<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-07T19:11:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டிலிருந்து வந்தவரை வெட்டிக்கொன்ற ஆசாமிகள் : பின்னணியில் அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-assailants-who-killed-a-foreigner-1788805410"></link>
            <id>https://ibctamil.com/article/the-assailants-who-killed-a-foreigner-1788805410</id>
            <summary type="text">கொழும்பில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கொஸ் மல்லி என்பவரின் மைத்துனரான பூத களுவா (46) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>

</p><h2>அதிகாலைவேளை இடம்பெற்ற சம்பவம்</h2><p>இன்று (07) அதிகாலை 1.45 மணியளவில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>கொலை செய்யப்பட்ட நபர், திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கொஸ் மல்லி என்பவருடன் பல வருடங்கள் டுபாயில் தங்கியிருந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8979a10d-dd95-400c-80e8-4fcf7c3b6cae/26-6a9f0c22b953a.webp' /></p><p> 

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டதையடுத்து, அவர் சில வாரங்களுக்கு முன்பு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். </p><p>

முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த இந்த நபரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.</p><p></p><p> 

</p><h2>காவல்துறை&nbsp; மேலதிக விசாரணை</h2><p>படுகாயமடைந்த அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cc90303-e9b2-40f1-a65e-7a0f08b4c1fd/26-6a9f0c236dbea.webp' /></p><p> </p><p>

இந்தக் கொலையைத் திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான படோவிட்ட அசங்கவின் தரப்பினர் செய்திருக்கலாம் என காவல்துறையினர்சந்தேகிக்கின்றனர். 

சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகப் பல காவல்துறை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T19:10:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐ.நா பிரதிநிதிகள் குழுவுக்கும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானிக்கும் இடையில் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/un-delegates-meet-presidential-staff-chief-1788806725"></link>
            <id>https://jvpnews.com/article/un-delegates-meet-presidential-staff-chief-1788806725</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரதிநிதி மார்க் என்ட்ரூ பிரெஞ்ச் ( Marc-Andre Franche, UN Resident Coordinator) மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரதிநிதி மார்க் என்ட்ரூ பிரெஞ்ச் ( Marc-Andre Franche, UN Resident Coordinator) மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (07) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
</p><p style="text-align: justify; ">


டிட்வா சூறாவளியால் வீடுகளை இழந்த மக்களை மீள்குடியேற்றும் வேலைத்திட்டம் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/991b2d4f-4472-4f64-a8b4-50091412b6f6/26-6a9f064cc76d5.webp' /></p><h2 style="text-align: justify; ">எதிர்கால வேலைத்திட்டங்கள்</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">எல் நினோ காலநிலை காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">அதற்கான அரசாங்கத்தின் தயார்நிலை மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி தெளிவுபடுத்தினார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">






அந்த வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு ஐக்கிய நாடுகள் சபை அரசாங்கத்திற்குத் தேவையான ஆதரவை வழங்கத் தயாராக உள்ளதாகவும் மார்க் என்ட்ரூ இதன்போது குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; ">



ஐக்கிய நாடுகள் சபையின் பங்குதாரர் மற்றும் அபிவிருத்தி நிதியியல் நிபுணர் அஸாம் பாக்கீர் மாகர் (Azam Bakeer Markar, Partnerships &amp; Dev Finance Specialist) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான மனிதாபிமான மற்றும் தாங்கும்திறன் தொடர்பான அதிகாரி வகீஷா பெரேரா ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-07T19:00:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் கைதின் பின்னர் விசமிகளால் இலக்கு வைக்கப்படும் தமிழர் கிராமங்கள்! வெளியான காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-villages-targeted-namal-s-arrest-1788806752"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-villages-targeted-namal-s-arrest-1788806752</id>
            <summary type="text">வனவளத் திணைக்கள அதிகாரிகள் என்று தங்களை அழைத்துக்கொண்ட குழுவினர், வாகரை பிரதேசத்தில் உள்ள மக்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களைச் சேதப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வனவளத் திணைக்கள அதிகாரிகள் என்று தங்களை அழைத்துக்கொண்ட குழுவினர், வாகரை பிரதேசத்தில் உள்ள மக்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களைச் சேதப்படுத்தியுள்ள காணொளியொன்று வெளியாகியுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்ட அதே காலப்பகுதியில் நிகழ்ந்துள்ளது. </p><p>

இது இன ரீதியான மோதல்களைத் தூண்டும் திட்டமிட்ட முயற்சியாக இருக்கலாம் என்று
கூறப்படுகின்றது,
 
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஸ்ரீநாத் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
</p><p>
பாதிக்கப்பட்ட மக்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
</p><p>
இந்தக் கிராமம் வரலாற்று ரீதியாகவே விவசாய நிலமாகவும், மக்களின் வாழ்வாதாரமாகவும் இருந்து வருகிறது. 

இத்தகைய சம்பவங்கள் அந்த மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகப் பார்க்கப்படுகிறது.
</p><p>
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. </p><p>

மேலும், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களான ரொஷான் ரணசிங்க, கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் திலித் ஜெயவீர ஆகியோரின் செயற்பாடுகள் இருக்கலாம் எனத் தொடர்ந்து சந்தேகம் வெளியிடப்படுகிறது.
</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக எடுத்து வருகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/bPcMV8QJimw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T18:54:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலகக் கும்பல் உறுப்பினரின் மைத்துனர் 'பூத களுவா' படுகொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/underworld-gang-member-s-brother-in-law-murdered-1788805254"></link>
            <id>https://jvpnews.com/article/underworld-gang-member-s-brother-in-law-murdered-1788805254</id>
            <summary type="text">திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கொஸ் மல்லி என்பவரின் மைத்துனரான பூத களுவா என்பவர் கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெஹ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கொஸ் மல்லி என்பவரின் மைத்துனரான பூத களுவா என்பவர் கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

இன்று (07) அதிகாலை 1.45 மணியளவில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/156ff0c3-00ef-4c20-be20-6d2c63b155b0/26-6a9f0088e4733.webp' /></p><h2>&nbsp;மேலதிக விசாரணைகள்</h2><p> </p><p>

இவ்வாறு கொலையானவர் தெஹிவளை ஓபன் பிரதேசத்தில் வசித்து வந்த 46 வயதுடைய நபராவார்.</p><p> 

கொலை செய்யப்பட்ட நபர், திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கொஸ் மல்லி என்பவருடன் பல வருடங்கள் டுபாயில் தங்கியிருந்துள்ளார். </p><p>

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டதையடுத்து, அவர் சில வாரங்களுக்கு முன்பு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.</p><p></p><p> </p><p>

முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த இந்த நபரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. </p><p>

படுகாயமடைந்த அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

இந்தக் கொலையைத் திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான படோவிட்ட அசங்கவின் தரப்பினர் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். </p><p>

சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகப் பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-07T18:30:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் வாழும் 102 வயது பாட்டியின் நிறைவேறிய ஆசை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/canadian-102-year-old-woman-walks-new-l-bridge-1788803476"></link>
            <id>https://ibctamil.com/article/canadian-102-year-old-woman-walks-new-l-bridge-1788803476</id>
            <summary type="text">கனடாவைச் சேர்ந்த 102 வயது மூதாட்டி ஒருவர், தனது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகப் புதிதாகக் கட்டப்பட்ட பிரமாண்டமான சர்வதேச பாலத்தை நடந்து கடந்து தனது வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவைச் சேர்ந்த 102 வயது மூதாட்டி ஒருவர், தனது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகப் புதிதாகக் கட்டப்பட்ட பிரமாண்டமான சர்வதேச பாலத்தை நடந்து கடந்து தனது வாழ்நாள் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.
</p><p>
</p><p>


கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள வின்ட்சர் நகரின் சாண்ட்விச் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ரீட்டா ஜார்ஜெஃப். இவர் கடந்த ஓகஸ்ட் 28-ஆம் திகதியன்று தனது 102-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.</p><h2>கட்டுமான பணிகளை உன்னிப்பாக கவனித்து வந்த பாட்டி</h2><p>அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள டெட்ராய்ட் நகரையும், கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள வின்ட்சர் நகரையும் இணைக்கும் வகையில் டெட்ராய்ட் ஆற்றின் குறுக்கே பல ஆண்டுகளாக ‘கோர்டி ஹோவ் சர்வதேச பாலம் ’கட்டப்பட்டு வந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca9335df-d2b6-4fa2-88aa-ed7e459f41a9/26-6a9efdaf866f7.webp' /></p><p>
</p><p>





ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்தத் பகுதியில் வாழ்ந்து வரும் ரீட்டா, இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகளை ஆரம்பத்திலிருந்தே உன்னிப்பாகக் கவனித்து வந்தார்.</p><p>

தனது 100-வது பிறந்தநாளிலேயே இந்தப் பாலத்தின் மீது நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அவர், பாலம் கட்டி முடிக்கப்படும் வரை மேலும் 2 ஆண்டுகள் காத்திருந்து, தற்போது தனது 102-வது பிறந்தநாளில் அந்த ஆசையை நிறைவேற்றியுள்ளார்.</p><p></p><p>
</p><h2>ஆச்சரியமாக இருக்கிறது, நான் இதைச் செய்துவிட்டேன்</h2><p>இதுகுறித்து அவர் பேசுகையில், "ஆச்சரியமாக இருக்கிறது, நான் இதைச் செய்துவிட்டேன்! எனது 7 வயதில் பீட்டர் மற்றும் இண்டியன் ரோடு சந்திப்பில் வசித்தபோது, பாலத்தில் மக்கள் கூட்டமாக இருந்ததை பார்த்த நினைவிருக்கிறது.

ஆனால் அப்போது என்ன நடக்கிறது என்று புரியும் வயது இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57f97ae1-4a1e-4e94-bc05-8f170da15f6c/26-6a9efdaed3b4f.webp' /></p><p> இப்போது இந்த வயதில் சாண்ட்விச் பகுதிக்குச் செல்வதே கடினம், இருந்தாலும் இந்த கோர்டி ஹோவ் பாலம் நமது நகரத்திற்குச் செய்துள்ள நன்மைகளை நான் பாராட்டுகிறேன். இது மிகவும் அற்புதம்" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
</p><p>


பாலத்தைக் கடந்து முடித்த ரீட்டாவிடம், செய்தியாளர்கள் உங்களது அடுத்த (103-வது) பிறந்தநாளுக்கான ஆசை என்னவென்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "நான் எனது அடுத்த பிறந்தநாளை சென்றடைய வேண்டும், அதுவே எனது ஆசை" என்று மிகவும் எதார்த்தமாகவும் நெகிழ்ச்சியாகவும் பதிலளித்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T18:09:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஐக்கிய மக்கள் சக்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-government-is-losing-the-people-s-trust-1788803306"></link>
            <id>https://tamilwin.com/article/the-government-is-losing-the-people-s-trust-1788803306</id>
            <summary type="text">அநுர அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து வருகின்றது என்றும், அரச வளங்கள்
துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய
அமைப்பாளர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுர அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து வருகின்றது என்றும், அரச வளங்கள்
துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய
அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
</p><p>
கொழும்பு, எதுல்கோட்டேயில் இன்று(7) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர்
மேற்கண்டவாறு கூறினார்.</p><h2>கடுமையான விமர்சனம்</h2><p>
</p><p>
தற்போதைய அரசின் நிர்வாக நடவடிக்கைகள், தேசிய பாதுகாப்பு, சுகாதாரம்,
பொருளாதாரம் மற்றும் அரசமைப்பு விவகாரங்கள் தொடர்பில் அவர் கடுமையான
விமர்சனங்களை இதன்போது முன்வைத்தார்.
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் அண்மையில் நடத்தப்பட்ட கூட்டங்கள்,
கடந்த காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நினைவூட்டவோ அல்லது மக்கள்
நலன் சார்ந்த புதிய திட்டங்களை அறிவிக்கவோ நடத்தப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98bea7ba-cf56-4a22-9c8d-51a5deb28f6d/26-6a9efdcd0854c.webp' /></p><p> மாறாக, பழைய
பொய்களை மீண்டும் சமூகத்தில் பரப்பி, அரசின் மீதான மக்களின் விரக்தியை
மறைத்து, மக்களை மீண்டும் ஏமாற்றும் நோக்கிலேயே இந்தக் கூட்டங்கள் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளன.
</p><p>
தேசிய மக்கள் சக்தியின் பேருவளைக் கூட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு
ஏற்பாடுகள் மிகுந்த விமர்சனத்துக்குரியவை. ஜனாதிபதியின் பாதுகாப்பைக்
கருத்தில்கொண்டு பேருவளை மீன்பிடித் துறைமுகத்துக்குள் படகுகள் நுழைவதற்குத்
தடை விதிக்கப்பட்டதால், அந்தப் பகுதி மீனவர்கள் கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

நாட்டில் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அரசு கூறிவரும்
நிலையில், ஜனாதிபதியின் கூட்டங்களுக்குப் பெருமளவு பாதுகாப்பு
வழங்கப்படுகின்றது.

கடந்த சில மாதங்களில் 37 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களும் 17
உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளமை நாட்டின் உண்மையான பாதுகாப்பு நிலைமை
தொடர்பில் பல கேள்விகளை எழுப்புகின்றது.</p><h2>அநுரகுமார திஸாநாயக்க</h2><p>
</p><p>
முன்னாள் ஜனாதிபதிகளின் கூட்டங்களை கடந்த காலங்களில் கடுமையாக விமர்சித்த
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தற்போது அரச வாகனங்கள், பெருமளவிலான
பாதுகாப்புப் படையினர் மற்றும் அரச நிதியைப் பயன்படுத்தித் தனது கட்சியின்
கூட்டங்களை நடத்தி வருகின்றார்.</p><p> இது அரச நிதி மற்றும் அரச வளங்களை நேரடியாகத்
துஷ்பிரயோகம் செய்யும் செயலாகும்.

சுகாதாரத்துறை தொடர்பில் தேர்தலுக்கு முன்னர் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்று
மீறப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ccb5880-9d38-4586-91c0-2d0e65ee3087/26-6a9efdcdb5b4b.webp' /></p><p> தேர்தலுக்கு முன்னர் சுகாதாரத் துறைக்கான 'வட்' வரியை
நீக்குவதாக வாக்குறுதியளித்த ஜனாதிபதி, தற்போது மக்கள் தமக்குத் தேவையான
நேரத்தில் வைத்தியசாலைக்குச் செல்வதைக் கட்டுப்படுத்தும் வகையில்,
மருத்துவரின் பரிந்துரையுடனேயே வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும் என்ற புதிய
முறையை அறிமுகப்படுத்த முயற்சிக்கின்றார்.</p><p> இவ்வாறான நடவடிக்கைகள் இலவச சுகாதார
சேவையைப் படிப்படியாக இல்லாதொழிக்கும் முயற்சியாகும்.

அதேவேளை, 22ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு
சபாநாயகருக்குக் கிடைப்பதற்கு முன்னரே ஜனாதிபதி அது தொடர்பில் கருத்து
வெளியிட்டமை தவறான முன்னுதாரணமாகும்.</p><p> நீதிமன்றத் தீர்ப்பை முன்கூட்டியே
கணித்துச் செயற்பட முடியாது. அரசமைப்பு ரீதியான குழப்பங்களைத் தவிர்க்க இந்த
விவகாரம் தொடர்பில் மக்கள் தீர்ப்பு நடத்தப்பட வேண்டும்.

நாட்டின் பொருளாதார நிலைமை மோசமடைந்து வருகின்றது.</p><h2>மக்களின் வாழ்வாதாரம்</h2><p> </p><p>அரசின் கீழ் கொண்டுவரப்பட்ட
தரமற்ற 19 நிலக்கரி கப்பல்கள் காரணமாக சுமார் 10 ஆயிரம் மில்லியன் ரூபா
நட்டம் ஏற்பட்டுள்ளது.</p><p> துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் இரகசியமாக
வெளியேற்றப்பட்டமை மற்றும் திறைசேரிக்கு 2.5 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டமை
உள்ளிட்ட தவறான நிர்வாகச் செயற்பாடுகள் காரணமாக நாட்டில் கறுப்புப்
பொருளாதாரம் தீவிரமடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10c52877-9301-4206-b5c4-05af9bdba46f/26-6a9efdce6a2e6.webp' /></p><p> </p><p>இதன் விளைவாக அத்தியாவசியப் பொருள்களின்
விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து, மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எதிர்க்கட்சி அரசியலை அழிப்பதாக இராணுவ மற்றும் பாதுகாப்புத் தரப்பு
அமைச்சர்கள் வெளியிடும் கருத்துக்கள் ஜனநாயகத்துக்கு நேரடியான
அச்சுறுத்தலாகும். மக்கள் ஆணையின்றி அதிகாரத்தைத் தக்கவைக்க முயலும் எந்தவொரு
அரசையும் மக்கள் இறுதியில் விரட்டியடிப்பார்கள்.

எதிர்க்கட்சியை அச்சுறுத்துவதற்காக அரசு மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சிக்கும்
பதிலளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T18:09:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இவற்றை செய்தால் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும்; ஈரானின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/hormuz-strait-to-reopen-if-these-steps-are-taken-1788804178"></link>
            <id>https://canadamirror.com/article/hormuz-strait-to-reopen-if-these-steps-are-taken-1788804178</id>
            <summary type="text">அமெரிக்கா தங்களை அச்சுறுத்துவதையும், தாக்குதல் நடத்துவதையும் நிறுத்தினால் ஹோர்முஸ் நீரிணையை திறந்து வைப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் உச்ச தேசிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா தங்களை அச்சுறுத்துவதையும், தாக்குதல் நடத்துவதையும் நிறுத்தினால் ஹோர்முஸ் நீரிணையை திறந்து வைப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. </p><p>ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாயி இதுகுறித்து கூறுகையில், “அமெரிக்கா ஈரானை அச்சுறுத்துவதையும் தாக்குவதையும் நிறுத்தினால், ஹோர்முஸ் நீரிணை திறந்திருப்பதை உறுதி செய்வோம்” என்று தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c9d3bf1-259f-4bb5-a887-7d05a5dd07fb/26-6a9efc53e316e.webp' /></p><p>
</p><p>


மேலும், ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே புதிய தடை செய்யப்பட்ட கடல் மண்டலத்தை வரும் நாட்களில் அறிவிக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாகவும் ரெசாயி கூறினார். </p><p>அமெரிக்க கடற்படை முற்றுகை தொடங்கும் பகுதியிலிருந்து பாரசீக வளைகுடாவின் சில பகுதிகள் வரை இந்த மண்டலம் நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

 

புதிய மண்டலத்துக்குள் ஈரானுடன் ஒருங்கிணைப்பு இல்லாமல் நுழையும் கப்பல்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.</p><p> இதனால் அந்தக் கப்பல்களின் காப்பீடு மற்றும் எதிர்கால ஹோர்முஸ் நீரிணை பயணங்களும் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. </p><p>இதற்கிடையே, ஈரான் மற்றும் ஓமன் கடற்பகுதிகளை உள்ளடக்கிய புதிய சர்வதேச கப்பல் போக்குவரத்து வழித்தடத்துக்கான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அவை விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் ரெசாயி தெரிவித்தார்.
</p><p>
 

அமெரிக்கா–ஈரான் இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், உலகின் முக்கியமான எண்ணெய் மற்றும் சரக்கு போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையின் எதிர்கால நிலை சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது</p>]]></content>
            <updated>2026-09-07T18:03:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/case-against-former-minister-jayakody-postponed-1788803312"></link>
            <id>https://jvpnews.com/article/case-against-former-minister-jayakody-postponed-1788803312</id>
            <summary type="text">தற்போதைய அரசாங்கத்தின் முன்னாள் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்ய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தற்போதைய அரசாங்கத்தின் முன்னாள் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதிக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

இந்த வழக்கு இன்று (07) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷந்த கொடவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc2314dc-468c-4ef8-9787-c5a8981d57d8/26-6a9ef8f154487.webp' /></p><h2 style="text-align: justify; ">இலஞ்ச ஊழல் விசாரணை</h2><p style="text-align: justify; "> 

இதன்போது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் நாயகம் அசித அந்தோனியின் வழிநடத்தலில் சாட்சியமளித்த இலங்கை உர நிறுவனத்தின் முன்னாள் தலைவர் புத்திக ருவன் மடிஹஹேவா, 2014 ஆம் ஆண்டு இலங்கை உர நிறுவனத்தின் ஹுனுபிட்டிய களஞ்சிய வளாகத்தில் வீதிக்கு கார்பட் இடுவதற்கான ஏலதாரர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் கொள்முதல் செயல்முறை தொடங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "> 

அக்காலகட்டத்தில் குறித்த நிறுவனத்தின் கொள்முதல் முகாமையாளராக பிரதிவாதி குமார ஜயகொடி பணியாற்றியதாகச் சாட்சி குறிப்பிட்டார். </p><p style="text-align: justify; ">

அதன்படி, கொள்முதல் நடைமுறையைப் பின்பற்றி இந்த கார்பட் இடும் பணியை மேற்கொள்வதற்காக ஒரு தனியார் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், அந்த நிறுவனத்திற்கு முன்பணப் பிணையின் அடிப்படையில் ரூ. 8,859,708 முன்பணமாக வழங்கப்பட்டதாகவும் சாட்சி கூறினார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

கொள்முதல் பிரிவு மற்றும் நிதிப் பிரிவு என்பன உரிய கொள்முதல் நடைமுறையைச் சரியாகப் பின்பற்றியுள்ளதாகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களைப் பரிசீலித்த பின்னரே தாம் அந்தப் பணப்பரிமாற்றத்திற்கு ஒப்புதல் அளித்ததாகச் சாட்சி சுட்டிக்காட்டினார். </p><p style="text-align: justify; ">

இருப்பினும், குறித்த நிறுவனம் கார்பட் இடும் பணியை மேற்கொள்ளவில்லை என்பதை ஒப்புக்கொண்ட சாட்சி, அந்தப் பணிக்காகக் கொண்டுவரப்பட்ட கற்கள் உள்ளிட்ட மூலப்பொருட்கள் தமது நிறுவன வளாகத்திலேயே விட்டுச் செல்லப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அதன் பின்னர், குறித்த நிறுவனம் வழங்கிய முன்பணப் பிணையின் கீழ் ரூ. 2,214,921 மட்டுமே அறவிடப்பட்டதாகச் சாட்சி குறிப்பிட்டார். 

இதனைத் தொடர்ந்து, தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் சட்ட அதிகாரி ஒருவரும் சாட்சியமளித்தார். </p><p style="text-align: justify; ">

அதன்பின்னர், இந்த வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-07T18:00:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் நாமல் : நிமல் பெரேரா 'பெரும் கள்ளன்' : டி.வி. சானக கொதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nimal-perera-is-a-blatant-thief-dv-chanaka-1788798034"></link>
            <id>https://ibctamil.com/article/nimal-perera-is-a-blatant-thief-dv-chanaka-1788798034</id>
            <summary type="text">விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு ஏர்பஸ் ஒப்பந்தத்தில் 100 மில்லியன் ரூபா இலஞ்சம் வழங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு ஏர்பஸ் ஒப்பந்தத்தில் 100 மில்லியன் ரூபா இலஞ்சம் வழங்கப்பட்டதாக வணிகர் நிமல் பெரேரா என்பவர் சத்தியக் கடதாசி மூலம் வெளிப்படுத்தியுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். </p><p>அந்த வழக்கு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோது, அவர் குறிப்பிடுகையில், 'பிஸ் சொலூஷன் இன்கார்பரேஷன்' என்ற கணக்கிலிருந்து நிமல் பெரேராவுக்கு சொந்தமான 'சேபர் விஷன் ஹோல்டிங்ஸ்' கணக்கிற்கு எட்டு லட்சம் அமெரிக்க டொலர் பணம் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.</p><h2>&nbsp;நாமலிடம் சென்ற 100 மில்லியன் இலஞ்சப்பணம்</h2><p>இலங்கை நாணயத்தில் 100 மில்லியன் ரூபாவுக்கு சமமான இந்த இலஞ்சப் பணம் ரூபாயாக மாற்றப்பட்டு சந்தேகநபரான நாமல் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டதாக சம்பந்தப்பட்ட வணிகர் சாட்சியமளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/005dca1a-246f-40f9-8761-c5dc0dca8171/26-6a9ee8d6ddbf4.webp' /></p><p>





எனினும், நாமல் ராஜபக்சவுக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், இந்த சத்தியக் கடதாசி மூலம் சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்ததுடன், நிமல் பெரேரா என்பவரின் வாக்குமூலத்தின் நம்பகத்தன்மை குறித்து நீதிமன்றத்தில் சவால் விடுத்தார்.</p><p></p><p> </p><h2>சானக எம்.பி கொதிப்பு</h2><p>இதற்கிடையில், சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி. வி. சானக, நிமல் பெரேரா என்பவர் கிட்டத்தட்ட 100 வழக்குகள் உள்ள, அடிக்கடி சாட்சியங்களை மாற்றும் ஒரு பொய்யான, ஊழல் நிறைந்த வணிகர் ஆவார். அத்தகைய ஒரு ஊழல் நிறைந்த நபரின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு தற்போதைய அரசாங்கம் நாமல் ராஜபக்சவை கைது செய்ய முயற்சிக்கிறது என்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி குற்றம் சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a28a876-7fb8-4d9c-8e4f-c3b46b077cf0/26-6a9ee8d6345d0.webp' /></p><p>
</p><p>



 பொதுஜன பெரமுனவால் ஊழல்வாதி என அழைக்கப்படும் நிமல் பெரேராவின் பிறந்தநாள் விருந்தில் நாமல் ராஜபக்சவும் அவரது மனைவியும் கலந்துகொண்ட பல புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.</p><p></p><h2>கிரிஷ் ஒப்பந்த வழக்கிலும்&nbsp;&nbsp;நிமல் பெரேராவுடன் நாமலுக்கு தொடர்பு</h2><p> கூடுதலாக, தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கிலும் நாமல் ராஜபக்ச சம்பந்தப்பட்ட வணிகருடன் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51bf592c-cb8a-42fa-9119-b752dc6ea296/26-6a9ee8d57f62b.webp' /></p><p> அதில், ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதற்காக நிதி உதவியாக கிரிஷ் நிறுவனத்தின் இயக்குனர் ஆர். பி. குப்தாவிடம் கோரப்பட்ட 70 மில்லியன் ரூபா பணம் 2012 ஒக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் நிமல் பெரேராவின் வங்கிக் கணக்குகளுக்கு வரவு வைக்கப்பட்டுள்ளதுடன், அந்தப் பணம் 2013 ஆம் ஆண்டு சூப்பர் செவன்ஸ் ரக்பி போட்டிக்கு முன்னர் தவணைகளாக நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T17:40:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சாக்கள் சிறையில் அடைக்கப்படவேண்டும்: ரணிலின் சகா ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rajapaksa-should-be-put-in-jail-says-ashu-1788800688"></link>
            <id>https://ibctamil.com/article/rajapaksa-should-be-put-in-jail-says-ashu-1788800688</id>
            <summary type="text">முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் அஷு மராசிங்க, ராஜபக்ச குடும்பத்தினர் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும்,அவர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் அஷு மராசிங்க, ராஜபக்ச குடும்பத்தினர் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும்,அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>

"ராஜபக்ச சிறையில் அடைக்கப்பட வேண்டும், ரணில் இதை எதிர்க்கிறார், அஷு இந்த நோக்கத்தை ஆதரிக்கிறார்," என்று அவர் கூறியுள்ளார்.</p><h2>"நல்லாட்சி" அரசாங்கத்தை அமைப்பதில் ஐ. தே. க ஆற்றிய பங்களிப்பு&nbsp;</h2><p>தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு "நல்லாட்சி" அரசாங்கத்தை அமைப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி ஆற்றிய பங்கை நினைவு கூர்ந்த மாரசிங்க, "நாங்கள் ஒன்றிணைந்து நல்லாட்சி அரசாங்கத்தைக் கொண்டு வந்தோம்," என்றும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5b80eda-ebb7-49ad-890e-2b9541e9cbfb/26-6a9ef6dccf26e.webp' /></p><p>
</p><p>
மேலும், அக்காலத்தில் பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்த அரசியல் சமநிலை குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார். "தராசுகள் ஒன்று சேர்ந்தபோது எட்டப்பட்ட சமநிலையை நாங்கள் அறிவோம்," என்றும் அவர் கூறியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T17:39:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க தடைக்கு பதிலடி! ஈரானின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-decides-announce-new-exclusion-zone-gulf-1788801560"></link>
            <id>https://tamilwin.com/article/iran-decides-announce-new-exclusion-zone-gulf-1788801560</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கா விதித்துள்ள தடையை எதிர்கொள்ளும்
வகையில், வளைகுடா கடற்பரப்பில் புதிய தடை மண்டலம் ஒன்றையும் புதிய கப்பல்
போக்குவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கா விதித்துள்ள தடையை எதிர்கொள்ளும்
வகையில், வளைகுடா கடற்பரப்பில் புதிய தடை மண்டலம் ஒன்றையும் புதிய கப்பல்
போக்குவரத்து பாதையையும் விரைவில் அறிவிக்கவுள்ளதாக ஈரான் அரசாங்கம்
தெரிவித்துள்ளது.</p><p>

ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு பேரவையின் செயலாளர் மொஹ்சேன் ரெசாய் இது
குறித்துத் தெரிவிக்கையில், புதிய தடை மண்டலத்திற்குள் நுழையும் கப்பல்கள்
அனைத்தும் உடனடியாகத் தடைகளின் பட்டியலில் சேர்க்கப்படும் எனக்
குறிப்பிட்டுள்ளார்.</p><h2>&nbsp;மசகு எண்ணெய் விலை</h2><p>

அத்துடன் ஓமான் நாட்டின் எல்லைக்குட்பட்ட நீர்ப்பரப்பினூடாக அமைக்கப்படும்
புதிய சர்வதேச கப்பல் பாதையை ஈரானே நிர்வகிக்கும் என்றும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே கடற்பகுதியில் பரஸ்பர தாக்குதல்கள்
தீவிரமடைந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் மசகு எண்ணெய் கொண்டு செல்லும்
கப்பல்களின் நடமாட்டம் பெருமளவில் குறைடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/966e7bc0-ebdf-4b2b-b4f2-5a844de3eb61/26-6a9ef570b3f80.webp' /></p><p>
</p><p>
இதன் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையானது பீப்பாய் ஒன்றுக்கு 97
டொலரைக் கடந்து பதிவாகியுள்ளதுடன், அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியில்
நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக
ஈரானிய பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T17:33:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்திற்கு மெட்ரோ பேருந்து சேவை ; அமைச்சர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/metro-bus-service-coming-to-jaffna-1788801457"></link>
            <id>https://jvpnews.com/article/metro-bus-service-coming-to-jaffna-1788801457</id>
            <summary type="text">மெட்ரோ பேருந்து சேவையை மேல் மாகாணத்திற்கு அப்பால் விரிவுபடுத்தி காலி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மெட்ரோ பேருந்து சேவையை மேல் மாகாணத்திற்கு அப்பால் விரிவுபடுத்தி காலி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். </p><p style="text-align: justify; ">

இன்று (07) கடவத்தை மெட்ரோ டிப்போ முனையத்தின் செயல்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/774a4229-f2a6-463f-b8d3-2d844a4444d0/26-6a9ef1b2b7a2e.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;மெட்ரோ பேருந்து சேவை</h2><p style="text-align: justify; "> 

இம்மாதத்திற்குள் மெட்ரோ பேருந்து சேவையின் பேருந்துகளின் எண்ணிக்கையை 122 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மேலும் 50 பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.</p><p style="text-align: justify; "> 

அதன்படி, இந்த ஆண்டின் இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டின் முற்பகுதியில் மெட்ரோ பேருந்து சேவையை 172 பேருந்துகள் வரை விரிவாக்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். </p><p style="text-align: justify; ">

மெட்ரோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து பேருந்து சேவையை நடத்துவதற்கு எதிர்காலத்தில் தனியார் துறைக்கும் வாய்ப்பளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

இதற்கிடையில், நாட்டின் நகர போக்குவரத்து துறையை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், மெட்ரோ பேருந்து சேவைக்கு தேவையான உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, Clean Sri Lanka செயலகம், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் லங்கா மெட்ரோ டிரான்சிட் தனியார் நிறுவனம் ஆகியன இணைந்து மேற்கொண்டு வருகின்றன. </p><p style="text-align: justify; ">

இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கடவத்தை மெட்ரோ டிப்போ முனையத்தின் செயல்பாடுகள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. 

மெட்ரோ திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட முதலாவது டிப்போ முனையம் கடந்த 04 ஆம் திகதி பத்தரமுல்லை, தலங்கம பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "> 

மெட்ரோ பேருந்து சேவையின் நிர்வாகம், செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு பணிகளை வலுப்படுத்துவதற்காக முதற்கட்டமாக தலங்கம, கடவத்தை, ஏகல மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு 04 புதிய டிப்போக்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

தற்போது மெட்ரோ பேருந்து சேவையின் 01 ஆம் இலக்க வழியின் கீழ் மாகும்புரவிலிருந்து மகரகம ஊடாக கடவத்தை வரை சேவைகள் இயங்கி வருவதுடன், அந்த வழித்தடத்திற்கு 15 புதிய மெட்ரோ பேருந்துகளை ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

மேலும் பேருந்து நிறுத்தங்கள், ஒருங்கிணைந்த கட்டண முறைகள், டிப்போ வசதிகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட ஏனைய போக்குவரத்து சேவைகளுடனான தொடர்பை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

அத்துடன், பொதுப் போக்குவரத்து சேவையில் முக்கிய பங்காற்றும் இலங்கை போக்குவரத்து சபையை (CTB) மேலும் வலுப்படுத்துவதற்காக, இந்த ஆண்டின் இறுதிக்குள் 600 புதிய குளிரூட்டப்பட்ட (A/C) பேருந்துகளை இறக்குமதி செய்யவும், இலங்கை போக்குவரத்து சபையின் நிதியைப் பயன்படுத்தி மேலும் 200 பேருந்துகளைக் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.</p>]]></content>
            <updated>2026-09-07T17:30:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளைகுடாவில் புதிய கட்டுப்பாட்டு மண்டலம் - ஈரான் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-to-declare-new-gulf-restricted-zone-soon-1788801835"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-to-declare-new-gulf-restricted-zone-soon-1788801835</id>
            <summary type="text">Iran to declare new gulf restricted zone soon: வளைகுடா பகுதியில் முக்கிய முடிவை ஈரான் எடுத்துள்ளது.
புதிய கட்டுப்பாட்டு மண்டலம்ஈரான் விரைவில் வளைகுடா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran to declare new gulf restricted zone soon: வளைகுடா பகுதியில் முக்கிய முடிவை ஈரான் எடுத்துள்ளது.
</p><h2>புதிய கட்டுப்பாட்டு மண்டலம்</h2><p>ஈரான் விரைவில் வளைகுடாவில் புதிய கட்டுப்பாட்டு மண்டலத்தை அறிவிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
இந்த மண்டலம் அமெரிக்கா ஈரானுக்கு விதித்துள்ள தடைகள் தொடங்கும் இடத்திலிருந்து வளைகுடா பகுதிகளுக்கு விரிவடையும் என்று ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சன் ரெசாயி தெரிவித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbe7adaa-ba68-48a3-863e-58bb9a54881c/26-6a9ef32ca1434.webp' /></p><p>இந்த புதிய மண்டலத்தில் நுழையும் எந்தக் கப்பலும் தடைப்பட்ட பட்டியலில் சேர்க்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். மேலும், ஹார்முஸ் நீரிணையில் புதிய சர்வதேச கடற்பாதை வரைபடங்கள் ஈரான் மற்றும் ஓமன் இணைந்து ஒப்புதல் அளிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
</p><p>
“அமெரிக்கா தனது சபோட்டாஜ் மற்றும் தாக்குதல்களை நிறுத்தினால் மட்டுமே ஹார்முஸ் நீரிணை திறந்திருக்கும்” என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது.</p><p></p><p>சமீபத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கப்பல்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான Kharg Island பலமுறை தாக்குதலுக்கு உள்ளானாலும் இன்னும் செயல்பட்டு வருவதாக ஈரான் எண்ணெய் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, விலை உயர்வு தொடர்கிறது.
</p><p>
ஈரான் பாராளுமன்றத் தலைவர் காளிபாப், “இனி ஈரானின் நலன்களுக்கு எதிரான எந்தத் தாக்குதலும் வேகமான, கடுமையான பதிலை சந்திக்கும்” என்று எச்சரித்துள்ளார். அதேசமயம், ஈரான் பொருளாதார சவால்களை சமாளிக்க சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் என பொருளாதார அமைச்சர் தெரிவித்தார்.
</p><p>
இந்த அறிவிப்பு வளைகுடா பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் வணிகப் போக்குவரத்துக்கு புதிய சவால்களை உருவாக்கும் நிலையில், சர்வதேச சமூகத்தின் கவனம் ஈரானின் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் நிலைகொண்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T17:20:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிருஷாந்தி படுகொலை இடம்பெற்று 30 ஆண்டுகள் – நினைவுகூரப்படும் செம்மணி படுகொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/krishanthi-commemoration-in-chemmani-1788799887"></link>
            <id>https://tamilwin.com/article/krishanthi-commemoration-in-chemmani-1788799887</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி பாடசாலை
மாணவியான குமாரசாமி கிருசாந்தி உள்ளிட்டவர்களின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல்
இன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி பாடசாலை
மாணவியான குமாரசாமி கிருசாந்தி உள்ளிட்டவர்களின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல்
இன்றைய தினம்(7) திங்கட்கிழமை மாலை செம்மணி பகுதியில் இடம்பெற்றது.
</p><p>
இதன்போது செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட, அங்கு புதைக்கப்பட்ட
ஏனையவர்களும் நினைவு கூரப்பட்டு, அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.</p><h2>கிரிசாந்தி நினைவேந்தல்</h2><p>
</p><p>
1996 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 7ஆம் திகதி 18 வயதுடைய யாழ்ப்பாணம்
சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி வீதியால் சென்று கொண்டிருந்த
போது, செம்மணி பகுதியில் இராணுவத்தினரால் வழிமறித்து பாலியல் துர்நடத்தைக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.</p><p>

கிருஷாந்தியை, செம்மணி இராணுவ முகாமில் தடுத்து வைத்திருந்ததை பிரதேச மக்கள்
அவதானித்து மாணவியின் தாயாரிடம் கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a95ed88-c20b-41f7-ba7d-424a55fdd048/26-6a9ef08d2723a.webp' /></p><p>

இதனையடுத்து, மாணவியின் தாயாரான ஆசிரியை குமாரசாமி இராசம்மா, மாணவியின்
சகோதரன், குமாரசாமி பிரணவன் மற்றும் மாணவியின் வீட்டுக்கு அயல் வீட்டில்
வசிக்கும் தென்மராட்சி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் உதவியாளராக கடமையாற்றிய
சிதம்பரம் கிருபாமூர்த்தி ஆகியோர் மாணவியை தேடி சென்று செம்மணி இராணுவ
முகாமில் விசாரித்துள்ளனர்.
</p><p>
அதனையடுத்து மாணவியைத் தேடிச் சென்ற மூவரையும் இராணுவத்தினர் படுகொலை
செய்திருந்தனர்.
</p><p>
அன்றைய தினம் நள்ளிரவு கிருஷாந்தி உள்ளிட்ட படுகொலை செய்யப்பட்ட நால்வரின்
உடல்கள் செம்மணி பகுதியில் உள்ள வயல் வெளியில் புதைத்திருந்தனர்.</p>]]></content>
            <updated>2026-09-07T17:12:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக முதல்வர் விஜய்யின் சட்டமன்ற உரை ; ஒரு மணி நேரத்தில் பதிவான விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-nadu-cm-vijay-s-assembly-speech-1788799733"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-nadu-cm-vijay-s-assembly-speech-1788799733</id>
            <summary type="text">தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று ஆற்றிய உரை டிஜிட்டல் தளங்களில் கவனம் பெற்றதாக கூறப்படுகிறது. குறிப்பாக பெண்களை அவமதிக்கும் பேச்சு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று ஆற்றிய உரை டிஜிட்டல் தளங்களில் கவனம் பெற்றதாக கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "> குறிப்பாக பெண்களை அவமதிக்கும் பேச்சுகளுக்கு எதிராக அவர் தெரிவித்த கருத்துகள் சமூக வலைதளங்களிலும் யூடியூப் தளத்திலும் வேகமாக பரவியதாக இந்த மதிப்பீடு தெரிவிக்கிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/110aa765-affa-418e-9cdf-24c92e13f74a/26-6a9eeaf77217e.webp' /></p><h2 style="text-align: justify; ">பார்வையாளர்</h2><p style="text-align: justify; "> 
முக்கிய தமிழ் செய்தி நேரலைகளை சேர்த்து பார்த்தால், ஒரே நேரத்தில் சுமார் 2.7 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்ததாக கூறப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">மேலும், உரை முடிந்த முதல் இரண்டு மணி நேரத்தில் வீடியோக்கள் மற்றும் கிளிப்புகள் மூலம் 18 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இவை அதிகாரப்பூர்வ ஒருங்கிணைந்த புள்ளிவிவரங்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p style="text-align: justify; "> 
பெண்கள்தான் தனது அரசியல் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும், பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளை பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்றும் விஜய் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> அந்த நேரத்தில் ஆன்லைன் பார்வையாளர் செயல்பாடுகள் 340 சதவீதம் வரை அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-07T16:49:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் துணை மின் நிலைய தாக்குதல்கள்..சந்தேக நபர் குறித்து விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-investigating-suspect-after-fire-damage-1788785801"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-investigating-suspect-after-fire-damage-1788785801</id>
            <summary type="text">Germany investigating after another substation fire: ஜேர்மனியில் மற்றொரு மின் துணை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>Germany investigating after another substation fire: ஜேர்மனியில் மற்றொரு மின் துணை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.</p><p>

ரஷ்யாவின் ஹைபிரிட் தாக்குதல் குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், ஜேர்மனியில் மற்றொரு மின் துணை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>ஜேர்மனியை குறிவைத்து</h2><p> 
ஐரோப்பிய நாடான ஜேர்மனியை குறிவைத்து சம்பவம் தொடர்ச்சியாக நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3751eb32-da13-46b8-8076-7dd7c3d13caf/26-6a9eb5879eea7.webp' />&nbsp;</p><p></p><p>
இந்த சூழலில், திங்களன்று பெர்லினில் உள்ள ஒரு மின் துணை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதம் உண்டானது.</p><p> 

இதுகுறித்து பேசிய காவல்துறையினர், "கட்டுமானப் பணி நடைபெறும் இடம் மற்றும் துணை மின் நிலையத்தின் ஒரு பகுதி ஆகியவை தீயில் எரிந்து சேதமடைந்தன. இதனால் விநியோகத்தில் எந்தத் தடங்கலும் ஏற்படவில்லை" என்றனர். </p><p>

மேலும், நாசவேலை குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இது நாசவேலையா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருவதாக என்றும் தெரிவித்தனர்.
</p><p>
இதற்கிடையில், நிலக்கரி மின் நிலையங்களில் இருந்து மின்சார விநியோகத்தைத் துண்டிக்கும் நோக்கில், கடந்த வாரம் ஜேர்மனி முழுவதும் உள்ள துணை மின் நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களுக்குக் காரணமானவர் என்று சந்தேகிக்கப்படும், தீவிரப் போக்குடைய சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38b2eedd-cc20-48db-871a-f63f41b4f39c/26-6a9eb586df47b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T16:37:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஸ்வநாத் &amp; சன்ஸ் 25 நாள் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vishwanath-and-sons-25-days-official-box-office-1788798616"></link>
            <id>https://cineulagam.com/article/vishwanath-and-sons-25-days-official-box-office-1788798616</id>
            <summary type="text">கருப்பு படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் வெளிவந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் பாக்ஸ் ஆபிசில் தொடர்ந்து நல்ல கலெக்ஷனை ஈட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கருப்பு படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் வெளிவந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் பாக்ஸ் ஆபிசில் தொடர்ந்து நல்ல கலெக்ஷனை ஈட்டி வந்தது.</p><p>தமிழை விட தெலுங்கில் தான் இந்த படத்திற்கு அதிக வசூல் கிடைத்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/102ff77b-502d-452b-b2ea-6ef92e8f6d74/26-6a9ee69b5eae4.webp' /></p><p>
</p><h2>25 நாள் அதிகாரப்பூர்வ வசூல் </h2><p>
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வெளியாகி 25 நாட்கள் ஆகி இருக்கும் நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ வசூலை சித்தாரா என்டர்டைன்மென்ட் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.
</p><p>அதன்படி உலக அளவில் மொத்தம் 260 கோடி ரூபாய் கிராஸ் வசூல் வந்திருக்கிறது.
</p><p>கருப்பு படத்தை தொடர்ந்து இந்த படம் மிகப்பெரிய வெற்றியை சூர்யாவுக்கு கொடுத்திருக்கிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T16:30:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-cases-reported-in-the-country-1788798281"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-cases-reported-in-the-country-1788798281</id>
            <summary type="text">நடப்பு ஆண்டில் இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 96,482 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இருப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நடப்பு ஆண்டில் இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 96,482 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;">

இருப்பினும், செப்டம்பர் மாதத்தின் கடந்த ஆறு நாட்களில் 991 நோயாளிகள் மட்டுமே பதிவாகியுள்ள நிலையில், டெங்கு நோயாளிகளின் பதிவில் ஒப்பீட்டளவில் வீழ்ச்சி தென்படுகிறது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3baa063-c546-4f5a-b958-f55a9e31ac87/26-6a9ee55225dbe.webp' /></p><h2 style="text-align: justify;">டெங்கு காய்ச்சல்</h2><p style="text-align: justify;">

மொத்த நோயாளிகளில் அதிகளவானோர் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 20,527 என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டுகிறது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆகும்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-07T16:26:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பக்தர்கள் புடைசூழ சிறப்பாக இடம்பெற்ற நல்லூர் வேட்டைத் திருவிழா! குதிரை வாகனத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nallur-kandasamy-temple-festival-2026-1788797698"></link>
            <id>https://tamilwin.com/article/nallur-kandasamy-temple-festival-2026-1788797698</id>
            <summary type="text">நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவத்தின் 22ஆம் நாள் திருவிழாவான வேட்டைத் திருவிழா அல்லது ஒருமுகத் திருவிழா இன்று(7) சிறப்பாக இடம்பெற்றது.

இதன்போத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவத்தின் 22ஆம் நாள் திருவிழாவான வேட்டைத் திருவிழா அல்லது ஒருமுகத் திருவிழா இன்று(7) சிறப்பாக இடம்பெற்றது.</p><p>

இதன்போது, முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, ஆலய வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்காட்சி வழங்கினார்.
</p><p>
இதனை முன்னிட்டு கட்டியம் சொல்லப்பட்டதுடன், பாரம்பரிய மரபுகளுக்கு அமைவாக இடம்பெற்ற வீதி உலாவில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81132bdc-c963-4f39-a832-ae1e241a8765/26-6a9ee40eef06c.webp' /></p>]]></content>
            <updated>2026-09-07T16:19:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் கைது : கலக்கமடையாத Gen Z தலைமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-one-is-worried-about-namals-arrest-vasudeva-1788796542"></link>
            <id>https://ibctamil.com/article/no-one-is-worried-about-namals-arrest-vasudeva-1788796542</id>
            <summary type="text">நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்ட சம்பவத்தால் நாட்டின் ஜெனரேஷன் Z (Gen Z) தலைமுறை கலக்கமடையவில்லை என்று கூறிய முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர், வாசுதேவ நாணய...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்ட சம்பவத்தால் நாட்டின் ஜெனரேஷன் Z (Gen Z) தலைமுறை கலக்கமடையவில்லை என்று கூறிய முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர், வாசுதேவ நாணயக்கார தற்போதைய ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் சதித்திட்டமான ஒன்றிணைப்பின் மூலம் நாட்டை மீண்டும் பின்னோக்கி இழுக்கும் முயற்சி குறித்துதான் அவர்களுக்கு உண்மையான கலக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் மேலும் தெரிவித்தார்.</p><p>&nbsp;இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>மக்கள் அதிருப்தி உருவாகும்வரை காத்திருக்கும் எதிர்க்கட்சி</h2><p>
</p><p>
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் அதிருப்தி உருவாகும் வரை எதிர்க்கட்சி காத்திருக்கிறது, ஏனெனில் அது தனது அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான முக்கிய உத்தியாக அதைப் பயன்படுத்துகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95c0709a-2e5e-4614-a9cd-8d831384cec3/26-6a9ee1aeee2ad.webp' /></p><p> </p><p>மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் சமூக சிரமங்களை தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு எதிராக மக்களை வழிநடத்த எதிர்க்கட்சி தயாராகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>ஆளும் தரப்பு&nbsp; எச்சரிக்கையாக செயல்படுவது அத்தியாவசியம்</h2><p>
</p><p>





 இத்தகைய சூழ்நிலையில் ஆளும் தரப்பு மிகவும் புத்திசாலித்தனமாகவும் எச்சரிக்கையாகவும் செயல்படுவது அத்தியாவசியம் என்று வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cfc752d-c6fa-46c0-aed1-57dccff175c4/26-6a9ee1ae454bd.webp' /></p><p> மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் வலதுசாரி ஐக்கிய எதிர்க்கட்சி பிற்போக்கு சக்திகளுடன் இணைந்து புதிய திட்டத்திற்கு தயாராகி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
</p><p>
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அறிக்கைகளைப் பார்க்கும்போது, அரசாங்கத்தின் தவறுகள் மற்றும் அரசாங்கம் குறித்து மக்கள் மத்தியில் உருவாகும் அமைதியின்மை குறித்து அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாகத் தெரிகிறது என்றும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T16:09:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த ஆபத்தான நபர் - நள்ளிரவில் கொடூரமாக வெட்டிக்கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-killed-who-returned-to-sri-lanka-1788790718"></link>
            <id>https://tamilwin.com/article/man-killed-who-returned-to-sri-lanka-1788790718</id>
            <summary type="text">கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில், வெளிநாட்டிலிருந்த வந்த குற்றக் கும்பலுடன் தொடர்புடைய நபர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். 

இந்த கொல...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில், வெளிநாட்டிலிருந்த வந்த குற்றக் கும்பலுடன் தொடர்புடைய நபர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். </p><p>

இந்த கொலை சம்பவம் தெஹிவளை ஓபன் பகுதியில் இன்று அதிகாலை 1.45 மணியில் இடம்பெற்றுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளார். </p><p>

திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கொஸ் மல்லி என்பவரின் உறவினரான பூத களுவா என்ற நபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><h2><b>

குத்தி கொலை</b></h2><p>நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று வீட்டுக்குள் நுழைந்து உறக்கத்தில் இருந்த களுவா மீது கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7321441-bbe1-4e71-b2ea-c6cc96912148/26-6a9eca660dd26.webp' /></p><p>படுகாயம் அடைந்த களுவா, களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p> 

கொலை செய்யப்பட்ட நபர், திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கொஸ் மல்லி என்பவருடன் பல வருடங்கள் டுபாயில் தங்கியிருந்துள்ளார். </p><p>

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டதையடுத்து, அவர் சில வாரங்களுக்கு முன்பு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். </p><p>

இந்தக் கொலையைத் திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான படோவிட்ட அசங்கவின் தரப்பினர் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.&nbsp;</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jaiQIN4g2fs" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p> 
</p>]]></content>
            <updated>2026-09-07T16:03:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை நிவேதிதா சதிஷ் நிச்சயதார்த்தம் முடிந்தது.. மாப்பிள்ளை யார் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-nivedhitha-sathish-engagement-photos-1788796680"></link>
            <id>https://cineulagam.com/article/actress-nivedhitha-sathish-engagement-photos-1788796680</id>
            <summary type="text">தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படங்கள் நடித்து இருப்பவர் நிவேதிதா சதிஷ். தனுஷின் கேப்டன் மில்லர் படத்திலும் அவர் நடித்திருந்தார்.வித்தியாசமான ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படங்கள் நடித்து இருப்பவர் நிவேதிதா சதிஷ். தனுஷின் கேப்டன் மில்லர் படத்திலும் அவர் நடித்திருந்தார்.</p><p>வித்தியாசமான ரோல்களில் நடித்து வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95bd9f02-12e2-409d-a3ec-6a7ee6505e91/26-6a9edf0b6e08f.webp' /></p><p>
</p><h2>நிச்சயதார்த்தம்</h2><p>தற்போது நிவேதிதாவுக்கு அவரது காதலர் சுஹைப் முகமது என்பவர் உடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது.&nbsp;சுஹைப் முகமது&nbsp;போட்டோகிராபர் ஆக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.</p><p>போட்டோக்கள் வெளியாகி இருக்கும் நிலையில் நெட்டிசன்கள் நடிகைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T15:58:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா குறித்து மீண்டும் சர்ச்சையை கிளப்பும் டிரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadas-exchange-rate-with-us-is-unacceptable-1788788844"></link>
            <id>https://canadamirror.com/article/canadas-exchange-rate-with-us-is-unacceptable-1788788844</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையிலான நாணய மாற்று விகிதம் &quot;ஏற்றுக்கொள்ள முடியாதது&quot; என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையிலான நாணய மாற்று விகிதம் "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். 
தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைதளப் பக்கத்தில் டிரம்ப், பதிவிட்டுள்ளார்.</p><p>
அமெரிக்க டாலருடன் கனடா டொலரின் சமநிலையற்ற நிலை ஏற்றுக்கொள்ள முடியாதது. 
பல ஆண்டுகளாக இந்நிலை நீடித்து வருகிறது, ஆனால் இனி அது தொடராது!" எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p> 
எனினும், இந்த விவகாரத்தில் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து அவர் விரிவாக விளக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38a3d0a6-f62b-45a1-a9a6-9ba0aaf625a1/26-6a9ec06d74b73.webp' /></p><p> </p><p>
தற்போது 1 அமெரிக்க டொலர் என்பது சுமார் 1.38 கனடா டொலருக்குச் சமமாக உள்ளது (அதாவது 1 கனடா டொலரின் மதிப்பு சுமார் 72 அமெரிக்க சென்ட்கள்).</p><p> 
வரலாற்று ரீதியாகக் கனடா டொலர் குறைந்த மதிப்பில் இருப்பது, அமெரிக்க வாடிக்கையாளர்களுக்குக் கனடாவின் ஏற்றுமதிப் பொருட்களை மலிவாகவும், கனடா மக்களுக்கு அமெரிக்கப் பொருட்களைக் கூடுதல் விலையுடனும் மாற்றுகிறது. </p><p>
ஆகஸ்ட் 22 முதல் கனடா ஏற்றுமதிகள் மீது டிரம்ப் விதித்த 50% வரிக்கான பதிலடியாக, அமெரிக்காவின் 700 பொருட்கள் மீது புதிய வரிகளைச் சுமத்த கனடா முடிவு செய்துள்ளது. </p><p>
செப்டம்பர் 8-ஆம் திகதி இந்த வரிகள் அமலுக்கு வரவுள்ள நிலையில் டிரம்பின் இந்தப் பதிவு வெளியாகியுள்ளது. </p><p>
ஆகஸ்ட் 21 அன்று இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததிலிருந்து, கனடாவை "மிக மோசமாகச் சுரண்டும் நாடுகளில் ஒன்று" என டிரம்ப் கடுமையாகச் சாடி வருகிறார். </p><p>"பல தசாப்தங்களாக அவர்கள் நம்மைச் சுரண்டி வருகிறார்கள், அது இனி நிறுத்தப்படும்" என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். </p><p>
டிரம்பின் இந்த விமர்சனங்களுக்குக் கனடா பிரதமர் மார்க் கார்னி இதுவரை பகிரங்கமாகப் பதில் எதுவும் தெரிவிக்கவில்லை. </p><p>
அதேவேளையில், அமெரிக்காவின் வரிகளுக்கு எதிராகக் கனடா அரசு எடுத்து வரும் பதில்-வரி நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு மக்களிடையே கணிசமான ஆதரவு இருப்பதாகச் அண்மைய 'நானோஸ்' கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T15:57:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெப்பமான வானிலை ; வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hot-weather-meteorological-department-warning-1788796616"></link>
            <id>https://jvpnews.com/article/hot-weather-meteorological-department-warning-1788796616</id>
            <summary type="text">பல மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. 

வடமத்திய, கிழக்கு மாகாணங...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பல மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கும் இந்த அறிவிப்பு செல்லுபடியாகும்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a14e4585-5fef-45d2-b380-8d3d1a673245/26-6a9edeca9eb95.webp' /></p><p style="text-align: justify; "> 

அதன்படி, வடமத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பகல் வேளையில் வெப்பக் குறியீடு, அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம் 'அவதானம் செலுத்தப்பட வேண்டிய' (Caution) மட்டத்தில் காணப்படலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-07T15:57:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 ஆண்டுகளின் பின் கடகத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/jupiter-moon-make-gajkesari-rajyog-who-get-luck-1788793295"></link>
            <id>https://manithan.com/article/jupiter-moon-make-gajkesari-rajyog-who-get-luck-1788793295</id>
            <summary type="text">ஜோதிடத்தில் மனம், தாய்மை மற்றும் உணர்ச்சிகளின் காரணியாக கருதப்படுபவர் சந்திரன். இவர் ஒரு ராசியில் சுமார் 2½ நாட்கள் மட்டுமே பயணிப்பதால், கிரகங்களிலேயே...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் மனம், தாய்மை மற்றும் உணர்ச்சிகளின் காரணியாக கருதப்படுபவர் சந்திரன். இவர் ஒரு ராசியில் சுமார் 2½ நாட்கள் மட்டுமே பயணிப்பதால், கிரகங்களிலேயே மிக வேகமாக ராசி மாறுபவர்.
</p><p>
செப்டம்பர் 07 அன்று சந்திரன் தனது சொந்த ராசியான கடகத்தில் நுழைகிறார். ஏற்கனவே அறிவு, அதிர்ஷ்டம், முன்னேற்றம் மற்றும் செழிப்பின் காரணியான குரு பகவான் கடகத்தில் பயணித்து வருவதால், சந்திரன்-குரு சேர்க்கையால் மங்களகரமான கஜகேசரி யோகம் உருவாகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3c0fc67-d652-4cbc-b5e8-541d426449ac/26-6a9ed6c776652.webp' /></p><p></p><p>
</p><p>
சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடகத்தில் இணையும் சந்திரன்-குருவின் இந்த கஜகேசரி ராஜயோகம் செப்டம்பர் 9 ஆம் தேதி வரை நீடிக்கும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், குறிப்பாக நான்கு ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர்.
</p><p>அப்படி 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடகத்தில் உருவாகும் இந்த கஜகேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் நான்கு ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32ccf4c7-835f-41d3-9a55-a0010a820678/26-6a9ed6c82b92d.webp' /></p><p></p><h2>
</h2><p>மேஷ ராசியின் 4-ஆவது வீட்டில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய வீடு, சொத்து, வாகனம் போன்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்புகளைப் பெறுவார்கள்.</p><p> குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து, குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பண வரவு அதிகரிப்பதன் மூலம், நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.</p><p>புதிய வருமானத்துக்கான வழிகள் தானாக உருவாகும். நீண்ட கால கடன் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கு அளவுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும்.</p><p>
</p><h2>
கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9127910-ccde-409a-b83c-34d2051ca190/26-6a9ed6c8d3b72.webp' /></p><h2>
</h2><p>கடக ராசியின் முதல் வீட்டில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை, மதிப்பு, மரியாதை, கௌரவம் போன்றவை வழக்கத்தைவிட அதிகரிக்கும்.</p><p> திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். திருமண வாழ்க்கை இனிமையாக இருப்பதுடன் மகிழ்ச்சியாக தருணங்களை அனுபவிப்பதற்கான வாய்ப்பு அமையும்.</p><p>பணியிடத்தில் செயல்திறன் பாராட்டப்படும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நிறைவேறும்.</p><h2>

விருச்சிகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05d067ef-f6e6-4934-aed0-bc077144fd70/26-6a9ed6c9891a3.webp' /></p><p>
விருச்சிக ராசியின் 9-ஆவது வீட்டில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இழுத்தடித்துக் கொண்டிருந்த வேலைகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவார்கள். </p><p>ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிப்பதோடு, ஆன்மீகப் பயணங்களையும் மேற்கொள்வீர்கள். மேலும், வேலை தொடர்பான பயணங்களையும் மேற்கொள்ள நேரிடும். </p><p>இந்தப் பயணங்களின் மூலம் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். புதிய வருமான வழிகள் உருவாகும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
</p><h2>
மீனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c3db0ae-86c2-4da9-b754-01fad36b6bf1/26-6a9ed6ca3da6a.webp' /></p><p>மீன ராசியின் 5-ஆவது வீட்டில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்திகளைப் பெறுவார்கள்.</p><p>எழுத்து மற்றும் ஆராய்ச்சித் துறையில் இருப்பவர்கள் நல்ல மதிப்பையும், மரியாதையையும் பெறுவதோடு, சிறப்பான வெற்றியையும் பெறுவார்கள். </p><p>பங்குச் சந்தை மற்றும் முதலீடுகள் மூலம் எதிர்பாராத அளவில் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T15:39:12+00:00</updated>
        </entry>
    </feed>
