<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-31T12:00:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு நகர்ப்புற நுகர்வோர் பணவீக்கம் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/colombo-urban-consumer-inflation-increases-1788176978"></link>
            <id>https://tamilwin.com/article/colombo-urban-consumer-inflation-increases-1788176978</id>
            <summary type="text">கொழும்பு நகர்ப்புறத்தை மையமாகக் கொண்ட நுகர்வோர் பணவீக்க வீதம் இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் 8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு நகர்ப்புறத்தை மையமாகக் கொண்ட நுகர்வோர் பணவீக்க வீதம் இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் 8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
</p><p>
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று (31.08.2026) வெளியிட்டுள்ள தரவுகளில் இருந்து இது தெரியவந்துள்ளது.
</p><p>
குறித்த புள்ளிவிபரங்களுக்கு பிரகாரம் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணிற்கு அமைவாக, ஜூலை மாதத்தில் 7.3 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்க வீதம் ஆகஸ்ட் மாதத்தில் 8 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.</p><h2>உணவுப் பிரிவின் வருடாந்த பணவீக்க வீதம்</h2><p>
</p><p>
இதற்கிடையில், ஜூலை மாதத்தில் அது 6.3 சதவீதமாகப் பதிவாகியிருந்த ஆகஸ்ட் மாதத்தில் உணவுப் பிரிவின் வருடாந்த பணவீக்க வீதம் 8.5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4612a573-be52-45b2-baf0-ef945b5ad84f/26-6a956b66f27ed.webp' /></p><p>

எனினும் உணவு அல்லாத பிரிவின் வருடாந்த பணவீக்க வீதம் ஆகஸ்ட் மாதத்தில் 7.7 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. </p><p>கடந்த ஜூலை மாதத்தில் குறித்த பிரிவின் பணவீக்க வீதம் 7.8 சதவீதமாகப் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T11:54:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு துறைமுகத்தில் கொள்கலனில் இருந்து ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/large-amount-of-ice-drugs-seized-at-colombo-port-1788175145"></link>
            <id>https://tamilwin.com/article/large-amount-of-ice-drugs-seized-at-colombo-port-1788175145</id>
            <summary type="text">கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்ட கொள்கலன் ஒன்றில் இருந்து &#039;ஐஸ்&#039; எனச் சந்தேகிக்கப்படும் பெருந்தொகையான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மத்திய கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்ட கொள்கலன் ஒன்றில் இருந்து 'ஐஸ்' எனச் சந்தேகிக்கப்படும் பெருந்தொகையான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p>

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இந்தப் போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><h2>கொள்கலனில் மறைத்து வைத்து</h2><p>
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் 'ஐஸ்' வகை போதைப்பொருளாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06ef4001-4cde-4d21-b9a5-c2815eb59342/26-6a956ad6c1f0e.webp' /></p><p>

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட குறித்த கொள்கலனில் மறைத்து வைத்து இந்தப் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T11:52:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ravi-mp-appeared-commissio-bribery-and-corruption-1788146384"></link>
            <id>https://tamilwin.com/article/ravi-mp-appeared-commissio-bribery-and-corruption-1788146384</id>
            <summary type="text">புதிய இணைப்புஇலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை பிணையில் செல்ல அனுமத...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை பிணையில் செல்ல அனுமதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p>இன்று(31.08.2026)&nbsp; புதுக்கடை பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே அவருக்கு இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>மூன்றாம் இணைப்பு</h2><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க புதுக்கடை பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>இன்று (31) இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம்&nbsp;இணைப்பு</span></p><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>ரவி கருணாநாயக்க இன்று காலை சுமார் 8.15 மணியளவில் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவிற்கு விசாரணைக்காக வருகை தந்திருந்த நிலையில், பல மணி நேர விசாரணைக்குப் பிறகு,&nbsp; அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>தேசிய லொத்தர் சபைக்கு அங்கீகரிக்கப்பட்ட பணியமர்த்தல் நடைமுறைகளுக்குப் புறம்பாக ஒப்பந்த அடிப்படையில் ஐவர் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டு, பின்னர் அவரின் தனிப்பட்ட பணியாளர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டமை தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>சற்றுமுன்னர் நடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p>தேசிய லொத்தர் சபைக்கு பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்தமை தொடர்பான விசாரணையொன்றிற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை (31) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.</p><h2>ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிப்பு</h2><p>மூன்று சந்தர்ப்பங்களில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அங்கு முன்னிலையாகவில்லை.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef81f79b-105d-4f60-b87d-d7e4b25fd357/26-6a94f5e55ec15.webp' /></p><p>இதனையடுத்து அவரிடம் வாக்குமூலம் பெற அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை அவரது வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், அவர் இருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.</p><p>தனது மகளின் திருமண ஏற்பாடுகள் காரணமாக ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு வேறொரு திகதியை வழங்குமாறு ரவி கருணாநாயக்க தனது சட்டத்தரணிகள் ஊடாகக் கோரிக்கை விடுத்திருந்தார்.&nbsp;</p><p> </p><p>இதன் பின்னர் ரவி கருணாநாயக்க எதிர்வரும் தினமொன்றில் கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T11:48:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டிற்கே வந்து பயணிகளை ஏற்றி செல்லும் அரசு பேருந்து - ஆந்திராவில் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/apsrtc-plans-doorstep-bus-pickup-in-vijayawada-1788176874"></link>
            <id>https://news.lankasri.com/article/apsrtc-plans-doorstep-bus-pickup-in-vijayawada-1788176874</id>
            <summary type="text">apsrtc plan doorstep bus pickup in vijayawada: அரசு பேருந்து மூலம் வீட்டிற்கே வந்து பயணிகளை ஏற்றி செல்லும் திட்டத்தை அறிமுகப்பட்ட ஆந்திராவின் APSRTC ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>apsrtc plan doorstep bus pickup in vijayawada: அரசு பேருந்து மூலம் வீட்டிற்கே வந்து பயணிகளை ஏற்றி செல்லும் திட்டத்தை அறிமுகப்பட்ட ஆந்திராவின் APSRTC முன்வந்துள்ளது. </p><h3> 

வீட்டிற்கே வந்து பயணிகளை ஏற்றி செல்லும் அரசு பேருந்து</h3><p>

பொதுமக்களின் பயணங்களை எளிதாக்கும் வகையில் அரசு சார்பில் பெரும்பாலும் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து இயக்கப்படுகிறது. </p><p>

ஆனால், பேருந்தில் பயணம் செய்வதற்கு நாம் குறிப்பிட்ட பேருந்து நிலையம் அல்லது பேருந்து நிறுத்தம் சென்றுதான் பேருந்தில் ஏற வேண்டி இருக்கும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/442aad8e-ff7f-4f87-bfaf-b3803fbf9e2b/26-6a9569eb7a666.webp' /></p><p> 

பொதுவாக குடும்பத்துடன் வெளியூர்களுக்கு செல்லும் போது அதிகப் பயணப் பொருட்களுடன் பேருந்து நிலையத்திற்கு பயணிகளுக்கு சிரமமாக இருக்கும்.</p><p> 

இந்த சிரமத்தை கருத்தில் கொண்டு, பயணிகளின் வீட்டு வாசலுக்கு வந்து பேருந்தை ஏற்றி செல்லும் திட்டம் ஆந்திராவில் தொடங்கப்பட உள்ளது.&nbsp;</p><p></p><p>

ஆந்திராவின் அரசு போக்குவரத்து கழகமான APSRTCயின், சூப்பர் சொகுசு, ஏசி மற்றும் ஸ்லீப்பர் பேருந்துகள் தொலைதூர இடங்களுக்குச் சேவை வழங்குகின்றன.
</p><p>
இதில், தொலைதூர பயணம் மேற்கொள்ள, 10க்கும் மேற்பட்ட டிக்கெட்களை மொத்தமாக முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு வீட்டிற்கே பேருந்தை அனுப்பி ஏற்றி வர APSRTC முன்வந்துள்ளது. </p><p>

மொத்தமாக முன்பதிவு செய்யும் பயணிகள் இது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். </p><p>

முதற்கட்டமாக இந்த சேவை, சோதனை முறையில் விஜயவாடா நகரத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T11:48:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோதுமை மா விலை உயர்விற்கான காரணத்தை வெளியிட்டார் பிரதி அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/price-of-flour-increased-due-to-war-situation-1788175475"></link>
            <id>https://ibctamil.com/article/price-of-flour-increased-due-to-war-situation-1788175475</id>
            <summary type="text">உலகப் போர்ச் சூழல் காரணமாக ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை ரூ. 17 உயர்ந்துள்ளது என வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர். எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகப் போர்ச் சூழல் காரணமாக ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை ரூ. 17 உயர்ந்துள்ளது என வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர். எம். ஜெயவர்தன தெரிவித்தார்.</p><p>

“உலகைப் பாதித்துள்ள போர்ச் சூழலுக்குள், பொருட்களின் போக்குவரத்து மற்றும் காப்பீட்டுக் கட்டணங்கள் மூலம் சிறப்பு விலை உயர்வு அல்லது கட்டண உயர்வு ஏற்பட்டுள்ள ஒரு சூழல் உருவாகியுள்ளது.</p><h2>ஜனாதிபதியால் குறிப்பிடத்தக்க தலையீடுகள்</h2><p>அவை இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுடன் சேர்க்கப்படுகின்றன. பொதுமக்களின் துன்பத்தைக் குறைப்பதற்காக, அரசாங்கம் என்ற முறையில், அமைச்சகங்கள், திணைக்களங்கள் மீது ஜனாதிபதியால் குறிப்பிடத்தக்க தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.”</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b368fba1-04c4-4b92-909f-ec3087a68cf7/26-6a956859a246a.webp' /></p><p>
</p><p>
மொனராகல பகுதியில் ஆழ்துளைக் கிணறுகளைச் சீரமைக்கும் பணியைத் தொடங்குவதற்காக நடைபெற்ற விழாவிற்குப் பிறகு ஊடகங்களுக்குப் பேட்டியளித்தபோது பிரதி அமைச்சர் ஆர். எம். ஜெயவர்தன இவ்வாறு கூறினார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T11:47:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனிச்சிறையில் இஷாரா செவ்வந்தியின் பரிதாப நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ishara-sevvanthi-s-situation-in-prison-1788173078"></link>
            <id>https://ibctamil.com/article/ishara-sevvanthi-s-situation-in-prison-1788173078</id>
            <summary type="text">விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, தொடர்ந்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பின் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தடுத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, தொடர்ந்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பின் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அதன்படி, சிறைச்சாலையின் பெண் பிரிவில் உள்ள ஏனைய கைதிகளுடன் தொடர்பு கொள்ளாத வகையில் அவர் தனிச் சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
தற்போது குறித்த சிறைச்சாலையில் 130 இற்கும் மேற்பட்ட பெண் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p></p><h2>தீவிர கண்காணிப்பின் கீழ் இஷாரா</h2><p>வழமையாக கைதிகள் காலை 6 மணியளவில் சிறைக் கூண்டுகளில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டு, மாலை 4 மணியளவில் மீண்டும் அறைகளுக்குள் அனுப்பப்படுவதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c8bfb27-8aa0-4d1b-b701-460bae144d7e/26-6a9569481342a.webp' /></p><p>
</p><p>
எனினும், விசேட பாதுகாப்பின் கீழ் தனிச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்திக்கு இந்த வழமையான நடைமுறை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>இஷாரா காலை 6 மணியளவில் அவர் சிறைக் கூண்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டு, காலை உணவு வழங்கப்பட்ட பின்னர் சுமார் 15 நிமிடங்களில் மீண்டும் தனிச் சிறையில் அடைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
மதிய உணவு வழங்குவதற்காகவும் சுமார் 15 நிமிடங்களுக்கு மாத்திரம் அவர் வெளியே அழைத்துச் செல்லப்படுகிறார். பின்னர் மாலை 4 மணியளவில் இரவு உணவுக்காக மீண்டும் வெளியே அழைத்துச் செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கு மேலதிகமாக, காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரையிலான காலப்பகுதியில் தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சிக்காக அவர் வெளியே அழைத்துச் செல்லப்படுவதாகவும், அந்த நேரத்திலும் சிறைச்சாலை அதிகாரிகளின் விசேட கண்காணிப்பின் கீழ் ஏனைய கைதிகளுடன் தொடர்பு கொள்ளாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இஷாரா செவ்வந்திக்கு சிறைச்சாலைக்குள் எந்தவொரு விசேட சலுகையும் வழங்கப்படவில்லை என சிறைச்சாலை திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T11:45:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் குதித்த தம்பலகாம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-at-trincomalee-1788171689"></link>
            <id>https://tamilwin.com/article/protest-at-trincomalee-1788171689</id>
            <summary type="text">திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும்
அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும்
அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>குறித்த போராட்டம் இன்றைய தினம் (31.08.2026)
பிரதேச செயலகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
அரச மற்றும் மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற் சங்கம் இதனை நாடு
பூராகவும் ஏற்பாடு செய்திருந்த நிலையில் அதற்கு வலுசேர்க்கும் முகமாக
தம்பலாகாமம் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் குறித்த கவனயீர்ப்பு
போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ff3f549-5c5b-4507-8da6-8a06feffd227/26-6a95681ab7b35.webp' /></p><h2>முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்</h2><p>
</p><p>
இதில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சேவை பிரமாணக் குறிப்பு, MN5 சம்பள
அளவுத் திட்டம் மற்றும் விசேட தரத்துடன் கூடிய பதவி உயர்வு முறை உள்ளிட்ட
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்கு,
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை யாப்பை சீர்திருத்தும் செயற்பாட்டை விரைவாக்கு,
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை நிறுவு 2027வரவு செலவு
திட்டத்தில் ரூபா 25000 இடைக்கால கொடுப்பனவு வழங்கு,

ஐந்து வருடங்களில் தரப் பதவி உயர்வு வழங்கு,பெறும் சம்பளம் ஒரு மாதத்திற்கே
போதாது எரிபொருள் கொடுப்பனவு எம்பிக்களுக்கு மட்டுமா போன்ற பல வாசகங்களை
ஏந்தியவாறும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>
திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் இதன்போது நடை பவணியாக போராட்டத்தில்
ஈடுபட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சென்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ef2bea0-5ff8-453a-b6bc-8dac83800660/26-6a95681b9c05e.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76fdf27d-f7f4-40ee-9e4a-bf821239f728/26-6a95681d1a02c.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T11:43:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாவனெல்ல பகுதியில் விபத்து; நால்வர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/accident-in-mawanella-area-four-injured-1788176594"></link>
            <id>https://jvpnews.com/article/accident-in-mawanella-area-four-injured-1788176594</id>
            <summary type="text">&amp;nbsp; மாவனெல்ல பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நால்வர் காயமடைந்து மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மாவனெல்ல பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நால்வர் காயமடைந்து மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>


அரநாயக்க திசையிலிருந்து இன்று (31) பிற்பகல் மாவனெல்ல நகரத்தை நோக்கிப் பயணித்த சிறிய ரக வேன் ஒன்றும், மாவனெல்ல நகரத்திலிருந்து உஸ்ஸாப்பிட்டிய நோக்கி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dab944d8-80fe-4ff3-bf89-4128625f77a1/26-6a9568d3874d8.webp' /></p><p>
</p><p>
 

வேனில் பயணித்த நால்வரே விபத்தில் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் சிகிச்சைக்காக மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



காயமடைந்தவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
</p><p>


விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனம் உரிய அனுமதியுடன் மணல் ஏற்றிச் சென்று கொண்டிருந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.



விபத்து தொடர்பில் மாவனெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T11:40:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டபயவின் உறக்கத்தை கூட திட்டமிட்ட ஞானாக்கா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gnana-akka-hotel-encroaches-nuwarawewa-lake-1788172144"></link>
            <id>https://ibctamil.com/article/gnana-akka-hotel-encroaches-nuwarawewa-lake-1788172144</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதியின் கோட்டபய ராஜபக்சவின் உறக்கத்தை கூட, அவரது ஆட்சிக்காலத்தில் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டு வந்த ஞானாக்கா என்பவரே தீர்மானித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதியின் கோட்டபய ராஜபக்சவின் உறக்கத்தை கூட, அவரது ஆட்சிக்காலத்தில் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டு வந்த ஞானாக்கா என்பவரே தீர்மானித்ததாக விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த விடயத்தை றுவுணு பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை விரிவுரையாளரும் ரிவிர பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் - இலங்கை புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் முன்னாள் ஊடக பணிப்பாளரான சந்தன காரியவசம் தெரிவித்துள்ளார். </p><p>


இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியில் இருந்த காலத்தில் அவருக்கு ஆலோசனை வழங்கிய அம்மையார் ஒருவர் இருந்தார்.</p><p> </p><p></p><h2>உரிமைச் சொத்து&nbsp;</h2><p>அவரை உங்களுக்கு நினைவிருக்கலாம் கோட்டாபயவின் அனைத்து செயல்பாடுகளும் அவரின் ஆலோசனைபடியே அமைந்திருந்தது.</p><p>

அமைச்சரவை நியமினம் - சிலரை பதவியில் நீக்கியமை அவர் சொற்படியே செய்தார். 

எப்படி உறங்குவது கூட அந்த அம்மையார் சொன்னபடியேதான்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e191e992-6025-434d-bf78-008d3e493596/26-6a955ef62f825.webp' /></p><p>நாம் மேலே குறிப்பிட்ட அம்மையார் தான் அநுராதபுரத்தில் சோதிடம் பார்த்து பிரபலமான ஞானக்கா.

அந்த அம்மையார் ஹோட்டல் கட்டினால் உனக்கென்ன எங்களுக்கு என்ன என்று கேள்வி எழலாம் அல்லவா ? </p><p>ஆனால் 2300 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட நுவரவௌ குளத்தை அழித்துள்ளார்கள். இது எங்களுடைய உரிமைச் சொத்து அதைத்தான் இவர்கள் நாசப்படுத்தியுள்ளனர்.</p><p></p><h2>பெரும்பாலான கட்டிடங்கள்&nbsp;</h2><p>நுவரவெவ எல்லைப் பகுதியில்தான் இந்த ஹோட்டலின் பெரும்பாலான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.</p><p>இது முற்றிலும் சட்டவிரோதமான செயல் அப்படிச் செய்ய முடியாது குளத்தின் எல்லைப் பகுதிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e22ed006-4b38-4e19-b085-d289d14f3532/26-6a955ef6e0159.webp' /></p><p>

ஒரு சாதாரண மனிதரால் இதைச் செய்ய முடியாது. நாட்டுத் தலைவரின் அரசியல் செல்வாக்கைக் கொண்டுதான் இவற்றை நிரப்பி இந்த நிலைக்குக் கட்டியிருக்கிறார்கள்.</p><p>மேலும் கோட்டாபய ராஜபக்ச பணம் வழங்கியதாகவும் ஒரு கதையும் உள்ளது.</p><p> இந்த அம்மையார் ஹோட்டல் கட்டினாரா அல்லது கோட்டாபயவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தாரா என்பது நமக்கு முக்கியமல்ல ஆனால் இந்த விடயங்கள் இப்படி நடக்க முடியாது.</p><p></p><h2>கோடிக்கணக்கான சொத்து</h2><p>கடந்த காலத்தில் குளத்தின் கரையோரங்களில் அல்லது குளத்திற்குள் கட்டப்பட்ட ஹோட்டல்களை அகற்றும் திட்டம் ஒன்று நடந்தது.</p><p> அதற்கும் நிறைய பிரச்சினைகள் வந்தன ஆனால் அநுராதபுரத்திலுள்ள இந்த ஹோட்டலுக்கு ஒன்றும் நடக்கவில்லை.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/608f8d6c-c38a-4bf6-b11e-e444cc71bf64/26-6a955ef792aec.webp' /></p><p>அதனால் அதிகாரிகள் மற்றும் அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
</p><p>
இந்த ஹோட்டல் புதிதாக அமைக்கப்பட்ட கண்டி - அனுராதபுர வீதியில் இராணுவ மருத்துவப் படைப்பிரிவை கடந்து சில மீட்டர்கள் செல்லும் போது உள்ளது.</p><p> அநுராதபுரத்தில் சோதிடம் பார்த்த சாதாரண ஒரு பெண் இப்போது கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு சொந்தக்காரராக இருப்பது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/IT-v1W9Laic" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T11:31:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[திரு கேட்ட கேள்வி.. உச்சகட்ட பதற்றத்தில் கவிதா - திருமாங்கல்யம் இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/thirumangalyam-serial-today-1788165691"></link>
            <id>https://viduppu.com/article/thirumangalyam-serial-today-1788165691</id>
            <summary type="text">திருமாங்கல்யம்&amp;nbsp;தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் திர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>திருமாங்கல்யம்</h2><p>&nbsp;தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் திருமாங்கல்யம். கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் திரு அவார்ட் பங்ஷன் நல்லபடியாக நடந்து முடிந்த நிலையில் இன்று நடக்கப் பவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.</p><p>

அதாவது கவிதா கௌதம் பார்த்து பேசிக்கொண்டிருக்கும் போது தாத்தா அந்த வழியாக வர கவிதா பதறிப்போய் கௌதமை ஓடி ஒளிந்து கொள்ள சொல்கிறாள். பிறகு கவிதாவை பார்த்து இங்கு என்னம்மா பண்ற என்று கேட்க போன் பேச வந்ததாக சொல்லி சமாளிக்கிறாள். 

அதன் பிறகு எல்லோரும் வீட்டுக்கு வர கவிதா தூங்கிக் கொண்டிருக்கும் போது திரு அந்த ஸ்கெட்ச்ல இருக்கிறது கௌதம் தானே..</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/660ed4b3-64a2-4a06-bd7b-a84422282de0/26-6a953e3dd69b1.webp' /></p><p>அவன நீங்க தானே வேலைக்கு வச்சீங்க அப்போ உங்களுக்கு இதெல்லாம் தெரியும் தானே என்று கேள்வி மேல் கேள்வி கேட்க கவிதா பதறிப் போய் தூக்கத்திலிருந்து எழுகிறாள்.

இதே நேரத்தில் திருவிடம் இருந்து போன் கால் வர கவிதை போன் எடுக்க திரு அந்த ஸ்கெட்ச் ரெடியா என்று கேட்க மேலும் பதட்டம் அடைகிறாள். உடனே அந்த ஸ்கெட்ச் எடுத்து எரிக்க மகா இதை பார்த்து சந்தேகம் அடைகிறாள். </p><p>

பிறகு கௌதம் ரூமுக்கு வந்து கவிதாவிடம் அந்த ஸ்கெட்ச் பற்றி கேட்க அவள் தேடுவது போல நடிக்கிறாள். மேலும் வேறொரு உருவத்தை வரைந்து அதை ஓரிடத்தில் வைத்து இருக்கிறாள். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய திருமாங்கல்யம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.</p>]]></content>
            <updated>2026-08-31T11:30:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலராலும் மறக்க முடியாத FR.S.J இம்மானுவேலை சந்தித்தார் IBC பாஸ்கரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bhaskaran-kandiah-meets-former-priest-in-person-1788175214"></link>
            <id>https://tamilwin.com/article/bhaskaran-kandiah-meets-former-priest-in-person-1788175214</id>
            <summary type="text">யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் மூத்த அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேலை தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

இந்த சந்திப்பு இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் மூத்த அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேலை தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.</p><p>

இந்த சந்திப்பு இன்று (31.08.2026) இடம்பெற்றுள்ளது.
</p><p>
வயது மூப்பு காரணமாக நோய்வாய்ப்பட்டிருக்கும்&nbsp; அருட்தந்தை இம்மானுவேல், யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் முன்னாள் குரு முதல்வராகவும், யாழ்ப்பாணம் புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியின் முன்னாள் அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.
</p><p>
அத்துடன், உலகத் தமிழர் பேரவையின் தலைவராகவும் செயற்பட்டுள்ள அவர், ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காகவும், புலம்பெயர் தமிழ் சமூகத்தின் குரலாகவும் சர்வதேச அளவில் மனித உரிமைச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.</p><h2>

நாட்டை விட்டு வெளியேறிய இம்மானுவேல்</h2><p>
இலங்கையில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்த நிலையில், 1997ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f5dc20b-fbb6-424a-8352-828e3238edfb/26-6a9565b0c52b1.webp' /></p><p> </p><p>

இதனையடுத்து இங்கிலாந்து சென்ற அவர், அங்கு ஓராண்டு காலம் பணியாற்றிய பின்னர் ஜெர்மனிக்குச் சென்று, மூன்ஸ்டர் மறைமாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் 2007ஆம் ஆண்டு வரை குருவாகப் பணியாற்றினார்.
</p><p>
அங்கு பணியாற்றிய காலத்திலும் இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான பணிகளை முன்னெடுத்ததுடன், அவர்களின் பிரச்சினைகளை சர்வதேச அரங்கிலும் தொடர்ந்து எடுத்துச் சென்றார்.
</p><h2>
ஈழ விடுதலைப் போராட்டம்</h2><p>
இதனையடுத்து, 2010ஆம் ஆண்டு உலகத் தமிழர் பேரவையின் தலைவராக அருட்தந்தை இம்மானுவேல் தெரிவுசெய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/393e8925-4054-46a0-9e31-5686853e20e2/26-6a9565b19d22f.webp' /></p><p>
</p><p>
ஈழ விடுதலைப் போராட்டத்தின் பின்னணியில் தமிழீழ தேசியத் தலைமையின் நிலைப்பாட்டுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கும் சர்வதேச அரங்கில் நீண்டகாலமாக குரல் கொடுத்து வந்த அவர், தனது வாழ்நாளின் பெரும்பகுதியை மக்களின் உரிமைகளுக்காக அர்ப்பணித்துள்ளார்.</p><p>

இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் அருட்தந்தை இம்மானுவேலை, தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c548eb8-ff9a-462b-87c9-980e84820182/26-6a9565b26e35c.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b83abe78-594b-4f7b-b3ef-2c54de1cbb8a/26-6a9565b33fa91.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1615279-ecef-4ca3-9243-93758feb51bb/26-6a9565b40bd1f.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T11:30:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிண்ணியாவில் தனியார் காணியிலிருந்து இரு மோட்டார் குண்டுகள் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-mortar-shells-recovered-private-land-kinniya-1788175770"></link>
            <id>https://tamilwin.com/article/two-mortar-shells-recovered-private-land-kinniya-1788175770</id>
            <summary type="text">கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலிம் வீதியில் அமைந்துள்ள தனியார்
காணியிலிருந்து இரு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த காணியில் வீடொன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலிம் வீதியில் அமைந்துள்ள தனியார்
காணியிலிருந்து இரு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
</p><p>
குறித்த காணியில் வீடொன்றை நிர்மாணிப்பதற்காக அத்திவாரம் இடும் பணிகளுக்காக
நேற்று (30) மாலை சுமார் 5.30 மணியளவில் நிலத்தைத் தோண்டியபோதே, இந்த இரு
மோட்டார் குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
கிண்ணியா ஆலிம் வீதியைச் சேர்ந்த முஹம்மத் ராபிக் மொஹம்மத் ரிபாஸ்
என்பவருக்குச் சொந்தமான காணியிலேயே இந்தக் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><h2>குண்டுகள் மீட்பு</h2><p>
</p><p>
இது தொடர்பில் காணி உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ
இடத்துக்கு கிண்ணியா பொலிஸார் விரைந்து சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளை
மேற்கொண்டனர்.</p><p>

இந்நிலையில், இன்று (31) மாலை சம்பவ இடத்துக்கு வருகை தந்த திருகோணமலை –
சர்தாபுர விசேட அதிரடிப்படை அணியினர், குறித்த இரு மோட்டார் குண்டுகளையும்
பாதுகாப்பாக மீட்டு கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ebef5e2-9518-45b0-a610-525c601f42d8/26-6a95659c0f7f7.webp' /></p><p>
</p><p>
மீட்கப்பட்ட குண்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான மேலதிக நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
இதேவேளை, குறித்த மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்ட பகுதி தொடர்பில் மேலும்
தெரியவருவதாவது, 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தப் பகுதியில் இராணுவ முகாம்
ஒன்று அமைந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T11:29:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய் பிரதமர் வேட்பாளரா? அமைச்சரவையிலிருந்து விலகுவோம் என மிரட்டும் காங்கிரஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/congress-warn-exit-from-tvk-ministry-if-vijay-pm-1788161023"></link>
            <id>https://ibctamilnadu.com/article/congress-warn-exit-from-tvk-ministry-if-vijay-pm-1788161023</id>
            <summary type="text">congress threat exit from tvk ministry if vijay as pm candidate: முதல்வர் விஜய் அடுத்த பிரதமர் என தவெக அமைச்சர்கள் பேசி வரும் நிலையில், அதற்கு எதிர்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>congress threat exit from tvk ministry if vijay as pm candidate: முதல்வர் விஜய் அடுத்த பிரதமர் என தவெக அமைச்சர்கள் பேசி வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் அமைச்சரவையிலிருந்து விலகுவோம் என எச்சரித்துள்ளது.
</p><h3> 
விஜய் பிரதமர் வேட்பாளர் </h3><p>

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக்க தவெக முன்னெடுப்பு செய்வதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
</p><p>
முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டில் செய்து வரும் திட்டங்கள் எனக்கூறி பல்வேறு போலி செய்திகள் வட இந்தியாவில் சமூக ஊடக பிரபலங்களால் பரப்பப்பட்டு வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ff17c40-3ab3-43a5-85e6-2ee2e0647c71/26-6a952c0218c78.webp' /></p><p> 

இதே போல், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் வர வேண்டும் என பேசினார். 

அதனைத்தொடர்ந்து பல்வேறு தவெக அமைச்சர்களும் முதல்வர் விஜய் தான் அடுத்த பிரதமர் என பேசி வருகின்றனர். </p><p>

சமீபத்தில் தனியார் நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கணிப்பில், அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டியில், மோடி, ராகுல் காந்தியை தொடர்ந்து முதல்வர் விஜய் 3வது இடம் பிடித்தார்.&nbsp;</p><p></p><p>

அமைச்சர்களின் இந்த பேச்சு காங்கிரஸ் கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. </p><h3>

காங்கிரஸ் எச்சரிக்கை</h3><p> 

கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் ராஜேஷ் குமார், "தவெக அமைச்சர்கள் பேசும்போது எங்கள் முதல்வர் அடுத்த பிரதமர் என்றெல்லாம் சொல்கிறார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fa5189d-e4d0-4580-9a99-12c1db65f5ac/26-6a952c00a7e61.webp' /></p><p> 

வருகிற 2029 ஆம் ஆண்டு நடைபெறுகிற நாடாளுமன்ற தேர்தலில் எங்களுடைய தலைவர் ராகுல் காந்தி அடுத்த பிரதமராக வருவார்கள்.</p><p>

ஒருவேளை தமிழக வெற்றிக் கழகம் அதற்கு உடன்படாவிட்டால், காங்கிரஸ் கட்சியினுடைய இரண்டு அமைச்சர்களும் இந்த பதவியில் நீடிக்க மாட்டார்கள்" என பேசியுள்ளார். </p><p>

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "பிரதமராக வேண்டும் என்ற எண்ணமோ, நோக்கமோ முதல்வர் விஜய்க்குத் துளியளவும் கிடையாது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a505eddd-0631-428f-9029-3522b7f81c50/26-6a952c0163fa2.webp' /></p><p>அவருக்கு கனவிலும், கற்பனையிலும் கூட அப்படி ஒரு எண்ணம் தோன்றாது.

இதுபோன்று பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சர்கள், தவெகவினருக்கு முதல்வர் அறிவுறுத்த வேண்டும். </p><p>

இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் தான் தலைமை என்பதால், ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும். வேறு யாரையும் பிரதமர் வேட்பாளராக நிறுத்த முடியாது" என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T11:26:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவில் பூத்த காதல்: ரஷ்யப் பெண்ணை மணமுடித்த தமிழக இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/chennai-youth-married-russian-woman-in-tiruchendur-1788161297"></link>
            <id>https://ibctamilnadu.com/article/chennai-youth-married-russian-woman-in-tiruchendur-1788161297</id>
            <summary type="text">Chennai youth married russian woman in tiruchendur:&amp;nbsp;சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரஷ்யப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

சென்னை மயி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Chennai youth married russian woman in tiruchendur:&nbsp;சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரஷ்யப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
</p><p>
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த உதயசங்கர் என்ற இளைஞர், ரஷ்ய பெண்ணொருவரை காதலித்து திருச்செந்தூரில் திருமணம் செய்துகொண்டார்.&nbsp;</p><h2>சீனாவில் பூத்த காதல்</h2><p>
சீனாவில் உள்ள கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றியவர் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த உதயசங்கர்.

இவரும் அதே நிறுவனத்தில் பணியாற்றிய மரியா என்ற பெண்ணும் நாட்பாக பழகியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/574d6352-fb7a-460d-b095-33fc77daa600/26-6a952d13ef90d.webp' />&nbsp;</p><p></p><p> நாளடைவில் இவர்களின் நட்பு காதலாக மாறியுள்ளது.

பின்னர் உதயசங்கர், மரியா ஜோடி தங்கள் காதல் குறித்து குடும்பத்தாரிடம் கூறி திருமணத்திற்கு சம்மதம் பெற்றுள்ளது.
</p><p>
அதனைத் தொடர்ந்து, திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயிலில் தமிழ் பாரம்பரிய முறைப்படி உதயசங்கர், மரியாவின் திருமணம் நடந்தது.&nbsp;</p><h2>'கீர்த்தனா' என சூட்டிக்கொண்ட ரஷ்யப் பெண்</h2><p>

இதில் இருவரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.</p><p> 

ரஷ்யாவைச் சேர்ந்த மரியா தனது பெயரை 'கீர்த்தனா' என சூட்டிக்கொண்டது பலரது கவனத்தை ஈர்த்தது.</p><p>

இதற்கிடையில் இந்தத் திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p> </p>]]></content>
            <updated>2026-08-31T11:25:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[57 ஆண்டுகால சாதனையை 15 வயதில் முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/vaibhav-sooryavanshi-breaks-57-year-record-1788167298"></link>
            <id>https://ibctamilnadu.com/article/vaibhav-sooryavanshi-breaks-57-year-record-1788167298</id>
            <summary type="text">Vaibhav Sooryavanshi breaks 57 years old record: இந்திய கிரிக்கெட் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி துலீப் கிண்ணத்தில் புதிய சாதனை படைத்தார். 

துலீப் கிண...</summary>
            <content type="html"><![CDATA[<p>Vaibhav Sooryavanshi breaks 57 years old record: இந்திய கிரிக்கெட் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி துலீப் கிண்ணத்தில் புதிய சாதனை படைத்தார். </p><p>

துலீப் கிண்ணப் போட்டியில் கிழக்கு மண்டல அணிக்காக விளையாடி வரும் வைபவ் சூர்யவன்ஷி 57 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.&nbsp;</p><h2>வைபவ் சூர்யவன்ஷி&nbsp;</h2><p> 

கிழக்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டலம் அணிகளுக்கு இடையிலான துலீப் கிண்ண அரையிறுதிப் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Vaibhav Sooryavanshi hitting it all around the park🤯🔥 <a href="https://t.co/lP9WGFwVDP">pic.twitter.com/lP9WGFwVDP</a></p>&mdash; Abhishek (@unfav_abhishek3) <a href="https://x.com/unfav_abhishek3/status/2094281091062628592?ref_src=twsrc%5Etfw">August 31, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

மத்திய மண்டல அணி முதல் இன்னிங்ஸில் 266 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக ரிங்கு சிங் 60 ஓட்டங்கள் எடுத்தார். முகேஷ் குமார், அபிஜித் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.&nbsp;</p><p></p><p>
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய கிழக்கு மண்டல அணியில் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினார்.&nbsp;</p><h2>57 ஆண்டுகால சாதனை</h2><p>
அதிரடி அரைசதம் அடித்த அவர், லக்ஷ்மண் சிங்கின் 57 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். 

அதாவது, 1969ஆம் ஆண்டில் லக்ஷ்மண் சிங் தனது 16 வயது 23-வது நாளில் துலீப் கிண்ணத்தில், தனது முதல் அரை சதத்தை அடித்தார். </p><p>

ஆனால் வைபவ் சூர்யவன்ஷி 15 வயது 157 நாட்களிலேயே அரைசதம் கடந்து, துலீப் கிண்ண வரலாற்றிலேயே அரைசதம் அடித்த <b>மிக இளம் வயது துடுப்பாட்ட வீரர்</b> என்ற சாதனையைப் படைத்தார். </p><p>

தொடர்ந்து ஆடிய வைபவ் சூர்யவன்ஷி 81 பந்துகளில் 7 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 92 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/891078cc-1dea-4084-a26f-f87e1d6a5326/26-6a954485ac72c.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T11:25:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[170 ஆண்டுகளாக காணப்படாமல் இருந்த அரிய தாவரம் இலங்கையில் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-rare-lankan-plant-that-been-miss-for-170years-1788168120"></link>
            <id>https://ibctamil.com/article/a-rare-lankan-plant-that-been-miss-for-170years-1788168120</id>
            <summary type="text">இலங்கையில் 1855-ஆம் ஆண்டு கடைசியாகப் பதிவுசெய்யப்பட்ட, மிகவும் அரிதான ஒரு தாவர இனத்தின் கூட்டம், சீதாவக்க கங்கை ஆற்றங்கரையோரம் உள்ள ஒரு தாழ்நில வனப்பக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் 1855-ஆம் ஆண்டு கடைசியாகப் பதிவுசெய்யப்பட்ட, மிகவும் அரிதான ஒரு தாவர இனத்தின் கூட்டம், சீதாவக்க கங்கை ஆற்றங்கரையோரம் உள்ள ஒரு தாழ்நில வனப்பகுதியில் வளர்ந்து வருவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் .
</p><p>
சமீபத்திய ஆய்வு ஒன்றில் இந்தக் கண்டுபிடிப்பை ஆவணப்படுத்திய ஆராய்ச்சியாளர்கள் , இண்டியன்தஸ் விர்கேட்டஸ் (Indianthus virgatus) என்ற அந்தத் தாவரம் இலங்கையில் அதிகாரப்பூர்வமாக மிக அருகிவரும் இனமாகப் பட்டியலிடப்பட்டிருந்தாலும், அந்நாட்டின் காடுகளில் அது அநேகமாக அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டதாக எழுதியுள்ளனர்.
</p><p>
சிறிய வெள்ளைப் பூக்களைக் கொண்ட ஐ. விர்கேட்டஸ், ஈரமான வெப்பமண்டலக் காடுகளின் அடர்வனப்பகுதியில் வளர்கிறது.</p><p></p><h2>சரிபார்க்கப்பட்ட ஒரே பதிவு</h2><p> </p><p>இது இந்தியாவில் சுமார் 150 இடங்களில் காணப்படுவதாக அறியப்படுகிறது, ஆனால் இலங்கையில் இந்தத் தாவரம் இருப்பதற்கான சரிபார்க்கப்பட்ட ஒரே பதிவு, 1855-ல் சேகரிக்கப்பட்ட ஒரு மாதிரியிலிருந்து மட்டுமே கிடைக்கிறது என்று அந்த ஆய்வு கூறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b693e9e-143c-4435-b6c4-f5f476a6eb5a/26-6a95646ad0e5d.webp' /></p><p>

இந்தியா மற்றும் இலங்கை முழுவதிலுமுள்ள வரலாற்றுப் பதிவுகளையும், சாத்தியமான வாழ்விடங்களைக் கண்டறிவதற்கான முன்கணிப்பு வாழ்விட மாதிரியாக்கத்தையும் ஒருங்கிணைத்து, ஆராய்ச்சியாளர்கள் தென்மேற்கு இலங்கையின் சபரகமுவ மாகாணத்தில் அந்தத் தாவரத்தைத் தேடினர்.</p><p>

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், ஆய்வுக் குழு 70 முதல் 100 வரையிலான ஐ. விர்கேட்டஸ் (I. virgatus) உயிரினங்களின் ஒரு சிறிய கூட்டத்தை வெற்றிகரமாகக் கண்டறிந்தது. </p><p>இந்த உயிரினம் வாழ்வதற்கு மிகவும் பொருத்தமானது என்று ஆய்வாளர்கள் கணித்திருந்த ஒரு பகுதியில் இந்தக் கூட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.</p><p>

இண்டியன்தஸ் பேரினத்தில் உள்ள ஒரே சிற்றினமான ஐ. விர்கேட்டஸ் , தனித்துவமான பரிணாம மற்றும் உயிர் புவியியல் சூழலைக் கொண்டுள்ளது என்று, இந்த ஆய்வின் இணை ஆசிரியரும், இந்தியாவின் மணிப்பால் உயர் கல்வி அகாடமியின் சூழலியல் மற்றும் பரிணாம உயிரியல் உதவிப் பேராசிரியருமான விவேக் பாண்டி கூறினார்.
</p><p>
இந்தியத் துணைக்கண்டம் மற்றும் இலங்கை முழுவதும் இந்த இனம் துண்டிக்கப்பட்டுக் காணப்படுகிறது, அதாவது இதன் இனக்கூட்டங்கள் ஒரு பெரிய புவியியல் இடைவெளியால் பிரிக்கப்பட்டுள்ளன என்று பாண்டி&nbsp; தெரிவித்தார்.</p><p></p><h2>சுவாரஸ்யமான கேள்வி</h2><p> </p><p>இது ஒரு சுவாரஸ்யமான கேள்வியை எழுப்புகிறது என்றும் அவர் மேலும் கூறினார்;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a75f9035-304e-42ee-ba33-cea57bcae8de/26-6a95646bc3d82.webp' /></p><p> </p><p>அதாவது, ஒரு காலத்தில் தொடர்ச்சியாக இருந்த இந்தத் தாவரத்தின் இனக்கூட்டத்தை ஏதேனும் ஒரு பண்டைய புவியியல் நிகழ்வு இரண்டு தனித்தனி குழுக்களாகப் பிரித்ததா; அல்லது இந்த இனம் பின்னர் நீண்ட தூரப் பரவல் மூலம் இலங்கையை அடைந்ததா?
</p><p>
இலங்கையின் காடுகளில் 170 ஆண்டுகளாக ஐ. விர்கேட்டஸ் இனம் பதிவு செய்யப்படாமல் இருந்தபோதிலும் , பல தசாப்தங்களாக வனப்பகுதிகளின் பாதுகாப்பான இடங்களில் இந்த இனம் கண்டறியப்படாமல் உயிர் பிழைத்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுவதாக பாண்டி கூறினார்.
</p><p>
பாண்டியின் கூற்றுப்படி, சுற்றியுள்ள நிலப்பரப்பில் கடுமையான இடையூறுகள் ஏற்பட்டபோதிலும், நிலையான நுண் தட்பவெப்ப நிலைமைகளைத் தக்கவைத்துக் கொள்ளக்கூடிய, ஈரமான, நிழலான காடுகளின் சிறிய எச்சங்கள், பொதுவாக நீரோடைகள் மற்றும் பாதுகாப்பான சரிவுகளைச் சுற்றி, இந்தப் பகுதிகளில் அடங்கியுள்ளன.</p><p>

" ஐ. விர்கேட்டஸின் மறு கண்டுபிடிப்பு, சிறியதாகவும் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் தோன்றும் இந்தக் காட்டு எச்சங்கள், அதிகம் அறியப்படாத உயிரினங்களைப் பாதுகாப்பதற்கு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது," என்று பாண்டி கூறினார்.</p><p></p><h2>நுண் புகலிடங்களைப் பாதுகாத்தல்</h2><p>இலங்கையில் இத்தாவரத்திற்கு ஏற்ற பெரும்பாலான வாழ்விடங்கள் தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்களால் அழிக்கப்பட்டுவிட்டதால், இந்த நுண் புகலிடங்களைப் பாதுகாப்பது அவசரமானது என அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.</p><p> மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள இத்தாவரக் கூட்டங்களும் வாழ்விடம் தொடர்பான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன என்று பாண்டி கூறினார்.</p><p>

இலங்கையில் புதிதாகக் கண்டறியப்பட்ட இந்தத் தாவரக் கூட்டத்தைத் திறம்படப் பாதுகாப்பதற்கு, உடனடி உள்ளூர் வாழ்விடப் பாதுகாப்பு மற்றும் தேசிய தாவரவியல் பூங்காக்களில் இத்தாவரத்தின் சேகரிப்புகளை நிறுவுவதற்கான முயற்சிகள் ஆகிய இரண்டையும் ஒருங்கிணைப்பது அவசியமாகும் என அந்த ஆய்வின் ஆசிரியர்கள் எழுதுகின்றனர்.
</p><p>
ஐ. விர்கேட்டஸின் பாதுகாப்பு நிலையை ஐயூசிஎன் செம்பட்டியலுக்காகவும் மதிப்பிட வேண்டும் என்றும், அப்போதுதான் அதன் பாதுகாப்பை தேசிய மற்றும் பிராந்திய பல்லுயிர் செயல் திட்டங்களில் ஒருங்கிணைக்க முடியும் என்றும் அவர்கள் மேலும் கூறுகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T11:24:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான பதிவுக்கு எதிராக கிளிநொச்சியில் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-against-non-govt-organizations-register-1788172841"></link>
            <id>https://ibctamil.com/article/protest-against-non-govt-organizations-register-1788172841</id>
            <summary type="text">அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான பதிவுக்கு
எதிராக&amp;nbsp;கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.கிளிநொச்சி - பழைய கச்சேரி முன்பாக இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான பதிவுக்கு
எதிராக&nbsp;கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.</p><p>கிளிநொச்சி - பழைய கச்சேரி முன்பாக இன்றைய தினம் (31) காலை 9 மணியளவில் இந்தப் போராட்டம் ஆரம்பமானது.</p><p>அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான சட்ட வரைபு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p></p><h2>மகஜர்கள் கையளிப்பு</h2><p>இதன்போது&nbsp;அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் பதிவுகள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்ட ஏற்பாடுகளுக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f6651e3-f55b-4824-91ca-ef9f342f1366/26-6a9561f71c242.webp' /></p><p>போராட்டத்தின் நிறைவில் வடக்கு மாகாண ஆளுநர், மாவட்ட அரசாங்க அதிபர், கடற்றொழில் அமைச்சர், ஜனாதிபதி ஆகியோருக்கான தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T11:16:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட ரவி கருணாநாயக்க!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mp-ravi-karunanayake-appears-before-ciaboc-1788146344"></link>
            <id>https://ibctamil.com/article/mp-ravi-karunanayake-appears-before-ciaboc-1788146344</id>
            <summary type="text">புதிய இணைப்புஇலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க புதுக்கடை பிரதான நீதிவ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க புதுக்கடை பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>

இன்று (31) இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><h2>இரண்டாம் இணைப்பு</h2><p>இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>4 சந்தர்ப்பங்களில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்த அழைப்புக்கு அமைய அங்கு சமூகமளிக்காது, இன்று (31) முன்னிலையான நிலையிலேயே ரவி கருணாநாயக்க இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>பல மணிநேர விசாரணையைத் தொடர்ந்து, விசாரணையின் ஒரு பகுதியாக அதிகாரிகள் அவரைக் கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதே விசாரணை தொடர்பில் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவி ஷர்மிளா பெரேரா கைது செய்யப்பட்டு பின்னர் ஜூன் 30 ஆம் திகதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். </p><p>

தேசிய லொத்தர் சபையின் விசேட திட்டத்திற்காகப் பணியமர்த்தப்பட்ட மூன்று ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் அளிப்பதற்காக, அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.</p><p> 

இந்த விசாரணை தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவுசெய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரவி கருணாநாயக்கவுக்கு அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அங்கு சமூகளிக்கவில்லை.</p><p></p><h2>வீட்டிற்குச் சென்ற அதிகாரிகள்</h2><p> </p><p>

இதன்காரணமாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று முன்தினம் (29) அவரது வீட்டிற்குச் சென்றிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac7f16e0-68f6-415e-b3ad-381c2f595d0d/26-6a94f5d78fc6b.webp' /></p><p> 

எனினும், அந்தச் சமயத்திலும் அவர் வீட்டில் இருக்கவில்லை என்பதுடன், தனது மகளின் திருமண ஏற்பாடுகள் காரணமாக ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு வேறொரு திகதியை வழங்குமாறு ரவி கருணாநாயக்க தனது சட்டத்தரணிகள் ஊடாகக் கோரிக்கை விடுத்திருந்தார். </p><p>

இதற்கமைய, ரவி கருணாநாயக்க இன்றைய தினம் (31) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அங்கு அவர் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/xv-PoI9u9Hk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T11:15:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் ஆரம்பித்த தாக்குதல்கள்; ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் செல்ல அச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/fear-over-ship-strait-of-hormuz-us-iran-colin-1788175080"></link>
            <id>https://canadamirror.com/article/fear-over-ship-strait-of-hormuz-us-iran-colin-1788175080</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வளைகுடாவில் ஈரான்–அமெரிக்கா இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ஹோர்முஸ் நீரிணை ஊடாக பயணிக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வளைகுடாவில் ஈரான்–அமெரிக்கா இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ஹோர்முஸ் நீரிணை ஊடாக பயணிக்கும் கப்பல்கள் அச்சத்தை எதிர்கொண்டுள்ளன.
</p><p> 

இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஈரானின் லாரக் தீவில் இரண்டு ஏவுகணை ஏவுதளங்களை அமெரிக்க ராணுவம் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94a7bf0d-536a-4502-a9ea-a5465f81cd81/26-6a9562ea27491.webp' /></p><p>
</p><p>
 ஜூலை மாதத்துக்குப் பிறகு ஈரான் பிரதேசத்தில் அமெரிக்கா நடத்தியதாக கூறப்படும் முதல் நேரடி தாக்குதல் இதுவாகும்.
</p><p> 
 
அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ஜோர்டானில் உள்ள இரண்டு அமெரிக்க விமானப்படை தளங்களை குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.</p><p>
 
ஒரு முன்னணி செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டிய தகவலின்படி, அஸ்ராக் பகுதியில் உள்ள முவாஃபக் சல்தி விமானப்படை தளம் மற்றும் கிங் ஹுசைன் விமானப்படை தளம் ஆகியவை தாக்குதலின் இலக்குகளாக இருந்ததாக IRGC தெரிவித்துள்ளது. </p><p> 
 
மேலும், ஹோர்முஸ் நீரிணை மீதான தனது கட்டுப்பாட்டை இந்த தாக்குதல்கள் எந்த வகையிலும் பலவீனப்படுத்தாது என்றும் IRGC எச்சரித்துள்ளது. </p><p> 


இன்னிலையில் ஹோர்முஸ் நீரிணை உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றாக இருப்பதால், இப்பகுதியில் அதிகரிக்கும் பதற்றம் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-31T11:15:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளப் பெருவெள்ளம்... மொத்தமாக மூடி மறைக்கும் சீனா: திபெத் ஆர்வலர்கள் ஆவேசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-is-concealing-tibet-campaigners-1788174965"></link>
            <id>https://news.lankasri.com/article/china-is-concealing-tibet-campaigners-1788174965</id>
            <summary type="text">China is concealing scale of flood disaster: நேபாள - திபெத் வெள்ளப் பேரிடரை மூடி மறைக்கும் சீனா.
நேபாள வெள்ளப் பேரிடரில் திபெத்தில் மட்டும் 300 குடிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>China is concealing scale of flood disaster: நேபாள - திபெத் வெள்ளப் பேரிடரை மூடி மறைக்கும் சீனா.
</p><p>நேபாள வெள்ளப் பேரிடரில் திபெத்தில் மட்டும் 300 குடியிருப்புகள் மொத்தமாக அடித்துச் செல்லப்பட்ட நிலையில், சீனாவின் உத்தியோகப்பூர்வ இறப்பு எண்ணிக்கை சமூக ஆர்வலர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed23013a-e28f-4f92-9158-bba3f39d7421/26-6a95627720d4c.webp' /></p><p>
</p><p>திபெத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் குறித்த பொது விவாதங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன; பேரிடர் தொடர்பான தவறான தகவல்களைப் பகிர்ந்துகொண்டதற்காக குறைந்தது 10 பேர் தண்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தனர்.</p><p> என்ன தண்டனை அளிக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், 16 பேர் மரணமடைந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 261 வெளிநாட்டினர் உட்பட 546 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>ஆனால், குறைந்தது 300 வீடுகள் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாகவும், இறப்புகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகமாக இருக்கும் என்றும் தங்களது தரப்பு நம்புவதாக திபெத்துக்கான சர்வதேச ஆர்வலர்கள் அமைப்பு தெரிவிக்கிறது.
</p><p>
நேபாளத்தில் காணக்கூடிய காட்சிகள், திபெத்தில் மறைக்கப்பட்டுள்ள உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அந்த அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p>திபெத்தில் சேல் (Sale), செர்சுங் (Serchung), லாபி (Labi) மற்றும் ரிசி (Rizi) ஆகிய நான்கு கிராமங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன; அங்கு சுமார் 300 வீடுகள் மொத்தமாக சேதமடைந்திருப்பதாகவும், பலர் இன்னும் காணாமல் போயிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>மேலும், திபெத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சீன அதிகாரிகள் தெரிவித்ததை விட மிக அதிகமாக இருக்கலாம் என்றே திபெத்துக்கான சர்வதேச ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
</p><p>ஆகஸ்ட் 26 அன்று, நேபாள-திபெத் எல்லையில் பனிப்பாறை ஒன்று சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட பெரும் வெள்ளம் முழு கிராமங்களையும் அழித்து உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca6b6e9f-51d3-4ca4-a283-29632426f0f2/26-6a956277c99d5.webp' /></p><p> </p><p>நேபாளப் பகுதியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐக் கடந்துள்ளது; மேலும் 4,000-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. மலையேற்றப் பயணிகளுக்கும் யாத்ரீகர்களுக்கும் புகழ்பெற்ற இப்பகுதிகளில், இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் நிலை குறித்த தகவல் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. </p><p>இதனிடையே, எல்லையின் இருபுறமும் வழங்கப்பட்ட தகவல்களின் அளவில் பெரும் வித்தியாசம் காணப்படுவதாக திபெத் ஆதரவு அமைப்புகள் கூறுகின்றன.</p><p> வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும் திபெத்தில், சுயாதீனமான சரிபார்ப்பு மிகவும் கடினமானது. சீனாவுக்கு வெளியே உள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் ஆதரவு அமைப்புகளுடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்காகத் திபெத்தியர்கள் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0df968c-2b05-4621-9f47-a2e5adb33cf0/26-6a9562787c28d.webp' /></p><p> </p><p>அரசு நடத்தும் Tibet Daily நாளிதழில் ஆகஸ்ட் 27 அன்று வெளியான ஒரு செய்தியின்படி, எல்லைக்கு அருகே 1,000-க்கும் மேற்பட்டோர் அடித்துச் செல்லப்பட்டதாக வதந்திகளைப் பரப்பியதற்காக இரண்டு திபெத்தியர்கள் விசாரணைக்காக கைது செய்யப்பட்டனர். </p><p>வெள்ளப் பேரிடர் நேபாளத்தில் மட்டுமே நடந்ததாகவும், திபெத்தில் அதனால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் சீன அரசாங்கம் சித்தரிக்கிறது என திபெத்துக்கான சர்வதேச ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T11:14:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் செய்துள்ள வசூல்.. சாதனை படைத்த நிவின் பாலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/bethlehem-kudumba-unit-movie-hits-200-crore-1788173666"></link>
            <id>https://cineulagam.com/article/bethlehem-kudumba-unit-movie-hits-200-crore-1788173666</id>
            <summary type="text">மலையாளத்தில் சமீபத்தில் வெளிவந்த பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் ரூ. 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
பெத்லகேம் குடும்ப யூனிட்

மலையாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலையாளத்தில் சமீபத்தில் வெளிவந்த பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் ரூ. 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.</p><p>
</p><p></p><h2>பெத்லகேம் குடும்ப யூனிட்
</h2><p>
மலையாள திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நிவின் பாலி நடிப்பில் இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த திரைப்படம் பெத்லகேம் குடும்ப யூனிட். இப்படத்தை இயக்குநர் கிரிஜ் ஏடி இயக்கியுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a39160bc-1ba2-49ff-9994-b910d42c6fb0/26-6a955d65e468b.webp' /></p><p>இவர் இதற்கு முன் பிரேமலு படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
</p><h2>
பாக்ஸ் ஆபிஸ்
</h2><p>
இந்நிலையில், 10 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள <a href="https://www.youtube.com/watch?v=Fv1FQi6CWe4" target="_blank">பெத்லகேம் </a>குடும்ப யூனிட் திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1b59880-440c-4c22-a62e-0d4b70c28725/26-6a955d6516f0b.webp' /></p><p>அதன்படி, 10 நாட்களில் பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் உலகளவில் ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளது. இது, நிவின் பாலியின் திரை வாழ்க்கையில் முதல் முறையாக ரூ. 200 கோடி வசூல் செய்யும் திரைப்படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-31T11:10:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு: வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rise-in-colombo-consumer-inflation-1788172346"></link>
            <id>https://tamilwin.com/article/rise-in-colombo-consumer-inflation-1788172346</id>
            <summary type="text">கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் இந்த ஆண்டின் ஓகஸ்ட் மாதத்தில் 8 சதவீதமாக அதிகரித்துள்ளதாக&amp;nbsp; தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் இந்த ஆண்டின் ஓகஸ்ட் மாதத்தில் 8 சதவீதமாக அதிகரித்துள்ளதாக&nbsp; தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;இன்று (31) வெளியிட்டுள்ள கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணிற்கு அமைவாக, ஜூலை மாதத்தில் 7.3 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்க வீதம் ஓகஸ்ட் மாதத்தில் 8 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.</p><h2>பணவீக்கம் அதிகரிப்பு</h2><p>

 

இதற்கிடையில், ஓகஸ்ட் மாதத்தில் உணவுப் பிரிவின் வருடாந்த பணவீக்க வீதம் 8.5 சதவீதம் வரை அதிகரித்துள்ளதுடன், ஜூலை மாதத்தில் அது 6.3 சதவீதமாகப் பதிவாகியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc387455-9a65-4e24-afef-a72723e1767f/26-6a955f7725635.webp' /></p><p>
</p><p>
 

எவ்வாறாயினும், உணவு அல்லாத பிரிவின் வருடாந்த பணவீக்க வீதம் ஓகஸ்ட் மாதத்தில் 7.7 சதவீதம் வரை குறைவடைந்துள்ளது. ஜூலை மாதத்தில் அவ்வீதம் 7.8 சதவீதமாகப் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T11:09:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஷாரா செவ்வந்தி இந்தியா தப்பிச் செல்ல படகு வழங்கிய யாழ்ப்பாணத்தவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-man-boat-ishara-travel-india-arrested-1788171396"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-man-boat-ishara-travel-india-arrested-1788171396</id>
            <summary type="text">கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு பின்னர் இந்தியாவுக்குத் தப்பிச் செல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு பின்னர் இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்குப் படகு வழங்கி உதவியதாகக் கூறப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியைச் சேர்ந்த 'பலசி' என அழைக்கப்படும் ஜேசுதாசன் செல்வசேத் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் காவல்துறையினர் தெரிவித்தனர்.&nbsp;</p><h2>காவல்துறையின் விசேட நடவடிக்கை&nbsp;</h2><p>மன்னார், இலுப்பைக்கடவை காவல்துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9572323e-f157-4cd1-ae2a-0b987e9efc1c/26-6a9557d8da86f.webp' /></p><p>
</p><p>


 இஷாரா செவ்வந்தி துப்பாக்கிசூட்டு சம்பவத்திற்கு பின்னர் யாழ்ப்பாணத்திற்கு வந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்கு இவரே படகு வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T11:07:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிசம்பர் முதல் இலங்கைக்கு வரும் புதிய விமான சேவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/newest-airline-coming-to-sri-lanka-from-december-1788173372"></link>
            <id>https://ibctamil.com/article/newest-airline-coming-to-sri-lanka-from-december-1788173372</id>
            <summary type="text">எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் இலங்கையையும் ரஷ்யாவின் சைபீரியப் பகுதியையும் இணைக்கும் புதிய சர்வதேச விமான சேவையைத் தொடங்க ரஷ்யாவின் முன்னணி விமான நிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் இலங்கையையும் ரஷ்யாவின் சைபீரியப் பகுதியையும் இணைக்கும் புதிய சர்வதேச விமான சேவையைத் தொடங்க ரஷ்யாவின் முன்னணி விமான நிறுவனமான S7 ஏர்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. </p><p>சைபீரியாவின் நோவோசிபிர்ஸ்க் (Novosibirsk) நகரத்திற்கும் கொழும்புக்கும் இடையில் இயக்கப்படும் இந்த விமானங்கள் 2026 டிசம்பர் 20 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்று அந்த நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><h2>&nbsp;ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு கிடைக்கப்போகும் வசதி</h2><p>&nbsp; இந்த புதிய விமான இணைப்பு மூலம் இலங்கைக்கு வரும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் ஹிக்கடுவ, பெந்தோட்டை மற்றும் திருகோணமலை போன்ற பிரபலமான கடற்கரை மற்றும் சுற்றுலாத் தலங்களை எளிதாக அடைய முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd68c353-e207-4a7a-a982-97cbd6df5c78/26-6a955fee9eff8.webp' /></p><p> இந்த விமானங்கள் வாரத்திற்கு இரண்டு நாட்கள், அதாவது ஒவ்வொரு வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நோவோசிபிர்ஸ்கில் உள்ள டோல்மாச்சேவோ விமான நிலையத்திலிருந்து வியாழக்கிழமை காலை 5.15 மணிக்கும் ஞாயிற்றுக்கிழமை காலை 5.00 மணிக்கும் புறப்படும் விமானங்கள், அதே நாளில் பிற்பகல் 1.40 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும்.</p><p></p><p> </p><h2>பயணத்திற்கான மொத்த நேரம்</h2><p>கொழும்பிலிருந்து மீண்டும் விமானம் புறப்படுவது அதே நாட்களில் பிற்பகல் 2.50 மணிக்கு நடைபெறும், மேலும் அந்த விமானங்கள் அடுத்த நாள் அதிகாலை 2.15 மணியளவில் நோவோசிபிர்ஸ்கை செ்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/801b7609-a733-4250-8885-6f515128b0df/26-6a955fedec304.webp' /></p><p>
</p><p>





இந்த பயணத்தின் போது இந்தியாவின் ஜெய்ப்பூர் நகரில் தொழில்நுட்ப எரிபொருள் நிரப்புதல் நடைபெறும், இதற்காக பயணிகள் விமானத்தில் இருந்து இறங்க வேண்டிய அவசியமில்லை. இந்த பயணத்திற்கான மொத்த நேரம் சுமார் 10 மணிநேரம் ஆகும்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T11:06:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதாகி எட்டு மாதங்களின் பின் வெளியான வெனிசுலா முன்னாள் அதிபர் புகைப்படம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/photo-of-former-venezuelan-president-released-1788159702"></link>
            <id>https://canadamirror.com/article/photo-of-former-venezuelan-president-released-1788159702</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;அமெரிக்க காவலில் உள்ள வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, தன்னை பற்றிய புகைப்படங்களை முதன்முறையாக சமூக வலைதளங்களில் வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;அமெரிக்க காவலில் உள்ள வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, தன்னை பற்றிய புகைப்படங்களை முதன்முறையாக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். </p><p>

கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட பின்னர், சுமார் எட்டு மாதங்களுக்கு பிறகு அவர் காவலில் இருக்கும் தோற்றத்தை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3437b06b-3db8-46e5-9f55-f1c16e93b889/26-6a9526d86761a.webp' /></p><h2>நியூயார்க்கில்&nbsp; &nbsp;புரூக்ளின் மெட்ரோபாலிட்டன் தடுப்பு மையத்தில் ...</h2><p>
 
 
ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியிடப்பட்ட அந்த இரண்டு புகைப்படங்களிலும் மதுரோ சாம்பல் நிற டிராக்சூட் மற்றும் வெள்ளை நிற காலணிகள் அணிந்தபடி புன்னகையுடன் காணப்படுகிறார்.
</p><p>
 இரு கைகளாலும் வெற்றி சின்னம் காட்டும் வகையிலும் அவர் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் மெட்ரோபாலிட்டன் தடுப்பு மையத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. </p><p>

எனினும், அவை சமீபத்தில் எடுக்கப்பட்டவை அல்ல என்றும், ஜூன் 25, 2026 என்ற தேதி புகைப்படங்களில் இடம்பெற்றுள்ளது.
</p><p> 
தனது பேரக்குழந்தைகள், குழந்தைகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு அன்பையும் நம்பிக்கையையும் தெரிவிக்கும் வகையில் மதுரோ இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 தானும் தனது மனைவி சிலியா புளோரஸும் உறுதியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். </p><p>மேலும், தங்களது ஆதரவாளர்களின் பிரார்த்தனைகள் மற்றும் ஒற்றுமைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
 
மதுரோ மற்றும் அவரது மனைவி ஜனவரியில் வெனிசுலாவில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.</p><p> 

போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதம் தொடர்பான குற்றச்சாட்டுகளை அவர்கள் எதிர்கொள்கின்றனர் . எனினும் இந்த குற்றச்சாட்டுகளை மதுரோ மறுத்துள்ள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-31T11:05:50+00:00</updated>
        </entry>
    </feed>
