<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-01T05:54:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக சந்தையில் தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1788239934"></link>
            <id>https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1788239934</id>
            <summary type="text">உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று (01.09.2026) சற்று சரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் இவ்வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று (01.09.2026) சற்று சரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் இவ்வாரம் வெளியிடப்படவுள்ள முக்கிய அமெரிக்க தொழிலாளர் சந்தை தரவுகள் மீது வர்த்தகர்கள் கவனம் செலுத்துவது இதற்கு காரணம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அதன்படி, ஒரு அவுன்ஸ் உடனடி தங்கத்தின் விலை 0.3% குறைந்து, 4,437.10 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.</p><h2>தங்க விலையின் மீதான அழுத்தம்</h2><p>
</p><p>இதற்கிடையில், ஈரான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6fb3d68-52d0-4c57-a3ae-d76e8b003bd9/26-6a96682620ec9.webp' /></p><p>
</p><p>
இதன் விளைவாக, மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதுடன், தொடர்ந்து இரண்டாவது நாளாக எண்ணெய் விலைகளும் உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
குறிப்பாக, அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் தங்கத்தின் விலைகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T05:52:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக் தொடர்பான விசாரணை ; முன்னாள் மேயர் CCID-யில் ஆஜர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/thanasiri-amaratunga-appears-before-ccid-1788241950"></link>
            <id>https://jvpnews.com/article/thanasiri-amaratunga-appears-before-ccid-1788241950</id>
            <summary type="text">கொழும்பு தெஹிவளை - கல்கிஸ்ஸ முன்னாள் மேயர் தனசிரி அமரதுங்க வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CCID) ஆஜராகியுள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு தெஹிவளை - கல்கிஸ்ஸ முன்னாள் மேயர் தனசிரி அமரதுங்க வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CCID) ஆஜராகியுள்ளார்.</p><p>
</p><p>அக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டுள்ள, பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக் என்பவர் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாகவே அவர் இவ்வாறு வாக்குமூலம் அளிப்பதற்காக வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0d31020-34e5-4631-9617-221a7c489f21/26-6a96681fc8ef8.webp' /></p>]]></content>
            <updated>2026-09-01T05:52:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-britain-demanding-justice-disappeared-1788240410"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-britain-demanding-justice-disappeared-1788240410</id>
            <summary type="text">காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி கோரி பிரித்தானியாவில்
கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி கோரி பிரித்தானியாவில்
கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.</p><p>

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில்
உள்ள இலங்கை தூதரகம் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.</p><h2>சர்வதேச நீதியை வலியுறுத்தி</h2><p>

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் தமிழ் உறவுகளை தேடி” எனும் தொனிப் பொருளுடன்
சர்வதேச நீதியை வலியுறுத்தி இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்
முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5011adc2-955c-4ed8-b2fc-a251c4fd8c86/26-6a966682ef58e.webp' /></p><p>
இந்த மாபெரும் போராட்டத்தில் லண்டனில் வாழும் ஈழத் தமிழர்கள் மற்றும்
செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
</p><p>
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும், உண்மை வெளிப்படுத்தப்பட
வேண்டும், குற்றவாளிகள் பொறுப்புக் கூற வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்வைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfd2ecff-4d2a-4709-8034-a8114c829b69/26-6a966683ca7b7.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T05:45:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவ அதிகாரிகளுக்கான இடைநிலைத் தரம் ; பரிந்துரைக்காக அறுவர் கொண்ட குழு நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/six-member-committee-appointed-to-recommend-1788241523"></link>
            <id>https://jvpnews.com/article/six-member-committee-appointed-to-recommend-1788241523</id>
            <summary type="text">மருத்துவ அதிகாரிகளுக்கான இடைநிலைத் தரத்தை (Intermediate grade) உருவாக்குவது தொடர்பான ஆலோசனைகளை ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக ஆறு பேர் கொண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மருத்துவ அதிகாரிகளுக்கான இடைநிலைத் தரத்தை (Intermediate grade) உருவாக்குவது தொடர்பான ஆலோசனைகளை ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக ஆறு பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் மருத்துவர் அனில் ஜாசிங்கவினால், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் பணிப்புரைக்கமைய இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88a9e595-e982-42b8-a18c-60090e8ec71e/26-6a96667459a30.webp' /></p><p>சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் மருத்துவர் ஹன்சக விஜேமுனி இந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இதன் செயலாளராக மருத்துவர் அமில சுரங்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவர் டப்ளியூ.கே. விக்ரமசிங்க, மருத்துவர் சமிந்த சமரக்கோன், சிரேஷ்ட பேராசிரியர் எச்.டி.என்.பி. ஓபாத்த மற்றும் சிரேஷ்ட பேராசிரியர் திலீப் டி சில்வா ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
முன்மொழியப்பட்டுள்ள இடைநிலைத் தரத்தை வரையறுத்தல், அதில் உள்ளடக்கப்பட வேண்டிய மருத்துவப் பிரிவுகள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மருத்துவ அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கும் முறைமை, அவர்களின் சேவைக்காலம், அவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் மற்றும் இடமாற்ற நடைமுறைமை என்பன குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ள இந்தக் குழுவுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T05:45:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம் : மாற்றப்பட்ட அரங்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/petitions-22nd-amendment-to-be-considered-today-1788233562"></link>
            <id>https://ibctamil.com/article/petitions-22nd-amendment-to-be-considered-today-1788233562</id>
            <summary type="text">புதிய இணைப்புஅரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்களைப் பரிசீலிக்கும் நடவ...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><h2>புதிய இணைப்பு</h2><p>அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்களைப் பரிசீலிக்கும் நடவடிக்கைகளை உயர்நீதிமன்றத்தின் 501 ஆம் இலக்க நீதிமன்ற அரங்கிற்கு மாற்றுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><p>
 

இன்று (01) குறித்த மனுக்கள் விசாரணைக்காக 502 ஆம் இலக்க நீதிமன்ற அரங்கில் அழைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு போதிய இடவசதி இன்மையால் 501 ஆம் இலக்க அரங்கிற்கு மாற்றுமாறு ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
</p><p>இந்தநிலையில் அந்த கோரிக்கையைக் பரிசீலித்த 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு இந்தத் தீர்மானத்தை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><h2>இரண்டாம் இணைப்பு</h2><p>அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனையை உயர்நீதிமன்றம் ஆரம்பித்துள்ளது.
</p><p>
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, நீதியரசர்களான அசேல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோரைக் கொண்ட ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமின் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன.
</p><p>
குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி 67 மனுக்களும், நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நீதித்துறை திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்து 5 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>இலங்கையின் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் இன்று (01) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
</p><p>
 

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இன்று காலை 10 மணி முதல் இந்த மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
 

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் கடந்த 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, அதற்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்வதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்தது.</p><p></p><h2>40க்கும் மேற்பட்ட மனுக்கள்&nbsp;</h2><p>
</p><p>
 

நேற்று (31) வரை அதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்த நிலையில், 40க்கும் மேற்பட்ட ஆதரவு மற்றும் எதிர்ப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5a2d099-88bf-458a-8d93-1580a4af1406/26-6a964b3cd15ba.webp' /></p><p> </p><p>இந்தச் சட்டமூலத்தின் மூலம் நீதிமன்றத்தின் சுயாதீனத்திற்கும் சட்டத்தின் ஆட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டியும், அரசியலமைப்பு துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகத் தெரிவித்தும், இச்சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என்பதால் இதனை நிறைவேற்றுவதற்கு மக்கள் தீர்ப்பிற்கு (சர்வஜன வாக்கெடுப்பு) உத்தரவிடுமாறு கோரியும் குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.</p><p>

 

அதற்கமைய, குறித்த மனுக்களைப் பரிசீலிப்பதற்காகப் பிரதம நீதியரசரால் 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் பிரதம நீதியரசருக்கு மேலதிகமாக அசேல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய நீதியரசர்கள் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/IEDdInNGtNY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T05:38:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 ஆவது திருத்த சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள்! பிரதம நீதியரசர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hearings-on-petitions-against-the-22nd-amendment-1788240798"></link>
            <id>https://tamilwin.com/article/hearings-on-petitions-against-the-22nd-amendment-1788240798</id>
            <summary type="text">அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களைப் பரிச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களைப் பரிசீலிக்கும் நடவடிக்கைகளை உயர்நீதிமன்றம் ஆரம்பித்துள்ளது.</p><p>இந்த மனுக்கள்,பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஆயத்தின் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.</p><h2>திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல்&nbsp;</h2><p>



இந்த சட்டமூலத்திற்கு எதிராக மொத்தம் 67 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், நீதித்துறை சட்டமூலத்திற்கு எதிராக மேலும் 5 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa356482-b11d-4ea2-b1d7-6a73f3f97fa5/26-6a9664ba0f26e.webp' /></p><p>இதற்கிடையில், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான விசாரணைகளை நீதிமன்ற அறை 501க்கு மாற்றுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>இன்று (01) குறித்த மனுக்கள் விசாரணைக்காக 502 ஆம் இலக்க அரங்கில் அழைக்கப்பட்டிருந்த போது, 502 ஆம் இலக்க நீதிமன்ற அரங்கிற்குள் போதிய இடவசதி இன்மையால், அதனை 501 ஆம் இலக்க அரங்கிற்கு மாற்றுமாறு ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.</p><p>இந்த கோரிக்கையைக் பரிசீலித்த 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. .</p>]]></content>
            <updated>2026-09-01T05:36:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் போர்... எதிரிகளால் தூக்கிலிடப்படலாம் என அஞ்சும் விளாடிமிர் புடின்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/putin-fears-enemies-will-1788236221"></link>
            <id>https://news.lankasri.com/article/putin-fears-enemies-will-1788236221</id>
            <summary type="text">Putin fears enemies will hang him: எதிரிகள் தன்னைத் தூக்கிலிட்டு விடுவார்கள் எனப் பீதியடைந்த புடின்.

உக்ரைன் மீதான தனது இடைவிடாத போரை வெற்றி இல்லாம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Putin fears enemies will hang him: எதிரிகள் தன்னைத் தூக்கிலிட்டு விடுவார்கள் எனப் பீதியடைந்த புடின்.
</p><p>
உக்ரைன் மீதான தனது இடைவிடாத போரை வெற்றி இல்லாமல் முடித்துக்கொள்வது தனது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்று புடின் அஞ்சுவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>தூக்கிலிட்டு விடுவார்கள்</h2><p>
</p><p>கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியுடன் தனது போரை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், தான் கொல்லப்படலாம் என்று புடின் தனது நெருங்கிய வட்டாரத்தினரிடம் கூறியதாகத் தகவல் கசிந்துள்ளது. </p><p>தி எகனாமிஸ்ட் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், பீதியடைந்த புடின், தான் டான்பாஸ் பகுதியின் கட்டுப்பாட்டை வெல்லவில்லை என்றால், அவர்கள் தன்னைத் தூக்கிலிட்டு விடுவார்கள் என்று தனக்கு ஆதரவான பெரும் கோடீஸ்வரர்களிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4d8124c-bad7-4659-8ecb-72ee323e3141/26-6a9651bfbd496.webp' /></p><p> </p><p>மட்டுமின்றி, உக்ரைன் மீதான படையெடுப்பு தோல்வியடைந்துவிட்டதாகவும், அது கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக நீடித்து ரஷ்யாவின் பொருளாதாரத்தைச் சீரழித்துவிட்டதாகவும் புடினின் முக்கிய கூட்டாளிகளும் கருதுகின்றனர்.
</p><p>இணையவழி சில்லறை விற்பனையாளர்களின் கிடங்குகள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்கி உக்ரைன் சமீபத்தில் நடத்திய முன்னெப்போதும் இல்லாத தாக்குதல்கள், பேரழிவுகரமான பெட்ரோல் தட்டுப்பாடுகளை ஏற்படுத்தி, போரின் விலையை புடினின் குடிமக்களுக்கு நேரடியாக உணர்த்தியுள்ளன.</p><p></p><p> </p><p>ஆனால் இதற்கு மிக மோசமான பதிலடி உறுதி என விளாடிமிர் புடின் மிரட்டல் விடுத்திருந்தாலும், புடின் ஒரு இக்கட்டான முட்டுச்சந்தில் சிக்கிக்கொண்டு, அதிலிருந்து வெளியேற ஆபத்தான வழியைத் தெரிவு செய்துள்ளதாக கிரெம்ளின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>தீவிர நெருக்கடியில் சிக்கியுள்ள புடின், நேட்டோ (NATO) உறுப்பு நாடுகள் மீது ஆவேசமாகப் பாய்வதன் மூலம் தனது அண்டை நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் அபாயத்தில் உள்ளார். </p><p>இந்த நிலையில், உக்ரைன் மீதான தனது கொடூரமான போரை நிறுத்துமாறு நரேந்திர மோடி புடினிடம் வெளிப்படையாக கூறியதால், அவர் இன்று உலக அரங்கில் தலைகுனியும் நிலை ஏற்பட்டது.</p><h2>தீவிரப்படுத்துவதில் உறுதி</h2><p> </p><p>ரஷ்யாவின் மிக நெருக்கமான நட்பு நாடான இந்தியா, நாம் ஒரு முடிவில்லாத போரிலிருந்து போரின் முடிவை நோக்கி நகர வேண்டும் என கூறியுள்ளது. </p><p>இதில் கடும் கோபமடைந்த விளாடிமிர் புடின்,
தனது மொழிபெயர்ப்புக் கருவியை (earpiece) கழற்றி வீசிவிட்டு, பற்களைக் கடித்தவாறே, மிக்க நன்றி, பிரதமரே. நாங்கள் அந்தத் திசையில்தான் நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்று பதிலளித்துள்ளார். </p><p>ரஷ்யாவிற்கு இந்தப் பேரழிவுகரமான போரினால் ஏற்படும் பெரும் இழப்புகள் இருந்தபோதிலும், புடின் மோதலைத் தீவிரப்படுத்துவதில் உறுதியாகத் தெரிகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7b3b109-f2a1-4ee5-831e-120c5b75526d/26-6a9651c07124b.webp' /></p><p> 2022-இல் உக்ரைன் மீது முழு அளவிலான போரைத் தொடங்கியதிலிருந்து, அவரது படைகளைச் சேர்ந்த சுமார் 15 லட்சம் பேர் உயிரிழந்தோ அல்லது காயமடைந்தோ போரில் இழக்கப்பட்டுள்ளனர். </p><p>எதிரிகளைப் பின்னுக்குத் தள்ளுவதற்கு இன்றியமையாததான, 50 கி.மீ அகலமுள்ள நகரங்களைக் கொண்ட பாதுகாப்பு அரணான, டான்பாஸின் எஞ்சிய பகுதியை முழுமையாகக் கைப்பற்றுவது ரஷ்யாவின் முக்கிய இலக்காக மாறியுள்ளது. டான்பாஸ் பகுதியை அவர் கைப்பற்றும் வரையில் போர் நீடிக்கலாம் என்றே கூறப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T05:35:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தர பௌதிகவியல் வினாத்தாளில் புதிய சர்ச்சை ; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-controve-advanced-level-physics-question-paper-1788240908"></link>
            <id>https://jvpnews.com/article/new-controve-advanced-level-physics-question-paper-1788240908</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பௌதிகவியல் பல்தேர்வு வினாத்தாளில் (MCQ) நான்கு வினாக்கள் பிழையானவை எனச் சுட்டிக்காட்டி இல...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பௌதிகவியல் பல்தேர்வு வினாத்தாளில் (MCQ) நான்கு வினாக்கள் பிழையானவை எனச் சுட்டிக்காட்டி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p></p><p>

கொழும்பிலுள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் பௌதிகவியல் ஆசிரியர் ஒருவரினால் இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
பௌதிகவியல் வினாத்தாள் 1 இல் இடம்பெற்ற 17, 18, 19 மற்றும் 46 ஆகிய வினாக்கள் பிழையானவை என்றும், அவற்றுக்கு சரியான பதில்களைத் தீர்மானிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் ஆசிரியர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cae7cab9-ed67-4e50-8e22-f65fb23f7564/26-6a96640dc2b8e.webp' /></p><p>

இந்நிலையில், குறித்த வினாத்தாளில் ஏற்பட்டுள்ள குளறுபடி தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளதுடன், 46ஆவது வினாவுக்கு மாத்திரம் ஒரு இலவசப் புள்ளியை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

எனினும், நான்கு வினாக்களும் பிழையானவை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில், 46ஆவது வினாவுக்கு மாத்திரம் இலவசப் புள்ளி வழங்குவது மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
</p><p>
எனவே, பிழையானதாகக் குறிப்பிடப்படும் 17, 18, 19 மற்றும் 46 ஆகிய நான்கு வினாக்களுக்கும் தலா ஒரு புள்ளி வீதம் மொத்தம் நான்கு புள்ளிகளை அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவதற்கு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
இந்த விவகாரம் தொடர்பில் மாணவர்களின் உரிமைகள் மற்றும் பரீட்சை நடைமுறைகளில் சமத்துவம் ஆகிய விடயங்களை கருத்திற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T05:35:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் பேரழிவு; பெற்றோரை தேடும் சிறுவனின் நெஞ்சை உலுக்கும் காணொளி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nepal-disaster-little-boy-searching-his-parents-1788237970"></link>
            <id>https://jvpnews.com/article/nepal-disaster-little-boy-searching-his-parents-1788237970</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாளத்தில் ஏற்பட்ட மிகக் கொடூரமான பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுப் பேரழிவைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு சிறுவனின் நெஞ்சை உலு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; <a href="https://jvpnews.com/article/twin-babies-rescued-from-nepal-floods-1787896496" target="_blank">நேபாளத்தில் ஏற்பட்ட மிகக் கொடூரமான பெருவெள்ளம்</a> மற்றும் நிலச்சரிவுப் <a href="https://jvpnews.com/article/stole-the-jewelry-of-a-woman-who-died-nepal-floods-1787902215" target="_blank">பேரழிவைத் தொடர்ந்து</a>, சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு சிறுவனின் நெஞ்சை உலுக்கும் காணொளி (Video) உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p>&nbsp; &nbsp;அந்த வைரல் வீடியோவில், வெள்ளப் பேரழிவிற்குப் பிறகு ஒரு சிறுவன் தனது கைக்குழந்தையான தங்கையைத் தனது முதுகில் சுமந்தபடி நடந்து செல்கிறான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9a5ec58-09dd-4cbd-af59-70845bc30792/26-6a9658937270e.webp' /></p><h2>வைரல் வீடியோ....</h2><p>

பேரழிவின் போது பெற்றோரிடமிருந்து பிரிந்த இந்த இரண்டு குழந்தைகளும், காயங்களுடன் தங்களது பெற்றோரைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
</p><p>
குழந்தைகளின் முகத்தில் வெள்ளத்தின் போது ஏற்பட்ட கீறல்களும் காயங்களும், பயமும் அப்பட்டமாகத் தெரிகின்றன.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1379736873712760%2F&show_text=false&width=380&t=0" width="380" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p> </p><p>

இக்காட்சி ஜப்பானிய அனிமேஷன் படமான 'கிரேவ் ஆஃப் தி ஃபயர்ஃபிளைஸ்' (Grave of the Fireflies) கதையை நினைவுபடுத்துவதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.</p><p></p><p>அதேவேளை நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 939 ஆக அதிகரித்துள்ளதுடன், காணாமல் போனோரின் எண்ணிக்கை 4,250 ஆக உயர்ந்துள்ளது.</p><p>



திபெத்–நேபாள எல்லையில் ஏற்பட்ட பெரும் பனிப்பாறைச் சரிவைத் தொடர்ந்து, கடந்த மாதம்-

 26ஆம் திகதி லெண்டே நதியில் ஏற்பட்ட வெள்ளம் போடே கோஷி நதியில் பெருக்கெடுத்தது.</p><p></p><p> </p><p>இதனால் கரையோர கிராமங்கள் மற்றும் சிறு நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள், பாலங்கள், வீதிகள் மற்றும் நீர்மின் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன</p>]]></content>
            <updated>2026-09-01T05:33:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொழில் முதலீடுகளை ஈர்க்க பிரித்தானியா செல்லும் முதல்வர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cm-vijay-to-visit-uk-sep-10-attract-investments-1788240744"></link>
            <id>https://news.lankasri.com/article/cm-vijay-to-visit-uk-sep-10-attract-investments-1788240744</id>
            <summary type="text">cm vijay to visit uk in september 10 for attract investments: முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்க்க பிரித்தானியா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>cm vijay to visit uk in september 10 for attract investments: முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்க்க பிரித்தானியா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><h3>

பிரித்தானியா செல்லும் முதல்வர் விஜய் </h3><p>

தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள முதல்வர் விஜய், தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/881748e4-cd19-49a4-9ac9-be7daf1f5f13/26-6a96636ac8f79.webp' /></p><p> 

சமீபத்தில் சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. </p><p></p><p>

ஆனால், பரந்தூர் விமான நிலையம் திட்டம் கைவிட்டப்பட்டதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள், அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவிற்கு செல்லும் என தொழில்துறையினர் கவலை தெரிவித்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/643764c6-8bb1-45f4-b3c0-13798ce09383/26-6a96636a1a167.webp' /></p><p>

இந்நிலையில், முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்க்க வரும் செப்டம்பர் 10 ஆம் திகதி பிரித்தானியாவிற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p></p><p> 

செப்டம்பர் 16 ஆம் திகதி வரை முதல்வர் விஜய் பிரித்தானியாவில் இருந்து, தொழில்துறையினர் மற்றும் பிரித்தானியா வாழ் தமிழர்களை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a46aaad-2417-4acf-aff0-7f6c6842ce4f/26-6a96636b7b52c.webp' /></p><p> 

இதே போல், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு, வரும் செப்டம்பர் 4 ஆம் திகதி தைவானில் நடைபெற உள்ள செமி கண்டக்டர், செயற்கை நுண்ணறிவு சிப் உள்ளிட்ட தொழில்துறைகளில் ஈடுபட்டுள்ள பல நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கும் செமிகான் மாநாட்டில் கலந்து கொண்டு முதலீடுகளை ஈர்க்க உள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T05:33:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் வகுப்பிற்கு சென்ற மூன்று மாணவிகள் மாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-schoolgirls-tuition-classes-gone-missing-1788238899"></link>
            <id>https://jvpnews.com/article/three-schoolgirls-tuition-classes-gone-missing-1788238899</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பலாங்கொடை- பின்னவல எல்லராவ, பிரதேசத்தை சேர்ந்த மூன்று மாணவிகள் காணாமல் போயுள்ளதாக நேற்று திங்கட்கிழமை (31) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பலாங்கொடை- பின்னவல எல்லராவ, பிரதேசத்தை சேர்ந்த மூன்று மாணவிகள் காணாமல் போயுள்ளதாக நேற்று திங்கட்கிழமை (31) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>


தனியார் வகுப்புகளுக்கு சென்ற மாணவிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் பலாங்கொடையில் பிரபல பாடசாலை மாணவிகள் ஆவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14d90a26-c1a5-4a19-a4bc-d1e42242f339/26-6a965c34efdcc.webp' /></p><h2>&nbsp; பொலிஸார் மேலதிக விசாரணை</h2><p> </p><p>கெளசல்யா, சர்மிளா, சதுனி ஆகிய மாணவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதுடன், மூவருக்கும் 17 வயது என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.</p><p></p><p>

இவர்களைப் பற்றி தகவல் தெரிந்தால் பலாங்கொடை பொலிஸ் நிலையம் 0452287222 அல்லது பெற்றோர்களுக்கு 0767070913, 0771658788 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.</p><p>

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் பலாங்கொடை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T05:33:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கலிபோர்னியாவில் இரு இந்திய இளம் பெண்கள் கொலை; திடீரென வில்லியாக மாறிய நண்பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-young-kerala-women-murdered-in-california-1788240930"></link>
            <id>https://canadamirror.com/article/two-young-kerala-women-murdered-in-california-1788240930</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மில்பிடாஸ் நகரில் இரு இந்திய இளம் பெண்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அமெரிக்க வாழ் புலம்பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மில்பிடாஸ் நகரில் இரு இந்திய இளம் பெண்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அமெரிக்க வாழ் புலம்பெயர் சமூகத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
</p><p>
திருச்சூர் பாணஞ்சேரி, மண்ணுத்தி, முடிக்கோடு தெக்கூட்டு வீட்டைச் சேர்ந்த ஹரிதாஸ் மற்றும் சுஷ்மா தம்பதியரின் மகள் அஞ்சனா மற்றும் கோட்டயம் சிங்கவனம் பகுதியைச் சேர்ந்த ஆன் ஆகிய இருவருமே இந்தக் கொடூர சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65df686a-bb5f-4b14-a14a-4e9c34f9c582/26-6a96642384b51.webp' /></p><h2>திடீரென&nbsp; வில்லியாக மாறிய&nbsp; நண்பி</h2><p>

இவர்கள் இருவருக்கும் நெருங்கிய தோழியும், அதே அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்தவருமான அனிலா என்ற பெண், இந்தக் கொலைகளைச் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தற்போது போலீஸ் காவலில் உள்ளார்.</p><p>

ஒரே அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்த இந்த மூன்று குடும்பங்களுக்கும் இடையே மிகவும் நெருக்கமான நட்பு இருந்ததாக கூறப்படுகிறது. 
ஆசிரியையாக பணியாற்றி வந்த அஞ்சனா கடந்த எட்டு ஆண்டுகளாக கலிபோர்னியாவில் வசித்து வந்தார். மென்பொருள் பொறியாளரான தனது கணவர் விஜீஷ் மற்றும் ஆறு வயது மகள் வாமிகாவுடன் அஞ்சனா வசித்து வந்தார்.
</p><p>
சமீபத்தில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்டங்களிலும், அஞ்சனா உள்ளிட்ட மூவரும் தங்களது நண்பர்களுடன் ஒன்றாகக் கலந்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>

ஆகஸ்ட் 28ஆம் தேதி, வெள்ளிக்கிழமை மதியம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்தக் கொலைச் சம்பவங்கள் அரங்கேறின. 
 
வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அஞ்சனாவின் கணவர் விஜீஷ், சம்பவ இடத்திலிருந்து நிற்காமல் வேகமாகச் சென்ற அனிலாவின் நீல நிற காரைக் கவனித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த விஜீஷ் உடனடியாக ஆனின் கணவர் ஜேக்கப்பை தொலைபேசியில் தொடர்புகொண்டு தகவலை தெரிவித்துள்ளார்.

ஜேக்கப், ஆனுக்கு தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை. </p><p>இதையடுத்து அவர் குடியிருப்புக்குச் சென்று பார்த்தபோது, ஆன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டுள்ளார்.
அதேநேரத்தில், விபத்து குறித்த தகவலை அறிந்து விஜீஷ் சம்பவ இடத்துக்கு வந்து சேரும் முன்பே அஞ்சனாவும் உயிரிழந்திருந்தார்.</p><p>

இந்த சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அஞ்சனா மற்றும் விஜீஷின் ஆறு வயது மகள் வாமிகா வீட்டின் அறைக்குள் இருந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்திற்குப் பிறகு, நீல நிற எஸ்.யு.வி. கார் ஒன்று அதிவேகமாக அங்கிருந்து சென்றதைப் பார்த்ததாக நேரில் பார்த்தவர்களும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
</p><p>
இதையடுத்து போலீசார் நடத்திய தேடுதல் நடவடிக்கையில், அருகிலுள்ள ஒரு பார்க்கிங் பகுதியில் பலத்த சேதமடைந்த நிலையில் அந்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. </p><p>தொடர்ந்து அனிலாவையும் போலீசார் காவலில் எடுத்தனர்.



நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்த இந்த மூவருக்கிடையே திடீரென கொலைச் சம்பவம் நிகழும் அளவுக்கு என்ன காரணம் ஏற்பட்டது என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை.
</p><p>காவலில் உள்ள அனிலாவிடம் அமெரிக்க போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் மூலம் கொலைக்கான உண்மையான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்த கூடுதல் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-01T05:32:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த ஆண்டில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/more-than-1-5-mn-tourists-visit-sri-lanka-2026-1788237493"></link>
            <id>https://ibctamil.com/article/more-than-1-5-mn-tourists-visit-sri-lanka-2026-1788237493</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15 இலட்சத்தைத் தாண்டியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15 இலட்சத்தைத் தாண்டியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. </p><p>
 

இதன்படி, ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 27 ஆம் திகதி வரை இலங்கைக்கு 1,517,296 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p>அத்துடன் ஓகஸ்ட் 01 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 173,878 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.</p><p></p><h2>இந்தியாவிலிருந்து அதிக சுற்றுலாப் பயணிகள்&nbsp;</h2><p>
</p><p>
 

ஓகஸ்ட் மாதத்தில் இதுவரை அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 41,781 ஆகும்.</p><p>

 

இரண்டாவதாக அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் ஐக்கிய இராச்சியத்திலிருந்து (UK) வருகை தந்துள்ள நிலையில் அந்த எண்ணிக்கை 18,197 ஆக&nbsp; பதிவாகியுள்ள நிலையில் மூன்றாவதாக சீனாவிலிருந்து 11,368 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14a8ad5d-9244-4a44-b55b-bd59ffa0f44d/26-6a96621019e8e.webp' /></p><p>
</p><p>
 

அத்துடன், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஒட்டுமொத்தமாக அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளும் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ள நிலையில் அந்த எண்ணிக்கை 380,011 ஆக பதிவாகியுள்ளது.</p><p>

 

இதற்கு மேலதிகமாக, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 148,598 பயணிகளும், சீனாவிலிருந்து 99,875 பயணிகளும் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T05:31:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக 67 மனுக்கள் தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/67-cases-against-22nd-ammendment-1788240626"></link>
            <id>https://tamilwin.com/article/67-cases-against-22nd-ammendment-1788240626</id>
            <summary type="text">&amp;nbsp;அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் 67 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் 41 மனுக்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் 67 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><p>

இவற்றில் 41 மனுக்கள் இணையவழியில் (Online) தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நீதிமன்ற அமைப்பியல் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி 5 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
</p><p>
இந்த மனுக்கள் அனைத்தையும் விசாரணை செய்வதற்காகப் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையில் ஐந்து நீதியரசர்கள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு பெயரிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcde90fc-2010-4d2a-9488-354a0fe1b9e3/26-6a9662f39e0ad.webp' /></p><p>

இதன்படி, இன்று (01) காலை 10.00 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் இம்மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-01T05:30:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இழுத்து மூடப்படும் நிலைக்கு சென்ற 'மார்வெல்'.. பல்லாயிரம் கோடி கடன்.. மீண்டு வந்த கதை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/marvel-studios-fall-and-the-rise-story-1788239291"></link>
            <id>https://cineulagam.com/article/marvel-studios-fall-and-the-rise-story-1788239291</id>
            <summary type="text">மார்வெல் இழுத்து மூடப்படும் நிலைமைக்கு சென்று அதிலிருந்து எப்படி மீண்டு வந்தார்கள் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.மார்வெல் தயாரிப்பில் வெளிவரும...</summary>
            <content type="html"><![CDATA[<p>மார்வெல் இழுத்து மூடப்படும் நிலைமைக்கு சென்று அதிலிருந்து எப்படி மீண்டு வந்தார்கள் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><p>மார்வெல் தயாரிப்பில் வெளிவரும் திரைப்படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும். கடைசியாக வெளியான ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்று உலகளவில் $2.2 பில்லியன் வசூல் செய்து சாதனை படைத்தது. இதை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' திரைப்படம் வரும் டிசம்பர் 18-ஆம் தேதி வெளியாகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86fee446-b7c5-4493-842d-7a8b3143c028/26-6a965dbeee5e7.webp' /></p><p>இன்று பில்லியன் கணக்கில் வசூல் செய்து சாதனை படைத்து வரும் மார்வெல் திரைப்படங்களை பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஆனால், ஒரு காலத்தில் மார்வெல் நிறுவனம் பல்லாயிரம் கோடி கடன் வாங்கி, இழுத்து மூடப்படும் நிலைமைக்கு சென்றது. அதைப்பற்றி தீவிர மார்வெல் ரசிகர்களை தவிர மற்றவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. </p><p>
இந்நிலையில், மார்வெல் நிறுவனம் தங்களுடைய வீழ்ச்சியிலிருந்து எப்படி மீண்டு வந்தது, அதன் பின்னணியில் உள்ள கதை என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
</p><h2>மார்வலின் வீழ்ச்சி</h2><p>
90-களில் மார்வெல் நிறுவனத்தின் மொத்த மதிப்பு ரூ. 2,500 கோடி. 90-களின் இறுதியில் மார்வெல்லின் காமிக்ஸ் விற்பனை சரிந்தது. இதனால் அந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது. மார்வெல் நிறுவனத்தின் உரிமையாளர்கள் பல கடன்களை வாங்கி கடன்காரர்களாக மாறினார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9685ce0-d82d-4296-8241-f8a63e018d76/26-6a965dbfb8aac.webp' /></p><p> </p><p>

1996 டிசம்பர் 27-ஆம் தேதி அன்று மார்வெல் திவால் மனுவை தாக்கல் செய்தது. ரூ. 5,000 கோடி கடன், மார்வெல்லின் ஷேர் ரூ. 2,800-ல் இருந்து ரூ. 150-ஆக சரிந்தது. இதனால் தங்களால் இனி இந்த துறையில் நீடிக்க முடியுமா என்கிற கேள்வி மார்வெலுக்கு எழுகிறது.</p><h2>விற்பனை செய்யப்பட்ட கதாபாத்திரங்கள்
</h2><p>
இவ்வளவு பெரிய கஷ்டத்திலிருந்து மீள வேண்டும் என்பதற்காக, அனைவருக்கும் பிடித்த ஸ்பைடர்-மேன் கதாபாத்திரத்தை சோனி நிறுவனத்திடம் மார்வெல் விற்பனை செய்கிறது. X-Men மற்றும் Fantastic Four ஆகியவை 20th Century Fox நிறுவனத்திடம் விற்கப்பட்டது. மேலும், Blade, Ghost Rider, Hulk மற்றும் Punisher போன்ற கதாபாத்திரங்களை வெவ்வேறு நிறுவனங்களிடம் மார்வெல் விற்றுவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0e0b11c-83fb-492a-9b6a-0053de603c16/26-6a965f6fe58f6.webp' /></p><h2>மீதமிருந்த சூப்பர் ஹீரோஸ்</h2><p>

2005-ஆம் ஆண்டு மார்வெல் நிறுவனம் தனது பிரதான கதாபாத்திரங்களை எல்லாம் விற்பனை செய்துவிடுகிறது. இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலையில் இருந்த ஒருசில கதாபாத்திரங்கள் மட்டுமே அப்போது மார்வலிடம் இருந்தன. அதுதான் கேப்டன் அமெரிக்கா, அயன் மேன், Thor, Black widow மற்றும் Hawkeye போன்ற கதாபாத்திரங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd17491b-ad68-4b09-bb35-8c306913dcc1/26-6a965eed23585.webp' /></p><h2>மார்வலின் எழுச்சி
</h2><p>
இப்போது, இந்த இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் உள்ள கதாபாத்திரங்களை வைத்து திரைப்படம் எடுக்க மார்வெல் முடிவு செய்கிறது. இதற்காக ரூ. 4000 கோடி கடன் வாங்குகிறது. சரி, எந்த கதாபாத்திரத்தை வைத்து முதலில் திரைப்படம் எடுக்கலாம் என எண்ணியபோது, அயன் மேன் கதாபாத்திரத்தை வைத்து எடுக்க முடிவு செய்கிறார்கள். அதில் ஹாலிவுட் திரையுலகில் தோற்றுப்போன ஹீரோவாக இருந்த Robert Downey Jr.-ஐ டோனி ஸ்டார்க்காக வைத்து அயன் மேன் படத்தை எடுக்கிறார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f887d390-468b-41b5-811e-d104ced5f226/26-6a965eedd07c6.webp' /></p><p>மே 2-ஆம் தேதி 2008-ஆம் ஆண்டு அயன் மேன் 1 திரைப்படம் வெளியாகிறது. இப்படம் கண்டிப்பாக தோல்வியை தழுவும் என எதிர்பார்த்த நிலையில், படம் வெளிவந்து உலகளவில் பட்டையை கிளப்பி ரூ. 5,000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைக்கிறது. இதன்பின், மார்வெல் பயன்படுத்திய மிகப்பெரிய யுத்தி தான் 'Post Credit Scene'. அயன் மேன் திரைப்படத்தின் இறுதியில், Nick Fury கதாபாத்திரம் "I m here to talk to you about the Avengers Initiative" என வசனத்தை கூறும். இதன்மூலம், அயன் மேன் என்பது ஒரு திரைப்படம் அல்ல, இது ஒரு யூனிவர்ஸ் என்பதை மார்வெல் கொண்டு வந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67c7aac7-6431-490b-a205-c3dbee999746/26-6a965eee866ac.webp' /></p><h2>'அவெஞ்சர்ஸ்'
</h2><p>
அயன் மேன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து Thor, கேப்டன் அமெரிக்கா போன்ற திரைப்படங்கள் வெளியாகின. 2009-ஆம் ஆண்டு ரூ. 30,000 கோடி கொடுத்து டிஸ்னி நிறுவனம் மார்வெல்லை வாங்குகிறது. இதன்பின், 2012-ஆம் ஆண்டு வெளியான 'அவெஞ்சர்ஸ்' $1.5 பில்லியன் வசூல், 2015-ல் வெளியான அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் $1.40 பில்லியன் வசூல், 2018-ல் வெளிவந்த 'அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்' $2.05 பில்லியன் வசூல், 2019-ல் வெளிவந்த 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' $2.72 billion வசூல் செய்து மாபெரும் சாதனைகளை படைத்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/474e83ea-e4ae-4770-b099-bb135b4d4bdf/26-6a965f230fd69.webp' /></p><p>ஒன்றுமே இல்லாமல் போய்விட்டதே என்கிற சூழ்நிலையிலிருந்து, இன்று உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு மார்வெல் வளர்ந்துள்ளது. இது தன்னம்பிக்கைக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T05:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிராண்ட் கேன்யன் வெள்ளப்பெருக்கு... காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/person-missing-in-grand-canyon-1788240496"></link>
            <id>https://news.lankasri.com/article/person-missing-in-grand-canyon-1788240496</id>
            <summary type="text">Desperate search for person missing in Grand Canyon: கிராண்ட் கேன்யனில் காணாமல் போன நபரைத் தேடும் பணி தீவிரம்.
கிராண்ட் கேன்யன் பகுதியில் ஏற்பட்ட கடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Desperate search for person missing in Grand Canyon: கிராண்ட் கேன்யனில் காணாமல் போன நபரைத் தேடும் பணி தீவிரம்.
</p><p>கிராண்ட் கேன்யன் பகுதியில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில், 80 மலையேற்ற வீரர்களும் இருவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5baf0a5a-3c7d-4a06-b9fe-085d20411698/26-6a96627282380.webp' /></p><p>
</p><p>உள்ளூர் நேரப்படி, சனிக்கிழமை பிற்பகல் சுமார் 2.30 மணியளவில், ரம்மியமான பள்ளத்தாக்கின் சில பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கினால், கொலராடோ நதிக்கு அருகிலுள்ள பாதைகளில் இருந்து மலையேறுபவர்களும், சுற்றுலா செல்பவர்களும் அடித்துச் செல்லப்பட்டனர்.</p><p> இந்த நிலையில், வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கவும் அவர்களைக் கண்டறியவும், தேடுதல் குழுவினர் இரவு நேரப் பார்வைக் கண்ணாடிகள் மற்றும் பிற உபகரணங்களைப் பயன்படுத்தியதாக, திங்கள்கிழமை இரவு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சம்பவ இடக் கட்டளை அதிகாரி டேவ் பிளாக் தெரிவித்தார். </p><p>சனிக்கிழமை சூரிய அஸ்தமனத்திற்குள் 45 பேர் மீட்கப்பட்டனர்; ஞாயிற்றுக்கிழமையன்று மேலும் 37 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.</p><p></p><p> அதேவேளையில், காணாமல் போன 15 மலையேற்ற வீரர்களைத் தேடும் பணியை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டனர். திங்கட்கிழமை முழுவதும் தேடுதல் பணிகள் தொடர்ந்த நிலையில், காணாமல் போனவர்களின் எண்ணிக்கையைக் கண்டறிய பூங்காவின் அனுமதி முறையைப் பார்வையிட்டும், வாகனங்களின் பதிவு எண்களைச் சரிபார்த்தும் பூங்காப் பாதுகாவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர். </p><p>இருப்பினும், திடீர் வெள்ளப்பெருக்கு பள்ளத்தாக்கிற்குள் செல்லும் ஒரேயொரு நீர்க் குழாயை கடுமையாக சேதப்படுத்தியதால் ஆபத்துகள் நீடித்தன, மேலும் இரவு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்தனர். </p><p>முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிராண்ட் கேன்யன் தேசியப் பூங்காவிற்குள் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் ஹொட்டல்களில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு அதிகாரிகள் தற்போது தடை விதித்துள்ளனர். </p><p>மேலும், ஆண்டு முழுவதும் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு அவசரகால நீர் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e92ffee5-f157-48b2-93ca-8cdbe348a793/26-6a966273368c8.webp' /></p><p> </p><p>கிராண்ட் கேன்யனின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு மலையேற்றம் செய்பவர்கள் இரவில் தங்கும் பிரபலமான விடுதிகள் மற்றும் முகாம் பகுதிகளைச் சுற்றி, கொலராடோ நதி பாயும் இடத்திற்கு அருகே பள்ளத்தாக்கின் ஆழத்தில் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. </p><p>செங்குத்தான சரிவுள்ள பாறைப் பகுதியில், வெறும் அரை மணி நேரத்திற்குள் சுமார் அரை முதல் ஒரு அங்குலம் வரை மழை பெய்துள்ளது. கிராண்ட் கேன்யன் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் நிலப்பரப்பைச் சிதைத்துக்கொண்டு செல்வதை, மேலே இருந்த தொங்கு பாலத்திலிருந்து மலையேற்றப் பயணிகள் படம்பிடித்த காட்சிகள் மிகவும் பயங்கரமாக இருந்தன. </p><p>பழுப்பு நிற நீரில் பெரிய குப்பைக் குவியல்களும் மிதந்து கொண்டிருந்தன. பின்னர், அப்பகுதியிலிருந்து ஏராளமான பார்வையாளர்கள் ஹெலிகொப்டர் மூலம் வெளியேற்றப்பட்டனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T05:26:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grade-5-scholarship-exam-results-september-5th-1788237226"></link>
            <id>https://tamilwin.com/article/grade-5-scholarship-exam-results-september-5th-1788237226</id>
            <summary type="text">நாடு முழுவதும் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு முழுவதும் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.</p><p>அனைத்து மதிப்பெண் தாள்களும் ஏற்கனவே கணினி மயமாக்கப்பட்டுவிட்டன, மேலும் தொடர்புடைய ஆவணங்களை மறுபரிசீலனை செய்யும் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>தேர்ந்தெடுக்கப்பட்ட 48 மையங்கள்</h2><p>நாடு தழுவிய அளவில் 2,723 மையங்களில், 9ஆம் திகதி நடைபெற்ற இந்த பரீட்சையில் 294,089 பரீட்சாத்திகள் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/114ed4b9-8709-4251-99f7-fa8909a59f81/26-6a965f7d10437.webp' /></p><p> </p><p>தேர்ந்தெடுக்கப்பட்ட 48 மையங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி 20ஆம் திகதி தொடங்கியது. </p><p>380 மதிப்பீட்டுக் குழுக்களின் கீழ், 6,000இற்கும் மேற்பட்ட மதிப்பீட்டாளர்கள் விடைத்தாள்களை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T05:16:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ஜூன் மகேந்திரனின் சர்ச்சைக்குரிய வாக்குமூலம்! தன்னுடன் இருக்கும் நபரால் தயக்கம் காட்டும் அநுர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/arjun-mahendran-s-controversial-statement-1788237488"></link>
            <id>https://tamilwin.com/article/arjun-mahendran-s-controversial-statement-1788237488</id>
            <summary type="text">
மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய அர்ஜூன் மகேந்திரனின் சர்ச்சைக்குரிய வாக்குமூலம் ஒன்றின் காரணமாகவே அவரை நாட்டிற்கு அழைத்து வராமல் அநுர தர...</summary>
            <content type="html"><![CDATA[<p>
மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய அர்ஜூன் மகேந்திரனின் சர்ச்சைக்குரிய வாக்குமூலம் ஒன்றின் காரணமாகவே அவரை நாட்டிற்கு அழைத்து வராமல் அநுர தரப்பு தயக்கம் காட்டுவதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். </p><p>


நேற்றையதினம்(31.08.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

திருடர்களை கைது செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.&nbsp; மாறாக அரசியல் நாடகத்திற்காக அதனை செய்வதையே நாங்கள் எதிர்க்கின்றோம்.</p><h2>தயங்கும் அநுர&nbsp;</h2><p> </p><p>

திருடர்களை கைது செய்வது போல, நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு வந்தவர்களுக்கு எதிராகவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>

மத்திய வங்கி பிணை முறி மோசடியில் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதாக இந்த அரசாங்கம் தெரிவித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea4af4c1-2fdc-4c49-9551-b586be5b478a/26-6a965efef3221.webp' /></p><p> </p><p> 


எனினும், தற்போது அர்ஜூன் மகேந்திரன் அவருடைய பெயரை அலெக்ஸாண்டர் என மாற்றிக் கொண்டிருப்பதால் அவரை நாட்டுக்கு அழைத்து வருவதில் சட்டச் சிக்கல் இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. </p><p>

அர்ஜூன் மகேந்திரனை சிங்கப்பூரில் இருந்து நாட்டுக்குக் கொண்டுவருவதற்கு சிங்கப்பூரில் எந்த சட்டச் சிக்கல்களும் இல்லை.

அர்ஜூன் மகேந்திரனை அழைத்து வர முடியாது என அரசாங்கம் கூறுவதில் எவ்வித உண்மைத்தன்மையும் கிடையாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14771ef8-ee61-4022-b9c2-7bac5ef58efb/26-6a965effa90bd.webp' /></p><p> </p><p>மாறாக, பிணைமுறி கணக்கை அதிகரிப்பதற்கு தனக்கு யாரால், எவ்வாறு அழுத்தம் கொடுக்கப்பட்டது என்பது குறித்து அர்ஜூன் மகேந்திரன் உறுதியான சாட்சியம் ஒன்றை வழங்கியிருந்தார்.
</p><p>
அர்ஜூன் மகேந்திரன் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய நபர் தற்போது, ஜனாதிபதி அநுரகுமாரவுடனேயே இருக்கின்றார். இதன் காரணமாகவே, அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதில் அரசாங்கம் தயக்கம் காட்டுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T05:14:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தரப் பரீட்சை பௌதிகவியல் வினாத்தாளில் சிக்கல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hrcsl-petitioned-over-a-l-physics-paper-errors-1788237781"></link>
            <id>https://ibctamil.com/article/hrcsl-petitioned-over-a-l-physics-paper-errors-1788237781</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பௌதிகவியல் பல்தேர்வு வினாத்தாளில் (MCQ) 4 வினாக்கள் பிழையானவை எனச் சுட்டிக்காட்டி முறைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பௌதிகவியல் பல்தேர்வு வினாத்தாளில் (MCQ) 4 வினாக்கள் பிழையானவை எனச் சுட்டிக்காட்டி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>&nbsp;கொழும்பிலுள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் பௌதிகவியல் ஆசிரியர் ஒருவர் இந்த முறைப்பாட்டை அளித்துள்ளார்.</p><p>இந்தநிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குச் நீதியை வழங்குமாறு கோரி அவர் முறைப்பாடளித்துள்ளார்.</p><p></p><h2>ஆணைக்குழுவிடம் கோரிக்கை</h2><p>இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், பௌதிகவியல் வினாத்தாள் 1 இல் இடம்பெற்ற 17, 18, 19 மற்றும் 46 ஆகிய வினாக்கள் பிழையானவை (சரியான பதில்களைப் பெற முடியாதவை) என அந்த ஆசிரியர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afe7008b-fbc5-4dc1-b4d5-d05a1ce5523e/26-6a965e57c1fcc.webp' /></p><p>இந்த வினாத்தாள் குளறுபடி தொடர்பில் கவனம் செலுத்திய பரீட்சைகள் திணைக்களம், 46 ஆவது வினாவுக்கு மட்டுமே இலவசப் புள்ளியை (1 Mark) வழங்க உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>இந்தநிலையில் 46 ஆவது வினாவுக்கு மட்டும் புள்ளி வழங்குவது மாணவர்களுக்குச் செய்யப்படும் கடுமையான அநீதி என்றும் பிழையான 4 வினாக்களுக்கும் சேர்த்து 4 புள்ளிகளையும் (4 Marks) அனைத்து மாணவர்களுக்கும் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p>
</p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T05:11:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரகசிய விசாரணையில் அதிரடியாக முற்றுகையிடப்பட்ட சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/illegal-liquor-factory-blockaded-1788239387"></link>
            <id>https://tamilwin.com/article/illegal-liquor-factory-blockaded-1788239387</id>
            <summary type="text">குளியாப்பிட்டிய அருகே நீண்டகாலமாக இயங்கி வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

குளியாப்பிட்டிய பொலிஸ் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>குளியாப்பிட்டிய அருகே நீண்டகாலமாக இயங்கி வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.</p><p>

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீழ் தியதொர, மாதரவத்த பிரதேசத்தில், இயங்கிவந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றே இவ்வாறு முற்றுகையிடப்பட்டுள்ளது.</p><h2>சந்தேகநபர் கைது</h2><p>
</p><p>
இதன்போது, அங்கு சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக, வலான ஊழல் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72ecb301-125c-4bbc-bc1a-50580ef14ce1/26-6a965e1da03e3.webp' />&nbsp;</p><p>
</p><p>
வலான ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட இரகசிய விசாரணையைத் தொடர்ந்து, நேற்று (31) விசேட பொலிஸ் குழுவினால் இந்த முற்றுகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன்போது, சட்டவிரோத மதுபான காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் 7,560,000 மில்லி லீட்டர் கோடா அடங்கிய 40 பீப்பாய்கள், 187,500 மில்லி லீட்டர் கள்ளச் சாராயம் அடங்கிய 250 போத்தல்கள், 07 சுருள்களைக் கொண்ட 02 செப்புச் சுருள்கள், 02 எரிவாயு அடுப்புகள் மற்றும் 12.5 கிலோகிராம் கொண்ட 04 எரிவாயு சிலிண்டர்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். </p><p>மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T05:09:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய் பிரித்தானியாவிற்கு பயணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chief-minister-vijay-travels-to-the-uk-1788239496"></link>
            <id>https://jvpnews.com/article/chief-minister-vijay-travels-to-the-uk-1788239496</id>
            <summary type="text">தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் செப்டெம்பர் 10ஆம் திகதி பிரித்தானியாவிற்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 10ஆம் திகதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் செப்டெம்பர் 10ஆம் திகதி பிரித்தானியாவிற்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
செப்டெம்பர் 10ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள முதலமைச்சர் விஜய், அங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழகத்தில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/816a2340-142a-4592-b784-151940a32d28/26-6a965e8a2efe4.webp' /></p><p>

தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேலும் விரிவுபடுத்துதல், புதிய முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவை இந்த வெளிநாட்டு பயணங்களின் முக்கிய நோக்கங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>
இந்நிலையில், முதலமைச்சர் விஜய் தனது பிரித்தானிய பயணத்தின்போது, மனைவி சங்கீதாவையும் சந்திக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-01T05:08:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[முக்கிய வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் ட்ரம்பின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/strait-of-hormuz-in-very-good-condition-trump-1788238342"></link>
            <id>https://tamilwin.com/article/strait-of-hormuz-in-very-good-condition-trump-1788238342</id>
            <summary type="text">முக்கிய வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை தற்சமயம் &quot;மிகவும் நல்ல நிலையில்&quot;
உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>முக்கிய வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை தற்சமயம் "மிகவும் நல்ல நிலையில்"
உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த நிலையில் அமெரிக்கக் கடற்படையின் உதவியுடன் தினமும் சராசரியாக 30
கப்பல்கள் அந்தப் பகுதி வழியாகப் பாதுகாப்பாக பயணித்து வருவதாகக்
குறிப்பிட்டுள்ளார்.</p><h2>சீர்குலைந்துள்ள தலைமைத்தும்</h2><p>இதேவேளை ஈரானின் பொருளாதாரம், இராணுவம் மற்றும் தலைமைத்துவம்
சீர்குலைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db908289-feeb-4209-8099-d8d5d98b2494/26-6a965c0f5e1f0.webp' /></p><p>அத்துடன், ஈரான் மீதான தாக்குதல்களை
அமெரிக்கா தவிர்க்காது என்றும் சூழலுக்கு ஏற்ப தக்க பதிலடி கொடுக்கப்படும்
என்றும் எச்சரித்துள்ளார்.
</p><p>
எவ்வாறாயினும் ஹோர்முஸ் நீரிணையின் லாராக் தீவில் அமைந்திருந்த ஈரானிய ஏவுகணை
தளங்கள் மீது அமெரிக்கப் படைகள் அண்மையில் தாக்குதல் நடத்தியதால்
அப்பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T05:01:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்: ராஜராஜனை அனுப்ப மாட்டேன்.. கார்த்திக்குக்கு எதிராக சாமுண்டீஸ்வரி எடுக்கும் அதிரடி முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/karthigai-deepam-today-episode-1303-1788238295"></link>
            <id>https://viduppu.com/article/karthigai-deepam-today-episode-1303-1788238295</id>
            <summary type="text">தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். நேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். நேற்றைய எபிசோடில், ரேவதிக்காக கார்த்திக் வளைகாப்பு விழா நடத்துவதை பார்த்த சாமுண்டீஸ்வரி கடும் கோபமடைந்த நிலையில், இன்றைய எபிசோடில் பல பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறவுள்ளன.</p><p>ரோகிணி தனது விருப்பத்தினால்தான் கார்த்திக் வீட்டிற்கு சென்றதாக கூறி சாமுண்டீஸ்வரியை எதிர்த்து பேசுகிறாள். இதனால் ஏற்கனவே ஆத்திரத்தில் இருக்கும் சாமுண்டீஸ்வரி மேலும் கோபமடைகிறாள்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cfd2772-b854-4b5c-b541-24708e34e034/26-6a9659da61b51.webp' /></p><p>அதனைத் தொடர்ந்து, ரோகிணி மற்றும் மயில்வாகனம் வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது, “என் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறாள். அவள் ஆசைப்படுவதை நிறைவேற்றுவது ஒரு கணவனின் கடமை. அதனால்தான் அவளை கார்த்திக் வீட்டிற்கு அழைத்துச் சென்றேன்” என்று மயில்வாகனம் சாமுண்டீஸ்வரியிடம் தைரியமாக பதிலடி கொடுக்கிறார்.
</p><p>மறுபுறம், தனக்காக விருப்பப்பட்டபடி வளைகாப்பு நடத்தி வைத்ததற்காக ரேவதி மிகவும் மகிழ்ச்சி அடைந்து கார்த்திக்கிற்கு நன்றி தெரிவிக்கிறாள். மேலும், தங்களுக்கும் விரைவில் குழந்தை பிறக்க வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்துகிறாள். இதைக் கேட்ட பரமேஸ்வரி பாட்டி, கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததும் எல்லாம் நல்லபடியாக நடைபெறும் என்று வாழ்த்துகிறார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3efba5b8-0755-4ffa-9051-d9b817a38a9f/26-6a9659db15656.webp' /></p><p>பின்னர், கோவில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் குறித்து பேசும்போது, நான்கு எல்லைகளிலும் கருப்பசாமி விளக்கு ஏற்றுவதற்கு ராஜராஜன் வர வேண்டும் என்று கூறப்படுகிறது. அதற்கு கார்த்திக், “மாமாவை நானே அழைத்து வருகிறேன்” என்று உறுதியளிக்கிறான்.
</p><p>ஆனால் இந்த தகவல் சந்திரகலா மூலம் சாமுண்டீஸ்வரிக்கு தெரிய வருகிறது. ஏற்கனவே கார்த்திக் மீது கோபத்தில் இருக்கும் சாமுண்டீஸ்வரி, “எக்காரணம் கொண்டும் ராஜராஜனை அங்கு அனுப்ப மாட்டேன்” என்று உறுதியான முடிவை எடுக்கிறாள்.
</p><p>இதனால் கார்த்திக் தனது வாக்குறுதியை நிறைவேற்றுவாரா? சாமுண்டீஸ்வரியின் முடிவு அடுத்ததாக என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? என்ற எதிர்பார்ப்புடன் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோடை Zee தமிழ் தொலைக்காட்சியில் தவறவிடாமல் காணுங்கள்.
&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T05:00:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[களு கங்கையில் நீரில் மூழ்கிய 19 வயது இளைஞனைத் தேடும் பணி தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-young-man-bathe-kalu-ganga-has-disappeared-1788238485"></link>
            <id>https://jvpnews.com/article/a-young-man-bathe-kalu-ganga-has-disappeared-1788238485</id>
            <summary type="text">களுத்துறை ஹொரணை, நாரகல பாலத்திற்கு அருகில் களு கங்கையில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனைத் தேடும் பணிகள் தொடர்ந்து ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை ஹொரணை, நாரகல பாலத்திற்கு அருகில் களு கங்கையில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>
</p><p></p><p>இன்று (01) காலை பொலிஸ் கடற்படைப் பிரிவின் உயிர் பாதுகாப்பு குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.</p><p>நண்பர்கள் மூவரில் 19 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>
</p><h3>
 

மேலதிக விசாரணை</h3><p>இவ்வாறு காணாமல் போனவர் யால பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய சிராத் சஸ்மித என்ற இளைஞராவார்.
</p><p>
 

நேற்று (31) மாலை 7.30 மணியளவில் நீராடுவதற்காக இந்த இடத்திற்கு வந்த மூன்று இளைஞர்களில் ஒருவர் ஆற்றில் குதித்து நீந்த முயன்ற போது, பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cfe1e8f-eea3-4a11-839a-ba8c79c3f94e/26-6a965bbc46e1c.webp' /></p><p> இதன்போது, அவரைப் காப்பாற்றுவதற்காக மற்றொரு இளைஞரும் ஆற்றில் குதித்துள்ளார்.

 

காப்பாற்றச் சென்ற நபரும் நீரோட்டத்தில் சிக்கிய போதிலும், அவர் கடும் போராட்டத்திற்குப் பிறகு கரை சேர்ந்துள்ளார்.</p><p>

 

பின்னர் இது குறித்து ஹொரணை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>
 

களு கங்கையின் நீரோட்டம் அதிகமாக உள்ள பகுதியாக இது விளங்குவதால், இன்று (01) காலை பொலிஸ் கடற்படைப் பிரிவின் உயிர் பாதுகாப்பு குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். </p><p>

 

மேலும், அந்தப் பகுதியில் முதலைகளின் நடமாட்டம் காணப்படுவதால், கரையோரத்தில் தீ மூட்டிப் பாதுகாப்பைப் பலப்படுத்தப் பிரதேசவாசிகளும் அவரது நண்பர்களும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
</p><p>
 

சம்பவம் தொடர்பில் ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T05:00:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆதாரத்தை கண்டுபிடித்த மருது.. ஆவேசத்தில் அரசி.. பரபரப்பாகும் சாமந்தி...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/zee-tamizh-chamanthi-serial-latest-episode-1788237535"></link>
            <id>https://cineulagam.com/article/zee-tamizh-chamanthi-serial-latest-episode-1788237535</id>
            <summary type="text">சாமந்தி சீரியல்Zee தமிழ் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சாமந்தி சீரியலில் நேற்றைய எபிசோடில் சாமந்தி, ராஜா-ராணி போட்டோவை பார்த்து வர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சாமந்தி சீரியல்</h2><p>Zee தமிழ் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சாமந்தி சீரியலில் நேற்றைய எபிசோடில் சாமந்தி, ராஜா-ராணி போட்டோவை பார்த்து வருத்தத்தில் இருந்தார்.</p><p> இந்த நிலையில் இன்று என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

மறுபக்கம் மருதுவும் இசக்கியும் கெமிக்கல் ஃபேக்டரி தொடர்பாக விசாரித்து வருகிறார்கள். ஆனால் ஆரம்பத்தில் அவர்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e555f534-5e54-41a2-a567-5bef4981a98d/26-6a9656e0b9ce5.webp' /></p><p> </p><p>இதனால் நேரடியாக அந்த ஃபேக்டரிக்கே சென்று விசாரிக்க முயற்சி செய்கிறார்கள். அங்கும் தகவல் கொடுக்க மறுக்கப்பட்ட நிலையில், அவர்களை மிரட்டி சிசிடிவி காட்சிகளை பார்த்த மருதுவுக்கு முக்கியமான ஆதாரம் சிக்குகிறது.
</p><p>
அந்த காட்சிகளில் காட்டு ராஜா தான் கெமிக்கல் வாங்கிச் சென்றது தெரிய வர, உடனே இந்த விஷயத்தை சாமந்தியிடம் தெரிவிக்கிறார்கள். இதைக் கேட்டு சந்தோஷப்படும் சாமந்தி, "புதுசா வந்திருக்கும் இன்ஸ்பெக்டர்கிட்ட இந்த ஆதாரத்தை கொடுத்தா எல்லா பிரச்சனையும் முடிஞ்சிடும்" என்று கூறுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23074c84-eb7f-4701-a502-313e2a571681/26-6a9656e16be7a.webp' /></p><p>
</p><p>
இதே நேரத்தில் உடல்நலக்குறைவால் பார்வதி சாப்பிடாமல் படுத்துக் கொண்டிருக்கிறார். சாமந்தி எவ்வளவு சொல்லியும் அவர் சாப்பிட மறுக்கிறார். அப்போது அங்கு வரும் அர்ஜூன், பார்வதியை உட்கார வைத்து அவருக்கு சாப்பாடு ஊட்ட முயற்சி செய்கிறான்.
</p><p>
இதையெல்லாம் பார்த்த அரசி, ஆவேசமாக "அர்ஜூன்!" என்று சத்தம் போடுகிறார். </p><p>இதனால் வீட்டில் அடுத்ததாக என்ன பிரச்சனை வெடிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

**மருதுவின் கையில் சிக்கிய ஆதாரம் காட்டு ராஜாவை சிக்க வைக்குமா? அரசியின் கோபம் அர்ஜூனை என்ன செய்யும்? அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது என்பதை இன்றைய சாமந்தி எபிசோடில் காணலாம்.**&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T05:00:06+00:00</updated>
        </entry>
    </feed>
