர் மீது திட்டமிட்ட கொலைக் குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளது.</p><p> 

மேலும், கடந்த சில மாதங்களாகவே அவர்களது உறவில் விரிசல் ஏற்பட்டு வந்ததும் நீதிமன்றத்தில் தெரியவந்தது. நவம்பர் 2025-ல் நடைபெற்ற ஒரு நிறுவன நிகழ்வில் சந்தித்த மற்றொரு ஊழியருடன் ஸ்லோத்சா நெருக்கமாகியிருந்தார்&nbsp; சியர்ப்காவின் பிறந்தநாளன்று, தனது பணியிடத்தில் வேறொரு பெண்ணைச் சந்தித்திருப்பதாக அவரிடம் அவர் கூறியிருந்தார்.</p><p>

பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ (British American Tobacco) நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவில் முன்பு பணியாற்றிய சியர்ப்காவின் நண்பர்கள், வேலையை இழந்த பிறகு அவர் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்தனர்.
</p><p>
 ஸ்லோத்சாவைக் கொன்ற பிறகு, அவரது மொபைல் போன் மூலம் அவரது மேலாளருக்கு வாட்ஸ்அப் (WhatsApp) செய்திகளை அனுப்பிய அவர், ஸ்லோத்சாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாகப் பொய்யான தகவலைத் தெரிவித்திருந்தார். </p><p>

வீட்டிற்குள் காலி மது பாட்டில்களையும் போலீசார் கண்டெடுத்தனர்; இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது</p>]]></content>
            <updated>2026-09-18T07:36:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவானில் அடித்துக்கொண்ட பயணிகள் - லண்டன் டு வங்காளதேச விமானத்தில் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mid-air-fight-shocks-london-bang-flight-passengers-1789717161"></link>
            <id>https://news.lankasri.com/article/mid-air-fight-shocks-london-bang-flight-passengers-1789717161</id>
            <summary type="text">Mid-air fight shocks London to Bangladesh flight passengers: நடுவானில் விமானத்தில் இரு பயணிகள் அடிதடி சண்டை போட்டுக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.

இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Mid-air fight shocks London to Bangladesh flight passengers: நடுவானில் விமானத்தில் இரு பயணிகள் அடிதடி சண்டை போட்டுக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.</p><p>
</p><h2>
இரண்டு பயணிகள் இடையே&nbsp;அடிதடி சண்டை</h2><p>லண்டனில் இருந்து வங்காளதேசம் நோக்கி பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தபோது, இரண்டு பயணிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதம் சில நிமிடங்களில் உடல் ரீதியான மோதலாக மாறி, விமானத்தின் உள்ளே பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">AIRPLANE BRAWL: Two male passengers got into a physical fight aboard a Biman Bangladesh Airlines flight from London to Bangladesh after an argument escalated, frightening nearby passengers, including children and elderly travelers.<br><br>Cabin crew and other passengers stepped in and… <a href="https://t.co/q1ZAqvZuY6">pic.twitter.com/q1ZAqvZuY6</a></p>&mdash; Breaking911 (@Breaking911) <a href="https://x.com/Breaking911/status/2100630585488105724?ref_src=twsrc%5Etfw">September 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோவில், இருவரும் முதலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருப்பது தெளிவாகக் காணப்படுகிறது.</p><p> சண்டையின் போது, ஒருவரின் டி-ஷர்ட் கிழிந்தது. இந்த சம்பவம் நடந்தபோது, விமானத்தில் இருந்த மற்ற பயணிகள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள், கடும் பதற்றத்திற்கு உள்ளானார்கள்.</p><p>
</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9bf4651-e589-49b6-8502-da9948cdbe4b/26-6aaceaaad5111.webp' /></p><p>சண்டை நீண்டுகொண்டிருந்த நிலையில், விமான பணியாளர்கள் மற்றும் பிற பயணிகள் இடைமறித்து, இருவரையும் பிரித்தனர். </p><p>சம்பவம் நடந்த காரணம் தெளிவாக தெரியவில்லை. மேலும், சம்பவத்திற்குப் பிறகு அந்த பயணிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றிய தகவலும் வெளிவரவில்லை.
</p><p>
பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் பொது தொடர்பு மேலாளர் மஹ்புபுத்தீன் அஹ்மத், இந்த சம்பவம் குறித்து தமக்கு தகவல் இல்லை என்று தெரிவித்தார்.</p><p></p><p>இந்த சம்பவம் விமானப் பயணங்களில் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. பயணிகள் இடையே ஏற்படும் சண்டைகள், விமானத்தில் உள்ள அனைவரின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், விமான நிறுவனங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-18T07:36:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதியில் தண்டனை பெற்ற அனோஜனை நாட்டுக்குத் திருப்பியழைக்க தீவிர நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lankan-tamil-sivarasa-anojan-saudi-sentenced-1789717012"></link>
            <id>https://jvpnews.com/article/lankan-tamil-sivarasa-anojan-saudi-sentenced-1789717012</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சவுதி அரேபிய நீதிமன்றத்தினால் ரிசானா நபீக்குக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அனோஜனை மீண்டும் நாட்டுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;சவுதி அரேபிய நீதிமன்றத்தினால் ரிசானா நபீக்குக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அனோஜனை மீண்டும் நாட்டுக்குத் திருப்பியழைத்து வருவதற்குத் தீவிரமான தலையீடுகள் மேற்கொள்ளப்படும் என நம்புவதாக சிவில் சமூக செயற்பாட்டாளர் சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம் தெரிவித்துள்ளார். </p><p> 

மதநிந்தனைக் குற்றச்சாட்டில் கடந்த மாதத் தொடக்கத்தில் சவுதி அரேபிய நீதிமன்றத்தினால் 5 வருட சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்ட இலங்கையரான சிவராசா அனோஜனின் மேன்முறையிட்டை அடுத்து, தற்போது அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d717c762-a879-45d7-9084-c88d0e3cb457/26-6aacea160e7e6.webp' /></p><h2>தீவிரமாக முயற்சிப்போம்</h2><p>
</p><p>
இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் சிவில் சமூக செயற்பாட்டாளராக சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம்,</p><p> சவுதிக்கு பணிக்குச்சென்ற தொழிலாளியான சிவராசா அனோஜனுக்கு சவுதி அரேபிய மேன்முறையீட்டு நீதிமன்றம் மதநிந்தனைக் குற்றச்சாட்டின்கீழ் மரணதண்டனை விதித்துள்ளது என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைவதாகத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
அதேபோன்று, '2013 ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவில் குழந்தையொன்றைக் கொன்றார் என்ற குற்றச்சாட்டில் ரிசானா நபீக் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டதை நாம் பார்த்தோம். </p><p>அக்காலகட்டத்தில் இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திரத் தலையீடு மிகப்பலவீனமானதாகவே இருந்தது.</p><p>அந்தச் சம்பவத்துக்குப் பின்னரும் கூட, அந்நாட்டின் சட்டக் கட்டமைப்பில் காணப்படுகின்ற தற்காலத்துக்குப் பொருந்தாத, மனிதநேயமற்ற தண்டனைகளிலிருந்து எமது தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான எந்தவொரு ஒப்பந்தமும் சவுதி அரேபிய அரசாங்கத்துடன் செய்துகொள்ளப்படாத நிலையிலும், நாம் எமது தொழிலாளர்களைத் தொடர்ந்து சவுதி அரேபியாவுக்கு அனுப்பிவந்தோம்' என்றும் அவர் கரிசனை வெளியிட்டுள்ளார்.</p><p></p><p>
மேலும், நாம் 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அனோஜனை மீண்டும் நாட்டுக்குத் திருப்பியழைத்து வருவதற்குத் தீவிரமாக முயற்சிப்போம் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-18T07:33:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டுக்கட்சியின் முக்கியஸ்தர் மற்றும் நாமல் ஒரே சிறையில்..! வெளியான முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/renuka-perera-also-goes-to-namal-s-crp-ward-1789696458"></link>
            <id>https://tamilwin.com/article/renuka-perera-also-goes-to-namal-s-crp-ward-1789696458</id>
            <summary type="text">ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா தற்போது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா தற்போது கொழும்பு விளக்கமறியல் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.
</p><p>
இலங்கை பொதுஜன பெரமுனவின் மூத்த உறுப்பினரும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) முன்னாள் தலைவருமான ரேணுக பெரேரா, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><h2>'N' வார்டில் 10 கைதிகளுடன்</h2><p>

தற்போது அவர் சிறைச்சாலையின் 'N' வார்டில், மேலும் சுமார் 10 கைதிகளுடன் அவர் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52a1a0ef-8ac5-46d6-810a-ef755b2100fc/26-6aace7be6676a.webp' /></p><p>
</p><p>
அதே வார்டில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p> 

பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அரசாங்க ஊழியர்களும் அந்த வார்டில் வைக்கப்பட்டுள்ள கைதிகளாவர்.</p><p>

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ரேணுகா பெரேரா, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.</p><h2>சட்டவிரோதமாக சாலை அனுமதிகள்&nbsp;</h2><p>
</p><p>
பேருந்துகளுக்கு சட்டவிரோதமாக சாலை அனுமதிகள் வழங்கியமை தொடர்பான குற்றச்சாட்டில் இலஞ்ச ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டார்.
</p><p>
1991-ஆம் ஆண்டின் 37ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணையச் சட்டத்தின் விதிகளுக்கும், 2014.09.19 திகதியிட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின் பரிந்துரைகளுக்கும் முரணாக, தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கு சட்ட முறைக்குப் புறம்பாக 56 பயணிகள் சேவை அனுமதிகளை வழங்கியதாகவும், ஆண்டு சுங்கத்தை ஒரே முறையில் வசூலிக்கவில்லை என்றும் ரேணுகா பெரேரா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p>&nbsp;</p><p></p><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T07:33:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி அரேபியா, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையே தீவிரமடையும் மோதல் ; 5 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/saudi-houthi-conflict-intensifies-further-1789715695"></link>
            <id>https://canadamirror.com/article/saudi-houthi-conflict-intensifies-further-1789715695</id>
            <summary type="text">சவுதி அரேபியா, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையேயான மோதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.


&amp;nbsp;ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியா, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையேயான மோதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.


</p><p>&nbsp;ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் ஏமனில் இரு நாடுகளும் மறைமுக மோதலில் ஈடுபட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05954c4e-6f21-4ffb-97c9-30eb1a97379a/26-6aace4f14d402.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, அமெரிக்கா, ஈரான் மோதலின்போது ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தினர். </p><p>இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனில் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது சவுதியும் தாக்குதல் நடத்தியது. </p><p>மேலும், ஏமன் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக மோதல் தீவிரமடைந்து வருகிறது.
</p><p>
உள்நாட்டுப்போர் தீவிரமடைந்து வரும் நிலையில் ஏமன் அரசுப்படையினர் கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி வருகின்றனர். </p><p>மேலும், சவுதி அரேபியா மீதும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு சவுதியும் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்பு மோதலால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.</p><p>அந்த வகையில் சவுதி அரேபியாவின் தென்கிழக்கே அமைந்துள்ள தைப் நகர் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை, டிரோன் மூலம் நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். </p><p>மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர். அதேபோல், ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள தைஸ் நகர் மீது சவுதி தாக்குதல் நடத்தியது. </p><p>இந்த தாக்குதலில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T07:30:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் ஆங்கிலக் கல்வியை மேம்படுத்த 34 புதிய அமெரிக்க சமாதானப் படை தொண்டர்கள் வருகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/support-english-education-in-sri-lanka-1789714784"></link>
            <id>https://tamilwin.com/article/support-english-education-in-sri-lanka-1789714784</id>
            <summary type="text">இலங்கையில் இரண்டு ஆண்டுகள் சேவை செய்வதற்கு முன்னதான பயிற்சிகளை
மேற்கொள்வதற்காக, 34 புதிய அமெரிக்க சமாதானப் படை பயிற்சித் தொண்டர்கள்
இலங்கையை வந்தடைந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இரண்டு ஆண்டுகள் சேவை செய்வதற்கு முன்னதான பயிற்சிகளை
மேற்கொள்வதற்காக, 34 புதிய அமெரிக்க சமாதானப் படை பயிற்சித் தொண்டர்கள்
இலங்கையை வந்தடைந்துள்ளனர்.</p><p>
எதிர்வரும் நவம்பர் மாதம் சேவை உறுதிமொழி ஏற்பதற்கு முன்பாக, இவர்கள் சிங்களம்
அல்லது தமிழ் மொழி, இலங்கைக் கலாச்சாரம் மற்றும் அமெரிக்க ஆங்கிலக் கற்பித்தல்
முறைகள் தொடர்பாகத் தீவிரப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளனர்.</p><h2>ஆங்கில கல்வி விரிவுப்படுத்தல்</h2><p>
</p><p>
சத்தியப்பிரமாண நிகழ்வுக்குப் பிறகு, இவர்கள் வட மாகாணம் மற்றும் வடமத்திய
மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் இலங்கை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன்
இணைந்து ஆங்கிலக் கல்வியை விரிவுபடுத்தப் பணியாற்றுவர்.
</p><p>
இதன் பிரகாரம் இவர்கள் உள்ளூர் குடும்பங்களுடன் இணைந்து வசிக்கவுள்ளதுடன்,
அவர்கள் சேவை செய்யும் சமூகத்தின் ஒரு அங்கமாகவும் மாறுவார்கள் என
கருத்தப்படுகிறது.
</p><p>
கொழும்பிலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில், இலங்கைக்கான
அமெரிக்க தூதுவர் எரிக் மயர் இத்தொண்டர்களை வரவேற்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5dfbc53a-81b0-40a0-b383-8b975a680c56/26-6aace68655622.webp' /></p><h2>இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பு</h2><p> </p><p>"இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான பிணைப்பு மக்கள் சார்ந்த தொடர்புகளாலேயே
கட்டியெழுப்பப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

அமெரிக்கர்களை அந்தப் பணியின் மையத்தில் நிறுத்துகிறது," எனவும் அவர்
குறிப்பிட்டார்.
</p><p>
இலங்கையில் Peace Corps சேவை 1962 ஆம் ஆண்டு தொடங்​கியது. இதுவரை 500-க்கும்
மேற்பட்ட அமெரிக்கத் தொண்டர்கள் கல்வி, சுகாதாரம், விவசாயம், சமூக மேம்பாடு
மற்றும் சுனாமி மறுவாழ்வுப் பணிகளில் இங்கு பணியாற்றியுள்ளனர்.
</p><p>
முன்னதாக 2018 ஆம் ஆண்டில் ஆங்கிலக் கல்வியை வலுப்படுத்தும் நோக்கத்துடன்
இத்திட்டம் மீண்டும் முறையாக ஆரம்பிக்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T07:23:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[125 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்! பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/125-million-worth-of-assets-frozen-1789713921"></link>
            <id>https://tamilwin.com/article/125-million-worth-of-assets-frozen-1789713921</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தி கொள்வனவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ரூ.12.5 கோடிக்கும் அதிகமான பெறுமதியுடைய ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தி கொள்வனவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ரூ.12.5 கோடிக்கும் அதிகமான பெறுமதியுடைய சொத்துக்கள் மற்றும் வாகனங்களை முடக்குவதற்கு பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>

பணச் சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த முடக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

இதன்படி, விசாரணைகள் தொடரும் நிலையில் குறித்த சொத்துக்களை 14 நாட்களுக்கு விற்பனை செய்யவோ, மாற்றம் செய்யவோ அல்லது அப்புறப்படுத்தவோ முடியாது.</p><h2>போதைப்பொருள் கடத்தல்&nbsp;</h2><p>

வத்தளையைச் சேர்ந்த ஒருவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெற்ற பணத்தைப் பயன்படுத்தி பல சொத்துக்களையும் வாகனமொன்றையும் கொள்வனவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

ரூ.9 கோடிக்கும் அதிகமான பெறுமதியுடையதாக மதிப்பிடப்பட்டுள்ள குறித்த சொத்துக்கள் செப்டெம்பர் 17, 2026 முதல் 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d808155-559d-479a-995a-1c5279bcf26d/26-6aace593379b8.webp' /></p><p>



ஹுனுப்பிட்டிய பகுதியில் 7 பேர்ச்சஸ் காணியும் இரண்டு மாடி வீடும் – ரூ.4 கோடி,
ஹுனுப்பிட்டிய, சட்டல பகுதியில் 17 பேர்ச்சஸ் காணியும் இரண்டு வீடுகளும் – ரூ.3 கோடி,
ஹுனுப்பிட்டிய, வத்தளை பகுதியில் 5 பேர்ச்சஸ் காணியும் கட்டடமொன்றும் – ரூ.50 இலட்சம்,
ஹுனுப்பிட்டிய, காந்தி மாவத்தையில் 3 பேர்ச்சஸ் காணியும் கட்டடமொன்றும் – ரூ.70 இலட்சம்,
விசேட வகை கார் – ரூ.80 இலட்சம் என்பவையே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு விசாரணையில், தணமல்வில பகுதியைச் சேர்ந்த ஒருவர் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தி ரூ.3.5 கோடி பெறுமதியான டொயோட்டா ரக ஜீப் வாகனமொன்றைக் கொள்வனவு செய்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4946786-96f2-4f65-a87f-6c57e6dd9bb4/26-6aace5926948e.webp' /></p><p>

இதன்படி, குறித்த வாகனத்தை 2026 செப்டெம்பர் 16ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு முடக்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>இதனால் வாகனத்தை விற்பனை செய்யவோ, உரிமையை மாற்றவோ அல்லது அப்புறப்படுத்தவோ முடியாது.

இரு சம்பவங்கள் தொடர்பிலும் பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T07:21:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜீவா மீனாட்சி பிரிக்க வந்த பெண்.. நடந்தது என்ன? - வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/zee-tamizhvaagai-sooda-vaa-serial-latest-episode-1789713974"></link>
            <id>https://cineulagam.com/article/zee-tamizhvaagai-sooda-vaa-serial-latest-episode-1789713974</id>
            <summary type="text">வாகை சூடவாதமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வாகை சூடவா. இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>வாகை சூடவா</h2><p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வாகை சூடவா. </p><p>இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் நடந்த பிரச்சனையில் ஜீவா அரியரை கிளியர் செய்வதாக வாக்கு கொடுத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ddda54a-4884-4740-9104-d1da0e3facc5/26-6aacde383e0ad.webp' /></p><p>
</p><p>
அதாவது அப்பத்தா நானே ஒரு டீச்சரை ஏற்பாடு செய்தேன் என்று சொல்லி ஒரு பெண்ணை ஏற்பாடு செய்கிறார். பிளாஷ்பேக்கில் வாசுதேவன் ஏற்பாடு செய்த டீச்சர் தான் அந்த பெண் எனவும் ஜீவா மீனாட்சி பிரிப்பதற்காக அனுப்பப்பட்டவர் என்பதும் தெரிய வருகிறது. </p><p>

இதனால் அப்பத்தாவின் அந்தப் பெண்ணை வீட்டுக்குள் அனுமதித்து இரண்டு பேரையும் பிரிக்கிற வேலையை நீ பார்த்துக்கோ என்று சொல்கிறார். அப்பத்தா வாண்டடாக இப்படி ஒரு விஷயம் செய்வதை நினைத்து மீனாட்சிக்கு சந்தேகம் கிளம்புகிறது. </p><p>

பிறகு டீச்சராக வந்த பெண் சிவாவை ரூமுக்குள் அழைத்துச் சென்று பாடம் சொல்லிக் கொடுப்பது போல அவனுடன் நெருங்கி பழக அதை பார்த்து மீனாட்சி பொசசிவ் கலந்த கடுப்பாகிறாள். </p><p>இதை நோட்டமிட்ட ஜீவா மீனாட்சியை மேலும் பொசசிவாக்க அந்த டீச்சர் உடன் நெருங்கி பழக மீனாட்சியை அவன் பாக்கெட்டில் தாலி ஒன்றை வைத்து விட்டு கிளம்பி செல்கிறாள். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வாகை சூடவா சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T07:20:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் முன்னிலை வகிக்கும் தீவிர வலதுசாரிக் கட்சி: வெளிநாட்டவர்கள் நிலை என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/marine-priority-french-citizens-in-public-service-1789715677"></link>
            <id>https://news.lankasri.com/article/marine-priority-french-citizens-in-public-service-1789715677</id>
            <summary type="text">Marine Le Pen has reaffirmed that national priority for French citizens for public services: அரசு வழங்கும் உதவிகளில், பிரெஞ்சுக் குடிமக்களுக்கே முன்னு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Marine Le Pen has reaffirmed that national priority for French citizens for public services: அரசு வழங்கும் உதவிகளில், பிரெஞ்சுக் குடிமக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என மரீன் லெ பென் தெரிவித்துள்ளார்.
</p><p>

பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்து யார் ஜனாதிபதியாவார் என்பது தொடர்பான கருத்துக்கணிப்புகளில், தீவிர வலதுசாரிக் கட்சியான National Rally கட்சியைச் சேர்ந்த மரீன் லெ பென்னே முன்னிலை வகிக்கிறார்.
</p><h3>
முன்னிலை வகிக்கும் தீவிர வலதுசாரிக் கட்சி
</h3><p>
இந்நிலையில், தேர்தலில் National Rally கட்சி வெற்றிபெறுமானால், பிரெஞ்சு மக்களுக்கே பிரான்ஸ் நாட்டில் முன்னுரிமை என்னும் நிலைப்பாட்டை தான் ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளார் அக்கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிற்கலாம் என எதிர்பார்க்கப்படும் மரீன் லெ பென்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76e73f8b-ac67-4c4b-8d5a-199bc80ac337/26-6aace4dec9495.webp' /></p><p>

தன் கட்சிக் கொள்கைகள் குறித்து உரையாற்றிய மரீன் லெ பென், பிரெஞ்சுக் குடிமக்கள், அவர்கள் என்ன நிறத்தில் இருந்தாலும் சரி, எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, எந்த நாட்டிலிருந்து வந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுடைய சொந்த நாடான பிரான்சில், அவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.</p><p>

குறிப்பாக, மக்களுக்கு வீடுகள் கிடைக்கும் விடயம் குறித்து பேசிய மரீன் லெ பென், பிரெஞ்சு மக்களுக்கே முன்னுரிமை என்று கூறியுள்ளார்.</p><p></p><p>
</p><p>
ஆக, பிரெஞ்சுக் குடிமக்களல்லாத வெளிநாட்டவர்களுக்கு பல சலுகைகள் மறுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
அத்துடன், வேலை விடயத்திலும், வேலைக்கு விண்ணப்பிப்பவர் எந்த நாட்டுக் குடிமகன் என பார்த்து, அந்த வேலைக்கு தகுதியான பிரெஞ்சுக் குடிமகன் இருக்கும் நிலையில், பிரெஞ்சுக் குடிமகன் அல்லாதவரை விட, பிரெஞ்சுக் குடிமகனுக்கே வேலையில் முன்னுரிமை கொடுக்கப்படும்.</p><p>

National Rally கட்சி, தீவிர புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கைகள் கொண்ட கட்சி. ஆக, அக்கட்சியைச் சார்ந்த மரீன் லெ பென் தேர்தலில் வெற்றி பெற்று பிரான்ஸ் ஜனாதிபதியாவாரானால், அதனால் வெளிநாட்டவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படலாம் என்றே கருதப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T07:17:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட முக்கிய ஆதாரம்.. திட்டவட்டமாக மறுக்கும் மொட்டுதரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-airbus-case-email-shared-1789713323"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-airbus-case-email-shared-1789713323</id>
            <summary type="text">ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் எயார்பஸ் (Airbus) ஒப்பந்தம் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்சவிற்கும் அந்நிறுவனத்திற்கும் இடையே எந்தவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் எயார்பஸ் (Airbus) ஒப்பந்தம் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்சவிற்கும் அந்நிறுவனத்திற்கும் இடையே எந்தவித மின்னஞ்சல் பரிமாற்றமும் நடைபெறவில்லை என்று சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
</p><p>
நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களிடம் பேசிய அவர், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எந்தவொரு மின்னஞ்சலிலும் நமல் ராஜபக்சவின் பெயர் இடம்பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>
சமீபத்தில் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த மின்னஞ்சல்கள் நிறுவனத்தின் சில உள்நிலை அதிகாரிகளுக்கு இடையே மட்டுமே பரிமாறப்பட்டவை என்றும், அவற்றில் நமல் ராஜபக்சவின் ஈடுபாடு அல்லது அவர் இலஞ்சம் பெற்றது குறித்த எந்தக் குறிப்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.&nbsp;</p><h2>முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள்..&nbsp;</h2><p>
ஷசீந்திர ராஜபக்சவுக்குச் சொந்தமான வங்கிக் கணக்கில் பணம் வைப்பீடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் செய்திகள் பொய்யானவை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9815bbeb-a54a-42dd-a618-8510c3b51135/26-6aace22346a76.webp' /></p><p>
</p><p>
இவ்வழக்கு தொடர்பாக இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட ஒரே முக்கிய ஆதாரம், நிமல் பெரேரா என்ற நபர் அரசாங்கத்திற்கு அளித்த வாக்குமூலம் மட்டுமே என்று சட்டத்தரணி தெரிவித்துள்ளார். </p><p>மேலும், சாட்சியச் சட்டத்தின் (Evidence Ordinance) கீழ், ஒரு குற்றத்தில் உடந்தையாக இருந்தவரின் வாக்குமூலத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஒருவரைத் தண்டிக்க முடியாது என்றும் சட்டத்தரணி மனோஜ் கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
இதற்கிடையில், அரசியல் ரீதியாக ஒடுக்கும் நோக்கத்துடன், பொதுச் சொத்துச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி நாமல் ராஜபக்சவைச் சிறையிலடைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T07:13:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வு நடவடிக்கை முறியடிப்பு: சந்தேகநபர்கள் தப்பியோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/illegal-gemstone-mining-operation-thwarted-1789714831"></link>
            <id>https://tamilwin.com/article/illegal-gemstone-mining-operation-thwarted-1789714831</id>
            <summary type="text">நோர்வூட் வனப்பகுதியில் பாரிய சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தி சட்டவிரோதமான
முறையில் மேற்கொள்ளப்பட்ட இரத்தினக்கல் அகழ்வு மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் பொல...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வூட் வனப்பகுதியில் பாரிய சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தி சட்டவிரோதமான
முறையில் மேற்கொள்ளப்பட்ட இரத்தினக்கல் அகழ்வு மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் பொலிஸாரால்
தீவிரமாக முறியடிக்கப்பட்டுள்ளன.</p><p>குறித்த நடவடிக்கை நேற்றுமுன்தினம் (16.09.2026) அதிகாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>

ஹட்டன் மூத்த காவல் கண்காணிப்பாளர் மற்றும் மண்டல ஊழல் தடுப்புப் பிரிவைச்
சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று நோர்வூட் மற்றும்
NC தேயிலைத் தோட்டப் பகுதிகள் மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர்
வழங்கும் பிரதான நீர் ஆதாரமான கெசல்கமு ஓயாவை அண்மித்த போர்ட்ரீ (Portree)
தோட்டப் பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் தேயிலைச் செடிகளை அழித்து இந்த
அகழ்வுகள் நடத்தப்பட்டு வந்தன.</p><h2>&nbsp;மாணிக்கக் கல் அகழ்வு</h2><p>

குறித்த சந்தேக நபர்கள் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு
பெரும் சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்
மேற்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a70886c-531b-4e28-8eda-c16509408737/26-6aace46f8275f.webp' /></p><p> எனினும் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர்கள்
அதிகாரிகளிடம் சிக்காமல் தப்பியோடியுள்ளனர்.

அவர்கள் மறைத்து வைத்திருந்த மாணிக்கக் கற்களை அகழ்வதற்கும், சுத்தம்
செய்வதற்கும் மற்றும் பிரித்தெடுப்பதற்கும் பயன்படுத்தும் 6 நீர் பம்பிகள்
மற்றும் மாணிக்கக் கல் அகழ்வு பணிக்குப் பயன்படுத்தப்படும் ஏராளமான உபகரணங்கள்
கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு ஹட்டன் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில்,
பேக்ஹோ இயந்திரங்களைப் பயன்படுத்தி முழுமையாக மூடப்பட்டிருந்த இந்தப் பகுதி,
மீண்டும் இரவும் பகலில் கிட்டத்தட்ட 100 பேரை வேலைக்கு அமர்த்தி இந்த
முறைகேட்டைச் செய்து வருவதாகவும், மாணிக்கக் கல் அகழ்விற்காகத் தோண்டப்பட்ட
குழிகள் இதுவரையிலும் மீள மூடப்படவில்லை என குறித்த பகுதி மக்கள் விசனம்
தெரிவிக்கின்றனர்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p> எனினும், அகழ்வு பணிகளின் பின்னர் குறித்த தோண்டப்பட்ட
குழிகள் மூடப்படாமல் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09f29851-ab68-48c9-958b-e33daf596d4b/26-6aace47068dd4.webp' /></p><p> </p><p>இதனால்
மழைக்காலங்களில் தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக இப்பகுதி மக்கள்
தெரிவிக்கின்றனர்.</p><p>

இந்தச் சம்பவம் தொடர்பாகத் தப்பி ஓடிய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T07:13:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு மீண்டும் சிறை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-rajapaksa-to-be-produced-in-court-today-1789701245"></link>
            <id>https://ibctamil.com/article/namal-rajapaksa-to-be-produced-in-court-today-1789701245</id>
            <summary type="text">புதிய இணைப்புநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌சவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு&amp;nbsp;நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அவரை எதிர்வரும் 2...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌சவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு&nbsp;நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>அதன்படி, அவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p>இதேவேளை சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நாமல் ராஜபக்ச சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள வழக்கில், அவரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><h2>இரண்டாம் இணைப்பு&nbsp;</h2><h5>சற்றுமுன்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்ச!</h5><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ச சற்றுமுன்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். </p><p>

நாமல் ராஜபக்‌ச சிறைச்சாலை அதிகாரிகளால் சிறைச்சாலைப் பேருந்தில் இன்று (18) காலை நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54276906-90ca-4b6f-9fbf-463369fbde74/26-6aacbd2f300d9.webp' /></p><h2>முதலாம் இணைப்பு</h2><h5>இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நாமல் ராஜபக்ச!</h5><p>இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று (18) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p><p>

சர்ச்சைக்குரிய எயார்பஸ் வானூர்தி கொள்வளவு தொடர்பான விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த 4 ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையானபோது நாமல் ராஜபக்சகைது செய்யப்பட்டார்.</p><p>

இந்த வழக்கில் இலஞ்சமாக 1.4 மில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான தொகை சிங்கப்பூர் வங்கிக் கணக்கொன்றில் வரவு வைக்கப்பட்டதாகவும், அதிலிருந்து 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் இலங்கை வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு&nbsp;</h2><p>

பின்னர், அந்த 8 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு நிகராக, சுமார் 10 கோடி ரூபாய் தொகையை நாமல் ராஜபக்ச பல தவணைகளில் பெற்றுக்கொண்டதாகவும் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/419789ed-9197-4378-9a7a-d0b38425c933/26-6aacb5612268f.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நிதித்தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணையில் நாமல் ராஜபக்ச சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.
</p><p>
அந்த வழக்கில், அவரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று முன்தினம் (16) உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T07:11:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் மணிக்கு 184 கி.மீ வேகத்தில் பயணித்த சாரதிக்கு கடுமையான தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/driver-fined-1918-after-being-caught-going-184-kmh-1789715462"></link>
            <id>https://canadamirror.com/article/driver-fined-1918-after-being-caught-going-184-kmh-1789715462</id>
            <summary type="text">கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில், அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட இருமடங்கிற்கும் அதிகமாக, மணித்தியாலத்திற்கு 184 கி.மீ வேகத்தில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில், அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட இருமடங்கிற்கும் அதிகமாக, மணித்தியாலத்திற்கு 184 கி.மீ வேகத்தில் காரை ஓட்டிச் சென்ற 26 வயது இளைஞரைக் கியூபெக் மாகாணப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>
வியாழக்கிழமை அதிகாலை நெடுஞ்சாலை 15 இல் போயஸ்ப்ரியாண்ட் பகுதியில் உள்ள வீதிப் புனரமைப்பு மண்டலத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. </p><p>அங்கு மணிக்கு 80 கி.மீ வேகம் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், இவர் மணிக்கு 184 கி.மீ வேகத்தில் காரைச் செலுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e36ae1d-2e8e-441e-ba0c-75bebe8fce48/26-6aace4079508e.webp' /></p><p>
குறித்த நபருக்கு 1,918 கனடிய டாலர் அபராதமும், 24 நெறிமுறைப் புள்ளிகள் குறைப்பும், சாரதி உரிமம் 90 நாட்களுக்கு இடைநிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது.
</p><p>குறித்த சாரதி மது அல்லது போதைப்பொருள் அருந்திய நிலையில் வாகனத்தை இயக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், அவரிடமிருந்து பரிசோதனை மாதிரி பெறப்பட்டுள்ளது. </p><p>
இது தொடர்பாக அவர் மீது கூடுதல் வழக்குகள் பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளது.
கியூபெக் வீதிகளில் ஏற்படும் உயிரிழப்பு விபத்துகளுக்கு அதிவேகமாக வாகனங்களை இயக்குவதே மிக முக்கியக் காரணமாக அமைகிறது என கியூபெக் மாகாணப் பொலிஸார் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T07:10:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு மீண்டும் விளக்கமறியல்! சற்றுமுன்னர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-returns-to-court-today-1789702379"></link>
            <id>https://tamilwin.com/article/namal-returns-to-court-today-1789702379</id>
            <summary type="text">புதிய இணைப்புநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>இதற்கமைய, அவரது பிணை மனு மீதான உத்தரவு அன்றைய தினம் அறிவிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>இலஞ்ச ஆணைக்குழுவின் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார மற்றும் சந்தேகநபரின் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்ட ஆலோசகர் ஷவிந்திர பெர்னாண்டோ ஆகியோரின் வாதங்களை கருத்தில்கொண்ட பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கலில் ரூ. 100 மில்லியன் இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><h2>இரண்டாம் இணைப்பு&nbsp;</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ச சற்றுமுன்னர் (18) மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று (18) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p><p>

சர்ச்சைக்குரிய எயார்பஸ் வானூர்தி கொள்வளவு தொடர்பான விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த 4 ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையானபோது நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டார்.</p><h2>எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள்</h2><p>

இந்த வழக்கில், கையூட்டலாக 1.4 மில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான தொகை சிங்கப்பூர் வங்கிக் கணக்கொன்றில் வரவு வைக்கப்பட்டதாகவும், அதிலிருந்து 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் இலங்கை வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faf784c4-ff8d-40ea-ae91-9591867a8b4c/26-6aacb36a54723.webp' /></p><p>இந்த சம்பவம் தொடர்பாக நிதித்தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணையில் நாமல் ராஜபக்ச சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.</p><p>இச்த வழக்கில் நேற்று முன்தினம் (16) நீதிமன்றில் முன்னிலையான போது அவரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T07:07:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்‌ஷ தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-remanded-again-court-oder-1789715317"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-remanded-again-court-oder-1789715317</id>
            <summary type="text">&amp;nbsp; பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத...</summary>
            <content type="html"><![CDATA[<p><a href="https://jvpnews.com/article/namal-rajapaksa-appears-in-court-in-handcuffs-1789706122" target="_blank">&nbsp; பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ</a>வை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4714471e-bd3b-4cc2-8c45-05b8524d5fdb/26-6aace3773a5ac.webp' /></p><p>பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ இன்று (18) மீண்டும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>எயார்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்யும் சம்பவத்தில் 8 இலட்சம் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாகக் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் அண்மையில் நாமல் ராஜபக்‌ஷ கைது செய்யப்பட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T07:05:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாக்ஸ் ஆபிஸில் கடும் சரிவை சந்தித்துள்ள சர்தார் 2.. 30 கோடி வசூல் வந்தாலே பெரிய விஷயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sardar-2-disaster-in-worldwide-box-office-1789702485"></link>
            <id>https://cineulagam.com/article/sardar-2-disaster-in-worldwide-box-office-1789702485</id>
            <summary type="text">Sardar 2 disaster in worldwide box office: இயக்குநர் பி.எஸ். மித்ரன் மற்றும் கார்த்தி கூட்டணியில் உருவாகி வெளிவந்த சர்தார் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Sardar 2 disaster in worldwide box office: இயக்குநர் பி.எஸ். மித்ரன் மற்றும் கார்த்தி கூட்டணியில் உருவாகி வெளிவந்த சர்தார் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில், 8 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><p> </p><h2>

சர்தார் 2
</h2><p>
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக உள்ள கார்த்தி நடிப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சர்தார். இப்படத்தை இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கியிருந்தார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து சர்தார் 2 பிரம்மாண்ட பொருட்செலவில் உருவானது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b124ecba-5bca-4f4d-8b45-cee8c7b50551/26-6aacb158526ce.webp' /></p><p></p><p>இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், யோகி பாபு, நிழல்கள் ரவி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74560d69-9ef4-4fa5-b475-317d42a2e380/26-6aacb1591073b.webp' /></p><p></p><p>ரசிகர்கள் இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை வைத்திருந்த நிலையில், அதனை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன; இதனால் பாக்ஸ் ஆபிஸில் சர்தார் 2 கடும் சரிவை சந்தித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67ea1d9d-292b-4e5a-bea5-bc7dbce6cda1/26-6aacb159c117a.webp' /></p><p></p><p>
</p><h3>
வசூல் விவரம்</h3><p>

இந்த நிலையில், 8 நாட்களில் <a href="https://cinema.dinamalar.com/news/kollywood/karthi-and-suriya-could-not-advance-to-the-first-row-why/140939" target="_blank">சர்தார் 2 </a>திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 8 நாட்களில் ரூ. 24 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. வரும் நாட்களில் இப்படம் ரூ. 30 கோடி வசூல் செய்வதே மிகப்பெரிய விஷயம் என கூறப்படுகிறது. இதன்மூலம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்துள்ளது சர்தார் 2.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dc9e88b-f716-401a-91bb-33d458b030bb/26-6aacb1c1a0047.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T07:04:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலவில் 728 அடி அகலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய பள்ளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nasa-discovered-728-foot-crater-in-moon-1789714587"></link>
            <id>https://news.lankasri.com/article/nasa-discovered-728-foot-crater-in-moon-1789714587</id>
            <summary type="text">nasa discovers 728 foot creator in moon: நிலவில் 728 அடி அகலத்திலான பாரிய பள்ளம் கண்டறியப்பட்டுள்ளது. 

நிலவில் 728 அடி அகலத்தில் பள்ளம்

நிலவின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>nasa discovers 728 foot creator in moon: நிலவில் 728 அடி அகலத்திலான பாரிய பள்ளம் கண்டறியப்பட்டுள்ளது. </p><h3>

நிலவில் 728 அடி அகலத்தில் பள்ளம்</h3><p>

நிலவின் மேற்பரப்பில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவிலான புதிய பள்ளம் ஒன்றை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கண்டறிந்துள்ளது.
</p><p>
இந்த பள்ளம் 2024 ஆம் ஆண்டிலே உருவாகியிருந்தாலும், தற்போதே இதனை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f35e613a-80d6-494a-8260-5e8ac6ffd4e5/26-6aace09e8e028.webp' /></p><p>

லூனார் ரெகனைசன்ஸ் ஆர்பிட்டர் கேமராவிலிருந்து (LROC) கிடைக்கும் தரவுகளுடன் பணிபுரியும், ராபர்ட் வாக்னர், நிலவின் மேற்பரப்பின் ஒரு பிரம்மாண்டமான வரைபடத்தை ஆய்வு செய்துகொண்டிருந்தபோது, ​​வழக்கத்திற்கு மாறான பெரிய பிரகாசமான புள்ளி ஒன்றைக் கவனித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40c26291-6b23-4922-b3b1-162f3bc3bd97/26-6aace09f53185.webp' /></p><p> 

சந்தேகிக்கப்படும் சிறுகோள் மோதலுக்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட படங்களை ஒப்பிட்டுப் பார்த்து, மோதல் நிகழ்ந்த இடத்தை கண்டறிந்துள்ளனர். </p><p>

பின்னர், LRO கேமரா அந்த இடத்தின் மீது பறந்து சென்றபோது எடுத்த ​​உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்கள், பள்ளத்தின் அளவு, வடிவம் மற்றும் சுற்றியுள்ள மோதல் சிதைவுகளை அறிய உதவியது.&nbsp;&nbsp;</p><p></p><p>

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 முதல் மே 22 வரையிலான காலகட்டத்தில் நிலவின் கிழக்கு விளிம்பில், 3 முதல் 6 மாடிக் கட்டிடம் அளவிலான ஒரு வால் நட்சத்திரம் அல்லது சிறுகோள் மோதியுள்ளது. </p><p>

இந்த மோதல் 728 அடி அகலமும் , 141 அடி ஆழமும் கொண்ட ஒரு பள்ளத்தை உருவாக்கியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7378c197-2176-4502-82bb-2357bc662207/26-6aace09dbbdbe.webp' /></p><p>

இந்தப் பள்ளம் ஏறக்குறைய 2 கால்பந்து மைதானங்களின் நீளத்திற்குப் பரவியுள்ளது எனவும், செங்குத்தாக அடுக்கப்பட்ட 3 மஞ்சள் பள்ளிப் பேருந்துகளை உள்ளடக்கக்கூடிய அளவுக்கு ஆழமாக உள்ளது என்றும் நாசா தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>இந்த மோதலால், நிலவில் தூசு மற்றும் பாறை துகள்கள் 100 கிமீ தூரத்திற்கு மேலாக பல்வேறு பகுதிகளில் தூக்கி எறியப்பட்டு உள்ளது.</p><p> 

மேலும், சூரிய மண்டலத்திலேயே இதுவரை கண்டறியப்பட்டதிலேயே மிகப்பெரிய, புதிதாக உருவான பள்ளமாக இது அறியப்படுகிறது. </p><p>

நிலவு குறித்து ஆய்வில் ஈடுபட்டு வந்த விஞ்ஞானியான டாம் மெக்கெட்சினின் நினைவாக இந்தப் பள்ளம் அதிகாரப்பூர்வமாக மெக்கெட்சின் எனப் பெயரிடப்பட்டுள்ளது. </p><p>

இந்த அளவிலான ஒரு மோதல் நிலவில் சுமார் ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறை அல்லது அதற்கும் மேலாக நிகழ்கிறது என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர்.</p><p>
மோதிய பொருள் குறித்த மேலும் விரிவான பகுப்பாய்வு செய்து அதன் விவரங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-18T06:59:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியாவில் அனோஜனின் மரண தண்டனை; கஜேந்திரகுமார் எம்பி அவசர கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sivarasa-anojan-sri-lankan-migrant-sentenced-saudi-1789708046"></link>
            <id>https://jvpnews.com/article/sivarasa-anojan-sri-lankan-migrant-sentenced-saudi-1789708046</id>
            <summary type="text">சர்ச்சைக்குரிய முகநூல் பதிவு காரணமாக&amp;nbsp; &amp;nbsp;சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் இளைஞர் சிவராசா அனோஜன் என்பவரின் தண்டனையை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்ச்சைக்குரிய முகநூல் பதிவு காரணமாக&nbsp; &nbsp;சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் இளைஞர் சிவராசா அனோஜன் என்பவரின் தண்டனையை இரத்து செய்வதற்கும், அவருக்குச் சட்டரீதியான மற்றும் இராஜதந்திர ரீதியான உதவிகளை வழங்குவதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>

இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருடன் இன்று காலை (செப்டம்பர் 18) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5efeadfd-7b81-463c-bb01-8d1f653357fb/26-6aacc71037c5f.webp' /></p><h2>சர்ச்சைக்குரிய முகநூல் பதிவு&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிவராசா அனோஜன் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ஆரம்பத்தில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டது.
</p><p>
 அதனைத் தொடர்ந்து செய்யப்பட்ட மேன்முறையீட்டின் தீர்ப்பில், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p></p><p>
</p><p>
இந்த நிலையில், அனோஜனின் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்வதற்கும், தண்டனையை இரத்துச் செய்வதற்கோ அல்லது குறைப்பதற்கோ சவூதி அரேபிய அதிகாரிகளுடன் அவசரமான இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிவிவகார அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T06:54:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[12.1 ஓவரிலேயே 146 ஓட்டங்கள் எடுத்து வெற்றி: இலங்கைக்கு எதிராக பட்லர் இமாலய சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jos-buttler-record-first-batter-15000-runs-in-t20-1789714184"></link>
            <id>https://news.lankasri.com/article/jos-buttler-record-first-batter-15000-runs-in-t20-1789714184</id>
            <summary type="text">இலங்கை அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் சாதனை படைத்தார். 

இங்கிலாந்தின் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் இலங்கைக்கு எதிரான...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் சாதனை படைத்தார். </p><p>

இங்கிலாந்தின் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் சாதனை படைத்தார்.&nbsp;</p><h2>லியாம் டாவ்ஸன்&nbsp;&nbsp;</h2><p>
இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி கார்டிஃப்பில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4fa779a-ebca-45be-8294-302279d6c394/26-6aacdfe3debb7.webp' /></p><p></p><p>
 
முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ஓட்டங்கள் எடுத்தது. நிசங்க 37 (21) ஓட்டங்களும், அசலங்கா 31 ஓட்டங்களும் எடுத்தனர். </p><p>

அபாரமாக பந்துவீசிய லியாம் டாவ்ஸன் 3 விக்கெட்டுகளும், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜேமி ஓவர்டன் தலா 2 விக்கெட்டுகளும், பேக்கர், ரஷீத் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
</p><p>
பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 12.1 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4b76678-28ac-4e21-848f-ae2f83cbb8dc/26-6aace3d50b57d.webp' /></p><p>

டாம் பான்டன் 52 (24) ஓட்டங்களும், ஜோஸ் பட்லர் 30 (16) ஓட்டங்களும், ஹாரி ப்ரூக் 23 (8) ஓட்டங்களும் விளாசினர்.&nbsp;</p><h2>ஜோஸ் பட்லர்&nbsp;சாதனை</h2><p> 

டி20யில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற இமாலய சாதனையை ஜோஸ் பட்லர் (Jos Buttler) படைத்தார். </p><p> 

கிரோன் பொல்லார்ட் 14,999 ஓட்டங்கள் குவித்ததே சாதனையாக இருந்த நிலையில், ஜோஸ் பட்லர் 15,000 ஓட்டங்கள் எடுத்து அதனை முறியடித்தார். </p><p>

இந்தப் பட்டியலில் அலெக்ஸ் ஹால்ஸ், கிறிஸ் கெய்ல், டேவிட் வார்னர், விராட் கோஹ்லி ஆகியோர் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fabe9f21-5594-4344-a535-36a9cf2bef8a/26-6aacdfe3010f5.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d6e8d56-ccf9-40da-adfc-de9529567726/26-6aace3d5ed82b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T06:50:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரதிதாசனுக்கு ஆதரவாக கனிமொழி எம்.பி-யின் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/bharathidasan-kanimozhi-tweet-viral-1789713911"></link>
            <id>https://ibctamilnadu.com/article/bharathidasan-kanimozhi-tweet-viral-1789713911</id>
            <summary type="text">கல்விக்காக இந்த 2026-லும், ஒரு மாணவர் கண்ணீர் சிந்த வேண்டிய நிலை ஏற்படுமானால், கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிலையை எட்ட நாம் மேற்கொண்ட போராட்டங்களி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்விக்காக இந்த 2026-லும், ஒரு மாணவர் கண்ணீர் சிந்த வேண்டிய நிலை ஏற்படுமானால், கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிலையை எட்ட நாம் மேற்கொண்ட போராட்டங்களின் நோக்கத்தையே தவெக அரசு சிதைத்து விட்டது என்றுதான் பொருள் என திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் கனிமொழி எம்பி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.
</p><p>
அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், தனக்காக அரசின் கல்வித்தொகை வரவில்லை என கண்ணீருடன் குற்றம்சாட்டியிருந்தார்.
</p><p>
இந்த விவகாரம் விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3201c62c-7f14-47c0-acfe-b27c9d2f5be2/26-6aacde70cd9db.webp' /><br></p><p>
</p><p>
"மாணவர் பாரதிதாசனுக்கு உறுதியளிக்கப்பட்ட கல்வி உதவித்தொகையை வழங்குவதற்கு இவ்வளவு கெடுபிடிகளை தவெக அரசு விதிப்பதற்கான தேவை என்ன? </p><p>கல்விக்காக இந்த 2026-லும், ஒரு மாணவர் கண்ணீர் சிந்த வேண்டிய நிலை ஏற்படுமானால், கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிலையை எட்ட நாம் மேற்கொண்ட போராட்டங்களின் நோக்கத்தையே இந்த அரசு சிதைத்து விட்டது என்றுதான் பொருள்.
</p><p>
அரசு தனது பொறுப்பைத் தட்டிக்கழித்தாலும், ஒரு மாணவரின் கல்விக் கனவு அரசின் பிடிவாதத்திற்குப் பலியாவதை இனியும் அனுமதிக்க முடியாது.</p><p>

என்றும், தி.மு.கழகமும் தமிழ்நாட்டு மக்களும் பாரதிதாசனின் கல்விக்கு உறுதுணையாக நிற்கும் என்றும் அண்ணன் மு.க. ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d6809e9-2dc6-4aa2-9cec-b407859db342/26-6aacde7182661.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-18T06:47:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென கடலில் விழுந்த கப்பல் மாலுமி ; விரைந்து செயற்பட்ட கடற்படையினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sailor-falls-overboard-navy-rushes-to-rescue-1789713916"></link>
            <id>https://jvpnews.com/article/sailor-falls-overboard-navy-rushes-to-rescue-1789713916</id>
            <summary type="text">கொழும்புத் துறைமுகத்திற்கு வர்த்தகக் கப்பல் ஒன்றை அழைத்து வருவதற்காக அதில் ஏற முற்பட்ட கப்பல் மாலுமி ஒருவர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானார். 

க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொழும்புத் துறைமுகத்திற்கு வர்த்தகக் கப்பல் ஒன்றை அழைத்து வருவதற்காக அதில் ஏற முற்பட்ட கப்பல் மாலுமி ஒருவர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானார்.</p><p> </p><p style="text-align: justify; ">

கொழும்புத் துறைமுகக் கட்டுப்பாட்டு அறையினால் வழங்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாக, உடனடியாகச் செயற்பட்ட கடற்படையினர், கொழும்புத் துறைமுக நுழைவாயிலுக்கு அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த P-163 கரையோர ரோந்துப் படகினைச் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82c035fa-0502-4bb5-96ed-83976d12796d/26-6aacde055be90.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அதற்கமைய, குறித்த படகின் மூலம் கடலில் விழுந்த மாலுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டு, துறைமுக செயல்பாட்டுக் கட்டுப்பாட்டுத் தளத்திற்கு அழைத்து வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இந்த விபத்து நேற்று (17) இடம்பெற்றுள்ளதாகக் கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-18T06:47:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்தடுத்த திட்டத்தை அரங்கேற்றும் சந்திரகலா.. கார்த்திக்கு காத்திருக்கும் புது சவால் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு அப்டேட்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/karthigai-deepam-sep-18-episode-details-1789714304"></link>
            <id>https://viduppu.com/article/karthigai-deepam-sep-18-episode-details-1789714304</id>
            <summary type="text">தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியல...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி ஒரு நாடகத்தை போட்டு ராஜராஜனை காப்பு கட்டு செல்ல விடாமல் தடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d4b161d-1ac7-40b0-aadc-14cc669844b9/26-6aacdf8324397.webp' /></p><p> </p><p>

அதாவது, சாமுண்டீஸ்வரி உடன் பஞ்சாயத்துக்கு வரும் ராஜராஜன் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக எந்த ஒரு விஷயத்துக்கும் இனி நான் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு இங்கிருந்து கிளம்பி வருகிறார். ராஜராஜனின் இந்த முடிவால் ஊர் மக்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.
</p><p>
அதன் பிறகு வீட்டுக்கு வந்த ராஜராஜன் எங்க அம்மா ஆசைப்பட்ட மாதிரி கும்பாபிஷேகத்துக்கு வரமாட்டேன் என்று சொல்லிட்டேன் என்று சொல்லி வருத்தப்பட இதற்கு முன்னாடி என்னை ஏமாத்திட்டு கோவிலுக்கு போனா மாதிரி இந்த முறை பண்ணுங்க நான் என்ன பண்ணுவேன் என்று தெரியாது என சாமுண்டீஸ்வரி ராஜராஜனை மிரட்டுகிறாள். 

பிறகு மயில்வாகனம் கார்த்திக்கு போன் செய்து நடந்த விஷயங்களை சொல்லி எல்லாத்துக்கும் காரணம் சந்திரகலா தான் என்று சொல்கிறான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0059d702-54be-466c-8372-0f94937f485e/26-6aacdf83cb366.webp' /></p><p> </p><p>ரேவதியை திரும்பவும் வீட்டுக்கு வர வைக்க வேண்டும் என்பதற்காக இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்காங்க என்று சொல்கிறான். 

அடுத்ததாக சிவனாண்டி சில ஆட்களை கார்த்தியின் ஆதரவாளர்கள் என்ற பெயரில் ஏவி விட்டு சாமுண்டீஸ்வரி ஊர் மக்களை தாக்க சொல்ல அவர்களின் ஊருக்கு வந்து மக்களை தாக்குகின்றனர். </p><p>

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.</p>]]></content>
            <updated>2026-09-18T06:45:00+00:00</updated>
        </entry>
    </feed>
