<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-19T09:20:36+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜீவா மீது மலரும் காதல்.. காதல் பயணத்தை நோக்கி நகரும் மீனாட்சி! வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vaagai-sooda-vaa-today-episode-augest-17-2026-1787130854"></link>
            <id>https://cineulagam.com/article/vaagai-sooda-vaa-today-episode-augest-17-2026-1787130854</id>
            <summary type="text">தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வாகை சூடவா. தினந்தோறும் விறுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வாகை சூடவா. தினந்தோறும் விறுவிறுப்பான திருப்பங்களுடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இந்த சீரியலில், நேற்றைய எபிசோடில் சிவா மற்றும் மீனாட்சி கல்லூரிக்கு வந்திருந்த நிலையில், இன்று பல சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேற உள்ளன.</p><p>கல்லூரிக்குச் சென்ற மீனாட்சி மற்றும் சிவா, அங்கு பேராசிரியராக பணியாற்றி வரும் ஜீவாவின் நெருங்கிய நண்பரை சந்திக்கின்றனர். அப்போது, "இவனுடன் நண்பராக இருந்த நீங்கள் எப்படி இவ்வளவு பெரிய பதவியில் இருக்கிறீர்கள்?" என்று மீனாட்சி ஜாலியாக கேட்க, ஜீவா அவரது வாழ்க்கையில் செய்த உதவிகள் குறித்து பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/479c21df-2e00-44f9-b118-d2da8a2b572f/26-6a8573ea0812e.webp' /></p><p>அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியின் கல்விக் கட்டணத்தையும் ஜீவாவே ரகசியமாக செலுத்தியிருப்பது தெரிய வருகிறது. அதுமட்டுமல்லாமல், "ஜீவா அண்ணா பல பேருக்கு உதவி செய்திருக்கிறார்... ஆனால் அதைப் பற்றி அவர் ஒருபோதும் வெளியே சொல்ல மாட்டார்" என்று அந்த மாணவி கூற, மீனாட்சியின் மனதில் ஜீவாவைப் பற்றிய பார்வை முற்றிலும் மாறுகிறது.</p><p>வீட்டில் அனைவராலும் "வெட்டிப் பையன்" என்று தவறாக புரிந்துகொள்ளப்படும் ஜீவா, உண்மையில் எத்தனை பேரின் வாழ்க்கையில் ஒளியாக இருக்கிறார் என்பதை அறிந்த மீனாட்சி, அவர்மீது தனி மரியாதையும் ஈர்ப்பும் கொள்ள தொடங்குகிறாள். இந்த நட்பு காதலாக மலரப் போகிறதா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef2e912f-ee59-4ef9-bb60-45f42df0f250/26-6a8573e953288.webp' /></p><p>மறுபக்கம், வீட்டில் பணத்தை மாற்றி வைத்த மர்ம நபரை கண்டுபிடிக்க அப்பத்தா உறுதியான முடிவெடுக்கிறார். தேவியுடன் சேர்ந்து அவர் ஒரு அதிரடி திட்டத்தை செயல்படுத்துகிறார். வீட்டின் வாசலில் சூடத்தை ஏற்றி வைத்து, "நான் பணத்தை எடுக்கவில்லை" என்று ஒவ்வொருவரும் சத்தியம் செய்ய வேண்டும் எனக் கூறுகிறார்.</p><p>இந்த எதிர்பாராத சோதனையில் உண்மை வெளிவருமா? குற்றவாளி சிக்குவாரா? ஜீவா - மீனாட்சி உறவு அடுத்த கட்டத்தை எட்டுமா?
</p><p>பரபரப்பும், உணர்வுகளும், எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்த இந்த எபிசோடை தவறாமல் இன்று இரவு 9:30 மணிக்கு உங்கள் Zee தமிழில் காணுங்கள்!
&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T09:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிந்தவூர் பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-official-arrested-ninthavur-police-1787128973"></link>
            <id>https://tamilwin.com/article/government-official-arrested-ninthavur-police-1787128973</id>
            <summary type="text">நிந்தவூர் பிரதேச செயலாளரை கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்
பேரில் பெண் அரச உத்தியோகத்தர் ஒருவர் நிந்தவூர் பொலிஸாரால் கைது
செய்யப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிந்தவூர் பிரதேச செயலாளரை கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்
பேரில் பெண் அரச உத்தியோகத்தர் ஒருவர் நிந்தவூர் பொலிஸாரால் கைது
செய்யப்பட்டுள்ளார்.</p><p>கைது செய்யப்பட்ட வேளையில் அதிர்ச்சியால் மயங்கி
விழுந்த நிலையைத் தொடர்ந்து பொலிஸ் பாதுகாப்புடன் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><h2>பொலிஸாரால் கைது</h2><p>
</p><p>
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமையின் போது குறித்த பெண்
உத்தியோகத்தர் காணொளி எடுத்து அச்சுறுத்தல் விடுத்ததுடன், அக்காணொளியை
சமூக வலைத்தளமான முகநூலிலும் பதிவேற்றம் செய்திருந்தார்.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பிரதேச செயலக நிர்வாகத்தினரால் நிந்தவூர்
பொலிஸ் நிலையத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு ஒன்று பதிவு
செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db891b1f-a0e1-46f7-901c-c719e313dc5e/26-6a857360d779a.webp' /></p><p>முறைப்பாட்டிற்கு அமைவாக, செவ்வாய்க்கிழமை (18) மாலை வாக்குமூலம் ஒன்றைப்
பெற்றுக்கொள்வதற்காகக் குறித்த பெண் அரச உத்தியோகத்தர் நிந்தவூர் பொலிஸ்
நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.</p><h2>அவசர சிகிச்சை</h2><p>

விசாரணைகளின் பின்னர் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்ட வேளையில், திடீரென
மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/556eab1f-7f9e-4d3f-a265-a1a25a29c670/26-6a8573618f260.webp' /></p><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக அருகில் உள்ள நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு
அவசர சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p> தற்போது அவருக்குப் பெண்
பொலிஸாரின் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதுடன்,
நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T09:12:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[செத்தா கூட யாரும் வரமாட்டாங்கனு சொல்லிட்டாங்க! நடிகை ஷகீலா எமோஷனல் பேட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/shakeela-emotional-interview-about-neck-surgery-1787128398"></link>
            <id>https://manithan.com/article/shakeela-emotional-interview-about-neck-surgery-1787128398</id>
            <summary type="text">Shakeela Emotional-Interview: நடிகை ஷகீலா சமீபத்தில் தீவிர உடல்நலப் பிரச்சினை காரணமாக கழுத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.&amp;nbsp;நீண்ட நேரம் தவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Shakeela Emotional-Interview: நடிகை ஷகீலா சமீபத்தில் தீவிர உடல்நலப் பிரச்சினை காரணமாக கழுத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.&nbsp;</p><p>நீண்ட நேரம் தவறான உடல் நிலையில் மொபைல் போனைப் பயன்படுத்தியதே தனது உடல்நலப் பிரச்சினைக்கு காரணம் என தனது&nbsp;அறுவை சிகிச்சை உட்பட&nbsp; வாழ்வில் நடந்த பல்வேறு விடயங்கள் குறித்து சமீபத்திய பேட்டியொன்றில் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d39cf87-cae1-4dd6-bb08-4f5d11ac4dd6/26-6a856d620ebde.webp' /></p><p></p><h2>நடிகை ஷகீலா எமோஷனல்&nbsp;</h2><p>நடிகை ஷகீலா குறிப்பிடுகையில்,&nbsp; நீண்ட நேரம் தவறான உடல் நிலையில் மொபைல் போனைப் பயன்படுத்தியதால் ஏற்பட்ட தீவிர உடல்நலப் பிரச்சினைக்காக கழுத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
படுக்கையில் ஒருபுறமாகச் சாய்ந்தபடி தொடர்ந்து பல மணி நேரம் மொபைல் கேம்ஸ் விளையாடியதுடன், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் நீண்ட நேரம் ரீல்ஸ்களையும் பார்த்ததாக அவர் கூறியுள்ளார்.</p><p> இதன் காரணமாக கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், இதற்காக சுமார் ரூ.3 லட்சம் செலவானதாகவும் தெரிவித்துள்ளார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு கழுத்தில் காலர் அணிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், படுக்கையில் இருந்து எழுவது, சாப்பிடுவது உள்ளிட்ட அன்றாட செயல்களுக்குக்கூட தற்போது பிறரின் உதவி தேவைப்படுவதாக ஷகீலா தெரிவித்துள்ளார்.
</p><p>சிகிச்சை குறித்து தனது அனுபவத்தைப் பகிர்ந்த அவர் வாழ்வில் அவர் கடந்து வந்த பல்வேறு கடிகமான சூழ்நிலைகள் மற்றும் விமர்சனங்கள் குறித்து பகிர்ந்துக்கொண்ட பேட்டியை முழுமையாக இந்த காணொளி வாயிலாக காணலாம்.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2bG8ylHx-nk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T09:00:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேனிலவு சென்ற பிரிட்டிஷ் தம்பதி உலங்கு வானூர்தி விபத்தில் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/honeymooning-uk-couple-killed-helicopter-crash-1787115636"></link>
            <id>https://canadamirror.com/article/honeymooning-uk-couple-killed-helicopter-crash-1787115636</id>
            <summary type="text">&amp;nbsp; தேனிலவு சென்ற இளம் பிரிட்டிஷ் தம்பதியினரும் அவர்களது விமானியும் உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்ததாக கிரேக்க காவல்துறை தெரிவித்துள்ளது.

கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தேனிலவு சென்ற இளம் பிரிட்டிஷ் தம்பதியினரும் அவர்களது விமானியும் உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்ததாக கிரேக்க காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
கிறீஸ் சிஃப்னோஸ் தீவில் நேற்றுத் திங்கள்கிழமை நடந்த உலங்கு வானூர்தி விபத்தில், 

புதுமணத் தம்பதிகளான அலெக்சாண்டர் குரோமி மற்றும் மேரி எபர்ட் ஆகியோர் தங்களது தேனிலவுக்காக கிரீஸில் இருந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b2be035-9e04-48b5-947c-e7d1eec7e723/26-6a8538761fc0d.webp' /></p><h2>தேனிலவுக்காக கிரீஸில் இருந்ததாக அடையாளம்</h2><p>
</p><p>

தனியார் உலங்கு வானூர்தி தரையிறங்கும் தளத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த இருவரும் மற்றும் அவர்களது கிரேக்க நாட்டவரான விமானியும் உயிரிழந்தனர்.
</p><p>
அந்தத் தம்பதியினர், ஏதென்ஸுக்கு அருகிலுள்ள மார்கோபோலோ கிராமத்திலிருந்து பிரபலமான விடுமுறைத் தீவுக்கு ஹெலிகாப்டரில் சென்றதாகக் கூறப்படுகிறது.
</p><p>
கிரீஸின் விமானப் பாதுகாப்பு ஆணையம், இந்த விபத்து குறித்து விசாரித்து வருவதாகவும், அதன் புலனாய்வாளர்கள் ஆதாரங்களைச் சேகரிக்கவும் சாட்சிகளிடம் பேசவும் செவ்வாயன்று சம்பவ இடத்திற்குச் செல்லவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T08:58:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி விபத்தில் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/former-minister-s-wife-dies-in-accident-1787128676"></link>
            <id>https://ibctamil.com/article/former-minister-s-wife-dies-in-accident-1787128676</id>
            <summary type="text">


முன்னாள் அமைச்சரவை அமைச்சரும், மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>


முன்னாள் அமைச்சரவை அமைச்சரும், மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.</p><p>

அவர்களுக்குச் சொந்தமான, புதிதாகக் கட்டப்பட்ட கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்தே அவர் தவறி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
இந்த நிலையில், கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை (19) அவர் உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>இரண்டு பிள்ளைகளின் தாய்</h2><p>

55 வயதுடைய தேஷானி குணரத்ன என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c93aad15-90f3-4920-9e95-ddd8a69aaf9a/26-6a856fe302c2b.webp' /></p><p>அவரது உடல் தனமல்விலவில் உள்ள அவர்களது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாக தெரியவருகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T08:57:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ காலனிலை சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/el-ni-o-climate-poses-a-threat-to-health-1787129693"></link>
            <id>https://jvpnews.com/article/el-ni-o-climate-poses-a-threat-to-health-1787129693</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தற்போதைய அதிக வெப்பமான காலநிலையில் நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பது தோல் தடிப்புகள், தசைப்பிடிப்புகள் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தற்போதைய அதிக வெப்பமான காலநிலையில் நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பது தோல் தடிப்புகள், தசைப்பிடிப்புகள் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுப்பதுடன், அதிக வெப்பத்தால் உயிரிழப்பும் ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சின் சமூக சுகாதார நிபுணர் டாக்டர் இனோகா சுரவீர தெரிவித்துள்ளார்.</p><p>



இன்று (19) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற எல் நினோ நிலைமை தொடர்பான ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14b60a7c-fe10-4a2e-b39d-b89ea64a5859/26-6a856f5eb60fe.webp' /></p><h2>&nbsp;எல் நினோ நிலைமை</h2><p> 



சிறுவர்கள், முதியவர்கள், தொற்றா மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், வெளிப்புறங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் விவசாயிகள் அதிக ஆபத்துள்ள குழுக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>



காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரையான காலப்பகுதியில் நேரடியாக சூரிய ஒளியில் இருப்பதைத் தவிர்க்குமாறும், போதுமான அளவு தண்ணீர் அருந்தி, வெளிர் நிற ஆடைகளை அணிந்து, தலையை மூடிக்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
</p><p>


மேலும், மாணவர்கள் தேவையற்ற வெளிப்புற விளையாட்டுகளைத் தவிர்த்து நிழலான இடங்களில் இருக்க வேண்டும் என்றும், பாடசாலை முடிந்து செல்லும்போது குடை அல்லது தலையை மூடும் பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். </p><p>



மேலும், வெப்பநிலை அதிகரிப்பை எதிர்கொள்ள சுகாதார அமைச்சு ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-19T08:53:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு மற்றொரு பொருளாதார நெருக்கடி : ரணிலின் கூற்றுக்கு அநுர தரப்பு பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-s-statement-anura-side-respond-1787114622"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-s-statement-anura-side-respond-1787114622</id>
            <summary type="text">2028இற்குப் பிறகு இலங்கை மற்றொரு பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கக்கூடும் என்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எச்சரிக்கைக்கு, நாடு மீண்டும் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>2028இற்குப் பிறகு இலங்கை மற்றொரு பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கக்கூடும் என்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எச்சரிக்கைக்கு, நாடு மீண்டும் திவாலாவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க பதிலடி கொடுத்துள்ளார்.
</p><p>
2028ஆம் ஆண்டுக்குப் பிறகு கடன் திருப்பிச் செலுத்துதல் அதிகரிக்கும்போது இலங்கை ஒரு பெரும் சவாலை எதிர்கொள்ளும் என்று எச்சரித்திருந்த விக்ரமசிங்க, நாடு தனது அந்நியச் செலாவணிக் கையிருப்பை சுமார் 15 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்த வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
</p><h2>8 பில்லியன் அமெரிக்க டொலர்</h2><p>
2026ஆம் ஆண்டின் இறுதியில் கையிருப்பு சுமார் 8 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டும் என்று மத்திய வங்கி எதிர்பார்ப்பதாகவும், மதிப்பிடப்பட்ட 15 பில்லியன் அமெரிக்க டொலர் அளவை எட்டுவதற்குத் தேவைப்படும் கூடுதல் 7 பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை எவ்வாறு திரட்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbb58815-17bc-4c9a-9f36-3f7d2ae964e1/26-6a853da7d6ee7.webp' /></p><p>
இந்தக் கருத்துகளுக்குப் பதிலளித்த அபேசிங்க, இலங்கையின் கடன் பொறுப்புகள் குறித்து விக்ரமசிங்க தவறான கூற்றுகளை முன்வைப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.&nbsp;</p><p>இலங்கை 2025ஆம் ஆண்டில் சுமார் 3.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் பொறுப்புகளைச் செலுத்தியதாகவும், அதே நேரத்தில் தனது வெளிநாட்டுக் கையிருப்பை அதிகரித்து, 2026ஆம் ஆண்டில் ஏறத்தாழ 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் பொறுப்புகளைச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.</p><p>
2027இல் செலுத்தப்பட வேண்டிய தொகை குறைவாக, சுமார் 2.7 பில்லியன் அமெரிக்க டொலராக இருக்கும் என்று அவர் கூறினார்.
</p><p>
</p><h2>அந்நியச் செலாவணியைத் திரட்ட தவறினால்</h2><p>மத்திய வங்கி முதலீட்டாளர்களுக்கு வழங்கிய புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டிய அபேசிங்க, இலங்கை தனது கையிருப்பை வலுப்படுத்திக்கொண்டே தனது கடனைத் தொடர்ந்து திருப்பிச் செலுத்த முடியும் என்பதை அவை நிரூபிக்கின்றன என்றும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e2fbd9f-4da2-4865-aa94-55adb2a4c6a4/26-6a853da88cee4.webp' /></p><p>
</p><p>
2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் அந்நியச் செலாவணிக் கையிருப்பு சுமார் 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், கையிருப்பை உருவாக்கும் அதே வேளையில் கடன் திருப்பிச் செலுத்துதலைத் தொடர்வதில் எந்தச் சிரமமும் இருக்காது என்றும் அவர் வாதிட்டார்.</p><p>

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026ஆம் ஆண்டில் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணம், ஏற்றுமதி, முதலீடுகள் மற்றும் சுற்றுலா வருவாய் ஆகியவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக துணை அமைச்சர் மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p>எனினும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அதிக கடன் பொறுப்புகளுக்கு முன்னதாக, போதுமான அந்நியச் செலாவணியைத் திரட்டத் தவறினால், இலங்கை மற்றொரு கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T08:51:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அழகே அழகு சீரியல் நடிகை அன்ஷிதாவின் அழகிய புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/anshitha-akbarsha-latest-saree-photoshoot-1787124300"></link>
            <id>https://cineulagam.com/article/anshitha-akbarsha-latest-saree-photoshoot-1787124300</id>
            <summary type="text">விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அழகே அழகே சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை அன்ஷிதா. இவர் இதற்கு முன் செல்லம்மா சீரியலில் நடித்து பிரபலமானார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அழகே அழகே சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை அன்ஷிதா. இவர் இதற்கு முன் செல்லம்மா சீரியலில் நடித்து பிரபலமானார். இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.</p><p> 

நடிகை அன்ஷிதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஒருவர். இந்நிலையில், தற்போது சேலையில் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-19T08:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனாவை காப்பாற்ற நான் தயார்..! யாழ். மக்களிடம் பகிரங்க கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-issued-to-member-of-parliament-archuna-1787128908"></link>
            <id>https://tamilwin.com/article/warning-issued-to-member-of-parliament-archuna-1787128908</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா எங்களுடைய பிள்ளை, அவருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது, அவரை என்னிடம் அழைத்து வாருங்கள் சரிச் செய்கிறேன் என யாழ்ப்பாண ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா எங்களுடைய பிள்ளை, அவருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது, அவரை என்னிடம் அழைத்து வாருங்கள் சரிச் செய்கிறேன் என யாழ்ப்பாண மக்களிடம் ஈரோஸ் கட்சித் தலைவர் இரா. பிரபாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
</p><p>
மட்டக்களப்பில் நேற்று(18.08.2026) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
யாழ்ப்பாணத்து மக்கள் அவர்களுடைய எதிர்காலத்திற்கு ஏதாவது மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்திற்காக நாடாளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனாவுக்கு வாக்களித்தார்கள். ஆனால் அர்ச்சுனா வெளிநாடுளில் இருக்கும் புலம்பெயர் தமிழர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, தமிழர்களின் இனப்படுகொலைக்கு காரணமாக இருந்த ராஜபக்சர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிறார்.
</p><p>
அவருக்கு பைத்தியம் முற்றி விட்டது, நாய்களை பிடித்துக் கொண்டுச் செல்லும் வண்டியில் சரி, அவரை என்னிடம் அழைத்து வாருங்கள் வைத்தியம் பார்க்க வேண்டும். இல்லாவிடின் அர்ச்சுனாவின் எதிர்காலமே வீணாகி விடும்.
</p><p>
அதுமட்டுமன்றி, அவருக்கு அரசியல் எப்படி செய்ய வேண்டும் என்றும் கற்றுக் கொடுக்க வேண்டும், எனெனின், அவர், சமூக வலைத்தளங்களில் அரசியல் தலைவர்கள் குறித்த மிகவும் மோசமாக பேசிக் கொண்டிருக்கிறார் என்றார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/550LOoNO5Zw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-19T08:43:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை வீழ்த்தி டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்ற இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/1st-test-sri-lanka-vs-india-2026-1787127325"></link>
            <id>https://tamilwin.com/article/1st-test-sri-lanka-vs-india-2026-1787127325</id>
            <summary type="text">இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.


இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
</p><p>

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.</p><h2>முதலாவது இன்னிங்ஸ்</h2><p>


இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி மைதானத்தில் நடந்தது. </p><p>

நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 462 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb3e8002-4ed0-458b-aee2-d8232a6b8fbe/26-6a856b8e34e79.webp' /></p><p> </p><p>

 
தேவ்தத் படிக்கல் 167 ஓட்டங்கள் மற்றும் கே.எல். ராகுலின் 82 ஓட்டங்களையும் பெற்று 116.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 462 ஓட்டங்களைக் குவித்தது.</p><p>

 இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜயசூரிய 4 விக்கெட்டுகளையும், கேசர நுவன்த 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54599c14-ed2c-4227-baba-f61faf420b6d/26-6a856b8edceaf.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்சைத் தொடர்ந்த இலங்கை அணி,</p><p>சோனல் தினுஷவின் போராட்டமிக்க 100 ஓட்டங்கள் மற்றும் நிரோஷன் திக்வெல்லவின் 80 ஓட்டங்களின் சிறப்பான பங்களிப்பால் 79.4 ஓவர்களில் 284 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

 
இந்திய அணி சார்பில் மானவ் சுதார் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.</p><h2>2ஆவது இன்னிங்ஸ்</h2><p>
</p><p>
 
முதல் இன்னிங்சில் 178 ஓட்டங்கள் முன்னிலையுடன் தனது 2ஆவது இன்னிங்சைத் தொடர்ந்த இந்திய அணிக்கு, ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி 66 ஓட்டங்களையும் தேவ்தத் படிக்கல் 44 ஓட்டங்களையும் பெற்றுத் தந்தனர்.</p><p> 

 
இலங்கை அணியின் அசித பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை வீழ்த்த, இந்திய அணி 48.5 ஓவர்களில் 193 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.


இதன்படி, இலங்கை அணிக்கு 372 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82b6d378-594c-4114-add8-560fbfc9a37a/26-6a856b8f92bf6.webp' /></p><p> </p><p>


372 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, போட்டியின் ஐந்தாவது நாளான இன்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 206 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
</p><p>

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக சோனல் தினுஷ 84 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 59 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். 


பந்துவீச்சில் இந்திய அணியின் மானவ் சுதார் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d35a3680-609c-4995-a7bb-249ee7bd712a/26-6a856b904b77d.webp' /></p><p>


இதன் மூலம், இந்திய அணி 165 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T08:38:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் விமான நிலையத்தில் பெரும் தொகை போதைப்பொருளுடன் பிடிபட்ட பயணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/swiss-passenger-caught-france-airport-144-kg-khat-1787128498"></link>
            <id>https://canadamirror.com/article/swiss-passenger-caught-france-airport-144-kg-khat-1787128498</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பிரான்ஸ் Roissy-Charles-de-Gaulle விமான நிலையத்தில் இஸ்ரேலின் Tel Aviv நகரிலிருந்து வந்த சுவிஸ் நாட்டைச் சேர்ந்த 28 வயது நபர் ஒருவர் 144 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பிரான்ஸ் Roissy-Charles-de-Gaulle விமான நிலையத்தில் இஸ்ரேலின் Tel Aviv நகரிலிருந்து வந்த சுவிஸ் நாட்டைச் சேர்ந்த 28 வயது நபர் ஒருவர் 144 கிலோ ‘காத்’ (khat) தாவரத்துடன் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

பிரான்ஸில் போதைப்பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ள ‘காத்’ தாவரம், நாட்டுக்குள் கொண்டு வரத் தடை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/267f941b-71ff-4116-a0ec-1d42c68eb5e7/26-6a856ab42d285.webp' /></p><h2>ஆப்பிரிக்க நாடுகளின்&nbsp; &nbsp;பரவலாக உள்ள&nbsp;‘காத்’ இலை</h2><p> 

அந்த நபர், ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை Bobigny நீதிமன்றத்தில் உடனடியாக விசாரணைக்கு முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>
ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த 144 கிலோ ‘காத்’ கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பயணி சுங்கக் காவலில் வைக்கப்பட்டார்.</p><p> 

‘காத்’ இலைகளை மென்று பயன்படுத்தும் பழக்கம் Yemen மற்றும் Ethiopia, Somalia உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளின் பகுதிகளில் பரவலாக உள்ளது. இதன் தாக்கம் ஆம்பெட்டமைன் போன்ற தூண்டுதல் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சுங்கத்துறை தரவுகளின்படி, கடந்த 2025ஆம் ஆண்டு 3.5 தொன் ‘காத்’ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. </p><p>இது 2024ஆம் ஆண்டில் 5 தொன்னுக்கும் அதிகமாகவும், 2023ஆம் ஆண்டில் 7 தொன்னாகவும், 2022ஆம் ஆண்டில் சுமார் 16 தொன்னாகவும் இருந்தது. 

</p><p>, 2022ஆம் ஆண்டு Spain-ல் ஐரோப்பாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ‘காத்’ பறிமுதல் செய்யப்பட்டிருந்தது; அதன் மதிப்பு சுமார் 61 மில்லியன் யூரோக்கள் என மதிப்பிடப்பட்டது.</p>]]></content>
            <updated>2026-08-19T08:32:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் ஜலசந்திக்கு சொந்தம் கொண்டாடும் ட்ரம்ப்: சட்டப்படி சாத்தியமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/can-trump-legally-declare-hormuz-as-us-territory-1787125501"></link>
            <id>https://news.lankasri.com/article/can-trump-legally-declare-hormuz-as-us-territory-1787125501</id>
            <summary type="text">Can Donald Trump legally declare Strait of Hormuz US territory? அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஹோர்முஸ் ஜலசந்திக்கு சொந்தம் கொண்டாடும் நிலையில், அது சட்டப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Can Donald Trump legally declare Strait of Hormuz US territory? அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஹோர்முஸ் ஜலசந்திக்கு சொந்தம் கொண்டாடும் நிலையில், அது சட்டப்படி சாத்தியமா என்னும் கேள்வி எழுந்துள்ளது.
</p><p>

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஹோர்முஸ் ஜலசந்தியை ஒரு அமெரிக்கப் பிராந்தியம் என அறிவித்துள்ளார்.
</p><p>
அப்படி அவர் ஹோர்முஸ் ஜலசந்தி அமெரிக்கப் பிராந்தியம் என சட்டப்படி அறிவிக்கமுடியுமா?
</p><h3>
ஹோர்முஸ் ஜலசந்திக்கு சொந்தம் கொண்டாடும் ட்ரம்ப்</h3><p>

முதலில், டிரம்ப், யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் என்ற விமானம் தாங்கி கப்பலை பாரசீக வளைகுடாவிற்கு அருகில் நிறுத்தி ஹோர்முஸ் ஜலசந்தியை மூட முயன்றார்.</p><p>

பின்னர், அந்த நீர்வழிப்பாதை நெடுகிலும் இருந்த ஈரானிய துறைமுகங்களில் கப்பல்கள் நுழைவதையும், வெளியேறுவதையும் தடுத்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/124ea61a-eeab-4bfc-ac7e-f0e150749384/26-6a855eff2faff.webp' /></p><p>

இப்போது, அவர் மேலும் ஒரு படி முன்னேறி, ஹோர்முஸ் ஜலசந்தியை ஒரு அமெரிக்கப் பிராந்தியமாக அறிவித்துள்ளார்.&nbsp;</p><p>

பாரசீக வளைகுடாவையும் ஓமான் வளைகுடாவையும் இணைக்கும் அந்த நீர்வழிப்பாதையை, ஒரு 'புதிய அமெரிக்கப் பிராந்தியமாக' காட்டும் வரைபடத்தையும் வெளியிட்டுள்ளார் ட்ரம்ப்!
</p><h3>
சட்டப்படி சாத்தியமா?
</h3><p>
விடயம் என்னவென்றால், ஹோர்முஸ் ஜலசந்தி, வடக்கே ஈரானுக்கும் தெற்கே ஓமானுக்கும் இடையில் அமைந்துள்ளது.
</p><p>
ஐக்கிய நாடுகள் கடல் சட்ட ஒப்பந்தத்தின்படி, இந்த இரண்டு நாடுகளின் கடற்கரையிலிருந்து 12 நாட்டிக்கல் மைல் தொலைவு வரையிலான பகுதி அந்த நாடுகளுக்குச் சொந்தம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1c14f80-e4cf-4ad7-bbc2-1e89fc82eada/26-6a855efe7ce51.webp' /></p><p>
அமெரிக்கா இதில் எந்த உரிமையும் கோர முடியாது.&nbsp;</p><p>
அதே நேரத்தில், ஹோர்முஸ் ஜலசந்தி இரண்டு நீர்வழிகளை இணைப்பதாலும், சர்வதேச கப்பல் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படுவதாலும், ஐக்கிய நாடுகள் கடல் சட்ட ஒப்பந்தத்தின் 37 - 44 பிரிவுகளின்படி அது ஒரு சர்வதேச ஜலசந்தியாகும்.&nbsp;</p><p></p><p>
போக்குவரத்து வழித்தட விதிமுறையின்படி, அனைத்துக் கப்பல்களுக்கும் விமானங்களுக்கும் இந்த நீர்வழிப்பாதை வழியாகத் தடையின்றிப் பயணிக்கும் உரிமை உண்டு, கடலோர நாடுகள் இந்த உரிமைகளை இடைநிறுத்தம் செய்ய முடியாது.</p><p>

மேலும், எந்தவொரு நாடும் மற்றொரு நாட்டின் நீர்வழியையோ அல்லது வேறு எந்த சர்வதேச நீர்நிலையையோ தனக்குச் சொந்தமானது என உரிமை கோருவதை சர்வதேச சட்டம் அனுமதிப்பதில்லை.
</p><p>
அமெரிக்கா ஐ.நா. கடல் சட்ட ஒப்பந்தத்தில் ஓர் உறுப்பினராக இல்லாவிட்டாலும், அதன் விதிகளை அதனால் புறக்கணிக்க முடியாது. ஏனென்றால், அந்த ஒப்பந்தம், ஒரு சர்வதேசச் சட்டமாக மதிக்கப்படுகிறது.</p><p>
ஆக, ட்ரம்ப் எதையாவது சொல்வார், சற்று நேரத்தில் அதிலிருந்து பின்வாங்கிவிடுவார். இப்போது ஹோர்முஸ் ஜலசந்தியைக் குறித்து அப்படி ஒரு விடயத்தைக் கூறியுள்ளார். இதுவும் அதேபோல்தானா என்பது தெரியவில்லை!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T08:25:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயினில் ஏற்பட்ட 4.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்! அலறியடித்தபடி தெருக்களில் தஞ்சமடைந்த பொதுமக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/4-8-magnitude-earthquake-in-spain-1787127715"></link>
            <id>https://canadamirror.com/article/4-8-magnitude-earthquake-in-spain-1787127715</id>
            <summary type="text">&amp;nbsp; தெற்கு ஸ்பெயினில் ஏற்பட்ட 4.8 ரிச்டர் அளவிலான பூமியதிர்ச்சியினால் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன், குறைந்தது மூன்று பேர் காயமடைந்துள்ளதாக சர்வதே...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தெற்கு ஸ்பெயினில் ஏற்பட்ட 4.8 ரிச்டர் அளவிலான பூமியதிர்ச்சியினால் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன், குறைந்தது மூன்று பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
ஸ்பெயினின் தேசிய புவியியல் நிறுவனத்தின் தகவலின்படி, வரலாற்றுச் சிறப்புமிக்க கிரனாடா நகரத்திற்குத் தெற்கே சுமார் 10 கிலோமீற்றர் தொலைவில் உள்ள 'அல்ஹெண்டின்' நகருக்குஅருகில் செவ்வாய்க்கிழமை காலை அந்நாட்டு நேரப்படி 10:37 மணியளவில் இந்த பூமியதிர்ச்சி மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af543dd9-67cd-42ba-a2a8-34b581275896/26-6a8567a4d3cfb.webp' /></p><h2>தெருக்களில் தஞ்சமடைந்த பொதுமக்கள்</h2><p>

பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து வீடுகள் பலமாக அதிர்ந்ததால், பூமியதிர்ச்சி பின்னதிர்வுகளுக்கு அஞ்சி பொதுமக்கள் அலறியடித்தபடி தெருக்களில் தஞ்சமடைந்தனர். கட்டிடங்களின் இடிபாடுகள் மற்றும் கற்கள் விழுந்ததில் பல வாகனங்கள் சேதமடைந்தன. </p><p>முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் அருங்காட்சியகங்கள், நிர்வாகக் கட்டிடங்கள் மற்றும் விளையாட்டு மையங்கள் மூடப்பட்டன தெரிவிக்கப்படுகிறது.</p><p>

யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமும், ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் மத்தியகால இஸ்லாமியக் கட்டிடக்கலையின் உலகப் புகழ்பெற்ற சின்னமான அல்ஹம்ப்ரா அரண்மனை பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
</p><p>

பாதுகாப்பு காரணங்களுக்காகக் கிரனாடாவின் மெட்ரோ புகையிரத சேவைகளின் வேகம் மணிக்கு 30 கி.மீ ஆகக் குறைக்கப்பட்டுள்ளதால் புகையிரதங்கள் தாமதமாக இயங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
கடந்த வெள்ளிக்கிழமை முதல் அப்பகுதியில் தொடர்ச்சியாக லேசான பூமியதிர்ச்சிகள் பதிவாகி வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட இந்த பூமியதிர்ச்சி மிகவும் சக்திவாய்ந்ததாகவும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-19T08:20:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு புறநகர் பகுதியில் சோதனை வேட்டை - கிலோகணக்கான கஞ்சாவுடன் சிக்கிய இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-caught-with-kilograms-of-ganja-1787126752"></link>
            <id>https://tamilwin.com/article/youth-caught-with-kilograms-of-ganja-1787126752</id>
            <summary type="text">பண்டாரகம பொலிஸ் பிரிவின் மஸ்வில பகுதியில் 18 கிலோகிராம் மற்றும் 672 கிராம் போதைப்பொருள் மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பண்டாரகம பொலிஸ் பிரிவின் மஸ்வில பகுதியில் 18 கிலோகிராம் மற்றும் 672 கிராம் போதைப்பொருள் மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த கைது நடவடிக்கை நேற்று(18.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

ஹொரானா பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை தலைமையகத்தின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவின் பொலிஸ் குழுவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><h2>

18 கிலோகிராம் கஞ்சாவுடன் கைது</h2><p>
இதன்போது, 18 கிலோகிராம் மற்றும் 672 கிராம் போதைப்பொருள் மாத்திரைகளைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a9607e1-3ef0-4313-8398-8415b47f1ee1/26-6a8566e163597.webp' /></p><p>
</p><p>
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர், பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஆவார்.
</p><p>
இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T08:19:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[Essel குழுமத்தின் 100 ஆண்டு பாரம்பரியத்தை பிரம்மாண்டமாக கொண்டாடிய Zee தமிழ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/essel-group-celebrates-100-years-of-legacy-1787121715"></link>
            <id>https://cineulagam.com/article/essel-group-celebrates-100-years-of-legacy-1787121715</id>
            <summary type="text">Essel குழுமம்சென்னை, Essel குழுமம் தனது 100 ஆண்டு சாதனையை கொண்டாடும் வகையில், Zee தமிழ், Zee திரை மற்றும் தமிழ் Zee 5 இணைந்து சென்னை ITC கிராண்ட் சோழா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>Essel குழுமம்</h2><p>சென்னை, Essel குழுமம் தனது 100 ஆண்டு சாதனையை கொண்டாடும் வகையில், Zee தமிழ், Zee திரை மற்றும் தமிழ் Zee 5 இணைந்து சென்னை ITC கிராண்ட் சோழா ஹோட்டலில் மிக பிரம்மாண்டமான விழாவை நடத்தியது.</p><p> தமிழ் திரையுலகம் மற்றும் தொலைக்காட்சி துறையைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள், படைப்பாளிகள், எழுத்தாளர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தொழில் துறை பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த விழா, Essel குழுமத்தின் சிறப்பான நூற்றாண்டு பயணத்தை கொண்டாடும் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7db6666a-d8be-4b31-bbed-ee7265eaab8e/26-6a8551c012346.webp' /></p><p> </p><p>

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக உலகநாயகன் கமல்ஹாசன், நடிகர்கள் விஜய் ஆண்டனி, ஆர்யா, விஜயகுமார் உள்ளிட்ட பல முன்னணி திரைப்பட பிரபலங்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். </p><p>அதேபோல் Zee தமிழ் குடும்பத்தின் நட்சத்திரங்களும், தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் துறையைச் சேர்ந்த ஏராளமான கலைஞர்களும் பங்கேற்றனர். 

விழாவில் உரையாற்றிய Essel குழுமத்தின் நிறுவனர் டாக்டர் சுபாஷ் சந்திரா, 1926-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட Essel குழுமத்தின் நூற்றாண்டு பயணத்தை நினைவுகூர்ந்தார்.</p><p> </p><p>பல்வேறு சவால்கள் மற்றும் மாற்றங்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு, இன்று உலகளாவிய ஊடக மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமாக வளர்ந்திருப்பது பெருமைக்குரிய விஷயம் என்று அவர் தெரிவித்தார். 

மேலும் தனது தொழில் முனைவோர் பயணத்தை பகிர்ந்துகொண்ட அவர், 1970-ஆம் ஆண்டு வெறும் ரூ.17 முதலீட்டுடன் தொடங்கிய தனது கனவு, இன்று கோடிக்கணக்கான மக்களை சென்றடையும் ஊடக பேரரசாக வளர்ந்திருப்பதை நினைவுபடுத்தினார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4d57f71-546b-48df-83d9-b0269498df55/26-6a8551c0e136f.webp' /></p><p>1992-ஆம் ஆண்டு பிரத்யேக இந்தி Zee Tv-ல் 2 மணி நேரம் மட்டும் தமிழ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டது. இப்படி இரண்டு மணி நேர ஒளிபரப்புடன் தொடங்கிய Zee தமிழ், இன்று இந்தியாவிலும் உலகம் முழுவதும் பல மொழிகளில் தரமான பொழுதுபோக்கு உள்ளடக்கங்களை வழங்கும் முன்னணி ஊடக நிறுவனமாக திகழ்கிறது என்றும் கூறினார். </p><p>

தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் மீது Zee நிறுவனத்திற்கு இருக்கும் ஆழமான மரியாதையை வலியுறுத்திய அவர், Zee தமிழ், Zee திரை மற்றும் தமிழ் Zee 5 ஆகியவை தமிழர்களின் பண்பாடு, பாரம்பரியம் மற்றும் குடும்ப மதிப்புகளை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகளையும் கதைகளையும் தொடர்ந்து வழங்கி வருவதாக தெரிவித்தார். </p><p>

 

விழாவில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன், Essel குழுமத்தின் 100 ஆண்டு பயணம் மிகவும் பாராட்டத்தக்க சாதனை என்று கூறினார். “ஒரு நிறுவனம் நூறு ஆண்டுகள் வெற்றிகரமாக இயங்குவது என்பது அதன் உறுதியையும், தொலைநோக்கு பார்வையையும், காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் திறனையும் காட்டுகிறது,” என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f91c2c77-1362-4b9b-9b6f-09408d739dc4/26-6a8551c1aac31.webp' /></p><p> </p><p>

மேலும், தொழில்நுட்பங்கள் எவ்வளவு மாறினாலும், நல்ல கதைகளுக்கான மக்களின் வரவேற்பு ஒருபோதும் குறையாது என்று தெரிவித்த அவர், இந்தியாவின் மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் கதைகள் உலகளாவிய பார்வையாளர்களை கவரும் வலிமை கொண்டவை என்றும் கூறினார். </p><p>இந்தியக் கதைகளை உலக அரங்கில் கொண்டு செல்வதற்கான முயற்சிகளில் தானும் தொடர்ந்து பங்கெடுக்கத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். 

இந்த விழா, Zee தமிழின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் பங்காற்றிய பாட்னர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பை கௌரவிக்கும் மேடையாகவும் அமைந்தது. </p><p>

மேலும் பிரசாந்த், ராதிகா சரத்குமார், விஜய் ஆண்டனி உள்ளிட்ட பல திரைப்படப் பிரபலங்களின் பங்கேற்பால் இந்த விழா நட்சத்திரங்கள் நிறைந்த சிறப்பான மாலையாக மாறியது.

இந்த நிகழ்வில் பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸ், பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், தொகுப்பாளர் ஆவுடையப்பன், நக்கீரன் கோபால் ஆகியோர் Zee தமிழ் தங்களது வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறியதை பற்றி உணர்வுபூர்வமான கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65b62232-55b9-47e5-83e2-0ce2af28cfb9/26-6a8551c278bc4.webp' /></p><p> </p><p>இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பல வருடங்களாக Zee தமிழுடன் இணைந்து பயணித்து வரும் தொகுப்பாளினி அர்ச்சனா தொகுத்து வழங்கினார். 

Essel குழுமத்தின் 100 ஆண்டு கொண்டாட்டம், அதன் பாரம்பரியம், புதுமை மற்றும் மக்களுடன் கொண்டுள்ள ஆழமான உறவை கொண்டாடியதுடன், இந்திய மற்றும் தமிழ் கதைகளை உலகளாவிய மேடைகளில் கொண்டு செல்லும் தனது உறுதியை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியது. </p><p>Zee தமிழ், Zee திரை மற்றும் தமிழ் Zee 5 ஆகியவை இனியும் தரமான தமிழ் கதைகளையும் நிகழ்ச்சிகளையும் வழங்கி பார்வையாளர்களின் மனதில் தனித்த இடத்தைப் பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.&nbsp;&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T08:15:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச மாநாட்டுக்கு அணிதிரளுங்கள் - காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/we-do-not-expect-justice-from-murderers-1787126110"></link>
            <id>https://tamilwin.com/article/we-do-not-expect-justice-from-murderers-1787126110</id>
            <summary type="text">எதிர்வரும் முப்பதாம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் யாழ்
தந்தை செல்வா அரங்கில் இடம்பெறவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்
சர்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் முப்பதாம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் யாழ்
தந்தை செல்வா அரங்கில் இடம்பெறவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்
சர்வதேச மாநாட்டுக்கு அனைத்து தரப்பினரும் அணிதிரண்டு பேர் ஆதரவை வழங்க
வேண்டும் என வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின்
தலைவி கனகரஞ்சினி அழைப்பு விடுத்துள்ளார்.</p><p>யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்
போது அவர் இவ்வாறு கோரிக்கை முன்வைத்துள்ளார்.</p><h2>சர்வதேச நீதி</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> இறுதி யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்ட எமது
உறவுகளை தேடி 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை எமது உறவுகளுக்கு என்ன
நடந்தது என தெரியாத நிலையில் தேடிக் கொண்டிருக்கிறோம்.
</p><p>
எமது உறவுகளை தேடிய போராட்டத்தில் சர்வதேச நீதியை எதிர்பார்த்து காணாமல்
ஆக்கப்பட்ட உறவுகள் ஐநா வரை எமது நீதிக்கான போராட்டத்தை இடைவிடாது தொடர்ந்து
கொண்டிருக்கிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea99d8e7-8159-4614-8f1c-0ee3f83bc145/26-6a8564f1d4da2.webp' /></p><p>

தமிழ் மக்கள் மீதான கொடூர இன அழிப்பு இடம்பெற்ற பின் எமக்கான நீதியை இலங்கை
அரசிடம் பல தடவைகள் எழுத்து மூலமாக கோரினோம் பதில் கிடைக்கவில்லை.</p><p>

12 மேற்பட்ட ஆணைக்குழுக்களை சந்தித்தோம் எந்தப் பயனும் இல்லாத நிலையில் இலங்கை
நீதித்துறை என்பது கொலைகாரர்களிடம் எமக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது என்ற
உண்மையை உணர்ந்தோம்.</p><h2>உறவுகளைத் தேடிய போராட்டம்</h2><p>
</p><p>
அதன் காரணமாக எமது உறவுகளைத் தேடிய போராட்டம் சர்வதேசத்தை நோக்கியதாக
மாற்றப்பட்டு ஐநா 36 ஆவது கூட்டத் தடரில் இருந்து எமது உண்மைக்கும்
நீதிக்குமான குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
</p><p>
இலங்கையில இடம் பெற்றது இனப்படுகொலை என்ற உண்மையை சர்வதேசத்தின் வாயிலாக மனித
உரிமைகளை மதிக்கின்ற நாடுகளூடாக எமக்கான நீதியை பெற வேண்டும் என்பதே எமது
எதிர்பார்ப்பு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a78d038-4d00-4ad1-8416-1af26cf92fd2/26-6a8564f2a9499.webp' /></p><p>
</p><p>
எமது உறவுகளைத் தேடிய நீதிக்கான போராட்டத்தின் தொடர்ச்சியாக எதிர்வரும்
முப்பதாம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் அன்று யாழ் தந்தை
செல்வா அரங்கில் வடக்கு கிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்
ஒன்றிணைந்து சர்வதேச மாநாடு ஒன்றை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
</p><p>
ஆகவே எமது உறவுகளை தேடிய போராட்டத்தின் சர்வதேச மாநாட்டை சிறப்பாக
முன்னெடுப்பதற்கு சகல தரப்பினர்களிடமும் ஆதரவை எதிர்பார்ப்பதோடு உதவிகளையும்
எதிர்பார்க்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.<br><br></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T08:10:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[Most Wanted குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இந்தியர்: அமெரிக்காவின் FBI அமைப்பு அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-gangster-major-singh-on-fbi-s-most-wanted-1787126712"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-gangster-major-singh-on-fbi-s-most-wanted-1787126712</id>
            <summary type="text">Indian gangster major Singh on FBI’s most wanted person: அமெரிக்காவின் FBI அமைப்பின் தேடப்படும் மிக முக்கிய குற்றவாளிகள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indian gangster major Singh on FBI’s most wanted person: அமெரிக்காவின் FBI அமைப்பின் தேடப்படும் மிக முக்கிய குற்றவாளிகள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த மேஜர் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.</p><h2> தேடப்படும் மிக முக்கிய குற்றவாளியான இந்தியர்</h2><p>அமெரிக்காவின் முக்கியமான FBI அமைப்பின் தேடப்படும் மிக முக்கிய குற்றவாளிகள் பட்டியலில் இந்தியாவின் பஞ்சாப்பை சேர்ந்த 29 வயது மேஜர் சிங்(Major Singh) அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளார்.</p><p> இவர் பஞ்சாப்பின் ஜக்கு பகவான்பரியா(Jaggu Bhagwanpuria) என்ற குற்றக் கும்பலுடன் தொடர்புடையவர் என கூறப்படுகிறது.</p><p> மேலும் கலிபோர்னியாவில் நடைபெற்ற பன்னாட்டுக் குற்றச் சம்பவத்தில் மேஜர் சிங்கிற்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் இவரை அமெரிக்க அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.</p><p> கலிபோர்னியாவின் மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் மேஜர் சிங் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a5d25be-1349-455c-b85f-18f53f646921/26-6a8563b98a9f5.webp' /></p><p></p><h2> சர்வதேச அளவிலான கைது நடவடிக்கை</h2><p>அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சட்ட அமலாக்க முகமைகள் இணைந்து நடத்தும் ஆபரேஷன் ஹார்ட்பால்(Operation Hardball) என்ற நடவடிக்கையின் கீழ் மேஜர் சிங் தீவிரமாக தேடப்பட்டு வருகிறார்.</p><p> ஆபரேஷன் ஹார்ட்பால் நடவடிக்கையின் கீழ் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சோதனையில் பன்னாட்டு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய இந்தியர்கள் 24 பேர் இந்த மாதத்தின் தொடக்கத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p><p> இதில் 11 பேர் கலிபோர்னியாவில் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T08:05:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோல்டர் அணி படுதோல்வி: ருத்ரதாண்டவமாடிய கீமோ பவுல், ரோவ்மன் பௌல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/keemo-paul-smash-65-runs-vs-st-kitts-1787126422"></link>
            <id>https://news.lankasri.com/article/keemo-paul-smash-65-runs-vs-st-kitts-1787126422</id>
            <summary type="text">Jaimaica Kingsmen beat St Kitts by 51 runs:
கரீபியன் தொடரில் ஜமைக்கா கிங்ஸ்மென் அணி 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் செயின்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Jaimaica Kingsmen beat St Kitts by 51 runs:
கரீபியன் தொடரில் ஜமைக்கா கிங்ஸ்மென் அணி 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் செயின்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியோட்ஸை வீழ்த்தியது.</p><p>
சபீனா பார்க் மைதானத்தில் நடந்த கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில், ஜமைக்கா கிங்ஸ்மென் அணி 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>ஜமைக்கா கிங்ஸ்மென்&nbsp;181 ஓட்டங்கள் </h2><p> 

கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 10வது போட்டியில், செயின்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியோட்ஸ் மற்றும் ஜமைக்கா கிங்ஸ்மென் அணிகள் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85b75e66-781e-4980-82aa-ba546cea9965/26-6a85639723cff.webp' />&nbsp;</p><p></p><p>

முதலில் ஆடிய ஜமைக்கா கிங்ஸ்மென் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ஓட்டங்கள் குவித்தது.
</p><p>
கீமோ பவுல் 36 பந்துகளில் 5 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 65 ஓட்டங்களும், ரோவ்மன் பௌல் 39 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 49 ஓட்டங்களும் விளாசினார். </p><p>

பின்னர் ஆடிய செயின்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியோட்ஸ் அணி 18 ஓவர்களிகள் 130 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
</p><p>
அதிகபட்சமாக கெவின் விக்ஹம் 37 ஓட்டங்களும், நவின் 19 ஓட்டங்களும் எடுத்தனர். கீமோ பவுல் 3 விக்கெட்டுகளும், ஆந்த்ரே ரஸல் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74d30ac1-f43b-43d3-b0d8-c1928569e488/26-6a856397db1b1.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T08:02:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணம் முடிப்பதாக ஆசை காட்டி யுவதி துஷ்பிரயோகம்; முன்னாள் மேயர் ஆட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-woman-abused-lured-promises-of-marriage-1787115041"></link>
            <id>https://jvpnews.com/article/young-woman-abused-lured-promises-of-marriage-1787115041</id>
            <summary type="text">&amp;nbsp; திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி யுவதியொருவரை துஷ்பிரயோகம் செய்த அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சக்கி அதாவுல்லாஹ்வை விளக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி யுவதியொருவரை துஷ்பிரயோகம் செய்த அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சக்கி அதாவுல்லாஹ்வை விளக்கமறியலில் வைக்க அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>

 குறித்த வழக்கு அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் நேற்று (18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08cf6f36-f668-411e-9baa-46dece05e1b1/26-6a853622cf102.webp' /></p><h2>&nbsp;அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில்பெண் முறைப்பாடு</h2><p>


கடந்த காலத்தில் அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வராக சக்கி அதாவுல்லாஹ் செயற்பட்டு வந்த போது, அங்கு கடமையாற்றிய அக்கரைப்பற்றை சேர்ந்த அரச உத்தியோகத்தரான பெண் ஒருவரைத் திருமணம் முடிப்பதாக வாக்குறுதி அளித்துத் தன்னைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குறித்த பெண் அண்மையில் நியாயம் கேட்டிருந்தார்.</p><p></p><p>
</p><p>
 இச் சம்பவம் தொடர்பில் அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திலும் பெண் முறைப்பாடு செய்திருந்தார்.
</p><p>


முறைப்பாட்டைத் தொடர்ந்து, அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவினால் தேடப்பட்டு வந்த சந்தேகநபரான சக்கி அதாவுல்லாஹ், வாக்குமூலம் வழங்குவதற்காக அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு வருகை தந்திருந்தார்.
</p><p>
இதன்போது, அப்பிரிவின் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் தயானி கமகே தலைமையிலான குழுவினரால் அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.</p><p></p><p>



அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினரால் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
</p><p>
சட்ட நடவடிக்கைகளுக்காக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட வேளையில், அவரை இன்றுவரை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.



 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-19T08:01:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பேருந்தில் சென்றவரின் முகம் சுழிக்க வைத்த செயல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/betel-leaf-spittle-spat-bus-passenger-in-jaffna-1787123493"></link>
            <id>https://jvpnews.com/article/betel-leaf-spittle-spat-bus-passenger-in-jaffna-1787123493</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் இருந்த பயணி ஒருவர் வெற்றிலை மென்று, பேருந்தின் யன்னல் வழியாக வெளியே து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் இருந்த பயணி ஒருவர் வெற்றிலை மென்று, பேருந்தின் யன்னல் வழியாக வெளியே துப்பியபோது வீதியில் சென்றவர் மீது பட்ட சம்பவம் விசனத்தை எற்படுத்த்யுள்ளது.
</p><p>
 பேருந்து பயணியால் துப்பப்பட்ட வெற்றிலை எச்சில், வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர்மீது பட்டதால் அவருக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfb4533e-11e9-4b26-8feb-36112d9846d4/26-6a8557276d3eb.webp' /></p><p></p><h2>வீதியில் சென்றவர் மீது பட்ட எச்சில்</h2><p>
</p><p>
இதனால் ஆத்திரமடைந்த மோட்டார் சைக்கிள் பயணி, தனியார் பேருந்தை இடைமறித்து, பொறுப்பற்ற முறையில் செயற்பட்ட பயணியை பேருந்தில் இருந்து இறக்கி, அவர் ஏற்படுத்திய வெற்றிலை கறையை சுத்தம் செய்ய வைத்துள்ளார்.</p><p></p><p>

இன்னிலையில் பொது இடங்களில் பயணிக்கும் அனைவரும் தங்களது செயற்பாடுகள் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் சமூகப் பொறுப்புடனும், நாகரிகத்துடனும் நடந்து கொள்வது அவசியம் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-19T08:01:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் இது அணிவது கட்டாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mandatory-for-drivers-passengers-to-wear-seatbelts-1787126403"></link>
            <id>https://jvpnews.com/article/mandatory-for-drivers-passengers-to-wear-seatbelts-1787126403</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அதிவேக வீதிகளுக்கு நுழையும் அனைத்து வாகனங்களின் சாரதிகள் மற்றும் பயணிகள் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கட்டுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அதிவேக வீதிகளுக்கு நுழையும் அனைத்து வாகனங்களின் சாரதிகள் மற்றும் பயணிகள் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.
</p><p>


அதன்படி செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் அதிவேக வீதிகளுக்கு நுழையும் அனைத்து வாகனங்களின் சாரதிகள் மற்றும் பயணிகள் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd16b9f6-3511-443a-b701-240a63ecd3dc/26-6a8562852d23e.webp' /></p><h2>&nbsp;அதிவிசேட வர்த்தமானி&nbsp;</h2><p>
</p><p>


விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்த அவர், அனைத்துப் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், இந்தச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.</p><p></p><p>



ஆசனப்பட்டி அணியாமல் பயணிக்கும் நபருக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அதிவேகப் பேருந்துகளில் ஆசனப்பட்டி அணியாத பயணிகளிடமிருந்தும் இந்த அபராதத் தொகையை அறவிடுவதற்கான சட்டப்பூர்வ வசதி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>


அனைவரின் உயிர் பாதுகாப்பிற்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

 

இதற்கிடையில், தேசிய வீதி பாதுகாப்பு சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன கருத்துத் தெரிவிக்கையில்,</p><p></p><p> </p><p>ஆசனப்பட்டி இல்லாத வாகனங்களில் அவற்றை பொறுத்திக்கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலமும் செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதியுடன் முடிவடடைவதாகத் தெரிவித்தார்.
</p><p>


2025 செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2455/29 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக, அதிவேக வீதியில் செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் ஆசனப்பட்டி அணியும் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-19T07:57:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் மின் தடையை சீர் செய்வதற்கான பணிகள் முன்னெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/work-to-repair-power-outage-in-jaffna-1787125442"></link>
            <id>https://tamilwin.com/article/work-to-repair-power-outage-in-jaffna-1787125442</id>
            <summary type="text">யாழில் அண்மைய நாட்களாக தொடர்ச்சியாக மின்தடை ஏற்பட்டிருந்த நிலையில் இதனை சீரமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.யாழில் கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் அண்மைய நாட்களாக தொடர்ச்சியாக மின்தடை ஏற்பட்டிருந்த நிலையில் இதனை சீரமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>யாழில் கடந்த பல நாட்களாக விட்டுவிட்டு மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள்
மிகவும் அல்லல்பட்டனர். குறிப்பாக க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்கள்
பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.</p><h2>மின் தடைக்கான காரணம்</h2><p>
</p><p>
இந்த மின் தடைக்கு காரணம் மின் இணைப்புகளில் தூசி படிந்தமையே என
தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38943138-b293-4787-bf1b-7db12cfbf430/26-6a856179a0ab0.webp' /></p><p>
</p><p>இந்த நிலையில் படிந்த தூசியை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் இலங்கை
மின்சார சபையினாரல் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
</p><p>அந்தவகையில் நேற்றையதினம் (18.08.2026) வலிகாமம் மேற்கு பகுதியிலும் குறித்த பணி
முன்னெடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cf8e92b-2022-4161-bda1-6fcb812334a7/26-6a85617a7ade5.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37f82624-5105-4327-a2f2-b96aa18a71e1/26-6a85617b4bb4d.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T07:56:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட 28 வாகனங்கள் : வெளியான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/28-vehicles-temporarily-removed-from-road-use-1787124493"></link>
            <id>https://ibctamil.com/article/28-vehicles-temporarily-removed-from-road-use-1787124493</id>
            <summary type="text">தலவாக்கலை பகுதியில் பயணித்த 28 வாகனங்களை தற்காலிகமாக வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறித்த விட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலவாக்கலை பகுதியில் பயணித்த 28 வாகனங்களை தற்காலிகமாக வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>குறித்த விடயத்தினை நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகன பரிசோதகர் ஜாலிய பண்டார தெரிவித்துள்ளார்.
</p><p>
 

நுவரெலியா காவல்துறை போக்குவரத்து பிரிவு அதிகாரிகளும், மோட்டார் வாகன பரிசோதகர்களும் இணைந்து தலவாக்கலை பகுதி வழியே பயணித்த பேருந்துகள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள், வான்கள் மற்றும் லொறிகள் உட்பட 40 வாகனங்கள் வீதிப் பயன்பாட்டிற்கு தகுதியான நிலையில் உள்ளதா என்பது குறித்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.</p><p></p><h2>வருமான உரிமங்கள் பொறுப்பேற்கப்பட்டது</h2><p>
</p><p>
 

இதன்போது, பல்வேறு குறைபாடுகளுடன் தகுதியற்ற நிலையில் இயக்கப்பட்டு வந்த 28 வாகனங்கள் தற்காலிகமாக வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டு, அவற்றின் வருமான உரிமங்கள் பொறுப்பேற்கப்பட்டதாக மோட்டார் வாகன பரிசோதகர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6262f421-72c7-4957-b669-bbe442da73db/26-6a85601805412.webp' /></p><p>
</p><p>வீதி விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையின் போது 4 தனியார் பேருந்துகள், 15 முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட 28 வாகனங்கள் வீதிப் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.</p><p>அத்துடன், கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தும் வரை அவ்வாகனங்களை இயக்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T07:54:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு அச்சுறுத்தல்: திருநெல்வேலியில் தீவிர சோதனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/conditions-conducive-spread-dengue-tirunelveli-1787124347"></link>
            <id>https://tamilwin.com/article/conditions-conducive-spread-dengue-tirunelveli-1787124347</id>
            <summary type="text">டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் திருநெல்வேலி பகுதியில் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான குழுவினரால் தொடர்ச்சியாக சோதனைகள் மேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் திருநெல்வேலி பகுதியில் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான குழுவினரால் தொடர்ச்சியாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.</p><p> 

அந்தவகையில் 03, 06, 08 ஆம் திகதிகளில் வளாக வீதி, கலாசாலை வீதி, பனிக்கர் வீதி பகுதிகளில் பா. சஞ்சீவனால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் வீட்டின் பல்வேறு இடங்களில் குடம்பிகள் காணப்பட்ட 09 வீட்டு உரிமையாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.</p><h2>வழக்கு விசாரணை</h2><p> 

அவர்களிற்கெதிராக நேற்று 18.08.2026ம் திகதி யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றில் பா. சஞ்சீவனால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ebd0e4d-88b9-4de5-8de3-adb92100b21c/26-6a8560392a2bc.webp' /></p><p> </p><p>

வழக்குகளினை விசாரணை செய்த நீதவான் 08 பேரிற்கு தலா 10,000/= வீதம் 80,000/= தண்டம் அறவிடப்பட்டதுடன், நீதிமன்றிற்கு வருகை தராத நபரிற்கு அழைப்பு கட்டளை அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-19T07:50:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆதாரமின்றி கைவசமிருந்த ஒரு கோடி ரூபா! 19 வயது இளைஞன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/youth-arrested-for-illegal-money-transfer-1787125147"></link>
            <id>https://ibctamil.com/article/youth-arrested-for-illegal-money-transfer-1787125147</id>
            <summary type="text">பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 19 வயது இளைஞர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

உண்டியல் (Undial) முறைமை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 19 வயது இளைஞர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
உண்டியல் (Undial) முறைமை மூலம் சட்டவிரோதமாகப் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வந்த நபர் குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று( 18) இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>அதன்படி, வேல்ல வீதி காவல்துறை பிரிவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப்பட்ட சோதனையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>

இதன்போது, கொழும்பு 05 பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து ஆதாரங்களை உறுதிப்படுத்த முடியாத ரூ. 10,467,000 பணமும், ஒரு போலி 1000 ரூபா நாணயத்தாளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c0aacfa-42e8-4def-a2d5-a97730d84ff7/26-6a855fc9c1591.webp' /></p><p>
</p><p>
அந்தவகையில், இந்த சந்தேக நபரிடம் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T07:48:36+00:00</updated>
        </entry>
    </feed>
