<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-25T23:39:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிற்கு கனடா வழங்கிய பதிலடி ; விரைவில் அமுலாகும் வரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-strikes-back-at-the-united-states-1787700288"></link>
            <id>https://canadamirror.com/article/canada-strikes-back-at-the-united-states-1787700288</id>
            <summary type="text">அமெரிக்கப் பொருட்களுக்கு எதிராக 19.94 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பதில் தீர்வை வரிகளை கனடா நேற்று (25) அறிவித்துள்ளது. 

இது அமெரிக்காவினால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கப் பொருட்களுக்கு எதிராக 19.94 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பதில் தீர்வை வரிகளை கனடா நேற்று (25) அறிவித்துள்ளது. </p><p>

இது அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட புதிய தீர்வை வரிகளுக்கு நிகரான டொலர் மதிப்பைக் கொண்டுள்ளதுடன், தீவிரமடைந்து வரும் வர்த்தகப் போரில் பாதிக்கப்பட்டுள்ள கனடிய வணிகங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான நிதியுதவித் திட்டத்தையும் கனடா வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/811a45eb-5c80-43df-b51b-baef3cf4e40e/26-6a8e2442761e6.webp' /></p><h2>பேச்சுவார்த்தைகள்</h2><p> </p><p>

அமெரிக்கப் பொருட்களுக்கான இந்த பதில் வரிகள் செப்டம்பர் 8 முதல் அமுலுக்கு வரும் என்றும், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 700 பொருட்களுக்கு 15%, 25% மற்றும் 50% வரிகள் விதிக்கப்படும் என்றும் அரசாங்க அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.</p><p> 

பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் தொழில்துறைகளுக்கான நிதி ஆதரவைப் பொறுத்தவரை, சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான ஆதரவு, நிறுவனங்களின் பணப்புழக்கத்திற்கு நிதியளிக்கும் வழிமுறை மற்றும் புதிய வரிகளால் ஆபத்தில் இருக்கக்கூடிய தொழிலாளர்களுக்கான ஆதரவு உள்ளிட்ட புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்காக 7.5 பில்லியன் கனடிய டொலர் மதிப்பிலான உதவித் திட்டத்தை கனடா அறிவித்துள்ளது. </p><p>

வரிகளைத் தவிர்ப்பதற்காக இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 20 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடிய இறக்குமதிகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய 50% வரிகள் சனிக்கிழமை முதல் அமுலுக்கு வந்தன. </p><p>

இந்த பரஸ்பர பழிவாங்கும் வரிகள் கனடா-அமெரிக்க உறவில் ஒரு புதிய பின்னடைவைக் எடுத்துக்காட்டுகின்றன. </p><p>

எங்களது டொலருக்கு டொலர், வீதத்திற்கு வீதம் என்ற அடிப்படையிலான பதில் வரிகளும், பல பில்லியன் டொலர் உதவித் திட்டமும் தொழிலாளர்கள், விவசாயிகள், குடும்பங்கள் மற்றும் வணிகங்களைப் பாதுகாக்கும் என்று கனடாவின் நிதி அமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பெயின் தெரிவித்தார். </p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T23:24:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பலரையும் கதி கலங்க வைத்த கதறல்! யாரும் அறியாத பல தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-protest-tamils-missing-person-1787697648"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-protest-tamils-missing-person-1787697648</id>
            <summary type="text">காணாமல் போனோருக்கான சர்வதேச தின நிகழ்வை கண்டித்து வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கடுமையான எதிர்ப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமல் போனோருக்கான சர்வதேச தின நிகழ்வை கண்டித்து வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கடுமையான எதிர்ப்புக்களையும், தமது மனக்குமுறல்களையும் வெளிப்படுத்தி இருந்தனர்.</p><p>காணாமல் போனவர்கள் குறித்த 2007ஆம் ஆண்டு நினைவுகள் எப்போதும் மனதினை வதைத்த வண்ணம் உள்ளன. அத்தோடு, OMP அலுவலகத்தின் மீது தமக்கு நம்பிக்கை இல்லை எனவும் காணாமல் போனவர்களின் உறவுகள் தொடர்சியாக கூறி வருகின்றனர்.</p><p>அத்தோடு, இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது எனக் கோரி வடக்கு கிழக்கிலுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு கொண்டு இருக்கின்றனர்.</p><p>காணாமல் போனோர் விடயமாக இருக்கலாம் அல்லது நாட்டை சீரழித்த விடயமாக இருக்கலாம் இவை அனைத்திற்குமே காரணகர்த்தாவாக ராஜபக்ச குடும்பத்தினரே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்தோடு,&nbsp; ராஜபக்ச குடும்பத்தினரே இந்த விவகாரங்களுக்கு பொறுப்பு கூற வேண்டும்.</p><p>இந்தப் பொறுப்பு இயற்கையாக கிடைக்குமா அல்லது&nbsp; கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றதா அல்லது கடந்த கால அரசாங்கம் போன்று தற்போதைய அரசாங்கமும் நடந்து கொள்ளுமா என்கின்ற சந்தேகம் மக்கள் மத்தியிலே எழுகின்றது.</p><p>காணாமல் போனவர்கள் குறித்த 2007 நினைவுகள் மற்றும் தற்போதைய சூழல் பற்றிய விரிவான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NT4jM-nb1qE" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T23:19:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாக்குதல்களை நிறுத்த உக்ரைனிடம் கோரிக்கை... ரஷ்யா பறந்த அமெரிக்க உளவுத்துறை தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-to-halt-strikes-1787692688"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-to-halt-strikes-1787692688</id>
            <summary type="text">CIA Chief On Secret Trip To Moscow: அமெரிக்க உளவுத்துறை தலைவர் மாஸ்கோவிற்கு ரகசியப் பயணம்.
அமெரிக்க உளவுத்துறை தலைவர் ஜான் ராட்க்ளிஃப், ரஷ்ய அதிகாரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>CIA Chief On Secret Trip To Moscow: அமெரிக்க உளவுத்துறை தலைவர் மாஸ்கோவிற்கு ரகசியப் பயணம்.
</p><p>அமெரிக்க உளவுத்துறை தலைவர் ஜான் ராட்க்ளிஃப், ரஷ்ய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முன்னறிவிப்பின்றி மாஸ்கோவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbf7ec52-5afe-491a-a24f-9e98c8cf60cc/26-6a8e0693da59f.webp' /></p><p>
</p><p>அவரது பயணத்திற்கு முன்பு, மாஸ்கோ மற்றும் வடக்கு ரஷ்யாவின் பிற நகரங்கள் மீதான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்துமாறு உக்ரைனிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>இந்தக் கோரிக்கை திங்கள் முதல் புதன் வரை அமுல்படுத்த வேண்டும் என்றும், ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி ரஷ்யாவிற்குப் பயணம் செய்யவிருப்பதாக கீவ்விற்குத் தெரிவிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டது.</p><p></p><p> </p><p>ரஷ்யாவையும் உக்ரைனையும் ஒரு ஒப்பந்தத்திற்கு கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் முயற்சிகளுக்கு ஒரு முக்கியமான தருணத்தில் இந்த இரகசியப் பயணம் அமைந்துள்ளது. </p><p>செவ்வாய்க்கிழமை அதிகாலையில், அமெரிக்காவின் போயிங் சி-17 குளோப்மாஸ்டர் III இராணுவப் போக்குவரத்து விமானம் ஒன்று மாஸ்கோவின் வ்னுகோவோ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96df43f6-e277-4e53-b09e-8f00fa68b763/26-6a8e0693327fe.webp' /></p><p> </p><p>அந்த விமானம் மேரிலாந்தில் உள்ள ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸிலிருந்து புறப்பட்டதாகத் தெரிகிறது. மட்டுமின்றி, தங்கள் பகுதியில் விமானத்தை இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்ததாக லாட்வியாவின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். </p><p>அவ்விமானம் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு, அந்த வான்வெளியில் இயக்குவதற்கான அனுமதியைப் பெற்றிருந்தது என்று அவர் கூறினார். </p><p>ஈரானை உலகப் பொருளாதாரத்திலிருந்து துண்டிப்பதை நோக்கமாகக் கொண்ட Operation Economic Outcast என்ற புதிய நடவடிக்கையை அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் அறிவித்த மறுநாளே, ராட்க்ளிஃப்பின் மாஸ்கோ பயணமும் அமைந்துள்ளது. </p><p>ஈரானுடன் தொடர்ந்து வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகள் மற்றும் அமைப்புகளை இந்த நடவடிக்கை குறிவைக்கிறது; ஈரானின் முக்கிய உத்திசார் வர்த்தகக் கூட்டாளிகளில் ரஷ்யாவும் ஒன்று.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T23:18:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹைதி தலைநகர் அருகே டசின் கணக்கானோர் கடத்தல்... 47 பேர் படுகொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/gang-attack-near-haiti-capital-1787699997"></link>
            <id>https://news.lankasri.com/article/gang-attack-near-haiti-capital-1787699997</id>
            <summary type="text">Gang attack near Haiti capital: ஹைதி தலைநகருக்கு அருகே குழு ஒன்று நடத்திய தாக்குதலில் டசின் கணக்கானோர் கடத்தப்பட்டனர்.
கடந்த வார இறுதியில் ஹைதியின் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Gang attack near Haiti capital: ஹைதி தலைநகருக்கு அருகே குழு ஒன்று நடத்திய தாக்குதலில் டசின் கணக்கானோர் கடத்தப்பட்டனர்.
</p><p>கடந்த வார இறுதியில் ஹைதியின் தலைநகருக்கு அருகே ஆயுதமேந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 47 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fff23af8-6d50-45dc-a425-418c933e403f/26-6a8e2320031a3.webp' /></p><p>
</p><p>போர்ட்-ஓ-பிரின்ஸுக்கு மேலே உள்ள மலைகளில் அமைந்துள்ள கென்ஸ்காஃப் சமூகத்தைப் பாதுகாக்கும் முயற்சியில், அதிகாரிகள் தங்கள் குழு உறுப்பினர்களில் யாரையாவது கொன்றால், பணயக்கைதிகளைக் கொன்றுவிடுவதாக ஒரு குழு தலைவர் மிரட்டியுள்ளார். </p><p>கரீபியன் நாட்டில் பாதுகாப்பு மேம்பட்டு வருகிறது என்ற நம்பிக்கையை ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதல் தகர்த்தது. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளி ஒன்றில், </p><p>அப்பகுதியில் உள்ள ஆயுதம் ஏந்திய குழுக்களை விரட்டியடிக்க ட்ரோன்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று ஹைதியின் தேசியக் காவல் துறைத் தலைவர் விளாடிமிர் பாரைசனை அந்தக் குழுவின் தலைவன் எச்சரித்தான். </p><p>ஹைதியின் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதக் குழு தலைவர்களில் ஒருவரான 'இஸோ' (Izo) அல்லது ஜான்சன் ஆண்ட்ரே (Johnson André) என்பவரைக் குறிக்கும் வகையில், அவர் தன்னை 'இஸோ 2' (Izo 2) என்று அடையாளப்படுத்திக்கொண்டார்.</p><p></p><p> </p><p>இந்த நிலையில், 'Izo 2' என்பவர் 'Didi' என்றும் அறியப்பட்டதாகவும், இஸோ மற்றும் பிற குழு தலைவர்களின் சார்பாகவும் அவர்களுடன் ஒருங்கிணைந்தும் கென்ஸ்காஃப் (Kenscoff) பகுதியில் ஆயுதமேந்திய குழுவை வழிநடத்தியதாகவும் கூறப்படுகிறது.
</p><p>ஹைதியின் காவல்துறையையும், ஐ.நா. ஆதரவு பெற்ற குழு ஒழிப்புப் படையையும், அவர்களின் செல்வாக்கை இன்னும் அதிகமாகச் சிதறடிக்கக் கட்டாயப்படுத்துவதே இந்தத் தாக்குதலின் நோக்கமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். </p><p>மேலும், ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலத்திற்குப் பிறகு டிசம்பர் 13 அன்று பொதுத் தேர்தலை நடத்த ஹைதி தயாராகி வரும் நிலையில், இந்தத் தாக்குதல் ஒரு பலப்பிரயோகமாகவும், அந்நாட்டு அரசாங்கத்திற்கும் காவல்துறைக்கும் விடுக்கப்பட்ட ஒரு செய்தியாகவும் இருக்கலாம் என்றே கூறுகின்றனர்.</p><p> கென்ஸ்கோஃப் (Kenscoff) மீதான முதல் பெரிய தாக்குதல் 2025 ஜனவரியில் நடைபெற்றது; அதன்பின்னர், நகர மன்றத்தைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் அவ்வப்போது தாக்குதல்கள் நிகழ்ந்து வருகின்றன. </p><p>ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதல் இதுவரை நடந்தவற்றிலேயே மிகப்பெரியது. ஹைதியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைந்த அலுவலகத்தின் தகவலின்படி, கொல்லப்பட்ட 47 பேரில் குறைந்தது ஐந்து பேர் குழந்தைகள் ஆவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97abddee-8e7a-47f2-8d66-a1e5e58a6491/26-6a8e2320e371c.webp' /></p><p> </p><p>கென்ஸ்கோஃப் (Kenscoff) நகரின் மேயர் ஜீன் மாசிலான், கொல்லப்பட்டவர்களில் இரண்டு அரசு ஊழியர்கள் அடங்குவதாகவும், அவர்களில் தனது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தனது உறவினரும் ஒருவர் என்றும் கூறினார். </p><p>அமெரிக்காவால் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிடப்பட்டுள்ள 'விவ் அன்சாம்' (Viv Ansanm) என்ற சக்திவாய்ந்த குழுக்களின் கூட்டணியைச் சேர்ந்தவர்கள், 25 வீடுகளுக்கும் தீ வைத்ததாக அவர் கூறினார். </p><p>தாக்குதலுக்கு முன்னதாகப் போதுமான பாதுகாப்பை வழங்கவில்லை என்று சில உயிர் பிழைத்தவர்கள் அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டினர். அந்தக் குற்றச்சாட்டுகளைக் காவல்துறை மறுத்தது. </p><p>போர்ட்-ஓ-பிரின்ஸ் நகரின் சுமார் 70 சதவீதப் பகுதியும், ஹைதியின் மத்தியப் பகுதி மற்றும் அதற்கப்பால் உள்ள பரந்த நிலப்பரப்புகளும் ஆயுதமேந்திய நபர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. மேலும், ஹைதி முழுவதும் குழு வன்முறையால் முன்னெப்போதும் இல்லாத வகையில் 15 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T23:17:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[கௌரி கிஷன் ஓணம் ஸ்பெஷல் ஸ்டில்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/gouri-kishan-onam-stills-1787698224"></link>
            <id>https://cineulagam.com/article/gouri-kishan-onam-stills-1787698224</id>
            <summary type="text">96 படத்தில் நடித்து பிரபலம் ஆனவர் கௌரி கிஷன். அவர் தற்போது படங்களில் குணச்சித்திர ரோல்களில் அதிகம் நடித்து வருகிறார். 

கேரளாவை சேர்ந்த கௌரி கிஷனுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>96 படத்தில் நடித்து பிரபலம் ஆனவர் கௌரி கிஷன். அவர் தற்போது படங்களில் குணச்சித்திர ரோல்களில் அதிகம் நடித்து வருகிறார். </p><p>

கேரளாவை சேர்ந்த கௌரி கிஷனுக்கு தமிழ் நாட்டிலும் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
</p><p>
தற்போது ஓணம் ஸ்பெஷல் ஆக அழகிய லுக்கில் கௌரி கிஷன் எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.</p>]]></content>
            <updated>2026-08-25T22:50:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ருக்மிணி வசந்த் ரெட் ஹாட் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/rukmini-vasanth-sizzling-in-red-1787698109"></link>
            <id>https://cineulagam.com/article/rukmini-vasanth-sizzling-in-red-1787698109</id>
            <summary type="text">தற்போது தென்னிந்திய சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை ருக்மிணி வசந்த். அவருக்கு பெரிய அளவில் ரசிகர்களும் கிடைத்து வருகிறார்கள்.

யாஷ் உடன் டாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது தென்னிந்திய சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை ருக்மிணி வசந்த். அவருக்கு பெரிய அளவில் ரசிகர்களும் கிடைத்து வருகிறார்கள்.
</p><p>
யாஷ் உடன் டாக்சிக் படத்தில் அவர் நடித்து இருக்கும் நிலையில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். </p><p>சமீபத்தில் சென்னையில் நடந்த விழாவில் ருக்மிணி ரெட் ஹாட் உடையில் தாராள கவர்ச்சியாக வந்திருந்தார். வைரல் ஆகும் அந்த ஹாட் புகைப்படங்களை பாருங்க.
</p>]]></content>
            <updated>2026-08-25T22:48:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tourists-flock-to-sri-lanka-in-record-numbers-1787697975"></link>
            <id>https://jvpnews.com/article/tourists-flock-to-sri-lanka-in-record-numbers-1787697975</id>
            <summary type="text">ஒகஸ்ட் மாதத்தின் முதல் 23 நாட்களில் இலங்கைக்கு 155,331 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஒகஸ்ட் மாதத்தின் முதல் 23 நாட்களில் இலங்கைக்கு 155,331 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "> 

அதற்கமைய 2026 ஆம் ஆண்டில் இதுவரை வருகை தந்த சர்வதேசப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 1.5 மில்லியனாக உயர்ந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4869efd7-ee76-460a-9699-0a65956777bf/26-6a8e1b391e6c3.webp' /></p><h2 style="text-align: justify; ">சுற்றுலாப் பயணிகள்</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

2026 ஜனவரி 1 ஆம் திகதிக்கும் ஒகஸ்ட் 23 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மொத்தம் 1,498,749 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். </p><p style="text-align: justify; ">

ஒகஸ்ட் மாதத்தின் முதல் 23 நாட்களில் 36,590 இந்திய சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இக்காலப்பகுதியில் பதிவான மொத்த வருகையில் இவர்கள் சுமார் 24% பங்கைக் கொண்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

16,688 வருகைகளுடன் பிரித்தானியா இரண்டாம் இடத்தில் உள்ளதுடன், சீனா 10,294 சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-25T22:46:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடனடியாக நிறுத்த வேண்டும் ; ஈரானிடம் ட்ரம்ப் முன்வைத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-urges-iran-to-halt-ongoing-executions-1787696990"></link>
            <id>https://canadamirror.com/article/trump-urges-iran-to-halt-ongoing-executions-1787696990</id>
            <summary type="text">ஈரானில் போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை விதிப்பதை நிறுத்த வேண்டும் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானில் போர் தொடங்குவதற்கு முன் உள்நாட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானில் போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை விதிப்பதை நிறுத்த வேண்டும் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஈரானில் போர் தொடங்குவதற்கு முன் உள்நாட்டு போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு ஈரான் அரசு மரண தண்டனை விதிப்பது கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1417f972-bde5-4b11-8d96-d809148c7f2e/26-6a8e180771e21.webp' /></p><p>

</p><p>இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட்&nbsp; ட்ரம்ப் ஈரான் மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p>ட்ரம்ப் தனது ட்ருத் சோசியல் சமூக ஊடகப் பதிவில், “வீழ்ச்சியடைந்து வரும் ஈரான் தனது ராணுவத்தின் பெரும்பாலான பிரிவினருக்கு ஊதியம் வழங்கவில்லை.</p><p>அதேநேரம், போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபடாத நேரத்திலும் கூட முன்னெப்போதும் இல்லாத அளவில் அவர்களை ஈரான் கொன்று குவித்து வருகின்றது.</p><p>இது மிகப்பெரிய மனித உரிமைக்கு எதிரான செயல். இதனை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T22:32:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 30 வருடங்கள் வாழ்ந்த வெளிநாட்டவரை நாடு கடத்த உத்தரவு - தமிழர்களுக்கு ஆபத்து உள்ளதாக எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/canada-took-mans-permanent-residency-1787673215"></link>
            <id>https://tamilwin.com/article/canada-took-mans-permanent-residency-1787673215</id>
            <summary type="text">கனடாவில் 30 வருடங்களாக வாழ்ந்து வந்த வெளிநாட்டவர் ஒருவர் நாடு கடத்தப்படவுள்ளார். 

செக் குடியரசை சேர்ந்த 58 வயதான ஸ்லெப்சிக் என்பவரே இவ்வாறு நாடு கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் 30 வருடங்களாக வாழ்ந்து வந்த வெளிநாட்டவர் ஒருவர் நாடு கடத்தப்படவுள்ளார். </p><p>

செக் குடியரசை சேர்ந்த 58 வயதான ஸ்லெப்சிக் என்பவரே இவ்வாறு நாடு கடத்தல் உத்தரவை பெற்றுள்ளார். </p><p>

கனடாவில் புகலிடம் கோரிய நிலையில், தனது சொந்த நாட்டுக்கு அடிக்கடி சென்று வந்தமையே அவர் இந்த உத்தரவை பெற காரணமாக அமைந்துள்ளது.</p><p> </p><h2><b>

பாதுகாப்பு அச்சுறுத்தல்</b></h2><p>செக் குடியரசில் தனக்கு ஆபத்து உள்ளதாக புகலிடம் பெற்ற நிலையில், அந்த நாட்டு கடவுச்சீட்டில் நாட்டுக்கு சென்று வந்தமை கனடா எல்லை பாதுகாப்பு முகவர அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6db49a5f-f0aa-49d2-b292-9c5789f17fe5/26-6a8dcd598b29c.webp' /></p><p>இதன்மூலம் அவரின் சொந்த நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லையெனுவும், கனடாவில் வாழ வேண்டிய அவசியம் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p>

அதற்கமைய 2012ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் அவரது நிரந்தர குடியுரிமை அந்தஸ்து மற்றும் பாதுகாப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டுள்ளன. </p><p>

இந்தச் சட்டத்திற்கு எதிராக பாதிக்கப்பட்ட தரப்பு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட போதும், அதனை விசாரிக்க மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில் ஸ்லெப்சிக்கை நாடு கடத்தும் நடவடிக்கையில் குடிவரவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

இந்தத் தீர்ப்பின் மூலம் கனடாவில் புகலிடம் கோரிய நிலையில், இலங்கை உட்பட வெளிநாடுகளுக்கு சென்று வரும் தமிழர்களுக்கு ஆபத்து உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-08-25T22:31:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக முதல்வர் விஜய்க்கு 2 நாட்கள் கால அவகாசம் - உயர் நீதிமன்றம் விடுத்த இறுதி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-nadu-chief-minister-vijay-gets-2-days-time-1787696702"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-nadu-chief-minister-vijay-gets-2-days-time-1787696702</id>
            <summary type="text">தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி எதிர்வரும் வியாழக்கிழமைக்குள் மனு தாக்கல் செய்யாவிட்டால் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக முதல்வர் விஜய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி எதிர்வரும் வியாழக்கிழமைக்குள் மனு தாக்கல் செய்யாவிட்டால் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
இது தொடர்பான வழக்கு நேற்று(25.08.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்குறிப்பிட்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2> 

தேர்தல் வெற்றி</h2><p>
தமிழக முதல்வர் விஜய் கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். </p><p>

இரண்டு தொகுதிகளிலும் விஜய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர், இனிகோ இருதயராஜ் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லஷ்மி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bba779c2-df03-48e7-a673-54a1d681e25c/26-6a8e170bde777.webp' /></p><p>
</p><p>
இந்த இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிப்பு குறித்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று(25) நீதியரசர் தி.லட்சுமி நாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><h2>

தமிழக முதல்வருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை</h2><p>
அந்தத் தருணத்தில் தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி மனு தாக்கல் செய்யவிருப்பதாகவும், அதற்கு இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கவேண்டும் என முதல்வர் விஜய் தரப்பிலும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பிலும் கால அவகாசம் கேட்கப்பட்டது.</p><p>

இதனை ஏற்க மறுத்த நீதியரசர், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 86ஆவது பிரிவின்படி தேர்தல் வழக்குகளை ஆறு மாத காலத்துக்குள் நிறைவு செய்யவேண்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ecc9c25-4b61-49d7-8492-9d7267acbddd/26-6a8e170b2f48c.webp' /></p><p> 

கடந்த முறை வழக்கை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது என குறிப்பிட்டிருந்தேன் என்றார்.


இதனைத் தொடர்ந்து இரண்டு வார கால அவகாசம் வழங்க மறுத்த நீதியரசர், எதிர்வரும் 27ஆம் திகதி வியாழக்கிழமை வரை அவகாசம் வழங்கினார். </p><p>அதற்குள் நிராகரிப்பு மனு தாக்கல் செய்யாவிட்டால் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு எச்சரிக்கை விடுத்தார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T22:28:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோதுமை ஏற்றுமதி மீதான தடையை நீக்கிய இந்தியா: பின்னணியில் இருக்கும் காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-lifted-wheat-export-ban-1787696804"></link>
            <id>https://news.lankasri.com/article/india-lifted-wheat-export-ban-1787696804</id>
            <summary type="text">India lifted wheat export ban: கடந்த 2022ல் விதித்த கோதுமை ஏற்றுமதி மீதான தடையை இந்தியா நீக்கியுள்ளது.
கோதுமை மற்றும் கோதுமை மாவு மீதான ஏற்றுமதித் தட...</summary>
            <content type="html"><![CDATA[<p>India lifted wheat export ban: கடந்த 2022ல் விதித்த கோதுமை ஏற்றுமதி மீதான தடையை இந்தியா நீக்கியுள்ளது.
</p><p>கோதுமை மற்றும் கோதுமை மாவு மீதான ஏற்றுமதித் தடையை இந்திய அரசு நீக்கியுள்ளதுடன், குறிப்பிட்ட கோதுமைப் பொருட்களை உடனடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2b8548d-09be-4bf6-9fcd-f6d176a39241/26-6a8e16a713fd8.webp' /></p><p> </p><p>
திருத்தப்பட்ட கொள்கையானது கோதுமை அல்லது மெஸ்லின் மாவு (அட்டா), மைதா, ரவை (சூஜி), முழு கோதுமை மாவு மற்றும் அதிலிருந்து பெறப்படும் மாவு ஆகியவற்றை ஏற்றுமதி செய்யலாம். </p><p>உள்நாட்டு இருப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்த கவலைகளுக்கு மத்தியில், இந்தியாவின் கோதுமை ஏற்றுமதிக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. </p><p>2022-இல், நாட்டின் 140 கோடி மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்தியா ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்தது. </p><p>ரஷ்யா-உக்ரைன் போரினால் உலகளாவிய விநியோகம் தடைபட்டதைத் தொடர்ந்து உள்நாட்டு விலைகள் உயர்ந்ததும், பயிர்களைச் சேதப்படுத்தி ஒட்டுமொத்த கோதுமை விளைச்சலைக் குறைத்த சுட்டெரிக்கும் வெப்பநிலையும் இந்த முடிவுக்கு வழிவகுத்தன.</p><p></p><p> </p><p> பெருமளவிலான மக்கள் தொகைக்குத் தேவையானவற்றை உள்ளூரிலேயே கிடைக்கச் செய்வதை உறுதிசெய்ய அரசு நடவடிக்கை எடுத்தது.</p><p>
அக்காலகட்டத்தில், 2021-22 ஆம் ஆண்டில் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி 2.05 பில்லியன் டொலர் மதிப்பிலான 7 மில்லியன் டன்கள் என்ற சாதனை அளவை எட்டியிருந்தது. </p><p>உள்நாட்டு விலைகளைக் கட்டுப்படுத்துதல், உணவு விநியோகத்தைப் பாதுகாத்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவையே இந்தத் தடையின் நோக்கங்களாக இருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2822ee8a-ccd2-4dfa-bbed-d9e1bd8e0cd9/26-6a8e16a7bae6b.webp' /></p><p> </p><p>இந்தியாவின் சமீபத்திய கோதுமை அறுவடை 120.6 மில்லியன் டன்கள் என்ற வரலாற்றுச் சாதனை அளவை எட்டியுள்ளதாலும், மொத்த உணவு தானிய உற்பத்தி 5.3 சதவீதம் அதிகரித்துள்ளதாலும், உள்நாட்டு விநியோகம் மேம்பட்டிருப்பதைக் காரணம் காட்டி இந்தியா தற்போது அந்தத் தடையை நீக்கியுள்ளது.</p><p> இந்தியாவில் கோதுமை அதிகம் பயிரிடப்படும் மாநிலங்களாக உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், பீகார் மற்றும் குஜராத் ஆகியவை உள்ளன. </p><p>2024-25 ஆம் ஆண்டில் கோதுமை உற்பத்தி 117.94 மில்லியன் டன்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது; நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம், பூட்டான் மற்றும் ஈராக் ஆகியவை இந்தியாவின் முக்கிய ஏற்றுமதிச் சந்தைகளாகத் திகழ்கின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T22:24:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தல்களை நடத்தாமல் ஆட்சியை நீடிக்க அரசாங்கம் சதி! சம்பிக்க குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-conspiring-holding-elections-champika-1787691505"></link>
            <id>https://tamilwin.com/article/government-conspiring-holding-elections-champika-1787691505</id>
            <summary type="text">&amp;nbsp;தேர்தல்களை நடத்தாமல் தொடர்ச்சியாக ஆட்சியில் இருப்பதற்கான சதித்திட்டத்தில்
மக்கள் விடுதலை முன்னணியினரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் செயற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தேர்தல்களை நடத்தாமல் தொடர்ச்சியாக ஆட்சியில் இருப்பதற்கான சதித்திட்டத்தில்
மக்கள் விடுதலை முன்னணியினரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் செயற்பட்டு
வருகின்றனர் என்று முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டினார்.</p><p>

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நாட்டின் உண்மையான பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளாமல், தங்களது ஆட்சிக்
காலத்தை நீடித்துக்கொள்வதற்காகவே அரசு 22ஆவது அரசமைப்புத் திருத்தத்தைக்
கையில் எடுத்துள்ளது.</p><p>

சில அமைச்சர்கள் தேர்தல்கள் வராது எனப் பிரகடனம் செய்த போதிலும், ஜனாதிபதியோ
அரசின் பேச்சாளரோ அதனை இதுவரை மறுக்கவில்லை.</p><h2>பொருளாதாரப் பிரச்சினை</h2><p>
</p><p>
சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டல்களின்படி, நாட்டின் அந்நியச் செலாவணி
கையிருப்பு 2026இல் 8.6 பில்லியன் டொலர்களாகவும், 2027இல் 12 பில்லியன்
டொலர்களாகவும் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால், எந்தவித உற்பத்தி வளர்ச்சியோ
புதிய முதலீடுகளோ இல்லாமல் வெறும் சமூக வலைத் விளம்பரங்களைக் கொண்டு நாட்டை
நடத்த முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a59ba4f-49d4-4064-a802-86f212ed089f/26-6a8e147a97762.webp' /></p><p>

கடந்த 2022 மார்ச் 7 அன்று இலங்கை வங்குரோத்தாகும் நிலை குறித்து சர்வதேச நாணய
நிதியம் இரகசியக் கடிதம் மூலம் எச்சரித்திருந்தும், அதற்குக் காரணமான எவர்
மீதும் தற்போதைய அரசு இதுவரை முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.</p><p>

உண்மையான பொருளாதாரப் பிரச்சினைகளை மூடிமறைத்து மக்களின் கவனத்தை வேறு
திசைக்குத் திருப்புவதற்காகவே அரசு இத்தகைய நாடகங்களை நடத்துகின்றது.
</p><p>
அரசின் இந்த ஏமாற்று வேலைகளுக்கு மக்கள் ஏமாந்துவிடக் கூடாது. கூட்டு
எதிர்க்கட்சியாக நாடு முழுவதும் சென்று மக்களை விழிப்புணர்வூட்டவுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T22:17:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-motor-traffic-commissioner-general-appointed-1787691140"></link>
            <id>https://jvpnews.com/article/new-motor-traffic-commissioner-general-appointed-1787691140</id>
            <summary type="text">தற்போது வெற்றிடமாக உள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் பதவிக்கு ஓய்வுபெற்ற எயார்வைஸ் மார்ஷல் துசார இந்துனில் பெர்னாண்டோவை உடனடியாக அமுலு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தற்போது வெற்றிடமாக உள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் பதவிக்கு ஓய்வுபெற்ற எயார்வைஸ் மார்ஷல் துசார இந்துனில் பெர்னாண்டோவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
</p><p style="text-align: justify; ">
குறித்த பதவிக்கு ஓய்வுநிலை எயார்வைஸ் மார்ஷல் துசார இந்துனில் பெர்னாண்டோவை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பது தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் யோசனை சமர்ப்பிக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a76cef57-75b6-48f8-9676-2bbae4aeb2e1/26-6a8e00865bc4a.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை தனது முழுமையான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-25T21:30:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை குறித்து எட்டப்படவுள்ள முடிவு! முக்கிய சந்திப்பில் அப்பாஸ் அராக்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/temporary-shipping-lane-to-strait-of-hormuz-1787690555"></link>
            <id>https://ibctamil.com/article/temporary-shipping-lane-to-strait-of-hormuz-1787690555</id>
            <summary type="text">ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் ஓமன் நாட்டு வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்புசைதி ஆகியோர், ஹோர்முஸ் நீரிணையில் ஒரு தற்காலிக கப்பல் போக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் ஓமன் நாட்டு வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்புசைதி ஆகியோர், ஹோர்முஸ் நீரிணையில் ஒரு தற்காலிக கப்பல் போக்குவரத்து வழித்தடத்தை அமைப்பது மற்றும் கண்ணிவெடிகளை அகற்றும் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து விவாதித்துள்ளனர்.
</p><p>
தெஹ்ரானில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளின் இறையாண்மையையும் மதிக்கும் வகையிலான ஏற்பாடுகளை எட்டுவதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

அதன்போது, ஹோர்முஸ் நீரிணை வழியாக ஒரு தற்காலிக கூட்டு கப்பல் போக்குவரத்து வழித்தடத்தை நிறுவுவது மற்றும் அங்குள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான கூட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவது ஆகியவற்றை உள்ளடக்கிய முன்மொழியப்பட்ட கட்டமைப்பு குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.</p><p></p><h2>எதிர்கால ஏற்பாடுகள்</h2><p>
</p><p>
இந்நிலையில், ஒரு நிரந்தர கப்பல் போக்குவரத்து வழித்தடத்தை அமைப்பது, நீரிணையை நிர்வகிப்பதற்கான எதிர்கால ஏற்பாடுகள், அத்துடன் தகவல் பரிமாற்றம், கப்பல் போக்குவரத்து மேலாண்மை மற்றும் அது தொடர்பான பாதுகாப்பு சேவைகளை வழங்குவதற்கான வழிமுறைகளை உருவாக்குவது குறித்து உடன்பாட்டை எட்டுவதற்காக இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடரும் என கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d14bdde-cfe0-43d9-8095-162fb9576c6b/26-6a8e0060dd709.webp' /></p><p>
மேலும், எட்டப்படும் எந்தவொரு உடன்பாடும் சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டதாகவும், அண்டை நாடுகளின் இறையாண்மையை மதிக்கும் வகையிலும் அமைவதை உறுதி செய்ய, வளைகுடா கடலோர நாடுகளுடன் கூட்டு விவாதங்களை நடத்துவதன் முக்கியத்துவத்தையும் அதன்போது இரு தலைவர்களும் உறுதிபடுத்தியுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T21:30:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ தாக்கத்தால் முற்றாக பாதிக்கப்பட்ட தமிழர் பகுதி - குடிநீர் தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/batticaloa-completely-affected-by-el-nino-impact-1787692456"></link>
            <id>https://tamilwin.com/article/batticaloa-completely-affected-by-el-nino-impact-1787692456</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>

மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கைத்தொழில்
மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற
உறுப்பினருமான சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க
அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு
மண்டபத்தில் நேற்று(25.08.2026) இடம்பெற்றது. </p><h2>

விசேட தீர்மானங்கள்</h2><p>

 ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த மே மாதம் மட்டக்களப்பு
மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டபோது நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்
கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் தொடர்பாக, நிகழ்நிலை
ஊடாகக் கலந்து கொண்ட அமைச்சரினால் விசேட மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது.
</p><p>

இதன்போது விசேடமாக எல் நினோ தாக்கம் குறித்தும் அதற்காக
முன்னெடுக்கப்படவேண்டிய செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c97f0b24-fc60-495c-bf89-3e28c8eeb9d1/26-6a8e06400da2b.webp' /></p><p>
</p><p>

மேலும் பிரஜா சக்தி வேலைத்திட்டங்கள், மாவட்டத்தில் இதுவரை முன்னெடுக்கப்பட்டு
வரும் அபிவிருத்தித் திட்டங்கள், புதிய வீடமைப்புத் திட்டங்கள், சிறு
குளங்களைப் புனரமைத்தல், மக்களின் வாழ்வாதார மற்றும் பொருளாதாரத்தை
மேம்படுத்துவதற்கான திட்டங்கள், விவசாய நடவடிக்கைகள், உணவுப் பாதுகாப்பு
உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது.
</p><h2>
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்</h2><p>
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், 

மாவட்டத்தில் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதுடன், மக்களின் குடிநீர்த் தேவையைப்
பூர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்பு அவசியம் எனத்
தெரிவித்தார்.
</p><p>
மேலும், மேய்ச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்டுள்ள மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல்
தரையை விடுவித்தல், முந்தானையாற்றை அபிவிருத்தி செய்தல், கிரான்
பொண்டுகள் - சேனைப் பால நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம், மண்டூர் - குருமண்வெளி
மற்றும் பட்டிருப்பு பால நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம்,
அம்பிளாந்துறை - குருக்கள்மடம், திக்கிலிவெட்டை- சந்திவெளி மற்றும் நரிப்புல்
தோட்டம்- பங்குடாவெளி ஆகிய பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட வேண்டிய பாலங்களின்
நிர்மாணப் பணிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4719aa24-8408-4546-8684-5913550ac714/26-6a8e0640b9a95.webp' /></p><p>
</p><p>

அத்துடன், மனித - காட்டு யானை மோதல்கள், நெல் கொள்வனவு, களப்பு வாவியைத்
தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது மீளாய்வு
மேற்கொள்ளப்பட்டது.
</p><p>

மேலும், எல் நினோ தாக்கத்தினால் மாவட்டத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக்
குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய செயற்றிட்டங்கள் தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு
இதன்போது ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், மக்களைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்க
வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
</p><p>

இந்த நிகழ்வில் மாவட்ட திட்டமில் பணிப்பாளர் எஸ்.நவநீதன், பிரதேச செயலாளர்கள்,
மூப்படை உயர் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து
கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/192a2372-de19-4e51-9caa-ecd8d1335afa/26-6a8e0641704d0.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a66d459-a031-4203-a3a5-24588abcddcf/26-6a8e06424e5ae.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T21:17:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தகாத உறவிலிருந்தவருடன் சேர்ந்து மனைவி செய்த சம்பவம்; மதுபோதையில் அரங்கேறிய கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wife-s-act-with-her-illicit-partner-1787679910"></link>
            <id>https://jvpnews.com/article/wife-s-act-with-her-illicit-partner-1787679910</id>
            <summary type="text">கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து, அவரது உடலை வீட்டின் அருகே புதைத்ததாக மனைவி உள்பட 2 பேரை 24 மணி நேரத்திற்குள் குற்றப்பிரிவு பொலிசார் கைது ச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து, அவரது உடலை வீட்டின் அருகே புதைத்ததாக மனைவி உள்பட 2 பேரை 24 மணி நேரத்திற்குள் குற்றப்பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர்.


</p><p style="text-align: justify; ">
கணவருடன் அடிக்கடி தகராறு
அரியானா மாநிலம் பரீதாபாத்தில் வசித்து வந்தவர் 42 வயதுடையவரின் மனைவிக்கும் காமத் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c386935b-3d63-4da2-9587-9980be1e8f06/26-6a8dd4ae35751.webp' /></p><h2 style="text-align: justify; ">கொலை செய்ய திட்டம்</h2><p style="text-align: justify; ">

இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்தநிலையில், இருவருக்கும்&nbsp; இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
</p><p style="text-align: justify; ">&nbsp;இதையடுத்து, மனைவியும் கள்ளக்காதலனும் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">அதன்படி,&nbsp; கணவருக்கு அதிக அளவில் மது குடிக்க வைத்துள்ளார்.&nbsp; கணவர் மதுபோதையில் இருந்தபோது, அவரது தலையில் ‘இன்டர்லாக்’ கல்லால் தாக்கி காமத் கொலை செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">பின்னர், கொலையை மறைக்க சியாம்வீரின் உடலை வீட்டின் அருகே இருவரும் சேர்ந்து புதைத்துள்ளனர்.இதையடுத்து இருவரையும் 24 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-25T20:53:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027-ஐ நோக்கி தீவிரமடையும் விசாரணை - காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் அநுர அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-s-response-to-the-issue-of-disappeared-1787691041"></link>
            <id>https://tamilwin.com/article/government-s-response-to-the-issue-of-disappeared-1787691041</id>
            <summary type="text">காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியைத் தேடும் பயணமும்
அந்த குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார உதவிகளை
வழங்கும் செயற்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியைத் தேடும் பயணமும்
அந்த குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார உதவிகளை
வழங்கும் செயற்பாடுகளும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.</p><p> 

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்று(25.08.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.</p><p> 

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2> 

உறவுகளை இழந்தவர்களுக்கு கொடுக்கப்படும் நிதி</h2><p>

அவர் மேலும் உரையாற்றுகையில்,</p><p>

பல ஆண்டுகளாகத் தங்களது உறவுகளைத்
தேடித் தவிக்கும் குடும்பங்களின் வலியை நாம் முழுமையாக உணர்கின்றோம்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம்
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்கு அதிக முன்னுரிமை வழங்கிச் செயற்பட்டு
வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd5398fa-6d70-4c33-8996-7d34c608ceeb/26-6a8e009b7fdda.webp' /></p><p> </p><p>

அதன் வெளிப்பாடாகவே காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின்
செயற்பாடுகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு
வருகின்றன. </p><p>


ஒரு குடும்பத்தின் வருமானம் ஈட்டுபவர் காணாமல் போயிருக்கலாம். எனவே, உண்மையைத் தேடும் விசாரணைக்கு இணையாக, அந்த குடும்பங்களின் பொருளாதார
மற்றும் சமூக வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்கான உதவிகளும் வழங்கப்பட வேண்டும்.


இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல.</p><p> அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு
மாகாணங்களில் மனிதப் புதைகுழிகள் தொடர்பான அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்று
வருகின்றன.</p><p> 

இவ்வாறான இடங்களில் கிடைக்கும் சான்றுகள் முறையாக
ஆவணப்படுத்தப்பட்டு, நிபுணத்துவத்துடன் விசாரிக்கப்பட்டு நீதிச்
செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படுவது அவசியமாகும். 

உண்மை, நீதி, நிவாரணம்,
கண்ணியம், மீள்நிகழாமை ஆகியன ஒன்றோடொன்று தொடர்புடையவை. உண்மையைத் தேடும் பொறுப்பிலிருந்து இந்த அரசாங்கம் ஒருபோதும் விலகாது என்றார்.</p><h2> 


57 மில்லியன் செலவில் மனித புதைகுழி ஆய்வு</h2><p>

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய நீதி
அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார, 


எமது அரசாங்கத்திலே முக்கியமான ஒரு கொள்கை இருக்கின்றது, சட்டம் அனைவருக்குமே
சமன். சட்டத்துக்கு மேலாக ஒருவரும் இல்லை. காணாமலாக்கப்பட்ட பிரச்சனைகள் போன்ற
சட்ட விரோதமான நடவடிக்கைகளுக்கும் சட்டம் சரியான முறையிலே
நடைமுறைப்படுத்தப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c3964a2-c24e-4a63-9d18-a423ed76dd80/26-6a8e009c72e1d.webp' /></p><p> </p><p>

அனைவருக்கும் நீதி கிடைக்கும் என்பதே எமது
எதிர்பார்ப்பு, நாட்டு மக்கள் எங்களுக்கு ஆணை வழங்கியதும் இந்த
எதிர்பார்ப்பிலாகும். 

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான செயற்பாடுகளைப்
பலப்படுத்தும் நோக்கில் அலுவலகத்தின் ஆளணிப் பற்றாக்குறை நிவர்த்தி
செய்யப்பட்டுப் புதிதாக 69 உத்தியோகத்தர்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக
2025ஆம் ஆண்டில் சுமார் 375 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன், செம்மணி சமூகப் புதைகுழி தொடர்பான ஆய்வுகளை விஞ்ஞான
ரீதியாக முன்னெடுப்பதற்காக 57 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன்,
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடமைப்பு, கல்வி மற்றும் சுகாதார வசதிகளை
உள்ளடக்கிய விசேட உதவிப் பொதி ஒன்றினை வழங்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகின்றது.</p><p> 

குற்றவாளிகள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு உரிய
தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
</p><h2>
2027 முழுமையாக நிறைவடையும் விசாரணைகள்</h2><p>

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த கருத்துத்
தெரிவிக்கையில், 

நாடளாவிய ரீதியில் கிடைக்கப்பெற்ற சுமார் 19,000
முறைப்பாடுகளில் 9,000க்கும் மேற்பட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும்,
குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் பதிவான 2,300 பேரில் 1,940 பேருக்கான
விசாரணைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/657ae54b-9430-421c-95e9-b83fe70d4a4f/26-6a8e009d599e3.webp' /></p><p>

இடைநிறுத்தப்பட்டிருந்த விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்,
எஞ்சியுள்ள அனைத்து விசாரணைகளையும் 2027ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நிறைவு
செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
இந்த நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்
சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன் மற்றும் ஜெ.ரஜீவன்,
யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டச் செயலர்கள், வடக்கு மாகாணப் பிரதிப்
பிரதம செயலாளர் - நிர்வாகம், பிரதேச செயலர்கள் உள்ளிட்ட அரச திணைக்களங்களின்
தலைவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்கள் எனப் பலரும்
பங்கேற்றிருந்தனர்.
</p><p>
இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் குடும்ப உறுப்பினர்களுக்கான மருத்துவ
முகாம் ஒன்றும் நேற்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T20:53:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொஸ்கோவில் அமெரிக்க இராணுவப் போக்குவரத்து விமானம் தரையிறக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-military-transport-aircraft-lands-in-moscow-1787687540"></link>
            <id>https://tamilwin.com/article/us-military-transport-aircraft-lands-in-moscow-1787687540</id>
            <summary type="text">அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான போக்குவரத்து விமானமொன்று மொஸ்கோவின்
நுக்கோவோ விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக ஃப்ளைட்ரேடார் 24 விமானக்
கண்காண...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான போக்குவரத்து விமானமொன்று மொஸ்கோவின்
நுக்கோவோ விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக ஃப்ளைட்ரேடார் 24 விமானக்
கண்காணிப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன.
</p><p>
07-7181 என்ற பதிவு இலக்கத்தைக் கொண்ட இந்த போயிங் குளோப்மாஸ்டர் ரக இராணுவ
விமானம், லத்வியாவின் ரிகா நகரிலிருந்து நேரடியாகப் புறப்பட்டு மொஸ்கோவில்
தரையிறங்கியுள்ளது.
</p><p>
எனினும், இவ்விமானத்தில் பயணிகள் அல்லது பொருட்கள் ஏதேனும் கொண்டு வரப்பட்டதா
என்பது குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.</p><h2>அமைதிப் பேச்சுவார்த்தை</h2><p>
</p><p>
அத்துடன், இப் பயணம் தொடர்பில் தமக்கு இதுவரை எவ்விதத் தகவலும்
கிடைக்கப்பெறவில்லை என ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
</p><p>முன்னதாக, வொஷிங்டனில் உள்ள கெம்ப் ஸ்ப்ரிங்ஸ் விமானத் தளத்திலிருந்து
புறப்பட்ட இவ்விமானம் ரிகாவை வந்தடைந்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb24c20b-3ac3-4e9b-ac41-132ce4ec08cd/26-6a8dfff0c452f.webp' /></p><p>
</p><p>
உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்காக விசேட பிரதிநிதிகள் வருகை தந்ததனைத்
தொடர்ந்து, ஐரோப்பாவிலிருந்து ரஷ்யாவிற்கு நேரடியாக அமெரிக்க விமானமொன்று
பயணித்துள்ளமை இதுவே முதன்முறையாகும்.
</p><p>
ஈரானில் இடம்பெற்று வரும் போர்ப் பதற்றங்களுக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும்
ரஷ்யாவிற்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்துள்ள நிலையில், இப் திடீர்
பயணம் பிராந்திய அரசியல் களத்தில் அவதானத்தைப் பெற்றுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T20:49:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[11 புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றிழ் கையளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/11-new-diplomats-present-credentials-to-president-1787690581"></link>
            <id>https://jvpnews.com/article/11-new-diplomats-present-credentials-to-president-1787690581</id>
            <summary type="text">இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 07 வெளிநாட்டு தூதுவர்களும் 04 உயர்ஸ்தானிகர்களும் இன்று (25) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 07 வெளிநாட்டு தூதுவர்களும் 04 உயர்ஸ்தானிகர்களும் இன்று (25) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர். </p><p>

இந்த புதிய இராஜதந்திரிகள் முறையே பிரேசில், பங்களாதேஷ், சீனா, ஒஸ்திரியா, அமெரிக்கா, டொமினிகன் குடியரசு, கானா, புரூணை தாருஸ்ஸலாம், சூடான், கயானா மற்றும் பனாமா ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12b06a54-40db-4548-ada1-5dafe462f4b6/26-6a8dfe56af078.webp' /></p><p> </p><p>

அதன்படி, இன்று ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்த புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் பின்வருமாறு, </p><h3>

தூதுவர்களாக:</h3><p>&nbsp;Jorge Geraldo Kadri - பிரேசில் கூட்டாட்சிக் குடியரசின் தூதுவர், Wei Huaxiang - சீன மக்கள் குடியரசின் தூதுவர், கலாநிதி Robert Zischg - ஆஸ்திரிய குடியரசின் தூதுவர், Eric S. Meyer - அமெரிக்கத் தூதுவர், Francisco Manuel Comprés Hernández - டொமினிகன் குடியரசின் தூதுவர், கலாநிதி Mohammed Abdalla Ali Eltom - சூடான் குடியரசின் தூதுவர், Nubiela Yanarith Ayala - பனாமா குடியரசின் தூதுவர்</p><p></p><h3> 

உயர்ஸ்தானிகர்களாக 

</h3><p> D.M. Salahuddin Mahmud - பங்களாதேஷ் குடியரசின் உயர்ஸ்தானிகர், பேராசிரியர் Kwasi Obiri-Danso - கானா குடியரசின் உயர்ஸ்தானிகர், Siti Arnyfariza Md Jaini - புரூணை தாருஸ்ஸலாமின் உயர்ஸ்தானிகர், Dharamkumar Seeraj - கயானா கூட்டுறவு குடியரசின் உயர்ஸ்தானிகர்</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T20:43:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவின் உகண்டா பணத்தை தேடும் பிக்கு - கொழும்பு பேருந்து நிலையத்தில் சிக்கிய 1029 பேர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/1029-people-trapped-at-colombo-bus-station-1787689626"></link>
            <id>https://tamilwin.com/article/1029-people-trapped-at-colombo-bus-station-1787689626</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்குகள் மிகத் தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், அடுத்த மாதம் மக்களுக்கான தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக த...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்குகள் மிகத் தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், அடுத்த மாதம் மக்களுக்கான தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதேபோன்று, கொழும்பு - புறக்கோட்டையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படுவதுடன், அவர்களது குற்றச் செயல்கள் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
“க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பலாலி காணி விவகாரம் தொடர்பில் மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>

மக்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வை வழங்க முடியாத நிலையும், இராணுவத்தினரின் நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய பதிலடி கொடுக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p> 

மேலும், இதுவரை நாட்டின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் குரல் கொடுக்காத சில அரசியல் தலைவர்கள், மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அநுர அரசாங்கத்திடம் கேள்விகளை எழுப்பி வருவதை அவதானிக்க முடிகிறது.
</p><p>இதுபோன்று, நாட்டில் நாளாந்தம் இடம்பெறும் சுவாரஸ்யமான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்களை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறது “நாட்டு நடப்பு” நிகழ்ச்சி,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Ul2MFwzqDoY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T20:35:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் வரி விதிப்புகளுக்கு கனடா பதிலடி! உள்நாட்டு வணிகர்களுக்கு நிவாரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/canada-announces-tariffs-against-the-us-1787688576"></link>
            <id>https://ibctamil.com/article/canada-announces-tariffs-against-the-us-1787688576</id>
            <summary type="text">அமெரிக்காவின் சமீபத்திய வரி விதிப்புகளுக்குப் பதிலடியாக, அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களுக்கு க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் சமீபத்திய வரி விதிப்புகளுக்குப் பதிலடியாக, அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களுக்கு கனடா பதில் வரிகளை விதித்துள்ளதுடன், உள்நாட்டு வணிகங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான நிதியுதவித் தொகுப்பையும் அறிவித்துள்ளது.
</p><p>
செப்டம்பர் 8 முதல் நடைமுறைக்கு வரும் இந்த பதில் வரிகள், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 700 வகையான பொருட்களுக்கு 15%, 25% மற்றும் 50% என்ற அளவில் விதிக்கப்படவுள்ளன. </p><p>

எஃகு(உலோகம்), அலுமினியம், மரத்தாலான பொருட்கள் மற்றும் ஆடைகளுக்கு 50% வரியும், சீஸ், வீட்டு உபகரணங்கள் மற்றும் கடல் உணவுகளுக்கு 25% வரியும், மின்னணுப் பொருட்கள் மற்றும் கருவிகளுக்கு 15% வரியும் விதிக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>கனடாவின் பதிலடி&nbsp;</h2><p>
</p><p>
இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 20 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடிய இறக்குமதிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த 50% வரிகள் கடந்த சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f3de2aa-2e7e-49bf-a66d-f87a7ee4fb1d/26-6a8df92158c44.webp' /></p><p><i>Image Credit: Aljazeera</i></p><p>
</p><p>
இதற்குக் கனடாவின் பதிலடி நடவடிக்கையாக இந்த பதில் வரிகள் அமைந்துள்ளன. </p><p>

அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்துவதையும், கனடிய வணிகங்களைப் பாதுகாப்பதையும் இந்த வரிகள் நோக்கமாகக் கொண்டுள்ளதாகத் தொழில்துறை அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.</p><h2>வட்டியில்லா கடன்கள்&nbsp;</h2><p>

அத்துடன், பாதிப்புக்குள்ளாகும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக 7.5 பில்லியன் கனடிய டொலர் மதிப்பிலான உதவித் திட்டத்தையும் கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f22302b8-8d73-4594-b775-1063fd884e1c/26-6a8df922528bd.webp' /><br></p><p><i>Image Credit: Remitly</i></p><p> </p><p>

இதன் கீழ் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு C$2.5 மில்லியன் முதல் C$5 மில்லியன் வரை 36 மாத கால அவகாசத்துடன் வட்டியில்லா கடன்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T20:33:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கப்பல்கள் உடனடியாக தகர்க்கப்படும் ; ஈரானுக்கு ட்ரம்பின் இறுதி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ships-face-immediate-destruction-1787689084"></link>
            <id>https://canadamirror.com/article/ships-face-immediate-destruction-1787689084</id>
            <summary type="text">சர்வதேச கடல் வழிப்பாதையான ஹார்முஸ் நீரிணையில் பதிக்கப்பட்டிருந்த அனைத்து கண்ணிவெடிகளும் அமெரிக்க கடற்படையால் வெற்றிகரமாக அகற்றப்பட்டு, வெடிக்க வைக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச கடல் வழிப்பாதையான ஹார்முஸ் நீரிணையில் பதிக்கப்பட்டிருந்த அனைத்து கண்ணிவெடிகளும் அமெரிக்க கடற்படையால் வெற்றிகரமாக அகற்றப்பட்டு, வெடிக்க வைக்கப்பட்டுவிட்டதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.


</p><p>புதிய கண்ணிவெடிகளை பதிக்கும் எந்தவொரு ஈரானிய கப்பலோ அல்லது படகோ கணப்பொழுதில், திட்டமிட்டு துவம்சம் செய்யப்படும்" என ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோசியல்' பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbfcb9dc-e982-4dd3-87b8-56035da24bc6/26-6a8df883224b2.webp' /></p><p> கண்ணிவெடிகள் வைக்கும் விவகாரத்தில் அமெரிக்கா "பூஜ்ஜிய சகிப்புத்தன்மை" கொள்கையை முழு வீச்சில் கையில் எடுத்துள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.</p><p>&nbsp;ஹார்முஸ் நீரிணையின் ஒவ்வொரு அங்குலமும் அமெரிக்காவின் விண்வெளிப் படை மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், ஈரானின் எந்தவொரு அத்துமீறலும் உடனடியாக முறியடிக்கப்படும் என்றும் வாஷிங்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-08-25T20:18:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[முக்கிய நாடொன்றில் இருந்து புதிய குறைந்த கட்டண விமான சேவை ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/australian-low-cost-airline-launched-service-to-sl-1787678614"></link>
            <id>https://ibctamil.com/article/australian-low-cost-airline-launched-service-to-sl-1787678614</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவின் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஜெட்ஸ்டார், அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையே தனது புதிய விமான சேவையைத் தொடங்கியுள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவின் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஜெட்ஸ்டார், அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையே தனது புதிய விமான சேவையைத் தொடங்கியுள்ளது. </p><p>

அதன் முதலாவது விமானம் மெல்போர்னிலிருந்து புறப்பட்டு, இன்று (25) மாலை 6:24 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதன்போது, 271 பயணிகள் மற்றும் 13 விமானப் பணியாளர்களுடன் வந்திறங்கிய JQ005 என்ற இந்த போயிங் 787 டிரீம்லைனர் விமானத்திற்கு விமான நிலையத்தில் பாரம்பரிய நீர் வணக்கம் செலுத்தி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>இயக்கப்படும் நாட்கள்</h2><p>
</p><p>
இந்த புதிய விமான சேவையானது மெல்போர்ன் மற்றும் கட்டுநாயக்க இடையே வாரத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் இயக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27320184-684a-49ca-8b10-2fa7dc307c6b/26-6a8dd1546d4c8.webp' /></p><p>

சுமார் 10 மணி நேரப் பயணக் காலத்தைக் கொண்ட இந்த சேவையின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பு நிகழ்வு ஒன்றும் நடைபெற்றதாக தெரியவருகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T20:11:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 5 மில்லியன் லொத்தர் சீட்டு பரிசை வென்ற பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bc-woman-looking-forward-to-suite-on-a-cruise-1787667535"></link>
            <id>https://canadamirror.com/article/bc-woman-looking-forward-to-suite-on-a-cruise-1787667535</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், மளிகைப் பொருட்கள் வாங்கச் சென்றபோது தான் 5 மில்லியன் டொலர் லொட்டோ 6/49 ஜாக்பாட் பரிசை வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், மளிகைப் பொருட்கள் வாங்கச் சென்றபோது தான் 5 மில்லியன் டொலர் லொட்டோ 6/49 ஜாக்பாட் பரிசை வென்றிருப்பதை அறிந்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
</p><p>ஜேன் டி. என்பவர் ஆகஸ்ட் 8ஆம் திகதி நடைபெற்ற லொட்டோ0 குலுக்கலில் கிளாசிக் ஜாக்பாட் பரிசை வென்றதாக பிரிட்டிஷ் கொலம்பியா லாட்டரி கழகம் திங்கட்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.</p><p>
எப்படி எதிர்வினையாற்றுவது என்றே எனக்குத் தெரியவில்லை. பணியாளர் என்னைவிட அதிக உற்சாகத்தில் இருந்தார் என ஜேன் டி. தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33e2a9b5-59e6-4e6a-85e4-abcda8584785/26-6a8da45148b37.webp' /></p><p>
</p><p>தாம் வெற்றி பெற்ற செய்தியை அறிந்த பின்னர் காருக்குத் திரும்பிச் சென்று தனது கணவரிடம் கூறியபோது, அவர் முதலில் அதை நம்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முதலில் அவர் என்னை நம்பவில்லை.</p><p> பின்னர் வெற்றிச் சீட்டின் சரிபார்ப்பு ரசீதைக் காட்டினேன். அதில் இருந்த பூஜ்ஜியங்களை அவர் எண்ணிப் பார்த்தார் என ஜேன் கூறியுள்ளார்.
</p><p>இந்த எதிர்பாராத பெரும் தொகை கிடைத்துள்ளதால், இனி தனது வாழ்க்கையில் “அதிக சுதந்திரத்துடன்” செயல்பட முடியும் என ஜேன் தெரிவித்துள்ளார்.
</p><p>தனது வீட்டில் சில புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதுடன், பணத்தின் ஒரு பகுதியை முதலீடு செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளார். </p><p>
அதேவேளை, தன்னை மகிழ்விக்கும் வகையில் சொகுசுக் கப்பல் பயணத்தின்போது ஒரு தனிப்பட்ட ஸ்யூட் அறையில் தங்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T20:03:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோதமாக கடத்தப்பட்ட பெருந்தொகையான இஞ்சி மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/large-consignment-of-smuggled-ginger-seized-1787687862"></link>
            <id>https://jvpnews.com/article/large-consignment-of-smuggled-ginger-seized-1787687862</id>
            <summary type="text">மன்னாரில் நறுவிலிக்குளம் மற்றும் வங்காலை கடற்கரைப் பகுதிகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம் உலர் இஞ்சித் தொகை ஒன்று கடற்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னாரில் நறுவிலிக்குளம் மற்றும் வங்காலை கடற்கரைப் பகுதிகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம் உலர் இஞ்சித் தொகை ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p> 

கடத்தல்காரர்களால் கைவிட்டுச் செல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் இந்த இஞ்சி தொகையானது&nbsp; கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/047416f7-0bbd-4183-95f8-7c905aa17b3b/26-6a8df3b7ceb72.webp' /></p><h2>சோதனை</h2><p> 

அதற்கமைய, வடமத்திய கடற்படை கட்டளைக்குச் சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் புஸ்ஸதேவவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம், நறுவிலிக்குளம் மற்றும் வங்காலை கடற்கரைப் பகுதிகளில் இருந்த சந்தேகத்திற்கிடமான 2 பொதிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.</p><p> 

இதன்போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்து கடத்தல்காரர்களால் அந்த கடற்கரைப் பகுதிகளில் கைவிட்டுச் செல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 240 கிலோகிராமிற்கும் அதிகமான உலர் இஞ்சித் தொகை கடற்படையினால் மீட்கப்பட்டது.</p><p></p><p> 

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட உலர் இஞ்சித் தொகை முருங்கன் மற்றும் வங்காலை பொலிஸ் நிலையங்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T19:57:56+00:00</updated>
        </entry>
    </feed>
