<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-22T13:45:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனுஷை தப்பா நினைச்சுட்டேன்..எனக்கும் வந்த பிரச்சனை!! பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/priya-bhavani-opens-thinks-dhanush-is-so-rude-1787404479"></link>
            <id>https://viduppu.com/article/priya-bhavani-opens-thinks-dhanush-is-so-rude-1787404479</id>
            <summary type="text">பிரியா பவானி சங்கர்&amp;nbsp;செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சின்னத்திரை நடிகையாக திகழ்ந்து தற்போது தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிரியா பவானி சங்கர்&nbsp;</h2><p>செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சின்னத்திரை நடிகையாக திகழ்ந்து தற்போது தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b92eeda-329e-4fcf-8aad-42b6d8ec3353/26-6a89a0c150579.webp' /></p><p>தற்போது ரவி தேஜா நடிப்பில் வெளியான இருமுடி படத்தில் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். படத்தின் பிரமோஷனுக்காக அளித்த பேட்டியொன்றில் தனுஷுடன் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.</p><p> அப்போது, நான் தொலைக்காட்சியில் பணியாற்றியபோது ஒருமுறை தனுஷ் சாரை பேட்டி எடுத்தேன். அவர் ரொம்பவே ரூடாக நடந்து கொண்டார். அப்போது, என்ன இவ்ளோ பெரிய ஸ்டார் இப்படி ரூடா இருக்காரேன்னு நினைத்தேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1aeaf0db-30b9-4433-9450-505b997f482e/26-6a89a0c2023f2.webp' /></p><p>ஆனால் நடிகையாக மாறியப்பின், பேட்டிகளிலும், பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் எனக்கு ஏற்படும் மனநிலையை பார்த்து அச்சச்சோ தனுஷ் சாரை தப்பா நினைத்துவிட்டோமே என்று நினைத்ததாக பிரியா பவானி சங்கர் தெரிவித்திருக்கிறார்.</p>]]></content>
            <updated>2026-08-22T13:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தைகள் தனியுரிமை விவகாரம் - ரூ.3,828 கோடி செலுத்த ஒப்புக்கொண்ட டிக்டாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tiktok-to-pay-3828-cr-settlement-resolve-case-us-1787405951"></link>
            <id>https://news.lankasri.com/article/tiktok-to-pay-3828-cr-settlement-resolve-case-us-1787405951</id>
            <summary type="text">குழந்தைகள் தனியுரிமை விவகாரத்தில், டிக்டாக் அமெரிக்க நீதித்துறைக்கு ரூ.3,828 கோடி செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. 

ரூ.3,828 கோடி செலுத்த உள்ள டிக்டாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குழந்தைகள் தனியுரிமை விவகாரத்தில், டிக்டாக் அமெரிக்க நீதித்துறைக்கு ரூ.3,828 கோடி செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. </p><h3>

ரூ.3,828 கோடி செலுத்த உள்ள டிக்டாக்</h3><p>

குழந்தைகளின் தனியுரிமை மற்றும் சமூக வலைதள பாதுகாப்பு தொடர்பாக சமூகவலைதள நிறுவனங்கள் பல்வேறு நாடுகளில் வழக்குகளை எதிர்கொண்டு வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88168949-2fa5-4c34-b079-542457119607/26-6a89a6812b441.webp' /></p><p>

இதே போல், 2024 ஆம் ஆண்டில் டிக்டாக்கின் தாய் நிறுவனமாக பைட் டான்ஸ், குழந்தைகளின் இணையதள தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டத்தை (COPPA) மீறியதாக அமெரிக்க நீதித்துறை அதன் மீது வழக்கு தொடர்ந்தது. </p><p>

அந்த வழக்கில் 13 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளின் தனிபட்ட தகவல்களை பெற்றோர் அனுமதியின்றி சேகரித்ததாகவும், குழந்தைகளின்கணக்குகளை நீக்குமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்தும் நீக்கப்படவில்லை என குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

தற்போது இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், டிக்டாக் செயலி அமெரிக்க நீதித்துறைக்கு 400 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.3,828 கோடி) செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது.&nbsp;</p><p></p><p>

இதில், ரூ2,871 கோடியை உடனடியாகவும், ரூ957 கோடியை மியூசிக்கலி செயலி மீதான முந்தைய உத்தரவை ரத்து செய்த பின்னரும் செலுத்துவதாக தெரிவித்துள்ளது. </p><p>
 
முன்னதாக COPPA விதிமீறலுக்காக 2019 ஆம் ஆண்டில் கூகிளின் யூடியுப் 170 மில்லியன் டொலர் செலுத்தியுள்ளது.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T13:39:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் புதிய கலாச்சார மோதல் களமாக மாறிய ஒரு விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swimming-pool-heatwave-in-germany-1787405829"></link>
            <id>https://news.lankasri.com/article/swimming-pool-heatwave-in-germany-1787405829</id>
            <summary type="text">Swimming pool heatwave in germany: ஜேர்மனியில் நீச்சல் குளங்களை சுற்றியுள்ள அரசியல், ஒரு சூடான தேசிய விவாதமாக மாற வழிவகுத்துள்ளது.

ஜேர்மனியில் நீச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Swimming pool heatwave in germany: ஜேர்மனியில் நீச்சல் குளங்களை சுற்றியுள்ள அரசியல், ஒரு சூடான தேசிய விவாதமாக மாற வழிவகுத்துள்ளது.
</p><p>
ஜேர்மனியில் நீச்சல் குளங்களை சுற்றியுள்ள பரபரப்பான சூழல், பாலினத்தை விட இனம் அல்லது அடையாளம் பற்றிய சூடான விவாதத்தை கிளப்பியுள்ளது.&nbsp;&nbsp;</p><h2>நீச்சல் குளங்கள்</h2><p>
லண்டனின் ஹாம்ப்ஸ்டெட் ஹீத்தில் உள்ள பெண்களுக்கான பிரத்யேக குளத்தை பயன்படுத்துவது தொடர்பாக, நீச்சல் குளங்கள் குறித்த கலாச்சாரப் போர் திருநங்கை சமூகத்திற்கும், பாலினத்தை விமர்சிக்கும் பெண்களுக்கும் இடையே மோதலாக இருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e06ea903-d3b0-48e1-becf-c3042152f847/26-6a89a6b14813c.webp' />&nbsp;</p><p></p><p>

அந்த வகையில் தற்போது ஜேர்மனியிலும் நீச்சல் குளங்கள் சார்ந்த சூடான விவாதம் ஒன்று ஏற்பட்டுள்ளது. ஆனால், இங்கு பாலினத்தை விட இனம் அல்லது அடையாளம் பற்றியதாக இருக்கிறது.</p><p>2026-ஆம் ஆண்டின் கடும் வெப்பம் நிறைந்த கோடைக்காலத்தில், வெப்பத்தில் இருந்து தப்பிக்க திறந்தவெளி நீச்சல் குளங்களை நோக்கி ஜேர்மனி மக்கள் பெருமளவில் படையெடுத்தனர். </p><p>

வெப்பநிலை உயர்ந்த அதே வேளையில், பதற்றமும் உச்சத்தை எட்டியது. அதற்கு காரணம் கறுப்பின சமூகத்தினர் தொடர்பிலான அறிவிப்புதான்.&nbsp;</p><h2>தற்காலிக திறந்தவெளி</h2><p> 

பெர்லினின் புகழ்பெற்ற வோல்க்ஸ்புனே திரையரங்கின் அருகே அமைக்கப்பட்ட தற்காலிக திறந்தவெளி நீச்சல் குளம், கோடை காலம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. </p><p>

ஆனால், கடந்த வாரம் ஒருநாள் மட்டும் 'கறுப்பின சமூகத்தினருக்கு மட்டுமே பிரத்யேகமாக திறந்திருக்கும்' என்று அறிவித்து, சிறுபான்மை இனத்தவரின் பங்கேற்பை அதிகரிக்க அதன் நிர்வாகிகள் முடிவு செய்தபோது, அதன் விளைவுகள் பெரும் வெடிப்பை ஏற்படுத்தின. </p><p>

இது ஒரு சூடான தேசிய விவாதமாக வெடிக்க வழிவகுக்க இடதுசாரிகளும், வலதுசாரிகளும் கட்டுப்பாட்டிற்காக ஒரு கடுமையான போரில் ஈடுபட்டுள்ளனர்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59e2695a-fd52-40a4-98e6-f1586abf904d/26-6a89a6b20dcd7.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T13:37:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகையின் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா?... அவரே பகிர்ந்த தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-sathyapriya-about-her-past-life-1787399777"></link>
            <id>https://cineulagam.com/article/actress-sathyapriya-about-her-past-life-1787399777</id>
            <summary type="text">எதிர்நீச்சல் தொடர்கிறதுஎப்படியோ ஜனனி, ராவணன் பற்றிய உண்மையை தெரிந்துகொண்டார். தனக்கு எதுவும் தெரியாதவர் போல் வீட்டிற்கு வந்தவர் குணசேகரன் மற்றும் குடு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>எதிர்நீச்சல் தொடர்கிறது</h2><p>எப்படியோ ஜனனி, ராவணன் பற்றிய உண்மையை தெரிந்துகொண்டார். </p><p>தனக்கு எதுவும் தெரியாதவர் போல் வீட்டிற்கு வந்தவர் குணசேகரன் மற்றும் குடும்பத்தினரிடம் சாமி கும்பிட போகிறீர்கள் சரி தான், ஆனால் அதைவிட ஒரு பிரச்சனை வரப்போகிறது என்று கூறுகிறார்.</p><p> அவர் சொன்னதை கேட்டு வீட்டுப் பெண்கள் செம ஷாக் ஆகிறார்கள்.
இன்னொரு பக்கம் Vkவை பிடிக்க சக்தியை தேடிவந்த ராவணன் இன்னொரு நேரடியாக மோத களமிறங்கிவிட்டார். இன்றைய எபிசோட் காட்சியில், ராவணன்-சக்தி நேரடியாக சக்திக்கும் காட்சிகள் இடம்பெறுகின்றன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85602969-2d51-41f0-9077-8e73f86abb3e/26-6a899a0de5bad.webp' /></p><h2>சோக கதை
</h2><p>எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் விசாலாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சத்யப்ரியா. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது சினிமா பயணத்தின் ஆரம்ப காலகட்டத்தில் சந்தித்த கஷ்டங்கள் குறித்து பேசியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f348367-867e-4ed0-91e8-cd31a5768f45/26-6a899a0ed3889.webp' /></p><p> </p><p>அதில் அவர், நான் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே திருமணம் செய்து செட்டில் ஆனேன். கணவர் தயாரித்த திரைப்படம் மாபெரும் தோல்வியடைய எல்லாம் இழந்துவிட்டேன், திடீரென கணவருக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. </p><p>குடும்பத்தைக் காப்பாற்ற சென்னை அப்போலோ மருத்துவமனையில் 5 மாதங்கள் 'வார்டு செக்ரட்டரியாக' வேலை பார்த்தேன், ஆனால் தொடர முடியவில்லை.
எப்படியாவது குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடினேன். </p><p>அப்போது கமல்ஹாசனிடம் வாய்ப்பு கேட்டேன், அவர் அட்வான்ஸ் பணம் கொடுத்தார், ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. கடைசியாக புதிய பாதை படத்தில் வில்லி வேடம் கிடைத்தது, அதன்பிறகு படிப்படியாக பட வாய்ப்புகள் கிடைத்து நடிக்க ஆரம்பித்தேன் என்றார்.</p>]]></content>
            <updated>2026-08-22T13:30:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருப்பு தான் எனக்கு பிடித்த கலரு என கலக்கும் டிடியின் போட்டோ ஷுட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/anchor-dd-black-saree-attire-photoshoot-1787403671"></link>
            <id>https://cineulagam.com/article/anchor-dd-black-saree-attire-photoshoot-1787403671</id>
            <summary type="text">தொகுப்பாளினி டிடிதமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக வலம் வரும் தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் டிடி.20 வருடங்களுக்கு மேலாக நிகழ்ச்சிகள் தொகுத்து வழங...</summary>
            <content type="html"><![CDATA[<h2>தொகுப்பாளினி டிடி</h2><p>தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக வலம் வரும் தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் டிடி.</p><p>20 வருடங்களுக்கு மேலாக நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறார், இப்போதும் அவரது பேட்டிகளுக்கு என்றே தனி ரசிகர்கள் வட்டாரம் உள்ளது. கடைசியாக விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யை பேட்டி எடுத்திருந்தார்.</p><p>போட்டோ ஷுட்களிலும் பிஸியாக இருக்கும் டிடி கருப்பு நிற புடவையில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷுட்டை வெளியிட்டுள்ளார்.</p><p>இதோ போட்டோஸ்,</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T13:29:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சென்னையை உலுக்கிய பயங்கரம் ; பெண்ணை துண்டாக்கி பிரியாணி சமைத்த கொடுமை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-couple-chennai-woman-brutal-murder-cooked-1787381322"></link>
            <id>https://jvpnews.com/article/young-couple-chennai-woman-brutal-murder-cooked-1787381322</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சென்னையில் பெண்ணை துண்டாக்கி பிரியாணி சமைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொடூர கொலைகார ஜோடியை போலீசார் தேடி வருவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;சென்னையில் பெண்ணை துண்டாக்கி பிரியாணி சமைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொடூர கொலைகார ஜோடியை போலீசார் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, 

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன் இருந்த ஒரு சிவப்பு நிற சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a8e23e5-05b9-41c3-8c16-33af23cf7690/26-6a89464b9aec3.webp' /></p><h2> சிவப்பு நிற சூட்கேஸ் - பெண்ணின்&nbsp; &nbsp;உடல் பாகங்கள்</h2><p> </p><p>அதனுள் ஒரு பெண்ணின் தலை மற்றும் கை கால்கள் மற்றும் உடல் பாகங்கள் கிடந்தன.

 
இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது கண்ணாடி அணிந்த ஒரு இளம் பெண்ணும், குறுந்தாடி வைத்திருந்த ஒரு வாலிபரும் அந்த சிவப்பு நிற சூட்கேசை எடுத்து வந்தது பதிவாகியிருந்தது.</p><p></p><p> </p><p>

அந்த ஜோடி சென்ட்ரல் ஸ்டேசனுக்கு வந்து ஆக்ராவுக்கு செல்லும் ரயில் ஏறி அந்த பெட்டியை வைத்துவிட்டு உடனே இறங்கிவிட்டனர்.</p><p> அதன்பின் கூடுவாஞ்சேரி நோக்கி சென்ற மின்சார ரயில் பயணித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது

300க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ததில் அவர்கள் இருவரும் ஆட்டோவில் கூடுவாஞ்சேரி மசூதி பகுதிக்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவழியாக
அவர்களின் வீட்டை போலீசார் கண்டறிந்து சென்று பார்த்தபோது வெளியே பூட்டப்பட்டிருந்தது</p><p></p><p>.

பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போதுதான் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ஒரு பெண் கொலை செய்யப்பட்டு உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு தடங்களை மறைப்பதற்காக பிரியாணி செய்யும் பெரிய பாத்திரத்தில் போட்டு மைதா மாவு, காய்கறிளை சேர்த்து சமைக்கவும் முயற்சி செய்திருக்கிறார்கள். </p><p>

எஞ்சிய உடல் பாகத்தைத்தான் அவர்கள் சூட்கேசில் வைத்து ரயிலில் வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு அந்த பெண்ணின் தலை இதுவரை கிடைக்கவில்லை.

போலீசாரின் விசாரனையில், கண்ணாடி அணிந்த அந்த பெண்ணின் பெயர் பகவதி பாஜி எனவும், அந்த இளைஞரின் பெயர் மாணிக் லஸ்கர் என்பது தெரியவந்தது.</p><p></p><p> அதோடு, கடந்த 10 நாட்களாக அவர்களுடன் அதே வீட்டில் ஹைதுல் நிஷா என்கிற பெண்ணும் தங்கியிருந்தது தெரிய வந்தது. அவருடன் சண்டை வந்ததால் பகவதி பாஜி மற்றும் மாணிக் லஷ்கர் இருவரும் சேர்ந்து ஹைதுல் நிஷாவை கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.
 

இந்த அளவுக்கு கொடூரமாக கண்டதுண்டமாக வெட்டி பிரியாணி சமைத்த இருவரையும் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். </p><p>தற்போது அவர்கள் ஒடிசாவில் இருப்பதாக தகவல் கிடைத்தநிலையில் இருவரையும் தேடி தனிப்படை போலீசார் ஒடிசா சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-22T13:25:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் தடைகள் ; பேரழிவுகரமாக இருக்கும் ; ஈரான் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-sanctions-would-be-catastrophic-iran-warns-1787379771"></link>
            <id>https://canadamirror.com/article/us-sanctions-would-be-catastrophic-iran-warns-1787379771</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரான் மீது வரலாற்றில் மிகக் கடுமையான நிதித் தடைகளை விதிக்கப்போவதாக வொஷிங்டன் உறுதியளித்துள்ள நிலையில், புதிய அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு அளிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரான் மீது வரலாற்றில் மிகக் கடுமையான நிதித் தடைகளை விதிக்கப்போவதாக வொஷிங்டன் உறுதியளித்துள்ள நிலையில், புதிய அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு அளிக்கப்படும் பதில் "பேரழிவுகரமாக" இருக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.</p><p>&nbsp; ஈரானுக்கு "எந்தவிதமான உயிர்நாடியையும்" வழங்கும் எந்தவொரு நாடும் பொருளாதார விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என டொனால்ட் டிரம்ப் எச்சரித்ததைத் தொடர்ந்து, திங்கட்கிழமை திட்டமிடப்பட்ட தடைகள் குறித்த விபரங்களை வெளியிடவுள்ளதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f5a771a-35c8-42f7-a8a1-fef3bd9249a1/26-6a89403cf062f.webp' /></p><h2>ஆயுதப் படைகள்&nbsp;பேரழிவுகரமான பதில்களை வழங்கும்</h2><p> 

ஈரானின் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அலி அப்தொல்லாஹி, இஸ்லாமியக் குடியரசின் எதிர்வினை விரிவானதாகவும் தீர்க்கமானதாகவும் இருக்கும் என்று கூறினார். </p><p>

"நிலம், கடல், வான், வான் பாதுகாப்பு மற்றும் இணையவெளி முழுவதும் தயார் நிலையில் உள்ள ஈரானின் ஆயுதப் படைகள், எதிரியின் புதிய அச்சுறுத்தல்களுக்கு நசுக்கும், தண்டிக்கும் மற்றும் பேரழிவுகரமான பதில்களை வழங்கும்" என்று அப்தொல்லாஹியை மேற்கோள் காட்டி ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>

அமெரிக்காவும் இஸ்ரேலும் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்பு தொடங்கிய போரில் இரு தரப்பினரும் இன்னும் வெற்றிபெறவில்லை என்றாலும், ஈரானியத் தலைவர்களும் டிரம்பும் வெற்றிகரமான மற்றும் அச்சுறுத்தலான அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். </p><p>

இந்தப் போர் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றதுடன், பிற வளைகுடா நாடுகளையும் ஈர்த்து உலகளாவிய எரிபொருள் விலையை உயர்த்தி வருகிறது.</p><p> 

அமெரிக்கத் தாக்குதல்கள் ஈரானின் பொருளாதாரத்தையும் அதன் வழக்கமான படைகளையும் கடுமையாகக் குறைத்துள்ளன, ஆயினும் ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் தாங்கி கப்பல் போக்குவரத்தைத் தடையின்றித் தடுக்கவும் பிராந்திய எதிரிகளைத் தாக்க ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் திறன்களைத் தெஹ்ரான் தொடர்ந்து தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-22T13:24:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகிலேயே முதல்முறை...மலைப்பாம்பிற்கு புற்றுநோய் சிகிச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/a-world-first-cancer-treatment-save-for-a-python-1787402012"></link>
            <id>https://canadamirror.com/article/a-world-first-cancer-treatment-save-for-a-python-1787402012</id>
            <summary type="text">&amp;nbsp; உலகிலேயே முதன்முறையாக ஒரு மலைப்பாம்பு புற்றுநோயிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளது.

இங்கிலாந்திலுள்ள செஸ்டர் உயிரியல் பூங்காவில் வாழும், &#039;...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; உலகிலேயே முதன்முறையாக ஒரு மலைப்பாம்பு புற்றுநோயிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளது.
</p><p>
இங்கிலாந்திலுள்ள செஸ்டர் உயிரியல் பூங்காவில் வாழும், 'ஜோடி ஃபோஸ்டர்' எனப் பெயரிடப்பட்ட 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று உணவருந்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f19b7c8-053f-481d-9cce-732bdb6b7bf6/26-6a89971e8b7ac.webp' /></p><p>மருத்துவப் பரிசோதனையில், அதன் தாடை எலும்பில் 'ஃபைப்ரோசார்கோமா'என்ற புற்றுநோய்க் கட்டி இருந்தது கண்டறியப்பட்டது. 

ஆரம்பத்தில் அறுவை சிகிச்சை மூலம் அது அகற்றப்பட்டாலும், மீண்டும் அப்புற்றுநோய் தோன்றி தாடை எலும்பைச் சேதப்படுத்தத் தொடங்கியது.</p><p>
இதனால் பாம்பைக் காப்பாற்ற, செஸ்டர் உயிரியல் பூங்கா மருத்துவர்கள் மற்றும் லிவர்பூல் பல்கலைக்கழக புற்றுநோய் நிபுணர்கள் இணைந்து மனிதர்களுக்குப் பயன்படுத்தப்படும் 'எலக்ட்ரோகீமோதெரபி' சிகிச்சையை அந்தப் பாம்பிற்கு ஏற்றவாறு மாற்றியமைத்து வழங்கினர்.</p><p>

பாம்பின் அளவிற்கு ஏற்ற அறுவை சிகிச்சை மேஜை இல்லாததால், இரண்டு மேஜைகளை ஒன்றாக இணைத்து, வெப்பப் போர்வைகள் மூலம் பாம்பின் உடல் வெப்பநிலையைச் சீராகப் பராமரித்து 90 நிமிடங்கள் இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
</p><p>
அறுவை சிகிச்சைக்குப் பின் மீதமிருந்த புற்றுநோய் செல்களை அழிக்க எலக்ட்ரோகீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அந்த மலைப்பாம்பு மிக விரைவாகக் குணமடைந்து தற்போது நலமாக உள்ளது.

உலகிலேயே ஒரு பாம்பிற்கு இந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-22T13:24:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வருங்கால மனைவி தொடர்பில் இயக்குநர் ஜேசன் சஞ்சயின் எதிர்பார்ப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/director-jason-sanjay-expectations-future-wife-1787401213"></link>
            <id>https://jvpnews.com/article/director-jason-sanjay-expectations-future-wife-1787401213</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகனும் , திரைப்பட இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தனது வருங்க்கால மனைவி தொடர்பான எதிர்பார்ப்புகள் குறித்து நேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகனும் , திரைப்பட இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தனது வருங்க்கால மனைவி தொடர்பான எதிர்பார்ப்புகள் குறித்து நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.</p><p>

 இது தொடர்பாகப் பேசிய அவர், தனக்கு இதுவரை காதலி இருந்ததில்லை என்றும், சாகசங்களில் ஆர்வம் கொண்டவராகவும், புதிய இடங்களுக்குச் செல்ல விரும்புபவராகவும் இருக்கும் பெண்களையே தனக்குப் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b1c30c1-ef03-45ab-b4ea-67a1dc5754f4/26-6a8993ffae922.webp' /></p><h2>பொருளாதார ரீதியாகச் சுயமாகச் செயல்படும் பெண்</h2><p>
</p><p>
மேலும், பொருளாதார ரீதியாகச் சுயமாகச் செயல்படும் பெண்ணாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம் எனக் குறிப்பிட்ட அவர், எந்தவொரு சூழ்நிலையிலும் பிறரைச் சார்ந்து இருக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

தொடர்ந்து பேசிய அவர், தனது மனைவி தமிழ் சினிமா மற்றும் தமிழ்ப் பாடல்களை ரசிப்பவராக இருக்க வேண்டும் என்றும், அதன் மூலம் நமது மண் சார்ந்த அடையாளத்துடன் இணைந்திருக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T13:21:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீனுவாங்கொடை கொலையாளிக்கு உதவிய நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/person-who-aided-the-minuwangoda-crime-1787404960"></link>
            <id>https://jvpnews.com/article/person-who-aided-the-minuwangoda-crime-1787404960</id>
            <summary type="text">&amp;nbsp; மீனுவாங்கொடை துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவரை, ஐஸ் போதைப்பொருளுடன் மீனுவாங்கொடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மீனுவாங்கொடை துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவரை, ஐஸ் போதைப்பொருளுடன் மீனுவாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p>
 

குறித்த கொலைச் சம்பவத்திற்காக துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/479b33db-2977-40ba-bb39-031202207905/26-6a89a2a191751.webp' /></p><p>
</p><p>
 

கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து 11 கிராம் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p>

 

கடந்த ஆண்டு ஓகஸ்ட் 13ஆம் திகதி மீனுவாங்கொடை பகுதியில் 36 வயதுடைய முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடையதாகவே இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-22T13:20:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடளாவிய ரீதியில் கடுமையான வறட்சி! நீர்ப்பாசனத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/irrigation-department-amid-drought-1787401265"></link>
            <id>https://tamilwin.com/article/irrigation-department-amid-drought-1787401265</id>
            <summary type="text">நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 35.9 சதவீதமாகக் குறைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 35.9 சதவீதமாகக் குறைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர் எச்.எம்.பி.எஸ்.டி.ஹேரத் தெரிவித்துள்ளார்.</p><p>நாடளாவிய ரீதியில் நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளாக அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><h2>நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் மொணராகலை ஆகிய மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மிகவும் குறைந்தளவை எட்டியுள்ளது.</p><p>
 

தற்போது சிறுபோக பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், நிலவும் நீரின் அளவு அந்த பயிர்ச்செய்கைகளுக்கு போதுமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0bbcbcd-9565-46f2-acaf-fd1f1876252b/26-6a89a0b18bef7.webp' /></p><h2>காலநிலை</h2><p>இருப்பினும், அதிக வெப்பநிலை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக, நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் ஆவியாதல் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். </p><p>எனவே, அன்றாடத் தேவைகளுக்கும் விவசாய நடவடிக்கைகளுக்கும் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர் முகாமைத்துவ பணிப்பாளர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T13:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரம்பின் 75 நாடுகளுக்கான விசா தடை நீதிமன்றத்தில் ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-judge-strikes-down-trumps-visa-ban-1787404361"></link>
            <id>https://news.lankasri.com/article/us-judge-strikes-down-trumps-visa-ban-1787404361</id>
            <summary type="text">US judge strikes down Trump’s visa ban: டிரம்பின் 75 நாடுகளுக்கான விசா தடை நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது.

அமெரிக்காவின் Federal District Court...</summary>
            <content type="html"><![CDATA[<p>US judge strikes down Trump’s visa ban: டிரம்பின் 75 நாடுகளுக்கான விசா தடை நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது.
</p><p>
அமெரிக்காவின் Federal District Court, Manhattan நீதிபதி Jeannette Vargas, டிரம்ப் நிர்வாகம் விதித்த 75 நாடுகளுக்கான புலம்பெயர்ந்தோர் விசா தடை, சட்டத்திற்கு முரணானது என தீர்ப்பளித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6532f77a-f41a-4c44-920b-32c1ad16de8a/26-6a89a04be7da5.webp' /></p><p>இந்த தடை, 2026 ஜனவரியில் அமுல்படுத்தப்பட்டது. உலகின் சுமார் 40 சதவீத நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்தோருக்கான விசாக்கள் வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டன.</p><p>இதில் பிரேசில், கொலம்பியா, எகிப்து, ஹைட்டி, சோமாலியா, ரஷ்யா போன்ற நாடுகள் அடங்கும்.</p><p>அந்த நாடுகளிலிருந்து வரும் புலம்பெயர் மக்கள் அரசு நலத்திட்டங்களை அதிகம் பயன்படுத்துவார்கள் என காரணம் கூறப்பட்டது.
</p><p></p><p>ஆனால், சட்டப்படி, ஒருவரை “Public Charge” (அரசு உதவியை சார்ந்தவர்) என நிராகரிக்க, அவரின் நிதிநிலை, வயது, உடல்நலம், திறமைகள், குடும்ப சூழல் ஆகியவற்றை தனிப்பட்ட முறையில் மதிப்பீடு செய்ய வேண்டும். நாட்டின் அடிப்படையில் பொதுவாக நிராகரிப்பது சட்டத்திற்கு முரணானது என நீதிபதி தெரிவித்தார்.
</p><p>
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி, அமெரிக்க தூதரக அதிகாரிகள் விண்ணப்பதாரர்கள் தங்கள் நிதி நிலையை நிரூபித்தாலும், “விசா மறுக்கப்பட வேண்டும்” என உத்தரவிடப்பட்டிருந்தது. இதனால், குடும்ப இணைப்பு மற்றும் வேலை வாய்ப்பு அடிப்படையிலான நிரந்தர குடியேற்ற விசாக்கள் பாதிக்கப்பட்டன.</p><p>இந்த தடை, 1965-ஆம் ஆண்டு அமுல்படுத்தப்பட்ட தேசிய அடிப்படையிலான பாகுபாட்டைத் தடைசெய்யும் சட்டத்திற்கும் முரணானது என நீதிபதி கூறினார்.</p><p></p><p>வழக்கு தொடர்ந்தவர்கள், அமெரிக்க குடிமக்கள். இவர்களின் கானா, ஜமைக்கா, குவாத்தமாலா, எத்தியோப்பியா போன்ற நாடுகளில் உள்ள உறவுகள் விசா மறுக்கப்பட்டதாக தெரிவித்தனர். மேலும், கொலம்பியாவிலிருந்து வேலை அடிப்படையிலான விண்ணப்பதாரர்களும் பாதிக்கப்பட்டனர்.</p><p>

இந்த தீர்ப்பு, டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றக் கொள்கைக்கு பெரிய பின்னடைவு என கருதப்படுகிறது. நிர்வாகம் இதற்கு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-22T13:10:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ஜென்டீனா கால்பந்து சம்மேளனத்திற்கு பல லட்சம் அபராதம் வித்தது FIFA]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fifa-fines-argentine-football-association-1787402907"></link>
            <id>https://ibctamil.com/article/fifa-fines-argentine-football-association-1787402907</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டு உலக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியின் பின்னர் ஏற்பட்ட கலவரம் தொடர்பில் சர்வதேச கால்பந்து சம்மேளனமான FIFA அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டு உலக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியின் பின்னர் ஏற்பட்ட கலவரம் தொடர்பில் சர்வதேச கால்பந்து சம்மேளனமான FIFA அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அர்ஜென்டீனா அணியின் முக்கிய வீர்கள் மற்றும் அந்நாட்டு கால்பந்து சம்மேளனத்திற்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.
</p><p>
ஸ்பெயினுக்கு எதிரான இறுதிப் போட்டிக்குப் பின்னர் ஏற்பட்ட மோதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அர்ஜென்டீனாவின் மத்தியகள வீரர் லியான்ட்ரோ பரேடஸ் 10 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் 90,000 அமெரிக்க டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஸ்பெயின் வீரருக்கும் போட்டித்தடையும் அபராதமும்</h2><p>இதே சம்பவத்தில் சிக்கிய ஸ்பெயின் வீரர் கவி 1 போட்டி தடையும், 30,000 டொலர் அபராதமும் பெற்றார்.

AFA மீது பல குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் மொத்தம் 321,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fc8c36d-83fc-4326-b04d-ae47c59d385d/26-6a899f297febc.webp' /></p><p>
</p><p>
FIFA சுட்டிக்காட்டிய குற்றங்கள்
</p><p>அரசியல் பதாகை: அரையிறுதிக்குப் பின்னர் 'மால்வினாஸ் தீவுகள் அர்ஜென்டீனாவுக்கே' என்ற பதாகையை காட்சிப்படுத்தியது.</p><p>இனவெறி நடத்தை: அர்ஜென்டீனா ஆதரவாளர்களின் இனவெறி கோஷங்கள் மற்றும் அவமதிப்பு.</p><p>ஒழுங்கீனம்: அணியினரின் ஒழுக்க மீறல் மற்றும் பாதுகாப்பு விதிமீறல்கள்.</p><p></p><h2>அர்ஜென்டீனா அணிக்கான தண்டனை</h2><p>
</p><p>
தண்டனையாக அர்ஜென்டீனா தனது அடுத்த 2 சொந்த மண் போட்டிகளை 50% பார்வையாளர்களுடன் மட்டுமே நடத்த வேண்டும் எனவும் FIFA உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44cfd3d0-b9db-4b9b-a6cd-88252349926d/26-6a899f2a31d61.webp' /></p><p>
</p><p>
மேலும் தண்டனை பெற்றவர்கள்
</p><p>
நஹுவேல் மோலினா 	அணி வீர்ர்7 போட்டிகள் தடை, $90,000 அபராதம்
</p><p>
ரோபர்ட்டோ அயாலா உதவி பயிற்றுநர்	3 போட்டிகள் தடை, $30,000 அபராதம்
</p><p>
தியாகோ அல்மாடா வீரர்	1 போட்டி தடை, $30,000 அபராதம்</p><p>

உலக் கிண்ண இறுதியில் ஸ்பெயினிடம் 1-0 என அர்ஜென்டீனா தோல்வியடைந்ததைத் தொடர்ந்தே இந்த மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
</p><p>
FIFA ஒழுக்கக்கட்டுப்பாட்டுக்குழு விளையாட்டின் கண்ணியத்தை காக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T13:07:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கெஸ்பேவ பொலிஸாரால் சித்திரவதை செய்யப்பட்ட இளம் தம்பதியினர்! பெண்ணில் உடலில் போடப்பட்ட கரப்பான் பூச்சி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-lodges-complaint-with-hrcsl-against-police-1787385468"></link>
            <id>https://tamilwin.com/article/man-lodges-complaint-with-hrcsl-against-police-1787385468</id>
            <summary type="text">கெஸ்பேவ பொலிஸாரால் இளம் தம்பதியினருக்கு செய்த சித்திரவதை மற்றும் கொடுமைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 46 பக்கங்களை கொண்ட தீர்ப்பை வழங்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கெஸ்பேவ பொலிஸாரால் இளம் தம்பதியினருக்கு செய்த சித்திரவதை மற்றும் கொடுமைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 46 பக்கங்களை கொண்ட தீர்ப்பை வழங்கியுள்ளது.
</p><p>இவர்களை சட்டவிரோதமாகக் கைது செய்து சித்திரவதைக்கு உள்ளாக்கிய சம்பவம். 2023 ஆம் ஆண்டிலேயே நடந்துள்ளது.
சட்டத்தரணி தருஷ திஷாரா பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><p>தற்போது மனித உரிமைகள் ஆணைக்குழு அந்த முறைப்பாடு குறித்து விசாரணை நடத்தி தீர்ப்பை வழங்கியுள்ளது. அது 46 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பாகும்.</p><p>குறித்த சம்பவத்தின் பின்னணி...</p><p></p><h2>கடைக்கு சென்ற போது நடந்த சம்பவம்</h2><p>களுபோவிலையில் வசிக்கும் குறித்த தம்பதியினர் கெஸ்பேவையில் உள்ள நண்பர்கள் வீட்டுக்கு சென்றிருந்த சமயத்தில் அதிகாலை வேளையில் இவர்களுக்குப் பசி ஏற்பட்டதால், இரவு கடைக்கு உணவு வாங்குவதற்காக இளைஞர் மட்டும் ஒரு சிறிய ஸ்கூட்டி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.</p><p>செல்லும்போது ஒரு பொலிஸ் ஜீப் வண்டி நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கின்றார். அந்த உணவகத்திற்கு அருகில் ஜீப்பில் இருந்தவர்கள் இவரை நிறுத்துகின்றனர். </p><p> "எங்கே செல்கிறீர்கள், எதற்காகச் செல்கிறீர்கள்?" என்று கேட்கின்றனர்.முதலில் அடையாள அட்டையைக் கேட்கின்றனர், இவர் அடையாள அட்டையைக் காட்டுகிறார். </p><p>அடையாள அட்டையில் தெஹிவளை முகவரி உள்ளது.
"இங்கு என்ன செய்கிறாய்?" எனக் கேட்க, இவர் விவரங்களைக் கூறுகிறார். </p><p>கூறிய பிறகு ஜீப்பில் ஏறுமாறு கூறி இவரை இழுக்க முயற்சித்த போது உணவகத்தில் சிசிடிவி (CCTV) கேமராக்கள் இருப்பதால் இவர் கடைக்குள் செல்கிறார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a479cf1-9130-437c-ad25-cfd5da35cbe9/26-6a89567e89bfe.webp' /></p><p>அதற்குப் பிறகு பொலிஸார் இவரைத் தாக்குகின்றனர்.
கழுத்தைப் பிடித்துத் தள்ளுகின்றனர்,பின்னர் வழுகட்டாயமாக கைவிலங்கிடுகின்றனர். </p><p>மேலும் ஜீப் வண்டியில் வைத்தும் இவரைத் தாக்குகின்றனர். தாக்கிவிட்டு ஒரு விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.
மைதானத்திற்கு அழைத்துச் சென்று அங்கும் தாக்குகின்றனர். </p><p>முகத்தில் அடிக்கின்றனர், மண்டியிட வைக்கின்றனர். மிகக் கொடூரமாக சித்திரவதை செய்கின்றனர். "நீ 'ஐஸ்' போதைப்பொருள் பயன்படுத்துகிறாய் அல்லவா?" எனக் கூறிப் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் சுமத்துகின்றனர்.
</p><h2>சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டு</h2><p>அதன் பிறகு இவரை வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர்.வீட்டிற்கு அழைத்துச் சென்று வீட்டில் உள்ளவர்களையும் மிரட்டி, சுற்றிலும் கிடந்த டொபி தாள்கள் மற்றும் அங்கிருந்த அட்டைப் பெட்டித் துண்டுகளைச் சேகரித்து, அவற்றை புகைப்படங்கள் எடுத்து, போதைப்பொருள் இருந்தது எனப் பொய் வழக்குப் போட்டு இவர்களைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.
</p><p>பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிறையில் அடைக்கின்றனர். பெண்ணை சிறையில் போடவில்லை.
பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பிறகு, இந்த இளைஞரின் சட்டையைக் கழற்றச் சொல்லித் தாக்கினர். </p><p>தாக்கிவிட்டு பொலிஸ் சிறையில் அடைத்தனர்.
மற்றவர்களை வெளியே உட்கார வைத்திருந்தனர். சிறிது நேரத்தின் பிறகு மனைவியின் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.அதன் பிறகு இரு அதிகாரிகள் இருந்த அறைக்கு அந்தப் பெண்ணை தனியாக வருமாறு கூறினர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bccc87c-9ed7-4d36-82ca-b2b2ccda1fd4/26-6a89567f3b080.webp' /></p><p>சிறிது நேரத்தில் அறையிலிருந்து அலறல் சத்தம் கேட்டது. அதைக் கேட்ட இளைஞர் கூண்டிற்குள்ளிருந்து, "பெண் பொலிஸ் அதிகாரிகள் யாரும் இல்லாமல், பொலிஸ் நிலையத்திற்குள் பெண்களை தனியறைக்கு அழைத்துச் சென்று என்ன செய்கிறீர்கள்?" என்று கத்திக் கேட்டுள்ளார். </p><p>ஏனெனில் அந்த நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் பெண் அதிகாரிகள் எவரும் இருக்கவில்லை.பின்னர் மனைவி அறையிலிருந்து வெளியே வந்ததும் "என்ன நடந்தது?" என்று கேட்டபோது, பொலிஸார் தன் உடலில் கரப்பான் பூச்சிகளை (Cockroach) போட்டதாக கூறினார்.</p><p>காலை வரை வைத்திருக்கிறார்கள், பிறகு 'ஐஸ்' போதைப்பொருள் வைத்திருந்ததாக நீதிமன்றத்தில் முன்னிலைப்டுத்தி பிணை செல்ல அனுமதித்துள்ளனர்.</p><p>அதன் பின்னரே இவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T13:07:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக குத்துச்சண்டை சாம்பியன் சுட்டுக்கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/world-boxing-champion-shot-dead-south-africa-1787404132"></link>
            <id>https://canadamirror.com/article/world-boxing-champion-shot-dead-south-africa-1787404132</id>
            <summary type="text">&amp;nbsp; தென்னாப்பிரிக்காவின் முன்னாள் உலக குத்துச்சண்டை சாம்பியன் ஜோலானி டெட், கிழக்கு கேப் மாகாணத்தில் உள்ள எம்தான்சேனே பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தென்னாப்பிரிக்காவின் முன்னாள் உலக குத்துச்சண்டை சாம்பியன் ஜோலானி டெட், கிழக்கு கேப் மாகாணத்தில் உள்ள எம்தான்சேனே பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
</p><p>


38 வயதான ஜோலானி தனது வீட்டிற்கு காரில் சென்றிருந்தபோது, முகமூடி அணிந்த இருவர் அவரை மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38dd1590-7d3c-41ef-bee9-33d6079729e7/26-6a899f65e7160.webp' /></p><p>



அவருடன் காரில் இருந்த 27 வயதுடைய பெண்ணும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.</p><p>



ஜோலானி டெட் 2007–2008ஆம் ஆண்டுகளில் டபிள்யூ.பி.எஃப். பறக்கும் எடைப் பிரிவிலும், 2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் டபிள்யூ.பி.ஓ. இளம்பருவ எடைப் பிரிவிலும் உலக சாம்பியன் பட்டங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
</p><p>


இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தென்னாப்பிரிக்க பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-22T13:06:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூரம் நட்சத்திரத்தில் சூரியன்: தொழில் நிலையில் அதிர்ஷ்டம் பெறும் டாப் 3 ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sun-transit-in-pooram-who-get-carrier-growth-money-1787402343"></link>
            <id>https://manithan.com/article/sun-transit-in-pooram-who-get-carrier-growth-money-1787402343</id>
            <summary type="text">நவகிரகங்களின் ராஜாவாகக் கருதப்படும் சூரியன், தலைமைத்துவம், ஆத்மா, தந்தை, அரசு வேலை, அதிகாரம் மற்றும் தன்னம்பிக்கையின் காரணியாவார். சூரியன் மாதம் ஒருமு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களின் ராஜாவாகக் கருதப்படும் சூரியன், தலைமைத்துவம், ஆத்மா, தந்தை, அரசு வேலை, அதிகாரம் மற்றும் தன்னம்பிக்கையின் காரணியாவார். சூரியன் மாதம் ஒருமுறை ராசியையும், அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுகிறார். </p><p>அவரது நிலையில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் சமீபத்தில் தனது சொந்த ராசியில் நுழைந்த நிலையில், ஆகஸ்ட் 31ஆம் தேதி பூரம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடையவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1274b11-bffc-42a7-9c81-8935b0ed8a1e/26-6a899d644c64d.webp' /></p><p> </p><p>பூரம் நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன் என்பதால், அழகு, காதல், செல்வம் மற்றும் செழிப்பு தொடர்பான பலன்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.இந்த நட்சத்திரப் பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலும் காணப்படும். </p><p>குறிப்பாக 3 ராசிக்காரர்கள் சூரியனின் இந்த பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறவுள்ளனர்.அப்படி சூரியபகவானின் ஆசியால் பலனடையப்போகும் 3 ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc8b1879-3496-41aa-9202-a3f491791d07/26-6a899d6500347.webp' /></p><h2>
</h2><p>சூரியனின் நட்சத்திரப் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை வழங்கும். குறிப்பாக, பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். </p><p>அதேபோல், புதிய பொறுப்புகளும் தேடி வரலாம். இதன் மூலம் அலுவலகத்தில் உங்களின் திறமையும், மதிப்பும் வெளிப்படும்.</p><p>

நிதி நிலைமையைப் பொறுத்தவரை, இந்த காலகட்டம் சிறப்பாக அமையக்கூடும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் மற்றும் வேலைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெற்றிகரமாக நிறைவேறும் </p><p>தொழில் செய்து வருபவர்களுக்கு எதிர்பார்த்ததை விட பெரிய அளவில் லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து, அதன் மூலம் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.</p><h2>

துலாம்</h2><p></p><h2>
</h2><p>ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெறும் சூரியனின் நட்சத்திரப் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும்.</p><p>இந்த காலகட்டத்தில் செல்வம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். நீண்ட நாட்களாக சிக்கித் தவித்த பணம் மீண்டும் கைக்கு வந்து சேரலாம். இதனால் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.</p><p>

வணிகத்தில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இந்த ஒப்பந்தங்கள் எதிர்காலத்தில் நல்ல வருமானத்தைப் பெற்றுத் தரக்கூடும். </p><p>பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். இதன் காரணமாக முக்கியமான பணிகளை சிரமமின்றி முடித்து, அலுவலகத்தில் நல்ல பெயரைப் பெற முடியும்.

மேலும், தந்தை வழி அல்லது பரம்பரை சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கலாம்.</p><p> சிலருக்கு இதன் மூலம் எதிர்பாராத நிதி ஆதாயமும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில், இந்த பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களின் பொருளாதார நிலையை வலுப்படுத்தும் காலமாக அமையலாம்.
</p><h2>
தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c2cb1fd-71c6-4cfd-961e-a140347e56ff/26-6a899dfbe3981.webp' /></p><p></p><p>ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெறும் சூரியனின் நட்சத்திரப் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெற்றுத் தரும்.</p><p>இதுவரை வேலை அல்லது தொழில் தொடர்பாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்திருந்தால், அவற்றுக்கு படிப்படியாக தீர்வு கிடைக்கத் தொடங்கும்.

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக முடிவடையும். </p><p>அதேபோல், எதிர்பாராத சில நிதி ஆதாயங்களும் கிடைக்கக்கூடும். ஏற்கனவே முதலீடு செய்திருப்பவர்களுக்கு அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் பொருளாதார நிலை மேலும் வலுப்பெறலாம்.</p><p>

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு, நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேலை கிடைக்கும் வாய்ப்பு உருவாகலாம். சிலருக்கு தங்களது வசதிக்கேற்ற புதிய வாகனம் வாங்கும் யோகமும் அமையும்.</p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T13:03:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆனவிந்தாவ சரணாலயத்தில் காட்டுத் தீ! கட்டுப்படுத்தத் தீவிர நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wildfire-anavindha-sanctuary-intensive-bring-1787402959"></link>
            <id>https://tamilwin.com/article/wildfire-anavindha-sanctuary-intensive-bring-1787402959</id>
            <summary type="text">ஆனவிழுந்தாவ சரணாலயத்தில் காட்டுத்தீ ஏற்பட்டதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவமானது நேற்றையதினம்(21.8.2026) இடம்பெற்றுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆனவிழுந்தாவ சரணாலயத்தில் காட்டுத்தீ ஏற்பட்டதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>

குறித்த சம்பவமானது நேற்றையதினம்(21.8.2026) இடம்பெற்றுள்ளது.
</p><p>

இதனையடுத்து உலங்குவானுர்திகளை பயன்படுத்தி ஆனவிழுந்தாவ ராம்சார் ஈரநிலப் பறவைகள் சரணாலயத்தில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், தீ அவ்வப்போது மீண்டும் பற்றி எரிந்துகொண்டே இருந்தது.</p><h2>காட்டுத் தீ</h2><p>இதன் விளைவாக, மாலை வேளையிலிருந்து அப்பகுதி மக்கள், ஆராச்சிக்கட்டுவ பிரதேச
சபை, புத்தளம் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அதிகாரிகள், வனவிலங்கு அதிகாரிகள்
மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் ஒன்றிணைந்து, நீர் தாங்கி வாகனங்களைப்
பயன்படுத்தி, இரவு நேரத்தில் தீ மய்யாவ கிராமப் பகுதி மற்றும் போகஹவெட்டிய
ஆகிய பகுதிகளுக்குப் பரவாமல் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு
வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/667f994f-ffc8-424a-8a8f-535a73e0d41a/26-6a899bcb71d04.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T12:53:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஹ்ரானுடன் தொடர்பு - ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு! ஒப்படைக்கப்பட்டுள்ள ஆதாரங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hizbullah-faces-police-complaint-batticaloa-1787402432"></link>
            <id>https://tamilwin.com/article/hizbullah-faces-police-complaint-batticaloa-1787402432</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று (22) முறைப்பாடு செய்துள்ளதாக ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஓட்டமாவடி காளி கோவில் இடிக்கப்பட்டமை, நீதவான் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டமை, தற்கொலை குண்டுதாரியான சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் விடயம் மற்றும் ஆயிரக்கணக்கான ஏக்கர் அரச காணிகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>ஹிஸ்புல்லாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்</h2><p>

முறைப்பாட்டைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜநாதன் பிரபாகரன், கடந்த 1990ஆம் ஆண்டு முதல் ஹிஸ்புல்லா கிழக்கு மாகாணத்தில் மேற்கொண்டதாகக் கூறப்படும் நடவடிக்கைகள் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
</p><p>
மேலும், ஹிஸ்புல்லாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் எழுத்துமூல ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17dd0a21-2d58-4314-a3fd-3a188b5defb6/26-6a899bc8b33d9.webp' /></p><p>
</p><p>
மட்டக்களப்பு நீதவான் ஒருவரை இடமாற்றம் செய்து தனக்கு சாதகமான நீதவானை நியமிக்க நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலும் விசாரணை நடத்துமாறு முறைப்பாட்டில் கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
</p><p>
அத்துடன், ஓட்டமாவடியில் இருந்த காளி கோவிலை இடித்து, அந்த இடத்தில் மீன் சந்தை மற்றும் பள்ளிவாசல் அமைக்கப்பட்டதாக ஹிஸ்புல்லா தெரிவித்ததாகக் கூறப்படும் விடயம் தொடர்பிலும் விசாரணை நடத்துமாறு கோரியுள்ளதாக இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார்.</p><h2>&nbsp;விசாரணை</h2><p>
</p><p>
தற்கொலை குண்டுதாரியான சஹ்ரானுடன் ஹிஸ்புல்லா தொடர்பில் இருந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என முறைப்பாட்டில் கோரியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
</p><p>
மேலும், தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் அரச காணிகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p><p>

இந்த முறைப்பாடு தொடர்பில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்ததாகவும் இராஜநாதன் பிரபாகரன் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b331cf78-1700-40f4-802d-f78ecd2cbb8e/26-6a899bc996931.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, இந்த நடவடிக்கை முஸ்லிம் மக்களுக்கு எதிரானது அல்ல எனவும், குறிப்பிட்ட ஒரு தனிநபருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான சட்ட நடவடிக்கைக்கான கோரிக்கையே எனவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் தனிநபர்களின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T12:53:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[க்ரித்தி ஷெட்டியின் ரீசெண்ட் கியூட் போட்டோஷூட்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/actress-krithi-shetty-recent-photos-post-1787402917"></link>
            <id>https://viduppu.com/article/actress-krithi-shetty-recent-photos-post-1787402917</id>
            <summary type="text">க்ரித்தி ஷெட்டிஇந்தியில் 2019ல் வெளியான சூப்பர் 30 படத்தில் சிறு ரோலில் நடித்து நடிகையாக அறிமுகமாகி க்ரித்தி ஷெட்டி, உப்பனா படத்தின் மூலம் கதாநாயகியாக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>க்ரித்தி ஷெட்டி</h2><p>இந்தியில் 2019ல் வெளியான சூப்பர் 30 படத்தில் சிறு ரோலில் நடித்து நடிகையாக அறிமுகமாகி க்ரித்தி ஷெட்டி, உப்பனா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc0fb200-e1bb-4c62-befc-2744015fcb12/26-6a899aadef835.webp' /></p><p>

அதன்பின் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான க்ரித்தி கஸ்டடி படத்திலும் முக்கிய ரோலில் நடித்தார். தமிழில் வா வாத்தியார், LIK உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.</p><p> தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் க்ரித்தி ஷெட்டி, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

தற்போது, க்யூட் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-22T12:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் 93,635 டெங்கு நோயாளர்கள் பதிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/93-635-dengue-cases-recorded-in-sri-lanka-1787402517"></link>
            <id>https://jvpnews.com/article/93-635-dengue-cases-recorded-in-sri-lanka-1787402517</id>
            <summary type="text">&amp;nbsp; நடப்பாண்டில் இதுவரை 93,635 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு காரணமாக 71 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நடப்பாண்டில் இதுவரை 93,635 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு காரணமாக 71 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>


மொத்த நோயாளர்களில் 52.94 வீதத்துக்கும் அதிகமானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். மாவட்ட ரீதியில் கம்பஹாவில் அதிகபட்சமாக 19,945 நோயாளர்களும், கொழும்பில் 18,588 பேரும் பதிவாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a085291-36bc-4b70-9c6c-20a674701b89/26-6a8999172fb66.webp' /></p><p>
</p><p>


மாதாந்த அடிப்படையில் ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 29,964 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், ஓகஸ்ட் மாதத்தின் முதல் 21 நாட்களில் 8,297 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
</p><p>


நாடு முழுவதும் உள்ள 76 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் அதிஅபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T12:39:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை ஜாம்பவானின் இமாலய சாதனையை முறியடித்த ஸ்டார்க்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mitchell-starc-surpassed-sri-lankan-legend-vaas-1787402243"></link>
            <id>https://news.lankasri.com/article/mitchell-starc-surpassed-sri-lankan-legend-vaas-1787402243</id>
            <summary type="text">சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் மிட்செல் ஸ்டார்க் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். 

அவுஸ்திரேலியாவின் மிட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் மிட்செல் ஸ்டார்க் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.</p><p> 

அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.&nbsp;</p><h2>மிட்செல் ஸ்டார்க்</h2><p>

வங்காளதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 12 ஓட்டங்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b700795-b0ba-4965-aaf8-3fedee0ee9a7/26-6a89996401d56.webp' /></p><p></p><p>
டெஸ்ட்டில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது 19-வது முறையாகும். தான் வீசிய 22 பந்துகளிலேயே அவர் 5வது விக்கெட்டை வீழ்த்தினார்.
</p><p>
இதன்மூலம் அதிக சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் எனும் சாதனையை மிட்செல் ஸ்டார்க் (Mitchell Starc) படைத்தார். </p><p>

அத்துடன் இலங்கை ஜாம்பவான் சமிந்த வாஸினை பின்னுத்தள்ளினார். சமிந்த வாஸ் 761 விக்கெட்டுகள் கைப்பற்றிய நிலையில், ஸ்டார்க் 767 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். </p><p>

பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம் (Wasim Akram) 916 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd4cc7b1-ec8c-4d3f-aaa6-c04befa5a1f1/26-6a8998066e4dc.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T12:35:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[Mutiny: திரை விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/mutiny-movie-review-1787402095"></link>
            <id>https://cineulagam.com/article/mutiny-movie-review-1787402095</id>
            <summary type="text">ஜேஸன் ஸ்டேதம் தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள Mutiny ஹாலிவுட் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.கதைக்களம் பேங்காக்கில் பில்லியனராக இருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேஸன் ஸ்டேதம் தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள Mutiny ஹாலிவுட் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.</p><h2>கதைக்களம் </h2><p>பேங்காக்கில் பில்லியனராக இருக்கும் திபு காம்பலோ என்ற நபரிடம் பாடிகார்ட் ஆக வேலை பார்க்கிறார் கோல் ரீட் (ஜேஸன் ஸ்டேதம்). </p><p>
திபுவின் நன்மதிப்பை பெறும் கோல், அவரிடம் இருந்து விலையுயர்ந்த வாட்ச் ஒன்றை பரிசாக பெறுகிறார்.
</p><p>ஒருநாள் கோல் ரீட் உடன் திபு காம்பலோ காரில் செல்லும்போது சிலர் துப்பாக்கியால் சுடுகின்றனர். ரீட்டும் பதிலுக்கு சுட்டு அனைவரையும் கொல்கிறார்.
</p><p>ஆனால், அந்த தாக்குதலில் திபு கொல்லப்பட, ரீட்தான் அவரை கொன்றார் என செய்தி வெளியாகிறது. </p><p>
இதனால் தலைமறைவாகும் ரீட், உன் அப்பாவை நான் கொல்லவில்லை என்று காமெரோனிடம் போனில் கூறுகிறார். </p><p>
பின்னர் தன்னால் கொல்லப்பட்ட நபரின் பாஸ்போர்ட்டை வைத்து சரக்கு கப்பல் ஒன்றில் ஏறி தப்பிக்கிறார். </p><p>
அந்த கப்பலில் உள்ள கன்டெய்னர் ஒன்றில் இருந்து வரும் சத்தத்தைக் கேட்டு அதன் பூட்டை உடைக்கிறார் ரீட்.
</p><p>அதனுள் குடும்பங்களாக இருக்கும் மக்களைப் பார்த்து அதிர்ச்சியடையும் ரீட், அவர்களிடம் உங்களை நான் காப்பாற்றுகிறேன் என்று உறுதியளிக்கிறார். </p><p>கப்பலின் கேப்டன் உட்பட அடியாட்கள் அனைவரிடம் இருந்து ரீட் எப்படி அந்த மக்களை காப்பாற்றினார்? அத்துடன் திபுவின் மரணத்திற்கு அவர் பழிதீர்த்தாரா? என்பதே மீதிக்கதை.</p><h2>படம் பற்றிய அலசல் </h2><p>
2023-யில் ஜெரார்டு பட்லரை வைத்து பிளேன் என்ற பிளாக்பாஸ்டர் படத்தைக் கொடுத்த ஜீன்-ஃப்ரான்கோய்ஸ் ரிசெட்தான் இப்படத்தை இயக்கியுள்ளார். </p><p>
அசாதாரண சூழலில் இருந்து தப்பிக்கும் ஒரு பாடிகார்ட், உயிர் பயத்தில் தவிக்கும் மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்ற லைனை வைத்து Mutiny என்ற ஆக்ஷன் திரைக்கதையை சார்லஸ் கம்மிங், ஜே.பி.டேவிஸ் வடிவமைத்துள்ளனர். </p><p>
பரபரக்கும் ஆக்ஷன் கதையை ஒரு கப்பலில் நடப்பது போல் காட்டி, சுவாரஸ்யமாக கொண்டு செல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ஜீன்.
</p><p>ஹீரோ ஜேஸன் ஸ்டேதமிற்கே உரித்தான டிரான்ஸ்போர்ட்டர் பாணியிலான ஆக்ஷன்பேக் கதையை இயக்குநர் படமாக எடுத்துள்ளார். </p><p>
ஆனால், பார்த்துப் பழகிய வழக்கமான திரைக்கதையில்தான் படம் செல்கிறது. Wrath of Man படத்தைப் போன்ற ட்விஸ்ட்களை எல்லாம் இதில் எதிர்பார்க்க முடியாதது ஒரு ஏமாற்றம். </p><p>
மேலும் வில்லத்தனத்தை டேனிஷ் நடிகரான ரோலண்ட் மெல்லெர் உடல்மொழியிலேயே காட்டியிருந்தாலும், ஹீரோவை எதிர்கொள்வதில் புத்திசாலித்தனத்தை காட்டுவதுபோன்ற காட்சிகள் பெரிதாக இல்லை.
</p><p>ஹீரோ, வில்லன் கிளாஷ் என்பது பழைய ஃபார்மேட்டிலேயே இருக்கிறது. கோல் ரீட் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜேஸன் ஸ்டேதம் ஆக்ஷன் காட்சிகளில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.
</p><p>வில்லனின் திட்டத்தை அறிய அவர் செய்யும் ஒரு விஷயம், சிம்பிள் ஆக இருந்தாலும் இந்த கதைக்கு இதுபோதும் என்றே தோன்றுகிறது. </p><p>
ஜேஸனை எங்கு அடைத்து வைத்தாலும் அவர் எளிதாக தப்பித்து விடுகிறார். அது எப்படி என்று நாம் யோசிக்கும்போது ஒரு விஷயம் ரிவீல் ஆகும்.
</p><p>அது கூஸ்பம்ப் மொமெண்ட் ஆக இருந்தாலும், ஜேஸன் ஸ்டேதமிற்கு இதெல்லாம் சாதாரணம்பா என்று நாமே கூறிவிடுவோம் என்பதால் பெரிதாக ஒர்க் ஆகவில்லை.
</p><p>ஹீரோயின் அனபெல் வல்லிஸ் அழகான ஆக்ஷன் பெண்ணாக கலக்கியிருக்கிறார். கிளைமேக்சில் அவரது ஸ்டண்ட் செம.
ஒளிப்பதிவு, பின்னணி இசை எல்லாம் ஓகே ரகம். படத்தின் நீளம் 95 நிமிடங்கள் என்பது ஒரு பிளஸ் பாயிண்ட். </p><h2>
க்ளாப்ஸ் </h2><p>ஜேஸன் ஸ்டேதம் </p><p>
சண்டைக்காட்சிகள் </p><p>
பழைய பார்முலா திரைக்கதை </p><p>
யூகிக்கக்கூடிய காட்சிகள் </p><p>
மொத்தத்தில் இந்த Mutiny ஜேஸன் ஸ்டேதம் ரசிகர்கள் மற்றும் ஆக்ஷன் இருந்தால் போதும் என்பவர்களை மட்டுமே திருப்திப்படுத்தும்.
</p><h2>ரேட்டிங்: 2.5/5&nbsp;&nbsp;</h2>]]></content>
            <updated>2026-08-22T12:35:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை; 13 ஆண்டுகளின் பின் கிடைத்த தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/father-abused-daughter-vavuniya-punishment-1787398794"></link>
            <id>https://jvpnews.com/article/father-abused-daughter-vavuniya-punishment-1787398794</id>
            <summary type="text">&amp;nbsp; வவுனியாவில் மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கால கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வவுனியாவில் மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கால கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா நேற்றைய தினம் (21) தீர்ப்பளித்துள்ளார்.</p><p>


 சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், வவுனியாவில் இக்குற்றச்செயல் இடம்பெற்ற போது பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது 14 ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c3e204f-5fa3-4a9a-a6aa-ad0fc29956df/26-6a898a8c12cf4.webp' /></p><h2>2021 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல்&nbsp;</h2><p> 

இது தொடர்பான வழக்கின் குற்றச்சாட்டுப் பத்திரம் 2021 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்தது.</p><p>

சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதால், எதிரி குற்றவாளியாகக் காணப்பட்டு தீர்ப்பு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (21) வழங்கப்பட்டது.</p><p></p><p>
</p><p>
சம்பவம் இடம்பெற்ற காலத்தில் குறித்த சிறுமியின் தாயும் தந்தையும் பிரிந்திருந்ததையடுத்து சிறுமி தந்தையின் பாதுகாப்பிலே வசித்து வந்துள்ளார்.

 குற்றச்செயல் நடந்த சந்தர்ப்பத்தில் சிறுமிக்கு வெறுமனே இரண்டரை வருடங்கள் நிரம்பிய தங்கையும் இருந்துள்ளார்.
</p><p>
சம்பவ தினத்தன்று தந்தை மதுபானம் அருந்தி விட்டு வீட்டிலே வைத்து குறித்த குற்றச்செயலைப் புரிந்துள்ளார்.</p><p></p><p>
</p><p>

பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது, சொந்தத் தந்தையாலேயே இக்குற்றச்செயல் புரியப்பட்டுள்ளமை, சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான உளவியல் பாதிப்புகள், மேலும் இனி வரும் காலங்களில் இப்படியானதொரு குற்றச்செயல் நடைபெறாமல் தடுக்கும் நோக்கம் ஆகியவற்றை நீதிமன்றம் கருத்தில் கொண்டு கடுமையான தண்டனையை வழங்கியுள்ளது.
</p><p>
இதன் பிரகாரம் 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் 50,000 ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டதுடன் அதனை செலுத்தத் தவறின் மேலதிக 1 வருடம் சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 1,000,000 ரூபா (ஒரு மில்லியன் ரூபாய்) நஷ்டஈடும் செலுத்த வேண்டும் எனவும், செலுத்தத் தவறின் மேலதிகமாக 2 வருடங்கள் சிறைத்தண்டனயும் வழங்கி தீர்பளித்திருந்தார்.</p><p></p><p>
</p><p>
தீர்ப்பும் தண்டனையும் குறித்த சிறுமியின் நலன்களை பாதுகாக்கும் முகமாகவும், சமூகத்தில் ஒரு பாரதூரமான குற்றச்செயல் இடம்பெறின் நீதிமன்றங்கள் கடுமையான தண்டனையை வழங்கும் என்ற எண்ணப்பாட்டை விதைக்கும் முகமாகவும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-22T12:34:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு ஐபோனால் ஒரு குடும்பமே பலியான பயங்கரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/maharashtra-teen-and-parents-dies-in-iphone-issue-1787402007"></link>
            <id>https://news.lankasri.com/article/maharashtra-teen-and-parents-dies-in-iphone-issue-1787402007</id>
            <summary type="text">Entire family lost their lives due to issues surrounding installment payments for an iPhone: ஐபோனுக்கு தவணை கட்டும் விவகாரத்தால் ஒரு குடும்பமே பலியான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Entire family lost their lives due to issues surrounding installment payments for an iPhone: ஐபோனுக்கு தவணை கட்டும் விவகாரத்தால் ஒரு குடும்பமே பலியான பயங்கரம் ஒன்று நிகழ்ந்துள்ளது.</p><p>


இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள சத்ரபதி சாம்பாஜிநகர் என்னுமிடத்தில் தன் பெற்றோருடன் வாழ்ந்துவந்த குணால் (18) என்னும் இளைஞர் ஐபோன் ஒன்றை வாங்கியுள்ளார்.
</p><h3>
ஒரு குடும்பமே மாண்ட பயங்கரம்</h3><p>

தான் வாங்கிய ஐபோனுக்கு மாதந்தோறும் தவணை செலுத்த பணம் கொடுக்குமாறு தன் குடும்பத்தினரை கேட்டுள்ளார் குணால்.
</p><p>
அதனால் சமீபத்தில் வீட்டில் வாக்குவாதம் உருவாகியுள்ளது. கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய குணால், அருகிலுள்ள மலை ஒன்றின் உச்சியில் ஏறியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38763ec7-e520-4350-af50-6c67ff528d2b/26-6a899718483e9.webp' /></p><p>
அவரைப் பின்தொடர்ந்த அவரது தந்தையான முரளிதரும், தாய் சங்கீதாவும், கிராம மக்களும், மலையிலிருந்து கீழே இறங்கி வருமாறு குணாலை கெஞ்சியுள்ளனர்.
</p><p>
அவரோ, வரமாட்டேன் என அடம்பிடித்ததுடன், தான் சாகவிரும்புவதாகக் கூறியுள்ளார்.

சுமார் மூன்று மணி நேரமாக பலர் அவரிடம் பல விதத்தில் கீழே இறங்குமாறு கோரியும் காலை 10.00 மணிக்கு மலையில் ஏறியவர் மதியம் 1.00 மணி வரை அடம்பிடித்துக்கொண்டிருக்க, அவரது தந்தை அவரைக் கீழே வருமாறு கையைப் பிடித்து இழுத்துள்ளார்.&nbsp;</p><p></p><p>

ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை, குணாலும் அவரது தந்தையான முரளிதரும் மலை உச்சியின் மறுபக்கம் இருந்த பள்ளத்தில் விழுந்துவிட்டார்கள்.</p><p>

கணவரும் மகனும் பள்ளத்தில் விழுந்ததைக் கண்ட சங்கீதாவும் பள்ளத்தில் குதித்ததாகக் கூறப்படுகிறது. மூன்று பேருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்கள்.</p><p>இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஏராளமான மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள நிலையில், இந்த பயங்கர சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T12:33:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிக்கான நீள்பயணம் அனைவரும் ஆதரவு வழங்க கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/international-conference-relatives-disappeared-1787400831"></link>
            <id>https://ibctamil.com/article/international-conference-relatives-disappeared-1787400831</id>
            <summary type="text">அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஆவணி 30 ம் திகதி நீதிக்கான
நீள்பயணம் எனும் தொனிப்பொருளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உண்மை,
ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஆவணி 30 ம் திகதி நீதிக்கான
நீள்பயணம் எனும் தொனிப்பொருளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உண்மை,
நீதி மற்றும் பொறுப்புக்கூறலை கோரும் தமிழ் தாய்மார்களின் அனைத்துலக மாநாடு
வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவுகளால் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெறவுள்ளது.</p><p>&nbsp; இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
உறவினர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம் பரமானந்தம் ,முல்லைத்தீவு மாவட்ட
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க செயலாளர் 
றஞ்சினிதேவி சசிக்குமார்,
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க
உபசெயலாளர் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்
ஆகியோர் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்தி
குறித்த மாநாட்டுக்கு ஆதரவு வழங்குமாறு
கோரிக்கை விடுத்தனர் .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f874bbf-12e9-4081-85d8-2f5620f39b78/26-6a8994e9da4ef.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T12:24:16+00:00</updated>
        </entry>
    </feed>
