<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-31T01:45:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை! மக்களுக்கு வெளியான எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-exceeding-100-mm-in-some-places-1785460723"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-exceeding-100-mm-in-some-places-1785460723</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
</p><p>
அதன்போது, சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>பலத்த காற்று&nbsp;</h2><p>நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.</p><p>
</p><p>
கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலனறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f4676d8-575c-45be-8e4b-757df1463848/26-6a6bf85bec91d.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் இரத்தினபுரி, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.</p><p>

இந்த நிலையில், வானிலை மாற்றங்களால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை குறைத்து கொள்ள முன்னெச்சரிக்கையாக செயற்பாடுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T01:41:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ தாக்கத்தினால் இலங்கைக்கு ஏற்படவுள்ள கடுமையான பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-is-too-dangerous-to-sri-lanka-1785461691"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-is-too-dangerous-to-sri-lanka-1785461691</id>
            <summary type="text">எல் நினோ நிலைமையின் தாக்கம் காரணமாக எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் எதிர்பாராத பாதிப்பு ஏற்படலாம் என சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ நிலைமையின் தாக்கம் காரணமாக எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் எதிர்பாராத பாதிப்பு ஏற்படலாம் என சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்துள்ளார்.</p><p> எதிர்பாராத விதமாக வறண்ட காலநிலை அதிகரிக்கக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>உலகளாவிய ரீதியில் அசாதாரண காலநிலை நிலைகளை உருவாக்கும் எல் நினோ நிகழ்வு இம்முறை கடுமையான ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> </p><h2><b>உயர் வெப்பநிலை </b></h2><p>ஒகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கடந்த வருடங்களுடன் ஒப்பிடும்போது உயர் வெப்பநிலை எதிர்பார்க்கப்படுகின்றது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/992e086f-f29f-441e-979f-852f25f6ae49/26-6a6bfd10a85ad.webp' /></p><p>இந்த காலநிலை பயிர்ச் செய்கைக்கு கடுமையான பாதிப்புக்களை ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். </p><p>எல் நினோ நிலைமையால் பயிர்ச் செய்கைக்கு ஏற்படும் தாக்கங்களைக் குறைத்துக் கொள்வதற்கு விவசாய அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைவாக செயற்படுவது அவசியமாகும் எனவும் பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார். </p>]]></content>
            <updated>2026-07-31T01:40:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்சவினால் ஊடகங்களை அச்சுறுத்திய இரகசிய உளவுத்துறை கொலைக் கும்பல் தொடர்பான புதிய தகவல்கள்.....]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-army-intelligence-sri-lanka-1785460209"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-army-intelligence-sri-lanka-1785460209</id>
            <summary type="text">முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் இலங்கையின் இராணுவ உளவுத்துறை பொறிமுறையின் கீழ் சாதாரண கட்டளை முறைமைக்கு அப்பால்,இரகசியமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் இலங்கையின் இராணுவ உளவுத்துறை பொறிமுறையின் கீழ் சாதாரண கட்டளை முறைமைக்கு அப்பால்,இரகசியமாக இயங்கிய ஒரு பிரிவு தொடர்பில் எவ்வித நீதி நடவடிக்கைகளும் இதுவரை மேற் கொள்ளப்படவில்லை என தெரியவந்துள்ளது. </p><p>
இந்த பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கொலை மற்றும் அச்சுறுத்தல் -தாக்குதல்- பயமுறுத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்ட இராணு அதிகாரிகள் இரண்டு தசாப்தங்கள் கடந்த நிலையில் சுதந்திரமாக நாட்டில் நடமாடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>இவ்வாறான ஒரு பிரிவு இயங்குவதை அரசாங்கம் ஒருபோதும் உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொள்ளவில்லை. </p><h2>


</h2><p></p><h2>புலனாய்வு பிரிவில் இயங்கிய இரகசிய குழு</h2><p>இந்த குழுவுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தது யார் என்பது மட்டுமல்ல அந்த உத்தரவுகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அதிகாரமுள்ள நிறுவனங்கள் தொடர்ந்தும் தவிர்த்தது ஏன் எனற் கேள்வியும் எழுந்துள்ளது.
</p><p>எந்தவொரு மேற்பார்வைக் குழுவிற்கும் பொறுப்புக்கூறக் கடமைப்படாத, பாதுகாப்புத் துறையின் உயர் அதிகாரிக்கு மட்டுமே பொறுப்புக்கூறும் ஒரு பிரிவாக இரகசியமாக இயங்கியது. இந்தப் பிரிவின் நேரடிப் தளபதியாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கபில ஹெந்தாவித்தாரண செயற்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p>அரச புலனாய்வுச் சேவையுடன் (SIS) இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆட்சேர்ப்புகளில், செயற்பாட்டுத் திறமையை விட இரகசியத்தைப் பேணுதல் மற்றும் அரசாங்கத்திற்கு, குறிப்பாக கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட விசுவாசத்திற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது.
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34408139-fe84-4878-9788-14779a862bd6/26-6a6bf5f3eff6b.webp' /></p><p>இந்தப் பிரிவு கொஹுவல இராணுவ முகாமில் நிறுவப்பட்டிருந்தது. இந்த உறுப்பினர்கள் சாதாரண இராணுவத்தினரிடமிருந்து தனித்து வாழ்ந்ததுடன், தனி உணவு மற்றும் வசதிகளைப் பெற்று, சாதாரண இராணுவ ஒழுக்கம் மற்றும் பரிசோதனைகளிலிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டிருந்தனர்.
</p><p>2009 ஆண்டளவில் போர் இறுதிப் கட்டத்தை எட்டியிருந்ததால், இந்தப் பிரிவு யுத்த களத்திற்காகக் கட்டியெழுப்பப்படவில்லை மாறாக ஏனைய உட்புற அடக்குமுறை நடவடிக்கைகளுக்காகவே உருவாக்கப்பட்டது.
</p><p>கண்ணுக்குத் தெரியாமல் தாக்குதல் நடத்தும் தொழில்நுட்பம்.....
ஒரு சாதாரண குற்றக் கும்பலிலிருந்து இந்தப் பிரிவை வேறுபடுத்துவது, ஆயுதமேந்திய உறுப்பினர்கள் எவ்வித தடையுமின்றி கொழும்பு நகரத்திற்குள் பயணிப்பதற்காக உருவாக்கப்பட்டிருந்த சிக்கலான ஒருங்கிணைப்பு அமைப்பாகும்.
</p><p>கண்காணிப்பு கெமராக்களில் சிக்காமல் இருக்க போலி இலக்கத் தகடுகளைப் பொருத்திய வெள்ளை நிற வேன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தியுள்ளனர்.
</p><h2>ஊடகங்களுக்கு எதிரான தாக்குதல்கள்</h2><p>பல ஆண்டுகளாகச் செயற்பட்ட இந்தப் பிரிவின் தாக்குதல்களில் ஒரே மாதிரியான முறைமை காணப்பட்டது. இரவு வேளையில் வெள்ளை வேன்களில் வருதல், T-56 துப்பாக்கிகளைக் காட்டி ஊடகர்களை அச்சுறுத்தல் மற்றும் இறுதியில் பெற்றோல் ஊற்றி ஊடக நிறுவனங்களைத் தீயிட்டுக் கொளுத்தி அழித்தல்.
</p><p>2009 ஜனவரி 6 அதிகாலை 2:30 மணிக்கு தெபானமவில் அமைந்துள்ள சிரச TV ஒளிபரப்பு மையத்தின் பிரதான கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் குண்டுவெடிப்பு சம்பவம். </p><p>உளவுத்துறையின் உட்புற தகவல்கள் மற்றும் முன்னாள் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளின் கூற்றுகளின்படி, இது அரசாங்கத்தின் அனுசரணையுடன், அரச நிதியில் இயங்கிய ஒரு இரகசியப் பிரிவின் திட்டமிடப்பட்ட நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டிருந்தது. </p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ce27932-adc4-4ca4-b51e-a25f61eed5a3/26-6a6bf5f4a36db.webp' /></p><p>2010 ஜூலை 29 சியத TV கங்காராமய 12 பேரடங்கிய கும்பல் வந்து, ஊழியர்களுக்குத் துப்பாக்கிகளைக் காட்டி முழங்காலிடச் செய்து, ஒளிபரப்பு உபகரணங்களுக்குப் பெற்றோல் இட்டு நிறுவனத்தையும் தீயிட்டுக் கொளுத்தியது.
</p><p>2011 ஜனவரி 11 லங்கா ஈ நியூஸ் மாலபே 6 பேரடங்கிய கும்பல் ஆசிரியர் சந்தருவன் சேனாதீரவின் வளாகத்திற்குள் நுழைந்து, கணினி அமைப்புகள் மற்றும் 7,000 க்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொண்ட ஆவணக் காப்பகத்தைத் தீயிட்டு அழித்தது.
</p><h2>படுகொலைகள், கடத்தல்கள்</h2><p>
லசந்த விக்கிரமதுங்க: 'சண்டே லீடர்' பத்திரிகையின் ஆசிரியர் படுகொலை. பிரகீத் எக்னலிகொட கடத்தல். MBC/MTV செய்தி முகாமையாளர் செவோன் டேனியல் சர்வதேச ஊடகங்கள் மற்றும் அமெரிக்கத் தூதரகப் பிரிவுகளின் தலையீட்டின் பேரில் தப்பினார். </p><p>லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் சந்தருவன் சேனாதீர ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் 5 மாத தீவிர கண்காணிப்புக்குப் பிறகு ஐக்கிய இராச்சியத்திற்குத் தப்பிச் சென்றார். இந்த குழுவினர் சாதாரண இராணுவச் சம்பளத்திற்கு மேலதிகமாக பல சலுகைகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.</p><p></p><p>இந்தத் தாக்குதல்கள் இருளில் நடந்த ஏதேச்சையான சம்பவங்கள் அல்ல, அரச நிதியில் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட தாக்குதல்கள் என்பதால், குற்றப் புலனாய்வுத் துறை (CID), சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதிமன்றங்களில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் போதுமான சான்றுகள் உள்ளன. </p><p>ஆனால் கேள்வி என்னவென்றால், இலங்கையின் பொறுப்புள்ள நிறுவனங்கள் என்றாவது சட்டத்தை நடைமுறைப்படுத்துமா என்பதாகும்.</p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T01:23:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை உலுக்கிய சம்பத்தால் அதிர்ச்சியில் பெற்றோர் - மாணவ குழுவால் மாணவிக்கு நேர்ந்த கொடுமை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/school-students-abused-a-female-student-1785384991"></link>
            <id>https://tamilwin.com/article/school-students-abused-a-female-student-1785384991</id>
            <summary type="text">இரத்தினபுரி பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் 5 மாணவர்கள், அதே வகுப்பை சேர்ந்த மாணவியை கடுமையான முறையில் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய சம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரி பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் 5 மாணவர்கள், அதே வகுப்பை சேர்ந்த மாணவியை கடுமையான முறையில் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய சம்பவம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

இந்த நிலையில் குறித்த 5 மாணவர்களும் குருவிட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
</p><p>
அதற்கமைய, சந்தேக நபர்களான மாணவர்களில் இருவரை 28 நாட்களுக்கு சிறுவர் நல்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். </p><h2><b>

மருத்துவப் பரிசோதனை</b></h2><p>அத்துடன், ஏனைய மூன்று மாணவர்களையும் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fff2f28-591f-4a23-a91a-cfd1a59b2cfd/26-6a6bf66a43d21.webp' /></p><p>தகாத செயற்பாட்டுக்கு உள்ளானதாக கூறப்படும் மாணவி, மருத்துவப் பரிசோதனைக்காக இரத்தினபுரி போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>இந்த சம்பவம் கடந்த 26ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. அது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கமைய குருவிட்ட பொலிஸார் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் குறித்த மாணவர்கள் குழு கைது செய்யப்பட்டுள்ளது. </p><p>கைது செய்யப்பட்ட 5 மாணவர்களில் இருவரும் மாணவியுடன் கடுமையான முறையில் தகாத செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.</p><p> ஏனைய 3 மாணவர்களும் அதற்கு உதவி மற்றும் உடந்தையாக செயல்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-31T01:12:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளம் ஆசிரியையின் விபரீத செயலால் பரபரப்பு ; தன்னை தானே சித்திரவதை செய்ய 4,000 டொலர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/teacher-pays-huge-sum-in-shocking-incident-1785457342"></link>
            <id>https://canadamirror.com/article/teacher-pays-huge-sum-in-shocking-incident-1785457342</id>
            <summary type="text">இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியைச் சேர்ந்த 32 வயதான பெண், அமெரிக்க நபருக்கு 4,000 டாலர் பணம் கொடுத்து விபரீத முடிவை தேடிக்கொண்ட திடுக்கிடும் தகவல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியைச் சேர்ந்த 32 வயதான பெண், அமெரிக்க நபருக்கு 4,000 டாலர் பணம் கொடுத்து விபரீத முடிவை தேடிக்கொண்ட திடுக்கிடும் தகவல் தற்போது நீதிமன்ற விசாரணையில் அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">

இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியைச் சேர்ந்த 32 வயதான இசை ஆசிரியை, கடுமையான மன உளைச்சல் காரணமாக விசித்திரமான இணையதளம் ஒன்றில் அமெரிக்காவைச் சேர்ந்த நபருடன் பழகி வந்துள்ளார். அந்த பழக்கம் ஒரு விபரீதமான முடிவை நோக்கி தள்ளியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d476b2e8-630c-41b1-b163-718f867cd963/26-6a6beac0854bb.webp' /></p><h2 style="text-align: justify; ">கொலை குற்றச்சாட்டுகள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

விசாரணையில் வெளிவந்துள்ள நீதிமன்ற ஆவணங்களின்படி, தன்னை கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொலை செய்ய வேண்டும் என்பதற்காக, சோனியா அந்த அமெரிக்க நபருக்கு 4,000 டாலர்களை கொடுத்துள்ளார்.</p><p style="text-align: justify; "> 

அமெரிக்காவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் வைத்து அந்த நபர் குறித்த ஆசிரியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார். </p><p style="text-align: justify; ">அப்போது ஆசிரியைக்கு தனது தவறு புரிய வந்துள்ளது. உடனே, தனது தோழி ஒருவருக்கு, ரகசியமாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அடுத்த சில நாட்களில் ஆசிரியை இங்கிலாந்து திரும்பாததால், அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். </p><p style="text-align: justify; ">அப்போது புளோரிடாவின் மேரியன் கவுண்டி காட்டுப் பகுதியில், 4 முறை கத்தியால் குத்தப்பட்டு, ஆழமற்ற ஒரு குழியில் கொடூரமான முறையில் புதைக்கப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
</p><p style="text-align: justify; ">

இதனை தொடர்ந்து, சோனியாவின் வங்கி அட்டைகளை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்ற 53 வயதான சந்தேகநபரை அமெரிக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> அவர் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p style="text-align: justify; ">
இந்த வினோதமான கொலை வழக்கு தற்போது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-31T01:10:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை முதல் சுக்கிர திசை ; இந்த ராசிகளுக்கு அமோக வாழ்வு காத்திருக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/venus-transit-opens-a-lucky-phase-for-these-signs-1785459848"></link>
            <id>https://jvpnews.com/article/venus-transit-opens-a-lucky-phase-for-these-signs-1785459848</id>
            <summary type="text">ஆகஸ்ட் ஒன்றாம் திகதி சுக்கிர பகவான் கன்னி ராசியில் பெயர்ச்சி ஆகிறார். சுக்கிர பகவான் உடைய இந்த பெயர்ச்சி சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் செல்வத்தை கொடுக்க ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆகஸ்ட் ஒன்றாம் திகதி சுக்கிர பகவான் கன்னி ராசியில் பெயர்ச்சி ஆகிறார். சுக்கிர பகவான் உடைய இந்த பெயர்ச்சி சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் செல்வத்தை கொடுக்க போகிறது.</p><p> 

ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியமான கிரகமாக சுக்கிர பகவான் இருக்கிறார். மேலும், சுக்கிர பகவான் முப்பது நாட்களுக்கு ஒரு முறை அவருடைய ராசியை மாற்றிக் கொண்டிருக்கிறார். சுக்கிர திசை எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொடுக்க போகிறது என்று பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc511bcd-7d36-4c9a-87c4-9babc66596c0/26-6a6bf489ded18.webp' /></p><p>
</p><h2> எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்
</h2><p><b>
ரிஷபம்:</b>
இவர்களுக்கு இந்த காலகட்டம் மனதில் இருந்த கவலைகள் விலகப் போகிறது. முகம் பொலிவாக தோற்றமளிக்கும். நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் விலகும். திருமண வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரம் அமையும்.</p><p></p><p>
</p><p><b>
மிதுனம்:</b>
இவர்களுக்கு இந்த காலகட்டங்களில் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் நலனில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல மகிழ்ச்சியான நேரத்தை செலவு செய்வீர்கள். மனைவி மற்றும் வாழ்க்கை துணையுடன் நல்ல நேரம் செலவழிப்பார்கள். சுப காரிய தொடர்பான பேச்சுவார்த்தைகள் நல்ல முறையில் முடியும். தந்தை முழு ஆதரவு கொடுப்பார்.</p><p></p><p>
</p><p><b>

தனுசு:
</b>இவர்களுக்கு இந்த காலகட்டங்களில் பணியில் புதிய பொறுப்புகள் தேடி வரும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஒரு சிலருக்கு நகை மற்றும் ஆடை சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் வழியே நல்ல உதவியை பெறுவீர்கள். நீண்ட நாட்கள் மனதில் இருந்த மந்த தன்மை விலகும்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T01:07:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸில் ஈழத்தமிழ்ப் பெண் மதுபோதையில் மீட்கப்பட்டதாகப் பரவும் செய்தி ; வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fact-check-viral-post-about-tamil-woman-in-france-1785455117"></link>
            <id>https://jvpnews.com/article/fact-check-viral-post-about-tamil-woman-in-france-1785455117</id>
            <summary type="text">பிரான்ஸின் Toulouse பகுதியில் தமிழ்ப் பெண் ஒருவர் மதுபோதையில் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் சமுக ஊடகங்களில் தெகவல்க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பிரான்ஸின் Toulouse பகுதியில் தமிழ்ப் பெண் ஒருவர் மதுபோதையில் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் சமுக ஊடகங்களில் தெகவல்கள்&nbsp; பகிரப்பட்டு வருகிறது.</p><p style="text-align: justify;">இதன் உண்மைத்தன்மை பற்றி பிரெஞ்சு பொலிஸாரிடம் இருந்து பல தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37b770e7-4c5f-4da1-ae72-d64ea69229a9/26-6a6be20e8d64d.webp' /></p><h2 style="text-align: justify; ">ஆரம்பகட்ட விசாரணை</h2><p style="text-align: justify;"> 

இந்தச் செய்தி பிரெஞ்சு ஊடகங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்றும் இது தொடர்பாக பிரெஞ்சுப் பொலிஸாரோ அல்லது துலூஸ் (Toulouse) நகர பிரதான ஊடகங்களோ (La Dépêche, Actu Toulouse போன்ற தளங்கள்) எந்தவொரு உத்தியோகபூர்வ செய்தியையும் வெளியிடவில்லை&nbsp;என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">
இந்தச் செய்தி வதந்தியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.பிரான்ஸில் இத்தகைய உணர்வுப்பூர்வமான சம்பவங்கள் நடக்கும்போது,
 பாதிக்கப்பட்டவர் தொடர்பில் எது வித தகவல்களையும் பிரெஞ்சுப் பொலிஸாரோ அல்லது ஊடகங்களோ ஆரம்பகட்ட விசாரணைகளின் போது ஒருபோதும் பகிரங்கப்படுத்த மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">எனவே, சமூக வலைத்தளங்கள் அல்லது வெளிநாட்டு புலம்பெயர் ஊடகங்களில் மட்டுமே பரவி வரும் இந்தச் செய்திக்கு நம்பகத்தன்மை இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"> 

சமூகத்தை இழிவு படுத்தும் விதத்தில் புனையப்பட்டதாக கருதப்படும் இத்தகைய செய்திகளைப் பகிர்வதைத் தவிர்ப்பது நல்லது எனவும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-31T01:06:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தையின் நண்பனால் துஷ்பிரயோகத்திற்குள்ளான 13 வயது சிறுமி ; காதலால் வந்த வினை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/13-year-old-girl-abused-by-father-s-friend-1785456307"></link>
            <id>https://jvpnews.com/article/13-year-old-girl-abused-by-father-s-friend-1785456307</id>
            <summary type="text">புத்தளம் - மாரவில பகுதியில் 7ஆம் வகுப்பில் கல்வி பயிலும் 13 வயது சிறுமியை பெற்றோரின் பராமரிப்பிலிருந்து அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">புத்தளம் - மாரவில பகுதியில் 7ஆம் வகுப்பில் கல்வி பயிலும் 13 வயது சிறுமியை பெற்றோரின் பராமரிப்பிலிருந்து அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 35 வயதுடைய திருமணமான நபர் ஒருவர் மாரவில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">


மஹாவெவ – குடாவெவ பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், சிறுமியின் தந்தையுடன் நெருங்கிய நட்பைப் பேணி வந்ததுடன், அடிக்கடி சிறுமியின் வீட்டிற்கும் சென்று வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60656991-ed79-4090-8dde-c121e742183c/26-6a6be6b4673cb.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;வாக்குமூலம்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இதனைப் பயன்படுத்தி சிறுமியுடன் நெருக்கமாகப் பழகிய சந்தேகநபர், அவரை காதல் வலையில் சிக்கவைத்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">


கடந்த ஜூலை 5ஆம் திகதி, “கடற்கரைக்குச் செல்வோம்” எனக் கூறி சிறுமியை அழைத்துச் சென்ற சந்தேகநபர், மஹாவெவ பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு சந்தர்ப்பங்களில் அதே விடுதிக்கு அழைத்துச் சென்று சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 என்ற அவசர இலக்கத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மாரவில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


இதன்போது, மாரவில பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் பொறுப்பதிகாரி முன்னிலையில் சிறுமியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் மூலம் சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">


கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மாரவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p style="text-align: justify; ">


மாரவில பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்&nbsp; தலைமையிலான குழுவினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-31T01:06:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரத்தில் தொங்கிய மனைவியின் தலை ; கணவர் கூறிய காரணத்தில் காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/husband-arrested-after-wife-found-beheaded-1785434501"></link>
            <id>https://jvpnews.com/article/husband-arrested-after-wife-found-beheaded-1785434501</id>
            <summary type="text">உணவு பரிமாறுவதற்கு தாமதமானதால் கோபமடைந்த நபர் தனது ச மனைவியின் தலையை வெட்டி மரத்தில் மாட்டிய சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.பீகார்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உணவு பரிமாறுவதற்கு தாமதமானதால் கோபமடைந்த நபர் தனது ச மனைவியின் தலையை வெட்டி மரத்தில் மாட்டிய சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.</p><p style="text-align: justify;">பீகார் மாநிலம் ஜகர்கன்ட் மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/206baf78-020d-4847-a1e1-c77038f2a2a8/26-6a6b918f809b0.webp' /></p><h2 style="text-align: justify; ">மதுபோதை</h2><p> </p><p style="text-align: justify;"> சகோதரர்கள் இருவர் வசித்து வந்த நிலையில் இதில் சகோதரர் ஒருவர் திருமணம் முடித்துள்ளார். குனல் குமாருக்கு மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என சொல்லப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">&nbsp;வீட்டிற்கு மதுபோதையில் சாப்பிட சென்றபோது, மனைவி&nbsp; அவருக்கு சாப்பாடு போடவில்லை எனவும்&nbsp; நீண்ட நேரம் சாப்பாட்டுக்காக காத்திருந்ததில் கோபமடைந்த குனல் குமார் பெண்ணின் தலையில் கோடாரியால் அடித்து கொலை செய்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;">
அதன்பின்&nbsp; தலையை வீட்டின் முன் இருந்த மரத்தில் தொங்க விட்டுள்ளார்.</p><p style="text-align: justify;">குணால் குமாரை கைது செய்து பொலிசார் விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-31T01:06:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்னை சித்திரவதை செய்து கொல்ல வேண்டும் ; பல இலட்சம் கொடுத்து விபரீத முடிவை தேடிய இளம் ஆசிரியை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/teacher-pays-huge-sum-in-shocking-incident-1785443266"></link>
            <id>https://jvpnews.com/article/teacher-pays-huge-sum-in-shocking-incident-1785443266</id>
            <summary type="text">இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியைச் சேர்ந்த 32 வயதான பெண், அமெரிக்க நபருக்கு 4,000 டாலர் பணம் கொடுத்து விபரீத முடிவை தேடிக்கொண்ட திடுக்கிடும் தகவல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியைச் சேர்ந்த 32 வயதான பெண், அமெரிக்க நபருக்கு 4,000 டாலர் பணம் கொடுத்து விபரீத முடிவை தேடிக்கொண்ட திடுக்கிடும் தகவல் தற்போது நீதிமன்ற விசாரணையில் அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">

இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியைச் சேர்ந்த 32 வயதான இசை ஆசிரியை, கடுமையான மன உளைச்சல் காரணமாக விசித்திரமான இணையதளம் ஒன்றில் அமெரிக்காவைச் சேர்ந்த நபருடன் பழகி வந்துள்ளார். அந்த பழக்கம் ஒரு விபரீதமான முடிவை நோக்கி தள்ளியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e89c278b-eba7-4b61-8421-3e08422650f8/26-6a6bb3c40190c.webp' /></p><h2 style="text-align: justify; ">கொலை குற்றச்சாட்டுகள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

விசாரணையில் வெளிவந்துள்ள நீதிமன்ற ஆவணங்களின்படி, தன்னை கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொலை செய்ய வேண்டும் என்பதற்காக, சோனியா அந்த அமெரிக்க நபருக்கு 4,000 டாலர்களை கொடுத்துள்ளார்.</p><p style="text-align: justify; "> 

அமெரிக்காவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் வைத்து அந்த நபர் குறித்த ஆசிரியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார். </p><p style="text-align: justify; ">அப்போது ஆசிரியைக்கு தனது தவறு புரிய வந்துள்ளது. உடனே, தனது தோழி ஒருவருக்கு, ரகசியமாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அடுத்த சில நாட்களில் ஆசிரியை இங்கிலாந்து திரும்பாததால், அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். </p><p style="text-align: justify; ">அப்போது புளோரிடாவின் மேரியன் கவுண்டி காட்டுப் பகுதியில், 4 முறை கத்தியால் குத்தப்பட்டு, ஆழமற்ற ஒரு குழியில் கொடூரமான முறையில் புதைக்கப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
</p><p style="text-align: justify; ">

இதனை தொடர்ந்து, சோனியாவின் வங்கி அட்டைகளை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்ற 53 வயதான சந்தேகநபரை அமெரிக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> அவர் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p style="text-align: justify; ">
இந்த வினோதமான கொலை வழக்கு தற்போது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-31T01:06:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைக்கவசங்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல் ; கடுமையாக்கப்படும் சட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/authorities-issue-notice-on-helmet-rules-1785429263"></link>
            <id>https://jvpnews.com/article/authorities-issue-notice-on-helmet-rules-1785429263</id>
            <summary type="text">தரமற்ற தலைக்கவசங்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

 

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தரமற்ற தலைக்கவசங்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த அதிகாரசபை, SLS முத்திரை இல்லாத தலைக்கவசங்களை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், விநியோகித்தல், களஞ்சியப்படுத்துதல், காட்சிப்படுத்துதல் அல்லது விற்பனை செய்தல் சட்டவிரோதமானது எனத் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e95b4513-378e-4411-a1bf-14275ee236ee/26-6a6b7f2b07a70.webp' /></p><h2 style="text-align: justify;">வர்த்தமானிப் பத்திரிகை</h2><p>
</p><p style="text-align: justify;">
 

2015.07.16 ஆம் திகதியுடைய 1923/65 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையின் 59 ஆம் இலக்கக் கட்டளைக்கு அமைய, இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள் பாதுகாப்புத் தலைக்கவசங்களுக்கு SLS 517 தரநிலைக்குரிய SLS தரச்சான்றிழ் முத்திரை இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;">

 

இதற்கமைய, கடந்த 27ஆம் திகதி தீவு முழுவதும் 98 சிறப்புச் சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், இதன்போது SLS முத்திரை இல்லாத 431 க்கும் மேற்பட்ட தலைக்கவசங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p>
</p><p style="text-align: justify;">
 

மேலும், SLS அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிக்காத காலப்பகுதியில் தலைக்கவசங்களை உற்பத்தி செய்த இரு தொழிற்சாலைகளின் 3,520 தலைக்கவசங்களின் விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify;">
 

2026 ஆம் ஆண்டில் இதுவரை 151 சோதனைகளும் சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், 4,038 க்கும் மேற்பட்ட தலைக்கவசங்கள் தொடர்பில் கைப்பற்றுதல், விற்பனையை நிறுத்துதல் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-31T01:05:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியல் மயப்படுத்தப்படும் நீதித்துறை! அரசாங்கத்தின் மீது நாமல் பகிரங்க குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-alleges-judiciary-is-being-politicized-1785458352"></link>
            <id>https://ibctamil.com/article/namal-alleges-judiciary-is-being-politicized-1785458352</id>
            <summary type="text">
நீதித்துறையின் சுயாதீனத்தை அரசியல் மயப்படுத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உற...</summary>
            <content type="html"><![CDATA[<p>
நீதித்துறையின் சுயாதீனத்தை அரசியல் மயப்படுத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.</p><p>
கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடன் நேற்று(20) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>

நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு ஒட்டுமொத்த சட்டத்தரணிகள் சமூகமும் எதிர்ப்பு தெரிவிக்கின்ற நிலையில் யாரை திருப்திப்படுத்துவதற்காக அரசாங்கம் இந்த தீர்மானத்தில் உறுதியாக உள்ளது என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் நாமல் கூறியுள்ளார்.</p><p></p><h2>தான்தோன்றித்தனமாக செயற்படும் அரசாங்கம்</h2><p>
அதன்போது மேலும் அவர் கூறுகையில், “நிறைவேற்றுத்துறை நீதித்துறையை ஆக்கிரமிப்பதை அலட்சியப்படுத்த முடியாது. கடந்த காலங்களில் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba609cb3-93ee-4134-a12c-434940f1ea55/26-6a6bf272e46e8.webp' /></p><p>
அதன் விளைவு பாரதூரமானதாக அமைந்தது. கடந்த கால அரசாங்கங்கள் செய்த தவறையும், செயற்பாடுகளையும் விமர்சித்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் அதே பாதையில் தான் தற்போது பயணிக்கிறது.</p><p>
நீதித்துறையின் சுயாதீனத்தை அரசியல் மயப்படுத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும். நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு ஒட்டுமொத்த சட்டத்தரணிகள் சமூகமும் எதிர்ப்பு தெரிவிக்கின்ற நிலையில் யாரை திருப்திப்படுத்துவதற்காக அரசாங்கம் இந்த தீர்மானத்தில் உறுதியாக உள்ளது என்பது தெரியவில்லை.</p><p>

காவல்துறையினர் மக்கள் விடுதலை முன்னணியின் காவல்துறையினர் போன்று செயற்படுகிறார்கள்.தேசிய மக்கள் சக்தியின் அரசியல் செயற்பாட்டாளர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவி வகிப்பதால் காவல்துறை திணைக்களத்தின் சுயாதீனமும் தற்போது மலினப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ளதால் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்படுகிறது. பைத்தியம் தலைக்கேறியதை போன்று செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. பைத்தியம் தலைக்கேறினால் உயரத்தில் இருந்து கீழே குதிக்க வேண்டும். அரசாங்கம் தற்போது உயரத்துக்கு சென்று விட்டது. வெகுவிரைவில் கீழே குதித்து விடும்” என்றார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-07-31T01:02:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் காட்டுப் பகுதிக்குள் தீவிர தேடுதலில் காத்திருந்த ஷாக் ; பின்னணியில் பிரபல கட்சியின் அரசியல்வாதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kerala-cannabis-packages-seized-in-jaffna-1785457810"></link>
            <id>https://jvpnews.com/article/kerala-cannabis-packages-seized-in-jaffna-1785457810</id>
            <summary type="text">வடமராட்சி நெல்லியடி பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் 20 லட்சம் ரூபா பெறுமதியா 16 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வடமராட்சி நெல்லியடி பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் 20 லட்சம் ரூபா பெறுமதியா 16 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது,</p><p style="text-align: justify;">
வடமராட்சி அரச புலனாய்வுச் சேவை வழங்கிய தகவலின்படி, இந்த போதைப்பொருள் தொகை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb7e9f88-15c3-40b3-a9f5-96d469452ceb/26-6a6bec93dec28.webp' /></p><h2 style="text-align: justify;">சட்ட விரோத பொருள்&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify;">
இந்த சட்ட விரோத கேரள கஞ்சா இன்றைய தினம் கொழும்பு பிரதேசத்திற்கு கைமாற்றுவதற்கு இருந்த நிலையில் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
</p><p style="text-align: justify;">
இதேவேளை, மேற்படி போதைப்பொருள் கடத்தலில் பின்னணியில், பிரபல அரசியல் கட்சியின் பிரதேச சபை உறுபினர் ஒருவரும் சம்மந்தப்பட்டிருப்பதாக விசாரணைஅதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p>

</p><p style="text-align: justify;">இந்த வாரம் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக பருத்தித்துறை வல்லிபுரம் கடற்கரை பகுதிக்கு கொண்டுவரப்பட்ட 250 kg விற்கு மேற்பட்ட கேரள கஞ்சாவின் சிறு தொகையே இவ்வாறு பிடிபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p style="text-align: justify;">
அந்த வகையில், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-31T00:55:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்தடுத்து நடத்தப்படும் தாக்குதல்கள் ; அதிரடி கொடுக்கும் அமெரிக்கப் படைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-forces-launch-major-military-operation-1785458474"></link>
            <id>https://canadamirror.com/article/us-forces-launch-major-military-operation-1785458474</id>
            <summary type="text">ஜோர்தானில் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் மீது அமெரிக்க ராணுவம் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளது.

சவூதி அரேபியாவின் எண்ணெய் கட்டமைப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோர்தானில் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் மீது அமெரிக்க ராணுவம் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளது.
</p><p>
சவூதி அரேபியாவின் எண்ணெய் கட்டமைப்புகள் மீது கடந்த சில நாள்களாக ஈராக்கிலிருந்து 30-க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.


இதற்குப் பதிலடியாக ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களைக் குறிவைத்து அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ed342e4-493f-4a41-bd1f-5eab69777a23/26-6a6bef2b9efa4.webp' /></p><p> </p><p>தொடர்ந்து ஜோர்தானில் உள்ள அமெரிக்க படைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
</p><p>
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஜோர்தானில் உள்ள விமானப் படைத் தளம் மற்றும் அங்குள்ள அமெரிக்க மத்திய படைப்பிரிவின் தலைமையகத்தைக் குறிவைத்து ஈரான் பல ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைகளை வீசி நடத்திய தாக்குதலில் 5 ஏவுகணைகளை நடுவானிலேயே இடைமறித்து, ஜோர்தான் ராணுவம் சுட்டுவீழ்த்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 


இந்த நிலையில், ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானின் தெற்குப் பகுதியைக் குறிவைத்து அமெரிக்கப் படைகள் தாக்குதல்களைத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
ஹோர்மூஸ் நீரிணையில் உள்ள கெஷ்ம் தீவில் மூன்று முறை வெடிகுண்டு சத்தம் கேட்டதாகவும், அங்கு குடியிருப்பு பகுதியில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
</p><p>

 இருப்பினும் இந்தத் தாக்குதல் சேதம் மற்றும் உயிர்ப்பலிகள் தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.</p>]]></content>
            <updated>2026-07-31T00:41:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு பத்திரிகையாளருக்கு கோட்டாபய விடுத்த மிரட்டல் கதை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-story-of-gotabaya-s-threat-to-a-journalist-1785418943"></link>
            <id>https://ibctamil.com/article/the-story-of-gotabaya-s-threat-to-a-journalist-1785418943</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தொலைபேசி உரையாடல் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகிய நிலையில் அது குறித்த முறைப்படும் நேற்று குற்றப்புலனாய...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தொலைபேசி உரையாடல் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகிய நிலையில் அது குறித்த முறைப்படும் நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டது.</p><p>

இது அவரது இராணுவ பதவி விலகல் தொடர்பில் சர்ச்சையை கிளப்பும் ஒரு உரையாடலாக காணப்பட்டது.
</p><p>
ஆனால் இதே போல ஒரு உரையாடல் 2012 ஆம் ஆண்டு இலங்கையின் அரசியல் மற்றும் ஊடக உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய ஒரு சம்பவம், அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை மையமாகக் கொண்டு உருவானது.</p><p></p><p>
</p><h2>இலங்கைக்கு ஒரு நாய்க்குட்டி</h2><p>இது சூரிச்சிலிருந்து (Zurich) இலங்கைக்கு ஒரு நாய்க்குட்டியை கொண்டு வருவதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் இயக்கத்தில் மாற்றம் செய்ய முயற்சிக்கப்பட்டதாக The Sunday Leader நாளிதழ் செய்தி வெளியிட்டது.

அந்தச் செய்தியின்படி, முதலில் A340 வகை விமானம் இயக்கப்பட இருந்த நிலையில், A330 விமானமாக மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டதாக கூறப்பட்டது.</p><p> 

A330 விமானத்தை மட்டுமே இயக்கத் தகுதி பெற்றிருந்த விமானி கேப்டன் பிரவீன் விஜேசிங்க பயணத்தை மேற்கொள்ளும் வகையில் இந்த மாற்றம் பரிசீலிக்கப்பட்டதாகவும், இதனால் பல பயணிகளுக்கு இடமின்மை ஏற்பட்டு விமான நிறுவனத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
</p><p>
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் பெற The Sunday Leader ஆசிரியர் குழு கோட்டாபய ராஜபக்சவை தொலைபேசியில் தொடர்புகொண்டது.</p><p> அப்போது, தனது மனைவிக்காக நாய்க்குட்டி ஒன்று கொண்டு வரப்படுவதை அவர் மறுக்கவில்லை. 

அதற்கான சரக்குக் கட்டணத்தை தாமே செலுத்துவதாகவும், தனிப்பட்ட பொருட்களை விமான சரக்காக கொண்டு வருவதில் தவறு எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்ததாக செய்தியில் குறிப்பிடப்பட்டது.
</p><p>
ஆனால், விமானம் மாற்றப்பட்டதாக கூறப்படும் தகவலை அவர் நிராகரித்தார். இதுதொடர்பான கேள்விகளை செய்தியாளர் தொடர்ந்து எழுப்பியபோது, அவர் கடும் கோபமடைந்து செய்தி வெளியிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என்றும், நாளிதழுக்கும் செய்தியாளருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்ததாக அந்த நாளிதழ் தெரிவித்தது.</p><p></p><p>
</p><h2>கடுமையான வாக்குவாதம்</h2><p>செய்தியில் வெளியிடப்பட்ட விவரங்களின்படி, உரையாடல் முன்னேறியபோது இரு தரப்பினருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. செய்தியாளர், பொதுநலன் கருதி விளக்கம் பெறுவதற்காகவே தொடர்புகொண்டதாக கூறியபோதும், கோட்டாபய ராஜபக்ச ஊடகத்தின் நோக்கத்தை விமர்சித்ததுடன், செய்தி வெளியிடப்பட்டால் அதற்கு கடுமையான சட்ட மற்றும் தனிப்பட்ட விளைவுகள் ஏற்படும் என எச்சரித்ததாக தெரிவிக்கப்பட்டது.
</p><p>
பின்னர் நடைபெற்ற மற்றொரு தொலைபேசி உரையாடலிலும், விமானத்தை மாற்றுவதற்கான உத்தரவை தாம் வழங்கவில்லை என்றும், அத்தகைய முடிவு எடுக்கப்பட்டிருந்தால் அது தமக்குத் தெரியாமலேயே நடந்திருக்கலாம் என்றும் அவர் கூறியதாக The Sunday Leader செய்தி வெளியிட்டது. </p><p>

இருப்பினும், செய்தியாளரின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் மீண்டும் ஆவேசமாக நடந்துகொண்டதாகவும், ஊடகங்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும் அச்செய்தி குறிப்பிட்டது.
</p><p>
இதற்கிடையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன, விமான ஒதுக்கீடு மற்றும் விமான வகை மாற்றம் போன்ற முடிவுகள் பயணிகள் எண்ணிக்கை, செயற்பாட்டு தேவைகள் மற்றும் வணிகக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்படுவதாக விளக்கம் அளித்தார். </p><p>

நாய்க்குட்டி தொடர்பான குற்றச்சாட்டில் அவர் நேரடியாக கருத்து தெரிவிக்கவில்லை.

சம்பவத்தில் பெயர் குறிப்பிடப்பட்ட கேப்டன் பிரவீன் விஜேசிங்க, பயணத்தின் முதல் கட்டத்தை மட்டுமே இயக்க இருந்ததாகவும், A340 விமானத்தை இயக்கும் தகுதி தமக்கு இல்லை என்றும் தெரிவித்ததாக செய்தியில் குறிப்பிடப்பட்டது.
</p><p>
 மேலும், நாய்க்குட்டியை கொண்டு வருவது குறித்து முன்கூட்டியே தனக்குத் தகவல் இல்லை என்றும் அவர் கூறியதாக அச்செய்தி தெரிவித்தது.</p><p></p><h2>ஊடகங்கள் எதிர்கொள்ளும் அழுத்தம்</h2><p> இந்தச் சம்பவம் அப்போது அரசியல் அதிகாரத்தின் பயன்பாடு, அரச நிறுவனங்களில் அரசியல் செல்வாக்கு, அரச வளங்களின் பயன்பாடு மற்றும் ஊடகச் சுதந்திரம் குறித்து இலங்கை முழுவதும் தீவிரமான விவாதங்களை ஏற்படுத்தியது. </p><p>

குறிப்பாக, அதிகாரத்தில் உள்ளவர்களைப் பற்றிய செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்தும் இந்த விவகாரம் பரவலாக பேசப்பட்டது.
</p><p>
இந்தத் தொலைபேசி உரையாடல் 2012 ஜூலை 5ஆம் திகதி நடைபெற்றது. இதில் சில இடங்களில் ஆபாச சொற்கள் பயன்படுத்தப்பட்டதாக அந்த பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p><b>

FJ</b>: ராஜபக்ச அவர்களே! இதைப் பற்றி உங்களுக்கு தெரியுமா தெரியாதா என எனக்குத் தெரியவில்லை. ஆனால், இந்த வெள்ளிக்கிழமை சூரிச்சுக்கு செல்லவுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், உங்களுக்காக ஒரு நாய்க்குட்டியை கொண்டு வரப் போகிறது என்று எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
</p><p><b>
GR</b>: அதில் என்ன தவறு? அந்த நாளுக்குத் திட்டமிடப்பட்ட விமானம்தானே அது. ஆம், அவர்கள் ஒரு நாய்க்குட்டியை கொண்டு வருகிறார்கள். அது என் மனைவிக்காக. அதில் எந்தத் தவறும் இல்லை. நாயல்ல, யானையாயிருந்தாலும் அதை கொண்டு வர எனக்கு முழு உரிமை இருக்கிறது. அதற்கான செலவை நானே செலுத்துகிறேன். என்ன வேண்டுமானாலும் கொண்டு வர எனக்கு உரிமை உண்டு. இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் அவர்கள் எனக்கு ஒரு நாய்க்குட்டியை கொண்டு வந்திருக்கிறார்கள். இதில் என்ன தவறு? விமானத்திற்கான செலவை நானே கொடுத்துள்ளேன். எனக்கு முழு உரிமை இருக்கிறது.</p><p>

<b>FJ</b>: உண்மையில், அது பிரச்சினையல்ல. ஆனால், கேப்டன் பிரவீன் விஜேசிங்க தானே சூரிச்சுக்குப் பறந்து அந்த நாய்க்குட்டியை கொண்டு வர முன்வந்துள்ளார் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
</p><p><b>
GR</b>: ஆம். அதில் என்ன? அவர் என் நண்பர். முன்னாள் விமானப்படை அதிகாரிகள் பலர் இப்போது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் பணியாற்றுகிறார்கள். அவர்களில் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எனக்குப் பிடித்த விஷயங்களைச் செய்கிறார்கள். அதில் என்ன தவறு?
</p><p>
<b>FJ</b>: ஆனால், A340 விமானத்தை இயக்குவதற்கு இந்த விமானிக்கு தகுதி இல்லை. அதனால், அவர் இயக்கக்கூடிய A330 விமானத்தை மாற்றிப் பயன்படுத்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மீது ஆரம்பத்தில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
</p><p><b>
GR</b>: இல்லை. விமானம் மாற்றப்படவில்லை.</p><p>

<b>FJ</b>: அது மாற்றப்படாததற்குக் காரணம், விமானிகள் சங்கத் தலைவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுதான்.</p><p></p><h2>மோசமான ஆபாச வார்த்தை</h2><p><b> GR</b>: யாரும் எதிர்க்கவில்லை. இதைப் பற்றி ஒரு அவதூறு வார்த்தையாவது நீங்கள் எழுதினால், நான் உங்கள்மீது வழக்கு தொடருவேன். எந்த நீதிமன்றத்துக்கும் நான் பயப்பட மாட்டேன். ஏற்கனவே உங்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளேன். மீண்டும் தொடருவேன். அது என் உரிமை.
</p><p>
<b>FJ</b>: ஆம். அதேபோல, ஒரு பத்திரிகையாளராக, உங்களைச் சார்ந்த இந்த விவகாரத்தில் உங்கள் தரப்பையும் அறிந்து கொள்ள எனக்கும் உரிமை இருக்கிறது.
</p><p><b>
GR</b>: அதைப் போய் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸிடம் கேளுங்கள்.<b>
</b></p><p><b>
FJ</b>: நாங்கள் ஏற்கனவே அவர்களிடம் பேசியுள்ளோம். எப்படியாயினும், விமானத்தின் அழுத்த அமைப்பைப் பற்றி தெரிந்த எந்த விமானியும் ஒரு நாய்க்குட்டியை கொண்டு வர முடியும். ஆனால், இந்த விவகாரத்தில் பிரச்சினை என்னவென்றால், அந்த விமானத்தை இயக்கத் தகுதியில்லாத கேப்டன் பிரவீன் விஜேசிங்கவே அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
</p><p><b>
GR</b>: அதில் என்ன? அவர் இயக்கியிருந்தால் என்ன தவறு? நான் சொல்கிறேன்... இதைப் பற்றி ஒரு அவதூறு வார்த்தையாவது எழுதியிருந்தால், உங்கள் [ஆபாசச் சொல்] பத்திரிகைக்கு எதிராக நான் வழக்கு தொடருவேன். மிக் (MiG) ஒப்பந்தம் பற்றியும் நீங்கள் இப்படித்தான் எழுதினீர்கள். எதையும் சரிபார்க்காமல், யாரோ சொன்னார்கள் என்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுதினீர்கள்.</p><p>

<b>FJ</b>: அதனால்தான் நான் உங்களைத் தொடர்புகொண்டேன். யாராவது சொன்னதற்காக நான் எழுத மாட்டேன். உங்கள் தரப்பையும் கேட்கவே உங்களை அழைத்தேன்.
</p><p><b>
GR</b>: நீ எழுதிப் பார். ஒரு அவதூறு வார்த்தையாவது எழுது. நான் வழக்கு தொடருவேன். எழுதியவனுக்கும், உங்கள் [ஆபாசச் சொல்] பத்திரிகைக்கும் எதிராக வழக்கு தொடருவேன்.
</p><p>
<b>FJ</b>: ராஜபக்ச அவர்களே, நீங்கள் என்னை மிரட்டுகிறீர்களா?
</p><p><b>
GR</b>: ஆம், மிரட்டுகிறேன். நான் சொன்னதை ஒரு வார்த்தையாவது எழுது. ஒரு [ஆபாசச் சொல்] வார்த்தையாவது எழுது. பிறகு பார்ப்போம்.

<b>FJ</b>: நான் ஒரு பத்திரிகையாளராக உங்களிடம் இந்த விஷயத்தைப் பற்றி கேட்கத்தான் அழைத்தேன். ஆனால், நீங்கள் மிகவும் மோசமான ஆபாச வார்த்தைகளால் திட்டினீர்கள்.

(பின்னர், ஜூலை 6 அன்று, இந்த விவகாரத்தைப் பற்றிய தகவல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு தெரிவிக்கப்பட்டதால், அது சரிசெய்யப்பட்டிருக்கிறது என்பதால், செய்தியை வெளியிடப் போவதில்லை என்பதை தெரிவிக்க மீண்டும் தொடர்பு கொண்டார்.)
</p><p>
<b>FJ</b>: ராஜபக்ச அவர்களே, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் ஒரு அதிகாரி என்னிடம், கேப்டன் பிரவீன் விஜேசிங்க காரணமாக விமானம் மாற்றப்பட்டிருந்தால் 56 பயணிகள் பயணம் செய்ய முடியாமல் போயிருப்பார்கள் என்றும், அது உங்களுக்குத் தெரியவில்லை என்றும் கூறினார்.</p><p></p><p>
</p><h2>குப்பைத் தின்னும் பெண் பன்றி</h2><p><b> GR</b>: நேற்று உன்னிடம் என்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று சொன்னேனே? இந்த முட்டாள் விமானிகள் இதற்காக விமானங்களை மாற்றப் போகிறார்களானால், அது என் தவறு அல்ல. நான் இதை முறையாகச் செய்ய முயன்றேன். ஆனால், இந்த விமானிகளுக்குள் பிரச்சினை இருக்கிறது. உங்களைப் போன்ற மோசமான பத்திரிகையாளர்கள் அவர்களுக்குச் செவி சாய்க்கிறார்கள். முட்டாள்கள்! அது என் தவறு அல்ல.</p><p>

<b>FJ</b>: உண்மைதான். ஆனால், முதலில் அந்த முடிவு எடுக்கப்பட்டதும், பின்னர் மூத்த விமானிகள் நிர்வாகத்தின் மீது அழுத்தம் கொடுத்ததால் அது மாற்றப்பட்டது என்பதே உண்மை.
</p><p>
GR: அது தவறு. நான் விசாரித்தேன். அப்படிப்பட்ட முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.</p><p>

<b>FJ</b>: அது உண்மையில் நடந்தது. எப்படியாயினும், நீங்கள் என்னை மிரட்டியதால் அல்ல; நீங்கள் சரியான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால், இந்த விவகாரத்தை வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்தேன்.
</p><p><b>
GR</b>: ஆம், நான் மிரட்டினேன். உங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் குப்பைத் தின்னும் பன்றிகள். மிகவும் மோசமானவர்கள்! மிகவும் மோசமானவர்கள்! மிகவும் மோசமானவர்கள்! இந்த நாட்டில் 90% மக்கள் உங்களை வெறுக்கிறார்கள். உங்களை அருவருக்கிறார்கள். நீங்கள் என் நிகழ்ச்சிக்கு வாருங்கள். அங்கே உங்களை எல்லோருக்கும் காட்டி, "இவர் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர்" என்று சொல்வேன். அப்போது 90% பேர் உங்களை வெறுப்பார்கள்.
</p><p>
<b>FJ</b>: அப்படி இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.
</p><p><b>
GR</b>: நீ அப்படி நினைக்கவில்லை. அதுதான் உன் அகந்தை. நீ மிகவும் மோசமான பத்திரிகையாளர். [ஆபாசச் சொல்]. குப்பைத் தின்னும் பெண் பன்றி. நான் நீதிமன்றத்துக்குப் போவேன். மிக் ஒப்பந்தம் பற்றி நீங்கள் எழுதியதற்காக ஏற்கனவே கொடுத்துள்ள வழக்கை நான் வாபஸ் பெற மாட்டேன்.</p><p>

<b>FJ</b>: அதற்கு எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அதைப் பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது.
</p><p><b>
GR</b>: இருந்தாலும் உன்னை சிறையில் போடுவேன். நீ நாட்டைப் பிளக்க முயற்சிப்பவள். உண்மையான பௌத்தர்களை பிரிப்பவள். மிகவும் மோசமான பத்திரிகையாளர். தூதுவர்கள், அரசு சாரா அமைப்புகள், பாக்கியசோதி போன்றவர்கள் உனக்கு பணம் தருகிறார்கள்.</p><p>

<b>FJ</b>: அப்படியானால் அது எவ்வளவு நல்ல விஷயம்!
</p><p><b>
GR</b>: நீ குப்பைத் தின்னும் பெண் பன்றி. [ஆபாசச் சொல்] குப்பைத் தின்னும் பத்திரிகையாளர்.
</p><p>
<b>FJ</b>: ராஜபக்ச அவர்களே, நீங்கள் சொல்வதை நீங்களே தெளிவாகக் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
</p><p><b>
GR</b>: மக்கள் உன்னை கொன்று விடுவார்கள். அவர்கள் உன்னை வெறுக்கிறார்கள். அவர்கள் உன்னை கொன்று விடுவார்கள்.</p><p>

<b>FJ</b>: அது உங்கள் உத்தரவின்படியா?
</p><p><b>
GR</b>: என்ன? இல்லை. என்னுடைய உத்தரவு அல்ல. ஆனால், உன்னைப் போன்ற கெட்டுப்போன [ஆபாசச் சொல்] பத்திரிகையாளரை அவர்கள் கொன்று விடுவார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T00:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள மிகப் பாரியளவு பணம்.. வெளியான முக்கிய அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-tax-revenue-year-2-71-trillion-1785455353"></link>
            <id>https://tamilwin.com/article/government-tax-revenue-year-2-71-trillion-1785455353</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வருவாய் மற்றும் மானியங்கள் 27 வீதம் அதிகரித்து 2.956 டிரில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.&amp;nbsp;நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வருவாய் மற்றும் மானியங்கள் 27 வீதம் அதிகரித்து 2.956 டிரில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.&nbsp;</p><p>நிதி அமைச்சின் நிதிக்கொள்கை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள பொது நிதி ஆய்வறிக்கையின்படி, இக்காலப்பகுதியில் வரவு - செலவுத் திட்டப் பற்றாக்குறைக்கு பதிலாக 9.5 பில்லியன் ரூபா உபரி பதிவாகியுள்ளது.

</p><p> </p><p>2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 405.6 பில்லியன் ரூபா வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை பதிவாகியிருந்தது.</p><p> இருப்பினும், இம்முறை உபரி பதிவாகியமைக்கு அரச வருமானம் 27 வீதம் அதிகரித்தமையும், அரச செலவினங்கள் சீரமைக்கப்பட்டமையுமே முக்கிய காரணம் என அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><h2>பற்றாக்குறை&nbsp;</h2><p>

இதற்கிடையில், 2026ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வரி வருவாய் 2,710.6 பில்லியன் ரூபாவாக (2.71 டிரில்லியன் ரூபா) அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4569de60-2e2e-4638-ab41-70c5e15bca3e/26-6a6be695e552a.webp' /></p><p> </p><p>இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 25.9 வீதம் அதிகரிப்பாகும். இதன்படி, ஆண்டின் மொத்த வரி வருவாய் இலக்கான 4.91 டிரில்லியன் ரூபாவில் 55.2 சதவீதத்தை முதல் ஆறு மாதங்களிலேயே அரசாங்கம் எட்டியுள்ளது.</p><p> வரி வருவாயில் அதிக பங்களிப்பை இலங்கை சுங்கம் வழங்கியுள்ளதுடன், அது 1,290 பில்லியன் ரூபாவைச் சேகரித்துள்ளது. இது மொத்த வரி வருவாயில் சுமார் 48 சதவீதமாகும். இரண்டாவது அதிகபட்ச பங்களிப்பை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வழங்கியுள்ளதுடன், அது 1,248 பில்லியன் ரூபா வருவாயை ஈட்டியுள்ளது.</p><p>இது மொத்த வரி வருவாயில் 46 சதவீதமாகும். தவிர, மதுவரித் திணைக்களம் 138 பில்லியன் ரூபா வருவாயை ஈட்டியுள்ளதுடன், ஏனைய வருவாய் வழிகளிலிருந்து 35 பில்லியன் ரூபா சேகரிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மொத்த வரி வருவாய்&nbsp;</h2><p>
</p><p>
சுங்க வருவாயில் பிரதான வருவாய் மூலமாக இறக்குமதிகளின் மீது விதிக்கப்பட்ட பெறமதி சேர் வரி (VAT) அமைந்துள்ளதுடன், இதன் மூலம் இந்த 6 மாதங்களில் 443.7 பில்லியன் ரூபா வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 354 பில்லியன் ரூபாவுடன் ஒப்பிடுகையில் 25 வீதம் அதிகரிப்பாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22369a50-89d5-4921-87ae-4a08caf94fc9/26-6a6be696edbe0.webp' /></p><p> </p><p>மோட்டார் வாகன வரியிலிருந்தான வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளதுடன், அது 129.1 பில்லியன் ரூபாவிலிருந்து 106.5 வீதம் அதிகரித்து 266.4 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. </p><p>சுங்கத்தால் சேகரிக்கப்பட்ட மொத்த வரி வருவாயில் 63 சதவீதம் மோட்டார் வாகன இறக்குமதி வரியிலிருந்தே பெறப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால் சேகரிக்கப்பட்ட வருவாயில் வருமான வரி முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதுடன், அது 568.4 பில்லியன் ரூபா வருவாயை ஈட்டியுள்ளது.</p><p></p><h2>இலங்கை பொருளாதாரம்</h2><p> </p><p>இது முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 16 சதவீத அதிகரிப்பாகும். கார்ப்பரேட் வருமான வரி 26 சதவீதத்தாலும், தனிநபர் வருமான வரி 15 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5e04045-67ff-4b0f-8870-b61d00b53314/26-6a6be697a5c70.webp' /></p><p> மேலும், உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகளில் வசூலிக்கப்படும் பெறமதி சேர் வரி (VAT) வருவாய் 26 சதவீதமும், சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி 15 சதவீதமும் அதிகரித்துள்ளன. </p><p>அதேவேளை, மதுபானங்கள் மீது மதுவரித் திணைக்களத்தினால் சேகரிக்கப்பட்ட மதுவரி 27 சதவீதம் அதிகரித்து 137.5 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.

வரி வருவாய்க்கு மேலதிகமாக, வரி அல்லாத வருவாயும் 43.6 சதவீதம் அதிகரித்து 243.6 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. </p><p>இருப்பினும், அரசாங்கத்தின் மொத்த செலவினம் 7.9 வீதம் அதிகரித்து சுமார் 2.95 டிரில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளதுடன், மீண்டெழுஞ் செலவினம் 6.5 வீதம் மற்றும் மூலதனச் செலவினம் 23.6 வீதம் அதிகரித்துள்ளன. </p><p>இதனிடையே, வட்டி செலுத்துகைகள் 2 வீதம் குறைந்து 1,234.6 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது. 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பதிவான 4.7 சதவீத வளர்ச்சியை விட, 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை பொருளாதாரம் 5.1 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக பொது நிதியியல் ஆய்வறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.</p>]]></content>
            <updated>2026-07-31T00:10:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு ஆயுத உதவி! முற்றாக மறுத்தது சீனா - ட்ரம்ப்புக்கு ஆறுதல் செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/china-denied-reports-providing-weapons-to-iran-1785445469"></link>
            <id>https://ibctamil.com/article/china-denied-reports-providing-weapons-to-iran-1785445469</id>
            <summary type="text">
சீனா ஈரானுக்கு 300 முதல் 400 தோள்மீது வைத்து இயக்கும் வான் பாதுகாப்பு ஏவுகணை செலுத்தும் கருவிகளை வழங்கவுள்ளதாக வெளியான செய்திகளை சீனாவின் வெளியுறவு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
</p><p>சீனா ஈரானுக்கு 300 முதல் 400 தோள்மீது வைத்து இயக்கும் வான் பாதுகாப்பு ஏவுகணை செலுத்தும் கருவிகளை வழங்கவுள்ளதாக வெளியான செய்திகளை சீனாவின் வெளியுறவு அமைச்சு முற்றாக மறுத்துள்ளது. </p><p>இந்த ஆயுதங்களின் மதிப்பு 60 முதல் 70 மில்லியன் டொலர் வரை இருக்கும் என சர்வதேச ஊடகங்கள் அண்மையில் தெரிவித்திருந்தன. </p><p>இந்நிலையில், இந்த செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை மற்றும் ஆதாரமற்றவை என்றும், அமைதியை ஏற்படுத்தவும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரவுமே சீனா எப்போதும் பாடுபட்டு வருகிறது என்றும் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் சின்ஹுவா கூறியுள்ளார்.</p><p></p><h2>ட்ரம்ப் அதிருப்தி</h2><p> </p><p>சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கினால் அது தமக்கு பெருத்த ஏமாற்றமளிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று தெரிவித்திருந்ததன் பின்னணியில், சீனாவின் மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57dd5435-341d-4829-ae10-b82e70867545/26-6a6be6078eb1f.webp' /></p><p> </p><p>ஈரான் தனது முக்கிய வெளிநாட்டுப் பங்காளிகளின் உதவியுடன் சில ஆயுத அமைப்புகளை மீண்டும் நிரப்ப முயன்று வரும் வேளையில், அமெரிக்க உளவுத்துறையினால் குறித்த ஆயுதங்கள் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டிருந்தாக சில அமெரிக்க ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T00:02:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியை வாட்டிய வரலாறு காணாத வெப்பம்: 10000ஐ தொட்ட உயிரிழப்பு எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-reach-10000-heat-related-deaths-1785447872"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-reach-10000-heat-related-deaths-1785447872</id>
            <summary type="text">ஜேர்மனியில் வெப்ப அலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000-ஐ தொட்டுள்ளது. 10,000-ஐ தொட்ட உயிரிழப்பு
ஜேர்மனியில் இந்த ஆண்டு பதிவான மிகத் தீவிரமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியில் வெப்ப அலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000-ஐ தொட்டுள்ளது.</p><h2> 10,000-ஐ தொட்ட உயிரிழப்பு</h2><p>
ஜேர்மனியில் இந்த ஆண்டு பதிவான மிகத் தீவிரமான வெப்ப அலைகள் காரணமாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.</p><p> ராபர்ட் கோக் இன்ஸ்டிடியூட் (RKI) என்ற நிறுவனம் வெளியிட்ட தரவுகளில், இந்த ஆண்டு அதிகமான வெப்பத்தில்&nbsp; பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட 10000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faa39c3c-4ef1-412d-a9a3-91a41fde6693/26-6a6bc5c27bd6a.webp' /></p><p>கோடை காலம் நிறைவடைவதற்கு முன்பே பதிவாகியுள்ள இந்த எண்ணிக்கை கடந்த கால உச்சபட்ச&nbsp; உயிரிழப்பு எண்ணிக்கையை விட அதிகமாகும்.</p><p></p><p> கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை 19ம் திகதி வரை மட்டும் கிட்டத்தட்ட 9800 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.</p><p> ஜூன் மாதத்தில் மட்டும் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5000க்கும் அதிகமாகும்.</p><p> ஜூன் காலக்கட்டத்தில் ஜேர்மனியின் வெப்ப அலை சில பகுதிகளில் 42°C (107.6°F) வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>ஏப்ரல் மாதம் முதல் ஜூலை 19ம் திகதி வரை பதிவான இந்த எண்ணிக்கை கடந்த 2018ம் ஆண்டு பதிவான 9000 என்ற அதிகபட்ச உயிரிழப்புகளின் எண்ணிக்கையை முந்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cb16ecc-7a5b-47e2-a8f7-9084b06b4bec/26-6a6bc5c330b9c.webp' /></p><p> ஜூன் 22 முதல் 28ம் திகதி வரை பதிவான உயிரிழப்புகள் எண்ணிக்கை கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான எண்ணிக்கையை விட 32% அதிகமாகும்.</p><p> ஜூலை 19 க்கு பிந்தைய வெப்ப நிலைகள் மற்றும் உயிரிழப்புகள் இன்னும் இதில் சேர்க்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p> ஜேர்மனியில் பதிவான தீவிரமான வெப்ப அலையில் உயிரிழந்தவர்கள் பெரும்பாலானோர் முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-30T23:52:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயினுக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான மொராக்கோ நாட்டினர்: சியூட்டா எல்லையில் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/morocco-migrants-cross-ceuta-border-viral-video-1785455419"></link>
            <id>https://news.lankasri.com/article/morocco-migrants-cross-ceuta-border-viral-video-1785455419</id>
            <summary type="text">மொராக்கோவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஸ்பெயின் எல்லைப்புற நகரான சியூட்டாவிற்குள் நுழைந்து இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.ஸ்பெயினுக்குள் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொராக்கோவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஸ்பெயின் எல்லைப்புற நகரான சியூட்டாவிற்குள் நுழைந்து இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>ஸ்பெயினுக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான மொராக்கோ நாட்டினர்</h2><p>வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சிறிய ஆதிக்கப் பகுதியான சியூட்டாவின்(Ceuta) எல்லைப் பகுதிக்குள் வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தவர்கள் அத்துமீறி நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a12c048-670a-465d-8f83-7b0a2cdbbd9d/26-6a6be33d03b07.webp' /></p><p> ஆயிரக்கணக்கானோரின் அத்துமீறிய நுழைந்ததை தொடர்ந்து எல்லை பாதுகாப்பு முற்றிலும் சிதைப்பட்டு இருப்பதாகவும், உடனே அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு எல்லை பாதுகாப்பிற்கு இராணுவத்தை அனுப்ப வேண்டும் எனவும் உள்ளூர் அதிகாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p> அத்துமீறி நுழையும் ஆயிரக்கணக்கானோர்(பெரும்பாலானோர் மொராக்கோவை சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை சேர்ந்தவர்கள்) இளைஞர், பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் நுழையும் குடும்பத்தினர் ஆவார்க்ள்.</p><p></p><p> தாராஜல் எல்லை வழியாகவும், கடற்கரை வழியாகவும் சியூட்டாவிற்குள் நுழையும் இந்த மக்களில் சிலர் “விவா எஸ்பானா”(Viva España!) என்ற கோஷங்களை எழுப்பியும், சாலைகளில் நடனமாடியும் வரும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><p> எல்லை காவலில் இருந்த அதிகாரிகள் நிலைமையை மிகவும் மோசமானதாக விவரித்துள்ளனர்.</p><p>இதற்கு முந்தைய புதன்கிழமை அன்று, ஆபத்தான முறையில் பலர் கடலில் நீந்தி சென்று ஸ்பெயின் நாட்டிற்கு நுழைய முயன்ற போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 3 பேர் வரை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.</p><p><iframe width="988" height="556" src="https://www.youtube.com/embed/hne9e6SKCl4" title="Migrants storm Ceuta to get into Europe | DW News" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><h2> மொராக்கோ மெளனம்</h2><p>இந்த சம்பவம் தொடர்பாக மொராக்கோ அதிகாரிகள் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.</p><p>அதே நேரத்தில் இந்த நெருக்கடிக்கு பதிலளித்த ஸ்பெயின் உள்துறை அமைச்சகம், குடிமக்களும் எல்லை பாதுகாப்பும் முதன்மையானவை என்று உறுதிப்படுத்தினார்.</p><p> ஆனால் குடி பெயர்வு தொடர்பான பிரச்சனைகளுக்கு எல்லாம் தேசிய அளவிலான அவசரநிலை பிரகடனம் செய்ய முடியாது என மறுத்துவிட்டார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T23:50:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வல்வெட்டித்துறை விவசாய அமைப்புகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gajendrakumar-meets-valvettithurai-farmers-1785453792"></link>
            <id>https://tamilwin.com/article/gajendrakumar-meets-valvettithurai-farmers-1785453792</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை, கொம்மந்தறை சனசமூக நிலையத்தில்
வல்வெட்டித்துறை விவசாய அமைப்புகளுக்கும் கஜேந்திரகுமார்
பொன்னம்பலத்திற்கும் இடையில் சந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை, கொம்மந்தறை சனசமூக நிலையத்தில்
வல்வெட்டித்துறை விவசாய அமைப்புகளுக்கும் கஜேந்திரகுமார்
பொன்னம்பலத்திற்கும் இடையில் சந்திப்பபொன்று இடம்பெற்றுள்ளது.
</p><p>இதன்போது விவசாயிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள்
தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><p></p><h2>மக்களின் கோரிக்கை</h2><p>
</p><p>

அத்துடன்&nbsp; புகையிலைச் செய்கை தடையிலிருந்து முழுமையாக மீள 3 - 4 வருட கால அவகாசம்
வழங்கப்பட வேண்டும் என்றும்&nbsp; புகையிலைக்குப் பதிலாகச் சிறந்த மாற்றுப் பயிர் திட்டம்
அறிமுகப்படுத்தப்பட வேண்டும் எனவும் மக்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76a4859d-d3f5-4635-ba16-2416fc467322/26-6a6bdda25b16d.webp' /></p><p>மேலும் மாற்றுப் பயிராகச் சின்ன வெங்காயத்தைப் பயிரிட்டு சந்தைக்குக் கொண்டுவரும்
வேளையில், அரசாங்கம் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதால் ஏற்படும்
நஷ்டத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.</p><p>இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் விவசாயிகளின் பிரச்சினையை எதிர்வரும்
நாடாளுமன்ற அமர்வில் முன்வைக்கவுள்ளதாகவும், விசேட பிரேரணை ஒன்றையும்
கொண்டுவர உள்ளதாகவும் உறுதியளித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T23:49:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மறைந்த மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனுக்கு சுவிஸ் தமிழ் ஊடக மையம் இரங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/passing-away-of-journalist-arumugam-sabeswaran-1785455041"></link>
            <id>https://ibctamil.com/article/passing-away-of-journalist-arumugam-sabeswaran-1785455041</id>
            <summary type="text">ஊடகவியலாளரும் கல்வியாளருமான ஆறுமுகம் சபேஸ்வரனின் மறைவு செய்தி மிகுந்த துயரத்தை அளிப்பதாக 
சுவிஸ் தமிழ் ஊடக மையம் தெரிவித்துள்ளது.

அவரின் மறைவு தொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊடகவியலாளரும் கல்வியாளருமான ஆறுமுகம் சபேஸ்வரனின் மறைவு செய்தி மிகுந்த துயரத்தை அளிப்பதாக 
சுவிஸ் தமிழ் ஊடக மையம் தெரிவித்துள்ளது.
</p><p>
அவரின் மறைவு தொடர்பில் குறித்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள இரங்கள் செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதில் மேலும், “யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் விரிவுரையாளரும், யாழ். ஊடக அமையத்தின் முன்னாள் தலைவருமான சபேஸ்வரன் கல்வித் துறையில் மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கும், நல்ல பண்புகளை உருவாக்குவதற்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதுடன், ஊடகத் துறையிலும் உண்மை, நேர்மை மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் செய்தியுலகிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கினார்.</p><p></p><h2>ஈடு செய்ய முடியாத பேரிழப்பு</h2><p>
</p><p>
அவரது கல்விச் சேவையும், எழுத்துப் பணியும், சமூக அக்கறையும் பலருக்கும் வழிகாட்டியாக அமைந்துள்ளன.

அன்னாரின் மறைவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமன்றி, கல்வித் துறைக்கும், ஊடக உலகிற்கும், அவரை அறிந்த அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7fb2ca7-6a3d-4127-90eb-7119805b1758/26-6a6be2ebe234e.webp' /></p><p>
</p><p>
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், மாணவர்கள் மற்றும் ஊடகத் துறையைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் மனமார்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.</p><p>

இறைவன் அன்னாரின் ஆன்மாவிற்கு சாந்தியையும், பிரிவுத் துயரில் வாடும் அனைவருக்கும் இந்த இழப்பைத் தாங்கும் மனவலிமையையும் அருள்வானாக.
ஆழ்ந்த இரங்கலுடன் சுவிஸ் தமிழ் ஊடக மையம்.” எனக் கூறப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-07-30T23:49:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் புதிய கட்டுப்பாடுகள்: நாய் கழிவுகளை சுத்தம் செய்யாவிட்டால் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-city-introduces-new-rules-to-dog-owners-1785451847"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-city-introduces-new-rules-to-dog-owners-1785451847</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தின் கியாஸ்ஸோ(Chiasso) நகரில் நாய் வளர்ப்போருக்கான புதிய கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நாய் கழிவுகளை சுத்தம் செய்ய உத்தரவுபொது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தின் கியாஸ்ஸோ(Chiasso) நகரில் நாய் வளர்ப்போருக்கான புதிய கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.</p><h2> நாய் கழிவுகளை சுத்தம் செய்ய உத்தரவு</h2><p>பொது இடங்கள் மற்றும் தெருக்களில் நாய்களின் கழிவு மற்றும் சிறுநீரால் ஏற்படும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் சுவிட்சர்லாந்தின் கியாஸ்ஸோ நகரம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.</p><p> அதன்படி நாய் வளர்ப்பாளர்கள் இனி தங்கள் நாய்களை பொது இடங்களுக்கோ அல்லது தெருக்களுக்கோ அழைத்து செல்லும் போது கட்டாயம் கழிவு பையும், தண்ணீர் பாட்டிலும் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a48725c3-bde2-42f8-9dbc-7d1f7b0cf0c3/26-6a6bd548b307b.webp' /></p><p>பொது இடங்களில் நாய்கள் சிறுநீர் கழித்தால் அதனை தண்ணீர் கொண்டு நீர்த்து போக செய்ய வேண்டும், மேலும் கழிவுகளை அதற்கான பைகள் மூலம் அப்புறப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> தொடர் வறட்சி மற்றும் வெப்பம் காரணமாக நகரின் வீதிகளில் அதிக துர்நாற்றம் வீசுவதாக புகார்கள் எழுந்ததை தொடர்ந்து இத்தகைய முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக நகராட்சி மேயர் புருனோ அரிகோனி காரணத்தை விளக்கியுள்ளார்,</p><p></p><h2>மீறியவர்களுக்கு அபராதம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef97ed14-ddd1-4f47-af14-93c60d84caeb/26-6a6bd5496456f.webp' /></p><p>இந்த புதிய உத்தரவை பின்பற்ற தவறியவர்களுக்கு முதலில் எச்சரிக்கை கொடுக்கப்படும்.</p><p> பின்னர் மீண்டும் இந்த தவறினை செய்தால் அவர்களுக்கு 100 சுவிஸ் பிராங்க் அபராதமாக விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இத்தாலி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T22:51:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷார்ட் உடையில் பிரக்யா ஜெய்ஸ்வால் ஹாட் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/pragya-jaiswal-dazzling-in-short-dress-1785451781"></link>
            <id>https://cineulagam.com/article/pragya-jaiswal-dazzling-in-short-dress-1785451781</id>
            <summary type="text">பிரக்யா ஜெய்ஸ்வால் ஹாட் உடையில் கிளாமர் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.

தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகையாக இருக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரக்யா ஜெய்ஸ்வால் ஹாட் உடையில் கிளாமர் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.</p><p>

தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகையாக இருக்கும் அவர் தொடர்ந்து நிகழ்ச்சிகளுக்கு உச்சகட்ட ஹாட் உடையில் வந்து நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
</p><p>
தற்போது ஷார்ட் உடையில் பிரக்யா ஜெய்ஸ்வால் கவர்ச்சி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இதோ பாருங்க.</p>]]></content>
            <updated>2026-07-30T22:49:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றுச் சிறப்புமிக்க மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/festival-of-historic-mamangeswarar-temple-1785451746"></link>
            <id>https://tamilwin.com/article/festival-of-historic-mamangeswarar-temple-1785451746</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த
மஹோற்சவப் பெருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி ஆரம்பமாகி, 12 ஆம்
திக...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த
மஹோற்சவப் பெருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி ஆரம்பமாகி, 12 ஆம்
திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் இன்றைய தினம் மட்டக்களப்பு
மாநகரசபையினால் மாபெரும் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
</p><p>இந்த மஹோற்சவக் காலத்தை ஒட்டி, ஆலயத்திற்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான
அடியார்களின் நலன் கருதியும், அவர்களது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும்
முகமாகவும் மட்டக்களப்பு மாநகர சபை பல்வேறு விசேட ஏற்பாடுகளை முன்னெடுத்து
வருகின்றது.
</p><p>இதன் கீழ் இன்றைய தினம் மாநகரசபையின் உத்தியோகத்தர்கள்,ஊழியர்களின்
பங்குபற்றுதலுடன் மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் இந்த
சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
</p><p>இந்த சிரமதான பணியில் மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன் மற்றும் மாநகரசபை
உறுப்பினர்கள்,உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
</p><p>ஆலய நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க, சுவாமி எழுந்தருளி
தீர்த்தமாடுவதற்காக தீர்த்தக்குளத்திற்குச் செல்லும் வீதி மிகவும்
குறுகியதாகக் காணப்பட்டமையால், அதனை அகலமாக்கிப் புனரமைக்கும் பணிகள் மாநகர
சபையினால் பொறுப்பேற்கப்பட்டு, தற்போது அதன் இறுதிக்கட்டப் பணிகள் மிகத்
தீவிரமாக நடைபெற்று வருகின்ற அதேநேரம் இன்று காலை மாபெரும் சிரமதான பணிகள்
முன்னெடுக்கப்பட்டன.</p><p>
தற்போது நாட்டில் பரவி வரும் டெங்கு நோயின் தீவிரம் மட்டக்களப்பு
மாவட்டத்திலும் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.
இதனைக் கருத்திற் கொண்டு, ஆலய வளாகத்தில் அடியார்களுக்கு டெங்குத் தொற்று
ஏற்படாமல் தடுப்பதற்கான விசேட தூய்மைப்படுத்தல் நடவடிக்கைகள் இன்று
ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியின் தொழில்நுட்ப ஆலோசனைகளுக்கு அமைய,
இந்த ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் முதற்கட்டமாக
மாமாங்கேஸ்வரர் ஆலய வளாகத்தில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றுதல், நீர்
தேங்கி டெங்கு வீரியமடையக்கூடிய குழிகள் மற்றும் கிடங்குகளை மூடிப்
பராமரித்தல் போன்ற துப்புரவுப் பணிகள் மாநகர சபையின் அனைத்து
உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் தற்பொழுது முழு வீச்சில் நடைபெற்று
வருகின்றன.</p><p>
இது தவிர, மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட 20 வட்டாரங்களிலும் நிலவும்
டெங்கு அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சுகாதாரப் பிரிவினரால்
தொடர்ச்சியான டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் வாராந்தம் வட்டாரங்கள் தோறும்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-30T22:49:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக் பாஸ் 10 வரும் பிரபல சீரியல் நடிகை.. யார் பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/serial-actress-to-enter-bigg-boss-10-tamil-1785451598"></link>
            <id>https://cineulagam.com/article/serial-actress-to-enter-bigg-boss-10-tamil-1785451598</id>
            <summary type="text">பிக் பாஸ் நிகழ்ச்சி விரைவில் தமிழில் தொடங்கஇருக்கிறது. அதில் போட்டியாளராக வர போவது யார் என தற்போதே பல தகவல்கள் வர தொடங்கி விட்டது.சீரியல் நடிகை ஜனனி அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக் பாஸ் நிகழ்ச்சி விரைவில் தமிழில் தொடங்கஇருக்கிறது. அதில் போட்டியாளராக வர போவது யார் என தற்போதே பல தகவல்கள் வர தொடங்கி விட்டது.</p><p>சீரியல் நடிகை ஜனனி அசோக் பிக் பாஸ் வர பேச்சுவார்த்தையில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5ef989f-ee3c-444b-802b-5eb00607bc86/26-6a6bd916dc582.webp' /></p><h2>சென்சேஷன் நடிகை
</h2><p>சமீப காலமாக ஜனனி அசோக் இணையத்தில் பிரபலம் ஆகி வருகிறார். அவரது கவர்ச்சி புகைப்படங்கள் தான் அதற்கு காரணம்.</p><p>

மேலும் இன்ஸ்டாவில் subscriptionல் பல லட்சம் ரூபாயை மாதம்தோறும் சம்பாதிப்பதும் சமீபத்தில் இணையத்தில் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22458d75-e8eb-44e6-938c-86ab8694333b/26-6a6bd917c77cd.webp' /></p><p>
</p>]]></content>
            <updated>2026-07-30T22:46:42+00:00</updated>
        </entry>
    </feed>
