<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-06T13:02:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[டில்லியில் 6 மாடி மாணவர் விடுதி இடிந்து விபத்து; தீசிலமாகும் மீட்புப்பணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/six-storey-student-hostel-collapses-in-delhi-1788698628"></link>
            <id>https://jvpnews.com/article/six-storey-student-hostel-collapses-in-delhi-1788698628</id>
            <summary type="text">இந்தியாவின் தென்மேற்கு டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் அமைந்துள்ள 6 மாடிகளைக் கொண்ட மாணவர்கள் தங்கும் விடுதி கட்டிடம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை திடீரென ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் தென்மேற்கு டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் அமைந்துள்ள 6 மாடிகளைக் கொண்ட மாணவர்கள் தங்கும் விடுதி கட்டிடம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><p>

டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள 'ஹோஸ்டல் டேஸ்' என்ற இந்த 75 படுக்கைகள் கொண்ட ஆண்கள் விடுதி இடிந்து விழுந்ததில், அங்கு தங்கியிருந்த பல மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3781f558-7b34-4065-a504-82d66324c1a5/26-6a9d6005dd6c3.webp' /></p><h2>மீட்புப் பணிகள்&nbsp;</h2><p>
</p><p>
இதுவரை 06 பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ள போதிலும், 2 பேர் மீட்கப்பட்டதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p>

இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள சில மாணவர்கள் தங்கள் தொலைபேசிகள் வாயிலாக உள்ளிருந்து உதவி கேட்டு அழைப்பதாக உள்ளூர் பிஜேபி எம்.எல்.ஏ அனில் சர்மா தெரிவித்துள்ளார்.
</p><p>
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சுமார் 50 மாணவர்கள் விடுதிக்குள் இருந்திருக்கலாம் என நேரில் பார்த்தவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>

சம்பவ இடத்திற்கு 12 தீயணைப்பு வாகனங்கள், அகழ்வாராய்ச்சி இயந்திரங்கள் மற்றும் பேரனர்த்த மீட்புப் படைகள் விரைந்து சென்று இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளன.</p><p>

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும், நிலைமை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T13:00:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் உட்பட 12 பேருக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/12-including-famous-tv-host-sentenced-to-death-1788699272"></link>
            <id>https://canadamirror.com/article/12-including-famous-tv-host-sentenced-to-death-1788699272</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத ஆயுதப் பயன்பாடு தொடர்பான வழக்கில், எகிப்தின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் சாரா கலீஃபா (Sarah Khalifa) உட்பட 1...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத ஆயுதப் பயன்பாடு தொடர்பான வழக்கில், எகிப்தின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் சாரா கலீஃபா (Sarah Khalifa) உட்பட 11 பேருக்கு மரணத் தண்டனை விதித்து எகிப்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p>

எகிப்தின் அரச ஊடகமான 'அல்-அஹ்ராம்' தகவலின்படி, போதைப்பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்த குற்றவியல் கும்பலுடன் இணைந்து செயல்பட்டமை மற்றும் சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60ea1570-06ed-4d0d-867a-67ccff812381/26-6a9d628988dd9.webp' /></p><p>

'மிஷன் இம்போசிபிள்' என்ற குற்றவியல் சார்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த 39 வயதான சாரா கலீஃபா, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
</p><p>
இந்த வழக்கில் மேலும் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, 7 பேர் விடுவிக்கப்பட்டும் உள்ளனர்.
</p><p>
முன்னதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட தீர்ப்பு, எகிப்திய சட்டப்படி நாட்டின் தலைமை மதகுருவின் (Grand Mufti) ஆலோசனைப் பெறப்பட்ட பின்னரே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
</p><p>
வழக்கின் விசாரணையின் போது, சந்தேகநபர்களிடமிருந்து 750 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்களும், அவற்றை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
</p><p>
இலத்திரனியல் சான்றுகள் மற்றும் 20 சாட்சியாளர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சாரா கலீஃபாவின் சார்பில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T12:54:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியின் புதிய பாதுகாப்பு கவசத் திட்டம்: வெளிநாட்டு அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-announces-multi-layered-security-shield-1788696446"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-announces-multi-layered-security-shield-1788696446</id>
            <summary type="text">அதிகரித்து வரும் வான்வழி பாதுகாப்பு அச்சுறுத்தல்களை தொடர்ந்து ஜேர்மனி பாதுகாப்பு கவசத்தை உருவாக்க திட்டமிட்டு வருகிறது. ஜேர்மனியின் பாதுகாப்பு கவச திட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிகரித்து வரும் வான்வழி பாதுகாப்பு அச்சுறுத்தல்களை தொடர்ந்து ஜேர்மனி பாதுகாப்பு கவசத்தை உருவாக்க திட்டமிட்டு வருகிறது.</p><h2> ஜேர்மனியின் பாதுகாப்பு கவச திட்டம்</h2><p>நாட்டின் லிப்ஜிக் ஹாலே(Leipzig-Halle Airport) விமான நிலையம் ட்ரோன் தாக்குதலுக்காக குறிவைக்கப்பட்டதை அடுத்து, அதிகரித்து வரும் வான்வழி மற்றும் டிஜிட்டல் தாக்குதலை சமாளிக்க ஜேர்மனி வலுவான பல அடுக்கு பாதுகாப்பு கவசத்தை உருவாக்க திட்டமிட்டு வருகிறது.</p><p> இந்த பல அடுக்கு பாதுகாப்பு கவசமானது நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகள், பெரிய நகரங்கள் மற்றும் போக்குவரத்து மையங்கள் ஆகியவற்றை வெளிநாட்டு அச்சுறுத்தல்கள் மற்றும் உளவு வேலைகளில் இருந்து பாதுகாக்கும் என ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் டொப்ரிண்ட் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74dc3118-b4e1-4635-b2a3-deb9bce73883/26-6a9d577fc250b.webp' /></p><p> இந்த புதிய திட்டத்தின் கீழ் ட்ரோன் தடுப்பு பிரிவுகள் நாட்டின் பல பகுதிகளுக்கு விரிவாக்கப்படுகின்றன.</p><p>வான்வழி அச்சுறுத்தல்களை சமாளிப்பதோடு, டிஜிட்டல் ஹேக்கிங் முயற்சிகளை கட்டுப்படுத்த தேசிய இணைய பாதுகாப்பு கவசம் ஒன்றையும் அறிமுகப்படுத்த ஜேர்மனி திட்டமிட்டுள்ளது.</p><p></p><p>இதில் செயற்கை நுண்ணறிவு(AI), வீடியோ கண்காணிப்பு மற்றும் பயோமெட்ரிக் ஆகிய நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு சந்தேகத்திற்குரிய நபர்களை முன்கூட்டியே அடையாளம் காண அரசு திட்டமிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6657113-d451-4e8f-ad2c-b2883bd38061/26-6a9d5780761a1.webp' /></p><p> இது அரசு துறை மற்றும் முக்கிய நிறுவனங்களை குறிவைத்து நடத்தப்படும் சைபர் தாக்குதல்களை கட்டுப்படுத்த இந்த புதிய முன்னெடுப்பானது எடுக்கப்பட்டுள்ளது.</p><p> ஆகஸ்ட் 4ம் திகதி ஜேர்மனியின் லிப்ஜிக் ஹாலே விமான நிலையத்தின் மீது ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அடுத்தே இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> இந்த சம்பவத்திற்கு ரஷ்யா தான் காரணம் என்று ஜேர்மனியின் உளவுத்துறை குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T12:48:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சோம்பேறிகள், திறமையற்றவங்கன்னு சொல்லட்டுமா? கொந்தளித்து திட்டிய கங்கனா ரானாவத்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/kangana-ranaut-confronts-officials-at-mandi-1788695195"></link>
            <id>https://viduppu.com/article/kangana-ranaut-confronts-officials-at-mandi-1788695195</id>
            <summary type="text">கங்கனா ரானாவத்பாலிவுட் நடிகையாகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் திகழ்ந்து வரும் நடிகை கங்கனா ரனாவத், சமீபகாலமாக சர்ச்சையான கருத்தை கூறி பரபரப்பை ஏற்படு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கங்கனா ரானாவத்</h2><p>பாலிவுட் நடிகையாகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் திகழ்ந்து வரும் நடிகை கங்கனா ரனாவத், சமீபகாலமாக சர்ச்சையான கருத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். சமீபத்தில் மாண்டி மாவட்டத்தில் நடந்த மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தின் போது அவர் நடந்து கொண்டது விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdae4eb6-4236-4dd2-9cb1-66ef27d66a7e/26-6a9d529d1d463.webp' /></p><p>அதில், பொது பணம் தவறானவர்களின் கைகளுக்கு செல்லக்கூடாது, திட்டங்களை செயல்படுத்துவதில் எந்தவொரு அலட்சியமும் காட்டக்கூடாது. பணிகளை செய்யாமல் கிடப்பில் போட்டால் நான் எப்படி ஊடகங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிப்பேன். பிரச்சனையை தீர்க்கும் காலம் சென்றுவிட்டது. இதெல்லாம் ஒரு ஆண்டுகள் பழைய விஷயங்கள். </p><h2>சோம்பேறிகள், திறமையற்றவங்கன்னு</h2><p>தற்போது வேலையை முடித்துவிட்டு வேலை முடித்துவிட்டோம் என்று எனக்கு அறிக்கை அளியுங்கள். 11 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளோம், ஆனால் ஒரு சிறு வேலைக்கூட நடக்கவில்லை. இது திறமையற்றது, கேவலமானது. ஊடகங்களிடம் நான் போய் என்ன சொல்வது, அவர்கள் சம்பளம் வாங்க மட்டுமே வருகிறார்கள் என்று சொல்ல முடியுமா?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2e161a9-10fd-469c-a7c5-42c4c871fa46/26-6a9d529dc8d1e.webp' /></p><p> நம் மாநில மக்கள் பற்றி நான் என்ன சொல்வது? அவர்களின் பணித்திறன் பற்றி என்ன சொல்வது, அவர்கள் எல்லாம் முழு சோம்பேறிகள், தகுதியற்றவர்கள், இப்படி நான் தேசிய ஊடகங்களிடம் சொல்ல முடியும்? மத்திய அரசின் திட்டங்கள் பேப்பர்களில் முடங்கிவிடக்கூடாது. </p><p>திட்டங்களின் பலன் கண்டிப்பாக கிராமங்களையும் உண்மையான பயனாளிகளையும் செல்ல வேண்டும். வளர்ச்சி திட்டங்களின் தரம், நிதி பயன்பாடு குறித்தும் அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திட்டம் முடிவடைவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.</p>]]></content>
            <updated>2026-09-06T12:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு மீண்டும் ரஷ்ய - பிரிட்டிஷ் நேரடி விமான சேவைகள் ஆரம்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/azur-air-resumes-flights-to-sri-lanka-in-nov-1788694794"></link>
            <id>https://ibctamil.com/article/azur-air-resumes-flights-to-sri-lanka-in-nov-1788694794</id>
            <summary type="text">ரஷ்யாவின் அசூர் எயர் (Azur Air) விமான நிறுவனம் ரஷ்யாவிற்கும் இலங்கைகக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.
இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவின் அசூர் எயர் (Azur Air) விமான நிறுவனம் ரஷ்யாவிற்கும் இலங்கைகக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.
</p><p>இதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் இந்தச் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்த விமான நிறுவனம் அறிவித்துள்ளது.</p><p>ரஷ்யாவிலுள்ள 5 சர்வதேச விமான நிலையங்களில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவைகளை இயக்‌க அசூர் எயர் நிறுவனம் எதிர்பார்க்கிறது.</p><p>
</p><p></p><h2>நேரடி விமான சேவை</h2><p>அசூர் எயர் தவிர, ரஷ்யாவின் பிரபல ஏரோஃப்ளோட்&nbsp; (Aeroflot) மற்றும் எஸ்7 எயர்லைன்ஸ் (S7 Airlines) ஆகிய நிறுவனங்களும் ரஷ்யா - இலங்கை இடையே நேரடி விமான சேவைகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ff2ea13-746e-47f0-b5ad-c8fb6db513e2/26-6a9d550e58ca7.webp' /></p><p>இதனிடையே, பிரித்தானியாவின் பிரிட்டிஷ் எயர்வேஸ் (British Airways) நிறுவனம் 11 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு பிரிட்டனுக்கும் இலங்கைகக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை அடுத்த மாதம் (அக்டோபர்) முதல் மீண்டும் தொடங்கவுள்ளது.
</p><p>பிரித்தானியாவின் லண்டன் கெட்விக் (London Gatwick) விமான நிலையத்திற்கும் கொழும்பிற்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் அக்டோபர் 23 ஆம் திகதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-06T12:44:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் திரைமறைவில் களமிறங்கும் மகிந்த! தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள புதிய திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-takes-to-the-stage-in-anuradhapura-1788677676"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-takes-to-the-stage-in-anuradhapura-1788677676</id>
            <summary type="text">&amp;nbsp;அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள பொதுஜன பெரமுனவின் பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துகொள்ள உள்ளார் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள பொதுஜன பெரமுனவின் பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துகொள்ள உள்ளார் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
</p><p>
சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய&nbsp; இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்ச&nbsp; (04) திகதி கைது செய்யப்பட்டார்.
</p><h2>12 ஆம் திகதி பேரணி நிச்சயமாக நடைபெறும்&nbsp;</h2><p>
இதனையடுத்து எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc229498-1916-4a01-ba11-2a8a88d7e348/26-6a9d3b149f880.webp' /></p><p>
</p><p>
இந்த பின்னணியில் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள பொதுஜன பெரமுனவின் மாபெரும் பேரணியில் நாமல் ராஜபக்சவின் வெற்றிடத்தை ஈடுசெய்ய மகிந்த ராஜபக்ச அநுராதபுரத்திற்கு வருகை தருவார் என்று ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
</p><p>
இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி 12 ஆம் திகதி நிச்சயமாக நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p>

பிரதான மேடைக்கு சென்று மக்களிடையே உரையாற்றுவதற்கு பதிலாக, மேடைக்கு முன்பாகவோ அல்லது மற்றொரு தளத்திலோ இருந்து பேரணியில் கலந்துகொள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறியுள்ளார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T12:40:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கறுப்பு பணம் குறித்து சிஐடியின் அதிரடி நடவடிக்கை.. ஜனாதிபதி இன்று வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-stopped-dollars-flowing-black-economy-anura-1788697354"></link>
            <id>https://tamilwin.com/article/govt-stopped-dollars-flowing-black-economy-anura-1788697354</id>
            <summary type="text">கறுப்பு பொருளாதாரம் மூலம் சட்டவிரோதமாக டொலர்கள் வெளியேறுவதைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் சுங்கத்திணைக்களத்தின் நடவடிக்கைகள் மூலம் அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கறுப்பு பொருளாதாரம் மூலம் சட்டவிரோதமாக டொலர்கள் வெளியேறுவதைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் சுங்கத்திணைக்களத்தின் நடவடிக்கைகள் மூலம் அரசாங்கம் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
</p><p>மேலும், நாட்டின் வருடாந்த தேயிலை ஏற்றுமதி வருவாய்க்கு சமமான சுமார் 1 பில்லியன் டொலர் தொகையானது சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டிருந்ததாகக் கூறினார். </p><p>சட்டவிரோத வழிகள் மூலம் டொலர்கள் வெளியேறுவதைத் தடுக்க CID மற்றும் சுங்கத் துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், திறைசேரிக்கு வர வேண்டிய ஒவ்வொரு சதமும் முறையாக வந்து சேர்வதை அரசாங்கம் உறுதி செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.</p><h2>நிதி ஒதுக்கீடு&nbsp;</h2><p>
</p><p>
முறைகேடான பொருளாதாரத்தை முடக்கியதன் மூலம், 2025 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருவாய் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 16.7 வீதமாக உயர்ந்துள்ளதாகவும், இது கடந்த மூன்று தசாப்தங்களில் இல்லாத சாதனையாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.[<iframe frameborder="0" src="//www.youtube.com/embed/A6qZIoUMNZw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p> </p><p>மேலும், செலவினங்களைக் கட்டுப்படுத்தி வருவாயை அதிகரித்ததன் மூலம் 1957 ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகக் குறைந்த வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.
</p><p>
அடுத்த ஆண்டு மூலதனச் செலவினங்களுக்காக வரலாற்றுச் சாதனையாக 2 டிரில்லியன் ரூபாயை ஒதுக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், மாவட்ட அளவிலான அபிவிருத்திப் பணிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 2 பில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்யவுள்ளதாகவும் ஜனாதிபதி அறிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T12:39:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தலில் மீண்டும் போட்டியிடும் ஜியானி இன்ஃபான்டினோ: அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்திய FIFA]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/fifa-gianni-infantino-will-run-for-re-election-1788697863"></link>
            <id>https://news.lankasri.com/article/fifa-gianni-infantino-will-run-for-re-election-1788697863</id>
            <summary type="text">Gianni Infantino will run for re-election FIFA Confirms: அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் ஜியானி இன்ஃபான்டினோ போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>Gianni Infantino will run for re-election FIFA Confirms: அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் ஜியானி இன்ஃபான்டினோ போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.</p><h2> சர்ச்சையில் சிக்கிய பிஃபா தலைவர்</h2><p>கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரின் டிக்கெட் விற்பனை தொடர்பில் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டது.</p><p>இந்த சர்ச்சையை தொடர்ந்து பிஃபா தலைவர் நேரடியாக எந்தவொரு ஊடகங்களையும் சந்திக்காமல் இருந்து வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b82a8841-c504-42ab-b890-d69d67afe900/26-6a9d5d095b045.webp' /></p><p>இந்நிலையில் சனிக்கிழமை போலந்து நாட்டின் கட்டோவிஸ்(Katowice) நகரில் நடைபெறும் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை போட்டியின் தொடக்க விழாவிற்கு வருகை தந்த பிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ (Gianni Infantino) வெளிநாட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.</p><p>அப்போது பிஃபாவில் அவரது எதிர்காலம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, கால்பந்து விளையாட்டை வளர்ப்பதும், உலகளவிலான கால்பந்து தொடர்களை மேம்படுத்துவது தான் தன்னுடைய எதிர்காலம் என்று பதிலளித்தார்.</p><p> மேலும் டிக்கெட் விற்பனை சர்ச்சை தொடர்பாக நேரடியாக பதிலளிக்க தவிர்த்த இன்ஃபான்டினோ, “ இன்று இதற்கான நேரம் அல்ல” என்றும் “உரிய நேரத்தில் பல விஷயங்களை சொல்வதற்கு இருக்கும் என்று தெரிவித்தார்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80e8271b-c28a-4af4-8365-b04995e4429a/26-6a9d5d0a13641.webp' /></p><h2> பிஃபா வெளியிட்ட அறிவிப்பு</h2><p>இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் பிஃபா தேர்தலில் ஜியானி இன்ஃபான்டினோ மீண்டும் போட்டியிடுவார் என்பதை பிஃபா(FIFA) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>அவரது நீண்ட பதவி காலம் குறித்து பல கேள்விகள் எழுந்து வந்த நிலையில் இந்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T12:31:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் நாளாந்த மின்சார தேவை வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/daily-electricity-demand-in-the-country-declines-1788697553"></link>
            <id>https://jvpnews.com/article/daily-electricity-demand-in-the-country-declines-1788697553</id>
            <summary type="text">கடந்த ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 03ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் தினசரி மின்சாரத் தேவை குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கடந்த ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 03ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் தினசரி மின்சாரத் தேவை குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. </p><p style="text-align: justify;">

புதிய அறிக்கையொன்றை வெளியிட்டு இலங்கை மத்திய வங்கி இதனைப் குறிப்பிட்டுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb7d50ea-9445-44d4-8e54-40c7052b5c70/26-6a9d5bd302bf5.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;மின்சாரத் தேவை</h2><p> </p><p style="text-align: justify;">

இதற்கமைய, ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி மின்சாரத் தேவை 2,947 மெகாவோட்டாகக் காணப்பட்டதுடன், அது செப்டம்பர் மாதம் முதலாம் திகதி 2,936 மெகாவோட்டாகப் பதிவாகியுள்ளது. </p><p style="text-align: justify;">

அத​ேமாதம் இரண்டாம் திகதி அந்தப் பெறுமதி 2,934 மெகாவோட்டாகப் பதிவாகியிருந்தது. </p><p style="text-align: justify;">

செப்டம்பர் மாதம் 03ஆம் திகதி தினசரி மின்சாரத் தேவை 2,920 மெகாவோட்டாகப் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> 

அத்துடன், தினசரி மின் உற்பத்தி படிப்படியாக அதிகரித்துள்ளதுடன், ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி 57.24 கிகாவாட் மணிநேரம் (GWh) மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

அது செப்டம்பர் மாதம் முதலாம் திகதி 58.37 கிகாவாட் மணிநேரம் வரை உயர்வடைந்துள்ளது.</p><p style="text-align: justify;">

எனினும், செப்டம்பர் மாதம் 2 மற்றும் 3ஆகிய திகதிகளில் முறையே 58.34 மற்றும் 58.08 கிகாவாட் மணிநேரம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-06T12:30:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தினசரி மின்சாரத் தேவையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/daily-electricity-demand-drops-1788695121"></link>
            <id>https://tamilwin.com/article/daily-electricity-demand-drops-1788695121</id>
            <summary type="text">தினசரி மின்சாரத் தேவை குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 03ஆம் திகதி வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தினசரி மின்சாரத் தேவை குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. </p><p>

கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 03ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இந்த நிலைமை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
புதிய அறிக்கையொன்றின் மூலம் இலங்கை மத்திய வங்கி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.</p><h2>மின்சாரத் தேவை</h2><p>

இதற்கமைய, ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி மின்சாரத் தேவை 2947 மெகாவோட்டாகக் காணப்பட்டதுடன், அது செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி 2936 மெகாவோட்டாகப் பதிவாகியுள்ளது. </p><p>

அதேமாதம் இரண்டாம் திகதி அந்த பெறுமதி 2934 மெகாவோட்டாக பதிவாகியிருந்தது. செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி தினசரி மின்சாரத் தேவை 2920 மெகாவோட்டாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08c2e722-abab-476a-9ef8-0aaa8a76bca4/26-6a9d5b3a7edc0.webp' /></p><h2>மின்சார உற்பத்தி</h2><p> </p><p>

அத்துடன், தினசரி மின் உற்பத்தி படிப்படியாக அதிகரித்துள்ளதுடன், ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி 57.24 கிகாவாட் மணிநேரம் (GWh) மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. </p><p>

அது செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி 58.37 கிகாவாட் மணிநேரம் வரை உயர்வடைந்துள்ளது. </p><p>

எனினும், செப்டெம்பர் மாதம் 2 மற்றும் 3ஆகிய திகதிகளில் முறையே 58.34 மற்றும் 58.08 கிகாவாட் மணிநேரம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T12:24:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம் ; வெளியான முக்கிய அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/school-educational-activities-to-resume-tomorrow-1788696804"></link>
            <id>https://jvpnews.com/article/school-educational-activities-to-resume-tomorrow-1788696804</id>
            <summary type="text">அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை (07) ஆரம்பமாகவுள்ளது.

இதனையொட்டி, அனைத்துப் பாடசாலை...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை (07) ஆரம்பமாகவுள்ளது.</p><p style="text-align: justify; ">

இதனையொட்டி, அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் (06) நாளையும் (07) டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2f10c23-2732-4bb6-9548-385fe490641c/26-6a9d58e617cd1.webp' /></p><p style="text-align: justify; ">

நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கண்காணிக்கும் சோதனைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உப தலைவர் பிரதீப் பொரலெஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

அதேவேளை, மாணவர்களின் நலன் கருதி தேவைக்கேற்ப 'சிசு செரிய' உட்பட மேலதிக பேருந்துகள் நாளை(7) முதல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-06T12:13:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒருவர் கூட விடுபடமாட்டார்! ஜனாதிபதி விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-government-2nd-year-anniversary-anura-speech-1788691268"></link>
            <id>https://tamilwin.com/article/npp-government-2nd-year-anniversary-anura-speech-1788691268</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;அரசாங்கத்தால் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்ட ஊழல்கள் மற்றும் தவறுகள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட்டால், அதற்குப் பொறு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>அரசாங்கத்தால் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்ட ஊழல்கள் மற்றும் தவறுகள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட்டால், அதற்குப் பொறுப்பானவர்களில் ஒருவர் கூட விடுபடமாட்டார் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.&nbsp;</p><p>
புளத்சிங்களவில் நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி, ஆட்சிக்கு வந்து அரசாங்கத்தின் உள்விவகாரங்களை ஆராய்ந்த பின்னரே, இடம்பெற்றுள்ள தவறுகளின் அளவை அரசாங்கம் கண்டறிந்ததாகக் கூறினார்.</p><p>"நாங்கள் வெளியே இருந்தபோது ஊழல்களைப் பற்றிப் பேசினோம். ஆனால் உள்ளே வந்து நமது நாட்டிற்கு என்ன செய்யப்பட்டுள்ளது என்று ஒவ்வொன்றாக ஆராயும்போது, நமது நாடு எவ்வளவு பெரிய தவறுகளை எதிர்கொண்டுள்ளது என்பதைப் பார்க்க முடிகிறது" என்று திசாநாயக்க தெரிவித்தார்.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவு பெற்றுள்ளன.</p><p>இந்நிலையில், "எங்கள் அரசாங்கம் - இரண்டு ஆண்டுகள், நாட்டிற்கு நன்மை” என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் ஆரம்ப நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் இன்று (06) புலத்சிங்களவில் ஆரம்பமாகியுள்ளது.
</p><p>
இந்நிகழ்வில் பெருமளவிலான அமைச்சர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளனர். </p><p>இதேபோல், எதிர்காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல நிகழ்ச்சிகளைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/A6qZIoUMNZw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T12:12:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பெண் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற விசித்திர விருந்தினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/calgary-homeowner-gets-surprise-visit-1788689808"></link>
            <id>https://canadamirror.com/article/calgary-homeowner-gets-surprise-visit-1788689808</id>
            <summary type="text">கனடாவின் கல்காரி நகரைச் சேர்ந்த ஜானிஸ் ஆண்டர்சன் என்பவரது வீட்டின் தோட்டத்தில், ஆகஸ்ட் 27 அன்று தாய் காட்டுப்பூனை ஒன்று தனது ஐந்து குட்டிகளுடன் நுழைந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் கல்காரி நகரைச் சேர்ந்த ஜானிஸ் ஆண்டர்சன் என்பவரது வீட்டின் தோட்டத்தில், ஆகஸ்ட் 27 அன்று தாய் காட்டுப்பூனை ஒன்று தனது ஐந்து குட்டிகளுடன் நுழைந்தது.
</p><p>அண்டை வீட்டார் கொடுத்த தகவலையடுத்து, தனது வளர்ப்பு நாயை வீட்டிற்குள் பூட்டிவிட்டு ஆண்டர்சன் உடனடியாகத் தனது கேமரா மற்றும் கைப்பேசியுடன் தோட்டத்திற்கு விரைந்தார்.</p><p>
அங்கு காட்டுப்பூனைகள் மிகவும் அமைதியாகத் தோட்டத்திலும், வீட்டின் முன்பக்கப் புல்வெளியிலும் அமர்ந்து ஓய்வெடுத்தன. தாய் காட்டுப்பூனை புல்வெளியில் சாவகாசமாகப் படுத்துக் கொண்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9925d006-fa51-490c-ad56-bcd6bfbb5989/26-6a9d3d91ec311.webp' /></p><p> </p><p>சில நிமிடங்களிலேயே அவை அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாலும், ஆண்டர்சன் அவற்றின் அழகிய தருணங்களைத் தனது கேமராவில் துல்லியமாகப் படம்பிடித்தார்.
</p><p>சில ஆண்டுகளுக்கு முன்புதான் வனவிலங்கு புகைப்படக் கலையை ஒரு பொழுதுபோக்காகத் தொடங்கிய ஆண்டர்சன், காட்டுப்பூனை குடும்பம் நேரடியாகத் தனது வீட்டிற்கே வந்து புகைப்படங்களுக்குப் பொஸ் கொடுத்ததை வாழ்நாளின் மறக்க முடியாத அரிய வாய்ப்பாகவும் கௌரவமாகவும் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T12:02:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் இரவில் வீதியில் சென்ற பெண்ணுக்கு மர்ம நபர் செய்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mysterious-man-targets-woman-on-road-at-night-1788695815"></link>
            <id>https://jvpnews.com/article/mysterious-man-targets-woman-on-road-at-night-1788695815</id>
            <summary type="text">மட்டக்களப்பு நகரில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபரொருவர் பறிக்க முற்பட்ட சம்பவம்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பு நகரில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபரொருவர் பறிக்க முற்பட்ட சம்பவம் நேற்று சனிக்கிழமை (05) இரவு இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; ">

மட்டக்களப்பு ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைந்துள்ள ஆலய வீதியில் இரு பெண்கள் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் அவர்களைப் பின் தொடர்ந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09f0844a-0054-40d9-b748-4790c1000eb4/26-6a9d55090d98c.webp' /></p><p style="text-align: justify; ">

இதன்போது, குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் இருந்தவாறே பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முற்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
எனினும், சங்கிலியை முழுமையாக பறிக்க முடியாத நிலையில், குறித்த நபர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; ">இந்தச் சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-06T11:57:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலச்சிக்கலுக்கு முடிவு கட்டணுமா? 5 எளிய இயற்கை வழிகள் இதோ!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/drink-these-6-natural-drinks-for-constipation-1788692388"></link>
            <id>https://manithan.com/article/drink-these-6-natural-drinks-for-constipation-1788692388</id>
            <summary type="text">தற்கால வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் காரணமாக, மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்கால வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் காரணமாக, மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. </p><p>குறிப்பாக, துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு, நீண்ட நேரம் அமர்ந்தபடியே வேலை செய்வது, முறையற்ற உணவுப் பழக்கங்கள், போதிய அளவு தண்ணீர் அருந்தாமை, உடற்பயிற்சியின்மை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்ற பல்வேறு காரணிகள் மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aba5317b-1786-4b83-a32b-705d5d405c8f/26-6a9d523f7672f.webp' /></p><p>

மலச்சிக்கல் என்பது அன்றாட வாழ்க்கையில் அசௌகரியத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்தக்கூடிய பொதுவான செரிமானப் பிரச்சனையாகும். மலம் கழிப்பதில் சிரமம், வழக்கத்தைவிட குறைவான குடல் இயக்கம், வயிறு உப்புசம் மற்றும் வயிற்றில் அசௌகரியம் போன்ற பிரச்சனைகளையும் இது ஏற்படும்.</p><p>இதனால் பலரும் விரக்தியடைந்தாலும், லேசான மற்றும் அவ்வப்போது ஏற்படும் மலச்சிக்கலை சமாளிக்க சில வாழ்க்கை முறை மாற்றங்களால் மலச்சிக்கலுக்கு முடிவுகட்ட முடியும்.</p><p>அந்தவகையில் மலச்சிக்களுக்கு இயற்கை முறையில், தீர்வு கொடுக்ககூடிய சில பானங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a7205b7-cf60-4651-b5a6-960a99757e94/26-6a9d52402a294.webp' /></p><p></p><p>1.வெல்லத் தண்ணீர்
</p><p>வெல்லம் இயற்கையான இனிப்பூட்டியாகும். இது மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. ஒரு குவளை வெந்நீரில் ஒரு தேக்கரண்டி வெல்லம் கலந்து, இரவில் உறங்கச் செல்லும் முன் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தும். நீரிழிவு நோயாளிகள் இதைத் தவிர்க்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f86f4a5f-e397-4f49-9fb5-6710f96aa4e5/26-6a9d5240d62d7.webp' /></p><p>
</p><p>2.எலுமிச்சை சாறு
</p><p>ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சம்பழச் சாறு கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தி, குடல் இயக்கத்தை எளிதாக்க உதவும். மேலும், கல்லீரலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும் உதவுவதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d82aea12-0822-4045-9c74-0a21e7b7007a/26-6a9d52418a603.webp' /></p><p>
</p><p>3.ஆப்பிள் சாறு
ஆப்பிள் </p><p>சாற்றில் உள்ள நார்ச்சத்து மற்றும் சார்பிட்டால் மலத்தை மென்மையாக்கி, எளிதாக வெளியேற உதவும். சர்க்கரை சேர்க்காத தூய ஆப்பிள் சாற்றை பகலில் குடிப்பது மலச்சிக்கலைப் போக்க உதவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4673ce58-5bcb-4f1d-aea1-3df6fb0cefbe/26-6a9d5242401ec.webp' /></p><p></p><p>4.விளக்கெண்ணெய்
</p><p>ஆமணக்கு எண்ணெய் சக்திவாய்ந்த இயற்கை மலமிளக்கியாகச் செயல்பட்டு, குடல் இயக்கத்தைத் தூண்டும். இரவில் இரண்டு தேக்கரண்டி எடுத்துக்கொள்ளலாம். சிறு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் இதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83082e25-bafd-4379-8418-34eda9c739ca/26-6a9d5242eb301.webp' /></p><p>
</p><p>5.திரிபலா பொடி </p><p>நீர்
ஆயுர்வேதத்தில் திரிபலா பொடிக்கு முக்கியத்துவம் உண்டு. இரண்டு தேக்கரண்டி திரிபலா பொடியை ஒரு குவளை வெந்நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது செரிமானப் பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிப்பதில் சிறப்பாக செய்ல்படும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T11:53:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருவால் உருவாகும் விபரீத ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு பணமும் பதவியும் தேடி வரும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/jupiter-in-cancer-forms-rajyog-who-get-luck-1788677075"></link>
            <id>https://manithan.com/article/jupiter-in-cancer-forms-rajyog-who-get-luck-1788677075</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான், செல்வம், அறிவு, மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம் ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான், செல்வம், அறிவு, மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம் ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறார். </p><p>நவகிரகங்களில் குரு பகவான் ஒரு ராசியில் சுமார் 1 ஆண்டு காலம் பயணிப்பதால், அவரது நிலை மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4842c1d-a936-4751-b34d-68da5bdebd05/26-6a9d0fdb6e4aa.webp' /></p><p></p><p>அந்தவகையில், குரு பகவான் ஜூன் 02 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைந்தார். குருவின் உச்ச ராசியான கடகத்தில் அக்டோபர் 31 ஆம் தேதி வரை அவர் பயணிக்கிறார். இதனால் 6, 8, 12 ஆம் வீடுகளில் விபரீத ராஜயோகம் உருவாகியுள்ளது.</p><p>

இந்த ராஜயோகம் குறுகிய காலத்தில் நல்ல வளர்ச்சியையும், நிதி நிலையில் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. </p><p>குரு பகவானால் உருவாகியுள்ள இந்த விபரீத ராஜயோகத்தால் நல்ல வளர்ச்சியைக் காணப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவி்ல் விரிவாக பார்க்கலாம்.</p><h2>சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcc91be5-812b-4c0f-9369-4db5fa14556c/26-6a9d0fdc22f56.webp' /></p><p>
சிம்ம ராசியின் 12-ஆம் வீட்டில் குரு பகவான் இருப்பதால் உருவாகும் விபரீத ராஜயோகம், வெளிநாடு தொடர்பான தொழில் அல்லது வேலை செய்பவர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். </p><p>வெளிநாடு செல்லும் கனவு இருந்தால் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். நீண்ட காலமாக இழுத்தடித்த அரசு வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.</p><p>தொழிலிலும் நல்ல வளர்ச்சி ஏற்படும்.

குரு 4-ஆம் வீட்டைப் பார்ப்பதால் வீட்டு பிரச்சனைகள் தீர்ந்து, குடும்பச் சூழல் மேம்படும். தாயாரின் ஆதரவு கிடைக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பும் அமையும்.</p><h2>
தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bda3d7f-c875-4d1e-b556-6a936ad9f61c/26-6a9d0fdccb4b6.webp' /></p><h2>
</h2><p>தனுசு ராசியின் 8-ஆம் வீட்டில் குரு பகவான் இருப்பதால் உருவாகும் விபரீத ராஜயோகம், நீண்ட கால பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.</p><p> திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கலாம். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.

ஏற்கனவே செய்த முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும்.</p><p> தொழிலதிபர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல பலன் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தேவையற்ற செலவுகள் குறையும். நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். புதிய சொத்துகளை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். குடும்பப் பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.
</p><h2>
கும்பம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/deed72f7-be94-4c87-bb9c-8a9cfceb77ee/26-6a9d0fdd7fd49.webp' /></p><p></p><h2>
</h2><p>கும்ப ராசியின் 6-ஆம் வீட்டில் குரு பகவான் இருப்பதால் உருவாகும் விபரீத ராஜயோகம், நிதி நிலையை வலுப்படுத்தி, கடன் தொல்லைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். </p><p>பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

வணிகர்களுக்கு தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் கிடைத்து, நல்ல லாபம் பெறலாம். </p><p>நீதிமன்ற வழக்குகள் இருந்தால், தீர்ப்பு சாதகமாக அமையும். இதுவரை இருந்த ஆரோக்கியப் பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து, உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T11:53:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெல்ஜியத்தில் புதிய வரலாறு படைத்த இலங்கை வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rumesh-tharanga-pathirage-new-record-in-belgium-1788695382"></link>
            <id>https://news.lankasri.com/article/rumesh-tharanga-pathirage-new-record-in-belgium-1788695382</id>
            <summary type="text">Rumesh tharanga pathirage create history in javelin 2026: டைமண்ட் லீக் இறுதிப் போட்டியில் இலங்கையின் ரூமேஷ் பத்திரகே தரங்க புதிய வரலாறு படைத்தார். 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>Rumesh tharanga pathirage create history in javelin 2026: டைமண்ட் லீக் இறுதிப் போட்டியில் இலங்கையின் ரூமேஷ் பத்திரகே தரங்க புதிய வரலாறு படைத்தார். </p><p>

பெல்ஜியத்தில் நடந்த மைமண்ட் லீக் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதலில் இலங்கை வீரர் ரூமேஷ் பத்திரகே தரங்க புதிய வரலாறு படைத்தார்.&nbsp;</p><h2>ஆடவர் ஈட்டி எறிதல்</h2><p>
பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் டயமண்ட் லீக் இறுதிப் போட்டி நடந்தது.&nbsp;ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில்&nbsp;இலங்கை வீரர் ரூமேஷ் தரங்க பத்திரகே&nbsp;பங்கேற்றார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f97a28d6-1b6f-431a-8066-a4b7338240cf/26-6a9d545888f6b.webp' />&nbsp;</p><p></p><p>இறுதிப்போட்டி வரை சென்ற அவர், தனது மூன்றாவது முயற்சியில் 89.04 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்த பட்டத்தை வென்றார்.</p><p> 

இதன்மூலம் டைமண்ட் லீக் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இலங்கை வீரர் என்ற பெருமையை ரூமேஷ் தரங்க பத்திரகே (Rumesh Tharanga Pathirage)பெற்றார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39ddb031-2495-40f6-90a9-79d861286b2a/26-6a9d5457a80c7.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T11:51:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பென்டகனில் இராணுவ அதிகாரிகளிடம் பொய் கண்டறியும் சோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/polygraph-tests-for-military-officers-at-pentagon-1788695117"></link>
            <id>https://canadamirror.com/article/polygraph-tests-for-military-officers-at-pentagon-1788695117</id>
            <summary type="text">அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு தொடர்பான தகவல்கள் கசிந்ததாகக் கூறப்படும் நிலையில், தகவல்களை வெளியிட்டவர்களைக் கண்டறியும் நோக்கில் பென்டகன் இராணுவ உயர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு தொடர்பான தகவல்கள் கசிந்ததாகக் கூறப்படும் நிலையில், தகவல்களை வெளியிட்டவர்களைக் கண்டறியும் நோக்கில் பென்டகன் இராணுவ உயர் அதிகாரிகளிடம் பொய் கண்டறியும் சோதனையை நடத்தியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>


கடந்த வெள்ளிக்கிழமை பென்டகனில் சுமார் 50 இராணுவ உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன், அதன் ஒரு பகுதியாக அவர்கள் பொய் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


ஈரானுடனான பல மாதகால போரினால் அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்களின் கையிருப்பு குறைந்துள்ளதாக கடந்த ஜூலை மாதம் செய்திகள் வெளியாகியிருந்தன. </p><p>எனினும், இந்தத் தகவலை அமெரிக்க இராணுவ அதிகாரிகள் மறுத்திருந்தனர்.
</p><p>


தேசிய பாதுகாப்பு தொடர்பான இரகசியத் தகவல்கள் கசிவதை அமெரிக்கா மிகவும் தீவிரமாகக் கருதுவதாகவும், இது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பென்டகன் தெரிவித்துள்ளது.
</p><p>


இரகசியத் தகவல்களைக் கையாளும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அனுமதி வழங்கும் அல்லது புதுப்பிக்கும் நடவடிக்கைகளில் பொய் கண்டறியும் சோதனை வழக்கமாக இடம்பெறும் நிலையில், தகவல் கசிவு தொடர்பான விசாரணையில் இதுபோன்ற சோதனை நடத்தப்படுவது முன்னெப்போதும் இல்லாத நடைமுறை என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T11:45:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சேலையில் க்யூட் லுக்கில் சுனிதா!! புகைப்படங்கள் இதோ..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/cwc-sunita-recent-saree-photoshoot-post-1788692071"></link>
            <id>https://viduppu.com/article/cwc-sunita-recent-saree-photoshoot-post-1788692071</id>
            <summary type="text">தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர்கள் கலைஞர்கள் பலர் உள்ளனர். அதில் ஒருவர் தான் சுனிதா. நடனம் என்பதை மட்டுமே அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டிற்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர்கள் கலைஞர்கள் பலர் உள்ளனர். அதில் ஒருவர் தான் சுனிதா. நடனம் என்பதை மட்டுமே அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டிற்கு வந்தவர் நிறைய ஷோக்களில் நடனம் ஆடி அப்படியே விஜய் டிவி பக்கம் வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e66b7e06-e0eb-4c9d-b2f8-ae80f51f7b5e/26-6a9d466f7d1b2.webp' /></p><p>
விஜய்யில் வந்த எல்லா நடன நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று கலக்கி வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்ற சுனிதா அடிக்கடி போட்டோ ஷுட் நடத்துவது வழக்கம்.
</p><p>
தற்போது, சேலையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-06T11:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீழ் மல்வத்து ஓயா பெயரில் செட்டிகுளத்தில் குடியேற்ற திட்டமா..! சத்தியலிங்கம் எம்.பி ஆவேசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sathyalingam-mp-statement-1788692861"></link>
            <id>https://tamilwin.com/article/sathyalingam-mp-statement-1788692861</id>
            <summary type="text">கீழ் மல்வத்து ஓயா பெயரில் செட்டிகுளத்தில் குடியேற்ற திட்டமா என நாடாளுமன்ற
உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கேள்வி எழுப்பிய நிலையில், பயிர்செய்கைக்காக
அநுர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கீழ் மல்வத்து ஓயா பெயரில் செட்டிகுளத்தில் குடியேற்ற திட்டமா என நாடாளுமன்ற
உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கேள்வி எழுப்பிய நிலையில், பயிர்செய்கைக்காக
அநுராதபுர மாவட்ட மக்களுக்கு காணிகள் வழங்கப்படும் என திட்ட அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
</p><p>
வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு
தலைவரும், பிரதியமைச்சருமாகிய உபாலி தலைமையில் வவுனியா
மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்திருந்தனர்.
</p><p>
இதன்போது செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கப்பாச்சி கிராமத்தை
அண்மித்த பகுதியில் வனவள திணைக்களத்தால் சுமார் 1650 ஏக்கர் காணிகள்
விடுவிக்கப்பட்டுள்ளதாக தாம் அறிந்துள்ளதாகவும் அதன் உண்மைத்தன்மை தொடர்பாக
சபைக்கு அறிவிக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் சபையில்
தெரிவித்திருந்தார்.
</p><p>
“கீழ் அருவியாறு (கீழ் மல்வத்து ஓயா) நீர்பாசன திட்டம்”எனும் பெயரில் 2019ம்
ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட நீர்பாசன திட்டமானது மீண்டும் தற்போது
நடைமுறைப்படுத்தப்படுகிறது.
</p><p>
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதனூடாக கட்டப்படும் நீர்த்தேக்கத்திலிருந்து
மன்னார் மாவட்டத்தின் கட்டுக்கரைக்குளம் மற்றும் அகத்திமுறிப்பு குளங்களுக்கு
நீர்வினியோகத்தை பரிபாலனம் செய்வது, நீர்மின்சாரத்தை பெறுவது,
மதவாச்சி, செட்டிகுளம் பிரதேசங்களுக்கான குடிநீர் வழங்கல், மேட்டு நீர்பாசன
வசதியை ஏற்படுத்தல் என்பன திட்ட நோக்கமாக சொல்லப்படுகிறது.</p><h2>திட்டங்களுக்காக விடுவிக்கப்படும் காணி</h2><p>
</p><p>
இந்த திட்டத்தினூடாக கட்டப்படும் அணையின் கீழ் வவுனியா மற்றும் அநுராதபுர
மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசம் நீரேந்து பகுதிக்குள் உள்வாங்கப்படுகிறது.
குறிப்பாக வவுனியா வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் 450
ஏக்கர் வயல் மற்றும் மேட்டுக்காணிகள் நீரேந்து பிரதேசத்திற்குள் செல்கின்றது.
</p><p>
இவ்வாறான சூழலில் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கப்பாச்சி
கிராமத்தை அண்மித்த பிரதேசத்தில் சுமார் 1650 ஏக்கர் வனப்பகுதியை மேற்படி
திட்ட தேவைகளுக்காக விடுவிப்பதாக அறியக்கூடியதாக உள்ளது.

எனவே நீரேந்து பிரதேசத்திற்குள் செல்கின்ற சுமார் 450 ஏக்கர் காணிகளுக்குப்
பதிலாக சுமார் 1650 ஏக்கர் காணியை வனவள திணைக்களத்தினைக்களம் விடுவிப்பது
தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் குறித்த கூட்டத்தில்
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பினார்.
</p><p>
உரிய பதில் கிடைக்காததால், அநுராதபுரம் மாவட்டத்தில் மேற்படி திட்டத்தினால்
காணிகளை இழக்கும் மக்களை செட்டிகுளத்தில் குடியேற்றம் செய்யவா இந்த மேலதிகமான
காணிகள் விடுவிக்கப்பட்டன என நேரடியாக கேள்வியெழுப்பினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddbc7998-584d-4484-b675-6441dac1273d/26-6a9d505b0f29b.webp' /></p><p>
</p><p>
இதற்குப் பதிலளித்த மல்வத்து ஓயா திட்டத்துக்குப் பொறுப்பான அதிகாரி,

செட்டிகுளத்தில் தாம் குடியேற்றம் எதனையும் செய்யவில்லை எனவும், அனுராதபுரம்
மாவட்டத்தில் இந்த திட்டத்தின் மூலம் வயல் காணிகளை இழக்கும் மக்களுக்கு
செட்டிகுளத்தில் வயல் காணிகளை வழங்கவே திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காகவே இந்த
காணிகள் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
</p><p>
இதனால் ஆவேசமடைந்த சத்தியலிங்கம் எம்பி,

இன்னொரு மாவட்டத்தில் உள்ள ஒருவருக்கு, இந்த மாவட்டத்துடன் சம்மந்தப்படாத
ஒருவருக்கு எதற்காக இந்த மாவட்டத்தில் காணிகளை வழங்குகின்றீர்கள். நீங்கள்
மீண்டும் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்காதீர்கள் என கடிந்தார்.

இதன்போது குறுக்கிட்ட பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க,

இலங்கை என்பது ஒரு நாடு, இங்கு யாருக்கும் எங்கும் காணி வழங்கலாம், அதற்குரிய
அதிகாரம் அரசாங்கத்திற்கு உள்ளது என தெரிவித்தார்.
</p><p>
இதனால் மீண்டும் விசனம் தெரிவித்த சத்தியலிங்கம் எம்.பி,

இந்த மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்றும் வயற்காணிகள்
இல்லாது உள்ளனர். அவர்களுக்கு குறைந்தது ஒரு ஏக்கர் வயற்காணியாவது வழங்க
வேண்டும் என கடந்த பல வருடங்களாக கோரி வருகின்றோம். நான் மாகாணசபையில்
இருக்கும் போது 5 வருடங்களாக இதைக்கோரி வந்தேன்.</p><h2>கோரிக்கை முன்வைப்பு</h2><p> </p><p>தற்போது மீண்டும் கடந்த
இரண்டு வருடங்களாக நான் இந்த கோரிக்கையினை முன்வைத்து வருகின்றேன். நாடாளுமன்றத்திலும் இவ்விடயத்தை முன்வைத்தேன், சம்மந்தப்பட்ட அமைச்சின்
ஆலோசனைக்கூட்டத்தில் இக்கோரிக்கையை முன்வைத்தேன், அமைச்சரிடமும்
பேசியிருக்கின்றேன். ஆனால் இதுவரை ஒரு ஏக்கர் காணி கூட எமது மாவட்ட மக்களுக்கு
வழங்கப்படவில்லை.
</p><p>அதுமட்டுமல்ல யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீளக்குடியேறும் மக்களின்
வயல்காணிகளை வனவளத்திணைக்களமும் ஏனைய திணைக்க்களங்களும் கையகப்படுத்தி
வைத்துள்ளீர்கள், அக்காணிகளை விடுவிக்குமாறு பல தடவைகள் கோரியிருக்கிறோம்,
ஆனால் நீங்கள் அவற்றை விடுவிக்காமல் மேலும் மேலும் எமது மக்களின் விளைநிலங்களை
கையகப்படுத்துகிறீர்கள்.
</p><p>இவ்வாறு மிகமோசமாக நடந்துகொள்ளும் நீங்கள் எவ்வாறு வெளிமாவட்ட மக்களுக்கு
வவுனியா மாவட்டத்தில் காணிகளை வழங்குவீர்கள்?
நான் இனவாதம் பேசவில்லை. எனது மாவட்ட மக்களுக்காக அவர்களின் பிரதிநிதி எனும்
வகையில் இதனை கேட்கும் பொறுப்பும் உரிமையும் எனக்குள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86c9edc1-a5db-472a-9ad8-70c501bdfaaf/26-6a9d505be1fa2.webp' /></p><p>
</p><p>
இந்த திட்டத்தின் மூலம் செட்டிகுளத்தில் சின்னசிப்பிக்குளம், ஆனைவிழுந்தான்
உள்ளிட்ட 5 குளங்கள் நீரேந்து பகுதிகளுக்குள் செல்லும் எனக்காரணம் காட்டி
கடந்த 7 வருடங்களாக விவசாயிகள் பயிரிடுவதை தடுத்து வருகிறீர்கள். அந்த
விவசாயிகள் தமது வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது?
</p><p>குறித்த விவசாயிகளுக்கு பயிர்செய்கை தடுக்கப்பட்டுள்ளதால் ஏற்படும் பொருளாதார
சரிவை ஈடுசெய்ய ஒவ்வொரு போகத்திற்கும் நட்டஈடாக ஏக்கருக்கு ரூபா 35,000/-
வழங்கப்படுமென அறிவிக்கப்பட்ட போதும் இதுவரை ஒரு சதமேனும் வழங்கப்படவில்லை.
அதேநேரம் வயல்செய்கை மேற்கொள்ளவும் அனுமதிக்கப்படவில்லை.</p><p>

அதுமட்டுமல்ல இந்த திட்டம் சம்மந்தமாக இதுவரையில் வெளிப்படையாக எந்த
கூட்டங்களிலும் பேசப்படவில்லை. மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களிலும்
தெளிவுபடுத்தப்படவோ, அனுமதி பெறப்படவோ இல்லை. ஏன் இவ்வாறு இரகசியாக இந்த
வேலைகளை செய்கின்றீகள்? </p><p>அநுராதபுர மாவட்ட மக்களை குடியேற்றும் நோக்கமே இந்த
திட்டம் என்பது இதன்மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது என தெரிவித்தார்.
</p><p>
இதனையடுத்து நீண்ட வாதபிரதிவாதங்களின் பின்னர் அடுத்த மாவட்ட அபிவிருத்திக்
குழு கூட்டத்தில் இந்த விடயம் முன்வைக்கப்பட்டு தெளிவுபடுத்தப்படுமென திட்ட
அதிகாரியினால் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T11:37:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெல்லியில் இடிந்து விழுந்த 6 மாடி மாணவர் விடுதி.. 50இற்கும் மேற்பட்டோர் இடிபாடுக்குள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/several-trapped-6-storey-building-collapses-delhi-1788693737"></link>
            <id>https://tamilwin.com/article/several-trapped-6-storey-building-collapses-delhi-1788693737</id>
            <summary type="text">தென்மேற்கு டெல்லியில் 75 படுக்கைகள் கொண்ட 6 மாடி மாணவர் விடுதி கட்டிடம் ஒன்று இன்று பிற்பகல் 1:30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்மேற்கு டெல்லியில் 75 படுக்கைகள் கொண்ட 6 மாடி மாணவர் விடுதி கட்டிடம் ஒன்று இன்று பிற்பகல் 1:30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p>டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள இப்பகுதியில் பெரும்பாலான மாணவர்கள் தங்கியிருந்த நிலையில், இடிபாடுகளுக்குள் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.</p><h3>பலர் ஆபத்தில்..&nbsp;</h3><p>

தகவலறிந்த தீயணைப்புப் படையினர், பொலிஸார், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் அவசரக்கால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/BREAKING?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BREAKING</a>: 🇮🇳 PG hostel caves in at Satya Niketan, Delhi, India <br><br>Officials say none confirmed dead yet but unconfirmed reports claim three dead, two girls and one boy, with several rescued and three critically hurt at AIIMS<a href="https://x.com/hashtag/Delhi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Delhi</a> <a href="https://x.com/hashtag/SatyaNiketan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SatyaNiketan</a> <a href="https://x.com/hashtag/BuildingCollapse?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BuildingCollapse</a> <a href="https://t.co/AZkxrt0YCp">pic.twitter.com/AZkxrt0YCp</a></p>&mdash; Twilight (@TwilightDewy) <a href="https://x.com/TwilightDewy/status/2096543490218008627?ref_src=twsrc%5Etfw">September 6, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> </p><p>இதுவரை சிலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. </p><p>முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள கட்டிடங்களும் காலியாக்கப்பட்டு, நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு முதன்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db1d1e23-4fb8-47bd-8299-a8281c683bb5/26-6a9d4e6d76653.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T11:29:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இது வெறும் ஆரம்பம் மட்டுமே... டோவரில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான குழு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dover-anti-migrant-blockade-1788694099"></link>
            <id>https://news.lankasri.com/article/dover-anti-migrant-blockade-1788694099</id>
            <summary type="text">Dover anti-migrant mob warn it&#039;s only the beginning: டோவரில் புலம்பெயர் மக்களுக்கு எதிரான குழு ஒன்று, இது வெறும் ஆரம்பம் மட்டுமே என்று எச்சரித்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>Dover anti-migrant mob warn it's only the beginning: டோவரில் புலம்பெயர் மக்களுக்கு எதிரான குழு ஒன்று, இது வெறும் ஆரம்பம் மட்டுமே என்று எச்சரித்துள்ளது.
</p><p>நேற்று டோவர் துறைமுகத்திற்குள் அத்துமீறி நுழைந்த, முகமூடி அணிந்த குழுவை அரசியல்வாதிகள் கண்டித்துள்ள நிலையில், இது வெறும் ஆரம்பம் தான் என்று போராட்டக்காரர்கள் எச்சரிக்கும் தொனியில் கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c442894-9ef7-4577-bffd-3d1109579c37/26-6a9d4e56f0f1c.webp' /></p><p>
</p><p>கருப்பு உடை அணிந்த நூற்றுக்கணக்கானவர்கள் பிரித்தானியாவின் மிகவும் பரபரப்பான படகு முனையத்தை மறித்ததால், அதைச் சுற்றியுள்ள சாலைகளில் பல மணிநேரப் போக்குவரத்து முடக்கமும் மைல்கணக்கிலான வாகன வரிசைகளும் ஏற்பட்டன. </p><p>இணையத்தில் வெளியான காணொளிகள், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு வேனின் பின்பகுதியிலிருந்து வெளியேறி, பின்னர் நகருக்குள் அணிவகுத்துச் சென்றதைக் காட்டின.</p><p></p><p> </p><p>மட்டுமின்றி, அவர்கள் படகுப் போக்குவரத்தை நிறுத்துங்கள் போன்ற முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர். இந்த நிலையில், அந்தப் குழுவைக் கண்டித்த அரசியல்வாதிகளில் Reform UK கட்சியைச் சேர்ந்த ராபர்ட் ஜென்ரிக் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ஜொனாதன் ரெனால்ட்ஸ் ஆகியோரும் அடங்குவர்.</p><p> ஆனால், அந்தக் குழுவின் மீது காவல்துறை மெதுவாக நடவடிக்கை எடுத்ததை டோவர் மாவட்ட மன்றத் தலைவர் கெவின் மில்ஸ் விமர்சித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c10a0b4-91d9-4744-ab02-c6c4e705d769/26-6a9d4e5646ffd.webp' /></p><p> புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் செல்லும் சிறிய படகுகள் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதால் ஏற்படும் அதிருப்தியைப் புரிந்துகொள்வதாக ஜென்ரிக் கூறினார், ஆனால் முகமூடி அணிந்து மக்கள் போராட்டத்தில் குதிப்பதை தாம் விரும்பவில்லை என்றார். </p><p>இந்த நிலையில், இந்த முகமூடி அணிந்த குழுவைக் களமிறக்கியது Patriot Platform என்ற அமைப்பு என்றே தெரிய வருகிறது. இந்த அமைப்பானது ஆண்டின் தொடக்கத்தில், தீவிர வலதுசாரிச் சிந்தனை கொண்ட சமூக ஊடகப் பிரபலமும் டேனியல் தாமஸ் என்ற இயற்பெயரைக் கொண்டவருமான டேனி டோமோவால் நிறுவப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf23201c-cd8f-4d37-ae02-9691d6e0785f/26-6a9d4e57a67b6.webp' /></p><p> </p><p>இவ்வமைப்பின் நோக்கம் இந்நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதே என்று அவர் முன்னரே அறிவித்துள்ளார். ஏப்ரல் மாதத்தில், தீவிரமான அத்துமீறல் குற்றத்திற்காக தாமஸ் கைது செய்யப்பட்டதோடு, டோவர், ராம்ஸ்கேட் மற்றும் ஃபோல்க்ஸ்டோன் ஆகிய இடங்களுக்குச் செல்ல அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. </p><p>மேலும் கடந்த மாதம், சட்டப்பூர்வ அனுமதியின்றி டோவர் துறைமுகத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைந்ததை அவர் ஒப்புக்கொண்டார்.</p><p> நேற்றைய போராட்டத்தில் காவல்துறையினர் யாரையும் கைது செய்யவில்லை; மதிய வேளையில் போராட்டக்காரர்களை டோவர் பிரையரி ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். குறைந்தது 100 போராட்டக்காரர்கள் ராம்ஸ்கேட் செல்லும் ரயிலில் ஏறுவதும் தெரிய வந்தது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T11:25:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிற்கு வலிமிகுந்த பதிலடி கொடுக்கப்படும்: ஈரான் கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-warns-of-painful-response-to-us-attacks-1788689363"></link>
            <id>https://ibctamil.com/article/iran-warns-of-painful-response-to-us-attacks-1788689363</id>
            <summary type="text">ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு விரைவான கடுமையான மற்றும் மிகவும் வலிமிகுந்த பதிலடி&amp;nbsp; கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.ஈரானின் நாடா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு விரைவான கடுமையான மற்றும் மிகவும் வலிமிகுந்த பதிலடி&nbsp; கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.</p><p>ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் கலீபாஃப் (Ghalibaf) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.</p><p>தாக்குதல்களுக்கு ஈரானின் பதிலடி இனி விகிதாசாரமாக (Proportionate) இருக்காது என்பதை அவர் வலியுருத்தியுள்ளார்.</p><p></p><h2>சமமான பதிலடி</h2><p>அத்தோடு சமமான பதிலடிகளைக் கொடுக்கும் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை அமெரிக்கர்கள் நிச்சயமாகப் புரிந்துகொண்டிருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
</p><p>மேலும் தெரிவித்த அவர், “ஆக்கிரமிப்பாளர்களின் தளங்களுக்கு எதிராக நாங்கள் சமீபத்தில் நடத்திய நடவடிக்கைகள் ஒரு தொடக்கமே.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbee5041-8b25-4e96-a027-d60974518f2a/26-6a9d4ce742ca7.webp' /></p><p>அவர்கள் இன்னும் அதைப் புரிந்துகொள்ளவில்லை என்றால் ஆட்டத்தின் விதிகள் மாறிவிட்டன என்பதை காலம் கடப்பதற்குள் புரிந்துகொள்ள வேண்டும்.</p><p>இராணுவ ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் அமெரிக்காவை ஈரான் எதிர்கொண்டது போல அமெரிக்காவின் பொருளாதாரப் பிரச்சாரத்தையும் ஈரான் முறியடித்து வெற்றிபெறும்” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-06T11:22:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை ஆரம்பமாகும் பாடசாலைகள் : கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/third-term-of-school-begins-tomorrow-education-min-1788690004"></link>
            <id>https://ibctamil.com/article/third-term-of-school-begins-tomorrow-education-min-1788690004</id>
            <summary type="text">நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை (07) ஆரம்பமாகவுள்ளது.இந்தநிலையில் அனைத்துப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை (07) ஆரம்பமாகவுள்ளது.</p><p>இந்தநிலையில் அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் (06) நாளையும் (07) டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.</p><p>

நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கண்காணிக்கும் சோதனைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உப தலைவர் பிரதீப் பொரலெஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மேலதிக பேருந்து சேவை&nbsp;</h2><p>அத்துடன், மாணவர்களின் நலன் கருதி தேவைக்கேற்ப 'சிசு செரிய' உட்பட மேலதிக பேருந்துகள் நாளை (07) முதல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0153bee-7af6-4ca2-85a1-21299fe3f941/26-6a9d46bd9b76e.webp' /></p><p>இதேவேளை&nbsp;அரச மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் ஓகஸ்ட் மாதம் 7ஆம் திகதி நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகி&nbsp;டிசம்பர் மாதம் 4 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T11:16:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயணத் தடைக்கு முன்னரே நாட்டை விட்டு வெளியேறிய பிரேமலால் ஜயசேகர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/premalal-left-the-country-before-travel-ban-1788693362"></link>
            <id>https://jvpnews.com/article/premalal-left-the-country-before-travel-ban-1788693362</id>
            <summary type="text">உயர் நீதிமன்றத்தால் வெளிநாட்டுப் பயணத் தடை விதிப்பதற்கு முன்னரே முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர நாட்டிலிருந்து வெளியேறியுள்ளமை தெரியவந்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உயர் நீதிமன்றத்தால் வெளிநாட்டுப் பயணத் தடை விதிப்பதற்கு முன்னரே முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர நாட்டிலிருந்து வெளியேறியுள்ளமை தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மேற்கொண்ட விசாரணையின் போதே இத்தகவல் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/267f301e-79ee-49a5-b86a-4474774013ed/26-6a9d4b73636e3.webp' /></p><h2 style="text-align: justify; ">பயணத் தடை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

கொலைக் குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு வெளிநாடு செல்வதைத் தடை விதித்து கடந்த வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.</p><p style="text-align: justify; "> 

இந்த வெளிநாட்டுப் பயணத் தடையைக் குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறு பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டிருந்தது. </p><p style="text-align: justify; ">

இதற்கு மேலதிகமாக, பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளையும் வரும் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து அழைப்பாணை பிறப்பிக்குமாறும் நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அந்த உத்தரவுகளுக்கு அமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கச் சென்றபோதே, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர கடந்த ஓகஸ்ட் மாதமே வெளிநாடு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

இருப்பினும், பிரேமலால் ஜயசேகர மீண்டும் நாட்டுக்குத் திரும்புவதற்கான விமான பயணச்சீட்டை முன்பதிவு செய்த பின்னரே இந்த வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அரசியல் கூட்டமொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு நபரொருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பிரேமலால் ஜயசேகரவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அந்தத் தண்டனைக்கு எதிராகப் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவர்களைக் குற்றமற்றவர்கள் என விடுவித்து உத்தரவிட்டது. </p><p style="text-align: justify; ">

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அந்தத் தீர்மானம் சட்டத்திற்குப் புறம்பானது என்றும், எனவே அதனை இரத்து செய்து தண்டனை வழங்குமாறும் கோரி இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர். </p><p style="text-align: justify; ">

அந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, பிரதம நீதியரசர் தலைமையிலான மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளும் வெளிநாடு செல்வதைத் தடுத்து இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-06T11:16:07+00:00</updated>
        </entry>
    </feed>
