<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-14T11:10:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவானில் நிலைகுலைந்த விமானம் ; அச்சத்தில் அலறிய பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/plane-loses-control-mid-air-passengers-panic-1789383740"></link>
            <id>https://canadamirror.com/article/plane-loses-control-mid-air-passengers-panic-1789383740</id>
            <summary type="text">இஸ்தான்புல்லில் இருந்து துனிசியா நோக்கி பயணித்த துருக்கி ஏர்லைன்ஸ் விமானம், கடந்த 10 ஆம் திகதி மோசமான வானிலையால் நடுவானில் திடீரெனக் கீழே இறங்கியதில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்தான்புல்லில் இருந்து துனிசியா நோக்கி பயணித்த துருக்கி ஏர்லைன்ஸ் விமானம், கடந்த 10 ஆம் திகதி மோசமான வானிலையால் நடுவானில் திடீரெனக் கீழே இறங்கியதில் பயணிகள் பெரும் பீதியடைந்தனர்.
</p><p>
துனிஸ்-கார்த்தேஜ் சர்வதேச வானூர்தி நிலையத்தை அடையும் போது TK 661 என்ற இந்த விமானம் கடுமையான சூறாவளி மற்றும் சீரற்ற வானிலையை எதிர்கொண்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bf56c03-ab97-425c-b64a-debd9eac4525/26-6aa7d43ea59c4.webp' /></p><p>
</p><p>
விமானத்தை தரையிறக்க விமானி 3 முறை முயன்ற போதிலும், பலத்த காற்றினாலும் புயலினாலும் விமானம் கடுமையாகக் குலுங்கி, திடீரெனக் கீழே சரியத் தொடங்கியது.
</p><p>
இதன்போது, விமானத்தில் இருந்த பயணிகள் "நாங்கள் இறக்கப் போகிறோம்" என்று அச்சத்தில் அலறியுள்ளனர். </p><p>இது தொடர்பான காட்சிகளை மேரினா மைஸ்காயா என்ற பெண் பயணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளியாகப் பகிர்ந்துள்ளார்.</p><p>

பயணிகளின் கடும் பீதி மற்றும் கோரிக்கையைத் தொடர்ந்து, விமானம் துனிஸ் நகருக்கு தெற்கே 60 மைல் தொலைவில் உள்ள என்பிதா-ஹம்மாமெட் சர்வதேச விமான நிலையத்துக்குத் திருப்பி விடப்பட்டு, பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.</p>]]></content>
            <updated>2026-09-14T11:02:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி அப்துல் வாஸித் பதவி விலகல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/slmc-mp-abdul-wahid-resigns-from-parliament-1789382352"></link>
            <id>https://ibctamil.com/article/slmc-mp-abdul-wahid-resigns-from-parliament-1789382352</id>
            <summary type="text">சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.எஸ். அப்துல் வாஸித் இன்று (14) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனது நாடாளும...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.எஸ். அப்துல் வாஸித் இன்று (14) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.</p><p>அப்துல் வாஹித், தனது பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்னவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.</p><p>இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் ஆசன வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிப்பு&nbsp;</h2><p>
</p><p>
நாடாளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் மூலம் இதனை அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5f38bc9-b5d2-4020-9554-1d94fdc2895a/26-6aa7d1cd19e5f.webp' /></p><p>இதன்படி, 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(5) ஆம் பிரிவுக்கு அமைவாக, பத்தாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினர் பதவி வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T10:58:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதி விபத்துக்களில் ஐவர் பரிதாபப் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/five-killed-tragically-in-road-accidents-1789381477"></link>
            <id>https://tamilwin.com/article/five-killed-tragically-in-road-accidents-1789381477</id>
            <summary type="text">இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று(13.9.2026) இடம்பெற்ற வீதி
விபத்துக்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிரிந்த, ஹபரணை, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று(13.9.2026) இடம்பெற்ற வீதி
விபத்துக்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

கிரிந்த, ஹபரணை, அனுராதபுரம், மதவாச்சி மற்றும் ஹக்மனை ஆகிய பொலிஸ்
பிரிவுகளிலேயே இந்த விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
</p><p>
கிரிந்த - திஸ்ஸமஹாராம வீதியின் விலமுல்ல பகுதியில் நேற்று அதிகாலை வேளையில்
மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி
விபத்துக்குள்ளானது.</p><h2>மேலதிக சிகிச்சை</h2><p> </p><p>இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் தெபரவெவ
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கேக்கிராவைப் பகுதியைச் சேர்ந்த 21
வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார். மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக
அம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e654ce4a-dc3e-4bda-89bb-19f7323fcdab/26-6aa7d2c8e0484.webp' /></p><p>

ஹபரணை - கந்தளாய் வீதியின் அலுத்ஓய பகுதியில் கந்தளாய் நோக்கிச் சென்ற சொகுசு
கார் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லொறியுடன் நேருக்கு
நேர் மோதியுள்ளது. </p><p>இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்து கந்தளாய் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட அஃபோபுரவைப் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.</p><h2>விசாரணை</h2><p>
</p><p>
அனுராதபுரம் - ரம்பேவ வீதியின் சாலியபுர பகுதியில் பஸ் ஒன்றை முந்திச் செல்ல
முயன்ற மோட்டார் சைக்கிள், அந்த பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/941e6186-7307-48b3-b017-6e0f673f3bbb/26-6aa7d2c99f39d.webp' /></p><p>
</p><p>இதன்போது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பஸ்ஸின் சக்கரங்களில் சிக்கி சம்பவ
இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சாலியபுரவைப் பகுதியைச் சேர்ந்த 25
வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.</p><p>இந்த விபத்துக்கள் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்கள் மேலதிக
விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T10:56:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெல்சன் மண்டேலாவுக்கு நாமல் இழைத்த அநீதி! ஆளுங்கட்சி எம்.பி சிற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/najith-criticized-quote-by-mandela-cited-by-namal-1789377871"></link>
            <id>https://ibctamil.com/article/najith-criticized-quote-by-mandela-cited-by-namal-1789377871</id>
            <summary type="text">

சிறையில் இருந்து முன்னாள் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் கூற்றை சுட்டிக்காட்டி செய்தி அனுப்பிய சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

சிறையில் இருந்து முன்னாள் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் கூற்றை சுட்டிக்காட்டி செய்தி அனுப்பிய சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக கடுமையாக விமர்சித்துள்ளார். </p><p>

அதன்போது, இருவரின் சிறைவாசப் பின்னணியையும் ஒருபோதும் ஒப்பிட முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச, சனிக்கிழமை அநுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் பேரணியில் வாசிக்கப்பட்ட செய்தியொன்றில் மண்டேலாவின் கூற்றை குறிப்பிட்டிருந்தார்.</p><p></p><h2>தென்னாப்பிரிக்க தலைவருக்கு அநீதி</h2><p>
</p><p>
 அதில், "கஷ்டங்கள் சிலரை உடைக்கின்றன; ஆனால் மற்றவர்களை மேலும் வலுவாக்குகின்றன" என்ற மண்டேலாவின் வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03118d03-0b54-466b-b2f6-25c8ba045d3e/26-6aa7d20292088.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், “யார் நெல்சன் மண்டேலாவை மேற்கோள் காட்டுகிறார்? நாமல் ராஜபக்சவா?” எனக் குறிப்பிட்ட நஜித் இந்திக, ஒடுக்குமுறை மற்றும் இனவெறி முறைமைக்கு எதிரான போராட்டத்துக்காக மண்டேலா சிறைவாசம் அனுபவித்து, பின்னர் தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதியாக நாட்டை வழிநடத்திய வரலாற்றையும், நாமல் ராஜபக்ச தற்சமயம் எதிர்கொண்டுள்ள குற்றச்சாட்டுகளையும் ஒப்பிட்டு ஒருபோதும் பேச முடியாது என்று தெரிவித்துள்ளார்.
</p><p>
ராஜபக் குடும்பத்தினரின் ஆட்சியையும் விமர்சித்த அவர், நாமலின் தந்தையும் சித்தப்பாவும் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியைக் குறிப்பிட்டு, தற்போதைய சூழ்நிலையில் மண்டேலாவை மேற்கோள் காட்டுவது மறைந்த தென்னாப்பிரிக்க தலைவருக்கு செய்யும் அநீதியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-09-14T10:54:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்படப் போகின்றாரா.. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது ஏன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-visited-the-hospital-before-arrested-1789382189"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-visited-the-hospital-before-arrested-1789382189</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தற்போது&amp;nbsp; வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தற்போது&nbsp; வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாம். கைது செய்யப்படப் போவதை அறிந்தால் அனைவருக்கும் நோய் வந்து விடுகின்றது என்று பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார். </p><p>

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>சட்டம் அனைவருக்கும் சமம்&nbsp;</h2><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

சிறைச்சாலைக்குச் செல்லும் நேரம் நெருங்கும் போதுதான் வைத்தியசாலைக்குச் செல்ல முயற்சி செய்கின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eab23770-dabe-4df7-930f-f563ad402fa0/26-6aa7d1817e7f7.webp' /></p><p> </p><p>

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அவ்வாறுதான். அவருக்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டது. இலங்கையில் புதுமையான முறையில் ஏதாவது நோய் வருகின்றதா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை.</p><p>

நாட்டில் தற்போது சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதை இவர்கள் புரிந்து கொண்டார்கள். 

முன்னாள் ஜனாதிபதியாகட்டும், இன்னாள் ஜனாதிபதியாகட்டும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படும். அதிகாரம் எதுவாக இருந்தாலும் அது பொருட்டல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b52a2e9-8c12-48ee-9124-f81a4c00296d/26-6aa7d18233ad7.webp' /></p><p>

முன்பு கைது செய்யப்பட்டு சிறைக்குச் செல்லும் இதுபோன்றவர்கள், சிரித்துக் கொண்டே கையசைத்து விட்டு சிறைக்குச் செல்வர். அவர்களுக்கு தெரியும் உடனடியாக வெளியே வந்துவிடலாம் என்று. அப்போதைய அரசாங்கங்கள் இப்படித்தான் சட்டத்தை நடைமுறைப்படுத்தின.</p><p> 

ஆனால், தற்போதைய நிலவரம் அப்படியல்ல. முன்புபோல சிரித்துக் கொண்டு கையசைத்துவிட்டு யாரும் சிறைக்குச் செல்வதில்லை. 

பொதுமன்னிப்பும் கிடையாது, ஜனாதிபதியின் மன்னிப்பும் கிடையாது. காப்பாற்றுவதற்கும் யாரும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T10:54:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[எயார்பஸ் விசாரணையில் நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-to-be-named-suspect-in-airbus-probe-1789383176"></link>
            <id>https://jvpnews.com/article/namal-to-be-named-suspect-in-airbus-probe-1789383176</id>
            <summary type="text">இலங்கை விமான சேவையின் எயார்பஸ் விமானக் கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான பணச் சலவை விசாரணைக்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கை விமான சேவையின் எயார்பஸ் விமானக் கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான பணச் சலவை விசாரணைக்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராக பெயரிட சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p style="text-align: justify; ">



இலங்கை விமான சேவையின் எயார்பஸ் விமானக் கொள்வனவு நடவடிக்கையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3976fad6-b530-4ba6-8749-24a6fd6217b2/26-6aa7d20a10a64.webp' /></p><p style="text-align: justify; ">இதன்படி, 2006 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க நிதித்தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-14T10:53:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டீசல் விற்பனையால் நெருக்கடியில் இலங்கை பொருளாதாரம் - மீண்டெழ வழிதேடும் டி.ஜே. ராஜகருணா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-in-crisis-due-to-diesel-sales-1789379253"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-in-crisis-due-to-diesel-sales-1789379253</id>
            <summary type="text">&amp;nbsp;டீசல் விற்பனையால் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;டீசல் விற்பனையால் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். </p><p>


இன்று(14.09.2026) இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றினைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>
ஒரு லிட்டருக்கு ரூ. 60 நஷ்டம்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

தற்போது எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு ஒரு லிட்டர் டீசலுக்கு சுமார் ரூ. 60 நஷ்டம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/190baf59-17ad-49a4-943a-403d299cdc1c/26-6aa7d1c83dcfe.webp' /></p><p> </p><p>

கடந்த காலங்களில் சுத்திகரிப்பு மூலம் கிடைத்த இலாபத்தைக் கொண்டு இந்த நஷ்டத்தைச் சமாளிக்க முடியும்.
</p><p>
இருப்பினும், பெட்ரோல் விற்பனை மூலம் எந்தவொரு தனியார் எண்ணெய் நிறுவனத்திற்கும் நஷ்டம் ஏற்படாது என்றார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T10:52:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா ; வெற்றிடமான எம்.பி பதவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/m-s-abdul-wahid-resigns-mp-seat-vacant-1789382208"></link>
            <id>https://jvpnews.com/article/m-s-abdul-wahid-resigns-mp-seat-vacant-1789382208</id>
            <summary type="text">ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஹித் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஹித் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள நிலையில், பத்தாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினர் பதவியொன்றில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
எம்.எஸ். அப்துல் வாஹித் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தமை தொடர்பில் சமர்ப்பித்த கடிதம் தமக்குக் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bccc9342-c7c5-4dab-8202-b48a091d02d3/26-6aa7cfa9650a2.webp' /></p><h2 style="text-align: justify; ">நாடாளுமன்ற உறுப்பினர் பதவி</h2><p>
</p><p style="text-align: justify;">
அப்துல் வாஹித்தின் இராஜினாமா 2026 செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify;">


இதனையடுத்து, 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(5) ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய, பத்தாவது நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;">

இந்நிலையில், ஏற்பட்டுள்ள தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுக்கவுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-14T10:42:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்பார்ப்பை எகிறவைக்கும் மூக்குத்தி அம்மன் 2 டீசர் இதோ! ரிலீஸ் எப்போது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mookuthi-amman-2-teaser-and-release-date-viral-1789379122"></link>
            <id>https://manithan.com/article/mookuthi-amman-2-teaser-and-release-date-viral-1789379122</id>
            <summary type="text">சுந்தர் சி இயக்கத்தில், நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரம்மாண்ட திரைப்படமான ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் டீசர் தற்போது வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுந்தர் சி இயக்கத்தில், நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரம்மாண்ட திரைப்படமான ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளதுடன் ரிலீஸ் திகதியும் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>மூக்குத்தி அம்மன் 2</h2><p> </p><p>பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஆரம்பம் முதலே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b11540a-cdbf-4310-9886-4e11b4babf04/26-6aa7c5110798a.webp' /></p><p>
</p><p>
இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ரெஜினா, சினேகா, குஷ்பூ, ஊர்வசி, யோகி பாபு, துனியா விஜய், மைனா நந்தினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதனால், படத்தின் நட்சத்திரப் பட்டாளமே ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af9a43e6-9a22-49a7-8611-75948830d9f8/26-6aa7c510526eb.webp' /></p><p>
</p><p>
மேலும், இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார். சுந்தர் சியின் இயக்கம், நயன்தாராவின் நடிப்பு, பிரம்மாண்டமான தயாரிப்பு மற்றும் முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணி என பல்வேறு சிறப்பம்சங்களுடன் உருவாகி வரும் இப்படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b78e7484-2fd5-42e4-b4bb-52572357f22b/26-6aa7c511aff45.webp' /></p><p></p><p>
</p><p>
இந்த நிலையில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் வரும் நவம்பர் 6-ஆம் தேதி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் டீசரும் தற்போது வெளியாகியுள்ளது. டீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்களின் அறிமுகம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.</p><p></p><p>
</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UUfAemccAJ0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T10:39:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[லிமினியின் அரசியல் பிரவேசம் : கலக்கத்தில் நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-concerned-over-limini-s-entry-into-politics-1789381685"></link>
            <id>https://ibctamil.com/article/namal-concerned-over-limini-s-entry-into-politics-1789381685</id>
            <summary type="text">&amp;nbsp;லிமினி ராஜபக்ச அரசியல் களத்தில் நுழையத் தயாராகி வருகிறார் என்ற செய்தியால் நாமல் ராஜபக்ச மிகவும் கலக்கமடைந்துள்ளார் என கொழும்புத் தகவல்கள் தெரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;லிமினி ராஜபக்ச அரசியல் களத்தில் நுழையத் தயாராகி வருகிறார் என்ற செய்தியால் நாமல் ராஜபக்ச மிகவும் கலக்கமடைந்துள்ளார் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
 வெலிக்கடை சிறைக்குச் சென்றபோது லிமினி ராஜபக்ச இந்தச் செய்தியை நாமல் ராஜபக்சவிடம் தெரிவித்தார்.</p><h2>அதிகாரபூர்வமாக மறுக்க நடவடிக்கை&nbsp;</h2><p>&nbsp;இதனால் மிகவும் கலக்கமடைந்த நாமல் ராஜபக்ச, இந்தப் பிரசாரத்தை உடனடியாக அதிகாரபூர்வமாக மறுக்க நடவடிக்கை எடுக்குமாறு அவருக்கு அறிவுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ea62220-2c83-4214-932a-82d510523570/26-6aa7ce908e530.webp' /></p><p>&nbsp;அநுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் பேரணியில் லிமினி ராஜபக்ச கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியானபோதிலும் பின்னர் அவரது தந்தையால் அது மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T10:38:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மண்டாடி-யா அல்லது சர்தார் 2-வா? தமிழ்நாட்டில் எது அதிக வசூல் செய்துள்ளது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sardar-2-and-mandaadi-tamilnadu-box-office-1789378550"></link>
            <id>https://cineulagam.com/article/sardar-2-and-mandaadi-tamilnadu-box-office-1789378550</id>
            <summary type="text">கடந்த வாரம் செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியான மண்டாடி மற்றும் சர்தார் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களின் தமிழ்நாடு வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

மண்டாடி
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த வாரம் செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியான மண்டாடி மற்றும் சர்தார் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களின் தமிழ்நாடு வசூல் விவரம் வெளியாகியுள்ளது.</p><p></p><p>
</p><h2>
மண்டாடி
</h2><p>
சூரி நடிப்பில் ஒரு திரைப்படம் வெளிவந்தால் கண்டிப்பாக அது பந்தயம் அடிக்கும் என்பதை மீண்டும் மண்டாடி திரைப்படம் நிரூபித்துள்ளது. முதல் நாளிலிருந்தே இப்படம் உலகளவிலும் தமிழ்நாட்டிலும் வசூலை வாரிக்குவித்து வருகிறது.

இந்த நிலையில், 4 நாட்களில் மண்டாடி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 30 கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு முதல் வாரத்தில் கிடைத்துள்ள மிகப்பெரிய ஓப்பனிங் ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/033a6be7-70c8-42a7-ae0a-987e2201cc2b/26-6aa7bff92924a.webp' /></p><p></p><h2>
சர்தார் 2</h2><p>
இந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த திரைப்படங்களில் ஒன்று <a href="https://tamil.filmibeat.com/news/blue-sattai-maran-on-mandaadi-vs-sardar-2-soori-beats-karthi-at-box-office-will-win-against-sk-next-184113.html" target="_blank">சர்தார் 2</a>. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் வசூலில் தடுமாறி வருகிறது.

பாக்ஸ் ஆபிஸில் 4 நாட்களை கடந்துள்ள சர்தார் 2 இதுவரை தமிழ்நாட்டில் ரூ. 9 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03a209c2-93b2-4f2a-91c8-49bbf9b59bf1/26-6aa7bff9d8094.webp' /></p>]]></content>
            <updated>2026-09-14T10:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எயார்பஸ் விவகாரம் : சந்தேகநபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-named-suspect-in-sl-airlines-airbus-probe-1789379554"></link>
            <id>https://ibctamil.com/article/namal-named-suspect-in-sl-airlines-airbus-probe-1789379554</id>
            <summary type="text">சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் ரக வானூர்திகளைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு மற்றும் நிதித்தூய்தாக்கல் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் ரக வானூர்திகளைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு மற்றும் நிதித்தூய்தாக்கல் விவகாரம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்தேகநபராகப் பெயரிடுமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.</p><p>

குறித்த வானூர்தி கொள்முதல் கொடுக்கல் வாங்கலின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் கையூட்டல் பெறப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

இதன்படி, 2006 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க நிதித்தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் நாமல் ராஜபக்சவை சந்தேகநபராகப் பெயரிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.</p><p></p><h2>எயார்பஸ் விமானங்கள் கொள்முதல்</h2><p>இதேவேளை சிறிலங்கன் எயர்லைன்ஸுக்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்வது தொடர்பான சர்ச்சைக்குரிய உடன்படிக்கையில் எட்டு இலட்சம் அமெரிக்க டொலர்கள் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகக் நாமல் ராஜபக்ச கடந்த 4 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/920d7f7d-8ef2-4ced-b5d1-143dde8d9f9c/26-6aa7cc7867f7c.webp' /></p><p>இந்த நிலையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்ச செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T10:27:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான குண்டு போன்ற பொருள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/suspicious-bomb-like-object-recovered-from-a-house-1789378761"></link>
            <id>https://ibctamil.com/article/suspicious-bomb-like-object-recovered-from-a-house-1789378761</id>
            <summary type="text">களுத்துறை மாவட்டத்தில் அளுத்கம காவல்துறை பிரிவுக்குட்பட்ட சீனவத்த பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இலங்கையில் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் குண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை மாவட்டத்தில் அளுத்கம காவல்துறை பிரிவுக்குட்பட்ட சீனவத்த பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இலங்கையில் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் குண்டு போன்ற பொருளொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர், வீட்டின் கூரையில் அந்தப் பொருள் இருப்பதை அவதானித்துள்ளார்.</p><p>

பின்னர் அவர் அதனை வீட்டின் முன்புறத்தில் வைத்து, சம்பவம் தொடர்பில் அளுத்கம காவல்துறையினருக்கு அறிவித்துள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணைகளில் காவல்துறை</h2><p>
</p><p>
</p><p>காவல்துறையினருக்க கிடைத்த தகவலை அடுத்து குறித்த இடத்திற்கு சென்று பொருளை மீட்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/340aac46-59d3-4f24-bce5-7df30eaa2b81/26-6aa7cc0161560.webp' /></p><p>இதன் பின்னர் சம்பவம் தொடர்பில் அளுத்கம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T10:27:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வயோதிபப் பெண் கட்டையால் அடித்து படுகொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/elderly-woman-death-with-a-piece-of-wood-1789380332"></link>
            <id>https://tamilwin.com/article/elderly-woman-death-with-a-piece-of-wood-1789380332</id>
            <summary type="text">அச்சுவேலி- புத்தூர் பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் கதவுக்கு
வைக்கப்படும் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அச்சுவேலி- புத்தூர் பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் கதவுக்கு
வைக்கப்படும் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p>

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் மேற்கு சிவன் கோவில் வீதியிலுள்ள 74 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>
</p><p>
வயோதிப தாயும் அவரது மகனும் வாழ்ந்து வந்த நிலையில் மகனின் மகனால் குறித்த
கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9ade597-8f50-43a7-8feb-f0f91037e242/26-6aa7ca49881df.webp' /></p><p>

குறித்த கொலைச்சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T10:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 ஆண்டுகள் உறைந்திருந்த கரு மூலம் குழந்தை பிரசவித்த 54 வயது பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/54-year-old-woman-gives-birth-frozen-embryo-1789380066"></link>
            <id>https://canadamirror.com/article/54-year-old-woman-gives-birth-frozen-embryo-1789380066</id>
            <summary type="text">கிரேக்கத்தில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக உறைநிலையில் (Frozen Embryo) வைக்கப்பட்டிருந்த கரு மூலம் 54 வயது பெண் ஒருவர் பெண் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>கிரேக்கத்தில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக உறைநிலையில் (Frozen Embryo) வைக்கப்பட்டிருந்த கரு மூலம் 54 வயது பெண் ஒருவர் பெண் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.</p><p>

கிரேக்கத்தைச் சேர்ந்த கிறிஸ்டினா ரப்தி-ட்செலேபி (54) - கொன்ஸ்டான்டினோஸ் ரப்திஸ் (60) தம்பதியின் 21 வயது மகன் ஜியோர்ஜோஸ், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நடந்த வீதி விபத்தொன்றில் உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd7fd9e9-8b11-4c54-83d0-e44bebe738e6/26-6aa7c5e3cfb16.webp' /></p><p>

மகனின் பிரிவால் துயருற்ற தம்பதியினர், மீண்டும் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க தீர்மானித்தனர்.

இதற்காக, 22 ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் செயற்கை கருத்தரித்தல் (IVF) சிகிச்சைக்காக சேமித்து வைத்திருந்த கருவை பயன்படுத்த முடிவு செய்தனர்.</p><p>

இருப்பினும், கிரேக்கத்தில் 54 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை அளிக்க சட்டப்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.</p><p>

வயது வரம்பை எட்டிய நிலையில் இருந்ததால், அந்த நாட்டின் தேசிய இனப்பெருக்க மருத்துவ அதிகார சபையிடம் விசேட அனுமதி பெற்று, ஏதென்ஸில் உள்ள மருத்துவமனையில் கிறிஸ்டினா 3.49 கிலோகிராம் எடையில் பெண் குழந்தையைப் பிரசவித்துள்ளார்.
</p><p>
உயிரிழந்த தங்கள் மகனின் நினைவாக இந்தக் குழந்தைக்கு 'ஜோர்ஜியா' என அவர்கள் பெயரிட்டுள்ளனர்.
</p><p>
22 ஆண்டுகள் பழமையான கரு மூலம் குழந்தை பிறந்தமை மருத்துவ உலகில் அரிதான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
</p><p>
இந்தநிலையில், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கிரேக்கத்தில் நிலவும் பிறப்பு விகிதக் குறைவைக் கருத்திற்கொண்டு, IVF சிகிச்சைக்கான 54 வயது வரம்புச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அந்த நாட்டு மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-14T10:10:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு அடித்த அதிஷ்டம் :வலையில் சிக்கிய 300 கிலோ எடைகொண்ட மீன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-300-kilogram-fish-caught-mannar-fishermen-1789380637"></link>
            <id>https://ibctamil.com/article/a-300-kilogram-fish-caught-mannar-fishermen-1789380637</id>
            <summary type="text">மன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த கடற்றொழிலாளர்களின் வலையில், *சுமார்
300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன் ஒன்று* சிக்கியுள்ளது.

உள்ளூர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த கடற்றொழிலாளர்களின் வலையில், *சுமார்
300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன் ஒன்று* சிக்கியுள்ளது.
</p><p>
உள்ளூர் கடற்றொழிலாளர்களால் *“கொப்பறா”* என அழைக்கப்படும் இந்த மீன், வழக்கமான
மீன்களை விட மிகப் பெரியதாக காணப்படுவதால், கடற்றொழிலாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை
ஏற்படுத்தியுள்ளது.</p><h2>அதிகளவானவர்கள் பர்வை</h2><p>மீனுடன் கடற்றொழிலாளர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில்
கவனம் பெற்றுள்ளன.

குறித்த மீனை தற்போது அதிகளவானவர்கள் பர்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9f99f1c-c056-4ef5-adf4-af13716697c2/26-6aa7c81f29566.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T10:10:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏர்பஸ் ஒப்பந்த முறைகேடு - சந்தேக நபராக அறிவிக்கப்பட்டார் நாமல் ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airbus-deal-is-questionable-1789379651"></link>
            <id>https://tamilwin.com/article/airbus-deal-is-questionable-1789379651</id>
            <summary type="text">ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏர்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் பணமோசடி விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏர்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் பணமோசடி விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
</p><p>
இந்த விசாரணையின் அடிப்படையில், தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்தேகநபராகப் பெயரிட சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதேவேளை, குறித்த சம்பவத்தில் இலஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், நாமல் ராஜபக்சவை எதிர்வரும் செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/W8TkdqfwQtQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T10:00:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[11ஆவது தேசிய சாரணர் ஜம்போரியின் உத்தியோகபூர்வ இலச்சினை ஜனாதிபதியிடம் கையளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-11th-national-scout-jamboree-1789379189"></link>
            <id>https://tamilwin.com/article/anura-11th-national-scout-jamboree-1789379189</id>
            <summary type="text">இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், இலங்கைச் சாரணர் சங்கத்தின் தலைமைச் சாரணியருமான&amp;nbsp; அநுர குமார திசாநாயக்கவிடம், 11ஆவது தேசிய சாரணர் ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், இலங்கைச் சாரணர் சங்கத்தின் தலைமைச் சாரணியருமான&nbsp; அநுர குமார திசாநாயக்கவிடம், 11ஆவது தேசிய சாரணர் ஜம்போரியின் உத்தியோகபூர்வ இலச்சினை ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டு கையளிக்கப்பட்டது.
</p><p>இந்நிகழ்வின் போது, உத்தியோகபூர்வ இலச்சினையைக் கொண்ட நினைவுச் சின்னம், தலைமைச் சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி மனோஜ்
நாயக்கக்காரவால் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
</p><p>ஹோமாகம், தியகமவில் 2027ஆம் ஆண்டு ஜனவரி 17 முதல் 23 வரை நடைபெறவுள்ள 11ஆவது தேசிய சாரணர் ஜம்போரி தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போதே இந்த உத்தியோகபூர்வ இலச்சினை வெளியிடப்பட்டது.</p><h2>அழைப்பு&nbsp;</h2><p> </p><p>இந்த ஜம்போரியுடன் இணைந்து, இலங்கை சாரணர் இயக்கத்தின் 115ஆவது ஆண்டு நிறைவு விழாவும் இடம்பெறவுள்ளது.
</p><p>இந்த தேசிய ஜம்போரியில் சுமார் 10,000 உள்ளூர் சாரணர்களும், வெளிநாடுகளிலிருந்து சுமார் 3,000 சாரணர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86da8f9e-f3b6-4ca9-a6e4-377d37cfbff9/26-6aa7c455c19de.webp' /></p><p>
</p><p>இந்தச் சந்திப்பின் போது, தலைமைச் சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி ஜனாதிபதியை இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளுமாறு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்தார்.
</p><p>இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொசான கமகே, இலங்கைச் சாரணர் சங்கத்தின் தலைவர் ரன்சிரி பெரேரா, பிரதித் தலைமை ஆணையாளர் சட்டத்தரணி கபில கல்யாண பெரேரா, மன்றக் குழுவின் தலைவர் பொறியியலாளர் கமலநாத் ஜினதாச, ஜம்போரியின் இணை ஏற்பாட்டாளர் ஆணையாளர் பொறியியலாளர் அமில் அபிசுந்தர மற்றும் பல சிரேஷ்ட சாரணர் ஆணையாளர்களும் கலந்து கொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-09-14T09:54:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் மீனவர்களுக்கு அடித்த அதிஸ்டம் ; வலையில் சிக்கிய 300 கிலோ மீன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mannar-fishermen-s-lucky-break-1789379339"></link>
            <id>https://jvpnews.com/article/mannar-fishermen-s-lucky-break-1789379339</id>
            <summary type="text">மன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மன்னார் மீனவர்களின் வலையில் இன்று (14) அதிகாலை ஆழ்கடல் மீனான “கொப்பரா” என அழைக்கப்படும் ஆழ்கடல் மீன் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மன்னார் மீனவர்களின் வலையில் இன்று (14) அதிகாலை ஆழ்கடல் மீனான “கொப்பரா” என அழைக்கப்படும் ஆழ்கடல் மீன் சிக்கியுள்ளது. </p><p style="text-align: justify; ">

சுமார் 300 கிலோ எடையுடைய குறித்த மீன் ஆழ்கடலில் வாழக்கூடியதுடன், தற்போது மீனவர்களின் வலையில் சிக்கியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59c3bf40-4ab9-40bf-a2ad-96c4cc0add00/26-6aa7c30d72fcf.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இது வேகமாக நீந்தக்கூடிய, நீளமான மூக்கையுடைய மீன் வகையாகக் காணப்படுகின்றது.</p><p style="text-align: justify; "> 

வழக்கமான மீன்களை விட மிகப் பெரியதாகக் காணப்படுவதால், மீனவர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. </p><p style="text-align: justify; ">

மீனுடன் மீனவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-09-14T09:49:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மன் உள்ளாட்சித் தேர்தல்கள்: மீண்டும் சாதித்த ஆளுங்கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/merz-cdu-top-in-lower-saxony-polls-1789379287"></link>
            <id>https://news.lankasri.com/article/merz-cdu-top-in-lower-saxony-polls-1789379287</id>
            <summary type="text">Merz&#039;s CDU comes out on top in Lower Saxony polls: ஜேர்மனியின் Lower Saxony மாகாணத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளுங்கட்சி அதிக வாக்குகளைப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Merz's CDU comes out on top in Lower Saxony polls: ஜேர்மனியின் Lower Saxony மாகாணத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளுங்கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.
</p><p>

சமீபத்தில் ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில் புலம்பெயர்தல் எதிர்ப்பு தீவிர வலதுசாரிக் கட்சியான AfD கட்சி அமோக வெற்றி பெற்றது.</p><h3>

மீண்டும் சாதித்த ஆளுங்கட்சி
</h3><p>
இந்நிலையில், நேற்று Lower Saxony மாகாணத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7511ea55-0dbc-4bfc-a68e-89a94ea2b1c1/26-6aa7c2d91b3ea.webp' /></p><p>
Saxony-Anhalt மாகாணத்தில் AfD கட்சி அமோக வெற்றி பெற்ற விடயம் நாடு முழுவதும் பரபரப்பை உருவாக்கியிருந்த நிலையில், Lower Saxony மாகாணத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்குமோ என்ற பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
</p><p>
இந்நிலையில், சேன்ஸலர் பிரெட்ரிக் மெர்ஸ் சார்ந்த, ஆளும் Christian Democratic Union (CDU) கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.&nbsp;</p><p></p><p>
CDU கட்சி 27.2 சதவிகித வாக்குகளுடன் முதலிடம் பிடித்த நிலையில், The Social Democrats (SPD) கட்சி 24.6 சதவிகித வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
</p><p>
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய AfD கட்சி 15.9 சதவிகித வாக்குகளுடன் மூன்றாவது இடத்தையே பிடிக்கமுடிந்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T09:48:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் 20 மாவட்டங்களுக்கு இரவு 11:30 மணி வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/department-of-meteorology-issues-red-warning-1789378096"></link>
            <id>https://tamilwin.com/article/department-of-meteorology-issues-red-warning-1789378096</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 20 மாவட்டங்களுக்கு தீவிர மின்னல்
அபாயம் குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேலும் 5 ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 20 மாவட்டங்களுக்கு தீவிர மின்னல்
அபாயம் குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன் மேலும் 5 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p>
இந்த எச்சரிக்கையானது இன்று இரவு 11:30 மணி வரை நடைமுறையில் இருக்கும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>பலத்த காற்றும் வீசக்கூடும்&nbsp;</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36e9a336-5ce1-4eed-a990-b1bb5b3a23ac/26-6aa7c24dd7000.webp' /></p><p>
</p><p>
மேலும், வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென்
மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மன்னார் மாவட்டங்களில்
இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், சில வேளைகளில் தற்காலிகமாக பலத்த
காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நிலையில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள
பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T09:48:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீன் திரைப்படத்தில் டாப் நடிகர்கள் கேமியோ.. திரையரங்கம் தெறிக்க போகுது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/top-actors-cameo-in-scene-movie-1789377498"></link>
            <id>https://cineulagam.com/article/top-actors-cameo-in-scene-movie-1789377498</id>
            <summary type="text">சூர்யா மற்றும் ஜீது மாதவன் கூட்டணியில் உருவாகி வரும் &#039;சீன்&#039; திரைப்படத்தில் டாப் நடிகர்கள் சிலர் கேமியோ ரோலில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

&#039;சீன...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூர்யா மற்றும் ஜீது மாதவன் கூட்டணியில் உருவாகி வரும் 'சீன்' திரைப்படத்தில் டாப் நடிகர்கள் சிலர் கேமியோ ரோலில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><h2>

'சீன்'</h2><p>

மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் ஜீது மாதவன். ரோமச்சன், ஆவேசம் ஆகிய திரைப்படங்களை இவர் இதற்கு முன் இயக்கியுள்ளார். தொடர்ந்து இரு வெற்றி படங்களை கொடுத்த ஜீது மாதவன் தனது மூன்றாவது திரைப்படத்திற்காக சூர்யாவுடன் கைகோர்த்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95f3bba9-bd2c-445d-9334-70b331b95e00/26-6aa7bbdd40080.webp' /></p><p>இப்படத்தில் நஸ்ரியா, நஸ்லன், ராஜப்ரியன், லால் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளிவந்து ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. மேலும், தீபாவளிக்கு இப்படம் வெளியாகிறது என்றும் அறிவித்துவிட்டனர்.</p><p></p><h3> 

கேமியோஸ்
</h3><p>
இந்த நிலையில், 'சீன்' திரைப்படத்தில் மலையாள திரையுலகை சேர்ந்த டாப் 5 ஹீரோக்களில் இருவர் கேமியோ ரோலில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவரும் '<a href="https://www.youtube.com/watch?v=_nuRAflabx8" target="_blank">சீன்</a>' திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. இவர்கள் மூவருடைய கேமியோ கண்டிப்பாக திரையரங்கை தெறிக்கவிட போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a06dbe5d-fd3b-428b-bf92-efe3d2b6cca7/26-6aa7bbddef8a4.webp' /></p>]]></content>
            <updated>2026-09-14T09:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[போரிஸ் ஜோன்சன் புறப்பட்ட சில நிமிடங்களில் ட்ரோன் தாக்குதல் ; உக்ரைனை அதிர வைத்த ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/drone-attack-minutes-after-boris-johnson-left-1789368500"></link>
            <id>https://canadamirror.com/article/drone-attack-minutes-after-boris-johnson-left-1789368500</id>
            <summary type="text">உக்ரேன்–போலந்து எல்லைக்கு அருகில் அமைந்துள்ள யஹோடின் ரயில் நிலையப் பகுதியில், பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் ஐரோப்பிய பாதுகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரேன்–போலந்து எல்லைக்கு அருகில் அமைந்துள்ள யஹோடின் ரயில் நிலையப் பகுதியில், பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பு அதிகாரிகள் பயணித்த ரயில் புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களில் ரஷ்ய ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கீவில் நடைபெற்ற ‘யால்டா ஐரோப்பிய உத்தி’ மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, தூதுவர்களுக்கான ரயில் மூலம் போலந்து நோக்கிப் பயணித்த உயர்மட்டக் குழுவினரையே குறித்த தாக்குதல் இலக்கு வைத்திருக்கலாம் என உக்ரேனின் ரயில் நிறுவனமான ‘உக்ர்சலிஸ்னிட்சியா’ குற்றம் சாட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f5167d8-5607-4190-ba4d-1d0b3028b8b3/26-6aa798b6025d6.webp' /></p><p>
</p><p>
ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல் அச்சுறுத்தலினால், பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் ஸ்வீடனின் முன்னாள் பிரதமர் கார்ல் பில்ட் உள்ளிட்டோர் பயணித்த தூதுவர் ரயில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே யஹோடின் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.</p><p>


அந்த ரயில் நிலையத்தைக் கடந்து சென்ற சில நிமிடங்களிலேயே, அதே பாதையில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு பயணிகள் ரயிலின் இயந்திரத்தின் மீது ரஷ்ய ட்ரோன் ஒன்று மோதி வெடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
தாக்குதலுக்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
</p><p>
இதேவேளை, யஹோடின் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு ரயிலில் அமெரிக்காவின் முன்னாள் சிஐஏ பணிப்பாளர் டேவிட் பெட்ரேயஸ் பயணித்துக் கொண்டிருந்ததாகவும், அவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தத் தாக்குதல் தொடர்பாக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனது எக்ஸ் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

</p><p>
போலந்து எல்லைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த உக்ரேனிய ரயில் இயந்திரத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஏன் தாக்கினார் என்பது தனக்குப் புரியவில்லை என்றும், உக்ரேனிய மக்கள் தினமும் எதிர்கொள்ளும் ‘அர்த்தமற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு’ இது மற்றுமொரு சான்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலும், உக்ரேனுக்குத் தேவையான வான் பாதுகாப்பு அமைப்புகளை மேலைத்தேய நாடுகள் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் போரிஸ் ஜோன்சன் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இதனிடையே, “நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வாசற்படியில் புட்டின் நடத்தும் பயங்கரவாதத்தின் ஒலிப்பே இது” என உக்ரேன் வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன், ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


எல்லைக்கு மிக அருகில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் அவசரப் பாதுகாப்புக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
</p><p>
நேட்டோ எல்லையிலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் தொலைவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், இச்சம்பவம் ஐரோப்பிய பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-14T09:39:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிலிப்ஸ், ஹோப், ஹெட்மையர் சொதப்பல்..99 ஓட்டங்களுக்கு சுருண்டு கயானா தோல்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/guyana-amazon-warriors-99-all-out-cpl-t20-1789378466"></link>
            <id>https://news.lankasri.com/article/guyana-amazon-warriors-99-all-out-cpl-t20-1789378466</id>
            <summary type="text">Barbados tridents beat guyana amazon warriors by 6 wickets: CPL டி20 போட்டியில் பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கயானா அமேசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Barbados tridents beat guyana amazon warriors by 6 wickets: CPL டி20 போட்டியில் பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கயானா அமேசான் வாரியர்ஸை வீழ்த்தியது.
</p><p>
கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த கரீபியன் லீக் போட்டியில், பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>சுருண்ட&nbsp;கயானா அமேசான் வாரியர்ஸ்</h2><p>

2026 CPL 35வது போட்டியில், கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணிகள் மோதின.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Making an instant impression! 🔥<br><br>George Linde comes on and delivers two Flow Classic Catches in the over! 🇧🇧 x 🇬🇾<a href="https://x.com/hashtag/CPL26?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CPL26</a> <a href="https://x.com/hashtag/BTvGAW?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BTvGAW</a> <a href="https://x.com/hashtag/CricketPlayedLouder?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CricketPlayedLouder</a> <a href="https://x.com/hashtag/BiggestPartyInSport?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BiggestPartyInSport</a> <a href="https://x.com/hashtag/Flow?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Flow</a> <a href="https://t.co/qw0V4zyyW9">pic.twitter.com/qw0V4zyyW9</a></p>&mdash; CPL T20 (@CPL) <a href="https://x.com/CPL/status/2099286757774606845?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>&nbsp;</p><p></p><p>

முதலில் ஆடிய கயானா அமேசான் வாரியர்ஸ் 18.1 ஓவர்களில் 99 ஓட்டங்களுக்கு சுருண்டது. 

அதிகபட்சமாக க்ளென் பிலிப்ஸ் (Glenn Phillips) 24 ஓட்டங்களும், ரோமரியோ ஷெப்பர்ட் 22 ஓட்டங்களும் எடுத்தனர். </p><p>

கஸன்பர் மற்றும் லேய்ன் தலா 3 விக்கெட்டுகளும், ஜார்ஜ் லிண்டே 2 விக்கெட்டுகளும், ரூதர்போர்ட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a7d0b10-fb84-494a-afd7-ed1d4fa40a62/26-6aa7c0c4e7d32.webp' /></p><h2>

பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ்&nbsp;வெற்றி </h2><p>பின்னர் ஆடிய பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 100 ஓட்டங்கள் (14.5 ஓவர்கள்) எடுத்து வெற்றி பெற்றது.
</p><p>
பிரண்டன் கிங் (Brandon King) ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களும், சட்ராக் டெஸ்கார்ட் 32 (20) ஓட்டங்களும் எடுத்தனர். </p><p>

மெஹிதி ஹசன் மிராஸ் 2 விக்கெட்டுகளும், வீராசாமி பெருமாள் மற்றும் இம்ரான் தாஹிர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/256acd0e-83b1-40cb-b28d-2d9885a2698b/26-6aa7c0c5c1029.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T09:36:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடிவடையும் மேக்ரானின் பதவிக்காலம்: அடுத்த ஜனாதிபதி யார்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/french-extreme-candidate-in-2027-presidential-race-1789378488"></link>
            <id>https://news.lankasri.com/article/french-extreme-candidate-in-2027-presidential-race-1789378488</id>
            <summary type="text">French extreme candidates steam ahead in 2027 presidential race: 2027ஆம் ஆண்டுக்கான பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில், தீவிர வலதுசாரியினர் முதலானோருக்கு மக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>French extreme candidates steam ahead in 2027 presidential race: 2027ஆம் ஆண்டுக்கான பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில், தீவிர வலதுசாரியினர் முதலானோருக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருக்கும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
</p><p>

பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானின் பதவிக்காலம், 2027ஆம் ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைய உள்ளது.
</p><p>
இந்நிலையில், அடுத்து யார் பிரான்சின் ஜனாதிபதியாவார் என்னும் கேள்வி வலுத்தவண்ணம் உள்ளது.
</p><h3>
அடுத்த ஜனாதிபதி யார்?
</h3><p>
சமீபத்திய ஆய்வொன்றில், வலதுசாரிக் கட்சியான National Rally கட்சியைச் சார்ந்த மரீன் லெ பென்னுக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71910714-27d4-491e-b40e-348dc8e31448/26-6aa7bfb9eb337.webp' /></p><p>

முதல் சுற்றுத் தேர்தலில், மரீன் லெ பென்னுக்கு 33 முதல் 36 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.&nbsp;</p><p></p><p>

அத்துடன், தீவிர இடதுசாரியினரான ஜான் லூக் மெலன்ஷான் இரண்டாம் இடத்தைப் பிடிப்பார் என்றும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35b52fed-b67c-43ad-9d3b-04def56a3eeb/26-6aa7bfbaa3dd5.webp' /></p><p>
மேக்ரான் ஆட்சியில் பிரதமராக இருந்த Edouard Philippeம் பிரான்ஸ் ஜனாதிபதிக்கான போட்டியில்இருக்கிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95e59149-5079-4138-b68b-98f3409f6d33/26-6aa7bfbb5729f.webp' /></p><p>
மெலன்ஷானைப் பொருத்தவரை, அவர் ஏற்கனவே 2012, 2017 மற்றும் 2022ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட்டும், அவரால் இரண்டாவது சுற்றை எட்டவேமுடியாமல் போய்விட்டது.
</p><p>
அதேபோல, மரீன் லெ பென்னும் 2017 மற்றும் 2022ஆம் ஆண்டு தேர்தல்களில் போட்டியிட்டும் மேக்ரானிடம் தோற்றுப்போனார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T09:34:59+00:00</updated>
        </entry>
    </feed>
