<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-27T19:52:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த குடும்பத்திற்கு பதற்றத்தை ஏற்படுத்தும் நீதிபதிகள் விவகாரம் - முடிவில் மாறாத அநுர அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rajapaksa-family-anura-government-cid-inquiry-1785177615"></link>
            <id>https://tamilwin.com/article/rajapaksa-family-anura-government-cid-inquiry-1785177615</id>
            <summary type="text">உயர்நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளால் நீடிப்பதற்கான அரசின் திட்டம் தொடர்பில் கடும் வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.&amp;nbsp;
குறிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர்நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளால் நீடிப்பதற்கான அரசின் திட்டம் தொடர்பில் கடும் வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.&nbsp;</p><p>
</p><p>குறிப்பாக, இந்த அரசியலமைப்புத் திருத்த மசோதா தொடர்பில் எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.&nbsp;</p><p>தற்போதைய உயர்நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிப்பதன் மூலம், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு எட்ட முடியும் என அரசாங்க தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>அதன்படியே, இந்த மசோதா முன்வைக்கப்பட்ட நிலையிலேயே இவ்வாறான கண்டனங்கள் எழுந்துள்ளன.&nbsp;</p><p>இவ்வாறிருக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இது குறித்து கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.&nbsp;</p><p>இந்நிலையில், ராஜபக்ச குடும்பத்தினர் தொடர்பில் பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படலாம். அதனாலேயே இவ்வாறு அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அரசியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.&nbsp;</p><p>இது உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/qQPDt_r7lfI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T19:51:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெய்வேந்திரமுனை விஷ்ணு ஊர்வல காவடி ஆட்டத்துக்கு அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/devendramunai-esala-45-kavadi-dance-allowed-1785180840"></link>
            <id>https://jvpnews.com/article/devendramunai-esala-45-kavadi-dance-allowed-1785180840</id>
            <summary type="text">தெய்வேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹரையில், கடந்த ஆண்டு பங்கேற்ற 45 காவடி நடனக் குழுக்களுக்கும் இந்த ஆண்டும் பங்கேற்க அனுமதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெய்வேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹரையில், கடந்த ஆண்டு பங்கேற்ற 45 காவடி நடனக் குழுக்களுக்கும் இந்த ஆண்டும் பங்கேற்க அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>மாத்தறை மாவட்ட செயலகத்தில் இன்று (27) பிற்பகல் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/120fbdc2-6d82-4ac0-b246-fc3262ede051/26-6a67b2aaa7aa6.webp' /></p><p>

இதன்படி, கடந்த ஆண்டு பெரஹரையில் பங்கேற்ற அனைத்து 45 காவடி நடனக் குழுக்களும் இம்முறை நடைபெறவுள்ள எசல பெரஹரையிலும் பங்கேற்க அனுமதிக்கப்படவுள்ளன.
</p><p>
மேலும், நாளை நடைபெறவுள்ள பெரஹரையின் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில், காவல்துறையினருடன் விசேட அதிரடிப்படையினரையும் மேலதிகமாக பணியில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
</p><p>
பெரஹரையில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T19:34:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெலென்ஸ்கி மற்றும் நெதன்யாகுவுடன் ட்ரம்ப் திடீர் சந்திப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-to-meet-with-both-zelensky-and-netanyahu-1785179081"></link>
            <id>https://ibctamil.com/article/trump-to-meet-with-both-zelensky-and-netanyahu-1785179081</id>
            <summary type="text">

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவரையும் செவ்வாய்க்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகையில் தனித்தனியாகச் சந்தித்துப் பேசவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
இந்தச் சந்திப்புகளில் உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதல்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>ஈரான் விவகாரம்</h2><p>
</p><p>
நெதன்யாகுவுடனான சந்திப்பின் போது ஈரானில் நடைபெறும் போர், லெபனானுடனான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் மற்றும் ஆபிரகாம் உடன்படிக்கைகளை விரிவுபடுத்துவது ஆகியவை குறித்து டரம்ப் விவாதிப்பார் என கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09fe6a84-988f-4515-8d44-c21e11967799/26-6a67b0002502e.webp' /></p><p><i>Image Credit:&nbsp;Reuters</i></p><p>
</p><p>
ஈரான் விவகாரத்தில் தனக்கும் நெதன்யாகுவுக்கும் இடையே சிறிய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இரு தலைவர்களும் ஒரே மாதிரியான நிலைப்பாட்டிலேயே நெருக்கமாக இருப்பதாக ட்ரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.</p><h2>ரஷ்யா-உக்ரைன் போர்</h2><p>
</p><p>
இதேவேளை, ஜெலென்ஸ்கியுடனான சந்திப்பில் ரஷ்யா-உக்ரைன் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும், போரை முடிவுக்குக் கொண்டுவர இதுவே சரியான நேரம் என்றும் அமெரிக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d902d42-f01c-4a9e-9755-7e206991f23d/26-6a67afff294f6.webp' /></p><p><i>Image Credit:The Straits Times</i></p><p>
</p><p>
முன்னதாக, அமெரிக்க இராணுவத் தளங்கள் குறித்த உளவுத் தகவல்களை ரஷ்யா ஈரானுக்கு வழங்கி வருவதாக ஜெலென்ஸ்கி சுமத்திய குற்றச்சாட்டையும் ட்ரம்ப் மறுத்துள்ளார்.</p><p>

மேலும், வொஷன்டனில் நடைபெறும் மறைந்த செனட்டர் லிண்ட்சே கிரஹாமின் இறுதிச் சடங்கிலும் நெதன்யாகு மற்றும் ஜெலென்ஸ்கி ஆகிய இருவரும் கலந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-27T19:27:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதிக்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/meeting-between-the-president-sri-lanka-cricket-1785179429"></link>
            <id>https://jvpnews.com/article/meeting-between-the-president-sri-lanka-cricket-1785179429</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.</p><p> </p><p></p><p>இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை கட்டியெழுப்பும் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டதுடன், நாட்டில் கிரிக்கெட் விளையாட்டின் முன்னேற்றத்திற்காக அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு குறித்தும் ஜனாதிபதியின் அவதானம் செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8613bf7c-94a0-4e6d-89b5-d24338c95eda/26-6a67ad26d794b.webp' /></p><p> 

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்ரகீர்த்தி, இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவின் தலைவர் எரான் விக்ரமரத்ன மற்றும் அதன் ஏனைய உறுப்பினர்களான ரொஷான் மஹாநாம, அவந்தி கொழம்பகே, உபுல் குமரப்பெரும, துஷிர ரதெல்ல, சிதத் வெத்தமுனி,டினால் பிலிப் ஆகியோரும் இந்த சந்திப்பில் இணைந்து கொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T19:10:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு போக்குவரத்து கட்டுப்பாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/aadivel-utsavam-police-advice-public-and-drivers-1785177315"></link>
            <id>https://jvpnews.com/article/aadivel-utsavam-police-advice-public-and-drivers-1785177315</id>
            <summary type="text">கொழும்பு புறக்கோட்டை மற்றும் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயங்களில் நடைபெறவுள்ள வருடாந்த ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு, நாளை (28) மற்றும் எதிர்வரும் ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு புறக்கோட்டை மற்றும் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயங்களில் நடைபெறவுள்ள வருடாந்த ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு, நாளை (28) மற்றும் எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதிகளில் குறித்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>உற்சவ நிகழ்வுகளுக்காக அதிகளவிலான பக்தர்கள் மற்றும் வாகனங்கள் வருகை தரும் என எதிர்பார்க்கப்படுவதால், புறக்கோட்டை மற்றும் பம்பலப்பிட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43122887-4880-4555-8438-5540d2041982/26-6a67a4e53eb4d.webp' /></p><p>இதன் காரணமாக, குறித்த நாட்களில் அப்பகுதிகள் வழியாகப் பயணிக்கவுள்ள சாரதிகள் மற்றும் பொதுமக்கள் இயன்றவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும், பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்ளுமாறும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
</p><p>
போக்குவரத்தை சீராக முன்னெடுப்பதற்காக தேவையான போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T18:35:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட சீன நாட்டவர்! அம்பலமாகும் புதிய தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-details-about-the-body-of-chinese-national-1785175490"></link>
            <id>https://ibctamil.com/article/new-details-about-the-body-of-chinese-national-1785175490</id>
            <summary type="text">கொழும்பு துறைமுக நகரத்திலிருந்து கடத்தப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சீன நாட்டவர் குறித்த புதிய விவரங்கள் வெளிவந்துள்ளன...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுக நகரத்திலிருந்து கடத்தப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சீன நாட்டவர் குறித்த புதிய விவரங்கள் வெளிவந்துள்ளன.</p><p> 

பெரும் தொகைப் பணம் மற்றும் சர்வதேச குற்றத் தொடர்புகள் சம்பந்தப்பட்ட அந்த சிக்கலான விவகாரத்தின் விசாரணைகளில் புலனாய்வாளர்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர்.</p><p>

அந்தவகையில், கொலை செய்யப்பட்ட சீன நாட்டவர், ஏப்ரல் 7 ஆம் திகதி ஒரு குழுவினருடன் கம்போடியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.</p><p></p><h2>போலி கடவுச்சீட்டு</h2><p>

அதன்போது, அவர் சுரினாம் குடியரசினால் வழங்கப்பட்ட கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைந்திருப்பதாக காவல்துறை வெளிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec0eb579-5544-46c9-a333-8e14c676f658/26-6a67a2cbeb445.webp' /></p><p>
</p><p>
அத்தோடு, இறந்தவருடன் தொடர்புடைய வங்கிக் கணக்குகளில் வழக்கத்திற்கு மாறாக பெரும் தொகைகள் இருந்ததையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
</p><p>
புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, அந்த நிதிகள் தொடர்பான ஒரு தகராறுடன் இந்தக் கொலை தொடர்புடையதாக கருதப்படுகிறது.</p><h2>ஐந்து பிரத்யேக புலனாய்வுக் குழுக்கள் </h2><p>

ஹாவோ சோங் என அடையாளம் காணப்பட்ட சம்பந்தப்பட்ட சீன நாட்டவர், ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட இணையவழிக் குற்றச் செயல்பாட்டின் முக்கிய உறுப்பினராக இருந்தார் என்பதை இதுவரை திரட்டப்பட்ட தகவல்கள் சுட்டிக்காட்டுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f788e99f-32d1-490e-81dc-9262b70fa1aa/26-6a67a2cb2fda8.webp' /></p><p>

இதற்கிடையில், கொல்லப்பட்டவரின் சாரதி, சமையல்காரர் மற்றும் காதலி ஆகியோர் கொழும்பு குற்றப்பிரிவின் காவலில் எடுக்கப்பட்டு, நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக தற்போது விசாரிக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
</p><p>
இதன்படி, குறித்த விவகாரத்தின் பல்வேறு விடயங்களை விசாரிப்பதற்காக ஐந்து பிரத்யேக புலனாய்வுக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-27T18:27:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெடுஞ்சாலைகளை கட்டுக்குள் கொண்டுவந்த சூடான் இராணுவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sudanese-army-takes-control-of-highways-1785174289"></link>
            <id>https://tamilwin.com/article/sudanese-army-takes-control-of-highways-1785174289</id>
            <summary type="text">சூடான் நாட்டின் தலைநகர் கார்ட்டூமையும் முக்கிய நகரமான எல்-ஒபெயினையும்
இணைக்கும் முக்கிய அதிவேக நெடுஞ்சாலையைத் தங்கள் படை முழுமையாகக்
கைப்பற்றியுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூடான் நாட்டின் தலைநகர் கார்ட்டூமையும் முக்கிய நகரமான எல்-ஒபெயினையும்
இணைக்கும் முக்கிய அதிவேக நெடுஞ்சாலையைத் தங்கள் படை முழுமையாகக்
கைப்பற்றியுள்ளதாகச் சூடான் இராணுவம் அறிவித்துள்ளது.
</p><p>
எதிரணித் துணை இராணுவப் படையான விரைவு ஆதரவுப் படைகளின் (RSF) முற்றுகையில்
இருந்த எல்-ஒபெயித் நகரைக் காப்பாற்றவும், RSF படைகளின் முன்னேற்றத்தைத்
தடுக்கவும் இந்த வெற்றி சூடான் இராணுவத்திற்குப் பெரிதும் உதவும்.</p><p></p><h2>நெடுஞ்சாலைகள் முடக்கம்</h2><p>

கடந்த இரண்டு நாட்களாக RSF படைகளுடன் நடைபெற்ற கடுமையான மோதல்களுக்குப் பிறகு,
இந்த நெடுஞ்சாலையில் உள்ள பல நகரங்களையும் கிராமங்களையும் மீட்டுள்ளதாகச்
சூடான் இராணுவம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/359320e1-29f6-4e87-8e18-2539ed6710b6/26-6a679b9e0831d.webp' /></p><p>குறிப்பாக உம் குர்ஃபா மற்றும் ஜாரிகாக் ஆகிய பகுதிகளை மீட்கும் நடவடிக்கையின்
போது எதிரணிக்கு பெரும் உயிர்ச்சேதமும் தளவாடச் சேதமும் ஏற்படுத்தப்பட்டதாக
இராணுவம் அறிவித்துள்ளது.
</p><p>
இந்த முக்கிய நெடுஞ்சாலையைக் கைப்பற்றியதன் மூலம் தலைநகருக்கும் கொர்தோஃபான்
பகுதிக்கும் இடையே பல மாதங்களுக்குப் பிறகு நேரடிப் போக்குவரத்துத் தொடர்பு
மீண்டும் ஏற்பட்டுள்ளது.</p><p></p><h2>ஐ.நா. தகவல்கள்&nbsp;</h2><p>
</p><p>
அத்துடன், இராணுவ வீரர்கள், ஆயுதங்கள் மற்றும் எரிபொருள்களை விரைவாக
எல்-ஒபெயித் நகரத்திற்குக் கொண்டு செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
<br></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8aad449c-f57b-4bf5-86b2-9da44e0d87e6/26-6a679b9d580cb.webp' /></p><p>
RSF படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கியப் பாதை கை மாறியுள்ளதால்,
அந்த நகரில் உள்ள சுமார் 5 இலட்சம் மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் மனிதநேய
உதவிகள் இனி எளிதாகச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை சுமார்
40,000 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 1.4 கோடிக்கும் அதிகமான மக்கள் தங்கள்
வீடுகளை விட்டு வெளியேறி இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் உலக சுகாதார நிறுவனம்
மற்றும் ஐ.நா. தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T18:26:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழில் விசேட கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussion-on-disappeared-persons-held-in-jaffna-1785168571"></link>
            <id>https://tamilwin.com/article/discussion-on-disappeared-persons-held-in-jaffna-1785168571</id>
            <summary type="text">எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை
முன்னிட்டு, யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் சர்வதேச மாநாடு ஒன்றினை நடத...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை
முன்னிட்டு, யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் சர்வதேச மாநாடு ஒன்றினை நடத்த
"வடக்கு கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின்
சங்கம்" ஏற்பாடு செய்துள்ளது.</p><p>இந்த மாநாடு தொடர்பான ஆதரவு, பங்களிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெற்றது.</p><p></p><h2>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்</h2><p>
இலங்கை அரசிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தைக் கையாளுவதற்கோ அல்லது
நீதியைப் பெற்றுத் தருவதற்கோ எந்தவித நம்பிக்கைக்குரிய பொறிமுறைகளும் இல்லை
என்பதையும், சர்வதேச விசாரணையே தமக்குத் தேவை என்பதையும் வலியுறுத்தும்
வகையில் இந்த மாநாடு அமையவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f692d741-d52c-4a7c-b43f-1c344203cce6/26-6a6786e8b4233.webp' /></p><p>
குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார்
பொன்னம்பலம், சிவஞானம் சிறிதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா
கஜேந்திரன், சிவகுரு ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள்,
சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் , வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர்
தியாகராஜா நிரோஸ், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91b113f7-5821-4412-bea4-28acd064f9d7/26-6a6786e9a3e59.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T18:26:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[குளக்கரையில் இருந்து முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு - மேலதிக விசாரணையில் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/an-elderly-man-body-recovered-from-pond-1785166111"></link>
            <id>https://tamilwin.com/article/an-elderly-man-body-recovered-from-pond-1785166111</id>
            <summary type="text">அனுராதபுரம் - கல்கிரியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலலுவெவ குளக்கரைப்
பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் - கல்கிரியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலலுவெவ குளக்கரைப்
பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
</p><p>
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று(26.07.2026) மாலை
பிரதேச மக்களின் உதவியுடன் இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பொலிஸ் விசாரணை</h2><p>
</p><p>
உயிரிழந்தவர் அனுராதபுரம் - நொச்சியாகம, காலதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த 79
வயதுடைய முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aecfc3ac-b791-45f7-be5a-2323d01f9730/26-6a6795c009126.webp' /></p><p>நீதிவான் விசாரணைகளுக்குப் பின்னர், பிரேத பரிசோதனைக்காகச் சடலம் கெக்கிராவ
வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவத்துக்கான காரணம் தொடர்பில் கல்கிரியாகம பொலிஸார் மேலதிக
விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T18:24:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் சூதாட்டத்திற்கு அடிமையானவர்களை மீட்க புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/alberta-aims-to-get-gambling-websites-1785150658"></link>
            <id>https://canadamirror.com/article/alberta-aims-to-get-gambling-websites-1785150658</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம், ஆன்லைன் சூதாட்ட தளங்களை சட்டப்பூர்வ முறைப்படுத்துதலின் கீழ் கொண்டுவந்து, அதன் மூலம் பெறப்படும் வரி வருவாயைக் கொண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம், ஆன்லைன் சூதாட்ட தளங்களை சட்டப்பூர்வ முறைப்படுத்துதலின் கீழ் கொண்டுவந்து, அதன் மூலம் பெறப்படும் வரி வருவாயைக் கொண்டு சூதாட்டப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்குச் சிகிச்சை அளிக்கத் திட்டமிட்டுள்ளது.</p><p>
கடந்த ஜூலை 13 முதல் ஆல்பர்ட்டாவில் தனியார் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சட்டப்பூர்வமாகச் செயல்பட அனுமதி அளிக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட்டன.
மக்களின் சூதாட்டப் பழக்கத்தைத் தடுத்து நிறுத்துவது கடினம். </p><p>முன்னதாக பெரும்பாலான ஆன்லைன் சூதாட்டங்கள் கட்டுப்பாடின்றி இயங்கி வந்ததாக ஆல்பர்ட்டா முதல்வர் டேனியல் ஸ்மித் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18760aa9-e2e2-42cb-9493-e7eb4aed1dc2/26-6a673cc40c0ac.webp' /></p><p>
</p><p> அரசாங்கத்திற்கு எந்தவித வரி வருவாயும் கிடைக்கவில்லை. எனவே, இவற்றை முறைப்படுத்தி அரசாங்கக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது அவசியம் எனக் கருதியதாகத் தெரிவித்துள்ளார்.</p><p>
ஆல்பர்ட்டா சந்தையில் இயங்க விரும்பும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் பின்வரும் கட்டுப்பாடுகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
ஒருவர் தான் சூதாட்டத்திற்கு அடிமையாகியிருப்பதாக உணர்ந்து தன்னைத் தடுத்துக் கொள்ளக் கோரினால், அனைத்து ஆன்லைன் மற்றும் நேரடி சூதாட்டத் தளங்களிலும் அவருக்குத் தடை விதிக்கப்படும்.
</p><p>பயனர்கள் தங்களுக்குத்தானே பண வரம்பு மற்றும் நேர வரம்புகளை நிர்ணயித்துக் கொள்ளும் வசதிகள் அளிக்கப்படும்.</p><p>
தொழிலும் சார்ந்த விளையாட்டு வீரர்கள் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>
மேலும் இளைஞர்கள் மற்றும் சூதாட்டத்தைக் கைவிட முயல்பவர்களைக் குறிவைத்து விளம்பரம் செய்யக் கூடாது.</p><p>இதேவேளை, ஆல்பர்ட்டாவில் நடைபெறும் ஆன்லைன் சூதாட்டத்தில் 70% பகுதி சட்டவிரோத அல்லது கட்டுப்பாடற்ற வெளிநாட்டு தளங்களிலேயே நடைபெற்று வந்தது.</p><p>
புதிய சட்டப்பூர்வ சந்தை மூலம் முதல் ஆண்டில் சுமார் 76 மில்லியன் டொலர் வருவாய் கிடைக்கும் எனவும், முதல் இரண்டு ஆண்டுகளில் ஒட்டுமொத்தப் சந்தை மதிப்பு 2.8 பில்லியன் டொலரை எட்டும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
</p><p>சூதாட்ட நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரியைக் கொண்டு, சூதாட்டப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய விழிப்புணர்வும், மருத்துவ மறுவாழ்வு சிகிச்சைகளும் வழங்கப்படும் என மாகாண அரசு உறுதியளித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T18:23:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் நான்கு கோடி பேருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/america-40-million-people-warned-1785175728"></link>
            <id>https://ibctamil.com/article/america-40-million-people-warned-1785175728</id>
            <summary type="text">அமெரிக்காவை வாட்டி வதைத்து வரும் &#039;ஹீட் டோம்&#039; எனப்படும் அதி தீவிர வெப்பத்தால், அந்நாட்டின் ஒட்டுமொத்த இயல்பு வாழ்க்கையும் முடங்கி உள்ளதுடன் சுமார் நான்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவை வாட்டி வதைத்து வரும் 'ஹீட் டோம்' எனப்படும் அதி தீவிர வெப்பத்தால், அந்நாட்டின் ஒட்டுமொத்த இயல்பு வாழ்க்கையும் முடங்கி உள்ளதுடன் சுமார் நான்கு கோடி மக்களுக்கு கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>

அமெரிக்காவின் மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களான மின்னசோட்டா முதல் மிசிசிபி வரையிலும், மேற்கில் நெவேடா மற்றும் தெற்கு கலிபோர்னியா வரையிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது.</p><h2>வரலாற்று சாதனையாக, 44 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை</h2><p>&nbsp;காற்றில் உள்ள ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையை இணைத்து கணக்கிடப்படும் 'ஹீட் இண்டெக்ஸ்' அளவு பல இடங்களில் 38 டிகிரி செல்ஷியசைத் தாண்டி பதிவாகி மக்களை திக்குமுக்காட வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/038e7b37-b475-4121-99c5-c57b1074dc74/26-6a67a15ba1b5f.webp' /></p><p>
</p><p>



ரேபிட் சிட்டியில் வரலாற்று சாதனையாக, 44 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மின்னசோட்டாவில் வெப்பத்தின் கொடூரம் தாங்க முடியாமல் புகழ்பெற்ற குதிரைப் பந்தயங்கள் உட்பட பல வெளிப்புற நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p></p><h2>வெயிலின் தாக்கம் 49 டிகிரி செல்ஷியஸ் வரை உயரக்கூடும்</h2><p>


அமெரிக்க தேசிய வானிலை மையம் அளித்துள்ள எச்சரிக்கையில், வெயிலின் தாக்கம் 49 டிகிரி செல்ஷியஸ் வரை உயரக்கூடும் என, தெரிவித்துள்ளது. திடீரென இந்த அளவுக்கு வெயில் அதிகரிக்க, 'ஹீட் டோம்' எனப்படும் உயர் அழுத்த வெப்ப மண்டலம் தான் காரணம் என வானிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06fd8bf1-3153-4213-8abb-ac7b29c77238/26-6a67a15aec0c6.webp' /></p><p>


இது பூமியின் மேற்பரப்பில் சூடான காற்றை வெளியேற விடாமல் ஒரு கூம்பு போல அடைத்து வைத்துக் கொள்கிறது. இதனால் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து கொண்டே செல்வதோடு, காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் தடுத்து நிறுத்தி, மக்களை புழுக்கத்தில் தவிக்க வைக்கிறது.


இதனால், 4 கோடிக்கும் அதிகமான மக்கள் கடுமையான வெப்ப அலை எச்சரிக்கையின் கீழ் முடங்கியுள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T18:20:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானில் பருவமழை மற்றும் வெள்ளப்பெருக்கு: 100ஐத் தாண்டிய பலி எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/monsoon-floods-pakistan-death-toll-crosses-100-1785174781"></link>
            <id>https://tamilwin.com/article/monsoon-floods-pakistan-death-toll-crosses-100-1785174781</id>
            <summary type="text">பாகிஸ்தானில் ஜூன் மாதம் தொடங்கிய பருவமழை மற்றும் அதனால் ஏற்பட்ட கனமழை,
வெள்ளப்பெருக்குக் காரணமாக இதுவரை 107 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தேசிய பேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தானில் ஜூன் மாதம் தொடங்கிய பருவமழை மற்றும் அதனால் ஏற்பட்ட கனமழை,
வெள்ளப்பெருக்குக் காரணமாக இதுவரை 107 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தேசிய பேரிடர்
முகாமைத்துவ அதிகார சபை தெரிவித்துள்ளது.</p><p>

தொடர் மழையால் 344-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதோடு, நூற்றுக்கணக்கான
வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்த வார இறுதியில் மேலும் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம்
எச்சரித்துள்ளதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
</p><p>
தேசிய பேரிடர் முகாமைத்துவ அதிகார சபையின் தகவலின்படி, மழை தொடர்பான
சம்பவங்களால் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அதிகபட்சமாக 55 பேரும், பஞ்சாப்
மாகாணத்தில் 36 பேரும் உயிரிழந்துள்ளனர்.</p><p></p><h2>17 நிவாரண முகாம்கள்</h2><p>

உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வீடுகள் மற்றும் கூரைகள் இடிந்து
விழுந்ததால் பலியாகியுள்ளனர்.

பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரும், பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமுமான
லாகூரில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைத் தங்கவைக்க குறைந்தது 17 நிவாரண
முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c287ebc-db67-4c1a-9e36-a3297b8d1802/26-6a679c8f951cc.webp' /></p><p>
</p><p>
லாகூர் மற்றும் குஜ்ரன்வாலா பிரிவுகளில் சுமார் 400 சதுர கிலோமீட்டர்
பரப்புக்கு நீரின் தாக்கம் பரவியுள்ளதால், நிலமை உள்நாட்டுக் கடல் போலக்
காட்சியளிப்பதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.</p><p>

பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸ் ஷெரீப், வெள்ள நீரைக் வெளியேற்ற மீட்புக்
குழுவினர் தீவிரமாகப் பணியாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.</p><p>

இதனிடையே, பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதன்கிழமை முதல் இஸ்லாமாபாத், மேல் பஞ்சாப், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு
காஷ்மீர், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பல்டிஸ்தான் ஆகிய பகுதிகளில்
புதிய மழைப் பொழிவு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
</p><p>
பருவமழைக்காலம் செப்டெம்பர் மாதம் வரை நீடிக்கும் என்பதால், தாழ்வான
பகுதிகளில் வாழும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள்
அறிவுறுத்தியுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T18:01:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-couple-finds-1000-pounds-hidden-cash-stash-1785174943"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-couple-finds-1000-pounds-hidden-cash-stash-1785174943</id>
            <summary type="text">பிரித்தானியாவில் வசிக்கும் லூயிசா (Luisa) மற்றும் அவரது கணவர் டான் (Dan), தங்கள் 100 வருட பழமையான வீட்டின் அடித்தளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் வசிக்கும் லூயிசா (Luisa) மற்றும் அவரது கணவர் டான் (Dan), தங்கள் 100 வருட பழமையான வீட்டின் அடித்தளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணக் குவியலை கண்டுபிடித்துள்ளனர்.</p><p>அவர்கள் வீட்டின் படிக்கட்டின் கீழ் சுவரால் மூடப்பட்டிருந்த இடத்தை ஆராய்ந்தபோது, பழைய நிலக்கரி துண்டுகள் மற்றும் சிதைந்த பைன்ட் டின் ஒன்றைக் கண்டனர்.

அந்த டின் மிகவும் பழுதடைந்த நிலையில், துர்நாற்றம் வீசியது. </p><p></p><p>ஆரம்பத்தில் அதைத் திறக்க அவர்கள் தயங்கினார்கள்.

பல மாதங்கள் கழித்து, அவர்கள் அதைத் திறந்தபோது, அதில் 1970-களில் அச்சிடப்பட்டிருந்த பணத்தாள்கள் குவிந்து கிடந்தன.

அதில் மொத்தம் 1,000 பவுண்டு இருந்தது.</p><p>இந்த சம்பவம் அவர்களின் குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01f4c3a2-27b7-4471-bcb9-d0078a961d2c/26-6a679ba07c0dd.webp' /></p><p>லூயிசா கூறியதாவது: “நாங்கள் இதில் பணம் இருக்கும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. குழந்தைகளுக்கு இது ஒரு அற்புதமான நினைவாக இருக்கும்.”</p><p>

இந்த பணம், குடும்பத்துக்கு சரியான நேரத்தில் உதவியாக அமைந்தது. லூயிசா வேலை இழந்திருந்ததால், அந்த பணம் மூலம் சில பில்களை செலுத்தவும், குழந்தைகளுக்கு சிறிய பரிசுகளை வழங்கவும் முடிந்தது.</p><p>

இந்த வீடியோ TikTok-இல் வைரலாகி, 2 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. பலர், பழைய நோட்டுகள் இன்னும் வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்றும், சில நோட்டுகள் அரிய சேகரிப்புப் பொருளாக அதிக மதிப்பைப் பெறக்கூடும் என்றும் பரிந்துரைத்துள்ளனர்.
</p><p></p><p>இது போன்ற மறைந்திருக்கும் பொருட்கள் பழைய வீடுகளில் அடிக்கடி கண்டுபிடிக்கப்படுகின்றன. சிலர் பழைய திருமண உடைகள், பழமையான ஆவணங்கள் போன்றவற்றையும் கண்டுபிடித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-27T17:53:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத வாகனப் பதிவு விவகாரம் ; மோட்டார் வாகனத் திணைக்கள முன்னாள் அதிகாரி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-motor-vehicles-department-official-arrested-1785174661"></link>
            <id>https://jvpnews.com/article/former-motor-vehicles-department-official-arrested-1785174661</id>
            <summary type="text">மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் இடம்பெற்ற சட்டவிரோத வாகனப் பரிமாற்றச் செயற்பாடுகள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, மோட்டார் வாகன போக்குவரத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் இடம்பெற்ற சட்டவிரோத வாகனப் பரிமாற்றச் செயற்பாடுகள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் நிர்வாகச் சேவை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கையூட்டல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>இலங்கை சுங்கத் திணைக்களத்தின் அனுமதி இன்றியும், சுங்க வரிகளைச் செலுத்தாமலும் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் வாகனம் ஒன்றை, மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்து, அதன் முதலாம் உரிமையாளர் பரிமாற்றத்தை மேற்கொள்வதற்காகச் சேவைச் சாளர எண்களை வழங்கி, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் உள்ளீடு செய்ய நடவடிக்கை எடுத்தார் என்ற குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47350514-4b42-47fd-bf35-15ded23b2b79/26-6a679a87cc306.webp' /></p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T17:51:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரும் பரபரப்புக்கு மத்தியில் இலங்கைக்குள் நுழைந்த அமெரிக்காவின் உளவு விமானம் P-8A Poseidon]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-spy-plane-p8a-poseidon-sri-lanka-1785173865"></link>
            <id>https://tamilwin.com/article/us-spy-plane-p8a-poseidon-sri-lanka-1785173865</id>
            <summary type="text">இலங்கை மற்றும் அமெரிக்க கடற்படைகளுக்கு இடையிலான 6ஆவது காராட் (CARAT Sri Lanka 2026) கூட்டுப் பயிற்சி திருகோணமலை மற்றும் கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது. இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மற்றும் அமெரிக்க கடற்படைகளுக்கு இடையிலான 6ஆவது காராட் (CARAT Sri Lanka 2026) கூட்டுப் பயிற்சி திருகோணமலை மற்றும் கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது. </p><p>இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு, அவசர கால மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் மேலாண்மைத் திறன்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தப் பயிற்சி முன்னெடுக்கப்படுகிறது.</p><p> இதில் அமெரிக்க கடற்படையின் அதிநவீன P-8A போஸைடான் கடல்சார் ரோந்து விமானம் மற்றும் SLNS கஜபாகு கப்பல் ஆகியவை விசேட கண்காணிப்பு மற்றும் கூட்டுப் பயிற்சிகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.</p><p> மேலும், இரு நாட்டுப் படைகளும் இணைந்து கடல்சார் கண்காணிப்பு, குண்டு வெடிப்புச் செயலிழப்பு மற்றும் சந்தேகத்திற்குரிய கப்பல்களைச் சோதனையிடும் (VBSS) பயிற்சிகளில் ஈடுபடவுள்ளன.</p><p> 2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த கூட்டுப் பயிற்சி, வாஷிங்டன் மற்றும் கொழும்பு இடையிலான நீண்டகால பாதுகாப்புப் பங்களிப்பையும் இருதரப்பு உறவையும் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Kktuo41eSFA" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T17:49:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகைகளால் மட்டும் அதை மாற்ற முடியாது!! நடிகை மாளவிகா மோகனன் ஓபன் டாக்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/malavika-mohanan-wants-more-women-directors-cinema-1785157900"></link>
            <id>https://viduppu.com/article/malavika-mohanan-wants-more-women-directors-cinema-1785157900</id>
            <summary type="text">மாளவிகா மோகனன்பிரபல நடிகை மாளவிகா மோகனன், சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், இந்திய சினிமாவில் பெண்களுக்கு வலுவான ரோல்கள் வேண்டும் என்றால் அதிகமான பெண்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மாளவிகா மோகனன்</h2><p>பிரபல நடிகை மாளவிகா மோகனன், சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், இந்திய சினிமாவில் பெண்களுக்கு வலுவான ரோல்கள் வேண்டும் என்றால் அதிகமான பெண் இயக்குநர்களும் பெண் திரைக்கதை ஆசிரியர்களும் வரவேண்டும் என்று கூறியிருக்கிறார். </p><p>திரையில் பெண்களின் பிரதிநிதித்துவம் சிறப்பாக மாற வேண்டும் என்றால் நடிகைகளால் மட்டுமே ஏற்படுத்த முடியாது, அதிகமான பெண் இயக்குநர்கள், எழுத்தாளர்கள் வரவேண்டும். அவர்களால் தான் எங்களுக்கே உரிய பார்வையுடன் புதிய கதைகளை சொல்ல முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adabec96-0c1e-4484-8e38-80f611a6c442/26-6a67590eba70a.webp' /></p><h2>பெண் இயக்குநர்கள், எழுத்தாளர்கள்</h2><p> </p><p>தங்களின் அனுபவங்களை கதைகளில் கொண்டு வருவார்கள். எனக்கு கதையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வலிமையான பெண் ரோல்களில் நடிக்கவே விருப்பம்.</p><p>அப்படியான கதைகள் அதிகம் உருவாக வேண்டும், அதிகமான பெண் இயக்குநர்கள் வந்தால், இந்தியாவிலும் குவென்டின் டிரான்டினோவின் கில் பில் படத்தை போன்ற சிறந்த ஆக்ஷன் திரைப்படத்தை உருவாக்க முடியும் என்று மாளவிகா மோகனன் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.</p>]]></content>
            <updated>2026-07-27T17:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் தெரிவு நாளை.!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chavakachcheri-urban-council-deputy-chairman-1785173801"></link>
            <id>https://ibctamil.com/article/chavakachcheri-urban-council-deputy-chairman-1785173801</id>
            <summary type="text">சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் தெரிவு நாளைய தினம் செவ்வாய்க்கிழமை(28) நடைபெறவுள்ளது.

குறித்த உப தவிசாளர் தெரிவினை நடத்த இடைக்கால தடை விதிக்குமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் தெரிவு நாளைய தினம் செவ்வாய்க்கிழமை(28) நடைபெறவுள்ளது.
</p><p>
குறித்த உப தவிசாளர் தெரிவினை நடத்த இடைக்கால தடை விதிக்குமாறு வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வில் முன்னாள் உப தவிசாளர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியின் கோரிக்கையை மன்று நிராகரித்ததை அடுத்து, நாளைய தினம் உப தவிசாளர் தெரிவு திட்டமிட்டபடி நடைபெறவுள்ளது.</p><p>

சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் முன்னாள் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோர், சபையில் ஆற்றிய உரைக்காகப் பதவி நீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்த எழுத்தாணை மனு, வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வில் இன்றையதினம்(27) திங்கட்கிழமை எழுத்து மூல சமர்ப்பணங்களுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.</p><p></p><h2>வர்த்தமானி<span style="color: inherit; font-size: 1.75rem;">அறிவித்தல்</span></h2><p>
</p><p> 
இதன்போது, மனுதாரரின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நாளைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர் தெரிவை, இவ்வழக்கின் தீர்ப்பு வரும் வரை நடாத்த வேண்டாம் எனக் கட்டளையிடுமாறு மன்றிலே கோரப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4da02c13-4469-4580-985d-aaa958105e40/26-6a67982996a7c.webp' /></p><p>

அதன் போது, முதலாம் இரண்டாம் எதிர்மனுதாரர்களான ஆளுநர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் சார்பாக மன்றில் தோன்றிய அரச சட்டவாதி, உப தவிசாளர் தெரிவு நாளைய தினம் நடைபெறும் என வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அரச செலவிலே வர்த்தமானி அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளமையால், அதனை நிறுத்த முடியாது என வாதிட்டார்.</p><p>
இரு தரப்பின் வாதங்களை அடுத்து , உபதவிசாளர் தெரிவுக்கு தடைவிதிக்க மன்று மறுத்தமையால், நாளைய தினம் திட்டமிட்டபடி உப தவிசாளர் தெரிவு நடைபெறவுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-27T17:41:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[துறைமுக நகரத்தில் இடம்பெற்ற சீன பிரஜையின் மரணம் ; வெளியான மேலும் பல திடுக்கிடும் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-chinese-national-shocking-details-revealed-1785168587"></link>
            <id>https://jvpnews.com/article/death-chinese-national-shocking-details-revealed-1785168587</id>
            <summary type="text">துறைமுக நகரத்தில் (Port City) கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சீன பிரஜை, கணினி சார்ந்த மோசடிகளில் ஈடுபட்டு சட்டவிரோதமாகப் பணம் ஈட்டிய ஒருவர் என அடையாளங்காண...</summary>
            <content type="html"><![CDATA[<p>துறைமுக நகரத்தில் (Port City) கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சீன பிரஜை, கணினி சார்ந்த மோசடிகளில் ஈடுபட்டு சட்டவிரோதமாகப் பணம் ஈட்டிய ஒருவர் என அடையாளங்காணப்பட்டுள்ளதாக கொழும்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த டி சொய்சா தெரிவித்துள்ளார்.</p><p> </p><p></p><p>கடந்த சில நாட்களில் கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாகச் சமூக ஊடகங்களில் பரவிய தகவல்களின் உண்மை நிலையை விளக்குவதற்காக இன்று (27) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

இதன்படி, கடந்த 23ஆம் திகதி நள்ளிரவு துறைமுக நகரத்திற்குள் சீன பிரஜைகள் குழுவிற்கிடையே இடம்பெற்ற சம்பவம் குறித்து முழுமையான விளக்கம் அளிக்கப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71404bd7-6018-45c9-8922-fde4599b0800/26-6a6782cd0601c.webp' /></p><p>இரு வேறு சீன பிரஜைகள் குழுக்களிடையே கடந்த 23ஆம் திகதி அதிகாலை 3.00 மணியளவில் ஏற்பட்ட மோதல் காரணமாக நபர் ஒருவர் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டிருந்த நிலையில், அவரது சடலம் எஹெலியகொடை பகுதியில் மீட்கப்பட்டிருந்தது. </p><p>

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த கொழும்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், சம்பவம் நடந்து சில மணிநேரங்களுக்குள் நாட்டிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற இரு சந்தேகநபர்களைக் கைது செய்ய முடிந்ததாகவும், அவர்களே இச்சம்பவத்தின் முதன்மைச் சந்தேகநபர்கள் என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். </p><p>

இதற்கிடையில், இச்சம்பவம் தொடர்பாக 08 சந்தேகநபர்கள் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் மூவர் ஏற்கனவே நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களை மீண்டும் நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

இச்சம்பவத்திற்காக இரண்டு வாயு துப்பாக்கி, ஒரு கையடக்க தொலைபேசி, ஒரு வோக்கி டாக்கி (Walkie-Talkie) மற்றும் சில வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். </p><p>

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் வேறு பல நாடுகளில் செயற்பட்டு இலங்கைக்கு வருகை தந்தவர்கள் என அடையாளங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

அதற்கமைய, இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்துடனும் சீன அரசாங்கத்துடனும் சரியான ஒருங்கிணைப்புடன் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கொழும்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த டி சொய்சா மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T17:27:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கத்தி குத்தால் பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர் - பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-family-member-was-stabbed-to-death-1785165541"></link>
            <id>https://tamilwin.com/article/a-family-member-was-stabbed-to-death-1785165541</id>
            <summary type="text">கம்பஹா - கந்தானை பிரதேசத்தில் இடம்பெற்ற
கத்திக்குத்துச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவமானது நேற்று (26.07.2026...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா - கந்தானை பிரதேசத்தில் இடம்பெற்ற
கத்திக்குத்துச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p>இந்த சம்பவமானது நேற்று (26.07.2026) இரவு இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>உயிரிழந்த நபர்</h2><p>

கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய நபரே
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.</p><p>

மதுபோதையில் இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி மோதலாக
மாறிய நிலையிலேயே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/540cb559-48e3-4a31-84a3-da15c4a0a6ef/26-6a6777449e799.webp' /></p><p>தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர்கள் சம்பவ இடத்திலிருந்து
தப்பியோடி தலைமறைவாகியுள்ளனர்.</p><p>

தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளைப்
பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T17:27:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்க அமைச்சரவை அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cabinet-approves-extension-retirement-age-judges-1785173210"></link>
            <id>https://jvpnews.com/article/cabinet-approves-extension-retirement-age-judges-1785173210</id>
            <summary type="text">நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று (27) நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p> </p><p></p><p>இன்று (27) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b42686e-0a5e-48d5-9f7f-1396bde51954/26-6a6794dbb3e5a.webp' /></p><p>இலங்கை அரசியலமைப்பின் மூலம் மேன்முறையீட்டு நீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதாக வரையறுக்கப்பட்டுள்ள முறையே 63 மற்றும் 65 வயது எல்லையை, அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றின் மூலம் மேலும் இரண்டு ஆண்டுகள் வீதம் நீடிப்பதற்கு அரசாங்கம் யோசனை முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>

இது தொடர்பில் அறிக்கைகளை வெளியிட்டு சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம், அரசாங்கத்தின் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. </p><p>

தற்போது உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் 08 நீதியரசர் பதவிகள் வெற்றிடமாகவுள்ளதாகவும், இந்தப் வெற்றிடங்களை நிரப்புவதை ஜனாதிபதி நீண்டகாலமாகத் தவிர்த்து வருவதாகவும் அந்த அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T17:27:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டு சித்தாண்டி முருகன் ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் கோரி வெடித்த ஆர்ப்பாட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-kumbabhishekam-at-sitthandi-murugan-kovil-1785171955"></link>
            <id>https://ibctamil.com/article/protest-kumbabhishekam-at-sitthandi-murugan-kovil-1785171955</id>
            <summary type="text">


சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் 14 வருடங்கள் ஆகியும் கும்பாபிஷேகம் இடம்பெறாத நிலையில், ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக பொதுமக்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>


சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் 14 வருடங்கள் ஆகியும் கும்பாபிஷேகம் இடம்பெறாத நிலையில், ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக பொதுமக்கள் ஆர்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
</p><p>
ஆலயத்திற்கு முன்னால் இன்று(27) இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் வருடாந்த திருவிழா வேண்டாம் கும்பாபிஷேகம் வேண்டும் என கோரி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p>

இளம் சைவ மாணவர் மன்றத்தின் ஏற்பாட்டினையடுத்து ஆலயத்தின் முன்னால் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><h2>ஆர்ப்பாட்ட&nbsp;சுலோகங்கள் </h2><p>
</p><p>
இதன்போது, இறை சிந்தனையுடனான சமய சமூகப் பணியில் பயபக்தியுடன் செயல்படுங்கள், வெளிப்படை தன்மையை பேணி ஒற்றுமையாக செயல்படுங்கள், வேண்டாம் வேண்டாம் ஊரை ஏமாற்றாதீர்கள், முருகனுக்கு கும்பாபிஷேகம் எப்போ? கடும் சொல் பேசாத பூட்டிய அறைக்குள் கூட்டமா?, இன்னும் பொறுமை வேண்டாம் அத்திப்பட்டியாக்கி விடுவார்கள் மக்களே விழித்தெழு என சுலோகங்கள் ஏந்தியவாறு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/137123e0-bd71-4ff7-bf4e-3e7ca34de02d/26-6a67941b9684e.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி கோயில் 12 வருடங்களுக்கு ஒரு முறை இந்து சமய ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் இடம்பெற வேண்டும்.</p><p> 

எனினும், தற்போது 14 வருடங்கள் கடந்தும் பாலஸ்தாபனம் செய்து கோவிலில் திருத்த பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b>WHATSAPP CHANNEL</b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table></h5><p>
</p>]]></content>
            <updated>2026-07-27T17:23:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்துக்காகக் காத்திருந்த தாய்க்கு நேர்ந்த கதி - படுகாயமடைந்த மகன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mother-dies-hit-by-tipper-2-sons-seriously-injured-1785164308"></link>
            <id>https://tamilwin.com/article/mother-dies-hit-by-tipper-2-sons-seriously-injured-1785164308</id>
            <summary type="text">தம்புள்ளை - மாத்தளை பிரதான வீதியின் கபுவத்தை பகுதியில் பேருந்துக்காகக் காத்திருந்த 46 வயதுடைய பெண் ஒருவர் மீது சிறிய
ரக டிப்பர் வாகனம் மோதியதில் அவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தம்புள்ளை - மாத்தளை பிரதான வீதியின் கபுவத்தை பகுதியில் பேருந்துக்காகக் காத்திருந்த 46 வயதுடைய பெண் ஒருவர் மீது சிறிய
ரக டிப்பர் வாகனம் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்ததுடன், அவரது இரு
மகன்களும் படுகாயமடைந்துள்ளனர்.
</p><p>இந்த விபத்தானது&nbsp; நேற்றைய தினம் (26.07.2026) நிகழ்ந்துள்ளது.</p><p></p><h2>பெண் ஒருவர் பலி&nbsp;</h2><p>
மகனுக்குப் பரிகார பூஜை நடத்துவதற்குத் தேவையான துணிமணிகள் மற்றும் ஏனைய
பொருள்களைக் கொள்வனவு செய்வதற்காக நகரத்துக்குச் செல்வதற்காக வீதியோரமாக
நின்றிருந்தபோதே, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் அவர்கள் மீது
மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/279094b2-ddc1-4453-8f06-5482b1dbc78a/26-6a6775596f358.webp' /></p><p>

இந்தச் சம்பவத்தில் தம்புள்ளை - கபுவத்தை பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின்
தாயான 46 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார். </p><p>விபத்தில் படுகாயமடைந்த அவரது 19
மற்றும் 14 வயதுடைய இரு மகன்களும் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>பொலிஸ் விசாரணை</h2><p>
</p><p>
உயிரிழந்த பெண் குவைத்தில் வீட்டுப் பணிப் பெண்ணாகப் பணிபுரிந்து விட்டு, கடந்த
8ஆம் திகதி தான் நாடு திரும்பியிருந்தார் என்று அவரது உறவினர்கள் கண்ணீருடன்
தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7daaf83b-7604-4e72-89ac-e44af8530b30/26-6a677558be9c3.webp' /></p><p>மூத்த மகனுக்கான நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதற்குத்
தேவையான பொருள்களை வாங்குவதற்காக&nbsp;பேருந்துக்காகக் காத்திருந்த வேளையிலேயே இந்தத்
துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p>
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளைப் பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T17:21:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜரான எம்.பி. அர்ச்சுனா ; பிணையில் விடுதலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/archuna-appears-fort-magistrate-court-release-bail-1785172738"></link>
            <id>https://jvpnews.com/article/archuna-appears-fort-magistrate-court-release-bail-1785172738</id>
            <summary type="text">பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (27) விசேட மனுத் தாக்கல் (Motion) ஒன்றின் மூலம் சட்டத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (27) விசேட மனுத் தாக்கல் (Motion) ஒன்றின் மூலம் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையானார்.</p><p> </p><p></p><p>இதற்கமைய, குறித்த வழக்கை வரும் ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி மீண்டும் அழைக்க உத்தரவிடப்பட்டுள்ளதோடு, இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு பிணை வழங்கப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94b6492d-2528-41ef-bde1-90f29a85d4c6/26-6a67930425045.webp' /></p><p>அவருக்கு எதிராகக் கோட்டை நீதவான் நீதிமன்றில் நிலுவையிலுள்ள வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாத காரணத்தினால், கடந்த 24ஆம் திகதி அவருக்கு எதிராக நீதவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. </p><p>

குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஆஜராகாதிருந்த நிலையிலும், அவரது பிணையாளர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை. </p><p>

இதனடிப்படையில், கோட்டை நீதவான் நீதிமன்றினால் அவருக்கு எதிராகப் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. </p><p>

கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T17:19:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 உலகக் கிண்ண விமர்சகர்களுக்கு ஃபிஃபா தலைவர் காட்டமான பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fifa-chief-hits-back-at-2026-world-cup-critics-1785170034"></link>
            <id>https://tamilwin.com/article/fifa-chief-hits-back-at-2026-world-cup-critics-1785170034</id>
            <summary type="text">2026 FIFA உலகக் கிண்ணம் குறித்து தொடர்ந்து விமர்சனம் முன்வைப்பவர்கள் பொய்களையும் வெறுப்பையும் பரப்புவதாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜியான்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 FIFA உலகக் கிண்ணம் குறித்து தொடர்ந்து விமர்சனம் முன்வைப்பவர்கள் பொய்களையும் வெறுப்பையும் பரப்புவதாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜியான்னி இன்ஃபான்டினோ குற்றஞ்சாட்டியுள்ளார். </p><p>அமெரிக்கா, கனடா, மெக்சிகோ இணைந்து நடத்திய தொடரில் ஸ்பெயின் சாம்பியனானது. எனினும், அமெரிக்க விசா கட்டுப்பாடுகள், நடுவர் தீர்ப்புகள் மற்றும் வீரர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.</p><p></p><h2>2026 FIFA உலகக் கிண்ணம்</h2><p>
விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் இன்ஃபான்டினோ தனது இன்ஸ்டாகிராம்
பக்கத்தில் வெளியிட்டுள்ள திறந்த மடலில் தெரிவித்திருப்பதாவது:</p><p>திரைக்குப் பின்னாலும், பேனா மற்றும் காகிதங்களுக்குப் பின்னாலும் அமர்ந்து
கொண்டு பொய் செய்திகளையும் வெறுப்பையும் பரப்புபவர்களுக்கு நான் ஒன்றைக்
கூறிக் கொள்ள விரும்புகிறேன்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b15a7357-0229-4704-bb16-8d1dc89bb19d/26-6a6790d735f12.webp' /></p><p>நீங்கள் பின்னால் அமர்ந்திருக்கும் போது,
ஃபிஃபாவில் உள்ள நாங்கள் தான் களத்தில் நின்று, கடினமாக உழைத்து உலகிலேயே
மிகச்சிறந்த ஒரு விளையாட்டு நிகழ்வை வழங்கியிருக்கிறோம்.
</p><p>
நீங்கள் வெறுப்பிலும் விமர்சனங்களிலும் மூழ்கியிருந்ததால், உலகெங்கிலும் உள்ள
மில்லியன் கணக்கான ரசிகர்கள் அனுபவித்த மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும்
பார்க்கத் தவறிவிட்டீர்கள்.</p><p></p><h2>மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம்</h2><p> </p><p>இந்தத் தொடரில் எந்தவித வன்முறையோ அல்லது
அசம்பாவிதங்களோ இன்றி 100% பாதுகாப்பும், மகிழ்ச்சியும் மட்டுமே
நிறைந்திருந்தது.</p><p>இந்த உலகக் கிண்ணத் தொடரின் போது பல்வேறு விவகாரங்கள் பூதாகரமாயின.

ஈரான், ஹைட்டி போன்ற நாடுகளைச் சேர்ந்த ஆதரவாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு
விசா வழங்குவதில் அமெரிக்கா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததாகக்
குற்றச்சாட்டு எழுந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8f97c8f-a1af-4051-a1f2-14edafc0d5ed/26-6a6790d7dad4d.webp' /></p><p>சோமாலியாவைச் சேர்ந்த உலகக் கிண்ண நடுவர் உமர் அப்துல்காதிர் அர்தானுக்குச்
செல்லுபடியாகும் விசா இருந்தபோதிலும் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி
மறுக்கப்பட்டது.
</p><p>
மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், ஈரான் அணி
தனது பயிற்சி முகாம் இடத்தை மெக்சிகோவின் டிஜுவானாவுக்கு மாற்ற வேண்டிய
கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது.</p><p></p><h2>விசா ஒப்புதல்</h2><p>
</p><p>
அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தலையீட்டிற்குப் பிறகு,
அமெரிக்க வீரர் ஃபோலரின் பலோகனுக்கு விதிக்கப்பட வேண்டிய தடை இரத்து
செய்யப்பட்டது பெரும் விவாதப் பொருளானது.</p><p>

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த இன்ஃபான்டினோ, "மில்லியன்
கணக்கான மக்களுக்கு விசா ஒப்புதல் அளிக்கப்பட்டதை விட்டுவிட்டு, ஒரு சிலருக்கு
விசா மறுக்கப்பட்டதை மட்டுமே பெரிதுபடுத்துகிறார்கள்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b15a7357-0229-4704-bb16-8d1dc89bb19d/26-6a6790d735f12.webp' /></p><p>ஈரான் அணி எந்தவித
பிரச்சனையும் இன்றி அமெரிக்காவிற்குள் நுழைந்தது.

கால்பந்து என்பது அமைதிக்கானது, அது அரசியலுக்கு அப்பாற்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
செய்தியாளர்கள் மற்றும் விமர்சகர்கள் தங்கள் பேனாக்களையும் விசைப்பலகைகளையும்
சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு, தொடரில் பங்கேற்று விளையாடிய அணிகளுக்கு உரிய
மரியாதையை அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T17:19:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா விதித்த சுங்க வரிகளுக்கு சீனா கடும் எதிரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-slams-us-forced-labour-tariffs-1785172830"></link>
            <id>https://news.lankasri.com/article/china-slams-us-forced-labour-tariffs-1785172830</id>
            <summary type="text">பீஜிங்கில் சீன வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கா சமீபத்தில் விதித்த புதிய சுங்க வரிகள் நியாயமற்றவை என்றும், “பாதுகாப்பு வாதம்” (Prote...</summary>
            <content type="html"><![CDATA[<p>பீஜிங்கில் சீன வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கா சமீபத்தில் விதித்த புதிய சுங்க வரிகள் நியாயமற்றவை என்றும், “பாதுகாப்பு வாதம்” (Protectionism) சார்ந்தவை என்றும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.</p><p>அமெரிக்கா, ஜூலை 24, 2026 அன்று, 60 நாடுகளிலிருந்து வரும் பொருட்களுக்கு 10 சதவீதம் மற்றும் 12.5 சதவீதம் சுங்க வரிகளை விதித்தது. இதில் சீனாவிற்கு 12.5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.</p><p>கட்டாய உழைப்பால் (Forced Labour) பொருட்கள் தயாரிக்கப்பட்டதன காரணமாக இந்நாடுகளுக்கு இந்த வரியை விதித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/781dd1b6-6cd0-4d96-a035-18b23e6bbc93/26-6a6793605def4.webp' /></p><p>இதற்கு சீனா, “இது ஒருதலைப்பட்சமான நடவடிக்கை. அமெரிக்கா மீண்டும் Section 301 விசாரணையைத் தொடங்கி, ‘கட்டாய உழைப்பு’ என்ற பெயரில் சுங்க வரிகளை விதித்துள்ளது. இது முற்றிலும் அநியாயமானது” என தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த சுங்க வரிகள் உலக வர்த்தக ஒழுங்கை பாதிக்கும் அபாயம் உள்ளதாக சீனா வலியுறுத்தியுள்ளது. மேலும், அமெரிக்கா தனது உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காகவே இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கிறது என்றும் சீனா குற்றம் சாட்டியுள்ளது.
</p><p></p><p>இந்த நிலைமை, சீனா-அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் பதற்றமடையச் செய்யும் அபாயம் உள்ளது. </p><p>ஏற்கனவே, இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் வர்த்தக மோதல்களை சந்தித்து வருகின்றன. புதிய சுங்க வரிகள், உலகளாவிய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம்.
</p><p>
சீனா, “அமெரிக்கா உடனடியாக இந்த சுங்க வரிகளை ரத்து செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-27T17:18:37+00:00</updated>
        </entry>
    </feed>
