<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-21T02:33:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[2,500 கோடி ரூபாய் பெறுமதியான தங்க சிலை தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/story-of-the-burial-of-the-golden-statue-is-a-lie-1787278863"></link>
            <id>https://tamilwin.com/article/story-of-the-burial-of-the-golden-statue-is-a-lie-1787278863</id>
            <summary type="text">ஜா எல மெல்வத்த பகுதியில் சுமார் 2,500 கோடி ரூபாய் பெறுமதியானதாக கருதப்படும் பழமையான தங்க முலாம் பூசப்பட்ட அனுமான் சிலை புதைக்கப்பட்டுள்ளதாக அண்மையில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜா எல மெல்வத்த பகுதியில் சுமார் 2,500 கோடி ரூபாய் பெறுமதியானதாக கருதப்படும் பழமையான தங்க முலாம் பூசப்பட்ட அனுமான் சிலை புதைக்கப்பட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியானது.</p><p>

எனினும், அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அத்தகைய சிலை எதுவும் அங்கு இல்லை என்பது தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் நேற்று இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2><b>
 தங்க சிலை</b></h2><p>தங்கச் சிலை புதைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதனை தொடர்ந்து ஜா எல மெல்வத்த பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை பயன்படுத்தி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48f63bec-bbd6-42c1-81e1-59439ec0a5ae/26-6a87b6f330040.webp' /></p><p>இதன் போது, அங்கு ஏதேனும் அறியப்படாத பொருள் இருப்பதாக தெரியவந்திருந்தது.</p><p>

எனினும், புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம், குறித்த இடத்தில் எந்தவொரு பொருளும் புதைக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-21T02:25:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். உள்ளிட்ட வடக்கில் காணிகளை உடனடியாக விடுவியுங்கள் - ஜனாதிபதி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/president-order-release-land-in-northand-east-1787274138"></link>
            <id>https://ibctamil.com/article/president-order-release-land-in-northand-east-1787274138</id>
            <summary type="text">வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் காணிகளை உடனடியாக விடுவித்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறு பாதுகாப்புப் பிரிவினருக்கு ஜனாதிபதி அநுர குமார தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் காணிகளை உடனடியாக விடுவித்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறு பாதுகாப்புப் பிரிவினருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தல் வழங்கினார்.</p><p>கடந்த யுத்த காலத்தின் போது பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தபட்ட தற்போது விடுவிக்கப்படக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் காணிகளையே உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அநுர குமார தெரிவித்தார்.</p><p>நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று (20) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>காணிகளை விடுவிக்க முடியாது</h2><p>தேசிய பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்பதுடன், தேசிய பாதுகாப்பிற்காக இராணுவ முகாம்கள் எங்கு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது முப்படையினர் மற்றும் பொலிசார் உள்ளிட்ட பாதுகாப்புடன் தொடர்புடையவர்களின் பொறுப்பாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53c4aa53-8ae1-4515-a9b6-8147ccdd228a/26-6a87a5f3e92b9.webp' /></p><p>அதன் அடிப்படையில் எவ்வாறான காணிகளை விடுவிக்கலாம், எவ்வாறான காணிகளை விடுவிக்க முடியாது என்பது தொடர்பான இறுதித் தீர்மானத்திற்கு வருமாறும் அறிவுறுத்தினார். </p><p>

அவசியமான காணி அளவைத் தீர்மானிக்கும் போது இயன்றவரை மக்களின் தரப்பிலிருந்து சிந்தித்து, விடுவிக்கக் கூடிய அதிகபட்ச காணிகளை விடுவிக்குமாறு மேலும் அறிவுறுத்திய ஜனாதிபதி, அவ்வாறு வழங்கப்படும் காணிகளுக்கு மேலதிகமாக அந்த மக்களின் வாழ்வாதார வழிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார். </p><p>

அதற்காக உயர் உற்பத்தித் திறனைப் பெற்றுக்கொள்ளக் கூடிய நவீன விவசாயத் தொழில்நுட்பத்துடன் கூடிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளருக்கு இதன்போது பணிப்புரை விடுத்தார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T02:06:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட ஐவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/five-dead-including-two-from-the-same-family-1787275082"></link>
            <id>https://ibctamil.com/article/five-dead-including-two-from-the-same-family-1787275082</id>
            <summary type="text">மொனராகலை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்த்தில் ஐவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்குறித்த விபத்து இன்று அதிகாலை (21) மணியளவில் மொனராகல...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொனராகலை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்த்தில் ஐவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்</p><p>குறித்த விபத்து இன்று அதிகாலை (21) மணியளவில் மொனராகலை - கும்புக்கன பகுதியில் இடம்பெற்றுள்ளது.</p><p>மொனராகலை ,கும்புக்கன பகுதியில், கெபிலித்த ஆலயத்திற்கு புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த குழுவினரை ஏற்றிச் சென்ற டிராக்டர் சுற்றுலா வாகனம் மீது டிப்பர் மோதியதில்&nbsp;இந்த விபத்து சம்பவித்துள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>இந்நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட ஐவர் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.&nbsp;மேலும் மூவர் கவலைக்கிடமான நிலையில் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08579531-b6ae-487b-9258-48eb2f5a8299/26-6a87ad9c02937.webp' /></p><p>தொடம்கஸ்லந்த, புத்தல மற்றும் ஹொரபொக்க பகுதிகளைச் சேர்ந்த, 21,26,31,55 மற்றும் 56 வயதுடையவர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.</p><p>விபத்திற்குள்ளான டிப்பர் லொறி சாரதி மற்றும் பயணிகளை ஏற்றி வந்த உழவு இயந்திர சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.</p><p>விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T02:06:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 10 வயதுடைய ரோஹன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/10-year-old-rohan-from-jaffna-national-level-team-1787277471"></link>
            <id>https://ibctamil.com/article/10-year-old-rohan-from-jaffna-national-level-team-1787277471</id>
            <summary type="text">தேசிய டெனிஸ் போட்டியில் யாழ் ஃபிளமிங்கோஸ் அணியினர் சாதிக்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாண...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய டெனிஸ் போட்டியில் யாழ் ஃபிளமிங்கோஸ் அணியினர் சாதிக்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.</p><p>யாழ்ப்பாணத்தின் டென்னிஸ் விளையாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், இலங்கை டென்னிஸ் சங்கம் (SLTA) ஏற்பாடு செய்யும் இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக் (SLTPL) போட்டியில் பங்கேற்கும் எட்டு நகர அணிகளில் ஒன்றான யாழ் ஃபிளமிங்கோஸ் (Jaffna Flamingos) அணியின் உத்தியோகபூர்வ அறிமுக விழா நேற்று (20.08.2026) வியாழக்கிழமை மாலை 04.00 மணிக்கு தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது.</p><p>இந் நிகழ்வில் உரையாற்றிய அரசாங்க அதிபர், யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய மட்ட டெனிஸ் போட்டியில் பங்கேற்கும் ‘யாழ் ஃபிளமிங்கோஸ்’ அணி வெற்றிபெற வேண்டும் என தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p><p></p><p>
</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">தேசிய மட்டப் போட்டி</span></p><p>யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 10 வயதுடைய ரோஹன் தேசிய மட்ட அணியில் இடம்பிடித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், சிறுவயதிலேயே தேசிய மட்டப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது எனவும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccd17ebc-67de-429f-928c-9893707533f6/26-6a87b278d85a1.webp' />&nbsp; &nbsp;&nbsp;</p><p>யாழ்ப்பாண டெனிஸ் வீரர்களுக்கு உயர்மட்டப் பயிற்சிகளையும் போட்டி அனுபவங்களையும் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும், இதனால் தேசிய மட்டத்திற்கு வீரர்கள் தெரிவாகுவதில் சவால்கள் காணப்படுவதாகவும் அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார்.</p><p>

டெனிஸ் விளையாட்டு தற்போது விளையாட்டைத் தாண்டி பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் துறையாகவும் வளர்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிட்டதுடன், மாணவர்களை கல்வியுடன் இணைந்து விளையாட்டுத் துறையிலும் ஈடுபடுத்த பெற்றோர்கள் வழங்கும் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது எனத் தெரிவித்தார்.
</p><p>
எட்டு மாவட்ட அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில் ‘யாழ் ஃபிளமிங்கோஸ்’ அணி தொடர்ச்சியான சுற்றுகளில் முன்னேறி வெற்றிபெற வேண்டும் எனவும் வாழ்த்துத் தெரிவித்தார்.</p><p>இந் நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக ஷங்கர் ஃபூட்ஸ் (UK) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், யாழ்ப்பாணம் சிட்டி ஹோட்டலின் உரிமையாளருமான சந்திரசேகரம் கேதீஸ்வரன் அவர்களும், கௌரவ விருந்தினராக அருட்தந்தை அ.பி. திருமகன் கலந்து கொண்டனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T02:05:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடகி நந்தா மாலினியின் இறுதி விருப்பம்: குடும்பத்தினரின் தீர்மானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nanda-malinis-last-will-1787276300"></link>
            <id>https://tamilwin.com/article/nanda-malinis-last-will-1787276300</id>
            <summary type="text">காலஞ்சென்ற புகழ்பெற்ற பாடகி கலாநிதி நந்தா மாலினியின் இறுதி விருப்பம் தொடர்பிலான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இறுதி விருப்பம் குறித்த அறிவுறுத்தல்களுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலஞ்சென்ற புகழ்பெற்ற பாடகி கலாநிதி நந்தா மாலினியின் இறுதி விருப்பம் தொடர்பிலான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
</p><p>இறுதி விருப்பம் குறித்த அறிவுறுத்தல்களுக்கு அமைய, அவரது இறுதிக்கிரியைகளை மிகவும் எளிமையான முறையில் நடத்துவதற்கு குடும்பத்தினரால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் சுனில் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>இன்றைய தினம் காலை 10:00 மணிக்கு நாவல வீதி, விஜயபா மாவத்தையில் உள்ள இலக்கம் 30 இல் அமைந்துள்ள "நந்தா மாலினீ சங்கீத ஆசிரமத்திற்கு" அன்னாரின் பூதவுடல் கொண்டுவரப்படவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e0b9e3c-6265-46e6-b7ae-fe3a4d7713af/26-6a87ac0e08739.webp' /></p><p>
பொதுமக்கள் அஞ்சலிக்காக சனிக்கிழமை பிற்பகல் 3:30 மணி வரை அவரது உடல் அந்த இல்லத்திலேயே வைக்கப்பட்டிருக்கும்.
தனது உடலை வீட்டிலிருந்து வேறு எந்தவொரு பொது இடத்திற்கும் கொண்டு செல்ல வேண்டாம் என நந்தா மாலினி தனது இறுதி விருப்பப் பத்திரத்தில் விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>அத்துடன், இறுதிச் சடங்குகளை எந்தவொரு ஆடம்பரமுமின்றி மிகவும் எளிமையான முறையில் நடத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். </p><p>
இதற்கமைய, சனிக்கிழமை பிற்பகல் 3:30 மணிக்கு அன்னாரின் உடல் வீட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு பொரளை மயானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அன்று பிற்பகல் 5:00 மணிக்கு தகனம் செய்யப்படவுள்ளது.</p><p>
அவரது பலத்த கோரிக்கைக்கு இணங்க, எந்தவொரு அனுதாபச் கூட்டமோ, புகழுரைகளோ அல்லது இரங்கல் உரை வாசிப்போ இடம்பெறமாட்டாது என்றும் பேராசிரியர் சுனில் ஆரியரத்ன மேலும் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.</p><p>
இதனிடையே, பாடகி நந்தா மாலினியின் மறைவையிட்டு மூன்று நாட்கள் தேசிய துக்க தினங்களை பிரகடனப்படுத்த அரசு தீர்மானித்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T01:38:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடனடியாக அகற்றுங்கள் - யாழில் போராட்டத்தில் குதித்த மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-demanding-removal-liquor-shop-in-inuvil-1787272665"></link>
            <id>https://ibctamil.com/article/protest-demanding-removal-liquor-shop-in-inuvil-1787272665</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் – இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக அங்கிருந்து அகற்றக் கோரி, பிரதேச மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டனப் போராட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் – இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக அங்கிருந்து அகற்றக் கோரி, பிரதேச மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டனப் போராட்டம் இடம்பெற்றது.
</p><p>
இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள குறித்த மதுபானசாலைக்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p>

இதன்போது, “எமது கிராமத்தை மதுபோதையில் இருந்து காப்பாற்றுவோம்” என்ற பிரதான கோஷம் முன்வைக்கப்பட்டதுடன், மதுபானசாலையை உடனடியாக அகற்ற வேண்டும் என போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் வலியுறுத்தினர்.</p><p></p><p>
</p><h2>மதுபானப் பாவனையின் தாக்கம்&nbsp;</h2><p>
மதுபானசாலை அமைந்துள்ள பகுதியில் பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் குடியிருப்புகள் காணப்படுவதால், இதனால் சமூக ரீதியான பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனவும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b672bc5a-277f-40e6-8908-5e65d8989e14/26-6a87a149b2f0f.webp' /></p><p>குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மீது மதுபானப் பாவனையின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் எனவும், கிராமத்தின் சமூகச் சூழலைப் பாதுகாக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
</p><p>
அத்துடன், மக்களின் எதிர்ப்பையும் சமூகத்தின் நலனையும் கருத்திற்கொண்டு குறித்த மதுபானசாலையின் அனுமதியை மறுபரிசீலனை செய்து, அதனை அங்கிருந்து அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.</p><p>
இந்தக் கண்டனப் போராட்டத்தில் பிரதேச மக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T01:22:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் இடம் பெற்ற கோர விபத்து ; ஐந்து பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/five-people-killed-in-early-morning-accident-1787274679"></link>
            <id>https://jvpnews.com/article/five-people-killed-in-early-morning-accident-1787274679</id>
            <summary type="text">மொனராகலை, கும்புக்கன பகுதியில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற கோர வாகன விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொனராகலை, கும்புக்கன பகுதியில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற கோர வாகன விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
வெல்லவாய – மொனராகலை பிரதான வீதியில், கும்புக்கன களுப்பாலம் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b417b2c2-f812-413e-9a08-52b36e7424a0/26-6a87a5b977af2.webp' /></p><p>
</p><p>
வெல்லவாய நோக்கி பயணித்த டிப்பர் ரக வாகனம், எதிர்திசையில் இருந்து வந்த டிராக்டருடன் இணைக்கப்பட்ட டிரெய்லருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>

விபத்தின்போது டிரெய்லரில் 10 பேர் பயணித்துள்ளதாகவும், அவர்களில் எட்டு பேர் படுகாயமடைந்து மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அவர்களில் ஐந்து பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.</p><p></p><p>

உயிரிழந்தவர்கள் 21, 26, 31, 55 மற்றும் 56 வயதுடையவர்களாவர். அவர்கள் தொடங்கஸ்லந்த, புத்தல மற்றும் ஹொரபொக்க ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த மேலும் மூவர் தற்போது மொனராகலை வைத்தியசாலையில் உள்நோயாளர்களாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி மற்றும் டிராக்டர் சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-21T01:11:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்து! ஐவர் பலி - மூவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/monaragala-breaking-news-1787274025"></link>
            <id>https://tamilwin.com/article/monaragala-breaking-news-1787274025</id>
            <summary type="text">மொனராகலை - கும்புக்கன பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.&amp;nbsp;இன்று அதிகாலை இந்த கோர விபத்து சம்பவித்துள்ளது.&amp;nbsp;இதன்போது, மேல...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொனராகலை - கும்புக்கன பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.&nbsp;</p><p>இன்று அதிகாலை இந்த கோர விபத்து சம்பவித்துள்ளது.&nbsp;</p><p>இதன்போது, மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><h2>ஐவர் மரணம்&nbsp;</h2><p>உழவு இயந்திரமும், டிப்பர் லொறியொன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.&nbsp;</p><p>டிப்பர் லொறியில் பயணித்த 10 பேரில் எட்டு பேர் படுகாயமடைந்து மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர், அவர்களில் ஐந்து பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f52adaf8-f2f6-4ecd-bac6-d172adccdc22/26-6a87a53968da3.webp' /></p><p>இதன்போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உள்ளிட்ட ஐவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>படுகாயமடைந்த மூவர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p>தொடம்கஸ்லந்த, புத்தல மற்றும் ஹொரபொக்க பகுதிகளைச் சேர்ந்த, 21,26,31,55 மற்றும் 56 வயதுடையவர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.&nbsp;</p><p>விபத்திற்குள்ளான டிப்பர் லொறி சாரதி மற்றும் பயணிகளை ஏற்றி வந்த&nbsp; உழவு இயந்திர சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவம் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T01:09:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்லேகல சிறைச்சாலையில் தப்பிச் செல்ல முயற்சி: மரண தண்டனை கைதிகள் இடமாற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/6-death-penalty-prisoners-transfered-1787272917"></link>
            <id>https://tamilwin.com/article/6-death-penalty-prisoners-transfered-1787272917</id>
            <summary type="text">பல்லேகல தும்பர சிறைச்சாலையின் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு மரண தண்டனை கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 சிறைச்சாலையின் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்லேகல தும்பர சிறைச்சாலையின் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு மரண தண்டனை கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
 சிறைச்சாலையின் கழிப்பறையிலுள்ள கம்பிகளை அறுத்துத் தப்பிச் செல்ல முயன்றனர் என குறித்த கைதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மரண தண்டனை விதிக்கப்பட்ட 6 கைதிகள் வெலிக்கடை மற்றும் அங்குணுகொளபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9631e55e-5826-440d-a87c-812691f9f670/26-6a879ed6dafec.webp' /></p><p>
</p><p>மரண தண்டனை விதிக்கப்பட்டக் கைதிகள் தங்கியிருந்த அறைக்குட்பட்ட கழிப்பறையின் இரும்புக் கம்பிகள் சில அறுக்கப்பட்டிருந்ததை அவதானித்த சிறைச்சாலை அதிகாரிகள், இது தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொண்டனர். </p><p>
இந்த விசாரணைகளின் போதே குறித்த கம்பிகளை அறுத்த சம்பவத்துடன் இந்த 6 கைதிகளுக்கும் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டது.
</p><p>இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய 6 கைதிகளில் நால்வர் வெலிக்கடை சிறைச்சாலைக்கும், ஏனைய இருவர் அங்குணுகொளபெலஸ்ஸ சிறைச்சாலைக்கும் உடனடியாக இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T00:59:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலி.தெற்கு பிரதேச சபை எதிராக எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/val-north-uc-demands-removal-of-illegal-waste-1787272123"></link>
            <id>https://ibctamil.com/article/val-north-uc-demands-removal-of-illegal-waste-1787272123</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான
முறையில் கழிவுகளை கொட்டிய வலி.தெற்கு பிரதேச சபைக்கு எதிராக தீர்மானம் ஒன்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான
முறையில் கழிவுகளை கொட்டிய வலி.தெற்கு பிரதேச சபைக்கு எதிராக தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில் எதிர்வரும் 13 ஆம்
திகதிக்கு முன்னர் அவற்றை மீள அள்ள வேண்டும் என காலக்கெடு விதித்து வலி.
வடக்கு பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
</p><p>
வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் (20-08-2026) தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.</p><p>
</p><p></p><h2>பாரிய பள்ளங்கள்</h2><p>அதன் போது சபை ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் சுண்ணக்கல் அகழப்பட்ட
பாரிய பள்ளங்களுக்குள் வலி. தெற்கு பிரதேச சபையினர், சட்டவிரோதமான முறையில்
இலத்திரனியல் கழிவுகள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகளை
கொட்டியமை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b09126a1-3474-4aac-8a62-ce0b224dfedd/26-6a879bbc63a9a.webp' /></p><p>அதனை தொடர்ந்து, கொட்டப்பட்ட கழிவுகளை வலி. தெற்கு பிரதேச சபையினர் எதிர்வரும்
13ஆம் திகதிக்கு முன்னர் மீள அள்ள வேண்டும் எனவும் அது
தொடர்பிலான அறிவித்தலை வலி. தெற்கு பிரதேச சபைக்கு உடனடியாக அனுப்ப வேண்டும்
என சபையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</p><p>

அத்துடன் எதிர்வரும் 14ஆம் திகதி சிறப்பு கூட்டத்தினை நடாத்துவது எனவும் 13ஆம் திகதிக்கு முன்னர் வலி. தெற்கு பிரதேச சபையினர் கழிவுகளை மீள அள்ளாது
விடின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அன்றைய கூட்டத்தில்
தீர்மானிப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T00:51:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுமி குளிப்பதை எட்டிப்பார்த்த 18 வயது இளைஞர் ; அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-peeked-girl-taking-bath-incident-ensued-1787264396"></link>
            <id>https://jvpnews.com/article/man-peeked-girl-taking-bath-incident-ensued-1787264396</id>
            <summary type="text">இந்தியாவில் நெல்லை அம்பை அருகே சிறுமி குளிப்பதை எட்டிப்பார்த்ததாக 18 வயது இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், குறித...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் நெல்லை அம்பை அருகே சிறுமி குளிப்பதை எட்டிப்பார்த்ததாக 18 வயது இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், குறித்த இளைஞனின் தந்தை சிறுமியின் சித்தப்பாவை கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h3>தகராறில் சித்தப்பாவுக்கு கத்திக்குத்து</h3><p>
</p><p>
தெற்கு கல்லிடைக்குறிச்சியை அடுத்த செம்பத்திமேடு தெற்கு தெருவைச் சேர்ந்த ராஜூவின் மகன் சதீஷ் (18). மேளக்கலைஞரான இவர் அவ்வப்போது கட்டிட வேலைக்கும் சென்று வந்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/876e0da3-ef1f-418f-8254-14f0d891d6f2/26-6a877d8e0c597.webp' /></p><p>சம்பவத்தன்று அருகிலுள்ள கிராமத்திற்கு சென்ற சதீஷ், அங்குள்ள வீட்டின் பின்புறம் சென்று குளியலறையில் 17 வயது சிறுமி குளிப்பதை எட்டிப்பார்த்ததாக கூறப்படுகிறது. </p><p>இதை கவனித்த சிறுமி கூச்சலிட்டதால் சதீஷ் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிகிறது.
</p><p>
இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் உறவினர்களுடன் சதீஷின் வீட்டுக்குச் சென்று அவரது தந்தை ராஜூவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். </p><p>தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ராஜூ சிறுமியின் சித்தப்பாவை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
</p><p>
காயமடைந்த அவர் அம்பை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
</p><p>
இதுகுறித்த கல்லிடைக்குறிச்சி பொலிஸாரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்து ராஜூவை கைது செய்தனர். </p><p>இதற்கிடையே, சிறுமியை எட்டிப்பார்த்ததாக சதீஷ் மீது அம்பை அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் தனியாக புகார் அளிக்கப்பட்டது.
</p><p>
அதன் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் சதீஷையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T00:38:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-sri-lanka-1787272104"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-sri-lanka-1787272104</id>
            <summary type="text">நாட்டின் சில பகுதிகளில் இன்றையதினம்(21) கடுமையான வெப்பம் நிலவக் கூடும்&amp;nbsp; என எச்சரிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;இதன்படி, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சில பகுதிகளில் இன்றையதினம்(21) கடுமையான வெப்பம் நிலவக் கூடும்&nbsp; என எச்சரிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இதன்படி, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் கடுமையான வெப்பம் நிலவக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><h2>அதிகரித்த வெப்பநிலை</h2><p>இதன்படி, மேற்குறிப்பிட்ட சில மாவட்டங்களில், பகல் நேரத்தில் மனித உடலால் உணரக் கூடிய வெப்பநிலை தீவிர மட்டத்தில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>இதேவேளை, மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலமுறை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0c0abfb-3e02-4ab4-b168-15a110643002/26-6a879d6f776ea.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T00:36:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சனி பகவானால் வாழ்வில் உச்சத்தை தொடப்போகும் ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/astrology-sani-bhagavan-valvil-utcham-thotum-rasi-1787272288"></link>
            <id>https://jvpnews.com/article/astrology-sani-bhagavan-valvil-utcham-thotum-rasi-1787272288</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் நுழைவது சில ராசிக்காரர்களுக்குச் சாதகமான பலன்களைத் தரும் என்று எதிர்பார்க்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் நுழைவது சில ராசிக்காரர்களுக்குச் சாதகமான பலன்களைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>வக்ர நிலையில் இருக்கும் சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் நுழைவார். அவர் அக்டோபர் 9-ஆம் திகதி வரை இப்பாதத்தில் சஞ்சரிப்பார். இந்த நட்சத்திர பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கப்போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என நாம் இங்கு பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42d582c9-3326-4c7a-9458-6beaf6f34b2b/26-6a879c62499b1.webp' /></p><h3>ரிஷபம்</h3><p>
சனி பகவான் தற்போது ரிஷப ராசியின் 11-ம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த வீடு லாபம், வருமானம் மற்றும் லட்சியங்களின் நிறைவேற்றம் ஆகியவற்றுடன் தொடர்புடையது. இந்த பெயர்ச்சி வருமானத்திற்கான புதிய வழிகளைத் திறப்பதுடன், நீண்ட காலமாகத் தேங்கிக் கிடந்த பணத்தை மீட்டெடுக்கவும் உதவும். நீண்ட நாட்களாகத் தடைபட்டிருந்த திட்டங்கள் இப்போது இறுதியாக வெற்றிகரமாக முடிவடையும். உங்கள் பொருளாதார நிலை படிப்படியாக மேம்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74c1860e-4094-46ea-9e78-e6cb7ccd307c/26-6a879c6303115.webp' /></p><h3>மிதுனம்
</h3><p>ரேவதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் சனி பகவான் சஞ்சரிப்பது மிதுன ராசிக்காரர்களுக்குச் சாதகமாக அமையக்கூடும். தற்போது சனி பகவான் மிதுன ராசியின் பத்தாம் வீட்டில் நுழையப் போகிறது. ஜோதிடக் கணிப்புகளின்படி, இக்காலம் பணியில் பல துறைகளில் வெற்றியைத் தேடித்தரக்கூடும். வேலையில் இருப்பவர்கள் தங்கள் முயற்சிகளுக்காக சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டைப் பெறலாம், மேலும் அவர்களுக்குப் புதிய பொறுப்புகளும் வழங்கப்படலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76fde4a6-89e9-475d-9da7-9bbbac12eade/26-6a879c645a7e1.webp' /></p><h3>மகரம்</h3><p>
ரேவதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் சனி பகவான் சஞ்சரிப்பது மிதுன ராசிக்காரர்களுக்குச் சாதகமாக அமையக்கூடும். தற்போது சனி பகவான் மகர ராசியின் பத்தாம் வீட்டில் நுழையப் போகிறார். ஜோதிட சாஸ்திரத்தின் படி, இக்காலம் பணியில் பல துறைகளில் வெற்றியைத் தேடித்தரக்கூடும். இந்த நேரத்தில் அவர்களின் திறமை மீதான அவர்களின் நம்பிக்கை அதிகரிக்கும், நீண்ட காலமாக மனதில் நீடித்து வரும் சில வலிகள் இப்போது மறையும், மேலும் மனம் வலிமையாக மாறும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3e6ca17-ed04-4ffe-98e4-222b7e91b4f6/26-6a879c63a793a.webp' /></p>]]></content>
            <updated>2026-08-21T00:31:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்டைலிஷ் உடைகளில் சீரியல் நடிகை சம்யுத்தா வெளியிட்ட போட்டோஸ்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/serial-actress-samyutha-stylish-photos-1787235668"></link>
            <id>https://cineulagam.com/article/serial-actress-samyutha-stylish-photos-1787235668</id>
            <summary type="text">நடிகை சம்யுத்தாநிறைமாத நிலவே என்ற வெப் தொடர் மூலம் பிரபலமானவர் தான் நடிகை சம்யுதா. அதன்பின் விஜய் டிவியில் வந்த பாவம் கணேசன் தொடரில் நடித்து வந்தார். ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகை சம்யுத்தா</h2><p>நிறைமாத நிலவே என்ற வெப் தொடர் மூலம் பிரபலமானவர் தான் நடிகை சம்யுதா. </p><p>அதன்பின் விஜய் டிவியில் வந்த பாவம் கணேசன் தொடரில் நடித்து வந்தார். 
சிப்பிக்குள் முத்து என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் கவனம் பெற்றார். </p><p>சீரியல்கள் தொடர்ந்து நடித்து வந்தவர் பிரபல நடிகரை திருமணம் செய்து அதனால் பல பிரச்சனைகளை சந்தித்து பிரிந்துவிட்டார்.</p><p>தற்போது நாம் நடிகை சம்யுதாவின் சில ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T00:30:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானைத் தனிமைப்படுத்த ட்ரம்பின் திட்டம்... சீனா மற்றும் ரஷ்யாவால் முடக்கக்கூடும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-russia-could-hobble-trump-1787261112"></link>
            <id>https://news.lankasri.com/article/china-russia-could-hobble-trump-1787261112</id>
            <summary type="text">China and Russia could hobble Trump’s plans: ஈரானைத் தனிமைப்படுத்துவதற்கான ட்ரம்ப்பின் திட்டங்களுக்குச் சீனா மற்றும் ரஷ்யா முட்டுக்கட்டை போடக்கூடும்....</summary>
            <content type="html"><![CDATA[<p>China and Russia could hobble Trump’s plans: ஈரானைத் தனிமைப்படுத்துவதற்கான ட்ரம்ப்பின் திட்டங்களுக்குச் சீனா மற்றும் ரஷ்யா முட்டுக்கட்டை போடக்கூடும்.
</p><p>ஈரானுக்குப் பொருளாதார ரீதியாக உதவியை வழங்கும் எந்தவொரு நாட்டின் மீதும் நிதி ரீதியான தண்டனை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.</p><h2>சீனா மற்றும் ரஷ்யா</h2><p>
</p><p>இஸ்ரேல் காரணமாக ஈரானுடனான அமெரிக்காவின் அதிக செலவுமிக்க போர் தொடங்கி ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. </p><p>தனது பதவிக்காலத்தின் முற்பகுதியில் பல பாதிப்புகளை ஏற்படுத்திய வர்த்தகப் போர்களுக்குப் பிறகு, தனது வெளிவிவகாரக் கொள்கை இலக்குகளை அடைய அமெரிக்காவின் பொருளாதார வலிமையைப் பயன்படுத்திக்கொள்ள ட்ரம்ப் மேற்கொள்ளும் மிகச் சமீபத்திய முயற்சி இதுவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0604b13a-af95-4c6d-996a-d05f34a4cb11/26-6a8770baaeed0.webp' /></p><p> </p><p>ஆனால், ஈரானின் முதன்மையான வர்த்தகப் பங்காளிகளான சீனா மற்றும் ரஷ்யா மீது ட்ரம்பிற்கு உள்ள செல்வாக்கு அல்லது அழுத்தம் செலுத்தும் திறன் குறைவானதே என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். </p><p>ரஷ்யா ஏற்கனவே அமெரிக்காவின் பரவலான பொருளாதாரத் தடைகளுக்கு உட்பட்டுள்ளதுடன், அமெரிக்கத் தலைமையிலான பொருளாதாரக் கட்டமைப்பிற்கு வெளியிலேயே பெரும்பாலும் செயல்பட்டு வருகிறது. </p><p>அதேவேளை, தனது சொந்தப் பொருளாதார நலன்களுக்கு உகந்ததாக இருக்கும்போது அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் புறக்கணிக்கத் தயாராக இருப்பதை சீனா பலமுறை வெளிப்படுத்தியுள்ளது. </p><p>ட்ரம்ப் எடுத்துள்ள இந்த முடிவும் தோல்வியில் முடியும் என்றே ஆய்வாளர் ஒருவரின் கருத்தாக உள்ளது.
பாரம்பரியமாகப் பலதரப்பு ஒருங்கிணைப்பின் மூலம் செயல்படுத்தப்படும் ஒருவகை ஒருங்கிணைந்த தடைகளை, ட்ரம்ப் ஒருதலைப்பட்சமாக அமுல்படுத்த முயற்சிக்கிறார்.</p><p></p><p> </p><p>அதாவது, சீனா, ரஷ்யா, ஐ.நா. பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள் ஆகியவற்றை இதில் இணைத்துக்கொள்வது அவசியமாகும். ஆனால் அதற்கான நகர்வுகளை அமெரிக்கா முன்னெடுக்காமல், முடிவுகளை அறிவித்துள்ளது.</p><p>ஈரான் மீதான இந்த நகர்வுகளை ட்ரம்ப் எடுத்த அதே நாளில், முக்கியமான இறக்குமதிகள் மற்றும் வணிகச் சந்தைகளுக்கான அணுகல் ஆகியவற்றிற்கு நீண்டகாலமாக ஈரானைச் சார்ந்திருந்த ஐக்கிய அரபு அமீரகம், </p><p>தனது நாட்டின் மீது ஈரான் ராணுவம் இரண்டு ஏவுகணைகளை ஏவியதாகக் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, ஈரான் மீது காலவரையறையற்ற வர்த்தகத் தடையை அறிவித்தது. </p><p>இதன் பின்னணியில் அமெரிக்காவின் அழுத்தம் இருக்கலாம் என்றே பிராண்டீஸ் பல்கலைக்கழகத்தின் மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதாரம் குறித்த பேராசிரியரான நாடர் ஹபிபி குறிப்பிடுகிறார். </p><p>ஆனால், சீனா-ஈரான் இடையிலான வர்த்தகத்திற்கு இடையூறு விளைவிக்கும் அமெரிக்காவின் எந்தவொரு திட்டமும் குறிப்பிடத்தக்க தடைகளைச் சந்திக்கக்கூடும் என்றே ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. </p><p>பகுப்பாய்வு நிறுவனமான Kpler-இன் தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் ஈரான் ஏற்றுமதி செய்த எண்ணெயில் 80 சதவீதத்தை சீனா வாங்கியுள்ளது.</p><p> இதனால், சீனாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை இலக்கு வைப்பது பெரும்பாலும் சவாலான ஒன்றாகும்; ஏனெனில், அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்க நிதி அமைப்பைச் சார்ந்திருக்காமல் சுதந்திரமாகச் செயல்படுபவை.</p><h2>பிரச்சினையைத் தீர்க்க உதவாது</h2><p>
</p><p>மேலும், அமெரிக்க நிதியமைச்சகம் அச்சுறுத்தியுள்ளபடி, ஈரானிய நிதிகளைக் கையாளும் முக்கிய சீன வங்கிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது பாதிப்பை ஏற்படுத்தினாலும், அது ஒரு முக்கியமான கட்டத்தில் சீனாவைத் திருப்பித் தாக்கத் தூண்டவும் கூடும். </p><p>இதனிடையே, ட்ரம்பின் பொருளாதார அழுத்த நடவடிக்கைக்குப் பதிலளித்துள்ள சீன வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், கூடுதல் தடைகள் பிரச்சினையைத் தீர்க்க உதவாது என்று கூறியுள்ளார்.
</p><p>அடுத்த மாதம் அமெரிக்காவுக்குச் செல்லவிருக்கும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் பயணத்திற்கு முன்னதாக, சீனாவுடனான பதற்றத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கவே அமெரிக்கா முயன்று வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/327413af-387d-4584-b017-e1996527faf9/26-6a8770bb744fc.webp' /></p><p> </p><p>ஈரானைப் பொறுத்தவரை சீனாவை விட ரஷ்யா ஒரு சிறிய வர்த்தகப் பங்காளியாக இருந்தாலும், மேற்கத்திய நாடுகளின் தலையீடு அல்லது கட்டுப்பாடுகளைத் தவிர்க்கும் வகையிலான முக்கிய வர்த்தக மற்றும் இராணுவ உறவுகளைக் கட்டியெழுப்புவதில் மாஸ்கோவும் தெஹ்ரானும் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்துள்ளன. </p><p>கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளாகியுள்ள இந்த இரு நாடுகளும் ஜனவரி 2025-இல் 20 ஆண்டுகாலக் கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன; ரஷ்ய எரிசக்தித் துறை அமைச்சர் செர்ஜி சிவிலேவின் கூற்றுப்படி, இந்த ஒப்பந்தம் 2025-ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் அவற்றின் வர்த்தக அளவை 4.8 பில்லியன் டொலராக உயர்த்த உதவியது. </p><p>தடை விதிக்கப்பட்ட எண்ணெய் வர்த்தகத்தைத் தாண்டி, ரஷ்யாவும் ஈரானும் காஸ்பியன் கடல் வழியாக ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்களையும் பரிமாறிக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>இந்த நிலையில், ஈரானின் வெளிவிவகார அமைச்சர் புதன்கிழமையன்று, ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் முன்னெடுத்துள்ள பொருளாதார நடவடிக்கைகளை கடுமையாகச் சாடினார்; இது அமெரிக்காவின் தோல்வியடைந்த கொள்கைகளின் தொடர்ச்சி என்றும், இது ட்ரம்ப் நிர்வாகத்திற்கு மேலும் பல தோல்விகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T00:22:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுங்கவரி இல்லா 10 லட்சம் டன் கச்சா சர்க்கரை இறக்குமதிக்கு இந்தியா அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/allows-duty-free-sugar-imports-1787271836"></link>
            <id>https://news.lankasri.com/article/allows-duty-free-sugar-imports-1787271836</id>
            <summary type="text">India allows 10 lakh tonnes of duty-free raw sugar imports: 10 லட்சம் டன் கச்சா சர்க்கரையை இறக்குமதி செய்ய இந்தியா அனுமதி அளித்துள்ளது.
உள்நாட்டில் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>India allows 10 lakh tonnes of duty-free raw sugar imports: 10 லட்சம் டன் கச்சா சர்க்கரையை இறக்குமதி செய்ய இந்தியா அனுமதி அளித்துள்ளது.
</p><p>உள்நாட்டில் சர்க்கரை விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அக்டோபர் 31 வரை 10 லட்சம் மெட்ரிக் டன் வரையிலான கச்சா சர்க்கரையை வரி இல்லாமல் இறக்குமதி செய்ய இந்தியா அனுமதி அளித்துள்ளது.</p><h2>வரி இல்லாத இறக்குமதி</h2><p> </p><p>இதன் மூலம் ஏறக்குறைய பத்து ஆண்டுகளில் முதல் முறையாகச் சர்க்கரை இறக்குமதி செய்வதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. 
சுங்க வரி விகித ஒதுக்கீட்டின் கீழ் கச்சா சர்க்கரை இறக்குமதியை அனுமதிக்கும் வகையில், வியாழக்கிழமையன்று அதன் இறக்குமதிக் கொள்கை திருத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86243082-2300-45d8-aad8-5be806baaf36/26-6a879a9ee2e12.webp' /></p><p>
</p><p>TRQ (சுங்க வரி விகித ஒதுக்கீட்டு முறை) திட்டத்தின் கீழ், ஒரு குறிப்பிட்ட அளவிலான சரக்குகளைக் குறைந்த சுங்க வரியிலோ அல்லது வரி இல்லாமலோ இறக்குமதி செய்ய முடியும். </p><p>சமீபத்திய அறிவிப்பு, வரி இல்லாத இறக்குமதி வரம்பை 10 லட்சம் டன்களாக நிர்ணயிப்பதோடு, இத்திட்டத்தை 2026 அக்டோபர் 31 வரை நடைமுறையில் வைத்திருக்கிறது. </p><p>விநியோகம் குறைந்ததால், கடந்த இரண்டு மாதங்களில் சர்க்கரை விலை கிட்டத்தட்ட 40 சதவீதம் உயர்ந்த நிலையில், பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில் நுகர்வோர் மீது அழுத்தம் ஏற்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>இந்தச் சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலகிலேயே சர்க்கரையை அதிகம் நுகரும் நாடு இந்தியா. அறிவிப்பு வெளியிடப்பட்ட திகதி வரை ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட கச்சா சர்க்கரைக்காக, SION E-52-ன் கீழ் வழங்கப்பட்ட முன்னேறிய அங்கீகாரங்களை (Advance Authorisations) புதிய TRQ திட்டத்திற்கு மாற்றிக்கொள்ளும் ஒருமுறை வாய்ப்பையும் அரசு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. </p><p>அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் கச்சா சர்க்கரையிலிருந்து ஏற்கனவே தயாரிக்கப்பட்ட அல்லது இனி தயாரிக்கப்படவிருக்கும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கும் இந்த விதிமுறை பொருந்தும். </p><p>இருப்பினும், இந்த மாற்றத்தைத் தெரிவுசெய்யும் நிறுவனங்கள், இறக்குமதியின் போது தாங்கள் பெற்றிருந்த ஜிஎஸ்டி விலக்கைச் செலுத்த வேண்டியிருக்கும்.</p><p> மட்டுமின்றி, இத்திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் கச்சா சர்க்கரையிலிருந்து தயாரிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை, அக்டோபர் 31-ஆம் திகதிக்குள் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்ய வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87603ed6-e2fc-45c6-8621-e2d3afad621c/26-6a879a9f9f6a2.webp' /></p><p> </p><p>உள்நாட்டுச் சர்க்கரை சந்தையைச் சமநிலைப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளில், இந்த இறக்குமதித் தளர்வும் இணைந்துள்ளது. </p><p>பதுக்கல் மற்றும் ஊக வணிகத்தைக் கட்டுப்படுத்தவும், நியாயமான விலையில் விநியோகத்தைத் தக்கவைக்கவும் நோக்கமாகக் கொண்டு, ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரை சர்க்கரை வியாபாரிகள் இருப்பு வைப்பதற்கான வரம்புகளை அரசு ஏற்கனவே விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T00:21:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பை உயர்த்தும் அரசின் நகர்வு ; நாமல் கடும் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/government-s-move-to-raise-retirement-age-judges-1787270825"></link>
            <id>https://jvpnews.com/article/government-s-move-to-raise-retirement-age-judges-1787270825</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பை உயர்த்துவதற்கு அரசாங்கம் முன்வைத்துள்ள முன்மொழிவு, நீதித்துறை மீதான செல்வாக்கை அதிகரிப்பதற்கும், தங்களது பாதுகாப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பை உயர்த்துவதற்கு அரசாங்கம் முன்வைத்துள்ள முன்மொழிவு, நீதித்துறை மீதான செல்வாக்கை அதிகரிப்பதற்கும், தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்குமான முயற்சியாக இருக்கக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
</p><p>
அரசாங்கம் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், நீதிமன்ற நடவடிக்கைகளில் செல்வாக்கு செலுத்துவதற்குமே 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டுவர முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/570c985e-52e9-4a1d-95ff-d62540433a1a/26-6a8796abacee1.webp' /></p><p>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு எதிராக மகாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL), ஐக்கிய நாடுகள் சபை மற்றும் காமன்வெல்த் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்துவது தொடர்பான அபராதங்களை அதிகரிப்பதில் தமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை எனக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ச, இது தொடர்பாக இதுவரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த முழுமையான விபரங்களை வெளியிடுமாறும் கோரிக்கை விடுத்தார்.
</p><p>
18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கே வேலைவாய்ப்பு கிடைக்காத சூழ்நிலை நிலவுவதாகவும், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் தங்களது உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
மேலும், வைத்தியசாலைகளில் புற்றுநோயாளிகளுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கள் ஹன்சார்ட் அறிக்கையிலிருந்து நீக்கப்பட்டமைக்கும் நாமல் ராஜபக்ச எதிர்ப்புத் தெரிவித்தார்.
</p><p>
இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறும் அவர் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T00:07:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழல்வாதிகளை காப்பாற்ற திட்டமிடும் ரணில்: அரசாங்கத்தை திசை திருப்ப சதி...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ranil-creating-panic-to-save-corrupts-1787269085"></link>
            <id>https://ibctamil.com/article/ranil-creating-panic-to-save-corrupts-1787269085</id>
            <summary type="text">எதிர்காலத்தில் கைது செய்யப்படவுள்ள மற்றும் தண்டனைப் பெறவுள்ள ஊழல்மிக்க எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை காப்பாற்றுவதற்காகவே ரணில் விக்ரமசிங்க பொருளாதார பீத...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்காலத்தில் கைது செய்யப்படவுள்ள மற்றும் தண்டனைப் பெறவுள்ள ஊழல்மிக்க எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை காப்பாற்றுவதற்காகவே ரணில் விக்ரமசிங்க பொருளாதார பீதியை உருவாக்கி மீண்டும் அவர்களுக்கு அரசியல் தஞ்சமளிக்க முயற்சிக்கின்றார் என்று ஜன பலய அமைப்பின் செயற்குழு உறுப்பினர் விதர்ஷன கண்ணங்கர தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்துக்கு நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வது குறித்த தெளிவான பார்வையும் திட்டமும் உள்ளது.</p><p> </p><p></p><h2>பொருளாதார ஸ்திரத்தன்மை</h2><p>2028 ஆம் ஆண்டளவில் சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கும் 15 பில்லியன் டொலர் அந்நிய செலாவணி கையிருப்பு இலக்கை அடைந்து நாட்டை மீண்டும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கொண்டு செல்ல இந்த அரசாங்கத்தால் முடியும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ba06f05-3282-47a9-867c-0fe9cba6d5d8/26-6a8793e65102f.webp' /></p><p>2028 ஆம் ஆண்டில் கடன் மீளச்செலுத்த தொடங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்பார்ப்புகளின்படி நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 15 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்க வேண்டும் என்றும் தற்போதைய இலங்கை மத்திய வங்கியின் கணிப்புகளின்படி இந்த ஆண்டின் இறுதியில் கையிருப்பு 8 பில்லியன் டொலர்களாக மட்டுமே இருக்கும் என்றும் ரணில் விக்ரமசிங்க கூறுகிறார். </p><p>இதன் மூலம் 2027 மார்ச் மாதத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பின்னர் அரசாங்கம் நிதி நெருக்கடிக்கு உள்ளாகும் என்றும் அதனால் அரசாங்கம் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தாமல் அந்நிய செலாவணியை பெருக்குவது குறித்து சிந்திக்க வேண்டும் என்றும் அவர் கூற முற்படுகிறார்.</p><p>
</p><p></p><h2>பொருளாதார ஆலோசகர்</h2><p>இருப்பினும், ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின் பொருளாதார ஆலோசகராக மாற முயல்வதும் அவரே பொருளாதாரத்தை மீட்டெடுத்தார் என்று பரப்புவதும் ஒரு கட்டுக்கதையாகும்.
</p><p>
2015 நல்லாட்சி காலத்திலிருந்தே ரணில் விக்ரமசிங்க பின்பற்றிய பொருளாதாரக் கொள்கைகளே நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடியையும் மக்கள் போராட்டத்தையும் உருவாக்க வழிவகுத்தன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bab49cd7-54dd-4375-9cbd-36814b888cff/26-6a8793e595667.webp' /></p><p>மத்திய வங்கி கொள்ளைக்கு பொறுப்புக் கூற வேண்டிய ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொருளாதாரம் குறித்த சரியான புரிதல் எதுவும் இல்லை.
</p><p>

அவர் எப்போதும் தீவிர நவதாராளவாத கொள்கைகளின் மூலம் மக்கள் மீது அதிக வரிகளைய சுமத்தி பொதுச் சொத்துக்களைய தனியார்மயப்படுத்தி மக்களை துன்புறுத்தினார்.
</p><p>
மக்களின் அரகலய போராட்டத்துக்குப் பின்னரும் ரணில் விக்ரமசிங்க செய்தது ராஜபக்சர்கள் உள்ளிட்ட ஊழல்வாதிகளை பாதுகாத்ததே தவிர நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதைக்கு கொண்டு சென்றதல்ல” என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T23:55:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[60 மணி நேரத்தில் சீனா, துருக்கி ராணுவ விமானங்கள் பாகிஸ்தானில் ; பரபரப்பு தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/chinese-turkis-military-aircraft-pakistan-60-hours-1787262827"></link>
            <id>https://canadamirror.com/article/chinese-turkis-military-aircraft-pakistan-60-hours-1787262827</id>
            <summary type="text">சீனா மற்றும் துருக்கியில் இருந்து பாகிஸ்தானுக்கு 60 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து வந்திறங்கிய கனரக ராணுவ விமானங்களில் போர் தளவாடங்கள் கொண்டுவரப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனா மற்றும் துருக்கியில் இருந்து பாகிஸ்தானுக்கு 60 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து வந்திறங்கிய கனரக ராணுவ விமானங்களில் போர் தளவாடங்கள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

பாகிஸ்தானின் ராவல்பிண்டி அருகே உள்ள நூர் கான் விமானப்படைத் தளம் மற்றும் கராச்சியில் உள்ள மஸ்ரூர் விமானப்படைத் தளங்களில் சீனா மற்றும் துருக்கியைச் சேர்ந்த கனரக ராணுவ விமானங்கள் சமீபத்தில் தரையிறங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2550fac-a5b2-46fc-bb4b-28125c534ca1/26-6a87776ccc542.webp' /></p><p>இந்த விமானங்கள் மூலம் பாகிஸ்தானுக்குத் தேவையான ராணுவ தளவாடங்கள் மற்றும் உபகரணங்கள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
</p><p>
கடந்த ஆண்டு இந்தியா–பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ மோதலுக்குப் பின்னர், பாகிஸ்தான் மற்றும் சீனா இடையேயான ராணுவ ஒத்துழைப்பு மேலும் வலுப்பெற்றுள்ளது.</p><p> போர் விமானங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பாகிஸ்தான் சீனாவை பெரிதும் நம்பி வருகிறது.
</p><p>
இதனிடையே, போர் விமான மேம்பாட்டுத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க துருக்கியும் பாகிஸ்தானும் சமீபத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. </p><p>மேலும், சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி இடையே கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தமும் அண்மையில் கையெழுத்தானது.
</p><p>
இத்தகைய சூழலில், சீனா மற்றும் துருக்கியின் கனரக ராணுவ விமானங்கள் பாகிஸ்தானில் அடுத்தடுத்து தரையிறங்கியிருப்பது பிராந்திய ராணுவ நிலவரம் குறித்து புதிய கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
எனினும், இந்த விமானங்களில் உண்மையில் என்ன வகையான தளவாடங்கள் கொண்டுவரப்பட்டன என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இதுவரை வெளியாகவில்லை.</p>]]></content>
            <updated>2026-08-20T23:53:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நைஜீரியாவில் படகு விபத்து ; சிறுவர்கள் உட்பட 40 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/boat-nigeria-40-people-including-children-killed-1787269775"></link>
            <id>https://canadamirror.com/article/boat-nigeria-40-people-including-children-killed-1787269775</id>
            <summary type="text">நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள சோகோடோ மாநிலத்தில்,அதிக பாரம் ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட குறைந்தது 40-க்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள சோகோடோ மாநிலத்தில்,அதிக பாரம் ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட குறைந்தது 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
உள்ளூர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற மரப் படகு ஆற்றைக் கடக்க முயன்றபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/138ea792-4521-48f8-baac-e607540f3c9d/26-6a87929096ce4.webp' /></p><p>இதுவரை 40-க்கும் மேற்பட்ட உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் காணாமல் போனோரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><p>

நைஜீரியாவின் நதிப் பகுதிகளில் பாதுகாப்பு நெறிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படாதது மற்றும் அதிகப்படியான பாரம் ஏற்றுவது போன்ற காரணங்களால் இது போன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ்வது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-20T23:49:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா–அமெரிக்கா பேச்சில் திருப்பம் ; முக்கிய பேச்சுவார்த்தை ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/turnaround-in-canada-us-talks-key-talks-begin-1787269215"></link>
            <id>https://canadamirror.com/article/turnaround-in-canada-us-talks-key-talks-begin-1787269215</id>
            <summary type="text">கனடாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான புதிய வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது குறித்து விவாதிக்க, கனடாவின் வர்த்தக அமைச்சர் டொமினிக் லெப்ளங்க் (Dom...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான புதிய வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது குறித்து விவாதிக்க, கனடாவின் வர்த்தக அமைச்சர் டொமினிக் லெப்ளங்க் (Dominic LeBlanc) மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) ஆகியோர் வொஷிங்டனுக்கு சென்றுள்ளனர்.
</p><p>
அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே நடந்துவரும் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், எஃகு மற்றும் அலுமினியம் மீதான வரிகளை 50 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் மற்றும் வோல் ஸ்ரீட் ஜேர்னல் ஆகிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5767aa2c-0606-43dd-83f6-f0f962db0f78/26-6a879060b1725.webp' /></p><p>புதிய வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நோக்கில், கனடா மீதான புதிய வர்த்தக வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மூன்று நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளார்.</p><p>

மேலும் அமெரிக்க விவசாயிகளுக்கான வரிகளை சுழியமாகக் கொண்டுவருவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தநிலையில், கனடாவின் பல்வேறு மாகாணங்களின் தலைவர்கள் இந்த வர்த்தக ஒப்பந்தம் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து வெவ்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.</p><p>

சில தலைவர்கள் இது குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், இறுதி விபரங்கள் வெளிவரும் வரை காத்திருக்கப்போவதாகவும் கூறியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-20T23:40:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவின் உக்கிரத் தாக்குதலுக்கு இலக்கான உக்ரைன்: 16 கடந்த இறப்பு எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/intense-russian-bombardment-1787269320"></link>
            <id>https://news.lankasri.com/article/intense-russian-bombardment-1787269320</id>
            <summary type="text">Kyiv comes under intense Russian bombardment: உக்ரைன் மீது ரஷ்யாவின் கடுமையான குண்டுவீச்சில் 16க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
உக்ரைனின் தலைநகரான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Kyiv comes under intense Russian bombardment: உக்ரைன் மீது ரஷ்யாவின் கடுமையான குண்டுவீச்சில் 16க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.</p><p>
உக்ரைனின் தலைநகரான கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்யா நடத்திய உக்கிரமான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2>அதிகபட்ச சேதம்</h2><p>
</p><p>போர் தொடங்கியதிலிருந்து அந்நகரம் மீது நடத்தப்பட்ட மிகத் தீவிரமான வான்வழித் தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும். நள்ளிரவு வாக்கில் தொடங்கி மதியம் வரை நீடித்த தாக்குதலில், வீடுகள், ஒரு பாடசாலை மற்றும் குழந்தைகள் மருத்துவ மையம் உள்ளிட்ட கட்டிடங்கள் சேதமடைந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa3b859d-1671-486e-8f7f-17b4108e3bca/26-6a8790cacd751.webp' /></p><p> </p><p>தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், 33 பேர் காயமடைந்ததாக மற்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.
</p><p>இது ஒரு மிகப்பெரிய தாக்குதல்; பொதுமக்கள் பயன்பாட்டிற்கான உள்கட்டமைப்புகளுக்கு அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தும் நோக்கில், பல்வேறு வகையான பாலிஸ்டிக் ஏவுகணைகள், குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஒருங்கிணைத்து ரஷ்யர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். </p><p>இரவுநேரத் தாக்குதலில் ரஷ்யா டசின் கணக்கான பாலிஸ்டிக், குரூஸ் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளையும், 168 ட்ரோன்களையும் ஏவியதாக உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>பின்னர், 46 குரூஸ் ஏவுகணைகளில் 41-ஐயும் 145 ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தியதாக விமானப்படை தெரிவித்தது; எனினும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஏவப்பட்ட அதிவேக பாலிஸ்டிக் ஏவுகணைகள் எதையும் இடைமறித்து அழிக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. </p><p>பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளின் பற்றாக்குறையால், வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே வந்து சேரக்கூடிய அதிவேக ஏவுகணைத் தாக்குதலில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள உக்ரைன் திணறி வருகிறது.</p><h2>ஜெலென்ஸ்கி வலியுறுத்தல்</h2><p> </p><p>இதனிடையே, பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டு, எத்தனை ஏவுகணைகள் ஏவப்பட்டன என்பதை அறிவிப்பதை நிறுத்த விமானப்படை இந்த மாதத் தொடக்கத்தில் முடிவு செய்தது. </p><p>இந்த நிலையில், தாக்குதல்களுக்கு உலகளாவிய ரீதியில் கண்டனம் தெரிவிக்குமாறு ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். வான் பாதுகாப்பு வசதிகள் குறைவாகவே உள்ள நிலையில், இரு தரப்பினரும் நீண்ட தூரத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb18d3a5-f684-4776-9112-6c77469a1335/26-6a8790cb802b6.webp' /></p><p> </p><p>உக்ரைன், புதிதாக உருவாக்கப்பட்ட கிரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி மாஸ்கோவிற்கு அருகிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. </p><p>அதே நேரத்தில், ரஷ்யா கடுமையான பாலிஸ்டிக் ஏவுகணைகளை அதிக அளவில் பயன்படுத்தி கீவ் மீதான தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T23:39:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். இணுவிலில் மதுபானசாலையை அகற்றக் கோரி மக்கள் போராட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/people-protest-to-remove-the-jaffna-liquor-store-1787268362"></link>
            <id>https://jvpnews.com/article/people-protest-to-remove-the-jaffna-liquor-store-1787268362</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் – இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக அங்கிருந்து அகற்றக் கோரி, பிரதேச மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டனப் போராட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் – இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக அங்கிருந்து அகற்றக் கோரி, பிரதேச மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டனப் போராட்டம் இன்று காலை இடம்பெற்றது.</p><p>

இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள குறித்த மதுபானசாலைக்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca396190-cc4c-4f06-9615-31316440749a/26-6a878d0c617c8.webp' /></p><p>இதன்போது, “எமது கிராமத்தை மதுபோதையில் இருந்து காப்பாற்றுவோம்” என்ற பிரதான கோஷம் முன்வைக்கப்பட்டதுடன், மதுபானசாலையை உடனடியாக அகற்ற வேண்டும் என போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் வலியுறுத்தினர்.
</p><p>
மதுபானசாலை அமைந்துள்ள பகுதியில் பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் குடியிருப்புகள் காணப்படுவதால், இதனால் சமூக ரீதியான பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனவும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
</p><p>
குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மீது மதுபானப் பாவனையின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் எனவும், கிராமத்தின் சமூகச் சூழலைப் பாதுகாக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
</p><p>
அத்துடன், மக்களின் எதிர்ப்பையும் சமூகத்தின் நலனையும் கருத்திற்கொண்டு குறித்த மதுபானசாலையின் அனுமதியை மறுபரிசீலனை செய்து, அதனை அங்கிருந்து அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.</p><p>

இந்தக் கண்டனப் போராட்டத்தில் பிரதேச மக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T23:26:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி சந்திப்பு! மாகாண சபை தேர்தல் குறித்து கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sritharan-meets-indian-high-commissioner-jha-1787267923"></link>
            <id>https://ibctamil.com/article/sritharan-meets-indian-high-commissioner-jha-1787267923</id>
            <summary type="text">இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும், இலங்கைத் தமிழ் அரசுக்
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான விசேட
சந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும், இலங்கைத் தமிழ் அரசுக்
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான விசேட
சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.</p><p>கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்றையதினம் (20-08-2026) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

​</p><p>இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் நாடாளுமன்ற
உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.</p><p></p><h2>முக்கிய பிரச்சினைகள்</h2><p>

இக்கலந்துரையாடலின் போது தற்போதைய சமகால அரசியல் நிலவரங்கள் மற்றும் தமிழ்
மக்களின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/941ebb82-7ac8-4fa1-ad49-765b87b8829b/26-6a878b560fad1.webp' /></p><p>
நீண்டகாலமாக இழுபறி நிலையில் உள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல்களை விரைவில்
நடத்துவதன் அவசியம் மற்றும் அதன் மூலம் அதிகாரப் பரவலாக்கலை உறுதிப்படுத்துவது
தொடர்பாகவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதாரத்தை
மேம்படுத்துவது, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் உள்கட்டமைப்பு திட்டங்களை
முன்னெடுப்பது மற்றும் பிராந்திய அபிவிருத்தி சார்ந்த பிற முக்கிய விடயங்கள்
குறித்தும் இதன்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டன.</p><p>மேலும் வட பிராந்தியத்தின் வர்த்தக மற்றும் போக்குவரத்து மையமாகத் திகழும்
காங்கேசந்துறை (KKS) துறைமுக திட்டங்களின் தற்போதைய நிலைமை மற்றும் அதனை
மேலும் விரிவுபடுத்தி பிராந்திய தொடர்பாடலை வலுப்படுத்துவது தொடர்பாகவும்
மேலும் பல விடயங்கள் சார்ந்தும் ஆரோக்கியமான கலந்துரையாடல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T23:18:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைது செய்யப்படப்போகும் மிக முக்கிய அரசியல் புள்ளிகள்! அரசாங்கத்தை திசை திருப்பும் களத்தில் ரணில்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-s-biggest-politicians-could-be-arrested-1787267515"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-s-biggest-politicians-could-be-arrested-1787267515</id>
            <summary type="text">எதிர்காலத்தில் கைது செய்யப்படவுள்ள மற்றும் தண்டனைப் பெறவுள்ள ஊழல்மிக்க எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை காப்பாற்றுவதற்காகவே ரணில் விக்ரமசிங்க பொருளாதார பீத...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்காலத்தில் கைது செய்யப்படவுள்ள மற்றும் தண்டனைப் பெறவுள்ள ஊழல்மிக்க எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை காப்பாற்றுவதற்காகவே ரணில் விக்ரமசிங்க பொருளாதார பீதியை உருவாக்கி மீண்டும் அவர்களுக்கு அரசியல் தஞ்சமளிக்க முயற்சிக்கின்றார் என்று ஜன பலய அமைப்பின் செயற்குழு உறுப்பினர் விதர்ஷன கண்ணங்கர தெரிவித்துள்ளார். </p><p>

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்துக்கு நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வது குறித்த தெளிவான பார்வையும் திட்டமும் உள்ளது.
</p><p>
2028 ஆம் ஆண்டளவில் சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கும் 15 பில்லியன் டொலர் அந்நிய செலாவணி கையிருப்பு இலக்கை அடைந்து, நாட்டை மீண்டும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கொண்டு செல்ல இந்த அரசாங்கத்தால் முடியும்.</p><h2>ஊழல்வாதிகளை பாதுகாத்த ரணில்</h2><p>
</p><p>
2028 ஆம் ஆண்டில் கடன் மீளச்செலுத்த தொடங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்பார்ப்புகளின்படி நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 15 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்க வேண்டும் என்றும், தற்போதைய இலங்கை மத்திய வங்கியின் கணிப்புகளின்படி இந்த ஆண்டின் இறுதியில் கையிருப்பு 8 பில்லியன் டொலர்களாக மட்டுமே இருக்கும் என்றும் ரணில் விக்ரமசிங்க கூறுகிறார்.</p><p>

இதன் மூலம் 2027 மார்ச் மாதத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பின்னர் அரசாங்கம் நிதி நெருக்கடிக்கு உள்ளாகும் என்றும், அதனால் அரசாங்கம் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தாமல் அந்நிய செலாவணியை&nbsp; பெருக்குவது குறித்து சிந்திக்க வேண்டும் என்றும் அவர் கூற முற்படுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cfab7a4-7be6-4a54-a936-5128bf9c5c5a/26-6a8789bd0491d.webp' /></p><p>
</p><p>
ஆனால், ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின் பொருளாதார ஆலோசகராக மாற முயல்வதும், அவரே பொருளாதாரத்தை மீட்டெடுத்தார் என்று பரப்புவதும் ஒரு கட்டுக்கதையாகும்.
</p><p>
2015 நல்லாட்சி காலத்திலிருந்தே ரணில் விக்ரமசிங்க பின்பற்றிய பொருளாதாரக் கொள்கைகளே நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடியையும் மக்கள் போராட்டத்தையும் உருவாக்க வழிவகுத்தன.</p><p>

மத்திய வங்கி கொள்ளைக்கு பொறுப்புக் கூற வேண்டிய ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொருளாதாரம் குறித்த சரியான புரிதல் எதுவும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f4f60e0-7f28-41fc-bc4d-eb8568a76ca6/26-6a8789bdb1552.webp' /></p><p> </p><p>அவர் எப்போதும் தீவிர நவதாராளவாத கொள்கைகளின் மூலம் மக்கள் மீது அதிக வரிகளைய சுமத்தி, பொதுச் சொத்துக்களைய தனியார்மயப்படுத்தி மக்களை துன்புறுத்தினார்.
</p><p>
மக்களின் அரகலய போராட்டத்துக்குப் பின்னரும் ரணில் விக்கிரமசிங்க செய்தது ராஜபக்சர்கள் உள்ளிட்ட ஊழல்வாதிகளை பாதுகாத்ததே தவிர, நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதைக்கு கொண்டு சென்றதல்ல என குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T23:12:18+00:00</updated>
        </entry>
    </feed>
