<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-12T05:26:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாலமன் பாப்பையா உடலுக்கு முழு அரசு மரியாதை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/state-honors-for-solomon-pappaiahs-mortal-1789190447"></link>
            <id>https://ibctamilnadu.com/article/state-honors-for-solomon-pappaiahs-mortal-1789190447</id>
            <summary type="text">முழு அரசு மரியாதையுடன் தமிழறிஞர் சாலமன் பாப்பையா உடல் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா...</summary>
            <content type="html"><![CDATA[<p>முழு அரசு மரியாதையுடன் தமிழறிஞர் சாலமன் பாப்பையா உடல் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா வயது மூப்பின் காரணமாக நேற்று காலமானார்.
</p><p>
இனிய தமிழில் பாமர மக்களுக்கும் புரியும் வண்ணம் பேசும் வல்லமை படைத்தவர் சாலமன் பாப்பையா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98a2bb5a-f7f2-4d51-aec3-8b71a89657b3/26-6aa4e18828a2f.webp' /><br></p><p>
</p><p>
தமிழ் இலக்கியங்கள் குறித்து ஆற்றிய உரைகளால் பிரபலமானவர், இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p><p>

தமிழக அரசு சார்பில் அமைச்சர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் சாலமன் பாப்பையாக உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
</p><p>
இந்நிலையில் அரவது எக்ஸ் தள பக்கத்தில், சாலமன் பாப்பையா உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a0277df-5a80-4760-afd1-64b5e33cf2a6/26-6aa4e188d19db.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-12T05:22:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அரசியல் தலைவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/political-leaders-stage-hunger-strike-in-jaffna-1789190262"></link>
            <id>https://jvpnews.com/article/political-leaders-stage-hunger-strike-in-jaffna-1789190262</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கத்திற்கு எதிராக இன்று காலை (12) சாவகச்சேரியில் மாபெரும் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கத்திற்கு எதிராக இன்று காலை (12) சாவகச்சேரியில் மாபெரும் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p> 

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6835ed0-58b6-47bb-8d74-1e4e2a7cfa91/26-6aa4e0782943c.webp' /></p><h2>போராட்டம்</h2><p> </p><p>

அநுர அரசு பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு எந்தவிதமான முன்னேற்றகரமான செயற்பாடுகளை செயற்படுத்தவில்லை என்கின்ற அடிப்படையில் இந்த போராட்டம் சாவகச்சேரி பேருந்து நிலைய வளாகத்தில் முன்னெடுக்கப்படுகிறது. </p><p>

அத்துடன் அரசியல் கைதிகளுடைய விடுதலை, கையகப்படுத்தியிருக்கக்கூடிய காணிகளை விடுவித்தல், செம்மணி புதைகுழிக்கான நீதி கோரல், மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்தல் உள்ளிட்ட பல விடயங்களை முன்னிறுத்தியும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> 

இந்த போராட்டத்தில் தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T05:18:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழைய போகம்பர சிறைக்கு மாற்றப்படும் கைதிகள் - அதிகாரிகள் பற்றாக்குறையால் அதிரடி தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prisoners-transferred-to-the-old-bogambara-prison-1789189984"></link>
            <id>https://tamilwin.com/article/prisoners-transferred-to-the-old-bogambara-prison-1789189984</id>
            <summary type="text">கைதிகள் அடுத்த வாரம் பழைய போகம்பர சிறைக்கு மாற்றப்படுவார்கள் என இலங்கைச் சிறைச்சாலைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

சிறைச்சாலையின் புனரமைப்புப் பணிகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைதிகள் அடுத்த வாரம் பழைய போகம்பர சிறைக்கு மாற்றப்படுவார்கள் என இலங்கைச் சிறைச்சாலைத் திணைக்களம் அறிவித்துள்ளது. </p><p>

சிறைச்சாலையின் புனரமைப்புப் பணிகள் தற்போது நிறைவடைந்து வருவதாக சிறைத்துறை ஆணையாளர் எஸ்.கே. பள்ளேதென்ன தெரிவித்துள்ளார். </p><h2>


நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்க நடவடிக்கை</h2><p>
இதற்கமைய, கைதிகள் உடனடியாக சிறைக்கு மாற்றப்படுவார்கள் என்றும், இவ்வாறு மாற்றப்படும் கைதிகளில் பெரும்பாலோர் நீர்கொழும்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் மற்ற சிறைகளுக்கு மாற்றப்பட்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3831c7b4-256c-4292-a35f-8073a928fdc2/26-6aa4dfe6e43b0.webp' /></p><p> 


இதற்கிடையில், பழைய போகம்பர சிறையில் பணிகளை மேற்கொள்வதற்கு சிறை அதிகாரிகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதாகவும், இதற்குத் தீர்வாக ஓய்வுபெற்ற சிறை அதிகாரிகளை மீண்டும் பணியில் அமர்த்தத் திட்டங்கள் உள்ளதாகவும் எஸ்.கே. பள்ளேதென்ன தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T05:17:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது போர் தொடுத்ததற்கு வருத்தமில்லை ; சர்ச்சையை கிளப்பும் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-no-regret-over-iran-war-1789189454"></link>
            <id>https://canadamirror.com/article/trump-no-regret-over-iran-war-1789189454</id>
            <summary type="text">அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தலில் எத்தகைய அரசியல் தாக்கம் ஏற்பட்டாலும், ஈரான் மீது போர் தொடுத்த முடிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தலில் எத்தகைய அரசியல் தாக்கம் ஏற்பட்டாலும், ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு தாம் சிறிதும் வருந்தவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>


அமெரிக்க செய்தித் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின்போது இதனைத் தெரிவித்த அவர்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6a95889-2cc5-4765-b681-7c94a08e84d4/26-6aa4dd4fb288e.webp' /></p><p> </p><p>“வருத்தம் என்ற சொல்லுடன் எனக்கு உடன்பாடில்லை. மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் இதே நடவடிக்கையையே மேற்கொள்வேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>



ஈரான் மீதான இராணுவ நடவடிக்கையால் தமது ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்துள்ளதாகவும் சோர்வடைந்துள்ளதாகவும் கூறப்படுவதை நிராகரித்த ட்ரம்ப், ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுத்து நிறுத்தியதற்காக தமது ஆதரவாளர்கள் பெருமிதம் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
</p><p>


இடைக்காலத் தேர்தல் முடிவடைந்தவுடன் ஈரான் மீதான போர் முடிவுக்கு வந்துவிடும் என்றும், தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்த ஈரான் முயற்சிப்பதாகவும் ட்ரம்ப் கூறி வருகிறார்.
</p><p>


எனினும், போரின் காரணமாக மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் அதிகரித்துள்ளமை ஆளும் குடியரசுக் கட்சிக்கு தேர்தல் களத்தில் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது.</p><p>



இந்நிலையில், குடியரசுக் கட்சி நாடாளுமன்றப் பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொண்டால், 18 வயதைப் பூர்த்தி செய்த அனைத்து அமெரிக்கர்களுக்கும் 5,000 அமெரிக்க டொலர்களை வழங்குவதாக ட்ரம்ப் வாக்குறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T05:04:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[2 நாள் முடிவில் நடிகர் கார்த்தியின் சர்தார் 2 திரைப்படம் செய்துள்ள மொத்த வசூல்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actor-karthi-sardar-2-movie-box-office-details-1789187152"></link>
            <id>https://cineulagam.com/article/actor-karthi-sardar-2-movie-box-office-details-1789187152</id>
            <summary type="text">சர்தார் 2பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான படம் சர்தார். இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது, பாக்ஸ் ஆபிஸிலும் கல...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சர்தார் 2</h2><p>பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான படம் சர்தார்.</p><p> இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது, பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கியது. முதல் பாக வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் தயாராகி கடந்த செப்டம்பர் 10ம் தேதி வெளியாகி இருந்தது. </p><p>இந்த இரண்டாவது பாகத்தில் கார்த்தியுடன் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb3773b8-30f6-4bcd-b9f5-b72404c5329b/26-6aa4d6779a10b.webp' /></p><h2>பாக்ஸ் ஆபிஸ்</h2><p>
சர்தார் 2 படத்திற்கான புரொமோஷன் எல்லாம் பக்காவாக நடந்தது, சூர்யா, கவின் என எல்லாம் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு படத்தை புரொமோட் செய்தார்கள்.
</p><p>உலக அளவில் இரண்டு நாளில் இப்படம் ரூ. 9 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த வாரம் விடுமறை நாட்கள் வேறு அதிகம் இருப்பதால் கண்டிப்பாக படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UVzewCmqj6U" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-12T05:00:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருவி விஜய் ஜம்ப்பையே தவிடுபொடியாக்கிய ஹாலிவுட் நடிகையின் உலகமகா ஜம்ப்!! வீடியோ..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/xena-warrior-princess-series-beats-vijays-jump-1789189439"></link>
            <id>https://viduppu.com/article/xena-warrior-princess-series-beats-vijays-jump-1789189439</id>
            <summary type="text">குருவி விஜய் ஜம்ப்விஜய், திரிஷா, விவேக் நடித்த குருவி படத்தை தயாரித்து தான் உதயநிதி ஸ்டாலின் சினிமாவுக்குள் எண்ட்ரி கொடுத்தார். அப்படத்தில் விஜய் ஜம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>குருவி விஜய் ஜம்ப்</h2><p>விஜய், திரிஷா, விவேக் நடித்த குருவி படத்தை தயாரித்து தான் உதயநிதி ஸ்டாலின் சினிமாவுக்குள் எண்ட்ரி கொடுத்தார். அப்படத்தில் விஜய் ஜம்ப் அடிக்கும் காட்சிதான் படத்தின் பிளாப்பிற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. </p><p>சினிமாவில் லிபெர்டி என்ற ஒரு வார்த்தை பல படங்களுக்கு கைக்கொடுக்கும். நம்பவே முடியாத ஸ்டண்ட் காட்சிகளில் தொடங்கி சில லாஜிக் மீறல்களுக்கு அது முட்டுக்கொடுக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d687496-a70e-41cf-9dcb-13a3be59dc96/26-6aa4dd417bcf9.webp' /></p><p> குருவி படத்திலும் சினிமா லிபர்டியை கொஞ்சம் ஓவராகவே அப்படத்தின் இயக்குநர் தரணி பயன்படுத்தினார். அந்த காலத்திலேயே அது மொரட்டு ட்ரோல் மெட்டீரியலாக மாறியது.</p><h2>ஹாலிவுட் நடிகையின் உலகமகா ஜம்ப்</h2><p> ஆனால் அதைவிட ஹாலிவுட் படம் ஒன்றுக்கு அனைத்து ஜம்ப் காட்சிகளுக்கும் இதுதான் டாப் என்பதுபோல் ஒரு ஜம்ப் காட்சி இடம்பெற்று தற்போது குருவி விஜய் எல்லாம் குட்டி புசுக்கா என்பதுபோல் ட்ரோல் மெட்டீரியலாக மாறியிருக்கிறது.</p><p> 1995 - 2001 ஒளிப்பரப்பான Xena: Warrior Princess என்ற தொடரில் ஹாலிவுட் நடிகை லெஸி லாலெஸ் காட்டுக்குள் ஒரு மரத்திலிருந்து ஜம்ப் அடித்து கடலில் நிற்கும் கப்பலுக்கு சென்று விழும் காட்சி தான் உலகமகா ஜம்ப் என்று ட்ரோலாகியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T05:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று பிரம்மாண்ட மக்கள் பேரணிகள் - நேருக்கு நேர் மோதும் அரசு மற்றும் எதிர்க்கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-and-opposition-massive-public-rallies-today-1789187280"></link>
            <id>https://ibctamil.com/article/govt-and-opposition-massive-public-rallies-today-1789187280</id>
            <summary type="text">பொலன்னறுவை மற்றும் அநுராதபுரத்தில் ஒரே நேரத்தில் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளின் இரு பிரதான அரசியல் பேரணிகள் நடைபெறவுள்ளன.“அரசாங்கத்திற்கு இரண்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலன்னறுவை மற்றும் அநுராதபுரத்தில் ஒரே நேரத்தில் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளின் இரு பிரதான அரசியல் பேரணிகள் நடைபெறவுள்ளன.</p><p>“அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் – நாட்டுக்கு நன்மை” என்ற தொனிப்பொருளில், ஜனாதிபதி தலைமையில் இன்று (12) மற்றுமொரு மக்கள் பேரணி நடைபெறவுள்ளது.</p><p>
பொலன்னறுவை திம்பிரியங்கடுவ தீப உயன வளாகத்தில் இந்த மக்கள் பேரணி நடைபெறவுள்ளது.</p><p></p><h2>அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு</h2><p>இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணி இன்று பிற்பகல் 2 மணிக்கு அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f783b831-e4db-444f-8f38-1db6e2ba00f8/26-6aa4d78766776.webp' /></p><p>



கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>



இந்தப் பேரணியில் பொதுஜன பெரமுனவிலிருந்து விலகிச் சென்ற பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உள்ளிட்டோர் கலந்துகொள்வதுடன், மேடையில் உரையாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இவ்வாறு வடமத்திய மாகாணத்தின் பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய இரு பிரதான மாவட்டங்களில் அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் ஒரே நாளில் தனித்தனியாக பேரணிகளை நடத்தவுள்ளமை அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T04:57:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் எரிபொருள் விலையில் திடீர் அதிகரிப்பா..! வெளியான புதிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-sudden-fuel-price-hike-this-month-cpc-1789185988"></link>
            <id>https://tamilwin.com/article/no-sudden-fuel-price-hike-this-month-cpc-1789185988</id>
            <summary type="text">இலங்கையில் எரிபொருள் விலையில் திடீர் அதிகரிப்பு மேற்கொள்ளப்படுமா என்பது தொடர்பில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் எரிபொருள் விலையில் திடீர் அதிகரிப்பு மேற்கொள்ளப்படுமா என்பது தொடர்பில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. </p><p>

இது தொடர்பில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ.ராஜகருணா கூறுகையில்,
</p><p>
மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற நிலையை அடுத்து உலக சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்வு போக்கினை காட்டுகின்றன.</p><h3>உள்ளூர் எரிபொருள் விலை</h3><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f546c57-f325-4e25-b3bf-281d05a565bc/26-6aa4d4c77a97e.webp' /></p><p>
</p><p>
இருந்த போதிலும், இந்த மாதம் உள்ளூர் எரிபொருள் விலைகளில் திடீர் உயர்வு எதுவும் இருக்காது.
</p><p>
உலகளாவிய எரிபொருள் விலைகளுக்கு ஏற்ப உள்ளூர் எரிபொருள் விலைகளை மாற்றியமைப்பது குறித்து தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T04:54:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் எல் நினோ தாக்கம் உச்சத்தை எட்டும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-warning-for-sri-lanka-1789186626"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-warning-for-sri-lanka-1789186626</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் எல் நினோ தாக்கம் மிகவும் கடுமையான எல் நினோ நிலையாக மாறுவதற்கான ஆபத்து அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கான சாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவும் எல் நினோ தாக்கம் மிகவும் கடுமையான எல் நினோ நிலையாக மாறுவதற்கான ஆபத்து அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதற்கான சாத்தியக்கூறு 98 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
எதிர்வரும் 3 மாதங்களுக்குள் இது மிகவும் கடுமையான எல் நினோவாக மாறக்கூடும் என அதன் பணிப்பாளர் நாயகம் அஜித் வீரமன்ன தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><h2><b>
எல் நினோ</b></h2><p>கடந்த 75 ஆண்டுகளில் பதிவான எந்தவொரு எல் நினோ நிகழ்வையும் விட இந்த நிகழ்வு அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c761dd7d-4d5f-459a-bd34-2070b14cfcb6/26-6aa4da7638470.webp' /></p>]]></content>
            <updated>2026-09-12T04:52:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை ஆசிரியர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-announcement-issued-for-teachers-1789188564"></link>
            <id>https://jvpnews.com/article/important-announcement-issued-for-teachers-1789188564</id>
            <summary type="text">இலங்கை ஆசிரியர் சேவையின் வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சைகளுக்குச் சலுகை அளிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்த கோரிக்கைக்கு அரச சேவை ஆணைக்குழுவின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கை ஆசிரியர் சேவையின் வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சைகளுக்குச் சலுகை அளிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்த கோரிக்கைக்கு அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.</p><p style="text-align: justify; "> 

இதற்கமைய, 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி முதல் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஆசிரியர் சேவையின் தரம் I-க்கு தரம் உயர்த்தப்பட்ட ஆசிரியர்கள், வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சைகளைப் பூர்த்தி செய்வதிலிருந்து விலக்களிக்கப்படுகின்றனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6121687-4d81-4e9f-9c4b-a054115f668c/26-6aa4da3f5c587.webp' /></p><h2 style="text-align: justify; ">தடைத்தாண்டல் பரீட்சை</h2><p style="text-align: justify; "> 

இருப்பினும், இந்தத் தடைத்தாண்டல் பரீட்சையை அடுத்த தரமுயர்வைப் பெறுவதற்கு முன்னர் பூர்த்தி செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

தான் தரம் உயர்த்தப்பட்ட தரத்திற்கு முன்னர் பூர்த்தி செய்ய வேண்டிய வினைத்திறன் தடைத்தாண்டலை அடுத்த தரமுயர்வுத் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் தரமுயர்வு பெற்ற அதிகாரிகளை, அத்தகைய முந்தைய தரத்தின் வினைத்திறன் தடைத்தாண்டலைப் பூர்த்தி செய்யும் தேவையிலிருந்து விலக்களிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

2025/06/30 திகதி முதல் கீழே குறிப்பிட்டுள்ளவாறு தாம் சார்ந்த தரத்திற்குரிய வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சைகள் நடத்தப்படும் திகதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தரமுயர்வைப் பெறும் அதிகாரிகளுக்கும், தொகுதிகள் (Modules) / வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சைகளைப் பூர்த்தி செய்வதைக் கவனத்திற் கொள்ளாது தரமுயர்வுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">&nbsp;முதலாவது வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சைக்கு இலக்கம் 2494 மற்றும் 2026/06/19 திகதியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமையவும்,</p><p style="text-align: justify; "> இரண்டாவது வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சைக்கு இலக்கம் 2498 மற்றும் 2026/07/17 திகதியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமையவும்,</p><p style="text-align: justify; ">

 

மூன்றாவது வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சைக்கு இலக்கம் 2503 மற்றும் 2026/08/21 திகதியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமையவும் பரீட்சைகள் நடைபெறும். </p><p style="text-align: justify; ">

இது தொடர்பில் அனைத்துத் தரப்பினரையும் தெளிவுபடுத்தி கல்விச் சுற்றறிக்கையொன்று எதிர்காலத்தில் வௌியிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. </p><p style="text-align: justify; ">

இலக்கம் 2444/21 மற்றும் 2025/07/08 திகதியிட்ட அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பிற்கு அமைவாக வினைத்திறன் தடைத்தாண்டல் பரீட்சை முறையை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T04:49:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்து: 44 பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/train-passengers-derails-france-injured-1789188000"></link>
            <id>https://news.lankasri.com/article/train-passengers-derails-france-injured-1789188000</id>
            <summary type="text">&amp;nbsp;Train carrying 180 passengers derails in France: பிரான்சில் 180 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;Train carrying 180 passengers derails in France: பிரான்சில் 180 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><p>

வடக்கு பிரான்சில் பயணிகள் ரயில் ஒன்று தடம்புரண்டதில் 44 பயணிகள் வரை காயமடைந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><h2>
பிரான்சில் தடம்புரண்ட ரயில்
</h2><p>
வடக்கு பிரான்சிலுள்ள Rouen மற்றும் Caen நகரங்களுக்கிடையே பயணித்துக்கொண்டிருந்த ரயில் ஒன்று, நேற்று வெள்ளிக்கிழமை மாலை 7.45 மணியளவில், Cleon நகருக்கு அருகே தடம்புரண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7387fd7-2d2f-4f79-a1b5-4f1f9a9d7e24/26-6aa4d873aaed8.webp' /><br></p><p>

ரயில் பாதையில் இருந்த ஏதோ ஒரு பொருள் மீது ரயில் மோதியதைத் தொடர்ந்து ரயிலின் ஒரு பெட்டி கவிழ்ந்துள்ளதாகவும், மூன்று பெட்டிகள் தடம்புரண்டுள்ளதாகவும் பிரான்ஸ் பொலிஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த விபத்தில், அந்த ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த பயணிகளில் 44 பேர் காயமடைந்துள்ளனர்.
</p><p>
அவர்களில், 18 வயது இளம்பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர் ஹெலிகொப்டர் மூலம் Rouen பல்கலை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மீட்புப் பணிகளில் 140 தீயணைப்புவீரர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அந்த பகுதியைத் தவிர்க்குமாறு உள்ளூர் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/896650df-3fe3-41cf-a1ff-69c104affc71/26-6aa4d8745e405.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-12T04:43:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதி குளக்கரையில் கிடந்த சடலம் - பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-found-on-the-tank-bund-in-kilinochchi-1789188083"></link>
            <id>https://tamilwin.com/article/body-found-on-the-tank-bund-in-kilinochchi-1789188083</id>
            <summary type="text">கிளிநொச்சி - தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உழவனூர் பகுதியில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று(11.09.2026) இடம்பெற்றதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உழவனூர் பகுதியில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சம்பவம் நேற்று(11.09.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உழவனூர் பகுதியில் உள்ள குளக்கரையொன்றில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ee8bbc4-a0e3-4c8a-b3fc-d1ecd263aef4/26-6aa4d85fed561.webp' /></p><p> 

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தருமபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T04:43:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[80s டிரெண்ட் புகைப்படங்கள்: காலியான பல கோடி லிட்டர் தண்ணீர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/80s-trend-wasted-more-water-ai-photos-1789187556"></link>
            <id>https://manithan.com/article/80s-trend-wasted-more-water-ai-photos-1789187556</id>
            <summary type="text">கடந்த சில நாட்களாக 80s டிரெண்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

தற்போதைய புகைப்படங்களை பதிவேற்றி 80s காலகட்டத்தில் தாங்கள் எப்படி இருப்போம் என பார...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த சில நாட்களாக 80s டிரெண்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
</p><p>
தற்போதைய புகைப்படங்களை பதிவேற்றி 80s காலகட்டத்தில் தாங்கள் எப்படி இருப்போம் என பார்க்க மக்கள் ஆர்வம் காட்டி வந்ததுடன் புகைப்படங்களை பகிர்ந்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.</p><p>

பிரபல நடிகைகளும் தங்களது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தனர், AI Prompt கொண்டு மிக எளிதாக உங்களது புகைப்படங்களை மாற்றியமைக்க முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39b30ad2-9f0c-4388-85b9-b8d59496ee4f/26-6aa4d7241e4c4.webp' /><br></p><p>
</p><p>
ஆனால் இதன் பின்னணியில் உள்ள வருத்தமான விடயம் என்ன தெரியுமா? இவ்வாறு செய்வதனால் கோடி லிட்டர் தண்ணீர் காலியாகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?</p><p>
இந்த புகைப்படங்கள் அனைத்தும் Cloud எனப்படும் Data Centersகளில் மாற்றியமைக்கப்படுகின்றன, லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் இதனை பயன்படுத்தும் போது GPU/CPU வேகம் அதிகரித்து சர்வர்கள் கடும் வெப்பமடைகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7cab486-ee62-4431-aaf4-e3830fa110ae/26-6aa4d724c76d6.webp' /><br></p><p>
</p><p>
இதனை குளிர்ச்சியாக Cooling Tower தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது, இதற்காக பல கோடி லிட்டர் தண்ணீர் செலவாகிறது.
</p><p>
தற்போதைய தகவலின் படி இந்தியாவில் உள்ள AI தரவு மையங்கள் மட்டும் கடந்தாண்டில் ஏறத்தாழ 15,000 கோடி லிட்டர் தண்ணீரை பயன்படுத்தி உள்ளதாம்.</p><p>விளையாட்டாக செய்யப்படும் ஒரு விடயம் எவ்வளவு பெரிய ஆபத்தை உருவாக்குகிறது என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டியது அவசியம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7f5b645-2b77-46b7-b1ad-fb90bab7c861/26-6aa4d7257c5ca.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-12T04:38:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதி ஆலய உற்சவத்தில் நள்ளிரவில் அரங்கேறிய சம்பவத்தால் பரபரப்பு ; சிறுவனுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/temple-festival-boy-s-fate-at-midnight-1789187556"></link>
            <id>https://jvpnews.com/article/temple-festival-boy-s-fate-at-midnight-1789187556</id>
            <summary type="text">மட்டக்களப்பு, கிரான் கூளாக்காடு சித்தி விநாயகர் ஆலய உற்சவத்தின் போது வெடிக்க வைத்த வெடி வெடிக்காததால், அதனைப் பார்க்கச் சென்ற 13 வயதுச் சிறுவன் அது வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பு, கிரான் கூளாக்காடு சித்தி விநாயகர் ஆலய உற்சவத்தின் போது வெடிக்க வைத்த வெடி வெடிக்காததால், அதனைப் பார்க்கச் சென்ற 13 வயதுச் சிறுவன் அது வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். </p><p style="text-align: justify; ">

இச்சம்பவம் நேற்று&nbsp; இரவு 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d3308bc-c33e-407d-afc0-9b008a0ac8b0/26-6aa4d61906cf4.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify;">

கிரான் கூளாக்காட்டைச் சேர்ந்த 13 வயதுச் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். </p><p style="text-align: justify;">

குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இடம்பெற்று வரும் நிலையில், சம்பவ தினமான நேற்று இரவு பூஜை வழிபாடுகளின் போது பெரிய வெடி ஒன்று வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"> எனினும், அது உடனடியாக வெடிக்காததால் அதனை அப்புறப்படுத்தி தூக்கி வீசியுள்ளனர். </p><p style="text-align: justify;">

அவ்வாறு வீசப்பட்ட வெடியைப் பார்ப்பதற்காக அச்சிறுவன் அருகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அது வெடித்துச் சிதறியுள்ளது. </p><p style="text-align: justify;">

இதில் படுகாயமடைந்த சிறுவனை உடனடியாக வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;"> 

உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T04:32:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுரத்தில் மகிந்த தலைமையில் அநுர அரசுக்கு எதிராக மக்கள் பேரணி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/slpp-rally-against-the-anura-government-1789185431"></link>
            <id>https://ibctamil.com/article/slpp-rally-against-the-anura-government-1789185431</id>
            <summary type="text">சிறிலங்கா பொதுஜன பெரமுன&amp;nbsp;முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று அநுராதபுரத்தில் மக்கள் பேரணியை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கா பொதுஜன பெரமுன&nbsp;முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று அநுராதபுரத்தில் மக்கள் பேரணியை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த விடயத்தினை சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் டி.வி. சானக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியமையைக் கண்டித்து இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் </h2><p>
அரசாங்கத்தின் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கு அழுத்தம் கொடுப்பதே இந்தப் பேரணியின் முதன்மை நோக்கமாகும் என டி.வி. சானக்க சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bfaa53d-859c-4238-a57b-19d9bdd2b348/26-6aa4d23f06a79.webp' /></p><p>
</p><p>
முன்னதாக இந்தப்பேரணி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் நடைபெறவிருந்தது.</p><p>
எனினும் அவர் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மகிந்த ராஜபக்ச பேரணிக்கு தலைமை தாங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T04:32:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவுக்கு எதிராக பொலன்னறுவையில் களமிறங்கும் அநுர - மாபெரும் பேரணிக்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-to-take-on-mahinda-1789187462"></link>
            <id>https://tamilwin.com/article/anura-to-take-on-mahinda-1789187462</id>
            <summary type="text">“நமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் ஆகிறது - நாட்டிற்கு நல்லது” என்ற கருப்பொருளின் கீழ் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டங்களின் தொடரின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>“நமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் ஆகிறது - நாட்டிற்கு நல்லது” என்ற கருப்பொருளின் கீழ் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டங்களின் தொடரின் ஒரு பகுதியாக விவசாயிகள் பேரணியொன்று இடம்பெறவுள்ளது. </p><p>

இந்த பேரணி இன்று(12.09.2026) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் பொலன்னறுவை தீப உயன வளாகத்தில் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p> 

அத்துடன், பேரணி மாலை 4.00 மணிக்குத் தொடங்குவதாக திட்டமிடப்பட்டுள்ளது.
</p><h2>
விவசாயிகள் பேரணி</h2><p>
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்படும் “நமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் ஆகிறது - நாட்டிற்கு நல்லது” என்ற பேரணித் தொடர், கடந்த வாரம் 6ஆம் திகதி களுத்துறை மாவட்டத்தில் தொடங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f7dd090-96a9-4e55-b1ed-4d968cbcb01d/26-6aa4d5bdaa53a.webp' /></p><p> 


இந்த நிலையில், இதற்கு முன்னரான பேரணி பேருவளை கடற்கரை மைதானத்தில், இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p><p> &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T04:32:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்கலைக்கழக விடுதி கட்டடத்தில் இருந்து கீழே விழுந்த மாணவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/university-student-fallen-form-the-building-1789183991"></link>
            <id>https://tamilwin.com/article/university-student-fallen-form-the-building-1789183991</id>
            <summary type="text">பேராதனை பல்கலைக்கழகத்தின் விடுதிக் கட்டடம் ஒன்றின் மேல் மாடியிலிருந்து மாணவன் கீழே விழுந்துள்ளார். படுகாயமடைந்த மாணவர் கண்டி தேசிய வைத்தியசாலையின் தீவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேராதனை பல்கலைக்கழகத்தின் விடுதிக் கட்டடம் ஒன்றின் மேல் மாடியிலிருந்து மாணவன் கீழே விழுந்துள்ளார். </p><p>படுகாயமடைந்த மாணவர் கண்டி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. </p><p>கலைப் பீடத்தைச் சேர்ந்த மாணவனே இவ்வாறு கீழே விழுந்துள்ளார் என தெரியவந்துள்ளது. </p><h2><b>தீவிர சிகிச்சைப் பிரிவு</b></h2><p>கீழே விழுந்து காயமடைந்த மாணவர் ஆரம்பத்தில் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d2a7cff-d90c-4861-ad0b-456158dc4e19/26-6aa4d3d5d2bd6.webp' /></p><p>பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். </p><p>இச்சம்பவம் தொடர்பாக பேராதனை பொலிஸாரும் பல்கலைக்கழகமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்</p>]]></content>
            <updated>2026-09-12T04:24:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீபாவளி ரேஸில் இத்தனை படங்களா, ரசிகர்களுக்கு செம விருந்து தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/2026-diwali-special-release-movies-list-1789181986"></link>
            <id>https://cineulagam.com/article/2026-diwali-special-release-movies-list-1789181986</id>
            <summary type="text">&amp;nbsp;தீபாவளி விருந்துதீபாவளி என்றாலே தமிழக மக்களுக்கு கொண்டாட்டம் தான். புதுத்துணி, பட்டாசு தாண்டி புதுப்படங்களும் எப்போதும் தீபாவளி ஸ்பெஷல் தான். அந...</summary>
            <content type="html"><![CDATA[<h2>&nbsp;தீபாவளி விருந்து</h2><p>தீபாவளி என்றாலே தமிழக மக்களுக்கு கொண்டாட்டம் தான். புதுத்துணி, பட்டாசு தாண்டி புதுப்படங்களும் எப்போதும் தீபாவளி ஸ்பெஷல் தான். </p><p>அந்த வகையில் இந்த வருடம் சினிமா ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது, ஆம் தீபாவளி விருந்தாக தமிழில் சூர்யாவின் சீன், நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2, பிரபுதேவா நடிப்பில் மூன்வாக் ஆகிய படங்கள் திரைக்கு வரவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c377bda9-e22c-4a53-b165-cb9be085c351/26-6aa4c025908a6.webp' /></p><p> அதே நேரத்தில் பாலிவுட்டில் 2000 கோடி பட்ஜெட்டில் உருவான ராமயாணம் படம் ரிலிஸ் ஆக, ஜப்பானிய மொழியில் உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த காட்சில்லா மைனஸ் ஜீரோ ஆகிய படங்கள் திரைக்கு வர, ரசிகர்களுக்கு கண்டிப்பாக இந்த தீபாவளி செம திரை விருந்து காத்திருப்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.</p>]]></content>
            <updated>2026-09-12T04:20:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Diasa</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்ராறியோவில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவுக்கான இணை அமைச்சர் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/appointment-of-minister-of-state-for-ai-1789186610"></link>
            <id>https://tamilwin.com/article/appointment-of-minister-of-state-for-ai-1789186610</id>
            <summary type="text">ஒன்ராறியோவின் முதலாவது செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டுத் துறைக்கான இணை
அமைச்சராக விஜய் தணிகாசலம் நியமிக்கப்பட்டுள்ளார்.  
 

இந்த நியமனத்தை ஒன்ராறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒன்ராறியோவின் முதலாவது செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டுத் துறைக்கான இணை
அமைச்சராக விஜய் தணிகாசலம் நியமிக்கப்பட்டுள்ளார். </p><p> 
 

இந்த நியமனத்தை ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்டுவினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>இணை
அமைச்சர் நியமனம்</h2><p>

இது பொது சேவைக்கான அவரது அர்ப்பணிப்புக்கும் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கான
அவரது பங்களிப்பிற்கும் கொடுக்கப்பட்ட அங்கீகாரம் என்றும், இந்தப் புதிய அமைச்சகம்,
தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகின்றன என்றும் கூறப்படுகின்றது. </p><p>



அத்துடன், பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், எதிர்கால சிறந்த
வாய்ப்புகளுக்குத் தயாராகவும் ஒன்ராறியோவுக்கு அர்ப்பணிப்புடன் செயற்படும்
தலைவர்கள் தேவை என்பதையும் எடுத்துக்காட்டுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd63cb75-e514-46b8-803a-33c24d4866d8/26-6aa4d29a2536e.webp' /></p><p> </p><p>

அமைச்ச‌ர் விஜய் தணிகாசலம், கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து மூன்றாவது முறையாக
ஸ்கார்பரோ-ரூஜ் பார்க்
தொகுதியின் ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருவதுடன், மேலும்
2023ஆம் ஆண்டில் ஒன்ராறியோவில் அமைச்சரவைப் பதவியை வகித்த முதல் தமிழ்
அரசியல்வாதி என்ற வரலாற்றையும் படைத்தார்.</p><p> 

உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரின்
வான்புகழ் திருக்குறளின் மீது மீண்டும் ஒருமுறை பதவிப் பிரமாணம் செய்து
கொண்டதன் மூலம் அவர், தனது தமிழ் மரபுடனான அவரின் ஆழமான தொடர்பையும்
வெளிப்படுத்தியிருந்தார்.
</p><h2>

பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டம்</h2><p>

அவர் முன்னதாக 2023ஆம் ஆண்டில் போக்குவரத்துக்கான இணை அமைச்சராகவும், 2024ஆம்
ஆண்டில் வீட்டுவசதிக்கான இணை அமைச்சராகவும், சமீபத்தில் சுகதாரா இணை
அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2dcc7fe1-d0bb-4d4d-8bd9-3ff945bd8013/26-6aa4d29b0583e.webp' /></p><p>
</p><p>

அவரது குறிப்பிடத்தக்க சாதனைகளில், 2023ஆம் ஆண்டில் போக்குவரத்துத் துறையில்
அறிமுகப்படுத்தப்பட்ட “ஒற்றைக் கட்டண (One Fare)” திட்டம், ஸ்காபரோவில்
முதன்முதலாக அமைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி, வீடின்மை, போதைப் பயன்பாடு
அல்லது உளநல சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு ஆதரவும் சிகிச்சையும் அளிக்கும்
வகையில் “வீடின்மை மற்றும் போதை பயன்பாட்டில் சிக்கியோருக்கான மீட்பு
சிகிச்சை மையங்களை” (HART Hubs) அமைத்தமை போன்றன உள்ளடங்கும். </p><p>

செயற்கை நுண்ணறிவு தொடர்ந்து நவீனமடைந்து பல ஒன்ராறியோவாசிகளின் வாழ்க்கையில்
தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால், செயற்கை நுண்ணறிவுத் துறையில் புதிய
வாய்ப்புகளைப் பெறவும், பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கவும், மாறிவரும் உலகளாவிய
சூழலில் போட்டித்தன்மையுடன் இருக்கவும், உரிய கட்டுப்பாட்டு வழிமுறைகளை
வகுப்பதிலும், ஒன்ராறியோவவின் வளர்ச்சிக்கு உதவுவதில் விஜய் தணிகாசலமின் 
தலைமைத்துவம் இன்றியமையாததாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T04:18:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகர் அஜித் பங்கேற்கும் கார்பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cm-vijay-is-flagging-off-the-le-mans-cup-car-race-1789186374"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cm-vijay-is-flagging-off-the-le-mans-cup-car-race-1789186374</id>
            <summary type="text">பிரபல நடிகர் அஜித் கலந்துகொள்ளும் Le Mans cup silverstone கார்பந்தய போட்டியில் தமிழக முதலமைச்சர் விஜய் இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

தமிழகத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல நடிகர் அஜித் கலந்துகொள்ளும் Le Mans cup silverstone கார்பந்தய போட்டியில் தமிழக முதலமைச்சர் விஜய் இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.</p><p>

தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் தமிழக முதலமைச்சர் விஜய் செப்டம்பர் 10ம் தேதி லண்டன் புறப்பட்டு சென்றார்.
</p><p>
இந்த பயணத்தின் ஒரு நிகழ்வாக இன்று Le Mans cup silverstone கார் பந்தயத்தை விஜய் தொடங்கிவைக்கவுள்ளார். </p><p>இத்தகவலை நடிகர் அஜித் உறுதிப்படுத்தியுள்ளார்.

இப்போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்கிறார் என்பதால் விஜய்- அஜித் இருவரும் சந்தித்துக்கொள்ளலாம்.</p><p>திரைப்படங்களில் அவரது ரசிகர்கள் போட்டியாக பார்க்கப்பட்டாலும் இருவருக்கும் நல்ல நட்பு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4526e03-ea02-47c7-8cbc-fc285480b1e9/26-6aa4d1fd60bbd.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-12T04:16:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு எதிராக 50 பக்க அறிக்கை! இலஞ்சம் - ஊழல் -பக்கச்சார்பு...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attorney-general-department-sri-lanka-1789185996"></link>
            <id>https://tamilwin.com/article/attorney-general-department-sri-lanka-1789185996</id>
            <summary type="text">சட்டமா அதிபர் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட துஷ்பிரயோகம் மற்றும் இலஞ்ச - ஊழல் -பக்கச்சார்பான செயற்பாடுகள் தொடர்பில் 50 பக்கங்களை கொண்ட அறிக்கையொன...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டமா அதிபர் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட துஷ்பிரயோகம் மற்றும் இலஞ்ச - ஊழல் -பக்கச்சார்பான செயற்பாடுகள் தொடர்பில் 50 பக்கங்களை கொண்ட அறிக்கையொன்றை ஜனாதிபதியின் கோரிக்கைக்கு இணங்க தயாரித்து கொடுத்ததாக சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்:' சில ஊடகங்களில் அச்சலா தான் சட்டமா அதிபருக்கு எதிராக அறிக்கையைத் தயாரித்துக் கொடுத்தார் என்ற சந்தேகத்தில் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் அதுதான் உண்மை.</p><p>அவர்கள் செய்த ஊழல் செயல்கள் தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெரும்பான்மையான மக்களின் சார்பாக ஆஜரான சட்டத்தரணி&nbsp; நான் தான். அதேபோல் பெண் சட்டத்தரணிகளும் இருந்தார்கள்.
</p><p></p><h2>அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள்</h2><p>அவர்கள் அனைவரையும் உள்ளடக்கி,அறிக்கையை நான் தயாரித்தேன். அதைத் தயாரித்தது இந்த நாட்டு மக்கள் மீது உள்ள அன்பினாலும், இந்த நாட்டு மக்களுக்கு நீதியும் நியாயமும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவுமே தவிர, எனக்கு உங்களுடன் எந்தவித தனிப்பட்ட பகையும் இல்லை.
</p><p>ஏனெனில் எனக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டமா அதிபர் பதவியைப் பெறவோ அல்லது அரசாங்க சட்டத்தரணியாகவோ எந்தவொரு காலத்திலும் எந்தவொரு வழியிலும் ஆசையோ அல்லது கோரிக்கையோ இருந்ததில்லை. </p><p>19 வருடங்களாக அப்படி எதுவும் இருக்கவில்லை. எனக்கு அப்படி சட்டமா அதிபர் திணைக்களத்திற்குச் செல்ல ஆசை இருந்திருந்தால், நான் சென்றிருக்க வேண்டும். </p><p>எனக்கு அப்படி எதுவுமே இருக்கவில்லை. ஆனால் நாங்கள் கஷ்டப்பட்டு, உயிர் அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் அன்று நிலவிய வன்முறை கலாசாரத்திற்குள், எங்கள் வீடுகளில் உள்ள சொந்தங்கள் மனதளவில் விழுந்து கிடந்த நேரத்தில் தான் நாங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பணியாற்றினோம்.
</p><p>பாதிக்கப்பட்டவர்களின் அந்தத் துன்பம், அந்த வேதனை உங்களை விட எங்களுக்கு நன்றாகப் புரிகிறது. ஏனெனில் நாங்கள் அவற்றை எதிர்கொண்டோம். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a699d185-5310-4ace-a6cf-8fbd14db6541/26-6aa4cfcecff7b.webp' /></p><p>எங்களுக்கு சலுகைகள் இருக்கவில்லை.சிலர் சொல்கிறார்கள் நான் பெரிய பிரபல சட்டத்தரணி அல்ல என்று. ஆம், நான் பிரபல சட்டத்தரணி இல்லை. </p><p>ஆனால் நான் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியிலும், அப்பாவி மக்கள் மத்தியிலும் பிரபலமடைந்தேன். அது எனக்குக் கௌரவம்.
அந்த அறிக்கையைத் தயாரிக்குமாறு கோரிக்கை விடுத்ததும் இந்த நாட்டின் ஜனாதிபதி தான்.</p><p>ஆனால் இறுதியில் அறிக்கையைத் தயாரித்து, தட்டு சூடான நேரத்தில் ரொட்டியைச் சுட்டுக் கொள்வதற்குப் பதிலாக, இப்போது நான் ஒரு ரொட்டியாக மாறியிருக்கிறேன். </p><p>அனைவரும் தட்டைச் சூடாக்கி ரொட்டியைச் சுட்டுக் கொண்டார்கள், இறுதியில் நான் தான் இப்போது ரொட்டியாக மாறியிருக்கிறேன் என்று எனக்குத் தோன்றுகிறது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T04:14:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை கடற்பரப்பில் உள்ள ஈரானிய கப்பலின் மாலுமிகளை மாற்ற அரசாங்கம் தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/replace-crew-members-of-iranian-ship-in-sri-lankan-1789184364"></link>
            <id>https://tamilwin.com/article/replace-crew-members-of-iranian-ship-in-sri-lankan-1789184364</id>
            <summary type="text">இலங்கையின் திருகோணமலை கடற்பரப்பில் நங்கூரமீட்டுள்ள ஈரானிய கப்பலின் மூன்று
மாலுமிகளையும் மாற்றுவதற்கு ஈரானிய அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு இலங்கை
இண...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் திருகோணமலை கடற்பரப்பில் நங்கூரமீட்டுள்ள ஈரானிய கப்பலின் மூன்று
மாலுமிகளையும் மாற்றுவதற்கு ஈரானிய அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு இலங்கை
இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p>நாடாளுமன்றத்தில் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.&nbsp;</p><h2>நாடாளுமன்றத்தில் விடுத்த கோரிக்கை</h2><p>
இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு வழிகள் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும்
என அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c29c4d68-2b72-41b7-b5ef-ad8c28669373/26-6aa4d02e4d53e.webp' /></p><p>
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், நீண்ட நாட்களாக மன
அழுத்தத்தில் இருக்கும் அந்த மூன்று ஈரானிய மாலுமிகளையும் மாற்ற
அனுமதிக்குமாறு நாடாளுமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே
பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T04:10:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் தாக்குதலுக்கு முன்னர் பிரித்தானியாவைக் குறி வைத்த ஒசாமா பின் லேடன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bin-laden-plotting-attack-on-britain-1789185938"></link>
            <id>https://news.lankasri.com/article/bin-laden-plotting-attack-on-britain-1789185938</id>
            <summary type="text">Osama bin Laden was plotting terror attack on Britain before 9/11: 9/11 தாக்குதலுக்கு முன்பே ஒசாமா பின் லேடன் பிரித்தானியா மீது பயங்கரவாதத் தாக்குதல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Osama bin Laden was plotting terror attack on Britain before 9/11: 9/11 தாக்குதலுக்கு முன்பே ஒசாமா பின் லேடன் பிரித்தானியா மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு வந்தார்.
</p><p>செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே, பிரித்தானியா மீதே தாக்குதல் நடத்த ஒசாமா பின் லேடன் திட்டமிட்டதாக சிஐஏ-வின் (CIA) புதிய, பரபரப்பான குறிப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.</p><h2>பிரித்தானியாவும்</h2><p>
</p><p>பயங்கரவாதத் தாக்குதல்களின் 25-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு CIA வெளியிட்ட அதீத ரகசிய ஆவணங்களில் உள்ள தகவல்களின்படி, அல்-கொய்தாவின் தாக்குதல் பட்டியலில் பிரித்தானியாவும் இடம்பெற்றிருந்ததற்கான வலுவான அறிகுறிகள் இருந்ததாக அமெரிக்க உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8cd7044-99ed-4937-a4ff-4cfef83c65e7/26-6aa4cf942e8ec.webp' /></p><p> </p><p>CIA வெளியிட்ட பெருமளவிலான ஆவணங்களில், பின் லேடன் பிரித்தானியாவை குறிவைக்கத் திட்டமிட்டிருந்ததாகக் கூறும் 1998-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் திகதியிட்ட ஆவணம் ஒன்றும் அடங்கும். </p><p>9/11 தாக்குதல் தொடர்பான தகவல்கள் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய அளவில் வெளியிடப்பட்ட நிலையில், புதிதாக ரகசியத் தன்மை நீக்கப்பட்ட 69 விளக்கக் குறிப்புகளில் பிரித்தானியா குறித்த ஆவணமும் ஒன்றாகும்.</p><p></p><p> </p><p>பின்லேடனின் பயங்கரவாதக் கட்டமைப்பு இன்னும் ஒரு அச்சுறுத்தலாக உள்ளது என்ற தலைப்பிலான ஆவணத்தில் பிரித்தானியா நேரடியாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. </p><p>சூடானில் உள்ள அல்-கொய்தா தளங்கள் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய பிறகு தயாரிக்கப்பட்ட அந்தக்குறிப்பு, பின் லேடன் பிரித்தானியாவைக் குறிவைக்க முயன்றதாகத் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7c64b79-e1e1-422b-8226-611df6b900d5/26-6aa4cf94d68d5.webp' /></p><p> </p><p>அக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்களுக்குச் சில மணிநேரங்களுக்கு முன்பு, அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுக்கு எதிராக மேலும் தாக்குதல்களை நடத்துவதற்கான வழிகளை பின்லேடன் ஆராய்ந்து கொண்டிருந்தார். </p><p>ஆனால், துல்லியமான இலக்குகளையோ அல்லது நேரத்தையோ குறிப்பிடவில்லை. மேலும், பெயர் குறிப்பிடப்படாத ஒரு நாட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய இலக்காக இருக்கலாம் என்றும், அமெரிக்காவில் தாக்குதல்களை நடத்துவது குறித்து ஆராய பின்லேடனால் ஒருவருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்ததாகவும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.</p><h2>பின் லேடன்&nbsp;கோபம்</h2><p> </p><p>அந்த ஆண்டின் இறுதியில் எழுதப்பட்ட மற்றொரு குறிப்பில், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா, இஸ்ரேல் போன்ற அதன் நட்பு நாடுகளின் சொந்த மண்ணிலேயே தாக்குதல் நடத்த அவர் விரும்புவதற்கான வலுவான அறிகுறிகள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>லண்டனைச் சேர்ந்த தனது கூட்டாளிகள் இருவர் பிரித்தானியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்ததைக் குறித்து பின் லேடன் கொண்டிருந்த கோபத்தை, 1999 ஆகஸ்ட் மாதத்தைச் சேர்ந்த ஒரு கோப்பு சுட்டிக்காட்டியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f26396e-0f1b-4b18-b4da-6b41100f6895/26-6aa4cf9589c12.webp' /></p><p> </p><p>இதனிடையே, நாட்டின் மிக இருண்ட தருணங்களில் ஒன்றுக்கு முந்தைய ஆண்டுகளிலும், அந்த நிகழ்வு நடந்த மறுநாளிலும் சேகரிக்கப்பட்ட மிக முக்கியமான உளவுத்துறைத் தகவல்களைப் பற்றிய ஒரு பார்வையை அமெரிக்கர்களுக்கு வழங்குவதையே இந்த மிகப்பெரிய ஆவண வெளியீடு நோக்கமாகக் கொண்டிருந்ததாக CIA தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T04:02:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த சாவகச்சேரி மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-against-anura-government-in-chavakachcheri-1789185084"></link>
            <id>https://ibctamil.com/article/protest-against-anura-government-in-chavakachcheri-1789185084</id>
            <summary type="text">அநுர அரசாங்கத்திற்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று யாழில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுர அரசாங்கத்திற்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று யாழில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>
தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமையை வலியுறுத்தி இந்தப் போராட்டம் இன்று (12.09.2026) ஆரம்பமாகியுள்ளது.</p><p>யாழ். சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் ஆரம்பமான போராட்டத்தில் தமிழரசு கட்சியை சேர்ந்த சி.வி.கே சிவஞானம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் உள்ளிட்ட தரப்பினரும் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>பொது தரப்பினரால்&nbsp;&nbsp;அழைப்பு </h2><p>இந்த போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பொது தரப்பினரால் நேற்று (11) அழைப்பு விடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da762dc0-7bdb-4188-a6eb-24b270f0b582/26-6aa4ccb517364.webp' /></p><p>குறித்த போராட்டம் அபகரிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்க கோரியும், மாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்தக் கோரியும், பயங்கரவாத தடை சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர், செம்மணி புதைகுழி விவகாரங்களுக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்று கோரியும், அரசியல் கைதிகளின் உடனடி விடுதலையை வலியுறுத்தியும் முன்னெடுக்கப்படுகின்றது.</p><h2>ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி</h2><p>இதேவேளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல் காலத்தில் தமிழ் மக்களிடம் பல்வேறு
கோரிக்கைகளை முன்வைத்து வாக்குகளை பெற்று, இன்று 2 வருடங்கள் கழிந்த
நிலையிலும் கொடுத்த வாக்குகள் நிறைவேற்றப்படவில்லை.</p><p>குறிப்பாக, வலி வடக்கில் 3 பகுதிகளில் மக்கள் தமது சொந்த நிலத்தை
விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7eb21a87-88f9-4055-944c-0f90103070f0/26-6aa4de3cbe713.webp' /></p><p> பலாலி விமான நிலையம்
காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படாமல் தொடர்ந்தும்
பின்னடிக்கப்பட்டு வருகின்றது.

இந்தியா வழங்கிய 600 மில்லியன் ரூபா டொலர்களை வழங்கிய போதும், வேலைகளை
செய்வதற்கான உடன்படிக்கைகளை மேற்கொள்ளாது காலம் கடத்தி வருகின்றனர்.
</p><p>
தேர்தல் காலத்தில் மாகாண சபை அதிகாரங்களை வழங்குவோம் என்றவர்கள், மாகாண சபை
தேர்தலை நடத்துவதற்கு எள்ளளவும் விரும்பாத நிலை காணப்படுகிறது.
</p><p>
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எவ்வித கரிசனையும்
காட்டாது இழுத்தடிக்கின்றனர், அது மாத்திரமின்றி, திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது திணிக்கும் தொல்லியல் துறை
சார்ந்த விடயங்ளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p>இவ்வாறான விடயங்களை கண்டித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ,
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T03:53:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியர்களுக்கு கிடைக்கப்போகும் சலுகை : அரச சேவை ஆணைக்குழு அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/efficiency-barriers-in-the-sl-teachers-service-1789183013"></link>
            <id>https://ibctamil.com/article/efficiency-barriers-in-the-sl-teachers-service-1789183013</id>
            <summary type="text">இலங்கை ஆசிரியர் சேவையின் வினைத்திறன் தடைகளை நிறைவு செய்வது தொடர்பில் ஆசிரியர்களுக்கு சலுகை வழங்குவதற்கு அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாக த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை ஆசிரியர் சேவையின் வினைத்திறன் தடைகளை நிறைவு செய்வது தொடர்பில் ஆசிரியர்களுக்கு சலுகை வழங்குவதற்கு அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

கல்வி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே அரச சேவை ஆணைக்குழு இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
அதன்படி, 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி முதல் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஆசிரியர் சேவையின் முதலாம் தரத்திற்கு பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள், வினைத்திறன் தடைகளை நிறைவு செய்ய வேண்டிய தேவையிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர்.</p><p></p><h2>வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சைகள்</h2><p>
</p><p>
எனினும், அடுத்த பதவி உயர்வைப் பெறுவதற்கு முன்னர் குறித்த வினைத்திறன் தடையை நிறைவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6e29410-d6f3-4539-ab20-2a52fe4ebdc7/26-6aa4ca43b57e6.webp' /></p><p>
</p><p>
அத்துடன், ஒருவர் பதவி உயர்வு பெற்ற தரத்திற்கு முன்னதாக நிறைவு செய்ய வேண்டிய வினைத்திறன் தடையை, அடுத்த பதவி உயர்வு பெறும் திகதிக்கு முன்னர் நிறைவு செய்ய வேண்டும்.
</p><p>
எனினும் தற்போது அந்த நிபந்தனையின் அடிப்படையில் பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளும், அந்த முந்திய தரத்திற்கான வினைத்திறன் தடையை நிறைவு செய்ய வேண்டிய தேவையிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர்.</p><p></p><h2>&nbsp;கல்வி அமைச்சின் சுற்றறிக்கை</h2><p>
</p><p>
2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி முதல், தங்களுக்கு உரிய தரத்திற்கான வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி வரையான காலப்பகுதியில் தரப் பதவி உயர்வுக்கு தகுதி பெறும் ஆசிரியர்களுக்கும் சலுகை வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7b8ae3d-4929-4ef6-b26b-4f43cec2af1e/26-6aa4ca44b7d92.webp' /></p><p>

அதன்படி, வினைத்திறன் தடையகப் பரீட்சைகளை நிறைவு செய்துள்ளார்களா என்பதை கருத்தில் கொள்ளாமல், அவர்களுக்கு தரப் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>
இந்த விடயம் தொடர்பில் அனைத்து தரப்பினருக்கும் அறிவிக்கும் வகையில் கல்வி அமைச்சின் சுற்றறிக்கை ஒன்று எதிர்வரும் காலத்தில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T03:47:11+00:00</updated>
        </entry>
    </feed>
