<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-10T11:30:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த, மைத்திரி காலத்தில் ஏற்பட்ட கோடிக்கணக்கான இழப்பு : தணிக்கை அறிக்கையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/coal-losses-mahinda-and-maithri-tenure-414-crore-1789039139"></link>
            <id>https://ibctamil.com/article/coal-losses-mahinda-and-maithri-tenure-414-crore-1789039139</id>
            <summary type="text">2009 முதல் 2016 வரையிலான 7 ஆண்டுகளில் நொரோசொல லக்விஜய மின் நிலையத்திற்கான நிலக்கரி கொள்முதலில் ஏற்பட்ட முறைகேடுகள் மற்றும் குறைபாடுகள் காரணமாக லங்கா ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>2009 முதல் 2016 வரையிலான 7 ஆண்டுகளில் நொரோசொல லக்விஜய மின் நிலையத்திற்கான நிலக்கரி கொள்முதலில் ஏற்பட்ட முறைகேடுகள் மற்றும் குறைபாடுகள் காரணமாக லங்கா நிலக்கரி நிறுவனத்திற்கு ரூ. 414 கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஒரு சிறப்புத் தணிக்கை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.</p><p>

எரிசக்தி மீதான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் வேண்டுகோளின் பேரில், 2009 முதல் 2016 வரை லங்கா நிலக்கரி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட கொள்முதல்கள் குறித்து இந்த சிறப்புத் தணிக்கை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.</p><h2>வருவாய் இழப்புகள் ஏற்படாத வகையில் நிலக்கரி கொள்முதல்&nbsp;</h2><p>ரூ. 414 கோடிக்கும் அதிகமான இழப்பிற்குப் பொறுப்பான அதிகாரிகள் அடையாளம் காணப்பட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற இழப்புகள், மேலதிக செலவுகள் மற்றும் வருவாய் இழப்புகள் ஏற்படாத வகையில் நிலக்கரி கொள்முதல் செயல்முறை சீரமைக்கப்பட வேண்டும் என்றும் இந்த சிறப்புத் தணிக்கை அறிக்கையில் தலைமைத் தணிக்கையாளர் முடிவு செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/920991ea-515b-4ca6-b2ee-f65be912c23e/26-6aa29436a8579.webp' /></p><p>
</p><p>
போதுமான நிலக்கரியைக் கொள்முதல் செய்ய இயலாமை மற்றும் மின் நிலையத்தைக் குறைக்கப்பட்ட திறனில் இயக்க வேண்டியதன் காரணமாக ஏற்பட்ட மேலதிக செலவுகள் குறித்து இந்தத் தணிக்கை அறிக்கை அதிக கவனம் செலுத்தியுள்ளது.</p><p></p><h2>கூடுதல் செலவுகள் ரூ. 1,25 கோடி</h2><p>
</p><p>
போதுமான நிலக்கரியைப் பெற இயலாததாலும், மின் உற்பத்தி நிலையத்தைக் குறைக்கப்பட்ட திறனில் இயக்க வேண்டியிருந்ததாலும் ஏற்பட்ட கூடுதல் செலவுகள் ரூ. 1,25 கோடி என அமைச்சகச் செயலாளர் கணக்கிட்டிருந்ததாகத் தணிக்கை அறிக்கை குறிப்பிடுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecee217c-6dcc-41ba-837e-4bc623d1f7bc/26-6aa294375c13a.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T11:28:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனப்படுகொலையாளி மகிந்தவின் மேடையில் அர்ச்சுனா! நாமலுக்கு ஒத்துழைப்பு என்ற கருத்தோடு வழங்கிய விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archchuna-cooperates-with-mahinda-and-namal-1789038301"></link>
            <id>https://ibctamil.com/article/archchuna-cooperates-with-mahinda-and-namal-1789038301</id>
            <summary type="text">சமூக ஊடகங்களில் தற்போது சிலர், “இனப்படுகொலையாளி மகிந்தவின் மேடைகளில் தான் ஏறப்போவதாக” பல்வேறான கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதாக யாழ். மாவட்ட நாடாளும...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக ஊடகங்களில் தற்போது சிலர், “இனப்படுகொலையாளி மகிந்தவின் மேடைகளில் தான் ஏறப்போவதாக” பல்வேறான கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.</p><p>நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்ட விடயத்தை வெளிப்படுத்திய அவர், இவ்வாறான வித்தியாசமான பதிவுகள் தொடர்வதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,&nbsp;</p><p></p><h2>சஜித் அழைத்தால் நான் செல்வேன்</h2><p>நாங்கள் நிற்பது அரசியல் மேடை. சஜித் ஜனாதிபதியாக வந்து தன்னை வருமாறு அழைத்தால் நான் செல்வேன். இதுதான் அரசியல். இது ஒரு பொது எதிர்கட்சி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b67665be-bb9c-45a3-9ad0-dc0bba1bcc50/26-6aa293020d9be.webp' /></p><p>எந்த ஒரு எதிர்கட்சி உறுப்பினருக்கும் நான் ஒத்துழைப்பை வழங்குவேன். நாமலும் எனக்கு அவ்வாறேதான்.
</p><p>

அவர் திருடியிருப்பார் என்றால் அவற்றுக்கு நான் துனைபோக மாட்டேன்.

நான் மேடைகளுக்கு ஏறுவது என மக்கள் சார்பாக.
</p><p>
இனப்படுகொளையாளி மகிந்தவின் மேடைகளில் தான் ஏறப்போவதாக சிலர் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.</p><p>

வடக்கில் தலைவன் இல்லாது இருக்கும் ஒரு சமூகத்திற்காக யாருடன் சென்று அரசியலை கதைக்கலாம்? இது ஒரு அரசியல் மேடை. இது போர் அல்ல.</p><p>
இந்த அரசியல் மேடையில் அநுர அரசாங்கம் வடக்கு மக்களுக்கு நன்மையை செய்யும் என நம்பிக்கை இல்லை.” என்றார்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T11:22:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சுகாதாரத்துக்கு முரணாக தயிர் விற்பனை : நீதிமன்றம் விதித்த அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rs-48-000-fine-imposed-on-curd-sellers-in-jaffna-1789037379"></link>
            <id>https://ibctamil.com/article/rs-48-000-fine-imposed-on-curd-sellers-in-jaffna-1789037379</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் சுகாதாரத்துக்கு முரணான முறையில் தெருவோரத்தில் வைத்து
தயிர் விற்பனை செய்த இருவருக்கு&amp;nbsp;48,000 ரூபாய் அபராதம் விதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் சுகாதாரத்துக்கு முரணான முறையில் தெருவோரத்தில் வைத்து
தயிர் விற்பனை செய்த இருவருக்கு&nbsp;48,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p> மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் ஒருவருக்கு தலா 24,000
ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>சந்நிதி கோவில் உற்சவ காலத்தை முன்னிட்டு, கடந்த 28.08.2026 அன்று அச்சுவேலி
1ஆம் பிரிவு பொதுச் சுகாதார பரிசோதகர் அ. சர்மிலன் மற்றும் உதயபாலா, சார்ல்ஸ் ஆகியோரால் உணவுச் சுகாதாரம் தொடர்பான விசேட
பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.</p><p></p><h2>மல்லாகம் நீதவான் நீதிமன்றம்</h2><p>இதன்போது, சுகாதாரத்துக்கு முரணான வகையில் தெருவோரத்தில் வைத்து தயிர் விற்பனை
செய்தமை கண்டறியப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c241b799-8e8e-47a6-a89a-cbf3d4007d43/26-6aa291bd6010a.webp' /></p><p>இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கும் எதிராக அச்சுவேலி 1ஆம்
பிரிவு பொதுச் சுகாதார பரிசோதகர் அ. சர்மிலனால் மல்லாகம் நீதவான்
நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
</p><p>குறித்த வழக்கு இன்று (10.09.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இரு
எதிரிகளுக்கும் மன்றினால் தலா 24,000 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T11:21:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நடுவீதியில் இளைஞர் கொடூரமாக வெட்டிக்கொலை - விசாரணையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/33-year-old-man-hacked-death-vadamarachchi-jaffna-1789027407"></link>
            <id>https://tamilwin.com/article/33-year-old-man-hacked-death-vadamarachchi-jaffna-1789027407</id>
            <summary type="text">புதிய இணைப்புயாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து
வெட்டிப் படுகொலை செய்யப்பட்டமை முன் பகை காரணமாக என தெரியவந்துள்ளது.
வடமராட்சி கிராம...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து
வெட்டிப் படுகொலை செய்யப்பட்டமை முன் பகை காரணமாக என தெரியவந்துள்ளது.</p><p>
வடமராட்சி கிராமக்கோடு சந்திக்கு அருகாமையில் நேற்றையதினம்(09.09.2026) இரவு
இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் துன்னாலை பகுதியை சேர்ந்த ஜெயசீலன் ஜெனிதன்
(வயது 33) என்பவரே படுகொலை செய்யப்பட்டார்.</p><p>
துன்னாலை பகுதியை சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையில் நீண்ட காலமாக பகைமை
நீடித்து வந்த நிலையில் குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின்
ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>யாழ்ப்பாணம் வடமராட்சி கிராம கோடு பகுதியில் 33 வயது இளைஞன் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். </p><p>குறித்த சம்பவம்
நேற்று(09.09.2026) இரவு 10.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
</p><h2>பொலிஸார் தீவிர விசாரணை</h2><p>
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,&nbsp;</p><p> கொலை செய்யப்பட்ட நபர் கடைக்கு வெற்றிலை வாங்கிக்கொண்டு வெளியே மோட்டார்
சைக்கிளில் ஏறிப் புறப்பட முற்பட்ட போது எதிரே வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை
வழிமறித்து வாளால் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad3956ff-e3ad-4805-af30-9a62a149e0fe/26-6aa265e782e96.webp' /></p><p>குறித்த சம்பவம்
பருத்தித்துறை பகுதியில் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>சம்பவம் நடந்த இடத்திற்கு காலை 11:00 மணியளவில் சென்ற பருத்தித்துறை
நீதாவான் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டார்.
</p><p>
குறித்த கொலை சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் தீவிர விசாரணைகளை
மேற்கொண்டு வருவதுடன் தடயவியல் ஆய்வு பொலிஸாரும் சம்பவ இடத்தை ஆய்விற்கு
உட்படுத்தி வருவதுடன் பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையில் தீவிர
விசாரணைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன.</p><p><b><i>மேலதிக தகவல் - தீபன்</i></b></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T11:18:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்நினோ தாக்கத்தால் இலங்கையிலும் தீவிரமான மாற்றங்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kilinochchi-regarding-el-nino-conditions-1789037416"></link>
            <id>https://tamilwin.com/article/kilinochchi-regarding-el-nino-conditions-1789037416</id>
            <summary type="text">உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் &#039;எல் நினோ&#039; (El Niño) வானிலை
நிகழ்வு, இலங்கையிலும் தீவிரமான மாற்றங்களை ஏற்படுத்தும் என
எதிர்பார்க்கப்படுவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் 'எல் நினோ' (El Niño) வானிலை
நிகழ்வு, இலங்கையிலும் தீவிரமான மாற்றங்களை ஏற்படுத்தும் என
எதிர்பார்க்கப்படுவதாக&nbsp;புவியல் துறை பேராசிரியருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.</p><p>எல்நினோ நிலைமை தொடர்பாக கிளிநொச்சியில் ஊடக சந்திப்பினை
இன்று 10.09.2026 மேற்கொண்டிருந்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp; கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இம்முறை எல்
நினோ மிக வலுவாக இருக்கும் என வானிலை கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.</p><h2>முக்கிய காலகட்டங்கள்</h2><p>

இலங்கையில் இதன் தாக்கத்தை மூன்று முக்கிய காலகட்டங்களாக பிரிக்கலாம்:

ஜூலை முதல் அக்டோபர் தொடக்கம் வரை: வறண்ட வானிலை நிலவும்.
</p><p>
அக்டோபர் முதல் டிசம்பர் முற்பகுதி வரை: தீவிரமடைந்து கனமழை மற்றும்
வெள்ளப்பெருக்கு ஏற்படும்.</p><p>

டிசம்பர் நடுப்பகுதி முதல் 2027 ஜூன் வரை: மீண்டும் தீவிர வறட்சி தொடரும்.
</p><p>
எதிர்பார்க்கப்படும் முக்கிய பாதிப்புகள்

வெப்பநிலை உயர்வு: இந்தியப் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை 3
.
C வரையிலும், நிலப்பரப்பு வெப்பநிலை 2.5
∘
C வரையிலும் அதிகரிக்கும்.</p><h2>வெள்ள அபாயங்கள்</h2><p>
</p><p>
கனமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள்: அக்டோபர் - டிசம்பர்
காலகட்டத்தில் 3 புயல்கள் மற்றும் 7 குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள்
உருவாக வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00c21e20-a780-4163-a355-f383aaae03a1/26-6aa2918cc9638.webp' /></p><p>
</p><p>
அதிக மழைப்பொழிவு: வடகிழக்கு மற்றும் இரண்டாவது இடைப்பருவக் காற்று காலத்தில்
வட மாகாணங்களில் சராசரியாக 700 மி.மீ-க்கும் அதிகமான மழை பதிவாகலாம்.
குறைந்தபட்சம் 2 பெரிய வெள்ள அபாயங்கள் ஏற்படக்கூடும்.</p><p>
விவசாயம் மற்றும் மீன்பிடித் துறை பாதிப்பு: வட, கிழக்கு மாகாணங்களில் காலபோக
நெல் சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டு, விளைச்சல் இழப்பு ஏற்வடையக்கூடிய
சூழல் உள்ளது. மீன்பிடித் தொழிலும் இதனால் கடுமையாக பாதிக்கப்படலாம்.</p><h2>கோரிக்கைகள்
</h2><p>
உலகளாவிய ரீதியில் தானிய உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படும் என
எதிர்பார்க்கப்படுவதால், இலங்கையின் உணவுத் தேவையை உள்நாட்டிலேயே பூர்த்தி
செய்ய வேண்டியது அவசியமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba10bdd1-c5a5-44ca-9f1e-353b9c0fdb99/26-6aa2918d88d54.webp' /></p><p>
</p><p>
எனவே, விவசாயிகள் நஷ்டத்தால் தொழிலைக் கைவிடாமல் தடுக்க அரசு உடனடி நடவடிக்கை
எடுக்க வேண்டும். </p><p>காலநிலை மற்றும் விவசாயக் காப்பீட்டுத் திட்டங்களை முறையாக
நடைமுறைப்படுத்துவதுடன், உரிய மானியங்களையும் வழங்கி, விவசாயிகளின்
வாழ்வாதாரத்தையும் நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என
தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T11:16:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய யுரேனியம் வசதியை உருவாக்கியுள்ள வடகொரியா: எச்சரிக்கும் ஐ.நா முகமை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/north-korea-built-uranium-facility-1789038990"></link>
            <id>https://news.lankasri.com/article/north-korea-built-uranium-facility-1789038990</id>
            <summary type="text">North Korea has built new uranium facility: வட கொரியா புதிய யுரேனியம் நிலையத்தை அமைத்துள்ளது.
தனது அணு ஆயுதக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக, ஆயுதத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>North Korea has built new uranium facility: வட கொரியா புதிய யுரேனியம் நிலையத்தை அமைத்துள்ளது.
</p><p>தனது அணு ஆயுதக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக, ஆயுதத் தரத்திலான யுரேனியத்தை செறிவூட்டும் திறன் கொண்ட ஒரு மையத்தை வட கொரியா அமைத்துள்ளதற்கான சான்றுகள் குறித்து, சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) கடுமையான கவலையை வெளிப்படுத்தியுள்ளது.</p><h2>யுரேனியம் செறிவூட்டும்</h2><p>
</p><p>இந்த வாரம் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, நாட்டின் முக்கிய அணுசக்தி நிலையமான யோங்பியோனில் (Yongbyon) அமைந்துள்ள புதிய கட்டிடத்தில், யுரேனியத்தை செறிவூட்டப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் இயந்திர அமைப்புகளான 28 மையவிலக்கு அடுக்குகள் (centrifuge cascades) வரை நிறுவ முடியும் என தெரிய வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7af623b0-22f2-4f2b-8178-f4404229b25c/26-6aa291903e14b.webp' /></p><p> </p><p>செயற்கைக்கோள் படங்கள் மற்றும் அந்நாட்டின் அரசு ஊடகங்கள் வெளியிட்ட புகைப்படங்கள் உள்ளிட்ட பொதுவெளியில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அமைந்த அந்த அறிக்கையின்படி, தலைநகர் பியோங்யாங்கிற்கு அருகிலுள்ள காங்சோனில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் தளத்தில் அந்த அரசாங்கம் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளனர்.</p><p></p><p> </p><p>2009-ஆம் ஆண்டில் தனது ஆய்வாளர்கள் வட கொரியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங்-உன் ஜூன் மாதத் தொடக்கத்தில் மேற்கொண்டிருந்த பயணத்தின்போது எடுக்கப்பட்ட ஊடகப் புகைப்படங்களையும், </p><p>கட்டுமானப் பணிகளின்போது எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்ததன் அடிப்படையில், யோங்பியோனில் உள்ள ஒரு கட்டிடத்தை அந்த வளாகத்தின் இரண்டாவது யுரேனியம் செறிவூட்டும் நிலையமாக சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) அடையாளம் கண்டுள்ளது. </p><p>அரசு ஊடகங்களின் தகவலின்படி, தனது பயணத்தின்போது கிம், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆயுதத் தரத்திலான அணுசக்திப் பொருட்களை உற்பத்தி செய்யும் வடகொரியாவின் திறன் இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளதாகக் கூறினார்; அத்துடன் நாட்டின் அணுசக்திப் படைகளை பன்மடங்கு வலுப்படுத்துவதற்கான விரிவான எதிர்காலத் திட்டங்களையும் அவர் உறுதியளித்தார்.</p><h2>சுமார் 85 கிலோ</h2><p> </p><p>வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், யோங்பியோன் (Yongbyon) மையத்தில் உள்ள 4,592 மையவிலக்கிகளை (centrifuges) உள்ளடக்கிய 28 அடுக்குத் தொகுப்புகள் (cascades), ஆண்டுக்கு சுமார் 85 கிலோ ஆயுதத் தரத்திலான, அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்யக்கூடும்; இது கூடுதலாக மூன்று அல்லது நான்கு அணு ஆயுதங்களை (warheads) உருவாக்கப் போதுமான அளவாகும். </p><p>இதனிடையே, தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஆன் கியூ-பேக் (Ahn Gyu-back) ஆகஸ்ட் மாதத்தில் கூறுகையில், வட கொரியாவிடம் 80 முதல் 120 வரையிலான அணு ஆயுதங்கள் (nuclear warheads) இருப்பதாகத் தெரிவித்தார்; இது அதே மாதத்தில் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்ட 57 என்ற எண்ணிக்கையை விட மிக அதிகமானதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73bdfe10-beae-4486-b854-2b509da075ab/26-6aa29190e7879.webp' /></p><p> </p><p>தென் கொரியா குறிப்பிட்ட அந்த எண்ணிக்கை தனியார் ஆராய்ச்சி நிறுவனங்களின் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டது என்று அன் (Ahn) நாடாளுமன்றத்தில் கூறினார்; அத்துடன், அந்த எண்ணிக்கையைத் தங்கள் நாட்டு ராணுவத்தால் உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p> ஒரு அங்கீகரிக்கப்பட்ட அணு ஆயுத நாடாக சர்வதேச அங்கீகாரத்தைக் கோரி வரும் வடகொரியா, அண்மைக்காலமாகத் தனது ஏவுகணை மற்றும் அணு ஆயுதத் திட்டங்களில் விரைவான முன்னேற்றத்தை அடைந்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T11:13:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிமலை வெடிப்பை படம் பிடிக்கச் சென்ற 08 பேர் மாயம் ; இறுதியாக வந்த குறுஞ்செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/8-missing-after-filming-volcanic-eruption-1789038485"></link>
            <id>https://canadamirror.com/article/8-missing-after-filming-volcanic-eruption-1789038485</id>
            <summary type="text">இந்தோனேஷியாவில் அனக் கிரகடாவ் எரிமலை வெடிப்பு சம்பவத்தை நேரில் படம் பிடிக்க காரிட்டா கடற்கரையில் இருந்து படகு மூலம் புறப்பட்டுச் சென்ற 08 நடுக்கடலில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேஷியாவில் அனக் கிரகடாவ் எரிமலை வெடிப்பு சம்பவத்தை நேரில் படம் பிடிக்க காரிட்டா கடற்கரையில் இருந்து படகு மூலம் புறப்பட்டுச் சென்ற 08 நடுக்கடலில் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>

இந்தோனேஷியாவில் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையே உள்ள சுண்டா நீரிணை பகுதியில் உள்ள 'அனக் கிரகடாவ்' என்ற எரிமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:53 மணிக்கு வெடித்து சிதறியது.</p><p>

இந்நிலையில், வெடிப்புச் சம்பவத்தை நேரில் படம் பிடிக்க காரிட்டா கடற்கரையில் இருந்து படகு மூலம் புறப்பட்டுச் சென்ற 05 புகைப்பட ஊடகவியலாளர்கள், 02 ஊழியர்கள் மற்றும் வழிகாட்டி உட்பட 08 பேர் நடுக்கடலில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.</p><p>

கடந்த திங்கட்கிழமை மாலை எரிமலைப் பகுதியை அடைந்துவிட்டதாக அவர்கள் அனுப்பிய குறுஞ்செய்திக்குப் பின்னர் இதுவரை அவர்களிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், காணாமல் போனவர்கள் முன்னணி செய்தி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ள நிலையில் நடுக் கடலில் மாயமான ஊடகவியலாளர்களைத் தேடும் பணியில் இந்தோனேஷிய கடலோரப் பாதுகாப்புப் படையினரும் மீட்புக் குழுவினரும் தீவிரமாக ஈடுபட்டுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-10T11:08:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச ஜோதிடரிடம் 3 மணி நேர வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-hour-statement-given-to-the-royal-astrologer-1789038602"></link>
            <id>https://jvpnews.com/article/three-hour-statement-given-to-the-royal-astrologer-1789038602</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் அரச ஜோதிடர் சுமனதாச அபேகுணவர்தன, ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முன்னிலையான<a href="https://jvpnews.com/article/former-royal-astrologer-under-investigation-1789021800" target="_blank"> முன்னாள் அரச ஜோதிடர் சுமனதாச அபேகுணவர்தன</a>, சுமார் மூன்று மணி நேர வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
</p><p>
அவர் இன்று (10) காலை 10.15 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு வருகை தந்தார்.

‘</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61f113ec-77e9-475c-900c-0423954c6a59/26-6aa2900b6f6b5.webp' /></p><p>சிரிலிய சவிய’ தொடர்பான விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு வருகை தந்திருந்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T11:06:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த ராஜபக்சவின் மேடையில் அர்ச்சுனா எம்.பி..! நாமலின் மோசடி குறித்து சபையில் பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/archchuna-on-mahinda-rajapaksa-s-stage-1789037307"></link>
            <id>https://tamilwin.com/article/archchuna-on-mahinda-rajapaksa-s-stage-1789037307</id>
            <summary type="text">


செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள மக்கள் கூட்டத்தில் தான் கலந்து கொள்ளவுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>


செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள மக்கள் கூட்டத்தில் தான் கலந்து கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். </p><p>

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>நாமலுக்காக மேடை ஏறுவேன்..</h2><p> 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

சமூக வலைத்தளங்களில் எமது இனத்தை அழித்த மகிந்த ராஜபக்சவின் மேடையில் ஏறுவது குறித்து பல பிரசாரங்கள் முன்வைக்கப்படுகின்றன.</p><p> </p><p>

அது, மகிந்த ராஜபக்ச அல்ல, நாளை ரணில் விக்ரமசிங்க அழைத்து அவருடயை மேடையில் ஏறச் சொன்னாலும் அந்த மேடைக்குச் செல்வேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eefc24be-d809-4d3e-b204-a7971f9dcf2d/26-6aa28e4f082cd.webp' /></p><p>
</p><p>
எமது அடுத்த ஜனாதிபதி சஜித் பிரேமதாச, அவர் அழைத்தாலும் அவருடைய மேடைக்கும் நான் செல்வேன். எதிர்க்கட்சியில் இருக்கக்கூடிய எந்தவொரு அரசியல்வாதிக்கும் எனது ஆதரவு இருக்கும். அதேபோலத்தான் நாமல் ராஜபக்சவும். </p><p>

நாமல் ராஜபக்ச மோசடியில் ஈடுபட்டிருந்தாலோ, அவர் மீதான தனிப்பட்டக் குற்றங்களையோ நான் ஆதரிக்கவில்லை. அது எனக்குத் தொடர்பற்றது. </p><p> எதிர்க்கட்சி உறுப்பினராக அவரை நான் ஆதரிக்கின்றேன்.

நாமல் ராஜபக்ச அல்ல, எனது மக்களுக்காக யாருடைய மேடையிலும் ஏறத் தயார் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T11:03:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸ் வரலாற்றில் முதல் வாரத்திலே வீட்டைவிட்டு வெளியா போட்டியாளர்கள்..லிஸ்ட் இதோ..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/first-in-bigg-boss-tamil-history-mid-week-eviction-1789038163"></link>
            <id>https://viduppu.com/article/first-in-bigg-boss-tamil-history-mid-week-eviction-1789038163</id>
            <summary type="text">பிக்பாஸ்விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக்பாஸ். தற்போது பிக்பாஸ் சீசன் 10 ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிக்பாஸ்</h2><p>விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக்பாஸ். தற்போது பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி ஞாயிற்று கிழமை ஆரம்பித்தது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b62aea5-bfea-4ec5-a07f-1a4cacea1fe6/26-6aa28e5742171.webp' /></p><p>முதல் நாளில் இருந்தே சுவாரசியத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் உடல் நிலை பிரச்சனையால் முதல் வாரத்திலேயே வீட்டைவிட்டு வெளியேறினார் பிளாக் பாண்டி. அப்படி பிக்பாஸ் தொடங்கப்பட்ட முதல் சீசன் முதல் 10வது சீசன் வரை முதல் வாரத்தில் வெளியேறிய முதல் ஆள் யார் என்று பார்ப்போம்..</p><p></p><p>பிக்பாஸ் தொடங்கப்பட்ட முதல் சீசனில் நடிகர் ஸ்ரீ, என்னால் இந்த வீட்டில் இருக்க முடியாது என்று கூறி 1st வீக்கிலேயே வீட்டைவிட்டு வெளியேனார்.</p><p>

ஸ்ரீ எப்படி வெளியேறினாரோம அதேபோல் பிக்பாஸ் சீசன் 5ல் திருநங்கை பிரபலமான நமிதா மாரிமுத்து முதல் வாரத்திலேயே வெளியேறினார். அவர் வெளியேறியதற்கான காரணம் பிக்பாஸ் குழு வெளியிடவில்லை.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/947d3ad6-343b-49d9-8505-cc4577154a0e/26-6aa28e568f1d4.webp' /></p><p>
பிக்பாஸ் சீசன் 7ல் கலந்து கொண்ட யூடியூப் பிரபலம் ஜிபி முத்து, ஒருசில நாளிலேயே வெளியேறினார். உடல்நிலை சரியில்லாத மகன், குடும்பத்தை பார்க்கலாம் என்ற முடிவை எடுத்து வெளியேறியிருக்கலாம் என்று கூறப்பட்டது.</p><p>

பிக்பாஸ் சீசன் 9ல் விஜே நந்தினி போட்டியாளராக கலந்து கொண்டபோது சில நாட்களிலேயே அவர் வீட்டைவிட்டு வெளியேறினார். சக போட்டியாளர்களிடம் அதிக கோபப்பட்டு கத்தியதால் அதிர்ச்சியடைந்த நிகழ்ச்சி குழு முதல் வாரத்திலேயே வெளியேற்றியது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62ccc2b9-c738-4725-aa47-8bc7a062084d/26-6aa28e5530518.webp' /></p><p>
பிக்பாஸ் சீசன் 10ல் நடிகர் பிளாக் பாண்டி 3வது நாட்களிலேயே வீட்டைவிட்டு வெளியேறினார் உடல் நிலை பிரச்சனையால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-10T11:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[SLS சான்றிதழ் இல்லாமல் வியாபாரம் செய்த நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/verdict-against-a-company-sold-extension-cords-1789035621"></link>
            <id>https://tamilwin.com/article/verdict-against-a-company-sold-extension-cords-1789035621</id>
            <summary type="text">பண்டாரவளை பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனமொன்று, இலங்கையின் தர நிர்ணய சான்றிதழ் (SLS) முத்திரை இல்லாமல் நீட்டிப்புக் கம்பிகளை விற்பனை செய்த குற்றத்திற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பண்டாரவளை பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனமொன்று, இலங்கையின் தர நிர்ணய சான்றிதழ் (SLS) முத்திரை இல்லாமல் நீட்டிப்புக் கம்பிகளை விற்பனை செய்த குற்றத்திற்காக நீதிமன்றம் ரூ. 400,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. </p><p>

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><h2>

4 பிரிவுகளில் வழக்குப் பதிவு</h2><p>
நுகர்வோர் விவகார அதிகார சபையின் பதுளை மாவட்ட புலனாய்வு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நான்கு குற்றச்சாட்டுகளின் பேரில் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
</p><p>
கடந்த ஒகஸ்ட் 28 அன்று நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​கட்டாய SLS சான்றிதழ் தேவைப்படும் நீட்டிப்புக் கம்பிகள், SLS முத்திரை இல்லாமல் ரூ. 2,790 என்ற விலையில் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f407e13-64dd-4183-9d64-ea0816be6526/26-6aa28d5812f6e.webp' /></p><p>
</p><p>
மேலும், குறைந்தபட்ச உத்தரவாதக் காலத்தை வழங்காதது மற்றும் விநியோகஸ்தர்களிடமிருந்து சட்டப்பூர்வ ரசீதுகள் இல்லாமல் பொருட்களை விற்பனைக்கு வைத்தது போன்ற குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.
</p><h2>
சட்டப்பூர்வ ரசீதுகள் இன்மை</h2><p>
நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதையடுத்து, பிரதிவாதி நிறுவனத்திற்கு ரூ. 400,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2017 டிசம்பர் 7 அன்று வெளியிடப்பட்ட சிறப்பு அரசிதழ் எண் 2048/39-இன் ஆணை எண் 63-இன் கீழ், 250 வோல்ட்டுகளுக்கு மிகாத பல மின் சாதனங்களுக்குக் கட்டாய SLS தரச் சான்றிதழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1aca49f-3bcf-4b5d-9a89-9b5047e6b835/26-6aa28d58d1a2f.webp' /></p><p>
</p><p>
இதற்கமைய, பிளக்குகள், சாக்கெட் அவுட்லெட்டுகள், மின் நீட்டிப்புக் கம்பிகள், அடாப்டர்கள், உருகி இணைப்பு அலகுகள், மாற்றி பிளக்குகள் மற்றும் கேபிள் ரீல்கள் ஆகியவை தொடர்புடைய SLS தரச் சான்றிதழைக் கொண்டிருப்பது கட்டாயமாகும்.</p><p>

மின் விபத்துகள் மற்றும் தீ விபத்துகளைத் தடுப்பதற்காக, நுகர்வோர் விவகார ஆணையம், அத்தகைய மின் சாதனங்களை வாங்கும் போது SLS தரச் சின்னம் மற்றும் உத்தரவாதக் காலத்தைச் சரிபார்த்து, சட்டப்பூர்வ ரசீதைப் பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-09-10T10:58:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவெக-வுக்கு எதிராக பிரசாரம்: தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/campaign-against-tvk-statement-1789037758"></link>
            <id>https://ibctamilnadu.com/article/campaign-against-tvk-statement-1789037758</id>
            <summary type="text">மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக-வுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளப்படும் என&amp;nbsp;உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக-வுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளப்படும் என&nbsp;உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.</p><p>இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது, ”தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் சிறு, குறு விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்கள் அனைத்தும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். </p><p>பெரு விவசாயிகளின் கடன்களில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்” என த.வெ.க. வாக்குறுதி அளித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43c2488f-ae7c-4e6d-836d-2510871eb46d/26-6aa28d2a41fe6.webp' /><br></p><p> </p><p>ஆனால், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிறகு, பல்வேறு கடுமையான நிபந்தனைகளை விதித்து முழுமையாக கடன்களை தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை ஏமாற்றிவிட்டது. </p><p>தமிழ்நாட்டில் வறட்சி நிலவும் சூழலில், பாகுபாடின்றி அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் த.வெ.க. அரசு கண்டு கொள்ளவில்லை. இது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 எனவே, அரசின் இந்த விவசாய விரோதப் போக்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அடுத்த மாதம் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், விவசாயிகளை ஒன்றுதிரட்டி த.வெ.க.வை தோற்கடிக்க தீவிரப் பிரசாரம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது

 என தெரிவிக்கப்பட்டுள்ளது.<br></p>]]></content>
            <updated>2026-09-10T10:58:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும நிதி மோசடி : ஆறு ஆசிரியர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/aswesuma-fraud-money-credited-accounts-teachers-1789036643"></link>
            <id>https://ibctamil.com/article/aswesuma-fraud-money-credited-accounts-teachers-1789036643</id>
            <summary type="text">அஸ்வெசும நிதியிலிருந்து மோசடி செய்யப்பட்ட பணத்தை ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தைச் சேர்ந்த ஆறு ஆசிரியர்களின் கணக்குகளில் வரவு வைத்த சம்பவம் தொடர்பில், அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அஸ்வெசும நிதியிலிருந்து மோசடி செய்யப்பட்ட பணத்தை ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தைச் சேர்ந்த ஆறு ஆசிரியர்களின் கணக்குகளில் வரவு வைத்த சம்பவம் தொடர்பில், அந்த ஆசிரியர்களை தற்காலிகமாக இடைநிறுத்த மத்திய மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.&nbsp;</p><p>நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதி மோசடி செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதேச செயலகத்தின் பிரிவு பொறுப்பு அதிகாரிகள் இருவர் கடந்த எட்டாம் திகதி ஸ்கைப் தொழில்நுட்பம் ஊடாக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் பீட்டர் போல் உத்தரவிட்டுள்ளார்.</p><p>






</p><h2>&nbsp;மோசடி செய்யப்பட்ட மொத்தப் பணம் 2 கோடி ரூபாய்க்கும் அதிகம்</h2><p>ஹட்டன் கோட்ட விசாரணைப் பிரிவின் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த விடயங்களில், இந்த நிதி மோசடி தொடர்பில் மேலும் 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவித்தனர். மோசடி செய்யப்பட்ட மொத்தப் பணம் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடையது என்பதால், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைப்பதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/355c0c12-dd85-4e6d-a875-8ddf59567d3a/26-6aa28c3063f66.webp' /></p><p>
</p><p>
நிதி அமைச்சின் கணக்காய்வு அதிகாரிகள் மற்றும் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கணக்காய்வுப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளில், சந்தேகத்திற்குரிய இரண்டு அதிகாரிகளும் ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் பணிபுரியும் ஆறு ஆசிரியர்களின் கணக்குகளில் இந்த பணத்தை வரவு வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.</p><p></p><h2>&nbsp;6 ஆசிரியர்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்</h2><p> சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் வங்கிக் கணக்கு அறிக்கைகளையும் பரிசோதிக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்ததையடுத்து, இந்த 6 ஆசிரியர்களின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d12298c1-0550-4830-a1c8-acbafd64582b/26-6aa28c3119bd8.webp' /></p><p>
</p><p>





இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபரின் சகோதரரின் கணக்கிலும் பெருமளவு பணம் வரவு வைக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நுவரெலியா மாவட்ட செயலகத்தில் உயர் பதவியில் இருந்த அந்த சகோதரரின் சேவையையும் தற்காலிகமாக இடைநிறுத்த மாவட்ட செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T10:55:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூதூரில் வெடிபொருள் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களுடன் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/820-kg-of-fish-caught-using-explosives-1789036390"></link>
            <id>https://ibctamil.com/article/820-kg-of-fish-caught-using-explosives-1789036390</id>
            <summary type="text">திருகோணமலை மூதூர் பகுதியில் வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மீன்தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மூதூர் பகுதியில் வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மீன்தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>குறித்த கைது நடவடிக்கை&nbsp;இலங்கை கடற்படையினர் நேற்று (09.10.2026) மேற்கொண்ட விசேட தேடுதலின் போது இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>கைது செய்யப்பட்டவர் 40 வயதுடைய பொடுவைக்கட்டு - செந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மூதூர் கடற்றொழில் பரிசோதகர்</h2><p>
</p><p>
இலங்கை கடற்படையின் SLNS பராக்கிரம நிறுவனத்துக்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், SLNS கோகண்ண நிறுவனத்துடன் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0ae9c00-99b3-4f47-bb36-92d8e51bc24c/26-6aa28c7aca1bb.webp' /></p><p>
</p><p>
இதன்போது சந்தேகத்திற்கிடமான லொறி ஒன்றை சோதனையிட்ட கடற்படையினர், வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 820 கிலோகிராம் மீன்களுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.</p><p>
சந்தேகநபர், லொறி மற்றும் மீன்தொகை ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மூதூர் கடற்றொழில் பரிசோதகர் அலுவலகத்தின் ஒருங்கிணைப்புடன் மூதூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T10:55:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணமாகி ஒரு வருடம் ;மனைவியின் தலையை வெட்டி பிரிட்ஜில் வைத்த கணவன்; ஷாக்காகி நின்ற பொலிஸார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/husband-beheads-wife-head-in-the-fridge-assam-1789028572"></link>
            <id>https://jvpnews.com/article/husband-beheads-wife-head-in-the-fridge-assam-1789028572</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியா அசாம் மாநிலம் கவுகாத்தியில் 25 வயதான இளம் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... கொலை செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியா அசாம் மாநிலம் கவுகாத்தியில் 25 வயதான இளம் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... கொலை செய்ததைவிட, கொலைக்கு பிறகு நடந்த பயங்கரம்தான், அதற்கு மேல் பீதியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரியாவும் ராமானுஜ் கோஸ்வாமியும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், பின்னர் இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fbfe0d0-0430-4491-8e85-775988846a44/26-6aa268de4d431.webp' /></p><h2>திருமணமாகி&nbsp; ஒரு வருடம்</h2><p> 

கடந்த செப்டம்பர் 3-ம் தேதி இருவருக்கும் ஏற்பட்ட தகராறு விபரீதமாகி, ராமானுஜ் தனது மனைவியை கொலை செய்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். சம்பவத்துக்குப் பிறகு வீட்டை பூட்டிவிட்டு அவர் தப்பிச் சென்றதாகவும், அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் போலீசார் வீட்டை சோதனை செய்தபோது கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p></p><p> </p><p>

விசாரணையில், ரியாவின் உடல் வீட்டில் கண்டெடுக்கப்பட்டதுடன், அவரது தலையும் வீட்டில் இருந்த ஃபிரிட்ஜில் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயுதமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ராமானுஜ் பின்னர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9909d809-52d9-49e8-b57e-13fcc5b6ddb7/26-6aa268df0d0d1.webp' /></p><p> 

போலீசாரிடம் அவர் அளித்ததாக வாக்குமூலத்தில், தனது மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாக சந்தேகித்ததால்தான் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p> 

 அதுமட்டுமல்லாது , தனது மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததாக அவர் சந்தேகிக்கும் அந்த நபரையும் கொலை செய்வேன் என்று ராமானுஜ் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை பொலிஸாருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.&nbsp; </p><p>&nbsp; &nbsp; &nbsp; </p>]]></content>
            <updated>2026-09-10T10:54:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓடி ஓடி ஜெயந்தியை கவனிக்கும் திவாகரன்.. கர்ணாவால் கடுப்பான புவனா - சின்னஞ்சிறு கிளியே இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/chinnan-siru-kiliye-today-episode-297-1789033790"></link>
            <id>https://cineulagam.com/article/chinnan-siru-kiliye-today-episode-297-1789033790</id>
            <summary type="text">தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சின்னஞ்சிறு கிளியே. இந்த ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சின்னஞ்சிறு கிளியே. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் திவாகரன் ஜெயந்தியை ஓடி ஓடி கவனிக்க கிருபா அதை பார்த்து கடுப்பான நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.</p><p>அதாவது கிருபா ஜெயந்திக்கு என்ன வேண்டும் என கேட்டு கேட்டு செய்ய வீட்டில் அனைவரும் ஆச்சரியமும் குழப்பமும் அடைகின்றனர். திவாகரனின் மாற்றத்திற்கு காரணம் என்ன என்பதை அறிந்த புவனா மட்டும் செம கடுப்பில் இருக்கிறாள்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8172319c-27f8-4e58-bb31-ecbf24b46748/26-6aa27d4261fda.webp' /></p><p>பிறகு திவாகரன் ரூமுக்கு சென்று ஜெயந்தியின் துணிகளை எடுத்துச் சென்று துவைக்க கர்ணாவும் இந்துவும் இதை மொட்டை மாடியில் இருந்து ரசிக்கின்றனர். கர்ணா சிரிக்க இந்து இப்ப எதுக்கு சிரிக்கிற என்று கேட்க முரட்டுத்தனமா இருக்குங்க ரொமான்டிக்கா மாறுனா இப்படித்தான் இருப்பாங்க போல என்று இந்து மீது கை போட அவள் அவனை முறைக்க கையை எடுத்து விடுகிறான். </p><p>
அடுத்ததாக திவாகரன் ஜெயந்திக்கு நெயில் பாலிஷ் போட்டு விடுவதாக சொல்லி அழைத்துச் செல்ல இங்கே கர்ணா இந்துவுக்கு நெயில் பாலிஷ் போட்டு விடுவதாக ரூமுக்கு அழைத்து வருகிறான். புவனா ரூமுக்குள் என்ன நடக்கிறது என மறைந்து பார்க்க இதை கவனித்த இந்த காலுக்கு போட்டு விடு என காலை காட்ட கர்ணா நெயில் பாலிஷ் போட்டு விட புவனா கடுப்பாகிறாள்.</p><p> </p><p>[M5IC5P ]</p><p>அதைத்தொடர்ந்து திவாகரன் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க ஜெயந்தி ஒரு பெரிய லிஸ்ட்டை கொடுக்க அவளை அழைத்து கொண்டு கடைக்கு செல்கிறான். திவாகரனுக்காக தூக்க மாத்திரை கலந்து வைத்திருந்த பாலை விஷ்வா குடித்து தூங்கி விடுகிறான். </p><p>
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? 24 மணி நேரம் முடிந்தால் திவாகரனின் மாற்றம் எப்படி இருக்க போகிறது? என்பது குறித்து அறிய சின்னஞ்சிறு கிளியே சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T10:50:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் திருவிழா காலத்தில் நடந்த சம்பவம் ; இருவருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/order-issued-to-two-curd-sellers-in-jaffna-1789037085"></link>
            <id>https://jvpnews.com/article/order-issued-to-two-curd-sellers-in-jaffna-1789037085</id>
            <summary type="text">அச்சுவேலி பகுதியில் சுகாதாரத்துக்கு முரணான முறையில் தெருவோரத்தில் வைத்து தயிர் விற்பனை செய்த இருவருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் தலா 24,000 ரூபா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அச்சுவேலி பகுதியில் சுகாதாரத்துக்கு முரணான முறையில் தெருவோரத்தில் வைத்து தயிர் விற்பனை செய்த இருவருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் தலா 24,000 ரூபா வீதம் மொத்தம் 48,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>


சன்னதி கோவில் உற்சவ காலத்தை முன்னிட்டு, கடந்த 28.08.2026 அன்று அச்சுவேலி 1ஆம் பிரிவு பொதுச் சுகாதார பரிசோதகர்&nbsp; மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களான உதயபாலா, சால்ஸ் ஆகியோரால் உணவுச் சுகாதாரம் தொடர்பான விசேட பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/634f2607-2bcc-4d4c-ae54-39d8d01923e5/26-6aa28a1e7be2f.webp' /></p><h2>அபராதம்</h2><p>



இதன்போது, சுகாதாரத்துக்கு முரணான வகையில் தெருவோரத்தில் வைத்து தயிர் விற்பனை செய்தமை கண்டறியப்பட்டது.
</p><p>


இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கு எதிராக அச்சுவேலி 1ஆம் பிரிவு பொதுச் சுகாதார பரிசோதகரால், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.</p><p></p><p>



குறித்த வழக்கு இன்று (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் மன்றினால் தலா 24,000 ரூபா வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T10:47:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் ஏற்படும் மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/scanning-machines-for-palaly-airport-and-harbour-1789036469"></link>
            <id>https://tamilwin.com/article/scanning-machines-for-palaly-airport-and-harbour-1789036469</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றில் உடல் பரிசோதனை செய்யும் ஸ்கேன் இயந்திரங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றில் உடல் பரிசோதனை செய்யும் ஸ்கேன் இயந்திரங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>
அதற்கமைய, இலங்கைச் சுங்கம் இதற்கான நடவடிக்கை எடுத்துள்ளது.
</p><p>
அண்மைய காலமாக பயணிகள் பரிமாற்றம் அதிகரித்துள்ளமையை கருத்திற் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதென சுங்க ஊடகப் பேச்சாளரும், சுங்கப் பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.</p><p>
</p><h2><b>
 உடல் பரிசோதனை </b></h2><p>கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fe374ab-5990-4252-bd0c-ad6df0ac4041/26-6aa28a6ab0abf.webp' /></p><p>புலம்பெயர் நாடுகள் மற்றும் இந்தியாவில் இருந்தும் பெருமளவு சுற்றுலா பயணிகள் யாழ்ப்பாணம் விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக பயணங்களை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p>
</p>]]></content>
            <updated>2026-09-10T10:46:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிறந்து 13 நாட்கள் ஆன குழந்தைக்கு Passport]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/13-day-old-baby-get-passport-1789036932"></link>
            <id>https://ibctamilnadu.com/article/13-day-old-baby-get-passport-1789036932</id>
            <summary type="text">இந்தியாவில் பிறந்து 13 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு பாஸ்போர்ட் பெறப்பட்டு சர்வதேச சாதனை புத்தகத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.ஆந்திராவின் ஸ்ரீகாகுளம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் பிறந்து 13 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு பாஸ்போர்ட் பெறப்பட்டு சர்வதேச சாதனை புத்தகத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.</p><p>ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டம் இச்சாபுரம் நகரை சேர்ந்தவர் ஆஷிஷ், இவரது மனைவி கீதாமாதுரி.</p><p>லண்டனில் வசித்து வருகின்றனர், இவர்களுக்கு கடந்த மே மாதம் 30ம் தேதி பெண் குழந்தை பிறந்தது, குழந்தை பிறந்த மறுநாளில் அகஸ்யா பிரின்ஸ் என பெயர் சூட்டினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9285505f-57bd-4af8-91db-eee9c0df3c20/26-6aa28a1841300.webp' /><br></p><p>தொடர்ந்து ஜூன் 4ம் தேதி ஆதார் கார்டு பெறுவதற்கும், 6ம் தேதி பாஸ்போர்ட் பெறுவதற்கும் விண்ணப்பிக்கப்பட்டது.</p><p> தற்போது பாஸ்போர்ட் வழங்கப்பட்டு பிறந்த 13 நாட்களில் பெற்றதால் சர்வதேச சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a25a780a-5888-4ae4-a857-c2618d52ebd4/26-6aa28a18ec663.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-10T10:45:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[2.5 மில்லியன் டொலர் மோசடிக்கு பின்னால் NPP அமைச்சர்கள் : சபையில் நாமல் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/are-ministers-behind-usd-2-5-mn-theft-asks-namal-1789034829"></link>
            <id>https://ibctamil.com/article/are-ministers-behind-usd-2-5-mn-theft-asks-namal-1789034829</id>
            <summary type="text">2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தைத் திருடியதாகக் கூறப்படும் சம்பவத்தின் பின்னணியில், நாடாளுமன்றத்தின் முதல் இரண்டு வரிசைகளில் அமர்ந்திருக்கும் சில ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தைத் திருடியதாகக் கூறப்படும் சம்பவத்தின் பின்னணியில், நாடாளுமன்றத்தின் முதல் இரண்டு வரிசைகளில் அமர்ந்திருக்கும் சில மூத்த அமைச்சர்கள் இருக்கலாம் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.</p><p>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச இன்று (10) நாடாளுமன்றில் உரையாற்றும் போதே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அமைச்சர்களுக்கு தெரியாமல் இவ்வளவு பெரிய தொகையைத் தவறான வங்கிக் கணக்கிற்கு மாற்ற முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>மறுக்கப்பட்ட&nbsp;அனுமதி</h2><p>நிலக்கரி கொள்முதலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்தும் அவர் கேள்விகளை எழுப்பியதுடன், அந்த விநியோகப் பணிகள் எவ்வாறு இவ்வளவு விரைவாக நிறைவு செய்யப்பட்டன என்றும் வினவினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afc43447-a22c-4a39-958f-b679769602f5/26-6aa287f77ca18.webp' /></p><p>
</p><p>இதேவேளை தங்களுடைய பேரணியை நடத்துவதற்காகக் கோரப்பட்ட மைதானத்தைப் பயன்படுத்த சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.</p><p>இந்த நிலையில் அடக்குமுறைகளால் எங்கள் போராட்டத்தை முடக்க முடியாது என்று நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T10:40:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய பாதுகாப்பு அமைச்சர் சீதை அம்மன் ஆலயத்தில் வழிபாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-defence-minister-prayers-sita-amman-temple-1789036880"></link>
            <id>https://jvpnews.com/article/indian-defence-minister-prayers-sita-amman-temple-1789036880</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இலங்கை வந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வியாழக்கிழமை (10) நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இலங்கை வந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வியாழக்கிழமை (10) நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டுள்ளார். </p><p>தெற்காசிய உடைகளைத் தேர்ந்தெடு


இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் இருநாட்டு மக்களுக்கிடையிலான நெருக்கமான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்த இந்த ஆன்மிக நிகழ்வில் அவர் கலந்துகொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/593fb51e-e04a-4564-9c8f-de68de2f9887/26-6aa28951b5e2b.webp' /></p><h2>&nbsp;உத்தியோகபூர் விஜயம் நிறைவு&nbsp;</h2><p>
</p><p>
இந்த வழிபாட்டில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பாராளுமன்ற உறுப்பினர் ஆலய நிர்வாக சபைத் தலைவர் வேலுசாமி ராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் இணைந்துகொண்டனர்.&nbsp;&nbsp;</p><p></p><p>அதேவேளை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைகான தனது மூன்று நாள் உத்தியோகபூர் விஜயத்தை நிறைவு செய்துவிட்டு இன்று (10) பிற்பகல்&nbsp; பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) விசேட விமானம் மூலம் புறப்பட்டுள்ளார்.</p><p></p><p> </p><p>

தனது இந்த விஜயத்தின் போது, இந்திய பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.</p>]]></content>
            <updated>2026-09-10T10:38:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போர் நடுவே... பல மில்லியன் டொலர் சம்பாதித்த டொனால்ட் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-oil-investments-gained-millions-1789036523"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-oil-investments-gained-millions-1789036523</id>
            <summary type="text">Trump’s oil investments have gained millions: ட்ரம்பின் எண்ணெய் முதலீடுகள் பல மில்லியன் லாபம் ஈட்டியுள்ளன.
ஈரான் தொடர்பான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump’s oil investments have gained millions: ட்ரம்பின் எண்ணெய் முதலீடுகள் பல மில்லியன் லாபம் ஈட்டியுள்ளன.
</p><p>ஈரான் தொடர்பான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் போர்க்கால உத்தரவுகள் உலகளாவிய சந்தைகளை தொடர்ச்சியாக உலுக்கியதால், அவரது தனிப்பட்ட எரிசக்தி முதலீடுகள் லாபம் ஈட்டியுள்ளன.</p><h2>முதலீடுகளின் மதிப்பு</h2><p>
</p><p>போர் தொடங்கிய முதல் ஆறு மாதங்கள் முழுவதும், ட்ரம்ப்பின் முதலீட்டுக் கணக்குகள் எரிசக்தித் துறைப் பங்குகளைத் தீவிரமாக வர்த்தகம் செய்து வந்தன.</p><p> அவரது வருடாந்திர நிதிநிலை வெளிப்பாடுகள், நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகள் மற்றும் 'ஃபேக்ட்-செட்' (FactSet) சந்தை தரவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் சிஎன்பிசி (CNBC) மேற்கொண்ட பகுப்பாய்வின்படி, </p><p>போருக்கு முந்தைய நாளான பிப்ரவரி 27 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான காலகட்டத்தில், அவரிடமிருந்த மிகப்பெரிய ஒன்பது எண்ணெய் மற்றும் எரிவாயு முதலீடுகளின் மதிப்பு சுமார் 1.5 மில்லியன் முதல் 4.4 மில்லியன் டொலர் வரை அதிகரித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3536e213-c1b7-4c91-bbb4-343eb46b0a41/26-6aa287ed7c141.webp' /></p><p>
ட்ரம்ப்பின் பல்வேறு முதலீட்டுக் கணக்குகளில் உள்ள அதே எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களில் அவருக்கு இருந்த 2025-ஆம் ஆண்டின் இறுதி நிலவரங்களை ஒருங்கிணைத்து, அவற்றின் வெளிப்படுத்தப்பட்ட மதிப்பின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தியதன் மூலம் CNBC அந்த ஒன்பது முதலீடுகளை அடையாளம் கண்டுள்ளது.</p><p></p><p> </p><p>ஒவ்வொரு முதலீடு தொடர்பாகவும் ட்ரம்ப் வெளியிட்ட குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச மதிப்புகள், அத்துடன் பிப்ரவரி 27 மற்றும் ஆகஸ்ட் 31 ஆகிய திகதிகளில் சந்தை வர்த்தகம் நிறைவடைந்த நேரங்களுக்கு இடைப்பட்ட அவற்றின் பங்கு விலை மாற்றங்கள் ஆகியவற்றைக் கொண்டு, லாப வரம்பை CNBC கணக்கிட்டுள்ளது.
</p><p>ஜூன் 29-ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில், அந்த ஒன்பது நிறுவனங்கள் தொடர்பான கொள்முதல் மற்றும் குறைந்தது 23 விற்பனை நடவடிக்கைகளை ட்ரம்ப்பின் கணக்குகள் பதிவு செய்துள்ளன; ட்ரம்ப் தனது வர்த்தக விவரங்களை வெளியிட்ட மிகச் சமீபத்திய திகதியும் இதுவேயாகும்.</p><p> பங்குகளின் துல்லியமான எண்ணிக்கை, வர்த்தகம் நடந்த விலைகள் அல்லது எந்தப் பங்குகள் விற்கப்பட்டன போன்ற விவரங்கள் இந்த அறிக்கைகளில் இடம்பெறாததால், இதில் குறிப்பிடப்பட்டுள்ள மதிப்பீடுகள், ஈட்டப்பட்ட லாபத்தையோ அல்லது ட்ரம்ப்பின் தற்போதைய துல்லியமான பங்கு இருப்பையோ குறிப்பதாக அமையாது.</p><h2>பல மில்லியன் டொலர்</h2><p>
</p><p>ட்ரம்ப் அல்லது அவரது முதலீட்டு மேலாளர்கள், அவரது முடிவுகள் குறித்த முன் அறிவின் அடிப்படையில் வர்த்தகம் செய்தார்கள் என்பதற்கோ, அவரது நிதி நலன்கள் கொள்கையைப் பாதித்தன என்பதற்கோ, அல்லது அவர் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பரிவர்த்தனையை வழிநடத்தினார் என்பதற்கோ CNBC எந்த ஆதாரத்தையும் கண்டறியவில்லை. </p><p>ட்ரம்ப் அமைப்பு இந்த விவகாரத்தில் ஏற்கனவே தெளிவான விளக்கமும் அளித்துள்ளது. இருப்பினும், தனது நிர்வாகத்தின் ராணுவ மற்றும் தூதரக முடிவுகளால் நேரடியாகப் பாதிக்கப்படும் ஒரு துறையில், பல மில்லியன் டொலர் மதிப்பிலான நிதிசார் பங்கை ட்ரம்ப் கொண்டிருப்பதற்கு இந்த ஆவணங்கள் மிகச் சமீபத்திய உதாரணமாக அமைந்துள்ளன. </p><p>பற்றாக்குறையைப் பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டியதற்காக எக்ஸான் (Exxon) மற்றும் செவ்ரான் (Chevron) ஆகிய எண்ணெய் நிறுவனங்களை ட்ரம்ப் பகிரங்கமாகக் கடுமையாகச் சாடிய அதே வேளையில், எண்ணெய் துறையில் தான் வைத்திருந்த முதலீடுகள் மூலமும் அவர் லாபம் ஈட்டினார். </p><p>போர்க்கால நிகழ்வுகள் சந்தைகளை ஏற்ற இறக்கத்திற்கு உள்ளாக்கிய நாட்களில், ட்ரம்பின் கணக்குகள் தொடர்ச்சியாக எரிசக்திப் பங்குகளை வர்த்தகம் செய்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e66205ea-e1e1-4d83-b562-924da9122dca/26-6aa287ee31d9b.webp' /></p><p> </p><p>ஈரான் மீதான முதல் அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதலுக்குப் பிந்தைய முதல் வர்த்தக நாளான மார்ச் 2 அன்று, ட்ரம்பின் கணக்குகள் எட்டு முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் பங்குகளை வாங்கியதாகத் தெரிவித்தன; இதில் எக்ஸான் நிறுவனத்தில் 100,001 டொலர் முதல் 250,000 டொலர் வரையிலான பங்குகளை வாங்கியதும் அடங்கும்.
</p><p>ட்ரம்ப் தனது நிதி வெளிப்படுத்தல்களின்படி, எக்ஸான் நிறுவனத்தில் 3.2 மில்லியன் டொலர் முதல் 12.5 மில்லியன் டொலர் வரை முதலீடு செய்த நிலையில் இந்தப் போரில் நுழைந்தார். </p><p>ட்ரம்பின் பங்குகள் மற்றும் பங்கு விலைகள் குறித்த சிஎன்பிசி பகுப்பாய்வின் அடிப்படையில், ஆகஸ்ட் 31 அன்று சந்தை முடிவடையும் நேரத்தில், பிற்கால வர்த்தகங்களைக் கணக்கில் கொள்வதற்கு முன்பு, எக்ஸானின் பங்கு விலை உயர்வானது அந்த ஆரம்ப முதலீட்டில் தோராயமாக 176,000 டொலர் முதல் 690,000 டொலர் வரை சேர்த்திருந்தது. </p><p>இந்த நிலையில், Transparency International U.S. அமைப்பின் நிர்வாகி ஸ்காட் கிரேடாக் ட்ரம்பின் போர் நிறுத்த முயற்சிகள் அவரது கணக்குகளில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டு முடிவுகளுடன் நேரடியாக ஒத்துப்போவது போல் அமைந்துள்ளது, </p><p>இருந்தாலும், இந்த வர்த்தகங்கள் குறித்து ட்ரம்புக்கு முன்கூட்டியே தெரியும் என்பதற்கோ அல்லது அவரது கொள்கை முடிவுகளுக்காகவே இந்த வர்த்தகங்கள் நடத்தப்பட்டன என்பதற்கோ எந்தவொரு நேரடியான ஆதாரமும் உறுதிப்படுத்தப்படவில்லை என கூறியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T10:32:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சுகாதாரத்துக்கு முரணாக தயிர் விற்பனை: இருவருக்கு அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/curd-sold-in-violation-48-000-fine-1789033810"></link>
            <id>https://tamilwin.com/article/curd-sold-in-violation-48-000-fine-1789033810</id>
            <summary type="text">யாழ்ப்பாணம்-அச்சுவேலி பகுதியில் சுகாதாரத்துக்கு முரணான முறையில் தெருவோரத்தில் வைத்து
தயிர் விற்பனை செய்த இருவருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் அப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம்-அச்சுவேலி பகுதியில் சுகாதாரத்துக்கு முரணான முறையில் தெருவோரத்தில் வைத்து
தயிர் விற்பனை செய்த இருவருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>சன்னதி கோவில் உற்சவ காலத்தை முன்னிட்டு, கடந்த 28.08.2026 அன்று அச்சுவேலி
1ஆம் பிரிவு பொதுச் சுகாதார பரிசோதகர் அ. சர்மிலன் மற்றும் பொதுச் சுகாதார
பரிசோதகர்களான உதயபாலா, சால்ஸ் ஆகியோரால் உணவுச் சுகாதாரம் தொடர்பான விசேட
பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
</p><p>இதன்போது, சுகாதாரத்துக்கு முரணான வகையில் தெருவோரத்தில் வைத்து தயிர் விற்பனை
செய்தமை கண்டறியப்பட்டது.</p><h2>வழக்குத் தாக்கல்</h2><p>
இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கு எதிராக அச்சுவேலி 1ஆம்
பிரிவு பொதுச் சுகாதார பரிசோதகரால் மல்லாகம் நீதவான்
நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50875538-0471-4cee-88f0-bd7beac7638f/26-6aa284933a7bd.webp' /></p><p>
</p><p>குறித்த வழக்கு இன்று (10.09.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இரு
எதிரிகளுக்கும் மன்றினால் தலா 24,000
ரூபா வீதம் மொத்தம் 48,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T10:26:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[காஞ்சிபானி இம்ரானின் உறவினர் சுட்டுக்கொன்ற சம்பவம்! சிசிடிவி காட்சியில் சிக்கிய சந்தேகநபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shooting-and-killing-kanjipanis-cousin-in-kotahena-1789033973"></link>
            <id>https://tamilwin.com/article/shooting-and-killing-kanjipanis-cousin-in-kotahena-1789033973</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி என சந்தேகிக்கப்படும் காஞ்சிபானி இம்ரானின் உறவினர் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் போதைப்பொருட்களுடன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி என சந்தேகிக்கப்படும் காஞ்சிபானி இம்ரானின் உறவினர் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு வடக்கு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>இந்த துப்பாக்கிச்சூடு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் ஒரு கடைக்கு முன்பாக ஆகஸ்ட் (10) பிற்பகல் நடைபெற்றுள்ளது.</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர் மட்டக்குளியை சேர்ந்த 23 வயதுடையவர் ஆவார்.</p><h2>பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்</h2><p> </p><p>இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர், கொழும்பு 05, கிருலப்பனையை சேர்ந்த 33 வயதான முகமது அஸ்மின் மொஹிதீன் ஆவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c13b8f37-db31-4c9c-b381-d3594e78f172/26-6aa2857f673e9.webp' />&nbsp;</p><p> 

இவர் காஞ்சிபானி இம்ரானின் மாமா என்று பொலிஸ் விசாரணையில் தற்போது வெளிப்படுத்தியுள்ளது.</p><p>துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்ததை சிசிடிவி காட்சிகள் வெளிப்படுத்தியுள்ளதாக பொலிஸ் கூறுகின்றது.</p><h2>சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலை&nbsp;</h2><p>

சந்தேகநபரை கைது செய்த நேரத்தில், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 12 கிராம் மற்றும் 470 மில்லிகிராம் போதைப்பொருட்களும், குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட இரண்டு கைபேசிகளும் வழக்கு ஆதாரங்களாக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கொழும்பு வடக்கு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவிக்கின்றது. </p><p>

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (10) நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவிருந்தார்.
</p><p>
மேலும், கொட்டாஞ்சேனை பொலிஸ் மற்றும் கொழும்பு வடக்கு பிரதேச குற்றப்புலனாய்வு பிரிவினால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T10:25:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் ; ஜனாதிபதிக்கு டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/douglas-sends-urgent-letter-to-president-1789035252"></link>
            <id>https://jvpnews.com/article/douglas-sends-urgent-letter-to-president-1789035252</id>
            <summary type="text">யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் பயன்பாட்டில் இருந்து இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்துக்குச் சொந்தமான காணி,...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் பயன்பாட்டில் இருந்து இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்துக்குச் சொந்தமான காணி, நிலங்கள் மற்றும் கட்டிடங்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c608a4bf-7a0e-4d21-b05b-20e6e3d0b08c/26-6aa2855a84900.webp' /></p><h2 style="text-align: justify; "><span style="text-align: left;">பொதுமக்களின் காணிகள்</span></h2><p style="text-align: justify; "><span style="text-align: left;"><br></span>யுத்த காலத்தில் பாதுகாப்புத் தேவைகளுக்காக பொதுமக்களின் காணிகள் பயன்படுத்தப்பட்ட நிலையில், யுத்தம் நிறைவடைந்த பின்னரும் சில பகுதிகள் முழுமையாக விடுவிக்கப்படாமல் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p style="text-align: justify; ">தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் 2,030 ஏக்கர் காணிகள் இன்னமும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாகவும், இதனால் பல நூற்றுக்கணக்கான குடும்பங்களின் மீள்குடியேற்றம் தாமதமடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
குறிப்பாக பலாலி வீதியின் கிழக்குப் பகுதியில் சுமார் 290 ஏக்கர் காணி பொன்னாலை–பருத்தித்துறை வீதியில் சுமார் 1,500 மீற்றர் நீளமான மூடப்பட்ட பகுதி வசாவிளான் கிழக்கில் 511 பிரிகேட் முகாம் அமைந்துள்ள பகுதியில் 45 குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார் 17 ஏக்கர் தனியார் காணி; மயிலிட்டித்துறை தெற்கில் சுமார் 130 ஏக்கர் பரப்பில் இதுவரை ஏறக்குறைய 5 ஏக்கர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளமை; மயிலிட்டித்துறை வடக்கில் சுமார் 40 ஏக்கர் காணி;பலாலி வடக்கில் இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கான சுமார் 400 மீற்றர் நீளமான அணுகல் பாதை ஆகியவை தொடர்பில் அவர் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
அத்துடன், மயிலிட்டி றோமன் கத்தோலிக்க பாடசாலையின் மைதானம், மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயம், கிறிஸ்தவ மயானம், பிள்ளையார் ஆலயம், பொதுமக்களின் வழிபாட்டு மற்றும் சமூகப் பயன்பாட்டு இடங்கள், ஐஸ் பெக்டரி உள்ளிட்ட முக்கிய இடங்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p>
</p><p style="text-align: justify; ">
பலாலி தெற்கு பகுதியில் அமைந்திருந்த தோலகட்டி பழச்சாறு தொழிற்சாலை மற்றும் அதனருகிலுள்ள சிறி வேலுப்பிள்ளை வித்தியாலயத்துக்குச் சொந்தமான காணிகளையும் விடுவிக்க வேண்டும் எனவும் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
காணிகளை விடுவிப்பது என்பது வெறுமனே நிலங்களை மீளக் கையளிப்பது மாத்திரமல்ல.

நூற்றுக்கணக்கான குடும்பங்களின் மீள்குடியேற்றம், விவசாய நடவடிக்கைகள், பொதுப் போக்குவரத்து, வழிபாடு மற்றும் சமூக–பொருளாதார நடவடிக்கைகளை மீள இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான முக்கிய நடவடிக்கையாகும்.
</p><p style="text-align: justify; ">
எனவே, ஜனாதிபதி இந்த விடயத்தில் விசேட கவனம் செலுத்தி, சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு, நீண்டகாலமாக விடுவிக்கப்படாமல் உள்ள காணிகளை விரைவாக விடுவிக்க வேண்டும் என கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-10T10:24:39+00:00</updated>
        </entry>
    </feed>
