<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-27T02:22:32+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிற்பகல் 2மணிக்குப் பின்னர் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-changes-after-2-pm-1787795529"></link>
            <id>https://tamilwin.com/article/weather-changes-after-2-pm-1787795529</id>
            <summary type="text">நாட்டில் சில இடங்களில்&amp;nbsp;இன்றும் (27.08.2026) 50 மில்லிமீற்றருக்கும் அதிக அளவிலான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் சில இடங்களில்&nbsp;இன்றும் (27.08.2026) 50 மில்லிமீற்றருக்கும் அதிக அளவிலான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. </p><p>

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><h2>வறண்ட வானிலை நிலவும்</h2><p>

அம்பாறை, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad679883-e05f-4dd4-b1e7-1bb92f87cb07/26-6a8f9acc2dc6d.webp' /></p><p>

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும். </p><p>

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (40-50) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். </p><p>

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T02:03:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நயன்தாரா vs கியாரா.. டாக்சிக் படத்தில் யாருக்கு சம்பளம் அதிகம் பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/nayanthara-salary-for-toxic-movie-1787750413"></link>
            <id>https://cineulagam.com/article/nayanthara-salary-for-toxic-movie-1787750413</id>
            <summary type="text">யாஷ் நடிப்பில் இன்று டாக்சிக் படம் திரைக்கு வந்து இருக்கிறது. படத்திற்கு விமர்சனங்களும் நெகடிவ் + கலவையாகவே வந்துகொண்டிருக்கிறது. அதனால் மிகப்பெரிய பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாஷ் நடிப்பில் இன்று டாக்சிக் படம் திரைக்கு வந்து இருக்கிறது. படத்திற்கு விமர்சனங்களும் நெகடிவ் + கலவையாகவே வந்துகொண்டிருக்கிறது. அதனால் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் வசூலில் சாதனை படைக்குமா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.</p><p>இந்நிலையில் டாக்சிக் படத்தில் நடித்த எந்த நடிகைக்கு சம்பளம் அதிகம் என்கிற தகவல் வந்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53305b74-27ed-4991-876e-4a924a238c18/26-6a8ee80ef183d.webp' /></p><p>
</p><h2>சம்பளம்</h2><p>டாக்சிக் படத்தில் நடித்த ஹிந்தி நடிகை கியாரா அத்வானிக்கு 15 கோடி ருபாய் சம்பளமாக தரப்பட்டுள்ளதாம்.
</p><p>அடுத்து கங்கா என்ற முக்கிய ரோலில் நடத்த நயந்தாராவுக்கு 12 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. </p><p>
அவர் ஒரே ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் மட்டுமே கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கியாரா டாக்சிக் படத்தின் அனைத்து ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டிருந்தார்.
&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e4cf053-8a87-428f-8b72-45a98494c5c9/26-6a8ee80fcea24.webp' /></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T01:59:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் அகதிகளாக வாழும் தமிழர்கள் - யாழில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-opens-legal-route-home-for-tamil-refugees-1787794913"></link>
            <id>https://ibctamil.com/article/govt-opens-legal-route-home-for-tamil-refugees-1787794913</id>
            <summary type="text">இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது
கைதுகளுக்கோ உள்ளாகாமல், தாயகம் திரும்புவதற்கு தேவையான சட்டரீதியான தளர்வுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது
கைதுகளுக்கோ உள்ளாகாமல், தாயகம் திரும்புவதற்கு தேவையான சட்டரீதியான தளர்வுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி
அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
</p><p>
யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்று (26.08.2026) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத்
தெரிவித்தார்.</p><p>இச்சந்திப்பில், ஜனாதிபதியுடனான உயர்மட்டக் கலந்துரையாடலில் எட்டப்பட்ட
தீர்மானங்கள் உள்ளிட்ட மாவட்ட மட்டத்திலான முக்கிய விடயங்கள் தொடர்பில்
விளக்கமளிக்கப்பட்டது.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">தாயகம் திரும்புவதற்கு அனுமதி</span></p><p>அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, யுத்த காலத்தில் முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கையர்கள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாடு திரும்பியபோது வழங்கப்பட்டிருந்த சில விதிவிலக்குகள், அண்மையில் பலாலி விமான நிலையம் ஊடாக நாடு திரும்பிய சிலருக்கு வழங்கப்படாததன் காரணமாக கைதுச் சம்பவங்கள் இடம்பெற்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da6d52ff-f548-47bc-9f9a-ed5c8581e4da/26-6a8f9786a68ac.webp' /></p><p>இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன்
மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோரின் தலையீட்டின்
மூலம் குறித்த நபர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
</p><p>
இதனைத் தொடர்ந்து, இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவையில் முக்கிய
தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டது.</p><p></p><h2>தேவையான காணி</h2><p> அதன்படி உயிரைப் பாதுகாப்பதற்காக
முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கைப் பிரஜைகள் அனைவரும் தற்போது
நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் அச்சமின்றித் தாயகம்
திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b64eb5bd-b307-4fea-99e4-24450df64670/26-6a8f978760b8d.webp' /></p><p>நாடு திரும்பும் இவ்வாறான நபர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவதற்கும், தேவையான
காணிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களாக
செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஊடாக தேவையான உதவிகள்
வழங்கப்படும்&nbsp;என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T01:49:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவை உலுக்கிய சம்பவம் ; உறவினர்கள் 8 பேரை கொன்று இளைஞன் செய்த செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-shocked-as-youth-kills-8-relatives-1787787960"></link>
            <id>https://canadamirror.com/article/us-shocked-as-youth-kills-8-relatives-1787787960</id>
            <summary type="text">அமெரிக்காவில் உறவினர்கள் 8 பேரை கொன்று விட்டு இளைஞர் தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் பில்லிங்ஸ் என்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் உறவினர்கள் 8 பேரை கொன்று விட்டு இளைஞர் தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.</p><p>

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் பில்லிங்ஸ் என்ற பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு விருந்து நடந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3288095d-eff0-4daa-8ae4-9f1000bc5b8b/26-6a8f7aba7e850.webp' /></p><p> </p><p>அப்போது 4 சிறுவர்கள் உள்பட உறவினர்கள் 8 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு வாலிபர் தன்னையும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.


</p><p>அவர்களில் 90 வயதுடைய பாட்டி முதல் 7 வயது கொண்ட சிறுமி வரை அடக்கம். </p><p>விருந்து நடக்க இருந்த வீடும் தீப்பிடித்து முற்றிலும் எரிந்துள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T01:32:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகை உலுக்கிய பெரும் அனர்த்தம் ; 150 பேரை பலியான துயரம் ; நிலைக்குலைந்த நேபாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sudden-tragedy-death-toll-rises-to-150-1787791951"></link>
            <id>https://jvpnews.com/article/sudden-tragedy-death-toll-rises-to-150-1787791951</id>
            <summary type="text">நேபாள- திபெத் எல்லையைத் தாக்கிய திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. 

இந்த அனர்த்தத்தில் சிக்கி நேபாளத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நேபாள- திபெத் எல்லையைத் தாக்கிய <a href="https://jvpnews.com/article/floods-ravage-nepal-death-toll-surges-1787757888" target="_blank">திடீர் வெள்ளப்பெருக்கின்</a> காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

இந்த அனர்த்தத்தில் சிக்கி நேபாளத்தில் 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/412b1069-336d-45b5-a086-1e78aa2487ef/26-6a8f8a516d5b2.webp' /></p><h2 style="text-align: justify; ">பலர் மாயம்&nbsp;</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

காணாமல் போனவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரும், அமெரிக்காவைச் சேர்ந்த 54 பேரும், இங்கிலாந்தைச் சேர்ந்த 33 பேரும் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரும் அடங்குகின்றனர். </p><p style="text-align: justify; ">

இந்த அனர்த்தத்தில் திபெத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 

அத்துடன் 265 பேரைக் காணவில்லை என சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

நிலநடுக்கம் காரணமாகவே வெள்ளம் ஏற்பட்டதாக அதிகாரிகள் முன்னதாக தெரிவித்தனர். எனினும் மண்சரிவு காரணமாகவே இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.</p><p style="text-align: justify; "> 

இதன்காரணமாக அந்த பகுதியில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகளும், ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டவர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.</p><p style="text-align: justify; "> 

அதேநேரம் வௌ்ளம் காரணமாக பாரியளவில் உட்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-27T01:32:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[50 ஆண்டுகளுக்கு பிறகு சந்திர கிரகணத்தில் வக்ரமடையும் சனி; இவர்களுக்கு இனி ஜாக்பாட்.!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/saturn-retrograde-during-lunar-eclipse-50-years-1787794233"></link>
            <id>https://jvpnews.com/article/saturn-retrograde-during-lunar-eclipse-50-years-1787794233</id>
            <summary type="text">இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் வருகிற செப்டம்பர் 07ஆம் திகதி நிகழவுள்ளது. இந்த அரிய வானியல் நிகழ்வு நடைபெறும் வேளையில் சந்திரன் க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் வருகிற செப்டம்பர் 07ஆம் திகதி நிகழவுள்ளது. இந்த அரிய வானியல் நிகழ்வு நடைபெறும் வேளையில் சந்திரன் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார்.
</p><p style="text-align: justify; ">கும்ப ராசியின் அதிபதியாக இருப்பவர் சனி பகவான். இந்த சந்திர கிரகணத்தின் போது சனி பகவான் வக்ர நிலையில் இருப்பதுடன், மீன ராசியிலும் வக்ரமாக சஞ்சரிக்கிறார். இந்த கிரக அமைப்பு ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12fe88a5-6fb1-4eb9-a262-43714c359520/26-6a8f933aae28b.webp' /></p><h2 style="text-align: justify; ">எதிர்பாராத அதிர்ஷ்டம்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
குறிப்பாக, சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்திர கிரகண நாளில் சனி பகவான் வக்ர நிலையில் இருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டமும், வாழ்க்கையில் பல்வேறு முன்னேற்றங்களும் கிடைக்கக்கூடும் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "><b>மிதுனம்:</b> சந்திர கிரகணத்தின் போது சனி வக்ர நிலையில் இருப்பதால், மிதுன ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண வாய்ப்புள்ளது. உங்கள் படைப்பாற்றலும் தலைமைத்துவ திறன்களும் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் செயல்திறன் பாராட்டப்படுவதுடன், புதிய பொறுப்புகள் அல்லது பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் கிடைக்கலாம். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம். வணிகத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நிதி நிலை சிறப்பாக இருக்கும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "><b>விருச்சிகம்:</b> சந்திர கிரகணத்தின் போது சனி வக்ர நிலையில் இருப்பதால், விருச்சிக ராசிக்காரர்களுக்கு குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்ப்பும் அமையும். உங்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்ச்சியுடன் அனுபவிப்பீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக முடிவடையும். எதிர்பாராத வகையில் திடீர் பணவரவு அல்லது நிதி நன்மைகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "><b>மீனம்: </b>சந்திர கிரகணத்தின் போது சனி வக்ர நிலையில் இருப்பதால், மீன ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கும் உயர வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் புரிதலும் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு தங்கள் வாழ்க்கைத் துணையை சந்திக்கும் வாய்ப்பு அமையும். ஏற்கனவே காதல் உறவில் இருப்பவர்களுக்கு, அந்த உறவு மேலும் ஆழமடையும். கூட்டுத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.</p>]]></content>
            <updated>2026-08-27T01:30:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த மண்ணில் புலிகள் கட்டிக்காத்த பண்பாட்டை பாடையில் ஏற்றுகிறதா புலம்பெயர் நிதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/diaspora-funding-a-way-to-preserve-the-culture-1787793116"></link>
            <id>https://ibctamil.com/article/diaspora-funding-a-way-to-preserve-the-culture-1787793116</id>
            <summary type="text">ஈழத்தமிழினத்தின் ஆதியான சைவப் பண்பாட்டு தொடர்ச்சியில் எப்போதுமே ஆலயங்கள் வெறுமனே வழிபாட்டுத் தலங்களாக மட்டுமன்றி, நமது சமூகத்தின் ஒழுக்க நெறிகளையும் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத்தமிழினத்தின் ஆதியான சைவப் பண்பாட்டு தொடர்ச்சியில் எப்போதுமே ஆலயங்கள் வெறுமனே வழிபாட்டுத் தலங்களாக மட்டுமன்றி, நமது சமூகத்தின் ஒழுக்க நெறிகளையும் ஆன்மீக விழுமியங்களையும் பாதுகாக்கும் சமூக வளர்ச்சி மையங்களாகவே விளங்கிவந்துள்ளது.</p><p>
ஆனால், மிக அண்மையக்காலமாக ஈழத்து சைவ ஆலயத் திருவிழாக்களில் மேலோங்கிவரும் கட்டுப்பாடற்ற ஆடம்பரங்களும், வணிகமயமாக்கலும், பண்பாட்டு விலகல்களும் சைவ சமய ஆன்மீகத்தின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. </p><p>அதேபோல மரபுசார்ந்த பக்தி நெறிகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, தனியாரின் நிதியாதிக்கத்தைக் காட்டும் போட்டித் தளமாக ஆலயங்கள் மாறிவருவது சைவச் சமூகம் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டிய ஒரு முக்கியமான எச்சரிக்கை குறியீடாக மாறியுள்ளது என்பதே இப்போதைய நிதர்சனமாகும் .</p><p></p><h3>
கடந்த காலக் கட்டுப்பாடுகளும் தற்போதைய கள யதார்த்தமும்</h3><p>

ஒரு காலத்தில் யாழ்ப்பாண ஆலயத் திருவிழாக்களில் "சின்னமேளம்" என்ற பெயரில் இடம்பெற்ற சதிராட்டப் போட்டிகளும், உபயக்காரர்களின் போலிப் பெருமைகளும் கலாச்சார ரீதியான சிக்கல்களை உருவாக்கியிருந்தன. ஆனால் தொடர்ந்து வந்த காலங்களில், சமூக ஒழுக்க நெறிமுறைகளைப் பேணும் பொருட்டு ஆலயங்களில் இத்தகைய ஆடம்பரக் கலைகளுக்கும், திரையிசைப் பாடல்களுக்கும் முற்றாகத் தடை விதிக்கப்பட்டது.&nbsp;</p><p>

அதன் பின் ஆலயங்கள் ஆடம்பரங்களின்றியும், பக்தியை மட்டுமே முதன்மைப்படுத்தியும் இயங்கக்கூடிய சூழல் இயல்பாக உருவாக்கப்பட்டது.</p><p>
ஆனால், 2009 ஆம் ஆண்டிற்குப் பிந்தைய ஈழ நிலப்பரப்பின் கேட்பாரற்ற சூழலில், முறையான வழிநடத்தல் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் இல்லாத நிலையைப் பயன்படுத்தி, பல ஆலயங்களில் கட்டுப்பாடற்ற பண்பாட்டு மீறல்கள் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளன.</p><h2>புலம்பெயர் பணமும் போலிப் பெருமிதப் போட்டியும்</h2><p>
நமது தயாக நிலப்பரப்பின் தற்போதைய சீரழிவுகளுக்கு முதன்மைக்காரணியாக அமைவது, ஆலய நிர்வாகங்களை அசைக்கும் கட்டுப்பாடற்ற பணப் புழக்கமாகும்./
 
குறிப்பாக, புலம்பெயர் தேசங்களிலிருந்து வரும் பெருந்தொகைப் பணம், பக்திக்காகப் பயன்படுத்தப்படுவதற்குப் பதிலாக, ஊர்ப் பெருமையையும் தனிநபர் செல்வாக்கையும் பறைசாற்றும் ஒரு கருவியாக மாற்றப்பட்டு வருகிறது.</p><p>

பல லட்சக்கணக்கில் பட்டுச் சாத்துதல், மாம்பழ ஏலம் என்ற பெயரில் கோடிகளைக் கரைத்தல், போட்டிபோட்டுக்கொண்டு மாலைகளைச் சாத்துதல் போன்றவை ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் வணிகக் காட்சிகளாக மாறியுள்ளன.</p><p>

அதே போலவே மரபுசார்ந்த தென்னிலங்கை ஆட்டங்கள், கேரளா செண்டை மேளங்கள், திரையிசைப் பிரபலங்களை வரவழைத்துக் கச்சேரிகள் நடத்துதல் போன்ற நிகழ்வுகள், ஆலயங்களின் அமைதியையும் சைவ மரபின் புனிதத்தையும் முற்றாகச் சிதைத்து நிற்கிறது.</p><p>
நல்லூர் கந்தசுவாமி ஆலயம் போன்ற தளங்களில் இன்றளவும் இறுக்கமாகப் பேணப்படும் வழிபாட்டு ஒழுக்கமும் கட்டுப்பாடும், பிற கிராமிய மற்றும் நகர ஆலயங்களில் இல்லாமல் போவதற்குக் காரணம் தகுதியான மற்றும் பொறுப்புள்ள நிர்வாகக் கட்டமைப்பு இன்மையே ஆகும்.</p><h2>
ஆலயத் திருவிழாக்களில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சீர்திருத்தங்கள்</h2><p>

ஈழத்து சைவ மரபைக் காப்பாற்றவும், ஆலயங்களை மீளவும் ஆன்மீக மையங்களாக மாற்றவும் உடனடியாகக் கீழ்க்காணும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.</p><ul><li>ஆடம்பரக் கலை நிகழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி: சினிமாப் பாடல்கள், வணிகரீதியான குத்தாட்டங்கள், வேற்றுப் பண்பாட்டுக் கலைக் குழுக்களின் ஆடம்பரக் காட்சிகளுக்கு ஆலய வளாகத்திற்குள் முற்றாகத் தடை விதிக்கப்பட வேண்டும்.பண்ணிசை, தேவாரம், திருவாசகம் மற்றும் மரபுசார் கலைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஏன் என்றால் ஆலயம் கேளிக்கை காட்டும் இடம் கிடையாது.</li><li>நிதிக்கட்டுப்பாடும் உச்சவரம்பும்: உபயக்காரர்கள் செய்யும் செலவுகளுக்கு ஆலய நிர்வாகங்கள் நல்லூரைப்போல தெளிவான உச்சவரம்பை நிர்ணயிக்க வேண்டும். தனிநபரின் பண பலம் ஆலய மரபுகளை மீறுவதற்கு அனுமதிக்கப்படக் கூடாது.</li><li>சமூகப் பயன்பாட்டிற்கு நிதியைத் திருப்புதல்: திருவிழாக்களில் வீணடிக்கப்படும் ஆடம்பரப் பணத்தைக் கொண்டு, வறிய மாணவர்களின் கல்வி வளர்ச்சி, மருத்துவ தேவைகள் மற்றும் சைவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்களை ஆலய நிர்வாகங்கள் முன்னெடுக்க வேண்டும்.</li><li>உயர்மட்டச் சைவ ஆதீனம் அல்லது தலைமைப் பீடத்தின் அவசியம்.</li></ul><p>
ஒவ்வொரு ஆலய நிர்வாகமும் தன்னிச்சையாகவும், எவ்விதக் கட்டுப்பாடின்றியும் செயல்படுவதே இத்தகைய கலாச்சார மீறல்களுக்கு அடிநாதமாகும். இதைக் கட்டுப்படுத்த, அனைத்துச் சைவ ஆலயங்களையும் ஒருங்கிணைத்து வழிநடத்தக்கூடிய ஓர் உயர்மட்ட சைவச் சபையோ அல்லது ஈழத்துச் சைவ ஆதீனம் போன்ற ஒரு தலைமைப் பீடமோ உருவாக்கப்படுவது காலத்தின் கட்டாயமாகும்.</p><p>

உண்மையில் ஆலயங்களின் கோபுர உயரத்திலோ, நாற்பது அடித் தேரின் பிரம்மாண்டத்திலோ சைவ சமயத்தின் பெருமை இல்லை என்பதையும் அங்கு பேணப்படும் ஆன்மீக ஒழுக்கத்திலும் அமைதியிலுமே சைவ சமயத்தின் ஆன்மா வாழ்கிறது என்பதனையும் உணரத்தலைப்பட வேண்டும்.&nbsp;</p><p>
ஊர்மக்களின் சுயவிழிப்புணர்வும், அனைத்து ஆலயங்களையும் கட்டுப்படுத்தக்கூடிய ஓர் ஒருமைப்படுத்தப்பட்ட சைவத் தலைமைப் பீடத்தின் எழுச்சியும் மட்டுமே ஈழத்து ஆலயங்களின் கைநழுவிப்போகும் புனிதத்தை மீட்டுத்தரும் என்ற காலத்தின் ஆகப்பெரிய உண்மையை சைவ சமயத்தார் உணரவேண்டும் .</p><p>

கடந்த நாட் களில் கிளிநொச்சி ஆலயங்களில் நடைபெற்ற அரைநிர்வாண ஆட்டங்கள் சைவசமயத்தையும் அதன் பண்பாட்டு ஒழுக்கத்தையும் சவப்பெட்டியில் வைத்து மூடியிருக்கிறது என்ற விடையம் 
புலம்பெயர் பணக்காரர்களுக்கு உணரத்தப்படவேண்டும்.&nbsp;</p><p>
இந்த மண்ணில் புலிகள் கட்டிக்காத்த பண்பாட்டை பாடையில் ஏற்றுகிறதா புலம்பெயர் நிதி என்ற கேள்வி சமூகத்தின் சகல மட்டங்களிலும் இன்று பெருங்கேள்வியாகி நிற்கிறது.&nbsp;</p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table></h5><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T01:25:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெல்ஜியத்தின் புகழ்பெற்ற 'பிரெஞ்சுப் பொரியல்' உற்பத்திக்குப் பேராபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/belgium-s-famous-fries-face-production-crisis-1787792859"></link>
            <id>https://canadamirror.com/article/belgium-s-famous-fries-face-production-crisis-1787792859</id>
            <summary type="text">பெல்ஜியத்தில் நிலவும் கடுமையான வறட்சி மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக, அங்குப் பயிரிடப்படும் உருளைக்கிழங்குகளின் பருமன் வெகுவாகக் குறைவடைந்துள்ளது. இதன...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெல்ஜியத்தில் நிலவும் கடுமையான வறட்சி மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக, அங்குப் பயிரிடப்படும் உருளைக்கிழங்குகளின் பருமன் வெகுவாகக் குறைவடைந்துள்ளது. </p><p>இதனால், அந்நாட்டின் புகழ்பெற்ற 'பிரெஞ்சுப் பொரியல்' (Frites) உற்பத்திக்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2938a0f8-4f68-4257-8042-c09c701ed6c7/26-6a8f8ddd7b892.webp' /></p><p> </p><p>வசந்த காலத்தின் இறுதியில் பெய்த கடும் மழையினால் மண்வளம் பாதிக்கப்பட்டதும், அதனைத் தொடர்ந்து கோடைகாலத்தில் நிலவிய அதீத வெப்பமும் வறட்சியுமே உருளைக்கிழங்குகளின் வளர்ச்சி குன்றியமைக்குப் பிரதான காரணங்களாகக் கூறப்படுகின்றன.

</p><p>ஏற்றுமதி மற்றும் விநியோகத்திற்கான ஒப்பந்தங்களை முன்கூட்டியே செய்துள்ள விவசாயிகள், தங்களது கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்காகக் கடந்த ஆண்டின் மேலதிக விளைச்சலில் சேமிக்கப்பட்ட உருளைக்கிழங்குகளைக் கொண்டே தற்போதைய தேவையைப் பூர்த்தி செய்யத் திட்டமிட்டுள்ளனர்.</p><p>

பதப்படுத்தப்பட்ட உருளைக்கிழங்குப் பொரியல்களை (Frites surgelées) ஏற்றுமதி செய்வதில் பெல்ஜியம் உலகளவில் முதலிடம் வகிக்கின்றது.</p><p> ஆண்டுதோறும் சுமார் ஆறு மில்லியன் தொன் உருளைக்கிழங்குகளைப் பதப்படுத்தும் இந்நாடு, தமது உற்பத்தியில் 90 விழுக்காட்டை 120-இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது.</p><p> இந்நிலையில், தற்போதைய விளைச்சல் வீழ்ச்சியால் உருளைக்கிழங்குகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை, நுகர்வோர் மத்தியில் பாரிய விலையேற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p> பொரியல் தயாரிப்பதற்கு ஏற்ற நீளமான மற்றும் பெரிய உருளைக்கிழங்குகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதால், எதிர்வரும் நாட்களில் இதன் விலைகள் அதிகரிக்கக்கூடும் என 4,500 உணவகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெல்ஜிய தேசியப் பொரியல் தயாரிப்பாளர் சங்கம் (Association nationale belge des frituristes) எச்சரித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-27T01:08:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்கின் விடுதலைக்காக 500 கோடி! கசிந்துள்ள தகவல்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drug-trafficker-shiran-basik-1787791704"></link>
            <id>https://tamilwin.com/article/drug-trafficker-shiran-basik-1787791704</id>
            <summary type="text">இலங்கைக்கு போதை பொருள் கடத்தலின் முக்கிய நபராக கருதப்படும் ஷிரான் பாசிக் அமைத்துள்ள போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் மூலங்களின்படி, அவரது விடுதலையை உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு போதை பொருள் கடத்தலின் முக்கிய நபராக கருதப்படும் ஷிரான் பாசிக் அமைத்துள்ள போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் மூலங்களின்படி, அவரது விடுதலையை உறுதி செய்வதற்கும், அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் குறிப்பிட்டுள்ள விடயங்களை மாற்றுவதற்கும் சுமார் 5000 மில்லியன் ரூபாய் (500 கோடி) நிதி தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. </p><p>
இந்த மூலங்களின் தகவல்படி, கொழும்பு தரப்பில் இந்த பணத்தை நிர்வகிப்பதாகவும், புலனாய்வாளர்களை அந்த வலையமைப்புடன் தொடர்புபடுத்தும் துபாயை தளமாகக் கொண்டியங்கும் முகமது சித்தீக்கிற்கு கீழ் செயற்படுவோரே நிதி கையாளுபவர்களாவர்.
</p><p></p><h2>நிதி வழங்கப்படும் மூலங்கள்</h2><p>அடையாளம் கண்டு கொள்வதற்காக அந்த மூலங்கள் குறியீட்டப் பெயரான "சாண்ட்ரா" என்ற ஒரு பெண்ணைப் பற்றி தெரிவித்துள்ளனர். </p><p>அவர் பாசிக்கின் நீண்டகால தொடர்பாளராகவும், இலங்கைக்கு அடிக்கடி பயணம் செய்பவராகவும் விவரிக்கப்படுகிறார். ஆரம்பக்கட்ட மூல தகவல்களின்படி அவரது வயது சுமார் 42 என்றும், அவர் திருமணம் ஆகாதவர் என தெரிவிக்கப்படுகிறது.</p><p>இருப்பினும் அவரது உண்மையான அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. 
பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுப்பது மற்றும் பாசிக்கின் பொது பிம்பத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஊடகவியலாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பது. </p><p>மேலும் மூன்று ஜனாதிபதி சட்டத்தரணிகளிடம் கலந்துரையாடப்பட்டுள்ளது, மேலும் அவர்கள் எந்தவொரு கட்டணத்திற்கும் வழக்கை பொறுப்பேற்க தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24092ce1-7a92-4824-955a-68310798e613/26-6a8f895accc96.webp' /></p><p>இதில் "பிடிகல" என அடையாளம் காணப்பட்ட பொலிஸ் சட்டத்தரணி ஒருவருக்கு எதிராக அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்யும் நோக்கத்துடன் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது .தற்போதைய நிதி போதுமானதாக இல்லை என்றால், துபாயில் இருந்து கூடுதல் பணத்தை அனுப்ப எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>மேற்கூறிய இலஞ்சக் குற்றச்சாட்டுகள் எதுவும் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.இவை எதிர்தரப்பு மூலங்களுக்கு உட்படுத்தப்பட்டவை, மேலும் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைகளாக அல்லாமல்,எதிர்வு கூறப்படும் குற்றச்சாட்டுகளாகவே 
முன்வைக்கப்படுகின்றன.
</p><h2>
பாசிக் ஏற்கனவே ஒப்புக்கொண்டது என்ன</h2><p>
அண்மையில் தெரிவிக்கப்பட்ட விடயங்களின் படி, பாசிக் பொரலஸ்கமுவ பகுதியில் இரண்டு வீடுகளின் உரிமையை ஒப்புக்கொண்டுள்ளார்.
</p><p>அதேபோல், தெஹிவளை மற்றும் வெள்ளவத்தை கடலோரப் பகுதிகளில் உள்ள ஐந்து ஹோட்டல்களின் உரிமையை ஒப்புக்கொண்டுள்ளார், ஆனால் அவை அவரது சொந்த பெயரில் இல்லை நண்பர்களின் பெயர்கள் மூலமாகவே முதலீடு செய்ததாக அவர் கூறுகிறார்.
</p><p>கொழும்பு குற்றப் புலனாய்வுப் பணியகம் அவரது முழு சொத்து விவரங்களை தேடுவதை இன்னும் முடிக்கவில்லை. அவர் தற்போது புலனாய்வுக் குழுவால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார், மேலும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகமும் அரச புலனாய்வு சேவையும் ஆதரவையும் தகவல்களையும் வழங்கி வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T00:56:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடருந்து திணைக்கள ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிரடி தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/railway-officers-banned-social-media-duty-time-1787791533"></link>
            <id>https://tamilwin.com/article/railway-officers-banned-social-media-duty-time-1787791533</id>
            <summary type="text">இலங்கை தொடருந்து ஊழியர்கள் கடமை நேரத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் வகையில் தொடருந்து திணைக்கள பொதுமுகாமையாளரால் சுற்றுநிருபம் ஒன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை தொடருந்து ஊழியர்கள் கடமை நேரத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் வகையில் தொடருந்து திணைக்கள பொதுமுகாமையாளரால் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>
இலங்கை தொடருந்து ஊழியர்கள் கடமை நேரத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதையும், தொடருந்து செயல்பாடுகள் தொடர்பான முக்கியத் தகவல்களைப் பகிர்வதையும் தடுக்கும் வகையில் குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.</p><h3>பாதுகாப்பு நடவடிக்கை&nbsp;</h3><p>

தொடருந்து ஊழியர்களும் சில அதிகாரிகளும் கடமை நேரத்தில் மற்றும் தங்கள் கடமைகள் தொடர்பாக முக்கியத் தகவல்களை சமூக ஊடகங்கள் மூலம் பகிரங்கப்படுத்துவது குறித்த அவதானிப்புகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac033207-bd4c-4853-a1c9-317af6b460b1/26-6a8f89aaafbe2.webp' /></p><p>
</p><p>
சமூக ஊடகங்கள் மூலம் இத்தகைய தகவல்களைப் பகிரங்கப்படுத்துவது, தொடருந்து சேவையின் நம்பகத்தன்மை, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நிறுவன ஒழுக்கம் ஆகியவற்றைப் கடுமையாகப் பாதிக்கக்கூடும் என்று தொடருந்து திணைக்களம் சுட்டிக்காட்டுகிறது.
</p><p>
புதிய சுற்றறிக்கையின்படி, தொடருந்து பொது முகாமையாளர், தொடருந்து உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளர் மற்றும் தகவல் அதிகாரி ஆகியோருக்கு மட்டுமே தொடருந்து திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தகவல்களை வெளித் தரப்பினருக்கோ அல்லது ஊடகங்களுக்கோ வழங்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.</p><p>

தொடருந்து பொது மேலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அந்த சுற்றறிக்கையில், உள்ள அறிவுறுத்தல்களைப் புறக்கணித்துச் செயல்படும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் எச்சரிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T00:53:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடுமையான விளைவுகள் உண்டு ; ட்ரம்பின் எச்சரிக்கைக்கு ஈரானின் பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-hits-back-at-trump-warning-with-threat-1787791286"></link>
            <id>https://canadamirror.com/article/iran-hits-back-at-trump-warning-with-threat-1787791286</id>
            <summary type="text">புதிதாக விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் மூலம் அமெரிக்கா எதையும் சாதிக்கப் போவதில்லை என ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.

ஈரான் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிதாக விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் மூலம் அமெரிக்கா எதையும் சாதிக்கப் போவதில்லை என ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.</p><p>

ஈரான் பொருளாதாரத்தை முடக்குவதற்கு அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed6ab37d-e325-49cc-b18c-602fde6a08c6/26-6a8f87b7c33a2.webp' /></p><p> </p><p>மேலும், ஈரானுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகள் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும் என்றும் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.



</p><p>
1979 ஆம் ஆண்டு புரட்சிக்குப் பின்னர் பல ஆண்டுகளாக ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.</p><p> அவற்றைத் தொடர்ந்து எதிர்கொண்டு வந்துள்ள ஈரான் தலைவர்கள் தற்போதைய அமெரிக்காவின் தடை நடவடிக்கைகளின் தாக்கத்தை நிராகரித்துள்ளனர்.
</p><p>
இதுதொடர்பாகப் பேசிய ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், “பேச்சுவார்த்தை மற்றும் உரையாடல் மூலமாக பிரச்னைகளைத் தீர்ப்பதே எங்களின் கொள்கை. அதேநேரம், இதுவரை நாங்கள் பிரச்னைகளில் உறுதியாக இருந்தது போன்று, இனிவரும் பொருளாதார அழுத்தங்களுக்கு எதிராகவும் உறுதியாக நிற்போம்.
</p><p>
போரின் மூலம் எதையும் சாதிக்க முடியாததைப் போன்று தற்போதைய பொருளாதாரத் தடை நடவடிக்கைகளாலும் அமெரிக்காவால் எதையும் சாதிக்க முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T00:41:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் ஒரு இலட்சத்தை அண்மித்த டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/number-of-dengue-patients-approached-one-lakh-1787791021"></link>
            <id>https://tamilwin.com/article/number-of-dengue-patients-approached-one-lakh-1787791021</id>
            <summary type="text">நடப்பு ஆண்டில் பதிவான டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை அண்மித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் வரையில் நாட்டில் பதிவான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடப்பு ஆண்டில் பதிவான டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை அண்மித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
கடந்த வாரம் வரையில் நாட்டில் பதிவான டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 94,037 ஆக அதிகரித்திருந்ததாக சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இந்த ஆண்டு ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 29,962 டெங்கு பாதிப்புகள் கடந்த ஜூலை மாதத்தில் பதிவாகியுள்ளன. ஜூன் மாதத்தில் 21,533 பாதிப்புகளும், ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை 8,701 பாதிப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன.</p><p>

ஜனவரியில் 7,866 டெங்கு பாதிப்புகளும், பெப்ரவரியில் 5,721 பாதிப்புகளும், மார்ச்சில் 6,013 பாதிப்புகளும், ஏப்ரலில் 5,651 பாதிப்புகளும், மே மாதத்தில் 8,590 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.</p><h2>டெங்கு பாதிப்புகள்&nbsp;</h2><p>
</p><p>
இதற்கிடையே நாட்டில் உள்ள மொத்த டெங்கு பாதிப்புகளில், 52.93 சதவீதம், அதாவது 49,771 பாதிப்புகள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளன.

தென் மாகாணத்தில் 13,763 பாதிப்புகளும், மத்திய மாகாணத்தில் 8,519 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57a65782-7f39-48c5-aec6-18b863ff984a/26-6a8f87a663704.webp' /></p><p>
மாவட்ட அளவில் அதிகபட்சமாக 20,034 டெங்கு பாதிப்புகள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் 18,652 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. </p><p>அவற்றில் 3,787 கொழும்பு மாநகர சபை பகுதியைச் சேர்ந்தவை.

கண்டி மாவட்டத்தில் 6,818, களுத்துறையிலிருந்து 6,093, காலியிலிருந்து 6,079, இரத்தினபுரியிலலிருந்து 5,160, மாத்தறையிலிருந்து 5,003, கேகாலையிலிருந்து 2,713, குருநாகலையிலிருந்து 2,651 மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து 2,510 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
</p><p>
இதற்கிடையே நாடு முழுவதும் 76 டெங்கு நோய் உயர் அபாய சுகாதார அலுவலர் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
</p><p>
டெங்கு கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை தவறாமல் சுத்தம் செய்து அழிக்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர். மேலும், காய்ச்சல் ஏற்பட்டால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் உடனடியாக சிகிச்சை பெறுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T00:41:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டாவது வெள்ள அபாயம் - நேபாளத்தில் மீண்டும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-faces-second-flood-warning-by-icimod-1787785613"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-faces-second-flood-warning-by-icimod-1787785613</id>
            <summary type="text">Nepal faces second flood warning: நேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாயம் இருப்பதாக எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

இரண்டாவது வெள்ள அபாயம்நேபாளத்தின் ரசுவா ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal faces second flood warning: நேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாயம் இருப்பதாக எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
</p><h2>
இரண்டாவது வெள்ள அபாயம்</h2><p>நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட திடீர் வெள்ளம் இன்னும் முழுமையாக அடங்கவில்லை.</p><p> 

இப்போது, காத்துமாண்டுவை தலைமையிடமாகக் கொண்ட International Centre for Integrated Mountain Development (ICIMOD) நிறுவனம், “இரண்டாவது வெள்ளம் ஏற்படும் அபாயம் மிகுந்துள்ளது” என எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p></p><p>ஆகஸ்ட் 26 அன்று, பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளம், Bhote Koshi மற்றும் Trishuli ஆற்றுப் பகுதிகளை கடுமையாக பாதித்தது. சில நிமிடங்களில் நீர்மட்டம் 9 மீட்டர் வரை உயர்ந்ததால், கிராமங்கள், சாலைகள், பாலங்கள், கண்காணிப்பு நிலையங்கள் அனைத்தும் சேதமடைந்தன.
</p><p>
ICIMOD விஞ்ஞானிகள், “Lhende Khola பகுதியில் பனிச்சரிவு காரணமாக ஆற்றில் பெரிய அளவில் பனி மற்றும் கற்கள் விழுந்திருக்கலாம். இதனால் ஆற்றின் ஓட்டம் தடைபட்டு, தற்காலிக அணை உருவாகியிருக்கலாம். அது உடைந்தால், இரண்டாவது வெள்ளம் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும்” எனக் கூறியுள்ளனர்.
</p><p></p><p>நேபாள-சீனா எல்லைப் பகுதியில் இன்னும் தடுப்பு அணை இருப்பதாகவும், அது உடைந்தால் Jilong port மற்றும் கீழ்நிலப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த 14 மாதங்களில் இதே பகுதியில் இரண்டாவது முறையாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நுவாகோட், தாடிங் மாவட்டங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>

ICIMOD இயக்குநர் பெமா க்யாம்சோ, “நேபாள மக்களுடன் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். இந்த திடீர் பேரழிவு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ எங்கள் பங்கு தொடரும்” என தெரிவித்துள்ளார்.</p><p></p><p>விஞ்ஞானிகள், “குளிர்பரப்பில் (Cryosphere) ஏற்படும் மாற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பனிச்சரிவு, பனிச்சரிவு அணைகள், நிலச்சரிவு போன்றவை மிக வேகமாக நடக்கின்றன. இதற்கு எல்லைத் தாண்டிய ஒத்துழைப்பு தேவை” என வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இந்நிலையில், நேபாள அரசு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் வெளியேற்றம் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T00:33:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் 9 அடுத்த iPhone வெளியீடு: ஆப்பிள் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/apple-sets-sept-9-date-for-next-iphone-launch-1787790923"></link>
            <id>https://news.lankasri.com/article/apple-sets-sept-9-date-for-next-iphone-launch-1787790923</id>
            <summary type="text">Apple sets next iPhone launch on Sept 9: ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை iPhone-ஐ வெளியிடும் நிகழ்ச்சியை 2026 செப்டம்பர் 9 அன்று நடத்தவுள்ளதாக அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Apple sets next iPhone launch on Sept 9: ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை iPhone-ஐ வெளியிடும் நிகழ்ச்சியை 2026 செப்டம்பர் 9 அன்று நடத்தவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
</p><p>
இந்த நிகழ்ச்சி, புதிய CEO ஜான் டெர்னஸ் (John Ternus) தலைமையில் நடைபெறுவதால், உலகம் முழுவதும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0798903a-f266-4ce2-8c93-061a99fd0ac0/26-6a8f864d648c6.webp' /></p><p>கடந்த சில மாதங்களாக, iPhone-இன் புதிய மாடல் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக, மேம்பட்ட AI அம்சங்கள், சிறந்த கமெரா தொழில்நுட்பம், மற்றும் அதிக திறன் கொண்ட பேற்றரி ஆகியவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>

மேலும், iPhone-இன் வடிவமைப்பில் சிறிய மாற்றங்களும், புதிய நிறங்களும் அறிமுகமாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p></p><p>ஆப்பிள், தனது நிகழ்ச்சியை கூப்பர்டினோ, கலிபோர்னியா நகரில் உள்ள Apple Park-இல் நடத்த உள்ளது. உலகம் முழுவதும் இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பாக காண்பிக்கப்படும்.
</p><p>
புதிய iPhone-இன் விலை மற்றும் விற்பனை திகதி குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், நிபுணர்கள், “இந்த முறை iPhone விலை சிறிது அதிகமாக இருக்கலாம். </p><p>அதே நேரத்தில், புதிய AI அம்சங்கள் மற்றும் மேம்பட்ட செயல்திறன் காரணமாக வாடிக்கையாளர்கள் அதை விரும்புவார்கள்” எனக் கூறுகின்றனர்.
</p><p>
ஆப்பிள் ரசிகர்கள், “டெர்னஸ் தலைமையில் வரும் முதல் iPhone எப்படியிருக்கும்?” என்ற கேள்வியுடன் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T00:32:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டத்தில் மரணிக்கவும் தயார்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/missing-persons-sri-lanka-tamils-1787790601"></link>
            <id>https://tamilwin.com/article/missing-persons-sri-lanka-tamils-1787790601</id>
            <summary type="text">நீதி கிடைப்பதே எமது முதன்மை இலக்கு. நீதி
கிடைத்த பின்னரே நாங்கள் நிதியைப் பற்றிச் சிந்திப்போம் என அம்பாறை மாவட்ட
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதி கிடைப்பதே எமது முதன்மை இலக்கு. நீதி
கிடைத்த பின்னரே நாங்கள் நிதியைப் பற்றிச் சிந்திப்போம் என அம்பாறை மாவட்ட
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி
திட்டவட்டமாகத் தெரிவித்தார்.</p><p>
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பகுதியில் நேற்று (26) நடைபெற்ற விசேட
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.</p><p>

அவர் அங்கு மேலும்,"ஒரு சரியான தீர்வை நோக்கியே நாங்கள் தொடர்ச்சியாகப் போராடிக்
கொண்டிருக்கிறோம். நீதி என்பது கடையில் கொடுத்து வாங்கும் பொருள் அல்ல.</p><h2>பல போராட்டங்கள்</h2><p>
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் எமக்கு வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களும்
நிதித் தேவைகளும் இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நீதிக்கு
முன்னால் அந்த நிதி எமக்கு பெரிதல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/024647b0-a872-430d-8f5c-b65fafa4961c/26-6a8f855eb9f5d.webp' /></p><p> </p><p>இலங்கை அரசாங்கமானது எங்களை எவ்வாறாவது
தங்களது உள்நாட்டு பொறிமுறைக்குள் தள்ளி, வழக்கை முடிக்கப் பார்க்கிறது.

உலகளவில் பல்வேறு நாடுகளிலும் பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.</p><p> சில நாடுகளுக்கு
30, 40 வருடங்களுக்குப் பிறகே தீர்வுகள் கிடைத்துள்ளன. நாங்களும் கடந்த 17
வருடங்களுக்கும் மேலாக நீதிக்காகப் போராடி வருகின்றோம்.</p><p> எமது இலக்கை அடைய 15
முதல் 17 வருடங்கள் வரை ஆகலாம். ஆனால், எனது உறவுகளுக்கு நீதி கிடைக்கும்
என்றால் நான் செத்தாவது நீதியைப் பெற்றுத் தருவேன்” என்றார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T00:31:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவிலுள்ள இலங்கை ஏதிலிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lankans-in-india-can-return-home-without-fear-1787789739"></link>
            <id>https://jvpnews.com/article/lankans-in-india-can-return-home-without-fear-1787789739</id>
            <summary type="text">இந்தியாவில் ஏதிலிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள், எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல் நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இந்தியாவில் ஏதிலிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள், எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல் நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்குத் தேவையான சட்டரீதியான தளர்வுகள் செய்யப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed95ade7-9bfc-4f26-a4ec-1bc8d6ffd3a2/26-6a8f841e5c6c5.webp' /></p><h2 style="text-align: justify; ">அமைச்சரவையில் தீர்மானம்</h2><p style="text-align: justify; ">&nbsp;யுத்த காலத்தில் முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் இலங்கையர்கள், பலாலி வானூர்தி நிலையம் ஊடாக நாடு திரும்பியபோது சில கைதுச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.</p><p style="text-align: justify; ">

இதனையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலையீட்டால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
</p><p style="text-align: justify; ">
அதனைத் தொடர்ந்து அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய, உயிரைப் பாதுகாப்பதற்காக முறைசாரா வழிகளில் வெளியேறிய அனைவரும் இப்போது நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையம் ஊடாகவும் அச்சமின்றித் திரும்ப முடியும் என அமைச்சர் விளக்கமளித்தார்.
</p><p style="text-align: justify; ">
மேலும், இவ்வாறு நாடு திரும்புவோரை மீள்குடியேற்றம் செய்வதற்கும், அவசியமான காணிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களாகச் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஊடாகத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><br></p>]]></content>
            <updated>2026-08-27T00:28:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[டாக்சிக் பட ரெஸ்பான்ஸ்.. கண்கலங்கிய இயக்குனர், டீம்! வைரலாகும் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/toxic-response-director-in-tears-see-video-1787790302"></link>
            <id>https://cineulagam.com/article/toxic-response-director-in-tears-see-video-1787790302</id>
            <summary type="text">யாஷ், கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான டாக்சிக் படம் நேற்று திரைக்கு வந்தது.ரசிகர்கள் பலரும் படம் எதிர்பார்ப்பை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாஷ், கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான டாக்சிக் படம் நேற்று திரைக்கு வந்தது.</p><p>ரசிகர்கள் பலரும் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fb4c774-b0a0-48f4-b922-5d7fae9a74c3/26-6a8f83dfd3b3e.webp' /></p><h2>கண்கலங்கிய இயக்குனர்</h2><p>இந்நிலையில் தியேட்டரில் ரசிகர்கள் உடன் டாக்சிக் படம் பார்த்த இயக்குனர் கீது மோகன்தாஸ் ரெஸ்பான்ஸை பார்த்து கண்கலங்கி இருக்கிறார்.</p><p>

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Team gets Emotional after watching the show with Audience💥👍 <a href="https://t.co/ikXN1fTjI8">pic.twitter.com/ikXN1fTjI8</a></p>&mdash; Christopher Kanagaraj (@Chrissuccess) <a href="https://x.com/Chrissuccess/status/2092627258796016045?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-08-27T00:25:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈழத்தமிழினப்படுகொலைக்கான நீதிக்காக உழைத்த அருட்தந்தை ஜாவியர் கிரால்டோ மொரேனோ மறைந்தார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/father-javier-giraldo-moreno-passes-away-1787789449"></link>
            <id>https://ibctamil.com/article/father-javier-giraldo-moreno-passes-away-1787789449</id>
            <summary type="text">தென்னமெரிக்கா, கொலம்பியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற கிறித்தவ அருட்தந்தையும், கிறித்துவ சபைத் (Jesuit) துறவியும், நீதி மற்றும் அமைதிக்கான போராட்டங்களில் மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னமெரிக்கா, கொலம்பியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற கிறித்தவ அருட்தந்தையும், கிறித்துவ சபைத் (Jesuit) துறவியும், நீதி மற்றும் அமைதிக்கான போராட்டங்களில் முன்னோடியாகத் திகழ்ந்தவரும், ஈழத்தமிழினத்திற்கு நிகழ்ந்த இனப்படுகொலைக்கெதிராக தீர்ப்பாயத்தை நிறுவுவதில் முன்னின்று உழைத்தவருமான அருட்தந்தை ஜாவியர் கிரால்டோ மொரேனோ (1944-2026) செவ்வாய்க்கிழமை (25) அன்று பொகோட்டாவில் காலமானார்.
</p><p>
2013-ல் நடைபெற்ற 'சிறிலங்கா மீதான மக்கள் தீர்ப்பாயத்தின்' (பிறேமன் அமர்வு) நடுவர் குழுவில் இவர் இடம்பெற்றிருந்தார்.</p><p></p><h2>கொலம்பியாவில் தமிழினப்படுகொலை&nbsp;நினைவுநாள்</h2><p> 

இவர் அருட்தந்தை பிரான்சுவா கூட்டாவுடன் இணைந்து தென்னமெரிக்கத் தூதுவராக இருந்த சிறிலங்காவின் முன்னைநாள் இராணுவத்தளபதி ஜகத் டயசின் மீது இனப்படுகொலைக் குற்றச்சாட்டைச் சுமத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தியவர் என்று பதியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2cf740e-f420-439f-8829-b42f506623d5/26-6a8f836ab932b.webp' /></p><p>
</p><p>
கொலம்பியாவில் தமிழினப்படுகொலை நினைவுநாளை நடாத்தியவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p> 

ஈழத்தமிழர்கள் சார்பில் உங்களை ஐபிசி தமிழ் உங்களை நெஞ்சில் நிறுத்தி நினைவுகூருகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T00:25:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடை விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய பார்த்தவர்களின் நிலை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-government-sri-lanka-political-condition-1787789112"></link>
            <id>https://tamilwin.com/article/npp-government-sri-lanka-political-condition-1787789112</id>
            <summary type="text">கல்முனை வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள சீருடை தொடர்பான பிரச்சினையானது நாட்டில் அரசியல் ரீதியான விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தன.இந்நிலையில், தற்போதைய அரசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள சீருடை தொடர்பான பிரச்சினையானது நாட்டில் அரசியல் ரீதியான விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தன.</p><p>இந்நிலையில், தற்போதைய அரசாங்கம் இப்பிரச்சினையை திட்டமிட்டு தூண்டி விட்டிருக்கலாம் என சிலர் கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.&nbsp;</p><p>இதற்கிடையில், கம்பஹா மாவட்டத்தில் இருக்கின்ற பள்ளிவாசல்களுக்கான புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.&nbsp;</p><p>இருப்பினும், இவ்விடயம் அறிவிக்கப்பட்டதை அடுத்து பெரும்பான்மையினத்தவர்கள், பௌத்த மதத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த அரசாங்கத்தில் ஏன் முஸ்லிம்களின்&nbsp;பள்ளிவாசல்களுக்கு இவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்கின்றார்கள் என சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்புகின்றனர்.&nbsp;</p><p>இவ்விவகாரம் தொடர்பில் லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சி ஆராய்கின்றது..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/s_GlV6JN6zs" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T00:24:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[சேலையிலும் கவர்ச்சி.. க்ரித்தி ஷெட்டி சேலையில் அழகிய ஸ்டில்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/krithi-shetty-latest-glam-look-in-saree-1787789774"></link>
            <id>https://cineulagam.com/article/krithi-shetty-latest-glam-look-in-saree-1787789774</id>
            <summary type="text">நடிகை க்ரித்தி ஷெட்டி தற்போது இளசுகளை அதிகம் கவர்ந்த நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

க்ரித்தி ஷெட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை க்ரித்தி ஷெட்டி தற்போது இளசுகளை அதிகம் கவர்ந்த நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
</p><p>
க்ரித்தி ஷெட்டி தற்போது சேலையில் ஹாட் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.</p><p>

ஓணம் சேலையிலும் கிளாமரா என ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்திருக்கின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-27T00:17:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் நீரிணையில் தற்காலிக பாதை: ஈரான்-ஓமன் ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-oman-agree-temporary-hormuz-route-1787789640"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-oman-agree-temporary-hormuz-route-1787789640</id>
            <summary type="text">Iran-Oman agree temporary Hormuz route: ஈரான் மற்றும் ஓமன் இடையே புதிய ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.


புதிய பாதைஈரான் மற்றும் ஓமன், உலகின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran-Oman agree temporary Hormuz route: ஈரான் மற்றும் ஓமன் இடையே புதிய ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><h2>

புதிய பாதை</h2><p>ஈரான் மற்றும் ஓமன், உலகின் முக்கியமான எரிபொருள் போக்குவரத்து வழியாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணையில் புதிய தற்காலிக பாதையை உருவாக்க ஒப்பந்தம் செய்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be18a338-3bda-4b8c-b07e-f811c41b2936/26-6a8f814a8f955.webp' /></p><h2>

தற்காலிக ஒப்பந்தம்</h2><p>ஈரான் துணை வெளிவிவகார அமைச்சர் காஜெம் கரிபாபாதி, “புதிய பாதையின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள் ஈரான் நிலப்பரப்பில் இருக்கும். இது தற்காலிக ஒப்பந்தம் மட்டுமே” எனக் கூறியுள்ளார். </p><p>இந்த பாதை சுமார் 11 கிலோமீட்டர் அகலமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
ஓமன் வெளிவிவகார அமைச்சர் பத்ர் அல்-புசைதி, “இந்த பாதையை விரைவில் அறிவிப்போம். எதிர்காலத்தில் நிரந்தர தீர்வும் உருவாகும்” எனக் கூறியுள்ளார்.
</p><p></p><p>கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய அமெரிக்கா-இஸ்ரேல் போர் காரணமாக ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டது. இதனால் உலகளாவிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. </p><p>ஜூன் மாதத்தில் அமெரிக்கா-ஈரான் இடையே இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானாலும், அதில் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளை அமெரிக்கா பின்பற்றவில்லை என ஈரான் குற்றம்சாட்டுகிறது.</p><p>

ஈரான், “அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருந்தால், ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாது” எனத் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், “அமெரிக்கா விதிக்கும் புதிய பொருளாதார தடைகள் தோல்வியடையும்” எனவும் எச்சரித்துள்ளது.
</p><p></p><p>இந்நிலையில், ஹார்முஸ் நீரிணையில் இன்னும் கடல் கண்ணிவெடிகள் உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. </p><p>அமெரிக்கா, “கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டன” எனக் கூறினாலும், ஈரான் அதை மறுத்து, “அமெரிக்க கப்பல்கள் எளிதில் இலக்காக மாறும்” என எச்சரித்துள்ளது.
</p><p>
இந்த ஒப்பந்தம், உலக எரிபொருள் சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T00:11:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீச்சல் உடையில் நடிகை சித்தி இத்னானி.. செம ஹாட் ஸ்டில்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/siddhi-idnani-in-swimsuit-1787788917"></link>
            <id>https://cineulagam.com/article/siddhi-idnani-in-swimsuit-1787788917</id>
            <summary type="text">வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு ஜோடியாக நடித்து இருந்தவர் சித்தி இத்னானி. அதற்கடுத்து அவர் நடித்த சில தமிழ் படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு ஜோடியாக நடித்து இருந்தவர் சித்தி இத்னானி. அதற்கடுத்து அவர் நடித்த சில தமிழ் படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை.
</p><p>
சித்தி இத்னானிக்கு இன்ஸ்டாவில் மட்டும் சுமார் 9.5 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
</p><p>
தற்போது அவர் இலங்கைக்கு ட்ரிப் சென்று இருக்கும் நிலையில் அங்கு பிகினியில் இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ..</p>]]></content>
            <updated>2026-08-27T00:08:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் திருவிழாவில் நடந்தது என்ன! ஆலயங்கள் மீது விரைவில் அரசின் அதிரடி சட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kilinochchi-temple-festival-new-law-on-temples-1787766873"></link>
            <id>https://tamilwin.com/article/kilinochchi-temple-festival-new-law-on-temples-1787766873</id>
            <summary type="text">அண்மையில், கிளிநொச்சியில் இடம்பெற்ற ஆலய திருவிழாவின் போது முன்னெடுக்கப்பட்ட நடன நிகழ்வுகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.&amp;nbsp;தமிழ் கலாசாரத்தை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில், கிளிநொச்சியில் இடம்பெற்ற ஆலய திருவிழாவின் போது முன்னெடுக்கப்பட்ட நடன நிகழ்வுகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.&nbsp;</p><p>தமிழ் கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கடும் கண்டனங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.&nbsp;</p><p>இலங்கை தமிழ் மக்களின் மற்றும் இந்து மதத்தின் மகத்துவத்தை கெடுக்கும் வகையில் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டாம் எனவும் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.&nbsp;</p><p>இந்நிலையில், இலங்கையில் உள்ள ஆலயங்களில் முக்கிய சட்டம் ஒன்று நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக அரச தரப்பில் இருந்து குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இது உட்பட நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jfUbfFv5RGU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T23:53:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்களை இலக்கு வைத்த சீனா! மொத்தமாக முறியடிக்கப்பட்ட திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-thwarts-chinese-cyber-attacks-1787787374"></link>
            <id>https://ibctamil.com/article/us-thwarts-chinese-cyber-attacks-1787787374</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்க நீதித்துறை, நாசா, ஃபெடரல் ரிசர்வ், செனட் சபை மற்றும் பிற முக்கிய அரசு நிறுவனங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட சீன ஹேக்கிங் நடவடிக்கையை அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்க நீதித்துறை, நாசா, ஃபெடரல் ரிசர்வ், செனட் சபை மற்றும் பிற முக்கிய அரசு நிறுவனங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட சீன ஹேக்கிங் நடவடிக்கையை அமெரிக்கா முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.</p><p>

இந்த ஹேக்கிங் பிரசாரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட 'QScan' மற்றும் 'QTRouter' ஆகிய இரு ஹேக்கிங் தளங்களின் டொமைன்களைக் கைப்பற்றியுள்ளதாக அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், அமெரிக்க எரிசக்தித் துறை, சுகாதாரத் துறை, தேசிய சுகாதார நிறுவனங்கள் மற்றும் அமெரிக்கா - தென் கொரியாவைச் சேர்ந்த 4 தனியார் நிறுவனங்களும் இந்த ஊடுருவல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>பின்னணியில் சீனாவின் உளவு அமைப்பு&nbsp;</h2><p>
</p><p>
இந்த ஹேக்கிங் தளங்களைச் சீனாவைச் சேர்ந்த 'நான்ஜிங் சின்ஜியுவே நெட்வொர்க் டெக்னாலஜி' (Nanjing Xinjiuwei Network Technology Company) என்ற நிறுவனம் இயக்கி வந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c8d7b7e-d7cf-45bb-9098-e78a03292b2f/26-6a8f7b74ca430.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், குறித்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக சீனாவின் உளவு அமைப்பான அரசுப் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் மக்கள் விடுதலை இராணுவம் (PLA) ஆகியவை செயல்பட்டுள்ளதாகவும் அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T23:49:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவுக்குப் பாடம் புகட்ட வேண்டிய நேரம் இது! ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-says-it-s-time-to-teach-canada-a-lesson-1787777796"></link>
            <id>https://ibctamil.com/article/trump-says-it-s-time-to-teach-canada-a-lesson-1787777796</id>
            <summary type="text">கனடாவுக்குப் பாடம் புகட்ட வேண்டிய நேரம் இது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேர்காணல் ஒன்றில் அறிவித்துள்ளார். 

கனடாவிடம் இருக்கும் பொருட்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவுக்குப் பாடம் புகட்ட வேண்டிய நேரம் இது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேர்காணல் ஒன்றில் அறிவித்துள்ளார். </p><p>

கனடாவிடம் இருக்கும் பொருட்கள் இல்லாமல் தங்களால் சமாளிக்க முடியும் என்றும், சில பொருட்கள் தற்காலிகச் சிரமத்தை ஏற்படுத்தினாலும் அவற்றை வேறு நாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>

முன்னதாக, இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை முறிந்ததால், 20 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடிய இறக்குமதிகள் மீது 50% புதிய வரியை ட்ரம்ப் சனிக்கிழமை விதித்தார்.</p><p></p><h2>வரி விதிப்புகள்</h2><p> </p><p>

அத்துடன் ஜனவரி 1 முதல் கனடிய வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் மீதும் 50% வரி நடைமுறைக்கு வரும் என அறிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c65c3f6-1c87-43cf-9e0d-bdc5c97d6292/26-6a8f76f475a4a.webp' /></p><p>
</p><p>
இதற்குப் பதிலடியாக கனடா, சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்புள்ள அமெரிக்க இறக்குமதிகள் மீது அதே அளவு பதில் வரியை விதித்து, வரும் செப்டம்பர் 8 முதல் அது நடைமுறைக்கு வரும் என அறிவித்துள்ளது. </p><p>

இந்நிலையில், கனடா நிராகரித்த ஒப்பந்தத்தை விட மோசமான ஒரு ஒப்பந்தத்தையே எதிர்காலத்தில் பெற முடியும் என வெள்ளை மாளிகை ஆலோசகர் பீட்டர் நவரோ எச்சரித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T23:34:45+00:00</updated>
        </entry>
    </feed>
