<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-27T13:25:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 அரசியல் வாதிகளின் தொடர்பை அம்பலபடுத்திய சிரான் பாசிக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/past-minister-received-crores-rupees-from-fasik-1787832055"></link>
            <id>https://ibctamil.com/article/past-minister-received-crores-rupees-from-fasik-1787832055</id>
            <summary type="text">தடுப்புக்காவலில் விசாரிக்கப்பட்டு வரும் போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான சிரான் பாசிக் என்பவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய,10 முக்கிய அரசியல...</summary>
            <content type="html"><![CDATA[<p>தடுப்புக்காவலில் விசாரிக்கப்பட்டு வரும் போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான சிரான் பாசிக் என்பவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய,10 முக்கிய அரசியல்வாதிகளிடம் எதிர்வரும் காலங்களில் விசாரணை நடத்தப்படவுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>கோடிக்கணக்கான ரூபாய் பணம் மற்றும் பல்வேறு சலுகைகளைப் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படகிறது.</p><p>
சிரான் பாசிக்கிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது வெளியாகிய தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.</p><p></p><h2>10 அரசியல்வாதிகள்</h2><p>
விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ள அரசியல்வாதிகளில் முன்னாள் அமைச்சர்கள் இருவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட பல பிரபல அரசியல்வாதிகள் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4238dce6-73dc-4d0c-bab9-9157268ca8da/26-6a902a012aa23.webp' /></p><p>
இந்த 10 அரசியல்வாதிகளுக்கும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது பல்வேறு சந்தர்ப்பங்களில் சிரான் பாசிக் பெருமளவு பணத்தை வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>

அத்துடன், கடந்த அரசாங்கத்தில் பதவி வகித்த சக்திவாய்ந்த அமைச்சர் ஒருவர்,&nbsp; பாசிக்கிற்கு சட்டவிரோதமாக காணிகளை பெற்றுக்கொடுத்து, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்களை நிர்மாணிப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

குறித்த நடவடிக்கைகளுக்காக அந்த முன்னாள் அமைச்சர், பாசிக்கிடமிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் பெருமளவு பணத்தைப் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p></p><h2>நீண்ட நேரமாக விசாரணை</h2><p>நீண்ட காலமாகவே சிரான் பாசிக் இந்த அரசியல்வாதிகளுக்காக தாராளமாக பணத்தை செலவிட்டு வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக காவ்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p>
இது தொடர்பில் கருத்து தெரிவித்த காவல்துறைமா அதிபர்&nbsp; பிரியந்த வீரசூரிய,சிரான் பாசிக்கிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின்போது வெளிப்படும் தகவல்களின் அடிப்படையில், குறித்த போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்புகளைப் பேணி பணம் மற்றும் பல்வேறு சலுகைகளைப் பெற்ற அனைத்து அரசியல்வாதிகளிடமும் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.</p><p>
தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சிரான் பாசிக்கிடம் நீண்ட நேரமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவருக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் தொடர்பிலும் விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக&nbsp; அவர் கூறியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T13:24:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீண்ட ஆயுளில் ஜப்பான் முதலிடம்: ரகசியம் இது தான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/what-is-the-80-rule-in-japan-1787833678"></link>
            <id>https://manithan.com/article/what-is-the-80-rule-in-japan-1787833678</id>
            <summary type="text">
Why do Japanese people live longer : ஜப்பான் நாட்டில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. உலகிலேயே நீண்ட ஆயுட்காலம் கொண...</summary>
            <content type="html"><![CDATA[<p>
Why do Japanese people live longer : ஜப்பான் நாட்டில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. </p><p>உலகிலேயே நீண்ட ஆயுட்காலம் கொண்ட மக்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகத் திகழும் ஜப்பானில், இவ்வாறு அதிக எண்ணிக்கையிலானோர் நூறு வயதைக் கடந்து வாழ்வதற்கு இவர்கள் தொன்று தொட்டு பின்பற்றும் தனித்துவமான உணவு முறைகள் மற்றும் வளர்ச்சியடைந்த மருத்துவம் என்பன காரணமாக இருக்கின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f86be202-5f91-4408-a322-7d06e25f8fe1/26-6a90372816625.webp' /></p><p></p><p>அந்தவகையில், அவர்களின் உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, உடல் இயக்கம், சமூக உறவுகள் மற்றும் மருத்துவ வசதிகள் ஆகியவை இதில் எந்த அளவுக்கு முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.</p><h2>ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளின் ரகசியம்&nbsp;</h2><p>
</p><p>
ஜப்பானில் நூறு வயதைக் கடந்த முதியவர்களின் எண்ணிக்கை, 2025 செப்டம்பர் நிலவரப்படி, 99,763 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.கடந்த 55 ஆண்டுகளாக இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றமையும்,&nbsp; நூறு வயதைக் கடந்தவர்களில் சுமார் 88 சதவீதம் பேர் பெண்கள் என்பதும் கவனிக்கத்தக்க அம்சமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/577649fd-0140-4166-bb94-dd88125f60a9/26-6a903729025a5.webp' /></p><p> ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்குப் பின்னால் அவர்களின் கட்டுப்பாடான வாழ்க்கை முறை மட்டுமின்றி, சமூக அமைப்பு மற்றும் சுகாதாரக் கட்டமைப்பும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.</p><p>
அளவான உணவும் ஆரோக்கியமான உணவுப் பழக்கமும்
ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாக அவர்களின் உணவுப் பழக்கம் கருதப்படுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7220882b-d977-4967-b4af-0d14fbc0819a/26-6a903729b2540.webp' /></p><p>வயிறு முழுமையாக நிரம்பும் வரை உண்பதைத் தவிர்த்து, சுமார் 80 விழுக்காடு நிறைந்தவுடன் உண்பதை நிறுத்தும் பழக்கம் அவர்களிடம் காணப்படுகிறது. இதன் மூலம் தேவைக்கு அதிகமாக உணவு உட்கொள்வதைத் தவிர்த்து, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது.
</p><p>
அதேபோல், பாரம்பரிய ஜப்பானிய உணவில் காய்கறிகள், மீன், கடல் உணவுகள், சோயா சார்ந்த உணவுகள் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துமிக்க உணவுகள் இடம்பெறுகின்றன.அளவோடு உண்பதும், உணவில் பல்வேறு ஊட்டச்சத்துகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதும் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.&nbsp;</p><p>
அன்றாட வாழ்க்கையிலேயே உடல் இயக்கம்
ஜப்பானியர்களின் வாழ்க்கை முறையில் உடற்பயிற்சி என்பது தனியாக ஒதுக்கப்படும் ஒரு செயலாக மட்டுமல்லாமல், அன்றாட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே உள்ளது.</p><p> நடைப்பயிற்சி மேற்கொள்வது, வீட்டு வேலைகளைச் செய்வது, அன்றாடத் தேவைகளுக்காக நடந்து செல்வது போன்ற செயல்பாடுகள் அவர்களின் உடல் இயக்கத்தைத் தொடர்ந்து பராமரிக்க உதவுகின்றன.</p><p>

மேலும், வயது முதிர்ந்த பின்னரும் தங்களுக்குப் பிடித்தமான பணிகள் மற்றும் செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bd163c6-25e0-43a0-ac7f-0cf90923a958/26-6a90372a6402f.webp' /></p><p> இதனால் முதுமையிலும் உடல் சுறுசுறுப்புடன் இருப்பதோடு, மனதளவிலும் உற்சாகத்தையும் வாழ்க்கையின் மீதான ஆர்வத்தையும் தொடர்ந்து பேண முடிகிறது.
</p><p>
பெண்களின் நீண்ட ஆயுளுக்கான காரணங்கள்
ஜப்பானில் நூறு வயதைக் கடந்தவர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. </p><p>இதற்கு உயிரியல் ரீதியான காரணிகளுடன், பெண்களின் சுகாதார விழிப்புணர்வும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

நோய் தீவிரமடைவதற்கு முன்பே அதைக் கண்டறிவதற்கான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது, உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்களைத் தொடர்ந்து கவனிப்பது போன்ற தடுப்பு சுகாதார நடைமுறைகள் அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகின்றன.</p><p>

அதுமட்டுமின்றி, முதுமையிலும் வலுவான சமூகத் தொடர்புகளைப் பேணுவதும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது, தினசரி உரையாடல்களில் ஈடுபடுவது போன்றவை தனிமை உணர்வையும் மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2e3fc95-09f8-4e84-815d-88b1b475970b/26-6a90372b16bcd.webp' /></p><p>
</p><p>
தரமான மருத்துவ வசதிகளும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளும்
ஜப்பானின் சுகாதாரக் கட்டமைப்பும் மக்களின் நீண்ட ஆயுளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அரசு வழங்கும் தரமான பொது மருத்துவக் காப்பீட்டின் உதவியுடன், மக்கள் தேவையான மருத்துவச் சேவைகளைப் பெறுவதற்கான வாய்ப்பு பரவலாக உள்ளது.
</p><p>
குறிப்பாக, நோய் ஏற்பட்ட பிறகு சிகிச்சை பெறுவதற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல், நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுப்பதற்கான மருத்துவப் பரிசோதனைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.</p><p> இதனால் பல்வேறு நோய்களை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சையை விரைவாகத் தொடங்க முடிகிறது. நீண்ட ஆயுளுக்குப் பின்னால் உள்ள வாழ்க்கை முறை
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான ஒரே ஒரு காரணத்தைக் குறிப்பிட்டு சொல்ல முடியாது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/342b2075-4d86-4433-ad01-1e823c8a291c/26-6a90372bbeaea.webp' /></p><p></p><p>அளவான உணவு, ஊட்டச்சத்துமிக்க பாரம்பரிய உணவுப் பழக்கம், தொடர்ந்து மேற்கொள்ளப்படும் உடல் இயக்கம், முதுமையிலும் சுறுசுறுப்பாக இருப்பது, வலுவான சமூக உறவுகளைப் பேணுவது, நோய்களை முன்கூட்டியே கண்டறியும் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் தரமான மருத்துவ வசதிகள் எனப் பல்வேறு காரணிகள் ஒன்றிணைந்து அவர்களின் நீண்ட ஆயுளுக்கு அடித்தளமாக அமைந்துள்ளன.</p><p>

இதனால், ஜப்பான் உலகிலேயே நீண்ட ஆயுட்காலம் கொண்ட மக்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகத் தொடர்ந்து விளங்கி வருகிறது. </p><p>நீண்ட காலம் வாழ்வது மட்டுமல்லாமல், முதுமையிலும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதுதான் ஜப்பானியர்களின் சிறப்பாகவும் பார்க்கப்படுகின்றது.&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T13:23:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளம் சென்ற பிரபல நடிகையின் பெற்றோர் மாயம்; சமூகவலைத்தளத்தில் கவலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/actress-nivetha-pethuraj-parents-missing-nepal-1787833519"></link>
            <id>https://jvpnews.com/article/actress-nivetha-pethuraj-parents-missing-nepal-1787833519</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் கைலாஷ் மலைக்கு யாத்திரைக்கு சென்ற , நடிகை நிவேதா பெத்துராஜின் பெற்றோர்கள் காணமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் கைலாஷ் மலைக்கு யாத்திரைக்கு சென்ற , நடிகை நிவேதா பெத்துராஜின் பெற்றோர்கள் காணமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. </p><p> 

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் கைலாஷ் மலைக்கு யாத்திரைக்கு சென்ற தனது பெற்றோர் ரமேஷ் சர்மா(65), மற்றும் நீலம் சர்மா(64) இருவரையும் காணவில்லை.. அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என நடிகர் நிவேதா பெத்தராஜ் சமூகவலைத்தங்களில் பதிவிட்டிருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ea7376b-63ba-49ae-8efa-cd298aece535/26-6a902cb143f11.webp' /></p><p></p><h2>நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம்</h2><p> </p><p>மீட்பு குழுவினர், அரசு அதிபர்கள் ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தன்னை தொடர்பு கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.</p><p>

நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.</p><p></p><p> அதில் பல இந்தியர்களும் அடக்கம். நேபாளம் ஒரு சுற்றுலா நாடு. அந்த வகையில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் பலரும் அங்கு சுற்றுலா சென்ற நேரத்தில்தான் நேற்று பெருவெள்ளம் ஏற்பட்டு அதில் பலரும் சிக்கியிருக்கிறார்கள்.</p><p></p><p> பலரும் உயிரிழந்திருக்கிறார்கள்.

அதேபோல், தமிழகத்திலிருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்றவர்களில் 83 பேரை தொடர்பு கொள்ளமுடியவில்லை. அவர்களின் நிலை என்னவாயிருக்கும் என்கிற பதட்டம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அவர்களை மீட்க தமிழக அரசும் முயற்சிகளை எடுத்து வருகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T13:21:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்தில் அகதி உரிமை கோருவோரின் எண்ணிக்கையில் சரிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/uk-asylum-applications-drop-by-21-in-2026-1787833979"></link>
            <id>https://ibctamil.com/article/uk-asylum-applications-drop-by-21-in-2026-1787833979</id>
            <summary type="text">இங்கிலாந்தில் அகதி உரிமை கோருவோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில்
குறைந்துள்ளதாகப் புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

​ஜூன் 2026 வரையிலான ஒர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்தில் அகதி உரிமை கோருவோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில்
குறைந்துள்ளதாகப் புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

​</p><p>ஜூன் 2026 வரையிலான ஒரு ஆண்டில் அகதி உரிமை கோரியவர்களின் எண்ணிக்கை 21
சதவீதம் குறைந்து 86,000 ஆகப் பதிவாகியுள்ளது.
</p><p>
இருப்பினும், இந்த எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டுக்கு முந்தைய சாதாரண அளவை விட
அதிகமாகவே உள்ளது.

​</p><p></p><h2>சிறிய படகுகள்&nbsp;</h2><p>அதேபோல், சிறிய படகுகள் மூலம் இங்கிலாந்தை வந்தடைந்தவர்களின் எண்ணிக்கையும்
23 சதவீதம் குறைந்து 33,000 ஆக பதிவாகியுள்ளது.
</p><p>
இவர்களில் எரித்திரியா, சூடான், ஆப்கானிஸ்தான், சோமாலியா மற்றும் ஈரான் ஆகிய
நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிகம் எனத் தெரியவந்துள்ளது.

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dde74349-a7e3-470c-b14c-0ab48220ac9a/26-6a9038aa5bfab.webp' /></p><p>அகதிகளுக்கான விடுதி பயன்பாடும் பாதியாகக் குறைந்துள்ளது, கடந்த ஜூன் மாத
நிலவரப்படி, சுமார் 16,000 அகதிகள் மட்டுமே விடுதிகளில்
தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

​</p><p>கன்சர்வேடிவ் ஆட்சிக்காலத்தின் இறுதியில் கொண்டுவரப்பட்ட கடுமையான விதிகளின்
காரணமாக வேலை, கல்வி மற்றும் குடும்ப விசாகளின் எண்ணிக்கையும்
சரிவடைந்துள்ளது.

​</p><p>இந்தத் தரவுகள் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள உள்துறைச் செயலாளர் ஷபானா
மஹ்மூத், அரசாங்கம் இதில் திருப்தியடைந்து விடவில்லை இன்னும் செய்ய
வேண்டியவை நிறைய உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.

​</p><p>அதேவேளை, நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும் அகதிகள் மேல்முறையீட்டு
வழக்குகளை விரைந்து முடிப்பதே தற்போதைய அரசாங்கத்தின் மிகப்பெரிய சவாலாக
இருக்கும் என இடம்பெயர்வு கண்காணிப்பகம் (Migration Observatory)
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-27T13:21:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்வே மன்னரின் உடல்நிலை கவலைக்கிடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/norway-king-in-critical-condition-1787831104"></link>
            <id>https://canadamirror.com/article/norway-king-in-critical-condition-1787831104</id>
            <summary type="text">நோர்வே நாட்டின் மன்னர் ஐந்தாம் ஹரால்ட்டின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக நோர்வே அரச மாளிகை அறிவித்துள்ளது.மன்னர் ஹரால்ட்டின் இரத்தத்தில் பாக்டீரியா தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வே நாட்டின் மன்னர் ஐந்தாம் ஹரால்ட்டின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக நோர்வே அரச மாளிகை அறிவித்துள்ளது.</p><p>மன்னர் ஹரால்ட்டின் இரத்தத்தில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் நோர்வே அரச மாளிகை இன்று (27) அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5938f2c-0c08-4f68-a55d-bfbd56084ca2/26-6a90234268953.webp' /></p><p>



89 வயதான மன்னர் ஐந்தாம் ஹரால்ட், கடந்த 1991ஆம் ஆண்டு முதல் நோர்வே நாட்டின் மன்னராக பதவி வகித்து வருகிறார். </p><p>

இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ள அவர், கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.



இதன் தொடர்ச்சியாக, ஓகஸ்ட் மாத தொடக்கத்தில் தலைநகர் ஒஸ்லோவில் உள்ள தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மன்னர் ஹரால்ட், சில நாட்கள் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பினார்.
</p><p>தொடர்ச்சியாக உடல்நலக் குறைவு காரணமாக மன்னர் ஹரால்ட் ஓய்வில் இருந்து வரும் நிலையில், அவரது மகனும் நோர்வே நாட்டின் பட்டத்து இளவரசருமான ஹாக்கோன் அரசுப் பிரதிநிதியாகச் செயல்பட்டு வருகிறார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T13:21:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டப்பேரவையில் இருக்கை மாற்றி அமர்ந்த முதல்வர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cm-cm-vijay-seat-changed-in-the-tn-assembly-1787836809"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cm-cm-vijay-seat-changed-in-the-tn-assembly-1787836809</id>
            <summary type="text">cm vijay seat changed in tn assembly: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், முதல்வருக்கான இருக்கையில் அமராமல் அமைச்சர்களுக்கிடையே அமர்ந்துள்ளார்.

சட்டப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>cm vijay seat changed in tn assembly: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், முதல்வருக்கான இருக்கையில் அமராமல் அமைச்சர்களுக்கிடையே அமர்ந்துள்ளார்.
</p><h3>
சட்டப்பேரவையில் இருக்கை மாற்றி அமர்ந்த முதல்வர் விஜய்</h3><p> 

தமிழ்நாடு சட்டமன்றத்தில் வழக்கமாக முதலமைச்சர் அமர்வதற்கு தனி இருக்கை ஒதுக்கப்பட்டிருக்கும். </p><p>

அதே போல் அமைச்சர்கள் அமர்வதற்கு தனி வரிசையும், அதன் பின்னர் எம்எல்ஏக்கள் அமர்வதற்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருக்கும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86fe3c25-9c32-4af1-bf78-9aefcca92dc8/26-6a90398b34da1.webp' /></p><p>

இந்நிலையில் இன்று சட்டமன்றத்தில் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் சமூகநீதித்துறை மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது. </p><p>

மதியத்திற்கு மேல் சட்டமன்றத்திற்கு வந்த முதல்வர் விஜய், தனது இருக்கையில் அமராமல் அமைச்சர்கள் வரிசையில் சென்று அமர்ந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5aa6eb4-be28-4e5a-959b-ff097bf1f3a8/26-6a90398a8234d.webp' /></p><p>

அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் செங்கோட்டையனுக்கு இடையே அமர்ந்த முதல்வர் விஜய், அமைச்சர் செங்கோட்டையனுடன் தீவிரமாக உரையாடிக் கொண்டிருந்தார்.
</p><p>
முதல்வர் இருக்கை மாற்றி அமர்ந்தது ஏன்? என்ன உரையாடினார்கள் என சமூகவலைத்தளங்களில் பலரும் விவாதித்து வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T13:20:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புரட்டிப்போட்ட பேரழிவு; நேபாளம் - சீனா எல்லையில் 1400 பேர் மாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/disaster-1-400-people-missing-nepal-china-border-1787835381"></link>
            <id>https://canadamirror.com/article/disaster-1-400-people-missing-nepal-china-border-1787835381</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; நேபாளம் - சீனா எல்லையில் 1400 பேர் மாயமான நிலையில் தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கபப்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வடக்கு நேபா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; நேபாளம் - சீனா எல்லையில் 1400 பேர் மாயமான நிலையில் தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கபப்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
</p><p>
வடக்கு நேபாளத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பலரும் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6dd20ade-6f69-4538-b34f-f1d94fb7b3c2/26-6a9033f88c8a9.webp' /></p><h2>&nbsp;500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம்</h2><p> </p><p>

பல வீடுகளும் கட்டிடங்களும், வாகனங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.</p><p>
 
அதோடு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. நேபாளம் நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற பலரும் இதில் சிக்கியிருக்கிறார்கள்.</p><p>

 தமிழகத்திலிருந்து சுற்றுலாவுக்கு சென்ற 83 பேர் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. அவர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது.</p><p>

ஒருபக்கம் நேபாளம் - சீன எல்லையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சுமார் 1400 பேர் மாயமாகியுள்ளனர். </p><p>

அந்த வகையில் நேபாளத்தில் 500 வெளிநாட்டினர் உட்பட 826 பேரும், சீனாவில் 260 வெளிநாட்டினர் உட்பட 558 பேரும் மாயமாகியிருப்பதாக அந்தந்த நாட்டு அரசுகள் அறிவித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-27T13:20:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்நீச்சல் தொடர்கிறது 2 சீரியல் இப்படியொரு சாதனையை செய்துவிட்டதா?... என்ன பாருங்க...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ethirneechal-thodargiradhu-serial-good-news-1787834828"></link>
            <id>https://cineulagam.com/article/ethirneechal-thodargiradhu-serial-good-news-1787834828</id>
            <summary type="text">எதிர்நீச்சல் தொடர்கிறது 2ஹீரோவை அசைக்கமுடியாத நாயகனாக காட்டினால் தான் மக்களுக்கு பிடிக்கும். ஆனால் எதிர்நீச்சல் தொடர்கிறது 2 சீரியலில் இரண்டு சீசன்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>எதிர்நீச்சல் தொடர்கிறது 2</h2><p>ஹீரோவை அசைக்கமுடியாத நாயகனாக காட்டினால் தான் மக்களுக்கு பிடிக்கும். ஆனால் எதிர்நீச்சல் தொடர்கிறது 2 சீரியலில் இரண்டு சீசன்கள் முடிந்தும் வில்லனை தான் அசைக்கமுடியாத ஒரு நபராக காட்டி வருகிறார்கள்.</p><p>ஒரு வில்லன் பத்தாது என்று இப்போது ராவணன் என்ற கொடூர வில்லனும் களமிறங்கியுள்ளார். இந்த இரண்டு வில்லனகளையும் சமாளித்து நியாயத்திற்காக போராடும் ஜனனி எப்படி சாதிக்க போகிறார் என்பதே இப்போதையாக கதையாக உள்ளது.</p><p>ராவணன் சக்தியிடம் அடிவாங்கிய பின்னர் இன்னும் கொடூரமான செயல்களை செய்ய ஆரம்பித்துவிட்டார். இன்றைய எபிசோடில், ராவணன் எதையோ ஜனனி-சக்தியிடம் காட்டி பயமுறுத்துகிறார். அப்படி என்ன காட்டினார், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது எல்லாம் பரபரப்பின் உச்சமாக செல்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ffcc5df-0294-4d27-95f9-958a833de4b5/26-6a9035dd87665.webp' /></p><h2>சாதனை</h2><p>முதல் சீசன் முடிவடைந்து 2வது சீசன் அதே நடிகர்களை வைத்து துவங்கப்பட்டது.</p><p>சில நடிகர்களே மாறினார்கள், ஆனால் கதை மட்டும் சுத்தமாக மாறவில்லை. இந்த நேரத்தில் எதிர்நீச்சல் தொடர்கிறது 2 சீரியல் ரசிகர்களுக்காக ஒரு சூப்பரான நியூஸ் வந்துள்ளது. அதாவது எதிர்நீச்சல் தொடர்கிறது 2ம் பாகம் 600 எபிசோடுகளை எட்டிவிட்டதாம்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Dcfni-EqWX2/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Dcfni-EqWX2/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Dcfni-EqWX2/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by ❤𝗧𝗡 𝗙𝗔𝗩𝗢𝗥𝗜𝗧𝗘 𝗦𝗘𝗥𝗜𝗔𝗟❤ (@familyserial_official)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-27T13:04:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பால் காய்ச்சினால் அமைதி...பற்றவைத்தால் வெடிக்கும்; தமிழக சட்டமன்றத்தில் காரசாரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-nadu-assembly-argument-premalatha-aadhav-1787834720"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-nadu-assembly-argument-premalatha-aadhav-1787834720</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தமிழக சட்டமன்றத்தில் இன்று இது சட்டமன்றமா? இல்லை சண்டை மன்றமா?.. பிரேமலதா கேள்வி எழுப்ப, பால் காய்ச்சினால் அமைதி...பற்றவைத்தால் வெடிக்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தமிழக சட்டமன்றத்தில் இன்று இது சட்டமன்றமா? இல்லை சண்டை மன்றமா?.. பிரேமலதா கேள்வி எழுப்ப, பால் காய்ச்சினால் அமைதி...பற்றவைத்தால் வெடிக்கும் என தவெக ஆதவ் அர்ஜுனா சூடாக பதிலடி கொடுத்துள்ளார்.
</p><p>

2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியிருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ac6413e-e8c4-4dc6-9bf3-9f75b31168af/26-6a903161ac026.webp' /></p><h2>கேஸை பிடுங்கிவிட்டு பற்றவைத்தால் வெடிக்கும்</h2><p> </p><p>

2021 தேர்தலில் வெற்றி பெற்று ஆளும் கட்சியாக இருந்த திமுக தற்போது எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறது. தவெக ஆட்சி அமைத்ததை தாங்கிக் கொள்ள முடியாத திமுக சட்டசபையில் தவெகவுடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறது.</p><p>

எதிர்க்கட்சி உதயநிதி ஸ்டாலின் எழுப்பும் கேள்விகளுக்கு தவெக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, சிடி நிர்மல் குமார், ராஜ்மோகன் போன்றவர்கள் எழுந்து பதில் கூறி வருகிறார்கள்.</p><p></p><p> </p><p>அதிலும் யார் என்ன கேள்வி கேட்டாலும் ஆதவ் அர்ஜுனா எழுந்து பதில் சொல்வதாக உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் சட்டமன்றத்தில் புகார் கூறியிருந்தார்.</p><p>

இந்நிலையில், இன்று சட்டசபையில் பேசிய தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதா ‘எப்போது பார்த்தாலும் சண்டை சண்டை என்று செல்கிறது.. இது சட்டமன்றம்.. சண்டை மன்றம் அல்ல.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச ஆரம்பிக்கும் வரை நன்றாக செல்கிறது.. அவர் பேச ஆரம்பித்தாலே சண்டைதான்’ எனக்கூறினார்.</p><p></p><p> அதற்கு பதிலளித்த ஆதவ் அர்ஜுனா ‘அண்ணியாருக்கும் எங்களுக்கும் பிரச்சனை இல்லை.. எங்களுக்கும் விஜயகாந்த் சாரை மிகவும் பிடிக்கும்.. உண்மைக்கு மாறாக பேசும் போது தான் நாங்கள் எழுந்து பதில் சொல்கிறோம்.</p><p> எதிர்க்கட்சி என்பது தீப்பெட்டி போன்றது.. அதை வைத்து கேஸ் பற்ற வைத்து பால் காய்ச்சினால் அமைதியாக இருப்போம்.. கேஸை பிடுங்கிவிட்டு பற்றவைத்தால் வெடிக்கும்’ என பதிலடி கொடுத்தார்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T13:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர்ச்சியான ஏமாற்றுதல்களால் முற்றாக ஸ்தம்பித்துள்ளது இலங்கை - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-premadhasa-statement-about-sri-lanka-1787834739"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-premadhasa-statement-about-sri-lanka-1787834739</id>
            <summary type="text">தொடர்ச்சியாக இரண்டு சந்தர்ப்பங்களில் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்
என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, 2019ஆம் ஆண்டில்
ஏமாந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடர்ச்சியாக இரண்டு சந்தர்ப்பங்களில் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்
என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, 2019ஆம் ஆண்டில்
ஏமாந்து நாடு வங்குரோத்தடைந்தது போல், 2024 இலும் ஏமாந்து இன்று முழு சமூகமும் முற்றாக ஸ்தம்பித்துப் போயுள்ளது என்றார்.
</p><p>
அநுராதபுரத்தில்
நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்தவர் விரிவாக்க விசேட
வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு
உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>கடுமையான அசௌகரியம்</h2><p>

விவசாயிகள், கடற்தொழிலாளர்கள், தொழிலாளிகள், தொழில்முனைவோர்கள், குழந்தைகள், பெண்கள்
உள்ளிட்ட 220 இலட்சம் மக்களும் தற்போது கடுமையான அசௌகரியத்துக்கும் பீதிக்கும்
ஆளாகியுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c048c68-9f87-426a-9a49-e8b48e2dbe66/26-6a9034459e75e.webp' /></p><p>
</p><p>
அவர் மேலும் உரையாற்றுகையில், தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் பிரகாரம் முப்பது நாள்கள்
ஒரு நபர் வாழ்வதற்கு 17 ஆயிரத்து 315 ரூபா போதுமானதாகக் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள் இதுபோன்ற பொய்யான தரவுகளை அடிப்படையாகக் கொண்டே
அமைந்துள்ளன.</p><h2>நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்</h2><p>
</p><p>
தேர்தல் காலத்தில் நெல் ஒரு கிலோகிராமிற்கு 150 ரூபா உத்தரவாத விலை தருவதாகக்
கூறிவிட்டு, தற்போது 120 ரூபாவே வழங்கப்படுகின்றது. ஆனால், நெல் ஒரு கிலோகிராமிற்கு உற்பத்தி செய்வதற்கு 137 ரூபா செலவாவதாக விவசாய அமைச்சரே நாடாளுமன்றத்தில்
தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb38665e-b256-4a3c-9124-9eb0ad081fd6/26-6a9034468a5bb.webp' /></p><p>
</p><p>
மின்சாரக் கட்டணத்தை 33 வீதத்தால் குறைத்தல், துறைமுகத்தில் இறக்கப்படும்
விலைக்கு எரிபொருள் வழங்குதல் மற்றும் 12 இலட்சத்துக்கு விட்ஸ் ரக கார்
வழங்குதல் போன்ற எவைகளுமே இதுவரை அரசால் நிறைவேற்றப்படவில்லை என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9111f859-6486-4306-ae70-70e8a01b0d61/26-6a90344764d82.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8ecde4d-1ee8-40c6-b8d5-77f663665fc8/26-6a9034483f76a.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T12:59:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாலியில் தாக்குதல்: பிரான்சும், உக்ரைனும் தான் காரணம்! ரஷ்யா பகீர் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-france-involvement-in-mali-attack-1787835425"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-france-involvement-in-mali-attack-1787835425</id>
            <summary type="text">Russia Accuses Ukraine France Involvement in Mali Attack: மாலி தாக்குதலில் உக்ரைன் மற்றும் பிரான்ஸ் நாட்டிற்கு தொடர்பு இருப்பதாக ரஷ்யா குற்றம்சாட்டியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russia Accuses Ukraine France Involvement in Mali Attack: மாலி தாக்குதலில் உக்ரைன் மற்றும் பிரான்ஸ் நாட்டிற்கு தொடர்பு இருப்பதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.</p><h2> பிரான்ஸ் - உக்ரைனை குற்றஞ்சாட்டிய ரஷ்யா</h2><p>
சமீபத்தில் மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் நடந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு உக்ரைன் மற்றும் பிரான்ஸ் நாட்டின் உளவு பிரிவுகள் காரணமாக இருக்கலாம் என்று ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p> இந்த கருத்தை ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் முதல் ஐரோப்பிய துறையின் இயக்குனர் ஆர்தம் ஸ்டுடென்னிகோவ் தெரிவித்துள்ளார்.</p><p> இது தொடர்பாக RIA நோவொஸ்டி செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், விரிந்த சாஹேல் பிராந்தியத்தில் அரசாங்கத்தை கவிழ்த்து விட்டு பொம்மை அரசாங்கத்தை முன்னெடுக்க பிரான்ஸ் தொடர்ந்து முயற்சித்து வருவதாக தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9a38eaa-821a-439e-b0c6-e73f2d305763/26-6a9034233ef0f.webp' /></p><p> அத்துடன் ஜனவரி 3ம் திகதி புர்கினா பாசோவில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையிலும் பிரான்ஸ் பின்னணியில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.</p><p> இந்த குற்றச்சாட்டில் உக்ரைன் மற்றும் மற்ற சில ஐரோப்பிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.</p><p></p><p>அதில், மாலியில் ஆட்சியை கவிழ்க்க உள்ளூர் தீவிரவாதிகளுக்கு உக்ரைன் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் இராணுவ பயிற்சி வழங்கியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.</p><p>கடந்த ஏப்ரலில் மாலியில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கை ரஷ்யாவின் “ஆப்பிரிக்கா கார்ப்ஸ்” படை வெற்றிகரமாக முறியடித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T12:57:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் பதிக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/talks-remove-mines-planted-in-the-strait-of-hormuz-1787833667"></link>
            <id>https://ibctamil.com/article/talks-remove-mines-planted-in-the-strait-of-hormuz-1787833667</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் இருந்து கண்ணிவெடிகளை அகற்றும் கூட்டுத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து கட்டாரும் ஈரானும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கட்டாரின...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் இருந்து கண்ணிவெடிகளை அகற்றும் கூட்டுத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து கட்டாரும் ஈரானும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கட்டாரின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
</p><p>ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் இன்று இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையே நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.</p><p>மேலும், ​​ஹோர்முஸ் நீரிணை வழியாக ஒரு தற்காலிக கப்பல் போக்குவரத்து வழித்தடத்தை உருவாக்குவதை உள்ளடக்கிய முன்மொழியப்பட்ட கட்டமைப்பு குறித்தும் இருதரப்பும் விவாதித்துள்ளன.</p><p></p><h2>பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை</h2><p>இது குறித்துகத்தார் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89bbb263-6c65-420f-b29a-1d4e64a31eba/26-6a90327ca6cb9.webp' /></p><p>“பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கு பங்களிக்கும் வகையில், பதற்றத்தைக் குறைப்பதற்கும், உரையாடலுக்கான பொருத்தமான நிலைமைகளை உருவாக்குவதற்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுடன், பிராந்திய சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களும் ஆய்வு செய்யப்பட்டன" என்று தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T12:50:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வயதான பெற்றோரின் சொத்தை பறித்து துரத்திவிட்ட மகன்; இலங்கையில் இப்படி ஒரு மோசமான சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/son-seizes-elderly-parents-assets-them-out-1787812367"></link>
            <id>https://jvpnews.com/article/son-seizes-elderly-parents-assets-them-out-1787812367</id>
            <summary type="text">&amp;nbsp; வயதான பெற்றோரின் சொத்தை பறித்து விட்டு அவர்களை அநாதரவாக, மகன் வீதிக்கு துரத்திவிட்ட துயரம் சம்பவம் ஒன்று தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளது.

சம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வயதான பெற்றோரின் சொத்தை பறித்து விட்டு அவர்களை அநாதரவாக, மகன் வீதிக்கு துரத்திவிட்ட துயரம் சம்பவம் ஒன்று தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த வயதான அந்த தம்பதிகளிற்கு ஒரு மகன், மற்றும் மகள் உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63a9cd9f-45e7-48fa-9b93-404d63ee60ec/26-6a8fda10ab4aa.webp' /></p><h2>இருக்க வசிப்பிடமின்றி&nbsp; வீதிக்கு வந்த&nbsp; பெற்றோர்கள்</h2><p> மகன் ஜப்பான் நாட்டுக்கு சென்று வந்த நிலையில் செல்வ செழிப்புடன் வாழ்ந்து வருகின்றார். மகள் கணவனை இழந்து வறுமையில் வாடுவதாக அந்த வயோதிப தம்பதிகள் கூறியுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
இந் நிலையில் வெளினாட்டில் இருந்து திரும்பிய தமது மகன், பெற்றோரின் சொத்துக்ளை பறித்ததோடு அவர்காளின் உடமைகளுக்கும் தீவைத்து, விட்டைவிட்டு வெளியேற்றி விட்டதாக கண்ணீருடன் அந்த வயதான தம்பதிகள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
தமது மகள் மிகவும் வறுமையில் வாடுவதாக தெரிவித்துள்ள அந்த வயதான தம்பதி, தாம் தங்குவதற்கு இருப்பிடம் ஒன்றை தேடிவருவதாக கூறியுள்ளனர்.</p><p></p><p> 

அதேவேளை பெற்றோரை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என அண்மையில் அரசாங்கம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.</p><p>

குறித்த தம்பதியின் சோக கதை சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், பெற்றோரை கைவிட்ட மகன் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க வெண்டும் என சமூக வலைத்தளவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T12:45:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிராவில் முடிந்த இந்தியா - இலங்கை டெஸ்ட்; சாதனை பட்டியலில் இணைந்த சோனல் தினுஷா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ind-vs-sl-2nd-test-draw-dinusha-joints-elite-list-1787834469"></link>
            <id>https://news.lankasri.com/article/ind-vs-sl-2nd-test-draw-dinusha-joints-elite-list-1787834469</id>
            <summary type="text">ind vs sl 2nd test draw: இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.

டிராவில் முடிந்த இந்தியா - இலங்கை டெஸ்ட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ind vs sl 2nd test draw: இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.
</p><h3>
டிராவில் முடிந்த இந்தியா - இலங்கை டெஸ்ட்
</h3><p>
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. </p><p>

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 503 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தேவ்தத் படிக்கல் மற்றும் துருவ் ஜுரெல் சதம் விளாசியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c7b8f88-de3a-4ef0-a65e-c2a6ccd36c71/26-6a9030675aa04.webp' /></p><p> </p><p>

இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி, 290 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. 213 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் இருந்த இலங்கை அணி பாலோ ஆன் நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடியது. </p><p>

5வது நாள் முடிவடைந்த நிலையில் இலங்கை அணி, 9 விக்கெட்களை இழந்து 429 ஓட்டங்கள் குவித்து டிரா செய்துள்ளது.&nbsp;</p><p></p><p> 

ஆட்டமிழக்காமல் 133 குவித்த சோனல் தினுஷா அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். சோனல் தினுஷா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47a295a4-f2ae-4030-809c-2c000a3982bc/26-6a903066aa2c6.webp' /></p><p>
இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. 

இந்திய வீரர் தேவ்தத் படிக்கல் தொடர் நாயகன் விருது வென்றுள்ளார்.</p><h3> 

சாதனை பட்டியலில் சோனல் தினுஷா
</h3><p>
இந்த போட்டியில் 2 இன்னிங்ஸிலும் சதம் விளாசிய சோனல் தினுஷா சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.&nbsp;</p><p></p><p> 

ஃபாலோ-ஆன் செய்யப்பட்ட பிறகு, இரு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த டெஸ்ட் வரலாற்றிலேயே 3வது துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையை சோனல் தினுஷா பெற்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af23ad29-7b20-4ed7-8527-9d6b032215c8/26-6a90306810357.webp' /></p><p>

முன்னதாக 1948 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் விஜய் ஹசாரே மற்றும் 2001 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வேவின் செய்த ஆண்டி ஃப்ளவரும் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
</p><p>
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 4 இன்னிங்ஸ்களிலும் 50க்கும் மேற்பட்ட ஓட்டங்கள் எடுத்த குமார் சங்கக்கார, திமுத் கருணாரத்ன ஆகியோருக்குப் பிறகு, இந்தச் சாதனையைப் படைத்த மூன்றாவது இலங்கை துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையை தினுஷா பெற்றுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T12:41:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் யார் குற்றம் செய்திருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் - டக்ளஸ் வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/douglas-devanandha-statement-about-disappeared-1787834164"></link>
            <id>https://tamilwin.com/article/douglas-devanandha-statement-about-disappeared-1787834164</id>
            <summary type="text">காணாமலாக்கப்பட்டவர்களின் விவகாரத்தில் யார் குற்றம் செய்திருந்தாலும்
அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று ஈழ
மக்கள் ஜனந...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமலாக்கப்பட்டவர்களின் விவகாரத்தில் யார் குற்றம் செய்திருந்தாலும்
அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று ஈழ
மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ்
தேவானந்தா தெரிவித்தார்.
</p><p>
காணாமல்போன உறவுகளின் வலியையும் வேதனையையும் உணர்ந்து அனைவரும் பொறுப்புடன்
செயற்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக
இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது முகம் கொடுக்க நேர்ந்த சம்பவங்கள் தமக்கு
மிகுந்த வேதனையளிக்கின்றது என்றும் சுட்டிக்காட்டினார்.</p><h2>எதிர்பார்ப்புகள் சுமக்கிறோம்</h2><p>

காணாமல்போனவர்களின் உறவுகள் நீண்டகாலமாகத் தங்களது அன்பானவர்களுக்கு என்ன
நடந்தது என்பதை அறிய முடியாமல், பல்வேறு இன்னல்களையும் எதிர்பார்ப்புகளையும்
சுமந்து கொண்டு வாழ்ந்து வருகின்றமையை அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c3c6a9c-6a9a-441d-96ae-d15b06fbbbac/26-6a902f3690e33.webp' /></p><p>

இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் எவராக இருந்தாலும் அவர்களை உடனடியாக அடையாளம்
கண்டு, எந்தவித பாரபட்சமுமின்றிச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே
தமது உறுதியான நிலைப்பாடு என்றார்.</p><p>

தாமும் காணாமல்போனவர்களின் உறவுகளைப் போன்றே வலிகளை உணர்ந்தவர் என்ற
அடிப்படையில், அவர்களின் உணர்வுகளையும் வேதனைகளையும் முழுமையாகப்
புரிந்துகொண்டு, உரிய தரப்பினர் அவர்களுக்கு நீதி வழங்க முன்வர வேண்டும்
என்றும் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T12:36:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியை வெள்ளையாக்க முகப்பூச்சு கொடுத்த கணவர் - உறவினர்கள் கண் முன் நடந்த கொடூரம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/husband-dies-due-to-marital-dispute-1787818549"></link>
            <id>https://tamilwin.com/article/husband-dies-due-to-marital-dispute-1787818549</id>
            <summary type="text">வவுனியா - நெடுங்கேணி, நையினாமடு பிரதேசத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா - நெடுங்கேணி, நையினாமடு பிரதேசத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.</p><p>

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

நெடுங்கேணி - நைனாமடு பகுதியில் வசித்து வந்த குறித்த குடும்பஸ்தர்,
தனது மனைவிக்கு 1000 ரூபாய் பெறுமதியான வெள்ளையாகும் முகப்பூச்சு ஒன்றை வாங்கி
கொடுத்துள்ளார். 

எனினும் மனைவி அதனை பூசவில்லை. </p><p>இதனால் கோபமுற்ற கணவர்
மண்ணெண்ணெய்யை தன் மீது ஊற்றி தீ வைக்க முயன்றுள்ளார்.</p><h2>

9 நாட்கள் உயிருடன் இருந்த குடும்பஸ்தர்</h2><p>

இதனைத் தொடர்ந்து, தம்பி முறையானவரிடம் இருந்த தீ மூட்டும் கருவியை பறிக்க முற்பட்ட போது எதிர்பாராத விதமாக தீ மூட்டப்பட்டு பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25bde6eb-d0e1-4c96-a5cd-1f9eee5c9857/26-6a8ff344f1739.webp' /></p><p> 

இதன்போது விரைந்து செயற்பட்ட அவருடைய உறவினர்கள், இளைஞரை மீட்டு, வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
</p><p>
இருப்பினும், சிகிச்சை பலனின்றி குறித்த குடும்பஸ்தர் 9 நாட்களின்
பின் உயிரிழந்துள்ளார்.</p><p>

இந்த சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/yHt2Ja-4HYs" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-27T12:34:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் கால்நடைத் தீவனத் தொட்டிக்குள் விழுந்த இருவர்: சோகத்தில் முடிந்த மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-men-die-in-silage-tank-accident-in-uk-cheshire-1787833957"></link>
            <id>https://news.lankasri.com/article/2-men-die-in-silage-tank-accident-in-uk-cheshire-1787833957</id>
            <summary type="text">பிரித்தானியாவில் கால்நடைத் தீவனத் தொட்டிக்குள் விழுந்த 2 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கால்நடைத் தீவன தொட்டிக்குள் விழுந்த நபர்கள்
பிரித்தானியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் கால்நடைத் தீவனத் தொட்டிக்குள் விழுந்த 2 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.</p><h2> கால்நடைத் தீவன தொட்டிக்குள் விழுந்த நபர்கள்</h2><p>
பிரித்தானியாவின் செஷயர்(Cheshire) பகுதியில் உள்ள பண்ணையில் இருந்த ராட்சத கால்நடை தீவனத் தொட்டிக்குள்(Silage Tank) தவறி விழுந்த இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
</p><p>இந்த சம்பவத்தில் 42 மற்றும் 72 வயது நபர்கள் இரண்டு பேர் உயிரிழந்து இருப்பது அப்பகுதி விவசாய மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/851466b1-35e5-4b9b-9736-ab3b5728f95b/26-6a902e673e2d2.webp' /></p><p> ஆஸ்டன் பை பட்வொர்த்(Aston by Budworth) பகுதியில் உள்ள கேன் லேனில்(Cann Lane) புதன்கிழமை மதியம் 12.20 மணியளவில் இந்த விபத்து சம்பவம் நடந்துள்ளது.</p><p> தொட்டிக்குள் விழுந்த இரண்டு பேரையும் மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி வெளியே எடுத்தனர்.</p><p> இருப்பினும் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர்.</p><p> இந்நிலையில் விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து&nbsp; அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T12:32:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகருடன் திடீர் திருமணமா? விளம்பரமா? ஜான்வி கபூரின் வீடியோ வைரல்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/janhvi-kapoor-ishaan-khatter-marriage-video-rumour-1787832075"></link>
            <id>https://viduppu.com/article/janhvi-kapoor-ishaan-khatter-marriage-video-rumour-1787832075</id>
            <summary type="text">ஜான்வி கபூர்இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜான்வி கபூர். இவர் நடிப்பில் சமீபத்தில் பெத்தி திரைப்படம் வெளிவந்து கலவையான விமர்சனங்களை பெற்றது....</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜான்வி கபூர்</h2><p>இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜான்வி கபூர். இவர் நடிப்பில் சமீபத்தில் பெத்தி திரைப்படம் வெளிவந்து கலவையான விமர்சனங்களை பெற்றது. </p><p>பாலிவுட் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் கவனம் செலுத்தி வரும் ஜான்வி கபூர் விரைவில் தமிழில் என்ட்ரி கொடுக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e04e53a4-dd81-40cd-8022-238bf63afb5b/26-6a90270db1247.webp' /></p><p>இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் இஷான் கட்டருடன் திருமண கோலத்தில் எடுத்த வீடியோவை பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்தார். ஜான்வி - இஷான் இருவரும் தடக் படத்தின் மூலம் இணைந்து நடித்து பின் நண்பர்களாக இருந்து வருகிறார்கள். </p><p>திடீரென இருவரும் திருமண கோலத்தில் எடுத்த வீடியோவால் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் இந்த வீடியோ உண்மையான திருமண நிகழ்வு கிடையாது, கல்கி ஃபேஷனின் புதிய பிரைடல் கலெக்ஷனை விளம்பரப்படுத்த உருவாக்கப்பட்ட வீடியோ தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Dcd2YzFoTtX/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Dcd2YzFoTtX/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Dcd2YzFoTtX/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by KALKI Fashion (@kalkifashion)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-27T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/justice-minister-harshana-nanayakkara-s-promise-1787830787"></link>
            <id>https://tamilwin.com/article/justice-minister-harshana-nanayakkara-s-promise-1787830787</id>
            <summary type="text">பயங்கரவாதத் தடைச் சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்ற நிலைப்பாட்டில்
அரசாங்கம் உறுதியாகவுள்ளது என்றும், இந்த சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக
இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயங்கரவாதத் தடைச் சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்ற நிலைப்பாட்டில்
அரசாங்கம் உறுதியாகவுள்ளது என்றும், இந்த சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக
இரத்து செய்யப்படும் என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர்
ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் நீக்கம் தொடர்பில் ஊடகங்களால் எழுப்பப்பட்ட
கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>பயங்கரவாதத் தடைச் சட்டம்</h2><p>
</p><p>
அவர் மேலும் கூறுகையில், கடந்த 1979ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச்
சட்டம் இன்றளவும் நடைமுறையில் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b85288d0-4751-43d6-8ef6-a04009381e44/26-6a902a3a67f0b.webp' /></p><p> </p><p>நாட்டின் வரலாற்று ரீதியான பல
முரண்பாடுகளுக்கு இந்த சட்டமே பிரதான காரணியாக அமைந்துள்ளது.

இதன் அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான குறைபாடுகள் தேசிய மற்றும் சர்வதேச
மட்டங்களில் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.</p><p>

ஆட்சிக்கு வந்தவுடன் பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக இரத்துச்
செய்யப்படும் என வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு இணங்க, தேசிய மற்றும் பொதுமக்கள்
பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு புதிய சட்டம் ஒன்றை இயற்றுவதற்கு விசேட கவனம்
செலுத்தப்பட்டுள்ளது.</p><h2>அமைச்சரவை அங்கீகாரம்</h2><p> இதற்காக நியமிக்கப்பட்ட நிபுணத்துவக் குழுவின் முதனிலைச்
சட்ட வரைவின் அடிப்படையில், 'பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாத்தல்'
எனும் சட்டத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்துக்குச் சட்டமா அதிபர்
அனுமதி அளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/037e3d63-89b9-4193-a116-d50429c9c037/26-6a902a3b3b177.webp' /></p><p> </p><p>வெகுவிரைவில் இது வர்த்தமானி அறிவித்தலில்
பிரசுரிக்கப்பட்டு, முதலாம் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில்
சமர்ப்பிக்கப்படும்.
</p><p>
போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய குற்றங்கள் மற்றும்
பூகோள பயங்கரவாதச் செயற்பாடுகளைக் கருத்தில்கொண்டு, புதிய சட்டத்தை
உருவாக்குவதற்கான ஒத்துழைப்பை அனைத்துத் தரப்பினரும் வழங்க வேண்டும் என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T12:20:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் சிக்கிய 350 பேர் மீட்பு...! தொடரும் மீட்பு பணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/350-rescued-from-nepal-floods-1787828553"></link>
            <id>https://ibctamil.com/article/350-rescued-from-nepal-floods-1787828553</id>
            <summary type="text">நேபாளத்தில் சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் சிக்கிய 350 இற்கும் மேற்பட்டோரை நேபாள இராணுவத்தினர் இன்று பாதுகாப்பாக மீட்டுள்ளனர். பாதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் சிக்கிய 350 இற்கும் மேற்பட்டோரை நேபாள இராணுவத்தினர் இன்று பாதுகாப்பாக மீட்டுள்ளனர். </p><p>பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின் போது 50 வெளிநாட்டவர்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அந்நாட்டின் இராணுவப் பேச்சாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெயிட்டுள்ளன.</p><p>
</p><p></p><h2>தரைப்படையினர்&nbsp;</h2><p>மீட்கப்பட்ட 50 வெளிநாட்டவர்களில் 30 இந்தியர்கள், 8 சீனர்கள், 8 கொரியர்கள், 2 அமெரிக்கர்கள் மற்றும் 2 இத்தாலியர்கள் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8278132-0193-4d62-930a-2c2253e0e348/26-6a9028947971e.webp' /></p><p>வெள்ளப்பெருக்கு தீவிரமடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தரைப்படையினர் மற்றும் உலங்கு வானூர்திகள் மூலம் அவசர மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-27T12:18:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குதிரையை தாக்கிய இளைஞர் அதிரடி கைது - குதிரையேற்றக்காரர்களுக்கு கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-arrested-for-attacking-horse-1787832927"></link>
            <id>https://tamilwin.com/article/youth-arrested-for-attacking-horse-1787832927</id>
            <summary type="text">நுவரெலியாவில் உள்ள கிரிகோரி ஏரி அருகே ஒரு குதிரைக்குட்டியைத் தாக்கிய குற்றத்திற்காக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியாவில் உள்ள கிரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியாவில் உள்ள கிரிகோரி ஏரி அருகே ஒரு குதிரைக்குட்டியைத் தாக்கிய குற்றத்திற்காக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

நுவரெலியாவில் உள்ள கிரிகோரி ஏரி அருகே குதிரைச் சவாரிக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு குதிரைக்குட்டியை இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவியது.
</p><p>
இந்த காணொளி, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்ததைத் தொடர்ந்து, பொலிஸார் இந்தச் சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கினர்.
</p><p>
இதற்கமைய, குதிரையின் மீது தாக்குதலை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 26 வயது இளைஞர் நுவரெலியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><h2>

குதிரையை தாக்கிய இளைஞர் கைது</h2><p>

 அவர் நுவரெலியாவில் உள்ள ஸ்திரபெட்டா பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், இந்த மாதம் 28ஆம் திகதி நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09dba731-470c-4a51-a907-34ccf6b06018/26-6a902aff31177.webp' /></p><p>
</p><p>

இந்தச் சம்பவம் தொடர்பாக கிரிகோரி ஏரிக்கு வருகை தரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், சுற்றுலாத் துறைக்குப் பயன்படுத்தப்படும் விலங்குகள் மீது எந்தவிதமான கொடுமையும் இழைக்கப்படாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.
</p><p>
குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான குதிரையேற்றம் போன்ற செயல்பாடுகள் இலங்கையின் சுற்றுலா ஈர்ப்பின் ஒரு பகுதியாகும் என்று சுட்டிக்காட்டிய அவர்கள், விலங்குகள் மீதான கொடுமைச் சம்பவங்கள் இலங்கையின் சுற்றுலாப் பிம்பத்தையும் சேதப்படுத்தும் என்று குறிப்பிடுகின்றனர்.
</p><h2>
குதிரையேற்றக்காரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை</h2><p>

இதற்கிடையில், கிரிகோரி ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில், பரிந்துரைக்கப்பட்ட உரிமங்களின் கீழ் குதிரையேற்ற சேவைகளில் ஈடுபட்டுள்ள குதிரையேற்றக்காரர்களும் இந்தச் சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/084d42fd-72db-49c4-8dc1-f8767caf8ec7/26-6a902b001bbaf.webp' /></p><p>

சட்டப்பூர்வமாக குதிரையேற்ற சேவையை இயக்குவதன் மூலம் தாங்கள் சுற்றுலாத் துறைக்கு பங்களிப்பதாகவும், ஒருவர் விலங்கை வன்முறையாகத் தாக்கியதன் காரணமாக அனைத்து குதிரையேற்றக்காரர்களும் எதிர்மறையாக சித்தரிக்கப்படுவது நியாயமற்றது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
</p><p>
உரிமம் பெற்ற சேவைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து குதிரையேற்றக்காரர்களுக்கும் விலங்குகளின் ஆரோக்கியம், உணவு, ஓய்வு நேரங்கள் மற்றும் பணி நிலைமைகள் தொடர்பான தெளிவான தரநிலைகளை நடைமுறைப்படுத்துமாறு அவர்கள் அதிகாரிகளை வலியுறுத்துகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T12:18:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒவ்வொரு குடிமகனும் கோடீஸ்வரரா? உலகின் செல்வந்த நாடு இதுதான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-country-every-citizen-is-a-millionaire-1787813432"></link>
            <id>https://manithan.com/article/which-country-every-citizen-is-a-millionaire-1787813432</id>
            <summary type="text">which country has the highest number of wealthy people : உலகில் அதிக பணக்காரர்கள் வசிக்கும் நாடு என்றால், அமெரிக்காதான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால...</summary>
            <content type="html"><![CDATA[<p>which country has the highest number of wealthy people : உலகில் அதிக பணக்காரர்கள் வசிக்கும் நாடு என்றால், அமெரிக்காதான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால், சமீபத்திய வெளியான ஆய்வு தவகல்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.&nbsp;</p><p>உலகில் சுமார் 195 நாடுகள் உள்ள நிலையில், சில நாடுகள் மட்டுமே மிகப்பெரிய செல்வ வளத்தைக் கொண்டுள்ளன. அந்த வகையில், UBS Global Wealth Report 2026-ன் படி, உலகின் அதிக செல்வம் கொண்ட நாடாக சுவிட்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0b088c2-020e-4de6-8489-53da60420086/26-6a8fe5831e674.webp' /></p><p></p><h2>ஒரு குடிமகனின் சராசரி சொத்து ரூ.9 கோடி</h2><p>
</p><p>
சுவிட்சர்லாந்தில் சராசரி தனிநபர் நிகர சொத்து மதிப்பு சுமார் 9.1 லட்சம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.9 கோடி) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>வங்கிச் சேவை, காப்பீடு, மருந்துத் தயாரிப்பு, சுற்றுலா உள்ளிட்ட துறைகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன.&nbsp;</p><p> உலகப் புகழ்பெற்ற சுவிஸ் கைக்கடிகாரங்கள், சாக்லேட் மற்றும் பால் பொருட்களும் அதன் பொருளாதாரத்தின் முக்கிய அடையாளங்களாக உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e52b39a7-0da2-4a1f-a5d4-dfc71c3b2b59/26-6a8fe583da438.webp' /></p><h2>இந்தியாவுக்கு எந்த இடம்?&nbsp;</h2><p>இந்தப் பட்டியலில் அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்நாட்டின் சராசரி தனிநபர் நிகர சொத்து மதிப்பு சுமார் 6.69 லட்சம் டாலர்கள் (ரூ.6.4 கோடி) எனக் கூறப்படுகிறது.</p><p>உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக விளங்கும் அமெரிக்கா, சர்வதேச வர்த்தகம் மற்றும் நிதி அமைப்பில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8cff32c-dbdb-46d3-ae39-f5c0d9e7a617/26-6a8fe585448b4.webp' /></p><p>
</p><p>
லக்சம்பர்க் சுமார் 6.55 லட்சம் டாலர்களுடன் மூன்றாவது இடத்திலும், ஹாங்காங் 6.48 லட்சம் டாலர்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளன. </p><p>ஆஸ்திரேலியா சுமார் 6.16 லட்சம் டாலர்களுடன் ஐந்தாவது இடத்திலும், சிங்கப்பூர் 5.27 லட்சம் டாலர்களுடன் ஆறாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளன.

ஆனால் இந்தியாவின் நிலை முற்றிலும் மாறுப்படும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d17df8a9-ce2b-44d4-abfd-007f52d57af6/26-6a8fe5848f971.webp' /></p><p></p><p>உலகில் அதிக கோடீஸ்வரர்கள் வசிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தாலும், சராசரி தனிநபர் நிகர சொத்து மதிப்பு சுமார் 2,700 டாலர்கள் மட்டுமே எனக் குறிப்பிடப்படுகிறது.</p><p> இதற்கு இந்தியாவின் மிகப்பெரிய மக்கள் தொகையும், நாட்டில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.
</p><p>
உலகின் பெரும் செல்வந்தர்களை கொண்ட நாடு என்ற பெருமையை சுவிட்சர்லாந்து பெற்றிருந்தாலும், ஒரு நாட்டின் மொத்த செல்வமும் அதன் ஒவ்வொரு குடிமகனின் செல்வமும் ஒன்றல்ல என்பதை இந்தியாவின் நிலை தெளிவாக உணர்த்துகின்றது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T12:12:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை மூழ்கடித்த வெள்ளம் : உயிரிழப்பு 332ஆக அதிகரிப்பு - இரண்டாவது வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nepal-floods-death-toll-rises-to-270-1787824086"></link>
            <id>https://tamilwin.com/article/nepal-floods-death-toll-rises-to-270-1787824086</id>
            <summary type="text">புதிய இணைப்புநேபாளம் - திபெத் எல்லையைத் தாக்கிய பேரழிவு வெள்ளத்தால் நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 332 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நேபாளம் - திபெத் எல்லையைத் தாக்கிய பேரழிவு வெள்ளத்தால் நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 332 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
அத்துடன், நேற்று(26.08.2026) நாட்டைத் தாக்கிய திடீர் வெள்ளத்தின் பின்னர், நேபாளத்தில் 800க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.
</p><p>
காணாமல் போனவர்களில் சுமார் 100 பேர் சீன நாட்டவர்கள் என்று சீன வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>

இதற்கிடையில், திபெத்தில் குறைந்தது 558 பேர் காணாமல் போயுள்ளனர், மேலும் மூன்று உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மழை மற்றும் புவியியல் இருப்பிடம் காரணமாக மீட்புப் பணிகள் சிக்கலாகியுள்ளதாக வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
மேலும், 1,500க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>அபாயம் இருப்பதாக</h2><p>
காணாமல் போனவர்களில் 517 பேர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எனவும், 127 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0078d0ef-4ae2-45b3-bb6a-023b71c2141f/26-6a900eb12e96e.webp' /></p><p>
இந்த நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>மேலும் நேபாளத்தின் திரிபுவன் பல்கலைக்கழகத்தின் பேரிடர் ஆய்வு மையத்தின் இயக்குநரான பசந்த ராஜ், இன்று அல்லது நாளை "இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைகள்" ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
</p><p>அதிக மழைப்பொழிவு இல்லை, ஆனால் மண்சரிவு ஏற்படக்கூடும். அவர்கள் இமயமலை ஆபத்துக்களைக் கண்காணித்து வருவதாகவும், இங்கு காலநிலை மாற்றம் உண்மையாகவே நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Gh9SC8_v0ms" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-27T12:06:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூர நட்சத்திரத்தில் சூரியன்: வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்போகும் டாப் 4 ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sun-transit-in-poora-nakshatra-who-get-luck-1787828867"></link>
            <id>https://manithan.com/article/sun-transit-in-poora-nakshatra-who-get-luck-1787828867</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் நவகிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுகிறார். ஆற்றல், தலைமைத்துவம், அங்கீகாரம் மற்றும் வீரத்தின் அதிபதியான சூரியனின் இயக்க மாற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் நவகிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுகிறார். ஆற்றல், தலைமைத்துவம், அங்கீகாரம் மற்றும் வீரத்தின் அதிபதியான சூரியனின் இயக்க மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.</p><p>

இந்நிலையில், ஆகஸ்ட் 31ஆம் தேதி சுக்கிரனால் ஆளப்படும் பூர நட்சத்திரத்திற்குள் சூரியன் நுழைய உள்ளார். இந்த நட்சத்திர மாற்றம் ஜோதிடரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e52584a-0f27-4795-a47f-6fc363e02170/26-6a90249ed9806.webp' /></p><p> இதனால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலன்கள் கிடைக்க உள்ளன. அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9af72f1-d035-4194-b4cc-02c778af64ec/26-6a90249f8c6af.webp' /></p><h2>
</h2><p>ரிஷப ராசியின் அதிபதியாக சுக்கிரன் இருப்பதால், சூரியனின் இந்த நட்சத்திர மாற்றம் சாதகமான பலன்களைத் தரும். சமூக அந்தஸ்தும் அங்கீகாரமும் அதிகரிக்கும். </p><p>நீண்டகால நிதிச் சிக்கல்கள் முடிவுக்கு வந்து, ஆசைகளில் சில நிறைவேறும். நிதிப் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும்.</p><p>திருமண வாழ்க்கையில் அன்பும் பரஸ்பர மரியாதையும் அதிகரிக்கும்.உடல் மற்றும் மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.</p><h2>
சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/991951a6-c5a6-4f79-b2c2-0e7b3a852242/26-6a9024a03eca9.webp' /></p><h2>
</h2><p>சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாக இருப்பதால், இந்த நட்சத்திர மாற்றம் பல நன்மைகளை அளிக்கும். அதிர்ஷ்டம் துணைநின்று முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.</p><p> தலைமைத்துவத்தின் மூலம் பல சாதனைகளைச் செய்யலாம். வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படுவதுடன், பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் லாபம் கிடைக்கும் வாய்ப்புகளும் அதிகரிக்கும்.</p><p>

வேலையில்லாதவர்களுக்கு பொருத்தமான வேலை கிடைக்கலாம். பணத்தைச் சேமிப்பதிலும் வெற்றி பெறுவார்கள். வணிகர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் கிடைத்து, கடின உழைப்பிற்கான முழுப் பலனும் கிடைக்கும்.
</p><h2>
துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64d25272-c081-424f-859f-2d4e13920f8b/26-6a9024a0e796e.webp' /></p><h2>
</h2><p>துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர மாற்றம் வெற்றிகளைத் தரும். தன்னம்பிக்கை அதிகரித்து, சமூகத்தில் நற்பெயர் உயரும். </p><p>திருமண வாழ்க்கையில் அன்பும் புரிதலும் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கூட்டு வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். </p><p>திருமணமாகாதவர்களுக்கு பொருத்தமான திருமண வாய்ப்புகள் அமையும். பணியிடத்தில் முன்னேற்றமும், வணிகர்களுக்கு ஒப்பந்தங்கள் மூலம் லாபமும் கிடைக்கும்.வியாபாரத்தை புதிய இடங்களுக்கு விரிவுபடுத்தும் வாய்ப்பும் உள்ளது.</p><h2>
தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebcf54b9-4353-4e14-9076-c2439878ef9d/26-6a9024a19959a.webp' /></p><p></p><p>
தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியனின் இந்த முக்கிய மாற்றம் மகத்தான நன்மைகளை அளிக்கும். திடீர் லாபம் கிடைக்கலாம். </p><p>வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.இலக்குகளை அடைவதில் வெற்றி பெறுவார்கள்.

புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும்.</p><p> மன வலிமையும் முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குறிப்பாக நிதி நிலையில் ஏற்றம் உண்டாகும்.&nbsp;</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T11:59:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்வே மன்னர் ஹரால்ட்டின் உடல்நிலை குறித்து வெளியான அறிவிப்பு - அவசரமாக நாடு திரும்பிய மதத்தலைவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/announcement-health-of-king-harald-of-norway-1787831672"></link>
            <id>https://tamilwin.com/article/announcement-health-of-king-harald-of-norway-1787831672</id>
            <summary type="text">நோர்வே மன்னரான 89 வயதான ஹரால்ட்டின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக நோர்வே அரச மாளிகை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு இன்று(2...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வே மன்னரான 89 வயதான ஹரால்ட்டின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக நோர்வே அரச மாளிகை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>

இந்த அறிவிப்பு இன்று(27.08.2026) வெளியிடப்பட்டுள்ளது. </p><p>

இரத்தத்தில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்று காரணமாக ஓகஸ்ட் 17 ஆம் திகதி
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மன்னர் ஹரால்ட், 1991 ஆம் ஆண்டு முதல்
நோர்வேயின் தலைவராக கடமையாற்றி வருகிறார்.
</p><p>
மன்னரின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, இளவரசர் ஹாகோன் மற்றும் அரசி சோன்யா
ஆகியோர் தமது அனைத்து உத்தியோகபூர்வ நிகழ்வுகளையும் இரத்துச் செய்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
</p><h2>
பதவியை துறக்க மறுப்பு</h2><p>
மன்னர் சிகிச்சை பெற்று வரும் ஒஸ்லோ பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு அரச குடும்ப
உறுப்பினர்கள் வருகை தந்துள்ளதையடுத்து, அந்நாட்டில் பதற்றமான சூழல்
நிலவுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb5c004c-2026-45ce-b880-9a740b6eec08/26-6a9025d3c05a3.webp' /></p><p>
</p><p>
இந்த நிலைமை காரணமாக நோர்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோரே தனது ஜெர்மனிக்கான
பயணத்தை இரத்துச் செய்துள்ளதுடன், மன்னருக்கும் அரச குடும்பத்தினருக்கும்
ஒட்டுமொத்த தேசத்தினதும் பிரார்த்தனைகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், நோர்வே நாடாளுமன்ற சபாநாயகர் தனது ஐஸ்லாந்து பயணத்தை பாதியிலேயே
கைவிட்டு நாடு திரும்பியுள்ளதுடன், ரோம் நகருக்கு விஜயம் செய்திருந்த நோர்வே
மதத்தலைவர்களும் அவசரமாக நாடு திரும்ப தீர்மானித்துள்ளனர்.
</p><p>
தனது வயது முதிர்வு காரணமாக உத்தியோகபூர்வ செயற்பாடுகளை குறைத்துக்கொண்ட
போதிலும், நாட்டின் மீதான தனது உறுதிமொழி ஆயுட்காலம் வரை நீடிக்கும் எனக் கூறி
மன்னர் ஹரால்ட் தனது பதவியை துறக்க மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T11:57:16+00:00</updated>
        </entry>
    </feed>
