<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-30T00:41:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை வேதிகாவை நியாபகம் இருக்கா... அவரின் சில போட்டோ ஷுட் புகைப்படங்கள் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/popular-actress-vedhika-photos-1785315756"></link>
            <id>https://cineulagam.com/article/popular-actress-vedhika-photos-1785315756</id>
            <summary type="text">நடிகை வேதிகாதமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் படங்கள் நடித்தவர் வேதிகா. கடந்த 2006ம் ஆண்டு அர்ஜுனுக்கு ஜோடியாக மதராசி படத்தில் நடித்ததன் மூலம்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகை வேதிகா</h2><p>தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் படங்கள் நடித்தவர் வேதிகா. </p><p>கடந்த 2006ம் ஆண்டு அர்ஜுனுக்கு ஜோடியாக மதராசி படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து கிடைக்கும் படங்களில் நடித்தவருக்கு சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.</p><p>படங்கள் நடிக்கவில்லை என்றாலும் இன்ஸ்டாவில் போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்டு எப்போதும் ரசிகர்களின் கவனத்திலேயே உள்ளார். தற்போது நாம் நடிகை வேதிகா தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T00:30:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசத்துரோக வழக்கில் கைதான பத்திரிகையாளர் ; 12 ஆண்டுகள் சிறை தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/journalist-jailed-12-years-in-treason-case-1785370267"></link>
            <id>https://canadamirror.com/article/journalist-jailed-12-years-in-treason-case-1785370267</id>
            <summary type="text">தேசத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் பிரபல பெண் பத்திரிகையாளருக்கு ரஷ்யா நீதிமன்றம் 12 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் பிரபல பெண் பத்திரிகையாளருக்கு ரஷ்யா நீதிமன்றம் 12 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது</p><p>
பிரபல பத்திரிகையில் அறிவியல் மற்றும் மருத்துவ பிரிவில் தர்யா ஷிபச்சேவா பத்திரிகையாளராக பணியாற்றி வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de6f6dfb-0ad5-4f1f-85b8-f153f66beb2f/26-6a6a969de9168.webp' /></p><p> </p><p>இவர் ரஷ்யாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் உக்ரைன் நாட்டுக்கு ரகசியமாக பண உதவி செய்ததாக கூறி, கடந்த 2025 ஆம் ஆண்டு தேசத்துரோக வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு மாஸ்கோ நீதிமன்றத்தில் மூடிய கதவுகளுக்கு பின்னால் ரகசியமாக நடந்து வந்தது.
</p><p>இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தர்யா ஷிபச்சேவாவுக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். </p><p>தண்டனையை குறைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக, தன் மீதான குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார். </p><p>ஆனாலும், நீதிமன்றம் அவருக்கு 12 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்ததால், தீர்ப்பை கேட்டு அவர் நீதிமன்றத்திலேயே கடும் அதிர்ச்சியடைந்தார்.</p><p>
2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததில் இருந்து, பத்திரிகையாளர்களுக்கு எதிராக அதிபர் புதின் அரசு பல்வேறு கடுமையான தணிக்கை சட்டங்களை கொண்டு வந்துள்ளது. </p><p>இந்த தீர்ப்புக்கு முன்பாகவே, ரஷ்யாவில் ஏற்கனவே பல பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சர்வதேசப் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
</p><p>
மேற்கத்திய நாடுகளுக்கு உளவு பார்த்ததாகவும், உக்ரைனுக்கு உதவியதாகவும் கூறி பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள விவகாரம் உலக அளவில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-30T00:11:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு சீனா வழங்கவுள்ள ஆயுதங்கள்! அதிருப்தியில் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/if-china-sells-weapons-to-iran-trump-disappointed-1785368903"></link>
            <id>https://ibctamil.com/article/if-china-sells-weapons-to-iran-trump-disappointed-1785368903</id>
            <summary type="text">சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கினால், அது தனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கினால், அது தனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>

சீனாவில் தயாரிக்கப்பட்ட, தோளில் வைத்து ஏவக்கூடிய 300 முதல் 400 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை கொண்ட சரக்கு சில வாரங்களுக்குள் ஈரானுக்கு வந்து சேரும் என்று எதிர்பார்ப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
 குறித்த ஒப்பந்தத்தின் மதிப்பு 60 மில்லியன் முதல் 70 மில்லியன் டொலர்கள் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.</p><p></p><h2>உளவுத்துறை தகவல்</h2><p>
</p><p>
தெஹ்ரான் முக்கிய வெளிநாட்டு கூட்டாளிகளின் உதவியுடன் தனது ஆயுத இருப்பை மீண்டும் நிரப்ப முயன்று வரும் பின்னணியில், ஈரானுக்குப் புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க சீனா தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00625352-8307-4025-87de-bad2a0660a56/26-6a6a934e257f4.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், குறித்து வியாழக்கிழமை ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்கள் கேட்டபோது, “அதாவது, இதுபோன்ற விஷயங்கள் நடப்பதுண்டு, ஆனால் இது ஆச்சரியமாக இருக்கும். அவர் (ஷி ஜின்பிங்) இதில் பங்கேற்க மாட்டேன் என்று என்னிடம் மிகவும் உறுதியாகக் கூறினார்; மேலும் நான் மிகவும் ஏமாற்றமடைவேன் என்பதும் அவருக்குத் தெரியும்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b> WHATSAPP CHANNEL</b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T23:57:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் ; எச்சரிக்கும் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-warns-of-possible-strike-on-iran-1785358165"></link>
            <id>https://canadamirror.com/article/trump-warns-of-possible-strike-on-iran-1785358165</id>
            <summary type="text">ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28ம் திகதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28ம் திகதி தாக்குதல் நடத்தின.</p><p> இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சர்வதேச அளவில் மசகு எண்ணெய் விலை உயர்ந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a291cfc-edcf-4d7e-bbb1-592ded05a94e/26-6a6a675680526.webp' /></p><p>
</p><p>


இதையடுத்து, இரு தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால், ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 12ம் திகதி ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. </p><p>இதனால் இரு தரப்பும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது. ஈரான் மீது கடந்த 25ம் திகதி வரை தொடர்ந்து 13 நாட்களாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்தது. இதையடுத்து இரு தரப்பும் கடந்த 26ம் திகதி முதல் எந்த தாக்குதலையும் நடத்தவில்லை. </p><p>இதனால் மத்திய கிழக்கில் அமைதி திரும்பி இருந்தது.



ஆனால் ஜோர்தானில் உள்ள அமெரிக்க படைத்தளத்தை குறிவைத்து ஈரான் இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது.</p><p> இந்த ஏவுகணைகள் அனைத்தும் வான்பாதுகாப்பு அமைப்பால் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன.



இந்நிலையில், ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். </p><p>ஈரான் மீது வலிமையான தாக்குதல் நடத்த அமெரிக்க படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். </p><p>இதனால் இன்று இரவு ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-29T23:55:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடும்ப பிரச்சினைக்காக அதி உயர் மின் கம்பத்தில் ஏறியவருக்கு நேர்ந்த கதி ; பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-climbs-power-tower-over-family-dispute-1785369097"></link>
            <id>https://jvpnews.com/article/man-climbs-power-tower-over-family-dispute-1785369097</id>
            <summary type="text">குடும்ப முரண்பாட்டை தீர்த்துக் கொள்வதற்காக உயர் மின்னழுத்த மின்சாரக் கம்பத்தில் ஏறி எதிர்ப்பை வெளியிட்டதால், மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டத்தைச் செலுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">குடும்ப முரண்பாட்டை தீர்த்துக் கொள்வதற்காக உயர் மின்னழுத்த மின்சாரக் கம்பத்தில் ஏறி எதிர்ப்பை வெளியிட்டதால், மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டத்தைச் செலுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட நபருக்கு உத்தரவிட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

இந்த நபர் கடந்த 2ஆம் திகதி பிற்பகல் கம்புருபிட்டிய பகுதியில் அமைந்துள்ள உயர் மின்னழுத்த மின்சார விநியோகக் கட்டமைப்பிற்குச் சொந்தமான கம்பமொன்றின் மீது ஏறி தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c822096e-4857-46d5-987a-44d213bfb0f7/26-6a6a920b053e0.webp' /></p><h2 style="text-align: justify; ">மின்சாரம் துண்டிப்பு</h2><p style="text-align: justify; "> 

இதன் காரணமாக திஹகொட, கம்புருபிட்டிய, அக்குரஸ்ஸ, முலட்டியன, தெய்யாந்தர, மாவறல, தெனியாய உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. </p><p style="text-align: justify;">

மின்சாரக் கம்பத்தில் ஏறிய நபரின் குடும்ப உறுப்பினர்களை பொலிஸார் அந்த இடத்திற்கு அழைத்து சென்றதை அடுத்து, அவர் கம்பத்தில் இருந்து கீழே இறங்கினார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify; ">

அச்சமயத்தில் சந்தேகநபரை பொலிஸார் கைது செய்து மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, இம்மாதம் 24 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.</p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify;">

இந்நிலையில் கடந்த 24 ஆம் திகதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த நபர் கம்பத்தில் ஏறியதால் மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டத்தைக் கணக்கிட்டு அறிக்கையளிக்குமாறு மாத்தறை பிரதான நீதவான், கம்புருபிட்டிய பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">

மேலும், இந்தச் சந்தேகநபரை நேற்று வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

அதற்கமைய நேற்று (28) மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 201,059.90 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify;"> 

இதன்போது சந்தேகநபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டத்தைச் செலுத்துமாறும், வழக்கை மீண்டும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-29T23:51:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 12 பேர் - பொலிஸார் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/12-people-arrested-by-police-in-mannar-area-1785367453"></link>
            <id>https://tamilwin.com/article/12-people-arrested-by-police-in-mannar-area-1785367453</id>
            <summary type="text">மன்னார் - சவுத்பார் கடற்கரை பகுதிகளில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 14,072...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் - சவுத்பார் கடற்கரை பகுதிகளில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 14,072 கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில், 3 டிங்கி படகுகளும் 2 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><h2>12 சந்தேக நபர்கள் கைது</h2><p>

சட்டவிரோதமாக கடல் வழியாக கொண்டுவரப்பட்டு, அனுமதியின்றி நிலப்பரப்பு வழியாக கொண்டு செல்லத் தயாராக வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கடல் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/397d7fd5-ead8-4754-abd3-f097f44f2d0f/26-6a6a8d998737b.webp' /></p><p>

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24 முதல் 46 வயதுக்குட்பட்ட மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>குறித்த சந்தேகநபர்களுடன் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள், படகுகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி மீன்வளப் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T23:49:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி 36ஆவது நாளாக தொடரும் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/keppapilavu-land-protest-enters-36th-day-1785362646"></link>
            <id>https://tamilwin.com/article/keppapilavu-land-protest-enters-36th-day-1785362646</id>
            <summary type="text">முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு பகுதியில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி அப்பகுதி மக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு பகுதியில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>

இன்று (29.07.2026) அந்தப் போராட்டம் இரண்டாவது கட்டத்தின் 36ஆவது நாளை எட்டியுள்ளது.</p><p></p><h2>36ஆவது நாளாக தொடரும் போராட்டம்</h2><p>கேப்பாப்பிலவு பகுதியில் 55 குடும்பங்களுக்கு சொந்தமான 59.5 ஏக்கர் பூர்வீக
வாழ்விடக் காணிகளும், மேலும் 4 குடும்பங்களுக்கு சொந்தமான 100 ஏக்கர் மத்திய
வகுப்புக் காணிகளும் இன்னும் இராணுவக் கட்டுப்பாட்டிலே உள்ளது.
</p><p>
தமக்குச் சொந்தமான காணிகளை மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி, காணி
உரிமையாளர்கள் தொடர்ச்சியாக அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab2bbc1d-9926-4d84-801d-909dd8bf7d1f/26-6a6a7ac249b32.webp' /></p><p>தமது பூர்வீக வாழ்விடங்களில் மீளக் குடியேறுவதற்கான உரிமையை
உறுதிப்படுத்தி, காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதே அவர்களின் பிரதான
கோரிக்கையாகும்.
</p><p>
இந்த நிலையில், போராட்டம் 37வது நாளைக் கடந்துள்ள போதிலும் இதுவரை
அதிகாரிகளிடமிருந்து எந்தவித நிரந்தரத் தீர்வும் எட்டப்படாத நிலையில்,
போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p></p><h2>காணிவிடுவிப்பு</h2><p>
</p><p>
இதன்போது போராட்டகாரர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, ”இன்று
இரண்டாம் கட்டத்தின் 36 வது நாளாக போராடிக்கொண்டு இருக்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9eac4205-48a9-48fa-8482-41453d9af538/26-6a6a7ac199615.webp' /></p><p> 

எமது
நியாயமான கோரிக்கைகளை ஏற்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் இவ்விடத்திற்கு வருகை
தருவதாக உறுதியளித்திருக்கின்றார். அவரின் வருகைக்காக நாம்
காத்திருக்கின்றோம்.</p><p> 

அவர் எமது காணிவிடுவிப்பு தொடர்பாக ஆக்கபூர்வமான
செயற்பாடுகளை முன்னெடுப்பார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. எனவே எமது
சாத்வீகமான போராட்டத்திற்கு செவிசாய்த்தமைக்கு அவருக்கு நன்றிகளை தெரிவித்து
கொள்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளனர்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T23:48:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தீவிரமடையும் டெங்குதொற்று - நோயாளர்களின் எண்ணிக்கை 83 ஆயிரமாக அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-dengue-cases-rise-to-83-000-1785360795"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-dengue-cases-rise-to-83-000-1785360795</id>
            <summary type="text">இலங்கையில் நடப்பு ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை
மேலும் அதிகரித்து வருகின்றது என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு கவலை
வெளியிட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நடப்பு ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை
மேலும் அதிகரித்து வருகின்றது என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு கவலை
வெளியிட்டுள்ளது.</p><p>

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் புதிய தரவுகளின்படி, நாடு முழுவதிலும்
இருந்து இதுவரை 83 ஆயிரத்து 661 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>வேகமாகப் பரவி வரும்&nbsp;டெங்கு</h2><p>டெங்குக் காய்ச்சலின் தீவிர தாக்கத்தினால் இதுவரை 61 பேர் பரிதாபமாக
உயிரிழந்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21efa92d-72cb-45a3-8a45-cf8fbc8cc644/26-6a6a746921803.webp' /></p><p>கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அங்கு இதுவரை
17 ஆயிரத்து 779 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p> இதற்கு
அடுத்தபடியாகக் கொழும்பு மாவட்டத்தில் 16 ஆயிரத்து 665 நோயாளர்கள்
கண்டறியப்பட்டு இரண்டாம் இடத்தில் உள்ளது. டெங்கு நோயால் மேல் மாகாணம் தொடர்ந்து பெரும் பாதிப்பைச் சந்தித்து
வருகின்றது.</p><p></p><h2>பொதுமக்களுக்கு எச்சரிக்கை</h2><p>மேல் மாகாணத்தில் மட்டும் இதுவரை 44 ஆயிரத்து 359 டெங்கு
நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அதற்கு அடுத்தபடியாகத் தென் மாகாணத்தில் 12
ஆயிரத்து 586 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ef20bf2-91ba-45f9-9bba-5d5f3cf4ac9b/26-6a6a7469ca5ff.webp' /></p><p>இலங்கை முழுவதும் டெங்கு நோய் வேகமாகப் பரவி வரும் தற்போதைய சூழ்நிலையைக்
கருத்திற்கொண்டு, நாடு முழுவதும் 175 பகுதிகள் 'அதிஅபாய மண்டலங்களாக'
சுகாதாரத் துறையினரால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளையும் சுற்றாடலையும் சுத்தமாகப் பேணுவதுடன்,
நீர் தேங்கும் இடங்களை அகற்றி கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்த விழிப்புடன்
செயற்படுமாறு சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T23:47:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த இந்திய பிரதி உயர்ஸ்தானிகர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-indian-deputy-high-commissioner-meet-sajith-1785359645"></link>
            <id>https://tamilwin.com/article/new-indian-deputy-high-commissioner-meet-sajith-1785359645</id>
            <summary type="text">இலங்கைக்கான புதிய இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் மைத்ரேய குல்கர்னிக்கும்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று(29.07.202...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான புதிய இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் மைத்ரேய குல்கர்னிக்கும்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று(29.07.2026) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
</p><p>
இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும்
வலுப்படுத்திக் கொள்வது தொடர்பிலும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் ஆழமான
கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.</p><p></p><h2>இருதரப்பு உறவு</h2><p>
</p><p>
கடந்த வருட இறுதியில் இலங்கைக்கு ஏற்பட்ட 'டித்வா' அனர்த்த நிலைமையின் போது,
அயல் நாடு என்ற முறையில் இந்தியா பெற்றுத் தந்த துரிதமான மற்றும் மனிதாபிமான
உதவிக்கு 220 இலட்சம் மக்கள் சார்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
தனது நன்றியையும் பாராட்டுக்களையும் இந்தியப் பிரதி உயர்ஸ்தானிகரிடம்
குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1b940b1-f7e1-4534-9ab7-be26bc2a0838/26-6a6a6ddc33335.webp' /></p><p>அத்துடன், கொவிட்-19 தொற்றுநோய் பரவற் காலத்திலும், கடுமையான பொருளாதார
நெருக்கடியின் பொழுதும் நெருங்கிய அயல் நாடொன்றாக இந்தியா இலங்கைக்கு நல்கிய
பெறுமதியான ஆதரவுக்கும் அவர் விசேடமாகப் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.</p><p>

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும், பரஸ்பர நம்பிக்கையையும்
மேலும் வலுப்படுத்தி, எதிர்காலத்திலும் அபிவிருத்தி, பொருளாதாரம் மற்றும்
மக்கள் நலன்புரித் துறைகளில் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயற்படுவதன்
முக்கியத்துவம் தொடர்பிலும் இரு தரப்பினரும் இதன்போது விசேட கவனம் செலுத்தியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T23:46:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பியோடிய வாகனம்.. பலியான முதியவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vavuniya-thandikulam-accident-old-man-died-1785368184"></link>
            <id>https://tamilwin.com/article/vavuniya-thandikulam-accident-old-man-died-1785368184</id>
            <summary type="text">வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில்
பயணித்த 64 வயதுடைய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.&amp;nbsp;அதேநேரம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில்
பயணித்த 64 வயதுடைய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p>அதேநேரம், விபத்தை
ஏற்படுத்திய கப் ரக வாகனம் தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>உயிரிழந்தவர், கனகராயன் குளத்தில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்
கொண்டிருந்த போதே இவ்விபத்து சம்பவித்துள்ளது.</p><p></p><h2>பொலிஸார் நடவடிக்கை..&nbsp;</h2><p>
</p><p>சம்பவத்தின் போது, மோட்டார் சைக்கிள் பயணித்த அதே திசையில் இருந்து பின்னால் வந்த கப் ரக வாகனம்,
மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிவிட்டு நிறுத்தாமல் சென்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4d48434-039a-45d5-81e1-e4c9186263d4/26-6a6a90b33ce0a.webp' /></p><p>

இவ்விபத்தில் கனகராயன் குளத்தைச் சேர்ந்த சிவராசா உதயகுமாரன் என்பவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், தப்பியோடிய கப் ரக வாகனத்தையும் அதன் சாரதியையும்
அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T23:45:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிரீஸ் சூட்கேசில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பிரித்தானிய பெண்: சர்வதேச விசாரணை தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/scottish-woman-found-dead-in-greece-1785368450"></link>
            <id>https://news.lankasri.com/article/scottish-woman-found-dead-in-greece-1785368450</id>
            <summary type="text">ஏதென்ஸில் சூட்கேஸில் பிரித்தானிய பெண்&amp;nbsp; ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூட்கேஸில் பிரித்தானிய பெண்கிரீஸ் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏதென்ஸில் சூட்கேஸில் பிரித்தானிய பெண்&nbsp; ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> சூட்கேஸில் பிரித்தானிய பெண்</h2><p>கிரீஸ் தலைநகர் எதென்ஸில் உள்ள பழமையான கட்டிடம் ஒன்றில் இருந்த சூட்கேஸில் ஸ்காட்லாந்தை சேர்ந்த பெண்ணின் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> உள்ளூர் ஊடகங்கள் வழங்கிய தகவலின் படி, சூட்கேஸில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண் சடலம் 38 வயது எலிசபெத் என்பவருடையது என தெரியவந்துள்ளது.</p><p> இதனை பிரித்தானியாவின் காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94c40770-12c4-4f39-aecf-a090076a39f6/26-6a6a8f8409968.webp' /></p><p> மற்றும் இந்த சம்பவம் தொடர்பாக கிரீஸ் நாட்டு அதிகாரிகளும், இண்டர்போல் மற்றும் ஸ்காட்லாந்து காவல் துறையினரும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p> பாதிக்கப்பட்ட பெண் சைப்ரஸ் வழியாக அமெரிக்காவில் இருந்து கிரீஸுக்கு வந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.</p><p></p><p> மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய, கொலை செய்யப்பட்ட பெண் கடைசியாக எங்கு சென்றார் என்பது போன்ற விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T23:41:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் ; தீயை அணைக்க சென்று பலியான அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/helicopter-crash-kills-wildfire-officials-1785367938"></link>
            <id>https://canadamirror.com/article/helicopter-crash-kills-wildfire-officials-1785367938</id>
            <summary type="text">அர்ஜென்டினாவின் மேற்கு சான் ஜுவான் மாகாணத்தில் தீயணைப்பு ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அர்ஜென்டினாவின் மேற்கு சான் ஜுவான் மாகாணத்தில் தீயணைப்பு ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><p>

உயிரிழந்தவர்களில் தீயணைப்பு வீரர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் குடிமை பாதுகாப்புப் பணியாளர்கள் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59758ad0-209e-4b3e-9cd6-6fe41e14b32e/26-6a6a8d841d889.webp' /></p><p> </p><p>விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர், நேற்று (புதன்கிழமை) காலை ஹெலிகாப்டர் தளத்துடனான தொடர்பை இழந்ததாக அவசரகால சேவைகள் தெரிவித்தன.
</p><p>
அருகிலுள்ள லா ரியோஜா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயை கட்டுப்படுத்த உதவுவதற்காக அது சென்று கொண்டிருந்ததாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> மேலும், விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.</p>]]></content>
            <updated>2026-07-29T23:32:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் ஆலயத்திற்குள் நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்.. அன்னதான நிகழ்வில் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sword-attack-on-food-donors-in-batticaloa-temple-1785366019"></link>
            <id>https://tamilwin.com/article/sword-attack-on-food-donors-in-batticaloa-temple-1785366019</id>
            <summary type="text">ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன்
ஆலயத்தில் அன்னதானம் வழங்கியவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளது.&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன்
ஆலயத்தில் அன்னதானம் வழங்கியவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>நேற்று (29) பிற்பகல் நடந்த இத்தாக்குதலில் பெண்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>வாள்வெட்டு நடத்திய குழுவைச் சேர்ந்த ஒருவரை பொதுமக்கள் மடக்கி
பிடித்துள்ளதுடன் ஏனையவர்கள் தப்பி ஓடியதாகவும் கூறப்படுகின்றது.&nbsp;</p><p></p><h2>முற்றிய வாக்குவாதம்..&nbsp;</h2><p>
குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்று வரும் நிலையில் நேற்று பகல் ஆலயத்தில் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee3dcd91-9225-48ea-ac5f-bb57de7085eb/26-6a6a8b601c2b1.webp' /></p><p>இதன்போது, அன்னதானம் வாங்கி உண்ட இளைஞர் ஒருவர், உணவு சரி இல்லை என தெரிவித்துள்ள நிலையில் அன்னதானம்
வழங்கியவர்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
</p><p>
இதனையடுத்து, அந்த இளைஞருடன் 7 பேர் கொண்ட வாள்வெட்டுக்குழு அன்னதானம் வழங்கியவர்கள்
மீது தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>இச்சம்பவத்தில் பெண்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்த
நிலையில் அவர்கள் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் வாள்வெட்டு தாக்குதலை
நடத்தியவர்களை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிபிடிக்க முயன்றபோது ஒருவர் மாத்திரம் சிக்கியுள்ளார்.&nbsp;</p><p>அதனை தொடர்ந்து மடக்கி பிடிக்கப்பட்ட சந்தேகநபர் பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T23:24:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு நாளைக்கு இத்தனை மாம்பழங்கள்தான் சாப்பிட வேண்டும்.. ஏன் தெரியுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/how-many-mangoes-can-you-eat-daily-1785367277"></link>
            <id>https://jvpnews.com/article/how-many-mangoes-can-you-eat-daily-1785367277</id>
            <summary type="text">மாம்பழ சீசன் தொடங்கி விட்டதால் பலரும் விதவிதமான மாம்பழங்களை ருசிக்க ஆர்வம் காட்டி வருகின்ற நிலையில் , மாம்பழங்களை அளவோடு உண்பதே உடலாரோக்கியத்திற்கு நல...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மாம்பழ சீசன் தொடங்கி விட்டதால் பலரும் விதவிதமான மாம்பழங்களை ருசிக்க ஆர்வம் காட்டி வருகின்ற நிலையில் , மாம்பழங்களை அளவோடு உண்பதே உடலாரோக்கியத்திற்கு நல்லது.
</p><p style="text-align: justify; ">


தினமும் 1 அல்லது 2 நடுத்தர அளவிலான மாம்பழங்களை (சுமார் 2 கப் அல்லது 330 கிராம் நறுக்கிய பழங்கள்) மட்டுமே சாப்பிடுவது பாதுகாப்பானது.



இந்த அளவு கலோரி மற்றும் இயற்கையான சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b536dd2-8ece-41fd-931b-10f8d13d9bf9/26-6a6a8b3e0d291.webp' /></p><p style="text-align: justify; ">
</p><h2 style="text-align: justify; ">


 இதை எவ்வாறு சாப்பிடலாம்</h2><p style="text-align: justify; ">மாம்பழங்களை ஜூஸாகவோ அல்லது மில்க்‌ஷேக் போன்ற வடிவிலோ குடிப்பதை விட, அப்படியே பழமாகச் சாப்பிடுவது சிறந்தது.
</p><p style="text-align: justify; ">


பழமாகச் சாப்பிடும்போது அதில் உள்ள நார்ச்சத்து, இரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சப்படும் வேகத்தைக் குறைக்க உதவுகின்றது.
</p><p style="text-align: justify; ">


இரத்தச் சர்க்கரை திடீரென உயர்வதைத் தவிர்க்கவும், வயிறு நிறைந்த உணர்வைப் பெறவும் மாம்பழத்துடன் தயிர் அல்லது பாதாம் போன்றவற்றைச் சேர்த்துச் சாப்பிடலாம்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


அத்துடன் மாம்பழத்துடன் சர்க்கரை, ஐஸ்கிரீம் அல்லது பால் ஆகியவற்றைச் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்; ஏனெனில் இவை கலோரிகளை பெருமளவில் கூட்டி விடும்.

தினமும் 2 மாம்பழங்களுக்கு மேல் சாப்பிட்டால் அதிக சர்க்கரை மற்றும் கலோரிகள் காரணமாக இரத்த சர்க்கரை அளவு திடீரென உயரக்கூடும்.</p><p style="text-align: justify; ">மேலும் தேவையற்ற உடல் எடை அதிகரிப்பதோடு 

வயிறு உப்புசம், வயிற்று வலி அல்லது வயிற்றுப்போக்கு போன்ற செரிமானப் பிரச்சினைகள் உருவாகலாம்.
</p><p style="text-align: justify; ">


குறிப்பாக, நீரிழிவு நோய் அல்லது இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்கள் அதிகமாகச் சாப்பிடும்போது கடுமையான பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-29T23:22:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இதற்காக விவாகரத்தா? லிப்ஸ்டிக்கால் வந்த பிரச்சினை ; நள்ளிரவில் மனைவி செய்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lipstick-sparks-divorce-shocking-dispute-1785349068"></link>
            <id>https://jvpnews.com/article/lipstick-sparks-divorce-shocking-dispute-1785349068</id>
            <summary type="text">இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின்போது, கணவர் முன்வைத்த காரணம் தொடர்பாக ஜா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின்போது, கணவர் முன்வைத்த காரணம் தொடர்பாக ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் முக்கியக் கருத்தை வெளியிட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">வழக்கில், தனது மனைவி மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர் எனக் கூறி கணவர் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/633cea64-409e-4a44-b0d1-4fa48083a679/26-6a6a43ce844b1.webp' /></p><h2 style="text-align: justify; ">மனநலக் குறைபாடு</h2><p style="text-align: justify; ">

அதற்கான காரணமாக, தனது மனைவி நள்ளிரவு 2 மணியளவில் காஜல் மற்றும் உதட்டுச்சாயம் (லிப்ஸ்டிக்) பயன்படுத்துவதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">
எனினும், நள்ளிரவில் காஜல் மற்றும் லிப்ஸ்டிக் பயன்படுத்துவது மட்டுமே ஒருவரை மனநலப் பிரச்சினை கொண்டவர் எனக் கருதுவதற்கு போதுமான ஆதாரமாக அமையாது என்று ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
மேலும், மனநலக் குறைபாடு தொடர்பான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு உரிய மருத்துவ ஆதாரங்களும் சட்டரீதியான சான்றுகளும் அவசியம் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-29T23:11:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய்யின் ஜனநாயகன் படத்தின் Deleted Scenes எப்போது வரும்... இயக்குனர் பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/h-vinoth-about-jananayagan-deleted-scenes-1785343451"></link>
            <id>https://cineulagam.com/article/h-vinoth-about-jananayagan-deleted-scenes-1785343451</id>
            <summary type="text">ஜனநாயகன்இந்த வருடத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்த ஒரு திரைப்படம் விஜய்யின் ஜனநாயகன். இத்தனை மாதம் காத்திருத்த ரசிகர்களுக்கு கொண்டா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜனநாயகன்</h2><p>இந்த வருடத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்த ஒரு திரைப்படம் விஜய்யின் ஜனநாயகன். </p><p>இத்தனை மாதம் காத்திருத்த ரசிகர்களுக்கு கொண்டாட்டம் கொடுக்கும் வகையில் விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் கடந்த ஜுலை 23ம் தேதி வெளியாகி இருந்தது.
</p><p>படம் ரிலீஸ் ஆக லேட் ஆனது, தணிக்கை பிரச்சனை, மொத்த படமும் சமூக வலைதளங்களில் லீக் என இந்தப் படம் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்தது, ஆனாலும் ரசிகர்கள் எப்போதும் போல விஜய்யின் படத்தை பெரிய அளவில் கொண்டாடினார்கள்.
</p><p>நாளுக்கு நாள் ஜனநாயகன் படமும் வசூல் வேட்டையில் கலக்கி வருகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c12f132-e4d9-4791-8c6f-2ff9520fb18f/26-6a6a32556f228.webp' /></p><h2>
நீக்கப்பட்ட காட்சி
</h2><p>ஜனநாயகன் படம் 3 மணிநேரம் 3 நிமிடம் ரன்னிங் டைம் உடன் வெளியாகி இருந்தது, இதில் சில காட்சிகள் வேறு நீக்கப்பட்டிருந்தது. Deleted செய்யப்பட்ட காட்சிகள் குறித்து ஏற்கெனவே இயக்குனர் எச்.வினோத் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். </p><p>அதில் அவர் இரண்டு நகைச்சுவைக் காட்சிகள், இரண்டு சண்டைக் காட்சிகள் மற்றும் இரண்டு எமோஷனல் காட்சிகள் எடிட்டிங்கில் தூக்கிவிட்டோம் என்று தெரிவித்திருந்தார்.</p><p> இந்த காட்சிகளை வெளியிடுவது குறித்து தயாரிப்பு நிறுவனத்திடம் ஆலோசித்து வருவதாக கூறியிருந்தார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T22:50:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[20 வருடமாக அடிப்படை வசதி இல்லாத கடற்றொழில் எழுச்சி கிராம மக்கள்.. ஜனாதிபதிக்கு அவசர கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fishermen-batticaloa-20-years-village-issue-1785362718"></link>
            <id>https://tamilwin.com/article/fishermen-batticaloa-20-years-village-issue-1785362718</id>
            <summary type="text">மட்டக்களப்பு - பாலமீன்மடு கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல்
கடந்த 20 வருடமாக வாழ்ந்து வரும் மக்களின் அவலங்களை போக்குமாறு ஜனாதிபதி
மற்றும் மாவட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - பாலமீன்மடு கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல்
கடந்த 20 வருடமாக வாழ்ந்து வரும் மக்களின் அவலங்களை போக்குமாறு ஜனாதிபதி
மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருக்கு அவசரமாக கடிதம் ஒன்றை
அனுப்பியுள்ளதாக ஈ.பி.டி.பி கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில்
ராஜ்குமார் தெரிவித்தார்.</p><p>பாலைமீன் மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் நேற்று (29) இடம்பெற்ற வாராந்த ஊடக மாநாட்டில் கட்சியின் மாவட்ட இணைப்பாளர்
சிவானந்தராஜா, மற்றும் ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் கலந்து கொண்ட
போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
</p><p>அவர் மேலும், "மட்டக்களப்பு கடற்றொழில் எழுச்சி கிராமம் 50 வீட்டுத்திட்டம் கடந்த 2000ஆம் ஆண்டு
உருவாக்கி குடியேற்றப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.</p><p></p><h2>&nbsp;தனிநபருக்கு குத்தகை</h2><p> </p><p>இந்த நிலையில் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தினால் இந்த வீட்டுத்திட்டம்
பாதிக்கப்;பட்டதையடுத்து ஒரு சிலருக்கு மாற்று காணிகள் வழங்கப்பட்டு சுவிஸ்
கிராமத்தில் குடியேற்றப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/930e05b1-0dc7-4b86-ae45-f438f2b30f0b/26-6a6a7c7cc961e.webp' /></p><p>

அதன் பின்னர் 2006ம் ஆண்டு பாதிக்கப்பட்ட கடற்றொழில் கிராமத்தில் ஒரு சிலர்
குடியேறி தொடர்ந்து 30 குடும்பங்கள் இன்று வரையும் வாழ்ந்து வருகின்றனர்
இவர்களுக்கான காணி ஆவணங்கள் இதுவரை வழங்கப்படவில்லை.</p><p>

இந்த கடற்றொழில் எழுச்சி கிராமாக அமைக்கப்பட்ட அந்த காணியில் உல்லாச விடுதி ஒன்று
நிர்மாணிப்பதற்காக 2014ஆம் ஆண்டு அப்போது இருந்த பிரதேச செயலாளர் ஒரு
தனிநபருக்கு குத்தகைக்கு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான அனுமதி
வழங்கப்பட்டு இருந்தது.
</p><p>
இதன்போது பாலைமீன் மடுவில் உள்ள பொது நல அமைப்புகள் ஆலய நிர்வாகம் அதற்கு
எதிர்த்து அதனை தடை செய்ய வேண்டும் என அப்போது இருந்த ஜனாதிபதியின்
கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து 2015ஆம் ஆண்டு அனுமதி வழங்கிய பிரதேச
செயலாளரால் அது இரத்து செய்யப்பட்டது.
</p><p>
இன்று அந்த மக்களுக்கு காணி ஆவணங்கள் வழங்காமல் இது அனர்த்த வலயமாக அதிகாரிகள்
சுட்டிக்காட்டுகின்றனர். எனவே அந்த இடம் ஹோட்டல் கட்ட அப்போது அனர்த்த வலயம்
இல்லை அனுமதி வழங்குகிறார்கள் அந்த ஊரிலே பிறந்த காணி இல்லாத மக்கள்
குடியிருப்பது அனர்த்த வலயமா?” என கேள்வி எழுப்பினார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T22:48:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ஜென்டினா அணி வீரர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை: ஃபிபா அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/fifa-take-action-against-argentina-team-1785362697"></link>
            <id>https://news.lankasri.com/article/fifa-take-action-against-argentina-team-1785362697</id>
            <summary type="text">2026ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில் அர்ஜென்டினா அணி மற்றும் வீரர்கள் மீது பிபா ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில் அர்ஜென்டினா அணி மற்றும் வீரர்கள் மீது பிபா ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.</p><h2> அர்ஜென்டினாவிற்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை</h2><p>நடந்து முடிந்த 2026 ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பல்வேறு விதிமீறல் நடந்து இருப்பதாக அர்ஜென்டினா&nbsp; அணி நிர்வாகம் மீது ஃபிபா ஒழுங்கு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.</p><p> அர்ஜென்டினா அணி கலந்து கொண்ட பல்வேறு போட்டிகளில் இத்தகைய விதிமீறல்கள் நடைபெற்று இருப்பதாக கூறி ஃபிபா இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.</p><p></p><p> அதில், பாரபட்சமான கோஷங்கள் மற்றும் சைகைகள், போட்டியை தாமதமாக தொடங்குதல், போட்டி மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற தவறுதல், பார்வையாளர்கள் மைதானத்தில் பொருட்களால் வீசுதல் ஆகியவை குற்றச்சாட்டுகளாக முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a4fa401-add9-4e04-bf3f-306248255f7e/26-6a6a790b4526d.webp' /></p><h2>தனிப்பட்ட வீரர் மீது நடவடிக்கை</h2><p>உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மிகவும் மோசமாக செயல்பட்ட குறிப்பிட்ட வீரர்கள் மீது தனிப்பட்ட நடவடிக்கைகளை பிபா தொடங்கியுள்ளது.</p><p> அதில் குறிப்பாக, அர்ஜென்டினா அணியின் நாகுவல் மொலினா, லியாண்ட்ரோ பரேடெஸ், தியாகோ அல்மாடா மற்றும் உதவி பயிற்சியாளர் ராபர்டோ அயலா.</p><p> மற்றும் ஸ்பெயின் அணி வீரரான பாப்லோ மார்ட்டின் பாயிஸ் கவிரா ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை குற்றச்சாட்டானது சுமத்தப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T22:05:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[லொட்டரியில் கொட்டிய $803 மில்லியன் அதிர்ஷ்ட மழை: புளோரிடாவை சேர்ந்த நபருக்கு கிடைத்த ஜாக்பாட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/florida-lottery-ticket-claims-803-million-us-dolla-1785351876"></link>
            <id>https://news.lankasri.com/article/florida-lottery-ticket-claims-803-million-us-dolla-1785351876</id>
            <summary type="text">புளோரிடாவை சேர்ந்த லொட்டரி டிக்கெட் ஒன்றுக்கு $803 மில்லியன் டொலர்&amp;nbsp; மெகா ஜாக்பாட் பரிசு விழுந்துள்ளது. புளோரிடாவை சேர்ந்த நபருக்கு அடித்த மெகா ஜா...</summary>
            <content type="html"><![CDATA[<p>புளோரிடாவை சேர்ந்த லொட்டரி டிக்கெட் ஒன்றுக்கு $803 மில்லியன் டொலர்&nbsp; மெகா ஜாக்பாட் பரிசு விழுந்துள்ளது.</p><h2> புளோரிடாவை சேர்ந்த நபருக்கு அடித்த மெகா ஜாக்பாட்</h2><p>அமெரிக்காவின் புளோரிடாவில்&nbsp; வாங்கப்பட்ட லொட்டரி டிக்கெட் ஒன்றுக்கு செவ்வாய்க்கிழமை இரவு நடந்த குலுக்கலில் பிரம்மாண்டமான $803 மில்லியன் டொலர் என்ற மெகா ஜாக்பாட் பரிசாக விழுந்துள்ளது.</p><p>ஜூலை 28ம் திகதி நடந்த இந்த குலுக்கலில் வெள்ளை பந்துகள் 34,48, 49,59, 70 மற்றும் தங்க பந்து 12 என்ற எண்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.</p><p>வெற்றி எண்கள் ஒரு சேர அமைந்த இந்த லொட்டரி டிக்கெட் புளோரிடாவின் பிரேடன்டன் நகரின் ஸ்டேட் ரோடு 70-ல் உள்ள WaWa என்ற கன்வீனியன்ஸ் கடையில் இருந்து விற்பனையாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f59193e-3ea6-4f4c-b426-7dee7b6451f7/26-6a6a4ec584433.webp' /></p><p></p><p> இந்த வரலாற்று வெற்றியை அடைந்த நபருக்கு புளோரிடாவின் லொட்டரி செயலாளர் ரெஜினால்டு டிக்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><h2> பரிசு தொகையை பெறும் முறைகள்</h2><p>இந்த பிரம்மாண்ட லொட்டரி வெற்றியை பெற்ற நபர் இரண்டு முறைகளில் தன்னுடைய பரிசை பெற்றுக் கொள்ளலாம்.</p><p>முதலாவது முறை, ஒரே தவணையாக வரிக்கு முந்தைய மதிப்பின் படி மொத்தமாக $345.5 மில்லியன் ரொக்க பணத்தை பெற்றுக் கொள்ளுதல்.</p><p>இரண்டாவது முறை, மொத்த பரிசுத் தொகையான $803 மில்லியனை 30 ஆண்டுகளுக்கு ஆண்டு தவணையாக பிரித்து பெற்றுக் கொள்ளுதல்.</p><p>லொட்டரி பரிசுகளுக்கு புளோரிடாவில் மாநில வரி என்பது கிடையாது, நேரடியாக மத்திய வரி மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-29T21:51:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்டைலிஷ் கருப்பு நிற உடையில் நடிகை அமைரா தஸ்தர் வெளியிட்ட போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/amyra-dastur-stylish-black-dress-photoshoot-1785328289"></link>
            <id>https://cineulagam.com/article/amyra-dastur-stylish-black-dress-photoshoot-1785328289</id>
            <summary type="text">அமைரா தஸ்தர்தமிழ் சினிமாவில் தனுஷின் அனேகன் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அமைரா தஸ்தர். முதல் படம் ஹிட் என்றாலும் அதன்பின் அவருக்கு பட வாய...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அமைரா தஸ்தர்</h2><p>தமிழ் சினிமாவில் தனுஷின் அனேகன் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அமைரா தஸ்தர். </p><p>முதல் படம் ஹிட் என்றாலும் அதன்பின் அவருக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. எனவே தமிழை விடுத்து ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்தார். </p><p>எல்லா நடிகைகளை போல படங்கள் அதிகம் நடிக்கிறாரோ இல்லையோ போட்டோ ஷுட்களை மட்டும் மிஸ் செய்வதே இல்லை.</p><p>நாள் ஒன்றிற்கு விதவிதமான உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்திவிடுகிறார். அப்படி அண்மையில் அவர் கருப்பு நிற உடையில் வெளியிட்ட போட்டோஸ்,</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T21:50:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[காத்தான்குடி பகுதியில் 28 வயதுடைய இளைஞனுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-28-year-old-youth-in-the-kattankudy-area-1785358859"></link>
            <id>https://tamilwin.com/article/death-28-year-old-youth-in-the-kattankudy-area-1785358859</id>
            <summary type="text">காத்தான்குடி - நூராணிய்யா மையவாடி
முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் தூண் இடிந்து விழுந்ததில் இளைஞர்
ஒருவர் சம்பவ இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காத்தான்குடி - நூராணிய்யா மையவாடி
முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் தூண் இடிந்து விழுந்ததில் இளைஞர்
ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் நேற்று(29.07.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>உயிரிழந்த&nbsp;இளைஞர் </h2><p>
</p><p>
உயிரிழந்தவர் மட்டக்களப்பு - ஜெயந்திபுரம், யாட் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய
இளைஞர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe09e46b-3e02-4f40-a5d4-ab7c15921d40/26-6a6a6b6649ad0.webp' /></p><p>

உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார்
முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T21:44:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கறுப்பு ஜூலையை நினைவு கூரும் முகமாக ஹட்டனில் நடைப்பெற்ற விசேட நிகழ்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hatton-event-promotes-black-july-reconciliation-1785357944"></link>
            <id>https://tamilwin.com/article/hatton-event-promotes-black-july-reconciliation-1785357944</id>
            <summary type="text">கறுப்பு ஜூலையின் போது நாட்டில் ஏற்பட்ட இன வன்முறைகளால் ஏற்பட்ட வரலாற்றுக்
காயங்களை ஆற்றுவதுடன், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கறுப்பு ஜூலையின் போது நாட்டில் ஏற்பட்ட இன வன்முறைகளால் ஏற்பட்ட வரலாற்றுக்
காயங்களை ஆற்றுவதுடன், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், ஹட்டனில் கையெழுத்துப் பெறும் நடவடிக்கை
ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>இந்த நிகழ்வு, 'இனவாதம் வேண்டாம் – இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றுபடுவோம்' என்ற தொனிப்பொருளில் நேற்று(29.07.2026) ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகிலுள்ள புத்தர் சிலை அமைந்துள்ள பகுதியில் நடைபெற்றுள்ளது.</p><p></p><h2>கையெழுத்துப் பெறும் நடவடிக்கை&nbsp;</h2><p>

நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கம், சகவாழ்வு மற்றும் சமாதானத்தை
ஏற்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த கையெழுத்துப் பெறும்
நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
நிகழ்வின் ஆரம்பத்தில் சர்வமதத் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கிட்ணன் கலைச்செல்வி மற்றும்
மஞ்சுல சுரவீர ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75ccf5d9-a7a0-427b-8a3a-d6a8a41083a2/26-6a6a67a701bc4.webp' /></p><p>பின்னர், பிரதேச மக்கள் மற்றும்
இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து
கையெழுத்திட்டுள்ளனர்.
இதனுடன், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும்
துண்டுப் பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
</p><p>
இதன்போது கருத்து தெரிவித்த நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்
அபிவிருத்திக் குழுத் தலைவருமான மஞ்சுல சுரவீர, ”கறுப்பு ஜூலையினால் நாட்டில்
ஏற்பட்ட வடுவை போக்கி, மக்கள் மத்தியில் நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும்
சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகவே இந்த நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அத்துடன், பல தசாப்தங்களுக்கு முன்னர் நாட்டில் இடம்பெற்ற இன வன்முறைகளினால்
அப்பாவி மக்களின் உயிர்களும் சொத்துக்களும் அழிக்கப்பட்டதாகவும், அந்தச்
சம்பவங்கள் இலங்கை வரலாற்றில் அழிக்க முடியாத வடுவாக மாறியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T21:44:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிஅபாய மண்டலங்களாக மாறும் நாட்டின் பல பகுதிகள் ; தீவிரமாகும் டெங்கு நோய் பரவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/many-areas-declared-high-risk-zones-1785359915"></link>
            <id>https://jvpnews.com/article/many-areas-declared-high-risk-zones-1785359915</id>
            <summary type="text">நாட்டில் நடப்பு ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு கவலை வெளியிட்டுள்ளது.

அ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டில் நடப்பு ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு கவலை வெளியிட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
அந்த அமைப்பின் புதிய தரவுகளின்படி, நாடு முழுவதிலும் இருந்து இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், டெங்கு காய்ச்சலின் தீவிர தாக்கத்தினால் 61 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6106ae95-a3d2-4f76-ac71-464a157023da/26-6a6a6e2c92ef7.webp' /></p><h2 style="text-align: justify; ">நோயாளர்கள்&nbsp; எண்ணிக்கை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
மாவட்ட ரீதியில் பார்க்கும்போது கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அங்கு இதுவரை 17,779 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">இதற்கு அடுத்தபடியாகக் கொழும்பு மாவட்டத்தில் 16,665 நோயாளர்கள் கண்டறியப்பட்டு இரண்டாம் இடத்தில் உள்ளது.

மாகாண மட்டத்தில் மேல் மாகாணம் தொடர்ந்து பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றது.</p><p style="text-align: justify; "> மேல் மாகாணத்தில் மட்டும் இதுவரை 44,359 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அதற்கு அடுத்தபடியாகத் தென் மாகாணத்தில் 12,586 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify; ">டெங்கு நோய் வேகமாகப் பரவி வரும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, நாடு முழுவதும் 175 பகுதிகள் 'அதிஅபாய மண்டலங்களாக' சுகாதாரத் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; ">

எனவே பொதுமக்கள் தங்கள் வீடுகளையும் சுற்றாடலையும் சுத்தமாக வைத்திருப்பதுடன், நீர் தேங்கும் இடங்களை அழித்து கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்த விழிப்புடன் செயல்பட வேண்டும் எனச் சுகாதார அதிகாரிகள் தீவிர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-29T21:40:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பௌர்ணமி தின சிறப்பு பூஜை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-pooja-at-neeraviyadi-pillayar-temple-1785356965"></link>
            <id>https://tamilwin.com/article/special-pooja-at-neeraviyadi-pillayar-temple-1785356965</id>
            <summary type="text">முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பௌர்ணமி தினத்தை
முன்னிட்டு&amp;nbsp; (29.07.2026) சிறப்பு பூஜைகள் மற்றும் விசேட வழிபாட்டு
நிகழ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பௌர்ணமி தினத்தை
முன்னிட்டு&nbsp; (29.07.2026) சிறப்பு பூஜைகள் மற்றும் விசேட வழிபாட்டு
நிகழ்வுகள் பக்தர்களின் பங்கேற்புடன் பக்தி பூர்வமாக நடைபெற்றிருந்தது.</p><p>

இதனையடுத்து, எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி நடைபெறவுள்ள
வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு, ஆலய வளாகத்தை சுத்தம் செய்து
ஒழுங்குபடுத்தும் பணிகள் ஆலய நிர்வாகத்தினர், பக்தர்கள் மற்றும் பொதுமக்களின்
பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><h2>ஆலயத்தின் வருடாந்த பெருவிழா</h2><p>

ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவை சிறப்பாக நடத்தும் நோக்கில் வளாகத்
தூய்மைப்படுத்தல், சுற்றுப்புற பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டு
நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.</p><p>

பௌர்ணமி தின சிறப்பு பூஜையின் போது கொக்குளாய் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி
உட்பட பொலிஸார் கலந்து கொண்டிருந்தனர்.</p><p> இதன்போது ஆலய பூசகர் ஆலய வளாகத்தினை
அண்டிய பகுதியில் மீன் ஏற்றும் கூலர்ரக வாகனங்கள் தரித்து நிற்பதனை அகற்றுமாறு
கோரிக்கை விடுத்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc9e1135-ac1b-4e97-b836-0a113351d7b5/26-6a6a631d6e936.webp' /></p><p> அதன்போது ஆலய பொங்கல் நிகழ்வுக்கும், பூஜை
வழிபாடுகளுக்கும் எவ்வித இடையூறும் விளைவிக்காமால் ஆதரவு வழங்குவதாகவும்
பொலிஸார் இதன்போது தெரிவித்திருந்தனர்.
</p><p>
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகம் கடந்த காலங்களில்
அபகரிக்கப்பட்டு, அங்கு சட்டவிரோதமாக பௌத்த விகாரை அமைக்கப்பட்டதாகவும்,
அதனைத் தொடர்ந்து ஆலய வழிபாடுகளுக்கு பல்வேறு தடைகள் மற்றும் நெருக்கடிகள்
ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. </p><p>இருப்பினும், ஆலய நிர்வாகத்தினரின்
வழிநடத்தலிலும் பக்தர்களின் ஒத்துழைப்புடனும் தற்போது ஆலயத்தில் வழமையான
வழிபாடுகளும் சமய நிகழ்வுகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது
குறிப்பிடத்தக்கதாகும்.</p>]]></content>
            <updated>2026-07-29T21:20:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசாங்கத்திற்கு சஜித் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-public-warning-to-anuradhapura-government-1785356352"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-public-warning-to-anuradhapura-government-1785356352</id>
            <summary type="text">&amp;nbsp;நீதிமன்றத்தை நிறைவேற்று அதிகாரத்தின் கைப்பொம்மையாக்கிக் கொள்ளும் நோக்கில்
அரசு கொண்டுவர முற்படும் அரசமைப்புத் திருத்தங்களை வன்மையாகக் கண்டிப்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நீதிமன்றத்தை நிறைவேற்று அதிகாரத்தின் கைப்பொம்மையாக்கிக் கொள்ளும் நோக்கில்
அரசு கொண்டுவர முற்படும் அரசமைப்புத் திருத்தங்களை வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ&nbsp;தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>
ஊடகங்களுக்கு நேற்று(29.07.2026) கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2> நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்களிடமிருந்து அரசுக்கு ஆணை கிடைத்தது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி
முறையை ஒழிப்பதற்காகவே தவிர,&nbsp; நீதிமன்றத்தை நிறைவேற்று அதிகாரத்தின்
கைபொம்மையாக்கிக் கொள்வதற்காக அல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15bb8fca-9520-4a71-be0b-983cce3bf098/26-6a6a61d5b603d.webp' /></p><p>அத்துடன் நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை மாற்றி, நீதிமன்றத்தின் மீது
நிறைவேற்று அதிகாரம் செல்வாக்குச் செலுத்த முற்படுவது வெட்கக்கேடான செயலாகும்.
</p><p>
சட்டம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று தூண்களின் மீதே
ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.&nbsp; அதிகாரப்
பகிர்வு மற்றும் சமன்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதிக்கோ அல்லது நீதி அமைச்சருக்கோ
புரிதல் இல்லாவிட்டால், மொன்டெஸ்கிவின் நூலைப் படித்துப் பாருங்கள்.</p><p></p><h2>சர்வாதிகார செயற்பாடு</h2><p>
</p><p>
அரசின் இந்த ஒருதலைபட்சமான சர்வாதிகாரப் போக்குக்காக நாட்டு மக்கள்
கைகட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள். இந்தியாவில் அண்மையில் வேலையற்ற இளம் சந்ததியினர் அவமதிக்கப்பட்ட
போது, இலட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்து
மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர்.</p><p>

அதேபோன்று, நீதிமன்றத்தின் சுயாதீனத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு
எதிராக இலங்கையின் இளைஞர்களும் சிவில் சமூகமும் ஒன்றுபட்டு மக்கள் பலத்தால்
அதனைத் தோற்கடிப்பார்கள்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67bdfeba-b119-4836-b744-cc021ed52eec/26-6a6a61d66a08d.webp' /></p><p>ஜனநாயகத்தை வலுப்படுத்துகின்றோம் என்ற பெயரில் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை
முடக்கும் சர்வாதிகாரச் செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும்.</p><p>நாட்டின் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்கும், நீதிமன்றத்தைப் பாதுகாப்பதற்கும் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள்
சக்தி எந்தவொரு தியாகத்துக்கும் முகம்கொடுக்கத் தயார்“ என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T21:19:36+00:00</updated>
        </entry>
    </feed>
