<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-02T21:35:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனி நடக்கப்போவது வேறு...அமெரிக்காவுக்கு எதிராக ஈரானின் அடுத்த அதிரடி திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-warns-us-of-new-strategy-in-war-1788383904"></link>
            <id>https://tamilwin.com/article/iran-warns-us-of-new-strategy-in-war-1788383904</id>
            <summary type="text">ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த சில வாரங்களில் இடம்பெற்ற மிகக் கடுமையான பரஸ்பர இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் ஈரான் “பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த சில வாரங்களில் இடம்பெற்ற மிகக் கடுமையான பரஸ்பர இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் ஈரான் “புதிய உத்தியை” முன்னெடுக்கவுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறைத் தலைவர் எச்சரித்துள்ளார்.
</p><p>
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் மொஹ்சென் ரெசாயி தனது X பதிவில், அமெரிக்காவை கடுமையாக எச்சரித்துள்ளார்.
</p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>
ஈரானின் புதிய போர்க்கள உத்தி, இராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் அமெரிக்காவின் அடித்தளத்தை சிதைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

இதேவேளை, ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்கா புதிய, பெரிய மற்றும் சக்திவாய்ந்த தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec25851c-986d-46a6-934f-edfdba9d0885/26-6a98958627de4.webp' /></p><p>
</p><p>
ஹோர்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடிகளை பதிக்க ஈரான் மேற்கொண்ட முயற்சிக்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், ஈரான் தரப்பில் இருந்து இதற்குப் பதிலடி வழங்கப்பட்டால், அதைவிட மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் எனவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.</p><h2>ஈரான் பதிலடி&nbsp;</h2><p>

அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகமும், ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீதும், பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள அமெரிக்க இராணுவத்தினர் மீதும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மேற்கொண்டதாகக் கூறப்படும் சமீபத்திய தாக்குதல் முயற்சிகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளது.</p><p>

இதனிடையே, அமெரிக்க இராணுவ இலக்குகள் மீது ஈரான் பதிலடி தாக்குதல்களை நடத்தியதாக அந்நாடு தெரிவித்துள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="fa" dir="rtl">با این دست و پا زدن‌ها، نه تنها از قعر جهنمی که برای خود ساخته‌اید بیرون نخواهید آمد، بلکه به زودی خواهید دید راهبرد جدید ایران در میدان جنگ، دیپلماسی و مقابله با محاصره اقتصادی، بنیان‌‌تان را درهم خواهد شکست.</p>&mdash; محسن رضایی (@ir_rezaee) <a href="https://x.com/ir_rezaee/status/2095106961394077902?ref_src=twsrc%5Etfw">September 2, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
ஜோர்தான், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன் மற்றும் ஈராக்கின் தன்னாட்சிப் பிராந்தியமான குர்திஸ்தானின் எர்பில் ஆகிய பகுதிகளில் உள்ள அமெரிக்க இராணுவ இலக்குகள் தாக்கப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
</p><p>
“தற்காப்புக்கான இயல்பான உரிமையின் அடிப்படையிலேயே” இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெஹ்ரான் தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், அமெரிக்கா தமது பிராந்தியத்திலிருந்து இராணுவத் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு தங்கள் நிலப்பரப்பை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என அப்பகுதி நாடுகளையும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T21:30:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போர் தொடர்பில் இஸ்ரேலுக்கு ட்ரம்ப் கூறிய விடயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-said-israel-not-worry-about-resuming-war-1788380823"></link>
            <id>https://ibctamil.com/article/trump-said-israel-not-worry-about-resuming-war-1788380823</id>
            <summary type="text">ஈரானுடனான போர் மீண்டும் தொடங்குவது குறித்து இஸ்ரேல் கவலைப்படத் தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய செய்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடனான போர் மீண்டும் தொடங்குவது குறித்து இஸ்ரேல் கவலைப்படத் தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
இஸ்ரேலிய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
</p><p>
தொலைபேசி வழியிலான அந்த நேர்காணலின் போது பேசிய ட்ரம்ப், "நான் ஜனாதிபதியாக இருக்கிறேன், அதை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>மிகப்பெரிய பலத்துடன் பதிலடி</h2><p>
</p><p>
அடுத்த வாரம் தொடங்கும் யூதப் பண்டிகைக் காலத்தில் ஈரான் தங்களைத் தாக்கினால், அதற்கு மிகப்பெரிய பலத்துடன் பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் முன்னதாகத் தெரிவித்திருந்த நிலையில், ட்ரம்பின் இந்தக் கருத்து வெளிவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57a4ec33-11e1-41f9-8268-0c60f43acdd5/26-6a988a1fbd928.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், ஈரானுடன் மீண்டும் மூண்டுள்ள மோதல்கள் அதிக காலம் நீடிக்காது என ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T21:30:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 ஐ ஆராய பூரண நீதியரசர் ஆயம் நியமிக்கப்படாமைக்கு CLA கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cla-concerned-over-bench-appointed-to-probe-22-1788383435"></link>
            <id>https://jvpnews.com/article/cla-concerned-over-bench-appointed-to-probe-22-1788383435</id>
            <summary type="text">அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகளுக்காக பூரண நீதியரசர்கள் அடங்கிய ஆயத்தினை நியமிப்பதற்கான கோரிக்கை நிரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகளுக்காக பூரண நீதியரசர்கள் அடங்கிய ஆயத்தினை நியமிப்பதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டமைக்கு, பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் தமது கவலையை வௌியிட்டுள்ளார். </p><p>

பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் (CLA) தலைவர் ஸ்டீவன் திரு, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீதான உயர் நீதிமன்ற விசாரணையை அவதானிப்பதற்காக&nbsp; கலந்துகொண்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35381f9d-1174-44d9-96c1-b563d3c3a7d9/26-6a9890cd685d8.webp' />&nbsp;</p><h2>அரசியலமைப்பு&nbsp;</h2><p> </p><p>

இந்த வழக்கு தொடர்பான கவலைகள் குறித்து சட்டத்துறையைச் சேர்ந்த பலருடன் தாம் கலந்துரையாடியதாக அவர் கூறினார். </p><p>

இது தொடர்பில் மேலும் கருத்து வௌியிட்ட அவர், நீதித்துறையின் சுதந்திரத்திற்கு இது மிகவும் முக்கியமானது என்பதால், இந்த வழக்கை விசாரிக்க ஏன் ஒரு விரிவான அமர்வு அல்லது பூரண நீதியரசர்கள் அடங்கிய ஆயம் நியமிக்கப்படவில்லை என்பது சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட முக்கிய கவலைகளில் ஒன்றாகும் எனக் குறிப்பிட்டார்.</p><p></p><p> </p><p>

முக்கியமான அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை சார்ந்த வழக்குகள் வழக்கமாகப் பெரிய அமர்வுகளாலேயே விசாரணை செய்யப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், பூரண ஆயத்திற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகத் தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார். </p><p>

நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பில் கவலைக்குரிய விடயமாக இதைக் குறிப்பிட்ட திரு, விரிவான அல்லது முழுமையான அமர்வை அமைக்காமைக்கான காரணங்கள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.</p><p> 

இதேவேளை, அரசாங்கத்தினால் அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் இன்று (02) நிறைவு செய்தது. </p><p>

அந்தச் சட்ட மூலத்தின் அரசியலமைப்பு அமைவுடைமை தொடர்பான வியாக்கியானத்தை பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைப்பதாக இன்று (2) உயர்நீதிமன்றம் அறிவித்தது.</p><p></p><p> 

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையானது நேற்றும் (1) இன்றும் (2) இரண்டு நாட்களாக இடம்பெற்றிருந்தது. </p><p>

பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேன, அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர் ஆயத்தின் முன்னிலையில் இந்த மனுக்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. </p><p>

அதற்கமைய, 22ஆவது திருத்ததை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் 67 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 

அவற்றில் 41 மனுக்கள் இணையவழி (Online) மூலம் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அரசியலமைப்பு திருத்தம் ஒன்றுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் அதிகூடிய எண்ணிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T21:10:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் முக்கியஸ்தர் வீடு ஒன்றிற்கு உதவி தேடிச் சென்ற 3 தாய்மார்களுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/major-party-boycotts-jaffna-global-conference-1788382296"></link>
            <id>https://tamilwin.com/article/major-party-boycotts-jaffna-global-conference-1788382296</id>
            <summary type="text">சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தன்று &quot;நீதிக்கான நீள்பயணம்&quot; எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தன்று "நீதிக்கான நீள்பயணம்" எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு நடைபெற்றது.
</p><p>

இந்தநிலையில் குறித்த மாநாட்டிற்கு வடக்கிலுள்ள முக்கிய கட்சியொன்று கலந்துகொள்ள மாட்டோம் என்று அறிக்கை வெளியிட்டது.</p><p>

இதனால் இந்த விடயம் தமிழர்கள் மத்தியில் பேசுபொருளான நிலையில், 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் உப தலைவி அ. அமலநாயகி இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் தெளிவுப்படுத்தினார்.
</p><p>


அதாவது குறித்த கட்சியை நேரில் சென்று அழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முற்று முழுவதாக மறுப்பதாக அமலநாயகி குறிப்பிட்டார்.</p><p>

கட்சியின் முக்கியஸ்தர் வீட்டிற்கு இரண்டு நாட்களாக தொடர்ந்து சென்ற நிலையில் அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது.மீண்டும் ஒகஸ்ட் மாதமளவில்&nbsp; சென்று நீண்ட நேரமாக காத்திருந்த நிலையில் குறித்த முக்கியஸ்தர் வெளியில் சென்றுள்ளார் என்ற பதிலே கிடைத்தது.</p><p>

எனவே அழைப்பிதழை மட்டுமே கொடுத்து விட்டு வந்ததாக குறிப்பிட்டார்.
</p><p>
இந்த விடயம் தொடர்பான முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/1VkU2Km2zbg" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T20:59:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுடனான மோதல் தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/renewed-conflict-with-iran-not-last-long-trump-1788379362"></link>
            <id>https://ibctamil.com/article/renewed-conflict-with-iran-not-last-long-trump-1788379362</id>
            <summary type="text">ஈரானுடன் மீண்டும் மூண்டுள்ள மோதல்கள் அதிக காலம் நீடிக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இரு தரப்பிற்கும் இடையே அண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடன் மீண்டும் மூண்டுள்ள மோதல்கள் அதிக காலம் நீடிக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.</p><p>இரு தரப்பிற்கும் இடையே அண்மையில் இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து, உலகின் முக்கிய எரிபொருள் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணை முழுமையான கட்டுப்பாடு தற்போது அமெரிக்காவின் வசமே உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். &nbsp;</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு</h2><p> </p><p>

செய்தியாளர் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், "ஹோர்முஸ் நீரிணையை நாங்கள் எங்கள் முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம். ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான பீப்பாய்கள் எண்ணெய் ஏற்றிய பல கப்பல்களை நாங்கள் அப்பகுதி வழியாக பாதுகாப்பாக இயக்கி வருகிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd909444-41c6-40cf-a8bf-6d050fc57369/26-6a9883055ef7a.webp' /></p><p><i>Image Credit:&nbsp;abcnews</i></p><p> </p><p>

பெரும்பாலான நேரங்களில் எந்த தடங்கலுமின்றி இப்பணியை மேற்கொள்கிறோம். </p><p>

எப்போதாவது அவர்கள் ஒரு ட்ரோனை அனுப்பும்போது, நாங்கள் அதை சுட்டு வீழ்த்துகிறோம். அங்கு மிகவும் வலுவான கட்டுப்பாட்டை நாங்கள் நிறுவியுள்ளோம்," எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T20:30:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[வயல்களுக்கு வைத்த தீயால் புகைமூட்டம் – மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/smoke-from-field-fires-motorcycle-accident-1788370953"></link>
            <id>https://tamilwin.com/article/smoke-from-field-fires-motorcycle-accident-1788370953</id>
            <summary type="text">கந்தளாய் – செருவில வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள்
நேருக்கு நேர் மோதியதில் ஒரு பெண் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்தானது நேற்று(02.09....</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாய் – செருவில வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள்
நேருக்கு நேர் மோதியதில் ஒரு பெண் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.</p><p>இந்த விபத்தானது நேற்று(02.09.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.</p><h2>மோட்டார் சைக்கிள் விபத்து</h2><p>
</p><p>
காயமடைந்தவர்கள் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,
படுகாயமடைந்த பெண் மற்றும் மற்றொரு நபர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e686c394-79a9-4461-b4f5-17b4de7d8bd5/26-6a9861ce72994.webp' /></p><p>அறுவடைக்குப் பின்னர் விவசாயிகள் வயல்களில் காய்ந்த புற்களுக்கு தீ வைத்ததால்
ஏற்பட்ட புகைமண்டலம் காரணமாக வீதியில் வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு
எதிரே வந்த வாகனங்கள் தென்படாமல் விபத்து ஏற்பட்டதாக கந்தளாய் பொலிஸார்
தெரிவித்துள்ளனர். </p><p>இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T20:12:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க பாஸ்போர்ட் விதிகளில் மாற்றம் - பெற்றோர் குடியுரிமை சான்று காட்ட வேண்டும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-passport-rules-may-change-for-parents-1788379535"></link>
            <id>https://news.lankasri.com/article/us-passport-rules-may-change-for-parents-1788379535</id>
            <summary type="text">US passport rules may change for parents: அமெரிக்காவில் பாஸ்போர்ட் விதிகளில் புதிய மாற்றங்கள் வரவிருக்கின்றன.

பாஸ்போர்ட் விதிகளில் மாற்றம்குழந்தைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>US passport rules may change for parents: அமெரிக்காவில் பாஸ்போர்ட் விதிகளில் புதிய மாற்றங்கள் வரவிருக்கின்றன.
</p><h2>
பாஸ்போர்ட் விதிகளில் மாற்றம்</h2><p>குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது பெற்றோர் தங்களது குடியுரிமை அல்லது குடியேற்ற நிலையை நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம்.</p><p>

அமெரிக்க வெளிவிவகார துறை தயாரித்து வரும் வரைவு வழிகாட்டுதலின் படி, பெற்றோர் தங்கள் குடியுரிமை சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84e8a9eb-feaa-4524-8a17-6879bb64f01f/26-6a9881917ac27.webp' /></p><h2>குடியுரிமையை கட்டுப்படுத்தும் முயற்சி</h2><p>இது, ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆகஸ்ட் 6 அன்று வெளியிட்ட EO 14418 என்ற நிர்வாக உத்தரவின் தொடர்ச்சியாகும்.
</p><p>
இந்த உத்தரவு, “பிறப்புரிமை குடியுரிமை” (Birthright Citizenship) குறைக்கவும், “Birth Tourism” எனப்படும் நடைமுறையை கட்டுப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. </p><p>அதாவது, அமெரிக்காவில் குழந்தை பிறந்தால் தானாகவே குடியுரிமை கிடைக்கும் என்ற நடைமுறையை கட்டுப்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.</p><p></p><p>இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தால், குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது பெற்றோர் தங்கள் குடியுரிமை அல்லது குடியேற்ற நிலையை நிரூபிக்க வேண்டியிருக்கும்.</p><p> இதனால், அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளின் குடியுரிமை தொடர்பான விவகாரங்களில் பெரிய மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இந்த வரைவு வழிகாட்டுதலை ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. </p><p>தற்போது இது ஆலோசனை நிலையில் உள்ளது. நடைமுறைக்கு வந்தால், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளின் குடியுரிமை தொடர்பான சட்டங்களில் முக்கியமான மாற்றம் நிகழும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T20:02:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருமளவிலான போதைப்பொருளுடன் ஒருவர் கைது ; கட்டுக்கட்டாக மீட்கப்பட்ட பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/person-arrested-with-large-quantity-of-drugs-1788377005"></link>
            <id>https://jvpnews.com/article/person-arrested-with-large-quantity-of-drugs-1788377005</id>
            <summary type="text">வெல்லம்பிட்டி - சேதவத்தை பகுதியில் பெருந்தொகை போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று (2) கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபரிடம் இருந்து 8 கிலோகிர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வெல்லம்பிட்டி - சேதவத்தை பகுதியில் பெருந்தொகை போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று (2) கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "> 

சந்தேகநபரிடம் இருந்து 8 கிலோகிராம் ஐஸ் மற்றும் 4 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றபட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/031cf9d6-e16b-4915-9a6a-18a27c0c6bd3/26-6a9877af6947c.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருள்&nbsp;</h2><p style="text-align: justify; "> 

அத்துடன் போதைப்பொருள் வர்த்தகத்தினால் ஈட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பெருந்தொகை பணமும் இதன்போது சந்தேகநபரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify; ">

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

கைதானவர் சேதவத்தை கசுன் என்ற போதைப்பொருள் கடத்தல் குற்றவாளியின் உதவியாளர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "> 

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 20 கோடி ரூபாவாகும் என தெரிவிக்கப்படுகின்றது&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-02T20:00:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இலங்கை முதலிடம்! மல்லாகம் மாணவன் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/grd-five-scholarship-exam-tamil-first-place-1788378696"></link>
            <id>https://ibctamil.com/article/grd-five-scholarship-exam-tamil-first-place-1788378696</id>
            <summary type="text">புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில்
முதலிடத்தைப் பெற்று யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த மாணவன் சு. சபின்
சாதனை பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில்
முதலிடத்தைப் பெற்று யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த மாணவன் சு. சபின்
சாதனை படைத்துள்ளார்.
</p><p>யாழ். மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி
கற்று வரும் மாணவன் சு. சபின், புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளைப்
பெற்று தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
</p><p>மாணவனின் இந்தச் சிறப்பான சாதனை, அவரது குடும்பத்தினருக்கும் பாடசாலை
சமூகத்திற்கும் மட்டுமன்றி, யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக
கல்விச் சமூகத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6681cb8c-85e6-4073-ae67-e1517c8d3fdf/26-6a9880161b184.webp' /></p><p></p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T19:59:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு முன்னாள் மேயர் முகமது முஸாமிலின் மகன் கட்டுநாயக்கவில் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/eldest-son-of-ex-colombo-mayor-muzammil-arrested-1788376359"></link>
            <id>https://ibctamil.com/article/eldest-son-of-ex-colombo-mayor-muzammil-arrested-1788376359</id>
            <summary type="text">
முன்னாள் ஊவா மாகாண ஆளுநரும், கொழும்பின் முன்னாள் மேயருமான முகமது முஸாமிலின் மகனான முகமது நிஷாம் ஜமால்தீன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப...</summary>
            <content type="html"><![CDATA[<p>
முன்னாள் ஊவா மாகாண ஆளுநரும், கொழும்பின் முன்னாள் மேயருமான முகமது முஸாமிலின் மகனான முகமது நிஷாம் ஜமால்தீன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த கைது நடவடிக்கையானது, இன்று(02) பிற்பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
47 வயதான ஜமால்தீன், லண்டன் புறப்படுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தபோது, ​​குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>விமானப் பயணத் தடை</h2><p>

கொழும்பு நிதி மற்றும் மோசடிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் நடத்தப்பட்ட ஒரு விசாரணை தொடர்பாக விதிக்கப்பட்ட விமானப் பயணத் தடையின் கீழ் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/163621a2-ca7a-4326-9593-8f60f4fbfd33/26-6a9876eca7967.webp' /></p><p>

இதன்படி, அவர் கட்டுநாயக்க விமான நிலையக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, மேலதிக விசாரணைக்காக மாலை சுமார் 04.30 மணியளவில் கொழும்பில் உள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T19:50:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூப்பர்சோனிக் ஏவுகணைகள் உருவாக்க ஈரானுக்கு ரகசியமாக உதவும் ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-aiding-iran-in-supersonic-missile-program-1788370423"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-aiding-iran-in-supersonic-missile-program-1788370423</id>
            <summary type="text">Russia aiding Iran in supersonic missile program: ஈரான் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் உருவாக்க ரஷ்யா ரகசியமாக உதவிவருவதாக அறிக்கை கூறுகிறது.

ஈரானுக்கு ரக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russia aiding Iran in supersonic missile program: ஈரான் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் உருவாக்க ரஷ்யா ரகசியமாக உதவிவருவதாக அறிக்கை கூறுகிறது.</p><h2>

ஈரானுக்கு ரகசியமாக உதவும் ரஷ்யா</h2><p>2023-ஆம் ஆண்டிலிருந்து ரஷ்யா, ஈரானுக்கு அதிவேக (Supersonic) க்ரூஸ் ஏவுகணை உருவாக்கத்தில் உதவி செய்து வருவதாக பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
இந்த திட்டம், அமெரிக்காவின் விமானக் கப்பல்கள் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள முக்கிய கடற்படை கப்பல்களை தாக்கும் திறனை ஈரானுக்கு வழங்கும் என அறிக்கை கூறுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5dbb7168-ad34-446e-a28d-4d3febc34cf2/26-6a985df8d7af1.webp' /></p><p>இந்த திட்டம் ரஷ்யாவின் முன்னணி இராணுவ நிபுணர்களின் பங்களிப்புடன் நடைபெறுகிறது. குறிப்பாக, ராம்ஜெட் (Ramjet) எனப்படும் இயக்க முறைமை பயன்படுத்தி, ஒலியின் வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் பறக்கும் ஏவுகணை உருவாக்கம் நடைபெறுகிறது.
</p><p>
ஈரான் ஏற்கனவே இந்த இயக்க முறைமையை சோதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், முழுமையான அதிவேக க்ரூஸ் ஏவுகணை இன்னும் பயன்படுத்தப்படவில்லை.</p><p>

இது, ரஷ்யாவிலிருந்து ஈரானுக்கு வழங்கப்படும் மிக முக்கியமான இராணுவ தொழில்நுட்ப பரிமாற்றமாகக் கருதப்படுகிறது.
</p><p></p><p>Conflict Armament Research நிறுவனத்தின் நிபுணர் Fabian Hinz, “இத்தகைய திட்டம் ரஷ்யாவின் உயர்மட்ட அரசியல் அனுமதி இல்லாமல் சாத்தியமில்லை. ஈரான் பல ஆண்டுகளாக இந்த தொழில்நுட்பத்தை பெற விரும்பி வந்தது” எனக் கூறியுள்ளார்.
</p><p>
இந்த முன்னேற்றம், மத்திய கிழக்கு பகுதியில் பாதுகாப்பு சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கும் அபாயம் உள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள், ஈரானின் இராணுவ திறன் அதிகரிப்பை கவனமாகக் கண்காணித்து வருகின்றனர்.
</p><p>
மொத்தத்தில், ரஷ்யா-ஈரான் கூட்டணி, உலகளாவிய பாதுகாப்பு மற்றும் அரசியல் சமநிலைக்கு புதிய சவால்களை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T19:39:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[எகிப்தில் பேருந்து விபத்து ; 16 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/egypt-bus-crash-16-people-killed-1788376013"></link>
            <id>https://canadamirror.com/article/egypt-bus-crash-16-people-killed-1788376013</id>
            <summary type="text">எகிப்தின் தெற்கு சினாய் மாகாணத்தில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 28 பேர் காயமடைந்துள்ளனர்.



தஹாப்–நுவைபா வீதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>எகிப்தின் தெற்கு சினாய் மாகாணத்தில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 28 பேர் காயமடைந்துள்ளனர்.
</p><p>


தஹாப்–நுவைபா வீதியில், அல்-சாதா பகுதிக்கு முன்னதாக நுவைபா நோக்கிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததாக எகிப்து சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b635f1a-e2bc-43dd-8d19-05182421c19e/26-6a9873cebc493.webp' /></p><p>
</p><p>


விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் 20 அவசர ஊர்திகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.</p><p> காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
</p><p>


உயிரிழந்த 16 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>



காயமடைந்தவர்களுக்கு தேவையான வைத்திய சிகிச்சை, மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-02T19:30:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத மின்வேலியில் சிக்கி 14 வயது சிறுவன் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/14-year-old-boy-dies-in-illegal-electric-fence-1788373865"></link>
            <id>https://jvpnews.com/article/14-year-old-boy-dies-in-illegal-electric-fence-1788373865</id>
            <summary type="text">சிரிபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லேகம பகுதியில், காட்டு யானைகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்வேல...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சிரிபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லேகம பகுதியில், காட்டு யானைகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி 14 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">&nbsp;செவ்வாய்க்கிழமை (01) இரவு மின்சாரம் தாக்கிய நிலையில், சிறுவன் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/130fe0a7-95f6-481a-b6e7-77eadb556a16/26-6a986b6ae9be5.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p> </p><p style="text-align: justify; ">எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிரிபுர, பல்லேகம பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; ">


ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளின்படி, சந்தேகநபர் ஒருவர் தனது காணியைச் சுற்றி கம்பி வேலி அமைத்து, அதற்கு தனது வீட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தை வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



இந்நிலையில், வேலிக்கு அருகில் சென்ற சிறுவன் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; ">



சம்பவத்துடன் தொடர்புடைய சட்டவிரோத மின்வேலியை அமைத்ததாகக் கூறப்படும் நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">



சம்பவம் தொடர்பில் சிரிபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-02T19:30:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர்நிறுத்தம் நடைமுறையில்... காஸாவில் தொடரும் இஸ்ரேலிய தாக்குதல்கள் – 1,300க்கும் மேற்பட்டோர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/900-people-death-ceasefire-was-announced-in-gaza-1788375893"></link>
            <id>https://tamilwin.com/article/900-people-death-ceasefire-was-announced-in-gaza-1788375893</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமைதித் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஒக்டோபர் 10 அன்று இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் நடைமுறைக்கு
வந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமைதித் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஒக்டோபர் 10 அன்று இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் நடைமுறைக்கு
வந்தபோதிலும், காஸாவில் இஸ்ரேலியத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று
வருகின்றன.</p><p>

இந்த ஆண்டில் மட்டும் காஸாவில் 900க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக
ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><h2>போர்நிறுத்தம்&nbsp;</h2><p>

போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை மொத்தம் 1,300க்கும் அதிகமான
பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்; இதில் 301 சிறுவர்களும் அடங்குவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57eda5d0-3fc1-4a44-92cc-a9e250a5597d/26-6a987771e42e3.webp' /></p><p>

குறிப்பாக, ஏப்ரல் முதல் ஒகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் மாதம்தோறும்
100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
</p><p>
ஜூலை மாதத்தில் மட்டும் 21 சிறுவர்கள் உட்பட 152 பேர் பலியாகியுள்ளனர்.
</p><h2>&nbsp;வான்வழித் தாக்குதல்</h2><p>
கடற்கரை உணவகம், அகதிகள் முகாம்கள் மற்றும் இறுதி ஊர்வலங்கள் மீது நடத்தப்பட்ட
ட்ரோன் மற்றும் வான்வழித் தாக்குதல்களின் காணொளிகளை ஆய்வு செய்து பிபிசி
உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fffce18-878f-47e2-ab44-51b60a708db3/26-6a9877729bcb6.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, தற்காப்புக்காகவும் அச்சுறுத்தல்களை நீக்குவதற்காகவுமே தாங்கள்
செயல்படுவதாகவும், பொதுமக்கள் இழப்பைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதாகவும்
இஸ்ரேலிய ராணுவம் (IDF) தெரிவித்துள்ளது.
</p><p>
போர்நிறுத்தம் நடைமுறையில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், காஸாவில் தொடரும்
இந்தத் தாக்குதல்கள் சர்வதேச அமைதி முயற்சிகளுக்குப் பெரும் சவாலாக
அமைந்துள்ளன என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T19:22:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொங்கோவில் எபோலா வைரஸ் தொற்றினால் 3,000க்கும் அதிகமானோர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3000-people-have-died-from-ebola-in-congo-1788372716"></link>
            <id>https://tamilwin.com/article/3000-people-have-died-from-ebola-in-congo-1788372716</id>
            <summary type="text">கொங்கோ ஜனநாயகக் குடியரசில் தீவிரமடைந்து வரும் எபோலா வைரஸ் தொற்றினால்
உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,000 ஐக் கடந்துள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம்
உத்தியோகப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொங்கோ ஜனநாயகக் குடியரசில் தீவிரமடைந்து வரும் எபோலா வைரஸ் தொற்றினால்
உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,000 ஐக் கடந்துள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம்
உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
</p><p>
அந்த நாட்டின் வடகிழக்கு மாகாணங்களில் அதிவேகமாகப் பரவி வரும் இந்த எபோலா
தொற்று, கொங்கோ வரலாற்றில் பதிவான மிக மோசமான நோய்த்தொற்று பேரழிவாக
மாறியுள்ளது.</p><h2>எபோலா&nbsp;வைரஸ் தொற்று</h2><p>

அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களின்படி, இதுவரை 6,186 பேருக்குத் தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,007 ஆக உயர்ந்துள்ளது.
</p><p>
கடந்த மே மாதம் இதுரி(Ituri) மாகாணத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட
இந்தத் தொற்று, தற்போது நாட்டின் ஆறு மாகாணங்களுக்குப் பரவியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db5ecbbc-f481-45b7-855f-a7a36966a448/26-6a98717850eb3.webp' /></p><p>
</p><p>
'பண்டிபுக்யோ' (Bundibugyo) எனப்படும் இந்த எபோலா வகைக்கு இதுவரை
அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது சிகிச்சைகளோ கண்டுபிடிக்கப்படவில்லை
என்பது சுகாதாரத் துறையினருக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
</p><p>
சுகாதாரப் பணியாளர்களின் பற்றாக்குறை, போதிய பாதுகாப்பின்மை மற்றும்
கிராமப்புற மக்களின் ஒத்துழைப்பின்மை காரணமாகவே இந்தத் தொற்றைக்
கட்டுப்படுத்துவதில் சிக்கல் நிலவுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், எபோலாவினால் உயிரிழப்பவர்களில் சுமார் 60 சதவீதமானோர் வைத்தியசாலைகளுக்கு வெளியே மரணிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T19:07:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடிவெடுத்துவிட்டு எங்களை அழைக்க வேண்டாம்: தமிழரசுக் கட்சி தன்மானக் கட்சியாம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/itak-said-don-t-call-us-after-making-a-decision-1788374888"></link>
            <id>https://ibctamil.com/article/itak-said-don-t-call-us-after-making-a-decision-1788374888</id>
            <summary type="text">
தமிழ் மக்களின் தன்மானத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தனித்துவமான பழம்பெரும் அரசியல் கட்சியாக தமிழரசுக் கட்சி விளங்குவதாகவும், ஏனைய கட்சிகளோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
தமிழ் மக்களின் தன்மானத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தனித்துவமான பழம்பெரும் அரசியல் கட்சியாக தமிழரசுக் கட்சி விளங்குவதாகவும், ஏனைய கட்சிகளோ அல்லது சிவில் அமைப்புகளோ தங்களது தீர்மானங்களை எடுத்துவிட்டு பின்னர் பகிரங்கமாக அழைப்பு விடுத்தால் அதில் பங்கேற்கப் போவதில்லை எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>

வலிகாமம் தெற்கு பிரதேச சபை வளாகத்தில் இன்றையதினம் இடமபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>தமிழரசுக் கட்சி பிரசன்னமாகாது</h2><p>
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் தன்மானத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தனித்துவமானதும் பழம்பெருமை மிக்கதுமான அரசியல் கட்சியாகும். தமிழரசுக் கட்சியின் தனித்துவமும் தன்மானமும் எந்த இடங்களில் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றதோ, அந்த இடங்களில் தமிழரசுக் கட்சி பிரசன்னமாகாது. இது எங்களுடைய உறுதியான நிலைப்பாடாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2476b27f-8f02-49ea-a3aa-0b0793e1303b/26-6a98725f0854a.webp' /></p><p>
பழம்பெரும் கட்சியான தமிழரசுக் கட்சியை தனிமைப்படுத்தியோ அல்லது ஓரங்கட்டியோ தீர்மானங்களை எடுத்துவிட்டு, அதன் பின்னர் பகிரங்கமாக ‘வாருங்கள்’ என அழைப்பு விடுத்தால் எவ்வாறு நாம் அங்கு செல்ல முடியும்? அவ்வாறு அழைக்கப்படும் இடங்களுக்கு நாம் செல்லவும் மாட்டோம்.</p><p>
தமிழரசுக் கட்சி யாராவது அழைத்த இடத்தில் சென்று அமருகின்ற கட்சி அல்ல. அதற்கென ஒரு தனித்துவமும் கௌரவமும் இருக்கின்றது. இதனை ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.</p><h2>உறுதியான நிலைப்பாடு</h2><p>

தமிழரசுக் கட்சியை கடந்த காலங்களில் வழிநடத்தியவர்கள் முதுகை வளைத்து அரசியல் செய்தவர்கள் அல்லர். அவர்கள் முதுகை நிமிர்த்தி, தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/410f5f9f-b8a1-4bef-8f09-d102577e2ca4/26-6a98725fb4d3e.webp' /></p><p>
அந்த வழியில் வந்த நாங்களும் வளைந்து செல்ல முடியாது. எங்களை மதிப்பவர்களிடம் ஒரு படி கீழிறங்கி சென்று பேசுவதற்கும், இணைந்து செயல்படுவதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம். ஆனால் எங்களை மதிக்காதவர்களிடம் எங்களுடைய தன்மானத்தையும் கௌரவத்தையும் விட்டுக்கொடுத்து செயல்பட முடியாது.&nbsp;</p><p>தேவைப்பட்டால் ஒரு படி மேலே சென்று எங்களுடைய நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்தவும் தயாராக இருக்கின்றோம். இதனை நான் ஆணித்தரமாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்” என்றார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T19:01:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[லேக் ஒன்டாரியோ புதிய பெயர் பலகையை திறக்க 25,000 டொலர் செலவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ontario-spent-25k-on-doug-fords-new-lake-1788369652"></link>
            <id>https://canadamirror.com/article/ontario-spent-25k-on-doug-fords-new-lake-1788369652</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உத்தரவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், கனடாவில் ஓன்டாரியோ மாகாணப் பிரதமர் டக் ஃபோர்டு திறந்தவைத்த புதிய &quot;...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உத்தரவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், கனடாவில் ஓன்டாரியோ மாகாணப் பிரதமர் டக் ஃபோர்டு திறந்தவைத்த புதிய "லேக் ஒன்டாரியோ, இப்போதும் எப்போதும்" பெயர் பலகைக்கு 25,000 டொலர்கள் செலவிடப்பட்டதாக அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p> 
கனடா-அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்த நிலையில், அமெரிக்க அரசு ஆவணங்கள் மற்றும் வரைபடங்களில் 'லேக் ஒன்டாரியோ' ஏரியின் பெயரை 'லேக் அமெரிக்கா' என மாற்றுமாறு டொனால்ட் டிரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். </p><p>
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வினோனா பகுதியில் இந்த பிரம்மாண்ட இருமொழிப் பெயர் பலகையை நிறுவிய டக் ஃபோர்டு, "ஜனாதிபதி டிரம்போ அல்லது வேறு யாரேனும் மறந்துவிட்டால் நினைவூட்டவே இதை வைத்துள்ளோம்; இது இப்போதும் எப்போதும் லேக் ஒன்டாரியோதான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd29a464-5c38-4f5f-988a-64f4d6665b5f/26-6a985af5851bc.webp' /></p><p> </p><p>நாங்கள் யாரிடமும் பணிந்து போகமாட்டோம்" என்று தெரிவித்தார். 
கனடியப் பிரதமர் மார்க் கார்னி இந்த பெயர் மாற்றத்தை முற்றிலுமாக நிராகரித்துள்ளார். </p><p>
'ஒன்டாரியோ' என்ற பெயர் 400 ஆண்டுகளுக்கு மேலான பழமையான "வெண்டாட்" பழங்குடியின மொழியிலிருந்து உருவானது எனவும், அதற்கு "பெரிய மற்றும் அழகிய ஏரி" என்று பொருள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T19:00:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அல்பெர்ட்டாவில் கோர விபத்து: செமி-ட்ரக் மோதியதில் 41 வயது நபர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/1-killed-1-injured-in-highway-2-crash-1788370125"></link>
            <id>https://canadamirror.com/article/1-killed-1-injured-in-highway-2-crash-1788370125</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் வடக்கு அல்பெர்ட்டா பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் கிராண்ட் பிரெய்ரி பகுதியைச் சேர்ந்த 41 வயது நபர் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் வடக்கு அல்பெர்ட்டா பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் கிராண்ட் பிரெய்ரி பகுதியைச் சேர்ந்த 41 வயது நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><p> 
ஸ்பிரிட் ரிவர் (Spirit River) பகுதிக்கு அருகில் உள்ள நெடுஞ்சாலை 2 இல் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில், பாதிக்கப்பட்டவரின் பிக்கப் டிரக்கும் ஒரு செமி-ட்ரக்கும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.</p><p> 
விபத்தில் சிக்கிய பிக்கப் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/240954d5-211f-4d15-b602-5400292a7eb2/26-6a985ccf3efa2.webp' /></p><p> </p><p>
உடன் பயணம் செய்த மற்றொரு பயணிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதை அடுத்து, அவர் 'ஸ்டார்ஸ்' வான்வழி மருத்துவ ஊர்தி மூலம் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.</p><p> 
செமி-டிரக் ஓட்டுநர் எந்தக் காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாகத் தப்பினார்.</p><p> 
விபத்து நடந்த பகுதியில் காவல்துறையினர் மற்றும் புலனாய்வாளர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டதால், அப்பகுதி பல மணி நேரம் போக்குவரத்துக்காக மூடப்பட்டிருந்தது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T18:59:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நொடியில் மாறிய வாழ்க்கை ; குடும்பத்தையும் இழந்து, பல கோடிகளையும் இழந்த தொழிலதிபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/businessman-loses-family-and-multi-million-fortune-1788375302"></link>
            <id>https://jvpnews.com/article/businessman-loses-family-and-multi-million-fortune-1788375302</id>
            <summary type="text">இமயமலையில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக திபெத், சீன எல்லையில் ஒரு செயற்கையாக ஒரு ஏரி உருவாகி, அந்த ஏரி உடைந்து அதிலிருந்து நீர் வெளியேறி வடக்கு நேபாளத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இமயமலையில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக திபெத், சீன எல்லையில் ஒரு செயற்கையாக ஒரு ஏரி உருவாகி, அந்த ஏரி உடைந்து அதிலிருந்து நீர் வெளியேறி வடக்கு நேபாளத்தில் உள்ள ஆறுகளில் பாய்ந்ததால் அந்த நாட்டில் உள்ள நான்கு ஊர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.</p><p style="text-align: justify; ">வெள்ளத்தில் சிக்கிய இதுவரை 1000-த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தவிட்டனர்.&nbsp;</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6aefc306-c1d3-4ca0-bb42-f76d9f6ece68/26-6a987107f36be.webp' /></p><h2 style="text-align: justify; ">ஆடை வியாபாரம்&nbsp;</h2><p style="text-align: justify; "> இந்நிலையில்தான் நேபாள வெள்ளத்தால் அங்கு ஆடை வியாபாரம் செய்து கொண்டிருந்த உத்தரப்பிரதேச சேர்ந்த இந்திய தொழிலதிபர் ஒரே நாளில் நடுத்தெருவுக்கு வந்திருக்கிறார்.</p><p style="text-align: justify; "> வெள்ளப்பெருக்கில் சிக்கி அவரின் மூன்றடுக்கு வீடு, 4 கடைகள் மற்றும் 4 குடோன்களை அசோக்குமார் இழந்துவிட்டார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இதனால் 45 கோடி மதிப்பிலான தொழிலை அவர் முற்றிலுமாக இழந்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.. அதோடு வெள்ளத்தில் அவரின் குடும்ப உறுப்பினர்கள் இரண்டு பேரையும் அவர் இழந்துவிட்டார். </p><p style="text-align: justify; ">தற்போது அணிவதற்கு சட்டை கூட இல்லாமல் மற்றவர்களிடம் வாங்கி அணியும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருக்கிறார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-02T18:55:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்லாந்து சென்றடைந்த அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-aircraft-arrives-thailand-after-286-days-1788371774"></link>
            <id>https://tamilwin.com/article/us-aircraft-arrives-thailand-after-286-days-1788371774</id>
            <summary type="text">சுமார் 286 நாட்கள் தொடர்ச்சியாக கடலில் பயணித்த அமெரிக்க கடற்படையின்
யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் என்ற விமான தாங்கி போர்க்கப்பல், ஓய்வு மற்றும்
பராமர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுமார் 286 நாட்கள் தொடர்ச்சியாக கடலில் பயணித்த அமெரிக்க கடற்படையின்
யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் என்ற விமான தாங்கி போர்க்கப்பல், ஓய்வு மற்றும்
பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக தாய்லாந்தின் லாம் சபாங் துறைமுகத்தைச்
சென்றடைந்துள்ளது.
</p><p>
மத்திய கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற ஈரானுக்கு எதிரான போரின் போது, கடற்படை
முற்றுகை மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளில் இந்தப்போர்க்கப்பல் முக்கிய
பங்காற்றியுள்ளது.</p><h2>அமைதி வழி ஓய்வு நடவடிக்கை</h2><p>
</p><p>
கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனது பயணத்தை ஆரம்பித்த இந்தப் போர்க்கப்பல்,
நவீன கடற்படை வரலாற்றில் மிக நீண்ட நாட்கள் தொடர்ச்சியாகக் கடலில் பயணித்து
புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.
</p><p>
சுமார் 5,000 கடற்படை மற்றும் கடல்சார் வீரர்களைக் கொண்ட இந்தப் போர்க்கப்பலின்
ஊழியர்களுக்கு ஓய்வளிக்கும் வகையிலேயே தாய்லாந்தில் இந்த 5 நாட்கள் தங்குமிடம்
ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>1954ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் நெருங்கிய ஒப்பந்த கூட்டாளியாக தாய்லாந்து விளங்கி வரும் நிலையில், வழக்கமான அமைதி வழி ஓய்வு நடவடிக்கைகளுக்காகவே இந்தக் கப்பல் வருகை தந்துள்ளதாக தாய்லாந்து அரசு தெளிவுபடுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bee31be8-35d0-4d19-92de-1971b55d3580/26-6a9865824dd7f.webp' /></p><p>

நீண்டகாலப் போர்ப் பயிற்சியின் காரணமாக கப்பலின் வெளிப்பகுதி துருப்பிடித்த
நிலையில் காணப்பட்ட போதிலும், அதன் தளத்தில் அதிநவீன எஃப்-35 (F-35) போர்
விமானங்கள் மற்றும் உலங்கு வானூர்திகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
</p><p>
அத்துடன், ஆயிரக்கணக்கான அமெரிக்கப் படையினரின் இந்த வருகை காரணமாக, அருகில்
உள்ள பட்டாயா சுற்றுலா நகரத்தின் உள்ளூர் வியாபாரம் மற்றும் பொருளாதார
நடவடிக்கைகளில் பெரும் வளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
அதேநேரம், படையினரின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு குறிப்பிட்ட சில ஆபத்தான
விளையாட்டுகளுக்குத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புப் பணிகளும்
பலப்படுத்தப்பட்டுள்ளன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T18:48:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[டீசல் கடத்திய வெளிநாட்டவர்களை கப்பலுடன் கைப்பற்றிய ஈரான் படைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-seizes-barge-for-smuggling-of-diesel-1788373661"></link>
            <id>https://ibctamil.com/article/iran-seizes-barge-for-smuggling-of-diesel-1788373661</id>
            <summary type="text">சுமார் 382,000 லிட்டர் டீசல் எரிபொருளைக் கடத்தியதாகக் கூறப்படும் ஒரு வெளிநாட்டு கப்பலை, வளைகுடாக் கடற்பரப்பில் இன்று (02)புதன்கிழமை ஈரான் அதிகாரிகள் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுமார் 382,000 லிட்டர் டீசல் எரிபொருளைக் கடத்தியதாகக் கூறப்படும் ஒரு வெளிநாட்டு கப்பலை, வளைகுடாக் கடற்பரப்பில் இன்று (02)புதன்கிழமை ஈரான் அதிகாரிகள் கைப்பற்றியதாகவும், அதில் இருந்த 11 வெளிநாட்டினரைக் கைது செய்ததாகவும் அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது.</p><p>வடக்கு வளைகுடாவில் ஒரு கப்பலில் பெட்ரோலியப் பொருட்கள் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஈரான் பாதுகாப்புப் படைகள் அந்த கப்பலுக்கு எதிராக ஒரு நடவடிக்கையைத் தொடங்கியதாக ஐஆர்என்ஏ கூறியது.</p><h2>கப்பலில் இருந்த பதினொரு வெளிநாட்டினரும் தடுத்து வைப்பு</h2><p>
</p><p>
அபாதானில் உள்ள ஈரான் எல்லைக் காவலர்கள் அந்தப் கப்பலை வழிமறித்து, 382,000 லிட்டர் டீசலைக் கைப்பற்றியதாக அந்த அறிக்கை தெரிவித்தது.

 கப்பலில் இருந்த பதினொரு வெளிநாட்டினரும் தடுத்து வைக்கப்பட்டனர், இருப்பினும் அவர்களின் தேசியம் வெளியிடப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f923910-0e79-438e-8d32-ca107cb1c924/26-6a986dd17b2ee.webp' /></p><p>
</p><p>
இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விவரங்களை வழங்கும் அதிகாரபூர்வ அறிக்கை எதுவும் ஈரான் அதிகாரிகளிடமிருந்து உடனடியாக வெளியிடப்படவில்லை.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T18:41:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அகில இலங்கை ரீதியில் முதலிடம்: புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்.மாணவன் சாதனை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/all-island-first-place-in-tamil-medium-scholarship-1788373122"></link>
            <id>https://tamilwin.com/article/all-island-first-place-in-tamil-medium-scholarship-1788373122</id>
            <summary type="text">புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில்
முதலிடத்தைப் பெற்று யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த மாணவன் சு. சபின்
சாதனை பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில்
முதலிடத்தைப் பெற்று யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த மாணவன் சு. சபின்
சாதனை படைத்துள்ளார்.
</p><p>யாழ். மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி
கற்று வரும் மாணவன் சு. சபின், புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளைப்
பெற்று தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.</p><h2>அகில இலங்கை முதலிடம்&nbsp;</h2><p>
</p><p>மாணவனின் இந்தச் சிறப்பான சாதனை, அவரது குடும்பத்தினருக்கும் பாடசாலை
சமூகத்திற்கும் மட்டுமன்றி, யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக
கல்விச் சமூகத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3197570-8255-44dd-94e8-86061f262ff9/26-6a986c8f2f563.webp' /></p><p>2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று(2) வெளியானமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T18:40:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக பாலியல் தொழில் ; மீட்கப்பட்ட பெண்கள் ; பங்களாவில் காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/women-rescued-from-sex-trade-promised-film-roles-1788373289"></link>
            <id>https://jvpnews.com/article/women-rescued-from-sex-trade-promised-film-roles-1788373289</id>
            <summary type="text">சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஆட்டோவில் அழைத்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுமி, ‘என்னை காப்பாற்றுங்கள்..’ என கத்தி கூச்சலிட்ட நிலையில், பொதுமக்கள் அந்த ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஆட்டோவில் அழைத்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுமி, ‘என்னை காப்பாற்றுங்கள்..’ என கத்தி கூச்சலிட்ட நிலையில், பொதுமக்கள் அந்த ஆட்டோவை மடக்கிப்பிடித்து சிறுமியை மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
</p><p>
அந்த சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை காட்டி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்களை சென்னைக்கு அழைத்து வந்து ராமாபுரம் பங்களாவில் சிறை வைத்தது தெரிய வந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd203aa5-4559-43d9-bae5-2b2bbe032a44/26-6a98692b065ef.webp' /></p><h2>பாலியல் தொழில்&nbsp;</h2><p> மேலும் அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் சிறுமி பொலிசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


</p><p>இதையடுத்து போலிசார் சம்பந்தப்பட்ட பங்களாவில் அதிரடி சோதனை நடத்தி, அங்கிருந்த சிறுமிகள் உள்ளிட்ட சுமார் 10 பெண்களை மீட்டனர்.</p><p> இவர்களில் வங்கதேசத்தை சேர்ந்த இரண்டு பெண்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>இந்த கும்பலின் தலைவி என சந்தேகிக்கப்படும் பெண் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>மேலும் சென்னையில் அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக கூறப்படும் 5 பேரை பொலிசார் தற்போது கைது செய்துள்ளனர்.&nbsp; </p><p>

</p>]]></content>
            <updated>2026-09-02T18:21:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணைக்கு ட்ரம்பின் பெயர்: ட்ரம்பின் அதிரடி பதிவு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-suggests-renaming-strait-of-hormuz-himself-1788366565"></link>
            <id>https://tamilwin.com/article/trump-suggests-renaming-strait-of-hormuz-himself-1788366565</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணையின் பெயரை “ட்ரம்ப் நீரிணை” (Trump Strait) என மாற்றலாமா என தனது Truth Social தளத்தில் பதிவிட்டுள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணையின் பெயரை “ட்ரம்ப் நீரிணை” (Trump Strait) என மாற்றலாமா என தனது Truth Social தளத்தில் பதிவிட்டுள்ளார்.
</p><p>
“இப்போது அது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதால், ஹோர்முஸ் நீரிணையின் பெயரை ‘ட்ரம்ப் நீரிணை’ என மாற்றலாமா? அமெரிக்காவைப் போலவே இதுவும் முன்னெப்போதையும் விட சூடாக இருக்கும்!” என ட்ரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>ட்ரம்ப் நீரிணை</h2><p>
</p><p>
ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், ட்ரம்பின் இந்தப் பதிவு வெளியாகியுள்ளது.</p><p><iframe src="https://truthsocial.com/@realDonaldTrump/117202132375758936/embed" class="truthsocial-embed" style="max-width: 100%; border: 0" width="600" allowfullscreen="allowfullscreen"></iframe><script src="https://truthsocial.com/embed.js" async="async"></script></p><p> 

முன்னதாகவும் இந்த நீரிணை மீது அமெரிக்கா கட்டுப்பாட்டை கொண்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T18:07:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாரிகள் கண்ணில் மண்ணைத் தூவிய வேட்டைக்காரன்! சமூக ஊடகங்களில் பரவும் பரபரப்பு காணொளிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-hunter-in-the-yala-forest-1788371407"></link>
            <id>https://ibctamil.com/article/the-hunter-in-the-yala-forest-1788371407</id>
            <summary type="text">யால தேசியப் பூங்காவின் பிரிவு 5-இல் உள்ள வெஹரகல பகுதியில், எந்தவித அச்சமுமின்றி பகிரங்கமாக விலங்குகளை வேட்டையாடும் நபர் ஒருவர் தொடர்பான காணொளிகள் தற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யால தேசியப் பூங்காவின் பிரிவு 5-இல் உள்ள வெஹரகல பகுதியில், எந்தவித அச்சமுமின்றி பகிரங்கமாக விலங்குகளை வேட்டையாடும் நபர் ஒருவர் தொடர்பான காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.</p><p>

இந்நிலையில், குறித்த சந்தேகநபர், தற்போது அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை தேடி வருவதாகவும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம், இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்த நாளிலிருந்து, பணியில் இருந்த வனக்காவலர், சம்பந்தப்பட்ட வேட்டைக்காரரைத் தேடுவதற்காக 2 நாட்கள் பூங்காவை ஆய்வு செய்ததாக தெரிவித்துள்ளது.</p><p></p><h2>தப்பியோட்டம்</h2><p>இருப்பினும், அந்த வேட்டைக்காரரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், அவர் தற்போது தான் வசிக்கும் பகுதியை விட்டும் தப்பிச் சென்றுவிட்டதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1595844305283299%2F&show_text=false&width=560&t=0" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>
</p><p>
இந்த வேட்டைக்காரரைக் கைது செய்வதற்காக வனவிலங்கு அதிகாரிகள் தற்போது தொடர் விசாரணைகளை நடத்தி வருவதாக தெரியருகிறது.
</p><p>
இதேவேளை, சர்ச்சைக்குரிய இந்தச் சம்பவத்திற்கு முன்பு, சம்பந்தப்பட்ட வேட்டைக்காரர் வனவிலங்கு அதிகாரிகளால் மூன்று முறை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T18:01:42+00:00</updated>
        </entry>
    </feed>
