<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-04T13:52:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனநலம் பாதித்த பெண்ணிடம் அத்துமீறிய சிறுவன் - காப்பாற்றிய தெருநாய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/street-dog-saves-women-from-assault-coimbatore-1788524546"></link>
            <id>https://news.lankasri.com/article/street-dog-saves-women-from-assault-coimbatore-1788524546</id>
            <summary type="text">street dog நள்ளிரவில் மனநலம் பாதித்த பெண்ணிடம் அத்துமீறிய சிறுவனை தெருநாய் ஒன்று விரட்டி பெண்ணை காப்பற்றியுள்ளது. 

மனநலம் பாதித்த பெண்ணை காப்பாற்றி...</summary>
            <content type="html"><![CDATA[<p>street dog நள்ளிரவில் மனநலம் பாதித்த பெண்ணிடம் அத்துமீறிய சிறுவனை தெருநாய் ஒன்று விரட்டி பெண்ணை காப்பற்றியுள்ளது.</p><h3> 

மனநலம் பாதித்த பெண்ணை காப்பாற்றிய தெருநாய்</h3><p> 

கோவையில் என்.ஜி.ஓ. காலனி அசோகபுரம் பகுதியில் ஒரு பெட்டிக்கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாக துடியலூர் காவல்துடையினருக்கு தகவல் கிடைத்தது.</p><p> 

இது குறித்த விசாரணைக்காக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அதில் பெண்ணிடம் அத்துமீறிய சிறுவனை நாய் துரத்தி, பெண்ணை கைப்பற்றியது தெரியவந்துள்ளது.</p><p> 

அந்த சிசிடிவி காட்சியில் அசோகபுரம் ரெயில்வே மேம்பால சாலையோரத்தில், நள்ளிரவு 2 மணியளவில் மனநலம் பாதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் படுத்திருந்தது தெரியவந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a93f0c2-4024-4255-90ad-bec1c2465cd3/26-6a9ab803d5204.webp' /></p><p>

அப்போது கஞ்சா மதுபோதையில் அந்த வழியாக வந்த நபரை தெருநாய் ஒன்று குறைத்து கொண்டே பின்தொடர்ந்து வந்துள்ளது. </p><p>

அந்த நபர் அங்கு படுத்திருந்த பெண்ணிடம் இது உங்கள் நாயா? பின்னாடியே வருகிறது என கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண், கல்லை எடுத்து எறியுங்கள் போய்விடும் என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>அந்த நபர் சாலையோரம் இருந்த கல்லை எடுத்ததும், அந்த நாய் சற்று தூரம் பின்னால் சென்றுள்ளது. </p><p> 

உடனே அந்த பெண் நபர், அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். அந்த பெண் கூச்சலிட்ட நிலையில், அந்த தெரு நாய் அந்த நபரை பார்த்து குறைக்க தொடங்கியுள்ளது.</p><p>
நாய் விடாமல் குறைத்துக்கொண்டே அவரை கடிக்க பாய்ந்த போது, அந்த நபர் அந்த பெண்ணை விட்டுவிட்டு தப்பியோடியுள்ளார். ஆனால் நாய் அவரை விடாமல் துரத்தி சென்றுள்ளது.</p><p>

இந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், பெண்ணிடம் அத்துமீறிய நபர் அதே துடியலூர் பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுவன் என தெரிய வந்தது. </p><p>

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த சிறுவனை கைது செய்து கோவை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T13:49:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-of-vadamarachchi-pushing-government-bus-1788527863"></link>
            <id>https://tamilwin.com/article/people-of-vadamarachchi-pushing-government-bus-1788527863</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மக்கள் அரச பேருந்தை நாளாந்தம்
தள்ளித்திரிந்து இயக்கும் சம்பவம் ஒன்று பேசு பொருளாகி உள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மக்கள் அரச பேருந்தை நாளாந்தம்
தள்ளித்திரிந்து இயக்கும் சம்பவம் ஒன்று பேசு பொருளாகி உள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

நாளாந்தம் காலை 06.00 கட்டைக்காட்டில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும்
அரச பேருந்தை பழுது காரணமாக சில நாட்களாக மாணவர்கள், மக்கள் சேர்ந்து தள்ளி
இயக்கும் சம்பவம் இடம்பெறுகின்றது.</p><p>மக்கள் தள்ளி பேருந்து இயங்காது போனால் சம நேரத்தில் பருத்தித்துறைக்கு
பயணிக்கும் அரச பேருந்தால் குறித்த பேருந்து கட்டி இழுக்கப்பட்டு இயக்குவது வழக்கம்.</p><h2>மக்கள் கோரிக்கை</h2><p>&nbsp;இன்று(4) காலை 06.00 மணிக்கு வழமை போன்று பாடசாலை மாணவர்களோடு பொதுமக்கள்
குறித்த பேருந்தை தள்ளி இயக்க முயன்றபோது பேருந்து இயங்கவில்லை. </p><p>பின்பு
பருத்தித்துறை நோக்கி பயணிக்கவிருந்த அரச பேருந்து மூலம் கட்டி இழுத்து இயக்க
முயன்ற வேளையும் பேருந்து இயங்கவில்லை.இதனால் இன்று காலை 06.00 மணிக்கு கட்டைக்காட்டில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி
பயணிக்கும் அரச பேருந்து பயணிக்காததால் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் என
பலர் பாதிப்படைந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4c6a222-caa9-469a-8ca8-d4c08f5e91c5/26-6a9acc1249fb1.webp' /></p><p>வடமராட்சி கிழக்கு மக்களின் தொடர் கோரிக்கையான, வடமராட்சி கிழக்கு பகுதிக்கு
சிறந்த தரமான பேருந்து சேவை ஒன்றை வழங்குமாறு ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
போன்ற பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுக்கப்பட்டது.ஆனாலும் மக்களின்
கோரிக்கை இன்று வரை தீர்க்கப்படவில்லை.</p><p>
இந்த அவல நிலையை கருத்தில் கொண்டு சிரமம் இன்றி சேவையில் ஈடுபடக் கூடிய நல்ல
தரமான ஒரு அரச பேருந்தை சேவையில் ஈடுபட செய்யுமாறு வடமராட்ச்சி கிழக்கு மக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T13:48:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிரே போனாலும் செய்த தவறை ஒப்புக்கொள்ளாத டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/zodiac-signs-who-never-accept-they-are-mistakes-1788526895"></link>
            <id>https://manithan.com/article/zodiac-signs-who-never-accept-they-are-mistakes-1788526895</id>
            <summary type="text">தவறு செய்யாத மனிதர்களே இல்லை. ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் தவறு செய்கிறார்கள். ஆனால், செய்த தவறை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் அனைவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தவறு செய்யாத மனிதர்களே இல்லை. ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் தவறு செய்கிறார்கள். ஆனால், செய்த தவறை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் அனைவரிடமும் இருப்பதில்லை.
</p><p>
ஜோதிட நம்பிக்கைகளின்படி, சில ராசிக்காரர்கள் எவ்வளவு&nbsp; கடினமான சூழ்நிலை வந்தாலும் தங்களின் தவறை எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ‘சாரி’ அல்லது ‘என் தவறு’ என்று சொல்வதற்குப் பதிலாக, தங்கள் செயல்களை நியாயப்படுத்தும் வகையில் மாத்திரமே பேசுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cead4c4-2188-496b-9c03-de89afd39fb5/26-6a9ac8b213ae8.webp' /></p><p></p><p>அப்படி தலையே போனாலும் செய்த தவறை மட்டும் ஒப்புக்கொள்ள விரும்பாத ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்களாம்.</p><h2>சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31572e5f-0ef5-43a9-9d5d-f5de14d9bce2/26-6a9ac8b2bd37a.webp' /></p><p>
சிம்ம ராசியின் அதிபதி கிரகங்களின் ராஜாவான சூரியன். இது அகங்காரம், தன்னம்பிக்கை மற்றும் கௌரவத்தைக் குறிக்கிறது. </p><p>சிம்ம ராசிக்காரர்கள் இயல்பிலேயே தலைமைப் பண்பு கொண்டவர்கள்; அனைவரும் தங்களைப் பாராட்ட வேண்டும் என விரும்புவார்கள். </p><p>இதனால், தாங்கள் செய்த தவறை ஒப்புக்கொள்வதும் மன்னிப்புக் கேட்பதும் அவர்களுக்கு கடினமாக இருக்கும். தாங்கள் வலிமையானவர்களாகத் தோன்ற வேண்டும் என்பதால், தவறை ஒப்புக்கொள்வது தங்களின் மதிப்பையும் இமேஜையும் பாதிக்கும் என நினைப்பார்கள்.
</p><h2>
மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8438c93-307f-4038-861f-6bd28f80eb08/26-6a9ac8b375d36.webp' /></p><p></p><h2>
</h2><p>மேஷ ராசியின் அதிபதி செயல் மற்றும் ஆக்ரோஷத்தின் கிரகமான செவ்வாய். மேஷ ராசிக்காரர்கள் துணிச்சலானவர்கள், தன்னம்பிக்கை மிக்கவர்கள், வேகமாகச் செயல்படுபவர்கள்.</p><p> ஆனால், தாங்கள் தவறு செய்திருந்தாலும் அதை நியாயப்படுத்தி மேலும் வாதிடுவார்கள். உணர்ச்சிவசப்பட்ட நேரங்களில் தங்களின் கருத்தே சரி என விடாப்பிடியாக இருப்பார்கள்.பின்னர் வருத்தப்பட்டாலும், வெளிப்படையாக மன்னிப்புக் கேட்க மாட்டார்கள்.</p><h2>
விருச்சிகம்</h2><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/237a56ab-3ae0-4ee6-9f70-f9b0c1d57054/26-6a9ac8b42950c.webp' /></p><h2>
</h2><p>விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய் மற்றும் புளூட்டோவின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள். தங்களின் உணர்வுகளை எளிதில் வெளிப்படுத்தாத இவர்கள், தவறு செய்தாலும் அதை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக மௌனம் காப்பார்கள்.</p><p> தங்களின் காரணங்கள் நியாயமானவை என நம்புவதால், மன்னிப்புக் கேட்பதைத் தவிர்த்து அந்தச் சூழ்நிலையிலிருந்து விலகிச் செல்ல முயல்வார்கள்.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">கும்பம்</span></h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca95ae8d-c5af-45e2-b4ab-e542aff98d4b/26-6a9ac8b4d3b7f.webp' /></p><p>கும்ப ராசியினர் யுரேனஸ் மற்றும் சனியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள். வித்தியாசமாகவும் தனித்துவமான கண்ணோட்டத்துடனும் சிந்திப்பார்கள்.தங்களின் நியாயமே சரி என நம்புவதால், தவறுகளை ஒப்புக்கொள்ளத் தயங்குவார்கள்.</p><p> தங்களின் காரணங்களை மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லை எனக் கூறி, உணர்வுப்பூர்வமான விவாதங்களைத் தவிர்ப்பார்கள். ஆனால் செய்த தவறை மட்டும் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp;</b> &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b> &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T13:44:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்று முன்னர் கை விலங்குடன் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாமல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-appears-before-the-bribery-commission-today-1788489690"></link>
            <id>https://tamilwin.com/article/namal-appears-before-the-bribery-commission-today-1788489690</id>
            <summary type="text">புதிய இணைப்புகைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கைவிலங்குடன் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.&amp;nbsp;
இலஞ்சம் அல்லது ஊழல் குற்...</summary>
            <content type="html"><![CDATA[<h2><span style="color: inherit; font-size: 1.75rem;">புதிய இணைப்பு</span></h2><p>கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கைவிலங்குடன் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.&nbsp;</p><p>
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று (04) கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">ஆறாம் இணைப்பு&nbsp;</span></p><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று (04) உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60c19b09-5d00-4729-a10f-765cc4f50a91/26-6a9acc3466afd.webp' /></p><p>எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையான நாமல் ராஜபக்சவிடம் ஐந்து மணி நேரம் முன்னெடுக்கப்பட்ட விசாரணை பின்னர் கைது செய்யப்பட்டார்.</p><p>

இதனையடுத்து மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa77e911-60bc-4097-b2b5-3821f0bbe236/26-6a9acc354e116.webp' /></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">ஐந்தாம் இணைப்பு&nbsp;</span></p><p>இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">நான்காம் இணைப்பு</span></p><p>சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். </p><p>

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த போது அவர் கைது செய்யப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3454f603-c2d9-4098-b51b-929f7533acc9/26-6a9a999449121.webp' /></p><h2>மூன்றாம் இணைப்பு</h2><p>சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சட்டத்தரணிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.</p><p>
வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.</p><p>

இதனையடுத்து பல மணிநேரம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையினை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/lUtyjGkX0qA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></p><p>சற்றுமுன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p>

இன்று காலை 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு நாமல் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் முன்னிலையாகியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3454f603-c2d9-4098-b51b-929f7533acc9/26-6a9a999449121.webp' /></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று காலை ( 4) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னிலையாவார் என சட்டத்தரணி முதித ஆர். லோகுமுதலி 
தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று காலை 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gSYHOvwD5kc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>கோரிக்கைக்கு இணக்கம்</h2><p>
</p><p>
எனவே தனது கட்சிக்காரர் இந்த கோரிக்கைக்கு இணங்க ஒப்புக்கொண்டதாக சட்டத்தரணி உறுதிபடுத்தியுள்ளார்.</p><p>இதன் காரணமாக&nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு ஆதரவான அரசியல்வாதிகள், பொதுமக்கள், கட்சியின் உறுப்பினர்கள் என பலர் தற்போது&nbsp;ஆணைக்குழுவின் முன்னிலையில் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக பெரிய ரக விமானக்குழுமத்தை அமைப்பது மற்றும் எயார்பஸ் (Airbus) விமானக்கொள்வனவின் போது இடம்பெற்றதாக கூறப்படும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, நாமல் ராஜபக்சவுக்கு ஆணைக்குழு (CIABOC) அழைப்பாணை விடுத்துள்ளது&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65d604aa-af14-4c35-8f3d-9d56698586ac/26-6a9a33ebe94cb.webp' />&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0103a55-c52f-43c9-bc3c-0cb3e650673b/26-6a9a99952ad37.webp' /></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T13:40:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடியோ காலில் கனடா பெண்ணுக்கு நிர்வாண பூஜை ; காத்திருந்த ஷாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nude-ritual-canadian-woman-astrologer-chennai-1788512948"></link>
            <id>https://jvpnews.com/article/nude-ritual-canadian-woman-astrologer-chennai-1788512948</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஜோதிடத்தில் அதிக நாட்டம் கொண்ட கனடாவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் தமிழகம் வந்துள்ளார். அவர் தொலைக்காட்சிகளிலும் அது தொடர்பாக பேசுபவர் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஜோதிடத்தில் அதிக நாட்டம் கொண்ட கனடாவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் தமிழகம் வந்துள்ளார். அவர் தொலைக்காட்சிகளிலும் அது தொடர்பாக பேசுபவர் என்று தெரிவிக்கப்படுகிறது
 

அந்தப் பெண் பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றுள்ளார். </p><p>அங்கு கிளி ஜோதிடம் பார்த்துக் கொண்டிருந்த ஜோதிடர் ஒருவரிடம் சென்று தனக்கு ஜோதிடம் பார்க்குமாறு கூறியுள்ளார். 

அப்போது கிளி ஜோதிடர் நான் உங்களை தொலைக்காட்சிகளில் பார்த்து உள்ளேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d071744-92d2-4d57-b139-e5807a34b58b/26-6a9a8ab5d6ce2.webp' /></p><h2>கூடுதலாக பணம்&nbsp; கேட்டு&nbsp; மிரட்டல்</h2><p> </p><p>நீங்கள் நன்றாக ஜோதிடம் பற்றி பேசுகிறீர்கள். 

நான் சொல்வதைக் கேட்டால் நீங்கள் இன்னும் உயரத்துக்கு சென்று விடலாம் என்று கூறியதுடன் அந்தப் பெண்ணின் வாழ்வில் நடந்த ஒரு விஷயத்தையும் துல்லியமாக குறிப்பிட்டு பல கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். </p><p>

 இதனால் கனடா பெண் கிளி ஜோதிடரை முழுமையாக நம்பத் தொடங்கியுள்ளார்.</p><p></p><p> நீங்கள் ஒரு நிர்வாண பூஜை செய்தால் போதும். வீடியோ கால் மூலமாகவே இந்த பூஜையை செய்து விடலாம் என கூறியிருக்கிறார். 

இதனை உண்மை என்று நம்பிய கனடா பெண்ணும் கிளி ஜோதிடர் கூறியபடி நிர்வாண பூஜைக்கு தயாராகி உள்ளார்.</p><p> 

ஜோதிடர் சொன்னபடி பொருட்களை எல்லாம் வாங்கி வீட்டில் வைத்து தனது ஆடைகளை எல்லாம் கலைந்து நிர்வாணமாக வீடியோ காலில் கிளி ஜோதிடருக்கு காட்சி தந்துள்ளார். கிளி ஜோதிடரும் தான் இருந்த இடத்தில் இருந்து பெண்ணை ரசித்த படி நிர்வாண பூஜைகளை செய்துள்ளார்.</p><p> 

இந்த நிர்வாண பூஜைக்கு கிளி ஜோதிடர் 20,000 ரூபா பணம் வாங்கி உள்ளார்.</p><p></p><p> </p><p>இதன் பின்னர் கனடா பெண்ணிடம் தொலைபேசியில் பேசிய ஜோதிடர் உங்களது நிர்வாண வீடியோவை நான் தொலைபேசியில் பதிவு செய்து வைத்துள்ளேன். </p><p>

அதனை வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் எனக்கு கூடுதலாக பணம் தர வேண்டும் எனக் கூறி மிரட்டல் விடுத்துள்ளார். ஜோதிடர் சொன்னதைக் கேட்டு கனடா பெண் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். 

இது பற்றி மாம்பலம் பொலிஸில் புகார் அளித்தார்.</p><p></p><p> </p><p>பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பெண்ணை ஏமாற்றி நிர்வாண பூஜை செய்த கிளி ஜோதிடர் யார்? என்பது பற்றி தொலைபேசி நம்பர் மூலமாக விசாரணை நடத்தினார்கள்.</p><p> இதில் கிளி ஜோதிடர் குற்றாலம் பகுதியை சேர்ந்த இசக்கி முத்து என்பது தெரிய வந்தது. 

இதைத்தொடர்ந்து பொலிஸார் அவரை கைது செய்த விசாரணை நடைபெற்று வருகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T13:36:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-minister-johnston-granted-bail-1788529087"></link>
            <id>https://jvpnews.com/article/former-minister-johnston-granted-bail-1788529087</id>
            <summary type="text">&amp;nbsp; இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.</p><p>


வாக்குமூலம் வழங்குவதற்காக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a0bf0d2-8d84-44f9-803d-2fb8e716c512/26-6a9ac9c0a0b0c.webp' /></p>]]></content>
            <updated>2026-09-04T13:35:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைவிலங்குடன் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாமல்! 14 நாட்கள் விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-rajapaksa-arrested-1788512140"></link>
            <id>https://ibctamil.com/article/namal-rajapaksa-arrested-1788512140</id>
            <summary type="text">புதிய இணைப்புகைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கைவிலங்குடன் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கைவிலங்குடன் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
</p><p>
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று (04) கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
</p><p>
2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்காக ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்தமை தொடர்பான ஒப்பந்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பிலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><h2>மூன்றாம் இணைப்பு</h2><p>நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6a77d19-8eb3-4aaf-8c18-71cde9c8e80d/26-6a9ac88753928.webp' /></p><p>இதனடிப்படையில் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட அவர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.</p><p>சிறிலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ்விமானக் கொள்முதல் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகள் நிமித்தமே இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.</p><h2>இரண்டாம் இணைப்பு</h2><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.</p><p></p><p> சிறிலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ்விமானக் கொள்முதல் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகள் நிமித்தமே இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில் நாமல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டமையை ஐபிசி தமிழ் செய்தியாளர் உறுதிப்படுத்தினார்.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p><b><u>சற்றுமுன்னர் அதிரடியாக கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச..!</u></b></p><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d149f0c1-97c9-48df-96fe-4ac0298ed075/26-6a9aa79233c9b.webp' /></p><p>
</p><p>இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் இன்று (04-09-2026) காலை முன்னிலையாகிய நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>இந்நிலையில் கைது செய்யப்ட்ட நாமல்&nbsp;ராஜபக்ச, புதுக்கடை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FLankasriTv%2Fvideos%2F875241888859624%2F&show_text=false&width=560&t=0" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>
</p><p>சிறிலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ்விமானக் கொள்முதல் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகள் நிமித்தமே இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு முன்னர் கருத்து தெரிவித்திருந்த நாமல் ராஜபக்ச, வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட எதிர்ப்பு பேரணிக்கு முன்னர் தன்னைக் கைது செய்து சிறையிலடைக்க அரசாங்கம் முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.</p><p>அரசாங்கம் அச்சமடைந்து அடக்குமுறையின் மூலம் எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க முயல்வதாகவும், இத்தகைய தடைகளால் தனது அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/8JcRUCEXLkY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T13:33:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளை நிற சுடிதாரில் மயக்கும் நடிகை நயன்தாரா போட்டோ ஷுட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-nayanthara-white-attire-photoshoot-1788527483"></link>
            <id>https://cineulagam.com/article/actress-nayanthara-white-attire-photoshoot-1788527483</id>
            <summary type="text">நயன்தாராலேடி சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவை தாண்டி இந்திய மொழிகளில் கெத்துக்காட்டி வரும் நடிகை.&amp;nbsp;அண்மையில் நயன்தாரா நடிப்பில் தமிழில் ஹாய் என்ற பட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நயன்தாரா</h2><p>லேடி சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவை தாண்டி இந்திய மொழிகளில் கெத்துக்காட்டி வரும் நடிகை.&nbsp;</p><p>அண்மையில் நயன்தாரா நடிப்பில் தமிழில் ஹாய் என்ற படம் வெளியானது, அதேபோல் கன்னட நடிகர் யஷ் நடிக்க டாக்சிக் என்ற படம் வெளியானது, அதிலும் நயன்தாரா முக்கிய ரோலில் நடித்திருந்தார்.</p><p>பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான இரண்டு படங்களுமே சுமாராக தான் ஓடியது. இந்த நிலையில் நடிகை நயன்தாரா வெள்ளை நிற சுடிதாரில் வெளியிட்ட போட்டோஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p><p>இதோ அந்த போட்டோஸ்,</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T13:30:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளர்ப்பது அம்மா, ஆனா நல்ல அப்பாவாம்!! ஆர்த்தி ரவி யாரை அட்டாக் செய்கிறார்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/imagine-flexing-about-being-good-dad-aarthi-s-post-1788526824"></link>
            <id>https://viduppu.com/article/imagine-flexing-about-being-good-dad-aarthi-s-post-1788526824</id>
            <summary type="text">ஆர்த்தி ரவிநடிகர் ரவி மோகன் கடந்த ஆண்டு தான் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறி விவாகரத்து வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிமன்றம் அதிரடி உத்தரவை ச...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஆர்த்தி ரவி</h2><p>நடிகர் ரவி மோகன் கடந்த ஆண்டு தான் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறி விவாகரத்து வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிமன்றம் அதிரடி உத்தரவை சமீபத்தில் பிறப்பித்து இருந்தது.

அதாவது வழக்கு முடியும் வரை மாதம் 3 லட்சம் ஜீவனாம்சமாக ஆர்த்திக்கு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3509ec02-36c5-4f93-9b95-869995bc033f/26-6a9ac0eab319d.webp' /></p><p> ஆர்த்தி தனக்கு ரூ. 40 லட்சம் வேண்டும் என்று கேட்ட நிலையில் நீதிபதி இப்படியொரு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் மகன்களை ரவி மோகனை சந்திக்க அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஆர்த்தி, ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையிலான போட்டோஷூட் நடத்தி வருகிறார்.</p><p> சமீபத்தில் ஆர்த்தி பகிர்ந்த இன்ஸ்டா ஸ்டோரி பலரது கவனத்தை பெற்று வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3d7fec2-15fe-41d1-b9cc-41043bdd0714/26-6a9ac0eb65a82.webp' /></p><p> </p><p>அதில், தங்கள் குழந்தைகளை உண்மையில் வளர்த்துக் கொண்டிருப்பது அவர்களது அம்மாவாக இருக்கும்போது, நல்ல அப்பா என்று பெருமை பேசிக் கொள்வதை நினைத்து பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ரவி மோகன் சர்தார் 2 பட நிகழ்ச்சியில் பேசியப்பின் ஆர்த்தி இந்த பதிவினை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-04T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா இணைய உளவு அமைப்பின் புதிய தலைவராக ஸ்காட் ஜோன்ஸ் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/carney-chooses-senior-bureaucrat-scott-jones-1788524000"></link>
            <id>https://canadamirror.com/article/carney-chooses-senior-bureaucrat-scott-jones-1788524000</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் இணைய வழியிலான உளவு அமைப்பான &#039;கமினிகேஷன்ஸ் செக்யூரிட்டி எஸ்டாப்ளிஷ்மென்ட்&#039; தலைவராக மூத்த அரசு அதிகாரி ஸ்காட் ஜோன்ஸை பிரதமர் மார்க் கார்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் இணைய வழியிலான உளவு அமைப்பான 'கமினிகேஷன்ஸ் செக்யூரிட்டி எஸ்டாப்ளிஷ்மென்ட்' தலைவராக மூத்த அரசு அதிகாரி ஸ்காட் ஜோன்ஸை பிரதமர் மார்க் கார்னி நியமித்துள்ளார்.</p><p> 
தற்போது ஓய்வு பெறவுள்ள கரோலின் சேவியருக்குப் பதிலாக ஸ்காட் ஜோன்ஸ் இந்தப் பொறுப்பை ஏற்கவுள்ளார். இவர் இதற்கு முன்னர் 'ஷேர்டு சர்வீசஸ் கனடா' அமைப்பின் தலைவராகப் பணியாற்றி வந்தார்.</p><p> 
அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இணைய வழியில் வெளிநாட்டு உளவுத் தகவல்களைச் சேகரிப்பதும், இணைய அச்சுறுத்தல்களிலிருந்து கனடாவைப் பாதுகாப்பதும் சி.எஸ்.இ அமைப்பின் முதன்மைப் பணியாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b6a280b-fffe-490f-abee-250d50fdb7c7/26-6a9ab5e1f0eed.webp' /></p><p> </p><p>
ஸ்காட் ஜோன்ஸ் 2018 முதல் 2021 வரை CSE அமைப்பின் கீழ் இயங்கும் 'கனடியன் சென்டர் ஃபார் சைபர் செக்யூரிட்டி' அமைப்பின் தலைவராகப் பணியாற்றினார். </p><p>மேலும், 2008 முதல் 2018 வரை இந்த அமைப்பில் பல்வேறு முக்கியப் பதவிகளை அவர் வகித்துள்ளார். </p><p>
ஓய்வு பெறவுள்ள கரோலின் சேவியர் கனடா நாட்டுக்கு ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவைகளைப் பாராட்டிப் பிரதமர் மார்க் கார்னி தனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்றொழிலுக்கு சென்ற தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-fishermen-lose-their-fishing-boat-1788516195"></link>
            <id>https://tamilwin.com/article/two-fishermen-lose-their-fishing-boat-1788516195</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;கிரான்குளம் கடலில் விபத்துக்குள்ளான தோணியிலிருந்து பாரிய அலையில் சிக்கிய உயிரிழந்த&amp;nbsp;இருவரில் மற்றைய நபரின் சடலமும் மீட்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>கிரான்குளம் கடலில் விபத்துக்குள்ளான தோணியிலிருந்து பாரிய அலையில் சிக்கிய உயிரிழந்த&nbsp;இருவரில் மற்றைய நபரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு<span style="color: inherit; font-size: 1.75rem;">&nbsp;</span></h2><p>மட்டக்களப்பு - கிரான்குளம் கடலில் கடற்றொழிலிலுக்காக சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.</p><p>குறித்த சம்பவமானது இன்று(4.9.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>கிரான்குளம் செல்லத்தம்பி வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய கடற்றொழில் சங்க தலைவர் மற்றும் விஷ்ணு கோவில் வீதியைச்
சேர்ந்த 48 வயதுடைய நபர் இருவருமே உயிரிழந்துள்ளனர்.</p><h3>மேலதிக விசாரணை</h3><p>

குறித்த கடல் பிரதேசத்தில் சம்பவ தினமான இன்று பிற்பகல் 11.00 மணியளவில் மீன்
பிடிப்பதற்கு தோணி ஒன்றில் 3 பேர் சென்று மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த
போது திடீரென பாரிய அலை ஒன்றில் தோணி சிக்கி கவிழ்ந்ததையடுத்து 3 பேரும்
நீரில் மூழ்கினர்.
</p><p>
இதில் ஒருவர் நீந்தி கரையை வந்தடைந்த நிலையில்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.</p><p>இந்நிலையில், நீரில் மூழ்கிய&nbsp;மற்றொருவரை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.&nbsp;</p><p>மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T13:26:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்சவுக்கு விளக்கமறியல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-released-on-bail-1788524039"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-released-on-bail-1788524039</id>
            <summary type="text">கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
அதன்படி, எதிர்வரும் 18 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b4a50c3-a272-4192-b605-0d070d238c9b/26-6a9ab609664c4.webp' /></p><p>
</p><p>



ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு வானூர்திகளை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் நாமல் ராஜபக்ச இன்று முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T13:26:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கையை கடிக்கும் வாழ்க்கை செலவு; ஐரோப்பாவிற்குப் புலம்பெயரும் பிரித்தானியர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/biting-cost-of-living-britons-emigrating-to-europe-1788509863"></link>
            <id>https://canadamirror.com/article/biting-cost-of-living-britons-emigrating-to-europe-1788509863</id>
            <summary type="text">&amp;nbsp; பிரிட்டனில் அதிகரித்து வரும் கடுமையான பணவீக்கம், அதிக வீட்டு வாடகை மற்றும் மின்கட்டண உயர்வு காரணமாக, அந்நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நகரங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரிட்டனில் அதிகரித்து வரும் கடுமையான பணவீக்கம், அதிக வீட்டு வாடகை மற்றும் மின்கட்டண உயர்வு காரணமாக, அந்நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நகரங்களுக்குக் குடிபெயரும் ‘காஸ்ட் ஆஃப் லீவிங்’ (Cost of Leaving) கலாச்சாரம் பிரிட்டன்வாசிகளிடையே அதிகரித்து வருகிறமை ஆய்வில் தெரியவந்துள்ளது.</p><p> 

பாரிஸ், ஸ்டாக்ஹோம் மற்றும் பெர்லின் போன்ற ஐரோப்பிய நகரங்களில் வாழ்க்கைச் செலவு லண்டனை விட கணிசமாகக் குறைவாக இருப்பது சர்வதேச நுகர்வோர் குறியீட்டு (Numbeo Cost of Living Index) ஆய்வில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64fffa31-2370-4d12-b1bd-eb7d7a9d691f/26-6a9a7ea8502ff.webp' /></p><h2>வாடகை மட்டுமல்லாது, தினசரிப் பொருட்கள் கொள்முதல்</h2><p>
</p><p>
சர்வதேச வாழ்வாதாரக் குறியீட்டின் தரவுகளின்படி, பிரிட்டன் தலைநகர் லண்டனில் தனிநபர் ஒருவர் சராசரியாக வாழத் தேவையான பணத்தை விட, பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 11 சதவீதமும், ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் 10 சதவீதமும் குறைவான செலவிலேயே வாழ முடியும் எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.</p><p> 

குறிப்பாக லண்டனில் ஒரு படுக்கையறை கொண்ட வீட்டின் சராசரி வாடகை ஐரோப்பிய தலைநகரங்களை விட 35 முதல் 40 சதவீதம் வரை அதிகமாக உள்ளது, பிரிட்டன் மக்களை பிற நாடுகளை நோக்கித் தள்ளும் முதன்மை காரணியாக மாறியுள்ளது.
</p><p>
வாடகை மட்டுமல்லாது, தினசரிப் பொருட்கள் கொள்முதல், பொதுப்போக்குவரத்து, மின்சாரம் மற்றும் உணவகங்களின் செலவுகளிலும் பிரிட்டனை விட ஐரோப்பிய நகரங்கள் அதிக சேமிப்பை வழங்கி வருகின்றன. </p><p>உதாரணமாக, ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் மற்றும் இத்தாலியின் ரோம் ஆகிய நகரங்கள் லண்டனை விட சுமார் 45 சதவீதம் வரை மலிவான வாழ்க்கைச் சூழலை வழங்குவதால், வீட்டில் இருந்தே பணியாற்றும் (Remote Work) இளம் பிரிட்டன் ஊழியர்கள் பெருமளவில் அந்நகரங்களை நோக்கிப் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
</p><p>
கடந்த சில ஆண்டுகளாகப் பிரிட்டனில் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால், குறைந்த செலவில் உயர்தர வாழ்க்கை முறையைப் (Quality of Life) பெற விரும்புவோருக்குப் பாரிஸ், பர்லின், பார்சிலோனா போன்ற நகரங்கள் சிறந்த மாற்றாக உருவெடுத்துள்ளன.</p><p>

 பிரிட்டன் அரசு வரி விதிப்புகளையும் வாழ்க்கைச் செலவுகளையும் சீரமைக்கத் தவறினால், நாட்டின் திறமைவாய்ந்த பணியாளர்கள் (Brain Drain) ஐரோப்பிய நாடுகளுக்குக் குடிபெயர்வது மேலும் அதிகரிக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-04T13:22:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடிய பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/officials-urge-parents-to-check-childrens-vaccines-1788523480"></link>
            <id>https://canadamirror.com/article/officials-urge-parents-to-check-childrens-vaccines-1788523480</id>
            <summary type="text">கனடாவில் பள்ளிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குரிய தடுப்பூசிகளைத் தவறாமல் செலுத்தியுள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் பள்ளிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குரிய தடுப்பூசிகளைத் தவறாமல் செலுத்தியுள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் அவசரமாக வலியுறுத்தியுள்ளனர்.
</p><p>குளிர்காலம் தொடங்கவுள்ள சூழலில், குழந்தைகள் வகுப்பறைகளுக்குள் ஒன்றாக அதிக நேரத்தைச் செலவிடுவார்கள்.
</p><p>இதனால் காய்ச்சல், கோவிட்-19 மற்றும் ஆர்.எஸ்.வி போன்ற நோய்த்தொற்றுகள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7011225c-7247-4a32-b4eb-732bcfb7f261/26-6a9ab3d995055.webp' /></p><p> </p><p>
குறிப்பாகத் தட்டம்மை நோய் மீண்டும் பரவுவது குறித்து அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். </p><p>
அரசின் தரவுகளின்படி, கடந்த ஆண்டில் 2 வயதுக் குழந்தைகளில் 85 சதவீதம் பேர் மட்டுமே தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி மற்றும் ரூபெல்லா தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். </p><p>
தட்டம்மை நோய் பரவாமல் தடுக்கவும், சமூக நோய் எதிர்ப்புச் சக்தியைப் பேணவும் குறைந்தபட்சம் 95 சதவீதக் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும். </p><p>
ஆனால் தற்போதைய 85 சதவீத விகிதம் இந்த இலக்கை விடக் குறைவாக இருப்பதால், நோய் பரவும் ஆபத்து அதிகரித்துள்ளது. </p><p>
பெற்றோர் பிள்ளைகளின் தடுப்பூசி குறித்து கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T13:21:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிபிஎல் தொடரில் அதிவேக சதமடித்து சாதனை படைத்த தசுன் ஷனகா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dasun-shanaka-smashes-fastest-century-in-cpl-1788527828"></link>
            <id>https://news.lankasri.com/article/dasun-shanaka-smashes-fastest-century-in-cpl-1788527828</id>
            <summary type="text">Dasun Shanaka smashes Fastest Century In CPL: 39 பந்துகளில் சதம் விளாசிய தசுன் ஷனகா, CPL வரலாற்றில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>Dasun Shanaka smashes Fastest Century In CPL: 39 பந்துகளில் சதம் விளாசிய தசுன் ஷனகா, CPL வரலாற்றில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.&nbsp; </p><h3>தசுன் ஷனகா அதிவேக சதம் </h3><p>

கரீபியன் பிரீமியர் லீக்(CPL) தொடரின் இன்றைய போட்டியில், செயின்ட் கிட்ஸ் நெவிஸ் பேட்ரியாட்ஸ்(SKN P) மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ்(SLK) அணிகள் மோதியது. </p><p>

நாணய சுழற்சியில் வென்ற SLK அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. </p><p>

முதலில் துடுப்பாட்டம் ஆடிய SKN Pஅணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/837e887a-ebc5-4250-ae67-68709ef014d8/26-6a9ac4d64a9fd.webp' /></p><p>

SKN P தரப்பில் அதிகபட்சமாக தசுன் ஷனகா 121 ஓட்டங்களும், ஆண்ட்ரே ஃபிளெட்சர் 64 ஓட்டங்களும் குவித்தனர். </p><p>

236 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய SLK, 13.5 ஓவர்களில் வெறும் 98 ஓட்டங்கள் மட்டுமே குவித்து ஆல் அவுட் ஆனது.&nbsp;</p><p></p><p> 

SLK தரப்பில் அதிகபட்சமாக டிம் சைஃபெர்ட் 50 ஓட்டங்கள் குவித்தார். 

SKN Pதரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜெர்மையா லூயிஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c622dd81-f0ab-434f-839b-4aef16de7559/26-6a9ac4d7a38fd.webp' /></p><p>

இதன் மூலம், SKN Pஅணி 137 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. </p><p>

43 பந்துகளில், 8 பவுண்டரி, 12 சிக்ஸர்கள் உட்பட 121 ஓட்டங்கள் குவித்த தசுன் ஷனகா, CPL வரலாற்றில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23ea1b99-aa65-48a1-a297-6196d793bfef/26-6a9ac4d6f229c.webp' /></p><p> 

முன்னதாக சிபிஎல் தொடரில் ஆண்ட்ரே ரஸல், டிம் சைஃபெர்ட், ஷிம்ரான் ஹெட்மையர் ஆகியோர் தலா 40 பந்துகளில் சதம் அடித்தததே சாதனையாக இருந்தது.&nbsp;</p><p></p><p>

தசுன் ஷனகா இந்த போட்டியில் 39 பந்துகளில் சதம் விளாசி சாதனையை முறியடித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T13:17:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு லட்சம் ஊழியர்களை வேலை நீக்கும் ஜேர்மன் நிறுவனம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/german-company-volkswagen-to-lay-off-100-000-1788527640"></link>
            <id>https://canadamirror.com/article/german-company-volkswagen-to-lay-off-100-000-1788527640</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;உலக புகழ் பெற்ற ஜேர்மன் வாகன நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், உலகளாவிய கார் தொழிற்துறையில் இதுவரை இல்லாத மிகப்பெரிய மறுசீரமைப்பாக அமையவிருக்கும் ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;உலக புகழ் பெற்ற ஜேர்மன் வாகன நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், உலகளாவிய கார் தொழிற்துறையில் இதுவரை இல்லாத மிகப்பெரிய மறுசீரமைப்பாக அமையவிருக்கும் ஒரு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் மொத்தம் 100,000 வேலைகளைக் குறைக்கப் போவதாக வியாழக்கிழமை அறிவித்தது .</p><p>

ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட 50,000 ஆட்குறைப்புகளுக்குக் கூடுதலாக, மேலும் 50,000 வேலைகளைக் குறைக்கும் திட்டத்திற்கு நிர்வாகமும் தொழிற்சங்கங்களும் ஒப்புதல் அளித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ac5f4ad-b722-4ff9-a77f-49621b36f400/26-6a9ac41a5cfb6.webp' /></p><h2>ஒரு லட்சம் வேலை இழப்புகள் ஏற்படக்கூடும்&nbsp;</h2><p>
</p><p>
பொருளாதார யதார்த்தங்களுக்கு ஏற்ப பணியாளர் எண்ணிக்கையை முறையாகச் சீரமைப்பது அவசியம் என்று, ஃபோக்ஸ்வேகன் மட்டுமின்றி ஆடி மற்றும் போர்ஷே ஆகிய நிறுவனங்களையும் உள்ளடக்கிய ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் அறிக்கை தெரிவித்தது. </p><p>

மொத்தமாக மேற்கொள்ளப்பட்ட 100,000 ஆட்குறைப்புகள், உலகெங்கிலும் உள்ள ஃபோக்ஸ்வேகன் ஊழியர்களில் சுமார் 15 சதவீதத்திற்குச் சமமாகும். 2009-ல் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் திவாலானதாக அறிவித்த பிறகு மேற்கொண்ட 50,000 ஆட்குறைப்புகளை இந்த ஆட்குறைப்பு விஞ்சியுள்ளது.</p><p>

திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன்பு, தொழிற்சங்கங்களும் நிர்வாகமும் பகிரங்கமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டன.</p><p> ஒரு லட்சம் வேலை இழப்புகள் ஏற்படக்கூடும் என்ற தகவல் நிறுவனத்திற்குள் தெரிவிக்கப்படுவதற்கு முன்பே ஊடகங்களில் வெளியானதால், நிர்வாகம் தொழிலாளர்களிடம் நேர்மையாக நடந்துகொள்ளவில்லை என்று தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டின.
</p><p>
மேலும், ஹனோவர், எம்டன், ஸ்விக்காவ் மற்றும் நெக்கர்சுல்ம் ஆகிய இடங்களில் உள்ள நான்கு முக்கிய ஜெர்மன் ஆலைகளின் நீண்டகால எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்றும் ஃபோக்ஸ்வேகன் கூறியுள்ளது. </p><p>அவற்றின் மூடல், ஃபோக்ஸ்வேகனின் தாய்நாட்டில் அதன் தொழிற்சாலைகள் முழு அளவில் மூடப்படும் முதல் நிகழ்வாக அமையும்.

அமெரிக்காவின் வரிகள் , சீனாவின் போட்டி மற்றும் மின்சார வாகனங்களுக்கான தேவையில் ஏற்பட்டுள்ள மந்தமான வளர்ச்சி ஆகியவற்றால் , ஐரோப்பாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனம் சிக்கலில் உள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-04T13:11:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/johnston-fernando-bribery-or-corruption-commission-1788497114"></link>
            <id>https://tamilwin.com/article/johnston-fernando-bribery-or-corruption-commission-1788497114</id>
            <summary type="text">புதிய இணைப்புஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் செல்ல அனுமதிக்குமாற...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது.&nbsp;</p><p>
இலஞ்ச ஆணைய அதிகாரிகள் மற்றும் சந்தேக நபர்களின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.&nbsp;</p><h2>மூன்றாம் இணைப்பு&nbsp;</h2><p>இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
</p><p>
 

பொல்கொல்ல மகிந்த ராஜபக்ச மண்டபத்திற்காக நாற்காலிகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்திற்காக தகுதியான முறையில் தெரிவுசெய்யப்பட்ட நிறுவனத்தை நீக்கிவிட்டு, தனக்கு நெருக்கமான ஒருவருக்கு வழங்கி 79 இலட்சம் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ee9e768-9f18-44da-a4ef-df78de657801/26-6a9ab058e662c.webp' />&nbsp;</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></h2><h2> </h2><p>முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.</p><p>இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையினை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>சற்றுமுன்னர் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். </p><p>

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் இன்று (04) ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T13:07:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கு பதற்றம்: இராணுவச் சாதனங்களில் விளம்பரக் கண்காணிப்பு கருவிகளை முடக்கிய அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-disabled-advertising-tracking-tools-on-military-1788525194"></link>
            <id>https://tamilwin.com/article/us-disabled-advertising-tracking-tools-on-military-1788525194</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் இராணுவப் பயன்பாட்டிலுள்ள
கணினிகள் மற்றும் தொலைபேசிகளில் காணப்பட்ட விளம்பரக் கண்காணிப்புக் கருவிகளை
அமெரிக்க இராணுவம் முடக்கியுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் இராணுவப் பயன்பாட்டிலுள்ள
கணினிகள் மற்றும் தொலைபேசிகளில் காணப்பட்ட விளம்பரக் கண்காணிப்புக் கருவிகளை
அமெரிக்க இராணுவம் முடக்கியுள்ளது.
</p><p>&nbsp;மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளின் நடமாட்டங்களை விளம்பர நிறுவனங்கள் மூலம் திரட்டப்படும் இருப்பிடத் தரவுகள் வழியே எதிரிகள் கண்காணிப்பதாக எழுந்த தகவல்களை அடுத்து குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>
குறித்த விளம்பர அடையாளக் குறியீடுகள் மூலம் திரட்டப்படும் தனிநபர் தரவுகள்
சந்தையில் விற்கப்படுவதால், போர் மண்டலங்களில் உள்ள படைவீரர்களின்
இருப்பிடத்தை எதிரிநாடுகள் மிக இலகுவாகக் கண்டறியும் ஆபத்து உருவாகியுள்ளதாகக்
கண்டறியப்பட்டுள்ளது.</p><h2>விசாரணை</h2><p>
</p><p>
இதன் காரணமாகவே அமெரிக்க விமானப்படை, கடற்படை மற்றும் சிறப்புப் படைகள் தமது
சாதனங்களில் இத்தகைய கண்காணிப்பு அம்சங்களை அண்மைக் காலத்தில் முடக்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e29ebe57-8faf-4d24-b692-73aa08828b34/26-6a9abe212182e.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், இராணுவத்தின் இந்த நடவடிக்கைகள் அச்சுறுத்தலை முழுமையாகத்
தடுப்பதற்குப் போதுமானதாக இல்லை என சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்க நாடாளுமன்ற
உறுப்பினர்கள், படைவீரர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பில்
பென்டகன் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/kVF3yFtml18" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T13:03:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/weather-urgent-warning-issued-to-fishermen-1788527087"></link>
            <id>https://jvpnews.com/article/weather-urgent-warning-issued-to-fishermen-1788527087</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களுக்கு காற்றின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களுக்கு காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதற்கமைய, குறித்த கடல் பிராந்தியங்களில் இடைக்கிடையே கடல் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என&nbsp; திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6eef45f5-be38-49ed-8875-0f7f00ff5203/26-6a9ac1f118c50.webp' /></p><p>
</p><p>
இதன் காரணமாக, குறிப்பிட்ட கடல் பிராந்தியங்களில் நடவடிக்கைகளில் ஈடுபடும்போது அவதானமாக செயற்படுமாறு கடற்றொழிலாளர்களை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-04T13:01:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[சைபர் குற்றங்கள் மற்றும் சட்டவிரோத இணையவழி சூதாட்ட நடவடிக்கைகள்! பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பில் விசேட கவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-takes-action-to-block-illegal-websites-1788523754"></link>
            <id>https://tamilwin.com/article/government-takes-action-to-block-illegal-websites-1788523754</id>
            <summary type="text">பொதுப் பாதுகாப்பை உறுதி செய்தல், சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பொலிஸ் சேவையின் திறனை அதிகரிப்பது தொடர்பில் பல விடயங்கள் குறித்து பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுப் பாதுகாப்பை உறுதி செய்தல், சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பொலிஸ் சேவையின் திறனை அதிகரிப்பது தொடர்பில் பல விடயங்கள் குறித்து பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய அமைச்சரவை ஆலோசனைக் குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
</p><p>

பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய அமைச்சரவை ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.</p><h2>விசேட கவனம்</h2><p>
</p><p>

சைபர் குற்றங்கள் மற்றும் சட்டவிரோத இணையவழி சூதாட்ட நடவடிக்கைகள் மற்றும் மோசடிகளைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இக்குழுவில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், சட்டவிரோத சூதாட்டம் மற்றும் இதர சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இணையதளங்களை முடக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
</p><p>

சைபர் குற்றங்கள் தொடர்பில் நாட்டில் தங்கியிருந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட வெளிநாட்டினருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இதன்போது வெளிப்படுத்தப்பட்டது.
</p><p>

குறித்த நாடுகளின் தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து அந்த வெளிநாட்டினரை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8472b6e4-be67-419b-b7ee-9f859b523769/26-6a9ac121d479c.webp' /></p><h2>ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை</h2><p>
</p><p>

சைபர் குற்றப் புலனாய்வுகளுக்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் சட்ட அறிவைக் கொண்ட மனித வளத்தைப் பலப்படுத்துவதற்காக மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் சட்டத்தரணிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.
</p><p>

மேலும், புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு களப் பயிற்சி மற்றும் தேவையான வெளிநாட்டுப் பயிற்சிகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
</p><p>

அத்துடன், சைபர் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பான புலனாய்வு நடவடிக்கைகளை மேலும் திறம்பட செய்வதற்கு புதிய தொழில்நுட்ப அமைப்புகளை அறிமுகப்படுத்துவது மற்றும் காலத்திற்கு ஏற்ற வகையில் செயல்படக்கூடிய மத்திய அமைப்பு ஒன்றை நிறுவுவதன் அவசியம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T13:01:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் அரைக்காற்சட்டையுடன் விசாரணைக்கு வந்த நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-rajapaksa-arrives-questioning-wearing-shorts-1788526721"></link>
            <id>https://ibctamil.com/article/namal-rajapaksa-arrives-questioning-wearing-shorts-1788526721</id>
            <summary type="text">இலங்கை அரசியலில் ஆட்சி மாற்றங்கள் என்பது வெறுமனே ஆட்சியாளர்கள் மாறுவதல்ல. 

அதிகாரத்தின் மொழியும், சட்டத்தின் நடைமுறையும், அரசியல் எதிரிகளை அணுகும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசியலில் ஆட்சி மாற்றங்கள் என்பது வெறுமனே ஆட்சியாளர்கள் மாறுவதல்ல. 

அதிகாரத்தின் மொழியும், சட்டத்தின் நடைமுறையும், அரசியல் எதிரிகளை அணுகும் விதமும் மாறுகின்றனவா என்ற கேள்வியையும் அது எழுப்புகிறது.
</p><p>
நாமல் ராஜபக்ச தொடர்பான இன்றைய சட்ட நடவடிக்கையும் இத்தகைய பரந்த அரசியல் விவாதத்திற்குள் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகியுள்ளது.
</p><p>
ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நாமல் ராஜபக்ச பல்வேறு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தபோதிலும், அவர் அரசியல் ரீதியாகச் சுதந்திரமாகச் செயல்பட்டார்.</p><p></p><h2>முற்றிலும் மாறிய&nbsp;அரசியல் சூழல்</h2><p> </p><p>விசாரணைகளில் சுதந்திரமாக நேரில் முன்னிலையாகினார். ஏன் அரைக்காற்சட்டையுடனும், தொப்பியுடனும் விசாரணையின் உயரிய சபைகளுக்கு இறுமாப்புடன் ஏறி,இறங்கினார்.</p><p> 

ஆனால் இன்று அரசியல் சூழல் முற்றிலும் மாறியுள்ளது. 

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னர், அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் மேலும் தீவிரமடைந்தது.
</p><p>
இதன் உச்சகட்டமாக விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது, வழக்கின் சட்டப்பூர்வ அம்சங்களைத் தாண்டி ஒரு முக்கியமான அரசியல் விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.</p><p>

 ஆட்சி மாறும்போது சட்டத்தின் அணுகுமுறையும் மாறுகிறதா?</p><p>

இந்தக் கேள்விக்கு உடனடியாக அரசியல் பதிலை வழங்க முடியாது. ஏனெனில் ஒருவரை விளக்கமறியலில் வைப்பது நீதிமன்றத்தின் சட்டப்பூர்வ முடிவு.
</p><p>
அதனை அரசியல் பழிவாங்கலாகவோ அல்லது முழுமையான நீதியின் வெற்றியாகவோ அறிவிப்பதற்கு முன்னர் வழக்கின் ஆதாரங்கள், நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளின் தன்மை ஆகியவை கவனமாக ஆராயப்பட வேண்டும்.</p><p></p><h2>இலங்கையின் அதிகார அரசியல்</h2><p>
</p><p>
ஆனால் அரசியல் ரீதியாக இந்த விவகாரம் முக்கியமானது.

ராஜபக்ச குடும்பம் நீண்டகாலமாக இலங்கையின் அதிகார அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. </p><p>

அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராக புதிய ஆட்சியின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்போது, அது அரசியல் மாற்றத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுவது இயல்பானதே. </p><p>

குறிப்பாக கடந்த காலத்தில் அதிகாரத்தில் இருந்தவர்கள்மீது விசாரணைகள் நடத்தப்பட்ட விதமும், இன்று அவர்கள் எதிர்கொள்ளும் சட்ட நடவடிக்கைகளும் ஒப்பிடப்படத் தொடங்குகின்றன.
</p><p>
இங்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் ஒரு முக்கியமான சோதனை உள்ளது.

முன்னைய ஆட்சிகளின் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்ற அரசியல் வாக்குறுதி புதிய ஆட்சியின் எழுச்சியில் முக்கிய பங்கு வகித்தது.</p><p> 

எனவே, முன்னாள் ஆட்சியாளர்கள் தொடர்பான வழக்குகளில் சட்டம் தனது வேலையைச் செய்ய அனுமதிப்பது மட்டுமல்லாமல், அந்தச் சட்ட நடவடிக்கைகள் அரசியல் பழிவாங்கலாகத் தோன்றாத வகையில் வெளிப்படைத்தன்மையையும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பும் அரசாங்கத்திற்கு இருக்கிறது.
</p><p>
மறுபுறம், ராஜபக்ச தரப்பிற்கும் இதே அளவு முக்கியமான பொறுப்பு உள்ளது. “அரசியல் பழிவாங்கல்” என்ற வார்த்தையை மட்டும் முன்வைப்பது போதாது. 

குற்றச்சாட்டுகளுக்கு சட்ட ரீதியான பதிலளிப்பதும், விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பதும், நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதும் அவசியம்.
</p><p>
இந்த விவகாரத்தின் மையக் கேள்வி நாமல் ராஜபக்ச தனிப்பட்ட முறையில் எதிர்கொள்ளும் சட்ட நடவடிக்கை மட்டுமல்ல.
</p><p>
இலங்கையில் ஆட்சி மாறும்போது சட்டத்தின் நடைமுறை மாறுகிறதா, அல்லது ஆட்சியாளர் யார் என்ற வேறுபாடின்றி சட்டம் ஒரே அளவுகோலில் செயல்படுகிறதா?

இதற்கான பதிலே புதிய அரசாங்கத்தின் அரசியல் நம்பகத்தன்மையை தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும்.</p><p></p><h2>சட்ட ரீதியான உண்மை</h2><p>
</p><p>
முன்னாள் ஆட்சியாளர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது மட்டும் ஒரு அரசாங்கத்தின் வெற்றியல்ல. 

அதே சட்டத்தை தனது அரசியல் எதிரிகளுக்கும், தனது ஆதரவாளர்களுக்கும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் ஒரே அளவில் பயன்படுத்த முடிகிறதா என்பதே உண்மையான சோதனை.
</p><p>
நாமல் ராஜபக்சவுக்கு எதிரான விளக்கமறியல் நடவடிக்கை இந்தப் பெரிய அரசியல் கேள்வியை மீண்டும் இலங்கை சமூகத்தின் முன் கொண்டுவந்துள்ளது. </p><p>

இது ஒரு தனிப்பட்ட வழக்காக முடிவடையுமா, அல்லது இலங்கையின் “அதிகாரத்திற்கு ஒரு சட்டம், எதிர்க்கட்சிக்கு இன்னொரு சட்டம்” என்ற பழைய அரசியல் கலாசாரத்தை மாற்றும் தொடக்கமாக மாறுமா என்பதைக் காலமே தீர்மானிக்கும்.
</p><p>
இறுதியில், நீதிமன்றத்தின் தீர்ப்பே சட்ட ரீதியான உண்மையை நிர்ணயிக்க வேண்டும். 

ஆனால் அந்தத் தீர்ப்பைச் சுற்றியுள்ள அரசியல் விவாதம் ஒரு முக்கியமான ஜனநாயகக் கோரிக்கையை மட்டும் முன்வைக்கின்றமைகுறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T12:59:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரும் பரபரப்புக்கு மத்தியில் கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் அர்ச்சுனா எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/archuna-went-to-the-court-to-see-namala-1788525561"></link>
            <id>https://tamilwin.com/article/archuna-went-to-the-court-to-see-namala-1788525561</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், கொழும்பு நீதிமன்றத்திற்கு பதற்றத்துடன், அர்ச்சுனா எம்.பி வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், கொழும்பு நீதிமன்றத்திற்கு பதற்றத்துடன், அர்ச்சுனா எம்.பி வருகை தந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (04.09.2026) காலை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையான நாமல் ராஜபக்சவிடம் சுமார் ஐந்து மணி நேரம் விசாரணை முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.</p><h2>நீதிமன்றம் வரை வந்த அர்ச்சுனா</h2><p>

இதனையடுத்து, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.</p><p>

இதன்போது, நாமல் ராஜபக்சவை எதிர்வரும் செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/213932a0-bf30-4f1e-9c3e-cfa48d3f053a/26-6a9abf1511e86.webp' /></p><p>
</p><p>

இந்த நிலையில், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்கு அவசர அவசரமாக சென்ற காணொளியொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது.</p><p></p><p></p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1605101454564871%2F&show_text=true&width=380&t=0" width="380" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>
</p>]]></content>
            <updated>2026-09-04T12:48:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-minister-johnston-fernando-arrives-at-ciaboc-1788496959"></link>
            <id>https://ibctamil.com/article/ex-minister-johnston-fernando-arrives-at-ciaboc-1788496959</id>
            <summary type="text">புதிய இணைப்புஇலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் (CIABOC) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு&amp;nbsp;...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் (CIABOC) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு&nbsp;பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><h2> மூன்றாம் இணைப்பு &nbsp;&nbsp;</h2><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கொழும்பு பிரதான நீதவான்&nbsp; நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
</p><p>
தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக ஜான்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (04) CIABOC-ஆல் கைது செய்யப்பட்டார்.</p><p></p><h3><u>இரண்டாம் இணைப்பு&nbsp;</u></h3><p>முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக ஆணைக்குழுவில் முன்னிலையான போதே கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h5>ஊழல் குற்றச்சாட்டு</h5><p>பொல்கொல்லயில் அமைந்துள்ள மகிந்த ராஜபக்ச அரங்கத்திற்கு கதிரைகளைக் கொன்வனவு செய்யும் போது உரிய கொள்முதல் நடைமுறைகளை&nbsp; மீறி செயற்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு&nbsp;7,973,114 ரூபாய் நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75f4e87d-cdf7-432b-80a4-09d270683907/26-6a9a5c900b4cc.webp' />&nbsp;&nbsp;</p><p>இந்த நிலையில் ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில்&nbsp;ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளதாக&nbsp; இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/cFbuPdSSLbI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ&nbsp; இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இன்று (04) காலை வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அந்த ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக முன்னர் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T12:48:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு விளக்கமறியல்! நீதிமன்ற வளாகத்தில் அர்ச்சுனா எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archuna-mp-in-court-premises-in-support-of-namal-1788526016"></link>
            <id>https://ibctamil.com/article/archuna-mp-in-court-premises-in-support-of-namal-1788526016</id>
            <summary type="text">கைது செய்யப்பட்டு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக அவரது நெருங்கிய ஆதரவாளர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைது செய்யப்பட்டு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றிற்கு வருகை தந்துள்ளனர்.</p><p>
இந்நிலையில், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனும் அங்கு வருகைதந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
</p><p>
எனினும் ஊடகவியலாளர்கள் அவரின் வருகை குறித்து கேள்வி எழுப்பியபோது, அதற்கு பதில் வழங்காது நீதிமன்றுக்குள் நுழைந்திருந்தார்.</p><p>

மேலும் அங்கு நாமலின் ஆதரவாளர்கள் பெருமளவில் கூடியுள்ள நிலையில் அங்கு காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67faa75a-2a52-4b96-8c78-f96b7c5f1f85/26-6a9abea028af0.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b359ce96-db5b-452f-9c15-3ba7a6d6e742/26-6a9abea11262d.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T12:47:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணத்தை முடித்த கையோடு ஹனிமூனிற்கு சீரியல் நடிகை வினுஷா எங்கே செய்துள்ளார் பாருங்க..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/serial-actress-vinusha-devi-honeymoon-trip-1788525052"></link>
            <id>https://cineulagam.com/article/serial-actress-vinusha-devi-honeymoon-trip-1788525052</id>
            <summary type="text">நடிகை வினுஷாவிஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகிய சீரியல்களில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் முதலில் கண்ணம்மா ரோலில் நடித்த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகை வினுஷா</h2><p>விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகிய சீரியல்களில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா. </p><p>இந்த சீரியலில் முதலில் கண்ணம்மா ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை ரோஷினி, அதன்பின் அந்த கதாபாத்திரத்தில் வினுஷா தேவி கமிட்டாகி நடித்து வந்தார். பாரதி கண்ணம்மா மூலம் ரீச் பெற்றவர் விஜய் டிவியிலேயே அடுத்தடுத்து சீரியல்கள் வந்தார். </p><p>பாரதி கண்ணம்மா 2, பனிவிழும் மலர்வனம், என நடித்து வந்தவர் இப்போது சுட்டும் விழி சுடரே என்ற சீரியலில் நடிக்கிறார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/913d37ab-ad14-4829-a016-7b0898acbb07/26-6a9abc8e8bf64.webp' /></p><h2>திருமணம்</h2><p>
நடிகை வினுஷா தேவிக்கு லிங்கேஸ்வரன் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்து இப்போது கோலாகலமாக திருமணமும் நடந்து முடிந்துள்ளது.
</p><p>அவரின் திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த நிலையில் நடிகை வினுஷா தேவி தனது கணவருடன் இலங்கைக்கு ஹனிமூன் சென்றுள்ளார். </p><p>அங்கு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fd921ae-6d85-4c91-b942-deeeb21f5e37/26-6a9abc8d89b85.webp' /></p>]]></content>
            <updated>2026-09-04T12:42:22+00:00</updated>
        </entry>
    </feed>
