<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-27T13:44:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய விவகாரம் - நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/issue-of-the-vattapalai-kannagi-amman-temple-1785159806"></link>
            <id>https://tamilwin.com/article/issue-of-the-vattapalai-kannagi-amman-temple-1785159806</id>
            <summary type="text">வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பரிபாலன சபையின் முறைகேடான செயற்பாடுகளுக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் கௌரி சங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பரிபாலன சபையின் முறைகேடான செயற்பாடுகளுக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் கௌரி சங்கரி தவராசா சட்ட நிறுவனம் சார்பில் சட்டத்தரணி தர்மராஜா தர்மஜாவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. </p><p>

இந்த வழக்கு விசாரணை கடந்த 13ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்பட்ட போது, வழக்கு தாக்கல் செய்த சட்டத்தரணியின் வாதத்தையடுத்து வற்றப்பளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாவன சபையின் நிரந்தர உறுப்பினராக இருந்த குலசேகரம் கிருஸ்ணபவன் சட்டரீதியற்ற முறையில் நீக்கியது தொடர்பிலும், சட்ட நீதியற்ற முறையில் செயற்படும் ஆலய பரிபாலன சபை தொடர்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>
இதனையடுத்து, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியால் வற்றாளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபையின் தலைவர், உபதலைவர், இணைச் செயலாளர்கள், பொருளாளர்களான 1, 2,3,4,5 எதிராளிகள் உட்பட பரிபாலன சபை உறுப்பினர்களுக்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. </p><h2>

நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு</h2><p>
இந்த வழக்கின் 1ஆம் 3ஆம் 5ஆம் எதிராளிகள் சார்பில் ஆட்சேபனை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து இன்று(27.07.2026) வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் எடுத்தக் கொள்ளப்பட்ட போது, வழங்கப்பட்ட கட்டாணைகளை நீக்க எதிர்த்தரப்பு சட்டத்தரணியால் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a30cdcd1-979f-4cbc-9181-7dc200ea340a/26-6a6760cb6ee74.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், வழக்கை தாக்கல் செய்தவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் எதிராளிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியின் வாதத்தை மறுத்து வழங்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் 3ஆம் திகதி வரை நீட்டித்துள்ளது. </p><p>

இந்த வழக்கினை தாக்கல் செய்த கௌரி சங்கரி தவராசா சட்ட நிறுவனம் சார்பில் சட்டத்தரணி தர்மராஜா தர்மஜா, சட்டத்தரணி அழகரட்ணம் ஜினோசன், சட்டத்தரணி ஜி. ஏ அருண்ராஜ் மற்றும் சட்டத்தரணி த. சிவானந்தராஜா ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T13:44:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[முச்சக்கரவண்டியுடன் பேருந்து மோதி விபத்து - சாரதி பலி! இரு பயணிகள் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-at-colombo-kolonnawa-road-1785159515"></link>
            <id>https://tamilwin.com/article/accident-at-colombo-kolonnawa-road-1785159515</id>
            <summary type="text">கொழும்பு - கொலன்னாவை வீதியில் கொத்தட்டுவ பகுதியை அண்மித்த பகுதியில் இன்று (27.07.2026) இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே
உயிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - கொலன்னாவை வீதியில் கொத்தட்டுவ பகுதியை அண்மித்த பகுதியில் இன்று (27.07.2026) இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே
உயிரிழந்துள்ளார்.
</p><p>முச்சக்கரவண்டி எதிரே வந்த பேருந்துடன் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>முச்சக்கரவண்டி சாரதி பலி</h2><p>

முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், முச்சக்கரவண்டியின் பின்புற ஆசனத்தில்
பயணித்த இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>முச்சக்கரவண்டி&nbsp;சாரதியின் அலட்சியமான செயற்பாடே இந்த விபத்துக்குக் காரணம் என
ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T13:39:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸ் ஜோடி அமீர்-பாவனி ரெட்டியின் சில ரொமான்டிக் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/bigg-boss-jodi-amir-pavni-reddy-cute-photos-1785147523"></link>
            <id>https://cineulagam.com/article/bigg-boss-jodi-amir-pavni-reddy-cute-photos-1785147523</id>
            <summary type="text">அமீர்-பாவனிபிக்பாஸ் நிகழ்ச்சி எந்த மொழி எடுத்துக்கொண்டாலும் நிகழ்ச்சி முடிவதற்குள் ஒரு காதல் ஜோடி உருவாகிவிடுவார்கள்.அப்படி தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அமீர்-பாவனி</h2><p>பிக்பாஸ் நிகழ்ச்சி எந்த மொழி எடுத்துக்கொண்டாலும் நிகழ்ச்சி முடிவதற்குள் ஒரு காதல் ஜோடி உருவாகிவிடுவார்கள்.</p><p>அப்படி தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு சீசனில் முதலில் அறிமுகம் இல்லாத நபர்களாக பழக தொடங்கி பின் நண்பர்களாகி அடுத்து காதலர்களாக மாறிய ஜோடி தான் அமீர்-பாவனி.</p><p>நிகழ்ச்சி முடிந்தபிறகு காதலித்து வந்தவர்கள் அழகாக நண்பர்கள், உறவினர் சூழ திருமணமும் செய்துகொண்டனர். இவர்கள் இருவரும் ஜோடியாக எடுத்த சில ரொமான்டிக் புகைப்படங்களை காண்போம்.</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T13:30:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய் வழங்கிய அரசு நியமனங்கள் ரத்து; உயர் நீதிமன்றம் உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/government-job-by-c-m-vijay-for-karur-cancelled-1785153727"></link>
            <id>https://jvpnews.com/article/government-job-by-c-m-vijay-for-karur-cancelled-1785153727</id>
            <summary type="text">&amp;nbsp; தமிழக முதலமைச்சர் விஜய், கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கிய அரசு பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தமிழக முதலமைச்சர் விஜய், கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கிய அரசு பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
 சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை&nbsp; இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2070e472-e98c-4955-9251-8e30f1abe3f1/26-6a6748c094a34.webp' /></p><h2>&nbsp;கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க விதிகளில் இடமில்லை</h2><p>பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அரசு பணி நியமன ஆணைகளை வழங்கியிருந்தார்.</p><p>&nbsp;இந் நிலையில்&nbsp; அரசியல் கூட்டங்களில் பலியாவோருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க விதிகளில் இடமில்லை எனத் தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.</p><p></p><p>

இதனை விசாரித்த நீதிமன்றம், அந்தப் பணி நியமனங்கள் செல்லாது எனவும் அவற்றை ரத்து செய்தும் தீர்ப்பளித்துள்ளதாக&nbsp; இந்திய&nbsp; ஊடகங்க்காள் குரிப்பிட்டுள்ளன.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T13:29:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் சூதாட்டத்திற்கு அடிமையானவர்களை மீட்க புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/alberta-aims-to-get-gambling-websites-1785150658"></link>
            <id>https://canadamirror.com/article/alberta-aims-to-get-gambling-websites-1785150658</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம், ஆன்லைன் சூதாட்ட தளங்களை சட்டப்பூர்வ முறைப்படுத்துதலின் கீழ் கொண்டுவந்து, அதன் மூலம் பெறப்படும் வரி வருவாயைக் கொண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம், ஆன்லைன் சூதாட்ட தளங்களை சட்டப்பூர்வ முறைப்படுத்துதலின் கீழ் கொண்டுவந்து, அதன் மூலம் பெறப்படும் வரி வருவாயைக் கொண்டு சூதாட்டப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்குச் சிகிச்சை அளிக்கத் திட்டமிட்டுள்ளது.</p><p>
கடந்த ஜூலை 13 முதல் ஆல்பர்ட்டாவில் தனியார் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சட்டப்பூர்வமாகச் செயல்பட அனுமதி அளிக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட்டன.
மக்களின் சூதாட்டப் பழக்கத்தைத் தடுத்து நிறுத்துவது கடினம். </p><p>முன்னதாக பெரும்பாலான ஆன்லைன் சூதாட்டங்கள் கட்டுப்பாடின்றி இயங்கி வந்ததாக ஆல்பர்ட்டா முதல்வர் டேனியல் ஸ்மித் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18760aa9-e2e2-42cb-9493-e7eb4aed1dc2/26-6a673cc40c0ac.webp' /></p><p>
</p><p> அரசாங்கத்திற்கு எந்தவித வரி வருவாயும் கிடைக்கவில்லை. எனவே, இவற்றை முறைப்படுத்தி அரசாங்கக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது அவசியம் எனக் கருதியதாகத் தெரிவித்துள்ளார்.</p><p>
ஆல்பர்ட்டா சந்தையில் இயங்க விரும்பும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் பின்வரும் கட்டுப்பாடுகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
ஒருவர் தான் சூதாட்டத்திற்கு அடிமையாகியிருப்பதாக உணர்ந்து தன்னைத் தடுத்துக் கொள்ளக் கோரினால், அனைத்து ஆன்லைன் மற்றும் நேரடி சூதாட்டத் தளங்களிலும் அவருக்குத் தடை விதிக்கப்படும்.
</p><p>பயனர்கள் தங்களுக்குத்தானே பண வரம்பு மற்றும் நேர வரம்புகளை நிர்ணயித்துக் கொள்ளும் வசதிகள் அளிக்கப்படும்.</p><p>
தொழிலும் சார்ந்த விளையாட்டு வீரர்கள் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>
மேலும் இளைஞர்கள் மற்றும் சூதாட்டத்தைக் கைவிட முயல்பவர்களைக் குறிவைத்து விளம்பரம் செய்யக் கூடாது.</p><p>இதேவேளை, ஆல்பர்ட்டாவில் நடைபெறும் ஆன்லைன் சூதாட்டத்தில் 70% பகுதி சட்டவிரோத அல்லது கட்டுப்பாடற்ற வெளிநாட்டு தளங்களிலேயே நடைபெற்று வந்தது.</p><p>
புதிய சட்டப்பூர்வ சந்தை மூலம் முதல் ஆண்டில் சுமார் 76 மில்லியன் டொலர் வருவாய் கிடைக்கும் எனவும், முதல் இரண்டு ஆண்டுகளில் ஒட்டுமொத்தப் சந்தை மதிப்பு 2.8 பில்லியன் டொலரை எட்டும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
</p><p>சூதாட்ட நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரியைக் கொண்டு, சூதாட்டப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய விழிப்புணர்வும், மருத்துவ மறுவாழ்வு சிகிச்சைகளும் வழங்கப்படும் என மாகாண அரசு உறுதியளித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T13:28:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாருக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-officials-visit-mannar-1785157626"></link>
            <id>https://ibctamil.com/article/us-officials-visit-mannar-1785157626</id>
            <summary type="text">இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற் கொண்டுள்ள
ஐக்கிய அமெரிக்கா நாட்டின் (United States)இலங்கைக்கான அரசியல் மற்றும் மனித
உரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற் கொண்டுள்ள
ஐக்கிய அமெரிக்கா நாட்டின் (United States)இலங்கைக்கான அரசியல் மற்றும் மனித
உரிமைகள் தொடர்பான அதிகாரிகள், இன்றைய தினம் திங்கட்கிழமை (27) காலை
மன்னாருக்கு விஜயம் செய்துள்ள நிலையில் மன்னார் சமூக பொருளாதார
மேம்பாட்டிற்கான (மெசிடோ) நிறுவனத்திற்கு விஜயம் செய்தனர்.</p><p>மன்னாரிலுள்ள (மெசிடோ) நிறுவன அலுவலகத்தில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த
சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து விரிவான கலந்துரையாடலில்
ஈடுபட்டனர்.</p><h2>மன்னார் மாவட்ட சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை</h2><p>
</p><p>
இக்கலந்துரையாடலில் , வடக்கு மற்றும் குறிப்பாக மன்னார் மாவட்டத்தின்
தற்போதைய சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பாக அதிகாரிகள்
 ஆர்வத்துடன் கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bed6e416-9179-4ebc-84cf-89a27403c432/26-6a675c9d99f20.webp' /></p><p>மேலும், மக்களின் வாழ்வாதாரம், பொருளாதார மீட்பு, நிலையான அபிவிருத்தி, சமூக
நீதி, மனித உரிமைகள், நல்லாட்சியை பலப்படுத்துதல் மற்றும் எதிர்கால
அபிவிருத்திக்கான வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவான
கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.</p><p></p><h2>&nbsp;மக்களும் சிவில் சமூக அமைப்புகளும் எதிர்கொள்ளும்&nbsp; சவால்கள்</h2><p>அதேவேளை, தற்போதைய சூழலில் வடக்கு மக்களும் சிவில் சமூக அமைப்புகளும்
எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள், நில உரிமைகள், வாழ்வாதார பாதுகாப்பு,
இளைஞர்கள் மற்றும் பெண்களின் பங்கேற்பு, சமூக ஒற்றுமை, நல்லிணக்கம், மனித
உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஜனநாயக பங்கேற்பு தொடர்பான பல்வேறு கருத்துக்கள்
சிவில் சமூக பிரதி நிதிகளால் முன்வைக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ef37f42-fac2-4fd8-bba6-990fb52a46f2/26-6a675c9e4a7ce.webp' /></p><p>பங்கேற்ற சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்களது துறைசார் அனுபவங்கள்,
களப் பணிகளில் இருந்து பெற்றுள்ள தகவல்கள் மற்றும் மக்களின் தேவைகளை நேரடியாக
பிரதிபலிக்கும் பரிந்துரைகளை பகிர்ந்துகொண்டனர்.</p><p>&nbsp;அவற்றை அதிகாரிகள் கவனமாக கேட்டறிந்து, எதிர்காலத்தில் தொடர்ச்சியான தொடர்பு
மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.
</p><p>
இவ்வாறான சந்திப்புகள், சர்வதேச சமூகத்திற்கும் உள்ளூர் சிவில்
சமூகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வை மேம்படுத்துவதோடு, மனித உரிமைகள்,
ஜனநாயக ஆட்சி, சமூக நீதி மற்றும் நிலையான அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கான
பயனுள்ள உரையாடல்களுக்கு வலுசேர்க்கும் முக்கிய வாய்ப்பாக அமைந்தது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T13:27:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க - ஈரான் மோதல் நிறுத்தம்; மசகு எண்ணெய் விலை சரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/us-iran-hostilities-cease-crude-oil-prices-fall-1785158899"></link>
            <id>https://jvpnews.com/article/us-iran-hostilities-cease-crude-oil-prices-fall-1785158899</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவும் ஈரானும் மேற்கொண்டு வந்த தாக்குதல்களைத் தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவும் ஈரானும் மேற்கொண்டு வந்த தாக்குதல்களைத் தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.
</p><p>
இதன்படி, பிரெண்ட் (Brent) ரகக் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 87 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1db051e2-e4f5-4610-87f1-aa2ce84ac922/26-6a675cf5443a4.webp' /></p><p>
</p><p>
அத்துடன், டபிள்யூ.டி.ஐ (WTI) ரகக் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
</p><p>
மற்றும் பிரெண்ட் (Brent) ரகக் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 92 டொலர்களாகவும், டபிள்யூ.டி.ஐ (WTI) ரகக் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85 டொலர்களாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T13:26:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கான அமெரிக்க மனித உரிமைகள் அதிகாரிகள் மன்னாரில் ஆய்வு விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-human-rights-officials-in-sri-lanka-1785158429"></link>
            <id>https://tamilwin.com/article/us-human-rights-officials-in-sri-lanka-1785158429</id>
            <summary type="text">இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கான வருகை தந்துள்ள 
ஐக்கிய அமெரிக்கா நாட்டின் இலங்கைக்கான அரசியல் மற்றும் மனித
உரிமைகள் தொடர்பான அதிகாரிகள் மன்னாருக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கான வருகை தந்துள்ள 
ஐக்கிய அமெரிக்கா நாட்டின் இலங்கைக்கான அரசியல் மற்றும் மனித
உரிமைகள் தொடர்பான அதிகாரிகள் மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். </p><p>

இன்று(27.07.2026) காலை
மன்னாரிற்கு விஜயம் செய்துள்ள நிலையில், சமூக பொருளாதார
மேம்பாட்டிற்கான (மெசிடோ) நிறுவனத்தையும் பார்வையிட்டுள்ளனர். </p><h2>

மக்களின் பிரச்சினைகள்</h2><p>
இதனைத் தொடர்ந்து, நிறுவன அலுவலகத்தில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த
சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து விரிவான கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b11fb79-bf8d-4455-be6e-f6a19977040a/26-6a675b62312f7.webp' /></p><p> 

இதன்போது, வடக்கு மற்றும் மன்னார் மாவட்டத்தின்
தற்போதைய சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பாக அதிகாரிகள்
ஆழ்ந்த ஆர்வத்துடன் கருத்துக்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.</p><p> 

மக்களின் வாழ்வாதாரம், பொருளாதார மீட்பு, நிலையான அபிவிருத்தி, சமூக
நீதி, மனித உரிமைகள், நல்லாட்சியை பலப்படுத்துதல் மற்றும் எதிர்கால
அபிவிருத்திக்கான வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>

முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்</h2><p>
இதேவேளை, தற்போதைய சூழலில் வடக்கு மக்களும் சிவில் சமூக அமைப்புகளும்
எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள், நில உரிமைகள், வாழ்வாதார பாதுகாப்பு,
இளைஞர்களின் பங்கேற்பு, பெண்களின் பங்கேற்பு, சமூக ஒற்றுமை, நல்லிணக்கம், மனித
உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஜனநாயக பங்கேற்பு தொடர்பான பல்வேறு கருத்துக்கள்
சிவில் சமூக பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11517d85-4eff-4027-90ce-1c10d25e29f1/26-6a675b632443d.webp' /></p><p>
</p><p>
பங்கேற்ற சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்களது துறைசார் அனுபவங்கள்,
களப் பணிகளில் இருந்து பெற்றுள்ள தகவல்கள் மற்றும் மக்களின் தேவைகளை நேரடியாக
பிரதிபலிக்கும் பரிந்துரைகளை பகிர்ந்துகொண்டனர்.</p><p>

அவற்றை அதிகாரிகள் கவனமாக கேட்டறிந்து, எதிர்காலத்தில் தொடர்ச்சியான தொடர்பு
மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.
</p><p>
இவ்வாறான சந்திப்புகள், சர்வதேச சமூகத்திற்கும் உள்ளூர் சிவில்
சமூகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வை மேம்படுத்துவதோடு, மனித உரிமைகள்,
ஜனநாயக ஆட்சி, சமூக நீதி மற்றும் நிலையான அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கான
பயனுள்ள உரையாடல்களுக்கு வலுசேர்க்கும் முக்கிய வாய்ப்பாக அமைந்தது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe795e8e-73d7-4318-9e26-3eca94e7f805/26-6a675b6403203.webp' /></p>]]></content>
            <updated>2026-07-27T13:21:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் காலவரையறையற்ற ஊரடங்கு உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/dispute-indefinite-curfew-in-nepal-1785158448"></link>
            <id>https://canadamirror.com/article/dispute-indefinite-curfew-in-nepal-1785158448</id>
            <summary type="text">&amp;nbsp; கிழக்கு நேபாளத்தில் நேற்றிரவு (26) இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கடும் மோதல், வன்முறையாக மாறியதையடுத்து, காலவரையறையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கிழக்கு நேபாளத்தில் நேற்றிரவு (26) இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கடும் மோதல், வன்முறையாக மாறியதையடுத்து, காலவரையறையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>

மோதல், வன்முறையாக மாறியதையடுத்து, கலவரத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e99ec3f-01a6-4390-9ef9-5d30a948b5b2/26-6a675b31dfdc4.webp' /></p><p>நேற்றிரவு (26) கிழக்கு நேபாளத்தின் சுன்சரி மாவட்டத்தில் உள்ள திவான்கஞ்ச், கப்தன்கஞ்ச் பஜார் பகுதி வழியாக சிலர் சப்தகோஷி நதியை நோக்கிப் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளபோது, ஒரு தரப்பினர் உரத்த சத்தத்துடன் இசைக்கச்சேரி நடத்தியபடி சென்றுள்ளனர்.
</p><p>


இதற்கு மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அது வன்முறை மோதலாக வெடித்துள்ளது.</p><p>



இந்த மோதலின் போது வன்முறையாளர்கள் வீடுகள், வைத்தியசாலைகள் வாகனங்கள் உள்ளிட்ட பொது மற்றும் தனியார் சொத்துக்களைச் சூறையாடியதுடன், தீவைத்தும் கொளுத்தியுள்ளனர். 

இந்த மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த பலர் காயமடைந்துள்ளனர்.</p><p> தகவலறிந்து விரைந்த பொலிஸார் , கலவரக்காரர்களைக் கலைக்கக் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், வானத்தை நோக்கி எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடும் நடத்தி இருந்ததாக கூறப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-07-27T13:19:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாணசபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துக! அரசிடம் ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/samagi-jana-balawegaya-urges-the-government-1785158022"></link>
            <id>https://tamilwin.com/article/samagi-jana-balawegaya-urges-the-government-1785158022</id>
            <summary type="text">நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், மாகாண சபைத் தேர்தலைப் பழைய
முறையில் உடனடியாக நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள்
சக்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், மாகாண சபைத் தேர்தலைப் பழைய
முறையில் உடனடியாக நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள்
சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க வலியுறுத்தினார்.</p><p>

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தொடர்பான தவறான கருத்துக்கள், நீதியரசர்களின்
ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் முயற்சி, நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும்
தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் அரசின் செயற்பாடுகளைக்
கடுமையாக விமர்சித்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர்
மேற்கண்டவாறு கூறினார்.
</p><p>
கொழும்பு, எதுல்கோட்டேயிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (27.07.2026) நடைபெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><p></p><h2>பொய்க்கூற்று கண்டிப்பு</h2><p> அவர் மேலும்
குறிப்பிடுகையில், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் சேவைக்காலத்தை நீடிப்பது தொடர்பாக இலங்கை
சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் எதிர்ப்பு வெளியிட்டமை, ஐக்கிய மக்கள்
சக்தியிடமிருந்து சலுகைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே என தேசிய மக்கள் சக்தியின்
நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன் தெரிவித்த பொய்க் கூற்றை வன்மையாகக்
கண்டிக்கின்றேன்.</p><p> எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் சட்டத்தரணிகள்
சங்கத்துக்கும் இடையில் எவ்வித அரசியல் கொடுக்கல் வாங்கல்களும் இல்லை.

உயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை
அதிகரிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு தொடர்ந்து முயல்வது தவறானது.

நீதிமன்றங்களில் வழக்குத் தேக்கத்தைக் குறைப்பதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு
ஒன்றை அமைக்கலாம்.</p><p></p><p> </p><p>தனிநபர்களை மையமாகக் கொண்ட அரசமைப்புத் திருத்தங்களுக்கு
மக்கள் தீர்ப்பு (சர்வசன வாக்கெடுப்பு) காணப்பட வேண்டும். மேலும்,
நீதியரசர்களின் 8 வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்காமல் குறுக்கு
வழியில் செல்வது தவறான முன்னுதாரணம்.
</p><p>
நாட்டின் 7 ஜனாதிபதி மாளிகைகள் சுற்றுலா விடுதிகளாக மாற்றப்படும் என்று
கூறப்பட்ட போதிலும், 2025ஆம் ஆண்டில் அவற்றின் பராமரிப்புக்காக 33 மில்லியன்
ரூபா செலவிடப்பட்டுள்ளதாகத் தணிக்கை அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1423f90-61ef-4e9f-a8fb-83bdfcadeed3/26-6a67598957739.webp' /></p><h2>நிதி முறைகேடு&nbsp;</h2><p> </p><p>ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்க அம்மாளிகைகளில் தங்கியிருக்காவிட்டாலும், 3 ஆயிரத்து 89
பேர் அம்மாளிகைகளைப் பயன்படுத்தியுள்ளனர். இது நிதி முறைகேடு ஆகும்.

கடந்த அரசின் காலத்தில் நுவரெலியா தபால் நிலையத்தைச் சுற்றுலாத் துறைக்காக
மாற்ற முற்பட்டபோது எதிர்த்த தற்போதைய ஆட்சியாளர்கள், இன்று அதே தபால்
நிலையத்தைச் சுற்றுலா விடுதியாக மாற்றத் தயாராகி வருவது மக்களை ஏமாற்றும்
செயல் ஆகும்.
</p><p>
நாட்டின் தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளது என்று அரசு பொய்ப் பிரசாரங்களை
மேற்கொள்கின்றது. கடந்த மாதத்தில் மட்டும் 35 ஆயிரத்து145 மில்லியன் ரூபா
பெறுமதியான தங்க நகைகள் மக்கள் வறுமை காரணமாக அடகு வைக்கப்பட்டுள்ளன. </p><p>மேலும்,
2026ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தின்படி அன்றாடச் செலவுகளுக்காக மேலும் 7
டிரில்லியன் ரூபா கடன் பெற அரசு எதிர்பார்ப்பது ஏன்?

தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், தேவிநுவர
பெரஹரா நிகழ்வில் பாதாள உலகக் குழுவினரின் அச்சுறுத்தல் காரணமாக நடன
நிகழ்வொன்று நிறுத்தப்பட்டமை பாதுகாப்பின் பலவீனத்தையே காட்டுகின்றது.

எனவே, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், மாகாண சபைத் தேர்தலைப் பழைய
முறையில் உடனடியாக நடத்த வேண்டும் என்றார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T13:13:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இன்று தங்கத்தின் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gold-price-in-sri-lanka-today-1785149398"></link>
            <id>https://jvpnews.com/article/gold-price-in-sri-lanka-today-1785149398</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (27) மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நேற்று முன்தின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (27) மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
அதன்படி, நேற்று முன்தினம் (25) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 375,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை 2,000 ரூபாயால் அதிகரித்து 377,000 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f380335-55bf-4e82-bbf8-366581c92c8f/26-6a6737d7b7983.webp' /></p><p>

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 377,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 346,800 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,350 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.</p><p>

உலகச் சந்தையில் தங்க விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலையிலும் ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T13:12:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய இலவச விசா ; இந்திய உயர்ஸ்தானிகராலயம் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pilgrimage-visa-colombo-high-commission-of-india-1785157806"></link>
            <id>https://jvpnews.com/article/pilgrimage-visa-colombo-high-commission-of-india-1785157806</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியாவுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் இலங்கை யாத்திரிகர்களுக்கான இலவச விசா (Gratis Visa) வழங்கும் நடைமுறை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியாவுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் இலங்கை யாத்திரிகர்களுக்கான இலவச விசா (Gratis Visa) வழங்கும் நடைமுறை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
</p><p>
புதிய விசா சேவை முகவர் நியமனம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த சேவை, கடந்த 7ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3cdf0b7-b777-43fd-b137-9c1f508f0249/26-6a6758afedc7f.webp' /></p><p>
</p><p>
இதன்படி, புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சின் ஊடாகப் பரிந்துரைக்கப்படும் 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களைக் கொண்ட யாத்திரிகர் குழுக்களுக்கு எவ்வித விசா கட்டணமும் அறவிடப்பட மாட்டாது.
</p><p>
இதற்கான விண்ணப்பங்களை கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள இந்திய தூதரக சேவை மையங்களில் (ICAC) சமர்ப்பிக்க முடியும்.</p><p></p><p>
</p><p>
இந்திய அரசின் புதிய விதிமுறைகளின்படி, 12 முதல் 70 வயதுக்குட்பட்ட பயணிகள் அனைவரும் கைரேகை உள்ளிட்ட உயிரியல் தரவுகளை (Biometrics) வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், சிரேஷ்ட பிரஜைகள் நீண்டநேரம் காத்திருப்பதைத் தவிர்க்க விசேட விரைவுச் சேவைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>
அதேசமயம் யாத்திரிகர்களுக்கு விசா கட்டணம் முழுமையாக விலக்களிக்கப்பட்ட போதிலும், விசா சேவை மையத்துக்கான செயலாக்கக் கட்டணமாக 1,855 இலங்கை ரூபாய் செலுத்தப்பட வேண்டும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெளிவுபடுத்தியுள்ளது</p>]]></content>
            <updated>2026-07-27T13:09:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ. 5 கோடி மதிப்புள்ள சொந்த வீடு.. நடிகை மமிதா பைஜூவின் சொத்து மதிப்பு.. முழு விவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-mamitha-baiju-net-worth-1785149354"></link>
            <id>https://cineulagam.com/article/actress-mamitha-baiju-net-worth-1785149354</id>
            <summary type="text">மமிதா பைஜூமலையாளத்தில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய அளவில் சென்சேஷனல் கதாநாயகியாக வலம் வருகிறார் மமிதா பைஜூ. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஜனநாயக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மமிதா பைஜூ</h2><p>மலையாளத்தில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய அளவில் சென்சேஷனல் கதாநாயகியாக வலம் வருகிறார் மமிதா பைஜூ. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஜனநாயகன் திரைப்படம் வசூலில் வேட்டையாடி வருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bafa461-5fec-4cc0-a7fc-45cf4effb8e3/26-6a6737ad6cabd.webp' /></p><p></p><p>இதை தொடர்ந்து விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படம் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>சொத்து மதிப்பு</h2><p>
</p><p>
திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் <a href="https://www.youtube.com/watch?v=BZ6nD0I5Avo" target="_blank">மமிதா பைஜூ</a>வின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. </p><p>அந்த தகவலின்படி, நடிகை மமிதா பைஜூ தற்போது ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். கேரளாவில் இவருக்கு சொந்தமாக உள்ள வீட்டின் மதிப்பு ரூ. 3 கோடி முதல் ரூ. 5 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4957104-9133-4d14-b8ed-d3fdb58c29a2/26-6a6737acbb20a.webp' /></p><p>

மொத்தத்தில் நடிகை மமிதா பைஜூவின் சொத்து மதிப்பு ரூ. 20 கோடி முதல் ரூ. 30 கோடி வரை இருக்கும் என தகவல் தெரிவிக்கிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-27T13:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசில் ராஜபக்சவை இலங்கைக்கு கொண்டு வருவது கடினமாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/basil-is-difficult-to-bring-back-to-sri-lanka-1785153948"></link>
            <id>https://ibctamil.com/article/basil-is-difficult-to-bring-back-to-sri-lanka-1785153948</id>
            <summary type="text">மாத்தறை நீதிமன்றம் விதித்த வழக்கில் முன்னலையாகத் தவறியதற்காகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, தற்போது அமெரிக்காவில் உள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை நீதிமன்றம் விதித்த வழக்கில் முன்னலையாகத் தவறியதற்காகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, தற்போது அமெரிக்காவில் உள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை, அமெரிக்க நீதிமன்ற உத்தரவின்படி நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவர முடியும் என்று முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
</p><p>
பசில் ராஜபக்சவை நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவருவதற்காக அரசாங்கம் சர்வதேச அளவில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கிடைத்த தகவலின் பேரில் அவர் இவ்வாறு கூறினார்.</p><h2>அது எளிதான காரியம் அல்ல</h2><p>பசில் ராஜபக்சவை இங்கு கொண்டுவருவது சாத்தியம் என்றும், ஆனால் அது எளிதான காரியம் அல்ல என்றும் அலி சப்ரி மேலும் கூறினார். இதனை அமெரிக்க நீதிமன்றத்திற்குப் பரிந்துரைத்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fea04301-f50e-4df8-897f-df15e124688c/26-6a67515266fcf.webp' /></p><p> </p><p>இதற்கிடையில், இன்டர்போலின் முழு ஆதரவுடன் பசில் ராஜபக்சவை இங்கு கொண்டுவரவும், அவரை இங்கு கொண்டுவருவதற்காக இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று ஒரு சிரேஷ்ட காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.</p><p>

மாத்தறைப் பகுதியில் ஒன்றரை ஏக்கர் நிலத்தை முறைகேடாகச் சம்பாதித்த பணத்தில் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு மாத்தறை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கில் ஆஜராகத் தவறியதையடுத்து, பசில் ராஜபக்சவுக்கு இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T12:58:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே ரிட் மனு ; நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/suresh-sallay-writ-petition-court-order-issued-1785155109"></link>
            <id>https://jvpnews.com/article/suresh-sallay-writ-petition-court-order-issued-1785155109</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் ரிட் மனு வை நாளை (28) மீண்டும் அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் ரிட் மனு வை நாளை (28) மீண்டும் அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>



உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி, சுரேஷ் சலே ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9d7e03d-f33f-4031-b090-b752ed4a9c2b/26-6a674e267b5fc.webp' /></p><p>
</p><p>
குறித்த மனு இன்று (27) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p> 

இதன்போது, மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் நீதிமன்றத்தில் விரிவான சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளார்.</p><p></p><p> </p><p>

 இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற் கொள்ளப்பட்டதை அடுத்து, குறித்த மனுவை நாளை மீண்டும் அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அதன்படி, மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் நிலையான திகதி நாளை அறிவிக்கப்படவுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T12:58:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்களைக் கொல்ல அனுப்பினார்! பாரிஸில் மகளிரை கத்தியால் தாக்கிய நபர்..அதிர்ச்சி வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-arrested-in-paris-who-stab-women-with-knife-1785157133"></link>
            <id>https://news.lankasri.com/article/man-arrested-in-paris-who-stab-women-with-knife-1785157133</id>
            <summary type="text">பிரான்ஸின் பாரிஸ் நகரில் நபர் ஒருவர் கத்தியால் தாக்கிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.&amp;nbsp;கத்தியால்&amp;nbsp;தாக்குதல் 
பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் Po...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸின் பாரிஸ் நகரில் நபர் ஒருவர் கத்தியால் தாக்கிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.&nbsp;</p><h2>கத்தியால்&nbsp;தாக்குதல் </h2><p>
பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் Porte de Clichy பகுதியில், நபர் ஒருவர் கத்தியால் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.&nbsp;</p><p><iframe allowfullscreen frameborder="0" width="698" height="573" scrolling="no" id="molvideoplayer" title="MailOnline Embed Player" src="https://www.dailymail.com/embed/video/3687845.html"></iframe></p><p>

உடனே அவரை அங்கிருந்தவர்கள் துணிச்சலுடன் மடக்கிப் பிடித்தனர். அவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.&nbsp;</p><p></p><p>
அவரிடம் இருந்து இரண்டு கத்திகள் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

கர்ப்பிணிப் பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.</p><p>

</p><h2>கவலைக்கிடமாக&nbsp;ஒருவர் </h2><p>இருவர் பலத்த காயமடைந்தாலும் அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும், மற்றொருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ் மற்றும் பாரிஸ் காவல்துறையினர் தெரிவித்தனர். </p><p> 

இதற்கிடையில், கைது செய்யப்பட்ட 31 வயது நபர் "பெண்களைக் கொல்ல கடவுள் என்னை அனுப்பினார் என்று கூறினார்" என்று Le Parisien இதழிடம் விசாரணைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த இளைஞர், ஆயுதத்துடன் பெண்ணை நோக்கி செல்லும் மற்றும் மடக்கிப் பிடிக்கப்பட்ட காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95db6e56-800f-45fd-8500-7ad751dafaac/26-6a6757a794c6a.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T12:57:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெல்ஜியத்தில், கனடிய பெண் அதிகாரி உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadian-nato-intern-arrested-on-suspicions-1785032737"></link>
            <id>https://canadamirror.com/article/canadian-nato-intern-arrested-on-suspicions-1785032737</id>
            <summary type="text">பெல்ஜியத்தில் உள்ள நேட்டோ இராணுவ அமைப்பின் தலைமை அலுவலகத்தில் பயிற்சி ஊழியராக பணியாற்றி வந்த கனடா நாட்டுப் பெண் ஒருவர், உளவு பார்த்த சந்தேகத்தின் பேரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெல்ஜியத்தில் உள்ள நேட்டோ இராணுவ அமைப்பின் தலைமை அலுவலகத்தில் பயிற்சி ஊழியராக பணியாற்றி வந்த கனடா நாட்டுப் பெண் ஒருவர், உளவு பார்த்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>
நேட்டோவின் பாதுகாப்புப் பிரிவு அளித்த ரகசியத் தகவலின் அடிப்படையில், பெல்ஜியம் இராணுவ உளவுத்துறையும் காவல்துறையும் இணைந்து இந்த விசாரணையைத் தொடங்கின. 
கைது செய்யப்பட்ட நபர் சீன வம்சாவளியைக் கொண்ட கனடா நாட்டவர் என பெல்ஜியம் அரசாங்கம் தெரிவித்துள்ளது. </p><p>
சந்தேக நநபரின் வீடு மற்றும் நேட்டோ தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது பணி இடத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது.
சோதனையைத் தொடர்ந்து அந்தப் பெண் அதிகாரப்பூர்வமாகக் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3747c6d3-a3e9-4786-a0e3-54cfd86485da/26-6a657022a1f60.webp' /></p><p> </p><p>
மூன்றாம் நாடு ஒன்றிற்காக உளவு பார்த்தல் மற்றும் சட்டவிரோத குற்றவியல் அமைப்பில் உறுப்பினராக இருத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>
இந்தச் சம்பவம் பெல்ஜியத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள மான்ஸ் நகரில் அமைந்துள்ள நேட்டோவின் ‘ஐரோப்பிய கூட்டுப் படைகளின் மூலோபாயத் தலைமை அலுவலகத்தில்’ (SHAPE) நடைபெற்றுள்ளது. </p><p>
இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சு வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதாகக் கூறியுள்ளது. </p><p>
எனினும், கனடாவின் உளவுத்துறை மற்றும் சட்ட அமலாக்க முகமைகள் சர்வதேச கூட்டாளிகளுடன் இணைந்து இத்தகைய அச்சுறுத்தல்களைக் கையாண்டு வருவதாக அதன் செய்தித் தொடர்பாளர் மார்கோ போயில் உறுதி அளித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T12:55:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெல்லம் கொடுத்த நபரை மிதித்துக் கொன்ற யானை: பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/elephant-kills-driver-while-feed-jaggery-1785156374"></link>
            <id>https://news.lankasri.com/article/elephant-kills-driver-while-feed-jaggery-1785156374</id>
            <summary type="text">இந்தியாவின் மேற்கு வங்கத்தில், தனக்கு வெல்லம் கொடுத்த ஒருவரை யானை ஒன்று மிதித்துக் கொன்ற பயங்கர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

வெல்லம் கொடுத்த நபரை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் மேற்கு வங்கத்தில், தனக்கு வெல்லம் கொடுத்த ஒருவரை யானை ஒன்று மிதித்துக் கொன்ற பயங்கர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
</p><h3>
வெல்லம் கொடுத்த நபரை மிதித்துக் கொன்ற யானை
</h3><p>
சனிக்கிழமையன்று, மேற்கு வங்கத்திலுள்ள சந்தன் நகர் என்னுமிடத்தில் தெருவில் வலம் வந்த யானை ஒன்றிற்கு விஜய் ஹோல்க்கர் (49) என்னும் ஆட்டோ ரிக்‌ஷா சாரதி வெல்லம் கொடுத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e0271b1-7318-43f3-a482-0e00bf41e8fd/26-6a6753183bcad.webp' /></p><p>
அப்போது, யானையை கட்டுப்பாட்டில் வைப்பதற்காக, யானைப்பாகனான உமேஷ் கோஸ்வாமி, யானையின் தலை அருகே குச்சியால் தட்டியுள்ளார்.</p><p>

கோபமடைந்த யானை தனக்கு வெல்லம் கொடுத்த விஜயை தூக்கி வீசி காலால் மிதித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p>
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையிலும், அவரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.</p><p>

அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பில், யானைப்பாகனான உமேஷை பொலிசார் கைது செய்துள்ளனர்.
</p><p>
அவர் மீது, விலங்கு ஒன்று தொடர்பில் அலட்சியம் காரணமாக உயிரிழப்புக்குக் காரணமாக இருந்தது முதலான இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T12:51:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சித்தாண்டி முருகன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் செய்யுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-at-siththandi-temple-1785154722"></link>
            <id>https://tamilwin.com/article/protest-at-siththandi-temple-1785154722</id>
            <summary type="text">அம்பாறை - சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் 14 வருடங்கள் ஆகியும்
கும்பாபிஷேகம் இடம்பெறவில்லை, இந்த நிலையில் வருடாந்த திருவிழா வேண்டாம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை - சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் 14 வருடங்கள் ஆகியும்
கும்பாபிஷேகம் இடம்பெறவில்லை, இந்த நிலையில் வருடாந்த திருவிழா வேண்டாம்
கும்பாபிஷேகமே வேண்டும் என கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>குறித்த போராட்டம் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக இன்று (27.07.2026) ஆலயத்தின் முன்பாக பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>போராட்டக்காரர்கள் ஒன்று
திரண்டு இறை சிந்தனையுடனான சமய சமூகப் பணியில் பயபக்தியுடன் செயல்படுங்கள், வெளிப்படை தன்மையை பேணி ஒற்றுமையாக செயல்படுங்கள், வேண்டாம் வேண்டாம் ஊரை
ஏமாற்றாதீர்கள், முருகனுக்கு கும்பாபிஷேகம் எப்போ? கடும் சொல் பேசாத பூட்டிய
அறைக்குள் கூட்டமா?, இன்னும் பொறுமை வேண்டாம் அத்திப்பட்டியாக்கி விடுவார்கள்
மக்களே விழித்தெழு என்ற சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.</p><p></p><h2>கும்பாபிஷேகம் இடம்பெற வேண்டும்</h2><p>
அதேவேளை போராட்டக்காரர்கள் கூறுகையில், சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் 12 வருடங்களுக்கு ஒரு
முறை இந்து சமய ஆகம விதிப்படியும் கும்பாபிஷேகம் இடம்பெற வேண்டும். ஆனால்
தற்போது 14 வருடங்கள் கடந்தும் பாலஸ்தாபனம் செய்து கோவிலில் திருத்த பணிகள்
மேற்கொண்டு கும்பாபிஷேகம் இடம் பெறவில்லை.</p><p>

இந்நிலையில் 1965ஆம் ஆண்டு செய்யப்பட்ட பாவைகள் செயல்திறன் அற்ற நிலையில்
குரங்குகள் பாய்ந்தும், இயற்கை சீற்றத்தின் காரணமாகவும் சில சிலைகள் உடைந்தும்
தோற்றப்பாடுகளுடனும், மின்சார இணைப்புக்களும் பழையனவாகவே இருக்கின்றதுடன், ஆலயத்தில் உள்ள வர்ணப் பூச்சுக்களும் பழமை வாய்ந்ததாக காட்சியளிக்கின்றதுடன், ஆலய கூரையில் உள்ள ஓடுகள் உடைந்தும் பீலிகள் இறந்த நிலையிலும், மழைக்
காலங்களில் மழைநீர் ஒழுகி நீர் நிறைந்து பக்தர்கள் நின்று வணங்க முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது.
</p><p>
இந்த நிலையில் திருவிழா முக்கியமா? என்பதை கடந்த வருடம் பொது மக்களாகிய
நாங்கள் சுட்டிக்காட்டிய போது காலம் நெருங்கி விட்டதாகவும் 2025ம் ஆண்டில்
திருவிழாவை நடத்தி விட்டு திருவிழா முடிந்ததும் கந்தசஷ்டி விரதம் (சூரன்
போர்) நடத்திவிட்டு பாலஸ்தாபனம் செய்து ஆலயத்தை புனருத்தாபனம் செய்து
கும்பாபிஷேகம் செய்வோம் என்றனர்.</p><p></p><h2>மகஜர் கையளிப்பு</h2><p>
</p><p>
பின்னர் சூரன் போர் முடிந்த பிற்பாடு மழைக் காலமாக இருப்பதால் 2026ம் ஆண்டு
தைப்பொங்கல் முடிந்த பிற்பாடு பாலஸ்த்தாபனம் செய்து கும்பாபிஷேகம் செய்வோம் என
நிர்வாக சபையினர் கூறினார்கள். ஆனால் இன்று வரை எந்த ஏற்பாடுகளும்
செய்யவில்லை. இது தொடர்பாக ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க ஆலய நிர்வாக
சபையினர் தவறியமையால் ஆலய நிர்வாக சபைக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டத்தை
முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.&nbsp;</p><p>இதையடுத்து போராட்டகளத்துக்கு சென்ற மதம் மற்றும் கலாச்சார பிரதி அமைச்சரின்
இணைப்புச் செயலாளர் மற்றும் தேசிய செயலாளர் கலாச்சார உத்தியோகத்தர்களிடம்
கோரிக்கை அடங்கிய மகஜர் கையளித்தனர்.</p><p>

இதன்போது அமைச்சரின் இணைப்புச் செயலாளர், இதனை ஒரு வாரத்துக்குள் தீர்த்து
வைப்பதாகவும் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட வேண்டும்
எனவும் தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்வர்கள் அங்கிருந்து
கலைந்து சென்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T12:49:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியலில் அடியெடுத்து வைக்கும் நடிகர் தனுஷ்?- அவரே கொடுத்த ஹின்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/actor-dhanush-political-entry-speech-spark-fans-1785152908"></link>
            <id>https://manithan.com/article/actor-dhanush-political-entry-speech-spark-fans-1785152908</id>
            <summary type="text">நடிகர் தனுஷ் வரும் 28ஆம் தேதி தனது 48வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். 

சமீபத்தில் ராயன் படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதும், கேப்டன் மி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் தனுஷ் வரும் 28ஆம் தேதி தனது 48வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். </p><p>

சமீபத்தில் ராயன் படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதும், கேப்டன் மில்லர் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் தனுஷுக்கு அறிவிக்கப்பட்டது.
</p><p>
இதனிடையே, தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. </p><p>

அவரது ரசிகர் மன்றத்துக்கான புதிய கொடி சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcf9aef2-c899-4445-b211-94535a0e59ef/26-6a674617651fd.webp' /></p><p>

தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் ரசிகர் மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.</p><p> 

இதில் கலந்துகொண்ட தனுஷ், ரசிகர்கள் தங்களைச் சுற்றியுள்ள மக்களின் பிரச்சினைகளை கவனித்து, அவர்களுக்கு உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
</p><p>
மேலும், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை செய்ய ரசிகர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p> </p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/Dhanush?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Dhanush</a> gives a Strong hint about his Political Entry:<br><br>&quot;So many people have gathered in one place.. This kind of unity has a power..💪 You need to give that unity a purpose.. Not just through audio launches and meet ups. Join hands and do more welfare work.. Do whatever you can…</p>&mdash; Laxmi Kanth (@iammoviebuff007) <a href="https://x.com/iammoviebuff007/status/2081407645572063497?ref_src=twsrc%5Etfw">July 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>தனுஷின் இந்த பேச்சு, அவரது அரசியல் பயணத்திற்கான தொடக்கமாக இருக்கலாம் என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p><p>

இதனிடையே, தனுஷின் அரசியல் வருகை குறித்து அவரது தந்தை கஸ்தூரி ராஜாவிடம் கேட்கப்பட்டபோது, "அரசியலுக்கு வருவது தனுஷின் தனிப்பட்ட முடிவு. அவர் கட்சி ஆரம்பித்தால் ஆரம்பிக்கட்டும், இல்லையென்றால் இருக்கட்டும். அது குறித்து நான் எதுவும் கேட்க மாட்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T12:45:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ.1300 சொத்து மதிப்பு!! விராட் - அனுஷ்கா வாங்கிய புது அடுக்குமாடி வீடு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/virat-kohli-anushka-sharma-bought-new-apartment-1785152069"></link>
            <id>https://viduppu.com/article/virat-kohli-anushka-sharma-bought-new-apartment-1785152069</id>
            <summary type="text">விராட் - அனுஷ்காஇந்திய கிரிக்கெட் நட்சத்திரமான விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் ஒரு அடுக்குமாடி கட்டிடம் ஒன்றினை சமீபத்தில் வாங்க...</summary>
            <content type="html"><![CDATA[<h2>விராட் - அனுஷ்கா</h2><p>இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் ஒரு அடுக்குமாடி கட்டிடம் ஒன்றினை சமீபத்தில் வாங்கியுள்ளனர். மும்பை அந்தேரி மேற்கிலுள்ள வெர்சோவா பகுதியில் விலையுயர்ந்த பிளாட் ஒன்றினை வாங்கியுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/378467de-e78e-4935-8c72-b7eebedcda33/26-6a674247dd66e.webp' /></p><p>பத்திரப்பதிவு ஆவணங்களின் அடிப்படையில் விராட் - அனுஷ்கா ஜோடி இணைந்து கோத்ரேஜ் ஸ்கைஷோர் கட்டிடத்தின் மேல் தளத்தில் 2,644 சதுர அடி பரப்பளவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றினை வாங்கியுள்ளனர். இதில் 316 சதுர அடி அளவிலான பிரத்யேக பகுதியும் 3 கார்கள் நிறுத்துமிடங்களும் அடங்கும். இந்த சொத்தின் மதிப்பு சுமார் ரூ. 18.29 கோடியாகும். இது விராட் கோலியின் 2026 ஐபிஎல் சம்பளத்திற்கு கிட்டத்தட்ட சமமாம்.</p><p> பெங்களூரு அணிக்காக கடந்த சீசனில் ரூ. 21 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். அடுக்குமாடி குடியிருப்பின் விற்பனை பரிவர்த்தனை ஜூலை 21 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இந்த தம்பதியினர் ரூ. 1.09 கோடியை முத்திரை கட்டணமாகவும் கூடுதலாக ரூ. 30 ஆயிரம் பதிவு கட்டணமாகவும் செலுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a42ed340-6398-4ffc-a497-e0ac1bf1ea1f/26-6a6742488c0ff.webp' /></p><h2>சொத்து மதிப்பு</h2><p> விராட் கோலி ஏற்கனவே மும்பை வொர்லி பகுதியில் 7,171 சதுர அடி பரப்பளவில் அடுக்குமாடி குடியிருப்பு, குருகிராமில் ஒரு பங்களா, அலிபாக்கில் ஒரு பண்ணைவீடு என்று சொந்தமாக வைத்துள்ளார். </p><p>விராட் கோலியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 1,050 கோடி முதல் ரூ. 1115 கோடி வரை இருக்கும் என்றும் பிராண்ட் வேல்யூவாக ரூ. 3542 கோடியையும் வைத்திருக்கிறாராம்.</p><p> மேலும் விராட் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவின் சொத்து மதிப்பு ரூ. 255 கோடி முதல் ரூ. 300 கோடி வரை இருக்கும் என்று இருவரையும் சேர்த்து சுமார் ரூ. 1300 கோடிக்கும் மேல் சொத்துக்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-27T12:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்களின் அழகை கெடுக்கும் கருவளையம் - செலவே இல்லாமல் சரிச் செய்வது எப்படி?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/how-to-remove-dark-circles-simple-tips-1785155791"></link>
            <id>https://manithan.com/article/how-to-remove-dark-circles-simple-tips-1785155791</id>
            <summary type="text">கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் (Dark Circles) என்பது இன்று பலரையும் பாதிக்கும் பொதுவான பிரச்சினையாக மாறியுள்ளது.

போதிய தூக்கமின்மை, அதிக மனஅழுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் (Dark Circles) என்பது இன்று பலரையும் பாதிக்கும் பொதுவான பிரச்சினையாக மாறியுள்ளது.</p><p>

போதிய தூக்கமின்மை, அதிக மனஅழுத்தம், நீண்ட நேரம் கணினி மற்றும் மொபைல் போன் பயன்படுத்துவது, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் கருவளையம் ஏற்படுகிறது.</p><p>

முன்பு பெண்களிடம் அதிகம் காணப்பட்ட இந்த பிரச்சினை, தற்போது ஆண்களிடமும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.</p><p></p><p>
நாம் அன்றாடம் செய்யும் சில சிறிய தவறுகள்கூட கண்களைச் சுற்றி கருவளையம் உருவாக முக்கிய காரணமாக இருக்கலாம்.</p><p>

அப்படியானால், கண்களைச் சுற்றியுள்ள கருவளையத்தை மருந்துகள் இல்லாமலேயே எளிய இயற்கை வழிமுறைகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் எவ்வாறு குறைக்கலாம் என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம்.</p><p><iframe width="463" height="823" src="https://www.youtube.com/embed/Gxm93M4un5I" title="கண்களை சுற்றி கருவளையமா? இத கண்டிப்பா பாருங்க! 😱 | Dark Circles Tips Tamil" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T12:38:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் தீவிரமடையும் காட்டுத்தீ : அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டிய ஜனாதிபதி மேக்ரோன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wildfires-france-macron-emergency-meeting-1785154817"></link>
            <id>https://tamilwin.com/article/wildfires-france-macron-emergency-meeting-1785154817</id>
            <summary type="text">பிரான்ஸ் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தவும்,
வரலாற்றுச் சிறப்புமிக்க போர்டோ நகரை நோக்கி தீ பரவுவதைத் தடுக்கவும் பிரான்ஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தவும்,
வரலாற்றுச் சிறப்புமிக்க போர்டோ நகரை நோக்கி தீ பரவுவதைத் தடுக்கவும் பிரான்ஸ்
ஜனாதிபதி இமானுவல் மேக்ரோன் அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
</p><p>
சுமார் 8.5 இலட்சம் மக்கள் வாழும் போர்டோ பெருநகரப் பகுதியில் இருந்து வெறும்
15 கிலோமீட்டர் தொலைவில் தீ பரவி வரும் நிலையில், வரும் நாட்களில் மீண்டும்
வெப்ப அலை வீசக்கூடும் என்ற வானிலை முன்னறிவிப்பு அதிகாரிகளிடையே பெரும்
பரபரப்பை உருவாக்கியுள்ளது.
</p><p></p><h2>தொடர் வெப்ப அலை</h2><p>
பிரபல திராட்சை மதுபான உற்பத்தி பிராந்தியமான ஜெரோண்டே பகுதியில் தற்சமயம்
நிலைமை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், இதுவரை
கண்டிராத அளவிலான காட்டுத்தீ பரவி வருவதாக உள்ளூர் மேயர்கள் கவலை
தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2e10b61-8616-4457-b017-dfb95f625780/26-6a674ea004eee.webp' /></p><p>ஐரோப்பாவில் தொடர்ந்து பதிவாகி வரும் வெப்ப அலை மற்றும்
வறட்சியால் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் காட்டுத்தீ மிக வேகமாகப்
பரவி, இதுவரை 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற
வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
</p><p>
அண்டை நாடான ஸ்பெயினிலும் காட்டுத்தீ காரணமாக 75,000இற்கும் மேற்பட்ட மக்கள்
பாதுகாப்பான இடங்களுக்குப் மாற்றப்பட்டுள்ளனர்.
</p><p>
தலைநகர் மட்ரிட்டை நோக்கி நகர்ந்து வந்த தீயின் வேகம் தற்போது சற்று
குறைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அங்குள்ள மக்களை மீண்டும் தங்கள்
வீடுகளுக்குத் திரும்ப அதிகாரிகள் அனுமதித்து வருகின்றனர்.
</p><p>
ஐரோப்பா முழுவதையும் உலுக்கி வரும் இந்தத் தொடர் வெப்ப அலைகள் மற்றும் காலநிலை
மாற்ற விளைவுகள், அப்பகுதியில் கடுமையான இயற்கை அழிவை ஏற்படுத்தி வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T12:38:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சர்களை காப்பாற்ற நடத்தப்படும் சங்க மாநாடு..! பௌத்த பிக்குகள் மறுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sana-maha-saba-is-to-protect-mahinda-1785155747"></link>
            <id>https://tamilwin.com/article/sana-maha-saba-is-to-protect-mahinda-1785155747</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தை பாதுகாக்கும் நோக்கில் மகா சங்க மாநாடு நடத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இடதுசாரி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தை பாதுகாக்கும் நோக்கில் மகா சங்க மாநாடு நடத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p>
இடதுசாரி மையத்தின் அழைப்பாளர் சமீர பெரேரா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
</p><p>ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சிறைக்குச் செல்வதனை தடுத்து அவர்களை பாதுகாக்கும் நோக்கில் சில பௌத்தப்பிக்குகள் இந்த சங்க மாநாட்டை நடத்துவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p></p><h2>ராஜபக்சர்களின் நாடகம்&nbsp;</h2><p>ராஜபக்சர்களை காப்பாற்றும் இந்த நாடகத்திற்கு பௌத்தப் பிக்குகளினால் செல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99791c30-80ac-475d-8a46-88d7173a5b44/26-6a6758a575da4.webp' /></p><p>இந்த மாநாடு பௌத்த மதத்தை பாதுகாக்கும் நோக்கிலோ பௌத்த மதத்தை மேம்படுத்தும் நோக்கிலோ நடத்தப்படுவது அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அத்துடன்,&nbsp; மாநாடு நாட்டு மக்களினது நாட்டினதோ நலனை கருத்திற் கொண்டு நடத்தவும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>குற்றச் செயல்கள் கொலைகள் ஊழல்கள் போன்றவற்றை மேற்கொண்ட ராஜபக்ச தரப்பினர் சிறைக்குச் செல்வதை தடுக்கும் நோக்கில் இந்த சங்க மாநாடு நடத்தப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
மோசமான ராஜபக்ச தரப்பினரை பாதுகாக்கும் நோக்கில் இந்த மகா சங்க மாநாடு நாடகம் நடத்தப்படுகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T12:35:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் பிரித்தானியா வரும் ஹரி: பக்கிங்காம் அரண்மனையில் தங்கப்போவதாக தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/prince-harry-to-stay-in-buckingham-palace-1785155463"></link>
            <id>https://news.lankasri.com/article/prince-harry-to-stay-in-buckingham-palace-1785155463</id>
            <summary type="text">பிரித்தானிய மன்னர் சார்லசின் இளைய மகனான ஹரி மீண்டும் பிரித்தானியா வர உள்ளார்.

இந்நிலையில், அவர் இம்முறை பக்கிங்காம் அரண்மனையிலுள்ள ஒரு அறையில் தங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானிய மன்னர் சார்லசின் இளைய மகனான ஹரி மீண்டும் பிரித்தானியா வர உள்ளார்.
</p><p>
இந்நிலையில், அவர் இம்முறை பக்கிங்காம் அரண்மனையிலுள்ள ஒரு அறையில் தங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><h3>
மீண்டும் பிரித்தானியா வரும் ஹரி</h3><p>

பிரித்தானிய இளவரசர் ஹரி, தன் மனைவி மேகன், பிள்ளைகள் ஆர்ச்சி மற்றும் லிலிபெட்டுடன் இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 10ஆம் திகதி, பிரித்தானியா வந்திருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f53ce7c3-7115-4a97-b5bb-02f5aa3fe56e/26-6a674f89a97b5.webp' /></p><p>
அப்போது, அவர் குடும்பமாக மன்னர் சார்லசை சந்தித்தார்.
</p><p>
இந்நிலையில், வருடாந்திர WellChild விருதுகள் வழங்கும் விழா தொடர்பிலான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மீண்டும் செப்டம்பர் மாதம் பிரித்தானியா வர உள்ளார் ஹரி.&nbsp;</p><p></p><p>
கடந்த முறை அவர் பிரித்தானியா வந்தபோது, முன்கூட்டியே சரியாக திட்டமிடாததால், அவரும் அவரது குடும்பத்தினரும் பக்கிங்காம் அரண்மனையில் தங்க முடியாமல் போய் விட்டது.
</p><p>
ஆனால், இம்முறை, பக்கிங்காம் அரண்மனையில் தங்க அவருக்கு மீண்டும் அறை ஒன்று ஒதுக்கப்படும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1aaad561-9553-4193-b353-65457e0f439d/26-6a674f890424a.webp' /></p><p>
அதாவது, இளவரசர் ஹரி மன்னர் சார்லசுடைய மகனாகவே இருந்தாலும், அவர் பக்கிங்காம் அரண்மனையில் தங்க திட்டமிட்டால், பல நாட்களுக்கு முன்பே தகவல் தெரிவிக்கவேண்டுமாம்.&nbsp;</p><p>
அதாவது, அவருக்கு அறை ஒதுக்கி, அவருக்கு உதவியாளர்கள் மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய நேரம் தேவை என்பதாலேயே இந்த ஏற்பாடாம்.</p><p>

இதற்கிடையில், இம்முறையும் ஹரியுடன் மேகனும் தம்பதியரின் பிள்ளைகளும் வருகிறார்களா என்பது குறித்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T12:34:02+00:00</updated>
        </entry>
    </feed>
