<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-27T05:26:36+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[10M உயர திடீர் வெள்ளத்தால் உருக்குலைந்த நாடு: நேபாளத்தில் உள்ள இலங்கையர்களின் நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-sri-lankans-reported-affected-by-nepal-floods-1787804841"></link>
            <id>https://ibctamil.com/article/no-sri-lankans-reported-affected-by-nepal-floods-1787804841</id>
            <summary type="text">நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் போட்கோஷி ஆற்றில் ஏற்பட்ட பேரழிவுமிக்க திடீர் வெள்ளப்பெருக்கில் இலங்கையர்கள் எவரும் உயிரிழக்கவோ அல்லது காயமடையவோ இல்லை எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் போட்கோஷி ஆற்றில் ஏற்பட்ட பேரழிவுமிக்க திடீர் வெள்ளப்பெருக்கில் இலங்கையர்கள் எவரும் உயிரிழக்கவோ அல்லது காயமடையவோ இல்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் பனிப்பாறை சரிவு மற்றும் திடீர் நிலச்சரிவு காரணமாகப் போட்கோஷி ஆற்றில் உருவான 8 முதல் 10 மீற்றர் உயரமான பெரும் வெள்ள அலைகள் கடுமையான பேரழிவை ஏற்படுத்தியுள்ளன.</p><p>இந்த திடீர் வெள்ளப் பெருக்கில் ஆற்றங்கரையோரத்திலிருந்த பல்வேறு கட்டிடங்கள், வாகனங்கள், ஆற்றின் குறுக்கே இருந்த பாலங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன.</p><p></p><h2>உலகம் முழுவதும் அதிர்ச்சி</h2><p> இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a32f1fa4-9f40-4cfe-9d27-0064d86f5c9e/26-6a8fc2b38ef62.webp' />&nbsp;&nbsp;</p><p>
</p><p>தற்போது வரை நேபாளைத்தைச் சேர்ந்த 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் 698 பேர் மாயமாகியிருப்பதாகவும் நேபாள அரசு அதிகாரப்பூர்வ தகவலைத் தெரிவித்துள்ளது.</p><p>குறிப்பாக, தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் 100க்கும் மேற்பட்டோர் மாயமாகியிருப்பதாகவும், அமெரிக்கர்கள் 54 பேர் மாயமாகியிருப்பதாகவும், 34 ஆஸ்திரேலியர்கள் மாயமாகியிருப்பதாகவும், 33 பிரிட்டன் நாட்டவர்கள் மாயமாகியிருப்பதாகவும் நேபாள சுற்றுலா துறை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>எவரும் பாதிக்கப்படவில்லை</h2><p>நேபாளத்தில் நிலவும் அவசர நிலைமையைக் கருத்தில் கொண்டு, அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் விழிப்புடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33246c10-efd6-4c56-b9fd-aca7c8d389a5/26-6a8fc2b44ba51.webp' />&nbsp;&nbsp;</p><p>
எனினும் இப்பேரழிவில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>நேபாளத்தில் வசிக்கும் 85 முதல் 100 வரையிலான இலங்கையர்களின் நிலைமையைக் காத்மண்டுவிலுள்ள இலங்கைத் தூதரகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், மேலதிக தகவல்கள் உடனுக்குடன் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அத்துடன்அந்நாட்டில் அவசர உதவி அல்லது ஒருங்கிணைப்பு தேவைப்படும் இலங்கையர்கள் காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தை 24 மணி நேர Hot line +977 9851048653 அல்லது slemk.kathmandu@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாக தொடர்புகொள்ளலாம்&nbsp;என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T05:25:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாடகை சொகுசு காரில் சட்டவிரோத மதுபானம் கடத்தல் ; இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-arreste-smugg-illegal-liquor-rented-luxury-car-1787808034"></link>
            <id>https://jvpnews.com/article/two-arreste-smugg-illegal-liquor-rented-luxury-car-1787808034</id>
            <summary type="text">வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி புத்தளம் வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தி புத்தளம் வென்னப்புவவில் இருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோத மதுபானத் தொகையுடன் மதுபான கடத்தல்காரர் ஒருவரின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><p> 

சந்தேக நபர்கள் இருவருடன், சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான 8 பைகளில் அடைக்கப்பட்ட 27,000 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபான ஸ்பிரிட் மற்றும் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கார் என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. </p><p>

மேல் மாகாண புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, கிந்தெல்பிட்டி பகுதியில் வைத்து இந்த சந்தேகத்திற்குரிய காரை நிறுத்தி சோதனையிட்ட போது, ​​அதன் பின்பக்க இருக்கைகள் அகற்றப்பட்டு மதுபானப் பைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f858b7a-bdc2-4a48-a015-b57fed2a7f84/26-6a8fc9236e8d5.webp' /></p><p> 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இந்த மதுபானம் ஹிரண பொலிஸ் பிரிவைச் சேர்ந்த மதுபான கடத்தல்காரரான 'சலா' என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் பாணந்துறை கல்துடே (Galthude) மற்றும் பாணந்துறை ஹிரண பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். </p><p>

சந்தேக நபர்கள் இருவரையும் பாணந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து, அவர்கள் தம்மை குற்றமற்றவர்கள் எனத் தெரிவித்தமையால், வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.</p><p> 

இச்சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T05:21:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: எந்தெந்த ராசிகளுக்கு பாதிப்பு அதிகம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/chandra-grahan-in-aquarius-on-28-who-get-bad-luck-1787805589"></link>
            <id>https://manithan.com/article/chandra-grahan-in-aquarius-on-28-who-get-bad-luck-1787805589</id>
            <summary type="text">இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் ஆகஸ்ட் 28-ஆம் தேதி நிகழவுள்ளது. இந்திய நேரப்படி, இந்த சந்திர கிரகணம் காலை 6.53 மணிக்குத் தொடங்கி, மதியம் 12.31 மணிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் ஆகஸ்ட் 28-ஆம் தேதி நிகழவுள்ளது. இந்திய நேரப்படி, இந்த சந்திர கிரகணம் காலை 6.53 மணிக்குத் தொடங்கி, மதியம் 12.31 மணிக்கு முடிவடைகிறது. இந்த கிரகணம் பகல் வேளையில் நிகழ்வதால், இந்தியாவில் இருந்து இதனைப் பார்க்க முடியாது.</p><p>இருப்பினும், ஜோதிடத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, கிரகணம் என்பது பொதுவாக ஒரு மோசமான நிகழ்வாகவே கருதப்படுகிறது.அதுவும் இந்த சந்திர கிரகணம் சனி பகவானின் ஆட்சி ராசியான கும்ப ராசியில் நிகழ்வதால், இதன் தாக்கம் கூடுதல் முக்கியத்துவம் பெறுவதாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dff155f9-2953-4293-8934-9d1359e5a2d7/26-6a8fc8f8c2551.webp' /></p><p></p><p>
இதன் காரணமாக, இந்த கிரகணத்தின் எதிர்மறையான விளைவுகள் பலமடங்கு அதிகரிக்கக்கூடும் என்று ஜோதிட நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன.</p><p> இந்த கிரகணத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களிடமும் ஏதேனும் ஒரு வகையில் காணப்படலாம் என்றாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் மட்டும் கூடுதல் கவனத்துடன் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஜோதிட கணிப்புகள் குறிப்பிடுகின்றன.&nbsp;</p><p>
அந்த வகையில், கும்ப ராசியில் நிகழவுள்ள 2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e66b1ed2-1a28-45f0-980a-8a6f01684a27/26-6a8fc8f9737da.webp' /></p><h2>
</h2><p>2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணத்தால் கடக ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிப்பதால் மன அழுத்தமும், ஆரோக்கியப் பிரச்சனைகளும் ஏற்படலாம்.</p><p> எனவே போதிய ஓய்வு எடுத்து, உடல்நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மேலும், இக்காலத்தில் எந்த முடிவையும் அவசரமாக எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.</p><p>குறிப்பாக புதிய சொத்து வாங்குவது அல்லது பெரிய முதலீடுகளை செய்வதை இந்த காலகட்டத்தில் தவிர்ப்பது நல்லது. இல்லையேல் நிதி இழப்பை சந்திக்க நேரிடலாம்.</p><h2>
கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41314c29-55ed-4fbc-b85f-e35d8764f589/26-6a8fc8fa266cb.webp' /></p><p>சந்திர கிரகண காலத்தில் கன்னி ராசிக்காரர்கள் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற வார்த்தைகள் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.</p><p>கடின உழைப்புக்கு ஓரளவு பலன் கிடைத்தாலும், குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பேச்சில் நிதானத்துடன் இருப்பதோடு, தேவையற்ற செலவுகளையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.</p><p>புதிய தொழில் தொடங்குவது தொடர்பில் இந்த காலகட்டத்தில் சற்று எச்சரிக்கையாக முடிவெடுக்க வேண்டியது அவசியம்.</p><p>
</p><h2>
கும்பம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f4c6349-70ac-4f75-8745-f9399bb1e451/26-6a8fc8facf476.webp' /></p><p></p><p>2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணத்தால் கும்ப ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.சிறிய அலட்சியமும் பெரிய இழப்பை ஏற்படுத்தலாம்.</p><p> வியாபாரிகள் லாபம் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். தொழிலில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், புதிய திட்டங்களைத் தொடங்கும்போதும் செயல்படுத்தும்போதும் கூடுதல் கவனம் தேவை.</p><p>பணியிடத்திலும் சரி குடும்ப உறவுகளிடமும் சரி வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். இல்லையேல் சிறிய வாக்குவாதங்களும்&nbsp; மோதலாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது.&nbsp;</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T05:20:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற 19 இந்தியர்கள் மடக்கிப் பிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/19-indians-arrested-to-smuggle-gold-into-india-1787805837"></link>
            <id>https://tamilwin.com/article/19-indians-arrested-to-smuggle-gold-into-india-1787805837</id>
            <summary type="text">இலங்கையிலிருந்து நூதனமான முறையில் இந்தியாவுக்குத் தங்கம் கடத்த முயன்ற
இந்திய நாட்டைச் சேர்ந்த 19 பேர் காங்கேசன்துறை ஊடாகப் பயணம் செய்யத் தயாரான
போது...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையிலிருந்து நூதனமான முறையில் இந்தியாவுக்குத் தங்கம் கடத்த முயன்ற
இந்திய நாட்டைச் சேர்ந்த 19 பேர் காங்கேசன்துறை ஊடாகப் பயணம் செய்யத் தயாரான
போது இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(26.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 சந்தேகநபர்கள்</h2><p>
</p><p>
காங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடாக இந்தியாவின் நாகப்பட்டினத்துக்குப்
புறப்படத் தயாராக இருந்த 19 பயணிகளையும் சுங்க அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில்
தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83715aec-e40e-4633-a8d0-28c37ddb8d9a/26-6a8fc86f634ff.webp' /></p><p>
விசாரணைகளின் அடிப்படையில், இவர்கள் தங்கத்தை நூதனமான முறையில் மறைத்து வைத்து
கடத்த முயன்றது தெரியவந்துள்ளது.</p><p> இதையடுத்து, தடுத்து வைக்கப்பட்டுள்ள 19
சந்தேகநபர்களையும் ஸ்கானிங் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல சுங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்ட அனைவரும் இந்திய நாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>

இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மேலதிக
விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T05:17:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யேர்மனியில் ஊஞ்சல் இராட்டினத்தில் சிக்கிய பார்வையாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/spectators-trapped-swing-ride-in-germany-hamburg-1787807638"></link>
            <id>https://canadamirror.com/article/spectators-trapped-swing-ride-in-germany-hamburg-1787807638</id>
            <summary type="text">&amp;nbsp; யேர்மனியில் ஊஞ்சல் இராட்டினத்தில் சிக்கியிருந்த திருவிழா பார்வையாளர்கள் மீட்கப்பட்டனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, 70 மீட்டர் (230 அடி) நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யேர்மனியில் ஊஞ்சல் இராட்டினத்தில் சிக்கியிருந்த திருவிழா பார்வையாளர்கள் மீட்கப்பட்டனர்.
</p><p>
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, 70 மீட்டர் (230 அடி) நீளமுள்ள அந்த சவாரி வாகனம் பழுதடைந்து நகர்வதை நிறுத்தியதால், 23 பயணிகள் பாதி வழியில் சிக்கிக்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62cbea48-8ccf-4cb6-843f-355919b18e08/26-6a8fc797cb7f9.webp' /></p><p>
மத்திய ஹாம்பர்க்கில் உள்ள ஊஞ்சல் இராட்டினத்தில் 25 மீட்டர் (82 அடி) உயரத்தில் சிக்கிக்கொண்டிருந்த சுமார் இருபதுக்கும் மேற்பட்ட திருவிழா பார்வையாளர்கள், 90 நிமிடப் போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டனர்.
</p><p>
ஹம்பர்கர் டோம் திருவிழா, நகரின் செயிண்ட்-பாலி பகுதியில் ஆண்டுக்கு மூன்று முறை நடத்தப்படுகிறது. இது ஜெர்மனியின் மிக நீண்ட காலமாக நடைபெறும் மற்றும் அதிக பார்வையாளர்களைக் கொண்ட கேளிக்கைச் சந்தைகளில் ஒன்றாகும். ஆண்டுதோறும் சுமார் 10 மில்லியன் விருந்தினர்களை இது ஈர்க்கிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T05:11:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெளிவிவகார அமைச்சருடன் தொலைபேசியில் உரையாடிய விஜித]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vijitha-had-a-telephone-nepalese-foreign-minister-1787807004"></link>
            <id>https://jvpnews.com/article/vijitha-had-a-telephone-nepalese-foreign-minister-1787807004</id>
            <summary type="text">நேபாள வெளிவிவகார அமைச்சர் சிசிர் கனாலுக்கும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திற்கும் இடையில் இன்று (27) தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாள வெளிவிவகார அமைச்சர் சிசிர் கனாலுக்கும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திற்கும் இடையில் இன்று (27) தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04f932fc-0772-4924-9725-426b860df4b5/26-6a8fc51e2d976.webp' /></p><p>இதனை இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார். </p><p>

நேபாளத்தின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், சரியான உதவிகளை வழங்குவதை உறுதிசெய்வதற்காக, தேவைப்படும் எந்தவொரு குறிப்பிட்ட உதவிகள் தொடர்பாகவும் எமது அனர்த்த முகாமைத்துவ நிலையங்கள் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

எமது நெருங்கிய நண்பரும் அண்டை நாடும் ஆகிய நேபாளத்துடனான தமது ஒருமைப்பாட்டிலும் அர்ப்பணிப்பிலும் இலங்கை உறுதியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-27T05:04:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகரித்துள்ள ஷோக்களின் எண்ணிக்கை.. 6 நாட்களில் மொத ராத்திரி திரைப்படம் செய்துள்ள வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/modha-rathiri-movie-6-days-box-office-1787804229"></link>
            <id>https://cineulagam.com/article/modha-rathiri-movie-6-days-box-office-1787804229</id>
            <summary type="text">கடந்த வாரம் திரைக்கு வந்த மொத ராத்திரி திரைப்படத்தின் 6 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மொத ராத்திரி

சிறை திரைப்படத்தின் மூலம் தமிழ் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த வாரம் திரைக்கு வந்த மொத ராத்திரி திரைப்படத்தின் 6 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><h2>
மொத ராத்திரி
</h2><p>
சிறை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை <a href="https://www.youtube.com/watch?v=YaakvqfCUsk" target="_blank">அனிஷ்மா </a>அனில்குமார். இதை தொடர்ந்து யூத் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7f34a36-e907-4589-b8d3-9abe62409e3e/26-6a8fba484f244.webp' /></p><p>இதன்பின், இவர் கதாநாயகியாக நடித்து வெளிவந்துள்ள தமிழ் திரைப்படம் மொத ராத்திரி. அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தில் பிரபல நடிகர் ரிஷிகாந்த் ஹீரோவாக நடித்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11aa9c65-51bc-4f6c-84bd-0789a0bddfa2/26-6a8fba49b520d.webp' /></p><p>
</p><h2>
பாக்ஸ் ஆபிஸ்</h2><p>

இந்நிலையில், மொத ராத்திரி திரைப்படத்திற்கான ஷோக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் 6 நாட்களில் உலகளவில் ரூ. 3 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47a34f65-9dfd-43cf-9d99-c1487ca5c1ad/26-6a8fba49067dc.webp' /></p>]]></content>
            <updated>2026-08-27T05:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு ; மீட்பு பணிகளுக்கு உதவ இலங்கை தயார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/catastrophic-flash-floods-in-nepal-sri-lanka-help-1787806822"></link>
            <id>https://jvpnews.com/article/catastrophic-flash-floods-in-nepal-sri-lanka-help-1787806822</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, அங்கு மேற்கொள்ளப்படும் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளுக்கு உதவி வழங்க இலங்கையானது த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, அங்கு மேற்கொள்ளப்படும் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளுக்கு உதவி வழங்க இலங்கையானது தயார் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது 'நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளப் பெருக்கினால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள செய்தி அறிந்து நான் மிகுந்த மனவேதனை அடைகிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/552e1637-b38e-45fa-beb6-e5e25ce5d67a/26-6a8fc4685dbc4.webp' /></p><p>
</p><p>
வெறும் 10 மாதங்களுக்கு முன்னர் ஒரு கொடிய சூறாவளியில் இருந்து மீண்டு வருமொரு நாடு என்ற வகையில், நேபாள மக்களின் துயரத்தை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம்.
</p><p>
நேபாள ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதில் இலங்கையும் என்னுடன் இணைந்துகொள்கிறது' என்றுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-27T04:57:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெயரை மாற்றிக் கொண்டு சிங்கப்பூரில் வாழும் அர்ஜுன மஹேந்திரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/legal-hurdle-to-extraditing-arjuna-mahendran-1787806168"></link>
            <id>https://tamilwin.com/article/legal-hurdle-to-extraditing-arjuna-mahendran-1787806168</id>
            <summary type="text">&amp;nbsp;அமைச்சர் வெளியிட்ட தகவல்
சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவதில் சட்டம் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமைச்சர் வெளியிட்ட தகவல்
சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவதில் சட்டம் சார்ந்த தடைகள் நிலவுவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். </p><p>
எனினும், அவரை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வருவதற்கான சாத்தியமான சட்ட வழிகள் குறித்து அதிகாரிகள் விரிவாக ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். </p><p>
சிங்கப்பூர் பிரஜையாக அந்நாட்டிலேயே வசித்து வரும் அர்ஜுன மஹேந்திரன், தற்போது தனது பெயரை மாற்றிக்கொண்டுள்ளதாக அமைச்சர் விஜேபால தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6903a2d5-9764-4055-9e4c-9bde99259417/26-6a8fc1d93c549.webp' /></p><p>
</p><p>அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு நாடு கடத்துவதில் சட்டப் பூர்வமான தடைகள் உள்ளன. ஆனால், சாத்தியமான அனைத்து சட்டப்பூர்வ வழிகளையும் அதிகாரிகள் தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.</p><p>அதேவேளையில், மத்திய வங்கி பிணைமுறி வழக்கு தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.</p><p> 
இலங்கை அரசு விடுத்த நாடு கடத்தல் கோரிக்கையானது, சிங்கப்பூரின் 'நாடுகடத்தல் சட்டத்தின்' கீழ் தேவையான சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி, அர்ஜுன மஹேந்திரனை ஒப்படைக்கும் கோரிக்கையை சிங்கப்பூர் அரசு முன்னதாக நிராகரித்திருந்தது. </p><p>
மத்திய வங்கி பிணைமுறி பரிவர்த்தனைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட நடவடிக்கைகளுக்காக அர்ஜுன மஹேந்திரன் இலங்கையில் தீவிரமாகத் தேடப்பட்டு வருகிறார். 
அரசுக்கு 11 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், 2019 ஜூன் மாதம் 'மூவரடங்கிய நிரந்தர மேல் நீதிமன்றத்தில்' இவருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. </p><p>
இதற்கிடையில், பல்வேறு குற்றவியல் வழக்குகளில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்களை இலங்கைக்குக் கொண்டுவந்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக சர்வதேச பொலிஸாரிடமிருந்து மொத்தம் 236 சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல்கள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜேபால தெரிவித்தார். </p><p>
இவற்றில் 110 சிவப்பு எச்சரிக்கைகள் தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற பின்னரே பெறப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். </p><p>
தேடப்பட்டு வந்த சந்தேகநபர்களில் 66 பேர் ஏற்கனவே இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், மேலும் 97 பேரிடம் விசாரணைகள் தொடர்வதாகவும் அமைச்சர் கூறினார். </p><p>இதில் 39 பேரின் இருப்பிடங்களை அதிகாரிகள் துல்லியமாகக் கண்டறிந்துள்ளனர்.</p><p> 
அத்துடன், தேடப்பட்டு வரும் மேலும் ஒரு நபர் அடுத்த வாரத்தில் இலங்கைக்கு கொண்டு வரப்படுவார் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T04:50:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்திற்கு உதவ களமிறங்கிய ஐக்கிய நாடுகள் சபை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/united-nations-steps-in-to-help-nepal-1787806112"></link>
            <id>https://canadamirror.com/article/united-nations-steps-in-to-help-nepal-1787806112</id>
            <summary type="text">நேபாளம் மற்றும் சீனாவில் பல உயிர்களைப் காவு கொண்டதுடன், பலரைக் காணாமல் ஆக்கி, பரவலான பேரழிவையும் ஏற்படுத்தியுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு தொடர்பில் தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் மற்றும் சீனாவில் பல உயிர்களைப் காவு கொண்டதுடன், பலரைக் காணாமல் ஆக்கி, பரவலான பேரழிவையும் ஏற்படுத்தியுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு தொடர்பில் தாம் மிகுந்த வேதனையடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6f61fab-e960-4fda-b2ef-c179e808abd7/26-6a8fc1a1ea33c.webp' /></p><p>அதேநேரம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தமது இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையத் தாம் பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

பாதிக்கப்பட்ட அனைவருடனும் நான் துணை நிற்கிறேன் என்று கூறியுள்ள அவர், நேபாள அரசாங்கத்தின் தலைமையிலான மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிக்க ஐ.நா. குழுக்களும் அதன் பங்காளர்களும் தேவையான நிவாரண பொருட்களையும் பணியாளர்களையும் திரட்டி வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-27T04:49:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பெரும் சோகம் - கோர விபத்தில் இளம் தாய், பிறந்த குழந்தை உட்பட மூவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3-dies-in-an-accident-1787805343"></link>
            <id>https://tamilwin.com/article/3-dies-in-an-accident-1787805343</id>
            <summary type="text">அனுராதபுரம் கெபிதிகொல்லாவ - மெதவச்சி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

ஜீப் மற்றும் முச்சக்கர வண்டி மோதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் கெபிதிகொல்லாவ - மெதவச்சி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.</p><p>

ஜீப் மற்றும் முச்சக்கர வண்டி மோதிக்கொண்ட விபத்தில், இவ்வாறு 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>

உயிரிழந்தவர்களில் ஒரு பாட்டி, அவரது மகள் மற்றும் பிறந்து 10 நாட்களான குழந்தை ஆகியோர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2><b>

கோர விபத்து</b></h2><p>சிகிச்சைக்காக அனுராதபுர போதனா மருத்துவமனைக்கு குழந்தை சென்று கொண்டிருந்த போது, ​​இன்று காலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3e82e14-0899-464d-b27b-dfcfae67c957/26-6a8fc11f79442.webp' /></p><p>உயிரிழந்தவர்கள் பதவிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.</p><p>

விபத்து தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T04:46:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ள அனர்த்தத்தில் பலி எண்ணிக்கை 160 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nepal-flood-killed-160-1787805506"></link>
            <id>https://canadamirror.com/article/nepal-flood-killed-160-1787805506</id>
            <summary type="text">நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். </p><p>
இமயமலைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட பனி மற்றும் பாறைச் சரிவினால் லெண்டே ஆற்றின் குறுக்கே உருவாகிய தற்காலிக இயற்கை அணை உடைந்ததே இந்த பேரழிவுக்கு முக்கியக் காரணமாகும்.
</p><p>இதனால் போதே கோசி மற்றும் திரிசூலி ஆறுகளில் வெள்ளநீர் பேரிரைச்சலுடன் சீறிப் பாய்ந்து கரையோர கிராமங்களைச் சூறையாடியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54d69449-e621-4bf9-8878-7fa7bed8a700/26-6a8fbf4bbb467.webp' /></p><p>
இந்த எதிர்பாராத வெள்ளப்பெருக்கில் நேபாளத்தின் ரசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. </p><p>கைலாஷ் மானசரோவர் புனிதப் பயணம் மேற்கொண்ட 130-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உட்பட சுமார் 600 பயணிகள் காணாமல் போயுள்ளதாக அஞ்சப்படுகிறது.
</p><p> மேலும், சீனா-நேபாள எல்லையிலுள்ள கியிரோங் வர்த்தகக் கணவாய், முக்கிய சர்வதேசப் பாலங்கள் மற்றும் பல நீர்மின் திட்டங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு அப்பகுதியின் உள்கட்டமைப்பு முற்றிலும் முடங்கியுள்ளது.</p><p>
தொடர் மழை மற்றும் தடிமனான சேறு காரணமாகப் பாதிக்கப்பட்ட மலைப் பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் மற்றும் ஹெலிகாப்டர்கள் செல்வதில் கடும் சிரமம் நிலவி வருகிறது.
</p><p> அதேவேளையில், நேபாள ஆறுகளில் இருந்து பெருக்கெடுக்கும் மேலதிக நீர் காரணமாக இந்தியாவின் பிஹார் மற்றும் உத்தரப் பிரதேச எல்லைப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T04:41:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விண்ணதிர்ந்த அரோகரா கோசத்துடன் தேரில் பவனி வந்த தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/thondamanaru-selva-sannithi-murugan-chariot-1787805823"></link>
            <id>https://jvpnews.com/article/thondamanaru-selva-sannithi-murugan-chariot-1787805823</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஈழத்தின் வரலாற்று சிறப்பு வாய்ந்த யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் தேர் திரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஈழத்தின் வரலாற்று சிறப்பு வாய்ந்த யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் தேர் திருவிழா இன்று பெருமளவான பக்தர்களின் விண்ணதிர்ந்த அரோகரா கோசத்துடன் கோலாகலமாக இடம்பெற்று வருகின்றது.
</p><p>
அன்னதானக் கந்தன் என சிறப்பிக்கப்படும் முருகப்பெருமானுக்கு இன்று (27) காலை முதல் விசேட பூசைகள் இடம்பெறுகின்ற நிலையில் இதனைத் தொடர்ந்து முருகப்பெருமான தேரிலே எழுந்தருளுவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83176639-0d6f-4c1c-962b-8f6fd3d708f3/26-6a8fc0812f2d1.webp' /></p><p>
</p><p>
அத்துடன் இன்றைய நாளில் ஏராளமான பக்த அடியார்கள் கலந்துகொண்டு தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.</p><p>

வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா கடந்த 13ஆம் திகதி அதிகாலை 1:45 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
</p><p>
இந்தநிலையில் நேற்று (26) இரவு சப்பறத் திருவிழா மிகச்சிறப்பாக இடம்பெற்ற நிலையில் இன்று தேர்திருவிழா இடம்பெறுகின்ற நிலையில் நாளை (28) தீர்த்தத் திருவிழா இடம்பெறவுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7aMXmy62Otc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-27T04:41:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[திபெத் மண்சரிவு பேரிடர் ; காணாமல் போனோர் எண்ணிக்கை 558 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tibet-landslide-number-missing-people-rises-to-558-1787805315"></link>
            <id>https://canadamirror.com/article/tibet-landslide-number-missing-people-rises-to-558-1787805315</id>
            <summary type="text">திபெத்தின் கைராங் (Gyirong) மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு பேரிடரில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 558 ஆக அதிகரித்துள்ளதாக சீனாவின் அரச ஒளிபரப்பு நிறுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திபெத்தின் கைராங் (Gyirong) மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு பேரிடரில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 558 ஆக அதிகரித்துள்ளதாக சீனாவின் அரச ஒளிபரப்பு நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. </p><p>

இவர்களில் 260 பேர் வெளிநாட்டவர்கள் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அனர்த்தம் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0345131-8cef-4110-abf8-8fe7472851b9/26-6a8fbe8505dde.webp' /></p><p>கைராங் எல்லையானது சீனா மற்றும் நேபாளத்திற்கு இடையிலான சுற்றுலாப் பயணிகள் மற்றும் போக்குவரத்துக்கான முக்கிய எல்லைக் கடக்கும் இடமாக உள்ளது. </p><p>

இரு நாடுகளும் பகிர்ந்துகொள்ளும் எல்லையில் மண்சரிவு ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே, பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சீன அரச ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.</p><p> 

அதேநேரம் நேபாளத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்துள்ளது. 

அத்துடன் சுமார் 400 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.காணாமல் போனவர்களில் 341 வெளிநாட்டவர்களும் அடங்குகின்றனர்.</p><p>

அவர்களில் 100க்கும் மேற்பட்ட இந்தியர்களும், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 34 பேரும், அமெரிக்காவைச் சேர்ந்த 54 பேரும், பிரித்தானியாவைச் சேர்ந்த 33 பேரும் மற்றும் எந்த நாடுகள் என உறுதிப்படுத்தப்படாத 100 பேரும் அடங்குவதாக பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-27T04:35:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/emergency-notice-to-sri-lankans-in-nepal-1787803305"></link>
            <id>https://tamilwin.com/article/emergency-notice-to-sri-lankans-in-nepal-1787803305</id>
            <summary type="text">நேபாளத்தில் நிலவும் அவசரகால நிலைமை குறித்து மிகவும் அவதானத்துடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு அங்குள்ள இலங்கையர்களுக்கு காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் நிலவும் அவசரகால நிலைமை குறித்து மிகவும் அவதானத்துடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு அங்குள்ள இலங்கையர்களுக்கு காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.</p><p>குறிப்பாக, அபாயகரமான மாவட்டங்களில் அல்லது அதற்கு அருகில் வசிக்கும் இலங்கையர்களைப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><h2>வெள்ளம் மற்றும் மண்சரிவு நிலைமை</h2><p>

ஏதேனும் இலங்கையருக்கு அவசர உதவி அல்லது ஒருங்கிணைப்புத் தேவைப்பட்டால், காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் 24 மணி நேரமும் செயற்படும் +977 9851048653 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது Slemb.kathmandu@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாகவோ உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/176ebc4b-bb3e-4b6e-95da-4dc7bc59a530/26-6a8fbc5bcf56b.webp' /></p><p>

எவ்வாறாயினும், நேபாளத்தைப் பாதித்துள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு நிலைமையினால் எந்தவொரு இலங்கையருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதாக இதுவரை பதிவாகவில்லை என காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p style="margin-left: 25px;">
</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T04:31:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள-திபெத் பெருவெள்ளம்... என்ன நடந்தது: விரிவான பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-tibet-floods-1787805167"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-tibet-floods-1787805167</id>
            <summary type="text">Deadly Nepal-Tibet floods: நேபாளம்-திபெத் பகுதிகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு குறித்த விரிவான பின்னணி.
நேபாள-திபெத் எல்லையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>Deadly Nepal-Tibet floods: நேபாளம்-திபெத் பகுதிகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு குறித்த விரிவான பின்னணி.
</p><p>நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்டுள்ள பெரும் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஆகியவை பரவலான சேதத்தை ஏற்படுத்தியதோடு, நூற்றுக்கணக்கானோரின் மரணத்திற்கும் பலர் காணாமல் போவதற்கும் காரணமாக அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/126094cb-8daa-4ab1-a3b1-31f492983cca/26-6a8fbdf22f488.webp' /></p><p>
</p><p>தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க அளவில் உயிர் அபாயங்கள் ஏற்பட்டுள்ளதாகச் சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில், நேபாள அதிகாரிகள் மிகப்பெரிய அளவிலான இழப்பை எதிர்பார்க்கின்றனர்.
</p><p>நிலச்சரிவு ஏற்படுவதற்குச் சற்று முன்பு திபெத்-நேபாள எல்லையில் நிலநடுக்கம் ஒன்று பதிவானதாக நேபாள வெளிவிவகார அமைச்சர் முன்னதாகத் தெரிவித்திருந்தார்; இதுவே அந்தப் பேரிடரைத் தூண்டியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. </p><p>ஆனால், அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் சமீபத்திய பகுப்பாய்வு நிலநடுக்கம் எதுவும் ஏற்படவில்லை என்பதைக் குறிக்கிறது; இது நிலச்சரிவுக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. </p><p>ஒரு சாத்தியம் என்னவென்றால், மழைநீர் அல்லது உருகும் பனியிலிருந்து வரும் நீர், நிலத்தையோ பனியையோ நிலை குலையச் செய்து, ஒரு தொடர் வினையைத் தூண்டியிருக்கலாம். </p><p>இந்து குஷ் இமயமலைப் பகுதியில் பனிப்பாறைகள் வேகமாக உருகுவதற்குப் பருவநிலை மாற்றம் காரணமாக அமைகிறது என்பது தெரிந்ததே; இருப்பினும், இந்த குறிப்பிட்ட நிகழ்வில் அதன் பங்கைத் துல்லியமாகக் குறிப்பிடுவதற்கு இது மிக ஆரம்பக்கட்ட நிலையே என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.</p><p></p><p> விஞ்ஞானிகள் தற்போது இந்தப் பேரிடன் உண்மையானப் பின்னணி என்ன என்பது தொடர்பில் டெஹ்ரிந்துகொள்ள முயன்று வருகின்றனர். மேலும், நிலச்சரிவு சரியாக எங்கு ஏற்பட்டது, பனிப்பாறை ஏதேனும் திடீரென வற்றியதா, ஆற்றுப் பாதை எங்கு மறிக்கப்பட்டிருக்கலாம் என்பது குறித்த செயற்கைக்கோள் படங்கள் மற்றும் சமீபத்திய மழைப்பொழிவு குறித்த தரவுகள் ஆகியவற்றை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய உள்ளனர். </p><p>நுவாகோட் (Nuwakot) பகுதியில், வேகமாக முன்னேறி வந்த சேறு மற்றும் பாறைகளின் பெருவெள்ளம் கட்டிடங்கள், சாலைகள் மற்றும் வாகனங்களை அடித்துச் செல்வதை அந்தப் பகுதி மக்கள் அங்கிருந்து தப்பி ஓடியபோது எடுக்கப்பட்ட காட்சிகளில் பதிவாகியுள்ளது. </p><p>ஒரு காணொளியில், திரிசூலி ஆற்றின் பள்ளத்தாக்கு வழியாக நீர் மற்றும் சேறு கலந்த பிரம்மாண்டமான சுவரொன்று பாய்ந்து வந்து, பல மாடிகளைக் கொண்ட ரசுவாகதி எல்லைச் சோதனைச் சாவடியை மூழ்கடிப்பது பதிவாகியுள்ளது. </p><p>போட் கோஷி, திரிசூலி மற்றும் நாராயணி நதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேபாள எல்லையின் திபெத்தியப் பகுதியில் உள்ள கிராமங்களிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மரணமடைந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68c8528f-d225-4995-921d-e884f1708b6a/26-6a8fbdf2d6523.webp' /></p><p>
</p><p>குறைந்தது 162 பேர் மரணமடைந்துள்ளதாக நேபாள காவல்துறை தெரிவித்துள்ளது. இறந்தவர்களில், 64 பேர் சித்வான் மாவட்டத்தின் கீழ்நிலைப் பகுதிகளிலும், மேலும் 26 பேர் நவல்பாசி கிழக்குப் பகுதியிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். </p><p>திபெத்தின் கியிராங் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுப் பேரழிவில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 558 ஆக உயர்ந்துள்ளதாக சீனாவின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான சிசிடிவி வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. </p><p>இவர்களில் 260 பேர் வெளிநாட்டினர் என்றும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாகவே நீடிக்கிறது என்றும் சிசிடிவி தெரிவித்துள்ளது. கியிராங்கில் உள்ள எல்லை, சீனாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே சுற்றுலாப் பயணிகள் மற்றும் போக்குவரத்துக்கான முக்கிய கடக்கும் இடமாக விளங்குகிறது.</p><p> முன்னதாக, சுமார் 579 சுற்றுலாப் பயணிகள் காணாமல் போனதாகவும், அவர்களில் 466 பேர் வெளிநாட்டினர் என்றும் நேபாளம் தெரிவித்திருந்தது. நேபாள மற்றும் சீனப் புள்ளிவிவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காணாமல் போனவர்களில் யாரேனும் இருமுறை கணக்கிடப்பட்டுள்ளனரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. </p><p>இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரகால தங்குமிடம், தண்ணீர், சுகாதாரம் மற்றும் பிற நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக 500,000 டொலர் நிதியுதவி அளிப்பதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e366ec0-99a4-44c5-9510-91773075bccc/26-6a8fbdf389895.webp' /></p><p> </p><p>நேபாளத்தில் உள்ள பிரித்தானியக் குடிமக்களுக்கு உதவும் வகையில், பிரித்தானிய அரசாங்கம் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று பிரதமர் ஆன்டி பர்னாம் தெரிவித்துள்ளார். இதுவரை வெளியாகியுள்ள தரவுகலின் அடிப்படையில், காணாமல் போனவர்களில் குறைந்தது 34 அவுஸ்திரேலிய குடிமக்கள் அடங்குவதாக பிரதமர் ஆன்றனி அல்பானீஸ் உறுதிப்படுத்தியுள்ளார். </p><p>காணாமல் போனவர்களில் 54 அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் அடங்குவதாக நேபாள சுற்றுலா வாரியம் அளித்துள்ள சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. 24 கனடியர்கள் காணாமல் போனதாக நேபாள சுற்றுலா வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். </p><p>13 வயது சிறுமி உட்பட 33 பிரித்தானியக் குடிமக்கள் காணாமல் போயுள்ளதை நேபாள காவல்துறை உறுதி செய்துள்ளது. இதனிடையே, ஃபிஷ்டெயில் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்துடன் பயணம் செய்த 17 மலேசியர்கள் வெள்ளத்தில் காணாமல் போயுள்ளனர் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p> நேபாளத்தில் உள்ள மலேசிய தூதரக அதிகாரி ஒருவர், 50-க்கும் மேற்பட்ட மலேசியர்களை தற்போது தொடர்புகொள்ள முடியவில்லை என்று கூறினார். 53 உக்ரேனியர்கள் காணாமல் போனதாக நேபாள சுற்றுலா காவல்துறை தங்களுக்குத் தெரிவித்ததாக உக்ரேனின் வெளிவிவகார அமைச்சகம் கூறியுள்ளது.</p><p> அண்டை நாடான இந்தியாவைச் சேர்ந்த 142 பேர் காணாமல் போயுள்ளதாக நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது. தென் கொரியா, தென்னாப்பிரிக்கா, போர்ச்சுகல் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளும் காணாமல் போனதாக நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T04:30:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்மறையான விமர்சனங்கள்.. ஆனாலும் முதல் நாள் மாபெரும் வசூல் செய்த டாக்சிக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/first-day-box-office-of-toxic-movie-1787805729"></link>
            <id>https://viduppu.com/article/first-day-box-office-of-toxic-movie-1787805729</id>
            <summary type="text">யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி நேற்று வெளியான திரைப்படம் டாக்சிக். இப்படத்தை இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்க, கே.வி.என் நிறுவனம் தய...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி நேற்று வெளியான திரைப்படம் டாக்சிக். இப்படத்தை இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்க, கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43137103-a78c-4b68-ac90-e2ce64782ba0/26-6a8fc024d05c7.webp' /></p><p>

இப்படத்தில் நயன்தாரா, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், கியாரா அத்வானி மற்றும் தாரா சுதாரியா என பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bae6bd3d-d431-4b4e-9b9c-7653649bba5c/26-6a8fc02586c35.webp' /></p><p> </p><p>

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நேற்று வெளியான டாக்சிக் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. ரசிகர்கள் இப்படத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a4c1cfe-da68-4f37-a695-e1918c714add/26-6a8fc0263e06b.webp' /></p><p>இப்படி இருந்தும் கூட, முதல் நாள் உலகளவில் இப்படம் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் ஓப்பனிங் வசூலாகும். இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p>]]></content>
            <updated>2026-08-27T04:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/urgent-notice-for-sri-lankans-in-nepal-1787801934"></link>
            <id>https://ibctamil.com/article/urgent-notice-for-sri-lankans-in-nepal-1787801934</id>
            <summary type="text">நேபாளத்தில் நிலவும் அவசர நிலைமையைக் கருத்தில் கொண்டு, அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் விழிப்புடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு காத்மாண்டுவில் உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் நிலவும் அவசர நிலைமையைக் கருத்தில் கொண்டு, அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் விழிப்புடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.</p><p>

வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அதிகம் ஏற்படக்கூடிய அபாயமுள்ள மாவட்டங்களில் அருகாமையில் வசிக்கும் இலங்கையர்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>இதுவரை அனர்த்ததில் சிக்கி&nbsp;500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம்</h2><p> 
</p><p>எனவே அந்நாட்டில் அவசர உதவி அல்லது ஒருங்கிணைப்பு தேவைப்படும் இலங்கையர்கள் காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தை 24 மணி நேர ஹாட்லைன் +977 9851048653 அல்லது slemk.kathmandu@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாக தொடர்புகொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/364bd7f6-1401-4309-90c9-3387051d9ed8/26-6a8fba964485e.webp' /></p><p>
</p><p>
எனினும், நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இதுவரை எந்தவொரு இலங்கையரும் பாதிக்கப்பட்டதாக தகவல் கிடைக்கவில்லை என இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>காணாமல் போனவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரும், அமெரிக்காவைச் சேர்ந்த 54 பேரும், இங்கிலாந்தைச் சேர்ந்த 33 பேரும் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரும் அடங்குகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T04:29:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடமை நேரங்களில் சமூக வலைத்தளப் பயன்பாடு : தொடருந்து ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/railway-employees-social-media-use-duty-hours-1787802422"></link>
            <id>https://ibctamil.com/article/railway-employees-social-media-use-duty-hours-1787802422</id>
            <summary type="text">தொடருந்து திணைக்கள ஊழியர்கள் தொடர்பில் அந்த திணைக்களத்தின் பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் விசேட சுற்றுநிருபம் ஒன்று&amp;nbsp; வெளியிடப்பட்டுள்ளது.கடமை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடருந்து திணைக்கள ஊழியர்கள் தொடர்பில் அந்த திணைக்களத்தின் பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் விசேட சுற்றுநிருபம் ஒன்று&nbsp; வெளியிடப்பட்டுள்ளது.</p><p>கடமை நேரங்களின் போது சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது மற்றும் தொடருந்து இயக்க நடவடிக்கைகள் தொடர்பான உணர்திறன் வாய்ந்த தகவல்களைச் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதைத் தடுப்பது தொடர்பில் குறித்த சுற்றுநிருபம் வெளியாகியுள்ளது.</p><p>அத்துடன் சுற்றுநிருபத்தின் அறிவுறுத்தல்களை மீறிச் செயற்படும் அதிகாரிகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அந்த சுற்றுநிருபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தல்</h2><p>
</p><p>
தொடருந்து திணைக்களத்தின் சில அதிகாரிகளும் ஊழியர்களும் கடமை நேரங்களிலும் அதற்குத் தொடர்புடைய சந்தர்ப்பங்களிலும் சமூக வலைத்தளங்கள் ஊடாக உணர்திறன் வாய்ந்த தகவல்களை வெளிப்படுத்தும் போக்கு அவதானிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4f035d9-e266-49dc-9d61-218ff31fcd39/26-6a8fbd4025947.webp' /></p><p>இந்தநிலையில் இவ்வாறு உணர்திறன் வாய்ந்த தகவல்களைச் சமூக வலைத்தளங்கள் மூலம் பகிரங்கப்படுத்துவதன் மூலம் தொடருந்து சேவையின் நம்பகத்தன்மை, பயணிகள் பாதுகாப்பு மற்றும் நிறுவன ஒழுக்கம் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்படுவதால் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>
அத்துடன், தொடருந்து பொது முகாமையாளர், தொடருந்து திணைக்கள உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளர் மற்றும் தகவல் அதிகாரி ஆகியோருக்கு மட்டுமே தொடருந்து திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ தகவல்களை வெளித்தரப்பினருக்கோ அல்லது ஊடகங்களுக்கோ வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்தப் புதிய சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T04:28:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தற்காலிகமாக மூடப்படும் யால தேசியப் பூங்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/yala-national-park-temporarily-closed-to-public-1787801734"></link>
            <id>https://ibctamil.com/article/yala-national-park-temporarily-closed-to-public-1787801734</id>
            <summary type="text">யால தேசியப் பூங்கா பொதுமக்கள் பார்வைக்கு தற்காலிகமாக மூடப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்நினோ தாக்கத்தின் காரணமாக யால தேசியப் பூங்காவை அண்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யால தேசியப் பூங்கா பொதுமக்கள் பார்வைக்கு தற்காலிகமாக மூடப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
எல்நினோ தாக்கத்தின் காரணமாக யால தேசியப் பூங்காவை அண்டியுள்ள அபகுதியில் நிலவும் வறட்சி காரணமாக, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
குறித்த விடயம் வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">தற்காலிகமாக மூடப்படும்</span></p><p>
</p><p>
அதன் பிரகாரம் யால தேசியப் பூங்காவின் தொகுதி 1 மற்றும் 2 ஆகியவை தற்போதைக்கு எதிர்வரும் நாட்களில் பொதுமக்கள் பார்வைக்கு மூடப்படவுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b246e7d-f9de-484f-820d-f5b0020599d5/26-6a8fbb835fbc0.webp' /></p><p>
அதன் பிரகாரம் எதிர்வரும் செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 15 வரை யால தேசியப் பூங்கா பொதுமக்களுக்குத் தற்காலிகமாக மூடப்படும் என்று வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p>
விலங்குகள் மற்றும் பொதுமக்கள் நலனைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T04:22:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 14 வயதுச் சிறுமியை கடத்திச் செல்ல முயற்சி ; துரத்திப் பிடித்த பொதுமக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/attempt-to-kidnap-14-year-old-girl-jaffna-public-1787804403"></link>
            <id>https://jvpnews.com/article/attempt-to-kidnap-14-year-old-girl-jaffna-public-1787804403</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 12 வயது சிறுமி ஒருவர் நேற்று (24) பிற்பகல் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 12 வயது சிறுமி ஒருவர் நேற்று (24) பிற்பகல் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக சமூக வலைத்தளப்பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.</p><p></p><p>பொதுமக்களின் துரிதமான முயற்சியினால் குறுகிய நேரத்திற்குள் சிறுமி மீட்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவல்களின்படி, சபாபதிப் பிள்ளை வீதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் நேற்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் கல்வி நிலையம் ஒன்றுக்குச் சென்று கொண்டிருந்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c198b2d5-a02f-4726-842e-8a9aec171d8a/26-6a8fbaf558316.webp' /></p><p>அப்போது சிவப்பு நிற ஓட்டோ ஒன்றில் வந்த சிலர் சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக மேற்கொண்ட முயற்சியின் மூலம் சிறுமி குறுகிய நேரத்திலேயே மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒருவர் மீது ஏற்கனவே போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும், அவர் பாடசாலை மாணவிகளைத் தொந்தரவு செய்து வருவதாக முன்னதாகவே அப்பகுதியில் முறைப்பாடுகள் எழுந்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அதிகாரப்பூர்வ விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளின் முடிவுகளே இறுதியானவை எனக் குறிப்பிடப்படுகிறது.
</p><p>
குறித்த நபர் பாடசாலை முடிவடையும் நேரங்களில் பாடசாலை வளாகத்திற்கு அருகில் நின்று மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துகொள்வதாகவும் சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர். </p><p>இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் உரிய அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
சிறுமி கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதாகவும், சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p> எனினும், இதுகுறித்து பொலிஸாரின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு இதுவரை வெளியாகவில்லை.
</p><p>
சுன்னாகம் பகுதியில் அண்மைக்காலமாக இடம்பெற்று வருவதாகக் கூறப்படும் பல்வேறு குற்றச்செயல்கள் குறித்து மக்கள் மத்தியில் கவலை மற்றும் அச்சம் நிலவி வருவதாகவும், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதுடன், சிறுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T04:20:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோகன்லாலிடம் பேரம் பேசிய அஜித் படக்குழு, கடைசியில் இப்படியாகிருச்சே]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/mohanlal-rejected-ajith-kumar-movie-offer-1787801549"></link>
            <id>https://cineulagam.com/article/mohanlal-rejected-ajith-kumar-movie-offer-1787801549</id>
            <summary type="text">டேர் டெவில்அஜித் அடுத்து ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் &#039;டேர் டெவில்&#039; என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் இறுதியில் தொட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>டேர் டெவில்</h2><p>அஜித் அடுத்து ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் 'டேர் டெவில்' என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் இறுதியில் தொடங்கவுள்ளதாம்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/245e2dcc-4f86-4b37-bc30-790cb8de110f/26-6a8fafd0a8a4e.webp' /></p><p>இப்படத்தை அஜித்தே தன் சொந்த தயாரிப்பில் தயாரிக்கவுள்ளாராம். அதற்கான வேலைகளை அவருடைய மனைவி ஷாலினி தான் பார்க்கவுள்ளார். அவருடைய பெயரில் தான் இந்த படத்தை அஜித் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.</p><p></p><h2>பேரம் பேசிய படக்குழு</h2><p> </p><p>

இந்நிலையில், <a href="https://www.youtube.com/watch?v=amwA8k0JR-Y" target="_blank">அஜித் </a>மற்றும் ஆதிக் இந்த படத்தில் மோகன்லால் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்துள்ளனர். அவரும் ஓகே சொல்ல சம்பளமாக ரூ. 35 கோடிக்கும் மேல் கேட்க, நாட்கள் குறைவு அதனால் ரூ. 15 கோடி வாங்கிகொள்கிறீர்களா என அஜித் படக்குழு கேட்க, மோகன்லால் நடிக்க மறுத்துவிட்டாராம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e047c76-6651-46fa-ab67-ea22e57a7c7d/26-6a8fafd15e3bd.webp' /></p><p> 

இதனால் படக்குழு அடுத்து யாரை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என வேறு நடிகரை தேடுவதாக பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T04:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகம் நட்சத்திரத்தில் அரிய கிரக சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sun-mercury-ketu-in-magha-nakshatra-who-get-luck-1787753041"></link>
            <id>https://manithan.com/article/sun-mercury-ketu-in-magha-nakshatra-who-get-luck-1787753041</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், கிரகங்கள் அவ்வப்போது ராசி மட்டுமின்றி நட்சத்திரத்தையும் மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சில சமய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், கிரகங்கள் அவ்வப்போது ராசி மட்டுமின்றி நட்சத்திரத்தையும் மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. </p><p>சில சமயங்களில் ஒரே ராசி அல்லது நட்சத்திரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் இணைந்து பயணிப்பதால், 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/906f61f2-4eb5-44ec-9eb3-f22b464c87e4/26-6a8ef6e1b0751.webp' /></p><p></p><p>
</p><p>
அந்த வகையில், கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படும் சூரியனும், இளவரசனாகக் கருதப்படும் புதனும் தற்போது மகம் நட்சத்திரத்தில் பயணிக்கின்றனர். மேலும், மகம் நட்சத்திரத்தின் அதிபதியான கேதுவும் இதே நட்சத்திரத்தில் இருக்கின்றார்.</p><p>

இவ்வாறு ஒரே நட்சத்திரத்தில் 3 சக்தி வாய்ந்த கிரகங்கள் இருப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளிலும் காணப்படும். சிலருக்கு சாதகமாகவும், சிலருக்கு பாதகமாகவும் அமையலாம்.
</p><p>
அந்த வகையில், மகம் நட்சத்திரத்தில் உள்ள இந்த 3 கிரகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><h2>கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db4e79d9-215e-42eb-aae9-2b0181d6ad1f/26-6a8ef6e288472.webp' /></p><h2>
</h2><p>மகம் நட்சத்திரத்தில் உள்ள 3 கிரகங்களால் முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடியும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், வீட்டு சூழல் இனிமையாகவும் இருக்கும். </p><p>புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். கடின உழைப்புக்கு முழுப் பலன் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க சிறந்த காலம். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம்.
</p><h2>
துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f50da8c-eaef-4666-971f-a55b3920f8a7/26-6a8ef6e34081a.webp' /></p><h2>
</h2><p>மகம் நட்சத்திரத்தில் உள்ள 3 கிரகங்களால் அனைத்து வேலைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். தொழிலில் முன்னேற்றமும், முதலீடுகளில் நல்ல லாபமும் கிடைக்கும்.</p><p> வியாபாரிகளுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கலாம். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நல்ல லாபம் தரும் புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கலாம்.
</p><h2>
மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/341c7dff-b27b-4ad1-831a-1d68b0efd378/26-6a8ef6e3e6cd4.webp' /></p><p>FPXXEU6</p><h2>
</h2><p>மகம் நட்சத்திரத்தில் உள்ள 3 கிரகங்களால் வருமானம் உயரும். முதலீடுகளில் லாபம் கிடைத்து, முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் முன்னேற்றமும், நிதி நிலைமையில் சிறப்பும் ஏற்படும். </p><p>வருமானத்தை அதிகரிக்கும் புதிய வழிகள் உருவாகும். பணியிடத்தில் கடின உழைப்பு பாராட்டப்பட்டு, புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b> &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T04:19:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பலாலி சர்வதேச விமான நிலைய விவகாரம் - NPP அமைச்சரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-international-airport-and-port-development-1787801590"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-international-airport-and-port-development-1787801590</id>
            <summary type="text">யாழில் சர்வதேச விமான நிலையம் மற்றும் துறைமுகத்துக்கு இந்தியா நிதி உதவி
வழங்கினாலும் எந்த அபிவிருத்தியை எப்போதும் மேற்கொள்வது என்பது தொடர்பில்
அரசாங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் சர்வதேச விமான நிலையம் மற்றும் துறைமுகத்துக்கு இந்தியா நிதி உதவி
வழங்கினாலும் எந்த அபிவிருத்தியை எப்போதும் மேற்கொள்வது என்பது தொடர்பில்
அரசாங்கமே முடிவெடுக்கும் என நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர்
விமல் ராட்நாயக்க தெரிவித்தார்.
</p><p>ஊடகவியலாளர் சந்திப்பின் போது காங்கேசன்துறை முகம்
மற்றும் விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் நிதி கிடைத்தும் அரசாங்கமே அதனை
அபிவிருத்தி செய்ய பின்னிக்கிறது என&nbsp;ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு
பதிலளித்தார்.
</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், விமான நிலைய அபிவிருத்திக்காக இந்தியா ஒரு தொகை
பணத்தை வழங்கியிருக்கிறது.</p><p></p><h2>அரசாங்கம் முறையான திட்டமிடல்</h2><p> அந்த நிதி முழுமையான அபிவிருத்திக்கு போதாது எஞ்சிய
தொகையை கடன் வாங்க வேண்டியுள்ளது.

அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் கரிசனையுடன் இருக்கிறோம் ஆனால்
எந்த அபிவிருத்தியை எங்கு மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் அரசாங்கமே
முடிவு செய்யும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff90430a-e4b4-4eeb-94a1-d0bda28e247d/26-6a8fb2c425985.webp' /></p><p>மத்தள விமான நிலையத்தை கடந்த கால அரசாங்கம் முறையான திட்டமிடல் என்று
கட்டியதன் காரணமாக அரசாங்கத்திற்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
</p><p>
அவ்வாறான ஒரு நஷ்டமான அபிவிருத்தியை எமது அரசாங்கம் மேற்கொள்ளாது அபிவிருத்தி
தொடர்பில் யார் நீதி வழங்கினாலும் அரசாங்கமே இறுதி முடிவை எடுக்கும் என
தெரிவித்தார்.
</p><p>
குறித்த ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கருணை நாதன் இளங்குமரன்
மற்றும் கடற் தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் ஆகியோரும் கலந்து
கொண்டனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T04:12:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் வெளிச்சத்துக்கு வந்த மருந்து மோசடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pharmaceutical-fraud-uncovered-in-colombo-1787803732"></link>
            <id>https://jvpnews.com/article/pharmaceutical-fraud-uncovered-in-colombo-1787803732</id>
            <summary type="text">கொழும்பு மருதானையில் வைத்தியரின் பரிந்துரையின்றி போதைப்பொருளுக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வந்ததாகக் கண்டறியப்பட்டதையடுத்து,...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மருதானையில் வைத்தியரின் பரிந்துரையின்றி போதைப்பொருளுக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வந்ததாகக் கண்டறியப்பட்டதையடுத்து, மருந்தகம் ஒன்று அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அதிகாரிகளும் மருதானை பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சோதனையின்போது, நரம்பியல் நோயாளிகளுக்கு வழங்கப்படும் வலி நிவாரணி மருந்துகள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யத் தயாராக வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a966964-5317-4862-9fa8-9fbaa10e2838/26-6a8fb855b4969.webp' /></p><p>மேலும், அரச வைத்தியசாலைகளுக்கு மருத்துவ விநியோகப் பிரிவினால் வழங்கப்படும், தனியார் மருந்தகங்களில் விற்பனை செய்வதற்கு சட்டத்தால் தடைசெய்யப்பட்ட 8 வகையான மருந்துகளும் அங்கு கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>
உரிய தகுதிகள் இல்லாத ஒருவரால் இந்த மருந்தகம் நடத்தப்பட்டு வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதேவேளை, அரச வைத்தியசாலைகளுக்காக வழங்கப்படும் தடைசெய்யப்பட்ட மருந்துகள் குறித்த மருந்தகத்திற்கு எவ்வாறு கிடைத்தன என்பது தொடர்பில் சுகாதார அமைச்சு துரித விசாரணையை ஆரம்பித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T04:08:58+00:00</updated>
        </entry>
    </feed>
