<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-26T20:25:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மீதான தாக்குதல்! வெளியான கண்டன அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/association-relatives-of-the-disappeared-condemns-1787773821"></link>
            <id>https://ibctamil.com/article/association-relatives-of-the-disappeared-condemns-1787773821</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக நேற்று(25) நடைபெற்ற அமைதிவழிப் போராட்டத்தின் போது, பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட வல...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக நேற்று(25) நடைபெற்ற அமைதிவழிப் போராட்டத்தின் போது, பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மீது சிறீலங்கா காவல்துறையினர் தாக்கிய சம்பவத்தை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் (ARED) வன்மையாகக் கண்டித்துள்ளது.</p><p>
இது குறித்து தொடர்புடைய சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.</p><p>
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள், காணாமல் ஆக்கப்பட்ட தங்களது அன்பிற்குரியவர்களுக்காக உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை கோரி பல ஆண்டுகளாக அமைதியான முறையில் போராடி வரும் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் ஆவர். அவர்களின் தொடர்ச்சியான இப்போராட்டம், அமைதியாக ஒன்றுகூடுவதற்கான மற்றும் கருத்து தெரிவிப்பதற்கான சுதந்திரம் ஆகிய அவர்களின் அடிப்படை உரிமைகளின் வெளிப்பாடாகும்.</p><p>&nbsp;</p><h2>பெண்களுக்கு எதிரான வன்முறை&nbsp;</h2><p>

தங்கள் அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராக வன்முறையைப் பிரயோகிப்பதை உலகின் எந்தப் பகுதியிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக, உண்மை மற்றும் நீதியைப் பெறுவதற்கான தேடலில் 2 வருடங்களாகத் துன்பங்களையும் உளவியல் ரீதியான வடுக்களையும் தாங்கி நிற்கும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/898074b8-4373-4a7a-baa5-f3bf25f63dd6/26-6a8f45b6a6038.webp' /></p><p>
அமைதியான போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், முதியவர்கள் மற்றும் ஏனைய பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மீது உடலியல் ரீதியான வன்முறை மேற்கொள்ளப்பட்டமை குறித்து பெரும் கவலையடைகின்றோம். சூழ்நிலை எதுவாக இருப்பினும், சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கு நிதானத்தைக் கடைப்பிடிப்பதற்கும், மனித கண்ணியத்தைப் பேணுவதற்கும், அமைதியான முறையில் போராட்டம் நடத்துவோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பொறுப்பு உள்ளது.</p><h2>

அடிப்படை உரிமைகள் சார்ந்த விடயம்</h2><p>
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அமைதியான மற்றும் ஜனநாயக வழிகளில் நீதியைத் தேடுவதில் தங்களின் அர்ப்பணிப்பை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர். அவர்களின் போராட்டங்கள் பொது அமைதிக்கோ அல்லது தேசிய பாது காப்பிற்கோ அச்சுறுத்தலாகக் கருதப்படக்கூடாது.</p><p>

காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் (OMP) உட்பட அரசாங்க நிறுவனங்களை அமைதியான முறையில் கேள்விக்குட்படுத்துவதும், பயனுள்ள உண்மை கண்டறியும் மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளைக் கோருவதும் ஒரு ஜனநாயக சமூகத்தின் இன்றியமையாத கூறுகளாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f669cdf8-6917-4bf4-b073-c9f262fb5a6b/26-6a8f45b79a9a5.webp' /></p><p>

நீதி கோரிக்கைகளை முன்வைத்து தேசிய மற்றும் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தொடர்ந்து எடுத்து வரும் முயற்சிகளின் பின்னணியில் இன்றைய சம்பவம் நடந்துள்ளது என்பது எமக்கு மிகவும் கவலையளிக்கிறது.</p><p>
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களிடம் நீண்டகாலமாக உள்ள நியாயமான கேள்விகள் இவைதான்: </p><p>அவர்களின் அன்பிற்குரியவர்கள் எங்கே? அரசாங்கத்தின் பாதுகாப்பில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுபவர்களுக்கு என்ன நடந்தது? இதற்கு யார் பொறுப்பு? உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் அவர்களுக்கு எப்போது கிடைக்கும்?</p><p>
இக்கேள்விகளுக்கு அச்சுறுத்தல், வன்முறை அல்லது அடக்குமுறைகள் மூலம் பதிலளிக்க முடியாது.</p><h3>
சிறீலங்கா அரசாங்கத்திடம் நாங்கள் கோருவது:</h3><ol><li>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.</li><li>இன்று காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் வன்முறை குறித்து சுயாதீனமான, நடுநிலையான மற்றும் வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும்.
</li><li>சட்டவிரோதமான அல்லது அளவுக்கு அதிகமான பலப்பிரயோகத்திற்கு காரணமானவர்கள் மீது பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும்.
</li><li>பாதிக்கப்பட்டவர்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் அமைதியாக ஒன்று கூடும் உரிமை மற்றும் கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
</li><li>அமைதியான போராட்டங்களில் பங்கேற்கும் பெண்கள் அச்சுறுத்தல், துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளிலிருந்து பாது காக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
</li><li>காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு வன்முறை அல்லது அடக்குமுறை மூலம் பதிலளிப்பதற்குப் பதிலாக, அவர்களுடன் அர்த்தமுள்ள வகையில் கலந்துரையாட வேண்டும்.
</li><li>உள்நாட்டு பொறிமுறையை நாம் நம்பிக்கை பெறும் வகையில் இயங்குவதை உறுதிசெய்ய வேண்டும், இதன் அர்த்தம் நாம் உள்நாட்டு பொறிமுறையை வலுபடுத்துமாறு கோருகின்றோம்.</li></ol><h2>
சர்வதேச சமூகத்திற்கு</h2><p>
இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் நிலைமையை கூர்ந்து கவனிக்குமாறு சர்வதேச சமூகம், ஐக்கிய நாடுகள் சபை, தூதரகங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.</p><p>
உண்மை மற்றும் நீதியை அமைதியான முறையில் தொடர்ந்து கோரி வரும் பாதிக்கப்பட்ட மக்களை நடத்தும் விதமே, இலங்கையின் உள்நாட்டுப் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் பொறிமுறைகளின் நம்பகத்தன்மையை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான குறிகாட்டியாகும் என்பதை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3750ede7-f2d1-4543-a19a-d432e7cef41c/26-6a8f45b85207c.webp' /></p><p>
காணாமல் ஆக்கப்பட்ட தன் குழந்தைக்கு என்ன நடந்தது என்று அறியக் கோரும் ஒரு அமைதியான தாயை ஒருபோதும் வன்முறையோடு எதிர்கொள்ளக் கூடாது. நீதியைக் கோரும் ஒரு பாதிக்கப்பட்ட நபரை ஒருபோதும் குற்றவாளியாக நடத்தக் கூடாது.</p><p>
இக்குடும்பங்களின் தொடர்ச்சியான துயரங்கள் இயல்புநிலையாக மாற அனுமதிக்கப்பட முடியாது.</p><p>
எனவே, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான இலங்கையின் முன்னேற்றம், பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு, அமைதியாக ஒன்றுகூடும் சுதந்திரம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் ஆகியவற்றை சர்வதேச சமூகம் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். ” எனக் கூறப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...! </h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T20:02:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென ஏற்பட்ட கோர அனர்த்தம் - 150ஐ தாண்டிய உயிரிழிப்புக்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nepal-flood-death-toll-increased-157-1787771151"></link>
            <id>https://tamilwin.com/article/nepal-flood-death-toll-increased-157-1787771151</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.பல...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><h2>பலி எண்ணிக்கை&nbsp;</h2><p>வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிர மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை 157 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p> முன்னதாக, இந்த வெள்ளப்பெருக்கில் 100 பேர் வரை உயிரிழந்ததாக அதிகாரிகளால் தகவல் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில், தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வெளிநாட்டு செய்திகள் குறிப்பிடுகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b129e7d0-2645-4741-b70a-58c821176fe8/26-6a8f3aa3bc0b7.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T20:00:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நொடிப்பொழுதில் அரங்கேறிய அசம்பாவிதம்; பாதுகாப்பு தரப்பினர் உட்பட 579 பேர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sudden-tragedy-579-including-troops-missing-1787773338"></link>
            <id>https://jvpnews.com/article/sudden-tragedy-579-including-troops-missing-1787773338</id>
            <summary type="text">நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 579-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. காணாமல் போனவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 579-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. </p><p>காணாமல் போனவர்களில் 28 நாடுகளைச் சேர்ந்த 466 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p> </p><p>

<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b88bac5c-5bcc-49f6-9cfd-a92a2d9c1b7c/26-6a8f423664086.webp' /></p><h2>சுற்றுலாப் பயணிகள்</h2><p>அவர்களில் 100க்கும் மேற்பட்ட இந்தியர்களும், 54 அமெரிக்கர்களும், பிரித்தானியாவைச் சேர்ந்த 33 பேரும் அடங்குகின்றனர்.</p><p> </p><p>

திபெத் எல்லையை ஒட்டியுள்ள ரசுவா மாவட்டத்தில் உள்ள கிராமங்களை, இன்று (26) காலை போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட கடும் திடீர் வெள்ளம் அடித்து சென்றதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95-ஆக உயர்ந்துள்ளது.</p><p></p><p> 

இந்த திடீர் வெள்ளத்தால் வீதிகள், நீர்மின் திட்டங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன. </p><p>

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக நேபாள இராணுவம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான 30-க்கும் மேற்பட்ட ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T19:44:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ! 14 பச்சிளங்குழந்தைகள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/14-babies-killed-in-pakistan-hospital-fire-1787772173"></link>
            <id>https://ibctamil.com/article/14-babies-killed-in-pakistan-hospital-fire-1787772173</id>
            <summary type="text">பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள மிகப்பெரிய அரசு மருத்துவமனையான பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (PIMS) மகப்பேறு வார்டில்&amp;nbsp; ஏற்பட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள மிகப்பெரிய அரசு மருத்துவமனையான பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (PIMS) மகப்பேறு வார்டில்&nbsp; ஏற்பட்ட தீ விபத்தில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 14 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்துள்ளன.</p><p>இன்றையதினம்(26) புதன்கிழமை அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>

சம்பவத்தின்போது வார்டில் இருந்த 15 குழந்தைகளில் ஒரு குழந்தை மருத்துவரால் காப்பாற்றப்பட்டதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>தீ விபத்துக்குக் காரணம்</h2><p> </p><p>

இந்த விபத்து நடந்தபோது பிரசவித்த தாய்மார்கள் ஜன்னல்கள், ஏணிகள் மற்றும் படிகள் வழியாகச் சென்று உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfcc44b8-2c9c-4bb7-9085-464bb1c25575/26-6a8f3ef0c1b6a.webp' /></p><p><i>Image Credit:&nbsp;japantimes</i></p><p>
</p><p>
மகப்பேறு வார்டின் கதவு பூட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாக பணிப்பாளர், குழந்தைகள் திருடப்படுவதைத் தடுப்பதற்காகவே பாதுகாப்புப் பணியாளர் ஒருவர் அங்கு நிறுத்தப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இந்நிலையில், பழுதடைந்த குளிரூட்டும் கருவி (A/C) வெடித்ததே தீ விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், அங்கு பயன்படுத்தப்பட்ட ஒட்சிசன் சிலிண்டர்கள் தீயின் தீவிரத்தை மேலும் அதிகப்படுத்தியிருப்பதாக பாகிஸ்தான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T19:41:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நியூயார்க்கை 'நியூயார்க் மாகாணம்' என அழைப்போம் — டொரண்டோ மேயர் வேட்பாளர் சவால்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/province-of-new-york-toronto-mayoral-candidate-1787760704"></link>
            <id>https://canadamirror.com/article/province-of-new-york-toronto-mayoral-candidate-1787760704</id>
            <summary type="text">கனடாவுடனான வர்த்தகப் போரின் பின்னணியில் &#039;ஒன்டாரியோ ஏரி&#039;யின் பெயரை &#039;லேக் அமெரிக்கா&#039; என மாற்றப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்ததற்குப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவுடனான வர்த்தகப் போரின் பின்னணியில் 'ஒன்டாரியோ ஏரி'யின் பெயரை 'லேக் அமெரிக்கா' என மாற்றப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்ததற்குப் பதிலடியாக, டொரண்டோ மேயர் வேட்பாளர் பிராட் பிராட்ஃபோர்ட் அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தை "நியூயார்க் மாகாணம்" என அழைக்க வேண்டும் என நகைச்சுவையாகப் பதிலடி கொடுத்துள்ளார். </p><p>
சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட பிராட்ஃபோர்ட், ஒன்டாரியோ ஏரிக்கரையில் அமர்ந்தவாறு, "டிரம்ப் எங்களது ஏரியின் பெயரை மாற்ற விரும்பினால், நாங்களும் அவரது சொந்த மாநிலத்திற்குப் புதிய பெயர் வைப்போம்; அது வரலாற்று ரீதியாகவும் துல்லியமானது" எனக் குறிப்பிட்டார்.
</p><p>1664 முதல் 1776 வரை நியூயார்க் பகுதி பிரிட்டிஷ் காலனியாக இருந்தபோது 'நியூயார்க் மாகாணம்' என்றே அழைக்கப்பட்ட வரலாற்றை அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>[58HPGE
]</p><p> </p><p>எதிர்வரும் அக்டோபர் 26 அன்று நடைபெறவுள்ள நகராட்சித் தேர்தலில் தாம் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், நியூயார்க்கை அதன் பழமையான வரலாற்றைப் போற்றும் வகையில் "நியூயார்க் மாகாணம்" என்றே அழைப்பேன் என்றும், அதற்கான நினைவுப் பலகை ஒன்றை டிரம்ப் டவரில் உள்ள டிரம்பிற்கு அனுப்பி வைக்கத் தயார் என்றும் அவர் கூறினார். </p><p>
இரு நாடுகளுக்கும் பொதுவான ஏரியின் பெயரை மாற்றுவதாக அச்சுறுத்துவது டொரண்டோ மக்களின் தேசபக்தியைக் குறைக்காது என்று கூறிய பிராட்ஃபோர்ட், அமெரிக்காவின் புதிய வரிகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அனைவரும் கனடியப் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.</p><p> 
வாஷிங்டன் செய்வதை நம்மால் மாற்ற முடியாது, ஆனால் டொரண்டோ தனக்கான ஆதரவை எப்படி வெளிப்படுத்துகிறது என்பதை நம்மால் தீர்மானிக்க முடியும் என்றார். </p><p>
அதேவேளையில், மேயர் தேர்தலில் போட்டியிடும் மற்றொரு வேட்பாளரான கிறிஸ் அலெக்ஸாண்டர், பிராட்ஃபோர்டின் இந்த கருத்தைக் கண்டித்துள்ளார்.</p><p>அமெரிக்காவுடன் வரலாறு காணாத வர்த்தகப் போர் நிலவும் இக்கட்டான சூழலில், ஒரு வேட்பாளர் அமெரிக்க அதிபருடன் பெயர் விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்.</p><p> வர்த்தகப் போர் என்பது வேலைவாய்ப்புகள் மற்றும் முதலீடுகளுக்கு ஏற்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தல்; இது சுய விளம்பரம் செய்வதற்கான நேரமல்ல" என்று அவர் சாடியுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T19:15:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றத்தில் பொய் கூறும் சலே! நீதிமன்றத்தில் வெளியிடப்பட்ட அதிர்ச்சி தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-salley-easter-attacks-investigation-cid-1787769941"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-salley-easter-attacks-investigation-cid-1787769941</id>
            <summary type="text">அரசு புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசு புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றார்.&nbsp;</p><p>இந்நிலையில், அவர் நீதிமன்றத்தில் விசாரணையின் போது பொய்க் கூறியதாக சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p>மேலும், சுரேஷ் சலே, வழக்கை திசை திருப்பும் வகையில் செயற்படுவதாகவும்&nbsp;சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளனர்.&nbsp;</p><p>சலே, விசாரணைகளுக்கு போதிய ஒத்துழைப்பை வழங்குவதில்லை என்றும், தனது இலத்திரனியல் சாதனங்களின் கடவுச்சொற்களை வழங்க மறுப்பதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளது.&nbsp;</p><p>இவ்விசாரணைகள் தொடர்பில் நீதிமன்றில் வெளியிடப்பட்ட முக்கிய தகவல்களை ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/WeSldGG7Nfs" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T19:01:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளம்: நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு, இந்தியர்கள் உட்பட பலர் காணவில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-flash-floods-kill-157-hundreds-missing-1787771009"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-flash-floods-kill-157-hundreds-missing-1787771009</id>
            <summary type="text">Nepal flash floods hundreds missing: நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் 157 பேரின் உயிரை பறித்துள்ளது.

750-க்கும் மேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal flash floods hundreds missing: நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் 157 பேரின் உயிரை பறித்துள்ளது.
</p><h2>
750-க்கும் மேற்பட்டோர்&nbsp;காணவில்லை</h2><p>750-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இதில் குறைந்தது 133 இந்தியர்கள், குறிப்பாக 37 தமிழர்கள், மேலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அடங்குவர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f44cfb45-e76f-4958-bfac-287ae0458c44/26-6a8f38840ce03.webp' /></p><p>இந்த வெள்ளம் திபெத் பகுதியில் ஏற்பட்ட 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு மூன்று நிமிடங்களில் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>நிலநடுக்கத்தால் பனிச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்பதால், அதுவே வெள்ளத்திற்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
</p><p></p><p>வெள்ளம் போதே கோஷி ஆற்றில் பாய்ந்து, ராசுவா மற்றும் தாடிங் மாவட்டங்களை கடுமையாக பாதித்தது. திமுரே, சியாப்ரு பேசி போன்ற பகுதிகள் முற்றிலும் சேதமடைந்தன. வீடுகள், வாகனங்கள், பாலங்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
</p><p>
95 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 100 பேர் உயிருடன் மீட்கப்பட்டு, காத்மண்டுவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். </p><p></p><h2>தமிழ்நாட்டைச் சேர்ந்த...</h2><p>இந்தியாவில் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு சென்ற 50 யாத்திரிகர்கள் காணாமல் போயுள்ளனர். தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சேர்ந்த 37 சுற்றுலா பயணிகளும் தொடர்பில் இல்லை.
</p><p>
இந்த பேரழிவால் 354 மெகாவாட் திறன் கொண்ட 8 நீர்மின் திட்டங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் 19 பாலங்கள் முற்றிலும் அழிந்துள்ளன. சாலைகள் துண்டிக்கப்பட்டதால் மீட்பு பணிகள் கடினமாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/506b1589-90f8-4896-a639-36235a67b683/26-6a8f3884ba9ae.webp' /></p><p>
</p><h2>
பிரதமர் நரேந்திர மோடி</h2><p>இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவுடன் பேசி, அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தார். இந்திய தூதரகம் அவசர எண்களை வெளியிட்டு, காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.</p><p>

நேபாள அரசு 12 ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. </p><p>சீனாவும் தன் எல்லைப் பகுதியில் மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

இந்த பேரழிவு நேபாளத்தின் வடக்கு எல்லையில் மிகப்பெரிய மனிதாபிமான மற்றும் கட்டமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T19:00:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[22வது அரசியலமைப்புத் திருத்தத்தில் உறுதியாக நிற்கும் ஜனாதிபதி அநுர! வெளியாகியுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/anura-s-decision-on-22nd-constitutional-amendment-1787769846"></link>
            <id>https://ibctamil.com/article/anura-s-decision-on-22nd-constitutional-amendment-1787769846</id>
            <summary type="text">முன்மொழியப்பட்ட 22வது அரசியலமைப்புத் திருத்தம் மக்களுக்கு நீதியை உறுதி செய்யவும், நாட்டின் நீதித்துறை நடவடிக்கைகளை விரைவுபடுத்தவுமே கொண்டுவரப்படுவதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்மொழியப்பட்ட 22வது அரசியலமைப்புத் திருத்தம் மக்களுக்கு நீதியை உறுதி செய்யவும், நாட்டின் நீதித்துறை நடவடிக்கைகளை விரைவுபடுத்தவுமே கொண்டுவரப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
தேசிய மிலாத்-உன்-நபி நிகழ்வில் இன்றையதினம் உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். </p><p>

இந்தச் சீர்திருத்தத்தைச் சுற்றி சர்ச்சைகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், நீதி அமைப்பின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>​​மக்களின் நம்பிக்கை</h2><p>

அந்தவகையில், பொதுமக்களுக்கு சிறிதும் அநீதி இழைக்கும் எந்தவொரு முடிவையும் தனது அரசாங்கம் எடுக்காது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, வழக்குகள் பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருக்கும்போது, ​​மக்கள் நீதி அமைப்பின் மீது எவ்வாறு நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0101a7a-2a61-47ed-8d8e-eee074e94ae5/26-6a8f35b0e1bbc.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எதிர்ப்புகள் காரணமாக மாற்றப்படமாட்டாது என்றும், ஏதேனும் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டால் அவற்றைச் சரிசெய்ய தனது அரசாங்கம் எப்போதும் தயாராக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table></h5>]]></content>
            <updated>2026-08-26T19:00:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் திருவிழாவில் நடந்தது என்ன! ஆலயங்கள் மீது விரைவில் அரசின் அதிரடி சட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kilinochchi-temple-festival-new-law-on-temples-1787766873"></link>
            <id>https://tamilwin.com/article/kilinochchi-temple-festival-new-law-on-temples-1787766873</id>
            <summary type="text">அண்மையில், கிளிநொச்சியில் இடம்பெற்ற ஆலய திருவிழாவின் போது முன்னெடுக்கப்பட்ட நடன நிகழ்வுகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.&amp;nbsp;தமிழ் கலாசாரத்தை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில், கிளிநொச்சியில் இடம்பெற்ற ஆலய திருவிழாவின் போது முன்னெடுக்கப்பட்ட நடன நிகழ்வுகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.&nbsp;</p><p>தமிழ் கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கடும் கண்டனங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.&nbsp;</p><p>இலங்கை தமிழ் மக்களின் மற்றும் இந்து மதத்தின் மகத்துவத்தை கெடுக்கும் வகையில் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டாம் எனவும் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.&nbsp;</p><p>இந்நிலையில், இலங்கையில் உள்ள ஆலயங்களில் முக்கிய சட்டம் ஒன்று நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக அரச தரப்பில் இருந்து குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இது உட்பட நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jfUbfFv5RGU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T18:44:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் ருமேஷ் தரங்கவுக்கு கிடைத்த இடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rumesha-s-world-javelin-ranking-01-position-1787769638"></link>
            <id>https://jvpnews.com/article/rumesha-s-world-javelin-ranking-01-position-1787769638</id>
            <summary type="text">பொதுநலவாய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்க வென்ற இலங்கையின் ருமேஷ் தரங்க, உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளார். 

...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பொதுநலவாய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்க வென்ற இலங்கையின் ருமேஷ் தரங்க, உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளார்.</p><p style="text-align: justify;"> 

சுவிட்சர்லாந்தின் லோசான் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகளத் தொடரின் 12 ஆவது சுற்றில் அவர் வெளிப்படுத்திய திறமை காரணமாகவே இந்த முதலிடத்தைப் அவரால் பெற முடிந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e3393a9-32ed-4fa2-93c1-8b6cb16bf39d/26-6a8f3327c0915.webp' /></p><h2 style="text-align: justify; ">புதிய தரவரிசை</h2><p> </p><p style="text-align: justify; ">

கடந்த ஒகஸ்ட் 21 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் 88.14 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து முதலிடத்தைப் பெற்று ருமேஷ் தரங்க வெற்றி பெற்றார். </p><p style="text-align: justify; ">

புதிய தரவரிசையின்படி, ருமேஷ் தரங்க 1,363 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளதுடன், இதுவரை முதலிடத்தில் இருந்த ஜெர்மனியின் ஜூலியன் வெபர் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">&nbsp;கிளாஸ்கோவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 89.75 மீற்றர் தூரத் திறமையை வெளிப்படுத்தி ருமேஷ் தரங்க தங்கப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-26T18:40:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/welikada-prison-prisoner-escaped-1787768860"></link>
            <id>https://ibctamil.com/article/welikada-prison-prisoner-escaped-1787768860</id>
            <summary type="text">வெலிக்கடை சிறைச்சாலை விடுதியைச் சுத்தம் செய்ய நியமிக்கப்பட்ட கைதி ஒருவர், விடுதியில் இருந்த சாரத்தை அணிந்துகொண்டு சிறைக் காவலரின் மோட்டார் சைக்கிளில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெலிக்கடை சிறைச்சாலை விடுதியைச் சுத்தம் செய்ய நியமிக்கப்பட்ட கைதி ஒருவர், விடுதியில் இருந்த சாரத்தை அணிந்துகொண்டு சிறைக் காவலரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக பொரளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

தப்பிச் சென்ற கைதி நாத்தாண்டிய - மெதகொட பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சிறை விடுதியின் மேலாளராகப் பணியாற்றும் சிறைக் காவலரால், அந்த விடுதியைச் சுத்தம் செய்வதற்காக மூன்று கைதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>சாவியுடன் நிறுத்தப்பட்டிருந்த&nbsp;மோட்டார் சைக்கிள்</h2><p>
</p><p>
இந்நிலையில், கைதிகள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிறைக் காவலர் மதிய உணவு அருந்துவதற்காகத் தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f6141b7-c75b-4bd7-bc47-bf690a30e662/26-6a8f3164c9bfe.webp' /></p><p>

அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட சந்தேக நபரான கைதி, விடுதிக்கு முன்னால் சாவியுடன் நிறுத்தப்பட்டிருந்த சிறைக் காவலரின் மோட்டார் சைக்கிளைத் திருடிக்கொண்டு, லெஸ்லி ரணகல மாவத்தை வாசல் வழியாகத் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T18:33:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிட்டிஷ் கொலம்பியா கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து தெரசா வாட் பதவி விலகல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/teresa-wat-quits-bc-conservatives-after-unfounded-1787760207"></link>
            <id>https://canadamirror.com/article/teresa-wat-quits-bc-conservatives-after-unfounded-1787760207</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து ரிச்மண்ட்-பிரிட்ஜ்போர்ட் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான தெரசா வாட் விலகியுள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து ரிச்மண்ட்-பிரிட்ஜ்போர்ட் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான தெரசா வாட் விலகியுள்ளார்.
</p><p>கட்சியின் புதிய தலைவரான கெர்ரி-லின் ஃபைண்ட்லே தனக்கெதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தியதாகவும், கனடா நாட்டிற்கான தனது விசுவாசத்தைக் கேள்விக்குள்ளாக்கியதாகவும் கூறி அவர் கட்சியிலிருந்து வெளியேறி சுயேச்சை உறுப்பினராக இயங்க முடிவு செய்துள்ளார். </p><p>
இந்த மாதத்தில் மட்டும் ஃபைண்ட்லேவின் தலைமையின் கீழ் அக்கட்சியிலிருந்து வெளியேறும் 4-வது சட்டமன்ற உறுப்பினர் இவர் ஆவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f0dcc12-46d5-4cff-a550-889bcf241b7b/26-6a8f0e5085759.webp' /></p><p> </p><p>
தனது விலகல் குறித்துப் பேசிய தெரசா வாட், "எனது நாட்டின் மீதான விசுவாசத்தை எவ்வித ஆதாரமும் இன்றி கேள்விக்குள்ளாக்கிய ஒருவரின் தலைமையில் இயங்கும் கட்சியில் என்னால் தொடர்ந்து நீடிக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.</p><p> 
இதுகுறித்து தலைவரிடமிருந்து மன்னிப்பும் விளக்கமும் அளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட போதிலும், அது நிறைவேற்றப்படாததால் தனது நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தைச் சரிசெய்யவே இக்கடினமான முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p> 
முன்னதாக, செவ்வாய்க்கிழமை அன்று கட்சியின் கொறடாவாக இருந்த ரோசலின் பேர்ட் விலகிய நிலையில், அடுத்த சில மணிநேரங்களிலேயே தெரசா வாட்டின் விலகல் அறிவிப்பும் வெளியாகியுள்ளது.</p><p>
இதற்கு சில தினங்களுக்கு முன்பு இயன் பேட்டன் மற்றும் பீட்டர் மிலோபார் ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் தலைவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்திருந்தனர்.
</p><p>கடந்த 2024 மாகாணத் தேர்தலில் 44 இடங்களைக் கைப்பற்றி ஆட்சிக்கு அருகில் வந்த கன்சர்வேடிவ் கூட்டணி, தற்போது உட்கட்சிப் பூசல்களால் 33 உறுப்பினர்களாகக் குறைந்து பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.</p><p> 
கடந்த மே மாதம் கெர்ரி-லின் ஃபைண்ட்லே தலைவராகப் பொறுப்பேற்றதில் இருந்து கட்சியின் முன்னாள் உயர் நிர்வாகிகள் பலரும் வெளியேறியுள்ளனர். </p><p>
மக்கள் விரும்பும் ஒரு மாற்று அரசை உருவாக்காமல், பிரிவினையைத் தூண்டும் பாதையில் கட்சி செல்வதாகவும், புதிய தலைமையின் கீழ் கன்சர்வேடிவ் கட்சி சரியான பாதையில் செல்லவில்லை என்றும் தெரசா வாட் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T18:30:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூப்பர் சிங்கர் பாடகி பிரகதி குருபிரசாத்தின் புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/super-singer-pragathi-guruprasad-recent-photos-1787755960"></link>
            <id>https://viduppu.com/article/super-singer-pragathi-guruprasad-recent-photos-1787755960</id>
            <summary type="text">பிரகதி குருபிரசாத்விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இதுவரை 11 சீசன்களை கடந்துவி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிரகதி குருபிரசாத்</h2><p>விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இதுவரை 11 சீசன்களை கடந்துவிட்டது. இதனையடுத்து சூப்பர் சிங்கர் ஜூனியர் 11 வது சீசனும் தொடங்கி நடைபெற்று வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06ccaa0b-7880-43b2-8c41-4bd993562726/26-6a8efdbad75c6.webp' /></p><p>சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர்.
அதில் ஒருவர்தான் பிரகதி குருபிரசாத். இவர் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசனில் பங்கேற்றுள்ளார்.</p><p> வெள்ளித்திரைக்கு சென்ற இவர், வணக்கம் சென்னை, பரதேசி, ரம், ராட்சசன் போன்ற பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். தற்போது க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DcgRZz3EoLV/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DcgRZz3EoLV/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DcgRZz3EoLV/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Pragathi Guruprasad (@pragathiguru)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-26T18:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்; ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/motorcycles-collide-head-on-one-killed-1787767740"></link>
            <id>https://jvpnews.com/article/motorcycles-collide-head-on-one-killed-1787767740</id>
            <summary type="text">அநுராதபுரம் இப்பலோகம பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இப்பலோகம பொலிஸார் தெரிவித்தனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அநுராதபுரம் இப்பலோகம பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இப்பலோகம பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
இப்பலோகம பொலிஸ் பிரிவின் குஷலானகம பகுதியில் நேற்று (25) இரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை நடத்திவரும் பொலிஸார் குறிப்பிட்டனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4cf9c96-3f46-48d1-88fc-a7732965ed79/26-6a8f2bbef2e7b.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">

ஓட்டமாவடி பகுதியில் வசித்துவந்த 75 வயதுடைய முதியவர் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும், இரண்டு பின் இருக்கை பயணிகளும் கலவேவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், பின் இருக்கை பயணிகளில் ஒருவர் உயிரிழந்தார் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">


இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் இப்பலோகம பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-26T18:09:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மண்டைதீவு படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள்! கண்ணீரில் நனைந்த படுகொலையின் நினைவிடம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/36th-memorial-day-mandaitivu-massacre-1787765231"></link>
            <id>https://ibctamil.com/article/36th-memorial-day-mandaitivu-massacre-1787765231</id>
            <summary type="text">

90 களில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மண்டைதீவு படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று (26) உறவுகளின் கண்ணீருடன், உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

90 களில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மண்டைதீவு படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று (26) உறவுகளின் கண்ணீருடன், உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.</p><p>
36 வருடங்களுக்கு முன்னர் இதே தினத்தன்று இலங்கையின் இராணுவத்தால் மண்டைதீவில் நடத்தப்பட்ட படுகொலைச் சாட்சி நினைவிடத்திலேயே இன்றையதினம் தீவக மக்கள் ஒன்றுகூடி தமது உறவுகளை நினைவுகூரி சுடரேற்றி மலர் தூவி அஞ்சலித்தனர்.</p><p>

தீவக நினைவேந்தல் குழு மற்றும் தீவக முன்னேற்றக்களகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த நினைவேந்தல் அனுஸ்டிப்பு நிகழ்வில் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட உறவுகளின் வாழும் உறவான ஸ்பன் மற்றில்டா முதன்மைச் சுடரேற்றிவைத்து நினைவு நினைவு கூரலை ஆரம்பித்து வைத்தார்.</p><p></p><h2>மலர்மாலை அணிவித்து அஞ்சலி</h2><p>தொடர்ந்து அருட்தந்த வசந்தன், மற்றும் தீவக முன்னேற்றக் கழக தலைவர் பிரகலாதன் ஆகியொரால் நினைவிடத்துக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி நினைவேந்தல் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9661f83-3e0f-4162-abec-0d1529b8357f/26-6a8f238bdbdb9.webp' /></p><p>
தொடர்ந்து உருவப்படங்களுக்கு உறவுகளால் மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் மண்டைதீவு பங்குத்தந்தை அலோய் அருணேஷகும்மார், அருட்தந்த வசந்தன்,அருட்சகோதரிகள், வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சி.அசோக்குமர், பிரதேச சபை உறுப்பினர்களான கருணாகரன் நாவலன், அனுசியா ஜெயகாந்த், மற்றும், ஜோசம் கனிஸ்டன் பொதுமக்கள் என பலரும் மலர்தூவி அஞ்சலித்தனர்.</p><p>
முன்பதாக 1990 ஆம் ஆண்டு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்ததுடன் மேலும் பலர் கொல்லப்படும் இருந்தனர்.</p><p>
இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உடலங்கள் மண்டைதீவு 2 ஆம் வட்டாரப் பகுதியில் குறிப்பிட்ட சில கிணறுகளில் இருப்பதாகவும் அதற்கான வாழும் சாட்சியங்கள் இருப்பதாகவும் பல்வேறு தரப்பினரும் கூறிவரும் நிபையில் குறித்த சம்பவத்தில் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா, மற்றும் வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோரால் இதற்கான தீர்வுகோரி ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன.</p><h2>கோர சம்பவத்துக்கான சாட்சி</h2><p>
இதேநேரம் குறித்த சம்பவம் குறித்து வாழும் சாட்சியாக இருக்கும் படுகொலைசெய்யப்பட்ட ஒருவரது தாயாரும் சகோதரியும் அன்றைய நாள் வடுக்களையும் வேதனைகளையும் சாட்சியாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ff4035d-a772-4767-9472-e0fcdcd71a3a/26-6a8f238c9720b.webp' /></p><p>
இதன்போது மகன இழந்த தாயார் கூறுகையில், 1990.08.25 மற்றும் 26 ஆம் திகதிகளில் இந்த படுகொலையும் காணாமலாக்கலும் இராணுவத்தால் அரங்கேற்றப்பட்டது.</p><p>
இதில் தனது மகன் இராணுவத்தால் என் கண் முன்னே கைது செய்யப்படு எனது உறவினர் ஒருவரது வீடின் பின் பகுதியில் வைத்து கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கினர்.</p><p>

அதன் பின்னர் அவர்களை சுட்டுக் கொன்றனர். இந்த கோர சம்பவத்துக்கு நான் சாட்சி.அதேபோன்று சுற்றுவட்டத்தில் இவ்வாறு கொல்லப்பட்ட பல உடலங்களை சிலவற்றை அவ்வூர் மக்களைக்கொண்டு சேகரித்து கிணறுகளில் போட்டு மூடினர்.</p><p>

அவ்வாறு புதைக்கப்பட்ட கிணறுகளில் ஒன்றுதான் இன்று நினைவு கூறப்படும் கிணறு. இந்த கிணறு போன்று இன்னும் சில கிணறுகள் இன்னும் இருக்கின்றன என கண்ணீர் மல்க தெரிவித்தார்.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T18:00:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காங்கேசன்துறை ஊடாக தங்கம் கடத்த முயன்ற இந்தியர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/customs-arrest-indians-attempting-smuggle-gold-1787758369"></link>
            <id>https://ibctamil.com/article/customs-arrest-indians-attempting-smuggle-gold-1787758369</id>
            <summary type="text">இலங்கையில் இருந்த இந்தியாவிற்கு கடல் மார்க்கமாக தங்கம் கடத்த முயற்சித்த&amp;nbsp;இந்தியப் பிரஜைகளை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.காங்கேசன்துறை ஊடாக இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இருந்த இந்தியாவிற்கு கடல் மார்க்கமாக தங்கம் கடத்த முயற்சித்த&nbsp;இந்தியப் பிரஜைகளை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.</p><p>காங்கேசன்துறை ஊடாக இன்று நாகப்பட்டினம் செல்லத் தயாராக இருந்த 19 இந்தியப் பயணிகளை இலங்கை சுங்க அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்த நிலையில் இந்த கடத்தல் சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.</p><p>இதன்படி தடுத்து நிறுத்தப்பட்டவர்களிடம்&nbsp; 7 பேரிடமிருந்து இதுவரை தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><h2>சுங்க அதிகாரிகள் விசாரணை&nbsp;</h2><p>ஏனையோரிடம் தங்கம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய ஸ்கானிங் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக அவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97193fb9-0665-46c9-b051-29719c2d262f/26-6a8f0723bb663.webp' /></p><p>
சந்தேகநபர்கள் கடந்த 24ஆம் திகதி கொழும்பு ஊடாக இலங்கைக்கு வந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>மேலும், தங்கத்தை உடலுக்குள் அல்லது வேறு நூதனமான முறையில் மறைத்து இந்தியாவுக்கு கடத்த முயன்றார்களா என்பது குறித்து சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T17:46:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/key-notice-issued-for-sri-lankans-in-nepal-1787765927"></link>
            <id>https://jvpnews.com/article/key-notice-issued-for-sri-lankans-in-nepal-1787765927</id>
            <summary type="text">திபெத் பகுதியில் இருந்து போதே கோஷி நதி ஊடாக நேபாளத்தின் ரசுவா மாவட்டத்துக்குள் புகுந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, திமுரே மற்றும் சியாப்ருபெசி பகு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">திபெத் பகுதியில் இருந்து போதே கோஷி நதி ஊடாக நேபாளத்தின் ரசுவா மாவட்டத்துக்குள் புகுந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, திமுரே மற்றும் சியாப்ருபெசி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகக் காத்மண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.
</p><p style="text-align: justify;">
மேலும், போதே கோஷி மற்றும் திரிசூலி நதிகளின் தாழ்நில கரையோரப் பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21b6eea8-e9a0-4db0-b919-5029786b7dbb/26-6a8f24a932bef.webp' /></p><h2 style="text-align: justify;"><span style="text-align: left;">எச்சரிக்கை</span></h2><p style="text-align: justify;">இதன் காரணமாக, ரசுவா, நுவகோட், தடிங், கொர்க்கா, சித்வான் அல்லது போதே கோஷி மற்றும் திரிசூலி நதிப் பள்ளத்தாக்குகளை ஒட்டியுள்ள பிற பகுதிகளில் பயணம் செய்யும் அல்லது வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;">
அத்துடன், உதவி அல்லது ஒருங்கிணைப்புத் தேவை உள்ள இலங்கையர்கள் உடனடியாகக் காத்மண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">24 மணி நேர அவசர உதவி எண்: +9779851048653</p><p style="text-align: justify;">
மின்னஞ்சல்: <a href="slemb.kathmandu@mfa.gov.lk" target="_blank">slemb.kathmandu@mfa.gov.lk</a>
</p><p style="text-align: justify;">
நேபாளத்தில் உள்ள எந்தவொரு இலங்கைப் பிரஜைக்கும் உதவிகளை வழங்குவதற்காகத் தூதரக அதிகாரிகள் எப்போதும் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-26T17:39:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மான்ட்ரியல் காவல் துறையில் இனவெறிப் புகார்: 4-வது அதிகாரி பணி இடைநீக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/montreal-police-suspend-4th-officer-over-racism-1787759156"></link>
            <id>https://canadamirror.com/article/montreal-police-suspend-4th-officer-over-racism-1787759156</id>
            <summary type="text">கனடாவின் மான்ட்ரியல் நகரில் உள்ள &#039;ஸ்டேஷன் 39&#039; காவல் பிரிவில் நடந்த இனவெறி மற்றும் தவறான நடத்தை புகார்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, 4-வது காவல...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் மான்ட்ரியல் நகரில் உள்ள 'ஸ்டேஷன் 39' காவல் பிரிவில் நடந்த இனவெறி மற்றும் தவறான நடத்தை புகார்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, 4-வது காவல் அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மான்ட்ரியல் பொலிஸார் அறிவித்துள்ளனர்.</p><p> 
முன்னதாக, இனவெறி மற்றும் முறைகேடு புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து மான்ட்ரியல் நோர்த் பகுதியில் செயல்பட்டு வந்த இந்தச் சிறப்புப் பிரிவு கடந்த ஜூன் மாதம் முழுமையாகக் கலைக்கப்பட்டது.</p><p>
இந்த 4-வது அதிகாரியின் பணி இடைநீக்கம் கடந்த ஆகஸ்ட் 19 முதல் அமலுக்கு வந்துள்ளதாகக் காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14651d7a-b06a-4213-a4c2-bb0f2e692021/26-6a8f0a35eadf8.webp' /></p><p>
</p><p>எங்கள் ஊழியர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எதிராக பாகுபாடு காட்டும் அல்லது இனவெறியைத் தூண்டும் செயல்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படாது; அதைப் பொறுத்துக் கொள்ளவும் முடியாது" என்று மான்ட்ரியல் காவல் துறை (SPVM) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.</p><p>
முன்னதாக, கடந்த ஜூன் 12 அன்று மான்ட்ரியல் காவல் துறைத் தலைவர் ஃபடி டாகர் (Fady Dagher) நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், ஸ்டேஷன் 39-ஐ சேர்ந்த 16 அதிகாரிகள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் 2 அதிகாரிகள் இனவெறி புகாரில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார். </p><p>
அந்த இரண்டு அதிகாரிகளின் இடைநீக்கமும் ஒரே நபர் தொடர்பான சம்பவத்துடன் தொடர்புடையதாகும். அதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 11 அன்று மற்றொரு நபர் தொடர்பான தனிப்பட்ட சம்பவத்தில் 3-வது அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
</p><p>தற்போது 4-வது அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மான்ட்ரியல் காவல் துறையின் தொழில்முறை தரநிலைப் பிரிவு இந்த விவகாரம் குறித்துத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T17:30:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவை கதிகலங்க வைத்த பிரதம நீதியரசருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/preethi-padman-surasena-gotabaya-rajapaksa-1787761959"></link>
            <id>https://tamilwin.com/article/preethi-padman-surasena-gotabaya-rajapaksa-1787761959</id>
            <summary type="text">நாட்டின் பிரதம நீதியரசர்கள் மற்றும் ஏனைய நீதிபதிகளின் ஓய்வு வயதினை அதிகரிப்பது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் பெரும் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பிரதம நீதியரசர்கள் மற்றும் ஏனைய நீதிபதிகளின் ஓய்வு வயதினை அதிகரிப்பது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் பெரும் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.&nbsp;</p><p>இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் எவ்வாறான நிலைப்பாடு உள்ளது என்பது தொடர்பில் எமக்கு பல்வேறு கேள்விகள் எழ தான் செய்கின்றன.&nbsp;</p><p>இருப்பினும், பொதுவாகவே, இலங்கை நீதித்துறை மீது தமிழ் மக்களிடையே அதிருப்தி தான் உள்ளது என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.&nbsp;</p><p>இது ஒரு புறம் இருக்க, அரசியலமைப்பின் 22வது சட்டமூல திருத்தம், சில நேர்மையான அதிகாரிகளுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு தீர்ப்பினை வழங்கிய&nbsp;இலங்கையின் 49வது பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேனவுக்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p>இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/G_hNcKSeXR4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T17:28:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை பொருளாதாரம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுனர் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/economy-is-getting-good-track-says-cb-1787764996"></link>
            <id>https://tamilwin.com/article/economy-is-getting-good-track-says-cb-1787764996</id>
            <summary type="text">நாட்டின் பொருளாதாரம் சாதக நிலையை நோக்கி நகர்வதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கடுமையான பொருளாதார மற்றும் செலுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பொருளாதாரம் சாதக நிலையை நோக்கி நகர்வதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>
கடுமையான பொருளாதார மற்றும் செலுத்துகைச் சமநிலை நெருக்கடிக்குப் பின்னர், இலங்கை பொருளாதாரம் மிக வேகமாக மீட்சியடைந்து நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டும் நிலைக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>
வெளிவிவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ராஜதந்திர அதிகாரிகளுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c541d0fb-0d70-4f66-b75d-5e085ae26ecc/26-6a8f2105a862e.webp' /></p><p>
குறுகிய காலத்தில் இத்தகைய வேகமான பொருளாதார நிலையை அடைய முடிந்தது ஒரு சிறப்பான சாதனையாகும் எனவும், இத்தகைய நெருக்கடியிலிருந்து விரைவாக மீண்ட நாடு என்ற வகையில் இலங்கை சர்வதேச சமூகத்திற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தியமை, அந்நியச் செலாவணி இருப்பை மீளக் கட்டியெழுப்பியமை மற்றும் அரசாங்கக் கடன்களை மறுசீரமைத்தமை ஆகியவற்றின் மூலம் நாட்டின் பேரியல் பொருளாதார உறுதித்தன்மை தற்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் இறையாண்மை கடனளவீட்டை மேலும் உயர்த்தும் நோக்கில், உலகின் மூன்று பிரதான சர்வதேச கடன் தரநிர்ணய நிறுவனங்களுடனும் தற்போது தீவிர பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T17:23:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் பேரழிவுகரமான வெள்ளம்! கவலை வெளியிட்டுள்ள இலங்கை அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nepal-floods-sri-lanka-concerned-1787764139"></link>
            <id>https://ibctamil.com/article/nepal-floods-sri-lanka-concerned-1787764139</id>
            <summary type="text">நேபாளத்தின் ரசுவா மாவட்டம் உட்பட பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள பேரழிவுகரமான வெள்ளப்பெருக்கு குறித்து இலங்கை அரசாங்கம் தனது ஆழந்த வருத்தத்தை தெரிவித்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தின் ரசுவா மாவட்டம் உட்பட பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள பேரழிவுகரமான வெள்ளப்பெருக்கு குறித்து இலங்கை அரசாங்கம் தனது ஆழந்த வருத்தத்தை தெரிவித்துள்ளது.</p><p>

வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இது தொடர்பான பதிவை தனது உத்தியோகபூர்வ எக்ஸ் கணக்கில் வெளியிட்டுள்ளார்.</p><p></p><h2>நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள்</h2><p>
</p><p>
இந்த சவாலான காலகட்டத்தில் நேபாள அரசாங்கத்துடனும் அந்நாட்டு மக்களுடனும் இலங்கை முழுமையாக உறுதுணையாக நிற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I am deeply saddened by the devastating floods reported in Rasuwa District and other parts of Nepal.<br><br>My thoughts are with all those affected, and especially with the families and communities enduring this difficult time. I commend the efforts of the Nepalese authorities and all…</p>&mdash; Vijitha Herath (@HMVijithaHerath) <a href="https://x.com/HMVijithaHerath/status/2092617429570801843?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், குறிப்பாக இந்த கடினமான சூழலை எதிர்கொள்ளும் குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு தனது ஆறுதல்களைத் தெரிவித்துள்ள அவர், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள நேபாள அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் முயற்சிகளையும் எடுத்துரைத்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T17:20:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - கனடா இடையே தீவிரமடையும் உருளைக்கிழங்கு சர்ச்சை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-tightens-rules-for-pei-potatoes-heres-1787759835"></link>
            <id>https://canadamirror.com/article/us-tightens-rules-for-pei-potatoes-heres-1787759835</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் புதிய உருளைக்கிழங்களுக்கான கட்டுப்பாடுகளை அமெரிக்க வேளாண்மைத் துறை மேலும் தீவிரப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் புதிய உருளைக்கிழங்களுக்கான கட்டுப்பாடுகளை அமெரிக்க வேளாண்மைத் துறை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. </p><p>
உருளைக்கிழங்கைப் பாதிக்கும் ஒருவகை பூஞ்சை நோய் பரவும் அபாயம் இருப்பதாகக் கூறி, அமெரிக்க அமைப்புகள் முழுமையான தடை கோரிய நிலைக்குப் பதிலாக, வரும் அக்டோபர் 5-ஆம் தேதி முதல் புதிய இறக்குமதி விதிகள் அமல்படுத்தப்படவுள்ளன.</p><p> 
இதன்படி, 50 பவுண்டுக்கும் அதிகமான மொத்த உருளைக்கிழங்கு மூட்டைகளை இறக்குமதி செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் கழிவு மேலாண்மை ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதும், உருளைக்கிழங்குகள் எந்தப் பண்ணையிலிருந்து வந்தன என்பதைக் கண்டறியும் துல்லியமான லேபிளிங் முறைகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2821df88-9422-4de5-834b-987a3b173feb/26-6a8f0cdd46d49.webp' /></p><p>
</p><p>அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குக் கனடிய உருளைக்கிழங்கு விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 
தங்கள் பகுதியிலிருந்து நோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்றும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தாவரப் பாதுகாப்பை விட தங்களின் சந்தைப் போட்டியையும் அரசியலையும் மையமாகக் கொண்டது என்றும் விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர். </p><p>
ஏற்கனவே கடந்த 2021-ஆம் ஆண்டு இதே காரணத்தைக் கூறி விதிக்கப்பட்ட தடையால், இத்தீவின் உருளைக்கிழங்குத் துறை சுமார் 50 மில்லியன் டாலர் வருவாய் இழப்பைச் சந்தித்ததுடன், 25 கோடி பவுண்ட் உருளைக்கிழங்குகளை அழிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
</p><p>கடந்த மே மாதத்தில் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் உள்ள ஒரு பண்ணை நிலத்தின் மண்ணில் இந்த பூஞ்சை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, 100 பில்லியன் டாலர் மதிப்புடைய அமெரிக்க உருளைக்கிழங்குத் தொழிலைப் பாதுகாக்க முழுத் தடை விதிக்க வேண்டும் என வாஷிங்டன் அமைப்புகள் வலியுறுத்தின. </p><p>எனினும் முழுத் தடை விதிக்காமல் புதிய நிபந்தனைகளை மட்டுமே அமெரிக்க அரசு கொண்டுவந்துள்ள நிலையில், இதனால் ஏற்படும் கூடுதல் நிதிச் சுமையைக் குறைக்கவும், கட்டுப்பாடுகளில் தளர்வுகளைப் பெறவும் கனடிய உருளைக்கிழங்கு வாரியம் அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T17:16:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[21 வயதான நடிகை அனிகா சுரேந்திரனின் ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/21-age-anikha-surendran-onam-special-photos-1787755569"></link>
            <id>https://viduppu.com/article/21-age-anikha-surendran-onam-special-photos-1787755569</id>
            <summary type="text">அனிகா சுரேந்திரன்மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை அனிகா சுரேந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அனிகா சுரேந்திரன்</h2><p>மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன்.
</p><p>
என்னை எறிந்தால், விஸ்வாசம் படங்களில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா, தெலுங்கில் தி கோஸ்ட் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b5c98ba-c4c3-4708-bfd2-bfdc518c25bf/26-6a8efc37dabdd.webp' /></p><p>

அதன்பின் புட்ட மொம்மா, ஓ மை டார்லிங், PT சார், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இந்ரா போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.</p><h2>ஓணம்</h2><p> 14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்ற நடிகை அனிகா, கிளாமர் பக்கம் சென்று போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.</p><p> 

தற்போது 21 வயதாகும் அனிகா, ஓணம் ஸ்பெஷலுக்காக எடுத்த அழகிய சேலை புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcgP-ORzWRM/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcgP-ORzWRM/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcgP-ORzWRM/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Anikha surendran (@anikhasurendran)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-26T17:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடும்பமாக பிரித்தானியாவில் குடியேறிய இளவரசர் ஹரி-மேகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/harry-meghan-return-for-uk-stay-1787764609"></link>
            <id>https://news.lankasri.com/article/harry-meghan-return-for-uk-stay-1787764609</id>
            <summary type="text">Harry Meghan return for UK stay: பிரித்தானியாவில் நீண்டகாலம் தங்கும் திட்டத்துடன் ஹரி-மேகன் தம்பதி குழந்தைகளுடன் வந்து இறங்கியுள்ளனர்.

குடும்பத்துட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Harry Meghan return for UK stay: பிரித்தானியாவில் நீண்டகாலம் தங்கும் திட்டத்துடன் ஹரி-மேகன் தம்பதி குழந்தைகளுடன் வந்து இறங்கியுள்ளனர்.</p><h2>

குடும்பத்துடன்...</h2><p>இளவரசர் ஹரி மற்றும் மேகன், தங்கள் குழந்தைகள் ஆர்ச்சியும் லிலிபெட் ஆகியோருடன், கலிஃபோர்னியாவிலிருந்து தனியார் விமானத்தில் புறப்பட்டு, பிரித்தானியாவின் பர்மிங்காம் விமான நிலையத்தில் இறங்கினர்.
</p><p>அவர்கள் பிரித்தானியாவில் நீண்ட காலம் தங்குவதற்கு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/075e0264-9bc4-41ac-ae1e-0785556b1022/26-6a8f1f83332f4.webp' /></p><p>2020-ஆம் ஆண்டு அரச குடும்ப பொறுப்புகளை விட்டு விலகிய பிறகு, அவர்கள் அமெரிக்காவில் குடியேறியிருந்தனர். இப்போது, அவர்கள் மீண்டும் பிரித்தானியாவில் குடியேற முடிவு செய்துள்ளனர்.
</p><p>
ஆனால், அவர்கள் “non-working royals” எனப்படும் நிலையில், அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ பணிகளில் ஈடுபடமாட்டார்கள்.</p><p></p><p>அவர்கள் லண்டன் நகரத்திற்கு வெளியே, கோட்ஸ்வோல்ட்ஸ் பகுதியில் உள்ள தனியார் வீட்டில் தங்க உள்ளனர். குழந்தைகள் ஆர்ச்சியும் லிலிபெட்டும் அங்குள்ள பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர், புதிய கல்வியாண்டு அடுத்த வாரம் தொடங்க உள்ளது.
</p><h2>
பாதுகாப்பு </h2><p>அவர்களின் பாதுகாப்பு குறித்து விவாதம் எழுந்துள்ளது. ஹரி, முன்னதாக தனது பாதுகாப்பு குறைக்கப்பட்டதை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தியிருந்தார். தற்போது, அவர்களுக்கு எந்த அளவிலான பாதுகாப்பு வழங்கப்படும், அதை யார் ஏற்க வேண்டும் என்பது தெளிவாகவில்லை.
</p><p>
இந்த வருகை, அரச குடும்பத்துடன் உள்ள உறவுகளை மீண்டும் சீரமைக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. 2022-ஆம் ஆண்டு ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்ற பிறகு, ஹரி மற்றும் மேகன் இருவரும் ஒன்றாக பிரித்தானியாவிற்கு வருவது இதுவே முதல் முறை.
</p><p>
அவர்களின் நீண்ட காலம் தங்குவது குறித்து பொதுமக்கள் மற்றும் ஊடகங்களில் பல்வேறு எதிர்வினைகள் எழுந்துள்ளன. பலரும், அவர்களின் பாதுகாப்பு செலவுகளை அரசாங்கம் ஏற்க வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T17:14:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை உலுக்கிய வெள்ளப் பெருக்கு ; உயிரிழந்தோர் எண்ணிக்கை சடுதியாக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/floods-ravage-nepal-death-toll-surges-1787757888"></link>
            <id>https://jvpnews.com/article/floods-ravage-nepal-death-toll-surges-1787757888</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்வடைந்துள்ளது. 

நேபாள சுற்றுலாச் சபையின் அண்மைய தகவல்படி, 61 ந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நேபாளத்தில் ஏற்பட்ட <a href="https://jvpnews.com/article/devastating-floods-in-nepal-380-tourists-missing-1787747125" target="_blank">திடீர் வெள்ளப் பெருக்கினால்</a> உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்வடைந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

நேபாள சுற்றுலாச் சபையின் அண்மைய தகவல்படி, 61 நேபாளப் பிரஜைகள் மற்றும் 341 வெளிநாட்டுப் பிரஜைகள் உட்பட 403 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5212d84-341b-4491-93d3-d630995d3b88/26-6a8f05421939d.webp' /></p><h2 style="text-align: justify; ">பலர் மாயம்&nbsp;</h2><p> </p><p style="text-align: justify; ">

காணாமல் போனவர்களில் 200 பேர் பெண்கள் என்றும் 203 பேர் ஆண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

காணாமல் போன வெளிநாட்டவர்கள் 26 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என அறியப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

இந்தியாவிலிருந்து 133 பேரும், அமெரிக்காவிலிருந்து 47 பேரும், பிரித்தானியாவின் 33 பேரும் காணாமல் போயுள்ளனர்.</p><p style="text-align: justify; "> 

சுற்றுலா ஏற்பாட்டாளர்களை மேற்கோள் காட்டி சுற்றுலாச் சபை வெளியிட்டுள்ள தகவலின்படி, பெரும்பாலான பயணிகள் இந்தியா மற்றும் நேபாள எல்லைக்கு அருகிலுள்ள மானசரோவருக்குச் செல்லும் வழியிலேயே இருந்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-26T17:11:11+00:00</updated>
        </entry>
    </feed>
