<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-23T14:30:24+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனிமல் பட புகழ் நடிகை த்ரிப்தி டிம்ரியின் அசத்தலான கிளாமர் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/tripti-dimri-latest-glamour-photos-1787481216"></link>
            <id>https://viduppu.com/article/tripti-dimri-latest-glamour-photos-1787481216</id>
            <summary type="text">இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர் நடிகை த்ரிப்தி டிம்ரி. 

இவர் பாலிவுட்டில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளிவந்த அனிமல் திரைப்படத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர் நடிகை த்ரிப்தி டிம்ரி. </p><p>

இவர் பாலிவுட்டில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளிவந்த அனிமல் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். </p><p>

முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து வரும் த்ரிப்தி டிம்ரி இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்வார். </p><p>

அந்த வகையில், தற்போது அசத்தலான கருப்பு நிற உடையில் எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 

இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. </p><p>இதோ அந்த புகைப்படங்கள்:</p>]]></content>
            <updated>2026-08-23T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[முச்சக்கரவண்டி சாரதிகளின் குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/minimum-age-for-three-wheeler-drivers-is-40-1787495322"></link>
            <id>https://ibctamil.com/article/minimum-age-for-three-wheeler-drivers-is-40-1787495322</id>
            <summary type="text">இலங்கையில் முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயது எதிர்காலத்தில் 40 ஆண்டுகளாக உயர்த்தப்படலாம் என தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹெவாகே தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயது எதிர்காலத்தில் 40 ஆண்டுகளாக உயர்த்தப்படலாம் என தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹெவாகே தெரிவித்துள்ளார்.
</p><p>பாடசாலை கல்வியை நிறைவு செய்தவுடனேயே அதிக இளைஞர்கள் முச்சக்கர வண்டி ஓட்டுவதைத் தடுப்பதையே இந்த முன்மொழியப்பட்ட நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று துணை அமைச்சர் கூறியுள்ளார்.</p><p>

 

கல்வி மற்றும் தொழிற்பயிற்சி மூலம் நாட்டின் மனிதவளத்தை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதை எடுத்துரைக்கும்போது ஹெவாகே இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஆற்றல்மிக்க இளம் தலைமுறை</h2><p>
 

பிரதி அமைச்சரின் கூற்றுப்படி, இலங்கையின் எதிர்காலம், திறமையான மற்றும் ஆற்றல்மிக்க இளம் தலைமுறையை உருவாக்குவதில் தங்கியுள்ளது. இது நாட்டை ஒரு வளர்ந்த தேசமாக மாற்றுவதற்கு இன்றியமையாதது என்றும் அவர் விவரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52d36543-d377-415e-86c2-77499d242eaf/26-6a8b039cbf81d.webp' /></p><p>
 

எனவே, அரசாங்கம் மனிதவள மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளித்து, கல்வித் துறையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் நோக்கில் புதிய கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p>

 

மேலும் நமது நாட்டின் எதிர்காலம் நமது பிள்ளைகளின் கைகளில் உள்ளது. மேம்பட்ட மனிதவளமே இறுதியில் இலங்கையை ஒரு வளர்ந்த நாடாக மாற்றும். ஓர் அரசாங்கம் என்ற முறையில், நாங்கள் மனிதவள மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கிறோம். அதனால்தான் நாங்கள் கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். கல்வியில் ஒரு பெரிய மாற்றம் தேவை என்று நாங்கள் நம்புகிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T14:28:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிரி நாடாக கருதப்படும் - அமெரிக்காவின் பொருளாதார போர் தொடர்பில் ஈரான் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-warns-nations-on-us-economic-war-1787494997"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-warns-nations-on-us-economic-war-1787494997</id>
            <summary type="text">Iran warns nations on US economic war: அமெரிக்காவின் பொருளாதார போரில் இணையும் நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் எச்சரிக்கைஅமெரிக்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran warns nations on US economic war: அமெரிக்காவின் பொருளாதார போரில் இணையும் நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><h2>
ஈரான் எச்சரிக்கை</h2><p>அமெரிக்கா, ஈரானை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தும் முயற்சியில் தனது கூட்டாளிகளை அழைத்துள்ள நிலையில், ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a58bf5d3-c5e4-4bf3-a258-dbb034233b90/26-6a8b0256dd487.webp' /></p><p>ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் மொஹ்சன் ரெசாய், “அமெரிக்கா நடத்தும் பொருளாதார போரில் எந்த நாடும் கலந்து கொண்டால், அது எங்களின் எதிரி நாடாக கருதப்படும்” என்று அரசுத் தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>நிறுவனங்களை தாக்கப்படும்</h2><p>

அவர் மேலும், “அமெரிக்கா எங்கள்மீது பொருளாதார தடைகள் விதிக்க முயன்றால், அவர்களின் எண்ணெய் மற்றும் பொருளாதார நிறுவனங்களை தாக்குவோம். இதுவரை நாங்கள் அமெரிக்க இராணுவ தளங்களை மட்டுமே குறிவைத்துள்ளோம். ஆனால், பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டால், எங்கள் பதில் நிலநடுக்கம் போல இருக்கும்” என்று எச்சரித்தார்.
</p><p>
இந்த எச்சரிக்கை, அமெரிக்கா தனது கூட்டாளிகளை ஈரானின் பொருளாதாரத்தை தனிமைப்படுத்தும் முயற்சியில் இணைக்க அழைத்துள்ள சூழலில் வந்துள்ளது.
</p><p>
குறிப்பாக, சீனாவிடம் அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளது. ஆனால், சீனா இந்த முயற்சியை விமர்சித்து, “தடைகள் மத்திய கிழக்கு பிரச்சினையை தீர்க்காது” என்று தெரிவித்துள்ளது.
</p><p></p><p>ஈரானின் முக்கிய வர்த்தக கூட்டாளியான ஐக்கிய அரபு அமீரகம், கடந்த வாரம் ஈரானுடன் உள்ள அனைத்து வர்த்தக மற்றும் நிதி பரிவர்த்தனைகளையும் நிறுத்துவதாக அறிவித்தது.</p><p>

இந்த நிலைமை, அமெரிக்கா-ஈரான் உறவுகளை மேலும் மோசமாக்குவதோடு, உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T14:20:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலதா மாளிகை பெரஹெராவில் குழப்பம் விளைவித்த நபர் - உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-arrested-for-obstructing-kandy-perahera-1787492155"></link>
            <id>https://tamilwin.com/article/man-arrested-for-obstructing-kandy-perahera-1787492155</id>
            <summary type="text">கண்டி தலதா மாளிகை பெரஹெராவில் குழப்பம் விளைவித்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் இன்றைய தினம் (...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி தலதா மாளிகை பெரஹெராவில் குழப்பம் விளைவித்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

குறித்த சம்பவம் இன்றைய தினம் (23.08.2026) இடம்பெற்றுள்ளது. </p><p>

சந்தேகநபர் பெரஹெராவிற்காக பணியில் இருந்த பல பொலிஸ் அதிகாரிகளை வாய்மொழியாக திட்டியதோடு, அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் குழப்பமான முறையில் நடந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>சந்தேகநபர் கைது</h2><p> </p><p>

</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc3a9c54-f8f0-4f2d-b04c-480aeb3da031/26-6a8b0187b64a8.webp' /></p><p>தலதா மாளிகை வளாகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக, பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகளை அந்த நபர் வாய்மொழியாகத் திட்டியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p>
</p><p>
அதன்படி, சம்பந்தப்பட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
மேலும் அவர் மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T14:20:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/earthquake-eastern-japan-1787494728"></link>
            <id>https://ibctamil.com/article/earthquake-eastern-japan-1787494728</id>
            <summary type="text">ஜப்பானின் கிழக்கு&amp;nbsp;&amp;nbsp; தலைநகர் டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில்&amp;nbsp;5.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானின் கிழக்கு&nbsp;&nbsp; தலைநகர் டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில்&nbsp;5.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.</p><p>இந்த நிலநடுக்கத்தின்
காரணமாகக் குறைந்தது 37 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p>ஜப்பானின் இப்பாராகி பிராந்தியத்தில் சுமார் 70
கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>சுனாமி குறித்த எச்சரிக்கை</h2><p><span style="color: inherit;">எனினும் குறித்த நிலநடுக்கத்தால் சுனாமி குறித்த எச்சரிக்கை இல்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</span></p><p><span style="color: inherit;">[</span>HY897H<span style="color: inherit;">]</span></p><p>

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிக்கான
தொடருந்து போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்ட போதிலும், பின்னர்
அவை வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதில் தளபாடங்கள் விழுந்ததாலும்,
மக்கள் பீதியடைந்து வெளியேற முயன்றதாலுமே பெரும்பாலானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-23T14:18:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உளவு செயற்கைக்கோள்களை கண்காணிக்கும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கிய இந்திய ஸ்டார்ட்அப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-startup-tracks-spy-satellites-in-space-1787491841"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-startup-tracks-spy-satellites-in-space-1787491841</id>
            <summary type="text">Indian startup Digantara tracks spy satellites in space: உளவு பார்க்கும் செயற்கைக்கோள்களை கண்காணிக்கும் புதிய தொழில்நுட்பத்தை இந்திய ஸ்டார்ட்அப் நிறுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indian startup Digantara tracks spy satellites in space: உளவு பார்க்கும் செயற்கைக்கோள்களை கண்காணிக்கும் புதிய தொழில்நுட்பத்தை இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனமொன்று உருவாக்கியுள்ளது.</p><h2>

இந்திய ஸ்டார்ட்அப் டிகந்தரா</h2><p>லடாக்கில் அமைக்கப்பட்டுள்ள MOSAIC எனும் விண்வெளி கண்காணிப்பு அமைப்பு, இந்திய ஸ்டார்ட்அப் டிகந்தரா (Digantara) உருவாக்கிய புதிய தொழில்நுட்பமாகும்.
</p><p>
இது வானில் இயங்கும் செயற்கைக்கோள்கள், விண்வெளி கழிவுகள் மற்றும் நட்சத்திரங்களை தானாகவே பிரித்து கண்காணிக்கும் திறன் கொண்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e07dad87-c179-4040-abc1-11d38df82b99/26-6a8af60417390.webp' /></p><h2>MOSAIC&nbsp;அமைப்பு</h2><p>இந்த அமைப்பு, செயற்கைக்கோள்களின் இயக்கத்தை தொடர்ந்து கண்காணித்து, அவற்றின் பாதையை கணக்கிடுகிறது. இதன் மூலம், எந்த செயற்கைக்கோள் எப்போது இந்தியாவின் முக்கிய பகுதிகளை கண்காணிக்கிறது என்பதை அறிய முடிகிறது. </p><p>இது தேசிய பாதுகாப்பு மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கு மிக முக்கியமான தகவல்களை வழங்குகிறது.
</p><p></p><p>முன்னதாக, போக்ரான் அணு பரிசோதனைகளின் போது வெளிநாட்டு உளவு செயற்கைக்கோள்களை தவிர்க்க இந்தியா மிகுந்த சிரமங்களை சந்தித்தது.</p><p> அந்த அனுபவம், “முதலில் எப்போது உளவு செயற்கைக்கோள் மேலே பறக்கிறது என்பதை அறிய வேண்டும்” என்ற பாடத்தை கற்றுக் கொடுத்தது.
</p><p>
MOSAIC அமைப்பு, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திரக் கற்றல் (machine learning) தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, வானில் பறக்கும் பொருட்களை தானாகவே அடையாளம் காண்கிறது. ஒரு இரவில் 400-500 பொருட்களை கண்காணிக்க முடியும்.
</p><p></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">India gets new eyes on orbit. 🇮🇳<br><br>Introducing MOSAIC, our AI-powered Wide Area Sensing Architecture, built to search, detect and track hundreds of objects simultaneously, turning observations into orbital intelligence.<br><br>Mobile. Autonomous. Built in India for the scale of modern… <a href="https://t.co/pr6Fu2iIdj">pic.twitter.com/pr6Fu2iIdj</a></p>&mdash; Digantara (@Digantarahq) <a href="https://x.com/Digantarahq/status/2088475774693347451?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இந்தியாவில் மட்டுமல்லாமல், நமீபியா, சிலி, நியூ மெக்சிகோ, ஹவாய் போன்ற இடங்களிலும் இந்த அமைப்புகள் நிறுவப்படுகின்றன. இதன் மூலம் உலகளாவிய அளவில் செயற்கைக்கோள்களின் இயக்கத்தை கண்காணிக்க இந்தியாவுக்கு தனித்துவமான திறன் கிடைக்கிறது.
</p><p>
மேலும், இந்த அமைப்பு “லேசர் டாஸ்லிங்” எனப்படும் தொழில்நுட்பத்தையும் சோதனை செய்கிறது. இது உளவு செயற்கைக்கோள்களின் கமெரா அமைப்பை தற்காலிகமாக பாதித்து, அவை முக்கிய இடங்களை படம் பிடிப்பதைத் தடுக்க உதவும்.
</p><p>
இந்தியாவின் பாதுகாப்பு கணக்கீடுகள் நிலம், கடல், வானம், சைபர் வலைப்பின்னல்கள் மட்டுமல்லாமல், இப்போது விண்வெளியையும் உள்ளடக்கியுள்ளன. </p><p>டிகந்தரா உருவாக்கிய MOSAIC அமைப்பு, இந்தியாவிற்கு சுயாதீனமான விண்வெளி கண்காணிப்பு திறனை வழங்கி, உலகளாவிய தரவுகளின் மீது சார்ந்திருப்பதை குறைக்கிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T14:15:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/5-9-magnitude-earthquake-eastern-japan-37-injured-1787493517"></link>
            <id>https://tamilwin.com/article/5-9-magnitude-earthquake-eastern-japan-37-injured-1787493517</id>
            <summary type="text">கிழக்கு ஜப்பானில் தலைநகர் டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள
பிராந்தியங்களை உலுக்கிய 5.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின்
காரணமாகக் குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு ஜப்பானில் தலைநகர் டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள
பிராந்தியங்களை உலுக்கிய 5.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின்
காரணமாகக் குறைந்தது 37 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இப்பாராகி பிராந்தியத்தை மையமாகக் கொண்டு நிலப்பரப்பிற்கு அடியில் சுமார் 70
கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.</p><h2>சுனாமி எச்சரிக்கை</h2><p>
</p><p>
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை என
ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d66d75e-20e8-4261-b383-58619f44bc7a/26-6a8afda764d77.webp' /></p><p>

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிக்கான
ரயில் போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்ட போதிலும், பின்னர்
அவை வழமைக்கு திரும்பின.</p><p>

நிலநடுக்க அதிர்வினால் கட்டடங்கள் குலுங்கியதில் தளபாடங்கள் விழுந்ததாலும்,
மக்கள் பீதியடைந்து வெளியேற முயன்றதாலுமே பெரும்பாலானோர் காயமடைந்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-23T14:03:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொடூர குற்றம் சாட்டப்பட்டுள்ள மஞ்சள் காவிக்கு சிறப்பு சலுகை - உடனடியாக விசாரிக்குமாறு நீதிபதி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-consideration-for-pallegama-thero-1787491679"></link>
            <id>https://tamilwin.com/article/special-consideration-for-pallegama-thero-1787491679</id>
            <summary type="text">அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற வளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற வளாகத்திற்குள் வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. </p><p>

சிறுமி ஒருவரை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேகநபர் எவ்வாறு அங்கு வந்தார் என்பது தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>

இது குறித்து அனுராதபுர பிரதான நீதவான் சியபத் சசிந்து விக்ரமதன, அனுராதபுர மேல் நீதிமன்ற வளாகத்தின் பொலிஸ் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜி. தர்மசிறிக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p> </p><h2><b>

மீண்டும் விசாரணை</b></h2><p>தகாத செயற்பாட்டு சம்பவம் தொடர்பில் பல்லேகம ஹேமரத்தன தேரருக்கு எதிராக அனுராதபுர பிரதான நீதவான் நீதிமன்றில் உள்ள வழக்கு கடந்த 21ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e075c43e-aec1-47f1-b811-efd9a182de07/26-6a8afc6b4e102.webp' /></p><p>இதன்போது, சட்டத்தரணி சானக அபேவிக்ரம நீதிமன்றில் முன்வைத்த விசேட கருத்துக்களை கருத்திற்கொண்டே பிரதான நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-23T13:59:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA['பிழைக்க மாட்டான்’ என்ற மருத்துவர்கள் - நாய் போல குரைத்த சிறுவன் 22 நாட்களில் மீண்ட அதிசயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mirzapur-boy-recovers-rabies-miracle-recovery-1787484207"></link>
            <id>https://manithan.com/article/mirzapur-boy-recovers-rabies-miracle-recovery-1787484207</id>
            <summary type="text">உத்தர பிரதேசத்தின் மிர்சாபூரைச் சேர்ந்த 15 வயது சிறுவன் கரண், நாய் கடித்ததால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த&amp;nbsp; மார்ச் 16 அன்று அவர் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>உத்தர பிரதேசத்தின் மிர்சாபூரைச் சேர்ந்த 15 வயது சிறுவன் கரண், நாய் கடித்ததால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த&nbsp; மார்ச் 16 அன்று அவர் நாயைப் போல குரைக்கும் காணொளிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவரால் தண்ணீர் குடிக்க முடியவில்லை. வாயில் இருந்து தொடர்ந்து உமிழ்நீர் வழிந்தது.</p><h2>நடந்தது என்ன?&nbsp;</h2><p>
கடந்த ஆண்டு டிசம்பர் 20 அன்று, வாராணசியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தபோது கரணை ஒரு நாய் கையில் கடித்தது. உடனே மருத்துவமனைக்குச் சென்ற அவருக்கு டெட்டனஸ் ஊசி மட்டும் போடப்பட்டது. </p><p>ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும் என்று கரணுக்குத் தெரிந்திருந்தாலும், மருத்துவமனையில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அங்கிருந்த ஊழியர் ஒருவர், டெட்டனஸ் ஊசி போட்டுவிட்டதால் ரேபிஸ் ஊசி தேவையில்லை என்று கூறியதாக கரண் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9971539c-db1e-4231-85ac-665f4d6a74b1/26-6a8ae12a2f232.webp' /></p><p></p><p>
</p><p>
அதன்பிறகு சுமார் நான்கு மாதங்கள் கரணுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.&nbsp; ஆனால், மார்ச் 13 அன்று வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிய கரண் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.&nbsp;</p><p>அதே போல் மறுநாள் மீண்டும் மயங்கி விழுந்ததுடன், நாயைப் போல குரைக்கத் தொடங்கியுள்ளார். அவரால் பேசவும் முடியவில்லை.&nbsp; என்பதால், குடும்பத்தினர் பயந்து போய் இது ஏதோ இயற்றைக்கு அப்பாற்பட்ட விடயம் என பிராத்தனையிலும் ஈடுப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>பின்னர் நிலைமை மோசமடையவே பல மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றும் சரியான சிகிச்சை கிடைக்கவில்லை. இறுதியில் வாராணசியில் உள்ள BHU மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். </p><p>அங்கு மருத்துவர்கள், கரண் ரேபிஸின் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும், இனி குணமடைவது கடினம் என்றும் கூறினர்.

மருத்துவர்களின் வார்த்தைகளைக் கேட்டு கரணின் தந்தை நம்பிக்கையிழந்தார். இருந்தாலும் மகனை வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார்கள்.&nbsp;</p><p></p><h2>22 நாட்களில் மீண்டது எப்படி?&nbsp;&nbsp;</h2><p>அப்போது ஹர்ஹுவாவில் இருந்த ஒரு உறவினரின் உதவியுடன் கரணுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது. அடுத்த சில வாரங்களில் தொடர்ந்து தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. மொத்தம் ஐந்து தடுப்பூசிகள் சுமார் 22 நாட்களில் போடப்பட்டன.
</p><p>
இதன் பிறகு கரணின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் சில பிரச்சினைகள் ஏற்பட்டதால், மேலும் இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டன.

தற்போது கரண் முழுமையாக குணமடைந்துள்ளார்.</p><p> பள்ளிக்கும் சென்று வருகிறார்.

ரேபிஸின் இறுதிக்கட்ட அறிகுறிகளுடன் இருந்தும் கரண் உயிர் பிழைத்தது மருத்துவத் துறையில் மிகவும் அரிதான நிகழ்வாகவே பார்க்கப்படுகின்றது.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcVkWKGDg1F/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcVkWKGDg1F/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcVkWKGDg1F/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Bhaskar English (@bhaskarenglish_)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T13:53:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கு போரில் ஒரு முடிவை தேடும் சர்வதேசம்! நோக்கி தெஹ்ரானுக்கு விரையும் ஆசிம் முனீர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/an-end-to-the-middle-east-war-1787492677"></link>
            <id>https://ibctamil.com/article/an-end-to-the-middle-east-war-1787492677</id>
            <summary type="text">மத்திய கிழக்கு போருக்கு ஒரு தீர்வைக் காண பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ய முயன்று வரும் நிலையில், அந்நாட்டின் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஈரானுக்கு திடீர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கு போருக்கு ஒரு தீர்வைக் காண பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ய முயன்று வரும் நிலையில், அந்நாட்டின் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஈரானுக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.</p><p>இதன்படி நாளை&nbsp;ஆசிம் முனீர் தனது விஜயத்தை மேற்கொள்வார் என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>ஈரான்-பாகிஸ்தான் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக முனீர் ஈரானிய தலைநகருக்கு ஒரு தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்குவார் என்று அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.</p><p></p><h2>பாகிஸ்தானின் தொடர்ச்சியான முயற்சி</h2><p>பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்த உதவும் பாகிஸ்தானின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகவும் இந்த வருகை அமைந்தது என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09d2d457-9571-4f7d-8e58-7e1253b7ecc1/26-6a8afad007f83.webp' /></p><p>

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான போரை நிறுத்தும் முயற்சிகளில் பாகிஸ்தான் முக்கியப் பங்கு வகித்துள்ளது.</p><p>குறிப்பாக ஜூன் மாதம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அது மத்தியஸ்தம் செய்தது, ஆனால் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தற்போது முடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்த மாதத் தொடக்கத்தில் பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கியுடன் ஒரு கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த நடவடிக்கை ஈரானின் செல்வாக்கை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டது என்று தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T13:51:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[Mothers of India: வெறும் 10 மாத வாழ்வு… 5 உயிர்களுக்கு ஒளி தந்து உடல் உறுப்புத் தானத்தில் வரலாறு படைத்த Aalin]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mothers-of-indiakerala-s-youngest-organ-donor-1787488289"></link>
            <id>https://manithan.com/article/mothers-of-indiakerala-s-youngest-organ-donor-1787488289</id>
            <summary type="text">கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம், மல்லப்பள்ளியைச் சேர்ந்த 10 மாதக் குழந்தை Aalin Sherin Abraham. சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம், மல்லப்பள்ளியைச் சேர்ந்த 10 மாதக் குழந்தை Aalin Sherin Abraham. சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட பின், அவரது பெற்றோரின் மனிதநேயத்தார் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு 5 பேரின் வாழ்வுக்கு ஒளியூட்டியதுடன் மாநிலத்தின் மிக இளைய உறுப்பு கொடையாளியாகவும் மாறினார்.
</p><p>தங்கள் குழந்தையை இழந்த பேரிடரான துயரத்திலும், அவரது பெற்றோர் அருண் மற்றும் ஷெரின் எடுத்த மனிதநேய முடிவு, இன்று பல உயிர்களுக்கு நம்பிக்கையாக மாறியுள்ளது. தங்கள் செல்ல மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவர்கள் முன்வந்தனர்.</p><p></p><p>அதன் மூலம் Aalin-ன் உடல் உறுப்புகள் பலருக்கு புதிய வாழ்வையும், ஒருவருக்கு மீண்டும் பார்வையையும் அளித்தன. இவ்வாறு, கேரளாவின் மிக இளைய உறுப்பு கொடையாளராக Aalin Sherin Abraham வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/TDB7355ehvY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
</p><p>
ஒரு குழந்தையின் வாழ்க்கை வெறும் 10 மாதங்களாக இருந்தாலும், அவள் விட்டுச் சென்ற மனிதநேயத்தின் தடம் பல தலைமுறைகளுக்கும் நிலைத்திருக்கும்.
</p><p>
மதம், மொழி, இனம், சாதி என எந்தப் பேதங்களையும் கடந்து, “மனித உயிரே முதன்மை” என்பதை தங்கள் துயரத்தின் மத்தியிலும் உலகுக்கு உணர்த்திய Aalin-ன் பெற்றோரின் பெருந்தன்மை உண்மையிலேயே போற்றத்தக்கது.</p><p></p><p>
</p><p>
இந்த மகத்தான மனிதநேயத்திற்காக Aalin-ன் தாயார் ஷெரின் அவர்களுக்கு “Mothers of India 2026” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருப்பது, அந்தத் தாயின் தியாகத்திற்கும் தைரியத்திற்கும் கிடைத்த சிறப்பான அங்கீகாரம்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T13:29:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூடுபிடிக்கும் வரிப்போர்: அமெரிக்காவுக்கு கனடாவின் பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-canada-trade-war-intensifies-canada-impose-1787490035"></link>
            <id>https://tamilwin.com/article/us-canada-trade-war-intensifies-canada-impose-1787490035</id>
            <summary type="text">அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு, பால் பொருட்கள் மற்றும்
மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு, பால் பொருட்கள் மற்றும்
மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம்
திகதி முதல் பதிலடி வரிகளை விதிக்கவுள்ளதாக கனடாவின் பிரதமர் மார்க் கார்னி
அறிவித்துள்ளார்.</p><p>

கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 20 பில்லியன் டொலர்கள் பெறுமதியான
பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்ததைத் தொடர்ந்து, அதற்குப்
பதிலடி கொடுக்கும் வகையிலேயே கனடா இந்த முடிவை எடுத்துள்ளது.</p><h2>தீவிர பேச்சுவார்த்தை</h2><p>

ஒட்டாவாவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பிரதமர் மார்க் கார்னி,
</p><p>கனடாவின் தொழிலாளர்கள், விவசாயிகள், குடும்பங்கள் மற்றும் வணிகங்களைப்
பாதுகாப்பதற்காக அமெரிக்காவின் வரிகளுக்கு நிகரான வரியை கனடாவும் விதிக்கும்
எனத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e23fa52e-e7be-4460-9132-17246423d050/26-6a8af46f6e145.webp' /></p><p>

இரு நாடுகளுக்கும் இடையிலான பல நாட்கள் தீவிர பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த
நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
</p><p>
இதற்குப் பதிலளித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடா
அமெரிக்காவின் ஒரு மாநிலமாக இல்லாமல், அதன் அனைத்துச் சலுகைகளையும் அனுபவிக்க
விரும்புவதாகத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
</p><p>
அமெரிக்காவின் இந்த கடுமையான வரி விதிப்பினால் கனடாவில் பொருட்களின் விலைகள்
மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும் என அஞ்சப்படும் அதேவேளை, கனடா
பிரதமர் ஏனைய ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் புதிய வர்த்தக உறவுகளை
பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T13:25:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கில் முதன்முறையாக எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/h5n1-bird-flu-infection-in-mammal-in-australia-1787486361"></link>
            <id>https://tamilwin.com/article/h5n1-bird-flu-infection-in-mammal-in-australia-1787486361</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கொன்றில் எச்5என்1 (H5N1)
பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக
உறுதிப்படுத்தப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கொன்றில் எச்5என்1 (H5N1)
பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
தெற்கு அவுஸ்திரேலியாவின் பீச்போர்ட் கடலோரப் பகுதியில் இறந்து கிடந்த 'நீண்ட
மூக்கு கடல்நாய்' ஒன்றிலேயே இத்தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><h2>ஆபத்து மிகக் குறைவு</h2><p>
</p><p>காட்டுப் பறவைகள் மூலம் இந்த வைரஸ் கடல்நாய்க்கு பரவியிருக்கலாம் எனச்
சந்தேகிக்கப்படும் நிலையில், நாட்டின் விவசாயத்துறை அல்லது பண்ணை
விலங்குகளுக்கு இத்தொற்று இதுவரை பரவவில்லை என அவுஸ்திரேலிய மத்திய அரசு
தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/739e027c-5127-4a74-9cb5-f0fb3c2fbecc/26-6a8af1d16cb47.webp' /></p><p>
</p><p>
வனவிலங்குகளிடையே இந்நோய் பரவுவதைத் தடுப்பது கடினம் எனக் குறிப்பிட்டுள்ள
அதிகாரிகள், பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சுகாதார ஆபத்து மிகக் குறைவாகவே
உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T13:13:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் 50% இறக்குமதி வரிக்கு பதிலடி ; கனடா பிரதமர் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-announces-retaliation-for-us-50-tariff-1787490763"></link>
            <id>https://canadamirror.com/article/canada-announces-retaliation-for-us-50-tariff-1787490763</id>
            <summary type="text">அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீதக் கடுமையான புதிய இறக்குமதி வரிகளுக்கு பதிலடியாக, அமெரிக்கப் பொருட்களுக்கு, டொலருக்கு டொலர் வரி விதிப்பு தொடர்பான திகதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீதக் கடுமையான புதிய இறக்குமதி வரிகளுக்கு பதிலடியாக, அமெரிக்கப் பொருட்களுக்கு, டொலருக்கு டொலர் வரி விதிப்பு தொடர்பான திகதியை கனடாப் பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
</p><p>
சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்த சில மணிநேரங்களிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/285ba980-9b0b-4fcb-b811-41159ae5c91a/26-6a8af1cced643.webp' /></p><p>

இதன்படி, கனடாவின் பதிலடி வரி, எதிர்வரும் செப்டம்பர் 8 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு, பால் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், விவசாயக் கருவிகள், காகிதம் மற்றும் மின்னணுப் பொருட்களுக்கே, பதிலடி வரிகள் விதிக்கப்படவுள்ளன.
</p><p>
இரண்டு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தத்தை எட்டப் பல நாட்களாக தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும், அமெரிக்காவின் நியாயமற்ற நிபந்தனைகளால் உடன்பாடு எட்டப்படவில்லை.
</p><p>
அமெரிக்கா அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பதோடு, மிகக் குறைவாகவே வழங்குகிறது என்று சுட்டிக்காட்டிய மார்க் கார்னி, "நாங்கள் தாக்கப்பட்ட பின்னரே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம்; என்று கூறியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-23T13:12:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ஹிந்து கோவில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/a-grand-hindu-temple-built-in-france-1787490329"></link>
            <id>https://canadamirror.com/article/a-grand-hindu-temple-built-in-france-1787490329</id>
            <summary type="text">பிரான்ஸில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஹிந்து கோவிலை வரும் செப்டம்பர் மாதம் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.பாரிஸூக்கு அருகே உள்ள புஸ்ஸி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஹிந்து கோவிலை வரும் செப்டம்பர் மாதம் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.</p><p>பாரிஸூக்கு அருகே உள்ள புஸ்ஸி செயின்ட் ஜார்ஜஸ் பகுதியில் பிரான்ஸின் முதல் பெரிய ஹிந்து கோவிலான பிஏபிஎஸ் சுவாமிநாராயண் ஹிந்து மந்திர் திறக்கப்பட உள்ளது. இதற்கான திறப்பு விழா அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/415f50db-fb35-444a-b169-7ebbe7c99755/26-6a8af01aa1d8b.webp' /></p><p> </p><p>மேலும், செப்டம்பர் 2ம் திகதி முதல் 14ம் திகதி வரை 13 நாட்கள் கலாசார திருவிழா நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. </p><p>இந்த விழாக்களையும், பூஜைகளையும் மஹந்த் சுவாமி மகாராஜ் துவக்கி வைக்க உள்ளார்.
</p><p>

கோவில் திறப்பு விழாவில் உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> இந்த மந்திர் கட்டுவதற்கான கற்கள் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p>


இதனிடையே, பிரான்ஸில் உள்ள இந்திய சமூகம் இந்தக் கோவிலை வரவேற்றுள்ளதுடன், இது இந்தியா, பிரான்ஸூக்கு இடையேயான கலாசார மற்றும் ஆன்மிக உறவுகளை ஆழப்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-23T13:05:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வசமாக சிக்கிய மூவர் - 43 பவுண் தங்க நகைகள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/three-arrested-for-burglary-in-jaffna-1787489689"></link>
            <id>https://tamilwin.com/article/three-arrested-for-burglary-in-jaffna-1787489689</id>
            <summary type="text">யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து திருட்டுச்
சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர் உட்பட மூவர்
சாவக...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து திருட்டுச்
சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர் உட்பட மூவர்
சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>இவர்களிடம் இருந்து சுமார் ஒரு கோடியே 75 இலட்சம் ரூபா பெறுமதியான 43 பவுண்
தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
கடந்த மாதம் 9ஆம் திகதி சாவகச்சேரி நகரில் உள்ள நகைக்கடை உரிமையாளரின்
வீட்டில் இருந்து 17 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டமை தொடர்பில் சாவகச்சேரி
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>
</p><p>இதனைத் தொடர்ந்து சிசிடிவி காணொளிகளின் உதவியுடன் பொலிஸார் முன்னெடுத்த
விசாரணைகளில், கல்லுண்டாய் குடியேற்றத் திட்டத்தைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர்
ஒருவர் நேற்று (22.08.2026) யாழ்ப்பாணம் நகரில் வைத்து கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19ee61b7-153f-4c55-8f72-0ebab7258950/26-6a8aefde48d0e.webp' /></p><p>
</p><p>அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், கோப்பாய்
பகுதியைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர்
தொடர்பாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.</p><p>
மேலும், ஊர்காவற்றுறையில் உள்ள வங்கி ஒன்றில் 43 பவுண் தங்க நகைகள் அடகு
வைக்கப்பட்டிருந்தமை விசாரணைகளின் போது கண்டறியப்பட்டதுடன், அவை பொலிஸாரால்
மீட்கப்பட்டுள்ளன.</p><h2>சாவகச்சேரி பொலிஸாரால் கைது</h2><p>
திருட்டுச் சம்பவத்திற்கு சந்தேகநபருக்கு உதவியதாகக் கூறப்படும் ஊர்காவற்றுறை
பகுதியைச் சேர்ந்த பெண்ணும் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33006c3a-12e2-4494-b8b5-f6945c83c07c/26-6a8aefdf0adbc.webp' /></p><p>
</p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (23.08.2026) சாவகச்சேரி நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் செப்டெம்பர் 4ஆம் திகதி
வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T13:04:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு - பொரளையில் வீடொன்றின் மீது கைக்குண்டு வீச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/colombo-grenade-attack-on-a-house-1787488607"></link>
            <id>https://ibctamil.com/article/colombo-grenade-attack-on-a-house-1787488607</id>
            <summary type="text">கொழும்பு பொரளையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரின் வீட்டின் மீது&amp;nbsp;கைக்குண்டுத் வீச்சு நடத்தப்பட்டதாக காவல்துறையினர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு பொரளையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரின் வீட்டின் மீது&nbsp;கைக்குண்டுத் வீச்சு நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p> பொரளை - லெஸ்லி ரணகல மாவத்தையில் வசிக்கும் ரன்சிலு என்பவரின் வீட்டின் மீதே கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொரளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>ரன்சிலு என அழைக்கப்படும் நபர், தற்போது துபாயில் கைது செய்யப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரான வானாத்தே சத்து என்பவரின் நெருங்கிய சகாவாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>வீசப்பட்ட கைக்குண்டு</h2><p>
</p><p>
எனினும், வீட்டின் மீது வீசப்பட்ட கைக்குண்டு வெடிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45710e77-f525-49e6-b7e0-9c9d0f367e9b/26-6a8aed5157869.webp' /></p><p> </p><p>மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் இந்தக் கைக்குண்டுத் தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T13:03:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனவாதம் - மதவாதம் பேசி அடுத்த தேர்தலுக்கு தயாராகும் சிலர் - எழுந்துள்ள குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kalmunai-hospital-musilm-girls-dress-issue-1787489177"></link>
            <id>https://tamilwin.com/article/kalmunai-hospital-musilm-girls-dress-issue-1787489177</id>
            <summary type="text">கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் தாதியர்களின் ஆடை தொடர்பான சர்ச்சையை இனவாதமாகப் பார்க்க வேண்டாம் என்று எமது தலைமுறை கட்சியின் தலைவரான சிதம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் தாதியர்களின் ஆடை தொடர்பான சர்ச்சையை இனவாதமாகப் பார்க்க வேண்டாம் என்று எமது தலைமுறை கட்சியின் தலைவரான சிதம்பரம் கருணாநிதி தெரிவித்தார்.
</p><p>
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>
மேலும் தெரிவித்த அவர்,
</p><p>
இது குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிப்பவர்கள், உண்மைத்தன்மையை உணர்ந்து அரசாங்கத்தை நேரடியாக விமர்சிக்க வேண்டும்.

இன ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் செயல்படக் கூடாது. </p><p>

தமிழ், முஸ்லிம் மக்களிடையே நிலவும் ஒற்றுமையைப் பேண வேண்டியதன் 

இனவாதம் மற்றும் மதவாதம் போன்ற கருத்துக்களைப் பரப்பி, வரவிருக்கும் மாகாண சபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அரசியல் லாபம் பெற சிலர் முயற்சிக்கின்றனர்.
</p><p>

மேலும், கல்முனை வைத்தியசாலை விவகாரத்தைப் பயன்படுத்திச் சிலர் வேண்டுமென்றே இனவாதத்தைத் தூண்டி, தங்களின் சுயநலத்திற்காக மக்களைப் பிரிக்கப் பார்க்கின்றனர் என குறிப்பிட்டார்.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பான விரிவான விளக்கங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/KIv74GUrG7A" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T12:51:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[செய்யாத கொலைக்காக 45 ஆண்டுகள் சிறை ; ரிச்சர்ட் பிலிப்ஸின் அதிர்ச்சிக் கதை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/45-years-in-prison-for-a-murder-he-didn-t-commit-1787466821"></link>
            <id>https://canadamirror.com/article/45-years-in-prison-for-a-murder-he-didn-t-commit-1787466821</id>
            <summary type="text">அமெரிக்காவின் தவறான குற்றத் தீர்ப்புகளின் வரலாற்றில் ரிச்சர்ட் பிலிப்ஸின் கதை மிகவும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களில் ஒன்றாகப் பதிவாகியுள்ளது. அவர் செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் தவறான குற்றத் தீர்ப்புகளின் வரலாற்றில் ரிச்சர்ட் பிலிப்ஸின் கதை மிகவும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களில் ஒன்றாகப் பதிவாகியுள்ளது. </p><p>அவர் செய்யாத கொலைக்காக 1972ஆம் ஆண்டு குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு, பரோல் இல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். </p><p>அதன் பின்னர் 45 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் கழித்த அவர், இறுதியில் நிரபராதி என அதிகாரப்பூர்வமாக விடுவிக்கப்பட்டார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff407c11-a98a-4dc8-b047-26308e18bf7b/26-6a8a94469400a.webp' /></p><p>M
michigan.law.umich.edu
+1

டெட்ராய்ட் நகரில் 1971ஆம் ஆண்டு கிரெகொரி ஹாரிஸ் என்ற நபர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கிலேயே பிலிப்ஸ் கைது செய்யப்பட்டார். </p><p>1972ஆம் ஆண்டு நடைபெற்ற விசாரணையில், முக்கிய சாட்சியொருவரின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு பிலிப்ஸுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது.</p><p> அவர் தொடர்ந்து தான் அந்தக் கொலையில் எந்தவிதத்திலும் தொடர்புபடவில்லை என மறுத்து வந்தார். </p><p>
M
Michigan Public
+1

சிறையில் இருந்த காலத்திலும் தனது நிரபராதித்தனத்தை நிரூபிப்பதற்கான போராட்டத்தை பிலிப்ஸ் கைவிடவில்லை.</p><p> பல ஆண்டுகளாக தனது வழக்கை எதிர்த்து சட்ட ரீதியாகப் போராடிய அவர், 2014ஆம் ஆண்டு மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் Innocence Clinic-ன் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டார். </p><p>
N
National Registry of Exonerations

இந்த வழக்கில் முக்கிய திருப்புமுனை ஏற்பட்டது. </p><p>பிலிப்ஸுடன் இணை குற்றவாளியாகக் குறிப்பிடப்பட்ட ரிச்சர்ட் பலோம்போ, பல ஆண்டுகளுக்குப் பின்னர் பிலிப்ஸுக்கு அந்தக் கொலையில் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்தார். </p><p>மாறாக, தானும் முக்கிய அரசு தரப்பு சாட்சியான பிரெட் மிட்செலும் இணைந்தே ஹாரிஸைக் கொலை செய்ததாக அவர் தெரிவித்திருந்தார். </p><p>
W
waynecounty.com
+1

இதனைத் தொடர்ந்து மிச்சிகன் பல்கலைக்கழக சட்டக் குழுவினர் வழக்கை மீண்டும் ஆராய்ந்ததுடன், பிலிப்ஸின் வாக்குமூலத்தையும் அவரது நிரபராதித்தனத்தை ஆதரிக்கும் தகவல்களையும் பரிசீலித்தனர். </p><p>2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பொய்யறிதல் சோதனையிலும் அவர் குற்றத்தில் ஈடுபடவில்லை எனக் கூறிய வாக்குமூலம் உண்மையானது என பரிசோதகர் முடிவு செய்ததாக National Registry of Exonerations தெரிவித்துள்ளது. </p><p>
N
National Registry of Exonerations

2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீதிமன்றம் பிலிப்ஸின் குற்றத் தீர்ப்பை ரத்து செய்து, அவருக்கு விடுதலைக்கான வாய்ப்பை ஏற்படுத்தியது.</p><p> அதே ஆண்டு டிசம்பர் 14ஆம் திகதி, 45 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். </p><p>
M
michigan.law.umich.edu
+1

பின்னர் வெய்ன் கவுண்டி வழக்கறிஞர் அலுவலகத்தின் Conviction Integrity Unit வழக்கை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தியது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff407c11-a98a-4dc8-b047-26308e18bf7b/26-6a8a94469400a.webp' /></p><p>விசாரணையின் போது, முக்கிய சாட்சியின் முன்னைய சாட்சியத்தில் முரண்பாடுகள் இருப்பதும், பிலிப்ஸுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வழக்கில் முக்கிய குறைபாடுகள் இருந்ததும் கண்டறியப்பட்டன.</p><p>இதையடுத்து 2018ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் திகதி பிலிப்ஸுக்கு எதிரான கொலைக் குற்றச்சாட்டுகள் முழுமையாகக் கைவிடப்பட்டன. 
W
waynecounty.com
+1

இவ்வாறு, தனது வாழ்நாளின் 45 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தை செய்யாத குற்றத்திற்காக சிறையில் கழித்த ரிச்சர்ட் பிலிப்ஸ், 2018ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக நிரபராதி என அறிவிக்கப்பட்டார். </p><p>மிச்சிகன் பல்கலைக்கழக சட்டப் பதிவுகளின்படி, அந்த நேரத்தில் அமெரிக்காவில் தவறான குற்றத் தீர்ப்புக்குப் பின்னர் நிரபராதி என விடுவிக்கப்பட்டவர்களில் மிக நீண்ட காலம் சிறையில் இருந்தவராக அவர் பதிவானார். </p><p>
M
michigan.law.umich.edu

பிலிப்ஸின் வழக்கு, தவறான சாட்சியங்கள் மற்றும் குறைபாடுகளைக் கொண்ட விசாரணைகள் ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படுத்தக்கூடிய பேரழிவை எடுத்துக்காட்டுவதுடன், பல தசாப்தங்கள் கடந்தாலும் நீதிக்கான போராட்டத்தை கைவிடக்கூடாது என்பதற்கும் ஒரு முக்கிய உதாரணமாக அமைந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-23T12:50:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[8 வருட இரகசிய சேமிப்பு ; ஒரே இரவில் எலியால் நேர்ந்த விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/8-years-secret-storage-overnigh-disaste-caused-rat-1787478493"></link>
            <id>https://jvpnews.com/article/8-years-secret-storage-overnigh-disaste-caused-rat-1787478493</id>
            <summary type="text">இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், நகை வாங்குவதற்காக குடும்பப் பெண் ஒருவர் 8 ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்த பணத்தை எலிகள் கடித்துச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், நகை வாங்குவதற்காக குடும்பப் பெண் ஒருவர் 8 ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்த பணத்தை எலிகள் கடித்துச் சிதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b679495-fdb4-4d5e-9c2f-32a55de5a922/26-6a8ac1dee058c.webp' /></p><p>

கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர், தங்க நகை வாங்க வேண்டும் என்ற நோக்கில் தனது கணவருக்குத் தெரியாமல் கடந்த 8 ஆண்டுகளாக ஒரு பெட்டியில் இரகசியமாகப் பணத்தைச் சேமித்து வந்துள்ளார்.
</p><p>
சேமிப்புத் தொகை 12 இலட்சம் ரூபாயை எட்டிய நிலையில், நகை வாங்குவதற்காக நேற்று அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்துள்ளார்.
</p><p>
அப்போது, பெட்டிக்குள் இருந்த பணத்தாள்கள் அனைத்தும் எலிகளால் கடித்து சிதைந்திருந்ததைக் கண்டு அவர் பேரதிர்ச்சியடைந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T12:48:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாலியில் ஹிந்து பாரம்பரியத்தை அவமதித்த வெளிநாட்டவர் கைது ; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/foreigner-arrested-insulting-hindu-tradition-bali-1787489247"></link>
            <id>https://canadamirror.com/article/foreigner-arrested-insulting-hindu-tradition-bali-1787489247</id>
            <summary type="text">இந்தோனேஷியாவின் பாலி தீவில் ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான நியேபி (Nyepi) தினத்தை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் காணொளி வெளியிட்ட சுவிட்சர்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேஷியாவின் பாலி தீவில் ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான நியேபி (Nyepi) தினத்தை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் காணொளி வெளியிட்ட சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த லூசியன் ஆன்ட்ரின் என்பவருக்கே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாலி தீவில் பெரும்பான்மையான மக்கள் ஹிந்து மதத்தைப் பின்பற்றுகின்றனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62f7d5d7-5d79-4e69-8166-f3057a2b8ce0/26-6a8aebe065bb0.webp' /></p><p>அங்கு ஆண்டுதோறும் நியேபி எனப்படும் அமைதித் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மக்கள் வீடுகளிலேயே தங்கியிருப்பதுடன், பொழுதுபோக்கு நடவடிக்கைகளைத் தவிர்த்து அமைதியாக இருப்பது பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
</p><p>
இந்த விதிமுறைகள் அங்கு தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பொருந்தும். இந்த ஆண்டுக்கான நியேபி பண்டிகை மார்ச் 19ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது.
</p><p>
இந்த நிலையில், பண்டிகை காலத்தில் பாலிக்கு சுற்றுலா சென்றிருந்த லூசியன் ஆன்ட்ரின், அப்பண்டிகையின் பாரம்பரியத்தை அவமதிக்கும் வகையில் காணொளி ஒன்றை பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து லூசியன் ஆன்ட்ரின் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
</p><p>
அவர் பாலி தீவுக்கு வந்தபோது, நியேபி பண்டிகை தொடர்பான விதிமுறைகள் குறித்து ஹோட்டல் ஊழியர்கள் அவருக்கு அறிவித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த வழக்கு டென்பசார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பண்டிகையின் பாரம்பரியம் குறித்து தனக்கு முழுமையாகத் தெரியாது என்றும், உணவு கிடைக்காததால் அவ்வாறு நடந்துகொண்டதாகவும் லூசியன் ஆன்ட்ரின் தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும், தனது செயலுக்காக மன்னிப்பு கோருவதாகவும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. </p><p>அதேவேளை, அவர் ஏற்கனவே சிறையில் கழித்த ஐந்து மாத காலத்தை தண்டனைக் காலத்தில் கழித்துக்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-23T12:47:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்ததில் இரு மாணவர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-students-killed-motorcycle-accident-tamil-area-1787488438"></link>
            <id>https://jvpnews.com/article/two-students-killed-motorcycle-accident-tamil-area-1787488438</id>
            <summary type="text">மட்டக்களப்பு - கோட்டைக்கல்லாறு பிரதான வீதியில் நேற்று (22) இரவு இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இருவர் மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - கோட்டைக்கல்லாறு பிரதான வீதியில் நேற்று (22) இரவு இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இருவர் மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐவர் பலத்த காயமடைந்துள்ளனர்.
</p><p>
கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் நேற்றிரவு 9.20 அளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.</p><h3>மேலதிக தீவிர விசாரணை</h3><p>
</p><p>
கோட்டைக்கல்லாறு பகுதியைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் இரண்டு உந்துருளிகளில் கல்முனை வீதி வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது, இரு உந்துருளிகளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47657e31-b95f-49be-8782-5c407fec0fd0/26-6a8ae8b83bdad.webp' /></p><p>

இதன்போது கட்டுப்பாட்டை இழந்த அவற்றில் ஒரு உந்துருளி, வீதியைக் கடப்பதற்காகக் காத்திருந்த மூன்று மாணவர்கள் மீது மோதியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
</p><p>
இந்த விபத்தில் காயமடைந்த 7 பேர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், 18 வயதான மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அத்துடன், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 17 வயதுடைய மாணவர் ஒருவரும் இன்று (23) காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.</p><p>

மேலதிக வகுப்பை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே குறித்த மாணவர்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.
</p><p>
காயமடைந்த மேலும் இரண்டு சிறுவர்களும் மூன்று சிறுமிகளும் தற்போதும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், விபத்து தொடர்பில் மட்டக்களப்புக் காவல்துறையினர் மேலதிக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T12:34:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொத ராத்திரி திரைப்படம் 2 நாட்களில் செய்துள்ள வசூல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/modha-rathiri-movie-2-days-box-office-1787478464"></link>
            <id>https://viduppu.com/article/modha-rathiri-movie-2-days-box-office-1787478464</id>
            <summary type="text">சிறை திரைப்படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனிஷ்மா அனில்குமார். இதை தொடர்ந்து யூத் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறை திரைப்படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனிஷ்மா அனில்குமார்.</p><p> இதை தொடர்ந்து யூத் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். 

இதன்பின், இவர் கதாநாயகியாக நடித்து வெளிவந்துள்ள தமிழ் திரைப்படம் மொத ராத்திரி.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ef618c1-caf1-43d1-8323-18bd9221de4a/26-6a8ac1c3bc5a8.webp' /></p><p>இப்படத்தில் பிரபல நடிகர் ரிஷிகாந்த் ஹீரோவாக நடித்துள்ளார். 

கடந்த 21-ஆம் தேதி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
</p><p>
இந்நிலையில், 2 நாட்களில் உலகளவில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ள என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 2 நாட்களில் உலகளவில் ரூ. 1.2 கோடி வசூல் செய்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc1b224a-bf04-46e8-89b2-332856150b73/26-6a8ac1c4715c2.webp' /></p>]]></content>
            <updated>2026-08-23T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலி கடற்பரப்பில் குவிந்துள்ள 16 ஈரானிய கப்பல்களால் சர்ச்சை.. இலங்கைக்கு காத்திருக்கும் பாரிய ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sixteen-iranian-oil-tankers-positioned-sri-lanka-1787470651"></link>
            <id>https://tamilwin.com/article/sixteen-iranian-oil-tankers-positioned-sri-lanka-1787470651</id>
            <summary type="text">ஈரானியக் கொடியைத் தாங்கிய 16 பாரிய எண்ணெய் கப்பல்கள் பல வாரங்களாக இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் நங்கூரமிட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானியக் கொடியைத் தாங்கிய 16 பாரிய எண்ணெய் கப்பல்கள் பல வாரங்களாக இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் நங்கூரமிட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்தக் கப்பல்களுக்கு சேவைகளை வழங்கும் இலங்கையைச் சேர்ந்த நிறுவனங்கள் அமெரிக்கத் தடைகளுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாகவும் தனியார் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><h2> ஈரானிய எண்ணெய் கப்பல்கள்</h2><p>

காலி துறைமுகத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ள இலங்கையின் பிராந்திய கடல் எல்லைக்கு அருகே இந்தக் கப்பல்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.</p><p>அமெரிக்க கருவூலத் திணைக்களத்தின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC) விதித்துள்ள தடைகளுக்கு உட்பட்ட ஈரானின் ‘Dark Fleet’ உடன் தொடர்புடைய இந்தக் கப்பல்கள், அமெரிக்காவின் சர்வதேச தடைகளை மீறி எண்ணெயை ஏற்றிச் செல்வதாக சந்தேகிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7187a046-e3c8-4bd5-ad6c-ed61cdc0b34f/26-6a8aa92b6a806.webp' /></p><p>
</p><p>
குறித்த பத்திரிகைக்கு கருத்து தெரிவித்த துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் டொக்டர் ஜனித ருவன் கொடிதுவக்கு, குறித்த கப்பல்கள் தற்போது இலங்கையின் பிராந்திய கடல் எல்லைக்கு வெளியே இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
எனினும், இந்த எண்ணெய் கப்பல்களுக்கு உணவு மற்றும் பிற பொருட்களை வழங்கும் உள்ளூர் தனியார் நிறுவனங்கள் அல்லது அவற்றுக்கு வங்கிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் அமெரிக்கத் தடைகளுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>அமெரிக்கா தடை</h2><p>

“அமெரிக்காவால் தடைவிதிக்கப்பட்ட கப்பல்கள் எவை என்பதை அடையாளம் காண எங்களிடம் நேரடி வழிமுறை இல்லை. தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் தடைகள் பட்டியல் மட்டுமே எங்களுக்குக் கிடைக்கிறது.</p><p>
</p><p>
 அமெரிக்கத் தூதரகம் வெளிவிவகார அமைச்சின் ஊடாக அதிகாரப்பூர்வமாக எங்களுக்குத் தகவல் வழங்கினால், அந்தக் கப்பல்கள் தொடர்பில் உள்ளூர் விநியோகஸ்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்க முடியும்” என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b355a6c0-b124-406b-81a1-8a24c28625dd/26-6a8aa92ab7573.webp' /></p><p>

இதற்கிடையில், இலங்கை கடற்படை இந்தக் கப்பல்கள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p>

சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க கடற்படை இவ்வாறான கப்பல்களை இடைமறிக்க முயற்சித்தால், இலங்கையின் கடற்கரைக்கு அருகில் மோதல் நிலைமை ஏற்படக்கூடும் எனவும், இதன் காரணமாக 2020ஆம் ஆண்டு MT New Diamond கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தைப் போன்ற பாரிய கடல் மாசுபாடு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.</p><h2>காலி கடற்பரப்பு</h2><p>
</p><p>
நிபுணர்களின் கருத்துப்படி, மலேசியாவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் எண்ணெய் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்தக் கப்பல்கள், ஈரானிய துறைமுகங்களுக்குள் நுழைவதைத் தடுக்கும் அமெரிக்கக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரை இலங்கையின் தென்பகுதி கடற்பரப்பில் தங்கியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91f47919-9636-4f97-8951-3426c3034cb5/26-6a8aa929e2f78.webp' /></p><p>
</p><p>
‘MT Amber’ உள்ளிட்ட சில கப்பல்கள் ஜூலை மாதத்தின் நடுப்பகுதியிலிருந்தே காலி கடற்பரப்புக்கு அருகில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த தீவிரமான நிலைமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு அல்லது துறைமுக அதிகார சபையின் உயர்மட்ட அதிகாரிகளிடம் கருத்துகளைப் பெற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இதுவரை வெற்றியளிக்கவில்லை என்றும் அந்தப் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T12:26:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டிலும் படிக்கல் சதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/devdutt-padikkal-2nd-test-century-vs-sri-lanka-1787487791"></link>
            <id>https://news.lankasri.com/article/devdutt-padikkal-2nd-test-century-vs-sri-lanka-1787487791</id>
            <summary type="text">Devdutt Padikkal century vs sri lanka in Colombo: கொழும்பு டெஸ்டில் இந்திய அணியின் தேவ்தத் படிக்கல் சதம் விளாசினார்.

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Devdutt Padikkal century vs sri lanka in Colombo: கொழும்பு டெஸ்டில் இந்திய அணியின் தேவ்தத் படிக்கல் சதம் விளாசினார்.
</p><p>
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் தேவ்தத் படிக்கல் 117 ஓட்டங்கள் குவித்தார்.</p><h2>இரண்டாவது டெஸ்ட்&nbsp;</h2><p> 

 இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8885d4c1-38b0-40a5-a6d7-877076a8d270/26-6a8ae727873af.webp' />&nbsp;</p><p></p><p>
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியது. 

கே.எல்.ராகுல் 18 ஓட்டங்களிலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 45 ஓட்டங்கள் விளாசியும் ஆட்டமிழந்தனர்.</p><p> 

பின்னர் தேவ்தத் படிக்கல் மற்றும் ஷுப்மன் கில் கூட்டணி நிதானமாக ஆடி ஓட்டங்களை சேர்த்தது.
 

அரைசதம் அடித்த அணித்தலைவர் ஷுப்மன் கில் (Shubman Gill) 50 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். </p><h2>

படிக்கல் சதம் </h2><p>அடுத்து வந்த ரிஷாப் பண்ட் மணிக்கட்டில் பந்துபட்டு ஏற்பட்ட வலியால், 3 ஓட்டங்களில் ரிட்டையர் ஹர்ட் முறையில் வெளியேறினார்.</p><p> 

இதற்கிடையில் அபாரமாக ஆடிய தேவ்தத் படிக்கல் (Devdutt Padikkal) தனது இரண்டாவது சதத்தினை பதிவு செய்தார். </p><p>

அணியின் ஸ்கோர் 281 ஆக உயர்ந்தபோது படிக்கல் 117 ஓட்டங்களில் (12 பவுண்டரிகள்) நுவந்தா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.</p><p> 

ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ஓட்டங்கள் குவித்துள்ளது. ரவீந்திர ஜடேஜா 43 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அசிதா பெர்னான்டோ 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57845bc5-0a4c-460e-be3e-a903e8662e6f/26-6a8ae72936b66.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a8bb2bc-f410-48c2-abf9-624e70f602f4/26-6a8ae728856b7.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p> 

</p>]]></content>
            <updated>2026-08-23T12:24:45+00:00</updated>
        </entry>
    </feed>
