<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-30T19:32:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி! இளைஞனுக்கு 24 வருட சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-sentenced-to-24-years-in-prison-1788115478"></link>
            <id>https://ibctamil.com/article/man-sentenced-to-24-years-in-prison-1788115478</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் 14 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த இளைஞனுக்கு 24
வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு 14 வயது சிறும...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் 14 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த இளைஞனுக்கு 24
வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த 2021ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகிய குற்றச்சாட்டில் இளைஞன் கைது செய்யப்பட்டு ,
சட்டமா அதிபர் திணைக்களத்தால் , யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு , விசாரணைகள் இடம்பெறு வந்தன.</p><p></p><h2>24 வருட சிறைத்தண்டனை</h2><p>
</p><p>
இந்நிலையில் வெள்ளிக்கிழமை குறித்த வழக்கு தீர்ப்புக்காக அழைக்கப்பட்ட போது ,
எதிரியான இளைஞனை குற்றவாளியாக கண்ட மன்று , இளைஞனுக்கு 24 வருட சிறைத்தண்டனை
விதித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4925116-dffc-4d24-bf64-b3ff12804a4b/26-6a947a18c3a66.webp' /></p><p>
</p><p>
அத்தோடு, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 இலட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க
வேண்டும் எனவும், நஷ்ட ஈட்டை வழங்க தவறின் மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என மன்று தீர்ப்பளித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T19:30:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் விடுமுறை நாளில் பணிக்கு அழைக்கப்பட்ட பெண் அரச உத்தியோகத்தருக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govert-official-dies-of-electrocution-in-jaffna-1788114248"></link>
            <id>https://ibctamil.com/article/govert-official-dies-of-electrocution-in-jaffna-1788114248</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி
உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான இன்று (30)ஞாயிற்றுக்கிழமை அலுவலகப் பணிக்காக...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி
உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான இன்று (30)ஞாயிற்றுக்கிழமை அலுவலகப் பணிக்காக
அழைக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பற்ற மின் கசிவில் சிக்கி உயிரிழந்த
துயரச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த துயர சம்பவத்தில், உடுவில் பிரதேச செயலகத்தின் சுதேச மருத்துவ
அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்த, இரண்டு பிள்ளைகளின் தாயாரான
நிசாந்தன் சிந்துப்பிரியா (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார்.</p><h2>அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு</h2><p>சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
</p><p>அரச அலுவலகங்களுக்கிடையில் நடைபெறும் உற்பத்தித் திறன் போட்டியில்
பங்கேற்பதற்காக உடுவில் பிரதேச செயலகமும் அலுவலகத்தை அழகுபடுத்துதல் மற்றும்
ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d64fb44-0a17-488d-b6f1-5c8465320f3c/26-6a94754a862e4.webp' /></p><p>
</p><p>நாளை திங்கட்கிழமை போட்டிக்கான மதிப்பீடுகள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட
நிலையில், விடுமுறை நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை அலுவலகத்திற்கு வருமாறு அங்கு
கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு வாட்ஸ்அப் ஊடாக அழைப்பு
விடுக்கப்பட்டிருந்ததாகத் தெரியவருகிறது.</p><h2>மின்சாரம் தாக்கியிருக்கலாம்&nbsp;</h2><p>
இதனையடுத்து அலுவலகத்திற்குச் சென்ற குறித்த பெண் உத்தியோகத்தர், அங்கிருந்த
மூலிகைத் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார்.
இதன்போது அப்பகுதியில் காணப்பட்ட பாதுகாப்பற்ற மின் கசிவு நீருடன் தொடர்புபட்ட
நிலையில், அவர் மீது மின்சாரம் தாக்கியிருக்கலாம் என ஆரம்பகட்டத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fcc98e5-3e97-4e05-b891-546ac63a3d55/26-6a94754b37b70.webp' /></p><p>
மின்சாரம் தாக்கிய நிலையில் அவர் உடனடியாக மீட்கப்பட்டு தெல்லிப்பளை ஆதார
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்படுவதற்கு முன்னரே அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.</p><p></p><h2>ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ள&nbsp;மரணம்</h2><p>
</p><p>விடுமுறை நாளிலும் அலுவலகப் பணிக்காகச் சென்ற நிலையில், இரண்டு பிள்ளைகளின்
தாயான இளம் பெண் உத்தியோகத்தர் ஒருவர் இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளமை
அவரது குடும்பத்தினரையும், சக உத்தியோகத்தர்களையும் ஆழ்ந்த துயரத்தில்
ஆழ்த்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ebb4c12-0152-410c-9c29-1c965e86abfb/26-6a94754bdd093.webp' /></p><p>
</p><p>

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர். பாதுகாப்பற்ற மின் இணைப்பு அல்லது மின் கசிவே இந்த
உயிரிழப்புக்குக் காரணமா என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T19:05:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசிற்கு கிடைத்த புலனாய்வுத் தகவல்! தேடப்பட்டு வரும் அர்ஜுன் மகேந்திரன் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/arjuna-mahendran-denies-changing-name-1788106187"></link>
            <id>https://tamilwin.com/article/arjuna-mahendran-denies-changing-name-1788106187</id>
            <summary type="text">&amp;nbsp;அமைச்சர் ஆனந்த விஜேபால பொய்யுரைப்பதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி வழக்கு தொடர்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமைச்சர் ஆனந்த விஜேபால பொய்யுரைப்பதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
</p><p>மத்திய வங்கி பிணைமுறி வழக்கு தொடர்பில் தேடப்பட்டு வரும் நிலையில் அவர் இந்த கருத்தினை ஆங்கில ஊடகமொன்றுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
தான் சட்டப்பூர்வமாக பெயரை மாற்றிக்கொண்டதாக அரசாங்க அமைச்சர் வெளியிட்ட கூற்றை "முற்றிலும் பொய்" என நிராகரித்து, அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்கு நேரடி சவால் விடுத்துள்ளார்.</p><h2>புலனாய்வுத் தகவல்..&nbsp;</h2><p>
</p><p>ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தன் மீதான இந்த குற்றச்சாட்டை உறுதியாக மறுத்துள்ள அவர், அந்த மறுப்பு அறிக்கையை வெளியிடுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3f239d7-e8c4-4b65-b228-f2bad936715b/26-6a9455ccc92ab.webp' /></p><p>
</p><p>மத்திய வங்கி பிணைமுறி வழக்கில் தேடப்படும் அர்ஜுன் மகேந்திரன், 'ஹர்ஜன் அலெக்சாண்டர்' (Harjan Alexander) என தனது பெயரை மாற்றியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அண்மையில் தெரிவித்திருந்தார்.
</p><p>நான் பெயரை மாற்றியுள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் பகிரங்கக் கூற்று வெளியிட்டுள்ளமை எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என்பதை உங்களுக்கும் உங்கள் வாசகர்களுக்கும் அறியத் தருகிறேன்" என மகேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>சிங்கப்பூர் முகவரியைக் குறிப்பிட்டுள்ள அவர், "லக்ஷ்மன் அர்ஜுன் மகேந்திரன்" (Lakshman Arjuna Mahendran) என்ற தனது அதிகாரப்பூர்வ பெயரிலேயே இக்கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார் என குறித்த ஆங்கில ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>அரசாங்கத்திற்கு பகிரங்க சவால்&nbsp;</h2><p>
</p><p>2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி வழக்கு தொடர்பாக இலங்கை அதிகாரிகளால் தேடப்பட்டு வரும் அர்ஜுன் மகேந்திரனை, சிங்கப்பூரிலிருந்து நாட்டிற்கு அழைத்து வருவதில் சட்ட ரீதியான தடைகள் நிலவி வருகின்றன.</p><p>
</p><p>இந்த நிலையில், அவரை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான மாற்று வழிகளை இலங்கை அதிகாரிகள் ஆராய்ந்து வரும் வேளையில், அவரது அடையாளத்தை மையப்படுத்தி அரசாங்கம் முன்வைத்த கூற்றை அர்ஜுன் மகேந்திரன் நேரடியாக மறுத்துள்ளார்.
</p><p>சிங்கப்பூரில் வசித்து வரும் அர்ஜூன் மகேந்திரன் அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் வகையில் அமைச்சரின் கருத்தை நிராகரித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
இந்த விவகாரம் தொடர்பில் ஆளும் தரப்பின் நிலைப்பாடு எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>
இந்த மறுப்பு அறிக்கையை அர்ஜூன் மகேந்திரன் வெளியிட்டாரா என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் எதனையும் குறித்த ஊடகம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T19:00:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா கலந்த லேகியம் விற்பனை! சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrested-for-selling-cannabis-mixed-legium-1788114085"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrested-for-selling-cannabis-mixed-legium-1788114085</id>
            <summary type="text">வவுனியா நகரப்பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு கஞ்சா கலந்த
லேகியம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, வவுனியா காவல்துறையினர் சந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா நகரப்பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு கஞ்சா கலந்த
லேகியம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, வவுனியா காவல்துறையினர் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.</p><p>
குறித்த விடயம் தொடர்பாக வவுனியா காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்
கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள குறித்த லேகியம் உற்பத்தி செய்யும் நிலையம்
ஒன்றை காவல்துறையினர் இன்று முற்றுகையிட்டதுடன் அங்கு சோதனை நடவடிக்கைகளை
மேற்கொண்டுள்ளனர்.</p><p>
இதன்போது கஞ்சா கலந்ததாக சந்தேகிக்கப்படும் 400 ற்கும் மேற்ப்பட்ட லேகியப்
பக்கற்றுகள் அங்கு கைப்பற்றப்பட்டதுடன் 20 வயதான இளைஞர் ஒருவர்
கைதுசெய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>இலக்காக்கப்பட்டுள்ள மாணவர்கள்&nbsp;</h2><p>இந்த லேகியங்கள் வவுனியா நகரை அண்டிய பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு
விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e87a9d6-30d6-4aa1-9a4e-8023861192be/26-6a9476f985d08.webp' />&nbsp;</p><p>
</p><p>இதேவேளை, குறித்த லேகிய உற்பத்தி நிலையத்தின் உரிமையாளரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T19:00:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெளிவான போர்த் திட்டங்களை சமர்ப்பிக்க உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ukraine-defense-minister-vows-submit-war-plans-1788113832"></link>
            <id>https://tamilwin.com/article/ukraine-defense-minister-vows-submit-war-plans-1788113832</id>
            <summary type="text">உக்ரைனின் 27 பில்லியன் டொலர் இராணுவ பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கும்,
ஐரோப்பிய ஒன்றியத்தின் கடன் நிதியை முன்னதாகவே பெற்றுக்கொள்வதற்கும் ஏதுவாக
...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் 27 பில்லியன் டொலர் இராணுவ பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கும்,
ஐரோப்பிய ஒன்றியத்தின் கடன் நிதியை முன்னதாகவே பெற்றுக்கொள்வதற்கும் ஏதுவாக
சர்வதேச பங்காளிகளுக்கு தெளிவான போர் மூலோபாய திட்டங்களை சமர்ப்பிக்கவுள்ளதாக
உக்ரைனின் புதிய பாதுகாப்பு அமைச்சர் ஏவ்ஹேனி க்மாரா தெரிவித்துள்ளார்.
</p><p>
ரஷ்யாவுடனான போர் ஐந்தாவது ஆண்டாக தொடரும் நிலையில், உக்ரைன் சர்வதேச
நிதியுதவிகளிலேயே பெருமளவில் தங்கியுள்ளது.</p><h2>உக்ரைனின் கோரிக்கை</h2><p>
</p><p>
அந்தவகையில் ஐரோப்பிய ஒன்றியம் 2027ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்கு 90
பில்லியன் யூரோ நிதியுதவியை வழங்க உறுதியளித்துள்ள போதிலும், அடுத்த
ஆண்டிற்காக திட்டமிடப்பட்டுள்ள 45 பில்லியன் யூரோ கடனின் ஒரு பகுதியை விரைவாக
விடுவிக்குமாறு உக்ரைன் கோரிக்கை விடுக்கவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2378a0fb-08d8-471e-aa06-dc805cac2cea/26-6a94752fae018.webp' /></p><p>
</p><p>
பாதுகாப்புப் படைகள் எதிர்கொள்ளும் சவால்கள், தேவையான திட்டங்கள் மற்றும்
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அடைய எதிர்பார்க்கும் இலக்குகள் தொடர்பான
தெளிவான பார்வையை பங்காளிகளுக்கு முன்வைக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர்
குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அத்துடன் புதிய இராணுவ தலைமை தளபதி மைக்கைலோ டிராபதியுடன் இணைந்து உக்ரைனின்
பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
ரஷ்யாவின் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ட்ரோன் வீச்சுகளுக்கு
மத்தியில், மனிதவள பற்றாக்குறை மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளின் தேவையை
நிவர்த்தி செய்வதுடன், உக்ரைனிய படைவீரர்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கான
சரியான தீர்மானங்களை எடுப்பதே தமது முதன்மை நோக்கம் என்றும் அமைச்சர்
வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T18:24:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மௌனம் கலைத்த அர்ஜுன மகேந்திரன்! அரசாங்கம் போலித் தகவலை வெளியிட்டுள்ளதாக குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/arjuna-mahendran-denies-changing-name-1788111871"></link>
            <id>https://ibctamil.com/article/arjuna-mahendran-denies-changing-name-1788111871</id>
            <summary type="text">

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தனது பெயரை சட்டப்பூர்வமாக மாற்றிக்கொண்டதாக வெளியாகும் செய்திகளை முற்றிலும் மறுத்துள்ளார்.அண்மையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தனது பெயரை சட்டப்பூர்வமாக மாற்றிக்கொண்டதாக வெளியாகும் செய்திகளை முற்றிலும் மறுத்துள்ளார்.</p><p>அண்மையில்&nbsp; பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, அர்ஜுன மகேந்திரன் தனது பெயரை "ஹர்ஜன் அலெக்சாண்டர்" என மாற்றிக்கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.</p><p>

2015ஆம் ஆண்டு மத்திய வங்கிபிணைமுறி பத்திர மோசடி தொடர்பாகத் தேடப்பட்டு வரும் அவரை, சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்துவதில் சிக்கல்கள் நிலவும் சூழலில், மாற்று சட்ட வழிகளை ஆராயும் நடவடிக்கையாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கிடைத்தகவல் அடிப்படையில் அமைச்சர் இந்தத் தகவலைக் குறிப்பிட்டிருந்தார்.</p><p></p><h2>சிங்கப்பூர் முகவரியுடன் பெயர்</h2><p>

இந்நிலையில், ஊடக நிறுவனமொன்றுக்கு ஓகஸ்ட் 30ஆம் திகதியிட்டு எழுதியுள்ள கடிதத்தில் இந்த குற்றச்சாட்டைப் பொய் என மகேந்திரன் நிராகரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddd6e3d9-0ddd-45f2-b02a-1b20ba2892cd/26-6a946d69d54f9.webp' /></p><p>
</p><p>
 "லக்ஷ்மன் அர்ஜுன மகேந்திரன்" என்ற தனது சொந்தப் பெயரிலேயே கையொப்பமிட்டு சிங்கப்பூர் முகவரியுடன் அவர் அனுப்பியுள்ள அக்கடிதத்தில், தான் பெயரை மாற்றியதாகக் கூறப்படும் செய்தி முற்றிலும் உண்மையற்றது எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p>

இந்நிலையில், அவரது பெயர் மாற்றம் குறித்து அரசாங்க அதிகாரிகளின் கூற்றுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T18:15:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நாசாவின் அதிநவீன ரோமன் தொலைநோக்கி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nasa-state-art-roman-telescope-launched-into-space-1788112203"></link>
            <id>https://tamilwin.com/article/nasa-state-art-roman-telescope-launched-into-space-1788112203</id>
            <summary type="text">நாசா அமைப்பின் புதிய முதன்மை விண்வெளித் தொலைநோக்கியான நான்சி கிரேஸ் ரோமன் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ள கென்னடி விண்வெளி
மையத்திலிருந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாசா அமைப்பின் புதிய முதன்மை விண்வெளித் தொலைநோக்கியான நான்சி கிரேஸ் ரோமன் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ள கென்னடி விண்வெளி
மையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ஹெவி ரொக்கெட் மூலம்
ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.</p><p>

சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன
தொலைநோக்கி, பிரபஞ்சத்தின் இரகசியங்களான இருண்ட ஆற்றல், இருண்ட பருப்பொருள்
மற்றும் புதிய கிரகங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக
வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><h2>சுற்றுவட்டப் பாதை</h2><p>
</p><p>
புவியிலிருந்து சுமார் 16 இலட்சம் கிலோமீற்றர் தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச்
பொயின்ட் 2 எனும் சுற்றுவட்டப் பாதையை நோக்கி இது பயணிக்கவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a4278ce-f323-42a4-84c7-9d64f493c781/26-6a947118b6143.webp' /></p><p>

ஹப்பிள் மற்றும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கிகளின் ஆற்றலை விடவும் அதிக பரந்த
பார்வைத்திறன் கொண்ட இந்தத் தொலைநோக்கி, பிரபஞ்சத்தின் விரிவான முப்பரிமாண
வரைபடத்தை (3D Map) உருவாக்கவுள்ளது.
</p><p>
ஹப்பிள் தொலைநோக்கி நூறாண்டுகளில் செய்யக்கூடிய விண்மீன் மண்டல ஆய்வுகளை
ரோமன் தொலைநோக்கியால் ஒரே மாதத்தில் செய்து முடிக்க முடியும் என விண்வெளி
ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
குறைந்தது ஐந்து ஆண்டுகள் வரை செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த
விண்வெளி ஆராய்ச்சி மையம், திட்டமிட்ட நேரத்திற்கு ஒன்பது மாதங்களுக்கு
முன்னதாகவே வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T18:06:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவும் இஸ்ரேலுமே உண்மையான எதிரிகள் ; ஈரான் உச்ச தலைவர் அதிரடி கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-and-israel-are-real-enemies-iran-supreme-leader-1788112414"></link>
            <id>https://canadamirror.com/article/us-and-israel-are-real-enemies-iran-supreme-leader-1788112414</id>
            <summary type="text">அமெரிக்காவும் இஸ்ரேலுமே இஸ்லாமிய ஒற்றுமைக்கு &quot;உண்மையான எதிரிகள்&quot; என ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவும் இஸ்ரேலுமே இஸ்லாமிய ஒற்றுமைக்கு "உண்மையான எதிரிகள்" என ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.
</p><p>
இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் தங்களின் "உண்மையான எதிரியை" இனம் கண்டு, அதன் திட்டங்களைப் புரிந்து கொண்டு எதிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>

"இஸ்லாமிய ஒற்றுமை வாரம்" குறித்த செய்தியை வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94fc2c31-5395-46d0-895a-b4af48cc5a26/26-6a946e1fa462c.webp' /></p><p>ஈரான் மற்றும் பிற இஸ்லாமிய நாடுகளின் மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதற்காகப் பல்வேறு இன, கலாசார, சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் புவியியல் ரீதியான வேறுபாடுகளை அமெரிக்காவும் இஸ்ரேலும் சாக்குப்போக்குகளாகப் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
அத்துடன், ஈரானியர்கள் தங்களுக்குள் எந்தவித வேறுபாடுகளையும் அனுமதிக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
விரும்பத்தக்க மற்றும் ஆதிக்கம் செலுத்தும் இஸ்லாமிய நாகரிகத்தை அடைவதற்கு முஸ்லிம்களிடையே ஒற்றுமை அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
வொஷிங்டனும் டெல் அவிவும் ஈரானின் எதிரிகள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகிற்கும் "உண்மையான எதிரிகள்" என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

கடந்த பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் மீது கூட்டுத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்ற நிலை அதிகரித்தது. இதனையடுத்து, அமெரிக்காவின் சொத்துக்கள் அமைந்துள்ள பிராந்திய நாடுகளின் மீது ஈரான் பதிலடித் தாக்குதல்களை நடத்தியது.
</p><p>
போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் கடந்த ஜூன் மாதம் ஈரானும் அமெரிக்காவும் 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போதிலும், அந்த இடைக்கால ஒப்பந்தம் விரைவில் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-30T17:53:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சைப்ரஸ் அருகே கவிழ்ந்த பயணிகள் கப்பல் ; 7 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/passenger-ship-capsizes-near-cyprus-7-dead-1788111934"></link>
            <id>https://canadamirror.com/article/passenger-ship-capsizes-near-cyprus-7-dead-1788111934</id>
            <summary type="text">வட சைப்ரஸ் அருகே சுமார் 270 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சென்ற பயணிகள் கப்பல் கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட சைப்ரஸ் அருகே சுமார் 270 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சென்ற பயணிகள் கப்பல் கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்தச் சம்பவத்தில் உயிர் பிழைத்தவர்கள், தலைகீழாக கவிழ்ந்த கப்பலின் அடிப்பகுதியில் பற்றிக் கொண்டு தப்பியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d383723f-d7c6-4329-b7da-1a39b131b501/26-6a946c3fe8af3.webp' /></p><p>தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்தக் கப்பல் கெரினியா துறைமுகத்திலிருந்து பிற்பகல் 12:30 க்கு (0930 GMT) புறப்பட்டுள்ளது.
</p><p>
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே என்ன காரணம் என்று தெரியாத நிலையில் அது தண்ணீரை உள்வாங்கத் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள துருக்கியின் மெர்சின் மாகாணத்தில் உள்ள தாசுசு துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-30T17:45:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[லடாக்கில் 18,600 அடி உயரத்தில் காயமடைந்த மலையேற்ற வீரரை மீட்ட இந்திய இராணுவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/army-cheetal-rescues-injured-mountaineer-ladakh-1788110930"></link>
            <id>https://news.lankasri.com/article/army-cheetal-rescues-injured-mountaineer-ladakh-1788110930</id>
            <summary type="text">Indian Army Cheetal rescues injured mountaineer Ladakh: லடாக்கின் சன்ஸ்கார் மலைத்தொடரில் 18,600 அடி உயரத்தில் நடந்த அதிரடியான மீட்பு நடவடிக்கையில் இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indian Army Cheetal rescues injured mountaineer Ladakh: லடாக்கின் சன்ஸ்கார் மலைத்தொடரில் 18,600 அடி உயரத்தில் நடந்த அதிரடியான மீட்பு நடவடிக்கையில் இந்திய இராணுவ விமானப்படை வீரர்கள் தங்கள் வீரத்தையும் திறமையையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
சனிக்கிழமை, நுன்-குன் சிகரங்கள் அருகே மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த ஒரு ஜூனியர் கமிஷன் அதிகாரி கடுமையாக காயமடைந்தார்.
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">18,600 feet. No place to land. Wind trying to throw the helicopter off the mountain.<br><br>Purpose: save a life.<br>Someone was hurt up there. That’s why they went.<br><br>Indian Army Aviation stripped the Cheetah down, took just enough fuel, and put one skid on a slope that wasn’t meant to… <a href="https://t.co/jZojziwupI">pic.twitter.com/jZojziwupI</a></p>&mdash; Omkar Rathore (@omiverseglobal) <a href="https://x.com/omiverseglobal/status/2093787633382199531?ref_src=twsrc%5Etfw">August 29, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2>&nbsp;வீரத்துடன் செயல்பட்ட வீரர்கள் </h2><p>அவரை மீட்க, இராணுவத்தின் சீட்டல் ஹெலிகாப்டர் பனியால் மூடப்பட்ட ஆபத்தான சரிவில் தரையிறங்கியது. மிகக் கடினமான சூழ்நிலைகளில், ஹெலிகாப்டர் ஒரு பக்க சக்கரம் மட்டுமே பனிப்பாறையை தொட்டபடி தரையிறங்கியது.</p><p>இந்த நடவடிக்கையை மேற்கொண்ட இரு விமானிகள், கடுமையான காற்றோட்டம் மற்றும் ஆபத்தான நிலப்பரப்பை மீறி வீரத்துடன் செயல்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73f53fb0-544a-4b23-8f7c-feb31c5aaa32/26-6a946b2a9cfa0.webp' /></p><h2>உயிரிழந்தார்</h2><p>ஹெலிகாப்டரில் தேவையற்ற உபகரணங்கள் அகற்றப்பட்டு, குறைந்த எரிபொருளுடன் பறக்கவிடப்பட்டதால், மிகுந்த துல்லியத்துடன் மீட்பு நடந்தது.</p><p>

காயமடைந்த வீரர் கார்கிலில் உள்ள இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவர்களின் முயற்சிகளுக்கும் பிறகு அவர் உயிரிழந்தார்.
</p><p></p><p>லேவில் உள்ள 14வது படை தலைமையகம் இந்த நடவடிக்கையை “அதிரடியான உயர்மட்ட மீட்பு” எனக் குறிப்பிட்டது. இது, இந்திய இராணுவ விமானப்படை வீரர்களின் தைரியம், திறமை, மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் நிகழ்வாகும்.</p><p>

குறிப்பாக, மூன்று மாதங்களுக்கு முன்பு லே அருகே ஒரு சீட்டல் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில் இருந்த மூன்று அதிகாரிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.
</p><p>
இந்திய இராணுவம் தற்போது பழைய சீட்டா மற்றும் சேடக் ஹெலிகாப்டர்களை மாற்றி, புதிய லேசான யூட்டிலிட்டி ஹெலிகாப்டர்களை (LUH) அடுத்த 8-10 ஆண்டுகளில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
</p><p>
இந்த மீட்பு நடவடிக்கை, இந்திய இராணுவத்தின் வீரத்தையும், நாட்டிற்கான அர்ப்பணிப்பையும் உலகிற்கு மீண்டும் நிரூபித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T17:38:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்து இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு: பெண் ஒருவர் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shooting-swiss-music-concert-woman-killed-1788111041"></link>
            <id>https://tamilwin.com/article/shooting-swiss-music-concert-woman-killed-1788111041</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தின் ஆராவ் நகரில் இடம்பெற்ற இசை விருந்து நிகழ்ச்சியொன்றில்
மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 22 வயதுடைய இளம் பெண்
ஒருவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தின் ஆராவ் நகரில் இடம்பெற்ற இசை விருந்து நிகழ்ச்சியொன்றில்
மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 22 வயதுடைய இளம் பெண்
ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
</p><p>
சுமார் 3,500 பேர் கலந்துகொண்ட டெக்னோ இசை நிகழ்ச்சி அதிகாலை வேளையில்
நிறைவடைந்த தருணத்திலேயே இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.</p><p>

சம்பவத்தில் காயமடைந்தவர்களும் உயிரிழந்த பெண்ணும் 20 முதல் 27 வயதிற்குட்பட்ட
சுவிட்சர்லாந்து வாசிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><h2>முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை&nbsp;</h2><p>

துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸார் நகரின்
பல பகுதிகளை முடக்கி தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c05dd1bf-bef1-464e-888d-e6436956c31b/26-6a946a0816222.webp' /></p><p>
</p><p>
அத்துடன், சம்பவம் தொடர்பிலான ஒளிப்படங்கள் அல்லது காணொளிகள் ஏதேனும்
இருப்பின் அதனை வழங்கி உதவுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை
விடுத்துள்ளனர்.</p><p>

சுவிட்சர்லாந்தில் துப்பாக்கிப் பயன்பாட்டு உரிமங்கள் பரவலாக காணப்படுகின்ற
போதிலும், இவ்வாறான கொடூரமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அரிதாகவே
இடம்பெறுகின்றன.
</p><p>
இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு
போடப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T17:36:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தில் இருவருக்கு மரண தண்டனை ; நடந்தது என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-high-court-dramatic-two-sentenced-death-1788106852"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-high-court-dramatic-two-sentenced-death-1788106852</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>திருநெல்வேலி பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு மதுபோதையில் இளைஞர் ஒருவர் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் 09 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
</p><p>
இதையடுத்து, 09 பேரும் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டு, சட்டமா அதிபர் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, நீண்டகாலமாக விசாரணைகள் இடம்பெற்று வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66b45fbb-0a3d-4302-9451-be11f95a36b1/26-6a9458657a821.webp' /></p><p>

இந்நிலையில், குறித்த வழக்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, 09ஆம் எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தீர்மானித்தது.
</p><p>
இதனையடுத்து, 09ஆம் எதிரிக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். </p><p>அதேவேளை, ஏனைய 08 எதிரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாத நிலையில், அவர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது.
</p><p>
இதேவேளை, பருத்தித்துறை வல்லிபுரம் குறிச்சி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 2014ஆம் ஆண்டு வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கும் மரண தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் தீர்ப்பளித்துள்ளார்.
</p><p>
இதன்மூலம், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்ற இருவேறு கொலை வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இருவருக்கு ஒரே நாளில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T17:34:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு மேலும் இரு சங்கங்கள் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-associations-22nd-constitutional-amendment-1788111214"></link>
            <id>https://jvpnews.com/article/two-associations-22nd-constitutional-amendment-1788111214</id>
            <summary type="text">உத்தேச அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்திற்குத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் அரச பல் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உத்தேச அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்திற்குத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் அரச பல் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர்கள் சங்கமும் தீர்மானித்துள்ளன.</p><p></p><p> 

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட தொடர்புடைய அனைத்துத் தொழில்முறை அமைப்புகளுடனும் இணைந்து இந்த முன்மொழிவுக்கு எதிராகச் செயற்பட அந்தச் சங்கங்களின் பிரதிநிதிகள் உடன்பாட்டுக்கு வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91228245-3582-4f03-b4e7-eb4492ce072b/26-6a94696fb01a6.webp' /></p>]]></content>
            <updated>2026-08-30T17:33:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை குறைப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fuel-prices-reduced-1788110155"></link>
            <id>https://ibctamil.com/article/fuel-prices-reduced-1788110155</id>
            <summary type="text">

நள்ளிரவு முதல் பெட்ரோலின் விலையை குறைக்க இலங்கை பெட்ரொலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

அதன்படி, ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெட்ரோலின் வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>

நள்ளிரவு முதல் பெட்ரோலின் விலையை குறைக்க இலங்கை பெட்ரொலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. </p><p>

அதன்படி, ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை ரூ. 414-லிருந்து ரூ. 15 குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 399 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>விலை திருத்தம்&nbsp;</h2><p> </p><p>

இதேவேளை, ஒரு லீற்றர் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை ரூ. 495-லிருந்து ரூ. 20 குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 475 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b739fb42-cc14-4663-9494-7647d4f50460/26-6a94689fcee55.webp' /></p><p> 

எவ்வாறாயினும், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் எந்த மாற்றமும் இருக்காது என கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T17:32:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓணம் உடையில் கவர்ச்சி.. நடிகை கௌரி கிஷனா இப்படி?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/gouri-kishan-glam-look-in-onam-dress-1788111051"></link>
            <id>https://cineulagam.com/article/gouri-kishan-glam-look-in-onam-dress-1788111051</id>
            <summary type="text">நடிகை கௌரி கிஷன் தமிழ் சினிமாவில் 96 படம் மூலமாக அறிமுகம் ஆனவர். அவர் இதற்குமுன் ஹோம்லியாக மட்டுமே படங்களில் நடித்து வந்தார்.ஆனால் LIK படத்தில் அவர் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை கௌரி கிஷன் தமிழ் சினிமாவில் 96 படம் மூலமாக அறிமுகம் ஆனவர். அவர் இதற்குமுன் ஹோம்லியாக மட்டுமே படங்களில் நடித்து வந்தார்.</p><p>ஆனால் LIK படத்தில் அவர் கிளாமராக நடித்து இருந்த நிலையில், அதற்கு பிறகு இன்ஸ்டாவிலும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
</p><p>தற்போது ஓணம் சேலையில் செம கிளாமர் ஆக நடிகை கௌரி கிஷன் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்களை பாருங்க.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T17:31:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ; நள்ளிரவு முதல் பெற்றோல் விலை குறைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/good-news-motorists-petrol-prices-reduced-midnight-1788110540"></link>
            <id>https://jvpnews.com/article/good-news-motorists-petrol-prices-reduced-midnight-1788110540</id>
            <summary type="text">இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதன்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.</p><p> </p><p></p><p>இதன்படி 414 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 399 ரூபாவாகும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0654cfb8-4752-4ebe-818d-423d5ae0d3d4/26-6a9466cdb238d.webp' /></p><p>அத்துடன் 495 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 475 ரூபாவாகும். </p><p>

ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T17:22:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[&quot;உண்மையான எதிரி&quot;யை அடையாளம் காணுங்கள் : முஸ்லிம் நாடுகளுக்கு ஈரான் உச்சதலைவர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/muslim-nations-recognize-true-enemy-mojtaba-1788106793"></link>
            <id>https://ibctamil.com/article/muslim-nations-recognize-true-enemy-mojtaba-1788106793</id>
            <summary type="text">முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்கள்,உண்மையான எதிரி யார் என்பதை முதலில் அடையாளம் காண வேண்டும் என்று ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி இன்று ஞாயிற்றுக்கிழம...</summary>
            <content type="html"><![CDATA[<p>முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்கள்,உண்மையான எதிரி யார் என்பதை முதலில் அடையாளம் காண வேண்டும் என்று ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவையும் இஸ்ரேலையும் இஸ்லாமிய ஒற்றுமையின் "பரம எதிரிகள்" என்று அவர் குற்றம் சாட்டினார்.</p><p>"இஸ்லாமிய நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு, குறிப்பாக மேற்கு ஆசியா மற்றும் வளைகுடாப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு, எனது அழுத்தமான மற்றும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் பரிந்துரை என்னவென்றால், உங்கள் உண்மையான எதிரியை அடையாளம் கண்டு, அதன் திட்டத்தைப் புரிந்துகொண்டு, அதை எதிர்கொள்ளுங்கள்" என்று நபிகள் நாயகத்தின் பிறந்தநாளையொட்டி அவரது அதிகாரபூர்வ டெலிகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ செய்தியில் இந்த முக்கியக் கருத்துக்களை அவர் பகிர்ந்துள்ளார்.</p><h2>முஸ்லிம் மக்களிடையே பிளவை உருவாக்க முயற்சி</h2><p>&nbsp; "ஈரானிலும் மற்ற இஸ்லாமிய நாடுகளிலும் உள்ள முஸ்லிம் மக்களிடையே பிளவுகளை உருவாக்குவதற்காக, அவர்கள் பல்வேறு இன, கலாசார, சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் புவியியல் வேறுபாடுகளைச் சாக்குப்போக்குகளாகப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர்," என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a4b5fe9-f21d-4e5c-98a9-9f22024386ff/26-6a94639690181.webp' /></p><p> மேலும், ஈரானியர்கள் தங்களுக்குள் வேறுபாடுகள் உருவாக அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

"அன்புக்குரிய மற்றும் மேலாதிக்க இஸ்லாமிய நாகரிகத்தை அடைவதற்கு முஸ்லிம்களிடையே ஒற்றுமை அவசியம்," என்று கமெனி குறிப்பிட்டார்.</p><p></p><p>
</p><p>
</p><h2>அமெரிக்காவும் இஸ்ரேலும் பரம எதிரிகள்</h2><p>அமெரிக்காவும் இஸ்ரேலும் "இந்த ஒற்றுமைக்கும் நட்புறவுக்கும் பரம எதிரிகள்" என்று கூறிய அவர், வோஷிங்டனும் டெல் அவிவும் ஈரானுக்கு மட்டுமல்ல, "முழு" இஸ்லாமிய உலகிற்கே எதிரிகள் என்றும் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f961c48-9915-49b8-9c6e-afcdbc316991/26-6a946395de024.webp' /></p><p>
</p><p>
"இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒன்றுபட்டிருந்தால், பாலஸ்தீன மக்கள் இன்று இந்த அளவுக்கு ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பார்களா?" என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T17:08:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில். மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தைக்கு 16 வருட சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-father-16-years-prison-abusing-daughter-1788109345"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-father-16-years-prison-abusing-daughter-1788109345</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 16 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது 

கோப்பாய் பகுதியில் கடந்த 200...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 16 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது 

கோப்பாய் பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு மகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்தில் தந்தை கைது செய்யப்பட்டார்.</p><p> </p><p></p><p>அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த வேளை தீர்ப்புக்காக வெள்ளிக்கிழமை வழக்கு அழைக்கப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdee8c00-229a-4a64-95b0-356dad2fcada/26-6a9462226e6c3.webp' /></p><p>அதன் போது , எதிரியான தந்தையை குற்றவாளியாக கண்டா நீதிமன்று , 16 வருட சிறைத்தண்டனை விதித்ததுடன் , பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 5 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் இழப்பீடு வழங்க தவறின் மேலும் 3 வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்று தீர்ப்பளித்தது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T17:02:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[உண்மையான எதிரியை அடையாளம் காணுங்கள்: முஸ்லிம் நாடுகளுக்கு மொஜ்தபா கமேனி கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/khamenei-letter-to-muslim-countries-1788088867"></link>
            <id>https://news.lankasri.com/article/khamenei-letter-to-muslim-countries-1788088867</id>
            <summary type="text">Mojtaba Khamenei&#039;s Letter To Muslim Countries: முஸ்லிம் நாடுகளுக்கு மொஜ்தபா கமேனி கடிதம் எழுதியுள்ளார்.
ஈரானின் உயர் தலைவர் மொஜ்தபா கமேனி, அமெரிக்கா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Mojtaba Khamenei's Letter To Muslim Countries: முஸ்லிம் நாடுகளுக்கு மொஜ்தபா கமேனி கடிதம் எழுதியுள்ளார்.
</p><p>ஈரானின் உயர் தலைவர் மொஜ்தபா கமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணையுமாறு அப்பிராந்தியத்தில் உள்ள முஸ்லிம் நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.</p><h2>தீர்வு என்பது</h2><p>
</p><p>மத்திய கிழக்குப்போர் தொடங்கி ஆறு மாதங்கள் கடந்த நிலையில் ஞாயிறன்று வெளியிடப்பட்ட ஒரு கடிதத்தில் இதை அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16570d70-8fc4-4029-9de1-278af1f994d0/26-6a94122555599.webp' /></p><p> </p><p>பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியபோது அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதிகாரத்திற்கு வந்த மொஜ்தபா கமேனி, பதவியேற்றதிலிருந்து இதுவரை பொதுவெளியில் காணப்படவில்லை; மேலும் அதிகாரிகள் அவரைப் பற்றிய எந்தவொரு காணொளியையோ அல்லது ஒலிப்பதிவையோ வெளியிடவில்லை. </p><p>இந்த நிலையில், வெளியாகியுள்ள கடிதத்தில், இஸ்லாமிய நாடுகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்பது நல்வழியில் ஒற்றுமை, நட்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றிலேயே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். </p><p>ஷியா முஸ்லிம்கள் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையிலேயே அவரது கடிதமும் வெளியாகியுள்ளது.</p><p></p><p> </p><p>எந்தவொரு பதவியில் இருப்பவரானாலும் சரி, தெரிந்தோ அல்லது தெரியாமலோ, வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ, முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்தும் அல்லது முஸ்லிம் சமூகத்தில் மோதலை உருவாக்கும் செயலில் ஈடுபடுபவர் எவரும் இஸ்லாத்தின் எதிரிகளின் நோக்கத்திற்கே சேவை செய்தவராவார் எனவும் கமேனி குறிப்பிட்டுள்ளார். </p><p>மட்டுமின்றி, பிராந்திய நாடுகளின் ஆட்சியாளர்கள் தங்கள் உண்மையான எதிரியை அடையாளம் கண்டு, அதன் திட்டத்தைப் புரிந்துகொண்டு, அதை எதிர்கொள்ளுமாறும் கமேனி அழைப்பு விடுத்துள்ளார்.</p><p> போரின்போது, ​​சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், குவைத், கத்தார் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை ஈரான் குறிவைத்தது. அதன்பிறகு அந்த நாடுகளுடனான உறவுகள் மோசமடைந்துள்ளன.</p><h2>டொலர் பயன்பாடு</h2><p> </p><p>முக்கிய அரசு கொள்கைகள் குறித்து இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொண்ட கமேனி, ஈரானிய அதிகாரிகளும் குடிமக்களும் தங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார். </p><p>வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சமூக நல்லிணக்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எதையும் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது என்று நான் உறுதியாகத் தெரிவிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். </p><p>மட்டுமின்றி, பல மாதங்களாக நீடித்த அமெரிக்கக் கடற்படை முற்றுகை மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதித்த பல ஆண்டுகால முடக்கும் பொருளாதாரத் தடைகளுக்குப் பிறகு, ஈரானியப் பொருளாதாரத்தை படிப்படியாக டொலர் பயன்பாட்டிலிருந்து விடுவிக்கவும், வளர்ச்சியை ஆதரிக்கும் வகையில் பொருளாதார உற்பத்தியை அதிகரிக்கவும் அவர் வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்திருந்தார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T16:35:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜே.ஆரை விடவும் தற்போதைய அரசாங்கம் அதிக சர்வாதிகாரப் போக்கில் செயல்படுகிறது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/current-govt-more-authoritarian-than-jr-1788107526"></link>
            <id>https://tamilwin.com/article/current-govt-more-authoritarian-than-jr-1788107526</id>
            <summary type="text">&amp;nbsp;முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன கூட பிரயோகிக்காத அளவிலான சர்வாதிகார ஆட்சியை தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவதாக &#039;சர்வஜன பலய&#039; கட்சியின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன கூட பிரயோகிக்காத அளவிலான சர்வாதிகார ஆட்சியை தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவதாக 'சர்வஜன பலய' கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>நாட்டின் மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் கூட செவிமடுக்க மறுக்கும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>புத்தல பொது விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52b04bc3-fec5-49bc-8414-33183d24ae7c/26-6a945b07bf7f5.webp' /></p><p>
மொணராகலை மாவட்டத்தில் 'சர்வஜன பலய' அமைப்பின் தொகுதி மட்ட தலைவர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் பொருட்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. </p><p>
சர்வஜன பலய அமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தலைமையில் இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
</p><p>தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளும் நிர்வாகப் போக்கும் அதிகாரத்தை ஒரே இடத்தில் குவிப்பதையும், நாட்டின் ஸ்தாபன அமைப்புகள் மற்றும் ஆலோசனைகளைப் புறக்கணிப்பதையுமே தெளிவுபடுத்துகின்றன என தெரிவித்துள்ளார்.</p><p>
இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் அரசியல் அமைப்பில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தைக் காட்டிலும் தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் எல்லை மீறிச் சென்றுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>
நாட்டின் உயரிய மதத் தலைவர்களான மகாநாயக்க தேரர்களின் கருத்துக்களைக் கூட அரசாங்கம் ஏற்க மறுப்பது மிகவும் தீவிரமான ஒரு நிலைமையாகும் எனவும் இது தொடர்பில் பொதுமக்கள் தீவிர அவதானம் செலுத்த வேண்டும் எனவும் திலித் ஜயவீர வலியுறுத்தியுள்ளார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T16:32:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அதிரடி கைதான அரசியல்வாதி ; அரச அதிகாரியின் வீட்டில் நடந்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/politician-arrested-in-jaffna-1788084928"></link>
            <id>https://jvpnews.com/article/politician-arrested-in-jaffna-1788084928</id>
            <summary type="text">நெல்லியடிப் பகுதியில் ஓய்வுபெற்ற அரச அதிகாரி ஒருவரின் வீட்டின் பாதுகாப்புக் கமராவுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் வடமராட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நெல்லியடிப் பகுதியில் ஓய்வுபெற்ற அரச அதிகாரி ஒருவரின் வீட்டின் பாதுகாப்புக் கமராவுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify;">

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற அரச அதிகாரி நெல்லிஅடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfcb63b3-2c17-4a7b-bbb2-af3aa9e345f9/26-6a94089abf82b.webp' /></p><p style="text-align: justify; ">முறைப்பாட்டையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இக் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்டவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதுடன், நாளை திங்கட்கிழமை (31) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்குப் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-30T16:29:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[22-வது அரசியலமைப்பு திருத்தத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை – அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22-amendment-will-imposed-says-govt-1788106852"></link>
            <id>https://tamilwin.com/article/22-amendment-will-imposed-says-govt-1788106852</id>
            <summary type="text">&amp;nbsp;22-வது அரசியலமைப்பு திருத்தத்தைக் கொண்டுவருவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையிலிருந்து ஒரு அடி கூட பின்வாங்கப் போவதில்லை என நீதி அமைச்சர் ஹர்ஷன நாந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;22-வது அரசியலமைப்பு திருத்தத்தைக் கொண்டுவருவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையிலிருந்து ஒரு அடி கூட பின்வாங்கப் போவதில்லை என நீதி அமைச்சர் ஹர்ஷன நாநாயக்கார தெரிவித்துள்ளார்.
</p><p>பதுளையில் இன்று நடைபெற்ற 'ரட்ட ஹதன ஜன பலய' (நாட்டை கட்டியெழுப்பும் மக்கள் சக்தி) மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.</p><p>
ஆட்சியைப் பொறுப்பேற்ற போது, கடந்த 30-40 ஆண்டுகளாக சீர்குலைந்து கிடந்த ஒரு அமைப்பையே எதிர்கொண்டோம். ஊழல்வாதிகளையும் மோசடிக்காரர்களையும் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்குத் தேவையான வேலைத்திட்டத்தை உருவாக்குவதே எங்களின் முக்கிய வாக்குறுதியாக இருந்தது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8803e6c5-8ebd-4721-87d7-a0129e99e26a/26-6a9458658b2ad.webp' /></p><p>
</p><p>அந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போது சுமார் 11 லட்சம் வழக்குகள் தேங்கிக் கிடப்பது தெரியவந்துள்ளதாகவும், நீதிமன்ற அமைப்பை விரைவுபடுத்தவும் திறம்படச் செயல்படுத்தவும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p> 
ஓய்வுபெறும் வயதை மட்டும் அதிகரிப்பது முழுமையான தீர்வாகாது என்பதை ஏற்றுக்கொண்டாலும், ஏனைய சீர்திருத்தங்களுடன் சேர்த்துப் பார்க்கும்போது நீதிபதிகளின் அறிவும் அனுபவமும் வழக்குகளை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>குறிப்பிட்ட ஒரு நபரை இலக்கு வைத்தே இந்த திருத்தம் கொண்டுவரப்படுவதாக எதிர்க்கட்சியினர் போலியான அச்சத்தை உருவாக்கி வருகின்றனர் என அமைச்சர் சாடியுள்ளார்.
</p><p>நீதிமன்ற அமைப்பியல் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டால் அனைத்து நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதும் 2 ஆண்டுகளால் அதிகரிக்கப்படுமே தவிர, தனிப்பட்ட ஒருவருக்காக இது செய்யப்படவில்லை என அவர் விளக்கமளித்துள்ளார்.
</p><p>பிரதம நீதியரசர் சூரசேனவின் பதவிக் காலத்திற்குப் பின்னர் இத்திருத்தத்தை மேற்கொள்ளுமாறு எதிர்க்கட்சியினர் கூறுவதன் மூலம், உண்மையில் ஒரு தனிநபரை இலக்கு வைப்பது அரசாங்கமா அல்லது எதிர்க்கட்சியா என்ற கேள்வி எழுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
இப்போது கொண்டுவந்தால் தவறாகத் தெரிவது, டிசம்பர் மாதத்திற்குப் பின்னர் எவ்வாறு சரியாகும்?" என அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p> இந்த ஆண்டின் இறுதிக்குள் மக்கள் இதற்கான நல்ல முடிவுகளைக் காண்பார்கள் எனவும், நீதியை நிலைநாட்டுவதில் அரசாங்கம் எடுத்த முடிவிலிருந்து ஒருபோதும் பின்வாங்காது என உறுதியளிப்பதாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T16:27:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘போராட்டம்’ – Trailer வெளியீட்டுக்கு இன்னும் சில நாட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/porattam-movie-trailer-1788082196"></link>
            <id>https://tamilwin.com/article/porattam-movie-trailer-1788082196</id>
            <summary type="text">ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள ‘போராட்டம்’ திரைப்படத்தின் முன்னோட்டம்( Trailer) எதிர்வரும் செப்டெம்பர் 2ஆம்திகதி வெளியாகவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள ‘போராட்டம்’ திரைப்படத்தின் முன்னோட்டம்( Trailer) எதிர்வரும் செப்டெம்பர் 2ஆம்திகதி வெளியாகவுள்ளது.
</p><p>
ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியாகவுள்ளது.


இந்த திரைப்படத்தை ராஜ் சிவராஜ் இயக்கியுள்ளதுடன், பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.</p><h2>போராட்டம்</h2><p>
</p><p>

திரைப்படத்தை தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபரான ஐபிசி கந்தையா பாஸ்கரன் தயாரித்துள்ளார். 

‘போராட்டம்’ திரைப்படத்தின் மூலம் பாஸ்கரன் றீகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.</p><p>

போராட்டம்’ திரைப்படத்திற்கு U சான்றிதழ் கிடைத்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01dbd2e7-0591-45bf-88aa-2bb00e835aa3/26-6a93f9dcab12a.webp' /></p><p>
ஈழ சினிமாவில் இதுவரை வெளியாகியுள்ள திரைப்படங்களில் நீளமான திரைப்படமாக ‘போராட்டம்’ உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.</p><p>

ஈழ சினிமாவில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் முயற்சியாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் இலங்கையில் மட்டுமன்றி புலம்பெயர் நாடுகளிலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>

‘போராட்டம்’ திரைப்படம் ஐபிசி தமிழின் தயாரிப்பில் வெளியாகும் நான்காவது முழுநீள திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p>

ஈழத்து கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகியுள்ள ‘போராட்டம்’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T16:26:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இடம்பெற்ற இரு கொடூர கொலைகள்.. பல வருடங்களுக்கு பிறகு இருவருக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-two-killed-case-death-sentence-to-suspects-1788106222"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-two-killed-case-death-sentence-to-suspects-1788106222</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலை சம்பவங்களில் குற்றவாளிகளாக
காணப்பட்ட இருவருக்கு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன்
மரண தண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலை சம்பவங்களில் குற்றவாளிகளாக
காணப்பட்ட இருவருக்கு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன்
மரண தண்டனை விதித்துள்ளார்.
</p><p>
திருநெல்வேலி பகுதியில், கடந்த 2012ஆம் ஆண்டு மது போதையில் இளைஞன் ஒருவரை
மூர்க்கத்தனமாக அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை
முன்னெடுத்த பொலிஸார் 09 நபர்களை கைது செய்திருந்தனர்.</p><h2>குற்றச்சாட்டு நிரூபிப்பு&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
குறித்த 09 நபர்களையும் சந்தேகநபர்களாக பெயர் குறிக்கப்பட்டு, மேல் நீதிமன்றில்
சட்டமா அதிபர் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள்
இடம்பெற்று வந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ef98676-cc5a-4e82-9101-b326019060e9/26-6a94598800977.webp' /></p><p> </p><p>இந்நிலையில், குறித்த வழக்கு நேற்றைய வெள்ளிக்கிழமை தீர்ப்புக்காக எடுத்து
கொள்ளப்பட்ட வேளை, 09ஆம் சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி
நிரூபிக்கப்பட்டமையால், அவருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி, ஏனைய 08
சந்தேகநபர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், 08 பேரையும் மன்று விடுவித்தது.</p><p>

அதேவேளை, பருத்தித்துறை வல்லிபுரம் குறிச்சி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை
கடந்த 2014ஆம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் கைதான இளைஞன்
மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டமையால்,
இளைஞனுக்கு மரண தண்டனை விதித்து, மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T16:25:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவு குருந்தூர் விகாரைக்கு மீண்டும் பொலிஸ் பாதுகாப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-security-restore-kurundur-temple-mullaitivu-1788105870"></link>
            <id>https://jvpnews.com/article/police-security-restore-kurundur-temple-mullaitivu-1788105870</id>
            <summary type="text">முல்லைத்தீவு குருந்தூர் ரஜமஹா விகாரை வளாகத்திலிருந்து அகற்றப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குவதற்குப் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு குருந்தூர் ரஜமஹா விகாரை வளாகத்திலிருந்து அகற்றப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குவதற்குப் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.</p><p> </p><p></p><p>விகாரையில் அகற்றப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு கோரி, விகாராதிபதி கல்கமுவே சந்தபோதி தேரரினால் அமைச்சுக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்குப் பதிலளிக்கும் வகையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de887f7c-e10f-402c-9f61-fc3cf64c4ae5/26-6a94548fc020c.webp' /></p><p>இந்தக் கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில், விகாரைக்குத் தேவையான பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனப் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, விகாராதிபதி தேரருக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T16:05:05+00:00</updated>
        </entry>
    </feed>
