<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-20T09:23:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரயில் தண்டவாளத்தில் ஜல்லி கற்கள் இருப்பது ஏன்? பின்னணியில் உள்ள காரணங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/reason-for-stones-filled-in-railway-tracks-1787217614"></link>
            <id>https://news.lankasri.com/article/reason-for-stones-filled-in-railway-tracks-1787217614</id>
            <summary type="text">reason for stones in railway track: ரயில் தண்டவாளத்தில் ஏன் ஜல்லி கற்கள் இருக்கிறது என்பதன் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலா...</summary>
            <content type="html"><![CDATA[<p>reason for stones in railway track: ரயில் தண்டவாளத்தில் ஏன் ஜல்லி கற்கள் இருக்கிறது என்பதன் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
</p><h3>
ரயில் தண்டவாளத்தில் ஜல்லி கற்கள் இருப்பது ஏன்?</h3><p>

ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது அதன் இடையே மற்றும் வெளியே ஜல்லி கற்கள் இருப்பதை கவனித்திருப்பீர்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2aedcd2b-d20e-43a8-834a-99a136ac647c/26-6a86c6d12b3b7.webp' /></p><p>

இந்த கற்கள் வெறும் பள்ளங்களை நிரப்புவதற்காகவோ அல்லது அலங்காரத்திற்காகவோ போடப்படவில்லை. மாறாக இதுவே ரயில் இயங்குவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.</p><p> 

தண்டவாளத்தில் கொட்டப்பட்டுள்ள இந்த ஜல்லி கற்கள்(Ballast) என்று அழைக்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p>

இந்த கற்கள் இல்லாமல் இருந்தால் ஆயிரக்கணக்கான டன் எடை கொண்ட ரயில் தண்டவாளத்தில் செல்லும் போது, தண்டவாளம் பூமிக்குள் புதைந்து விடும்.</p><p> 

இந்த கற்கள், ரயில் எடையை தாங்கி அதனை மற்ற கற்களுக்கும் அந்த எடையை பரப்பி ரயில் இயங்க உதவுகிறது. 

மேலும் இந்த கற்கள் ரயிலின் அதிர்வை உறிஞ்சி, தண்டவாளம் விலகி செல்வதை தடுக்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d808946b-155b-4110-a970-a483d9a2262c/26-6a86c6d076977.webp' /></p><p>
இதே போல் மழைக்காலங்களில் தண்டவாளங்களில் நீர் தேங்குவதை தடுக்க இந்த கற்கள் உதவுகிறது. கற்களுக்கு இடையேயான சிறிய இடைவெளி மூலம், மழைநீர் எளிதாக வடிகிறது. </p><p>

இந்த கற்கள், தண்டவாளத்தைச் சேதப்படுத்தக்கூடிய புற்களோ செடிகளோ வளராமல் தடுக்க உதவுகிறது. 

சுமார் 12 முதல் 16 இன்ச் அளவுள்ள சீரற்ற வடிவத்தில் உள்ள கற்கள் பயன்படுத்தப்படுகிறது. </p><p>

கற்கள் காலப்போக்கில் தேய்ந்து, உடையக்கூடியதாக மாறி தாங்குதிறனை இழக்கும். இதனால் பராமரிப்பின் போது, ​​பழைய கற்கள் சுத்தம் செய்யப்பட்டு புதிய கற்கள் பதிக்கப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T09:20:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட மாணவர்கள்: பள்ளி முதல்வரை குத்திக் கொன்ற கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nalgonda-school-murder-case-2-student-arrested-1787209468"></link>
            <id>https://news.lankasri.com/article/nalgonda-school-murder-case-2-student-arrested-1787209468</id>
            <summary type="text"> Nalgonda school principal murder case 2 student arrested: தெலுங்கானாவில் பணத்திற்காக பள்ளி முதல்வரை மாணவர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p> Nalgonda school principal murder case 2 student arrested: தெலுங்கானாவில் பணத்திற்காக பள்ளி முதல்வரை மாணவர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>பள்ளி முதல்வரை குத்தி கொலை செய்த மாணவர்கள்</h2><p>தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தின் கொடமள்ளேபள்ளி பகுதியில் அமைந்துள்ள நாகார்ஜுனா பப்ளிக் பள்ளியின் முதல்வரான கள்ளூ ரூபா ரெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> இந்த சம்பவத்தில் இரண்டு பள்ளி மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் பணம் மற்றும் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இந்த குற்றத்தை செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3c30058-d702-446a-b1fd-7ee17abdcd70/26-6a86a6fdd4151.webp' /></p><p></p><h2> நடந்தது என்ன?</h2><p>
கடந்த ஆகஸ்ட் 12ம் திகதி ரூபா ரெட்டி அவரது இல்லத்தில் 27 முறை கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் இறந்து கிடந்தார்.</p><p>முன்னதாக ஹைதராபாத்தில் இருந்த அவரது கணவர் ரூபா ரெட்டியிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயன்ற போது பதில் கிடைக்கவில்லை என்பதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை தொடர்பு கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0e68a74-ee2c-4fd2-b814-bebcc4344291/26-6a86a6fea020c.webp' /></p><p> இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டிற்கு வந்த பார்த்த ரூபா ரெட்டி உயிரிழந்து கிடப்பதை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> ரூபா ரெட்டி அவரது அத்தையுடன் கடைசியாக பேசிக் கொண்டிருந்த போது பாபு என்ற பெயரை உச்சரித்துள்ளார்.</p><p>இதனை முதன்மையாக கொண்டு விசாரணையை தீவிரப்படுத்திய பொலிஸார் ரூபா ரெட்டி பணியாற்றி வந்த பள்ளியில் 10 வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவரை கைது செய்துள்ளனர்.</p><p> அவர்கள் ரூபா ரெட்டியின் வீட்டுக்குள் நுழைந்து 2.50 லட்சத்தை திருடி விட்டு தப்பிக்க முயன்ற போது ரூபா ரெட்டி அவர்களை அடையாளம் கண்டு கொண்டதால் அந்த மாணவர் ரூபா ரெட்டியை 27 முறை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T09:20:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தரப் பரீட்சை மண்டபத்தில் மது போதையில் சிக்கிய அதிபர் மற்றும் ஆசிரியர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/principal-teacher-caught-drunk-on-exam-center-1787212360"></link>
            <id>https://ibctamil.com/article/principal-teacher-caught-drunk-on-exam-center-1787212360</id>
            <summary type="text">

மெதிரிகிரிய பிரதேசத்தில் உள்ள ஒரு உயர்தரப் பரீட்சை மண்டபத்தில் மது போதையில் இருந்ததாகக் கண்டறியப்பட்ட மேற்பார்வையாளர் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகார...</summary>
            <content type="html"><![CDATA[<p>

மெதிரிகிரிய பிரதேசத்தில் உள்ள ஒரு உயர்தரப் பரீட்சை மண்டபத்தில் மது போதையில் இருந்ததாகக் கண்டறியப்பட்ட மேற்பார்வையாளர் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரி ஆகியோர் அங்கிருந்த இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
அவர்களில் ஒருவர் ஒரு பாடசாலை அதிபர் என்றும், மற்றொருவர் ஹிங்குராக்கொட கல்வி வலயத்தை சேர்ந்த ஆசிரியர் என்றும் வட மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ.சமரகோன் தெரிவித்துள்ளார்.
</p><p>
பரீட்சைத் திணைக்களத்திற்கு கிடைத்த தகவலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் குறித்த இருவரும் சிக்கியதாக கூறப்படுகிறது.</p><p></p><h2>கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை</h2><p>
</p><p>
அதன்படி, பிடிப்பட்ட மேற்பார்வையாளரையும் உதவி ஒருங்கிணைப்பு அதிகாரியையும் பரீட்சை மேற்பார்வை பணிகளிலிருந்து இடைநீக்கம் செய்ததாக பணிப்பாளர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dae79da3-9975-44e7-abff-3cee82b75491/26-6a86b5805681f.webp' /></p><p>

இந்நிலையில், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் பின்னர் அவர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T09:18:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசிடம் சஜித் விடுத்த கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-s-request-to-the-anura-government-1787210301"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-s-request-to-the-anura-government-1787210301</id>
            <summary type="text">அரசுக்கு வாக்களித்த விவசாயிகளுக்கு இப்போதாவது முறையான நீதியை வழங்குமாறு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் கோரிக்கை
விடுத்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசுக்கு வாக்களித்த விவசாயிகளுக்கு இப்போதாவது முறையான நீதியை வழங்குமாறு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் கோரிக்கை
விடுத்துள்ளார்.</p><p>

விவசாயிகளின் பிரச்சினைகள் ஏற்கனவே உக்கிரமடைந்துள்ள நிலையில், உற்பத்திச்
செலவுக்கு ஏற்ப இலாபத்துடன் நெல்லை விற்பனை செய்ய முடியாத பாரிய நெருக்கடி
ஏற்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><h2>விவசாயிகளுக்காகக் கூறிய விடயங்கள்</h2><p>மேலும் தெரிவிக்கையில், "ஈர நெல் 80 முதல் 85 ரூபா வரையிலும், காய்ந்த நெல் 90 முதல் 100 ரூபா
வரையிலும் கொள்வனவு செய்யப்படுகின்றது.</p><p> ஆனால், அரசின் புள்ளிவிபரங்களின்படி
ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்வதற்கு 137 ரூபா செலவாகின்றது.</p><p> இதனால்
விவசாயிகள் பாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78178515-fcfc-451d-ad25-b6f1c961c38d/26-6a86aed419cbc.webp' /></p><p>
தேர்தல் காலத்தில் அரசு விவசாயிகளுக்காகக் கூறிய விடயங்கள் எதுவும் இன்று
நடைமுறைப்படுத்தப்படவில்லை. விவசாயிகளை ஏழ்மைக்குள் தள்ளி, அவர்களின்
ஜீவனோபாயத்தை நசுக்காமல் முறையான விலையை உறுதிப்படுத்த வேண்டும்.</p><p>ஒரு ஹெக்டேயருக்குத் தேவையான 225 கிலோகிராம் யூரியா உரத்துக்கு அரசு வழங்கும்
30 ஆயிரம் ரூபா மானியம் போதுமானதாக இல்லை.
</p><h2>மொத்த உள்நாட்டு உற்பத்தி</h2><p>
விதை நெல், உரம், எரிபொருள் மற்றும் கிருமிநாசினிகளின் விலைகள் பலமடங்கு
உயர்ந்துள்ளதோடு, யானை - மனித மோதல் போன்ற பாரிய சவால்களுக்கும் விவசாயிகள்
முகங்கொடுத்து வருகின்றனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d037c92e-54dc-4dbe-bfc3-c1f2d7879920/26-6a86aed4df24f.webp' /></p><p>
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பைக்
கணக்கிடுவதில் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின்
கணிப்பீடுகளில் பிழைகள் காணப்படுவதால், அவற்றை உடனடியாகத் திருத்திக் கொள்ள
வேண்டும்.
</p><p>
வேளாண்மை மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில்
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் கிராமிய சமூகம் பாரிய அவல நிலைக்குத் தள்ளப்படும்.
</p><p>
அரசுக்குத் தியாகங்களைச் செய்து வாக்களித்த விவசாயிகளின் நலனைக் காக்க
உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T09:00:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[Khalifa: The Ruler (மலையாளம்) திரை விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/khalifa-the-ruler-movie-review-1787216071"></link>
            <id>https://cineulagam.com/article/khalifa-the-ruler-movie-review-1787216071</id>
            <summary type="text">பிரித்விராஜ் நடிப்பில் வைசாக் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ள கேங்ஸ்டர் ட்ராமாவான இந்த கலீபா ரசிகர்களை கவர்ந்ததா? பார்ப்போம்.கதைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்விராஜ் நடிப்பில் வைசாக் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ள கேங்ஸ்டர் ட்ராமாவான இந்த கலீபா ரசிகர்களை கவர்ந்ததா? பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52df93da-d78c-449b-98a2-c3463f81abe8/26-6a86c0cab92ab.webp' /></p><h2>கதைக்களம்
</h2><p>
பிரித்விராஜ் நண்பர் சமீர் முதல் காட்சியிலேயே போலிஸில் பிடிபடுகிறார், அதிலிருந்து கதை தொடங்குகிறது, பிரித்விராஜ் அப்பா சமூகத்தில் நல்ல பெயருடன் இருப்பவர்.</p><p> இவரை ஒரு ஸ்மக்லீங் செய்ய நீல் நிதின் முகேஷ் வறுபுறுத்துகிறார், அதை அவர் மறுக்கிறார்.

அதை தொடர்ந்து ப்ரித்விராஜ் அப்பாவை சதி செய்து தங்கம் கடத்தல் வழக்கில் சிக்க வைக்கிறார்கள், இதனால் கோபமான பிரித்விராஜ் தன் அப்பாவிற்காக களத்தில் இறங்குகிறார்.
</p><p>
ஒரு கட்டத்தில் மிகபெரிய ஸ்மக்லீங் தொழிலுக்குள் பிரித்விராஜும் வர, அவருக்கான பகை பல மடங்காக அதன் பின் இவர்களை எப்படி சமாளித்தார் என்பதே மீதிக்கதை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c16df1d3-ff7f-4c93-bf8a-339238d0d90f/26-6a86c0cb707e4.webp' /></p><h2>படத்தை பற்றிய அலசல்
</h2><p>
பிரித்விராஜ் செம ஸ்டைலிஷாக நடித்துள்ளார், அதிலும் ப்ளாஸ்பேக்-ல் காட்சிகளில் அத்தனை இளமை தோற்றத்தில் அசத்துகிறார், ஸ்மக்லீங் தொழிலுக்கு சென்றவுடன் அவரிடம் ஏற்படும் மாற்றம், அவருக்கு ஏற்படும் இழப்பு, அதிலிருந்து அவர் மீண்டு வருவது என பிரித்விராஜ் ஒன் மேன் ஷொக் தான்.
</p><p>
அதே நேரத்தில் படத்தின் முதல் பாதி தேவையில்லாத காட்சிகள் இல்லாமல் முழுக்க முழுக்க கதை நோக்கியே நகர்கிறது. ஆனால், அப்படியிருந்தும் படத்தில் பெரிய சுவாரஸ்யமில்லை, பில்டப் காட்சிகளாக மட்டுமே செல்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25247cc7-bc12-4b26-bd37-cc5bc5cecfae/26-6a86c128b1397.webp' /></p><p></p><p>அதே நேரத்தில் இடைவேளை முன்பு கோயமுத்தூரில் ஏர்போர்ட்டில் தங்கம் கடத்தும் காட்சி, எத்தனையோ படத்தில் நாம் பார்த்து பழகி போனது போல் உள்ளது, இருந்தாலும் அந்த காட்சியை சுவாரஸ்யமாக கொண்டு சென்றது நன்றாக இருந்தது.
</p><p>
இதை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாதி ஏதோ பல டுவிஸ்ட் அண்ட் டர்ன்ஸ் இருக்கும் என பார்த்தால், அதிலும் எந்த சுவாரஸ்யமும் இல்லை, அதே நேரத்தில் சண்டை காட்சிகள் கொஞ்சம் ரசிக்க வைக்கிறது.

அதிலும் இரண்டாம் பாதியில் ஜெயிலில் வரும் சண்டைகாட்சி மட்டுமே கொஞ்சம் ஆறுதலாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e755b85-d8c9-4b99-ab0e-5b20e58e5420/26-6a86c1298a7e7.webp' /></p><p> அதை தாண்டி திரைக்கதையில் எந்த சுவாரஸ்யமும் இல்லை.

டெக்னிக்கலாக படத்தின் ஒளிப்பதிவு டாப் நாச், அதிலும் இரவு நேரத்தில் வரும் சண்டை காட்சி படம்பிடித்த விதம் சூப்பர், ஜாக்ஸ் பிஜாய் பாடல்கள், பின்னணி இசை மிகைப்பு ஆறுதல்.</p><p><b><u>க்ளாப்ஸ்</u></b></p><p>

பிரித்விராஜ் பங்களிப்பு
</p><p>
ஜாக்ஸ் பிஜாய் இசை மற்றும் டெக்னிக்கல் ஒர்க்
</p><p><b><u>
பல்ப்ஸ்
</u></b></p><p>
பார்த்து பழகி போன பில்டப் காட்சி அமைப்புக்கள்.
</p><p>
வில்லன் கதாபாத்திரம்
</p><p>
இந்த மாதிரி கதைகளில் பெரிய புத்திசாலித்தனம் வேண்டும், இதுவோ நாம தான் இதை அந்த படத்திலே பார்த்துட்டோமே என்ற உணர்வை தான் தருகிறது.
</p><h5><b>
மொத்தத்தில் இந்த கலீபா தி ரூலர் டைட்டிலில் மட்டுமே உள்ளது, ரசிகர்கள் மனதை ரூல் செய்ய தவறிவிட்டனர்.&nbsp;</b></h5><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58b0fd10-5fd5-4bc3-9159-050b9663ee70/26-6a86c0ca097bf.webp' /></p>]]></content>
            <updated>2026-08-20T09:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பணத்துக்காக தனது பாடசாலை அதிபரை கொலை செய்த மாணவன்! அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/student-murders-his-school-principal-for-money-1787216486"></link>
            <id>https://jvpnews.com/article/student-murders-his-school-principal-for-money-1787216486</id>
            <summary type="text">பணத்துக்காக தனது பாடசாலை அதிபரை பத்தாம் வகுப்பு மாணவன் கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

தெலுங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பணத்துக்காக தனது பாடசாலை அதிபரை பத்தாம் வகுப்பு மாணவன் கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. </p><p>

தெலுங்கானாவில் உள்ள ஒரு தனியார் பாடசாலை அதிபராக இருந்தவர் ரூபா ரெட்டி. இவர் கடந்த 11ம் தேதி தனது வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c083424-1d33-4c28-a605-1f39a8707d32/26-6a86c26826621.webp' /></p><h2>&nbsp;பணம் வைத்திருந்ததால் கண்டித்த அதிபர்</h2><p>

போலீசார் நடத்திய சோதனையில் கடைசியாக ரூபா தனது அத்தையிடம் ஃபோனில் பேசியிருக்கிறார். பேசி முடிக்கும் போது யாரையோ பாபு என அழைத்து விட்டு போனை கட் செய்திருக்கிறார். </p><p>

எனவே, தனது பாடசாலையில் படிக்கும் மாணவனைத்தான் அவர் அப்படி அழைத்திருக்க வேண்டும் என போலீசார் சந்தேகப்பட்டனர்.</p><p></p><p>
</p><p>
அதன் அடிப்படையில் மாணவர்களை அவர்கள் கண்காணித்தபோதுதான் அதில் இரண்டு பேர் பார்களுக்கு செல்வது, பப்களுக்கு செல்வது, பணத்தை அதிகமாக செலவு செய்து என இருந்து வந்தனர்.

 சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை செய்தனர்.</p><p> அப்போதுதான் அவர்கள் இருவரும் சேர்ந்து பள்ளி முதல்வரை கொலை செய்தது தெரிய வந்தது.

அதில் ஒரு சிறுவன் ஹாஸ்டலில் தங்கியிருந்தபோது செல்போன் மற்றும் பணம் கையில் வைத்திருந்ததால் கண்டித்த அதிபர், சிறுவனை ஹாஸ்டலில் இருந்து நீக்கிவிட்டார்.</p><p></p><p> </p><p>

இந்த கோபத்தில் ரூபா வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்துகொண்ட அந்த சிறுவன் அவரின் வீட்டு சுவர் ஏறி உள்ளே குதித்திருக்கிறார். ஒரு மாணவர் வெளியே காத்திருந்தார்.
</p><p>
அந்த சிறுவனை பார்த்துதான் ரூபா ‘பாபு’ என அழைத்திருக்கிறார். அப்போது எடுத்துச் சென்ற கத்தியால் ரூபாவை சிறுவன் 27 முறை குத்தியதில் அவர் அங்கேயே மரணமடைந்தார்.
தற்போது அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-20T08:58:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[20 ஆண்டுகளாக மர்மம் நீடிக்கும் அல்லைப்பிட்டி அருட்தந்தை காணாமற்போன சம்பவம்: நினைவேந்தல் அனுஷ்டிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pries-missing-in-the-middle-of-allaipitiya-1787215378"></link>
            <id>https://tamilwin.com/article/pries-missing-in-the-middle-of-allaipitiya-1787215378</id>
            <summary type="text">அல்லைப்பிட்டி பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது உதவியாளர் வின்சன் விமலதாஸ் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டு 20 ஆண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அல்லைப்பிட்டி பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது உதவியாளர் வின்சன் விமலதாஸ் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவர்களுடன் அக்காலப்பகுதியில் காணாமல்
ஆக்கப்பட்ட 22 பேரின் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த நிகழ்வுகள், இன்று(20.08.2026) அல்லைப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது.
</p><h2>


20 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம்</h2><p>நினைவேந்தலை முன்னிட்டு அல்லைப்பிட்டி சந்தியிலிருந்து அமைதிப் பேரணி
ஆரம்பமானது. 

கிறிஸ்தவ மதகுருக்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்
மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற பேரணி, புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தை
சென்றடைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7183c62-f321-4db5-82de-51d7206b07da/26-6a86be94621ff.webp' /></p><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, ஆலயத்தில் நினைவஞ்சலி நிகழ்வும் விசேட வழிபாடுகளும் இடம்பெற்றுள்ளதுடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நினைவாக அஞ்சலி உரைகளும்
நிகழ்த்தப்பட்டன.
</p><h2>
நடுவழியில் மாயமான இருவர்</h2><p>
கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் திகதி, யாழ்ப்பாணத்திலிருந்து அல்லைப்பிட்டிக்கு
சென்று மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தபோது அருட்தந்தை ஜிம் பிறவுண்
அடிகளாரும் அவரது உதவியாளர் வின்சன் விமலதாஸும் காணாமல் ஆக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/580165db-44cd-47e7-8669-270fae61ac51/26-6a86be955840b.webp' /></p><p>

அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார், ஈழத்தின் வடக்கில் நான்காம் கட்ட ஈழப்போர்
தீவிரமடைந்த காலப்பகுதியில் இடம்பெற்ற முக்கிய மனித உரிமை மீறல் சம்பவங்களில்
ஒன்றாகக் குறிப்பிடப்படும் இந்த சம்பவத்தின் மூலம் காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. </p><p>


யாழ்ப்பாணத்திலிருந்து பிற்பகல் 1.45 மணியளவில் அல்லைப்பிட்டிக்கு சென்றதற்கான
பதிவும், பிற்பகல் 1.50 மணியளவில் அங்கிருந்து திரும்பியதற்கான பதிவும்
பண்ணைப்பாலம் பகுதியில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினரிடம் இருந்ததாக
அக்காலத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p> 

எனினும், அதன்பின்னர் இருவரின் நிலை
தொடர்பில் உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.</p><h2>


நினைவேந்தல் அனுஷ்டிப்பு</h2><p>
20 ஆண்டுகள் கடந்தும் அவர்களது நிலை தொடர்பில் உண்மை வெளிப்படுத்தப்படாத
நிலையில், காணாமல் ஆக்கப்பட்ட 22 பேரையும் நினைவுகூரும் வகையில் இன்றைய
நிகழ்வு நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3866a1e0-297e-4911-b6db-8e8afbad9ad8/26-6a86be962dcda.webp' /></p><p>
</p><p>

இந்த நிகழ்வில், மறைமாவட்ட குருக்கள் ஒன்றிய தலைவர் அருட்பணி எஸ். றெக்ஸ்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் மா. இளப்பிறை, சட்டத்தரணி க. சுகாஸ்,
கொழும்பைச் சேர்ந்த அருட்தந்தை செராட் மற்றும் யாழ். மறைமாவட்ட நீதி சமாதான
ஆணைக்குழு தலைவர் அருட்தந்தை அ. அகஸ்ரின் ஆகியோர் அஞ்சலி உரைகளை நிகழ்த்தினர்.
</p><p>

அஞ்சலி நிகழ்வு அல்லைப்பிட்டி பங்குத்தந்தை அருட்தந்தை லியோ தலைமையில்
இடம்பெற்றது.


இந்த நிலையில், நினைவேந்தல் அனுஷ்டிப்பில், கிறிஸ்தவ மதகுருக்கள், பொதுமக்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவினர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
நினைவாக அஞ்சலி செலுத்தினர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T08:50:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் 2 முதல் சுக்கிரன் வக்ர சஞ்சாரம்: ராஜயோகம் பெறப்போகும் டாப் 4 ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/venus-retrograde-in-libra-who-get-money-and-luck-1787212735"></link>
            <id>https://manithan.com/article/venus-retrograde-in-libra-who-get-money-and-luck-1787212735</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசிகளை மாற்றுவதோடு, அவ்வப்போது வக்ர நிலையிலும் பயணித்து மனித வாழ்க்கையில் தாக்கத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசிகளை மாற்றுவதோடு, அவ்வப்போது வக்ர நிலையிலும் பயணித்து மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. </p><p>அவற்றில் அசுரர்களின் குருவாகக் கருதப்படும் சுக்கிரன், பொதுவாக ஒரு ராசியில் ஒரு மாத காலம் பயணிப்பார்; அரிதாகவே வக்ர நிலையில் சஞ்சரிப்பார்.

இந்நிலையில், சுக்கிரன் செப்டம்பர் 2ஆம் தேதி துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/217c95d2-fad2-4145-bc37-50842cc074c8/26-6a86bd2bc4950.webp' /></p><p> துலாம் சுக்கிரனின் சொந்த ராசி என்பதால், இப்பெயர்ச்சி சிறப்பானதாகக் கருதப்படுகிறது. மேலும், வழக்கத்திற்கு மாறாக இங்கு சுக்கிரன் வக்ர நிலையில் பயணித்து நவம்பர் வரை நீடிக்கவுள்ளார்.
</p><p>
துலாம் ராசியில் சுக்கிரனின் வக்ர சஞ்சாரம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் தொழில், வியாபாரம், நிதி மற்றும் உறவுகளில் சாதகமான மாற்றங்களைக் காணலாம். அப்படி சுக்கிரனால், அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7aa3e8cd-545c-4a4a-9248-fbf08f3a5299/26-6a86bd2c7a08a.webp' /></p><h2>
</h2><p>துலாம் ராசியின் முதல் வீட்டில் சுக்கிரன் வக்ரமடைவதால், இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் காத்திருக்கின்றது.</p><p>குறிப்பாக, பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக மேற்கொண்ட கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். </p><p>தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காணக்கூடும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவிற்கு நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட காலமாக சந்தித்து வந்த பணப் பிரச்சனைகளில் இருந்தும் நல்ல நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளது.
</p><h2>
சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3348615d-516d-4a7a-b594-267bdc34921f/26-6a86bd2d2d189.webp' /></p><h2>
</h2><p>சிம்ம ராசியின் 3-வது வீட்டில் சுக்கிரன் வக்ரமடைவதால், இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படக்கூடும்.</p><p> பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட காலமாக வர வேண்டியிருந்த பணம் இந்தக் காலகட்டத்தில் கைக்கு வந்து சேரும். </p><p>பண வரவு அதிகரிப்பதுடன், நிதி தொடர்பான பிரச்சனைகளும் படிப்படியாக முடிவுக்கு வரும். நிதி நிலையில் எதிர்பாராத அளவிற்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.</p><h2>

மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb0354e2-36be-4b89-8894-e93517995cd0/26-6a86bd2dd7ebb.webp' /></p><p></p><h2>
</h2><p>மகர ராசியின் 10-வது வீட்டில் சுக்கிரன் வக்ரமடைவதால், இந்த ராசிக்காரர்களுக்கு மங்களகரமான பலன்கள் கிடைக்கும்.</p><p>ஏராளமான தொழில் வாய்ப்புகள் தேடி வரலாம். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்பும் உள்ளது. பணியிடத்தில் மேற்கொண்ட கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். </p><p>வியாபாரிகளுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். குடும்ப வாழ்க்கையிலும் நல்ல மாற்றங்களைக் காணக்கூடும். நிதி ரீதியாக நல்ல ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.</p><h2>

மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed457bd1-c5fe-4d52-bb93-37a11269041e/26-6a86bd2e8850b.webp' /></p><p>மேஷ ராசியின் 7-வது வீட்டில் சுக்கிரன் வக்ரமடைவதால், தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.</p><p>பல்வேறு வழிகளில் இருந்து சாதகமான செய்திகள் வந்து சேரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. </p><p>காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதிகளுக்கு இடையே நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b> &nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T08:41:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முறைகேடுகளுக்கு எதிராக பேசிய உறுப்பினர்..! கட்சி உறுப்புரிமையை நீக்கிய மொட்டு கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/asanga-sampath-peiris-has-alleged-slpp-1787214053"></link>
            <id>https://tamilwin.com/article/asanga-sampath-peiris-has-alleged-slpp-1787214053</id>
            <summary type="text">தலவாக்கலை – லிந்துலை நகரசபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும்
முறைகேடுகளுக்கு எதிராக குரல் கொடுத்ததன் காரணமாகவே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலவாக்கலை – லிந்துலை நகரசபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும்
முறைகேடுகளுக்கு எதிராக குரல் கொடுத்ததன் காரணமாகவே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
கட்சியின் உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக முன்னாள் தலவாக்கலை – லிந்துலை
நகரசபை உறுப்பினர் அசங்க சம்பத் பீரிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>
தனக்கு எதிராக எந்தவொரு குற்றச்சாட்டும் முறையாக முன்வைக்கப்படாத நிலையில்,
கட்சியின் உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு எதிராக நீதிமன்றத்தை
நாடியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>மகிந்தவின் வழிகாட்டுதல்</h2><p>
தலவாக்கலையில் இன்று 20ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்
இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் வழிகாட்டுதலின் கீழ், 24
வருடங்களுக்கும் மேலாக அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும், கட்சியின்
வளர்ச்சிக்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32f6d34e-7bae-49c0-961c-021dc9562bbf/26-6a86bc982eca3.webp' /></p><p>

தான் கட்சிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத நிலையில், தன் மீது எந்தவொரு
குற்றச்சாட்டும் முன்வைக்கப்படாமல் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாகவும்
அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

அதேவேளை, தலவாக்கலை – லிந்துலை நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்றதாகக்
கூறப்படும் காணி முறைகேடுகள், முச்சக்கரவண்டி தரிப்பிட விவகாரம், தீபாவளி
மற்றும் பொங்கல் சந்தைகள், சட்டவிரோத கட்டட நிர்மாணங்கள், நிதி முறைகேடுகள்
உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை
விசாரிக்கும் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளதாகவும் அசங்க சம்பத்
பீரிஸ் தெரிவித்தார்.</p><h2>போலியான குற்றச்சாட்டு</h2><p>

இந்த முறைப்பாடுகள் காரணமாக பாதிக்கப்பட்டதாகக் கருதும் சிலர், கட்சியின் உயர்
மட்டத்திற்கு தமக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும் அவர்
குற்றஞ்சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9c9b3b6-f892-4da5-b86f-848ae8b9b857/26-6a86bc992af55.webp' /></p><p>

எனினும், அந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறையான விசாரணைகள் எதுவும்
முன்னெடுக்கப்படாமல், தமது தரப்பை விளக்குவதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்படாமல்
உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
</p><p>
இதனால் பொதுஜன பெரமுன கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தி
ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.</p><h2>கட்சியின் முக்கியஸ்தர்கள்</h2><p>

இந்த விடயம் தொடர்பாக பல சந்தர்ப்பங்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த
ராஜபக்ஸவிடம் தாம் நேரடியாக எடுத்துரைத்துள்ளதாகவும், எனினும் கட்சியின்
முக்கியஸ்தர்கள் அவரது கருத்துக்களைக் கூட கவனத்தில் கொள்ளவில்லை எனவும் அசங்க
சம்பத் பீரிஸ் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32252f8f-89ec-4eca-aec1-fe7cda6e0548/26-6a86bc99d46d4.webp' /></p><p>
</p><p>
இவ்வாறான நிலைமை தொடருமானால், பொதுஜன பெரமுன கட்சிக்குள் பிளவு ஏற்படுவதை
எவராலும் தடுக்க முடியாது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.</p><p>

இதனிடையே, பல்வேறு அரசியல் கட்சிகளிடமிருந்து தமக்கு அழைப்புகள்
கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர், கொள்கை ரீதியாக மகிந்த ராஜபக்ஸ அரசியலில்
இருக்கும் வரை வேறு எந்தக் கட்சியிலும் இணைவதற்கு தாம் தயாரில்லை எனவும்
தெரிவித்தார்.
</p><p>
தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை தொடர்ந்து
முன்னெடுக்கவுள்ளதாகவும் முன்னாள் நகரசபை உறுப்பினர் அசங்க சம்பத் பீரிஸ்
மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/WOL7FtNziVc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-20T08:39:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத பணப்பரிமாற்றம்; வங்கி அதிகாரிகள் குறித்து நீதிமன்றின் உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/illegal-money-transfer-court-order-bank-officials-1787215191"></link>
            <id>https://jvpnews.com/article/illegal-money-transfer-court-order-bank-officials-1787215191</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு தனியார் வங்கி அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு தனியார் வங்கி அதிகாரிகளும் செப்டம்பர் 3ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>


பொறியியல் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளின் வாதங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான், சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8eb2dcd-6752-460f-8aa6-08a4cfa5bafa/26-6a86bd58b76e8.webp' /></p><p>



நான்கு வங்கி அதிகாரிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை மனுக்களையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


பொருட்கள் இறக்குமதி செய்வதாகக் கூறி ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையை சட்டவிரோதமாக நாட்டிலிருந்து வெளியேற்றியதுடன், குறித்த பணப் பரிமாற்றங்களுக்கு உதவி மற்றும் ஆதரவு வழங்கியதாகவும் சந்தேகநபர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-20T08:37:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச காணியில் தமிழரொருவரால் கட்டப்பட்டுள்ள கட்டடம்! விடுதலைப் புலிகள் பயிற்சி முகாம் குறித்தும் அமைச்சர் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/training-camp-issue-in-palai-anadha-wijepala-1787210675"></link>
            <id>https://tamilwin.com/article/training-camp-issue-in-palai-anadha-wijepala-1787210675</id>
            <summary type="text">அரச காணியில் தியாகராசா குலதீபன் என்பவரால் கற்றாழை மற்றும் காய்கறி பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும், அங்கு ஆடைகள் தயாரிக்கும் நோக்கில் கட்டடம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச காணியில் தியாகராசா குலதீபன் என்பவரால் கற்றாழை மற்றும் காய்கறி பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும், அங்கு ஆடைகள் தயாரிக்கும் நோக்கில் கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன் பளையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியிடப்பட்ட தகவல் முற்றிலும் போலியானது எனவும் அவர் கூறியுள்ளார். </p><p>

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (20.08.2026) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>போலியான தகவல்</h2><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி - பளையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக அண்மையில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்ட தகவல் முற்றிலும் போலியானது.

இந்த போலி செய்தியாளர் சந்திப்பை பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த சங்கீத் ஜெயசேகர என்பவர் நடத்தியதாக விசாரணைகளில் அடையாளம் காணப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
விசாரணைகளின் படி, சந்தேகநபரிடம் இரண்டு போலி அடையாள அட்டைகள் காணப்பட்டதுடன், அவர் 7 வெவ்வேறு முகவரிகளைப் பயன்படுத்தியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், நிதி மோசடி உள்ளிட்ட மூன்று குற்றவியல் வழக்குகளில் அவர் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/849a1c83-930d-46d2-8b0d-36d3cebb357f/26-6a86ba4f5705d.webp' /></p><p> </p><p>தம்மை மருத்துவராக அடையாளப்படுத்தி கொண்டு அவர் பல்வேறு நபர்களை ஏமாற்றி வந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், சந்தேகநபர் முன்னர் சில அமைச்சுக்களின் அதிகாரிகளுக்கு ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார். அந்த நியமனங்கள் தொடர்பிலும் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>

குறித்த செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து கிளிநொச்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், அங்கு விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் இருந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை.</p><h2>திட்டமிட்ட செயல்</h2><p> </p><p>குறித்த இடம் பயிர்ச்செய்கைக்காகப் பயன்படுத்தப்பட்ட நிலப்பகுதி மாத்திரமே. இனங்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் சந்தேகநபர் திட்டமிட்டு பொதுமக்களை தவறாக வழிநடத்தியுள்ளார். குறித்த பகுதியில் எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையும் பதிவாகவில்லை. இனவாதத்தைத் தூண்டும் அல்லது பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கும் வகையிலான எந்தவொரு நடவடிக்கைக்கும் இடமளிக்கப்பட மாட்டாது.
</p><p>
இதனிடையே, குறித்த பகுதி கிளிநொச்சி மாவட்டத்தின் கண்ணகிபுரம், முட்கொம்பன் பகுதியில் அமைந்துள்ள அரச காணி என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்னதாகத் தெரிவித்திருந்தார். இந்த நிலம் 1919ஆம் ஆண்டு வனப்பகுதியாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட அரச காணி எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
</p><p>
தியாகராசா குலதீபன் என்பவரால் குறித்த காணியில் கற்றாழை மற்றும் காய்கறி பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும், அங்கு ஆடைகள் தயாரிக்கும் நோக்கில் மூன்று மாடிக் கட்டடமொன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9949d90-2d21-4fdd-8d0e-c91ab1c84b53/26-6a86ba502756f.webp' /></p><p>
</p><p>
கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் குறித்த காணியிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டிருந்த போதிலும், அந்த உத்தரவை மீறி சட்டவிரோத மணல் அகழ்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, இந்த விவகாரம் அரச காணியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தல், அனுமதியற்ற கட்டுமானம் மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பானதே அன்றி, விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் தொடர்பானது அல்ல எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-20T08:30:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் காணமல் போன விமானி சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/body-of-missing-pilot-found-in-kawartha-lakes-ont-1787209898"></link>
            <id>https://canadamirror.com/article/body-of-missing-pilot-found-in-kawartha-lakes-ont-1787209898</id>
            <summary type="text">கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள கவர்தா லேக்ஸ் பகுதிக்குத் தனது சிறிய, சொந்தமாக தயாரிக்கப்பட்ட விமானத்தில் சென்று காணாமல் போன விமானியின் உடல் மீட்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள கவர்தா லேக்ஸ் பகுதிக்குத் தனது சிறிய, சொந்தமாக தயாரிக்கப்பட்ட விமானத்தில் சென்று காணாமல் போன விமானியின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ மாகாணக் காவலத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின்னர், வுல்ஃப் ஏரியில் மூழ்கிய நிலையில் அந்தச் சிறிய விமானத்தைக் கண்டறிந்த மீட்புக் குழுவினர், அதிலிருந்த விமானி உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர்.</p><p> 
ஆரம்பத்தில் விமானம் காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்ட நிலையில், அதை இயக்கிச் சென்றவர் டேவிட் டக்ளஸ் என்ற முதியவர் என்பதை அவரது குடும்பத்தினர் அடையாளம் காட்டினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bbc8de3-6551-432b-b5d6-b2141a4aa477/26-6a86a8ac1779f.webp' /></p><p> 
கடந்த வார இறுதியில் ஒஷாவா எக்சிகியூட்டிவ் விமான நிலையத்திலிருந்து வடக்கு நோக்கிப் புறப்பட்டுச் சென்ற அவர், அதன்பின் திரும்பவில்லை.</p><p> ஞாயிற்றுக்கிழமையன்று வுல்ஃப் ஏரியில் விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட போதிலும், விமானியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. </p><p>
பல தேடுதல் மற்றும் மீட்பு முகமைகள், காவல்துறையினர் இணைந்து இந்த தீவிரத் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தற்போது ஏரியிலிருந்து விமானத்தையும் உடலையும் வெளியே எடுப்பதற்கான திட்டங்களை அதிகாரிகள் ஒருங்கிணைத்து வருகின்றனர்.
இந்த விபத்துக்கான பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து விசாரணை நடத்த கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஒன்ராறியோ காவலத்துறை தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T08:30:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் வாழ்ந்துவந்த இந்திய இளம்பெண் மாரடைப்பால் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-women-died-of-heart-attack-in-canada-1787214395"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-women-died-of-heart-attack-in-canada-1787214395</id>
            <summary type="text">An Indian woman died of a heart attack in Canada: கனடாவில் வாழ்ந்துவந்த இந்திய இளம்பெண்ணொருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.


இந்தியாவின் பஞ்சாபைச...</summary>
            <content type="html"><![CDATA[<p>An Indian woman died of a heart attack in Canada: கனடாவில் வாழ்ந்துவந்த இந்திய இளம்பெண்ணொருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
</p><p>

இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் கல்வி கற்பதற்காக கனடா சென்றிருந்த நிலையில், அவர் மாரடைப்பால் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
</p><h3>
கல்வி கற்பதற்காக கனடா சென்றிருந்த இளம்பெண்
</h3><p>
அன்மோல்தீப் கௌர் (24), நான்கு ஆண்டுகளுக்கு முன் கல்வி கற்பதற்காக கனடா சென்றிருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cab5f88-bf7b-4842-8041-008c23b9e37d/26-6a86ba3c9909e.webp' /></p><p>
மனித்தோபா மாகாணத்தின் வின்னிபெக் நகரில் கல்வி கற்று முடித்து, நிரந்தர குடியிருப்பு அனுமதிக்காக விண்ணப்பித்துவிட்டு காத்திருந்தார் கௌர்.&nbsp;</p><p></p><p>

இந்நிலையில், செவ்வாயன்று திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட கௌர், மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
</p><p>
கௌர் உயிரிழந்த செய்தி அறிந்து அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T08:26:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தை பெற நினைத்தால் விசா இல்லை; இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் விடுத்த எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/visa-intend-birth-child-warn-us-embassy-sri-lanka-1787202001"></link>
            <id>https://jvpnews.com/article/visa-intend-birth-child-warn-us-embassy-sri-lanka-1787202001</id>
            <summary type="text">&amp;nbsp; குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துடன், அமெரிக்காவில் குழந்தையைப் பிரசவிப்பதற்காகச் சுற்றுலா விசாவுக்கு விண்ணப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துடன், அமெரிக்காவில் குழந்தையைப் பிரசவிப்பதற்காகச் சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பித்தால், அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது.
</p><p>
இது தொடர்பில் தூதரகம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில் , 

ஒருவர் அமெரிக்காவுக்குப் பயணம் செய்வதன் பிரதான நோக்கம், அங்கு குழந்தையைப் பிரசவித்து அந்தக் குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுக்கொடுப்பதே என அமெரிக்கக் கொன்சியூலர் (Consular) அதிகாரிகள் கருதினால், விண்ணப்பதாரிகளின் சுற்றுலா விசா விண்ணப்பங்கள் உடனடியாக நிராகரிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d28d04a1-0a42-4818-8f24-71f837617da1/26-6a86b99d87d84.webp' /></p><h2>&nbsp;விசா விண்ணப்பங்கள் உடனடியாக நிராகரிக்கப்படும்</h2><p>
</p><p>
இவ்வாறான நோக்கங்களுக்காகச் சுற்றுலா விசாவைப் பயன்படுத்துவது அமெரிக்க சட்ட திட்டங்களின் கீழ் அனுமதிக்கப்பட்டதொன்றல்ல எனவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><p>.

அத்துடன், இத்தகைய விசா விண்ணப்பங்களை அமெரிக்கக் கொன்சியூலர் அதிகாரிகள் நிராகரிப்பார்கள் எனவும் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-20T08:21:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாக்ஸ் ஆபிஸ்: டிசி திரைப்படம் 13 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/dc-movie-worldwide-13-days-box-office-collection-1787209911"></link>
            <id>https://cineulagam.com/article/dc-movie-worldwide-13-days-box-office-collection-1787209911</id>
            <summary type="text">டிசி திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில், 13 நாட்களில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாங...</summary>
            <content type="html"><![CDATA[<p>டிசி திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில், 13 நாட்களில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.</p><p></p><h2>

டிசி</h2><p>

தமிழ் சினிமாவில் இயக்குநராக களமிறங்கி மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி என தொடர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இயக்குநராக மாபெரும் உச்சத்தை தொட்ட இவர், டிசி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49c390d8-22a6-4c4e-a407-77726be0d0f3/26-6a86a8ba8aae0.webp' /></p><p> 

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் மற்றும் காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதனால் முதல் நாளில் இருந்தே இப்படத்தின் வசூல் அதிகரித்து வருகிறது.
</p><h2>
வசூல்
</h2><p>
இந்நிலையில், 13 நாட்களில் லோகேஷின் டிசி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 13 நாட்களில் இப்படம் ரூ. 89 கோடி வசூலித்துள்ளது. 

விரைவில் ரூ. 100 கோடியை தொட்டுவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என திரை வட்டாரத்தில் கூறி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9353f32-2acf-4560-8b19-6ade6396a6ee/26-6a86a8bb409d6.webp' /></p>]]></content>
            <updated>2026-08-20T08:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணிக்கு சென்ற கனடா தூதுவர் குழுவிற்கு ஏமாற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/canadian-delegation-visited-chemmani-mass-grave-1787207922"></link>
            <id>https://jvpnews.com/article/canadian-delegation-visited-chemmani-mass-grave-1787207922</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியை பார்வையிட சென்ற கனடா நாட்டின் தூதுவர் இசபெல்லா மார்ட்டீன் உள்ளிட்ட குழுவினர் நீதிமன்ற அனுமதி இல்லாததால் , த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியை பார்வையிட சென்ற கனடா நாட்டின் தூதுவர் இசபெல்லா மார்ட்டீன் உள்ளிட்ட குழுவினர் நீதிமன்ற அனுமதி இல்லாததால் , திருப்பி சென்றுள்ளனர்.
</p><p>
யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் செய்திருந்த கனடா தூதுவர் தலைமையிலான குழு செம்மணி அகழ்வாய்வு களத்தை பார்வையிடுவதற்கு சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e887b541-9a1a-4bd3-a7be-2bf9e6feab02/26-6a86a0f44ebfa.webp' /></p><p></p><h2>அனுமதி கிடைக்க காலதாமதம்</h2><p>
</p><p>
அதன் போது அவர்களிடம், அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தவர்கள், நீதிமன்ற அனுமதியினை கோரிய வேளை, தாம் இலங்கை அரசாங்கத்தின் நிர்வாக ரீதியான துறைசார் அமைச்சிடம் அனுமதி கேட்ட நிலையில் , எங்களுக்கான அனுமதி கிடைக்க காலதாமதம் ஏற்பட்டதால், நங்கள் இந்த இடத்தினை நேரில் பார்வையிட்டு , செல்வதற்கு முயற்சி செய்தோம் என கனடா நாட்டின் தூதுக்குழுவினரால் தெரிவிக்கப்பட்டது. </p><p></p><p>

அதன் போது அங்கிருந்த சட்டத்தரணிகள் , செம்மணி அகழ்வாய்வு தளத்தை பார்வையிடுவதற்கு , அனுமதி கோரி நீதிமன்றில் விண்ணப்பம் செய்து , நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டாலே பார்வையிட முடியும் என எடுத்து கூறினார்கள்.</p><p></p><p>
</p><p>
அதனை ஏற்றுக்கொண்டு அவர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக கனடா நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவர் இசபெல்லா மார்ட்டீன் உள்ளிட்ட உயர்மட்ட தூதுக்குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-20T08:18:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dollar-rate-in-sri-lanka-banks-today-usd-to-lkr-1787213669"></link>
            <id>https://ibctamil.com/article/dollar-rate-in-sri-lanka-banks-today-usd-to-lkr-1787213669</id>
            <summary type="text">இன்றைய நாளுக்கான (20.08.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய நாளுக்கான (20.08.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.
</p><p>
அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 326.05 ஆகவும் விற்பனைப் பெறுமதி 335.01 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>

ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	442.35 ஆகவும் விற்பனைப் பெறுமதி 457.17 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>&nbsp;</p><h2>நாணயமாற்று விகிதம்</h2><p>யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	379.35 ஆகவும் விற்பனைப் பெறுமதி 392.71 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	234.93 ஆகவும் விற்பனைப் பெறுமதி 243.86 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/817aea47-41f0-47dd-bf2a-41105720adbc/26-6a86b825c241d.webp' /></p><p>அவுஸ்திரேலிய&nbsp;(Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 		229.69 ஆகவும் விற்பனைப் பெறுமதி 240.61 ஆகவும் பதிவாகியுள்ளது.&nbsp; &nbsp;</p><p>சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	254.58 ஆகவும் விற்பனைப் பெறுமதி 265.28 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T08:17:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்!! அனுபமாவுக்கு ஆதரவாக நடிகை அதிதி ஷங்கர்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/aditi-shankar-reacts-to-anupama-toxic-relationship-1787213723"></link>
            <id>https://viduppu.com/article/aditi-shankar-reacts-to-anupama-toxic-relationship-1787213723</id>
            <summary type="text">அனுபமாநடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தன்னுடைய முன்னாள் காதலரால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல கொடுமைகளுக்கு ஆளானேன் எ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அனுபமா</h2><p>நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தன்னுடைய முன்னாள் காதலரால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல கொடுமைகளுக்கு ஆளானேன் என்று அதிர்ச்சி தகவலை கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45c49e3e-1ca7-4a00-b1c4-18da8ec3238e/26-6a86b79d84a3b.webp' /></p><p> மேலும் தன்னை மொத்தமாக அந்த நபர் கட்டுப்படுத்த பார்த்தார், இனிமேல் ஒத்து வராது என்று நிரந்தரமாக பிரிந்துவிடலான் என்று முடிவெடுத்தேன் என்றும் திருமணம் செய்து 11 குழந்தைகளை பெற்றுக்கொள்ளவும் திட்டமிட்டேன், ஆனால் டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பால் இப்போது திருமணத்தின் மீதே பயம் வந்துவிட்டது என்றும் கூறினார். </p><p>இந்ந சம்பவம் பெரியளவில் பேசப்பட்டு வரும் நிலையில், நடிகை அதிதி ஷங்கர் இது குறித்து பேசியுள்ளார்.</p><h2>பெரிய விழிப்புணர்வை</h2><p> அதில், நடிகை ஒருவரின் பேட்டி பார்த்தேன், அதுகுறித்து எல்லோருக்கும் பல கருத்துகள் இருக்கலாம் என்று எனக்கு தெரியும். ஆனால் அதை வெளிப்படையாக சொன்னதற்காக அந்த நடிகையை பாராட்டத்தான் செய்ய வேண்டும், அது உண்மையான விஷயம், தனிப்பட்ட அனுபவம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07f7acf1-8970-4fbc-a7ec-3eb90f6f2374/26-6a86b79e381fa.webp' /></p><p> </p><p>யாரையும் பொதுவெளியில் குறைத்து காட்ட வேண்டும் என்ற நோக்கம் அவருக்கு கிடையாது என்று நான் நினைக்கிறேன். என்னை பொறுத்தவரை அவர் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். </p><p>பல பெண்கள், ஆண்கள் இதே விஷயத்தை எதிர்கொண்டு வருகிறார்கள், ஆனால் தங்களுக்கு என்ன நடக்கிறது என்று அவர்களுக்கு தெரியாமல் கூட இருக்கிறது என்று பேசியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-20T08:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீன் பற்றாக்குறைக்கு எல் நினோவும் காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/el-ni-o-is-also-a-reason-for-the-fish-shortage-1787213831"></link>
            <id>https://jvpnews.com/article/el-ni-o-is-also-a-reason-for-the-fish-shortage-1787213831</id>
            <summary type="text">&amp;nbsp; எல் நினோ காலநிலைச் சூழ்நிலை காரணமாக கடலில் மீன்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; எல் நினோ காலநிலைச் சூழ்நிலை காரணமாக கடலில் மீன்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
</p><p>


இதுதொடர்பாக தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமை ஆய்வு செய்து, இன்று அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34210e87-cbde-4dcf-a918-4e34c13776bb/26-6a86b808ef821.webp' /></p><p>



மேலும், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் முறையற்ற மீன்பிடி முறைகள் காரணமாகவும் கடலில் மீன்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-20T08:14:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[குவிந்து கிடக்கும் 1,037 வேலைவாய்ப்புகள் - வேலை தேடுவோருக்கு சிறந்த வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/job-opportunity-applications-driver-conductor-1787210463"></link>
            <id>https://tamilwin.com/article/job-opportunity-applications-driver-conductor-1787210463</id>
            <summary type="text">இலங்கை போக்குவரத்துச் சபையின் நாடளாவிய ரீதியிலான டிப்போக்களில் ஒப்பந்த அடிப்படையில் சாரதிகள் மற்றும் நடத்துநர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை போக்குவரத்துச் சபையின் நாடளாவிய ரீதியிலான டிப்போக்களில் ஒப்பந்த அடிப்படையில் சாரதிகள் மற்றும் நடத்துநர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
</p><p>
இதன்படி, 788 சாரதி வெற்றிடங்களும், 249 நடத்துநர் வெற்றிடங்களுக்கான&nbsp;விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.</p><p>

அந்தந்த பிரதேசங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ஆட்சேர்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.</p><h2>வேலைவாய்ப்பு</h2><p>சாரதி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.</p><p>க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் ஆறு பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும் என்பதுடன், இரண்டு பாடங்களில் திறமைச் சித்தியும் பெற்றிருக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ace10fa-4788-47cf-876e-ab86f6da0b28/26-6a86b5c9be733.webp' /></p><p> </p><p>

மேலும், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக செல்லுபடியாகும் கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருப்பதுடன், குறிப்பிடப்பட்டுள்ள உடல் மற்றும் சுகாதாரத் தகைமைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
</p><p>
நடத்துநர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.</p><h2>விண்ணப்பம் கோரல்</h2><p>
</p><p>
 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தாய்மொழி மற்றும் கணிதம் உள்ளிட்ட ஆறு பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும் என்பதுடன், இரண்டு பாடங்களில் திறமைச் சித்தியும் பெற்றிருக்க வேண்டும்.
</p><p>
தெரிவு செய்யப்படும் சாரதிகளுக்கு மாதாந்தம் 40,847 ரூபாய் அடிப்படை ஒப்பந்தக் கொடுப்பனவும், நடத்துநர்களுக்கு 40,008 ரூபாய் அடிப்படை ஒப்பந்தக் கொடுப்பனவும் வழங்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8ea48e6-2d30-4ac1-8a7e-2a6def1648af/26-6a86b5caae038.webp' /></p><p> </p><p>

இதற்கு மேலதிகமாக 17,800 ரூபாய் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு, மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் ஊக்குவிப்புக் கொடுப்பனவுகளும் வழங்கப்படும்.
</p><p>

ஊழியர் சேமலாப நிதியத்திற்கு (EPF) ஊழியர்கள் 8 சதவீத பங்களிப்பை வழங்குவதுடன், தொழில் வழங்குநர் 12 சதவீத பங்களிப்பை வழங்குவார். 

ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கு (ETF) தொழில் வழங்குநரால் 3 சதவீத பங்களிப்பும் வழங்கப்படும்.</p><h2>நியமனம்</h2><p>
</p><p>
நேர்முகப் பரீட்சை, நடைமுறைப் பரீட்சை மற்றும் தொடர்புடைய பயிற்சி நெறிகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு இடம்பெறும். நியமனம் செய்யப்பட்ட பின்னர் பணியிட மாற்றம் மேற்கொள்ளப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியிடத்திலிருந்து 30 கிலோமீற்றர் வரையான சுற்றளவில் பணிக்கு சென்று வருவதற்கான பயண அனுமதிப்பத்திரமும் வழங்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20af7a04-877c-4285-a4d3-2d44e682e655/26-6a86b5cb600f1.webp' /></p><p>

குறிப்பிட்ட மாதிரி வடிவில் தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை, தலைமை நிர்வாக அதிகாரி, இலங்கை போக்குவரத்துச் சபை, இலக்கம் 200, கிருல வீதி, நாரஹேன்பிட்ட, கொழும்பு 05 என்ற முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
</p><p>
விண்ணப்பங்கள் 2026 செப்டெம்பர் 7ஆம் திகதிக்குள் கிடைக்குமாறு அனுப்பப்பட வேண்டும்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T08:13:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் உளவு பார்க்கும் மொசாட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/how-mossad-spying-you-by-smartphone-1787213424"></link>
            <id>https://news.lankasri.com/article/how-mossad-spying-you-by-smartphone-1787213424</id>
            <summary type="text">ஸ்மார்ட்போன் மூலம் மொசாட் உளவு பார்க்கும் சாத்தியம் குறித்து IBC Tamil ன் நிராஜ் டேவிட் விரிவாக பேசியுள்ளார்.

போன் மூலம் உளவு பார்க்கும் மொசாட் 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்மார்ட்போன் மூலம் மொசாட் உளவு பார்க்கும் சாத்தியம் குறித்து IBC Tamil ன் நிராஜ் டேவிட் விரிவாக பேசியுள்ளார்.
</p><h3>
போன் மூலம் உளவு பார்க்கும் மொசாட் </h3><p>

இன்று உலகில் ஸ்மார்ட்போன் இல்லாத மனிதர்களை பார்ப்பது அரிதாக உள்ளது. ஸ்மார்ட் போனில் பல்வேறு வசதிகள் இருந்தாலும், போன் ஹேக் செய்யப்படுவதற்கான அபாயங்களும் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a135456-bec9-407c-9e0f-05e13c65b150/26-6a86b6718b344.webp' /></p><p>

ஐபோன் அதிகளவிலான பாதுகாப்பு அம்சங்கள் உடைய போனாக கருதப்பட்டாலும் அதனையும் ஹேக் செய்வதற்கான சாத்தியங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.</p><p> 

போனை ஹேக் செய்து கேமரா மூலம் நீங்கள் இருக்கும் இடத்தை எங்கோ ஒரு இடத்திலிருந்து கண்காணிக்க முடியும். நீங்கள் ரகசியமாக பேசுவதை ஒட்டுக்கேட்க முடியும். </p><p>

சில மாதங்களுக்கு முன்னர் ஈரான் உச்சத்தலைவர் காமேனி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கொல்ல இஸ்ரேலின் மொசாட் அமைப்பு அங்கிருந்த பாதுகாப்பு கேமராக்கள் மற்றும் அவரது பாதுகாப்பு அலுவலர்களின் போனை ஹேக் செய்ததன் மூலம் பெறப்பட்ட தகவல்களை வைத்தே அந்த தாக்குதலை மேற்கொண்டது. </p><p>

இதே போல், ஹிஸ்புல்லா அமைப்பில் உள்ளவர்கள் யாரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்த வேண்டாம், ஸ்மார்ட் போன் இருந்தால் அதனை மண்ணில் புதைத்து விடுங்கள் என அதன் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கட்டளை பிறப்பித்தார். 

அது உங்களை உளவு பார்க்கும் ஒற்றன் என தெரிவித்திருந்தார்.</p><p> மேலும், இதனை தெரிவித்த 7 மாதங்களில் ஹிஸ்புல்லாகளிடம் இருந்த பேஜர் வெடித்து சிதறியது. </p><p>

இதே போல், சீனாவில் உற்பத்தி செய்யப்படும் மெமரி சிப்களை ஆப்பிள் போன்களில் பயன்படுத்த கூடாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. </p><p>

இது குறித்த பல்வேறு தகவல்களை வழங்கியுள்ள IBC Tamil ன் நிராஜ் டேவிட் தான் இஸ்ரேல் சென்ற போது, அங்கு ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றும் பொறியாளர் கூறிய கருத்துகளையும் பகிர்ந்துள்ளார். </p><p>

மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NNqduegvc0Y" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T08:10:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[75 ஆண்டுகளில் இல்லாத எல்நினோ அபாயம் - குடிநீரை விநியோகிக்க புதிய சுற்றறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/el-ni-o-impact-new-circular-on-water-supply-1787211402"></link>
            <id>https://ibctamil.com/article/el-ni-o-impact-new-circular-on-water-supply-1787211402</id>
            <summary type="text">இவ்வாண்டின் இறுதியில் வரலாற்றில் மிக மோசமான எல்நினோ (El Niño) நிலவழியை எதிர்கொள்வதற்கான சாத்தியக்கூறு 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாக வளிமண்டலவியல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இவ்வாண்டின் இறுதியில் வரலாற்றில் மிக மோசமான எல்நினோ (El Niño) நிலவழியை எதிர்கொள்வதற்கான சாத்தியக்கூறு 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>இது கடந்த 75 ஆண்டுகளில் நாடு எதிர்கொள்ளும் மிக மோசமான எல்நினோ நிலையாக இருக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அஜித் விஜயமான்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
எவ்வாறாயினும், இந்த எல்நினோ நிலவரத்தை எதிர்கொள்ள அரசாங்கம் சிறந்த தயார் நிலையில், இருப்பதாக அமைச்சர் தம்மிக பட்டபெதி தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>புதிய சுற்றறிக்கை</h2><p>எல் நினோ நிலைமையின் காரணமாக எதிர்காலத்தில் வறட்சி ஏற்பட்டால், நீர் விநியோகத்திற்காக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9ce1f63-efc6-4e87-997d-9a647c8be4e9/26-6a86b1d2af01c.webp' /></p><p>எல் நினோ நிலைமையால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு இன்று (20) சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>இந்தச் சுற்றறிக்கை ஒகஸ்ட் 6 ஆம் திகதி முதல் நடைமுறையாகும் வகையில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>சட்ட விதிமுறைகள்</h2><p>வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு நீர் வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை இலகுவாகவும் துரிதமாகவும் மேற்கொள்ளும் வகையில், தேவையான சட்ட விதிமுறைகள் இந்தச் சுற்றறிக்கையின் மூலம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fd02054-2755-4a4a-8ce7-fd62cee93c57/26-6a86b1d130939.webp' /></p><p>இதேவேளை நாட்டில் நிலவும் கடும் வறட்சி காரணமாக சிறிய குளங்கள் அனைத்தும் வற்றிப்போயுள்ளன. </p><p>கடந்த 35 ஆண்டுகளில் ஏற்பட்ட இந்த கடும் வறட்சியால் பொலன்னறுவை மாவட்டத்தில் மெடிரிகிரிய கும்குனா குளம், காமிணி குளம் உட்பட பல குளங்கள் வற்றிப்போய் நெற்பயிர்கள் அழிந்து போயுள்ளன.</p><p>நீர்நிலைகள் வற்றியதால் கிராந்துருகோட்டே பகுதியில் யானைகள் கூட்டமாக உணவு மற்றும் நீர் தேடி வரத் தொடங்கியுள்ளன. மொணராகலை மாவட்டத்தில் நிலவும் கடும் வெயில் காரணமாக காடுகளிலுள்ள புல்வெளிகள் மற்றும் தாவரங்கள் காய்ந்து நாசமாகியுள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T08:03:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பணப்பரிமாற்ற மோசடியில் சிக்கிய தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள்! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/four-bank-managers-us-dollars-fraud-court-order-1787210880"></link>
            <id>https://tamilwin.com/article/four-bank-managers-us-dollars-fraud-court-order-1787210880</id>
            <summary type="text">நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு&amp;nbsp;பணத்தை கடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தனியார் வங்கிகளின் நான்கு முகாமையாளர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு&nbsp;பணத்தை கடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தனியார் வங்கிகளின் நான்கு முகாமையாளர்களையும் மற்றுமொரு சந்தேகநபரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>இதன்படி, செப்டம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>மேலும், நான்கு வங்கி அதிகாரிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை மனுக்களையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.&nbsp;&nbsp;</p><h2>வங்கி நிதி மோசடிகள்</h2><p>பொருட்கள் இறக்குமதி செய்வதாகக் கூறி ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையை சட்டவிரோதமாக நாட்டிலிருந்து வெளியேற்றியதுடன், குறித்த பணப்பரிமாற்றங்களுக்கு உதவி மற்றும் ஆதரவு வழங்கியதாகவும் சந்தேகநபர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99eb0f77-f5a0-4e8b-b82a-5edda8b5c5ac/26-6a86b2c8a3e59.webp' /></p><p>வங்கி நிதி மோசடிகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.&nbsp;&nbsp;</p><p>சந்தேகநபர் நாட்டிற்கு பொருட்களை இறக்குமதி செய்வதாகக்கூறி சுமார் 36 நிறுவனங்களை நிறுவியுள்ளதாகவும், அவற்றுக்கு வங்கிக்கணக்குகளை திறப்பதற்காக குறித்த 4 தனியார் வங்கிகளுக்கு சென்றுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>கைது செய்யப்பட்ட நான்கு வங்கி அதிகாரிகளும் சந்தேகநபரை நேரில் சந்தித்து வங்கி நடவடிக்கைகளை செய்து கொடுத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p>இந்த மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் இந்த நான்கு அதிகாரிகளுக்கும் வாராந்தம் 30,000, 50,000 மற்றும் ஒரு இலட்சம் ரூபா வீதம் பணம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T07:54:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிராக மிகக் கடுமையான பொருளாதார நடவடிக்கை - ட்ரம்ப் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trumps-harshest-economic-war-on-iran-1787212624"></link>
            <id>https://news.lankasri.com/article/trumps-harshest-economic-war-on-iran-1787212624</id>
            <summary type="text">Trump announces economic operation against Iran: ஈரானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.


கடுமையான பொருளாதார ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump announces economic operation against Iran: ஈரானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
</p><h2>

கடுமையான பொருளாதார நடவடிக்கை</h2><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார்.
</p><p>
“ஈரான் ஒப்பந்த வாய்ப்பை பயன்படுத்தத் தவறிவிட்டது. இனி இது வரை இல்லாத அளவிற்கு பொருளாதார போர் மற்றும் தனிமைப்படுத்தலை எதிர்கொள்ளும்,” என்று அவர் Truth Social-ல் பதிவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f2a17a3-2521-4109-81f4-96fde5c7cb51/26-6a86b351ce76f.webp' /></p><h2>ஈரானை தனிமைப்படுத்த&nbsp;திட்டம்</h2><p>ட்ரம்ப், ஈரானுடன் வணிகம் செய்யும் எந்த நாட்டுக்கும் கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படும் என எச்சரித்துள்ளார்.
</p><p>
“எண்ணெய் வர்த்தகம், பணப் பரிமாற்றம், கப்பல் போக்குவரத்து, வணிக நிறுவனங்கள், இவை அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும். ஈரானை தனிமைப்படுத்த அமெரிக்க கூட்டாளிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><h2>அமெரிக்காவின் திசை திருப்பும் முயற்சி</h2><p>ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அபாஸ் அராக்சி, இந்த நடவடிக்கையை “அமெரிக்காவின் சொந்த நெருக்கடியிலிருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சி” எனக் கூறியுள்ளார்.

மேலும், “அமெரிக்காவின் இந்த பொருளாதார பயங்கரவாதம் உலக பொருளாதாரத்தையும் இறையாண்மையையும் அச்சுறுத்துகிறது,” என்று அவர் தெரிவித்தார்.
</p><p>
இதனிடையே ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் ஈரானுடன் உள்ள அனைத்து நிதி தொடர்புகளையும் நிறுத்தியுள்ளதாகவும் UAE தெரிவித்துள்ளது. ஆனால், ஈரான் இதனை மறுத்து, “தவறான குற்றச்சாட்டு” என தெரிவித்துள்ளது.</p><p></p><p>ட்ரம்ப் நடவடிக்கைகள் சீனா, ஈராக், துருக்கி போன்ற ஈரானின் முக்கிய வர்த்தக கூட்டாளிகளையும் பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால், சீன அரசு தனது நிறுவனங்களுக்கு அமெரிக்க தடைகளை பின்பற்ற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதால், அமெரிக்காவிற்கு முழுமையான கட்டுப்பாடு சாத்தியமில்லை எனவும் கூறப்படுகிறது.
</p><p>
ட்ரம்பின் இந்த அறிவிப்பு, ஐந்து மாதங்களாக நீடிக்கும் அமெரிக்கா-ஈரான் மோதலில் புதிய கட்டத்தை உருவாக்கியுள்ளது. உலக பொருளாதாரத்திலும் அதிர்வுகளை ஏற்படுத்தும் அபாயம் அதிகரித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T07:54:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் எல் நினோ நிலைமை: பாதிப்பை எதிர்கொள்ள வெளியிடப்பட்டது சுற்றறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/severe-drought-new-circular-for-drinking-water-1787209995"></link>
            <id>https://tamilwin.com/article/severe-drought-new-circular-for-drinking-water-1787209995</id>
            <summary type="text">நீர் விநியோகத்திற்காக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்துள்ளார்.எல் நினோ நிலைமையின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர் விநியோகத்திற்காக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்துள்ளார்.</p><p>எல் நினோ நிலைமையின் காரணமாக எதிர்காலத்தில் வறட்சி ஏற்படுமாயின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>எல் நினோ நிலைமையால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இன்று (20) அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><h2>நீர் வசதி வழங்கல்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த சுற்றறிக்கை ஆகஸ்ட் 6ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4db14db6-c089-452b-925f-e95192623e7a/26-6a86b190e9c8e.webp' /></p><p>அத்துடன், வறட்சியால் பாதிக்கப்படும் பிரதேசங்களுக்கு நீர் வசதிகளை வழங்குவதற்கு மிகவும் இலகுவான மற்றும் துரிதமான தலையீட்டை மேற்கொள்ளக்கூடிய வகையில் தேவையான சட்ட விதிமுறைகள் இந்தச் சுற்றறிக்கையின் ஊடாக மாற்றப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T07:49:44+00:00</updated>
        </entry>
    </feed>
