<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-31T08:04:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாக மமிதா பைஜு, சென்சேஷனல் இயக்குனர் படத்தில் மமிதா பைஜு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/mamitha-baiju-next-movie-with-dulquer-salmaan-1788156052"></link>
            <id>https://cineulagam.com/article/mamitha-baiju-next-movie-with-dulquer-salmaan-1788156052</id>
            <summary type="text">மமிதா பைஜுமமிதா பைஜு தான் தற்போது தென்னிந்திய சினிமாவின் சென்சேஷனல் நடிகை. இந்த இரண்டு மாதங்களிலேயே விஸ்வநாத் அண்ட் சன்ஸ், பெத்லகேம் குடும்ப யூனிட், ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மமிதா பைஜு</h2><p>மமிதா பைஜு தான் தற்போது தென்னிந்திய சினிமாவின் சென்சேஷனல் நடிகை. இந்த இரண்டு மாதங்களிலேயே விஸ்வநாத் அண்ட் சன்ஸ், பெத்லகேம் குடும்ப யூனிட், ஜனநாயகன் என பல படங்கள் இவர் நடிப்பில் வெளிவந்துவிட்டன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10fcf8a6-bc51-4840-8c0d-a8a7a56d6549/26-6a951897e3bd6.webp' /></p><p>இதில் <a href="https://www.youtube.com/watch?v=JTHZCJ8Rhxg&amp;t=2s" target="_blank">விஸ்வநாத் </a>அண்ட் சன்ஸ், பெத்லகேம் குடும்ப யூனிட் ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டாக அமைந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6bf9172-24e7-403f-a94d-91a2a9d52e8e/26-6a951897358ea.webp' /></p><p></p><h2>சென்சேஷனல் இயக்குனர்</h2><p> </p><p>

இந்நிலையில், மமிதா அடுத்து ஆவேசம் என்ற மெகா ஹிட் கொடுத்த ஜீது மாதவன் இயக்கத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/863c18de-7fd7-4350-bb56-0458f4463052/26-6a9518989e4d2.webp' /></p><p>

இது நடந்தால் கண்டிப்பாக இந்த வருடம் மமிதா வருடம்தான், ஜீது மாதவன் தற்போது சூர்யா படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T08:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் விடுமுறை நாளில் அலுவலகம் சென்ற பெண் உத்தியோகஸ்தருக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/female-government-employee-dies-in-jaffna-uduvil-1788151488"></link>
            <id>https://jvpnews.com/article/female-government-employee-dies-in-jaffna-uduvil-1788151488</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அலுவலகப் பணிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அலுவலகப் பணிக்காக அழைக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பற்ற மின் கசிவில் சிக்கி உயிரிழந்த துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

 சம்பவத்தில் உடுவில் பிரதேச செயலகத்தின் சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்த, இரண்டு பிள்ளைகளின் தாயாரான நிசாந்தன் சிந்துப்பிரியா (வயது 37) என்பவரே நேற்று (30) உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac189a9e-b511-499a-97db-35647fef5e56/26-6a9506c2485df.webp' /></p><h2>விடுமுறை நாளிலும் அலுவலகப் பணி</h2><p> </p><p>

அரச அலுவலகங்களுக்கு இடையே நடைபெறும் உற்பத்தித்திறன் போட்டியில் பங்கேற்பதற்காக, உடுவில் பிரதேச செயலகத்தை அழகுபடுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.</p><p></p><p> </p><p>

திங்கட்கிழமை போட்டிக்கான மதிப்பீடுகள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை அலுவலகத்திற்கு வருமாறு அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு வாட்ஸ்அப் (WhatsApp) ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. </p><p>

இதனையடுத்து அலுவலகத்திற்குச் சென்ற பெண் உத்தியோகத்தர், அங்கிருந்த மூலிகைத் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டுள்ளார்.</p><p></p><p> </p><p>

இதன்போது அப்பகுதியில் காணப்பட்ட பாதுகாப்பற்ற மின் கசிவு நீருடன் தொடர்புற்றதால், அவர் மீது மின்சாரம் தாக்கியிருக்கலாம் என ஆரம்பக்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>

மின்சாரம் தாக்கிய நிலையில் அவர் உடனடியாக மீட்கப்பட்டு, தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 

எனினும், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p></p><p> </p><p>

விடுமுறை நாளிலும் அலுவலகப் பணிக்காகச் சென்ற நிலையில், இளம் பெண் உத்தியோகத்தர் ஒருவர் இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தமை , சக உத்தியோகத்தர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. </p><p>
 சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T07:58:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வீடு புகுந்து அடாவடி ; தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் இராஜினாமா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rampage-house-in-jaffna-npp-member-resigns-1788163166"></link>
            <id>https://jvpnews.com/article/rampage-house-in-jaffna-npp-member-resigns-1788163166</id>
            <summary type="text">&amp;nbsp; வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன் தனது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன் தனது உள்ளூராட்சி சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். </p><p>

யாழ்ப்பாணம் நெல்லியடிப் பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டின் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தி இருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d10bd686-b9b6-4202-a936-a1781315dabb/26-6a95345fd6910.webp' /></p><h2>கைது செய்த&nbsp; பொலிஸார்&nbsp;</h2><p>அத்துடன், வீட்டு வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராக்களையும் (CCTV) குறித்த உள்ளூராட்சி சபை உறுப்பினர் தலைமையிலான கும்பல் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p> </p><p>

அது தொடர்பில் வீட்டாரால் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்தனர். </p><p>

பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.</p><p></p><p> 

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த உறுப்பினர் தனது பிரதேச சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T07:56:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்திற்கு நிதியுதவி வழங்க முன்வந்த அநுர: எச்சரிக்கை விடுத்த நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-making-false-promises-namal-1788159149"></link>
            <id>https://tamilwin.com/article/anura-making-false-promises-namal-1788159149</id>
            <summary type="text">அநுர அரசாங்கம் நாட்டு மக்களை ஏமாற்றுவதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுர அரசாங்கம் நாட்டு மக்களை ஏமாற்றுவதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேபாளத்திற்கு நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார் என்றும் இலங்கையில் மக்களை ஏமாற்றியது போன்று நேபாளத்தையும் இந்த அரசாங்கம் ஏமாற்றுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>விவசாயிகளுக்கு கூறிய பொய்யை போன்று நேபாளத்திற்கு ஒரு மில்லியன் டொலர் வழங்குவதாக கூறிய வாக்குறுதியை நிறைவேற்றாமல் விட்டுவிட வேண்டாம் என நாமல் ராஜபக்ச ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.</p><p>டித்வா புயல் ஏற்பட்ட காலத்தில் தகரம் ஒன்றிற்கு 10 லட்சம் ரூபாய் தருவதாகவும் வீட்டிற்கு 50 லட்சம் ரூபாய் தருவதாகவும் அரசாங்கம் உறுதிமொழி வழங்கியதாக அவர் நினைவூட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8ae7eb8-8410-4348-8953-54bc8409d216/26-6a9524afea737.webp' />&nbsp;&nbsp;</p><p>
இதேபோன்று நேபாளத்திற்கும் இந்த அரசாங்கம் பொய் வாக்குறுதி அளித்து விட்டதோ தெரியவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p>அரசாங்கம் தொடர்ந்தும் நாட்டு மக்களை ஏமாற்றக்கூடாது எனவும் நெல் கொள்வனவு செய்தால் அதற்கான உரிய விலையை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>நாட்டு மக்களை ஏமாற்றும் அநுர அரசாங்கம்</h2><p>
</p><p>மேலும் எரிபொருள் விலைகளை குறைப்பதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>
அரசாங்கம் எரிபொருள் விலையை குறைப்பதாகவும் வரிகளை குறைப்பதாகவும் கூறிய ஆட்சி அதிகாரத்தை பெற்றுக் கொண்ட போதிலும் நாளுக்கு நாள் வரி அதிகரித்துச் செல்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc732d0c-d76d-4b4d-a49b-4f8602834d0b/26-6a953269537ba.webp' /></p><p>
</p><p>வாழ்க்கைச் செலவு தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
அரசாங்கம் வரிகளை குறைப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சி பீடம் ஏறிய போதிலும் நாளுக்கு நாள் வரி அதிகரித்துச் செல்லும் நிலையை அவதானிக்க முடிவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
உள்நாட்டு விவசாயிகள் தொழில் முனைவோர் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T07:51:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் போராட்டத்தில் குறித்த பொதுமக்கள்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kilinochchi-protest-demands-safe-railway-gates-1788154939"></link>
            <id>https://ibctamil.com/article/kilinochchi-protest-demands-safe-railway-gates-1788154939</id>
            <summary type="text">கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகளை புணரமைக்க கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக இன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகளை புணரமைக்க கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக இன்று (31-08-2026) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>கிளிநொச்சி உமையாள் புரம் முதல் முறிகண்டி வரையான பகுதிகளில் சுமார்
35 இற்கும் மேற்பட்ட பாதுகாப்பு பற்ற கடவைகள் காணப்படுகின்றன.</p><p></p><h2>பாதுகாப்பு கடவைகள்</h2><p>
இந்த கடவைகளுக்கு பாதுகாப்பு கடவைகளை அமைக்குமாறு கோரி குறித்த போராட்டம்
இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4623d71f-104e-476f-abd0-0c7bfcae0492/26-6a95314c27417.webp' /></p><p>குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மத்த
தலைவர்கள் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள்
பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அண்மையில் தொடருந்து விபத்தில் உயிரிழந்த
மாணவியின் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.</p><p> தொடர்ந்து கிளிநொச்சி
மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் போக்குவரத்து அமைச்சரிடம் தொடருந்து திணைக்களம்
ஆகியவற்றிற்கான மகஜர்களும் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T07:50:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-minister-ravi-karunanayake-arrested-1788162627"></link>
            <id>https://jvpnews.com/article/former-minister-ravi-karunanayake-arrested-1788162627</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால்&amp;nbsp;இன்று&amp;nbsp; கைது செய்யப்பட்டார்.



விசாரணை...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால்&nbsp;இன்று&nbsp; கைது செய்யப்பட்டார்.</p><p>



விசாரணையாளர்கள் விடுத்த அழைப்பாணைக்கு இணங்க, கருணாநாயக்க இன்று காலை&nbsp; இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவிற்கு&nbsp; அழைக்கப்பட்ட நிலையில்&nbsp; &nbsp;நீண்ட&nbsp; நேர விசாரணைக்குப் பிறகு,&nbsp; &nbsp;அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23c9ff7f-93df-411f-aac1-d9598afd7504/26-6a953244d5933.webp' /></p><h2>&nbsp;தேசிய லொத்தர் சபையில்&nbsp; ஆட்சேர்ப்பு</h2><p>
</p><p>


அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறைகளுக்கு வெளியே, ஐந்து நபர்கள் தேசிய லொத்தர் சபையில் ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு, பின்னர் முன்னாள் அமைச்சரின் தனிப்பட்ட பணியாளர்களுடன் இணைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில்&nbsp;ரவி கருணாநாயக்க கைதாகியுள்ளார்.</p><p></p><p>&nbsp;கருணாநாயக்க இதற்கு முன்னர் நான்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இலஞ்ச ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டிருந்தார், ஆனால் அந்தச் சமயங்களில் அவர் ஆணைக்குழுவில் ஆஜராகவில்லை.
</p><p>


விசாரணை தொடர்பாக, இரண்டு நாட்களுக்கு முன்னர் பத்தரமுல்லவில் உள்ள ராஜமல்வத்த வீதியில் அமைந்துள்ள கருணநாயக்கவின் இல்லத்திற்கும் விசாரணையாளர்கள் சென்றிருந்தனர்.</p><p></p><p> </p><p>இருப்பினும், அந்தப் பயணத்தின்போது அவர் வீட்டில் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.



இந்த விசாரணையின் விளைவாக, இவ்விவகாரத்துடன் தொடர்புடைய மற்ற நபர்கள் மீதும் ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>அத்வேளை&nbsp; இதே விசாரணை தொடர்பாக முன்னாள் தேசிய லாட்டரி வாரியத் தலைவர் ஷர்மிளா பெரேரா கைது செய்யப்பட்டு, பின்னர் ஜூன் 30 அன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T07:47:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய் பிரதமர் வேட்பாளரா? அமைச்சரவையிலிருந்து விலகுவோம் என மிரட்டும் காங்கிரஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/congress-warn-exit-from-tvk-ministry-if-vijay-pm-1788161023"></link>
            <id>https://news.lankasri.com/article/congress-warn-exit-from-tvk-ministry-if-vijay-pm-1788161023</id>
            <summary type="text">congress threat exit from tvk ministry if vijay as pm candidate: முதல்வர் விஜய் அடுத்த பிரதமர் என தவெக அமைச்சர்கள் பேசி வரும் நிலையில், அதற்கு எதிர்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>congress threat exit from tvk ministry if vijay as pm candidate: முதல்வர் விஜய் அடுத்த பிரதமர் என தவெக அமைச்சர்கள் பேசி வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் அமைச்சரவையிலிருந்து விலகுவோம் என எச்சரித்துள்ளது.
</p><h3> 
விஜய் பிரதமர் வேட்பாளர் </h3><p>

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக்க தவெக முன்னெடுப்பு செய்வதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
</p><p>
முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டில் செய்து வரும் திட்டங்கள் எனக்கூறி பல்வேறு போலி செய்திகள் வட இந்தியாவில் சமூக ஊடக பிரபலங்களால் பரப்பப்பட்டு வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ff17c40-3ab3-43a5-85e6-2ee2e0647c71/26-6a952c0218c78.webp' /></p><p> 

இதே போல், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் வர வேண்டும் என பேசினார். 

அதனைத்தொடர்ந்து பல்வேறு தவெக அமைச்சர்களும் முதல்வர் விஜய் தான் அடுத்த பிரதமர் என பேசி வருகின்றனர். </p><p>

சமீபத்தில் தனியார் நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கணிப்பில், அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டியில், மோடி, ராகுல் காந்தியை தொடர்ந்து முதல்வர் விஜய் 3வது இடம் பிடித்தார்.&nbsp;</p><p></p><p>

அமைச்சர்களின் இந்த பேச்சு காங்கிரஸ் கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. </p><h3>

காங்கிரஸ் எச்சரிக்கை</h3><p> 

கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் ராஜேஷ் குமார், "தவெக அமைச்சர்கள் பேசும்போது எங்கள் முதல்வர் அடுத்த பிரதமர் என்றெல்லாம் சொல்கிறார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fa5189d-e4d0-4580-9a99-12c1db65f5ac/26-6a952c00a7e61.webp' /></p><p> 

வருகிற 2029 ஆம் ஆண்டு நடைபெறுகிற நாடாளுமன்ற தேர்தலில் எங்களுடைய தலைவர் ராகுல் காந்தி அடுத்த பிரதமராக வருவார்கள்.</p><p>

ஒருவேளை தமிழக வெற்றிக் கழகம் அதற்கு உடன்படாவிட்டால், காங்கிரஸ் கட்சியினுடைய இரண்டு அமைச்சர்களும் இந்த பதவியில் நீடிக்க மாட்டார்கள்" என பேசியுள்ளார். </p><p>

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "பிரதமராக வேண்டும் என்ற எண்ணமோ, நோக்கமோ முதல்வர் விஜய்க்குத் துளியளவும் கிடையாது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a505eddd-0631-428f-9029-3522b7f81c50/26-6a952c0163fa2.webp' /></p><p>அவருக்கு கனவிலும், கற்பனையிலும் கூட அப்படி ஒரு எண்ணம் தோன்றாது.

இதுபோன்று பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சர்கள், தவெகவினருக்கு முதல்வர் அறிவுறுத்த வேண்டும். </p><p>

இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் தான் தலைமை என்பதால், ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும். வேறு யாரையும் பிரதமர் வேட்பாளராக நிறுத்த முடியாது" என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T07:45:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹரியின் கோபம் போகவில்லை... நண்பர்கள் வட்டாரம் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/friends-reveal-harry-still-angry-with-other-royals-1788162247"></link>
            <id>https://news.lankasri.com/article/friends-reveal-harry-still-angry-with-other-royals-1788162247</id>
            <summary type="text">&amp;nbsp;Harry still angry with other royals: இளவரசர் ஹரி இன்னமும் ராஜ குடும்பத்தில் சிலர் மீது கோபமாகவே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


ராஜ குடும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;Harry still angry with other royals: இளவரசர் ஹரி இன்னமும் ராஜ குடும்பத்தில் சிலர் மீது கோபமாகவே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>


ராஜ குடும்பத்திலிருந்தும், பிரித்தானியாவிலிருந்தும் வெளியேறி ஆறு ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்த நிலையில், பிரித்தானிய மன்னரின் இளைய மகனான ஹரி, தன் குடும்பத்துடன் மீண்டும் பிரித்தானியா திரும்பியுள்ளார்.
</p><h3>
ஹரியின் கோபம் போகவில்லை...
</h3><p>
ஆனால், ஹரி இன்னமும் கோபமாகவே இருப்பதாக அவருடைய நண்பர் வட்டாரத்தைச் சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b7acdcd-3108-4e29-9a82-0a3ef63f34be/26-6a9530c96ab22.webp' /></p><p>
ஹரி மீண்டும் தன் குடும்பத்துடன் இணைவார், சமரசமாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ராஜ குடும்ப உறுப்பினர்கள் மீதும், பக்கிங்காம் அரண்மனை அலுவலர்கள் மீதும் கோபமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p></p><p>
தான் தன் தந்தையுடன் சமரசம் ஆவதை கெடுக்கும் வகையில் தன் தந்தையைச் சுற்றி இருக்கும் அதிகாரிகள் சிலர் செயல்பட்டுவருவதாக ஹரி ஏற்கனவே சாடியிருந்தார்.
</p><p>
இந்நிலையில், ராஜ குடும்ப உறுப்பினர்களும், பக்கிங்காம் அரண்மனை அலுவலர்களும் தன்னிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என ஹரி எதிர்பார்ப்பதாக அவரது நண்பர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T07:45:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[7 மாவட்டங்கள் பெரும் அபாயத்தில் - மக்களுக்காக அரசு சிறப்பு நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dry-spell-affects-81k-in-7-districts-1788159032"></link>
            <id>https://ibctamil.com/article/dry-spell-affects-81k-in-7-districts-1788159032</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 7 மாவட்டங்களில் உள்ள 24 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 25,647 குடும்பங்களின் 81,929 பேர் குடிநீரைப் பெற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 7 மாவட்டங்களில் உள்ள 24 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 25,647 குடும்பங்களின் 81,929 பேர் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.</p><p>

பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கும் நடவடிக்கைகள் தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலையம், மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்து தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த மத்திய நிலையத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரகீத் தனன்சூரிய தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த வறட்சியான காலநிலையால் மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>குடிநீரை விநியோகிப்பதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு</h2><p> </p><p>இதற்கு மேலதிகமாக அம்பாறை, பதுளை, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் குடிநீர் பற்றாக்குறை கடுமையாக பாதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0d6d36f-2d69-4f00-9244-e3d1b985f8b6/26-6a952e653ded9.webp' /></p><p>பாதிக்கப்பட்ட பகுதிகளில் பவுசர் வாகனங்கள் மூலம் குடிநீரை விநியோகிப்பதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.</p><p>
எதிர்வரும் காலநிலை நிலவரத்தை கருத்திற்கொண்டு, குடிநீர் பற்றாக்குறை மேலும் அதிகரித்தால் அதனை எதிர்கொள்வதற்குத் தேவையான கூடுதல் நிதி ஒதுக்கீடுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என&nbsp;சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரகீத் தனன்சூரிய தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், உடனடியாக தமது பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர் அல்லது பிரதேச செயலாளருக்கு அறிவிக்குமாறு தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலையம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T07:42:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ 2 லட்சம் கோடி... ஈரான் போரால் இந்தியா எதிர்கொண்ட இழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-paid-second-highest-1788161962"></link>
            <id>https://news.lankasri.com/article/india-paid-second-highest-1788161962</id>
            <summary type="text">During Iran conflict India paid second highest:&amp;nbsp;கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான இரண்டாவது அதிகபட்ச தொகையை இந்தியா செலவிட்டுள்ளது.அமெரிக்கா மற்றும் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>During Iran conflict India paid second highest:&nbsp;கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான இரண்டாவது அதிகபட்ச தொகையை இந்தியா செலவிட்டுள்ளது.</p><p>அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் தொடங்கப்பட்ட ஈரான் போரால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எத்தகைய பாதிப்பு மற்றும் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை CREA அமைப்பு விரிவான தரவுகளை வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d809932-bc11-43aa-b394-65bb25e76f43/26-6a952fac8b82e.webp' /></p><p>
</p><p>ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களைத் தொடர்ந்து கடந்த ஆறு மாதங்களில், புதைபடிவ எரிபொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகள் ஒவ்வொரு மாதமும் கூடுதலாக 55 பில்லியன் டொலர்களைச் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.</p><p> 1990-ஆம் ஆண்டு வளைகுடாப் போருக்குப் பிறகு ஏற்பட்ட மிக நீண்ட கால விலை அதிர்ச்சி இதுவாகும். சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளதாக ஒரு புதிய அறிக்கை தெரிவித்துள்ளது. </p><p>கடந்த ஐந்து ஆண்டுகளில் தூய்மையான ஆற்றல் துறையில் மேற்கொள்ளப்பட்ட விரிவாக்கம் இல்லாவிட்டால், புதைபடிவ எரிபொருள் இறக்குமதிக்கான செலவு 36 பில்லியன் டொலர்கள் அதிகமாக இருந்திருக்கும் என்று 'ஆற்றல் மற்றும் தூய்மையான காற்றுக்கான ஆராய்ச்சி மையம்' (CREA) தெரிவித்துள்ளது.</p><p> இக்காலகட்டத்தில், 35.5 பில்லியன் டொலர் செலவிட்ட சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தியா புதைபடிவ எரிபொருட்களுக்காகக் கூடுதலாக 22 பில்லியன் டொலரைச் செலவிட்டுள்ளது.</p><p></p><p> </p><p>அதாவது இந்தியா ரூ 2 லட்சம் கோடி அளவுக்கு அதிகமாக செலவிட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிக்கான செலவுகள் அதிகரித்திருப்பது ஏழை நாடுகளையே மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது. </p><p>மார்ச் மற்றும் ஆகஸ்ட் 2026-க்கு இடைப்பட்ட காலத்தில் அதிகத் தொகையைச் செலவிட்ட முதல் பத்து நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. </p><p>பிப்ரவரி மாதம் துவங்கிய போர் மூலம் கடந்த 6 மாதத்தில் உலக நாடுகள் சுமார் 330 பில்லியன் டொலர் தொகையை கூடுதலாக கொடுத்து எரிபொருளை வாங்கியுள்ளது. </p><p>போருக்கு முன்பு இருந்த விலை நிலையும், பிப்ரவரி மாதம் போர் துவங்கிய பின்பு ஏற்பட்ட விலை உயர்வை ஒப்பிடுகையில் ஆசிய நாடுகள் வாங்கும் எல்என்ஜி விலை சராசரியாக 75 சதவீதம் உயர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a988a05b-ef7b-4601-9e28-7a1e36c00ed5/26-6a952fad46583.webp' /></p><p> </p><p>ஐரோப்பா வாங்கும் எல்என்ஜி விலை 60 சதவீதமும், டீசல் 59 சதவீதமும், கச்சா எண்ணெய் 35 சதவீதமும் விலை அதிகரித்துள்ளது என CREA அமைப்பு கணக்கிட்டு உள்ளது. </p><p>இந்த விலை உயர்வால் உலக நாடுகள் சுமார் 330 பில்லியன் டொலர் தொகையை கூடுதலாக செலவு செய்துள்ளது. இதில் பெரும் பங்கை ஐரோப்பிய நாடுகள் செலுத்தியுள்ளது சுமார் 78 பில்லியன் டொலர் தொகையை கூடுதலாக செலவிட்டு உள்ளது. </p><p>சீனாவுக்கு அடுத்தாக உலகிலேயே அதிக கச்சா எண்ணெய் இறக்கமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கும் வேளையில் மார்ச் மாதம் நாட்டின் LNG இறக்குமதி என்பது 49 சதவீதம் குறைந்துள்ளது. </p><p>இந்த நிலையில் இந்தியா அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் எல்என்ஜி இறக்குமதி என்பது வெறும் 8 சதவீதத்தில் இருந்து 32 சதவீதம் வரையில் ஏப்ரல் மாதத்தில் அதிகரித்தது. இதன் மூலம் தற்போது இந்தியாவுக்கு அமெரிக்கா முக்கியமான எரிவாயு சப்ளையராக மாறியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T07:37:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைது செய்யப்பட்டார் ரவி கருணாநாயக்க!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mp-ravi-karunanayake-appears-before-ciaboc-1788146344"></link>
            <id>https://ibctamil.com/article/mp-ravi-karunanayake-appears-before-ciaboc-1788146344</id>
            <summary type="text">புதிய இணைப்புஇலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான&amp;nbsp;ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க க...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான&nbsp;ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>4 சந்தர்ப்பங்களில் இலஞ்ச , ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்த அழைப்புக்கு அமைய அங்கு சமூகமளிக்காது, இன்று (31) முன்னிலையான நிலையிலேயே ரவி கருணாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>பல மணிநேர விசாரணையைத் தொடர்ந்து, தொடர்ந்து விசாரணையின் ஒரு பகுதியாக அதிகாரிகள் அவரைக் கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதே விசாரணை தொடர்பில் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவி ஷர்மிளா பெரேரா கைது செய்யப்பட்டு பின்னர் ஜூன் 30 ஆம் திகதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். </p><p>

தேசிய லொத்தர் சபையின் விசேட திட்டத்திற்காகப் பணியமர்த்தப்பட்ட மூன்று ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் அளிப்பதற்காக, அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.</p><p> 

இந்த விசாரணை தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவுசெய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரவி கருணாநாயக்கவுக்கு அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அங்கு சமூகளிக்கவில்லை.</p><p></p><h2>வீட்டிற்குச் சென்ற அதிகாரிகள்</h2><p> </p><p>

இதன்காரணமாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று முன்தினம் (29) அவரது வீட்டிற்குச் சென்றிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac7f16e0-68f6-415e-b3ad-381c2f595d0d/26-6a94f5d78fc6b.webp' /></p><p> 

எனினும், அந்தச் சமயத்திலும் அவர் வீட்டில் இருக்கவில்லை என்பதுடன், தனது மகளின் திருமண ஏற்பாடுகள் காரணமாக ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு வேறொரு திகதியை வழங்குமாறு ரவி கருணாநாயக்க தனது சட்டத்தரணிகள் ஊடாகக் கோரிக்கை விடுத்திருந்தார். </p><p>

இதற்கமைய, ரவி கருணாநாயக்க இன்றைய தினம் (31) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அங்கு அவர் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/xv-PoI9u9Hk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T07:31:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 நாட்களில் உலகளவில் 'ஹாய்' திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/hi-movie-worldwide-3-days-box-office-1788156662"></link>
            <id>https://viduppu.com/article/hi-movie-worldwide-3-days-box-office-1788156662</id>
            <summary type="text">சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கால்பதித்து மாபெரும் வெற்றி பெற்ற நட்சத்திரங்களில் ஒருவர் கவின். 

இவர் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கால்பதித்து மாபெரும் வெற்றி பெற்ற நட்சத்திரங்களில் ஒருவர் கவின். </p><p>

இவர் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் 'ஹாய்'. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் ஓப்பனிங் வாரத்தில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1668e668-4789-4a6e-a151-224c146ff2cd/26-6a951af92dddd.webp' /></p><p>இந்நிலையில், 3 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. </p><p>

அதன்படி, இப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 7 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p>]]></content>
            <updated>2026-08-31T07:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டனில் குளவி கொட்டு இலக்கான 17 பேர் வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/17-people-stung-by-wasps-admitted-to-hospital-1788161337"></link>
            <id>https://tamilwin.com/article/17-people-stung-by-wasps-admitted-to-hospital-1788161337</id>
            <summary type="text">ஹட்டன் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள வனராஜ தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 17 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (31.8.2026) காலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள வனராஜ தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 17 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

இன்று (31.8.2026) காலையில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் குழு
மீது குளவிகள் தாக்கியதில் காயமடைந்த 16 பெண் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும்
ஒரு ஆண் டிக்கோயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><h2>குளவி கொட்டு&nbsp;</h2><p>

குளவி தாக்குதலில் காயமடைந்த ஒரு தோட்டத் தொழிலாளி ஊடகங்களிடம் கூறுகையில்,
ஹட்டன் காவல் பிரிவின் கீழ் உள்ள வனராஜ தோட்டத்தின் மேல் பகுதியில் உள்ள 7ஆவது
தேயிலைத் தோட்டத்தில், ஒரு மரம் மற்றும் பாறையில் கட்டப்பட்டிருந்த குளவிக்
கூட்டிற்கு அருகில் வேலை செய்து கொண்டிருந்தபோது தான் தாக்கப்பட்டதாக
தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d6d022f-2f63-4047-9aa6-fd70e8695932/26-6a952d3f6db17.webp' /></p><p>
</p><p>
குளவியால் தாக்கப்பட்ட மற்றொரு தோட்டத் தொழிலாளி கூறுகையில், புகையை உருவாக்கி
குளவிகளால் தாக்கப்பட்ட குழுவை காப்பாற்ற முயன்றபோதிலும், புகையை உருவாக்கிய
குழுவையும் குளவிகள் தாக்கியதாக தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T07:29:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ravi-mp-appeared-commissio-bribery-and-corruption-1788146384"></link>
            <id>https://tamilwin.com/article/ravi-mp-appeared-commissio-bribery-and-corruption-1788146384</id>
            <summary type="text">புதிய இணைப்புஇலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
ரவி கருணாநாயக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>ரவி கருணாநாயக்க இன்று காலை சுமார் 8.15 மணியளவில் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவிற்கு விசாரணைக்காக வருகை தந்திருந்த நிலையில், பல மணி நேர விசாரணைக்குப் பிறகு,&nbsp; அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>தேசிய லொத்தர் சபைக்கு அங்கீகரிக்கப்பட்ட பணியமர்த்தல் நடைமுறைகளுக்குப் புறம்பாக ஒப்பந்த அடிப்படையில் ஐவர் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டு, பின்னர் அவரின் தனிப்பட்ட பணியாளர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டமை தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>சற்றுமுன்னர் நடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p>தேசிய லொத்தர் சபைக்கு பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்தமை தொடர்பான விசாரணையொன்றிற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை (31) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.</p><h2>ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிப்பு</h2><p>மூன்று சந்தர்ப்பங்களில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அங்கு முன்னிலையாகவில்லை.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef81f79b-105d-4f60-b87d-d7e4b25fd357/26-6a94f5e55ec15.webp' /></p><p>இதனையடுத்து அவரிடம் வாக்குமூலம் பெற அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை அவரது வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், அவர் இருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.</p><p>தனது மகளின் திருமண ஏற்பாடுகள் காரணமாக ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு வேறொரு திகதியை வழங்குமாறு ரவி கருணாநாயக்க தனது சட்டத்தரணிகள் ஊடாகக் கோரிக்கை விடுத்திருந்தார்.&nbsp;</p><p> </p><p>இதன் பின்னர் ரவி கருணாநாயக்க எதிர்வரும் தினமொன்றில் கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T07:28:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவில் பூத்த காதல்: ரஷ்யப் பெண்ணை மணமுடித்த தமிழக இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chennai-youth-married-russian-woman-in-tiruchendur-1788161297"></link>
            <id>https://news.lankasri.com/article/chennai-youth-married-russian-woman-in-tiruchendur-1788161297</id>
            <summary type="text">Chennai youth married russian woman in tiruchendur:&amp;nbsp;சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரஷ்யப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

சென்னை மயி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Chennai youth married russian woman in tiruchendur:&nbsp;சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரஷ்யப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
</p><p>
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த உதயசங்கர் என்ற இளைஞர், ரஷ்ய பெண்ணொருவரை காதலித்து திருச்செந்தூரில் திருமணம் செய்துகொண்டார்.&nbsp;</p><h2>சீனாவில் பூத்த காதல்</h2><p>
சீனாவில் உள்ள கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றியவர் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த உதயசங்கர்.

இவரும் அதே நிறுவனத்தில் பணியாற்றிய மரியா என்ற பெண்ணும் நாட்பாக பழகியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/574d6352-fb7a-460d-b095-33fc77daa600/26-6a952d13ef90d.webp' />&nbsp;</p><p></p><p> நாளடைவில் இவர்களின் நட்பு காதலாக மாறியுள்ளது.

பின்னர் உதயசங்கர், மரியா ஜோடி தங்கள் காதல் குறித்து குடும்பத்தாரிடம் கூறி திருமணத்திற்கு சம்மதம் பெற்றுள்ளது.
</p><p>
அதனைத் தொடர்ந்து, திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயிலில் தமிழ் பாரம்பரிய முறைப்படி உதயசங்கர், மரியாவின் திருமணம் நடந்தது.&nbsp;</p><h2>'கீர்த்தனா' என சூட்டிக்கொண்ட ரஷ்யப் பெண்</h2><p>

இதில் இருவரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.</p><p> 

ரஷ்யாவைச் சேர்ந்த மரியா தனது பெயரை 'கீர்த்தனா' என சூட்டிக்கொண்டது பலரது கவனத்தை ஈர்த்தது.</p><p>

இதற்கிடையில் இந்தத் திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p> </p>]]></content>
            <updated>2026-08-31T07:27:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதம நீதியரசர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கோரி சபாநாயகருக்கு தயாசிறி கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dayasiri-calls-for-clarification-on-allegations-1788161256"></link>
            <id>https://tamilwin.com/article/dayasiri-calls-for-clarification-on-allegations-1788161256</id>
            <summary type="text">&amp;nbsp;பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தொடர்பாக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் குறித்து தெளிவுபடுத்துமாறு கோரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தொடர்பாக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் குறித்து தெளிவுபடுத்துமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு உத்தியோகபூர்வமாக கடிதம் எழுதியுள்ளார்.</p><p> 
பிரதம நீதியரசரின் குடும்பச் சொத்துக்கள், தனிப்பட்ட ஆவணங்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நஷ்டஈடு வழக்கில் அவரது பங்களிப்பு உள்ளிட்ட பல தீவிரமான குற்றச்சாட்டுகளைப் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் சபையில் முன்வைத்திருந்ததாக தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>
பிரதம நீதியரசரின் மகனுடன் தொடர்புடைய 185 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் கொழும்பிலுள்ள ஆடம்பர வீடொன்றைப் பெற்றுக்கொண்டமை.</p><h2>நீதித்துறை நடவடிக்கை</h2><p> </p><p>
சொத்து பிரகடனங்கள் மற்றும் அவற்றின் வருமான மூலங்கள் குறித்த சந்தேகங்கள்.
பிறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் உள்ளிட்ட தனிப்பட்ட ஆவணங்கள் தொடர்பில் எழுந்துள்ள கேள்விகள்.</p><p>
எக்ஸ்பிரஸ் பேர்ல் நஷ்டஈடு வழக்கு தொடர்பான நீதித்துறை நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் குறித்த கரிசனைகள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18fcf161-ba07-417d-8b24-bf69b425d8e9/26-6a952ceaeaa6d.webp' /></p><p>
குடும்பச் சொத்துக்களுக்கும் நஷ்டஈடு வழங்கும் நடைமுறைகளுக்கும் இடையே முறையற்ற செல்வாக்குச் செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தகவல்கள் என சில குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p>
இக்குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை குறித்துத் தான் எந்தவொரு முடிவிற்கும் வரவில்லை என தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.</p><h2>விசாரணை</h2><p>
</p><p>இவற்றை அலட்சியப்படுத்துவது நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் என எச்சரித்துள்ளார். </p><p>
இக்குற்றச்சாட்டுகள் உண்மை எனக் நிரூபிக்கப்பட்டால், அவை நீதித்துறையின் சுயாதீனம், ஒழுக்கநெறிகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் மீது பாரிய கேள்விகளை எழுப்பும் என்பதால், தகுதியான சுயாதீன அதிகாரசபைகளால் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/881fea96-e4bc-418d-8ecc-64b97407e5d5/26-6a952cea3e7fb.webp' /></p><p>
</p><p> மாறாக, இவை பொய்யானவை என்றால், நாடாளுமன்றத்தில் இதுபோன்று பகிரங்கமாகப் பேசப்பட்டது பிரதம நீதியரசரின் நற்பெயருக்கும் நீதித்துறையின் கண்ணியத்திற்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் என்பதால், உண்மையைத் தெளிவுபடுத்துவது மிகவும் அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>பிரதம நீதியரசரையோ அல்லது நீதித்துறையையோ அவமதிக்கும் நோக்கில் இந்தக் கோரிக்கை விடுக்கப்படவில்லை என்றும், குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனவும், பொய்யாக இருந்தால் நீதித்துறை கட்டமைப்பின் நாணயம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தனது நோக்கம் எனவும் தயாசிறி ஜயசேகர தனது கடிதத்தில் நிறைவாகக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T07:27:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய பிரதமராகும் எண்ணத்தில் முதல்வர் விஜய்..! உண்மையை உடைக்கும் வைகோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cm-vijay-becoming-the-prime-minister-vaiko-1788157096"></link>
            <id>https://ibctamil.com/article/cm-vijay-becoming-the-prime-minister-vaiko-1788157096</id>
            <summary type="text">தமிழக முதல்வர் விஜய்க்கு பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.தவெக கூட்டணியில் காங்கிரஸ் இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக முதல்வர் விஜய்க்கு பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.</p><p>தவெக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும் நிலையில், `முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமர்' எனத் தவெகவினர் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.&nbsp;இதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். </p><p>அந்தவகையில், "ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக தவெக ஏற்காவிட்டால் அமைச்சர் பதவியில் இருந்து விலகவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று தவெகவிற்கு அமைச்சர் ராஜேஷ்குமார் கடந்த (30.08.2026)&nbsp;ஆம் திகதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.</p><p></p><h2>பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும்</h2><p>தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், எதிர்காலத்தில் பிரதமராகும் நோக்கத்துடன் அரசியலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படும் கருத்துகளுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பதிலளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28b51a3b-f421-4866-b517-491bbd4db43c/26-6a952c09bed79.webp' /></p><p>அதில், ராகுல் காந்தியை பிரதமராக ஏற்றுக்கொள்ளாவிட்டால் பபதவி விலகல் செய்வோம் என்று அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்ததாக கூறப்படுவது குறித்து வைகோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், தமிழக முதல்வரின் கற்பனையில் கூட இதுபோன்ற கருத்து இருக்காது என்று தெரிவித்தார்.</p><p> அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பதை தவிர்த்து பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
</p><p>


அகில இந்திய அளவில் நடைபெறும் தேர்தலில் ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>


மேலும், காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், தொகுதி மறுவரையறை நடவடிக்கை ஜனநாயகத்திற்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்பதால் அதனை கைவிட வேண்டும் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T07:27:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[Grand Canyon பூங்காவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு; பலர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/flash-flood-at-grand-canyon-park-many-missing-1788161298"></link>
            <id>https://canadamirror.com/article/flash-flood-at-grand-canyon-park-many-missing-1788161298</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அமெரிக்காவின் கிராண்ட் கேன்யன் (Grand Canyon) தேசியப் பூங்காவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து 20-க்கும் மேற்பட்டோர் காணாமல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அமெரிக்காவின் கிராண்ட் கேன்யன் (Grand Canyon) தேசியப் பூங்காவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து 20-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகத் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

பிரைட் ஏஞ்சல் கேன்யன் மற்றும் ஃபாண்டம் ராஞ்ச் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் நடைபாலங்கள், பாறைகள் மற்றும் உலோகக் கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7cde0cc-da83-4fe5-b531-a9ba8e8d5f30/26-6a952d14469b5.webp' /></p><p>
</p><p>
இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>

மேலும், கொலராடோ ஆற்றில் இடிபாடுகள் கலந்துள்ளதால் அப்பகுதியில் படகு போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T07:25:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரித் திணைக்களத்திற்கு எதிரான வழக்கில் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-cricketers-win-tax-battle-1788159834"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-cricketers-win-tax-battle-1788159834</id>
            <summary type="text">இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு எதிராகத் தேசிய கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்த சட்டப் போராட்டத்தில் வீரர்களுக்குச் சாதகமாக மேன்முறையீட்டு நீதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு எதிராகத் தேசிய கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்த சட்டப் போராட்டத்தில் வீரர்களுக்குச் சாதகமாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p>
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழியர்களாக வீரர்களைக் கருதி, முன்நிகழ் நிபந்தனையுடன் வரி விதிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. </p><p>
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரான நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய ஆயத்தால் இன்று நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.</p><h2>உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் முயற்சி</h2><p>2024 அக்டோபரில், தேசிய கிரிக்கெட் வீரர்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ‘ஊழியர்கள்’ என வகைப்படுத்தி, அவர்களுக்கு முன் கூட்டிய தனிநபர் வருமான வரியை விதிக்க உள்நாட்டு இறைவரித் திணைக்களம் முயன்றது.</p><p>
தங்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழியர்களாகக் கருதக் கூடாது என்றும், தாங்கள் பல ஆண்டுகளாக 'சுயாதீன சேவை வழங்குநர்களாகவே' அங்கீகரிக்கப்பட்டு வந்துள்ளதாகவும் ஆண் மற்றும் பெண் கிரிக்கெட் அணிகளின் தலைவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a853aad-a0ba-4866-a3ae-8b50f63781a5/26-6a95275b4665f.webp' /></p><p> 
ஊழியர் சேமலாப நிதியம் , ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம், பணிக்கொடை, வருடாந்த விடுமுறை மற்றும் மகப்பேறு விடுமுறை போன்ற எந்தவொரு ஊழியர் சலுகைகளும் தங்களுக்கு வழங்கப்படுவதில்லை என்பதை வீரர்கள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர். </p><p>
இந்த முந்தைய திகதியிட்ட வரியை நடைமுறைப்படுத்தியதால் தங்களின் ஒப்பந்தக் கொடுப்பனவுகள் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டதாக 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்த வீரர்கள் சத்தியக் கடதாசிகள் மூலம் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.</p><h2>வீரர்கள் வரி செலுத்துவதை தவிர்க்கிறார்களா..</h2><p> </p><p>
வீரர்கள் வரி செலுத்துவதைத் தவிர்க்க முயல்கிறார்கள் என்ற தவறான கருத்து பொதுமக்களிடையே நிலவியதாகக் ஆண் கிரிக்கெட் வீரர்களின் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி நிஷான் சிட்னி பிரேமதிரத்ன குறிப்பிட்டார்.</p><p> 
வீரர்கள் வரி கட்டுவதைத் தவிர்க்கவில்லை என்றும், ஊழியர்களாகத் தவறாக வகைப்படுத்தப்பட்டு வரி வசூலிப்பதை மட்டுமே எதிர்த்து வழக்கு பதிவு செய்தார்கள் என தெளிவுபடுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1efa1638-4aee-495e-8fc6-fa6f70a06d17/26-6a952be0a2c58.webp' /></p><p> </p><p>
அண்மையில் உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் மூலம் 'விளையாட்டு வீரர்கள்' அதிகாரப்பூர்வமாக 'சுயாதீன சேவை வழங்குநர்களாக' வகைப்படுத்தப்பட்ட போதிலும், அந்தத் திருத்தம் மனுதாரர்களுக்குப் பொருந்தாது என இறைவரித் திணைக்களம் வாதிட்டது.</p><p> 
எனினும், இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இறைவரித் திணைக்களத்தின் தீர்மானத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது.</p><h2>ஆண் கிரிக்கெட் அணி சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள்</h2><p>ஆண் கிரிக்கெட் வீரர்கள் சார்பில் சட்டத்தரணிகள் ஷெனாலி டயஸ், சிதத் கஜநாயக்க ஆகியோருடன் சட்டத்தரணி நிஷான் சிட்னி பிரேமதிரத்ன முன்னிலையானார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34cf5c39-7c83-426b-a471-fd2d3bbb4815/26-6a952be15a2aa.webp' /></p><p> பெண் கிரிக்கெட் வீரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ கப்ராலுடன் விகும் ஜெயசிங்க, மணித் தசநாயக்க ஆகியோர் முன்னிலையாகினார்கள்.</p><p>
 அரசுத் தரப்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்காக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மனோஹர ஜெயசிங்க முன்னிலையாகினார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் உறுப்பினர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி குவேர டி சொய்சா முன்னிலையாகினார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T07:23:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் ; திருப்பி அடித்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-forces-attack-missile-launch-sites-iran-1788153668"></link>
            <id>https://canadamirror.com/article/us-forces-attack-missile-launch-sites-iran-1788153668</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரானின் லராக் தீவில் உள்ள இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. 

ஜூலை மாத இறுதிக்குப் பின்னர் ஈரான் மீது அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரானின் லராக் தீவில் உள்ள இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. 

ஜூலை மாத இறுதிக்குப் பின்னர் ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்ட முதல் இராணுவத் தாக்குதல் இதுவாகும்.</p><p>



ஹோர்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடிகளைப் பொருத்துவதற்கான ரொக்கெட்டுகளை ஏவ ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையினர் தயாராகி வந்ததாகக் கண்டறியப்பட்டதையடுத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2838143f-f6fd-4340-a17f-2cf69569d54c/26-6a950f45e2218.webp' /></p><h2>அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது&nbsp; தாக்குதல்&nbsp;</h2><p>


ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் காயமடைந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.</p><p> இதற்குப் பதிலடியாக ஜோர்டானிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.</p><p>


இதனிடையே, தமது வான்வெளிக்குள் நுழைந்த எட்டு ஏவுகணைகளை இடைமறித்ததாக ஜோர்டான் இராணுவம் அறிவித்துள்ளது.
</p><p>

லராக் தீவு ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் அமைந்துள்ள நிலையில், உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு போக்குவரத்தில் சுமார் 20 சதவீதம் இந்த நீர்வழியூடாக இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-31T07:21:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதாகி எட்டு மாதங்களின் பின் வெளியான வெனிசுலா முன்னாள் அதிபர் புகைப்படம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/photo-of-former-venezuelan-president-released-1788159702"></link>
            <id>https://canadamirror.com/article/photo-of-former-venezuelan-president-released-1788159702</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;அமெரிக்க காவலில் உள்ள வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, தன்னை பற்றிய புகைப்படங்களை முதன்முறையாக சமூக வலைதளங்களில் வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;அமெரிக்க காவலில் உள்ள வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, தன்னை பற்றிய புகைப்படங்களை முதன்முறையாக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். </p><p>

கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட பின்னர், சுமார் எட்டு மாதங்களுக்கு பிறகு அவர் காவலில் இருக்கும் தோற்றத்தை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3437b06b-3db8-46e5-9f55-f1c16e93b889/26-6a9526d86761a.webp' /></p><h2>நியூயார்க்கில்&nbsp; &nbsp;புரூக்ளின் மெட்ரோபாலிட்டன் தடுப்பு மையத்தில் ...</h2><p>
 
 
ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியிடப்பட்ட அந்த இரண்டு புகைப்படங்களிலும் மதுரோ சாம்பல் நிற டிராக்சூட் மற்றும் வெள்ளை நிற காலணிகள் அணிந்தபடி புன்னகையுடன் காணப்படுகிறார்.
</p><p>
 இரு கைகளாலும் வெற்றி சின்னம் காட்டும் வகையிலும் அவர் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் மெட்ரோபாலிட்டன் தடுப்பு மையத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. </p><p>

எனினும், அவை சமீபத்தில் எடுக்கப்பட்டவை அல்ல என்றும், ஜூன் 25, 2026 என்ற தேதி புகைப்படங்களில் இடம்பெற்றுள்ளது.
</p><p> 
தனது பேரக்குழந்தைகள், குழந்தைகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு அன்பையும் நம்பிக்கையையும் தெரிவிக்கும் வகையில் மதுரோ இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 தானும் தனது மனைவி சிலியா புளோரஸும் உறுதியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். </p><p>மேலும், தங்களது ஆதரவாளர்களின் பிரார்த்தனைகள் மற்றும் ஒற்றுமைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
 
மதுரோ மற்றும் அவரது மனைவி ஜனவரியில் வெனிசுலாவில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.</p><p> 

போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதம் தொடர்பான குற்றச்சாட்டுகளை அவர்கள் எதிர்கொள்கின்றனர் . எனினும் இந்த குற்றச்சாட்டுகளை மதுரோ மறுத்துள்ள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-31T07:20:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[எம்.எஸ். சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு திரைப்படம்.. ருக்மிணி வசந்த், சாய் பல்லவி இல்லை!! கமிட்டான ராஷ்மிகா மந்தனா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-rashmika-mandanna-ms-subbulakshmi-biopic-1788153769"></link>
            <id>https://cineulagam.com/article/actress-rashmika-mandanna-ms-subbulakshmi-biopic-1788153769</id>
            <summary type="text">எம்.எஸ். சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எம்.எஸ். சுப்புலட்சுமி

1916-ஆம் ஆண்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எம்.எஸ். சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>
</p><p></p><h2>எம்.எஸ். சுப்புலட்சுமி
</h2><p>
1916-ஆம் ஆண்டு பிறந்த எம்.எஸ். சுப்புலட்சுமி, தனது 10-வது வயதிலேயே எச்.எம்.வி நிறுவனத்திற்காக பாடி சாதனை படைத்தார். அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தார். இதில் இவர் நடிப்பில் வெளிவந்த மீரா என்கிற திரைப்படம் மிகவும் பிரபலமான ஒன்று.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/573f8d60-4159-4ba8-8cbe-ec6c22137c7c/26-6a950fac07f72.webp' /></p><p>புகழ்பெற்ற இந்திய கர்நாடக இசைக்கலைஞரான எம்.எஸ். சுப்புலட்சுமி, இந்தியாவின் உயரிய விருதான 'பாரத ரத்னா'வை பெற்றுள்ளார். இந்த விருதை பெற்ற முதல் இசைக்கலைஞர் இவரே. மேலும், 1954-ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதை பெற்றார். இதுமட்டுமின்றி மியூசிக் அகாடமி வழக்கு சங்கீத கலாநிதி பட்டத்தை 1968-ல் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இசை உலகில் மாபெரும் உச்சத்தில் இருந்த எம்.எஸ் அவர்கள் கடந்த 2004-ஆம் ஆண்டு தனது 88-வது வயதில் உயிரிழந்தார்.</p><h2> 

வாழ்க்கை வரலாறு
</h2><p>
எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறை சினிமா படமாக எடுக்க கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் கௌதம் தின்னூரி இயக்கப்போவதாக கூறப்படுகிறது. இவர் இதற்கு முன் தெலுங்கில் வெளிவந்த ஜெர்ஸி மற்றும் கிங்டம் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e72a52b-2768-40fa-8f4e-1d9a9b5055f6/26-6a950facb66ef.webp' /></p><p> </p><h2>சாய் பல்லவி, ருக்மிணி வசந்த்</h2><p>இப்படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடிக்க முன்னணி நடிகைகளான சாய் பல்லவி, ருக்மிணி வசந்த் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், இவர்கள் இருவரும் தற்போது இப்படத்தில் நடிக்கவில்லை என கூறப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/329131d4-d311-495f-961d-cf8d49f881a2/26-6a951027dc144.webp' /></p><h2>ராஷ்மிகா மந்தனா
</h2><p>
இந்நிலையில், நடிகை <a href="https://www.youtube.com/watch?v=javF7bnU9kc" target="_blank">ராஷ்மிகா </a>மந்தனாவை இப்படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க இறுதியாக முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற செப்டம்பர் 16-ஆம் தேதி எம்.எஸ் சுப்புலட்சுமியின் பிறந்தநாளில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8fbf598-4ae2-4f2b-aaa1-54b6a4a4dfd6/26-6a951028afb5d.webp' /></p><p> </p><p>

ஏற்கனவே இந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, எம்.எஸ். சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் புதிய உச்சத்தை அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-31T07:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாரும் வரவேண்டாம் ; மூடப்பட்ட கொழும்பு மாவட்ட நீதிமன்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/colombo-district-court-is-closed-collapsed-1788160903"></link>
            <id>https://jvpnews.com/article/colombo-district-court-is-closed-collapsed-1788160903</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் ஒரு பகுதி சனிக்கிழமை இரவில் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, இன்று (31) நீதிமன்றம் செயல்படாது என்று கொழும்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் ஒரு பகுதி சனிக்கிழமை இரவில் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, இன்று (31) நீதிமன்றம் செயல்படாது என்று கொழும்பு சட்டத்தரணிகள் சங்கம் (CLS) அறிவித்துள்ளது.
</p><p>
கொழும்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் லஹிரு வெல்கம விடுத்துள்ள அவசர அறிவிப்பின்படி, நீதிமன்ற வளாகத்திற்குள் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8217cdfb-21a0-4dc2-8097-e43a9d680321/26-6a952b88cb797.webp' /></p><h2>&nbsp;இன்று விசாரிக்கப்படவிருந்த&nbsp; &nbsp;வழக்குகள்&nbsp;செப்டம்பர் 30 இற்கு</h2><p>
</p><p>
அத்துடன் இன்று விசாரிக்கப்படவிருந்த அனைத்து வழக்குகளும் செப்டம்பர் 30, 2026 அன்று விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
</p><p>
நீதிமன்ற நடவடிக்கைகள் எவ்வாறு செயல்படும் என்பது குறித்த மேலதிக அறிவுறுத்தல்களை நீதிபதிகள் உரிய காலத்தில் வழங்குவார்கள் என்று கொழும்பு சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p></p><p>

இதற்கிடையில், இடைக்காலத் தடை உத்தரவுகளை நீடிப்பதற்கான கோரிக்கைகள் பதிவாளரிடம் விண்ணப்பிக்கப்பட்டால் ஏற்றுக்கொள்ளப்படும்.
</p><p>
பாதிக்கப்பட்ட கட்டிடத்தின் அமைப்பு நிலையற்றதாக இருக்கலாம் என எச்சரித்துள்ள கொழும்பு சட்டத்தரணிகள் சங்கம், சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் அந்த கட்டிடத்திற்குள் நுழைய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
மேலும் சூழ்நிலைக்கு ஏற்ப மேலதிக தகவல்கள் அறிவிக்கப்படும் என்று சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-31T07:18:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கான வரி விதிப்பு இரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/taxation-on-sri-lankan-cricketers-abolished-1788160299"></link>
            <id>https://jvpnews.com/article/taxation-on-sri-lankan-cricketers-abolished-1788160299</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;இலங்கை தேசிய கிரிக்கெட் வீரர்களுக்கு தனிநபர் வருமான வரி விதிக்கப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த மேன்மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;இலங்கை தேசிய கிரிக்கெட் வீரர்களுக்கு தனிநபர் வருமான வரி விதிக்கப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தின் வரி விதிப்பு தீர்மானத்தை இரத்துச் செய்து உத்தரவிட்டுள்ளது.
</p><p>


சில தேசிய கிரிக்கெட் வீரர்களால் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனுக்களை பரிசீலித்த பின்னரே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29dde563-103e-4b82-b23b-07d013792001/26-6a95292c7b0eb.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T07:08:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: தாய்மார்களின் கதறல்களுக்கு தீர்வு இல்லையே..! ஐ.நா. பிரதிநிதி கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/issue-of-enforced-disappearances-1788159562"></link>
            <id>https://tamilwin.com/article/issue-of-enforced-disappearances-1788159562</id>
            <summary type="text">வடக்கு - கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் அம்மாக்கள் தமது
உறவுகளுக்கு என்ன நடந்தது என அறியாமலே இறந்து போவது மோசமான ஒரு சம்பவம் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு - கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் அம்மாக்கள் தமது
உறவுகளுக்கு என்ன நடந்தது என அறியாமலே இறந்து போவது மோசமான ஒரு சம்பவம் என
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வலிந்து காணமல் ஆக்கப்பட்டோருக்கான
பணிக் குழு பிரதிநிதி அனா லோறினா டெல்கடிலோ பெரஸ் கவலை வெளியிட்டுள்ளார். </p><p>

நேற்று(30.08.2026) யாழ்ப்பாணம் - தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் வலிந்து காணாமல்
ஆக்கப்பட்ட உறவுகளால் ஏற்பாடு செய்த சர்வதேச வலிந்து காணாமல் போனோர் தினத்தை
முன்னிட்டு “சர்வதேச நீதியை நோக்கிய பயணம்” எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற
சர்வதேச மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>

பிள்ளைகளை இழந்த தாய்மார்களின் கதறல்கள்</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> 

 வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் அம்மாக்களின் துயரங்களை நன்கு அறிவோம்.

தமது பிள்ளைக்கு என்ன நடந்தது என அறியாமலே அம்மாக்கள் இறக்கின்ற சம்பவங்கள்
அதிகரித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், உண்மைக்கும் நீதிக்குமான தேடலில்
தளர்வு நிலை இருப்பதை மறுக்க முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1880c833-93c4-4a1b-88f1-c172ad3e983f/26-6a9527410c507.webp' /></p><p>
</p><p>

இதனை அறிந்த நாம் இலங்கையில் பாதிக்கப்பட்ட தரப்புகளுடன் இணைந்து வேலை
செய்துவருகின்ற நிலையில், இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஆட்கள்
தொடர்பில் இறுதியான எண்ணிக்கையை பெற முடியவில்லை.</p><h2>காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை</h2><p>
இலங்கையில் விடுதலைப் புலிகள் காலம் மற்றும் ஜேவிபியால் காணாமல்
ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பதிவுகளை நாம் சேகரித்து வைத்துள்ள நிலையில்,
வெள்ளை வான் காணாமல் ஆக்கப்படுதல் மற்றும் பணத்துக்காக என பல வடிவங்களில்
இலங்கையில் காணாமல் ஆக்கப்படுதல் இடம்பெற்றிருக்கின்றது.
</p><p>
வடக்கு - கிழக்கில் அரச படைகளால் காணி இழந்த மக்கள் போராடி வருகிறார்கள்,
அவர்களுடைய ஆதங்களையும் கேட்டு அளித்துள்ளேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93dccbda-9ae7-4f1c-a45f-e0bb21e663c6/26-6a952741bcda0.webp' /></p><p>
</p><p>

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் இந்த சர்வதேச மாநாடு ஆனது நாம்
அவர்களுடன் நெருக்கமாவதற்கும் இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கு
முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எமது விருப்பம்.


எமக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் மனிதாபிமான ஆணை உள்ளது, வலிந்து
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்காக அங்கத்துவ
நாடுகளை இணைக்க முடியும்.</p><p>

இதுவரை 61 ஆயிரத்து 626 வழக்குகளை பதிவு செய்துள்ள நிலையில்100 மேற்பட்ட
நாடுகளுக்கு அனுப்பியுள்ளதுடன், தொடர்ந்தும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்
தொடர்கிறது.
</p><h2>
சாட்சியங்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை..</h2><p>

முழுமையான ஆதாரங்கள் மற்றும் சாட்சிகள் இருந்தும் வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் தரவுகளை அரச அதிகாரிகள் மறைக்க முயற்சித்தமை மட்டுமல்லாது
மறைத்தும் இருக்கிறார்கள்.
</p><p>
அதன் பாதிப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட நபர்கள் உற்பட அவர்களின்
குடும்பமும் அதன் பாதிப்பை அனுபவித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc632bd1-482e-470f-aefc-6f22405ef129/26-6a95274279f41.webp' /></p><p>
</p><p>
ஆகவே, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுப்பதில்
தமது முழுமையான பங்களிப்பு தொடர்ந்து இருக்கும் என்பதை கூறிக் கொள்வதுடன், உண்மைக்கும் நீதிக்குமான தேடலில் அனைத்து தரப்பினர்களும் தமது
முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றார்.
</p><p>

இந்த மாநாட்டில் இலங்கைக்கான அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலியா தூதரகங்களைச் 
சேர்ந்த பிரதிநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன், ரவிகரன், 
ஸ்ரீநேசன் , வடக்க மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன், தமிழ் மக்கள்
கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், தமிழ் தேசிய
மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரட்னம் சுகாஸ், போராளிகள் கட்சியின்
தலைவர் வேந்தன், ஈ பி ஆர் எல் தலைவர் சுரேஷ் பிரேம சந்திரன், உட்பட
மாதகுருமார்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T07:04:01+00:00</updated>
        </entry>
    </feed>
