<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-01T01:54:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கற்பித்தலில் ஈடுபட ஆசிரியர்களுக்கு அனுமதிப்பத்திர முறை அறிமுகம் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/licenses-for-teachers-1788227505"></link>
            <id>https://tamilwin.com/article/licenses-for-teachers-1788227505</id>
            <summary type="text">&amp;nbsp;ஆசிரியர்கள் கற்பித்தலில் ஈடுபடுவதற்கு அனுமதிப்பத்திரமொன்றை அறிமுகம் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் வகுப்புகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஆசிரியர்கள் கற்பித்தலில் ஈடுபடுவதற்கு அனுமதிப்பத்திரமொன்றை அறிமுகம் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
தனியார் வகுப்புகள் உட்பட நாட்டிலுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் தேசிய கல்விச் சபையின் ஊடாகக் கற்பித்தல் அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>
ஒருவர் மருத்துவராகப் பணியாற்றுவதற்கு மருத்துவச் சபையின் அனுமதி மற்றும் அங்கீகாரத்தைப் பெறுவதைப் போன்றதொரு நடைமுறையே இதுவெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>தேசிய கல்விச் சபையை அமைப்பதற்காக ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
</p><p>இதற்கான புதிய சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக குறித்த பணி தற்போது சட்ட வரைஞர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
</p><p>சட்ட வரைஞர் திணைக்களத்தால் வரைவு தயாரிக்கப்பட்ட பின்னர், அது மீண்டும் அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குச் சமர்ப்பிக்கப்பட்டு, வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.</p><p>
இந்த முழுமையான நடைமுறைகளை நிறைவுசெய்து சட்டத்தைக் நடைமுறைக்குக் கொண்டுவர குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும் என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T01:51:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கலிபோர்னியாவில் கொலை செய்யப்பட்ட 2 கேரளாவை சேர்ந்த பெண்கள்: கொலையாளி அதிரடி கைது2]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kerala-women-killed-in-california-milpitas-1788226630"></link>
            <id>https://news.lankasri.com/article/kerala-women-killed-in-california-milpitas-1788226630</id>
            <summary type="text"> kerala women killed in California Milpitas :கலிபோர்னியாவில் கேரளாவை சேர்ந்த 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.என்ன நடந...</summary>
            <content type="html"><![CDATA[<p> kerala women killed in California Milpitas :கலிபோர்னியாவில் கேரளாவை சேர்ந்த 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>என்ன நடந்தது?</h2><p>ஆகஸ்ட் 28ம் திகதி கலிபோர்னியாவின் மில்பிடாஸ்(Moonnilavu in Kottayam) நகரில் மில் கிரிக் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி ஆன் மேரி மேத்யூ(40) என்ற திருவனந்தபுரத்தை சேர்ந்த பெண் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p> அதே அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே உள்ள டிக்சன் சாலையில் ஏற்பட்ட வாகன மோதல் தொடர்பாக&nbsp; முதலில் காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.</p><p> சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் கேரளாவின் திருச்சூரை சேர்ந்த 35 வயது அஞ்சனா ஹரி என்ற பெண் ஒருவர் வாகனம் மோதியதில் சிக்கி பலத்த காயங்களுடன் வாகன நிறுத்துமிடத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டுபிடித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b13936a2-0777-4eee-bfcb-585949392b68/26-6a962c4836bbe.webp' /></p><p></p><p> மேலும் இது தொடர்பாக விசாரணையை தொடங்கிய அதிகாரிகள், அஞ்சனா ஹரி மீது மோதி விட்டு தப்பிச் சென்ற நீல நிற எஸ்.யூ.வி (SUV) வாகனத்தை அடையாளம் கண்டனர்.</p><p>இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், தேடப்படும் நீல நிற எஸ்.யூ.வி (SUV) வாகனம் அருகே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இருப்பதை பொலிஸார் கண்டுபிடித்தனர்.</p><p> மேலும் அதன் ஓட்டுநரான கோட்டயத்தின் மூன்னிலவு பகுதியை சேர்ந்த 32 வயது அனிலா என்பவரை பொலிஸார் அதிரடியாக கைது செய்தனர்.</p><p> இதற்கிடையில் வாகன மோதலில் உயிரிழந்த அஞ்சனாவும், அடுக்குமாடி குடியிருப்பில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட மேரி மேத்யூவும், இந்த இரண்டு குற்றச்செயல்களை செய்ததாக சந்தேகிக்கப்படும் அனிலா மூவரும் ஏற்கனவே ஒருவருக்கு ஒருவர் தெரிந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>அத்துடன் கைது செய்யப்பட்ட அனிலாவும், பாதிக்கப்பட்டவர்களும் ஒரே அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் தான் வசித்து வருகின்றனர் என்பதை உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.</p><p> உயிரிழந்த இருவருக்கும் கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் தங்கள் குடும்பத்தினருடன் ஓணம் பண்டிகை கொண்டாடியுள்ளனர்.</p><p> இந்த கொலைக்கான காரணம் குறித்து பொலிஸார் இன்னும் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை. ஆனால் இது தொடர்பான தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T01:37:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை எதிர்த்து ஒன்றிணைந்துள்ள முக்கிய அமைப்புகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/opposition-to-22nd-constitutional-amendment-bill-1788224818"></link>
            <id>https://ibctamil.com/article/opposition-to-22nd-constitutional-amendment-bill-1788224818</id>
            <summary type="text">முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை எதிர்த்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) உடன் இணைந்து 40 தொழில்சார் அமைப்புகள் மற்றும் தொழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை எதிர்த்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) உடன் இணைந்து 40 தொழில்சார் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள்,கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். </p><p>

நேற்று BASL இல் நடந்த கூட்டத்தை தொடர்ந்து கூட்டு அறிக்கை ஒன்றையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
</p><p>
அதன்படி, நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்கும் இந்த திருத்தம் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு நேரடி அச்சுறுத்தலாக அமையும் என BASL முன்வைத்த நிலைப்பாட்டுக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>கலந்துரையாடப்பட்டுள்ள விடயங்கள்</h2><p>
</p><p>
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (FUTA), அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA), புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம், தரப்படுத்தப்பட்ட அதிபர்கள் சங்கம், அரச தாதியர் சங்கம் உள்ளிட்ட சுகாதார மற்றும் அரச ஊழியர் சங்கங்கள் பல இதில் அடங்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/248b8839-c1f8-4557-8661-d943d1da4537/26-6a962721e39e4.webp' /></p><p>

அறிக்கையின் முக்கிய கருத்துகள்
</p><ol><li>உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் உட்பட நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிப்பது நீதித்துறை சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம் மற்றும் மக்களின் இறையாண்மையை பாதிக்கும்.
</li><li>2022 இல் உள்நாட்டு இறைவரி திருத்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்ற விசேட தீர்மானத்தை சுட்டிக்காட்டினர். அதில், பதவியில் உள்ள நீதிபதிகளின் ஓய்வு வயதை பாதிக்கும் அரசியலமைப்பு திருத்தம் நீதித்துறை சுதந்திரத்தை மீறுவதாகவும், அரசியலமைப்பின் 3ஆவது சரத்தை மீறுவதாகவும், எனவே அது பொது வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.</li></ol><h2>பொது வாக்கெடுப்புக்கு வலியுறுத்து</h2><p>

இதன்படி, 40 அமைப்புகளும் ஒருமனதாக அரசாங்கம் இந்த திருத்த சட்டமூலத்தை உடனடியாக மீளப் பெற வேண்டும் எனவும், அதற்கு பதிலாக உயர் நீதிமன்றங்களில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e20eaf32-fcb3-40df-bb23-cf88c68400a7/26-6a9627229bf9a.webp' /></p><p>

மேலும், அரசு இந்த திருத்தத்தை முன்னெடுக்க விரும்பினால், அதனை நேரடியாக மக்களிடம் பொது வாக்கெடுப்புக்கு விட வேண்டும் எனவும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
அத்தோடு, நீதித்துறை சுதந்திரத்தை பலவீனப்படுத்தும் எந்த நடவடிக்கையையும் எதிர்பதாகவும், சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம் மற்றும் மக்களின் இறையாண்மையை பாதுகாக்க தாங்கள் உறுதிபூண்டுள்ளதாகவும் BASL தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T01:30:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ஜுன் மகேந்திரனை அழைத்துவருவதில் எந்த சட்டத்தடையும் இல்லை! சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-legal-impediment-to-bringing-arjun-mahendran-1788223707"></link>
            <id>https://ibctamil.com/article/no-legal-impediment-to-bringing-arjun-mahendran-1788223707</id>
            <summary type="text">அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்துவர சிங்கப்பூரில் எந்த சட்ட ரீதியான தடைகளும் இல்லை என ஜனநாயக கூடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்துவர சிங்கப்பூரில் எந்த சட்ட ரீதியான தடைகளும் இல்லை என ஜனநாயக கூடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.</p><p>

அவர் வழங்கியுள்ள வாக்குமூலம் காரணமாகவே அவரை நாட்டுக்கு கொண்டுவர அரசாங்கம் பின்வாங்கி வருகிறது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
</p><p>
திருடர்களை கைதுசெய்வதாக தெரிவித்து அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கை தொடர்பில் திங்கட்கிழமை (31) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>பொருளாதார வீழ்ச்சி</h2><p>
</p><p>
அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட சம்பிக்க ரணவக்க, “திருடர்களை கைதுசெய்யும் அரசாங்கத்தின் வேவைத்திட்டத்துக்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை. ஆனால் அரசியல் நாடகத்துக்காக அதனை செய்வதையே நாங்கள் எதிர்க்கிறோம்.திருடர்களை கைதுசெய்வதுபோல், நாட்டை வங்குரோத்தாகியவர்களுக்கு எதிராகவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f58b1e0-7a60-468f-9d5d-1e25488011e0/26-6a9623510fbc8.webp' /></p><p>எமது நாடு விடுதலை புலிகளின் யுத்தத்துக்கு முன்னர் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்து வந்தது ஆனால் 87,88 காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் கலவரத்தினால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.</p><p>அதனைத் தொடர்ந்து விடுதலை புலிகளின் 30 வருட யுத்தம் காரணமாக எமது நாடு வீழ்ச்சியடைந்தது. இந்த இரண்டு போராட்டங்களும் இடம்பெறாமல் இருந்திருந்தால், எமது நாடு அபிவிருத்தியடைந்த நாடாக மாறி இருக்கும்.” என தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b> <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> </b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T01:30:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இதை செய்தால் வரிகள் இல்லை ; ட்ரம்பின் மற்றொரு அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-s-latest-shock-announcement-1788219362"></link>
            <id>https://canadamirror.com/article/trump-s-latest-shock-announcement-1788219362</id>
            <summary type="text">அமெரிக்க-கனடா வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள கனடியப் பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீதம் வரி வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க-கனடா வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள கனடியப் பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்தது. இந்த வரிகள் 2027-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.


</p><p>
பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாததால் 2 நாடுகளும் ஒன்றையொன்று குற்றம்சாட்டின. அமெரிக்காவுடன் மோதலுக்குத் தங்கள் நாடு தயாராக இருப்பதாக கனடா அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/590f874a-d51d-44c7-9878-8f6aae7c3440/26-6a960fe45a461.webp' /></p><p>

புதிதாக விதிக்கப்பட்டு உள்ள வரிகளைத் தவிர்ப்பதற்காக, கனடிய நிறுவனங்கள் தங்கள் தலைமையகங்களையும் உற்பத்தி வசதிகளையும் அமெரிக்காவுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
</p><p>

இதுதொடர்பாக அவர் சமூகவலைதள பதிவில் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து கனடிய நிறுவனங்களும் உடனடியாக அமெரிக்காவிற்கு இடம் பெயரட்டும்.</p><p>

அவற்றுள் பல, அமெரிக்காவின் முட்டாள்தனமான தலைமை காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியேறிய நிறுவனங்களாகும்.

நீங்கள் திரும்பி வரும்போது, ​​சுங்க வரிகள் எதுவும் இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார். </p><p>மற்றொரு பதிவில், கனடா அமெரிக்காவின் 2-வது பெரிய வர்த்தகப் பங்காளியாக இருந்தபோதிலும், அது அமெரிக்காவின் மிக மோசமான வர்த்தகப் பங்காளிகளில் ஒன்றாகும் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.</p><p>


அமெரிக்கப் பொருளாதாரம் கனடாவைவிடப் பல மடங்கு பெரியது. கனடாவின் ஏற்றுமதியில் சுமார் 70 சதவீதம் அமெ ரிக்காவிற்கே செல்கிறது. </p><p>அதே நேரத்தில் பல அமெரிக்க மாநிலங்களுக்கு மிக முக்கிய வாடிக்கையாள ராகக் கனடா விளங்குறது என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-01T00:54:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சொந்த மகளுக்கு தந்தை செய்த தகாத செயல் ; 18 வருடத்தின் பின்னர் கிடைத்த அதிரடி தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/father-s-inappropriate-act-against-daughter-1788222221"></link>
            <id>https://jvpnews.com/article/father-s-inappropriate-act-against-daughter-1788222221</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 16 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

கோப்பாய் பகுதியில் கடந்த 20...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 16 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

கோப்பாய் பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டு மகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்தில் தந்தை கைது செய்யப்பட்டார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af98b951-4b9c-44f9-80f6-6eebc6ef499d/26-6a961b0f458e0.webp' /></p><p> </p><p style="text-align: justify; ">

அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த வேளை தீர்ப்புக்காக கடந்த 28 ஆம் திகதி வழக்கு அழைக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;"> 

அதன் போது, எதிரியான தந்தையை குற்றவாளியாக கண்ட மன்று, 16 வருட சிறைத்தண்டனை விதித்ததுடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 5 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் இழப்பீடு வழங்க தவறின் மேலும் 3 வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என மன்று தீர்ப்பளித்தது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-01T00:54:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாபா வாங்கா கணிப்புப்படி செப்டம்பர் மாதத்தில் இவர்களுக்கு பெரும் அதிஸ்டம் காத்திருக்கு...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/baba-vanga-predicts-luck-for-them-in-september-1788223974"></link>
            <id>https://jvpnews.com/article/baba-vanga-predicts-luck-for-them-in-september-1788223974</id>
            <summary type="text">பாபா வாங்கா, உலகளவில் மிகவும் பிரபலமான எதிர்காலத்தை கணித்துக் கூறும் தீர்க்கத்தரசியாவார். இவரது எதிர்கால கணிப்புகளுள் பல நிஜமாகிவிட்டதோடு, இன்னும் நடந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பாபா வாங்கா, உலகளவில் மிகவும் பிரபலமான எதிர்காலத்தை கணித்துக் கூறும் தீர்க்கத்தரசியாவார். இவரது எதிர்கால கணிப்புகளுள் பல நிஜமாகிவிட்டதோடு, இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. </p><p style="text-align: justify; ">அந்த வகையில் இவரது 2026 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாத கணிப்புகளும் இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன. மாதத்தின் முதல் வாரம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. ஏனெனில் இந்த வாரத்தில் பல சுப யோகங்கள் உருவாகின்றன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9516097-27ad-4b31-a881-18618517a479/26-6a9621e7a66da.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;சுப யோகங்கள்</h2><p style="text-align: justify; ">&nbsp;பாபா வாங்காவின் கணிப்புப்படி, செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

</p><p style="text-align: justify; "><b>தனுசு :</b> செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

</p><p style="text-align: justify; "><b>சிம்மம் : </b>செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் உங்களின் முக்கியமான பெரிய வேலைகள் வெற்றிகரகமாக முடிவடையும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் இந்த வாரத்தில் கைக்கு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; "><b>
ரிஷபம் : </b>&nbsp;மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. குறிப்பாக நிதி ரீதியாக நன்றாக இருக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழில் ரீதியாக முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பல வழிகளில் இருந்து நல்ல செய்திகளைப் பெறக்கூடும்.



</p><p style="text-align: justify; "><b>துலாம் : </b>தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் சில நட்புகள் இந்த வாரத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் எடுக்கும் முடிவுகள் நல்ல பலன்களைத் தரும். முக்கியமாக நீண்ட காலமாக இருந்த மன அழுத்தம் குறையும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்வது நல்லது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "><b>
மிதுனம் : </b>முன்னேற்றத்தைத் தரும் வாரமாக இருக்கப் போகிறது. பணியிடத்தில் ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். மேலும் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். முக்கியமாக இந்த வாரத்தில் சில முக்கியமான வேலைகள் தடையின்றி வெற்றிகரமாக முடிவடையும்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-01T00:52:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரம் அடையும் எல் நினோ நிலைமை - அபாய கட்டத்தில் இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-among-countries-of-concern-1788187941"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-among-countries-of-concern-1788187941</id>
            <summary type="text">ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் எல் நினோ காரணமாக, உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய நாடுகளுள் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், நாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் எல் நினோ காரணமாக, உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய நாடுகளுள் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. </p><p>

இந்த நிலையில், நாட்டின் இயல்பான மழை அளவைக் காட்டிலும் அதிகமான மழைவீழ்ச்சி, வெள்ள அபாயம் அதிகரிப்பு மற்றும் எரிபொருள், உரங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் போன்ற தொடர்ச்சியான பொருளாதார சுமை ஆகியவற்றுக்கு இலங்கை முகங்கொடுக்க நேரிடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.</p><h2>எல் நினோ தாக்கம்</h2><p> </p><p>

புதிய பிராந்திய மதிப்பீட்டு அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு , உலக உணவுத் திட்டம், ஐநா பெண்கள் அமைப்பு, உலக வானிலை அமைப்பு மற்றும் ஐ.நா மனித உரிமை விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான அலுவலகம் ஆகியவை இணைந்து இந்த அறிக்கையை தயாரித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71eaf399-c6b5-484e-8d77-126739a0d32a/26-6a96117dabe19.webp' /></p><p>ஆசிய பசிபிக் பிராந்தியமானது மிகவும் சிக்கலான மற்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய ஆபத்துக்களுக்கு முகங்கொடுத்து வருவதாக அந்த அறிக்கை எச்சரிக்கிறது. </p><p>

வலுவடைந்து வரும் எல் நினோ, சாதகமான இந்தியப் பெருங்கடல் இருமுனை மற்றும் மத்திய கிழக்கு நெருக்கடியின் தொடர்ச்சியான பொருளாதாரத் தாக்கங்கள் இதற்கு காரணமாக கூறப்படுகின்றது. </p><p>

தற்போதைய எல் நினோ பதிவுகளில் வலிமையான ஒன்றாக அமையக்கூடுவதுடன், 2027 ஆம் ஆண்டு வரை நீடிக்கக்கூடும்.</p><h2>இலங்கைக்கு முக்கிய அச்சுறுத்தல்&nbsp;</h2><p> இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் பப்புவா நியூ கினி போன்ற நாடுகளில் வறட்சி அபாயம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
</p><p>
 எனினும் சராசரிக்கும் அதிகமான மழைவீழ்ச்சி கிடைக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முக்கிய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நாடாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6ebcb69-e56d-415b-bbdb-b33ed740aa62/26-6a96117cdca1a.webp' /></p><p>இந்த மதிப்பீடானது இலங்கையை உயர்ந்த கவலைக்குரிய நாடுகளின் பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சராசரிக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பெய்யக்கூடும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.</p><p> 

இலங்கையின் இரண்டாவது இடைப்பருவ காற்று வீசும் காலமான ஒக்டோபர் மாதம் முதல் இந்த ஆபத்து குறிப்பாக முக்கியத்துவம் பெறுவதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
</p><p>
இது பாரம்பரியமாக ஆண்டின் அதிக மழை பெய்யும் காலங்களில் ஒன்றாகும், இதனைத் தொடர்ந்து ஈசான் பருவமழையும் ஆரம்பமாகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T00:49:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு! வடக்கு கிழக்கில் அதிகரிக்கும் வெப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-weather-alert-sri-lanka-1788222498"></link>
            <id>https://ibctamil.com/article/today-weather-alert-sri-lanka-1788222498</id>
            <summary type="text">




சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று இன்று மதியம் சுமார் 12.10 மணியளவில் நெரியகுளம், பூனாவ, கெப்பித்திகொள்ளாவ பன்குளம் மற்றும் சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>




சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று இன்று மதியம் சுமார் 12.10 மணியளவில் நெரியகுளம், பூனாவ, கெப்பித்திகொள்ளாவ பன்குளம் மற்றும் சிங்கபுர போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.</p><p>
இதன்போது, கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் பொலனறுவை, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் காரணமாக அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.</p><p>

எனினும், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவிக்கிறது.</p><p>]</p><h2>ஓரளவு பலத்த காற்று</h2><p>
</p><p>
இதேவேளை, வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.</p><p>
ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c69eec9-88db-42f1-aa06-8735226907bc/26-6a961fa3930e0.webp' /></p><p>

நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.
</p><p>
மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 - 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் ஓரளவு கூடும்.
</p><p>
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T00:43:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளை மாளிகை தொடர்பில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-supreme-court-orders-white-house-1788223222"></link>
            <id>https://canadamirror.com/article/us-supreme-court-orders-white-house-1788223222</id>
            <summary type="text">வெள்ளை மாளிகையில் 400 மில்லியன் டொலர் மதிப்பிலான பிரம்மாண்ட பிரதான மண்டபம் கட்டும் பணியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து மேற்கொள்வதற்கு அமெரிக்க உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெள்ளை மாளிகையில் 400 மில்லியன் டொலர் மதிப்பிலான பிரம்மாண்ட பிரதான மண்டபம் கட்டும் பணியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து மேற்கொள்வதற்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் 5-4 என்ற பெரும்பான்மைத் தீர்ப்பின் மூலம் அனுமதி வழங்கியுள்ளது.
</p><p>
இந்தத் திட்டத்தின் தரைக்கு மேலான பகுதி கட்டுமானங்களை நிறுத்தியிருக்கக்கூடிய கீழ் நீதிமன்றத் தீர்ப்புகளை ரத்து செய்யக்கோரி ட்ரம்ப் நிர்வாகம் சமர்ப்பித்த அவசரகாலக் கோரிக்கையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06e9e59c-0821-42fc-905d-b21500ae97b9/26-6a961ef832082.webp' /></p><p>
</p><p>
காங்கிரஸின் நேரடி அனுமதியின்றி வெள்ளை மாளிகையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கிழக்குப் பகுதியை இடித்து இந்தக் கட்டுமானத்தை மேற்கொள்வது சட்டவிரோதமானது என வாதிட்டு 'வரலாற்றுப் பாதுகாப்புக்கான தேசிய அறக்கட்டளை' தொடர்ந்த வழக்கை நிராகரித்து இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
</p><p>
தலைமை நீதிபதி மற்றும் 3 தாராளவாத நீதிபதிகள் இந்தத் திட்டத்திற்கு எதிராகத் தங்கள் மாறுபட்ட கருத்துக்களைப் பதிவு செய்த போதிலும், பெரும்பான்மை நீதிபதிகள் ட்ரம்ப் நிர்வாகத்தின் அவசரகால வாதத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்துள்ளனர்.
</p><p>
இந்த நிலையில் வெள்ளை மாளிகைக்கு ஒரு பெரிய நிகழ்ச்சி அரங்கம் தேவை என்றும், அது தனது பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது என்றும் ட்ரம்ப் நீண்டகாலமாக வாதிட்டு வருகிறார்.
</p><p>
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வளாகத்தில் பிரதான மண்டபக் கட்டுமானப் பணிகள் எந்தவிதத் தடையுமின்றித் தொடர்ந்து நடைபெறவுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-01T00:40:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் இந்திய இராணுவம் பழுகாமம் பாலம் புனர்நிர்மான பணி ஆரம்பிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-army-reconstruction-work-palugamam-bridge-1788223072"></link>
            <id>https://tamilwin.com/article/indian-army-reconstruction-work-palugamam-bridge-1788223072</id>
            <summary type="text">மட்டக்களப்பில் இந்திய இராணுவம் 3 பாலங்களை புனர் நிர்மானிக்கும் திட்டத்தில்
முதலாவதாக பழுகாமம் பாலம் புனரமைக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை (30)
இந்திய இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பில் இந்திய இராணுவம் 3 பாலங்களை புனர் நிர்மானிக்கும் திட்டத்தில்
முதலாவதாக பழுகாமம் பாலம் புனரமைக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை (30)
இந்திய இராணுவ தொழில்நுட்ப பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.
</p><p>
மாவட்டத்தில் கடந்த காலங்களில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடிந்து
வீழ்ந்துள்ள மகிழவெட்டுவான், பழுகாமம், மாவடி ஓடை போன்ற 3 பாலங்களை
நிர்மானித்து தருமாறு இந்திய அரசிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்தது.
</p><p>
இந்த கோரிக்கைக்கு அமைவாக 45 பேர் கொண்ட இந்திய இராணுவ தொழில்நுட்ப பிரிவினர்
இலங்கை இராணவ தொழில்நுட்ப பிரிவினர்கள் மற்றும் இலங்கை வீதி அதிகார சபையுடன்
இணைந்து பழுகாமம் பெரிய போரதீவு இணைக்கும் ஆத்துக்கட்டு பாலத்தை முதற்கட்டமாக
புனர் நிர்மானிக்கும் நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp; இதனை தொடர்ந்து ஏனைய பாலங்களுக்கான பொருட்கள் வந்தவுடன் தொடர்ந்து இந்திய
இராணுவத்தினர் புனர்நிர்மான பணிகளை முன்னெடுப்பார்கள் என மாவட்ட வீதி அதிகார
சபை பணிப்பாளர் எந்திரி வேதநாயகம் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-01T00:38:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதல பாதாளத்தில் டாக்சிக் பட வசூல்.. திங்கட்கிழமை இவ்வளவு தானா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/yash-toxic-collection-dips-on-monday-1788223048"></link>
            <id>https://cineulagam.com/article/yash-toxic-collection-dips-on-monday-1788223048</id>
            <summary type="text">கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடித்த டாக்சிக் படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி இருந்தது. இந்த படம் வந்த நாளில் இருந்தே நெகடிவ் விமர்சனங்கள் தான் வந்து கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடித்த டாக்சிக் படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி இருந்தது. இந்த படம் வந்த நாளில் இருந்தே நெகடிவ் விமர்சனங்கள் தான் வந்து கொண்டிருக்கிறது.</p><p>இருப்பினும் முதல் சில தினங்களுக்கு நல்ல வசூலை டாக்சிக் பெற்று வந்தது. முதல் நாளில் இந்தியா முழுக்க 120 கோடி ரூபாய் வரை டாக்சிக் வசூல் செய்து சாதனை புடைத்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/921ad6ef-d900-456d-87bc-6dcd2a8fa1b0/26-6a961e4a8d061.webp' /></p><h2>திங்கட்கிழமை குறைந்த வசூல்
</h2><p>நெகடிவ் விமர்சனங்கள் காரணமாக நாளுக்கு நாள் வசூல் குறைந்துகொண்டே வந்த நிலையில் திங்கட்கிழமை அதள பாதாளத்திற்கு சென்று இருக்கிறது.
</p><p>திங்கள் அன்று சுமார் 7.45 கோடி ரூபாய் மட்டுமே இந்தியா முழுக்க வசூல் வந்திருக்கிறதாம். அதனால் வசூலில் மிகப்பெரிய வீழ்ச்சி இது என பாக்ஸ் ஆபிஸ் ட்ராக்கர்கள் தெரிவித்து உள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1ca7e4f-c047-4246-ab64-18989b647f68/26-6a961e4b67c6a.webp' /></p>]]></content>
            <updated>2026-09-01T00:37:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இந்திய மசாஜ் நிலையம் அமைக்க 20 ஏக்கர் அரச காணி.. கடும் எதிர்ப்பு வெளியிடும் மக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vadamaratchi-people-oppose-land-to-indian-firm-1788217328"></link>
            <id>https://tamilwin.com/article/vadamaratchi-people-oppose-land-to-indian-firm-1788217328</id>
            <summary type="text">யாழ் - வடமராட்சி கிழக்கில் 20 ஏக்கர் அரச காணியை
மசாஜ் நிலையம் அமைப்பதற்காக இந்தியாவின் தனியார் நிறுவனத்திற்கு கொடுப்பதற்கான தீர்மானத்திற்கு மக்கள் கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ் - வடமராட்சி கிழக்கில் 20 ஏக்கர் அரச காணியை
மசாஜ் நிலையம் அமைப்பதற்காக இந்தியாவின் தனியார் நிறுவனத்திற்கு கொடுப்பதற்கான தீர்மானத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.</p><p>கடந்த 28 அன்று வடமராட்சி, கிழக்கு பிரதேச செயலகத்தில் நாடாளுமன்ற
உறுப்பினர் ரஜீவன் எம்.பி தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த 20 ஏக்கர் நிலப்பரப்பை குத்தகை
அடிப்படையில் கொடுப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>நிரந்தர காணி</h2><p> தங்களுடைய மண் பல வரலாற்றை கொண்டது, பல தியாகங்களைச் செய்த மண், ஆகவே
வடமராட்சி கிழக்கு பகுதிக்கு மசாஜ் நிலையம் தேவை இல்லை என மக்கள் குறித்த
திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
</p><p>
வடமராட்சி, கிழக்கில் தற்போதும் பல நூறு குடும்பங்கள் நிரந்தர காணியில்லாமல்
தவிக்கின்ற போதும் மக்களுக்கு கொடுக்க வேண்டிய அரச காணியை தனியார்
நிறுவனத்திற்கு கொடுப்பதற்கு ஏன் ஆர்வம் காட்டுகிறார்கள் என மக்கள் கேள்வி
எழுப்பி உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c08f19bd-fc01-45eb-a340-c7b8544a0a64/26-6a960cff95ab7.webp' /></p><p>இந்நிலையில் வடமராட்சி, கிழக்கு பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுகின்ற போதும்
அதனை தடுத்து நிறுத்தாமல் இளைய தலைமுறையை சீரழிக்கும் கழியாட்ட விடுதிகளை
அமைப்பதற்கு முயற்சிப்பது ஏற்கத்தக்கதல்ல என மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>எனவே&nbsp; மக்களுக்கு நன்மையற்ற அபிவிருத்தி திட்டங்களை முன்மொழிவதை உரியவர்கள் நிறுத்த
வேண்டுமென அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T00:34:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுக்கு உதவும் அண்டை நாடுகளுக்கு ஈரானின் இறுதி எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-warns-regional-countries-that-helping-america-1788211511"></link>
            <id>https://ibctamil.com/article/iran-warns-regional-countries-that-helping-america-1788211511</id>
            <summary type="text">அமெரிக்கப் படைகள் தனது நாட்டின் மீது தாக்குதல் நடத்த பிராந்திய நாடுகளின் மண்ணையோ அல்லது ராணுவத் தளங்களையோ பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று அண்டை நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கப் படைகள் தனது நாட்டின் மீது தாக்குதல் நடத்த பிராந்திய நாடுகளின் மண்ணையோ அல்லது ராணுவத் தளங்களையோ பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று அண்டை நாடுகளுக்கு ஈரானின் ராணுவம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
 மீறி அனுமதித்தால், கடும் பதிலடியை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளது.</p><p>

அண்டை நாடுகளின் தேசிய இறையாண்மையை மதிப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஈரான் ராணுவம், எந்தவொரு ஆக்கிரமிப்பையும் தங்களால் சகித்துக் கொள்ள முடியாது என்றும், அதற்கு மிகக் கடுமையான முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.</p><p></p><h2>ஈரான் ஆயுதப்படைகளின் உறுதி</h2><p>அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு உதவி செய்பவர்கள் யாராக இருந்தாலும், ஈரானின் ஆயுதப்படைகளான&nbsp; புரட்சிகர காவல் படை மற்றும் ராணுவம் இணைந்து, தாக்குதலுக்குக் காரணமான இடங்களை துல்லியமாக இலக்கு வைக்கும் என்றும் எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a221be4b-6745-44c0-b5fb-b803ae65c386/26-6a95f54cb5184.webp' /></p><p>
</p><p>அதன்போது தனது இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ள ஈரான், "எங்கள் ஆயுதப்படைகளின் உறுதியையும், எங்கள் மக்களின் சகிப்புத்தன்மையையும் மீண்டும் மீண்டும் சோதித்துப் பார்க்காதீர்கள்" எனத் தெரிவித்து உள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T00:32:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சிறுமியை கடத்தி கொடூர செயலில் ஈடுபட்ட நபர் தப்பியோட்டம்.. பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prisoner-sentenced-to-24-years-in-prison-rearrest-1788215640"></link>
            <id>https://tamilwin.com/article/prisoner-sentenced-to-24-years-in-prison-rearrest-1788215640</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியை சேர்ந்த 14 வயது
சிறுமியை கடத்தி, தகாத முறைக்குட்படுத்திய குற்றத்திற்காக 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தப்பிச்சென்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியை சேர்ந்த 14 வயது
சிறுமியை கடத்தி, தகாத முறைக்குட்படுத்திய குற்றத்திற்காக 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தப்பிச்சென்ற கைதியை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.</p><p>அவரை, சிறைக் காவலர்களின் பாதுகாப்பில் இருந்து தப்பிச்சென்ற குற்றச்சாட்டில் பிறிதொரு வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><h2>மேல் நீதிமன்ற உத்தரவு&nbsp;</h2><p> </p><p>குறித்த கைதியால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 இலட்ச
ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், நஷ்ட ஈட்டை வழங்க தவறின் மேலும் 3
ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற
நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (28) தீர்ப்பளித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af01b8f2-3a2e-49e7-a32d-8f0009321a48/26-6a96077791a28.webp' /></p><p>இந்த நிலையில் மறுநாள் சனிக்கிழமை (29) திடீர் சுகவீனம் என கூறி
கைதி சிறைக்காவலர்களின் பாதுகாப்புடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (31) மதியம் குறித்த கைதி
வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்றுள்ளார்.
</p><p>
கைதி தப்பி சென்ற நிலையில், சிறைக்காவலர்கள் தேடுதல் நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ளதுடன் , யாழ்ப்பாண பொலிஸ் விசேட குழுவினரும் தேடுதல் நடவடிக்கையில்
ஈடுபட்டிருந்ததனை அடுத்து, இளவாலை பகுதியில் உள்ள பற்றைக்காட்டிற்குள்
மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T00:31:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பெருவெள்ளத்திற்கான உண்மையான காரணம் வெளியானது! விஞ்ஞானிகளின் புதிய அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-real-cause-of-the-nepal-floods-1788213714"></link>
            <id>https://ibctamil.com/article/the-real-cause-of-the-nepal-floods-1788213714</id>
            <summary type="text">நேபாளத்தின் லங்டாங் லிரங் (Langtang Lirung) சிகரத்தில் ஏற்பட்ட பிரம்மாண்ட பனிப்பாறை சரிவே அண்மையில் நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் பேரழிவை ஏற்படுத்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தின் லங்டாங் லிரங் (Langtang Lirung) சிகரத்தில் ஏற்பட்ட பிரம்மாண்ட பனிப்பாறை சரிவே அண்மையில் நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கிற்கு முக்கியக் காரணம் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.</p><p> 

ஆரம்பத்தில் இந்தத் பேரிடருக்கு நிலநடுக்கமோ அல்லது பனியாற்று ஏரி உடைப்போ (GLOF) காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.
</p><p>
எனினும், செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்த நேபாள விஞ்ஞானிகள் குழு, அங்கு ஏரி உடைப்போ அல்லது நிலநடுக்கமோ நிகழவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p></p><h2>நிலநடுக்கத்திற்கு இணையான அதிர்வு</h2><p>

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சுமார் 5,200 மீற்றர் உயரத்தில் இருந்த பனி மற்றும் பாறைகள் அடங்கிய பெரும் பகுதி திடீரெனச் சரிந்து, சுமார் 2,900 மீற்றர் உயரத்திற்குச் செங்குத்தாகக் கீழே விழுந்துள்ளது. 

இதுவே ரிக்டர் அளவில் 5.2 நிலநடுக்கத்திற்கு இணையான அதிர்வை உருவாக்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/800b1e53-49ed-45a2-bc20-b3fb963cebc7/26-6a95f9d40695e.webp' /></p><p>
</p><p>
வெறும் 7 நிமிடங்களுக்குள் மணித்தியாலத்திற்குச் சராசரியாக 167 கிலோமீற்றர் வேகத்தில் பாய்ந்து வந்த இந்த சிதைவுகள் 22 கிலோமீற்றர் தொலைவைக் கடந்து அஸ்வகந்தா பகுதியை அடைந்துள்ளன.</p><h2>3,000-க்கும் மேற்பட்டோர் மாயம்</h2><p>
</p><p>
இவ்வாறு சரிந்து விழுந்த பாறைகளும் பனிக்கட்டிகளும் ஆற்றின் குறுக்கே தடைகளை ஏற்படுத்தியதால் புதிய தற்காலிக ஏரிகள் உருவாகி ஆற்றின் இயல்பான பாதையே மாறியிருப்பதாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4db9c90c-6783-493c-9134-14792db6c3fb/26-6a95f9d4b5ea4.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் இதுவரை 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 3,000-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T00:30:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு மாவட்ட செயலக வீதியிலுள்ள குப்பைகளை அகற்றுமாறு ஈ பி டி பி கட்சி ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/epdp-seeks-garbage-removal-from-batticaloa-road-1788211998"></link>
            <id>https://tamilwin.com/article/epdp-seeks-garbage-removal-from-batticaloa-road-1788211998</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்ட புதிய செயலகத்துக்கு செல்லும் வீதியில் அதிகரித்த குப்பை கூழங்களினால் ஏற்படும் துர்நாற்றம் அந்தப் பகுதி மக்கள் பாரிய அசௌகரியத்திற்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்ட புதிய செயலகத்துக்கு செல்லும் வீதியில் அதிகரித்த குப்பை கூழங்களினால் ஏற்படும் துர்நாற்றம் அந்தப் பகுதி மக்கள் பாரிய அசௌகரியத்திற்கு ஆளாகியுள்ளதாக&nbsp;ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.</p><p> எனவே இந்த வீதியின் இரு
பக்கமும் கொட்டப்பட்டுள்ள இந்த குப்பைகளை அகற்ற மாநகர சபை நடவடிக்கை எடுக்க
வேண்டும் என நேற்று(31) அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது கோரிக்கை விடுத்துள்ளார்.</p><h2>கழிவு அகற்றல்</h2><p> அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், குறித்த வீதியில் இரு பகுதிகளிலும் தகரங்கள் மற்றும் வீட்டு கழிவுகள் உட்பட
குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07b2af22-c39b-4efc-abbf-8490edeaee7d/26-6a95fadf0fb98.webp' /></p><p> இந்த குப்பைகளை மாதக்கணக்கில்
அகற்றப்படாததால் அங்கு துர்நாற்றம் வீசுவதுடன் மாவட்ட செயலகத்திற்கு
செல்லும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.</p><p>மாநகரசபை தேர்தலில் போட்டியிட்டு இந்த வட்டாரத்துக்கு தெரிவான உறுப்பினர்
இது தொடர்பாக கவனம் செலுத்தாமல் உள்ளதுடன் அவர் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெற்றி
பெற்றால் வாங்கும் சம்பளத்தை கல்விக்கு செலவு செய்வதாக வாக்குறுதி அளித்தார்.</p><h2>வடிகால்களை துப்பரவு செய்தல்</h2><p> </p><p>வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டாலும் வாக்களித்த மக்களுக்காவது குறைந்த
பட்சம் புதிய மாவட்டத்திற்கு செல்லும் பாலமீன்மடு வீதி இரு பக்கமும் உள்ள
குப்பைகளை அகற்றிக் கொடுங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/437407cc-09f2-4663-8622-c6b2c221f596/26-6a95fae028d06.webp' /></p><p>
அதேவேளை வடக்கு கிழக்கில் பருவபெயர்ச்சி மழை ஐப்பசி மாதத்தில் இருந்து பெய்ய
தொடங்கும். நேபாளத்தில் இன்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு போன்று இலங்கையில்
வெள்ளப்பெருக்கு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>எனவே மழை வரும் முன்னர் இந்த மழைநீர் வழிந்தோடும் வடிகால்களை மாநகரசபை
துப்பரவு செய்ய வேண்டும் இல்லாவிடில் மழை வெள்ளத்தில் பாலமீன்மடு கிராமம்
பாதிக்கப்படும் என கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p><p><br></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T00:27:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாவணியில் அஞ்சனா.. அழகிய புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/anjana-rangan-cute-in-half-saree-1788222308"></link>
            <id>https://cineulagam.com/article/anjana-rangan-cute-in-half-saree-1788222308</id>
            <summary type="text">பிரபல தொகுப்பாளராக தற்போது வலம் வருபவர் அஞ்சனா. பட விழாக்கள், விருது விழாக்கள் போன்ற பெரிய நிகழ்ச்சிகளை மட்டும் அவர் தற்போது தொகுத்து வழங்கி வருகிறார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல தொகுப்பாளராக தற்போது வலம் வருபவர் அஞ்சனா. பட விழாக்கள், விருது விழாக்கள் போன்ற பெரிய நிகழ்ச்சிகளை மட்டும் அவர் தற்போது தொகுத்து வழங்கி வருகிறார்.
</p><p>
சமீபத்தில் படவிழா ஒன்றிற்கு தாவணி உடன் அவர் வந்திருந்தார்.

அந்த லுக்கில் அவர் எடுத்த அழகிய போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க. </p><p>வைரலாகும் புகைப்படங்கள்.</p>]]></content>
            <updated>2026-09-01T00:26:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீர்த்தி சுரேஷ் ஓணம் கொண்டாட்ட ஸ்டில்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/keerthy-suresh-onam-celebration-stills-1788221604"></link>
            <id>https://cineulagam.com/article/keerthy-suresh-onam-celebration-stills-1788221604</id>
            <summary type="text">நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது அவரது கணவர் மற்றும் நண்பர்கள் உடன் ஓணம் பண்டிகையை கொண்டாடி இருக்கிறார்.

அந்த புகைப்படங்களை அவர் வெளியிட்டு இருக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது அவரது கணவர் மற்றும் நண்பர்கள் உடன் ஓணம் பண்டிகையை கொண்டாடி இருக்கிறார்.
</p><p>
அந்த புகைப்படங்களை அவர் வெளியிட்டு இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி இருக்கிறது.
</p><p>
அழகிய புகைப்படங்களை பாருங்க. </p><p>நடிகர் நானி குடும்பத்துடன் வீடியோ காலில் பேசிய ஸ்டில்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-01T00:16:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ள அனர்த்தம் ; 900ஐ கடந்த பலி எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nepal-flood-disaster-death-toll-surpasses-900-1788221666"></link>
            <id>https://canadamirror.com/article/nepal-flood-disaster-death-toll-surpasses-900-1788221666</id>
            <summary type="text">நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 939-ஆக அதிகரித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி மாயமானோரின் எண்ணிக்கை 2,500-இல் 4,250-ஆக உயா்ந்துள்ளது.

திபெத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 939-ஆக அதிகரித்துள்ளது.</p><p> வெள்ளத்தில் சிக்கி மாயமானோரின் எண்ணிக்கை 2,500-இல் 4,250-ஆக உயா்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04d5316b-6fcf-4980-8ce9-fd61c1913bf9/26-6a9618e429a0f.webp' /></p><p>
</p><p>
திபெத்-நேபாள எல்லையில் பெரும் பனிப்பாறைச் சரிவால் லெண்டே நதியில் ஏற்பட்ட பெருவெள்ளம், நேபாளத்தின் போடே கோஷி நதியில் சீறிப்பாய்ந்தது.</p><p> சகதியுடன் பல அடி உயரத்துக்கு பெருக்கெடுத்த வெள்ளத்தில் கரையோர கிராமங்கள், சிறு நகரங்கள் அடியோடு அழிந்தன. வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள், பாலங்கள், சாலைகள், நீா்மின் நிலையங்கள், இதர உள்கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன.




</p><p>ரசுவா, நுவாகோட், சித்வன், நவல்பராசி, கோா்கா, தனாஹு ஆகிய மாவட்டங்களில் கரையோரப் பகுதிகளைப் புரட்டிப் போட்ட இந்தப் பெருவெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 939-ஆக உயா்ந்துள்ளது. </p><p>வெள்ளத்தில் சிக்கி 85 பாதுகாப்பு அதிகாரிகள், 320 வெளிநாட்டவா் உள்பட 4,250 போ் மாயமாகினா்.</p><p>உத்தர பிரதேச மாநிலம், மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள கண்டக் ஆற்றில் அடையாளம் தெரியாத 3 பெண்கள் மற்றும் ஓா் ஆணின் சடலங்கள் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டன. </p><p>இதையடுத்து, 4 பேரின் உடல்களும் இரு ஆம்புலன்ஸுகள் மூலமாக நேபாள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக மகாராஜ்கஞ்ச் மாவட்ட நிா்வாகிகள் தெரிவித்தனா்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T00:14:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளைஞர்களுடன் சேர்ந்து இருபெண்கள் அரங்கேற்றிய சம்பவம் ; பொலிஸாரிடம் சிக்கிய கும்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incidents-involving-women-reported-1788220733"></link>
            <id>https://jvpnews.com/article/incidents-involving-women-reported-1788220733</id>
            <summary type="text">ஹொரனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக் காலமாக இடம்பெற்று வந்த தங்கச்சங்கிலி கொள்ளைச் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களையும் அவ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஹொரனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக் காலமாக இடம்பெற்று வந்த தங்கச்சங்கிலி கொள்ளைச் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களையும் அவர்களுக்கு உதவிய இரு பெண்களையும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">

கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த ஹொரனை தலைமையக பொலிஸ் அதிகாரிகள், இக் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45a83c8b-8e24-4028-9513-45bfe7cfc80e/26-6a96153f60355.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">

கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை அடகு வைத்த குற்றத்திற்காகவே குறித்த இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
ஹொரனை பகுதியிலுள்ள கடை ஒன்றில் கடமையாற்றிக் கொண்டிருந்த பெண்ணின் தங்கச்சங்கிலி மற்றும் பதக்கத்தை மோட்டார் சைக்கிளில் வந்து கொள்ளையடித்தமை, இரண்டு நாட்களுக்குள் ஹொரனை, வெலிகல பகுதியில் இரு பெண்களின் கழுத்திலிருந்த தங்கச்சங்கிலி மற்றும் பதக்கங்களை கொள்ளையடித்தமை, ஹொரனை, கோணப்பல பகுதியில் பெண்ணொருவரின் தங்கச்சங்கிலி மற்றும் பதக்கத்தைக் கொள்ளையடித்தமை மற்றும் ஹொரணை, முணகம பகுதியில் கடையில் கடமையாற்றிக் கொண்டிருந்த ஒருவரின் தங்கச்சங்கிலியைக் கொள்ளையடித்தமை போன்ற கொள்ளைச் சம்பவங்களில் சந்தேகநபர்கள் ஈடுபட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; ">கைதான பிரதான சந்தேகநபர்கள் இருவரும் ஹொரனை மற்றும் அங்குருவாதொட பகுதிகளைச் சேர்ந்த 25 மற்றும் 23 வயதுடையவர்களாவர்.
</p><p style="text-align: justify; ">
அதேபோன்று, கைது செய்யப்பட்ட 53 வயதுடைய இரு பெண்களும் ஹொரனை மற்றும் அங்குருவாதொட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
சந்தேகநபர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட இரு ஜோடி தங்க நகைகள், அடகுப் இரசீது ஒன்று மற்றும் கொள்ளைச் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">மேலும், கைது செய்யப்பட்ட நால்வரிடமும் ஹொரனை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-31T23:59:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டெம்பர் 22இல் இறுதித் தீர்ப்பு..! வியப்பில் ஆழ்த்திய மைத்திரிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/maithri-pala-sirisena-crown-president-of-happy-era-1788203211"></link>
            <id>https://tamilwin.com/article/maithri-pala-sirisena-crown-president-of-happy-era-1788203211</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு “மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி” என்ற கௌரவப் பட்டம் வழங்கப்பட்ட விடயம் அரசியல் பரபரப்பில் பேசுபொருளாகியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு “மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி” என்ற கௌரவப் பட்டம் வழங்கப்பட்ட விடயம் அரசியல் பரபரப்பில் பேசுபொருளாகியுள்ளது.&nbsp;</p><p>
கொழும்பிலுள்ள அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிலேயே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்த கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.
</p><p>மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி என அவர் கௌரவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பல கொடூர சம்பவங்கள் மற்றும் குற்றச் செயல்க்ள தொடர்பில் அரசியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.&nbsp;</p><p>குறிப்பாக, பல உயிர்களை பறித்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்&nbsp;மைத்திரிபாலவின் ஆட்சிக்காலத்திலேயே நடந்தேறியது.&nbsp;</p><p>இது தொடர்பில் அவர் மீது பல குற்றச்சாட்டுக்களும் உள்ள நிலையில், இந்த தாக்குதல்கள் தொர்பிலான வழக்கு விசாரணையின் தீர்ப்பு எதிர்வரும் 22ஆம் திகதி வழங்கப்பட உள்ளது.</p><p>&nbsp;இவ்வாறிருக்கையில், அவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அங்கீகாரம் பல கேள்விகளை எழுப்புகின்றது எனலாம்.&nbsp;</p><p>நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/sgq8jMiHzoc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T23:46:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல நோய்களை தவிடுபொடியாக்கும் சின்ன வெங்காயம் ; நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/small-onions-may-help-fight-many-illnesses-1788218062"></link>
            <id>https://jvpnews.com/article/small-onions-may-help-fight-many-illnesses-1788218062</id>
            <summary type="text">&amp;nbsp;சின்ன வெங்காயத்தை உரிப்பது நேரம் எடுக்கும் என்பதாலும் அதை உறிக்கும் போது கண்ணில் நீரை வரவழைக்கும் என்பதாலும் இப்போதெல்லாம் பெரும்பாலான பெண்கள் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;சின்ன வெங்காயத்தை உரிப்பது நேரம் எடுக்கும் என்பதாலும் அதை உறிக்கும் போது கண்ணில் நீரை வரவழைக்கும் என்பதாலும் இப்போதெல்லாம் பெரும்பாலான பெண்கள் பெரிய வெங்காயத்தையே சமையலில் பயன்படுத்த தொடங்கி விட்டனர். </p><p style="text-align: justify;">ஆனால் சின்ன வெங்காயத்தில் இருக்கும் சத்துக்களை பற்றி பலரும் அறிவதில்லை.அதுபற்றி இங்கே பார்ப்போம்</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5cf95ec-6031-4d4c-a1ee-812430c56119/26-6a960acfd1be3.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;அருமருந்து&nbsp;</h2><p style="text-align: justify; ">
ஜலதோஷம், இதய நோய் பிரச்சனை இருப்பவர்கள், சின்ன வெங்காயத்தை மென்று சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறைவதோடு தும்மலும் நின்றுவிடும். </p><p style="text-align: justify; ">சின்ன வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி சாப்பிட்டால் ரத்த கொதிப்பு குறைவதோடு இதயமும் பலமாகும். இதய நோய் மற்றும் மாரடைப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை சாப்பிட வேண்டும்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16273137-6d0f-46d4-a1f7-0539ff22cbeb/26-6a961171a2695.webp' /></p><p>
</p><p style="text-align: justify;">
அதேபோல் மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கும் சின்ன வெங்காயம் ஒரு அருமருந்து. </p><p style="text-align: justify;">மேலும் பொடுகு தொல்லை, முடி கொட்டுதல் வழுக்கை போன்ற பிரச்சனைகளும் சின்ன வெங்காயம் நல்ல மருந்தாக இருக்கிறது. வழுக்கை விழுந்த இடங்களில் சின்ன வெங்காயத்தை தேய்ப்பதன் மூலம் முடி வளரவும் வாய்ப்பிருக்கிறது.
</p><p style="text-align: justify;">
தேள் கொட்டிய இடத்தில் சின்ன வெங்காயம் சாறை தேய்த்தால் உடலில் விஷம் ஏறாது. மேலும் சின்ன வெங்காயத்துடன் சிறிது வெல்லத்தை சார்ந்து சாப்பிடும் பொழுது பித்தம் குறையும்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> தலைவலி பிரச்சினை இருப்பவர்கள் வெங்காய நெடியி சுவாசித்தால் நிவாரணம் கிடைக்கும்.


அதேபோல் உடல் உஷ்ணத்தால் ஏற்படும் ஆசன கடுப்பு, மூல பிரச்சினைகளும் நீங்கும்.</p><p style="text-align: justify; ">குறிப்பாக சின்ன வெங்காயத்தில் இன்சுலின் சத்துக்கள் அதிகமாக உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் சின்ன வெங்காயத்தை தவறாமல் சாப்பிட வேண்டும்.. சின்ன வெங்காயத்தை சாறு எடுத்து உண்பதால் உடல் உள்ள கொழுப்புகள் கரையும்.</p><p style="text-align: justify;"> தொடர்ந்து 48 நாட்கள் சின்ன வெங்காயத்தை சாப்பிடும் போது உடல் குளிர்ச்சியடையும். மூளைக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-31T23:14:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் நாயிறைச்சி விற்பனை? பொதுமக்களுக்கு வெளியான அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dog-meat-sold-in-tamil-area-public-notice-issued-1788196771"></link>
            <id>https://jvpnews.com/article/dog-meat-sold-in-tamil-area-public-notice-issued-1788196771</id>
            <summary type="text">சாய்ந்தமருது பிரதேசத்தில் ‘நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக’ சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வரும் தகவல்களில் எவ்வித உண்மைத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சாய்ந்தமருது பிரதேசத்தில் ‘நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக’ சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வரும் தகவல்களில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை எனச் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெளிவுபடுத்தியுள்ளது.
</p><p style="text-align: justify; ">
கடந்த 29ஆம் திகதி சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் கீழ் உள்ள பிரதான வீதிப் பகுதியில், சுகாதார வைத்திய அதிகாரியும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் இணைந்து வழக்கமான உணவுப் பாதுகாப்புப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5fe5334-0328-487f-a701-424611da2bdf/26-6a95b7a4cf9ac.webp' /></p><h2 style="text-align: justify; ">பரிசோதனை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதன்போது, அப்பகுதியிலுள்ள ஆட்டிறைச்சிக் கடையொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஆட்டிறைச்சி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. </p><p style="text-align: justify; ">குறித்த இறைச்சியானது உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமலும், அங்கீகரிக்கப்பட்ட கால்நடை வைத்தியரின் பரிசோதனைச் சான்றிதழைப் பெறாமலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.</p><p style="text-align: justify; ">

இதனையடுத்து, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் குறித்த ஆட்டிறைச்சி உடனடியாகக் கையகப்படுத்தப்பட்டு, கடை உரிமையாளரின் அனுமதியுடன் அழிக்கப்பட்டதுடன், சுகாதார நடைமுறையைப் பின்பற்றாத கடை உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
எனினும், இச்சம்பவத்தைத் தவறாகச் சித்தரித்து, சாய்ந்தமருது பகுதியில் நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாகவும், அதனைப் பரிசோதகர்கள் பறிமுதல் செய்ததாகவும் சிலர் உள்நோக்கத்துடன் சமூக ஊடகங்களில் பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; ">

இது குறித்துச் சுட்டிக்காட்டியுள்ள சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் நோக்கிலேயே இத்தகைய வதந்திகள் பரப்பப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
எனவே, பொதுமக்கள் இந்த உண்மைக்குப் புறம்பான தகவல்களை நம்பவோ அல்லது சமூக வலைத்தளங்களில் பகிரவோ வேண்டாம் என்றும், இது தொடர்பில் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் கேட்டுக்கொண்டுள்ளது</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 </p>]]></content>
            <updated>2026-08-31T23:05:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க பயணங்களை கணிசமாகக் குறைத்த கனடியர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadians-are-keeping-travel-money-home-1788185258"></link>
            <id>https://canadamirror.com/article/canadians-are-keeping-travel-money-home-1788185258</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கனடா பயணிகள் அமெரிக்காவிற்கான தங்கள் பயணங்களையும் செலவுகளையும் கணிசமாகக் குறைத்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கனடா பயணிகள் அமெரிக்காவிற்கான தங்கள் பயணங்களையும் செலவுகளையும் கணிசமாகக் குறைத்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட தேசிய சுற்றுலா சர்வே தரவுகள் தெரிவிக்கின்றன.
</p><p>2025ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுடன் ஒப்பிடுகையில், 2026 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் கனடாவாசிகள் அமெரிக்காவிற்கு மேற்கொண்ட பயணங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம் குறைந்துள்ளது.
</p><p>பயணங்களின் எண்ணிக்கை குறைந்ததால், அமெரிக்காவில் கனடாவாசிகள் செய்த செலவு சுமார் 800 மில்லியன் டொலர் வரை சரிவடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00773107-b6ec-4d0c-9c05-274134e87139/26-6a958aabc6735.webp' /></p><p> </p><p>இதில் விமானக் கட்டணம் மற்றும் கனடாவில் பயணத்திற்காகச் செய்யப்பட்ட ஆரம்பச் செலவுகளும் அடங்கும்.</p><p>
அமெரிக்க பயணங்களைத் தவிர்த்து கனடாவாசிகள் தங்கள் சொந்த நாட்டின் சுற்றுலாத் துறையை ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர்.
</p><p>2025 முதல் காலாண்டில் 13.8 பில்லியன் டொலராக இருந்த கனடாவின் உள்நாட்டுச் சுற்றுலாச் செலவு, 2026 முதல் காலாண்டில் 14.5 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.
</p><p>இதேவேளை, கனடாவாசிகள் அமெரிக்கப் பயணத்தைக் குறைத்துக் கொண்டபோதிலும், அமெரிக்கர்களிடையே கனடாவிற்குச் செல்லும் ஆர்வம் குறையவில்லை.
</p><p>2026 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் கனடாவில் சுமார் 3 பில்லியன் டொலர் செலவிட்டுள்ளனர்.
</p><p>இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட சுமார் 500 மில்லியன் டொலர் அதிகமாகும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T23:05:09+00:00</updated>
        </entry>
    </feed>
