<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-19T00:21:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் வரி குறைப்பு மற்றும் விலை உச்சவரம்பு நிர்ணயம்: ஜேர்மன் அரசின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-govt-announced-fuel-discount-1789775354"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-govt-announced-fuel-discount-1789775354</id>
            <summary type="text">Germany Govt announced fuel discount: ஜேர்மனியில் எரிபொருள் மீதான வரி குறைப்பு மற்றும் விலை உச்சவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் வரி குறைப்புமத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Germany Govt announced fuel discount: ஜேர்மனியில் எரிபொருள் மீதான வரி குறைப்பு மற்றும் விலை உச்சவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2> எரிபொருள் வரி குறைப்பு</h2><p>மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை தொடர்ந்து ஜேர்மனியின் எரிபொருள் சந்தை கடுமையான விலை ஏற்றம் கண்டது.</p><p> இந்நிலையில் ஜேர்மனி ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோக தடை மற்றும் கடுமையான ஆற்றல் செலவினங்களை கட்டுப்படுத்த எரிபொருள் மீதான வரி குறைப்பு மற்றும் விலை உச்சவரம்பு உள்ளடக்கிய நிவாரணத் தொகுப்பு ஆகியவற்றை ஜேர்மன் அரசாங்கம் வெள்ளிக்கிழமை இரவு இறுதி செய்துள்ளது.</p><p> கூட்டாட்சி மற்றும் மாநில அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்று வந்த பல வார பேச்சுவார்த்தைக்கு பிறகு ஜேர்மன் சான்சிலர் பிரெட்ரிக் மெர்ஸ்(Friedrich Merz) தலைமையிலான கூட்டணி அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8244f15d-2533-40fb-8f65-90edd09643f2/26-6aadcdfc55e98.webp' /></p><p></p><p>இந்த புதிய நடவடிக்கையின் கீழ், அக்டோபர் மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி 17 சென்ட்கள் குறைக்கப்படுகிறது.</p><p> மேலும் வாகன ஓட்டிகளுக்கான மோட்டார் எரிபொருளின் விலை உச்சவரம்பு ஜனவரி 2027-லில் அமலுக்கு வரவுள்ளது.</p><p> பெர்லின், மெக்லென்பர்க்-வெஸ்டர்ன் பொமெரேனியா ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள 2 நாட்களுக்கு முன்பு இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.<br></p>]]></content>
            <updated>2026-09-19T00:10:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெடுக்குநாறிமலையில் பௌர்ணமி வழிபாடு! சாந்தபோதி தேரருக்கு நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-order-santhabodhi-thero-vedukkunaari-issue-1789776390"></link>
            <id>https://ibctamil.com/article/court-order-santhabodhi-thero-vedukkunaari-issue-1789776390</id>
            <summary type="text">கல்கமுவ சாந்தபோதி தேரரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.எதிர்வரும் 26 ஆம் திகதி&amp;nbsp;வெடுக்குநாறிமலையில் பௌர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்கமுவ சாந்தபோதி தேரரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p>எதிர்வரும் 26 ஆம் திகதி&nbsp;வெடுக்குநாறிமலையில் பௌர்ணமி வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு ஏற்பாடுகளை செய்த நிலையில் அவருக்கு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p> அவரை எதிர்வரும் 24 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மோதல் ஏற்படக்கூடிய நிலை</h2><p>

1979ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106(1) ஆம்
பிரிவின் கீழ் இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/965359a7-e7ca-4161-8a10-085752459ecd/26-6aadd209d434e.webp' /></p><p>
</p><p>
இந்த விடயம் தொடர்பாக நெடுங்கேணி காவல்துறை வவுனியா நீதிமன்றில் இன்று அறிக்கை
ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.</p><p>இதன்படி எதிர்வரும் 26ஆம் திகதி நெடுங்கேணி காவல்துறை பிரிவுக்குட்பட்ட வெடுக்குநாறிமலை
பாதுகாக்கப்பட்ட பகுதியில் அமைந்துள்ள தொல்லியல் பெறுமதி கொண்ட இடத்தில்,
இந்து மதத்தைச் சேர்ந்த பக்தர்களும் பௌத்த மதத்தைச் சேர்ந்த பக்தர்களும் மத
வழிபாடுகளை மேற்கொள்ளத் தயாராகி வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது.
</p><p>
குறித்த இரு தரப்பும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் மத வழிபாடுகளை மேற்கொள்ளத்
தயாராகி வருவதாலும், இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்படக்கூடிய நிலைமை
காணப்படுவதாலும், அதன் காரணமாக இனங்களுக்கு இடையிலான மோதல்கள்
ஏற்படுவதற்கும், மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுவதற்கும்
வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>இதன்படி மேற்படி காரணங்களின் அடிப்படையில், இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் 24 ஆம்
திகதி அன்று மாலை 2.30மணிக்கு வவுனியா நீதவான் நீதிமன்றத்தில்
முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T00:06:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[விருது விழாவுக்கு சேலையில் செம கிளாமராக வந்த ஐஸ்வர்யா மேனன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/iswarya-menon-sizzling-look-in-awards-event-1789775604"></link>
            <id>https://cineulagam.com/article/iswarya-menon-sizzling-look-in-awards-event-1789775604</id>
            <summary type="text">நடிகை ஐஸ்வர்யா மேனன் படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருபவர். மேலும் அவர் இன்ஸ்டாக்ராமில் அடிக்கடி வெளியிட்டு வரும் கவர்ச்சி புகைப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை ஐஸ்வர்யா மேனன் படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருபவர். மேலும் அவர் இன்ஸ்டாக்ராமில் அடிக்கடி வெளியிட்டு வரும் கவர்ச்சி புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகின்றன.
</p><p>
ஐஸ்வர்யா மேனன் சமீபத்தில் நடந்த SIIMA விருது விழாவில் கலந்துகொண்டார்.
</p><p>
அதில் அவர் சேலையில் செம ஹாட் ஆக வந்திருக்கிறார். அழகிய புகைப்படங்களை பாருங்க.</p>]]></content>
            <updated>2026-09-18T23:53:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் 24 இல் கதி கலங்கப்போகும் கொழும்பு : 159 எம்பிக்களையும் மிரட்டும் சஜித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/colombo-set-to-be-shaken-on-september-24-1789764037"></link>
            <id>https://tamilwin.com/article/colombo-set-to-be-shaken-on-september-24-1789764037</id>
            <summary type="text">செப்டெம்பர் 24 ஆம் திகதி பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம். குறித்த பேரணியைப்பார்த்து 159 எம்பிக்களும் கதிகலங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செப்டெம்பர் 24 ஆம் திகதி பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம். குறித்த பேரணியைப்பார்த்து 159 எம்பிக்களும் கதிகலங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>தற்போது நாடு பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த 22 ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனநாயகத்தை அழித்து, தனிக்கட்சி ஆட்சியைக் கொண்டுவந்து, நாட்டின் அதிகாரத்தை பெலவத்தைக்குக் கொண்டு செல்லும் முயற்சியைத் தோற்கடிக்க வேண்டும்.</p><p>மக்களை ஏமாற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டனர். நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்கள் தேசிய மக்கள் சக்திக்கு உண்டு என்பதற்காக 220 இலட்சம் மக்களின் உரிமைகளை நசுக்க இடமளிக்க முடியாது. </p><p>இதற்கு எதிராகப் பெரும் மக்கள் பலத்தைத் திரட்டுவோம் என்றும்&nbsp;சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இந்த விடயங்களுடன் மேலும் பல விடயங்களை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி.....</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/pKw5uBl22W0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T23:44:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்ற அவமதிப்பு - திலித் ஜயவீர தாக்கல் செய்த ரிட் மனு பரிசீலனைக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/contempt-of-court-writ-petition-filed-by-dilith-1789770496"></link>
            <id>https://tamilwin.com/article/contempt-of-court-writ-petition-filed-by-dilith-1789770496</id>
            <summary type="text">நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தினால் தனக்கெதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டை வலுவிழக்கச் செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தினால் தனக்கெதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டை வலுவிழக்கச் செய்யும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தாக்கல் செய்துள்ள ரிட் மனு மீதான உத்தரவை எதிர்வரும் 30 ஆம் திகதி அறிவிக்க உள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி குறித்துள்ளது.
</p><p>
குறித்த ரிட் மனுவானது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரொஹாந்த அபேசூரிய, சமத் மொராயஸ் மற்றும் ஆதித்ய பட்டபெதிகே ஆகிய மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நேற்றைய தினம் (18) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.&nbsp;&nbsp;</p><p>இதன்போது வழக்குக்குக் காரணமான, திலித் ஜயவீர பங்கேற்ற தொலைக்காட்சி நேர்காணலின் காணொளிப் பதிவை ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி திறந்த நீதிமன்றத்தில் திரையிட்டுக் காண்பித்தார்.</p><h2>முழுமையான தகவல்களை ஆராயாமல்</h2><p>அதன்பின்னர், அக்காணொளித் தொடர்பில் விளக்கமளித்த ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி,&nbsp; இந்தக் காணொளியின் மூலம், அவர் வெளியிட்ட கருத்தில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் எதுவும் இல்லை என்பது தெளிவாகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b6f1b91-c06b-422f-879f-298ea0e4901a/26-6aadcc7b00fcc.webp' /></p><p>தாம் நீதிமன்றத்தைக் மதிப்பதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சமர்ப்பித்த கூற்றின் அடிப்படையிலேயே இந்த முடிவுக்குவந்ததாக நீதிவானின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அந்நிகழ்ச்சியில் தெரிவிக்கப்படும் முழு விடயத்தையும் நீதிமன்றத்துக்குச் சமர்ப்பிக்காமல், விசாரணை அதிகாரிகள் தேர்ந்தெடுத்த பகுதியை மாத்திரமே மன்றுக்கு சமர்ப்பித்துள்ளனர்.</p><p> ஆகையால் நீதிவான் முழுமையான தகவல்களை ஆராயாமல், குறிப்பிட்ட விடயங்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டே எனது சேவைபெறுனருக்கு எதிராகச் செயல்பட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.</p><p>2024 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க நீதிமன்ற அவமதிப்பு சட்டத்துக்கமைய, இவ்வாறானதொரு முறைப்பாடு கிடைக்கும் போது அச்சட்டத்திற்கு இணங்கச் செயற்பட வேண்டிய பொறுப்பு நீதிவானுக்கு உள்ளது. அதற்கமையவே நீதிவான் இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்&nbsp;சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T23:43:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் பசிலை நாடுகடத்தும் நடவடிக்கை! அமெரிக்காவை சென்றடைந்த இரகசிய கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/move-to-deport-basil-secret-letter-reaches-the-us-1789774905"></link>
            <id>https://ibctamil.com/article/move-to-deport-basil-secret-letter-reaches-the-us-1789774905</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவைவை அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தும் செயல்முறை இறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியாகிய தகவல் மீது இலங்கை அரசியல...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவைவை அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தும் செயல்முறை இறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியாகிய தகவல் மீது இலங்கை அரசியலின் முழு கவணமும் திரும்பியுள்ளது.
</p><p>
 இந்த விடயத்தை காவல்துறை வட்டாரங்கள் தலைமையக வட்டாரங்கள் நேற்று தெரிவித்திருந்தன.
</p><p>
இந்நிலையில் இந்த தகவலுக்கு மேலதிகமாக, இலங்கை வெளியுறவு அமைச்சகம் விசேட நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகிறது.</p><p></p><h3>அமெரிக்காவில் வசிக்கும் ராஜபக்ச குடும்பம்</h3><p>

அமெரிக்காவில் வசிக்கும் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, இலங்கை வெளியுறவு அமைச்சகத்திற்கும் அமெரிக்க வெளியுறவுத் துறையின் சட்டத் துறைக்கும் இடையே முத்திரையிடப்பட்ட கடிதப் பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cb50653-e94b-4182-bee4-726e9c7bea75/26-6aadceb77d8af.webp' /></p><p>

எந்தவொரு ஒப்படைப்புக்குமான சட்ட அடிப்படை, 1999 செப்டம்பர் 30 அன்று அமெரிக்காவில் கையெழுத்திடப்பட்ட இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உடன்படிக்கையாகும். </p><p>

இந்த உடன்படிக்கை இரட்டைக் குற்றத்தன்மை என்ற கோட்பாட்டைப் பின்பற்றுகிறது.

அதாவது, ஒருவரின் அடிப்படை நடத்தை இரு நாடுகளிலும் குற்றமாக அமைகிறது என்பதை அதிகாரிகள் நிரூபிக்க வேண்டும் என்பதே இந்த சட்டத்தின் அடிப்படையாகும்.</p><p>

இதன்படி ராஜபக்ச ஒரு அமெரிக்கக் குடிமகன் என்ற தகுதி மட்டுமே, அந்த உடன்படிக்கையின் விதிகளின் கீழ், ஒரு முறையான கோரிக்கையிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்காது.</p><p>


இரண்டு தனித்தனி குற்றவியல் வழக்குகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதால், பல நீதிமன்றங்கள் அவருக்கு எதிரான கைது பிடியாணைகளை மீண்டும் பிறப்பித்துள்ளன.</p><p></p><h2>முறையான சர்வதேச செயல்முறை</h2><p> </p><p>

காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், பசில் ராஜபக்ச மற்றும் மனைவி திஸ்ஸ கலப்பத்தியின் சகோதரி என நீதிமன்ற அறிக்கைகளில் அடையாளம் காணப்பட்ட அயோமா கலப்பத்தி, முதிதா ஜெயகோடி உள்ளிட்ட பல சந்தேகநபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/274007ef-0deb-4bcc-874b-8899d45d7550/26-6aadceb83819b.webp' /></p><p>

குறிப்பாக , அமெரிக்க உதவியை நாடுவதானது ஒரு முறையான சர்வதேச செயல்முறையைத் தொடங்குவதற்கு மட்டுமே வழிவகுக்கும் என்றும், அது தானாகவே ராஜபக்சவின் கைதுக்கோ அல்லது இலங்கைக்குத் திரும்புவதற்கோ வழிவகுக்காது என்றும் அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். </p><p>

இதன்படி இலங்கை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகள், கூறப்படும் குற்றங்களின் விவரங்கள் மற்றும் பிற துணை ஆவணங்களை உரிய தூதரக மற்றும் நீதித்துறை வழிமுறைகள் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். </p><p>

அதன்பிறகு, எந்தவொரு கோரிக்கையும் அமெரிக்கச் சட்டம் மற்றும் பொருந்தக்கூடிய சட்ட ஏற்பாடுகளின் கீழ் சம்பந்தப்பட்ட அமெரிக்க அதிகாரிகளால் பரிசீலிக்கப்படும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-18T23:42:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவர் பெரிய சூப்பர்ஸ்டார்.. பிக் பாஸ் சர்ச்சைக்கு நடுவில் விஜய் பற்றி பேசிய விஜய் சேதுபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/he-is-a-superstar-vijay-sethupathi-about-vijay-1789774738"></link>
            <id>https://cineulagam.com/article/he-is-a-superstar-vijay-sethupathi-about-vijay-1789774738</id>
            <summary type="text">சமீபத்தில் விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய்யை தாக்கி பேசியதாக சர்ச்சை வெடித்தது. அவர் விஜய் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், அவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமீபத்தில் விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய்யை தாக்கி பேசியதாக சர்ச்சை வெடித்தது. அவர் விஜய் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், அவர் பேசிய விஷயங்கள் விஜய் ரசிகர்களை கோபமடைய வைத்தது.</p><p>அதனால் விஜய் சேதுபதியை இணையத்தில் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
</p><h2>அவர் சூப்பர்ஸ்டார்..
</h2><p>இந்நிலையில் விஜய் சேதுபதியின் பத்தா இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் விஜய் பற்றி விஜய் சேதுபதி பேசி இருக்கிறார்.
</p><p>"நான் சஞ்சய் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி இருந்தேன். அதன்பின் விஜய் எனக்கு போன் செய்து பேசினார். 'நண்பா ரொம்ப நன்றி.. அவன் சந்தோசமாக இருந்தான்' என கூறினார்.
</p><p>அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அவரே ஒரு பெரிய சூப்பர்ஸ்டார். சஞ்சய்க்கு என்னை பிடித்து இருக்கிறது என்பது பெரிய ஆச்சர்யம். அதை அவனிடமே கூறி இருக்கிறேன். 'ஏண்டா வீட்ல எவ்ளோ பெரிய ஆளை வெச்சிருக்க' என சொல்வேன்.
</p><p>தங்கமான பையன். அவனது படமும் எங்களுடன் வருகிறது. அவனை எனக்கு ரொம்ப பிடிக்கும். கியூட் fellow" என விஜய் சேதுபதி பேசி இருக்கிறார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/VijaySethupathi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VijaySethupathi</a> about <a href="https://x.com/hashtag/ThalapathyVijay?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ThalapathyVijay</a> at <a href="https://x.com/hashtag/Baththa?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Baththa</a> event:<br><br>“I wished Sanjay on his birthday. He called me and said, ‘Nanba, romba nandri. Avan sandhosama irundhan.’ I didn’t expect that because he’s a big superstar, and I was surprised that Sanjay liked me. I told him, ‘Hey,…</p>&mdash; Laxmi Kanth (@iammoviebuff007) <a href="https://x.com/iammoviebuff007/status/2101010253689299394?ref_src=twsrc%5Etfw">September 18, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-09-18T23:39:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தினமும் காலையில் 1 பல் பூண்டு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/benefits-of-eating-one-clove-garlic-every-morning-1789773934"></link>
            <id>https://jvpnews.com/article/benefits-of-eating-one-clove-garlic-every-morning-1789773934</id>
            <summary type="text">நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் சரி, உடலில் பிரச்சனைகள் வருவதற்கும் சரி முக்கிய காரணம் உணவுகள் தான். நாம் ஆரோக்கியமானது என்று நினைத்து தேர்ந்தெடுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் சரி, உடலில் பிரச்சனைகள் வருவதற்கும் சரி முக்கிய காரணம் உணவுகள் தான். நாம் ஆரோக்கியமானது என்று நினைத்து தேர்ந்தெடுத்து சாப்பிடும் உணவுகள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அதே வேளையில் அவற்றை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது மோசமான விளைவுகளை உண்டாக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cf59866-bd64-4580-94e4-268872c32890/26-6aadc87083c66.webp' /></p><p>பூண்டு பற்களை தினசரி சமையலில் சேர்த்து வந்தாலும், "தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு பல் பூண்டை பச்சையாக உட்கொள்ளும் போது ஏராளமான நன்மைகள் கிடைக்கும் அவை என்னவென நாம் இங்கு பார்ப்போம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddec3f4e-8e27-4804-b84d-ad504d5d550e/26-6aadc86fcf78e.webp' />&nbsp;</p><h4>இதயத்திற்கு நல்லது </h4><p>பூண்டில் அல்லிசின் என்னும் கெமிக்கல் உள்ளது. அது உடலில் நைட்ரிக் ஆக்ஸைடின் உற்பத்தியை அதிகரிக்கும். இந்த நைட்ரிக் ஆக்ஸைடு உடலில் உள்ள இரத்த நாளங்களை விரிவடையச் செய்யும். இதன் விளைவாக உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும். அதோடு கெட்ட கொலஸ்ட்ரால் அளவை இரத்தத்தில் குறைக்கும். இதனால் இரத்த நாள அடைப்பு நோய் வராமல் தடுக்கும். இதன் மூலம் மாரடைப்பு வராமல் தடுக்கும்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8879fe14-284c-46cf-92c7-d6fdbe08a354/26-6aadc87404b74.webp' /></p><h4>குடலுக்கு நல்லது </h4><p>நமது குடலில் உடலுக்கு நன்மை விளைவிக்கும் ஏராளமான பாக்டீரியாக்கள் உள்ளன. அந்த பாக்டீரியாக்கள் நாம் உண்ணும் உணவை ஜீரணம் செய்வதிலும் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த நல்ல பாக்டீரியாக்கள் வளர ப்ரீ பயோடிக்குகள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இந்த ப்ரீபயோடிக்குகள் வெங்காயம், தக்காளி, வாழைப்பழம், தயிர், பூண்டு போன்ற உணவுப் பொருட்களில் அதிகம் உள்ளது. எனவே தினமும் பூண்டை உணவில் சேர்த்து வரும் போது, செரிமான மண்டலம் நன்கு வேலை செய்யும். செரிமான பிரச்சனை வராமல் இருக்கும்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72e0f1b6-31cd-4d08-ac79-4fd99386c72a/26-6aadc8734d601.webp' /></p><h4>மூளைக்கு நல்லது </h4><p>தினமும் பல பிரச்சனைகளால் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடுகிறது. இது தவிர புகைப்பிடிப்பது, மது அருந்துவது, தவறான உணவுப் பழக்கங்களால் உடலில் ப்ரீ ராடிக்கல்கள் என்று சொல்லக்கூடிய கழிகள் சேர்கின்றன. இந்த ப்ரீ ராடிக்கல்கள் நமது உடலில் உள்ள செல்களை சேதப்படுத்தும். இதனால் புற்றுநோய், டிமென்ஷியா, நரம்பு சிதைவு நோய் போன்ற பல நோய்களின் அபாயம் அதிகரிக்கும். ஆனால் பூண்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை உடலில் ப்ரீ ராடிக்கல்களின் அளவைக் குறைத்து, உடலில் உள்ள செல்கள் சேதமடைவதை தடுத்து, டிமென்ஷியா போன்ற ஞாபக மறதி நோய் வருவதைத் தடுக்கும்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4575f40f-c32c-4795-8382-5ddb626a8533/26-6aadc8729b27b.webp' /></p><h4>நோயெதிர்ப்பு சக்திக்கு நல்லது </h4><p>தினமும் ஒரு பல் பூண்டை காலையில் சாப்பிடும் போது, உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பூண்டில் வைட்டமின் சி, வைட்டமின் பி6 போன்ற வைட்டமின்கள், செலினியம், பாஸ்பரஸ், மாங்கனீசு போன்ற நிறைய தாதுஉப்புக்கள் உள்ளன. இது உடலில் வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். இதன் மூலம் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும். அதுமட்டுமின்றி, பூண்டிற்கு ஆன்டி-மைக்ரோபியல் பண்புகளும் உள்ளன. எனவே தான் சளி, இருமல், காய்ச்சல் இருக்கும் போது, பூண்டு ரசம் வைத்து சாப்பிடும் போது விரைவில் குணமாகிறது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fc8d320-eae5-4e34-9d26-1c565a8bdd5b/26-6aadc871e0246.webp' /></p><h4>இரத்த சர்க்கரை கட்டுப்படும் </h4><p>சர்க்கரை நோய் உள்ளவர்கள் பூண்டு சாப்பிடும் போது இன்சுலின் எதிர்ப்புத்தன்மை குறையும் மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்&nbsp;இதுமட்டுமின்றி, பூண்டு இரத்தத்தை சுத்தம் செய்யும், எடை இழப்புக்கு உதவும், ஆண்மை குறைவு பிரச்சனையை சரிசெய்யும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தினமும் பூண்டு சாப்பிடும் போது தாய்ப்பால் நிறைய சுரக்கும்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c81dae70-a640-4060-9439-a5bdc18191d3/26-6aadc871392bb.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T23:25:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொந்த அத்தையைக் கழுத்தறுத்துக் கொன்ற 7 வயது சிறுவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/7-year-old-boy-slits-own-aunt-throat-and-kills-her-1789747083"></link>
            <id>https://canadamirror.com/article/7-year-old-boy-slits-own-aunt-throat-and-kills-her-1789747083</id>
            <summary type="text">பிரான்ஸின் வால்-து-மார்ன் (Val-de-Marne) பகுதியில், 7 வயது சிறுவன் ஒருவன் தனது சொந்த அத்தையை கத்தியால் குத்தியதில், அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸின் வால்-து-மார்ன் (Val-de-Marne) பகுதியில், 7 வயது சிறுவன் ஒருவன் தனது சொந்த அத்தையை கத்தியால் குத்தியதில், அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>சென்-மோர்-டெ-போஸ் (Saint-Maur-des-Fossés) நகரில் இன்று வெள்ளிக்கிழமை (செப்டெம்பர் 18) அதிகாலை சுமார் 4.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். </p><p>அப்போது, வீதியில் பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்ததையும், மற்றொரு பெண் துணியொன்றைப் பயன்படுத்தி அவரது கழுத்துப் பகுதியில் ஏற்பட்டிருந்த காயத்தில் இருந்து வெளியேறிய இரத்தத்தை கட்டுப்படுத்த முயன்றுகொண்டிருந்ததையும் காவல்துறையினர் அவதானித்துள்ளனர்.
</p><p>
அவர்களுக்கு அருகில் சிறுவன் ஒருவனும் நின்றுகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07d1c20f-cd37-4965-af6c-daec0b1c07e3/26-6aad5f8ce5041.webp' /></p><p>பலத்த காயமடைந்திருந்த பெண்ணுக்கு அவசரகால மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்ற முயன்ற போதிலும், அதிகளவான இரத்தப்போக்கு காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
</p><p>
உயிரிழந்தவர் நதியா எஸ். (Nadia S.) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த நதியாவுக்கு உதவி செய்ய முயன்ற பெண் அவரது சொந்த சகோதரியான யாஸ்மினா எஸ். (Yasmina S.) என்பதும், அவருக்கு அருகில் நின்றுகொண்டிருந்தது யாஸ்மினாவின் 7 வயது மகன் என்பதும் தெரியவந்துள்ளது.</p><p>விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி, வியாழக்கிழமை இரவு யாஸ்மினாவின் வீட்டிற்கு நதியா தங்குவதற்காக சென்றுள்ளார்.
</p><p>
இதன்போது, நள்ளிரவு வேளையில் தலைமுடியை நேராக்குவது (Hair straightening) தொடர்பாக இரு சகோதரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
வாக்குவாதம் பின்னர் கடும் சண்டையாக மாறியதுடன், நதியா தனது சகோதரியான யாஸ்மினாவை தாக்கியதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

இந்தச் சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்த யாஸ்மினாவின் 7 வயது மகன், திடீரென வீட்டின் குளியலறைக்குச் சென்று அங்கிருந்த கத்தியை எடுத்துக்கொண்டு வந்து நதியாவின் கழுத்துப் பகுதியில் குத்தியதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கத்திக்குத்துக்கு உள்ளான நதியா, உதவி கோரி வீட்டிலிருந்து வெளியேறி வீதியை நோக்கி ஓடியுள்ளார். </p><p>எனினும், சிறிது தூரம் சென்ற நிலையில் அவர் இரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்ததாகவும், பின்னர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c97667ea-1e17-479b-b57e-3e128d426a6c/26-6aad5f8da14eb.webp' /></p><p>சம்பவத்தின் போது யாஸ்மினாவின் இடது மணிக்கட்டிலும் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கும் அவசரகால மருத்துவக் குழுவினர் சிகிச்சை வழங்கியுள்ளனர்.
</p><p>
அதேவேளை, 7 வயது சிறுவனின் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>எனினும், சம்பவத்தைத் தொடர்ந்து சிறுவன் மருத்துவப் பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் பிரான்ஸ் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>

ஒரு குடும்பத்திற்குள் ஏற்பட்டதாகக் கூறப்படும் தகராறு, எதிர்பாராத வகையில் வன்முறையாக மாறி, இறுதியில் 7 வயது சிறுவனின் கைகளால் அவரது சொந்த அத்தை உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-18T23:07:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவேக நெடுஞ்சாலைகளில் பின் இருக்கை பயணிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/seat-belts-mandatory-seat-passengers-expressways-1789771465"></link>
            <id>https://jvpnews.com/article/seat-belts-mandatory-seat-passengers-expressways-1789771465</id>
            <summary type="text">அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் முன் மற்றும் பின் இருக்கைகளில் பயணிக்கும் அனைவரும் இன்று (18) நள்ளிரவு முதல் ஆசனப்பட்டி அணிவது...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் முன் மற்றும் பின் இருக்கைகளில் பயணிக்கும் அனைவரும் இன்று (18) நள்ளிரவு முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>இந்த விதிமுறையை மீறி ஆசனப்பட்டி அணியாமல் பயணிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d26a864c-e891-4db4-990c-ccacc0c4adc6/26-6aadbecad5d1b.webp' /></p><p>வாகனங்களில் பயணிக்கும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

எனவே, அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் அனைவரும் ஆசனப்பட்டி அணிந்துள்ளதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T22:44:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனில் பரபரப்பு ; ஐரோப்பிய அதிகாரிகளை குறிவைக்கும் ரஷ்ய ட்ரோன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russian-drones-targeting-european-officials-ukrane-1789771019"></link>
            <id>https://canadamirror.com/article/russian-drones-targeting-european-officials-ukrane-1789771019</id>
            <summary type="text">கீவ் நகருக்கு வந்து செல்லும் உக்ரைன், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு ரஷ்யா ஆளில்லா வானூர்திகள் மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>கீவ் நகருக்கு வந்து செல்லும் உக்ரைன், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு ரஷ்யா ஆளில்லா வானூர்திகள் மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளது.
</p><p>
ரஷ்யாவின் தரைவழிப் போர் தடுமாறி வரும் சூழலில் இந்தத் தாக்குதல்கள் வந்துள்ளன. </p><p>உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் ரஷ்யா முன்னர் கைப்பற்றியிருந்த 85 சதுர கிலோமீட்டர் (33 சதுர மைல்) நிலப்பரப்பை, லைமன் நகரைக் கைப்பற்றும் முயற்சியின் போது இழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f9e79b0-bf9a-4081-90d9-dd7414c51d8d/26-6aadbd0d3efd8.webp' /></p><p>செப்டம்பர் 13 அன்று, போலந்து எல்லையிலிருந்து 5 கி.மீ (3 மைல்) தொலைவில் உக்ரைனின் தொடருந்து இயந்திரம் மீது ரஷ்ய ஆளில்லா வானூர்திகள் தாக்குதல் நடத்தின.</p><p>

கீவில் நடைபெற்ற யால்டா ஐரோப்பிய உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு வோர்சாவுக்குத் திரும்பிய ஐரோப்பிய அதிகாரிகளை இது ஆபத்தில் ஆழ்த்தியது.
</p><p>
பிரித்தானின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் ஐரோப்பிய அரசியல், பாதுகாப்பு அதிகாரிகள் அந்த தொடருந்தில் பயணம் செய்தனர்.</p><p>

"இந்த சம்பவம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவின் கதவுகளை நேரடியாகத் தட்டும் புதினின் பயங்கரவாதம்" என உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மற்றொரு சம்பவத்தில், செப்டம்பர் 8 அன்று உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸியின் வானூர்தி கிசினாவ் நகரிலிருந்து புறப்படத் தயாரானபோது ரஷ்ய ஆளில்லா வானூர்தி ஒன்று மோல்டோவா வான்வெளிக்குள் நுழைந்து வானூர்தி போக்குவரத்தைத் தாமதப்படுத்தியது.</p><p>

இந்த தாக்குதல் ஸெலென்ஸ்கியின் வானூர்தியை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டபோதும், மோல்டோவா அதனை உறுதிப்படுத்தவில்லை.</p>]]></content>
            <updated>2026-09-18T22:37:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனுக்காக சவூதி தூதுவரிடம் அவசர முறையீடு - தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை முன்னெடுக்கும் முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/urgent-appeal-to-saudi-ambassador-on-anojan-1789770673"></link>
            <id>https://tamilwin.com/article/urgent-appeal-to-saudi-ambassador-on-anojan-1789770673</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலை
தொடர்பில், இலங்கையில் உள்ள சவூதி அரேபியத் தூதுவரை நேரில் சந்தித்து, அந்த
நாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலை
தொடர்பில், இலங்கையில் உள்ள சவூதி அரேபியத் தூதுவரை நேரில் சந்தித்து, அந்த
நாட்டுப்பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகம்மது பின் சல்மான் பின் அப்துல்
அசீஸ் அல் சவுத்திடம் கோரிக்கை முன்வைக்கத் தமிழ் பேசும் மக்களின் அரசியல்
பேரவை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
</p><p>
இந்த விடயம் தொடர்பில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

சவூதி அரேபியாவில் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் விடயத்தில்,
கருணை மற்றும் மனிதாபிமான அடிப்படையில் பரிசீலித்து அவருக்கு மன்னிப்பு
வழங்குமாறு, சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசருக்கு, இலங்கைக் குடியரசுக்கான
சவூதி அரேபியத் தூதுவரை நேரடியாகச் சந்தித்து அவர் ஊடாக ஒரு கூட்டு வேண்டுகோளை
முன்வைக்க வேண்டும் எனத் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை அங்கத்துவச்
சகோதரக் கட்சித் தலைவர்களிடம் கோரியுள்ளேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/902c4ee1-7e8a-4279-a11e-13088a2138aa/26-6aadbbea3d91c.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பில் நாம் பேரவைக்குள் அவசரமாக உரையாடுகின்றோம். மேலும், இந்த
விடயத்தை நமது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஊடாகவும் முன்னெடுத்து,
இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக இந்த விடயத்தைச் சவூதி அரேபிய அரசிடம் எடுத்துச்
செல்லுமாறும் கோருகின்றோம் என்றார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T22:32:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - ஹவுதி ரகசிய பேச்சுவார்த்தை ; ஏமனில் தொடரும் பதற்றமும் புதிய பூகோள அரசியலும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/secret-us-houthi-talks-continuing-tensions-yemen-1789770448"></link>
            <id>https://canadamirror.com/article/secret-us-houthi-talks-continuing-tensions-yemen-1789770448</id>
            <summary type="text">ஓமன் தலைநகர் மஸ்கட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில், அமெரிக்க அதிகாரிகளும் ஹவுதி (houthi) பிரதிநிதிகளும் கடந்த வார இறுதியில் இரகசியமாகச் சந்தித்துப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓமன் தலைநகர் மஸ்கட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில், அமெரிக்க அதிகாரிகளும் ஹவுதி (houthi) பிரதிநிதிகளும் கடந்த வார இறுதியில் இரகசியமாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.</p><p>

ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி இயக்கம் ஏமனில் குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7ab49a5-47dd-4517-abcf-0af08dbc49f8/26-6aadbad217930.webp' /></p><p>ஏமனின் செங்கடல் கடற்கரைப் பகுதிகள் மற்றும் மிக முக்கியமான மூலோபாயத் தீவுகள் தற்போது ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன.
</p><p>
அத்துடன் உலகளாவிய கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி விநியோகத்தின் முக்கியப் பகுதியான பாப் அல்-மந்தேப் நீரிணையை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
</p><p>
அமெரிக்கக் கப்பல்களைத் தாக்கும் எண்ணம் தனக்கில்லை என்றும், சவுதி அரேபியாவுடன் தொடர்புடைய கப்பல்கள் மீது மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் ஹவுதிகள் அமெரிக்க அதிகாரிகளிடம் உறுதியளித்துள்ளனர்.
</p><p>
ஹவுதிகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை நடத்துமாறு சவுதி இளவரசர் மொஹமட் பின் சல்மான் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வலியுறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகின.
</p><p>
ஆனால், அமெரிக்கா நேரடித் ராணுவத் தலையீட்டை விரும்பவில்லை என்று கூறிவிட்டார்.

எனினும், சவுதி அரேபியாவுக்காகத் தான் தலையிடத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c2d2db2-3b5c-4830-8723-f6c63bc0b94b/26-6aadbad2cd68f.webp' /></p><p>இருப்பினும், காஸா மற்றும் லெபனான் மோதல்களுக்கு மத்தியில் இது அரபு உலகில் சவுதிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தலாம் என்பதால் தயக்கம் நிலவுகிறது.
</p><p>
ஈரானுடன் ஏற்கனவே நீண்ட காலமாகத் தொடரும் போரினால் அமெரிக்காவின் ஆயுதக் களஞ்சியங்கள் குறைந்துள்ளதாகவும், நவம்பர் மாதம் இடைக்காலத் தேர்தல் நடைபெறவுள்ளதால் ட்ரம்ப் புதிய போரைத் தவிர்க்க விரும்புவதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.</p><p>

இதற்கிடையில், அமெரிக்கா மீதான நம்பகத்தன்மை குறைந்ததால், சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கியுடன் இணைந்து புதிய பாதுகாப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டு தனது பாதுகாப்பை வலுப்படுத்தி வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-18T22:27:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பிரபல பாடசாலை மாணவி போதைப்பொருளுக்கு அடிமையா? வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/has-student-school-jaffna-become-addicted-to-drugs-1789768640"></link>
            <id>https://jvpnews.com/article/has-student-school-jaffna-become-addicted-to-drugs-1789768640</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று, இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 19 வயதான இளம் பெண் ஒருவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று, இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 19 வயதான இளம் பெண் ஒருவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாகவும், அவரை உரிய முறையில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தாது குடும்பத்தினர் பாதுகாத்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.</p><p></p><p>

குறித்த இளம் பெண் பல்வேறு இளைஞர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் அறைகளை வாடகைக்கு எடுத்து போதைப்பொருள் பாவிப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அண்மையில் யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதி ஒன்றில் இளம் பெண் ஒருவரும் இளைஞர் ஒருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e6c53ce-1d2b-42e9-8321-4bc097d12b49/26-6aadb3c225be4.webp' /></p><p>குறித்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் வயது தொடர்பில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில், விடுதி ஊழியர்கள் நிர்வாகத்தினருக்கு தகவல் வழங்கியதாகவும், அதனைத் தொடர்ந்து ஊழியர்கள் எச்சரிக்கப்பட்டு பணியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
மேலும், குறித்த இளம் பெண் போதைப்பொருள் பயன்பாட்டில் ஈடுபடுவதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல்கள் வழங்கப்பட்ட போதிலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் சில தரப்பினரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
குடும்பத்தின் செல்வாக்கு காரணமாக குறித்த விவகாரம் வெளியில் வராமல் தடுக்கப்படுவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
எவ்வாறாயினும், குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை. </p><p>எனவே, சம்பவம் தொடர்பில் பொலிஸார் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் விசாரணை மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்த பின்னரே குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த முடியும்.
</p><p>
இதேவேளை, இளம் தலைமுறையினரிடையே போதைப்பொருள் பாவனை தொடர்பான ஆபத்துகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் பயன்பாடு தொடர்பில் பெற்றோர் மற்றும் பொறுப்பான தரப்பினர் உரிய முறையில் தலையிட்டு தேவையான மருத்துவ மற்றும் புனர்வாழ்வு உதவிகளை வழங்குவது முக்கியம் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T22:18:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க வெள்ளை மாளிகையில் CNN மற்றும் சில ஊடகங்களுக்கு தடை ; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ban-on-cnn-and-other-media-trump-announcement-1789769819"></link>
            <id>https://canadamirror.com/article/ban-on-cnn-and-other-media-trump-announcement-1789769819</id>
            <summary type="text">CNN, MSOW மற்றும் Politico ஆகிய ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகையில் நுழைய உடனடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அறிவித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>CNN, MSOW மற்றும் Politico ஆகிய ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகையில் நுழைய உடனடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அறிவித்துள்ளார்.</p><p>நேற்று அன்று தனது நிர்வாகத்தின் மீதான ஊடகங்களின் செய்தி வெளியீடு குறித்து தனது அதிருப்தியை சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டதை அடுத்தே இந்த தடையை அவர் அறிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dd43275-fe2a-4b1a-b409-f36c1372a7ae/26-6aadb85d44953.webp' /></p><p>இந்த ஊடகங்கள் "பொய்ச் செய்திகளைப் பரப்புவதாகக்" குறிப்பிட்ட ட்ரம்ப், தன்னைப் பற்றியும் தனது நிர்வாகத்தைப் பற்றியும் நாட்டைப் பற்றியும் அவை செய்திகளைத் தாங்களாகவே புனைந்து கூறுவதாகக் குற்றம் சாட்டினார்.</p><p>

"இதனைப் பின்பற்றி மற்ற போலிச் செய்தி ஊடகங்களும் தடை செய்யப்படும்" என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
</p><p>
இதற்கு முன்பும் சில ஜனாதிபதிகள் ஊடகச் செய்திகள் மீது கோபம் அடைந்துள்ளனர்.</p><p>

எனினும் அவர்கள் வெள்ளை மாளிகைக்குள் ஊடகங்களை தடை செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-18T22:17:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனை மீட்க தீவிர முயற்சி - விஜித ஹேரத்துடன் கந்தசாமி பிரபு அவசர சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kandasamy-prabhu-holds-an-urgent-meeting-1789769312"></link>
            <id>https://tamilwin.com/article/kandasamy-prabhu-holds-an-urgent-meeting-1789769312</id>
            <summary type="text">சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக கூறப்படும் அனோஜன் எனும் இளைஞரின் விடுதலை தொடர்பில் வெளி விவகார அமைச்சர் விஜித ஹேரத் உடன் அவசர சந்திப்பொன...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக கூறப்படும் அனோஜன் எனும் இளைஞரின் விடுதலை தொடர்பில் வெளி விவகார அமைச்சர் விஜித ஹேரத் உடன் அவசர சந்திப்பொன்றை மேற்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவொன்றையும் பதிவிட்டுள்ளார். </p><p>

மேற்படி பதிவில், </p><p>

இலங்கை இளைஞர் அனோஜனின் விடுதலை தொடர்பில் விஜித ஹேரத் உடன், மட்டக்களப்பு பாசிக்குடா பகுதியில் அவசர சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டேன்.
</p><p>
இதன்போது இலங்கையின் ஒட்டு மொத்த மக்கள் சார்பிலும் அனோஜன் விடுவிக்கப்பட வேண்டும் என விடுக்கப்படும் கோரிக்கை தொடர்பிலும் அவரது குடும்பத்தால் விடுக்கப்படும் கருணை அடிப்படையிலான தனிப்பட்ட விடுவிப்பு கோரிக்கை தொடர்பிலும், அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் வெளி விவகார அமைச்சர் இவ்விவகாரத்தில் நேரடி தலையீட்டை மேற்கொள்ளுமாறும் வேண்டிக்கொண்டேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96358395-f099-44c5-8fb1-0eadd8e63981/26-6aadb6e4b0642.webp' /></p><h2>

 
அதிகாரபூர்வமான அறிவிப்பு கிடைக்கப்பெறவில்லை..
</h2><p>
இது தொடர்பில் அமைச்சர் 
அனோஜன் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு இலங்கை அரசாங்கத்தின் ஊடாக முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றுக்குத் தேவையான சட்ட முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் 
இலங்கை அரசாங்கத்தால் தூதரகம் ஊடாக சட்டத்தரணிகள் நியமிக்கப்பட்டு, அனோஜன் குடும்பத்தினரின் கோரிக்கைக்கு ஏற்ப அவசியமான அனைத்துவிதமான உதவிகளையும் வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டு வரும்.
</p><p>
அதே வேளை, இந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவராத போதிலும், வழக்கு விசாரணைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f577661-62ba-4348-a5d1-10673b8be6ff/26-6aadb6e5c55e2.webp' /></p><p>
</p><p>

அத்துடன் ​இதுவரை மரண தண்டனை அல்லது தீர்ப்பு சம்பந்தமான எந்தவொரு அதிகாரப்பூர்வ பிரதியும், அது தொடர்பான அறிக்கைகளும் வெளிவிவகார அமைச்சிற்கு கிடைக்கப் பெறவில்லை என்றும் தற்போதைய நிலவரப்படி, 
இலங்கை மக்களினதும் அரசினதும் சார்பில் சவுதி அரேபியா அரசிடம் சாதகமான தீர்ப்புகளை எதிர்பார்த்து அதற்கேற்ற முறையான நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சு தீவிரமாக முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டார்.

உண்மையில் தான் நேரடி கவனம் செலுத்தி வருவதாகவும் என்னிடம் உறுதி கூறினார்.</p><p>

அத்துடன் இந்த விடயம் தொடர்பாக அனோஜன் குடும்ப உறுப்பினர்களை அமைச்சர் அவர்கள் நேரில் சந்தித்து பேசும் வேண்டுகோளையும் முன் வைத்தேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fphoto.php%3Ffbid%3D122221474328550927%26set%3Da.122111964638550927%26type%3D3&show_text=true&width=500" width="500" height="850" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T22:10:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கொழுந்துவிட்டு எரிந்த குப்பை மேடு ; புகையால் இரவு முழுவதும் அவதிப்பட்ட மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/garbage-heap-ablaze-in-jaffna-residents-suffer-1789769222"></link>
            <id>https://jvpnews.com/article/garbage-heap-ablaze-in-jaffna-residents-suffer-1789769222</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட கல்லுண்டாய் குப்பை மேடு நேற்றைய தினம்&amp;nbsp; இரவு தீப்பற்றி எரிந்தமையால் , அயலூர் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட கல்லுண்டாய் குப்பை மேடு நேற்றைய தினம்&nbsp; இரவு தீப்பற்றி எரிந்தமையால் , அயலூர் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர் 

தீ பரவியத்தை அடுத்து நீண்ட பல மணிநேர பெரும் போராட்டத்தின் மத்தியில் தீயணைப்புப் படையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்</p><p> </p><p></p><p>குப்பை மேட்டிலிருந்து எழும் அடர்ந்த புகையின் காரணமாக, அயலூர் மக்கள் இரவு முழுவதும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39ff371b-8617-470a-bec8-7ebd02029d6d/26-6aadb60799152.webp' /></p><p>அந்நிலையில் இன்றைய தினம் அப்பகுதிகளில் மாநகர சபை குப்பைகளை கொட்டக்கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பை வெளியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
அதனை அடுத்து, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமையை நேரில் பார்வையிட்டு சென்றுள்ளனர்&nbsp;</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da41a680-7800-42b1-bd70-4899d9c7ef43/26-6aadb60902e31.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8a52863-0b6a-4890-96d2-8cfd2f7575c5/26-6aadb6084c2c4.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/697d2290-0989-4d71-aa92-34ee0a0723e6/26-6aadb609ac23c.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39ff371b-8617-470a-bec8-7ebd02029d6d/26-6aadb60799152.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T22:07:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்தின் சக்கரம் கழன்று விழுந்தது - கேமராவில் சிக்கிய காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/school-trip-bus-loses-wheel-on-expressway-1789768322"></link>
            <id>https://tamilwin.com/article/school-trip-bus-loses-wheel-on-expressway-1789768322</id>
            <summary type="text">பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்று விழுந்த காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சம்பவம் தொடர்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்று விழுந்த காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
</p><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
</p><p>
பாடசாலை மாணவர்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்ற தனியார் பேருந்து ஒன்று அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>இதன்போது, குறித்த தனியார் பேருந்தின் முன்பக்க சக்கரம் திடீரென கழன்று தனியாக விழுந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1755352d-e56b-4179-8e49-991d8cb00b17/26-6aadb2da7b58c.webp' /></p><p>

எனினும், பேருந்தில் பயணித்த மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
</p><p>
இந்த சம்பவம், மற்றுமொரு வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.&nbsp; &nbsp; </p><p></p><p></p><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T21:53:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்ணின் குடும்பத்திற்கு 40 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க Uber நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uber-ordered-to-pay-40-million-after-highway-incid-1789764066"></link>
            <id>https://news.lankasri.com/article/uber-ordered-to-pay-40-million-after-highway-incid-1789764066</id>
            <summary type="text">Uber Ordered to Pay $40 Million after Emily Parker Died in HIghway: சாலை விபத்தில் உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்திற்கு 40 மில்லியன் டொலர் இழப்பீடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Uber Ordered to Pay $40 Million after Emily Parker Died in HIghway: சாலை விபத்தில் உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்திற்கு 40 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க உபர்(Uber) நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><h2> நடுவழியில் இறக்கிவிடப்பட்ட பெண்கள்</h2><p>கலிபோர்னியாவில் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் திகதி 23 வயது இளம் பெண்ணான எமிலி நார்மின்-பார்கர்(Emily Normandin-Parker) மற்றும் அவரது 2 தோழிகள் வீடு திரும்புவதற்காக உபர் செயலியை பயன்படுத்தி டாக்ஸியை புக் செய்துள்ளனர்.</p><p>இந்த பயணத்தின் போது எமிலியின் தோழி உடல்நலக்குறைவு காரணமாக காரில் வாந்தி எடுத்துள்ளார்.</p><p> இதையடுத்து அந்த டாக்ஸியின் ஓட்டுநரான வூ ட்ரான்(Vu Tran) என்பவர் காரை நெடுஞ்சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு, போதையில்(intoxicated) இருந்த அந்த பெண்களை வலுக்கட்டாயமாக நடுவழியில் இறக்கி விட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e30b2b0a-f6c2-4fd0-9d4e-bf480f4e664a/26-6aada1e3826d8.webp' /></p><p> அவர்கள் இறக்கிவிடப்பட்ட சிறிது நேரத்தில், அவர்களுக்கு பின்னால் வந்த வாகனம் மோதி எமிலி பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p></p><h2> 40 மில்லியன் டொலர் இழப்பீடு</h2><p>
இந்த சம்பவம் தொடர்பாக எமிலியின் பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், எமிலி உபர் நிறுவனம் கூறிய அனைத்து வழிகாட்டுதல்களையும் முறையாக பின்பற்றியதாக தெரிவித்துள்ளனர்.</p><p> மேலும் அவளை உபர் நிறுவனம் பாதுகாப்பாக வீடு சேர்ப்பார்கள் என்று நினைத்தோம், ஆனால் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் உடனடியாக உபர் நிறுவனத்தை தொடர்பு கொண்டு காரை சுத்தம் செய்வதற்கான கட்டணத்தை கோரியதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> இந்நிலையில் நடுவழியில் இறக்கிவிடப்பட்டு உயிரிழந்த எமிலியின் குடும்பத்தினருக்கு உபர் நிறுவனம் 40 மில்லியன் டொலர் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று மத்தியஸ்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T21:46:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலிய கடற்கரையில் நீச்சல் வீரருக்கு நடந்த கொடூரம்: அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/shark-attack-at-perth-beach-1-swimmer-dead-1789765360"></link>
            <id>https://news.lankasri.com/article/shark-attack-at-perth-beach-1-swimmer-dead-1789765360</id>
            <summary type="text">Shark Attack at Perth Beach 1 Swimmer Dead: அவுஸ்திரேலிய கடற்கரையில் நடந்த சுறா தாக்குதலில் நீச்சல் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவுஸ்திரேலிய கடற்கர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Shark Attack at Perth Beach 1 Swimmer Dead: அவுஸ்திரேலிய கடற்கரையில் நடந்த சுறா தாக்குதலில் நீச்சல் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><h2> அவுஸ்திரேலிய கடற்கரையில் சுறா தாக்குதல்</h2><p>
மேற்கு அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உள்ள சோரென்டோ கடற்கரையில்(Sorrento Beach) வெள்ளிக்கிழமை காலை 10.15 மணிக்கு சுறா மீன் தாக்குதல் நடந்து இருப்பதாக அவசர கால உதவி படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இதையடுத்து ரோந்து படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டையானது முன்னெடுக்கப்பட்டது.</p><p> இந்த சுறா தாக்குதலில் நீச்சல் வீரர் ஒருவரின் உயிரிழந்து இருப்பதாக கூறப்படும் நிலையில், அவரது உடல் மீட்கப்பட்டுள்ளதா என்பது குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் தெரிவிக்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c253ef0-fc2b-47b9-8963-2bd7c2cfcd25/26-6aada6f1a32b0.webp' /></p><p> கடற்கரைக்கு வெறும் 50 மீட்டர் தொலைவில் நடந்த இந்த சுறா தாக்குதல் சம்பவத்தை கரையில் இருந்த பலர் நேரில் பார்த்ததாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.</p><p> சுறா தாக்குதலை தொடர்ந்து சோரென்டோ கடற்கரை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மூடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் யாரும் அப்பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-18T21:30:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீரிமலையில் கொட்டப்பட்ட வைத்தியசாலையின் ஆபத்தான மருத்துவ கழிவுகள் ; பிரதேச சபை உறுப்பினர்கள் கடும் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hazardous-medical-waste-hospital-dumped-keerimalai-1789766465"></link>
            <id>https://jvpnews.com/article/hazardous-medical-waste-hospital-dumped-keerimalai-1789766465</id>
            <summary type="text">பல தரப்பினரின் எதிர்ப்புகளையும் மீறி யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் தொடர்ச்சியாக கழிவுகள் கொட்டப்பட்டு வரும் நிலையில், குறித்த பகுதியில் தெல்லிப்பழை பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல தரப்பினரின் எதிர்ப்புகளையும் மீறி யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் தொடர்ச்சியாக கழிவுகள் கொட்டப்பட்டு வரும் நிலையில், குறித்த பகுதியில் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையைச் சேர்ந்ததாக கூறப்படும் பெருமளவிலான ஆபத்தான மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>இன்று (வெள்ளிக்கிழமை) மாலை குறித்த பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
கீரிமலை பகுதியில் கட்டுப்பாடின்றியும், உரிய அனுமதிகள் இன்றியும் சுமார் 300 டிப்பர் வாகனங்களில் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. </p><p>இதற்கு கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afa896a7-7645-4ffd-b4b3-dc987301c9ca/26-6aadab4315d1a.webp' /></p><p>இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.</p><p>

இதன்போது, ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ச. சிறிபவானந்தராசா, கீரிமலை பகுதியில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை மாத இறுதிக்குள் மீள அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளருக்கு பணிப்புரை விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

மேலும், வலி. வடக்கு பிரதேச சபை பகுதிகளில் கழிவுகளை கொட்டக்கூடாது எனவும் குறித்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
</p><p>
இதனிடையே, நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தை சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர்.</p><p>

கீரிமலையில் ஏற்கனவே கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தியே உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

அதேவேளை, உள்ளூராட்சி ஆணையாளர், மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகள் மற்றும் வலி. தெற்கு பிரதேச சபையின் சுகாதார பரிசோதகர் உள்ளிட்ட அதிகாரிகள், வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களுடன் இணைந்து நேற்று கீரிமலையில் கழிவுகள் கொட்டப்பட்டுள்ள பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
</p><p>
இதன்போது, குறித்த கழிவுகளை உடனடியாக அகற்றுமாறு வலி. தெற்கு பிரதேச சபைக்கு உத்தரவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/760cbfde-4bcd-4f70-b300-5ddb90ba0ff2/26-6aadab43c1610.webp' /></p><p>இவ்வாறான நிலையில், வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான உழவு இயந்திரம் மூலம் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையைச் சேர்ந்ததாக கூறப்படும் பெருமளவிலான ஆபத்தான மருத்துவக் கழிவுகள் கீரிமலை பகுதியில் கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பிரதேச சபை உறுப்பினர்கள், பொதி செய்யப்பட்ட நிலையில் பெருமளவிலான மருத்துவக் கழிவுகள் அப்பகுதியில் கொட்டப்பட்டிருந்ததை அவதானித்ததாக தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பில் புகைப்படங்கள் மற்றும் காணொளி ஆதாரங்களுடன் உரிய அதிகாரிகளிடம் முறையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

கடந்த இரண்டு மாதங்களாக கீரிமலை பகுதியில் கழிவுகளை கொட்டக்கூடாது என தாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கழிவுகளை அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், உள்ளூராட்சி ஆணையாளரும் அவற்றை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ள நிலையில், அவற்றை மீறி ஆபத்தான மருத்துவக் கழிவுகள் அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ளதாகவும் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p>

இந்த சம்பவம் தொடர்பில் உரிய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T21:21:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிராக அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு தயாராகும் அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-prepares-for-next-phase-of-action-against-iran-1789753256"></link>
            <id>https://ibctamil.com/article/us-prepares-for-next-phase-of-action-against-iran-1789753256</id>
            <summary type="text">ஈரான் மீது கூடுதல் இராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வரும் நிலையில், அந்நாடு அமெரிக்காவுடன் ஒரு உடன்பாட்டை நாடுவதாக அமெரிக்க ஜனாதிபதி தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது கூடுதல் இராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வரும் நிலையில், அந்நாடு அமெரிக்காவுடன் ஒரு உடன்பாட்டை நாடுவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
</p><p>தொலைபேசி நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்ட அவரிடம், ஈரானை முற்றிலுமாக அழிப்பதா என்பது குறித்து பரிசீலித்து வருவதாக சமீபத்தில் கூறிய கருத்துக்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில் இதற்கு பதில் வழங்கிய அவர், "என்ன நடக்கிறது என்று பொருத்திருந்துபார்ப்போம்," என கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>இருதரப்பு&nbsp;உடன்பாடு</h2><p>அத்தோடு, இருதரப்பும் ஒரு உடன்பாட்டை எட்டுவதில் ஆர்வமாக உள்ளது என ட்ரம்ப் மேலும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97609579-c9e6-4986-97b9-4d3590bd5fd3/26-6aad77a9734d3.webp' /></p><p>“ஈரான் நிதி ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் எல்லா வகையிலும் இழந்து வருகிறது. </p><p>அந்த ஒப்பந்தம் சரியானதாக இல்லையென்றால், நான் அதைப் பற்றி யோசிக்கக் கூட மாட்டேன்.ஆனால் தற்சமயம், அவர்கள் எல்லா வகையிலும் இழந்து கொண்டிருப்பதால், ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள்.” என கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-18T21:07:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதியில் அனோஜனிற்கு இறுதி நிமிடங்களில் நடந்த மறைக்கப்பட்ட உண்மைகள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/final-moments-for-anojan-in-saudi-arabia-1789750970"></link>
            <id>https://tamilwin.com/article/final-moments-for-anojan-in-saudi-arabia-1789750970</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் உயிருக்கு போராடும் அனோஜனின் தாய் மற்றும் தந்தை, “எப்படியாவது எங்களுடைய மகனை மீட்டுத் தாருங்கள்” என இலங்கை அரசாங்கத்திடமும் மக்களிடமு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் உயிருக்கு போராடும் அனோஜனின் தாய் மற்றும் தந்தை, “எப்படியாவது எங்களுடைய மகனை மீட்டுத் தாருங்கள்” என இலங்கை அரசாங்கத்திடமும் மக்களிடமும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>

முகநூலில் பதிவிட்ட ஒரு பதிவுக்காக அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சிலர் தெரிவித்து வருகின்றனர். எனினும், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படவில்லை என்றும், மாறாக 5 வருட சிறைத்தண்டனையும் 3,000 சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.
</p><p>
இவ்வாறு இருவேறு தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், உண்மை என்ன என்பது தொடர்பில் பலரும் குழப்பத்தில் உள்ளனர்.</p><p>

இந்நிலையில், அனோஜன் தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கோரி முகநூலில் காணொளியொன்றையும் வெளியிட்டுள்ளார்.</p><p>

அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை என்ன? அவரை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா? இந்த விடயம் தொடர்பில் மேலும் பல தகவல்களுடன், செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி ஆராய்கின்றது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jPMCFUTKFaI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T21:06:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[டயானா விபத்து செய்தி கேட்டு எரிச்சலடைந்த ராணி எலிசபெத்! ஸ்பென்சர் அதிர்ச்சி கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/elizabeth-upon-hearing-the-news-diana-s-accident-1789765188"></link>
            <id>https://ibctamil.com/article/elizabeth-upon-hearing-the-news-diana-s-accident-1789765188</id>
            <summary type="text">மறைந்த இளவரசி டயானாவின் பாரிஸ் கார் விபத்துச் செய்தி முதன்முதலில் கிடைத்தபோது, மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் அதற்கு மிகவும் எரிச்சலுடன் எதிர்வினையாற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மறைந்த இளவரசி டயானாவின் பாரிஸ் கார் விபத்துச் செய்தி முதன்முதலில் கிடைத்தபோது, மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் அதற்கு மிகவும் எரிச்சலுடன் எதிர்வினையாற்றினார் என்று டயானாவின் சகோதரர் ஏர்ல் ஸ்பென்சர் தனது புதிய சுயசரிதை புத்தகத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்.</p><p> இங்கிலாந்தின் ஊடகம் ஒன்றில், தொடராக வெளியாகி வரும் அவரது நினைவுக்குறிப்புகளின் புதிய பகுதியில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.</p><p>விபத்தின் பாரதூரமான தன்மை மற்றும் டயானாவின் உயிருக்கு ஏற்பட்ட ஆபத்து குறித்து முழுமையாகத் தெரியவருவதற்கு முன்பாகவே ராணி இந்த அதிருப்தியை வெளியிட்டதாக ஸ்பென்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>எரிச்சலடைந்த தொனியில் பதில்</h2><p>டயானா விபத்தில் சிக்கிய ஆரம்பக்கட்ட செய்தியைக் கேட்டவுடன், ராணி எலிசபெத் மிகவும் எரிச்சலடைந்த தொனியில், "இப்போது அவள் என்ன புதுப் பிரச்சனை செய்கிறாள்?" (What is she up to now?) என்று கேட்டதாக ஏர்ல் ஸ்பென்சர் தனது நூலில் எழுதியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab65b8ba-ddf7-40d4-acb9-72a0a0b31c2e/26-6aada7319ea4b.webp' /></p><p>இருப்பினும், டயானா மரணமடைந்த பின்னர், அவரது 'HRH' (Her Royal Highness) என்ற அரச கௌரவப் பட்டத்தை மீண்டும் டயானாவிற்கு வழங்குவதற்கு ராணி எலிசபெத் முன்வந்ததாகவும், அதற்கான செய்தியைத் தனது தனிப்பட்ட செயலாளர் மூலம் அனுப்பியதாகவும் ஸ்பென்சர் அந்தப் புத்தகத்தில் விவரித்துள்ளார். </p><p>கடந்த 1997 ஆகஸ்ட் 31 அன்று பாரிஸில் நடந்த கார் விபத்தில் டயானா உயிரிழந்த ஐந்து நாட்களுக்குப் பிறகு, ராணி எலிசபெத் தொலைக்காட்சியில் நேரடியாகத் தோன்றி டயானாவிற்கு நெகிழ்ச்சியான அஞ்சலி செலுத்தியிருந்தார்.</p><p>இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்தத் தகவல்கள் பிரித்தானிய அரச வட்டாரத்தில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-18T21:00:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அத்துமீறி நுழைந்து ஒலிபெருக்கி சாதனங்களை பிடுங்கி சென்ற பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-seized-loudspeaker-equipment-thyaga-deepam-1789764394"></link>
            <id>https://jvpnews.com/article/police-seized-loudspeaker-equipment-thyaga-deepam-1789764394</id>
            <summary type="text">தியாக தீபத்தின் நினைவிடத்தில் அனுமதியின்றி ஒலிபெருக்கி சாதனங்களை பயன்படுத்தியதாக பொலிஸார் அவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
தியாக தீபத்தின் 4ஆம் ஆண்டு நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தியாக தீபத்தின் நினைவிடத்தில் அனுமதியின்றி ஒலிபெருக்கி சாதனங்களை பயன்படுத்தியதாக பொலிஸார் அவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>தியாக தீபத்தின் 4ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது நினைவிடத்திற்கு வந்த யாழ்ப்பாண பொலிஸார் அனுமதியின்றி ஒலி பெருக்கி சாதனங்களை பயன்படுத்தியதாக கூறி அவற்றை பறிமுதல் செய்து பொலிஸ் நிலையம் எடுத்து சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/247fb1f8-9fcb-47ec-983d-b3de0a61520a/26-6aada32e802df.webp' /></p><p>
</p><p>
பொலிஸார் ஒலிபெருக்கி சாதனங்களை பறிமுதல் செய்யும் போது பொலிஸாரின் வாகனத்தினுள் சிவில் உடையில் இருந்த பெண்ணொருவர் அவற்றை தனது கையடக்க தொலைபேசியில் காணொளி பதிவு செய்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. </p><p>

அதேவேளை வேலணை பகுதியில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நடைபெற்ற இடத்திற்கு சென்ற ஊர்காவற்துறை பொலிஸார் ஒலிபெருக்கி சாதனத்தை பறிமுதல் செய்துள்ளதுடன் , உடுவில் பகுதியில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்விடத்திற்கு சென்ற சுன்னாகம் பொலிஸாரும் ஒலிபெருக்கி சாதனங்களை பறிமுதல் செய்துள்ளனர்&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ed53ff3-1f52-4967-b61a-5e84e5fb1cc6/26-6aada32bb1cd8.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffc8afbd-e25e-4504-9830-6ef1dea11c6d/26-6aada32c6718d.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23c24bdc-8ee2-4ed7-bffd-f8159f0fe151/26-6aada32d1c13a.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b548af1-68db-4c95-abbe-276439cb91b7/26-6aada32dc5b7a.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/247fb1f8-9fcb-47ec-983d-b3de0a61520a/26-6aada32e802df.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T20:49:13+00:00</updated>
        </entry>
    </feed>
