<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-20T07:18:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த மழை ;நாவலப்பிட்டியில் நீரில் மூழ்கிய வீடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heavy-rain-houses-submerged-in-nawalapitiya-1789886358"></link>
            <id>https://jvpnews.com/article/heavy-rain-houses-submerged-in-nawalapitiya-1789886358</id>
            <summary type="text">நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (20) அதிகாலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மகாவலி கங்கை பெருக்கெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (20) அதிகாலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மகாவலி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் பல தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.</p><p>இதன் காரணமாக, அப்பகுதிகளில் உள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால் சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>குறிப்பாக, நாவலப்பிட்டியின் கித்துல்கோட்டே, லபுவெல்கொட்டுவ மற்றும் ஜயசுந்தரஓவிட்ட ஆகிய பகுதிகளில் உள்ள பல தாழ்நிலப் பகுதிகளும் வீடுகளும் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாகப் பதிவாகியுள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T07:13:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய ஒன்றியத்தின் 'இணை உறுப்பினர்' அழைப்பு: கனடா பிரதமருக்கு சவாலாக உருவெடுக்குமா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nanos-canadians-back-closer-eu-ties-but-not-1789888046"></link>
            <id>https://canadamirror.com/article/nanos-canadians-back-closer-eu-ties-but-not-1789888046</id>
            <summary type="text">&amp;nbsp;ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்கிய உறவை ஏற்படுத்துவதை கனடா மக்கள் வரவேற்ற போதிலும், இந்த விவகாரம் கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு அரசியல் ரீதியில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்கிய உறவை ஏற்படுத்துவதை கனடா மக்கள் வரவேற்ற போதிலும், இந்த விவகாரம் கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு அரசியல் ரீதியில் ஒரு சிக்கலான சவாலாக மாறக்கூடும் என்று பிரபல கருத்துக்கணிப்பாளர் நிக் நானோஸ் எச்சரித்துள்ளார்.</p><p>
உலகின் மிகப்பெரிய வர்த்தக கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியம், கனடாவை தனது முதலாவது 'இணை உறுப்பினராக' இணைவது குறித்து ஆராயுமாறு வரலாற்றுப்பூர்வ அழைப்பொன்றை விடுத்துள்ளது. </p><p>
இந்த முன்மொழிவு முழுமையான உறுப்பினர் அந்தஸ்தை உள்ளடக்கியது அல்ல என்பதுடன், தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத ஒரு புதிய அந்தஸ்தாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0f9b8b9-d525-4c8f-a08e-27bf3c592c3f/26-6aaf86303fcfb.webp' /></p><p>
</p><p>இந்த அழைப்பை விடுத்து உரையாற்றிய ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் அர்சுலா வொன் டெர் லேயன், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான பகிரப்பட்ட மதிப்புகளை சுட்டிக்காட்டினார்.</p><p> 
செயற்கை நுண்ணறிவு, பருவநிலை மாற்றம், ஆர்க்டிக் பகுதிகள், புவிசார் அரசியல், உக்ரைன் விவகாரம், பாதுகாப்பு, மூலப்பொருட்கள் மற்றும் விநியோகச் சங்கிலி என பல துறைகளில் இரு தரப்பும் ஒரே பார்வையைக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
</p><p>இந்த அழைப்பை வியாழக்கிழமை வரவேற்ற கனடா பிரதமர் மார்க் கார்னி, கனடா முழுமையான ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் அந்தஸ்தைக் கோரவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். </p><p>
மேலும், "கனடாவின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படாத வரையில்" மட்டுமே இந்த பிரத்யேக கூட்டாண்மை சாத்தியப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
</p><p>கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் பிரெட் ஹவுஸ் கருத்து தெரிவிக்கையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதித் தரநிலைகள் மற்றும் விதிகளை கனடா ஏற்றுக்கொள்வது அதிக செலவீனங்களை ஏற்படுத்தும் என்றார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T07:13:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊவாபரணகம தபகொல்ல மலை வெடி; தாழ்ந்த பூமி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heat-wave-occurred-in-uva-baranagama-1789888359"></link>
            <id>https://jvpnews.com/article/heat-wave-occurred-in-uva-baranagama-1789888359</id>
            <summary type="text">ஊவாபரணகம, யாலகமுவ, தபகொல்ல மலை வெடித்துள்ளது என&amp;nbsp; அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஞாயிற்றுக்கிழமை (20) அன்று&amp;nbsp; தெரிவித்துள்ளது.தபகொல்ல மலையின் தற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊவாபரணகம, யாலகமுவ, தபகொல்ல மலை வெடித்துள்ளது என&nbsp; அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஞாயிற்றுக்கிழமை (20) அன்று&nbsp; தெரிவித்துள்ளது.</p><p>தபகொல்ல மலையின் தற்போது 700 மீட்டர் அளவிலான பகுதி வெடித்துள்ளது. அந்தப் பிளவுகள் 10 முதல் 12 அங்குல அளவில் காணப்படுவதுடன், சில இடங்களில் பூமி 7 முதல் 8 அடி வரை ஆழத்திற்குத் தாழ்ந்து போயுள்ளதாகவும் ஊவாபரணகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>&nbsp;கடந்த நாட்களில் நிலவிய கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக காட்டை யாரோ தீயிட்டு எரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தற்போது நிலவும் மழையுடன் இவ்வாறு அந்த விரிசல்கள் அதிகரித்து, மழை நீர் ஓடுவதால் பூமி தளரத் தொடங்கியுள்ளதாகவும்&nbsp; அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.</p><p>இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ள தபகொல்ல மலையைச் சுற்றி வீடுகளோ அல்லது மனித குடியிருப்புகளோ இல்லை என்றும்,&nbsp; &nbsp;அந்த மலையைச் சுற்றி பல ஏக்கர் பரப்பளவில் மிளகுச் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-20T07:12:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-massive-thunder-and-lightning-1789887869"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-massive-thunder-and-lightning-1789887869</id>
            <summary type="text">நாட்டின் பல மாவட்டங்களுக்கு பலத்த இடி மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.இன்று (20.09.2026) காலை 11.00 மண...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல மாவட்டங்களுக்கு பலத்த இடி மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.</p><p>இன்று (20.09.2026) காலை 11.00 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, இரவு 11.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதால், திணைக்களம் 'அம்பர்' எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p></p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>இதன்படி, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் பல இடங்களில் கடும் மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0431b37-14a0-4ce2-bea6-da0d37228785/26-6aaf866d1c2e9.webp' />&nbsp;&nbsp;</p><p>


இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது</p><p>மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இடியுடன் கூடிய மழையின் போது திறந்த வெளிகள், நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் அல்லது நீர்நிலைகளில் தங்கியிருப்பதைத் தவிர்க்கவும். மரங்களின் கீழ் தஞ்சம் அடைவதைத் தவிர்த்து, பாதுகாப்பான கட்டிடங்களுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T07:10:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சேலையில் மயக்கும் கிளாமரில் நடிகை தமன்னா!! புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/thevvaan-promotion-saree-look-tamannaah-1789887718"></link>
            <id>https://viduppu.com/article/thevvaan-promotion-saree-look-tamannaah-1789887718</id>
            <summary type="text">கேடி, வியாபாரி, கல்லூரி, பையா, அயன், படிக்காதவன், சுறா, சிறுத்தை போன்ற படங்களில் நடித்து தமிழில் பிரபலமானவர் நடிகை தமன்னா.

பாலிவுட்டில் டாப் நடிகைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேடி, வியாபாரி, கல்லூரி, பையா, அயன், படிக்காதவன், சுறா, சிறுத்தை போன்ற படங்களில் நடித்து தமிழில் பிரபலமானவர் நடிகை தமன்னா.

பாலிவுட்டில் டாப் நடிகையாக ஜொலித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7128dc0d-612f-4ef2-af75-070ebd641444/26-6aaf84f1202f4.webp' /></p><p> </p><p>நடிப்பை தாண்டி பிசினஸிலும் ஈடுபட்டு சம்பாதித்து வரும் தமன்னா, பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

தற்போது சித்தார்த் மல்ஹோத்ராவுடன் இணைந்து TheVVAAN என்ற படத்தில் நடித்துள்ளார். </p><p>படத்தின் பிரமோஷனுக்காக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் தமன்னா, கிளாமர் சேலையில் அணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-20T07:02:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய மக்கள் சக்திக்குள் எந்தப் பிளவும் இல்லை! அமைச்சர் கே.டி. லால்காந்த சுட்டிக்காட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-split-within-npp-rumors-regarding-pm-1789887193"></link>
            <id>https://tamilwin.com/article/no-split-within-npp-rumors-regarding-pm-1789887193</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்திக்குள் எவ்விதமான பிளவுகளும் இல்லை எனவும், பிரதமர்
சுயாதீனமாக இயங்கவுள்ளார் என்று கூறப்படும் தகவல்களில் எந்தவிதமான உண்மையும்
இல்லை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்திக்குள் எவ்விதமான பிளவுகளும் இல்லை எனவும், பிரதமர்
சுயாதீனமாக இயங்கவுள்ளார் என்று கூறப்படும் தகவல்களில் எந்தவிதமான உண்மையும்
இல்லை எனவும் அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார்.</p><p>

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.</p><p>

அவர் மேலும் தெரிவித்ததாவது, ஆரம்பத்தில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது
என்றும், பின்னர் தேசிய மக்கள் சக்திக்கும் ஜே.வி.பிக்கும் இடையே முரண்பாடுகள்
உருவாகியுள்ளன என்றும் பல்வேறு செய்திகள் பரப்பப்பட்டன.</p><h2>புதிய வதந்திகள்</h2><p> எனினும், அவ்வாறான
எந்தவொரு நிலைமையும் எங்குமே இடம்பெறவில்லை. தற்போது பிரதமர் தொடர்பாகப் புதிய வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a810966-2c6f-4496-8daa-7fb21724b7c4/26-6aaf848a292db.webp' /></p><p>
</p><p>பிரதமருக்கு எதிராக ஜே.வி.பி. சூழ்ச்சி செய்வதாகக் கூறப்படுகின்றது. இவை
அனைத்தும் முற்றிலுமாக உண்மைக்குப் புறம்பான தகவல்களாகும்.
</p><p>
பைத்தியங்கள் பலவற்றைப் பேசலாம், குழப்பங்களை ஏற்படுத்தலாம். ஆனால்,
வைத்தியர்கள் எதற்கும் குழம்பமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T07:00:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாக்ஸ் ஆபிஸ் : 10 நாட்களில் உலகளவில் சர்தார் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sardar-2-movie-10-days-worldwide-collection-1789887150"></link>
            <id>https://cineulagam.com/article/sardar-2-movie-10-days-worldwide-collection-1789887150</id>
            <summary type="text">Sardar 2 movie 10 days worldwide collection: கார்த்தி நடிப்பில், இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளியான சர்தார் 2 திரைப்படம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Sardar 2 movie 10 days worldwide collection: கார்த்தி நடிப்பில், இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளியான சர்தார் 2 திரைப்படம் உலகளவில் 10 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க.</p><p></p><p>
</p><h2>
சர்தார் 2</h2><p>

இயக்குநர் பி.எஸ். மித்ரன் தமிழ் சினிமாவில் இரும்புத்திரை படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை பெற்ற இவர், ஹீரோ, சர்தார் என அடுத்தடுத்து படங்களை இயக்கினார். இதில் ஹீரோ படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e78209a1-d5a7-40ef-80c1-ebb88bff63f0/26-6aaf82b116461.webp' /></p><p></p><p>சர்தார் முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து கார்த்தி - பி.எஸ். மித்ரன் கூட்டணி மீண்டும் சர்தார் 2 படத்திற்காக இணைந்தது. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/660ffc17-1402-4ffc-9d94-ba54fd7bbc24/26-6aaf82b1c269d.webp' /></p><p></p><h3>

பாக்ஸ் ஆபிஸ்</h3><p>
கடந்த வாரம் வெளிவந்த <a href="https://cinema.dinamalar.com/news/kollywood/karthi-and-suriya-could-not-advance-to-the-first-row-why/140939" target="_blank">சர்தார் 2</a> திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் எதிர்பார்த்த வசூலை பாக்ஸ் ஆபிஸில் பெறவில்லை.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8df567b7-8585-447a-bee8-d7d707f17ab8/26-6aaf82b27bbf2.webp' /></p><p></p><p>இப்படத்தின் வசூல் ஒவ்வொரு நாளும் எவ்வளவு வருகிறது என்பதை தொடர்ந்து பார்த்து வரும் நிலையில், 10 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் வந்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சர்தார் 2 திரைப்படம் உலகளவில் 10 நாட்களில் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T07:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/landslide-risk-warning-for-12-districts-sri-lanka-1789887500"></link>
            <id>https://jvpnews.com/article/landslide-risk-warning-for-12-districts-sri-lanka-1789887500</id>
            <summary type="text">12 மாவட்டங்களுக்கு&amp;nbsp; மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவித்தலை புதுப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த எச்சரிக்கை அறிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>12 மாவட்டங்களுக்கு&nbsp; மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவித்தலை புதுப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (20) முற்பகல் 10.00 மணி முதல் நாளை முற்பகல் 10.00 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>கட்டம் 1 (எச்சரிக்கை) மற்றும் கட்டம் 2 (அவதானம்) ஆகியவற்றின் கீழ் இந்த எச்சரிக்கை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>கட்டம் 2 இன் கீழ் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள பகுதிகள்,</p><p>&nbsp;காலி மாவட்டம்: நாகொட, நெளுவ</p><p>கண்டி மாவட்டம்: பஸ்பாகே கோரளை, கங்க இஹள கோரளை</p><p>கேகாலை மாவட்டம்: யட்டியாந்தோட்டை, தெஹிஓவிட்ட, தெரணியகல</p><p>மாத்தறை மாவட்டம்: பிடபெத்தற</p><p>நுவரெலியா மாவட்டம்: கொத்மலை, கொத்மலை கிழக்கு</p><p>இரத்தினபுரி மாவட்டம்: அயகம, பெல்மடுல்ல, இரத்தினபுரி, குருவிற்ற, நிவித்திகலை, எஹெலியகொட</p><p>களுத்துறை மாவட்டம்: பாலின்தநுவர, வலல்லாவிட்ட, அகலவத்தை, புலத்சிங்கள</p><p>&nbsp;கட்டம் 1 இன் கீழ் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள பகுதிகள்,</p><p>கொழும்பு மாவட்டம்: சீதாவக்க</p><p>களுத்துறை மாவட்டம்: இங்கிரிய</p><p>கேகாலை மாவட்டம்: ருவன்வெல்ல, வரகாப்பொல, அரநாயக்க, புலத்கோஹுபிட்டிய</p><p>மாத்தறை மாவட்டம்: கொடபொல, அக்குரஸ்ஸ</p><p>இரத்தினபுரி மாவட்டம்: கிரியெல்ல, கலவானை</p><p>காலி மாவட்டம்: தவலம</p>]]></content>
            <updated>2026-09-20T06:58:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி நாராயணசாமி காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sivaji-ganesan-elder-daughter-shanthi-passed-away-1789886624"></link>
            <id>https://manithan.com/article/sivaji-ganesan-elder-daughter-shanthi-passed-away-1789886624</id>
            <summary type="text">நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகளும், திரைப்படத் தயாரிப்பாளருமான சாந்தி நாராயணசாமி இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவு சிவாஜி கணேசனின் குடும்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகளும், திரைப்படத் தயாரிப்பாளருமான சாந்தி நாராயணசாமி இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவு சிவாஜி கணேசனின் குடும்பத்தினருக்கும், திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
</h2><p>தமிழ் சினிமாவில் நடிப்பின் உச்சமாகக் கருதப்படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தனது தனித்துவமான நடிப்புத் திறன், குரல் வளம், வசன உச்சரிப்பு மற்றும் கதாபாத்திரங்களை வெளிப்படுத்தும் விதம் ஆகியவற்றால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்.பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த ரசிகர்களால் இன்றளவும் அவரது நடிப்பு போற்றப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36534c79-53fd-4105-9eb5-c8bf940f1801/26-6aaf83bf69770.webp' /></p><p></p><h2>
சிவாஜி கணேசனின் குடும்பம்
</h2><p>சிவாஜி கணேசன் - கமலா கணேசன் தம்பதியினருக்கு ராம்குமார், பிரபு ஆகிய இரு மகன்களும், சாந்தி, ராஜ்வி ஆகிய இரு மகள்களும் உள்ளனர். இவர்களில் மூத்த மகளாக சாந்தி நாராயணசாமி இருந்தார்.
</p><p>
தனது மூத்த மகள் சாந்தியின் பெயரை நினைவுகூரும் வகையில், சென்னை அண்ணாசாலையில் சிவாஜி கணேசன் ஒரு திரையரங்கையும் கட்டியிருந்தார்.இதன் மூலம் சாந்தியின் பெயர் அவரது குடும்பத்துடனும், திரையுலகுடனும் நெருக்கமாக இணைந்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa97a7bb-280f-4417-898b-62a88c2df270/26-6aaf83c01e83f.webp' /></p><p>
</p><p>சாந்தி நாராயணசாமி குடும்பப் பின்னணியைக் கொண்டவராக மட்டுமின்றி, திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டிருந்தார்.</p><p>சிவாஜி கணேசன் நடிப்பில் 1974-ஆம் ஆண்டு வெளியான ‘தங்கப்பதக்கம்’ திரைப்படத்தை அவர் தயாரித்திருந்தார். காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம் சிவாஜி கணேசனின் குறிப்பிடத்தக்க படைப்புகளில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.சாந்தி நாராயணசாமியின் கணவர் நாராயணசாமி. இவர்களுக்கு சத்யலட்சுமி என்ற மகள் உள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6a1346b-75c9-4dca-9f3b-2ee2ea17773a/26-6aaf83c0c97f7.webp' /></p><p></p><h2>
சாந்தி நாராயணசாமி மறைவு</h2><p>இந்த நிலையில், சிவாஜி கணேசனின் மூத்த மகளும், நடிகர்கள் பிரபு மற்றும் ராம்குமாரின் சகோதரியுமான சாந்தி நாராயணசாமி இன்று அதிகாலை காலமானார்.
</p><p>
அவரது மறைவுச் செய்தி சிவாஜி கணேசனின் குடும்பத்தினரையும், அவருக்கு நெருக்கமானவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. </p><p>திரையுலகில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் குடும்பத்துடன் தொடர்புடைய முக்கியமான நபராகவும், திரைப்படத் தயாரிப்பாளராகவும் அறியப்பட்ட சாந்தி நாராயணசாமியின் மறைவு குடும்பத்தினருக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T06:57:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாயைக் கொலை செய்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட மகன்: பலப்படுத்திய காவல்துறை விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/son-commits-suicide-after-killing-his-mother-1789880770"></link>
            <id>https://ibctamil.com/article/son-commits-suicide-after-killing-his-mother-1789880770</id>
            <summary type="text">வவுனியா, தோணிக்கல் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி தாயைக் கொலை செய்துவிட்டு, அவரது மகன் உயிரைமாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
காவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா, தோணிக்கல் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி தாயைக் கொலை செய்துவிட்டு, அவரது மகன் உயிரைமாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
</p><p>காவல்துறையின் விசாரணைப்படி வாக்குவாதம் முற்றியதன் காரணமாக மகன் தனது தாயை கூர்மையான ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் தாயைக் கொலை செய்த பின்னர், மகன் அதே வீட்டில் அருகிலுள்ள அறையில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>வவுனியா காவல்துறை</h2><p>
</p><p>சம்பவம் தொடர்பில் வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab25345b-e0a2-41ac-894b-2cc7bcf5cb02/26-6aaf73adccba1.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T06:56:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை; தெஹ்ரானின் அனுமதி கட்டாயம் ஈரான்; அதிரடி சட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/strait-of-hormuz-tehran-permission-mandatory-iran-1789887109"></link>
            <id>https://canadamirror.com/article/strait-of-hormuz-tehran-permission-mandatory-iran-1789887109</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை வழியாகத் தரவு கேபிள்களை (Data cables) அமைப்பதற்குத் தெஹ்ரானின் அனுமதி கட்டாயம் என்பதை வலியுறுத்தும் சட்டப் பிரிவுக்கு ஈரானிய உயர் அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை வழியாகத் தரவு கேபிள்களை (Data cables) அமைப்பதற்குத் தெஹ்ரானின் அனுமதி கட்டாயம் என்பதை வலியுறுத்தும் சட்டப் பிரிவுக்கு ஈரானிய உயர் அதிகாரிகளின் சிறப்புக்குழு ஒப்புதல் அளித்துள்ளதாகப் ஃபார்ஸ் (Fars) செய்தி முகமை தெரிவித்துள்ளது.</p><p>உளவுத்துறை அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் சட்ட விவகாரங்களுக்கான துணைத் தலைவரின் அலுவலகம் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் இந்தச் சிறப்புக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.</p><p>'பிரிவு 10' (Article 10) என்று முறைப்படி அழைக்கப்படும் இந்தச் சட்டப் பிரிவு, இந்த நீரிணை வழியாகச் செல்லும் பிற தரவுத் தகவல் தொடர்பு சாதனங்களுக்கும் பொருந்தும் என ஃபார்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.</p><p>ஈரானின் இந்தச் சட்டத்தின் துல்லியமான விவரங்கள் பல ஒழுங்குமுறை விதிகளின் கீழ் கொண்டுவரப்பட உள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-20T06:52:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறந்தவர்களின் பெயரில் அஸ்வெசும பணம்..! ரூ.30 மில்லியன் மோசடி அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/norwood-probe-sri-lanka-s-largest-aswesuma-fraud-1789885741"></link>
            <id>https://tamilwin.com/article/norwood-probe-sri-lanka-s-largest-aswesuma-fraud-1789885741</id>
            <summary type="text">நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு மோசடி தொடர்பான விசாரணையில், அரசுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய இழப்பு சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு மோசடி தொடர்பான விசாரணையில், அரசுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய இழப்பு சுமார் 30 மில்லியன் ரூபாவை நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த தொகை உறுதிப்படுத்தப்பட்டால், இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு மோசடிகளில் மிகப்பெரியதாக இது அமையக்கூடும் என ஆங்கில வாராந்த பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><h2>பாரிய மோசடி</h2><p>
</p><p>
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்காக வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகளைப் பெறுவதற்காக, உயிரிழந்த வயோதிபர்களின் தனிப்பட்ட தகவல்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் விசாரணைகளில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26c16c16-a123-4866-8ec8-afa0499c4cbb/26-6aaf81fabcf20.webp' /></p><p>
</p><p>
நோர்வூட் மற்றும் தலவாக்கலை பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய இந்த மோசடி தொடர்பில் இதுவரை 20 அரச ஊழியர்கள் சந்தேகத்தின் பேரில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனால் சுமார் 100 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நோர்வூட் பிரதேச செயலகத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மோசடியில் சுமார் 30 மில்லியன் ரூபாவும், தலவாக்கலை பிரதேச செயலகத்துடன் தொடர்புடைய சம்பவத்தில் சுமார் 2 மில்லியன் ரூபாவும் மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;10 பேர் பணி நீக்கம்</h2><p>
</p><p>
நலன்புரி நன்மைகள் சபையின் கணக்காய்வுப் பிரிவு, நோர்வூட் சம்பவம் தொடர்பில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. எனினும், இதுவரை இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.
</p><p>
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, நோர்வூட் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 18 அரச ஊழியர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44727423-f910-4e9e-a56e-cd7ec17cbe2c/26-6aaf81fb6f3ce.webp' /></p><p>
</p><p>
அவர்களில் 10 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய நான்கு ஊழியர்களும் ஆறு ஆசிரியர்களும் அடங்குகின்றனர்.
</p><p>
மேலும், இரண்டு பெண் அரச ஊழியர்கள் அரச சொத்துச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 50 நாட்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பத்திரிக்கை&nbsp; செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T06:49:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனுக்கு மரண தண்டனையைக் குறைத்துக் கருணை வழங்குங்கள்: அட்டனில் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-in-hatton-demanding-anojan-s-release-1789884083"></link>
            <id>https://ibctamil.com/article/protest-in-hatton-demanding-anojan-s-release-1789884083</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், அவரது மரண தண்டனையைக் குறைத்து கருணை வழங...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், அவரது மரண தண்டனையைக் குறைத்து கருணை வழங்குமாறு வலியுறுத்தியும் அட்டனில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
“மனிதாபிமான வேண்டுகோள்” என்ற தொனிப்பொருளில் அட்டன் மல்லியப்பு சந்தியில் இந்து அமைப்புகளின் ஒன்றியத்தினால் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
</p><p>
மேன்முறையீட்டு விசாரணையிலும் சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையிலேயே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p></p><h2>மனிதாபிமான வேண்டுகோள்</h2><p>
</p><p>
கொட்டும் மழைக்கு மத்தியிலும் ஏராளமானோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbcb350f-e5f8-48a0-9618-eeb9eeb284ea/26-6aaf8148d7b8a.webp' /></p><p> இதன்போது, சிவராசா அனோஜனின் உருவம் தாங்கிய பதாகைகள் மற்றும் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பையும் மனிதாபிமானக் கோரிக்கையையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T06:49:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[படைகளை குறைக்க அமெரிக்கா திட்டம்; நேட்டோ நாடுகள் அதிர்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/reduce-troops-in-europe-us-decision-1789881922"></link>
            <id>https://canadamirror.com/article/reduce-troops-in-europe-us-decision-1789881922</id>
            <summary type="text">ஈரான் மீதான போருக்குத் தங்கள் நாட்டு வானுர்தித் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, ஐரோப்பாவிலுள்ள தனது படைகளைக் கணிசமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான போருக்குத் தங்கள் நாட்டு வானுர்தித் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, ஐரோப்பாவிலுள்ள தனது படைகளைக் கணிசமாகக் குறைக்க அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.</p><p>ஐரோப்பிய நேட்டோ (NATO) நாடுகள் அமெரிக்காவிற்குத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுத்தது "வெட்கக்கேடானது" என அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்சேத் சாடியுள்ளார்.</p><p>ஐரோப்பாவிலுள்ள 68,000 அமெரிக்க வீரர்களில் மூன்றில் ஒரு பங்கினரை (முக்கியமாக ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின்) திரும்பப் பெறுவது, அல்லது 40,000 வீரர்கள் மற்றும் ஆயுதங்களை வெளியேற்றுவது குறித்து பென்டகன் ஆலோசித்து வருகிறது.</p><p>இந்த நடவடிக்கை ஐரோப்பாவின் பாதுகாப்பைப் பாதிப்பதுடன், ரஷ்யாவிற்குச் சாதகமான சமிக்ஞையை அனுப்பக்கூடும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p>வர்த்தக வரிகள், கிரீன்லாந்து விவகாரம் மற்றும் நேட்டோ நிதியுதவி போன்ற காரணங்களால் அமெரிக்கா-ஐரோப்பா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.</p><p>இதேபோல தாய்வான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கான அமெரிக்காவின் பாதுகாப்பு ஆதரவும் தளர்ந்து வருவதாகக் வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.</p>]]></content>
            <updated>2026-09-20T06:45:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் கொந்தளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/philippines-up-in-arms-against-china-water-1789886663"></link>
            <id>https://canadamirror.com/article/philippines-up-in-arms-against-china-water-1789886663</id>
            <summary type="text">தென்சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் அரசுக்குச் சொந்தமான மீன்பிடி வளத் திணைக்களத்தின் (BFAR) &#039;பி.ஆர்.பி தாது மகத் சலமத்&#039; (BRP Datu Magat Salamat) கப்பல் மீது...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் அரசுக்குச் சொந்தமான மீன்பிடி வளத் திணைக்களத்தின் (BFAR) 'பி.ஆர்.பி தாது மகத் சலமத்' (BRP Datu Magat Salamat) கப்பல் மீது சீனக் கடலோரக் காவல் படை கப்பல் மோதிப் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிலிப்பைன்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.</p><p>பளவான் (Palawan) மாகாணக் கடற்பரப்பில் கடற்றொளிலாலர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கச் சென்ற பிலிப்பைன்ஸ் கப்பலின் பாதையில் சீனக் கப்பல் அபாயகரமாகக் குறுக்கிட்டு மோதியுள்ளது.</p><p>இந்த சம்பவத்தில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.பிலிப்பைன்ஸ் கப்பலே எச்சரிக்கைகளைப் புறக்கணித்துத் தன்னிச்சையாக வேகத்தை அதிகரித்து மோதியதாகச் சீனா இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.</p><p>தென்சீனக் கடலின் பெரும்பாலான பகுதிக்குச் சீனா உரிமை கோரி வரும் நிலையில், அந்த பகுதியில்&nbsp; அடிக்கடி இத்தகைய மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.</p><p>சீனாவின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளதுடன், சீனாவின் உரிமைகோரலுக்கு எவ்வித சட்டப்பூர்வ ஆதாரமும் இல்லை என ஐ.நா ஆதரவு பெற்ற நடுவர் மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது</p>]]></content>
            <updated>2026-09-20T06:44:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு சுகாதாரத்துறையின் சவால்கள் குறித்து அமைச்சர் நளிந்தவுடன் முக்கிய கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussion-northern-health-sector-nalintha-mp-1789886348"></link>
            <id>https://tamilwin.com/article/discussion-northern-health-sector-nalintha-mp-1789886348</id>
            <summary type="text">வடக்கு மாகாண சுகாதார சேவையின் நடைமுறைச் சவால்கள் தொடர்பில் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை
அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வடக்கு மாகாண ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாண சுகாதார சேவையின் நடைமுறைச் சவால்கள் தொடர்பில் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை
அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்
தலைமையிலான மாகாண அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் நடைபெற்றது.</p><p>குறித்த கலந்துரையாடலானது நேற்று(19.9.2026) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.</p><p>இதன்போது, இலங்கையிலுள்ள மாகாண சபைகளில் வடக்கு மாகாண சபையே அதிகளவான மருத்துவமனைகளை
நிர்வகித்து வருவதுடன், மாவட்டப் பொது மருத்துவமனைகளும் மாகாண சபையின்
நிர்வாகத்துக்குட்பட்டே இயங்கி வருகின்றமை தொடர்பில் அமைச்சருக்கு விரிவாக
எடுத்துரைக்கப்பட்டது.</p><h2>நிதி ஒதுக்கீடுகள்&nbsp;</h2><p> இதனைக் கருத்திற்கொண்டு, ஏனைய மாகாணங்களுடன்
ஒப்பிடுகையில் வடக்கு மாகாண சுகாதாரத்துறைக்கு அதிகளவான மூலதன மற்றும்
பராமரிப்பு நிதி ஒதுக்கீடு தேவைப்படுவதாகவும் வலியுறுத்தப்பட்டது.
</p><p>
குறிப்பாக, நிதி ஆணைக்குழுவால் அனுமதிக்கப்படும் பராமரிப்பு நிதி போதுமானதாக
இல்லாத நிலை தொடர்பில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன், அதிகளவான
மருத்துவமனைகள் மற்றும் அவற்றின் உட்கட்டமைப்புகளைப் பராமரிக்க
வேண்டியிருப்பதால் மாகாண சுகாதாரத்துறைக்கு ஏற்படும் நிதிச் சுமையும்
சுட்டிக்காட்டப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37702179-2656-4ad7-a998-84f05d31dd6c/26-6aaf800c0d6a4.webp' /></p><p>
</p><p>
மேலும், மருத்துவமனைகளுக்குத் தனித்தனியாக நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படாமல்,
மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கான ஒதுக்கீடாக ஒருங்கிணைந்த முறையில் நிதி
வழங்கப்படுவதால் நடைமுறையில் ஏற்படும் பல்வேறு சிக்கல்கள் தொடர்பிலும்
அமைச்சருக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
</p><p>வடக்கு மாகாண சுகாதார சேவையின் தற்போதைய தேவைகள் மற்றும் நடைமுறைச்
சவால்களுக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்பது தொடர்பிலும், குறிப்பாக மேலதிக
நிதி ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட விடயங்களில் நிதி ஆணைக்குழுவுடன்
கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அமைச்சர் மருத்துவர் நளிந்த
ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T06:41:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்தால் என்னால் பொறுப்பேற்க முடியாது! ரணில் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/i-cannot-take-responsibility-if-the-country-ranil-1789885734"></link>
            <id>https://tamilwin.com/article/i-cannot-take-responsibility-if-the-country-ranil-1789885734</id>
            <summary type="text">&quot;நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்தால், அதனை மீண்டும் கட்டியெழுப்ப முடியாமல்
போய்விடும். அவ்வாறானதொரு நிலைமை மீண்டும் ஏற்பட்டால் நாட்டை மீண்டும் நீங்கள்
ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>"நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்தால், அதனை மீண்டும் கட்டியெழுப்ப முடியாமல்
போய்விடும். அவ்வாறானதொரு நிலைமை மீண்டும் ஏற்பட்டால் நாட்டை மீண்டும் நீங்கள்
பொறுப்பெடுப்பீர்களா என பலரும் என்னிடம் கேட்கிறார்கள். ஆனால், என்னால் இனி
நாட்டை பொறுப்பேற்க முடியாது. ஏனெனில் நான் தற்போது நாடாளுமன்றத்தில்
இல்லை என முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில்
விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>கொழும்பில் அமைந்துள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களால்
எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>நாட்டுக்குள் கலவரங்கள்&nbsp;</h2><p>

"அரசியல் செய்யும்போது அதிகளவான பொறுமை இருக்க வேண்டும். அப்போது தான்
தோல்விகளை ஏற்றுக்கொள்ள முடியுமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d173665-295f-4722-bbb9-bddafff24f93/26-6aaf7fa03a6e2.webp' /></p><p> </p><p>ஆட்சி அதிகாரம் என்பது எப்போதும் ஒரே
மாதிரி இருக்கப்போவதில்லை.

அதிகாரம் கிடைக்கும்போது அதனை நாட்டுக்காக முடிந்தளவு பயன்படுத்திக்கொள்ள
வேண்டும். அதேநேரம், எப்போது வேண்டுமானாலும் எதிர்கட்சியில் இருப்பதற்கும்
தயாராக இருக்க வேண்டும்.</p><p> அத்துடன் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஆட்சியைக்
கைப்பற்றுவதற்கான முயற்சிகளையும் முன்னெடுக்க வேண்டும்.

நாட்டுக்குள் கலவரங்கள் ஏற்பட்டு, நாடு முற்றாக வீழ்ச்சியடையும் போது ஆட்சியைப்
பொறுப்பேற்க யாருமே முன்வராத இக்கட்டான நிலையில் தான் நான் முன்வந்தேன். யாரும்
முன்வராவிட்டால் நாட்டுக்கு எதிர்காலம் ஒன்று இருக்கப்போவதில்லை என்பதாலேயே
நாட்டை பொறுப்பேற்றேன்.</p><h2>இக்கட்டான நிலைமைகளில் அரசாங்கம்</h2><p>

இவ்வாறான இக்கட்டான நிலைமைகளில் அச்சப்பட்டுக்கொண்டு இருக்க முடியாது.
எவ்வாறாவது நாட்டை நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற எண்ணத்துடனேயே
பொறுப்பேற்றேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9762fbc-478c-4d5b-9524-5bf9838cef0e/26-6aaf7fa0e34fa.webp' /></p><p>
</p><p>
ஜே.ஆர். ஜயவர்த்தன நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியதுடன், நாட்டை
முன்னேற்றுவதற்காக அனைவருக்கும் கல்வியைப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை
எடுத்தார்.

அன்று ஜே.ஆர். பாதுகாத்து வந்த ஜனநாயகத்தை யாராவது இல்லாமலாக்க
முற்படுவார்களாகின், அதற்கு எதிராக நாங்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். </p><p>அன்று
ஏகாதிபத்தியவாதத்துக்கு எதிராக ஜே.ஆர். நாடு பூராகவும் மக்களை ஒன்றிணைத்துச்
சத்தியாக்கிரகப் போராட்டங்களை மேற்கொண்டதைப் போன்று, தற்போதும் அவ்வாறானதொரு
நிலை ஏற்படுமாகின் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T06:39:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வீதியில் பறிபோன இளைஞனின் உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-man-loses-his-life-on-a-jaffna-road-1789885614"></link>
            <id>https://jvpnews.com/article/young-man-loses-his-life-on-a-jaffna-road-1789885614</id>
            <summary type="text">யாழ்ப்பாணம்&amp;nbsp; மானிப்பாய் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் வீதியில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம்&nbsp; மானிப்பாய் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் வீதியில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p>வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில்&nbsp; &nbsp; சுன்னாகம், சபாபதிப்பிள்ளை வீதியைச் சேர்ந்த தபேந்திரன் தினுசன் (வயது 26) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.</p><p>இளைஞன் மானிப்பாய் தேவாலயத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது போக்குவரத்துப் பொலிஸார் அவரை வழிமறித்தனர்.</p><p>இதன்போது, அந்த இளைஞன் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திய பின்னர் தானாகவே கீழே சரிந்து விழுந்து அசைவற்று காணப்பட்டுள்ளார்.</p><p>முறைப்படி அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.</p><p>&nbsp;சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T06:27:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனின் விடுதலைக்காக கொட்டும் மழையிலும் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-seeks-release-of-anojan-1789884769"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-seeks-release-of-anojan-1789884769</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனுக்கு மேன்முறையீட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், மர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனுக்கு மேன்முறையீட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், மரண தண்டனையை குறைத்து கருணை வழங்குமாறு வலியுறுத்தியும் ஹட்டனில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.</p><p>

“மனிதாபிமான வேண்டுகோள்” என்ற தலைப்பில் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் இந்து அமைப்புகளின் ஒன்றியத்தினால் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.</p><h2>கொட்டும் மழை</h2><p>
</p><p>
கொட்டும் மழைக்கு மத்தியிலும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், சிவராசா அனோஜனின் புகைப்படம் தாங்கிய பதாகைகளையும், கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளையும் ஏந்தியவாறு தமது எதிர்ப்பையும் கோரிக்கைகளையும் வெளிப்படுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f62cc88b-cbc6-4a21-99cf-b930b9f6d953/26-6aaf7bcfc49db.webp' /></p><p>
</p><p>
சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை மறுபரிசீலனை செய்து, அவருக்கு கருணை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T06:23:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமர்சனம் வந்தால் அதை கண்டு பயப்படாதீங்க, மீண்டும் மீண்டுமா விஜய் சேதுபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vijay-sethupathi-talk-about-criticism-in-bigg-boss-1789884444"></link>
            <id>https://cineulagam.com/article/vijay-sethupathi-talk-about-criticism-in-bigg-boss-1789884444</id>
            <summary type="text">பிக்பாஸ்&amp;nbsp;விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது எல்லோரும் அறிந்ததே. 

இவர் கடந்த வாரம் போட்டியாளர்கள் ஆளும் கட்சி, எதிர் கட்சி எ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிக்பாஸ்&nbsp;</h2><p>விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது எல்லோரும் அறிந்ததே. </p><p>

இவர் கடந்த வாரம் போட்டியாளர்கள் ஆளும் கட்சி, எதிர் கட்சி என பிரிந்து பேசியதை சுட்டிக்காட்டி விஜய் சேதுபதி, ஆளும் கட்சி மற்றவர்கள் மேல் பழியை போட்டு தப்பிக்க கூடாது என கூறினார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fe2c30b-4b47-4ea9-8b42-fb9d8a4cc2ec/26-6aaf781e58ba6.webp' /></p><p></p><p>இதை கேட்ட விஜய் ரசிகர்கள், TVK தொண்டர்கள் ஏன் MLA வரை <a href="https://x.com/rajubhai_DMK/status/2101386082499936318" target="_blank">விஜய் சேதுபதி-</a>யை தாக்கினார்கள், இதற்கு விஜய் தொலைக்காட்சியே டிஸ்க்ளைமர் எல்லாம் போட்டனர்.</p><h3>மீண்டும் மீண்டுமா</h3><p>
</p><p>
விஜய் சேதுபதி அவர்களும் இது எல்லாம் வீட்டில் உள்ளவர்களை சொன்னது மட்டுமே என பேசினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c215df1-ce48-404c-9972-34e244c99fe6/26-6aaf781f10b82.webp' /></p><p></p><p>
தற்போது இந்த வாரம் விஜய் சேதுபதி பிக்பாஸ் வீட்டில் பேசுகையில், விமர்சனம் வந்தால் அதை எதிர்கொள்ளுங்கள், அது தான் மெச்சூரிட்டி என கூற, மீண்டும் விஜய் சேதுபதி தாக்கிவிட்டார் என ஒரு கும்பல் ஆதரவும் ஒரு கும்பல் எதிர்ப்பும் தெரிவிக்க ஆரம்பித்து விட்டது.</p>]]></content>
            <updated>2026-09-20T06:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் 20 முதல் 26 வரை: இந்த வாரம் 12 ராசிகளுக்கும் என்ன பலன் காத்திருக்குது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/weekly-horoscope-for-20-september-2026-to-26-1789878699"></link>
            <id>https://manithan.com/article/weekly-horoscope-for-20-september-2026-to-26-1789878699</id>
            <summary type="text">பொதுவாகவே நம் வாழ்வில் ஏற்படும் நன்மைகள்&amp;nbsp; மற்றும் தீமைகள் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளின் அடிப்படையிலேயே அமைகின்றன என்று ஜோதிடத்தில் நம்பப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாகவே நம் வாழ்வில் ஏற்படும் நன்மைகள்&nbsp; மற்றும் தீமைகள் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளின் அடிப்படையிலேயே அமைகின்றன என்று ஜோதிடத்தில் நம்பப்படுகிறது. </p><p>குறிப்பாக, கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் அவற்றின் நிலைப்பாடுகள் ஒருவரின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களையும், எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b03f3e2-2254-462c-8ede-09e3b57f09d2/26-6aaf67b14bd76.webp' /></p><p>
</p><p>
</p><p>அந்தவகையில், செப்டம்பர் 20 முதல் 2026 செப்டம்பர் 26 வரையிலான காலகட்டத்தில்,கிரக நிலைகளின் அடிப்படையில் 12 ராசிக்காரர்களுக்கும் எவ்வாறு பலன்கள் அமையப் போகின்றன?</p><p>எந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கலாம்? யாருக்கு சில சவால்கள் அல்லது எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது? என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6090815-2802-4534-8e16-7b3150d1cc75/26-6aaf67b20f8ab.webp' /></p><h2>12 ராசிகளுக்குமான பலன்கள்</h2><p><b>மேஷம் -</b>
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். வேலை தொடர்பாகப் பல பயணங்களை மேற்கொள்வீர்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு சாதகமான வாய்ப்புகளும், சிலருக்கு புதிய வேலை அல்லது சம்பள உயர்வும் கிடைக்கலாம். தொழிலதிபர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது.</p><p><b>

ரிஷபம் -</b>
ரிஷப ராசிக்காரர்கள் இந்த வாரம் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கலாம். நிதி நிலை சிறப்பாக இருக்கும்; பல வழிகளில் பணவரவு கிடைக்கலாம். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையலாம். புதிய தொழில் தொடங்கவும் இந்த வாரம் சாதகமாக இருக்கும்.</p><p>
</p><p><b>
மிதுனம் - </b>மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்ல பலன்கள் கிடைக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு ஏற்படலாம். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். வேலை மாற்ற நினைப்பவர்களுக்கும் சாதகமான காலம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கலாம். தேவையற்ற கவலைகளைத் தவிர்ப்பது நல்லது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c847378-f388-42a9-a184-26834efd048b/26-6aaf67b2bb7e7.webp' /></p><p><b>

கடகம் - </b>கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் பல பயணங்களை மேற்கொள்வார்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரித்து, புனித யாத்திரை செல்லலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பப் பிரச்சனைகள் முடிவுக்கு வரலாம்.</p><p><b>

சிம்மம் - </b>சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றமும் நல்ல நிதி ஆதாயமும் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய தொழில் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கலாம். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். நிதி நிலையும் மேம்படும்.
</p><p><b>
கன்னி - </b>கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரும். குடும்பத்தினரின் முழு ஆதரவும், நிதி நிலைமையில் முன்னேற்றமும் கிடைக்கும். பயணங்கள் மூலம் நிதி ஆதாயம் ஏற்படலாம். பெரிய முடிவுகளை எடுப்பதற்கு முன் குடும்பத்தினர் அல்லது நண்பர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.</p><p>
</p><p><b>
துலாம் -</b> துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வேலை மற்றும் தொழிலில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் திட்டங்களை ரகசியமாக வைத்துச் செயல்பட்டால் வெற்றி கிடைக்கலாம். இருப்பினும், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மன அழுத்தம் மற்றும் எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ef3a390-1324-4dce-a0d9-6cc4ee9db718/26-6aaf67b37441f.webp' /></p><p>
</p><p><b>
விருச்சிகம் - </b>விருச்சிக ராசிக்காரர்களின் மதிப்பும் மரியாதையும் இந்த வாரம் அதிகரிக்கும். வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவுக்கு வரும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கலாம். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.</p><p><b>

தனுசு -&nbsp;</b>தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கலவையான பலன்கள் கிடைக்கும். சிறிய வேலைகளுக்குக்கூட அதிக முயற்சி தேவைப்படலாம். பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்கும்.
</p><p><b>
மகரம் - </b>மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று மன அழுத்தமும் பதற்றமும் இருக்கலாம். வேலையில் கவனமாக இருக்க வேண்டும்; அலட்சியம் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இருப்பினும், நிதி, குடும்பம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.
</p><p><b>
கும்பம் - </b>கும்ப ராசிக்காரர்கள் இந்த வாரம் தேவையற்ற செலவுகளால் சிரமப்படலாம். எனவே செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. செய்யும் வேலையில் முழு கவனத்துடன் செயல்பட்டால் நல்ல பலன்களையும், பணியிடத்தில் முன்னேற்றத்தையும் பெறலாம்.
</p><p><b>
மீனம் - </b>மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். வேலை மாற்றம் குறித்து யோசிப்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். மொத்தத்தில் வேலை, தொழில் மற்றும் நிதி நிலை என அனைத்திலும் நல்ல பலன்கள் கிடைக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp;</b> &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> </a><b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">&nbsp;</a></td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T06:18:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sivaji-daughter-shanthi-narayanasamy-passed-away-1789884036"></link>
            <id>https://news.lankasri.com/article/sivaji-daughter-shanthi-narayanasamy-passed-away-1789884036</id>
            <summary type="text">Actor sivaji daughter shanthi narayanasamy passed away-&amp;nbsp;நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி நாராயணசாமி உடல்நலக்குறைவால் இன்று சென்னைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Actor sivaji daughter shanthi narayanasamy passed away-&nbsp;நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி நாராயணசாமி உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார்.</p><h2>உடல்நலக்குறைவால் காலமானார்</h2><p>சிவாஜி கணேசன் - கமலாம்பாள் தம்பதிக்கு ராம்குமார், பிரபு என்ற இரு மகன்களும், சாந்தி, தேன்மொழி என்ற இரு மகள்களும் உள்ளனர். </p><p>

இவர்களில் மூத்தவர் சாந்தி, சிவாஜி கணேசன் தனது மகள் மீது கொண்ட பாசத்தால், சென்னை அண்ணா சாலையில் உள்ள தனது திரையரங்கிற்கு சாந்தி திரையரங்கம் என பெயர் வைத்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f3ddb99-1766-47f6-9226-fcf0fd056288/26-6aaf7686ea851.webp' /></p><p>சாந்தியின் திருமணம் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.</p><p> 

இதில் காமராஜர், பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும், திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோரும் கலந்து கொண்டனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5172a7a8-b7e0-46a3-8c08-c48e06c404ca/26-6aaf768640786.webp' /></p><p>இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலப் பிரச்சினையால் சிகிச்சை பெற்று வந்த சாந்தி நாராயணசாமி இன்று காலமானார்.</p><p> 

அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p><p> 
</p>]]></content>
            <updated>2026-09-20T06:03:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்! மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minor-flood-warning-issued-for-low-lying-areas-1789873864"></link>
            <id>https://tamilwin.com/article/minor-flood-warning-issued-for-low-lying-areas-1789873864</id>
            <summary type="text">புதிய இணைப்புமகாவலி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் &#039;சிவப்பு&#039; எச்சரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>மகாவலி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் 'சிவப்பு' எச்சரிக்கையை விடுத்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>எனவே மகாவலி ஆற்று பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>மகாவலி கங்கையை சுற்றியுள்ள தாழ்நில பகுதிகளுக்கு சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.</p><p>நீர்ப்பாசன திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.&nbsp;</p><h2>சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்&nbsp;</h2><p>இதன்படி, மகாவலி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்துள்ள நிலையில், பஸ்பாகே கோரளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மகாவலி கங்கையை சுற்றியுள்ள தாழ்நிலப்பகுதிகளுக்கு சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce1ae49f-8eaa-4bde-b72a-cfbc97e155f0/26-6aaf512bc1da2.webp' /></p><p>

 

எனவே, அப்பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் அங்குள்ள வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
 

மேலும், மகாவலி கங்கைக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T06:02:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய் சேதுபதி அப்படி பேச வேண்டிய அவசியமே இல்லை!! சீரியல் நடிகை ஐஸ்வர்யா..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/annamalai-serial-aishwarya-about-vijay-sethupathi-1789884204"></link>
            <id>https://viduppu.com/article/annamalai-serial-aishwarya-about-vijay-sethupathi-1789884204</id>
            <summary type="text">ஐஸ்வர்யாசின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா. 15 வயதில் சீரியலில் நடிக்க ஆரம்பித்தவர், விருப்பட்டு நடிக்க வராததால் அப்போதெல்லாம் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஐஸ்வர்யா</h2><p>சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா. 15 வயதில் சீரியலில் நடிக்க ஆரம்பித்தவர், விருப்பட்டு நடிக்க வராததால் அப்போதெல்லாம் ஷூட்டிங் போகமாட்டேன் என்று அழுதும் இருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8045f208-aa14-41a1-8dea-dcfbc2d9cc7a/26-6aaf772e9eabd.webp' /></p><p> </p><p>அதன்பின் குடும்ப சூழ்நிலையால் நடிக்க ஆரம்பித்த ஐஸ்வர்யா, அண்ணாமலை சீரியலில் ஜோதி என்ற ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தெலுங்கி சீரியல் ஆஃபருக்காக, வெள்ளித்திரை வாய்ப்பை வேண்டாம் என்று கூறி கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுத்துவிட்டு சீரியல் வாய்ப்பே போதும் என்று இருந்துள்ளார்.</p><h2>விஜய் சேதுபதி</h2><p> விஜய் சேதுபதி நடித்த பெண் சீரியலில் நடித்தும் இருக்கிறார். மகாராஜா படத்தின் பிரமோஷனின் போது ஐஸ்வர்யாவின் தங்கை விஜய் சேதுபதியிடம் அவர் பற்றி பேச, உடனே வீடியோ கால் மூலம் பேசியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d423e5c4-472f-4f76-8190-d16f80f3e0d9/26-6aaf772f5349f.webp' /></p><p> </p><p>இந்நிலையில், சமீபத்தில் ஐஸ்வர்யா அளித்த பேட்டியில், விஜய் சேதுபதி என்னிடம் பேசியது ரொம்ப சந்தோஷம். நான் டைம் லைட்டில் கூட இல்லை, அப்படி இருக்கும்போது அவர் எனக்காக வீடியோ கால் செய்து, பழைய விசயங்களை எல்லாம் பேச வேண்டிய அவசியமே இல்லை, ஆனாலும் அவர் போன் பண்ணுனார். அவர் ரொம்ப எளிமையானவர் என்று பெருமையாக பேசியுள்ளார் ஐஸ்வர்யா.</p>]]></content>
            <updated>2026-09-20T06:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல பிரதேசங்களுக்கு பலத்த இடி மின்னல் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/severe-thunderstorm-and-lightning-warning-1789883948"></link>
            <id>https://jvpnews.com/article/severe-thunderstorm-and-lightning-warning-1789883948</id>
            <summary type="text">ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கும் பலத்த இடி மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலை வளிமண...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கும் பலத்த இடி மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.</p><p>இந்த அறிவித்தல் இன்று (20) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p style="margin-bottom: 0px;">இதற்கமைய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் மாலையில் அல்லது இரவில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த இடி மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் அப்பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும்.</p><p>இடி மின்னலினால் ஏற்படும் அசம்பாவிதங்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T05:59:25+00:00</updated>
        </entry>
    </feed>
