<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-12T06:27:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளை சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் நிறைவேறாத கனவு - துயரில் முழ்கிய நண்பர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dream-of-boy-who-tragically-died-in-dehiwela-1789193915"></link>
            <id>https://tamilwin.com/article/dream-of-boy-who-tragically-died-in-dehiwela-1789193915</id>
            <summary type="text">தெஹிவளை - சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட கையெறி குண்டு தாக்குதலின் போது இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், அவரின் தந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை - சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட கையெறி குண்டு தாக்குதலின் போது இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், அவரின் தந்தை வைத்தியசாலையில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த சம்பவம் நேற்று(11.09.2026) இடம்பெற்ற நிலையில், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.</p><p> 

தந்தை - ஹெட்டியாராச்சிங்கே நலின் துசந்தா, 17 வயதான கசுன் ரஸ்மகா மற்றும் அவரது 11 வயதான தம்பி அஜித் கிஹான் ஆகியோரே இந்த தாக்கதலின் போது பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><h2>
நள்ளிரவில் நடந்த கொடூரம்</h2><p>
சம்பவம் தொடர்பான விசாணையில்,</p><p> 

முச்சக்கர வண்டி சாரதியான நலின் அவருடைய மனைவியை பிரிந்து மகன்களுடன் வாழ்ந்து வந்துள்ளார். </p><p>அவருடைய மூத்தமகன் கசுன் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தேர்ச்சி பெற்றிருந்தார், அதே சமயம் அவரது தம்பி எட்டாம் வகுப்பில் படித்து வந்தார். </p><p>

சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் இரவு, நலினும் அவரது இரண்டு குழந்தைகளும் வீட்டின் தரையில் ஒரு பாயில் உறங்கச் சென்றிருந்தனர்.

சுமார் 3.15 மணியளவில், வீட்டின் முன் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு நலின் கதவைத் திறக்கச் சென்றபோது, ​​கதவருகே இருந்த ஒருவர் வீட்டிற்குள் ஒரு கையெறி குண்டை வீசினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cad78c7e-424e-4df8-8ff0-7448ab6c2f11/26-6aa4f04280931.webp' /></p><p> </p><p>அதன் பின்னர் அந்த நபர் உடனடியாக கதவை மூடிவிட்டு, தனது மற்றொரு கூட்டாளியுடன் வெளியே ஒரு முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்றுள்ளார்.
</p><p>
வீட்டிற்குள் கையெறி குண்டு வெடித்ததில் நலினும் அவரது இரண்டு குழந்தைகளும் படுகாயம் அடைந்தனர். மூவரையும் அக்கம்பக்கத்தினர் களுபோவில போதனா வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்றுள்ளனர். 

எனினும் சிகிச்சை பலனின்றி சிறுவர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில், தந்தை நலின் இரு கால்களிலும் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.</p><h2>
சிறுவர்களின் கடைசி ஆசை</h2><p>
மேலும், சாதாரண தரப் பரீட்சையில் தேர்ச்சி பெற்றிருந்த கசுன் ரஸ்மகா, வீட்டில் நிலவிய கடுமையான வறுமையின் காரணமாக தனது உயர்நிலை படிப்பைத் தொடர பாடசாலைக்குச் செல்லவில்லை. அடுத்த திங்கட்கிழமை முதல் ஒரு பெட்ரோல் நிலையத்தில் வேலைக்குச் சேரத் தயாராகி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36721db3-4a5b-4e45-a9a2-b4d0d06ee9f9/26-6aa4f0435855c.webp' /></p><p> </p><p>

இதேவேளை, என் அம்மா வீட்டை விட்டுச் சென்ற நாள் முதல், எனக்கும் என் தம்பிக்கும் உணவும் நீரும் வழங்கவும், பாடசாலைக்கு எங்களை அனுப்பவும் அப்பா கடுமையாகப் போராடி வருகிறார். அதனால், என்னால் உயர்நிலை படிப்புக்குச் செல்ல வழியில்லை. வகுப்புகளுக்குச் செல்ல என்னிடம் பணமும் இல்லை. </p><p>

எனவே, நான் மீண்டும் பாடசாலைக்குச் செல்ல மாட்டேன். நான் என் வேலையைச் செய்வேன், என் தம்பிக்கு நன்றாகக் கற்பித்து அவனை ஒரு சிறந்த நிலைக்குக் கொண்டு வருவேன் என அவருடைய நண்பர்களிடம் கசுன் கூறியதாகவும் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T06:25:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மறைந்த சாலமன் பாப்பையாவின் நிறைவேறாத கடைசி ஆசை என்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/solomon-pappaiah-last-wish-before-death-1789192341"></link>
            <id>https://manithan.com/article/solomon-pappaiah-last-wish-before-death-1789192341</id>
            <summary type="text">தமிழ் பேராசிரியர் பட்டிமன்ற பேச்சாளரும் நடுவருமான சாலமன் பாப்பையா பற்றி தமிழ்நாட்டில் தெரியாத நபர்களையே இல்லை. அவரின் பேச்சு பலரும் ரசிக்கும் படியும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் பேராசிரியர் பட்டிமன்ற பேச்சாளரும் நடுவருமான சாலமன் பாப்பையா பற்றி தமிழ்நாட்டில் தெரியாத நபர்களையே இல்லை. அவரின் பேச்சு பலரும் ரசிக்கும் படியும் சிந்திக்கும் படியும் இருக்கும். அவர் தற்பொழுது வயது மூப்பின் காரணமாக 91 வயதில் காலமாக இருக்கிறார். </p><p>இதற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சாலமன் பாப்பையா அவர்கள் மகாகவி சுப்பிரமணியர் பாரதியார் மறைந்த அதே தினத்தில் உயிரிழந்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் சாலமன் பாப்பையாவிற்கு மகாகவி பாரதி குறித்து நிறைவேறாத கடைசி ஆசை ஒன்றும் இருந்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3c92cbc-4cfa-47f8-8845-3d992aa18b63/26-6aa4e896a0702.webp' /></p><p></p><p> </p><p>அதை தொடர்பாக அவருடைய உதவியாளர் பேசியுள்ளார்.


சாலமன் பாப்பையாவின் கடைசி ஆசையை குறித்து அவருடைய உதவியாளர் ராஜா அவர்கள் பேசுகிற பொழுது பேராசிரியர் சாலமன் பாப்பையா 1965 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார்.</p><p> அவருக்கு வயது தற்போது 91. 3 தினங்களுக்கு முன்பாக விநாயகர் சதுர்த்திக்கு பட்டிமன்றம் நடந்தது அதற்காக அவர் சிவகாசி வந்திருக்கிறார் நன்றாக இருந்துள்ளார் நேற்று இரவு சற்று தூக்கம் வராமல் தவித்திருக்கிறார் இன்று காலை அவரால் மூச்சு விடவே முடியவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். </p><p>மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பொழுது அவர்கள் அப்போலோ அழைத்து செல்ல சொன்னார்கள். அப்போலோ சென்ற பொழுது மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளார்கள். அவர்கள் சாலமன் பாப்பையா அவர்கள் நம்மை விட்டு பிரிந்த அந்த துயரச் செய்தி தெரிவித்ததாக அவர் சொல்கிறார். </p><p>முக்கியமாக அதைவிட முக்கியமாக சாலமன் பாப்பையா அவர்கள் கிறிஸ்துவராக பிறப்பெடுத்திருந்தாலும் அவர் சாதி மத வேறுபாடுகளை கடந்து வாழ்ந்ததால் தன்னுடைய உடலை அவர் இந்திய சட்ட முறைப்படி தகனம் செய்ய வேண்டும் என உயில் எழுதி வைத்திருக்கிறார். அதன்படியே அவருடைய உடல் தகனம் செய்யப்பட உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6de99a31-968c-41a1-b22b-d1a077438352/26-6aa4e89759cdd.webp' /></p><p></p><p> </p><p>மேலும், சாலமன் பாப்பையா பிறந்து வளர்ந்த வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல் பாரதியார் குறித்து ஒரு நூல் எழுதிக் கொண்டிருந்தார். அவருக்கு அது எப்படியாவது முடித்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தார். அதுதான் அவருடைய கடைசி ஆசையாகவும் இருந்தது.</p><p>பாரதியாருடைய வரலாற்றை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். அது நிறைவேறும் முன்னதாகவே அவர் காலமாகி இருப்பது மிகுந்த வேதனையை தெரிவிப்பதாகவும் அவர் சொல்லியிருக்கிறார்.</p>]]></content>
            <updated>2026-09-12T06:24:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸ் 10 போட்டியாளரின் தாயார் திடீர் மரணம்.. அவர் எடுத்த அதிரடி முடிவு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/bigg-boss-10-contestant-mom-sudden-death-1789192255"></link>
            <id>https://cineulagam.com/article/bigg-boss-10-contestant-mom-sudden-death-1789192255</id>
            <summary type="text">பிக்பாஸ் 10விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது, இப்போது 10வது சீசன் கடந்த செப்டம்பர் 6ம் தேதி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிக்பாஸ் 10</h2><p>விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது, இப்போது 10வது சீசன் கடந்த செப்டம்பர் 6ம் தேதி துவங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.</p><p> 7 சீசன்கள் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வர கடந்த 2 சீசன்களை தொகுத்து வழங்கிய நிலையில் இப்போது 10வது சீசன் தொகுத்து வழங்குகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88fcc136-5394-4302-a6b2-a4f9eb8c54db/26-6aa4ee6e49aa2.webp' /></p><p>
இந்த சீசனில் தேர்வு செய்யப்பட்ட நபர்களை 3ஆக பிரித்து நிற்க வைத்து அங்குள்ள மக்களை ஓட்டு போட வைத்து இருவரை உள்ளே அனுப்பி குறைந்த வாக்குகளை பெற்ற ஒருவரை வெளியே அனுப்பினார்கள்.
</p><p>அப்படி மொத்தம் 19 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aadff7e5-e5d8-4f41-b29d-c05353112c95/26-6aa4ee6fe3ecd.webp' /></p><h2>சோகம்</h2><p>
இந்த பிக்பாஸ் 10வது சீசனில் பிளாக் பாண்டி உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் பிக்பாஸ் 10 போட்டியாளர் ஒருவரின் தாயார் இறப்பு செய்தி வந்துள்ளது.</p><p>அதாவது போட்டியாளர் மணிவண்ணன் தாயார் இறந்துள்ளாராம், அவர் வெளியே செல்ல விரும்புகிறாரா என கேட்கப்பட அதற்கு அவர் வீட்டில் இருக்கிறேன் என கூறியுள்ளார். </p><p>பின் அவரது அம்மா இடம்பெறும் ஒரு வீடியோ பிக்பாஸ் 10 வீட்டிற்குள் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/665c2781-0bfc-4ff0-99c3-e8269ec2ae56/26-6aa4ee6f1657d.webp' /></p>]]></content>
            <updated>2026-09-12T06:20:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் தாக்குதலுக்கு முன்னர் பிரித்தானியாவைக் குறி வைத்த ஒசாமா பின் லேடன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bin-laden-plotting-attack-on-britain-1789185938"></link>
            <id>https://news.lankasri.com/article/bin-laden-plotting-attack-on-britain-1789185938</id>
            <summary type="text">Osama bin Laden was plotting terror attack on Britain before 9/11: 9/11 தாக்குதலுக்கு முன்பே ஒசாமா பின் லேடன் பிரித்தானியா மீது பயங்கரவாதத் தாக்குதல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Osama bin Laden was plotting terror attack on Britain before 9/11: 9/11 தாக்குதலுக்கு முன்பே ஒசாமா பின் லேடன் பிரித்தானியா மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு வந்தார்.
</p><p>செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே, பிரித்தானியா மீதே தாக்குதல் நடத்த ஒசாமா பின் லேடன் திட்டமிட்டதாக சிஐஏ-வின் (CIA) புதிய, பரபரப்பான குறிப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.</p><h2>பிரித்தானியாவும்</h2><p>
</p><p>பயங்கரவாதத் தாக்குதல்களின் 25-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு CIA வெளியிட்ட அதீத ரகசிய ஆவணங்களில் உள்ள தகவல்களின்படி, அல்-கொய்தாவின் தாக்குதல் பட்டியலில் பிரித்தானியாவும் இடம்பெற்றிருந்ததற்கான வலுவான அறிகுறிகள் இருந்ததாக அமெரிக்க உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8cd7044-99ed-4937-a4ff-4cfef83c65e7/26-6aa4cf942e8ec.webp' /></p><p> </p><p>CIA வெளியிட்ட பெருமளவிலான ஆவணங்களில், பின் லேடன் பிரித்தானியாவை குறிவைக்கத் திட்டமிட்டிருந்ததாகக் கூறும் 1998-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் திகதியிட்ட ஆவணம் ஒன்றும் அடங்கும். </p><p>9/11 தாக்குதல் தொடர்பான தகவல்கள் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய அளவில் வெளியிடப்பட்ட நிலையில், புதிதாக ரகசியத் தன்மை நீக்கப்பட்ட 69 விளக்கக் குறிப்புகளில் பிரித்தானியா குறித்த ஆவணமும் ஒன்றாகும்.</p><p></p><p> </p><p>பின்லேடனின் பயங்கரவாதக் கட்டமைப்பு இன்னும் ஒரு அச்சுறுத்தலாக உள்ளது என்ற தலைப்பிலான ஆவணத்தில் பிரித்தானியா நேரடியாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. </p><p>சூடானில் உள்ள அல்-கொய்தா தளங்கள் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய பிறகு தயாரிக்கப்பட்ட அந்தக்குறிப்பு, பின் லேடன் பிரித்தானியாவைக் குறிவைக்க முயன்றதாகத் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7c64b79-e1e1-422b-8226-611df6b900d5/26-6aa4cf94d68d5.webp' /></p><p> </p><p>அக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்களுக்குச் சில மணிநேரங்களுக்கு முன்பு, அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுக்கு எதிராக மேலும் தாக்குதல்களை நடத்துவதற்கான வழிகளை பின்லேடன் ஆராய்ந்து கொண்டிருந்தார். </p><p>ஆனால், துல்லியமான இலக்குகளையோ அல்லது நேரத்தையோ குறிப்பிடவில்லை. மேலும், பெயர் குறிப்பிடப்படாத ஒரு நாட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய இலக்காக இருக்கலாம் என்றும், அமெரிக்காவில் தாக்குதல்களை நடத்துவது குறித்து ஆராய பின்லேடனால் ஒருவருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்ததாகவும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.</p><h2>பின் லேடன்&nbsp;கோபம்</h2><p> </p><p>அந்த ஆண்டின் இறுதியில் எழுதப்பட்ட மற்றொரு குறிப்பில், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா, இஸ்ரேல் போன்ற அதன் நட்பு நாடுகளின் சொந்த மண்ணிலேயே தாக்குதல் நடத்த அவர் விரும்புவதற்கான வலுவான அறிகுறிகள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>லண்டனைச் சேர்ந்த தனது கூட்டாளிகள் இருவர் பிரித்தானியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்ததைக் குறித்து பின் லேடன் கொண்டிருந்த கோபத்தை, 1999 ஆகஸ்ட் மாதத்தைச் சேர்ந்த ஒரு கோப்பு சுட்டிக்காட்டியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f26396e-0f1b-4b18-b4da-6b41100f6895/26-6aa4cf9589c12.webp' /></p><p> </p><p>இதனிடையே, நாட்டின் மிக இருண்ட தருணங்களில் ஒன்றுக்கு முந்தைய ஆண்டுகளிலும், அந்த நிகழ்வு நடந்த மறுநாளிலும் சேகரிக்கப்பட்ட மிக முக்கியமான உளவுத்துறைத் தகவல்களைப் பற்றிய ஒரு பார்வையை அமெரிக்கர்களுக்கு வழங்குவதையே இந்த மிகப்பெரிய ஆவண வெளியீடு நோக்கமாகக் கொண்டிருந்ததாக CIA தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T06:20:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிலிப்பைன்ஸ் படகு தீ விபத்து ; உயிரிழப்பு 35 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/philippines-boat-fire-death-toll-hits-35-1789193617"></link>
            <id>https://canadamirror.com/article/philippines-boat-fire-death-toll-hits-35-1789193617</id>
            <summary type="text">பிலிப்பைன்ஸில் இந்த வாரம் தீப்பிடித்து எரிந்த படகின் சிதைவுகளில் இருந்து மேலும் 30 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிலிப்பைன்ஸில் இந்த வாரம் தீப்பிடித்து எரிந்த படகின் சிதைவுகளில் இருந்து மேலும் 30 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
</p><p>


மணிலாவிலிருந்து சுற்றுலாத் தலமான கோரோன் நோக்கிப் பயணித்த ‘எம்வி ஜூன் ஆஸ்டர்’ என்ற படகில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d33b887-baa2-4be3-b448-47942745081a/26-6aa4ed92cc816.webp' /></p><p> </p><p>சம்பவத்தின்போது படகில் 117 பயணிகள் மற்றும் 17 பணியாளர்கள் என 134 பேர் பயணித்துள்ளனர்.



இதுவரை 43 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். </p><p>மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>


நச்சுப் புகை மற்றும் அதிக வெப்பம் காரணமாக நேற்று வரை படகுக்குள் நுழைய முடியாத நிலை காணப்பட்டதாக பிலிப்பைன்ஸ் கடலோரக் பொலிஸ் படை தெரிவித்துள்ளது. </p><p>இதனால் மேலும் சில உடல்கள் படகுக்குள் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



பெரும்பாலான உடல்கள் பயணிகள் உறங்கும் பகுதியில் இருந்து மீட்கப்பட்டதாக கடலோரக் காவல் படை செய்தித் தொடர்பாளர் கொமடோர் நோயெமி கயாப்யாப் தெரிவித்துள்ளார்.
</p><p>


உயிர் பிழைத்தவர்களிடம் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், சரக்கு வைக்கும் பகுதியில் இருந்தே தீ பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.</p><p> மேலும், சில பயணிகள் உயிர்காக்கும் கவசங்களை அணியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



இந்நிலையில், படகு விபத்து தொடர்பான காரணங்கள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பிலிப்பைன்ஸ் கடல்சார் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-12T06:17:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்வரும் முதலாம் திகதி முதல் இலங்கை சுங்கத்தின் புதிய நடைமுறை! சர்வதேச நாணய நிதியம் ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imf-supports-sl-customs-paperless-system-1789192947"></link>
            <id>https://tamilwin.com/article/imf-supports-sl-customs-paperless-system-1789192947</id>
            <summary type="text">இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் 2026 அக்டோபர் 01 ஆம் திகதி முதல்
நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள காகிதமற்ற சுங்க அறிவிப்புத் திட்ட
செயலாக்க முற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் 2026 அக்டோபர் 01 ஆம் திகதி முதல்
நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள காகிதமற்ற சுங்க அறிவிப்புத் திட்ட
செயலாக்க முறைமை குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்குத்
தெளிவுபடுத்தும் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
</p><p>
ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த கலந்துரையாடல்
ஜனாதிபதிச் செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க
தலைமையில் நடைபெற்றது.</p><h2>பிரதிநிதிகளுக்கு விளக்கம்</h2><p>

இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் வருமான நிர்வாகம், சீர்திருத்தம் மற்றும்
நவீனமயமாக்கல் பிரிவின் அதிகாரிகள், புதிய முறைமை, விழிப்புணர்வு திட்டங்கள்
மற்றும் சுங்கத் திணைக்களத்தின் தொழில்நுட்ப தயார்நிலை குறித்து சர்வதேச நாணய
நிதியப் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தனர்.</p><p>

இந்த முறைமையை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை சுங்கம் மற்றும் ஜனாதிபதிச்
செயலகத்தின் வருமான நிர்வாகச் சீர்திருத்தப் பிரிவு மேற்கொண்ட பங்களிப்பை
சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் பாராட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20f271f3-37dd-49fa-b8ca-6f1e5dc0fb26/26-6aa4ee5b7346e.webp' /></p><h2>தேவையான ஆதரவு</h2><p>
மேலும், இத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்குத் தேவையான ஆதரவை
வழங்கவும் அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
</p><p>
வருமான நிர்வாகம், சீர்திருத்தம் மற்றும் நவீனமயமாக்கல் பிரிவின் சிரேஷ்ட
மேலதிக செயலாளர் சீவலி அருக்கொட, இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகம் விமல்
லியனகே மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும்
தினா பிரிகார்தினி மற்றும் கிளாகோவ் அகபனிட்சாவோர்ன் ஆகியோர் கலந்துகொண்டனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T06:17:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் பற்றி எரிந்த பயணிகள் படகு - பறிபோன 35 உயிர்கள்: தொடரும் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/death-toll-from-philippines-ferry-fire-rises-to-35-1789193043"></link>
            <id>https://ibctamil.com/article/death-toll-from-philippines-ferry-fire-rises-to-35-1789193043</id>
            <summary type="text">பிலிப்பைன்ஸில் தீப்பிடித்து எரிந்த படகின் சிதைவுகளில் இருந்து மேலும் 30 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிலிப்பைன்ஸில் தீப்பிடித்து எரிந்த படகின் சிதைவுகளில் இருந்து மேலும் 30 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.</p><p>இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அந்நாட்டின் கடலோரக் காவல்படை எச்சரித்துள்ளது.</p><p>கடும் வெப்பம் மற்றும் புகை காரணமாக மீட்புக் குழுவினர் கப்பலுக்குள் நுழைய சிரமப்பட்டதால், உள்ளே சிக்கியிருக்கக்கூடிய பயணிகளைத் தேடும் பணிகள் தாமதமாயின.&nbsp;இதனால் மேலும் சில உடல்கள் படகுக்குள் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>வைத்தியசாலைகளில் சிகிச்சை&nbsp;</h2><p>



சம்பவம் தொடர்பில் தெரியவகையில், மணிலாவிலிருந்து சுற்றுலாத் தலமான கோரோன் நோக்கிப் பயணித்த ‘எம்வி ஜூன் ஆஸ்டர்’ என்ற படகில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a326dbd-38f5-43d4-8424-bc3176695a33/26-6aa4ee47e5792.webp' /></p><p> சம்பவத்தின் போது படகில் 117 பயணிகள் மற்றும் 17 பணியாளர்கள் என 134 பேர் பயணித்துள்ளனர். இதுவரை 43 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். </p><p>மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><h2>ஆரம்பகட்ட விசாரணை</h2><p>


</p><p>பெரும்பாலான உடல்கள் பயணிகள் உறங்கும் பகுதியில் இருந்து மீட்கப்பட்டதாக கடலோரக் காவல் படை செய்தித் தொடர்பாளர் கொமடோர் நோயெமி கயாப்யாப் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efabe8de-44f4-416e-acb9-c08562e7368f/26-6aa4ee489b88a.webp' /></p><p>


உயிர் பிழைத்தவர்களிடம் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், சரக்கு வைக்கும் பகுதியில் இருந்தே தீ பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. </p><p>மேலும், சில பயணிகள் உயிர்காக்கும் கவசங்களை அணியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


இந்நிலையில், படகு விபத்து தொடர்பான காரணங்கள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பிலிப்பைன்ஸ் கடல்சார் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T06:16:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் ஒத்திவைக்கப்படும் மாகாண சபைத் தேர்தல் : கிளம்பியுள்ள எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/provincial-council-elections-postponed-again-1789192035"></link>
            <id>https://ibctamil.com/article/provincial-council-elections-postponed-again-1789192035</id>
            <summary type="text">இலங்கையில் மாகாண சபைத் தேர்தல் எந்தத் தேர்தல் முறையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நாடாளுமன்ற விசேட கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் மாகாண சபைத் தேர்தல் எந்தத் தேர்தல் முறையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நாடாளுமன்ற விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தக் குழுவின் கால எல்லையை மேலும் நீடிப்பதற்கு நேற்று (11) நாடாளுமன்றத்தின் அனுமதி கிடைத்துள்ளது.</p><p>இத்தெரிவுக்குழுவிற்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுவதால் அதன் கால எல்லை டிசம்பர் மாதம் 17ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டதாக நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.</p><p></p><h2>நாடாளுமன்றத்தில் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்</h2><p>இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் தமது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2f510e0-4978-4741-a02e-6cc17883b349/26-6aa4edf47c860.webp' /></p><p> 
</p><p>அந்தவகையில், மாகாண சபைத் தேர்தலை வேண்டுமென்றே ஒத்திவைப்பதற்காகவே இந்த விசேட குழுவின் காலம் நீடிக்கப்படுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளதுடன் அந்த தெரிவுக்குழுவிலிருந்து வெளியேற தீர்மானித்துள்ளனர்.</p><p> </p><p>மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அல்லாமல், அதனைப் பிற்போடுவதற்காகவே அமைக்கப்பட்டுள்ள ஒரு தெரிவுக்குழு என்றே இதனை வரையறுக்க முடியும் எனவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T06:13:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னர் சார்லசின் முன்னாள் காதலி ஒருவர் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/king-charles-former-girlfriend-dies-1789193174"></link>
            <id>https://news.lankasri.com/article/king-charles-former-girlfriend-dies-1789193174</id>
            <summary type="text">&amp;nbsp;King Charles&#039; former girlfriend dies aged 75: மன்னர் சார்லசின் முன்னாள் காதலி ஒருவர் தனது 75ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.


சார்லஸ் இளவரசி டய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;King Charles' former girlfriend dies aged 75: மன்னர் சார்லசின் முன்னாள் காதலி ஒருவர் தனது 75ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.</p><p>


சார்லஸ் இளவரசி டயானாவைத் திருமணம் செய்யும் முன் பல இளம்பெண்களை காதலித்தவர் என்பது உலகமறிந்த விடயம்.</p><p>

அப்படி அவர் காதலித்த பெண்களில் ஒருவர், சமீபத்தில் தனது 75ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.
</p><h2>
யார் அந்தப் பெண்?
</h2><p>
அவரது பெயர், டவீனா மார்லி. பிரபல தொழிலதிபர் ஒருவரின் பேத்தியான டவீனாவும், சார்லசும் 1960, 70களில் காதலித்துவந்துள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f4738b8-22e7-4201-84bc-f763192a05c4/26-6aa4ec389e77d.webp' /><br></p><p>
</p><p>
அந்த காலகட்டத்தில் சார்லஸ் பல பெண்களுடன் பழகிவந்த நிலையில், சார்லஸ் டவீனாவை உருகி உருகி காதலிக்கத் துவங்க, கடைசியாக பிரித்தானியாவின் வருங்கால ராணியை சார்லஸ் கண்டுபிடித்துவிட்டார் என்றே அப்போது கருதப்பட்டதாம்.
</p><p>
ராஜ குடும்பத்திலுள்ளவர்களுக்கு டவீனாவை பிடித்துப்போன நிலையில், டவீனாவின் முன்னாள் காதலரான ஜேம்ஸ் பியர்ட் என்பவர் ஒரு அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளார்.
</p><p>
அதாவது, சார்லசும் டவீனாவும் காதலிக்கத் துவங்கும் முன்பே, தானும் டவீனாவும் உடல் ரீதியாக நெருக்கமாக இருந்ததாக ஜேம்ஸ் கூற, ராஜ குடும்பத்துக்கு மருமகளாக வரும் ஒரு பெண் களங்கப்படாத ஒரு பெண்ணாக இருக்கவேண்டும் என விதி உள்ளதால் சார்லஸ் டவீனாவை பிரிய நேர்ந்துள்ளது.</p><p>

பின்னர் சார்லஸ் டயானாவை திருமணம் செய்துகொள்ள, டவீனா, ஜேக் மார்லி என்பவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். </p><p>தம்பதியருக்கு மூன்று மகன்கள் உள்ளார்கள்.

இந்நிலையில், இம்மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி, தன் குடும்பத்தினர் சூழ டவீனாவின் உயிர் அமைதியாக பிரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-12T06:08:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரத்து செய்யப்பட்ட பொதுமன்னிப்பு! ஞானசார தேரர் தலைமறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gnanasara-thero-goes-into-hiding-from-the-temple-1789192152"></link>
            <id>https://ibctamil.com/article/gnanasara-thero-goes-into-hiding-from-the-temple-1789192152</id>
            <summary type="text">பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், தாம் தங்கியிருந்த ராஜகிரிய ஸ்ரீ சதர்மராஜிக விகாரையிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், தாம் தங்கியிருந்த ராஜகிரிய ஸ்ரீ சதர்மராஜிக விகாரையிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அவர் தறைமறைவாகியுள்ளதாக தென்னிலங்கை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியான சந்தியா எக்னலிகொட உள்ளிட்ட தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையின் பின்னர் உயர் நீதிமன்றம் மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளது.</p><p></p><h2>சிறையில் அடைக்க உத்தரவு&nbsp;</h2><p>
</p><p>
அதன்படி, நீதிமன்ற வளாகத்திற்குள் சந்தியா ஏக்னலிகொடவை அச்சுறுத்தியமை மற்றும் நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக 2018 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையின் எஞ்சிய பகுதியை அனுபவிப்பதற்காக அவர் மீண்டும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d284a60f-45ed-4d06-9a25-33acfc8bac57/26-6aa4ea410bed1.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், உயர்நீதிமன்றின் இத்தீர்ப்பு வெளியானதனைத் தொடர்ந்து அவர் விகாரையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும், இதுவரை காவல்துறையினரோ அல்லது பாதுகாப்புத் தரப்பினரோ அவரைக் கைது செய்யவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T05:59:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் இணையும் தமிழக முதல்வர் விஜய், நடிகர் அஜித் ; சினிமா வரலாற்றில் நடக்காத நிகழ்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vijay-and-ajith-to-reunite-in-london-1789192697"></link>
            <id>https://jvpnews.com/article/vijay-and-ajith-to-reunite-in-london-1789192697</id>
            <summary type="text">லண்டனில் இன்று நடைபெறும் மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை தமிழக முதலமைச்சர் விஜய் பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைக்கவுள்ளார். இந்தப் போட்டியி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">லண்டனில் இன்று நடைபெறும் மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை தமிழக முதலமைச்சர் விஜய் பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைக்கவுள்ளார். </p><p style="text-align: justify; ">இந்தப் போட்டியில் நடிகர் அஜித்குமார் உள்ளிட்ட இந்தியாவைச் சேர்ந்த முன்னணி கார் பந்தய வீரர்கள் பங்கேற்கின்றனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c34da9b-1ce9-43fc-9e6b-6b8eaf323f6c/26-6aa4e9fb590eb.webp' /></p><h2 style="text-align: justify;">அரசுமுறைப் பயணம்</h2><p>
</p><p style="text-align: justify;">


தமிழகத்துக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாள் அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் விஜய், நேற்று லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை சென்றடைந்தார்.
</p><p style="text-align: justify;">


அவருக்கு விமான நிலையத்தில் பிரிட்டன் தமிழ் சங்கத்தின் தலைவர்&nbsp; உள்ளிட்ட பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">&nbsp;தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதும், உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுமே அவரது பிரிட்டன் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.</p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">


மேம்பட்ட உற்பத்தி, மோட்டார் வாகனங்கள், மின்சார வாகனங்கள், மின்னணுவியல் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களை அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">


இந்நிலையில், இன்று சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயத் திடலுக்குச் செல்லும் விஜய், அங்குள்ள பந்தயச் சுற்றுப்பாதை, உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் நேரில் பார்வையிடவுள்ளார்.
</p><p style="text-align: justify;">


இந்தப் போட்டி இன்று இரவு 9.45 மணிக்கு ஆரம்பமாகி, இரவு 11.45 மணிக்கு நிறைவடையவுள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-12T05:58:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர தலைமையில் பொலன்னறுவையில் இன்று பிரம்மாண்ட மக்கள் பேரணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-attend-npp-farmers-rally-polonnaruwa-today-1789191944"></link>
            <id>https://tamilwin.com/article/anura-attend-npp-farmers-rally-polonnaruwa-today-1789191944</id>
            <summary type="text">பொலன்னறுவை மாவட்ட விவசாயிகள் பேரணி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (12.09.2026) பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது. 

&#039;எமது அரசாங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலன்னறுவை மாவட்ட விவசாயிகள் பேரணி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (12.09.2026) பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது.</p><p> 

'எமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் - நாட்டிற்கு நன்மை' என்ற தொனிப்பொருளில் நாடு முழுவதும் நடத்தப்படும் மக்கள் பேரணித் தொடருக்கு அமைவாக, இப்பேரணி பொலன்னறுவை தீப உயன வளாகத்தில் நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/741dff02-7ab8-4b47-b906-23b924cb6ea8/26-6aa4e8d55399d.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T05:53:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓரினச்சேரிக்கையாளர் சர்ச்சைக்கு இடையே புது தோழியுடன் நெருக்கத்துடன் நடிகை மெளனி ராய்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/mouni-roy-with-her-new-girl-friend-doll-dox-dubai-1789192511"></link>
            <id>https://viduppu.com/article/mouni-roy-with-her-new-girl-friend-doll-dox-dubai-1789192511</id>
            <summary type="text">மெளனி ராய்நாகினி சீரியலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தவர் தான் நடிகை மெளனி ராய். சுராஜ் நம்பியார் என்பவரை திருமணம் செய்த சில ஆண்டுகளில் க...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மெளனி ராய்</h2><p>நாகினி சீரியலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தவர் தான் நடிகை மெளனி ராய். சுராஜ் நம்பியார் என்பவரை திருமணம் செய்த சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாக கூறி அறிக்கை வெளியிட்டார் மெளனி. </p><p>இதற்கு காரணம் திஷா பதானி உள்ளிட்ட நடிகைகளுடன் ஓரினச்சேர்க்கையாளராக இருந்து வந்தது தான் என்று கூறப்பட்டு வந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d49ad63-4f73-4c7a-94bf-8ad1ab0a5b79/26-6aa4e9448b1bf.webp' /></p><p> இந்நிலையில் தன்னுடைய தோழி ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார். </p><p>துபாய் தொழிலதிபரும், ஃபேஷன் இன்ஃப்ளூயன்சருமான டால் டாக்ஸ் என்று அழைக்கப்படும் தக்‌ஷிதா குமாருடன் தான் மெளனி ராய் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.</p><p> இருவரும் துபாய் சொகுசு கப்பலில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-12T05:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மாற்றப்பட்ட பிரபல நடிகை... யார் அவர் பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/character-change-in-pandian-stores-2-serial-1789190871"></link>
            <id>https://cineulagam.com/article/character-change-in-pandian-stores-2-serial-1789190871</id>
            <summary type="text">பாண்டியன் ஸ்டோர்ஸ் 2விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் மக்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது கதையில் தனது அம்மாவால் வீட்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பாண்டியன் ஸ்டோர்ஸ் 2</h2><p>விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் மக்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வருகிறது. </p><p>இப்போது கதையில் தனது அம்மாவால் வீட்டைவிட்டு வெளியே அனுப்பப்பட்ட மயில் போக இடமில்லாமல் கோவிலில் அமர்ந்துகொண்டிருந்த வரை பாண்டியன்-கோமதி அவரை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c9284e9-5924-4a65-ae7a-e24fe4438728/26-6aa4e62a5e571.webp' /></p><p> </p><p>கொஞ்ச நாள் அவர் இங்கே இருக்கட்டும் பிறகு என்ன செய்வது பார்ப்போம் என்கிறார். ஆனால் மயில் வந்ததில் இருந்து சரவணன் தனது அம்மா-அப்பா மீதே செம கோபத்தில் உள்ளார். </p><p>மயிலுடன் விவாகரத்து ஆன சந்தோஷத்தில் அஞ்சலியை திருமணம் செய்துகொள்கிறேன் என வாக்கு கொடுத்திருக்கிறார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b5c5760-d164-48ed-907e-38ea149e3b14/26-6aa4e62888c45.webp' /></p><h2>மாற்றம்</h2><p>
கதையில் சரவணன்-மயில் பிரச்சனை என்ன ஆகப்போகிறது என்றே தெரியவில்லை. மயில் வீட்டிற்கு வந்தது சரவணன் தம்பிகள் என யாருக்குமே பிடிக்கவில்லை. இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஒரு நடிகையின் மாற்றம் நடந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22b52393-4967-4a40-a078-467b30da1fe1/26-6aa4e62991803.webp' /></p><p> </p><p>சீரியலில் அஞ்சலியாக ஷதிகா நடித்து வந்தார், அவர் பிக்பாஸ் செல்லவே இப்போது நாயகி மாற்றம் நடந்துள்ளது. </p><p>அஞ்சலியாக இனி நடிப்பவர் யார் என்ற புகைப்படம் இதோ,&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DdK8SugKQVI/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DdK8SugKQVI/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DdK8SugKQVI/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Vijay TV Express (@vijaytvexpresss)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-12T05:42:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் எரிபொருள் விலையில் திடீர் அதிகரிப்பு : வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-sudden-fuel-price-hike-this-month-in-sl-cpc-1789188255"></link>
            <id>https://ibctamil.com/article/no-sudden-fuel-price-hike-this-month-in-sl-cpc-1789188255</id>
            <summary type="text">இலங்கையில் எரிபொருள் விலையில் திடீர் அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவது தொடர்பில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி, உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் எரிபொருள் விலையில் திடீர் அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவது தொடர்பில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.</p><p>அதன்படி, உலக சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்த போதிலும், இந்த மாதம் உள்ளூர் எரிபொருள் விலைகளில் திடீர் உயர்வு எதுவும் இருக்காது என்று அந்தக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.</p><p>அத்துடன், உலகளாவிய எரிபொருள் விலைகளுக்கு ஏற்ப உள்ளூர் எரிபொருள் விலைகளை மாற்றியமைப்பது குறித்து தற்போது ஆய்வு செய்து வருவதாக அக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஏ. ராஜகருணா தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பெட்ரோலின் விலையை குறைத்தல்</h2><p>இதேவேளை கடந்த 31ஆம் திகதி நள்ளிரவு முதல் பெட்ரோலின் விலையை குறைக்க இலங்கை பெட்ரொலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b5a0c95-380f-4891-9551-39691e47b733/26-6aa4e4513600a.webp' /></p><p>

அதன்படி, ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 414 ரூபாயிலிருந்து 15 ரூபாயால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 399 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>ஒரு லீற்றர் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 495 ரூபாயிலிருந்து 20 ரூபாயால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 475 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>எனினும், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் எந்த மாற்றமும் இருக்காது என கூட்டுத்தாபனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T05:36:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஃபாக்லாண்ட்ஸ் விவகாரத்தில் பிரித்தானியாவுக்கு உதவ முடியாது... பழிவாங்கிய ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/falklands-were-invaded-trump-hinted-1789191354"></link>
            <id>https://news.lankasri.com/article/falklands-were-invaded-trump-hinted-1789191354</id>
            <summary type="text">USA agrees to sell Black Hawk helicopters to Argentina: அர்ஜென்டினாவுக்கு பிளாக் ஹாக் ஹெலிகொப்டர்களை விற்க அமெரிக்கா ஒப்புக்கொண்டது.
ஃபாக்லாண்ட்ஸ் தீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>USA agrees to sell Black Hawk helicopters to Argentina: அர்ஜென்டினாவுக்கு பிளாக் ஹாக் ஹெலிகொப்டர்களை விற்க அமெரிக்கா ஒப்புக்கொண்டது.</p><p>
ஃபாக்லாண்ட்ஸ் தீவுகள் மீது படையெடுக்கப்பட்டால் பிரித்தானியாவுக்கு உதவ முடியாது என்று டொனால்ட் ட்ரம்ப் சூசகமாகத் தெரிவித்த சில வாரங்களில், அர்ஜென்டினா உடன் பல மில்லியன் பவுண்டுகளுக்கு ஆயுத ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>உதவப்போவதில்லை</h2><p>
</p><p>தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவிற்கு UH-60L பிளாக் ஹாக் ஹெலிகொப்டர்கள் மற்றும் அது தொடர்பான உபகரணங்களை, சுமார் 103 மில்லியன் பவுண்டுகள் மதிப்பில் ஆயுத விற்பனை செய்வதற்கான சாத்தியத்தை அமெரிக்க வெளிவிவகார அமைச்சகம் வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7da5297-89f2-4c9c-b5d3-c54e702061b2/26-6aa4e4bc97408.webp' /></p><p> அர்ஜென்டினா மீண்டும் ஃபாக்லாண்ட்ஸ் (Falklands) தீவுகளை ஆக்கிரமித்தால் பிரித்தானியாவிற்கு உதவப்போவதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி மறைமுகமாகக் குறிப்பிட்ட சில வாரங்களிலேயே, அந்த நாட்டிற்கு நான்கு இராணுவ ஹெலிகொப்டர்களை வழங்கும் இந்த விற்பனை ஒப்பந்தம் வெளியாகியுள்ளது. </p><p>ஃபாக்லாண்ட்ஸ் விவகாரத்தில் அமெரிக்கா பாரம்பரியமாக நடுநிலை வகித்து வந்துள்ளது; இருப்பினும், பிரித்தானியாவின் கூடுதல் ராணுவ ஒத்துழைப்பைப் பெறுவதற்கான ஒரு அழுத்த உத்தியாகவே இது பார்க்கப்பட்ட நிலையில், அந்த நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்வது குறித்து ஜனாதிபதி ட்ரம்ப் அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார்.</p><p></p><p> ஈரான் விவகாரத்தில் தாம் தனித்துவிடப்பட்டதை மறக்காத ட்ரம்ப், பிரித்தானியா சிறப்பாகச் செயல்படவில்லை என்றும், ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் உதவத் தவறிவிட்டது என்றும் கிண்டலாகக் குறிப்பிட்டார். </p><p>மிக சமீபத்தில், மற்றொரு படையெடுப்பு ஏற்பட்டால் இங்கிலாந்துக்கு உதவுவீர்களா என்று கேள்விக்கு, ​​1982 ஃபாக்லாண்ட்ஸ் போர் தனக்குத் தெளிவாக நினைவிருக்கிறது என்று ட்ரம்ப் பதிலளித்துள்ளார். </p><p>அந்த முதல் போர் நடந்தபோது நான் அங்கே இருந்தேன்; அது வெகு காலத்திற்கு முன்பு நடந்தது... இங்கிலாந்து மிகச் சிறப்பாகச் செயல்பட்டது, மிகக் குறுகிய காலத்திலேயே அதை மீட்டெடுத்தீர்கள். ஆனால், அது வெகு காலம் முன்பு.</p><h2>பாதுகாப்பை மேம்படுத்த</h2><p> </p><p>தற்போது பிரித்தானியா சிறப்பாகச் செயல்படவில்லை. ஹார்முஸ் நீரிணை வழியாகத்தான் உங்கள் நாட்டின் கணிசமான அளவு எண்ணெய் கிடைக்கிறது என்பதையும், எனக்கு உதவ நீங்கள் அங்கு இருக்கவில்லை என்பதையும் மறந்துவிடாதீர்கள் என்றார். </p><p>இதனிடையே, அர்ஜென்டினாவுடனான 'பிளாக் ஹாக்' (Black Hawk) ஒப்பந்தத்தை அறிவித்த அமெரிக்க அதிகாரி ஒருவர், இந்த விற்பனை அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை மற்றும் தேசியப் பாதுகாப்பு இலக்குகளுக்கு ஆதரவாக அமையும் என்று கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a74c9f72-f172-431d-a4e5-1dd83ed960e0/26-6aa4e4bd4b60f.webp' /></p><p> </p><p>மேலும், தென் அமெரிக்காவில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான ஒரு சக்தியாகத் திகழும், நேட்டோ (NATO) அமைப்பில் இடம்பெறாத ஒரு முக்கிய கூட்டாளியின் பாதுகாப்பை மேம்படுத்துதலே இதன் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>சுமார் 320 முதல் 370 மைல்கள் வரை பறக்கும் திறன் கொண்ட 'பிளாக் ஹாக்' ஹெலிகொப்டர்கள் ஏறக்குறைய அரை நூற்றாண்டாகப் பயன்பாட்டில் உள்ளன; இவை சுமார் 11 வீரர்களை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டவை.</p><p>அவற்றில் துணை பீரங்கிகளைப் பொருத்துவதன் மூலம் அவற்றின் பயண வரம்பை சுமார் 950 மைல்கள் வரை அதிகரிக்க முடியும், ஆனால் அவை அரிதாகவே ஆயுதங்களைக் கொண்டிருப்பதால், ஃபாக்லாண்ட்ஸைப் பாதுகாக்கும் RAF டைஃபூன் போர் விமானங்களுக்கு எளிதில் இலக்காகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0f1ed65-5d7d-4458-baef-23d60c0001ae/26-6aa4e4bdf3812.webp' /></p><p> இருப்பினும், ஃபாக்லாண்ட் தீவுகளுக்கு அருகில் அமைந்துள்ள 'சீ லயன்' (Sea Lion) எண்ணெய் வயலில் துளையிடும் எண்ணெய் நிறுவனங்கள் மீது அண்மையில்தான் தடைகளை அறிவித்திருந்த அர்ஜென்டினா ஜனாதிபதி ஜேவியர் மிலெய்-க்கு, இந்த ஹெலிகொப்டர்களின் வருகை ஒரு ஊக்கமளிக்கும் நிகழ்வாக அமைந்துள்ளது. </p><p>கடந்த வாரம் ஒலிபரப்பு ஒன்றில் பேசிய மிலெய், தற்போதைய சூழலில், [ஃபாக்லாண்ட் தீவுகள் மீதான] நமது உரிமைக்கோரிக்கைக்குச் சாதகமான காற்று வீசிக் கொண்டிருக்கிறது என்றார். </p><p>இதனிடையே, ஜனாதிபதி மிலெயின் கருத்துக்குப் பதிலளித்த பிரதமர் ஆன்டி பர்னாம், ஃபாக்லாண்ட் தீவுகளைப் பாதுகாப்பதில் தான் உறுதியுடன் செயல்படுவேன் என்று வலியுறுத்தினார்.</p>]]></content>
            <updated>2026-09-12T05:32:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேராதனை பல்கலையில் ஏற்பட்ட துயரம்! மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/peradeniya-university-student-falls-from-floor-1789190212"></link>
            <id>https://ibctamil.com/article/peradeniya-university-student-falls-from-floor-1789190212</id>
            <summary type="text">
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், விடுதிக் கட்டடத்தின் மேல் தளத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளதாக தகவல...</summary>
            <content type="html"><![CDATA[<p>
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், விடுதிக் கட்டடத்தின் மேல் தளத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
குறித்த சம்பவமானது, இன்று(12) காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி</h2><p>
</p><p>
இந்நிலையில், பலத்த காயமடைந்த மாணவர் உடனடியாக பேராதனைப் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e3df3c8-4f10-4bb4-af8b-c002c7999c9c/26-6aa4e3a0a0a70.webp' /></p><p>

இச்சம்பவம் தொடர்பாக பேராதனைப் காவல்துறையினரும் பல்கலைக்கழக நிர்வாகமும் இணைந்து விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T05:31:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டிற்கு முன்னால் அரங்கேறிய படுகொலை ; வசமாக பிடிபட்ட இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/murder-unfolds-right-outside-the-home-1789191013"></link>
            <id>https://jvpnews.com/article/murder-unfolds-right-outside-the-home-1789191013</id>
            <summary type="text">மஹியங்கனை, அலுக்கெட்டியாவ பகுதியில் வீடொன்றிற்கு முன்னால் நபரொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முதன்மை...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மஹியங்கனை, அலுக்கெட்டியாவ பகுதியில் வீடொன்றிற்கு முன்னால் நபரொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முதன்மைச் சந்தேகநபரைப் பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை (11) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">

10 ஆம் திகதி இடம்பெற்ற இக் குற்றச் சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b55e44b-f8a3-43b9-84d2-11ecb39cb492/26-6aa4e366d6ac8.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">

மாபாகடவெவ பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இக் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபராகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
10 ஆம் திகதி அலுக்கெட்டியாவ பகுதியில் வீடொன்றிற்கு முன்னால் வைத்து நபரைத் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்துவிட்டுச் சந்தேகநபர் தப்பியோடியிருந்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
மேலும், இச் சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-12T05:30:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாலமன் பாப்பையா உடலுக்கு முழு அரசு மரியாதை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/state-honors-for-solomon-pappaiahs-mortal-1789190447"></link>
            <id>https://ibctamilnadu.com/article/state-honors-for-solomon-pappaiahs-mortal-1789190447</id>
            <summary type="text">முழு அரசு மரியாதையுடன் தமிழறிஞர் சாலமன் பாப்பையா உடல் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா...</summary>
            <content type="html"><![CDATA[<p>முழு அரசு மரியாதையுடன் தமிழறிஞர் சாலமன் பாப்பையா உடல் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா வயது மூப்பின் காரணமாக நேற்று காலமானார்.
</p><p>
இனிய தமிழில் பாமர மக்களுக்கும் புரியும் வண்ணம் பேசும் வல்லமை படைத்தவர் சாலமன் பாப்பையா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98a2bb5a-f7f2-4d51-aec3-8b71a89657b3/26-6aa4e18828a2f.webp' /><br></p><p>
</p><p>
தமிழ் இலக்கியங்கள் குறித்து ஆற்றிய உரைகளால் பிரபலமானவர், இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p><p>

தமிழக அரசு சார்பில் அமைச்சர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் சாலமன் பாப்பையாக உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
</p><p>
இந்நிலையில் அரவது எக்ஸ் தள பக்கத்தில், சாலமன் பாப்பையா உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a0277df-5a80-4760-afd1-64b5e33cf2a6/26-6aa4e188d19db.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-12T05:22:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அரசியல் தலைவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/political-leaders-stage-hunger-strike-in-jaffna-1789190262"></link>
            <id>https://jvpnews.com/article/political-leaders-stage-hunger-strike-in-jaffna-1789190262</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கத்திற்கு எதிராக இன்று காலை (12) சாவகச்சேரியில் மாபெரும் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கத்திற்கு எதிராக இன்று காலை (12) சாவகச்சேரியில் மாபெரும் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p> 

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6835ed0-58b6-47bb-8d74-1e4e2a7cfa91/26-6aa4e0782943c.webp' /></p><h2>போராட்டம்</h2><p> </p><p>

அநுர அரசு பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு எந்தவிதமான முன்னேற்றகரமான செயற்பாடுகளை செயற்படுத்தவில்லை என்கின்ற அடிப்படையில் இந்த போராட்டம் சாவகச்சேரி பேருந்து நிலைய வளாகத்தில் முன்னெடுக்கப்படுகிறது. </p><p>

அத்துடன் அரசியல் கைதிகளுடைய விடுதலை, கையகப்படுத்தியிருக்கக்கூடிய காணிகளை விடுவித்தல், செம்மணி புதைகுழிக்கான நீதி கோரல், மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்தல் உள்ளிட்ட பல விடயங்களை முன்னிறுத்தியும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> 

இந்த போராட்டத்தில் தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T05:18:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழைய போகம்பர சிறைக்கு மாற்றப்படும் கைதிகள் - அதிகாரிகள் பற்றாக்குறையால் அதிரடி தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prisoners-transferred-to-the-old-bogambara-prison-1789189984"></link>
            <id>https://tamilwin.com/article/prisoners-transferred-to-the-old-bogambara-prison-1789189984</id>
            <summary type="text">கைதிகள் அடுத்த வாரம் பழைய போகம்பர சிறைக்கு மாற்றப்படுவார்கள் என இலங்கைச் சிறைச்சாலைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

சிறைச்சாலையின் புனரமைப்புப் பணிகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைதிகள் அடுத்த வாரம் பழைய போகம்பர சிறைக்கு மாற்றப்படுவார்கள் என இலங்கைச் சிறைச்சாலைத் திணைக்களம் அறிவித்துள்ளது. </p><p>

சிறைச்சாலையின் புனரமைப்புப் பணிகள் தற்போது நிறைவடைந்து வருவதாக சிறைத்துறை ஆணையாளர் எஸ்.கே. பள்ளேதென்ன தெரிவித்துள்ளார். </p><h2>


நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்க நடவடிக்கை</h2><p>
இதற்கமைய, கைதிகள் உடனடியாக சிறைக்கு மாற்றப்படுவார்கள் என்றும், இவ்வாறு மாற்றப்படும் கைதிகளில் பெரும்பாலோர் நீர்கொழும்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் மற்ற சிறைகளுக்கு மாற்றப்பட்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3831c7b4-256c-4292-a35f-8073a928fdc2/26-6aa4dfe6e43b0.webp' /></p><p> 


இதற்கிடையில், பழைய போகம்பர சிறையில் பணிகளை மேற்கொள்வதற்கு சிறை அதிகாரிகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதாகவும், இதற்குத் தீர்வாக ஓய்வுபெற்ற சிறை அதிகாரிகளை மீண்டும் பணியில் அமர்த்தத் திட்டங்கள் உள்ளதாகவும் எஸ்.கே. பள்ளேதென்ன தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T05:17:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது போர் தொடுத்ததற்கு வருத்தமில்லை ; சர்ச்சையை கிளப்பும் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-no-regret-over-iran-war-1789189454"></link>
            <id>https://canadamirror.com/article/trump-no-regret-over-iran-war-1789189454</id>
            <summary type="text">அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தலில் எத்தகைய அரசியல் தாக்கம் ஏற்பட்டாலும், ஈரான் மீது போர் தொடுத்த முடிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தலில் எத்தகைய அரசியல் தாக்கம் ஏற்பட்டாலும், ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு தாம் சிறிதும் வருந்தவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>


அமெரிக்க செய்தித் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின்போது இதனைத் தெரிவித்த அவர்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6a95889-2cc5-4765-b681-7c94a08e84d4/26-6aa4dd4fb288e.webp' /></p><p> </p><p>“வருத்தம் என்ற சொல்லுடன் எனக்கு உடன்பாடில்லை. மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் இதே நடவடிக்கையையே மேற்கொள்வேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>



ஈரான் மீதான இராணுவ நடவடிக்கையால் தமது ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்துள்ளதாகவும் சோர்வடைந்துள்ளதாகவும் கூறப்படுவதை நிராகரித்த ட்ரம்ப், ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுத்து நிறுத்தியதற்காக தமது ஆதரவாளர்கள் பெருமிதம் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
</p><p>


இடைக்காலத் தேர்தல் முடிவடைந்தவுடன் ஈரான் மீதான போர் முடிவுக்கு வந்துவிடும் என்றும், தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்த ஈரான் முயற்சிப்பதாகவும் ட்ரம்ப் கூறி வருகிறார்.
</p><p>


எனினும், போரின் காரணமாக மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் அதிகரித்துள்ளமை ஆளும் குடியரசுக் கட்சிக்கு தேர்தல் களத்தில் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது.</p><p>



இந்நிலையில், குடியரசுக் கட்சி நாடாளுமன்றப் பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொண்டால், 18 வயதைப் பூர்த்தி செய்த அனைத்து அமெரிக்கர்களுக்கும் 5,000 அமெரிக்க டொலர்களை வழங்குவதாக ட்ரம்ப் வாக்குறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T05:04:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[2 நாள் முடிவில் நடிகர் கார்த்தியின் சர்தார் 2 திரைப்படம் செய்துள்ள மொத்த வசூல்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actor-karthi-sardar-2-movie-box-office-details-1789187152"></link>
            <id>https://cineulagam.com/article/actor-karthi-sardar-2-movie-box-office-details-1789187152</id>
            <summary type="text">சர்தார் 2பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான படம் சர்தார். இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது, பாக்ஸ் ஆபிஸிலும் கல...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சர்தார் 2</h2><p>பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான படம் சர்தார்.</p><p> இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது, பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கியது. முதல் பாக வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் தயாராகி கடந்த செப்டம்பர் 10ம் தேதி வெளியாகி இருந்தது. </p><p>இந்த இரண்டாவது பாகத்தில் கார்த்தியுடன் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb3773b8-30f6-4bcd-b9f5-b72404c5329b/26-6aa4d6779a10b.webp' /></p><h2>பாக்ஸ் ஆபிஸ்</h2><p>
சர்தார் 2 படத்திற்கான புரொமோஷன் எல்லாம் பக்காவாக நடந்தது, சூர்யா, கவின் என எல்லாம் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு படத்தை புரொமோட் செய்தார்கள்.
</p><p>உலக அளவில் இரண்டு நாளில் இப்படம் ரூ. 9 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த வாரம் விடுமறை நாட்கள் வேறு அதிகம் இருப்பதால் கண்டிப்பாக படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UVzewCmqj6U" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-12T05:00:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருவி விஜய் ஜம்ப்பையே தவிடுபொடியாக்கிய ஹாலிவுட் நடிகையின் உலகமகா ஜம்ப்!! வீடியோ..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/xena-warrior-princess-series-beats-vijays-jump-1789189439"></link>
            <id>https://viduppu.com/article/xena-warrior-princess-series-beats-vijays-jump-1789189439</id>
            <summary type="text">குருவி விஜய் ஜம்ப்விஜய், திரிஷா, விவேக் நடித்த குருவி படத்தை தயாரித்து தான் உதயநிதி ஸ்டாலின் சினிமாவுக்குள் எண்ட்ரி கொடுத்தார். அப்படத்தில் விஜய் ஜம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>குருவி விஜய் ஜம்ப்</h2><p>விஜய், திரிஷா, விவேக் நடித்த குருவி படத்தை தயாரித்து தான் உதயநிதி ஸ்டாலின் சினிமாவுக்குள் எண்ட்ரி கொடுத்தார். அப்படத்தில் விஜய் ஜம்ப் அடிக்கும் காட்சிதான் படத்தின் பிளாப்பிற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. </p><p>சினிமாவில் லிபெர்டி என்ற ஒரு வார்த்தை பல படங்களுக்கு கைக்கொடுக்கும். நம்பவே முடியாத ஸ்டண்ட் காட்சிகளில் தொடங்கி சில லாஜிக் மீறல்களுக்கு அது முட்டுக்கொடுக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d687496-a70e-41cf-9dcb-13a3be59dc96/26-6aa4dd417bcf9.webp' /></p><p> குருவி படத்திலும் சினிமா லிபர்டியை கொஞ்சம் ஓவராகவே அப்படத்தின் இயக்குநர் தரணி பயன்படுத்தினார். அந்த காலத்திலேயே அது மொரட்டு ட்ரோல் மெட்டீரியலாக மாறியது.</p><h2>ஹாலிவுட் நடிகையின் உலகமகா ஜம்ப்</h2><p> ஆனால் அதைவிட ஹாலிவுட் படம் ஒன்றுக்கு அனைத்து ஜம்ப் காட்சிகளுக்கும் இதுதான் டாப் என்பதுபோல் ஒரு ஜம்ப் காட்சி இடம்பெற்று தற்போது குருவி விஜய் எல்லாம் குட்டி புசுக்கா என்பதுபோல் ட்ரோல் மெட்டீரியலாக மாறியிருக்கிறது.</p><p> 1995 - 2001 ஒளிப்பரப்பான Xena: Warrior Princess என்ற தொடரில் ஹாலிவுட் நடிகை லெஸி லாலெஸ் காட்டுக்குள் ஒரு மரத்திலிருந்து ஜம்ப் அடித்து கடலில் நிற்கும் கப்பலுக்கு சென்று விழும் காட்சி தான் உலகமகா ஜம்ப் என்று ட்ரோலாகியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T05:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று பிரம்மாண்ட மக்கள் பேரணிகள் - நேருக்கு நேர் மோதும் அரசு மற்றும் எதிர்க்கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-and-opposition-massive-public-rallies-today-1789187280"></link>
            <id>https://ibctamil.com/article/govt-and-opposition-massive-public-rallies-today-1789187280</id>
            <summary type="text">பொலன்னறுவை மற்றும் அநுராதபுரத்தில் ஒரே நேரத்தில் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளின் இரு பிரதான அரசியல் பேரணிகள் நடைபெறவுள்ளன.“அரசாங்கத்திற்கு இரண்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலன்னறுவை மற்றும் அநுராதபுரத்தில் ஒரே நேரத்தில் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளின் இரு பிரதான அரசியல் பேரணிகள் நடைபெறவுள்ளன.</p><p>“அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் – நாட்டுக்கு நன்மை” என்ற தொனிப்பொருளில், ஜனாதிபதி தலைமையில் இன்று (12) மற்றுமொரு மக்கள் பேரணி நடைபெறவுள்ளது.</p><p>
பொலன்னறுவை திம்பிரியங்கடுவ தீப உயன வளாகத்தில் இந்த மக்கள் பேரணி நடைபெறவுள்ளது.</p><p></p><h2>அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு</h2><p>இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணி இன்று பிற்பகல் 2 மணிக்கு அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f783b831-e4db-444f-8f38-1db6e2ba00f8/26-6aa4d78766776.webp' /></p><p>



கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>



இந்தப் பேரணியில் பொதுஜன பெரமுனவிலிருந்து விலகிச் சென்ற பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உள்ளிட்டோர் கலந்துகொள்வதுடன், மேடையில் உரையாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இவ்வாறு வடமத்திய மாகாணத்தின் பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய இரு பிரதான மாவட்டங்களில் அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் ஒரே நாளில் தனித்தனியாக பேரணிகளை நடத்தவுள்ளமை அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T04:57:17+00:00</updated>
        </entry>
    </feed>
