<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-03T03:43:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடி வெள்ளிக்கிழமைகள்.., எந்த வெள்ளிக்கிழமை எந்த அம்மனை வழிபட வேண்டும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-amman-form-to-worship-on-each-aadi-velli-1785496507"></link>
            <id>https://manithan.com/article/which-amman-form-to-worship-on-each-aadi-velli-1785496507</id>
            <summary type="text">ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. 

இந்த மாதத்தில் அம்மனின் சக்தி இரு மடங்காக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

ஆடி மாதத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. </p><p>

இந்த மாதத்தில் அம்மனின் சக்தி இரு மடங்காக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. </p><p>

ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு அம்மன் வடிவத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டதாக கருதப்படுகிறது.&nbsp;</p><h2>ஆடி முதல் வெள்ளி- சொர்ணாம்பிகை</h2><p>

முதல் ஆடி வெள்ளிக்கிழமை சொர்ணாம்பிகை அம்மனுக்கு உகந்த நாள். இந்த நாளில் அம்மனை வழிபட்டால் வீட்டில் செல்வ வளம் பெருகும். கடன் பிரச்சனைகள் குறையும். தங்கம் சேர வேண்டும், அடமானத்தில் உள்ள நகைகளை மீட்க வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த அம்மனை வழிபடலாம்.
</p><h2>
ஆடி இரண்டாம் வெள்ளி- அங்காளம்மன்
</h2><p>
இரண்டாம் ஆடி வெள்ளிக்கிழமை அங்காளம்மனுக்கு உகந்தது. இந்த நாளில் வழிபட்டால் புத்திக்கூர்மை, தைரியம் மற்றும் மனவலிமை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. வாழ்க்கை சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சலும் கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c34293a-7bee-495f-a4f0-36f0af601fa6/26-6a6c8439b2f03.webp' /></p><p>
</p><h2>
ஆடி மூன்றாம் வெள்ளி- காளிகாம்பாள்
</h2><p>
மூன்றாம் ஆடி வெள்ளிக்கிழமை காளிகாம்பாளை வழிபடுவது சிறப்பாக கருதப்படுகிறது. இந்த வழிபாடு ஆரோக்கியம், தைரியம் மற்றும் வெற்றியை வழங்கும் என்று கூறப்படுகிறது. செல்வ வளமும் அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
</p><h2>
ஆடி நான்காம் வெள்ளி- காமாட்சி அம்மன்
</h2><p>
நான்காம் ஆடி வெள்ளிக்கிழமை காமாட்சி அம்மனை வழிபட ஏற்ற நாள். இந்த நாளில் வழிபட்டால் தீய சக்திகள் விலகும். திருமணத் தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
</p><h2>
ஆடி ஐந்தாம் வெள்ளி- மகாலட்சுமி, பராசக்தி
</h2><p>
ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமி, பராசக்தி மற்றும் குலதெய்வத்துடன் தொடர்புடைய பெண் தெய்வங்களை வழிபட ஏற்ற நாளாகும். மாலையில் ஐந்து முக விளக்கு ஏற்றி வழிபட்டால் செல்வம், ஐஸ்வர்யம் பெருகும் என்று நம்பப்படுகிறது. பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் வீட்டில் மகிழ்ச்சியும் வளமும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-03T03:39:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[Fenugreek for Diabetes: சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த ஒரு விதை போதும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/fenugreek-seeds-and-its-benefits-for-diabetic-1785493895"></link>
            <id>https://manithan.com/article/fenugreek-seeds-and-its-benefits-for-diabetic-1785493895</id>
            <summary type="text">சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் நல்ல தேர்வாக இருக்கும் என்று சித்த மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.சர்க்கரை நோய்சர்க்கரை நோயாளிகளுக்கு மலச்சிக்கல...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் நல்ல தேர்வாக இருக்கும் என்று சித்த மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.</p><h2>சர்க்கரை நோய்</h2><p>சர்க்கரை நோயாளிகளுக்கு மலச்சிக்கல், எடை குறைப்பு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படலாம்.</p><p>இரத்த சர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகமாகும் ஒரு நிலை ஆகும்.
</p><p>
இது இன்சுலின் உற்பத்தி செய்யாதபோது அல்லது உடல் அதனை பயன்படுத்தாதபோது ஏற்படுகிறது.
</p><p>
உணவு கட்டுப்பாடும் வாழ்க்கை முறை மாற்றங்களும் தான் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவி செய்யும்.</p><p>

அந்தவகையில், சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் நல்ல தேர்வாக இருக்கும் என்று சித்த மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdc2383e-a59b-4fb8-8644-9a7173dea4f1/26-6a6c798a515c3.webp' /></p><h2>வெந்தயம்</h2><p>அதன்படி, ஒரு கைப்பிடி வெந்தயத்தை பொடியாக அரைத்து, தினமும் அரை டீஸ்பூன் அளவு தண்ணீரில் கலந்து குடிக்கலாம். </p><p>

இதை காலையில் வெறும் வயிற்றில் அல்லது மதிய உணவுக்கு முன் எடுத்துக்கொள்ளலாம். </p><p>

வெந்தயத்தில் உள்ள கரையும் நார்ச்சத்து இதய நலனுக்கு உதவுகிறது. கரையாத நார்ச்சத்து மலச்சிக்கலை குறைத்து, குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது.
</p><p>தினமும் சுமார் 10 கிராம் வெந்தயம் எடுத்துக்கொள்வதால் நார்ச்சத்து கிடைத்து, மலச்சிக்கல் குறைய உதவும் என்று மருத்துவர் கூறுகிறார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb22694b-89c9-44fa-b3b4-aa856a340ce7/26-6a6c79899f18c.webp' /></p><p>நீண்ட காலமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால், செரிமானத்தை கட்டுப்படுத்தும் நரம்புகள் பாதிக்கும். 

இதனால் குடல் இயக்கம் மெதுவாகி, மலம் கடினமாகி மலச்சிக்கல் ஏற்படுகிறது.
</p><p>
வெந்தயத்தில் உள்ள காலக்டோமேனன் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து, உணவு செரிமான வேகத்தை குறைத்து, ரத்தத்தில் சர்க்கரை திடீரென உயர்வதைத் தடுக்க உதவுகிறது.
</p><p>
வெந்தயத்தில் உள்ள சில அமினோ அமிலங்கள், இன்சுலின் சுரப்பை ஊக்குவித்து, இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.</p><p> 

மேலும், இது கெட்ட கொழுப்பின் அளவையும் குறைக்க உதவுகிறது.</p><p>

ஏற்கனவே நீரிழிவு மருந்துகள் அல்லது இன்சுலின் பயன்படுத்துபவர்கள், வெந்தயத்தை தொடர்ந்து எடுத்துக்கொள்வதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T03:32:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரியல் நடிகைக்கு மாமியார் வீட்டில் கொடுமை.. கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/aditi-sharma-files-complaint-against-her-husband-1785726888"></link>
            <id>https://cineulagam.com/article/aditi-sharma-files-complaint-against-her-husband-1785726888</id>
            <summary type="text">அதிதி ஷர்மாபிரபல சீரியல் நடிகை அதிதி ஷர்மா, தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் அளித்துள்ளது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<h2>அதிதி ஷர்மா</h2><p>பிரபல சீரியல் நடிகை அதிதி ஷர்மா, தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் அளித்துள்ளது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cca86c80-475e-4ddd-ad35-f1a332f61bb5/26-6a7007ab84ef2.webp' /></p><p>மும்பையை சேர்ந்த பிரபல இந்தி டிவி நடிகை அதிதி ஷர்மா. இவருக்கு வயது 29. 'கலீரின்' சீரியல் மூலம் இவர் ரசிகர்களிடையே பிரபலமானார். மேலும் 'யே ஜாது ஹை ஜின் கா', 'ரப் சே ஹை துவா' உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.</p><h2>புகார்&nbsp;</h2><p> </p><p>

கடந்த 2024-ஆம் ஆண்டு தன்னுடைய காதலரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் கணவருடன் கோரேகாவ் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நடிகை அதிதி ஷர்மா மும்பை கோரே காவி போலீஸ் நிலையத்தில் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் மனு அளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea264354-5548-42e1-af17-b7c6a6acfda9/26-6a7007ac3b469.webp' /></p><p> </p><p>அந்த புகாரில் அவர் கூறியுள்ளது, "திருமணம் முடித்த சில நாட்களிலேயே எனது கணவர் என்னுடைய ஆடை விஷயத்தில் தேவையில்லாமல் குறை கூற தொடங்கினார். சிறு பிரச்சனைகளுக்கு எல்லாம் என்னுடன் பெரிய அளவில் சண்டை போட்டு வந்தார். கடந்த ஆண்டு முதல் எனது நடத்தையில் சந்தேகப்பட்டு, என்னை தவறான வார்த்தைகளால் திட்டினார். அதன்பின், என்னுடன் பேசுவதையே நிறுத்திவிட்டார்".</p><p></p><p>
</p><p>"இதனால் எனக்கு கடுமையான மனஉளைச்சல் ஏற்பட்டது. இதுமட்டுமின்றி, எனது கணவரின் பெற்றோர் என்னுடைய நகைகள் அனைத்தையும் வலுக்கட்டாயமாக பறித்துக்கொண்டனர். என்னை அவர்கள் தொடர்ந்து கொடுமைப்படுத்தி, துன்புறுத்தினார்கள்" என அதில் தெரிவித்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b76fd06-dbd9-4e9e-8d0a-8c0937c00ca2/26-6a7007acea6e4.webp' /></p><p>அதிதி ஷர்மாவின் புகாரின் அடிப்படையில் போலீசார், அவரது கணவர் மற்றும் மாமனார், மாமியார் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p>]]></content>
            <updated>2026-08-03T03:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் பேருந்துகள் மோதி கோர விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/25-hospitalised-in-kegalle-bus-crash-1785727022"></link>
            <id>https://ibctamil.com/article/25-hospitalised-in-kegalle-bus-crash-1785727022</id>
            <summary type="text">இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த விபத்து கேகாலை - கரடுபன பகுதியில் இன்று (3.06.2026) காலை 6:15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

​</p><p>இந்த விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>ரம்புக்கனையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த இ.போ.ச. பேருந்தும், திகனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்துமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

​</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3180f20-2763-4fe8-b837-cc0dfffc9fdf/26-6a700addd292a.webp' /></p><p>விபத்தில் காயமடைந்தவர்கள் கேகாலை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

​</p><p> விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கேகாலை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T03:28:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாறு காணாத வெப்பம்... பொதுமக்களுக்கு கிழக்கு ஆசிய நாடொன்று விடுத்த எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/south-korea-highest-temperature-1785726809"></link>
            <id>https://news.lankasri.com/article/south-korea-highest-temperature-1785726809</id>
            <summary type="text">ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வெப்பநிலைப் பதிவுகள் தொடங்கப்பட்டதிலிருந்து, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில் மிக உயர்ந்த வெப்பநிலைப் பதிவாகியுள்ளது.மிக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வெப்பநிலைப் பதிவுகள் தொடங்கப்பட்டதிலிருந்து, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில் மிக உயர்ந்த வெப்பநிலைப் பதிவாகியுள்ளது.</p><h2>மிக அதிகபட்ச வெப்பநிலை</h2><p>
</p><p>கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துமாறு அதிகாரிகள் மக்களை எச்சரித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5178eb44-ea93-4d8d-bcbf-8bdaaa812379/26-6a7008c97e981.webp' /></p><p> தென்கிழக்கு நகரமான யாங்சானில் ஞாயிற்றுக்கிழமை மதியம் வெப்பநிலை 42.5 டிகிரி செல்சியஸை எட்டியதாக கொரிய வானிலை ஆய்வு மையம் (KMA) தெரிவித்துள்ளது; 1904-ஆம் ஆண்டில் நவீன வானிலை கண்காணிப்பு முறை தொடங்கியதிலிருந்து பதிவான மிக அதிகபட்ச வெப்பநிலை இதுவாகும்.</p><p> வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், யாங்சான் (Yangsan) பகுதி தொடர்ந்து நிலவும் வெப்ப அலையின் மையமாகத் திகழ்கிறது; அங்கு ஞாயிற்றுக்கிழமையன்று தொடர்ந்து ஐந்தாவது நாளாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியது. </p><p>அதேவேளை, டேகு (Daegu) மற்றும் புசான் (Busan) உள்ளிட்ட பல நகரங்களிலும் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸின் உயர் நிலைகளை எட்டி வருகிறது.</p><p></p><p> இதனிடையே, கடுமையான வெப்பத்திலிருந்து தப்பிக்க மக்கள் குளிரூட்டப்பட்ட வணிக வளாகங்கள் அல்லது சிற்றுண்டிச்சாலைகளை நோக்கிப் படையெடுத்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.</p><p>ஞாயிற்றுக்கிழமையன்று 20-க்கும் மேற்பட்ட பகுதிகள் அவசர வெப்ப அலை எச்சரிக்கையின் கீழ் இருந்தன; அதிகரித்து வரும் வெப்பநிலையைச் சிறப்பாகக் கையாள்வதற்காக இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய எச்சரிக்கை வகை இதுவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bceea541-bf89-4d10-ae4b-91f87d5b9089/26-6a7008ca6d229.webp' /></p><p> </p><p>வெப்ப அலை வீசும் பகுதிகளில், அன்றைய தினத்தில் உணரப்படும் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸையோ அல்லது உண்மையான வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸையோ எட்டும் என்று கணிக்கப்படும்போது அவசரக்கால எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.</p><h2>பருவநிலை மாற்றம்</h2><p> </p><p>KMA வெளியிட்டுள்ளத் தரவுகள் அடிப்படையில், நாட்டில் வெப்ப அலை வீசும் நாட்களின் சராசரி ஆண்டு எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் இருமடங்கிற்கும் அதிகமாக அதிகரித்து 19-ஆக உயர்ந்துள்ளது. </p><p>குறைந்தபட்சம் 33 டிகிரி செல்சியஸ் அதிகபட்ச வெப்பநிலையைக் கொண்ட ஒரு நாள், வெப்ப அலை நாளாக வரையறுக்கப்படுகிறது.



சாங்வோன் (Changwon) நகரில் வெப்பநிலை 39.5 டிகிரி செல்சியஸாக உயர்ந்ததைத் தொடர்ந்து அங்கு நடைபெறவிருந்த தென் கொரியாவின் தொழில்முறை பேஸ்பால் லீக் தொடரின் ஒரு ஆட்டத்தை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது; அந்நகரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒரு ஆட்டம் ரத்து செய்யப்படுவது இதுவேயாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e60cecae-4a3a-4fa0-a8ca-7bd8a5575c45/26-6a7008cb1f50b.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், மனிதனால் தூண்டப்பட்ட பருவநிலை மாற்றத்தின் விளைவாக, வெப்ப அலைகள் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் அடிக்கடி நிகழக்கூடியதாகவும், அதிகத் தீவிரத்தன்மை கொண்டவையாகவும் மாறி வருகின்றன என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். </p><p>அத்துடன், உலக நாடுகளில் தீவிர வானிலை நிலையை மேலும் தீவிரமாக்கும் வகையில், இந்த ஆண்டு 'எல் நினோ' (El Niño) மீண்டும் திரும்பியுள்ளது; இது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலையை உயர்த்தக்கூடிய, பொதுவாக இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழக்கூடிய ஒரு இயற்கையான காலநிலை நிகழ்வாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T03:11:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களே அவதானம்: பிற்பகலில் இடியுடன் கூடிய மழை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rainfall-exceeding-100mm-is-expected-today-1785726189"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rainfall-exceeding-100mm-is-expected-today-1785726189</id>
            <summary type="text">நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.சப்ரகமுவ மாகாணத்திலும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.</p><p>சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (03.08.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>அடிக்கடி மழை&nbsp;</h2><p>​மத்திய, சப்ரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்பதுடன், அப்பகுதிகளில் மேகமூட்டமான வானிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc36f9cd-c21c-4166-b9e7-a8d447fa18ae/26-6a70065c42a59.webp' /></p><p>மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யும். 

​முல்லைத்தீவு மாவட்டத்தில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். 

​</p><p>வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

</p><p>இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T03:09:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[60 பேருக்கு சர்ச்சைக்குரிய விசா வழங்கியது யார்....! பின்னணியில் செயற்பட்ட மறைகரம்! ஆபத்தாக மாறும் இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/visas-for-60-suspicious-chinese-were-obtained-1785723755"></link>
            <id>https://tamilwin.com/article/visas-for-60-suspicious-chinese-were-obtained-1785723755</id>
            <summary type="text">இலங்கையில் விசா பிரச்சினை காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பொறுப்பில் எடுக்கப்பட்ட 60 சீனப் பிரஜைகளின் கடவுச்சீட்டுகள் மீண்டும் அவசரமாக விடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் விசா பிரச்சினை காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பொறுப்பில் எடுக்கப்பட்ட 60 சீனப் பிரஜைகளின் கடவுச்சீட்டுகள் மீண்டும் அவசரமாக விடுவிக்கப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளது. </p><p>இந்த சீனப் பிரஜைகளிடம் ஒரு மாதத்திற்கு மட்டும் செல்லுபடியாகும் வணிக விசா மட்டுமே காணப்பட்டுள்ளது. </p><p>சந்தேகம் எழுந்தமையால் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசாரணைப் பிரிவினால் இந்த விசாக்கள் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. அந்த அனுமதிப்பத்திரங்கள் திணைக்களத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.</p><h2><b>வதிவிட விசா</b></h2><p> அதன்பின்னர், அவசரமாக சீன பிரஜைகள் வதிவிட விசா வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு, அத்தகைய விசாக்களை வழங்குவதற்கான நீண்ட நடைமுறை பின்பற்றப்பட்டதா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a7eb652-1bf3-4a9c-a087-afc28ca70964/26-6a70051b69747.webp' /></p><p>இது தொடர்பான தகவல்கள் கிடைத்ததையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. </p><p>இந்த நிலையில், எதிர்காலத்தில் இது குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் ஊடாக விசாரணையொன்றை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. </p><h3><b>சீன கும்பல்</b></h3><p>இலங்கையில் செயற்படும் சீன மாபியா குழுக்கள் தொடர்பில் பல விடயங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், இவ்வாறு செயற்பட்டமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0facd9b4-7fdf-4357-9917-e97247cbfb94/26-6a700590879cc.webp' /></p><p>கடந்த வாரம் கொழும்பில் சீன கும்பல் ஒன்று ஆயுதமுனையில் சீன பிரஜையான கோடீஸ்வரரை கடத்தி கொலை செய்திருந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
</p>]]></content>
            <updated>2026-08-03T03:07:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற வானிலையால் நாட்டின் சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/holidays-for-schools-in-the-central-province-1785724999"></link>
            <id>https://ibctamil.com/article/holidays-for-schools-in-the-central-province-1785724999</id>
            <summary type="text">நாட்டின் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிாகியுள்ளது.அதன்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிாகியுள்ளது.</p><p>அதன்படி, மத்திய மாகாணத்தின் ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க&nbsp; தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார். 

​</p><p>அதற்கமைய அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தங்களது பாடசாலைகளுக்கான விடுமுறையை வழங்குவதா? இல்லையா? என்பது குறித்த தீர்மானத்தை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>மண்சரிவு எச்சரிக்கை&nbsp;</h2><p>இதேவேளை நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c749b28f-b4d0-430f-b9db-4806aa5ac20e/26-6a7004aa0ccf6.webp' /></p><p>அந்த நிறுவனம் நேற்று (02) இரவு 11:00 மணிக்கு வெளியிட்ட அறிவிப்பில் கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T03:07:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. 11 நாட்கள் விவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/jananayagan-movie-11-days-worldwide-box-office-1785724906"></link>
            <id>https://cineulagam.com/article/jananayagan-movie-11-days-worldwide-box-office-1785724906</id>
            <summary type="text">ஜனநாயகன்இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஜனநாயகன். ஜனவரி மாதம் இப்படம் வெளிவரவிரு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜனநாயகன்</h2><p>இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஜனநாயகன். ஜனவரி மாதம் இப்படம் வெளிவரவிருந்த நிலையில், சென்சார் உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்தித்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01455d9d-724d-48e9-a3df-bd7207bdb95c/26-6a6fffede3c1b.webp' /></p><p></p><p>இதனால் ரிலீஸ் தள்ளிப்போனது. 

இறுதியாக விஜய் முதலமைச்சர் ஆனபின் ஜனநாயகன் வெளிவந்தது. ரசிகர்கள் ஜனநாயகன் திரைப்படத்தை திரையரங்குகளில் திருவிழா போல் கொண்டாடினார்கள்.</p><h2>11 நாட்கள் விவரம்&nbsp;</h2><p> </p><p>

விஜய்யின் நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு திரைப்படமும் வசூலில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. அதேபோல் இப்படமும் ஓப்பனிங் வாரத்தில் சிறந்த வரவேற்பு பெற்றது. ஆனால், அதன்பின் பாக்ஸ் ஆபிஸில் சற்று சரிவை சந்தித்து வருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/355ec3db-531a-462a-8a8b-b0977b6bac62/26-6a6fffed3421f.webp' /></p><p>இந்த நிலையில், 11 நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள <a href="https://www.youtube.com/watch?v=FM4UvDi2xiU" target="_blank">வசூல் </a>குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 11 நாட்களில் இப்படம் ரூ. 290 கோடி வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p>]]></content>
            <updated>2026-08-03T03:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள பல கோடி மதிப்புள்ள வாகனங்கள் - வெளியான புதிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-import-in-sril-anka-1785724338"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-import-in-sril-anka-1785724338</id>
            <summary type="text">இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1.254 பில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 41,971 மில்லியன் இலங்கை ரூபாய்) மதிப்பிலான வாகனங்கள் நாட்டிற்குள் இறக்குமதி ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1.254 பில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 41,971 மில்லியன் இலங்கை ரூபாய்) மதிப்பிலான வாகனங்கள் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.</p><p>

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>வாகன இறக்குமதி செலவினம்</h2><p>

மேலும், கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நாட்டின் வாகன இறக்குமதி செலவினம் 318 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 10,645 மில்லியன் இலங்கை ரூபாய்) குறைந்துள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/feb600c2-fc95-4a52-b6cf-920cfff0fdeb/26-6a70026989170.webp' /></p><p>

இதேவேளை, மத்திய வங்கியின் தரவு அறிக்கையின்படி, இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 182 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 6,093 மில்லியன் இலங்கை ரூபாய்) மதிப்பிலான வாகனங்கள் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
</p><p>
இது, இந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் வாகன இறக்குமதி செலவினத்தில் 27.1 சதவீதம் அல்லது 2,276 மில்லியன் ரூபாய் குறைவாகும்.</p><p>

இருப்பினும், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 163 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் ரூ. 5,455 கோடி) மதிப்புள்ள வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.</p><p>

அதனுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நாட்டின் வாகன இறக்குமதிச் செலவு ரூ. 638 கோடி அதிகரித்துள்ளது.</p><p>
கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், 157 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் ரூ. 52,614 கோடி) மதிப்புள்ள வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T02:52:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசமடையும் வானிலை! ஆற்றுப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/considerable-rainfall-mahaweli-kelani-kalu-ganga-1785722949"></link>
            <id>https://tamilwin.com/article/considerable-rainfall-mahaweli-kelani-kalu-ganga-1785722949</id>
            <summary type="text">கடந்த 24 மணி நேரத்தில் மகாவலி, களனி மற்றும் களு ஆறுகளின் மேல் பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழை பெய்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 24 மணி நேரத்தில் மகாவலி, களனி மற்றும் களு ஆறுகளின் மேல் பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழை பெய்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதன் காரணமாக, ஆறுகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளராக பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>அதிகமான மழையும் பதிவு</h2><p>
அதன்படி, மகாவலி ஆற்றின் மேல் பகுதிகளில் அமைந்துள்ள நாவலப்பிட்டிய, நானுஓயா மற்றும் வத்தளை போன்ற பகுதிகளில் சுமார் 200 மி.மீ மழையும், சில இடங்களில் 200 மி.மீ-க்கு அதிகமான மழையும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33a4d9a8-60a2-4665-af65-6bc89e790b1d/26-6a6ffd2f897aa.webp' /></p><p>

இதன் காரணமாக, நாவலப்பிட்டிய மற்றும் பேராதெனியாவிற்கு இடையே மகாவலி ஆற்றின் அருகே வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.</p><p>&nbsp;தற்போது நீர்மட்டம் வேகமாக உயராவிட்டாலும், இயல்பான உயர்வையே கண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
வெள்ள நிலைமை பேரிடர் நிலை வரை மோசமடையாது என்று எதிர்பார்ப்பதாகவும், நேற்று இரவு சில இடங்களில் 70 மி.மீ-க்கு மேல் மழை பெய்ததால் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததில் இந்த நிலைமை காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>தற்போது நீர்மட்டம் குறைந்து வந்தாலும், சில தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p> மேலும், கலா ஓயா மற்றும் அத்தனகலு ஓயா&nbsp; பகுதிகளில் அதிக மழை பெய்யாததால், அப்பகுதிகளில் வெள்ள அபாயம் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T02:30:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படங்கள்.. மொத்த லிஸ்ட் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/movies-grossed-over-100-crore-in-tamilnadu-1785655114"></link>
            <id>https://cineulagam.com/article/movies-grossed-over-100-crore-in-tamilnadu-1785655114</id>
            <summary type="text">வசூல்&amp;nbsp;பாக்ஸ் ஆபிஸில் ஒரு திரைப்படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை வைத்துதான் அந்த படத்தின் வெற்றி தோல்வி முடிவு செய்யப்படுகிறது. அதுவும் முன்னணி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>வசூல்&nbsp;</h2><p>பாக்ஸ் ஆபிஸில் ஒரு திரைப்படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை வைத்துதான் அந்த படத்தின் வெற்றி தோல்வி முடிவு செய்யப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3073d7cb-ae1b-4bdb-ad6e-1be0dc402cb4/26-6a6eef4d96d43.webp' /></p><p>அதுவும் முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை, அப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்ததா? ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்ததா என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் இருப்பார்கள்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cab7df5f-8f1f-492a-bc5d-7f9dd78d9e9c/26-6a6eef4cdf62d.webp' /></p><p></p><p>சமீபத்தில் வெளியான <a href="https://www.youtube.com/watch?v=Xz0Ar7Rp3dI" target="_blank">ஜனநாயகன் </a>திரைப்படம் உலகளவில் 10 நாட்களில் ரூ. 275 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 122 கோடி வசூலித்துள்ளது. விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களில் தமிழ்நாட்டில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் 9-வது திரைப்படம் ஜனநாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fc8661b-5596-4029-baa5-defc7286752d/26-6a6eef4e4f743.webp' /></p><h2>மொத்த லிஸ்ட் இதோ</h2><p> </p><p>

இந்நிலையில், தமிழ்நாட்டில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படங்கள் என்னென்ன என்பதை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.</p><ul><li> 

எந்திரன்
</li><li>மெர்சல்
</li><li>பாகுபலி 2
</li><li>சர்கார்
</li><li>விஸ்வாசம்</li><li>
பேட்ட
</li><li>பிகில்
</li><li>2.0 </li><li>
மாஸ்டர்
</li><li>வலிமை</li><li>
பீஸ்ட்
</li><li>கே.ஜி.எப் 2
</li><li>வாரிசு
</li><li>துணிவு
</li><li>ஜெயிலர்
</li><li>லியோ
</li><li>கோட்
</li><li>குட் பேட் அக்லி
</li><li>விக்ரம்</li><li>
வேட்டையன்
</li><li>கூலி
</li><li>பொன்னியின் செல்வன் 1
</li><li>பொன்னியின் செல்வன் 2
</li><li>அமரன்
</li><li>கருப்பு</li><li>
ஜனநாயகன்</li></ul>]]></content>
            <updated>2026-08-03T02:16:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - 20 பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bus-accident-20-injured-1785722481"></link>
            <id>https://tamilwin.com/article/bus-accident-20-injured-1785722481</id>
            <summary type="text">இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த விபத்தில் ரம்புக்கனையில் இருந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட விபத்து ஏற்பட்டுள்ளது. </p><p>

இந்த விபத்தில் ரம்புக்கனையில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்றும், திகணையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.</p><p>&nbsp;</p><p>
</p><p><b style="color: inherit; font-size: 1.75rem;">மருத்துவமனையில் அனுமதி</b></p><p>இன்று காலை 6:15 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் 20 பேர் வரை காயமடைந்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eba09596-aac5-41dc-a08e-94990821c452/26-6a6ff880ef94d.webp' />&nbsp;&nbsp;<b style="color: inherit; font-size: 1.75rem;"></b></p><p>காயமடைந்தவர்கள் கேகாலை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T02:10:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை! அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/holidays-for-central-province-schools-1785721272"></link>
            <id>https://tamilwin.com/article/holidays-for-central-province-schools-1785721272</id>
            <summary type="text">மத்திய மாகாணத்தின் ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

​ நில...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய மாகாணத்தின் ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

​</p><p> </p><p>நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் மாகாண கல்வி பணிப்பாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>பாடசாலைகளுக்கான விடுமுறை</h2><p>அதற்கமைய அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தங்களது பாடசாலைகளுக்கான விடுமுறையை வழங்குவதா இல்லையா என்பது குறித்த தீர்மானத்தை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f46d3b6-986d-4567-9c08-4e393c93cc7a/26-6a6ff501880ff.webp' />&nbsp;</p><p>இதேவேளை, மத்திய மலைநாட்டில் பெய்யும் கனமழையின் காரணமாக காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.</p><p>நீர்மட்டம் நிரம்பி வழியும் அளவை நெருங்கி வருவதாகவும் குறித்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T01:55:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் இருவரை மட்டுமே இலக்கு வைத்து விசாரணை! முன்னாள் எம்.பி குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-mp-demands-full-investigation-easter-attack-1785720752"></link>
            <id>https://ibctamil.com/article/ex-mp-demands-full-investigation-easter-attack-1785720752</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒரு சிலரை மட்டும் இலக்கு வைக்காமல் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய குடியரசு முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒரு சிலரை மட்டும் இலக்கு வைக்காமல் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
கொழும்பில் நேற்றையதினம் (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
</p><p>
அதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாட்டு மக்களுக்குப் பெரும் வேதனை நிகழ்கிறது. மிகத் தெளிவான எச்சரிக்கைகளும் முன்னறிவிப்புகளும் கிடைத்திருந்த போதிலும், அத்தாக்குதலைத் தடுப்பதற்குப் காவல்துறையினரோ அல்லது ஏனைய பொறுப்பு வாய்ந்த தரப்பினரோ உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.</p><p></p><h2>பூரண விசாரணை</h2><p>
</p><p>
இது தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகளில் பூஜித ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் மட்டுமன்றி, பல அரச அதிகாரிகளும் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9ed2ab6-42d8-4231-b09f-a4501f168c01/26-6a6fefb2afd23.webp' /></p><p> </p><p>

அந்தவகையில், இருவரை மட்டும் இலக்கு வைத்துத் தண்டிப்பதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
</p><p>
குறிப்பாக, 2017 ஆம் ஆண்டில் தாய்நாட்டின் மீது பற்றுக்கொண்ட மௌலவிகள் சிலர் சட்டமா அதிபர் திணைக்களத்துக்குச் சென்று இது குறித்து முறைப்பாடு செய்திருந்ததாக அக்காலப்பகுதியில் நீதி அமைச்சராக இருந்தவர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.
</p><p>
இதன் மூலம் சட்டமா அதிபர் திணைக்களமும் தனது பொறுப்பைச் சரியாக நிறைவேற்றவில்லை என்பது புலனாகின்றது.</p><p> </p><p>எனவே, அக்காலத்தில் விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் உட்பட அனைவரையும் உள்ளடக்கிப் பூரண விசாரணை செய்யப்பட வேண்டும். அதை விடுத்து ஒரு சிலரை மட்டும் பலிகடா ஆக்கிவிட்டுப் பிரச்சினையைத் தீர்த்துவிட்டதாகக் காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.” என்றார்.</p><p></p><p>

</p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T01:33:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/earth-slip-warning-for-4-districts-1785719045"></link>
            <id>https://tamilwin.com/article/earth-slip-warning-for-4-districts-1785719045</id>
            <summary type="text">நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் மண்சரிவு குறித்த முன் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
தேசிய க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் மண்சரிவு குறித்த முன் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. </p><p>
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இது தொடர்பான எச்சரிக்கையை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.</p><p></p><h2>இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை&nbsp;</h2><p>
</p><p>இந்த அறிவிப்பு நேற்று (02) இரவு 11:00 மணிக்கு வெளியிடப்பட்டதுடன், இன்று (03) இரவு 11:00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f84750fd-a997-457e-be4c-07f56d5bbc4d/26-6a6fef15992cf.webp' /></p><p>
</p><p>சில பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அவற்றின் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>கண்டி மாவட்டத்தில் பச்பாகே கோரளே மற்றும் கங்க இஹள கோரளே ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ மற்றும் நோர்வூட் பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>முதலாம் கட்ட மண்சரிவு அறிவித்தல்</h2><p>
கீழ்கண்ட பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அவற்றின் சுற்றியுள்ள பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.</p><p> கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க மற்றும் தெஹியோவிற்ற&nbsp; பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் நுவரெலியா மாவட்டத்தின்&nbsp; நுவரெலியா, தலவாக்கலை, கொத்மலை கிழக்கு மற்றும் கொத்மலை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மேற்கு
இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகலை மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதலாம் கட்ட மண்சரிவு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T01:30:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூச நட்சத்திரத்தில் அமரும் புதன் பகவான்; இந்த ராசிகளுக்குஅதிர்ஷ்டம் காத்திருக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mercury-enters-pushya-star-brings-fortune-1785720242"></link>
            <id>https://jvpnews.com/article/mercury-enters-pushya-star-brings-fortune-1785720242</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகத்தில் புதன் பகவான் வலுவாக இருந்தால் அவர்கள் ராஜ வாழ்க்கை வாழக்கூடிய அமைப்பு உண்டாகும்.

அந்த வகையில், 2026 ஆகஸ்ட் 8ஆம் தேதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகத்தில் புதன் பகவான் வலுவாக இருந்தால் அவர்கள் ராஜ வாழ்க்கை வாழக்கூடிய அமைப்பு உண்டாகும்.

அந்த வகையில், 2026 ஆகஸ்ட் 8ஆம் தேதி புதன் கிரகம் புனர்பூசம் நட்சத்திரத்திலிருந்து பூச நட்சத்திரத்திற்கு இடம் மாறுகிறார். </p><p>இந்த மாற்றத்தால் ஒரு சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் நற்பலன்களை கொடுக்கப் போகிறது. அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb3d508a-b95a-42d1-b090-2eafbb09488d/26-6a6fedb4276d6.webp' /></p><p><b>


மிதுனம்:
</b>மிதுன ராசியின் அதிபதி புதன் பகவானார். ஆதலால் இந்த பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய அளவில் நற்பலன்களை கொடுக்கப் போகிறது. நீண்ட நாட்கள் பாதியில் நின்ற வேலை இவர்களுக்கு நல்ல முடிவை கொடுக்க போகிறது. எழுத்தாளர்களுக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வரக்கூடிய காலமாகும்.</p><p></p><p>
</p><p><b>
கன்னி:
</b>பூச நட்சத்திரத்தில் புதன் பகவானுடைய சஞ்சாரம் கன்னி ராசிக்கு நிறைய புதிய வாய்ப்புகளை வழங்கப்போகிறது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த அரசு வேலைகள் நல்ல முன்னேற்றத்தை தரும்.

வேலை மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நற்செய்தி தேடி வரும். பழைய முதலீடுகள் நல்ல லாபத்தை கொடுக்கும்.</p><p></p><p> </p><p><b>துலாம்:
</b>துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பகவானுடைய பூச நட்சத்திர பெயர்ச்சியானது இவர்களுக்கு உயர்ந்த செல்வாக்கை அளிக்க போகிறது.

வேலை செய்யும் இடங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வேலை செய்யும் இடங்களில் உங்களுடைய கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T01:28:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூதூரில் பொறியியல் பீட மாணவன் கோர விபத்தில் பலி ; வெளிநாடு செல்லவிருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/engineering-student-killed-in-tragic-crash-1785717911"></link>
            <id>https://jvpnews.com/article/engineering-student-killed-in-tragic-crash-1785717911</id>
            <summary type="text">மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஜின்னாநகர் (59ஆம் கட்டை) பகுதியில் ரிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித...</summary>
            <content type="html"><![CDATA[<p>மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஜின்னாநகர் (59ஆம் கட்டை) பகுதியில் ரிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>



திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை (02) மாலை இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/839260a4-1601-4d3e-9728-cc29ef82be65/26-6a6fe4992d548.webp' /></p><h2>சரணடைந்த&nbsp; சாரதி</h2><p>
விபத்தில் மூதூர் -கிளிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பீட முதலாம் வருட மாணவன், மற்றொருவர் பிரான்ஸ் செல்லத் தயாராக இருந்த 19வயது&nbsp; இளைஞரும்&nbsp; உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21563cee-3c4c-49f8-9f1d-8fdb3bb529e7/26-6a6fe499d8a99.webp' /></p><p>
</p><p>


ரிப்பர் வாகனச் சாரதி மூதூர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.</p><p></p><p> </p><p>உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் சடலங்களும் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p>சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T01:28:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகளுக்கு தொந்தரவு ; இளைஞர்களுக்கு பொலிஸார் செய்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/schoolgirls-harassed-on-way-to-tuition-classes-1785717059"></link>
            <id>https://jvpnews.com/article/schoolgirls-harassed-on-way-to-tuition-classes-1785717059</id>
            <summary type="text">மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகளை மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து தொந்தரவு செய்தமை மற்றும் தலைக்கவசம் அணியாமல் போக்குவரத்து விதிகளை மீறிப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகளை மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து தொந்தரவு செய்தமை மற்றும் தலைக்கவசம் அணியாமல் போக்குவரத்து விதிகளை மீறிப் பயணித்தமை தொடர்பாகப் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 8 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; ">

பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e44621f-ecf3-43a4-8351-89a72e2b1ec7/26-6a6fe14524f1c.webp' /></p><h2 style="text-align: justify; ">அதிரடி நடவடிக்கை</h2><p>
</p><p style="text-align: justify; ">
கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், இந்த விசேட அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
</p><p style="text-align: justify; ">
பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையில் இந்தக்கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, </p><p style="text-align: justify; ">பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் தொடர்பான காணொளி மற்றும் புகைப்பட ஆதாரங்களை பொதுமக்கள் உடனடியாகப் பொலிஸாருக்கு அனுப்பி வைக்க வேண்டும். </p><p style="text-align: justify; ">தவறு செய்பவர்கள் எவராக இருந்தாலும் பாரபட்சமின்றிச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

சம்மாந்துறையை ஒழுக்கமும் சட்டமும் நிலவும் பாதுகாப்பான சமூகமாக மாற்றுவதே எமது நோக்கமாகும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இளைஞர்கள் போக்குவரத்து விதிகளை மதித்து நடக்க வேண்டும். பெண்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்கள் கடுமையாகக் கருதப்படும்."
</p><p style="text-align: justify; ">
மேலும், பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் வாகனப் பயன்பாடு, நண்பர்கள் வட்டம் மற்றும் அன்றாட நடவடிக்கைகள் குறித்து விழிப்புடனும் கூடுதல் கவனத்துடனும் இருக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-03T01:27:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு நாட்களில் முதல் பிரசவம் ; தாய்க்கும் சேய்க்கும் நடந்தேறிய துயரம் ; ஆபத்தாக மாறும் நிலைமை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mother-and-baby-die-of-dengue-1785715165"></link>
            <id>https://jvpnews.com/article/mother-and-baby-die-of-dengue-1785715165</id>
            <summary type="text">முதலாவது மகப்பேறுக்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியிருந்த நிலையில், பிறக்காத தனது பிஞ்சுக் குழந்தையுடன் தாயும் பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் வாத்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">முதலாவது மகப்பேறுக்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியிருந்த நிலையில், பிறக்காத தனது பிஞ்சுக் குழந்தையுடன் தாயும் பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் வாத்துவ பகுதியில் பதிவாகியுள்ளது.
</p><p style="text-align: justify;">
வாதுவையைச் சேர்ந்த 34 வயதான&nbsp; பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab2312bd-8cfc-45f0-b4d4-f380320e0337/26-6a6fd9df27e97.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;தீவிர சிகிச்சை</h2><p>
</p><p style="text-align: justify;">
குறித்த பெண்ணுக்கு கடந்த 24ஆம் திகதி லேசான காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்டதன் மூலம் காய்ச்சல் தணிந்துள்ளது.</p><p style="text-align: justify;">

எனினும், மலச்சிக்கல் உபாதை காரணமாகவே அவர் தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">ஆரம்பம் முதலே குறித்த தனியார் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில், அறுவை சிகிச்சை மூலம் குழந்தையைப் பிரசவிப்பதற்கான பரிசோதனைகளின் போதே அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify;">
எனினும், குறித்த தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இடவசதி இல்லாத காரணத்தினால், உறவினர்கள் அவரை அரச மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
</p><p style="text-align: justify;">
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், நிலைமை மிகவும் தீவிரமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">தீவிர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும், கடந்த 28ஆம் திகதி குழந்தையும், 29ஆம் திகதி மாலையில் தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.</p><p style="text-align: justify;">

இறப்பு தொடர்பில் திறந்த முடிவு வழங்கப்பட்டுள்ளதுடன், உயிரிழப்பதற்கு முன்னர் அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்தமை இரத்தப் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-03T01:27:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியை கொன்று வீடியோ எடுத்து மாமனார்-மாமியாருக்கு அனுப்பிய கணவர் ; இறுதியில் நடந்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/husband-kills-wife-sends-video-to-in-laws-1785700305"></link>
            <id>https://jvpnews.com/article/husband-kills-wife-sends-video-to-in-laws-1785700305</id>
            <summary type="text">கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கேசகோடு கிராமத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மனைவியை கொன்று கணவர் தற்கொலை செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கேசகோடு கிராமத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மனைவியை கொன்று கணவர் தற்கொலை செய்து வீடியோ எடுத்து மாமனார்-மாமியாருக்கு அனுப்பிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
</p><p style="text-align: justify; ">
கடந்த சில நாட்களாக மனைவியின் நடத்தையில் மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், அவர்கள் 2 பேருக்கும் இடையே கடந்த சில நாட்களாகவே வாக்குவாதம் ஏற்பட்டு, குடும்பத்தகராறு ஆனது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c515c25-6949-43e9-ab3c-2730f4911b02/26-6a6f9fd3126b5.webp' /></p><h3 style="text-align: justify; ">&nbsp;தீவிர விசாரணை</h3><p>
</p><p style="text-align: justify; ">


இந்நிலையில், சம்பவத்தன்று மனைவியுடன் காரில் புறப்பட்ட கணவர், வழியிலேயே மனைவியுடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">பின்னர், அவரை காரில் வைத்து கொலை செய்தார். கொலை செய்வதை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர்,&nbsp; கேசகோடு கிராமத்துக்கு சென்ற ரகு, தனது மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களுக்கு செல்போனில் வீடியோ அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு மனைவியை கொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
மேலும் கொலை வீடியோவையும் அவர்களுக்கு அனுப்பினார். தானும் தற்கொலை செய்து கொள்வதாக கூறிவிட்டு இணைப்பை தொடர்பை துண்டித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இதனால், அதிர்ச்சி அடைந்த அவர்கள் ரகுவை தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர். ஆனால், அவர் அழைப்பை எடுத்து பேசவில்லை.
</p><p style="text-align: justify; ">

இதையடுத்து, கேசகோடு கிராமத்தின் எல்லையில் சாலையோ ரத்தில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பொலிஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

 இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
</p><p style="text-align: justify; ">
இதற்கிடையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வீடியோ அழைப்பில் பேசியது தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.</p><p style="text-align: justify; "> இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-03T01:27:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதி விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளுக்கு சிக்கல் ; சட்ட நடவடிக்கை நிச்சயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/trouble-for-drivers-breaking-traffic-rules-1785707913"></link>
            <id>https://jvpnews.com/article/trouble-for-drivers-breaking-traffic-rules-1785707913</id>
            <summary type="text">மோட்டார் வாகன விபத்துக்களைத் தடுப்பதற்கும் சாரதிகளால் மேற்கொள்ளப்படும் விதிமீறல்களைக் கண்டறிவதற்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மோட்டார் வாகன விபத்துக்களைத் தடுப்பதற்கும் சாரதிகளால் மேற்கொள்ளப்படும் விதிமீறல்களைக் கண்டறிவதற்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன கேமரா அமைப்பைப் பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று வீதிப்போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுக்காப்பு பிரிவுப் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

இது குறித்து ஞாயிற்றுக்கிழமை (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef0050c4-6ae8-46d5-b843-e63560cdb1c4/26-6a6fbd8b2f8f6.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;புதிய கண்காணிப்பு நடைமுறை</h2><p style="text-align: justify; "> அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த புதிய கண்காணிப்பு நடைமுறையின் கீழ் வாகனங்களைச் செலுத்தும் போது தொலைபேசியில் பேசுவது அல்லது குறுஞ்செய்தி அனுப்புவது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடும் சாரதிகள் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கேமராக்கள் மூலம் துல்லியமாக அடையாளம் காணப்பட்டு படம் பிடிக்கப்படுவார்கள்.</p><p style="text-align: justify; ">

வழக்கமான கேமராக்களைப் போலன்றி, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் வீதி விதிமீறல்கள் உடனடியாகப் படம்பிடிக்கப்பட்டு சான்றுகளுடன் சேமிக்கப்படுவதால், தவறிழைக்கும் சாரதிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது.</p><p style="text-align: justify; ">

இத்திட்டம் முதற்கட்டமாக கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த 9 பிரதான சந்திப்புகள் மற்றும் வீதிகளில் ஆரம்பிக்கப்படவுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இதன் மூலம் கொழும்பு நகரில் இடம்பெறும் அதிகளவிலான போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் விபத்துக்களை வெகுவாகக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p style="text-align: justify; ">


இதேவேளை வீதி விபத்துக்களைக் கட்டுபடுத்தும் நோக்கில், வாகனங்களின் வேகத்தை கண்டறிவதற்காக புதிதாக 50 வேகமானி கருவிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதற்கு முன்னர் போக்குவரத்துப் பொலிஸாரால் 45 வேகமானி கருவிகள் மட்டுமே பயன்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 50 கருவிகள் சேர்க்கப்படுகின்றன. </p><p style="text-align: justify; ">45 இத்தகைய கருவிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள இந்த கருவிகளில் ஒன்றின் விலை சுமார் 33 இலட்சம் ரூபாவாகும் என்றார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-03T01:27:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட மாகாணத்தில் கட்டாக்காலி நாய்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/action-taken-on-stray-dogs-in-northern-province-1785698720"></link>
            <id>https://jvpnews.com/article/action-taken-on-stray-dogs-in-northern-province-1785698720</id>
            <summary type="text">வட மாகாணத்தில் வீதியோரங்களில் பெருகிவரும் கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வட மாகாணத்தில் வீதியோரங்களில் பெருகிவரும் கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட கருத்தடைச் செயற்றிட்டத்தில் இந்த ஆண்டு 7,606 நாய்களுக்குக் கருத்தடை சிகிச்சை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify;">

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழான கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களமும், உள்ளூராட்சி அமைச்சின் கீழான உள்ளூராட்சித் திணைக்களமும் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9d7d98d-9ea8-4484-93e6-896e5c16d0fc/26-6a6f99a218f61.webp' /></p><h2 style="text-align: justify;">கருத்தடை</h2><p>
</p><p style="text-align: justify;">
இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக இந்த ஆண்டு 15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், மாவட்ட ரீதியாகப் பின்வரும் எண்ணிக்கையான நாய்களுக்குக் கருத்தடை செய்யப்படவுள்ளது</p><p style="text-align: justify;"> 

யாழ். மாநகர சபை - 120 நாய்கள் ஏனைய யாழ். மாவட்ட உள்ளூராட்சி சபைகள் - 5,216 நாய்கள், கிளிநொச்சி மாவட்டம் (கரைச்சி தவிர்ந்த) - 350 நாய்கள்,&nbsp; முல்லைத்தீவு மாவட்டம் - 750 நாய்கள்,

வவுனியா மாவட்டம் (மாநகர சபை உள்ளடங்கலாக) - 1,170 நாய்களுக்குக் கருத்தடை செய்யப்படவுள்ளது</p><p style="text-align: justify; ">இச்செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக, வவுனியா மாவட்டத்தில் இதுவரை 72 நாய்களுக்கான கருத்தடை சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக நிறைவுறுத்தப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;">அதனைத் தொடர்ந்து, ஏனைய மாவட்டங்களிலும் இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;">
இதற்கமைவாக, நாளைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண மாநகர சபையிலும், நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்றுப் பிரதேச சபையிலும், எதிர்வரும் 23ஆம் திகதி வவுனியா மாநகர சபையிலும் இத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;"> 

அமைச்சரவை மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள புதிய 'விலங்கு நலச் சட்டத்தின்' ஏற்பாடுகளுக்கு அமைவாக, விலங்குகளின் உரிமைகள் மற்றும் நலன்களுக்கு அதியுயர் முன்னுரிமை வழங்கப்படுகின்றது.</p><p style="text-align: justify;">

விலங்குகளின் நலனைக் காப்பதன் ஊடாக ஆரோக்கியமானதொரு சமூகத்தை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்துக்கு, அனைத்துப் பொதுமக்களும் உரிய தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T01:26:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் பெண் பொலிஸ் உயரதிகாரி செய்த செயல் ; அதிரடி காட்டிய அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-police-officer-s-act-stuns-tamil-area-1785712122"></link>
            <id>https://jvpnews.com/article/woman-police-officer-s-act-stuns-tamil-area-1785712122</id>
            <summary type="text">இங்கினியாகல காவல் நிலையத்துக்கு பல்வேறு சேவைகள் ஊடாக வருமானமாகப் பெறப்பட்ட சுமார் 290,000 ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில், அதே காவல் நிலையத்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இங்கினியாகல காவல் நிலையத்துக்கு பல்வேறு சேவைகள் ஊடாக வருமானமாகப் பெறப்பட்ட சுமார் 290,000 ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில், அதே காவல் நிலையத்தில் கடமையாற்றிய பெண் பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
அம்பாறை பொலிஸ் விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fa5eca5-bbd6-429c-82e6-f5bb7750e474/26-6a6fcdfc34799.webp' /></p><h2 style="text-align: justify; ">நிதி முறைக்கேடு&nbsp;</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட உள்வாரி கணக்காய்வு பரிசோதனையின் போதே இந்த நிதி முறைக்கேடு கண்டறியப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
ஒலிபெருக்கி அனுமதிப்பத்திரங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மூலம் பெறப்படும் வருமானப் பணத்தை, அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ கணக்கில் முறையாக வைப்பிலிட வேண்டும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
எனினும், சந்தேகநபரான பெண் பொலிஸ் சார்ஜண்ட் காவல் நிலையத்துக்குப் பெறப்பட்ட அந்த பணத்தைச் வைப்பிலிடாது தவறியுள்ளமை கணக்காய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-03T01:07:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப் சொல்வது பொய் ; ஈரான் கொடுத்த பதிலடி ; எதற்கும் நாங்கள் தயார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-rejects-trump-s-claims-as-false-1785719124"></link>
            <id>https://canadamirror.com/article/iran-rejects-trump-s-claims-as-false-1785719124</id>
            <summary type="text">ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை எனத் தெரிவித்துள்ள ஈரான், தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவிடம் வேண்டுகோள் ஏதும் வை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை எனத் தெரிவித்துள்ள ஈரான், தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவிடம் வேண்டுகோள் ஏதும் வைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.</p><p>


கடந்த ஜூன் மாதம் ஈரான் - அமெரிக்கா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. எனினும் ஓமன் கடற்பகுதியில் வந்த வணிக கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதால், அந்த ஒப்பந்தத்தை அதிபர் ட்ரம்ப் ரத்து செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc491acf-6a88-4bf6-b23f-75a05003ebaf/26-6a6fe98ee699d.webp' /></p><p> </p><p>ஈரான் மீது மீண்டும் வான்வழி தாக்குதல்களையும் தீவிரப்படுத்தினார்.அதற்கு பதிலடி தரும் வகையில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் குறிவைத்து தாக்கியது.
</p><p>

கடந்த வாரம் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, ஈரான் மீது மிக கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் எச்சரித்திருந்தார். </p><p>அமெரிக்கா மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தினால், வளைகுடாவில் மேலும் பதற்றம் அதிகரிக்கும் என சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் கவலை தெரிவித்தார்.
</p><p>

அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் தொலைபேசியில் பேசிய அவர், ஈரானின் எரிபொருள் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தினால், பதிலுக்கு வளைகுடா நாடுகளில் உள்ள எரிபொருள் உள்கட்டமைப்புகளுக்கு ஈரான் குறிவைக்கும் என எச்சரித்ததாக கூறப்படுகிறது. </p><p>தவிர, ஈரானுடனான போரை முடிவுக்கு கொண்டு வர வளைகுடா நாடுகள் மத்தியஸ்தம் நடத்தி, புதிய அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தப் போவதாக அமெரிக்காவிடம் தெரிவித்தன.
</p><p>

இதையடுத்து, ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
</p><p>இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் கூறியதாவது:
உலக நாடுகளின் நலன் கருதியும், ஈரானின் எதிர்கால வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் புதிய தாக்குதல்களை ரத்து செய்ய ஒப்புக்கொண்டுள்ளேன். </p><p>ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளும் பணியில், அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட இஸ்ரேலும் ஒப்புக்கொண்டுள்ளது.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


ஆனால், இதனை மறுத்துள்ள ஈரான், அமெரிக்கா உடன் எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.</p><p> மேலும், அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடரும் வரை ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு தான் இருக்கும். </p><p>போரை நிறுத்தி வைக்க வேண்டும் என ஈரான் சொன்னதாக டிரம்ப் கூறுவது பொய்யைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. எதனையும் சமாளிக்க ஈரானிய படைகள் தயாராக உள்ளன எனத் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-03T01:06:26+00:00</updated>
        </entry>
    </feed>
