<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-06T10:56:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தையிட்டி- பவானி வீதி விடுவிப்புக்கு எதிரான வழக்கு! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/release-of-bhavani-road-thaiyiddy-tissa-vihara-1786012402"></link>
            <id>https://tamilwin.com/article/release-of-bhavani-road-thaiyiddy-tissa-vihara-1786012402</id>
            <summary type="text">தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட
பவானி வீதி விடுவிப்புக்கு எதிராக வலிவடக்கு பிரதேச சபைக்கு எதிராக பொலிசார்
தொடர்ந்த வழக்கு மல்லாகம் நீதிம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட
பவானி வீதி விடுவிப்புக்கு எதிராக வலிவடக்கு பிரதேச சபைக்கு எதிராக பொலிசார்
தொடர்ந்த வழக்கு மல்லாகம் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.</p><p>அத்தோடு, வலி.வடக்கு பிரதேசசபைத் தவிசாளர் சுகிர்தன் , செயலாளர் வழக்கிலிருந்து
விடுவிக்கப்பட்டனர்.</p><p>

தவிசாளர் சார்பில் சட்டத்தரணி சுமந்திரன் முன்னிலையாகிருந்து வாதங்களை
முன்வைத்திருத்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/945321cd-cdf1-451f-b5fc-661aef3a6d9a/26-6a74661d79593.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T10:48:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[காற்று மாசுபாடு : இலங்கையில் வருடாந்தம் பறிபோகும்7000 மனித உயிர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/air-pollution-kills-7-000-people-sri-lanka-1786012265"></link>
            <id>https://ibctamil.com/article/air-pollution-kills-7-000-people-sri-lanka-1786012265</id>
            <summary type="text">வளிமண்டலக் காற்று மாசுபாடு காரணமாக இலங்கையில் வருடாந்தம் சுமார் 7,000 மரணங்கள் சம்பவிப்பதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

காற்றிலுள்ள பல்வே...</summary>
            <content type="html"><![CDATA[<p>வளிமண்டலக் காற்று மாசுபாடு காரணமாக இலங்கையில் வருடாந்தம் சுமார் 7,000 மரணங்கள் சம்பவிப்பதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

காற்றிலுள்ள பல்வேறு தீங்கிழைக்கும் நுண் துகள்களே இதற்குக் காரணம் என விசேட ய நிபுணர் சாந்தனி விதான சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>காற்று மாசுபாடு காரணமாக உலகளவில் ஆண்டுக்கு 7 மில்லியன் முதல் 8 மில்லியன் மக்கள் வரை உயிரிழப்பதுடன், இலங்கையிலும் இக்காரணத்தால் ஆண்டுக்கு 7,000 பேர் வரை அகால மரணமடைகின்றனர்.</p><h2>விறகு எரிப்பதால் மாசடையும் வளிமண்டலம்</h2><p>விறகுகளை எரிப்பதன் மூலமும் பெருமளவிலான நச்சு வாயுக்கள் சுற்றாடலில் வெளிவிடப்பட்டு வளிமண்டலம் மாசடைவதாக மருத்துவர் மேலும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74c3ecac-7d9a-4dc7-994c-308228b3668c/26-6a7466439f0e2.webp' /></p><p>
</p><p>
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் (Health Promotion Bureau) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மருத்துவர் சாந்தனி விதான இத்தகவல்களை வெளியிட்டார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T10:47:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[AI போலி விளம்பரங்கள்: ரூ.15 கோடி இழப்பீடு கோரி நீதிமன்றம் சென்ற நடிகை ஸ்ருதி ஹாசன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/shruti-haasan-files-15-crore-lawsuit-against-ai-ad-1786011782"></link>
            <id>https://manithan.com/article/shruti-haasan-files-15-crore-lawsuit-against-ai-ad-1786011782</id>
            <summary type="text">Shruti Haasan : செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், பிரபலங்களின் புகைப்படங்கள், குரல் மற்றும் வீடியோக்களை அனுமதியின்றி பயன்படுத்தி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Shruti Haasan : செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், பிரபலங்களின் புகைப்படங்கள், குரல் மற்றும் வீடியோக்களை அனுமதியின்றி பயன்படுத்தி போலி விளம்பரங்கள் உருவாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற மோசடிகளுக்கு எதிராக நடிகை ஸ்ருதி ஹாசன் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.</p><h2> நடிகை ஸ்ருதி ஹாசன் வழக்கு</h2><p>

தனது பெயர், புகைப்படம் மற்றும் அடையாளத்தை அனுமதியின்றி பயன்படுத்தி, ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் போலி விளம்பரங்கள் வெளியிடப்படுவதாகக் குற்றம்சாட்டி, மும்பை உயர்நீதிமன்றத்தில் ஸ்ருதி ஹாசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad7213f9-e791-4578-bac4-a33b07fcfa11/26-6a7464f8de28e.webp' /></p><p></p><p>சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனக்கு ஏற்பட்ட நற்பெயர் மற்றும் வணிக மதிப்பு பாதிப்புக்காக ரூ.15 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார்.</p><p>
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரபலங்கள் ஒரு குறிப்பிட்ட தயாரிப்பை பரிந்துரைப்பது போலவும், அவர்கள் நடித்ததே இல்லாத விளம்பரங்களில் தோன்றுவது போலவும் சித்தரித்து சமூக வலைதளங்களில் போலி விளம்பரங்கள் பரப்பப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a65d684c-c0a8-4a7b-b01f-08703ebb0041/26-6a7464f991b7a.webp' /></p><p> இதன் மூலம் பொதுமக்களின் நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி பொருட்கள் விற்பனை செய்யப்படுவதோடு, பிரபலங்களின் நற்பெயர் மற்றும் வணிக மதிப்பும் பாதிக்கப்படுகிறது.</p><p>

குறிப்பாக நடிகைகளின் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் குரல்கள் இணையத்தில் எளிதாகக் கிடைப்பதால், அவற்றை பயன்படுத்தி போலி விளம்பரங்களை உருவாக்குவது மேலும் எளிதாகியுள்ளது.அந்த வகையில், இந்த மோசடியின் சமீபத்திய பாதிக்கப்பட்டவராக நடிகை ஸ்ருதி ஹாசன் உள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84b42e62-d9cc-4ced-b83b-99a957d549ee/26-6a7464fa4526d.webp' /></p><p></p><p>
இதற்கு முன்பும் நடிகை ஐஸ்வர்யா ராய், நடிகர் சல்மான் கான் மற்றும் ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள், தங்களது பெயர் மற்றும் அடையாளத்தை அனுமதியின்றி பயன்படுத்துவதைத் தடுக்க நீதிமன்றங்களை நாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T10:47:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[லிட்ரோ சமையல் எரிவாயு விலை திருத்தம்...! வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/litro-lp-gas-prices-unchanged-for-august-1786011810"></link>
            <id>https://ibctamil.com/article/litro-lp-gas-prices-unchanged-for-august-1786011810</id>
            <summary type="text">2026 ஆகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு (LP Gas) விலைகளில் மாற்றங்களைச் செய்யப்படாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு (LP Gas) விலைகளில் மாற்றங்களைச் செய்யப்படாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
</p><p>
லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் (Litro Gas Lanka Limited) இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.</p><p>

உலகச் சந்தையில் எரிவாயுவின் விலைகள் அதிகரித்து வருவதோடு, நாணய மாற்று விகிதத்திலும் சவாலான நிலமைகள் காணப்பட்டபோதிலும், நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதனடிப்படையில், ஆகஸ்ட் மாதம் முழுவதும் தற்போதைய லிட்ரோ எரிவாயு விலைகளே தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

தற்போதைய விற்பனை விலைகள்:
</p><ul><li>
12.5 கிலோகிராம் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் - ரூபாய் 4,465
</li><li>
5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் - ரூபாய் 1,792
</li><li>
2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் - ரூபாய் 835</li></ul><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T10:40:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையை இலக்குவைத்து சர்வதேச எண்ணெய் விநியோகத் திட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/international-oil-supply-project-targeting-trinco-1786009957"></link>
            <id>https://ibctamil.com/article/international-oil-supply-project-targeting-trinco-1786009957</id>
            <summary type="text">இலங்கையை ஒரு சர்வதேச எண்ணெய் விநியோக மையமாக மாற்றுவதற்கும், பெரும் வருவாயை ஈட்டுவதற்கும் திருகோணமலை எண்ணெய் நீர்த்தேக்க அமைப்பை மையமாகக் கொண்ட ஒரு மாப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையை ஒரு சர்வதேச எண்ணெய் விநியோக மையமாக மாற்றுவதற்கும், பெரும் வருவாயை ஈட்டுவதற்கும் திருகோணமலை எண்ணெய் நீர்த்தேக்க அமைப்பை மையமாகக் கொண்ட ஒரு மாபெரும் திட்டம் தொடங்கப்படும் என்று அமைச்சர் அனுர கருணாதிலக்க கூறியுள்ளார்.</p><p> திருகோணமலையில் உள்ள எண்ணெய் தொட்டிகளை ஆய்வு செய்த சுற்றுப்பயணத்தில் பங்கேற்றபோது அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.</p><p>
அனுர கருணாதிலக திருகோணமலை எண்ணெய் தேக்க வளாகத்தைப் பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்த நிலையில் இந்த விடயத்தை குறித்து விளக்கமளித்துள்ளார்.</p><p></p><h2>அனுர கருணாதிலக</h2><p>

மேலும் திருகோணமலை எண்ணெய் தேக்கங்களை மேம்படுத்தும் திட்டத்தை தற்போதைய அரசு முன்னெடுக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b4de8d9-a8a4-46bf-a321-9ea2ee76b2b0/26-6a7462c1eaa7b.webp' /></p><p> </p><p>பிரதி அமைச்சர்களான ஜனித ருவான் கொடித்துவக்கு மற்றும் அருண் ஹேமச்சந்திர ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T10:33:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[24 வயதான ஊர்வசி மகள் தேஜா லட்சுமியின் கலக்கல் போட்டோஷூட்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/urvashi-daughter-teja-lakshmi-photos-goes-trendy-1786013023"></link>
            <id>https://viduppu.com/article/urvashi-daughter-teja-lakshmi-photos-goes-trendy-1786013023</id>
            <summary type="text">ஊர்வசி மகள் தேஜாதென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக 80, 90களில் திகழ்ந்து தற்போது தன் நடிப்பால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருபவர்தான் நடிகை ஊர்வசி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஊர்வசி மகள் தேஜா</h2><p>தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக 80, 90களில் திகழ்ந்து தற்போது தன் நடிப்பால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருபவர்தான் நடிகை ஊர்வசி. </p><p>உள்ளொழுக்கு படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதினை ஊர்வசி வாங்கினார்.</p><p> இந்நிலையில் தன்னுடைய 24 வயதும மகள் தேஜா லட்சுமியை, மலையாள சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். கன்னட சினிமாவிலும் நாயகியாக அறிமுகமாகியிருக்கும் தேஜா லட்சுமியின் அழகிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-06T10:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஜெயிலர் திரைப்படம்.. ப்ரோமோ வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sun-tv-sunday-special-jailer-movie-telecast-1786009635"></link>
            <id>https://cineulagam.com/article/sun-tv-sunday-special-jailer-movie-telecast-1786009635</id>
            <summary type="text">தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமான ஜெயிலர், சன் டிவியில் ஒளிபரப்பப்படவுள்ளது.

ஜெயிலர்

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமான ஜெயிலர், சன் டிவியில் ஒளிபரப்பப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31d57d18-563d-4c4c-84da-9aea8888dca4/26-6a74585f63b7a.webp' /></p><h2>

ஜெயிலர்
</h2><p>
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் <a href="https://www.youtube.com/watch?v=F0VNumCcD9U" target="_blank">ரஜினிகாந்த் </a>நடிப்பில் உருவாகி கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்னா, வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு, சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி சரோஃப் ஆகியோர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd7e46d5-a241-45e4-8fe3-3535643d4c3f/26-6a745827d2c35.webp' /></p><h2> 

முதல் முறை ஒளிபரப்பு
</h2><p>
2023-ஆம் ஆண்டு மாபெரும் வெற்றிபெற்ற இப்படம் எப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. 2023 தீபாவளி அன்று ஜெயிலர் திரைப்படம் முதல் முறையாக சன் டிவியில் ஒளிபரப்பானது. இதன்பின் பலமுறை ஒளிபரப்பப்பட்டு TRP-யில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/407ea13d-4f55-4160-af4a-a0e8ebe9e17f/26-6a745827292fc.webp' /></p><h2>ப்ரோமோ வீடியோ
</h2><p>
இந்நிலையில், வருகிற ஆகஸ்ட் 9-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் ஜெயிலர் திரைப்படம் ஒளிபரப்பாகவுள்ளது. அதற்கான ப்ரோமோ வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/F0VNumCcD9U" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><h2>


ஜெயிலர் 2</h2><p>

ஜெயிலர் முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2 பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படம் வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி வெளியாகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb85587d-7e52-4033-ae94-ff7a51bfa1bf/26-6a74582887a58.webp' /></p>]]></content>
            <updated>2026-08-06T10:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கழிவுகளால் துர்நாற்றம் - பாதசாரிகள் பொதுமக்கள் பெரும் அவதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/foul-smell-waste-pedestrians-public-suffering-1786009789"></link>
            <id>https://tamilwin.com/article/foul-smell-waste-pedestrians-public-suffering-1786009789</id>
            <summary type="text">கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் குப்பைகள் மற்றும் திடக்கழிவுகள்
முறையாக அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன்,
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் குப்பைகள் மற்றும் திடக்கழிவுகள்
முறையாக அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன்,
அப்பகுதியைப் பயன்படுத்தும் பொதுமக்களும் பாதசாரிகளும் பெரும் சிரமங்களை
எதிர்கொண்டு வருகின்றனர்.
</p><p>
கழிவுகள் உரிய முறையில் சேகரிக்கப்பட்டு அகற்றப்படாததால் சுற்றுச்சூழல்
மாசடைந்து, பாரிய சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் நிலவுவதாகப் பிரதேச
மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.</p><p> </p><p>குறிப்பாக மழைக்காலத்தில் கழிவுகள் தேங்கி
நிற்பதால், கொசுப் பெருக்கம் அதிகரித்துத் தொற்றுநோய்கள் பரவும் அபாயம்
உருவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p>
</p><p>
அத்துடன், பாதையோரங்களில் கழிவுகள் குவிந்து கிடப்பதால் பாதசாரிகள்
பாதுகாப்பாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், வாகனப் போக்குவரத்திற்கும்
பெரும் இடையூறுகள் ஏற்படுகின்றன.
</p><p>
இந்நிலைமை தொடர்பில் கல்முனை மாநகர சபையோ அல்லது சம்பந்தப்பட்ட பொது சுகாதார
பரிசோதகர்களோ (PHI) இதுவரை எவ்வித உரிய கவனமும் செலுத்தவில்லை எனப் பிரதேச
மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.</p><p>

எனவே, சூழல் மாசடைவதைத் தடுக்கும் வகையில் குறித்த பகுதியில் குவிந்துள்ள
கழிவுகளை உடனடியாக அகற்றுவதற்கும், சீரான கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை
முன்னெடுப்பதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க
வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-06T10:26:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் விஷேசம் நடந்த வீட்டில் 28 பவுண் நகை திருட்டு - பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/28-pounds-of-jewelry-stolen-in-jaffna-1786011840"></link>
            <id>https://tamilwin.com/article/28-pounds-of-jewelry-stolen-in-jaffna-1786011840</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் தெற்கு பகுதியில் உள்ள வீடு
ஒன்றில், திருடர்கள் தாலிக்கொடி உட்பட சுமார் 28 பவுண் தங்க நகைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் தெற்கு பகுதியில் உள்ள வீடு
ஒன்றில், திருடர்கள் தாலிக்கொடி உட்பட சுமார் 28 பவுண் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p><p> 

கோப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில், விஷேசம் நடந்து மறுநாள், சொந்த வீட்டிற்கு செல்வதற்கான தயார்ப்படுத்தல் வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு, குளியல் அறைக்கு சென்ற வேளையில், திருடர் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.</p><h2>

28 பவுண் நகைகள் திருட்டு</h2><p>
சம்பவம் நடந்து அடுத்த நாள் காலையில், அறையில் உள்ள அலுமாரிகளை திறந்து பார்த்த பொழுது தாலி உட்பட 28 பவுண் தங்க நகைகள் திருட்டு போயுள்ளது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae62046b-0657-4aa9-b731-aec765613e77/26-6a74610896cc3.webp' /></p><p> </p><p> 


இதனைத் தொடர்ந்து, கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் மோப்ப நாய்கள் மற்றும்
அருகில் உள்ள வீடுகளில் உள்ள சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T10:26:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gas-price-sri-lanka-litro-gas-price-1786010827"></link>
            <id>https://tamilwin.com/article/gas-price-sri-lanka-litro-gas-price-1786010827</id>
            <summary type="text">ஒகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகளில் திருத்தம் செய்யப்போவதில்லை என முடிவு செய்துள்ளதாக லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.

சர்வதேச ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகளில் திருத்தம் செய்யப்போவதில்லை என முடிவு செய்துள்ளதாக லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.</p><p>

சர்வதேச சந்தையில் எரிவாயு விலை உயர்ந்து வருவதையும், சவாலான நாணய மாற்று விகித நிலவரங்களையும் மீறி, நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில் ஒகஸ்ட் மாதத்தில் எரிவாயு விலையை உயர்த்த வேண்டாம் என முடிவு செய்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>
அதன்படி, இம்மாதம் முடியும் வரை தற்போதைய விலைகளே செல்லுபடியாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p>குறித்த அறிவிப்புக்கமைய பின்வரும் விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p><b>12.5 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் -&nbsp; 4,465 ரூபா</b></p><p><b>5 கிலோ எரிவாயு சிலிண்டர் - 1,792 ரூபா&nbsp;</b></p><p><b>2.3 கிலோ எரிவாயு சிலிண்டர் - 835 ரூபா</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b873230-f237-4e2b-b657-188cb4959129/26-6a7460cc7d341.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T10:24:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வறுமை குறைந்ததா! அரசின் புள்ளி விபரங்களில் வெளியான தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-poverty-status-economic-cost-1786008279"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-poverty-status-economic-cost-1786008279</id>
            <summary type="text">இலங்கையில் வறுமை குறைந்து விட்டதா என்ற கேள்வி இன்று அரசியலிலும் சமூக வலைத்தளங்களிலும் அதிகம் பேசப்படுகின்றது.உலக வங்கி மற்றும் IMF மதிப்பீடுகளின்படி, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் வறுமை குறைந்து விட்டதா என்ற கேள்வி இன்று அரசியலிலும் சமூக வலைத்தளங்களிலும் அதிகம் பேசப்படுகின்றது.</p><p>உலக வங்கி மற்றும் IMF மதிப்பீடுகளின்படி, நாட்டில் இன்னும் 24% முதல் 25% வரையிலான மக்கள் (சுமார் 53 - 55 இலட்சம் பேர்) வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்.</p><p>2026 ஏப்ரல் மாதத்தின் அதிகாரப்பூர்வ அரசுத் தரவுகளின்படி, ஒரு நபர் தன் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதம் ரூ. 17,117 வருமானம் பெற வேண்டும். இதன்படி, 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 68,468 தேவைப்படுகிறது. </p><p>இது அடிப்படை வாழ்வாதாரத்திற்கான அளவு மட்டுமே தவிர, வசதியாக வாழ்வதற்கான தொகையல்ல. நகர்ப்புறங்களில் வாடகை, மின்சாரம், கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளைக் கணக்கிட்டால் இத்தொகை போதுமானதாக இல்லை.</p><p>

பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வந்தாலும், 2022 நெருக்கடியின் நீண்டகால தாக்கம், உயர்ந்த வாழ்க்கைச் செலவு, வருமானமின்மை, வரி அதிகரிப்பு மற்றும் காலநிலை மாற்றங்கள் காரணமாக வறுமை இன்னும் முழுமையாகக் குறையவில்லை.</p><p>தற்போது, பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைந்திருந்தாலும், அதன் பலன்கள் இன்னும் சாமானிய மக்களைச் சென்றடையவில்லை.</p><p>2022 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு இலங்கையின் வறுமை நிலை குறித்த விரிவான உண்மையான தகவல்களை கீழே உள்ள காணொளியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9NVvM3PNRJk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T10:23:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே ஒரு கையெழுத்து! பூஜித் மற்றும் ஹேமசிறியை தூக்கிலிடலாம் - அநுரவுக்குச் சென்ற அறிவுரை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pujith-and-hemasiri-can-be-hanged-1786006892"></link>
            <id>https://tamilwin.com/article/pujith-and-hemasiri-can-be-hanged-1786006892</id>
            <summary type="text">தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பூஜித் மற்றும் ஹேமசிறி ஆகிய&amp;nbsp; இருவருக்கும் எதிராக ஜனாதிபதி அநுர குமார ஒரே ஒரு கையெழுத்தினை இட்டால் அவர்களைத்&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பூஜித் மற்றும் ஹேமசிறி ஆகிய&nbsp; இருவருக்கும் எதிராக ஜனாதிபதி அநுர குமார ஒரே ஒரு கையெழுத்தினை இட்டால் அவர்களைத்&nbsp; தூக்கிலிட முடியும். அப்படிச் செய்தால் இந்த அரசாங்கம் மக்களிடத்தில் இன்னும் பிரபலமடையும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.&nbsp;</p><p>நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிலரால் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமை அனைவருக்கும் தெரியும். எனினும், தற்போது சிங்களவர்கள் அதனை செய்ததாக காட்டுவதற்கு முயற்சி செய்யப்பட்டு வருகின்றது.</p><h2>சிங்களவர்கள் மீதான தாக்குதல்கள்&nbsp;</h2><p> </p><p>கடந்த காலங்களில் சிங்கள மக்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்துள்ளன. போர்த்துகீசர், ஆங்கிலேயர் உள்ளிட்டோர் தாக்குதல் நடத்தினர். பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்கினர், தற்போது ஜேவிபியினரும் தாக்குதல் நடத்துகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13529f54-b200-43b1-8439-1d21e4b3c2ea/26-6a745452eab1c.webp' /></p><p> </p><p>

பூஜித் ஜயசுந்தரவும், ஹேமசிறி பெர்னாண்டோவும் தான் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் 300 பேரைக் கொன்றனர். குண்டுகளை&nbsp; இயக்கச் செய்ததும் அவர்கள்தான் என்பது போல காட்டுவதற்கு இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.</p><p> ஆனால், ஜேவிபியுடன் தொடர்பில் இருந்து, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய இப்ராஹிமுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
</p><p>

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய எந்தவொரு நபருக்கும் தற்போது பிரச்சினை இல்லை. அவர்கள் வெளியில் சுதந்திரமாக உள்ளனர். ஆனால், தண்டனை அனுபவித்து சிறைக்குள் இருப்பது பூஜித்தும், ஹேமசிறியும் ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/615e4e98-b3c5-426c-a992-7bea9b720f56/26-6a745453e7edb.webp' /></p><p>
</p><p>

மக்கள் மத்தியில் இந்த அரசாங்கம் இன்னும் பிரபலமடைய வேண்டும் என்றால் இன்னும் ஒரு சிறந்த வாய்ப்பு இருக்கின்றது. முடியுமென்றால் மரண தண்டனை விதிக்கப்பட்ட பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு மரண தண்டனை நிறைவேற்ற ஜனாதிபதிக்கு முடியும். </p><p>

வேண்டுமென்றால், கையொப்பம் ஒன்றை இட்டு அவர்களை தூக்கிலிட ஜனாதிபதிக்கு முடியும். அப்போது அரசாங்கம் இன்னும் மக்களிடத்தில் பிரபலமடைய முடியும்.</p><p>

குற்றம் சுமத்தப்பட்ட, ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன ஆகியோர் இன்று உயர் பதவிகளில் இருக்கின்றனர். சிறையில் இருக்கவேண்டியவர்கள் இன்று வெளியில் உயர் பதவிகளில் சுதந்திரமாக உள்ளனர். வெளியில் இருக்க வேண்டியவர்கள் இன்று சிறையில் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/PpZxqySgcSc" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-06T10:22:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் வீடுகள் இல்லாத குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-houses-for-colombo-1786010089"></link>
            <id>https://tamilwin.com/article/new-houses-for-colombo-1786010089</id>
            <summary type="text">அரசாங்கத்தின் தேசிய வீட்டுவசதி திட்டத்திற்காக 44,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தின் தேசிய வீட்டுவசதி திட்டத்திற்காக 44,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உப்பாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.</p><p> 

கொழும்பு மாவட்டம், கெஸ்பேவ பிரதேச செயலகப் பிரிவு, பெலவத்த மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள வீடற்ற பயனாளி குடும்பத்திற்கு, "வசதியான வீடு - அபிவிருத்தி பெற்ற குடும்பம்" என்ற வீட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை வழங்கும் நிகழ்வில் இன்று (06) பங்கேற்றபோது அமைச்சர் இதனை கூறியுள்ளார்.</p><h2>குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீடுகள்</h2><p> </p><p>

தேசிய வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு வீடற்ற 30,000 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/833696f9-1469-420b-8fd7-2f4850e40936/26-6a745f3ad2b91.webp' />&nbsp;</p><p> 

மேலும், வீட்டுவசதி, அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, மற்றும் தோட்டப்பயிர்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு உள்ளிட்ட துறைசார்ந்த அமைச்சுகளின் கூட்டுத் திட்டமாக இந்த தேசிய வீட்டுவசதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதற்கமைய, சமுர்த்தி மேம்பாட்டுத்துறையும் இந்த ஆண்டு 1,000 க்கும் மேற்பட்ட வீடுகளை பயனாளிகளுக்காக நிர்மாணிக்கும் என்றும் எதிர்பார்க்கின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T10:17:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் அரசு எண்ணெய் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-state-oil-company-bank-accounts-1786011522"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-state-oil-company-bank-accounts-1786011522</id>
            <summary type="text">கடன் காரணமாக ஈரான் அரசு எண்ணெய் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் கடன் காரணமாக, அரசுக்குச் சொந்தமான ஒரு வங்கி, தேசி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடன் காரணமாக ஈரான் அரசு எண்ணெய் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
</p><p>அதிகரித்து வரும் கடன் காரணமாக, அரசுக்குச் சொந்தமான ஒரு வங்கி, தேசிய ஈரானிய எண்ணெய் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.</p><h2>முடக்கப்பட்ட கணக்குகள்</h2><p>
நாட்டின் மிக முக்கியமான வருவாய் ஆதாரம் எதிர்கொள்ளும் நெருக்கடியை இந்த விவகாரம் அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவே கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd119bb8-0bbd-40df-bded-e0f05f97cc4c/26-6a745f85437b7.webp' /></p><p> </p><p>'ஃபார்ஸ்' (Fars) செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, 'பேங்க் ஆஃப் இண்டஸ்ட்ரி அண்ட் மைன்' (Bank of Industry and Mine) நிலுவைத் தொகை அல்லது முடக்கப்பட்ட கணக்குகள் குறித்த விவரங்களை வெளியிடவில்லை. </p><p>மட்டுமின்றி, NIOC-இன் சில கடன்களைத் திருப்பிச் செலுத்துவதை 2027 மார்ச் மாதம் வரையான ஈரானிய நாட்காட்டி ஆண்டின் இறுதி வரை ஒத்திவைக்கும் ஈரானின் வரவு-செலவுத் திட்டச் சட்டத்தின் விதிகள் இருந்தபோதிலும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>இதனிடையே, ஆசாதேகன் (Azadegan) எண்ணெய் வயலிலிருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டு, தேசிய மேம்பாட்டு நிதியத்திற்கு (NDF) சுமார் 17 பில்லியன் டொலர் கடனைத் திருப்பிச் செலுத்த NIOC-ஆல் இயலாது என்று அந்த நிதியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். </p><p>நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான இதன் வளர்ச்சி, அதிகாரத்துவ தாமதங்கள் மற்றும் நிர்வாகத் தடைகளால் மந்தமடைந்துள்ளது.</p><p></p><p> </p><p>தடைகள், பல ஆண்டுகால முதலீட்டுக் குறைபாடு மற்றும் உள்நாட்டு நிதியுதவியை நம்பியிருத்தல் ஆகியவை NIOC-இன் இருப்புநிலைக் குறிப்பில் அழுத்தத்தை அதிகரித்துள்ளதால், அந்நிறுவனம் மீதான நிதி நெருக்கடிகள் அதிகரித்து வருவதை இந்த நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. </p><p>அமெரிக்கத் தடைகள் காரணமாக நாட்டின் எரிசக்தித் துறையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெருமளவில் இல்லாத நிலையில், எண்ணெய் வயல் மேம்பாட்டுக்கு நிதியளிக்க என்.ஐ.ஓ.சி நிறுவனம், என்.டி.எஃப் உள்ளிட்ட உள்நாட்டு நிறுவனங்களை அதிகளவில் சார்ந்துள்ளது.</p><h2>அரசின் சட்டப் பிரிவு</h2><p> </p><p>இது, ஒரு இறையாண்மை நிதியாக (sovereign wealth fund) உருவாக்கப்பட்ட NDF-ஐத் திட்டங்களுக்கான நிதியளிப்பு ஆதாரமாக மாற்றிவிட்டது; அதேவேளையில், எண்ணெய் நிறுவனத்தை அதிகரித்து வரும் கடன் சுமைக்கு உள்ளாக்கியுள்ளது. </p><p>சமீபத்திய டிஜிட்டல் விலைப்பட்டியல் விதிகளைக் கடைபிடிப்பது தொடர்பாக என்.ஐ.ஓ.சி-க்கும் வரி அதிகாரிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0620e4a-85c3-44a2-abc2-ce8e1832a03e/26-6a745f848378c.webp' /></p><p> </p><p>இப்பிரச்சினை காரணமாக, வரி அதிகாரிகள் முன்னதாக NIOC-இன் சில கணக்குகளை முடக்கி, அவற்றில் இருந்த நிதியை எடுத்திருந்தனர்; எனினும், அரசின் சட்டப் பிரிவு தலையிட்டதைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை பின்னர் நிறுத்தப்பட்டது. </p><p>இதனிடையே, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தனது எண்ணெய் விற்பனை மற்றும் ரகசிய ஏற்றுமதிப் பரிவர்த்தனைகளைச் சாதாரண வணிக நடவடிக்கைகளாகக் கருதக்கூடாது என்று NIOC வாதிட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T10:16:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் ராணுவ வீரர்கள் குடும்பத்தினர் திடீர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/families-of-military-suddenly-arrested-in-the-us-1785994044"></link>
            <id>https://canadamirror.com/article/families-of-military-suddenly-arrested-in-the-us-1785994044</id>
            <summary type="text">அமெரிக்காவில்&amp;nbsp; 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களின் பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகள் திடீரென கைது செய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில்&nbsp; 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களின் பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகள் திடீரென கைது செய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p>&nbsp;அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் தீவிர குடியேற்ற கொள்கையின் விளைவாக, பல ஆண்டுகளாக அங்கு வசித்து வந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு குடியேற்ற பாதுகாப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p>&nbsp;இதன் காரணமாக, கைது செய்யப்பட்டவர்களில் சிலர் ஏற்கனவே அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும், பலர் குடியேற்ற காவல்துறையின் காவலில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><p>&nbsp;நாட்டிற்காக உயிரை பணயம் வைத்து எல்லையில் சேவை செய்யும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினரையே கைது செய்து வெளியனுப்புவது, அமெரிக்க வீரர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும் மன உளைச்சலையும் உருவாக்கியுள்ளது.</p><p> இந்த நடவடிக்கை நாட்டின் பாதுகாப்புக்கும் வீரர்களின் மன உறுதிக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என ராணுவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-06T10:13:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடியாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/arrest-warrant-former-dmk-minister-ponmudi-1786011091"></link>
            <id>https://jvpnews.com/article/arrest-warrant-former-dmk-minister-ponmudi-1786011091</id>
            <summary type="text">திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;சென்னையில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>சென்னையில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.&nbsp;</p><p>இதுசம்பந்தமாக சென்னை மாநகராட்சி உறுப்பினர் உமா ஆனந்தன், சைதாப்பேட்டை நீதவான் நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்தார்.&nbsp;</p><p>அந்த மனுவில், வெறுப்பு பேச்சு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான இந்த புகாரை விசாரித்து, மதரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவரை தண்டிக்க வேண்டும் என கோரப்பட்டது.&nbsp;</p><p>இந்த புகார் மனு, எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றமான ஜார்ஜ் டவுன் நீதவான் நீதிமன்றத்திற்கு மாற்றபட்டு நிலுவையில் உள்ளது.&nbsp;</p><p>தனக்கு எதிரான புகாரை விசாரணைக்கு ஏற்று ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் அனுப்பிய அழைப்பாணை மற்றும் வழக்கை இரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.&nbsp;</p><p>இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றி நீதிபதி ஜி.கே.இளந்திரையன் , திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் வழக்கை தள்ளுபடி செய்து&nbsp; &nbsp;வழக்கை ஆறு மாதத்தில் முடிக்க உத்தரவிட்டார்.&nbsp;</p><p>இந்த வழக்கு இன்று சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விசாரணை வந்தது.&nbsp;</p><p>அப்போது மனுதரார் உமா ஆனந்த தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உணர் நீதிமன்றம் நீக்கி இருப்பதாகவும் ஆறு மாதத்தில் விசாரணை முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரிவித்தார்.&nbsp;</p><p>பொன்முடி தரப்பில் ஆஜராக இருந்த வழக்கறிஞர் வழக்கில் இன்று ஆஜராவதிலிருந்து விளக்கு அளிக்க வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது ஆனால் நீதிபதி வழக்கில் இன்று ஆஜராதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரி பொன்முடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிப்பதாக உத்தரவிட்ட நீதிபதி, சைவ, வைணவ சமயங்கள், பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில்&nbsp; பொன்முடிக்கு பிடியாணை பிறப்பிக்கப்படுகிறது.&nbsp;</p><p><br></p><p>பொன்முடியை செப்டம்பர் 2ஆம் திகதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்த பொலிஸாருக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிடுகிறது என கூறி வழக்கு விசாரணை செப்டம்பர் 2 திகதிக்கு தள்ளிவைத்தார்.</p>]]></content>
            <updated>2026-08-06T10:11:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடு செல்ல யோசித ராஜபக்சவிற்கு அனுமதி மறுத்தது நீதிமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-denies-permission-yositha-to-travel-abroad-1786009897"></link>
            <id>https://ibctamil.com/article/court-denies-permission-yositha-to-travel-abroad-1786009897</id>
            <summary type="text">வெளிநாட்டு வர்த்தக மாநாட்டில் பங்கேற்கவுள்ள நிலையில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு யோஷித ராஜபக்ச விடுத்த கோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டு வர்த்தக மாநாட்டில் பங்கேற்கவுள்ள நிலையில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு யோஷித ராஜபக்ச விடுத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம நிராகரித்தார்.
</p><p>



இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்திருந்த இந்த முறைப்பாடு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோது, சந்தேகநபருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்தது.</p><h2>கல்வித்தகுதி இல்லாமல் கடற்படையில் இணைப்பு</h2><p>&nbsp;அதன்படி, உரிய அறிவிப்புகள் கிடைத்ததும் சந்தேகநபர்களை மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடுமாறு இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்திடம் கோரியதுடன், முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்தில் கொண்ட நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d4e8d73-2523-43a6-9606-6a446c9e1a8f/26-6a745c4a53bde.webp' /></p><p>2006 செப்டம்பர் 01 ஆம் திகதி முதல் 2007 ஜூன் 08 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் உரிய கல்வித் தகைமைகள் இல்லாத யோஷித ராஜபக்சவை கடற்படையில் இணைத்து, பிரித்தானிய அரச கடற்படைப் பயிற்சியை வழங்குவதன் மூலம் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி அவருக்கு அநியாயமான ஆதாயத்தை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஆணைக்குழு குற்றம் சாட்டுகிறது.</p><p></p><h2>வசந்த கரன்னாகொட மற்றும் யோசித ராஜபக்ச பிரதிவாதிகள்</h2><p>&nbsp;கடந்த 31 ஆம் திகதி இந்த பிரதிவாதிகளுக்கு எதிராக எட்டு குற்றச்சாட்டுகளின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் முதல் பிரதிவாதியாக வசந்த குமார ஜயதேவ கரன்னாகொடவும், இரண்டாவது பிரதிவாதியாக யோஷித கனிஷ்க ராஜபக்சவும் பெயரிடப்பட்டுள்ளனர். இந்த வழக்கிற்கு சம்பந்தமாக 25 சாட்சிகளின் பெயர்களும் 47 சாட்சி ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/010d3c11-d3d5-45ce-8cb9-090cb1740c8c/26-6a745c4b21769.webp' /></p><p>சந்தேகநபரான யோஷித ராஜபக்ச சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ரவீன் நுவரபக்ச நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்து, தனது கட்சிக்காரர் வெளிநாட்டு வர்த்தக மாநாட்டில் பங்கேற்கவுள்ளதால், விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு கடந்த வாரம் சமர்ப்பித்த விசேட மனு மூலம் கோரியதாகக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>விசேட மனு நிராகரிப்பு</h2><p> </p><p>இருப்பினும், தற்போது மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அந்த கோரிக்கையை பரிசீலிக்க முடியாது என சுட்டிக்காட்டிய பிரதான நீதவான், சம்பந்தப்பட்ட கோரிக்கையை மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59e61bde-7e24-40bc-811e-08a239301863/26-6a745c4bcddbd.webp' /></p><p> </p><p>இந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சவிந்திர பெர்னாண்டோ உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவொன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T10:10:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடல் கொந்தளிப்பு காரணமாக நெடுந்தீவில் கரையொதுங்கிய தமிழக கடற்தொழிலாளர்களின் படகு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamilnadu-fishermen-s-boat-stranded-on-neduntheevu-1786009748"></link>
            <id>https://tamilwin.com/article/tamilnadu-fishermen-s-boat-stranded-on-neduntheevu-1786009748</id>
            <summary type="text">நிலவும் சீரற்ற காலநிலையால் நிலவும் கடல் கொந்தளிப்பு காரணமாக தமிழக கடற்தொழிலாளர்களின் படகொன்று நெடுந்தீவு
கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளது.&amp;nbsp;இதன்போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலவும் சீரற்ற காலநிலையால் நிலவும் கடல் கொந்தளிப்பு காரணமாக தமிழக கடற்தொழிலாளர்களின் படகொன்று நெடுந்தீவு
கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளது.&nbsp;</p><p>இதன்போது படகில் இருந்த 11 கடற்தொழிலாளர்கள்
மீட்கப்பட்டுள்ளனர்.</p><p>

தமிழக கடற்தொழிலாளர்களின் படகொன்று நெடுந்தீவு கடற்பரப்பில்
கரையொதுங்கியுள்ளதாக கடற்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.</p><p></p><h2>கடற்தொழிலாளர்கள் மீட்பு</h2><p>இதனையடுத்து, சம்பவ
இடத்திற்கு சென்ற கடற்படையினர் படகில் இருந்த கடற்தொழிலாளர்களை மீட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cf3a0bc-af9f-49ad-922f-eefa5e99b3c3/26-6a745c37b9c49.webp' /></p><p>

படகினை மயிலிட்டி மீன்பிடித்துறைமுக பகுதிக்கு எடுத்துள்ள செல்ல கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p>அத்துடன், மீட்கப்பட்ட கடற்தொழிலாளர்களை, கடற்தொழில் நீரியல்
வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த
நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T10:09:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களுக்கான வீடுகள் தொடர்பில் கனடா பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/carney-announce-5000-rental-houses-for-toronto-1786010941"></link>
            <id>https://canadamirror.com/article/carney-announce-5000-rental-houses-for-toronto-1786010941</id>
            <summary type="text">ரொரன்றோ மக்களுக்காக சுமார் 5,600 வாடகை வீடுகளை கட்ட இருப்பதாக கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.

கனடா அரசும் ரொரன்றோ நகரமும் இணைந்து மக்களுக்காக 5,600க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரொரன்றோ மக்களுக்காக சுமார் 5,600 வாடகை வீடுகளை கட்ட இருப்பதாக கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.
</p><p>
கனடா அரசும் ரொரன்றோ நகரமும் இணைந்து மக்களுக்காக 5,600க்கும் அதிகமான வாடகை வீடுகளை கட்ட இருப்பதாக கனடா பிரதமரான மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89e5090e-1946-4fb9-9a05-b0c4477a364f/26-6a745d3e93db8.webp' /></p><p>
கனடா அரசும் ரொரன்றோ நகரமும் இணைந்து 2.7 பில்லியன் டொலர்கள் முதலீட்டில் 18 வீடுகட்டும் திட்டங்களை செயல்படுத்த உள்ளன.
</p><p>
அடுத்த மூன்று ஆண்டுகளில், 5,600க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்ட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் 4,500க்கும் அதிகமான வீடுகள் கட்டி முடிக்கப்பட இருப்பதாக கனடா பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த திட்டத்தின் கீழ் கட்டப்படும் அனைத்து வீடுகளுமே வாடகைக்கு விடப்படுவதற்காகவே கட்டப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T10:09:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[Ather-ன் புதிய Konarc மின்சார ஸ்கூட்டர் - ஆகஸ்ட் 29 அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ather-konarc-electric-scooter-india-launch-1786010281"></link>
            <id>https://news.lankasri.com/article/ather-konarc-electric-scooter-india-launch-1786010281</id>
            <summary type="text">Ather Energy நிறுவனம் தனது புதிய Konarc எனப்படும் மின்சார ஸ்கூட்டரின் பெயரை இன்று அறிவித்துள்ளது.

Ather Konarc ஆகஸ்ட் 29-ஆம் திகதி நடைபெறும் Commun...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ather Energy நிறுவனம் தனது புதிய Konarc எனப்படும் மின்சார ஸ்கூட்டரின் பெயரை இன்று அறிவித்துள்ளது.
</p><p>
Ather Konarc ஆகஸ்ட் 29-ஆம் திகதி நடைபெறும் Community Day நிகழ்வில் அறிமுகமாகிறது.
</p><p>
Konarc, முன்பு EL01 Concept என அறிமுகப்படுத்தப்பட்ட மாடலின் தயாரிப்பு பதிப்பாகும். இது Rizta-வின் கீழ் வரிசையில் இடம் பெறும் குடும்ப ஸ்கூட்டராகக் கருதப்படுகிறது.</p><p>
</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Presenting Ather Konarc!<br><br>Launching on 29th August 2026 at Ather Community Day. <a href="https://t.co/D6uG0bjgpw">pic.twitter.com/D6uG0bjgpw</a></p>&mdash; Tarun Mehta (@tarunsmehta) <a href="https://x.com/tarunsmehta/status/2084931493055606914?ref_src=twsrc%5Etfw">August 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2>வடிவமைப்பு அம்சங்கள்
</h2><ul><li>
முன்புறத்தில் அகலமான LED Daytime Running Light</li><li>

ஒளிரும் வடிவில் Ather லோகோ </li><li>

முன்புற டிஸ்க் பிரேக்
</li><li>
ஒற்றை சீட், Rizta-வுடன் ஒப்பிடும்போது சற்று குறுகியது</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6ece03b-0f0f-44cb-b104-50b2f1f6967d/26-6a745cb97ade2.webp' /></p><h2>Konarc-ன்&nbsp;<span style="color: inherit; font-size: 1.75rem;">பிளாட்ஃபார்ம் &amp; சஸ்பென்ஷன்:</span></h2><ul><li>
புதிய Steel Unibody Platform
</li><li>
14-inch முன்சக்கரம் (Ather-ல் முதல் முறை)</li><li>

12-inch பின்சக்கரம்
</li><li>
முன்புறம் Telescopic Forks, பின்புறம் Single Shock Absorber</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a7c3967-a494-479b-8480-94b5599d4af7/26-6a745cba2daee.webp' /></p><p>
</p><h2>
பேட்டரி &amp; விலை:
</h2><ul><li>
2kWh முதல் 4kWh வரை பேட்டரி விருப்பங்கள்
</li><li>
எதிர்காலத்தில் 5kWh பேட்டரி கிடைக்க வாய்ப்பு
</li><li>
Built-in Charger வசதி
</li><li><b>
விலை:</b> ரூ.1 லட்சம் (அறிமுக விலை, ex-showroom)
</li><li>
மேம்பட்ட மாடல்கள் ரூ.1.25 லட்சம் வரை இருக்கலாம்
</li></ul><p></p><p>Konarc, Ather-இன் புதிய மகாராஷ்டிரா தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. விரிவான விவரங்கள், வேரியண்ட்கள், விலை விவரங்கள் ஆகஸ்ட் 29-ஆம் திகதி அறிமுக நாளில் அறிவிக்கப்படும்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T10:04:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[5,000க்கும் மேற்பட்ட வாடகை வீடுகள்: கனடா பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/carney-promises-5000-new-rental-homes-for-toronto-1786010547"></link>
            <id>https://news.lankasri.com/article/carney-promises-5000-new-rental-homes-for-toronto-1786010547</id>
            <summary type="text">ரொரன்றோ மக்களுக்காக சுமார் 5,600 வாடகை வீடுகளை கட்ட இருப்பதாக கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.


கனடா அரசும் ரொரன்றோ நகரமும் இணைந்து ரொரன்றோ நகர மக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரொரன்றோ மக்களுக்காக சுமார் 5,600 வாடகை வீடுகளை கட்ட இருப்பதாக கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.</p><p>


கனடா அரசும் ரொரன்றோ நகரமும் இணைந்து ரொரன்றோ நகர மக்களுக்காக 5,600க்கும் அதிகமான வாடகை வீடுகளை கட்ட இருப்பதாக கனடா பிரதமரான மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
</p><h3>
5,000க்கும் மேற்பட்ட வாடகை வீடுகள்
</h3><p>
கனடா அரசும் ரொரன்றோ நகரமும் இணைந்து 2.7 பில்லியன் டொலர்கள் முதலீட்டில் 18 வீடுகட்டும் திட்டங்களை செயல்படுத்த உள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05b4a449-e360-4c4c-83f9-40f4c5a3471e/26-6a745bb52f0dd.webp' /></p><p>
அடுத்த மூன்று ஆண்டுகளில், 5,600க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்ட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் 4,500க்கும் அதிகமான வீடுகள் கட்டி முடிக்கப்பட இருப்பதாக கனடா பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
இந்த திட்டத்தின் கீழ் கட்டப்படும் அனைத்து வீடுகளுமே வாடகைக்கு விடப்படுவதற்காகவே கட்டப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T10:03:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை மாணவர்கள் 30 க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/over-50-students-from-trincomalee-hospital-bee-1785998898"></link>
            <id>https://jvpnews.com/article/over-50-students-from-trincomalee-hospital-bee-1785998898</id>
            <summary type="text">திருகோணமலை பாடசாலை ஒன்றின் 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை பாடசாலை ஒன்றின் 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.&nbsp;</p><p>திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகதிவுல்வெவ தேசிய பாடசாலையில் இன்று (06) காலை இடம்பெற்ற திடீர் குளவிக்கொட்டுச் சம்பவத்தில் 30 மாணவர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>பாடசாலைக் கட்டடத்தில் இருந்த குளவிக் கூடு கலைந்தமையினால் மாணவர்கள் இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>குறித்த மாணவர்கள் சிகிச்சைக்காக மஹதிவுல்வெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் மூன்று மாணவிகள் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-06T10:01:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/announcement-regarding-third-term-school-holidays-1786008590"></link>
            <id>https://jvpnews.com/article/announcement-regarding-third-term-school-holidays-1786008590</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை தொடர்பாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை தொடர்பாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p>அதற்கமைய, பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான முதலாம் கட்டம் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு நாளை (07) ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.&nbsp; முஸ்லிம் பாடசாலைகளுக்கு செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி நிறைவடைகிறது.&nbsp;</p><p>அனைத்துப் பாடசாலைகளுக்கும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதுடன், டிசம்பர் 4 ஆம் திகதி மூன்றாம் தவணை நிறைவடைகிறது.&nbsp;</p><p>2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர)ப் பரீட்சை ஒகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 5 வரை நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-06T10:00:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கழிவுகளால் துர்நாற்றம்; பாதசாரிகள், பொதுமக்கள் பெரும் அவதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/foul-odor-from-waste-in-kalmunai-1786010420"></link>
            <id>https://jvpnews.com/article/foul-odor-from-waste-in-kalmunai-1786010420</id>
            <summary type="text">கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் குப்பைகள் மற்றும் திடக்கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் பொத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் குப்பைகள் மற்றும் திடக்கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்களும் பாதசாரிகளும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.</p><p>கழிவுகள் உரிய முறையில் சேகரிக்கப்பட்டு அகற்றப்படாததால் சுற்றுச்சூழல் மாசடைந்து,&nbsp; பாரிய சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் நிலவுவதாகப் பிரதேச மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.</p><p>குறிப்பாக மழைக்காலத்தில் கழிவுகள் தேங்கி நிற்பதால் கொசுப் பெருக்கம் அதிகரித்துத் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p>அத்துடன் பாதையோரங்களில் கழிவுகள் குவிந்து கிடப்பதால் பாதசாரிகள் பாதுகாப்பாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் வாகனப் போக்குவரத்திற்கும் பெரும் இடையூறுகள் ஏற்படுகின்றன.</p><p>இந்நிலைமை தொடர்பில் கல்முனை மாநகர சபையோ அல்லது சம்பந்தப்பட்ட பொது சுகாதார பரிசோதகர்களோ இதுவரை எவ்வித உரிய கவனமும் செலுத்தவில்லை எனப் பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.</p><p>எனவே சூழல் மாசடைவதைத் தடுக்கும் வகையில் குறித்த பகுதியில் குவிந்துள்ள கழிவுகளை உடனடியாக அகற்றுவதற்கும் சீரான கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-06T10:00:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[2 வருடத்தில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை!! அதிதி சர்மா எடுத்த அதிரடி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/aditi-sharma-files-police-complaint-to-husband-1786011498"></link>
            <id>https://viduppu.com/article/aditi-sharma-files-police-complaint-to-husband-1786011498</id>
            <summary type="text">அதிதி சர்மாபிரபல பாலிவுட் சீரியல் நடிகை அதிதி&amp;nbsp;சர்மா சின்னத்திரை சீரியல்களில் நடித்தும் ஃபியர் ஃபேக்டர் கத்ரோன் கே கில்லாடி நிகழ்ச்சியின் 14வது சீ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அதிதி சர்மா</h2><p>பிரபல பாலிவுட் சீரியல் நடிகை அதிதி&nbsp;சர்மா சின்னத்திரை சீரியல்களில் நடித்தும் ஃபியர் ஃபேக்டர் கத்ரோன் கே கில்லாடி நிகழ்ச்சியின் 14வது சீசனில் போட்டியாளராகவும் கலந்து கொண்டு பிரபலமானார். கடந்த 2024 ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகர் அபிநீத் வித்யானந்த் கெளசிக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e33be22-6e52-4774-9d5b-4d83e2d0c318/26-6a745f6cdef5b.webp' /></p><p>ஆனால் திருமணமானதில் இருந்தே கணவரும் அவரது குடும்பத்தினரும் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் கெட்ட வார்த்தைகளில் திட்டி அசிங்கப்படுத்தியதாகவும் கோரேகான் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.</p><p> இதனையடுத்து அபிநீத் வித்யானந்த் கெளசிக் மீதும் அவரது அம்மா, சகோதரி மீது் கடந்த ஜூலை மாதம் 30 ஆம் தேதி FIR போடப்பட்டு விசாரனை நடத்தி வருகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc78b8a9-406d-480e-bc3d-01f2d28e4c34/26-6a745f6d91bc8.webp' /></p><p> </p><p>தனக்கு வெறொருவருடன் தொடர்பு இருப்பதாக கணவர் சந்தேகத்தை கிளப்பியதுடன் என் செல்போனை அடிக்கடி சோதித்தும் பார்க்கிறார், சாதாரண டீ பிரச்சனையில் ஆரம்பித்த சண்டை இன்று விவாகரத்து வரை சென்றுவிட்டது. திருமணத்தின்போது நான் அணிந்து வந்த தங்க, வைர நகைகளை என் மாமியார் எடுத்துக் கொண்டு தர மறுக்கிறார் என்று நடிகை அதிதி saர்மா கூறியிருக்கிறார்.</p>]]></content>
            <updated>2026-08-06T10:00:00+00:00</updated>
        </entry>
    </feed>
