<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-02T05:54:42+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முட்டுக்கட்டை போட்ட சாமுண்டீஸ்வரி.. கார்த்திக்கின் மாஸ்டர் பிளான் என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/karthigai-deepam-serial-today-episode-1788328197"></link>
            <id>https://viduppu.com/article/karthigai-deepam-serial-today-episode-1788328197</id>
            <summary type="text">தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். நேற்றைய எபி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். நேற்றைய எபிசோடில் கருப்பசாமியாக விளக்கு போட ராஜராஜன் கோவிலுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவான நிலையில், இன்றைய எபிசோடில் நடக்கவுள்ள பரபரப்பான சம்பவங்கள் குறித்து பார்க்கலாம்.</p><p>ராஜராஜன் கோவிலுக்கு செல்லப் போகிறார் என்ற தகவலை அறிந்த சந்திரகலா, சாமுண்டீஸ்வரியை தூண்டிவிடுகிறார். இதையடுத்து, ராஜராஜன் கோவிலுக்கு செல்லக்கூடாது என்று சாமுண்டீஸ்வரி கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/900ccc3c-0369-4e25-afc2-ae439c70e839/26-6a97b9095b8e5.webp' /></p><p>இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த ராஜராஜன், கார்த்திக்கிடம் தகவல் தெரிவிக்கிறார். அதன் பிறகு கார்த்திக் மற்றும் குடும்பத்தினர் ஒன்றாக இணைந்து ஒரு திட்டத்தை தீட்டுகின்றனர். அதன்படி, தன்னுடைய உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்று வர வேண்டும் என்று ராஜராஜன் கூறுகிறார். ஆனால் சாமுண்டீஸ்வரி அதை நம்பாமல், மருத்துவரையே வீட்டிற்கு வரவழைக்கிறார்.
</p><p>மருத்துவர் ராஜராஜனை பரிசோதித்து அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிந்து கொள்கிறார். எனினும், மயில்வாகனம் மற்றும் ரோகினி ஆகியோர் மருத்துவரிடம் பேசி, ராஜராஜனுக்கு ஓய்வு அவசியம் என்று சொல்ல வைக்கின்றனர். இருந்தபோதிலும் சந்திரகலாவுக்கு சந்தேகம் நீங்கவில்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2deb354-1c31-442c-abea-283a0c55ecd7/26-6a97b90a18679.webp' /></p><p>ராஜராஜன் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்பதற்காக, அவர் குடிக்கும் பாலில் தூக்க மாத்திரை கலந்து வைக்கிறார் சந்திரகலா. ஆனால் மயில்வாகனம், சந்திரகலாவை திசைதிருப்பி, அந்த பாலை ராஜராஜன் குடித்துவிட்டதாக நம்ப வைத்து அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்.
</p><p>இந்நிலையில், கார்த்திக்கின் திட்டம் வெற்றியடையுமா? ராஜராஜன் கோவிலுக்கு செல்வாரா? சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரகலாவின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும்? என்ற பரபரப்பான திருப்பங்களுடன் இன்றைய எபிசோட் நகரவுள்ளது. இதனை தெரிந்துகொள்ள கார்த்திகை தீபம் சீரியலை Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.
&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T05:51:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-year-old-child-died-falling-into-the-bucket-1788326885"></link>
            <id>https://tamilwin.com/article/2-year-old-child-died-falling-into-the-bucket-1788326885</id>
            <summary type="text">மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில்
இரண்டு வயது 8 மாதங்களுமான குழந்தையொன்று வாளிக்குள்&amp;nbsp;வீழ்ந்த நிலையில்&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில்
இரண்டு வயது 8 மாதங்களுமான குழந்தையொன்று வாளிக்குள்&nbsp;வீழ்ந்த நிலையில்&nbsp;உயிரிழந்துள்ளது.</p><p>குறித்த சம்பவம் நேற்று(01.09.2026) இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><h2>தலைகீழாக வாளிக்குள் விழுந்து</h2><p>
கொக்கட்டிச்சோலை கற்சேனை, முல்லை வீதியைச் சேர்ந்த 2 வயதும் 8 மாதங்களுமான
நந்தகோபன் கிசோத் என்ற குழந்தையே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cdd5bf8-3efb-4a02-a1c4-11cd3cf99f46/26-6a97b86c32d0f.webp' /></p><p>
குறித்த சிறுவன் வீட்டின் வாசலில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பெரிய
வாளியின் அருகே விளையாடிக் கொண்டு இருந்துள்ளான்.</p><p> இதன்போது, எதிர்பாராதவிதமாக
சிறுவன் தலைகீழாக வாளிக்குள் விழுந்ததில் நீரில் மூழ்கி மூச்சுத்திணறல்
ஏற்பட்டுள்ளது.</p><p>உடனடியாக உறவினர்கள் சிறுவனை மீட்டு பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு
சென்ற போதிலும், வழியிலேயே சிறுவன் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள்
தெரிவித்துள்ளனர்.
</p><h2>மேலதிக விசாரணைகள்&nbsp;</h2><p>
மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாக திடீர் மரண விசாரணை
அதிகாரி வீ.ஆர். மகேந்திரன், பழுகாமம் வைத்தியசாலைக்கு வருகை தந்து சடலத்தைப்
பார்வையிட்டதுடன், உறவினர்களிடமும் விசாரணைகளை முன்னெடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9122bc5-867c-4c84-a487-18937b2a9bbf/26-6a97b86ce81f1.webp' /></p><p>

உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக சிறுவனின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார
வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p>
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T05:51:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[200 நாள் கடல் வாழ்க்கைக்கு முடிவு; ; ஓய்வெடுக்க தாய்லாந்து செல்லும் 5000 அமெரிக்க வீரர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/uss-abraham-lincoln-5-000-troops-rest-in-thailand-1788328381"></link>
            <id>https://canadamirror.com/article/uss-abraham-lincoln-5-000-troops-rest-in-thailand-1788328381</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; அமெரிக்க கடற்படை மற்றும் கடற்படை வீரர்கள் சுமார் 5,000 பேர், 200 நாட்களுக்கும் மேலான நீண்ட கடற்படை பணிக்கு பிறகு USS Abraham Lincoln விம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; அமெரிக்க கடற்படை மற்றும் கடற்படை வீரர்கள் சுமார் 5,000 பேர், 200 நாட்களுக்கும் மேலான நீண்ட கடற்படை பணிக்கு பிறகு USS Abraham Lincoln விமானம் தாங்கி கப்பலில் பட்டாயா அருகே உள்ள Laem Chabang துறைமுகத்தை சென்றடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p> 
வீரர்களுக்கு ஓய்வு மற்றும் புத்துணர்வு அளிக்கும் வகையில் கரையோர பகுதிகளில் நேரம் செலவிட அனுமதி வழங்கப்பட உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38fd0127-c144-418b-b476-03e53012010b/26-6a97b9bee0c34.webp' /></p><h2>சட்டவிரோத பாலியல் தொழில் அதிகரிக்கக்கூடும்&nbsp;&nbsp;</h2><p> இதனால் பட்டாயாவில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள், பார்கள், கடைகள் உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த தொழில்களுக்கு குறுகிய காலத்தில் கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>ஒவ்வொரு அமெரிக்க வீரரும் தினமும் சுமார் 1,000 முதல் 3,000 தாய் பாட் வரை செலவு செய்யக்கூடும் என பட்டாயா மேயர் தெரிவித்துள்ளார்.
</p><p> 
அதே நேரத்தில், வீரர்களின் வருகையால் சட்டவிரோத பாலியல் தொழில் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் போலீசாரிடம் உள்ளது. </p><p>இதையடுத்து கடற்கரை மற்றும் முக்கிய இரவு நேர பொழுதுபோக்கு பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனைகளில் சுமார் 40 முதல் 50 பேர் பாலியல் தொழில் தொடர்பான சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
 
வியட்நாம் போர் காலத்திலிருந்தே அமெரிக்க ராணுவ வீரர்களின் ஓய்வு சுற்றுலாவுடன் பட்டாயாவுக்கு நீண்ட தொடர்பு உள்ளது. 

தற்போது 200 நாட்களுக்கும் மேலாக கடலில் இருந்த USS Abraham Lincoln வீரர்களின் வருகை, நகரின் சுற்றுலா மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு தற்காலிக ஊக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-02T05:50:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுரத்தில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sharp-weapon-in-anuradhapura-suspect-arrested-1788325335"></link>
            <id>https://ibctamil.com/article/sharp-weapon-in-anuradhapura-suspect-arrested-1788325335</id>
            <summary type="text">அநுராதபுரம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட மான்கடவல குளக்கட்டுக்கு அருகிலுள்ள வீதியொன்றில்&amp;nbsp; கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட மான்கடவல குளக்கட்டுக்கு அருகிலுள்ள வீதியொன்றில்&nbsp; கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (01.09.2026) இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>இந்த விடயம் தொடர்பில் தெரியவருகையில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட குறித்த நபர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p></p><h2>காவல்துறை விசாரணை</h2><p>
</p><p>மேலும் உயிரிழந்தவர் அநுராதபுரம், யாய 05 பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/894fc063-86fd-45f7-b430-aaead2ccbda6/26-6a97b7e312575.webp' /></p><p>உயிரிழந்த நபருக்கும் வேறு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக, அவர் கோடாரியால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>மேலும், தலைமறைவாகியுள்ள மற்றைய சந்தேகநபரை கைது செய்வதற்காக அநுராதபுரம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T05:46:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/served-lunch-mahinda-sentenced-14-years-in-prison-1788327927"></link>
            <id>https://jvpnews.com/article/served-lunch-mahinda-sentenced-14-years-in-prison-1788327927</id>
            <summary type="text">2014ஆம் ஆண்டு கொழும்பு கம்பல் பூங்காவில் நடைபெற்ற மே தின பேரணியில் பங்கேற்ற ஆதரவாளர்களுக்கு, அரசுக்குச் சொந்தமான ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் நித...</summary>
            <content type="html"><![CDATA[<p>2014ஆம் ஆண்டு கொழும்பு கம்பல் பூங்காவில் நடைபெற்ற மே தின பேரணியில் பங்கேற்ற ஆதரவாளர்களுக்கு, அரசுக்குச் சொந்தமான ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் நிதியில் இருந்து மதிய உணவு வழங்கிய குற்றச்சாட்டில், முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜெயரத்னவுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது.</p><p>
</p><p></p><p>இரண்டு குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளித்த நீதிமன்றம், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 7 ஆண்டுகள் வீதம் தண்டனை விதித்தது. எனினும், தண்டனைகள் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்படுவதால் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையாக அமுல்படுத்தப்படவுள்ளது.</p><p>

மேலும், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 2 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.</p><p> அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலதிக சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41a236cb-9f4a-446e-9e54-b6110a219dc6/26-6a97b7f8e9e99.webp' /></p><p>மே தின பேரணிக்காக தனியார் நிறுவனத்துக்கு 3 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அரச நிறுவனத்தின் நிதியில் இருந்து செலுத்தப்பட்டதாகவும், இது அரசியல் நடவடிக்கைக்காக பொது நிதியைப் பயன்படுத்திய செயலாகும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
ஊழல் என்பது அரச நிறுவனங்கள் மற்றும் நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை பாதிக்கும் என்பதால், இத்தகைய குற்றங்களை சாதாரணமாகக் கருத முடியாது என நீதிபதி முகமது மிஹைல் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதேவேளை, பியங்கர ஜெயரத்னவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவினால் மேலும் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளதுடன், அவற்றில் சில தொடர்பான விசாரணைகளும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T05:45:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் தொழிலதிபரின் வீட்டில் திடீரென உயிரிழந்த அழகுக்கலை பயிற்றுவிப்பாளர்! பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspicious-death-of-famous-model-sula-pathmendra-1788312817"></link>
            <id>https://tamilwin.com/article/suspicious-death-of-famous-model-sula-pathmendra-1788312817</id>
            <summary type="text">&amp;nbsp;கொழும்பு - பிலியந்தல பகுதியில் உள்ள தொழிலதிபருக்கு சொந்தமான வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பிரபல அழகுக்கலை பயிற்றுவிப்பாளர் சூலா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கொழும்பு - பிலியந்தல பகுதியில் உள்ள தொழிலதிபருக்கு சொந்தமான வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பிரபல அழகுக்கலை பயிற்றுவிப்பாளர் சூலாபத்மேந்திர குமாரபத்திரனவின் பிரேத பரிசோதனையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

சூலாபத்மேந்திரவின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>உடல் பாகங்களை அரசாங்க ஆய்வாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை&nbsp;</h2><p>
</p><p>
பிரேத பரிசோதனையின் போது அவரது உடலில் வெளிப்புற அல்லது உள் காயங்கள் எதுவும் காணப்படவில்லை என்று பொலிஸ் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c721d6c-d400-4d7e-a2f9-4e9cf9c7c71f/26-6a9793974ba40.webp' />&nbsp;</p><p>

இந்நிலையில், மேலதிக விசாரணைக்காக உடல் பாகங்களை அரசாங்க ஆய்வாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
45 வயதான சூலாபத்மேந்திர பிலியந்தல, தும்போவிலவில் உள்ள ஒரு தொழிலதிபருக்கு சொந்தமான வீட்டில், 31 ஆம் திகதியன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த தொழிலதிபருடன் அவர் காதல் உறவில் இருந்ததாகவும், 30 ஆம் திகதி பத்தரமுல்லையில் அவர் ஏற்பாடு செய்திருந்த விருந்தை தொடர்ந்து, 31 ஆம் திகதி அதிகாலை பிலியந்தலவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
இதன்பின்னர் அங்கு அறையில் உறங்கச்சென்ற நிலையில், மதியம் சுமார் 12.45 மணியளவில் அவரை எழுப்ப முயன்றபோதும், அவர் பதிலளிக்காததால் 1990 ஆம்புலன்ஸ் அவசர சேவை வரவழைக்கப்பட்டுள்ளது.</p><h2>மரணம் தொடர்பாக இரண்டு முறைப்பாடுகள்&nbsp;</h2><p>
</p><p>
இதன்போது மேற்கொண்ட பரிசோதனையில் அவர் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>
இதற்கிடையில், சம்பந்தப்பட்ட தொழிலதிபர் மற்றும் உயிரிழந்தவரின் தாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
</p><p>
அதன்படி, மரணம் தொடர்பாக இரண்டு முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bc1f987-f062-44f4-856c-2d58d0b6c5cc/26-6a97939803488.webp' /></p><p>
</p><p>
கேஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் விபரங்களை தெரிவித்த பின்னர், பதில் நீதவான் சம்பவ இடத்தையும் உடலையும் ஆய்வு செய்துள்ளார்.
</p><p>
இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில், களுபோவில போதனா வைத்தியசாலையில் நீதித்துறை மருத்துவ அதிகாரியினால் பிரேதப்பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
பிலியந்தல பொலிஸ் பொறுப்பாசிரியர் பிரதம ஆய்வாளர் சமிந்த குலசிங்கவின் அறிவுறுத்தல்களின் பேரில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.&nbsp; </p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T05:42:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் கியூஆர் குறியீடு மற்றும் விலை மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srilanka-fuel-price-next-month-change-1788325712"></link>
            <id>https://tamilwin.com/article/srilanka-fuel-price-next-month-change-1788325712</id>
            <summary type="text">எதிர்வரும் மாதத்தில் எரிபொருள் விலைகளை மேலும் குறைப்பது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திண...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் மாதத்தில் எரிபொருள் விலைகளை மேலும் குறைப்பது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,</p><h2>எரிபொருள் கியூஆர் குறியீடு பயன்பாடு</h2><p>மேலும் கியூஆர் குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருள் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de87fe0d-6349-4735-803f-61039642d59a/26-6a97b6e5c95c1.webp' /></p><p>
எரிபொருள் விலைகளை குறைப்பதற்காக தற்போதைய சூழ்நிலையை சமாளிக்க அரசாங்கம் செயல்பட்டு வருவதால், மக்களுக்கு முதல் வாய்ப்பிலேயே நிவாரணம் வழங்கப்படும்.</p><p>
மண்ணெண்ணெய், பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளையும் ஒரே நேரத்தில் குறைப்பது சாத்தியமில்லை என்றும், எதிர்வரும் மாதத்தில் எரிபொருள் விலைகளில் மேலும் குறைப்பது தொடர்பில் ஆராயப்படும் என்றும் விளக்கமளித்துள்ளார்.</p><h2>எரிபொருள் விலை உயர்வில் தாக்கம்</h2><p>
</p><p>
மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற சூழ்நிலை காரணமாக உலகளவில் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
</p><p>
கப்பல் கட்டணங்கள் அதிகரிப்பு மற்றும் முன்பதிவு இரத்து போன்ற காரணிகளும் எரிபொருள் விலை உயர்வில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
எனவே கியூஆர் குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருள் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T05:41:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக சட்டசபை கூட்டத்தில் மீண்டும் &quot;மன்மத நன்றி&quot; ; அவையில் கலகல சிரிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/manmatha-nandri-tamil-nadu-legislative-assembly-1788327519"></link>
            <id>https://jvpnews.com/article/manmatha-nandri-tamil-nadu-legislative-assembly-1788327519</id>
            <summary type="text">&amp;nbsp; தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் போது கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் பேசிய பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் போது கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் பேசிய பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
</p><p>
சட்டப்பேரவையில் தனது தொகுதி பிரச்சினைகள் குறித்துப் பேசி உரையை நிறைவு செய்த அருள் விக்னேஷ், சபாநாயகருக்கு நன்றி தெரிவிக்கும் போது "மனமார்ந்த நன்றி" என்பதற்குப் பதிலாக எதிர்பாராதவிதமாக "மன்மத நன்றி" என்று கூறிவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/986b356f-9d31-4084-9392-3f11f923a32f/26-6a97b660f017b.webp' /></p><h2>அவையிலும் சிரிப்பலை...</h2><p>
</p><p>
தான் தவறுதலாகச் சொன்னதை உணர்ந்து அவர் உடனடியாகச் சிரிக்க, அவையிலும் சிரிப்பலை எழுந்தது.</p><p>

முன்னதாகஇ தனது முதல் சட்டப்பேரவை உரையின் போது கனிமொழி சந்தோஷும் இதேபோன்று "மனமார்ந்த நன்றி" என்பதற்குப் பதிலாக "மன்மத நன்றி" என்று கூறி சமூக வலைதளங்களில் பேசப்பட்டார் .</p><p>இந்த நிலையில்&nbsp; சட்டமன்ற உறுப்பினர்&nbsp; அருள் விக்னேஷும் அதே வார்த்தையைத் தவறுதலாக உச்சரித்தபோது, அவருக்கு முன்பாக அமர்ந்திருந்த கனிமொழி வெளிப்படுத்திய முகபாவனையும் இணையத்தில் தற்போது அதிக கவனம் பெற்று வைரலாகி வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-02T05:35:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படத்திற்காக அனிருத் வாங்கும் சம்பளம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/anirudh-is-highest-paid-music-director-in-india-1788322492"></link>
            <id>https://cineulagam.com/article/anirudh-is-highest-paid-music-director-in-india-1788322492</id>
            <summary type="text">லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகவுள்ள AA23 திரைப்படத்திற்காக அனிருத் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகவுள்ள AA23 திரைப்படத்திற்காக அனிருத் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.</p><p></p><p>
</p><h2>
லோகேஷ் கனகராஜ்
</h2><p>
இயக்குநராக பல வெற்றிகளை பார்த்த லோகேஷ் கனகராஜ், சமீபத்தில் டிசி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக முதல் வெற்றியை பார்த்தார். இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68f60709-1a53-41d8-90cd-778c8c675efc/26-6a97a2c00b50c.webp' /></p><p>
</p><h2>
AA23</h2><p>

ஹீரோவாக நிரூபித்த லோகேஷ் அடுத்ததாக இயக்கத்தில் களமிறங்குகிறார். அல்லு அர்ஜுன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் AA23 திரைப்படம் உருவாகவுள்ளது. இப்படத்திற்கான அறிவிப்பு ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக வெளியானது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d95fc21-4299-47a6-94f5-6ceeaf86759e/26-6a97a2bf526ed.webp' /></p><p>மைத்திரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். முன் தயாரிப்பு பணிகள் இப்படத்திற்கு நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d5d6ae8-d58c-45a4-b130-691da8005749/26-6a97a2c0b5f89.webp' /></p><p>
</p><h2>
அனிருத் சம்பளம்
</h2><p>
இந்திய சினிமாவில் இன்று முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக அனிருத் உள்ளார். இவர் இசையில் அடுத்ததாக ஜெயிலர் 2, அரசன், கிங், பாரடைஸ், தர்மன் உள்ளிட்ட பல பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளிவரவுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03dde395-bd90-4860-a230-83a18d9fee61/26-6a97a2c16af23.webp' /></p><p>அதில் ஒன்றான AA23 திரைப்படத்திற்கு இசையமைக்க அனிருத் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்காக அனிருத்துக்கு ரூ. 23 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.&nbsp;இது உண்மையெனில், இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக அனிருத் மாறியுள்ளார்.
</p>]]></content>
            <updated>2026-09-02T05:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-barriers-for-arresting-foreigners-1788320383"></link>
            <id>https://tamilwin.com/article/no-barriers-for-arresting-foreigners-1788320383</id>
            <summary type="text">இலங்கையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினரை கைது செய்வதில் உரிய நாடுகளுடன் நிலவும் இருதரப்பு ஒத்துழைப்புக்கு எவ்விதத்திலும் தடையாக இருக்காத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினரை கைது செய்வதில் உரிய நாடுகளுடன் நிலவும் இருதரப்பு ஒத்துழைப்புக்கு எவ்விதத்திலும் தடையாக இருக்காது என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.</p><p>

“சீனாவில் இருந்து மட்டுமின்றி வேறு நாடுகளில் இருந்தும் வருகை தரும் நபர்கள் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.</p><h2><b>

சட்டத்தின் கீழ் கைது </b></h2><p>பின்னர், அந்த நாட்டில் நிலவும் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/515047a8-08b8-4a69-8ccb-8507bdce401c/26-6a97b33b1f2ac.webp' /></p><p>இதனால், அந்தந்த நாடுகளுடன் செய்துகொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அல்லது கூட்டாகச் செயற்படுவதில் எந்தவித சிக்கலும் ஏற்படுவதில்லை.
</p><p>
சட்டவிரோதச் செயல்களைத் தடுத்து நிறுத்துவது மாத்திரமின்றி, அறிவுப் பரிமாற்றம், ஆற்றல் மேம்பாடு போன்றவையும் அதன் கீழ் இடம்பெற்றுள்ளன. </p><p>

அதன் பின்னர் இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
</p>]]></content>
            <updated>2026-09-02T05:25:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு மாகாண அபிவிருத்தித் திட்டங்களை உரிய காலத்தில் நிறைவு செய்ய வேண்டும்! ஆளுநர் வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/northern-development-projects-completed-due-time-1788324736"></link>
            <id>https://tamilwin.com/article/northern-development-projects-completed-due-time-1788324736</id>
            <summary type="text">வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின்
முன்னேற்றத்தைத் தொடர்ச்சியாக மீளாய்வு செய்து, திட்டங்களை உரிய காலத்துக்குள்
நிறைவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின்
முன்னேற்றத்தைத் தொடர்ச்சியாக மீளாய்வு செய்து, திட்டங்களை உரிய காலத்துக்குள்
நிறைவு செய்வதுடன் தொழில்நுட்ப ஆளணிப் பற்றாக்குறை உள்ளிட்ட
நடைமுறைச் சவால்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்கவும் வேண்டும் என்று வடக்கு
மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>ஆளுநருக்கும், வடக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின்
செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள்
ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று(01.09.2026) நடைபெற்றபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>தீர்வுகளை விரைவாக மேற்கொள்ள&nbsp;</h2><p>
இந்தக் கலந்துரையாடலில் மாகாண சபையால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட
வேலைத்திட்டங்கள் தொடர்பான அறிக்கையைத் தயாரித்தல், இவ்வாண்டில்
நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல்
மற்றும் அவற்றை உரிய காலத்துக்குள் நிறைவு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள்
தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d7de8a2-e67f-4b50-a6c1-810408e3f87f/26-6a97b259e4089.webp' /></p><p>மேலும், நிரல் அமைச்சுக்களினால் மாகாணத்துக்கு ஒதுக்கப்படும் மேலதிக நிதியை
உரிய நோக்கத்துக்காகவும் வினைத்திறனுடனும் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள்
குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.</p><p> திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில்
காணப்படும் தொழில்நுட்ப ஆளணிப் பற்றாக்குறை உள்ளிட்ட மனிதவள மற்றும் நடைமுறைச்
சவால்களை அடையாளம் கண்டு அவற்றுக்குத் தேவையான தீர்வுகளை விரைவாக மேற்கொள்ள
வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.</p><h2>கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்</h2><p>இதன்போது, பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடலின் கீழ் பணியாற்றும் கள
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவை நிலையங்கள் மற்றும் அவர்களின் பணிகளை
மேலும் ஒழுங்குபடுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d725311-452c-45f8-9344-0eb96b164bb9/26-6a97b25acf235.webp' /></p><p> </p><p>கள மட்டத்தில்
அபிவிருத்திச் செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்கும் திட்டங்களின் கண்காணிப்பு
மற்றும் நடைமுறைப்படுத்தலை மேம்படுத்துவதற்கும் தேவையான ஏற்பாடுகள் குறித்து
கருத்துக்கள் பரிமாறப்பட்டன.</p><p>இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின்
செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாணப்
பணிப்பாளர்கள், ஆணையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T05:21:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடன் சுமை அதிகரிப்பு குறித்து பரவும் செய்திகள்: அரச தரப்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/minister-denies-rs-190-billion-govt-debt-surge-1788323345"></link>
            <id>https://ibctamil.com/article/minister-denies-rs-190-billion-govt-debt-surge-1788323345</id>
            <summary type="text">அரசாங்கத்தின் கடன் சுமை 190 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையால் அதிகரித்துள்ளதாக வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாமென அறிவுருத்தப்பட்டுள்ளது. நிதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தின் கடன் சுமை 190 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையால் அதிகரித்துள்ளதாக வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாமென அறிவுருத்தப்பட்டுள்ளது.</p><p> நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ (Anil Jayantha Fernando) இதனை முற்றாக நிராகரித்துள்ளார்.</p><p>

உத்தியோகபூர்வ மற்றும் சரிபார்க்கப்பட்ட தரவுகளைக் குறிப்பிடாமல் நாட்டின் கடன் சுமை குறித்து இத்தகைய தகவல்கள் வெளியிடப்படுவது கவலையளிப்பதாகப் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>வெளிநாட்டுக் கடன்கள்</h2><p>மத்திய வங்கியின் தகவல்களை மேற்கோள் காட்டி அரசாங்கக் கடன் 190 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாகச் சமீபத்திய ஊடக அறிக்கைகள் செய்தி வெளியிட்டிருந்தன.</p><p>எனினும் இந்த அதிகரிப்பிற்கான அடிப்படையை அந்த அறிக்கைகள் தெளிவாக விளக்கவில்லை என்றும் மற்றும் குறிப்பிடப்பட்ட சில தரவுகள் பிழையானவை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b868884a-4f83-4004-8e45-43f49cfaee77/26-6a97b0d46e7cd.webp' /></p><p>அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கடன் தரவுகள் காலாண்டுக்கு ஒருமுறை கடன் அறிக்கை (Debt Bulletin) ஊடாக வெளியிடப்படுவதாகவும், அதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பான விரிவான தகவல்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>தனிப்பட்ட நாடுகள், பன்முக அமைப்புகள், இருதரப்பு மற்றும் வர்த்தக ஆதாரங்களில் பெறப்பட்ட கடன் விவரங்கள் உத்தியோகபூர்வ அறிக்கைகளில் துல்லியமாக உள்ளடக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அரசாங்கத்தின் கடன் நிலைமை குறித்துக் கருத்துக்கள் வெளியிடுவதற்கு முன்னர் உத்தியோகபூர்வ ஆவணங்களைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் மற்றும் ஊடக அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அரசாங்கக் கடன் அதிகரிக்கவில்லை என்றும் பிரதி அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T05:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் ஈரான் மீது அமெரிக்க தாக்குதல் ; பதிலடியில் வளைகுடா நாடுகள் அதிர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-attacks-iran-again-gulf-countries-react-shock-1788325688"></link>
            <id>https://canadamirror.com/article/us-attacks-iran-again-gulf-countries-react-shock-1788325688</id>
            <summary type="text">ஈரான் மீது அமெரிக்கப் படைகள் மீண்டும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க மத்தியக் கட்டளை மையம் (CENTCOM) தெரிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையில் வணிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது அமெரிக்கப் படைகள் மீண்டும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க மத்தியக் கட்டளை மையம் (CENTCOM) தெரிவித்துள்ளது. </p><p>ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல் போக்குவரத்துக்கு எதிராக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை மேற்கொண்ட தாக்குதல் முயற்சிகளுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனிடையே, தெற்கு ஈரானின் சிரிக் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலின் சிதைவுகள் விழுந்ததில் சிறு குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்ததுடன், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக ஈரானிய செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df679668-587d-4277-869a-079867815402/26-6a97af39c736f.webp' /></p><p>
</p><p>
இதற்கு பதிலடியாக ஈரான், ஈராக் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீதும், குவைத் மற்றும் பஹ்ரைன் பகுதிகளிலும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> ஜோர்டான் 13 ஏவுகணைகளை இடைமறித்ததாகவும், தாக்குதல்களில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், புதன்கிழமை அதிகாலையில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களுக்கு எதிராக குவைத் தனது வான் பாதுகாப்பு அமைப்புகளைச் செயல்படுத்தியதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
</p><p>
ஈரான் பதிலடி கொடுத்தால் மேலும் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில், அமெரிக்கா–ஈரான் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. </p><p>இதனால் ஹார்முஸ் நீரிணை மற்றும் வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமை குறித்த சர்வதேச கவலை அதிகரித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-02T05:08:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 ஆவது திருத்தத்தின் ஊடாக தனிக்கட்சி ஆட்சியை நிறுவ அரசு முயற்சி! எதிர்க்கட்சித்தலைவர் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-attempts-the-22nd-amendment-1788324914"></link>
            <id>https://tamilwin.com/article/government-attempts-the-22nd-amendment-1788324914</id>
            <summary type="text">ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான மக்கள் ஆணையை பெற்றுக்கொண்டு, தற்போது
அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனநாயகத்தைச் சீரழிக்கவும்,
நீதிமன்றத்தின் சுயா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான மக்கள் ஆணையை பெற்றுக்கொண்டு, தற்போது
அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனநாயகத்தைச் சீரழிக்கவும்,
நீதிமன்றத்தின் சுயாதீனத்துக் குப் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தவும் அரசு
முயல்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.</p><p>

அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தைச் சவாலுக்குட்படுத்தித் தாக்கல் செய்யப்பட்ட
மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் நேற்று பரிசீலனைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>இதன்போது, நீதிமன்ற வளாகத்துக்கு வருகை தந்த பின்னர்
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,</p><h2>22ஆவது திருத்த&nbsp;நடைமுறை</h2><p>
</p><p>
"உலகளாவிய நடைமுறைகளை ஆராயும்போது, 22ஆவது திருத்தமானது அனைத்து வகையிலும்
நீதிமன்றத்தின் சுயாதீனத்தை அழிப்பதாக அமைகின்றது.</p><p> பொதுநலவாய நாடுகள்
சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகளும் இதனால் நீதித்துறைக்குப் பாரிய
பாதிப்பு ஏற்படும் எனச் சுட்டிக்காட்டியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4e0b21b-18f7-494e-a0bb-4a9f22402201/26-6a97ae1d8ac4c.webp' /></p><p>

தற்போதைய அரசு தனது அரசியல் இலக்குகளை அடைவதற்காக நாட்டில் ஒற்றைக் கட்சி
ஆட்சியை நிறுவுவதற்கும், இளைஞர் கழகத் தேர்தல்கள் மற்றும் சிவில் பாதுகாப்புச்
குழு நியமனங்கள் முதற்கொண்டு ஜனநாயகத்தை முடக்குவதற்கும் இந்தத்
திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது.
</p><p>
நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்க அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு
இடையேயான சமநிலையைப் பாதிக்கச் செய்யும் இந்த 22ஆவது திருத்தம்
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மாத்திரம்
நிறைவேற்றப்படாமல், கட்டாயம் சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்.</p><p>

நாட்டில் தொழில் துறைகள் வீழ்ச்சியடைதல், வேலையின்மை அதிகரிப்பு போன்ற பல
பாரிய பிரச்சினைகள் நிலவும்போது, அரசிடம் உள்ள ஒரே தேசிய வேலைத்திட்டம்
நகைச்சுவையான தீர்வுகளை வழங்குவது மட்டுமே.

அடிப்படை உரிமைகளை மேம்படுத்தும் அரசமைப்புத் திருத்தமே தற்போது அவசியமானது என்றார்.</p><p>&nbsp;</p><p></p><p><b>YOU MAY LIKE THIS..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/u4Zq0eyUb5E" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-02T05:03:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல மாடல் அழகி சுலா பத்மேந்திரா மரணம்; திறந்த தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/open-verdict-srilankan-model-chula-padmendra-death-1788325559"></link>
            <id>https://jvpnews.com/article/open-verdict-srilankan-model-chula-padmendra-death-1788325559</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; பிரபல மாடல் அழகி சுலா பத்மேந்திராவின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, மரணத்திற்கான உறுதியான காரணம் எதுவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; <a href="https://jvpnews.com/article/sri-lankan-model-chula-padmendra-has-passed-away-1788178473" target="_blank">பிரபல மாடல் அழகி சுலா பத்மேந்திரா</a>வின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, மரணத்திற்கான உறுதியான காரணம் எதுவும் குறிப்பிடப்படாத 'திறந்த தீர்ப்பு' (open verdict) வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
பிரேதப் பரிசோதனையின் போது அவரது உடலில் வெளிப்புற அல்லது உட்புறக் காயங்கள் எதுவும் காணப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இருப்பினும், மேலதிக விசாரணைகளுக்காக அவரது உடலின் மாதிரிகளை அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c236e02-2deb-4975-bcfa-c5eccad50144/26-6a97aeb8ad167.webp' /></p><h2>உடலின் மாதிரிகளை அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்ப நடவடிக்கை</h2><p>
</p><p>
மாடல் அழகியான சுலா பத்மேந்திரா குமாரபதிரன, ஆகஸ்ட் 31 அன்று பிலியந்தலை, தும்போவில, கங்காராம வீதியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இறப்பு தொடர்பான விவரங்களை பிலியந்தலை பொலிஸார் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, பதில் நீதவான் சுனேத்ரா பெரேரா சம்பவ இடத்தையும் சடலத்தையும் பார்வையிட்டார்.</p><p></p><p> மேலும், சடலத்தை கலுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்குமாறும், நீதிமன்ற மருத்துவ அதிகாரி (JMO) மூலம் பிரேதப் பரிசோதனை நடத்துமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.</p><p>

அதற்கிணங்க, நீதிமன்ற மருத்துவ அதிகாரி மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்டார்.

முந்தைய நாள் இரவு பத்தரமுல்ல பகுதியில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வுக்குப் பிறகு, ஆகஸ்ட் 31 அன்று அதிகாலை 5.00 மணியளவில் அந்தத் தொழிலதிபருடன் பிலியந்தலையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து உறங்கச் சென்றதாகப் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>

அன்று மதியம் 12.45 மணியளவில் அவரை எழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அவர் பதிலளிக்காததால் '1990' அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர் பரிசோதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவரைப் பரிசோதித்த சுகாதாரப் பணியாளர்கள் அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர். </p><p>இருப்பினும், படுக்கை விரிப்பில் இரத்தக் கறை இருந்ததால், அந்தத் தொழிலதிபர் பிலியந்தலை பொலிஸில் முறைப்பாடு செய்தார்.

இறந்த மாடல் அழகியின் தாயாரும் பிலியந்தலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்; </p><p>பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், அவரது மரணத்தைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் அவரைப் பற்றிய பல்வேறு நினைவுகளும் பதிவுகளும் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.</p><p> இவை கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளதோடு, கண்ணியத்தைக் காக்குமாறும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-02T05:03:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்.ஜி.ஓ. சட்டமூலம் - 22ஆவது திருத்தம் - ஆடை உரிமை குறித்து கல்முனையில் விரிவான ஆராய்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ngo-bill-22nd-amendment-clothing-rights-discussed-1788325215"></link>
            <id>https://tamilwin.com/article/ngo-bill-22nd-amendment-clothing-rights-discussed-1788325215</id>
            <summary type="text">அரச சார்பற்ற நிறுவன சட்டமூலம் (NGO Bill), 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்
மற்றும் முஸ்லிம் அரச ஊழியர்களின் கலாசார ஆடை உரிமை உள்ளிட்ட பிரதான
விடயங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச சார்பற்ற நிறுவன சட்டமூலம் (NGO Bill), 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்
மற்றும் முஸ்லிம் அரச ஊழியர்களின் கலாசார ஆடை உரிமை உள்ளிட்ட பிரதான
விடயங்கள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று கல்முனை ஆசாத் பிளாசாவில்
இடம்பெற்றது.</p><p>

வைத்தியர் சட்டத்தரணி வை.எல்.எம். யூசுப் தலைமையில் நடைபெற்ற
இக்கலந்துரையாடலில் 20-க்கும் மேற்பட்ட கல்விமான்கள், உலமாக்கள் மற்றும் சமூக
ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும்
முன்வைத்தனர்.
</p><p>
அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள அரச சார்பற்ற நிறுவன சட்டமூலம், 22ஆவது
அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் முஸ்லிம் உதவி சுகாதார ஊழியர்களின் கலாச்சார
ஆடை அணியும் உரிமை மறுக்கப்பட்டமை ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில்
இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
</p><p>
குறிப்பாக, ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தின் போது முஸ்லிம் சமூகம் பகடைக்காயாகப்
பயன்படுத்தப்பட்டு, அரசியல் மற்றும் சமூக மட்டங்களில் கடுமையான பாதிப்புகள்
ஏற்படுத்தப்பட்டதைப் போன்று, தற்போது முன்வைக்கப்பட்டுள்ள இப்புதிய
சட்டமூலங்கள் மற்றும் சம்பவங்கள் ஊடாகவும் எதிர்காலத்தில் முஸ்லிம்
சமூகத்திற்கு பாதிப்புகள் ஏதும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா
என்பது பற்றி ஆழமாக ஆராயப்பட்டது.
</p><p>
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் என்.ஜி.ஓ. சட்டமூலத்தின் சாதக, பாதக
அம்சங்கள் குறித்துப் பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டன. </p><p>குறிப்பாக,
முஸ்லிம்களின் சமய மற்றும் கலாச்சார நிறுவனங்கள், மதரஸாக்கள் உள்ளிட்ட சமூக
அமைப்புகளின் எதிர்கால செயற்பாடுகளுக்கு இச்சட்ட ஏற்பாடுகள் எத்தகைய
தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.</p><p>

அதேவேளை, முஸ்லிம் அரசாங்க ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தமது சமய, கலாச்சார
அடையாளங்களின் அடிப்படையில் ஆடை அணியும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கு
நிரந்தரமான சட்ட ரீதியான தீர்வு அவசியம் என்றும் கூட்டத்தில்
வலியுறுத்தப்பட்டது.
</p><p>
இக்கலந்துரையாடலின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் முரண்பட்ட கருத்துக்கள்
விரிவாக முன்வைக்கப்பட்ட போதிலும், முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளையும்
நலன்களையும் பாதுகாப்பதற்கு ஊழலற்ற, பொறுப்புணர்வுமிக்க சமூகத் தலைமைகள்
உருவாக்கப்பட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இவ்வாறான விடயங்களில்
சமூகத்திற்குத் தெளிவான வழிகாட்டல்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டு கூட்டம் நிறைவடைந்தது</p>]]></content>
            <updated>2026-09-02T05:00:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்துவின் காதலை வெளியே கொண்டு வர என்ட்ரி கொடுக்கும் லேடி- சின்னஞ்சிறு கிளியே]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/chinna-siru-kiliye-serial-latest-episode-1788321781"></link>
            <id>https://cineulagam.com/article/chinna-siru-kiliye-serial-latest-episode-1788321781</id>
            <summary type="text">சின்னஞ்சிறு கிளியேதமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சின்னஞ்ச...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சின்னஞ்சிறு கிளியே</h2><p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சின்னஞ்சிறு கிளியே. </p><p>இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் குழந்தைகளுக்கான சாப்பாட்டில் பேதி மருந்தை கலந்த புவனா மீது கடும் கோபத்தை காட்டிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. </p><p>

அதாவது இந்து பேதி மருந்து கலந்த சாப்பாட்டை புவனா வாயில் திணித்து விட போன அதிர்ச்சி அடைந்து நிற்க கடைசியில் அதுல எதுவும் கலக்கல பிழைத்து போ என இந்து மன்னித்து விடுகிறாள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6185778e-c545-48c7-ab87-c8cc06eb27c9/26-6a979ff6a477c.webp' /></p><p> பிறகு ஜெயந்தி போன செய்ததுக்காக இந்துவிடம் மன்னிப்பு கேட்டு புவனாவை வீட்டை விட்டு வெளியே போக செல்கிறாள். 

இந்த சமயத்தில் கிருபா வீட்டுக்கு வர புவனா இந்த விஷயத்தை சொல்ல கிருபா இது என்னுடைய வீடு இந்த வீட்டில யார் இருக்கணும் இருக்கக்கூடாது என்பதை நான் தான் முடிவு பண்ணனும் என கொதிக்கிறார். </p><p>

அதைத் தொடர்ந்து இந்து ரூமில் இருக்க அவள் கர்ணாவுக்கு நன்றி சொல்ல கருணா அப்படியே பேசிக் கொண்டு கட்டுதல் வந்து உட்கார இந்து அவனைத் திட்டி தரையில் படுக்க சொல்ல கர்ணா அப்செட் ஆகிறான். </p><p>

பிறகு பாண்டியிடம் நடந்ததை சொல்லி வருத்தப்பட இந்து மனதில் இருக்கும் காதலை வெளியே கொண்டு வர ஒரு பொண்ணால தான் முடியும்.. அவ பேரு சுகந்தி பிரியா, உங்க வீட்டுக்கு வருவா என்று சொல்கிறான். </p><p>

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சின்னஞ்சிறு கிளியே சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T05:00:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் இந்திய குடும்பங்களுக்கு புதிய நெருக்கடி ; H-4 பணி அனுமதி ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/crisis-indian-families-america-h-4-work-cancelled-1788325015"></link>
            <id>https://canadamirror.com/article/crisis-indian-families-america-h-4-work-cancelled-1788325015</id>
            <summary type="text">அமெரிக்காவில் எச்-1பி (H-1B) விசா வைத்திருப்பவர்களின் துணைகளுக்கு வழங்கப்பட்டு வரும் எச்-4 (H-4) பணி அனுமதியை ரத்து செய்வதற்கான முன்மொழிவு, அந்நாட்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் எச்-1பி (H-1B) விசா வைத்திருப்பவர்களின் துணைகளுக்கு வழங்கப்பட்டு வரும் எச்-4 (H-4) பணி அனுமதியை ரத்து செய்வதற்கான முன்மொழிவு, அந்நாட்டு உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் (DHS) 2026ஆம் ஆண்டுக்கான நீண்டகால ஒழுங்குமுறை நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ளது.
</p><p>
இந்த முன்மொழிவு நடைமுறைக்கு வந்தால், எச்-1பி விசாதாரர்களின் கணவன் அல்லது மனைவி அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக பணியாற்றுவதற்கு வழங்கப்படும் வேலை அனுமதி பாதிக்கப்படலாம்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4fe5816-df0d-4cb7-aefb-609a5fab224d/26-6a97ac989ef7b.webp' /></p><p>2015ஆம் ஆண்டு ஒபாமா நிர்வாகத்தின் போது அறிமுகப்படுத்தப்பட்ட விதியை மாற்றியமைக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறிப்பாக, அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்காக நீண்டகாலமாக காத்திருக்கும் எச்-1பி விசாதாரர்களின் குடும்பங்கள் இந்த மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.</p><p>

எச்-4 பணி அனுமதிகளில் பெரும்பகுதி இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் திட்டம் இந்தியக் குடும்பங்கள் மத்தியில் அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p><p> வேலை செய்து வரும் துணைகளின் வருமானம் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய ஆதாரமாக உள்ள நிலையில், பணி அனுமதி ரத்து செய்யப்பட்டால் அவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் குடும்ப வருமானம் பாதிக்கப்படக்கூடும்.
</p><p>
இதேவேளை, தற்போது செல்லுபடியாகும் எச்-4 பணி அனுமதிகள் உடனடியாக ரத்து செய்யப்படவில்லை. இந்த நடவடிக்கை தற்போது ‘Long-Term Action’ எனும் நீண்டகால நடவடிக்கையாக மட்டுமே ஒழுங்குமுறைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/baa117e1-6b1e-4018-b63c-ef44907897e6/26-6a97ad0a698b7.webp' /></p><p>அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை முதலில் முறையான முன்மொழிவு விதியை வெளியிட வேண்டும். </p><p>அதன் பின்னர் பொதுமக்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டு, சட்ட மற்றும் நிர்வாக ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் பின்னரே இறுதி விதி அமுலுக்கு வர முடியும். </p><p>எனவே, தற்போதைய எச்-4 பணி அனுமதிதாரர்கள் உடனடியாக வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கருத முடியாது.

இதனிடையே, அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கைகளை கடுமையாக்கும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இந்த முன்மொழிவு பார்க்கப்படுகிறது.</p><p> எச்-1பி விசா தொடர்பான பிற கட்டுப்பாடுகளும் அதிகரித்து வரும் நிலையில், எச்-4 விசாதாரர்களுக்கான பணி அனுமதி விவகாரம் இந்தியக் குடும்பங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-02T04:57:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[புனர்பூசம் நட்சத்திரத்தில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mars-nakshatra-transit-who-get-huge-luck-1788323708"></link>
            <id>https://manithan.com/article/mars-nakshatra-transit-who-get-huge-luck-1788323708</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்களின் தளபதியாகக் கருதப்படுபவர் செவ்வாய். இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக உள்ளார். செவ்வாய் சுமார் 45 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்களின் தளபதியாகக் கருதப்படுபவர் செவ்வாய். இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக உள்ளார். செவ்வாய் சுமார் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவதுடன், அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். </p><p>தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படும் செவ்வாயின் நிலைமாற்றம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28d91496-1b72-45b2-af21-74d0582775d6/26-6a97aba4c16f6.webp' /></p><p>

அந்த வகையில், செவ்வாய் செப்டம்பர் 2ஆம் தேதியான இன்று தனது நட்சத்திரத்தை மாற்றி, புனர்பூசம் நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். புனர்பூசம் நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான். </p><p>செவ்வாய், குருவின் நட்சத்திரத்தில் நுழைவதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாரத அதிர்ஷ்டத்தையும் தொழில் முன்னேற்றத்தையும் கொடுக்கப்போகின்றது.</p><p>அப்படி செவ்வாயின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.&nbsp;</p><h2>மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b232caa1-519b-4609-90e8-b4134feb8a64/26-6a97aba575d37.webp' /></p><h2>
</h2><p>செவ்வாயின் நட்சத்திரப் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நிறைவேறும்.</p><p> குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் அதிகரிக்கும். பரம்பரைச் சொத்துக்கள் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.</p><p> பணிபுரிபவர்களுக்கு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். முக்கியமாக, மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். தொழிலிலும் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும்.</p><h2>
கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37ac7bef-abcb-4663-bbbe-0fca73f7568b/26-6a97aba628a67.webp' /></p><h2>
</h2><p>செவ்வாயின் நட்சத்திரப் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.</p><p> தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான வெற்றியைப் பெறும் சூழல் உருவாகும். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கலாம்.</p><p> கடின உழைப்பிற்கான உரிய பலன்கள் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. மேலும், நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடும் சந்தர்ப்பங்களும் அமையும்.
</p><h2>
மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c8ea58f-f4d4-4663-ac83-0e40dd487e6b/26-6a97aba6d268f.webp' /></p><p></p><h2>
</h2><p>செவ்வாயின் நட்சத்திரப் பெயர்ச்சியானது மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும், நல்ல பலன்களையும் வழங்கப் போகிறது. நீண்ட காலமாக தொடங்க முடியாமல் நிலுவையில் இருந்த பணிகளை வெற்றிகரமாகத் தொடங்குவீர்கள்.</p><p> உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இழுபறியில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நிறைவடையும்.</p><p>அதன் மூலம் நல்ல லாபமும் கிடைக்கும். செவ்வாயின் அருளால் தொழில் மற்றும் நிதி ரீதியாக சிறப்பான முன்னேற்ற பலன்கள் கிடைக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://chat.whatsapp.com/KPaiG8NNYogL3W9EipSjKP" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T04:53:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு கொலைகள்; லண்டனில் உள்ள பிள்ளையான் சகாவிற்கு பிடிவிறாந்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/batticaloa-crime-arrest-warrant-london-based-tamil-1788324915"></link>
            <id>https://jvpnews.com/article/batticaloa-crime-arrest-warrant-london-based-tamil-1788324915</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு ஜவரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக லண்டனில் உள்ள ‘பொலிஸ் பாய்க்குத் தொடர்ந்து பிடிவிறாந்து பிறப்பித்து ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;<a href="https://jvpnews.com/article/court-order-issued-today-regarding-pillayan-1788257767" target="_blank">மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு ஜவரை கொலை</a> செய்த சம்பவம் தொடர்பாக லண்டனில் உள்ள ‘பொலிஸ் பாய்க்குத் தொடர்ந்து பிடிவிறாந்து பிறப்பித்து நீதிபதி கட்டளையிட்டுள்ளது.</p><p>

ஏற்கனவே கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட மூன்று பேரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec8047d0-aab0-42d7-bc96-9f0896ea3472/26-6a97ac34b98aa.webp' /></p><h2>&nbsp;லண்டனில் வசிக்கும் காத்தான்குடி ‘பொலிஸ் பாய்ஸ்’</h2><p>

கடந்த 2008ஆம் ஆண்டில், கல்லடியில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர் உட்பட இருவர் காத்தான்குடியில் சுட்டுக் கொல்லப்பட்டமை மற்றும் வவுணதீவு கரையாக்கன்தீவுப் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை சம்பவங்கள் தொடர்பிலேயே கைதுகள் தொடர்கின்றது.</p><p></p><p>ஏற்கனவே 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத் ஆகியோரை கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிஐடியினர் கைது செய்திருந்தனர்.</p><p></p><p>மனிதக் கொலைகள் தொடர்பாகப் பிள்ளையான், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் மற்றும் லண்டனில் வசிக்கும் காத்தான்குடியைச் சேர்ந்த ‘பொலிஸ் பாய்ஸ்’ உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த 2026ஆம் ஆண்டு யூன் 17ஆம் திகதியன்று குற்றப்புலனாய்வுப்பிரிவினர் வழக்குத் தாக்கல் செய்தனர்.</p><p></p><p>

பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-02T04:52:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சற்றுலாப்பயணிகள்: வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tourists-visiting-the-country-in-august-1788322086"></link>
            <id>https://ibctamil.com/article/tourists-visiting-the-country-in-august-1788322086</id>
            <summary type="text">2026 ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் 3.3 சதவீதம் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் 3.3 சதவீதம் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
</p><p>
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தரவுகளின்படி, ஆகஸ்ட் மாதத்தில் 191,704 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். </p><p>இது கடந்த 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 3.3 சதவீதம் குறைவாகும்.</p><p></p><h2>இந்திய சுற்றுலா பயணிகளே அதிகம்&nbsp;</h2><p>மேலும்&nbsp;ஆகஸ்ட் மாதத்தில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aed649cd-88a9-4b19-8eda-a900a7127835/26-6a97ab2d81698.webp' /></p><p>இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தரவுகளின்படி, இந்தியாவிலிருந்து வருகை தந்தோர்&nbsp;47,253 ஆக பதிவாகியுள்ளது.&nbsp;</p><p>இதற்கு மேலதிகமாக பிரித்தானியாவிலிருந்து 19,588 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 12,321 சுற்றுலாப் பயணிகளும் மற்றும் ஜேர்மனியிலிருந்து 11,405 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.</p><p>

இதற்கமைய, 2026 ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகை தந்துள்ள ஒட்டுமொத்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,535,122 ஆகப் பதிவாகியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T04:51:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் கொல்லப்பட்ட பிரித்தானிய இளம்பெண்: சமீபத்திய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/brit-woman-killed-at-german-train-station-pictured-1788324490"></link>
            <id>https://news.lankasri.com/article/brit-woman-killed-at-german-train-station-pictured-1788324490</id>
            <summary type="text">British woman stabbed to death at German train station pictured: ஜேர்மனியில் கொல்லப்பட்ட பிரித்தானிய இளம்பெண்ணின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.


ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>British woman stabbed to death at German train station pictured: ஜேர்மனியில் கொல்லப்பட்ட பிரித்தானிய இளம்பெண்ணின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.</p><p>


ஜேர்மனியின் பவேரியா மாகாணத்தில், பிரித்தானிய இளம்பெண்ணொருவர் கத்தியால் குத்தப்பட்டார்.
</p><h3>
ஜேர்மனியில் கொல்லப்பட்ட பிரித்தானிய இளம்பெண்
</h3><p>
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.50 மணியளவில், இளம்பெண்ணொருவர் தாக்கப்பட்டது குறித்து தகவலறிந்த பொலிசார் Rosenheim என்னும் நகரிலுள்ள ரயில் நிலையத்துக்கு விரைந்த நிலையில், அங்கு 31 வயதுடைய பிரித்தானிய இளம்பெண்ணொருவர் கத்திக்குத்துக் காயங்களுடன் அபாயகரமான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a282398-3802-49dc-88b6-97167e583172/26-6a97aa8c0d652.webp' /></p><p>

உடனடியாக அவர் அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்.</p><p>

சமீபத்திய தகவல்

இந்நிலையில், அந்தப் பெண்ணின் பெயர் பெயர், புகைப்படம் முதலான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.&nbsp;</p><p></p><p>
அவரது பெயர், ரெபேக்கா புல்லக் (Rebecca Bullock, 31). ரெபேக்கா, இங்கிலாந்தின் Buckinghamshireஇலுள்ள Whitchurch என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார்.&nbsp;</p><p>
மதுபான விடுதி ஒன்றை நடத்திவந்த ரெபேக்கா, தொண்டு நிறுவனங்களுக்காக நிதி திரட்டும் சேவையிலும் ஈடுபட்டுவந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4b9f939-628e-4cc0-8e2b-123f6212f194/26-6a97aa8cb4ba8.webp' /></p><p>
ஆஸ்திரியா நாட்டில், தன் அன்பிற்குரியவரை இழந்த தோழி ஒருவருக்கு ஆதரவாக, இறுதிச்சடங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக ரெபேக்கா சென்றுகொண்டிருக்கும்போதுதான் அவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.</p><p>

பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டுவந்தவரான ரெபேக்காவுக்கு இரங்கல் செய்திகள் குவிந்தவண்ணம் உள்ளன. </p><p>

இந்நிலையில், ரெபேக்கா கொல்லப்பட்ட விடயம் தொடர்பில் 27 வயது ஜேர்மானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T04:48:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல பாடகர் பிரியங்கர பெரேரா காலமானார் - நாளை இறுதிச்சடங்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/final-rites-of-singer-priyankara-perera-tomorrow-1788323776"></link>
            <id>https://ibctamil.com/article/final-rites-of-singer-priyankara-perera-tomorrow-1788323776</id>
            <summary type="text">பிரபல பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேரா, உடல்நலக்குறைவு காரணமாக தனது 64 ஆவது வயதில் காலமானார்.மறைந்த பிரியங்கர பெரேரா, பிரபல பாடகர் மில்டன் பெரேராவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேரா, உடல்நலக்குறைவு காரணமாக தனது 64 ஆவது வயதில் காலமானார்.</p><p>மறைந்த பிரியங்கர பெரேரா, பிரபல பாடகர் மில்டன் பெரேராவின் மகனாவார்.&nbsp;&nbsp;</p><p>காலமான பிரியங்கர பெரேராவின் இறுதிச்சடங்குகள் நாளை (03) நடைபெறும் என அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>அஞ்சலி</h2><p> </p><p>

அவரது பூதஉடல் இன்று (02) பிற்பகல் பொரளை பகுதியில் உள்ள தனியார் மலர்சாலை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ef3bdd1-dc88-48df-aeb5-98fe7e0b26a4/26-6a97a9c643b6a.webp' /></p><p>நீண்டகாலமாக நோயுற்றிருந்த பிரியங்கர பெரேரா, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (01) இரவு காலமானார்.</p><p>பிரியங்கர பெரேரா, பல பிரபல பாடல்களைப் பாடியுள்ளதுடன் ‘சுபுன் சந்தக்’, ‘சந்துன் கசே சமன் வலக்’, ‘சிக்குருலியா’, ‘அகாத சகராரே’ உள்ளிட்ட பிரபல பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தார்.
</p><p>


பாடகராக மட்டுமன்றி நடிகராகவும் கலைத்துறையில் தனது பங்களிப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T04:45:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தத்தை எவரும் ஏற்கமாட்டர்! ரஜீவ் அமரசூரிய தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amendment-rajiv-amarasuriya-s-statement-1788322768"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amendment-rajiv-amarasuriya-s-statement-1788322768</id>
            <summary type="text">&amp;nbsp;நீதித்துறை சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மதிப்பவர்கள் எவரும்
அரசமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு இணக்கம் தெரிவிக்கப்போவதில்லை என்று
இலங...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நீதித்துறை சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மதிப்பவர்கள் எவரும்
அரசமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு இணக்கம் தெரிவிக்கப்போவதில்லை என்று
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.</p><p>

நீதிபதிகளின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் அரசின்
தீர்மானத்துக்குத் தங்களது சங்கம் ஆரம்பத்தில் இருந்தே கொள்கை ரீதியான
எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,</p><h2>22ஆவது திருத்த சட்டமூலத்தின் உள்ளடக்கம்&nbsp;</h2><p>
</p><p>
"அரசமைப்பின் 22ஆவது திருத்த சட்டமூலத்தின் உள்ளடக்கம் மக்களின்
இறையாட்சியுடன் நேரடியாகத் தொடர்புடையது என்பதால், இது குறித்துத் தீர்மானம்
எடுக்கும் முழு உரிமை மக்களுக்கே உண்டு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fd96977-83ed-46cd-8c3e-b9aa3eb8d30e/26-6a97a8595c0c4.webp' /></p><p>
</p><p>
நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிக்கும் இந்த தீர்மானத்தை அரசு உடனடியாக
மக்கள் வாக்கெடுப்புக்கு விட வேண்டும்.
</p><p>
அரச உறுப்பினர்களைத் தவிர ஏனைய சகல தரப்பினரும் இந்தத் திருத்தத்தின்
பாரதூரத்தன்மையைச் சுட்டிக்காட்டித் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
அரசின் நிலைப்பாடு ஒட்டுமொத்த மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தாது என்பதால்
இந்த விடயத்தில் அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T04:38:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் நீர்த்தொட்டியில் மூழ்கி 2 வயது சிறுவன் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2-year-old-boy-dies-after-drowning-water-tank-1788323634"></link>
            <id>https://jvpnews.com/article/2-year-old-boy-dies-after-drowning-water-tank-1788323634</id>
            <summary type="text">மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் இரண்டு வயது குழந்தையொன்று நீர்த்தொட்டியில் வீழ்ந்த நிலையில் பழுகாமம் வைத்தியசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் இரண்டு வயது குழந்தையொன்று நீர்த்தொட்டியில் வீழ்ந்த நிலையில் பழுகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.</p><p> </p><p></p><p>கற்சேனை, முல்லை வீதியைச் சேர்ந்த 2 வயதும் 8 மாதங்களுமான குழந்தையே வாளி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. </p><p>

நேற்று (02) காலை 10.30 மணியளவில், வீட்டின் வாசலில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பெரிய வாளியின் அருகே சிறுவன் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். </p><p>

இதன்போது, எதிர்பாராதவிதமாக சிறுவன் தலைகீழாக வாளிக்குள் விழுந்ததில் நீரில் மூழ்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d7884c0-7c18-451f-be41-de7b0242f18c/26-6a97a733d4e9e.webp' /></p><p>உடனடியாக உறவினர்கள் சிறுவனை மீட்டு பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், வழியிலேயே சிறுவன் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> 

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாக திடீர் மரண விசாரணை அதிகாரி வீ.ஆர். மகேந்திரன், பழுகாமம் வைத்தியசாலைக்கு வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்டதுடன், உறவினர்களிடமும் விசாரணைகளை முன்னெடுத்தார்.</p><p>

உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக சிறுவனின் சடலம் நேற்று மாலை 6.00 மணியளவில் பழுகாமம் வைத்தியசாலையிலிருந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p>

இச்சம்பவம் குறித்து கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T04:34:14+00:00</updated>
        </entry>
    </feed>
