<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-13T04:41:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான ஹிஸ்புல்லாஹ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hizbullah-appears-before-bribery-commission-1786595395"></link>
            <id>https://tamilwin.com/article/hizbullah-appears-before-bribery-commission-1786595395</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (13) முன்னிலையாகியுள்ளார்.சொத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (13) முன்னிலையாகியுள்ளார்.</p><p>சொத்துக்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p><br></p><p>

</p>]]></content>
            <updated>2026-08-13T04:37:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் பதவியேற்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-appoints-eric-meyer-as-new-ambassador-to-sl-1786593173"></link>
            <id>https://ibctamil.com/article/us-appoints-eric-meyer-as-new-ambassador-to-sl-1786593173</id>
            <summary type="text">இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் (Eric Meyer) உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுள்ளார்.வோஷிங்டனில் அமைந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் (Eric Meyer) உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுள்ளார்.</p><p>வோஷிங்டனில் அமைந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இப்பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.</p><p>இதனைத் தொடர்ந்து, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம் எரிக் மேயருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டது.</p><p></p><h2>வெளியுறவுச் சேவை அதிகாரி</h2><p>

எரிக் மேயர், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களில் பரந்த அனுபவம் கொண்ட ஒரு சிரேஸ்ட வெளியுறவுச் சேவை அதிகாரியாவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66f2dd4c-a91f-4b9d-97aa-5d59a73dcb12/26-6a7d46ca39a1b.webp' /></p><p> 

தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், அவர் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் சிரேஸ்ட அதிகாரியாகப் பணியாற்றினார்.</p><p> 

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகமும் எரிக் மேயரை வரவேற்றுள்ளதோடு, அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பங்களிப்பை மேலும் வலுப்படுத்த அவரது தலைமையின் கீழ் பணியாற்றத் தூதரகக் குழு ஆவலுடன் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>எரிக் மேயரின் பதவிக் காலம்</h2><p> </p><p>

வொஷிங்டன் மற்றும் கொழும்புக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதிலும், பகிரப்பட்ட நலன்கள் மற்றும் முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்வதிலும் எரிக் மேயரின் பதவிக் காலம் கவனம் செலுத்தும் என்றும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97127749-59a1-4b3e-afd1-fbd9864d6d19/26-6a7d46c97d946.webp' /></p><p> </p><p>

பொருளாதார ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பு, நல்லாட்சி மற்றும் வளர்ச்சி உள்ளிட்ட பல துறைகளில் அமெரிக்காவும் இலங்கையும் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையிலேயே மேயரின் இந்த நியமனம் அமைந்துள்ளது. </p><p>

புதிய தூதுவரை கொழும்பிற்கு வரவேற்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கும் அவருடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T04:30:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நயன்தாரா அணிந்திருக்கும் புடவை முதல் மோதிரம் வரை, அவற்றின் விலை எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/nayanthara-orange-saree-bracelet-and-ring-price-1786592398"></link>
            <id>https://cineulagam.com/article/nayanthara-orange-saree-bracelet-and-ring-price-1786592398</id>
            <summary type="text">டாக்சிக் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு நயன்தாரா அணிந்து வந்திருந்த புடவை, பிரேஸ்லெட் மற்றும் மோதிரத்தின் விலை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன....</summary>
            <content type="html"><![CDATA[<p>டாக்சிக் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு நயன்தாரா அணிந்து வந்திருந்த புடவை, பிரேஸ்லெட் மற்றும் மோதிரத்தின் விலை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p></p><p>
</p><h2>
நயன்தாரா </h2><p>

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, ஜவான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பான்-இந்தியன் ஸ்டாராக வலம் வருகிறார். அடுத்ததாக சல்மான் கானுக்கு ஜோடியாக இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f1c13fc-4fd4-4896-8286-e6fb740b5f57/26-6a7d3c9321ced.webp' /></p><p> 

இதுமட்டுமின்றி மூக்குத்தி அம்மன் 2, Hi என அடுத்தடுத்த பல திரைப்படங்கள் நயன்தாராவின் நடிப்பில் வெளிவரவுள்ளன. இந்நிலையில், வருகிற ஆகஸ்ட் 26-ஆம் தேதி இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் டாக்சிக் வெளியாகிறது.</p><h2>

டிரைலர் வெளியீட்டு விழா
</h2><p>
<a href="https://www.youtube.com/watch?v=JsD-LmCkUpY" target="_blank">டாக்சிக் </a>திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. பட ப்ரோமோஷனில் பெரிதும் கலந்துகொள்ளாத நயன்தாரா, இதில் கலந்துகொண்டார். மேலும், தான் ஏன் படத்தின் ப்ரோமோஷன் விழாக்களில் கலந்துகொள்வதில்லை, டாக்சிக் ப்ரோமோஷனில் மட்டும் ஏன் கலந்துகொண்டேன் என்பது குறித்தும் விவரமாக கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3968f11-3079-4236-b03d-189b26e94d3d/26-6a7d3c926d2ec.webp' /></p><p> </p><h2>

புடவை, பிரேஸ்லெட் மற்றும் மோதிரத்தின் விலை </h2><p>

டாக்சிக் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா அணிந்திருந்த ஆரஞ்சு நிற புடவை, பிரேஸ்லெட் மற்றும் மோதிரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், அவர் அணிந்திருந்த புடவையின் விலை ரூ. 22,900 என்றும், பிரேஸ்லெட்டின் விலை ரூ. 23 லட்சம் என்றும், மோதிரத்தின் விலை ரூ. 6.25 லட்சம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efcc6b37-c4e8-4de0-aba6-1251b2f986af/26-6a7d3c91a7a94.webp' /></p>]]></content>
            <updated>2026-08-13T04:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 9 இந்திய கடற்றொழிலாளர்கள் படகுடன் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/9-indian-fishermen-arrested-trespassing-sri-lankan-1786593360"></link>
            <id>https://ibctamil.com/article/9-indian-fishermen-arrested-trespassing-sri-lankan-1786593360</id>
            <summary type="text">தலைமன்னார், உருமலை முனைக்கு அப்பால் உள்ள இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய கடற்றொழிலாளர்கள் இல...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமன்னார், உருமலை முனைக்கு அப்பால் உள்ள இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
நேற்று (12.08.2026) இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கையின்போதே குறித்த கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
</p><p>
சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த அவர்கள், தடைசெய்யப்பட்ட இழுவலை முறையைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த நிலையில், இந்திய இழுவைப்படகு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>9 கடற்றொழிலாளர்கள் கைது</h2><p>கைது செய்யப்பட்ட 9 கடற்றொழிலாளர்களும், அவர்கள் பயன்படுத்திய படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21e8cfca-4c19-4314-b7d0-66f5aabcc476/26-6a7d461f40979.webp' /></p><p>
இதனிடையே, மன்னார் தீவு மற்றும் இராமர் பாலத்தைச் சுற்றியுள்ள மன்னார் வளைகுடா கடற்பகுதி, சர்வதேச மற்றும் உள்ளூர் மட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கடல்சார் பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்தப் பகுதியில் கடல்சார் வளங்களைப் பாதுகாப்பதற்காக விசேட கடற்றொழில் முகாமைத்துவ மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T04:25:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய என்.சந்திரசேகரன் - பங்குகள் வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/n-chandrasekaran-step-down-as-tata-sons-chairman-1786517952"></link>
            <id>https://news.lankasri.com/article/n-chandrasekaran-step-down-as-tata-sons-chairman-1786517952</id>
            <summary type="text">N.Chandrasekaran resigns tata sons chairman : டாடா சன்ஸ் தலைவர் பதவியை தமிழ்நாட்டை சேர்ந்த என்.சந்திரசேகரன் ராஜினாமா செய்துள்ள நிலையில், டாடா குழும பங...</summary>
            <content type="html"><![CDATA[<p>N.Chandrasekaran resigns tata sons chairman : டாடா சன்ஸ் தலைவர் பதவியை தமிழ்நாட்டை சேர்ந்த என்.சந்திரசேகரன் ராஜினாமா செய்துள்ள நிலையில், டாடா குழும பங்குகள் சரிவை சந்தித்துள்ளது.</p><h3> 

டாடா சன்ஸ் தலைவர் பதவி விலகல்</h3><p> 

400 பில்லியன் டொலர் மதிப்புள்ள டாடா குழுமத்தின் தாய் நிறுவனமாக டாடா சன்ஸ் உள்ளது. 

இது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), டாடா மோட்டார்ஸ் மற்றும் ஏர் இந்தியா உட்பட 30க்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் கட்டுப்படுத்துகிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/DoDeWAGUz9s" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
</p><p>
டாடா சன்ஸ் நிறுவனத்தின் 66% பங்குகள், குழுமத்தின் தொண்டுப் பிரிவான டாடா டிரஸ்ட்ஸுக்குச் சொந்தமானது.
</p><p>
கடந்த 2017 ஆம் ஆண்டு டாடா சன்ஸ் தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d60c043-2735-4bf5-9063-76fc6ec81d95/26-6a7c19c135852.webp' /></p><p>

அவரது பதவிக்காலம் பிப்ரவரி 2027 ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்வதாக என்.சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.</p><p> 

ஆகஸ்ட் 18 அன்று நடைபெறவுள்ள நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்திற்கு முன்னதாக இந்த ராஜினாமா நடைபெற்றுள்ளது. </p><p>

டாடா டிரஸ்ட்ஸின் தலைவர் நோயல் டாடா உடனான கருத்து வேறுபாடு மற்றும் எதிர்ப்பு காரணமாகவே இந்த ராஜினாமா முடிவை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.&nbsp;</p><p></p><p> 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டாடா குழுமத்தில் எனது 40 ஆண்டுகால தொழில் வாழ்க்கையை நிறைவு செய்துள்ளேன். இந்த மதிப்புமிக்க நிறுவனத்திற்குப் பங்களிக்கும் மிகுந்த மனநிறைவைத் தரும் வாய்ப்பிற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். </p><p>

கடந்த 10 ஆண்டுகளாக டாடா சன்ஸ் நிறுவனத்தை வழிநடத்தியது ஒரு பெரும் கௌரவமாகவும் ஆழ்ந்த பொறுப்பாகவும் இருந்துள்ளது.</p><p>

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக எனது தற்போதைய பதவிக்காலம் பிப்ரவரி 20, 2027 அன்று முடிவடைகிறது. சர் தோரப்ஜி டாடா அறக்கட்டளை மற்றும் சர் ரத்தன் டாடா அறக்கட்டளை ஆகியவை எனது அடுத்த பதவிக்காலத்தை ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்க ஒருமனதாகத் தீர்மானித்துப் பரிந்துரைத்தன. இதனை டாடா சன்ஸ் நியமனம் மற்றும் ஊதியக் குழு மற்றும் இயக்குநர்கள் குழு பதிவுசெய்து பரிந்துரைத்தது. </p><p>

அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 24, 2026 அன்று டாடா சன்ஸ் இயக்குநர்கள் குழுவில் அந்தத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், இயக்குநர்கள் குழு உறுப்பினர்களில் ஒருவர் அதற்கு ஆதரவளிக்காததால் அந்த முன்மொழிவு நிறைவேற்றப்படவில்லை. ஒருமித்த ஆதரவு இல்லாத நிலையில், நான் அந்த முடிவை ஒத்திவைக்கத் தேர்ந்தெடுத்தேன்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Tata Sons Chairman, N Chandrasekaran, released a statement, &quot;I have communicated to the Tata Sons Board that I have decided not to offer myself for reappointment when my term ends on Feb 20, 2027. I have asked the Board to decide on the succession soon to ensure a proper… <a href="https://t.co/cG5eBoftOg">pic.twitter.com/cG5eBoftOg</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2087419418230104302?ref_src=twsrc%5Etfw">August 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

அந்த இயக்குநர் குழுக் கூட்டம் நடந்து 6 மாதங்கள் ஆகிவிட்டன, ஆனால் இன்றுவரை எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. டாடா சன்ஸ் ஒரு மிகப் பெரிய நிறுவனம், மேலும் பல முக்கியத் திட்டங்கள் செயல்படுத்தும் இறுதிக்கட்டத்தில் உள்ளன.</p><p> 

பிப்ரவரி 2027 க்கு அப்பால் குழுமத்தை வழிநடத்த ஒரு தலைவர் இருப்பது அவசியம் என்பது மட்டுமல்லாமல், ஊழியர்கள், முதலீட்டாளர்கள், கூட்டாளிகள் மற்றும் பிற சம்பந்தப்பட்ட தரப்பினருக்குத் தலைமைத்துவம் குறித்த தெளிவும் முக்கியமானது. </p><p>

இந்தச் சூழ்நிலைகளில், 2027 பிப்ரவரி 20 அன்று எனது பதவிக்காலம் முடிவடையும்போது, ​​மறுநியமனத்திற்கு என்னை முன்மொழியப் போவதில்லை என முடிவு செய்துள்ளதை, இன்று காலை டாடா சன்ஸ் வாரியத்திற்குத் தெரிவித்துள்ளேன். </p><p>முறையான அதிகாரப் பரிமாற்றத்தை உறுதி செய்வதற்காக, அடுத்த வாரிசு நியமனம் குறித்து விரைவில் முடிவெடுக்குமாறு வாரியத்தைக் கேட்டுக்கொண்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.</p><h3> 

பங்குகள் வீழ்ச்சி</h3><p> 

சந்திரசேகரனின் ராஜினாமாவையடுத்து, டாடா குழுமப் பங்குகள் இன்று 4% வரை சரிவை சந்தித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e57f18d-aceb-46e8-bea9-5fcb9875d71f/26-6a7c19c2918af.webp' /></p><p>

ஜாகுவார் லேண்ட் ரோவரின் உரிமையாளரான டாடா மோட்டார்ஸ், 2.8 சதவீதமும், TCS 4.1 சதவீதம் சரிவையும் சந்தித்துள்ளது. </p><h3>

யார் இந்த என்.சந்திரசேகரன்?
</h3><p>
தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் பிறந்த என்.சந்திரசேகரன், தனது பள்ளிக்கல்வியை மோகனூரில் உள்ள அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddef3a49-af30-4558-9b16-c69a9e76c814/26-6a7c19c1db96e.webp' /></p><p> 

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தையும், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் கணினிப் பிரிவில் முதுகலையில் பட்டம் பெற்றுள்ளார்.&nbsp;</p><p> 

1987 ஆம் ஆண்டு, டாடா குழுமத்தின் TCS நிறுவனத்தில் பயிற்சியாளராக வாழ்க்கையை தொடங்கி, 2009 ஆம் ஆண்டு அதன் தலைமை செயல் அதிகாரியாக(CEO) நியமிக்கப்பட்டார்.
</p><p>
2024-25 நிதியாண்டில் ரூ.155.81 கோடி சம்பளம் பெற்ற என்.சந்திரசேகரன், இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நிறுவனத் தலைவர் என்ற பெருமையை பெற்றார்.&nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T04:25:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன் ஹிஸ்புல்லா எம்.பி இலஞ்சம் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mp-hizbullah-arrives-at-bribery-commission-1786594658"></link>
            <id>https://ibctamil.com/article/mp-hizbullah-arrives-at-bribery-commission-1786594658</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, இலஞ்சம் அல்லது ஊழல் முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு&amp;nbsp;வருகை தந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, இலஞ்சம் அல்லது ஊழல் முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு&nbsp;வருகை தந்துள்ளார். </p><p>அவர் சற்றுமுன்னர் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக (CIABOC) வருகை தந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>சொத்துக்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9975654b-d0bb-4fd5-a68a-b9299eca618b/26-6a7d483fc9a94.webp' /></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T04:23:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேவை மயக்கத்தில் வைத்து உண்மையை கண்டுபிடிக்க நடவடிக்கை! வைத்தியர்கள் தீவிர முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/medical-board-to-hospital-to-examine-salley-1786593963"></link>
            <id>https://tamilwin.com/article/medical-board-to-hospital-to-examine-salley-1786593963</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலேவை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலேவை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
</p><p>
அவரை மருத்துவ சோதனைக்கு உட்படுத்துவதற்கு ஐவரடங்கிய மருத்துவக் குழுவினர் கடந்த வாரம் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.
</p><p>
அங்கு வருகை தந்த மருத்துவக் குழுவினர் முற்பகல் 9.00 மணிமுதல் மாலை வரை அவரைப் பரிசோதித்ததாக தேசிய மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><h2><b>
ஐவரடங்கிய மருத்துவக் குழு</b></h2><p>கோட்டை நீதவான் பசன் அமரசேனவினால் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய மருத்துவக் குழுவினரே இவ்வாறு பரிசோதனை செய்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f82ee1dc-4226-4243-9925-4796d0410099/26-6a7d456f789d3.webp' /></p><p>அத்துடன், எதிர்வரும் வாரம் சலேயின் குடும்ப உறவினர்களைச் சந்திப்பதற்கும் மருத்துவக் குழு தீர்மானித்துள்ளது.
</p><p>
கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமையவே இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.</p><p>

சிரேஷ்ட நிபுணத்துவ நீதவான் மனநல மருத்துவர் சுசித் மெண்டிஸின் தலைமையில் நியமிக்கப்பட்ட இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நிபுணத்துவ மருத்துவர் சித்தாஹரி அபயநாயக்க, நிபுணத்துவ மருத்துவர் தசந்தி அக்மீமன, நிபுணத்துவ மருத்துவர் துலைக்கா அமரசிங்க வாஸ், நிபுணத்துவ மருத்துவர் வஜிர தர்மவர்தன ஆகியோர் செயற்படுகின்றனர்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T04:17:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய வைத்தியசாலையை அண்டிய பகுதிகளில் அதிகரித்துள்ள குற்றச்செயல்கள்! மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/national-hospital-colombo-1786582167"></link>
            <id>https://tamilwin.com/article/national-hospital-colombo-1786582167</id>
            <summary type="text">கொழும்பு தேசிய வைத்தியசாலை சூழல் குற்றச்செயற்பாட்டாளர்களிடமிருந்து மீட்கப்படாத ஒரு வலயமாக மாறியுள்ளதால் வைத்தியசாலைக்கு வரும் பொது மக்கள் அவதானமாக செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு தேசிய வைத்தியசாலை சூழல் குற்றச்செயற்பாட்டாளர்களிடமிருந்து மீட்கப்படாத ஒரு வலயமாக மாறியுள்ளதால் வைத்தியசாலைக்கு வரும் பொது மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p> 
வைத்தியசாலைக்கு முன்னால் இருக்கும் பகுதியான நொரிஸ் கெனல் வீதியில் கடைகளுக்கு மத்தியில் ஒரு பொதுக்கழிப்பறை அமைந்துள்ளது. </p><p>இருப்பினும், இரவு 7 மணியின் பின்னர் குறித்த இடம் போதைக்கு அடிமையானவர்களின் புகலிடமாக மாறுவிடுகின்றது. 
இக்கழிப்பறை கொழும்பு மாநகரசபையினால் நிர்வகிக்கப்பட்டாலும் இரவு வேளையில் எந்தவொரு வெளிச்சமும் இருப்பதில்லை. </p><h2>

</h2><p><span style="color: inherit; font-size: 1.75rem;">போதைக்கு அடிமையானவர்களின் ஆதிக்கம்</span></p><p>இரவில் இந்த இருள் சூழ்ந்த பாதையால் பயணிக்கும் ஒரு அப்பாவி மனிதன் தன் ஆடை மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ள பெரும் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e745a55-0786-447e-9129-e52e91ab42a4/26-6a7d1499a19d0.webp' /></p><p> கூர்மையான ஆயுதங்களைக் காட்டிப் பயமுறுத்துதல், பணம் பறித்தல், தாக்குதல் நடத்துதல் ஆகியவை இவ்விடத்தில் தினமும் நடைபெறும் சம்பவங்களாகும். </p><p>கடைகளுக்கு வரும் மனிதர்களை பயமுறித்து கப்பம் பெறுதல் மற்றும் வைத்தியசாலையில் வேலை செய்யும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.</p><p>குறித்த பகுதிகளில் வியாபாரம் செய்யும் பெண்மணிகள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் ரூ. 400 - 500 ஐப் பறிக்கிறார்கள். 'இந்தக் கடைப் பக்கத்தில் எங்கும் நிற்காதீர் உன்னை வெட்டிவிடுவேன்' என்று ரூ. 400 - 500 ஐப் பறிக்கிறார்கள்.</p><p>இங்கிருக்கும் 'பாபா' என்றழைக்கப்படும் போதைப்பொருள் வியாபாரி பொலிஸ் அதிகாரி போல் நடித்துக் கப்பம் பெறுவதும் கூர்மையான ஆயுதங்களால் தாக்குவதும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது.</p><p>அதுமட்டுமன்றி தேசிய வைத்தியசாலையைச் சுற்றி நடக்கும் மாபெரும் மோசடி என்னவென்றால் தானத்திற்கு எனக் கூறி பொதுமக்களிடம் இருந்து பணம் சேகரிப்பதாகும். </p><p>இவ்வாறு சேகரிக்கப்படும் பணம் நேரடியாகவே போதைப்பொருள் வாங்குவதற்குச் செல்கிறது.
 நாளாந்த வருமானம் 10,000 ரூபாவையும் மிஞ்சுவதாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. </p><p>இவ்வாறு மோசடியாகப் பணம் சேகரித்த பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல வருடங்களாகத்தான் இதைச் செய்து வருகிறார்கள். </p><p>மேலும் வைத்திசாலையின் பொலிஸ் காவலரணில் அடையாள அட்டைகள் மற்றும் பணப்பைகள் குவிந்து கிடக்கின்றன.
</p><p>பொலிஸ் போக்குவரத்து அதிகாரிகள் தமது கடமையை முறறையாகச் செய்தபோதிலும் தேசிய வைத்தியசாலை சூழலின் பாதுகாப்புத் தொடர்பாகப் பெரும் கேள்விக்குறியான சூழ்நிலையே நிலவுகிறது. </p><p>இது குறித்து விரைவான தீர்வை வழங்குவதற்கு பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நேரடி கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T04:11:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் 21 வயது இலங்கை மாணவன் குத்திக்கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/18-year-old-held-after-sl-student-dies-in-japan-1786589858"></link>
            <id>https://ibctamil.com/article/18-year-old-held-after-sl-student-dies-in-japan-1786589858</id>
            <summary type="text">ஜப்பானில் 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் சிபா மாகாணத்தின் நாகரேயாமா நகரில் உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானில் 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p>குறித்த சம்பவம் சிபா மாகாணத்தின் நாகரேயாமா நகரில் உள்ள ஒரு இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலை சுமார் 10:20 மணியளவில் நடந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p> 

ஜப்பானில் கல்வி பயின்று வந்த இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><h2>காவல்துறையினரால் கைது</h2><p> </p><p>

குறித்த கொலையை அவருடன் தங்கியிருந்த 18 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவரே செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8933c19-2939-428d-b443-51941c5bc721/26-6a7d351f0ee69.webp' /></p><p>இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை அந்நாட்டுப் காவல்துறையினர் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. </p><p>

சந்தேகநபரான 18 வயது இளைஞரை அந்நாட்டுப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். </p><p>

மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, தானும் தனது தாயாரும் அவமதிக்கப்பட்டதால் ஏற்பட்ட கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T04:11:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[தளபதி கடைசி படம் இப்படி ஆகிவிட்டதே, ஜனநாயகன் வெற்றியா, தோல்வியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vijay-jananayagan-final-verdict-1786582174"></link>
            <id>https://cineulagam.com/article/vijay-jananayagan-final-verdict-1786582174</id>
            <summary type="text">ஜனநாயகன்தளபதி விஜய் நடிப்பில் அவரின் கடைசி படமான ஜனநாயகன் பல தடைகளை தாண்டி கடந்த மாதம் திரைக்கு வந்தது. இந்த படம் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆனது அனைவரும...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜனநாயகன்</h2><p>தளபதி விஜய் நடிப்பில் அவரின் கடைசி படமான ஜனநாயகன் பல தடைகளை தாண்டி கடந்த மாதம் திரைக்கு வந்தது. இந்த படம் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆனது அனைவரும் அறிந்தது தான். </p><p>அப்படி படம் லீக் ஆகியும் உலகம் முழுவதும் இந்த படம் ரூ 300 கோடி வசூலை குவிக்க, கண்டிப்பாக இந்த சாதனை எல்லாம் இந்தியாவில் வேறு எந்த நடிகரும் செய்ய முடியாதது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69de76ac-d43f-426c-bee1-3c96d851be86/26-6a7d14a18cc9e.webp' /></p><p>ஆனால், தளபதி படம் என்றாலே வெற்றி தான் ஆனால் 300 கோடி வசூல் செய்தும் ஒரு பல இடங்களில் ஜனநாயகன் நஷ்டத்தை கொடுக்க, கண்டிப்பாக இது தளபதி கடைசி படமாக இருக்க கூடாது.</p><p>அவர் கண்டிப்பாக மிகப்பெரிய காம்போ-வில் ஒரு படம் கொடுத்து 500 கோடி மேல் வசூல் அறுவடை செய்தே சினிமாவை விட்டு போகவேண்டும் என்பது எல்லோரின் ஆசை, நடக்குமா..அது தளபதி முடிவு தானே, பார்ப்போம்.</p>]]></content>
            <updated>2026-08-13T04:00:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தயார் நிலையில் தூக்குமேடை - 50 வருடங்களின் பின் மீண்டும் இலங்கையில் மரண தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/welikada-gallows-ready-if-death-penalty-imposed-1786588410"></link>
            <id>https://ibctamil.com/article/welikada-gallows-ready-if-death-penalty-imposed-1786588410</id>
            <summary type="text">இலங்கை அரசாங்கம் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்த தீர்மானித்தால் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள தூக்குமேடை பயன்படுத்துவதற்கு தயாராக இருப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசாங்கம் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்த தீர்மானித்தால் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள தூக்குமேடை பயன்படுத்துவதற்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>வெலிக்கடை சிறைச்சாலை&nbsp;உடன் தற்போது இரு மரண தண்டனை நிறைவேற்றுபவர்கள் இணைக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் பணிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். </p><p>பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர்களின் அடையாளங்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>ஒரே தூக்குமேடை</h2><p> இலங்கையில் தற்போது கட்டமைப்பு ரீதியாக செயல்படக்கூடிய ஒரே தூக்குமேடை வெலிக்கடை சிறைச்சாலையிலேயே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1deca63c-aa3d-451e-8602-c3d7b36b0808/26-6a7d30f9128e3.webp' /></p><p>கண்டி போகம்பர சிறைச்சாலையில் இருந்த மற்றொரு தூக்கு மேடை தற்போது அந்தச் சிறைச்சாலை மூடப்பட்டுள்ளதால் பயன்பாட்டில் இல்லை. </p><p>சிறைச்சாலை அதிகாரிகளின் தகவலின்படி தற்போது நாட்டில் 806 கைதிகள் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.</p><p></p><p> </p><h2>மீண்டும்&nbsp;மரண தண்டனை</h2><p>இவர்களில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட 58 பேர் அடங்குகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a26cd16f-b3c7-46b4-8720-b795107f4110/26-6a7d30f9b9031.webp' /></p><p> அவர்களில் 52 ஆண்களும் 6 பெண்களும் உள்ளனர். மேலும் ஒரு வெளிநாட்டவரும் மரண தண்டனை கைதிகளில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>போதைப்பொருள் குற்றங்களுக்காக மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பான விவகாரம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கடந்த 10 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற தேசிய செயற்பாட்டு சபை கூட்டத்திலும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T04:00:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜூன் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக்கோட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/srilanka-s-official-poverty-line-rises-to-rs-17592-1786591446"></link>
            <id>https://ibctamil.com/article/srilanka-s-official-poverty-line-rises-to-rs-17592-1786591446</id>
            <summary type="text">ஜூன் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக்கோடு 17,592 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜூன் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக்கோடு 17,592 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

இது கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 277 ரூபாய் உயர்வாகும் எனத் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>கொழும்பு மாவட்டத்தின் வறுமைக்கோடு</h2><p>

ஒரு நபர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு மாதத்திற்குத் தேவைப்படும் குறைந்தபட்சத் தொகையே உத்தியோகபூர்வ வறுமைக்கோடு மூலம் அறிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36c21750-1704-4163-b693-cf77b1d00ba9/26-6a7d3c807f009.webp' /></p><p> </p><p>

ஜூன் மாத உத்தியோகபூர்வ வறுமைக்கோட்டின்படி, கொழும்பு மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் மதிப்பு 18,973 ரூபாவாக அதிகரித்துள்ளதுடன், கம்பஹா மாவட்டத்தில் அம்மதிப்பு 18,876 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.</p><p>

வறுமைக்கோட்டின் மிகக் குறைந்த மதிப்பு மொனராகலை மாவட்டத்தில் பதிவாகியுள்ள நிலையில் அந்தத் தொகை 16,821 ரூபாயாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T03:46:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[‘வெற்றி தமிழ்நாடு 2026’ - இன்று சென்னையில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/vetri-tamilnadu-2026-meeting-1786592192"></link>
            <id>https://ibctamilnadu.com/article/vetri-tamilnadu-2026-meeting-1786592192</id>
            <summary type="text">Vetri Tamilnadu 2026: சென்னையில் இன்று வெற்றித்தமிழ்நாட்டு முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார்.

இன்று காலை 11 மணியள...</summary>
            <content type="html"><![CDATA[<p>Vetri Tamilnadu 2026: சென்னையில் இன்று வெற்றித்தமிழ்நாட்டு முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார்.</p><p>

இன்று காலை 11 மணியளவில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் தொடங்கி வைக்கிறார், இவருடன் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் முதலீட்டாளர்கள் பங்கேற்கின்றனர்.
</p><p>
தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வண்ணம் குறித்த மாநாடு நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8cdcbea-e9a0-4051-a304-e9b9c3549b0d/26-6a7d3bc195494.webp' /><br></p><h2>அமைச்சர் கீர்த்தனா எக்ஸ் தள பதிவு</h2><p>
</p><p>
இதுதொடர்பில் அமைச்சர் கீர்த்தனா, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களைச் சந்தித்து, நடைபெறவுள்ள ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026’ தொடர்பான பணிகளை விளக்கி, மாநாட்டைத் தொடங்கி வைத்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைப்பு விடுத்தேன்.
</p><p>
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், முதலீட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் மாற்றத்தை உருவாக்குபவர்கள் ஒன்றிணையும் முக்கிய தளமாக இம்மாநாடு அமையவுள்ளது. </p><p>தமிழ்நாட்டின் மீது உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி, ஒவ்வொரு முதலீட்டையும் மக்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்பாக மாற்றும் நமது பயணத்தில், ‘வெற்றி தமிழ்நாடு 2026’ ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.&nbsp;&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-13T03:36:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸ்: உலகளவில் 21 நாட்களில் செய்துள்ள வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/jananayagan-worldwide-21-days-box-office-1786590768"></link>
            <id>https://cineulagam.com/article/jananayagan-worldwide-21-days-box-office-1786590768</id>
            <summary type="text">விஜய் நடிப்பில் வெளிவந்த ஜனநாயகன் திரைப்படம் 21 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஜனநாயகன்

தளபதி விஜய்யின் கடைசி...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஜய் நடிப்பில் வெளிவந்த ஜனநாயகன் திரைப்படம் 21 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><p>
</p><h2>
ஜனநாயகன்
</h2><p>
தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் கடந்த ஜூலை 23-ஆம் தேதி வெளியானது. இப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்க, கே.வி.என் நிறுவனம் தயாரித்தது. அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8a1395f-a21a-41d2-b800-8ab32b402b5e/26-6a7d36342ec48.webp' /></p><p> 

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக நடிகை <a href="https://www.youtube.com/watch?v=JTHZCJ8Rhxg" target="_blank">மமிதா </a>பைஜூ நடித்துள்ளார். மேலும், பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், ரேச்சல் ரெபேக்கா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9122f3cf-f390-4faf-8929-68554c29813e/26-6a7d36337a263.webp' /></p><p>பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த ஜனநாயகன் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும், கலவையான விமர்சனங்களை சந்தித்தது. மேலும், ஒருசில இடங்களில் வசூல் ரீதியாக சரிவை சந்தித்தது.
</p><h2>
பாக்ஸ் ஆபிஸ்</h2><p>

இந்நிலையில், 21 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ccbe9aa-7753-42cc-b787-32a322092a93/26-6a7d3632c4e0f.webp' /></p><p>
அதன்படி, 21 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 316 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p>]]></content>
            <updated>2026-08-13T03:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரால் அரசாங்கத்திற்கு செலுத்தப்படாத கோடிக்கணக்கான பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-prime-minister-mp-presidential-fund-issue-1786587624"></link>
            <id>https://tamilwin.com/article/former-prime-minister-mp-presidential-fund-issue-1786587624</id>
            <summary type="text">ஜனாதிபதி நிதியத்திலிருந்து மீள பெறப்படும் என்ற அடிப்படையில் ஒரு முன்னாள் பிரதமருக்கும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் வழங்கப்பட்ட பெருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி நிதியத்திலிருந்து மீள பெறப்படும் என்ற அடிப்படையில் ஒரு முன்னாள் பிரதமருக்கும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் வழங்கப்பட்ட பெருந்தொகை பணம் இதுவரை மீட்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.</p><p>

தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது.
</p><h2>செலுத்தப்படாத கோடிக்கணக்கான பணம்</h2><p>
அதன்படி, 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், மருத்துவ சிகிச்சை வசதிகளுக்காக ஜனாதிபதி நிதியிலிருந்து ஒரு முன்னாள் பிரதமருக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வழங்கப்பட்ட ( 24,657,015) சுமார் இரண்டரை கோடி ரூபாய் தொகையானது, மே 20, 2026 நிலவரப்படி வசூலிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ef8ef9c-aa17-436c-bba7-d585fa9140b3/26-6a7d3a2e97859.webp' /></p><p>
</p><p>
2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய தணிக்கைச் சட்டத்தின் பிரிவு 12 (j)-இன் படி மேற்கொள்ளப்பட்ட தணிக்கை ஆய்வுகளின் போது இந்த தகவல் வெளிப்பட்டுள்ளது.
</p><p>
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்ட ரூ. 10,908,798 (ஏப்ரல் 04, 2012 அன்று) மற்றும் முன்னாள் பிரதமருக்கு வழங்கப்பட்ட ரூ. 13,748,217 ஆகிய தொகைகள் மே 20, 2026 நிலவரப்படி வசூலிக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.</p><p> 

ஜனாதிபதி நிதியத்தின் 2025 ஆண்டு அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள தணிக்கை அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T03:29:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[புல்வெளியில் விழுந்து வெடித்து சிதறிய அமெரிக்கா ராணுவ ஹெலிகாப்டர்: பரவிய கட்டுக்கடங்காத காட்டுத்தீ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-army-apache-helicopter-crash-in-texas-1786591311"></link>
            <id>https://news.lankasri.com/article/us-army-apache-helicopter-crash-in-texas-1786591311</id>
            <summary type="text">அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். ராணுவ ஹெலிகாப்டர் விபத்துஅமெரிக்காவின் மத்திய டெக்சாஸ் புல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.</p><h2> ராணுவ ஹெலிகாப்டர் விபத்து</h2><p>அமெரிக்காவின் மத்திய டெக்சாஸ் புல்வெளி ஒன்றில் ராணுவத்தின் அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென விழுந்து விபத்துக்குள்ளானது.</p><p> இந்த ஹெலிகாப்டர் விபத்து சம்பவத்தில் அதில் பயணித்த இரண்டு பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8615e1e5-20f3-4ad1-8ad7-119fbefea5be/26-6a7d385098271.webp' /></p><p> புதன்கிழமை உள்ளூர் நேரப்படி மதியம் 1.30 மணிக்கு ஹெலிகாப்டர் விபத்து குறித்து ஷெரீப் அலுவலகத்திற்கு அவசர அழைப்பு வந்துள்ளது.</p><p> இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அமெரிக்க ராணுவத்தின் அப்பாட்சி ஏ.எச் 64 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதை உறுதிப்படுத்தினர்.</p><p> மேலும் விபத்திற்குள்ளான ஹெலிகாப்டர் போர்ட் ஹுட் தளத்தை மையமாக கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் அவசர விசாரணையை நடத்தி வருகின்றனர்.</p><p></p><h2> காட்டுத்தீ</h2><p>ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதி புல்வெளி நிறைந்த பகுதி என்பதால் அப்பகுதியில் பயங்கர தீ விபத்தானது ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2778173c-7f13-444a-8d8c-af3927cc4876/26-6a7d38514be44.webp' /></p><p>இந்த தீ விபத்து பின்னர் கட்டுக்கடங்காத காட்டுத்தீயாக அதிகரித்ததை அடுத்து அப்பகுதியை சுற்றி இருந்த பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.</p><p> இந்த விபத்தின் போது ஹெலிகாப்டர் ஆனது வேறு எந்த கட்டிடத்தின் மீதோ அல்லது வீடுகள் மீதோ மோதவில்லை என்பதை பெல் கவுண்டி ஷெரிஃப் அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் கிளிஃப் கோல்மன் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T03:22:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/europe-hundreds-of-flights-cancelled-1786570530"></link>
            <id>https://news.lankasri.com/article/europe-hundreds-of-flights-cancelled-1786570530</id>
            <summary type="text">Flights have been cancelled across Europe: ஐரோப்பாவில் எரிமலை சீற்றம் காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து.
ஐரோப்பாவில் எரிமலை சீற்றம் காரணமாக நூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Flights have been cancelled across Europe: ஐரோப்பாவில் எரிமலை சீற்றம் காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து.
</p><p>ஐரோப்பாவில் எரிமலை சீற்றம் காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பல குடும்பங்கள் வெளிநாடுகளில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.</p><h2>முழுமையாக முன்பதிவு</h2><p>
</p><p>எட்னா எரிமலையின் தற்போதைய சீற்றம் சிசிலியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது; இதன் காரணமாக வார இறுதி முதல் கட்டானியா விமான நிலையம் தனது செயல்பாடுகளை நிறுத்தி வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13828a81-12f9-4f5b-bcba-0357adb2854c/26-6a7ce72640a5a.webp' /></p><p> </p><p>இதன் விளைவாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன; நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வெளிநாடுகளில் சிக்கியுள்ளனர். </p><p>விமானங்கள் ரத்து மட்டுமல்லாமல், பேருந்துகள் மற்றும் ரயில்களில் இடங்கள் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன, வாடகை வாகனங்களின் கட்டணம் மிக அதிகமாக உள்ளது, மேலும் விடுதிகளும் நிரம்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><p> </p><p>தீவின் வடக்குப் பகுதியில் உள்ள பலெர்மோ விமான நிலையத்திலிருந்து விமானங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன; ஆனால், அங்கிருந்து செல்லும் விமானங்களில் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவே கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c97799ff-d12b-428a-b614-d86f162b4d8a/26-6a7ce724d9442.webp' /></p><h2>மாலை 4 மணி வரை</h2><p> </p><p>உள்ளூர் ஊடகங்களின் தகவலின்படி, ஆகஸ்ட் 8 முதல் 11-ஆம் திகதி வரை சுமார் 400 புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன; இன்று மேலும் 52 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a85a540e-5da6-40f6-89a1-cf3a10ad4f6e/26-6a7ce7258b5a5.webp' /></p><p> </p><p>250-க்கும் மேற்பட்ட விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டன. கட்டானியா விமான நிலையத்திற்கான மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து விமான சேவைகளும் குறைந்தது நாளை மாலை 4 மணி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. </p><p>எரிமலை சீற்றம் காரணமாக மால்டாவிற்கான விமானங்களும் ரத்து செய்யப்பட்டு தாமதமாவதால், சிசிலி மட்டுமல்லாமல் மால்டாவும் பாதிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T03:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக எரிக் மேயர் பதவியேற்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-us-ambassador-to-sri-lanka-eric-meyer-sworn-in-1786589840"></link>
            <id>https://tamilwin.com/article/new-us-ambassador-to-sri-lanka-eric-meyer-sworn-in-1786589840</id>
            <summary type="text">இலங்கைக்கான புதிய அமெரிக்கத்தூதுவராக எரிக் மேயர் (Eric Meyer) உத்தியோகபூர்வமாக பதவியேற்றுள்ளார்.&amp;nbsp;வாஷிங்டன், டி.சி.யில் உள்ள அமெரிக்க வெளியுறவுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான புதிய அமெரிக்கத்தூதுவராக எரிக் மேயர் (Eric Meyer) உத்தியோகபூர்வமாக பதவியேற்றுள்ளார்.&nbsp;</p><p>வாஷிங்டன், டி.சி.யில் உள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அலுவலகத்தில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.</p><h2>கொழும்பிற்கு வரவேற்பு</h2><p>புதிய தூதுவரை கொழும்பிற்கு வரவேற்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கும் அவருடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8a115cb-841a-4ea0-8dae-e88a4e37b93d/26-6a7d339fe874d.webp' /></p><p>அதன்படி, எரிக் மேயர் இலங்கைக்கான அமெரிக்கத்தூதராக கடமைகளை தொடங்க உள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T03:02:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகளவில் மிகப்பெரிய முன்பதிவு வசூல் செய்த விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/viswanathan-and-sons-pre-booking-collection-1786582442"></link>
            <id>https://cineulagam.com/article/viswanathan-and-sons-pre-booking-collection-1786582442</id>
            <summary type="text">&amp;nbsp;Box officeசூர்யா, மமிதா பைஜு நடிப்பில் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் நாளை வெளிவரவுள்ள படம் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ். இப்படத்தின் ட்ரைலர் வந...</summary>
            <content type="html"><![CDATA[<h2>&nbsp;Box office</h2><p>சூர்யா, மமிதா பைஜு நடிப்பில் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் நாளை வெளிவரவுள்ள படம் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ். </p><p>இப்படத்தின் ட்ரைலர் வந்த நாளிலிருந்து படத்தின் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. </p><p>இந்நிலையில் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் உலகளவில் நல்ல முன்பதிவு நடந்து வருகிறதாம், அதிலும் வெளிநாடுகளில் இப்படம் ரூ 4 கோடி வரை முன் பதிவு ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d9294d2-5596-4dab-b844-8bbacb877f1f/26-6a7d15add0e19.webp' /></p><p>அதோடு இந்தியாவில் ரூ 3 கோடி முன்பதிவு நடக்க உலகம் முழுவதும் இப்படம் ரூ 7 கோடி முன்பதிவு வசூலை எட்டியுள்ளது, பொறுத்திருந்து பார்ப்போம் முதல் நாள் வசூல் என்ன வரும் என்பதை, கண்டிப்பாக சூர்யாவின் டாப் 3 கெரியர் பெஸ் வசூல் ஓப்பனிங் படமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-13T03:00:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் உயிருடன் குவியலாக புதைக்கப்பட்ட மக்கள் - இன்று எடுக்கப்பட உள்ள முக்கிய முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/important-session-regs-chemmani-mass-grave-1786586218"></link>
            <id>https://ibctamil.com/article/important-session-regs-chemmani-mass-grave-1786586218</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் புதிதாக எந்தப் பகுதியில் குழிகளைத் தோண்ட வேண்டும் என்பது குறித்து இன்று (13) தீர்மானிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் புதிதாக எந்தப் பகுதியில் குழிகளைத் தோண்ட வேண்டும் என்பது குறித்து இன்று (13) தீர்மானிக்கப்படவுள்ளது.</p><p> குறித்த விடயத்தை பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன், மீட்கப்பட்ட எலும்புக் குவியல்கள் தொடர்பில் சட்டமருத்துவ அதிகாரியின் அறிக்கையின் பிரகாரமே அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>மனித என்புக் குவியல்</h2><p>

இதேவேளை, யாழ்ப்பாணம் நீதிவான் செ.லெனின்குமார் முன்னிலையில் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது புதிதாக 5 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் வெளிப்பட்டதுடன், 6 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b1ae1b4-0400-4361-aa96-e111fa56f799/26-6a7d25d324062.webp' /></p><p>அத்துடன், ஏற்கனவே குவியலாக அடையாளம் காணப்பட்டு 42 என இலக்கமிடப்பட்ட மனித என்புக் குவியலும் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கமைய, இதுவரை மொத்தமாக 544 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் வெளிப்பட்டுள்ளதுடன், அவற்றில் 530 மனித என்புக் கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகச் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா தெரிவித்தார்.
</p><p>
மேலும், யாழ்ப்பாண நீதிமன்றத்தில் ஏற்கனவே இந்தப் பகுதியிலிருந்து அடையாளம் காணப்பட்டுப் பிரித்தெடுக்கப்பட்ட பிற சான்றுப் பொருட்களை உத்தியோகபூர்வமாகப் படம் எடுக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

இதற்கமைய, 1 முதல் 37 வரை இலக்கமிடப்பட்ட பிற சான்றுப் பொருட்கள் முழுமையாகப் படம் எடுத்து முடிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T02:51:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீட்டிழுப்பு இலக்கங்களை பயன்படுத்தி பணமோசடிகள்! பரவும் போலி தகவல்கள் தொடர்பில் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/massive-gambling-using-lottery-numbers-1786585040"></link>
            <id>https://tamilwin.com/article/massive-gambling-using-lottery-numbers-1786585040</id>
            <summary type="text">&amp;nbsp;தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகளின் சீட்டிழுப்பு எண்களை அடிப்படையாகக்கொண்டு இடம்பெறும் மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகளின் சீட்டிழுப்பு எண்களை அடிப்படையாகக்கொண்டு இடம்பெறும் மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>

இவ்வாறான சட்டவிரோத சூதாட்டம் காரணமாக சமூகத்தில் பாரிய பேரழிவு உருவாகியுள்ளதாக தேசிய லொத்தர் சபையின் தலைவர் சிறில் எண்டனி பெரேரா தெரிவித்துள்ளார்.
</p><p>
கோப் (COPE) உபகுழு முன்னிலையில் இரு லொத்தர் சபைகளின் அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்த போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">லொத்தர் சீட்டின் கடைசி இரண்டு எண்களுக்காக பந்தயம்&nbsp;</span></p><p>

அதாவது, 0 முதல் 9 வரையிலான எண் அமைப்புகளிலிருந்து 2 எண்களைத் தேர்ந்தெடுத்து, அன்றைய தினம் வெளியாகும் லொத்தர் சீட்டின் கடைசி இரண்டு எண்களுக்காக இதில் பந்தயம் கட்டப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ce84341-17a1-4d7c-9c6f-5354f3a03ab2/26-6a7d2e2f415ae.webp' /></p><p>

தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகளால் இரவு 7.30 மணியளவிலேயே சீட்டிழுப்புகள் நடத்தப்படுகின்றன.
</p><p>
இந்நிலையில், ஒரு மாதத்திற்குத் தேவையான அனைத்துக் சீட்டிழுப்புகளும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு தினமும் வெளியிடப்படுவதாக போலி தகவல்களை மக்களிடையே பரப்பி, WhatsApp குழுக்கள் மூலம் ஒழுங்கமைப்பு ரீதியாக இந்த பண மோசடிகள் செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளது.</p><h2>முறைப்பாடுகள் பதிவு&nbsp;</h2><p>

 இதற்கமைய, பல பகுதிகளில் 30,000 ரூபாய் முதல் அதற்கு மேலதிகமாகவும் பந்தயம் கட்டப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p>

இதன் காரணமாகப் பலரும் தங்களது நிலங்கள் மற்றும் சொத்துக்களை இழந்து நிர்க்கதியாகியுள்ளதாக தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த சட்டவிரோத சூதாட்டம் மேலும் பரவினால், லொத்தர் சபைகளின் வணிக நிலைத்தன்மை, சாதாரண மக்களின் வாழ்க்கையும் பாதிப்புக்கள்ளாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T02:31:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆகஸ்ட் 15ஆம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சுதந்திர தின சிறப்பு திரைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/independence-day-special-movies-in-vijay-tv-1786442401"></link>
            <id>https://cineulagam.com/article/independence-day-special-movies-in-vijay-tv-1786442401</id>
            <summary type="text">ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின சிறப்பாக மூன்று திரைப்படங்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகின்றன.

ஆகஸ்ட் 15

தீபாவளி, பொங்கல் போன்ற சிறப்பு நாட்களில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின சிறப்பாக மூன்று திரைப்படங்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகின்றன.</p><p></p><p>
</p><h2>
ஆகஸ்ட் 15
</h2><p>
தீபாவளி, பொங்கல் போன்ற சிறப்பு நாட்களில் தொலைக்காட்சியில் என்னென்ன திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருப்பார்கள்.</p><p> <img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b178fb3-366a-4c24-a438-e566d748d830/26-6a7af2a53a096.webp' /></p><p>அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின சிறப்பாக மூன்று சூப்பர் ஹிட் திரைப்படங்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகின்றன. அதற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/487be78f-4e1b-4d7f-871a-a420666b571b/26-6a7af3d7b81ea.webp' /></p><p>
</p><h2>சிறப்பு திரைப்படங்கள்
</h2><p>
உலகளவில் மாபெரும் வசூல் வேட்டையாடிய 'துரந்தர்' திரைப்படத்தின் முதல் பாகம் ஆகஸ்ட் 15 காலை 8:30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/xdwMo8BJhJg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
</p><p>
இதை தொடர்ந்து, லெஜெண்ட் சரவணன் நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற 'லீடர்' திரைப்படம் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/S9L62wj81Vk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
</p><p>
இதன்பின், மதியம் 3 மணிக்கு அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் வெளியான 'வித் லவ்' திரைப்படம் ஒளிபரப்பாகிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/3-d-6waIMdI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-13T02:23:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் விடுதியொன்றில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-youth-dies-in-japan-1786585324"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-youth-dies-in-japan-1786585324</id>
            <summary type="text">ஜப்பானின் சிபா மாகாணத்தில் 21 வயதான இலங்கை இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை காலை சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானின் சிபா மாகாணத்தில் 21 வயதான இலங்கை இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை காலை சுமார் 10:20 மணியளவில் நிகழ்ந்துள்ளது. </p><p>

ஜப்பானில் கல்வி பயின்று வந்த மாணவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><h2>விசாரணையில் வெளியான தகவல்&nbsp;</h2><p>

இவருடன் விடுதியில் தங்கியிருந்த 18 வயதான இலங்கை மாணவர் ஒருவரே இந்த கொலையை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac58c89b-4a02-4165-b50b-fed91aae9c22/26-6a7d27da93848.webp' /></p><p>
</p><p>
இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடந்ததாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>

சந்தேகநபரான 18 வயதான இளைஞர், ஜப்பான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் ​​தன்னையும் தனது தாயையும் அவமதித்ததால் ஏற்பட்ட கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இந்த தாக்குதலை நடத்தியதாக அவர் ஒப்புக்கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T02:11:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச் சந்நிதியான் கொடியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/thondamanaaru-selvasannidhi-temple-annual-festival-1786585276"></link>
            <id>https://ibctamil.com/article/thondamanaaru-selvasannidhi-temple-annual-festival-1786585276</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக அரம்பமாகியது.சந்நிதியான் கொடியேற்றம் இன்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக அரம்பமாகியது.</p><p>சந்நிதியான் கொடியேற்றம் இன்று அதிகாலை 1:45 மணியளவில் நூற்றுக் கணக்கான
பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் இடம்பெற்றது.</p><h2>அடியவர்கள் வருகை</h2><p>
செல்வச் சன்நிதியான் கொடியேற்றத்தை காண்பதற்காக நாட்டின் பல்வேறு
பகுதிகளிலிருந்தும் அடியவர்கள் வருகை தந்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/887052a2-205d-447c-b51c-9a468b128fff/26-6a7d2318b168d.webp' /></p><p>
</p><p>
திருவிழாவிற்கு வருகை தருகின்ற அடியவர்களின் நலன் கருதி சுகாதார, குடிநீர்
உட்பட்ட வசதிகளை வல்வெட்டித்துறை நகர சபை மேற்கொண்டுள்ளதுடன் விசேட
போக்குவரத்து ஒழுங்குகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
இவ் வருடத்தின் தேர் திருவிழா எதிர்வரும் 27 ம் திகதியும் 28/08/2026 தீர்த்தத் திருவிழாவும் இடம் பெறவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9770459a-9b47-4bab-8fee-0f9c3f7c8863/26-6a7d231804f0e.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T01:51:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்தில் பிரதமரின் ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கவுதம் ரங்கராஜன் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indian-man-appointed-advisor-prime-minister-uk-1786574956"></link>
            <id>https://canadamirror.com/article/indian-man-appointed-advisor-prime-minister-uk-1786574956</id>
            <summary type="text">இங்கிலாந்து பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உத்தி வகுப்பாளரும் ஊடகத் துறை நிர்வாகியுமான கவுதம் ரங்கராஜனை, பிரதமர் அலுவலகத்தின் கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்து பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உத்தி வகுப்பாளரும் ஊடகத் துறை நிர்வாகியுமான கவுதம் ரங்கராஜனை, பிரதமர் அலுவலகத்தின் கட்டமைப்பு மற்றும் செயல்முறைக்கான நிபுணத்துவ ஆலோசகராக நியமித்துள்ளார்.</p><p>புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பொறுப்பில், முன்னாள் பிபிசி உத்தி வகுப்பாளரும் இசைக்கலைஞருமான கவுதம் ரங்கராஜன், லண்டனில் உள்ள பிரதமர் அலுவலகமான 10 டவுனிங் ஸ்ட்ரீட்டில் இந்த வாரம் தனது பணியைத் தொடங்குகிறார்.

அரசின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் செயல்முறைகளை மேம்படுத்தும் வகையில் இந்தப் புதிய பொறுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c8d373a-310d-4d1b-8d2f-69828a82fa21/26-6a7cf86e2d4e2.webp' /></p><p>கார்ப்பரேட் உத்தி மற்றும் நிறுவன மாற்றங்களை செயல்படுத்துவதில் கவுதம் ரங்கராஜனுக்கு குறிப்பிடத்தக்க அனுபவம் இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
</p><p>
அரசின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டு முறைகளில் மாற்றங்களை மேற்கொள்ளும் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நியமனம் பார்க்கப்படுகிறது.</p><p> புதிய நிர்வாக அணுகுமுறையை உருவாக்கும் முயற்சியில் ரங்கராஜனின் உத்தி மற்றும் நிறுவன மாற்ற அனுபவம் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
முன்னாள் பிபிசி நிர்வாகியாக பணியாற்றியுள்ள கவுதம் ரங்கராஜன், ஊடகம் மற்றும் நிறுவன உத்தி சார்ந்த துறைகளில் அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T01:18:44+00:00</updated>
        </entry>
    </feed>
