<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-08T05:30:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸ் 10வது சீசனின் முதல் தலைவராக தேர்வாகியுள்ள ஷதிகா கலக்கல் போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/bigg-boss-10-fame-shathiga-photos-1788841977"></link>
            <id>https://cineulagam.com/article/bigg-boss-10-fame-shathiga-photos-1788841977</id>
            <summary type="text">பிக்பாஸ் 10என்டர்டெயின்மென்ட் என்ற பெயரில் மக்களுக்காக நிறைய ரியாலிட்டி ஷோக்கள் தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வருகிறது. அப்படி 105 நாட்கள் என்டர்ட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிக்பாஸ் 10</h2><p>என்டர்டெயின்மென்ட் என்ற பெயரில் மக்களுக்காக நிறைய ரியாலிட்டி ஷோக்கள் தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வருகிறது. </p><p>அப்படி 105 நாட்கள் என்டர்டெயின்மென்ட்டாக இருக்கப்போகும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் 10. கடந்த செப்டம்பர் 6ம் தேதி மாலை 6 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. </p><p>இந்த 10வது சீசனில் வீட்டின் முதல் தலைவராக ஷதிகா தேர்வாகியுள்ளார். </p><p>அவரின் சில கூல் போட்டோஸ் இதோ,</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T05:30:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[81ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வு: வெளிவிவகார அமைச்சர் - ஐ.நா. பிரதிநிதி சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/foreign-minister-un-representative-meeting-1788844971"></link>
            <id>https://tamilwin.com/article/foreign-minister-un-representative-meeting-1788844971</id>
            <summary type="text">வரும் 81ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வை முன்னிட்டு, இலங்கையின்
முன்னுரிமைகள் தொடர்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்
சுற்றுலாத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரும் 81ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வை முன்னிட்டு, இலங்கையின்
முன்னுரிமைகள் தொடர்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்
சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான
நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரெஞ்ச்சை நேற்று (07.09.2026) சந்தித்துக் கலந்துரையாடினார்.
</p><p>
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில்
நடைபெற்ற இந்தச் சந்திப்பில், எதிர்வரும் பொதுச் சபை அமர்வு தொடர்பான முக்கிய
விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் விரிவாகக் கலந்துரையாடினர்.</p><h2>கவனம் செலுத்தப்பட்ட விடயம்</h2><p>
</p><p>
இதன்போது, இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான 70 ஆண்டுகளுக்கும்
மேலான ஒத்துழைப்பு, 'ஐ.நா. 80' முன்முயற்சி, ஐ.நா. நிலையான அபிவிருத்தி
ஒத்துழைப்புக் கட்டமைப்பு மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான
இலங்கையின் மூன்றாவது தன்னார்வ தேசிய மீளாய்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள்
குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/783f00f2-1eb7-4b7b-8fd0-685eceb6c15f/26-6a9f9d08ac41f.webp' /></p><p>
</p><p>
ஐக்கிய நாடுகள் அமைப்புடன் தொடர்ந்து ஆக்கபூர்வமாக ஈடுபடுவதற்கும், பல்தரப்பு
ஒத்துழைப்பை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கும் இலங்கை தொடர்ந்தும்
உறுதியாகவுள்ளது என்று அமைச்சர் விஜித ஹேரத் இந்தச் சந்திப்பின்போது
தெரிவித்தார்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T05:29:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேரவையிலிருந்து திமுக எம்எல்ஏக்களை வெளியேற்றிய காவலர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/police-personel-evicted-dmk-mlas-from-the-assembly-1788845108"></link>
            <id>https://ibctamilnadu.com/article/police-personel-evicted-dmk-mlas-from-the-assembly-1788845108</id>
            <summary type="text">&amp;nbsp;சட்டப்பேரவையில் பேரவை தலைவர் இருக்கை முன்பாக அமளியில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.

காவல்துறை மீட்புபணிகள் உள்ளிட்ட துறை மீத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சட்டப்பேரவையில் பேரவை தலைவர் இருக்கை முன்பாக அமளியில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.</p><p>

காவல்துறை மீட்புபணிகள் உள்ளிட்ட துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் பதிலுரையை நேற்று ஜோசப் விஜய் அளித்தார், அதில் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.</p><p>

இதற்கு பதிலளிக்க எதிர்க்கட்சி தலைவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை, இதனால் திமுக எம்எல்ஏ-க்கள் வெளிநடப்பு செய்தனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/zwhHa14VsPQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
</p><p>
இன்று சட்டப்பேரவை தொடங்கியதும் முதலமைச்சர் நேற்று பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுக எம்எல்ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
</p><p>
பேரவை தலைவர் இருக்கை முன்பாக தொடர்ந்து அமளியில் ஈடுபடவே, பேரவை விதிகளுக்கு உட்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.</p><p>

இதனை தொடர்ந்து அவர்களை வெளியேற்றுமாறு காவலர்களுக்கு பேரவை தலைவர் உத்தரவிட்டார், இதனால் அவர்கள் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8445815-42f1-4100-927a-71b306cc0133/26-6a9f9cb5a56c1.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-08T05:27:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுரத்தில் கதிர்காம விகாராதிபதி பயணித்த வாகனம் விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kataragama-chief-monk-in-matala-accident-1788842082"></link>
            <id>https://ibctamil.com/article/kataragama-chief-monk-in-matala-accident-1788842082</id>
            <summary type="text">அம்பாந்தோட்டையின் ருஹுணு மாகம் பத்துவவின் பிரதம சங்கநாயக்கரும், கதிர்காமம் கிரிவெஹெர ராஜமகா விகாரையின் விகாராதிபதியுமான ராஜகீய பண்டிதர் கொபவக தம்மிந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாந்தோட்டையின் ருஹுணு மாகம் பத்துவவின் பிரதம சங்கநாயக்கரும், கதிர்காமம் கிரிவெஹெர ராஜமகா விகாரையின் விகாராதிபதியுமான ராஜகீய பண்டிதர் கொபவக தம்மிந்த தேரர் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><p>இந்த விபத்து நேற்று (07.09.2026) இரவு&nbsp; 9.00 மணியளவில் மத்தளை மத்தளை பகதியில் இடம்பெற்றுள்ளது.
</p><p>
வீதியில் நின்றுகொண்டிருந்த எருமை மாட்டுடன் வாகனம் மோதியதையடுத்து, வாகனம் கவிழ்ந்து வீதியை விட்டு விலகிச் சென்றதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p></p><h2>ராஜகீய பண்டிதர் கொபவக தம்மிந்த தேரர்&nbsp;</h2><p>

எனினும், வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு காற்றுப் பைகள் (Airbags) செயற்பட்டதன் காரணமாக விகாராதிபதி தேரருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4d52ccd-9da1-4529-aad2-4eb3044f2828/26-6a9f9ac672420.webp' /></p><p>இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T05:26:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் துரித கதியில் முன்னெடுக்கப்படும் தூர்வாரும் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rapid-desilting-operations-underway-in-jaffna-pool-1788845096"></link>
            <id>https://jvpnews.com/article/rapid-desilting-operations-underway-in-jaffna-pool-1788845096</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாண மாவட்டத்தின் நீர்வளத்தைப் பாதுகாத்து, குளங்களின் நீர்ப்பிடிப்புத் திறனையும் பயன்பாட்டுத் திறனையும் மேம்படுத்தும் நோக்கில் குளங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாண மாவட்டத்தின் நீர்வளத்தைப் பாதுகாத்து, குளங்களின் நீர்ப்பிடிப்புத் திறனையும் பயன்பாட்டுத் திறனையும் மேம்படுத்தும் நோக்கில் குளங்களைத் தூர்வாரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>

இதன் அடிப்படையில், கந்தரோடை குளம், அராலி பாலத்துக்கு அண்மையில் உள்ள வழுக்கை ஆற்றுப்படுக்கையில் நன்னீரைத் தேக்கும் செயற்றிட்டம் மற்றும் கற்குளம் – அல்லைப்பிட்டி ஆகிய பகுதிகளில் தூர்வாரும் பணிகள் அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களின் பங்கேற்புடனும் ஒத்துழைப்புடனும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35cd1de0-106c-4903-9b97-065d70689495/26-6a9f9c29e4ed8.webp' /></p><p>

குறித்த பகுதிகளில் நீர்த்தேக்கங்களின் கொள்ளளவை அதிகரித்தல், நீர்ப்பிடிப்புப் பகுதிகளைச் சீரமைத்தல் மற்றும் கிடைக்கக்கூடிய நீர்வளத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்தக்கூடிய நிலைமையை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுடன் தூர்வாரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. </p><p>

எல் நோ தாக்கத்தினால் இம்முறை யாழ்ப்பாணத்திற்கு அதிக மழை வீழ்ச்சி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் , மழை காலம் ஆரம்பிக்க முதல் , குளங்களைத் தூர்வாரும் நடவடிக்கைகள் துரித கெதியில் முன்னெடுக்கப்படுகின்றன</p>]]></content>
            <updated>2026-09-08T05:21:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதுமாத்தளனில் அதிரடி சோதனை : 3,200 கிலோவுக்கும் அதிகமான மீன்கள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/more-than-3-200-kg-of-fish-rescued-1788844873"></link>
            <id>https://tamilwin.com/article/more-than-3-200-kg-of-fish-rescued-1788844873</id>
            <summary type="text">முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரைப் பகுதியில், இலங்கை கடற்படையினரும்
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களமும் இணைந்து நேற்று (07) மேற்கொண்ட கூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரைப் பகுதியில், இலங்கை கடற்படையினரும்
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களமும் இணைந்து நேற்று (07) மேற்கொண்ட கூட்டுச் சோதனையின் போது, வெடிபொருள் பயன்படுத்தி
பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3,200 கிலோகிராமிற்கும் அதிகமான மீன்கள்
கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>புதுமாத்தளன் பகுதியில் மீன்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த
சந்தேகத்திற்கிடமான இடமொன்றை சோதனையிட்டபோதே இந்த மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.</p><p>

இதன்போது, புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் ஒருவர்
சந்தேகத்தின் பேரில்&nbsp; கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், கைப்பற்றப்பட்ட மீன்களும் மேலதிக சட்ட
நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள
அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-08T05:21:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க எமது மக்கள் அறிவால் பலம் பெற வேண்டும்! எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-premadhasa-statement-about-political-1788842845"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-premadhasa-statement-about-political-1788842845</id>
            <summary type="text">நாட்டில் தொடரும் ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் எமது
மக்கள் அறிவால் பலம் பெற்றவர்களாக மாற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்
ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தொடரும் ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் எமது
மக்கள் அறிவால் பலம் பெற்றவர்களாக மாற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.</p><p>

எதுல்கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகத்தில்
ஐக்கிய கல்வி ஊழியர் சங்கத்தினருக்கான பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நமது நாட்டில் ஏமாற்று அரசியலே தொடர்ந்தும் காணப்படுகின்றது. துறைமுகத்தில்
இறக்குமதி செய்யப்படும் விலைக்கு எண்ணெய் வழங்குவோம் என்று தேர்தல் காலத்தில்
பிரதாபித்தாலும், இன்று அந்த வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70cdb139-1e93-47d6-b034-23b58a9f9e77/26-6a9f99aa9810c.webp' /></p><h2>மின் உற்பத்தி நிலைய மாபியா</h2><p>

உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலை குறையும் நிலையிலும், தொடர்ந்தும்
எரிபொருள்கள் மீது வரிகள் விதிக்கப்படுகின்றன. மின்சாரக் கட்டணத்தை 33
வீதத்தால் குறைப்போம் எனக் கூறிவிட்டு அதனை அதிகரித்துள்ளனர்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறிவிட்டு, இன்று
அரசும் எரிபொருளில் தங்கியிருக்கும் மின் உற்பத்தி நிலைய மாபியாக்களுக்கு
அடிமையாகியுள்ளது.
</p><p>
அன்று விவசாயிகளுடன் இணைந்து நெற்கதிர்களை வாயில் கடித்துக்கொண்டு, ஒரு கிலோகிராம் நெல்லுக்கு 150 ரூபாய் நிலையான விலை பெற்றுத் தருவதாகக் கூறினார்கள். எனினும்,
ஒரு கிலோகிராம் நெல்லை உற்பத்தி செய்வதற்கு 137 ரூபா செலவாகின்றது என விடயத்துக்குப்
பொறுப்பான அமைச்சரே தெரிவித்த நிலையில், 120 ரூபாவை நிலையான விலையாக
அறிவித்து விவசாயிகளுக்கு ஒரு கிலோவுக்கு 17 ரூபா நட்டத்தை
ஏற்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0be6bbb9-0471-42cc-95dd-7b4fb2a05b93/26-6a9f99ab792e9.webp' /></p><p> </p><p>பிரஜைகள் சமகாலத்தில் உரிய விழிப்புணர்வைப் பெறாமல்
இருப்பதே இவற்றுக்கெல்லாம் காரணமாகும். நாம் அறிவால் பலம்பெற்ற சமூகமாக மாற
வேண்டும்.

கல்வித் துறையில் பிரதானமாக 6 பிரிவினர்கள் காணப்படுவதுடன், அவற்றுள் பாரிய
குறைபாடுகளும் முரண்பாடுகளும் நிலவுகின்றன. நாட்டில் 2 இலட்சத்து 50 ஆயிரம்
ஆசிரியர்களும், 15 ஆயிரம் அதிபர்களும், சுமார் 10 ஆயிரத்து 145 பாடசாலைகளும்
உள்ளன. சில பாடசாலைகள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.</p><h2>கவர்ச்சிகரமான வார்த்தை</h2><p> </p><p>ஐக்கிய மக்கள்
சக்தி எவருக்கும் பொய் வாக்குறுதிகளையோ கானல் நீர் கனவுகளையோ வழங்காது.
ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு கொடுப்பனவை நாம்
பெற்றுக்கொடுப்போம். கவர்ச்சிகரமான வார்த்தைகளைக் கூறி ஆசிரியர்களை
நடுவீதியில் விடமாட்டோம்.

இலவசக் கல்வியிலும் பேதங்கள் காணப்படுகின்றன. தேசிய மற்றும் மாகாண
பாடசாலைகளுக்குக் கிடைக்கும் நிதி ஒதுக்கீடுகளில் தெளிவான இடைவெளிகள் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/689d7436-e0bf-4b50-8549-c8ba93f4a1b8/26-6a9f99ac4c832.webp' /></p><p>
</p><p>அரசாங்கங்கள் மாறும்போது பல திட்டங்கள் வந்தாலும், கல்வியைப் பாதுகாக்கும்
ஆசிரியர்களும் மாணவர்களுமே இறுதியில் பாதிக்கப்படுகின்றனர். ஆரம்பக்
கல்வியிலிருந்தே கல்வி நவீனமயமாக்கப்பட வேண்டும். மனப்பாட முறையில் இருந்து
விடுபட்டு சவால்களுக்கு முகம் கொடுத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்
கல்வி முறைக்கு நாம் செல்ல வேண்டும்.

இன்று பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கான போதிய உபகரணங்கள் இல்லை. </p><p>அவற்றை
வாங்குவதற்காகப் பெற்றோரிடம் பணம் வசூலிக்கப்படுகின்றது. மாணவர்களில் 40
வீதமானோருக்குக் கூட ஸ்மார்ட் கருவிக்கான அணுகல் வசதி இல்லை. ஆங்கில மொழியிலான
கல்வியை ஊக்குவிப்பதுடன், பிற்போக்கான காலாவதியான கருத்துக்களிலிருந்து நாம்
வெளியேற வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9275a6d-a5c2-4068-bdae-e0244f2cc40b/26-6a9f99ad24d45.webp' /></p><p> </p><p>பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் ஊடாக ஸ்மார்ட் கல்வியை
மேம்படுத்தி, அத்தகைய வசதிகள் இல்லாத பிள்ளைகளுக்கான வசதிகளைத் தொடர்ந்து
பெற்றுக்கொடுப்போம். இலவசக் கல்வியை வலுப்படுத்தி, எமது பிள்ளைகள் உலகை
வெல்லக்கூடிய முறையான கல்வியை உருவாக்குவோம் என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T05:18:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chamal-rajapaksa-appears-sri-lanka-ciaboc-1788844302"></link>
            <id>https://jvpnews.com/article/chamal-rajapaksa-appears-sri-lanka-ciaboc-1788844302</id>
            <summary type="text">&amp;nbsp; முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று (08) ஆஜராகியுள்ளார்.

ஏர்பஸ் கொள்முதல் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று (08) ஆஜராகியுள்ளார்.
</p><p>
ஏர்பஸ் கொள்முதல் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இவ்வாறு ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67d95733-eb09-4412-bbc3-f724448be747/26-6a9f991069233.webp' /></p><p>அதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ச, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான கொள்முதல் தொடர்பான இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு செப்டம்பர் 18, 2026 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T05:08:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தம் அநுர அரசின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்! மொட்டுக்கட்சி எம்.பி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pothujana-peramuna-party-mp-chanaka-warning-1788842470"></link>
            <id>https://tamilwin.com/article/pothujana-peramuna-party-mp-chanaka-warning-1788842470</id>
            <summary type="text">அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுமாக இருந்தால், அது தற்போதைய
அநுரகுமார திஸாநாயக்க அரசின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடியதாக அமையும்
என்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுமாக இருந்தால், அது தற்போதைய
அநுரகுமார திஸாநாயக்க அரசின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடியதாக அமையும்
என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.பி. சானக
தெரிவித்துள்ளார்.
</p><p>
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து நேற்று திங்கட்கிழமை
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>பொலிஸ் திணைக்களத்தின் சுயாதீனம்</h2><p>
</p><p>
"இந்த அரசு தனது இயலாமையை மறைப்பதற்காகவே நிறுவனங்களின் சுயாதீனத்தன்மையை
இல்லாமலாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e42169bb-5870-4e96-ab9e-ef9f05f38938/26-6a9f95e7ae001.webp' /></p><p> </p><p>ஆரம்பத்தில் பொலிஸ்
திணைக்களத்தின் சுயாதீனத்தை இல்லாமலாக்கியவர்கள், தற்போது நீதித்துறைக்கு
அரசியல் தலையீடுகளை மேற்கொள்ள முயற்சிக்கின்றனர்.</p><p> ஏகாதிபத்திய நடவடிக்கை
ஒன்றுக்கே இவர்கள் தயாராகி வருகின்றார்கள் என்பதை மக்கள் தற்போது புரிந்து
கொண்டுள்ளனர்.</p><h2>அரசு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள்&nbsp;</h2><p>

நீதித்துறையின் சுயாதீனத்தில் கைவைப்பது அரசுக்குப் பாரிய தாக்கத்தை
ஏற்படுத்தும். மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தவறியவர்கள், சுயாதீன நிறுவனங்களை
அடக்கும் செயற்பாடுகளிலேயே குறியாக உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1e39b34-7b44-4eb9-816a-516be390327f/26-6a9f95e87ca5f.webp' /></p><p>
</p><p>
அரசு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் இதுவரை நிறைவேற்றவில்லை.
விவசாயிகள் தங்களின் உற்பத்திக்கு நியாயமான விலையைக் கோரிவரும் நிலையில்,
எதனையும் பொருட்படுத்தாமல் இந்த 22ஆவது திருத்தத்தை அவசரமாக நிறைவேற்றிக்கொள்ள
முயற்சிக்கின்றார்கள். </p><p>இதன் மூலம் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்
போவதில்லை. அரசின் இத்தகைய திட்டங்களை நீதிமன்றத்திலும் வீதிகளிலும்
தோற்கடிக்க மக்களுடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T05:03:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் இலங்கைப் பிரதிநிதியுடன் சஜித் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/un-sajith-meets-sri-lankan-representative-1788843046"></link>
            <id>https://tamilwin.com/article/un-sajith-meets-sri-lankan-representative-1788843046</id>
            <summary type="text">பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும்
பொருட்டு, ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் இலங்கைப் பிரதிநிதி புன்ட்சோ
வங...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும்
பொருட்டு, ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் இலங்கைப் பிரதிநிதி புன்ட்சோ
வங்ஜெல்லுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட
சந்திப்பு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.</p><p>

பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளைப் பாதுகாத்தல், பெண்களின் ஆரோக்கியத்தை
மேம்படுத்துதல் மற்றும் அவர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல
முக்கிய விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் இதன்போது கவனம் செலுத்தினர்.</p><h2>பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த</h2><p>

குறிப்பாக, இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் மாதவிடாய் சுகாதாரம், பாலின
அடிப்படையிலான வன்முறைகள் மற்றும் பாகுபாடுகளை ஒழித்தல், தொழிலாளர் படையில்
பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல் மற்றும் பாலின சமத்துவத்துக்குப்
பதிலளிக்கும் வகையிலான கொள்கை வகுப்பை உறுதி செய்தல் தொடர்பாகவும்
கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/959b9132-fa64-4bf7-9b93-dfd056f1dc67/26-6a9f966a9dccc.webp' /></p><p>இலங்கையின் அரசமைப்புச் சட்டக் கட்டமைப்புக்குள் பெண்கள், சிறுமிகள் மற்றும்
சிறுவர்களின் உரிமைகளை அங்கீகரிப்பதையும் பாதுகாப்பதையும் மேலும் வலுப்படுத்த
வேண்டியதன் அவசியத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் இங்கு
வலியுறுத்தினார்.</p><p> அத்துடன், பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் பற்றிய
விழிப்புணர்வை நாடாளுமன்றத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தாமல் நாடு முழுவதும்
உள்ள சமூகங்களிடையே கொண்டு செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர்
சுட்டிக்காட்டினார்.
</p><p>
பெண்களின் சுகாதாரம், அதிகாரமளித்தல், பாலின சமத்துவம் மற்றும் வன்முறைகள்
குறித்த விழிப்புணர்வைச் சிவில் சமூகத்திற்கு ஏற்படுத்தும் வகையில், ஐக்கிய
நாடுகள் சனத்தொகை நிதியத்தின் நிபுணர்களுடன் இணைந்து தொடர்ச்சியான அறிவுசார்
தகவல் பகிர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்ற யோசனையை எதிர்க்கட்சித்
தலைவர் இதன்போது முன்வைத்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T05:00:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அக்காக்களுக்கு ஷாக்கிங் உண்மை கூறிய ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ethirneechal-thodargiradhu-promo-08-sep-2026-1788838684"></link>
            <id>https://cineulagam.com/article/ethirneechal-thodargiradhu-promo-08-sep-2026-1788838684</id>
            <summary type="text">எதிர்நீச்சல் தொடர்கிறதுசன் தொலைக்காட்சியில் வில்லன்கள் கை ஓங்கிய கதையாக ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.&amp;nbsp;கதையில் குணசேகரன் ச...</summary>
            <content type="html"><![CDATA[<h2>எதிர்நீச்சல் தொடர்கிறது</h2><p>சன் தொலைக்காட்சியில் வில்லன்கள் கை ஓங்கிய கதையாக ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.&nbsp;</p><p>கதையில் குணசேகரன் செய்த தவறுக்கு அவருக்கு தண்டனை கிடைத்தே ஆக வேண்டும் என போராடி வருகிறார் ஜனனி, அதற்கு ஆதரவாக இருந்த ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி இப்போது அவரை மன்னித்து விடலாம் என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டனர்.</p><p>ஆனால் ஜனனி, யார் மாறினாலும் எனது முடிவில் உறுதியாக உள்ளேன் என அதற்கு போராடி வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5865c5c3-0def-4029-8410-21eb7d6bfafd/26-6a9f8a99a9178.webp' /></p><h2>புரொமோ</h2><p>இன்றைய எபிசோடின் புரொமோவில், கதிர் இவள் தான் என் அண்ணனை எங்கேயோ மறைத்து வெச்சிருக்கா என போலீஸிடம் கூறுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b08c89aa-c8a9-418a-a111-d4f343e36e08/26-6a9f8a98d0c9b.webp' /></p><p> </p><p>ஜனனி அவரை காப்பாற்ற நான் ஏன் உங்களிடம் இருந்து மறைத்து வைக்க வேண்டும் என கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.</p><p>பின் சக்திக்கு ஜனனி அவருக்கு ஜாமீன் கேன்சல் ஆனது குறித்து பேசுகிறார்.</p><p>அடுத்து ஜனனி, ஈஸ்வரி, ரேணுகா, நந்தினியிடம், ராவணன் யார் தெரியுமா தேவகி மகன் என கூற நந்தினி-ரேணுகா ஷாக் ஆகிறார்கள்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/hQyuCGjfndA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-08T05:00:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் போர்க் குற்றவாளி அல்ல; சவேந்திர சில்வா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/i-am-not-a-war-criminal-shavendra-silva-1788843692"></link>
            <id>https://jvpnews.com/article/i-am-not-a-war-criminal-shavendra-silva-1788843692</id>
            <summary type="text">&amp;nbsp; இறுதிப்போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகத் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா திட்டவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இறுதிப்போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகத் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
</p><p>
அத்துடன் தன் மீதான குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும், சர்வதேச அளவில் தன் மீது விதிக்கப்பட்ட தடைகளுக்கான அடிப்படை குறித்து கேள்வி எழுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் கூறுகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da394b57-565f-4704-85e6-1767ec5f6bea/26-6a9f96ae09300.webp' /></p><h2>இலங்கை அரசாங்கங்கள் சரியானபடி விளக்கமளிக்கவில்லை</h2><p>
</p><p>
இலங்கைப் பாதுகாப்பு படையினர் புலிகளுக்கு எதிராகத் தொழில்முறை ரீதியிலேயே போரிட்டனர் என்றும், இறுதி இராணுவ நடவடிக்கையின் போது பொதுமக்கள் உயிரிழப்புகளைக் குறைக்கப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>

2020 ஆம் ஆண்டு அமெரிக்காவும், 2025 ஆம் ஆண்டில் பிரித்தானியாவும் தன் மீது விதித்துள்ள தடைகளுக்கான காரணங்களை தொடர்ந்து கேட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், தான் ஒரு போர்க் குற்றவாளி அல்ல என்றும் தாய்நாட்டுக்காகவே போரிட்டதாகவும் தெரிவித்தார்.
</p><p>
இராணுவத்தினர் வேண்டுமென்றே பொதுமக்களை இலக்கு வைக்கவில்லை எனக் கூறிய சவேந்திர சில்வா, போரின் போது பொதுமக்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும், ஆனால் அவை திட்டமிட்டுச் செய்யப்பட்டவை அல்ல என்றும் விளக்கமளித்தார்.
</p><p>
2009 ஆம் ஆண்டு போரின் இறுதிக் கட்டத்தில் தனது 58 ஆவது படைப்பிரிவு 123,000 க்கும் அதிகமான பொதுமக்களை மீட்டதாகவும், சரணடைந்த சுமார் 12,000 புலிகள் உறுப்பினர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் தனது படைப்பிரிவிடமே சரணடைந்ததாகவும் குறிப்பிட்டார்.
</p><p>
அவ்வாறு சரணடைந்தவர்கள் பின்னர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.</p><p>

புலிகளின் வட பிராந்திய சிரேஷ்ட தளபதி ஒருவர் சிவில் உடையில் ஆயுதத்துடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், சீருடை அணியாத போராளிகள் கொல்லப்படும் போது அவர்கள் பொதுமக்களாகக் கணக்கிடப்படும் சூழல் நிலவுவதாகக் கூறினார்.
</p><p>புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதாகவும் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சாடினார்.
</p><p>
 இலங்கை அரசாங்கங்கள் சர்வதேச ரீதியில் இராணுவத்தின் பக்க நியாயங்களை சரியாக முன்வைக்கத் தவறியதே தன் மீதான குற்றச்சாட்டுகள் சர்வதேச அளவில் வலுப்பெறக் காரணம் என அவர் விமர்சித்தார்.</p><p>

குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்துடன் கூடிய ஆதாரங்களுடன் நேரடியாக விவாதத்துக்கு வருமாறு சர்வதேச அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்த அவர், தவறு நடந்திருந்தால் அதை ஏற்றுக்கொள்ளத் தயார் என்றும் தெரிவித்தார்.
</p><p>
மேலும், புலிகள் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும், தமிழ் மக்களின் குறைகளுக்கு அரசியல் ரீதியாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்றும் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.</p>]]></content>
            <updated>2026-09-08T04:58:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹங்வெல்ல மயானத்திலிருந்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/guns-and-bullets-recovered-from-hangwella-cemetery-1788840620"></link>
            <id>https://tamilwin.com/article/guns-and-bullets-recovered-from-hangwella-cemetery-1788840620</id>
            <summary type="text">கொழும்புக்கு அருகே ஹங்வெல்ல மயானத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

துபாயில் இருந்து நாடு கடத்தப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்புக்கு அருகே ஹங்வெல்ல மயானத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.</p><p>

துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டு தற்போதைக்கு தடுப்புக்காவலில் உள்ள 'பஸ் லலித்' என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் குறித்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><h2>&nbsp;மேலதிக விசாரணை</h2><p>

அதனடிப்படையில், ஹங்வெல்ல பகுதியிலுள்ள மயானமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த டி56 துப்பாக்கிகள் மூன்றும் மற்றும் ஒரு தொகுதி தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0050629-0d16-4244-b902-e9a3e1d59ad5/26-6a9f959408873.webp' /></p><p>
</p><p>
ஹங்வெல்லை பிரதேசத்தில் கடந்த காலத்தில் நடைபெற்ற பல்வேறு படுகொலைகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கு இந்தத் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T04:57:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சாக்களுக்கு தொடரும் நெருக்கடி : சமல் ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/former-speaker-chamal-rajapaksa-arrives-at-ciaboc-1788842086"></link>
            <id>https://ibctamil.com/article/former-speaker-chamal-rajapaksa-arrives-at-ciaboc-1788842086</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்ச சற்று நேரத்திற்கு முன்பு&amp;nbsp;இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்ச சற்று நேரத்திற்கு முன்பு&nbsp;இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p>நடைபெற்று வரும் விசாரணை ஒன்றுக்காக வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் இன்று (08) காலை அந்த ஆணைக்குழுவிற்கு வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>எயார்பஸ் கொள்முதல் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக அவர்&nbsp;இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><h2>&nbsp;எயார்பஸ் விமானக் கொள்வனவு</h2><p>இதேவேளை எயார்பஸ் விமானக் கொள்வனவின் போது இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, நாமல் ராஜபக்ச கடந்த வெள்ளிக்கிழமை (04) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/200a5598-b108-4736-984d-363c144ac9a9/26-6a9f99772df1f.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T04:53:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[10000 வங்கிக் கணக்கு இலக்கங்களை பயன்படுத்தி நிதி மோசடி! ஆரம்பமாகிறது CID விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/never-share-ur-bank-account-details-with-outsiders-1788838557"></link>
            <id>https://ibctamil.com/article/never-share-ur-bank-account-details-with-outsiders-1788838557</id>
            <summary type="text">பல்வேறு நபர்களின் 10,000 வங்கிக் கணக்கு இலக்கங்களைப் பயன்படுத்தி, இணையவழியாக மேற்கொள்ளப்பட்ட கோடி ரூபாய் பெறுமதியான பல்வேறு நிதி மோசடிகள் தொடர்பில் கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்வேறு நபர்களின் 10,000 வங்கிக் கணக்கு இலக்கங்களைப் பயன்படுத்தி, இணையவழியாக மேற்கொள்ளப்பட்ட கோடி ரூபாய் பெறுமதியான பல்வேறு நிதி மோசடிகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.</p><p>

இதன்படி மோசடிக் குழுக்கள் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை வாடகைக்கு பெறப்பட்ட அல்லது பணம் செலுத்தி கொள்வனவு செய்யப்பட்ட பிறருக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் ஊடாக பரிமாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>
இவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள், இலாபம் ஈட்டக்கூடிய வர்த்தக நடவடிக்கைகளில் இணைத்துக்கொண்டு அதற்கான கொடுப்பனவுகள் மற்றும் தரகு பணம் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் எனக் கூறி பல்வேறு நபர்களிடமிருந்து அவர்களின் வங்கிக் கணக்கு இலக்கங்களைப் பெற்றுக்கொள்வதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>இரகசிய வங்கித் தகவல்கள்</h2><p>
</p><p>இதன் பின்னர், குறித்த கணக்குகளுக்கு ஒரு தொகைப் பணத்தை வரவு வைத்து கணக்கு உரிமையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ளும் மோசடிக் குழுக்கள், அதன் பின்னர் அவர்களின் PIN இலக்கம் உள்ளிட்ட இரகசிய வங்கித் தகவல்களை தந்திரமாகப் பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d561d2d-3788-4d6f-aa1a-62ee9cad07c7/26-6a9f8f0c9c5da.webp' /></p><p>
</p><p>
இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் வங்கிக் கணக்குகள், கணக்கு உரிமையாளர்களுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் பாரிய நிதிக் குற்றங்களுக்கு பயன்படுத்தப்படுவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு மாத்திரம் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 500 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.&nbsp;</p><p>
மேலும், தங்களது வங்கிக் கணக்குகளை பிறரிடம் ஒப்படைத்து மோசடிகளுக்கு உதவி செய்ததாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, பலர் சட்டத்தின் முன் சிக்கியுள்ளள்ளனர்.&nbsp;</p><p>வீட்டிலிருந்தே வருமானம் ஈட்டக்கூடிய வர்த்தக நடவடிக்கைகளில் இணைந்துகொள்ளுமாறு பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் ஊடாக விளம்பரங்களை வெளியிட்டு, இந்த மோசடிகளுக்காக நபர்களை இணைத்துக்கொள்வதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><h2>குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எச்சரிக்கை</h2><p>

குறித்த மோசடிக் குழுக்கள், தாங்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தக நாமங்களைக் கொண்ட நிறுவனங்கள் மற்றும் வர்த்தகங்களுடன் தொடர்பு கொண்டு செயற்படுவதாகவும், அதன் மூலம் கிடைக்கும் இலாபத்தில் ஒரு பகுதியை கணக்கு உரிமையாளர்களுக்கு வழங்குவதாகவும் கூறி அவர்களை ஏமாற்றுகின்றனர்.</p><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3421d1c0-d527-452d-84df-4e345672e9b3/26-6a9f8f0bce723.webp' /></p><p>
பின்னர், குறித்த வங்கிக் கணக்கு விபரங்கள் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள் ஊடாக வெளிநாடுகளில் உள்ள மோசடிக் குழுக்களின் கைகளுக்குச் செல்வதாகவும், அந்தக் கணக்குகளைப் பயன்படுத்தி பல்வேறு நிதிக் குற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும்&nbsp; குற்றப்புலனாய்வு திணைக்களம் கூறியுள்ளது.&nbsp;</p><p>
இவ்வாறான நடவடிக்கைகளில் உள்நாட்டு வங்கிக் கணக்கு உரிமையாளர்கள் தெரிந்தோ தெரியாமலோ மோசடிகளுக்கு உதவி செய்தவர்களாகக் கருதப்பட்டு, சட்டரீதியான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எச்சரித்துள்ளது.</p><p>

எனவே, எந்தவொரு காரணத்திற்காகவும் தமக்குச் சொந்தமான வங்கிக் கணக்கை வெளிநபர்கள் அல்லது வேறு தரப்பினரிடம் ஒப்படைக்க வேண்டாம் என குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணைப் பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
வங்கிக் கணக்குகளை பிறரிடம் ஒப்படைப்பதன் மூலம் இணையவழி பண மோசடிகளுக்கு உதவி செய்த குற்றத்திற்காக, எவ்வித தொடர்பும் இல்லாத நபர்களும் சட்டத்தின் முன் தண்டனை பெற நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T04:52:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலிய குடியிருப்புகளுக்கு பிரித்தானியா வர்த்தகத் தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/britain-imposes-trade-ban-on-israeli-settlements-1788843113"></link>
            <id>https://canadamirror.com/article/britain-imposes-trade-ban-on-israeli-settlements-1788843113</id>
            <summary type="text">&amp;nbsp; மேற்குக்கரையில் உள்ள இஸ்ரேலிய குடியிருப்புகளுக்கு வர்த்தகத் தடைகளை விதிக்க பிரித்தானியா தீர்மானித்துள்ளதாக பிரித்தானிய ஊடகச் செய்திகள் தெரிவிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மேற்குக்கரையில் உள்ள இஸ்ரேலிய குடியிருப்புகளுக்கு வர்த்தகத் தடைகளை விதிக்க பிரித்தானியா தீர்மானித்துள்ளதாக பிரித்தானிய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. </p><p>

இந்தத் தீர்மானம் குறித்த அறிவிப்பை பிரதமர் எண்டி பர்னம் இன்று (08) வெளியிடவுள்ளதாக 'நியூயோர்க் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb1850cb-331d-4cd3-bc19-92b8c217d00b/26-6a9f946b4b2f4.webp' /></p><p> 

கடந்த ஜூலை மாதம் அதிகாரத்திற்கு வந்த பின்னர், பிரதமர் தலையிடும் மிகப்பெரிய வெளிநாட்டுக் கொள்கை தீர்மானமாக இது அமையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p> 

அதேசம்யம் பிரித்தானியாவின் இந்தத் தீர்மானத்திற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளிடமிருந்து பலத்த எதிர்ப்புகள் கிளம்பக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T04:48:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டில் படுதோல்வியை சந்தித்துள்ள விஸ்வநாத் &amp; சன்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/vishwanath-and-sons-flop-in-tamilnadu-box-office-1788842591"></link>
            <id>https://viduppu.com/article/vishwanath-and-sons-flop-in-tamilnadu-box-office-1788842591</id>
            <summary type="text">இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்து வெளிவந்த திரைப்படம் விஸ்வநாத் &amp;amp; சன்ஸ்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்து வெளிவந்த திரைப்படம் விஸ்வநாத் &amp; சன்ஸ்.
</p><p>
இப்படம் வெளியான அனைத்து இடங்களிலும் மெகா ஹிட் ஆன விஸ்வநாத் &amp; சன்ஸ், தமிழகத்தில் மட்டும் படுதோல்வி என்று கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46f483b7-74c2-437a-a04d-3188ba9ad7d0/26-6a9f9262d1120.webp' /></p><p>
</p><p>
இப்படம் தமிழகத்தில் ரூ. 100 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது 60+ கோடி தான் வசூல் செய்துள்ளது.</p><p>

அதனால் தமிழகத்தில் விநியோகஸ்தர்களுக்கு இந்த படம் நஷ்டத்தை கொடுத்து இருக்கலாம் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கூறுகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T04:43:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவன் கொலை சம்பவத்தில் மனைவி கைது !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wife-arrested-over-2018-retired-soldier-murder-1788842601"></link>
            <id>https://jvpnews.com/article/wife-arrested-over-2018-retired-soldier-murder-1788842601</id>
            <summary type="text">கம்பஹா&amp;nbsp; கிரிந்திவெல பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் கொலை சம்பவத்தில் , உயிரிழந்தவரின் மனைவியைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா&nbsp; கிரிந்திவெல பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் கொலை சம்பவத்தில் , உயிரிழந்தவரின் மனைவியைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கைது செய்துள்ளது.</p><p> 

கடந்த 2018.09.09 அன்று இந்தச் குற்றம் இடம்பெற்றுள்ளதுடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக்கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8812b318-862d-4162-afca-af675a344a73/26-6a9f926abf70b.webp' /></p><h2>எட்டு வருடங்களின் பின் கைதான&nbsp; மனைவி</h2><p> </p><p>

இதற்கமைய, புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, இக்குற்றத்திற்கு உடந்தையாக இருந்தமை மற்றும் சதித் திட்டம் தீட்டியமைக்காகத் தேடப்பட்டு வந்த சந்தேகநபரான கொல்லப்பட்ட நபரின் மனைவி நேற்று (07) மதியம் கிரிந்திவெல, நாரங்கஸ்பிட்டிய பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p> </p><p>

 சந்தேகநபர் நாரங்கஸ்பிட்டிய, கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் ஆவார்.

மேலும் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-08T04:40:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைப்பேருந்தில் நாடாளுமன்றுக்கு அழைத்துவரப்பட்ட நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/remanded-namal-rajapaksa-to-attend-session-1788833170"></link>
            <id>https://ibctamil.com/article/remanded-namal-rajapaksa-to-attend-session-1788833170</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்று முன்னர் நாடாள...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p>

சிறைச்சாலை பேருந்தில் நாமல் ராஜபக்ச அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p>
இதன் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நாமல் பதிலளிக்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/hzIOuv44RZg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>மேலும், அனைத்து விடயங்களையும் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்த உள்ளதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p><u><b>சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமலுக்கு சிறப்பு அனுமதி - தொடரும் சலுகைகள்</b></u></p><p>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு இன்றைய தினம் நடைபெறும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>நாடாளுமன்றப் பொதுச்செயலாளர் விடுத்த அறிவித்தலுக்கு அமைய நாமல் ராஜபக்சவை நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>

குறித்த விடயத்தை சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.

&nbsp;</p><p></p><h2>பிரேரணை&nbsp;</h2><p>செப்டெம்பர் மாதத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடும் என நாடாளுமன்றப் பொதுச்செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6791eea8-f556-4da3-a9b3-2f85acee3380/26-6a9f70c4ee542.webp' /></p><p>இன்று காலை 09.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நாடாளுமன்றம் கூடவுள்ளது</p><p>இன்றைய தினம் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 2489/22 மற்றும் 2493/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட இரு கட்டளைகள் அங்கீகாரத்திற்காக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.</p><p> 

அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.&nbsp;</p><p></p><h2>வீட்டில் இருந்து உணவு</h2><p>இதேவேளை கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவுக்கு வீட்டில் இருந்து உணவைப் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1bd66e0-4f07-49ad-92a9-fb2d21d8c2ab/26-6a9f70c5b1067.webp' /></p><p>அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூடத்திற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள ஊடகப் பேச்சாளர் செனக பல்லதென்ன தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், ஒரு நாளில் மூன்று பேர் வரையில் நாமல் ராஜபக்சவை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T04:39:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசேட போக்குவரத்து திட்டம் : கொழும்பு வாழ் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/special-traffic-plan-in-colombo-rajnathsingh-visit-1788839389"></link>
            <id>https://ibctamil.com/article/special-traffic-plan-in-colombo-rajnathsingh-visit-1788839389</id>
            <summary type="text">கொழும்பில் இன்று (08) முதல் நாளை மறுதினம் (10) வரை ஒரு விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறையில் இருக்கும் என்று இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.இந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் இன்று (08) முதல் நாளை மறுதினம் (10) வரை ஒரு விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறையில் இருக்கும் என்று இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ பயணத்தை முன்னிட்டு இந்த விசேட ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இந்திய பாதுகாப்பு அமைச்சர் நகரின் வழியாகப் பயணிக்கும் காலங்களில், போக்குவரத்து அவ்வப்போது மற்றும் வழித்தடம் வாரியாகக் கட்டுப்படுத்தப்படும் என்று காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>போக்குவரத்து கட்டுப்பாடுகள்&nbsp;</h2><p>அதன்படி, இன்று பிற்பகல் 1:30 மணி முதல், கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து, கட்டுநாயக்க - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை வழியாக, கொழும்பு துறைமுகப் பகுதி வழியாக, மற்றும் அங்கிருந்து என்.எஸ்.ஏ. வட்டச்சந்தி வழியாக தாஜ் சமுத்ரா ஹோட்டல் வரையிலான வழித்தடத்தில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd1a7ec2-0579-421e-a9db-418e7a9f9944/26-6a9f8ff4aa287.webp' /></p><p>இந்த வீதி கட்டுப்பாடுகளால் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்க மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும், காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கொழும்பு போக்குவரத்து பிரிவு, பொதுமக்கள் மற்றும் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T04:38:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமல் ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chamal-rajapaksa-arrives-at-bribery-commission-1788841943"></link>
            <id>https://tamilwin.com/article/chamal-rajapaksa-arrives-at-bribery-commission-1788841943</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்ச, சற்று நேரத்திற்கு முன்பு, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணை...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்ச, சற்று நேரத்திற்கு முன்பு, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளார்.</p><p><br></p><p><br></p><hr><p>You May Like This Video..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4cFwOIR-RHQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T04:38:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளைகள் சேர்கைக்கு இரண்டரை இலட்சம் லஞ்சம் பெற்ற பிரபல பாடசாலை அதிபர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/school-principal-accepts-a-bribe-2-5-lakh-rupees-1788842008"></link>
            <id>https://jvpnews.com/article/school-principal-accepts-a-bribe-2-5-lakh-rupees-1788842008</id>
            <summary type="text">&amp;nbsp; காலிப் பகுதி பிரபல பாடசாலை அதிபர் இரண்டு பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்ப்பதற்காக இலஞ்சமாக இரண்டரை இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்ட ஒருவர் கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; காலிப் பகுதி பிரபல பாடசாலை அதிபர் இரண்டு பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்ப்பதற்காக இலஞ்சமாக இரண்டரை இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

சந்தேகநபரான அதிபர், குறித்த பிள்ளைகளைச் சேர்ப்பதற்காக ஒரு பிள்ளைக்கு மூன்று லட்சம் ரூபாய் வீதம் இருவருக்கும் ஆறு லட்சம் ரூபாய் கோரிய பின்னர் அத்தொகை மூன்று லட்சம் ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/342abc73-56b2-402e-9095-18f829a24598/26-6a9f9019cb1c5.webp' /></p><h2>ஆறு லட்சம் ரூபாய்&nbsp;லஞ்சம் </h2><p> 

அதில் ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டு 2026ஆம் ஆண்டின் முதலாம் ஆண்டிற்கு ஒரு பிள்ளையைச் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>

மற்றைய பிள்ளையை 8ஆம் வகுப்பில் சேர்ப்பதற்காக எஞ்சிய ஒன்றரை லட்சம் ரூபாயில் 50,000 ரூபாயைப் பெற்றுக்கொண்டு அப்பிள்ளையையும் பாடசாலையில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p> 

 பிள்ளைகளை பாடசாலையில் சேர்ப்பதற்குத் தேவையான பணிகளைச் செய்து கொடுத்தமைக்காக மேலும் இரண்டரை இலட்சம் ரூபாய் பணம் கோரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p> 

அப்பணத்தைக் கொடுக்காவிட்டால் இரண்டு பிள்ளைகளையும் பாடசாலையை விட்டு நீக்கிவிடுவதாகக் கூறி, இரண்டரை இலட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற முயன்றபோதே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. 

 கைதா அதிபர் காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-08T04:30:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜீ தமிழில் புதிதாக ஒளிபரப்பாக போகும் மூக்குத்தி அம்மன் சீரியல்.. கதாநாயகி இவரா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/zee-tamil-mookuthi-amman-serial-heroine-1788839957"></link>
            <id>https://cineulagam.com/article/zee-tamil-mookuthi-amman-serial-heroine-1788839957</id>
            <summary type="text">ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் &#039;மூக்குத்தி அம்மன்&#039; எனும் தலைப்பில் புதிய சீரியல் ஒளிபரப்பாகவுள்ள நிலையில், அந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்கப்போகு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் 'மூக்குத்தி அம்மன்' எனும் தலைப்பில் புதிய சீரியல் ஒளிபரப்பாகவுள்ள நிலையில், அந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்கப்போகும் நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><p>
</p><h2>
ஜீ தமிழ் </h2><p>

சின்னத்திரையில் டாப் தொலைக்காட்சிகளில் ஒன்றாக <a href="https://www.youtube.com/watch?v=EC2_JbKZVUs" target="_blank">ஜீ தமிழ்</a> உள்ளது. இதில் கார்த்திகை தீபம், வாகை சூடவா, திருமாங்கல்யம், அயலி, வீரா உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93b8c454-3a78-482d-95ec-2101398cfe25/26-6a9f8818ea71e.webp' /></p><p> </p><h2>

மூக்குத்தி அம்மன்
</h2><p>
இந்நிலையில், புதிதாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'மூக்குத்தி அம்மன்' எனும் சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோவை ஏற்கனவே ஜீ தமிழ் வெளியிட்டுள்ளது. ஆனால், ஒளிபரப்பு தேதி மற்றும் நேரம் எப்போது என்பது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த <a href="https://kalkionline.com/entertainment/chinnathirai-ott/sun-tv-thulasi-serial-time-and-zee-tamil-mookuthi-amman-cast-details" target="_blank">சீரியலில் </a>அம்மன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகை நித்யா தாஸ் நடிக்கிறார் என்பதை ப்ரோமோவில் உறுதி செய்துள்ளனர். மேலும், சின்னத்திரையில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் ஸ்ரீகுமார் இந்த சீரியலில் கதாநாயகனாக நடிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5cbef08-db51-41ef-82ef-3cf859f80ddb/26-6a9f88183eae8.webp' /></p><p>
</p><h3>
கதாநாயகி
</h3><p>
இந்நிலையில், மூக்குத்தி அம்மன் சீரியலில் கதாநாயகியாக நடிக்கப்போகும் நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'வீரா' சீரியலில் கதாநாயகியாக நடித்து மக்களின் மனதை வென்ற, நடிகை வைஷ்ணவி தான், மூக்குத்தி அம்மன் சீரியலில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faf0e19c-d0d8-49d1-ae81-6bd4443cbb0f/26-6a9f8819a1ff6.webp' /></p><p></p><p> </p><h4>

மகிழ்ச்சியில் ரசிகர்கள்
</h4><p>
வீரா சீரியல் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை வைஷ்ணவி, புதிய சீரியலில் கதாநாயகியாக நடிப்பது அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. இதனால், மூக்குத்தி அம்மன் சீரியலை மிகவிரைவில் காண ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afdee4d4-e795-4ea2-8d3c-5e3117450a7a/26-6a9f881a5d88b.webp' /></p>]]></content>
            <updated>2026-09-08T04:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் சிறைச்சாலை வாகனத்தில் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-visit-parliament-from-prison-1788841306"></link>
            <id>https://tamilwin.com/article/namal-visit-parliament-from-prison-1788841306</id>
            <summary type="text">இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்றுமுன்னர் நாடாளுமன்றத்திற்கு அழைத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்றுமுன்னர் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். </p><p>

இன்று (08) நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காகவே 


சிறைச்சாலை பேருந்தில் நாமல் ராஜபக்ச அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/hzIOuv44RZg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>பதிலளிக்க மறுப்பு</h2><p>இதன் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நாமல் பதிலளிக்க மறுத்துள்ளார்.</p><p> </p><p> 

<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec47bad9-6875-4f6f-8c6f-e6adbe58cff2/26-6a9f8f50ae312.webp' /></p><p>அனைத்து விடயங்களையும் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்த செல்வதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T04:28:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/grade-5-scholarship-exam-answer-sheet-recorrection-1788836108"></link>
            <id>https://ibctamil.com/article/grade-5-scholarship-exam-answer-sheet-recorrection-1788836108</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மீளாய்வு செய்வது குறித்து&amp;nbsp;பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மீளாய்வு செய்வது குறித்து&nbsp;பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.</p><p>அதன்படி, விடைத்தாள்களை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் நேற்று (07) முதல் செப்டெம்பர் 21 ஆம் திகதி வரை இணையவழியில் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p><p> </p><p>அதற்கமைய தகுதிபெற்ற விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் உரிய இணையத்தளத்தின் ஊடாக தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள்</h2><p>இந்த நிலையில் பரீட்சார்த்தி கல்வி கற்கும் பாடசாலையின் அதிபரால், பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி [<a href="https://onlineexams.gov.lk/" target="_blank">https://onlineexams.gov.lk</a>] என்ற இணையத்தளத்திலுள்ள SCHOOL LOGIN பகுதிக்குள் பிரவேசித்து இந்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cda01029-62b6-4064-950b-8a96b1ba3a51/26-6a9f7ed50dbfa.webp' /></p><p>இதேவேளை 2026 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம் 9ஆம் திகதி நடைபெற்ற நிலையில்&nbsp;289,867 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.</p><p>இம்மாதம் 02ஆம் திகதி வெளியான பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில்&nbsp;குறித்தப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 56,000 பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T04:28:22+00:00</updated>
        </entry>
    </feed>
