<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-06T07:01:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்! களமிறங்கிய வனவிலங்கு அதிகாரிகள் - பல மணிநேர தீவிர போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/elephant-attack-in-sri-lanka-1788676174"></link>
            <id>https://tamilwin.com/article/elephant-attack-in-sri-lanka-1788676174</id>
            <summary type="text">கந்தளாய் - பேராறு பகுதியில் நேற்று முன் தினம் (04.09.2026) கிராமத்திற்குள் புகுந்த காட்டு
யானைகள் வனவிலங்கு அதிகாரிகளின் பல மணி நேர தீவிர போராட்டத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாய் - பேராறு பகுதியில் நேற்று முன் தினம் (04.09.2026) கிராமத்திற்குள் புகுந்த காட்டு
யானைகள் வனவிலங்கு அதிகாரிகளின் பல மணி நேர தீவிர போராட்டத்திற்குப்
பிறகு நேற்று மாலை (05) பாதுகாப்பாக வனப்பகுதியை நோக்கி விரட்டப்பட்டது.
</p><p>
பேராறு கிராமத்திற்குள் நுழைந்த இந்த காட்டு யானை, குடியிருப்புகள் நிறைந்த
பகுதிக்குள் உலா வந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திற்கும் பீதிக்கும்
உள்ளாகினர். </p><p>இது குறித்து கந்தளாய் வனவிலங்கு காரியாலய அதிகாரிகளுக்கு
உடனடியாக தகவளிக்கப்பட்டது.</p><h2>யானைகளை வெளியேற்றும் பணி</h2><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை முதல் வனவிலங்கு அதிகாரிகளும் பொலிஸ்
மற்றும் கிராம மக்கள் இணைந்து யானையை கிராமத்தை விட்டு வெளியேற்றும் பணியில்
ஈடுபட்டனர். </p><p>நாள் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சிகளின் பலனாக, நேற்று
மாலையளவில் யானை வெற்றிகரமாக வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa94463f-ef82-4207-abc7-3bede2ea1532/26-6a9d0db1d397f.webp' /></p><h2>பிரதேச மக்கள் வேதனை</h2><p>

யானை ஊருக்குள் புகுந்திருந்த அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்
சைக்கிள் ஒன்றை சேதப்படுத்தியுள்ளதுடன், பல வீடுகளின் பாதுகாப்பு வேலிகளையும்
உடைத்து நாசம் செய்துள்ளதாக பிரதேச மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
</p><p>
அடிக்கடி கிராமங்களுக்குள் புகுந்து சேதம் விளைவிக்கும் காட்டு யானைகளிடம்
இருந்து பேராறு கிராம மக்களையும் அவர்களின் சொத்துக்களையும் பாதுகாக்க நிரந்தர
தீர்வு காணப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை
விடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T06:52:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அடுத்தடுத்து கரையொதுங்கும் இந்திய படகுகள்! கடற்படையினர் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-boats-continue-to-run-aground-in-sri-lanka-1788676440"></link>
            <id>https://tamilwin.com/article/indian-boats-continue-to-run-aground-in-sri-lanka-1788676440</id>
            <summary type="text">இந்திய கடற்றொழிலாளர்களுக்கு சொந்தமான படகொன்று புத்தளம், கற்பிட்டி பிரதேசத்தில்&amp;nbsp;கரை ஒதுங்கியுள்ளது. இந்திய கடற்றொழிலாளர்களின் பயன்பாட்டில் உள்ள வக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய கடற்றொழிலாளர்களுக்கு சொந்தமான படகொன்று புத்தளம், கற்பிட்டி பிரதேசத்தில்&nbsp;கரை ஒதுங்கியுள்ளது. </p><p>இந்திய கடற்றொழிலாளர்களின் பயன்பாட்டில் உள்ள வகையை சேர்ந்த படகு ஒன்றே
இயந்திரமின்றி நேற்று இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளது.</p><h2>கடற்படையினர் விசாரணை</h2><p>இந்த படகு இந்தியாவின் காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்களின் படகாக இருக்கலாம்
என கருதப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb9acf00-a271-4624-b2b7-46ec36924db2/26-6a9d0c308311d.webp' /></p><p>
</p><p>இதேவேளை, கரையொதுங்கிய படகு தொடர்பில் கடற்படையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு
வருகின்றனர்.</p><p>

இதேநேரம், இவ்வகையான இந்திய படகு ஒன்று கடந்த மாதமும் இதே பகுதியில் கரை
ஒதுங்கியமையும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T06:46:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப்புதைகுழி : சுயாதீன சர்வதேச விசாரணை கோரும் பிரித்தானிய எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/international-investigation-about-chemmani-uk-mp-1788674300"></link>
            <id>https://ibctamil.com/article/international-investigation-about-chemmani-uk-mp-1788674300</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச நிதியுதவியுடன் கூடிய முழுமையானதும் சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச நிதியுதவியுடன் கூடிய முழுமையானதும் சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் பொப் பிளக்மன் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை செய்யப்பட்டு நாளையுடன் (07) 30 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், 30 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை தொடர்பான வழக்கில் வெளிப்பட்ட தகவல்களே செம்மணி பகுதியில் மனிதப் புதைகுழிகள் இருப்பது தொடர்பான விசாரணைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தன.</p><p></p><h2>&nbsp;583 மனித எச்சங்கள் மீட்பு&nbsp;</h2><p>இந்தநிலையில், செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டுவரும் அகழ்வுப் பணிகளில் இதுவரை 583 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் செம்மணி, இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e07d077f-45c1-44a3-b0fa-9698dc5c207c/26-6a9d09f5a5506.webp' /></p><p> கிருஷாந்தி குமாரசுவாமியின் படுகொலையும் அதனைத் தொடர்ந்து வெளிப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி விவகாரமும், இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் போர்க்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொலைகள் தொடர்பான உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் நீண்டகாலமாக பதிலளிக்கப்படாத கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளன.
</p><p>செம்மணி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கும் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டும்.</p><p></p><h2>டி.என்.ஏ பரிசோதனை</h2><p>
</p><p>
மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்படும் எச்சங்கள் தொடர்பான தடயவியல் மற்றும் டி.என்.ஏ பரிசோதனைகளுக்கு சர்வதேச நிபுணத்துவம் தேவைப்படுவதாகவும், இந்த விவகாரத்தில் சர்வதேச பங்களிப்பு அவசியம் எனவும் மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6b0ae09-f56f-47cb-9c50-d274a9d14281/26-6a9d09f660ea7.webp' /></p><p>எனவே, செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் வெளிப்படையான, சுயாதீனமான மற்றும் சர்வதேச தரத்திலான விசாரணை முன்னெடுக்கப்படுவதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீண்டகாலமாக மறுக்கப்பட்டு வரும் உண்மையும் நீதியும் உறுதி செய்யப்பட வேண்டும்“ என&nbsp; தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T06:42:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரை சேர்ந்த மூவர் யாழில் கைது ; சோதனையில் சிக்கிய பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-from-mannar-arrested-in-jaffna-1788676711"></link>
            <id>https://jvpnews.com/article/three-from-mannar-arrested-in-jaffna-1788676711</id>
            <summary type="text">வடக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட வெற்றிலைக்கேணி கடற்படை முகாம் அதிகாரிகளால் நேற்று (05) காலை முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வடக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட வெற்றிலைக்கேணி கடற்படை முகாம் அதிகாரிகளால் நேற்று (05) காலை முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த கடலட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify; ">

கடற்கரைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட படகொன்றைச் பரிசோதித்தபோது, சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்டு நிலப்பரப்பிற்கு கடத்தி வரப்பட்ட 673 கடல் அட்டைகள் அடங்கிய தொகுதியை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b65c2552-ee10-4a57-9e55-0808dc540183/26-6a9d0a6851594.webp' /></p><h2 style="text-align: justify; ">சட்ட நடவடிக்கை</h2><p style="text-align: justify; "> 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 51 முதல் 56 வயதிற்கு இடைப்பட்ட மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கடலட்டைகள் தொகுதி, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மீன்பிடிப் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-06T06:39:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை அடுத்து வரிசையில் ரணில் மற்றும் கோட்டாபய! அமைச்சர் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-ranil-may-be-arrested-in-the-future-1788672339"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-ranil-may-be-arrested-in-the-future-1788672339</id>
            <summary type="text">

மக்கள் எமக்கு வழங்கிய ஆணையின் படி, நாமல் அல்ல ரணில், மைத்திரி, கோட்டாபய என யார் என்ற வேறுபாடின்றி சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

மக்கள் எமக்கு வழங்கிய ஆணையின் படி, நாமல் அல்ல ரணில், மைத்திரி, கோட்டாபய என யார் என்ற வேறுபாடின்றி சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் என்று வர்த்தக அமைச்சர் வந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். </p><p>

அநுராதபுரம் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

நாமல் ராஜபக்ச தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

நாமல் ராஜபக்ச உள்ளிட்ட தரப்பு தற்போது எதிர்நோக்கி வரும் சட்ட நடவடிக்கைகள் அரசியல் பழிவாங்கல் என பிரசாரம் மேற்கொள்ளப்படுகின்றது.</p><h2>சட்டம் அனைவருக்கும் சமம்&nbsp;</h2><p> </p><p>

நிச்சயமாக அது அப்படியல்ல. நீதிமன்றத்தில் சாட்சியங்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>

கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தி, சட்டவிரோதமாகச் சேர்த்த சொத்துக்களை அரசுடமையாக்குமாறு மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2059577-9419-4c7c-b1e1-3f3f865cfe8b/26-6a9d016ecdfff.webp' /></p><p> </p><p>

இந்த அதிகாரத்தின் அடிப்படையில் புதிய சட்டங்கள் இயற்றப்பட்டு, இதுவரை 4 ஆயிரம் மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கள் அரசுக்குக் கையகப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>

முன்பு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்படும்போது பாம்பு கடித்துவிட்டதாகக் கூறி தப்பித்த கதைகள் இனிமேல் செல்லுபடியாகாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad7e0260-eb5d-467b-8048-23e9147bc63a/26-6a9d016e25368.webp' /></p><p> </p><p>

2024 செப்டெம்பர் மாதத்தில் நாட்டின் சாதாரண மக்கள் வழங்கிய ஆணையின் படி, நாமல் அல்ல, ரணில், மைத்திரி, கோட்டாபய என அனைவருக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படும்.
</p><p>
நாங்கள் விரும்பிய எவரையும் சிறையில் அடைக்க முடியாது. 2011, 2012ஆம் ஆண்டுகளின் பழைய முறைப்பாடுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறையினர் வெளிநாடுகளுக்குச் சென்ற சாட்சியங்களைப் பதிசு செய்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கைகளின் அடிப்படையிலேயே தீர்ப்புக்கள் வழங்கப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><p></p><p> 

</p>]]></content>
            <updated>2026-09-06T06:38:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[55 ஓட்டங்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்: ஆசியக் கிண்ணத்தில் சம்பவம் செய்த இந்திய வீராங்கனைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ind-w-beat-pak-w-by-7-wkts-in-asia-cup-2026-1788676479"></link>
            <id>https://news.lankasri.com/article/ind-w-beat-pak-w-by-7-wkts-in-asia-cup-2026-1788676479</id>
            <summary type="text">India women team beat pakistan by 7 wickets: மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

து...</summary>
            <content type="html"><![CDATA[<p>India women team beat pakistan by 7 wickets: மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
</p><p>
துபாயில் நடந்த மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில், பாகிஸ்தான் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியுற்றது.&nbsp;&nbsp;</p><h2>55 ஓட்டங்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்&nbsp;</h2><p>55 ஓட்டங்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்
மகளிர் ஆசியக் கிண்ணத் தொடரின் 9வது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் துபாயில் நேற்று மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d856003a-900b-41ae-a665-7f632f0f411f/26-6a9d0a45c6cdc.webp' />&nbsp;&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி இந்திய வீராங்கனைகள் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18.1 ஓவர்களில் 55 ஓட்டங்களுக்கு சுருண்டது.
</p><p>
அதிகபட்சமாக ஷாவால் 14 ஓட்டங்களும், முனீபா அலி 13 ஓட்டங்களும் எடுத்தனர். ஏனைய 9 வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.
</p><p>
ஸ்ரீசரணி மற்றும் பிரேமா ராவத் தலா 3 விக்கெட்டுகளும், தீப்தி ஷர்மா 2 விக்கெட்டுகளும், ஷபாலி வெர்மா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
</p><p>
பின்னர் ஆடிய இந்திய அணி 8.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 57 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47122e25-6e33-4826-aa6b-02eababa9e1d/26-6a9d0a46980ce.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T06:34:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய விசைப்படகுகள் ; பல இலட்சம் பெறுமதியான வலைகள் சேதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-trawlers-engaged-in-illegal-fishing-1788675629"></link>
            <id>https://jvpnews.com/article/indian-trawlers-engaged-in-illegal-fishing-1788675629</id>
            <summary type="text">தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடற்பரப்பில், இலங்கை கடல் எல்லையில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடற்பரப்பில், இலங்கை கடல் எல்லையில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக உள்ளூர் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><p style="text-align: justify; ">&nbsp;இந்தச் சம்பவம் நேற்று (05) சனிக்கிழமை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56fc3482-225e-46fc-a838-16ecfe610e49/26-6a9d062e92122.webp' /></p><h2 style="text-align: justify; ">இந்திய விசைப்படகுகள்&nbsp;</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதன்போது, இலங்கை மீனவர்களுக்குச் சொந்தமான சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி வலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சில வலைகள் திருடப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p style="text-align: justify; ">

இந்த விவகாரம் தொடர்பில் தலைமன்னார் கடற்படையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

இந்திய விசைப்படகுகளின் அத்துமீறலைத் தடுத்து, இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-06T06:20:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[9 நாட்களில் ஹாய் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/kavin-hi-movie-9-days-box-office-1788675573"></link>
            <id>https://cineulagam.com/article/kavin-hi-movie-9-days-box-office-1788675573</id>
            <summary type="text">ஹாய் திரைப்படம் வெளிவந்து 9 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஹாய்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹாய் திரைப்படம் வெளிவந்து 9 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><p>
</p><h2>
ஹாய்</h2><p>

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து இன்று தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் கவின். இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஹாய். இப்படத்தில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e630010c-e995-4875-b126-1c1f2ea6b8cf/26-6a9d05f804fc0.webp' /></p><p>அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் மாஸ்டர், விக்ரம், கருப்பு உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
</p><h2>
பாக்ஸ் ஆபிஸ்
</h2><p>
காதல் கதைக்களத்தில் உருவாகி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ஹாய் திரைப்படத்தின் 9 நாட்கள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/428b995c-84a4-4b11-aaac-76f546544e26/26-6a9d05f8b0504.webp' /></p><p>அதன்படி, 9 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 14 கோடிக்கும் மேல் <a href="https://www.youtube.com/watch?v=FM4UvDi2xiU" target="_blank">வசூல் </a>செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p>]]></content>
            <updated>2026-09-06T06:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: விமான சேவைகள் ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indonesia-s-anak-krakatau-volcano-erupts-1788675275"></link>
            <id>https://news.lankasri.com/article/indonesia-s-anak-krakatau-volcano-erupts-1788675275</id>
            <summary type="text">Indonesia&#039;s Anak Krakatau Volcano Erupts: இந்தோனேசியாவின் அனாக் கிரக்டாவ் எரிமலை வெடித்ததை அடுத்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. எரிமலை வெடிப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indonesia's Anak Krakatau Volcano Erupts: இந்தோனேசியாவின் அனாக் கிரக்டாவ் எரிமலை வெடித்ததை அடுத்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.</p><h2> எரிமலை வெடிப்பு</h2><p>ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்தோனேசியாவின் புகழ்பெற்ற அனாக் கிரகடாவ்(Anak Krakatau) எரிமலை வெடித்து சிதறியது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>எரிமலை வெடிப்பு காரணமாக வானத்தில் ராட்சத சாம்பல் மேகங்கள் உருவானதுடன், எரிமலை பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலைநகர் ஜகார்த்தாவின் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/023a65f6-baec-41de-b679-afccc1d50f1b/26-6a9d04cd2876b.webp' /></p><p> கிட்டத்தட்ட 209 விமானங்கள் எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்டு இருப்பதாக போக்குவரத்து அமைச்சகத்தின் தகவல் தெரிவித்துள்ளது.</p><p> இதனால் 22,000க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p> சுமத்ரா பகுதியில் 15,000 மீட்டர் உயரத்திலும், ஜாவா பகுதியில் 6000 மீட்டர் உயரத்திலும் சாம்பல் புகையானது எழும்பியுள்ளது.</p><p>சுகர்னோ - ஹத்தா சர்வதேச விமான நிலையம் எரிமலை வெடிப்பு காரணமாக காலை 5.30 மணி முதல் 9.30 மணி வரை மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T06:14:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/five-european-nations-migrants-1788668565"></link>
            <id>https://news.lankasri.com/article/five-european-nations-migrants-1788668565</id>
            <summary type="text">European nations seek deals to send migrants out of the EU: புலம்பெயர்ந்தோரை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே அனுப்ப ஒப்பந்தமிடும் ஐரோப்பிய நாடுகள்.
சட...</summary>
            <content type="html"><![CDATA[<p>European nations seek deals to send migrants out of the EU: புலம்பெயர்ந்தோரை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே அனுப்ப ஒப்பந்தமிடும் ஐரோப்பிய நாடுகள்.
</p><p>சட்டப்பூர்வ வதிவிட உரிமை இல்லாத புலம்பெயர்ந்தோரை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றும் வகையிலான ஒப்பந்தங்களை முன்னெடுக்க ஐந்து ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டுள்ளது.</p><h2>ஐவர் குழு</h2><p> டென்மார்க்கில் வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. புலம்பெயர் மக்களின் எண்ணிக்கையைக் 
குறைப்பதற்கான ஐரோப்பிய நாடுகளின் சமீபத்திய முயற்சியாக, </p><p>ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத ஒரு நாட்டுடன் மக்களைத் திருப்பி அனுப்புவதற்கான நடைமுறைகள் குறித்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜேர்மனி, ஆஸ்திரியா, கிரீஸ், டென்மார்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d282ebfe-887a-49aa-9432-08a2b1388d75/26-6a9cea97bea6b.webp' /></p><p>
</p><p>ஐவர் குழு (Group of Five) என்று அழைக்கப்படும் இந்த நாடுகள், திருப்பி அனுப்பப்படுவோருக்கான மையங்களை நடத்தத் தாங்கள் எதிர்பார்க்கும் நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடவில்லை. </p><p>இந்த ஆண்டு அப்படியான நாடுகளுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்ட விரும்புவதாகவும், அது திருப்பி அனுப்பப்படுபவர்களுக்கான மையங்களை (return hubs) அமைக்க வழிவகுக்கும் என்றும் ஜேர்மனியின் உள்விவகார அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரிண்ட் கோபன்ஹேகனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.</p><p></p><p> </p><p>புலம்பெயர் மக்கள் தொடர்பான விவகாரத்தில் இந்த ஆண்டில் தொடர்ச்சியான கூட்டங்களை நடத்தியுள்ள இந்த ஐவர் குழு, செப்டம்பர் மாத இறுதியில் ஜேர்மனியின் மியூனிக் நகரில் மீண்டும் கூடத் திட்டமிட்டுள்ளது. </p><p>இதனிடையே, நாடு கடத்தும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதையும், உறுப்பு நாடுகள் வெளிநாடுகளில் மையங்களை அமைக்க அனுமதிப்பதையும் நோக்கமாகக் கொண்ட குடியேற்றக் கொள்கை சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் ஜூன் மாதம் ஒப்புதல் அளித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c532e0d8-361e-41d6-a662-3ca73124e405/26-6a9cea9871e89.webp' /></p><p> </p><p>இது புகலிடம் தேடுவோருக்கான பாதுகாப்புகளை பலவீனப்படுத்தக்கூடும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும், ஐரோப்பா கண்டம் முழுவதும் மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை ஊக்குவிக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத அமைப்பான 'ஐரோப்பிய அவை' (Council of Europe),</p><p> கடந்த ஜூலை மாதம் திரும்ப அனுப்பும் மையங்கள் (return hubs) குறிப்பிடத்தக்க மனித உரிமை அபாயங்களை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தது; அத்துடன் இந்த விவகாரத்தில் பல அமைப்புகளும் இத்திட்டத்தைக் விமர்சித்துள்ளன. </p><p>இந்த நிலையில், 
2027-ஆம் ஆண்டின் இறுதிக்குள் புலம்பெயர் மக்களை வெளியேற்றும் திட்டம் நடைமுறைக்கு வரும் என்று டென்மார்க் எதிர்பார்ப்பதாக, குடியேற்றம் மற்றும் ஒருங்கிணைப்புத் துறை அமைச்சர் மோர்டன் போட்ஸ்கோவ் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T06:10:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் இருமடங்கு அதிகரித்துள்ள மோட்டார் சைக்கிள் விலைகள்! அரசாங்க நிறுவனங்களில் முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/selling-motorcycles-illegally-warrning-1788665009"></link>
            <id>https://tamilwin.com/article/selling-motorcycles-illegally-warrning-1788665009</id>
            <summary type="text">நாட்டில் சில மோட்டார் சைக்கிள் விற்பனையாளர்கள், நுகர்வோருக்கு 100% குத்தகை வசதியின் கீழ் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்வதாக நிதி அமைச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் சில மோட்டார் சைக்கிள் விற்பனையாளர்கள், நுகர்வோருக்கு 100% குத்தகை வசதியின் கீழ் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்வதாக நிதி அமைச்சகம் மற்றும் பிற தொடர்புடைய அரசாங்க நிறுவனங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>

இலங்கை மத்திய வங்கி வாகன கொள்முதலுக்கான கடன் வட்டி விகித வரம்புகளை கடுமையாக்க நடவடிக்கை எடுத்திருந்தபோதிலும் இவ்வாறான மோசடியாக விற்பனை இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>மோட்டார் வாகனங்களுக்கு வழங்கப்படும் கடன் வசதி</h2><p>

இலங்கை மத்திய வங்கி மே 25 முதல் மோட்டார் வாகனங்களுக்கு வழங்கப்படும் கடன் வசதிகளுக்குப் பொருந்தக்கூடிய அதிகபட்ச கடன் வட்டி விகித வரம்புகளைக் கடுமையாக்க முடிவு செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4f0b3b9-2962-4119-b4a3-0f53a9ae8a08/26-6a9d01a7357b9.webp' /></p><p>
</p><p>
அதன்படி, கார்கள், வான்கள் மற்றும் முச்சக்கர வாகனங்கள் உள்ளிட்ட தனியார் வாகனங்களைக் கொள்முதல் செய்வதற்கான கடன் வசதிகளை வழங்குவதற்கு அளிக்கப்படக்கூடிய அதிகபட்ச வரம்பு 50%-லிருந்து 40%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.</p><p>

இருப்பினும், மோட்டார் சைக்கிள்களை விற்கும் சில நிறுவன முகவர்கள், மோட்டார் சைக்கிளின் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட இருமடங்கு விலையில் விலைப்பட்டியல்களை தயாரித்து, நுகர்வோர் 100% குத்தகை கடன் வசதியை பெறுவதற்கான வாய்ப்பை வழங்கியதாக முறைப்பாடுகளில் கூறப்பட்டுள்ளது.</p><p>

குறிப்பிட்ட மோட்டார் சைக்கிளுக்கு காப்பீடு செய்யும்போது, ​​அதன் விலைப்பட்டியலில் அதன் உண்மையான விலையை விட இரு மடங்கு குறிப்பிடப்பட்டிருந்ததால், காப்பீட்டுச் சான்றிதழைப் பெறுவதற்காக வாடிக்கையாளர்கள் அதன் உண்மையான மதிப்பை விட அதிக தொகையைச் செலுத்த நிர்பந்திக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T06:01:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[இதை செய்ய சில பெண்களே முன் வருகிறார்கள்..இசையமைப்பாளர் குறித்து பாடகி ஸ்வாகதா...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/singer-swagatha-allegation-against-music-composer-1788674965"></link>
            <id>https://viduppu.com/article/singer-swagatha-allegation-against-music-composer-1788674965</id>
            <summary type="text">பாடகி ஸ்வாகதாசினிமாத்துறையில் இருந்து விலகி தற்போது ரிஷிகேஷில் வசித்து வரும் பாடகி ஸ்வாகதா, ஒரு இசையமைப்பாளரின் பெயரை குறிப்பிடாமல் பாலியல் குற்றச்சாட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பாடகி ஸ்வாகதா</h2><p>சினிமாத்துறையில் இருந்து விலகி தற்போது ரிஷிகேஷில் வசித்து வரும் பாடகி ஸ்வாகதா, ஒரு இசையமைப்பாளரின் பெயரை குறிப்பிடாமல் பாலியல் குற்றச்சாட்ட்டை மீண்டும் முன்வைத்துள்ள சம்பவம் தற்போது பேசு பொருளாகியுள்ளது. </p><p>சமீபத்திய அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், இதெல்லாம் சினிமாவில் மட்டும்தான் நடக்கும். பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தவர், அவர்களை கட்டாயப்படுத்தி உரையாட வைத்திருக்கிறார். எங்களின் கண்ணியத்தை பறித்து, பணத்தை பறித்து மிரட்டி பிளாக்மெயில் செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebed36bf-a5b6-47a7-9bed-ff200a70ab80/26-6a9d0397d200f.webp' /></p><p> </p><p>இன்று கூலிங் கிளாஸ் அணிந்து, சோசியல் மீடியா பிம்பங்கள் குறித்தும், சமூகத்தின் மனநிலை குறித்தும், பிஆர் நடைமுறை குறித்தும் பேட்டி கொடுத்து வருகிறார். </p><p>ஆன்மிக படம் ஒன்றுக்கு இசையமைக்கும் அவரை, மேடைக்கு அழைத்து இரண்டு பெண்கள் கேக் ஊட்டி வரவேற்கிறார்கள். இதைத்தான் சினிமா ஆதரிக்கிறது. இதைச்செய்ய சில பெண்களே முன் வருகிறார்கள் என்று கூறியுள்ளார். </p><p>இதனை பார்த்த பலரும் யார் அந்த இசையமைப்பாளர் என்ற கேள்வியை மீண்டும் எழுப்பி வருகிறார்கள்.</p>]]></content>
            <updated>2026-09-06T06:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் வியாபாரியின் மனைவியிடம் மோசமாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-officer-suspended-for-bribery-from-accused-1788673617"></link>
            <id>https://tamilwin.com/article/police-officer-suspended-for-bribery-from-accused-1788673617</id>
            <summary type="text">கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரியிடம் இருந்து அவரின் மனைவியை பாலியல் இலஞ்சமாக கோரிய பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.&amp;nbsp;திருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரியிடம் இருந்து அவரின் மனைவியை பாலியல் இலஞ்சமாக கோரிய பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை
செய்வதற்காக, இலஞ்சமாக பணமும் மற்றும் வியாபாரியின் மனைவியை பாலியல் இலஞ்சமாகவும் குறித்த அதிகாரி கோரியுள்ளார்.&nbsp;</p><p>மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் நிலையத்தில்
கடமையாற்றி வரும் ஓட்டுமாவடியைச் சேர்ந்த பொலிஸ் உப பரிசோதகர் (எஸ்.ஜ) ஒருவரே இச்சம்பவத்தில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><h2>முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள்..&nbsp;</h2><p>
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த 2021ஆம் ஆண்டு திருகோணமலை பொலிஸ்
நிலையத்தில் கடமையாற்றிய போது ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபரை விடுவிப்பதற்கு ஒரு தொகை பணம் மற்றும் அந்த வியாபரியின்
மனைவியை பாலியல் இலஞ்சமாக கோரியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbf0f19c-90db-4fee-8758-fb7ef7ccb9df/26-6a9d0027509c0.webp' /></p><p>
</p><p>
இதனை தொடர்ந்து குறித்த வியாபாரி இது தொடர்பாக பொலிஸ் உத்தியோகத்தருக்கு
எதிராக திருகோணமலை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு
செய்ததையடுத்து விசாரணைகள் இடம்பெற்று வந்துள்ளன.&nbsp;</p><p>குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அங்கிருந்து வாழைச்சேனை மற்றும்
கந்தளாய் பொலிஸ் பிரிவிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு
அங்கிருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கல்குடா பொலிஸ் நிலையத்திற்கு
இடமாற்றப்பட்டு கடமையாற்றி வந்துள்ளார்.&nbsp;</p><p> இந்த நிலையில், அவரை உடனடியாக பணி இடைநீக்கம்
செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்து கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T05:57:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை ; மக்களே அவதானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-issue-warning-to-sri-lankans-1788674187"></link>
            <id>https://jvpnews.com/article/police-issue-warning-to-sri-lankans-1788674187</id>
            <summary type="text">போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதக் கட்டணங்களை இணைய வழியில் செலுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட &#039;Gov Pay&#039; அமைப்பைப் போன்ற போலி இணையதளத்தை உருவாக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதக் கட்டணங்களை இணைய வழியில் செலுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 'Gov Pay' அமைப்பைப் போன்ற போலி இணையதளத்தை உருவாக்கி, பொதுமக்களின் பணம் மற்றும் முக்கியமான தகவல்களைத் திருடும் மோசடியொன்று இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "> 

'Gov Pay' மூலம் பணத்தைச் செலுத்துவதற்கு வேறு எந்த இணையதளமும் கிடையாது என்பதால், இத்தகைய நிதி மோசடிகளில் சிக்கி ஏமாற வேண்டாம் என்று பொலிஸார் அறிவுறுத்துகின்றனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f58829d3-acac-4155-8e00-fa1b576032ed/26-6a9d008cbf923.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;நிதி மோசடி</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

பொதுமக்களின் சேவையை இலகுபடுத்தும் நோக்கிலும், நிதி மோசடிகளைக் குறைக்கும் நோக்கிலும் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை 'Gov Pay' முறைமையின் மூலம் செலுத்தும் நடைமுறை இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. </p><p style="text-align: justify; ">

இருப்பினும், 'Gov Pay' அமைப்பைப் போன்ற போலி இணையதளத்தை உருவாக்கி, பொதுமக்களின் பணம் மற்றும் ரகசியத் தரவுகளை தந்திரமாகத் திருடும் மோசடி இடம்பெற்று வருவதாக பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இந்த போலி இணையதளத்தின் இணைப்புகள் (Links), குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp) செய்திகள் மூலமாக கையடக்க தொலைபேசிகளுக்கு அனுப்பப்பட்டு, பொதுமக்களின் பணம் இவ்வாறு திருடும் மோசடி இடம்பெறுவதாக குறிப்பிடப்படுகிறது. </p><p style="text-align: justify; ">

'Gov Pay' மூலம் பணத்தைச் செலுத்துவதற்கு வேறு எந்த இணையதளமும் இல்லாததால், இவ்வாறான போலி நிதி மோசடிகளில் சிக்க வேண்டாம் என போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர, பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-06T05:56:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 உயர்தர பரீட்சை பெறுபேறுகள் - பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2026-a-l-results-to-be-released-before-year-end-1788664680"></link>
            <id>https://ibctamil.com/article/2026-a-l-results-to-be-released-before-year-end-1788664680</id>
            <summary type="text">2026 ஆண்டின் இறுதிப் பகுதிக்குள் உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.அதற்கமைய, உயர...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆண்டின் இறுதிப் பகுதிக்குள் உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.</p><p>அதற்கமைய, உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த விடயத்தை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><h2>மதிப்பீட்டுப் பணிகள்</h2><p>இந்த மதிப்பீட்டுச் செயற்பாடுகள் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளதுடன், எதிர்வரும் அக்டோபர் மாதம் 25 ஆம் திகதிக்குள் மதிப்பீட்டுப் பணிகளை முழுமையாக நிறைவுசெய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e71bc350-7634-44bc-8002-5b919c758757/26-6a9cdd93aac50.webp' /></p><p>அத்துடன், உயர்தரப் பரீட்சைக்கான செய்முறைப் பரீட்சைகள் செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நேற்றைய தினத்துடன் (05) நிறைவடைந்தன.</p><p>

இந்தமுறை நடைபெற்ற பரீட்சையில் மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
</p><p>
பரீட்சை மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நடப்பு ஆண்டின் இறுதிப் பகுதிக்குள் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T05:50:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனரக லொறி மோதி சைக்கிள் ஓட்டுநர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cyclist-killed-in-collision-with-heavy-lorry-1788672672"></link>
            <id>https://tamilwin.com/article/cyclist-killed-in-collision-with-heavy-lorry-1788672672</id>
            <summary type="text">கனரக லொறி மோதியதில் சைக்கிளில் சென்ற ஆண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றைய தினம் (05.09.2026) காலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனரக லொறி மோதியதில் சைக்கிளில் சென்ற ஆண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த சம்பவம் நேற்றைய தினம் (05.09.2026) காலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.&nbsp;</p><p>
</p><p>கொழும்பு - குருநாகல் வீதியில் ஏகல மற்றும் ஜா-எல ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட
பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.&nbsp;</p><h2>விசாரணை முன்னெடுப்பு</h2><p>இதன்போது கனரக லொறி மோதியதில் சைக்கிளில் சென்ற நபர்
ஒருவர் லொறிக்கு அடியில் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81d660d7-401e-422e-a129-eb5892f9f519/26-6a9cfebe41e33.webp' /></p><p>
</p><p>மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா - எல பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T05:48:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த ராசி ஆண்களிடம் ஜாக்கிரதையா இருங்க! பெண்களை ஏமாற்றுவதில் கில்லாடிகளாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-zodiac-signs-men-are-cheat-girls-1788669220"></link>
            <id>https://manithan.com/article/which-zodiac-signs-men-are-cheat-girls-1788669220</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரம் அவர்களின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரம் அவர்களின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. </p><p>குறிப்பாக, அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, காதல் மற்றும் திருமண வாழ்க்கை மட்டுமின்றி, அவர்களின் நேர்மறை மற்றும் எதிர்மறையான குணநலன்களிலும் ராசி மற்றும் நட்சத்திரத்தின் தாக்கம் இருப்பதாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af077fd3-5068-485a-9a5a-ce412fe9801c/26-6a9cf2ab04c57.webp' /></p><p></p><p>

அந்த வகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே பெண்கள் மீதும் காதல் மீதும் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள் என்றும், இவர்கள்&nbsp; தங்களின் காதல் உறவுகளில் நேர்மையாக இல்லாமல், துணையை ஏமாற்றும் அல்லது ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட உறவுகளைத் தொடரும் மனப்பான்மை கொண்டிருக்ப்பார்கள் என்றும் கணிக்கபபட்டுள்ளது.</p><p>அப்படி காதல் என்ற பெயரில் பெண்களை அதிகம் ஏமாற்றும் குணம் கொண்டவர்களாக ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.&nbsp;</p><h2>மேஷம்
</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2830fc86-5615-403c-b72e-871807766ec1/26-6a9cf2abb4a77.webp' /></p><p>மேஷ ராசியின் அதிபதி செயல் மற்றும் போரின் கிரகமான செவ்வாய். இவர்கள் இயல்பிலேயே துணிச்சலும், ஆர்வமும், உத்வேகமும் கொண்டவர்கள். </p><p>உறவுகளில் தீவிரமாக ஈடுபட்டாலும், விரைவில் பொறுமையிழக்கவோ சலிப்படையவோ வாய்ப்புள்ளது. சவால்களையும் புதிய அனுபவங்களையும் விரும்புவதால், ஒரே பெண்ணிடம் நிலையான விசுவாசத்துடன் இருப்பது இவர்களுக்கு கடினம்.</p><p>ஆனால் இவர்கள் ஒருவரை&nbsp; உண்மையாக நேசிக்கும்போது, அவர்களின் காதலும் ஈடுபாடும் தீவிரமாக இருக்கும். இவர்களுக்கு எளிதில் சளிப்படையும் குணம் இருப்பதால் இவர்கள் பல பெண்களை விரும்ப அதிக வாய்ப்பு காணப்படும்.&nbsp;</p><h2>
மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54f4e612-bcc5-4df4-b210-b6e4434ba6db/26-6a9cf2ac6626b.webp' /></p><h2>
</h2><p>மிதுன ராசியின் அதிபதி கிரகங்களின் இளவரசரான புதன். இவர்கள் ஆர்வமுள்ளவர்களாகவும், துடிப்பானவர்களாகவும், மாற்றத்தை விரும்புபவர்களாகவும் இருப்பார்கள்.</p><p> புதிய இடங்கள் மற்றும் மனிதர்களைச் சந்திப்பதில் ஆர்வம் கொண்டதால், ஒரே பெண்ணுடன் நிலைத்து வாழ்வது சில நேரங்களில் கடினமாகலாம். </p><p>எப்போதும் புதுப்புது அனுபவங்களைத் தேடுவதால், எளிதில் சலிப்படையக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். இதனால் ஒரே துணைக்கு விசுவாசமாக இருப்பது கடினம்.&nbsp;</p><h2>

தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2364c31e-daf5-4d2d-9a83-23a9bfc97057/26-6a9cf2ad180ec.webp' /></p><p>
தனுசு ராசியின் அதிபதி முன்னேற்றம் மற்றும் சாகசத்தின் கிரகமான குருபகவான். இவர்கள் சுதந்திரத்தையும் புதிய அனுபவங்களையும் அதிகம் விரும்புவார்கள். </p><p>புதிய இடங்கள், யோசனைகள் மற்றும் மனிதர்களை ஆராய்வதில் ஆர்வம் கொண்டதால், ஒரே பெண்ணுடன் முழுமையாகத் திருப்தி அடைவது சில நேரங்களில் கடினமாகலாம். </p><p>தங்களின் சுதந்திரத்தைப் புரிந்துகொள்ளும் துணையை விரும்புவார்கள். உறவில் கட்டுப்பட்டதாக உணர்ந்தால், அதிலிருந்து விலகிவிடும் மனநிலை ஏற்படலாம்.</p><h2>

துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7527ca5-1ee0-4114-8ea6-3079d240d02a/26-6a9cf2adc12cd.webp' /></p><p></p><p>
துலாம் ராசிக்காரர்கள் வசீகரமானவர்கள், காதல் உணர்வு கொண்டவர்கள் மற்றும் சமூகத்தில் எளிதில் பழகக்கூடியவர்கள்.</p><p> புதிய நபர்களைச் சந்திப்பதையும், காதல் வாழ்க்கையை ரசிப்பதையும் விரும்புவார்கள். இதனால் சில நேரங்களில் பல உறவுகளுக்கு இடையில் ஊசலாடக்கூடும்.</p><p> உறவுகளில் நல்லிணக்கத்தை விரும்பினாலும், ஒரே ஒரு பெண்ணிடம் மட்டும் நிலைத்திருப்பது அவர்களுக்கு சவாலாக இருக்கலாம்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><b><u><br></u></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T05:47:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸ் 10 வாய்ப்பை நிராகரித்த ஜாய் கிரிஸில்டா… காரணம் இதுதான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/why-rejected-bigg-boss-10-joy-crizildaa-reveal-1788671960"></link>
            <id>https://manithan.com/article/why-rejected-bigg-boss-10-joy-crizildaa-reveal-1788671960</id>
            <summary type="text">பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் உடனான பிரச்சனை காரணமாக சமீப காலமாக அதிகம் பேசப்பட்டு வந்தார்.

தன்னை கர்ப்பமாக்கிவிட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் உடனான பிரச்சனை காரணமாக சமீப காலமாக அதிகம் பேசப்பட்டு வந்தார்.
</p><p>
தன்னை கர்ப்பமாக்கிவிட்டு மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டதாகக் கூறி, அவர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தார்.இதையடுத்து நடைபெற்ற டிஎன்ஏ பரிசோதனையில், ஜாய் கிரிஸில்டாவுக்கு பிறந்த குழந்தை மாதம்பட்டி ரங்கராஜின் குழந்தைதான் என்பது உறுதி செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e48d1ac6-c14c-4683-adfd-8e56c4821d57/26-6a9cfe009b0d8.webp' /></p><p></p><p>

இந்த விவகாரத்திற்குப் பிறகு தற்போது இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.&nbsp;</p><h2>பிக்பாஸ் 10 வாய்ப்பை நிராகரித்த ஜாய்&nbsp;</h2><p>இந்த நிலையில், ஜாய் கிரிஸில்டாவுக்கு பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ளும் வாய்ப்பு தேடி வந்ததாகவும் இவர் அதனை நிராகரித்தாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4d3e913-f071-41da-a7ef-503c3e0bf557/26-6a9cfe014eec9.webp' /></p><p>இவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைத்தும் அதை ஜாய் கிரிஸில்டா ஏன் நிராகரித்தார் என்ற கேள்வி எழுந்த நிலையில், அதற்கான காரணத்தையும் அவரே தற்போது தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da383647-718b-4289-8b52-dd1556b00942/26-6a9cfe0200cea.webp' /></p><p></p><p>
தனது மகன் ராகா இன்னும் சிறிய குழந்தையாக இருப்பதால், அவரை விட்டுவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வது தனக்கு சரியாகத் தோன்றவில்லை என்றும், அதனால் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டதாகவும் ஜாய் கிரிஸில்டா தெரிவித்துள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-06T05:46:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசியக் கொடியை எரித்தால் கடுமையான தண்டனை: அவுஸ்திரேலியா முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jail-time-for-burning-the-flag-1788673687"></link>
            <id>https://news.lankasri.com/article/jail-time-for-burning-the-flag-1788673687</id>
            <summary type="text">Jail time for burning the flag: தேசியக் கொடியை எரித்ததற்காக சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
அவுஸ்திரேலியாவில் தேசியக் கொடியை எரிக்கும் அல்லது போர் நினைவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Jail time for burning the flag: தேசியக் கொடியை எரித்ததற்காக சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
</p><p>அவுஸ்திரேலியாவில் தேசியக் கொடியை எரிக்கும் அல்லது போர் நினைவிடங்களைச் சேதப்படுத்துவோர் விரைவில் சிறைத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடலாம்.</p><h2>புதிய ஃபெடரல் குற்றம்</h2><p>
</p><p>நாட்டின் தேசிய சின்னங்கள் மற்றும் வரலாற்று நினைவிடங்களுக்கு வலுவான சட்டப் பாதுகாப்பு தேவை என்று வாதிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஆங்கஸ் டெய்லர், அவுஸ்திரேலிய தேசிய சின்னங்கள் மற்றும் பாரம்பரியப் பாதுகாப்பு மசோதாவிற்கான திட்டங்களை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdf3cfac-4002-43d4-9724-7519d9d23476/26-6a9cfe998c81f.webp' /></p><p> </p><p>ஒருவரின் செயல்கள் வெறுப்பையோ வன்முறையையோ தூண்டுமா, பொது அமைதிக்கு அச்சுறுத்தல் விளைவிக்குமா அல்லது பொதுக் குழப்பத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொருட்படுத்தாமல், அவுஸ்திரேலியக் கொடியை பொதுவெளியில் கடுமையாக அவமதிப்பதை இந்தத் திட்டம் ஒரு புதிய ஃபெடரல் குற்றமாகவே கருதும். </p><p>மேலும், அவுஸ்திரேலியா குறித்து அரசியல் கருத்துக்களைத் தெரிவிக்கவும், தாராளமாக விமர்சிக்கவும் மக்களுக்கு உரிமை உண்டு; ஆனால், தேசியக் கொடியை எரிப்பது எல்லையை மீறும் செயலாகும் என்றும் டெய்லர் கூறியுள்ளார்.</p><p></p><p> </p><p>தேசியக் கொடி என்பது ஒரு அடையாளம்; அது நம் தேசத்தின் மற்றும் நம் பாரம்பரியத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். அவுஸ்திரேலியர்கள் அது குறித்து மிகுந்த உணர்வுப்பூர்வமான பிணைப்பைக் கொண்டுள்ளனர் என்பதை நான் அறிவேன் என குறிப்பிட்டுள்ள அவர், கொடி எரிக்கப்படுவதைப் பார்ப்பது பெரும்பாலான அவுஸ்திரேலியர்களுக்கு ஏற்புடையதல்ல; நிச்சயமாக எனக்கும் அது ஏற்புடையதல்ல. </p><p>எனவே, ஓராண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கும் வகையிலான ஏற்பாடு கொண்டுவரப்படுவது பொருத்தமானது என்றே நான் கருதுகிறேன் என்றார்.</p><p> மேலும், அவுஸ்திரேலியாவின் வரலாற்றைப் போற்றும் போர் நினைவுச்சின்னங்கள், சிலைகள், நினைவுப் பலகைகள் மற்றும் பிற நினைவுச்சின்னங்களை வேண்டுமென்றே சேதப்படுத்துதல், சிதைத்தல் அல்லது அவமதித்தல் ஆகியவற்றுக்குச் சிறைத் தண்டனை விதிக்கக்கூடிய கடுமையான புதிய ஃபெடரல் குற்றங்களையும் இந்தக் கூட்டணி அறிமுகப்படுத்தும் என்றார்.
</p><p>அவுஸ்திரேலிய தினம் காமன்வெல்த் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டதாக அமையும்; அதாவது, அதன் திகதியில் ஏதேனும் மாற்றம் செய்ய முன்மொழியப்பட்டால், அது ஒரு தேசிய வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் டெய்லர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28e538f2-bad5-4ef3-9d70-2deead2d835e/26-6a9cfe9a3f18e.webp' /></p><p> </p><p>சமீபத்திய மாதங்களில் விக்டோரியா மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களில் நிகழ்ந்த தொடர்ச்சியான சம்பவங்களைத் தொடர்ந்து இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. </p><p>மேற்கு விக்டோரியாவின் டோபி (Dobie) பகுதியில் உள்ள போர் நினைவுச் சின்னம் ஒன்று சேதப்படுத்தப்பட்டது; இதில் உள்ளூர் முன்னாள் படைவீரர்களைக் கௌரவிக்கும் பலகை திருடப்பட்டதுடன், அப்பகுதி முழுவதும் அரசியல் வாசகங்கள் எழுதப்பட்டு, சுற்றியுள்ள தாவரங்களும் சேதப்படுத்தப்பட்டன. </p><p>இந்த ஆண்டின் தொடக்கத்தில், மெல்போர்னின் ஃபிளாக்ஸ்டாஃப் பூங்காவில் உள்ள 155 ஆண்டுகள் பழமையான நினைவுச்சின்னமும் சேதப்படுத்தப்பட்டு, அவுஸ்திரேலியாவிற்கு எதிரான சுவரெழுத்துக்களால் மூடப்பட்டது. </p><p>மட்டுமின்றி, அவுஸ்திரேலிய தினத்தன்று, பிரிஸ்பேனில் நடைபெற்ற 'ஆக்கிரமிப்பு நாள்' (Invasion Day) போராட்டத்தின் போது அவுஸ்திரேலியக் கொடி ஒன்று தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T05:46:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை ஆரம்பமாகும் ஜெனீவா கூட்டத்தொடர் : இறுதி நேரத்தில் விஜிதவின் பயணம் இரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/min-vijitha-visit-cancelled-geneva-63rd-session-1788671559"></link>
            <id>https://ibctamil.com/article/min-vijitha-visit-cancelled-geneva-63rd-session-1788671559</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது அமர்வில் பங்கேற்கவிருந்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரக் குழுவின் விஜய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது அமர்வில் பங்கேற்கவிருந்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரக் குழுவின் விஜயம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது.</p><p>இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் முக்கிய விவாதங்கள் இடம்பெறவுள்ள இந்த அமர்வு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நாளை (07) ஆரம்பமாகவுள்ளது.</p><p> </p><p>இந்த நிலையில் அமைச்சர் விஜித ஹேரத் ஐ.நா மனித உரிமைகள் அமர்வுகளில் இம்முறை பங்கேற்க மாட்டார் எனவும், ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தர இராஜதந்திரத் தூதுக்குழுவே இந்த அமர்வை முழுமையாகக் கையாளும் எனவும்&nbsp;வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் துஷார ரொட்ரிகோ உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p></p><h2>எழுத்துமூலமான அறிக்கை</h2><p>எனினும் குறித்த பயணம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டதற்கான காரணம் தொடர்பில் அவர் விரிவாக எதுவும் தெரிவிக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbbdad19-d796-469a-bc90-ba3774d78eab/26-6a9cfc4398d3c.webp' /></p><p>மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வில் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரகத்தின் எழுத்துமூலமான புதுப்பிக்கப்பட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.</p><p>


இந்த அறிக்கையை மையப்படுத்தி உறுப்பு நாடுகளின் பங்களிப்புடன் கூடிய பொது விவாதமும் நடைபெறவுள்ளது.</p><p>சர்வதேசத்தின் கடுமையான கவனத்தைப் பெற்றுள்ள யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உள்ளிட்ட உணர்வுபூர்வமான பொறுப்புக்கூறல் விடயங்களை முறையாகக் கையாள்வது குறித்து வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் விரிவான ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T05:41:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அசுரன் படத்தில் தனுஷுக்கு பதில் நான் தான் நடிக்க வேண்டியது, பிரபல நடிகர் உடைத்த உண்மை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/popular-actor-was-first-choice-for-asuran-movie-1788672464"></link>
            <id>https://cineulagam.com/article/popular-actor-was-first-choice-for-asuran-movie-1788672464</id>
            <summary type="text">&#039;அசுரன்&#039;&amp;nbsp;&#039;அசுரன்&#039; தனுஷ் நடிப்பிலும் வெற்றிமாறன் இயக்கத்திலும் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த படம். எல்லோரும் எதிர்பார்த்தது போலவே படமும் வச...</summary>
            <content type="html"><![CDATA[<h2>'அசுரன்'&nbsp;</h2><p>'அசுரன்' தனுஷ் நடிப்பிலும் வெற்றிமாறன் இயக்கத்திலும் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த படம். எல்லோரும் எதிர்பார்த்தது போலவே படமும் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbb25433-866a-4049-8362-747ee4b952aa/26-6a9cf9d2dea68.webp' /></p><p>அதோடு தனுஷ் மற்றும் வெற்றிமாறனுக்கு இந்த படத்தின் மூலம் தேசிய விருது கூட கிடைத்தது. இந்நிலையில் அசுரன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது கருணாஸ் தானாம்; அவரே ஒரு பேட்டியில் இதை கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/effee322-33b7-43a9-8037-942cccd38bc2/26-6a9cf9d3966e6.webp' /></p><p></p><h2>நடிகர் உடைத்த உண்மை</h2><p> </p><p>

வெற்றி முதலில் என்னிடம் தான் இந்த கதையை சொன்னார், நீங்களும் உங்க மகனும் நடிக்கலாம் என்றார்; ஆனால், முழு கதையையும் கேட்ட நான், "வெற்றி இது மாஸ் ஹீரோ பண்ண வேண்டிய படம், கண்டிப்பாக மெகா ஹிட் ஆகும்" என்று சொன்னேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c32125b-ce48-4a55-be34-67cbe9076811/26-6a9cf9d44bf94.webp' /></p><p> 

வெற்றி, "நீங்க வாங்க உங்கள வச்சு நான் எடுக்கிறேன் என்றால், நான் உறுதியாக இருந்தேன் மாஸ் ஹீரோதான் இந்த கதையில் நடிக்க வேண்டும் என்று". அதே போல் தனுஷ் நடித்து இந்த படம் மெகா ஹிட் ஆனது என கருணாஸ் கூறியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T05:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொந்த தந்தையை படுகொலை செய்த 16 வயது மகன் ; இலங்கையில் பரபரப்பு சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/16-year-old-son-kills-his-own-father-1788672738"></link>
            <id>https://jvpnews.com/article/16-year-old-son-kills-his-own-father-1788672738</id>
            <summary type="text">மாத்தளை, உக்குவளை பகுதியில் மகனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

இச்சம்பவத்தில் உக்குவளை, மாத்தளை பகுதியைச் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மாத்தளை, உக்குவளை பகுதியில் மகனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">

இச்சம்பவத்தில் உக்குவளை, மாத்தளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3546978e-362a-46e4-831b-1ed38db07a6a/26-6a9cfae440a65.webp' /></p><p style="text-align: justify; "> 

இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாகவே மகன் இந்தக்கொலையைச் செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "> 

சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-06T05:32:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கபொத உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/advanced-level-examination-results-released-date-1788671699"></link>
            <id>https://tamilwin.com/article/advanced-level-examination-results-released-date-1788671699</id>
            <summary type="text">கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
</p><p>
கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நேற்றுடன் (05) நிறைவடைந்துள்ளன.
</p><h2>விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள்</h2><p>
இதற்கமைய, கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த மதிப்பீட்டு செயற்பாடுகள் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea7b5b82-0b1d-415c-bb82-d2e5d0dadd3e/26-6a9cfa74674ed.webp' /></p><p>

அத்துடன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதிக்குள் மதிப்பீட்டுப் பணிகளை முழுமையாக நிறைவுசெய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். </p><p>

இம்முறை பரீட்சையில் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த நிலையில், செய்முறைப் பரீட்சைகள் செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T05:30:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை தொடர்ந்து அநுரவிடம் சிக்கவுள்ள சஜித்..! மொட்டுக் கட்சி தரப்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-complain-in-un-1788604168"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-complain-in-un-1788604168</id>
            <summary type="text">நாமல் ராஜபக்ச மட்டுமன்றி சஜித் பிரேமதாச மற்றும் திலித் ஜயவீர ஆகியோரும் அரசாங்கத்தின் நியாயமற்ற அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என&amp;nbsp;பொதுஜன பெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்ச மட்டுமன்றி சஜித் பிரேமதாச மற்றும் திலித் ஜயவீர ஆகியோரும் அரசாங்கத்தின் நியாயமற்ற அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என&nbsp;பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் மிலிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர்,</p><p> </p><p>இலங்கையில் ஜனநாயகத்தை அழித்து, சர்வாதிகார ஆட்சியை நோக்கியும் அரசியல் பழிவாங்கலை நோக்கியும் அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சி தொடர்பாக ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அடுத்த வாரம் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யவுள்ளோம்.&nbsp;</p><p>
இது தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சென்று மக்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, அடுத்த கட்டமாக சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கவுள்ளோம்.&nbsp;</p><h2>ஜெனிவாவில் முறைப்பாடு..&nbsp;&nbsp;</h2><p>

அடுத்த திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அடுத்த அமர்வுக்கு இணைவாக, செவ்வாய்க்கிழமை இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்த தகவல்களை முன்வைக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d772de7c-9f3a-41e5-99c5-41437d108f50/26-6a9cf843b5774.webp' /></p><p>ஜனநாயகத்தை அழித்து சர்வாதிகார அதிகாரத்தைக் கட்டியெழுப்ப மேற்கொள்ளப்படும் முயற்சி, நீதித்துறையின் சுயாதீனத்தின் மீதான தாக்கம், மக்கள் எதிர்ப்பு முறையில் அரசியலமைப்பை மாற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் மற்றும் எதிர்க்கட்சியைக் இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் அரசியல் பழிவாங்கல் என்பனவற்றுக்கே முக்கிய கவனம் செலுத்தப்படும்.&nbsp;</p><p>
</p><p>
எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை அரசியல் பழிவாங்கலின் விளைவே.&nbsp;</p><p>
எதிர்க்கட்சியின் அரசியல் தலைவர்களை அடக்குவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவதாகவும், நாமல் ராஜபக்ச மட்டுமன்றி சஜித் பிரேமதாச மற்றும் திலித் ஜயவீர ஆகியோரும் இதுபோன்ற நியாயமற்ற அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுவார்கள்” என எச்சரித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T05:27:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாக்குதல்களால் அதிரும் மத்திய கிழக்கு ; தகர்க்கப்பட்ட எண்ணெய் தாங்கிக் கப்பல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/middle-east-shaken-by-attacks-1788672405"></link>
            <id>https://canadamirror.com/article/middle-east-shaken-by-attacks-1788672405</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக மீண்டும் தீவிரமடைந்துள்ள மோதலில், சனிக்கிழமையன்று இரு நாடுகளும் பரஸ்பரம் கப்பல்கள் மீது ஏவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக மீண்டும் தீவிரமடைந்துள்ள மோதலில், சனிக்கிழமையன்று இரு நாடுகளும் பரஸ்பரம் கப்பல்கள் மீது ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
</p><p>
அமெரிக்க மத்திய கட்டளையகம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின்படி,

ஈரானின் 'கார்க் தீவு' அருகே ஒன்று, ஜாஸ்க் பகுதிக்கு அருகே ஒன்று மற்றும் ஓமன் வளைகுடாவில் ஒன்று என ஈரானுடன் தொடர்புடைய 03 மசகு எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் முற்றிலுமாக முடக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34c20753-4313-4dd6-a522-6b2689856309/26-6a9cf99a97389.webp' /></p><p>

முன்னதாக அமெரிக்கப் படைகளின் போர் விமானம் தாங்கி கப்பல் மற்றும் ஏவுகணை அழிப்புக் கப்பலைக் குறிவைத்து ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><p>ஈரானின் தாக்குதலில் அமெரிக்கப் படைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. </p><p> அழிக்கப்பட்ட கப்பல்கள் ஈரானிய புரட்சிகர காவல் படையின் நிதியுதவிக்காகப் பயன்படுத்தப்படும் நிழல் அமைப்பைச் சேர்ந்தவை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. </p><p> 

ஈரானின் அரசு ஊடகமான ஐஆர்ஐபி மற்றும் ஐஆர்ஜிசி வெளியிட்ட தகவலின்படி,

அமெரிக்கத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஓமர்ன் வளைகுடா மற்றும் ஹோர்மூஸ் நீரிணைப் பகுதிகளில் அமெரிக்க தொடர்புடைய 3 கப்பல்கள் மற்றும் "அனுமதிக்கப்படாத பாதையில்" பயணித்த 3 எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.</p><p>

கார்க் தீவு அருகே அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கப்பலில் இருந்த ஊழியர்கள் மீட்கப்பட்டதால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-06T05:26:58+00:00</updated>
        </entry>
    </feed>
