<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-16T10:14:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய் சேதுபதி மீது வசைபாடுபவர்கள் நிறுத்தவேண்டும் - சீமான் வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/seeman-condemnattack-vijay-sethupathy-in-bigg-boss-1789546736"></link>
            <id>https://ibctamilnadu.com/article/seeman-condemnattack-vijay-sethupathy-in-bigg-boss-1789546736</id>
            <summary type="text">Seeman Condemns TVK Cadres for Criticizing Vijay Sethupathi- பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் இரண்டாவது வாரத்தில் சட்டசபையை மையமாகக் கொண்ட நிகழ்ச்சி நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Seeman Condemns TVK Cadres for Criticizing Vijay Sethupathi- பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் இரண்டாவது வாரத்தில் சட்டசபையை மையமாகக் கொண்ட நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. </p><p>

இதற்காக ஜனநாயக அறை திறக்கப்பட்டு போட்டியாளர்கள் ஆளும் அணி, எதிர் அணி என இரு பிரிவுகளாக செயல்படுகின்றனர்.</p><p> 

ஆளும் அணியினர் செய்யும் தவறுகளை எதிர் அணியினர் சுட்டிக்காட்ட வேண்டும்.
</p><p>
ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் நடிகர் விஜய் சேதுபதி போட்டியாளர்களுடன் கலந்துரையாடி, நிகழ்ச்சி மற்றும் போட்டியாளர்களின் நிறை, குறைகளை அவர் சுட்டிக்காட்டுவார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6767ef0-a27d-4ff4-b243-06de08f42cd9/26-6aaa50f23b07d.webp' /></p><p>இந்நிலையில், தலைமைப் பண்பு குறித்து பேசிய விஜய் சேதுபதி, தலைமைத்துவம் என்றால் என்னவென்று தெரியாமல் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை வழங்கிவிட்டு, பிரச்சனைகள் மற்றும் பொறுப்புகள் வரும்போது எதிரணியினர் மீது பழியைப் போட்டுவிட்டு ஓடுவது தலைவருக்கான தகுதி இல்லை எனத் தெரிவித்தார்.
</p><p>
விஜய் சேதுபதி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவர் முதலமைச்சர் விஜய்யை தாக்கிப் பேசியதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p><p> 

இதனால் ஆத்திரமடைந்த தவெக தொண்டர்கள் விஜய் சேதுபதிக்கு எதிராக சமூக வலைதளங்களில் விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
</p><p>
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுகுறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
</p><h2>
வெளியிட்டு பதிவு&nbsp; &nbsp;&nbsp;</h2><p>பிக்பாஸ் 10 தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களிடையே நடைபெற்ற விளையாட்டுச் சூழலை முன்வைத்து தலைமைத்துவம், பொறுப்புணர்வு, அதிகாரம் ஆகியவை குறித்து அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி விஜய் சேதுபதி அவர்கள் தெரிவித்த பொதுவான கருத்துகளை, முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு எதிராகப் பேசியதாகத் தாங்களாகவே பொருள் கற்பித்துக்கொண்டு, தவெகவினர் அவரை மிகக் கடுமையாக விமர்சித்தும் இழிவுபடுத்தியும் வருவது கடும் கண்டனத்திற்குரியது.&nbsp;</p><p>தம்பி விஜய்சேதுபதி யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை; எந்த அரசியல் கட்சியையும் சுட்டிக்காட்டவில்லை. ஒரு விளையாட்டில் உருவான சூழலை வைத்து தலைமைத்துவம் குறித்த தனது கருத்தைச் சொல்கிறார். அதனை உடனடியாகத் தங்களது தலைவரோடு பொருத்திப் பார்த்து, கருத்து சொன்னவரையே தாக்க முற்படுவது ஏன்?</p><p>மற்ற எந்த கட்சிக்கும் வராத கோபம் அமைச்சர் தொடங்கி தொண்டர் வரை தவெகவினருக்கு மட்டும் வருவது ஏன்?</p><p>
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr"><a href="https://x.com/hashtag/BiggBoss10?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BiggBoss10</a> தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களிடையே நடைபெற்ற விளையாட்டுச் சூழலை முன்வைத்து தலைமைத்துவம், பொறுப்புணர்வு, அதிகாரம் ஆகியவை குறித்து அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி விஜய் சேதுபதி அவர்கள் தெரிவித்த பொதுவான கருத்துகளை, முதலமைச்சர்… <a href="https://t.co/35RzihSat7">pic.twitter.com/35RzihSat7</a></p>&mdash; செந்தமிழன் சீமான் (@Seeman4TN) <a href="https://x.com/Seeman4TN/status/2099833952609644967?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>தலைமைத்துவம் குறித்த பொதுவான ஒரு கருத்தே தங்களை இவ்வளவு கோபப்படுத்துகிறதென்றால், ஜனநாயகத்தில் எழும் நேரடி விமர்சனங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?
</p><p>
இதுதான் நீங்கள் பேசிவரும் மாற்று அரசியலா?
</p><p>இதுதான் உங்கள் அரசியல் பண்பாடா?
</p><p>இதுதான் உங்கள் ஜனநாயக மாண்பா?
</p><p>இவ்வளவு தான் உங்கள் சகிப்புத்தன்மையா?&nbsp;</p><p>ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்ல; கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை உண்டு. அந்தக் கருத்து நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அதனை மறுத்துப் பேசலாம்; எதிர்வாதம் செய்யலாம். ஆனால், கூட்டமாகச் சென்று தனிநபரை வசைபாடுவதும், மிரட்டுவதும், அவதூறு செய்வதும் ஜனநாயக அரசியல் பண்பல்ல.</p><p>அரசியலுக்கு வந்த பிறகு பாராட்டுகளை மட்டும் எதிர்பார்க்க முடியாது. விமர்சனங்களையும் கேள்விகளையும் எதிர்கொண்டே ஆக வேண்டும். அதிகாரம் என்பது விமர்சனத்திலிருந்து பாதுகாக்கும் கவசம் அல்ல; விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு.
</p><p>எனவே, தம்பி விஜய் சேதுபதியின் பொதுவான கருத்தை, தங்கள் மீதான விமர்சனம் என தவறாகப் பொருள்கொண்டு அவரை இழிவுபடுத்துவதையும், வசைபாடுவதையும், தனிப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாக்குவதையும் தொடர்புடையவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். </p><p>
தனக்குப் பிடித்த கருத்தை மட்டுமே மற்றவர்கள் பேசவேண்டும் என நினைப்பது ஜனநாயகம் அல்ல. தனக்கு எதிரான கருத்தையும் பேச அனுமதித்து, அதற்கு கருத்தால் பதில் சொல்வதுதான் ஜனநாயகம்!
</p><p>ஜனநாயகன் என்று படம் எடுத்தால் மட்டும் போதாது... உண்மையான ஜனநாயகத்தைப் போற்றி அதன் மாண்புகளைக் காக்க வேண்டும். </p><p>
கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளுங்கள்!</p><p>
கேள்விக்குப் பதிலால் எதிர்வினையாற்றுங்கள்!
</p><p>வசையாலும் மிரட்டலாலும் கருத்துரிமையை முடக்க முற்படாதீர்கள்!&nbsp; என தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-16T10:10:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானில் ஸ்மார்ட் லாக்டவுன் திட்டம் - எரிபொருள் விலை உயர்வால் மக்கள் அவதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pakistan-plans-smart-lockdown-amid-fuel-crisis-1789553601"></link>
            <id>https://news.lankasri.com/article/pakistan-plans-smart-lockdown-amid-fuel-crisis-1789553601</id>
            <summary type="text">Pakistan Plans Smart Lockdown Amid Fuel Crisis: பாகிஸ்தானில் ‘ஸ்மார்ட் லாக்டவுன்’ திட்டம் அறிவிக்கப்படவுள்ளது.

ஸ்மார்ட் லாக்டவுன்பாகிஸ்தானில் எரிபொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Pakistan Plans Smart Lockdown Amid Fuel Crisis: பாகிஸ்தானில் ‘ஸ்மார்ட் லாக்டவுன்’ திட்டம் அறிவிக்கப்படவுள்ளது.</p><h2>

ஸ்மார்ட் லாக்டவுன்</h2><p>பாகிஸ்தானில் எரிபொருள் விலை அதிகரிப்பால் மக்களின் வாழ்க்கைச் செலவு கடுமையாக உயர்ந்துள்ளது. இதை சமாளிக்க அரசு ‘ஸ்மார்ட் லாக்டவுன்’ என்ற புதிய திட்டத்தை பரிசீலித்து வருகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d6eb266-1fdf-4499-a939-637c8549c4f8/26-6aaa6bc349278.webp' /></p><p>இந்த திட்டத்தின் கீழ் வாரத்தில் நான்கு நாள் வேலை, அலுவலகங்களில் மாறி மாறி பணியாற்றும் முறைகள், மற்றும் சந்தைகள், வணிக வளாகங்கள் முன்கூட்டியே மூடுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.
</p><p>
பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் பல்வேறு யோசனைகள் விவாதிக்கப்பட்டன.</p><p></p><p> தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.384.34, டீசல் விலை ரூ.415.83-ஆக உயர்ந்துள்ளது.

மேலும், சவுதி அரேபியாவின் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல், ஹார்முஸ் நீரிணை மற்றும் பாப்-எல்-மண்டெப் பகுதியில் ஏற்பட்ட பதற்றம் ஆகியவை உலகளாவிய எண்ணெய் விலையை அதிகரித்துள்ளன. இதனால் பாகிஸ்தானின் எரிசக்தி பாதுகாப்பு சவாலுக்கு உள்ளாகியுள்ளது.</p><p>அரசு, PM’s Fuel Relief Scheme மூலம் மக்களுக்கு சலுகை பெட்ரோல் வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ், மோட்டார் சைக்கிள் பயணிகள் வாரத்திற்கு 5 லிட்டர், கார் பயணிகள் 10 நாட்களுக்கு ஒருமுறை 10 லிட்டர் சலுகை பெட்ரோல் பெறலாம்.
</p><p></p><p>எனினும், அமைச்சரவை உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. சிலர் ‘ஸ்மார்ட் லாக்டவுன்’ குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாக கூறினாலும், சிலர் அதனை மறுத்துள்ளனர்.
</p><p>
பாகிஸ்தான் அரசு, தினசரி எரிபொருள் விலை நிர்ணய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாராந்திர முறையை மாற்றி, உலகளாவிய எண்ணெய் விலை மாற்றங்களை உடனுக்குடன் பிரதிபலிக்கிறது.
</p><p>
இந்த நடவடிக்கைகள், எரிபொருள் பயன்பாட்டை குறைத்து, மக்களின் சுமையை ஓரளவு குறைக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T10:10:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல பாடசாலையின் உயர்தர மாணவர்கள் மீது தாக்குதல்…! இளைஞர்குழு அட்டகாசம்…!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/attack-students-from-a-prominent-school-1789552781"></link>
            <id>https://ibctamil.com/article/attack-students-from-a-prominent-school-1789552781</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை மாணவர்கள் மீது குழு ஒன்று
தாக்குதல் மேற்கொண்டதில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை மாணவர்கள் மீது குழு ஒன்று
தாக்குதல் மேற்கொண்டதில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
குறித்த சம்பவம் நேற்றுமதியம்(15) இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும்
தெரியவருகையில்…
</p><p>
நேற்றையதினம் குறித்த இரு மாணவர்களும் பாடசாலைமுடிவடைந்து வீடு செல்ல
முற்பட்டபோது பாடசாலைக்கு வெளியே நின்றிருந்த 10ற்கும் மேற்பட்டவர்களை கொண்ட
இளைஞர்குழு அவர்கள்மீது சரமாரியான தாக்குதலை மேற்கொண்டுள்ளது.</p><h2>வவுனியா வைத்தியசாலையில் அனுமதி</h2><p>&nbsp;இதில் உயர்தரத்தில் பயிலும் இரண்டு மாணவர்கள் காயமடைந்தநிலையில் வவுனியா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff0b90f6-dc84-487f-a294-91b081fe2235/26-6aaa6a92da239.webp' /></p><p>
</p><p>
வவுனியா நகரை அண்மித்த பாடசாலைகளில் பாடசாலை முடிவடைகின்ற நேரங்களில் அதற்கு
தொடர்பில்லாத இளைஞர்கள் குழுவாக வந்துநிற்கும் நிலைமை தொடர்ச்சியாக
அவதானிக்கமுடிகின்றது.</p><p></p><h2>உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்து</h2><p> அவர்களால் அந்தப்பகுதிகளில் குழுமோதல் சம்பவங்களும்
இடம்பெற்றுவருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d8ba425-e267-4521-80e2-0767e2d47467/26-6aaa6a938e30e.webp' /></p><p>

எனவே இந்த விடயம் தொடர்பாக பாடசாலைநிர்வாகமும்,காவல்துறையினரும் உரிய நடவடிக்கைகளை
எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T10:08:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றம் அழைத்து வரப்பட்ட நாமல் ராஜபக்ஷ; மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-brought-to-court-heavy-securit-1789549991"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-brought-to-court-heavy-securit-1789549991</id>
            <summary type="text">

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (16)...</summary>
            <content type="html"><![CDATA[<p>

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது. </p><p>

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்ததில் சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைவாக, சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba539dbc-b101-48ea-99fe-ddea1c80d261/26-6aaa5da8e1dc6.webp' /></p><p> </p><p>

இந்நிலையிலேயே அவருக்கு மீண்டும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரின் பிணைக் கோரிக்கை தொடர்பான தீர்மானமும் அன்றைய தினமே அறிவிக்கப்படும் என்றும் நீதவான் தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p><b>முதலாம் இணைப்பு</b></p><p>&nbsp; ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் எயார்பஸ் வானூர்தி கொள்முதல் விவகாரத்தில் இடம்பெற்ற நிதி முறைகேடு தொடர்பான வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள <a href="https://jvpnews.com/article/namal-rajapaksa-to-appear-in-court-today-1789534614" target="_blank">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்</a>ஷ, சிறைச்சாலை அதிகாரிகளினால் இன்று (16) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.</p><p></p><p>

ஏற்கனவே கையூட்டல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அவர் இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.&nbsp;&nbsp;</p><p>முன்னதாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமையவே சிறைச்சாலை அதிகாரிகளால் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

 

இந்த வழக்கு விசாரணை இன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் பசந்த அமரசேன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T10:07:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் எரிபொருள் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-inflation-hits-3-1-pct-as-fuel-prices-surge-1789547265"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-inflation-hits-3-1-pct-as-fuel-prices-surge-1789547265</id>
            <summary type="text">UK inflation hits 3.1 Percent as fuel prices surge: பிரித்தானியாவில் எரிபொருள் விலை உயர்வால் பணவீக்கம் 3.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பிரித்தானியாவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK inflation hits 3.1 Percent as fuel prices surge: பிரித்தானியாவில் எரிபொருள் விலை உயர்வால் பணவீக்கம் 3.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.</p><h2>

பிரித்தானியாவில் பணவீக்கம்</h2><p>பிரித்தானியாவில் ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 3.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில் இது 2.9 சதவீதமாக இருந்த நிலையில், எரிபொருள் விலை கிட்டத்தட்ட 23 சதவீதம் அதிகரித்ததால் பணவீக்கம் மீண்டும் உயர்ந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f57b2d84-45d5-4d49-b2ba-73557d79fea8/26-6aaa530364b09.webp' /></p><p>தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.1 பென்ஸ் உயர்ந்து 161.3 பென்ஸ் ஆகியுள்ளது. டீசல் விலை 14.2 பென்ஸ் உயர்ந்து 181.8 பென்ஸ் ஆகியுள்ளது. </p><p>இதனால் பொதுமக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்து, குடும்பங்களும் வணிகங்களும் கடுமையான அழுத்தத்தை சந்தித்து வருகின்றன.

மேலும், விமான கட்டணங்களும் 6.2 சதவீதம் உயர்ந்துள்ளன. </p><p>எரிபொருள் விலை உயர்வு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் பொருட்களின் விலையையும் அதிகரித்துள்ளது.
</p><p></p><h2>போரின் தாக்கம்</h2><p>மத்திய கிழக்கில் நடைபெறும் போரின் தாக்கம் காரணமாக எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 108 டொலருக்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால் உலகளாவிய நிதி சந்தைகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
</p><p>
இங்கிலாந்து வங்கி வட்டி விகிதம் குறித்த முக்கிய முடிவை எடுக்கத் தயாராகி வருகிறது. அதிகரித்து வரும் பணவீக்கம், கடன் வாங்கும் செலவுகள், மற்றும் அரசின் பட்ஜெட் திட்டங்கள் மக்கள் வாழ்வில் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.</p><p>
</p><p></p><p>பிரித்தானியாவின் சேன்சலர் ஜான் ஹீலி, மின்சார கட்டண வரி குறைப்பு, பஸ் கட்டணத்தை 2 பவுண்டாக நிர்ணயம் செய்தல், மற்றும் சமூக இடங்களுக்கு வரி சலுகை அளித்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் குடும்பங்களுக்கு உதவுவதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
பிரித்தானிய பொருளாதாரம் சவால்களை எதிர்கொண்டு கொண்டிருந்தாலும், அரசு வளர்ச்சியை உறுதியாக முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T10:05:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றத்தில் இருந்து வெளியேறும் போது நாமல் வெளியிட்ட விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/what-namal-said-while-leaving-the-court-1789551409"></link>
            <id>https://tamilwin.com/article/what-namal-said-while-leaving-the-court-1789551409</id>
            <summary type="text">அதிகாரிகளுக்கு பிரச்சினை வரும் என்பதால், உங்களுடைய கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை என்று பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிகாரிகளுக்கு பிரச்சினை வரும் என்பதால், உங்களுடைய கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை என்று பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இருந்து சிறைச்சாலை&nbsp; பேருந்தில் திரும்பிச் செல்லும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>நீதிமன்ற உத்தரவு&nbsp;</h2><p>சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொள்முதல் வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச இன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.&nbsp;</p><p>இதனையடுத்து, எதிர்வரும் 23ஆம் திகதி வரை நாமல் ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40a430a5-2c16-4b0b-8727-3bd36e538eed/26-6aaa69d81503e.webp' /></p><p>நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் சிறைச்சாலை பேருந்தில் நாமல் ராஜபக்ச அழைத்துச் செல்லப்படும்போது ஊடகவியலாளர்கள்&nbsp; நாமல் ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.</p><p>இதற்குப் பதிலளித்த நாமல் ராஜபக்ச, “உங்களுடைய கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியும், ஆனால், அதிகாரிகளுக்கு(சிறைக்கு அழைத்து வந்த அதிகாரிகள்) பிரச்சினை வரும் என்பதால் பதிலளிக்க முடியவில்லை” என தெரிவித்துச் சென்றுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T10:05:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதுக்குடியிருப்பில் அதிகரிக்கும் மணற்கொள்ளை.. ரவிகரன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pudhukudiyiruppu-sand-smuggling-raviharan-mp-1789551867"></link>
            <id>https://tamilwin.com/article/pudhukudiyiruppu-sand-smuggling-raviharan-mp-1789551867</id>
            <summary type="text">புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில்
சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள்
அதிகரித்துள்ளதாக&amp;n...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில்
சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள்
அதிகரித்துள்ளதாக&nbsp; வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்&nbsp;சுட்டிக்காட்டினார்.&nbsp;</p><p>முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று (15.09.2026) இடம்பெற்றது.&nbsp;</p><p>இக்கூட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகளவில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரால் வெளிப்படுத்தப்பட்டது.&nbsp;&nbsp;</p><h2>பாதுகாப்பற்ற நிலை..&nbsp;</h2><p>இதன்போது,&nbsp; கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், ”பொலிஸாரால் குறித்த சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த
முடியாதெனில் எமது இளைஞர், யுவதிகளிடம் ஆயுங்களைக் கையளித்தால் அவர்கள்
சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6dbc9e4-6038-4993-83e4-65ce04d72937/26-6aaa67c0ae1d6.webp' /></p><p>தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் சட்டவிரோத செயற்பாடுகள்
இருந்திருக்கவில்லை, நடுநிசியில் கூட பெண்கள் உலவக்கூடிய
நிலையிலிருந்தது, தற்போது அத்தகைய
நிலை இல்லை" என்றார்.&nbsp;</p><p>இதன்போது புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் கருத்துத் தெரிவிக்கையில், "சட்டவிரோத மணல் அகழ்வென்பது முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய
பிரச்சினையாகவுள்ளது.</p><p>
விசுவமடு நெத்தலியாறு தொடக்கம் மன்னாகண்டல் கெருடமடுவரைக்கும் சட்டவிரோத மணல்
அகழ்வு மிக அதிகளவில் இடம்பெற்று வருகின்றது.
</p><p>
அத்தகைய சில சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகளை பொலிசார் கைதுசெய்தாலும்,
அதையும் தாண்டி அதிகளவில் சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகள்
இடம்பெறுகின்றன” என குறிப்பிட்டார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T09:58:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவானில் குலுங்கிய விமானம் ; மேற்கூரை பேனல்கள் உடைந்ததால் அலறிய பயணிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/plane-shakes-mid-air-in-iran-passengers-scream-1789552554"></link>
            <id>https://jvpnews.com/article/plane-shakes-mid-air-in-iran-passengers-scream-1789552554</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரானில் நடுவானில் பறந்துகொண்டிருந்த போயிங் 737 ரக பயணிகள் விமானம் பயங்கரமாகக் குலுங்கியதில், அதன் மேற்கூரை பேனல்கள் உடைந்து பயணிகள் மீது விழுந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரானில் நடுவானில் பறந்துகொண்டிருந்த போயிங் 737 ரக பயணிகள் விமானம் பயங்கரமாகக் குலுங்கியதில், அதன் மேற்கூரை பேனல்கள் உடைந்து பயணிகள் மீது விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
மஷாத் நகரிலிருந்து கெர்மான்ஷா நோக்கிப் புறப்பட்ட ‘செபெஹ்ரான் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் விமானத்தில், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையிறங்கும் சக்கரப் பகுதி மற்றும் என்ஜினில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8eb3a1c2-69ca-4254-a0b9-1375d50e36c8/26-6aaa67abf25a8.webp' /></p><h2>&nbsp;என்ஜினில் தொழில்நுட்பக் கோளாறு</h2><p> </p><p>

இதனால் விமானம் மிகக் கடுமையாக அதிரத் தொடங்கியதில், பயணிகளின் பைகள் வைக்கும் அறைகள் திறந்து உடைமைகள் சிதறி விழுந்ததால் பயணிகள் அச்சத்தில் அலறிய காணொளி சமூக வலைத்தளங்க்களில் வெளியாகியுள்ளது.</p><p></p><p>
</p><p>
 இதனையடுத்து , விமானிகள் சாதுரியமாகச் செயல்பட்டு விமானத்தை மீண்டும் மஷாத் விமான நிலையத்திலேயே அவசரத் தரையிறக்கம் செய்தனர். அதிர்ஷ்டவசமாக இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">WATCH: Cabin ceiling falls apart onboard a Sepehran Airlines Boeing 737 after a tire reportedly burst shortly after takeoff from Mashhad Airport causing engine damage and severe vibrations. https://t.co/R7RP1AwZYX</p>&mdash; Breaking Aviation News &amp; Videos (@aviationbrk) <a href="https://x.com/aviationbrk/status/2099883286906478737?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

அதேவேளை சர்வதேசப் பொருளாதாரத் தடைகள் காரணமாக ஈரானில் புதிய விமானங்களையோ உதிரிப் பாகங்களையோ வாங்க முடியாததால், அந்நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட விமானங்கள் முடங்கிக் கிடப்பதோடு, சுமார் 32 ஆண்டுகள் பழமையான விமானங்களே அங்கு தொடர்ந்து இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T09:52:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரான் அலஸுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/case-against-trans-alus-adjourned-1789551482"></link>
            <id>https://tamilwin.com/article/case-against-trans-alus-adjourned-1789551482</id>
            <summary type="text">தனியார் நிறுவனமொன்றுக்கு 290 மில்லியன் ரூபா தொகையைச் செலுத்தாத குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனியார் நிறுவனமொன்றுக்கு 290 மில்லியன் ரூபா தொகையைச் செலுத்தாத குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
</p><p>
செய்தித்தாள் அச்சிடுவதற்குத் தேவையான காகிதம் மற்றும் அட்டை இறக்குமதிக்காக கேசர லங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு 290 மில்லியன் தொகையைச் செலுத்தவில்லை என்று முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><h2>மீண்டும் விசாரணை</h2><p>
</p><p>
குறித்த சம்பவம் தொடர்பாக கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று (16)வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது, சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக, இவ்வழக்கை 2027 மார்ச் 3 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு ​​நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
</p><p>
குறித்த சம்பவம் தொடர்பாக, கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று(16) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7c381b0-d975-47c3-9de8-ccb46231830c/26-6aaa6597a89e8.webp' /></p><p>
</p><p>&nbsp;டிரான் அலஸ் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகளைத் தொடர்வதா இல்லையா என்பது குறித்து நீதிமன்றத்தில் சாட்சியங்களைச் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சாட்சியங்களைச் சமர்ப்பித்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம், இச்சம்பவம் தொடர்பாக டிரான் அலஸ் ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளதாகவும், அவரது கைது நடவடிக்கையைத் தடுப்பதற்காக ஒரு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தது.</p><h2>&nbsp;பிணையில் செல்ல அனுமதி</h2><p>
</p><p>
இந்தப் பரிவர்த்தனை ஒரு வணிகப் பரிவர்த்தனை என்றும், இது ஒரு குற்றவியல் வழக்கு அல்ல என்றும் தாங்கள் விசாரணை அறிக்கைகளைப் பதிவு செய்துள்ளதாகவும், ரிட் மனு எதிர்வரும் 30ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கூறியது.
</p><p>
அதே நேரம் டிரான் அலஸின் சட்டத்தரணி, சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் ஒரு சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fc56975-cb16-4df8-aec2-bf5d4dfb253e/26-6aaa65985c1f6.webp' /></p><p>
குறித்த வழக்கு தொடர்பில் ஜனவரி 29 ம் திகதி குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் ஆதாரங்களைச் சமர்ப்பித்து, டிரான் அலஸை ஒரு சந்தேக நபராகப் பெயரிட்டு, வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கும் நீதிமன்ற உத்தரவொன்றைப் பெற்றுக் கொண்டிருந்தது.
</p><p>
மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக சிலோன் செய்தித்தாள் நிறுவனத்தின் கணக்காளர் மற்றும் நிர்வாகத்தினர் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T09:47:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல் - முகக்கவசம் அணிய அமைச்சர் அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/minister-advices-wear-mask-rise-of-dengue-fever-tn-1789551985"></link>
            <id>https://news.lankasri.com/article/minister-advices-wear-mask-rise-of-dengue-fever-tn-1789551985</id>
            <summary type="text">minister advice to wear mask over rise of dengue fever in tamilnadu: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் சூழலில், பொதுமக்கள் முகக்கவசம் அண...</summary>
            <content type="html"><![CDATA[<p>minister advice to wear mask over rise of dengue fever in tamilnadu: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் சூழலில், பொதுமக்கள் முகக்கவசம் அணியுமாறு அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தியுள்ளார். </p><h3> 

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்
</h3><p>
சென்னை மருத்துவக்கல்லூரியில், நடைபெற்ற 192 வது மருத்துவ இளநிலை மாணவர் சேர்க்கை வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6637bbc-1c88-46fa-ad85-fb3ff7e4a01d/26-6aaa657244f5b.webp' /></p><p>

இதில் பேசிய அவர், தமிழ்நாட்டில் சுவாசத் தொற்று மற்றும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகமாக உள்ளது. 

இதனால் பொதுமக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். </p><p>நடப்பாண்டில் செப்டம்பர் 15 ஆம் திகதி வரை தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவலால் 15,933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 9 பேர் உயிரிழந்துள்ளனர். </p><p>

2025 ம் ஆண்டில் 25,585 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு பதிவாகி இருந்தது. டெங்குவை கட்டுக்குள் வைக்க அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.</p><p>

தமிழ்நாடு முழுவதும் சுமார் 25,000 க்கும் அதிகமான கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கொசுப் புழுக்களை கண்டறிந்து, அழிக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். </p><p>

காய்ச்சல் போன்ற பாதிப்புகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணியுங்கள்" என கூறியுள்ளார்.&nbsp;</p><p> 

தீவிர காய்ச்சல், தாங்கமுடியாத தலைவலி, கண்வலி, உடல் சோர்வு, வாந்தி, மூட்டு மற்றும் தசைவலி போன்றவை டெங்குவின் பொதுவான அறிகுறிகள் ஆகும். காய்ச்சல் குறைந்த பிறகும் பொதுவாக 3 முதல் 7 நாட்களுக்குள் சிலருக்கு பாதிப்பு தீவிரமடையலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46c63d75-e7a1-44cf-980b-aedbc65b2079/26-6aaa6572effb4.webp' /></p><p>
வயிற்று வலி, வாந்தி, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று அவசர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T09:47:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ருமேஷ் தரங்கவின் ஈட்டிகளுக்கு இழப்பீடு; துருக்கி எயார்லைன்ஸ் வருத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/compensation-for-rumesh-tharanga-s-javelins-1789551799"></link>
            <id>https://jvpnews.com/article/compensation-for-rumesh-tharanga-s-javelins-1789551799</id>
            <summary type="text">&amp;nbsp; விமானத்தில் எடுத்து வரப்பட்டபோது உலக சாம்பியன் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்கவின் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்தமை தொடர்பில் துருக்கி எயார்லை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; விமானத்தில் எடுத்து வரப்பட்டபோது உலக சாம்பியன் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்கவின் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்தமை தொடர்பில் துருக்கி எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><p>


இந்த சம்பவம் தொடர்பில் நிறுவனத்திற்குள் முறையான உள்நாட்டு விசாரணையை நடத்தி, விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களைச் சரியாக மதிப்பீடு செய்ய துருக்கி எயார்லைன்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/104de7a7-5fbe-4ab1-b2ee-f89d1891e3b3/26-6aaa64b9116ce.webp' /></p><p>



அத்துடன், பாதிக்கப்பட்ட வீரருக்கு விரைவாக உரிய இழப்பீட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் நிறுவனத்தின் பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளனர்.</p><p></p><p>



சர்வதேச அரங்கில் இலங்கையின் பெருமையை உயர்த்திய விளையாட்டு வீரரின் உபகரணங்கள் சேதமடைந்த விவகாரத்தில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு நேரடியாக தலையிட்டு கவனம் செலுத்தியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T09:40:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ற உனக்கே அவ்ளோ என்றால், எனக்கு எவ்ளோ இருக்கும்- புகழ் கோபம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/cook-with-comali-pugazh-gets-angry-1789525423"></link>
            <id>https://cineulagam.com/article/cook-with-comali-pugazh-gets-angry-1789525423</id>
            <summary type="text">&amp;nbsp;Cook With Comali புகழ்குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்கள் மனதை கொள்ளை கொண்டவர் புகழ். இவர் வந்தாலே அந்த இடம் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>&nbsp;Cook With Comali புகழ்</h2><p>குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்கள் மனதை கொள்ளை கொண்டவர் புகழ். இவர் வந்தாலே அந்த இடம் செம கலகலப்பாக மாறிவிடும், இவருக்கு என்று மிகப்பெரிய சின்னத்திரை ரசிகர்கள் கூட்டம் உள்ளது.</p><p> இந்நிலையில் புகழ் குறித்து ஒரு சிலர் வேண்டுமென்றே வன்மத்தை பரப்பி வரும் நிலையில், அதிலும் குறிப்பாக அவர் கருப்பு கெட்டப்பில் வந்த போல சிலர் மோசமான கமெண்ட்ஸுகளை சொல்ல, அதற்கு புகழ் மிக கடுமையாக பதில் அளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30b9b2cd-a79c-44d8-84b8-2144292a1aff/26-6aa9fdb21fa08.webp' /></p><p> உங்களை பொறுத்தவரை சினிமாகாரன் தான என்ற எண்ணம் உள்ளது, ஆனால் 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து திட்டும் உனக்கே இவ்ளோ இருக்கும் போது போஸ்ட் பெயிட் பயன்படுத்தும் எனக்கு எவ்ளோ இருக்கும் நான் வருஷம் முழுவதும் உனக்கு கமெண்ட் செய்யலாம், ஆனால் எங்களுக்கு வேலை இருக்கு, அதை பார்க்ல வேண்டும் என கோபமாக புகழ் பேசியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-16T09:40:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இன்று ஒரு கிராம் தங்க விலை எவ்வளவு தெரியுமா? (16-09-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1789551153"></link>
            <id>https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1789551153</id>
            <summary type="text">இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (16-09-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி W...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (16-09-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>

தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 1,341,794.00 ஆகும்.</p><p>

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 47,340.00.
</p><p>
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 378,650.00.
</p><p>
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 43,400.00.
</p><p>
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 347,200.00.</p><p>

21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 41,430.00.
</p><p>
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 331,400.00.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T09:34:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான நிலையத்தில் ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/summons-issued-to-shiranthi-rajapaksa-at-airport-1789550351"></link>
            <id>https://jvpnews.com/article/summons-issued-to-shiranthi-rajapaksa-at-airport-1789550351</id>
            <summary type="text">&amp;nbsp; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவை, செப்டம்பர் 24 அன்று பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன் ஆஜராகுமாறு அழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவை, செப்டம்பர் 24 அன்று பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
</p><p>


அவர் இன்று காலை (16) சிங்கப்பூருக்குப் புறப்பட்ட போது,விமான நிலையத்தில் வைத்து அவருக்கு குறித்த அழைப்பாணை வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/109b3565-c095-4fe2-a863-aad18eb25b84/26-6aaa5f10c128d.webp' /></p><p>
</p><p>


பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு, சிறிலிய சவிய கணக்கு தொடர்பான விசாரணைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
</p><p>


அதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவிடம், இது தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காகவே செப்டம்பர் 24 அன்று நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார் .</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T09:30:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்சவுக்கு மீண்டும் விளக்கமறியல் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-appearance-fort-court-security-tightened-1789534452"></link>
            <id>https://ibctamil.com/article/namal-appearance-fort-court-security-tightened-1789534452</id>
            <summary type="text">புதிய இணைப்புசிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் வானூர்திகளை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு மற்றும் நிதித்தூய்த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் வானூர்திகளை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு மற்றும் நிதித்தூய்தாக்கல் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் சந்தேகநபராக பெயரிடப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, நாமல் ராஜபக்சவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (16) உத்தரவு பிறப்பித்துள்ளார்.</p><p>அத்துடன் சந்தேகநபருக்கு பிணை வழங்குவது தொடர்பிலான உத்தரவு அன்றைய தினம் வழங்கப்படும் என்றும் நீதவான் அறிவித்தார்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த பின்னரே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.</p><h2>&nbsp;சட்டமா அதிபரின் ஆலோசனை</h2><p>
</p><p>
நீதிமன்றில் விடயங்களை சமர்ப்பித்த பிரதி மன்றாடியார் நாயகம் ஜனக பண்டார, இந்த சம்பவம் தொடர்பில் நாமல் ராஜபக்ச நான்காவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba76bca5-0755-4fca-a3dd-835e55fcb42e/26-6aaa643ff3e64.webp' /></p><p>
</p><p>
மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதால், இது தொடர்பான குற்றச்சாட்டுகளை தாமதமின்றி தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
அத்துடன், இந்த விசாரணை நடவடிக்கைகளுக்காக எயார்பஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் பல தடவைகள் இலங்கைக்கு வருகை தந்து வாக்குமூலங்களை வழங்கியுள்ளதாகவும் பிரதி மன்றாடியார் நாயகம் மேலும் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.</p><h2>இரண்டாம் இணைப்பு</h2><p>சர்ச்சைக்குரிய எயார்பஸ் (Airbus) விமான கொள்முதல் வழக்கில் சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p>நீதிமன்றம் பிறப்பித்த முந்தைய உத்தரவுக்கமைய, சிறைச்சாலை அதிகாரிகள் நாமல் ராஜபக்சவை சற்றுமுன்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.</p><p>இந்தநிலையில் குறித்த வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ae61fa9-31f7-4d9b-a00e-1185dd69ebbc/26-6aaa568057a52.webp' /></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2wEw6jp0N8w" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><h5>நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நாமல் : பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு</h5><p>கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
</p><p>தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று (16) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையிலேயே இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
 

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.</p><p></p><h2>கோட்டை நீதவான் நீதிமன்றம்</h2><p>இந்தநிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச&nbsp;கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8914347-9d7c-4b3a-945b-c5bf9b61d736/26-6aaa28e5b7e1c.webp' /></p><p>இதேவேளை சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் ரக வானூர்திகளைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு மற்றும் நிதித்தூய்தாக்கல் விவகாரம் தொடர்பில்,நாமல் ராஜபக்சவை சந்தேகநபராகப் பெயரிடுமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Ud1LZwQnssE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T09:29:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சனி வக்ர நிவர்த்தி: இனி இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/saturn-direct-in-pisces-who-will-get-more-benefits-1789544505"></link>
            <id>https://manithan.com/article/saturn-direct-in-pisces-who-will-get-more-benefits-1789544505</id>
            <summary type="text">ஜோதிடத்தில் சனி பகவானின் நிலை ஒருவரது வாழ்க்கையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. சனி ஒரு ராசியில் சுமார் 2½ ஆண்டுகள் பயணிப்பதுடன்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் சனி பகவானின் நிலை ஒருவரது வாழ்க்கையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. சனி ஒரு ராசியில் சுமார் 2½ ஆண்டுகள் பயணிப்பதுடன், அவ்வப்போது வக்ர நிலையில் சஞ்சரிப்பார்.</p><p>

தற்போது மீன ராசியில் சஞ்சரித்து வரும் சனி பகவான், ஜூலை 27 முதல் வக்ர நிலையில் உள்ளார். இதனால் சில ராசிக்காரர்கள் தடைகள், பிரச்சினைகள் மற்றும் முயற்சிகளில் தாமதங்களை சந்திக்க நேரிடும் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89cc886d-b477-4931-b8de-6b736ed61acf/26-6aaa6027cd888.webp' /></p><p></p><p>

இந்நிலையில், டிசம்பர் 11 அன்று சனி வக்ர நிவர்த்தி அடைந்து மீண்டும் நேர்கதியில் பயணிக்கவுள்ளார். இதன் மூலம் இதுவரை சிரமங்களை எதிர்கொண்ட சில ராசிக்காரர்களுக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சனி நேர்கதிக்கு திரும்புவதால் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf7bc348-e8b1-4fe6-8b46-2ea0d6d53280/26-6aaa6028821c6.webp' /></p><p>
சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த பல்வேறு பிரச்சனைகள் படிப்படியாக குறையும். </p><p>குறிப்பாக வேலை தொடர்பான சிக்கல்கள் முடிவுக்கு வந்து, பணியில் முன்னேற்றத்திற்கான சூழல் உருவாகலாம். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.</p><p>

நீண்ட காலமாக பணப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்தவர்களுக்கு நிதி நிலை மேம்படும் சூழல் உருவாகலாம்.எதிர்பாராத வகையில் பணவரவு கிடைப்பதுடன், பொருளாதார ரீதியாகவும் நிம்மதி கிடைக்க வாய்ப்புள்ளது.</p><h2>
மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cf47811-651f-424a-9e3f-f825429b1903/26-6aaa602938093.webp' /></p><h2>
</h2><p>சனி வக்ர நிவர்த்தி மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக வேலை மாற்றம் குறித்து நீண்ட நாட்களாக யோசித்து வந்தவர்களுக்கு டிசம்பர் மாதத்திற்குப் பிறகு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம்.
</p><p>
நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த பணிகள் மற்றும் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவு பெறும் வாய்ப்புள்ளது. இதுவரை சந்தித்து வந்த சில பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் கிடைக்ககும்.</p><p>மேலும் மன அழுத்தம் குறைந்து, மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி அமைதியும் நிம்மதியும் கிடைக்கக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.&nbsp;</p><h2>
கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/440f61d2-ef4a-4173-b7a4-120efef93a62/26-6aaa6029e2bb2.webp' /></p><p></p><h2>
</h2><p>சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக தாமதமாகி வந்த வேலைகள் மற்றும் முயற்சிகள் இனி தடையின்றி நிறைவேறும் சூழல் உருவாகும்.</p><p>

பணிபுரிபவர்களுக்கு நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கக்கூடும். அதேபோல், பல்வேறு வழிகளில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.</p><p> தொழில் செய்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைப்பதுடன், அதன் மூலம் நிதி நிலையும் மேம்படும். குறிப்பாக புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான யோகம் கூடிவரும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T09:27:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்கா மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதல் முயற்சி முறியடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/attempted-drone-missile-attack-on-mecca-thwarted-1789551017"></link>
            <id>https://canadamirror.com/article/attempted-drone-missile-attack-on-mecca-thwarted-1789551017</id>
            <summary type="text">&amp;nbsp; சவூதியின் புனித நகரமான மக்காவை நோக்கி ஹவுதி அமைப்பினர்கள் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சவூதியின் புனித நகரமான மக்காவை நோக்கி ஹவுதி அமைப்பினர்கள் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.
</p><p>


மக்காவை நோக்கி வந்த ட்ரோனை, அது மக்கா வான் எல்லைக்குள் நுழைவதற்கு முன்னதாகவே சவூதி வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/860a4b0f-f9f9-4cbc-a469-c4110ad586d1/26-6aaa61ab636d8.webp' /></p><p> </p><p> 



மக்காவை நோக்கி ஹவுதி படையினரால் ஏவப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக சவூதி வான் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
</p><p>


வழிபாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் புனித நகரை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல் முயற்சிகளையும் சவூதி கண்டித்துள்ளது.</p><p>



மேலும், புனித நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சிப்பவர்களுக்கு எதிராக தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயங்கமாட்டோம் என சவூதி பாதுகாப்புத் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>


அதேசமயம் 2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் மக்காவை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டதாக கூறப்படும் இரண்டாவது தாக்குதல் முயற்சி இதுவென சவுதி தரப்பு தெரிவித்துள்ளது.
</p><p>


அமெரிக்கா–ஈரான் இடையிலான மோதல் ஆரம்பித்த பின்னர் ஹவுதி அமைப்பினர்கள் சவூதி அரேபியாவை நோக்கி தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக கூறப்படும் நிலையில், தற்போது மக்காவை இலக்காகக் கொண்டதாக தெரிவிக்கப்படும் இந்த தாக்குதல் முயற்சி பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-16T09:26:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சேலையில் கிளாமர் லுக்கில் அசத்தும் நடிகை நந்திதா ஸ்வேதா...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/nandita-swetha-siima-awards-saree-look-photos-1789550551"></link>
            <id>https://viduppu.com/article/nandita-swetha-siima-awards-saree-look-photos-1789550551</id>
            <summary type="text">நந்திதா ஸ்வேதாகன்னட சினிமாவில் அறிமுகமாகி, தமிழில் அட்டக்கத்தி, எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா, முண்டாசுபட்டி உள்ளிட்ட படங்களில்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நந்திதா ஸ்வேதா</h2><p>கன்னட சினிமாவில் அறிமுகமாகி, தமிழில் அட்டக்கத்தி, எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா, முண்டாசுபட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை நந்திதா ஸ்வேதா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/325d9be6-2d94-4438-a9c0-ae0a69ac0cc4/26-6aaa5fdd0f156.webp' /></p><p>
</p><p>
அதன்பின் உப்பு கருவாடு, உள்குத்து, அசுரவேதம், தேவி 2, டானா, ஈஸ்வரன், நெஞ்சம் மறப்பதில்லை, ரத்தம், ரனம் அறம் தவறேல் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
</p><p>
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் நடந்த SIIMA விருது விழாவில் நீலநிற சேலையணிந்து சென்றுள்ளார். </p><p>அங்கு எடுத்த புகைப்படங்களை தற்போது பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-16T09:26:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்சியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரம் : தமிழரசின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக அரியநேத்திரன் வழக்கு தாக்கல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/itak-ex-mp-ariyanethiran-expulsion-from-the-party-1789546932"></link>
            <id>https://ibctamil.com/article/itak-ex-mp-ariyanethiran-expulsion-from-the-party-1789546932</id>
            <summary type="text">இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை கட்சியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு ஒன்று தாக்கல் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை கட்சியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>குறித்த விவகாரம் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தற்போதைய பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளர் உள்ளிட்ட 5 தரப்பினருக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றில் இன்று (16) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. </p><p>முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன தமிழரசுக் கட்சியின் விதிகளை மீறி கடந்த வருடம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.</p><p></p><h2>டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு&nbsp;</h2><p>இந்தநிலையில் இதற்கு எதிராக, தற்போதைய கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம், நிர்வாக செயலாளர் குணநாயகம் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி ஆகியோருக்கு எதிராக சிரேஷ்ட சட்டத்தரணி பிரேம்நாத் ஊடாக இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ac09ce9-6a59-4192-bf3f-d9782dee3e65/26-6aaa5c117b304.webp' /></p><p> </p><p>

இவ்வழக்கினை மாவட்ட நீதிபதி இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது, வழக்கை எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துத் திகதியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T09:19:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிம்ம ராசியில் கேது.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-ketu-peyarchi-1789550232"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-ketu-peyarchi-1789550232</id>
            <summary type="text">நவக்கிரகங்களில் அமங்கல நாயகனாக விளங்கும் கேது எப்போதும் பின்னோக்கி நகர்ந்து கொண்டே இருப்பார்.

இவர் ஆன்மீக முன்னேற்றம், ஞானம், துறவறம் ஆகியவற்றைக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவக்கிரகங்களில் அமங்கல நாயகனாக விளங்கும் கேது எப்போதும் பின்னோக்கி நகர்ந்து கொண்டே இருப்பார்.
</p><p>
இவர் ஆன்மீக முன்னேற்றம், ஞானம், துறவறம் ஆகியவற்றைக் குறிக்கும் காரணியாகக் கருதப்படுகிறது.</p><p>

இந்நிலையில், கேது சமீபத்தில் சிம்ம ராசிக்குள் நுழைந்துள்ளார். அங்கு அவர் அடுத்த 90 நாட்களுக்கு அதே நிலையில் நிலைத்திருப்பார்.</p><p> 

அந்தவகையில், சிம்ம ராசிக்குள் கேது இருப்பதால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.&nbsp;</p><h2>மேஷம்
</h2><ul><li>
சாதகமான பலன்களைத் தரக்கூடும்.
</li><li>நிலுவையில் இருந்த பணப் பரிவர்த்தனைகள் முடிவுக்கு வரும்.
</li><li>முதலீடுகள் மூலம் பணவரவு கிடைக்கும்.
</li><li>ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f260389d-5cab-467a-890f-05d4e53a3d93/26-6aaa5e9a55fca.webp' /></p><p>
</p><h2>
மிதுனம்
</h2><ul><li>
தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
</li><li>வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
</li><li>வியாபாரத்தில் முன்னேற்றமும் நிதி ஆதாயமும் கிடைக்கும்.
</li><li>பொருளாதார நிலை மேம்பட வாய்ப்புள்ளது.
</li><li>முதலீடுகள் நல்ல வருமானத்தைத் தரக்கூடும்.
</li><li>தன்னம்பிக்கை சிறந்த முடிவுகளை எடுக்க உதவும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cab8a26-2089-4a1c-a213-46af6ae67b6b/26-6aaa5e9b0d7a8.webp' /></p><p>
</p><h2>
சிம்மம்
</h2><ul><li>
நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.
</li><li>தலைமைத்துவப் பண்புகள் வலுப்பெறக்கூடும்.
</li><li>தொழிலில் அங்கீகாரம் கிடைக்கும்.
</li><li>ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
</li><li>நிதி நிலைமை மேம்படும்.
</li><li>வேலைக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புள்ளது.</li><li>
திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் சுமூகமாக முடியும்.&nbsp;</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e93697b0-0756-4fa9-bc71-e0835d035db6/26-6aaa5e9bc5687.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T09:18:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தையிட்டி பவானி வீதியினை விடுவிக்க பொலிஸாரை ஒத்துழைக்குமாறு கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-cooperate-releasing-thaiyiddy-bhavani-road-1789548677"></link>
            <id>https://tamilwin.com/article/police-cooperate-releasing-thaiyiddy-bhavani-road-1789548677</id>
            <summary type="text">தையிட்டி சட்டவிரோத விகாரை வளாகத்தினுள் கையகப்படுத்தப்பட்டுள்ள வலி. வடக்கு
பிரதேச சபைக்கு சொந்தமான பவானி வீதியினை விடுவிக்க பொலிஸார் பிரதேச
சபையினருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தையிட்டி சட்டவிரோத விகாரை வளாகத்தினுள் கையகப்படுத்தப்பட்டுள்ள வலி. வடக்கு
பிரதேச சபைக்கு சொந்தமான பவானி வீதியினை விடுவிக்க பொலிஸார் பிரதேச
சபையினருக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்&nbsp; நாடாளுமன்ற
உறுப்பினர் ச. சிறிபவானந்தராசா தலைமையில் நடைபெற்றபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p><p>தையிட்டி விகாரைக்காக கையகப்படுத்தப்பட்ட காணிகளை
உரிமையாளர்களிடம் மீள ஒப்படைப்பது தொடர்பான நடவடிக்கை எந்தளவில் தற்போது
காணப்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கேள்வி
எழுப்பினார்.</p><h2>வீதி விடுவிப்பு</h2><p>

அதற்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் , அது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் விசேட
குழு உருவாக்கப்பட்டு , அந்த குழு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என பதில்
அளித்தார்.
</p><p>
அதன் போது, விகாரை அமைந்துள்ள பகுதியில் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச
சபைக்கு சொந்தமான பவானி வீதியினை விடுவிக்க பொலிஸார் ஒத்துழைக்க வேண்டும்
என்றும் , நீதிமன்றில் குறித்த வீதியை விடுவிக்குமாறு
கட்டளையிடப்பட்டுள்ள நிலையில் ஏன் காலதாமதம் என மீண்டும் அர்ச்சுனா இராமநாதன்
கேள்வி எழுப்பினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7eac39f3-b726-4f1b-b6ff-4fdff12bbd2a/26-6aaa5bf72fee5.webp' /></p><p>
</p><p>
அதற்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் , நீதிமன்ற கட்டளையை
நடைமுறைபப்டுத்த பொலிஸார் ஒத்துழைக்க வேண்டும். அதற்கு பலாலி பொலிஸார்
ஒத்துழைக்கவில்லை எனில் , வடமாகாண மூத்த பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட உயர்
பொலிஸ் அதிகாரிகள் பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட தரப்பினரை ஒன்றிணைத்து
கூட்டம் ஒன்றினை நடாத்தி , எவ்வாறு வீதியினை விடுவிக்க நடவடிக்கை எடுப்பது என
தீர்மானிப்போம் என தெரிவித்தார்.</p><p>பொலிஸாரை அழைத்து கூட்டம் கூடுவதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களான அர்ச்சுனா
இராமநாதன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் எதிர்ப்பு
தெரிவித்தனர்.</p><h2>நடவடிக்கை</h2><p>
</p><p>
பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை விடுவிக்குமாறு நீதிமன்றமும்
கட்டளையிட்டுள்ளது. அதனால் நீதிமன்ற கட்டளையை நடைமுறைப்படுத்த பொலிஸார்
ஒத்துழைக்க வேண்டும். இங்கே வீதியினை விடுவிக்க பிரதேச சபை நடவடிக்கை எடுக்க
கூடாது என வழக்கு தொடர்ந்ததே பலாலி பொலிஸார் தான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d02328e-4326-4c43-a1fe-6aade7ad238d/26-6aaa5bf7df284.webp' /></p><p> </p><p>அதனால் , அவர்கள் நீதிமன்ற
கட்டளையை நடைமுறைப்படுத்த பின்னடிக்கலாம்.

ஆகவே வீதியினை விடுவிக்க நீதிமன்றம் வழங்கிய கட்டளையை பிரதேச சபை
நடைமுறைப்படுத்தும் போது, அதற்கு பொலிஸார் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என
பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி , அதனை பொலிஸ் உயர்
அதிகாரிகள் உள்ளிட்ட உரிய தரப்பினர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுங்கள் என
கோரினார்கள்.
</p><p>
அதனை ஏற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச. பவானந்தராசா , ஒருங்கிணைப்பு குழு
கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தை பொலிஸார் உள்ளிட்ட தரப்பினருக்கு
அனுப்பி வைக்குமாறு கூறினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T09:17:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபலத்துக்கு உயிர் பயத்தைக் காட்டிய கொள்ளைச் சம்பவம்: ஒரு யூரோ இழப்பீடு வழங்கிய நீதிமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/court-award-kim-kardashian-1-euro-for-2016-robbery-1789549958"></link>
            <id>https://news.lankasri.com/article/court-award-kim-kardashian-1-euro-for-2016-robbery-1789549958</id>
            <summary type="text">A Paris court awards Kim Kardashian 1 euro after her 2016 robbery: கிம் கார்டாஷியன் கொள்ளைச் சம்பவம் ஒன்றில் சிக்கிய வழக்கில் அவருக்கு பாரீஸ் நீதிமன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>A Paris court awards Kim Kardashian 1 euro after her 2016 robbery: கிம் கார்டாஷியன் கொள்ளைச் சம்பவம் ஒன்றில் சிக்கிய வழக்கில் அவருக்கு பாரீஸ் நீதிமன்றம் ஒன்று ஒரு யூரோ இழப்பீடு வழங்கியுள்ளது.
</p><p>

அமெரிக்கத் தொலைக்காட்சிப் பிரபலமான கிம் கார்டாஷியன் என்பவர் 2016ஆம் ஆண்டு பாரீஸில் ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்தார்.
</p><h3>
உயிர் பயத்தைக் காட்டிய கொள்ளைச் சம்பவம்
</h3><p>
2016ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 2ஆம் திகதி, முகமூடி அணிந்த எட்டு பேர் கிம் தங்கியிருந்த ஹொட்டல் அறைக்குள் நுழைந்தார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15e64068-86db-430c-ba91-8522e7bec3c2/26-6aaa5d8846b81.webp' /></p><p>
அவர்கள் கிம்மைக் கட்டிப்போட்டு, அவரது வாயில் துணியை அடைத்து அவரிடமிருந்த 6 மில்லியன் டொலர்கள் மதிப்புடைய நகைகளை கொள்ளையடித்துச் சென்றார்கள்.
</p><p>
அவர்கள் நடந்துகொண்ட விதத்தால் பயந்து நடுங்கிய கிம், தனக்குப் பிள்ளைகள் இருப்பதாக கூறியதுடன், என்ன வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள், என்னை மட்டும் உயிருடன் விட்டுவிடுங்கள் என கெஞ்சியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.&nbsp;</p><p></p><p>
அந்த வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டார்கள். என்றாலும், விசாரணைக்கு முன்பே அவர்கள் சிறையில் நீண்ட காலம் செலவிட்டிருந்ததால், வழக்கு முடிந்தும் அவர்கள் யாரும் சிறைக்குச் செல்லவில்லை.
</p><h3>
ஒரு யூரோ இழப்பீடு</h3><p>

இந்நிலையில், அந்த வழக்கில் கிம்முக்கு பாரீஸ் நீதிமன்றம் ஒன்று ஒரு யூரோ இழப்பீடு வழங்கியுள்ளது.
</p><p>
அதாவது, தங்கள் வழக்கில் தங்களுக்கு நீதி கிடைத்ததே போதும் என்று கிம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
தன் வாழ்வில் மிக பயங்கரமான ஒரு சம்பவம் அது என்று குறிப்பிட்டுள்ள கிம், தங்கள் குடும்பத்தின் மீது அது நிரந்தர தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது என்று கூறியுள்ளதுடன், வழக்கில் தங்களுக்கு நிதி கிடைக்க உதவிய பிரான்ஸ் அதிகாரிகளுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
தனக்கு ஒரு யூரோ மட்டும் இழப்பீடு வழங்கினால் போதும் என கிம் கேட்டுக்கொண்டதையடுத்தே, அவருக்கு நீதிமன்றம் ஒரு யூரோ இழப்பீடு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-16T09:12:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மல்வத்து அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் விடுத்துள்ள அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahanayaka-theros-malwathu-asgiriya-chapters-1789547005"></link>
            <id>https://tamilwin.com/article/mahanayaka-theros-malwathu-asgiriya-chapters-1789547005</id>
            <summary type="text">சமூக ஊடகங்கள் மூலம் சில தரப்பினர் மேற்கொள்ளும் ஆதாரமற்ற விமர்சனங்கள் மற்றும் அவதூறுகளைக் கருத்தில் கொண்டு, சமூக ஊடகங்களை ஒரு குறிப்பிட்ட ஒழுங்குமுறைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக ஊடகங்கள் மூலம் சில தரப்பினர் மேற்கொள்ளும் ஆதாரமற்ற விமர்சனங்கள் மற்றும் அவதூறுகளைக் கருத்தில் கொண்டு, சமூக ஊடகங்களை ஒரு குறிப்பிட்ட ஒழுங்குமுறைக்கு உட்படுத்துவது காலத்தின் தேவையாகும் என்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய உபா மகா விகாரையின் மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
</p><p>
சமூக ஊடகங்களால் ஏற்படும் தீங்கு விளைவிக்கும் தாக்கங்களிலிருந்து நாட்டின் சிறுவர் பரம்பரையைப் பாதுகாப்பதற்காக மதத் தலைவர்களின் தலையீட்டை எதிர்பார்த்து, தேசிய ஊடக அறக்கட்டளை 10 அம்ச முன்மொழிவை தயாரித்துள்ளது.</p><p> 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பாதுகாப்பான ஊடகத் தரநிலைகள் மற்றும் நெறிமுறை வழிகாட்டுதல்களை உருவாக்குவதன் அவசியத்தை சுட்டிக்காட்டும் இந்த முன்மொழிவு இரு மகாநாயக்க தேரர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.</p><h2>குழந்தைகளின் பாதுகாப்பு&nbsp;</h2><p>
</p><p>
அதன்போதே மகாநாயக்க தேரர்கள் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளனர். அந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் அதிசங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரர், கொரோனா காலத்தில் கல்வி நடவடிக்கைகள் இணையவழியில் நடைபெற்றதால் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கைகளில் கையடக்க தொலைபேசிகள் பரவலாகச் சென்றடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb61071f-9e3a-4194-a7d2-9c0e6e4f04e6/26-6aaa5713d17ac.webp' /></p><p>இணையம் மூலம் நல்லதை விட தீய விஷயங்களை அதிகம் கற்றுக்கொள்ளும் குழந்தைகள் சமூக ஊடகங்கள் வழியாக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இறுதியில் தற்கொலை செய்துகொள்ளும் சூழ்நிலைகள் கூட ஏற்பட்டுள்ளன. </p><p>சமூக ஊடக ஒழுங்குமுறை பற்றி பேசக்கூட பலர் அஞ்சும் பின்னணியில், தேசிய ஊடக அறக்கட்டளை இது குறித்து ஒரு உரையாடலை உருவாக்கியது பாராட்டிற்குரிய விடயமாகும் என்றும் குறிப்பிட்டார்.

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் அதி சங்கைக்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன மகாநாயக்க தேரர், சில பாடசாலை மாணவர்களின் வாழ்க்கையே கையடக்க தொலைபேசியாக மாறிவிட்டதாக சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>குறிப்பிட்ட தாக்கம்&nbsp;</h2><p> </p><p>இளைஞர்கள் போதைப்பொருள் மற்றும் மதுபானங்களுக்கு அடிமையாவதற்கும் சமூக ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்றும் அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d894114-0718-4591-97e8-65d270825e1b/26-6aaa57149b142.webp' /></p><p>
</p><p>
மேலும், அஸ்கிரிய பீடத்தின் பிரதி மகாநாயக்கரும், களனி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான சங்கைக்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரர், சமூக ஊடக அடிமைத்தனம் பொது சமூகத்தையும், பிரிவேனா கல்வி கற்கும் சாமணேர தேரர்கள் உட்பட துறவற சமூகத்தையும் பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டார். </p><p>ஒருவரின் நற்பெயரை ஒரு நொடியில் அழிக்க சமூக ஊடகங்கள் வல்லமை பெற்றுள்ளதால், இந்த அழிவிலிருந்து குழந்தைப் பரம்பரையை விடுவிக்க ஒரு முறையான திட்டம் தேவை என்று அவர் கூறினார்.
</p><p>
இது குறித்து கருத்து தெரிவித்த தேசிய ஊடக அறக்கட்டளையின் சிரேஷ்ட ஆலோசகரும், ஸ்ரீ பாலி வளாகத்தின் சிரேஷ்ட பேராசிரியருமான டியூடர் வீரசிங்க, மனிதநேயத்தை மேம்படுத்த சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாகக் குறிப்பிட்டார்.</p><p> ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா உட்பட உலகின் பல நாடுகள் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களை தடை செய்வது உள்ளிட்ட ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், இலங்கையில் சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட ஒன்லைன் (நிகழ்நிலைப் பாதுகாப்பு) சட்டம் தற்போது நடைமுறையில் இல்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T09:09:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா பிரதமருக்கு யூடியூபில் கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/youtuber-charged-with-threatening-prime-minister-1789545579"></link>
            <id>https://canadamirror.com/article/youtuber-charged-with-threatening-prime-minister-1789545579</id>
            <summary type="text">&amp;nbsp;கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு யூடியூப் காணொளி ஊடாக கொலை மிரட்டல் விடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட கல்கரியைச் சேர்ந்த நபர் தொடர்ந்து காவலில் வைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு யூடியூப் காணொளி ஊடாக கொலை மிரட்டல் விடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட கல்கரியைச் சேர்ந்த நபர் தொடர்ந்து காவலில் வைக்கப்படவுள்ளார்.
31 வயதான ஜேமி டா கோஸ்டா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p> டா கோஸ்டா தற்போது கல்கரி தடுப்புக் காவல் மையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>கனடிய குற்றவியல் சட்டத்தின் 264.1(1)(a) பிரிவுக்கு அமைவாக, "கனடா பிரதமர் மார்க் கார்னியை கொலை செய்யும் வகையில் மிரட்டல் விடுத்தமை" தொடர்பில் டா கோஸ்டா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9782ed4-56d5-431c-9b4c-c294cbdbaa34/26-6aaa4c6d361d5.webp' /></p><p>
</p><p>ஜூலை 28 அன்று, யூடியூப் கணக்கு ஒன்றில் பிரதமர் மார்க் கார்னியைக் கொலை செய்வதற்கான மிரட்டல்கள் பதிவிடப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்ததாக கனடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
இச்சம்பவம் ஜூலை 25 மற்றும் 26 ஆகிய திகதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்றுள்ளதாக நீதிமன்ற ஆவணங்கள் காட்டுகின்றன.
</p><p>கனடிய தலைவருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுமாறும் ஒட்டாவாவிற்குப் பயணம் செய்யுமாறும் தூண்டும் வகையிலான காணொளி ஒன்று ஜேமி டா கோஸ்டாவின் பெயரிலுள்ள யூடியூப் பக்கத்தில் இன்னமும் உள்ளது. </p><p>
இதில் பிரதமரின் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகவும் வன்முறையைத் தூண்டும் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
பிரதமர் கார்னி தொடர்பான வழக்கு தவிர, டா கோஸ்டா மேலும் பல குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T09:00:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[6 நாளில் மோசமான பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் செய்துள்ள கார்த்தியின் சர்தார் 2... தமிழகத்தில் இவ்வளவுதானா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/6-days-actor-karthi-sardar-2-movie-bo-1789544273"></link>
            <id>https://cineulagam.com/article/6-days-actor-karthi-sardar-2-movie-bo-1789544273</id>
            <summary type="text">சர்தார் 2சர்தார், முதல் பாகம் நன்றாக ஓட நடிகர் கார்த்தி நடித்த இரண்டாம் பாகம் தான் சர்தார் 2. கடந்த 2022ம் ஆண்டு பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி ந...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சர்தார் 2</h2><p>சர்தார், முதல் பாகம் நன்றாக ஓட நடிகர் கார்த்தி நடித்த இரண்டாம் பாகம் தான் சர்தார் 2. </p><p>கடந்த 2022ம் ஆண்டு பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்த முதல் பாகம் செம ஹிட்டானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/970e9122-0516-4e20-9ff6-46c15f370632/26-6aaa4f3ec39eb.webp' /></p><p> </p><p>இதையடுத்து மீண்டும் இந்திய உளவாளி பற்றிய கதையாக எழுதப்பட்ட சர்தார் 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு மற்றும் ரஜீஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். </p><p>இப்படம் செப்டம்பர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.</p><p></p><h2>
பாக்ஸ் ஆபிஸ் </h2><p>
பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் வசூலில் படம் சொதப்பியது. </p><p>ரூ. 80 கோடிக்கும் மேலான பட்ஜெட்டில் உருவான இப்படம் இதுவரை மொத்தமாக ரூ. 21 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் படம் 6 நாள் முடிவில் ரூ. 10 கோடி தான் வசூலித்துள்ளதாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af12e3cd-03ec-4325-bb76-1100486742e9/26-6aaa4f3dbd907.webp' /></p>]]></content>
            <updated>2026-09-16T09:00:02+00:00</updated>
        </entry>
    </feed>
