<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-15T11:47:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சனி–குரு சேர்க்கையால் உருவாகும் ராஜயோகம்: அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/saturn-jupiter-navpanchama-rajyoga-who-get-luck-1786790927"></link>
            <id>https://manithan.com/article/saturn-jupiter-navpanchama-rajyoga-who-get-luck-1786790927</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில், சனி பகவான் கர்மாவிற்கும், நீதிக்கும் உரிய கிரகமாகக் கருதப்படுகிறார். மற்ற கிரகங்களுடன் ஒப்பிடும் போது சனிபகவான் மெதுவாக நகரக்கூடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில், சனி பகவான் கர்மாவிற்கும், நீதிக்கும் உரிய கிரகமாகக் கருதப்படுகிறார். மற்ற கிரகங்களுடன் ஒப்பிடும் போது சனிபகவான் மெதுவாக நகரக்கூடியவராவார். சனிபகவான் ஒவ்வொரு ராசியிலும் ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகள் தங்கியிருப்பார். </p><p>தற்போது மீன ராசியில் வக்ர கதியில் இருக்கும் சனிபகவான், டிசம்பர் 11 அன்று நேரடி இயக்கத்திற்குத் திரும்புவார். இந்த காலகட்டத்தில் அவர் பல முக்கிய கிரகச் சேர்க்கைகளை உருவாக்குவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6a507a1-449a-4e78-afe1-84eec1bb2687/26-6a8051257ddd4.webp' /></p><p></p><p>
செப்டம்பர் மாதத்தில் சனிபகவான் மற்றும் குருபகவான் ஆகிய கிரகங்கள் இணைந்து 'நவபஞ்சம ராஜயோகத்தை' உருவாக்குகின்றன.இந்த சக்திவாய்ந்த ராஜயோகம் ஜோதிடத்தில் பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றாகும்.</p><p> இந்த அரிய கிரக அமைப்பானது இந்த 3 ராசிக்காரர்களுக்குத் தொழில், நிதி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில், அமோகமான சாதக பலன்களை கொடுக்கப்போகின்றது.</p><h2>கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f74ccfd6-3d32-4bec-9e37-db2c37295a9b/26-6a80512631066.webp' /></p><p> கடக ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம ராஜயோகம் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைத் தரும். தடைப்பட்ட திட்டங்கள் வேகம் பெறுவதுடன், வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகளும் கிடைக்க்கும்.</p><p> சட்ட விஷயங்களில் வெற்றி, எதிரிகளை சமாளிக்கும் திறன், வியாபாரத்தில் முன்னேற்றம் ஆகியவை அமையும். பதவி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் எதிர்பாராத பணவரவு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. கடந்தகால முதலீடுகளின் மூலம் லாபம் கிடைக்கும்.</p><h2>துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08de9e7f-f40e-487e-ae9e-f13f0174ef5b/26-6a805126d8b8a.webp' /></p><p>சனி–குரு சேர்க்கை துலாம் ராசிக்காரர்களின் தொழில், நிதி மற்றும் குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தலாம்.</p><p> புதிய வேலைவாய்ப்புகள் கிடைப்பதுடன், தொழில் சவால்கள் குறைந்து முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.</p><p>நிதி நிலை மேம்படுவதுடன் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பயணங்களுக்கான வாய்ப்புகளும் அமையும். புதிய தொடக்கங்களுக்கு ஏற்ற காலமாக இது அமையும்.
</p><h2>
மீனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/713b4376-98d8-438e-8a9a-2109622cb331/26-6a8051278be69.webp' /></p><p></p><p>மீன ராசிக்காரர்களுக்கு லக்னத்தில் சனியும், ஐந்தாம் வீட்டில் குருவும் அமைவது நற்பலன்களைத் தரும். உயர்கல்வி, தொழில் முடிவுகள், நிதி வளர்ச்சி மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படலாம். </p><p>வெற்றியை நோக்கிய பயணம் வேகம் பெறுவதுடன், நிதி நிலையும் வலுப்பெறும். வாழ்க்கையின் பல்வேறு துறைகளிலும் சாதிக்கக்கூடிய காலமாக இது அமையும். குறிப்பான நிதி நிலையில் இதுவரையில் இல்லாத முன்னேற்றம் உண்டாகும்.&nbsp;</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T11:44:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டி தேசிய வைத்தியசாலையில் மக்கள் பயன்பாட்டிற்கு ரூ.570 மில்லியன் திட்டங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/medical-equipment-worth-570-million-rupees-kandy-1786791624"></link>
            <id>https://ibctamil.com/article/medical-equipment-worth-570-million-rupees-kandy-1786791624</id>
            <summary type="text">கண்டி தேசிய வைத்தியசாலையின் நோயாளர்களுக்கான சிகிச்சை சேவைகளை மேலும் மேம்படுத்தும் வகையில் அதிநவீன மூன்று மருத்துவ உபகரணத் தொகுதிகள் மக்கள் பயன்பாட்டிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி தேசிய வைத்தியசாலையின் நோயாளர்களுக்கான சிகிச்சை சேவைகளை மேலும் மேம்படுத்தும் வகையில் அதிநவீன மூன்று மருத்துவ உபகரணத் தொகுதிகள் மக்கள் பயன்பாட்டிற்கு இன்று வழங்கி வைக்கபட்டன.&nbsp;</p><p>இந்த உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (15.08.2026)நடத்தப்பட்டதுடன் இவை&nbsp; ரூ.570 மில்லியன் பெறுமதியான ஷவை என தெரிவிக்கபட்டுள்ளது.&nbsp;</p><p>சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி ஆகியோரின் பங்கேற்புடன் இந்த நிகழ்வு நடைபெற்றது.</p><p></p><h2>ரூ.570 மில்லியன் திட்டங்கள்</h2><p>இதன்போது புதிதாக நிறுவப்பட்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன்கூடிய இருதய வடிகுழாய் ஆய்வகப் பிரிவு (ரூ. 200 மில்லியன்), மமோகிராபி பிரிவு (ரூ. 180 மில்லியன்) மற்றும் சி.டி. பரிசோதனைப் பிரிவு (ரூ. 190 மில்லியன்) ஆகியவை இவ்வாறு மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/341613c6-c871-4f64-9aa7-14f4820f8919/26-6a804b515565e.webp' /></p><p>ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிப் பங்களிப்பில் செயற்படுத்தப்படும் சுகாதார முறைமை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் இதற்கான நிதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>
 

கண்டி தேசிய வைத்தியசாலையின் கதிரியக்க சிகிச்சை சேவைகளுக்காக இணைக்கப்பட்ட இரண்டாவது சி.டி. ஸ்கேன் இயந்திரம் இதுவென்பதுடன், இருதய வடிகுழாய் ஆய்வகப் பிரிவும் அவ்வைத்தியசாலைக்கு கிடைத்த இரண்டாவது இருதய வடிகுழாய் ஆய்வகமாகும்.
</p><p>
 

அத்துடன், இலங்கையிலுள்ள மிக உயர்ந்த நவீன தொழில்நுட்பம் கொண்ட 5 மமோகிராபி இயந்திரங்களில் ஒன்றும் இன்றைய தினம் வைத்தியசாலையில் நிறுவப்பட்டது.</p><p>
</p><p>
 

அதிகளவு காத்திருப்புப் பட்டியலைக் கொண்ட கண்டி தேசிய வைத்தியசாலையில் தற்போது 8,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
</p><p>
 

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் நிதிப் பங்களிப்பில் புற்றுநோய் பிரிவு, அவசர விபத்துப் பிரிவு உள்ளிட்ட கட்டிடங்களை அமைப்பதற்காக இத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
</p><p>
 

இருதய வடிகுழாய் பிரிவுகள் 16 இந்த ஆண்டிற்குள் நாட்டின் வைத்தியசாலை கட்டமைப்பில் நிறுவும் வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அதன்கீழ் கண்டி தேசிய வைத்தியசாலையின் புதிய இருதய வடிகுழாய் ஆய்வகப் பிரிவு நிறுவப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T11:33:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மடு அன்னையின் ஆவணித் திருவிழா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/our-lady-of-madhu-s-august-festival-2026-1786793548"></link>
            <id>https://jvpnews.com/article/our-lady-of-madhu-s-august-festival-2026-1786793548</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் மடு தேவாலயத்தின் ஆவணித் திருவிழா திருப்பலி&amp;nbsp; இன்று&amp;nbsp; &amp;nbsp;(15) காலை ஒப்புக் கொடுக்கப்பட்டது.மன்னார் மறைமாவட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் மடு தேவாலயத்தின் ஆவணித் திருவிழா திருப்பலி&nbsp; இன்று&nbsp; &nbsp;(15) காலை ஒப்புக் கொடுக்கப்பட்டது.</p><p>மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோர் தலைமையில் பதுளை மறைமாவட்ட ஆயர் யூட் நிஷாந்த சில்வா, மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் நோபட் அன்ராடி ஆண்டகை ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.&nbsp;</p><p>திருவிழா திருப்பலியை தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவனி நடைபெற்றது.</p><p>இத்திருவிழா திருப்பலியில் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஜே. பெப்பி சோசை அடிகளார்,&nbsp; மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை பி. கிறிஸ்து நேசரத்தினம் அடிகளார், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும், சர்வதேச இசைக்கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவருமான அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோ, பாலஸ்தீன அரசின் தூதுவர் இஹாப் ஐ.எம். கலீல் ஆகியோர் கலந்துகொண்டதோடு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 10 இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.</p><p>பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மடு அன்னையின் ஆவணித் திருவிழா இன்று நடைபெற்றது</p>]]></content>
            <updated>2026-08-15T11:32:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[8 நாட்களில் டிசி திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/dc-movie-8-days-box-office-collection-1786791321"></link>
            <id>https://cineulagam.com/article/dc-movie-8-days-box-office-collection-1786791321</id>
            <summary type="text">லோகேஷ் கனகராஜின் டிசி திரைப்படம் உலகளவில் 8 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
டிசி

இயக்குநர் அருண் மாதேஸ்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>லோகேஷ் கனகராஜின் டிசி திரைப்படம் உலகளவில் 8 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p>
</p><p></p><h2>டிசி</h2><p>

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி கடந்த 7-ஆம் தேதி வெளியான திரைப்படம் டிசி.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8253c2f-c580-471d-91f5-2b207d3329f6/26-6a80459c1647d.webp' /></p><p>இதுவரை இயக்குநராக பட்டையை கிளப்பி வந்த லோகேஷ், ஹீரோவாக தனது முதல் திரைப்படத்திலேயே தனது நடிப்பால் அனைவரையும் மிரட்டியுள்ளார். தன்னைப்பற்றி வந்த அனைத்து விமர்சனங்களுக்கும் நடிப்பால் பதிலடி கொடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fc1a63c-49d8-446f-835b-a17b548cd0bd/26-6a80459cc7d04.webp' /></p><p>

இப்படத்தில் லோகேஷுடன் இணைந்து வாமிகா கேபி, சஞ்சனா, கஸ்தூரி ராஜா, க்ரிஷ் தயாள் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவருடைய பின்னணி இசையும், பாடல்களும் தான் படத்தின் இவ்வளவு வெற்றியடைய செய்துள்ளது என பலரும் கூறி வருகிறார்கள்.</p><h2>

பாக்ஸ் ஆபிஸ்
</h2><p>
இந்நிலையில், பாக்ஸ் ஆபிஸில் 8 நாட்களை கடந்துள்ள டிசி திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 70 கோடி வசூலித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b7e0311-ff04-457e-9ba7-d6559f594f64/26-6a80459d7b415.webp' /></p>]]></content>
            <updated>2026-08-15T11:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்கொள்ளையர் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி : அமைச்சர் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/an-end-to-the-threat-of-piracy-fisheries-minister-1786792554"></link>
            <id>https://ibctamil.com/article/an-end-to-the-threat-of-piracy-fisheries-minister-1786792554</id>
            <summary type="text">அம்பாறை மாவட்ட கடற்றொழில் துறையில் நிலவும் சவால்களுக்கு விரைவான தீர்வு காண்பதுடன், ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்ட கடற்றொழில் துறையில் நிலவும் சவால்களுக்கு விரைவான தீர்வு காண்பதுடன், ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதியளித்துள்ளார்.</p><p>அம்பாறை மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (14) அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே&nbsp;அமைச்சர் இதனை தெரிவித்தார்.&nbsp;</p><p>மாவட்ட அரசாங்க அதிபர் அனுபம மங்கள விக்ரமாராச்சியின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமை தாங்கினார்.</p><p></p><h2>விரிவாக ஆராயப்பட்ட விடயங்கள்</h2><p>

 

அம்பாறை மாவட்டத்தின் கடற்றொழில் துறையை மேம்படுத்துதல், கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் மற்றும் அவர்களின் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் தொடர்பில் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/142512bb-8f22-49d4-92e6-ef716536e814/26-6a804c0eb7dd5.webp' /></p><p>
</p><p>
 

இதன்போது, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், தாம் நாளாந்தம் எதிர்கொள்ளும் தொழில்சார் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பில் அமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.
</p><p>
 

குறிப்பாக, ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கடற்கொள்ளையர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கும், அவர்களின் செயற்பாடுகளை முற்றாக ஒழிப்பதற்கும் உடனடியானதும் உறுதியானதுமான பொறிமுறையொன்றை அமைச்சு உருவாக்க வேண்டும் என கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.</p><p>அத்துடன், ஒலுவில் துறைமுகத்தை முழுமையான மீன்பிடித் துறைமுகமாக தரம் உயர்த்துவதுடன், துறைமுக வாயிலில் குவிந்துள்ள மண்ணை அகற்றி, மீன்பிடி நடவடிக்கைகளுக்கு ஏற்ற வகையில் துறைமுகத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.</p><p></p><h2>தீர்வுகளை பெற்றுத் தர நடவடிக்கை</h2><p>

 

கடற்றொழிலாளர்களின் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் திணைக்களங்களுடன் கலந்துரையாடி, முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு நடைமுறைச் சாத்தியமானதும் விரைவானதுமான தீர்வுகளை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20284ed3-a416-4b34-afcb-d730b59417fa/26-6a804c0f6fe21.webp' />&nbsp;</p><p>

 

ஒலுவில் துறைமுகத்தைப் பயன்படுத்தி முதலீடுகளை மேற்கொள்வதற்கு பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருவதாக அமைச்சர் தெரிவித்தார். </p><p>

 

அவர்களின் பங்களிப்புடன் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதுடன், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான அத்தியாவசிய வசதிகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>

 

அம்பாறை மாவட்டத்தில் கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், கடற்றொழில் துறையை மேலும் இலாபகரமானதாகவும் நிலையானதாகவும் மாற்றுவதற்கான பல முக்கிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T11:26:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவிற்கு பயத்தை காட்டும் இளம் வங்காளதேச பந்துவீச்சாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hasan-mahmud-stunning-bowl-against-australia-day-3-1786792919"></link>
            <id>https://news.lankasri.com/article/hasan-mahmud-stunning-bowl-against-australia-day-3-1786792919</id>
            <summary type="text">டார்வினில் நடந்து வரும் டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி 67 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது.

வங்காளதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், அவுஸ்திரேலியா 4 விக்கெட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>டார்வினில் நடந்து வரும் டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி 67 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது.
</p><p>
வங்காளதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், அவுஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் எடுத்துள்ளது.&nbsp;</p><h2>வங்காளதேச அணி 426 ஓட்டங்கள்</h2><p> 

அவுஸ்திரேலியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டார்வினில் நடந்து வருகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f02100be-f834-42c9-9f5e-ae844664b358/26-6a804bd9ea7f8.webp' />&nbsp;</p><p></p><p>
முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 198 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, வங்காளதேச அணி 426 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. </p><p>

தன்ஸித் ஹசன் தமிம் 101 ஓட்டங்களும், நஜ்முல் ஹொசைன் 84 ஓட்டங்களும், மெஹிதி ஹசன் 65 ஓட்டங்களும் எடுத்தனர்.

ஜோஷ் ஹேசல்வுட் 6 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் மற்றும் லயன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p> 

பின்னர் 228 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. </p><h2>ஹசன் மஹ்முத்&nbsp;மிரட்டலான&nbsp;பந்துவீச்சு </h2><p> 

26 வயது இளம் வீரரான ஹசன் மஹ்முத் (Hasan Mahmud) மிரட்டலான பந்துவீச்சில் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்தினார். </p><p>

அவரது பந்துவீச்சில் ஜேக் வெதரால்ட் டக்அவுட் ஆக, டிராவிஸ் ஹெட் 17 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து மார்னஸ் லபுஸ்சாக்னே 31 ஓட்டங்கள் எடுத்த நிலையில் டைஜூல் இஸ்லாம் பந்துவீச்சில் வெளியேறினார்.</p><p>

நிதானமாக ஓட்டங்களை சேர்த்த ஸ்டீவன் ஸ்மித் 44 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, மெஹிதி ஹசன் மிராஸ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். </p><p>

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் எடுத்துள்ளது. மேலும் 67 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது. </p><p>

கேமரூன் கிரீன் 43 ஓட்டங்களுடனும், அலெக்ஸ் கேரி 19 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். ஹசன் 2 விக்கெட்டுகளும், டைஜுல் மற்றும் மெஹிதி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5adaad6-708d-44c8-a3e0-bc5b3a4265e9/26-6a804bda9ebb3.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T11:19:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயின் நாட்டை நள்ளிரவில் உலுக்கிய நிலநடுக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/spain-earthquake-hits-buliding-collapsed-1786792649"></link>
            <id>https://news.lankasri.com/article/spain-earthquake-hits-buliding-collapsed-1786792649</id>
            <summary type="text">ஸ்பெயின் நாட்டை நள்ளிரவில் நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது.


ஸ்பெயின் நாட்டிலுள்ள கிரனாடா நகரை ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவான நிலநடுக்கம் ஒன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயின் நாட்டை நள்ளிரவில் நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது.
</p><p>

ஸ்பெயின் நாட்டிலுள்ள கிரனாடா நகரை ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவான நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது.
</p><h2>
நள்ளிரவில் உலுக்கிய நிலநடுக்கம்</h2><p>

நள்ளிரவு 1.00 மணியளவில் கிரனாடா நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வீடுகளில் வாழும் உள்ளூர் மக்களும் ஹொட்டல்களில் தங்கியிருக்கும் சுற்றுலாப்பயணிகளும் அலறியடித்துக்கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25450c1f-351e-4317-b2a3-baead1f0ea60/26-6a804acb2a8d1.webp' /></p><p>பல வீடுகள் நிலநடுக்கத்தால் சேதமடைந்துள்ள நிலையில், சாலைகளில் பிளவு ஏற்பட்டுள்ளதை வெளியாகியுள்ள புகைப்படங்களில் காணலாம்.</p><p>
</p><p></p><p>நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அதிகாரிகள் அவசர நிலை பிறப்பித்துள்ளதாக தெரிவித்துள்ள Andalusia அரசின் துணைத்தலைவரான Antonio Sanz Cabello, மக்கள் கட்டிடங்களுக்குள் செல்லவேண்டாம் என்றும், இடிந்து விழும் நிலையிலுள்ள எதன் அருகிலும் நிற்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8a0b931-05df-45c0-a64c-ffdfbf3ceb6a/26-6a804acbd28d0.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், முதல் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து Gojar என்னும் கிராமத்தின் அருகே மீண்டும் ரிக்டர் அளவுகோலில் 2.6ஆக பதிவான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
</p><p>
ஸ்பெயினைப் பொருத்தவரை, பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படுவது அபூர்வம் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T11:17:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம் ; உயிரிழப்பு 38 ஆக அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/death-toll-from-indonesia-earthquake-rises-to-38-1786792318"></link>
            <id>https://canadamirror.com/article/death-toll-from-indonesia-earthquake-rises-to-38-1786792318</id>
            <summary type="text">கிழக்கு இந்தோனேசியாவில்&amp;nbsp; 7.7 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 38 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நிலநடுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு <a href="https://canadamirror.com/article/powerful-7-7-magnitude-earthquake-in-indonesia-1786771486" target="_blank">இந்தோனேசியாவில்&nbsp; 7.7 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில்</a> குறைந்தது 38 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>நிலநடுக்கத்தைத் தொடர்ந்து டஜன் கணக்கான பின்அதிர்வுகளும் பதிவாகியுள்ள நிலையில், மீட்புப் பணியாளர்கள் நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகிலுள்ள பகுதிகளை சென்றடைய தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியாவின் பல பகுதிகளில் ஒரு மீற்றருக்கும் குறைவான உயரத்தில் சுனாமி அலைகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T11:12:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[பத்து இலட்சம் பக்தர்கள் பங்கேற்பு : சிறப்புற நடந்தேறிய மடு அன்னையின் ஆவணித் திருவிழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-august-festival-of-mother-madu-was-held-1786790561"></link>
            <id>https://ibctamil.com/article/the-august-festival-of-mother-madu-was-held-1786790561</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் மருதமடு அன்னையின் ஆவணித்
திருவிழா திருப்பலி இன்று (15) சனிக்கிழமை காலை 6.15 மணிக்கு ஒப்புக்
கொடுக்கப்பட்டது.&amp;nbsp; ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் மருதமடு அன்னையின் ஆவணித்
திருவிழா திருப்பலி இன்று (15) சனிக்கிழமை காலை 6.15 மணிக்கு ஒப்புக்
கொடுக்கப்பட்டது.</p><p>&nbsp; மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும்
கொழும்பு பேராயர் அதி வணக்கத்துக்குரிய கருதினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை
ஆகியோர் தலைமையில் பதுளை மறைமாவட்ட ஆயர் யூட் நிஷாந்த சில்வா,மன்னார்
மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை,அனுராதபுரம்
மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் நோபட் அன்ராடி ஆண்டகை ஆகியோர் இணைந்து
திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலி யாக ஒப்புக்கொடுத்தனர்.</p><h2>&nbsp;மடு அன்னையின் திருச்சொரூப பவனி</h2><p>
</p><p>
திருவிழா திருப்பலியை தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவனி இடம் பெற்ற
தோடு மடு அன்னையின் ஆசி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d52acd4a-7c8c-44ad-a23d-97a935483704/26-6a80492bacffe.webp' /></p><p>

குறித்த திருவிழா திருப்பலியில் மடு திருத்தலத்தின் பரிபாலகர்
அருட்தந்தை எஸ்.ஜே. பெப்பி சோசை அடிகளார் , மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர்
அருட்தந்தை பி. கிறிஸ்து நேசரத்தினம்
அடிகளார்,அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள்,அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி
ஒன்றியத்தின் தலைவரும், சர்வதேச இசைக்கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை
தூதுவருமான அதிவணக்கத்திற்குரிய பிதா அருட்கலாநிதி எஸ். சந்துரு
பெர்னாண்டோ,பாலஸ்தீன அரசின் தூதுவர் இஹாப் ஐ. எம். கலீல் ஆகியோர் கலந்து
கொண்டனர். </p><p>நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான
பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் மடு அன்னையின் ஆவணித் திருவிழா சிறப்புற
இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T11:11:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாடு : மட்டக்களப்பில் முக்கிய கலந்துரையாடல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/international-day-of-enforced-disappearances-1786790642"></link>
            <id>https://ibctamil.com/article/international-day-of-enforced-disappearances-1786790642</id>
            <summary type="text">சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை
முன்னிட்டு, வடக்கு–கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை
முன்னிட்டு, வடக்கு–கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் யாழ்ப்பாணம் தந்தை செல்வா
கலையரங்கில் சர்வதேச மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>

இம்மாநாட்டுக்கு வலுச்சேர்க்கும் வகையிலும், மாநாட்டிற்கான பொதுமக்கள்,
அரசியல் பிரதிநிதிகள், மதகுருமார்கள் மற்றும் சிவில் சமூகத்தினரின் ஆதரவைப்
பெற்றுக்கொள்ளும் நோக்கிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (14) பொதுக்கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
</p><p>
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின்
ஏற்பாட்டில், அதன் தலைவி அ. அமலநாயகி தலைமையில் மட்டக்களப்பு
அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
</p><p>கலந்துரையாடலின்போது எதிர்வரும் சர்வதேச மாநாடு தொடர்பான முக்கிய விடயங்கள் பகிரப்பட்டதுடன், மாநாட்டை மேலும் வலுப்படுத்துவதற்கான ஆலோசனைகளும் பெறப்பட்டன. மாநாட்டை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பும் ஆதரவும் கோரப்பட்டது.</p><p></p><h2>சர்வதேச நீதியே எமது கோரிக்கை </h2><p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை அரசின் உள்ளகப் பொறிமுறைகளில் நம்பிக்கை இழந்துள்ள நிலையில், சர்வதேச நீதிப் பொறிமுறையின் அவசியத்தை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்வதே இம்மாநாட்டின் பிரதான நோக்கமாகும் என தெரிவித்தனர்.&nbsp;</p><p>விசாரணைக்காகவும், பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படுவதாகவும் கூறி அரச
அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில்
இலங்கை அரசு இதுவரை உரிய பொறுப்புக்கூறலை முன்னெடுக்கத் தவறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ec97fe2-dc1e-4f5a-9ffd-e65533260986/26-6a8047cc37516.webp' /></p><p> </p><p>இதனாலேயே
தாம் சர்வதேச நீதியை வலியுறுத்தி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் தலைவி தெரிவித்தார்.</p><p>

மேலும், தமது உறவுகளைத் தேடி நீண்டகாலமாகப் போராடி வந்தவர்களில் 600க்கும்
மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><p>

அவர்களின் போராட்டங்களும், சாட்சியங்களும் எதிர்கால சந்ததியினருக்கும் சர்வதேச
சமூகத்திற்கும் சென்றடையும் வகையில், உயிரிழந்த உறவுகளின் சாட்சியங்களைப்
பதிவு செய்து நூல் வடிவில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு
வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
அத்துடன், “அழிக்கப்பட்ட சாட்சியங்கள்” என்ற தலைப்பிலான நூல் ஒன்றையும்,
இதுவரை தமது போராட்டங்களின் ஊடாக முன்வைக்கப்பட்ட அறிக்கைகளைத் தொகுத்து
மற்றுமொரு நூலாகவும் வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்
தெரிவித்தார்.</p><p></p><h2>

பல்வேறு நிகழ்வுகளுடன் சர்வதேச மாநாடு
</h2><p>
எதிர்வரும் சர்வதேச மாநாட்டில் பல்வேறு முக்கிய நிகழ்வுகளான சிறப்புரைகள்,
ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை உள்ளடக்கிய கண்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு
நிகழ்வுகளுடன் பேரணிகளும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பல ஆண்டுகளாக எதிர்கொண்டுவரும்
வலிகளையும், அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் சர்வதேச சமூகத்திற்கு
எடுத்துரைக்கும் முக்கிய தளமாக இம்மாநாடு அமைய வேண்டும் எனவும்
கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79fe5512-e032-4f30-a93e-1490f9201065/26-6a8047cb84e78.webp' /></p><p>

இம்மாநாட்டில் அனைத்துச் சமூகங்களையும் சேர்ந்த பொதுமக்கள், அரசியல்
பிரதிநிதிகள், மதகுருமார்கள், சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமை
செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பங்கேற்று வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் நீதிக்கான போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு
ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.</p><p>இந்தநிலையில் “நடைபெற்ற அநீதிக்கு சர்வதேச நீதி வேண்டும்” என்ற கோரிக்கையை வலுப்படுத்தும்
வகையில், எதிர்வரும் ஓகஸ்ட் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச
மாநாட்டில் அனைவரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறும்
கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>இக்கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், ஞா. சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அரியநேத்திரன், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் ச. சிவயோகநாதன், மதகுருமார்கள், அமெரிக்கன் மிஷன் அருட்தந்தை டேவிட், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T11:04:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கு பதற்றம்; அமெரிக்காவின் கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/middle-east-tension-us-issues-stern-warning-1786772116"></link>
            <id>https://canadamirror.com/article/middle-east-tension-us-issues-stern-warning-1786772116</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் அமெரிக்கா, ஈரான், லெபனான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் மற்றும் அரசியல் பதற்றங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளமை உலக நாடுகளில்&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் அமெரிக்கா, ஈரான், லெபனான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் மற்றும் அரசியல் பதற்றங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளமை உலக நாடுகளில்&nbsp; பதற்றத்தை ஏற்படுடததியுள்ளது.</p><p>இந்தநிலையில், ஈரான் தோற்கடிக்கப்பட்ட பின்னர், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்மூஸ் நீரிணையை, ":அமெரிக்காவின் பிராந்தியம்" என விரைவில் அறிவிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>எனினும், இந்த நீர்சந்தி எப்போதுமே ஈரானின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என்றும், ஈரானின் அனுமதியின்றி எந்தவொரு கப்பலும் கடந்து செல்ல முடியாது என்றும் ஈரானிய இராணுவம் பதில் அளித்துள்ளது.</p><p>இதற்கிடையில், தெஹ்ரானை முற்றாக தனிமைப்படுத்தும் நோக்கில், ஈரான் மீது இதுவரை கண்டிராத கடுமையான பொருளாதாரக் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) எச்சரித்துள்ளார்.</p><p>இதேவேளை, லெபனான் அரசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைப் போக்கை ஏற்க முடியாது என்றும், இது "சரணடைவதற்கு" சமம் என்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நைம் காசிம் (Naim Qassem) குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>லெபனான் அரசு இஸ்ரேலின் நிபந்தனைகளுக்குப் பணியக்கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>அதேவேளை&nbsp; ஏமனின் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மொகா துறைமுக நகர் மீது ஹு தி அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 2 பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதாக&nbsp; அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-15T11:01:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்தவன் சோத்துல ஏன் மண்ணை அள்ளிப் போடுறீங்க..!! மன்சூர் அலி கான் வேதனை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/mansoor-ali-khan-slams-suriya-s-karuppu-song-scene-1786790909"></link>
            <id>https://viduppu.com/article/mansoor-ali-khan-slams-suriya-s-karuppu-song-scene-1786790909</id>
            <summary type="text">நடிகர் சூர்யா, திரிஷா நடிப்பில் இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கி வில்லனாக நடித்த படம் தான் கருப்பு. கடந்த மே 15 ஆம் தேதி ரிலீஸாகி மக்கள் மத்தியில் மிகப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் சூர்யா, திரிஷா நடிப்பில் இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கி வில்லனாக நடித்த படம் தான் கருப்பு. கடந்த மே 15 ஆம் தேதி ரிலீஸாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவையும் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது.</p><h2>மன்சூர் அலி கான்</h2><p> </p><p>இந்நிலையில், நடிகர் மன்சூர் அலி கான் அப்படத்தில் ஒருசில காட்சிகளில் நடித்திருந்தார். ஆனால் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், சமீபத்தில் ரொம்பவே பாதிக்கப்பட்டேன், வேதனையாக இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9fb3125-4b69-48c5-9472-a3bf3a57c970/26-6a8043ff3325a.webp' /></p><p> </p><p>கருப்பு படத்தில் 'நாங்க நாலு பேரு' பாடலுக்கு நானும் ஆடியிருந்தேன். அந்த காட்சியை தூக்கிட்டாங்க், பரவாயில்லை. யூடியூப்பில் வரும் என்று சொன்னார்கள், கஷ்டப்பட்டு சிறப்பாக ஆடிய அந்தக் காட்சியை காணோம்.</p><p>ஏன் இப்படி இழுத்தடிக்கிறீங்க? நீங்க சம்பாறிங்க, சொத்து சேருங்க, உங்களுக்கு ஆண்மை இருந்தால் அதை போடுங்க, அடுத்தவன் சோத்துல ஏன் மண்ணை அள்ளிப் போடுறீங்க? என்று வேதனையுடன் மன்சூர் அலி கான் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-15T11:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஜித்தை வைத்து படம் எடுக்க ஆள் இல்லைங்க, வெளுத்து வாங்கிய திருப்பூர் சுப்ரமணியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/tiruppur-subramaniam-about-ajith-kumar-1786790104"></link>
            <id>https://cineulagam.com/article/tiruppur-subramaniam-about-ajith-kumar-1786790104</id>
            <summary type="text">அஜித்&amp;nbsp;அஜித் இன்று இந்திய சினிமாவின் மிகப்பெரிய உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் எப்போதும் தனக்கென ஒரு கொள்கை வைத்து அதில் மட்டுமே வாழ்ந்து வருபவ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அஜித்&nbsp;</h2><p>அஜித் இன்று இந்திய சினிமாவின் மிகப்பெரிய உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் எப்போதும் தனக்கென ஒரு கொள்கை வைத்து அதில் மட்டுமே வாழ்ந்து வருபவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3c46fea-f49c-40e1-b1a1-871b07baff4e/26-6a8040db0efd2.webp' /></p><p> </p><p>ஆனால் சமீப காலமாக இவருடைய கொள்கைகள் எல்லாம் சுக்கு நூறாக உடைந்துவிட்டன. ஆம், எப்போது அஜித் கார் ரேஸ் போனாரோ அப்போதே விளம்பரம், பேட்டி என கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.</p><p></p><h2>திருப்பூர் சுப்ரமணியம்</h2><p> </p><p>இந்நிலையில் அஜித் தற்போது சொந்த தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து அதில் தான் டேர் டெவில் படத்தை எடுக்கவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efbc85b6-e993-4dc4-abba-a38cd09c907f/26-6a8040dbb93a7.webp' /></p><p>இதுகுறித்து திருப்பூர் சுப்ரமணியம் "<a href="https://www.youtube.com/watch?v=amwA8k0JR-Y" target="_blank">அஜித் </a>மிகப்பெரிய உச்ச நடிகர் தான், அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை, ஆனால் அதே நேரத்தில் தான் கேட்கிற சம்பளத்தில் உறுதியாக இருந்ததால் தான் இன்று அவரை வைத்து படம் எடுக்க ஆள் இல்லாமல், அவரே படம் தயாரிக்க வந்துவிட்டார், படத்திற்காக ப்ரோமோஷன் வரமாட்டார், ஆனால், கார் ரேஸுக்கு மட்டும் ப்ரோமோஷன் வருவாரா?" என திருப்பூர் சுப்ரமணியம் கோபமாக சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-15T11:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் 80வது சுதந்திர முன்னிட்டு யாழில் கொடியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/flag-hoisting-in-jaffna-of-india-independence-day-1786780996"></link>
            <id>https://tamilwin.com/article/flag-hoisting-in-jaffna-of-india-independence-day-1786780996</id>
            <summary type="text">இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம்(15.08.2028) யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவரின் வாசஸ்தலத்தில் இந்திய
தேசியக்கொடி ஏற்றப்பட்டு,...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம்(15.08.2028) யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவரின் வாசஸ்தலத்தில் இந்திய
தேசியக்கொடி ஏற்றப்பட்டு, சுதந்திர தின நிகழ்வு கொண்டாடப்பட்டுள்ளது.
</p><p>
யாழ்ப்பாணம், கச்சேரி - நல்லூர் வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத்
தூதுவரின் வாசஸ்தலத்தில் காலை 9 மணியளவில் இந்தியாவின் தேசியக் கொடியை துணைத்
தூதர் சாய் முரளி ஏற்றி வைத்துள்ளார்.</p><h2>கொடி ஏற்றம்</h2><p>
</p><p>சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவரின்
வாழ்த்துச் செய்தியை துணைத் தூதர் வாசித்துள்ளார்.
</p><p>
இந்த நிகழ்வில் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள்,
அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99988bda-8d74-4dfc-acaf-7e9d37f50281/26-6a80308e39d40.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d98f49b3-4d27-4b89-8652-fab580937e1e/26-6a80308f1b102.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T10:53:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[40 இலட்சம் செலவில் பாதை புனரமைப்பு பணி நிறைவு - பொதுமக்கள் நெகிழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kotagala-errington-colony-main-road-reconstruction-1786787658"></link>
            <id>https://tamilwin.com/article/kotagala-errington-colony-main-road-reconstruction-1786787658</id>
            <summary type="text">கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட எரிங்டன் கொலனி பிரதேசத்திற்குச் செல்லும்
பிரதான பாதையை சுமார் 40 இலட்சம் ரூபா செலவில் கொங்கிறீட் போட்டு புனரமைப்பதற்கான...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட எரிங்டன் கொலனி பிரதேசத்திற்குச் செல்லும்
பிரதான பாதையை சுமார் 40 இலட்சம் ரூபா செலவில் கொங்கிறீட் போட்டு புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் இன்று(15) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>
கொட்டகலை எரிங்டன் கொலனி பகுதிக்கு செல்லும் இந்த பிரதான வீதி, கடந்த பல
வருடங்களாக உரிய முறையில் புனரமைக்கப்படாத நிலையில், குன்றும் குழியுமாக
காணப்பட்டு வந்தது.</p><h2>வீதி புனரமைப்பு</h2><p> </p><p>இதனால் இந்த வீதியைப் பயன்படுத்தும் பொதுமக்கள், பாடசாலை
மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் வாகன சாரதிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி
வந்தனர்.</p><p>

குறிப்பாக மழைக்காலங்களில் வீதியில் நீர் தேங்குவதுடன், குழிகள் மேலும்
பெரிதாகி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்ததாகவும் மக்கள்
தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0630d38-bf3f-497c-8985-37da71bf9d20/26-6a803c6ccbf61.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் இந்த
முக்கியமான வீதியை விரைவாக புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் தொடர்ச்சியாக
விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, வீதியை கொங்கிறீட் இட்டு புனரமைக்கும் நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p>

இதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று 15ஆம் திகதி கொட்டகலை பிரதேச சபையின் உப தலைவி
யாகுல மேரி தலைமையில் நடைபெற்றது.</p><h2>நிரந்தரத் தீர்வு</h2><p>
</p><p>
இந்த வீதி புனரமைக்கப்படுவதன் மூலம் எரிங்டன் பகுதியில் நேரடியாக வசிக்கும்
சுமார் 300 குடும்பங்கள் பயனடையவுள்ளதுடன், ரொப்கில், எரிங்டன் உள்ளிட்ட அதனை
அண்டிய பல பகுதிகளைச் சேர்ந்த மேலும் பல ஆயிரக்கணக்கான மக்களும் இதன் மூலம்
பயனடையவுள்ளனர்.
</p><p>
பிரதேச மக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதுடன், அவசர மருத்துவ
சேவைகள், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து மற்றும் தொழிலாளர்களின் அன்றாட
பயணங்களுக்கும் இந்த வீதி புனரமைப்பு பெரும் உதவியாக அமையும் என
எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc39a747-d0c4-41fb-9c35-78250d2af5c9/26-6a803c6da5591.webp' /></p><p>

நீண்டகாலமாக சேதமடைந்த நிலையில் காணப்பட்ட வீதிக்கு நிரந்தரத் தீர்வொன்று
கிடைத்துள்ளமை தொடர்பில் பிரதேச மக்கள் தமது மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் உப தலைவி யாகுல மேரி, வட்டார
உறுப்பினர் அமித ஆனந்த, பிரஜாசக்தி தலைவர் சுனில் வீரசிங்க, குடாஓயா வட்டார
பிரஜாசக்தி தலைவர் லோகநாதன், அமைப்பாளர் கிருஸ்ணன் சசிகுமார் உள்ளிட்ட பலர்
கலந்து கொண்டிருந்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T10:52:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தர பரீட்சை வினாத்தாள் முறைகேடுகள் விவகாரம்! ஆரம்பமான சிஐடி விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-level-question-paper-incident-cid-investigations-1786788429"></link>
            <id>https://tamilwin.com/article/a-level-question-paper-incident-cid-investigations-1786788429</id>
            <summary type="text">&amp;nbsp;அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் சமீபத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து குற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் சமீபத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணையை தொடங்கியுள்ளது.
</p><p>
இந்த விவகாரம் தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கல்வி உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
</p><h2>வினாத்தாள் பொதிகள் திறக்கப்பட்டுள்ள விவகாரம்</h2><p>
குறித்த மையத்தில் வினாத்தாள் பொதிகள் திறக்கப்பட்டிருந்தபோதிலும், இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் எந்த வினாத்தாள்களும் கசிந்ததாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b20a51c8-8b51-4b56-bfcc-53e29ba84475/26-6a8044948bf5e.webp' /></p><p>
</p><p>
இச்சம்பவம் குறித்து பரீட்சைகள் திணைக்களமும், பொலிஸாரும் விசாரணையை நடத்தியுள்ளன. </p><p>

க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பில் எந்த சம்பவங்களும் பதிவாகவில்லை என்றும், பரீட்சை பணிகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-15T10:51:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் எங்கள் கண்மணிகள் நாடகம் தமிழர் பகுதிகளில் அரங்கேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmaniyil-engal-kanmanigal-drama-1786776840"></link>
            <id>https://tamilwin.com/article/chemmaniyil-engal-kanmanigal-drama-1786776840</id>
            <summary type="text">செம்மணி படுகொலையின் வரலாற்றை அடுத்த
தலைமுறையினருக்கு மறக்காமல் கடத்தும் நோக்கில் “செம்மணியில் எங்கள் கண்மணிகள்
” என்ற நாடகம் வடமாகாணம் முழுவதும் ஆற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி படுகொலையின் வரலாற்றை அடுத்த
தலைமுறையினருக்கு மறக்காமல் கடத்தும் நோக்கில் “செம்மணியில் எங்கள் கண்மணிகள்
” என்ற நாடகம் வடமாகாணம் முழுவதும் ஆற்றுகைப்படுத்தப்பட்டு வருகின்றது.</p><p>செம்மணியில் புதைக்கப்பட்ட எங்கள் உறவுகளுக்கான உண்மையையும் நீதியையும் உலகிற்கு எடுத்துக்கூறுவதாக இந்த நாடகம் அமைந்துள்ளது.</p><h2>செம்மணியில் எங்கள் கண்மணிகள்</h2><p>

கலைப்புலவர் ஜெயம் ஜெகனின் எழுத்துரு, பாடல் வரிகள் மற்றும்
நெறியாள்கையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நாடகம், அரங்கத்திற்குள்
மட்டுப்படுத்தப்படாமல் மக்களோடு மக்களாகவும், மாணவர்களிடம் நேரடியாகவும்
கொண்டு செல்லப்பட்டு வருகின்றது.
</p><p>
வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும்
மன்னார் ஆகிய மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 இடங்களில் மக்களினதும்,
மாணவர்களினதும் பார்வைக்காக நாடக ஆற்றுகைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/381eafab-6c7e-4416-8ad4-add17d2d4b80/26-6a800f4a38db5.webp' /></p><p>
</p><p>
சுமார் 30 நிமிடங்கள் கொண்ட இந்த நாடகம், செம்மணியில் இடம்பெற்ற கொடூர
சம்பவங்களை மையப்படுத்தி, அன்றைய மக்களின் மகிழ்ச்சியான இயல்பு வாழ்க்கையில்
இருந்து படிப்படியாக இடம்பெற்ற இராணுவ ஆக்கிரமிப்பு, அச்சுறுத்தல் மற்றும்
மனித உரிமை மீறல்களை காட்சிப்படுத்துகின்றது. </p><p>

பாடசாலை மாணவர்கள் மற்றும்
வீதியில் பயணித்தவர்கள் காணாமலாக்கப்பட்டமை, பெண்கள் மற்றும் மாணவிகள் மீதான
பாலியல் வன்முறைகள், சித்திரவதைகள், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி
அலைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் வேதனைகள் போன்ற பல்வேறு சம்பவங்கள்
நாடகத்தில் உணர்வு பூர்வமாக எடுத்துக்காட்டப்படுகின்றன.</p><p>
</p><p>
மேலும் செம்மணியை வெறுமனே ஒரு மயானமாக பார்க்க முடியாது என்றும், அது
புதைகுழிகளையும் அங்கு புதைக்கப்பட்ட மனிதர்களின் கதைகளையும் தாங்கி நிற்கும்
இடம் என்பதையும் வலியுறுத்தும் காட்சிகள் பார்வையாளர்களின் மனதை நெகிழச்
செய்கின்றன.</p><h2>நீதிக்கான கோரிக்கை</h2><p>
</p><p>
இந்த நாடகம் சிங்கள சகோதரர்களிடமும் நீதிக்கான கோரிக்கையை முன்வைப்பதுடன்
சர்வதேச சமூகத்தினதும் மனித உரிமை அமைப்புகளினதும் தலையீட்டின் ஊடாக உண்மையும்
நீதியும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனும் நிறைவடைகின்றது.
</p><p>
இதுவரை 40இற்கும் மேற்பட்ட அரங்குகளில் இந்த நாடகம் மேடையேற்றப்பட்டுள்ளது.
நாடகத்தை பார்வையிட்ட பலரும் காட்சிகளின் உணர்வு பூர்வமான தன்மையால் கண்ணீர்
மல்கியதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/083b408c-8209-42f7-8182-f3618ac42d13/26-6a800f4962fda.webp' /></p><p>
</p><p>
ஜெயம் நாடக கல்லூரியின் ஒழுங்கமைப்பில் ஆற்றுகைப்படுத்தப்பட்டு வரும்
இந்த நாடகத்தில் மொத்தமாக 15 நடிகர்கள் பங்கேற்கின்றனர். எழுச்சிப்
பாடலாசிரியர் செல்லக்குட்டி இசையமைத்துள்ளார். 
தபேலா இசையில் ந.நவதர்சன்
பங்களித்துள்ளார்.</p><p>

செம்மணியில் புதைக்கப்பட்ட உறவுகளின் உண்மையையும், அவர்களுக்கான நீதிக்கான
கோரிக்கையையும் அடுத்த தலைமுறைக்கும் உலக சமூகத்திற்கும் கொண்டு செல்லும் ஒரு
கலை வடிவிலான போராட்டக் குரலாகவே “செம்மணியில் எங்கள் கண்மணிகள்” நாடகம்
வடமாகாணம் முழுவதும் தொடர்ந்து பயணித்து வருகின்றது.</p><p>
11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தெருவெளி நாடகமானது செம்மணியில் நீதியின் ஓலம்
நிறுவுபெறும் 17ஆம் திகதி இறுதி நாளில் செம்மணியில் இடம்பெறவுள்ளதுடன் 20 ஆம்
திகதி வரை இந்த நாடகம் அரங்கேற்றப்படவுள்ளது.

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஆண், பெண் கலைஞர்கள் இணைந்து இந்த துணிச்சலாக
நாடகத்தை அரங்கேற்றி வருகிறமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T10:50:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[27 வயதுடைய இளைஞன் அடித்து படுகொலை! தொடரும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-27-year-old-man-has-been-killed-1786789801"></link>
            <id>https://ibctamil.com/article/a-27-year-old-man-has-been-killed-1786789801</id>
            <summary type="text">வெலிக்கடை காவல்துறை பிரிவுக்குட்பட்ட நாவல பகுதியில் 27 வயது இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
ராஜகிரியவைச் சேர்ந்த அந்த இளைஞருக்கும் ஒரு கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெலிக்கடை காவல்துறை பிரிவுக்குட்பட்ட நாவல பகுதியில் 27 வயது இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.</p><p>
ராஜகிரியவைச் சேர்ந்த அந்த இளைஞருக்கும் ஒரு குழுவினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகிறது.</p><p>
தகராறு முற்றியதால், இந்த கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>&nbsp;</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>இந்நிலைியல், கொல்லப்பட்ட இளைஞனின் சடலம் களுபோவில வைத்தியசாலையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ed66b47-e6a0-454c-9159-c8442ea555a1/26-6a80442a83f8f.webp' /></p><p>

இச்சம்பவம் குறித்து வெலிக்கடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-15T10:49:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய வாகனங்களை வாங்க காத்திருப்போருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-prices-to-increase-in-sri-lanka-1786787833"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-prices-to-increase-in-sri-lanka-1786787833</id>
            <summary type="text">இலங்கையில் வாகனங்களின் விலைகள் கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறக்குமதி வரிகள் மீதான 50 வீத கூடுதல் வரியை டிசெம்பர் 31 வரை நீடிக்கும் அரசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் வாகனங்களின் விலைகள் கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> </p><p>இறக்குமதி வரிகள் மீதான 50 வீத கூடுதல் வரியை டிசெம்பர் 31 வரை நீடிக்கும் அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, இந்த நீடிப்பு காட்சியக விலைகளை கணிசமாக உயர்த்தும் என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>அதன்படி, ஒரு சுசுகி வேகன் ஆர் சுமார் 500,000 ரூபா, ஒரு டொயோட்டா ரைஸ் 1 மில்லியன் ரூபா, ஒரு ஹோண்டா வெசல் 1.5 - 2 மில்லியன் ரூபா, ஒரு டொயோட்டா பிராடோ 3 மில்லியன் ரூபா, ஒரு லேண்ட் குரூசர் 5 மில்லியன் ரூபா மற்றும் ஒரு டபுள் கேப் 2 - 2.5 மில்லியன் ரூபா வரை விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p></p><h2>விலை அதிகரிப்பு..&nbsp;</h2><p>அதேநேரம், தற்போது காட்சியகங்களில் உள்ள வாகனங்கள், மே 15இற்கு முன்னர் தொடங்கப்பட்ட கடன் கடிதங்களின் (LCs) கீழ் இறக்குமதி செய்யப்பட்டவை என்றும், அவற்றுக்கு கூடுதல் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/349a5195-c2ea-4a28-9b06-e3269c347098/26-6a8041b8cdde7.webp' /></p><p>
இருப்பினும், மே 15இற்குப் பிறகு திறக்கப்பட்ட கடன் கடிதங்களின் (LCs) கீழ் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு அதிக வரி விதிக்கப்படும், இது விலை உயர்வுக்கு வழிவகுக்கலாம் என கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><p>

"கூடுதல் கட்டணம் நீட்டிக்கப்படாது என்று நாங்கள் எதிர்பார்த்தோம், ஆனால் பல்வேறு காரணங்களால் அது தொடரப்பட்டுள்ளது. </p><p>இதன் விளைவாக, வாகன விலைகளில் மேலும் உயர்வுகளை நாம் எதிர்பார்க்கலாம்" என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கூறியுள்ளார்.&nbsp;</p><p>மேலும் அவர், "இதுவரை அனுமதிக்கப்பட்ட வாகனங்களில் 90 வீத கூடுதல் கட்டணத்திற்கு உட்படாத கடன் கடிதங்களின் கீழ் இருந்தன.&nbsp;</p><p>ஆனால் இப்போது புதிய வரியின் கீழ் வரும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கும் பணி தொடங்கியுள்ளது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T10:46:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[25-க்கு மேல் வெற்றிடங்கள்..! பரீட்சைக்கான தீர்வை நம்பி காத்திருக்கும் விண்ணப்பதாரர்களின் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/examination-for-social-service-officer-grade-iii-1786790374"></link>
            <id>https://tamilwin.com/article/examination-for-social-service-officer-grade-iii-1786790374</id>
            <summary type="text">கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு மூலமாக சமூக சேவை உத்தியோகத்தர் தரம் iii க்கான திறந்த போட்டிப் பரீட்சை விண்ணப்பம் கோரப்பட்டு தற்போது மூன்று வருடங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு மூலமாக சமூக சேவை உத்தியோகத்தர் தரம் iii க்கான திறந்த போட்டிப் பரீட்சை விண்ணப்பம் கோரப்பட்டு தற்போது மூன்று வருடங்கள்
கடந்துள்ள நிலையில் போட்டி பரீட்சை நடத்தப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p>

அத்துடன், விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதே பரீட்சைக்கான கட்டணங்களும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
விண்ணப்பதாரர்களுக்கான பதில்</h2><p>மாறாக, இந்த விடயம் தொடர்பில் இதுவரையில் பரீட்சாதிகளுக்கு எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96dfef27-c9d0-4694-8bad-546a40dc1367/26-6a80434804db6.webp' /></p><p>


இது தொடர்பில் மாகாண பொதுச் சேவை
ஆணைக்குழுவுக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக இது தொடர்பில் விளக்கம்
கோரப்பட்டுள்ள நிலையில், இதற்கான பதிலாக "நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட
2020.02.25 ஆம் திகதிய 01/2020 ஆம் இலக்க முகாமைத்துவ சேவைகள் சுற்றரிக்கை
மற்றும் 2022.04.26 ஆம் திகதிய 03/2022 ஆம் இலக்க தேசிய வரவு செலவு திட்ட
சுற்று நிரூபத்துக்கு அமைவாக நியமனங்கள் அனைத்தும் நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>

25-க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்</h2><p>
கிழக்கில் உள்ள பிரதேச செயலகங்களில் திருகோணமலை ,மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய
மாவட்டங்களில் சமூக சேவை உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் நிலவி வருவதுடன்,
இதனை இழுத்தடிப்பு செய்து வருகின்றனர். </p><p>

தற்போது வரை கிழக்கு மாகாணத்தில்
மொத்தமாக 25க்கு மேற்பட்ட வெற்றிடங்கள் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் துறைசார் உயர் அதிகாரிகள் கவனம்
செலுத்தி இந்த போட்டிப் பரீட்சையை விரைவில் நடத்துமாறு விண்ணப்பதாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T10:45:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அறுவை சிகிச்சைகளுக்காக 25,000க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/25-000-people-waiting-for-surgeries-in-sri-lanka-1786790615"></link>
            <id>https://jvpnews.com/article/25-000-people-waiting-for-surgeries-in-sri-lanka-1786790615</id>
            <summary type="text">இலங்கையின் அரச மருத்துவமனைகளில் 2 இருதய அறுவை சிகிச்சைகள், முக்கிய அறுவை சிகிச்சைகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவப் பரிசோதனைகளுக்காக 5,000க்கும் மேற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் அரச மருத்துவமனைகளில் 2 இருதய அறுவை சிகிச்சைகள், முக்கிய அறுவை சிகிச்சைகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவப் பரிசோதனைகளுக்காக 5,000க்கும் மேற்பட்ட நோயாளிகள்&nbsp; காத்திருப்புப் பட்டியலில் உள்ளதாகத் தகவல்&nbsp; வெளியாகியுள்ளது.</p><p>அரச சுகாதாரத் துறையில் அதிகரித்து வரும் காத்திருப்புப் பட்டியல் நெரிசலைக் குறைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர், நிபுணத்துவ மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.</p><p>கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.</p><p>அவர்களில் , சில இருதய அறுவை சிகிச்சைகளுக்கான காத்திருப்பு காலம் 2029ஆம் ஆண்டு வரை நீடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அரச மருத்துவமனைகளில் நிலவும் காத்திருப்புப் பட்டியலைக் குறைப்பதற்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும், அந்தத் திட்டம் எதிர்பார்த்த அளவில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>நீண்டகாலமாக சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நோயாளிகளில், தனியார் மருத்துவமனைகளில் அதிக செலவில் சிகிச்சை பெற முடியாத குறைந்த வருமானம் கொண்டவர்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இதற்குத் தீர்வாக, ஜனாதிபதி நிதியத்தின் ஒதுக்கீடுகளை அதிகரித்து, அரச மருத்துவமனைகளில் காத்திருக்கும் நோயாளிகள் குறிப்பிட்ட கட்டண அடிப்படையில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்தலாம் என அவர் யோசனை முன்வைத்துள்ளார்.</p><p>அதேவேளை, அரச மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மேலதிக சேவைக்கான உரிய கொடுப்பனவுகளை வழங்கி, தினசரி மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>நீண்டகாலத் தீர்வாக, சிறப்பு மருத்துவப் பயிற்சி பெற்ற மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், மருத்துவமனை வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்குத் தேவையான உபகரணங்களின் போதுமான இருப்பை உறுதி செய்தல் அவசியம் என்றும் நிபுணத்துவ மருத்துவர் சமல் சஞ்சீவ வலியுறுத்தியுள்ளார்</p>]]></content>
            <updated>2026-08-15T10:43:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டில் ஆறு பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shooting-in-the-us-6-people-killed-1786788994"></link>
            <id>https://ibctamil.com/article/shooting-in-the-us-6-people-killed-1786788994</id>
            <summary type="text">அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். </p><p>உயிரிழந்தவர்களில் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபரும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
அப்பகுதியில் அமைந்துள்ள இரண்டு வீடுகளை இலக்காகக் கொண்டு இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு</h2><p> சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ae200fc-1160-4ccc-9314-05d20ea6d695/26-6a8040d070ea5.webp' /></p><p>

துப்பாக்கிச்சூட்டை நடத்திய பின்னர் சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தகவல் கிடைத்ததையடுத்து, அவரைக் கைது செய்வதற்காக மிச்சிகன் பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
</p><p>
இந்நிலையில், பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கைகளுக்கு மத்தியில், சந்தேகநபரின் சடலம் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதனால், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த ஆறு பேரில் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாகக் கூறப்படும் நபரும் உள்ளடங்கியுள்ளார்.</p><p>
துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>மேலும் இந்த சம்பவம் தொடர்பில்&nbsp;மிச்சிகன் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T10:40:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருட வந்த இடத்தில் கடுப்பான திருடன்; என்னதான் நடந்தது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-thief-gets-annoyed-at-the-scene-of-the-crime-1786776525"></link>
            <id>https://jvpnews.com/article/a-thief-gets-annoyed-at-the-scene-of-the-crime-1786776525</id>
            <summary type="text">நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள பிரபல தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றை உடைத்து திருட முயன்றதாக சந்தேகிக்கப்படும் அடையாளம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள பிரபல தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றை உடைத்து திருட முயன்றதாக சந்தேகிக்கப்படும் அடையாளம் தெரியாத நபரின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.</p><p>கடந்த வெள்ளிக்கிழமை (14) இரவு சுமார் 10.45 மணியளவில் குறித்த விற்பனை நிலையத்திற்கு வந்த சந்தேகநபர், கதவில் பொருத்தப்பட்டிருந்த பூட்டை பலவந்தமாக திறந்து உள்ளே நுழைய நீண்ட நேரமாக முயற்சித்துள்ளார்.</p><p>எனினும், பூட்டை திறக்க முடியாத நிலையில், தனது முயற்சியைக் கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>சந்தேகநபர் பூட்டைத் திறக்க போராடிய காட்சிகள் விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கண்காணிப்பு கெமெராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளன.</p><p>சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>கண்காணிப்பு கெமெரா பதிவுகளின் உதவியுடன் சந்தேகநபரை விரைவில் அடையாளம் காண முடியும் என&nbsp; தெரிவித்துள்ள பொலிஸார் , பொதுமக்களின் உதவியையும் கோரியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-15T10:36:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பிரதேசத்தில் அதிர்ச்சி; இளம் தாய் கூட்டு வன்புனர்வு ; மகன் செய்த கொடும் செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mother-gang-raped-in-vavuniya-committed-by-son-1786784583"></link>
            <id>https://jvpnews.com/article/mother-gang-raped-in-vavuniya-committed-by-son-1786784583</id>
            <summary type="text">வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண் ஒருவரை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில்ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண் ஒருவரை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில்ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார்&nbsp; (14) தெரிவித்தனர். இது தொடர்பாக பொலிசார் மேலும் தெரிவித்ததாவது,</p><h2>&nbsp;முதல் கணவரின் மகனே திட்டமிட்டு&nbsp;கொடும் செயல்</h2><p>கடந்த 8 ஆம் திகதி வவுனியா, மடுகந்தை, மயிலங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை உடைத்து உட் சென்ற சிலர் அங்கிருந்த வாகனச் சாரதி மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு, வீட்டு உரிமையாளரான 51 வயது பெண் அணிந்திருந்த நகைகளை&nbsp; கொள்ளையிட்டு&nbsp; கூட்டு துஸ்பிரயோகம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.</p><p>அத்துடன் வீட்டில் மறைத்து வைத்திருந்த 80 இலட்சம் பெறுமதியான இரத்தினக் கல், 56 இலட்சம் பெறுமதியான 15 பவுணுக்கு அதிகமான தங்க நகைகள், 5 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம், 15 வாகனப் புத்தகங்கள் மற்றும் திறப்புகள், 35 காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் என பலவற்றை திருடிச் சென்றுள்ளனர்.</p><p>பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தின் குற்த்தடுப்பு பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து விரைந்து செயல்பட்ட பொலிசார் ஆபத்தான நிலையில் இருந்த, பாதிக்கப்பட்ட இருவரையும் மீட்டு வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.&nbsp;</p><p>வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கு அமைய வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.யே.எஸ்.ரத்னமலலா அவர்களின் வழிகாட்டலில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவின் பதில் பொறுப்பதிகாரி ஆர். பந்துல தலைமையில் பொலிஸ் சார்ஜன்டுகளான சந்தன (16446), கேரத் (14692), பியங்கர ( 47358), பொலிஸ் கொன்ஸ்தாபிள்களான நவகீதன் ( 8098), சுப்புன் (28752), சம்பத் ( 11388) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.</p><p>பாதிக்கப்பட இப்பெண்ணின் தொழில்சாலையில் பணியாளர்களாக வேலை செய்த 35 வயதான உக்குவெல மாத்தறை பகுதியை சேர்த்த நபர் ஒருவரையும், 29 வயதான களேமிதுனுவெல, சிவலாங்குளம் பகுதியை சேர்ந்த மற்றொரு இளைஞரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.</p><p>பெண்ணிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் , சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பாதிக்கப்பட்ட பெண்ணின் முதல் கணவரின் மகனே திட்டமிட்டு இச் சம்பவத்துக்கு மூலகாரணமாக செயல்பட்டு இக் கொள்ளைச் சம்பவத்தை நடத்தியதாக கூறப்படுகின்றது.</p><p>மகனே&nbsp; தனது காரில் களேமிதுனுவெல சிவலாங்குளம் பகுதியில் இருந்து சந்தேக நபர்களை ஏற்றி வந்து வீட்டு அருகில் வீதியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது.</p><p>மேலும் சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் திருடப்பட்ட இரத்தினக்கற்கள், தங்க நகைகள், வாகனப் புத்தகங்கள், திறப்புகள், 35 காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் என்பவற்றை மீட்டது.</p><p>அத்துடன், இச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மேலதிக விசாரணைணகளின் பின் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்</p>]]></content>
            <updated>2026-08-15T10:35:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சனிக்கிழமைகளில் கடமைகளிலிருந்து விலக கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/grama-niladharis-abstain-from-duties-on-saturdays-1786787762"></link>
            <id>https://ibctamil.com/article/grama-niladharis-abstain-from-duties-on-saturdays-1786787762</id>
            <summary type="text">இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் இன்று (15) முதல் சனிக்கிழமைகளில் கடமைகளிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கிராம உத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் இன்று (15) முதல் சனிக்கிழமைகளில் கடமைகளிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>கிராம உத்தியோகத்தர்களால் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் தவறியதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்தநிலையில் மீள அறிவிக்கும் வரை சனிக்கிழமைகளில் கடமைகளிலிருந்து விலகுவதற்கு கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானித்துள்ளதாக அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் நெவில் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மேலதிக கொடுப்பனவு</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், "இன்று முதல் சனிக்கிழமை அலுவலக நாட்களிலிருந்து விலகுமாறு ஒரு சங்கமாக நாங்கள் தீர்மானித்து ஏனைய சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a713b0cb-eb8c-4897-9d8b-65673cfa024d/26-6a803fc691bd4.webp' /></p><p> </p><p>அதற்கமைய, எவ்வித மேலதிக கொடுப்பனவும் இன்றி எங்களது விடுமுறையை தியாகம் செய்து மேற்கொள்ளும் அந்த அலுவலக நாளை நாங்கள் தவிர்க்கிறோம்.</p><p> மேலும், அன்றைய தினம் நாங்கள் களப் பணிகளை மேற்கொள்ள மாட்டோம். அதன்படி, சனிக்கிழமை அலுவலக நாளை புறக்கணிக்கிறோம். அதற்கமைய, கிராம உத்தியோகத்தர்கள் இனிமேல் மறு அறிவித்தல் வரை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டுமே பிரிவு அலுவலகங்களில் தங்கியிருப்பார்கள்." என தெரிவித்தார்.</p><p></p><h2>இரு நாள் தொழிற்சங்க நடவடிக்கை</h2><p>
</p><p>இதேவேளை பயணக் கொடுப்பனவை அதிகரித்தல், பட்டப்படிப்பை குறைந்தபட்ச தகுதியாக மாற்றுதல், கம்மன்பில குழுவினால் பரிந்துரைக்கப்பட்டு அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவுகளை வழங்குதல், சனிக்கிழமை மற்றும் அரச விடுமுறை நாட்களில் செய்யப்படும் சேவைக்காக ஒரு நாள் சம்பளத்தை வழங்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் கடந்த 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் மருத்துவ விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a64e6eb9-06d7-4048-981b-481271924654/26-6a803fc5b17e9.webp' /></p><p>

 

எனினும், குறித்த இரு நாள் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமை மற்றும் கோரிக்கைகளுக்கு நேர்மறையான தீர்வை வழங்கத் தவறியமை காரணமாக இவ்வாறு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T10:33:43+00:00</updated>
        </entry>
    </feed>
