<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-21T13:13:09+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[லோ-நெக் ஆடையணிந்து கிளாமர் போட்டோஷூட் எடுத்த நடிகை சைத்ரா அச்சார்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/chaithra-j-achar-red-dress-photoshoot-post-1787316301"></link>
            <id>https://viduppu.com/article/chaithra-j-achar-red-dress-photoshoot-post-1787316301</id>
            <summary type="text">மஹிரா, ஆ த்ருஷ்யா, கில்கி, தோபி, பிளிங்க் போன்ற கன்னட மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சைத்ரா ஜே அச்சார். கடந்த ஆண்டு வெளியான 3BHK என்ற ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹிரா, ஆ த்ருஷ்யா, கில்கி, தோபி, பிளிங்க் போன்ற கன்னட மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சைத்ரா ஜே அச்சார். கடந்த ஆண்டு வெளியான 3BHK என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பலரது கவனத்தையும் ஈர்த்தார் சைத்ரா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9428afb1-4c54-4855-81d8-c569565eb2cf/26-6a884856b596b.webp' /></p><p>

இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான மை லார்ட் படத்தில் சுசிலா என்ற ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

நடிப்பை தாண்டி பாடகியாகவும் விளங்கி வரும் சைத்ரா, பல பாடல்களை பாடியிருக்கிறார். </p><p>மீசையமுறுக்கு படத்தின் பப்பாளி பழமே என்ற பாடலுக்கு ஹிப் ஆப் ஆதியுடன் ஆட்டம் போட்டார். தற்போது லோ-நெக் ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் சைத்ரா.</p>]]></content>
            <updated>2026-08-21T13:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் வங்கி அதிகாரி பிரபல ஹோட்டலில் செய்த காரியம்; பொலிஸார் வலைவீச்சு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/theft-at-a-popular-hotel-by-a-person-bank-official-1787315159"></link>
            <id>https://jvpnews.com/article/theft-at-a-popular-hotel-by-a-person-bank-official-1787315159</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கொழும்பு பிரபல ஹோட்டல் ஒன்றில் தந்திரமாகப் புகுந்து பொருட்களைத் திருடிச் சென்ற சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கொழும்பு பிரபல ஹோட்டல் ஒன்றில் தந்திரமாகப் புகுந்து பொருட்களைத் திருடிச் சென்ற சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.</p><p>

கடந்த 03 ஆம் திகதி கொம்பனி வீதி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரபல ஹோட்டலுக்கு வருகை தந்த நபரொருவர், தான் ஒரு முன்னணி தனியார் வங்கியின் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0ec5568-ba92-40ce-a2a0-373b1a7c4da7/26-6a8843d98b721.webp' /></p><h2>பெறுமதிமிக்க பொருட்களைத் திருடிக்கொண்டு ஓட்டம்</h2><p>
</p><p>
 தனது வங்கி ஊழியர்கள் இரவு விருந்திற்காக வருகை தரவுள்ளதாகக் கூறி, பெருமளவிலான உணவுகளை ஓடர் செய்ததை தொடர்ந்து, ஹோட்டலில் ஊழியர்கள் பணியில் தீவிரமாக இருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பெறுமதிமிக்க பொருட்களைத் திருடிக்கொண்டு அவர் தப்பிச் சென்றுள்ளார்.</p><p></p><p> 

இச் சம்பவம் தொடர்பில் ஹோட்டல் நிர்வாகத்தினரால் கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளில், இச் சந்தேகநபர் இதற்கு முன்னரும் கருவாத்தோட்டம், பேலியகொடை மற்றும் நுகேகொடை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளிலும் இதே பாணியில் மோசடிகளைச் செய்து திருட்டில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>

சந்தேகநபரின் புகைப்படங்கள் மற்றும் சிசிரிவி காட்சிகளைப் பொலிஸார் வெளியிட்டுள்ளடன், இவரைப் பற்றிய தகவல்கள் ஏதேனும் தெரியுமாயின் பின்வரும் தொலைபேசி எண்களுக்குத் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்:

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (கொம்பனிவீதி): 071-8591561

கொம்பனிவீதி பொலிஸ் நிலையம்: 011-2433829&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-21T13:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தைக்கே பல இலட்சம் ரூபா வாடகை செலுத்திய ஷிரான் பாசிக்! முன்னாள் பிரதியமைச்சர் ஒருவரின் புகைப்படமும் கண்டுபிடிப்பு...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-orders-full-financial-review-of-shiran-basik-1787316585"></link>
            <id>https://tamilwin.com/article/court-orders-full-financial-review-of-shiran-basik-1787316585</id>
            <summary type="text">&amp;nbsp;ஷிரான் பாசிக்கின் சோல்பீச் ஹோட்டலில் அமைக்கப்பட்ட ஓமான் ஹோல்டிங்ஸ் கூட்டு நிறுவனத்தின் கட்டடத்திற்காக தனது தந்தைக்கு மாதந்தோறும் 8 முதல் 8.5 இலட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஷிரான் பாசிக்கின் சோல்பீச் ஹோட்டலில் அமைக்கப்பட்ட ஓமான் ஹோல்டிங்ஸ் கூட்டு நிறுவனத்தின் கட்டடத்திற்காக தனது தந்தைக்கு மாதந்தோறும் 8 முதல் 8.5 இலட்சம் ரூபாய் வாடகை செலுத்தியுள்ளார். </p><p>தனது சொந்தத் தந்தைக்கு எவ்வாறு ஒரு நபர் வாடகை செலுத்த முடியும்? என்ற பிரச்சினை எழுந்துள்ளது. இது பணச்சலவை நடவடிக்கையாகவே இடம்பெற்றுள்ளது என புலனாய்வு அதிகாரிகள் தெரிவிப்பதுடன் அது தொடர்பிலும் தீவிர விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><h2>
</h2><p></p><h2>'சோல் பீச்' ஹோட்டல் கட்டட காணி</h2><p>
'சோல் பீச்' ஹோட்டல் தொடர்பான சாட்சியங்களை வழங்கிய போது இதை உடைத்து அகற்றியது தொடர்பாக கடந்த காலத்தில் பெரும் பேச்சுகள் எழுந்தன. அந்தப் பேச்சுகளுக்கு அப்பால் இதன் உரிமையாளர் யார் என்பது குறித்து ஷிரான் பாசிக் தனக்கு முன்னுரிமை கொடுத்துக் கூறியுள்ளார்.
</p><p>ஹோட்டல் அமைந்துள்ள காணி தனது தந்தையிடமிருந்தே கிடைத்தது என்றும் தந்தைக்கு ஆனந்த என்பவரால் நன்கொடை உறுதிப்பத்திரம் மூலம் அது வழங்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். </p><p>அவ்வாறு கிடைத்த காணியிலேயே இந்த உணவகம் அமைக்கப்பட்டு ஒரு திட்டமாக செயற்படுத்தப்பட்டதாக அவர் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளில் வெளிவந்த பிரதான விடயம் என்னவெனில்இ இந்த நன்கொடை உறுதிப்பத்திரம் என்பது முற்றிலும் பொய்யான ஒன்றாகும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14ae6d57-b84e-4ac9-bf65-f5c9425c9a5c/26-6a88496bdcbdf.webp' /></p><p>இது ஒரு போலி உறுதிப்பத்திரம் என தெரிவிக்கின்றன. மேலும்இ இந்தக் காணியின் உரிமை எந்தவொரு தனிநபருக்கும் உரியது அல்ல என்றும் இது பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்ட அரச காணியாகும.</p><p>
'சோல் பீச்' ஹோட்டல் அமைந்துள்ள அதே வளாகத்திலேயே இந்த ஓமhன் ஓல்டிங்ஸ் நிறுவனத்திற்குரிய கட்டடமும் அமைக்கப்பட்டுள்ளது. 
அரசுக்குச் சொந்தமான காணியை பலவந்தமாக ஆக்கிரமித்து இவ்வாறான கட்டடம் உயர்த்தப்பட்டுள்ளதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>இது தொடர்பாக போலி நன்கொடை உறுதிப்பத்திரத்தைத் தயாரித்தமைக்காக ஷிரானின் தந்தை மற்றும் இதற்கு உதவிய சட்டத்தரணி ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடர புலனாய்வு அதிகாரிகள் அவதானம் செலுத்தியுள்ளனர்.
</p><h2>
பெறப்பட்ட சட்டவிரோத ஆவணங்கள்</h2><p>அத்துடன் இதில் பல்வேறு நபர்கள் தொடர்புபட்டுள்ளதுடன் அவர்களின் தகவல்களும் வெளிவந்துள்ளன. மேலும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் அல்லது நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் இதற்காக எவ்வித முறையான அனுமதியும் பெறப்படவில்லை.
</p><p>குறிப்பாக இந்த ஹோட்டல் தொடருந்து பாதைக்கு அருகிலேயே அமைந்துள்ளது. அப்படியிருக்க பிரதான வீதியிலிருந்து தொடருந்து பாதையைக் கடந்து உணவகத்திற்குச் செல்வதற்காக இவர்கள் தொடருந்து திணைக்களத்திற்கு கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும். </p><p>இது பிரித்தானியர் ஆட்சிக்காலத்திலிருந்து உள்ள ஒரு சட்டமாகும் என புலனாய்வு அதிகாரிகள் கூறுகின்றனர். அந்தச் சட்டத்தின்படி அதனை ஒரு அனுமதியாகக் கொண்டு உணவகத்திற்கு மின்சாரம் மற்றும் நீர் வசதிகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
</p><p>ஆனால் இவை அனைத்துமே போலி மற்றும் சட்டவிரோதமானவை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி இந்த உணவகத்திற்காகப் பெறப்பட்ட மதுபான உரிமங்கள் கூட முற்றிலும் சட்டவிரோதமானவை எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன. </p><p>
ஷிரான் பாசிக்கிற்குச் சொந்தமான இந்த உணவகத்திற்கு வந்து சென்ற ஒரு முன்னாள் பிரதி அமைச்சர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் நகர அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சராகப் பணியாற்றிய காலத்திலேயே இந்த உணவக வளாகத்திற்கு வந்து சென்றுள்ளார். </p><p>அவர் அங்கு வந்து சென்றமைக்கான புகைப்படங்கள் உணவகத்தில் இருந்து புலனாய்வு அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T12:55:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெயிலர் 2வில் இடம்பெற்றுள்ள Ala Bolelo பாடல் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ala-bolelo-lyric-video-jailer-2-rajinikanth-1787316721"></link>
            <id>https://cineulagam.com/article/ala-bolelo-lyric-video-jailer-2-rajinikanth-1787316721</id>
            <summary type="text">ஜெயிலர் 2நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாகப்போகும் திரைப்படம் ஜெயிலர் 2.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினியுடன் பலர் நடிக்கும் இப்படத...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜெயிலர் 2</h2><p>நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாகப்போகும் திரைப்படம் ஜெயிலர் 2.
</p><p>நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினியுடன் பலர் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார். தற்போது படத்தில் இடம்பெற்றுள்ள Ala Bolelo என்ற பாடலின் Lyric வீடியோ வெளியாகியுள்ளது. </p><p>அதில் ஒரு நடிகை ஸ்பெஷல் நடனம் போட்டுள்ளார், அவர் யார், அவரது அட்டகாசமான ஆட்டத்தை வீடியோவில் காணுங்கள்,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/hIHUeuw2yj8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-21T12:52:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் பிரித்தானியா திரும்பும் ஹரி, மேகன் தம்பதியர்: அதிர்ச்சியில் இணையம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/internet-shocks-for-harry-meghan-uk-return-1787302754"></link>
            <id>https://news.lankasri.com/article/internet-shocks-for-harry-meghan-uk-return-1787302754</id>
            <summary type="text">Harry and Meghan’s surprise UK move shocks internet: ஹரி, மேகன் தம்பதியர் மீண்டும் பிரித்தானியா திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அந்த செய்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Harry and Meghan’s surprise UK move shocks internet: ஹரி, மேகன் தம்பதியர் மீண்டும் பிரித்தானியா திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அந்த செய்தி கேட்டு இணையவாசிகள் பலர் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.</p><p>



ராஜ குடும்பத்திலிருந்தும், பிரித்தானியாவிலிருந்தும் வெளியேறி ஆறு ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்த நிலையில், பிரித்தானிய மன்னரின் இளைய மகனான ஹரி, தன் குடும்பத்துடன் பிரித்தானியா திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><h3>
அதிர்ச்சியில் இணையம்</h3><p>
இந்நிலையில், ஹரி, மேகன் தம்பதியர் மீண்டும் பிரித்தானியா திரும்புவது குறித்து பலரும் சமூக ஊடகங்களில் கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6998f626-0af4-4876-bf3b-84e955156a12/26-6a8813639f9b0.webp' /></p><p>

ஹரி, மேகன் வாழும் அதே கலிபோர்னியாவில் வாழும் சிலர், என்ன ஹரியும் மேகனும் கலிபோர்னியாவிலிருந்து வெளியேறுகிறார்களா? தொல்லை ஒழிந்தது என்கிறார்கள்.</p><p>

பிரித்தானியர்களில் சிலர், ஐயோ பாவம், மன்னரும் ராணியும் என்றாலும், சிலர், அவர்கள் மீண்டும் பிரித்தானியாவுக்குத் திரும்புவதை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcQjw3jsXPk/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcQjw3jsXPk/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcQjw3jsXPk/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by RTÉ News (@rtenews)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>

மேகன் ராஜ குடும்பத்தில் பிரச்சினைகளை உருவாக்கத் துவங்கியதிலிருந்தே அவரை கடுமையாக விமர்சித்துவந்த ஊடகவியலாளரான பையர்ஸ் மார்கன் சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், சரி, நான் இனி அமெரிக்காவுக்கு புலம்பெயரவேண்டியதுதான் என்று கூறியுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I may have to emigrate to the U.S. <a href="https://t.co/HRKx7iLopr">https://t.co/HRKx7iLopr</a></p>&mdash; Piers Morgan (@piersmorgan) <a href="https://x.com/piersmorgan/status/2090192320163463421?ref_src=twsrc%5Etfw">August 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
அரசியல் விமர்சகரான மேகம் மெக்கெயின் என்பவர், பிரித்தானியாவிலிருக்கும் நண்பர்களுக்கு அதிர்ஷ்டம் அமையட்டும், ஏனென்றால் இனி ஹரியும் மேகனும் உங்கள் பிரச்சினை என்று கூறியுள்ளார்.&nbsp;</p><p></p><p>
கன்சர்வேட்டிவ் கட்சி விமர்சகரான மைக்கேல் நோலஸ் என்பவர், மேன்மை தங்கிய மன்னர் சார்லஸ் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று கூறியுள்ளார்.
</p><p>
அதே நேரத்தில், ஊடகவியலாளரான சோபியா A நெல்சன் என்பவர், என்னால் இதை நம்பமுடியவில்லை, மேகன் அமெரிக்காவில் ஒரு அருமையான வாழ்க்கையை அமைத்துக்கொண்டுள்ளார்.
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I just can&#39;t believe it. Meghan has built a wonderful<br>Life. Here. In California. And Hollywood. Her family. Marriage. The UK is very hateful toward her and Harry. Why subject the kids to this? Her mental health?! Yikes! <a href="https://t.co/RErw7zpvn5">https://t.co/RErw7zpvn5</a></p>&mdash; Sophia A. Nelson (@IAmSophiaNelson) <a href="https://x.com/IAmSophiaNelson/status/2090219384560075220?ref_src=twsrc%5Etfw">August 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

பிரித்தானியா ஹரியையும் மேகனையும் வெறுக்கிறது, ஏன் இப்படிப்பட்ட ஒரு நிலையை பிள்ளைகளுக்கு அனுமதிக்கவேண்டும், மேகனின் மன நலன் என்ன ஆகும் என கேள்வி எழுப்பியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T12:45:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[எடை இழப்பு முதல் டீடாக்ஸ் வரை.. எலுமிச்சை நீரில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/benefits-of-drinking-lemon-water-for-weight-loss-1787226447"></link>
            <id>https://news.lankasri.com/article/benefits-of-drinking-lemon-water-for-weight-loss-1787226447</id>
            <summary type="text">Benefits of Lemon Water: காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான எலுமிச்சை நீரை குடிக்கும் பழக்கம் தற்பொழுது பலரிடம் காணப்படுகிறது.ஆயுர்வேதம் மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Benefits of Lemon Water: காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான எலுமிச்சை நீரை குடிக்கும் பழக்கம் தற்பொழுது பலரிடம் காணப்படுகிறது.</p><p>ஆயுர்வேதம் மற்றும் ஊட்டச்சத்து ஆகிய இரு துறைகளை சார்ந்த நிபுணர்களும் இப்பழக்கம் உடலுக்கு நன்மை கொடுக்க கூடியது என்று கருதுகின்றனர்.
 எலுமிச்சை நீரில் உள்ள வைட்டமின் சி, ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள்&nbsp;மற்றும் தாதுக்கள் ஆகியவை உடலை உள்ளிருந்தே தூய்மைப்படுத்தவும் உடலை எப்போதும் ஆற்றலுடன் வைத்திருக்கவும் உதவுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/950915f8-eb80-494a-a399-8de92971b394/26-6a86e95119460.webp' /></p><p></p><p>
</p><p> நாமும் எப்பொழுதும் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த பழக்கத்தை நடைமுறை வாழ்க்கையில் கொண்டு வரலாம்.
</p><h3> உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது:
</h3><p>நாம் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான எலுமிச்சை நீரை குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கிறது. அதில் முதலாவதாக உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்ற எலுமிச்சை நீர் உதவுகிறது. </p><p>காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் போது கல்லீரலின் செயல்பாடு தூண்டப்படுவதோடு உடலின் இயற்கையான சுத்திகரிப்பு செயல்முறைகளையும் வேகப்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக நம்முடைய சருமம் பொலிவுடன் தெளிவானதாகவும் உள்ளது. </p><h3>
செரிமான மண்டலத்தை வலுப்படுத்துகிறது:
</h3><p> ஒருவருக்கு வாயு தொல்லை நெஞ்செரிச்சல் அல்லது மலச்சிக்கல் போன்ற செரிமானம் சார்ந்த பிரச்சனைகள் வந்து அடிக்கடி அவதிப்படுபவர் என்றால் அவர்களுக்கு வெதுவெதுப்பான எலுமிச்சை நீர் மிகவும் கை கொடுக்கும். இது செரிமான நொதிகளை தூண்டி உணவை விரைவாக செரிமானம் செய்ய பெரிதும் உதவுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdb2e395-efd8-4ffb-95de-0063cc80064c/26-6a86e951cfbd3.webp' /></p><p>
</p><h3> எடை இழப்பிற்கு உதவுகிறது:
</h3><p> உடலில் உள்ள கூடுதல் எடையை குறைப்பதற்கும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் இது மிகவும் உதவியாக இருக்கிறது. எலுமிச்சை நீர் உடலின் வளர்ச்சியை மாற்றத்தை அதிகரிக்க செய்து அவை நாம் கொழுப்பை எரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. அதனால், தினமும் தவறாமல் இதை பருகி வருகின்ற பொழுது காலப்போக்கில் உடல் எடை படிப்படியாக குறைய தொடங்குகிறது.
</p><h3> நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:
</h3><p>எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சத்து உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதோடு, சளி இருமல் மற்றும் பல்வேறு வகையான தொற்று நோய்கள் ஏற்படும் அபாயத்தைகுறைகிறது. மேலும், நம் உடலை உள்ளிருந்தே வலிமையாகவும் உறுதியாகவும் மாற்றுகிறது. சரும பொலிவிற்கு பெரிதும் உதவிகிறது.</p><p></p><p>
</p><h3> எலுமிச்சை நீரின் நன்மைகள்:
</h3><p> எலுமிச்சை நீர் உடலை எப்போதும் நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவுகிறது. ரத்தத்தை சுத்திகரிக்கவும் செய்கிறது. அதோடு முகத்திற்கு ஒரு இயற்கையான பொழுவையும் முகப்பரு போன்ற சருமப் பிரச்சனைகளையும் குறைக்க உதவுகிறது. ஆதலால் தினமும் காலையில் பருகி வரும் பொழுது நல்ல மாற்றம் கிடைக்கும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T12:40:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசாகபட்டிணம்: ஆசிரியை அடித்து சிறுவன் இறந்த துயர் நிகழ்வு: மருத்துவர் சொல்வது என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/what-really-happend-in-vizag-school-kid-death-1787314316"></link>
            <id>https://manithan.com/article/what-really-happend-in-vizag-school-kid-death-1787314316</id>
            <summary type="text">நேற்றைய தினம் விசாகப்பட்டிணத்தில் ஒரு ஆசிரியை அடித்து சிறுவன் உயிர் இழந்த சம்பவம் எல்லோரையும் துயரத்தில் ஆழ்த்துகிறது. அதைப்போல், அவை பல கேள்விகளையும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேற்றைய தினம் விசாகப்பட்டிணத்தில் ஒரு ஆசிரியை அடித்து சிறுவன் உயிர் இழந்த சம்பவம் எல்லோரையும் துயரத்தில் ஆழ்த்துகிறது. அதைப்போல், அவை பல கேள்விகளையும் எழுப்பி இருக்கிறது. ஒவ்வொருவர் மனதிலும் எதற்காக அந்த சிறுவன் இறந்தான்? என்ற பல குழப்பங்கள் சூழ்ந்து உள்ளது. </p><p>அந்த சிறுவன் ஆசிரியர் அடித்த அந்த ஒரு நொடியில் உயிர் இழந்திருக்க கூடுமா?அல்லது என்ன நடந்திருக்க கூடும் என்பதை பற்றி சிவகங்கை மருத்துவர் ஒருவர் தெளிவாக விளக்கம் கொடுக்கிறார். அதை தெரிந்து கொள்வோம்.</p><p></p><p> </p><p> 

அவர் கூறுவதாவது,
</p><p>
ஆந்திர மாநிலம் விசாகபட்டிணம் நகரத்தில்
ஆசிரியை ஒருவர் அடித்ததில் மயங்கி விழுந்து சிறுவன் உயிரிழிந்திருப்பது ஆழ்ந்த கவலையையும் பலரின் கவனத்தையும் கோரியிருக்கிறது. சிசிடிவியில் பதிவான நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது
ஆசிரியை வரிசையில் வரும் மாணவர்களில் ஒருவரின் 
ஆடைகளைக் களைய முற்படுகிறார்
அடுத்து அவனை கன்னத்தில் அறைகிறார் 
சிறுவன் மூர்ச்சையாகி முன்னோக்கி விழுகிறான். </p><p>
அடுத்து அவன் மரணமடைந்தான் என்ற செய்தி வருகிறது. 
இந்த நிகழ்வை விளக்கமாகப் பார்ப்போம்
மாணவ மாணவிகளை ஆடைகளைக் களைவது உள்ளிட்ட தண்டனைகள் உளவியல் ரீதியாக பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை.</p><p> 
பள்ளிகள் / வீடுகளில் ஏதேனும் தவறு செய்து விட்டால் குழந்தைகளின் ஆடைகளைக் களைந்து அவர்களை நிர்வாணப்படுத்தி தண்டனை கொடுப்பது 
கொடுமையானது. 
அது அவர்களின் மனதில் பெரிய வடுக்களை ஏற்படுத்தும் செயலாகும்.
</p><p>இங்கே இதை எழுதும் நானும் அதற்கு விதிவிலக்கல்ல. 
ஆரம்ப பள்ளி காலங்களில் மேல் சட்டையைக் கழட்டி சக மாணவ மாணவிகள் முன் அவமானப்படுத்தி கொடுக்கும் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளேன். </p><p>
இன்னும் நினைவில் உள்ளது. 
இது தவறானது. 
ஆபத்தானது. 
ஆழ்மன வக்கிரங்களை வெளிக்கொணரும் கொடுஞ்செயல். 
போக்சோ சட்டங்கள் அமல்படுத்தப்படும் இக்காலத்தில் இது போன்ற அவமானப்படுத்தப்படுத்தும் உளவியல் ரீதியான தண்டனைகள் தவறானவை.</p><p> 
எப்போதும் ஆசிரியரோ 
பெற்றோரோ தங்களது ஆழ்மன வக்கிரங்களையும் , பொது சமூகத்தில் அடக்கி வைத்த மிருகத்தனத்தையும் கட்டவிழ்த்து விட்டு கழிவறக்கம் செய்யும் இடமாக குழந்தைகளையும் சிறார் சிறுமியரையும் பார்க்கும் எண்ணத்தைக் கைவிட வேண்டும். 
ஒருவரிடம் மாற்றம் கொண்டு வர அன்பை விட சிறந்த ஆயுதம் ஏதுமில்லை. 
அன்பினால் ஆகாதது.</p><p> வேறொன்றினாலும் ஆகாது. 
சிறார் சிறுமியரை திருத்தும் நோக்கில் தரப்படும் தண்டனைகள் என்பவை அவர்களுக்கு வழி ஏற்படுத்துவதாக அமைய வேண்டுமே அன்றி வலி ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது.</p><p> 
புத்தகப்பையுடன் எல்நினோ வெயிலில் 
மைதானத்தை பத்து முறை சுற்றி வரக் கூறுவது 
வகுப்புக்கு வெளியே ஆயிரம் முறை உக்கி போடக்கூறுவது 
சக மாணவ மாணவிகள் முன் 
அரை நிர்வாணப் படுத்தி அவனாமப்படுத்துவது 
போன்றவை தண்டனைகள் அல்ல. </p><p>
ஆழ்மன வக்கிரங்கள் ஆகும். 
பெற்றோரும் கூட தாங்கள் எங்குமே காட்ட முடியாத கோபத்தைக் கொட்டும் குப்பைத் தொட்டிகளாக குழந்தைகளை நினைப்பது எவ்வளவு பெரிய தவறு. 
அன்பைக் காட்டி 
தப்பும் தவறும் செய்யும் போது
அதட்டி திட்டி 
லேசாக கொஞ்சம் சினத்தையும் அவ்வப்போது காட்டி வளர்ப்பது நல்ல வளர்ப்பு முறை. </p><p>
மாறாக ஒரே கொஞ்சல்ஸ் 
நல்ல செல்லம் 
எதிர்த்து பேச ஆளே இல்லை என்ற அளவில் வளர்த்தாலும் பிள்ளை கெட்டு விடும். 
இரண்டுக்கும் இடையே சரிசம நிலையை உருவாக்கி அதன் படியே பிள்ளைகளை வளர்க்க வேண்டும். </p><p>
ஆசிரியர்களும் தங்களின் பணி என்ன? 
தாங்கள் எதற்கு குழந்தைகளிடம் தேவையற்ற சினத்தைக் காட்டுகிறோம் என்று சிந்திக்க வேண்டும் 
சரி இந்த நிகழ்வுக்கு வருவோம் 
அந்த ஆசிரியரை ஒன்றாம் வகுப்பு மாணவனை கன்னத்தில் அறைகிறார்.</p><p> 
உடனே அவன் சுருண்டு விழுகிறான் 
அந்த மாணவன் தான் ஏற்கனவே அச்சத்தில் நடுங்கி அழுகிறானே 
அவனை அறையவும் வேண்டுமா? 
கபாலம், முகம் ,வயிறு, நெஞ்சாங்கூடு ஆகிய பகுதிகள் மிகவும் ஆபத்தானவை. </p><p>
அங்கே அடி வாங்கும் போது திடீரென மூளை ஸ்தம்பித்து மூர்ச்சை நிலை ஏற்படலாம். 
குழந்தைக்கு ஏற்கனவே இதயம் சார்ந்த பிறவிக் குறைபாடு ஏதேனும் இருந்திருக்கலாம். அதுவரை அது வெளியே தெரியாமல் இருந்திருக்கலாம்.
அதிகமான மன மற்றும் உடல் அழுத்தம் ( அழுது கொண்டே இருந்தது) 
காரணமாக ஏற்கனவே குழந்தை சோர்வாகி இருந்திருக்கலாம்.</p><p></p><p> 
முதலில் குழந்தைகளை நீண்ட நேரம் நிற்க வைப்பதே நல்லதல்ல.
அதிலும் வெயிலில் நிற்க வைப்பது ஆபத்தானது. 
இதயம் சார்ந்த பிரச்சனை + திடீர் உடல் &amp; மன அழுத்தம் + சோர்வு + கன்னத்தில் வாங்கி அடி என்று 
குழந்தை சரிந்துள்ளது.</p><p> 
இதய செயல் முடக்கம் ஏற்பட்டிருக்கும் வாய்ப்பு அதிகம். சிறார் சிறுமியருக்கு இதய ரத்த நாள அடைப்பு ( மாரடைப்பு) ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு. 
உடனே சிபிஆர் முதலுதவி அளிக்கப்பட்டிருந்தால் குழந்தை பிழைக்க வாய்ப்பு இருந்திருக்கும். 
இங்கே ஆசிரியர் தெரிந்தே குழந்தையைக் கொன்றாரா? 
இல்லை. </p><p>எந்த ஆசிரியரும் அப்படிச் செய்வதில்லை. 
ஆனால் குழந்தையின் சுதந்திரத்தையும் 
வரம்புகளையும் மீறினாரா? என்றால் 
ஆம்.. 
அவர் குழந்தையிடம் காட்டப்படவே தேவையற்ற வன்முறையை கட்டவிழ்த்து விட்டு குழந்தையின் மரணத்திற்கு ஒரு காரணமாக அமைந்து விட்டார்.</p><p> 
இதற்கு அவரின் ஆழ்மன வக்கிரமும் 
தவறான தண்டனை முறைகளை வழங்கி
குழந்தையைத் திருத்தலாம் என்ற தவறான வழிநடத்தலும் 
வன்முறைப் பிரயோகமும் 
அந்தக் குழந்தையின் இறப்பிற்குப் காரணமாக அமைந்து விட்டது. 
இதே போன்று செய்யும் தாய்மார்களும் பெற்றோர்களும் தாத்தா பாட்டிமார்களும் 
நமது சமூகத்தில் உண்டு 
நாம் அனைவரும் திருந்துவோமாக..
</p><p>அன்பைக் கொண்டு ஆகாதது எதுவும் வேறெதைக் கொண்டு ஆகாது என்றுணர்வோம். 
திருத்துகிறேன் என்று நாம் குழந்தைகளுக்கு தரும் தண்டனைகளில் பெரும்பான்மை நம் ஆழ்மன வக்கிரக் கழிவுகளே அன்றி வேறில்லை 
உணர்ந்தால் தெளிவு பிறக்கும் 
மாற்றமும் பிறக்கும்</p><p> 
நன்றி</p><p> 
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 
பொது நல மருத்துவர் 
சிவகங்கை</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/078b6fef-18dc-4bfa-9135-0e0e94e3b63a/26-6a88408e60f92.webp' /></p>]]></content>
            <updated>2026-08-21T12:39:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்ல வாழ்வை எதிர்பார்த்து ஸ்பெயினுக்குள் நுழைந்த புலம்பெயர்ந்தோர்: ஒரு திடுக் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/morocco-migrants-minors-on-streets-in-spain-1787315956"></link>
            <id>https://news.lankasri.com/article/morocco-migrants-minors-on-streets-in-spain-1787315956</id>
            <summary type="text">Young girls living alone on Ceuta&#039;s streets at risk of abuse: செயூட்டாவின் தெருக்களில் தனியாக வாழும் பதின்ம வயதுப் பெண் பிள்ளைகள் சீரழிக்கப்படும் அபாய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Young girls living alone on Ceuta's streets at risk of abuse: செயூட்டாவின் தெருக்களில் தனியாக வாழும் பதின்ம வயதுப் பெண் பிள்ளைகள் சீரழிக்கப்படும் அபாயத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
</p><p>

மொராக்கோ நாட்டவர்கள் சுமார் 60,000 பேர் ஸ்பெயினுக்கு சொந்தமான பகுதி ஒன்றிற்குள் நுழைந்ததைக் கண்டு ஐரோப்பாவே பதறிய விடயம் நினைவிருக்கலாம்.</p><h3>

ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்...
</h3><p>
மொராக்கோ நாட்டவர்களான சுமார் 60,000 பேர், கடந்த மாத இறுதியில், ஸ்பெயினுக்கு சொந்தமான சியூட்டா என்னும் நகருக்குள் நுழைந்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/352bec45-fa7d-473e-b14f-8035e3e1ebe9/26-6a8846f66f8e9.webp' /></p><p>
உயிரை பணயம் வைத்து ஆபத்தான முறையில் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் சியூட்டாவுக்குள் நுழைய, ஸ்பெயினுக்குள் நுழைந்தவர்கள் நம் நாட்டுக்குள்ளும் வந்துவிடுவார்களோ என மற்ற ஐரோப்பிய நாடுகள் பதறின.
</p><p>
ஆனால், சியூட்டாவுக்குள் நுழைந்த சில மணி நேரத்துக்குள், சுமார் 50,000 பேர் மீண்டும் தங்கள் சொந்த நாடான மொராக்கோவுக்கே திரும்பிவிட்டதாக பின்னர் செய்திகள் வெளியாகின.
</p><h3>
ஒரு திடுக் தகவல்
</h3><p>
விடயம் என்னவென்றால், இன்னும் ஆயிரக்கணக்கான மொராக்கோ நாட்டவர்கள் சியூட்டாவில்தான் இருக்கிறார்கள்.
</p><p>
அவர்களில் சுமார் 3,000 முதல் 5,000 பேர், பெற்றோரில்லாமல் தனியாக இருக்கும் பதின்ம வயது பிள்ளைகள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1568ea8e-d13a-4386-bcb9-da745c7dc44d/26-6a8846f5bd58d.webp' /></p><p>
மோசமான செய்தி என்னவென்றால், இந்தப் பிள்ளைகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அவர்கள் தொடர்பில் வெளியாகிவரும் மோசமான செய்திகளிலிருந்து, ஒரு நல்ல வாழ்வுக்காக உயிரை பணயம் வைத்து வந்த இடத்திலும் பிள்ளைகளுக்கு பாதுகாப்பில்லை என தெரியவந்துள்ள விடயம், நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது.
</p><p>
அதாவது, சியூட்டாவில் இந்த மொராக்கோ நாட்டவர்களுக்கு டாய்லெட் வசதியே இல்லை.&nbsp;</p><p></p><p>
ஆக, பிள்ளைகள் இயற்கை உபாதையை தீர்க்கச் செல்லும் இடங்களில் அவர்கள் வன்புணரப்படுவதாக அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகிவருகின்றன.</p><p>

சியூட்டா பல்கலை மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவரான சூசன்னா (Susana Ascaso), தான் அத்தகைய பல பிள்ளைகளுக்கு சிகிச்சையளித்ததாக தெரிவிக்கிறார்.
</p><p>
12 வயதுச் சிறுமி ஒருத்தி பயந்து நடுங்கியபடி தன்னைக் காண வந்ததாக தெரிவிக்கும் சூசன்னா, அந்தப் பிள்ளை தன்னை பலர் தவறாக தொட்டதாகவும், தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகவும் தெரிவிக்கிறார்.
</p><p>
அவ்வழியே சென்ற பெண்ணொருவர் அந்தப் பிள்ளையைக் காப்பாற்றி மருத்துவரிடம் அழைத்துவந்துள்ளார்.
</p><p>
சியூட்டாவில் இளம்பெண்களுக்கு, குறிப்பாக 18 வயதுக்குக் கீழுள்ள பிள்ளைகளுக்கு அபாயம் அதிகம் என்கிறார் சூசன்னா.
</p><p>
இந்நிலையில், பெற்றோர் உடன் இல்லாமல் தனியாக இருக்கும் பிள்ளைகளை, குறிப்பாக பெண் பிள்ளைகள் சுமார் 500 பேரை ஸ்பெயினுக்குக் கொண்டு செல்ல ஸ்பெயின் புலம்பெயர்தல் மற்றும் இளைஞர் பாதுகாப்பு அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்கள்.
</p><p>
அவர்களை அரசு காப்பகங்களில் தங்கவைக்க திட்டமிட்டுவருவதாக ஸ்பெயின் புலம்பெயர்தல் அமைச்சரான எல்மா (Elma Saiz) தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T12:39:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் ஆலயத்தில் பலரது கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்திய மின்விளக்குகள் பறிமுதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chinese-electric-lamps-seized-by-police-1787313684"></link>
            <id>https://ibctamil.com/article/chinese-electric-lamps-seized-by-police-1787313684</id>
            <summary type="text">

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நேற்றைய ஆலயத் திருவிழாவின் போது நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பான விசாரணைகள் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நேற்றைய ஆலயத் திருவிழாவின் போது நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
கண் பாதிப்புக்கான காரணத்தை கண்டறியும் நோக்கில் காவல்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஆலய வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிக சக்தி கொண்ட சீனத் தயாரிப்பு மின் விளக்குகள் சிலவற்றை காவல்துறையினர் கையகப்படுத்தி எடுத்துச் சென்றுள்ளனர்.
</p><p>
கையகப்படுத்தப்பட்ட மின் விளக்குகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், அவற்றின் மின்சக்தி அளவு, பயன்பாட்டுத் தன்மை மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அவை அனுமதிக்கப்பட்டவையா அல்லது தடை செய்யப்பட்டவையா என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகிறது.</p><p></p><h2>நூற்றுக்கணக்கானவர்கள் பாதிப்பு&nbsp;</h2><p>
</p><p>
இந்நிலையில், குறித்த மின் விளக்குகள் காரணமாக நூற்றுக்கணக்கான மக்களுக்கு கண்களில் எரிச்சல், பார்வைக் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a34f6294-7e71-4c1c-a132-724473664568/26-6a88418b02d85.webp' /></p><p> </p><p>

முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுமார் 120 பேரும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 46 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-08-21T12:38:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன உரிமையாளர்களுக்கு காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-warn-vehicle-owners-1787314476"></link>
            <id>https://ibctamil.com/article/police-warn-vehicle-owners-1787314476</id>
            <summary type="text">நாட்டில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும்வதாக&amp;nbsp;காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும்வதாக&nbsp;காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், வாகன உரிமையாளர்களின் கவனக்குறைவும், பாதுகாப்பற்ற முறையில் வாகனங்களை நிறுத்துவதும் திருட்டுகளுக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.</p><p>
பொதுமக்களின் வாகனங்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் கொழும்பில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">சிசிரிவி வசதிகள் உள்ள பகுதிகள்</span></p><p>அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்காலத்தில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகள் திருடப்படும் சம்பவங்கள் அதிகமாக பதிவாகி வருவதுடன், உரிமையாளர்களின் கவனக்குறைவே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06efc53f-d38b-439b-a694-0976e8e51ed0/26-6a8846aa329e5.webp' /></p><p> </p><p>மோட்டார் சைக்கிள்களின் எஞ்சின் இயக்கத்தில் இருக்கும் போதே அவற்றை விட்டுச் செல்கின்றனர்.</p><p>மேலும், சாவியை திறப்பு துளையிலேயே கவனக்குறைவாக விட்டுவிடுவது மற்றும் தொலைபேசிகள், மடிக்கணினிகள், பணம் போன்ற மதிப்புமிக்க பொருட்களை இருக்கைகளுக்கு அடியில் கவனமாக விட்டுச் செல்வது போன்ற பல தவறுகள் பொதுமக்களால் இழைக்கப்படுகிறது</p><p>எனவே, பொதுமக்கள் அனைவரும் வாகனங்களை நிறுத்தும் போது பாதுகாப்பற்ற மற்றும் தனிமையான இடங்களைத் தவிர்த்து, பகல் அல்லது இரவு நேரங்களிலும் கூட பாதுகாப்பான இடங்களில் வாகனங்களை நிறுத்தவேண்டும்.
</p><p>
மேலும், பாதுகாப்புப் பணியாளர்களை நேரில் சந்தித்து தகவல் தெரிவிப்பதுடன், சிசிரிவி வசதிகள் உள்ள பகுதிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
</p><p>
வாகனங்களில் ஒலி அமைப்புகள், ஜிபிஎஸ் (GPS) கருவிகளைப் பொருத்துவதும், வாகனங்களின் புகைப்படங்களைப் பாதுகாப்பாக நகல் எடுத்து வைத்திருப்பதும் திருட்டுக்களைத் தவிர்க்க உதவும். </p><p>ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டத்தைக் கண்டால், உடனடியாக 24 மணிநேரமும் சேவையில் உள்ள காவல்துறையின் அவசர இலக்கங்களான 119 அல்லது 118 ஆகிய எண்களுக்குத் தொடர்புகொண்டு தெரிவிக்கவேண்டும். பொதுமக்களின் விழிப்புணர்வும் பொறுப்பான நடத்தையுமே குற்றவாளிகளுக்கான வாய்ப்புகளை முற்றிலுமாக அகற்றும்” என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T12:38:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆண்டு இறுதிக்குள் 9 பில்லியன் அமெரிக்க டொலர்! அரசாங்கம் கொண்டுள்ள நம்பிக்கை - வெளிப்படுத்தும் நிதி பிரதி அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/foreign-reserves-to-reach-9-billion-1787313055"></link>
            <id>https://tamilwin.com/article/foreign-reserves-to-reach-9-billion-1787313055</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டு இறுதிக்குள் 9 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கையிருப்பு இலக்கை எட்ட முடியும் என அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளதாக நிதி மற்றும் திட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டு இறுதிக்குள் 9 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கையிருப்பு இலக்கை எட்ட முடியும் என அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.</p><p>வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் அதிகரித்து வரும் சாதகமான போக்கின் அடிப்படையில் இந்த நம்பிக்கையை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p>
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (21.08.2026) உரையாற்றியபோதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>நாட்டிற்கு கிடைத்துள்ள பணம்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், 2026ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் வெளிநாட்டு தொழிலாளர்கள் 5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணத்தை நாட்டுக்கு அனுப்பியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf9de5c1-f970-4203-9124-06f0a9942ed3/26-6a8844cb17245.webp' /></p><p>இதனிடையே, 2028ஆம் ஆண்டில் எதிர்கொள்ள வேண்டியுள்ள குறிப்பிடத்தக்க வெளிநாட்டுக் கடன் மீளச் செலுத்தல்களை கருத்திற்கொண்டு, வெளிநாட்டு நாணய வருவாய் மூலங்களை பல்வகைப்படுத்துவதற்கும், அதிகளவிலான நேரடி வெளிநாட்டு முதலீடுகளை நாட்டிற்கு ஈர்ப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.</p><p>முதலீடுகள், ஏற்றுமதிகள் மற்றும் வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளின் ஊடாக நாட்டிற்குள் வரும் நிகர வெளிநாட்டு நாணய வருவாயை அதிகரிப்பதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருகிறது.</p><h2>வெளிநாட்டு கடன்</h2><p>

</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fb324bb-eae7-4f8d-9b6e-01a1cd9afcdd/26-6a8844cbdaeba.webp' />&nbsp;&nbsp;</p><p>2028ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுமார் 3.9 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்த வேண்டியுள்ள நிலையில், பாரம்பரியமற்ற துறைகள் ஊடாக வெளிநாட்டு வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>அத்துடன், சர்வதேச தொழிலாளர் சந்தையில் அதிக வருமானத்தை ஈட்டக்கூடிய துறைகளுக்கு இலங்கை தொழிலாளர்களை வழிநடத்துவதற்கான நிதி மற்றும் பொருளாதார உத்திகளும் வகுக்கப்பட்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T12:34:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் கார் மீது மோதிய விமானம்: ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/one-dies-by-plane-hit-car-in-canada-road-1787315337"></link>
            <id>https://canadamirror.com/article/one-dies-by-plane-hit-car-in-canada-road-1787315337</id>
            <summary type="text">One person dead after plane makes emergency landing on road: கனடாவில் சாலையில் இறங்கிய விமானம் கார் ஒன்றின் மீது மோதியதில் ஒருவர் பலியாகியுள்ளார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>One person dead after plane makes emergency landing on road: கனடாவில் சாலையில் இறங்கிய விமானம் கார் ஒன்றின் மீது மோதியதில் ஒருவர் பலியாகியுள்ளார்.
</p><p>
நேற்று மதியம் 2.20 மணியளவில், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள பிரின்ஸ் ஜார்ஜ் நகரில், நெடுஞ்சாலை ஒன்றில் திடீரென சிறிய ரக விமானம் ஒன்று தரையிறங்கியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/718bc444-1542-49d1-a089-671f9149b23d/26-6a88448b43500.webp' /></p><p>

அப்போது சாலையில் வரிசையாக வாகனங்கள் வந்துகொண்டிருக்க, விமானத்தின் இறக்கை, வேகமாக வந்துகொண்டிருந்த கார் ஒன்றின் மீது மோதியுள்ளது.</p><p>

விமானத்தில் எட்டு பேரும், காரில் இரண்டு பேரும் பயணித்ததாக கூறப்படும் நிலையில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
</p><p>
உயிரிழந்தவர், காரில் பயணித்தவரா அல்லது விமானத்தில் பயணித்தவரா, ஆணா அல்லது பெண்ணா என பொலிசார் தெரியப்படுத்தவில்லை.
</p><p>
எதனால் விமானம் திடீரென சாலையில் தரையிறங்கியது என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், அந்த சாலை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T12:29:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் திருவிழாவில் ஏற்பட்ட பரபரப்பான சம்பவம்! இதுவரையில் 235 பேர் வைத்தியசாலையில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/excessive-use-of-lighting-at-a-temple-in-jaffna-1787293143"></link>
            <id>https://tamilwin.com/article/excessive-use-of-lighting-at-a-temple-in-jaffna-1787293143</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தில் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட மின் விளக்கு அலங்காரத்தால் தற்போதுவரை 235 பேர் பாதிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தில் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட மின் விளக்கு அலங்காரத்தால் தற்போதுவரை 235 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><h2>புதிய இணைப்பு</h2><p>பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நேற்றைய(20) ஆலயத் திருவிழாவின் போது
நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பான விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>கண் பாதிப்புக்கான காரணத்தை கண்டறியும் நோக்கில் பொலிஸார் மற்றும்
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஆலய
வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிக சக்தி கொண்ட சீனத் தயாரிப்பு மின்
விளக்குகள் சிலவற்றை பொலிஸார் கையகப்படுத்தி எடுத்துச் சென்றுள்ளனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/WQ7bM1YT4SA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
கையகப்படுத்தப்பட்ட மின் விளக்குகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு
வருவதுடன், அவற்றின் மின்சக்தி அளவு, பயன்பாட்டுத் தன்மை மற்றும் பொதுமக்கள்
பயன்பாட்டிற்கு அவை அனுமதிக்கப்பட்டவையா அல்லது தடை செய்யப்பட்டவையா என்பது
தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகிறது.&nbsp;</p><h2>மூன்றாம் இணைப்பு</h2><p>யாழ்.பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகமூர்த்தி ஆலயத்தில் நேற்றிரவு நடைபெற்ற
திருவிழாவில் அதிகளவு ஒலி காரணமாக கண் பாதிப்புக்குள்ளானவர்கள் அனைவரும்
உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு, அங்கு சிகிச்சை
மற்றும் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக
வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c9126fe-085d-4814-86c6-16b9041742f6/26-6a8843de7f133.webp' /></p><p>
</p><p>கண் பாதிப்புக்குள்ளானவர்களில் இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் இரு
மாணவர்களுக்கு மேலதிக சிகிச்சைகளைப் பெற்று வீடு திரும்பியுள்ளதுடன், அவர்கள்
தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பில் இருக்குமாறு பெற்றோருக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
இதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனியான விடுதியொன்று
ஒதுக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மேலதிக வைத்தியர்கள், தாதியர்கள்
மற்றும் ஊழியர்களின் பங்களிப்புடன் சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>இந்நிலையில், தற்போது ஆண்கள் 58 பேரும், பெண்கள் 44 பேரும், சிறுவர்கள் 55
பேரும் என மொத்தம் 157 பேர் கண் பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்காக
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84d11e32-fddd-485e-bc99-2487af8f2a96/26-6a8843df65f63.webp' /></p><p>
கண் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்படும் அனைவரும் தாமதமின்றி உடனடியாக
வைத்தியசாலைக்கு வருமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p>
மேலும், சுகாதார சேவைகள் பணிமனை, பொலிஸார், பிரதேச செயலாளர்கள் மற்றும்
தொடர்புடைய அதிகாரிகள் இணைந்து நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, தேவையான
நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><h2>இரண்டாவது இணைப்பு&nbsp;</h2><p>பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின் போது
இடம்பெற்ற அதிகளவிலான வாணவேடிக்கை மற்றும் லேசர் ஒளிக்கீற்றுப் பயன்பாடு
காரணமாக பலர் கண் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளை நாடி வருகின்றனர்.
</p><p>இதுதொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் வைத்தியர்&nbsp; எம். மலரவன் பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார்.</p><p>
️ கண்களில் எரிச்சல், சிவத்தல், நீர்வருதல், வலி, பார்வை மங்குதல் அல்லது
ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அலட்சியம் செய்ய வேண்டாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbf0db8c-637c-4ee7-a408-b2a7e2bc8c8e/26-6a880a998b5a2.webp' /></p><p>
</p><p>உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று பரிசோதனை செய்து
கொள்ளுமாறும், தேவையானவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண்
சிகிச்சைப் பிரிவை நாடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
️ குறிப்பாக நேற்றைய திருவிழாவில் கலந்துகொண்ட சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட
அனைவரும் தங்களது கண்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கவனமாக அவதானிக்க வேண்டும்.
கண்களை தேய்க்க வேண்டாம்.
</p><p>சுயமாக எந்தவொரு கண் மருந்தையும் பயன்படுத்த வேண்டாம்.
சந்தேகம் ஏற்பட்டாலும் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெறுங்கள்.
</p><p>“கண் பாதிப்பு ஏற்பட்டால் தாமதிக்காமல் வைத்தியசாலையை நாடுங்கள்” – வைத்தியர் எம். மலரவன்
இந்த அறிவிப்பை அதிகமானவர்களுக்கு பகிர்ந்து, பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக
வைத்தியசாலைக்கு செல்லுமாறு அறிவுறுத்துவோம்.</p><h2>வைத்தியசாலையில் அனுமதி</h2><p>யாழ்ப்பாணம்,பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள முருகமூர்த்தி
ஆலயத்தில் நேற்று (20.08.2026) நடைபெற்ற திருவிழாவின் போது அதிகளவில்
வாணவேடிக்கைகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள்
பயன்படுத்தப்பட்டதால், சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர்
கண் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுமார்
120 பேரும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 46 பேரும் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>நோயாளிகளின் எண்ணிக்கை&nbsp;</h2><p>

இவர்களில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் சுமார் 60 பேரும், ஆண்கள் 50-க்கும்
மேற்பட்டோரும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>மேலும்
பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளை நாடி வருவதால், நோயாளிகளின்
எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“பொதுமக்கள் எவ்வித பதற்றமும் இன்றி உடனடியாக வைத்தியசாலைகளை நாடலாம்.
</p><p>அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன” என யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.</p><p>

இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக வைத்தியசாலைகளுக்குச் செல்லுமாறு
பிரதேச சபையினால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது.
</p><p>
குறிப்பாக கண்களில் பாதிப்பு, எரிச்சல் அல்லது பார்வை தொடர்பான பிரச்சினைகள்
ஏற்பட்டவர்கள் தாமதிக்காமல் அருகிலுள்ள வைத்தியசாலையை நாடுமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>ஆலயத் திருவிழா</h2><p>
</p><p>
மேலும், ஆலயத் திருவிழாவின் போது மின் இணைப்புகளை வழங்கியதாகக் கூறப்படும்
சிலர் இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதனிடையே, இதேபோன்று நவாலி அந்திரான் பகுதியில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின்
போதும் வாணவேடிக்கையால் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a4f5d61-1510-4a3f-bdb4-a5434702ed78/26-6a87f1b62cc5d.webp' /></p><p>
</p><p>இதன்போது பனை மரம் ஒன்றும் பாதுகாப்பு வேலியும் தீப்பற்றி எரிந்ததுடன், சில
பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க
அதிபர் மருதலிங்கம் பிரதீபன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்
வகையில் ஆலய நிர்வாகங்கள் மற்றும் மதகுருமார்கள் உள்ளிட்ட அனைத்து
பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினரும் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என
கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>
தேவையற்ற ஒலிபெருக்கி பயன்பாடு, அதிகளவிலான பட்டாசு மற்றும் வாணவேடிக்கை, அதிக
சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்புக்கு
பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளைத் தவிர்க்குமாறும் அவர்
வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
பொதுமக்களின் பாதுகாப்பை விட எந்தவொரு திருவிழா கொண்டாட்டமும் முக்கியமானதல்ல
எனவும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் ஆலய
நிர்வாகங்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><b><i>&nbsp;மேலதிக தகவல் - தீபன்</i></b></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>யாழ்ப்பாணம், பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தில் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட மின் விளக்கு அலங்காரத்தால் சுமார் 35 பேருக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

குறித்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், ஆலய வளாகம் பல்வேறு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
</p><h2>பார்வை பிரச்சினை</h2><p>
இந்நிலையில், அதிகளவில் பயன்படுத்தப்பட்ட மின் விளக்குகளின் ஒளியால் நேற்று ஆலயத்திற்கு சென்றவர்களில் சுமார் 35 பேருக்கு கண் பார்வை தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b96d6b16-a4d5-4f7b-9533-87ec33cef535/26-6a87f1b55bdf5.webp' /></p><p>பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இதனையடுத்து, குறித்த ஆலயத்திற்கு நேற்று சென்ற அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று கண் பரிசோதனை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/CFWVi5B8mkE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-21T12:24:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்ர தங்கம் பாவம்; யாழில் காதல் தோல்வியால் உயிரை மாய்த்த இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-takes-his-own-life-in-jaffna-due-heartbreak-1787312334"></link>
            <id>https://jvpnews.com/article/youth-takes-his-own-life-in-jaffna-due-heartbreak-1787312334</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்.நெல்லியடியில் காதல் தோல்வியால் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

உயிரிழந்த இளைஞர் காதல் தோல்வி காரணமாக கடிதம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்.நெல்லியடியில் காதல் தோல்வியால் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

உயிரிழந்த இளைஞர் காதல் தோல்வி காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.
</p><p>
இறப்பதற்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் " என்ர தங்கம் பாவம்! அவளை யாரும் தொல்லைப்படுத்த வேண்டாம் " எனக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb3c31ff-b7f2-4225-ba50-2667664ab443/26-6a8838d02f835.webp' /></p><p> </p><p>&nbsp;சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T12:24:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் ஆலயத் திருவிழாவில் அதிக வெளிச்சம்; நூற்றிற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/excessive-lighting-jaffna-temple-vision-impairment-1787297452"></link>
            <id>https://jvpnews.com/article/excessive-lighting-jaffna-temple-vision-impairment-1787297452</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் இடம்பெறும் ஆலயத் திருவிழாவின்போது அதிக வெடிகள் மற்றும் லேசர் லைற் பயன்பாட்டின் காரணமாக கண்ணில் பாதிப்படைந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் இடம்பெறும் ஆலயத் திருவிழாவின்போது அதிக வெடிகள் மற்றும் லேசர் லைற் பயன்பாட்டின் காரணமாக கண்ணில் பாதிப்படைந்த நூற்றிற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக&nbsp; தெரியவருகின்றது.</p><p>
பிரான்பற்று, பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள ஆலயத்தில் நேற்றைய உற்சவத்தின்போது அதிக வானவேடிக்கை வெடிகள் கொளுத்தப்பட்டதோடு ஆலயத்தில் இசை நிகழ்வின்போது அதிக சக்திகொண்ட லேசர் லைற் வகைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f910deef-2b2a-44c8-8dbd-ff8acea46d1d/26-6a87feae4d898.webp' /></p><p>
</p><h2>&nbsp;கண்ணில் பாதிப்படைந்த நூற்றுக் கணக்கானோர்</h2><p>இதனால் கண்ணில் பாதிப்படைந்த நூற்றுக் கணக்கானோர் வைத்தியசாலைகளை நாடி வருகின்றனர்.</p><p>
இதனால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வழமையான பணிகள் குறைக்கப்பட்டு இதற்காக விசேட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதோடு ஏனைய வைத்தியசாலைகளில் இருந்து வைத்தியர்கள், தாதியர்கள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.</p><p></p><p>

இதேநேரம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 46 பேரும் போதனா வைத்தியசாலையில் 120 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a083bad8-0591-43ff-a5be-7c09f2afc38a/26-6a8819a638212.webp' /></p><p></p><p>
</p><p>
இதேநேரம் எந்தவித பதற்றமும் இன்றி உடன் வைத்தியசாலையை நாடலாம் அதற்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் தயார. நிலையில் உள்ளதாக போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f9460aa-bcd0-40f5-b8f2-2bdee99fcca0/26-6a882fa75c52b.webp' /></p><p>
இதேநேரம் ஆலய திருவிழாவின்போது மின் இணைப்புக்களை வழங்கியவர்கள் இளவாலைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p>அதேவேளை&nbsp; ஆலய திருவிழாக்கள்&nbsp; தற்போது&nbsp; கேளிக்கை கூடமாக மாறி வருவதாக&nbsp; சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86f19575-ed0e-4587-95e0-7f7ce4d44099/26-6a882fa839241.webp' /></p>]]></content>
            <updated>2026-08-21T12:24:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென சாலையில் இறங்கிய விமானம்: கார் மீது மோதியதில் ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/1-death-in-plane-emergency-land-in-road-hit-car-1787314988"></link>
            <id>https://news.lankasri.com/article/1-death-in-plane-emergency-land-in-road-hit-car-1787314988</id>
            <summary type="text">One person dead after plane makes emergency landing on road: கனடாவில் சாலையில் இறங்கிய விமானம் கார் ஒன்றின் மீது மோதியதில் ஒருவர் பலியாகியுள்ளார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>One person dead after plane makes emergency landing on road: கனடாவில் சாலையில் இறங்கிய விமானம் கார் ஒன்றின் மீது மோதியதில் ஒருவர் பலியாகியுள்ளார்.
</p><p>
நேற்று மதியம் 2.20 மணியளவில், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள பிரின்ஸ் ஜார்ஜ் நகரில், நெடுஞ்சாலை ஒன்றில் திடீரென சிறிய ரக விமானம் ஒன்று தரையிறங்கியுள்ளது.</p><h3>

கனடாவில் கார் மீது மோதிய விமானம்
</h3><p>
அப்போது சாலையில் வரிசையாக வாகனங்கள் வந்துகொண்டிருக்க, விமானத்தின் இறக்கை, வேகமாக வந்துகொண்டிருந்த கார் ஒன்றின் மீது மோதியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db0155fb-f503-45e2-85bd-bf985badf049/26-6a88432dcf028.webp' /></p><p>

விமானத்தில் எட்டு பேரும், காரில் இரண்டு பேரும் பயணித்ததாக கூறப்படும் நிலையில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
உயிரிழந்தவர், காரில் பயணித்தவரா அல்லது விமானத்தில் பயணித்தவரா, ஆணா அல்லது பெண்ணா என பொலிசார் தெரியப்படுத்தவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83f0d13b-3040-48a2-a2e3-df520220cbbc/26-6a88432e83128.webp' /></p><p>
எதனால் விமானம் திடீரென சாலையில் தரையிறங்கியது என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், அந்த சாலை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T12:23:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நவாலி ஆலய திருவிழாவில் நடந்த அசம்பாவிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/an-incident-occurred-where-palm-tree-safety-fence-1787312501"></link>
            <id>https://tamilwin.com/article/an-incident-occurred-where-palm-tree-safety-fence-1787312501</id>
            <summary type="text">நவாலி அந்திரான் கிராமத்தில் நேற்று(21) இரவு நடைபெற்ற திருவிழாவின் போது
வாணவேடிக்கையால் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது
பனை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவாலி அந்திரான் கிராமத்தில் நேற்று(21) இரவு நடைபெற்ற திருவிழாவின் போது
வாணவேடிக்கையால் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p> இதன்போது
பனை மரம் ஒன்றும் மற்றும் பாதுகாப்பு வேலியும் தீப்பற்றி எரிந்ததுடன், சில
பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.</p><h2>ஆலய திருவிழா</h2><p>

ஆதலால், இவ்வாறான சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக வழிபாட்டு தலங்களின்
நிர்வாகங்களுக்கு பலமுறை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க
அதிபர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/019f66ac-5f15-48a9-9d0c-8af64fc7a396/26-6a883f31dc659.webp' /></p><p>
</p><p>
தேவையற்ற ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடித்தல், லேசர் ஒளிக்கீற்றுகளைப்
பயன்படுத்துதல், யானைகளை அழைத்துச் செல்லுதல் உள்ளிட்ட பொதுமக்களின்
பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு
தொடர்ச்சியாக கோரிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் ஊடகங்கள் வாயிலாகவும்
விடுக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் சில ஆலயங்கள் வழங்கப்பட்ட
அறிவுறுத்தல்களுக்கு உரிய முறையில் செவிசாய்க்காமல், பொதுமக்களுக்கு சிரமத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுத்து வருவது
கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
எனவே, வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தினர், மதகுருமார்கள் உள்ளிட்ட
பொறுப்புக்கூற வேண்டிய அனைத்து தரப்பினரும் இவ்விடயம் தொடர்பில் உரிய
நடவடிக்கைகளை முன்னெடுத்து, எதிர்காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை
உறுதிப்படுத்தும் வகையில் சமூகப் பொறுப்புணர்வுடன் திருவிழா நடவடிக்கைகளை
முன்னெடுக்க வேண்டும் என அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T12:06:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[20 நாட்களில் 8 ஆயிரத்தை தாண்டிய நோயாளர்கள் - இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் பெரும் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/8-000-dengue-patients-registered-in-20-days-of-aug-1787311377"></link>
            <id>https://tamilwin.com/article/8-000-dengue-patients-registered-in-20-days-of-aug-1787311377</id>
            <summary type="text">ஓகஸ்ட் மாதத்தின் முதல் 20 நாட்களில் இலங்கை முழுவதும் மொத்தம் 8,043 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓகஸ்ட் மாதத்தின் முதல் 20 நாட்களில் இலங்கை முழுவதும் மொத்தம் 8,043 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், இந்த ஆண்டில் இதுவரையில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 93,381ஆக உயர்ந்துள்ளதாகவும், டெங்கு தொடர்பான 71 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் NDCU கூறுகிறது.</p><h2>டெங்கு நோய் தொற்று</h2><p>
</p><p>
தற்போது டெங்கு நோயால் ஏற்படும் இறப்பு விகிதம் 0.076% ஆக உள்ளது என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>

ஓகஸ்ட் மாதத்தின் முதல் 20 நாட்களில் 8,043 நோய்த்தொற்றுகள் பதிவாகியிருந்தாலும், ஜூலையில் பதிவான 29,964 நோய்த்தொற்றுகள் மற்றும் ஜூன் மாதத்தில் பதிவான 21,533 நோய்த்தொற்றுகளுடன் ஒப்பிடும்போது ஓகஸ்ட் மாதத்தில் ஒரு சிறிய சரிவு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> கூடுதலாக, மொத்த நோய்த்தொற்றுகளில் 52.94%, அதாவது 49,440 நோயாளிகள், மேற்கு மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளனர்.</p><p>

தெற்கு மாகாணத்தில் 13,697 நோய்த்தொற்றுகளும், மத்திய மாகாணத்தில் 8,441 நோய்த்தொற்றுகளும் பதிவாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4c16795-f85a-4a5a-9253-913c9d6ed239/26-6a883aa31b5f8.webp' /></p><p>
</p><p>
மாவட்ட அளவில், கம்பஹாவில் அதிகபட்சமாக 19,888 வழக்குகளும், அதனைத் தொடர்ந்து கொழும்பு மாவட்டத்தில் 18,535 வழக்குகளும், கண்டி மாவட்டத்தில் 6,755 வழக்குகளும் பதிவாகியுள்ளன.</p><p>மொத்தம் 76 சுகாதார மருத்துவ அதிகாரப் பகுதிகள் டெங்கு நோய்க்கான அதிக அபாயமுள்ள பகுதிகளாகத் தொடர்ந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை சுத்தம் செய்து சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்குமாறும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறும் சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T11:59:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் வடக்கு - கிழக்கு காணி இழந்த மக்கள் அமைப்புக்களின் ஒன்றிணைந்த ஆர்ப்பாட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/people-who-lost-their-land-in-the-north-and-east-1787313381"></link>
            <id>https://ibctamil.com/article/people-who-lost-their-land-in-the-north-and-east-1787313381</id>
            <summary type="text">வடக்கு கிழக்கில் கையகப்படுத்தியுள்ள பொது மக்களின் காணிகளை மக்களிடமே
வழங்கு என வலியுறுத்தி வடக்கு - கிழக்கு காணி இழந்த மக்கள் அமைப்புக்கள்
ஒன்றிணைந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு கிழக்கில் கையகப்படுத்தியுள்ள பொது மக்களின் காணிகளை மக்களிடமே
வழங்கு என வலியுறுத்தி வடக்கு - கிழக்கு காணி இழந்த மக்கள் அமைப்புக்கள்
ஒன்றிணைந்த கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.</p><p>குறித்த போராட்டம்,&nbsp; இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கிளிநொச்சி பழைய
கச்சேரிக்கு முன்னால் இடம்பெற்றது.</p><p>

காலை 10 மணிக்கு ஆரம்பமான குறித்த போராட்டத்தில் காணிகளை இழந்த முல்லைத்தீவு
கேப் பாப்புலவு மக்கள் அமைப்பு, மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரவை போராட்ட குழு,
யாழ் வலி வடக்கு தையிட்டி, மயிலிட்டி பலாலி ,வசாவிளான் போராட்ட அமைப்புக்கள்,
கிராஞ்சி மற்றும் ,பொன்னாவெளி அமைப்புக்கள் பங்குற்றி இருந்தன.</p><p></p><h2>பல்வேறு கோரிக்கைகள்&nbsp;</h2><p>

போராட்டத்தில் பங்குபெற்றவர்கள் "மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு,
அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களை அழிக்காதே, தையிட்டி என்ன தருசு நிலமா,
மயிலத்தமடு மாதவனை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்று" என கோஷங்களை
எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ebade4b-0cea-4a9f-afd7-4f6360faf510/26-6a883ce857238.webp' /></p><p>
</p><p>
போராட்டத்தில் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் பிரதேச சபை உறுப்பினர்கள்
தவிசாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T11:56:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வருங்கால முதல்வரேன்னு சொன்ன ரசிகர்!! சிவகார்த்திகேயன் கொடுத்த ரியாக்ஷன்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/varugalaa-muthalvarey-sivakarthikeyan-react-video-1787313231"></link>
            <id>https://viduppu.com/article/varugalaa-muthalvarey-sivakarthikeyan-react-video-1787313231</id>
            <summary type="text">சிவகார்த்திகேயன்முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன், அக்ஷயா தங்க நகை கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசின...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சிவகார்த்திகேயன்</h2><p>முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன், அக்ஷயா தங்க நகை கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார் மேடையில் நின்று கொண்டிருந்த சிவகார்த்திகேயனை பார்த்து ஒரு ரசிகர், வருங்கால முதல்ச்வரே என்று கோஷமிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cb02d87-838f-4884-9286-920d07d82624/26-6a883c517857e.webp' /></p><p> அதனால் ஷாக்கான சிவகார்த்திகேயன், வாயில் விரல் வைத்து 'உஷ்' என்று அமைதியாக இருக்குமாறி சைகை காட்டினார். இந்த சம்பவம் இணையத்தில் பகிரப்பட்டு வைரலானாலும் சிரித்தபடி தன்னுடைய ரியாக்ஷனை கொடுத்தாலும், நெட்டிசன்கள் சில சம்பவங்களை நினைவுப்படுத்தி வருகிறார்கள்.</p><p> அதாவது, கோட் படத்தில் விஜய், சிவகார்த்திகேயனிடம், துப்பாக்கிய புடிங்க சிவா என்று கூறியிருப்பார். அதேபோல் வருங்காலங்களில் விஜய், சிவகார்த்திகேயனிடம் தன்னுடைய பொறுப்பை ஒப்படைப்பாரோ என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="et" dir="ltr">Varugalaa Muthalvarey - <a href="https://x.com/hashtag/Sivakarthikeyan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Sivakarthikeyan</a> 🤫😅!! <a href="https://t.co/MYNgCYleQZ">pic.twitter.com/MYNgCYleQZ</a></p>&mdash; Gv (@gowtham0725) <a href="https://x.com/gowtham0725/status/2090684116475986292?ref_src=twsrc%5Etfw">August 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-08-21T11:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் விமான விபத்தில் பலியான இந்திய வம்சாவளி தம்பதியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-origin-couple-dies-in-wales-plane-crash-1787312416"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-origin-couple-dies-in-wales-plane-crash-1787312416</id>
            <summary type="text">Indian origin husband and wife who died in plane crash pictured: விமான விபத்தில் உயிரிழந்த இந்திய வம்சாவளி தம்பதியரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indian origin husband and wife who died in plane crash pictured: விமான விபத்தில் உயிரிழந்த இந்திய வம்சாவளி தம்பதியரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.</p><p>


ஒரு இந்திய வம்சாவளி தம்பதியர் இங்கிலாந்திலிருந்து வேல்ஸ் நாட்டுக்கு பயணிக்கும்போது அவர்களுடைய விமானம் மாயமானது.
</p><p>
அந்த சம்பவம் தொடர்பில் புதிய தகவல்கள் சில வெளியாகியுள்ளன.
</p><h3>
இந்திய வம்சாவளி தம்பதியர்
</h3><p>
இங்கிலாந்திலுள்ள Syston என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த கேத்தன் ஸ்வாலி (59) மற்றும் ஷீத்தல் ஸ்வாலி (55) தம்பதியர், கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, ஆகத்து மாதம் 14ஆம் திகதி, Tatenhill விமான நிலையத்திலிருந்து வேல்ஸ் நாட்டிலுள்ள Caernarfon விமான நிலையத்துக்கு சிறிய ரக விமானம் ஒன்றில் புறப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/567680ab-28f1-4850-acb2-46973553b652/26-6a8839224a416.webp' /></p><p>
ஆனால், அவர்கள் Caernarfon விமான நிலையம் வந்தடையாததால், அவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், அவர்களுடைய விமானம், வேல்ஸ் நாட்டிலுள்ள Gwynedd என்னுமிடத்தில் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கிக் கிடந்தது தெரியவந்தது.&nbsp;</p><p></p><p>

சம்பவ இடத்தை அவசர் உதவிக்குழுவினர் அடைந்த நிலையில், கேத்தன், ஷீத்தல் தம்பதியர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டிருந்தது தெரியவந்துள்ளது.
</p><p>
தம்பதியரின் மரணம் அவர்களுடைய குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ள நிலையில், அவர்களுக்கு இரங்கல் செய்திகள் குவிந்த வண்ணம் உள்ளன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T11:40:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 மணி நேர நீர்வெட்டு..! தமிழர் பகுதி மக்களுக்கு வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/4-hour-water-cut-in-batticaloa-1787309879"></link>
            <id>https://tamilwin.com/article/4-hour-water-cut-in-batticaloa-1787309879</id>
            <summary type="text">எல் நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில்
நாளை(22) முதல் 4 மணி நேரம் நீர் வெட்டு மேற்கொள்ள
தீர்மானிக்கப்பட்டுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில்
நாளை(22) முதல் 4 மணி நேரம் நீர் வெட்டு மேற்கொள்ள
தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>எனவே மக்கள் நீரை சிக்கனமாக பாவிக்குமாறு தேசிய
நீர்வழங்கல் அதிகாரசபை மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன்
அறிவித்துள்ளார்.</p><h2>நீர் வெட்டு</h2><p>

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை காரணமாக உன்னிச்சை குளத்தின்
நீர்மட்டம் வெகுவாக குறைடைந்து செல்லுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f9a03dc-a5e4-47ce-b824-5b255ed8496c/26-6a883252de40d.webp' /></p><p>இந்த நிலையில் தொடர்ச்சியாக
நீர் வளங்களை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே நாளை முதல் காலை 10.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணி வரை
நாளாந்தம் நீர் வெட்டை மேற்கொள்ளுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
</p><p>இதேவேளை தற்போது உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் வரலாற்றில் முதல் தடவையாக 10
அடியாக குறைந்துள்ளதுடன் தற்போது மழை பெய்வதற்கான சாத்திய கூறுகள் இல்லை என
வானிலை ஆராய்ச்சி மையம் எதிர்வு கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d1d8f8f-28ea-4e59-a323-b730f0aff4dd/26-6a8839a7a6326.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T11:39:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் சிறப்பு விமான விபத்தில் 8 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/alaska-charter-flight-crash-kills-8-1787307360"></link>
            <id>https://tamilwin.com/article/alaska-charter-flight-crash-kills-8-1787307360</id>
            <summary type="text">அண்மையில் மேற்கு அலாஸ்காவில் உள்ள தொலைதூர இராணுவ ரேடார் தளத்தில் நடந்த வாடகை விமான விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில் மேற்கு அலாஸ்காவில் உள்ள தொலைதூர இராணுவ ரேடார் தளத்தில் நடந்த வாடகை விமான விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
</p><p>
அலாஸ்காவின் மிகப்பெரிய நகரமான ஆங்கரேஜிலிருந்து சுமார் 725 கிலோமீட்டர் (450 மைல்கள்) மேற்கே அமைந்துள்ள கேப் நியூவென்ஹாம் ரேடார் தள விமான நிலையத்தை அணுகும்போது அந்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><h2>விமான விபத்து</h2><p>
</p><p>
இந்த சம்பவத்தின்போது விமானத்தில் ஆறு பயணிகளும் இரண்டு விமானிகளும் இருந்ததாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் (NTSB) அலாஸ்கா பிராந்தியத் தலைவர் கிளின்ட் ஜான்சன் கூறியுள்ளார்.
</p><p>
ஆங்கரேஜை தளமாகக் கொண்ட செக்யூரிட்டி ஏவியேஷன் என்ற விமான வாடகை நிறுவனத்தால் இயக்கப்படும் செஸ்னா 441 ரக விமானம் இது என அறிக்கைகள் அடையாளம் காட்டியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54977dd3-5880-4d65-bb85-d9938404ffd2/26-6a88387adb7ee.webp' /></p><p> </p><p>விபத்து குறித்த செய்தியைத் தொடர்ந்து, அலாஸ்கா செனட்டர் லிசா முர்கோவ்ஸ்கி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.</p><p>
"நான் அலாஸ்கா முழுவதும் செக்யூரிட்டி ஏவியேஷனுடன் விரிவாகப் பயணம் செய்துள்ளேன், மேலும் அவர்களின் அனுபவம் வாய்ந்த பல விமானிகளைச் சந்தித்துள்ளேன்," என அந்தத் தொலைதூரப் பகுதியில் செயல்படும் வாடகை நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.</p><p>விமானப்படை அலாஸ்கன் கட்டளைப் பிரிவு ‘நமது இராணுவக் குடும்பத்திற்கான இழப்பு’ என இரங்கல் தெரிவிக்கிறது.&nbsp; அந்த விமானம் “பொதுமக்களுக்கான ஒப்பந்த விமானம்” என அமெரிக்க இராணுவத்தின் அலாஸ்கன் கட்டளைப் பிரிவு கூறியதாக அசோசியேட்டட் பிரஸ் மேற்கோள்காட்டியுள்ளது.</p><p>
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T11:38:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு இலங்கையர்களுக்கு தென் கொரியாவில் நீண்ட கால வதிவிட விசா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/long-term-residence-visas-for-two-srilankans-1787311444"></link>
            <id>https://ibctamil.com/article/long-term-residence-visas-for-two-srilankans-1787311444</id>
            <summary type="text">தென் கொரியாவில் கடலில் விழுந்து நொறுங்கிய விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளின் உயிரைக் காப்பாற்றிய இரண்டு இலங்கையர்களுக்கு நீண்ட கால வதிவிட விசாக்களை...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் கொரியாவில் கடலில் விழுந்து நொறுங்கிய விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளின் உயிரைக் காப்பாற்றிய இரண்டு இலங்கையர்களுக்கு நீண்ட கால வதிவிட விசாக்களை வழங்க தென் கொரிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.</p><p>

உள்ளூர் ஊடக அறிக்கை ஒன்றின்படி, 2022 ஒகஸ்ட் 12 அன்று, சியோலுக்குத் தெற்கே சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள
ஹ்வாசொங் கடற்கரைக்கு அப்பால் மஞ்சள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று இலங்கையர்களால் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
</p><p>
விபத்து நடந்த உடனேயே அவர்கள் செயல்பட்டு, தாங்கள் பணிபுரிந்து கொண்டிருந்த கொரிய மீன்பிடிப் படகின் உதவியுடன், கடலில் விழுந்த இரண்டு விமானிகளையும் மீட்டுப் பாதுகாப்பாகக் கரைக்குக் கொண்டு வந்தனர்.</p><p></p><h2>வேலைவாய்ப்பு அனுமதி</h2><p>
</p><p>
விபத்து நடந்த நேரத்தில், இந்த இலங்கையர்கள் வேலைவாய்ப்பு அனுமதி முறையின் (EPS) கீழ் வழங்கப்பட்ட 'E-9' விசாக்களில் தென் கொரியாவில் பணிபுரிந்து வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c452ce3-e2fd-4ee3-b4fa-b9bfd6bf039d/26-6a88387cb9d36.webp' /></p><p> பொதுவாக, அந்த விசா வகையின் கீழ் ஒரு வெளிநாட்டுப் பணியாளர் தென் கொரியாவில் அதிகபட்சமாக 4 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் மட்டுமே தங்கியிருக்க முடியும்.</p><p>

விமானிகளின் உயிரைக் காப்பாற்றுவதில் அவர்கள் ஆற்றிய சிறப்பான பங்களிப்பையும், அவர்களின் மனிதாபிமானப் பணிகளையும் அங்கீகரிக்கும் விதமாக, தென் கொரிய நீதி அமைச்சு, சம்பந்தப்பட்ட இரண்டு இலங்கையர்களுக்கும் இந்த நீண்ட கால விசாக்களை வழங்கியுள்ளது. </p><p>இந்த விசாக்கள், அவர்கள் தங்கள் விசாக்களை மீண்டும் மீண்டும் புதுப்பிக்க வேண்டிய அவசியமின்றி, நாட்டில் நிரந்தரமாகத் தங்குவதற்கு உரிமை அளிக்கின்றன.
</p><p>
இந்தச் சம்பவத்திற்கு உதவிய மற்ற இலங்கையரும் ஏற்கனவே நீண்ட கால விசா வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T11:37:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மானிப்பாய் சபைக்கு தீச்சட்டியுடன் வந்த உறுப்பினரால் பரபரப்பு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/member-arriving-manipay-council-carrying-fire-pot-1787310834"></link>
            <id>https://tamilwin.com/article/member-arriving-manipay-council-carrying-fire-pot-1787310834</id>
            <summary type="text">மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று(21) தவிசாளர் கந்தையா ஜெசீதன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, பிரதேச சபை உறுப்பினர் நா. பகீரதன், தீச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று(21) தவிசாளர் கந்தையா ஜெசீதன் தலைமையில் நடைபெற்றது.
</p><p>
இதன்போது, பிரதேச சபை உறுப்பினர் நா. பகீரதன், தீச்சட்டியுடன் திடீரென சபைக்குள் நுழைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.</p><h2>சுகாதாரப் பிரச்சினை</h2><p>
</p><p>
கல்லூண்டாய் குப்பை மேடு தொடர்ச்சியாக தீப்பற்றி எரிவதால், அப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களையும் சுகாதாரப் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருவதாக உறுப்பினர் நா. பகீரதன் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4eaca82c-3581-4f2b-a5eb-1bfc92a48a20/26-6a883480a4332.webp' /></p><p>

குறிப்பாக, குப்பை மேட்டில் பொலித்தீன் மற்றும் பம்பஸ் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் எரிவதால் அப்பகுதி மக்கள் சுவாசம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
இந்தப் பிரச்சினை தொடர்பில் மானிப்பாய் பிரதேச சபை, யாழ்ப்பாண மாநகர சபை உள்ளிட்ட பல்வேறு தரப்புகளிலும் பலமுறை பேசப்பட்டுள்ளதுடன், ஊடகங்கள் மூலமும் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><h2>யாழ்ப்பாண மாநகர சபை</h2><p>
</p><p>
எனினும், இதுவரை பிரச்சினைக்கு தீர்க்கமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.</p><p>

இதனை வெளிப்படுத்தும் வகையில், கல்லூண்டாய் குப்பை மேட்டில் எரிக்கப்படும் கழிவுப் பொருட்களை அடையாளப்படுத்தும் விதமாக நெருப்பு சட்டியுடன் சபைக்குள் நுழைந்ததாகவும் நா. பகீரதன் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c2cd70b-2b99-4399-991b-88c201cd1d52/26-6a88348189f10.webp' /></p><p>
</p><p>
மேலும், கல்லூண்டாய் குப்பை மேடு தொடர்பில் மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் க. ஜெசீதனின் நடவடிக்கைகள் தமக்கு திருப்தியளிக்கவில்லை எனவும் அவர் கூறினார்.</p><p>

யாழ்ப்பாண மாநகர சபையின் நடவடிக்கைகளுக்கு தவிசாளர் துணைபோவதாகவும், இந்த விடயம் தொடர்பில் தாம் பலமுறை கோரிக்கைகளை முன்வைத்த போதிலும், அதற்கான உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் நா. பகீரதன் குற்றஞ்சாட்டினார்.
</p><p>
மக்கள் எதிர்கொள்ளும் சுகாதாரப் பிரச்சினைக்கு விரைவான தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T11:29:40+00:00</updated>
        </entry>
    </feed>
