<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-13T14:36:32+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[FIFA தலைவருக்கான தேர்தலில் ஆபிரிக்க நாடுகளின் நிலைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fifa-election-african-votes-uncertain-infantino-1786627392"></link>
            <id>https://tamilwin.com/article/fifa-election-african-votes-uncertain-infantino-1786627392</id>
            <summary type="text">உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளை நடத்தும் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவிற்கு ஆபிரிக்க கால்பந்தாட்டக் கூட்டமைப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளை நடத்தும் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவிற்கு ஆபிரிக்க கால்பந்தாட்டக் கூட்டமைப்பு (CAF) ஆதரவு தெரிவித்துள்ளது.
</p><p>
எனினும், எதிர்வரும் தலைவர் தேர்தலில் ஆபிரிக்க நாடுகளின் அனைத்து வாக்குகளும் இன்ஃபான்டினோவிற்கு முழுமையாகக் கிடைப்பது உறுதியற்ற நிலையிலேயே உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.</p><h2>உலகக் கிண்ணப் போட்டி</h2><p>
</p><p>
எதிர்கால உலகக் கிண்ணப் போட்டிகளின் வர்த்தக உரிமைகளை விற்பனை செய்வது
தொடர்பான திட்டங்கள் தொடர்பில் இன்ஃபான்டினோவிற்கு எதிராக விமர்சனங்கள்
எழுந்துள்ளன.
</p><p>
இந்தச் சூழலில் ஆபிரிக்க கால்பந்தாட்டக் கூட்டமைப்பு அவருக்கு தனது
உத்தியோகபூர்வ ஆதரவை வழங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1341393a-528f-4841-ba12-e8c041184cc7/26-6a7dcc46c3b6b.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், கடந்த கால வரலாறுகளை நோக்கும்போது, ஆபிரிக்க நாடுகள் தமது
பிராந்தியக் கூட்டமைப்பின் தீர்மானத்தை மீறி தன்னிச்சையாக வாக்களிக்கும்
போக்கையே கொண்டுள்ளன.
</p><p>
கடந்த 1998 ஆம் ஆண்டு ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவருக்கு CAF ஆதரவளித்த
போதிலும், பெரும்பாலான ஆபிரிக்க நாடுகள் செப் பிளாட்டருக்கே வாக்களித்தன.
</p><p>
அதேபோன்று 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் CAF வேறு வேட்பாளரை
ஆதரித்த போதும், பல ஆபிரிக்க நாடுகளின் ஆதரவுடனேயே இன்ஃபான்டினோ வெற்றி
பெற்றிருந்தார்.</p><h2>வேட்புமனு தாக்கல்</h2><p>
</p><p>
மேலும், 2026 உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்தும் உரிமையை மொராக்கோவிற்கு வழங்க
CAF தீர்மானித்திருந்த நிலையிலும், 11 ஆபிரிக்க நாடுகள் வட அமெரிக்க கூட்டுப்
பெரும்பான்மைக்கே ஆதரவாக வாக்களித்திருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26496b34-65da-41f9-abbe-11532195aeae/26-6a7dcc47859f3.webp' /></p><p>
</p><p>
எதிர்வரும் மார்ச் மாதம் மொராக்கோவில் நடைபெறவுள்ள ஃபிஃபா தலைவர் தேர்தலில்
போட்டியிட விரும்புவோர் எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதிக்குள் தமது
வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும். மொத்தமுள்ள 211 உறுப்பு நாடுகளில்
106 வாக்குகளைப் பெறுபவரே வெற்றி பெறுவார்.</p><p>
தற்போதைக்கு எகிப்து, மொராக்கோ, நைஜர் மற்றும் கொங்கோ ஜனநாயகக் குடியரசு
போன்ற சில நாடுகள் இன்ஃபான்டினோவிற்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ள போதிலும்,
பலமான எதிரணி வேட்பாளர் ஒருவர் களமிறங்கும் பட்சத்தில் ஆபிரிக்க நாடுகளின்
வாக்குகள் மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T14:34:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே நாளில் 377 க்கும் மேற்பட்ட திருமணங்கள் ; குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் புதிய சாதனை !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/over-377-wedding-single-day-guruvayur-krishna-1786626355"></link>
            <id>https://jvpnews.com/article/over-377-wedding-single-day-guruvayur-krishna-1786626355</id>
            <summary type="text">&amp;nbsp; கேரளாவில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில், எதிர்வரும் 23 ஆம் திகதி ஒரே நாளில் 377 க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற முன்பதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கேரளாவில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில், எதிர்வரும் 23 ஆம் திகதி ஒரே நாளில் 377 க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
முன்பதிவுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அன்றைய தினம் நடைபெறும் திருமணங்களின் எண்ணிக்கை 400-ஐத் தாண்டி புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9944fb19-8bdc-43ef-a936-35238818c9d0/26-6a7dc1350080b.webp' /></p><h2>23 ஆம் திகதி மிகவும் சுபயோக நாள்</h2><p>

எதிர்வரும் 23 ஆம் திகதி மிகவும் சுபயோக நாளாகக் கருதப்படுவதால், ஒரே நாளில் நூற்றுக்கணக்கான தம்பதிகள் இங்கு திருமணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>
அதிக அளவிலான கூட்ட நெரிசலைச் சமாளிக்க, வழக்கமான நேரத்திற்கு மாறாக அதிகாலை 4 மணிக்கே திருமணச் சடங்குகளைத் தொடங்க ஆலய நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளததோடு ஆலயத்தில் பிரத்தியேகமாக 6 திருமண மண்டபங்கள் அமைக்கப்பட்டு, கூடுதல் பணியாளர்களும் பாதுகாப்புப் படையினரும் நியமிக்கப்படவுள்ளனர்.</p><p></p><p>

அதேவேளை கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், ஒரு திருமணக் குழுவில் மணமகன், மணமகள் மற்றும் படப்பிடிப்பாளர் உட்பட மொத்தம் 24 நபர்களுக்கு மட்டுமே மண்டபத்துக்கு அருகில் அனுமதி அளிக்கப்படும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

இதற்கு முன்னர் கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் திகதி ஒரே நாளில் 334 திருமணங்கள் நடைபெற்றமையே அதிகபட்ச சாதனையாக இருந்தது. தற்போது எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள திருமணங்கள் மூலம் அந்தப் பழைய சாதனை முறியடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-13T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - இஸ்ரேல் உறவில் விரிசல்! சர்வதேசத்தை அதிரவைத்த முசப் ஹசன் யூசுப்பின் கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cracks-in-us-israel-relations-1786630426"></link>
            <id>https://ibctamil.com/article/cracks-in-us-israel-relations-1786630426</id>
            <summary type="text">ஹமாஸ் அமைப்பின் ஸ்தாபகரின் புதல்வரான முசப் ஹசன் யூசுப், ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்ட 12 நாள் இராணுவ நடவடிக்கையை அமெரிக்கா முன்கூட்டியே தடுத்து ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹமாஸ் அமைப்பின் ஸ்தாபகரின் புதல்வரான முசப் ஹசன் யூசுப், ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்ட 12 நாள் இராணுவ நடவடிக்கையை அமெரிக்கா முன்கூட்டியே தடுத்து நிறுத்தியதாக கூறியுள்ளார்.
</p><p>
இஸ்ரேல் வெற்றி பெறும் நிலையில் இருந்தபோது அமெரிக்கா தலையிட்டது அந்நாட்டின் இராணுவ உத்திகளைப் பாதித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
இவ்வாறானதொரு பின்னணியில், காசா தொடர்பான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 15 அம்ச சமாதானத் திட்டத்தை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பகிரங்கமாக நிராகரித்தது, இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே ஒரு பனிப்போரை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
அந்த வகையில், அமெரிக்காவின் தலையீடு இஸ்ரேலின் வெற்றியைத் தடுத்துவிட்டதாக அந்நாட்டு மக்கள் கருதுவதும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள பெரு விரிசல் தொடர்பிலும் அலசி ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gJwLWLiY9mM" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T14:23:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுதந்திர தினத்தில் தொலைக்காட்சியில் விஜய், சூர்யா பட ஸ்பெஷல்... இரண்டு படத்திலும் த்ரிஷா...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/independence-day-vijay-suriya-special-movies-1786630002"></link>
            <id>https://cineulagam.com/article/independence-day-vijay-suriya-special-movies-1786630002</id>
            <summary type="text">சுதந்திர தினம்மக்களின் பொழுதுபோக்கு விஷயங்களில் முக்கிய பங்கு வகிக்கும் விஷயம் தான் தொலைக்காட்சி. சன், விஜய், ஜீ தமிழ் என ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சுதந்திர தினம்</h2><p>மக்களின் பொழுதுபோக்கு விஷயங்களில் முக்கிய பங்கு வகிக்கும் விஷயம் தான் தொலைக்காட்சி. </p><p>சன், விஜய், ஜீ தமிழ் என ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளார்கள். சன் டிவி என்றால் சீரியலுக்கும், விஜய் டிவி என்றால் ரியாலிட்டி ஷோக்களும் பேமஸாக உள்ளது. </p><p>சாதாரண நாட்களில் எப்போதும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் அதிகம் ஒளிபரப்பாகி வரும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/393c28ac-1c63-425a-a727-4dc11c9cd5c0/26-6a7dd32024f98.webp' /></p><p>
</p><h2>திரைப்படம்</h2><p>
வரும் ஆகஸ்ட் 15, சுதந்திர தினம், அந்த தினம் ஸ்பெஷல் என்றாலும் முதன்முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் கொடியேற்ற இருப்பதை பார்க்க மக்கள் ஆவலாக உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5575628a-6c61-4acf-8323-e6237a43e6e4/26-6a7dd32113b7f.webp' /></p><p>
</p><p>இந்த நிலையில் தொலைக்காட்சியிலும் ஆகஸ்ட் 15 ஸ்பெஷல் படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.
சன் டிவியில் சுதந்திர தினம் அன்று மாலை 6.30 மணிக்கு விஜய் த்ரிஷா நடித்த லியோ திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. </p><p>அதேபோல் ஜீ தமிழில் ஆகஸ்ட் 15 சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியாகி மாஸ் வெற்றியடைந்த கருப்பு திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளதாம்.
இந்த இரண்டு படத்திலுமே த்ரிஷா நடித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-13T14:22:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பம் - பல என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-excavation-enters-51st-day-of-phase-three-1786629979"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-excavation-enters-51st-day-of-phase-three-1786629979</id>
            <summary type="text">செம்மணியில் மூன்றாம் கட்டத்தின்&amp;nbsp; 51 ஆவது நாள் அகழ்வுப் பணிகள் இன்று(13.08.2026) முன்னெடுக்கப்பட்டது.இதன்போது புதிதாக 08 என்பு கூடுகள் அடையாளம் கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணியில் மூன்றாம் கட்டத்தின்&nbsp; 51 ஆவது நாள் அகழ்வுப் பணிகள் இன்று(13.08.2026) முன்னெடுக்கப்பட்டது.</p><p>இதன்போது புதிதாக 08 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்துடன் இன்று 10 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டு, நீதிமன்ற&nbsp; காவலுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>51ஆவது நாள் அகழ்வுப் பணி</h2><p>செம்மணியில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட முதலாம், இரண்டாம்
மற்றும் மூன்றாம் கட்டங்களாக 105 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு
பணிகளின் போது, 552 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. </p><p>அவற்றில் 540
என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ed19194-7af5-45ab-884a-93d774ef9029/26-6a7dd0851e62f.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T14:20:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கஞ்சாவுடன் பிரபல பாடசாலை மாணவன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/school-student-arrested-with-cannabis-1786629626"></link>
            <id>https://ibctamil.com/article/school-student-arrested-with-cannabis-1786629626</id>
            <summary type="text">பதுளை – லுணுகலை பகுதியில் பிரபல பாடசாலையொன்றில் சாதாரணதரத்தில் கல்விகற்கும் 16 வயதுடைய மாணவன் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.


அவரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதுளை – லுணுகலை பகுதியில் பிரபல பாடசாலையொன்றில் சாதாரணதரத்தில் கல்விகற்கும் 16 வயதுடைய மாணவன் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.


அவரிடமிருந்து 5,600 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.</p><p>&nbsp; லுணுகலை – 27ஆம் கட்டை, அலகொலகம பகுதியை குறித்த மாணவன் வசிப்பிடமாக கொண்டுள்ளார்.</p><h2>&nbsp;காவல்துறைக்கு ஏற்பட்ட சந்தேகம்</h2><p>முச்சக்கர வண்டியிலிருந்து இறங்கி பாக்குத் தோட்டம் பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, காவல்துறைக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் அவரை மறித்துச் சோதனையிட்டபோதே அவரிடமிருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0e068cf-f65e-4b31-8a95-4f35209500f3/26-6a7dd2799d6ee.webp' /></p><p>

விசாரணைகளின்போது, கைது செய்யப்பட்ட மாணவனின் தந்தை கஞ்சா விற்பனை தொடர்பில் ஏற்கனவே பலமுறை கைது செய்யப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. </p><p>சந்தேகத்திற்கிடமான மாணவனை பசறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T14:19:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்வானில் முடங்கிய வீதிகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட இணையச் சேவை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/streets-deserted-and-internet-service-taiwan-1786628834"></link>
            <id>https://tamilwin.com/article/streets-deserted-and-internet-service-taiwan-1786628834</id>
            <summary type="text">தாய்வானில்
முன்னெடுக்கப்பட்டு வரும் வருடாந்த ‘ஹான் குவாங்’ இராணுவப் பயிற்சியின் ஒரு
பகுதியாகத் தலைநகர் தாய்பேயில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்வானில்
முன்னெடுக்கப்பட்டு வரும் வருடாந்த ‘ஹான் குவாங்’ இராணுவப் பயிற்சியின் ஒரு
பகுதியாகத் தலைநகர் தாய்பேயில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலிகள்
எழுப்பப்பட்டு, வீதிகள் அமைதியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>சீன படையெடுப்பு அபாயத்தை எதிர்கொள்ளும் வகையில் 10 நாட்கள் நடத்தப்படும்
இந்தப் பயிற்சியின் போது, தாக்குதல் சூழலை செயற்கையாக உருவாக்கிப்
பரிசோதிப்பதற்காக மொபைல் இணையச் சேவையின் வேகம் அரசாங்கத்தினால் திட்டமிட்டபடி
கட்டுப்படுத்தப்பட்டது.
</p><p>
சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்த இந்த இணைய வேகக் கட்டுப்பாட்டின் போது,
நிலையான இணைய இணைப்புகள் மற்றும் வைஃபை (Wi-Fi) சேவைகள் தடையின்றி இயங்கின.</p><p></p><h2>போலி வான்வழித் தாக்குதல்</h2><p>
</p><p>
போலி வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வீதிகளில்
பயணித்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன்,
வாகனங்களும் வீதியோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டன.</p><p>

இதன்போது, தாய்வான் ஜனாதிபதி லாய் சிங்-தே மற்றும் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட
வெளிநாட்டுத் தூதுவர்கள் பலரும் அவசர மருத்துவ முகாமாக மாற்றப்பட்ட இடங்கள்
மற்றும் உணவுப் பொருட்கள் விநியோக மையங்களைப் பார்வையிட்டனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bff562e-4c26-4390-93e0-adbd62ae3695/26-6a7dcec17161b.webp' /></p><p>இதேவேளை, சீனாவின் முற்றுகை முயற்சிகளை எதிர்கொள்ளும் வகையில் தாய்வான்
கடற்படை மற்றும் கடலோரக் காவல்படை இணைந்து முதல்முறையாக கப்பல்களுக்குப்
பாதுகாப்பு அளிக்கும் கூட்டுப் பயிற்சியையும் மேற்கொண்டுள்ளன.
</p><p>
பிராந்தியத்தில் ஏற்பட்டு வரும் பூகோள அரசியல் மாற்றங்களுக்கு சர்வதேச
சமூகத்தின் ஆதரவுடன் தாய்வான் பதிலளித்து வருவதாக அதிபர் லாய் சிங்-தே
தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T14:04:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கஞ்சாவுடன் 16 வயது பாடசாலை மாணவன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/16-year-old-school-student-arrested-with-cannabis-1786627844"></link>
            <id>https://jvpnews.com/article/16-year-old-school-student-arrested-with-cannabis-1786627844</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பதுளை – லுணுகலை பகுதியில் 5,600 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளை தன்னிடம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், 16 வயதுடைய பாடசாலை மாணவனொருவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பதுளை – லுணுகலை பகுதியில் 5,600 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளை தன்னிடம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், 16 வயதுடைய பாடசாலை மாணவனொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
லுணுகலை – 27 கட்டை, அலகொலகம பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன், அப்பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bcbe7f5-9da0-44a5-9175-1ea6ba934fbd/26-6a7dc7061dc91.webp' /></p><p>

முச்சக்கர வண்டியிலிருந்து இறங்கி பாக்குத் தோட்டம் பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, பொலிஸாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் அவரை மறித்துச் சோதனையிட்டபோதே அவரிடமிருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
விசாரணைகளின்போது, கைது செய்யப்பட்ட மாணவனின் தந்தை கஞ்சா விற்பனை தொடர்பில் ஏற்கனவே பலமுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. </p><p>

சந்தேகத்திற்கிடமான மாணவனை பசறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப் லுணுகலை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்தியகிழக்கில் இரகசியமாக குவிக்கப்படும் அமெரிக்க துருப்புக்கள்! எழுந்தது தரைவழி தாக்குதல் அச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fears-ground-attack-as-us-troops-middle-east-rise-1786626659"></link>
            <id>https://ibctamil.com/article/fears-ground-attack-as-us-troops-middle-east-rise-1786626659</id>
            <summary type="text">எதிர்கால நடவடிக்கைகளுக்கான தனது விருப்பங்களை விரிவுபடுத்தும் வகையில் அமெரிக்கா மத்திய கிழக்கில் கூடுதல் இராணுவப் பணியாளர்களை குவித்து வருவதாக மாத்திக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்கால நடவடிக்கைகளுக்கான தனது விருப்பங்களை விரிவுபடுத்தும் வகையில் அமெரிக்கா மத்திய கிழக்கில் கூடுதல் இராணுவப் பணியாளர்களை குவித்து வருவதாக மாத்திக்க கிழக்கில் பாதுகாப்பு விவகாரங்களை ஆய்வு செய்த ஆய்வாளர் மைக்கேல் ஸ்டீபன்ஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஈரானுடனான மோதலில் தற்போதைய நிலை தெளிவான வெற்றியோ தோல்வியோ இல்லாமல் முட்டுக்கட்டையாக நீடித்து வரும் நிலையில் அமெரிக்க இந்த நகர்வை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
</p><p>
அமெரிக்க விமானப்படையைச் சேர்ந்த சில பணியாளர்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அனுப்பப்படுவதற்காக அழைக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு அறிக்கைகளை மேற்கோள்கட்டி அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><p></p><h2>தெளிவில்லா படை குவிப்பு&nbsp;</h2><p>
</p><p>
அமெரிக்கா இந்தப் பிராந்தியத்தில் தனது பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இது ஒருவிதமான இராணுவக் குவிப்பு நடைபெறுவதற்கான அறிகுறியாக இருக்கிறது.” என அவர் விளக்கமளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4677ddf3-c176-49e1-8066-c57463ed60f9/26-6a7dc63ebba6a.webp' /></p><p>
</p><p>
எனினும், அமெரிக்கா கூடுதல் படைகளை எந்த குறிப்பிட்ட நோக்கத்திற்காக குவிக்கிறது என்பது தற்போது தெளிவாகவில்லை எனவும் ஸ்டீபன்ஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>
இது உடனடி தரைத் தாக்குதலுக்கான தயாரிப்பா, தற்போதுள்ள அமெரிக்க தளங்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையா அல்லது எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பல்வேறு சூழ்நிலைகளுக்கு தயாராகும் நடவடிக்கையா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
அமெரிக்கா தற்போது ஈரானுக்குள் முழுமையான தரைப்படையெடுப்பை நடத்தி வெற்றியை எதிர்பார்ப்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதே தனது மதிப்பீடு என்றும் ஸ்டீபன்ஸ் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஈரான் மீதான நேரடி ஆக்கிரமிப்பு</h2><p>
</p><p>
அவரது கருத்துப்படி, ''ஈரான் மீதான நேரடி ஆக்கிரமிப்பு மிகப்பெரிய இராணுவ, அரசியல் மற்றும் பிராந்திய சவால்களை உருவாக்கக்கூடும்.

அமெரிக்கா தனது இராணுவ விருப்பங்களை அதிகரித்துக் கொண்டிருப்பது, உடனடியாக ஈரானை ஆக்கிரமிக்கப் போகிறது என்பதற்கான உறுதியான அறிகுறியாகக் கருத முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd440b76-2644-4cfa-900a-bf5fc7027464/26-6a7dc63f7f475.webp' /></p><p>

தற்போது யாரும் வெற்றி பெறுகிறார்கள் என்று நான் நினைக்கவில்லை. நாம் முற்றிலும் முட்டுக்கட்டையில் இருக்கிறோம்.
</p><p>
அதாவது, அமெரிக்காவும் ஈரானும் தங்களது முக்கிய இலக்குகளை முழுமையாக அடைய முடியாத நிலையில், மோதல் நீடித்துக் கொண்டிருக்கின்றது" என அவரது மதிப்பீடு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T13:47:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைது செய்யப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள்! காவல்துறை வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/1093-foreign-nationals-arrested-so-far-this-year-1786627317"></link>
            <id>https://ibctamil.com/article/1093-foreign-nationals-arrested-so-far-this-year-1786627317</id>
            <summary type="text">இணையவழிக் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 1,093 வெளிநாட்டுப் பிரஜைகளை இந்த ஆண்டில் இதுவரை நடத்தப்பட்ட 24 சோதனைகளின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இணையவழிக் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 1,093 வெளிநாட்டுப் பிரஜைகளை இந்த ஆண்டில் இதுவரை நடத்தப்பட்ட 24 சோதனைகளின் போது இலங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
</p><p>
ஒன்றிணைந்த நாடு என்ற தேசிய நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இன்று (13) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காவல்துறை பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
</p><p>
அவரது கூற்றுப்படி, 2024 ஆம் ஆண்டில் 26 சம்பவங்களில் 573 வெளிநாட்டவர்களும், 2025 ஆம் ஆண்டில் இரண்டு சம்பவங்களில் 26 வெளிநாட்டவர்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.</p><p>EQYFWW6&nbsp;</p><h2>சட்ட நடவடிக்கைகள்</h2><p>
எனினும், இந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 24 சோதனைகளில் 1,093 வெளிநாட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdc7c587-59bf-4c40-b623-70fc51055e0e/26-6a7dc8e4e8aff.webp' /></p><p>

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களை அவரவர் நாடுகளுக்கு நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக உதவி காவல்துறை அத்தியட்சகர் வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T13:46:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வத்தளை பிறந்த நாள் கொண்டாட்டத்தில் படுகொலை - இந்தியாவில் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-suspects-of-wattala-murder-arrested-in-india-1786622918"></link>
            <id>https://tamilwin.com/article/two-suspects-of-wattala-murder-arrested-in-india-1786622918</id>
            <summary type="text">கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளை, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடரடபில் இரண்டு சந்தேகநபர்கள் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளை, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடரடபில் இரண்டு சந்தேகநபர்கள் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.</p><p>

கதிரன பகுதியில் பிறந்தநாள் விழாவொன்றின் போது நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
விசேட நடவடிக்கையின் போதே இவர்கள் இருவரும் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
</p><h2><b>
இருவர் கைது</b></h2><p>இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85a6ef59-1dea-4fb4-ad66-d5bcd05c1fba/26-6a7dc9bc6feb2.webp' /></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-13T13:42:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் அநுர அரசாங்கத்தின் நகர்வுகள்! அரசியலுக்குள் இருக்கும் படுகொலையாளிகள் அச்சத்தில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-opposition-is-scared-1786611288"></link>
            <id>https://tamilwin.com/article/the-opposition-is-scared-1786611288</id>
            <summary type="text">படுகொலைகள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் அதனோடு தொடர்புடைய பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கலக்கமடைந்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>படுகொலைகள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் அதனோடு தொடர்புடைய பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கலக்கமடைந்துள்ளனர் என்று பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>நீதிபதிகளின் பதவிக் காலத்தை அதிகரிக்கும் தீர்மானத்தை நாட்டு மக்கள் வரவேற்றுள்ளார்கள்.</p><p> நீதித்துறை மற்றும் விசாரணை கட்டமைப்பு தொடர்பில் எவ்வழியிலாவது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை பலவீனப்படுத்தி அதனூடாக தம்மை பாதுகாத்துக்கொள்ளவே எதிர்க்கட்சியினர் முயற்சிக்கிறார்கள். நாட்டு மக்கள் அதற்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை.</p><h3>எதிர்க்கட்சியினரின் விமர்சனம்&nbsp;</h3><p>முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவை அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தி சட்டவிரோதமான முறையில் பதவி நீக்கியவர்கள் இன்று நீதித்துறையின் சுயாதீனம் பற்றி பேசுவது நகைப்புக்குரியது. </p><p>நீதித்துறைக்கு எதிராக செயற்பட்டால் அதன் பாதிப்பு எவ்வாறானதாக அமையும் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். ஆகவே எதிர்க்கட்சியினர் அச்சம் கொள்ளத் தேவையில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d5669b0-40f0-4b8e-b2f4-25a925f77b50/26-6a7d92c5e01bc.webp' /></p><p>ஆகவே நீதித்துறையின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல் மற்றும் பாதிப்பு ஏற்படும் வகையில் ஒருபோதும் செயற்படப் போவதில்லை.</p><p>

படுகொலைகள், ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் அந்த குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் தற்போது கலக்கமடைந்து விசாரணை அதிகாரிகள் மீதும், நீதித்துறை கட்டமைப்பின் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T13:40:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் முதல் தனியார் பிராண்டட் ரயில் - Sprite Tejas Express]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indias-first-private-branded-train-sprite-launched-1786627812"></link>
            <id>https://news.lankasri.com/article/indias-first-private-branded-train-sprite-launched-1786627812</id>
            <summary type="text">India&#039;s first private branded train: இந்தியாவின் முதல் தனியார் பிராண்டட் ரயில் அறிமுகமாகிறது.இந்திய ரயில்வேயின் புதிய முயற்சியாக, தனது பிரீமியம் ரயில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>India's first private branded train: இந்தியாவின் முதல் தனியார் பிராண்டட் ரயில் அறிமுகமாகிறது.</p><p>இந்திய ரயில்வேயின் புதிய முயற்சியாக, தனது பிரீமியம் ரயில்களில் ஒன்றான லக்னோ - டெல்லி - லக்னோ தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு Sprite பிராண்டிங் வழங்கியுள்ளது.
</p><p>
இதன் மூலம், இந்தியாவில் முதல் முறையாக ஒரு பயணிகள் ரயில் தனியார் பிராண்டட் ரயிலாக இயங்குகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3af08b75-c338-4001-bebe-8fb9e787ca96/26-6a7dc9d0911fe.webp' /></p><p>
</p><h2>
ஆறு மாதங்களுக்கு விளம்பர உரிமை</h2><p>இந்த திட்டத்தின் கீழ், IRCTC நிறுவனம் Sprite நிறுவனத்துக்கு ஆறு மாதங்களுக்கு விளம்பர உரிமையை வழங்கியுள்ளது.</p><p> ஆகஸ்ட் 19 முதல் நவம்பர் 11, 2026 வரை, ரயில் எண் 82501 மற்றும் 82502 Sprite Tejas Express என அழைக்கப்படும்.

இது ரயில்வேவிற்கு புதிய வருவாய் வாய்ப்புகளை உருவாக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p> ஏற்கனவே ரயில்வே நிலையங்கள், ரயில்கள் மற்றும் பிற சொத்துகளில் விளம்பரங்கள் மூலம் வருவாய் ஈட்டுகிறது. இப்போது, ரயிலின் பெயரே ஒரு பிராண்டுடன் இணைக்கப்படுவது, பயணிகளுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.</p><p></p><p>
</p><h2>
தேஜஸ் எக்ஸ்பிரஸ்</h2><p>தேஜஸ் எக்ஸ்பிரஸ், இந்தியாவின் பிரீமியம் ரயில்களில் ஒன்றாகும். பயணிகளுக்கான உணவு, பானங்கள், பொழுதுபோக்கு வசதிகள் உள்ளிட்ட நவீன சேவைகள் இதில் வழங்கப்படுகின்றன. </p><p>மேலும், குழு முன்பதிவு வசதி உள்ளதால், நிறுவன கூட்டங்கள், திருமணங்கள் போன்ற நிகழ்வுகளுக்காக முழு AC Chair Car coach-ஐ முன்பதிவு செய்யலாம்.</p><p>

இந்த ரயில் முதன்முதலில் 2021 டிசம்பர் 3 அன்று, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களால் தொடங்கப்பட்டது. </p><p></p><p>இப்போது Sprite பிராண்டிங் மூலம், இந்திய ரயில்வே தனது வருவாய் வாய்ப்புகளை விரிவுபடுத்தும் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
</p><p>
இந்த முயற்சி, டிக்கெட் விலையை உயர்த்தாமல் ரயில்வேக்கு கூடுதல் வருவாய் ஈட்டும் வழியை உருவாக்கும். இது எதிர்காலத்தில் மற்ற ரயில்களுக்கும் தனியார் பிராண்டிங் வாய்ப்புகளைத் திறக்கக்கூடும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T13:40:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூளைச்சாவடைந்தவர்களின் உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி யாழில் விழிப்புணர்வு நடை பயணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-walk-promotes-kidney-donation-1786626249"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-walk-promotes-kidney-donation-1786626249</id>
            <summary type="text">உலக உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை
மற்றும் வட மாகாண உறுப்பு மாற்று சிகிச்சை சங்கத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை
மற்றும் வட மாகாண உறுப்பு மாற்று சிகிச்சை சங்கத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைப்பயணம் ஒன்று நடைபெற்றுள்ளது.
</p><p>
மூளைச்சாவடைந்தவர்களின் உறுப்புகளை தானமாக வழங்குவதன் முக்கியத்துவம்
தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நடைப்பயணம்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><h2>மூளைச்சாவு</h2><p>

விபத்து ஒன்றின் காரணமாக ஏற்படும் கடுமையான தலைக்காயம் அல்லது மூளையில்
திடீரென ஏற்படும் இரத்தக்கசிவு, மூளைச் சிதைவு போன்ற காரணங்களால் சில
சந்தர்ப்பங்களில் மூளையின் அனைத்து முக்கிய செயல்பாடுகளும் நிரந்தரமாக செயலிழக்கக்கூடும்.
</p><p>
இவ்வாறு மூளையின் செயற்பாடுகள் முழுமையாகவும் நிரந்தரமாகவும்
நிறுத்தப்பட்டிருப்பது மருத்துவ ரீதியான உரிய பரிசோதனைகள் மூலம் உறுதி
செய்யப்பட்டால், அந்த நிலை மூளைச்சாவு (Brain Death) என அழைக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/682fc2ce-8a10-4fc4-a4ed-8b6dd1cac6e9/26-6a7dc33d1f8db.webp' /></p><p>

மூளைச்சாவடைந்த ஒருவரின் இதயம் உள்ளிட்ட சில உறுப்புகள், செயற்கை சுவாசம்
மற்றும் தீவிர சிகிச்சை உதவிகளின் காரணமாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு
தொடர்ந்து இயங்கக்கூடும்.</p><p> 

இதனால் அவர் உயிருடன் இருப்பது போன்ற தோற்றம்
ஏற்படலாம். ஆனால் மூளைச்சாவு என்பது மீள முடியாத நிலையாகும். மூளை மீண்டும்
செயல்பட செய்வதற்கான சிகிச்சை இல்லை.</p><p>

எனவே, மூளைச்சாவு உறுதி செய்யப்பட்ட பின்னர் தொடர்ந்து வழங்கப்படும் தீவிர
சிகிச்சையின் நோக்கம் மூளையை மீண்டும் செயல்பட செய்வது அல்ல.</p><h2>உறுப்பு தானம்&nbsp;</h2><p> 

சட்டரீதியான
நடைமுறைகளுக்கும் குடும்பத்தினரின் சம்மதத்திற்கும் அமைவாக, தானம்
செய்யக்கூடிய உறுப்புகளை பாதுகாத்து, அவற்றை உறுப்பு மாற்று சிகிச்சை
தேவைப்படும் நோயாளிகளுக்கு வழங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதே முக்கிய
நோக்கமாக அமைகிறது.</p><p>
ஒருவரின் உயிரைக் காப்பாற்ற முடியாத துயரமான தருணத்திலும், அவரது உறுப்புகள்
மூலம் பலருக்கு புதிய வாழ்வை வழங்க முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0681b62b-e93a-4036-8746-b0850621686f/26-6a7dc33ded15a.webp' /></p><p>

ஒருவரின் சிறுநீரகம் மற்றொருவருக்கு புதிய வாழ்க்கையை வழங்கலாம். இதயம்
ஒருவரின் வாழ்க்கையை மீண்டும் துடிக்கச் செய்யலாம். கல்லீரல், நுரையீரல்
உள்ளிட்ட பல்வேறு உறுப்புகள் உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு நம்பிக்கையாக
அமையலாம்.</p><p>

“நாம் மறைந்தாலும் நமது உறுப்புகள் மூலம் இன்னொருவர் வாழட்டும்” என்ற உயரிய
எண்ணத்துடன் உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில்
ஏற்படுத்துவதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.</p><p>
உறுப்பு தானம் என்பது வெறும் தானம் அல்ல, அது ஒரு மனிதன் மறைந்த பின்னரும்
மற்றொரு மனிதனின் வாழ்க்கையில் தொடர்ந்தும் வாழ்வதற்கான உன்னதமான மனிதநேயச்
செயல்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T13:35:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் கணவன் தாக்குதலை தடுத்ததால் தூக்கிலிடப்பட்ட 23 வயதான இளம் பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/23-year-old-marzieh-nieri-hanged-in-iran-1786598914"></link>
            <id>https://canadamirror.com/article/23-year-old-marzieh-nieri-hanged-in-iran-1786598914</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரானில் பாலியல் தாக்குதலுக்கு முயன்ற ஒருவரிடமிருந்து தற்காப்புக்காகச் செயல்பட்டதாகக் கூறிய 23 வயதான மர்ஸியே நெய்ரி தூக்கிலிடப்பட்டுள்ளார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரானில் பாலியல் தாக்குதலுக்கு முயன்ற ஒருவரிடமிருந்து தற்காப்புக்காகச் செயல்பட்டதாகக் கூறிய 23 வயதான மர்ஸியே நெய்ரி தூக்கிலிடப்பட்டுள்ளார்.


அந்தத் தண்டனை 2026 ஆகஸ்ட் 8 அதிகாலை கஸ்வின் மத்திய சிறையில் நிறைவேற்றப்பட்டது.
</p><p>
குடும்ப அழுத்தத்தின் காரணமாக தனது 17-வது வயதில் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படும் நெய்ரி, 2021 அக்டோபரில் தனக்கு 18 வயதாக இருந்தபோது, மதுபோதையில் இருந்த தனது கணவரின் தொழில் கூட்டாளி ஒருவர் தன்னை பாலியல் ரீதியாகத் தாக்க முயன்றதாக தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd10c2e8-b983-4edb-83d4-a96bdcbd7c7f/26-6a7d5603f3682.webp' /></p><h2>கணவரின் தொழில் கூட்டாளி&nbsp;&nbsp;பாலியல் துன்புறுத்தல்</h2><p> 

அப்போது தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சமையலறைக் கத்தியைப் பயன்படுத்தியதாகவும், ஏற்பட்ட மோதலில் அந்த நபரும் தனது கணவரும் உயிரிழந்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.</p><p> 

சம்பவத்துக்குப் பின்னர் சில நாட்களில் அதிகாரிகளிடம் சரணடைந்த அவர், தனது செயல் தற்காப்புக்காக மேற்கொள்ளப்பட்டது என வாதிட்டபோதும், ஈரான் நீதிமன்றங்கள் அந்த வாதத்தை ஏற்கவில்லை. </p><p>

இதையடுத்து, ஈரானின் ‘கிசாஸ்’ எனப்படும் பழிக்குப் பழி சட்ட நடைமுறையின் கீழ் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 


 2026ஆம் ஆண்டில் இதுவரை ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண்களின் எண்ணிக்கை குறைந்தது 14 ஆக உயர்ந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. </p><p>

தன்னை பாலியல் ரீதியாகத் தாக்க முயன்ற ஒருவரைக் கொன்றதாகக் கூறப்பட்ட வழக்கில் 2014ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்ட ரெய்ஹானே ஜப்பாரியின் வழக்குடன் நெய்ரியின் வழக்கும் ஒப்பிடப்படுகிறது.
</p><p>
 ஈரானின் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தில் ‘கிசாஸ்’ உள்ளிட்ட நடைமுறைகள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் சட்டப் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.</p><p>

 இருப்பினும், நெய்ரி பாலியல் தாக்குதலுக்கு உள்ளானார் என்பது நீதிமன்றத்தால் நிரூபிக்கப்படவில்லை ஆனால் அவர் முன்வைத்தது தற்காப்பு வாதம் என்று செய்திகள் கூறுகிறது</p>]]></content>
            <updated>2026-08-13T13:34:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ரிஷாட் எம்.பி – ஜெகதீஸ்வரன் எம்.பி இடையே வாக்குவாதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rishad-jagadeeswaran-argument-mannar-coordination-1786627085"></link>
            <id>https://tamilwin.com/article/rishad-jagadeeswaran-argument-mannar-coordination-1786627085</id>
            <summary type="text">மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று(13)நடைபெற்றபோது நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன்
மற்றும் ஜெகதீஸ்வரன் ஆகியோருக்கு இடையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று(13)நடைபெற்றபோது நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன்
மற்றும் ஜெகதீஸ்வரன் ஆகியோருக்கு இடையில் கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டது.
</p><p>
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மின்சாரம் தடைப்படுவதால் மக்கள்
எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டபோது,
“மின்வெட்டை பற்றி நாங்கள் கதைக்கக் கூடாதா என ரிஷாட் பதியுதீன் கேள்வி
எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டது.</p><p>

இதன்போது பதிலளித்த ஜெகதீஸ்வரன், கடந்த அரசாங்கங்களில் அமைச்சர்களாகவும்
அபிவிருத்திக் குழுத் தலைவர்களாகவும் இருந்தவர்கள், தற்போதைய நிலைமை தொடர்பாக
கேள்வி எழுப்புவது குறித்து கருத்து தெரிவித்தார்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">வாக்குவாதம்</span></p><p>

இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் வார்த்தைப் பரிமாற்றம்
தீவிரமடைந்ததுடன், கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61057bfb-594e-4e43-84be-d733a1da3658/26-6a7dc6a8b855c.webp' /></p><p>

நிலைமை மேலும் தீவிரமடையாத வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும்
மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் ஆகியோர் தலையிட்டு இருவரையும்
சமரசப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் மின்சாரத் தடைக்கு நிரந்தரத்
தீர்வு காணப்பட வேண்டும் என்பதே மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ள நிலையில்,
இந்த விவகாரம் தொடர்பான கலந்துரையாடல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும்
சூடுபிடித்துள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T13:33:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதறவைத்த சம்பவம் ;சிறுமி ஒருவரை அனாதரவாக வீதியில் விட்டு சென்ற முச்சக்கர வண்டி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wattegama-abandoned-girl-on-the-road-1786612004"></link>
            <id>https://jvpnews.com/article/wattegama-abandoned-girl-on-the-road-1786612004</id>
            <summary type="text">&amp;nbsp; கண்டி - வத்தேகம பொலிஸ் பிரிவுக்குள் உள்ள யட்டிராவன பிரதேசத்தில் இன்று காலை (13) சிறுமி ஒருவரை முச்சக்கர வண்டி வண்டியில் கொண்டு வந்தவர்கள் வீதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கண்டி - வத்தேகம பொலிஸ் பிரிவுக்குள் உள்ள யட்டிராவன பிரதேசத்தில் இன்று காலை (13) சிறுமி ஒருவரை முச்சக்கர வண்டி வண்டியில் கொண்டு வந்தவர்கள் வீதியில் இறக்கிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 

தாக்கப்பட்டுள்ள நிலையில் வத்தேகம பொலிஸாரால் மீட்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29c41275-2ac9-4a11-b3af-bfbe0ad50d92/26-6a7da008376f2.webp' /></p><h2>தொடர்ச்சியான துன்புறுத்தல்களுக்கான காயங்கள்</h2><p>
இந்த நிலையில், பத்து வயதிற்கு உட்பட்ட குறித்த சிறுமி தனது பெயர் ஆயிஷா எனவும் தனது தந்தையின் பெயர் ராசிக் எனவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
 சிறுமியில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார் , சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக வத்தேகம பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p>பெற்றோரே இவரைக் கைவிட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான விசேட தேடுதல் வேட்டையைச் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
</p><p>
மேலும், அச்சிறுமியின் உடலில் தொடர்ச்சியான துன்புறுத்தல்களுக்கான காயங்கள் மற்றும் அடையாளங்கள் காணப்படுவதால், இது குறித்த விரிவான மருத்துவ அறிக்கையைப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது</p>]]></content>
            <updated>2026-08-13T13:32:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரீட்சை மண்டபத்தில் கண்டெடுக்கப்பட்ட உயர்தர பரீட்சை வினாத்தாள் பொதிகள் தொடர்பில் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/6-packets-tomorrow-s-al-question-paper-today-1786624615"></link>
            <id>https://tamilwin.com/article/6-packets-tomorrow-s-al-question-paper-today-1786624615</id>
            <summary type="text">அம்பலாந்தோட்டையில் உள்ள ஒரு உயர்தர பரீட்சை மையத்தில், நாளை (14) நடைபெறவிருந்த முதல் இயற்பியல் வினாத்தாள் அடங்கிய ஆறு பொதிகள் வினாத்தாள் கொள்கலனில் கண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பலாந்தோட்டையில் உள்ள ஒரு உயர்தர பரீட்சை மையத்தில், நாளை (14) நடைபெறவிருந்த முதல் இயற்பியல் வினாத்தாள் அடங்கிய ஆறு பொதிகள் வினாத்தாள் கொள்கலனில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து கல்வி அமைச்சு விசாரணையைத் தொடங்கியுள்ளது.</p><p>

இருப்பினும், வினாத்தாள்கள் அடங்கிய பொதிகள் வெளியிடப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
</p><h2>மற்றொரு பாடத்திற்கான 6 வினாத்தாள்</h2><p>
தற்போது க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நடைபெற்று வருகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17f37d02-27e5-432a-ba32-2c34b794179d/26-6a7dc73ddcef1.webp' /></p><p>
இந்நிலையில், அம்பலாந்தோட்டையில் உள்ள ஒரு பாடசாலையில், இன்று நடைபெறும் பாடங்களைத் தவிர, நாளை நடைபெறவிருந்த மற்றொரு பாடத்திற்கான 6 வினாத்தாள் பொதிகள் வினாத்தாள் கொள்கலனில் கண்டெடுக்கப்பட்டடுள்ளது.</p><p>நாளை நடைபெறவிருக்கும் இயற்பியல் பாடத்தின் முதல் வினாத்தாள் அடங்கிய ஆறு பொதிகள், இன்று நடைபெற்று வரும் இசை, நடனம் மற்றும் விவசாய விஞ்ஞான பாடங்களுக்கான வினாத்தாள் பொதிகள் இருந்த கொள்கலன்களில் கண்டெடுக்கப்பட்டன.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T13:32:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[துருவ் விக்ரமைதான் அனுபமா சொன்னது..அயோக்கியத்தனம்!! வெளுத்துவிட்ட பிரபலம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/anupama-parameswaran-s-love-life-controversy-1786627141"></link>
            <id>https://viduppu.com/article/anupama-parameswaran-s-love-life-controversy-1786627141</id>
            <summary type="text">அனுபமா பரமேஸ்வரன்தென்னிந்திய நடிகை அனுபமா பரமேஸ்வரன், கேரள யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியொன்றில், தன்னுடைய முன்னாள் காதலர் குறித்து அதிர்ச்சி தகவலை...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அனுபமா பரமேஸ்வரன்</h2><p>தென்னிந்திய நடிகை அனுபமா பரமேஸ்வரன், கேரள யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியொன்றில், தன்னுடைய முன்னாள் காதலர் குறித்து அதிர்ச்சி தகவலை கொடுத்தார். தன்னை அந்த நபர் முழுமையாக கட்டுப்படுத்த பார்த்தார், 2 ஆண்டுகள் வேதனை அடைந்தேன் என்று விரிவாக கூறியிருந்தார். </p><p>அந்த நடிகர் துருவ் விக்ரம் தான் என்று நெட்டிசன்கள் கருத்துகளை பகிர்ந்து வந்தனர். இந்நிலையில், பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு அளித்த பேட்டியில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5791ce2d-9a32-4e9b-a1ba-1703dc9c8735/26-6a7dc447b786d.webp' /></p><p>அதில், நான் சினிமா பத்திரிக்கையாளராக பல வருடங்கள் இருக்கிறேன். பல நடிகைகளிடம் என்னிடம் சொன்ன விஷயத்தை நம்பிக்கையின் அடிப்படையில் வெளியே யாரிடமும் நான் சொன்னதில்லை. அப்படி செய்வது அறமே இல்லை. அனுபமாவுக்கு பைசன் படம்தான் மிகப்பெரிய பெயரை கொடுத்தது. தூத்துக்குடி பெண்ணாகவே மாறிவிட்டார். அதற்கு காரணம் மாரி செல்வராஜ் தான்.</p><p> ஏற்கனவே துருவ் விக்ரம்தான் அனுபமாவின் காதலர் என்று சொன்னார்கள். தான் காதலித்த நபர் பெரிய சைக்கோவாகவே நடந்துகொள்ள தொடங்கிவிட்டார், நான் நடிக்கக்கூடாது, குடும்பமும் திட்டமிட்டு நிச்சயதார்த்தம் செய்ய பார்த்தார்கள் என்று சொன்னார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/398d77e0-8e6d-4fa1-b04a-bcb7f83b75fa/26-6a7dc448680f0.webp' /></p><p>இவர்கள் மட்டும் ஊரில் இருக்கும் நடிகைகளுடன் நடிக்கலாம், வீட்டுக்கு வரும் மருமகள் நடிக்கக்கூடாதாம், ஏன் நடிகை என்றால் கேவலமா?

அனுபமா கூறியது துருவ் விக்ரமைத்தான், இதெல்லாம் பணக்கார திமிரின் உச்சம்தான்.</p><h2>அயோக்கியத்தனம்</h2><p> </p><p>பசங்களுக்கு அது இருக்கும், துருவ்வின் அப்பா போராடி இந்த இடத்து வந்தவர். அதரு முக்கிய காரணம் பாலா, துருவ்வையும் பாலாதான் அறிமுகம் செய்ய வேண்டும் என்று விரும்பினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/281945b8-9616-478c-a5af-0541e4afb08d/26-6a7dc4491d92b.webp' /></p><p> பாலாவே ஒரு டார்ச்சர் பார்ட்டிதான், ஆனால் அவரையே இவர்கள் டார்ச்சர் செய்திருக்கிறார்கள். எனக்கு மன அழுத்தம் அதிகமகிவிட்டதாக அனுபமா கூறுகிறார். அதெல்லாம் எவ்வளவு பெரிய பிரச்சனை.</p><p> </p><p>அனுபமா ஒரு பெரிய தயாரிப்பாளரின் உறவினராக இருந்தால் அவரை யாராவது சீண்ட முடியுமா? அவர் நடுத்தர குடும்பம்தான். அனுபமா முட்டி மோதி இந்த இடத்துக்கு வந்திருக்கிறார். எவ்வளவு பிரச்சனைகளை அவர் பார்த்திருப்பார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e3e13a1-d0d5-4c3e-b2ea-933200184cd5/26-6a7dc449c3ebb.webp' /></p><p>நடிகை என்றால் அவ்வளவு கிள்ளுக்கீரையா? சினிமாவில் இருக்கும் வாரிசுகள் எல்லாம் கதையே கேட்பதில்லை. பத்திரிக்கையாளர்களை சந்திப்பதில்லை. ஒரு படம் ஹிட்டானால் பெரிய கொம்பு வந்துவிடும், அனுபமாவை கண்ட்ரோல் செய்ய முயற்சித்தது பெரிய அயோக்கியத்தனம் என்று செய்யாறு பாலு விமர்சித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-13T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சை வினாத்தாள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2026-g-c-e-a-l-examination-question-paper-leak-1786627460"></link>
            <id>https://jvpnews.com/article/2026-g-c-e-a-l-examination-question-paper-leak-1786627460</id>
            <summary type="text">&amp;nbsp; அம்பாலாந்தோட்டையிலுள்ள உயர்தரப் பரீட்சை மையமொன்றில், பரீட்சை வினாத்தாள் பெட்டியொன்றிலிருந்து நாளை (14) நடைபெறவிருந்த பெளதிகவியல் முதலாம் வினாத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அம்பாலாந்தோட்டையிலுள்ள உயர்தரப் பரீட்சை மையமொன்றில், பரீட்சை வினாத்தாள் பெட்டியொன்றிலிருந்து நாளை (14) நடைபெறவிருந்த பெளதிகவியல் முதலாம் வினாத்தாள் அடங்கிய 06 பொதிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு உடனடியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.</p><p> 

எவ்வாறாயினும், அந்த வினாத்தாள்கள் அடங்கிய பொதிகள் திறக்கப்படவோ அல்லது வெளிப்படுத்தப்படவோ இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f1e611e-796e-43d9-8144-e0f823b66f40/26-6a7dc585edc71.webp' /></p><h2>&nbsp;6 வினாத்தாள் பொதிகள்&nbsp;</h2><p> 

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தற்போது நடைபெற்று வருகின்றது. 

இவ்வாறான பின்னணியில், உயர்தர ஒருங்கிணைப்பு மையமான அம்பாலாந்தோட்டையிலுள்ள பாடசாலையொன்றில், இன்று நடைபெறும் பாடங்களுக்குப் புறம்பாக நாளை நடைபெறவிருந்த பாடத்தின் 6 வினாத்தாள் பொதிகள் பெட்டியொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.</p><p></p><p> </p><p>

இன்று நடைபெறவுள்ள இசை, நடனம் மற்றும் விவசாய அறிவியல் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள் பொதிகள் அடங்கிய பெட்டியில் இருந்தே, நாளை நடைபெறவிருந்த பெளதிகவியல் முதலாம் வினாத்தாள் அடங்கிய 6 பொதிகள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027 ஏப்ரல் வரை இலங்கையில் எல் நினோவின் தாக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/impact-of-el-ni-o-in-sri-lanka-until-april-2027-1786614463"></link>
            <id>https://jvpnews.com/article/impact-of-el-ni-o-in-sri-lanka-until-april-2027-1786614463</id>
            <summary type="text">இலங்கையில் எல் நினோவின் (El Niño) தாக்கம் 2027 ஏப்ரல் வரை நீடிக்கும் என கவளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் கூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் எல் நினோவின் (El Niño) தாக்கம் 2027 ஏப்ரல் வரை நீடிக்கும் என கவளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் கூறியுள்ளார்.
</p><p>
தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பத்தின் அளவு அவதானிக்க வேண்டிய அளவிற்கு உயர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3161b034-53e5-4aaa-a109-81c1890b7716/26-6a7d92c1bbf35.webp' /></p><p></p><h2>ஒட்டுமொத்தமாக மழைவீழ்ச்சி குறையும்</h2><p> </p><p>

இதன்படி, தற்போது நிலவும் இந்த வறட்சியான வானிலை முடிவடைந்து, போதுமான மழைவீழ்ச்சியை வரும் ஒக்டோபர் மாதத்திலேயே எதிர்பார்க்க முடியும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> 

குறிப்பாக கிழக்கு மாகாணத்திலும், மொனராகலை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை கணிசமாக உயர்ந்துள்ளது. 

இதன் காரணமாக, அப்பகுதி மக்கள் பின்வரும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06758374-5d10-487e-928b-7b09a1badb6b/26-6a7d92c29ec61.webp' /></p><p><b> 

வெளியில் நடமாடும் போது இலகுவான ஆடைகளைப் பயன்படுத்துதல்</b>. </p><p><b>

அவ்வப்போது ஓய்வெடுத்தல் மற்றும் முடிந்தவரை அதிகளவில் நீர் அருந்துதல். </b></p><p><b>

நோயாளிகள் மற்றும் முதியவர்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துதல். </b></p><p>

நாட்டில் தற்போது தென்மேற்கு பருவப்பெயர்ச்சி வானிலை நிலவுகிறது. 

இதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (13) சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p> </p><p>

இதுதவிர, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். </p><p>

இருப்பினும், வரும் நாட்களில் ஒட்டுமொத்தமாக மழைவீழ்ச்சி குறையும் என எதிர்பார்ப்பதாகப் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>

காற்றின் நிலையைக் கருத்திற்கொள்ளும்போது, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். </p><p>

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் செப்டம்பர் மாதம் வரை மேலும் வறட்சியான வானிலையே எதிர்பார்க்கப்படுகிறது. 

மே முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலத்தில் இந்தப் பகுதிகளில் மழை குறைவது சாதாரண நிலை என்ற போதிலும், 'எல் நினோ' (El Niño) நிலை காரணமாக இது மேலும் தீவிரமடையக்கூடும்.&nbsp;</p><p></p><p> 

"இந்த ஆண்டில் நமக்கு இன்னும் எல் நினோ நிலையின் அதிகபட்சத் தாக்கத்தைக் காண முடியவில்லை. ஓகஸ்ட் மாதத்துடன் அதன் வளர்ச்சியை நாம் அவதானிக்க முடியும். </p><p>எவ்வாறாயினும், நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்கள் ஆகும்போது இந்த எல் நினோ நிலை வலுவடையும் சாத்தியக்கூறு 80%க்கும் அதிகமாக உள்ளது. இதன் தாக்கம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீடிக்கக்கூடும்." என்றார்.</p><p>

மேலும், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நாடு முழுவதும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், எல் நினோ நிலையின் தாக்கம் காரணமாக அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் மீண்டும் மழைவீழ்ச்சி குறைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் எச்சரித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-13T13:29:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை நடைபெறவிருந்த பௌதிகவியல் வினாத்தாள் பரீட்சை நிலையமொன்றிலிருந்து மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/physics-question-paper-recovered-exam-center-1786626884"></link>
            <id>https://ibctamil.com/article/physics-question-paper-recovered-exam-center-1786626884</id>
            <summary type="text">நாளையதினம் நடைபெறவிருந்த பௌதிகவியல் பரீட்சையின் முதலாம் பகுதிக்கான வினாத்தாள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு உடனடியான விசாரணைகளை ஆரம்பித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாளையதினம் நடைபெறவிருந்த பௌதிகவியல் பரீட்சையின் முதலாம் பகுதிக்கான வினாத்தாள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு உடனடியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.&nbsp;</p><p>அம்பாலாந்தோட்டையிலுள்ள உயர்தரப் பரீட்சை மையமொன்றில், இருந்தே வினாத்தாள் அடங்கிய 06 பொதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>பரீட்சை ஆணையாளரின் அறிவிப்பு</h2><p>&nbsp;எனினும், அந்த வினாத்தாள்கள் அடங்கிய பொதிகள் திறக்கப்படவோ அல்லது வெளிப்படுத்தப்படவோ இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d20e5e55-6c7f-4ccf-a9e2-d31790534f81/26-6a7dc6069d5be.webp' /></p><p>உயர்தர ஒருங்கிணைப்பு மையமான அம்பலாந்தோட்டையிலுள்ள பாடசாலையொன்றில், இன்று நடைபெற்ற பாடங்களுக்குப் புறம்பாக நாளை நடைபெறவிருந்த பௌதிகவியல் பாடத்தின் 6 வினாத்தாள் பொதிகள் பெட்டியொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. </p><p>

இன்று நடைபெற்ற இசை, நடனம் மற்றும் விவசாயம் மற்றும் அறிவியல் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள் பொதிகள் அடங்கிய பெட்டியில் இருந்தே, நாளை நடைபெறவிருந்த பெளதிகவியல் முதலாம் வினாத்தாள் அடங்கிய 6 பொதிகள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T13:26:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முக்கிய வேண்டுகோள் வைக்கும் சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில்... என்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/mirchi-senthil-request-to-his-fans-1786624613"></link>
            <id>https://cineulagam.com/article/mirchi-senthil-request-to-his-fans-1786624613</id>
            <summary type="text">மிர்ச்சி செந்தில்தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் மறக்கவே முடியாத ஒரு சினிமா பிரபலம் தான் மிர்ச்சி செந்தில். வானொலியில் பணியாற்றி மக்களின் மனதை வென்றவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மிர்ச்சி செந்தில்</h2><p>தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் மறக்கவே முடியாத ஒரு சினிமா பிரபலம் தான் மிர்ச்சி செந்தில். வானொலியில் பணியாற்றி மக்களின் மனதை வென்றவர் அப்படியே சின்னத்திரை பக்கம் வந்தார்.</p><p>முதன்முறையாக ஹீரோவாக சரவணன் மீனாட்சி என்ற தொடர் நடித்தார், அவருக்கு அந்த சீரியல் பெரிய அளவில் வளர்ச்சியை கொடுத்தது என்று தான் கூற வேண்டும். அந்த சீரியலில் நடித்த ஸ்ரீஜாவும், இவரும் காதலிக்க திருமணமும் செய்துகொண்டனர்.</p><p>இவர்களுக்கு திருமணம் ஆகி சில வருடங்கள் கழித்து ஒரு குழந்தை பிறந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f594556-f94d-4882-9614-fa375b33f0f0/26-6a7dc4077b7f7.webp' /></p><h2>வேண்டுகோள்</h2><p>கடைசியாக மிர்ச்சி செந்தில் ஜீ தமிழில் அண்ணா சீரியலில் நடித்திருந்தார். அந்த தொடரும் சில மாதங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது.&nbsp;</p><p>இந்த நிலையில் மிர்ச்சி செந்தில் ஒரு பேட்டியில் மக்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார்.&nbsp;அதில் அவர், திருமணம் ஆகி 10 ஆண்டுகள் கழித்து தான் எங்களுக்கு குழந்தை பிறந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1554e68-48ba-4f5e-8663-236ad4ccd0c6/26-6a7dc4d744ec0.webp' /></p><p> </p><p>அந்த 10 வருஷத்தில் எங்களுக்குள்ள நிறைய பிரச்சனை வந்தது. இப்போது இருக்க நிறைய பேர் செட்டில் ஆகிட்டு குழந்தை பெத்துக்கலாம்னு நினைக்குறாங்க, தயவு செய்து அந்த தப்ப மட்டும் பண்ணாதீங்க. எவ்ளோ சீக்கிரம் பெத்துக்க முடியுமோ பெத்துக்கோங்க. </p><p>சைகலாஜிக்கா ஒரு குழந்தை வந்தா கணவன் மனைவிக்கு இடையே ஒரு பாண்டிங் வரும் என கூறியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-13T13:18:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் உள்ள புலம்பெயர்ந்தோர் இலங்கை திரும்ப சிறப்பு குடிவரவு ஏற்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sri-lanka-permit-migrants-india-return-to-homeland-1786626688"></link>
            <id>https://news.lankasri.com/article/sri-lanka-permit-migrants-india-return-to-homeland-1786626688</id>
            <summary type="text">sri lanka permits migrants return from india : இந்தியாவில் வசித்து வரும் புலம்பெயர்ந்தோர் மீண்டும் நாடு திரும்புவதற்கான சிறப்பு குடிவரவு ஏற்பாடுகளுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>sri lanka permits migrants return from india : இந்தியாவில் வசித்து வரும் புலம்பெயர்ந்தோர் மீண்டும் நாடு திரும்புவதற்கான சிறப்பு குடிவரவு ஏற்பாடுகளுக்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது.</p><h3>

இலங்கை தமிழர்களுக்கு சிறப்பு குடிவரவு ஏற்பாடு</h3><p>

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற உள்நாட்டு போர் காரணமாக பாதிக்கப்பட்ட தமிழர்கள், நாட்டில் இருந்து வெளியேறி, உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a6ef0d4-c3c9-4511-a20b-f277715d95b2/26-6a7dc28239d81.webp' /></p><p> 

இந்நிலையில் முறையான பயண ஆவணங்கள் இன்றி நாட்டை வெளியேறி இந்தியாவில் வசித்து வரும் புலம்பெயர்ந்தோர் மீண்டும் நாடு திரும்புவதற்கான சிறப்பு குடிவரவு ஏற்பாடுகளுக்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
</p><p>
ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஆணையரின் (UNHCR) வழிகாட்டுதலின் கீழ் திரும்பி வருபவர்களுக்கான சட்டரீதியான தடைகளை நீக்குவதே இந்த நடவடிக்கைகளின் நோக்கம் ஆகும். </p><p>

இவ்வ்வாறு நாடு திரும்ப விரும்புவார்கள், 2006 ஜூன் ஒன்றாம் திகதிக்கு முன்னர் இலங்கையை விட்டுச் சென்றிருக்க வேண்டும். </p><p>

இலங்கை தூதரகம் மூலம் அவர் இலங்கையை சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். </p><p>

மேலும், அவர்கள் கொலை, தேசத்துரோகம் அல்லது பிற குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகவில்லை என்பதை உறுதி செய்வதற்காக அரச புலனாய்வு சேவையால் பரிசோதிக்கப்படுவார்கள்.&nbsp;</p><p></p><p>

இந்த பரிசோதனைச் செயல்முறையில் தகுதி பெற்றவர்கள், அங்கீகரிக்கப்பட்ட விமான நிலையம் அல்லது துறைமுகம் வழியாக தற்காலிக கடவுச்சீட்டு மூலம் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். </p><p>

அங்கீகரிக்கப்படாத வழிகள் மூலம் வெளியேறியதற்காக, குடிவரவுச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. </p><p>

தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாட்டில் உள்ள 108 முகாம்களில் 58,000 இலங்கைத் தமிழர்கள் தங்கியுள்ளனர். 

முகாமிற்கு வெளியே காவல்நிலையத்தில் பதிவு செய்து, 34,000 இலங்கைத் தமிழர்கள் தங்கியுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T13:12:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mitchell-starc-sets-new-record-in-test-cricket-1786622258"></link>
            <id>https://tamilwin.com/article/mitchell-starc-sets-new-record-in-test-cricket-1786622258</id>
            <summary type="text">அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.

பங்களாதேஸுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.
</p><p>
பங்களாதேஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், அவ்வணியின் தொடக்க வீரர் ஷாட்மான் இஸ்லாமை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் ஸ்டார்க் தனது 434ஆவது டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.</p><h2>டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு</h2><p>
</p><p>
இதன் மூலம் இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்தின் 433 விக்கெட்டுகள் என்ற சாதனையை ஸ்டார்க் முறியடித்துள்ளார்.
</p><p>
இதையடுத்து, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இடதுகை பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஸ்டார்க் பெற்றுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60a6ab1c-395c-4c60-aad1-3adc42873176/26-6a7db8332425a.webp' /></p><p>ஸ்டார்க் தற்போது 106 டெஸ்ட் போட்டிகளில் 434 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ்வுடன் 11ஆவது இடத்தை சமப்படுத்தியுள்ளார்.
</p><p>
மேலும், அடுத்த கட்டமாக டெஸ்ட் கிரிக்கெட்டின் அனைத்து காலத்திற்குமான முதல் 10 விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இடம்பிடிக்க ஸ்டார்க்கிற்கு இன்னும் சில விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகின்றன.
</p><p>
ரங்கன ஹேரத் 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 433 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

2018ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஹெரத், நீண்ட காலமாக அதிக விக்கெட் எடுத்த இடதுகை பந்துவீச்சாளர் என்ற சாதனையை தக்க வைத்திருந்தார்.</p><p>தற்போது அந்த சாதனை ஸ்டார்க் வசம் சென்றுள்ளது. ஸ்டார்க் தனிப்பட்ட முறையில் வரலாறு படைத்தாலும், டார்வின் டெஸ்டின் முதல் நாள் அவுஸ்திரேலியா அணிக்கு சிறப்பாக அமையவில்லை.</p><h2>பங்களாதேஸின் பந்து வீச்சு</h2><p>
முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா வெறும் 198 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. 

பங்களாதேஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் மஹ்மூத் 6 விக்கெட்டுகளை 55 ஓட்டங்களுக்கு வீழ்த்தி அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வரிசைக்கு சவால் விடுத்துள்ளார்.
</p><p>
மேலும் அவுஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் மட்டும் போராடி 71 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.

அவுஸ்திரேலியாவை 198 ஓட்டங்களுக்கு சுருட்டிய பின்னர், பங்களாதேஸ் அணி சிறப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcc364ed-7f4f-410f-97cb-39c334ab3979/26-6a7db833d543e.webp' /></p><p>முதல் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 1 விக்கெட்டை இழந்து 96 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இதனால் அந்த அணி அவுஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை விட 102 ஓட்டங்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது.
</p><p>
இதனால், டார்வின் டெஸ்டில் முதல் நாளிலேயே பங்களாதேஸ் அவுஸ்திரேலியாவுக்கு கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T13:10:51+00:00</updated>
        </entry>
    </feed>
