<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-30T22:25:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் மாணவர்களை இலக்கு வைத்து சூசகமான முறையில் போதைப்பொருள் விற்பனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-sell-drugs-to-students-in-vavuniya-arrested-1788128303"></link>
            <id>https://tamilwin.com/article/man-sell-drugs-to-students-in-vavuniya-arrested-1788128303</id>
            <summary type="text">வவுனியா நகரப்பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு கஞ்சா கலந்த
லேகியம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.&amp;nb...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா நகரப்பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு கஞ்சா கலந்த
லேகியம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மேற்கொண்ட நடவடிக்கையில் நேற்று (30.08.2026)
குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>கைது நடவடிக்கை&nbsp;</h2><p>கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள லேகியம்
விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டு, அங்கு சோதனை
நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45346300-5fec-4b20-8348-b046362debe3/26-6a94ad35e3dac.webp' /></p><p>

இதன்போது கஞ்சா கலந்ததாக சந்தேகிக்கப்படும் 400ற்கும் மேற்ப்பட்ட லேகியப்
பொதிகள் கைப்பற்றப்பட்டதுடன் வியாபார நிலையத்தில் கடமையாற்றிய 20
வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>மேலும், குறித்த லேகியம் வவுனியா நகரை அண்டிய பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு
விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.&nbsp;</p><p>இதனை தொடர்ந்து, விற்பனை நிலையத்தின் உரிமையாளரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T22:24:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலனாய்வுத் துறையால் மறைக்கப்பட்ட உண்மைகள்.. யாழில் சிறீதரன் எம்பி பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-missing-persons-conference-sritharan-speech-1788127925"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-missing-persons-conference-sritharan-speech-1788127925</id>
            <summary type="text">நீதிக்கான இந்த நீள் பயணம் என்பது
சர்வதேசத்தின் கதவுகளைத் திறந்து, தமிழர்கள் மீதான காணாமல் போதல்களுக்கான
நீதியை நிச்சயம் நிலைநாட்டும் என்று வலிந்து க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிக்கான இந்த நீள் பயணம் என்பது
சர்வதேசத்தின் கதவுகளைத் திறந்து, தமிழர்கள் மீதான காணாமல் போதல்களுக்கான
நீதியை நிச்சயம் நிலைநாட்டும் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
சர்வதேச மாநாட்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்
சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.</p><p>

அவர் மேலும் உரையாற்றுகையில்,

"இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் உறவினர்கள் நடத்தி வரும்
தொடர் போராட்டம் எதிர்வரும் பெப்ரவரி 20ஆம் திகதியுடன் 10 ஆண்டுகளை நிறைவு
செய்கின்றது. </p><p>இத்தனை ஆண்டு காலப் போராட்டப் பாதையில், "தங்கள் பிள்ளைகள்
நிச்சயம் திரும்பி வருவார்கள்" என்ற பெரும் கனவோடும் நீதிக்கான ஏக்கத்தோடும்
போராடிய 260 இற்கும் மேற்பட்ட தாய்மார்களும் தந்தையர்களும் தம் உயிரைப்
பறிகொடுத்துள்ளனர்.</p><h3>புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்..&nbsp;&nbsp;</h3><p>
</p><p>
நல்லிணக்க ஆணைக்குழு போன்ற அமைப்புகள் மூலமாக உண்மை கண்டறிய முயன்றபோது,
சாட்சியமளிக்கச் சென்ற மக்களை இலங்கை புலனாய்வுத் துறையினர் அச்சுறுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16a1b843-3584-403b-a3e3-7bf1d132eed6/26-6a94ab9d14d61.webp' /></p><p>
வழியிலேயே கொட்டகைகளை அமைத்து மக்களைத் திசைதிருப்பி, சாட்சியம் அளிப்பதைத்
தடுத்து நிறுத்தினர். இதனால் மக்கள் எவ்வித பாதுகாப்பும் இல்லாத அச்சச்
சூழ்நிலையிலேயே வாழ நேரிட்டதுடன், முழுமையான சாட்சியங்களை வெளிப்படையாக வழங்க
முடியாமலும் போனது. </p><p>இதன் காரணமாக, உள்நாட்டு விசாரணை மற்றும் நீதி வழங்கும்
முறைகள் முற்றிலும் முடங்கிப் போய்விட்டன.

உள்நாட்டில் நீதி மறுக்கப்பட்ட நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்
மற்றும் தமிழ் மக்கள் அனைவரும் சர்வதேச நீதிமன்றம் மூலமாக மட்டுமே
தங்களுக்குப் பூரண நீதி கிடைக்க முடியும் என்பதைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி
வருகின்றனர்.</p><p>

2009 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்
முதன்முதலில் இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் கொண்டுவரப்பட்டபோது, அமெரிக்கா
மிகப்பெரிய அளவில் ஆதரவளித்து உதவியது. </p><p>அன்றுமுதல் இன்றுவரை அப்பிரேரணைகள்
வீணாகிவிடாமல், நீதியைப் பெறுவதற்கான முயற்சியில் அமெரிக்க நாடு காட்டிவரும்
கரிசனையையும் பங்களிப்பையும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் என்றும் நன்றியுடன்
நினைவு கூருகின்றோம்." என்றார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T22:16:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் பதற்றம்! ஈரானிய ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-attacks-iranian-missile-sites-1788126258"></link>
            <id>https://ibctamil.com/article/us-attacks-iranian-missile-sites-1788126258</id>
            <summary type="text">
ஈரானின் லராக் தீவில் அமைந்திருந்த இரண்டு ஈரானிய ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>
ஈரானின் லராக் தீவில் அமைந்திருந்த இரண்டு ஈரானிய ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
ஜூலை மாதப் பிற்பகுதிக்குப் பிறகு ஈரான் மீது அமெரிக்கா நடத்திய முதல் அறியப்பட்ட தாக்குதல் இதுவென தெரியவருகிறது.</p><p>
ஹோர்முஸ் நீரிணைக்குள் கடல் கண்ணிவெடிகள் பொருத்தப்பட்ட ராக்கெட்டுகளை ஏவுவதற்கு ஈரானியப் புரட்சிகரக் காவலர் படையினர் தயாராகிக் கொண்டிருந்ததை அடுத்து, இந்த ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கத் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஈரானின் பதிலடி எச்சரிக்கை</h2><p>
</p><p>
இந்தத் தாக்குதலில் பல ராணுவ வீரர்களும் குடிமக்களும் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளதாகத் தெரிவித்துள்ள ஈரானின் புரட்சிகரக் காவலர் படை, இதற்குத் தகுந்த “பதிலடியும் தண்டனையும்” வழங்கப்படும் என எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f79d3481-5b7e-448c-a3cf-4cf9834b203d/26-6a94a8cbf131d.webp' /></p><p><i>Image Credit:&nbsp;en.irna.ir</i></p><p>
</p><p>
ஹோர்முஸ் நீரிணையின் சர்வதேச கடல் பகுதியில் புதிய கண்ணிவெடிகளைப் பதிக்கும் எந்தவொரு கப்பலும் அழிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T22:11:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெற்றோல் விலை குறைப்பு தொடர்பில் லங்கா IOC நிறுவனம் வெளியிட்ட புதிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lanka-ioc-announces-petrol-price-reduction-1788127641"></link>
            <id>https://jvpnews.com/article/lanka-ioc-announces-petrol-price-reduction-1788127641</id>
            <summary type="text">இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைத் திருத்தத்துக்கு இணங்க, தாமும் விலைகளைக் குறைக்கவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி (LIOC) நிறுவனமும் அறிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைத் திருத்தத்துக்கு இணங்க, தாமும் விலைகளைக் குறைக்கவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி (LIOC) நிறுவனமும் அறிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>முன்னதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளைக் திருத்தியமைத்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c87fa61-22b5-4096-a5bb-6dbe92a1f428/26-6a94a99b49339.webp' /></p><p>அதற்கமைய, ஒரு லீற்றர் ஒக்டென் 92 பெட்ரோலின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டு 399 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், ஒக்டென் 95 பெட்ரோலின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு 475 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>

ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T22:07:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இடம்பெற்ற இரு கொடூர கொலைகள்.. பல வருடங்களுக்கு பிறகு இருவருக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-two-killed-case-death-sentence-to-suspects-1788106222"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-two-killed-case-death-sentence-to-suspects-1788106222</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலை சம்பவங்களில் குற்றவாளிகளாக
காணப்பட்ட இருவருக்கு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன்
மரண தண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலை சம்பவங்களில் குற்றவாளிகளாக
காணப்பட்ட இருவருக்கு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன்
மரண தண்டனை விதித்துள்ளார்.
</p><p>
திருநெல்வேலி பகுதியில், கடந்த 2012ஆம் ஆண்டு மது போதையில் இளைஞன் ஒருவரை
மூர்க்கத்தனமாக அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை
முன்னெடுத்த பொலிஸார் 09 நபர்களை கைது செய்திருந்தனர்.</p><h2>குற்றச்சாட்டு நிரூபிப்பு&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
குறித்த 09 நபர்களையும் சந்தேகநபர்களாக பெயர் குறிக்கப்பட்டு, மேல் நீதிமன்றில்
சட்டமா அதிபர் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள்
இடம்பெற்று வந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ef98676-cc5a-4e82-9101-b326019060e9/26-6a94598800977.webp' /></p><p> </p><p>இந்நிலையில், குறித்த வழக்கு நேற்றைய வெள்ளிக்கிழமை தீர்ப்புக்காக எடுத்து
கொள்ளப்பட்ட வேளை, 09ஆம் சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி
நிரூபிக்கப்பட்டமையால், அவருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி, ஏனைய 08
சந்தேகநபர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், 08 பேரையும் மன்று விடுவித்தது.</p><p>

அதேவேளை, பருத்தித்துறை வல்லிபுரம் குறிச்சி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை
கடந்த 2014ஆம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் கைதான இளைஞன்
மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டமையால்,
இளைஞனுக்கு மரண தண்டனை விதித்து, மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T22:03:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிண்ணியாவில் தனியார் காணியிலிருந்து இரு மோட்டார் குண்டுகள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-mortar-shells-recovered-private-land-kinniya-1788125814"></link>
            <id>https://tamilwin.com/article/two-mortar-shells-recovered-private-land-kinniya-1788125814</id>
            <summary type="text">கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலிம் வீதி நோவா மைதானத்தில் அமைந்துள்ள தனியார்
காணியிலிருந்து இரு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

ஆலிம் வீதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலிம் வீதி நோவா மைதானத்தில் அமைந்துள்ள தனியார்
காணியிலிருந்து இரு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
</p><p>
ஆலிம் வீதியில் அமைந்துள்ள குறித்த காணியில் வீடொன்றை நிர்மாணிப்பதற்காக
அத்திவாரத்திற்கான நிலத்தைத் தோண்டியபோதே, இந்த இரு மோட்டார் குண்டுகளும்
கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><h2>சட்ட நடவடிக்கை&nbsp;</h2><p>
</p><p>
கிண்ணியா ஆலிம் வீதியைச் சேர்ந்த முகம்மட் ராபிக் முகம்மட் ரிபாஸ்
என்பவருக்குச் சொந்தமான காணியிலேயே இக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/227159bf-87bc-45de-bfb8-beaf12603ba4/26-6a94a3d3860c4.webp' /></p><p>

இதனையடுத்து, காணி உரிமையாளர் வழங்கிய தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு
விரைந்த கிண்ணியா பொலிஸார், குண்டுகளை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
</p><p>
மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்று (31)
நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T21:42:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் 270 பயணிகளுடன் கவிழ்ந்த கப்பல்! 17 பேர் மாயம் பலர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ferry-capsizes-off-north-cyprus-1788124555"></link>
            <id>https://ibctamil.com/article/ferry-capsizes-off-north-cyprus-1788124555</id>
            <summary type="text">வடக்கு சைப்ரஸ் கடற்பகுதியில் சுமார் 270 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சென்ற பயணிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது 8 பேர் உயி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு சைப்ரஸ் கடற்பகுதியில் சுமார் 270 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சென்ற பயணிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>
ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணியளவில் கெய்ரேனியா (Kyrenia) துறைமுகத்திலிருந்து துருக்கியின் தசுசு (Tasucu) துறைமுகத்தை நோக்கிப் புறப்பட்ட இந்தத் தனியார் கப்பல், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே எதிர்பாராதவிதமாகக் கடலில் தள்ளாடத் தொடங்கி தண்ணீருக்குள் மூழ்கத் தொடங்கியுள்ளது. </p><p>

நீர்மட்டத்தில் பலமாக மோதியதில் இரண்டு உடற்பகுதிகளைக் கொண்ட அந்தப் கப்பலின் முன்பகுதி உடைந்து, அதற்குள் நீர் புகுந்ததாக உயிர்தப்பிய பயணிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>மீட்புப் பணிகள்</h2><p>

பிரபல சுற்றுலாத் தளமான கெய்ரேனியா கடற்கரைக்கு அருகிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3998e2d2-dea3-4b58-8e96-b570105d5d26/26-6a94a1c62aa2e.webp' /></p><p>
</p><p>
விபத்தைத் தொடர்ந்து, கவிழ்ந்த படகின் மேல்பகுதியில் சிவப்பு நிற உயிர்காப்பு அங்கிகளை அணிந்தபடி உயிர்தப்பியவர்கள் அமர்ந்திருந்த நிலையில், கடலோரக் காவல் படையினரும் தனியார் படகுகளும் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் மேற்கொண்டுள்ளனர்.
</p><p>
இச்சம்பவம் குறித்துத் வடக்கு சைப்ரஸ் ஜனாதிபதி துஃபான் எர்ஹுர்மன் தனது கவலைகளை வெளியிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T21:36:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிராக ஐஸ்லாந்து மக்கள் அதிரடி தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/icelanders-take-deci-action-against-european-union-1788125491"></link>
            <id>https://canadamirror.com/article/icelanders-take-deci-action-against-european-union-1788125491</id>
            <summary type="text">ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவை ஐஸ்லாந்து நாட்டு மக்கள் பொது வாக்கெடுப்பில் நிராகரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவை ஐஸ்லாந்து நாட்டு மக்கள் பொது வாக்கெடுப்பில் நிராகரித்துள்ளனர்.
</p><p>
இதன்படி, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் 52.8 சதவீத மக்கள் "இல்லை" என்றும் 47.2 சதவீத மக்கள் "ஆம்" என்றும் வாக்களித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a3730af-9864-480d-a3f5-642617c1ef38/26-6a94a1347f9a8.webp' /></p><p>இந்தநிலையில் பொதுமக்களின் இந்த முடிவை மதிப்பதாக ஐஸ்லாந்து பிரதமர் கிரிஸ்ட்ருன் ஃப்ரொஸ்டாடோட்டீர் (Kristrun Frostadottir) தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன் தனது பதவிக்காலம் 2028 இல் முடியும் வரை ஐரோப்பிய ஒன்றிய விவகாரம் மீண்டும் அரசியல் திட்டத்துக்குள் வராது என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
</p><p>
இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்தால் நாட்டின் இறையாண்மை மற்றும் மீன்பிடித் தொழில் பாதிக்கப்படும் என்று பொது வாக்கெடுப்பில் "இல்லை" என்று வாக்களித்தவர்கள் தெரிவித்து வந்தனர்.
</p><p>
அதேநேரம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்தால், நாடு சிறப்பான இடத்துக்கு செல்லும் என்று ஆம் என்று வாக்களித்தவர்கள் தெரிவித்து வந்தனர்.</p>]]></content>
            <updated>2026-08-30T21:31:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனின் ஆயுதக் கிடங்கில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் - 38 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-strike-on-ukraine-ammunition-depot-kills-38-1788125393"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-strike-on-ukraine-ammunition-depot-kills-38-1788125393</id>
            <summary type="text">Russia strike on Ukraine ammunition depot: உக்ரைனின் ஆயுதக் கிடங்கில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஆயுதக் கிடங்கில்...உக்ரைனின் தலைநகர் கீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russia strike on Ukraine ammunition depot: உக்ரைனின் ஆயுதக் கிடங்கில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
</p><h2>
ஆயுதக் கிடங்கில்...</h2><p>உக்ரைனின் தலைநகர் கீவ் அருகே உள்ள மைலா பகுதியில் அமைந்திருந்த ஆயுதக் கிடங்கில் ரஷ்யா மேற்கொண்ட ட்ரோன் தாக்குதல், இந்த ஆண்டின் மிகப்பெரிய உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa4c4ecc-f053-430e-a9eb-d731123bba46/26-6a94a0d3143f0.webp' /></p><p>இந்த தாக்குதலில் 38 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார். மேலும் நான்கு பேர் காணாமல் போயுள்ளனர். </p><p>

தாக்குதலுக்குப் பிறகு கிடங்கில் இருந்த வெடிமருந்துகள் தீப்பற்றி, தொடர் வெடிப்புகள் ஏற்பட்டன. இதனால் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
</p><p></p><h2>குடியிருப்பு பகுதிகள் சேதம்</h2><p>கிடங்கில் ஆர்டிலரி குண்டுகள், கண்ணிவெடிகள், ட்ரோன்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. வெடிப்பின் தாக்கம் காரணமாக வீடுகள் சேதமடைந்ததோடு, வெடிக்காத குண்டுகள் குடியிருப்பு பகுதிகளில் சிதறியுள்ளன.</p><p>

ஜெலென்ஸ்கி, அதிகாரிகள் மீது கடும் விமர்சனம் செய்து, “பெரிய அளவில் வெடிமருந்துகளை குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் வைத்திருப்பது தவறு” என்று கூறினார். இதனால் உக்ரைன் பாதுகாப்புத்துறை, நாடு முழுவதும் உள்ள ஆயுதக் கிடங்குகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.
</p><p></p><h2>முதல் முறையல்ல</h2><p>இது முதல் சம்பவமல்ல. கடந்த ஜூலை மாதத்தில், கீவ் அருகே உள்ள விஷ்னேவே பகுதியில் நடந்த ஆயுதக் கிடங்கு வெடிப்பில் 10 பேர் உயிரிழந்தனர்.
</p><p>
ரஷ்யா கடந்த வாரம் மட்டும் 2,000 ட்ரோன்கள், 1,600 குண்டுகள், 31 ஏவுகணைகள் உக்ரைனின் இராணுவ, ஆற்றல், தொழில் மற்றும் போக்குவரத்து அமைப்புகளை குறிவைத்து தாக்கியதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த தாக்குதல், உக்ரைனின் ஏற்கனவே சிரமப்பட்டு வரும் வான்வழி பாதுகாப்பு அமைப்பிற்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T21:27:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியை கோடரியால் தாக்கி கொன்ற கணவன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/husband-arrested-for-attacking-wife-with-axe-1788124706"></link>
            <id>https://jvpnews.com/article/husband-arrested-for-attacking-wife-with-axe-1788124706</id>
            <summary type="text">நுவரெலியா, பொரலந்த விநாயகபுரம் பகுதியில் இடம்பெற்ற குடும்பத் தகராறில், கணவனின் தாக்குதலுக்கு இலக்கான 43 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா, பொரலந்த விநாயகபுரம் பகுதியில் இடம்பெற்ற குடும்பத் தகராறில், கணவனின் தாக்குதலுக்கு இலக்கான 43 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p></p><p>இந்தச் சம்பவம் நேற்று (29) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த பெண், சிகிச்சைக்காக நுவரெலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d81dbdd-500c-404a-a90d-38afef523f11/26-6a949e248cf58.webp' /></p><p>தனிப்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், கூரிய ஆயுதத்தால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
</p><p>
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான, குறித்த பெண்ணினுடைய கணவர் நுவரெலியா காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இச்சம்பவம் தொடர்பில் நுவரெலியா காவல் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>
சரணடைந்த சந்தேக நபரை இன்று (30) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
</p><p>
உயிரிழந்தவரின் உடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T21:18:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவும் இஸ்ரேலுமே உண்மையான எதிரிகள் ; ஈரான் உச்ச தலைவர் அதிரடி கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-and-israel-are-real-enemies-iran-supreme-leader-1788112414"></link>
            <id>https://canadamirror.com/article/us-and-israel-are-real-enemies-iran-supreme-leader-1788112414</id>
            <summary type="text">அமெரிக்காவும் இஸ்ரேலுமே இஸ்லாமிய ஒற்றுமைக்கு &quot;உண்மையான எதிரிகள்&quot; என ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவும் இஸ்ரேலுமே இஸ்லாமிய ஒற்றுமைக்கு "உண்மையான எதிரிகள்" என ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.
</p><p>
இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் தங்களின் "உண்மையான எதிரியை" இனம் கண்டு, அதன் திட்டங்களைப் புரிந்து கொண்டு எதிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>

"இஸ்லாமிய ஒற்றுமை வாரம்" குறித்த செய்தியை வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94fc2c31-5395-46d0-895a-b4af48cc5a26/26-6a946e1fa462c.webp' /></p><p>ஈரான் மற்றும் பிற இஸ்லாமிய நாடுகளின் மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதற்காகப் பல்வேறு இன, கலாசார, சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் புவியியல் ரீதியான வேறுபாடுகளை அமெரிக்காவும் இஸ்ரேலும் சாக்குப்போக்குகளாகப் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
அத்துடன், ஈரானியர்கள் தங்களுக்குள் எந்தவித வேறுபாடுகளையும் அனுமதிக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
விரும்பத்தக்க மற்றும் ஆதிக்கம் செலுத்தும் இஸ்லாமிய நாகரிகத்தை அடைவதற்கு முஸ்லிம்களிடையே ஒற்றுமை அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
வொஷிங்டனும் டெல் அவிவும் ஈரானின் எதிரிகள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகிற்கும் "உண்மையான எதிரிகள்" என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

கடந்த பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் மீது கூட்டுத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்ற நிலை அதிகரித்தது. இதனையடுத்து, அமெரிக்காவின் சொத்துக்கள் அமைந்துள்ள பிராந்திய நாடுகளின் மீது ஈரான் பதிலடித் தாக்குதல்களை நடத்தியது.
</p><p>
போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் கடந்த ஜூன் மாதம் ஈரானும் அமெரிக்காவும் 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போதிலும், அந்த இடைக்கால ஒப்பந்தம் விரைவில் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-30T21:08:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தில் இருவருக்கு மரண தண்டனை ; நடந்தது என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-high-court-dramatic-two-sentenced-death-1788106852"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-high-court-dramatic-two-sentenced-death-1788106852</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>திருநெல்வேலி பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு மதுபோதையில் இளைஞர் ஒருவர் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் 09 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
</p><p>
இதையடுத்து, 09 பேரும் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டு, சட்டமா அதிபர் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, நீண்டகாலமாக விசாரணைகள் இடம்பெற்று வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66b45fbb-0a3d-4302-9451-be11f95a36b1/26-6a9458657a821.webp' /></p><p>

இந்நிலையில், குறித்த வழக்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, 09ஆம் எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தீர்மானித்தது.
</p><p>
இதனையடுத்து, 09ஆம் எதிரிக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். </p><p>அதேவேளை, ஏனைய 08 எதிரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாத நிலையில், அவர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது.
</p><p>
இதேவேளை, பருத்தித்துறை வல்லிபுரம் குறிச்சி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 2014ஆம் ஆண்டு வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கும் மரண தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் தீர்ப்பளித்துள்ளார்.
</p><p>
இதன்மூலம், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்ற இருவேறு கொலை வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இருவருக்கு ஒரே நாளில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T21:07:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் பாரிஸில் சிக்கிய 58 அகதிகள் ; பிரித்தானியா செல்லும் வழியில் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/58-refugees-trapped-in-paris-rescued-route-britain-1788123514"></link>
            <id>https://canadamirror.com/article/58-refugees-trapped-in-paris-rescued-route-britain-1788123514</id>
            <summary type="text">பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் 18ஆவது வட்டாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆளில்லா பாரவூர்தியொன்றிலிருந்து 58 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

செவ்வாய்க்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் 18ஆவது வட்டாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆளில்லா பாரவூர்தியொன்றிலிருந்து 58 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p>
செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 'இம்பாஸ் மார்ட்டோ' (Impasse Marteau) பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், சாரதி எவருமின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்திக்குள் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட 58 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்தமை காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1376bbfc-dcdc-4aca-aa18-ad64005bc77a/26-6a94997bef64a.webp' /></p><p>

மீட்கப்பட்டவர்களில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் அகதித் தஞ்சம் கோரியதற்கான ஆவணங்களை வைத்திருந்தவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

எனினும், சட்டபூர்வ வதிவிட ஆவணங்கள் எதுவும் இல்லாத 26 வெளிநாட்டவர்கள் காவல்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டு, நிர்வாகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>

இதனிடையே, அகதிகள் மீட்கப்பட்ட பாரவூர்தி சென்-எ-மார்ன் (Seine-et-Marne) மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனமொன்றுக்குச் சொந்தமானது என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
மேலும், சம்பவ இடத்துக்கு அருகில் கதவுகள் திறந்த நிலையில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு பாரவூர்தியும் காவல்துறையினரின் கவனத்திற்கு வந்துள்ளது.</p><p> அந்த வாகனம் வாடகை வாகன சேவை வழங்கும் நிறுவனமொன்றுக்குச் சொந்தமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, மீட்கப்பட்ட அகதிகள் பிரித்தானியாவுக்கு அழைத்துச் செல்லும் நோக்கில் குறித்த பாரவூர்தியில் ஏற்றப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிரான்ஸ் காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளதுடன், அகதிகளை யார் ஏற்றிச் சென்றனர், அவர்களை பிரித்தானியாவுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-30T20:58:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் இசை நிகழ்ச்சியில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு ; 22 வயது இளம்பெண் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/shooting-in-switzerland-22-year-old-woman-killed-1788121169"></link>
            <id>https://canadamirror.com/article/shooting-in-switzerland-22-year-old-woman-killed-1788121169</id>
            <summary type="text">வடக்கு சுவிட்சர்லாந்தில் இரவு நேர இசை நிகழ்ச்சியொன்றில் இடம்பெற்ற கொடூரத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 22 வயது இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு சுவிட்சர்லாந்தில் இரவு நேர இசை நிகழ்ச்சியொன்றில் இடம்பெற்ற கொடூரத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 22 வயது இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் 05 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>

சுரிச் நகருக்கு அருகில் உள்ள ஆராவ் எனும் நகரில் அமைந்துள்ள குதிரைப் பந்தய மைதானத்தில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அந்நாட்டு நேரப்படி அதிகாலை 2:30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85e32d4b-7d15-45d5-aadb-46e35d6e9b2e/26-6a949052750c0.webp' /></p><p>உயிரிழந்த 22 வயது பெண்ணைத் தவிர, 24 முதல் 27 வயதுக்குட்பட்ட 4 ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 05 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

நிகழ்ச்சியில் இசை அமைத்துக்கொண்டிருந்த 'டேக்கிபோ' என்ற சுவிஸ் டிஜே , இந்த தாக்குதலில் தனது நெருங்கிய நண்பரை இழந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.</p><p>துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்ற நபர் யார்? அவரது பின்னணி அல்லது தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
</p><p>
கொலையாளியைக் கைது செய்வதற்காகச் சுவிஸ் பொலிஸார் அப்பகுதி முழுவதையும் தீவிரக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.</p><p>


நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான ஆர்காவ் ரேசிங் கிளப் இந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதோடு, உடனடியாக விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அவசரக்காலச் சேவையினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-30T20:19:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிலிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்ட நெதன்யாகுவின் மகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/netanyahu-son-urgently-evacuated-from-the-us-1788102510"></link>
            <id>https://tamilwin.com/article/netanyahu-son-urgently-evacuated-from-the-us-1788102510</id>
            <summary type="text">இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மூத்த மகனான யாயிர் நெதன்யாகுவிற்கு
விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலையடுத்து, அவர் அமெரிக்காவிலிருந்து அவசரமாக
...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மூத்த மகனான யாயிர் நெதன்யாகுவிற்கு
விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலையடுத்து, அவர் அமெரிக்காவிலிருந்து அவசரமாக
இஸ்ரேலுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்நாட்டு உளவு அமைப்பான
ஷின் பெட் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>

சமூக வலைத்தளங்கள் வாயிலாக எழுந்த கணிசமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை
மதிப்பீடு செய்த பின்னரே, அவரது பாதுகாப்புப் படையினருடன் அவரை உடனடியாக
தாயகம் திருப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>அவசரமாக வெளியேற்றம்</h2><p>
</p><p>
கடந்த டிசம்பர் மாதம் புளோரிடாவில் வசித்து வந்த யாயிர் நெதன்யாகுவைக் இலக்கு
வைத்து ஈரானிய சதித்திட்டம் ஒன்று தீட்டப்பட்டதாக முன்னதாக அமெரிக்க ஊடகங்கள்
செய்தி வெளியிட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89cba172-73a7-4d0b-8d2f-4b020c92aa4a/26-6a94487b39e52.webp' /></p><p>

வலதுசாரி செயற்பாட்டாளரும் பாட்காஸ்ட் நிகழ்ச்சி நடத்துனருமான யாயிர்
நெதன்யாகு, கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவின் புளோரிடாவில் சொகுசு வாழ்க்கை
வாழ்ந்து வந்தமை இஸ்ரேலில் பலத்த விமர்சனங்களை தோற்றுவித்திருந்தது.
</p><p>
குறிப்பாக காசா போர் தீவிரமடைந்த வேளையில், நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய
இராணுவத்தினர் போருக்கு அழைக்கப்பட்ட நிலையில் இவர் வெளிநாட்டில்
தங்கியிருந்தமை அரசாங்க எதிர்ப்பாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
</p><p>
இதேவேளை, தமது மகன்களில் ஒருவரைக் கொல்ல ஈரான் முயற்சிப்பதாக பிரதமர்
பெஞ்சமின் நெதன்யாகு அண்மையில் தெரிவித்திருந்த கூற்றை உறுதிப்படுத்தும்
வகையில் இந்த அவசர வெளியேற்ற நடவடிக்கை அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்
சுட்டிக்காட்டியுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T20:14:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[முழு பலத்துடன் செயற்படும் ஈரானிய கடற்படை! ட்ரம்ப்பின் கூற்று பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iranian-navy-response-to-trump-s-statement-1788116271"></link>
            <id>https://ibctamil.com/article/iranian-navy-response-to-trump-s-statement-1788116271</id>
            <summary type="text">ஈரானின் கடற்படைக் கப்பல்கள் அனைத்தும் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து தெரிவித்து வந்த கருத்துக்களை ஈரான...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் கடற்படைக் கப்பல்கள் அனைத்தும் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து தெரிவித்து வந்த கருத்துக்களை ஈரான் நிராகரித்துள்ளது.</p><p>

இந்நிலையில், அவரது இந்த அறிவிப்பை ஈரானியக் கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ஷஹ்ராம் இரானி (Shahram Irani) முற்றாக நிராகரித்துள்ளார்.</p><p>
ஈரானிய அரசுப் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமான IRIB-க்கு அளித்துள்ள அதிகாரப்பூர்வ பேட்டியில், ஈரானின் கடற்படை எந்தவிதப் பாதிப்பும் இன்றி மிகவும் ஆரோக்கியமாகவும் முழு வலிமையோடும் தனது அன்றாடப் பணிகளைத் தொடர்ந்து செய்து வருவதாக அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.</p><p></p><h2>ஈரானிய மக்களின் பாதுகாப்பு</h2><p>
</p><p>
மேலும் தனது அறிக்கையில், "தாய்நாடான ஈரானைப் பாதுகாக்கவும், நமது மாபெரும் ஈரானிய மக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியைத் தொடர்ந்து உறுதிப்படுத்தவும் கடற்படை எவ்விதத் தயக்கமுமின்றி முழு ஆற்றலுடன் தொடர்ந்து செயலாற்றும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d571b916-d103-49ee-b904-f196ca0622e9/26-6a947d31335c5.webp' /></p><p> </p><p>

ட்ரம்பின் கூற்றுக்கு ஈரானிய ராணுவத்தின் உயர்மட்டப் பொறுப்பில் இருந்து வந்துள்ள இந்த நேரடி பதில், ஈரானின் ராணுவத் திறன் குறித்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக கருதப்படுவதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T20:00:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[7 வயது இந்திய வம்சாவளி சிறுவன் - பிரித்தானியாவில் 16 வயதுக்கான கணிதத் தேர்வில் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/7-year-old-indian-boy-aces-gcse-maths-uk-1788118929"></link>
            <id>https://news.lankasri.com/article/7-year-old-indian-boy-aces-gcse-maths-uk-1788118929</id>
            <summary type="text">7-year-old Indian boy aces GCSE maths UK: பிரித்தானியாவில் 7 வயது இந்திய வம்சாவளி சிறுவன் கணிதத்தில் சாதனை படைத்துள்ளார்.

ஜிவ்யன் ரெட்டி திருவாபிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>7-year-old Indian boy aces GCSE maths UK: பிரித்தானியாவில் 7 வயது இந்திய வம்சாவளி சிறுவன் கணிதத்தில் சாதனை படைத்துள்ளார்.</p><h2>

ஜிவ்யன் ரெட்டி திருவா</h2><p>பிரித்தானியாவில் வாழும் 7 வயது இந்திய வம்சாவளி சிறுவன் ஜிவ்யன் ரெட்டி திருவா (Jivyan Reddy Dhruva ), 16 வயது மாணவர்களுக்கான GCSE உயர்நிலை கணிதத் தேர்வில் Grade 8 (A) பெற்றுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e35ab25-c532-4d3c-a229-e7a860984f0e/26-6a94879324831.webp' /></p><p>ஜிவ்யன், மே மாதத்தில் Pearson Edexcel GCSE Higher Mathematics தேர்வில் பங்கேற்று, 240 மதிப்பெண்களில் 196 பெற்றார். பொதுவாக இந்தத் தேர்வு 16 வயது மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது.
</p><p>
தன் முடிவுகளைப் பார்த்தபோது “Grade 9 வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் Grade 8 வந்ததும் மகிழ்ச்சி அடைந்தேன். எனக்கு கணிதம் பிடிக்கும், ஏனெனில் கடினமான பிரச்சினைகளைத் தீர்க்கவும், பல்வேறு வழிகளில் விடையை கண்டுபிடிக்கவும் விரும்புகிறேன்” என்று ஜிவ்யன் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>அவர் அடுத்த ஆண்டு A-level Maths மற்றும் Further Maths படிக்கத் தயாராகிறார். “நான் வளர்ந்த பிறகு, மனிதர்களுக்கு உதவும் ரோபோட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்க விரும்புகிறேன்” என்று கூறினார்.</p><p>

ஜிவ்யன், லண்டனில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். ஆனால் அவரது திறமையை கருத்தில் கொண்டு, பெற்றோர் அவரை Home Schooling-க்கு மாற்றினர். </p><p>அவரது தந்தை த்ருவா குமார் ரெட்டி கட்டா, தொழில்நுட்ப நிபுணர். அவர் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா தேவி த்ருவா, AI மற்றும் தனிப்பயன் விளையாட்டுகள், புதிர்கள், செயலிகள் மூலம் குழந்தையின் கல்வியை சுவாரஸ்யமாக மாற்றியுள்ளனர்.</p><p></p><p>“ஜிவ்யன் எப்போதும் ‘ஏன்?’ என்ற கேள்வியை கேட்கிறான். அதனால், ஒரு முறை மட்டும் சொல்லாமல், அது ஏன் வேலை செய்கிறது என்பதை விளக்குகிறோம்” என்று தந்தை கூறினார்.</p><p>

ஜிவ்யனின் ஆர்வம், புதுமை, மற்றும் கற்றலுக்கான உற்சாகம் பெற்றோர்களை பெருமைப்பட வைத்துள்ளது. “அவன் சாதனை செய்தாலும், அவன் இன்னும் 7 வயது குழந்தை. விளையாடவும், நண்பர்களுடன் சேரவும், தவறுகள் செய்யவும், சாதாரண குழந்தைப் பருவத்தை அனுபவிக்கவும் வேண்டும்” என்று பெற்றோர் தெரிவித்தனர்.
</p><p>
இந்தச் சிறுவனின் சாதனை, இந்திய வம்சாவளி குடும்பங்களின் கல்வி அர்ப்பணிப்பையும், குழந்தைகளின் திறமையை வளர்க்கும் சூழலையும் வெளிப்படுத்துகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T19:39:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி! இளைஞனுக்கு 24 வருட சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-sentenced-to-24-years-in-prison-1788115478"></link>
            <id>https://ibctamil.com/article/man-sentenced-to-24-years-in-prison-1788115478</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் 14 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த இளைஞனுக்கு 24
வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு 14 வயது சிறும...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் 14 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த இளைஞனுக்கு 24
வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த 2021ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகிய குற்றச்சாட்டில் இளைஞன் கைது செய்யப்பட்டு ,
சட்டமா அதிபர் திணைக்களத்தால் , யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு , விசாரணைகள் இடம்பெறு வந்தன.</p><p></p><h2>24 வருட சிறைத்தண்டனை</h2><p>
</p><p>
இந்நிலையில் வெள்ளிக்கிழமை குறித்த வழக்கு தீர்ப்புக்காக அழைக்கப்பட்ட போது ,
எதிரியான இளைஞனை குற்றவாளியாக கண்ட மன்று , இளைஞனுக்கு 24 வருட சிறைத்தண்டனை
விதித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4925116-dffc-4d24-bf64-b3ff12804a4b/26-6a947a18c3a66.webp' /></p><p>
</p><p>
அத்தோடு, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 இலட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க
வேண்டும் எனவும், நஷ்ட ஈட்டை வழங்க தவறின் மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என மன்று தீர்ப்பளித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T19:30:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் விடுமுறை நாளில் பணிக்கு அழைக்கப்பட்ட பெண் அரச உத்தியோகத்தருக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govert-official-dies-of-electrocution-in-jaffna-1788114248"></link>
            <id>https://ibctamil.com/article/govert-official-dies-of-electrocution-in-jaffna-1788114248</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி
உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான இன்று (30)ஞாயிற்றுக்கிழமை அலுவலகப் பணிக்காக...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி
உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான இன்று (30)ஞாயிற்றுக்கிழமை அலுவலகப் பணிக்காக
அழைக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பற்ற மின் கசிவில் சிக்கி உயிரிழந்த
துயரச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த துயர சம்பவத்தில், உடுவில் பிரதேச செயலகத்தின் சுதேச மருத்துவ
அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்த, இரண்டு பிள்ளைகளின் தாயாரான
நிசாந்தன் சிந்துப்பிரியா (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார்.</p><h2>அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு</h2><p>சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
</p><p>அரச அலுவலகங்களுக்கிடையில் நடைபெறும் உற்பத்தித் திறன் போட்டியில்
பங்கேற்பதற்காக உடுவில் பிரதேச செயலகமும் அலுவலகத்தை அழகுபடுத்துதல் மற்றும்
ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d64fb44-0a17-488d-b6f1-5c8465320f3c/26-6a94754a862e4.webp' /></p><p>
</p><p>நாளை திங்கட்கிழமை போட்டிக்கான மதிப்பீடுகள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட
நிலையில், விடுமுறை நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை அலுவலகத்திற்கு வருமாறு அங்கு
கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு வாட்ஸ்அப் ஊடாக அழைப்பு
விடுக்கப்பட்டிருந்ததாகத் தெரியவருகிறது.</p><h2>மின்சாரம் தாக்கியிருக்கலாம்&nbsp;</h2><p>
இதனையடுத்து அலுவலகத்திற்குச் சென்ற குறித்த பெண் உத்தியோகத்தர், அங்கிருந்த
மூலிகைத் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார்.
இதன்போது அப்பகுதியில் காணப்பட்ட பாதுகாப்பற்ற மின் கசிவு நீருடன் தொடர்புபட்ட
நிலையில், அவர் மீது மின்சாரம் தாக்கியிருக்கலாம் என ஆரம்பகட்டத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fcc98e5-3e97-4e05-b891-546ac63a3d55/26-6a94754b37b70.webp' /></p><p>
மின்சாரம் தாக்கிய நிலையில் அவர் உடனடியாக மீட்கப்பட்டு தெல்லிப்பளை ஆதார
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்படுவதற்கு முன்னரே அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.</p><p></p><h2>ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ள&nbsp;மரணம்</h2><p>
</p><p>விடுமுறை நாளிலும் அலுவலகப் பணிக்காகச் சென்ற நிலையில், இரண்டு பிள்ளைகளின்
தாயான இளம் பெண் உத்தியோகத்தர் ஒருவர் இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளமை
அவரது குடும்பத்தினரையும், சக உத்தியோகத்தர்களையும் ஆழ்ந்த துயரத்தில்
ஆழ்த்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ebb4c12-0152-410c-9c29-1c965e86abfb/26-6a94754bdd093.webp' /></p><p>
</p><p>

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர். பாதுகாப்பற்ற மின் இணைப்பு அல்லது மின் கசிவே இந்த
உயிரிழப்புக்குக் காரணமா என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T19:05:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசிற்கு கிடைத்த புலனாய்வுத் தகவல்! தேடப்பட்டு வரும் அர்ஜுன் மகேந்திரன் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/arjuna-mahendran-denies-changing-name-1788106187"></link>
            <id>https://tamilwin.com/article/arjuna-mahendran-denies-changing-name-1788106187</id>
            <summary type="text">&amp;nbsp;அமைச்சர் ஆனந்த விஜேபால பொய்யுரைப்பதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி வழக்கு தொடர்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமைச்சர் ஆனந்த விஜேபால பொய்யுரைப்பதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
</p><p>மத்திய வங்கி பிணைமுறி வழக்கு தொடர்பில் தேடப்பட்டு வரும் நிலையில் அவர் இந்த கருத்தினை ஆங்கில ஊடகமொன்றுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
தான் சட்டப்பூர்வமாக பெயரை மாற்றிக்கொண்டதாக அரசாங்க அமைச்சர் வெளியிட்ட கூற்றை "முற்றிலும் பொய்" என நிராகரித்து, அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்கு நேரடி சவால் விடுத்துள்ளார்.</p><h2>புலனாய்வுத் தகவல்..&nbsp;</h2><p>
</p><p>ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தன் மீதான இந்த குற்றச்சாட்டை உறுதியாக மறுத்துள்ள அவர், அந்த மறுப்பு அறிக்கையை வெளியிடுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3f239d7-e8c4-4b65-b228-f2bad936715b/26-6a9455ccc92ab.webp' /></p><p>
</p><p>மத்திய வங்கி பிணைமுறி வழக்கில் தேடப்படும் அர்ஜுன் மகேந்திரன், 'ஹர்ஜன் அலெக்சாண்டர்' (Harjan Alexander) என தனது பெயரை மாற்றியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அண்மையில் தெரிவித்திருந்தார்.
</p><p>நான் பெயரை மாற்றியுள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் பகிரங்கக் கூற்று வெளியிட்டுள்ளமை எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என்பதை உங்களுக்கும் உங்கள் வாசகர்களுக்கும் அறியத் தருகிறேன்" என மகேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>சிங்கப்பூர் முகவரியைக் குறிப்பிட்டுள்ள அவர், "லக்ஷ்மன் அர்ஜுன் மகேந்திரன்" (Lakshman Arjuna Mahendran) என்ற தனது அதிகாரப்பூர்வ பெயரிலேயே இக்கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார் என குறித்த ஆங்கில ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>அரசாங்கத்திற்கு பகிரங்க சவால்&nbsp;</h2><p>
</p><p>2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி வழக்கு தொடர்பாக இலங்கை அதிகாரிகளால் தேடப்பட்டு வரும் அர்ஜுன் மகேந்திரனை, சிங்கப்பூரிலிருந்து நாட்டிற்கு அழைத்து வருவதில் சட்ட ரீதியான தடைகள் நிலவி வருகின்றன.</p><p>
</p><p>இந்த நிலையில், அவரை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான மாற்று வழிகளை இலங்கை அதிகாரிகள் ஆராய்ந்து வரும் வேளையில், அவரது அடையாளத்தை மையப்படுத்தி அரசாங்கம் முன்வைத்த கூற்றை அர்ஜுன் மகேந்திரன் நேரடியாக மறுத்துள்ளார்.
</p><p>சிங்கப்பூரில் வசித்து வரும் அர்ஜூன் மகேந்திரன் அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் வகையில் அமைச்சரின் கருத்தை நிராகரித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
இந்த விவகாரம் தொடர்பில் ஆளும் தரப்பின் நிலைப்பாடு எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>
இந்த மறுப்பு அறிக்கையை அர்ஜூன் மகேந்திரன் வெளியிட்டாரா என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் எதனையும் குறித்த ஊடகம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T19:00:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா கலந்த லேகியம் விற்பனை! சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrested-for-selling-cannabis-mixed-legium-1788114085"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrested-for-selling-cannabis-mixed-legium-1788114085</id>
            <summary type="text">வவுனியா நகரப்பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு கஞ்சா கலந்த
லேகியம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, வவுனியா காவல்துறையினர் சந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா நகரப்பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு கஞ்சா கலந்த
லேகியம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, வவுனியா காவல்துறையினர் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.</p><p>
குறித்த விடயம் தொடர்பாக வவுனியா காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்
கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள குறித்த லேகியம் உற்பத்தி செய்யும் நிலையம்
ஒன்றை காவல்துறையினர் இன்று முற்றுகையிட்டதுடன் அங்கு சோதனை நடவடிக்கைகளை
மேற்கொண்டுள்ளனர்.</p><p>
இதன்போது கஞ்சா கலந்ததாக சந்தேகிக்கப்படும் 400 ற்கும் மேற்ப்பட்ட லேகியப்
பக்கற்றுகள் அங்கு கைப்பற்றப்பட்டதுடன் 20 வயதான இளைஞர் ஒருவர்
கைதுசெய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>இலக்காக்கப்பட்டுள்ள மாணவர்கள்&nbsp;</h2><p>இந்த லேகியங்கள் வவுனியா நகரை அண்டிய பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு
விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e87a9d6-30d6-4aa1-9a4e-8023861192be/26-6a9476f985d08.webp' />&nbsp;</p><p>
</p><p>இதேவேளை, குறித்த லேகிய உற்பத்தி நிலையத்தின் உரிமையாளரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T19:00:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெளிவான போர்த் திட்டங்களை சமர்ப்பிக்க உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ukraine-defense-minister-vows-submit-war-plans-1788113832"></link>
            <id>https://tamilwin.com/article/ukraine-defense-minister-vows-submit-war-plans-1788113832</id>
            <summary type="text">உக்ரைனின் 27 பில்லியன் டொலர் இராணுவ பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கும்,
ஐரோப்பிய ஒன்றியத்தின் கடன் நிதியை முன்னதாகவே பெற்றுக்கொள்வதற்கும் ஏதுவாக
...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் 27 பில்லியன் டொலர் இராணுவ பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கும்,
ஐரோப்பிய ஒன்றியத்தின் கடன் நிதியை முன்னதாகவே பெற்றுக்கொள்வதற்கும் ஏதுவாக
சர்வதேச பங்காளிகளுக்கு தெளிவான போர் மூலோபாய திட்டங்களை சமர்ப்பிக்கவுள்ளதாக
உக்ரைனின் புதிய பாதுகாப்பு அமைச்சர் ஏவ்ஹேனி க்மாரா தெரிவித்துள்ளார்.
</p><p>
ரஷ்யாவுடனான போர் ஐந்தாவது ஆண்டாக தொடரும் நிலையில், உக்ரைன் சர்வதேச
நிதியுதவிகளிலேயே பெருமளவில் தங்கியுள்ளது.</p><h2>உக்ரைனின் கோரிக்கை</h2><p>
</p><p>
அந்தவகையில் ஐரோப்பிய ஒன்றியம் 2027ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்கு 90
பில்லியன் யூரோ நிதியுதவியை வழங்க உறுதியளித்துள்ள போதிலும், அடுத்த
ஆண்டிற்காக திட்டமிடப்பட்டுள்ள 45 பில்லியன் யூரோ கடனின் ஒரு பகுதியை விரைவாக
விடுவிக்குமாறு உக்ரைன் கோரிக்கை விடுக்கவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2378a0fb-08d8-471e-aa06-dc805cac2cea/26-6a94752fae018.webp' /></p><p>
</p><p>
பாதுகாப்புப் படைகள் எதிர்கொள்ளும் சவால்கள், தேவையான திட்டங்கள் மற்றும்
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அடைய எதிர்பார்க்கும் இலக்குகள் தொடர்பான
தெளிவான பார்வையை பங்காளிகளுக்கு முன்வைக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர்
குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அத்துடன் புதிய இராணுவ தலைமை தளபதி மைக்கைலோ டிராபதியுடன் இணைந்து உக்ரைனின்
பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
ரஷ்யாவின் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ட்ரோன் வீச்சுகளுக்கு
மத்தியில், மனிதவள பற்றாக்குறை மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளின் தேவையை
நிவர்த்தி செய்வதுடன், உக்ரைனிய படைவீரர்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கான
சரியான தீர்மானங்களை எடுப்பதே தமது முதன்மை நோக்கம் என்றும் அமைச்சர்
வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T18:24:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மௌனம் கலைத்த அர்ஜுன மகேந்திரன்! அரசாங்கம் போலித் தகவலை வெளியிட்டுள்ளதாக குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/arjuna-mahendran-denies-changing-name-1788111871"></link>
            <id>https://ibctamil.com/article/arjuna-mahendran-denies-changing-name-1788111871</id>
            <summary type="text">

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தனது பெயரை சட்டப்பூர்வமாக மாற்றிக்கொண்டதாக வெளியாகும் செய்திகளை முற்றிலும் மறுத்துள்ளார்.அண்மையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தனது பெயரை சட்டப்பூர்வமாக மாற்றிக்கொண்டதாக வெளியாகும் செய்திகளை முற்றிலும் மறுத்துள்ளார்.</p><p>அண்மையில்&nbsp; பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, அர்ஜுன மகேந்திரன் தனது பெயரை "ஹர்ஜன் அலெக்சாண்டர்" என மாற்றிக்கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.</p><p>

2015ஆம் ஆண்டு மத்திய வங்கிபிணைமுறி பத்திர மோசடி தொடர்பாகத் தேடப்பட்டு வரும் அவரை, சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்துவதில் சிக்கல்கள் நிலவும் சூழலில், மாற்று சட்ட வழிகளை ஆராயும் நடவடிக்கையாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கிடைத்தகவல் அடிப்படையில் அமைச்சர் இந்தத் தகவலைக் குறிப்பிட்டிருந்தார்.</p><p></p><h2>சிங்கப்பூர் முகவரியுடன் பெயர்</h2><p>

இந்நிலையில், ஊடக நிறுவனமொன்றுக்கு ஓகஸ்ட் 30ஆம் திகதியிட்டு எழுதியுள்ள கடிதத்தில் இந்த குற்றச்சாட்டைப் பொய் என மகேந்திரன் நிராகரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddd6e3d9-0ddd-45f2-b02a-1b20ba2892cd/26-6a946d69d54f9.webp' /></p><p>
</p><p>
 "லக்ஷ்மன் அர்ஜுன மகேந்திரன்" என்ற தனது சொந்தப் பெயரிலேயே கையொப்பமிட்டு சிங்கப்பூர் முகவரியுடன் அவர் அனுப்பியுள்ள அக்கடிதத்தில், தான் பெயரை மாற்றியதாகக் கூறப்படும் செய்தி முற்றிலும் உண்மையற்றது எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p>

இந்நிலையில், அவரது பெயர் மாற்றம் குறித்து அரசாங்க அதிகாரிகளின் கூற்றுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T18:15:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நாசாவின் அதிநவீன ரோமன் தொலைநோக்கி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nasa-state-art-roman-telescope-launched-into-space-1788112203"></link>
            <id>https://tamilwin.com/article/nasa-state-art-roman-telescope-launched-into-space-1788112203</id>
            <summary type="text">நாசா அமைப்பின் புதிய முதன்மை விண்வெளித் தொலைநோக்கியான நான்சி கிரேஸ் ரோமன் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ள கென்னடி விண்வெளி
மையத்திலிருந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாசா அமைப்பின் புதிய முதன்மை விண்வெளித் தொலைநோக்கியான நான்சி கிரேஸ் ரோமன் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ள கென்னடி விண்வெளி
மையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ஹெவி ரொக்கெட் மூலம்
ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.</p><p>

சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன
தொலைநோக்கி, பிரபஞ்சத்தின் இரகசியங்களான இருண்ட ஆற்றல், இருண்ட பருப்பொருள்
மற்றும் புதிய கிரகங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக
வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><h2>சுற்றுவட்டப் பாதை</h2><p>
</p><p>
புவியிலிருந்து சுமார் 16 இலட்சம் கிலோமீற்றர் தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச்
பொயின்ட் 2 எனும் சுற்றுவட்டப் பாதையை நோக்கி இது பயணிக்கவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a4278ce-f323-42a4-84c7-9d64f493c781/26-6a947118b6143.webp' /></p><p>

ஹப்பிள் மற்றும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கிகளின் ஆற்றலை விடவும் அதிக பரந்த
பார்வைத்திறன் கொண்ட இந்தத் தொலைநோக்கி, பிரபஞ்சத்தின் விரிவான முப்பரிமாண
வரைபடத்தை (3D Map) உருவாக்கவுள்ளது.
</p><p>
ஹப்பிள் தொலைநோக்கி நூறாண்டுகளில் செய்யக்கூடிய விண்மீன் மண்டல ஆய்வுகளை
ரோமன் தொலைநோக்கியால் ஒரே மாதத்தில் செய்து முடிக்க முடியும் என விண்வெளி
ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
குறைந்தது ஐந்து ஆண்டுகள் வரை செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த
விண்வெளி ஆராய்ச்சி மையம், திட்டமிட்ட நேரத்திற்கு ஒன்பது மாதங்களுக்கு
முன்னதாகவே வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T18:06:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சைப்ரஸ் அருகே கவிழ்ந்த பயணிகள் கப்பல் ; 7 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/passenger-ship-capsizes-near-cyprus-7-dead-1788111934"></link>
            <id>https://canadamirror.com/article/passenger-ship-capsizes-near-cyprus-7-dead-1788111934</id>
            <summary type="text">வட சைப்ரஸ் அருகே சுமார் 270 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சென்ற பயணிகள் கப்பல் கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட சைப்ரஸ் அருகே சுமார் 270 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சென்ற பயணிகள் கப்பல் கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்தச் சம்பவத்தில் உயிர் பிழைத்தவர்கள், தலைகீழாக கவிழ்ந்த கப்பலின் அடிப்பகுதியில் பற்றிக் கொண்டு தப்பியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d383723f-d7c6-4329-b7da-1a39b131b501/26-6a946c3fe8af3.webp' /></p><p>தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்தக் கப்பல் கெரினியா துறைமுகத்திலிருந்து பிற்பகல் 12:30 க்கு (0930 GMT) புறப்பட்டுள்ளது.
</p><p>
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே என்ன காரணம் என்று தெரியாத நிலையில் அது தண்ணீரை உள்வாங்கத் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள துருக்கியின் மெர்சின் மாகாணத்தில் உள்ள தாசுசு துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-30T17:45:42+00:00</updated>
        </entry>
    </feed>
