<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-07T03:18:37+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓடுபாதையை விட்டு விலகிய சரக்கு விமானம்: 5 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/amazon-cargo-plane-crash-five-dead-1788748298"></link>
            <id>https://ibctamil.com/article/amazon-cargo-plane-crash-five-dead-1788748298</id>
            <summary type="text">அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகி தீப்பிடித்ததில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகி தீப்பிடித்ததில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சைப்பிரிவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.&nbsp;</p><p>

புவேர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவான் நகரிலிருந்து பயணித்த குறித்த சரக்கு விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகி, அருகிலிருந்த களஞ்சியக் கட்டிடத் தொகுதிகள் மற்றும் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பல வாகனங்களுடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>ஐவர் பலி</h2><p> </p><p>

இதன்போது அங்கிருந்த வாகனங்களிலும் தீப்பற்றி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e6c3f89-3d8f-4655-a8c3-7e71e29f1bb5/26-6a9e29c99573d.webp' /></p><p> 

எனினும், உயிரிழந்த 5 பேரும் விமானத்தில் பயணித்தவர்களா அல்லது விபத்துக்குள்ளான வாகனங்களில் இருந்தவர்களா என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. </p><p>

மேலும் 200க்கும் மேற்பட்ட அவசரக்கால பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T03:08:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசிடம் சிக்கியுள்ள ராஜபக்சர்களின் மறைக்கப்பட்ட இரகசியங்கள் - கலக்கத்தில் மகிந்த குடும்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nimal-perera-have-rajapaksa-family-secrets-1788745345"></link>
            <id>https://tamilwin.com/article/nimal-perera-have-rajapaksa-family-secrets-1788745345</id>
            <summary type="text">சமகால அரசாங்கத்தின் சார்பான நபராக கோடிஸ்வர வர்த்தகர் நிமல் பெரேரா மாறியுள்ளமை ராஜபக்ச குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமகால அரசாங்கத்தின் சார்பான நபராக கோடிஸ்வர வர்த்தகர் நிமல் பெரேரா மாறியுள்ளமை ராஜபக்ச குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. </p><p>

ராஜபக்சர்கள் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் நன்கு அறிந்த நபர்களில் ஒருவராக நிமல் பெரேரா உள்ளமையே இதற்கு காரணமாகும். </p><p>

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்வதற்கு முக்கிய காரணமாக நிமல் பெரேரா வழங்கிய சாட்சியமே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> </p><h2><b>

அநுர அரசாங்கத்திடம் வாக்குமூலம்</b></h2><p>இந்நிலையில் ராஜபக்சர்கள் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் அநுர அரசாங்கத்திடம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1661bc46-a360-48fd-968b-5b625e6a7a50/26-6a9e20793047c.webp' /></p><p>ஒரு காலத்தில் ராஜபக்ச குடும்பத்தின் மிக நெருங்கிய நண்பராகவும் அவர்களது அனைத்து நிதி நடவடிக்கைகளையும் கையாண்டவராக நிமல் பெரேரா உள்ளார்.
</p><p>
நிமல் பெரேரா என்பவர் ராஜபக்சர்களின் அனைத்து இருண்ட இரகசியங்கள், மறைக்கப்பட்ட கணக்குகள் மற்றும் நிதிப் பரிமாற்றங்கள் குறித்து அனைத்தையும் அறிந்த தனித்துவமான நபராகும்.</p><p> 

அவர் தற்போது அவுஸ்திரேலியாவின் தீவிர பாதுகாப்பின் மத்தியில வசித்து வருவதுடன், நாமலுக்கு எதிராக தீர்க்கமான 2 சாட்சிகளையும் நீதிமன்றத்திற்கு வழங்க ஒப்புக்கொண்டுள்ளார். </p><p>

நிமல் பெரேராவின் இந்தத் தீர்க்கமான நடவடிக்கையுடன் அவரைக் எப்படியாவது மௌனிக்க செய்ய சர்வதேச நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> </p><h3><b>

 சர்வதேச நடவடிக்கை</b></h3><p>நாமல் ராஜபக்சவின் மற்றுமொரு மிக நெருங்கிய நண்பரான தற்போது மெல்பர்னில் வசிக்கும் பிரசித்தி பெற்ற சட்டத்தரணியாக செயற்படும் இந்திக கருணாஜீவ ஊடாக நிமல் பெரேராவுக்கு கடுமையான அழுத்தங்களைக் பிரயோகிக்க முயன்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d13922e2-2fb4-4ed6-9b95-f9d9a4190f03/26-6a9e2358c3d14.webp' /></p><p>ராஜபக்சர்களுக்கு எதிராக எந்தவொரு சாட்சியத்தையும் வழங்க வேண்டாம் என வேண்டிக்கொண்டு நிமல் பெரேராவுக்கு தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் பல அனுப்பப்பட்டுள்ளது.</p><p> 

இந்த நிலையில் நிமல் பெரேராவிடம் இருந்து நீண்ட வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உயர் மட்ட விசேட அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று அவுஸ்திரேலியா சென்றுள்ளதாக தெரிய வருகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T03:07:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/bigg-boss-tamil-season-10-premiere-1788748176"></link>
            <id>https://cineulagam.com/article/bigg-boss-tamil-season-10-premiere-1788748176</id>
            <summary type="text">விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது சீசனை ஸ்டார் விஜய்யும் ஜியோஹாட்ஸ்டாரும் இன்று அதிகாரப்பூர...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது சீசனை ஸ்டார் விஜய்யும் ஜியோஹாட்ஸ்டாரும் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கின. இந்திய ரியாலிட்டி தொலைக்காட்சி வரலாற்றிலேயே புதிய சாதனை படைக்கும் வகையில் இந்த பிரம்மாண்ட தொடக்க விழா அமைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b425b56-702b-4b36-9775-e9706699cee9/26-6a9e21950e0dd.webp' /></p><p>பிக் பாஸ் சீசன் 10-ன் தொடக்க நிகழ்ச்சியில், முன்னெப்போதும் இல்லாத வகையில் 29 போட்டியாளர்கள் இல்லத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் நேரலை மேடையில் தங்களைப் பற்றிய அறிமுகத்தை ரசிகர்கள் முன் வழங்கினர். முற்றிலும் புதிய முயற்சியாக, போட்டியாளர்களின் அறிமுகத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, நேரலையில் பங்கேற்ற பார்வையாளர்கள் அவர்களின் தொடர் பயணத்தைத் தீர்மானித்தனர். இதன் விளைவாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
</p><p>பொதுமக்களின் வாக்குகள் மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் தங்கள் இடத்தை உறுதி செய்த 19 போட்டியாளர்கள்: அன்சார், முகேஷ், தான்யா, ராகவ், குமரன், சந்தினி, சவின்யா, வினோத், பாண்டியன், அவினாஷ், முத்தழகி, அஸ்வினி, பிரித்விநாத், ஜாவேத், லட்சுமி பிரியா மற்றும் ஷாதிகா. இவர்களுடன், பிக் பாஸ்: தி காமன் மேன் என்ற மாநில அளவிலான போட்டியின் மூலம் தேர்வான ஜேசன், முனியம்மா மற்றும் ஷாமா ஆகிய மூன்று சாமானிய மக்களும் இணைகின்றனர். பிக் பாஸ் முதன்மை வீட்டில் பிரபலங்களுடன் சாமானிய மக்கள் இணைந்து போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6122e4cc-5095-4cd7-be34-c9c5421be24d/26-6a9e21945081f.webp' /></p><p>தொடக்க நாளிலேயே எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களுள் சாமானிய மக்களான ஆஷா, மணிகண்டன், சோபா, மணிவண்ணன் மற்றும் டார்வின் ஆகியோருடன் ஷப்னம், பிரசாந்த் ரிவியூவர், கவிதா, அக்ஷிதா, ராகவ், மாளவிகா, புவியரசன், எபி மற்றும் ரகு ஆகியோரும் அடங்குவர்.
</p><p>பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியை தினமும் இரவு 9.30 மணிக்கு ஸ்டார் விஜய் மற்றும் ஜியோஹாட்ஸ்டாரில் கண்டு மகிழலாம். மேலும், ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் நேரலையாகக் காணலாம்.
</p><p><b><u>ஜியோஹாட்ஸ்டார் பற்றி:
</u></b></p><p>
50 கோடிக்கும் அதிகமான மாதச் சராசரி பயனர்களையும், 3,00,000 மணிநேரத்திற்கும் அதிகமான நிகழ்ச்சிகளையும் கொண்டுள்ள ஜியோஹாட்ஸ்டார், உலகின் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றாகும். திரைப்படங்கள், ஒரிஜினல் தொடர்கள், நேரலை விளையாட்டுப் போட்டிகள், நேரலை நிகழ்வுகள், அனிமேஷன் மற்றும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்குகள் உட்பட ஜியோஸ்டார் நெட்வொர்க்கின் 100-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகள் 19 மொழிகளில் இதில் கிடைக்கின்றன. ஜியோஹாட்ஸ்டார் சேவையை ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் (iOS) மற்றும் https://www.hotstar.com/in இணையதளம் வாயிலாகப் பயனர்கள் பெறலாம்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T03:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையிலிருந்து நாமல் எழுதிய அவசர கடிதம்..! தீவிர ஆலோசனையில் அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-s-letter-to-the-secretary-general-parliament-1788747220"></link>
            <id>https://tamilwin.com/article/namal-s-letter-to-the-secretary-general-parliament-1788747220</id>
            <summary type="text">

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வரவிருக்கும் நாட்களில் நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்துகொள்வது தொடர்பில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வரவிருக்கும் நாட்களில் நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்துகொள்வது தொடர்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவிற்கு கடிதமொன்றினை அனுப்ப தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இந்த கடிதம் இன்று (7) நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அனுப்பப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><h2>சட்டரீதியான தடை&nbsp;</h2><p> </p><p>

நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால், அவர் நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு சட்டரீதியான தடை ஏதுமில்லை என சட்ட வட்டாரங்கள் கூறுகின்றன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64006fd1-d3c7-4b73-99b9-1c69de5789a5/26-6a9e2271115a1.webp' /></p><p>

நாடாளுமன்ற அமர்வுகள் செவ்வாய்க்கிழமை (08) முதல் 11ஆம் திகதி வரை கூடவிருக்கின்றது.</p><p> 

 எயார்பஸ் ஒப்பந்தத்தில் நடந்ததாக கூறப்படும் மோசடி சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த நிலையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், அந்த அமர்வில் நாமல் ராஜபக்ச கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p><p>





</p>]]></content>
            <updated>2026-09-07T02:38:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்னொரு காருக்காக முத்தகாட்சி பண்ணமாட்டேன்? சாய் பல்லவி பேட்டியின் பின்னணி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/sai-pallavi-shared-her-candid-views-on-performing-1788698245"></link>
            <id>https://viduppu.com/article/sai-pallavi-shared-her-candid-views-on-performing-1788698245</id>
            <summary type="text">சாய் பல்லவிதென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட்டிலும் கால்பதித்து நடித்து வருகிறார் நடிகை சாய் பல்லவி. தற்போது ராமயணா படத்தில் சீதை ரோலில் நடி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சாய் பல்லவி</h2><p>தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட்டிலும் கால்பதித்து நடித்து வருகிறார் நடிகை சாய் பல்லவி. தற்போது ராமயணா படத்தில் சீதை ரோலில் நடித்து வரும் சாய் பல்லவி, முத்தக்காட்சியோ அல்லது எல்லைமீறிய காட்சியிலோ நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று கூறியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee22c67c-f53d-4384-b468-2232bcca0d7d/26-6a9d5e8742f5d.webp' /></p><p> </p><p>அவர் அளித்த பேட்டியில், எனக்கு காதலன் இருந்தால், அது நடிப்பாக இருந்தாலும் வேறொருவருக்கு முத்தம் கொடுக்கமாட்டேன். நிம்மதியாக வாழ ஒரு குடும்பம், வீடு, கார் இருந்தாலே போதும். இன்னொரு கார் வாங்குவதற்காக மட்டுமே நான் திரையில் முத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. </p><p>நடிப்புக்கு மட்டுமே என்னை அணுகுங்கள், நெருக்கமான காட்சிகளுக்கு வேறு ஆளைப்பாருங்கள் என்று கூறியதாக அவரை பாராட்டி வந்தனர். </p><p>ஆனால், எனக்கு எந்தமாதிரி உடைகள், காட்சிகள் செளகரிமாக இருக்கிறதோ, அதில் மட்டுமே நடிப்பேன், அது என் தனிப்பட்ட விருப்பம் என்று மட்டுமே என்று கூறியிருந்தார். </p><p>அவர் கார், வீடு, காதலன் என்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தவில்லை என்று பலரும் கூறி வருகிறார்கள்.</p>]]></content>
            <updated>2026-09-07T02:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைக்குள் நாமலுக்கு ஆபத்து - அநுர அரசு எடுத்துள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-security-for-namal-rajapaksa-1788743426"></link>
            <id>https://tamilwin.com/article/special-security-for-namal-rajapaksa-1788743426</id>
            <summary type="text">
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலை ஆணையாளருமான செனக பல்தென்ன தெரிவித்தார்.
</p><p>
அதற்காக முறையான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
நாமல் ராஜபக்ச விளக்கமறியல் சிறைச்சாலைக்குள் வேறு சிலருடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><h2><b>
 தனி சிறை</b></h2><p>எனினும் அவரது பாதுகாப்பிற்காக தனி சிறைச்சாலை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8ed66e5-78a6-4f18-99ea-5a6d2d8aa6c6/26-6a9e10ed02bc4.webp' /></p><p>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஸவின் நலம் விசாரிப்பதற்காக அவரது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் வருகை தந்ததாகவும் பல்தென்ன மேலும் தெரிவித்துள்ளார்.
</p><p>
சிறையில் உள்ள நாமல் கொலை செய்யப்படலாம் என எதிர்க்கட்சிகளால் குற்றம் சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-07T02:19:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து! ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வழித்தடங்களில் திடீர் மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srilankan-airlines-routes-to-be-changed-1788745131"></link>
            <id>https://tamilwin.com/article/srilankan-airlines-routes-to-be-changed-1788745131</id>
            <summary type="text">&amp;nbsp;அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்போர்னிலிருந்து இலங்கைக்கு வரவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் இரண்டு விமானங்களின் வழித்தடங்களை மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்போர்னிலிருந்து இலங்கைக்கு வரவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் இரண்டு விமானங்களின் வழித்தடங்களை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தோனேசியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையில் அமைந்துள்ள எரிமலை மீண்டும் செயல்பட தொடங்கியதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன்படி, நேற்றிரவு (07) இரண்டு விமானங்களின் வழித்தடங்களை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>மாற்றப்பட்டுள்ள பல விமானங்கள்</h2><p>இதற்கிடையில், அவுஸ்திரேலியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையில் பறக்கும் மத்திய கிழக்கு விமான நிறுவனங்களுக்கு சொந்தமான பல விமானங்களும் மாற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b51d29d7-0fcc-4f09-9eca-929608e097db/26-6a9e1cddc3449.webp' /></p><p>இந்தோனேசியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையில் அமைந்துள்ள அனக் கிரகடாவ் எரிமலை மீண்டும் செயல்பட தொடங்கியதன் காரணமாக, ஜகார்த்தாவில் உள்ள சுகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையம் உட்பட பல விமான நிலையங்களில் விமானச்சேவைகளை நிறுத்திவைக்க இந்தோனேசிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
</p><p>
 எரிமலையிலிருந்து வெளியேறும் சாம்பல் மற்றும் சிலிக்கா கலந்த பாறைத்துண்டுகள் வானத்தின் பரந்த பகுதியில் பரவுவதால், விமானங்களின் இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
</p><p>
இந்த நிலைமையைக்கருத்தில் கொண்டு, இலங்கைக்கு கீழே, எரிமலைக்கு மேற்கே உள்ள பரந்த வான்வெளியில் விமானங்கள் பறப்பதற்கு இந்தோனேசிய விமான போக்குவரத்து அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T02:09:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் இருந்து திருமணத்திற்காக இலங்கை வந்த குடும்பத்திற்கு அதிர்ச்சி - 4 வயது சிறுவன் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/foreign-kid-dies-in-sri-lanka-1788744037"></link>
            <id>https://tamilwin.com/article/foreign-kid-dies-in-sri-lanka-1788744037</id>
            <summary type="text">வெலிகம பிரதேசத்தில் வளர்ப்பு மீன்களைப் பிடிப்பதற்கு சென்று, வீட்டின் அருகில் அமைந்துள்ள ஆற்றில் விழுந்து நான்கு வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெலிகம பிரதேசத்தில் வளர்ப்பு மீன்களைப் பிடிப்பதற்கு சென்று, வீட்டின் அருகில் அமைந்துள்ள ஆற்றில் விழுந்து நான்கு வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர். </p><p>இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளவர் குவைத் நாட்டைச் சேர்ந்த அம்மார் எனப்படும் நான்கு வயது சிறுவன் என தெரியவந்துள்ளது. </p><p>சிறுவனின் தாய், தந்தை மற்றும் சகோதரர்களுடன் அவர்கள் குவைத்தில் வசித்து வந்துள்ளனர்.</p><p> </p><h2><b>திருமண நிகழ்வு</b></h2><p>இந்த நிலையில் வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள உறவினர் ஒருவரின் வீட்டுத் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இலங்கை வந்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/573c57a3-e8e9-4279-a17d-2b69c0a27efd/26-6a9e18b1b084b.webp' /></p><p>கடந்த வாரம் குறித்த நிகழ்வுகள் நிறைவடைந்துள்ளது. எதிர்வரும் நாட்களில் அவர்கள் மீண்டும் குவைத் செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். இதன் போதே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p> வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் நேற்றைய தினம் பிற்பகல் 2 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே வந்த சிறுவன், வீட்டிற்கு அருகிலுள்ள ஆற்றிற்குச் சென்று பிளாஸ்டிக் போத்தல் ஒன்றில் சிறிய வலையின் உதவியுடன் மீன்பிடிக்க முயன்றுள்ளார்.</p><p> இதன்போது அவர் தவறுதலாக ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கியிருக்கலாம் எனப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.</p><h3><b> சிறுவன் பலி</b></h3><p>சிறுவன் வீட்டில் இல்லாததால் பதற்றமடைந்த உறவினர்களும் அயலவர்களும் சுற்றுப்புறத்தைத் தேடியபோது, ​​சிறுவனின் சடலம் ஆற்றில் மிதப்பதாக தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcfbae40-d406-4c2e-a396-00cf17263134/26-6a9e187219200.webp' /></p><p>உடனடியாக சிறுவனை வெலிகம மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரியவந்துள்ளது.</p><p> பிரேத பரிசோதனை நடவடிக்கைகளுக்காக சடலம் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மேலதிகமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. </p><p>சம்பவம் தொடர்பாக வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-07T01:51:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் வான் பாதுகாப்புத் துப்பாக்கிகள்! ஒப்பந்தத்துடன் வருகிறார் ராஜ்நாத் சிங்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/india-s-air-defense-guns-rajnath-singh-arrives-1788715371"></link>
            <id>https://ibctamil.com/article/india-s-air-defense-guns-rajnath-singh-arrives-1788715371</id>
            <summary type="text">இலங்கை - இந்தியா இடையே&amp;nbsp;மேற்கொள்ளப்படவுள்ள வான் பாதுகாப்பு குறித்த&amp;nbsp;ஒப்பந்தம் தற்போது இருதரப்பு இராஜதந்திர ரீதியில் கவனம் பெற்றுள்ளது.இந்திய ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை - இந்தியா இடையே&nbsp;மேற்கொள்ளப்படவுள்ள வான் பாதுகாப்பு குறித்த&nbsp;ஒப்பந்தம் தற்போது இருதரப்பு இராஜதந்திர ரீதியில் கவனம் பெற்றுள்ளது.</p><p>இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகும் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ள நிலையில் அதன் அறிக்கைகள் குறித்த செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன.</p><p>இந்நிலையில் அவரின் விஜயத்தின் முக்கிய நோக்கங்கள் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளன.</p><p></p><h2>மற்றொரு ஒப்பந்தம்</h2><p>இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாதுகாப்புத் துறையுடன் தொடர்புடைய மூன்று புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதனுடன், கடந்த ஆண்டு ஏப்ரல் 5ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது கைச்சாத்திடப்பட்ட இந்தியா - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முன்னேற்றம் குறித்தும் இருதரப்பினரும் மீளாய்வு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>இதில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஒன்று இந்தியாவிடமிருந்து வான் பாதுகாப்புத் துப்பாக்கிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பானதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
மற்றொரு ஒப்பந்தம் இரு நாடுகளின் மாணவர் படைகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதையும், மூன்றாவது ஒப்பந்தம் இலங்கை பாதுகாப்புக் கல்லூரிக்கும் இந்தியாவின் பாதுகாப்புக் கல்லூரிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.</p><p></p><h2>
ஜனாதிபதி மற்றும் பிரதமர் சந்திப்பு
</h2><p>புதன்கிழமை பாதுகாப்புத் துறைக்கு பொறுப்பான ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை ராஜ்நாத் சிங் சந்திக்கவுள்ளார்.
</p><p>
மேலும், நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்யும் அவர், பிரதமர் ஹரிணி அமரசூரியவையும் சந்திக்கவுள்ளதுடன், நாடாளுமன்ற நடவடிக்கைகளையும் பார்வையிடவுள்ளார்.
</p><p>
அன்றைய தினம் பாதுகாப்புப் படைகளின் பிரதானிகள் குழுவின் (OCDS) அலுவலகத்தை ஒழிப்பது தொடர்பான சட்டமூலம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தனது விஜயத்தின்போது, இந்திய நிதியுதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்யவுள்ளார்.</p><p>
</p><p></p><h2>சீதை அம்மன் ஆலயம்</h2><p>குறிப்பாக, கடந்த ஆண்டு தித்வா புயலினால் அழிக்கப்பட்ட அல்லது சேதமடைந்த உட்கட்டமைப்புகளை புனரமைப்பதற்காக இந்தியா வழங்கிய 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பிலும் அவர் கவனம் செலுத்தவுள்ளார்.</p><p>

தித்வா புயலினால் சேதமடைந்த நிலையில், இந்திய உதவியுடன் புனரமைக்கப்பட்ட மூன்று பாலங்களையும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக திறந்து வைக்கவுள்ளார். </p><p>அவற்றில் இரண்டு பாலங்கள் குருநாகல் மாவட்டத்திலும், மற்றைய பாலம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் அமைந்துள்ளன.
</p><p>மேலும், வியாழக்கிழமை தனது இலங்கை விஜயத்தை நிறைவு செய்து இந்தியாவுக்குத் திரும்புவதற்கு முன்னர், நுவரெலியாவில் உள்ள சீதை அம்மன் ஆலயத்திற்கும் ராஜ்நாத் சிங் விஜயம் செய்யவுள்ளார்.</p><p>

1989ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் கொழும்புக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T01:35:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த இரகசியங்கள்! அமைச்சரின் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dont-share-the-defense-information-to-others-1788744525"></link>
            <id>https://tamilwin.com/article/dont-share-the-defense-information-to-others-1788744525</id>
            <summary type="text">பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த இரகசியங்களை கசியவிட வேண்டாம் என பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் நிறுவப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த இரகசியங்களை கசியவிட வேண்டாம் என பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உத்தரவிட்டுள்ளார்.
</p><p>நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள பொதுமக்கள் பாதுகாப்பு குழுக்கள் மூலம் பெறப்படும் தகவல்களை மிகவும் இரகசியமாக வைத்திருப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.</p><h2>அரசாங்கம் சிறப்பு கவனம்&nbsp;</h2><p>
</p><p>நாட்டில் சமூக பொலிஸ் சேவையை மேலும் பலப்படுத்துவதில் அரசாங்கம் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3932bcd6-86d1-4def-8059-672e0c4302dc/26-6a9e134f5e148.webp' /></p><p>
</p><p>பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் கூடியபோதே இது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.</p><p>
சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் விசாரணைகளை விரைவுபடுத்துவதற்கும், குற்றத்தடுப்பு நடவடிக்கைகளுக்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>
குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை ஒழிக்கும் பொலிஸாரின் பணிகளுக்கு பொதுமக்களின் ஆதரவை அதிகளவில் பெற்றுக்கொள்வது குறித்தும் இக்கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T01:28:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா வழங்கிய புலனாய்வுத் தகவல்!மேலும் இரு ஐஸ் போதைபொருள் கொள்கலன்கள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspected-ice-drug-consignment-found-1788743842"></link>
            <id>https://tamilwin.com/article/suspected-ice-drug-consignment-found-1788743842</id>
            <summary type="text">&amp;nbsp;ஐஸ் போதை பொருள் கொள்கலன் தகவல் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துக்குவுக்கு அமெரிக்க புலனாய்வு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஐஸ் போதை பொருள் கொள்கலன் தகவல் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துக்குவுக்கு அமெரிக்க புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளது. </p><p>அமெரிக்க புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் ஒழிப்புப் பணியகமும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவும் இணைந்து இந்த சோதனையை மேற்கொண்டுள்ளன.
</p><p>இந்த கொள்கலன் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் விடுதியொன்றில் தங்கியிருந்த மூன்று பாகிஸ்தானியர்களும் கைது செய்யப்பட்டனர்.
</p><h2>
</h2><p></p><h2>கடத்தல் வலையமைப்பின் தொடர்புகள்</h2><p>பாகிஸ்தானியர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மேலும் இரண்டு சந்தேகத்திற்குரிய கொள்கலன்கள் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. </p><p>அதில் ஒன்று ஏற்கனவே சுங்கப் பரிசோதனையில் உள்ளது; மற்றொன்று கப்பல் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளது. அவை இரண்டையும் சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
</p><p>
இந்த கைதுகளின் போது பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இதில் 'அங்கொட பியந்த' அல்லது 'கார்கோ பியன்' ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக பேசப்பட்டது. </p><p>ஆனால், தற்போது இடம்பெற்று வரும் விசாரணைகளின் மூலம் இவர்கள் யாருக்கும் இதில் நேரடித் தொடர்பு இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3ead8ec-719d-40f6-b9db-d6bf6bb822b3/26-6a9e10d630976.webp' /></p><p>இருப்பினும், இந்த பாகிஸ்தானியர்கள் மற்றும் அவர்கள் நடத்தும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு, இலங்கையிலுள்ள வர்த்தகர்களுடன் இணைந்து செய்யும் வியாபாரத்தின் ஒரு பகுதியாகவே இந்த இரண்டு கொள்கலன்களையும் கொண்டுவந்துள்ளனர் என்ற சந்தேகம் பொலிஸாருக்கு உள்ளது. </p><p>அந்த இரண்டு கொள்கலன்களையும் விடுவித்துக்கொள்வதற்காகவே இவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக இலங்கையில் தங்கியிருந்துள்ளனர்.

இங்கு ஒரு சிக்கல் எழுந்துள்ளது.</p><p>மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு தங்களது கடமையை சரியாகச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில், பொலிஸ் விசேட பணியகத்தால் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
விசாரணைகளில் ஏற்பட்ட தாமதம்</h2><p>கடந்த மாதம் 18 ஆம் திகதி இதற்கான நீதிமன்ற உத்தரவு கோரப்பட்டபோதிலும், அது நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. </p><p>பின்னர் இரண்டாவது தடவையாக நீதிமன்ற உத்தரவைப் பெற்றே இவர்கள் சோதனையை மேற்கொண்டுள்ளனர். ஆனால், முதல் நீதிமன்ற உத்தரவு நிராகரிக்கப்பட்ட விபரத்தை உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கோ அல்லது ஏனைய பிரிவுகளுக்கோ அறிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. </p><p>மேலும், போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் இந்த விசாரணையை மெதுவாகச் நடத்தியதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

ஆனால் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் ஆரம்பத்தில் இருந்தே இந்த விசாரணையை முடிவுக்குக் கொண்டுவர பெரும் முயற்சி எடுத்தது. </p><p>சுங்கத் திணைக்களத்திற்கு அறிவித்து, இந்த கொள்கலன்களை எக்காரணம் கொண்டும் வெளியே விட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டது. </p><p>ஆனால், அதைத் திறப்பதற்கு நீதிமன்ற உத்தரவு தேவைப்பட்டதாலும், சுங்கப் பகுதியினரின் அனுமதி கிடைக்கும் வரை காத்திருந்ததாலுமே தாமதம் ஏற்பட்டது.
</p><p>
அமெரிக்க புலனாய்வுப் பிரிவினர் ஈரான், ஆப்கானிஸ்தான், பலுகிஸ்தான் போன்ற பிராந்தியங்களில் உள்ள தீவிரவாத அமைப்புகளின் நிதி ஆதாரமாக இருக்கும் போதைப்பொருள் கடத்தலை முற்றாக ஒழிப்பதையே முதன்மை இலக்காகக் கொண்டுள்ளனர்.
</p><p>
பாகிஸ்தானியர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மேலும் இரண்டு சந்தேகத்திற்குரிய கொள்கலன்கள் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. </p><p>அதில் ஒன்று ஏற்கனவே சுங்கப் பரிசோதனையில் உள்ளது; மற்றொன்று கப்பல் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளது. அவை இரண்டையும் சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
</p><p>
இந்த கடத்தலின் பின்னணியில் சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு நேரடியாக ஈடுபட்டுள்ளது. இலங்கையில் உள்ளவர்கள் வெறும் இறக்குமதி செய்யும் வர்த்தகப் பங்காளிகள் மட்டுமே. பிரதான சூத்திரதாரிகள் யார் என்பது இன்னும் வெளிவரவில்லை.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T01:22:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் பிரபல டிவி தொகுப்பாளினி உட்பட 12 பேருக்குத் தூக்கு தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tv-presenter-among-12-sentenced-to-death-1788703248"></link>
            <id>https://canadamirror.com/article/tv-presenter-among-12-sentenced-to-death-1788703248</id>
            <summary type="text">எகிப்தில் சட்டவிரோதமாகப் போதைப்பொருட்களைத் தயாரித்து கடத்திய வழக்கில், அந்நாட்டின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான சாரா கலீஃபா உட்பட 12 பேருக்குத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எகிப்தில் சட்டவிரோதமாகப் போதைப்பொருட்களைத் தயாரித்து கடத்திய வழக்கில், அந்நாட்டின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான சாரா கலீஃபா உட்பட 12 பேருக்குத் தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றக் கெய்ரோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. </p><p>
39 வயதான சாரா கலீஃபா, எகிப்தில் குற்றவியல் தொடர்பான 'மிஷன் இம்பாசிபிள்' என்ற புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாவார். </p><p>
போதைப்பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்து, செயற்கைப் போதைப்பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்த குற்றவியல் கும்பலுடன் இணைந்து செயல்பட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fa5d369-5466-46ea-9047-3bb4ae5316da/26-6a9d7215b0903.webp' /></p><p> </p><p>
மேலும், உரிமம் பெறாத சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்களை வைத்திருந்த குற்றச்சாட்டுகளும் இவர்கள் மீது நிரூபிக்கப்பட்டுள்ளன. 
இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், 7 பேர் விடுவிக்கப்பட்டனர்.
</p><p>கடந்த மாதம் முதற்கட்டத் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட போதிலும், எகிப்திய சட்டப்படி மரண தண்டனை விவகாரங்களில் எகிப்தின் தலைமை மதத் தலைவரான 'கிராண்ட் முஃப்தி'யின் மத ரீதியான ஆலோசனையைப் பெற்ற பிறகே இத்தீர்ப்பு தற்போது முறைப்படி உறுதி செய்யப்பட்டுள்ளது. </p><p>
விசாரணையின் போது, 750 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருட்களும், அவற்றைச் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. </p><p>
20 சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் ஆடியோ/வீடியோ உரையாடல்கள் அடங்கிய மின்னணு ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. </p><p>
எனினும் தன் மீதான குற்றச்சாட்டுகளை சாரா கலீஃபா முற்றிலுமாக மறுத்துள்ளார். போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் வைத்துப் புகைப்படம் எடுக்கப்படும் வரை தான் போதைப்பொருட்களைப் பார்த்ததே இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். </p><p>
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாகச் சாரா கலீஃபாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.</p><p>
இதேவேளை, சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்ட 2025 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, எகிப்தில் அந்த ஆண்டில் மட்டும் 492 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, அதில் 23 தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.</p><p> 
சர்வதேச சட்ட விதிகளின்படி "திட்டமிட்ட கொலை" குற்றங்களுக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற போதிலும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களுக்கும் எகிப்தில் மரண தண்டனை வழங்கப்படுவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T01:08:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 கைதிகளுடன் நாமல்; மோசமடையும் சூழல்; அநுரவின் அதிரடி பாய்ச்சல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-with-10-prisoners-anura-s-aggressive-move-1788723922"></link>
            <id>https://jvpnews.com/article/namal-with-10-prisoners-anura-s-aggressive-move-1788723922</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு எதிர்வரும் செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சிறைச்சாலையில் எந்தவிதமான உடல் பாதிப்புகளும் இல்லை என சிறைச்சாலைத் தரப்புகள் தெரிவித்துள்ளன.</p><p>
</p><p></p><p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானக் கொள்வனவு தொடர்பான விசாரணையின் அடிப்படையில் கடந்த 4ஆம் திகதி நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார். </p><p>சுமார் ஐந்து மணிநேர விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.&nbsp;</p><p>சிறைச்சாலைத் தரப்பின் தகவலின்படி, அவருக்கு விசேட சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும், ஏனைய 10 கைதிகளுடன் வழமையான சிறைச்சாலை நடைமுறைகளுக்கு அமையவே அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

இதேவேளை, நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானக் கொள்வனவு விவகாரத்துடன் தொடர்புடையதாகும்.</p><p> 2012–2013 காலப்பகுதியில் இடம்பெற்ற விமானக் கொள்வனவு ஒப்பந்தங்களில் இலஞ்சப் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அவரது கைது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. </p><p>விசாரணைகளில் வெளிநாடுகளின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் ‘கிறிஸ்’ (Krrish) விவகாரங்களுடன் தொடர்புபடுத்தப்படும் பணப் பரிமாற்றங்கள் நன்கொடைகள் எனவும், அவற்றை இலஞ்சமாகக் கருத முடியாது எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.</p><p>இந்த விடயம் தொடர்பான மேலும் பல தகவல்களை கீழே காணப்படும் காணொளியில் முழுமையாகப் பார்வையிடலாம்.......</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tgSkYHLgmMQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-07T01:07:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம் ; அசுர வளர்ச்சியை காணப்போகும் ராசிக்காரங்க இவங்க தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kuru-bhavan-asura-valarchi-kana-pogum-rasi-1788740180"></link>
            <id>https://jvpnews.com/article/kuru-bhavan-asura-valarchi-kana-pogum-rasi-1788740180</id>
            <summary type="text">ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் செல்வம், அறிவு, மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் செல்வம், அறிவு, மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். நவகிரகங்களில் குரு பகவான் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் பயணிப்பார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d9861d4-00be-4230-bb8f-47ec7f397588/26-6a9e0256b0bbe.webp' /></p><p>இந்த விபரீத ராஜயோகமானது ஒருவரது வாழ்க்கையில் குறுகிய காலத்தில் நல்ல வளர்ச்சியையும், நிதி நிலையில் முன்னேற்றத்தையும் கொண்டு வரக்கூடிய அளவில் சக்தி வாய்ந்தது. இப்போது குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகத்தால் நல்ல வளர்ச்சியைக் காணும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/506918e0-7967-4179-acfb-192d1e4e1a40/26-6a9e025608ded.webp' /></p><h3>சிம்மம்
</h3><p>சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டில் குரு பகவான் உள்ளார். இதனால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகத்தால் வெளிநாட்டுடன் தொடர்புடைய தொழிலை அல்லது வேலையை செய்பவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். வெளிநாடு செல்லும் கனவு இருந்தால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். நீண்ட காலமாக இழுத்துக் கொண்டிருந்த அரசு வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காணக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4e19356-1d12-416d-8bdf-78c80216eb36/26-6a9e0258d2bae.webp' /></p><h3>தனுசு</h3><p>
தனுசு ராசியின் 8 ஆவது வீட்டில் குரு பகவான் உள்ளார். இதனால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகத்தால், நீண்ட கால பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் குரு பகவானின் அருளால் கைக்கு வந்து சேரும்.

ஏற்கனவே முதலீடுகளை செய்து, அதிலிருந்து எந்த நலனையும் பெறாமல் இருந்தால், இக்காலத்தில் அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/788672a3-c94e-4215-a685-8822eaec39a2/26-6a9e0258192bd.webp' /></p><h3>கும்பம்
</h3><p>கும்ப ராசியின் 6 ஆவது வீட்டில் குரு பகவான் உள்ளார். இதனால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகத்தால் நிதி நிலைமை வலுவடையும், கடன் தொல்லைகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2c5f1e9-1cce-4410-aef2-0ca0c78734c9/26-6a9e0257639b9.webp' /></p>]]></content>
            <updated>2026-09-07T01:07:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்ச குடும்பத்தை தொடரும் விசாரணைகள்! மீண்டும் சிக்கலில் சிக்கிய ஷிரந்தி ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pet-scan-fundraising-probe-into-siriliya-saviya-1788739755"></link>
            <id>https://tamilwin.com/article/pet-scan-fundraising-probe-into-siriliya-saviya-1788739755</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவினால் நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படும் சிரிலிய சவிய அமைப்பு, மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவினால் நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படும் சிரிலிய சவிய அமைப்பு, மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு PET Scan இயந்திரம் ஒன்றை வழங்குவதற்காக நிதி திரட்டியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சிரிலிய சவிய அமைப்பு, PET Scan இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக அரச மற்றும் தனியார் வங்கிகளிடம் நிதியுதவி கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, தேசிய சேமிப்பு வங்கியும் குறித்த திட்டத்திற்காக ஒரு மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><h2>நிதி திரட்டு</h2><p>

இந்த விவகாரம் தொடர்பில், அப்போது தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக இருந்த பிரதீப் காரியவசத்திடம் வாக்குமூலம் பெறுமாறு சட்டமா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cea927d-8f5b-4c4c-aad9-681e6664965a/26-6a9e0311221a5.webp' /></p><p>
</p><p>
எனினும், மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட PET Scan இயந்திரம், சிரிலிய சவிய அமைப்பினால் கொள்வனவு செய்யப்படவில்லை என்றும், அது சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனால், சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட PET Scan இயந்திரத்தை கொள்வனவு செய்வதாகக் கூறி நிதி திரட்டப்பட்டதன் மூலம் மோசடி ஏதேனும் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T01:05:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கம் பணம் கொடுத்து யார் மீதும் சேறு பூசுவதில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-will-not-sling-mud-at-anybody-1788743048"></link>
            <id>https://tamilwin.com/article/npp-will-not-sling-mud-at-anybody-1788743048</id>
            <summary type="text">அரசாங்கம் பணம் கொடுத்து யார் மீதும் சேறு பூசுவதில்லை என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்காகச் சமூக ஊடகங்களில் தன்னார்வமாக குரல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கம் பணம் கொடுத்து யார் மீதும் சேறு பூசுவதில்லை என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>
அரசாங்கத்திற்காகச் சமூக ஊடகங்களில் தன்னார்வமாக குரல் கொடுக்கும் குழுக்களைத் தடுக்கும் சக்தி தமக்கு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
</p><p> இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அமைச்சர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8503ccc2-047e-4a7f-898d-0fec97ec10de/26-6a9e0d89d65a2.webp' /></p><p>
தேசிய மக்கள் சக்திக்காகச் சமூக ஊடகங்களில் தன்னார்வமாக முன்வருபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் எனவும், அரசாங்கம் எவரையும் அவ்வாறு செய்யுமாறு கேட்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
</p><p>தன்னார்வ அடிப்படையில் அரசாங்கத்தின் சார்பில் சமூக ஊடகங்களில் கருத்து வெளியிடுவேரை மதிப்பதாகவும் பாராட்டி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இவர்கள் பணத்திற்காக எழுதுபவர்களோ, கூலிக்குச் சேறுபூசுபவர்களோ அல்லது பணத்திற்காகக் கருத்துகளைப் பதிவிடுபவர்களோ அல்லர். தமது இயக்கத்திற்காகத் தன்னார்வமாக முன்வரும் ஒரு மிகப்பெரிய மக்கள் கூட்டம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>தன்னார்வமாக உழைக்கும் இத்தகைய படைகள் தானாகவே உருவாகின்றன எனவும் இவ்வாறான படைகளே முற்போக்கு மக்கள் இயக்கங்களைப் பாதுகாக்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.</p><p>
பிற எந்தவொரு சக்தியையும் விட, முற்போக்கு மக்கள் இயக்கங்கள் மூலம் தானாகவே உருவாகும் பரந்த மக்கள் சக்தியே மிகவும் வலிமையானது என சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>அத்தகைய சக்தி உருவாகுவது நல்லதே தவிர, அதைத் தடுக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை எனவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T01:04:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்லாந்து செல்லும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு! விசா விதியில் அதிரடி மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/major-change-for-sri-lankans-traveling-to-thailand-1788742247"></link>
            <id>https://tamilwin.com/article/major-change-for-sri-lankans-traveling-to-thailand-1788742247</id>
            <summary type="text">இலங்கை கடவுச்சீட்டு (Passport) வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்குத்
திட்டத்தில் தாய்லாந்து அரசு அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கடவுச்சீட்டு (Passport) வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்குத்
திட்டத்தில் தாய்லாந்து அரசு அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது.</p><p>

இந்த நிலையில் வரும் செப்டம்பர் 15, 2026 முதல் இலங்கையர்கள் தாய்லாந்திற்கு
விசா இன்றி பயணம் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>இலங்கை பயணிகள்</h2><p>

மேலும் செப்டம்பர் 15 முதல் தாய்லாந்து செல்லும் அனைத்து இலங்கை பயணிகளும்
புறப்படுவதற்கு முன்பே உரிய விசாவைப் பெற வேண்டியது அவசியமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0d795e6-5e5c-4d98-92dc-473aa47289bf/26-6a9e0b9b51252.webp' /></p><p>

அத்துடன் விசா விண்ணப்பங்களையும் அதற்கான கட்டணங்களையும் தாய்லாந்தின்
அதிகாரப்பூர்வ இணையவழி e-Visa முறைமை மூலமாகவே சமர்ப்பிக்க வேண்டும்.</p><p>

இதேவேளை கொழும்பில் உள்ள தாய்லாந்து தூதரகம் நேரில் சமர்ப்பிக்கப்படும் விசா
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளாது.</p><h2>&nbsp;விசா இரத்து</h2><p>
</p><p>
எனவே செப்டம்பர் 15-க்கு முன்னர் ஏற்கனவே உள்ள விசா விலக்கு முறையின் கீழ்
தாய்லாந்திற்குள் நுழையும் பயணிகள், அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட காலம் வரை
தொடர்ந்து அங்கு தங்கியிருக்க முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e05c0b24-9742-4ffb-8adb-9a2f5e2d25f9/26-6a9e0b9c1e27f.webp' /></p><p>

இந்தநிலையில் தேசிய பாதுகாப்பு, சுற்றுலா, பொருளாதார நலன்கள் மற்றும் பரஸ்பர
ஒத்துழைப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தாய்லாந்து அரச அமைச்சரவை இந்த முடிவை
எடுத்துள்ளது.
</p><p>
இது குறித்த "புதிய விசா நடவடிக்கைகள்" பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை
கொழும்பில் உள்ள தாய்லாந்து தூதரகம் வெளியிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T01:02:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிருசாந்தியின் நினைவு நாளில் ஜெனிவாவில் ஓங்கி ஒலிக்கப்போகும் அவலங்களின் கேள்விகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kirushanthi-kumaraswami-30-commemoration-1788707672"></link>
            <id>https://ibctamil.com/article/kirushanthi-kumaraswami-30-commemoration-1788707672</id>
            <summary type="text">கிருஷாந்தி குமாரசாமி படுகொலை செய்யப்பட்டு இன்று செப்டெம்பர் 7ஆம் திகதியுடன் 30 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 1996ஆம் ஆண்டு செம்மணி இராணுவச் சோதனைச் சாவடியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிருஷாந்தி குமாரசாமி படுகொலை செய்யப்பட்டு இன்று செப்டெம்பர் 7ஆம் திகதியுடன் 30 ஆண்டுகள் நிறைவடைகின்றன. </p><p>1996ஆம் ஆண்டு செம்மணி இராணுவச் சோதனைச் சாவடியில் கைது செய்யப்பட்ட 18 வயதான கிருஷாந்தி, பின்னர் பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதுடன், அவரைத் தேடிச் சென்ற அவரது தாயார், சகோதரர் மற்றும் அயலவரும் கொல்லப்பட்டனர். </p><p>இந்த வழக்கில் இராணுவத்தினரை உள்ளடக்கிய குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டது இலங்கையின் கடந்தகால மனித உரிமை வழக்குகளில் முக்கியத்துவமாகியது.</p><p></p><h2>கிருஷாந்தி வழக்கின் நீதி</h2><p>ஆனால், கிருஷாந்தி வழக்கின் நீதிமன்றத் தீர்ப்பு செம்மணியின் முழு உண்மையை வெளிக்கொண்டு வந்ததா? என்ற கேள்விக்கு மூன்று தசாப்தங்களுக்குப் பின்னரும் முழுமையான பதில் கிடைக்கவில்லை.&nbsp;</p><p>1998ஆம் ஆண்டு கிருஷாந்தி வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்ச செம்மணியில் நூற்றுக்கணக்கானோர் புதைக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது, வழக்கை ஒரு தனிப்பட்ட கொலைச் சம்பவத்திலிருந்து மிகப் பெரிய மனித உரிமை விவகாரமாக மாற்றியது. </p><p>அதன் பின்னர் 1999ஆம் ஆண்டு செம்மணியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.</p><p>ஆனால், அந்த அகழ்வுகளால் எழுந்த முக்கியமான கேள்விகளுக்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் முழுமையான நீதிசார் விசாரணை நடைபெறவில்லை. </p><p>குறிப்பாக, காணாமல் போனவர்களின் எண்ணிக்கை, புதைகுழிகளின் முழுமையான பரப்பு, அவர்களின் மரணத்துக்குப் பொறுப்பானவர்கள் மற்றும் அவர்களுக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படும் உயர்மட்ட அதிகாரிகள் தொடர்பான கேள்விகள் நீடித்தன.</p><p></p><h2>செம்மணி&nbsp;உண்மைகள்</h2><p>இதனால் கிருஷாந்தி குமாரசாமி வழக்கு என்பது ஒரு தனிமனித படுகொலைக்கான நீதி என்ற எல்லையைத் தாண்டி, செம்மணியில் புதைக்கப்பட்டிருக்கக்கூடிய ஏனைய உயிர்களின் உண்மையையும் வெளிக்கொணரும் திறவுகோலாக மாறியுள்ளது.</p><p>கடந்த 2025ஆம் ஆண்டு செம்மணி பகுதியில் மீண்டும் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றபோது மனித எச்சங்கள் பெருமளவில் கண்டெடுக்கப்பட்டமை, மூன்று தசாப்தங்களாக மறைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் உண்மைகள் மீண்டும் தேசிய மற்றும் சர்வதேச கவனத்திற்கு வந்தன.</p><p> 2025 செப்டெம்பர் நினைவேந்தலின் போது, அங்கு நூற்றுக்கணக்கான மனித எச்சங்கள் நீதிமன்றப் பாதுகாப்பில் இருப்பதாக உள்ளூர் செய்திகள் தெரிவித்திருந்தன.</p><p>மேலும், இந்த ஆண்டு கிருஷாந்தியின் 30ஆவது நினைவு தினம் மற்றொரு முக்கியமான சர்வதேச நிகழ்வுடன் இணைகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது வழக்கமான அமர்வு இன்று, செப்டெம்பர் 7ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகிறது. </p><p>இந்த அமர்வில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் எழுத்து அறிக்கை தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.</p><p>இதனால், கிருஷாந்தியின் 30ஆவது நினைவு தினம் ஒரு குறியீட்டு முக்கியத்துவத்தையும் பெறுகிறது.</p><p></p><h2>ஜெனீவாவில் இலங்கை</h2><p>ஒருபுறம், செம்மணியில் புதைக்கப்பட்ட உண்மையைத் தேடும் குடும்பங்கள்.

மறுபுறம், ஜெனீவாவில் இலங்கையின் கடந்தகால மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் தொடர்பான சர்வதேச விவாதம்.
</p><p>
இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரே நாளில் சந்திப்பது, இலங்கையின் கடந்தகால குற்றங்கள் தொடர்பான விசாரணைகளின் நிலை குறித்து மீண்டும் கேள்வி எழுப்புகிறது.</p><p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் கடந்தகால அரசியல் கொலைகள், கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதாக தேர்தல் காலத்தில் உறுதியளித்திருந்தது. </p><p>ஆனால், தற்போதைய நிலைமையில் பல முக்கிய வழக்குகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இன்னும் ஏற்படவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு&nbsp; தனது சமீபத்திய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. </p><p>குறிப்பாக, கடந்தகால கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகள் தேங்கிக் கிடப்பதும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதில் அரசியல் விருப்பம் போதுமானதாக இல்லாதிருப்பதும் முக்கிய கவலையாக முன்வைக்கப்பட்டுள்ளது. </p><p>அதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கடந்த பல ஆண்டுகளாக இலங்கை தொடர்பில் பொறுப்புக்கூறல் மற்றும் ஆதாரங்களைப் பாதுகாப்பது குறித்து தீர்மானங்களை நிறைவேற்றி வந்துள்ளது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p> </p>]]></content>
            <updated>2026-09-07T01:00:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவுக்கான முதல் வேளாண்மை AI மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ள Google]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/google-launches-india-agri-ai-models-1788742853"></link>
            <id>https://news.lankasri.com/article/google-launches-india-agri-ai-models-1788742853</id>
            <summary type="text">Google நிறுவனம், இந்தியாவுக்கான முதல் வேளாண்மை செயற்கை நுண்ணறிவு (AI) மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

Google DeepMind-இன் AnthroKrishi குழு உருவாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Google நிறுவனம், இந்தியாவுக்கான முதல் வேளாண்மை செயற்கை நுண்ணறிவு (AI) மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
</p><p>
Google DeepMind-இன் AnthroKrishi குழு உருவாக்கிய இந்த மாடல்கள், விவசாய நிலங்களைப் புரிந்துகொள்வதற்கும், பயிர் நிலைமைகளை கண்காணிப்பதற்கும் உதவுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a04e778d-d2cd-46b9-b830-79b0b1ba4006/26-6a9e0cc68a9ce.webp' /></p><p>
</p><h2>
இரண்டு முக்கிய மாடல்கள்</h2><p><b>Agricultural Landscape Understanding (ALU):</b> நிலத் தரவுகளை ஆய்வு செய்து, விவசாய நிலப் படங்களை அடையாளம் காண உதவுகிறது. இது நில வரைபடம், நிலப் பயன்பாடு, டிஜிட்டல் வேளாண்மை போன்ற பயன்பாடுகளுக்கு உதவுகிறது.
</p><p><b>
Agricultural Monitoring and Event Detection (AMED):</b> பயிர் நிலைமைகள், நிலப் பயன்பாட்டில் மாற்றங்கள், விவசாய சம்பவங்களை கண்காணிக்கிறது. ALU-உடன் இணைந்து பயன்படுத்தப்படும் போது, பெரிய அளவில் பயிர் கண்காணிப்பு செய்ய முடிகிறது.
</p><p></p><p>இந்த மாடல்கள், Google Earth-இல் தரவு அடுக்குகளாக இணைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தியாவைத் தவிர கென்யா, உகாண்டா, கானா, ருவாண்டா, நைஜீரியா, சாம்பியா போன்ற நாடுகளிலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
</p><h2>
பயன்பாட்டு உதாரணங்கள்</h2><p>CarbonFarm: குறைந்த கார்பன் அரிசி சாகுபடிக்கு ALU API மற்றும் ஜெமினியைப் பயன்படுத்தியுள்ளது, 2030 க்குள் 2 மில்லியன் ஹெக்டேர் இலக்கு நிர்ணயித்துள்ளது.
</p><p>
TerraStack (IIT Bombay startup): 140 மில்லியன் ஹெக்டேர் நில வரைபடமாக்க பயன்படுத்தியுள்ளது.
</p><p>
கர்நாடகா நீர்வளத் துறை: 2.6 மில்லியன் ஹெக்டேர் பாசன நிலங்களுக்கு நீர் மேலாண்மை செய்ய பயன்படுத்தியுள்ளது.
</p><p>
Telangana ADeX: டிஜிட்டல் வேளாண்மை சேவைகளுக்கு பயன்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த AI மாடல்கள், precision agriculture, irrigation planning, crop monitoring போன்ற துறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T00:57:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் நிமல் பெரேராவை சந்திக்க முயற்சித்த நாமலின் சட்டத்தரணி!மெல்பேர்ன் நகரில் நடந்த அதிர்ச்சிக்கும் சம்பவங்கள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-nimal-perera-businessman-1788742407"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-nimal-perera-businessman-1788742407</id>
            <summary type="text">நாமல் ராஜபக்சவின் நெருங்கிய நண்பராக இருந்த தொழிலதிபர் நிமல் பெரேரா,இரு சந்தர்ப்பங்களில் சாட்சியமளிக்க உள்ளதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்சவின் நெருங்கிய நண்பராக இருந்த தொழிலதிபர் நிமல் பெரேரா,இரு சந்தர்ப்பங்களில் சாட்சியமளிக்க உள்ளதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். </p><p>மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலம் முதல் ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பராக இருந்த இவர், தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.</p><p>தொழிலதிபர் நிமல் பெரேராவை நாமல் தொடர்பில் சாட்சியமளிக்க வேண்டாம் என அவுஸ்திரேலியாவிலும் பாரிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
</p><h2>

</h2><p></p><h2>நிமல் பெரேராவை சந்திக்க முயற்சித்தவர்</h2><p>

நாமல் ராஜபக்சவின் சகாக்களில் ஒருவரான இந்திக கருணாஜீவ, மெல்பேர்ன், விக்டோரியாவில் வசித்து வரும் வழக்கறிஞராவார். </p><p>ராஜபக்சவின் நீண்டகால நண்பரான இவர், அவுஸ்திரேலியாவில் உள்ள நிமல் பெரேராவைத் தொடர்புகொண்டு நாமல் ராஜபக்சவிற்கு எதிராக எந்தவொரு வாக்குமூலத்தையும் வழங்க வேண்டாம் என கோருவதற்கு தீவிர முயற்சி செய்ததாக தெரியவந்துள்ளது. </p><p>கருணாஜீவ, Narre Warren, VIC 3805, 66 Victor Crescent, Level 2, Suite 319 இல் அமைந்துள்ள ISK Law இன் முதன்மை வழக்கறிஞராவார்.
</p><p>
ஆனால் கருணாஜீவவால் நிமல் பெரேராவைத் தொடர்புகொள்ள முடியவில்லை. நிமல் பெரேரா அவரது அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும் குறுஞ்செய்திகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்த்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3e69677-6fbf-4574-a2f3-3c5249c9250c/26-6a9e0b09be350.webp' /></p><p>இதன் காரணமாக கருணாஜீவவின் முயற்சி தோல்வியடைந்ததாகவும், இச்சம்பவம் நாமல் ராஜபக்சவை முற்றிலும் விரக்தியடையச் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அவுஸ்திரேலியா சென்ற CID மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் இது தெரியவந்ததையடுத்து, குற்றப் புலனாய்வுத் துறை (CID) மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நிமல் பெரேராவிடமிருந்து சத்தியக்கடதாசி (Affidavit) பெறுவதற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ளனர். </p><p>அங்கு நிமல் பெரேரா, நாமல் ராஜபக்சவிற்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை எவ்வாறு வழங்கினார் என்பதைக் குறிப்பிட்டு சத்தியக்கடதாசியை அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார்.
</p><h2>
அவுஸ்திரேலிய அரசு வழங்கிய வாக்குறுதி</h2><p>நிமல் பெரேராவிற்கு பாதுகாப்பை வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அவர் அவுஸ்திரேலியாவிலிருந்து 'Zoom' வழியாக சாட்சியமளிக்கவுள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த விசாரணைக்கு அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பரஸ்பர சட்ட உதவியை வழங்கியுள்ளதோடு, தற்போது விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cb41ded-a7b0-4a56-a30e-b9be7029fe66/26-6a9e0b0a80c15.webp' /></p><p>எயார்பஸ் (Airbus) நிறுவனத்திடமிருந்து ஆவணங்களைப் பெறுவது தொடர்பான உடன்பாடே இந்த வழக்கின் முக்கிய விடயமாகும். வழக்கு மிகவும் வலுவாக உள்ளதாகவும், நாமல் ராஜபக்சவிற்கு எதிராக மேலும் சான்றுகள் வெளிவரும் என்றும் சட்டமா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p>
இந்த வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட மேல் நீதிமன்ற தீர்ப்பாயத்தை நியமிக்குமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுப்பாரா என்பது இன்னும் வெளியாகவில்லை.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T00:57:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் 10 கைதிகளுடன் நாமல்! அநுரவின் அதிரடி பாய்ச்சல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-case-updates-1788724787"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-case-updates-1788724787</id>
            <summary type="text">ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் செப்டம்பர் 4 அன்று நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் செப்டம்பர் 4 அன்று நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
 இந்த கைது நடவடிக்கை மட்டுமல்லாது, 2016-ல் தாக்கல் செய்யப்பட்ட கிரிஷ் குரூப் (Krrish Group) தொடர்பான 70 மில்லியன் ரூபா வழக்கு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட நான்குக்கும் மேற்பட்ட வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன.
</p><p>
இந்த வழக்குகள் அனைத்தும் நல்லாட்சி காலத்தில் தாக்கல் செய்யப்பட்டவை என்றும், சட்டமா அதிபர் திணைக்களம் தற்போதும் அதன் பணிகளைத் தொடர்கிறது.

தற்போதைய சூழலில், நாமல் ராஜபக்சவுக்கு உடனடியாக பிணை கிடைப்பது கடினம் போன்று காணப்படுகின்றது.
</p><p>
இந்தநிலையில், நாமல் ராஜபக்ச சிறைச்சாலையில் 10 கைதிகளுடன் தங்கியிருக்கிறார்.அவருக்கு சிறைச்சாலைக்குள் எந்தவிதமான சிறப்புச் சலுகைகளும் வழங்கப்படவில்லை.</p><p>

மேலும், அவர் எந்தவிதமான நோய் பாதிப்புகளும் இன்றி நலமாக இருப்பதாக சிறைச்சாலை தரப்புகள் தெரிவிக்கின்றன. </p><p>

 இந்த விடயங்கள் தொடர்பில் எடுத்து வருகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tgSkYHLgmMQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T00:56:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[கமல்ஹாசனை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/writers-union-meets-kamalhaasan-1788742587"></link>
            <id>https://cineulagam.com/article/writers-union-meets-kamalhaasan-1788742587</id>
            <summary type="text">தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல் அலுவலகத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல் அலுவலகத்தில் சந்தித்தனர்.</p><p>இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பாக மரியாதை நிமித்தமாக எங்களின் முன்னோடியும் திரையுலகின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராகவும் திகழும் திரு. கமல்ஹாசன் அவர்களை நிர்வாகிகளும் செயற்குழு உறுப்பினர்களும் சந்தித்து மகிழ்ந்தோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e0ca131-e0d5-41c9-a973-a1a64fef581c/26-6a9e0c12890f2.webp' /></p><p>
</p><p>சினிமாவில் வியக்கத்தக்க எழுத்தாளர்கள் நிறைய பேர் இருந்தாலும் திரு. கமல்ஹாசன் அவர்கள் அடுத்த தலைமுறைக்கான பாதையை வகுத்துக் கொடுத்த ஒரு முன்னோடியான எழுத்தாளர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அந்த எழுத்தாளரை சந்தித்து அவருடைய அனுபவங்களையும், அவருடைய வழிகாட்டுதலையும் நாங்கள் கேட்டுக்கொள்ள நேரம் ஒதுக்க கேட்டிருந்தோம்.
</p><p>அதை எற்றுக்கொண்டு அவர் எங்களை சந்தித்தார். அப்போது நிறைய விஷயங்களை எங்களிடம் பகிர்ந்தார். அவர் உருவாக்கிய படங்களான மகாநதி, அன்பே சிவம், ஹே ராம், குணா, தேவர் மகன் என அனைத்திலும் அவருடைய எழுத்துகள் மிகவும் வலிமையானதாகவும் கூர்மையானதாவும் இருக்கும், சிறிய வசனமாக இருந்தாலும் பெரும் அர்த்தத்தை சொல்லும்.
</p><p>அந்த மாதிரியான எழுத்துகளை கொடுத்தவர் தான் திரு. கமல்ஹாசன் அவர்கள். அவரை சந்தித்தது எங்களுக்கு பெரிய உற்சாகம். எங்களை நேரம் ஒதுக்கி சந்தித்து, வாழ்த்துகளை தெரிவித்து, சங்கத்தை சிறப்பாக நடத்துங்கள் என்று சொல்லி அனுப்பினார். இந்த சந்திப்பு எங்களுக்கு என்றென்றும் நினைவில் இருக்கும்," என்று தெரிவித்துள்ளனர். &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cb05cad-ffa0-481b-8038-637c8f4131b1/26-6a9e0c138fba4.webp' /></p>]]></content>
            <updated>2026-09-07T00:56:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக போர்சூழ்நிலைகளின் சுமையை அரசாங்கம், மக்கள் மீது திணிக்கவில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-not-imposing-burden-on-people-1788742339"></link>
            <id>https://tamilwin.com/article/npp-not-imposing-burden-on-people-1788742339</id>
            <summary type="text">உலக போர்ச் சூழ்நிலைகளின் சுமையை அரசாங்கம் மக்கள் மீது திணிக்கவில்லை என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
 பேருவளையில் நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக போர்ச் சூழ்நிலைகளின் சுமையை அரசாங்கம் மக்கள் மீது திணிக்கவில்லை என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.</p><p>
 பேருவளையில் நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p>70 ஆண்டுகளுக்கும் மேலாக சீரழிக்கப்பட்ட ஒரு நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவது நீண்டதும் சவாலானதுமான ஒரு பயணமாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/562fe399-63f6-42ab-9384-60300a8d7cd5/26-6a9e0ac940c7f.webp' /></p><p>
எனினும், உலகில் நிலவும் போர்ச் சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் நாட்டின் மக்களுக்கு அதன் சுமை தெரியாத வகையில் செயற்பட தற்போதைய அரசாங்கத்தினால் முடிந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் நிலைமை காரணமாக ஹோர்முஸ் நீரிணை ஊடான கடல்சார் போக்குவரத்துக்கு தடைகள் ஏற்பட்டுள்ளன.
</p><p>இதனால் கப்பல் கட்டணங்கள், காப்பீட்டுக் கட்டணங்கள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ள போதிலும், அரசாங்கம் எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளை உயர்த்த அனுமதிக்காமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
</p><p>வேறு அரசாங்கம் இருந்திருந்தால், இந்தப் போரைச் சாட்டாக வைத்து பெரிய சூதாட்டம் நடத்தி, எரிபொருள் இல்லை, எரிவாயு இல்லை எனக் கூறி விலைகளை உயர்த்தியிருப்பார்கள். மக்கள் மீண்டும் வரிசைகளில் நின்றிருப்பார்கள். </p><p>ஆனால், நமது அரசாங்கத்தின் கீழ் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட அனுமதிக்கப்படவில்லை. மாறாக, எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளை படிப்படியாகக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறோம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் போன்ற சவால்களின் போதும் அரசாங்கம் மிகவும் திறம்பட தலையிட்டு மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>உலகில் நிலவும் போரின் தாக்கம் கூட மக்களுக்குத் தெரியாத வகையில் நாட்டை ஆட்சி செய்ய முடிந்தது தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய சாதனை என ரில்வின் சில்வா மேலும் வலியுறுத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T00:52:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிகழ்ச்சிக்கு அழகிய உடையில் வந்த ஸ்ரீலீலா.. கியூட் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sreeleela-cute-new-photoshoot-1788742132"></link>
            <id>https://cineulagam.com/article/sreeleela-cute-new-photoshoot-1788742132</id>
            <summary type="text">நடிகை ஸ்ரீலீலாவுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அந்த அளவுக்கு தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் கலக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை ஸ்ரீலீலாவுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அந்த அளவுக்கு தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் கலக்கி வருகிறார்.
</p><p>
 ஸ்ரீலீலா தற்போது நிகழ்ச்சிக்கு அழகிய உடையில் கியூட் ஆக வந்திருக்கிறார்.

அதில் அவர் அழகிய போஸ் கொடுத்த புகைப்படங்களை பாருங்க.</p>]]></content>
            <updated>2026-09-07T00:49:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரோன்களுக்கு நிதி திரட்ட போர்னோகிராபியை சட்டபூர்வமாக்கும் உக்ரைன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-may-legalise-p0rn-for-war-funds-1788741813"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-may-legalise-p0rn-for-war-funds-1788741813</id>
            <summary type="text">உக்ரைன் நாடாளுமன்றத்தில், போர்னோகிராபியை (ஆபாச வீடியோ) சட்டபூர்வமாக்கும் மசோதா முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், நாட்டின் அடல்ட் எண்டர்டெயின்மென்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் நாடாளுமன்றத்தில், போர்னோகிராபியை (ஆபாச வீடியோ) சட்டபூர்வமாக்கும் மசோதா முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன் மூலம், நாட்டின் அடல்ட் எண்டர்டெயின்மென்ட் துறையை சட்டப்பூர்வமாக்கி, வரி வசூலிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f073b21-9771-4b0f-b8c8-4330fc7f593e/26-6a9e08b73c54e.webp' /></p><p>நாடாளுமன்ற நிதி குழுத் தலைவர் யாரோஸ்லாவ் ஜெலெஸ்னியாக், இந்தத் துறையை சட்டப்பூர்வமாக்கினால், 25 மில்லியன் டொலர் வரி வருவாய் கிடைக்கும் என மதிப்பிட்டுள்ளார். அந்த தொகை, உக்ரைன் போருக்காக 30,000 ட்ரோன்கள் வாங்க போதுமானதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

தற்போது, உக்ரைனில் போர்னோகிராபி தயாரித்தல், வைத்திருத்தல், பகிர்தல் அனைத்தும் சட்டவிரோதமாகும். இதற்காக ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். இருந்தாலும், இந்தத் துறை குற்றப்புலனாய்வு அதிகாரிகளின் ஊழல் உதவியுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.</p><p></p><p>2023-ஆம் ஆண்டு, 7,900 உக்ரைனியர்கள் OnlyFans மூலம் 131 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், வரி செலுத்தியவர்கள் கூட பார்ன் வீடியோ சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டதால், பலர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.</p><p>

OnlyFans படைப்பாளர் ஸ்விட்லானா ட்வோர்னிகோவா, “நான் 9 லட்சம் டொலர் வரி செலுத்தியுள்ளேன். அதற்குப் பிறகும் என்னை குற்றவாளியாக நடத்துவது தவறு” எனக் கூறி, ஜெலென்ஸ்கி இணையதளத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவுக்கு ஒரு வாரத்தில் 25,000 கையெழுத்துகள் கிடைத்தன.</p><p>

இதையடுத்து, ஜெலென்ஸ்கி அரசு, போர்னோகிராபி சட்டபூர்வமாக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் பரிசீலிக்க ஒப்புக்கொண்டுள்ளது. ஜூலை மாதத்தில், இந்த மசோதா முதல் வாசிப்பில் நிறைவேற்றப்பட்டு, தற்போது இரண்டாவது வாசிப்புக்காக காத்திருக்கிறது.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T00:41:18+00:00</updated>
        </entry>
    </feed>
