<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-31T03:16:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளம் - திபெத்தை அடுத்து... கிராண்ட் கேன்யனைப் புரட்டிப் போட்ட பெருவெள்ளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/flash-flood-in-grand-canyon-1788145947"></link>
            <id>https://news.lankasri.com/article/flash-flood-in-grand-canyon-1788145947</id>
            <summary type="text">US Grand Canyon Flash Floods: அமெரிக்காவின் கிராண்ட் கேன்யன் பகுதியில் திடீர் வெள்ளத்தில் பலர் காணாமல் போயினர்.
அமெரிக்காவின் கிராண்ட் கேன்யன் தேசியப...</summary>
            <content type="html"><![CDATA[<p>US Grand Canyon Flash Floods: அமெரிக்காவின் கிராண்ட் கேன்யன் பகுதியில் திடீர் வெள்ளத்தில் பலர் காணாமல் போயினர்.
</p><p>அமெரிக்காவின் கிராண்ட் கேன்யன் தேசியப் பூங்காவில் ஏற்பட்ட பெரும் திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, 20க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>காணாமல் போனவர்கள்</h2><p>
</p><p>பிரைட் ஏஞ்சல் கேன்யன் மற்றும் ஃபாண்டம் ராஞ்ச் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு, பெரிய பாறைகள், உலோகக் கட்டமைப்புகள் மற்றும் பிற குப்பைகளை அதன் வழியாகப் பாயும் கொலராடோ ஆற்றில் அடித்துச் சென்றதாக தேசிய பூங்கா சேவை அமைப்பு தெரிவித்துள்ளது. </p><p>பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து மக்களை வெளியேற்றவும், அங்குள்ளவர்களின் விவரங்களை உறுதிப்படுத்தவும் அரிசோனா அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக தேசிய பூங்கா சேவை அமைப்பு தெரிவித்துள்ளது;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b3a4b35-7660-4b25-94c4-43693146c2df/26-6a94f11d49c81.webp' /></p><p> </p><p>அத்துடன், காணாமல் போனவர்கள் மற்றும் அப்பகுதியில் இருந்த மலையேற்றப் பயணிகள் குறித்த ஏதேனும் தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் அது கேட்டுக்கொண்டது. </p><p>கொலராடோ ஆற்றில் கலக்கும் பிரைட் ஏஞ்சல் ஓடையில், சனிக்கிழமை பிற்பகல் சுமார் 2:30 மணியளவில் திடீர் வெள்ளப்பெருக்கு தொடங்கியது.</p><p></p><p> பெருக்கெடுத்த நீர், ஓடையின் மீதான நடைப்பாலங்களை அடித்துச் சென்றதுடன், நிலப்பரப்பையும் கணிசமாக மாற்றியது. இதனிடையே, உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை, பூங்கா ஊழியர்களும் அரிசோனா பொதுப் பாதுகாப்புத் துறையினரும் 60-க்கும் மேற்பட்டோரை வெளியேற்றியுள்ளனர். </p><p>தேசிய பூங்கா சேவை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி எவருக்கும் காயங்கள் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்றே குறிப்பிட்டுள்ளது. </p><p>சனிக்கிழமையன்று 'பிரைட் ஏஞ்சல் கிரீக்' (Bright Angel Creek) வழித்தடத்தையொட்டிய பள்ளத்தாக்கின் உட்பகுதியில் இருந்த மலையேற்றப் பயணிகள் அல்லது 'பேக்-பேக்கர்கள்' (backpackers) குறித்தோ, </p><p>அல்லது பாதிக்கப்பட்ட அந்தப் பகுதியில் முகாமிடுவதற்கான முன்பதிவு செய்திருந்தவர்கள் குறித்தோ ஏதேனும் தகவல் தெரிந்தால் அரசு அமைப்பிற்குத் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்ட பூங்கா அதிகாரிகள்,</p><h2>கொலராடோ ஆற்றில்</h2><p> </p><p>காணாமல் போன அல்லது விவரம் அறியப்படாதவர்களின் எண்ணிக்கையையும் தனி அறிக்கை ஒன்றில் வெளியிட்டனர். பிரைட் ஏஞ்சல் ஓடையின் (Bright Angel Creek) குறுக்கே அமைக்கப்பட்டிருந்த ஏறக்குறைய அனைத்து நடைபாலங்களும் அடித்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்; </p><p>உலோகக் கட்டமைப்புகளும் இடிபாடுகளும் ஆற்றில் கலப்பதால், அடுத்த அறிவிப்பு வரும் வரை கொலராடோ ஆற்றில் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. </p><p>திங்கட்கிழமை வரையிலும் அப்பகுதியில் மேலும் மழையும் இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செங்குத்தான சரிவுள்ள பாறைப் பகுதியில், சுமார் 30 நிமிடங்களுக்குள் அரை அங்குலம் முதல் 1 அங்குலம் (1 சென்டிமீட்டர் முதல் 2.5 சென்டிமீட்டர்) வரை மழை பெய்ததாக ஃபிளாக்ஸ்டாஃபில் உள்ள தேசிய வானிலை சேவை வானிலை ஆய்வாளர் ஜஸ்டின் ஜான்ட்ரோ கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a29e6749-a820-4fe9-bfe9-519a8307bb79/26-6a94f11e00715.webp' /></p><p>
</p><p>கிராண்ட் கேன்யனின் வடக்குப் பகுதியில் இந்தப் பெருவெள்ளம் ஏற்பட்டதாக கூறியுள்ள அவர்; அப்பகுதியில் 'பிரைட் ஏஞ்சல் கிரீக்' நீரோடையானது வடக்குப் விளிம்பிலிருந்து (North Rim) கொலராடோ நதியை நோக்கி சுமார் 6,000 அடி (1,828 மீட்டர்) உயரத்தில் இருந்து கீழே இறங்கி வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.</p><p> ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, வரலாற்றுச் சிறப்புமிக்க உணவகம் மற்றும் தங்குமிடங்களைக் கொண்டதும், படகு சவாரி செய்பவர்கள் ஆற்றில் ஏறி இறங்குவதற்கான பொதுவான இடமாகவும் விளங்கும் ஃபாண்டம் ராஞ்சிலிருந்து 62 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்; மேலும் பலர் வெளியேற்றப்படவிருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d62bb6d-0f1e-4a7a-ae00-6ce1e6c207f6/26-6a94f11eba1e4.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T03:09:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலையில் இஷாரா செவ்வந்தியின் பரிதாப நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ishara-sewwandi-s-current-situation-1788144530"></link>
            <id>https://tamilwin.com/article/ishara-sewwandi-s-current-situation-1788144530</id>
            <summary type="text">விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி தொடர்ந்தும் அங்குணுகோலபெலஸ்ஸ சிறைச்சாலையின் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சா...</summary>
            <content type="html"><![CDATA[<p>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி தொடர்ந்தும் அங்குணுகோலபெலஸ்ஸ சிறைச்சாலையின் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அதற்கமைய, குறித்த சிறைச்சாலையின் பெண் பிரிவில் உள்ள ஏனைய கைதிகளுடன் பழகாதவாறு தனிச் சிறையில் அவர் வைக்கப்பட்டுள்ளார். </p><p>

தற்போது குறித்த சிறைச்சாலையில் 130 இற்கும் மேற்பட்ட பெண் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p>
</p><h2><b>
செவ்வந்தியின் பரிதான நிலை</b></h2><p>அத்துடன், கனேமுல்ல சஞ்சீவவின் நெருங்கிய தொடர்புடைய சிலரும் ஆண் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edce5b01-52b8-460a-b1ab-4afa7578c740/26-6a94ee4cce7f4.webp' /></p><p>எனினும், இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளாவிட்டாலும், சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு மட்டுமே இவ்வாறான விசேடமான இடம் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
வழமையாக கைதிகள் காலை 6 மணிக்குச் சிறைக் கூண்டுகளிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படுவதுடன், அவர்கள் மீண்டும் மாலை 4 மணியளவில் தான் அறைகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள். </p><p> 

எனினும், விசேட பாதுகாப்பின் கீழ் தனிச் சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட தனிமைப்படுத்தப்பட்ட எந்தவொரு கைதிக்கும் இந்த வசதி கிடைக்காது.
</p><p>
இஷாரா செவ்வந்தி காலை 6 மணிக்குச் சிறைக் கூண்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படுவார். காலை உணவளிக்கப்பட்ட பின் மீண்டும் 15 நிமிடங்களுக்கு பின்னர் சிறைக் கூண்டிலேயே தங்க வைக்கப்படுவதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.</p><h3><b>

தீவிர கண்காணிப்பு</b></h3><p>அவர் மீண்டும் வெளியே அழைத்துச் செல்லப்படுவது மதிய உணவு வழங்குவதற்காக 15 நிமிடங்களுக்கு மாத்திரமே ஆகும். 

சிறைச்சாலையில் உணவு சமைத்துப் பரிமாறும் நேரத்திலேயே இஷாரா செவ்வந்தி இவ்வாறு வெளியே அழைத்துச் செல்லப்படுவதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08ad1385-c230-4c66-b921-14d5c9b44212/26-6a94ee4d8512b.webp' /></p><p>மீண்டும் சிறைக் கூண்டில் வைக்கப்படும் இஷாரா செவ்வந்தி, இரவு உணவு வழங்குவதற்காகவே மாலை 4 மணிக்கு வெளியே அழைத்துச் செல்லப்படுகிறார்.

இது தவிர, காலை 6 மணிக்கும் மாலை 5 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் தினசரி 30 நிமிடங்கள் இஷாரா செவ்வந்தி வெளியே அழைத்துச் செல்லப்படுவதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. </p><p>

உடற்பயிற்சி செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதற்காகவே இது மேற்கொள்ளப்படுகிறது. அதற்கமைய, சிறைச்சாலை அதிகாரிகளின் விசேட பாதுகாப்பின் கீழ், ஏனைய கைதிகளுடன் பழகாதவாறு சந்தேகநபருக்கு அந்த சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
</p><p>
இஷாரா செவ்வந்திக்கு சிறைச்சாலைக்குள் விசேட சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை என சிறைச்சாலை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. </p><p>

அண்மையில் குறித்த சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர் தனது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்குமாறு கோரியுள்ளார். அங்குணுகோலபெலஸ்ஸ சிறைச்சாலையானது இஷாரா செவ்வந்தியின் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது.</p><p>

அது நடைமுறையிலுள்ள சிறைச்சாலைச் சட்டத்திற்கு உட்பட்டே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எந்தவொரு கைதியும் மாதத்திற்கு இருமுறை சிறைச்சாலை ஊடாக தொலைபேசி அழைப்புகளைப் பெற்றுக் கொள்ளும் வசதியைக் கொண்டுள்ளனர். </p><p>சம்பந்தப்பட்ட கைதி அது தொடர்பிலான கோரிக்கையை முதலில் சிறைச்சாலையிடம் முன்வைக்க வேண்டும்.
</p><p>
அதற்கமைய, சிறைச்சாலை அதிகாரிகளின் கடுமையான கண்காணிப்பின் கீழ் குடும்ப உறுப்பினர்களுடன் தொலைபேசியில் பேசுவதற்கு இரண்டு நிமிடங்கள் மாத்திரமே கால அவகாசம் கிடைக்கும் என சிறைச்சாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.</p>]]></content>
            <updated>2026-08-31T03:01:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாக்ஸ் ஆபிஸ்: 5 நாட்களில் உலகளவில் டாக்சிக் திரைப்படம் செய்துள்ள வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/toxic-movie-5-days-box-office-collection-1788145269"></link>
            <id>https://cineulagam.com/article/toxic-movie-5-days-box-office-collection-1788145269</id>
            <summary type="text">பான்-இந்தியன் ஸ்டார் யஷ் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த டாக்சிக் படத்தின் 5 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

டாக்சிக்

2026-ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பான்-இந்தியன் ஸ்டார் யஷ் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த டாக்சிக் படத்தின் 5 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><p>
</p><h2>
டாக்சிக்
</h2><p>
2026-ஆம் ஆண்டு பான்-இந்தியா அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று <a href="https://www.youtube.com/watch?v=7TwkpFlc0dA" target="_blank">டாக்சிக்</a>. இப்படத்தை இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்க, யஷ் நடிப்பில் உருவான இப்படத்தில் நயன்தாரா, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி, கியாரா அத்வானி மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் நடித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/250aba1f-91e1-42dd-bf74-0eb3ab371132/26-6a94ee78f1c67.webp' /></p><p>பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் பாக்ஸ் ஆபிஸிலும் சரிவை சந்தித்துள்ளது.
</p><h2>
வசூல் விவரம்</h2><p>

இந்நிலையில், 5 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் டாக்சிக் திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 5 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 270 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/327ed78d-de99-48b3-9ae8-98a4453a1e57/26-6a94ee79ac8fe.webp' /></p>]]></content>
            <updated>2026-08-31T03:01:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் நீராடிய பெண் மற்றும் சிறுவர்கள் மூவர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/four-reported-missing-after-drowning-incident-1788140643"></link>
            <id>https://ibctamil.com/article/four-reported-missing-after-drowning-incident-1788140643</id>
            <summary type="text">கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த குழுவினருள் பெண் ஒருவர், இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். குறித்த சம்பவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த குழுவினருள் பெண் ஒருவர், இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். </p><p>குறித்த சம்பவம் பமுணுகம - எபாமுல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

இவ்வாறு காணாமல்போனவர்கள் 35 வயதுடைய பெண், 04 மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகள் மற்றும் 13 வயதுடைய ஒரு சிறுவன் ஆவர். </p><p>

இவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72dc4a14-514e-450e-9bfb-f221db50d63c/26-6a94edd23a705.webp' /></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T02:58:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவு 10 மணி முதல் 6 மணி வரை இதற்குத் தடை - வெளியான அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-warn-against-loudspeaker-use-after-10pm-1788142064"></link>
            <id>https://ibctamil.com/article/police-warn-against-loudspeaker-use-after-10pm-1788142064</id>
            <summary type="text">ஒலிபெருக்கிகள் மற்றும் ஏனைய ஒலி உபகரணங்களை பயன்படுத்துவதற்கான சட்ட ஒழுங்கு குறித்து இலங்கை காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.ஒலி மாசுபாடான...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒலிபெருக்கிகள் மற்றும் ஏனைய ஒலி உபகரணங்களை பயன்படுத்துவதற்கான சட்ட ஒழுங்கு குறித்து இலங்கை காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.</p><p>ஒலி மாசுபாடானது குழந்தைகள், மாணவர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்குப் பெரும் சுகாதார மற்றும் மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.&nbsp;</p><p>உயர் நீதிமன்றத்தின் 38/2005 இலக்க கட்டளை மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் 261 ஆம் பிரிவின் கீழ், பொது தொல்லையாகக் கருதப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">சட்டரீதியான அனுமதி</span></p><p>இதன்படி, இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட மாட்டாது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/475a4900-e1db-43bb-be63-1c29b217a428/26-6a94e350d0fb6.webp' /></p><p>அனுமதிப்பத்திரம் பெறப்பட்டிருப்பினும், திங்கள் முதல் வியாழன் வரையிலான நாட்களில் இரவு 10 மணி வரையிலும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நள்ளிரவு ஒரு மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவு 12.30 வரையிலும் மட்டுமே ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும்.
</p><p>
எனினும், விசேட சட்டரீதியான அனுமதிகள் வழங்கப்பட்ட குறிப்பிட்ட மத அல்லது விசேட நிகழ்வுகளுக்கு இந்தக் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்களிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அனுமதி பெறப்பட்டிருந்தாலும் ஒலி குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும், மீறுபவர்களின் ஒலிபெருக்கிச் சாதனங்களைக் கைப்பற்றிச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சட்டவிரோத ஒலி மாசுபாடு தொடர்பில் 118 அல்லது 119 ஆகிய அவசர இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T02:43:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரீட்சைக்காக செலவிடப்பட்டுள்ள கோடிக்கணக்கான பணம்! விண்ணப்பித்தும் வருகை தராத மாணவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/90-million-without-students-for-the-git-exam-1788140275"></link>
            <id>https://tamilwin.com/article/90-million-without-students-for-the-git-exam-1788140275</id>
            <summary type="text">க.பொ.த உயர் தர மாணவர்களுக்கான பொதுத்தகவல் தொழில்நுட்ப பரீட்சைக்கு (GIT) விண்ணப்பித்திருந்த கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்கள் பரீட்சைக்கு வருகை தரவில்லை...</summary>
            <content type="html"><![CDATA[<p>க.பொ.த உயர் தர மாணவர்களுக்கான பொதுத்தகவல் தொழில்நுட்ப பரீட்சைக்கு (GIT) விண்ணப்பித்திருந்த கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்கள் பரீட்சைக்கு வருகை தரவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

இதன் காரணமாக 9 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் வீணடிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
</p><p>
2025 ஆம் ஆண்டிற்கான இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆண்டு செயல்திட்ட அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>மூன்று முறை&nbsp;நடத்தப்பட்ட&nbsp;பரீட்சை</h2><p> </p><p>

பொதுத் தகவல் தொழில்நுட்ப பாட பரீட்சை 2019 முதல் 2024 வரை ஆறு ஆண்டுகளில் மூன்று முறை நடத்தப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b146199-351b-451e-8909-cc08f3d2e0be/26-6a94e99ecfbf0.webp' /></p><p>
இந்த பரீட்சை மூன்று முறை நடத்தப்பட்ட நிலையில், க.பொ.த உயர் தர பரீட்சைக்கு வந்த மாணவர்களில் 36 சதவீதம் பேர் பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சைக்கு விண்ணப்பிக்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
பொதுத் தகவல் தொழில்நுட்பப் பாடத்திற்கு விண்ணப்பித்த மாணவர்களில் 42 சதவீதம் பேர் பரீட்சைக்கு வரவில்லை என தெரியவந்துள்ளது.
</p><p>
இந்த பரீட்சையை நடத்துவதற்காக பல மில்லியன் ரூபாய் செலவிடப்பட்ட போதிலும், எதிர்பார்க்கப்பட்ட இலக்குகள் அடையப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.</p><p>

பரீட்சை நடத்தப்பட்ட மூன்று சந்தர்ப்பங்களிலும், மதிப்பீட்டுச் செலவுகள் நீங்கலாக, விண்ணப்பித்து வராத மாணவர்களுக்காக பல கோடி ரூபாய் வீணாக செலவிடப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T02:42:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் மாயமான சிறுவர்கள், பெண் உட்பட நான்கு பேர் - தீவிரமாக தேடும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/4-missing-in-the-sea-in-colombo-1788142852"></link>
            <id>https://tamilwin.com/article/4-missing-in-the-sea-in-colombo-1788142852</id>
            <summary type="text">கம்பஹா, பமுனுகம - எபாமுல்ல கடற்கரைப் பகுதியில் கடலில் குளித்துக் கொண்டிருந்தவர்களில் நால்வர் காணாமல் போயுள்ளனர். பெண், இரண்டு சிறுமிகள் மற்றும் சிறுவன...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா, பமுனுகம - எபாமுல்ல கடற்கரைப் பகுதியில் கடலில் குளித்துக் கொண்டிருந்தவர்களில் நால்வர் காணாமல் போயுள்ளனர்.</p><p> பெண், இரண்டு சிறுமிகள் மற்றும் சிறுவன் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பமுனுபுகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> இவ்வாறு காணாமல் போனவர்கள் 35 வயதுடைய பெண்ணொருவர், 4 வயதுடைய இரண்டு சிறுமிகள் மற்றும் 12 வயதுடைய சிறுவன் என தெரியவந்துள்ளது.</p><p> </p><h2><b>பொலிஸார் மேலதிக விசாரணை</b></h2><p>குறித்த நால்வரும் ஜா-எல பிரதேசத்தில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff7b1ec7-8dc9-4c3b-ae18-04695229343c/26-6a94e62469f37.webp' /></p><p>காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து கூட்டு நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர். </p><p>பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
</p>]]></content>
            <updated>2026-08-31T02:25:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் விடுமுறை நாளில் பணிக்கு அழைக்கப்பட்ட பெண் அரச அதிகாரி மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/female-government-officer-died-jaffna-holiday-duty-1788137548"></link>
            <id>https://tamilwin.com/article/female-government-officer-died-jaffna-holiday-duty-1788137548</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான நேற்று (30)அலுவலகப் பணிக்காக அழைக்கப்பட்ட நில...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான நேற்று (30)அலுவலகப் பணிக்காக அழைக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பற்ற மின் கசிவில் சிக்கி உயிரிழந்த துயரச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த துயர சம்பவத்தில், உடுவில் பிரதேச செயலகத்தின் சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்த, இரண்டு பிள்ளைகளின் தாயாரான நிசாந்தன் சிந்துப்பிரியா (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார்.
</p><p>
அரச அலுவலகங்களுக்கிடையில் நடைபெறும் உற்பத்தித் திறன் போட்டியில் பங்கேற்பதற்காக உடுவில் பிரதேச செயலகமும் அலுவலகத்தை அழகுபடுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளது.</p><h2>மின் கசிவு</h2><p>இன்று போட்டிக்கான மதிப்பீடுகள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், விடுமுறை நாளான நேற்று மாலை அலுவலகத்திற்கு வருமாறு அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு வாட்ஸ்அப் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகத் தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3da1739c-f050-4de6-a457-181f5f01a781/26-6a94d0d9e17e3.webp' /></p><p>
</p><p>

இதனையடுத்து அலுவலகத்திற்குச் சென்ற குறித்த பெண் உத்தியோகத்தர், அங்கிருந்த மூலிகைத் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். இதன்போது அப்பகுதியில் காணப்பட்ட பாதுகாப்பற்ற மின் கசிவு நீருடன் தொடர்புபட்ட நிலையில், அவர் மீது மின்சாரம் தாக்கியிருக்கலாம் என ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>

மின்சாரம் தாக்கிய நிலையில் அவர் உடனடியாக மீட்கப்பட்டு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>

விடுமுறை நாளிலும் அலுவலகப் பணிக்காகச் சென்ற நிலையில், இரண்டு பிள்ளைகளின் தாயான இளம் பெண் உத்தியோகத்தர் ஒருவர் இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளமை அவரது குடும்பத்தினரையும், சக உத்தியோகத்தர்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><p>


சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பற்ற மின் இணைப்பு அல்லது மின் கசிவே இந்த உயிரிழப்புக்குக் காரணமா என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T02:02:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பட்டப்பகலில் பட்டதாரி யுவதியை கடத்திய காதலன்! பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/university-students-kidnapped-colombo-1788141106"></link>
            <id>https://tamilwin.com/article/university-students-kidnapped-colombo-1788141106</id>
            <summary type="text">கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்ற 26 வயதான யுவதியொருவரை கடத்திச்சென...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்ற 26 வயதான யுவதியொருவரை கடத்திச்சென்ற காதலனை கைது செய்ய&nbsp;இரண்டு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.</p><p>சந்தேகநபரான, அப்பெண்ணின் காதலனை கைது செய்வதற்காக, நாரஹேன்பிட்ட மற்றும் குருந்துவத்த பொலிஸ் நிலையங்களால் நேற்று (30 ஆம் திகதி) இரண்டு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.</p><p>சனிக்கிழமை (29) பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் யுவதி ஒருவர் காரில் கடத்திச் செல்லப்படுவதாக பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு தகவல் கிடைத்த நிலையில் நாரஹேன்பிட்டி பொலிஸார் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.</p><h2>காரை நோக்கி துப்பாக்கிச்சூடு&nbsp;</h2><p>இதன்படி, நாரஹேன்பிட்டியிலிருந்து நாவல நோக்கிப் பயணித்த காரை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்ட போதிலும், சாரதி அதனை நிறுத்தாமல் தொடர்ந்து செலுத்திச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef91a40b-06a5-4d9f-a16f-a17c54976805/26-6a94e063840a2.webp' /></p><p>
</p><p>
எனினும், உத்தரவையும் மீறி கார் தொடர்ந்து சென்றதால், பொலிஸார் காரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி அதனை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p> 

இதன்போது காரை செலுத்திய நபர் வாகனத்தை கைவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில், பொலிஸார் மேற்கொண்ட சோதனையில், காருக்குள் 26 வயதான யுவதி ஒருவர் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி பீடத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக தனது குடும்பத்தினருடன் மாநாட்டு மண்டபத்திற்கு வந்திருந்தபோதே&nbsp; யுவதியின் காதலனால் கடத்தப்பட்டமை தெரியவந்திருந்தது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">வெளியான காரணம்</span></p><p>யுவதி தனது காதலனுக்குத் தெரிவிக்காமல் பட்டமளிப்பு விழாவிற்கு வந்திருந்த நிலையில், அவர் கடத்தப்படுவதாக யுவதியின் தந்தை பொலிஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், தப்பிச்சென்ற சந்தேகநபர் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர் எனவும், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>இதன்படி, சந்தேகநபரை , கைது செய்வதற்காக, நாரஹேன்பிட்ட மற்றும் குருந்துவத்த பொலிஸ் நிலையங்களால் நேற்று (30 ஆம் திகதி) இரண்டு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p>இச்சம்பவம் தொடர்பாக குருந்துவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T02:01:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையில் மாற்றம் - வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fuel-price-revision-today-new-fuel-prices-1788138191"></link>
            <id>https://ibctamil.com/article/fuel-price-revision-today-new-fuel-prices-1788138191</id>
            <summary type="text">உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளமையால் இலங்கையிலும் எரிபொருள் விலையைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் பல்வேறு தரப்பினரும் கோரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளமையால் இலங்கையிலும் எரிபொருள் விலையைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.</p><p>​சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரிக்கும் போதெல்லாம், அந்தப் சுமையை மக்கள் மீது சுமத்தி எரிபொருள் விலையை உயர்த்தும் அரசாங்கம், உலகச் சந்தையில் விலை குறையும் போது அதன் நன்மையை மக்களுக்கு வழங்கவில்லை என்றும் மக்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.</p><p>இந்நிலையில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைத் திருத்தத்துக்கு இணங்க, தாமும் விலைகளைக் குறைக்கவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி (LIOC) நிறுவனமும் அறிவித்துள்ளது.</p><p></p><h2>பெட்ரோலின் விலை</h2><p>
</p><p>
முன்னதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளைக் திருத்தியமைத்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b93a8ab-33f2-4f5c-b763-36b6df38070d/26-6a94d60d8e2c2.webp' /></p><p>அதற்கமைய, ஒரு லீற்றர் ஒக்டென் 92 பெட்ரோலின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டு 399 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது</p><p>ஒக்டென் 95 பெட்ரோலின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு 475 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T01:36:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2.00 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-strong-winds-across-parts-today-1788139263"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-strong-winds-across-parts-today-1788139263</id>
            <summary type="text">மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (31.08.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.</p><p> 

வடமேல் மாகாணத்தில் சிறிய அளவில் மழை பெய்யக்கூடும் என்பதுடன், ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>காற்று மற்றும் மின்னல்</h2><p>மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99a26aa0-2b0f-4989-bb05-20bfa47468bc/26-6a94d8ddcb57c.webp' /></p><p>

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><h2>வறட்சியான வானிலை</h2><p> </p><p>நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96f2c34b-6b91-4843-9f80-86a0f46c17ac/26-6a94d8dd1c53a.webp' /></p><p>

அதேநேரம், சூரியனின் தோற்ற தென்திசை நோக்கிய சார்பு இயக்கத்தின் காரணமாக, ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. </p><p>

அதற்கிணங்க இன்று (31) நண்பகல் 12.10 அளவில் நேரியகுளம், பூனேவ, கெப்பித்திகொல்லாவ, பன்குளம் மற்றும் சிங்கபுர ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T01:33:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[AI மூன்றாம் உலகப் போர் - ஆப்பிளின் தந்திரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/apple-ai-strategy-amid-tech-war-1788139403"></link>
            <id>https://news.lankasri.com/article/apple-ai-strategy-amid-tech-war-1788139403</id>
            <summary type="text">Apples AI strategy amid tech war: Apple முதலில் வருவது முக்கியமல்ல, சரியான தயாரிப்பை உருவாக்குவது தான் முக்கியம் என்ற அணுகுமுறையை AI-யிலும் பின்பற்றுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Apples AI strategy amid tech war: Apple முதலில் வருவது முக்கியமல்ல, சரியான தயாரிப்பை உருவாக்குவது தான் முக்கியம் என்ற அணுகுமுறையை AI-யிலும் பின்பற்றுகிறது.</p><p>
</p><h2>
AI மூன்றாம் உலகப் போர்</h2><p>தொழில்நுட்ப உலகில் தற்போது AI (Artificial Intelligence) மீது முன்னிலை பெறும் போட்டி, “AI மூன்றாம் உலகப் போர்” என அழைக்கப்படுகிறது.
</p><p>
OpenAI, Google, Anthropic, Meta, xAI, Microsoft போன்ற நிறுவனங்கள், நூற்றுக்கணக்கான பில்லியன் டொலர்கள் முதலீடு செய்து, மிகப்பெரிய AI மாடல்கள் மற்றும் தரவு மையங்களை உருவாக்கி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bf8f62a-c653-425f-b0d8-07ca49236ca6/26-6a94d78c8881b.webp' /></p><p>
</p><h2>
பில்லியன்களில் முதலீடு&nbsp;செய்யும் டெக் நிறுவனங்கள்</h2><p>OpenAI-யின் Stargate Project மட்டும் அடுத்த நான்கு ஆண்டுகளில் 500 பில்லியன் டொலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

Google, Meta, Amazon, Microsoft ஆகியவை 2026-இல் மட்டும் 150-220 பில்லியன் டொலர் வரை செலவழிக்கின்றன. Anthropic, xAI போன்ற புதிய நிறுவனங்களும் பில்லியன் கணக்கில் முதலீடு செய்து வருகின்றன.
</p><p>
இந்த போட்டி வெறும் மென்பொருள் மட்டுமல்ல, சிப்கள், மின்சாரம், தரவு மையங்கள், பொறியாளர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியவற்றை கைப்பற்றும் போராட்டமாக மாறியுள்ளது.
</p><p></p><p>ஆனால், Apple வேறு பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது. OpenAI, Google போன்ற நிறுவனங்கள் பெரும் முதலீடு செய்து AI-யை முன்னெடுத்து வரும் நிலையில், Apple காத்திருந்து சரியான தருணத்தில் தன் AI-யை வலுப்படுத்தும் தந்திரத்தை பின்பற்றுகிறது.</p><p>

Apple, Google-ன் Gemini AI உடன் கூட்டாண்மை செய்து, தன் Apple Intelligence மற்றும் புதிய Siri-யை அறிமுகப்படுத்தியுள்ளது. Tim Cook-ன் பழைய வாக்குமூலத்தைப் போல, Apple “முதலில் வருவது முக்கியமல்ல, சரியான தயாரிப்பை உருவாக்குவது தான் முக்கியம்” என்ற அணுகுமுறையை AI-யிலும் பின்பற்றுகிறது.
</p><p></p><p>Apple-க்கு 2.5 பில்லியன் சாதனங்கள் என்ற வலுவான விநியோக வலையமைப்பு உள்ளது. AI-யின் இறுதி வெற்றியாளர்கள் யார் என்ற தெளிவு கிடைக்கும் வரை, Apple காத்திருந்து, பின்னர் தன் சாதனங்கள் மூலம் AI-யை உலகளாவிய பயனர்களிடம் கொண்டு செல்லும் வாய்ப்பு உள்ளது.
</p><p>
இதனால், Apple-ன் தந்திரம் சரியான தருணத்தில் களமிறங்கும் பொறுமையான காத்திருப்பாகக் கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T01:20:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[EPDP இன் பங்காளிகளான சுமந்திரன் தரப்பிற்கு தமிழ் தாய்மார்களுடைய கண்ணீர் பயணத்தில் கரம் கொடுக்க மனம் வராதுதான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/itak-ignored-support-for-the-tamil-people-1788138768"></link>
            <id>https://ibctamil.com/article/itak-ignored-support-for-the-tamil-people-1788138768</id>
            <summary type="text">இன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், யாழ்ப்பாணத்தில் தாய்மார்களும் ஏனையவர்களும் வீதியில் நின்று நெஞ்சம் வெடிக்கக் கண்ணீரோடும் ஏக்கத்தோடும் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், யாழ்ப்பாணத்தில் தாய்மார்களும் ஏனையவர்களும் வீதியில் நின்று நெஞ்சம் வெடிக்கக் கண்ணீரோடும் ஏக்கத்தோடும் நீதி கேட்கும்போது, "இந்த மாநாட்டிற்கும் போராட்டத்திற்கும் தமிழரசுக்கட்சி பங்கேற்காது, ஆதரவும் இல்லை" என்று மிகச் சாதாரணமாக அறிக்கையை விட்டுவிட்டு ஒதுங்கிக்கொண்டது இந்தச் சுமந்திரன் தலைமையிலான தமிழரசுக்கட்சி.</p><p>
அடுத்ததற்கெல்லாம் நாங்கள் தமிழ் மக்களினுடைய ஏகப்பிரதிநிதிகள். வடகிழக்கில் வாழுகின்ற தமிழர்கள் மக்கள் அதிக அளவில் வாக்களித்தது எங்களுக்குத்தான். எங்களுக்குத்தான் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள். நாங்கள்தான் தமிழ்த்தேசியவாதிகள். எங்களிடம்தான் தமிழ்த்தேசியம் இருக்கிறது. நாங்கள்தான் தமிழ்த்தேசியத்தைக் கட்டிக்காக்கிறோம். இப்படி அடிக்கடி முழங்கிக் கொள்கின்றவர்கள் நேற்று அரசியல் குழு கூட்டத்தை நிகழ்நிலை (Zoom) இல் நடத்தியிருக்கிறார்கள்.</p><p>
"இந்த மாநாட்டிற்கு ஏன் போகக் கூடாது?" என ஶ்ரீநேசன் எம்பி கேள்வி எழுப்பியபோது, "எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை" என்று சாக்குப்போக்குச் சொல்லியிருக்கிறார் சுமந்திரன். அதற்கு மட்டக்களப்பு முன்னாள் உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், "நாங்கள் ஸ்ரீதர் தியேட்டர் வாசலில் போய் நின்றால் எங்களை வாருங்கள் என்று அழைப்பு விடுப்பார்களா ?" என்று கேட்க பதிலளிக்க வழியின்றி zoom மீட்டிங்கை விட்டே சுமந்திரன் நழுவி ஓடியிருக்கிறார்.</p><p>
அழைப்பு வரவில்லை என்ற இவர்களின் அப்பட்டமான பொய்யை, காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவியிடம் நாம் கேட்டபோது சுமந்திரனின் வீடு தேடிச் சென்று, அவர் இல்லாததால் அவரின் மகளிடமே அழைப்புக் கடிதத்தைக் கையளித்ததாகச் சான்றுகளோடு கூறியுள்ளார்.&nbsp;</p><p>

ஆனால், அந்த தாய்மார் கொடுத்த கடிதத்தில் 'தமிழரசு கட்சி' என்பதற்குப் பதிலாகப் பிழையாக 'தமிழரசு காட்சி' என்று எழுதப்பட்டிருந்ததாம் இதை வைத்துக் கொண்டு, தன்னை அவமதித்துவிட்டார்கள் என்று சுமந்திரன் தரப்பு புலம்பியதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிகின்றன.</p><p>
சுமந்திரன் அவர்களே.

வீதியில் நின்று போராடும் அந்தத் தாய்மார் ஒன்றும் பல்கலைக்கழகத்தில் ப (PhD) பட்டமோ, சட்டத்துறையில் பட்டமோ பெற்றுவிட்டு வீதிக்கு வரவில்லை! இந்த மண்ணிற்காகவும் தமிழ்த் தேசியத்திற்காகவும் பெற்ற பிள்ளைகளையும் உறவுகளையும் தொலைத்துவிட்டு, முதுமையிலும் தள்ளாத வயதிலும் கண்ணீரோடு நீதிக்காக அலைபவர்கள். நம் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கும் தாயைப் போன்றவர்கள். அவர்களது எழுத்துப் பிழையை ஆராய்ந்து அரசியல் செய்யும் உங்களுக்குச் சிறிதளவாவது மனசாட்சி இருக்கிறதா?</p><p>
சிங்களச் சமூகத்திற்கோ கொழும்பு மேல்தட்டு வர்க்கத்திற்கோ ஒரு பிரச்சனை என்றால் மூக்கு வியர்க்க ஓடிப்போய் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யத் தெரிந்த இவர்களுக்கு, சொந்த இன தாய்மார்களின் கண்ணீரும் நியாயமான போராட்டமும் மட்டும் கசக்கிறதோ?&nbsp;</p><p>தான் வாதாடிய வழக்கறிஞர் தொழில் பட்டியலைச் சமூக ஊடகங்களில் தன் விசிறிகளை வைத்துப் பரப்பி, தன்னை ஒரு 'சட்டரீதியான கிங் மேக்கர்' என்றும், தமிழினத்தின் மீட்பர் என்றும் போஜிக்க வைக்கும் சுமந்திரனிடம் கேட்கிறோம்:</p><ul><li>தமிழ் மக்களின் காணி அபகரிப்புக்கோ, அரசியல் கைதிகளின் விடுதலைக்கோ, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கோ சட்டரீதியாக நீர் பெற்றுத் தந்த ஒரு துளி தீர்வுதான் என்ன?</li><li>நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கித் தொழில் தர்மத்தின் பெயரால் வாதாடியதை, தமிழ்த் தேசியத்திற்கான வரலாற்றுச் சாதனையாகக் காட்டி எத்தனை காலம்தான் இந்த மக்களை ஏமாற்றப் போகிறீர்கள்?</li><li>தமிழ் மக்களின் இரத்தத்தில் கறைபடிந்த அப்பட்டமான தமிழர் விரோத சக்தியான ஈபிடிபி (EPDP) உடனெல்லாம் ஸ்ரீதர் தியேட்டர் வாசலில் கை குலுக்கி, அரசியல் பங்காளிகளாக நின்று பேரம் பேசத் தெரிந்த உங்களுக்கு, சொந்த மக்கள் வீதியில் நின்று போராடும்போது மட்டும் "கட்சி கலந்து கொள்ளாது" என்று புறக்கணித்து ஓட எப்படி மனம் வருகிறது?</li></ul><p>

உள்ளூராட்சி மன்ற அதிகாரத்தைக் கைப்பற்ற ஈபிடிபியின் அரசியல் பங்காளிகளாக மாறியுள்ள சுமந்திரன் தரப்பால் ஒருபோதும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை எடுக்க முடியாது என்பதும், தமிழர்களின் உரிமைக்கான உண்மையான குரலாக நிற்க முடியாது என்பதும் எப்போதோ தெரிந்த உண்மை. </p><p>இதனால்தான் இன்றைய காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச மாநாட்டைக் கண்டு தமிழர் தேசத்தின் திரட்சியைக்கண்டு அஞ்சியபடி இவர்கள் ஓடி ஒளிந்திருக்கிறார்கள்.</p><p>

மக்களின் உண்மையான வலிகளைப் புறக்கணித்துவிட்டு, தமிழர் விரோத சக்திகளோடு கூட்டணி வைத்துக்கொண்டு, தங்களைத் 'தமிழ்த் தேசியத்தின் உயிர்மூச்சு' என்று கூச்சமே இல்லாமல் சொல்லிக்கொள்ளும் அப்பட்டமான தமிழர் விரோதப் போக்கில் பயணிக்கும் இந்தச் சுமந்திரன் தரப்பிற்கு, இந்த மண்ணில் தமிழர்களுக்கான அரசியலை முன்னெடுப்பதற்கு எந்தவொரு தகுதியும் அருகதையும் எள்ளளவும் கிடையாது எனப் பலரும் ஆங்காங்கே அங்கலாய்த்துக்கொள்கிறார்களாம்.</p><p>

சில வேளைகளில் இன்றைய காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய அந்த மாநாட்டில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத், நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன், நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் இவர்களுக்கு எதிராக கட்சியினுடைய முடிவை மீறியதாக சில வேளைகளில் கடிதம் கூட அனுப்பலாம்.&nbsp;</p><p>

அப்படி இந்த சுமந்திரன் என்று கையப்பம் இட்டு ஒரு கடிதத்தை எழுதி அனுப்பினால் ஈழத்து தமிழ் மக்களே நீங்களே தீர்மானியுங்கள். தமிழ் தேசிய அரசியலில் இவர்கள் இருக்க வேண்டுமா இல்லையா என்பதை.</p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T01:19:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவும் இஸ்ரேலுமே உண்மையான எதிரிகள் ; ஈரான் உச்ச தலைவர் அதிரடி கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-and-israel-are-real-enemies-iran-supreme-leader-1788112414"></link>
            <id>https://canadamirror.com/article/us-and-israel-are-real-enemies-iran-supreme-leader-1788112414</id>
            <summary type="text">அமெரிக்காவும் இஸ்ரேலுமே இஸ்லாமிய ஒற்றுமைக்கு &quot;உண்மையான எதிரிகள்&quot; என ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவும் இஸ்ரேலுமே இஸ்லாமிய ஒற்றுமைக்கு "உண்மையான எதிரிகள்" என ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.
</p><p>
இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் தங்களின் "உண்மையான எதிரியை" இனம் கண்டு, அதன் திட்டங்களைப் புரிந்து கொண்டு எதிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>

"இஸ்லாமிய ஒற்றுமை வாரம்" குறித்த செய்தியை வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94fc2c31-5395-46d0-895a-b4af48cc5a26/26-6a946e1fa462c.webp' /></p><p>ஈரான் மற்றும் பிற இஸ்லாமிய நாடுகளின் மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதற்காகப் பல்வேறு இன, கலாசார, சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் புவியியல் ரீதியான வேறுபாடுகளை அமெரிக்காவும் இஸ்ரேலும் சாக்குப்போக்குகளாகப் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
அத்துடன், ஈரானியர்கள் தங்களுக்குள் எந்தவித வேறுபாடுகளையும் அனுமதிக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
விரும்பத்தக்க மற்றும் ஆதிக்கம் செலுத்தும் இஸ்லாமிய நாகரிகத்தை அடைவதற்கு முஸ்லிம்களிடையே ஒற்றுமை அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
வொஷிங்டனும் டெல் அவிவும் ஈரானின் எதிரிகள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகிற்கும் "உண்மையான எதிரிகள்" என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

கடந்த பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் மீது கூட்டுத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்ற நிலை அதிகரித்தது. இதனையடுத்து, அமெரிக்காவின் சொத்துக்கள் அமைந்துள்ள பிராந்திய நாடுகளின் மீது ஈரான் பதிலடித் தாக்குதல்களை நடத்தியது.
</p><p>
போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் கடந்த ஜூன் மாதம் ஈரானும் அமெரிக்காவும் 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போதிலும், அந்த இடைக்கால ஒப்பந்தம் விரைவில் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-31T01:04:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தில் இருவருக்கு மரண தண்டனை ; நடந்தது என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-high-court-dramatic-two-sentenced-death-1788106852"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-high-court-dramatic-two-sentenced-death-1788106852</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>திருநெல்வேலி பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு மதுபோதையில் இளைஞர் ஒருவர் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் 09 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
</p><p>
இதையடுத்து, 09 பேரும் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டு, சட்டமா அதிபர் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, நீண்டகாலமாக விசாரணைகள் இடம்பெற்று வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66b45fbb-0a3d-4302-9451-be11f95a36b1/26-6a9458657a821.webp' /></p><p>

இந்நிலையில், குறித்த வழக்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, 09ஆம் எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தீர்மானித்தது.
</p><p>
இதனையடுத்து, 09ஆம் எதிரிக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். </p><p>அதேவேளை, ஏனைய 08 எதிரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாத நிலையில், அவர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது.
</p><p>
இதேவேளை, பருத்தித்துறை வல்லிபுரம் குறிச்சி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 2014ஆம் ஆண்டு வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கும் மரண தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் தீர்ப்பளித்துள்ளார்.
</p><p>
இதன்மூலம், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்ற இருவேறு கொலை வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இருவருக்கு ஒரே நாளில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T01:04:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடம்பில் கெட்ட கொழுப்பை குறைக்க இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/give-up-these-habits-to-reduce-bad-cholesterol-1788137839"></link>
            <id>https://jvpnews.com/article/give-up-these-habits-to-reduce-bad-cholesterol-1788137839</id>
            <summary type="text">உலகளவில் இதய நோய் ஒரு பெரிய கவலைக்குரிய ஒன்றாக உள்ளது. இப்படி இதய நோயால் ஒருவர் பாதிக்கப்படுவதற்கு காரணம் அவரது மோசமான வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளவில் இதய நோய் ஒரு பெரிய கவலைக்குரிய ஒன்றாக உள்ளது. இப்படி இதய நோயால் ஒருவர் பாதிக்கப்படுவதற்கு காரணம் அவரது மோசமான வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள் போன்றவை தான். இவை ஒரே நாளில் இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. மாறாக தினசரி மேற்கொள்ளும் போது, அதன் விளைவாக இதய ஆரோக்கியத்தை பாழாக்குகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4c8c761-d7bf-41a1-b859-4e3505509383/26-6a94d171e3ea1.webp' /></p><p>ஆனால் நாம் தெரியாமல் செய்யக்கூடிய சில காலை பழக்கங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு தடையாக இருக்கும் கெட்ட கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கலாம். உதாரணமாக அதிக சர்க்கரை அல்லது நிறைவுற்ற கொழுப்பு கொண்ட காலை உணவைத் தேர்ந்தெடுப்பது, உடற்பயிற்சியைத் தவிர்ப்பது போன்றவை உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிக்க வழிவகுத்து, நீண்ட காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இப்போது உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும் சில காலை பழக்கங்களைக் காண்போம். இந்த பழக்கங்கள் இருந்தால் உடனே கைவிடுங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76913eeb-2882-455a-8341-ca9a30348ab1/26-6a94d17132950.webp' /></p><h4>காலை உணவை தவிர்ப்பது
</h4><p>காலை உணவைத் தவிர்ப்பது கெட்ட கொழுப்பு அதிகரிப்புடன் வலுவாக இணைக்கப்பட்டுள்ளது. காலை உணவை தவறாமல் சாப்பிடுபவர்களுடன் ஒப்பிடும் போது காலை உணவைத் தவிர்க்கும் நபர்களுக்கு மொத்த கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பின் அளவு அதிகம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.</p><h4>அதிக கொழுப்புள்ள அல்லது பொரித்த காலை உணவை உண்பது
</h4><p>காலை வேளையில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் எண்ணெயில் பொரித்த காலை உணவை உட்கொள்வது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்க வழிவகை செய்யும். ஏனெனில் இதில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் ட்ரான்ஸ் கொழுப்புகள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை நேரடியாக அதிகரிக்கும்.</p><h4>காலையில் அதிக மன அழுத்தத்தை அனுபவிப்பது</h4><p>
பொதுவாக காலையில் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் இயற்கையாகவே அதிகரிக்கும். இந்நிலையில் காலையில் அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்புவது அல்லது பதட்டத்துடன் நாளைத் தொடங்குவது, கூடுதல் மன அழுத்தத்தை அதிகரிக்கும். நாள்பட்ட காலை மன அழுத்தம் அதிக LDL அளவு மற்றும் அதிகரித்த வீக்கத்திற்கு பங்களிக்கக்கூடும். இது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.</p><h4>உடலுழைப்பில்லாமை</h4><p>காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி, ஸ்ட்ரெட்ச்சிங் போன்ற லேசான உடற்பயிற்சிகளை செய்யாமல் இருந்தால், கொழுப்பைக் கட்டுப்படுத்தும் உடலின் திறனைக் கட்டுப்படுத்தும். அதுவும் காலையில் செய்யும் உடற்பயிற்சி இரவு நேர கொழுப்பு உற்பத்தியை எதிர்த்து, சீரான கொழுப்பு சுயவிவரத்தை பராமரிக்க உதவும் என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.</p><h4>தாமதமாக தூங்கி எழுவது
</h4><p>காலையில் தாமதமாக தூங்கி எழுவது அல்லது ஒழுங்கற்ற தூக்க முறையை மேற்கொள்வது உடலின் சர்க்காடியன் தாளத்தை சீர்குலைக்கிறது. கல்லீரலில் உள்ள கொழுப்பு தொகுப்பு தான் தினசரி சர்க்காடியன் தாளத்தைப் பின்பற்றுகிறது. மேலும் ஒழுங்கற்ற காலை வழக்கங்கள் வளர்சிதை மாற்ற செயல்முறைகளை தவறாக சீரமைக்கும். இது அதிக எல்.டி.எல் உற்பத்தி மற்றும் குறைந்த எச்.டி.எல் அளவுகளுக்கு பங்களிக்கிறது.</p>]]></content>
            <updated>2026-08-31T01:02:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[தர்ஷா குப்தா காதலர் இவர்தான்.. நெருக்கமான போட்டோ இணையத்தில் வைரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/dharsha-gupta-reveal-boyfriend-photo-1788137613"></link>
            <id>https://cineulagam.com/article/dharsha-gupta-reveal-boyfriend-photo-1788137613</id>
            <summary type="text">நடிகை தர்ஷா குப்தா தொடர்ந்து இன்ஸ்டாக்ராமில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு இளசுகளை கவர்ந்து வருகிறார்.சமீபத்தில் அவர் app ஒன்றில் இணைந்து, அதில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை தர்ஷா குப்தா தொடர்ந்து இன்ஸ்டாக்ராமில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு இளசுகளை கவர்ந்து வருகிறார்.</p><p>சமீபத்தில் அவர் app ஒன்றில் இணைந்து, அதில் தன்னுடன் பணம் செலுத்தி வீடியோ காலில் பேசலாம் என அறிவித்து இருந்தது சர்ச்சை ஆனது. தான் எந்த தவறான விஷயமும் செய்யவில்லை என அவர் விளக்கம் கொடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d401485-301a-425b-9525-bcb1de1c497a/26-6a94d0908b768.webp' /></p><h2>காதலர் போட்டோ
</h2><p>இந்நிலையில் தர்ஷா குப்தா தனது காதலர் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். மிக நெருக்கமாக காதலருக்கு முத்தம் கொடுக்கும் போட்டோவை அவர் வெளியிட்டுள்ளார்.
</p><p>அது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T01:00:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் அரியணை ஏற துடிக்கும் ராஜபக்ச அணி.. ரில்வின் சில்வாவின் கடும் விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rajapaksa-allaince-npp-government-tilwin-silva-1788136764"></link>
            <id>https://tamilwin.com/article/rajapaksa-allaince-npp-government-tilwin-silva-1788136764</id>
            <summary type="text">பெரும் ஊழல்வாதிகளும் கொலைகாரக் கும்பலைச் சேர்ந்தவர்களுமான ராஜபக்ச அணியினர்
மீண்டும் இந்த நாட்டின் அரியணை ஏறுவதற்கு நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெரும் ஊழல்வாதிகளும் கொலைகாரக் கும்பலைச் சேர்ந்தவர்களுமான ராஜபக்ச அணியினர்
மீண்டும் இந்த நாட்டின் அரியணை ஏறுவதற்கு நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்க
மாட்டார்கள் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா
தெரிவித்தார்.
</p><p>
சிறந்த திட்டமிடலுடன் தற்போதைய அரச நிர்வாகம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
என்றும், வெளியகத் தாக்கங்களினால் பொருளாதார ரீதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை
ஏற்றுக்கொள்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>

தேசிய மக்கள் சக்தி அரசின் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டமிடல்கள்
தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,

"பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்கள் உருவாக்கிய தேசிய மக்கள் சக்தி
அரசு, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றது.</p><h2>பொருளாதார நிலை&nbsp;</h2><p> </p><p>எனினும், சகல
வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதை
ஏற்றுக்கொள்கின்றோம்.

வங்குரோத்து நிலையடைந்து வீழ்ச்சியடைந்த அரச கட்டமைப்புடனான அரசையே ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்க பொறுப்பேற்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b8d6caa-bd83-4343-9ef5-fb5b163bf94a/26-6a94cd3e60e93.webp' /></p><p>
</p><p>
கடந்த காலங்களில் போதைப்பொருள் வர்த்தகத்துக்கும் பாதாளக் குழுக்களுக்கும் அரச
அனுசரணை வழங்கப்பட்டிருந்ததுடன் செல்வந்தர்கள் எவ்வித அச்சமுமின்றி ஊழல்,
மோசடிகளில் ஈடுபட்டனர்.
</p><p>
தற்போது அந்த நிலைமை மாற்றியமைக்கப்பட்டு சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக
ஆக்கப்பட்டுள்ளது. பிரபுக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் வழங்கப்பட்டிருந்த
விசேட சிறப்புரிமைகள் மற்றும் வரப்பிரசாதங்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள் இன்று கூட்டணியாக
ஒன்றிணைந்துள்ளனர்.</p><p> ஊழல், மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள்
துரிதப்படுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் அச்சமடைந்துள்ளனர். அது அவர்களின்
தனிப்பட்ட பிரச்சினையே தவிர தேசிய பிரச்சினை அல்ல.

அரச நிர்வாகக் கட்டமைப்பில் ஒருசில தரப்பினரிடம் குறைபாடுகள் காணப்படுவதை
அவதானிக்க முடிகின்றது.</p><p> கடந்த கால மோசடியான நிர்வாகக்மைப்புக்குப்
பழக்கப்பட்டவர்கள் குறித்தும் நிர்வாகக் கட்டமைப்பின் ஊடாக உரிய நடவடிக்கைகள்
எடுக்கப்படும்." என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T00:46:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கம் நீதித்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி! அஜித் பி பெரேரா பகிரங்க குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-is-trying-to-take-control-judiciary-ajith-p-1788135885"></link>
            <id>https://ibctamil.com/article/govt-is-trying-to-take-control-judiciary-ajith-p-1788135885</id>
            <summary type="text">அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தின் மூலம் அரசாங்கம் நீதித்துறையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தின் மூலம் அரசாங்கம் நீதித்துறையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>
இந்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றத்தின் அனைத்து 13 நீதியரசர்களும் அடங்கிய முழுமையான அமர்வு உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><h2>நீதித்துறையின் சுதந்திரம்</h2><p>

இதன்போது, மேலும் கருத்து வெளியிட்ட அஜித் பி பெரேரா, “நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர், 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கடும் கவலை தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f929ed60-6179-4cfd-b6de-9bfa1d03f592/26-6a94cd556703c.webp' /></p><p>

இத்திருத்தம் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் 14(1) பிரிவுக்கு முரணானது என்றும், பதவியிலிருக்கும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.</p><p>
மேலும், இத்திருத்தத்தைக் கொண்டுவருவதற்கு முன்னர் எந்தெந்த அமைப்புகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டது மற்றும் ஒட்டுமொத்த நீதித்துறை மறுசீரமைப்புத் திட்டம் என்ன என்பது குறித்து விளக்குமாறு ஐ.நா பிரதிநிதி அரசாங்கத்திடம் கேள்விகளை எழுப்பியிருந்தார்.</p><p>

 ஐ.நாவின் கேள்விகளுக்கு அரசாங்கம் அளித்துள்ள பதில் மிகவும் மோசமானது. முழுமையான நீதித்துறை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகவே இத்திருத்தம் செய்யப்படுகிறது. இதற்கு 2026 ஜூலையில் அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் அரசு கூறியுள்ளது.&nbsp;</p><p>
ஆனால், குறிப்பிட்ட எந்த திகதியும் இல்லாத இந்த அறிக்கை ஒரு அப்பட்டமான பொய்யாகும். அரசாங்கம் இலங்கை மக்களை மட்டுமன்றி சர்வதேச அமைப்பையும் ஏமாற்றப் பார்க்கிறது.” என்றார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T00:39:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாங்காக் சென்ற ரம்யா பாண்டியன்.. அழகிய புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ramya-pandian-dazzling-stills-from-bangkok-1788136529"></link>
            <id>https://cineulagam.com/article/ramya-pandian-dazzling-stills-from-bangkok-1788136529</id>
            <summary type="text">நடிகை ரம்யா பாண்டியன் சில படங்களில் நடித்து இருந்தாலும் அவரை அதிகம் பிரபலம் ஆக்கியது அவரது மொட்டை மாடி போட்டோஷூட் மற்றும் பிக் பாஸ் ஷோ தான்.

அவர் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை ரம்யா பாண்டியன் சில படங்களில் நடித்து இருந்தாலும் அவரை அதிகம் பிரபலம் ஆக்கியது அவரது மொட்டை மாடி போட்டோஷூட் மற்றும் பிக் பாஸ் ஷோ தான்.
</p><p>
அவர் திருமணமாகி செட்டில் ஆகிவிட்ட நிலையில் தொடர்ந்து கிளாமர் ஸ்டில்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.</p><p>

தற்போது பாங்காக் சென்றுள்ள அவர் அங்கு அழகிய உடையில் வலம் வந்த ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ பாருங்க.</p>]]></content>
            <updated>2026-08-31T00:35:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜே.ஆர். கூட செய்யாத சர்வாதிகாரம் ; அரசாங்கத்தை கடுமையாக சாடிய திலித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dilit-slams-dictatorship-even-jr-did-not-commit-1788136114"></link>
            <id>https://jvpnews.com/article/dilit-slams-dictatorship-even-jr-did-not-commit-1788136114</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவ்கூட நடைமுறைப்படுத்தாத அளவிலான சர்வாதிகாரப் போக்கை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவ்கூட நடைமுறைப்படுத்தாத அளவிலான சர்வாதிகாரப் போக்கை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>
</p><p></p><p>மகாநாயக்க தேரர்களின் அனுசாசனையையும் ஏற்றுக்கொள்ளாத நிலைக்கு தற்போதைய அரசாங்கம் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

சர்வஜன அதிகாரத்தின் மொனராகலை மாவட்ட தொகுதி தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (30) பிற்பகல் புத்தல சந்தை வளாகத்தில் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdf63a42-4c35-4f20-8e56-c501e4fdc3f5/26-6a94cab34ba35.webp' /></p><p> இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே திலித் ஜயவீர மேற்கண்ட கருத்துக்களை வெளியிட்டார்.
</p><p>
தற்போது நாட்டின் ஜனநாயகம் உச்சக்கட்ட சவாலுக்கு முகங்கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், எந்த ஜனாதிபதியும் இதுவரை மகாநாயக்க தேரர்களின் கருத்துக்களை புறக்கணிக்கும் வகையில் செயற்படவில்லை என்றும் தெரிவித்தார்.</p><p>

மேலும், இவ்வாறான அதிகாரமிக்க அரசியல் நிலை உருவாகுவதற்கு நாட்டு மக்கள் காரணமல்ல என்றும், சுயநல அரசியல்வாதிகளே அதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
</p><p>
தமது அரசியல் நடவடிக்கைகள் முற்போக்கு சக்திகளை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டவை எனக் குறிப்பிட்ட திலித் ஜயவீர, எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவாகச் செயற்படுவது இதன் நோக்கமல்ல என்றும் தெரிவித்தார்.
</p><p>
அரசியலில் குடும்பப் பின்னணி அல்லது பரம்பரை உரிமை மூலம் தலைமைத்துவம் கிடைக்கும் என்ற எண்ணம் மாற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
</p><p>
“அரசியலில் எதுவும் தந்தையின் உரிமையால் கிடைக்காது; மக்களின் அன்பின் மூலமே அரசியல் உரிமை கிடைக்கும்” எனவும் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T00:28:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஜித்தின் டேர்டெவில் படத்தில் ஷாலினியும் நடிக்கிறாரா? உண்மை இதுதான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/is-ajith-daredevil-have-shalini-in-guest-role-1788135945"></link>
            <id>https://cineulagam.com/article/is-ajith-daredevil-have-shalini-in-guest-role-1788135945</id>
            <summary type="text">அஜித் கார் ரேஸில் கலந்துகொள்வதற்காக சினிமாவில் இருந்து இடைவெளி எடுத்துக்கொண்டு இருக்கிறார். அவர் அடுத்து நடிக்கும் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அஜித் கார் ரேஸில் கலந்துகொள்வதற்காக சினிமாவில் இருந்து இடைவெளி எடுத்துக்கொண்டு இருக்கிறார். அவர் அடுத்து நடிக்கும் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.</p><p>அந்த படத்திற்கு டேர்டெவில் என டைட்டில் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதை ஷாலினி அஜித் தான் தயாரிக்க போகிறார்.</p><p>செப்டம்பர் மாதத்தில் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bd41f35-c09e-497d-bc7e-154ca14a3ed4/26-6a94ca0b3e6e2.webp' /></p><p>
</p><h2>ஷாலினி நடிக்கிறாரா?
</h2><p>இந்நிலையில் இந்த படத்தில் ஷாலினியை கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க ஆதிக் ரவிச்சந்திரன் முயற்சி செய்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
</p><p>இருப்பினும் ஷாலினி நடிக்க மறுத்துவிட்டாராம். அஜித்தை திருமணம் செய்த பிறகு ஷாலினி படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். தற்போது மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் எண்ணம் இல்லை என சொல்லிவிட்டாராம்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T00:25:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவின் முக்கிய பெட்ரோல் வழங்குநராக உருவெடுத்துள்ள இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-key-petrol-supplier-to-russia-1788135560"></link>
            <id>https://news.lankasri.com/article/india-key-petrol-supplier-to-russia-1788135560</id>
            <summary type="text">India becomes key petrol supplier to Russia: ரஷ்யாவிற்கு முக்கிய பெட்ரோல் விநியோக நாடாக இந்தியா மாறியுள்ளது.

உக்ரைனின் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல...</summary>
            <content type="html"><![CDATA[<p>India becomes key petrol supplier to Russia: ரஷ்யாவிற்கு முக்கிய பெட்ரோல் விநியோக நாடாக இந்தியா மாறியுள்ளது.
</p><p>
உக்ரைனின் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் உள்நாட்டு எரிபொருள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இதனால், ரஷ்யா தனது தேவைகளை பூர்த்தி செய்ய வெளிநாடுகளிலிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது.
</p><p>
ஆகஸ்ட் மாதத்தில், ரஷ்யா தினசரி 1,25,000 பீப்பாய் பெட்ரோல் (சுமார் 4.7 லட்சம் டன்) இறக்குமதி செய்துள்ளது. இதில் இந்தியா, துருக்கி, மொராக்கோ ஆகிய மூன்று நாடுகள் முக்கிய பங்காற்றின.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af75b6a7-312e-4733-9ea6-1739eb63c03c/26-6a94c88ab2c75.webp' /></p><p>குஜராத்தில் அமைந்துள்ள Nayara Energy-யின் Vadinar சுத்திகரிப்பு நிலையம் ரஷ்யாவின் Rosneft நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு ரஷ்யாவிற்கு பெருமளவில் பெட்ரோல் அனுப்பியுள்ளது.</p><p> கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இந்தியா சுமார் 10 லட்சம் பீப்பாய் பெட்ரோல் ரஷ்யாவுக்கு வழங்கியுள்ளது.</p><p></p><p>

2022 முதல் இந்தியா ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துள்ளது. ஜூன், ஜூலை மாதங்களில் இந்தியா தினசரி 2.6 மில்லியன் பீப்பாய் ரஷ்யா கச்சா எண்ணெய் வாங்கியுள்ளது. இதன் மூலம் தயாரிக்கப்பட்ட பெட்ரோல் மீண்டும் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.</p><p>

ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யாவின் பெட்ரோல் இறக்குமதியில் 55 சதவீதம் (சுமார் 2.6 லட்சம் டன்) தடை செய்யப்பட்ட கப்பல்கள் மூலம், 40 சதவீதம் இரகசிய ship-to-ship (STS) transfers மூலம் வந்ததாக எரிசக்தி ஆய்வு நிறுவனம் Vortexa தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>உக்ரைன் தாக்குதலால் ரஷ்யாவின் உள்நாட்டு பெட்ரோல் உற்பத்தி 70 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதனால், உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடான ரஷ்யா, தனது உள்நாட்டு தேவைக்காகவே பெட்ரோல் இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.</p><p>

இந்நிலையில் இந்தியா, ரஷ்யாவிற்கு எரிபொருள் வழங்கும் முக்கிய கூட்டாளியாக உருவெடுத்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T00:16:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாட்ஸ்அப் குழுவில் ரகசிய பணப் பரிமாற்ற வலையமைப்பு ; வெளிச்சத்துக்கு கொண்டு வந்த உண்மை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/secret-money-transfer-network-in-whatsapp-group-1788134790"></link>
            <id>https://jvpnews.com/article/secret-money-transfer-network-in-whatsapp-group-1788134790</id>
            <summary type="text">வாட்ஸ்அப் (WatsApp) குழு ஒன்றின் ஊடாக கோடிக்கணக்கான யூரோக்கள் சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒலிபரப்பு நிறுவனங்களின் (EBU) புலன...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாட்ஸ்அப் (WatsApp) குழு ஒன்றின் ஊடாக கோடிக்கணக்கான யூரோக்கள் சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒலிபரப்பு நிறுவனங்களின் (EBU) புலனாய்வுத் தகவல்கள் கூறுகின்றன.
</p><p>
"டிரேடர்ஸ் ஒஃப் கிரேட்டர் ஐரோப்பா" (Traders of Greater Europe) என்ற பெயரிலான 532 உறுப்பினர்களைக் கொண்ட வாட்ஸ்அப் குழு மூலமாக, எந்தவிதமான அதிகாரப்பூர்வ ஆவணப் பதிவுகளும் இன்றி பல நூறு மில்லியன் யூரோக்கள் ரொக்கமாக உலகம் முழுவதும் கைமாற்றப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4e6761b-78a9-42ab-831d-5519d4330bd7/26-6a94c588c55b3.webp' /></p><p>இந்த பணப் பரிமாற்ற வலையமைப்பு பல நாடுகளின் குற்றச் செயல்கள் போதைப்பொருள் கடத்தல் மனித கடத்தல் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு நிதி உதவி வழங்குதல் போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

எந்தவித மின்னணுப் பதிவுகளும் இல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் உலகம் முழுவதும் பணத்தை அனுப்பப் பயன்படும் பழமையான 'ஹவாலா' பணப் பரிமாற்ற முறை இதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
பெல்ஜிய நீதித்துறை மற்றும் ஐரோப்பிய காவல்துறையினர் மேற்கொண்ட சோதனைகளில் இந்த ரகசிய வலையமைப்பு கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
பெல்ஜியத்தில் நடந்த நீதிமன்ற வழக்கைத் தொடர்ந்து இந்தத் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
</p><p>
அத்துடன் ஒஸ்திரியா உள்ளிட்ட நாடுகளில் ஹவாலா முறையைப் பயன்படுத்தி மனிதக் கடத்தலில் ஈடுபட்ட குழுக்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-31T00:06:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்தான்புலில் துருக்கி, சவுதி, பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/turkiye-saudi-pakistan-meet-in-istanbul-1788134238"></link>
            <id>https://news.lankasri.com/article/turkiye-saudi-pakistan-meet-in-istanbul-1788134238</id>
            <summary type="text">Turkiye Saudi Pakistan meet in Istanbul: இஸ்தான்புலில் துருக்கி, சவுதி, பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் சந்திக்கவுள்ளனர்.

துருக்கி, சவுதி அரேபியா மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>Turkiye Saudi Pakistan meet in Istanbul: இஸ்தான்புலில் துருக்கி, சவுதி, பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் சந்திக்கவுள்ளனர்.
</p><p>
துருக்கி, சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள், திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) அன்று இஸ்தான்புலில் சந்திக்க உள்ளனர்.</p><p>

இந்த சந்திப்பு, மூன்று நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் நடைபெறுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cea65d4f-8c7b-4bc9-935e-b41bdbfd9142/26-6a94c3602b302.webp' /></p><p>அல்ஜசீரா வெளியிட்ட தகவலின்படி, இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு, பிராந்திய நிலைத்தன்மை, மற்றும் இராணுவ ஒத்துழைப்பு குறித்து முக்கியமான விவாதங்கள் நடைபெறவுள்ளன.
</p><p>
குறிப்பாக, மத்திய கிழக்கு மற்றும் தென் ஆசியாவில் அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்கள் குறித்து மூன்று நாடுகளும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன.</p><p>
</p><p></p><p>துருக்கி, சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை, கடந்த சில ஆண்டுகளில் பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தி வருகின்றன. இந்த சந்திப்பு, அந்த உறவுகளை மேலும் மேம்படுத்தும் முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.
</p><p>
சவுதி அரேபியா, சமீபத்தில் பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் ஆயுத உற்பத்தி துறையில் துருக்கியுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. பாகிஸ்தானும், துருக்கி மற்றும் சவுதியுடன் இராணுவ பயிற்சி மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்களில் ஈடுபட்டு வருகிறது.
</p><p>
இந்த சந்திப்பு, பிராந்தியத்தில் புதிய பாதுகாப்பு கூட்டணியை உருவாக்கும் வாய்ப்பாகக் கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T23:54:25+00:00</updated>
        </entry>
    </feed>
