<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-26T07:44:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழின படுகொலையின் சாட்சியே செம்மணி சமூக புதைகுழி: அருட்தந்தை மா. சத்திவேல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-community-burial-witness-to-tamils-1785050280"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-community-burial-witness-to-tamils-1785050280</id>
            <summary type="text">செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இடம்பெற்ற தமிழின படுகொலையின் முக்கிய
சாட்சியாக அமைந்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் வருகை வெறும்
கண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இடம்பெற்ற தமிழின படுகொலையின் முக்கிய
சாட்சியாக அமைந்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் வருகை வெறும்
கண்துடைப்பாகவோ அல்லது அரசியல் நாடகமாகவோ அமையக்கூடாது என சமூக நீதிக்கான
செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின்
இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
</p><p>
அவரால் இன்று (26.07.2026) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு
தெரிவித்துள்ளார். அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p><p></p><h2>தமிழின படுகொலையின் சாட்சி</h2><p>செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் நடந்தேறிய தமிழின படுகொலையின் சாட்சியாகும்.
ஒவ்வொரு நாளும் அங்கு அகழப்படும் போது எம்மவரின் அவல குரல் மட்டுமல்ல நீதிக்கான
குரலும் ஓங்கி ஒலிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1352c7c1-902a-4563-80f7-24c990e1408c/26-6a65b966d6fc9.webp' />&nbsp;</p><p> </p><p>இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின்
வருகை வெறும் கண்துடைப்பானதாகவோ, மேற்குலக நாடுகளின் அரசியல் நாடகத்தின் ஓர்
அங்கமாகவோ, தூது குழுவினரின் சுற்றுலாவாகவோ அமைந்துவிடக்கூடாது.
</p><p>
குழுவினர் கண்ட சாட்சிகள், பெற்றுக்கொண்ட அறிக்கை, மக்களின் நீண்ட கால குரல்
என்பவற்றை ஏற்று இலங்கையில் யுத்த குற்றங்களோடு இனப்படுகொலையும்
நிகழ்ந்துள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அதுவே
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கௌரவமாக அமையும்.
</p><p>
இலங்கையில் கடந்த 78 ஆண்டு காலமாக தொடர்ந்த தமிழின அழிப்பு 2009
முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலையாக உச்சம் தொட்டது என்பதை சர்வதேசம் அறியும்.
ஆயுத யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னரும், தற்போதை ஆட்சியிலும் இன அழிப்பு
தொடர்கின்றது என்பதுவே உண்மை.</p><p>

தமிழர்கள் முகம் கொடுத்தது மனித உரிமை மீறல்களுக்கு மட்டுமல்ல. இங்கு நன்கு
திட்டமிட்ட இனப்படுகொலையே நிகழ்ந்தது. இது பிராந்திய அரசியலுக்காகவும்,
சர்வதேச வல்லரசுகளின் ஆதிக்கத்திற்காகவும் அவர்களின் ஆயுத மற்றும் வழிகாட்டல்
பங்களிப்புடனும் அவர்களின் மேற்பார்வையுடனுமே நிகழ்ந்தன என்பது ஐரோப்பிய
ஒன்றியத்திற்கும் நன்கு தெரிந்த விடயமாகும்.</p><p>

ஆயுத யுத்தம் மௌனிக்கப்பட்டதை தொடர்ந்து உடனடியாகவே ஐ.நா பொதுச் செயலாளர்
பாங்யூ மூன் இலங்கைக்கு வந்தது மட்டுமல்ல. யுத்தம் தொடர்பான கருத்தாடல்கள்
ஐ.நா மனித உரிமை பேரவையில் இன்றைய நாள் வரை தொடர்ந்து நடைபெறுகின்றன.</p><p></p><h2>நம்பிக்கை இழந்துள்ள தமிழர்கள் </h2><p> மனித உரிமை
பேரவையால் முன்வைக்கப்படும் முன்மொழிவுகள் ஆலோசனைகள் என்பவற்றை இலங்கை
ஆட்சியாளர்கள் திரும்பியும் பார்க்காத நிலை தொடர்கின்றது. இதனால் இலங்கை அரசு
மீதும் ஆட்சியாளர்கள் மீதும் தமிழர்கள் நம்பிக்கை இழந்த நிலையிலேயே ஐரோப்பிய
ஒன்றிய தூத்துக்குழுவினரின் வருகை நிகழ்ந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f67ba8a3-8742-4f3e-a7d5-e2a7c47d4ef2/26-6a65b96796501.webp' /></p><p> கடந்த வருடம் ஐக்கிய நாடுகள்
மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க செம்மணிக்கு வருகை தந்த போதும் அதனால்
பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு எந்த நன்மையும் இதுவரை கிட்டவில்லை என்பதையும்
வெளிப்படுத்துகின்றோம்.</p><p>

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக பேரினவாத அரசு முன்னெடுத்த கொடிய யுத்தத்தின்
போது யுத்தக்குற்றங்களோடு திட்டமிட்ட இனப்படுகொலையே நிகழ்ந்தது என்பதற்கு
தமிழர் தாயகத்தில் இதுவரை அகழப்பட்டதும் தற்போது அகழப்பட்டு கொண்டிருக்கின்ற
செம்மணி சமூக புதைகுழியும் 2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த பாரிய
இனப்படுகொலையும் போதுமான சாட்சி.</p><p> சர்வதேச தயவோடு இயங்கும் ஐ.நா
மனித உரிமை பேரவை உட்பட அனைத்து அமைப்புகளும் "யுத்தக்குற்றம், இனப்படுகொலை"
எனும் சொற்களை வேண்டுமென்றே தவிர்த்து இலங்கை தொடர்பில் கடந்த 17
வருடங்களாக உரையாடல்கள் நிகழ்வதை நாம் அறிவோம். </p><p>இச்சந்தர்ப்பத்தில் மானிட
கௌரவம் கருதியும் தமிழ் மக்களின் எதிர்பார்க்கும் நீதியை
முன்னிலைப்படுத்தியும் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் யுத்த குற்றங்களோடு,
இனப்படுகலையும் நிகழ்ந்தது என்பதை உடனடியாக சர்வதேசத்திற்கு தெரிவித்து இது
தொடர்பில் விசேட கவனம் செலுத்த அழுத்தம் கொடுக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.</p><p>

சர்வதேச வல்லரசுகளின் அரசியல் நலன் சார்ந்தும், பிராந்திய நாடுகளின் நலன்
காரணமாகவுமே "யுத்த குற்றம்", "இனப்படுகொலை" எனும் சொற்கள் வேண்டும் என்று
தவிர்க்கப்படுவதன் காரணமாக தமிழர்களுக்கான நீதி செயற்பாடுகள் ஐ.நா மனித உரிமை
பேரவைக்குள் மட்டும் முடங்கியுள்ளது.</p><p> ஐரோப்பிய ஒன்றிய தூதுக் குழுவினர் அதற்கு
சவால் விடுத்து ஐ.நா மனிதர்கள் பேரவைக்கு வெளியில் தமிழர்களுக்கான நீதி
செயற்பாடுகள் தொடர வழி திறக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
</p><p>
ஐரோப்பிய ஒன்றியம் தமிழர்களின் குரலுக்கு செவிமடுக்காது வல்லரசுகளின் அரசியல்
தேவையை கருத்தில் கொண்டு இலங்கை அரசினை பாதுகாப்பதற்கான செயற்பாட்டினை
தொடர்ந்தால் தமிழர்கள் தமது நீதிக்கான செயற்பாட்டிற்கு மாற்று வழிகளையும்,
மாற்று சக்திகளையும் அணுக வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படுவர் என்பதையும்
கூற விரும்புகின்றோம் என தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T07:41:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் ஆறாவது வாரமாக போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-at-palali-junction-for-release-lands-1785051166"></link>
            <id>https://tamilwin.com/article/protest-at-palali-junction-for-release-lands-1785051166</id>
            <summary type="text">வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய
தினம் (26.07.2026) ஆறாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த 36...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய
தினம் (26.07.2026) ஆறாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.</p><p>
கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை
விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p>தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை
அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தாம் நீண்ட காலமாக
நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் காணிகளை
விடுவிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.</p><h2>போராட்டக்காரர்கள் அனுபவிக்கும் துன்பநிலை</h2><p>
அதேவேளை கடந்த வாரங்களில் போராட்டக்காரர்கள் பயன்படுத்தினார்கள் என பலாலி பொது
நோக்கு மண்டபத்தில் காணப்பட்ட வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான குடிநீர்
தாங்கி மற்றும் தற்காலிக மலசல கூடம் என்பவற்றை பலாலி பொலிஸார் அவ்விடத்தில்
இருந்து எடுத்து சென்று பொலிஸ் நிலையத்தில் வைத்திருப்பதனால், இன்றைய தினம்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குடிநீர் மற்றும் மலசலகூடங்கள் இன்றி பல்வேறு
இன்னல்களையும் அனுபவித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.</p><p></p><p>
அத்துடன், தற்காலிக கொட்டகை அமைக்கவும், தரப்பாள் கட்ட இரண்டு தடிகளை நாட்ட
கூட பொலிஸார் அனுமதிக்காததால், கைகளினால் தரப்பாளை பிடித்தவாறு வெயிலின்
கொடுமையில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொண்டு முதியவர்கள் உள்ளிட்டவர்களும்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
இன்றைய போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன்,
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் கலந்து கொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T07:40:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கதையின் நாயகியாக களமிறங்கும் சாய் பல்லவி.. புதிய திரைப்படத்தின் இயக்குநர் யார் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sai-pallavi-solo-heroine-new-movie-update-1785047953"></link>
            <id>https://cineulagam.com/article/sai-pallavi-solo-heroine-new-movie-update-1785047953</id>
            <summary type="text">கதையின் நாயகிகதாநாயகன் திரைப்படம் மட்டும் தான் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைக்கும் என்கிற காலம் மலையேறிப்போய், கதாநாயகிகளின் திரைப்படங்களும் வசூல் வே...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கதையின் நாயகி</h2><p>கதாநாயகன் திரைப்படம் மட்டும் தான் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைக்கும் என்கிற காலம் மலையேறிப்போய், கதாநாயகிகளின் திரைப்படங்களும் வசூல் வேட்டையாடி வருகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f6b40e3-54a1-44d8-98d4-53f32fdd268f/26-6a65ab93e8adc.webp' /></p><p>சமீபத்தில் முன்னணி நடிகை சமந்தா நடிப்பில் வெளியான மா இண்டி பங்காரம் திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து, பாக்ஸ் ஆபிஸில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் ஆனது. 

மேலும் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா, சாய் பல்லவி என பல முன்னணி கதாநாயகிகள் இதுபோன்ற திரைப்படங்களில் தொடர்ந்து கதையின் நாயகிகளாக நடித்து வருகிறார்கள்.</p><h2>சாய் பல்லவி</h2><p> </p><p>

இந்த நிலையில், நடிகை <a href="https://www.youtube.com/watch?v=icYuPFcRohY" target="_blank">சாய் பல்லவி</a> அடுத்ததாக கதையின் நாயகியாக நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவரான கிஷோர் திருமலா, அடுத்ததாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையை இயக்க திட்டமிட்டுள்ளாராம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bbdca19-5359-4ec0-82a8-2c2ee365ab91/26-6a65ab954fbde.webp' /></p><p></p><p>பக்தி மற்றும் இதிகாச கூறுகள் கொண்ட கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், கதையை கேட்டுவிட்டு சாய் பல்லவி நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28ebe45a-9d18-4e8f-9608-a8c1731e0f69/26-6a65ab949f0ac.webp' /></p><p>

எப்போதும் வலுவான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. இவர் நடிப்பில் தமிழில் வெளிவந்த கார்கி திரைப்படமே இதற்கு முக்கிய உதாரணமாக விளங்கும். மேலும், இவர் நடிப்பில் தற்போது ராமாயணா, ஓம் திரைப்படங்கள் உருவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T07:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் இயங்கிய விபச்சார விடுதி ; பெண்ணுடன் பிடிபட்ட முகாமையாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/brothel-busted-in-tamil-area-residence-1785040603"></link>
            <id>https://jvpnews.com/article/brothel-busted-in-tamil-area-residence-1785040603</id>
            <summary type="text">அம்பாறை நகரில் விடுதி ஒன்றின் மறைவில் ரகசியமாக இயங்கிவந்த விபச்சார விடுதியொன்றைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அம்பாறை நகரில் விடுதி ஒன்றின் மறைவில் ரகசியமாக இயங்கிவந்த விபச்சார விடுதியொன்றைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைத்துள்ளனர். </p><p style="text-align: justify;">இதன்போது, அங்கு முகாமையாளராகப் பணியாற்றிய நபர் உட்பட பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5a2eb7e-724a-4799-ae82-c86ba2021711/26-6a658edcde6d2.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p style="text-align: justify;">
 

அம்பாறை தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, உளவாளி ஒருவரைப் பயன்படுத்திப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify;">
 

கைது செய்யப்பட்ட விடுதி முகாமையாளர் அக்கரைப்பற்றுப் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவருடன் கைது செய்யப்பட்ட பெண் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify;">

 

சந்தேகநபர்கள் இருவரையும் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான முதற்கட்ட சட்ட நடவடிக்கைகளை அம்பாறை தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T07:34:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையுடன் சீன பிரஜை கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chinese-national-arrested-with-imported-cigarettes-1785051084"></link>
            <id>https://jvpnews.com/article/chinese-national-arrested-with-imported-cigarettes-1785051084</id>
            <summary type="text">சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையுடன் சீன பிரஜை ஒருவர் இன்று (26) விமான நிலைய சுங்க அதிகாரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையுடன் சீன பிரஜை ஒருவர் இன்று (26) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

 

40 வயதுடைய இச்சந்தேகநபர், மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து எயார் ஏஷியா விமான சேவைக்குச் சொந்தமான AK-047 என்ற விமானத்தின் மூலம் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a604e864-eadb-4335-8fcd-c8b88e76c91d/26-6a65b7ce3e126.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;மேலதிக விசாரணை</h2><p>
</p><p style="text-align: justify; ">
 

அவர் தனது இரண்டு பயணப் பைகளுக்குள் சீனாவில் தயாரிக்கப்பட்ட 40,200 சிகரெட்டுகளைக் கொண்ட 201 சிகரெட் கார்ட்டூன்களை மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளார். கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி 60 இலட்சத்து முப்பதாயிரம் ரூபா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">
 

குறித்த சந்தேகநபர் இந்த சிகரெட் தொகையை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தின் "பச்சை வழி" ஊடாக எடுத்துச் செல்ல முயன்றுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

இதன்போது விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சம்பவம் தொடர்பாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-26T07:31:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறகடிக்க ஆசை நடிகை ப்ரீத்தி ஸ்பந்தனாவின் கிளாமர் போட்டோஸ்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/siragadikka-aasai-preethi-spandanah-recent-photos-1785051058"></link>
            <id>https://viduppu.com/article/siragadikka-aasai-preethi-spandanah-recent-photos-1785051058</id>
            <summary type="text">சிறகடிக்க ஆசை ப்ரீத்திசின்னத்திரை சீரியல்களில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சீரியல்களில் ஒன்று தான் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சிறகடிக்க ஆசை ப்ரீத்தி</h2><p>சின்னத்திரை சீரியல்களில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சீரியல்களில் ஒன்று தான் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடர்.</p><p> டிஆர்பியில் முதல் இடம் பிடித்து வரும் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு தனியொரு ரசிகர்கள் பட்டாளமே இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5ea36a0-1fad-450b-b304-132010729c64/26-6a65b7bb24fbe.webp' /></p><p> </p><p>அந்தவகையில், மீனாவின் தம்பி சத்யா காதலித்து திருமணம் செய்து கொண்ட ரேகா ரோலில் நடித்து வரும் ப்ரீத்தி ஸ்பந்தனாவிற்கென தனி ரசிகர்கள் பட்டாளம் தொடங்கியுள்ளது.</p><p> அமைதியான பெண்ணாக வரும் ப்ரீத்தி ரியல் வாழ்க்கையில் மாடர்ன் பெண். அவரின் சமீபத்திய கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-07-26T07:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆற்றில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/school-student-dies-while-bathing-in-the-river-1785048821"></link>
            <id>https://ibctamil.com/article/school-student-dies-while-bathing-in-the-river-1785048821</id>
            <summary type="text">கலவான, வெத்தாக்கல பகுதியில்&amp;nbsp;ஆற்றில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் பலியாகி உள்ளார்.&amp;nbsp;இவ்வாறு உயிரிழந்தவர் அப்பகுதியைச் சேர்ந்த கயான் சதர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கலவான, வெத்தாக்கல பகுதியில்&nbsp;ஆற்றில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் பலியாகி உள்ளார்.&nbsp;</p><p>இவ்வாறு உயிரிழந்தவர் அப்பகுதியைச் சேர்ந்த கயான் சதருவன் எனும் 16 வயதுடைய பாடசாலை மாணவர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>மேலும் காவல்துறையின் மேலதிக விசாரணைப்படி இவர் மற்றொரு நண்பருடன் சேர்ந்து வெத்தாக்கல ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த போது, நீர்ரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக&nbsp; தெரியவந்துள்ளது.</p><p></p><h2>பாடசாலை மாணவன் பலி</h2><p>
</p><p>
குறித்த சம்பவம் தொடர்பில் கலவான காவல்துறையினர் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fbb1004-da55-4bcc-aae1-cfa6a52e0579/26-6a65b61d9871c.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T07:26:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கலிபோர்னியாவில் பேரழிவுகரமான காட்டுத்தீயை மூட்டிய நபர் ஒரு துஸ்பிரயோகக் குற்றவாளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/california-wildfire-guilty-1785050463"></link>
            <id>https://news.lankasri.com/article/california-wildfire-guilty-1785050463</id>
            <summary type="text">கலிபோர்னியா வரலாற்றிலேயே பேரழிவை ஏற்படுத்திய காட்டுத்தீ சம்பவங்களில் ஒன்றை மூட்டியதற்காக, 42 வயதான பாலியல் குற்றவாளி ஒருவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கலிபோர்னியா வரலாற்றிலேயே பேரழிவை ஏற்படுத்திய காட்டுத்தீ சம்பவங்களில் ஒன்றை மூட்டியதற்காக, 42 வயதான பாலியல் குற்றவாளி ஒருவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.</p><h2>எரிந்து கொண்டிருந்த கார்</h2><p>
</p><p>வடக்கு கலிபோர்னியாவின் சிகோ நகருக்கு அருகில், ஜூலை 24, 2024 அன்று, மிகப்பெரிய தீயை மூட்டியதாக சரியாக இரண்டு வருடங்களுக்குப் பிறகு, ரோனி டீன் ஸ்டவுட் என்பவர் வெள்ளிக்கிழமை அன்று பட் கவுண்டி உயர் நீதிமன்றத்தில் திட்டமிட்டே தீ வைத்த குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8187fc80-acda-49c8-b971-664b1a9eb9f5/26-6a65b6ad3ca5f.webp' /></p><p> சம்பவத்தன்று பிற்பகல் 3 மணிக்குச் சற்று முன்னதாக, அப்பர் பிட்வெல் பார்க் பகுதியில் எரிந்து கொண்டிருந்த 2007 மொடல் டொயோட்டா யாரிஸ் காரை ஸ்டவுட் என்பவர் ஒரு பள்ளத்தாக்கிற்குள் தள்ளியதாகவும், அதன் விளைவாக எரிந்து கொண்டிருந்த அந்தக் கார் அருகிலிருந்த புதர்களில் தீப்பற்ற காரணமானதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>இந்தப் பெருந்தீ சுமார் 430,000 ஏக்கர் நிலப்பரப்பை எரித்து, பியூட் (Butte) மற்றும் டெஹாமா (Tehama) மாவட்டங்களில் 713 கட்டிடங்களை அழித்ததாகவும், அவற்றில் 427 வீடுகள் என்றும் 'கால் ஃபயர்' (CAL FIRE) அமைப்பு தெரிவித்துள்ளது.</p><h2>ஆயுள் தண்டனை வரை</h2><p> </p><p>மாகாண முகமையின் தகவலின் அடிப்படையில், இது கலிபோர்னியா வரலாற்றிலேயே நான்காவது மிகப்பெரிய காட்டுத்தீயாகும். 2001ல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர் ஒருவருக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்காகக் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்டவுட் (Stout) முன்னதாக ஓராண்டு காலம் சிறைத்தண்டனை அனுபவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87c977f4-6d96-4990-ac6c-ceddecab9951/26-6a65b6ac5d4ac.webp' /></p><p> </p><p>ஓராண்டுக்குப் பிறகு, கடுமையான உடல் காயத்தை ஏற்படுத்திய கொள்ளைச் சம்பவத்திற்காக ஸ்டவுட் குற்றவாளியாகக் காணப்பட்டு, அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. </p><p>அவரது முந்தைய இரண்டு குற்றத்தீர்ப்புகளின் காரணமாக, கலிபோர்னியாவின் மூன்று-தவறு சட்டத்தின் கீழ் ஸ்டவுட் தற்போது 25 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார். ஸ்டவுட்டுக்கு அக்டோபர் 9-ம் திகதி தண்டனை வழங்கப்பட உள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T07:19:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[39 பந்துகளில் 88 ஓட்டங்கள்: சரவெடி காட்டிய கமிந்து மெண்டிஸ்..கொழும்பு கேப்ஸ் அபாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kamindu-mendis-88-in-39-balls-vs-dambulla-sixers-1785050242"></link>
            <id>https://news.lankasri.com/article/kamindu-mendis-88-in-39-balls-vs-dambulla-sixers-1785050242</id>
            <summary type="text">லங்கா பிரீமியர் லீக்கில் கொழும்பு கேப்ஸ் அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தம்புள்ளை சிக்ஸர்ஸை வீழ்த்தியது.&amp;nbsp;ஹெர்மன், கமிந்து மெண்டிஸ் 

தம்புள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>லங்கா பிரீமியர் லீக்கில் கொழும்பு கேப்ஸ் அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தம்புள்ளை சிக்ஸர்ஸை வீழ்த்தியது.&nbsp;</p><h2>ஹெர்மன், கமிந்து மெண்டிஸ் </h2><p>

தம்புள்ளையில் நடந்த LPL 2026 தொடரின் 12வது போட்டியில், கொழும்பு கேப்ஸ் மற்றும் தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணிகள் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3376b31a-b725-4b50-95d6-facb89537484/26-6a65b7b402171.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய கொழும்பு கேப்ஸ் அணியில் ரூபின் ஹெர்மன் (Rubin Hermann) 24 பந்துகளில் 39 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.</p><p>சிக்ஸர்களை பறக்கவிட்டு அதிரடி காட்டிய அணித்தலைவர் கமிந்து மெண்டிஸ் (Kamindu Mendis, 39 பந்துகளில் 88 ஓட்டங்கள் (4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள்) விளாசினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc750b53-ab82-4586-934e-0a3b0888b448/26-6a65b7b34170b.webp' /></p><h2>
கொழும்பு கேப்ஸ் வெற்றி </h2><p>இதன்மூலம் கொழும்பு கேப்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ஓட்டங்கள் குவித்தது. தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b8f32e3-4825-4ce3-8f99-91f57ec36299/26-6a65b7b50ef7e.webp' /></p><p>&nbsp;எனினும் பவன் ரத்னாயகே (Pavan Rathnayake) அதிரடியாக 33 பந்துகளில் 50 விளாசினார்.</p><p>

மார்க்யூஸ் அக்கர்மன் 40 ஓட்டங்களும், குல்பதின் நைப் 28 (13) ஓட்டங்களும் எடுக்க, தம்புள்ளை சிக்ஸர்ஸ் 20 ஓவர்கள் 176 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca85388c-5b22-4e1d-8588-c30fb0d77c7b/26-6a65b7b275843.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef387e6b-601b-45e1-bcbe-3a32557e7677/26-6a65b7b5cdc14.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p> </p>]]></content>
            <updated>2026-07-26T07:17:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் குடும்பஸ்தருக்கு எமனான காட்டு யானை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wild-elephant-kills-family-man-in-vavuniya-1785050200"></link>
            <id>https://jvpnews.com/article/wild-elephant-kills-family-man-in-vavuniya-1785050200</id>
            <summary type="text">காட்டு யானையின் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, செட்டிகுளம் பொல...</summary>
            <content type="html"><![CDATA[<p>காட்டு யானையின் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>

வவுனியா, செட்டிகுளம் பொலிஸ் பிரிவின் ஆனவிழுந்தாவ பகுதியில் 25 திகதி நேற்று (25) சனிக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் குறிப்பிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00cccabe-5b85-4ba1-aced-cf6acf76ca4b/26-6a65b45a3650b.webp' /></p><h2>&nbsp;மேலதிக விசாரணை</h2><p>

சம்பவத்தில் உயிரிழந்தவர் நேரியகுலம பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவர் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.</p><p>&nbsp;சம்பவத்தை அடுத்து அப்பகுதி மக்கள் திரண்டு வந்து உடலத்தை மீட்டதுடன், செட்டிகுளம் பொலிஸாருக்கும் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கும் தகவல் வழங்கினர்.</p><p></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் செட்டிகுளம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T07:16:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விசாரணை...! முன்வைக்கப்பட்டுள்ள பகிரங்க குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/negombo-prison-clash-cid-inquiry-flawed-1785048064"></link>
            <id>https://ibctamil.com/article/negombo-prison-clash-cid-inquiry-flawed-1785048064</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் விசாரணைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் நடுநிலையானதாக இல்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு (CPRP) இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
</p><p>
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே CPRP இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.</p><p>
</p><p></p><h2>கூர்மையற்ற ஆயுதங்கள்</h2><p>மேலும் தெரிவித்த அக்குழு, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் 17 பேர் துப்பாக்கிச் சூட்டினாலும் மேலும் 11 பேர் கூர்மையற்ற ஆயுதங்களால் தாக்கப்பட்டதாலும் உயிரிழந்துள்ளமை மருத்துவ அறிக்கைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
இச்சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நான்கு உதவி காவல்துறை அத்தியட்சகர்களின் கீழ் பிரத்யேக விசாரணைகளை நடத்தி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f691b35-a44d-46a3-a35f-4871e13762bc/26-6a65b201e2d54.webp' /></p><p>

இந்தநிலையில் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக்க பெரேரா, “தற்போது நடைபெற்று வரும் விசாரணைகள் மூலம் முழுப் பழியையும் சிறைக்கைதிகள் மீது மட்டுமே சுமத்த முயற்சி நடக்கிறது.</p><p> </p><p>இச்சம்பவத்திற்குப் பொறுப்பான ஏனைய தரப்பினரைக் காப்பாற்றவே அதிகாரிகள் முயற்சிக்கின்றனர்.</p><p></p><h2>துப்பாக்கிச் சூடுகள்</h2><p>

ஜன்னல்கள் வழியாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகள் தண்டனைச் சட்டக் கோவையின் 294 ஆவது பிரிவின் கீழ் கொலை குற்றச்சாட்டாக விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.</p><p> 

ஆனால் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அது குறித்துச் சரியான கவனத்தைச் செலுத்தவில்லை” என குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77cd76c9-a5e6-48c8-9187-8bf47fec4ff8/26-6a65b20133ac8.webp' /></p><p>சிறைச்சாலை அதிகாரிகளின் அலட்சியப் போக்கே இந்த மரணங்களுக்கு முக்கிய காரணம் எனச் சாடிய சேனக்க பெரேரா, மோதல் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் போன்ற அடிப்படை கலவரத் தடுப்பு உபகரணங்கள் கூட நீர்கொழும்பு சிறைச்சாலையிடம் இருக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
கைதிகளை முழங்கால் இடவைத்து மன்னிப்புக் கேட்கச் செய்தமை மற்றும் மின்சாரத்தைத் துண்டித்தமை போன்ற செயல்கள் மூலம் கைதிகள் மேலும் கோபமூட்டப்பட்டு வன்முறைக்குத் தள்ளப்பட்டதாகவும் அவர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T07:07:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய தாய் கோர விபத்தில் பலி - ஆபத்தான நிலையில் குழந்தைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dampulla-accident-mother-death-children-injury-1785040049"></link>
            <id>https://tamilwin.com/article/dampulla-accident-mother-death-children-injury-1785040049</id>
            <summary type="text">தம்புள்ளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புள்ளை - கண்டி பிரதான வீதியின் கபுவத்த சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>தம்புள்ளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புள்ளை - கண்டி பிரதான வீதியின் கபுவத்த சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
நேற்று (25) காலை இடம்பெற்ற விபத்தில் பெண்ணின் இரு குழந்தைகளும் காயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>பாதசாரி மீது மோதி விபத்து</h2><p>
</p><p>
தம்புள்ளை நோக்கிப்பயணித்த டிப்பர் ரக லொறியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச்சென்று பாதசாரியான பெண் மற்றும் இரு குழந்தைகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0a321cc-ef63-4f9f-91d0-df32451f1b8d/26-6a65936d01ede.webp' /></p><p>நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக கதிர்காமம் செல்ல தயாராக ஆடைகள் மற்றும் பொருட்களை வாங்குவதற்காக தம்புள்ளை நகருக்கு சென்றபோது விபத்திற்குள்ளாகியுள்ளனர்.&nbsp;</p><p> 

இதன்போது மூவரும் காயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பெண் உயிரிழந்துள்ளார்.</p><p> 

இவ்வாறு உயிரிழந்தவர் கபுவத்த பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான டி.எம். திலானி அரோஷா என்றும் தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய தாய்</h2><p>

அவரது 19 மற்றும் 14 வயதுடைய இரண்டு மகன்களும் இந்த விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8266f406-ffcf-47d1-a937-56a5f3a6ad49/26-6a65936da806d.webp' /></p><p>இதேவேளை, 19 வயதான மூத்த மகன் தம்புள்ள வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>இவர் பிரபல கல்லூரியில் பயிலும் ஒரு திறமையான தடகள வீரர் என்றும், இந்த ஆண்டு நடைபெறும் உயர்தர பரீட்சைக்கு தயாராகி வருவதாகவும்&nbsp;பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p>
குறித்த பெண் குவைத்தில் வீட்டுப்பணிப்பெண்ணாக பணியாற்றிய பின்னர், எட்டு நாட்களுக்கு முன்பு இலங்கை திரும்பியதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>இந்த விபத்து தொடர்பாக டிப்பர் லொரியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p> </p><p></p><p></p><p>&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T07:03:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/jananayagan-movie-3-days-tamilnadu-box-office-1785043762"></link>
            <id>https://cineulagam.com/article/jananayagan-movie-3-days-tamilnadu-box-office-1785043762</id>
            <summary type="text">ஜனநாயகன்ஹெச். வினோத் - விஜய் கூட்டணியில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி கடந்த 23-ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜனநாயகன். இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜனநாயகன்</h2><p>ஹெச். வினோத் - விஜய் கூட்டணியில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி கடந்த 23-ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜனநாயகன்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4247fd8d-a6ad-43a4-b71a-8a94a032546c/26-6a659b35b6c50.webp' /></p><p></p><p>இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில், சென்சார் பிரச்சனை காரணமாக 6 மாதங்கள் கழித்து தற்போது வெளியாகியுள்ளது. இதற்கிடையில், படம் லீக்காகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது. இருப்பினும், இப்படத்தை விஜய்யின் ரசிகர்கள் அனைவரும் திரையரங்கில் தான் பார்ப்போம் என ஆவலுடன் காத்திருந்தனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca705cf5-3c0c-4639-90e2-62b51287fa81/26-6a659b3666c66.webp' /></p><p>அப்படி எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சும்மாவே விஜய்யின் திரைப்படத்தை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். அதுவும் இது <a href="https://www.youtube.com/watch?v=HKFfzog_Xno" target="_blank">விஜய்</a>யின் கடைசி படம், சொல்லவா வேண்டும்.</p><h2>தமிழ்நாடு வசூல்</h2><p> </p><p>

ஜனநாயகன் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். உலகளவில் இதுவரை ரூ. 165 கோடியை தாண்டியுள்ள இப்படத்தின் வசூல் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது தெரியுமா? 3 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 64 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/389c7fdc-7318-4871-a8d0-67d15774fc8c/26-6a659b3722cb3.webp' /></p>]]></content>
            <updated>2026-07-26T07:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடந்த காலத்தில் இந்த அரசாங்கம் சொன்னது என்ன..! திருகோணமலையில் அடையாள உண்ணாவிரத போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/what-has-this-government-said-in-the-past-1785048802"></link>
            <id>https://tamilwin.com/article/what-has-this-government-said-in-the-past-1785048802</id>
            <summary type="text">கடந்த காலத்தில் இந்த அரசாங்கம் சொன்னது என்ன? ஜனாதிபதி தேர்தலில் சொன்னபடி
செய்தார்களா என்ற அடிப்படையில் திருகோணமலை சிவன் கோயிலடிக்கு முன்னால் அடையாள
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த காலத்தில் இந்த அரசாங்கம் சொன்னது என்ன? ஜனாதிபதி தேர்தலில் சொன்னபடி
செய்தார்களா என்ற அடிப்படையில் திருகோணமலை சிவன் கோயிலடிக்கு முன்னால் அடையாள
உண்ணாவிரத போராட்டம் இன்று (26) இடம்பெற்றது.
</p><p>
திருகோணமலை மக்கள் சமூக செயற்பாட்டாளர் உண்ணாவிரத வேந்தன் இதனை ஏற்பாடு
செய்தார்.</p><h2>ஏழு கோரிக்கைகள்</h2><p>

இதில் பிரதானமாக ஏழு கோரிக்கைகளை முன்வைத்து அதற்கு தீர்வு கோரியும்
உண்ணாவிரதம் இருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54827cf6-db1c-4419-8042-4c87593ddd8c/26-6a65b0381010e.webp' /></p><p>
</p><p>
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும், அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட வெடி
மருந்து மற்றும் சுருக்கு வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர் இதனை தடை
செய்ய வேண்டும், அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும், செம்மனி
மனித புதை குழியில் 500 க்கும் மேற்பட்ட எலும்பு கூடுகள் எடுக்கப்பட்டன உரிய
விசாரணை இதற்காக தேவை இதனை செய்தீர்களா?,</p><p>

மந்த கதியில் இடம் பெறும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை துரித விசாரணை இடம் பெற வேண்டும், வடகிழக்கு உட்பட நாட்டின்
அனைத்து மாகாண சபை தேர்தல்களும் இடம் பெற வேண்டும், நாட்டின் அனைத்து
பிரதேசத்தையும் போதையற்ற நாடாக மாற்ற வேண்டும் இதனை செய்தீர்களா என பல்வேறு
தரப்பட்ட கேள்விகளை முன்வைத்து அரசாங்கத்திடம் கோரிக்கையாக முன்வைத்து
 என்றும் தெரிவித்திருந்தனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T06:59:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/typhoon-noul-china-hong-kong-1785044255"></link>
            <id>https://news.lankasri.com/article/typhoon-noul-china-hong-kong-1785044255</id>
            <summary type="text">நௌல் புயல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கரையைக் கடந்த நிலையில், ஹொங்ஹொங் உள்ளிட்ட தெற்கு சீனாவில் பலத்த காற்றும் கனமழையும் இயல்பு வாழ்க்கையை மொத்தமாகப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நௌல் புயல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கரையைக் கடந்த நிலையில், ஹொங்ஹொங் உள்ளிட்ட தெற்கு சீனாவில் பலத்த காற்றும் கனமழையும் இயல்பு வாழ்க்கையை மொத்தமாகப் புரட்டிப்போட்டுள்ளது.</p><h2>உயர் எச்சரிக்கை</h2><p>
</p><p>நௌல் புயல் காரணமாக குவாங்டாங் மாகாணத்தில் லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்; அப்பகுதி உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டதோடு, நூற்றுக்கணக்கான விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e32cfa0-1848-49b5-a5d3-fb2e1d020da5/26-6a659e6fe1f2f.webp' /></p><p> </p><p>தெற்கு குவாங்டாங் மாகாணத்தில் ஹுய்ஜோ நகரின் ஹுய்டோங் மாவட்டக் கடற்பகுதியில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 3:50 மணியளவில் நௌல் புயல் கரையைக் கடந்ததாக சீனாவின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><p>இதனிடையே, இந்த ஆண்டில் இதுவரை சீனாவில் கரையைக் கடந்த புயல்களிலேயே நௌல் மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது என்று சீனாவின் உத்தியோகப்பூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>மணிக்கு 110 கி.மீ வேகத்தில் அதிகபட்ச தொடர் காற்றுடன் வீசிய நௌல் புயல், ஞாயிற்றுக்கிழமையன்று குவாங்டாங்கின் உள்பகுதிக்குள் நகர்ந்து படிப்படியாக வலுவிழந்துள்ளதாகவும், இதனால் அப்பகுதியின் சில பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்து வருவதாகவும் ஹொங்ஹொங் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><p>அரசு வானொலி வெளியிட்டுள்ள தகவலில்
குவாங்டாங் மாகாணத்தில் பாதுகாப்பு கருதி 715,000-க்கும் மேற்பட்ட மக்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b0ad86f-1893-4982-84f4-4956e1d723ef/26-6a659e6e838eb.webp' /></p><h2>பலத்த காற்றும் மழையும்</h2><p> </p><p>அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமைக்கான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. குவாங்டாங் மாகாணத்தின் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள ஹுய்லாய் (Huilai) மாவட்டத்தில் பல மரங்கள் வேரோடு சாய்ந்து கிடந்ததாக அரசு செய்தி நிறுவனமான சிசிடிவி (CCTV) செய்தி வெளியிட்டுள்ளது.</p><p> ஞாயிற்றுக்கிழமையன்று சுமார் 350 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக ஹொங்ஹொங் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. சூறாவளி வீசிய காலத்தில் நகரம் முழுவதும் குறைந்தது ஒன்பது பேர் காயமடைந்ததாக ஹொங்ஹொங் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ffd18e7-e2fe-457d-b5f7-4171cc154bc5/26-6a659e6f3f65d.webp' /></p><p>
</p><p>
இந்த மாதத் தொடக்கத்தில், Bavi சூறாவளி பலத்த காற்று மற்றும் மழையுடன் கிழக்கு சீனாவைப் புரட்டிப்போட்டதால், 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டனர். </p><p>இது ஜூலை 11 அன்று கரையை அடைந்தது. மற்றொரு சூறாவளியான 'மேசக்' (Maysak), ஜூலை 3 அன்று தென் சீனாவில் கரையை அடைந்தது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T06:58:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெர்மனியில் 'பிரைட்' பேரணி மீது வாகனம் மோதி விபத்து ; ஒருவர் பலி, 14 பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/car-rams-into-pride-parade-in-germany-1785049023"></link>
            <id>https://canadamirror.com/article/car-rams-into-pride-parade-in-germany-1785049023</id>
            <summary type="text">ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற &#039;பிரைட்&#039; (Pride) பேரணியின் போது மக்கள் கூட்டத்திற்குள் சிற்றூந்து ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 14பே...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற 'பிரைட்' (Pride) பேரணியின் போது மக்கள் கூட்டத்திற்குள் சிற்றூந்து ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 14பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
பெர்லினில் பேரணி நடைபெற்ற பகுதிக்கு அருகே மக்கள் திரண்டிருந்த கூட்டத்திற்குள் வாகனம் ஒன்று அதிவேகமாகப் புகுந்து மோதியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e01f8ee-3127-4742-96e3-a30ad32dd650/26-6a65afc17897c.webp' /></p><p>
</p><p>
இந்த சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
</p><p>
காயமடைந்தவர்களில் பலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரைப் பிடிக்கக் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
</p><p>
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்புக் காரணங்களுக்காக நிகழ்வுகள் உடனடியாக நிறுத்தப்பட்டு, அப்பகுதியில் அவசரக்கால மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-26T06:57:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்காலத்தில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களை திருகோணமலையிலிருந்து உருவாக்க வேண்டும் - இம்ரான் எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imran-mp-statement-about-cricket-players-1785047132"></link>
            <id>https://tamilwin.com/article/imran-mp-statement-about-cricket-players-1785047132</id>
            <summary type="text">எதிர்காலத்தில் இலங்கை பிரீமியர் லீக் (LPL) மற்றும் இலங்கை தேசிய கிரிக்கெட்
அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களை திருகோணமலை மாவட்டத்திலிருந்து
உர...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்காலத்தில் இலங்கை பிரீமியர் லீக் (LPL) மற்றும் இலங்கை தேசிய கிரிக்கெட்
அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களை திருகோணமலை மாவட்டத்திலிருந்து
உருவாக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான்
மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
</p><p>
திருகோணமலையின் அடுத்த கிரிக்கெட் நட்சத்திரங்களை உருவாக்கும் புதிய
அத்தியாயமாக உள்ளதாக நேற்று (25.07.2026) கிண்ணியாவில் இடம்பெற்ற கடினப் பந்து
போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.</p><p></p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், திருகோணமலை மாவட்டத்தில் கடினப்பந்து கிரிக்கெட்டை மேலும் வலுப்படுத்தி,
திறமையான இளம் வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களை உயர்மட்ட போட்டிகளுக்கு
தயார்படுத்துவதே இந்த முயற்சியின் பிரதான நோக்கமாகும்.</p><h2>உயரிய இலக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள பயணம்</h2><p>

எதிர்காலத்தில் இலங்கை பிரீமியர் லீக் (LPL) மற்றும் இலங்கை தேசிய கிரிக்கெட்
அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களை திருகோணமலை மாவட்டத்திலிருந்து
உருவாக்க வேண்டும் என்ற உயரிய இலக்குடன் இந்தப் பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
இது ஒரு கிரிக்கெட் தொடர் மட்டுமல்ல திருகோணமலை மாவட்ட விளையாட்டின்
எதிர்காலத்தை உருவாக்கும் ஒரு புதிய பயணமாகும்.
</p><p>
இந்த சிறப்புமிக்க நிகழ்வை மிக நேர்த்தியாகவும், வெற்றிகரமாகவும் ஏற்பாடு
செய்த கிண்ணியா பிரீமியர் லீக் (KPL) ஏற்பாட்டுக் குழுவினருக்கும், இதற்கு
பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த
நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T06:50:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் வர்த்தகக் கப்பல் மீது உக்ரைன் நடத்திய தாக்குதல்: வெடிவிபத்தில் மாலுமி பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-accuses-ukraine-of-deadly-attack-on-caspian-1785039455"></link>
            <id>https://ibctamil.com/article/iran-accuses-ukraine-of-deadly-attack-on-caspian-1785039455</id>
            <summary type="text">காஸ்பியன் கடலில் ஈரானுடன் தொடர்புடைய வர்த்தகக் கப்பல் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் கடுமையாக கண்டித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>காஸ்பியன் கடலில் ஈரானுடன் தொடர்புடைய வர்த்தகக் கப்பல் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் கடுமையாக கண்டித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>இந்த தாக்குதலில் ஏற்பட்ட வெடி விபத்தில் மாலுமி ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>மேலும் தாக்குதலுக்கு உள்ளான கப்பல் மீது நடத்தப்பட்ட நடவடிக்கையை "ஆக்கிரமிப்புச் செயல்" என்றும், "பகைமையான மற்றும் குற்றவியல் தாக்குதல்" என்றும் ஈரான் கூறி உள்ளது.</p><p></p><h2>வெடிவிபத்தில் மாலுமி உயிரிழப்பு</h2><p>இதற்கு எதிர்ப்பை தெரிவிக்க, தெஹ்ரானில் உள்ள உக்ரைன் தூதரகத்தின் பொறுப்பாளரை ஈரான் வெளியுறவு அமைச்சகம் அழைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcb4e808-b718-43ce-9877-dbfb9fff8190/26-6a65a8926d1b4.webp' /></p><p>உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, ரஷ்யா பயன்படுத்தி வரும் ஈரான் வடிவமைத்த ஆளில்லா விமானத் தாக்குதல்களை கீவ் தொடர்ந்து எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
 

மத்திய கிழக்கில் தாக்குதல்களை நடத்துவதற்கு ஈரானுக்கு ஏதுவாக, ரஷ்யா தனது செயற்கைக்கோள் கண்காணிப்புத் தரவுகளை அந்நாட்டிற்கு வழங்கி வருவதை கீவ் கவனித்திருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>
 

காஸ்பியன் கடலில் ரஷ்ய போர்க்கப்பல் ஒன்றையும், ஈரானுடன் தொடர்புடைய இராணுவ சரக்குகளை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்பட்ட கப்பல்களையும் உக்ரைன் படைகள் தாக்கியதாக ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.&nbsp;</p><p>மேலும் அவருடைய X தளத்தில்&nbsp; வெளியிடப்பட்ட கருத்துக்களில், உக்ரைன் ஜனாதிபதி, ஜூலை மாதத் தொடக்கத்தில் இருந்து "வளைகுடா நாடுகள் மற்றும் அங்குள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ரஷ்யாவின் தீவிர செயற்கைக்கோள் கண்காணிப்பை" கீவ் பதிவு செய்து வந்ததாகவும், "இந்தக் காட்சிகள் பின்னர் ஈரானில் வெளிவருகின்றன" என்றும் கூறினார்.
</p><p>
 

"அதே நேரத்தில், இந்த இடங்கள் குறித்த ரஷ்யாவின் செயற்கைக்கோள் படங்களுக்கும் ஈரானியத் தாக்குதல்களுக்கும் இடையே ஒரு தெளிவான தொடர்பு உள்ளது. தாக்குதல்களுக்கு முன்னரும், அவற்றுக்கான தயாரிப்பாகவும், பின்னரும், ஏற்படுத்தப்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காகவும் இந்தத் தொடர்பு காணப்படுகிறது," என்று ஜெலென்ஸ்கி கருத்து வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T06:50:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மீதான குற்றச்சாட்டுகள் - வெளியான அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/allegations-against-the-president-bar-association-1785047381"></link>
            <id>https://tamilwin.com/article/allegations-against-the-president-bar-association-1785047381</id>
            <summary type="text">இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரியவுக்கு எதிராக
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை
என்று தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரியவுக்கு எதிராக
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை
என்று தெரிவித்துள்ள அச்சங்கம், நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி
மேற்கொள்ளப்படும் இத்தகைய அரசியல் உள்நோக்கம் கொண்ட அவதூறுகளை வன்மையாகக்
கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
</p><p>
ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசித்த நிரோஷன எகொட விதாரணவினால்
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும்
வகையிலேயே இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.</p><p>குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,</p><p>&nbsp;</p><h2>பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கம்</h2><p> "பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் நோக்கில், நாடாளுமன்ற சிறப்புரிமைகளைத்
துஷ்பிரயோகம் செய்து இத்தகைய பொய்யான கருத்துக்கள் தெரிவிக்கப்படுவது
கவலைக்குரியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d664e20-3683-434c-a1c1-2b00777f21fe/26-6a65ada6924d8.webp' /></p><p>
</p><p>
நீதித்துறையின் சுதந்திரத்தையும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின்
கௌரவத்தையும் பாதுகாப்பதில் நாட்டின் சட்டச் சமூகம் என்றும் உறுதியுடன்
ஒன்றுபட்டு நிற்கும்.
</p><p>
உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும்
வயதை அதிகரிப்பது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த திருத்தங்கள், முறையான
நிறுவனத் தேவை மற்றும் அனைத்துப் பங்குதாரர்களின் பரந்த
கலந்தாய்வுகளுக்கேற்பவே கொண்டுவரப்பட வேண்டுமே தவிர, தற்காலிக
சூழ்நிலைகளுக்காகவோ அல்லது அவசர கோலத்திலோ மேற்கொள்ளப்படக் கூடாது.</p><h2>நாடாளுமன்ற சிறப்புரிமை</h2><p>எந்தவொரு அரசு ஆட்சியில் இருந்தாலும், ஜனநாயகம், நீதித்துறைச் சுதந்திரம்
மற்றும் மனித உரிமைகளுக்காக சங்கம் தொடர்ந்தும் குரல்கொடுத்து
வந்துள்ளதுடன், நாம் எப்போதுமே அரசியல் செய்ததில்லை. இனிமேலும்
செய்யப்போவதில்லை.</p><p>
நாடாளுமன்ற சிறப்புரிமை என்ற பாதுகாப்புக் கவசத்தைத் தவிர்த்து,
இக்குற்றச்சாட்டுகளைப் நாடாளுமன்றத்துக்கு வெளியே பகிரங்கமாக கூறுமாறு
நாடாளுமன்ற உறுப்பினர் அசித்த நிரோஷன எகொட விதாரணவுக்குச் சவால்
விடுக்கின்றோம். அவ்வாறு கூறும் பட்சத்தில் அவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும் என்றுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T06:48:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் ஆபத்தாக மாறும் டெங்கு நிலைமை ; அதிகரிக்கும் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-situation-turns-dangerous-in-sri-lanka-1785048324"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-situation-turns-dangerous-in-sri-lanka-1785048324</id>
            <summary type="text">நாட்டின் இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 81,511 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

 
...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டின் இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 81,511 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

இக்காலப்பகுதியில் டெங்கு நோயினால் 61 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p style="text-align: justify;">

 

அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் இந்த ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa578645-daf2-44fa-99b1-ca8add5db89e/26-6a65ad0596411.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;டெங்கு நோயாளர்கள்</h2><p> </p><p style="text-align: justify; ">அதற்கமைய, இம்மாதத்தின் கடந்த சில நாட்களில் மட்டும் 26,136 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

மேலும், கடந்த ஜூன் மாதத்திலும், ஜூலை மாதத்தின் இதுவரை வரையான காலப்பகுதியிலும் மட்டும் 47,670 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.</p><p style="text-align: justify; ">&nbsp;இக்காலப்பகுதியில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p> </p><p style="text-align: justify;">அந்த எண்ணிக்கை 43,132 ஆகும்.

 

அவற்றுள் அதிகளவிலான நோயாளர்கள் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களிலேயே பதிவாகியுள்ளனர். </p><p style="text-align: justify;">கம்பஹாவில் 17,280 நோயாளர்களும், கொழும்பில் 16,213 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
</p><p style="text-align: justify;">
 

அத்துடன், நாட்டில் தற்போது 175 அதி அபாய வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"><br></p>]]></content>
            <updated>2026-07-26T06:45:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியை உலுக்கிய பிரைட் பேரணி விபத்து...! ஒருவர் பலி பத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/berlin-pride-parade-event-accident-update-1785045353"></link>
            <id>https://ibctamil.com/article/berlin-pride-parade-event-accident-update-1785045353</id>
            <summary type="text">ஜேர்மனியில் கிறிஸ்டோபர் ஸ்ட்ரீட் டே (CSD Pride Parade) எல்ஜிபிடிகியூ (LGBTQ+) பேரணியில் வாகனம் ஒன்று புகுந்து விபத்திற்குள்ளகியுள்ளது.

தலைநகர் பெர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியில் கிறிஸ்டோபர் ஸ்ட்ரீட் டே (CSD Pride Parade) எல்ஜிபிடிகியூ (LGBTQ+) பேரணியில் வாகனம் ஒன்று புகுந்து விபத்திற்குள்ளகியுள்ளது.
</p><p>
தலைநகர் பெர்லினில் நடைபெற்ற பேரணியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>

இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><h2>நடைபவனி பேரணி</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பெர்லினில் உள்ள டியர்கார்டன் பூங்கா பகுதிக்கு அருகில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டிருந்த வேளையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ef3019a-9788-46aa-89aa-347c8aef4db2/26-6a65a962d8fda.webp' /></p><p>எல்.ஜி.பி.டி.க்யூ சமூகத்தினரின் நடைபவனி பேரணியின் போது வெள்ளை நிற வேன் ஒன்று மக்கள் கூட்டத்திற்குள் புகுந்துள்ளது.
</p><p>
இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காகப் பேரணி உடனடி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>தேடுதல் நடவடிக்கை</h2><p>தாக்குதலைத் தொடர்ந்து வாகனத்திலிருந்து தப்பிச் சென்ற சந்தேகநபரை அப்துல் பி (Abdul B.) என காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f46d05d-5a22-411e-bfd8-95a943650c2c/26-6a65a961ea2a5.webp' /></p><p>

அத்தோடு, அவர் ஆயுதம் ஏந்தியவர் மற்றும் ஆபத்தானவர் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
தப்பியோடிய சந்தேகநபரைப் பிடிப்பதற்காக பெர்லின் நகரம் முழுவதிலும் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p></p>]]></content>
            <updated>2026-07-26T06:38:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு தடை: ரஷ்யா இந்த முடிவுக்கு என்ன காரணம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-extends-gasoline-export-ban-1785047559"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-extends-gasoline-export-ban-1785047559</id>
            <summary type="text">எரிபொருள் ஏற்றுமதி தடையை இந்த ஆண்டு டிசம்பர் வரை நீட்டித்து இருப்பதாக ரஷ்யா முடிவு செய்துள்ளது. எரிபொருள் ஏற்றுமதிக்கான தடைவெளிநாடுகளுக்கு பெட்ரோல், ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>எரிபொருள் ஏற்றுமதி தடையை இந்த ஆண்டு டிசம்பர் வரை நீட்டித்து இருப்பதாக ரஷ்யா முடிவு செய்துள்ளது.</p><h2> எரிபொருள் ஏற்றுமதிக்கான தடை</h2><p>வெளிநாடுகளுக்கு பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான தடையை இந்த ஆண்டின் டிசம்பர் வரை நீட்டிக்க திட்டமிட்டு இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.</p><p> ஜூலை மாத இறுதியுடன் முன்னர் அறிவிக்கப்பட்ட தடை முடிவடைய உள்ள நிலையில், இந்த நடவடிக்கையானது திட்டமிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f63d781f-ba51-47dd-b9da-350db0cf82b2/26-6a65aa0885573.webp' /></p><p> இந்த நீட்டிக்கப்பட்ட தடை எரிபொருள் உற்பத்தி செய்வோர் மற்றும் எரிபொருள் உற்பத்தி செய்யாதோர் என இருவருக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> எரிப்பொருள் தடை டிசம்பர் வரை நீடிப்பது தொடர்பான தகவலை ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் செய்தியாளர்கள் சந்திப்பின் போது உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p> உள்நாட்டு சந்தை நிலவரம் சீரடைந்த பிறகே எரிபொருள் ஏற்றுமதி மீதான தடை தளர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.</p><p></p><p> அதே சமயம் நாட்டில் எரிபொருள் சந்தை முழுமையான ஸ்திரத்தன்மை அடைவதற்கான அனைத்து முயற்சிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் தகவல் தெரிவித்துள்ளார்.</p><p> உள்நாட்டு எரிபொருள் விநியோகத்தை தடையற்றதாக மாற்ற கடந்த ஏப்ரல் மாதம் ரஷ்யா பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்கள் ஏற்றுமதிக்கு தடை விதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T06:32:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீன ராசியில் சனி வக்ர பெயர்ச்சி : இந்த 3 ராசியிரை பிரச்சினைகள் வாட்டியெடுக்கப்போகுது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/saturns-july-2026-transit-who-get-extreme-bad-luck-1785045679"></link>
            <id>https://manithan.com/article/saturns-july-2026-transit-who-get-extreme-bad-luck-1785045679</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில் சனிபகவான் மிகவும் வலிமைமிக்கதும், முக்கியத்துவம் வாய்ந்ததுமான கிரகமாகக் கருதப்படுகிறார். சனியின் ஒவ்வொரு சஞ்சாரமும் மனிதர்களின் வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில் சனிபகவான் மிகவும் வலிமைமிக்கதும், முக்கியத்துவம் வாய்ந்ததுமான கிரகமாகக் கருதப்படுகிறார். </p><p>சனியின் ஒவ்வொரு சஞ்சாரமும் மனிதர்களின் வாழ்க்கையில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தும் என ஜோதிட நம்பிக்கைகள் கூறுகின்றன. குறிப்பாக, சனிபகவான் வக்ர சஞ்சாரம் மேற்கொள்ளும் காலம், சுயபரிசோதனை மற்றும் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் முக்கியமான காலகட்டமாக பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1db9f082-377b-47a9-a142-8aeed836f473/26-6a65a9dd5bd58.webp' /></p><p></p><p>அந்த வகையில், 2026 ஜூலை 29 அன்று சனிபகவான் மீன ராசியில் வக்ர சஞ்சாரம் அடைகிறார். இந்த காலகட்டம் கடந்த கால செயல்கள், நிறைவேற்றப்படாத பொறுப்புகள், கடமைகள், உடல்நல பழக்கங்கள் மற்றும் குடும்ப உறவுகள் குறித்து சிந்தித்து சரியான முடிவுகளை எடுக்க வேண்டிய காலகட்டமாகவே அமையும்.</p><p>&nbsp;சனி வக்ர பெயர்ச்சியானது அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக பாதக மாற்றங்களை ஏற்படுத்தினாலும், தனிப்பட்ட வாழ்க்கை, தொழில், நிதிநிலை என அனைத்திலும் பாரியளவில் சவால்களை சந்திக்கப்போகும் ராசியிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>கும்பம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54ff5641-8642-49c7-a7d4-ae6379d286f6/26-6a65a9de0d82f.webp' /></p><p> கும்ப ராசிக்காரர்கள் ஏழரைச் சனியின் கடைசி கட்டத்தில் உள்ளனர். இந்த காலத்தில் பண விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து, பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது. </p><p>குடும்பத்தில் பழைய பிரச்சினைகள் மீண்டும் எழலாம் என்பதால் யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுப்படாமல் இருப்பது நல்லது. பொறுமையுடன் அணுகினால் தீர்வு காணலாம். </p><p>தொழில் மற்றும் வியாபாரத்தில் சில தடைகள் வரக்கூடும் என்பதால் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும்.புதிய முதலீடுகளில் கூடுதல் கவனட் தேவை. இந்த காலகட்டத்தில் புதிய முயற்ச்சிகளை தவிர்ப்பதே சிறப்பு.&nbsp;</p><h2>

மீனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77f75754-81d3-4f87-b4ea-d969bf16dea2/26-6a65a9decfea6.webp' /></p><p> மீன ராசிக்காரர்கள் ஏழரைச் சனியின் இரண்டாவது கட்டத்தில் உள்ளனர். இந்த காலம் மன அழுத்தம், தன்னம்பிக்கை குறைவு மற்றும் உடல்நல கவனம் தேவைப்படும் காலமாக இருக்கலாம்.</p><p> கடந்த கால தவறுகளை சரிசெய்வது நல்லது. திருமண உறவுகள் மற்றும் குடும்ப உறவுகளில் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் இருக்க, தெளிவான பேச்சும் பொறுமையும் அவசியம்.</p><p>தொழில் விடயத்தில் பாரிய சிக்கல்களையும் நிதி இழப்புகளையும் சந்திக்க நேரிடலாம். பணத்தை கையாளும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.&nbsp;</p><h2>

மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adc3fe90-6233-478e-a653-7cde2260bfe4/26-6a65a9df99a39.webp' /></p><p></p><p>மேஷ ராசிக்காரர்கள் ஏழரைச் சனியின் முதல் கட்டத்தில் உள்ளனர். இந்த காலத்தில் அதிக செலவுகள், மன அழுத்தம் மற்றும் தனிமை உணர்வு ஏற்படலாம்.அவசர முடிவுகள் மற்றும் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும்.</p><p>வேலைப் பளு அதிகரிக்கலாம் என்பதால் மன அமைதியை காக்க வேண்டும். நம்பிக்கையானவர்களுடன் மட்டுமே தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது நல்லது.</p><p>இந்த காலகட்டத்தில், புதிய சொத்துக்கள் வாங்குவது அல்லது புதிய முதலீடுகளை மேற்கொள்வது என்பவற்றை தவிர்த்துக்கொள்வது சிறப்பு.&nbsp;</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T06:32:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறியதால் ஜப்னா கிங்ஸ் கழகத்தின் ஒப்பந்தம் ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-kings-club-contract-cancelled-1785047422"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-kings-club-contract-cancelled-1785047422</id>
            <summary type="text">இலங்கை பிரீமியர் லீக்கில் ஜப்னா கிங்ஸ் அணியுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறியதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பிரீமியர் லீக்கில் ஜப்னா கிங்ஸ் அணியுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
</p><p>
ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
இதன்படி, வீரர்களுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குவது உட்பட, அனைத்துப் பொறுப்புகளையும் ஜப்னா கிங்ஸ் அணிக்குச் சொந்தமான நிறுவனம் ஏற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
ஜப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவர் அண்மையில் ஆட்ட நிர்ணய சதி தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f0cd39f-8d2d-4d0c-bd8c-723dbb563eaa/26-6a65a9c7b73cf.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T06:31:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறக்குமதி செய்யப்பட்ட 1,025 வாகனங்கள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/update-on-1-025-imported-vehicles-released-1785047481"></link>
            <id>https://jvpnews.com/article/update-on-1-025-imported-vehicles-released-1785047481</id>
            <summary type="text">இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1,025 வாகனங்களை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து விடுவித்துக் கொள்ள இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1,025 வாகனங்களை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து விடுவித்துக் கொள்ள இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

அவற்றில் 625 வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு 6 மாதங்களுக்கும் மேலாகின்றன என இலங்கை சுங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a6cf51f-a53e-4993-86c5-3d701075067f/26-6a65a9bae884d.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;வரித் தொகை</h2><p> </p><p style="text-align: justify;">குறித்த வாகனங்களில் எந்தவிதமான சுங்கக் குற்றங்களும் இல்லை எனவும் அதன்படி, எவ்வித சுங்கக் குற்றங்களும் இன்றி விடுவிக்கப்படாத வாகனங்களைச் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 129 ஆவது பிரிவுக்கு அமைவாக ஏலம் விடுவதற்கோ அல்லது டெண்டர் கோரி விற்பனை செய்வதற்கோ எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify;">
 

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் எந்தவொரு பொருளையும் ஒரு மாதத்திற்குள் அதற்குரிய அனைத்து வரிகளையும் செலுத்தி விடுவித்துக்கொள்ள வேண்டும்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
 

அவ்வாறு செய்யத் தவறினால், குறித்த சட்டத்தின் கீழ் அவற்றை விற்பனை செய்து, அந்தப் பணத்தின் மூலம் அரசாங்கத்திற்குத் தேவையான வரித் தொகையை அறவிட்டுக்கொள்வதற்குத் தேவையான ஏற்பாடுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
 

உரிய வரிகளைச் செலுத்திய பின்னர் எஞ்சியிருக்கும் தொகையைக் கொண்டு துறைமுக மற்றும் களஞ்சியக் கட்டணங்களைச் செலுத்த முடியும்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
 

அக்கட்டணங்களைச் செலுத்திய பின்னரும் எஞ்சியத் தொகை ஏதேனும் இருப்பின், அதனைத் தொடர்புடைய இறக்குமதியாளருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">&nbsp;விடுவிக்கப்படாத வாகனங்கள் குறித்துத் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய எதிர்காலத்தில் அவற்றை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் வலியுறுத்தினார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
 

இருப்பினும், நியாயமான காரணத்தினால் குறித்த வாகனங்களை விடுவித்துக்கொள்ள முடியாமல் போயுள்ளதாக ஏதேனும் இறக்குமதியாளர் அறிவிக்கும் பட்சத்தில், அது குறித்து பரிசீலிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது என இலங்கை சுங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify;"><br></p>]]></content>
            <updated>2026-07-26T06:31:34+00:00</updated>
        </entry>
    </feed>
