<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-26T13:49:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்சீனக் கடலில் சீனா திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை: ஃபிலிப்பைன்ஸ் மீது குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/china-s-sudden-encirclement-operation-south-sea-1785071451"></link>
            <id>https://tamilwin.com/article/china-s-sudden-encirclement-operation-south-sea-1785071451</id>
            <summary type="text">தென்சீனக் கடலில் தனது கடற்படை மற்றும் விமானப் படைகளை உள்ளடக்கிய வழக்கமான
சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

அதேவேளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்சீனக் கடலில் தனது கடற்படை மற்றும் விமானப் படைகளை உள்ளடக்கிய வழக்கமான
சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
</p><p>
அதேவேளை, வெளிநாடுகளுடன் இணைந்து கூட்டு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை
மேற்கொள்வதன் மூலம் அப்பகுதியின் அமைதியை ஃபிலிப்பைன்ஸ் சீர்குலைப்பதாக சீனா
குற்றம் சாட்டியுள்ளது.
</p><p>
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் தெற்குப் பிராந்தியக் கட்டளைப் பீடத்தின்
ஊடகப் பேச்சாளர் கேர்ணல் சாய் ஷிச்சென் இது குறித்துத் தெரிவிக்கையில்,
வெளிநாடுகளுடன் இணைந்து ஃபிலிப்பைன்ஸ் நடத்தும் கூட்டு சுற்றிவளைப்பு
நடவடிக்கைகள் தென்சீனக் கடல் பிராந்தியத்தின் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும்
பாதிப்பதாகக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>சீனப் படைகள்&nbsp;</h2><p>
</p><p>
நாட்டின் எல்லை இறையாண்மையையும் கடல்சார் உரிமைகளையும் சீனப் படைகள்
உறுதியாகப் பாதுகாக்கும் என்றும், பிராந்திய அமைதியை நிலைநிறுத்தும் என்றும்
அவர் மேலும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34ca4700-8ab6-4196-8e52-58d98fbc69d7/26-6a660e2e5bfa0.webp' /></p><p>

தென்சீனக் கடலின் பெரும்பகுதிக்கு சீனா உரிமை கோரி வருகிறது. இருப்பினும்,
தென்கிழக்கு ஆசிய நாடுகள் பலவும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும்
நிலையில், 2016-ஆம் ஆண்டு சர்வதேச தீர்ப்பாயம் சீனாவின் இந்த உரிமைகோரலை
நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T13:40:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இந்தியர்கள் செய்த மோசமான செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indians-in-canada-face-serious-allegation-1785070155"></link>
            <id>https://canadamirror.com/article/indians-in-canada-face-serious-allegation-1785070155</id>
            <summary type="text">கனடாவில் 1.7 டன் போதை மருந்து கடத்தியது தொடர்பாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லொறி சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.எல்லை வழியாக போதை மருந்து கடத்தல் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் 1.7 டன் போதை மருந்து கடத்தியது தொடர்பாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லொறி சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>எல்லை வழியாக போதை மருந்து கடத்தல் தொடர்பாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கனடா பொலிசார் ' புராஜக்ட் பே' என்ற பெயரில் கண்காணித்து வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0e224a4-95b4-48bd-a54c-1abb5c7b68f6/26-6a66024ca2f19.webp' /></p><p> </p><p>அதில், அமெரிக்கா மற்றும் கனடா இடையில் செல்லும் லாரிகளில் கொக்கைன், மெத்தம்பெட்டமைன் மற்றும் ஓப்பியம் போன்ற போதை மருந்துகளை கடத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>&nbsp;விண்ட்சர், லசலே, கொரூனா, பிராம்ப்டன், மார்ஹம் மற்றும் கலேடன் உள்ளிட்ட பகுதிகளிலும் நடந்த இந்த சோதனையில் 1.7 டன் போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டது. 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
</p><p>

இது தொடர்பாக ககன்தீப் திண்டல், சிம்ரன்ஜித் சிங், கன்வர்பால் குலார், ஜதிந்தர்பால் சிங், ஜஸ்விந்தர் சோஹி, தேஜ்விந்தர் சந்து, ஹர்ஜ்விந்தர் சந்து, தர்மிந்தர் சிங், கன்தீப் தரிவால், மஹப்ரீத் சிங் மற்றும் கரன்தீப் சிங் உள்ளிட்ட இந்திய வம்சாவளியினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T13:39:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[17 வயது சிறுவனுடன் தகாத உறவு ; கர்ப்பமான 19 வயது இளம்பெண் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pregnant-19-year-old-woman-arrested-suddenly-1785071450"></link>
            <id>https://jvpnews.com/article/pregnant-19-year-old-woman-arrested-suddenly-1785071450</id>
            <summary type="text">&amp;nbsp;குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஆற்றூர் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சைக்காக&amp;nbsp; மருத்துவமனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஆற்றூர் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சைக்காக&nbsp; மருத்துவமனைக்கு சென்றார்.
</p><p>
அங்கு&nbsp; அவரை பரிசோதனை செய்தபோது இளம்பெண் 8 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து டாக்டர்கள் இளம்பெண்ணிடம் கணவர் குறித்த விவரத்தை கேட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c276a61-cd6c-41e8-b227-54e6bc53be02/26-6a66075c93e8b.webp' /></p><h2>விசாரணை</h2><p> </p><p>அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.
</p><p>
இதனால் சந்தேகம் அடைந்த வைத்தியர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். அதை தொடர்ந்து மகளிர் பொலிசார் மருத்துவமனைக்கு வந்து இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.</p><p>அப்போது இளம்பெண்ணின் கர்ப்பம் குறித்து பல தகவல்கள் தெரியவந்தது.

அதாவது அந்த இளம்பெண் விமான பணியாளர்கள் தொடர்பான ஒரு ஆண்டு பட்டய படிப்புக்காக குழித்துறையில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்ந்துள்ளார்.</p><p></p><p> </p><p>அதே பாடப்பிரிவில் களியக்காவிளை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய ஒரு சிறுவனும் சேர்ந்துள்ளார். 

இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நெருக்கம் அதிகரித்து இருவரும் இளம் பெண்ணின் வற்புறுதலின் பேரில் தகாத உறவிலிருந்துள்ளனர்.</p><p>

இதன் காரணமாக இளம்பெண் கர்ப்பமானார். 

அந்த புகாரின் பேரில் இளம்பெண் மீது பொலிசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>தற்போது இளம்பெண் 8 மாத கர்ப்பிணியாக இருப்பதால் அவர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T13:38:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப்புக்கு எதிராகவும் பேச தயார்..! பிரித்தானியா பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் அதிர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/britain-s-new-prime-minister-criticizes-trump-1785068478"></link>
            <id>https://tamilwin.com/article/britain-s-new-prime-minister-criticizes-trump-1785068478</id>
            <summary type="text">பிரித்தானியாவின் தேசியப் பாதுகாப்பையும், உரிமைகளையும் பாதுகாக்க தேவைப்பட்டால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராகவும் பேச தயாராக இருப்பதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் தேசியப் பாதுகாப்பையும், உரிமைகளையும் பாதுகாக்க தேவைப்பட்டால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராகவும் பேச தயாராக இருப்பதாக 
பிரித்தானிய புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார். </p><p>


பதவியேற்ற பின்னர், சர்வதேச ஊடகமொன்று வழங்கிய நேர்காணல் ஒன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><h2>


எதிராகவும் பேச தயார்..
</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
டொனால்ட் ட்ரம்புடன் தனது முதல் தொலைபேசி உரையாடல் மிகவும் சுமுகமாக இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3503eda-5f0a-4f08-8551-d8bba1e4d878/26-6a660d6490d2d.webp' /></p><p> </p><p>

உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், சூழ்நிலைகளுக்கு ஏற்ப நாம் முடிவுகளை எடுக்க வேண்டும்.</p><p>

 பிரித்தானியாவுக்கு எது சரி என்று நான் உணரும் போதெல்லாம், ட்ரம்பின் கருத்திலிருந்து மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவும், அதனை வெளிப்படுத்தவும் தயங்க மாட்டேன்.</p><p> 

எந்தவொரு தலைவரும் முதலில் தங்களது நாட்டின் தேசிய நலன்களைப் பாதுகாக்க வேண்டும். அந்தப் பொறுப்பை முறையாக நிறைவேற்றுவதற்கு அதுவே அவசியம். 

ட்ரம்ப் ஈரானுடன் உருவாக்கியுள்ள மோதல் சூழ்நிலை கவலையளிக்கின்றது என்றார்.</p><p></p><p></p><p> 
</p>]]></content>
            <updated>2026-07-26T13:36:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுட்டுக்கொல்லப்பட்ட உணவக உரிமையாளர் ; அம்பலமான திடுக்கிடும் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/restaurant-owner-shot-dead-in-attack-1785071959"></link>
            <id>https://jvpnews.com/article/restaurant-owner-shot-dead-in-attack-1785071959</id>
            <summary type="text">பெல்லன்வில உணவக உரிமையாளரைச் சுட்டுக்கொன்ற துப்பாக்கிச்சூடு நடத்தியவர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் மி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பெல்லன்வில உணவக உரிமையாளரைச் சுட்டுக்கொன்ற துப்பாக்கிச்சூடு நடத்தியவர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் மின்னேரியா இராணுவ முகாமிலிருந்து துப்பாக்கிகளைக் கடத்திய சம்பவத்தின் சந்தேகநபர் எனத் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

பெல்லன்வில பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவரை நேற்று (25) இரவில் சுட்டுக்கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களை நவகமுவ பொது மயானத்திற்கு அருகில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b5fbb4a-24bf-4d7e-99ee-c800c0072e09/26-6a660958bd2f6.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;துப்பாக்கிச் சூடு</h2><p>
</p><p style="text-align: justify; ">
 

தெஹிவளை - பொரலஸ்கமுவ வீதியில் பெல்லன்வில நடைபாதை நுழைவாயிலுக்கு எதிரில் உள்ள உணவகத்திற்கு அருகில் நேற்று இரவு 7.45 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; ">

 

ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், குறித்த உணவக உரிமையாளரை இலக்கு வைத்துத் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

துப்பாக்கிச் சூடு நடந்த வேளையில், உணவக உரிமையாளர் உணவகத்திற்கு வெளியே சிகரெட் புகைத்துக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">
 

இதன்போது அவரது வயிற்றுப் பகுதியில் காயமேற்பட்டதையடுத்து, அவர் உணவகத்திற்குள் ஓடிச் சென்றுள்ளார்.

 

பின்னர் அவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், காயங்களின் தீவிரத்தன்மை காரணமாக உயிரிழந்தார்.
</p><p style="text-align: justify; ">
 

இவ்வாறு உயிரிழந்தவர் உணவகத்தின் உரிமையாளரான மல்லவ ஆரச்சிகே நெல்சன் சுதத் அமரசிங்க எனப்படும் 55 வயதுடைய நபராவார்.

 

நேற்று இரவே சம்பவ இடத்திற்கு வந்த பொரலஸ்கமுவ பொலிஸார், கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட பல குழுக்கள் விசாரணைகளைத் தொடங்கின.</p><p style="text-align: justify; ">

 

முதற்கட்ட விசாரணைகளில், உயிரிழந்த உணவக உரிமையாளர் 'கொஸ் மல்லி' எனப்படும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரின் உறவினர் எனத் தெரியவந்துள்ளது.

 

அதற்கமைய, கொஸ் மல்லியின் எதிர்த்தரப்பான 'சண்டோ' அல்லது 'அசங்க' என்பவர்களே இத்துப்பாக்கிச் சூட்டை வழிநடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p style="text-align: justify; ">

 

விசாரணைகளைத் தொடங்கிய பொலிஸார், துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்ற ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் குறித்த தகவல்களை ஏனைய பகுதி பொலிஸ் சோதனைக் சாவடிகளில் கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
 

அதற்கமைய, குறித்த தகவல்களுக்குப் பொருத்தமான மோட்டார் சைக்கிளும் இரு நபர்களும் நவகமுவ பகுதியில் நடமாடுவதைக் கண்ட பொலிஸ் அதிகாரிகள் அவர்களைப் பின்தொடர்ந்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

அப்போது, குறித்த இருவரும் தங்கள் மோட்டார் சைக்கிளை நவகமுவ, நிஸ்சரண சித்பிம பொது மயானத்திற்கு அருகில் நிறுத்திவிட்டு, முகமூடிகள் மற்றும் கையுறைகளைக் கழற்றிவிட்டு அவ்விடத்திலிருந்து புறப்படத் தயாராக இருந்ததைக் கண்டறிந்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

 

இரு சந்தேகநபர்களையும் கைது செய்த பொலிஸார் சோதனையிட்டபோது அவர்களிடமிருந்து 'ஐஸ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், அவர்களின் கைபேசிகளைப் பரிசோதித்தபோது பெல்லன்வில கொலை தொடர்பான குரல் பதிவுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
</p><p style="text-align: justify; ">
 

அதனைத் தொடர்ந்து கொலைச் சம்பவம் தொடர்பில் அவ்விருவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் இன்று கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மேலும் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி பெறப்படவுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-26T13:30:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 நாட்களில் உலகளவில் ஜனநாயகன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/3-days-box-office-of-jananayagan-movie-1785061243"></link>
            <id>https://viduppu.com/article/3-days-box-office-of-jananayagan-movie-1785061243</id>
            <summary type="text">பிரம்மாண்ட பொருட்செலவில் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் ஜனநாயகன்.

பல தடைகளை தாண்டி வெளிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரம்மாண்ட பொருட்செலவில் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் ஜனநாயகன்.
</p><p>
பல தடைகளை தாண்டி வெளியாகியுள்ள இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதே போல், கலவையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4e23262-b931-40f5-b786-276a6d4523f7/26-6a65df7e63cdb.webp' /></p><p>

இந்த நிலையில், 3 நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.</p><p> 

அதன்படி, 3 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 165 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கிண்ண விதிவிலக்கினால் தண்டனையிலிருந்து தப்பிய லியோனல் மெஸ்ஸி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/messi-escaped-suspension-world-cup-rule-exception-1785071462"></link>
            <id>https://tamilwin.com/article/messi-escaped-suspension-world-cup-rule-exception-1785071462</id>
            <summary type="text">அர்ஜென்டினா (Argentina) கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி, வரவிருக்கும்
மேஜர் லீக் சாக்கர் (MLS) ஆல்-ஸ்டார் போட்டியில் பங்கேற்காத போத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அர்ஜென்டினா (Argentina) கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி, வரவிருக்கும்
மேஜர் லீக் சாக்கர் (MLS) ஆல்-ஸ்டார் போட்டியில் பங்கேற்காத போதிலும், எந்தவித
இடைநீக்கம் அல்லது ஒழுங்கு நடவடிக்கையும் இன்றி தப்பியுள்ளார்.
</p><p>
வழக்கமாக எம்.எல்.எஸ் ஆல்-ஸ்டார் போட்டியில் பங்கேற்கத் தவறினால் ஒரு
போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்படும் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ளது.</p><p></p><h2>உலகக் கிண்ண விதி</h2><p>

ஆனால், 2026-ஆம் ஆண்டு சீசனுக்கு முன்பாகவே எம்.எல்.எஸ் நிர்வாகம் மற்றும்
வீரர்கள் சங்கம் (MLSPA) இடையே எட்டப்பட்ட சிறப்பு ஒப்பந்தத்தின்படி, உலகக்
கிண்ணத் தொடரின் இறுதிச் சுற்றுகள் வரை விளையாடிய வீரர்களுக்குப் போதிய ஓய்வு
மற்றும் பயிற்சியில் மீண்டும் இணைவதற்கான அவகாசம் வழங்குவது குறித்து
அணிகளுடன் பேசி முடிவெடுக்க அனுமதி அளிக்கப்பட்டது.

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09981427-2699-475a-87d1-6b186264bc34/26-6a660b5c12559.webp' /></p><p>இதன் காரணமாக, சமீபத்தில் முடிவடைந்த உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி
வரை அர்ஜென்டினா (Argentina) அணிக்காக விளையாடிய லியோனல் மெஸ்ஸி மற்றும் அவரது சக வீரர்
ரோட்ரிகோ டி போல் ஆகிய இருவருக்கும் சார்லட்டில் நடைபெறவுள்ள 30ஆவது
ஆல்-ஸ்டார் போட்டியில் இருந்து உத்தியோகபூர்வமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த 2025-ஆம் ஆண்டு போதிய மருத்துவக் காரணங்களின்றி கடைசி நேரத்தில்
போட்டியில் இருந்து விலகியதற்காக மெஸ்ஸிக்கு ஒரு போட்டித் தடை
விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த முறை முன்கூட்டியே முறைப்படி பெறப்பட்ட
விலக்கு காரணமாக ஒழுங்கு நடவடிக்கை ஏதும் இன்றி அவர் தப்பியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T13:28:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோரர்முஸ் நீரிணையில் கண்ணிவெடியில் சிக்கி சிதறியது எண்ணெய் கப்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/oil-tanker-explodes-in-strait-of-hormuz-1785071107"></link>
            <id>https://ibctamil.com/article/oil-tanker-explodes-in-strait-of-hormuz-1785071107</id>
            <summary type="text">ஈரான் நிர்ணயித்த வழித்தடத்திலிருந்து விலகிச் சென்றபோது, ஹோரர்முஸ் நீரிணையில் விதைக்கப்பட்டிருந்த கடற்படை கண்ணிவெடியில் மோதியதால் எண்ணெய் கப்பல் ஒன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் நிர்ணயித்த வழித்தடத்திலிருந்து விலகிச் சென்றபோது, ஹோரர்முஸ் நீரிணையில் விதைக்கப்பட்டிருந்த கடற்படை கண்ணிவெடியில் மோதியதால் எண்ணெய் கப்பல் ஒன்று வெடித்ததாக ஈரானிய ஊடகங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டன.</p><p>அரசு சாரா மெஹர் செய்தி நிறுவனத்தின்படி, அந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழியில் கண்ணிவெடியில் மோதுவதற்கு முன்பு, ஈரான் நிர்ணயித்த வழித்தடத்திலிருந்து அந்த எண்ணெய் கப்பல் விலகிச் சென்றதாக, நம்பகமான ஒரு வட்டாரம் டெஃபாபிரஸ் செய்தி இணையதளத்திடம் தெரிவித்துள்ளது.</p><h2>தெஹ்ரான் நிர்ணயித்த வழித்தடங்கள் மூலம் மட்டுமே அனுமதி</h2><p>

உயிரிழப்புகள், கப்பலின் அடையாளம் அல்லது சேதத்தின் அளவு குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/899d3033-07df-4baf-9006-68644ae9277c/26-6a660af68f609.webp' /></p><p>
</p><p>
ஜூன் 26 அன்று, ஹோரர்முஸ் நீரிணை வழியாகச் செல்வது தெஹ்ரான் நிர்ணயித்த வழித்தடங்கள் மூலம் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று ஈரான் எச்சரித்தது.
</p><p>

வோஷிங்டன், ஹோர்முஸ் நீரிணை வழியாகத் தடையற்ற போக்குவரத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், தெஹ்ரான் தனது கடற்கரைக்கு அருகிலுள்ள ஒரு கால்வாய் வழியாக, ஈரானால் நிர்வகிக்கப்படும் வழிசெலுத்தல் பொறிமுறையின் கீழ் கப்பல்கள் பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T13:26:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடி உதிர்வை தடுக்க உதவும் சூறை மீன்.., கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/health-benefits-of-eating-soorai-fish-in-tamil-1785049453"></link>
            <id>https://manithan.com/article/health-benefits-of-eating-soorai-fish-in-tamil-1785049453</id>
            <summary type="text">மீன் சாப்பிடுவது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.

மீன்களில் உயர்தர புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி மற்றும் பி1...</summary>
            <content type="html"><![CDATA[<p>மீன் சாப்பிடுவது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
</p><p>
மீன்களில் உயர்தர புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி மற்றும் பி12 போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
</p><p>
அந்தவகையில், குறைந்த விலையில் கிடைக்கும் சூரை மீன் ஊட்டச்சத்து நிறைந்த உணவாக கருதப்படுகிறது.
</p><p>
இந்தியப் பெருங்கடல் மற்றும் மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் சூரை மீன்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65a2b2dc-97e7-4ec3-9063-619f6736dfdc/26-6a65b2049a45f.webp' /></p><p>சூரை மீனில் அதிகளவு புரதம், வைட்டமின் டி, வைட்டமின் பி12, நியாசின், செலினியம், வைட்டமின் பி6 மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.&nbsp;</p><p>அதாவது, 85 கிராம் சூரை மீனில் சுமார் 21 கிராம் புரதம் இருப்பதாக கூறப்படுகிறது.
</p><p>
சூரை மீனில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. </p><p>

மேலும், நியாசின் மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் முடி வளர்ச்சிக்கும் பயனுள்ளதாக இருக்கும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8bc7b22-ea65-4b34-8758-7cad7b01cc6f/26-6a65b2058300f.webp' /></p><p>இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவக்கூடும் என்பதால் இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும்.</p><p>இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கண் ஆரோக்கியத்திற்கும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவக்கூடும் என கூறப்படுகிறது.
</p><p>
வஞ்சிரம் போன்ற விலை உயர்ந்த மீன்களுடன் ஒப்பிடும்போது, சூரை மீன் குறைந்த விலையில் கிடைக்கிறது.</p>]]></content>
            <updated>2026-07-26T13:23:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இத்தாலியிலிருந்து சூட்சுமமாக கொண்டுவரப்பட்ட உலோகக் கூடுகள் - இலங்கை சகோதரர்களுக்கு நேர்ந்த கதி..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/64-pigeons-rescued-from-katunayake-flight-1785071688"></link>
            <id>https://tamilwin.com/article/64-pigeons-rescued-from-katunayake-flight-1785071688</id>
            <summary type="text">கட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 64 புறாக்களை சட்டவிரோதமாக கொண்டு வர முயன்ற சகோதரர்கள் இருவருக்கு சுங்க பிரிவினரால் 5 இலட்சம் ரூபா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 64 புறாக்களை சட்டவிரோதமாக கொண்டு வர முயன்ற சகோதரர்கள் இருவருக்கு சுங்க பிரிவினரால் 5 இலட்சம் ரூபாய் தண்டப்பணம் அறிவிடப்பட்டுள்ளது.</p><p> 


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p><p>கட்டுநாயக்க&nbsp; விமான நிலையத்தில் 64 புறாக்களை சட்டவிரோதமாக கொண்டு வர இரண்டு சகோதரர்கள் முற்பட்டுள்ளனர்.</p><p></p><p> 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த 38 மற்றும் 42 வயதுடையவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p> 

இவர்கள் இத்தாலியிலிருந்து எமிரேட்ஸ் நிறுவனத்தின் EK652 விமானம் மூலம் நேற்று( 25.07.2026) சனிக்கிழமை இரவு 7:15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்துள்ளனர்.
</p><h2>
திருப்பி அனுப்பப்பட்ட புறாக்கள்</h2><p>
இதன்போது, கிரீன் சேனல் வழியூடாக வெளியேற முயன்ற நிலையில், அவர்களின் 8 பயணப் பெட்டிகளைச் சுங்க அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். அதற்குள் 12 உலோகக் கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 64 புறாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c8c4457-5a83-425c-ba88-654d69eeb290/26-6a66099091664.webp' /></p><p>
</p><p>
இவ்வாறு கைப்பற்றப்பட்ட புறாக்களின் பெறுமதி சுமார் 3,431,400 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
போதிய காற்றோட்டம் மற்றும் முறையான பராமரிப்பு இல்லாததால், கடத்தி வரப்பட்ட புறாக்களில் 8 புறாக்கள் கூண்டுகளுக்குள்ளேயே உயிரிழந்திருந்துள்ளன.</p><p>

சுங்கப் விசாரணைகளின் முடிவில், குற்றவாளியாகக் காணப்பட்ட ஒரு சகோதரருக்கு 4,00,000 ரூபாய், மற்றையவருக்கு 100,000 ரூபாய் என மொத்தம் ரூ. 5,00,000 தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

உயிருடன் மீட்டெடுக்கப்பட்ட எஞ்சிய புறாக்களை உடனடியாக மீண்டும் இத்தாலிக்கே திருப்பி அனுப்புமாறு இலங்கை சுங்கப் பிரிவினர் உத்தரவிட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T13:21:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூமிக்கு திரும்பிய Soyuz MS -28 விண்கலம்: 241 நாட்கள் வெற்றிகரமாக முடிந்த விண்வெளி பயணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/soyuz-ms-28-crew-return-back-on-earth-1785071873"></link>
            <id>https://news.lankasri.com/article/soyuz-ms-28-crew-return-back-on-earth-1785071873</id>
            <summary type="text">241 நாட்கள் விண்வெளி பயணத்தை முடித்துவிட்டு சோயுஸ் எம்.எஸ் 28 விண்கலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளது. பூமிக்கு திரும்பிய Soyuz MS -28
ரஷ்யாவின...</summary>
            <content type="html"><![CDATA[<p>241 நாட்கள் விண்வெளி பயணத்தை முடித்துவிட்டு சோயுஸ் எம்.எஸ் 28 விண்கலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளது.</p><h2> பூமிக்கு திரும்பிய Soyuz MS -28</h2><p>
ரஷ்யாவின் சோயுஸ் எம்.எஸ் 28(Soyuz MS -28) ரக விண்கலம் கஜகஸ்தானில் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது.</p><p> இந்த விண்கலத்தில் பயணம் செய்து 3 விண்வெளி வீரர்களும் பத்திரமாக பூமிக்கு திரும்பியுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை நாசா அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f414c54d-2cc2-4979-9d90-484d76431f41/26-6a66090361249.webp' /></p><p>கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் 27ம் திகதி நாசா விண்வெளி வீரர் கிரிஸ் வில்லியம்ஸ் மற்றும் ரஷ்யாவின் ரோஸ்காஸ்மாஸ் விண்வெளி வீரர் செர்கெய் குட் ஸ்வெர்ச்ச்கோவ், செர்கெய் மிகாயேவ் ஆகியோர் சோயுஸ் எம்.எஸ் 28 விண்கலத்தில் தங்களது விண்வெளி பயணத்தை தொடங்கினர்.</p><p></p><p> கிட்டத்தட்ட 241 நாட்களுக்கு பிறகு இவர்களின் விண்வெளிப் பயணம் வெற்றிகரமாக தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Soyuz MS-28 lands in Kazakhstan, ending its 8 month long mission <a href="https://t.co/LvQfl9JZzq">https://t.co/LvQfl9JZzq</a> <a href="https://t.co/dA38TSgCuo">pic.twitter.com/dA38TSgCuo</a></p>&mdash; afec7032 🇷🇺 (@afec7032) <a href="https://x.com/afec7032/status/2081325865179214191?ref_src=twsrc%5Etfw">July 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2> படைத்துள்ள சாதனை</h2><p>விண்வெளி வீரர் குழுவினர் தங்களது 241 நாள் விண்வெளி பயணத்தில் 3,856 முறை பூமியின் சுற்றுவட்டப் பாதையை சுற்றி வந்துள்ளனர்.</p><p> குழுவினர் கிட்டத்தட்ட 102 மில்லியன் மைல்களுக்கு மேல் கடந்து பயணம் செய்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-26T13:18:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சகித்துக்கொள்ள முடியாதவை: சுட்டு வீழ்த்திய விமானி - கொந்தளித்த ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/romania-shoot-down-russia-drone-president-angry-1785071003"></link>
            <id>https://news.lankasri.com/article/romania-shoot-down-russia-drone-president-angry-1785071003</id>
            <summary type="text">ரஷ்யாவின் மூன்றாவது ட்ரோன் விமானத்தை ரோமேனியா சுட்டு வீழ்த்தியது.டானூப் நதிக்கு அப்பால்&amp;nbsp;

ரோமேனியா, உக்ரைனுடன் 650 கிலோமீற்றர் நில எல்லையைப் பக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவின் மூன்றாவது ட்ரோன் விமானத்தை ரோமேனியா சுட்டு வீழ்த்தியது.</p><h2>டானூப் நதிக்கு அப்பால்&nbsp;</h2><p>

ரோமேனியா, உக்ரைனுடன் 650 கிலோமீற்றர் நில எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.</p><p> 

 </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10a4f4b7-e04a-4b02-9469-74afde9d5b78/26-6a66093806be4.webp' />&nbsp;</p><p></p><p>நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யாவின் தாக்குதல் நடப்பதில், அதன் விமானங்கள் வான்வெளியை மீண்டும் மீண்டும் மீறி வந்துள்ளன.</p><p>இந்த நிலையில், டானூப் நதிக்கு அப்பால் உள்ள உக்ரேனிய துறைமுகங்கள் மீதான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தி வரும்போது, கருங்கடலுக்கு மேலே பறந்த ட்ரோன் விமானத்தை ரோமேனிய இராணுவம் சுட்டு வீழ்த்தியது.
</p><h2>
ஜனாதிபதி நிகுசர் டான்</h2><p>வெள்ளிக்கிழமை வரை ரோமேனியா எந்த ட்ரோன் விமானத்தையும் அழிக்காத நிலையில், ரோமேனிய விமானி ஒருவர் மக்கள் வசிக்காத பகுதியில் ஒன்றை பாதுகாப்பாக வீழ்த்தினார். </p><p>

இதன்மூலம் மொத்தமாக மூன்று நாட்களில் 3 ட்ரோன் விமானங்களை ரோமேனியா வீழ்த்தியுள்ளது.
</p><p>
ரோமேனிய ஜனாதிபதி நிகுசர் டான், "நேட்டோ உறுப்பு நாட்டின் வான்வெளியை தொடர்ச்சியாக மீறி வரும் செயல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த மீறல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை மற்றும் சகித்துக்கொள்ள முடியாதவை" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cde982a7-4d71-4209-99d2-e6bd9ba75de5/26-6a660938d279a.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40472bc7-e266-4597-a26e-19ed27c07f6b/26-6a660b4a275bd.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T13:17:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[தித்திக்கும் சுவையில் தேங்காய் போளி.., எப்படி செய்வது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/coconut-poli-recipe-in-tamil-1785070934"></link>
            <id>https://news.lankasri.com/article/coconut-poli-recipe-in-tamil-1785070934</id>
            <summary type="text">போளி தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் தேங்காய் போளி இலகுவாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>போளி தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி.
</p><p>அந்தவகையில், தித்திக்கும் சுவையில் தேங்காய் போளி இலகுவாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.</p><p></p><h2>



தேவையான பொருட்கள்</h2><ul><li>
மைதா- 250g
</li><li>உப்பு- 1 சிட்டிகை</li><li>
மஞ்சள் தூள்- 1 சிட்டிகை</li><li>
நல்லெண்ணெய்- 100ml
</li><li>வெல்லம்- 75g
</li><li>தேங்காய்- 1
</li><li>ஏலக்காய் தூள்- 1 சிட்டிகை
</li><li>சுக்கு தூள்- 1 சிட்டிகை</li><li>
நெய்- 1 ஸ்பூன்</li></ul><h2>செய்முறை
</h2><p>முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, மஞ்சள் தூள், நல்லெண்ணெய் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிணைந்துகொள்ளவும்.
</p><p>
பின் ஒரு வாணலில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதித்ததும் அதில் வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சவும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5b88e78-6bbf-4ae8-bedb-2fda5bd744fa/26-6a660558ade00.webp' /></p><p>அடுத்து இதில் தேங்காய் துருவல், ஏலக்காய் தூள், சுக்கு தூள், உப்பு சேர்த்து வதக்கி கெட்டியாகி வந்ததும் இதனை ஆறவைக்கவும்.</p><p>

இதனைதொடர்ந்து பிணைந்து வைத்து மாவை உருண்டையாக உருட்டி அதனுள் வெல்லப்பாகில் வதக்கிய தேங்காயை வைத்து வட்டமாக தேய்க்கவும்.
</p><p>
பின்னர் இதை தவாவில் மிதமான தீயில் நெய் விட்டு சுட்டு எடுத்தால் சுவையான தேங்காய் போளி தயார்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T13:02:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[விவசாயிகளை இழிவுபடுத்தும் அரசாங்கம் ஒருநாள் வீட்டுக்கு அனுப்பப்படும் - சஜித் முழக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opposition-leader-sajith-in-anuradhapura-1785070078"></link>
            <id>https://tamilwin.com/article/opposition-leader-sajith-in-anuradhapura-1785070078</id>
            <summary type="text">விவசாயிகளை இழிவுபடுத்தும் தற்போதைய அரசாங்கத்தை ஒருநாள் வீட்டுக்கு அனுப்பப்போவதும்
இந்த விவசாயிகள்தான் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>விவசாயிகளை இழிவுபடுத்தும் தற்போதைய அரசாங்கத்தை ஒருநாள் வீட்டுக்கு அனுப்பப்போவதும்
இந்த விவசாயிகள்தான் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
</p><p>
அநுராதபுரம் மாவட்டம், மிஹிந்தலை தேர்தல் தொகுதி, நாச்சியாதீவு பிரதேசத்தில்
நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று நெற்செய்கை உள்ளிட்ட விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள மக்கள் பெரும்
அதிர்ச்சிக்குள்ளாகி பல்வேறு அநீதிகளை எதிர்கொண்டு வருகின்றனர். பல சவால்கள்
மற்றும் துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் இவர்கள், பிள்ளைகளின்
கல்விக்குக் கூட வலுவூட்ட முடியாதவாறு தற்போதைய அரசு விவசாயத்தை அழிக்கும்
கொள்கையில் ஈடுபட்டுள்ளது.</p><p></p><h2>தரமற்ற உரம்</h2><p>

நகைநட்டுக்களை அடகு வைத்து, வட்டிக்குப் பணம் பெற்று விவசாயத்தைத்
தொடங்கினாலும், இன்று விவசாயத்துக்குத் தேவையான தரமான விதைநெல் இல்லை. உரிய
நேரத்தில் உர மானியமும் கிடைப்பதில்லை. கிடைக்கும் உரமும் தரமற்றதாகக்
காணப்படுகின்றது. விவசாய இரசாயனங்கள், உரம் மற்றும் விவசாய உபகரணங்களின்
விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
</p><p>
விவசாயியை இவர்கள் கடவுள் என்று கூறினாலும், விவசாய உபகரணங்களுக்கு அரசாங்கம்
வட் வரியை விதித்து வருகின்றது.

யானை - மனித மோதல் உள்ளிட்ட பல சிக்கல்களுக்கு மத்தியில் அறுவடை செய்தாலும்,
அவ்வாறு பெறப்படும் அறுவடைக்கு நியாயமான நிலையான குறிப்பிட்ட விலை
கிடைப்பதில்லை. இன்று ஒரு கிலோகிராம் நெல் உற்பத்தி செய்வதற்கு 137 ரூபா செலவாவதாக
விவசாய அமைச்சரே கூறிவிட்டு, நிலையான விலையை 120 ரூபாவாக ஆக்கியுள்ளார். </p><p>இந்த
அரசின் அமைச்சர்களுக்குத் தேர்தல் காலத்தில் விவசாயி ராஜாவாகத் தெரிந்தாலும்,
தேர்தலின் பின்னர் விவசாயிகள் நட்டமடைய வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர்.

அன்று 5000 ரூபா உரம் வேண்டாம் என்று கூறி அநுரகுமார திஸாநாயக்கவை
ஜனாதிபதியாக்கி இறுதியில் விவசாயிகள் துயரப்படுகின்றனர். அரசின் திறைசேரியில்
பணம் நிரம்பியிருந்தும் உரிய நிவாரணங்களை விவசாயிகளுக்குப் பெற்றுக்கொடுக்க
நடவடிக்கை எடுக்கவில்லை.</p><p></p><h2>இறக்குமதி செய்யப்பட்ட அரிசி</h2><p> </p><p>விவசாயியை கடவுள் என்று கூறி அதிகாரத்தைக்
கைப்பற்றிவிட்டு, இன்று விவசாயியைக் 'கசிப்புக்காரன்' என அரசு கூறி வருகின்றது.

இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி அங்கு வேலையின்றி அவதியுறும் இளைஞர்களைக்
'கரையான்கள்' என அழைத்தமையால், இளைஞர்கள் ஒன்றிணைந்து கரப்பான் பூச்சி மக்கள்
கட்சியை ஆரம்பித்து மேற்கொண்ட புரட்சி புதுடில்லி வரை வந்த காரணத்தால்
இந்தியக் கல்வி அமைச்சர் வேலையை விட்டு சென்றுள்ளதை போல், நமது நாட்டு
விவசாயிகளை 'கசிப்புக்காரன்' என அழைக்கும், செயற்கை விவசாயிகள் என அவமதிக்கும்
இந்த அரசாங்கத்தின் முடிவை இந்த விவசாய சமூகமே ஒருநாள் தீர்மானிக்கும்.
</p><p>
இன்று நெற்களஞ்சியங்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியால்
நிறைந்துபோயுள்ளன. நிலையான விலையைப் பேணிப் பாதுகாப்பதற்கு நுண், சிறிய
மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களைப் பாதுகாக்க வேண்டும். இன்று அவர்கள்
கடன் செலுத்தாதோர் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால், இந்தச் சிறிய
அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும்.</p><p>
உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாப்பதாகக் கூறிய இந்த அரசு வெளிநாடுகளிலிருந்து
அரிசியை இறக்குமதி செய்து இங்குள்ள களஞ்சியங்களை நிரப்பியுள்ளது.

பெலவத்த கட்சி அலுவலகமே இன்று அரசின் சகல பதவிகளையும் தீர்மானித்து
வருகின்றது. இன்று விவசாய அமைச்சரால் விவசாயிகளைச் சந்திக்க முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது. இவர்கள் ஆரம்பம் முதலே விவசாய சங்கங்கள், இளைஞர் கழகங்கள்,
சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்கான உறுப்புரிமைகள் மற்றும் பதவிகள் என
சகலதையும் பெலவத்த கட்சி அலுவலகத்திலிருந்தே தீர்மானித்து வந்தனர்.</p><p></p><h2>நியாயமான விலையில் மூலதனம்</h2><p>
</p><p>எல்லாவற்றையும் பெலவத்த அரசியலுக்கு உட்படுத்தவே இந்த அரசாங்கம் முற்பட்டு
வருகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தி அரசின் கீழ் விவசாயிகளை நவீன தொழில்நுட்பத்தால்
வலுப்படுத்தி, சிறிய பரப்பளவிலான காணியிலிருந்து அதிக அறுவடையைப் பெறத்
தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருவதுடன், நியாயமான விலையில் மூலதனத்தையும்
பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம்.
</p><p>
அன்று ஜே.ஆர். ஜயவர்தனவின் காலத்தில் விவசாயக் கடன் வழங்கப்பட்ட போதிலும்,
இப்போது அந்தக்கடன் வசதிகள் வழங்கப்படுவதில்லை. கிராமத்திலுள்ள வட்டி
வியாபாரிகளே இன்று விவசாயக் கடன்களை வழங்கி வருகின்றனர். ஆகவே, சொந்த காலில்
நின்று விவசாயத்தை மேற்கொள்ள மூலதனத்தையும் நிதிசார் பக்கபலத்தையும்
பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்றும் கூட விவசாயிக்காக ஐக்கிய மக்கள் சக்தியே தொடர்ச்சியாகக் குரல்
கொடுத்து வருகின்றது.
</p><p>
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் விவசாயிகளுக்காகவும், விவசாயிகளின் உரிமைகள்
மற்றும் நிலையான விலைக்காகவும் ஐக்கிய மக்கள் சக்தியே குரல் கொடுத்தது.
அதனால்தான் இன்றும் மக்கள் தமது பிரச்சினைகளை எதிர்க்கட்சித் தலைவரிடம்
முன்வைத்து வருகின்றனர். அதிகாரம் இல்லாவிட்டாலும் இன்றும் எதிர்க்கட்சியில்
இருந்துகொண்டு மக்களுக்குச் சேவை செய்வது ஐக்கிய மக்கள் சக்தியே என்றார்.</p>]]></content>
            <updated>2026-07-26T13:01:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி விவகாரத்தில் மௌனம் ஏன்..! தட்டிக் கேட்காத அரசியல் தலைவர்களை தரகரென விமர்சித்த கருணாநிதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/controversy-over-the-chemmani-burial-ground-1785070639"></link>
            <id>https://tamilwin.com/article/controversy-over-the-chemmani-burial-ground-1785070639</id>
            <summary type="text">செம்மணியில் கண்டெடுக்கப்பட்டுள்ள என்புத் தொகுதிகள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் மோசமான கருத்துகளுக்கு தமிழ் அரசியல் தலைவர்களும் பொறுப்புக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணியில் கண்டெடுக்கப்பட்டுள்ள என்புத் தொகுதிகள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் மோசமான கருத்துகளுக்கு தமிழ் அரசியல் தலைவர்களும் பொறுப்புக்கூற வேண்டும் என எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார்.</p><p>

லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>

செம்மணி மனிதப் புதைக்குழி விவகாரத்தில் தற்போது அதிகாரத்தில் உள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் அமைதியாக இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

அதிகாரத்தைப் பெற்ற பின்னரும், சிங்கள அரசியல் தலைமையின் பிடியிலிருந்து விடுபடாமல், ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காகவே சில தமிழ் தலைவர்கள் கூட்டணி அமைத்து செயற்பட்டு வருகின்றனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/JvYOkpTQT1w" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>

இவ்வாறு செயற்படுபவர்கள் உண்மையான அரசியல்வாதிகள் அல்ல, மாறாக “அரசியல் தரகர்கள்” என்றே கூற வேண்டும்.
</p><p>
செம்மணி விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறான அல்லது மோசமான கருத்துகளை வெளியிட வேண்டாம் என நாடாளுமன்றத்தில் அறிவுறுத்தும் அதிகாரம் அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உள்ளது.

மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால், நாடாளுமன்றத்தில் இதுகுறித்து தெளிவான அறிவிப்பை வெளியிட்டு, இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T12:59:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் மட்டும் 258 தீ விபத்து சம்பவங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/colombo-records-258-fire-incidents-alone-1785070639"></link>
            <id>https://jvpnews.com/article/colombo-records-258-fire-incidents-alone-1785070639</id>
            <summary type="text">ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தீயணைப்புத் திணைக்களம் தெரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

அந்தத் தீ விபத்து சம்பவங்களில் மொத்த மீட்பு நடவடிக்கைகளின் எண்ணிக்கை 17 ஆகப் பதிவாகியுள்ளதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8316148-8ddb-4314-884c-9379fe25fcee/26-6a660431060a9.webp' />&nbsp;</p><h2>&nbsp;தீ விபத்து சம்பவங்கள்&nbsp;</h2><p> </p><p>

கடந்த ஆண்டில் மட்டும் கொழும்பு மாவட்டத்தில் 382 தீ விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 46 மீட்புச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. </p><p>

எவ்வாறாயினும், இந்த ஆண்டின் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் மட்டும் கொழும்பு மாவட்டத்தில் 258 தீ விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளமை கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு விடயமாகும் என்றும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><p> </p><p>

மேலும், இந்த ஆண்டில் இதுவரை தீயணைப்பு சேவைத் திணைக்களத்திற்கு 13 அவசர அழைப்புகள் கிடைத்துள்ளதுடன், அந்த அழைப்புகளில் பாதை தடைகள், மரங்கள் முறிந்து விழுதல், வீதி விபத்துக்கள் காரணமாக இடம்பெறும் மீட்பு நடவடிக்கைகளும் அடங்குகின்றன. </p><p>

இந்தத் தீ விபத்துகளுக்கான முக்கிய காரணங்களாகப் பல்வேறு பணி இடங்களில் தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாதிருத்தல், அவசரப் பதிலளிப்பு நடவடிக்கைகளுடன் இணையாதிருத்தல், வீடுகள் மற்றும் பணி இடங்களில் பாதுகாப்பற்ற மின்சாரப் பயன்பாடுகள் மற்றும் வறண்ட வானிலை நிலைமைகள் என்பன செல்வாக்கு செலுத்தியுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T12:57:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் திறக்கப்படவுள்ள ஹோர்முஸ் நீரிணை: ஈரான், ஓமான் பேச்சுவார்த்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/an-says-progress-made-in-talks-with-oman-on-hormuz-1785047769"></link>
            <id>https://ibctamil.com/article/an-says-progress-made-in-talks-with-oman-on-hormuz-1785047769</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையையும் அப்பகுதியில் உள்ள தங்களது கடற்பரப்புகளையும் மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முன்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையையும் அப்பகுதியில் உள்ள தங்களது கடற்பரப்புகளையும் மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிராந்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p>விவகாரம் சாதகமான திசையில் சென்றாலும், ஒப்பந்தம் எட்ட இராஜதந்திர முயற்சிகளுக்கு மேலும் கால அவகாசம் தேவை என வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>பேச்சுவார்த்தைக்காக ஓமான் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஈரான் சென்றதாகவும், இந்த இராஜதந்திர முயற்சி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீதான அமெரிக்க குண்டுவீச்சை நிறுத்திய முடிவுடன் ஒத்துப்போனதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>திறக்கப்படவுள்ள ஹோர்முஸ் நீரிணை</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b028ed0d-185a-40a9-ac6e-2dd795bd9eec/26-6a65fe7c4d0a1.webp' /></p><p>அமெரிக்க மத்திய படைத் தளபதி தலைமையகம் தொடர்ச்சியாக 13 இரவுகளாக இந்த தாக்குதலை நடத்தி வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p>எனினும் வெள்ளை மாளிகையும் சென்ட்கம்மும் கருத்து கோரியதற்கு பதிலளிக்கவில்லை எனவும் அது மேலும் தெறிவிக்கப்படுகிறது.</p><p>ஓமான்-ஈரான் பேச்சுவார்த்தையை வாஷிங்டன் உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனம் மேலும் தெரிவித்தது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T12:55:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் கறுப்பு ஜூலை போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-black-outside-in-london-1785069229"></link>
            <id>https://tamilwin.com/article/protest-black-outside-in-london-1785069229</id>
            <summary type="text">கறுப்பு ஜூலை நினைவேந்தல் மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் லண்டனில் இடம்பெற்றுள்ளது. 

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன வெறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கறுப்பு ஜூலை நினைவேந்தல் மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் லண்டனில் இடம்பெற்றுள்ளது.</p><p> 

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன வெறி வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில், இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஜூலை போராட்டம்</h2><p>
</p><p>
தமிழீழ சுயநிர்ணய அமைப்பு, (MSDTE) சர்வதேச நீதிக்கான தமிழீழ மக்கள் சங்கம் ( TEPAIJ) மற்றும் பல தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிக ரகத்திற்கு முன்பாக (13 Hyde Park Gardens, Tyburnia, London W2 2LU) இடம்பெற்றிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ba9ae69-cd2b-4fd0-ae29-2f3301595581/26-6a6601b0319cf.webp' /></p><p>

1983 ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி தொடங்கி ,இலங்கையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன வெறி வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.</p><p>

இந்தப் போராட்டத்தில் கருப்பு நிற ஆடைகள் அணிந்து ஈழத் தமிழ் மக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தமையுடன், நீதிக்கான கோரிக்கைகளை வெளிப்படுத்தும் பதாகைகளை ஏந்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச நீதியும், பொறுப்புக்கூறலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T12:53:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கரபிட்டியா இல்லத்தில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-discovered-body-at-a-house-in-karapitiya-1785069438"></link>
            <id>https://ibctamil.com/article/police-discovered-body-at-a-house-in-karapitiya-1785069438</id>
            <summary type="text">காலி, கரபிட்டியாவில் உள்ள ஒரு வீட்டின் குளியலறைக்குள் 58 வயது மதிக்கத்தக்க ஆணின் அழுகிய சடலம் ஒன்று காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 

இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி, கரபிட்டியாவில் உள்ள ஒரு வீட்டின் குளியலறைக்குள் 58 வயது மதிக்கத்தக்க ஆணின் அழுகிய சடலம் ஒன்று காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

இறந்த நபர் திருமணமாகாத ஆண் என்றும், அவர் அந்த இல்லத்தில் தனியாக வசித்து வந்ததாகவும் காவல்துறை விசாரணைகளில் தெரிவித்துள்ளது.
</p><p>
 

அருகிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்று, அந்த வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாகக் கரபிட்டிய&nbsp; காவல்துறைக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>அழுகிய சடலம் மீட்பு</h2><p>காவல்துறையினர் அந்த இல்லத்திற்குச் சென்று குளியலறைக்குள் சடலத்தைக் மீட்டெடுத்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/282e6498-b7db-4a97-9b60-892ea4c6b52a/26-6a66027c7e889.webp' /></p><p>மேலும் மீட்கப்பட்ட சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக மீதங்கள் காலி தேசிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காலி காவல்துறையினர் மேற்பொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T12:53:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் பிளம்பருக்கு அடித்த அதிஷ்டம் : தங்கப்புதையலால் ஒரே நாளில் கோடீஸ்வரரான அதிசயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/plumber-lucky-in-austria-gold-treasure-1785069613"></link>
            <id>https://ibctamil.com/article/plumber-lucky-in-austria-gold-treasure-1785069613</id>
            <summary type="text">ஒஸ்திரியாவில் பழைய சொகுசு பங்களா ஒன்றில், 23 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கப் புதையல் பெட்டியை, &#039;பிளம்பர்&#039; ஒருவர் கண்டெடுத்து ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒஸ்திரியாவில் பழைய சொகுசு பங்களா ஒன்றில், 23 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கப் புதையல் பெட்டியை, 'பிளம்பர்' ஒருவர் கண்டெடுத்து ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
</p><p>
இது தொடர்பில் தெரியவருவதாவது,
</p><p>

ஐரோப்பிய நாடான ஒஸ்திரியா நாட்டின் வியன்னா நகரில் உள்ள ஒரு பழமையான சொகுசு பங்களாவில் சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருந்தன.</p><h2>அடித்தளத்திலிருந்து நீட்டிக்கொண்டிருந்த கயிறு</h2><p>அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த பிளம்பர் ஒருவர், அடித்தளத்தின் சிமெந்து தரையில், அடியில் இருந்து ஒரு கயிறு வெளியில் நீட்டிக் கொண்டிருப்பதை கவனித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69c1cb01-418e-4be6-9a6f-81207b9431e6/26-6a6602fd3e369.webp' /></p><p>
</p><p>



அந்தக் கயிற்றை அலட்சியம் செய்யாமல் அது எங்கே இருந்து வருகிறது என்பதை அறியும் ஆர்வத்துடன், சிமெந்து தரையை தோண்டத் தொடங்கினார். அப்போது கயிற்றுடன் துருப்பிடித்த ஒரு பழைய இரும்புப் பெட்டி புதைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தார்.</p><p></p><p>
</p><p>

</p><h2>30 கிலோ தங்கக் காசுகள்</h2><p>அந்த பெட்டியைத் திறந்து பார்த்தபோது, அதற்குள் பளபளக்கும், 30 கிலோ தங்கக் காசுகள் இருந்தன.&nbsp; அவை இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவை என்பது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0d37ee2-e91d-4576-b358-e8ff99c4caab/26-6a6602fc8d947.webp' /></p><p>
</p><p>

அவருக்கு முன் மற்றொரு தொழிலாளி; அந்த கயிற்றை பார்த்துள்ளார். ஆனால், அசட்டையாக விட்டுவிட்டார்.
</p><p>

ஒஸ்திரிய நாட்டின் சட்டப்படி புதையல் கண்டெடுக்கப்பட்டால், அதில் கிடைக்கும் மதிப்பை கண்டெடுத்த நபரும், அந்த நிலத்தின் உரிமையாளரும் பாதியாக பிரித்துக் கொள்ளலாம். இதன் மூலம், அந்த பிளம்பர் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T12:52:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூப்பர் எல் நினோவால் 20 பில்லியன் டொலரை இழக்கும் ஆபிரிக்கா - அபிவிருத்தி வங்கி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/loss-due-to-super-el-nino-african-development-bank-1785065551"></link>
            <id>https://tamilwin.com/article/loss-due-to-super-el-nino-african-development-bank-1785065551</id>
            <summary type="text">பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டு வரும் அசாதாரண வெப்பநிலை மாற்றங்களால்
உருவாகும் சூப்பர் எல் நினோ வானிலை மாற்றம் காரணமாக, ஆபிரிக்க நாடுகள்
சுமார் 10 பில...</summary>
            <content type="html"><![CDATA[<p>பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டு வரும் அசாதாரண வெப்பநிலை மாற்றங்களால்
உருவாகும் சூப்பர் எல் நினோ வானிலை மாற்றம் காரணமாக, ஆபிரிக்க நாடுகள்
சுமார் 10 பில்லியன் முதல் 20 பில்லியன் டொலர் வரை பொருளாதார இழப்பைச்
சந்திக்க நேரிடும் என ஆபிரிக்க அபிவிருத்தி வங்கியின் காலநிலை மாற்றப்
பிரிவு இயக்குநர் ஆண்டனி நியோங் எச்சரித்துள்ளார்.
</p><p>
இந்த தீவிர வானிலை மாற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்படும் நாடுகளின் மொத்த
உள்நாட்டு உற்பத்தி சராசரியாக 1% முதல் 2% வரை குறையக்கூடும் என ஆபிரிக்க
அபிவிருத்தி வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><p>
</p><p>
வரவிருக்கும் காலநிலை பாதிப்புகளை எதிர்கொள்ள ஆபிரிக்காவுக்கு இந்த ஆண்டு
காலநிலை தழுவல் நிதியாக சுமார் 100 பில்லியன் டொலர் தேவைப்படும் என
மதிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>மக்கள் இடம்பெயரும் சூழல் உருவாகலாம்</h2><p>
</p><p>
வறட்சி மற்றும் கடல் வெப்பநிலை உயர்வால் விவசாயிகளுக்கு சுமார் 330 மில்லியன்
டொலர் வருமான இழப்பும், மீன்பிடித் துறையில் 1% முதல் 4% வரை உற்பத்திக்
குறைவும் ஏற்படும் என ஆபிரிக்க அபிவிருத்தி வங்கி கணித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f9769e3-a123-413c-b636-cb628589395f/26-6a65fde8136ea.webp' /></p><p>
</p><p>
உணவு மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக சூடான், தெற்கு சூடான், கொங்கோ,
சோமாலியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து மக்கள் பெருமளவில் இடம்பெயரும்
சூழல் உருவாகலாம்.
</p><p>
ஆபிரிக்க நாடுகளின் முக்கிய உணவான சோளத்தின் விலை இருமடங்காக உயரக்கூடும் என
அஞ்சப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T12:32:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தண்ணீர் போத்தலால் 10 இலட்சம் ரூபாய் இழந்த சுற்றுலா நிறுவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/water-bottle-costs-tour-firm-rs-1m-loss-1785066709"></link>
            <id>https://jvpnews.com/article/water-bottle-costs-tour-firm-rs-1m-loss-1785066709</id>
            <summary type="text">எல்ல பகுதியில் குடிநீர் போத்தல்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சுற்றுலா நிறுவனமொன்றுக்கு ஒரு மில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல்ல பகுதியில் குடிநீர் போத்தல்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சுற்றுலா நிறுவனமொன்றுக்கு ஒரு மில்லியன் ரூபாய் (10 இலட்சம் ரூபாய்) அபராதம் விதித்து பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>


நுகர்வோர் விவகாரங்கள் ஆணையத்தின் புலனாய்வு அதிகாரிகள் கடந்த 10ஆம் திகதி மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, குறித்த நிறுவனம் குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தமை கண்டறியப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fe36779-f341-4bae-acb7-a164125d42c8/26-6a65f4d7347a8.webp' /></p><h2>வழக்குத் தாக்கல்</h2><p>
</p><p>


இதனையடுத்து, நுகர்வோர் விவகாரங்கள் ஆணையச் சட்டத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மீறியதாகக் கூறி, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் விவகாரங்கள் ஆணையம் வழக்குத் தாக்கல் செய்தது.
</p><p>


இந்த வழக்கு கடந்த 22ஆம் திகதி பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டது.</p><p></p><p>
</p><p>


இதனைத் தொடர்ந்து, குறித்த நிறுவனத்திற்கு ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T12:30:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[70 மில்லியன் மக்களைப் பாதிக்கவுள்ள கடும் வெப்ப அலை: அதிகாரிகள் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/scorching-us-heatwave-to-hit-1785065139"></link>
            <id>https://news.lankasri.com/article/scorching-us-heatwave-to-hit-1785065139</id>
            <summary type="text">அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மாநிலங்களின் பெரும்பகுதியை ஆபத்தான அளவிலான கடும் வெப்பம் வாட்டி வதைக்க இருப்பதால், சுமார் 7 கோடி மக்கள் தீவிர வெப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மாநிலங்களின் பெரும்பகுதியை ஆபத்தான அளவிலான கடும் வெப்பம் வாட்டி வதைக்க இருப்பதால், சுமார் 7 கோடி மக்கள் தீவிர வெப்பம் தொடர்பான எச்சரிக்கைகளை எதிர்கொள்ள உள்ளனர்.</p><h2>வரும் வாரத்திலும் நீடிக்கும்</h2><p>
</p><p>கடந்த ஒரு மாதத்தில் அமெரிக்காவைத் தாக்கும் மூன்றாவது பெரிய வெப்ப அலையானது வார இறுதியில் வலுவடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது; இது மெக்சிகோ வளைகுடா கடற்கரை முதல் கிரேட் ப்ளைன்ஸ் மற்றும் மத்திய-மேற்குப் பகுதிகள் வரை நாட்டின் பெரும்பாலான நிலப்பரப்பில் பரவியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0924db7-6f73-4e24-9136-56d78e14b424/26-6a65f01126556.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், 95 முதல் 105 டிகிரி ஃபாரன்ஹீட் (35-40 டிகிரி செல்சியஸ்) வரையிலான வெப்பநிலை எதிர்பார்க்கப்படுகிறது; தென்மேற்கு அமெரிக்கப் பாலைவனப் பகுதிகளில் வெப்பநிலை 120 டிகிரி ஃபாரன்ஹீட் (48 டிகிரி செல்சியஸ்) வரை கூட உயரக்கூடும். </p><p>'ஹீட் டோம்' (heat dome) எனப்படும் வளிமண்டல உயர் அழுத்த அமைப்பின் காரணமாக, அதிக வெப்பம் வரும் வாரத்திலும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; இந்த அமைப்பு ஒரு மூடியைப் போலச் செயல்பட்டு, ஒரு குறிப்பிட்ட பகுதியின் மீது வெப்பத்தை நாட்கள் அல்லது வாரக்கணக்கில் சிறைபிடித்து வைத்துக்கொள்கிறது.</p><p></p><p> </p><p>அமெரிக்கக் கோடைக்காலத்தில் வெப்ப அலைகள் ஒன்றும் புதிதல்ல என்றாலும், மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பருவநிலை நெருக்கடியின் காரணமாக இத்தகைய நிகழ்வுகளின் நிகழ்வுத்தன்மையும் தீவிரமும் மோசமடைந்து வருகின்றன. </p><p>அமெரிக்காவில் பலருக்கும் இந்த கோடைக்காலம் ஏற்கனவே கடும் வெப்பம் நிறைந்ததாக அமைந்துள்ளது; ஜூலை மாதத் தொடக்கத்தில் ஏற்பட்ட தீவிர வெப்ப மண்டல நிகழ்வு (heat dome) காரணமாக, நாட்டின் கிழக்குப் பகுதியில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் சில ரத்து செய்யப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd6cd462-6662-4b78-8c68-b6badbd17b05/26-6a65f0105810a.webp' /></p><h2>ஆபத்தான வெப்பச் சூழல்</h2><p> அதன்பிறகு, மேற்கே மேலும் ஒரு வெப்ப அலை தாக்கியது; இதனால் மொன்டானாவில் வெப்பநிலை 115 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர்ந்ததுடன், முந்தைய வெப்பநிலைச் சாதனைகளும் முறியடிக்கப்பட்டன. </p><p>சமீபத்திய 'ஹீட் டோம்' (heat dome) நிகழ்வு டென்வர் பகுதியில் புதிய வெப்பச் சாதனைகளை முறியடிக்கக்கூடும்; அதேவேளையில், வார இறுதியில் வெப்பநிலை 108 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ள மேற்கு நெப்ராஸ்கா பகுதிக்குத் தேசிய வானிலை ஆய்வு மையம் கடும் வெப்பத்திற்கான எச்சரிக்கையை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8219c4f-aca6-479d-aa7c-543d9248bab6/26-6a65f011e243c.webp' /></p><p> </p><p>இதனிடையே, ஐரோப்பாவின் பெரும்பகுதி தற்போது ஆபத்தான வெப்பச் சூழலில் சிக்கியுள்ளது; ஸ்பெயின் மற்றும் பிரான்சில் காட்டுத்தீயிலிருந்து தப்பிக்க 300,000 பேர் வெளியேறியுள்ளனர். </p><p>பிரான்சில் ஜூன் மாதத்தில் ஏற்பட்ட தனியொரு வெப்ப அலை காரணமாக சுமார் 5,700 பேர் மரணமடைந்திருக்கலாம் என்று அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.</p><p>
காட்டுத்தீ எளிதில் ஏற்படக்கூடிய சூழலை உருவாக்கியுள்ள வெப்பமான மற்றும் வறண்ட வானிலையால், பிரித்தானியாவின் சில பகுதிகளும் தீப்பிடித்து எரிகின்றன. அமெரிக்கா முழுவதும், 88 இடங்களில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T12:20:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[லிந்துல பகுதியில் இரும்பு பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு: 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iron-bridge-collapses-in-lindula-area-traffic-1785068008"></link>
            <id>https://tamilwin.com/article/iron-bridge-collapses-in-lindula-area-traffic-1785068008</id>
            <summary type="text">லிந்துலை - மெராயா பகுதியிலிருந்து ஹென்போல்ட் தோட்டத்திற்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ள இரும்புப் பாலம் உடைந்து விழுந்ததால், அப்பகுதி மக்களின் போக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>லிந்துலை - மெராயா பகுதியிலிருந்து ஹென்போல்ட் தோட்டத்திற்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ள இரும்புப் பாலம் உடைந்து விழுந்ததால், அப்பகுதி மக்களின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட டித்வா புயலின் தாக்கத்தால் இந்த நிலை ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் இதுவரை போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
</p><h2>

800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு</h2><p>
போக்குவரத்து தேவைகளுக்காக இதுவரை தற்காலிகப் பாலம் கூட அமைக்கப்படாததால், அங்குள்ள மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98bbefe6-c546-421e-a324-b9a340c78b49/26-6a65faa839c82.webp' /></p><p>
</p><p>
இதன் காரணமாக, லிந்துலை - ஹென்போல்ட் தோட்டத்தின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள மிளகுசேனை, ஊட்டுவெளி, சென்ட்ரல் கிளாஸ் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள், தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

சிறியளவில் மழை பெய்தாலே ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து, அந்த வழியாக மக்கள் செல்ல முடியாத நிலை உருவாகிறது. இதனால், அவர்கள் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சுற்றுவழிப் பாதையை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>

மேலும், மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், கிராம மக்கள் முழுமையாக வெளியேற முடியாத அபாய நிலை உருவாகும் என்ற அச்சமும் அப்பகுதி மக்களிடையே நிலவி வருகிறது.</p><h2>

அரச அதிகாரிகளிடம் விடுத்துள்ள கோரிக்கை</h2><p>
சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் அன்றாடப் போக்குவரத்து, பாடசாலைச் செல்லுதல் மற்றும் அவசர மருத்துவ சேவைகளைப் பெறுவதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34ac5505-fb57-44a1-b1bc-62c786f30c64/26-6a65faa907573.webp' /></p><p> </p><p>குறிப்பாக, மாணவர்கள் ஆபத்தைப் பொருட்படுத்தாமல் பாதணிகளை கையில் எடுத்துக்கொண்டு ஆற்றைக் கடந்து, மறுபுறம் கால்களை சுத்தம் செய்து மீண்டும் பாதணிகளை அணிந்து பாடசாலைக்குச் செல்லும் அவல நிலையும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்நிலையில், சம்பந்தப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் இப்பகுதியை பார்வையிட்டுச் சென்றிருந்த போதிலும், பாலத்தை சீரமைப்பது தொடர்பாக உரிய அதிகாரிகள் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
</p><p>
எனவே, இப்பகுதியில் வாழும் மக்களின் பாதுகாப்பையும் நலனையும் கருத்தில் கொண்டு, உடனடியாக தற்காலிகப் பாலம் ஒன்றை அமைப்பதற்கும், நிரந்தரத் தீர்வை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab71cc53-0486-4fb3-bab9-924e757f91a0/26-6a65faa9c3ea2.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T12:16:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[துஷாரா விஜயனின் ரீசெண்ட் பார்ட்டி புகைப்படங்கள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/dushara-vijayan-recent-photos-party-1785060026"></link>
            <id>https://viduppu.com/article/dushara-vijayan-recent-photos-party-1785060026</id>
            <summary type="text">துஷாரா விஜயன்இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா, பசுபதி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து பெரிய ஹிட்டான படம் தான் சார்பட்டா பரம்பரை. ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>துஷாரா விஜயன்</h2><p>இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா, பசுபதி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து பெரிய ஹிட்டான படம் தான் சார்பட்டா பரம்பரை. இப்படத்தின் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை துஷாரா விஜயன்.
</p><p>
இப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து அனுப்புள்ள கில்லி, நட்சத்திரம் நகர்கிறது, அநீதி, ராயன், வேட்டையன், வீர தீர சூரன் உள்ளிட்ட படங்களில் நடித்து டாப் நடிகையாகினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3c219ac-45b5-4c51-953f-af994ff3cf83/26-6a65dac1061e2.webp' /></p><p>
</p><p>
தற்போது மலையாளம், தமிழ் மொழி படங்களில் கமிட்டாகி நடித்து வரும் துஷாரா, GD Naidu என்ற படத்தில் மாதவனுடன் நடித்து படம் வெளியாகவுள்ளது. மேலும் பிக்பாஸ் பிரபலம் ராஜு ஜெயமோகனுடன் Almost நல்லவன் என்ற படத்திலும் நடிக்கவுள்ளார்.</p><p> இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை துஷாரா, தற்போது ஷாட்டான ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-26T12:15:00+00:00</updated>
        </entry>
    </feed>
