<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-14T22:17:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல் சுவர் இடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/demolition-memorial-wall-at-mullivaikkal-mutram-1789409172"></link>
            <id>https://ibctamil.com/article/demolition-memorial-wall-at-mullivaikkal-mutram-1789409172</id>
            <summary type="text">முள்ளிவாய்க்கால் முற்றத்தின் நினைவேந்தல் சுவர் இடிக்கப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

2009ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரில் உயி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முள்ளிவாய்க்கால் முற்றத்தின் நினைவேந்தல் சுவர் இடிக்கப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
</p><p>
2009ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் மிக முக்கியமானதொரு வரலாற்று இடத்தில் அமைந்துள்ள நினைவேந்தல் சுவரே இவ்வாறு இடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (TNPF) கட்சியைச் சேர்ந்த ஒரு முக்கிய அரசியல்வாதியும் யாழ்ப்பாண மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ரத்னம் சதீஸ், வீதி அபிவிருத்தி அதிகார சபையால் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது என்ற விடயத்தை தனது முகநூலில் பகிர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53251a8b-8961-4e3e-9b0a-d686f57765f8/26-6aa837962d7c0.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T21:49:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/man-killed-by-police-after-woman-infant-reportedly-1789402889"></link>
            <id>https://canadamirror.com/article/man-killed-by-police-after-woman-infant-reportedly-1789402889</id>
            <summary type="text">கனடாவில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத்தில் உள்ள எட்மண்டன் நகரின் தென்மேற்குப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>
கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத்தில் உள்ள எட்மண்டன் நகரின் தென்மேற்குப் பகுதியில், பெண்ணையும் குழந்தையையும் சுட்ட 36 வயது நபரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். </p><p>
ஞாயிற்றுக்கிழமை காலையில் டான்ஸ்டேல் டிரைவ் மற்றும் 45-வது அவென்யூ பகுதிக்கு அருகில் உள்ள வீடு ஒன்றிற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த அந்த நபர், அங்கிருந்த பெண்ணையும் ஒரு குழந்தையையும் சுட்டதாக எட்மண்டன் காவல் துறைக்கு அவசரத் தகவல் கிடைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/799d4e77-0e93-44b6-867e-51229102c334/26-6aa81f0bc7ce8.webp' /></p><p>
</p><p>தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், காயமடைந்த சிலர் வீட்டின் வெளியே தவித்துக் கொண்டிருப்பதைக் கண்டனர். 
தொடர்ந்து வீட்டைச் சுற்றி வளைக்க முயன்றபோது, அந்த நபர் கையில் துப்பாக்கியுடன் வீட்டின் முன் கதவைத் திறந்து வெளியே வந்துள்ளார்.</p><p> 
அப்போது அதிகாரிகள் கொடுத்த வாய்மொழி எச்சரிக்கைகளை அவர் மதிக்கத் தவறியதால், அங்கிருந்த மூன்று காவலர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். </p><p>
மருத்துவக் குழுவினர் அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தபோதிலும், அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><p>
இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
</p><p>அவர்களின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>
இதனிடையே, காவல்துறையினர் நடத்திய இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தற்போது விரிவான விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T21:11:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ரூ.11,000 கோடி முதலீடு ; 7000 பேருக்கு வேலைவாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/11-000-crore-secured-london-presence-chief-vijay-1789406889"></link>
            <id>https://jvpnews.com/article/11-000-crore-secured-london-presence-chief-vijay-1789406889</id>
            <summary type="text">தமிழ்நாட்டில் சுமார் இந்திய மதிப்பில் 11,000 கோடி ரூபாய் முதலீட்டில் 7000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், முதலமைச்சர் விஜய் முன்னிலையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டில் சுமார் இந்திய மதிப்பில் 11,000 கோடி ரூபாய் முதலீட்டில் 7000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், முதலமைச்சர் விஜய் முன்னிலையில் லண்டனில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு, லண்டனில் வசிக்கும் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்திருந்தனர்.
</p><p>
இந்த நிலையில், இன்று (14) லண்டனில் நடைபெற்ற முதலீட்டாளர் சந்திப்பில், சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Ltd.) நிறுவனம், அதன் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79990f73-9e9e-4308-ad3a-75d014484de7/26-6aa82eaad318a.webp' /></p><p>இதன்படி, வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, கூட்டிணைப்பு மற்றும் தளபாட வசதிகள் உள்ளிட்ட துறைகளில் சுமார் 11,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படவுள்ளதுடன், சுமார் 7000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres – GCCs) நிறுவுவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் மேலும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
</p><p>
இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி உலகளாவிய தகவல் தொடர்பு நிறுவனம், சென்னையில் உலகளாவிய திறன் மையம் ஒன்றை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம் மற்றும் ஏர்ன்ஸ்ட் &amp; யங் (Ernst &amp; Young) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
</p><p>
சுமார் 1000 கோடி ரூபாய் முதலீட்டில் அமையவுள்ள இந்த மையத்தின் ஊடாக 2000க்கும் மேற்பட்ட உயர் மதிப்புடைய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.
</p><p>
இந்த மையம், சென்னையின் மவுண்ட் பூந்தமல்லி வீதியில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள GCC கொரிடார் பகுதியில் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், சுவீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குரூப் (Sigma Technology Group), தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் (Sria Solutions) மூலம், திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் இயங்கி வரும் உலகளாவிய திறன் மையங்களை விரிவுபடுத்துவதற்கும் உறுதியளித்துள்ளது.</p><p>

இதன்மூலம் எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட துறைகளில் 600 உயர் மதிப்புடைய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.
</p><p>
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதலமைச்சர் விஜய் முன்னிலையில், சிக்மா டெக்னாலஜி குரூப் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் கார்ல்சன், ஸ்ரியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப் IAS ஆகியோருக்கு இடையே பரிமாறிக் கொள்ளப்பட்டது.
</p><p>
இந்த முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி மற்றும் உயர்தர வேலைவாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-14T21:11:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இத்தாலியில் பெண்ணை கொடூரமாக தாக்கிய இலங்கை இளைஞனை துரத்தி பிடித்த பொலிஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-boy-arrested-in-italy-1789396538"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-boy-arrested-in-italy-1789396538</id>
            <summary type="text">இத்தாலியின் வெரோனா நகரில் சுப்பர் மார்க்கெட் ஒன்றிலிருந்து மதுபானப் போத்தல்களைத் திருடிவிட்டு, தப்பியோட முற்பட்டபோது, பெண் ஊழியர் ஒருவரை தாக்கிய 29 வய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இத்தாலியின் வெரோனா நகரில் சுப்பர் மார்க்கெட் ஒன்றிலிருந்து மதுபானப் போத்தல்களைத் திருடிவிட்டு, தப்பியோட முற்பட்டபோது, பெண் ஊழியர் ஒருவரை தாக்கிய 29 வயதுடைய இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>இந்தச் சம்பவம்&nbsp; Vicolo Fossetto பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. </p><p>குறித்த இலங்கையர் அலுமாரிகளில் இருந்த பல மதுபானப் போத்தல்களை எடுத்து தனது பைக்குள் மறைத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><h2><b>பெண் மீது தாக்குதல்</b></h2><p>பணம் செலுத்தாமல் காசாளர் பகுதியைக் கடந்து வெளியேறும் பகுதியை நோக்கிச் சென்றுள்ளார். ஊழியர் ஒருவர் அவரை அணுகி திருடப்பட்ட பொருட்களைத் திருப்பி தருமாறு கோரியுள்ளார். எனினும் அவர் ஊழியரை உடல் ரீதியாக தாக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a03fafc-08cd-4e3e-aa39-7d9d716c3277/26-6aa81c6181bf1.webp' /></p><p>ஊழியரை கீழே தள்ளியதோடு, திருடப்பட்ட பொருட்களுடன் இலங்கையர் தப்பியோடியுள்ளார். </p><p> கீழே விழுந்த பெண் எழுந்து, தனக்கு உதவ நின்ற வாடிக்கையாளர் ஒருவரின் காரில் இலங்கையரை துரத்தத் தொடங்கினார். </p><p>அங்கு வசிப்பவர் ஒருவர் சந்தேக நபரை அடையாளம் கண்டு, சந்தேக நபர் எங்கு பதுங்கியிருக்கின்றார் என்பதை அதிகாரிகளுக்கு தெரிவித்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><h3><b>சட்டவிரோத குடியேற்றவாசி</b></h3><p>சோதனையின் போது, பையில் திருடப்பட்ட இரண்டு மதுபானப் போத்தல்களைக் கண்டெடுத்தனர். தப்பியோடும்போது கைவிடப்பட்ட மூன்றாவது மதுபான போத்தல் அதிகாரிகளால் மீட்கப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef89cfd9-9a3d-4d28-976c-4469b8d7f026/26-6aa81c6272d81.webp' /></p><p>இந்நிலையில் விற்பனை செய்யக்கூடிய நிலையில் இருந்த அனைத்துப் பொருட்களும் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன. </p><p>விசாரணையை தொடர்ந்து பல குற்றப் பின்னணியை கொண்டவரும் சட்டவிரோதமான குடியேற்றவாசியுமான இலங்கையர் கைது செய்யப்பட்டார். </p>]]></content>
            <updated>2026-09-14T21:10:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவின் கூட்டத்தில் நடந்த அட்டகாசம் - அநுரவின் பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/videos-of-scenes-at-mahinda-s-rally-anura-warning-1789418869"></link>
            <id>https://tamilwin.com/article/videos-of-scenes-at-mahinda-s-rally-anura-warning-1789418869</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய அரசாங்க எதிர்ப்பு பேரணியில் பங்கேற்ற சில ஆதரவாளர்கள் பேரணி நிறைவடைந்த பின்னர் மதுபோதையில் இருப்பதாகக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய அரசாங்க எதிர்ப்பு பேரணியில் பங்கேற்ற சில ஆதரவாளர்கள் பேரணி நிறைவடைந்த பின்னர் மதுபோதையில் இருப்பதாகக் கூறப்படும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகின.
</p><p>
இந்நிலையில் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் குடிப்பது அவர்களது உரிமை அதை யாரும் தடுபக்க முடியாது எனக் கூறியுள்ளார்.
</p><p>மேலும் அநுரவுக்கு எதிரான பேரணியில் நாமலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளது.</p><p>.இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்புகள் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/DM_VJcCmwvE" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T21:09:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்லாந்தில் கோய் மீன்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 51 வயது முதியவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/elderly-man-sexually-harassed-koi-fish-1789419453"></link>
            <id>https://canadamirror.com/article/elderly-man-sexually-harassed-koi-fish-1789419453</id>
            <summary type="text">தாய்லாந்தில் அண்டை வீட்டாரின் தனியார் கோய் மீன் வளர்ப்புத் தொட்டிக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் 51 வயது நபர் ஒருவர், மீன்களுக்கு பாலியல் துஷ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்தில் அண்டை வீட்டாரின் தனியார் கோய் மீன் வளர்ப்புத் தொட்டிக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் 51 வயது நபர் ஒருவர், மீன்களுக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் அதிர்ச்சி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

தாய்லாந்தின் துங் சோங் ஹோங் பகுதியில் உள்ள தனியார் குளமொன்றில் கடந்த செப்டம்பர் 7ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e024373a-87ef-4dd7-b0b8-b8bfd1eaf57f/26-6aa85fbe930c2.webp' /></p><p>குறித்த நபர் மிதிவண்டியில் அப்பகுதிக்கு வந்த பின்னர், குளத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், அங்கு வளர்க்கப்பட்டிருந்த கோய் மீன்களுக்கு துஷ்பிரயோகம் செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவத்தை வீட்டுப் பணியாளரும் குளத்தின் உரிமையாளரும் அவதானித்து அவரை எதிர்கொண்டபோது, சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். </p><p>இதனையடுத்து உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில், குளத்தில் வளர்க்கப்பட்ட கோய் மீன்கள் தொடர்ச்சியாக விசித்திரமான முறையில் உயிரிழந்ததை அவதானித்த உரிமையாளர், காரணம் தொடர்பில் சந்தேகமடைந்துள்ளார்.
</p><p>
மேலும், குளத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான பொருளொன்று கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த CCTV காட்சிகளை ஆய்வு செய்தபோதே சம்பவத்தின் பின்னணி தெரியவந்துள்ளது.

இதையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சந்தேகநபரை மறுநாள் லாக் சி பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். </p><p>கைது செய்யப்பட்டபோது, சம்பவத்தன்று அணிந்திருந்த ஆடைகளையே அவர் அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ac78282-8bc1-448c-a744-93b27c474e82/26-6aa85fbf47e2a.webp' /></p><p>விசாரணைகளின்போது குறித்த நபர் சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதாகவும், போதைப்பொருள் பயன்படுத்தியிருந்ததாகவும் பொலிஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.</p><p>
மேலும், கடந்த காலங்களிலும் விலங்குகள் மற்றும் பொருட்கள் தொடர்பில் இதுபோன்ற தகாத செயல்களில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.</p><p>

சுமார் ஏழு முதல் எட்டு ஆண்டுகளாக கோய் மீன்களை வளர்த்து வரும் குளத்தின் உரிமையாளர், மீன்கள் வித்தியாசமான நிலையில் உயிரிழந்ததைக் கண்டு ஆரம்பத்தில் அவை ஒன்றுடன் ஒன்று மோதியதன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என கருதியதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
எனினும், CCTV காட்சிகளை ஆய்வு செய்த பின்னரே உண்மையான காரணம் தெரியவந்துள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் விலங்கு வதை, சொத்து சேதம், ஒழுக்கக்கேடான செயற்பாடு மற்றும் இரவு நேரத்தில் அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து தாய்லாந்து பொலிஸார் பரிசீலித்து வருகின்றனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-09-14T20:57:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவில் உண்மையான மீனைப் போல நீந்தும் செயற்கை மீன் ; இணையத்தில் கவனம் ஈர்க்கும் காட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/robot-fish-that-swims-like-a-real-fish-china-1789417828"></link>
            <id>https://canadamirror.com/article/robot-fish-that-swims-like-a-real-fish-china-1789417828</id>
            <summary type="text">உண்மையான மீனைப் போலவே நீருக்கடியில் தத்ரூபமாக நீந்தக்கூடிய அதிநவீன ரோபோ மீன் ஒன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் நடைபெற்ற சர்வதேச ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>உண்மையான மீனைப் போலவே நீருக்கடியில் தத்ரூபமாக நீந்தக்கூடிய அதிநவீன ரோபோ மீன் ஒன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
சீனாவில் நடைபெற்ற சர்வதேச சேவை வர்த்தகக் கண்காட்சியான CIFTIS-இல், ‘BG-5 Golden Dragon Fish’ என்ற இந்த ரோபோ மீன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2375680-c080-40fd-b572-ee90a90ef0d6/26-6aa8596640536.webp' /></p><p>

சாதாரணமாகப் பார்க்கும்போது இது செயற்கையாக உருவாக்கப்பட்ட ரோபோ மீன் என்பதைக் கண்டறிவது மிகவும் கடினமாக இருக்கும் வகையில், உண்மையான மீனைப் போன்ற தோற்றத்துடனும் நீச்சல் இயக்கத்துடனும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த அதிநவீன ரோபோ மீனை கடல்சார் தொழில்நுட்ப நிறுவனமான ROBOSEA உருவாக்கியுள்ளது.</p><p>

நீரடிப் பகுதிகளில் உளவுப் பணிகள், ரகசியக் கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் கடல்சார் ஆராய்ச்சிப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக இந்த ரோபோ மீனைப் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

உண்மையான மீனைப் போன்றே நீந்தக்கூடிய இந்த ரோபோவின் தொழில்நுட்பத் திறன், கண்காட்சிக்கு வந்த பார்வையாளர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-14T20:30:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அணுசக்தி மாநாட்டில் ஈரான் பங்கேற்பதற்கு அமெரிக்கா தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-bans-iran-participating-in-nuclear-conference-1789414569"></link>
            <id>https://tamilwin.com/article/us-bans-iran-participating-in-nuclear-conference-1789414569</id>
            <summary type="text">வியன்னாவில் நடைபெற்று வரும் சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் (IAEA) வருடாந்த
பொது மாநாட்டில், ஈரானின் அணுசக்தித் தலைவர் மொஹமட் எஸ்லாமி பங்கேற்பதைத்
தடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வியன்னாவில் நடைபெற்று வரும் சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் (IAEA) வருடாந்த
பொது மாநாட்டில், ஈரானின் அணுசக்தித் தலைவர் மொஹமட் எஸ்லாமி பங்கேற்பதைத்
தடுக்கும் வகையில் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளமைக்கு
ஈரான் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.
</p><p>
ஈரான் மீது மீண்டும் விதிக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பயணத்
தடைகளிலிருந்து மொஹமட் எஸ்லாமிக்கு விலக்கு அளிக்குமாறு மாநாட்டை நடத்தும்
ஆஸ்திரியா விடுத்த கோரிக்கையை, ஐ.நா. பாதுகாப்புச் சபையின் பொருளாதாரத்
தடைக்குழுவில் அமெரிக்கா நிராகரித்துள்ளது.
</p><h2>அரசியல் நோக்கம் கொண்டது என</h2><p>
இதனைத் தொடர்ந்து ஆஸ்திரியாவினால் அவருக்கு வழங்கப்பட்ட விசா இரத்து
செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c41e2bcf-1116-407f-81d7-f71e11978af7/26-6aa853d01a708.webp' /></p><p>

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்டது எனவும்,
சர்வதேச அமைப்பினைத் தனது அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்துவதாகவும் ஈரான்
குற்றம் சுமத்தியுள்ளது.</p><p>இருப்பினும், ஈரானிய பிரதிநிதி மாநாட்டைத் தனது பிரச்சார மேடையாகப்
பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த விலக்கு கோரிக்கை
நிராகரிக்கப்பட்டதாக அமெரிக்கா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T20:06:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவுதிகளுடன் நேரடி பேச்சுவார்த்தையை தொடங்கியது அமெரிக்கா: ஜே.டி வான்ஸ் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-starts-direct-talks-with-houthis-1789416325"></link>
            <id>https://news.lankasri.com/article/us-starts-direct-talks-with-houthis-1789416325</id>
            <summary type="text">US Starts Direct Talks with Houthis Following Perim Island Seizure: ஹவுதிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>US Starts Direct Talks with Houthis Following Perim Island Seizure: ஹவுதிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><h2> பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள்</h2><p>செங்கடலின் கிழக்கு கடற்கரைக்கு அருகே இராஜதந்திர ரீதியில் முக்கியமாக அமைந்துள்ள பெரிம்(Perim) தீவை ஹவுதிகள் கைப்பற்றியுள்ளனர்.</p><p> இந்த பெரிம் தீவானது முக்கியமான சர்வதேச கடல்வழிப் போக்குவரத்து பாதையான பாப் எல்-மண்டப் ஜலசந்திக்கு அருகில் அமைந்துள்ளது. எனவே இந்த கைப்பற்றல் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு முக்கிய ராணுவ பலத்தை பெற்றுத் தந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/524d768d-a419-4f81-ba24-6d97cbda9595/26-6aa853873c11a.webp' /></p><h2> அமெரிக்கா தலையீடு</h2><p>இந்நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுடன் நேரடித் தொடர்புகளை அமெரிக்கா தொடங்கியுள்ளது.</p><p> கான்சாஸ் மாகாணத்திற்கு புறப்படுவதற்கு சற்று முன்பு ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடியை அமெரிக்கா தீவிரமாக கையாண்டு வருவதாக உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p> அத்துடன் இது தொடர்பாக சவுதி அரேபியா, எமிரேட்ஸ் மற்றும் அப்பகுதியை சுற்றி பாதிக்கப்பட்ட மற்ற தரப்பினருடனும் அமெரிக்கா தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p> மேலும் நிலைமையை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.<br></p>]]></content>
            <updated>2026-09-14T20:05:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/announcement-regarding-the-aswesuma-allowance-1789415796"></link>
            <id>https://jvpnews.com/article/announcement-regarding-the-aswesuma-allowance-1789415796</id>
            <summary type="text">செப்டெம்பர் மாதத்திற்குரிய &#039;அஸ்வெசும&#039; கொடுப்பனவு எதிர்வரும் 16ஆம் திகதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நலன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செப்டெம்பர் மாதத்திற்குரிய 'அஸ்வெசும' கொடுப்பனவு எதிர்வரும் 16ஆம் திகதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நலன்புரிப் நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>அறிக்கையொன்றை வெளியிட்டு நலன்புரிப் நன்மைகள் சபை இதனைக் குறிப்பிட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8abff56-9849-4fe9-9c59-913860015833/26-6aa851764fc28.webp' /></p><p>இதற்கமைய, அஸ்வெசும நலன்புரிப் நன்மைகள் திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் பலனடையும் 9,99,053 குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் 9 பில்லினே 181 மில்லியனே 696 ஆயிரத்து 250 ரூபா நிதி வைப்புச் செய்யப்படவுள்ளது. </p><p>

அத்துடன், அதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் பலனடையும் 2,13,335 குடும்பங்களுக்கு 2 பில்லியனே 120 மில்லியனே 856 ஆயிரத்து 250 ரூபா நிதியை செலுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>

இதன்படி, இந்த நிதியை எதிர்வரும் 17ஆம் திகதி முதல் பயனாளிகள் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரிப் நன்மைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-14T19:57:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஹுங்கல்லையில் துப்பாக்கிச்சூடு முயற்சி ; மரணத்தின் விளிம்பில் இருந்து தப்பிய பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/attempted-shooting-woman-escapes-brink-death-1789414826"></link>
            <id>https://jvpnews.com/article/attempted-shooting-woman-escapes-brink-death-1789414826</id>
            <summary type="text">அம்பலாங்கொடை - அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிகந்த பகுதியில் உள்ள வீடொன்றிற்கு இன்று (14) இரவு பிரவேசித்த நபரொருவர், அங்கிருந்த பெண் மீது துப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பலாங்கொடை - அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிகந்த பகுதியில் உள்ள வீடொன்றிற்கு இன்று (14) இரவு பிரவேசித்த நபரொருவர், அங்கிருந்த பெண் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்ட போதிலும், துப்பாக்கி இயங்காத காரணத்தினால் அத்தாக்குதல் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.</p><p> </p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>சம்பவம் நடந்த நேரத்தில் குறித்த வீட்டில் அந்தப் பெண் மட்டுமே இருந்துள்ளதுடன், நபரொருவர் வந்து கதவைத் தட்டியதை அடுத்து அவர் கதவைத் திறந்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5480f5f9-17da-4561-89fa-c1dfa64d2617/26-6aa84dac3e4f2.webp' /></p><p>அந்தக் கணமே செயற்பட்ட அந்த நபர், பெண் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற போதிலும் துப்பாக்கி இயங்கவில்லை. 

இதனையடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்த வந்த நபர் அவ்விடத்திலிருந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

இவ்வாறு அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பெண், போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் பலமுறை சிறைவாசம் அனுபவித்த 'குடு நோனி' என்று அழைக்கப்படும் லியன கமகே அனோமா என்ற பெண் ஆவார். 

சம்பவம் தொடர்பில் அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-14T19:40:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[AI-க்கு எதிரான அபத்தமான சதி! செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான ஒழுங்குமுறைக்கு டிரம்ப் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-dismisses-ai-regulation-calls-1789413966"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-dismisses-ai-regulation-calls-1789413966</id>
            <summary type="text">Trump Dismisses AI Regulation Calls as a Sick Conspiracy: செயற்கை நுண்ணறிவுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump Dismisses AI Regulation Calls as a Sick Conspiracy: செயற்கை நுண்ணறிவுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><h2> ஆந்த்ரோபிக் CEO-யின் எச்சரிக்கை</h2><p>செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகத்தை குறைக்க வேண்டும் என பிரபல AI நிறுவனமான ஆந்த்ரோபிக்(Anthropic) தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி(Dario Amodei) சமீபத்தில் வலியுறுத்தி இருந்தார்.</p><p> செயற்கை நுண்ணறிவுத் துறையின் கட்டுப்பாடற்ற தொழில்நுட்ப வளர்ச்சி எதிர்காலத்தில் மனித குலத்தின் கட்டுப்பாட்டை மீறிச் சென்று விடும் அபாயம் இருப்பதாகவும் டாரியோ அமோடி எச்சரித்து இருந்தார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">We Must Pace the Frontier: I’ve written a new essay on why the AI industry should slow down, with a three-part plan for doing so.<br><br>Anthropic is unilaterally committing to the first of these steps. We’ll provide third-party evaluators with permanent, employee-level access to our…</p>&mdash; Dario Amodei (@DarioAmodei) <a href="https://x.com/DarioAmodei/status/2098773920774074715?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> ஆந்த்ரோபிக்-கின் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி முன்வைத்த செயற்கை நுண்ணறிவுக்கான கூடுதல் பாதுகாப்பு தேவைகளை ஓபன் ஏஐ(Open AI) நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேன், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ஆகியோரும் அங்கீகரித்து இருந்தனர்.</p><h2> டிரம்பின் நிலைப்பாடு</h2><p>
இந்நிலையில் செயற்கை நுண்ணறிவுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னுடைய நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p> &nbsp;ஆந்த்ரோபிக் CEO டாரியோ அமோடி முன்வைத்த கடுமையான தடைகள் தொடர்பான தேவைகள் மற்றும் வாதங்களை டிரம்ப் கடுமையாக நிராகரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a780ac8-aa70-4014-ab6c-4826558b588a/26-6aa84a4fa7e4c.webp' /></p><p> இது தொடர்பாக தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்ட கருத்தில், செயற்கை நுண்ணறிவு துறையின் வளர்ச்சியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அனைத்தும் இந்த துறைக்கு எதிரான ஒரு அபத்தமான சதி(Sick Conspiracy) என்று தெரிவித்துள்ளார்.</p><p> மேலும் அந்த பதிவில், ஆந்த்ரோபிக் CEO டாரியோ அமோடி-வை டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p> குறிப்பாக, டாரியோ அமோடியை கிண்டல் செய்யும் வகையில், “அவர் தன்னை பரிசுத்தமான சிறிய தேவதை போல் காட்டிக் கொள்வதாக” குற்றஞ்சாட்டியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-14T19:26:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானிய சமூகத்தை சீர்குலைக்க திட்டமிடும் அமெரிக்க பொருளாதாரத் தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-us-plans-to-destabilize-iranian-society-1789413759"></link>
            <id>https://ibctamil.com/article/the-us-plans-to-destabilize-iranian-society-1789413759</id>
            <summary type="text">அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் மூலம் ஈரானிய சமூகத்தை சீர்குலைத்து, நாட்டில் சமூகக் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக ஈரான் ஜனாதிபதி மசூத் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் மூலம் ஈரானிய சமூகத்தை சீர்குலைத்து, நாட்டில் சமூகக் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
</p><p>ஈரானில் தொழிலாளர் அமைச்சகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் ஊடாக ஈரானில் சமூக வீழ்ச்சியை ஏற்படுத்துவதே அதன் நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
மேலும், வெளிநாடுகளில் வசிக்கும் சில ஈரானியர்கள் நாட்டின் எதிரிகளுடன் இணைந்து செயல்பட்டு, ஈரானுக்குள் உள்ள மக்களிடையே குழப்பத்தையும் பிளவையும் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>அமெரிக்க திறைசேரி</h2><p>
அமெரிக்க திறைசேரி கடந்த ஆகஸ்ட் 24ஆம் திகதி “Operation Economic Outcast” என்ற நடவடிக்கையை அறிவித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c119c591-02aa-442e-8d92-03601273e1d3/26-6aa8498155fe5.webp' /></p><p>ஈரானின் வெளிநாட்டு வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் வருவாயைத் துண்டிப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அதேவேளை, அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நடவடிக்கைகள் மற்றும் கடுமையாக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் காரணமாக ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதுடன், அந்நாட்டின் வெளிநாட்டு நாணய அணுகலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இதன் விளைவாக ஈரானிய பொருளாதாரத்தின் மீதான அழுத்தம் மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அமெரிக்காவின் பொருளாதார மற்றும் வர்த்தக அழுத்தங்களுக்கு மத்தியில் ஈரானிய அரசாங்கம் எதிர்கொள்ளும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்கள் தொடர்பில் பெசெஷ்கியானின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T19:23:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் ; பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dehiwala-hand-grenade-attack-police-release-detail-1789413718"></link>
            <id>https://jvpnews.com/article/dehiwala-hand-grenade-attack-police-release-detail-1789413718</id>
            <summary type="text">கொழும்பு தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல முக்கிய தகவல்களை வெளிக்கொணர்வதில் பொலிஸார் வெற்றியடைந்துள்ளனர். 

சம்பவம் குறித்து மேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல முக்கிய தகவல்களை வெளிக்கொணர்வதில் பொலிஸார் வெற்றியடைந்துள்ளனர்.</p><p></p><p> 

சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளான படோவிட்ட அசங்க மற்றும் குடு அவிஷ்க ஆகியோரின் குழுக்களுக்கு இடையே நிலவிய பகையே இக்கைக்குண்டுத் தாக்குதலுக்குக் காரணம் என பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர். </p><p>

அத்துடன், குண்டுத் தாக்குதலை நடத்த வந்த சந்தேகநபர் மற்றும் முச்சக்கரவண்டி சாரதியின் தொலைபேசித் தரவுகள் மூலமும் பல தகவல்கள் பொலிஸாரால் பெறப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efc78103-c973-484c-b2f8-bbea0f70cd24/26-6aa849590b420.webp' /></p><p> 

மேலும், இத்தாக்குதலை நடத்துவதற்காக சந்தேகநபர்கள் நெதிமால ஆசிரி மாவத்தை பகுதியிலிருந்து முச்சக்கரவண்டியில் புறப்பட்டுச் செல்லும் காட்சிகள் அடங்கிய CCTV காட்சிகளும் கண்டறியப்பட்டுள்ளன. </p><p>

அவிஷ்கவின் நெருங்கிய கூட்டாளியான 'கொஸ்மல்லி' என்ற குற்றவாளியின் மாமாவும் அவரது கோஷ்டியைச் சேர்ந்த ஒருவருமே இத்தாக்குதலை வழிநடத்தியுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p> 

சந்தேகநபர் தெஹிவளை, வனரதன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், அவரைக் கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளன. </p><p>

அவிஷ்க குழுவின் முதன்மை கூலிப்படை கொலையாளியாக இவரே செயற்பட்டுள்ளார் என்றும், கல்கிஸ்ஸை மற்றும் தெஹிவளை பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் இவருக்குத் தொடர்புள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். </p><p>

இச்சம்பவம் குறித்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கின் நேரடி மேற்பார்வையில் ஒரு பொலிஸ் குழுவும், மேல் மாகாண தெற்கு திசைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சமந்த விஜேசேகர தலைமையில் 3 பொலிஸ் குழுக்களும் விசாரணைகளை நடத்தி வருகின்றன.</p><p> 

இதன்படி, கைக்குண்டுத் தாக்குதலுக்காக குற்றவாளிகள் வந்த முச்சக்கரவண்டியின் நிறத்தை மாற்றுவதற்காக அதை பழுது பாரக்கும் நிலையம் ஒன்றுக்கு ஒப்படைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரும், அந்த நிலையத்தின் உரிமையாளரும் கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர். </p><p>

குறித்த முச்சக்கரவண்டி களுத்துறை நாகொட பகுதியில் வைத்து திருடப்பட்டு, பின்னர் தெஹிவளை நெதிமால பகுதியில் உள்ள பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றில் வைத்து அதன் நிறம் மாற்றப்பட்டுள்ளமை கல்கிஸ்ஸை பிரிவின் பொறுப்பதிகாரிக்கு தெரியவந்துள்ளது.</p><p> </p><p></p><p>அதனடிப்படையிலேயே அந்த நிலைய்த்தின் உரிமையாளரான 36 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>அத்துடன், முச்சக்கரவண்டியை அங்கு கொண்டு வந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதேவேளை, வீட்டிற்குள் கைக்குண்டை வீசிய சந்தேகநபரும், முச்சக்கரவண்டி சாரதியும் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் தற்போது அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>

வீட்டின் மீது கைக்குண்டு வீசியதாக சந்தேகிக்கப்படும் நபர் அத்திட்டிய மாந்திரிமுல்ல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவராவார். </p><p>இவர், கல்கிஸ்ஸை பொது மயானத்தின் காவலாளியாக செயற்பட்ட 'செண்டோ' என்ற குற்றவாளியின் தந்தையை சுடுவதற்கு வந்த துப்பாக்கிச் சூட்டாளர்களுக்கு தங்குமிட வசதி அளித்துள்ளமையுடன், கடந்த ஓகஸ்ட் 01 ஆம் திகதி 'குடு அஞ்சு' என்பவனின் காசாளரை படுகொலை செய்த நபர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

விசாரணைகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டாலும், இந்தச் சம்பவத்தில் நெஞ்சைப் பிளக்கும் உண்மை என்னவெனில், இந்த குண்டுத் தாக்குதல் தவறான வீட்டை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ளது என்பதை பொலிஸார் கண்டறிந்துள்ளமையாகும்.</p><p> 

தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது கடந்த 11 ஆம் திகதி அதிகாலை நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரு அப்பாவிச் சிறுவர்கள் உயிரிழந்தனர். </p><p>

தாயின் அரவணைப்பும் இன்றி, தந்தையின் பாதுகாப்பில் வளர்ந்து வந்த 17 வயதான கசுன் ரஷ்மிக மற்றும் அவரது சகோதரரான 11 வயதான துமிந்த கிஹான் ஆகிய இருவருமே இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர்.</p><p> 

பாதாள உலகத்தைப் பற்றி எதுவுமே அறியாத, தாயின் குறையையும் போக்கி தங்களை வளர்த்த தந்தையுடன் ஆயிரம் கனாக்களுடன் வாழ்ந்த இரு அப்பாவி சிறுவர்களுமே இந்த குண்டுத் தாக்குதலால் தங்களின் உயிர்களை வீணாகப் பலி கொடுத்துள்ளனர்.</p><p> 

இத்தாக்குதலில் சிறுவர்களின் தந்தையின் காலில் பலத்த காயம் ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி அவரது ஒரு கால் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4c3bd22-66ea-4636-b722-f8350af72916/26-6aa849585065c.webp' /></p><p> </p><p>

பாதாள உலகத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாத, முச்சக்கரவண்டி ஓட்டி தனது இரு பிள்ளைகளையும் காப்பாற்றி வந்த அந்த அன்புத் தந்தை, தற்போது ஒரு காலை இழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p> 

மனைவியும் இல்லாத சூழலில், தான் ஆசையாக வளர்த்த இரு பிள்ளைகளின் முகத்தைக் கூட கடைசி நேரத்தின் போது நேரில் பார்க்க முடியாமல், வைத்தியசாலைக் கட்டிலில் கண்ணீர் வடித்தபடி அந்தத் தந்தை தவிக்கின்றார்.</p><p>இதேவேளை, இந்த இரு சிறுவர்களின் படுகொலை தனது இதயத்தை உலுக்கிய சம்பவமாகும் எனக் குறிப்பிட்டு இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரூ பிரான்ஸ் (Marc-André Franche) எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். </p><p>

எந்தவொரு குழந்தையும் ஒருபோதும் இத்தகைய வன்முறைக்கு பலியாகக் கூடாது என்றும், இந்த சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் அதற்கு பதிலளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், உயிரிழந்த சிறுவர்களின் உறவினர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். </p><p>

ஒரு கிராமத்தையே அழவைத்துவிட்டு அநியாயமாகப் பிரிந்த இந்த சிறு சகோதரர்களின் இறுதிக்கிரியைகள் இன்று கல்கிஸ்ஸை பொது மயானத்தில் இடம்பெற்றன. </p><p>

இறுதியில்... தங்கள் உயிர் ஏன் பறிக்கப்பட்டது என்று கூட அறியாமல் விடைபெற்ற இந்த அப்பாவிச் சிறுவர்கள், இந்த சமூகம் எவ்வளவு பாதுகாப்பற்றது, பயங்கரமானது என்பதைக் காட்டிக் கொடுத்துவிட்டு நாடே கண்ணீர் சிந்த உலகை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-14T19:22:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள மாட்டோம்! ஒப்புக் கொண்ட உக்ரைன் - ரஷ்யா: டிரம்ப் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-says-ukraine-russia-accept-to-halt-attacks-1789407597"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-says-ukraine-russia-accept-to-halt-attacks-1789407597</id>
            <summary type="text">Trump Says Ukraine and Russia Accept to Halt Attacks: &amp;nbsp;ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள மாட்டோம் என்று ரஷ்யாவும்,&amp;nbsp; உக்ரைனும் ஒப்புக் கொண்டதாக டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump Says Ukraine and Russia Accept to Halt Attacks: &nbsp;ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள மாட்டோம் என்று ரஷ்யாவும்,&nbsp; உக்ரைனும் ஒப்புக் கொண்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><h2> எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்க மாட்டோம்</h2><p>
உக்ரைனும், ரஷ்யாவின் இனி எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்கிக் கொள்ள மாட்டோம் என்று ஒப்புக் கொண்டு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>மேலும், உலகளாவிய அளவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு மத்திய கிழக்கில் நடந்து வரும் போர் காரணம் இல்லை என்றும், உக்ரைன் - ரஷ்யா இடையே நடந்து வரும் மோதல்களே காரணம் என்றும் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>இது தொடர்பாக தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் தகவல் பதிவிட்டுள்ள டிரம்ப், ரஷ்யாவின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது இனி தாக்குதல் நடத்த மாட்டோம் என்று உக்ரைன் தெரிவித்து இருப்பதாகவும், ரஷ்யாவும் அவ்வாறே ஒப்புக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf003e7d-46e1-47fb-b6c8-d5389ae829eb/26-6aa8316ed80fa.webp' /></p><p> மேலும் அதில் உலகின் டீசல் விலை ஏற்றத்திற்கு ரஷ்யா - உக்ரைன் போர் தான் காரணம், ஈரான் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>நேட்டோ ஆதரவை பெறும் உக்ரைன்</h2><p>இதற்கிடையில் உக்ரைனுக்கான ஆதரவை நேட்டோ அதிகரிக்கும் என்று அந்த அமைப்பின் தலைவர் மார்க் ரூட்டே தெரிவித்துள்ளார்.</p><p> உக்ரைனுக்கு எதிராக மோசமான தாக்குதல்களை ரஷ்யா தொடர்ந்து வருகிறது. இதன்மூலம் மேலும் மேலும் ரஷ்ய பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு வருகிறது.</p><p> உக்ரைனுக்கு நேட்டோ ஆதரவு அளிப்பதை யாராலும் தடுத்துவிட முடியாது என்றும், நேட்டோவின் ஒற்றுமையை சிதைத்து விட முடியும் என்று ரஷ்யா நினைக்கிறது. ஆனால் அது தவறு என்றும் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-14T19:19:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசிய கப்பல் விபத்தில் 129 பேரைக் காணவில்லை - தேடுதல் பணிகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/129-missing-in-indonesian-ship-accident-1789410705"></link>
            <id>https://tamilwin.com/article/129-missing-in-indonesian-ship-accident-1789410705</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் ஜாவா கடற்பகுதியில் 243 பயணிகளுடன் பயணித்த கப்பலொன்று சீரற்ற
வானிலை காரணமாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 129 பேர் காணாமல்போயுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் ஜாவா கடற்பகுதியில் 243 பயணிகளுடன் பயணித்த கப்பலொன்று சீரற்ற
வானிலை காரணமாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 129 பேர் காணாமல்போயுள்ளதாக
அந்நாட்டு தேடுதல் மற்றும் மீட்பு முகவரகம் தெரிவித்துள்ளது.
</p><p>
சுராபாயா நகரிலிருந்து போர்னியோ தீவின் பஞ்சார்மாசின் துறைமுக நகரை நோக்கிப்
பயணித்த 'வர்ஜோ ட்ரான்ஸ்போர்ட் 8' (Virgo Transport 8) என்ற கப்பலே இவ்வாறு
விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><h2>மீட்புப் பணிகளை முன்னெடுப்பதில்</h2><p>
இதுவரை இடம்பெற்ற மீட்பு நடவடிக்கைகளின் போது 108 பேர் பத்திரமாக
மீட்கப்பட்டுள்ளதுடன், ஆறு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/090071a2-2da1-4492-aa05-104594ab84bb/26-6aa847bd08a04.webp' /></p><p>
காணாமல்போனவர்களைத் தேடும் பணிகளில் 600இற்கும் மேற்பட்ட மீட்புப்
பணியாளர்களும் 12 கப்பல்களும் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.</p><p>

இருப்பினும், அப்பகுதியில் நிலவும் பலத்த காற்று, கொந்தளிப்பான கடல் அலைகள்
மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக மீட்புப் பணிகளை முன்னெடுப்பதில் பெரும்
சவால்கள் நிலவுவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T19:15:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சட்டவிரோத மணல் கடத்தல் ; இரு டிப்பர்கள் மீது அதிரடிப்படையினர் துப்பாக்கிச்சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shots-fired-tipper-involved-sand-smuggling-jaffna-1789412280"></link>
            <id>https://jvpnews.com/article/shots-fired-tipper-involved-sand-smuggling-jaffna-1789412280</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், கொடிகாமம் - மீசாலை வடக்கு புத்தூர் வீதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்று, சமிக்ஞையை மீறி தப்பிச் செல்ல முயன்ற இரண்டு டிப்பர் வாகனங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், கொடிகாமம் - மீசாலை வடக்கு புத்தூர் வீதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்று, சமிக்ஞையை மீறி தப்பிச் செல்ல முயன்ற இரண்டு டிப்பர் வாகனங்கள் மீது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.</p><p></p><h3>பொலிஸார் மேலதிக விசாரணை</h3><p> </p><p>

நேற்று இரவு 11.15 இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/705cbe19-d6a3-4642-90a0-5ff928a5c600/26-6aa843ba81532.webp' /></p><p>சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற இரு டிப்பர் வாகனங்களை புத்தூர் வீதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வழிமறித்துள்ளனர். </p><p>

இருப்பினும், அவர்களின் சமிக்ஞையை மீறி வாகனங்கள் நிறுத்தப்படாமல் வேகமாகச் சென்றுள்ளன. </p><p>

இதனையடுத்து, அதிரடிப்படையினர் குறித்த டிப்பர் வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி அவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். </p><p>

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சோதனையில் இரு டிப்பர் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவற்றைச் செலுத்தி வந்த சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.</p><p> 

இச்சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-14T18:58:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் சோகம்: 2 இளைஞர்கள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-participants-dies-in-great-north-run-1789411762"></link>
            <id>https://news.lankasri.com/article/2-participants-dies-in-great-north-run-1789411762</id>
            <summary type="text">2 Participants Dies in Great North Run: பிரித்தானியாவில் நடைபெற்ற கிரேட் நார்த் ரன் போட்டியில் இரண்டு பங்கேற்பாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>2 Participants Dies in Great North Run: பிரித்தானியாவில் நடைபெற்ற கிரேட் நார்த் ரன் போட்டியில் இரண்டு பங்கேற்பாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> இருவர் உயிரிழப்பு</h2><p>உலகின் மிகப்பெரிய அரை மாரத்தான் போட்டியாக கருதப்படும் கிரேட் நார்த் ரன்(Great North Run) போட்டியில் இரண்டு பங்கேற்பாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> நியூகேஸில்(Newcastle) முதல் சவுத் ஷீல்ட்ஸ்(South Shields) வரை நடைபெற்ற 13.1 மைல் தூரப் அரை மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் வடகிழக்கு பகுதியை நேர்ந்த இரண்டு 25 வயது இளைஞர்கள் திடீரென மயங்கி விழுந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d08605f5-3365-44b7-ab06-388ac54e0839/26-6aa841b3aa132.webp' /></p><p> அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் வழங்கப்பட்ட போதிலும் இருவரும் பரிதாபமாக உயிரிழந்ததாக கிரேட் ரன் கம்பெனி அறிவித்துள்ளது.</p><p> உயிரிழப்புக்கான அதிகாரப்பூர்வ காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை கருத்தில் கொண்டு மேற்கண்ட விவரங்கள் எதுவும் வெளியிடப்படாது என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p> ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற இந்த அரை மாரத்தான் போட்டியில் கிட்டத்தட்ட 63,000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.</p><p> மேலும் இந்த ஓட்டப் பந்தயத்தில் மற்றொரு முக்கியமான நிகழ்வாக, இதில் பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ஹாம் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.</p><p> இதன் மூலம் இந்த போட்டியில் பங்கேற்ற முதல் பிரித்தானிய பிரதமர் என்ற பெருமையை அவர் ஆண்டி பர்ஹாம் பெற்றுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-14T18:49:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ குறித்து சஜித் எச்சரிக்கை ; பேரழிவுக்கு முன்பே தயாராக வேண்டும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sajith-warn-about-el-ni-no-before-disaster-strikes-1789411615"></link>
            <id>https://jvpnews.com/article/sajith-warn-about-el-ni-no-before-disaster-strikes-1789411615</id>
            <summary type="text">சர்வதேச காலநிலை அமைப்புகளின் தரவுகளின்படி &#039;எல் நினோ&#039; காலநிலையில் மாற்றம் ஏற்படுவது 100 சதவீதம் உறுதியாகியுள்ளதால், பேரழிவைத் தடுப்பதற்கான தயார்நிலையை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச காலநிலை அமைப்புகளின் தரவுகளின்படி 'எல் நினோ' காலநிலையில் மாற்றம் ஏற்படுவது 100 சதவீதம் உறுதியாகியுள்ளதால், பேரழிவைத் தடுப்பதற்கான தயார்நிலையை அதிகரிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

பேரழிவுகள் நிகழ்ந்த பின்னர் நிவாரணம் வழங்குவதில் கவனம் செலுத்துவதை விடுத்து, முன்னெச்சரிக்கையாக , முன்கூட்டியே தயாராகுவதிலும் பாதிப்புகளைக் குறைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e10a141c-964d-468b-bbd8-593eaa28f161/26-6aa84120e0d8e.webp' /></p><p>

பாரம்பரியமாக, ஒரு பேரழிவு தாக்கிய பின்னரே இலங்கை அதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறது.
</p><p>
பேரழிவு குறித்து முன்னெச்சரிக்கை விடுக்கப்படும்போதெல்லாம், அதன் பாதிப்புகளைக் குறைப்பதற்கும் முன்கூட்டியே தயாராகுவதற்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-14T18:47:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாணவர்களின் ஆரோக்கியத்திற்காக இங்கிலாந்து அரசாங்கம் எடுத்த அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bold-move-by-the-uk-government-students-health-1789410385"></link>
            <id>https://canadamirror.com/article/bold-move-by-the-uk-government-students-health-1789410385</id>
            <summary type="text">இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் வழங்கப்பட்டு வரும் உணவுகளில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சிறுவர்களின் ஆரோக்கியத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் வழங்கப்பட்டு வரும் உணவுகளில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>
</p><p>சிறுவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கிலும், சிறுவர் பருமன் (Childhood obesity) பிரச்சனையைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் இந்த புதிய கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd05831b-d1c1-46cc-87cd-b3173067cf2a/26-6aa83c531fbaf.webp' /></p><p>இந்தப் புதிய விதிமுறைகளின் கீழ், பாடசாலைகளில் பொரித்த உணவுகள் (Deep-fried food) முழுமையாகத் தடை செய்யப்படுவதோடு, புதிய பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்துள்ள உணவுகள் மற்றும் முழு தானியங்கள் ஆகியவற்றின் பயன்பாடு அதிகரிக்கப்படவுள்ளது.
</p><p>
அத்துடன், இனிப்புப் பண்டங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளின் பயன்பாடு வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறைகளாகக் கட்டுப்படுத்தப்படவுள்ளது.</p><p>

அதன்படி, பேஸ்ட்ரி வகைகள், பொரித்த முட்டைகள் மற்றும் அதிக சீனியைக் கொண்ட தானிய உணவுகள் வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பாடசாலைகள் தங்களின் உணவு அட்டவணைகளை இணையத்தில் வெளியிட வேண்டும் என்பதுடன், உணவுத் தரநிலை ஆய்வகத்துடன் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-14T18:26:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகளாவிய முதலீட்டாளர்களை ஈர்க்க கனடா பிரதமர் மார்க் கார்னி தீவிர முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mark-carney-effort-to-attract-global-investors-1789408257"></link>
            <id>https://tamilwin.com/article/mark-carney-effort-to-attract-global-investors-1789408257</id>
            <summary type="text">நாட்டின்
பொருளாதாரத்தைச் சீரமைக்கும் நோக்கில் சர்வதேச அளவிலான முன்னணி
முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான இரண்டு நாட்கள் மாநாட்டை கனடா பிரதமர் மார்க்
கார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின்
பொருளாதாரத்தைச் சீரமைக்கும் நோக்கில் சர்வதேச அளவிலான முன்னணி
முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான இரண்டு நாட்கள் மாநாட்டை கனடா பிரதமர் மார்க்
கார்னி டொரான்டோவில் ஆரம்பித்து வைத்துள்ளார்.
</p><p>
சுமார் 160 க்கும் மேற்பட்ட பல்வேறு திட்டங்களுக்காக 1 டிரில்லியன் கனடிய
டொலர்களை அடுத்த ஐந்து ஆண்டுகளில் திரட்டுவதை இலக்காகக் கொண்டு இந்த மாநாடு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இதில் பிளக்ரொக் தலைமை நிர்வாகி லாரி ஃபிங்க் மற்றும் பிளக்ஸ்டோன் தலைவர் ஜோன்
கிரே உள்ளிட்ட உலகின் முன்னணி நிதி நிறுவனங்களின் தலைவர்கள் பலர்
கலந்து கொண்டுள்ளனர்.</p><h2>வர்த்தக உறவு</h2><p>
</p><p>
சுரங்கம், எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்து போன்ற முக்கிய
துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதையே கனடா முதன்மையாக நோக்கமாகக் கொண்டுள்ளது.
</p><p>
குறிப்பாக, அல்பர்ட்டா மற்றும் நியூ பிரன்சுவிக் பகுதிகளில் தரவு மையங்கள்,
ஆல்பர்ட்டாவின் ஹைட்ரஜன் திட்டங்கள் மற்றும் கல்கரிக்கும் எட்மண்டனுக்கும்
இடையிலான அதிவேக போக்குவரத்துத் திட்டம் போன்றவை இம்மாநாட்டில் சர்வதேச
முதலீட்டாளர்களுக்குக் காட்சிப்படுத்தப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1349d293-b5dc-4a33-9b52-d055079278b3/26-6aa8383fd6a6c.webp' /></p><p>
</p><p>
அமெரிக்கா விதித்துள்ள வரி விதிப்புகளால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளை
ஈடுசெய்யவும், உலகளாவிய முதலீடுகளை அதிகரிக்கவும் மத்திய கிழக்கு, ஆசியா
மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தக உறவுகளைப் பலப்படுத்த கனடிய அரசாங்கம்
நடவடிக்கை எடுத்து வருகிறது.
</p><p>
எனினும், இம்மாநாட்டின் மூலம் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டாலும்,
மிகப்பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக குறைந்தது 12 முதல் 18 மாதங்கள் வரை
ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T18:22:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருணா - டக்ளஸ் கைது தாமதம் ஏன்..! 80 இலட்சம் ஊழல் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/delay-in-arresting-karuna-and-douglas-1789405381"></link>
            <id>https://tamilwin.com/article/delay-in-arresting-karuna-and-douglas-1789405381</id>
            <summary type="text">தென்னிலங்கையில் இன்று கைது விவகாரம் சூடுபிடித்திருக்கின்ற நிலையில் வடக்கு கிழக்கிலே பல மக்கள் அநாதரவாக்கப்படுவதற்கும் காரணமாக இருந்த ஒட்டுக் குழுக்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னிலங்கையில் இன்று கைது விவகாரம் சூடுபிடித்திருக்கின்ற நிலையில் வடக்கு கிழக்கிலே பல மக்கள் அநாதரவாக்கப்படுவதற்கும் காரணமாக இருந்த ஒட்டுக் குழுக்கள் விவகாரத்திலே பிள்ளையானை மட்டும் ஏன் கைது செய்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்ணணியின் ஊடகப்பேச்சாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான சுகாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.&nbsp;</p><p>லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>

இவர்கள் ஏன் பிள்ளையானின் தலைவனான கருணாவை கைது செய்யவில்லை. அதாவது தற்பேோது எடுபிடிகளையும் அடியாட்களையும் தான் கைது செய்கின்றார்கள்.</p><p>

யாழ்ப்பாணத்தில் பல கடத்தல்களையும் கொலையையும் செய்த டக்ளஸ் தேவானந்தாவை ஏன் கைது செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/zJao2wvCNU4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T18:06:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை மறுதினம் வடக்கிற்கு வருகிறார் ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/anura-visiting-the-north-the-day-after-tomorrow-1789404868"></link>
            <id>https://ibctamil.com/article/anura-visiting-the-north-the-day-after-tomorrow-1789404868</id>
            <summary type="text">அநுராதபுரம், திருகோணமலை, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரச வைத்தியசாலைகளில் 7148 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரம், திருகோணமலை, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரச வைத்தியசாலைகளில் 7148 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய கட்டடங்களுக்கு ஜனாதிபதி அடிக்கல் நாட்டவுள்ளார்.


அந்த வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புதன்கிழமை (16) மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.</p><p>&nbsp; ஜனாதிபதியின் இந்தப் பயணத்தின்போது, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகளில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டடத் தொகுதிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.</p><p> 

</p><h2>அடிக்கல் நடும் நிகழ்வு</h2><p>இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவரும் கலந்துகொள்ளவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/536f88d0-aa92-4713-8cdb-8c132c436d08/26-6aa836480f411.webp' /></p><p>
</p><p>
இதன்படி, மன்னார் மாவட்டத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டடமும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மருத்துவ விடுதிக்கான கட்டடமும் நிர்மாணிக்கப்படவுள்ள நிலையில், குறித்த கட்டடங்களுக்கான அடிக்கல் நடும் நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/wJDK9pWylLI" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T18:00:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருநாகலில் பாரிய தீ விபத்து ; கணினி நிலையத்திற்குள் நேர்ந்த பெரும் சேதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/major-fire-in-kurunegala-computer-center-damaged-1789408268"></link>
            <id>https://jvpnews.com/article/major-fire-in-kurunegala-computer-center-damaged-1789408268</id>
            <summary type="text">குருநாகல் - மஹவ நகரத்தில் இயங்கி வந்த கணினி பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தீப்பரவலில் குறித்த நிலையத்தில் இருந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருநாகல் - மஹவ நகரத்தில் இயங்கி வந்த கணினி பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.</p><p></p><p>

இந்தத் தீப்பரவலில் குறித்த நிலையத்தில் இருந்த அனைத்துக் கணினி உபகரணங்களும் எரிந்து அழிவடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9d10639-ecae-4014-8f22-ee6ee5e1f4cf/26-6aa8340e26dc8.webp' /></p><p>தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பிரதேசவாசிகளும் காவல்துறையினரும் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-14T17:51:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரந்தி ராஜபக்ச பொய் சொல்லி பெற்ற 1 கோடி! நாமலுக்கு ஏற்படவுள்ள சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-admit-hospital-cid-namal-1789406625"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-admit-hospital-cid-namal-1789406625</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச இந்த வாரத்தில் சிஐடிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளதாக வெளியான தகவலையடுத்து தான் அவர் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச இந்த வாரத்தில் சிஐடிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளதாக வெளியான தகவலையடுத்து தான் அவர் வைத்தியசாலைக்கு சென்றாரா என்கின்ற கேள்வி எழுகின்றது.</p><p>கொழும்பு ரிஜ்வே ஆரியா குழந்தைகள் மருத்துவமனைக்கு நன்கொடையாக CT ஸ்கேன் இயந்திரம் ஒன்றை வாங்குவதற்காக அரச வங்கி ஒன்றிடமிருந்து ஒரு கோடி ரூபாய் அந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.</p><p>இந்த விசாரணை&nbsp;ஷிரந்தி ராஜபக்ச உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய தரப்பினரை மையப்படுத்தியே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p>மேலும்,&nbsp;CT ஸ்கேன் இயந்திரம் வாங்குவதற்காக&nbsp;தேசிய சேமிப்பு வங்கியில் இருந்து பெறப்பட்ட ஒருகோடி ரூபாய் வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9Poe2i6CulQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T17:48:36+00:00</updated>
        </entry>
    </feed>
