<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-28T21:38:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைது செய்யப்பட்ட தென் மாகாண முன்னாள் பிரதி பிரதம செயலாளர்கள் இருவருக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-southern-provincial-secretaries-granted-bail-1785274680"></link>
            <id>https://jvpnews.com/article/two-southern-provincial-secretaries-granted-bail-1785274680</id>
            <summary type="text">இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (28) கைது செய்யப்பட்ட தென் மாகாண சபையின் முன்னாள் பிரதி பிரதம செயலாளர்கள் இருவரை பிணையில் விடுவிக்குமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (28) கைது செய்யப்பட்ட தென் மாகாண சபையின் முன்னாள் பிரதி பிரதம செயலாளர்கள் இருவரை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>2019 ஆம் ஆண்டில் ஆளுநரின் அனுமதியின்றி மீண்டும் கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு, காலியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து கைப்பிடிகளற்ற 408 பிளாஸ்டிக் நாற்காலிகளைப் பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பிலேயே இவ்விரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db1ab2e7-b9b0-4b17-88d6-4cbde06e570d/26-6a692139da276.webp' /></p><p>தென் மாகாண சபை பிரதம செயலாளர் அலுவலகத்தின் முன்னாள் பிரதி பிரதம செயலாளர் (நிதி) மற்றும் முன்னாள் பிரதி பிரதம செயலாளர் (திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்தல்) ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T21:38:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவுதிகளை முதல் முறையாக தொடர்பு கொண்ட சீனா! கசிந்துள்ள முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/china-contacted-houthi-organization-1785273255"></link>
            <id>https://ibctamil.com/article/china-contacted-houthi-organization-1785273255</id>
            <summary type="text">தெற்கு செங்கடல் வழியாகத் தங்கள் எண்ணெய்க் கப்பல்கள் எவ்விதத் தாக்குதலுமின்றிப் பாதுகாப்பாகச் செல்வதற்காகச் சீனா, ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்புடன் நே...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு செங்கடல் வழியாகத் தங்கள் எண்ணெய்க் கப்பல்கள் எவ்விதத் தாக்குதலுமின்றிப் பாதுகாப்பாகச் செல்வதற்காகச் சீனா, ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்புடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
சவூதி அரேபியத் துறைமுகங்களுக்கான போக்குவரத்தைத் தடுப்பதாக கடந்த 20 ஆம் திகதி ஹவுதி அமைப்பினர் அறிவித்ததைத் தொடர்ந்து, தங்கள் எண்ணெய்க் கப்பல்கள் எவ்விதத் தாக்குதலுமின்றிப் பாதுகாப்பாகச் செல்வதற்காக சீனா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>

இதன்போது, சீனா தனது எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பான பயணப் பாதையை உறுதி செய்யுமாறு ஹவுதிகளிடம் நேரடியாகக் கோரியுள்ளதாக தெரியவருகிறது.</p><p></p><h2>சீனாவின் முயற்சி&nbsp;</h2><p>

இந்த நிலையில், செங்கடலின் தெற்கு முனையில் ஏமனின் கிழக்குக் கரையை ஒட்டியுள்ள பாப் அல்-மண்டேப் நீர்வழிப்பாதை வழியாகப் பயணிப்பது குறித்து ஹவுதிகளை நேரடியாகத் தொடர்பு கொண்ட முதல் நாடு சீனா என கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c7c0c06-c160-43e9-bb90-1f16ab2d9510/26-6a691ef0d0162.webp' /></p><p>
</p><p>
வளைகுடாவிலிருந்து வெளியேறும் வழியிலுள்ள ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் ஏற்பட்ட விநியோகப் பற்றாக்குறையை நிரப்பும் வகையில், சவூதி அரேபியாவின் செங்கடல் முனையங்களிலிருந்து, குறிப்பாய் யான்பு துறைமுகத்திலிருந்து எண்ணெய் ஏற்றுமதியைத் தொடர்ந்து பெறச் செய்ய சீனா முயன்று வருகிறது.
</p><p>
இருப்பினும் இது குறித்துச் சீனப் போக்குவரத்து அமைச்சு, ஹவுதிகளின் ஊடக அலுவலகம் மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சு ஆகியவை இதுவரை எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-28T21:36:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வசமாக சிக்கிய சுரேஷ் சலே..! இந்தியாவில் செய்த இரகசிய மோசடிகள் அம்பலம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-saleh-linked-to-alleged-india-scam-claims-1785265667"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-saleh-linked-to-alleged-india-scam-claims-1785265667</id>
            <summary type="text">சுரேஷ் சலேவை விசாரிக்கின்ற குற்றத்தடுப்புப் பிரிவினுடைய பணிப்பாளர் ஷானி அபயசேகரவை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்குமாறு கோரி நீதி மன்றத்திலே மனு ஒன்று தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுரேஷ் சலேவை விசாரிக்கின்ற குற்றத்தடுப்புப் பிரிவினுடைய பணிப்பாளர் ஷானி அபயசேகரவை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்குமாறு கோரி நீதி மன்றத்திலே மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
பிரதிவாதிகள் தரப்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுதர்சனி ஹேரத் முதன் முறையாக அடிப்படை ஆதாரங்களை நீதிமன்றத்தில் முன்வைத்தது மட்டுமல்லாமல் சுரேஷ் சலே சார்பில் முன்னிலையாகி இருந்த சட்டத்தரணிகளை திணரடித்த சம்பவம் நீதிமன்றத்திலே இடம் பெற்றிருந்தது.</p><p>

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுதர்சனி ஹேரத் நீதிமன்றத்திலே சுரேஷ் சலேவுக்கு எதிரான வாதங்களை முன்வைத்த வேளை, சுரேஷ் சலே 64 பக்கங்கள் இருக்கக்கூடிய கடவுச்சீட்டில் பல பக்கங்களை கிழித்திருந்த விடயம் அம்பலமாகியுள்ளது.
</p><p>
அத்துடன் ”மனுதாரர் தரப்பு தூய்மையான கைகளுடன் நீதிமன்றத்தை அணுகவில்லை. மிக மோசமாக அணுகி இருக்கிறார்கள். இதில் பல பொய்கள் இருக்கின்றன. இதனை நீதிமன்றம் ஒரு போதும் கருத்தில் எடுக்கக் கூடாது. இவர்களுடைய அனைத்து வாதத்திறமைகளும் போலிகளால் நிரம்பப்பட்டவை” என அவர் நீதிமன்றத்தில் கடுமையான வாதத்தை முன்வைத்திருந்தார்.
</p><p>
மேலும் ஜூன் 11ஆம் திகதி குறித்த வழக்கானது நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்ட போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக 5 அறிக்கைகள் நீதிமன்ற கவனத்திற்கு எடுத்த வரப்பட்டதாகவும் சதர்சனி ஹேரத் கூறியுள்ளார்.
</p><p>
அவர் முன்வைத்த மேலும் பல ஆதார பூர்வமான வாதங்களை ஆராய்கிறது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..&nbsp; &nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/bvS71qDw2ww" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T21:33:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் 5 மாதக் குழந்தைக்கு நிகழ்ந்த அவலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/5-month-baby-dies-swing-pole-breaks-and-falls-1785267269"></link>
            <id>https://tamilwin.com/article/5-month-baby-dies-swing-pole-breaks-and-falls-1785267269</id>
            <summary type="text">வவுனியா - கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெடுங்கேணி, குளவிசுட்டான்
கிராமத்தில் ஊஞ்சல் தடி முறிந்து விழுந்ததில் ஐந்து மாதக் குழந்தை ஒன்று சம்பவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா - கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெடுங்கேணி, குளவிசுட்டான்
கிராமத்தில் ஊஞ்சல் தடி முறிந்து விழுந்ததில் ஐந்து மாதக் குழந்தை ஒன்று சம்பவ
இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. </p><p>குழந்தை தனது தாயுடன் ஊஞ்சலில் அமர்ந்திருந்த போது
எதிர்பாராதவிதமாக ஊஞ்சல் தடி சரிந்து விழுந்துள்ளததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>உயிரிழந்த குழந்தை</h2><p>இதில் படுகாயமடைந்த ஐந்து
மாதக் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் குழந்தையின் தாய் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd02c597-8846-44f8-a114-8d99ae63b815/26-6a6906e2d7a27.webp' /></p><p>உயிரிழந்த குழந்தையின்
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத
அறையில் வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T21:32:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாண மக்களின் பயணத்தை இலகுபடுத்த புதிய போக்குவரத்து நடவடிக்கைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-transportation-ease-travel-people-of-jaffna-1785261357"></link>
            <id>https://jvpnews.com/article/new-transportation-ease-travel-people-of-jaffna-1785261357</id>
            <summary type="text">யாழ்ப்பாண மாவட்ட மக்களின் போக்குவரத்து வசதிகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் உப குழுக் கூட்டம் இன்று நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண மாவட்ட மக்களின் போக்குவரத்து வசதிகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் உப குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.</p><p>
</p><p></p><p>இதன்போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீதி அபிவிருத்தித் திட்டங்கள், உள்ளூராட்சி சபைகளின் ஊடாக மேற்கொள்ளப்படும் வீதி புனரமைப்புப் பணிகள், அத்துடன் டித்வா புயலால் சேதமடைந்த பாலங்கள் மற்றும் வீதிகளை விரைவாக சீரமைக்கும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef6fe76b-8774-467c-ba3b-631b67e7a794/26-6a68ed325dcb6.webp' /></p><p>மேலும், தீவகப் பகுதிகளுக்கான போக்குவரத்து சேவையை மேலும் வலுப்படுத்துவது, பொதுமக்களின் அன்றாடப் பயணத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சீரான, பாதுகாப்பான மற்றும் தரமான போக்குவரத்து சேவையை உறுதிப்படுத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
</p><p>
மக்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் பாதுகாப்பான, தரமான மற்றும் நிலையான போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்க அரசாங்கம் உறுதியுடன் செயற்பட்டு வருவதாகவும், யாழ்ப்பாண மாவட்டத்தின் போக்குவரத்து உட்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T21:12:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் சில பகுதிகளில் கடும் வெப்பம் ; பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heatwave-in-the-country-public-urged-be-vigilant-1785273069"></link>
            <id>https://jvpnews.com/article/heatwave-in-the-country-public-urged-be-vigilant-1785273069</id>
            <summary type="text">நாட்டின் சில பகுதிகளில் இன்று (29) வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, கிழக்கு மாகாணம் மற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சில பகுதிகளில் இன்று (29) வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>
</p><p></p><p>இதன்படி, கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db962981-f812-4afd-9777-45e789c385d4/26-6a691aef13a39.webp' /></p><p>அதிக வெப்பநிலை காரணமாக உடல்நல பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
</p><p>
குறிப்பாக, அதிக நேரம் நேரடி வெயிலில் இருப்பதைத் தவிர்த்தல், போதுமான அளவு நீர் அருந்துதல், குழந்தைகள் மற்றும் முதியவர்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
நிலவும் வெப்பமான வானிலை தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T21:11:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானில் நில அதிர்வு ; 40,000க்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரமின்றி தவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/earthquake-japan-40-000-homes-without-electricity-1785271939"></link>
            <id>https://canadamirror.com/article/earthquake-japan-40-000-homes-without-electricity-1785271939</id>
            <summary type="text">ஜப்பானின் கியூசு தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில அதிர்வினைத் தொடர்ந்து, குறித்த பகுதியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரமின்றி தவித்து வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானின் கியூசு தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில அதிர்வினைத் தொடர்ந்து, குறித்த பகுதியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரமின்றி தவித்து வருவதாக கியூசு மின்சார நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fedcce98-0d77-4d98-81be-d10f7a1daa4d/26-6a691684c0878.webp' /></p><p>கியூசு தீவின் உட்பகுதியில் பதிவான இந்த 7.1 ரிக்டர் அளவிலான நில அதிர்வினால், ஹிகாவா நகரில் குடிநீர் மற்றும் மின் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பானின் பொது ஊடகமான NHK செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள அவசரகால மின் உற்பத்தி நிலையங்களில் பழுது ஏற்பட்டுள்ளதால், ஹிகாவா நகர மண்டபம் உள்ளிட்ட பல கட்டடங்கள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியுள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-28T20:52:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு உக்ரைன் விடுத்துள்ள எச்சரிக்கை! மாறியது அராக்சியின் நிலைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ukraine-warn-against-iranian-support-for-russia-1785269872"></link>
            <id>https://ibctamil.com/article/ukraine-warn-against-iranian-support-for-russia-1785269872</id>
            <summary type="text">ஈரானியக் கப்பல் மீதான உக்ரைனின் ட்ரோன் தாக்குதலை ஈரான் கண்டித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியை தொலைபேசியில் அழைத்து உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானியக் கப்பல் மீதான உக்ரைனின் ட்ரோன் தாக்குதலை ஈரான் கண்டித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியை தொலைபேசியில் அழைத்து உரையாடியதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா தெரிவித்துள்ளார். </p><p>

அதன்போது, பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும், ரஷ்யாவிற்கான அனைத்து ஆதரவுகளையும் முடிவுக்குக் கொண்டுவருமாறும் அவர் எச்சரித்துள்ளார்.</p><p></p><h2>ஈரானியக் கப்பல் மீதான தாக்குதல்</h2><p>
</p><p>
அராக்சியுடனான உரையாடல் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சிபிஹா, "எந்தவொரு பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளிலிருந்தும் விலகி இருக்க வேண்டியதன் அவசியத்தையும், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போருக்கான ஆதரவை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தையும் நான் வலியுறுத்தினேன். இந்தப் போர் சட்டவிரோதமானது, இது முடிவுக்கு வர வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cce371e4-57ab-4da9-9c06-a234e97452cd/26-6a69140837414.webp' /></p><p>
இதேவேளை, ஈரானியக் கப்பல் மீதான தாக்குதல் தற்செயலானது என்றும், உக்ரைன் பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை என்றும் சிபிஹா தனக்கு உறுதியளித்ததாக அராக்சி எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><h2>ஈரானுக்கு உரிய இழப்பீடு</h2><p> </p><p>

மேலும், “ஈரானும் பதற்றத்தை அதிகரிக்க விரும்பவில்லை. இருப்பினும் எங்கள் குடிமக்கள் அல்லது நலன்கள் மீதான எந்தவொரு தாக்குதலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc46e09e-ad84-496a-bdb6-f3639731d211/26-6a6914093acac.webp' /></p><p>
</p><p>
இந்த இழப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்" என்றும் அராக்சி தெரிவித்துள்ளார்.</p><p>

கஸ்பியன் கடலில் ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்காமல் இருக்க முடியாது என அராக்சி முன்னதாக அறிவித்திருந்த நிலையில், அவரது நிலைப்பாட்டை மேற்கண்டவாறு மாற்றியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-28T20:52:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவின் அடுத்த முன்னேற்றம்., உள்நாட்டிலேயே DUV சிப் உற்பத்தி கருவிகள் தயாரிப்பு தொடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-begins-local-duv-chip-tool-production-1785271290"></link>
            <id>https://news.lankasri.com/article/china-begins-local-duv-chip-tool-production-1785271290</id>
            <summary type="text">சீனா, தன்னுடைய உள்நாட்டு தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும் முயற்சியில், immersion deep-ultraviolet (DUV) lithography machines எனப்படும் சிப் உற்பத்தி கர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனா, தன்னுடைய உள்நாட்டு தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும் முயற்சியில், immersion deep-ultraviolet (DUV) lithography machines எனப்படும் சிப் உற்பத்தி கருவிகளை உள்நாட்டிலேயே தயாரிக்கத் தொடங்கியுள்ளது.</p><p>இது, வெளிநாட்டு தொழில்நுட்பங்களின் மீது சீனாவின் சார்பை குறைக்கும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.</p><p>இந்த உற்பத்தி முயற்சியை, Shanghai Aishengna Electronic Technology Group எனப்படும் அரசு ஆதரவு பெற்ற நிறுவனம் முன்னெடுத்து வருகிறது. இந்த நிறுவனம், சீனாவின் முன்னணி lithography start-ups-இன் தொழில்நுட்பக் குழுக்களை இணைத்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b04fffe2-922f-4a9c-acc5-39fbda75a94f/26-6a6913fc7172d.webp' /></p><p>DUV கருவிகள், உலகளவில் ASML எனும் நெதர்லாந்து நிறுவனத்தால் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தப்பட்டவை. சீனாவின் புதிய முயற்சி, ASML-க்கு உடனடி அச்சுறுத்தலாக இல்லாவிட்டாலும், மேற்கத்திய நாடுகள் சிப் உற்பத்தி கருவிகள் மீது விதிக்கும் கட்டுப்பாடுகளை சமாளிக்க சீனாவுக்கு மாற்று வழியாக அமையும்.
</p><p>
சீனாவில் தயாரிக்கப்பட்ட DUV கருவிகள், SMIC, Hua Hong Semiconductor, ChangXin Memory Technologies (CXMT) போன்ற முன்னணி சிப் உற்பத்தியாளர்களுக்கு இந்த ஆண்டிலேயே வழங்கப்பட உள்ளன.
</p><p>
Aishengna நிறுவனம் 2023-ல் 7 பில்லியன் யுவான் முதலீட்டுடன் தொடங்கப்பட்டது. Huawei ஆதரவு பெற்ற SiCarrier-இன் இணை நிறுவனமான Yuliangsheng மற்றும் Shanghai Micro Electronics Equipment (SMEE) ஆகியவற்றின் தொழில்நுட்பக் குழுக்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
</p><p></p><p>சீனாவிற்கு ASML-ன் மிக நவீன EUV கருவிகளை வாங்க அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து தடைவிதித்துள்ள நிலையில், இந்த உள்நாட்டு DUV உற்பத்தி, சீனாவின் சிப் தற்சார்பு முயற்சியில் முக்கியமான படியாக பார்க்கப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-28T20:39:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடரும் ரஷ்யா - உக்ரைன் போர் ; அமெரிக்காவில் டிரம்பை சந்திக்கும் ஜெலென்ஸ்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russia-ukraine-war-continues-zelensky-meet-trump-1785271011"></link>
            <id>https://canadamirror.com/article/russia-ukraine-war-continues-zelensky-meet-trump-1785271011</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை, உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று (ஜூலை 28) வெள்ளை மாளிகையில் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை, உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று (ஜூலை 28) வெள்ளை மாளிகையில் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 24 ஆம் திகதி தொடங்கிய ரஷ்யா–உக்ரைன் போர் மூன்றாவது ஆண்டையும் கடந்தும் தொடரும் நிலையில், இந்தச் சந்திப்பு சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p>போரின் ஆரம்பம் முதல் உக்ரைனுக்கு அமெரிக்கா இராணுவ, பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.

ரஷ்யா–உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர பல்வேறு இராஜதந்திர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், இதுவரை நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbff646d-c1c1-47a2-a631-e1c4318ec58b/26-6a6912e53e440.webp' /></p><p>இந்த நிலையில், ஜூலை மாதத்தில் டிரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி இடையே நடைபெறும் இரண்டாவது நேரடி சந்திப்பாக இது அமைகிறது.
</p><p>
இந்தச் சந்திப்பின் போது, ரஷ்யா–உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான வழிமுறைகள், போர்நிறுத்தம் தொடர்பான முயற்சிகள், அமெரிக்காவின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் பிராந்திய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
இதனிடையே, அண்மையில் ஜெலென்ஸ்கி வெளியிட்டிருந்த கருத்தும் இந்தச் சந்திப்பில் கவனம் பெறக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். </p><p>ஜூலை மாதத் தொடக்கத்திலிருந்து வளைகுடா நாடுகள் மற்றும் அங்கு அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் தொடர்பாக ரஷ்யா செயற்கைக்கோள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாகவும், அந்தத் தகவல்கள் பின்னர் ஈரானுடன் பகிரப்பட்டதாக உக்ரைன் தரப்பில் பதிவாகியுள்ளதாகவும் ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியிருந்தார்.
</p><p>
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும், மத்திய கிழக்கு பாதுகாப்பு நிலைமை மற்றும் ரஷ்யாவின் பிராந்திய நடவடிக்கைகள் குறித்தும் டிரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி இடையே கருத்துப் பரிமாற்றம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

ரஷ்யா–உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளுக்கு இந்தச் சந்திப்பு புதிய திருப்புமுனையாக அமையுமா என்பது குறித்து சர்வதேச சமூகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-07-28T20:36:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யானை - மனித மோதலைக் கட்டுப்படுத்த மூங்கில் உயிரி வேலி ; இலங்கைக்கு உதவ சீனா ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bamboo-biofence-to-control-human-elephant-conflict-1785269423"></link>
            <id>https://jvpnews.com/article/bamboo-biofence-to-control-human-elephant-conflict-1785269423</id>
            <summary type="text">இலங்கையில் நிலவும் யானை - மனித மோதலைக் குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மூங்கில் உயிரி வேலிகளை (Bamboo bio-fences) அமைப்பதற்குத் தேவையான தொழில்நு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நிலவும் யானை - மனித மோதலைக் குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மூங்கில் உயிரி வேலிகளை (Bamboo bio-fences) அமைப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி உதவிகளை வழங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.</p><p></p><p>

சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகள் குழு, பெய்ஜிங்கில் உள்ள மூங்கில் மற்றும் பிரம்பிற்கான சர்வதேச மையத்திற்கு (INBAR) மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5c2abb7-2621-466f-8436-08bd3b863bae/26-6a690cb1b0260.webp' /></p><p>இவ்விஜயத்தின் போது, அக்குழு மையத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியது.
</p><p>
இதில் மூங்கில் பயிர்செய்கை, மேம்பட்ட பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் மற்றும் மூங்கில் சார்ந்த தொழில்துறை தயாரிப்புகளின் வளர்ச்சி ஆகியவை குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.
</p><p>
யானை - மனித மோதலுக்கு நிலையான தீர்வாக இலங்கையில் மூங்கில் உயிர் வேலித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சீனாவின் ஆதரவை பிரதி அமைச்சர் ஜெயக்கொடி உத்தியோகபூர்வமாகக் கோரினார்.
</p><p>
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இந்த திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்குத் தேவையான நவீன தொழில்நுட்பம், தொழில்நுட்ப நிபுணத்துவம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆதரவு மற்றும் சிறந்த நடைமுறைகளை வழங்கச் சீனத் தரப்பு தனது ஆயத்தத்தை வெளிப்படுத்தியது.</p><p>

மேலும், இத்திட்டம் யானை - மனித மோதலுக்கு நீண்டகாலத் தீர்வை வழங்குவதோடு, மூங்கில் சார்ந்த தொழில்களை ஊக்குவிப்பதன் மூலம் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உதவும் எனச் சீன அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T20:10:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடனடி உணவுச் சந்தையில் புதிய அத்தியாயம் ; வெண்டிஸ் உணவகத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் ஜோன் கீல்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-chapter-instant-food-market-wendy-s-1785268167"></link>
            <id>https://jvpnews.com/article/new-chapter-instant-food-market-wendy-s-1785268167</id>
            <summary type="text">இலங்கையின் முன்னணி வணிகக் குழுமங்களில் ஒன்றான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (John Keells Holdings), சர்வதேச அளவில் புகழ்பெற்ற உணவக பிராண்டான வெண்டிஸ் (Wendy&#039;...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் முன்னணி வணிகக் குழுமங்களில் ஒன்றான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (John Keells Holdings), சர்வதேச அளவில் புகழ்பெற்ற உணவக பிராண்டான வெண்டிஸ் (Wendy's) உணவகத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாக அறிவித்துள்ளது.</p><p></p><p>

இந்த நடவடிக்கையின் மூலம் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் தனது நுகர்வோர் உணவுத் தயாரிப்புத் தொகுப்பை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்க்கிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8e5bf8e-d73a-420c-b6ac-821c8a519934/26-6a6907c8ebd26.webp' /></p><p>இந்த புதிய திட்டத்தின் கீழ், இலங்கையின் முதலாவது வெண்டிஸ் உணவகம் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் திறக்கப்படவுள்ளது.
</p><p>
இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் உடனடி உணவுச் சந்தையில் (Fast food market) தனது நிலையை வலுப்படுத்துவதும், நுகர்வோருக்கு புதிய மற்றும் உயர்தர உணவு அனுபவத்தை வழங்குவதுமே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் என்று ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T19:49:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை நிராகரித்தது ஈரான்! உச்சம் தொடும் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-has-no-plans-to-negotiate-with-us-1785267063"></link>
            <id>https://ibctamil.com/article/iran-has-no-plans-to-negotiate-with-us-1785267063</id>
            <summary type="text">அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரானுக்கு எந்த திட்டமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை ஈரானின் சட்ட மற்றும் சர்வதேச விவகாரங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரானுக்கு எந்த திட்டமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த விடயத்தை ஈரானின் சட்ட மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபா அறிவித்துள்ளார்.
</p><p>
எவ்வாறாயினும், ஓமானுடன் படிப் படியாக அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை&nbsp;கண்ணிவெடிகள்</h2><p>
</p><p>
ஈரானிய அரசு தொலைக்காட்சியில், “அமெரிக்கா தான் விரும்பும் போதெல்லாம் சண்டையிடுவதற்கும், விரும்பும் போதெல்லாம் பேச்சுவார்த்தை மேசையில் அமர்வதற்கும் நாம் அதனை பழக்கப்படுத்திவிடக் கூடாது” என்று அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/856501c0-2564-4fb7-a99f-87d3202c201f/26-6a69076f50dcc.webp' /></p><p>
</p><p>
அத்துடன், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் தெற்குப் பாதையை ஈரான் அங்கீகரிக்காது என மீண்டும் வலியுறுத்திய அவர், அங்குள்ள கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகள் முற்றிலும் ஈரானின் பொறுப்பிலேயே உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-28T19:48:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[24 மணி நேரம் இடைவிடாமல் பறந்த விமானம்., ஏர்பஸ் A350 புதிய சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/airbus-a350-sets-24-hour-flight-record-1785268081"></link>
            <id>https://news.lankasri.com/article/airbus-a350-sets-24-hour-flight-record-1785268081</id>
            <summary type="text">ஏர்பஸ் நிறுவனம், உலகின் நீண்ட தூர வணிக விமான சேவைகளை உருவாக்கும் முயற்சியில், A350-1000ULR விமானத்தை 24 மணி நேரம் 24 நிமிடங்கள் இடைவிடாமல் பறக்கச் செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏர்பஸ் நிறுவனம், உலகின் நீண்ட தூர வணிக விமான சேவைகளை உருவாக்கும் முயற்சியில், A350-1000ULR விமானத்தை 24 மணி நேரம் 24 நிமிடங்கள் இடைவிடாமல் பறக்கச் செய்து சாதனை படைத்துள்ளது.
</p><h2>
அவுஸ்திரேலியாவிலிருந்து பிரான்ஸ் வரை</h2><p>இந்த விமானம் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னிலிருந்து புறப்பட்டு, 23,075 கிலோமீட்டர் (14,338 மைல்கள்) தூரம் பறந்து, பிரான்சின் டூலூஸ் நகரில் உள்ள ஏர்பஸ் தொழிற்சாலையில் தரையிறங்கியது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e729c79-6826-454c-a67c-b7937f70bb01/26-6a69077393164.webp' /></p><p>இந்த சோதனை, அவுஸ்திரேலிய விமான நிறுவனம் Qantas-இன் Project Sunrise திட்டத்தின் முக்கிய கட்டமாகும்.</p><p> இந்த திட்டம், சிட்னி-லண்டன் மற்றும் சிட்னி-நியூயார்க் இடையே 20 மணி நேரம் நீடிக்கும் நேரடி விமான சேவைகளை 2027 முதல் தொடங்க திட்டமிட்டுள்ளது.
</p><p></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The <a href="https://x.com/hashtag/A350?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#A350</a>-1000ULR is just back from its longest flight ever from Melbourne 🇦🇺 to Toulouse 🇫🇷! That’s a 12,460NM (23,075.92 km) hop 🦘 in 24 hours 24 minutes!<br><br>And for the crew, that meant flying from winter to summer, crossing 2 oceans, 3 continents, and seeing 2 sunrises + 2… <a href="https://t.co/Xk3Gbfq3HL">pic.twitter.com/Xk3Gbfq3HL</a></p>&mdash; Airbus (@Airbus) <a href="https://x.com/Airbus/status/2082126647533150280?ref_src=twsrc%5Etfw">July 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>ஏர்பஸ், கூடுதல் எரிபொருள் தொட்டியுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட A350-1000ULR-ஐ உருவாக்கியுள்ளது. 238 பயணிகள் அமரக்கூடிய இந்த விமானம், 20,000 லீற்றர் எரிபொருளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது.
</p><h2>
அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானம்</h2><p>இந்த விமானப் பயணம், Flightradar24-இல் 3.6 மில்லியனுக்கும் மேற்பட்டோர் கண்காணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது, 2024-இல் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலை எடுத்துச் சென்ற விமானத்திற்குப் பிறகு, அதிகம் கண்காணிக்கப்பட்ட இரண்டாவது விமானமாகும்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">23,075.92 km in 24 hours, 24 minutes. <br><br>We tallied up a few other facts and figures from this historic <a href="https://x.com/Airbus?ref_src=twsrc%5Etfw">@Airbus</a> A350-1000ULR flight. <a href="https://t.co/nJnJIQwQYC">pic.twitter.com/nJnJIQwQYC</a></p>&mdash; Flightradar24 (@flightradar24) <a href="https://x.com/flightradar24/status/2082127854939082802?ref_src=twsrc%5Etfw">July 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>Qantas, 12 A350-1000ULR விமானங்களை ஆர்டர் செய்துள்ளது. 2027 அக்டோபர் மாதம் முதல், சிட்னி-லண்டன் இடையே தினசரி நேரடி விமான சேவைகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
இந்த சாதனை, நீண்ட தூர விமானப் பயணங்களில் இடைநிறுத்தங்களை நீக்கி, பயணிகளுக்கு நேரத்தைச் சேமிக்கும் புதிய யுகத்தைத் தொடங்கிவைக்கிறது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/805f1b1a-0df7-49d2-9fe4-8082754cd6ad/26-6a69077442c87.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-28T19:46:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எங்கள் காணிகளை மீளக் கையளியுங்கள்! தையிட்டியில் காணி உரிமையாளர்களின் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/landowners-protest-demanding-located-in-tahiti-1785262687"></link>
            <id>https://tamilwin.com/article/landowners-protest-demanding-located-in-tahiti-1785262687</id>
            <summary type="text">தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி
காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த விகாரை அமைந்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி
காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
குறித்த விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளான தனியார்
காணிகளை காணி உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்க வேண்டும் எனக் காணி
உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் போராட்டத்தை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><h2>&nbsp;சட்டவிரோத விகாரை</h2><p>
</p><p>
இந்நிலையில், இன்றைய தினம்(28) செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துள்ள போராட்டம் நாளைய
தினம்(29) புதன்கிழமை மாலை வரையில் இரண்டு நாட்களும் போராட்டத்தை
முன்னெடுக்கவுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T19:33:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேதன்யாகுவின் செயலால் எரிச்சலடைந்த ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/netanyahu-irritates-trump-meets-1785267063"></link>
            <id>https://news.lankasri.com/article/netanyahu-irritates-trump-meets-1785267063</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் செயலால் எரிச்சலடைந்ததாக தகவ்கள் தெரிவிக்கின்றன.ட்ரம்ப், செவ்வாயன்று நேதன்ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் செயலால் எரிச்சலடைந்ததாக தகவ்கள் தெரிவிக்கின்றன.</p><p>ட்ரம்ப், செவ்வாயன்று நேதன்யாகுவை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். ஆனால், இந்த சந்திப்புக்கு முன் ட்ரம்ப், நேதன்யாகுவின் ஈரான் தொடர்பான பேச்சுவார்த்தைக்கான முக்கிய புள்ளிகள் குறித்து ஊடகங்களில் வெளியானதைப் பற்றி அதிருப்தி தெரிவித்தார்.</p><p>
இது இரு தலைவர்களுக்கிடையேயான உறவில் புதிய பதற்றத்தை வெளிப்படுத்துகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0e9bbe4-2d9c-4d3d-a1fd-a59e7633ea50/26-6a6903793046e.webp' /></p><p>நேதன்யாகு, ஈரான் அணுசக்தி நிலையங்கள் குறித்து ட்ரம்பிடம் தகவல் பகிர விரும்பினார். </p><p>ஆனால், ட்ரம்ப் “ஏன் உலகத்துக்கு அறிவிக்க வேண்டும்? நேரடியாக எனக்கு சொல்ல முடியாதா?” என்று Fox &amp; Friends நிகழ்ச்சியில் விமர்சித்தார்.
</p><p>
இருவரும் Oval Office-இல் புன்னகையுடன் அமர்ந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டாலும், பின்னணி உறவு சிக்கலானதாகவே உள்ளது.</p><p>நேதன்யாகு, அக்டோபர் மாத தேர்தலுக்கு முன் ட்ரம்பின் ஆதரவைப் பெற முயற்சிக்கிறார்.</p><p>
</p><p></p><p>அதே நாளில், ட்ரம்ப் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியையும் சந்தித்தார். உக்ரைன் ரஷ்யாவின் முன்னேற்றங்களை தடுத்து நிறுத்தியதால், ட்ரம்ப்-ஜெலென்ஸ்கி உறவு சமீபத்தில் மேம்பட்டுள்ளது.
</p><p>
ஜெலென்ஸ்கி, அமெரிக்காவின் Patriot ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளுக்கான உற்பத்தி உரிமம் மற்றும் ட்ரோன் ஒத்துழைப்பை பற்றி பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
இரு சந்திப்புகளும், ஈரான் போரின் தீவிர நிலையும், உக்ரைன்-ரஷ்யா போரின் முக்கிய கட்டமும், அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-28T19:29:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப் - ஜெலென்ஸ்கி சந்திப்பு! பேசப்பட்டுள்ள முக்கிய விடயங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/things-trump-and-zelensky-talked-about-1785265830"></link>
            <id>https://ibctamil.com/article/things-trump-and-zelensky-talked-about-1785265830</id>
            <summary type="text">


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் வெள்ளை மாளிகையில் மேற்கொள்ளப்பட்ட சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்களை உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் வெள்ளை மாளிகையில் மேற்கொள்ளப்பட்ட சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்களை உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ளார்.</p><p>

அதன்போது, பேட்ரியாட் ஏவுகணைத் தடுப்பான்களைத் தயாரிப்பதற்கான உரிமத்தைப் பெறுவது குறித்தும், தூதரக பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது குறித்தும் சுமுகமாக விவாதித்ததாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
சந்திப்பிற்குப் பிறகு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், உக்ரேனிய மக்களின் உயிரைப் பாதுகாக்கவும் அமைதியை முன்னெடுத்துச் செல்லவும் இணைந்து செயல்படும் அனைத்து முயற்சிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>போரின் முடிவு</h2><p> </p><p>

மேலும், இந்தச் சந்திப்பின் போது பேட்ரியாட் தடுப்பு அமைப்புகளின் உற்பத்தி உரிமங்கள் மற்றும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ராஜதந்திர முயற்சிகளைத் தீவிரப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் கலந்தாலோசித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A good meeting with President Trump <a href="https://x.com/POTUS?ref_src=twsrc%5Etfw">@POTUS</a> at the Oval Office. Thank you for everything we do together to protect the lives of Ukrainians and advance peace. First and foremost, I offered President Trump our condolences on the passing of Lindsey Graham. He was a true friend of… <a href="https://t.co/56yoaeqb2B">pic.twitter.com/56yoaeqb2B</a></p>&mdash; Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) <a href="https://x.com/ZelenskyyUa/status/2082125765634822619?ref_src=twsrc%5Etfw">July 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
அத்துடன், அண்மையில் மறைந்த அமெரிக்க செனட்டர் லின்ட்சே கிரஹாமின் இறுதிச்சடங்கு நடைபெறும் இந்நாளில், உக்ரைனின் உண்மையான நண்பரான அவரை இழந்ததற்காக டொனால்ட் ட்ரம்பிற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஜெலென்ஸ்கி தெரிவித்துக் கொண்டுள்ளார்.</p><p></p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b>WHATSAPP CHANNEL</b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table></h5>]]></content>
            <updated>2026-07-28T19:22:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[1983 கறுப்பு யூலை தமிழர் படுகொலை: வெலிக்கடை சிறைச்சாலையில் உயிர் தப்பியவரின் சாட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/1983-black-july-tamil-massacre-1785260024"></link>
            <id>https://ibctamil.com/article/1983-black-july-tamil-massacre-1785260024</id>
            <summary type="text">1983 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற கறுப்பு ஜூலை இனக் கலவரத்தின் போது, வெலிக்கடை சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் எதிர்கொண்ட கொடூரமான படுகொலை சம்பவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>1983 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற கறுப்பு ஜூலை இனக் கலவரத்தின் போது, வெலிக்கடை சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் எதிர்கொண்ட கொடூரமான படுகொலை சம்பவத்தை அங்கிருந்து உயிர்தப்பிய ஒருவர் விவரித்துள்ளார்.</p><p>

சிறையில் உள்ள பிற கைதிகள், தமிழ் அரசியல் கைதிகள் அடைக்கப்பட்டிருந்த இடங்களுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கியதையும், அதில் குட்டிமணி மற்றும் தங்கத்துரை உள்ளிட்ட 35 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தையும் அதன்போது அவர் எடுத்துரைத்துள்ளார்.
</p><p>
இதேவேளை, உயிருக்குப் போராடிய கைதிகள், தங்களுக்கு இருந்த குறைந்தபட்ச வசதிகளைப் பயன்படுத்தி எப்படி தற்காப்பு அரண்களை உருவாக்கினார்கள் என்பதையும், தாக்குதல் நடத்தியவர்களின் பயம் தங்களை எப்படி காப்பாற்றியது என்பதையும் அவர் பின்வருமாறு ஐபிசி தமிழுக்கு விளக்கியுள்ளார்,&nbsp; &nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_DpkHslAGEM" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-28T19:06:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐ.நா அகதிகள் ஒப்பந்தத்திற்கு 75 ஆண்டுகள் நிறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/75th-anniversary-of-the-un-refugee-convention-1785256700"></link>
            <id>https://tamilwin.com/article/75th-anniversary-of-the-un-refugee-convention-1785256700</id>
            <summary type="text">இரண்டாம் உலகப் போரின் பேரழிவுகளுக்குப் பிறகு, போர் மற்றும் அடக்குமுறைகளில்
இருந்து தப்பிப் பிழைக்கும் மக்களுக்கு அடைக்கலம் அளிப்பதற்காக உருவாக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரண்டாம் உலகப் போரின் பேரழிவுகளுக்குப் பிறகு, போர் மற்றும் அடக்குமுறைகளில்
இருந்து தப்பிப் பிழைக்கும் மக்களுக்கு அடைக்கலம் அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட
1951-ஆம் ஆண்டின் ஐ.நா. அகதிகள் ஒப்பந்தம் தனது 75ஆவது ஆண்டை நிறைவு செய்கிறது.
</p><p>
உலகளவில் இலட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க
ஒப்பந்தம், சர்வதேச அளவில் தஞ்சம் கோருபவர்களின் உரிமைகளை உறுதிசெய்கிறது.</p><p></p><h2>ஐ.நா அகதிகள் ஒப்பந்தம்</h2><p>
</p><p>
எனினும், தற்போது உலகம் முழுவதும் 4.1 கோடிக்கும் அதிகமான மக்கள் கட்டாயமாக
இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.</p><p>

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய கொள்கைகள் மற்றும் பல்வேறு
நாடுகளின் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஒப்பந்தத்தின் மீதான மதிப்பு சவாலுக்கு
உள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5704505f-4748-4f2f-9597-e69072e65fe4/26-6a68dfac31ccb.webp' /></p><p>இந்தச் சூழலில், இந்த ஒப்பந்தம் மூலம் பயனடைந்த மற்றும் இன்னும் பாதுகாப்பற்ற
சூழலில் வாழும் 6 அகதிகள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.</p><p>
மனித உரிமைகள் வழக்கறிஞரான ஹுவான் கார்லோஸ் ஆர்சே, நிக்கரகுவா அரசின்
அடக்குமுறைகளில் இருந்து தப்பி கோஸ்டாரிகாவிற்குச் சென்று, பின்னர் ஐ.நா.
உதவியுடன் ஸ்பெயினில் தஞ்சம் புகுந்து பாதுகாப்பான வாழ்க்கையை வாழ்ந்து
வருகிறார்.</p><p></p><h2>இரண்டாம் உலகப் போர்</h2><p>
</p><p>
சூடான் உள்நாட்டுப் போரினால் பெற்றோரால் எகிப்திற்கு அகதியாகக் கொண்டு
செல்லப்பட்ட வென்யென் கேப்ரியல், பின்னர் அமெரிக்காவில் குடியேறி பிரபல NBA
கூடைப்பந்து வீரராகவும், ஐ.நா. அகதிகள் முகமையின் (UNHCR) தூதுவராகவும்
உயர்ந்துள்ளார்.</p><p>

இரண்டாம் உலகப் போரின் போது நாஜிக்களிடம் இருந்து தப்பிக்கக் குகையில் பிறந்த
ஹெர்ஷல் க்ரீன்பிளாட், போருக்குப் பின் அமெரிக்காவில் குடியேறினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee95c541-94c1-4fed-b88e-3ff5cc47a0c6/26-6a68dfacd677a.webp' /></p><p>அக்காலத்தில் அகதிகளுக்குக் கிடைத்த ஆதரவு தற்காலத்தில் குறையும் சூழல்
குறித்து இவர் கவலை தெரிவிக்கிறார்.
சையத் ஆலம்
மியான்மர் இராணுவத்தின் இன அழிப்பு நடவடிக்கையில் இருந்து தப்பி வங்கதேச
அகதிகள் முகாமில் தங்கியுள்ளார்.</p><p> </p><p>வங்கதேசம் இந்த ஐ.நா.
ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால், வன்முறைகளும் இயற்கைப் பேரிடர்களும் நிறைந்த
முகாம்களிலேயே இன்றும் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து வருகிறார்.</p><p></p><h2>நாடுகடத்தாமை கொள்கை</h2><p>
</p><p>
1948 போரில் பாலஸ்தீனத்தில் இருந்து தப்பி லெபனான் சென்ற ஹுஸ்னியா அகமத்
கோஸ்லான், 70 ஆண்டுகளுக்கும் மேலாக லெபனான் முகாமிலேயே கல்வியறிவு மற்றும்
முறையான சட்டப் பாதுகாப்பு இன்றி வாழ்ந்து வருகிறார்.
</p><p>
சிரியாப் போரிலிருந்து தப்பி, கடலில் மூழ்கிய படகை நீந்தியே கரைசேர்த்து
ஜெர்மனியில் தஞ்சம் அடைந்த யுஸ்ரா மார்டினி, பின்னர் ஒலிம்பிக் போட்டியில்
பங்கேற்றுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a560ffd1-8c86-41af-955f-3039b2edcc44/26-6a68dfad87ff0.webp' /></p><p>தற்போது போர் முடிவுக்கு வந்துள்ள சூழலில் தனது தாய்நாட்டின்
மறுசீரமைப்பிற்கு உதவ விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஒரு நபர் தனது சொந்த நாட்டிற்குத் திரும்ப அனுப்பப்பட்டால் அவருக்குப்
பேராபத்து ஏற்படும் பட்சத்தில், அவரைப் பலவந்தமாகத் திருப்பி அனுப்பக் கூடாது
என்ற 'நாடுகடத்தாமை' கொள்கையே இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையாகும்.
</p><p>
உலகளவில் 130-க்கும் மேற்பட்ட ஆயுத மோதல்கள் நிலவும் இன்றைய சூழலில், அகதிகள்
பாதுகாப்பு ஒப்பந்தம் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என மனித உரிமை
ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T19:01:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதவிக் காலத்தை நிறைவு செய்து விடைபெறும் சீனத் தூதுவர் சஜித்துடன் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-meets-outgoing-chinese-ambassador-1785258295"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-meets-outgoing-chinese-ambassador-1785258295</id>
            <summary type="text">தனது சேவைக் காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாட்டைவிட்டுப் பிரியாவிடை
பெற்றுச் செல்லும் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங், நாடாளுமன்ற
எதிர்க்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது சேவைக் காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாட்டைவிட்டுப் பிரியாவிடை
பெற்றுச் செல்லும் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங், நாடாளுமன்ற
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை கலந்துரையாடியுள்ளார்.</p><p>இந்த சந்திப்பானது நேற்று(27.07.2026) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைப்பெற்றள்ளது.</p><p></p><h2>இருதரப்பு உறவுகள்</h2><p>
தனது பதவிக் காலத்தில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீடித்த இராஜதந்திர
உறவுகளை மேலும் வலுப்படுத்தச் சீனத் தூதுவர் ஆற்றிய பங்களிப்புக்காக
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது மனமார்ந்த நன்றியைத்
தெரிவித்துக்கொண்டதுடன், அவரின் எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற
வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f482a801-e12e-4d86-ac0c-75f8e830c470/26-6a68e8e105ecd.webp' /></p><p>இந்தச் சந்திப்பின்போது இரு தரப்பினரும் நீண்டகால இருதரப்பு உறவுகள்,
பொருளாதார ஒத்துழைப்பு, முதலீடுகள், வர்த்தகம், அபிவிருத்தி உதவிகள் மற்றும்
எதிர்காலத்திலும் இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான உறவுகளைத்
தொடர்வதன் முக்கியத்துவம் குறித்தும் தமது கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.</p><p>இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே எப்போதுமொரு ஆக்கப்பூர்வமான மற்றும் பரஸ்பர
நன்மை பயக்கும் கூட்டாண்மையைப் பேணிப் பாதுகாப்பதன் அவசியத்தையும்
எதிர்க்கட்சித் தலைவர் இந்தச் சந்திப்பின்போது மீண்டும் வலியுறுத்தினார்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T18:48:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். கரவெட்டி பிரதேச சபை விவகாரம் ; நீதிமன்றத்தில் முக்கிய முன்னேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-karavetti-pradeshiya-major-progress-court-1785263632"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-karavetti-pradeshiya-major-progress-court-1785263632</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் கரவெட்டி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களை சபை அமர்விலிருந்து வெளியேற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் கரவெட்டி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களை சபை அமர்விலிருந்து வெளியேற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) பருத்தித்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>
</p><p></p><p>இந்த வழக்கில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்த கரவெட்டி பிரதேச சபையின் வருமானப் பரிசோதகர் பவ கீர்த்தனனுக்கு தலா ரூ.100,000 பெறுமதியான நான்கு ஆட்பிணைகளில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b80680f2-942d-4b37-9acd-ba933caaa070/26-6a68f611c3992.webp' /></p><p>

இதனிடையே, குறித்த பிரதேச சபையில் பணியாற்றும் நான்கு ஊழியர்கள் தங்களது அலுவலக வருகையை பதிவு செய்த பின்னர், கடமை நேரத்திலேயே நீதிமன்றத்துக்கு வந்து பிணைக் கையொப்பமிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
கரவெட்டி தென்மேற்கு பிரதேச சபையின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அச்சுறுத்தும் வகையில் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடரவுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T18:33:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜித சேனாரத்னவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chargesheet-filed-against-rajitha-this-month-1785262292"></link>
            <id>https://ibctamil.com/article/chargesheet-filed-against-rajitha-this-month-1785262292</id>
            <summary type="text">கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் கொரிய நிறுவனம் ஒன்றுக்கு மணல் அகழ்வுத் திட்டத்தை வழங்கியதன் மூலம் அரசுக்கு 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிக இழப்பை ஏற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் கொரிய நிறுவனம் ஒன்றுக்கு மணல் அகழ்வுத் திட்டத்தை வழங்கியதன் மூலம் அரசுக்கு 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிக இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இம்மாதம் 31ஆம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரராம முன்னிலையில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உதவிச் சட்டப் பணிப்பாளர் சுலோச்சனா ஹெட்டியாரச்சி இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன், இந்தச் சம்பவத்தின் முதலாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டிருந்த உபாலி லியனகே என்பவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்பட மாட்டாது என்பதால், அவரை இவ்வழக்கிலிருந்து விடுவிக்குமாறு லஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p></p><h2>விடுவிக்கப்பட்ட&nbsp;முதலாவது சந்தேநபர்</h2><p>
</p><p>
முன்வைக்கப்பட்ட வாதங்களை கருத்தில் கொண்ட நீதிவான், முதலாவது சந்தேகநபரை வழக்கில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டதோடு, இரண்டாவது சந்தேகநபருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அது குறித்து நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/518de20f-46f6-4f49-b7b8-072363e368b2/26-6a68f46970c2b.webp' /></p><p>

இதன்படி, குறித்த இரு சந்தேகநபர்கள் மீதான விசாரணைகளும் நிறைவடைந்துள்ள நிலையில், மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>

ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையான போதே இத்தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்த வழக்கு மீண்டும் டிசம்பர் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-28T18:29:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடி பௌர்ணமியில் உருவாகும் அரிய கேந்திர திருஷ்டி யோகம்: இந்த ராசிகளிளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mars-venus-make-kendra-drishti-yog-who-get-luvck-1785250096"></link>
            <id>https://manithan.com/article/mars-venus-make-kendra-drishti-yog-who-get-luvck-1785250096</id>
            <summary type="text">ஜோதிட நம்பிக்கைகளின்படி, கிரகங்களின் நிலை, அவற்றின் சேர்க்கை மற்றும் பார்வை ஆகியவை மனிதர்களின் வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என்று தென்...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>ஜோதிட நம்பிக்கைகளின்படி, கிரகங்களின் நிலை, அவற்றின் சேர்க்கை மற்றும் பார்வை ஆகியவை மனிதர்களின் வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என்று தென்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.&nbsp;</p><p>அந்த வகையில், ஜூலை 29 ஆம் தேதி அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளமாகக் கருதப்படும் சுக்கிரனும், தைரியம், வீரம், வலிமை மற்றும் துணிச்சலின் காரணியாக விளங்கும் செவ்வாயும் ஒன்றிணைந்து, மிகவும் சிறப்பானதாகக் கருதப்படும் கேந்திர திருஷ்டி யோகத்தை உருவாக்க உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d7436c6-4a7c-4b03-9fea-12f11f3602ca/26-6a68ccb5316ca.webp' /></p><p></p><p>

குறிப்பாக, இந்த அரிய யோகம் ஆடி மாத பௌர்ணமி நாளில் உருவாகுவது மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி, இரண்டு வலிமையான கிரகங்கள் ஒன்றுக்கொன்று 4-ஆம் மற்றும் 10-ஆம் வீடுகளில் அமைந்திருக்கும்போது கேந்திர திருஷ்டி யோகம் ஏற்படும்.</p><p>

அதன்படி, சுக்கிரனும் செவ்வாயும் ஒருவருக்கொருவர் 4-ஆம் மற்றும் 10-ஆம் இடங்களில் இருந்து இந்த கேந்திர திருஷ்டி யோகத்தை உருவாக்குகின்றன. </p><p>இந்த யோகத்தின் தாக்கத்தால், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள், முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். அப்படி இந்த அரிய யோகத்தால் அதிர்ஷ்ட பலன்களை அள்ளப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1b40feb-57a4-4de4-9dae-1faf30351514/26-6a68ccb5d87c9.webp' /></p><p>
ஆடி பௌர்ணமியில் செவ்வாய்–சுக்கிரன் உருவாக்கும் கேந்திர திருஷ்டி யோகத்தின் காரணமாக மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த காலம் சாதகமாக அமையும். </p><p>புதிய வருமான வாய்ப்புகள் உருவாகலாம். நீண்ட நாட்களாக கிடைக்காமல் இருந்த பணம் மீண்டும் கைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.</p><p> ரியல் எஸ்டேட், ஃபேஷன் போன்ற துறைகளில் இருப்பவர்கள் எதிர்பார்த்ததை விட நல்ல லாபம் பெறக்கூடும்.தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.&nbsp;</p><h2>
ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cda83a96-0c07-47ae-8555-826962c83e3f/26-6a68ccb688108.webp' /></p><h2>
</h2><p>ஆடி பௌர்ணமியில் உருவாகும் செவ்வாய்–சுக்கிரன் கேந்திர திருஷ்டி யோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் பணியில் முன்னேற்றத்தைத் தரக்கூடியதாக இருக்கும். </p><p>பணியிடத்தில் உங்கள் தலைமைத்துவ திறமைகள் வெளிப்படும். சிலருக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. </p><p>அரசு பணியில் இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கலாம். தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் சூழல் உருவாகும்.
</p><h2>
துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7f4caca-db33-4c81-9367-10e689110382/26-6a68ccb74401f.webp' /></p><p></p><p>ஆடி பௌர்ணமியில் செவ்வாய்–சுக்கிரன் உருவாக்கும் கேந்திர திருஷ்டி யோகத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு புதிய முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்கலாம்.</p><p>புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால் அதற்கான சாதகமான சூழல் அமையும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேலும் வலுப்படும். </p><p>எதிர்பாராத வகையில், பெரிய தொகை பணம் கைக்கு வரும் வாய்ப்பு காணப்படுவதுடன், புதிய தொழில் முயற்ச்சிகள் இரட்டிப்பு லாபம் கொடுக்கும்.</p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp;</b><p></p><p><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T18:25:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகள் விவகாரத்தால் தூக்கத்தை இழந்த மகிந்த குடும்பம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/judicature-act-to-extend-judges-tenure-1785258121"></link>
            <id>https://tamilwin.com/article/judicature-act-to-extend-judges-tenure-1785258121</id>
            <summary type="text">இலங்கையில் தற்போது நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை விடயம் பேசுபொருளாகியுள்ள நிலையில், ராஜபக்ச தரப்புக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கை என்று குற்றச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தற்போது நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை விடயம் பேசுபொருளாகியுள்ள நிலையில், ராஜபக்ச தரப்புக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கை என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
</p><p>
இந்தநிலையில், தற்போதைய உச்சநீதிமன்றத்தில் இன்னும் கோட்டாபய ராஜபக்ச நியமித்த நீதிபதிகள் இருப்பதால், வயது நீட்டிப்பு மூலம் அரசியல் பழிவாங்கல் நடக்கும் என்ற வாதத்திற்கு போதிய ஆதாரம் இல்லை என்று அரசியல் ஆய்வாளர் நேரு. குணரட்னம் தெரிவித்தார்.</p><p>


லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதிகளில் 7 பேரை கோட்டாபய ராஜபக்சவும், 5 பேரை அநுர குமார திஸாநாயக்கவும் நியமித்துள்ளனர்.
</p><p>
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் பெரும்பாலானவை நாமல் ராஜபக்ச குடும்பத்தினர் அல்லது அவர்களுடன் தொடர்புடையவர்களைச் சார்ந்தவை என்பதால், இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பேசப்படுகிறது.</p><p>

இலங்கையில் 11 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பது நீதித்துறையின் பெரும் சவாலாக உள்ளது. 

ஓய்வு வயதை நீட்டிப்பதால் மட்டும் இந்தச் சிக்கல் தீர்ந்துவிடாது; நிர்வாக மட்டத்திலிருந்தே நீதித்துறையைச் சீரமைக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார்.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/g8EqX1Vihpc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T18:24:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகள் ஓய்வு வயது விவகாரம்: அநுரவுக்கு யாழ் சட்டத்தரணிகள் சங்கத்தின் அவசர கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/letter-from-the-jaffna-bar-association-1785260326"></link>
            <id>https://tamilwin.com/article/letter-from-the-jaffna-bar-association-1785260326</id>
            <summary type="text">மீயுயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் நோக்கில்
அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவரும் அமைச்சரவையின் முடிவை மறுபரிசீலனை
செய்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மீயுயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் நோக்கில்
அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவரும் அமைச்சரவையின் முடிவை மறுபரிசீலனை
செய்து கைவிடுமாறு கோரி, யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் சிறிலங்கா அரச
தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்குக் கடிதம் எழுதியுள்ளது.</p><p>

மீயுயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் வகையில்
அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றைக் கொண்டுவர அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக
வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் தனது
கவலையை வெளிப்படுத்தியுள்ளது.</p><p></p><h2>&nbsp;நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது</h2><p> </p><p>இது தொடர்பில் சிறிலங்கா அரச தலைவர் அநுர குமார
திசாநாயக்கவுக்கு, யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மற்றும்
செயலாளர் ஒப்பமிட்டு இன்றைய தினம் (28.07.2026) கடிதம் ஒன்று அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f8b2273-7b24-41db-b76b-056cfb5dfebb/26-6a68ecd074af8.webp' /></p><p>

கீழ் நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகள் உட்பட அனைத்து நீதிபதிகளுக்கும்
பொருந்தும் வகையிலும், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் ஒரு விரிவான
முயற்சியின் பகுதியாகவும் இருக்கும் பட்சத்தில், நீதிபதிகளின் ஓய்வுபெறும்
வயதை உயர்த்துவதற்கு கொள்கை அளவில் யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம்
எதிரப்பைக் கொண்டிருக்கவில்லை என அக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
எனினும், முன்மொழியப்பட்டுள்ள இந்த அரசியலமைப்புத் திருத்தமானது,
நீதித்துறைக்கு நிறைவேற்று அதிகார அமைப்பால் வழங்கப்படும் ஒரு சலுகையாகவோ
அல்லது நீதித்துறையின் செயல்பாடுகளில் தலையிடும் நடவடிக்கையாகவோ
பார்க்கப்படும் சூழலை உருவாக்கக் கூடாது என்பதில் தாங்கள் தீவிர கவனம்
செலுத்துவதாகச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><h2>யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள்</h2><p> </p><p>நீதித்துறையின் சுயாதீனத்தையும்,
நீதித்துறை மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையையும் பாதுகாப்பதற்கு
இத்தகைய சந்தேகங்களுக்கு இடம் தராமல் இருப்பது இன்றியமையாததாகும் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a42e661b-d267-4f6d-b69f-af6cedf6526e/26-6a68ecd1269e2.webp' /></p><p>

தற்போதைய அரசாங்கம் அரசியலமைப்பை முழுமையாக இரத்து செய்து, புதிய
அரசியலமைப்பைக் கொண்டுவர முனையும் தருணத்தில் மட்டுமே ஓய்வுபெறும் வயதை
உயர்த்தும் விடயத்தைப் பரிசீலிக்க முடியும் என யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள்
சங்கம் கருதுகிறது.</p><p> குறுகிய அல்லது குறிப்பிட்ட நோக்கம் கருதிய அரசியலமைப்புச்
சீர்திருத்தங்கள், அரசியலமைப்புவாதத்திற்கான மரியாதையைக் குறைப்பதுடன்,
மக்களாட்சியின் நல்நெறிப் கொள்கைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியையும்
பலவீனப்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, தற்போது முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவரும்
முயற்சிகளை அரச தலைவர் மறுபரிசீலனை செய்து உடனடியாகக் கைவிட வேண்டும் என
யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T18:20:30+00:00</updated>
        </entry>
    </feed>
