<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-10T03:41:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[80 மில்லியன் டொலர் மோசடியில் சிக்கிய தொழிலதிபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/business-man-arrested-for-fund-transfer-1789010800"></link>
            <id>https://tamilwin.com/article/business-man-arrested-for-fund-transfer-1789010800</id>
            <summary type="text">கொழும்பு, மருதானை பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவர் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொருட்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, மருதானை பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவர் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
பொருட்களை இறக்குமதி செய்வதாக கூறி வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பிய தொழிலதிபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>2023 - 2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொருட்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கையின் கீழ் 80 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளார்.</p><p>
</p><h2><b>
தொழிலதிபர்&nbsp;கைது</b></h2><p>இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/656cac77-a8ae-4fbf-ba26-ff16b9dec511/26-6aa225a77b316.webp' /></p>]]></content>
            <updated>2026-09-10T03:36:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் 80 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு தனி நபர் செய்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/illegally-transferred-million-to-foreign-accounts-1789011226"></link>
            <id>https://jvpnews.com/article/illegally-transferred-million-to-foreign-accounts-1789011226</id>
            <summary type="text">80 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கணக்குகளுக்கு சட்டவிரோதமாக telegraphic transfers (T/T) முறைமை மூலம் மாற்றியதாகக் கூறப்படும் நபர் ஒருவர் மருத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">80 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கணக்குகளுக்கு சட்டவிரோதமாக telegraphic transfers (T/T) முறைமை மூலம் மாற்றியதாகக் கூறப்படும் நபர் ஒருவர் மருதானை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "> 

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் குறித்த சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1a24b19-5b9c-45d3-be63-a35a9c16f4f6/26-6aa2251c4434a.webp' /></p><p style="text-align: justify; "> 

2023 - 2025 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இவ்வாறு 80 மில்லியன் அமெரிக்க டொலர்களை வௌிநாட்டு கணக்குகளுக்கு மாற்றியுள்ளதாக கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T03:35:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இந்த வகை கோழி இறைச்சி தயாரிப்பு குறித்து எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/costco-canada-recalling-select-chicken-products-1789009532"></link>
            <id>https://canadamirror.com/article/costco-canada-recalling-select-chicken-products-1789009532</id>
            <summary type="text">&amp;nbsp;கனடா கொஸ்கோ நிறுவனம், அறிவிக்கப்படாத &quot;சோயா&quot; கலந்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில், சில கோழி இறைச்சி தயாரிப்புகளை திரும்பப்பெற்று வருகிறது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடா கொஸ்கோ நிறுவனம், அறிவிக்கப்படாத "சோயா" கலந்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில், சில கோழி இறைச்சி தயாரிப்புகளை திரும்பப்பெற்று வருகிறது. </p><p>
கொஸ்கோவின் இணையதளத் தகவல்படி, 'Rossdown Meal Starters Black Garlic Chicken Breast Chunks' (லொட் எண்: 295021) எனும் தயாரிப்பே இவ்வாறு திரும்பப்பெறப்படுகிறது.</p><p> 
இந்தத் தயாரிப்புகள் 2026 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் கனடாவில் உள்ள கொஸ்கோ விற்பனையகங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/894fa97d-f476-4acc-a9f5-05ebed4c57f6/26-6aa21e7e30be2.webp' /></p><p> </p><p>
"சோயா ஒவ்வாமை அல்லது உணர்திறன் உள்ளவர்கள் இந்தத் தயாரிப்பை உட்கொள்ள வேண்டாம். ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவை உட்கொள்வது கடுமையான அல்லது உயிருக்கு ஆபத்தான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும்" என கொஸ்கோ எச்சரித்துள்ளது.</p><p>
பாதிக்கப்பட்ட தயாரிப்புகளை வாங்கிய வாடிக்கையாளர்கள், அவற்றை மீண்டும் கொஸ்கோ விற்பனையகத்திலேயே ஒப்படைத்து முழுப் பணத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T03:30:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜிவி பிரகாஷ் Immortal 6 நாட்களில் இத்தனை கோடி வசூலா, முழு விவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/immortal-movie-6-days-box-office-1789003006"></link>
            <id>https://cineulagam.com/article/immortal-movie-6-days-box-office-1789003006</id>
            <summary type="text">&#039;இம்மார்ட்டல்&#039;ஜிவி பிரகாஷ் இந்த வருடம் செம கலக்கு கலக்கி வருகிறார். இவர் இசையமைத்த யூத், விஸ்வநாத் அண்ட் சன்ஸ், இருமுடி என அனைத்து படங்களும் மெகா ஹிட்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>'இம்மார்ட்டல்'</h2><p>ஜிவி பிரகாஷ் இந்த வருடம் செம கலக்கு கலக்கி வருகிறார். இவர் இசையமைத்த யூத், விஸ்வநாத் அண்ட் சன்ஸ், இருமுடி என அனைத்து படங்களும் மெகா ஹிட் ஆக, இவர் நடிப்பிப் வெளியான ஹாப்பி ராஜ் செம ஹிட் அடித்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a119ee8-961b-4df2-8563-196074fa8c34/26-6aa2050164efe.webp' /></p><p>இதை தொடர்ந்து இவர் நடிப்பில், கயாடு லோகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த 'இம்மார்ட்டல்' படமும் தற்போது வெற்றியை சூடியுள்ளது.</p><p></p><h2>வசூல்</h2><p>

இந்த படம் வெளியாகி 6 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 10 கோடி வசூலை நெருங்கிவிட்டது, கண்டிப்பாக இந்த படமும் ஜிவி பிரகாஷுக்கு வெற்றி படமாக தான் அமைந்துள்ளது இந்த வருடம் கண்டிப்பாக ஜிவி பிரகாஷுக்கு செம கொண்டாட்டமாக அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63942088-1182-4aa0-868b-978d18c5d3f6/26-6aa205021eb53.webp' /></p><p>

மேலும். அஜித்தின் கார் ரேஸ் டாக்குமெண்டரி 'கிளாடியேட்டர்' படத்திற்கும் இவரே இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-10T03:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து : 22 பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/22-hospitalised-after-bus-overturns-in-minneriya-1789010053"></link>
            <id>https://ibctamil.com/article/22-hospitalised-after-bus-overturns-in-minneriya-1789010053</id>
            <summary type="text">பொலன்னறுவையில்&amp;nbsp;இடம்பெற்ற பேருந்து விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஹபரணை பிரதான வீதியின் மின்னேரிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலன்னறுவையில்&nbsp;இடம்பெற்ற பேருந்து விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>ஹபரணை பிரதான வீதியின் மின்னேரியா, 7ஆம் கட்டை தேவாலய வளைவுப் பகுதியில்&nbsp;இன்று (10) அதிகாலை 4.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p> மெதிரிகிரியவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றே வீதியை விட்டு விலகி கால்வாயொன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>&nbsp;</p><h2>வைத்தியசாலைகளில் அனுமதி</h2><p>பேருந்து கவிழ்ந்ததில் காயமடைந்த 22 பேர் ஹபரணை மற்றும் ஹிங்குராங்கொடை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மின்னேரியா காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28202196-c9f5-4e09-b5fa-1267d2cddbac/26-6aa224897aed6.webp' /></p><p>விபத்து இடம்பெற்ற குறித்த பகுதி அடிக்கடி விபத்துக்கள் நிகழும் ஒரு பகுதியாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T03:29:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல் ; முடிவுக்கு வரும் ஈரான் போர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/happy-news-announced-by-donald-trump-1789009998"></link>
            <id>https://canadamirror.com/article/happy-news-announced-by-donald-trump-1789009998</id>
            <summary type="text">எதிர்வரும் நவம்பரில் நடைபெறும் இடைத்தேர்தலுக்குப் பின்னர் உடனடியாக ஈரான் போர் முடிவுக்கு வரும் என தாம் கருதுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் நவம்பரில் நடைபெறும் இடைத்தேர்தலுக்குப் பின்னர் உடனடியாக ஈரான் போர் முடிவுக்கு வரும் என தாம் கருதுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். </p><p>

டெக்சாஸ் செல்வதற்கு முன்னர் ஊடகவியலாளர்களுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abee4bb2-817f-4279-9930-5e0230e25678/26-6aa220505cea2.webp' /></p><p> 

ஈரானால் இதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என்பதால், தேர்தலுக்குப் பிறகு உடனடியாக போர் முடிவுக்கு வரும் என நான் நினைக்கிறேன் என்று ட்ரம்ப் கூறினார்.</p><p> 

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி, அமெரிக்க ஜனாதிபதி தனது சொந்த குடியரசுக் கட்சிக்குள்ளிருந்தே அழுத்தத்தை எதிர்நோக்கி வருவதுடன் அவருக்கான கருத்துக் கணிப்பு ஆதரவும் குறைந்து வருகின்றது. </p><p>

பெப்ரவரியில் போர் தொடங்கியதிலிருந்து, இந்த மோதல் எப்போது முடிவடையும் என்பது குறித்து ட்ரம்ப் பல்வேறு காலக்கெடுவை முன்பு அளித்திருந்தார். </p><p>

ஆனால், போர் தொடர்ந்தும் நீடித்து வருவதால் ட்ரம்ப் மீது பல்வேறு விமர்சனங்கள் நேரடியாகவே எழுந்துள்ளன. 

மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள மோதல்கள் காரணமாக, நேற்றைய தினம் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 அமெரிக்க டொலரை கடந்து விற்பனையாகின்றது. </p><p>

இது கடந்த ஜூலை மாதத்திற்குப் பின்னர் முதல் முறையாக ஏற்பட்ட பாரிய அதிகரிப்பாகும்.</p><p> 

ஈரான் போர் சர்ச்சைகளுக்கு மத்தியில் அமெரிக்க நேரப்படி இன்றைய தினம் குடியரசுக் கட்சி மாநாட்டில் ட்ரம்ப் சிறப்புரை ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-10T03:13:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுக்கடலில் பற்றியெரிந்த பயணிகள் படகு... ஏராளமான மக்கள் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/80-missing-philippine-ferry-fire-1789009802"></link>
            <id>https://news.lankasri.com/article/80-missing-philippine-ferry-fire-1789009802</id>
            <summary type="text">Philippines ferry fire leaves scores of people missing: பிலிப்பைன்ஸில் படகு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர்.
மேற்கு பிலிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Philippines ferry fire leaves scores of people missing: பிலிப்பைன்ஸில் படகு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர்.
</p><p>மேற்கு பிலிப்பைன்ஸில் உள்ள பலவான் தீவுக்கு அருகே புதன்கிழமை இரவு பயணிகள் படகு ஒன்று தீப்பிடித்ததில், ஐந்து பேர் மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 80க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.</p><h2>எண்ணிக்கை மாறக்கூடும்</h2><p>
</p><p>பலவானின் கொரோன் கடற்பகுதியில் தீ விபத்தில் சிக்கிய எம்வி ஜூன் ஆஸ்டர் படகில் இருந்து நாற்பத்தி மூன்று பேர் மீட்கப்பட்டதாக கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c96e430b-ba1e-4623-a27a-78fa90531e74/26-6aa21f8cdde90.webp' /></p><p> </p><p>இதனிடையே, கடலோரக் காவல் படையின் செய்தித் தொடர்பாளர் கமோடோர் நோயெமி கயப்யாப் கூறுகையில், அந்தப் படகின் பயணப் பட்டியலில் 117 பயணிகள் மற்றும் 17 பணியாளர்கள் இடம்பெற்றிருந்ததாகத் தெரிவித்தார். </p><p>மேலும், பதிவுசெய்யப்பட்ட உயிர் பிழைத்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், 80-க்கும் மேற்பட்டோர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை; மீட்புப் பணிகள் தொடர்வதால் இந்த எண்ணிக்கை மாறக்கூடும் என்று கயப்யாப் கூறியுள்ளார்.</p><p></p><p> </p><p>அந்தப் படகு மணிலாவில் உள்ள பாசெக்கோவிலிருந்து புறப்பட்டு கொரோனை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார். இதனிடையே, லுசோனில் நடைபெற்ற இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த ஒரு குடும்பம் இந்த விபத்தில் சிக்கி இன்னும் காணாமல் போயுள்ளனர். </p><p>7,100 தீவுகளைக் கொண்ட தீவுக்கூட்டமான பிலிப்பைன்ஸில் கடல் விபத்துகள் சாதாரணமாக நிகழ்கின்றன. விமானம் மூலம் அணுக முடியாத சில தீவுகளுக்கு இடையே, மக்களையும் சரக்குகளையும் கொண்டு செல்ல தீவுகளுக்கு இடையேயான படகுகள் ஒரு மலிவான வழியாகும். </p><p>ஆனால், கடுமையான வானிலை, பருவமழை மற்றும் புயல்கள் காரணமாக கொந்தளிப்பான சூழல்கள் ஏற்படக்கூடிய அபாயம் எப்போதும் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a754a770-4caf-44cd-91ec-84e3115df8fd/26-6aa21f8d907b8.webp' /></p><p> பிலிப்பைன்ஸ் நாடு ஆண்டுதோறும் சராசரியாக 20 புயல்களால் பாதிக்கப்படுகிறது. மோசமான பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டங்களைச் சீரற்ற முறையில் அமுல்படுத்துதல் ஆகியவையும் கடந்த கால விபத்துகளுக்குக் காரணமாகக் கூறப்பட்டுள்ளன. </p><p>ஆனால் தற்போது, 87 பேர் காணாமல் போயுள்ள நிலையில், இந்தப் படகு விபத்து பிலிப்பைன்ஸில் நிகழ்ந்த மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக அமையக்கூடும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T03:07:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் சஜித் விசேட சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/maintaining-close-relations-between-two-countries-1789008929"></link>
            <id>https://tamilwin.com/article/maintaining-close-relations-between-two-countries-1789008929</id>
            <summary type="text">இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் பாதுகாப்புத்துறை
அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங்குக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் பாதுகாப்புத்துறை
அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங்குக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாசக்கும் இடையிலான விசேட சந்திப்பு கொழும்பில்
நடைபெற்றது.</p><p>

இந்தச் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் நீண்டகால மற்றும்
பன்முகத் தொடர்புகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது. </p><p>அத்துடன் பரஸ்பர
நலனுக்காக இருதரப்பு ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவம்
குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
</p><h2>இரு நாட்டு மக்களுக்கு</h2><p>
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நிலவும் வரலாற்று ரீதியான, கலாசார மற்றும்
மக்கள் இடையேயான தொடர்புகளைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாச, இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான, பயனுள்ள மற்றும் தொடர்ச்சியான
உறவைப் பேணுவதன் அவசியத்தை இந்தியப் பாதுகாப்பு அமைச்சரிடம் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec78647f-e804-4911-83a0-82e0405528b6/26-6aa21e2d8f913.webp' /></p><p>இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலவ வேண்டிய அமைதி, பாதுகாப்பு, நிலையான
தன்மை மற்றும் மேம்பாட்டுக்கான ஒத்துழைப்பு உள்ளிட்ட பிராந்திய அபிவிருத்தி
மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள்
தொடர்பாகவும் இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
</p><p>
பரஸ்பர மரியாதை, இறையாண்மை, சமத்துவம், நம்பிக்கை மற்றும் புரிதல் ஆகியவற்றின்
அடிப்படையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் வலுவான மற்றும் பரஸ்பர
நன்மை பயக்கக்கூடிய உறவைப் பேணிப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை
எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தினார்.
</p><p>
மேலும், அனைத்து மட்டங்களிலும் தொடர்ச்சியான உறவுகளைப் பேணுவதன் மூலம் இரு
நாட்டு மக்களுக்கிடையேயான நட்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T03:04:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லைக் கந்தனின் தீர்த்தோற்சவம் இன்று]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nallur-kandaswamy-kovil-theerththa-thiruvila-1789008645"></link>
            <id>https://ibctamil.com/article/nallur-kandaswamy-kovil-theerththa-thiruvila-1789008645</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவின்&amp;nbsp;தீர்த்தோற்சவம் இன்றாகும்.இன்றைய (10) இருபத்தைந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவின்&nbsp;தீர்த்தோற்சவம் இன்றாகும்.</p><p>இன்றைய (10) இருபத்தைந்தாம் நாள் திருவிழாவின் காலைநேரப் பூஜைகள் ஆரம்பமாகிய நிலையில்&nbsp;முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராக பிள்ளையார் மற்றும் சண்டேஷ்வரருடன் உள்வீதி, வெளிவீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.</p><p>இதனைத் தொடர்ந்து நல்லூர் கந்தனின் ஷண்முக புஸ்கரணி தீர்த்த கேணியில் தீர்த்தோற்சவம் இடம்பெற்றவண்ணம் உள்ளது.</p><p>அலங்காரக் கந்தனின் திருவழகைக் காண நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபடுவதுடன் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.</p><p>கடந்த மாதம் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் தொடர்ந்து 25 நாட்கள் நடைபெற்றது.</p><p>இந்த நிலையில் இன்று (22) காலை தீர்த்தத் திருவிழா நடைபெறுவதுடன் மாலை கொடியிறக்கம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/d68MluZQ5ZU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T03:02:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் ; நள்ளிரவில் அரங்கேறிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/grenade-attack-on-a-house-1789009149"></link>
            <id>https://jvpnews.com/article/grenade-attack-on-a-house-1789009149</id>
            <summary type="text">கொஹுவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெஹிவளை, களுபோவில் பகுதியில் உள்ள வீடொன்றை இலக்குவைத்து கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொஹுவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெஹிவளை, களுபோவில் பகுதியில் உள்ள வீடொன்றை இலக்குவைத்து கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், வீட்டின் மீது கைக்குண்டை வீசி தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/452e45e7-361c-4300-ab0e-e0299a03e1d0/26-6aa21cff70394.webp' /></p><p>
</p><p>
எவ்வாறாயினும், இந்தத் தாக்குதலில் வீட்டில் இருந்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் கொஹுவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-10T02:59:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[களுபோவில பகுதியில் வீடொன்றின் மீது குண்டுத் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bomb-attack-on-dheiwala-office-1789008766"></link>
            <id>https://tamilwin.com/article/bomb-attack-on-dheiwala-office-1789008766</id>
            <summary type="text">தெஹிவளை, களுபோவில பகுதியில் வீடொன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களுபோவில பகுதியில் பெரும் அளவிலான போதைப்பொரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை, களுபோவில பகுதியில் வீடொன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
களுபோவில பகுதியில் பெரும் அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் நண்பரின் வீட்டின் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>நேற்று இரவு 11.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் கைக்குண்டை வீட்டின் பிரதான வாயிலுக்குள் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.</p><p>
கைக்குண்டு வெடித்ததில் வீட்டின் முன்பக்க இரண்டு ஜன்னல்களுக்கும் கண்ணாடிகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும், எவருக்கும் உயிரிழப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை.
</p><p>தாக்குதலுக்கு இலக்கான வீட்டில் வசிக்கும் தரிது ரவிஷான் என்பவர், 'திசாநாயக்க முதியான்சேலாகே அவிஷ்க ஏஷான்' எனும் பெரும் அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரின் நண்பர் எனவும், அந்த போதைப்பொருள் கும்பலுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்தவர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>சம்பவம் இடம்பெற்ற போது 56 வயதான பெண் ஓருவர் மட்டுமே வீட்டில் இருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><p>இச்சம்பவம் தொடர்பில் கொஹுவளை பொலிஸ் நிலையத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T02:58:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கால்வாய்க்குள் கவிழ்ந்த பேருந்து ; 22 பேர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bus-accident-in-polonnrauwa-1789008293"></link>
            <id>https://jvpnews.com/article/bus-accident-in-polonnrauwa-1789008293</id>
            <summary type="text">பொலன்னறுவை - ஹபரணை பிரதான வீதியின் மின்னேரியா, 7ஆம் கட்டை தேவாலய வளைவுப் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர். 

மெதிரிகி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பொலன்னறுவை - ஹபரணை பிரதான வீதியின் மின்னேரியா, 7ஆம் கட்டை தேவாலய வளைவுப் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர். </p><p style="text-align: justify; ">

மெதிரிகிரியவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றே வீதியை விட்டு விலகி கால்வாயொன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1100a0c3-5ec2-4b8a-b4dd-2be3a8ff760c/26-6aa21af82e27c.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இன்று (10) அதிகாலை 4.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், பேருந்து கவிழ்ந்ததில் காயமடைந்த 22 பேர் ஹபரணை மற்றும் ஹிங்குராங்கொடை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "> 

இந்த இடம் அடிக்கடி விபத்துக்கள் நிகழும் ஒரு பகுதியாகும் எனவும் குறிப்பிடப்படுகின்றது</p>]]></content>
            <updated>2026-09-10T02:45:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-home-loan-scheme-for-to-work-abroad-1789006678"></link>
            <id>https://tamilwin.com/article/new-home-loan-scheme-for-to-work-abroad-1789006678</id>
            <summary type="text">வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக்கடன்களை வழங்கும் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, &#039;எதெர த...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக்கடன்களை வழங்கும் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கமைய, 'எதெர திரிய' (Ethera Diriya) புதிய வீட்டுக் கடன் திட்டம் நேற்று (10) உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
</p><p>
வீடு ஒன்றை நிர்மாணிக்க அல்லது கொள்வனவு செய்ய எதிர்பார்க்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம்.</p><h2>சலுகை வட்டியில் கடன்&nbsp;</h2><p>
</p><p>
இந்த திட்டத்தின் கீழ் 500,000 ரூபாய் முதல் 10 மில்லியன் ரூபாய் வரையில் சலுகை வட்டியில் கடன் வழங்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7794b1c7-3262-4cc6-9017-3a52125f9139/26-6aa21971cffba.webp' /></p><p>
</p><p>
இந்த கடன்களுக்கு 10 ஆண்டுகள் வரையிலான திருப்பிச்செலுத்தும் கால அவகாசம் வழங்கப்படவுள்ளது.
</p><p>
அத்துடன், கடன்களுக்காக செலுத்தப்பட வேண்டிய வட்டியின் ஒரு பகுதி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் (SLBFE) மீளச்செலுத்தப்படவுள்ளது.</p><h2>விண்ணப்பிக்கும் முறை&nbsp;</h2><p>
</p><p>
அரச மற்றும் தனியார் வங்கிகள் ஊடாக இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 வெளிநாட்டு வாழ் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், இந்த வீட்டுவசதி ஆதரவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T02:44:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[என் வாழ்க்கைல வந்த ஒருத்தன் நடிச்சானே நடிப்பு.. ஆர்த்தி ரவியின் பதிவு வைரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/aarti-slam-ravi-mohan-in-instagram-post-1789000673"></link>
            <id>https://cineulagam.com/article/aarti-slam-ravi-mohan-in-instagram-post-1789000673</id>
            <summary type="text">நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி கெனிஷா இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். விவாகரத்து வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இரு தரப்பும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி கெனிஷா இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். விவாகரத்து வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.</p><p>இரு தரப்பும் மாறி மாறி பல புகார்களை கூறி வருகின்றனர். "என்னிடம் பேங்க் அக்கவுண்ட் கூடஇல்லை, தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் ஆர்த்தி தான் நிர்வகித்தார். பணம் வேண்டும் என்றால் அவரிடம் போய் நிற்க வேண்டும்" என ரவி மோகன் புகார் கூறி இருந்தார்.
</p><p>மேலும் மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வேண்டும் என ஆர்த்தி தரப்பு கேட்ட நிலையில், மாதம் 3 லட்சம் ரூபாயை ஜீவனாம்சமாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b6a5a03-7a64-401d-91a5-0d4cb0a30682/26-6aa1fbe3c02f3.webp' /></p><p>
</p><h2>ஆர்த்தியின் பதிவு
</h2><p>சர்ச்சைகளுக்கு நடுவில் தற்போது ஆர்த்தி போட்டிருக்கும் இன்ஸ்டா பதிவு வைரல் ஆகி இருக்கிறது.
</p><p>
"சூர்யா, அஜித், விக்ரம், கமல். இவங்க எல்லாரையும் விட என் lifeல வந்த ஒருத்தன் நடிச்சானே நடிப்பு. Oscar awardsஐ கூட கொடுக்கலாம்" என ஆர்த்தி பதிவிட்டுள்ளார்.

&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T02:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்சவிற்கு எதிரான கைது ஆதாரங்கள் - பெரும் குழப்பத்தில் மொட்டுக்கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pohottuwa-doubts-the-evidence-against-namal-1789005419"></link>
            <id>https://tamilwin.com/article/pohottuwa-doubts-the-evidence-against-namal-1789005419</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைது தொடர்பாக முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் நம்பகத்தன்மையற்றவை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுச்செயலாளர் சட்டத்தரண...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைது தொடர்பாக முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் நம்பகத்தன்மையற்றவை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர கரியவசம் தெரிவித்துள்ளார்.</p><p>மல்வத்தை மற்றும் அஸ்கிரி மகா தேரர்களை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,</p><h2>நாமல் ராஜபக்சவின் கைது ஆதாரங்கள்&nbsp;</h2><p>நாமல் ராஜபக்சவின் கைது தொடர்பாக முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் நம்பகத்தன்மையற்றவை. அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்காக தற்போதைய அரசாங்கம் ஊழல் ஒழிப்புச்சட்டங்களைப் பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccd1d877-e98b-4273-a345-a99315827bf9/26-6aa2128a754a2.webp' />&nbsp;</p><p>இதன் காரணமாக தற்போது நாமல் ராஜபக்சவுக்கு எதிராக நடைபெற்று வரும் சட்ட நடவடிக்கைகளில் முன்வைக்கப்பட்ட சான்றுகளை நம்ப முடியாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
</p><p>சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்த பின்னர் (04) திகதி கைது செய்யப்பட்டார்.</p><p>இதனையடுத்து எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
</p><p>இதற்கமைய, கொழும்பு காவல் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச ஒரு சிறப்புப்பிரிவில் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T02:14:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் வீடொன்றை இலக்கு வைத்து கைக்குண்டுத் தாக்குதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hand-grenade-attack-targeting-a-house-in-colombo-1789003654"></link>
            <id>https://ibctamil.com/article/hand-grenade-attack-targeting-a-house-in-colombo-1789003654</id>
            <summary type="text">கொஹுவல காவல்துறை பிரிவுக்குட்பட்ட தெஹிவளை, களுபோவில் பகுதியில் உள்ள வீடொன்றை இலக்குவைத்து கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொஹுவல காவல்துறை பிரிவுக்குட்பட்ட தெஹிவளை, களுபோவில் பகுதியில் உள்ள வீடொன்றை இலக்குவைத்து கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p>
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், வீட்டின் மீது கைக்குண்டை வீசி தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>

எவ்வாறாயினும், இந்தத் தாக்குதலில் வீட்டில் இருந்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9918985f-1300-4cc1-8ccf-523013382e66/26-6aa20788e8c3f.webp' /></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பில் கொஹுவல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T02:00:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலை கோர விபத்தில் சிக்கிய கொழும்பு சென்ற பேருந்து - 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bus-accident-in-minneriya-22-hospitalized-1789003819"></link>
            <id>https://tamilwin.com/article/bus-accident-in-minneriya-22-hospitalized-1789003819</id>
            <summary type="text">பொலன்னறுவை - ஹபரணை பிரதான வீதியின் மின்னேரியா, 7ஆம் கட்டை தேவாலய வளைவுப் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலன்னறுவை - ஹபரணை பிரதான வீதியின் மின்னேரியா, 7ஆம் கட்டை தேவாலய வளைவுப் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.</p><p>இந்த விபத்து இன்று (10) அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.&nbsp;&nbsp;</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p> 

மெதிரிகிரியவிலிருந்து கொழும்பு நோக்கிப்பயணித்த தனியார் பேருந்து ஒன்றே வீதியை விட்டு விலகி கால்வாயொன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50c2b9c0-19cc-4c7c-8ed8-0d88abcad480/26-6aa20af5ed447.webp' /></p><p> </p><p>பேருந்து கவிழ்ந்ததில் காயமடைந்த 22 பேர் ஹபரணை மற்றும் ஹிங்குராங்கொடை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T01:42:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்கான அறிவிப்பு: கட்டாயமாகும் நடைமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/driving-licensee-new-regulation-1789003031"></link>
            <id>https://tamilwin.com/article/driving-licensee-new-regulation-1789003031</id>
            <summary type="text">&amp;nbsp;வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள், நாட்டில் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதாயின், அவர்கள் நாட்டிற்கு வருகை தந்து கட்டாயமாக மூன்று மாத ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள், நாட்டில் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதாயின், அவர்கள் நாட்டிற்கு வருகை தந்து கட்டாயமாக மூன்று மாத காலப்பகுதி வரை தங்கியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரகாரம், சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான எழுத்து மூலப் பரீட்சையில் சித்தியடைந்து மூன்று மாதங்கள் நிறைவடையும் முன்னர் எக்காரணம் கொண்டும் செய்முறைப் பரீட்சைக்கு அனுமதி வழங்க முடியாது என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.</p><h2>மூன்று மாத கால அவகாசம்</h2><p>மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னாண்டோ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc7b921d-f5f1-4b31-ac99-e8c0d7747275/26-6aa20518c9247.webp' /></p><p>
</p><p>சாரதி அனுமதிப்பத்திரப் பரீட்சை எழுதப்பட்ட நாளில் இருந்து மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படுவதன் முக்கிய நோக்கமே பயிற்சி பெறுவதற்காகவே ஆகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>பரீட்சைக்குத் தோற்றிய நாளில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் வரை குறித்த தற்காலிக பயிற்சி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் என மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>எனவே, எழுத்து மூலப் பரீட்சை எழுதிய பின்னர் மூன்று மாதங்களுக்குள் விண்ணப்பதாரர் ஒருவர் வெளிநாடு செல்வாராயின், அவர் மீண்டும் ஒன்றரை வருட காலப்பகுதி முடிவடைவதற்குள் இலங்கைக்கு வருகை தந்து, செய்முறைப் பரீட்சைக்குத் தோற்றி மட்டுமே சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.</p><p>
நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T01:27:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதன் பெயர்ச்சியால் வருமானம் அதிகரிக்க போகும் ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/budhan-peyarchi-varumanam-athikarikka-rasi-1789003374"></link>
            <id>https://jvpnews.com/article/budhan-peyarchi-varumanam-athikarikka-rasi-1789003374</id>
            <summary type="text">ஜோதிடத்தில் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் தான் புதன்.&amp;nbsp;ஜோதிடத்தில் புதனுக்கும், சுக்கிரனுக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் தான் புதன்.&nbsp;ஜோதிடத்தில் புதனுக்கும், சுக்கிரனுக்கும் இடையே நட்புறவு இருப்பதாக கருதப்படுகிறது. எனவே இந்த புதன் பெயர்ச்சி வியாபாரம், வேலை வாய்ப்பு, நிதி விஷயங்கள் போன்றவற்றில் சிறப்பான பலன்களைத் தரும்.</p><p>இப்போது துலாம் ராசிக்கு செல்லும் புதனால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8921cf8d-863d-4ff1-a4c6-c7623b50b217/26-6aa2066f81304.webp' /></p><h3>மேஷம்
</h3><p>மேஷ ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் கூட்டு தொழிலில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில் வருமானத்தில் உயர்வும், தொழிலில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும் வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f715f73-0930-4e69-8537-43678f3cbe5c/26-6aa2067034678.webp' /></p><h3>கன்னி
</h3><p>கன்னி ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி ரீதியாக நல்ல பலன்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் அல்லது பதவி உயர்வைப் பெறும் வாய்ப்புள்ளது. பேச்சாற்றல் மேம்படும். இந்த பேச்சால் பல முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5008c5b8-9f79-4098-b478-fb3cb6adaf86/26-6aa20670e03c0.webp' /></p><h3>துலாம்</h3><p>
துலாம் ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கியமான முடிவுகளை திறம்பட யோசித்து எடுப்பீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். தொழிலதிபர்கள் புதிய திட்டங்களால் தங்களின் தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. பணப் பிரச்சனைகள் தீர்ந்து, நிதி நிலையில் உயர்வு ஏற்படலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86d5164d-290d-48ca-a0c3-7f2fcbc42858/26-6aa2067191fa7.webp' /></p><h3>கும்பம்
</h3><p>கும்ப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்களின் திறமையும், முடிவெடுக்கும் திறனும் பாராட்டப்படலாம். தொழிலதிபர்கள் புதிய நட்புகளால் நல்ல பலனைப் பெறுவார்கள். முக்கியமாக இக்காலத்தில் ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b762505-26de-46cc-982e-c67d392b6a6d/26-6aa2067244bb4.webp' /></p>]]></content>
            <updated>2026-09-10T01:23:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சில மாவட்டங்களில் இடைக்கிடையே மழை! வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னெச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/intermittent-rain-is-likely-today-1789001893"></link>
            <id>https://ibctamil.com/article/intermittent-rain-is-likely-today-1789001893</id>
            <summary type="text">சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
</p><p>
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>பலத்த காற்று மற்றும் மின்ன்ல தாக்கம்</h2><p> </p><p>

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9b32ea0-c364-44b2-a259-55057a44403f/26-6aa203f76308b.webp' /></p><p>

இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
</p><p>
இதேவேளை, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வெப்பச் சுட்டெண் காரணமாக இன்று பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T01:17:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவுடனான ரகசிய ஒப்பந்தங்களை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reveal-the-real-mous-with-india-says-fsp-1788998963"></link>
            <id>https://tamilwin.com/article/reveal-the-real-mous-with-india-says-fsp-1788998963</id>
            <summary type="text">&amp;nbsp;இந்தியாவுடனான ரகசிய ஒப்பந்தங்களை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என முன்னிலை சோசலிசக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் புபுது ஜயகொட வலியுறுத்தியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இந்தியாவுடனான ரகசிய ஒப்பந்தங்களை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என முன்னிலை சோசலிசக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் புபுது ஜயகொட வலியுறுத்தியுள்ளார்.
</p><p>இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயத்தின் போது, அரசாங்கம் கூறுவது போன்று சிறிய மற்றும் முக்கியத்துவமற்ற சில ஒப்பந்தங்களில் கையெழுத்திட வாய்ப்பில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>மக்கள் முன் அரசாங்கம் மறைக்கும் உண்மையான ஒப்பந்தங்கள் மற்றும் உடன்பாடுகள் எவை என்பதை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74b4eb78-e19f-414a-9a8a-24121cb3ae87/26-6aa1f53548cb0.webp' /></p><p>
</p><p>கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இந்த விஜயத்தின் போது, மாணவர் படைப்பிரிவு பயிற்சி பரிமாற்றம், பாதுகாப்பு பல்கலைக்கழக ஒத்துழைப்பு மற்றும் இந்தியாவால் வழங்கப்பட்ட ஆயுதங்களின் பராமரிப்பு தொடர்பான மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
</p><p>எனினும், இத்தகைய சிறிய ஒப்பந்தங்கள் பொதுவாக அமைச்சரவை மட்டத்திலான கீழ்நிலை அதிகாரிகளால் கையெழுத்திடப்படுபவை என புபுது ஜயகொட சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>வரலாற்றுப் பின்னணியை நினைவுபடுத்திய ஜயகொட, இதற்கு முன்னர் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்தது 38 ஆண்டுகளுக்கு முன்னரே என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>1987 ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்னர் ஏற்பட்ட கடும் பதற்றமான சூழ்நிலையில், அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த கே.சி. பந்த் 1988 ஆம் ஆண்டு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>எனவே, 38 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்தது, பாடசாலை மாணவர்களின் காடெட் பயிற்சி அல்லது துப்பாக்கி பராமரிப்பு பற்றி பேசுவதற்காக என அரசாங்கம் கூறுவதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார்.
</p><p>மேலும், 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியாவில் மேற்கொண்ட விஜயத்தின் போது எட்டப்பட்ட உடன்பாடுகள் அல்லது 2025 ஏப்ரல் 05 ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்த போது கையெழுத்திடப்பட்ட ஏழு ஒப்பந்தங்களின் பிரதிகள் இதுவரை நாட்டுக்கு வெளிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.</p><p>
அக்காலத்தில் கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை சட்டப்பூர்வமான ஒப்பந்தமாக மாற்றுவது குறித்து கலந்துரையாடவே இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
தற்போதைய அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மக்களுக்குத் தெரியாமல் ரகசியமாகச் செய்வதாக புபுது ஜயகொட குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>
இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே உண்மையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள், எட்டப்பட்ட ரகசிய உடன்பாடுகள் மற்றும் கையெழுத்திடப்பட்ட உண்மையான ஒப்பந்தங்கள் எவை என்பதை உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டுமென அவர் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T01:02:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இதய நோயாளிகள் தொடர்பில் வெளியிடப்படும் அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heart-disease-on-rise-says-dr-1789000243"></link>
            <id>https://tamilwin.com/article/heart-disease-on-rise-says-dr-1789000243</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கையில் இதய நோயாளிகள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இதய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கையில் இதய நோயாளிகள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இதய நோய்களுக்கு உள்ளாகும் மக்களின் வயதுப் பிரிவு சுமார் 40 வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>கண்டி தேசிய வைத்தியசாலையின் இதயநோய் மயக்கவியல் விசேட வைத்திய நிபுணர் ரோஷன மல்லவாரச்சி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
</p><p>இலங்கையில் கடந்த காலங்களில் 50 முதல் 70 வயதுக்குட்பட்டவர்களுக்கே இதய நோய்கள் அதிகம் பதிவாகியிருந்த போதிலும், தற்போது 40 வயதுடையவர்கள் மற்றும் அதற்கும் குறைந்த வயதுடையவர்கள் கூட இதய நோய்களால் பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20c6f087-99ac-42a7-b450-a0b64a45dc48/26-6aa1fa39a7310.webp' /></p><p>
</p><p>ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை முறையாகப் பரிசோதிக்காமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு, கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற பரிசோதனைகளை மேற்கொள்வார்களாயின், இதய நோய் ஏற்படுவதற்கு முன்னரே வைத்தியர்களால் தகுந்த முடிவுகளுக்கு வர முடியும் என தெரிவித்துள்ளார்.</p><p>
ஆனால் பெரும்பாலானோர் இதய நோய் தாக்கிய பின்னரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>இதய நோய் ஏற்பட்ட பின்னர் அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்கள், அந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்காகக் குறிப்பிட்ட காலம் காத்திருப்புப் பட்டியலில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p> கொழும்பு, குருணாகல், கண்டி, கராப்பிட்டிய, ஸ்ரீ ஜெயவர்த்தனபுர உள்ளிட்ட பல வைத்தியசாலைகளில் இந்த நிலைமை பதிவாகியுள்ளதாகவும் வைத்திய நிபுணர் ரோஷன மல்லவாரச்சி மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T01:01:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடுகளில் பணிப்புரிவோருக்கு புதிய வீட்டுக் கடன் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-home-loan-scheme-for-those-working-abroad-1789001893"></link>
            <id>https://jvpnews.com/article/new-home-loan-scheme-for-those-working-abroad-1789001893</id>
            <summary type="text">வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக் கடன்களை வழங்கும் &#039;எதெர திரிய&#039; (Ethera Diriya) புதிய வீட்டுக் கடன் திட்டம் இன...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக் கடன்களை வழங்கும் 'எதெர திரிய' (Ethera Diriya) புதிய வீட்டுக் கடன் திட்டம் இன்று (10) உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.</p><p>
</p><p></p><p>இந்த திட்டத்தின் கீழ் 500,000 ரூபாய் முதல் 10 மில்லியன் ரூபாய் வரையில் சலுகை வட்டியில் கடன் வழங்கப்படவுள்ளது.</p><p>

அத்துடன், கடன்களுக்காகச் செலுத்தப்பட வேண்டிய வட்டியின் ஒரு பகுதி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் (SLBFE) மீளச் செலுத்தப்படவுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e115925-8c77-49c4-a082-7babe17075d7/26-6aa200a68356e.webp' /></p><p>இதன் மூலம், வீடு ஒன்றை நிர்மாணிக்க அல்லது கொள்வனவு செய்ய எதிர்பார்க்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நிதிச்சுமை பெருமளவு குறைவடையும்.
</p><p>
இந்தக் கடன்களுக்கு 10 ஆண்டுகள் வரையிலான திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் வழங்கப்படுவதுடன், அரச மற்றும் தனியார் வங்கிகள் ஊடாக இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.</p><p>

வெளிநாடுகளில் ஈட்டும் வருமானத்தைப் பாதுகாப்பான மற்றும் இலகுவான வீடமைப்புத் துறையில் முதலீடு செய்வதற்கு வெளிநாட்டு வாழ் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், இந்த வீட்டுவசதி ஆதரவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T00:58:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நீதிமன்றில் சாட்சியமளித்த இளைஞர் மீது வாள்வெட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-attacked-sword-testifying-in-jaffna-court-1788983027"></link>
            <id>https://jvpnews.com/article/youth-attacked-sword-testifying-in-jaffna-court-1788983027</id>
            <summary type="text">யாழ்ப்பாணம்- ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம்- ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>குறித்த சம்பவமானது வேலணை அராலிச் சந்தி பகுதியில் இன்று (9) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
</p><p>

நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த பிரச்சினை தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், குறித்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக பாதிக்கப்பட்ட இளைஞர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d9dac7a-57f7-4e0d-b936-9e46dd1a6b12/26-6aa1b6f590b73.webp' /></p><p>வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் அவர் வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, வேலணை அராலிச் சந்தி பகுதியில் அவரை வழிமறித்த மற்றைய தரப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் நபர்கள் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
தாக்குதலாளிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சிலர் தற்போது கிளிநொச்சி பகுதியில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>தாக்குதலில் கடும் காயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T00:52:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பருத்தித்துறையில் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள்: போராட்டத்திற்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/paruthithurai-land-dispute-protest-planned-1789000877"></link>
            <id>https://tamilwin.com/article/paruthithurai-land-dispute-protest-planned-1789000877</id>
            <summary type="text">இராணுவம் மற்றும் கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டு வரும் காணிகளை மீண்டும் விடுவிக்கக் கோரி, பருத்தித்துறை நகரசபை ஏற்பாடு செய்துள்ள கவனயீர்ப்பு பேரணிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இராணுவம் மற்றும் கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டு வரும் காணிகளை மீண்டும் விடுவிக்கக் கோரி, பருத்தித்துறை நகரசபை ஏற்பாடு செய்துள்ள கவனயீர்ப்பு பேரணிக்கு நகரசபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி ஆதரவு தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பாக அவர்&nbsp; ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.</p><h2>கவனயீர்ப்பு பேரணி</h2><p>

பருத்தித்துறை நகரில் தபால் திணைக்களம், நீதிமன்றம் மற்றும் நகரசபைக்கு சொந்தமான காணிகள் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அவற்றை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c7381a7-178a-44e2-968f-b633416a0f88/26-6aa1ff4d7e435.webp' /></p><p>
</p><p>
மேலும், சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கடற்படை முகாம் மற்றும் கலங்கரை விளக்கம் அமைந்துள்ள பகுதிகளில் இருந்தும் கடற்படையினர் வெளியேற வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.</p><p>

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் இருந்து கவனயீர்ப்பு பேரணி ஆரம்பமாகவுள்ளது.</p><h2>போராட்டத்திற்கு அழைப்பு</h2><p>
</p><p>
பேரணி பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை நடைபெறும். அங்கு ஜனாதிபதிக்கு வழங்குவதற்காக மனு ஒன்றும் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1f345ec-077d-4526-82e8-0864749af8d6/26-6aa1ff4e6ddfa.webp' /></p><p>
</p><p>
இந்த போராட்டத்திற்கு என்பிபி தவிர்ந்த பருத்தித்துறை நகரசபையில் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக ஜெயகோபி குறிப்பிட்டார்.
</p><p>
எனவே, பருத்தித்துறை மக்களின் பூர்வீக காணிகளை மீட்டெடுக்கும் இந்தப் போராட்டத்தில் மக்கள் அனைவரும் பெருமளவில் கலந்துகொண்டு ஆதரவு வழங்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T00:52:41+00:00</updated>
        </entry>
    </feed>
