<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-08T11:30:24+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் : சிக்கிய ஆபத்தான பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/five-crore-drugs-seized-at-bandaranaike-airport-1788866199"></link>
            <id>https://ibctamil.com/article/five-crore-drugs-seized-at-bandaranaike-airport-1788866199</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள &#039;பசுமைப் பாதை&#039; வழியாக ஐந்து கோடியே முந்நூற்று எழுபதாயிரம் ரூபாய் மதிப்புள்ள &#039;குஷ்&#039; மற்றும் &#039;ஹஷிஷ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள 'பசுமைப் பாதை' வழியாக ஐந்து கோடியே முந்நூற்று எழுபதாயிரம் ரூபாய் மதிப்புள்ள 'குஷ்' மற்றும் 'ஹஷிஷ்' போதைப்பொருட்களை வெளியே கொண்டு சென்றுகொண்டிருந்த இரண்டு வெளிநாட்டுப் பயணிகளை, சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்தனர்.
</p><p>
அவர்கள் 23 மற்றும் 39 வயதுடைய தாய்லாந்து நாட்டவர்கள், மேலும் அவர்கள் அந்நாட்டில் உள்ள ஒரு இறைச்சிக் கடையில் கசாப்புக் கடைக்காரர்களாகப் பணிபுரிகின்றனர்.</p><h2>மிகவும் சூட்சுமமாக கொண்டு வரப்பட்ட போதைப்பொருட்கள்</h2><p>அவர்கள் 4 கிலோகிராம் மற்றும் 496 கிராம் எடையுள்ள 'குஷ்' என்ற போதைப்பொருளை, வைட்டமின்கள் அடங்கிய 16 பொதிகளில் இரண்டு சூட்கேஸ்களில் மறைத்து வைத்திருந்தனர். மேலும், 641 கிராம் எடையுள்ள 'ஹஷிஷ்' என்ற போதைப்பொருள், வெளித்தோற்றத்தில் 'திராட்சை விழுது' போலத் தோற்றமளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு பொலிதீனில் சுற்றப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56071fac-d89c-41fe-9c2c-b6f9cbd1a549/26-6a9ff13254061.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T11:27:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதியின் முக்கிய தளங்களை நோக்கி பாய்ந்த பாரிய ஏவுகணைகள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/houthi-attacks-on-saudi-arabia-73-injured-1788865229"></link>
            <id>https://tamilwin.com/article/houthi-attacks-on-saudi-arabia-73-injured-1788865229</id>
            <summary type="text">சவூதி அரேபியாவின் தெற்குப் பகுதியிலுள்ள நான்கு முக்கிய நகரங்களை இலக்கு வைத்து யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இன்று பாரிய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவின் தெற்குப் பகுதியிலுள்ள நான்கு முக்கிய நகரங்களை இலக்கு வைத்து யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இன்று பாரிய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.</p><h2>&nbsp;73 பேர் காயம்&nbsp;</h2><p>
</p><p>
தலைநகர் சனா உட்பட நாட்டின் பெரும்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், சவூதியின் கமிஸ் முஷைத் பகுதியிலுள்ள விமானப்படை தளம், அப்ஹா, நஜ்ரான் மற்றும் ஜஸான் பகுதியிலுள்ள சவூதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் மின் உற்பத்தி நிலையங்களை இலக்கு வைத்து இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfd8828a-a662-44e9-8427-ad158f33b50b/26-6a9ff0c916920.webp' /></p><p>
</p><p>
இத்தாக்குதல்களில் எண்ணெய் ஆலைகள் தீப்பிடித்து எரிந்ததோடு, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 73 பேர் காயமடைந்துள்ளதாக சவூதி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. </p><p>ஊடகக் கட்டுப்பாடுகள் காரணமாக சேதங்கள் தொடர்பான புகைப்படங்கள் உடனடியாக வெளியாகாத போதிலும், எல்லைப் பகுதியில் சவூதியின் டிரக்குகள் மீதான தாக்குதல் காட்சிகளை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T11:26:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டு மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-regarding-strong-winds-and-rough-seas-1788865362"></link>
            <id>https://tamilwin.com/article/warning-regarding-strong-winds-and-rough-seas-1788865362</id>
            <summary type="text">பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.இன்று (08.09.202...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.</p><p>இன்று (08.09.2026) முற்பகல் 11.00 மணிக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவித்தல் நாளை வரை செல்லுபடியாகும்.</p><h2>எச்சரிக்கை</h2><p> </p><p>

இதன்படி, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அப்பகுதியிலுள்ள கடல் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0031db3-ddb3-4c11-be62-6cd9df5e75ba/26-6a9ff0447531e.webp' /></p><p> </p><p>

எனவே, குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்சார் மற்றும் மீன்பிடிச் சமூகத்தினர் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T11:25:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை கிரிக்கெட் ஒளிபரப்பில் மறைமுக சூதாட்ட மறைமுக விளம்பரங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cricket-researcher-questions-betting-linked-ads-1788863754"></link>
            <id>https://ibctamil.com/article/cricket-researcher-questions-betting-linked-ads-1788863754</id>
            <summary type="text">இலங்கையில் உரிமம் பெறாத இணையவழி சூதாட்டத் தளங்களுக்குத் தடை
விதிக்கப்பட்டுள்ள போதிலும், கிரிக்கெட் போட்டிகளின் போது பந்தயம் தொடர்பான
மாற்றுத் தொழில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் உரிமம் பெறாத இணையவழி சூதாட்டத் தளங்களுக்குத் தடை
விதிக்கப்பட்டுள்ள போதிலும், கிரிக்கெட் போட்டிகளின் போது பந்தயம் தொடர்பான
மாற்றுத் தொழில்களின் விளம்பரங்கள் தொடர்ந்து காட்டப்படுவது
குறித்து சிரேஷ்ட ஆய்வாளர் மருத்துவர் சஞ்சனா ஹட்டோட்டுவா கேள்வி
எழுப்பியுள்ளார்.
</p><p>இலங்கை - இந்தியாவிற்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் சிறப்பம்சங்கள்
அடங்கிய 5 காணொளிகளில், ஒரு சூதாட்ட பந்தயம் கட்டும் நிறுவனத்தின் சின்னம் சுமார் 14 நிமிடங்கள்
இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>காலியில் இடம்பெற்ற போட்டிகளையும் சேர்த்து 10 காணொளிகளில் சுமார் 25
நிமிடங்கள் இந்த விளம்பரம் காட்டப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>விளம்பரங்கள் காட்சிப்படுத்தல்</h2><p>

இந்த நிலையில் விக்கெட்டுக்குப் பின்னால் உள்ள விளம்பரப் பாய், எல்லை விளம்பரங்கள் மற்றும் பார்வைத் திரைகள் மூலமாக, வெளிநாட்டுச் சூதாட்டப் பின்னணி கொண்ட முத்திரைகள் போட்டியில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c6f2263-6c2c-4a81-a803-b2cd9535676c/26-6a9fedc1b0c75.webp' /></p><p>

அத்துடன்&nbsp; குறித்த நிறுவனத்துக்கு சொந்தமான இணைய தளங்களை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்
தடை செய்துள்ள நிலையிலும், 2025ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சூதாட்ட ஒழுங்குமுறை
ஆணையச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையிலும் இத்தகைய விளம்பரங்கள் இடம்பெறுவது
சட்டம் நடைமுறையாக்கத்துக்கு பலவீனத்தைக் காட்டுவதாக ஆய்வாளர் கூறியுள்ளார்.</p><p>
இதனிடையே "இலங்கையின் எல்லைக்குள் நடைபெறும் போட்டிகளில் சூதாட்ட விளம்பரங்களை
அனுமதிப்பதில்லை" என சிறிலங்கா கிரிக்கெட் முன்னர் தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T11:16:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[51.37 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் இரு தாய்லாந்து நாட்டினர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-thai-nationals-arrested-at-bia-1788865379"></link>
            <id>https://tamilwin.com/article/two-thai-nationals-arrested-at-bia-1788865379</id>
            <summary type="text">பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சுமார் ரூபாய் 51.37 மில்லியன்
மதிப்புள்ள குஷ் கஞ்சா மற்றும் ஹஷிஷ் ஆகிய போதைப்பொருட்களுடன் இரு தாய்லாந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சுமார் ரூபாய் 51.37 மில்லியன்
மதிப்புள்ள குஷ் கஞ்சா மற்றும் ஹஷிஷ் ஆகிய போதைப்பொருட்களுடன் இரு தாய்லாந்து
நாட்டினரை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் கைது
செய்துள்ளனர்.</p><p>
பேங்கொக்கிலிருந்து தாய் ஏர்வேஸ் (TG-307) விமானம் மூலம் நேற்று திங்கட்கிழமை
(07) வந்திறங்கிய பயணிகளிடம் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சோதனையின் போதே
இவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.</p><h2>போத்தல்களில் மறைத்து வைப்பு..&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
கைது செய்யப்பட்ட 39 வயதான நபரின் பயணப் பையிலிருந்த 8 பிளாஸ்டிக்
போத்தல்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.224 கிலோ குஷ் கஞ்சா (மதிப்பு
ரூ. 22.24 மில்லியன்) மீட்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94e6c4e2-264a-4121-88f4-73c9cdc39890/26-6a9febe773c4c.webp' /></p><p>
</p><p>
அதேபோன்று, 23 வயதான மற்றொரு நபரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 8 பிளாஸ்டிக்
போத்தல்களில் மறைக்கப்பட்டிருந்த 2.272 கிலோ குஷ் கஞ்சா (மதிப்பு ரூ. 22.72
மில்லியன்) மற்றும் அட்டைப் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 641
கிராம் ஹஷிஷ் (மதிப்பு ரூ. 6.41 மில்லியன்) கைப்பற்றப்பட்டன.</p><p>

அத்துடன் மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்ட 5.137 கிலோ போதைப் பொருட்களுடனும்,
கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க
விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் (PNB)
ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T11:11:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடித்துக்கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/body-of-young-man-found-beaten-to-death-1788865248"></link>
            <id>https://ibctamil.com/article/body-of-young-man-found-beaten-to-death-1788865248</id>
            <summary type="text">&amp;nbsp;தலத்துவோயா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பவ்லானா கிராமத்தில் உள்ள ஒரு வனப்பகுதியில், அடித்துக் கொலை செய்யப்பட்டு பின்னர் எரிக்கப்பட்ட இளைஞர் ஒருவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தலத்துவோயா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பவ்லானா கிராமத்தில் உள்ள ஒரு வனப்பகுதியில், அடித்துக் கொலை செய்யப்பட்டு பின்னர் எரிக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் உடல் இன்று காலை (8) கண்டெடுக்கப்பட்டதாக தலத்துவோயா காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
இவ்வாறு கொல்லப்பட்டவர், பவ்லானா கிராமத்தைச் சேர்ந்த பணிக்கா முதியன்செலகே சாந்த சஞ்சய பண்டார (29) ஆவார்.&nbsp;</p><h2>காவல்துறையில் சகோதரன் முறைப்பாடு</h2><p>தனது அண்ணனை இரண்டு நாட்களாகக் காணவில்லை என்ற சந்தேகத்தின் பேரில், அவரது தம்பி தலத்துவோயா காவல்துறையில் புகார் அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87cda4e5-5cf2-45a3-866f-c6479ea3c99c/26-6a9fed3e3239f.webp' /></p><p>

அவர் கடைசியாகச் சந்தித்த இரண்டு நண்பர்களிடம் விசாரணை நடத்திய பின்னர், இந்தக் கொலை குறித்த தகவலை காவல்துறை வெளிப்படுத்தியுள்ளது.</p><p></p><h2>&nbsp;கொலை செய்த நண்பர்கள்</h2><p>

மது அருந்திவிட்டுத் தங்கள் நண்பரைக் கொலை செய்த பின்னர், உடலை எரித்து வனப்பகுதிக்கு எடுத்துச் சென்று, சவப்பெட்டியில் வைத்து வனப்பகுதியில் மறைத்து வைத்ததாகச் சந்தேக நபர்கள் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b6bc120-d8bc-4b2b-a8f5-6432b411a1b0/26-6a9fed3d7f60b.webp' /></p><p>

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக இன்று (8) நீதித்துறை நடுவர் விசாரணை நடைபெற உள்ளது. தலத்துவோயா காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T11:11:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுபமா, குஷ்பூ முதல் ஐஸ்வர்யா ராஜேஷ் வரை!! பிரபலங்களின் 80-s லுக் புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/80s-look-ai-photos-celeb-post-viral-social-media-1788866057"></link>
            <id>https://viduppu.com/article/80s-look-ai-photos-celeb-post-viral-social-media-1788866057</id>
            <summary type="text">சோசியல் மீடியாக்களில் தினமும் ஏதாவது ஒன்று டிரெண்ட்டாகி பலரது கவனத்தையும் பெறும். அப்படி நெட்டிசன்கள் பலரும் 1980 லுக்கில் ஏஐ மூலம் எடிட் செய்யப்பட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சோசியல் மீடியாக்களில் தினமும் ஏதாவது ஒன்று டிரெண்ட்டாகி பலரது கவனத்தையும் பெறும். அப்படி நெட்டிசன்கள் பலரும் 1980 லுக்கில் ஏஐ மூலம் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ட்ரெண்ட்டாக்கி வருகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fed55b7-03ca-402c-b3c4-4c21ab4ab103/26-6a9fee16c78ad.webp' /></p><p> </p><p>அந்தவகையில் இதை சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்களில் 80-s லுக்கில் எடிட் செய்யப்பட்ட தங்களின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பகக்த்தில் பகிர்ந்து வருகிறார்கள்.</p><p> அப்படி குஷ்பூ முதல், ஐஸ்வர்யா ராஜேஷ் வரை பல பிரபலங்கள் 80-s லுக் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.</p>]]></content>
            <updated>2026-09-08T11:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை கிரிக்கெட் ஒளிபரப்பில் சூதாட்ட மறைமுக விளம்பரங்கள் - ஆய்வாளர் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cricket-researcher-questions-betting-linked-ads-1788863079"></link>
            <id>https://tamilwin.com/article/cricket-researcher-questions-betting-linked-ads-1788863079</id>
            <summary type="text">இலங்கையில் உரிமம் பெறாத இணையவழி சூதாட்டத் தளங்களுக்குத் தடை
விதிக்கப்பட்டுள்ள போதிலும், கிரிக்கெட் போட்டிகளின் போது பந்தயம் தொடர்பான
மாற்றுத் தொழில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் உரிமம் பெறாத இணையவழி சூதாட்டத் தளங்களுக்குத் தடை
விதிக்கப்பட்டுள்ள போதிலும், கிரிக்கெட் போட்டிகளின் போது பந்தயம் தொடர்பான
மாற்றுத் தொழில்களின் விளம்பரங்கள் தொடர்ந்து காட்டப்படுவது
குறித்து சிரேஷ்ட ஆய்வாளர் மருத்துவர் சஞ்சனா ஹட்டோட்டுவா கேள்வி
எழுப்பியுள்ளார்.
</p><p>இலங்கை - இந்தியாவிற்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் சிறப்பம்சங்கள்
அடங்கிய 5 காணொளிகளில், '1xBAT' நிறுவனத்தின் சின்னம் சுமார் 14 நிமிடங்கள்
இடம்பெற்றுள்ளது. </p><p>Galle போட்டிகளையும் சேர்த்து 10 காணொளிகளில் சுமார் 25
நிமிடங்கள் இந்த விளம்பரம் காட்டப்பட்டுள்ளது.</p><h2>விளம்பரங்கள் காட்சிப்படுத்தல்</h2><p>

இந்த நிலையில் விக்கெட்டுக்குப் பின்னால் உள்ள விளம்பரப் பாய், எல்லை விளம்பரங்கள் மற்றும் பார்வைத் திரைகள் மூலமாக 1xBAT, Parimatch Sports மற்றும் batbricks7 போன்ற
வெளிநாட்டுச் சூதாட்டப் பின்னணி கொண்ட முத்திரைகள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d77791b2-0129-4c33-a86f-5b22ae9b0027/26-6a9fe5d102eb9.webp' /></p><p>

அத்துடன் 1xbet.com போன்ற தளங்களை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்
தடை செய்துள்ள நிலையிலும், 2025ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சூதாட்ட ஒழுங்குமுறை
ஆணையச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையிலும் இத்தகைய விளம்பரங்கள் இடம்பெறுவது
சட்டம் அமுலாக்கத்தின் பலவீனத்தைக் காட்டுவதாக ஆய்வாளர் கூறுகிறார்.
</p><p>
இதனிடையே "இலங்கையின் எல்லைக்குள் நடைபெறும் போட்டிகளில் சூதாட்ட விளம்பரங்களை
அனுமதிப்பதில்லை" என ஸ்ரீலங்கா கிரிக்கெட் முன்னர் தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T10:59:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் துறை ஊழியர்களுக்கான போக்குவரத்து குறித்து அரசாங்கத்திற்கான சிறப்பு நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/special-announcement-for-private-sector-employees-1788862669"></link>
            <id>https://ibctamil.com/article/special-announcement-for-private-sector-employees-1788862669</id>
            <summary type="text">தனியார் துறை ஊழியர்களுக்கு தொடருந்து சேவைகளுக்கான மாதாந்த பருவச்சீட்டுகளை இணையவழியில் பெற்றுக்கொள்ளும் வசதி எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் வழங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனியார் துறை ஊழியர்களுக்கு தொடருந்து சேவைகளுக்கான மாதாந்த பருவச்சீட்டுகளை இணையவழியில் பெற்றுக்கொள்ளும் வசதி எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளது.
</p><p>
இதற்காக seatreservation.railway.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>

இதன்படி, தினசரி பயணங்களுக்கு தொடருந்து சேவையை பயன்படுத்தும் தனியார் துறை ஊழியர்களும், இணையவழி தொடருந்து முன்பதிவு தளத்தின் ஊடாக மாதாந்த பருவச்சீட்டுகளுக்கு விண்ணப்பித்து அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும்.</p><p></p><h2>இருக்கை முன்பதிவு வசதி</h2><p>
</p><p>
இதுவரை அரச துறை ஊழியர்களுக்கு மாதாந்த பருவச்சீட்டுகளை இணையவழியில் பெற்றுக்கொள்ளும் வசதி காணப்பட்ட நிலையில், அந்த வசதி தற்போது தனியார் துறை ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99893d5f-72de-4896-87a9-71ff33f2ac3e/26-6a9fe97e21501.webp' /></p><p>
</p><p>
இந்த புதிய திட்டம் இன்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் டொக்டர் பிரசன்ன குணசேன தலைமையில், டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன பங்கேற்புடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.</p><p>

முன்னைய முறையின் கீழ், மாதாந்த பருவச்சீட்டைப் பெற விரும்பிய பயணிகள் விண்ணப்பப் படிவம், புகைப்படம், வசிப்பிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் மற்றும் தேசிய அடையாள அட்டையின் பிரதி உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து தொடருந்து அடையாள அட்டையைப் பெற வேண்டியிருந்தது. </p><p>அத்துடன், இந்த சேவை குறிப்பிட்ட நேரங்களிலும் ஒவ்வொரு மாதமும் வரையறுக்கப்பட்ட காலப்பகுதியிலும் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
</p><p>
புதிய முறையின் கீழ், பயணிகள் தங்களது அடையாளத்தையும் பயனர் கணக்கையும் உறுதிப்படுத்திய பின்னர், வீட்டிலிருந்தே இணையவழியில் மாதாந்த பருவச்சீட்டு பெறுவதற்கான முழு செயல்முறையையும் நிறைவு செய்ய முடியும்.</p><p>

இருக்கை முன்பதிவு வசதி கொண்ட தொடருந்து நிலையங்களில் பயனர் கணக்கு சரிபார்ப்பை மேற்கொள்ள முடியும்.
</p><p>
தொடருந்து சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் விரிவான வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, இலங்கை தொடருந்து வே திணைக்களம் மற்றும் SLT-Mobitel ஆகியவை இணைந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T10:57:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று இலங்கை வரும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indian-defence-minister-arrives-in-sri-lanka-today-1788835600"></link>
            <id>https://ibctamil.com/article/indian-defence-minister-arrives-in-sri-lanka-today-1788835600</id>
            <summary type="text">புதிய இணைப்புஇந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் இன்று பிற்பகல் இலங்கை வந்தடைந்தார். இதன் மூலம், செப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் இன்று பிற்பகல் இலங்கை வந்தடைந்தார். </p><p>இதன் மூலம், செப்டம்பர் 10 வரை நடைபெறவுள்ள மூன்று நாள் உத்தியோகப்பூர்வப் பயணம் தொடங்கியுள்ளது.
</p><p>
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த வருகை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, மற்றும் பாதுகாப்பு அமைச்சக செயலாளர் ஓய்வுபெற்ற விமான துணைத் தளபதி சம்பத் துயகொந்த உள்ளிட்டோருடன் சிங் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b62d9f7-874b-40cf-a980-7d241700bd00/26-6a9fd075e92fd.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d12d7188-16a3-4202-9f27-20859b9a9155/26-6a9fd076a5ce8.webp' /></p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>இந்தியாவின் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள்
உத்தியோகபூர்வ பயணமாக இன்று செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
</p><p>
பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள்
அடங்கிய உயர்மட்டக் குழு ஒன்றும் அவருடன் இந்த விஜயத்தில் இணைந்துள்ளது.
</p><p>
இந்தப் பயணத்தின்போது, இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் இலங்கையின்
உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்து பல்வேறு முக்கிய இருதரப்பு விவகாரங்கள்
குறித்துக் கலந்துரையாடவுள்ளதுடன், கொழும்பில் உள்ள இந்திய வம்சாவளியினரையும்
சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.</p><p></p><p>
</p><h2>அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை</h2><p>
இது குறித்து மத்திய தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

"இந்தியாவும் இலங்கையும் ஆழமான நாகரிகப் பிணைப்புகளையும், பாதுகாப்பு,
பொருளாதாரம், வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள்
ஆகியவற்றின் அடிப்படையில் பன்முக ஒத்துழைப்பையும் பகிர்ந்து கொள்கின்றன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8edacdbb-214a-4b46-ae02-97755278df96/26-6a9f78873bd5e.webp' /></p><p>
இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய பொருளாதார உதவியும்,
2025 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட டித்வா புயலின் போது மீட்புப் பணிகளில்
களமிறங்கிய முதல் நாடுகளில் ஒன்றாக இந்தியா உதவிக்கரம் நீட்டியதும் இவ்விரு
தரப்பு உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளன.
</p><p>
இது, 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' என்ற கொள்கை மீதான இந்தியாவின்
தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கின்றது.
</p><p>
பாதுகாப்புத்துறை அமைச்சரின் இந்தப் பயணம் இந்தியா - இலங்கை இடையேயான
இருதரப்பு உறவுகளை மேலும் புதிய உயரத்துக்குக் கொண்டு செல்லும் என
எதிர்பார்க்கப்படுகின்றது என்றுள்ளது</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tkTqoEzA3tM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T10:55:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் அரசியல் தலைவருக்கு மீண்டும் ஊதிய உயர்வு அளிக்கும் நாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/highest-paid-leader-salary-increase-1788865031"></link>
            <id>https://news.lankasri.com/article/highest-paid-leader-salary-increase-1788865031</id>
            <summary type="text">Highest paid world leader to get salary increase: அதிக சம்பளம் பெறும் உலகத் தலைவருக்கு சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளது.
சிங்கப்பூர் அரசாங்கம், அதன் பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Highest paid world leader to get salary increase: அதிக சம்பளம் பெறும் உலகத் தலைவருக்கு சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளது.
</p><p>சிங்கப்பூர் அரசாங்கம், அதன் பிரதமர் உட்பட அமைச்சர்கள் மற்றும் பிற பதவிகளில் இருப்பவர்களின் ஆண்டுச் சம்பளத்தை உயர்த்தப்போவதாகத் தெரிவித்துள்ளது.</p><h2>நன்கொடையாக</h2><p>
</p><p>சிங்கப்பூர் பிரதமர், உலகின் அதிக சம்பளம் வாங்கும் அரசியல் தலைவர் ஆவார். பிரதமர் லாரன்ஸ் வோங்கின் ஆண்டு ஊதியத் தொகுப்பில் 1.4 மில்லியன் சிங்கப்பூர் டொலர்கள் (1.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) உயர்வு கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/579c7d00-319c-4747-9258-23c81db240d0/26-6a9fea097b447.webp' /></p><p> </p><p>இந்த ஊதிய உயர்வை அடுத்த ஐந்து ஆண்டுகளில் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். சிறந்த திறமையாளர்களை ஈர்ப்பதற்கு அமைச்சர்களின் ஊதியத்தை உயர்த்துவது அவசியம் என்று வோங் கூறியிருந்தார். </p><p>அமைச்சர்களுக்கு அதிக சம்பளம் வழங்குவது ஊழலைத் தடுக்கும் என்றும் சிங்கப்பூர் அரசாங்கம் முன்னதாக வாதிட்டிருந்தது. ஆனால், வேலைப் பாதுகாப்பு மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு குறித்து ஆழ்ந்த கவலை நிலவும் சிங்கப்பூரில் இந்த நடவடிக்கை விமர்சனங்களை ஈர்த்துள்ளது.</p><p></p><p> </p><p>அவரது சம்பள உயர்வு நடைமுறைக்கு வருவதற்கு முன்பும், வோங் தான் உலகத் தலைவர்களிலேயே மிக அதிக சம்பளம் வாங்குபவராகத் திகழ்கிறார்.
</p><p>தற்போது ஆண்டுக்கு 2.2 மில்லியன் சிங்கப்பூர் டொலர் சம்பளம் பெறும் அவர், இனி தனது சம்பளத்தை 60 சதவீதத்திற்கும் மேலாக உயர்த்தி 3.6 மில்லியன் சிங்கப்பூர் டொலராக (2.8 மில்லியன் அமெரிக்க டொலர்) பெறவிருக்கிறார். </p><p>இந்த வரிசையில் அடுத்து, சுமார் 719,000 டொலர் சம்பாதிக்கும் ஹொங்ஹொங் தலைமை நிர்வாகி ஜான் லீயும், அவரைத் தொடர்ந்து 606,000 டொலர் சம்பாதிக்கும் சுவிட்சர்லாந்து ஜனாதிபதி கை பார்மெலினும் உள்ளனர். </p><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆண்டுக்கு 400,000 டொலர் ஊதியமாகப் பெறுகிறார், அதே வேளையில் பிரித்தானிய பிரதமர் ஆன்டி பர்னாம் 230,000 டொலர் ஊதியமாகப் பெறுகிறார்.</p><h2>ஊதியம் அதிகரிக்கும்</h2><p> </p><p>இந்த நிலையில், பெரும்பாலான குடிமக்கள் சம்பாதிப்பதை விட சிங்கப்பூர் அமைச்சர்களின் சம்பளம் மிகவும் அதிகமாக இருப்பதால், அது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது என்பதை செவ்வாயன்று வோங் ஒப்புக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b137045-7a25-4eba-bcc9-e3702741d95c/26-6a9fea0a30443.webp' /></p><p> </p><p>அந்நாட்டின் சராசரி மாத வருமானம் 5,775 சிங்கப்பூர் டொலராகும். தற்போது, ​​அமைச்சர்களின் அடிப்படை ஊதியத் தொகுப்பு சுமார் 1.1 மில்லியன் சிங்கப்பூர் டொலராக உள்ளது. </p><p>புதிய ஊதியத் திட்டத்தின் மூலம், அது சுமார் 1.2 மில்லியன் சிங்கப்பூர் டொலராக அதிகரிக்கும். மட்டுமின்றி, தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலத்தின் முடிவில், செயல்திறனின் அடிப்படையில் அமைச்சர்களின் ஊதியம் அதிகரிக்கும் என்றும் வோங் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T10:54:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்காக களமிறங்கும் மகிந்தவுக்கு ஐக்கிய தேசியக்கட்சி வாழ்த்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/unp-congratulations-rally-joint-mahinda-1788864791"></link>
            <id>https://ibctamil.com/article/unp-congratulations-rally-joint-mahinda-1788864791</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் அநுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணிக்கு ஐக்கிய தேசியக்கட்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் அநுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணிக்கு ஐக்கிய தேசியக்கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.
</p><p>
 ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். </p><p>குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p><p></p><h2>நாமல் ராஜபக்ச கைது</h2><p>சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தலைமையில் இந்த பேரணி முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d2793fa-f500-4ef3-a69e-d20afd7cf089/26-6a9fe919d6b2a.webp' /></p><p>எனினும், அதனை சீர்குலைக்கும் நோக்கிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
இந்த கைது நடவடிக்கையால் தளராமல், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில், நடைபெறவுள்ள பேரணிக்கு ஐக்கிய தேசியக்கட்சி வாழ்த்து தெரிவிக்கின்றது.” என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T10:53:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை ஒன்றில் மாணவர்கள் சேர்க்கைக்கு இலஞ்சம்: பாடசாலை அதிபர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/student-admission-principal-arrested-swift-action-1788863854"></link>
            <id>https://tamilwin.com/article/student-admission-principal-arrested-swift-action-1788863854</id>
            <summary type="text">காலி, உணவட்டுன - ரூமசலா பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இரண்டு
மாணவர்களைச் சேர்ப்பதற்காக இலஞ்சம் பெற்ற அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி, உணவட்டுன - ரூமசலா பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இரண்டு
மாணவர்களைச் சேர்ப்பதற்காக இலஞ்சம் பெற்ற அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(7.9.2026) இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>2026-ஆம் கல்வியாண்டில் 1ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புகளில் இரு
குழந்தைகளைச் சேர்ப்பதற்காக, அஹங்கமவைச் சேர்ந்த பாடசாலை அதிபர் ஆரம்பத்தில்
ரூ. 600,000 கேட்டுள்ளார்.</p><h2>கைது</h2><p>
</p><p>
இந்தநிலையில் பேச்சுவார்த்தையின் முடிவில் இந்தத் தொகை ரூ. 3,00,000 ஆகக்
குறைக்கப்பட்டு, முதற்கட்டமாக ரூ. 1,50,000 அதிபரால்
பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>

மேலும் மீதிப் பணத்தைக் கேட்டுத் தொடர்ந்து வற்புறுத்திய அதிபர், பணத்தைத்
தராவிட்டால் குழந்தைகளைப் பாடசாலையிலிருந்து நீக்கி விடுவதாக மிரட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b2b19b2-019b-4b97-acc6-1cd401023ea4/26-6a9fe74433ea2.webp' /></p><p>
</p><p>
அத்துடன் பாதிக்கப்பட்ட தாயார் அளித்த முறைப்பாட்டின் பேரில், ஹபரடுவ
பகுதியிலுள்ள பிரபல கடையில் வைத்து ரூ. 2,50,000 இலஞ்சப் பணத்தைப்
பெற்றுக்கொண்டபோது அதிபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
</p><p>
மேலும் சந்தேக நபரான அதிபர் இன்று காலி நீதவான் நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T10:45:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை நாடு இடம்பெறவில்லை; ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வேண்டும் - MLA சிந்து கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mla-sindhu-request-eezham-tamil-citizenship-1788861137"></link>
            <id>https://news.lankasri.com/article/mla-sindhu-request-eezham-tamil-citizenship-1788861137</id>
            <summary type="text">
Mla sindhu request eezham tamil citizenship in assembly: இந்தியாவில் ஈழத்தமிழர்களின் குடியுரிமை குறித்து எம்.எல்.ஏ சிந்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>
Mla sindhu request eezham tamil citizenship in assembly: இந்தியாவில் ஈழத்தமிழர்களின் குடியுரிமை குறித்து எம்.எல்.ஏ சிந்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் கோரிக்கை முன்வைத்தார்.</p><p>

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை, போக்குவரத்து உள்ளிட்ட மானிய கோரிக்கை குறித்த சட்டமன்ற கூட்டத்தில், ஈழத்தமிழர்கள் குடியுரிமை பெற வலியுறுத்த வேண்டும் என குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் க.சிந்து கோரிக்கை வைத்தார்.&nbsp;</p><h2>ஈழத்தமிழர்கள் குறித்த கோரிக்கை&nbsp;</h2><p>

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை, போக்குவரத்து உள்ளிட்ட மானிய கோரிக்கை குறித்த கூட்டம் சட்டமன்றத்தில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd9d6263-ea04-45a6-9e58-59ad07403867/26-6a9fdd8f5f761.webp' />&nbsp;</p><p></p><p>

இதில் பேசிய குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் க.சிந்து, தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் குறித்த கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். </p><p>

அவர் கூறும்போது, "நமது ஈழத்தமிழர்கள் நெடுங்காலமாக அகதிகள் முகாமில் இருக்கிறார்கள். அவர்கள் தமிழ்நாட்டை தாய்நாடாக நினைத்து வாழ்ந்து வருகின்றனர். 

ஆனால் அவர்களுக்கு நிலையான வாழ்வு இல்லை; குடியுரிமையும் மறுக்கப்பட்டுள்ளது.</p><p> ஒன்றிய அரசு கொண்டுவந்த CAA சட்டத்திலும் இலங்கை நாடு இடம்பெறவில்லை. 

யாதும் ஊரும் யாவரும் கேளிர் என்று உரைத்த தமிழ் உறவுகளுக்கு நிலையான வாழ்வு வாழ இங்கு இடமில்லை. </p><p>


ஆகையால், ஈழத்தமிழர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற ஒன்றிய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று தங்கள் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.</p><p>

அவருக்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், 'எங்கெல்லாம் தமிழ்மொழி பேசப்படுகிறதோ அவர்கள் அத்தனை பேருமே எங்களது சகோதரர்கள். எனவே ஈழத்தமிழர்களின் நலம் சார்ந்து, சட்டமன்ற உறுப்பினரின் அவர்களது அத்தனை கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும்' என்று உறுதியளித்தார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/604ce4b2-d058-462d-afe1-c759f82db174/26-6a9fdcc3f260d.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T10:45:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேயின் மனைவியை போன்று நாமலின் மனைவிக்கும் கடும் அழுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/planned-to-use-namal-s-wife-for-political-games-1788858330"></link>
            <id>https://tamilwin.com/article/planned-to-use-namal-s-wife-for-political-games-1788858330</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவிக்கு அழுத்தம் பிரயோகிக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 உயிர்த்த ஞாயிறு தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவிக்கு அழுத்தம் பிரயோகிக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நடாத்தப்படும் விசாரணைகளுக்காக நீதிமன்ற உத்தரவிற்கமைய கைது செய்யப்பட்ட முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலேயின் மனைக்கு வழங்கப்பட்ட அரசியல் அழுத்தம், போன்ற அழுத்தம், நாமலின் மனைவிக்கும் பிரயோகிக்க முயற்சிகள் இடம்பெற்றுள்ளது. </p><p>

எதிர்வரும் 12 ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியில் நாமல் ராஜபக்சவின் மனைவியைப் பிரசார உத்தியாக கலந்துகொள்ள செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.</p><p> </p><h2><b>

நாமலின் மனைவிக்கு அழுத்தம் </b></h2><p>அதற்காக திஸக்குட்டியாராச்சி உள்ளிட்ட குழுவினர் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பொதுஜன கட்சி மேலும் வங்குரோத்து அடைந்துள்ளமை இதன் மூலம் உறுதியாகியுள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16420f9a-bc72-4b59-9c9e-d30145452019/26-6a9fe734667da.webp' /></p><p>சுரேஷ் சலேயின் மனைவியும் மகனும் பிரசார நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு நடுவழியில் கைவிடப்பட்டுள்ள விதம் ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-08T10:45:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திபெத்தில் வேகமாக மறையும் பனிப்பாறைகள்; சீனா விடுக்கும் எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/glaciers-in-tibet-vanishing-rapidly-china-warn-1788861840"></link>
            <id>https://canadamirror.com/article/glaciers-in-tibet-vanishing-rapidly-china-warn-1788861840</id>
            <summary type="text">&amp;nbsp; திபெத்தில் வேகமாக மறையும் பனிப்பாறைகள், பேரழிவை ஏற்படுத்தக்கூடிய வெள்ளப்பெருக்குகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; திபெத்தில் வேகமாக மறையும் பனிப்பாறைகள், பேரழிவை ஏற்படுத்தக்கூடிய வெள்ளப்பெருக்குகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
</p><p>

சீன – நேபாள எல்லைப் பகுதியில் ஆகஸ்ட் 26ஆம் திகதி ஏற்பட்ட கடுமையான பனிப்பாறை சரிவுக்கு புவி வெப்பமயமாதலே முக்கிய காரணமாக இருக்கலாம் என சீன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2233526f-9e24-4ef7-8230-e0dca1e908b1/26-6a9fdd91a8c24.webp' /></p><h2>வெள்ளப்பெருக்குகள் ஏற்படும் அபாயம்</h2><p>

திபெத் பீடபூமியில் கடந்த 60 ஆண்டுகளில் பனிப்பாறைகளின் பரப்பளவு குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.</p><p>

இதன்படி, அப்பகுதியில் பனிப்பாறைகளின் பரப்பளவு சுமார் 51,000 சதுர கிலோமீற்றரிலிருந்து 39,000 சதுர கிலோமீற்றராகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது</p><p>.

மேலும், பனிப்பாறைகள் உருகுவதன் காரணமாக அப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏரிகள் உருவாகியுள்ளதாகவும், இதனால் திடீர் மற்றும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய வெள்ளப்பெருக்குகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
</p><p>
காலநிலை மாற்றத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பனிப்பாறைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நீர்நிலைகளில் ஏற்படும் மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம் என ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-08T10:44:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[38 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைக்கு வந்தடைந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indian-defence-minister-arrives-in-sri-lanka-1788863573"></link>
            <id>https://ibctamil.com/article/indian-defence-minister-arrives-in-sri-lanka-1788863573</id>
            <summary type="text">இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் இன்று பிற்பகல் இலங்கை வந்தடைந்தார். இது, செப்டம்பர் 10 வரை நீடிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் இன்று பிற்பகல் இலங்கை வந்தடைந்தார். இது, செப்டம்பர் 10 வரை நீடிக்கும் அவரது மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
</p><p>
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><h2>ஜனாதிபதி உட்பட பல்வேறு தரப்புடன் பேச்சு</h2><p>&nbsp;இந்நிலையில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, மற்றும் பாதுகாப்பு அமைச்சக செயலாளர் ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த உள்ளிட்டோருடன் சிங் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90478771-a777-4292-8930-35f931d7ad19/26-6a9fe64b98f3c.webp' /></p><p>
</p><p>
கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தின்போது கையெழுத்திடப்பட்ட இந்திய-இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

38 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் உத்தியோகபூர்வ பயணம் இது என்பதால், இந்தப் பயணம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T10:41:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த மற்றும் ரணில் மீதான ஊழல் விசாரணைகள் குறித்து UNHRC அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/unhrc-report-about-mahinda-ranil-s-corruption-1788840136"></link>
            <id>https://tamilwin.com/article/unhrc-report-about-mahinda-ranil-s-corruption-1788840136</id>
            <summary type="text">இலங்கையில் மனித உரிமைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் மனித உரிமைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
</p><p>
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி, ஊழல் மற்றும் மோசடிகள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது வழக்கமான அமர்வில் மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகரால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><h2><b>
 ஊழல் விசாரணை ஆணைக்குழு</b></h2><p>இதேவேளை, இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள் குறித்தும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dfd58f6-158c-4e64-823d-ac4ede5572a9/26-6a9f8af8dc64c.webp' /></p><p>மிகவும் சர்ச்சைக்குள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பெயரும் உள்ளடங்கியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான பொதுப்பண முறைக்கேடு விசாரணைகள் குறித்தும் அறிக்கை கவனம் செலுத்தியுள்ளது.
</p><p>
அத்துடன் நாட்டில் நிலவும் நிதி அழுத்தம் மற்றும் அரச வருமான பகிர்வு தொடர்பில் பிரதான விடயங்கள் பல வெளிப்படுத்தப்பட்டுள்ளன:</p><p>

2026 ஆம் ஆண்டு மதிப்பீட்டிற்கமைய நாட்டின் அரச வருமானத்தில் 49.38 சதவீதம் பெறப்பட்ட கடன்களின் வட்டியைச் செலுத்துவதற்காக ஒதுக்க வேண்டியுள்ளதெனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><h3><b>மேலதிக அழுத்தம்</b></h3><p>அரச வருமானத்தில் பெரும்பகுதி கடன் சேவைக்காகச் செலவிடப்பட்டுள்ளது. இதனால், சுகாதாரம், கல்வி, வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோருக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக 1.9 முதல் 2.4 சதவீதம் என்ற சிறிய தொகையே ஒதுக்க முடிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff0a2a5b-4255-4bb7-b1ca-8e82989806c3/26-6a9f8c13865f4.webp' /></p><p>வரையறுக்கப்பட்ட அரச நிதி வெளிப்பாட்டின் மத்தியில் சக்திவள, உணவு மற்றும் உர விலையேற்றம் காரணமாக மக்கள் மீது மேலதிக அழுத்தம் ஏற்படக்கூடும் என அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
கடந்த வருடத்தின் இறுதியிலிருந்து இலங்கைக்குள் சட்டச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல், நிறுவனங்களை வலுப்படுத்துதல், விசாரணைகளை நடத்துதல் மற்றும் வழக்குத் தாக்கல் செய்தல் ஊடாக ஊழல் எதிர்ப்பு வேலைத்திட்டத்தைச் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனினும், அந்தச் சீர்திருத்தங்களை நடைமுறை ரீதியாகச் செயற்படுத்துவதில் இன்னும் பல சவால்கள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T10:39:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 சிக்ஸர், 16 பவுண்டரிகள்..64 பந்தில் 173 ஓட்டங்கள் விளாசிய நமன் திர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/naman-dhir-blast-173-runs-in-64-balls-for-amritsar-1788863576"></link>
            <id>https://news.lankasri.com/article/naman-dhir-blast-173-runs-in-64-balls-for-amritsar-1788863576</id>
            <summary type="text">Naman dhir 173 runs vs mohali kings: ஷேர்-இ-பஞ்சாப் டி20 போட்டியில் அம்ரித்சார் சூர்மாஸ் அணித்தலைவர் நமன் திர் 173 ஓட்டங்கள் விளாசினார்.

நமன் திர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Naman dhir 173 runs vs mohali kings: ஷேர்-இ-பஞ்சாப் டி20 போட்டியில் அம்ரித்சார் சூர்மாஸ் அணித்தலைவர் நமன் திர் 173 ஓட்டங்கள் விளாசினார்.
</p><p>
நமன் திர் 64 பந்துகளில் 173 ஓட்டங்கள் விளாச, அம்ரித்சார் சூர்மாஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 279 ஓட்டங்கள் குவித்தது.
</p><h2>
ஷேர்-இ-பஞ்சாப் டி20 போட்டி </h2><p>அம்ரித்சார் சூர்மாஸ் மற்றும் மொஹாலி கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஷேர்-இ-பஞ்சாப் டி20 போட்டி மொஹாலியில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">🥶 NAMAN DHIR SHOW IN THE SHER-E-PUNJAB T20 LEAGUE! 🔥<br><br>Naman smashed 100 runs from just 37 balls 🥵🥵<br><br>Absolute carnage from Naman Dhir! 🥵🏏<a href="https://x.com/hashtag/NamanDhir?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#NamanDhir</a> <a href="https://x.com/hashtag/SherEPunjabT20League?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SherEPunjabT20League</a> <a href="https://t.co/NPGyE3AVtO">pic.twitter.com/NPGyE3AVtO</a></p>&mdash; ʀ ᴜ ᴋ ᴍ ɪ ɴ ɪ ᶠᵃⁿ (@rukmini_fan) <a href="https://x.com/rukmini_fan/status/2097262973081518114?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

முதலில் துடுப்பாட்டத்தைத் தொடங்கிய அம்ரித்சார் சூர்மாஸ் அணியில், தலைவர் நமன் திர் சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினார்.&nbsp;</p><p></p><p>
மறுமுனையில் ஜஷன்ப்ரீத் சிங் 25 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 41 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். </p><p>

</p><h2>நமன் திர்&nbsp;ருத்ரதாண்டவம் </h2><p>ஏனைய வீரர்கள் சொதப்ப, தனியாளாக நமன் திர் (Naman Dhir) ருத்ரதாண்டவம் ஆடி சதம் அடித்தார்.</p><p> 

இதன்மூலம் அம்ரித்சார் சூர்மாஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 279 ஓட்டங்கள் குவித்தது.</p><p> நமன் திர் 64 பந்துகளில் 173 ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 12 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகள் அடங்கும்.</p><p>

ஆயுஷ் கோயல் 4 விக்கெட்டுகளும், ஹர்ப்ரீத் பிரார், ஹர்ஷிதீப் சிங், தேஜ்ப்ரீத் சிங் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf1125b6-1510-47bb-a3b9-7a5c740ff970/26-6a9fe6044122d.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T10:37:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! எழுத்துப்பூர்வமான வாக்குமூலங்கள் தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-case-defendants-written-submission-1788862619"></link>
            <id>https://tamilwin.com/article/easter-case-defendants-written-submission-1788862619</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக 23,270 குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 24 பிரதிவாதிகள்&amp;nbsp;கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக 23,270 குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 24 பிரதிவாதிகள்&nbsp;கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பாக எழுத்துப்பூர்வமான வாக்குமூலங்களை தாக்கல் செய்துள்ளனர்.</p><p>
இதன்படி, வழக்கின் தீர்ப்பு செப்டெம்பர் 22 அன்று அறிவிக்கப்படும் என கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தெரிவித்துள்ளது.</p><h2>இருபத்து நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல்</h2><p>
</p><p>
நீதிபதிகளான&nbsp;நவரத்ன மராசிங்க, இராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்ஸங்க ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்றத்தின் அமர்வின் முன் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7767c2f9-3563-411a-8324-8033387b3a7a/26-6a9fe35e835fd.webp' /></p><p>இந்த வழக்கு விசாரணையின்போது பிரதிவாதிகள் எழுத்துப்பூர்வமான வாக்குமூலங்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
</p><p>
நௌபர் மௌலவி உட்பட இருபத்து நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் இவ்வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T10:36:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் வழக்கு விசாரணை! 23,270 குற்றச்சாட்டுகள் குறித்து பிரதிவாதிகள் அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/easter-attack-case-investigation-report-1788863335"></link>
            <id>https://ibctamil.com/article/easter-attack-case-investigation-report-1788863335</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக 24 பிரதிவாதிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 23,270 குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில், பிரதிவாதிகள் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக 24 பிரதிவாதிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 23,270 குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில், பிரதிவாதிகள் தங்களது எழுத்துமூல சமர்ப்பணங்களை&nbsp;சமர்ப்பித்துள்ளனர்.</p><p> கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய Trial-at-Bar நீதிமன்றத்தின் முன்பாக இந்த&nbsp;சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>எழுத்துமூல சமர்ப்பணங்கள் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இவ்வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ஆம் தேதி வழங்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்ற Trial-at-Bar நீதிபதிகள் குழு அறிவித்துள்ளது.</p><p></p><h2>எழுத்துமூல சமர்ப்பணங்கள்</h2><p>
</p><p>
இந்த வழக்கு நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிசங்க ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய மேல் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd832ddd-5c2b-46f2-85d0-734d95bfd318/26-6a9fe494687de.webp' /></p><p>விசாரணையின்போது, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 24 பிரதிவாதிகளும் தங்களது எழுத்துமூல சமர்ப்பணங்களை நீதிமன்றத்தில் முன்வைத்தனர்.</p><p>

நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T10:34:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[Purple நிற மாடர்ன் உடையில் நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்ட போட்டோஸ்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/shruti-haasan-purple-modern-attire-photoshoot-1788860727"></link>
            <id>https://cineulagam.com/article/shruti-haasan-purple-modern-attire-photoshoot-1788860727</id>
            <summary type="text">ஸ்ருதிஹாசன்&amp;nbsp;பிளாக், பிளாக் என எப்போதும் கருப்பு நிற விதவிதமான உடைகளில் புகைப்படங்கள் எடுத்து வெளியிடுபவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன்.&amp;nbsp;ஆனால் சில ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஸ்ருதிஹாசன்&nbsp;</h2><p>பிளாக், பிளாக் என எப்போதும் கருப்பு நிற விதவிதமான உடைகளில் புகைப்படங்கள் எடுத்து வெளியிடுபவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன்.&nbsp;</p><p>ஆனால் சில வாரங்களாக வேறு வேறு நிறங்களில் உடைகள் அணிந்து போட்டோ ஷுட் நடத்துகிறார். அப்படி அண்மையில் Purple நிற உடையில் நடிகை ஸ்ருதிஹாசன் போட்டோ ஷுட் நடத்தி வெளியிட்டுள்ளார்.</p><p>அதற்கு ரசிகர்கள் மத்தியில் செம லைக்ஸ் குவிந்த வண்ணம் உள்ளது. இதோ அவரது லேட்டஸ்ட் போட்டோ ஷுட்,</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T10:30:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகன் சிறையில் ... களத்தில் குதிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rally-in-anuradhapura-led-by-mahinda-rajapaksa-1788852883"></link>
            <id>https://jvpnews.com/article/rally-in-anuradhapura-led-by-mahinda-rajapaksa-1788852883</id>
            <summary type="text">&amp;nbsp; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் அனுராதபுரத்தில் பேரணி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந் நிலையில் அனுராதபுரத்தில் ஏற்பாடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் அனுராதபுரத்தில் பேரணி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இந் நிலையில் அனுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணிக்கு ஐக்கிய தேசியக் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f563a342-a320-465c-b856-ef38984ee800/26-6a9fba94db441.webp' /></p><p></p><h2>முன்னதாக&nbsp;நாமல் ராஜபக்ஷ தலைமையில்&nbsp; பேரணி&nbsp; ஏற்பாடு</h2><p>

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
அதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தலைமையில் இந்த பேரணி முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p></p><p>
</p><p>
எனினும், அதனை சீர்குலைக்கும் நோக்கிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டதாக அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
 இந்த கைது நடவடிக்கையால் தளராமல், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில், அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள பேரணி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T10:28:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொலைபேசி காதல் ; திருவிழாவுக்கு சென்ற மாணவி கூட்டு பாலியல் வன்புணர்வு; சம்பவத்தால் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-gang-rape-girl-seruwila-sacred-ground-car-park-1788863485"></link>
            <id>https://jvpnews.com/article/a-gang-rape-girl-seruwila-sacred-ground-car-park-1788863485</id>
            <summary type="text">&amp;nbsp; திருகோணமலை செருவில புனிதப் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்றினுள் வைத்து பள்ளி மாணவி ஒருவரைச் சிலர் கூட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; திருகோணமலை செருவில புனிதப் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்றினுள் வைத்து பள்ளி மாணவி ஒருவரைச் சிலர் கூட்டாகப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 இன்னிலையில் மஆணவியை வன்புனர்த சம்பவம் தொடர்பாக, செருநுவர காவல்துறையினர் ஐந்து சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8112e36-c174-4387-9e52-9113819b3946/26-6a9fe3ff50281.webp' /></p><h2>தொலைபேசி வாயிலாக ஏற்பட்ட காதல்</h2><p> </p><p>

பெரஹெரா திருவிழாவின் போது சிறப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்த முத்தூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விரைந்து செயல்பட்டு அந்த மாணவியை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.</p><p></p><p>எனினும், அதற்குள்ளாகவே மூன்று இளைஞர்கள் மாணவியை வன்புனவுர்க்கு உடபடுத்தியதாக பொலிஸார் கூறியுள்ளனர்.</p><p>

தொலைபேசி வாயிலாக ஏற்பட்ட காதல் உறவு மூலம் அந்த மாணவியை ஏமாற்றி, பெரஹெரா திருவிழாவைப் பார்ப்பதற்காகச் செருவிலவுக்கு வரவழைத்தே கூட்டாகப் வன்புனர்வு செய்யப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
பாதிக்கப்பட்ட மாணவி வழங்கிய தகவலின் அடிப்படையில், இக்குற்றத்தைச் செய்த முக்கிய சந்தேக நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் என மொத்தம் ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.</p><p>

 தாக்குதலுக்குள்ளான மாணவி மேலதிக சிகிச்சைக்காகக் கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் முத்தூர் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் , மீலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றது.</p>]]></content>
            <updated>2026-09-08T10:28:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையிலிருந்து வந்த நாமல்! நாடாளுமன்றத்தில் பேசிய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/parliament-speech-namal-rajapaksa-1788862275"></link>
            <id>https://tamilwin.com/article/parliament-speech-namal-rajapaksa-1788862275</id>
            <summary type="text">அரசியல் பழிவாங்கல்கள் மூலம் தங்களை முடக்க முடியாது என்றும், சட்டத்தின் முன் தங்களது நியாயத்தை நிரூபிப்போம் என்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியல் பழிவாங்கல்கள் மூலம் தங்களை முடக்க முடியாது என்றும், சட்டத்தின் முன் தங்களது நியாயத்தை நிரூபிப்போம் என்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>நாமல் ராஜபக்ச விளக்கப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றையதினம்(8.9.2026), நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காகச் சிறைச்சாலை அதிகாரிகளால் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டதையடுத்து அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>சிறையில் இருக்கும் கைதிகளின் மனித உரிமைகள், அடிப்படை வசதிகள் மற்றும் சிறைச்சாலை அமைப்பில் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்துப் பேசிய அவர், சுதந்திரம் மட்டுமே பறிக்கப்பட வேண்டுமே தவிர, மனித கண்ணியம் பாதிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தினார்.
</p><p>தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நிர்வாக ரீதியிலான தோல்விகளை விமர்சித்து, மக்கள் நலனுக்கான திட்டங்களை அரசு முன்னெடுக்க வேண்டும் எனக் கூறினார்.&nbsp;</p><p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/n-Pq_K_SNvY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T10:24:10+00:00</updated>
        </entry>
    </feed>
