<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-29T20:43:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[எச்சரிக்கை மட்டத்தை எட்டும் வெப்பம் ; பல பகுதிகளுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heat-reaches-warning-level-across-regions-1785357387"></link>
            <id>https://jvpnews.com/article/heat-reaches-warning-level-across-regions-1785357387</id>
            <summary type="text">இலங்கையின் கிழக்கு மாகாணம் உள்ளிட்ட ஆறு பகுதிகளில் இன்று வியாழக்கிழமை (30) வெப்பச் சுட்டெண் ‘எச்சரிக்கை’ மட்டத்தை அடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கையின் கிழக்கு மாகாணம் உள்ளிட்ட ஆறு பகுதிகளில் இன்று வியாழக்கிழமை (30) வெப்பச் சுட்டெண் ‘எச்சரிக்கை’ மட்டத்தை அடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">


இதன்படி, கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வெப்பமான காலநிலை தொடர்பான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2efa29b2-ad40-42ff-a672-fd5c22360a5f/26-6a6a644d6c4b2.webp' /></p><p style="text-align: justify; ">



மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையை பிரதிபலிக்கும் வெப்பச் சுட்டெண்,&nbsp; பகல் நேரங்களில் சில பகுதிகளில் ‘எச்சரிக்கை’ மட்டத்தை அடையக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



எனவே, நிலவும் அதிக வெப்பமான காலநிலையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-29T20:36:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் அறிவிப்பால் அதிகரித்த பதற்றம்! ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-threatens-to-hit-iran-very-hard-1785353965"></link>
            <id>https://ibctamil.com/article/trump-threatens-to-hit-iran-very-hard-1785353965</id>
            <summary type="text">

அமெரிக்க இராணுவ நிலைகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல் முயற்சிக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>

அமெரிக்க இராணுவ நிலைகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல் முயற்சிக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.</p><p>

அண்மைகாலமாக இராஜதந்திரத் தீர்வை எட்ட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ட்ரம்பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p></p><h2>முதலில் தாக்கிய ஈரான்</h2><p>
</p><p>
ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “நாங்கள் அவர்களை மிகக் கடுமையாகத் தாக்கப் போகிறோம், ஏனெனில் அவர்களைத் தாக்குவது இப்போது நமது முறை. அது வரப்போகிறது என்பது அவர்களுக்கும் தெரியும்” என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b566e1d-16cd-4cbd-93a1-5738239e7ee7/26-6a6a5d6dcb8c7.webp' /></p><p>
</p><p>
அமெரிக்க இராணுவத்தின் கூற்றுப்படி, அப்பகுதியில் உள்ள அமெரிக்கப் படைகளை இலக்கு வைத்து ஈரான் இரவோடு இரவாக ஏவுகணைகளை ஏவியது.எனினும், அவை அனைத்தும் இடைமறித்து அழிக்கப்பட்டன.</p><p>
வழக்கமாக அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பிறகே ஈரான் பதிலடி கொடுத்து வந்த நிலையில், இம்முறை ஈரானே முதலில் தாக்குதலைத் தொடங்கியிருப்பது வழக்கமான போக்கிலிருந்து மாறுபட்டுள்ளதுடன், போரை மீண்டும் தொடங்க ஈரான் முற்படுவதையும் காட்டுவதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><h2>மிகக் கடுமையான தாக்குதல்</h2><p>
</p><p>
மேலும் பதிலடி குறித்துப் பேசிய ட்ரம்ப், “பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அவர்கள் நம்மிடம் கேட்டுக்கொள்கிறார்கள்” எனக் குறிப்பிட்டதுடன், ஈரானின் ஏவுகணைகள் அனைத்தும் தரையிலேயே வீழ்த்தப்பட்டுவிட்டதாக விமர்சித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4766ce91-ea72-4759-8981-23b7148d4d44/26-6a6a5d6ec829c.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு கட்டத்தில் உடன்பாட்டை எட்ட முடிகிறதா என்று பார்க்கவுள்ளதாகவும், ஆனால் அதற்குள் அவர்களை தாங்கள் மிகக் கடுமையாகத் தாக்கப்போவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T20:11:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ; கைதான 25 வயது இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/warning-issued-to-people-in-tamil-area-1785355704"></link>
            <id>https://jvpnews.com/article/warning-issued-to-people-in-tamil-area-1785355704</id>
            <summary type="text">களுவாஞ்சிக்குடியில் வைத்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார்&amp;nbsp; புதன்கிழமை (29) தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">களுவாஞ்சிக்குடியில் வைத்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார்&nbsp; புதன்கிழமை (29) தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "> 


இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் கடந்த வாரம் புதன்கிழமை (22) களுவாஞ்சிக்குடி கண்ணகை அம்மன் ஆலயத்தில் வைத்து காணாமல்போயுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9928c51d-be1f-48bd-b5eb-3b3d4471d841/26-6a6a5db9c012d.webp' /></p><h2 style="text-align: justify; ">அறிவுறுத்தல்</h2><p style="text-align: justify; "> 

இவ்விடயம் தொடர்பில் அந்த நபர் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். </p><p style="text-align: justify; ">



அதனையடுத்து, விசாரணையில் ஈடுபட்ட பொலிஸார், செவ்வாய்க்கிழமை (28) அந்த மோட்டார் சைக்கிளையும் அதனைத் திருடிச் சென்றதாகக் கருதப்படும் சந்தேக நபரையும் பாணமை பகுதியில், பாணமை பொலிஸாருடன் இணைந்து கைது செய்துள்ளதோடு, மோட்டார் சைக்கிளையும் மீட்டுள்ளனர்.&nbsp;</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்டவர் 25 வயது இளைஞர் எனவும், கண்டுபிடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் 8 இலட்சத்துக்கும் அதிக பெறுமதி கொண்டது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற நபர், வாகனத்தின் இலக்கத்தகட்டை மாற்றிவிட்டு கதிர்காமம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். </p><p style="text-align: justify; ">

சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதோடு, கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள், போலி இலக்கத்தகடு உள்ளிட்ட சான்றுப் பொருட்களையும் மன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளதாகவும், பொதுமக்கள் தமது வாகனங்களை நிறுத்தும்போது சரியான முறையில் பூட்டி, குறிப்பாக, மோட்டார் சைக்கிள் கென்ரின் பூட்டு செய்து, பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவேண்டும் எனவும், கள்வர்கள் நடமாடுவதனால் அவதானத்துடன் செயற்படுமாறும் பொலிஸார் அறிவுறுத்துகின்றனர்.&nbsp; &nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-29T20:08:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்து கைதாகப் போவது யார்..! அநுரவின் அதிரடியால் திணறும் அரச அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-officers-anura-kumara-decision-1785348860"></link>
            <id>https://tamilwin.com/article/government-officers-anura-kumara-decision-1785348860</id>
            <summary type="text">தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்தது போல் ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்த்து நடவடிக்கை எடுத்து வருகின்றது.&amp;nbsp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்தது போல் ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்த்து நடவடிக்கை எடுத்து வருகின்றது.&nbsp;</p><p>இந்நிலையில், முந்தைய அரசாங்கங்களில் நடந்த பல்வேறு&nbsp;ஊழல் முறைக்கேடுகள் தொடர்பில் அம்பலப்படுத்தப்பட்டும் வருகின்றது.&nbsp;</p><p>இதற்கிடையில், அரசாங்க அதிகாரிகள் பலரின் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>ஜனாதிபதி அநுர குமாரவுடனான கலந்துரையாடலின் போது சில முக்கிய அதிகாரிகளிடம் அவர் எழுப்பிய கேள்விகளின் மூலம் இவை அம்பலமாகியுள்ளன.&nbsp;</p><p>இது உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2iVdgos_NAE" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T20:03:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரகீத் எக்னெலிகொட வழக்கில் திருப்பம் - விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சுரேஷ்குமாரின் அதிர்ச்சி சாட்சியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eknaligoda-case-member-shocking-testimony-1785351370"></link>
            <id>https://tamilwin.com/article/eknaligoda-case-member-shocking-testimony-1785351370</id>
            <summary type="text">அண்மையில் நாட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய நீர்கொழும்பு கலவரம் சம்மந்தமான வழக்கு விசாரணை நீதிமன்றத்திலே எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் சிஐடி தரப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில் நாட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய நீர்கொழும்பு கலவரம் சம்மந்தமான வழக்கு விசாரணை நீதிமன்றத்திலே எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் சிஐடி தரப்பிலிருந்து பல முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

இந்த விவகாரம் குறித்து குஷ் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிக்கு ஒருவர் பல முக்கிய விடயங்களை சாட்சிகளாக தெரிவித்திருக்கின்றார்.
</p><p>
அவர் தனது வாக்குமூலத்தில், ஜூலை 15ஆம் திகதி மதிய உணவு வேளையில் முகத்தை மூடிய சுமார் 15 பேர் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதனை அடுத்து மறுநாள் காலை சிறை அதிகாரிகள் இல்லாமல் கைதிகளே உணவை பகிர்ந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். பின்பு துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும் கைதிகள் தாக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.</p><p>இந்த நீர்கொழும்பு கலவரம் குறித்து இன்னும் சிலர் சாட்சியங்களாக மாறி தனது கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தனர். அவ்வாறான பல முக்கிய சாட்சியங்களின் பதிவுகளை கொண்டு வருகிறது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Q56Hn1ODi7Q" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T19:59:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்மராட்சியில் இராணுவத்தின் கொடூரம் - ஐரோப்பிய தூதுக்குழுவின் சந்திப்பு தவறானது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/thenmarachchi-abuse-witness-alleges-eu-meeting-1785350817"></link>
            <id>https://tamilwin.com/article/thenmarachchi-abuse-witness-alleges-eu-meeting-1785350817</id>
            <summary type="text">வடக்குக் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் அனுபவம் மிக்கவர்கள் தற்பொழுது இல்லை என ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்குக் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் அனுபவம் மிக்கவர்கள் தற்பொழுது இல்லை என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் விஜயகுமார் தெரிவித்திருந்தார்.
</p><p>
ஐபிசி தொலைகாட்சின் களம் நிகழ்ச்சிக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், "இப்பொழுது காணப்படுகின்ற காணாமல் ஆக்கப்பட்டோர் சம்மந்தமான ஒன்றியங்கள் மற்றும் சங்கங்களில் அன்றைய காலங்களில் இருந்தவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை.</p><p>
நாங்கள் நீண்டகாலமாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் குறித்து பல போரட்டங்களை முன்னெடுத்திருந்ததுடன் பல்வேறுபட்ட தரப்பினரை நேரிலும் சந்தித்து அவர்களுக்கான நியாயங்களை கேட்டிருந்தோம்.</p><p> 

ஆனால் எங்களுக்கான நியாயம் இதுவரையிலும் கிடைக்கவில்லை. இதனால் ஏற்பட்ட விரக்தியினாலேயே தற்போதைய காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்களில் எங்களுடைய காலத்தில் இருந்தவர்கள் பங்கேற்பதில்லை" என தான் நினைப்பதாக குறிப்பிட்டிருந்தார்.</p><p>

இந்த விவகாரம் தொடர்பில் அவர் வழங்கிய இன்னும் பல விடயங்கள் மற்றும் அவருடைய அனுபவங்களை தொகுத்து வழங்குகிறது களம் நிகழ்ச்சி..&nbsp; &nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/HjyzbYWrhvI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T19:55:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடனான மோதலுக்கு மத்தியில் சீனாவிடம் இருந்து வான் பாதுகாப்பு ஏவுகணைகளைப் பெறும் ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-air-defense-missiles-china-standoff-us-1785346534"></link>
            <id>https://tamilwin.com/article/iran-air-defense-missiles-china-standoff-us-1785346534</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதலுக்கு மத்தியில் தனது வான் பாதுகாப்பு
அமைப்புகளைப் பலப்படுத்தும் நோக்கில், சீனாவிடமிருந்து தோளில் வைத்து இயக்கும்
4...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதலுக்கு மத்தியில் தனது வான் பாதுகாப்பு
அமைப்புகளைப் பலப்படுத்தும் நோக்கில், சீனாவிடமிருந்து தோளில் வைத்து இயக்கும்
400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளைப் பெற ஈரான் ஒப்பந்தம் செய்துள்ளது.</p><p>

சுமார் 60 முதல் 70 மில்லியன் டொலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின் கீழ்,
சீனாவின் QW-12 மற்றும் FN-16 வகை ஏவுகணைகள் அடங்கிய 300 முதல் 400 மேன்பேட்ஸ் அமைப்புகள் இன்னும் சில வாரங்களில் ஈரானுக்கு முதற்கட்டமாக
விநியோகிக்கப்படவுள்ளன.</p><p></p><h2>பாதுகாப்பு நடவடிக்கைகள்&nbsp;</h2><p>
</p><p>
ஹொங்கொங்கைச் சேர்ந்த இடைத்தரகு நிறுவனம் ஒன்றின் மூலம் இந்த ஒப்பந்தம்
கையெழுத்தாகியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/830b9d8e-ffa2-4975-b9e1-711127125054/26-6a6a56e4a638c.webp' /></p><p>
குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்களைத்
தாக்கி அழிக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகள், ஈரானின் இராணுவ மற்றும்
எரிசக்தி உள்கட்டமைப்பு மையங்களைப் பாதுகாக்கப் பயன்படும் என பாதுகாப்பு
வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>

இருப்பினும், இந்தச் செய்தியை முற்றிலுமாக மறுத்துள்ள சீன வெளியுறவு
அமைச்சகம், "இந்த அறிக்கை முற்றிலும் ஆதாரமற்றது. </p><p>பிராந்தியத்தில் அமைதியை
ஏற்படுத்தவே சீனா தொடர்ந்து முயன்று வருகிறது" எனத் தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், பாகிஸ்தான் வழியே இந்த ஏவுகணைகள் கொண்டு செல்லப்படவுள்ளதாக வெளியான
தகவல்களையும் பாகிஸ்தான் இராணுவம் முற்றிலும் பொய் என மறுத்துள்ளது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T19:51:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ayyanar-thunai-serial-reshma-about-casting-couch-1785333181"></link>
            <id>https://cineulagam.com/article/ayyanar-thunai-serial-reshma-about-casting-couch-1785333181</id>
            <summary type="text">அய்யனார் துணைஅய்யனார் துணை, விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சீரியல். 4 அண்ணன்-தம்பிகளின் வாழ்க்கை கதையாக தொடங...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அய்யனார் துணை</h2><p>அய்யனார் துணை, விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சீரியல்.</p><p> 4 அண்ணன்-தம்பிகளின் வாழ்க்கை கதையாக தொடங்கப்பட்ட இந்த தொடர் இப்போது உள்ள கதைக்களம் பொறுத்த வரை நிலா-சோழன் வாழ்க்கை கதையாக ஒளிபரப்பாகி வருகிறது. நிலாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்க சோழன் ஒன்று செய்ய அது கடைசியில் பிரச்சனையாக மாறிவிட்டது. </p><p>ஆனால் சோழன் எப்படியோ அட்வான்ஸ் பணத்தை வாங்கிவிட்டார், அந்த பணத்தில் வீட்டிற்கு ஒரு தொலைக்காட்சியும் வாங்கியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de82b47c-3463-4d78-a837-cdb65ee12f9c/26-6a6a0a3dc8ce2.webp' /></p><h2>நடிகை வேதனை
</h2><p>இந்த அய்யனார் துணை சீரியலில் கார்த்திகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ரேஷ்மா. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், Casting Couch பற்றி பேசியுள்ளார். </p><p>அதில் அவர், நான் நடிக்க தொடங்கிய சமயத்தில் சின்ன ரோலில் நடிக்கக்கூட அட்ஜெஸ்ட்மென்ட் பண்ண முடியுமா என கேட்பார்கள், அதை கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b4f7e86-d009-43f0-9ace-69c78ffb0173/26-6a6a0a3c1ebaa.webp' /></p><p> </p><p>அட்ஜெஸ்ட்மென்ட் ஓகேவா என்று கேட்பார்கள், நாம் வேண்டாம் என்று சொன்னாலும் மேனேஜர் ஃபோன் செய்து ஓகேவா என கேட்பார். எங்களுக்கு மேலிடத்திலிருந்து கேட்பார்கள் அதை சொல்லத்தான் உங்களிடம் கேட்கிறோம் என்பார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbdf8e14-29ca-48a7-87da-43a64a131d77/26-6a6a0a3d0ad97.webp' /></p><p> </p><p>நோ சொன்னால் உடனே ஃபோன் வைத்துவிடுவார்கள், வாய்ப்பு இருக்காது என கூறியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-29T19:50:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் ஏரியில் தொலைந்த திருமண மோதிரம்: மீட்ட கடற்படை வீரர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/find-louisiana-mans-submerged-wedding-band-1785332641"></link>
            <id>https://canadamirror.com/article/find-louisiana-mans-submerged-wedding-band-1785332641</id>
            <summary type="text">அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தைச் சேர்ந்த ஜெஃப் டக்ளாரிஸ் என்பவர், கனடாவின் நோவா ஸ்கோஷியாவில் உள்ள ஏரியொன்றின் ஆழத்தில் தவறவிட்ட தனது திருமண மோதிரத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தைச் சேர்ந்த ஜெஃப் டக்ளாரிஸ் என்பவர், கனடாவின் நோவா ஸ்கோஷியாவில் உள்ள ஏரியொன்றின் ஆழத்தில் தவறவிட்ட தனது திருமண மோதிரத்தை, நெய்ட் மெக்லாகன் என்பவரின் உதவியுடன் பத்திரமாக மீட்டுள்ளார்.
</p><p>கனடிய ராயல் கடற்படையில் ஆயுதத் தொழில்நுட்பக் கலைஞராகப் பணியாற்றி வரும் நெய்ட் மெக்லாகன், கடந்த 20 ஆண்டுகளாக 'மெட்டல் டிடெக்டர்' கருவி மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார். </p><p>
இந்த ஆண்டு மட்டும் தொலைந்துபோன 25 பொருட்களையாவது உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற இலக்குடன் அவர் செயல்பட்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcb43dd6-05be-4510-9ceb-daaa14611abb/26-6a6a03a2c2654.webp' /></p><p>
</p><p>ஜெஃப் டக்ளாரிஸ் பயிற்சிக்காக கனடாவிற்கு வந்திருந்தபோது, தனது நண்பர்களுடன் 'கேஜிம்குஜிக் தேசியப் பூங்காவில்' உள்ள ஏரியில் காயாக்கிங் படகுச் சவாரி செய்தார். பாறைகளில் ஏறி ஏரி நீரில் குதித்தபோது, அவரது விரலிலிருந்த 14-காரட் தங்கத் திருமண மோதிரம் நழுவி ஏரிக்குள் விழுந்தது.
</p><p>திருமணமாகி மூன்றரை ஆண்டுகளாகத் தனது விரலை விட்டுப் பிரியாத மோதிரம் தொலைந்ததால் மனமுடைந்த டக்ளாரிஸ், அதைத் தேட முயன்றும் நீர் தெளிவில்லாமல் இருந்ததால் கண்டுபிடிக்க முடியவில்லை. </p><p>
உடனே அந்த இடத்தைக் குறிப்பாய்வு செய்து, புகைப்படங்களை எடுத்துக்கொண்டு இணையத்தில் உதவி தேடியபோது, மெக்லாகனின் அறிமுகம் கிடைத்துள்ளது.
</p><p>டக்ளாரிஸ் தனக்கு அனுப்பிய தகவல்களின் அடிப்படையில், அடுத்த வார இறுதியில் டைவிங் உடைகள் மற்றும் மெட்டல் டிடெக்டருடன் அந்த ஏரிக்குச் சென்றார் மெக்லாகன்.
ஆச்சரியப்படும் விதமாக, ஏரியின் அடியில் தேடத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பாறைகளுக்கு இடையே மின்னிய அந்தத் தங்க மோதிரத்தைக் கண்டெடுத்தார்.
</p><p>கடந்த ஆண்டில் 13 தொலைந்த பொருட்களை மீட்டுத் தந்த மெக்லாகன், இதை ஒரு பொழுதுபோக்காகவும் தன்னார்வத் தொண்டாகவுமே செய்து வருகிறார்.</p><p> 
இதற்காக அவர் யாரிடமும் பெருந்தொகையைக் கட்டணமாகப் பெறுவதில்லை; தூரப் பயணங்களுக்கான எரிபொருள் செலவை மட்டுமே ஏற்றுக்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>
மோதிரங்கள், கைபேசிகள், சாவிக்கொத்துகள் மட்டுமின்றி, முதல் உலகப்போருக்குப் பிந்தைய வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கங்கள், பீரங்கி உதிரிபாகங்கள் எனப் பல அரிய பொருட்களையும் இவர் ஏரிகளிலிருந்து கண்டெடுத்துள்ளார்.<b>டி</b>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T19:48:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இதற்காக விவாகரத்தா? லிப்ஸ்டிக்கால் வந்த பிரச்சினை ; நள்ளிரவில் மனைவி செய்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lipstick-sparks-divorce-shocking-dispute-1785349068"></link>
            <id>https://jvpnews.com/article/lipstick-sparks-divorce-shocking-dispute-1785349068</id>
            <summary type="text">இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின்போது, கணவர் முன்வைத்த காரணம் தொடர்பாக ஜா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின்போது, கணவர் முன்வைத்த காரணம் தொடர்பாக ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் முக்கியக் கருத்தை வெளியிட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">வழக்கில், தனது மனைவி மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர் எனக் கூறி கணவர் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/633cea64-409e-4a44-b0d1-4fa48083a679/26-6a6a43ce844b1.webp' /></p><h2 style="text-align: justify; ">மனநலக் குறைபாடு</h2><p style="text-align: justify; ">

அதற்கான காரணமாக, தனது மனைவி நள்ளிரவு 2 மணியளவில் காஜல் மற்றும் உதட்டுச்சாயம் (லிப்ஸ்டிக்) பயன்படுத்துவதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">
எனினும், நள்ளிரவில் காஜல் மற்றும் லிப்ஸ்டிக் பயன்படுத்துவது மட்டுமே ஒருவரை மனநலப் பிரச்சினை கொண்டவர் எனக் கருதுவதற்கு போதுமான ஆதாரமாக அமையாது என்று ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
மேலும், மனநலக் குறைபாடு தொடர்பான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு உரிய மருத்துவ ஆதாரங்களும் சட்டரீதியான சான்றுகளும் அவசியம் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-29T19:45:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாத்தறையில் உள்ள ஒரு பிளாஸ்டிக் பொருட்கள் கடையில் தீப்பரவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fire-erupts-at-plastic-goods-store-in-matara-1785354226"></link>
            <id>https://jvpnews.com/article/fire-erupts-at-plastic-goods-store-in-matara-1785354226</id>
            <summary type="text">மாத்தறையில் உள்ள ஒரு பிளாஸ்டிக் பொருட்கள் கடையில் இன்று பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டது.

தீயை அணைப்பதற்காக மாத்தறை மாநகர சபையைச் சேர்ந்த இரண்டு தீயணைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறையில் உள்ள ஒரு பிளாஸ்டிக் பொருட்கள் கடையில் இன்று பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டது.
</p><p>
தீயை அணைப்பதற்காக மாத்தறை மாநகர சபையைச் சேர்ந்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டதாகக்&nbsp; பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab88a7ec-e18d-480d-b710-f58a41bb6462/26-6a6a57f383e6d.webp' /></p><p>
</p><p>
தீப்பரவலுக்கான காரணம் குறித்த இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.</p><p>மாத்தறை தீயணைப்புப் படை, மாத்தறை பொலிஸ் மற்றும் உள்ளூர் மக்கள் தற்போது தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.</p><p></p><p>

இதற்கிடையில், தீ விபத்தில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T19:43:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் அதிரடி நகர்வு! விதிக்கப்பட்ட புதிய தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/america-sanctions-against-iranian-companies-1785352397"></link>
            <id>https://ibctamil.com/article/america-sanctions-against-iranian-companies-1785352397</id>
            <summary type="text">
இரண்டு ஈரானிய நிறுவனங்களுக்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகம் தடைகளை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
இரண்டு ஈரானிய நிறுவனங்களுக்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகம் தடைகளை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் கும்பலுக்கு ஆதரவளித்ததாக குற்றஞ்சாட்டி இந்த தடைகளை அமெரிக்கா நடைமுறைப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>

Persian Gulf Marine Insurance Company மற்றும் HormuzSafe Marine Services Authority ஆகிய இரு நிறுவனங்களும், ஹோர்முஸ் நீரிணையை கடக்கும் வணிகக் கப்பல்களிடம் இருந்து பணம் அறவிடும் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை சார்ந்த மிரட்டிப் பறிக்கும் திட்டத்தின் முக்கிய பிரிவாக செயற்படுவதாக அமெரிக்க திறைசேரி குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p></p><h2>ஈரானால் உருவாக்கப்படும் அபாயங்கள்</h2><p>

ஈரான் இந்த முக்கிய நீர்வழிப் பாதையின் மீதான தனது கட்டுப்பாட்டைத் தக்கவைக்க முயல்வதால், இங்கு தடையற்ற மற்றும் திறந்த போக்குவரத்தை மீண்டும் உருவாக்குவது அமெரிக்காவுக்கு ஒரு பாரிய பிரச்சினையாகவே நீடிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d59269dc-1422-4fe9-a29a-97f8d7ea5854/26-6a6a5484d563a.webp' /></p><p>

அமெரிக்க திறைசேரியின் தகவல்படி, இந்த நிறுவனங்கள் வழங்கும் காப்பீடு, கப்பல்களைப் பறிமுதல் செய்வது போன்ற பெரும்பாலான ஈரானாலேயே உருவாக்கப்படும் அபாயங்களுக்கு துணைபோவதாக கூறப்படுகிறது.</p><h2>நிழல் கப்பற்படை</h2><p>
</p><p>
இதன் மூலம் கிடைக்கும் வருவாய், அந்நாட்டின் பயங்கரவாதம் மற்றும் ஊழல் நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கவே பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/371dec2e-e78d-4f9e-bb4a-4a78baf83bc1/26-6a6a54858e444.webp' /></p><p>
</p><p>
மேலும், தடை செய்யப்பட்ட ஈரானிய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை சீனா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்குக் கொண்டு செல்ல உதவும் நிழல் கப்பற்படை கப்பல்களை இயக்கும் நிறுவனங்கள் மீதும் அமெரிக்க நிர்வாகம் தடைகளை விதித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T19:30:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரவும் புதுவித நோய் ; சினிமா பாணியில் மொட்டை அடித்து ஏமாந்த பெண்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/women-duped-in-movie-style-head-shaving-scam-1785352763"></link>
            <id>https://jvpnews.com/article/women-duped-in-movie-style-head-shaving-scam-1785352763</id>
            <summary type="text">சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புதுக்கொத்தாம்பாடி கிராமத்தில், கொரோனா போன்ற புதுவித நோய் தலைமுடி வழியாகப் பரவுவதாகவும், தாலுகா அலுவலகத்தில் இருந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புதுக்கொத்தாம்பாடி கிராமத்தில், கொரோனா போன்ற புதுவித நோய் தலைமுடி வழியாகப் பரவுவதாகவும், தாலுகா அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும் மர்ம நபர் ஒருவர் போனில் கூறியுள்ளார். </p><p style="text-align: justify; ">மொட்டை அடித்தால் ரூ.15,000 ஊக்கத்தொகையும், ஆண்களுக்கு ரூ.6,000 வழங்கப்படும் என்றும் அவர் ஆசை வார்த்தை காட்டியுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/313c073a-944e-4602-8b4d-e3d590447397/26-6a6a523d1c638.webp' /></p><p style="text-align: justify; ">இதனை நம்ப வைப்பதற்காக ஏற்கனவே மொட்டை அடித்து பணம் பெற்றதாகக் கூறி சில புகைப்படங்களையும் அவர் அனுப்பியுள்ளார். மர்ம நபரின் பேச்சை நம்பி அப்பகுதியைச் சேர்ந்த 3 பெண்கள் மொட்டை அடித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">மேலும் சிலர் மொட்டை அடிக்கத் தயாராக இருந்த நிலையில், பணம் தருவதாகக் கூறிய நபரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இதன் பின்னரே தாங்கள் ஏமாற்றப்பட்டதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">&nbsp;இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "> எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-29T19:19:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[லொட்டரியில் கொட்டிய $803 மில்லியன் அதிர்ஷ்ட மழை: புளோரிடாவை சேர்ந்த நபருக்கு கிடைத்த ஜாக்பாட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/florida-lottery-ticket-claims-803-million-us-dolla-1785351876"></link>
            <id>https://news.lankasri.com/article/florida-lottery-ticket-claims-803-million-us-dolla-1785351876</id>
            <summary type="text">புளோரிடாவை சேர்ந்த லொட்டரி டிக்கெட் ஒன்றுக்கு $803 மில்லியன் டொலர்&amp;nbsp; மெகா ஜாக்பாட் பரிசு விழுந்துள்ளது. புளோரிடாவை சேர்ந்த நபருக்கு அடித்த மெகா ஜா...</summary>
            <content type="html"><![CDATA[<p>புளோரிடாவை சேர்ந்த லொட்டரி டிக்கெட் ஒன்றுக்கு $803 மில்லியன் டொலர்&nbsp; மெகா ஜாக்பாட் பரிசு விழுந்துள்ளது.</p><h2> புளோரிடாவை சேர்ந்த நபருக்கு அடித்த மெகா ஜாக்பாட்</h2><p>அமெரிக்காவின் புளோரிடாவில்&nbsp; வாங்கப்பட்ட லொட்டரி டிக்கெட் ஒன்றுக்கு செவ்வாய்க்கிழமை இரவு நடந்த குலுக்கலில் பிரம்மாண்டமான $803 மில்லியன் டொலர் என்ற மெகா ஜாக்பாட் பரிசாக விழுந்துள்ளது.</p><p>ஜூலை 28ம் திகதி நடந்த இந்த குலுக்கலில் வெள்ளை பந்துகள் 34,48, 49,59, 70 மற்றும் தங்க பந்து 12 என்ற எண்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.</p><p>வெற்றி எண்கள் ஒரு சேர அமைந்த இந்த லொட்டரி டிக்கெட் புளோரிடாவின் பிரேடன்டன் நகரின் ஸ்டேட் ரோடு 70-ல் உள்ள WaWa என்ற கன்வீனியன்ஸ் கடையில் இருந்து விற்பனையாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f59193e-3ea6-4f4c-b426-7dee7b6451f7/26-6a6a4ec584433.webp' /></p><p></p><p> இந்த வரலாற்று வெற்றியை அடைந்த நபருக்கு புளோரிடாவின் லொட்டரி செயலாளர் ரெஜினால்டு டிக்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><h2> பரிசு தொகையை பெறும் முறைகள்</h2><p>இந்த பிரம்மாண்ட லொட்டரி வெற்றியை பெற்ற நபர் இரண்டு முறைகளில் தன்னுடைய பரிசை பெற்றுக் கொள்ளலாம்.</p><p>முதலாவது முறை, ஒரே தவணையாக வரிக்கு முந்தைய மதிப்பின் படி மொத்தமாக $345.5 மில்லியன் ரொக்க பணத்தை பெற்றுக் கொள்ளுதல்.</p><p>இரண்டாவது முறை, மொத்த பரிசுத் தொகையான $803 மில்லியனை 30 ஆண்டுகளுக்கு ஆண்டு தவணையாக பிரித்து பெற்றுக் கொள்ளுதல்.</p><p>லொட்டரி பரிசுகளுக்கு புளோரிடாவில் மாநில வரி என்பது கிடையாது, நேரடியாக மத்திய வரி மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-29T19:04:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பச்சை நிற புடவையில் தொகுப்பாளினி டிடியின் அழகிய போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/anchor-dd-simple-green-saree-photos-1785313254"></link>
            <id>https://cineulagam.com/article/anchor-dd-simple-green-saree-photos-1785313254</id>
            <summary type="text">தொகுப்பாளினி டிடிதமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் ஆல் டைம் பேவரெட் தொகுப்பாளினியாக இருப்பவர் தான் டிடி.&amp;nbsp;20 வருடங்களுக்கு முன்பில் இருந்தே தொகுப்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>தொகுப்பாளினி டிடி</h2><p>தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் ஆல் டைம் பேவரெட் தொகுப்பாளினியாக இருப்பவர் தான் டிடி.&nbsp;</p><p>20 வருடங்களுக்கு முன்பில் இருந்தே தொகுப்பாளினியாக கலக்கி வருகிறார், இப்போதும் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறார். இடையில் தனது காலில் ஏற்பட்ட பிரச்சனையால் நிகழ்ச்சிகள் பக்கம் வராமல் இருந்தவர் இப்போது மீண்டும் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது என பிஸியாக உள்ளார்.</p><p>டிடியின் நிகழ்ச்சிகளுக்கு ஒரு ரசிகர் கூட்டம் என்றால் அவரின் போட்டோக்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. டிடி சமீபத்தில் பச்சை நிற புடவையில் வெளியிட்ட அழகிய புகைப்படங்களை காண்போம்.</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T18:50:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விபத்தில் பலியான நபர் ; பொதுமக்களின் உதவி நாடும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-seek-help-to-identify-crash-victim-1785350646"></link>
            <id>https://jvpnews.com/article/police-seek-help-to-identify-crash-victim-1785350646</id>
            <summary type="text">மீரிகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, சடலம் அடையாளம் காண முடியாதவாறு சிதைவடைந்துள்ளமையால், உயிரிழந்தவரின் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மீரிகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, சடலம் அடையாளம் காண முடியாதவாறு சிதைவடைந்துள்ளமையால், உயிரிழந்தவரின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்கு உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

மீரிகம கிரிவுல்ல - பஸ்யால வீதிப் பகுதியில் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94b6ac5e-cda2-4e95-846a-3a74a39d7401/26-6a6a49f86bd9b.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;உயிரிழந்தவரின் அடையாளம்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
விபத்தினால் சடலம் கடுமையாக சிதைவடைந்துள்ளதால் உயிரிழந்தவரின் அடையாளத்தை இதுவரை உறுதிப்படுத்த முடிவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">உயிரிழந்தவர் சுமார் 55 வயதுடையவர் என மதிப்பிடப்பட்டுள்ளது. 5 அடி 2 அங்குலம் உயரம் கொண்டவர் என கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; ">

உயிரிழந்த நபரின் முகத்தில் தாடி உள்ளதுடன், சடலமானது இளம்பச்சை நிற நீண்ட காற்சட்டையும், அதே நிறத்தில் அரைக்கை மேற்சட்டையும் அணிந்த நிலையில் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">

தற்போது சடலம் வதுபிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
இந்த அடையாளங்கள் உள்ள நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் அறிந்திருப்பின்,</p><p style="text-align: justify; ">
மீரிகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி - 071 8591625
</p><p style="text-align: justify; ">
மீரிகம பொலிஸ் நிலையம் - 033 2274322 ஆகிய இலக்கங்களைத் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T18:44:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை நாடாளுமன்றத்தை இலக்கு வைத்து சைபர் தாக்குதல்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cyberattacks-risk-sl-parliament-s-digital-systems-1785347957"></link>
            <id>https://ibctamil.com/article/cyberattacks-risk-sl-parliament-s-digital-systems-1785347957</id>
            <summary type="text">
இலங்கை நாடாளுமன்றத்தின் டிஜிட்டல் அமைப்புகளைக் குறிவைத்து இணையவழித் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயமான...</summary>
            <content type="html"><![CDATA[<p>
இலங்கை நாடாளுமன்றத்தின் டிஜிட்டல் அமைப்புகளைக் குறிவைத்து இணையவழித் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>

குறித்த விடயமானது, நாடாளுளுமன்றத்தின் 2025 ஆண்டு செயல்திறன் அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
அறிக்கையின்படி, இலங்கை கணினி அவசரகால ஆயத்தக் குழு (SLCERT), ஆய்வு காலத்தில் நாடாளுமன்றத்தின் தகவல் மற்றும் இணையப் பாதுகாப்பு குறித்த ஒரு மதிப்பீட்டை நடத்தியுள்ளது.</p><p></p><h2>பாதுகாப்பு குறைபாடுகள்</h2><p>

இந்த மதிப்பீடு, இணையப் பாதுகாப்பு தொடர்பான 56 பகுதிகளை ஆய்வு செய்தது, அவற்றில் 46 பகுதிளுக்கு உயர் மட்ட அபாயம் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb7852ff-f998-462a-bdd9-2db2a658ad6b/26-6a6a414f09b33.webp' /></p><p> இதன்படி, டிஜிட்டல் அமைப்புகளுக்குள் அங்கீகரிக்கப்படாத அணுகல், முக்கியத் தகவல்களைத் திருடுதல், நிறுவனத்தின் செயல்பாடுகளைச் சீர்குலைத்தல் மற்றும் உத்தியோகபூர்வ வலைத்தளங்களைச் சிதைத்தல் உள்ளிட்ட தீங்கிழைக்கும் இணையவழிச் செயல்பாடுகள் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
இந்நிலையில், குறித்த இணையப் பாதுகாப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்ய உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T18:38:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க - சவுதி தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் அவசரமாக ஈரானுக்கு மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-saudi-strikes-transferred-to-iran-1785340907"></link>
            <id>https://ibctamil.com/article/us-saudi-strikes-transferred-to-iran-1785340907</id>
            <summary type="text">ஈராக்கிற்குள் உள்ள ஈரானிய ஆதரவு பெற்ற அமைப்பின் இலக்குகள் மீது அமெரிக்க-சவுதி இணைந்த நடத்திய வான்வழித் தாக்குதல்களில் காயமடைந்த பல ஈராக்கியர்கள் மருத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈராக்கிற்குள் உள்ள ஈரானிய ஆதரவு பெற்ற அமைப்பின் இலக்குகள் மீது அமெரிக்க-சவுதி இணைந்த நடத்திய வான்வழித் தாக்குதல்களில் காயமடைந்த பல ஈராக்கியர்கள் மருத்துவ சிகிச்சைக்காக ஈரானுக்கு மாற்றப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் இன்று(29)புதன்கிழமை தெரிவித்தன</p><p>ஈரானிய செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒருங்கிணைப்புடன், காயமடைந்தவர்கள் ஈராக்குடனான கோஸ்ரவி எல்லைக் வழியாக ஈரானுக்குள் நுழைந்ததாகவும், அங்கு அவர்கள் மேற்கு ஈரானில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.</p><h2>காயமடைந்தவர்களின் நிலை</h2><p>

காயமடைந்த அனைவரும் சீரான நிலையில் இருப்பதாக ஆரம்பகட்ட மருத்துவ மதிப்பீடுகள் சுட்டிக்காட்டின என்றும் அந்த நிறுவனம் மேலும் கூறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f2d4f7c-ebff-4bad-bf71-f39beb0b0719/26-6a6a2934e31c5.webp' /></p><p>இந்த சம்பவம் குறித்து ஈராக்கிய அதிகாரிகள் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.</p><p></p><p>
</p><p>
</p><h2>அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் அறிவிப்பு</h2><p>ஈராக்கில் ஈரானுடன் இணைந்த குழுக்களுடன் தொடர்புடைய இலக்குகள் மீது அமெரிக்க மற்றும் சவுதி படைகள் இணைந்து துல்லியமான தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) புதன்கிழமை தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f928fd8-d0b5-4c9d-a777-8ce7588241f5/26-6a6a2935927b1.webp' /></p><p> </p><p>இந்த நடவடிக்கை, அமெரிக்கப் படைகள் மற்றும் சவுதி எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களுடன் தொடர்புடைய இடங்களைக் குறிவைத்தது என்றும் அது கூறியது.</p><p>

 ஈரான் ஆதரவு பெற்ற ஷியா ஆயுதக் குழுக்களின் கூட்டணியான மக்கள் திரட்டல் படைகள் (PMF), இந்தத் தாக்குதல்களில் தங்களது பல தலைமையகங்கள் தாக்கப்பட்டதாகவும், இதில் குறைந்தது 20 உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகவும், 32 பேர் காயமடைந்ததாகவும், மேலும் பெரும் சொத்து சேதம் ஏற்பட்டதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p> &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T18:27:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோயில் வாசலில் காலணிகளை கழற்றுவது ஏன்? இதில் இவ்வளவு ரகசியம் இருக்கா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/why-we-remove-footwear-before-entering-a-temples-1785337940"></link>
            <id>https://manithan.com/article/why-we-remove-footwear-before-entering-a-temples-1785337940</id>
            <summary type="text">பொதுவாகவே பக்தர்கள் கோயிலுக்குச் செல்லும்போது, ​​புனிதமான அந்த இடத்திற்கு வெளியே தங்கள் காலணிகளைக் கழற்றிவிட்டு, வெறும் கால்களுடன் கோவிலுக்குள் நடந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாகவே பக்தர்கள் கோயிலுக்குச் செல்லும்போது, ​​புனிதமான அந்த இடத்திற்கு வெளியே தங்கள் காலணிகளைக் கழற்றிவிட்டு, வெறும் கால்களுடன் கோவிலுக்குள் நடந்து கடவுளை வழிபடுபட வேண்டும் என்ற வழக்கத்தை தொன்று தொட்டு பின்பற்றி வருகின்றார்.
</p><p>
மேலோட்டமாகப் பார்க்கும்போது, ​​இது தூய்மையைப் பேணுவதற்கும், கோயிலில் உள்ள தெய்வங்களுக்கு மரியாதை செலுத்துவதற்கும் கடைப்பிடிக்கப்படும் ஒரு வழக்கமாக மாத்திரமே தோன்றும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/551a3162-3587-4e09-bf6e-42b4b13c6091/26-6a6a207f4b8d0.webp' /></p><p> </p><p>ஆனால், இதன் பின்னணியில் உள்ள உண்மை மிகவும் ஆழமானது. இது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>ஆன்மீக முக்கியத்துவமும் அறிவியல் பின்னணியும்</h2><p>பொதுவாக இது கோயிலின் தூய்மையைப் பாதுகாப்பதற்கான ஒரு வழக்கம் என்று கருதப்பட்டாலும், இதன் பின்னணியில் ஆழமான ஆன்மீக அர்த்தங்கள் உள்ளன. இறைவனை தரிசிப்பதற்கு முன், ஒரு பக்தர் மனதிலும் உடலிலும் தூய்மையுடனும், பணிவுடனும் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்த வழக்கம் உருவானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fa7c234-45de-44e2-91f6-8dbd0728e525/26-6a6a207ff11e2.webp' /></p><p>

இந்து மத நம்பிக்கைகளின்படி, கோயிலுக்கு வெளியே காலணிகளை விட்டுச் செல்வது என்பது வெளிப்புற பொருட்களை மட்டுமல்ல, அகங்காரம், கவலைகள் மற்றும் உலகியல் பற்றுகளையும் விட்டு விட்டு இறைவனை அணுகுவதைக் குறிக்கிறது.</p><p> </p><p>இது பக்தரின் பணிவையும், புனிதமான இடத்தின் மீதான மரியாதையையும் வெளிப்படுத்துகிறது.

இறைவனுக்கும் பக்தருக்கும் இடையிலான இணைப்பு
காலணிகள் பக்தருக்கும் இறைவனுக்கும் இடையே ஒரு தடையாக இருப்பதாக ஆன்மீக ரீதியாகக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef640967-57ae-4c0f-a2bf-1c6247f5b86b/26-6a6a2080a67c1.webp' /></p><p> </p><p>எனவே, கோயிலுக்குள் செல்லும் முன் அவற்றை கழற்றுவது, மனதை ஒருமுகப்படுத்தி இறை வழிபாட்டில் முழுமையாக ஈடுபட உதவுகிறது என்றும் நம்பப்படுகிறது.</p><p>வெறும் கால்களுடன் கோயிலுக்குள் நடப்பது பூமியின் ஆற்றலுடன் மனிதனை இணைக்கிறது என்ற நம்பிக்கையும் உள்ளது. யோக மரபுகளில் குறிப்பிடப்படும் ‘மூலாதாரச் சக்கரம்’ நிலைத்தன்மை மற்றும் சமநிலையுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. </p><p>வெறும் கால்களுடன் நடப்பதால் மன அமைதியும், ஆன்மீக உறுதியும் கிடைக்கும் என்று பலர் நம்புகின்றனர்.

தூய்மையின் அடையாளம்
பழங்காலத்தில் காலணிகள் பெரும்பாலும் தோலால் தயாரிக்கப்பட்டன.</p><p> </p><p>தோல் இறந்த விலங்குகளிலிருந்து பெறப்படுவதால், அது புனிதமான இடங்களில் பயன்படுத்தத் தகாதது என சில இந்து மரபுகளில் கருதப்பட்டது. அதனால் கோயிலுக்குள் காலணிகளை அணிந்து செல்வது தவிர்க்கப்பட்டது. இது உயிர்களுக்கு தீங்கு விளைவிக்காத அகிம்சை கொள்கைக்கு மதிப்பளிக்கும் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ebc7b76-48f1-4a7c-874b-b56b0f884ffa/26-6a6a20815864a.webp' /></p><p></p><h2>

உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான நன்மைகள்</h2><p>
பெரும்பாலான கோயில்களின் தரைப்பகுதி கிரானைட், சலவைக்கல் அல்லது மணற்கல் போன்ற கற்களால் அமைக்கப்பட்டிருக்கும். இவை உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு, வெறும் காலுடன் நடப்பது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கும்.</p><p>
மேலும், கோயில்களில் மஞ்சள், சந்தனம், குங்குமம் போன்ற இயற்கையான பொருட்களால் தூய்மை செய்யப்படும் சூழல் பக்தர்களுக்கு மன அமைதியையும் நேர்மறையான உணர்வையும் தருகிறது.
</p><p>
எனவே, கோயிலுக்குள் நுழைவதற்கு முன் காலணிகளை கழற்றுவது என்பது வெறும் ஒரு பழக்கம் மட்டுமல்ல; அது தூய்மை, பணிவு, ஆன்மீகம் மற்றும் இறை நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு அர்த்தமுள்ள மரபாகவே இன்றுவரையில் பின்பற்றப்ட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T18:25:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[6 வயதில் 10 பிரம்படி..உன் வாழ்க்கையை பாழாக்கிவிட்டாய்ன்னு சொன்னாங்க!! நடிகை அர்ச்சனா ஓபன் டாக்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/archana-puran-singh-recalls-being-caned-10-school-1785332264"></link>
            <id>https://viduppu.com/article/archana-puran-singh-recalls-being-caned-10-school-1785332264</id>
            <summary type="text">அர்ச்சனா புரான் சிங்பாலிவுட்டில் டாப் நடிகையாகவும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் திகழ்ந்து விளங்கியவர் தான் நடிகை அர்ச்சனா புரான் சிங். தற்போது கபில் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அர்ச்சனா புரான் சிங்</h2><p>பாலிவுட்டில் டாப் நடிகையாகவும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் திகழ்ந்து விளங்கியவர் தான் நடிகை அர்ச்சனா புரான் சிங். தற்போது கபில் சர்மா நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba59fb2a-bab9-41b5-90b8-da9ca0d44b7c/26-6a6a022abfa70.webp' /></p><p> சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தன்னுடைய விருது வயதில் அனுபவத்த சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், நான் ஒன்றாம் வகுப்பு படித்தபோது, அதாவது என் 6 வயதில், பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் அழைத்து செல்லப்பட்டேன். </p><p>அவர் ஒரு பெரிய பிரம்பை எடுத்து என்னை கெட்ட பிள்ளை என்று கூறியபடி என் கையில் 10 முறை அடித்தார். நான் என்ன தவறு செய்தேன் என்று இப்போது கூட நினைவில் இல்லை. ஆனால் அந்த பிரம்படியின் வலி மட்டும் இன்னும் மறக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/227bb2ee-3afd-45ff-8c4d-ece741a57275/26-6a6a022b6f778.webp' /></p><h2>வாழ்க்கையை பாழாக்கிவிட்டாய்</h2><p> </p><p>பள்ளியில் தவறு செய்த மாணவர்களை வகுப்பறைக்கு வெளியேவுள்ள காரிடாரில் முழங்காலிட்டு நிற்கவைப்பது வழக்கம். அந்த தண்டனை மிகவும் அவமானமான அனுபவம். பள்ளிப் பருவத்தில் எப்போதும் வகுப்பில் முதல் மாணவியாக இருந்தேன். இருந்தாலும் குறும்புத்தனம் அதிகமாக இருந்ததால் ஆசிரியர்கள் அடிக்கடி உன் திறமையையும் ஆற்றலையும் வீணடிக்கிறாய் என கண்டிப்பார்கள்.</p><p> பின் நான் நடிகையாக மாறியபோது என் ஆசிரியர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தார்கள். நாங்கள் நீ ஐஏஎஸ் அல்லது ஐஎப்எஸ் அதிகாரியாக வருவாய் என்று நினைத்தோம், ஆனால் நீ நடிகையாகிவிட்டாய். உன் வாழ்க்கையே பாழாகிவிட்டது என்று என்னிடம் ஆசிரியர்கள் கூறினார்கள் என்று சிரிப்புடன் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-29T18:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் அம்பாறையில் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/motorcycle-stolen-in-batti-recovered-in-colombo-1785343610"></link>
            <id>https://ibctamil.com/article/motorcycle-stolen-in-batti-recovered-in-colombo-1785343610</id>
            <summary type="text">மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் வைத்து களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் அம்பாறை பாணமை குதியில்
வைத்து காவல்துறையினரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக களுவா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் வைத்து களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் அம்பாறை பாணமை குதியில்
வைத்து காவல்துறையினரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர் இன்று
புதன்கிழமை(29.07.2026) தெரிவித்தனர். </p><p>



மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி காவல் நிலைய பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி
கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் கடந்த 2026.07.22 அன்று
களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் ஆலயத்தில் வைத்து காணாமல் போயுள்ளது.&nbsp;</p><h2>பாணமை பகுதியில் கண்டுபிடிப்பு</h2><p>களுவாஞ்சிகுடி காவல் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் உரிமையாளர் முறைப்பாட்டைப்
பதிவு செய்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/312829b7-ed1b-47d5-bd37-c6287996ed23/26-6a6a41b0b3f24.webp' /></p><p>இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர்அனைத்த காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்திருந்த நிலையில்
செவ்வாய்கிழமை(28.07.2026) குறித்த மோட்டார் சைக்கிளையும் அதனைக் களவாடிச்
சென்றதாகக் கருதப்படும் சந்தேக நபரையும் பாணமை பகுதியில் வைத்து பாணமை
காவல்தறையினருடன் இணைந்து கைது செய்யப்பட்டுள்ளதோடு, மோட்டார் சைக்கிளும்
மீட்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 25 வயது மத்திக்கத்தக்கவர் எனவும்,
மோட்டார்சைக்கிளின் பெறுமதி சுமார் எட்டு இலட்சத்தது தொண்ணூறாயிரத்துக்கு மேல்
எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்</p><p></p><h2>கதிர்காமம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் கைது</h2><p>2026.07.22 அன்று களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் ஆலயத்தில் வைத்து குறித்த நபர்
மிகவும் சூட்சுமமான முறையில் குறித்த மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்று
இலக்கத் தகட்டையும் மாற்றிவிட்டு கதிர்காமம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த
நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abfb18df-9a7b-42ff-98ff-881f0f315687/26-6a6a41b187c82.webp' /></p><p>




சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்தியுள்ளதோடு, கைப்பற்றப்பட்ட மோட்டார்
சைக்கிள் போலி இலக்கத்தகடு உள்ளிட்ட சான்றுப் பொருட்களையும் நீதிமன்றில்
முன்னிலைப்படுத்தியுள்ளதாகவும், பொதுமக்கள் தமது வாகனங்களை நிறுத்தும்போது
சரியான முறையில் பூட்டி, 
பாதுகாப்பாக நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், கள்வர்கள் நடமாடுவதானால்
அவதானத்துடன் செயற்படுமாறும் காவல்துறையினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T18:08:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்மராட்சியில் இராணுவத்தின் கொடூரம்! தம்பியை தொலைத்த சாட்சியின் அவலநிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/brother-disappeared-by-the-military-jaffna-1785347176"></link>
            <id>https://ibctamil.com/article/brother-disappeared-by-the-military-jaffna-1785347176</id>
            <summary type="text">1996ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் திகதி தென்மராட்சியில் உள்ள நுணாவில் பகுதியில் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு, பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட தனது தம...</summary>
            <content type="html"><![CDATA[<p>1996ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் திகதி தென்மராட்சியில் உள்ள நுணாவில் பகுதியில் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு, பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட தனது தம்பியின் நிலை குறித்து, அவரது சகோதரர் சில உருக்கமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
</p><p>
“தனது தம்பி அந்த நேரத்தில் சர்வோதய இயக்கத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்பகுதியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலைத் தொடர்ந்து, அவரும் அங்கிருந்த ஒரு முதிய காவலாளியும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். </p><p>

காவலாளி பின்னர் விடுவிக்கப்பட்டாலும், தனது தம்பி கொண்டு செல்லப்பட்ட நிலையில் இன்றுவரை காணாமல் போயுள்ளார்.
</p><p>
தாங்கள் சர்வதேச செஞ்சிலுவை சங்கம், இராணுவம், காவல்துறை மற்றும் சிவில் அமைப்புகள் மூலம் தீவிரமாகத் தேடினோம்.
</p><p>
 பின்னர், யாழ்ப்பாண மாவட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஒன்றிணைத்து காணாமல் போனோர் சங்கம் உருவாக்கப்பட்டது.
</p><p>
 அதன்போது, 1997ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை சந்தித்து முறையிட்டும், தங்கள் கோரிக்கைகளுக்கு எந்தவொரு தீர்க்கமான பதிலும் கிடைக்கவில்லை.”
</p><p>
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/HjyzbYWrhvI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T17:53:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருங்கடலில் சிக்கியுள்ள 13 இந்திய மாலுமிகள்: உக்ரைனிய துறைமுகத்தில் பதற்றம் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/13-indian-seafarers-trapped-in-ukraine-chornomorsk-1785347455"></link>
            <id>https://news.lankasri.com/article/13-indian-seafarers-trapped-in-ukraine-chornomorsk-1785347455</id>
            <summary type="text">ட்ரோன் தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைனிய துறைமுகத்துக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ள சரக்கு கப்பலில் 13 இந்திய மாலுமிகள் சிக்கியுள்ளனர். சிக்கலில் 13 இந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ட்ரோன் தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைனிய துறைமுகத்துக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ள சரக்கு கப்பலில் 13 இந்திய மாலுமிகள் சிக்கியுள்ளனர்.</p><h2> சிக்கலில் 13 இந்திய மாலுமிகள்</h2><p>உக்ரைன் - ரஷ்யா இடையிலான ட்ரோன் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைனின் கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சோர்னோமோர்ஸ்க்(Chornomorsk) துறைமுகத்திற்கு அருகில் ‘M.V. AMIR1’&nbsp; என்ற சரக்கு கப்பல் சிக்கியுள்ளது.</p><p>சோர்னோமோர்ஸ்க் துறைமுகம் மற்றும் ‘M.V. AMIR1’ சரக்கு கப்பலை சுற்றியும் தொடர்ந்து ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடந்து வருவதால் மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64a46397-f0a8-4398-91af-9bae52f9499f/26-6a6a3d8108db0.webp' /></p><p> ‘M.V. AMIR1’ சரக்கு கப்பலில் 15 மாலுமிகள் சிக்கியுள்ள நிலையில், அதில் 13 மாலுமிகள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p> இது தொடர்பாக இந்திய முன்னோடி மாலுமிகள் சங்கம்(FSUI) வெளியிட்ட தகவலில், கப்பலில் சிக்கியுள்ள மாலுமிகள் கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் சிக்கி இருப்பதாக எச்சரித்துள்ளது.</p><p></p><p>சரக்கு கப்பல் எந்த நேரத்திலும் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் மாலுமிகள் இருப்பதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.</p><h2>வெளியான வீடியோ</h2><p>
ஆபத்தான சூழ்நிலைகளுக்கு மத்தியில் ‘M.V. AMIR1’ சரக்கு கப்பல் இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக கப்பலின் மேற்பரப்பில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை FSUI வெளியிட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Urgent Appeal | M.V. AMIR1<br>M.V. AMIR1, currently at Ukrainian port Chornomorsk with 15 crew on board, including 13 Indian seafarers, is trapped in a terrible and life-threatening situation.<br>Repeated drone and missile attacks are being attempted in the immediate vicinity of the… <a href="https://t.co/tIIwuC9Mdk">pic.twitter.com/tIIwuC9Mdk</a></p>&mdash; FSUI (@FSUIINDIA) <a href="https://x.com/FSUIINDIA/status/2082122296811258188?ref_src=twsrc%5Etfw">July 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> அதில் கப்பலை சுற்றி மோதல்களினால் ஏற்பட்ட கரும்புகை மண்டலங்கள் இருப்பதை பார்க்க முடிகிறது.</p><p> இருப்பினும், உக்ரைனிய துறைமுகத்தில் சிக்கியுள்ள இந்திய மாலுமிகள் குறித்து வெளியுறவு அமைச்சகம் அல்லது கப்பல் நிறுவனங்கள் எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T17:51:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விவேக் சார் மட்டும் இருந்திருந்தா, சாப்பிடும்போதே அழுத Kaaka Gopal]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/popular-comedy-actor-kakka-gopal-interview-1785313833"></link>
            <id>https://cineulagam.com/article/popular-comedy-actor-kakka-gopal-interview-1785313833</id>
            <summary type="text">காக்கா கோபால்நடிகர் காக்கா கோபால், இவர் ஆசை ஆசையாய் படத்தில் நடிகர் விவேக்குடன் சேர்ந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மாதவன் நடிப்பில் வெள...</summary>
            <content type="html"><![CDATA[<h2>காக்கா கோபால்</h2><p>நடிகர் காக்கா கோபால், இவர் ஆசை ஆசையாய் படத்தில் நடிகர் விவேக்குடன் சேர்ந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். </p><p>மாதவன் நடிப்பில் வெளியான ரன் படத்தில் காக்கா கோபால் விவேக் இடம்பெற்ற ரூ. 5 காக்கா பிரியாணி காமெடி காட்சிகள் செம ஹிட். சிட்டிசன், தொடரும், ரன் என மொத்தம் 150 படங்களில் நடித்த காக்கா கோபாலை சினிமாவிற்கு அறிமுகம் செய்தவர் நடிகர் ரமேஷ் கண்ணா.&nbsp;</p><p>தொடர்ந்து படங்கள் நடித்தவருக்கு இப்போது சரியான வாய்ப்புகள் இல்லை. தற்போது இவர் நமது சினிஉலகம் யூடியூப் பக்கததில் சினிமா பயணம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.</p><p>இதோ அவரது பேட்டி,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ueSGzsuAvfU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-29T17:50:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். தீவகப் பகுதியில் கடற்றொழிலாளர்கள் கறுப்புக்கொடியுடன் கடலில் இறங்கிப் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kurikattuvan-fishermen-hold-black-flag-sea-protest-1785341398"></link>
            <id>https://tamilwin.com/article/kurikattuvan-fishermen-hold-black-flag-sea-protest-1785341398</id>
            <summary type="text">இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லைதாண்டிய அத்துமீறல் கடற்றொழில்
நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ்ப்பாணம் தீவகப் பகுதி கடற்றொழிலாளர்கள் இன்று(29.06.2026) கடல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லைதாண்டிய அத்துமீறல் கடற்றொழில்
நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ்ப்பாணம் தீவகப் பகுதி கடற்றொழிலாளர்கள் இன்று(29.06.2026) கடலில்
இறங்கி கறுப்புக்கொடி ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
குறிகட்டுவான் இறங்குதுறை பகுதியில் கடலுக்குள் இறங்கிச் சென்ற
தீவக கடற்றொழிலாளர்கள், கறுப்புக்கொடிகளை ஏந்தி தங்களது எதிர்ப்பை
வெளிப்படுத்தியுள்ளதுடன், ஜனாதிபதிக்கு அவசர நடவடிக்கை கோரி கோரிக்கை மனு ஒன்றையும்
விடுத்துள்ளனர்.</p><p></p><h2>கறுப்புக்கொடியுடன்&nbsp;போராட்டம்</h2><p>
</p><p>
இந்திய இழுவைப் படகுகளின் சட்டவிரோத அத்துமீறலால் தங்களது வாழ்வாதாரம்
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான கடற்றொழில்
உபகரணங்களும் அழிக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்கள்
குற்றம் சாட்டியுள்ளனர்.
</p><p>
குறித்த போராட்டகாரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை மனுவில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfbeace2-b217-4f58-ad6e-0ee456fffd0a/26-6a6a542c3441e.webp' /></p><p>
</p><p>
நெடுந்தீவு, நயினாதீவு, வேலணை, எழுவைத்தீவு, அனலைதீவு, யாழ்குடா, பாக்குநீரிணை
மற்றும் மன்னார் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த பாரம்பரிய மீனவ சமூகங்களாகிய
தாங்கள், தங்களது வாழ்வாதாரம், கடல்வளம் மற்றும் நாட்டின் கடல்சார் மரபைப்
பாதுகாப்பதற்காக அரசின் உடனடி தலையீடு வேண்டும்.
</p><p>
மேலும் பல தசாப்தங்களாக இந்திய இழுவைப் படகுகள் இலங்கைக் கடற்பரப்பிற்குள்
அத்துமீறி நுழைந்து அடிமடி இழுவை கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், இது
வெறும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கை மட்டுமன்றி கடலடித் தளங்கள், பவளப்
பாறைகள் மற்றும் மீன்களின் இனப்பெருக்கப் பகுதிகளை அழித்து கடல் உயிரினப்
பல்வகைமையையும் மீன்வளத்தையும் கடுமையாக பாதிக்கிறது.</p><p></p><h2>உறுதியான தீர்வு&nbsp;</h2><p>மேலும், இந்த நடவடிக்கைகள் வடக்கின் கடல்சார் பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு
மற்றும் இலங்கையின் கடல்வள உரிமைகளுக்கு நேரடியான அச்சுறுத்தலாக
அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8a74b1d-60af-4164-8796-de9242b8e15a/26-6a6a542d4d782.webp' /></p><p>

காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் தொண்டி பகுதிகளைச் சேர்ந்த இந்திய இழுவை
மடி விசைப்படகுகள், கடந்த ஜூலை 16 முதல் 18 ஆம் திகதி வரை மூன்று நாட்களில்
தீவகத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பாரம்பரிய கடற்றொழிலாளர்களின் ஐந்து கோடி
ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நண்டு வலைகளை இழுத்தழித்து சேதப்படுத்தியுள்ளது.</p><p>

இந்தப் பிரச்சினைக்கு தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த அரசுகள் உறுதியான தீர்வை
வழங்கத் தவறியுள்ளதால், வடக்கு கடற்றொழிலாளர்களிடையே ஏமாற்றமும் நம்பிக்கையின்மையும்
அதிகரித்துள்ளதுடன், இலங்கை–இந்திய இராஜதந்திர உறவுகளின் பெயரில் வடக்கு
மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பலியிடப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது
என வலியுறுத்தியுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T17:50:50+00:00</updated>
        </entry>
    </feed>
