<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-06T11:59:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் இரவில் வீதியில் சென்ற பெண்ணுக்கு மர்ம நபர் செய்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mysterious-man-targets-woman-on-road-at-night-1788695815"></link>
            <id>https://jvpnews.com/article/mysterious-man-targets-woman-on-road-at-night-1788695815</id>
            <summary type="text">மட்டக்களப்பு நகரில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபரொருவர் பறிக்க முற்பட்ட சம்பவம்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பு நகரில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபரொருவர் பறிக்க முற்பட்ட சம்பவம் நேற்று சனிக்கிழமை (05) இரவு இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; ">

மட்டக்களப்பு ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைந்துள்ள ஆலய வீதியில் இரு பெண்கள் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் அவர்களைப் பின் தொடர்ந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09f0844a-0054-40d9-b748-4790c1000eb4/26-6a9d55090d98c.webp' /></p><p style="text-align: justify; ">

இதன்போது, குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் இருந்தவாறே பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முற்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
எனினும், சங்கிலியை முழுமையாக பறிக்க முடியாத நிலையில், குறித்த நபர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார்.

</p><p style="text-align: justify; ">இந்தச் சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-06T11:57:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலச்சிக்கலுக்கு முடிவு கட்டணுமா? 5 எளிய இயற்கை வழிகள் இதோ!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/drink-these-6-natural-drinks-for-constipation-1788692388"></link>
            <id>https://manithan.com/article/drink-these-6-natural-drinks-for-constipation-1788692388</id>
            <summary type="text">தற்கால வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் காரணமாக, மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்கால வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் காரணமாக, மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. </p><p>குறிப்பாக, துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு, நீண்ட நேரம் அமர்ந்தபடியே வேலை செய்வது, முறையற்ற உணவுப் பழக்கங்கள், போதிய அளவு தண்ணீர் அருந்தாமை, உடற்பயிற்சியின்மை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்ற பல்வேறு காரணிகள் மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aba5317b-1786-4b83-a32b-705d5d405c8f/26-6a9d523f7672f.webp' /></p><p>

மலச்சிக்கல் என்பது அன்றாட வாழ்க்கையில் அசௌகரியத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்தக்கூடிய பொதுவான செரிமானப் பிரச்சனையாகும். மலம் கழிப்பதில் சிரமம், வழக்கத்தைவிட குறைவான குடல் இயக்கம், வயிறு உப்புசம் மற்றும் வயிற்றில் அசௌகரியம் போன்ற பிரச்சனைகளையும் இது ஏற்படும்.</p><p>இதனால் பலரும் விரக்தியடைந்தாலும், லேசான மற்றும் அவ்வப்போது ஏற்படும் மலச்சிக்கலை சமாளிக்க சில வாழ்க்கை முறை மாற்றங்களால் மலச்சிக்கலுக்கு முடிவுகட்ட முடியும்.</p><p>அந்தவகையில் மலச்சிக்களுக்கு இயற்கை முறையில், தீர்வு கொடுக்ககூடிய சில பானங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a7205b7-cf60-4651-b5a6-960a99757e94/26-6a9d52402a294.webp' /></p><p></p><p>1.வெல்லத் தண்ணீர்
</p><p>வெல்லம் இயற்கையான இனிப்பூட்டியாகும். இது மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. ஒரு குவளை வெந்நீரில் ஒரு தேக்கரண்டி வெல்லம் கலந்து, இரவில் உறங்கச் செல்லும் முன் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தும். நீரிழிவு நோயாளிகள் இதைத் தவிர்க்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f86f4a5f-e397-4f49-9fb5-6710f96aa4e5/26-6a9d5240d62d7.webp' /></p><p>
</p><p>2.எலுமிச்சை சாறு
</p><p>ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சம்பழச் சாறு கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தி, குடல் இயக்கத்தை எளிதாக்க உதவும். மேலும், கல்லீரலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும் உதவுவதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d82aea12-0822-4045-9c74-0a21e7b7007a/26-6a9d52418a603.webp' /></p><p>
</p><p>3.ஆப்பிள் சாறு
ஆப்பிள் </p><p>சாற்றில் உள்ள நார்ச்சத்து மற்றும் சார்பிட்டால் மலத்தை மென்மையாக்கி, எளிதாக வெளியேற உதவும். சர்க்கரை சேர்க்காத தூய ஆப்பிள் சாற்றை பகலில் குடிப்பது மலச்சிக்கலைப் போக்க உதவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4673ce58-5bcb-4f1d-aea1-3df6fb0cefbe/26-6a9d5242401ec.webp' /></p><p></p><p>4.விளக்கெண்ணெய்
</p><p>ஆமணக்கு எண்ணெய் சக்திவாய்ந்த இயற்கை மலமிளக்கியாகச் செயல்பட்டு, குடல் இயக்கத்தைத் தூண்டும். இரவில் இரண்டு தேக்கரண்டி எடுத்துக்கொள்ளலாம். சிறு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் இதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83082e25-bafd-4379-8418-34eda9c739ca/26-6a9d5242eb301.webp' /></p><p>
</p><p>5.திரிபலா பொடி </p><p>நீர்
ஆயுர்வேதத்தில் திரிபலா பொடிக்கு முக்கியத்துவம் உண்டு. இரண்டு தேக்கரண்டி திரிபலா பொடியை ஒரு குவளை வெந்நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது செரிமானப் பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிப்பதில் சிறப்பாக செய்ல்படும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T11:53:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருவால் உருவாகும் விபரீத ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு பணமும் பதவியும் தேடி வரும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/jupiter-in-cancer-forms-rajyog-who-get-luck-1788677075"></link>
            <id>https://manithan.com/article/jupiter-in-cancer-forms-rajyog-who-get-luck-1788677075</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான், செல்வம், அறிவு, மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம் ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான், செல்வம், அறிவு, மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம் ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறார். </p><p>நவகிரகங்களில் குரு பகவான் ஒரு ராசியில் சுமார் 1 ஆண்டு காலம் பயணிப்பதால், அவரது நிலை மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4842c1d-a936-4751-b34d-68da5bdebd05/26-6a9d0fdb6e4aa.webp' /></p><p></p><p>அந்தவகையில், குரு பகவான் ஜூன் 02 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைந்தார். குருவின் உச்ச ராசியான கடகத்தில் அக்டோபர் 31 ஆம் தேதி வரை அவர் பயணிக்கிறார். இதனால் 6, 8, 12 ஆம் வீடுகளில் விபரீத ராஜயோகம் உருவாகியுள்ளது.</p><p>

இந்த ராஜயோகம் குறுகிய காலத்தில் நல்ல வளர்ச்சியையும், நிதி நிலையில் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. </p><p>குரு பகவானால் உருவாகியுள்ள இந்த விபரீத ராஜயோகத்தால் நல்ல வளர்ச்சியைக் காணப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவி்ல் விரிவாக பார்க்கலாம்.</p><h2>சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcc91be5-812b-4c0f-9369-4db5fa14556c/26-6a9d0fdc22f56.webp' /></p><p>
சிம்ம ராசியின் 12-ஆம் வீட்டில் குரு பகவான் இருப்பதால் உருவாகும் விபரீத ராஜயோகம், வெளிநாடு தொடர்பான தொழில் அல்லது வேலை செய்பவர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். </p><p>வெளிநாடு செல்லும் கனவு இருந்தால் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். நீண்ட காலமாக இழுத்தடித்த அரசு வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.</p><p>தொழிலிலும் நல்ல வளர்ச்சி ஏற்படும்.

குரு 4-ஆம் வீட்டைப் பார்ப்பதால் வீட்டு பிரச்சனைகள் தீர்ந்து, குடும்பச் சூழல் மேம்படும். தாயாரின் ஆதரவு கிடைக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பும் அமையும்.</p><h2>
தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bda3d7f-c875-4d1e-b556-6a936ad9f61c/26-6a9d0fdccb4b6.webp' /></p><h2>
</h2><p>தனுசு ராசியின் 8-ஆம் வீட்டில் குரு பகவான் இருப்பதால் உருவாகும் விபரீத ராஜயோகம், நீண்ட கால பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.</p><p> திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கலாம். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.

ஏற்கனவே செய்த முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும்.</p><p> தொழிலதிபர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல பலன் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தேவையற்ற செலவுகள் குறையும். நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். புதிய சொத்துகளை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். குடும்பப் பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.
</p><h2>
கும்பம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/deed72f7-be94-4c87-bb9c-8a9cfceb77ee/26-6a9d0fdd7fd49.webp' /></p><p></p><h2>
</h2><p>கும்ப ராசியின் 6-ஆம் வீட்டில் குரு பகவான் இருப்பதால் உருவாகும் விபரீத ராஜயோகம், நிதி நிலையை வலுப்படுத்தி, கடன் தொல்லைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். </p><p>பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

வணிகர்களுக்கு தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் கிடைத்து, நல்ல லாபம் பெறலாம். </p><p>நீதிமன்ற வழக்குகள் இருந்தால், தீர்ப்பு சாதகமாக அமையும். இதுவரை இருந்த ஆரோக்கியப் பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து, உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T11:53:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒருவர் கூட விடுபடமாட்டார்! ஜனாதிபதி விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-government-2nd-year-anniversary-anura-speech-1788691268"></link>
            <id>https://tamilwin.com/article/npp-government-2nd-year-anniversary-anura-speech-1788691268</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;அரசாங்கத்தால் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்ட ஊழல்கள் மற்றும் தவறுகள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட்டால், அதற்குப் பொறு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>அரசாங்கத்தால் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்ட ஊழல்கள் மற்றும் தவறுகள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட்டால், அதற்குப் பொறுப்பானவர்களில் ஒருவர் கூட விடுபடமாட்டார் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.&nbsp;</p><p>
புளத்சிங்களவில் நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி, ஆட்சிக்கு வந்து அரசாங்கத்தின் உள்விவகாரங்களை ஆராய்ந்த பின்னரே, இடம்பெற்றுள்ள தவறுகளின் அளவை அரசாங்கம் கண்டறிந்ததாகக் கூறினார்.</p><p>"நாங்கள் வெளியே இருந்தபோது ஊழல்களைப் பற்றிப் பேசினோம். ஆனால் உள்ளே வந்து நமது நாட்டிற்கு என்ன செய்யப்பட்டுள்ளது என்று ஒவ்வொன்றாக ஆராயும்போது, நமது நாடு எவ்வளவு பெரிய தவறுகளை எதிர்கொண்டுள்ளது என்பதைப் பார்க்க முடிகிறது" என்று திசாநாயக்க தெரிவித்தார்.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவு பெற்றுள்ளன.</p><p>இந்நிலையில், "எங்கள் அரசாங்கம் - இரண்டு ஆண்டுகள், நாட்டிற்கு நன்மை” என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் ஆரம்ப நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் இன்று (06) புலத்சிங்களவில் ஆரம்பமாகியுள்ளது.
</p><p>
இந்நிகழ்வில் பெருமளவிலான அமைச்சர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளனர். </p><p>இதேபோல், எதிர்காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல நிகழ்ச்சிகளைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/A6qZIoUMNZw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T11:51:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெல்ஜியத்தில் புதிய வரலாறு படைத்த இலங்கை வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rumesh-tharanga-pathirage-new-record-in-belgium-1788695382"></link>
            <id>https://news.lankasri.com/article/rumesh-tharanga-pathirage-new-record-in-belgium-1788695382</id>
            <summary type="text">Rumesh tharanga pathirage create history in javelin 2026: டைமண்ட் லீக் இறுதிப் போட்டியில் இலங்கையின் ரூமேஷ் பத்திரகே தரங்க புதிய வரலாறு படைத்தார். 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>Rumesh tharanga pathirage create history in javelin 2026: டைமண்ட் லீக் இறுதிப் போட்டியில் இலங்கையின் ரூமேஷ் பத்திரகே தரங்க புதிய வரலாறு படைத்தார். </p><p>

பெல்ஜியத்தில் நடந்த மைமண்ட் லீக் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதலில் இலங்கை வீரர் ரூமேஷ் பத்திரகே தரங்க புதிய வரலாறு படைத்தார்.&nbsp;</p><h2>ஆடவர் ஈட்டி எறிதல்</h2><p>
பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் டயமண்ட் லீக் இறுதிப் போட்டி நடந்தது.&nbsp;ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில்&nbsp;இலங்கை வீரர் ரூமேஷ் தரங்க பத்திரகே&nbsp;பங்கேற்றார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f97a28d6-1b6f-431a-8066-a4b7338240cf/26-6a9d545888f6b.webp' />&nbsp;</p><p></p><p>இறுதிப்போட்டி வரை சென்ற அவர், தனது மூன்றாவது முயற்சியில் 89.04 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்த பட்டத்தை வென்றார்.</p><p> 

இதன்மூலம் டைமண்ட் லீக் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இலங்கை வீரர் என்ற பெருமையை ரூமேஷ் தரங்க பத்திரகே (Rumesh Tharanga Pathirage)பெற்றார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39ddb031-2495-40f6-90a9-79d861286b2a/26-6a9d5457a80c7.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T11:51:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பென்டகனில் இராணுவ அதிகாரிகளிடம் பொய் கண்டறியும் சோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/polygraph-tests-for-military-officers-at-pentagon-1788695117"></link>
            <id>https://canadamirror.com/article/polygraph-tests-for-military-officers-at-pentagon-1788695117</id>
            <summary type="text">அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு தொடர்பான தகவல்கள் கசிந்ததாகக் கூறப்படும் நிலையில், தகவல்களை வெளியிட்டவர்களைக் கண்டறியும் நோக்கில் பென்டகன் இராணுவ உயர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு தொடர்பான தகவல்கள் கசிந்ததாகக் கூறப்படும் நிலையில், தகவல்களை வெளியிட்டவர்களைக் கண்டறியும் நோக்கில் பென்டகன் இராணுவ உயர் அதிகாரிகளிடம் பொய் கண்டறியும் சோதனையை நடத்தியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>


கடந்த வெள்ளிக்கிழமை பென்டகனில் சுமார் 50 இராணுவ உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன், அதன் ஒரு பகுதியாக அவர்கள் பொய் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


ஈரானுடனான பல மாதகால போரினால் அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்களின் கையிருப்பு குறைந்துள்ளதாக கடந்த ஜூலை மாதம் செய்திகள் வெளியாகியிருந்தன. </p><p>எனினும், இந்தத் தகவலை அமெரிக்க இராணுவ அதிகாரிகள் மறுத்திருந்தனர்.
</p><p>


தேசிய பாதுகாப்பு தொடர்பான இரகசியத் தகவல்கள் கசிவதை அமெரிக்கா மிகவும் தீவிரமாகக் கருதுவதாகவும், இது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பென்டகன் தெரிவித்துள்ளது.
</p><p>


இரகசியத் தகவல்களைக் கையாளும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அனுமதி வழங்கும் அல்லது புதுப்பிக்கும் நடவடிக்கைகளில் பொய் கண்டறியும் சோதனை வழக்கமாக இடம்பெறும் நிலையில், தகவல் கசிவு தொடர்பான விசாரணையில் இதுபோன்ற சோதனை நடத்தப்படுவது முன்னெப்போதும் இல்லாத நடைமுறை என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T11:45:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சேலையில் க்யூட் லுக்கில் சுனிதா!! புகைப்படங்கள் இதோ..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/cwc-sunita-recent-saree-photoshoot-post-1788692071"></link>
            <id>https://viduppu.com/article/cwc-sunita-recent-saree-photoshoot-post-1788692071</id>
            <summary type="text">தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர்கள் கலைஞர்கள் பலர் உள்ளனர். அதில் ஒருவர் தான் சுனிதா. நடனம் என்பதை மட்டுமே அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டிற்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர்கள் கலைஞர்கள் பலர் உள்ளனர். அதில் ஒருவர் தான் சுனிதா. நடனம் என்பதை மட்டுமே அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டிற்கு வந்தவர் நிறைய ஷோக்களில் நடனம் ஆடி அப்படியே விஜய் டிவி பக்கம் வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e66b7e06-e0eb-4c9d-b2f8-ae80f51f7b5e/26-6a9d466f7d1b2.webp' /></p><p>
விஜய்யில் வந்த எல்லா நடன நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று கலக்கி வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்ற சுனிதா அடிக்கடி போட்டோ ஷுட் நடத்துவது வழக்கம்.
</p><p>
தற்போது, சேலையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-06T11:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீழ் மல்வத்து ஓயா பெயரில் செட்டிகுளத்தில் குடியேற்ற திட்டமா..! சத்தியலிங்கம் எம்.பி ஆவேசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sathyalingam-mp-statement-1788692861"></link>
            <id>https://tamilwin.com/article/sathyalingam-mp-statement-1788692861</id>
            <summary type="text">கீழ் மல்வத்து ஓயா பெயரில் செட்டிகுளத்தில் குடியேற்ற திட்டமா என நாடாளுமன்ற
உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கேள்வி எழுப்பிய நிலையில், பயிர்செய்கைக்காக
அநுர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கீழ் மல்வத்து ஓயா பெயரில் செட்டிகுளத்தில் குடியேற்ற திட்டமா என நாடாளுமன்ற
உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கேள்வி எழுப்பிய நிலையில், பயிர்செய்கைக்காக
அநுராதபுர மாவட்ட மக்களுக்கு காணிகள் வழங்கப்படும் என திட்ட அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
</p><p>
வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு
தலைவரும், பிரதியமைச்சருமாகிய உபாலி தலைமையில் வவுனியா
மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்திருந்தனர்.
</p><p>
இதன்போது செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கப்பாச்சி கிராமத்தை
அண்மித்த பகுதியில் வனவள திணைக்களத்தால் சுமார் 1650 ஏக்கர் காணிகள்
விடுவிக்கப்பட்டுள்ளதாக தாம் அறிந்துள்ளதாகவும் அதன் உண்மைத்தன்மை தொடர்பாக
சபைக்கு அறிவிக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் சபையில்
தெரிவித்திருந்தார்.
</p><p>
“கீழ் அருவியாறு (கீழ் மல்வத்து ஓயா) நீர்பாசன திட்டம்”எனும் பெயரில் 2019ம்
ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட நீர்பாசன திட்டமானது மீண்டும் தற்போது
நடைமுறைப்படுத்தப்படுகிறது.
</p><p>
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதனூடாக கட்டப்படும் நீர்த்தேக்கத்திலிருந்து
மன்னார் மாவட்டத்தின் கட்டுக்கரைக்குளம் மற்றும் அகத்திமுறிப்பு குளங்களுக்கு
நீர்வினியோகத்தை பரிபாலனம் செய்வது, நீர்மின்சாரத்தை பெறுவது,
மதவாச்சி, செட்டிகுளம் பிரதேசங்களுக்கான குடிநீர் வழங்கல், மேட்டு நீர்பாசன
வசதியை ஏற்படுத்தல் என்பன திட்ட நோக்கமாக சொல்லப்படுகிறது.</p><h2>திட்டங்களுக்காக விடுவிக்கப்படும் காணி</h2><p>
</p><p>
இந்த திட்டத்தினூடாக கட்டப்படும் அணையின் கீழ் வவுனியா மற்றும் அநுராதபுர
மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசம் நீரேந்து பகுதிக்குள் உள்வாங்கப்படுகிறது.
குறிப்பாக வவுனியா வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் 450
ஏக்கர் வயல் மற்றும் மேட்டுக்காணிகள் நீரேந்து பிரதேசத்திற்குள் செல்கின்றது.
</p><p>
இவ்வாறான சூழலில் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கப்பாச்சி
கிராமத்தை அண்மித்த பிரதேசத்தில் சுமார் 1650 ஏக்கர் வனப்பகுதியை மேற்படி
திட்ட தேவைகளுக்காக விடுவிப்பதாக அறியக்கூடியதாக உள்ளது.

எனவே நீரேந்து பிரதேசத்திற்குள் செல்கின்ற சுமார் 450 ஏக்கர் காணிகளுக்குப்
பதிலாக சுமார் 1650 ஏக்கர் காணியை வனவள திணைக்களத்தினைக்களம் விடுவிப்பது
தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் குறித்த கூட்டத்தில்
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பினார்.
</p><p>
உரிய பதில் கிடைக்காததால், அநுராதபுரம் மாவட்டத்தில் மேற்படி திட்டத்தினால்
காணிகளை இழக்கும் மக்களை செட்டிகுளத்தில் குடியேற்றம் செய்யவா இந்த மேலதிகமான
காணிகள் விடுவிக்கப்பட்டன என நேரடியாக கேள்வியெழுப்பினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddbc7998-584d-4484-b675-6441dac1273d/26-6a9d505b0f29b.webp' /></p><p>
</p><p>
இதற்குப் பதிலளித்த மல்வத்து ஓயா திட்டத்துக்குப் பொறுப்பான அதிகாரி,

செட்டிகுளத்தில் தாம் குடியேற்றம் எதனையும் செய்யவில்லை எனவும், அனுராதபுரம்
மாவட்டத்தில் இந்த திட்டத்தின் மூலம் வயல் காணிகளை இழக்கும் மக்களுக்கு
செட்டிகுளத்தில் வயல் காணிகளை வழங்கவே திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காகவே இந்த
காணிகள் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
</p><p>
இதனால் ஆவேசமடைந்த சத்தியலிங்கம் எம்பி,

இன்னொரு மாவட்டத்தில் உள்ள ஒருவருக்கு, இந்த மாவட்டத்துடன் சம்மந்தப்படாத
ஒருவருக்கு எதற்காக இந்த மாவட்டத்தில் காணிகளை வழங்குகின்றீர்கள். நீங்கள்
மீண்டும் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்காதீர்கள் என கடிந்தார்.

இதன்போது குறுக்கிட்ட பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க,

இலங்கை என்பது ஒரு நாடு, இங்கு யாருக்கும் எங்கும் காணி வழங்கலாம், அதற்குரிய
அதிகாரம் அரசாங்கத்திற்கு உள்ளது என தெரிவித்தார்.
</p><p>
இதனால் மீண்டும் விசனம் தெரிவித்த சத்தியலிங்கம் எம்.பி,

இந்த மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்றும் வயற்காணிகள்
இல்லாது உள்ளனர். அவர்களுக்கு குறைந்தது ஒரு ஏக்கர் வயற்காணியாவது வழங்க
வேண்டும் என கடந்த பல வருடங்களாக கோரி வருகின்றோம். நான் மாகாணசபையில்
இருக்கும் போது 5 வருடங்களாக இதைக்கோரி வந்தேன்.</p><h2>கோரிக்கை முன்வைப்பு</h2><p> </p><p>தற்போது மீண்டும் கடந்த
இரண்டு வருடங்களாக நான் இந்த கோரிக்கையினை முன்வைத்து வருகின்றேன். நாடாளுமன்றத்திலும் இவ்விடயத்தை முன்வைத்தேன், சம்மந்தப்பட்ட அமைச்சின்
ஆலோசனைக்கூட்டத்தில் இக்கோரிக்கையை முன்வைத்தேன், அமைச்சரிடமும்
பேசியிருக்கின்றேன். ஆனால் இதுவரை ஒரு ஏக்கர் காணி கூட எமது மாவட்ட மக்களுக்கு
வழங்கப்படவில்லை.
</p><p>அதுமட்டுமல்ல யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீளக்குடியேறும் மக்களின்
வயல்காணிகளை வனவளத்திணைக்களமும் ஏனைய திணைக்க்களங்களும் கையகப்படுத்தி
வைத்துள்ளீர்கள், அக்காணிகளை விடுவிக்குமாறு பல தடவைகள் கோரியிருக்கிறோம்,
ஆனால் நீங்கள் அவற்றை விடுவிக்காமல் மேலும் மேலும் எமது மக்களின் விளைநிலங்களை
கையகப்படுத்துகிறீர்கள்.
</p><p>இவ்வாறு மிகமோசமாக நடந்துகொள்ளும் நீங்கள் எவ்வாறு வெளிமாவட்ட மக்களுக்கு
வவுனியா மாவட்டத்தில் காணிகளை வழங்குவீர்கள்?
நான் இனவாதம் பேசவில்லை. எனது மாவட்ட மக்களுக்காக அவர்களின் பிரதிநிதி எனும்
வகையில் இதனை கேட்கும் பொறுப்பும் உரிமையும் எனக்குள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86c9edc1-a5db-472a-9ad8-70c501bdfaaf/26-6a9d505be1fa2.webp' /></p><p>
</p><p>
இந்த திட்டத்தின் மூலம் செட்டிகுளத்தில் சின்னசிப்பிக்குளம், ஆனைவிழுந்தான்
உள்ளிட்ட 5 குளங்கள் நீரேந்து பகுதிகளுக்குள் செல்லும் எனக்காரணம் காட்டி
கடந்த 7 வருடங்களாக விவசாயிகள் பயிரிடுவதை தடுத்து வருகிறீர்கள். அந்த
விவசாயிகள் தமது வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது?
</p><p>குறித்த விவசாயிகளுக்கு பயிர்செய்கை தடுக்கப்பட்டுள்ளதால் ஏற்படும் பொருளாதார
சரிவை ஈடுசெய்ய ஒவ்வொரு போகத்திற்கும் நட்டஈடாக ஏக்கருக்கு ரூபா 35,000/-
வழங்கப்படுமென அறிவிக்கப்பட்ட போதும் இதுவரை ஒரு சதமேனும் வழங்கப்படவில்லை.
அதேநேரம் வயல்செய்கை மேற்கொள்ளவும் அனுமதிக்கப்படவில்லை.</p><p>

அதுமட்டுமல்ல இந்த திட்டம் சம்மந்தமாக இதுவரையில் வெளிப்படையாக எந்த
கூட்டங்களிலும் பேசப்படவில்லை. மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களிலும்
தெளிவுபடுத்தப்படவோ, அனுமதி பெறப்படவோ இல்லை. ஏன் இவ்வாறு இரகசியாக இந்த
வேலைகளை செய்கின்றீகள்? </p><p>அநுராதபுர மாவட்ட மக்களை குடியேற்றும் நோக்கமே இந்த
திட்டம் என்பது இதன்மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது என தெரிவித்தார்.
</p><p>
இதனையடுத்து நீண்ட வாதபிரதிவாதங்களின் பின்னர் அடுத்த மாவட்ட அபிவிருத்திக்
குழு கூட்டத்தில் இந்த விடயம் முன்வைக்கப்பட்டு தெளிவுபடுத்தப்படுமென திட்ட
அதிகாரியினால் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T11:37:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெல்லியில் இடிந்து விழுந்த 6 மாடி மாணவர் விடுதி.. 50இற்கும் மேற்பட்டோர் இடிபாடுக்குள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/several-trapped-6-storey-building-collapses-delhi-1788693737"></link>
            <id>https://tamilwin.com/article/several-trapped-6-storey-building-collapses-delhi-1788693737</id>
            <summary type="text">தென்மேற்கு டெல்லியில் 75 படுக்கைகள் கொண்ட 6 மாடி மாணவர் விடுதி கட்டிடம் ஒன்று இன்று பிற்பகல் 1:30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்மேற்கு டெல்லியில் 75 படுக்கைகள் கொண்ட 6 மாடி மாணவர் விடுதி கட்டிடம் ஒன்று இன்று பிற்பகல் 1:30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p>டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள இப்பகுதியில் பெரும்பாலான மாணவர்கள் தங்கியிருந்த நிலையில், இடிபாடுகளுக்குள் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.</p><h3>பலர் ஆபத்தில்..&nbsp;</h3><p>

தகவலறிந்த தீயணைப்புப் படையினர், பொலிஸார், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் அவசரக்கால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/BREAKING?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BREAKING</a>: 🇮🇳 PG hostel caves in at Satya Niketan, Delhi, India <br><br>Officials say none confirmed dead yet but unconfirmed reports claim three dead, two girls and one boy, with several rescued and three critically hurt at AIIMS<a href="https://x.com/hashtag/Delhi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Delhi</a> <a href="https://x.com/hashtag/SatyaNiketan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SatyaNiketan</a> <a href="https://x.com/hashtag/BuildingCollapse?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BuildingCollapse</a> <a href="https://t.co/AZkxrt0YCp">pic.twitter.com/AZkxrt0YCp</a></p>&mdash; Twilight (@TwilightDewy) <a href="https://x.com/TwilightDewy/status/2096543490218008627?ref_src=twsrc%5Etfw">September 6, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> </p><p>இதுவரை சிலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. </p><p>முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள கட்டிடங்களும் காலியாக்கப்பட்டு, நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு முதன்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db1d1e23-4fb8-47bd-8299-a8281c683bb5/26-6a9d4e6d76653.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T11:29:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இது வெறும் ஆரம்பம் மட்டுமே... டோவரில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான குழு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dover-anti-migrant-blockade-1788694099"></link>
            <id>https://news.lankasri.com/article/dover-anti-migrant-blockade-1788694099</id>
            <summary type="text">Dover anti-migrant mob warn it&#039;s only the beginning: டோவரில் புலம்பெயர் மக்களுக்கு எதிரான குழு ஒன்று, இது வெறும் ஆரம்பம் மட்டுமே என்று எச்சரித்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>Dover anti-migrant mob warn it's only the beginning: டோவரில் புலம்பெயர் மக்களுக்கு எதிரான குழு ஒன்று, இது வெறும் ஆரம்பம் மட்டுமே என்று எச்சரித்துள்ளது.
</p><p>நேற்று டோவர் துறைமுகத்திற்குள் அத்துமீறி நுழைந்த, முகமூடி அணிந்த குழுவை அரசியல்வாதிகள் கண்டித்துள்ள நிலையில், இது வெறும் ஆரம்பம் தான் என்று போராட்டக்காரர்கள் எச்சரிக்கும் தொனியில் கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c442894-9ef7-4577-bffd-3d1109579c37/26-6a9d4e56f0f1c.webp' /></p><p>
</p><p>கருப்பு உடை அணிந்த நூற்றுக்கணக்கானவர்கள் பிரித்தானியாவின் மிகவும் பரபரப்பான படகு முனையத்தை மறித்ததால், அதைச் சுற்றியுள்ள சாலைகளில் பல மணிநேரப் போக்குவரத்து முடக்கமும் மைல்கணக்கிலான வாகன வரிசைகளும் ஏற்பட்டன. </p><p>இணையத்தில் வெளியான காணொளிகள், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு வேனின் பின்பகுதியிலிருந்து வெளியேறி, பின்னர் நகருக்குள் அணிவகுத்துச் சென்றதைக் காட்டின.</p><p></p><p> </p><p>மட்டுமின்றி, அவர்கள் படகுப் போக்குவரத்தை நிறுத்துங்கள் போன்ற முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர். இந்த நிலையில், அந்தப் குழுவைக் கண்டித்த அரசியல்வாதிகளில் Reform UK கட்சியைச் சேர்ந்த ராபர்ட் ஜென்ரிக் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ஜொனாதன் ரெனால்ட்ஸ் ஆகியோரும் அடங்குவர்.</p><p> ஆனால், அந்தக் குழுவின் மீது காவல்துறை மெதுவாக நடவடிக்கை எடுத்ததை டோவர் மாவட்ட மன்றத் தலைவர் கெவின் மில்ஸ் விமர்சித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c10a0b4-91d9-4744-ab02-c6c4e705d769/26-6a9d4e5646ffd.webp' /></p><p> புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் செல்லும் சிறிய படகுகள் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதால் ஏற்படும் அதிருப்தியைப் புரிந்துகொள்வதாக ஜென்ரிக் கூறினார், ஆனால் முகமூடி அணிந்து மக்கள் போராட்டத்தில் குதிப்பதை தாம் விரும்பவில்லை என்றார். </p><p>இந்த நிலையில், இந்த முகமூடி அணிந்த குழுவைக் களமிறக்கியது Patriot Platform என்ற அமைப்பு என்றே தெரிய வருகிறது. இந்த அமைப்பானது ஆண்டின் தொடக்கத்தில், தீவிர வலதுசாரிச் சிந்தனை கொண்ட சமூக ஊடகப் பிரபலமும் டேனியல் தாமஸ் என்ற இயற்பெயரைக் கொண்டவருமான டேனி டோமோவால் நிறுவப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf23201c-cd8f-4d37-ae02-9691d6e0785f/26-6a9d4e57a67b6.webp' /></p><p> </p><p>இவ்வமைப்பின் நோக்கம் இந்நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதே என்று அவர் முன்னரே அறிவித்துள்ளார். ஏப்ரல் மாதத்தில், தீவிரமான அத்துமீறல் குற்றத்திற்காக தாமஸ் கைது செய்யப்பட்டதோடு, டோவர், ராம்ஸ்கேட் மற்றும் ஃபோல்க்ஸ்டோன் ஆகிய இடங்களுக்குச் செல்ல அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. </p><p>மேலும் கடந்த மாதம், சட்டப்பூர்வ அனுமதியின்றி டோவர் துறைமுகத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைந்ததை அவர் ஒப்புக்கொண்டார்.</p><p> நேற்றைய போராட்டத்தில் காவல்துறையினர் யாரையும் கைது செய்யவில்லை; மதிய வேளையில் போராட்டக்காரர்களை டோவர் பிரையரி ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். குறைந்தது 100 போராட்டக்காரர்கள் ராம்ஸ்கேட் செல்லும் ரயிலில் ஏறுவதும் தெரிய வந்தது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T11:25:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிற்கு வலிமிகுந்த பதிலடி கொடுக்கப்படும்: ஈரான் கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-warns-of-painful-response-to-us-attacks-1788689363"></link>
            <id>https://ibctamil.com/article/iran-warns-of-painful-response-to-us-attacks-1788689363</id>
            <summary type="text">ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு விரைவான கடுமையான மற்றும் மிகவும் வலிமிகுந்த பதிலடி&amp;nbsp; கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.ஈரானின் நாடா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு விரைவான கடுமையான மற்றும் மிகவும் வலிமிகுந்த பதிலடி&nbsp; கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.</p><p>ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் கலீபாஃப் (Ghalibaf) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.</p><p>தாக்குதல்களுக்கு ஈரானின் பதிலடி இனி விகிதாசாரமாக (Proportionate) இருக்காது என்பதை அவர் வலியுருத்தியுள்ளார்.</p><p></p><h2>சமமான பதிலடி</h2><p>அத்தோடு சமமான பதிலடிகளைக் கொடுக்கும் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை அமெரிக்கர்கள் நிச்சயமாகப் புரிந்துகொண்டிருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
</p><p>மேலும் தெரிவித்த அவர், “ஆக்கிரமிப்பாளர்களின் தளங்களுக்கு எதிராக நாங்கள் சமீபத்தில் நடத்திய நடவடிக்கைகள் ஒரு தொடக்கமே.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbee5041-8b25-4e96-a027-d60974518f2a/26-6a9d4ce742ca7.webp' /></p><p>அவர்கள் இன்னும் அதைப் புரிந்துகொள்ளவில்லை என்றால் ஆட்டத்தின் விதிகள் மாறிவிட்டன என்பதை காலம் கடப்பதற்குள் புரிந்துகொள்ள வேண்டும்.</p><p>இராணுவ ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் அமெரிக்காவை ஈரான் எதிர்கொண்டது போல அமெரிக்காவின் பொருளாதாரப் பிரச்சாரத்தையும் ஈரான் முறியடித்து வெற்றிபெறும்” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-06T11:22:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை ஆரம்பமாகும் பாடசாலைகள் : கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/third-term-of-school-begins-tomorrow-education-min-1788690004"></link>
            <id>https://ibctamil.com/article/third-term-of-school-begins-tomorrow-education-min-1788690004</id>
            <summary type="text">நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை (07) ஆரம்பமாகவுள்ளது.இந்தநிலையில் அனைத்துப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை (07) ஆரம்பமாகவுள்ளது.</p><p>இந்தநிலையில் அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் (06) நாளையும் (07) டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.</p><p>

நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கண்காணிக்கும் சோதனைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உப தலைவர் பிரதீப் பொரலெஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மேலதிக பேருந்து சேவை&nbsp;</h2><p>அத்துடன், மாணவர்களின் நலன் கருதி தேவைக்கேற்ப 'சிசு செரிய' உட்பட மேலதிக பேருந்துகள் நாளை (07) முதல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0153bee-7af6-4ca2-85a1-21299fe3f941/26-6a9d46bd9b76e.webp' /></p><p>இதேவேளை&nbsp;அரச மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் ஓகஸ்ட் மாதம் 7ஆம் திகதி நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகி&nbsp;டிசம்பர் மாதம் 4 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T11:16:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயணத் தடைக்கு முன்னரே நாட்டை விட்டு வெளியேறிய பிரேமலால் ஜயசேகர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/premalal-left-the-country-before-travel-ban-1788693362"></link>
            <id>https://jvpnews.com/article/premalal-left-the-country-before-travel-ban-1788693362</id>
            <summary type="text">உயர் நீதிமன்றத்தால் வெளிநாட்டுப் பயணத் தடை விதிப்பதற்கு முன்னரே முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர நாட்டிலிருந்து வெளியேறியுள்ளமை தெரியவந்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உயர் நீதிமன்றத்தால் வெளிநாட்டுப் பயணத் தடை விதிப்பதற்கு முன்னரே முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர நாட்டிலிருந்து வெளியேறியுள்ளமை தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மேற்கொண்ட விசாரணையின் போதே இத்தகவல் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/267f301e-79ee-49a5-b86a-4474774013ed/26-6a9d4b73636e3.webp' /></p><h2 style="text-align: justify; ">பயணத் தடை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

கொலைக் குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு வெளிநாடு செல்வதைத் தடை விதித்து கடந்த வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.</p><p style="text-align: justify; "> 

இந்த வெளிநாட்டுப் பயணத் தடையைக் குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறு பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டிருந்தது. </p><p style="text-align: justify; ">

இதற்கு மேலதிகமாக, பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளையும் வரும் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து அழைப்பாணை பிறப்பிக்குமாறும் நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அந்த உத்தரவுகளுக்கு அமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கச் சென்றபோதே, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர கடந்த ஓகஸ்ட் மாதமே வெளிநாடு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

இருப்பினும், பிரேமலால் ஜயசேகர மீண்டும் நாட்டுக்குத் திரும்புவதற்கான விமான பயணச்சீட்டை முன்பதிவு செய்த பின்னரே இந்த வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அரசியல் கூட்டமொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு நபரொருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பிரேமலால் ஜயசேகரவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அந்தத் தண்டனைக்கு எதிராகப் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவர்களைக் குற்றமற்றவர்கள் என விடுவித்து உத்தரவிட்டது. </p><p style="text-align: justify; ">

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அந்தத் தீர்மானம் சட்டத்திற்குப் புறம்பானது என்றும், எனவே அதனை இரத்து செய்து தண்டனை வழங்குமாறும் கோரி இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர். </p><p style="text-align: justify; ">

அந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, பிரதம நீதியரசர் தலைமையிலான மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளும் வெளிநாடு செல்வதைத் தடுத்து இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-06T11:16:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அநுர பங்கேற்கும் மக்கள் பேரணி ஆரம்பம் - நேரலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/npp-to-hold-series-of-public-rallies-from-today-1788669791"></link>
            <id>https://ibctamil.com/article/npp-to-hold-series-of-public-rallies-from-today-1788669791</id>
            <summary type="text">புதிய இணைப்பு“எமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் - நாட்டிற்குச் சுபிட்சம்“ எனும் கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெறும...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>“எமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் - நாட்டிற்குச் சுபிட்சம்“ எனும் கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெறும் மக்கள் பேரணி ஆரம்பமாகியுள்ளது.</p><p>இதற்கமைய, முதலாவது மக்கள் பேரணிகள் இன்று பிற்பகல் 02.00 மணிக்கு புளத்சிங்கள பகுதியில் நடைபெற்ற நிலையில் இரண்டாவது பேரணி பிற்பகல் 03.30 மணிக்கு பேருவளையிலலும் நடைபெறுகின்றன.</p><p>இந்த மக்கள் பேரணியில் மதத் தலைவர்கள், அரசியல் வாதிகள் எனப் பலர் கலந்துகொண்டுள்ள நிலையில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/A6qZIoUMNZw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><h4>அநுர தலைமையிலான மக்கள் பேரணித் தொடர் இன்று ஆரம்பம்!</h4><p>தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பங்கேற்கும் மக்கள் பேரணித் தொடர் இன்றைய தினம் (06.09.2026) ஆரம்பமாகவுள்ளது.</p><p>

"எமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் - நாட்டிற்குச் சுபிட்சம்" எனும் கருப்பொருளின் கீழ் இந்தப் பேரணிகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த மக்கள் பேரணித் தொடரின் முதற்கட்டம் களுத்துறை மாவட்டத்தை மையமாகக் கொண்டு இன்று பிற்பகல் ஆரம்பமாகவுள்ளது.</p><p></p><h2>&nbsp;நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு&nbsp;&nbsp;</h2><p> </p><p>

பேருவளை மற்றும் புளத்சிங்கல ஆகிய நகரங்களில் இந்தப் பேரணிகள் நடைபெறவுள்ள நிலையில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு முதலாவது பேரணி புளத்சிங்கலயிலும், பிற்பகல் 3.30 மணிக்கு பேருவளையிலும் ஆரம்பமாகவுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2adf0262-2356-4878-80e4-d393393b5089/26-6a9cf40267893.webp' /></p><p>மேலும், பொலன்னறுவை, அனுராதபுரம், மாத்தறை மற்றும் கம்பஹா மாவட்டங்களை மையமாகக் கொண்டு தேசிய மக்கள் சக்தி எதிர்கால பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது.</p><p>இதேவேளை&nbsp;அரசாங்கத்தின் எதிர்கால அரசியல் செயற்பாடுகளையும் அமைப்புக் கட்டமைப்பையும் பலப்படுத்தும் நோக்கிலேயே நாடு முழுவதும் இந்த அரசியல் நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் தெரிவித்திருந்தார்.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7rnlu1KswuU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T11:09:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணத்தை மீறிய உறவு; காதலன், 13 வயது மகன் உதவியுடன் கணவனுக்கு செய்த பகீர் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shocking-incident-involving-husband-with-lover-1788692910"></link>
            <id>https://jvpnews.com/article/shocking-incident-involving-husband-with-lover-1788692910</id>
            <summary type="text">சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலகவுண்டன்புதூர் எஸ்.கே. நகரைச் சேர்ந்தவர் 45 வயதான வியாபாரி&amp;nbsp; 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலகவுண்டன்புதூர் எஸ்.கே. நகரைச் சேர்ந்தவர் 45 வயதான வியாபாரி&nbsp; 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். </p><p>இந்நிலையில் ஒரு நாள் காருக்குள் பூபதி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0f82c44-fc89-44e2-acf4-72409f8437d1/26-6a9d49b5e43a8.webp' /></p><h2>வாக்குவாதம்</h2><p> தலை, முகம், முதுகு உள்ளிட்ட பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்ததை பார்த்த பொதுமக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p>இதற்கிடையே, கணவரை மர்ம கும்பல் வெட்டிக் கொன்று நகைகளை பறித்துச் சென்றதாக மனைவி பொலிசாரிடம் கூறியுள்ளார். </p><p>கணவர் தன்னை காரில் அழைத்துச் சென்றபோது, வழியில் சிறுநீர் கழிப்பதற்காக காரை நிறுத்தியதாகவும், அப்போது 3 பேர் கொண்ட கும்பல் பூபதியை வெட்டிக் கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>&nbsp;ஆனால் மனைவியின் வாக்குமூலம் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரிலும், கொலை நடந்ததாக கூறப்பட்ட இடத்திலும் ரத்தக்கறைகள் இல்லாத நிலையில், வீட்டில் மட்டும் ரத்தக்கறைகள் சரியாக சுத்தம் செய்யப்படாமல் இருந்தது பொலிசாரின் சந்தேகத்தை அதிகரித்துள்ளது. </p><p>இதையடுத்து சுஜிதாஸ்ரீயிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 34 வயதான தொழிலதிபரடன் குறித்த பெண்ணுக்கு நெருக்கமான பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது.</p><p> இதனை அறிந்த பூபதி, மனைவியை கண்டித்ததால் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. </p><p> இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரும் சேர்ந்து பூபதியை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பின்னர் பூபதியின் உடலை காரில் எடுத்துச் சென்று ஆட்டுக்காரனூர் பகுதியில் நிறுத்தி, நகைக்காக மர்ம கும்பல் கொலை செய்தது போல் நாடகம் ஆடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>மேலும் விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பூபதியை கொலை செய்யும்போது அவர் திமிறிய நிலையில், தனது 13 வயது மகனிடம் தந்தையின் காலை பிடித்து இழுத்துக்கொள்ளுமாறு சுஜிதாஸ்ரீ கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். </p><p>&nbsp;இதையடுத்து 13 வயது சிறுவனையும் போலீசார் கைது செய்து சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். </p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T11:08:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏஜிஎஸ் 29: பிரபல நடிகருடன் கைகோர்த்த நடிகை பிரியங்கா மோகன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/priyanka-mohan-ags-29th-movie-announcement-1788692215"></link>
            <id>https://cineulagam.com/article/priyanka-mohan-ags-29th-movie-announcement-1788692215</id>
            <summary type="text">ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகும் 29-வது திரைப்படத்தில் பிரியங்கா மோகன் நடிக்கிறார். அதற்கான அறிவிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

ஏஜிஎஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகும் 29-வது திரைப்படத்தில் பிரியங்கா மோகன் நடிக்கிறார். அதற்கான அறிவிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.</p><p></p><h2>

ஏஜிஎஸ்</h2><p>

தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களை தந்த பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏஜிஎஸ். மதராசபட்டினம், தனி ஒருவன், பிகில், லவ் டுடே, டிராகன், கோட், என தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை தயாரித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d4e06b5-0eb0-4a38-80b6-aec41f8d09b1/26-6a9d46fa2227a.webp' /></p><p>இவர்கள் தயாரிப்பில் கடைசியாக வெளியான பிளாஸ்ட் திரைப்படம் மாபெரும் வசூல் செய்து வெற்றிபெற்றது. இந்த நிலையில், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் 29-வது திரைப்படத்திற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
</p><h2>
பிரியங்கா மோகன்
</h2><p>
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்து வரும் <a href="https://www.youtube.com/watch?v=0xWw4Ed27wc" target="_blank">பிரியங்கா மோகன்</a> நடிப்பில் ஏஜிஎஸ் 29-வது திரைப்படம் உருவாகிறது. இப்படத்தில் பிரபல நடிகர் ஜெய்யுடன் இணைந்து பிரியங்கா நடிக்கிறார். மேலும் யோகி பாபு இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சக்ரா திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்தன் எம்.எஸ் இப்படத்தை இயக்குகிறார். மேலும் கே.ஜி.எஃப் திரைப்படத்திற்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb7e2d94-556c-4228-863b-9055c78f3353/26-6a9d46fad1b18.webp' /></p><p>

இன்று இப்படத்தின் பூஜா நடைபெற்ற நிலையில், அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">An auspicious beginning to an exciting new journey ❤️<a href="https://x.com/hashtag/AGS29Poojai?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AGS29Poojai</a> <br><br>Written &amp; Directed by <a href="https://x.com/anandanmsoffcl?ref_src=twsrc%5Etfw">@anandanmsoffcl</a> <br>Starring <a href="https://x.com/Actor_Jai?ref_src=twsrc%5Etfw">@Actor_Jai</a> <a href="https://x.com/priyankaamohan?ref_src=twsrc%5Etfw">@priyankaamohan</a> <a href="https://x.com/iYogiBabu?ref_src=twsrc%5Etfw">@iYogiBabu</a><br>A <a href="https://x.com/RaviBasrur?ref_src=twsrc%5Etfw">@RaviBasrur</a> Musical<a href="https://x.com/hashtag/KalpathiSAghoram?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#KalpathiSAghoram</a> <a href="https://x.com/hashtag/KalpathiSGanesh?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#KalpathiSGanesh</a> <a href="https://x.com/hashtag/KalpathiSSuresh?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#KalpathiSSuresh</a> <a href="https://x.com/archanakalpathi?ref_src=twsrc%5Etfw">@archanakalpathi</a> <a href="https://x.com/aishkalpathi?ref_src=twsrc%5Etfw">@aishkalpathi</a> <a href="https://x.com/venkat_manickam?ref_src=twsrc%5Etfw">@venkat_manickam</a>… <a href="https://t.co/FWVzSCv7sh">pic.twitter.com/FWVzSCv7sh</a></p>&mdash; AGS Entertainment (@Ags_production) <a href="https://x.com/Ags_production/status/2096531736314433731?ref_src=twsrc%5Etfw">September 6, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-09-06T11:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த பெயரை கூறுமாறு கபில சந்திரசேனவிற்கு அழுத்தம்! மரணத்திற்கு முன் பிரமாணப் பத்திரத்தில் அம்பலம் - சாகரவின் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sagara-kariyawasam-statement-about-namal-1788689626"></link>
            <id>https://tamilwin.com/article/sagara-kariyawasam-statement-about-namal-1788689626</id>
            <summary type="text">இலங்கையை விட்டுத் தப்பி சென்று 13 ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் தொழிலதிபர் நிமல் பெரேரா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே, நாமல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையை விட்டுத் தப்பி சென்று 13 ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் தொழிலதிபர் நிமல் பெரேரா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே, நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரும், சட்டத்தரணியுமான சாகர கரியவசம் தெரிவித்துள்ளார். </p><p>

2013ஆம் ஆண்டில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>உடன்படிக்கை இரத்தானதால் இழப்பு</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், 2013ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக 08 ஏர்பஸ் விமானங்களை வாங்குவதற்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டதாகவும், 2015ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் அந்த உடன்படிக்கையை இரத்து செய்தபோது, ​​அரசாங்கத்திற்கு 116 மில்லியன் டொலர்கள் (37 பில்லியன் ரூபாய்க்கும் மேல்) இழப்பு ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
இந்தப் பரிவர்த்தனையில் குற்றம் சாட்டப்பட்ட நிமல் பெரேரா, சம்பந்தப்பட்ட கணக்குகளுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என முன்னர் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce8acfe1-745e-4e53-bf62-e3aab9eb6502/26-6a9d43bfb33e6.webp' /></p><p> </p><p>இருப்பினும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, 13 ஆண்டுகள் கழித்து அவுஸ்திரேலியாவிலிருந்து நிமல் பெரேரா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டது ஒரு கடுமையான பிரச்சினை என்று செயலாளர் குறிப்பிட்டார்.</p><h2>மகிந்தவின் பெயரை கூறுமாறு அழுத்தம்</h2><p> </p><p>

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக முன்னர் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான கபில சந்திரசேன, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாகவும், மகிந்த ராஜபக்சவின் பெயரை கூறுமாறு அழுத்தம் கொடுத்ததாகவும், தனது மரணத்திற்கு முன்பு ஒரு பிரமாணப் பத்திரம் மூலம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார் என சாகர கரியவசம் வெளிப்படுத்தினார்.</p><p> 

எந்தவொரு அறிவியல் சான்றுகளோ அல்லது வங்கிப் பதிவுகளோ இன்றி, தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் மட்டுமே இந்தச் செயல்முறையை நடத்துகிறது என்றும், இது ஜனநாயகத்திற்கு ஒரு மரண அடி என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T10:55:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவுக்கு ஐ.நா எச்சரிக்கை! ஜெனீவாவில் வெடிக்கும் இலங்கை விவகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/un-warns-anura-sri-lanka-issue-erupts-in-geneva-1788689306"></link>
            <id>https://ibctamil.com/article/un-warns-anura-sri-lanka-issue-erupts-in-geneva-1788689306</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் 
மனித உரிமைகள் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.</p><p>

2024 ஆம் ஆண்டு இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் 2026 செப்டெம்பர் மாதம் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள 16 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒரு கசப்பான நியத்தை உலகிற்கு எடுத்துச்சொல்கின்றது.</p><p>இந்தநிலையில், பயங்கரவாத தடைச்சட்டம் என்ற பெயரில் மனித உரிமை மீறல்களும் காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி மறுக்கப்படுவதும் தொடர்கின்றது.</p><p>
 
இது தொடர்பான மேலும் பல விடயங்களை ஐபிசி தமிழின் பார்வைகள் நிகழ்ச்சியில் காண்க....</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/3sJQMbscMNY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T10:54:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் கரடி தாக்குதல்: ஒரு கரடியைக் சுட்டுக் கொன்ற அதிகாரிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bear-killed-after-woman-attacked-near-whistler-1788690239"></link>
            <id>https://canadamirror.com/article/bear-killed-after-woman-attacked-near-whistler-1788690239</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள விஸ்லர் பகுதிக்கு அருகே, வெள்ளிக்கிழமை அன்று மலையேறிக் கொண்டிருந்த குழுவினர் மீது கரடி தாக்குதல் நடத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள விஸ்லர் பகுதிக்கு அருகே, வெள்ளிக்கிழமை அன்று மலையேறிக் கொண்டிருந்த குழுவினர் மீது கரடி தாக்குதல் நடத்தியதில், பெண் ஒருவர் காயமடைந்தார். அவர் ஹெலிகாப்டர் மூலம் அவசரமாக மீட்புக் குழுவினரால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
</p><p>பிரிட்டிஷ் கொலம்பியா வனவிலங்கு பாதுகாப்பு சேவை அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, விஸ்லருக்கு மேற்கே உள்ள காலைஹான் பள்ளத்தாக்கின் 'கான்ப்ளிக்ட் ஏரி' பகுதியில் ஒரு குழுவினர் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது இரண்டு கரடிகளை எதிர்கொண்டனர்.</p><p> 
அதில் ஒரு கரடி திடீரென அந்தப் பெண்ணைத் தாக்கியுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு அக்கரடி அங்கிருந்து விலகிச் சென்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b37cc959-5269-4667-b638-aff1c08072d9/26-6a9d3f416886e.webp' /></p><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்குப் பொலிஸார், மீட்புக் குழுவினர் மற்றும் வனப்பாதுகாப்பு அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் விரைந்தனர்.</p><p> காயமடைந்த பெண்ணுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, அப்பகுதியில் காணப்பட்ட ஒரு வளர்ந்த ஆண் கருங்கரடியை வனப்பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர். </p><p>
எனினும், அந்தப் பெண்ணைத் தாக்கியது கருங்கரடியா அல்லது 'கிரிஸ்லி' வகைக் கரடியா என்பதை அதிகாரிகளால் இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை.
</p><p>இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கான்ப்ளிக்ட் ஏரிப் பகுதி மலையேறும் பாதையை அதிகாரிகள் மூடியுள்ளதுடன், பொதுமக்கள் யாரும் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T10:41:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்ல நில்திய பொக்குன பிரதேசத்தை சுற்றுலா வலயமாக அறிவிக்க அரசாங்கம் தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/declare-ella-nil-diya-pokuna-a-tourist-zone-1788691243"></link>
            <id>https://jvpnews.com/article/declare-ella-nil-diya-pokuna-a-tourist-zone-1788691243</id>
            <summary type="text">எல்ல நில்திய பொக்குன பிரதேசத்தை சுற்றுலா வலயமாக அறிவித்து அதனை வன விலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் நிர்வகிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>எல்ல நில்திய பொக்குன பிரதேசத்தை சுற்றுலா வலயமாக அறிவித்து அதனை வன விலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் நிர்வகிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.</p><p>

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் திங்கட்கிழமை (07) சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க படபெந்தியால் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1c3d5b8-2121-43ed-8a47-e8cb32d13866/26-6a9d432d44a7b.webp' /></p><p>

இந்த அறிவித்தல் தொடர்பான சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு அண்மையில் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-06T10:40:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவிடம் விளக்கம் கோரும் திபெத்தில் காணாமல் போன யாத்ரீகர்களின் குடும்பத்தினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/missing-pilgrims-in-tibet-1788690937"></link>
            <id>https://news.lankasri.com/article/missing-pilgrims-in-tibet-1788690937</id>
            <summary type="text">Families of missing pilgrims in Tibet demand answers from China: திபெத்தில் காணாமல் போன யாத்ரீகர்களின் குடும்பத்தினர் சீனாவிடம் விளக்கம் கோருகின்றனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p>Families of missing pilgrims in Tibet demand answers from China: திபெத்தில் காணாமல் போன யாத்ரீகர்களின் குடும்பத்தினர் சீனாவிடம் விளக்கம் கோருகின்றனர்.
</p><p>பேரழிவு ஏற்பட்டு 10 நாட்களுக்குப் பிறகும் இந்தியாவில் பிறந்த பின்லாந்து குடிமகள் உட்பட, திபெத்தில் 261 வெளிநாட்டினர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.</p><h2>மொத்தம் 531 பேர்</h2><p> </p><p>
இந்த விவகாரத்தில் சீன ஆரசாங்கத்தின் பதில்கள் கடும் விரக்தியை ஏற்படுத்துவதாகவே உறவினர்கள் பலர் தெரிவிக்கின்றனர். காணாமல் போயுள்ள உறவினர்கள் விவகாரத்தில், சீனாவுக்கு சென்று முறையிட முடியாத நிலை இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0595951-fc0e-4a87-ae35-1239c276b374/26-6a9d41fb817b9.webp' /></p><p> </p><p>பாதிப்புக்குள்ளானப் பகுதியில் என்ன நடக்கிறது அல்லது அங்குள்ள சூழல் என்ன என்பது குறித்து சீனாவிலிருந்து எந்தத் தகவலும் இல்லை என்றே கூறுகின்றனர். </p><p>கடந்த வாரம் திபெத்-நேபாள எல்லையில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு 1,300-க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்ததுடன், எல்லைப் பகுதியின் இருபுறமும் 5,600-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. </p><p>திபெத்தில் குறைந்தது 31 பேர் மரணமடைந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 531 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா வெள்ளிக்கிழமை தெரிவித்தது.</p><p></p><p> </p><p>ஆனால், காணாமல் போனவர்களின் பல குடும்பங்கள் சீனாவில் இருந்து வெளியாகும் தகவல் மறைக்கப்படுவதாகக் குற்றம் சாட்டுகின்றன; இது அவர்களின் துயரத்தை மேலும் தீவிரமாக்குகிறது. </p><p>இதனிடையே, 
சீன அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பதற்காக, திபெத்தில் மாயமாகியுள்ள பிரியங்கா சௌத்ரி என்பவரின் மகளிடமிருந்து டிஎன்ஏ (DNA) மாதிரியைப் பெறுவதற்கு, சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்து காவல்துறையினர் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர். </p><p>இந்த நிலையில், குற்றச்சாட்டுகள், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கான காலக்கெடு, அல்லது திபெத்திய தரப்பில் பயன்படுத்தப்படும் டிஎன்ஏ சேகரிப்பு நெறிமுறைகள் ஆகியவை குறித்து கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு சீனாவின் வெளிவிவகார அமைச்சகம் உடனடியாகப் பதிலளிக்கவில்லை. </p><p>ஆனால், 23 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தூதரகங்களுக்குத் தாங்கள் விளக்கங்களை அளித்து வருவதாகவும்; அத்துடன், வெள்ளம் குறித்த தகவல்களை வெளியிட்ட விதம் வெளிப்படையானதாகவும் உரிய நேரத்தில் அமைந்ததாகவும் திங்களன்று சீனாவின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><h2>டிஎன்ஏ (DNA) பரிசோதனை</h2><p> </p><p>மேலும், உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதற்காக மற்ற நாடுகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது. </p><p>பேரழிவின் பெரும் பாதிப்புக்குள்ளான நேபாளத்திற்கு, டிஎன்ஏ (DNA) மூலம் அடையாளம் காணும் நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்றையும் அனுப்பியுள்ளது.</p><p> நேபாளத்தில், காணாமல் போனவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்களைக் காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்; அதேவேளையில், தேடுதல் பணிகளுடன் இணைந்து தீவிர டிஎன்ஏ (DNA) பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p> நேபாளத்தில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள குடிமக்களைக் கொண்ட நாடுகளின் தூதரக அதிகாரிகளை, கடந்த வாரம் பெய்ஜிங்கில் நடைபெற்ற விளக்கக் கூட்டத்திற்கு சீனா அழைத்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8de2d30-4912-47e7-9737-445bf3425e0f/26-6a9d41fc3373e.webp' /></p><p> </p><p>இதில் கலந்துகொண்ட தூதரக அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்களை டிஎன்ஏ (DNA) மூலம் அடையாளம் காணும் பணியை எவ்வாறு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது என்பது குறித்த எந்த விவரங்களையும் பெய்ஜிங் பகிர்ந்துகொள்ளவில்லை என்று தெரிவித்தனர். </p><p>மேலும், உயிரிழந்தவர்களை அடையாளம் காணவோ அல்லது அவர்களது குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ளவோ ​​உதவக்கூடிய, முகத்தை அடையாளம் காணும் படங்கள் உள்ளிட்ட காணொளிகளை, நில எல்லைப் பகுதியின் தங்கள் தரப்பிலிருந்து வழங்க சீனா முன்வரவில்லை என்று அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சகத்துடன் தொடர்பில் உள்ள தூதர்கள் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T10:32:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தத்தால் நீதிபதிகளுக்கு எழுந்துள்ள சவால் - கேள்விகளை முடக்க அரசு திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/challenge-posed-to-judges-by-the-22nd-amendment-1788690450"></link>
            <id>https://tamilwin.com/article/challenge-posed-to-judges-by-the-22nd-amendment-1788690450</id>
            <summary type="text">22 ஆவது திருத்தம் நீதித்துறையின் சுயாதீனத்தை கேள்விக்கு உள்ளாக்குவதோடு அதன் நோக்கத்தில் உண்மைத் தன்மை உள்ளதா என்பது தொடர்பிலும் ஐயப்பாடுகள் உள்ளதாக சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>22 ஆவது திருத்தம் நீதித்துறையின் சுயாதீனத்தை கேள்விக்கு உள்ளாக்குவதோடு அதன் நோக்கத்தில் உண்மைத் தன்மை உள்ளதா என்பது தொடர்பிலும் ஐயப்பாடுகள் உள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார். </p><p>

இந்த விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,</p><p> 

22 வது திருத்தம் தொடர்பான விவாதம் நீதித்துறையின் சுயாதீனமான முடிவா என கேள்வியெழுப்பப்படுகின்றது, மாறாக, அறிமுகக் கருத்துக்களில் நான் மூன்று விடயங்களை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
</p><h2>

அரசாங்கத்தின் நோக்கம்</h2><p>
முதலாவது, 22-வது திருத்தத்தின் கூறப்பட்ட நோக்கம் உண்மையில் அதன் உண்மை நிலைக்கு ஏற்ப உள்ளதா என கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.</p><p> 

“ அரசாங்கத்திலிருந்தும், அரசுடன் தொடர்புடையவர்களிடமிருந்தும் கூறப்பட்ட கருத்து என்னவென்றால் நீதித் தாமதங்களை, சட்டத் தாமதங்களைக் குறைப்போம் என்பதுதான்.

 இது நீதித்துறை சுயாதீனத்திற்கு இழுக்கு என்று வாதிடுபவர்களில் சிலர் கூட, இது சட்டத் தாமதங்களுக்குச் சற்றேனும் உதவும் என்று ஒப்புக்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7db3546-f40c-4f8c-b0d5-bd952f103998/26-6a9d409ac620f.webp' /></p><p>
</p><p>
 ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. மேம்பட்ட நீதிமன்ற நீதிபதிகளின் வயது வரம்பையும், இப்போது கீழ்நிலை நீதித்துறை உறுப்பினர்களின் வயது வரம்பையும் உயர்த்துவது சட்டத் தாமதப் பிரச்சினையைச் சமாளிக்க உதவுமா என்பதில் எனக்கு அடிப்படை ஐயம் உள்ளது.</p><p> 

அதற்கான காரணத்தை விளக்குகிறேன், வயது வரம்பை உயர்த்துவது இந்த நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போவதில்லை, அதே எண்ணிக்கையிலான நீதிபதிகள் தான் பணியாற்றுவார்கள்.
</p><p>
 சமீபத்திய காலத்தில் உச்ச நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரித்த அரசியலமைப்புத் திருத்தம் ஏற்கனவே கொண்டு வரப்பட்டது என்பதை நாம் அறிவோம்.</p><p>

 அதேபோன்று, கீழ்நிலை நீதித்துறை உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஆகியவற்றின் வயதை உயர்த்துவதால் நீதிமன்ற வளாகங்களின் எண்ணிக்கையோ, நீதிபதிகளின் எண்ணிக்கையோ அதிகரிக்காது. 

வழக்குகளை விசாரிக்க அதிக நீதிபதிகள் கிடைப்பதில்லை என்றால், தாமதங்களும் குறையாது” </p><h2>

தீர்ப்பின் தாமதம்</h2><p>
ஆகவே, அதே நீதிபதிகள் மேலும் இரண்டு ஆண்டுகள் பணியாற்றப் போகிறார்கள் என்றால், தாமதத்தைக் குறைக்க அது எப்படி உதவும் என கேள்வியெழுப்பப்படுகின்றது. </p><p>

“ தீர்ப்பு வழங்கும் தரத்தை இது உயர்த்தும் என்று வாதிடப்பட்டால், அது தற்போதைய நீதித்துறை உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட்ட தரத்தில் நீதி வழங்குகிறார்கள், புதிதாக நீதித்துறையில் நுழைபவர்கள் அந்தத் தரத்தைத் தக்கவைக்க முடியாது என்று முன்னரே கருதுவதாகும். 

அந்த வாதம் எங்கிருந்து வருகின்றது என்று எனக்குத் தெரியவில்லை. </p><p>நீதித்துறையில் நுழைபவர்களின் தரம் மிகச் சிறந்ததாக இல்லை என்று வாதிடப்பட்டால், நீதித்துறைக்கான நுழைவுத் தேவைகள் குறிப்பாக மேம்பட்ட நீதிமன்றங்களுக்கானவை மாற்றப்பட வேண்டும் என்பதே அதன் பொருள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04527ee3-4184-44d7-8198-9eec68f995c1/26-6a9d409b974ed.webp' /></p><p>
</p><p>
மேம்பட்ட நீதிமன்றங்களைப் பொறுத்தவரை, நான் நீண்ட காலமாகச் சொல்லி வருவது என்னவென்றால், மேம்பட்ட நீதிமன்றங்கள் பெரும்பாலும் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்தே நீதிபதிகளைப் பெறுகின்றன.

 ஜனாதிபதி சட்டத்தரணிகளை சாடியவர்கள், இந்த விடயத்திற்கு மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன்.</p><p> கடந்த இருபது முப்பது ஆண்டுகளில் மிக அதிக எண்ணிக்கையிலான நீதிமன்ற நீதிபதிகளை வழங்கிய ஒரே அரசு நிறுவனம் அதுவே.

 தனியார் பார் உறுப்பினர்களை மேம்பட்ட நீதிமன்றங்களில் பணியமர்த்த அழைப்பது மிகக் குறைந்த அளவிலேயே இருந்து வருகின்றது. </p><p> 

உதாரணமாக, இந்தியாவில் தனியார் பார் உறுப்பினர்களை மேம்பட்ட நீதிமன்றங்களில் அமர்த்துவதில் இன்னும் திறந்த அணுகுமுறை உள்ளது. </p><p>

ஆகவே, மேம்பட்ட நீதிமன்ற நீதிபதிகள், சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்தோ அல்லது கீழ் நீதிமன்றங்களிலிருந்தோ மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

 இந்தத் தேர்வு முறை மாறாவிட்டால், பிரச்சினை தரம் பற்றியதாக இருந்தால், அதைச் சமாளிக்க முடியாது”.
</p><h2>
22ஆவது திருத்தம்</h2><p>
தற்போதைய நீதிபதிகளை மேலும் இரண்டு ஆண்டுகள் பணியாற்ற அனுமதிப்பது திறமையான, அனுபவமிக்க நீதிபதிகளைத் தக்கவைக்கும் என்று சொல்பவர்களிடம் என் கேள்வி,

 மேம்பட்ட நீதிமன்ற நியமனப் பிரச்சினையை இந்தத் திருத்தம் கையாளாதபோது, தீர்ப்புத் தரத்தை அது எப்படி மேம்படுத்தும்?
</p><p>
எனவே, 22-வது திருத்தம் சட்டத் தாமதங்களைக் குறைப்பது பற்றியதல்ல என்று நான் நினைக்கிறேன். தகுதியான, திறமையான நீதிபதிகளைத் தக்கவைப்பது பற்றியதும் அல்ல 

 அது மிகவும் ஆபத்தான வாதம். </p><p>எனவே இரு விஷயங்களிலும் 22-வது திருத்தம் அதன் கூறப்பட்ட நோக்கத்தில் தோல்வியடைகின்றது என்று நான் கருதுகிறேன்.
</p><h2>

ஜனாதிபதியின் முடிவில் சிக்கல்</h2><p>
பின்னர் இந்தத் திருத்தம் எதைப் பற்றியது? ஜனாதிபதி இது ஒரு பெரிய கட்டமைப்புச் சீர்திருத்தத்தின் பகுதி என்று நம்பச் செய்ய விரும்புகிறார் என்று நினைக்கிறேன்.
</p><p>
 சட்டத்தரணிகள் சங்கத்துடனான சந்திப்பில் சட்டத் தாமதங்களைக் குறைக்க அவர் மேற்கொள்ளும் பிற சீர்திருத்த முயற்சிகளைப் பற்றிக் குறிப்பிட்டதாக ஊடகங்களில் கண்டேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a7a540d-d80c-47a8-9f75-fee1b00f4197/26-6a9d409c48bb6.webp' /></p><p> </p><p>

அந்தச் சீர்திருத்த முயற்சிகள் எவ்வாறு தாமதங்களைக் குறைக்கும் என்பது எனக்குத் தெளிவாகத் தெரியாவிட்டாலும், அந்தப் பட்டியலில் இந்தத் திருத்தம் எவ்வாறு பங்களிக்கிறது என்பதை நான் காணவில்லை.</p><p> 

இது விதிவிலக்கான ஒன்று. தாமதங்களைக் குறைக்க இது பங்களிக்கிறது என்ற எந்த நியாயமான காரணத்தையும் நான் இதுவரை கேள்விப்படவில்லை. இது நம்மை பதவிக் காலப் பாதுகாப்பு என்ற கேள்விக்கு அழைத்துச் செல்கின்றது. 

சாலிய பீரிஸ், ஊடக நேர்காணல்களில் இதைச் சிறப்பாக விளக்கியுள்ளார்.</p><p>நீதித்துறை சுயாதீனம் பதவிக் காலப் பாதுகாப்புடன் தொடர்புடையது.

 அதனால்தான் அரசியலமைப்பின் 175-வது பிரிவு உச்ச நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதைக் கையாள்கின்றது என்றார்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T10:30:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பெண் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற விசித்திர விருந்தினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/calgary-homeowner-gets-surprise-visit-1788689808"></link>
            <id>https://canadamirror.com/article/calgary-homeowner-gets-surprise-visit-1788689808</id>
            <summary type="text">கனடாவின் கல்காரி நகரைச் சேர்ந்த ஜானிஸ் ஆண்டர்சன் என்பவரது வீட்டின் தோட்டத்தில், ஆகஸ்ட் 27 அன்று தாய் காட்டுப்பூனை ஒன்று தனது ஐந்து குட்டிகளுடன் நுழைந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் கல்காரி நகரைச் சேர்ந்த ஜானிஸ் ஆண்டர்சன் என்பவரது வீட்டின் தோட்டத்தில், ஆகஸ்ட் 27 அன்று தாய் காட்டுப்பூனை ஒன்று தனது ஐந்து குட்டிகளுடன் நுழைந்தது.
</p><p>அண்டை வீட்டார் கொடுத்த தகவலையடுத்து, தனது வளர்ப்பு நாயை வீட்டிற்குள் பூட்டிவிட்டு ஆண்டர்சன் உடனடியாகத் தனது கேமரா மற்றும் கைப்பேசியுடன் தோட்டத்திற்கு விரைந்தார்.</p><p>
அங்கு காட்டுப்பூனைகள் மிகவும் அமைதியாகத் தோட்டத்திலும், வீட்டின் முன்பக்கப் புல்வெளியிலும் அமர்ந்து ஓய்வெடுத்தன. தாய் காட்டுப்பூனை புல்வெளியில் சாவகாசமாகப் படுத்துக் கொண்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9925d006-fa51-490c-ad56-bcd6bfbb5989/26-6a9d3d91ec311.webp' /></p><p> </p><p>சில நிமிடங்களிலேயே அவை அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாலும், ஆண்டர்சன் அவற்றின் அழகிய தருணங்களைத் தனது கேமராவில் துல்லியமாகப் படம்பிடித்தார்.
</p><p>சில ஆண்டுகளுக்கு முன்புதான் வனவிலங்கு புகைப்படக் கலையை ஒரு பொழுதுபோக்காகத் தொடங்கிய ஆண்டர்சன், காட்டுப்பூனை குடும்பம் நேரடியாகத் தனது வீட்டிற்கே வந்து புகைப்படங்களுக்குப் பொஸ் கொடுத்ததை வாழ்நாளின் மறக்க முடியாத அரிய வாய்ப்பாகவும் கௌரவமாகவும் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T10:28:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க தூதர்களுடன் புடின் 3 மணிநேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/putin-talks-with-us-envoys-morethan-3-hours-1788690617"></link>
            <id>https://news.lankasri.com/article/putin-talks-with-us-envoys-morethan-3-hours-1788690617</id>
            <summary type="text">Vladimir putin talks with us envoys: ரஷ்யாவிற்கு வருகை தந்த அமெரிக்க தூதர்களுடன் ஜனாதிபதி புடின் 3 மணிநேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>Vladimir putin talks with us envoys: ரஷ்யாவிற்கு வருகை தந்த அமெரிக்க தூதர்களுடன் ஜனாதிபதி புடின் 3 மணிநேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.</p><p>

அமெரிக்க தூதர்களான ஸ்டீவ் விட்கோஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோருடன், ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் 3 மணிநேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தியதாக கிரெம்ளின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.&nbsp;</p><h2>அமெரிக்க தூதர்கள்&nbsp;</h2><p> 

ரஷ்யா மற்றும் உக்ரைன் சமீப வாரங்களில் இரு தரப்பில் இருந்தும் தொலைதூர வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2e04913-595c-44fc-9942-55bbee569168/26-6a9d42d1465ca.webp' /></p><p></p><p>

இந்த சூழலில், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமெரிக்க பிரதிநிதிகளான ஸ்டீவ் விட்கோஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகிய தூதர்கள் ரஷ்யாவிற்கு பயணித்துள்ளனர்.
</p><p>
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சார்பாக, ஜனவரிக்குப் பிறகு முதல் முறையாக ரஷ்யாவிற்கு இவர்கள் வருகை புரிந்துள்ளனர். </p><p>

அவர்கள் இருவரும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அது 3 மணிநேரத்திற்கு மேலாக நடந்ததாகவும், மிகவும் பயனுள்ள பேச்சுவார்த்தைகள் என்றும் கிரெம்ளின் அதிகாரி யூரி உஷாகோவ் தெரிவித்தார். </p><p>

அதே சமயம் இதில் எந்தவொரு முக்கிய முன்னேற்றமும் ஏற்பட்டதற்கான அறிகுறி எதுவும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.</p><h2>

உக்ரைன் நெருக்கடியைத் தீர்ப்பது</h2><p>பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான சாத்தியமான வழிகள் குறித்த பல கருத்துகளை விட்கோஃப், குஷ்னர் முன்வைத்தனர் என்று தெரிவித்தார். ஆனால், அந்த கருத்துக்கள் என்ன என்பது குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை.</p><p> 

மேலும் அவர் கூறுகையில், "போர்க்களத்தில் ரஷ்யா உண்மையான முன்னேற்றத்தை அடைந்து வருவதாகவும், தனது இலக்குகளை அடைவதில் உறுதியாக இருப்பதாகவும் புடின் அந்த இருவரிடமும் கூறினார்.

உக்ரைன் நெருக்கடியைத் தீர்ப்பது குறித்த வெறும் கருத்துப் பரிமாற்றத்தைத் தாண்டி இந்தப் பேச்சுவார்த்தைகள் சென்றன.
</p><p>
பொருளாதாரப் பிரச்சனைகள் மற்றும் சாத்தியமான பெரிய, பரஸ்பர நன்மை பயக்கும் ரஷ்ய-அமெரிக்கத் திட்டங்கள் குறித்து ஓரளவு விரிவாக விவாதிக்கப்பட்டது.

மொத்தத்தில், இந்தப் பேச்சுவார்த்தைகள் சரியான நேரத்தில் நடந்ததாகவும், இரு தரப்பினருக்கும் மிகவும் பயனுள்ளதாகவும் இருந்தன என்று கூறலாம்" என்றார். </p><p> 

இதற்கிடையில், விட்காஃப் மற்றும் குஷ்னர் இருவரும் மாஸ்கோவில் இருந்து புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை கீவ்வில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்திக்க உள்ளனர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8fe707f-7112-46af-a26a-f4144c955db2/26-6a9d42d2193ba.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T10:27:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் இருந்து செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றம் வரப்போகும் நாமல்! வெளியிடவுள்ள முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-1788687758"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-1788687758</id>
            <summary type="text">சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வார். அதன்போது, அநுதாரபுரத்தில் நாட்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வார். அதன்போது, அநுதாரபுரத்தில் நாட்டு மக்களுக்கு அவர் கூறவிருந்த சக்திவாய்ந்த செய்தியை சபையில் பகிரங்கமாக அறிவிப்பார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>நாமல் ராஜபக்சவின் கைது குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.&nbsp;</p><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p><p>ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவின் கைது ஒரு தெளிவான அரசியல் பழிவாங்கல்.&nbsp;</p><h2>அரசியல் பழிவாங்கல் பொருத்தமானதல்ல</h2><p>12ஆம் திகதி அநுராதபுரத்தில்&nbsp; மாபெரும் கூட்டம் ஒன்றை பொதுஜன பெரமுன நடத்தவிருந்த நிலையில், தற்போது நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.&nbsp;</p><p>12ஆம் திகதி அநுராதபுரத்தில் அவர் ஆற்றவிருந்த சக்திவாய்ந்த உரையை, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு பகிரங்கமாக சபையில் வைத்து நாமல் ஆற்றுவார்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/CWIGW7iZQtY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>தான் அமைச்சராக இருந்த கடந்த அரசாங்கத்தின் போது, இது போன்ற நிகழ்வு நடந்திருந்தாலும் நான் அதனையும் அனுமதித்திருக்க மாட்டேன். ஒரு ஜனநாயக நாட்டிற்கு அரசியல் பழிவாங்கல் பொருத்தமானதல்ல.&nbsp;</p><p>எதிர்வரும் 12ஆம் திகதி இடம்பெறவுள்ள கூட்டத்தில் நாடாளுமன்ற அமர்வில் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச உரையாற்றவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தி முற்றிலும் பொய்யானது. அவை ஆதாரமற்றவை.</p><p>செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நாமல் ராஜபக்ச ஆற்றவுள்ள உரையை சரியாக செவிமடுக்குமாறு அரசாங்கத்திடம் நான் கோரிக்கை விடுக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec306d82-3523-4653-b84c-36dcef26b87b/26-6a9d3f5975255.webp' />&nbsp;&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T10:24:38+00:00</updated>
        </entry>
    </feed>
