<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-12T08:24:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென அதிகரித்த தங்கத்தின் விலை.. வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-price-sri-lanka-today-1789200376"></link>
            <id>https://tamilwin.com/article/gold-price-sri-lanka-today-1789200376</id>
            <summary type="text">நேற்றைய தினத்துடன் (11) ஒப்பிடுகையில் இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, கொழும்பு செட்டித்தெரு தங்க ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேற்றைய தினத்துடன் (11) ஒப்பிடுகையில் இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.</p><p> இதற்கமைய, கொழும்பு செட்டித்தெரு தங்க சந்தையில் இன்று (12) காலை ஒரு பவுண்&nbsp;தங்கத்தின் விலை 345,000 ரூபாவாக உயர்ந்துள்ளது.</p><h2>சந்தை நிலவரம்..&nbsp;</h2><p>நேற்றைய தினம் இதன் விலை 343,200 ரூபாவாகக் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/991ac672-0dc8-4e39-9d4b-1e188fc80650/26-6aa50af8145f5.webp' /></p><p> </p><p>மேலும், கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தை வட்டாரங்களின்படி, 24 கரட் தங்கத்தின் விலை நேற்றைய தினம் 373,000 ரூபாவாக இருந்த நிலையில், இன்று 375,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. </p><p>இருப்பினும், இந்த விலைகள் அடிக்கடி மாறுபடக்கூடியவை என்பதால், கொள்முதல் செய்வதற்கு முன்னர் தற்போதைய சந்தை விலைகளை சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T08:21:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த காற்று ; பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/strong-winds-public-warning-issued-1789201123"></link>
            <id>https://jvpnews.com/article/strong-winds-public-warning-issued-1789201123</id>
            <summary type="text">ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்த எச்சரிக்கை அறிவிப்பொன்று விடுக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்த எச்சரிக்கை அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

இந்த அறிவிப்பு இன்று (12) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், இது நாளை (13) முற்பகல் 11.00 மணி வரை செல்லுபடியாகும்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2162483e-04ba-44ec-8e76-5635bd01aa87/26-6aa50ae536b95.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;கடற்போக்குவரத்து நடவடிக்கை</h2><p> </p><p style="text-align: justify;">

குறித்த அறிவிப்பின்படி, அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையை ஒட்டியுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அப்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். </p><p style="text-align: justify;">

அதேபோல், சிலாபத்திலிருந்து காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையை ஒட்டியுள்ள கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரமானது 2.0 முதல் 3.0 மீற்றர் வரை உயர்வடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify; ">

இதன் காரணமாக, பேருவளையிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான பகுதிகளில் கடல் அலைகள் கரையை நோக்கி வரக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"> 

எனவே, குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் மீன்பிடி மற்றும் கடற்சார் சமூகத்தினர் இது குறித்து மிகுந்த விழிப்புடன் செயல்படுமாறு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-12T08:21:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[323 கொள்கலன்கள் விவகாரம்! குற்றஞ்சாட்டப்பட்டவர் அரசாங்கதின் உயர் பதவியில் - எதிர்க்கட்சிகள் ஆவேசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/323-container-release-issue-mujibur-s-allegation-1789198066"></link>
            <id>https://ibctamil.com/article/323-container-release-issue-mujibur-s-allegation-1789198066</id>
            <summary type="text">


கொழும்பு துறைமுகத்தில் பெளதீகப் பரிசோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சுங்கத் திணைக்களத்தின் சிரேஷ...</summary>
            <content type="html"><![CDATA[<p>


கொழும்பு துறைமுகத்தில் பெளதீகப் பரிசோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சுங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், பணி ஓய்வுக்குப் பின்னர் அரசாங்கத்தின் உயர் பதவியொன்றில் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
</p><p>
நல்லாட்சிக் கொள்கையின் அடிப்படையில் அரசாங்கம் செயற்படுமாயின் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.
</p><p>
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ள போதிலும், அதன் இறுதி அறிக்கை வெளியாவது இரண்டு மாதங்களுக்கும் மேலாகத் தாமதப்படுத்தப்பட்டு வருவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>அறிக்கை வெளியீட்டில்&nbsp;தாமதம் </h2><p>

அதன்படி, இந்த அறிக்கை வெளியீட்டில் ஏற்பட்டுள்ள தாமதம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகக் களுத்துறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அஜித் பி. பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/298a3bd3-0c7d-4976-bf44-f395291b4454/26-6aa507cbbab1d.webp' />&nbsp;</p><p>

இந்நிலையில், கொள்கலன்கள் விடுவிப்புத் தொடர்பாக விசாரணை நடத்தும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவராக நீதியமைச்சரும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சருமான ஹர்ஷன நாணயக்கார செயற்படுகின்றார்.</p><h2>அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டு</h2><p>
</p><p>
அத்துடன், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவும் தனது இறுதி அறிக்கையில், கொள்கலன்கள் பெளதீகப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டமையை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80fe2cfc-9db8-409b-8215-d34a927cdf88/26-6aa507cca7f93.webp' /></p><p>
</p><p>
இவ்வாறானதொரு பின்னணியில், குறித்த விவகாரத்தில் அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T08:13:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பென் ஸ்டோக்ஸின் இமாலய சாதனையை எட்டிப்பிடித்த பாகிஸ்தான் வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/razaullah-hit-9-sixers-and-equal-stokes-1789200519"></link>
            <id>https://news.lankasri.com/article/razaullah-hit-9-sixers-and-equal-stokes-1789200519</id>
            <summary type="text">இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தானின் ரஸாவுல்லா மாஷ்வானி அரைசதம் விளாசி சாதனை படைத்தார்.

எட்ஜ்பஸ்டனில் நடந்து வரும் டெஸ்டில், பாகிஸ்தானி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தானின் ரஸாவுல்லா மாஷ்வானி அரைசதம் விளாசி சாதனை படைத்தார்.</p><p>

எட்ஜ்பஸ்டனில் நடந்து வரும் டெஸ்டில், பாகிஸ்தானின் ரஸாவுல்லா மாஷ்வானி 9 சிக்ஸர்கள் விளாசி பென் ஸ்டோக்ஸ் சாதனையை சமன் செய்தார். </p><h2>ரஸாவுல்லா மாஷ்வானி</h2><p> 

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் எட்ஜ்பஸ்டனில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af30cc1d-e527-4160-a9c8-b639239d6976/26-6aa50952e76d7.webp' /></p><p></p><p>

பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 449 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. </p><p>

இளம் வீரர் ரஸாவுல்லா மாஷ்வானி 9 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 63 பந்துகளில் 81 ஓட்டங்கள் விளாசினார். </p><p>

இதன்மூலம் ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த பென் ஸ்டோக்ஸின் (Ben Stokes) சாதனையை ரஸாவுல்லா சமன் செய்தார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73f3fde1-7c87-4114-9b98-14de00c170c8/26-6aa509523092b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-12T08:08:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகச் சந்தையில் திடீர் சரிவை கண்ட கச்சா எண்ணெய் விலை - ஈரானின் அதிரடி முடிவால் ஏற்பட்ட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/crude-oil-prices-following-iran-s-decision-1789199433"></link>
            <id>https://tamilwin.com/article/crude-oil-prices-following-iran-s-decision-1789199433</id>
            <summary type="text">ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான இராணுவப் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், உலகச் சந்தையில் தொடர் உயர்வை சந்தித்த கச்சா எண்ணெய் விலை தற்போது...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான இராணுவப் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், உலகச் சந்தையில் தொடர் உயர்வை சந்தித்த கச்சா எண்ணெய் விலை தற்போது சரிவை கண்டுள்ளது. </p><p>

இது தொடர்பான அறிவிப்பானது, நேற்றைய தினத்துடன் ஒப்பிட்டு இன்று(12.09.2026) வெளியிடப்பட்டுள்ளது. </p><p>

உலகச் சந்தையின் முக்கிய எண்ணெய் விலைக் குறியீடான ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை, நேற்றைய நிலவரப்படி, 108 அமெரிக்க டொலர் என்ற அளவைத் தாண்டியிருந்தது.</p><p>

இந்த நிலையில், தற்போது 104.61 அமெரிக்க டொலாராக குறைந்துள்ளது.

இதேவேளை, ஒரு பீப்பாய் அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெயின் விலையும், நேற்றைய தினம் 103.34 அமெரிக்க டொலராகப் பதிவான நிலையில் இருந்து, இன்று(12) 100.05 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது.</p><h2>

உலகச் சந்தையில் குறைந்த கச்சா எண்ணெய் விலை</h2><p>
 மேலும், ஒரு பீப்பாய் முர்பான் கச்சா எண்ணெயின் விலையும், நேற்று 122.48 அமெரிக்க டொலராக இருந்த நிலையில் இருந்து, இன்று 119.46 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee3431d5-a9a6-4598-b846-8c1d81094ffe/26-6aa507e1101c6.webp' /></p><p> </p><p>

கிட்டத்தட்ட ஒரு வாரமாக நீடித்துவரும் இராணுவச் சூழல் தீவிரமடைந்து வந்தபோதிலும், ஹோர்முஸ் நீரிணை குறித்து விவாதிப்பதற்காக ஈரானிய அதிகாரிகள் குழு ஒன்று ஓமானுக்குப் புறப்படுவதாக ஈரானிய அரசு ஊடகங்கள் வெளியிட்ட செய்தியே கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. </p><p>

 பல வளைகுடா நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த முக்கிய விவாதங்களில் கலந்துகொள்ள உள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T08:07:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் குறைய இருக்கும் வாகன எரிபொருள் விலைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/gas-prices-canada-reduce-1789200215"></link>
            <id>https://canadamirror.com/article/gas-prices-canada-reduce-1789200215</id>
            <summary type="text">&amp;nbsp;Gas prices are expected to drop soon in Canada: கனடாவில் வாகன எரிபொருள் விலைகள் விரைவில் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


அமெரிக்காவும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;Gas prices are expected to drop soon in Canada: கனடாவில் வாகன எரிபொருள் விலைகள் விரைவில் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>


அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தத் துவங்கியதைத் தொடர்ந்து, பிப்ரவரி மாத இறுதியிலிருந்தே, பெட்ரோல், டீசல் போன்ற வாகன எரிபொருட்கள் விலை உலகமெங்கும் உயர்ந்துவருகிறது.
</p><p>
இந்நிலையில், கனடாவில் வாகன எரிபொருள் விலைகள் விரைவில் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><span style="color: inherit;">முதலாவதாக, குளிர் காலத்தில் கனேடியர்களும் அமெரிக்கர்களும் பயணம் செய்வதை வெகுவாகக் குறைத்துவிடுகிறார்கள்.</span></p><p>
ஆகவே, வாகன பயன்பாடு குறைவதால், எரிபொருள் நிரப்புவதற்கான தேவையும் குறைகிறது.</p><p>இரண்டாவதாக, கனடாவைப் பொருத்தவரை, குளிர்காலம் துவங்கியதும் வாகன எரிபொருளில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்படும்.</p><p>

குளிர்காலத்தில் வாகன செயல்பாடு நன்றாக இருப்பதற்காக, எரிபொருளுடன் பியூட்டேன் போன்ற உட்பொருட்கள் கலக்கப்படுகின்றன.</p><p>

இந்த பியூட்டேன் போன்றவை கலக்கப்படும் எரிபொருள் விலை, வழக்கமாகவே குறைவாகத்தான் இருக்கும்.
</p><p>
ஆக, இந்த இரண்டு காரணங்களாலும், எரிபொருள் விலைகள் குறைய உள்ளன.
</p><p>
இந்த விலை குறைவு, இம்மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் அமுலுக்கு வர அமுலுக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.<br></p>]]></content>
            <updated>2026-09-12T08:05:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன எரிபொருள் விலை தொடர்பில் கனேடியர்களுக்கு ஆறுதலளிக்கும் ஒரு செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/gas-prices-canada-1789200045"></link>
            <id>https://news.lankasri.com/article/gas-prices-canada-1789200045</id>
            <summary type="text">&amp;nbsp;Gas prices are expected to drop soon in Canada: கனடாவில் வாகன எரிபொருள் விலைகள் விரைவில் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


அமெரிக்காவும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;Gas prices are expected to drop soon in Canada: கனடாவில் வாகன எரிபொருள் விலைகள் விரைவில் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>


அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தத் துவங்கியதைத் தொடர்ந்து, பிப்ரவரி மாத இறுதியிலிருந்தே, பெட்ரோல், டீசல் போன்ற வாகன எரிபொருட்கள் விலை உலகமெங்கும் உயர்ந்துவருகிறது.
</p><p>
இந்நிலையில், கனடாவில் வாகன எரிபொருள் விலைகள் விரைவில் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><h2>
என்ன காரணம்?
</h2><p>
முதலாவதாக, குளிர் காலத்தில் கனேடியர்களும் அமெரிக்கர்களும் பயணம் செய்வதை வெகுவாகக் குறைத்துவிடுகிறார்கள்.
</p><p>
ஆகவே, வாகன பயன்பாடு குறைவதால், எரிபொருள் நிரப்புவதற்கான தேவையும் குறைகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/beab7243-9da1-48c0-a108-ca542edb65ea/26-6aa5071a7dd7a.webp' /><br></p><p>

இரண்டாவதாக, கனடாவைப் பொருத்தவரை, குளிர்காலம் துவங்கியதும் வாகன எரிபொருளில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்படும்.</p><p>

குளிர்காலத்தில் வாகன செயல்பாடு நன்றாக இருப்பதற்காக, எரிபொருளுடன் பியூட்டேன் போன்ற உட்பொருட்கள் கலக்கப்படுகின்றன.</p><p>

இந்த பியூட்டேன் போன்றவை கலக்கப்படும் எரிபொருள் விலை, வழக்கமாகவே குறைவாகத்தான் இருக்கும்.
</p><p>
ஆக, இந்த இரண்டு காரணங்களாலும், எரிபொருள் விலைகள் குறைய உள்ளன.
</p><p>
இந்த விலை குறைவு, இம்மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் அமுலுக்கு வர அமுலுக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.<br></p>]]></content>
            <updated>2026-09-12T08:03:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிதாக கொள்வனவு செய்த வாகனம் - மூன்று நாளில் பற்றி எரிந்தமையால் அதிர்ச்சியில் உரிமையாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-van-got-fired-owner-injured-1789179768"></link>
            <id>https://tamilwin.com/article/new-van-got-fired-owner-injured-1789179768</id>
            <summary type="text">களுத்துறை பிரதேசத்தில் புதிய வாகனம் ஒன்று முழுமையாக தீக்கிரையாகியுள்ளதுடன், சாரதி படுகாயமடைந்துள்ளார். சாரதி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை பிரதேசத்தில் புதிய வாகனம் ஒன்று முழுமையாக தீக்கிரையாகியுள்ளதுடன், சாரதி படுகாயமடைந்துள்ளார். </p><p>சாரதி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் கலப்புகம பனாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடையவராவார். </p><p>மூன்று நாட்களுக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட புதிய வேனை இயக்க முற்பட்டபோது இயங்காமல் போயுள்ளது.</p><p> </p><h2><b>தீப்பற்றி எரிந்த&nbsp;வாகனம் </b></h2><p>அதனைத் தள்ளிக்கொண்டிருந்த போது தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc9d4a51-1c71-4778-9bac-9cd24c5c572e/26-6aa4beb3e828a.webp' /></p><p>பொலிஸார், பிரதேசவாசிகள் மற்றும் களுத்துறை மாநகரசபையின் தீயணைப்பு வாகனம் என்பன வந்து தீயைக் கட்டுப்படுத்திய போதிலும், அதற்குள் வேன் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. </p><p>சாரதி பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-12T08:02:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 நாள் முடிவில் நயன்தாரா-கவினின் ஹாய் திரைப்படம் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/kavin-nayanthara-hi-movie-bo-details-1789196661"></link>
            <id>https://cineulagam.com/article/kavin-nayanthara-hi-movie-bo-details-1789196661</id>
            <summary type="text">ஹாய் படம்அறிமுக இயக்குனர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் தயாராகி இருந்த திரைப்படம் ஹாய். கவின்-நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடித்துள்ள இப்படம் கடந்த ஆகஸ்ட்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஹாய் படம்</h2><p>அறிமுக இயக்குனர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் தயாராகி இருந்த திரைப்படம் ஹாய். </p><p>கவின்-நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடித்துள்ள இப்படம் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி வெளியாகி இருந்தது.</p><p> இவர்களை தாண்டி ராதிகா சரத்குமார், பாக்யராஜ், பிரபு, பூர்ணிமா, காவ்யா அறிவுமணி, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
</p><p>நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து இந்தப் படத்தினை தயாரிக்க ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c2dea2b-3757-4503-b21d-9b20b183832a/26-6aa5021cb1b36.webp' /></p><h2>பாக்ஸ் ஆபிஸ்</h2><p>நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. </p><p>படத்திற்கான திரைகளும் ரிலீஸ் நாளை விட அடுத்தடுத்த நாட்களில் அதிகரித்து வருகிறது. ரிலீஸ் ஆகி 15 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் ஹாய் திரைப்படம் இதுவரை ரூ. 18 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Yn2B8v4bmic" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-12T08:00:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசேட நடவடிக்கையால் வடக்கு, கிழக்கில் சிக்கிய 65 பேர் கைது ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/65-arrested-in-north-east-operation-1789199613"></link>
            <id>https://jvpnews.com/article/65-arrested-in-north-east-operation-1789199613</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கை கடற்படையினரால் செப்டெம்பர் 1 முதல் 11ஆம் திகதி வரையான காலப்பகுதியில் உள்நாட்டு நீர்ப்பரப்புகளை உள்ளடக்கிய வகையில் மேற்கொள்ளப்பட்ட விசேட த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;இலங்கை கடற்படையினரால் செப்டெம்பர் 1 முதல் 11ஆம் திகதி வரையான காலப்பகுதியில் உள்நாட்டு நீர்ப்பரப்புகளை உள்ளடக்கிய வகையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளில், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


இதன்போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், சட்டவிரோத மீன்பிடி முறைகள், வின்ச் இயந்திரங்கள் மற்றும் டிராக்டர்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 63 பேரும், காத்தான்குடி நகரில் பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் தடைசெய்யப்பட்ட 44 மீன்பிடி வலைகளுடன் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6cae821-9809-422a-b99e-57107c338037/26-6aa504fe9262f.webp' /></p><h2 style="text-align: justify; ">தேடுதல் நடவடிக்கை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


மேலும், இந்த நடவடிக்கைகளின் போது 26 டிங்கி படகுகள், ஒரு கெப் வாகனம் மற்றும் 2 டிராக்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify; ">


திருகோணமலை ஜமாலியா, பவுல் பொயிண்ட், இலக்கந்தை, புறாத்தீவு, நதிதீவு, அலாஸ்வத்தை, நிலாவெளி, யாழ்ப்பாணம் கட்கைக்காடு, வெற்றிலைக்கேணி, சுண்டிக்குளம் மற்றும் மட்டக்களப்பு அறுகம்பே உள்ளிட்ட கடற்பரப்புகளை உள்ளடக்கிய பகுதிகளில் இந்த தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுகள், வாகனங்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கோட் பே, கிண்ணியா, மூதூர், திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் பொத்துவில் ஆகிய பகுதிகளில் உள்ள மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகங்களில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-12T07:54:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர் - மூவர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3-arrested-in-connection-with-murder-in-jaffna-1789198568"></link>
            <id>https://ibctamil.com/article/3-arrested-in-connection-with-murder-in-jaffna-1789198568</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>குறித்த படுகொலை சம்பவம் கடந்த புதன்கிழமை இரவு யாழ்ப்பாணம் - வடமராட்சி, கிராமக்கோடு சந்திக்கு அருகில் இடம்பெற்றது</p><p>இதன்போது துன்னாலை பகுதியைச் சேர்ந்த வயது 33 வயதான குடும்பஸ்தர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.</p><p></p><h2>சரமாரியாக வெட்டிப் படுகொலை&nbsp;</h2><p>

துன்னாலை பகுதியைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையே நீண்டகாலமாக பகைமை நீடித்து வந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் அடங்கிய குழுவினர் இவரைச் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a860744-9e64-4643-b387-be4ae9e9ace4/26-6aa503071d0ec.webp' /></p><p> </p><p>

இச்சம்பவம் தொடர்பாகப் பருத்தித்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். </p><p>

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர். </p><p>

கைது செய்யப்பட்ட மூவரையும் பருத்தித்துறை காவல் நிலையத்தில் தடுத்து வைத்துப் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>

அத்துடன், தொடர்ந்து தலைமறைவாக உள்ள பிரதான சந்தேகநபரைத் தேடிக் கைது செய்வதற்காகப் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T07:45:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கர்ப்பமாக இருக்கும் நடிகை சமந்தாவின் அழகிய புகைப்படங்கள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/samantha-pregancy-time-photos-post-viral-1789198328"></link>
            <id>https://viduppu.com/article/samantha-pregancy-time-photos-post-viral-1789198328</id>
            <summary type="text">சமந்தாமுன்னணி நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான மா இண்டி பங்காரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. உலகளவில் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சமந்தா</h2><p>முன்னணி நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான மா இண்டி பங்காரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. உலகளவில் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/592e24e4-3e42-4c44-9656-a2ffa0efdf9a/26-6aa5000324736.webp' /></p><p>
</p><p>
இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகை சமந்தா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதனால் சினிமாவிலிருந்து சில காலம் விலக முடிவு செய்துள்ளார்.</p><p> இருப்பினும் சில நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொள்கிறார்.

இந்நிலையில், கர்ப்பமாக இருக்கும் நடிகை சமந்தா தன்னுடைய கர்ப்பமாக புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் வாழ்த்தை பெற்று வருகிறார்.</p>]]></content>
            <updated>2026-09-12T07:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி யாழில் பேரணி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/international-justice-for-the-chemmani-mass-grave-1789197489"></link>
            <id>https://ibctamil.com/article/international-justice-for-the-chemmani-mass-grave-1789197489</id>
            <summary type="text">செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளை சர்வதேச சமூகம் முன்னெடுக்க
வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.நாளைய தினம...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளை சர்வதேச சமூகம் முன்னெடுக்க
வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p>நாளைய தினம் (12) நல்லூர் பகுதியில் அமைந்துள்ள, ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு அருகில் இருந்து ஆரம்பமாகவுள்ள பேரணி கிட்டுப்பூங்கா பகுதியில் நிறைவடையவுள்ளது.</p><p>செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து 583 மனித என்புக்கூடுகளும், சான்றுப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்</h2><p> </p><p>அவை தொடர்பில் சர்வதேச விசாரணைகள்
முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதற்கான சான்றாக செம்மணி மனிதப் புதைகுழி
காணப்படுகின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c94dcbff-cd20-4f35-b9b1-83ca5c7f8eff/26-6aa5009f43cf1.webp' /></p><p>இந்தநிலையில் அது தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்க வேண்டும் என
கோரியே பேரணி நடைபெறவுள்ளது.</p><p>குறித்த பேரணிக்கு ஆதரவு கோரி தமிழ் தேசிய பேரவையினாரால் நேற்றைய தினம் (11) சனிக்கிழமை துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
</p><p>
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பருத்தித்துறை நகர
பிதா டக்ளஸ் போல், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து
கொண்டு, வர்த்தகர்கள் மற்றும் மக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T07:40:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[களனி கங்கையிலிருந்து அடையாளம் தெரியாத சடலம் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/unidentified-body-recovered-from-kelani-river-1789186999"></link>
            <id>https://ibctamil.com/article/unidentified-body-recovered-from-kelani-river-1789186999</id>
            <summary type="text">களனி கங்கையிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த சடலம்&amp;nbsp;நேற்று (11) மாலை ஹங்வெல்ல காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஜல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>களனி கங்கையிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த சடலம்&nbsp;நேற்று (11) மாலை ஹங்வெல்ல காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஜல்தர பகுதியில் மீட்கபட்டுள்ளது&nbsp;&nbsp;</p><p>

ஹங்வெல்ல காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p> 

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை&nbsp;என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cd406bd-14aa-4970-b16a-877a818ac9ab/26-6aa5008137b1a.webp' /></p><p>சடலம் தொடர்பான நீதவான் விசாரணை நடாத்தப்படவுள்ளது</p><p>ஹங்வெல்ல காவல்துறையினர்
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T07:34:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்வேயில் இலங்கை வம்சாவளி பெண்ணுக்கு கிடைத்த உயர் பதவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sri-lankan-origin-woman-gets-top-norway-post-1789198392"></link>
            <id>https://canadamirror.com/article/sri-lankan-origin-woman-gets-top-norway-post-1789198392</id>
            <summary type="text">இலங்கை வம்சாவழியைச் சேர்ந்தவரும் நோர்வேயின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தருமான கம்சி குணரட்ணம், அந்நாட்டின் புதிய போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை வம்சாவழியைச் சேர்ந்தவரும் நோர்வேயின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தருமான கம்சி குணரட்ணம், அந்நாட்டின் புதிய போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>&nbsp;நோர்வே மன்னர் தலைமையில் நடைபெற்ற அரசாங்க சபைக் கூட்டத்தில், 2026 செப்டெம்பர் 11ஆம் திகதி கம்சி குணரட்ணம் போக்குவரத்து அமைச்சராக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டதாக நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d667326-a3ed-437d-a262-d79e39344d20/26-6aa500398df93.webp' /></p><p>
</p><p>
இதன் மூலம் நோர்வே அரசியலில் முக்கியமான அமைச்சுப் பதவியை வகிக்கும் தமிழ்ப் பின்னணியைக் கொண்ட அரசியல்வாதியாக கம்சி குணரட்ணம் உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
</p><p>
இளம் வயதிலேயே அரசியலில் ஈடுபட்ட கம்சி குணரட்ணம், தொழிலாளர் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி படிப்படியாக பல்வேறு அரசியல் பொறுப்புகளை வகித்து முன்னேறியுள்ளார்.</p><p> 19 வயதில் ஒஸ்லோ மாநகர சபைக்கு தெரிவான அவர், பின்னர் தேசிய அரசியலிலும் முக்கிய இடத்தைப் பெற்றார்.
</p><p>
தற்போது நோர்வே அரசாங்கத்தில் போக்குவரத்து அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கம்சி குணரட்ணம், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து, அஞ்சல் சேவைகள் உள்ளிட்ட துறைகள் தொடர்பான கொள்கைகளுக்கு பொறுப்பானவராக செயற்படவுள்ளார்.</p><p>அரசியல் செய்திகளை வாசி

கம்சியின் இந்த உயர்வு, அவரது அரசியல் பயணத்தில் முக்கியமான புதிய கட்டமாகவும், நோர்வே வாழ் தமிழர்கள் உள்ளிட்ட உலகத் தமிழர்களுக்கு பெருமைக்குரிய நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது.</p><p>

நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரே தலைமையிலான தற்போதைய அரசாங்கம் தொழிலாளர் கட்சி உறுப்பினர்களைக் கொண்டதாக அமைந்துள்ள நிலையில், கம்சி குணரட்ணம் போக்குவரத்து அமைச்சராக இடம்பெற்றுள்ளார்.
</p><p>
இதேவேளை, புதிய அமைச்சருக்கான மாநிலச் செயலாளர்களாக Abel Cecilie Knibe Kroglund மற்றும் Jakob Vorren ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நோர்வே அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-12T07:33:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலால் மகிந்தவாக மாற முடியாது - நிரோஷன் பாதுக்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/niroshan-statement-about-namal-and-mahinda-1789196019"></link>
            <id>https://tamilwin.com/article/niroshan-statement-about-namal-and-mahinda-1789196019</id>
            <summary type="text">நாமல், மகிந்த ராஜபக்சவின் மகனாக இருக்கலாம் அதற்காக ஒருபோதும் அவரால் மகிந்த ராஜபக்சவாக மாற முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழலுக்கு எதிரான இயக்கத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல், மகிந்த ராஜபக்சவின் மகனாக இருக்கலாம் அதற்காக ஒருபோதும் அவரால் மகிந்த ராஜபக்சவாக மாற முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் நிரோஷன் பாதுக்க தெரிவித்துள்ளார். </p><p>

கொழும்பில் நேற்றைய தினம் (11.09.2026) ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>நாமலால் மகிந்தவின் இடத்தை அடைய முடியாது</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், மகிந்த ராஜபக்ச என்பவர் முற்றிலும் ஒரு தனித்துவமான அரசியல் ஆளுமையையும் அடையாளத்தையும் கொண்டவராவார். 

எனவே, வெறும் வாரிசு என்ற தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு மகிந்த ராஜபக்சவின் அரசியல் ஆளுமையையோ அல்லது அவருக்குரிய இடத்தையோ நாமல் ராஜபக்சவினால் அடைந்துவிட முடியாது.
</p><p>
அத்துடன், நாமல் ராஜபக்சவும் அங்கம் வகித்த கடந்த அரசாங்கத்தின் தவறான நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் சீர்கேடான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாகவே இலங்கை நாடு முன்னெப்பொழுதுமில்லாதவாறு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d3cab32-45b3-4a4a-81d2-af7340da7192/26-6aa4fde93d858.webp' /></p><h2>ஆட்சி அதிகாரம்</h2><p> </p><p>

எனினும், நாடு எவ்வாறு இவ்வாறான வீழ்ச்சியைச் சந்தித்தது என்பதற்கான உண்மையான காரணங்களையோ அல்லது அதிலிருந்து மீண்டு வருவதற்கான சரியான தீர்வுகளையோ பற்றிய எந்தவொரு புரிதலும் தெளிவும் இல்லாத ஒரு தரப்பிடமே நாட்டின் பொதுமக்கள் தற்போதைய ஆட்சி அதிகாரத்தைக் கையளித்துள்ளனர். </p><p>

அதேவேளை, நாட்டின் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் தமக்குரிய பொறுப்புகளையும் கடமைகளையும் தாங்கள் சரியான முறையில் நிறைவேற்றி வருகிறோம்.</p><p> 

எதிர்க்கட்சியில் உள்ள ஏனைய அனைத்துக் குழுக்களும் தத்தமது அரசியல் இலக்குகளை நோக்கிப் பயணிப்பதற்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், நாட்டில் தற்போது உடனடியாகத் தேர்தல்கள் எதுவும் நடத்தப்படாத நிலையில், நாமல் ராஜபக்சவும் எதிர்க்கட்சியிலேயே தொடர்ந்தும் அங்கத்துவம் வகித்து வருகிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T07:29:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fill-academic-non-academic-vacancies-universities-1789195957"></link>
            <id>https://ibctamil.com/article/fill-academic-non-academic-vacancies-universities-1789195957</id>
            <summary type="text">பல்கலைக்கழகங்களில் வெற்றிடமாகவுள்ள கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு துணைவேந்தர்களுக்கு அறிவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்கலைக்கழகங்களில் வெற்றிடமாகவுள்ள கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
உயர்கல்வி பற்றிய ஆலோசனைக் உபகுழுவின் முன்னிலையில் துணைவேந்தர்கள் அழைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஆட்சேர்ப்புக்கு அனுமதி </h2><p>
</p><p>
நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் வெற்றிடமாகவுள்ள கல்வி மற்றும் கல்விசாரா பணியிடங்களை நிரப்புவதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c60f17c9-3bee-44f0-a426-83138c27f566/26-6aa4faf00b83f.webp' /></p><p>
</p><p>
எனினும், சில பல்கலைக்கழகங்களில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தாமதமடைந்துள்ளதாகச் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
இவ்வாறானதொரு பின்னணியில், தற்போது நாட்டில் 19 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T07:25:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் AfD-யின் வெற்றி... விளாடிமிர் புடின் சொன்ன காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/afd-win-caused-by-putin-says-1789197833"></link>
            <id>https://news.lankasri.com/article/afd-win-caused-by-putin-says-1789197833</id>
            <summary type="text">Putin says events in Europe caused by Western globalists: ஐரோப்பாவில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு மேற்கத்திய உலகளாவியவாதிகளே காரணம் என்று புடின்.
ஜேர்மன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Putin says events in Europe caused by Western globalists: ஐரோப்பாவில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு மேற்கத்திய உலகளாவியவாதிகளே காரணம் என்று புடின்.
</p><p>ஜேர்மனியில் மாகாணத் தேர்தல் ஒன்றில் தீவிர வலதுசாரிக் கட்சி வெற்றி பெற்றது உள்ளிட்ட ஐரோப்பாவில் நடைபெறும் நிகழ்வுகள், மேற்கத்திய நாடுகளில் உள்ள உலகளாவிய ஆதரவாளர்கள் (globalists) இழைத்த அமைப்புரீதியான தவறுகளின் விளைவே என்று விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.</p><h2>மேற்கத்திய மேல்தட்டு வர்க்கம்</h2><p>
இந்தியாவுக்கான தனது பயணத்தின் முதல் நாளில் செய்தியாளர்களிடம் பேசிய புடின், ரஷ்யா மீது தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததும், உக்ரைனை நேட்டோ (NATO) கூட்டணியில் இணைக்க முயன்றதுமே உக்ரைன் மோதலுக்குக் காரணம் என்று மேற்கத்திய நாடுகளைக் குற்றம் சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f5f5bfc-a10e-4420-b513-7ebee4509bd9/26-6aa4fe0b27889.webp' /></p><p> </p><p>ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் AfD கட்சி பெற்ற குறிப்பிடத்தக்க வெற்றி குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கப்போவதில்லை என்று ரஷ்ய ஜனாதிபதி கூறினார்; இருப்பினும், அத்தேர்தல் உட்பட ஐரோப்பியக் கண்டத்தில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு மேற்கத்திய மேல்தட்டு வர்க்கத்தினரே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார். </p><p>ஐரோப்பாவில் தற்போது நடந்து கொண்டிருக்கும் அனைத்தும், அடிப்படையில் மேற்குலகம் என்று அழைக்கப்படுபவர்களின், அதாவது அரசியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத் துறைகளைச் சேர்ந்த மேற்கத்திய உலகளாவியவாதிகளின் அமைப்புரீதியான தவறுகளின் விளைவே என்று நான் கருதுகிறேன் என்று புடின் கூறியுள்ளார்.</p><p></p><p> </p><p>மேலும், நேட்டோ அமைப்பின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்திற்கு ரஷ்யா தெரிவித்த எதிர்ப்பையும் மேற்கத்திய நாடுகள் புறக்கணித்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். </p><p>2014-இல் ரஷ்யாவுக்கு ஆதரவான ஜனாதிபதி ஒருவர் உக்ரைனிலிருந்து தப்பிச் செல்ல நிர்பந்திக்கப்பட்ட பிறகு, உக்ரைனை நேட்டோ (NATO) அமைப்பில் இணைப்பதையே மேற்கத்திய நாடுகள் உடனடியாகத் தங்கள் குறிக்கோளாகக் கொண்டதாக அவர் கூறினார். </p><p>இறுதியில், உக்ரைனில் இன்று நிகழ்ந்துவரும் துயரமான சம்பவங்களுக்கு இதுவே முக்கிய காரணமாக அமைந்தது என்றும் புடின் குறிப்பிட்டுள்ளார். இதற்குக் காரணமானவர்கள் மேற்கத்திய உலகளாவிய மேல்தட்டு வர்க்கத்தினரே; ஆனாலும், அவர்கள் தொடர்ந்து பழி முழுவதையும் எங்கள் மீதே சுமத்தி வருகிறார்கள் என்றார். </p><p>ஐரோப்பாவில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன் என குறிப்பிட்ட புடின், அதனால்தான் ஜேர்மனியில் இத்தகைய முடிவுகளும், ஒட்டுமொத்த ஐரோப்பாவிலும் இத்தகைய போக்குகளும் காணப்படுகின்றன என்றார்.</p><h2>அச்சுறுத்தல் எதுவும் இல்லை</h2><p> </p><p>சோவியத் ஒன்றிய காலத்திலிருந்தே உருவானதாகக் கூறப்படும் ரஷ்யாவின் போலியான அச்சுறுத்தலைக் காட்டி மேற்கத்திய நாடுகள் தங்கள் மக்களை அச்சுறுத்தி வருவதாக குறிப்பிட்ட புடின், ஆனால், அத்தகைய அச்சுறுத்தல் எதுவும் இல்லை; ஒருபோதும் இருந்ததும் இல்லை என்றார். </p><p>இந்தியாவில் சனிக்கிழமை தொடங்கவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் ஆகியோருடன் புடினும் பங்கேற்கவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2191d23-8d6b-4424-b196-1e6a44036e9a/26-6aa4fe0bd122a.webp' /></p><p> </p><p>இதனிடையே, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதாகவும் ரஷ்யாவுடனான உறவுகளை மீட்டெடுப்பதாகவும் உறுதியளித்த AfD கட்சி, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் முதலிடம் பிடித்தது. </p><p>ஆனால், அரசாங்கத்தை அமைக்க, AfD கட்சி தற்போது பிற கட்சிகளிலிருந்து விலகி வருபவர்களை ஈர்க்க வேண்டும் அல்லது தீவிர இடதுசாரிச் சிந்தனை கொண்ட சிறிய கட்சியான BSW-உடன் ஓர் உடன்பாட்டை எட்ட வேண்டும் என்ற நிலையில் உள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-12T07:20:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைமன்னாரில் மணல் திட்டில் சிக்கிய இந்தியச் சிறுவன் ; பாதுகாப்பாக மீட்ட இலங்கைக் கடற்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-boy-stranded-on-sandbar-in-talaimannar-1789197264"></link>
            <id>https://jvpnews.com/article/indian-boy-stranded-on-sandbar-in-talaimannar-1789197264</id>
            <summary type="text">தலைமன்னாருக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் மணல் திட்டில் வழிதவறிச் சிக்கித் தவித்த 17 வயதுடைய இந்தியச் சிறுவன் ஒருவரை இலங்கைக் கடற்படையினர் வெள்ளிக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தலைமன்னாருக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் மணல் திட்டில் வழிதவறிச் சிக்கித் தவித்த 17 வயதுடைய இந்தியச் சிறுவன் ஒருவரை இலங்கைக் கடற்படையினர் வெள்ளிக்கிழமை (11) பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
வட மத்திய கடற்படை கட்டளைக்குச் சொந்தமான 'இலங்கை கடற்படைக் கப்பல் தம்மென்னா' நிறுவனத்தின் கடற்படையினர் அப்பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, மணல் திட்டில் நபர் ஒருவர் சிக்கியிருப்பதை அவதானித்துள்ளனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12109707-4025-468e-a403-f9f1bc2eecd5/26-6aa4fbd1a35a2.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;சட்ட&nbsp; நடவடிக்கை</h2><p style="text-align: justify;">தெற்காசிய உடைகளைத் தேர்ந்தெடு

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், அச்சிறுவன் தென்னிந்தியப் பகுதியிலிருந்து படகு மூலம் வருகை தந்து, வழியறியாமல் மணல் திட்டில் சிக்கியது கண்டறியப்பட்டது.
</p><p style="text-align: justify;">

மீட்கப்பட்ட சிறுவன் கடற்படையினரால் 'தம்மென்னா' முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவருக்குத் தேவையான குடிநீர், உணவு உள்ளிட்ட மனிதநேய உதவிகள் வழங்கப்பட்டன.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
தற்போது அச்சிறுவனை மேலதிக சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-12T07:19:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த தலைமையிலான பேரணியில் பங்கேற்க போவதில்லை.. சாமர தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chamara-not-participating-anuradhapura-rally-1789196864"></link>
            <id>https://tamilwin.com/article/chamara-not-participating-anuradhapura-rally-1789196864</id>
            <summary type="text">இன்று அனுராதபுரத்தில் நடைபெறும் பொதுஜன பெரமுனவின் பேரணியில் தான் பங்கேற்க போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சமர சம்பத் தஸ்ஸநாயக்க தெரிவித்தார்.குறித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று அனுராதபுரத்தில் நடைபெறும் பொதுஜன பெரமுனவின் பேரணியில் தான் பங்கேற்க போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சமர சம்பத் தஸ்ஸநாயக்க தெரிவித்தார்.</p><p>குறித்த பேரணியில் கலந்துகொள்வதற்கான அழைப்பு தனக்கோ அல்லது இலங்கை சுதந்திரக் கட்சிக்கோ&nbsp; கிடைக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.&nbsp;</p><p>
இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுராதபுரத்திலேயே இருந்தபோதிலும், அவருக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படாததால், தன்னால் அந்த நிகழ்வில் கலந்துகொள்ள முடியவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.</p><h2>அழைப்பு விடுக்கவில்லை..&nbsp;</h2><p>
</p><p>மேலும் அவர், "இன்றைய பேரணியில் ஏராளமான மக்கள் கலந்துகொள்கின்றனர். அவர்கள் எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fa39cbc-bd19-451a-93dd-e484d6275e71/26-6aa4fbc8dd0c7.webp' /></p><p> </p><p>அனுராதபுரப் பேரணியில் எங்கள் தரப்பினர் கலந்துகொள்ள வேண்டும் என்று நான் நாடாளுமன்றத்திலேயே குறிப்பிட்டிருந்தேன்; இருப்பினும், இதுவரை இலங்கை சுதந்திரக் கட்சிக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை.</p><p>விமல் வீரவன்ச மற்றும் பிறருக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அனுராதபுரத்தில் இருக்கிறார்; அவருக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில் என்னால் அங்கு செல்ல முடியாது. </p><p>இது எதிர்க்கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பிரம்மாண்டமான பேரணியாகும். வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிலான மக்கள் கூட்டத்தை, அதாவது ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோரை ஈர்க்கவுள்ள இந்தப் பேரணி வெற்றிபெற நான் வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T07:18:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவு உணவு சாப்பாட்டுக்கு பின்னர் 10 நிமிட நடைப்பயிற்சி அவசியம் ஏன்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/10-mins-walking-after-eating-1789197041"></link>
            <id>https://manithan.com/article/10-mins-walking-after-eating-1789197041</id>
            <summary type="text">10 Mins Walking After Eating: இன்றைய காலகட்டத்தில் இரவு உணவை பெரும்பாலானவர்கள் தாமதமாக சாப்பிடுகின்றனர், அதுவும் மிட் நைட் பிரியாணி பல நகரங்களில் டிரெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>10 Mins Walking After Eating: இன்றைய காலகட்டத்தில் இரவு உணவை பெரும்பாலானவர்கள் தாமதமாக சாப்பிடுகின்றனர், அதுவும் மிட் நைட் பிரியாணி பல நகரங்களில் டிரெண்டாகி வருகிறது.
</p><p>
ருசிக்காக அதை சாப்பிட்டாலும் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் அதிகம்.
</p><p>
இரவு உணவு என்பது 7-8 மணிக்குள் சாப்பிட்டு முடித்தாக வேண்டும், இதுவே ஆரோக்கியமான பழக்கம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
</p><p>
அதிலும் முக்கியமாக இரவு உணவை முடித்தபின், அப்படியே அமர்ந்திருக்காமல் குறைந்தது 10 நிமிடமாவது மிதமான நடைப்பயிற்சி செய்தாக வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac11038f-03d3-4abf-af40-9e4f735b8561/26-6aa4fc7a05255.webp' /><br></p><p>

இது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா?
</p><p>
இரவு உணவை முடித்தவுடன் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிக்கும், அதாவது கார்போஹைட்ரேட்டுகள் செரிமானம் ஆகும் போது குளுக்கோஸ் ரத்தத்தில் கலக்கத் தொடங்குகிறது.
</p><p>
உணவின் அளவு, கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம் ஆகியவற்றை பொறுத்து சர்க்கரை அளவு அதிகபட்சத்தை அடையும் நேரம் மாறுபடலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c996452-a427-4b76-bac2-30c7b93e3167/26-6aa4fc7951ed3.webp' /><br></p><p>

அதுவே நாம் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது தசைகள் தொடர்ந்து வேலை செய்வதால் அதற்கு தேவையான ஆற்றலை நம் உடல் எடுத்துக்கொள்ளும்.
</p><p>
இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது குறையும், இதற்காக வேகமாக நடப்பதோ ஓடுவதோ அவசியமில்லை, மிதமான நடைப்பயிற்சியே போதுமானது.</p><p>

உணவை முடித்தபின்னர் 10 நிமிடங்கள் காத்திருந்து மிதமான நடைப்பயிற்சியை தொடங்கலாம்.<br></p>]]></content>
            <updated>2026-09-12T07:17:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதி ஆலயத்தில் நள்ளிரவில் சிறுவனுக்கு அரங்கேறிய சம்பவத்தால் பரபரப்பு ; கதறும் உறவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/temple-festival-boy-s-fate-at-midnight-1789187556"></link>
            <id>https://jvpnews.com/article/temple-festival-boy-s-fate-at-midnight-1789187556</id>
            <summary type="text">மட்டக்களப்பு, கிரான் கூளாக்காடு சித்தி விநாயகர் ஆலய உற்சவத்தின் போது வெடிக்க வைத்த வெடி வெடிக்காததால், அதனைப் பார்க்கச் சென்ற 13 வயதுச் சிறுவன் அது வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பு, கிரான் கூளாக்காடு சித்தி விநாயகர் ஆலய உற்சவத்தின் போது வெடிக்க வைத்த வெடி வெடிக்காததால், அதனைப் பார்க்கச் சென்ற 13 வயதுச் சிறுவன் அது வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். </p><p style="text-align: justify; ">

இச்சம்பவம் நேற்று&nbsp; இரவு 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d3308bc-c33e-407d-afc0-9b008a0ac8b0/26-6aa4d61906cf4.webp' /></p><h2 style="text-align: justify; ">இரவு பூஜை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify;">

கிரான் கூளாக்காட்டைச் சேர்ந்த 13 வயதுச் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். </p><p style="text-align: justify;">

குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இடம்பெற்று வரும் நிலையில், சம்பவ தினமான நேற்று இரவு பூஜை வழிபாடுகளின் போது பெரிய வெடி ஒன்று வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"> எனினும், அது உடனடியாக வெடிக்காததால் அதனை அப்புறப்படுத்தி தூக்கி வீசியுள்ளனர். </p><p style="text-align: justify;">

அவ்வாறு வீசப்பட்ட வெடியைப் பார்ப்பதற்காக அச்சிறுவன் அருகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அது வெடித்துச் சிதறியுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">

இதில் படுகாயமடைந்த சிறுவனை உடனடியாக வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;"> 

உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-12T07:16:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நடுவீதியில் வெட்டிக்கொல்லப்பட்ட இளம் குடும்பஸ்தர் ; பொலிஸார் காட்டிய அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-father-hacked-to-death-on-jaffna-street-1789196456"></link>
            <id>https://jvpnews.com/article/young-father-hacked-to-death-on-jaffna-street-1789196456</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்ப்பாணம் வடமராட்சி, கிராமக்கோடு சந்திக்கு அருகில் முன்பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;யாழ்ப்பாணம் வடமராட்சி, கிராமக்கோடு சந்திக்கு அருகில் முன்பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "> எனினும், சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f6a6e37-199a-44b3-83d1-2e49a7352dcc/26-6aa4f8a9e9d87.webp' /></p><h2 style="text-align: justify; ">முன்பகைமை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், துன்னாலை பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஜெயசீலன் ஜெனிதன் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">


துன்னாலை பகுதியைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த பகைமை காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p style="text-align: justify; ">

மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் அடங்கிய குழுவினர், ஜெனிதனை வழிமறித்து சரமாரியாக வெட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், சந்தேகநபர்கள் மூவர் முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் அவர்களைக் கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">



கைது செய்யப்பட்ட மூவரும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். </p><p style="text-align: justify; ">அதேவேளை, தலைமறைவாகியுள்ள பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்கான தொடர் விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-12T07:15:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை கர்ப்பம், குவியும் வாழ்த்துக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/pandian-stores-actress-reveals-her-pregnancy-1789196410"></link>
            <id>https://cineulagam.com/article/pandian-stores-actress-reveals-her-pregnancy-1789196410</id>
            <summary type="text">&amp;nbsp;பாண்டியன் ஸ்டோர்ஸ்பாண்டியன் ஸ்டோர்ஸ் தமிழ் சீரியல் உலக ரசிகர்களின் மிக பேவரட் சீரியல். இந்த சீரியல் வெற்றியால் தான் தற்போது இரண்டாவது சீசனும் தொ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>&nbsp;பாண்டியன் ஸ்டோர்ஸ்</h2><p>பாண்டியன் ஸ்டோர்ஸ் தமிழ் சீரியல் உலக ரசிகர்களின் மிக பேவரட் சீரியல். </p><p>இந்த சீரியல் வெற்றியால் தான் தற்போது இரண்டாவது சீசனும் தொடங்கியது, அதுவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. </p><p>அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸில் நடிக்கும் அனைத்து நடிகைகளுக்குமே மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது, அவர்கள் பலரும் இணையத்தில் மிகப்பெரிய இன்புலன்ஸ் நபர்களாக இருந்து வருபவர்கள்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc6eb476-5021-4b08-ab25-2180a2cbf61b/26-6aa4f87cc3373.webp' /></p><p>இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-வில் வரும் அரசி தற்போது செம ஹாப்பி நியூஸ் ஒன்றை அறிவித்துள்ளார். ஆம், அரசி கதாபாத்திரத்தில் நடிக்கும் சத்யா தான் கர்ப்பமாக இருப்பதை கியூட் வீடியோ ஒன்றின் மூலம் தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட, பல சீரியல் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-12T07:12:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/earthquake-strikes-indonesia-s-java-region-1789194178"></link>
            <id>https://ibctamil.com/article/earthquake-strikes-indonesia-s-java-region-1789194178</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.<br></p><p>இந்த நிலநடுக்கம் இன்று (12) சனிக்கிழமை அதிகாலை 04:23 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, ஜகார்த்தாவின் ஆயிரம் தீவுகளுக்கு வடகிழக்கே 69 கிலோமீற்றர் தொலைவில், ஜாவா கடலில் 368 கிலோமீற்றர் ஆழத்தில் அமைந்திருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><h2>நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள்&nbsp;</h2><p> </p><p>இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி பேரலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை என இந்தோனேசிய வளிமண்டலவியல், காலநிலை மற்றும் புவிப்பௌதிகவியல் முகவரகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfc109f0-7e35-4dc1-9d0c-6a4c1f761107/26-6aa4f98ef16b8.webp' /></p><p>இந்தச் சம்பவத்தால் இதுவரை உயிரிழப்புகளோ அல்லது கட்டட சேதங்களோ ஏற்பட்டதாக எந்தவித அதிகாரப்பூர்வத் தகவலும் வெளியாகவில்லை.</p><p>
ஜகார்த்தா, பாந்தென், மேற்கு ஜாவா மற்றும் சுமாத்ராவின் பாலம்பாங், பெங்குலு, லம்பங் உள்ளிட்ட பல பகுதிகளில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வலுவாக உணரப்பட்டுள்ளன.</p><p>


தொடர் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T07:05:50+00:00</updated>
        </entry>
    </feed>
