<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-25T12:49:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[1997ல் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடிய தர்மேந்திர பிரதான் - இன்று பறிபோன அமைச்சர் பதவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dharmendra-pradhan-protest-for-paper-leak-in-1997-1784983409"></link>
            <id>https://news.lankasri.com/article/dharmendra-pradhan-protest-for-paper-leak-in-1997-1784983409</id>
            <summary type="text">இன்று நீட் வினாத்தாள் கசிவு காரணமாக அமைச்சர் பதவியை இழந்துள்ள தர்மேந்திர பிரதான், தனது மாணவர் பருவத்தில் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியதாக கூறப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று நீட் வினாத்தாள் கசிவு காரணமாக அமைச்சர் பதவியை இழந்துள்ள தர்மேந்திர பிரதான், தனது மாணவர் பருவத்தில் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியதாக கூறப்படுகிறது. </p><h3>

தர்மேந்திர பிரதான் ராஜினாமா</h3><p> 

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி(CJP) கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்தது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57504a5b-5155-493b-9630-9b324bd06234/26-6a64af73aecb6.webp' /></p><p>
இந்த போராட்டம் நாடு முழுவதும் பரவி, மோடி அரசையே அசைத்து பார்த்துள்ளது. தர்மேந்திர பிரதான், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.</p><p>

12 ஆண்டுகால மோடி அரசில், ஒரு அமைச்சர் மக்களின் போராட்டதிற்கு பணிந்து பதவியை ராஜினாமா செய்துள்ளது இதுவே முதல்முறையாகும்.&nbsp;</p><p></p><p>

தங்களது 3 கோரிக்கைகளையும் அரசு ஏற்றுக்கொண்டதால் நாடு முழுவதும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக CJP அறிவித்துள்ளது.</p><h3>

1997 ல் போராடிய தர்மேந்திர பிரதான்</h3><p>

ஒடிசாவை சேர்ந்த தர்மேந்திர பிரதான் தனது கல்லூரி காலத்திலே RSS அமைப்பின் மாணவர் அமைப்பான ABVPயில் இணைந்து தீவிரமாக பணியாற்றியுள்ளார். 2 முறை ABVPயின் தேசிய செயலாளராக இருந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5efcaf2-6197-4535-a5df-da16ce089eac/26-6a64af730c736.webp' /></p><p>புவனேஸ்வரில் உள்ள ஆர்எம்டி பட்டக் கல்லூரியின் முதல்வராக உள்ள பிரசாந்த் குமார் ரௌட், கல்லூரியில் தர்மேந்திர பிரதானின் ஜுனியராக இருந்துள்ளார். </p><p>

தர்மேந்திர பிரதான் குறித்து பேசிய அவர், "1997 ஆம் ஆண்டில் ஒடிசாவில் காங்கிரஸ் தலைமையிலான அரசில் ஜானகி பல்லப் பட்நாயக் முதலமைச்சராக இருந்தார். </p><p>

நாங்கள் தலைமைச் செயலகத்தின் முன்பு ஒடிசா அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினோம். அங்கு சுமார் 1,500 மாணவர்கள் எங்களுடன் இணைந்தனர்.</p><p> 

போராட்டம் அமைதியாக நடைபெற்றாலும் காவல்துறை எங்களை கடுமையாக தாக்கியது. நாங்கள் மிகவும் பயந்துவிட்டோம்.</p><p> அப்போது பிரதான் கடுமையாகத் தாக்கப்பட்டார். அவருக்கு சில எலும்பு முறிவுகளும் ஏற்பட்டிருந்தன. 

வன்முறை நிகழ்ந்தபோதிலும், வினாத்தாள் கசிவுக்கு எதிராக பிரதான் தொடர்ந்து போராடியதே, அவரை மாநிலத்தின் மிக முக்கியமான மாணவர் தலைவர்களில் ஒருவராக நிலைநிறுத்தியது" என்று தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T12:43:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா கப்பல்கள் மீது யுக்ரேன் தாக்குதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ukraine-attacks-russian-ships-1784983499"></link>
            <id>https://canadamirror.com/article/ukraine-attacks-russian-ships-1784983499</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரானில் இருந்து ரஷ்யாவுக்கு இராணுவப் பொருட்களை கொண்டு சென்ற கப்பல்கள் மீது யுக்ரேன் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிகின்றன.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரானில் இருந்து ரஷ்யாவுக்கு இராணுவப் பொருட்களை கொண்டு சென்ற கப்பல்கள் மீது யுக்ரேன் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிகின்றன.
</p><p>
கெஸ்பியன் கடல் பகுதியில் பயணித்த, ஆயுதங்கள் மற்றும் இராணுவப் பொருட்களை கொண்டு சென்ற கப்பல்களையே யுக்ரேனிய படைகள் இலக்கு வைத்துத் தாக்கியுள்ளதாக யுக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50b86caf-04fc-4214-839a-bbbb32e733c9/26-6a64afcd6c86d.webp' /></p><p>ரஷ்யா - உக்ரைன் போர் நான்காண்டுகளைக் கடந்து தீவிரமாகத் தொடர்கிறது.
உக்ரேனின் தலைநகர் கிவ்வில் ரஷ்யா வெள்ளிக்கிழமை (ஜூலை 24) நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததோடு நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.</p><p>

உக்ரேனின் தற்காப்புத் துறை சார்ந்த நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோது அந்தத் தாக்குதல் நடந்துள்ளது என்று அந்நாட்டுஅதிகாரிகளும் துறை சார்ந்த பிரதிநிதிகளும் உறுதிப்படுத்தினர்.</p>]]></content>
            <updated>2026-07-25T12:43:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/dharmendra-pradhan-resign-letter-details-1784980866"></link>
            <id>https://ibctamilnadu.com/article/dharmendra-pradhan-resign-letter-details-1784980866</id>
            <summary type="text">நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், மத்தியக் கல்வித் துற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், மத்தியக் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.</p><h2>

ராஜினாமா கடிதம்</h2><p>

அவர் தனது ராஜநாமா கடிதத்தில் குறிப்பிடுகையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும்,தேச விரோத சக்திகள் இந்தச் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவுமே இந்த முடிவை எடுத்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75f7c087-68f1-4bd4-b821-3464b642d0a5/26-6a64accc3768a.webp' /></p><p>
</p><p>&nbsp;தனது கடிதத்தில்," கல்விச் சீர்திருத்தங்களுக்காக கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக என்னை நான் அர்ப்பணித்துள்ளேன். வலுவான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட கல்வி முறையே ஒரு வலிமையான தேசத்தின் அடித்தளம் என்று நான் எப்போதும் நம்புகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p> மேலும், இளைஞர்களின் அபிலாசைகள், உணர்வுகள் மற்றும் நியாயமான எதிர்பார்ப்புகளைத் தான் ஆழமாக மதித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் தேசத்திற்குச் சேவை செய்ய வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்த அவர், மே 3, 2026 அன்று நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்ததைக் சுட்டிக்காட்டினார்.</p><p>"இந்த விவகாரத்தில் உடனடியாக கவனம் செலுத்திய மத்திய அரசு, விசாரணையை சிபிஐ-யிடம் ஒப்படைத்ததுடன், தேர்வை ரத்து செய்து, மறுதேர்வுக்கான தேதியையும் அறிவித்தது. மேலும், அடுத்த ஆண்டு முதல் இத்தேர்வை முழுமையாகக் கணினி வழியில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது," என்று கூறியுள்ளார்.</p><p>

சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு எவ்வித இடையூறுமின்றி மறுதேர்வை நடத்துவதே தங்களின் முதன்மை நோக்கமாக இருந்ததாகக் கூறிய அவர், இதற்காக 'ஒருங்கிணைந்த அணுகுமுறை' பின்பற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். </p><p>மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகளும், குறிப்பாக மாவட்ட நிர்வாகங்களும் இதில் முக்கியப் பங்கு வகித்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
"மாணவர்கள் மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்புடன் ஜூன் 21, 2026 அன்று தேர்வு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. </p><p>முதல் நாளிலிருந்தே நான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டேன்; சூழ்நிலையை விட்டு நான் ஒருபோதும் விலகவில்லை. 'தேர்வு மாஃபியாக்களால்' எந்தவொரு தகுதியான மாணவனின் திறமையும் பாழாகிவிடக் கூடாது என்பதிலும், எந்த மாணவருக்கும் அநீதி இழைக்கப்படக் கூடாது என்பதிலும் நான் உறுதியாக இருந்தேன்," என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p>

ஜூலை 16 அன்று வெளியான நீட் முடிவுகள் திருப்திகரமாக இருந்ததாகவும், பின்தங்கிய பின்னணியைக் கொண்ட பல தகுதியான மாணவர்கள் இதில் வெற்றி பெற்றதாகவும் ,இருப்பினும் பொறுப்பான பதவிகளில் உள்ள சில தனிநபர்கள் தடைகளை ஏற்படுத்தவும், மாணவர்களைத் தவறாக வழிநடத்தவும் முயன்றது தனக்கு மிகுந்த மனவேதனையை அளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
கடந்த பத்து நாட்களாக அரங்கேறி வரும் நிகழ்வுகள் தனக்கு வேதனை அளிப்பதாகக் கூறியுள்ள அவர், "இது எனது தனிப்பட்ட கவுரவம் சார்ந்த பிரச்சனை அல்ல. நாட்டின் இளைஞர் சக்தியே இந்த தேசத்தின் உண்மையான பலம். நாட்டின் இளைஞர்களை ஒருபோதும் குழப்ப வலையில் சிக்க விடக்கூடாது என்பதே எனது நிலைப்பாடு. </p><p>ஜந்தர் மந்தர் மற்றும் நாடு முழுவதும் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், தேச விரோத சக்திகள் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், தேசிய ஒற்றுமையைப் பாதுகாக்கவும் நான் எனது ராஜினாமாவை பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளேன்.</p><p> எந்தவொரு இந்திய மாணவனின் எதிர்காலமும் கேள்விக்கு உள்ளாகாமல் இருப்பதையும், குழந்தைகள் தங்கள் நேரத்தைப் படிப்பிற்காகச் செலவிட்டு தங்கள் எதிர்காலத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதையும் உறுதி செய்வதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="zxx" dir="ltr"><a href="https://t.co/VSArqS98OJ">pic.twitter.com/VSArqS98OJ</a></p>&mdash; Dharmendra Pradhan (@dpradhanbjp) <a href="https://x.com/dpradhanbjp/status/2080938216505667663?ref_src=twsrc%5Etfw">July 25, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-07-25T12:32:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷூட்டிங்கில் சில்மிஷம் செய்த நடிகர்!! போர்க்கொடி தூக்க தயாரான இளம் நடிகை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/actress-ready-to-expose-heros-misconduct-1784981272"></link>
            <id>https://viduppu.com/article/actress-ready-to-expose-heros-misconduct-1784981272</id>
            <summary type="text">சில்மிஷம் செய்த நடிகர்முன்னணி நடிகருடன் முதன்முறையாக இணைந்துள்ள இளம் நடிகை, ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகரின் எல்லைமீறிய நடத்தையால் அதிர்ச்சியாகியுள்ளார். ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சில்மிஷம் செய்த நடிகர்</h2><p>முன்னணி நடிகருடன் முதன்முறையாக இணைந்துள்ள இளம் நடிகை, ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகரின் எல்லைமீறிய நடத்தையால் அதிர்ச்சியாகியுள்ளார். ஆரம்பத்தில் பெரிதாக எடுத்துக்கொள்ளாத நடிகையிடம் தொடர்ந்து அதேமாதிரியான செய்கையில் இருந்துள்ளார் நடிகர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c6685f9-b6b4-425a-9880-8a980a4ea6e9/26-6a64a71a22790.webp' /></p><p> </p><p>இனிமேல் பொறுத்துக்கொள்ள முடியாது என்று படக்குழுவினரிடமும், நெருங்கிய வட்டாரங்களிடமும் இது குறித்து பேசியிருக்கிறார். தேவைப்பட்டால் வெளிப்படையாக ஊடகங்களில் கூட சொல்லத் தயாராக இருந்துள்ளார். இந்த விஷயம் படத்தின் தயாரிப்பாளர் காதுக்கு செல்ல, நடிகையை தனியாக கூப்பிட்டு பேசியிருக்கிறார்.</p><h2>இளம் நடிகை</h2><p>இப்போது இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் படத்தின் எதிர்காலம் பாதிக்கும். கடன் வாங்கி இப்படத்தை எடுத்து வருகிறேன், படம் வெளியானால்தான் கடன், வட்டியை அடைக்க முடியும். இந்த சர்ச்சை வெடித்தால் படமே போய்விடும். என் குடும்பமும் பெரும் சிக்கலில் சிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71bc4aad-1d9a-407c-8747-ac65a63dab7f/26-6a64a71ac938a.webp' /></p><p> </p><p>தயவு செய்து படப்பிடிப்பை முடித்துக் கொடுங்கள், அதன்பின் நீங்கள் எதை வேண்டுமானாலும் சட்டப்படி பேசலாம் என்று சமாதானப்படுத்தியுள்ளார் தயாரிப்பாளர். அவரின் நிலைமையை அறிந்து படத்தை முடித்துக் கொடுக்கலாம் என்ற முடிவில் இருந்துள்ளார் நடிகை. ஆனால் படத்திற்கு பின் நடிகை அமைதியாக இருப்பாரா? இல்லை நடிகரின் இந்த செயல் குறித்து பேசுவாரா என்று சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.</p>]]></content>
            <updated>2026-07-25T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஜித்-ரணில் கூட்டணி - நளிந்த ஜயதிஸ்ஸ விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/legal-cannot-done-with-pen-nalinda-jayatissa-1784978521"></link>
            <id>https://tamilwin.com/article/legal-cannot-done-with-pen-nalinda-jayatissa-1784978521</id>
            <summary type="text">சஜித்-ரணில் கூட்டணி என்பது ஒரு கூட்டணி அல்ல ரணில் விக்ரமசிங்க தலைவராகி,
சஜித்தை தனது ஆதரவாளராக்கப் பார்க்கும் ஒரு முயற்சி என
சுகாதார மற்றும் ஊடக அமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>சஜித்-ரணில் கூட்டணி என்பது ஒரு கூட்டணி அல்ல ரணில் விக்ரமசிங்க தலைவராகி,
சஜித்தை தனது ஆதரவாளராக்கப் பார்க்கும் ஒரு முயற்சி என
சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>

களுவாஞ்சிகுடியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போதே
அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>நாட்டின் பொருளாதாரம்</h2><p> </p><p>

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,</p><p>நாம்
பொறுப்பேற்றது பொருளாதார ரீதியாகப் பலவீனப்பட்டு, அழிக்கப்பட்டு,
ஸ்தம்பித்துப் போய் இருந்த ஒரு நாட்டை ஆகும்.</p><p> 

2024 செப்டெம்பர் மாதத்திற்கு
முன்னர் பொருளாதாரம் மிகச் சிறந்த நிலையில் இயங்கவில்லை. நாம் பொருளாதாரத்தை
ஒரு நிலைக்குக் கொண்டுவந்துள்ளோம், சீரமைத்துள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9dea2eda-572c-4029-8350-3785c2b98b82/26-6a64a1b496d2f.webp' /></p><p>
</p><p>
அதேபோல கடந்த நவம்பர் மாதத்தில் 'டித்வா'
 சூறாவளி வந்து எமது நாட்டின் மக்கள் தொகையில் 11 சதவீதமானோர்
பாதிப்புக்கு உள்ளானார்கள். அதற்குப் பிறகு மத்திய கிழக்கில் ஏற்பட்ட
அச்சுறுத்தல் இன்னமும் முழுமையாக முடியடையவில்லை.</p><p> </p><p>

அப்படி இருந்தும், உலக
நாடுகள் இயற்கை பேரிடர்களினாலும் மத்திய கிழக்கு அச்சுறுத்தல்களினாலும் மக்கள்
மீது பல்வேறு பொருளாதாரக் கட்டுப்பாடுகளை விதித்த போதிலும், நாம் எந்தவொரு
பொருளாதாரக் கட்டுப்பாடுகளும் இன்றி நாட்டை ஒரு நிலைக்குக் கொண்டுவந்துள்ளோம்.</p><p></p><h2>சர்வதேச அமைப்புகளின் புள்ளிவிபரம்</h2><p>

அது மத்திய வங்கியின் அல்லது சர்வதேச அமைப்புகளின் புள்ளிவிவரங்களில்
மட்டுமன்றி, மக்களின் வாழ்க்கையிலும் உணரக்கூடிய அளவிற்குப் பொருளாதாரத்தை
நாம் மேம்படுத்தியுள்ளோம்.</p><p> </p><p>

இப்போது இருப்பது நாட்டைப்
பலப்படுத்துவதே ஆகும். இப்போது எந்தவொரு
நிறுவனத்திற்கும், அமைப்பிற்கும், தனிநபருக்கும், தொழிலதிபருக்கும் 
தெளிவாகத் தங்கள் பொருளாதார இலக்குகளுக்கு ஏற்பப் பணிகளைத் தொடங்கக்கூடிய
வாய்ப்பு உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/435299ed-d894-4c67-a858-e2fdf9eca62c/26-6a64a1b3e6650.webp' /></p><p>

 இதைத்தான் நாம் நாட்டிற்குச் செய்த மிகப்பெரிய வெற்றியாகப்
பார்க்கிறோம். இதில் பிரதேசம், இனம், மதம், தொழில் போன்றவை கவனத்தில் கொள்ளப்படாமல்,
ஒட்டுமொத்தமாக பொருளாதாரத்தின் கருவூலத்தைப் பலப்படுத்தும்
அதேவேளையில், அதன் பலன்கள் மக்களுக்குச் சென்று சேர வழிவகை செய்யப்பட்டது.</p><p>

 இது
எமது இறுதி இலக்கு அல்ல, இன்னும் செல்ல வேண்டிய தூரம் உள்ளது. எனினும்,
செல்லும் பாதையில் நாம் படிப்படியாக முன்னேறி வருகிறோம்.<br></p><p></p><h2>சட்ட மறுசீரமைப்பு&nbsp;</h2><p> </p><p>மக்களின்
வாழ்க்கையில் ஒரு சுலபமான நிலை உணரப்படுகின்றது. நாம் எந்தவொரு குறிப்பிட்ட
வழியையும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், இப்போது நாம் சரியான பாதையில் செல்கிறோம்
என்பது அனைவருக்கும் புரிகின்றது.
</p><p>
"உங்களால் பார்க்க முடியும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மிக விரைவாக இரத்து
செய்யப்படும். அது தொடர்பான பணிகள் இப்போது இறுதி கட்டத்தில் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55801a2a-aeeb-498e-b769-3defb3124c12/26-6a64a1b3295d5.webp' /></p><p>சட்ட
மறுசீரமைப்பு அல்லது ஒரு சட்டத்தை இரத்து செய்வது என்பது பேனா முனையினால் உடனே
செய்துவிடக் கூடிய விடயம் அல்ல.</p><p>
இதற்கு முன்னர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் இதையெல்லாம் செய்வதாக
வாக்குறுதி அளித்துவிட்டு வேறு தவறான காரியங்களைச் செய்துகொண்டிருந்தது என குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-25T12:25:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியமைச்சர் தொடர்பில் அர்ச்சுனா எம்.பியின் உளறல் : அமைச்சர் வசந்த சமரசிங்க தக்க பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archuna-send-justice-minister-to-jail-in-2029-1784974016"></link>
            <id>https://ibctamil.com/article/archuna-send-justice-minister-to-jail-in-2029-1784974016</id>
            <summary type="text">&quot;2029-லும் நான் நாடாளுமன்றத்திற்கு வந்து, நீதி அமைச்சர் நாணயக்கார சிறைக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்வேன்,&quot; என்றுநாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநா...</summary>
            <content type="html"><![CDATA[<p>"2029-லும் நான் நாடாளுமன்றத்திற்கு வந்து, நீதி அமைச்சர் நாணயக்கார சிறைக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்வேன்," என்றுநாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
</p><p>

 நேற்று (24)நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>மது அருந்திய நீதியமைச்சர்&nbsp;</h2><p>நீர் கொழும்பு சிறையில் மோதல் நடந்த நேரத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மது அருந்தியிருந்ததால் உறங்கிக் கொண்டிருந்தார்.




"அமைச்சருக்கு அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை," என்று அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23911b7e-6c99-4bbb-a19b-e3b4833a3ae2/26-6a648db11faa8.webp' /></p><p>
</p><p>


</p><h2>அமைச்சர் வசந்த சமரசிங்கவின் பதிலடி</h2><p>இதற்குப் பதிலளித்த அமைச்சர் வசந்த சமரசிங்க, நீதி அமைச்சர் மது அருந்துவது அவரது தனிப்பட்ட விஷயம் என்றார். "இந்த எம்.பி.க்கள் அமைச்சரின் பானத்தில் சோடாவைக் கலந்தது போல் பேசுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e16a728-8015-428a-a7b3-eda052e2868f/26-6a648db1de0aa.webp' /></p><p> </p><p>மோதலுக்குப் பிறகு அமைச்சர் தனது கடமையைச் செய்தார். மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அவர் அனைத்தையும் செய்தார்," என்று அவர் கூறினார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T12:24:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் கொல்லப்பட்ட சீன பிரஜை : வெளிவரும் அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chinese-national-killed-in-colombo-1784981649"></link>
            <id>https://ibctamil.com/article/chinese-national-killed-in-colombo-1784981649</id>
            <summary type="text">கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீன பிரஜை தொடர்பில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி கொல்லப்பட்ட கோடீஸ்வரரான சீன பிரஜை இணையக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீன பிரஜை தொடர்பில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி கொல்லப்பட்ட கோடீஸ்வரரான சீன பிரஜை இணையக்குற்றவலையமைப்பில் முக்கிய புள்ளி என தெரியவந்துள்ளது.
</p><p>
சர்வதேச கணினி குற்ற வலையமைப்பின் தலைவரும் கோடீஸ்வரருமான ஹாவோ போன் என்ற சீனப் பிரஜையே கொல்லப்பட்டவராவார்.</p><p>இந்த கொலை சம்பவத்திற்குப் பின்னால் சர்வதேச மாஃபியா கும்பல் ஒன்று இருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.</p><p> </p><h2>&nbsp;பணம் தொடர்பான கடுமையான தகராறு</h2><p>கணினி குற்றங்கள் மூலம் சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாய் பணம் தொடர்பான கடுமையான தகராறு இந்த மனிதாபிமானமற்ற கொலைக்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7faa28e9-37a6-4396-89e6-48e8032ac4cd/26-6a64aa752d8cc.webp' /></p><p>
</p><p>





இந்த குற்றத்தில் சுமார் இருபது சீனப் பிரஜைகள் சம்பந்தப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த அன்று நண்பர்களாக நடித்த இரண்டு சீனப் பிரஜைகள் பாதிக்கப்பட்ட கோடீஸ்வரரை துறைமுக நகரில் உள்ள ஒரு பாலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.</p><p></p><h2>கொடூரமான சித்திரவதைகளைச் செய்து, வெட்டி கொலை</h2><p> அவர்கள் ஒன்றாக மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சீனக் கும்பல் அவரைக் கடத்திச் சென்றுள்ளது. அதன் பின்னர் எஹலியகொட கரதன பிரதேசத்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று, கைகால்களைக் கட்டி, கொடூரமான சித்திரவதைகளைச் செய்து, வெட்டி கொலை செய்து உடலை கற்களால் மூடிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8e57a38-4480-4737-8005-5d9c572ee253/26-6a64aa747c0f9.webp' /></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றப் பிரிவு மற்றும் எஹலியகொட காவல்துறையினர் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp; </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-25T12:22:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் STF மக்கள் மோதல்; நடந்தது என்ன !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kilinochchi-people-oppose-stf-operation-1784981011"></link>
            <id>https://jvpnews.com/article/kilinochchi-people-oppose-stf-operation-1784981011</id>
            <summary type="text">&amp;nbsp; கிளிநொச்சி, அக்கராயன்குளம் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மேற்கொண்ட சோதனையின் போது, அவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கிளிநொச்சி, அக்கராயன்குளம் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மேற்கொண்ட சோதனையின் போது, அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
அக்கராயன்குளம் மூக்கப்பன் பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஒன்று சட்டவிரோதமாக அழிக்கப்பட்டு வருவதாகக் கிடைத்த தகவலுக்கு அமையவே அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93e32b4c-5cdd-40a8-b6fb-f44b52c18f69/26-6a64a6147e82f.webp' /></p><h2>&nbsp;வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு&nbsp;</h2><p>
</p><p>
இதன்போது அங்கு இருந்த சிலர் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்து தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
நிலவிய பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>

இச்சம்பவத்தில் காயமடைந்த விசேட அதிரடிப்படை அதிகாரிகள் நால்வர் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p> 

சந்தேகநபர்கள் காட்டை அழிப்பதற்குப் பயன்படுத்திய இயந்திரமொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் அக்கராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-25T12:19:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஏவுகணை தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/missile-attack-saudi-arabia-oil-refinery-blockade-1784981970"></link>
            <id>https://canadamirror.com/article/missile-attack-saudi-arabia-oil-refinery-blockade-1784981970</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சவூதி அரேபியாவின் யான்பு (Yanbu) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை இலக்குவைத்து யேமனில் இருந்து இன்று ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை, சவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;சவூதி அரேபியாவின் யான்பு (Yanbu) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை இலக்குவைத்து யேமனில் இருந்து இன்று ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை, சவூதி அரேபியாவில் உள்ள கிரேக்க இராணுவத்தினர் வான் பாதுகாப்பு தொகுதி மூலம் வெற்றிகரமாக மறித்து அழித்துள்ளனர்.
</p><p>
சவூதி அரேபியாவின் எரிசக்தி உள்கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்கு உதவும் வகையில், 2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அமெரிக்க தயாரிப்பான பேட்ரியோட்வான் பாதுகாப்புத் தொகுதியை கிரேக்க இராணுவத்தினர் அங்கு இயக்கி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80a4e7f5-0b63-4c6b-96b6-03236d242303/26-6a64a9d3895b2.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், இன்று யேமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை கிரேக்க இராணுவப் பணியாளர்கள் உடனடியாகக் கண்டறிந்து, வான் பாதுகாப்புத் தொகுதியைப் பயன்படுத்தி நடுவானில் வீழ்த்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-25T12:17:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை வன்முறை: 1200 கைதிகளிடம் வாக்குமூலம் - சி.ஐ.டி. விசாரணை தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-violence-1200-prisoners-confessions-1784979920"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-violence-1200-prisoners-confessions-1784979920</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத்
திணைக்களத்தால் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இதுவரை 1200
கைதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத்
திணைக்களத்தால் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இதுவரை 1200
கைதிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பொதுமக்கள்
பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் நேற்று(24) வெள்ளிக்கிழமை நடைபெற்ற நடைபெற்ற நீதி அமைச்சருக்கு
எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்</h2><p>
</p><p>
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, "நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் மற்றும் பதிவாகிய உயிரிழப்புகள் மிகவும்
கவலைக்குரியவை. இச்சம்பவம் தொடர்பாகச் சி.ஐ.டி.யினர் விரிவான விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2401686d-31f5-4e97-a257-d887c2cd8789/26-6a64a55e9c3a4.webp' /></p><p> </p><p>இதுவரை 1200 கைதிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு
செய்யப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் வசமிருந்த ஆயுதங்களும்
நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. </p><p>விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில்,
அனுமானங்களின் அடிப்படையில் எவர் மீதும் எவ்விதக் குற்றச்சாட்டுகளையும்
முன்வைக்க முடியாது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் போதைப்பொருளுக்கு எதிராகக் கடுமையான
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.</p><h2>&nbsp;அதிகமானோர் கைது&nbsp;</h2><p> </p><p>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்
சம்பவமானது போதைப்பொருள் குற்றத்தின் நேரடி விளைவாகும். போதைப்பொருள்
வலைப்பின்னலுடன் தொடர்புடைய தரப்பினருக்கும், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த
தரப்பினருக்கும் இடையிலான முரண்பாடே இந்த மோதலாக உருவெடுத்துள்ளது.</p><p>
</p><p>போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குத் தடைபோடும் வகையிலேயே நீர்கொழும்பு
சிறைச்சாலை மோதல் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6dc7336-7373-47d5-bb36-9a22d3d2c3d7/26-6a64a55d09b44.webp' /></p><p> இச்சம்பவம் தொடர்பான
முழுமையான உண்மை விரைவில் வெளிப்படுத்தப்படும்.

போதைப்பொருளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் இதுவரை 2
இலட்சத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>பலருக்குப் பிணை
வழங்கப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் பாவனையாளர்களை நோயாளிகளாகக் கருதி
அவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>குறுகிய அரசியல் இலாபம்</h2><p>
</p><p>
சிறைச்சாலை கட்டமைப்பை மறுசீரமைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை நீதி
அமைச்சர் மிகச் சிறந்த முறையில் மேற்கொண்டுள்ளார். </p><p>அந்தத் துறையுடன்
தொடர்புடைய பிரிவுகளில் காணப்பட்ட வெற்றிடங்களையும் அவர் உரிய முறையில்
நிரப்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f728cde-406f-48ab-9155-1cb8b055ce57/26-6a64a55dc30e8.webp' /></p><p> எனவே, நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்துக்கு நீதி
அமைச்சர் மாத்திரம் பொறுப்புக்கூற வேண்டிய அவசியமில்லை.

தோற்றம் பெறும் சகல பிரச்சினைகளையும் எதிர்க்கட்சியினர் தமது குறுகிய அரசியல்
இலாபத்துக்காகவும் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்காகவும் பயன்படுத்தி
வருகின்றனர்.</p><p> கடந்த காலங்களில் அரச அனுசரணையுடன் சிறைச்சாலைகளுக்குள் மோதல்கள்
உருவாக்கப்பட்டன. ஆனால் இந்தச் சம்பவம் அவ்வாறானதல்ல.</p><p> சிறைச்சாலைகளில்
இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருப்பதற்கான கடுமையான
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T12:15:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானுக்கு தரமான பதிலடி கொடுத்த இலங்கை: சதம் விளாசிய இருவர்..அபார வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/vishmi-and-harshitha-century-vs-pakistan-2nd-odi-1784981466"></link>
            <id>https://news.lankasri.com/article/vishmi-and-harshitha-century-vs-pakistan-2nd-odi-1784981466</id>
            <summary type="text">பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.&amp;nbsp;சிட்ரா அமின்&amp;nbsp;சதம் 
இலங்கை மற்றும் பாகிஸ்தான் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>சிட்ரா அமின்&nbsp;சதம் </h2><p>
இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹம்பன்டோடாவில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff010950-616e-4014-af30-bd1ae0e63f10/26-6a64a9d681925.webp' /></p><p></p><p> 

முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி சிட்ரா அமின் (Sidra Amin) 100 ஓட்டங்களும், ஆயிஷா 49 ஓட்டங்களும் எடுக்க 273 ஓட்டங்கள் குவித்தது.
</p><p>
பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் சமரி அதப்பத்து (Chamari Athapaththu) 1 ரன்னில் ஃபாத்திமா சனா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><h2>ஹர்ஷிதா, விஷ்மி சதம் </h2><p><span style="font-size: 14px; color: inherit;">அடுத்து களமிறங்கிய ஹர்ஷிதாவுடன் தொடக்க வீராங்கனை விஷ்மி குணரத்னே இணைந்து வலுவான கூட்டணி அமைத்தார்.</span></p><p> 

அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விஷ்மி குணரத்னே (Vishmi Gunaratne) 123 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். </p><p>

அதனைத் தொடர்ந்து நிதானமாக ஓட்டங்களை சேர்த்த ஹர்ஷிதா சமரவிக்ரமா (Harshitha Samarawickrama) 100 ஓட்டங்களும், கவிஷா தில்ஹரி 40 ஓட்டங்களும் விளாசினர்.
</p><p>
இதன்மூலம் இலங்கை அணி 46.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 275 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac0e3dcb-55a1-4398-872e-b2399a43b18a/26-6a64a9d5c77c5.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T12:15:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டன் ஹோட்டலில் மர்மமாக உயிரிழந்த சவுதி இளவரசர்; 8 மாதம் கழித்து வந்த அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/alcohol-cannabis-saudi-prince-died-london-hotel-1784960598"></link>
            <id>https://canadamirror.com/article/alcohol-cannabis-saudi-prince-died-london-hotel-1784960598</id>
            <summary type="text">&amp;nbsp; லண்டனில் உள்ள பிரபல மேரியட் ஹோட்டலில் சவுதி இளவரசர் அப்துல்லா பின் ஃபஹத் கடந்த ஆண்டு நவம்பர் 25 அன்று மர்மமான முறையில் உயிரிழந்தார். 

அவரது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; லண்டனில் உள்ள பிரபல மேரியட் ஹோட்டலில் சவுதி இளவரசர் அப்துல்லா பின் ஃபஹத் கடந்த ஆண்டு நவம்பர் 25 அன்று மர்மமான முறையில் உயிரிழந்தார். 

அவரது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை மற்றும் விசாரணை முடிவுகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 
 
ஹோட்டல் அறையின் குளியலறையில் மயங்கிக்கிடந்த இளவரசரை ஹோட்டல் ஊழியர் கண்டுபிடித்து அவசர உதவிக்கு அழைத்துள்ளார். 

இருப்பினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d1c8e2f-7563-40db-86da-fcefc593d29a/26-6a64565788776.webp' /></p><h2>ஆபத்தான அளவில்&nbsp;&nbsp;போதைப்பொருள்</h2><p> </p><p>பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, அவரது உடலில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மூன்று மடங்கு அதிக மது அருந்தியிருந்தது தெரியவந்துள்ளது. 
 
மேலும், ஆபத்தான அளவில் ஜி.எச்.பி போதைப்பொருள், கானபியா மற்றும் ஜானக்ஸ் போன்ற மாத்திரைகளும் கலந்திருந்தன. </p><p>

இந்த நச்சுப் பொருட்களின் அதிவேக கலவையே அவரது திடீர் மாரடைப்புக்குக் காரணம் என மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
 
 இதற்கு முன் அவர் மது மற்றும் மருந்து அடிமைத்தனத்துக்காக லண்டனில் உள்ள பிரபல மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p> 

எனினும், அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும், இது ஒரு எதிர்பாராத விபத்து மரணம் என்றும் உதவி coroner ஜீன் ஹார்க்கின் தீர்ப்பளித்துள்ளார். 

இதனையடுத்து சவுதி அரச குடும்பத்தினர் அவரது மறைவை உறுதிசெய்து, இறுதிச்சடங்குகளை நடத்தியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-25T12:07:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு ஆயுதங்கள்; சீனா, ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/arms-to-iran-trump-warns-china-and-russia-1784976591"></link>
            <id>https://canadamirror.com/article/arms-to-iran-trump-warns-china-and-russia-1784976591</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந் நிலையில் ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கவோ அல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
</p><p>
இந் நிலையில் ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது என சீனா மற்றும் ரஷ்யாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். டிரம்ப் தனது சமூக வலைதளமான “ட்ரூத் சோஷியல்” தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afb0bdd7-83eb-47d0-83fd-ae6634eb7cfd/26-6a6494d0b723e.webp' /></p><p>சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஆகியோர் ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கப்படவில்லை என உறுதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>அவர்களின் வார்த்தையை நான் நம்புகிறேன்” என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

 சீனா அல்லது ரஷ்யா ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால், அது அந்த நாடுகளின் நலன்களுக்கு சாதகமாக இருக்காது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.</p><p> 

அமெரிக்கா–ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சீனா மற்றும் ரஷ்யா மறைமுகமாக ஈரானுக்கு இராணுவ உதவிகளை வழங்கக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணியிலேயே டிரம்பின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-25T12:06:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[8 நாட்களில் அன்பே டயானா திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/anbe-diana-movie-8-days-box-office-1784976324"></link>
            <id>https://cineulagam.com/article/anbe-diana-movie-8-days-box-office-1784976324</id>
            <summary type="text">அன்பே டயானாஇயக்குநர் பாரி இளவழகன் இயக்கி, ஹீரோவாக நடித்து கடந்த வாரம் திரைக்கு வந்த படம் அன்பே டயானா. இப்படத்தில் நடிகை ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அன்பே டயானா</h2><p>இயக்குநர் பாரி இளவழகன் இயக்கி, ஹீரோவாக நடித்து கடந்த வாரம் திரைக்கு வந்த படம் அன்பே டயானா. இப்படத்தில் நடிகை ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea5c80a6-c25f-40ab-834b-c0b63ad5723f/26-6a6493c77a3ee.webp' /></p><p></p><p> மேலும், நடிகை ரோஜா பல ஆண்டுகளுக்கு பின் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர் சேத்தன், பரிதாபங்கள் கோபி ஆகியோர் நடித்துள்ளனர்.</p><h2>வசூல்</h2><p>
</p><p>
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றுள்ள <a href="https://www.youtube.com/watch?v=1b7erKvajq0" target="_blank">அன்பே டயானா</a> திரைப்படம் 8 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84bc2c45-ed15-4d39-8aab-648a7221bd72/26-6a6493c8438e4.webp' /></p><p>

அதன்படி, 8 நாட்களில் இப்படம் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 6+ கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p>]]></content>
            <updated>2026-07-25T12:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்கள் மத்தியில் எதிர்க்கட்சிக்கே வெற்றி! மார்தட்டிக் கொள்ளும் முஜிபுர் ரஹ்மான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mujibur-said-govt-failed-among-the-people-1784978786"></link>
            <id>https://ibctamil.com/article/mujibur-said-govt-failed-among-the-people-1784978786</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தால் நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசாங்கம் தோற்கடித்திருந்தாலும் நாடாளுமன்றத்திற்கு வெளியே மக்கள் மத்தியில் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தால் நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசாங்கம் தோற்கடித்திருந்தாலும் நாடாளுமன்றத்திற்கு வெளியே மக்கள் மத்தியில் எதிர்க்கட்சி முன்வைத்த உண்மைகளே வெற்றிபெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.</p><p>

நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்ட நிலையில், அது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.</p><p>அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கத்துக்கு 159 பெரும்பான்மை உறுப்பினர்களும், எதிர்க்கட்சிக்கு 80 உறுப்பினர்களும் உள்ள நிலையில், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சி கொண்டுவந்ததற்கான முதன்மை காரணம், தற்போதைய அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்தபோது அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டுவதற்கே ஆகும்.</p><p></p><h2>நீதி அமைச்சரின்&nbsp;அலட்சியம்</h2><p>
பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம் எனக் கூறி ஆட்சியைப் பிடித்த அரசாங்கம், நீதி அமைச்சரின் பொறுப்பற்றத்தனத்தையும் அலட்சியத்தையும் மறைக்க முயல்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9884c39-bd8a-4421-8bc7-b65212e92e08/26-6a64a4fb0a974.webp' /></p><p>
விவாதத்தின் போது எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட பலமான ஆதாரங்கள் மற்றும் கேள்விகள் எதற்கும் ஆளுங்கட்சி அமைச்சர்களாலோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களாலோ பதிலளிக்க முடியவில்லை. நேரடிப் பதில்களைத் தவிர்த்து சம்பந்தமில்லாத விடயங்களையே ஆளுங்கட்சியினர் விவாதத்தில் பேசினர்.</p><p>
கடந்த காலங்களில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்ட போது, அப்போதைய ஆளுங்கட்சியினர் அவரைப் பாதுகாத்து வாக்களித்த போதிலும், இறுதியில் அவர் தவறு செய்தது நிரூபிக்கப்பட்டு சிறைக்குச் செல்ல நேர்ந்தது.</p><p>தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் வெளியனுப்புவோம் என்று கூறி ஆட்சியைப் பிடித்த தற்போதைய அரசாங்கமும் அதே தவறையே மீண்டும் செய்கிறது. இது தமக்கு வாக்களித்த மக்களுக்குச் செய்த பெரும் துரோகமாகும்” என்றார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T11:58:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வான் மீது மோதியது யானை : ஐவர் படுகாயம் : மூவரின் நிலை கவலைக்கிடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/five-people-injured-after-elephant-attacks-van-1784978763"></link>
            <id>https://ibctamil.com/article/five-people-injured-after-elephant-attacks-van-1784978763</id>
            <summary type="text">பாதுக்கவிலிருந்து அனுராதபுரம் நோக்கி நேற்றையதினம்(24) சென்றுகொண்டிருந்த வான் மீது யானை மோதியதில் ஐவர் காயமடைந்தனர்.

இந்தத் துயரச் சம்பவம் வானில் பய...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதுக்கவிலிருந்து அனுராதபுரம் நோக்கி நேற்றையதினம்(24) சென்றுகொண்டிருந்த வான் மீது யானை மோதியதில் ஐவர் காயமடைந்தனர்.
</p><p>
இந்தத் துயரச் சம்பவம் வானில் பயணித்தவர்கள் சென்றடையும் இடத்தை அடைவதற்குச் சில மீட்டர்களுக்கு முன்பு,யானை மீது வான் மோதியதாகத் தெரிவிக்கப்பட்டது.</p><p>காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.</p><p> </p><h2>&nbsp;மனிதன்-யானை மோதல்</h2><p>காவல்துறையின்படி, அந்த வானில் சுமார் ஆறு பேர் பயணம் செய்துகொண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be15b031-61bf-4615-8195-b458dcfc3d49/26-6a64a4d9418f1.webp' /></p><p>
</p><p>
அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள படேனியா கிராமம், கடந்த சில ஆண்டுகளாக காட்டு யானைகளால் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அப்பகுதியில் மனித-யானை மோதலின் விளைவாக சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T11:58:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[எமது கடவுச்சீட்டிற்குப் பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது! ஒரு நாடாக நாம் முன்னோக்கி வருகிறோம் - அமைச்சர் நளிந்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minister-nalinda-jayatissa-statement-at-eastern-1784975794"></link>
            <id>https://tamilwin.com/article/minister-nalinda-jayatissa-statement-at-eastern-1784975794</id>
            <summary type="text">எமது
கடவுச்சீட்டிற்குப் பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது, ஒரு நாடாக நாம் முன்னோக்கி வருகிறோம் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர்
நளிந்த ஜயதிஸ்ஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எமது
கடவுச்சீட்டிற்குப் பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது, ஒரு நாடாக நாம் முன்னோக்கி வருகிறோம் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர்
நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>




மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி நகரில் நவீன வசதிகளுடன் புதிதாக
நிர்மாணிக்கப்பட்ட தபால் அலுவலகம் இன்றைய தினம் (25.07.2026) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.</p><p>இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.&nbsp;</p><p></p><h2>சேவையை சிறப்பாக வழங்கும் வாய்ப்பு</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வளவு காலமும் பழைய கட்டடத்தில் இருந்து கொண்டு, எமது அஞ்சல் திணைக்கள
அதிகாரிகள் அனைவரும் அனைத்துக் கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டு, சகித்துக் கொண்டு
மக்களுக்குச் சேவை வழங்கி வந்தீர்கள்.</p><p>இப்போது உங்களால் அச்சேவையை முன்னரை
விடச் சிறப்பாக வழங்க முடியும்.



அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்னவெனில், திறைசேரியின் பணத்தை உங்களுக்காகச்
செலவிடுவது, உங்களுக்குச் சுலபமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதற்காகவே
ஆகும். ஒருபுறம் எமது வரிப் பணத்தைச் செலவிட்டு உங்களுக்கு வலிமையான
பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகிறோம்; மறுபுறம் எமது வரிப் பணத்தைச் செலவிட்டு
உங்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குகிறோம்.</p><p>



கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, அஞ்சல் சேவை, பொலிஸ் உள்ளிட்ட மக்கள் சேவைகளை
உங்களுக்கு முடிந்தவரை அதிகபட்சக் திறமையுடன் வழங்கும்போது, உங்களால் இந்தப்
பொருளாதாரச் செயற்பாட்டில் பங்காளியாக முடியும் என்றார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ca9c104-78ef-46ae-ad87-be2d1b92e991/26-6a64a31aa750d.webp' /></p><p>எமது முதன்மை வைத்தியசாலைகளுக்கு தேவையான விசேட வைத்தியர்களை வழங்குவதில்
அதாவது அறுவைச் சிகிச்சை செய்வதற்குத் தேவையான அறுவைச்சிகிச்சை விசேட
வைத்தியர்கள் மற்றும் மகப்பேறு விசேட வைத்தியர்கள் சில இடங்களில் இருந்தாலும்,
அவர்கள் அறுவைச்சிகிச்சை செய்வதற்குத் தேவையான விசேட மயக்கவியல் வைத்தியர்கள்
இலங்கையில் மிகவும் குறைவாகவே உள்ளனர்.</p><h2>நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்கள்</h2><p>
</p><p>


கடந்த 2022, 2023, 2024 காலப்பகுதியில் நிலவிய பொருளாதார நெருக்கடியுடன்,
அதிகளவில் நாட்டை விட்டு வெளியேறியவர்கள் மயக்கவியல் விசேட வைத்தியர்களே ஆவர்.
அதனால் எமது சில வைத்தியசாலைகளில், ஒரு மயக்கவியல் விசேட வைத்தியர் பல
வைத்தியசாலைகளை உள்ளடக்கிப் பணியாற்றி வருகின்றார்.
</p><p>


ஆனால் வெளிநாட்டுப் பயிற்சிகளுக்குச் சென்ற எமது விசேட வைத்தியர்களில்
குறிப்பிடத்தக்க அளவினர் இலங்கைக்குத் திரும்பி வந்து, இந்த வைத்தியசாலைகளில்
பணியாற்றி வருகின்றனர். அதன்படி, எம்மால் படிப்படியாக இந்த
வைத்தியசாலைகளுக்கும் அந்த விசேட மருத்துவச் சேவைகளை வழங்க முடியும்.</p><p></p><p>



எப்படியிருப்பினும், நான் ஆகஸ்ட் மாதத்தின் மூன்றாவது வாரமளவில்
இம்மாவட்டத்திற்கு வருகை தந்து, எமது மக்கள் பிரதிநிதிகள், சுகாதாரத் துறை
சார்ந்த அனைத்து அதிகாரிகள் மற்றும் எமது பிரதேச நிர்வாகத்தைச் சார்ந்த அரச அதிகாரிகளை ஒன்றிணைத்து, இந்தப் பிரதேச மட்டத்திலான வைத்தியசாலைகளில் நிலவும்
பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாட எதிர்பார்க்கின்றேன்.
</p><p>


எமது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்காக 45,000 மில்லியன் ரூபாய் முதன்மைச் சுகாதார
மேம்பாட்டிற்காக மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய நிதி.</p><h2>சுகாதார மையங்களை மேம்படுத்தல்</h2><p> அந்த நிதியை
எவ்வாறு உங்களது கிராம மட்டத்தில் உள்ள பிரதேச வைத்தியசாலைகள் அல்லது எமது
முதன்மைச் சுகாதார மையங்களை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்துவது என்பது
குறித்துத் தீர்க்கமான இறுதித் திட்டத்திற்கு வர எதிர்பார்க்கின்றேன். ஏனெனில்
அதன்படியே அடுத்த இரு ஆண்டுகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f40b1d5-4f9c-43f5-aea4-f422ae79c867/26-6a64a319b5d07.webp' /></p><p>
</p><p>


நாடு பூராகவும் பரந்துள்ள சுமார் 3,500 உப அஞ்சலகங்கள், சுமார் 600
அஞ்சலகங்கள் என மொத்தமாகச் சேர்த்தால், சுமார் 4,100 அஞ்சலகங்கள் மூலம் எமது
சேவைகளை வழங்கி வருகிறோம்.



கிராமத்திற்கு அஞ்சல் சேவை அத்தியாவசியமானது. முத்திரை குத்துவதற்கு மட்டும்
அல்ல, கடிதங்கள் மற்றும் பொதிகளை அஞ்சல் செய்வதற்கு மட்டும் அல்ல எமது பல
கொடுப்பனவுகள், அரசின் கொடுப்பனவுகள் அஞ்சலகங்கள் மூலமாகவே வழங்கப்படுகின்றன.
</p><p>அதேபோல உங்களுக்குச் சுலபமாக உங்களின் சில செலுத்துகைகளை மேற்கொள்வதற்கும்
அஞ்சலகங்களைப் பயன்படுத்த முடியும்.



நாம் இந்த நாட்களில் இந்த அஞ்சலகங்களுக்கு கணினி வசதிகளை வழங்குவதற்கான
பணிகளைச் செய்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T11:51:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/burnham-to-give-exempt-for-existing-care-workers-1784980082"></link>
            <id>https://news.lankasri.com/article/burnham-to-give-exempt-for-existing-care-workers-1784980082</id>
            <summary type="text">பிரித்தானியாவின் பிரதமராக லேபர் கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆன்டி பர்னாம், தொடர்ச்சியாக மக்களுக்கு நன்மை தரும் சில நடவடிக்கைகளை எடுத்துவருகிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் பிரதமராக லேபர் கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆன்டி பர்னாம், தொடர்ச்சியாக மக்களுக்கு நன்மை தரும் சில நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.
</p><p>
இந்நிலையில், அவர், புலம்பெயர்தல் தொடர்பில் ஒரு நல்ல முடிவை எடுக்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் லட்சக்கணக்கானோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
</p><h3>
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு...
</h3><p>
உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத், தொடர்ச்சியாக புலம்பெயர்தலுக்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கைகள் ஏராளமானோருக்கு கவலையை ஏற்படுத்துபவையாக அமைந்துள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7cfb2f3-73e8-48c4-8de2-c4e6e61ccd8f/26-6a64a273b3c5e.webp' /></p><p>
அவற்றில் ஒன்று, ஏற்கனவே பிரித்தானியாவில் பல ஆண்டுகள் வாழ்ந்து, நிரந்தரமாக குடியமர காத்திருக்கும் புலம்பெயர்ந்தோருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான விதி ஆகும்.
</p><p>
அதாவது, ஐந்து ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தால், அதன் பின் காலவரையறையின்றி வாழ தகுதி பெறலாம் என இருந்த விதியை மாற்றி, இனி 10 ஆண்டுகளுக்கும்மேல் பிரித்தானியாவில் வாழ்ந்தால் மட்டுமே அது சாத்தியம் என்னும் ரீதியிலான புது விதி ஒன்றை ஷபானா அறிவிக்க, நிரந்தரமாக குடியமர காத்திருக்கும் புலம்பெயர்ந்தோர் ஏராளமானோர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்கள். </p><p></p><p>
இந்நிலையில், அந்த விதியிலிருந்து முதியவர்களை கவனித்துக்கொள்ளும் பணியை மேற்கொள்ளும் care workers என்னும் பணியாளர்களுக்கு, அதாவது, ஏற்கனவே பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் புலம்பெயர்ந்தோருக்கு, விலக்கு அளிக்க பிரித்தானியாவின் புதிய பிரதமரான ஆன்டி பர்னாம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
இந்த செய்தி, லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
</p><h3>
என்ன காரணம்?
</h3><p>
இப்படி தன் அரசில் உள்துறைச் செயலராக இருக்கும் ஷபானாவின் முடிவுக்கு எதிராக பிரதமர் ஆன்டி பர்னாம் முடிவெடுக்க ஒரு முக்கிய காரணம் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cb6b03c-d9e4-44b1-bf21-43bbfb6c634f/26-6a64a274625d9.webp' /></p><p>
அதை ஆன்டி பர்னாமே கூறியும் உள்ளார். அதாவது, ஆன்டி பர்னாமின் தந்தையான ராய், அல்ஸீமர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
தன் மகன் பிரித்தானியாவின் பிரதமரானதுகூட அவருக்கு தெரியாது என்னும் ரீதியில் சில செய்திகள் வெளியாகியிருந்தன.
</p><p>
இந்நிலையில், ஷபானாவின் கட்டுப்பாடுகளிலிருந்து care worker பணியாளர்களுக்கு விலக்கு அளிக்கும் திட்டம் குறித்து பேசிய ஆன்டி பர்னாம், என் தந்தைக்கு அல்ஸீமர் பிரச்சினை உள்ளது.
</p><p>
அவரை கவனித்துக்கொள்ள care worker பணியாளர்கள் படும் கஷ்டம் எனக்குத் தெரியும். அது அவர்கள் தவறல்ல, சிஸ்டமே தவறு என்று கூறியிருந்தார் ஆன்டி பர்னாம்.
</p><p>
அத்துடன், சமூக பாதுகாப்பு அமைப்பை இப்படியே விட்டுவிட முடியாது என்றும் கூறியிருந்தார் ஆன்டி பர்னாம்.
</p><p>
ஆக, விரைவில் அது குறித்து ஆன்டி பர்னாம் அறிவிப்பு ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், புலம்பெயர்ந்தோர், சுகாதாரப் பணியாளர்கள் உட்பட ஏராளமானோருக்கு நல்ல செய்தி ஒன்று காத்திருக்கிறது என்று மட்டும் இப்போதைக்குக் கூறலாம்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T11:48:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகரிக்கும் டெங்கு அச்சுறுத்தல்: ரசாயனமின்றி நுளம்புகளை விரட்டும் எளிய முறைகள் உங்களுக்கு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/how-to-get-rid-of-mosquitoes-naturally-1784900414"></link>
            <id>https://manithan.com/article/how-to-get-rid-of-mosquitoes-naturally-1784900414</id>
            <summary type="text">மாலை நேரம் வந்தாலே வீட்டைச் சுற்றி நுளம்புகளின் தொல்லை ஆரம்பமாகிவிடுகிறது. சிறியதாகத் தோன்றும் இந்த நுளம்புகள், டெங்கு காய்ச்சல், மலேரியா போன்ற ஆபத்தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாலை நேரம் வந்தாலே வீட்டைச் சுற்றி நுளம்புகளின் தொல்லை ஆரம்பமாகிவிடுகிறது. சிறியதாகத் தோன்றும் இந்த நுளம்புகள், டெங்கு காய்ச்சல், மலேரியா போன்ற ஆபத்தான நோய்களை ஏற்படுத்தக்கூடியவை என்பதால் அவற்றிடம் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியம்.
</p><p>
தற்போது டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், நுளம்புகளிடமிருந்து நம்மையும் நம் குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்வது முக்கியமான விடயமாக மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/668a0758-b307-47df-be4a-e5c807a3e96f/26-6a6371a1271fc.webp' /></p><p>நுளம்புகளை விரட்ட நாம் பயன்படுத்தும் பல பொருட்களில் அதிக அளவில் ரசாயனங்கள் கலந்திருப்பதால், அவை வீட்டின் சூழலையும் நமது ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.

அதில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒன்றுதான் நுளம்பு சுருள்.</p><p></p><h2>இயற்கை வழிகள்</h2><p> நுளம்புகளை விரட்டுவதில் இது உதவினாலும், தொடர்ந்து அதன் புகையை சுவாசிப்பது உடலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக வீட்டில் இருக்கும் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.</p><p></p><p>
அப்படியானால், ரசாயனப் பொருட்களை தவிர்த்து இயற்கையான முறையில் நுளம்புகளை எவ்வாறு விரட்டுவது?

நம் வீட்டில் எளிதாகக் கிடைக்கும் சில இயற்கைப் பொருட்களை பயன்படுத்தி, எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லாமல் நுளம்புத் தொல்லையைக் குறைக்கும் வழிகளை இந்த காணொளி மூலம் தெரிந்துகொள்ளலாம்.</p><p><iframe width="325" height="578" src="https://www.youtube.com/embed/J2LOSjQEl9w" title="நுளம்பை விரட்டியடிக்கும் டெக்னிக்- இனி ட்ரை பண்ணி பாருங்க..! #mosquitorepellent #srilanka #wellness" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T11:47:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/commemorate-july-1983-genocide-1784973377"></link>
            <id>https://tamilwin.com/article/commemorate-july-1983-genocide-1784973377</id>
            <summary type="text">இலங்கைத்தீவில் 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு தாக்குதல் என்பது சடுதியாக ஆரம்பிக்கப்பட்ட ஒன்று அல்ல. அது நீண்ட திட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைத்தீவில் 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு தாக்குதல் என்பது சடுதியாக ஆரம்பிக்கப்பட்ட ஒன்று அல்ல. </p><p>அது நீண்ட திட்டமிடலோடும், இன விரோதத்தோடும், தமிழர்களின் பொருளாதாரத்தை கொழும்பில் இல்லாது ஒழிக்கவும், பொருளாதார இலக்குகளை சிங்களவர்கள் கைப்பற்றுவதற்குமான ஒரு நீண்டகால தொடர் இனவிரோத செயல்முறையின் ஒட்டுமொத்த திரட்சியின் வடிவமே ஆகும்.</p><p></p><h2>கறுப்பு ஜூலை படுகொலை</h2><p>
ஆனால் யாழ் திருநெல்வேலியில் ஜூலை 23ஆம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்பினர் மேற்கொண்ட கண்ணிவெடி தாக்குதலில் 13 சிங்கள படையினர் கொல்லப்பட்டமை என்பது அந்த இனப்படுகொலையை ஆரம்பிப்பதற்கான உடனடி காரணமாக அமைந்துவிட்டது.
</p><p>
கறுப்பு ஜூலை படுகொலை என்பது கொழும்பில்தான் ஆரம்பித்தது என நம்மவர்கள் வரலாற்றை பதிவு செய்ய முற்படுகின்றனர். ஆனால் உண்மையில் அந்த ஜூலை படுகொலை யாழ்ப்பாணத்திலேயே ஆரம்பமானது என்பதுதான் உண்மை.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e26b15a2-fadd-4b93-a1a1-8864c3c876ed/26-6a6490a099ee1.webp' /></p><p>ஜூலை 23ஆம் திகதி நள்ளிரவு திருநெல்வேலியில் 13 படையினர் கொல்லப்பட்டதை அடுத்து 24ஆம் திகதி அதிகாலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள படைமுகாம்களில் இருந்து இராணுவ கவச வண்டிகளில் வந்த படையினர் மக்கள் மீது சரமாரியாக சுட்டு படுகொலை தாக்குதலை ஆரம்பித்தனர். </p><p>

இதில் மானிப்பாய் - சுண்ணாகம் வீதியில் வந்துகொண்டிருந்த பேருந்தையும் இராணுவத்தினர் சுட்டனர். இதில் பல்கலைக்கழக சமூகத்தினால் வெளியிடும் மாதாந்தப் பத்திரிகையான மனிதம் பத்திரிகையின் ஆசிரியர் விமலதாஸ் கொல்லப்பட்டார். </p><p>

அத்துடன் இலக்கியவாதி கலா.பரமேஸ்வரன் பலாலி வீதியில் அவரது வீட்டில் வைத்து கொல்லப்பட்டார். மேலும் காரைநகரிலிருந்து வந்த பேரூந்தினை மறித்து அதில் வந்த 13 பேரை நிரையில் நிற்கவைத்து 12 பேரைக் சுட்டுக்கொன்றனர்.</p><h2>தமிழர் இனப்படுலை</h2><p>இதில் ஒருவர் ஓடித்தப்பி லண்டனில் வாழ்கிறார். இவ்வாறு ஜூலை 24ஆம் திகதி யாழில் மொத்தமாக 51 தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்பதை பெயர் பட்டியலுடன் TRRO எனப்படும் தொண்டர் நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
</p><p> 
திருநெல்வேலி தாக்குதலில் கொல்லப்பட்ட 13 படைவீரர்களும் சிங்கள தேசத்தின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள். ஆனாலும் ஜே.ஆர். அரசாங்கம் கொழும்பு - பொரளையில் அவர்களுக்கான இறுதிக் கிரியைகளை 24ஆம் திகதி செய்யத் திட்டமிட்டதே கொழும்பில் உள்ள தமிழர்கள் மீது இனவழிப்பு செய்வதற்காகத் தான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac2f5ce1-309a-473c-bee0-e460da3c1f99/26-6a6490a189a57.webp' /></p><p>
</p><p>
 படையினரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக வன்முறைகளைச் செய்யக் கூடிய காடையர்கள் சிங்கள தேசத்தின் பல பகுதிகளிலும் இருந்து கொண்டுவரப்பட்டு கொழும்பில் விடப்பட்டிருந்தனர். </p><p>அன்று அது ஒரு எசல பௌர்ணமி நாள். பொரளை கனத்தை மயானத்தில் 13 படையினரது தகனக் கிரியை முடிந்ததும் தமிழர்களுக்கெதிரான படுகொலை அரங்கேறத் தொடங்கியது.
</p><p>
அன்றைய காலகட்டத்தில் இலங்கையின் பொலிஸ்மா அதிபராக ருத்திரா ராஜசிங்கம் எனும் தமிழர் இருந்தார். அவர் கொலை வெறித்தாக்குதலுக்கான முஸ்திப்புகளின் விபரீதத்தை உணர்ந்து அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனவின் வதிவிடத்திற்கு நேரே சென்று ஊரடங்குச் சட்டம் பிரகடனம் செய்து நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர உத்தரவு கேட்டார்.</p><h2>கொலைவெறித் தாக்குதல்</h2><p> </p><p>
ஜே. ஆர் அதற்குச் சம்மதிக்கவில்லை. மாறாக “சிங்கள மக்கள் அவர்களின் மனவுணர்வை வெளிப்படுத்தட்டும்“ என்று கூறி மறுத்துவிட்டார். </p><p>

இதன் விளைவாக நாடெங்கும் தமிழர்களுக்கு எதிராகத் திட்டமிட்ட இனப்படுகொலைகள் வேகமாக பரவியது. இதற்கு ஜே. ஆர். ஜெயர்த்தனாவின் வலது, இடது கரங்களாக செயல்பட்ட சிறில் மத்தியூ, காமினி திசாநாயக்க ஆகியோர் பிரதான சூத்திரதாரிகளாக வீதிகளில் வந்து நின்று தலைமை தாங்கினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54837a9e-822b-47e1-a633-f2b53e3a3e05/26-6a6490a23aed9.webp' /></p><p>
</p><p>
இந்த தாக்குதல்களின் இலக்கு பெரும்பாலும் தமிழர்களுடைய பொருளாதார இலக்குகளான வியாபார தளங்கள் மீதும், தொழிற்சாலைகள் மீதும் நடத்தப்பட்டது. அவை தீயிட்டு அழிக்கப்பட்டன. வீதிகளில் நடமாடிய தமிழர்கள் அடித்துக் கொல்லப்பட்டார்கள். கொழும்பு நகரப்புறங்களில் தமிழர்களின் வீடுகள் தேடித்தேடி தீக்கிரையாக்கப்பட்டன.</p><p>
 இந்தக் கொலைவெறித் தாக்குதல்களினால் 3000க்கு அதிகமான தமிழர்கள் தென்னிலங்கையில் கொல்லப்பட்டார்கள். ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டார்கள்.</p><p>

அதே சமயம் ஜூலை 25 மற்றும் 27 ஆகிய திகதிகளில் கொழும்பு வெலிக்கடைச் சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள்.</p><h2>மரண தண்டனை தீர்ப்பு&nbsp;</h2><p> </p><p>குட்டிமணி,ஜெகன், தங்கத்துரை ஆகியோருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கிய போது இறுதி ஆசை என்னவென்று கேட்கப்பட்டது. அப்போது குட்டிமணி தனது கண்களைத் தமிழ் மகன் ஒருவனுக்குத் தானமாக வழங்குங்கள். மலரப் போகும் தமிழீழத்தை அதனூடாகப் பார்ப்பேன் என்றார். </p><p>அதனால் அவரது கண்கள் தோண்டப்பட்டுக் கொல்லப்பட்டார். இந்தப் படுகொலையின் சாட்சியாக டக்ளஸ் தேவானந்தா மற்றும் விரிவுரையாளர் நித்தியானந்தன் போன்றவர்கள் தற்போதும் உயிருடன் உள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/156b9946-498f-4378-a8d8-9ad8c566c621/26-6a6490a2e52a6.webp' /></p><p>
</p><p>
அதேவேளை வெளிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் சடலங்கள் இரகசியமாக கொழும்பு பொரளை மயானத்தில் 10அடி ஆழத்தில் வெட்டப்பட்ட மூன்று புதைகுழிகளுக்குள் ஐம்பத்து மூன்று உடலங்களும் புதைக்கப்பட்டன.</p><p> 

இதனை 1983ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொரளை மயானத்தின் இரவு காவல் பணியாளராக பணியாற்றிய அனிஸ் துவான் என்பவர் 2016ஆம் ஆண்டில் சுமார் 33 வருடங்களுக்கு பின்னர் உண்மையின் சாட்சியமாக வாய்திறந்து வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><p>

1983ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் இறுதி வாரத்தில் ஒரு நடுஇரவில் பொரளை மயானத்தில் இராணுவ வண்டிகளில் வந்திறங்கிய இராணுவ வீரர்கள் கனரக மண் அள்ளும் இயந்திரத்தின் உதவியுடன் பத்து அடி ஆழமுள்ள குழிகளை வெட்டினார்கள்.</p><p></p><h2>தமிழீழ விடுதலை முன்னோடிகள்</h2><p> 

மூடப்பட்ட இராணுவ வண்டியில் கொண்டு வரப்பட்ட 35 ஆண்களுடைய உடலங்களை அதில் புதைத்தனர். அது சம்பந்தமாக மயானத்தின் மேலாளர் கொழும்பு மாநகர மேயருக்கு அறிவித்தபோது “இராணுவத்தினரை தடுக்க வேண்டாம். அதனை அவர்கள் செய்து முடிக்க அனுமதியுங்கள் என கொழும்பு மாநகர மேயர் உத்தரவிட்டார்“ என்றும் அனிஸ் துவான் என்ற அந்த மயான காவலாளி தெரிவித்துள்ளார்.</p><p>

மறுநாள் மேலும் 18 ஆண்களுடைய உடலங்களை இராணுவத்தினர் கொண்டுவந்து நடு இரவில் புதைத்தனர்" எனவும் தெரிவித்தார்.

1983ஆம்ஆண்டில் வெலிக்கட சிறைச்சாலையில் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளான தங்கதுரை, குட்டிமணி, ஜெகன், ராஜசுந்தரம், தேவன், சிவபாதம் மாஸ்டர் உட்பட 53 தமிழர்களுடைய உடலங்கள் அவர்களது குடும்பங்களுக்கோ, அவர்களது அன்புக்கு உரியவர்களுக்கோ எந்தவொரு அறிவிப்பும் செய்யாது சிங்கள அரசு புதைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7edd0529-2d82-4a4b-8f4f-eec7f86b863b/26-6a6490a397e59.webp' /></p><p> </p><p>

இது சம்மந்தமான எந்தவித அறிவிப்பையும் அரசு செய்யாமல் இருப்பது மனித உரிமை மீறலும், போர்க்குற்றமுமாகும். இப்போது அவர்களின் புதைகுழிக்கு மேலாக கார் தரிப்பிடம் ஒன்றையும் அமைத்துவிட்டார்கள். </p><p>சிங்களதேசத்தின் தலைநகரத்தில் தினமும் இலட்சக் கணக்கான மக்கள் கடந்து போகும் ஒரு சுறுசுறுப்பான பகுதியில் நிலத்துக்கு கீழே எங்கள் தேசத்தின் வீரப் புதல்வர்களான தமிழீழ விடுதலை முன்னோடிகள் புதைத்துவிட்டு மறைக்கப்பட்ட கிடக்கிறார்கள்.</p><p> 

இன்றுவரை வெலிக்கட சிறையில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு சிங்கள தேசத்தின் ஆட்சியாளர்கள் யாரும் எதுவிதமான கவலையோ, கண்டனமோ, மன்னிப்போ கோரவில்லை. அது மட்டுமின்றி வெலிக்கடையில் படுகொலை செய்யப்பட்டவர்களை மிகவும் கவனமாக திட்டமிட்டு அவர்கள் புதைக்கப்பட்ட இடங்களை தெரியப்படுத்தாது மறைத்துவருகின்றனர்.</p><h2>நினைவுச் சின்னங்கள்</h2><p>
</p><p>
அவர்கள் சார்ந்த நினைவுச் சின்னங்களை கட்டவிடாது தடுத்து தமிழ் மக்களின் கூட்டுணர்வையும், நினைவு வணக்கங்களையும் செய்ய முடியாமல் தடுத்து வருகின்றது.</p><p> அதன் ஒரு பகுதிதான் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் நினைவுச் சின்னங்கள் வல்வெட்டித்துறையில் கட்டப்பட்ட நிலையில் அதனை திறந்து வைக்க முடியாமல் சிங்கள பொரிஸார் தடுத்திருக்கின்றனர் என்பதும் கவனிக்கத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/257e78fa-8932-4ac2-b712-0da8e23086e1/26-6a6490a4497bd.webp' /></p><p>

இங்கே குட்டிமணி, தங்கதுரை ஆகிய இருவரது நினைவு சின்னங்களையும் திறக்க விடாமல் தடுத்திருக்கும் அதே நேரத்தில் உமாமகேஸ்வரன், பத்மநாபா, குகன் போன்றவர்களுடைய சிலைகள் வவுனியாவில் ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டுள்ளன.</p><p> 

அதற்கு இலங்கை அரசு தரப்பு எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டியது. ஏனெனில் அவர்கள் தமிழர்களாலே கொல்லப்பட்டதனால் அவர்களுடைய சிலைகளை திறப்பதற்கு எந்தத் தடையையும் சிங்களதேசம் விதிக்கவில்லை. </p><p>ஆனால் சிங்களவர்களால் கொல்லப்பட்ட விடுதலைக்கான முன்னோடிகளின் நினைவுச் சின்னங்களை உருவாக்குவதை அரசு தடுக்கிறது என்பதிலிருந்து இலங்கை அரசு தமிழ் மக்களை எவ்வாறு ஒடுக்கவும், அடக்கவும், பிளவுபடுத்தவும், இல்லாத ஒழிக்கவும் சாதுரியமாக செயல்படுவதை தமிழர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.</p><h2>சிங்கள தேசத்தின் உயிர் அச்சுருத்தல்</h2><p>
</p><p>

இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் இனப்படுகொலையிலிருந்து தம்மை தற்காத்துக் கொள்வதற்கும், தமக்கான சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கும், அதனுடாக தாம் இழந்துபோன இறைமையை மீட்டெடுப்பதற்குமான தொடர் போராட்டத்தில் தமது இழப்புக்களையும், தமக்கு ஏற்பட்ட அவலங்களையும் நினைவு கூர்வதும் அதன் மூலமாக ஒரு கூட்டு மன உணர்வுடன் ஐக்கியப்படவும், ஒற்றுமைப்படுவதற்குமான இடமாக நினைவுச் சின்னங்களும், நினைவு மண்டபங்களும் பேருதவி புரியும். </p><p>அந்த அடிப்படையில் தமிழ் மக்கள் தமது வலிகளை, மனக்காயங்களை, உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய வகையில் ஜூலை இனப்படுகொலையை நினைவு கூறும் நினைவு சின்னங்கள் வரலாற்று உணர்வோடு அமைக்கப்பட வேண்டியது அவசியமானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/254d90ea-3328-49ca-8db8-8262e0697cb3/26-6a6490a4f0a0b.webp' /></p><p>


தமிழ் மக்களுடைய நினைவுச் சின்னங்களை சிங்கள தேசத்தில் அமைக்க முடியாது. ஆகவே 1983 ஜூலை இனப்படுகொலை நினைவுச் சின்னங்கள் தமிழர் தாயகத்தில் பல்வேறு இடங்களில் நிறுவப்பட முடியும். </p><p>உதாரணமாக சிங்கள தேசத்தின் உயிர் அச்சுறுத்தலினால் அகதிகளாக்கப்பட்டு தமிழர் தாயகத்திற்கு கப்பல் வழியாக காங்கேசன்துறைக்கு அனுப்பப்பட்ட தமிழர்கள் காங்கேசன்துறையில் தங்கவைக்கப்பட்ட இடத்திலோ, அல்லது அதற்கு அண்மித்த இடங்களிலோ வரலாற்று உணர்வோடு அகதியாக வந்து இறங்கிய நினைவைத் தாங்கிய நினைவுச் சின்னத்தை கட்டுவது அவசியமானது. </p><p>அத்தகைய நினைவுச் சின்னங்கள்தான் எதிர்காலத்தில் எமது சந்ததிக்கு வழிகாட்டியாக அமையும்.

அதேபோல தென்னிலங்கையில் இருந்து ஏராளமான மலையகத் தமிழர்கள் தென்னிலங்கையில் வாழமுடியாது என பயந்து உயிருக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய தமிழர் தாயகத்தில் வந்திறங்கி ஏ9 வீதியில் ஓமந்தை, புளியங்குளம், கனராயன்குளம், முறிகண்டி, இரணமடிச் சந்தி, மற்றும் தர்மபுரம், நெடுங்கேணி ஆகிய இடங்களில் அகதிகளாக தங்கி இருந்தனர்.</p><h2>தமிழ் மக்களின் வரலாறு</h2><p>
</p><p>
 பின்னாளில் அந்த இடங்களில் அவர்கள் குடியேறினர். அந்த இடங்களில் ஜூலை அவலத்தை குறிக்கின்ற நினைவுச் சின்னங்கள் கட்டப்பட வேண்டும். அது எங்களின் அடுத்த சந்ததிக்கு வரலாற்றைக் கடத்துவதற்கான இலகுவான வழியாகவும் அமையும்.
</p><p>அந்த அடிப்படையில்தான் இப்போது குட்டிமணி, தங்கதுரை ஆகியோருடைய நினைவு சின்னங்கள் வல்வட்டித் துறையில் அமைக்கப்பட்டன. 

அதேபோல ஏனையவர்களுடைய பிறந்த இடங்களிலும் வெளிக்கடை சிறையிலே கொல்லப்பட்ட தமிழர் தேசத்தின் மைந்தர்களுக்கு நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட வேண்டியது அவசியமானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/472802eb-fb21-42b2-af7e-cebed53e7ea2/26-6a6490a5a1c57.webp' /></p><p> </p><p>இந்தக் கூட்டு மனவுணர்வும், வரலாற்று உணர்வுமே ஒரு இனத்தை வழிநடத்த வல்லது.

அந்த அடிப்படையில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவுத்தூபி தமிழர் தாயகம் எங்கும் அமைக்கப்படுவது அவசியமானது. </p><p>அதுவே தமிழ் மக்களை ஒன்று திரட்டவும், ஐக்கியப்படுத்தவும், ஒருங்கிணைப்பதற்குமான வழியாகவும் அமையும். அதுவே தமிழ் மக்களின் வரலாற்றை காவிச் செல்வதற்கான உந்து சக்தியாகவும், அமையும்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T11:40:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பிரதேசத்தில் இரு பெண்கள் தவறான முடிவால் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2-women-lose-their-lives-ampara-drastic-step-1784978325"></link>
            <id>https://jvpnews.com/article/2-women-lose-their-lives-ampara-drastic-step-1784978325</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டத்தின் இரு வேறு பிரதேசங்களில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட இரு பெண்களின் சடலங்கள், உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகப் பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டத்தின் இரு வேறு பிரதேசங்களில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட இரு பெண்களின் சடலங்கள், உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>

நீதிமன்ற மரண விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


மருதமுனை - 06 ஆம் பிரிவைச் சேர்ந்த 20 வயதுடைய பெண், செவ்வாய்க்கிழமை (21) மாலை தனது வீட்டில் வைத்து தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9781871d-cc84-4fe3-8c82-bee2b58f8ea6/26-6a649b973394a.webp' /></p><h2>யுவதியின் மரணம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்து</h2><p>
</p><p>
 யுவதியின் மரணம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்களும் சந்தேகங்களும் பரவியதைத் தொடர்ந்து, பெரிய நீலாவணை பொலிஸாரும் அம்பாறை மாவட்ட தடயவியல் பிரிவு பொலிஸாரும் பல கோணங்களில் விசாரணைகளைத் தீவிரப்படுத்தினர்.</p><p></p><p>
</p><p>
சம்பவ இடத்திற்குச் சென்று மரண விசாரணையை மேற்கொண்ட கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான், உயிரிழந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதால் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார்.
</p><p>
அம்பாறை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியினால் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, உயிரிழப்பின் துல்லியமான காரணத்தைக் கண்டறிவதற்காகச் சடலத்தின் சில உயிரியல் பாகங்கள் கொழும்பிலுள்ள அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு மேலதிக பரிசோதனைக்கென அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
</p><p>

பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் கடந்த புதன்கிழமை (22)&nbsp; உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.</p><p></p><h3>கணவன் வெளிநாட்டில்</h3><p> 

இதேவேளை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஜீட்புரம், மல்வத்தை - 03 பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய், வியாழக்கிழமை (23) தனது வீட்டில் வைத்து தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
</p><p>
நேற்று வெள்ளிக்கிழமை (24) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில், சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் மரண விசாரணை நடத்தப்பட்டது.</p><p></p><p>
</p><p>
உயிரிழந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், மரணத்திற்கான பின்னணி மற்றும் காரணம் குறித்து சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்</p>]]></content>
            <updated>2026-07-25T11:39:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/yemen-escalates-attacks-after-1784978891"></link>
            <id>https://news.lankasri.com/article/yemen-escalates-attacks-after-1784978891</id>
            <summary type="text">கடந்த ஐந்து மாதங்களாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்று வரும் போரில் சவுதி அரேபியாவும் ஏமனும் இழுத்துவிடப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த ஐந்து மாதங்களாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்று வரும் போரில் சவுதி அரேபியாவும் ஏமனும் இழுத்துவிடப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.</p><h2>யான்பு மற்றும் ஜசான்</h2><p>
</p><p>செங்கடல் கப்பல் போக்குவரத்தின் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஏமனின் ஹொடைடாவில் உள்ள ஹவுதி இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், </p><p>வணிகக் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த இலக்குகளை அழித்ததாகவும் சவுதி அரேபியா அறிவித்த மறுநாளான சனிக்கிழமையன்று, ஹவுதிகள் ஏவுகணைகளை ஏவியதில் சவுதி அரேபியாவின் யான்பு மற்றும் ஜசான் நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c65d301-91fc-449c-9de2-e3aa34b50a39/26-6a649f3ab7b59.webp' /></p><p> </p><p>பொதுவாக 'ஹவுதிகள்' என்று அழைக்கப்படும் ஏமனின் 'அன்சார் அல்லாஹ்' அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், சவுதி அரேபியா ஹொடைடா மாகாணத்தில் உள்ள கமரன் தீவு மற்றும் தொலைத்தொடர்பு நிலையங்களுக்குச் சொந்தமான வசதிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்டிருந்தது. </p><p>இதனிடையே, அல் ஜசீரா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், சவுதி எண்ணெய் கப்பல்கள் குறிவைக்கப்பட்ட ஒரு முக்கிய கப்பல் போக்குவரத்து பாதையான பாப் அல்-மந்தீப் நீரிணைக்கு அருகில் கமரான் தீவு அமைந்துள்ளதால், அது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.</p><p></p><p> </p><p>சவுதி கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இந்த மோதல் வெடித்தது; ஹவுதிகளின் கடல்வழி முற்றுகையானது, ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியதைத் தொடர்ந்து, உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு அச்சுறுத்தலாக மாறியது.</p><h2>அரம்கோ எண்ணெய் நிலையங்கள்</h2><p> இந்த நிலையில், ஹொடைடாவில் உள்ள ராணுவ இலக்குகள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது சவுதி அரேபியா தாக்குதல் நடத்தினால், செங்கடலில் உள்ள எண்ணெய் மற்றும் சரக்குக் கப்பல்களை மட்டுமல்லாமல், </p><p>சவுதி அராம்கோ (Saudi Aramco) நிறுவனத்தின் கட்டமைப்புகள், விமான நிலையங்கள், விமானப்படைத் தளங்கள் மற்றும் எண்ணெய் குழாய்த்தொடர்கள் ஆகியவற்றையும் குறிவைத்துத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்துவோம் என்று ஹவுதிகள் எச்சரித்திருந்தனர். </p><p>தற்போது சவுதி அரேபியாவின் யான்பு மற்றும் ஜசான் நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. 'ஃபார்ஸ்' (Fars) செய்தி முகமை வெளியிட்டுள்ள நாசா செயற்கைக்கோள் படங்களில், ஏவுகணைத் தாக்குதல்கள் ஜிசானில் உள்ள சவுதி அராம்கோவின் சேமிப்புக் கிடங்குகளில் தீ விபத்தை ஏற்படுத்தியதைக் காட்டியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fe13999-ac83-4cd2-8f2b-1a24b4bb6978/26-6a649f39ee41d.webp' /></p><p> </p><p>சனிக்கிழமையன்று ஹவுதிகள் நடத்திய அரம்கோ எண்ணெய் நிலையங்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, யான்பு மற்றும் ஜசான் விமான நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. </p><p>ஏமனில் இருந்து அதிகாலையில் நடத்தப்பட்ட திடீர் தாக்குதல்கள் காரணமாக, தெற்கு சவுதி அரேபியாவில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு ரியாத் பல எச்சரிக்கைச் செய்திகளை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T11:35:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நூற்றாண்டின் விவாகரத்து - முன்னாள் மனைவிக்கு ரூ.6,245 கோடி வழங்க உள்ள தொழிலதிபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sk-chairman-to-pay-6245-crores-part-of-divorce-1784978917"></link>
            <id>https://news.lankasri.com/article/sk-chairman-to-pay-6245-crores-part-of-divorce-1784978917</id>
            <summary type="text">தென் கொரியாவில் முன்னாள் மனைவிக்கு விவாகரத்தின் ஒரு பகுதியாக ரூ.6,245 கோடி வழங்க தொழிலதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விவாகரத்தின் ஒரு பகுதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் கொரியாவில் முன்னாள் மனைவிக்கு விவாகரத்தின் ஒரு பகுதியாக ரூ.6,245 கோடி வழங்க தொழிலதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><h3>
விவாகரத்தின் ஒரு பகுதியாக ரூ.6,245 கோடி
</h3><p>
தென் கொரியாவில், 1953 ஆம் ஆண்டில் ஒரு ஜவுளி நிறுவனமாகத் தொடங்கி, செமிகண்டக்டர், டெலிகாம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி நாட்டின் 2வது பெரிய கூட்டு நிறுவனமாக உள்ளது SK குழுமம் ஆகும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf54340c-f41a-4036-b044-1def8afaab10/26-6a649de6d1f5a.webp' /></p><p>

இதன் சேர்மன் சேய் டே-வோன்(Chey Tae-won), கடந்த 1988 ஆம் ஆண்டில் தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி ரோ டே-வூ என்பவரின் மகளான ரோ சோ-யோங்(Roh Soh-yeong) என்பவரை திருமணம் செய்துகொண்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e62c5e2a-e9e3-4973-bfd5-2a2151dc8da1/26-6a649de781d61.webp' /></p><p>

இந்த தம்பதி 2011 ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்கின்றனர். 2025 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றனர். </p><p>

இந்த விவாகரத்து சொத்துப் பங்கீட்டின் ஒரு பகுதியாக 944 பில்லியன் வோன் (இந்திய மதிப்பில் ரூ.6,245 கோடி) ரொக்கமாகச் செலுத்த வேண்டும் என்று தென் கொரியா மேல்முறையீடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
சியோல் உயர் நீதிமன்றம் தனது முந்தைய தீர்ப்பில் வழங்கப்பட்ட 1.38 டிரில்லியன் வோன் வழங்க உத்தரவிட்டிருந்தது. </p><p>

ஆனால், சோ-யோங்கின் தந்தை ரோ டே-வூ கள்ளப் பண நிதியிலிருந்து சேய்க்கு 30 பில்லியன் வோன் கொடுத்தது சட்டவிரோதம் என்பதால் அதைத் தம்பதியரின் சொத்துக்களின் ஒரு பகுதியாகக் கருத முடியாது என்று கூறி உச்ச நீதிமன்றம் அதனை ரத்து செய்தது. </p><p>

ஆனால், ரோவும் இல்லறம், பிள்ளைகளை வளர்த்தல் மற்றும் SK குழுமம் தொடர்பான வெளி நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பங்களித்தார் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
</p><p>
ரோ அந்த இழப்பீட்டுத் தொகையை முழுவதுமாகப் பணமாகப் பெற வேண்டும் என்றும், சே தனது SK பங்குகளின் உரிமையைத் தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த தீர்ப்பை எதிர்த்து இருதரப்பில் யாரேனும் ஒருவர் மேல்முறையீடு செய்தாலும், இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு செல்லும்.</p><p> 

இந்த விவாகரத்து, தென் கொரியாவில் "நூற்றாண்டின் விவாகரத்து" என இது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T11:30:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரியலில் கர்ப்பிணி..அல்ட்ரா மாடல் லுக்கில் எதிர்நீச்சல் பார்வதி!! புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/ethirneechal-thodargiradhu-parvathy-recent-photos-1784977554"></link>
            <id>https://viduppu.com/article/ethirneechal-thodargiradhu-parvathy-recent-photos-1784977554</id>
            <summary type="text">எதிர்நீச்சல் தொடர்கிறதுசன் தொலைக்காட்சியில் வாரம் 7 நாட்கள் வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சீரியல் தான் எ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>எதிர்நீச்சல் தொடர்கிறது</h2><p>சன் தொலைக்காட்சியில் வாரம் 7 நாட்கள் வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது. சிறப்பாக இல்லத்தரசிகள் முதல் இளசுகள் வரை இத்தொடரை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91d7cc67-549d-47fe-8082-e8b98979a4c0/26-6a649897ec70d.webp' /></p><h2>பார்வதி</h2><p> </p><p>இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரமான ஜனனி என்ற கெத்தான ரோலில் நடித்து வருவது நடிகை பார்வதி, லட்சக்கணக்கான ரசிகர்களை ஈர்த்து வருகிறார். </p><p>தற்போது தொடரில் கர்ப்பிணியாக இருந்து பல போராட்டங்களை சந்தித்து வரும் காட்சியில் நடித்து வருகிறார். சீரியலை தாண்டி மாடலிங்கிலும் ஈடுபட்டு வரும் பார்வதி, ரசிகர்கள் ஈர்க்கும் வகையில் போட்டோஷூட் புகைப்படத்தை தற்போது பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-25T11:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[படங்களில் நடிப்பதை தள்ளிவைக்கும் நடிகை ஸ்ரீலீலா.. காரணம் என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/did-sreeleela-taking-break-acting-for-studies-1784975745"></link>
            <id>https://cineulagam.com/article/did-sreeleela-taking-break-acting-for-studies-1784975745</id>
            <summary type="text">ஸ்ரீலீலாகன்னடத்தில் வெளியான &#039;கிஸ்&#039; திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரீலீலா. இதை தொடர்ந்து தெலுங்கில் என்ட்ரி தந்த இவர், தொடர்ந்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஸ்ரீலீலா</h2><p>கன்னடத்தில் வெளியான 'கிஸ்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரீலீலா. இதை தொடர்ந்து தெலுங்கில் என்ட்ரி தந்த இவர், தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை கொடுத்து பிரபலமானார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe9a577a-0d66-4fba-8889-78d0360bbd65/26-6a64918560fa7.webp' /></p><p>நடிப்பை தாண்டி இவருடைய நடனத்திற்குத்தான் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக புஷ்பா 2 திரைப்படத்தில் இடம்பெற்ற 'கிஸ்ஸிக்' பாடலுக்கு இவர் ஆடிய நடனம் இந்திய அளவில் ரீச் ஆனது.</p><p>
</p><p></p><p>இதை தொடர்ந்து தமிழ் சினிமா பக்கம் வந்த ஸ்ரீலீலா, பராசக்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால், பராசக்தி திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3f79205-357f-4747-a77a-4192019bb281/26-6a649184af48d.webp' /></p><p>அடுத்ததாக தனுஷுடன் இணைந்து 'ஓம்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படம் ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.</p><h2>நடிப்பதை தள்ளிவைக்கும் ஸ்ரீலீலா</h2><p>
</p><p>
இந்த நிலையில், தற்போது படிப்பிற்காக படங்களில் நடிப்பதில் தள்ளிவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாக்டர் படிப்பை (MBBS) முடித்திருக்கும் ஸ்ரீலீலா, இன்டர்ன்ஷிப் செல்லவிருக்கிறாராம். அடுத்த MD படிப்பிற்காக நீட் தேர்வுக்கும் தயாராகி வருகிறாராம். இதனாலேயே அவர் புதிய படங்களில் எதிலும் நடிக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்றும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d726ed2-60dc-4dec-a762-8d1a05cfb7a7/26-6a64918406ab6.webp' /></p><p>
</p>]]></content>
            <updated>2026-07-25T11:30:00+00:00</updated>
        </entry>
    </feed>
