<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-31T16:59:05+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க தாக்குதல்களுக்கு மத்தியிலும் எண்ணெய் உற்பத்தியை தொடரும் ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kharg-island-did-not-stop-oil-production-1788193839"></link>
            <id>https://ibctamil.com/article/kharg-island-did-not-stop-oil-production-1788193839</id>
            <summary type="text">ஈரானின் கார்க் தீவு &quot;அமெரிக்க-இஸ்ரேலிய எதிரியால் பலமுறை தாக்குதல்களுக்கு உள்ளானது&quot; என்றும், இருப்பினும், அந்தத் தாக்குதல்கள் தீவில் எண்ணெய் உற்பத்தியை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் கார்க் தீவு "அமெரிக்க-இஸ்ரேலிய எதிரியால் பலமுறை தாக்குதல்களுக்கு உள்ளானது" என்றும், இருப்பினும், அந்தத் தாக்குதல்கள் தீவில் எண்ணெய் உற்பத்தியை நிறுத்தவில்லை என்றும் ஒரு ஈரானிய அதிகாரி திங்களன்று (31) தெரிவித்தார்.</p><p>

"கார்க் தீவு துண்டு துண்டாக சிதறடிக்கப்படுகிறது" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னதாகக் கூறிய கருத்துகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, ஈரானின் தேசிய எண்ணெய் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்&nbsp; என ஈரானின் அரை-அரசு செய்தி நிறுவனமான ஃபார்ஸ் தெரிவித்துள்ளது.</p><h2>ட்ரம்பின் கருத்துக்கள் "சிரிப்புக்குரியவை"</h2><p>&nbsp;ட்ரம்பின் கருத்துக்களை "சிரிப்புக்குரியவை" என்று குறிப்பிட்ட அந்த செய்தி நிறுவனம், அந்த அதிகாரி கூறியதாக மேற்கோள் காட்டியுள்ளது: "நான் உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், பல ஒப்பந்தகாரர்கள் சேமிப்புக் கிடங்குகளை மீண்டும் கட்டவும் புதுப்பிக்கவும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்."</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebbb4b7d-2fe3-493d-8ecb-9837b4ceb6c5/26-6a95b2201689b.webp' /></p><p>
</p><p>
"கார்க்கில் நடைபெற்று வரும் எந்தப் பணியும் நிறுத்தப்படவில்லை. சில திட்டங்கள் தற்போது 20% முதல் 30% வரை நிறைவடைந்துள்ளன, மேலும் அவற்றில் பணிகள் தொடர்கின்றன." என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.</p><p></p><h2>மீண்டும் தொடங்கிய தாக்குதல்</h2><p>

ஞாயிற்றுக்கிழமை, லராக் தீவில் உள்ள இரண்டு ஈரானிய ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியதாகவும், ஜூலை மாத இறுதியில் இருந்து ஈரானியப் பிரதேசம் மீது அமெரிக்கா நடத்திய முதல் தாக்குதல் இது என்றும் ஒரு அமெரிக்க அதிகாரி ஆக்சியோஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bd907db-d27f-4436-a5f6-5afe9e50b2f0/26-6a95b220e0def.webp' /></p><p>

இதற்குப் பதிலடியாக, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T16:56:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க பயணங்களை கணிசமாகக் குறைத்த கனடியர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadians-are-keeping-travel-money-home-1788185258"></link>
            <id>https://canadamirror.com/article/canadians-are-keeping-travel-money-home-1788185258</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கனடா பயணிகள் அமெரிக்காவிற்கான தங்கள் பயணங்களையும் செலவுகளையும் கணிசமாகக் குறைத்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கனடா பயணிகள் அமெரிக்காவிற்கான தங்கள் பயணங்களையும் செலவுகளையும் கணிசமாகக் குறைத்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட தேசிய சுற்றுலா சர்வே தரவுகள் தெரிவிக்கின்றன.
</p><p>2025ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுடன் ஒப்பிடுகையில், 2026 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் கனடாவாசிகள் அமெரிக்காவிற்கு மேற்கொண்ட பயணங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம் குறைந்துள்ளது.
</p><p>பயணங்களின் எண்ணிக்கை குறைந்ததால், அமெரிக்காவில் கனடாவாசிகள் செய்த செலவு சுமார் 800 மில்லியன் டொலர் வரை சரிவடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00773107-b6ec-4d0c-9c05-274134e87139/26-6a958aabc6735.webp' /></p><p> </p><p>இதில் விமானக் கட்டணம் மற்றும் கனடாவில் பயணத்திற்காகச் செய்யப்பட்ட ஆரம்பச் செலவுகளும் அடங்கும்.</p><p>
அமெரிக்க பயணங்களைத் தவிர்த்து கனடாவாசிகள் தங்கள் சொந்த நாட்டின் சுற்றுலாத் துறையை ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர்.
</p><p>2025 முதல் காலாண்டில் 13.8 பில்லியன் டொலராக இருந்த கனடாவின் உள்நாட்டுச் சுற்றுலாச் செலவு, 2026 முதல் காலாண்டில் 14.5 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.
</p><p>இதேவேளை, கனடாவாசிகள் அமெரிக்கப் பயணத்தைக் குறைத்துக் கொண்டபோதிலும், அமெரிக்கர்களிடையே கனடாவிற்குச் செல்லும் ஆர்வம் குறையவில்லை.
</p><p>2026 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் கனடாவில் சுமார் 3 பில்லியன் டொலர் செலவிட்டுள்ளனர்.
</p><p>இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட சுமார் 500 மில்லியன் டொலர் அதிகமாகும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T16:42:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[46 வயதான இலங்கையின் பிரபலம் காலமானார்; சோகத்தில் பலர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-model-chula-padmendra-has-passed-away-1788178473"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-model-chula-padmendra-has-passed-away-1788178473</id>
            <summary type="text">இலங்கையின் பிரபல மொடலிங் துறை சார்ந்த கலைஞரும், சர்வதேச ஆடைவடிவமைப்பு மற்றும் அழகிப்போட்டிப் பயிற்றுவிப்பாளருமான சுலா பத்மேந்திரா குமாரபத்திரன தனது 46...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பிரபல மொடலிங் துறை சார்ந்த கலைஞரும், சர்வதேச ஆடைவடிவமைப்பு மற்றும் அழகிப்போட்டிப் பயிற்றுவிப்பாளருமான சுலா பத்மேந்திரா குமாரபத்திரன தனது 46 ஆவது வயதில் காலமானார்.</p><p> 

 

அவரது இந்தத் திடீர் மறைவு இலங்கையின் மொடலிங் மற்றும் ஆடைவடிவமைப்புத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7174d70b-e7c2-4d3c-ad22-a74c427e3fe5/26-6a95702adac92.webp' /></p><h2>நாட்டின் முன்னணி மொடலிங் பயிற்றுவிப்பாளர்</h2><p>

 

நாட்டின் முன்னணி மொடலிங் பயிற்றுவிப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த இவர், பல புதிய கலைஞர்களை சர்வதேச அளவிற்கு உருவாக்கிய பெருமைக்குரியவர்.</p><p></p><p> </p><p>

 

ஆடைவடிவமைப்புத் துறையிலும் அழகிப்போட்டிகளுக்கான பயிற்சிகளை வழங்குவதிலும் சிறந்த வல்லுநராக அவர் அடையாளப்படுத்தப்பட்டிருந்தார்.</p><p>

 

அண்மைக்காலத்திலும் கூட பல முன்னணி மொடலிங் நிகழ்வுகள், ஆடைவடிவமைப்பு விழாக்கள் மற்றும் அழகிப்போட்டிகளில் அவர் தீவிரமாகவும் சுறுசுறுப்பாகவும் பங்கேற்று வந்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T16:40:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாவனல்லையில் சிறிய ரக வான் - லொறி மோதி விபத்து.. நால்வர் மருத்துவமனையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/small-van-lorry-collision-accident-mawanella-1788192228"></link>
            <id>https://tamilwin.com/article/small-van-lorry-collision-accident-mawanella-1788192228</id>
            <summary type="text">மாவனல்லை - கடோல் பாலம் (செங்கற் பாலம்) பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நால்வர் காயமடைந்து மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாவனல்லை - கடோல் பாலம் (செங்கற் பாலம்) பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நால்வர் காயமடைந்து மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

அரணாயக்கவிலிருந்து மாவனல்லை நோக்கிப் பயணித்த சிறிய ரக வேன் ஒன்றும், மாவனல்லையிலிருந்து உஸ்ஸாபிட்டிய நோக்கி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொரி ஒன்றும் கடோல் பாலத்தின் மீது நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மாவனல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

சம்பவம் இன்று (31) நண்பகல் அளவில் நடைபெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ceb4308-3fac-4c46-8386-873381c94eb4/26-6a95add4e96a4.webp' /></p><p>
</p><p>
விபத்தின் போது வானில் பயணித்த நால்வரே காயமடைந்து மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p>
காயமடைந்தவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதோடு, ஏனையவர்கள் சாதாரண காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் மாவனல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T16:37:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓய்வை அறிவித்தார் மெஸ்ஸி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lionel-messi-announces-retirement-1788194107"></link>
            <id>https://tamilwin.com/article/lionel-messi-announces-retirement-1788194107</id>
            <summary type="text">அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவரும், உலகின் முன்னணி வீரர்களில் ஒருவருமான லியோனல் மெஸ்ஸி, தனது 21 ஆண்டுகால சர்வதேசக் கால்பந்து வாழ்க்கையிலிருந்து ஓய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவரும், உலகின் முன்னணி வீரர்களில் ஒருவருமான லியோனல் மெஸ்ஸி, தனது 21 ஆண்டுகால சர்வதேசக் கால்பந்து வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதாகத் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.</p><p>
சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், "இந்த முடிவை எடுப்பது மிகவும் வேதனையாக இருந்தது, இன்னமும் மனதிற்குள் வலிக்கிறது.</p><p> ஆனால் விலகுவதற்கான நேரம் வந்துவிட்டது என்பதைப் புரிந்து கொண்டேன்," என மெஸ்ஸி குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24c5299d-75a1-4626-b60d-756995419788/26-6a95ad3ccc5c2.webp' /></p><p>
2005ஆம் ஆண்டு அறிமுகமான மெஸ்ஸி, அர்ஜென்டினா அணிக்காக 207 போட்டிகளில் விளையாடி அதிகபட்சமாக 125 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.
</p><p>022ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கிண்ணத்தை அர்ஜென்டினா வெல்வதற்கு அணித் தலைவராக அணியை வழிநடத்தினார்.</p><p> மேலும், 2021 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் 'கோபா அமெரிக்கா' கிண்ணங்களையும் வென்று கொடுத்துள்ளார்.</p><p>
ஸ்பெயின் அணிக்கு எதிராக 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்த 2026 ஃபிஃபா உலகக் கிண்ண இறுதிப் போட்டியே அர்ஜென்டினாவுக்காக மெஸ்ஸி விளையாடிய கடைசிச் சர்வதேசப் போட்டியாகும்.
</p><p>அர்ஜென்டினா அணியில் புதிய தலைமுறை வீரர்கள் உருவாகி வருவதைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவை எடுத்ததாகக் கூறியுள்ள மெஸ்ஸி, தேசிய அணிக்காகச் சாதனை படைத்ததில் பெருமையடைவதாகத் தெரிவித்துள்ளார்.</p><p>
8 முறை 'பாலன் டி ஓர்' (Ballon d'Or) விருது வென்ற மெஸ்ஸி, அமெரிக்காவின் 'இன்டர் மயாமி' கழகத்திற்காக தொடர்ந்து விளையாடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T16:35:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[துறைமுகத்தை பரபரபாக்கிய கொள்கலன் ; 02 பாகிஸ்தானியர்கள் கைது, சிக்கிய தொழிலதிபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/container-causes-port-stir-2-pakistanis-arrested-1788194141"></link>
            <id>https://jvpnews.com/article/container-causes-port-stir-2-pakistanis-arrested-1788194141</id>
            <summary type="text">கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றில் மறைத்து வைத்து &#039;ஐஸ்&#039; போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று சந்தேகநபர்கள் க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொழும்பு துறைமுகத்தில் <a href="https://jvpnews.com/article/420-kg-ice-drug-seized-container-businessman-1788180486" target="_blank">கொள்கலன் </a>ஒன்றில் மறைத்து வைத்து 'ஐஸ்' போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் பாகிஸ்தான் நாட்டவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/792c9d27-92b3-4481-ab05-583b5a7064b8/26-6a95ad5eee638.webp' /></p><h2 style="text-align: justify;">கைது நடவடிக்கை</h2><p style="text-align: justify;">

 

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இந்த அதிகாலை கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;">

 

முன்னதாகச் சந்தேகத்திற்குரிய கொள்கலனைச் சோதனையிட்ட போது அதிலிருந்து 463 கிலோகிராம் எடை கொண்ட 'ஐஸ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-31T16:35:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிட்டிஷ் கொலம்பியாவில் 5 மணி நேரத்தில் 3 இடங்களில் காட்டுத்தீ:]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/three-suspicious-wildfires-under-investigation-1788185650"></link>
            <id>https://canadamirror.com/article/three-suspicious-wildfires-under-investigation-1788185650</id>
            <summary type="text">&amp;nbsp;சதிச் செயலா என தீவிர விசாரணை!
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கிராண்ட் ஃபோர்க்ஸ் பகுதியில், வெறும் 5 மணி நேர இடைவெளியில் அடுத்தட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சதிச் செயலா என தீவிர விசாரணை!
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கிராண்ட் ஃபோர்க்ஸ் பகுதியில், வெறும் 5 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து 3 இடங்களில் காட்டுத்தீ பரவியதை அடுத்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை 2 மணி வரையிலான குறுகிய காலத்தில், ஹார்டி மலைப்பகுதியில் இந்த மூன்று தீ விபத்துகளும் பதிவாகியுள்ளன.
</p><p>கிராண்ட் ஃபோர்க்ஸ் தீயணைப்புத் துறையினர் வெளியிட்ட அறிக்கையின்படி, முதலில் பரவிய இரண்டு காட்டுத்தீகளும் சிறிய அளவில் இருந்ததால் குறுகிய காலத்தில் விரைவாக அணைக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a3ea768-4ffb-4b0c-b43a-e1d8126afbcc/26-6a958c340f3e3.webp' /></p><p>
</p><p>ஆனால், மூன்றாவது காட்டுத்தீ மிகவும் தீவிரமாகப் பரவி, சுமார் 8400 சதுர மீட்டர் பரப்பளவை ஆக்கிரமித்தது. இது நாலாபுறமும் வேகமாகப் பரவியபோதிலும், அதிர்ஷ்டவசமாக அருகிலிருந்த கட்டடங்கள் அல்லது குடியிருப்புப் பகுதிகளுக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
</p><p>தீ பரவிய இடங்களின் நெருக்கம், அது பதிவான குறுகிய கால இடைவெளி மற்றும் தீ விபத்துகளின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இது திட்டமிட்டு வைக்கப்பட்ட தீயா என்ற கோணத்தில் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
</p><p>இது தொடர்பாக பொலிஸ் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா காட்டுத்தீ தடுப்புப் பிரிவு ஆகிய அமைப்புகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>
இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்தால் உடனடியாக காவல்துறையைத் தொடர்புகொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T16:30:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்தார் 2 ட்ரெய்லர் வெளியானது! கார்த்தி, எஸ்ஜே சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/karthi-sardar-2-trailer-is-out-1788193741"></link>
            <id>https://cineulagam.com/article/karthi-sardar-2-trailer-is-out-1788193741</id>
            <summary type="text">டபுள் ரோலில் கார்த்தியின் மிரட்டலான நடிப்பில் சர்தார் 2 படம் வரும் செப்டம்பர் 10ம் தேதி திரைக்கு வருகிறது.&amp;nbsp;எஸ்ஜே சூர்யா வில்லனாகவும், மாளவிகா மோக...</summary>
            <content type="html"><![CDATA[<p>டபுள் ரோலில் கார்த்தியின் மிரட்டலான நடிப்பில் சர்தார் 2 படம் வரும் செப்டம்பர் 10ம் தேதி திரைக்கு வருகிறது.&nbsp;எஸ்ஜே சூர்யா வில்லனாகவும், மாளவிகா மோகனன் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.</p><p>

தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.
</p><p>
புது வில்லனாக வரும் எஸ்ஜே சூர்யாவை வயதான சந்திர போஸ் (கார்த்தி) எப்படி சமாளிக்கிறார் என பாருங்க.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jpvb4l2RIXU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-31T16:29:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கப்படைகள் மீதான ஈரானின் தாக்குதல்களுக்கு பதிலடி நிச்சயம் : கர்ஜிக்கும் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-to-respond-to-iranian-attacks-trump-1788189556"></link>
            <id>https://ibctamil.com/article/us-to-respond-to-iranian-attacks-trump-1788189556</id>
            <summary type="text">ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) உள்ள அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) உள்ள அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று(31) தெரிவித்துள்ளார்.
</p><p>
"நாங்கள் அவர்களைக் கடுமையாகத் தாக்குவோம். பதிலடி கொடுக்கப்படும்," என்று அவர் பொக்ஸ் நியூஸிடம் கூறினார்.</p><h2>&nbsp;தாக்குதல்களை முறியடித்த அமெரிக்க வான்பாதுகாப்பு அமைப்பு</h2><p>ஈரானிலிருந்து வந்த பெரும்பாலான தாக்குதல்களை அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்ததாக அவர் குறிப்பிட்டார். ஒரு ஏவுகணை "குறிப்பிடத்தக்க எதையும் தாக்காது" என்று அடையாளம் காணப்பட்டதாகவும், அமெரிக்கப் படைகள் அதை வான்வெளியைக் கடந்து செல்ல அனுமதித்ததாகவும் ட்ரம்ப் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/694fa969-580b-4383-b456-24bc3f0c4e40/26-6a95a030eda06.webp' /></p><p>

ஜோர்டானில் உள்ள கிங் ஹுசைன் மற்றும் அஸ்ராக் விமானத் தளங்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்கியதாகவும், அதே நேரத்தில் யுஏஇ-யில் உள்ள அல் மின்ஹாத் விமானத் தளத்தை வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானங்கள் மூலம் குறிவைத்ததாகவும் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (ஐஆர்ஜிசி) திங்கள்கிழமை அதிகாலையில் தெரிவித்தது.
</p><p>
முக்கியமான எண்ணெய் போக்குவரத்து மையமான ஹோர்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடிகள் வைப்பதைத் தடுக்கும் நோக்கில், ஞாயிற்றுக்கிழமை லராக் தீவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஐஆர்ஜிசி கூறியது.</p><h2>ஈரான் தொடர்பில் ட்ரம்பிற்கு ஏற்பட்ட சந்தேகம்</h2><p>
</p><p>
ஜூன் மாத புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக ட்ரம்ப் கூறியதை அடுத்து, தெஹ்ரானுக்கு எதிரான இரண்டு வார கால குண்டுவீச்சுத் தாக்குதலை அமெரிக்கா ஜூலை மாத இறுதியில் முடிவுக்குக் கொண்டுவந்தது.அதன்பிறகு ஈரானியப் பிரதேசத்தில் நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eda3e033-4823-48d5-b75e-4921b345460a/26-6a95a031d868f.webp' /></p><p>
மேலும், தெஹ்ரான் ஒரு சந்திப்பை விரும்புவதாகக் கூறி, ஒரு இராஜதந்திர முன்னேற்றம் குறித்து ட்ரம்ப் தனது சந்தேகத்தையும் வெளிப்படுத்தினார். ஈரானியர்கள் "சந்திக்க மிகவும் விரும்புகிறார்கள்" என்று கூறிய அவர், "அவர்கள் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்வார்கள் என்று நம்ப முடியுமா" என்பது தனக்குத் தெரியவில்லை என்றும் கூறினார்.</p><p></p><p>
</p><p>
</p><h2>&nbsp;"பொருளாதாரப் பயங்கரவாதம்"&nbsp;</h2><p>தற்போதைய அமெரிக்கத் தடைகள் "கடுமையாகச் செயல்படத் தொடங்கியுள்ளன" என்றும் அவர் கூறினார். கடந்த வாரம், அமெரிக்கா 'ஒபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்' என்ற நடவடிக்கையைத் தொடங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d30141e-80b6-4ad8-80c9-a3ba8b5d9cd2/26-6a95a1734e032.webp' /></p><p> </p><p>இது, ஈரானின் முக்கிய பொருளாதார உயிர்நாடிகள் என்று வோஷிங்டன் விவரித்த அதன் எண்ணெய், கப்பல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, தங்கம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சொத்துத் துறைகளை இலக்காகக் கொண்டது. </p><p>தெஹ்ரானுக்கு எதிரான இந்த நடவடிக்கை சர்வதேசச் சட்டத்தை மீறுவதாகவும், சமீபத்திய இந்தத் தடைகள் நடவடிக்கையை "பொருளாதாரப் பயங்கரவாதம்" என்றும் ஈரான் தெரிவித்தது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T16:18:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூட்டான் சென்றடைந்தார் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-pm-harini-amarasuriya-arrives-in-bhutan-1788192114"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-pm-harini-amarasuriya-arrives-in-bhutan-1788192114</id>
            <summary type="text">Global Conscious Food Systems’ உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பூட்டானை சென்றடைந்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">Global Conscious Food Systems’ உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பூட்டானை சென்றடைந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">


பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகஸ்ட் 31ஆம் திகதி பிற்பகல் பூட்டானின் பாரோ சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b72553fc-7ff4-4f9e-b741-6e281a6a2af2/26-6a95a5746f03e.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;விமான நிலையத்தில் வரவேற்பு</h2><p style="text-align: justify; ">அவரை பூட்டான் பிரதமர் டஷோ ஷெரிங் டோப்கே (Tshering Tobgay) உள்ளிட்ட அந்நாட்டு அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



பூட்டானில் ஆகஸ்ட் 31ஆம் திகதி முதல் செப்டெம்பர் 4ஆம் திகதி வரை நடைபெறும் முதலாவது ‘Global Conscious Food Systems’ உச்சிமாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், அரசாங்கப் பிரதிநிதிகள் மற்றும் உணவு முறைமை தொடர்பான நிபுணர்கள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-31T16:15:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026இல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சூட்டப்பட்ட மகுடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/crown-bestowed-upon-maithripala-sirisena-in-2026-1788186566"></link>
            <id>https://tamilwin.com/article/crown-bestowed-upon-maithripala-sirisena-in-2026-1788186566</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு “மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி” என்ற கௌரவப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள அலரி மாளிகையில் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு “மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி” என்ற கௌரவப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
கொழும்பிலுள்ள அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு குறித்த கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.
</p><h2>
முன்னாள் ஜனாதிபதிக்கு கிடைத்த பட்டம்</h2><p>

மேலும்,'KGF' திரைப்படத் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமான இந்திய நடிகர் கருடா ராம் உள்ளிட்ட சர்வதேச விருந்தினர்களும், இலங்கை மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வர்த்தகத் தலைவர்கள், தொழில்முனைவோர், பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்சார் நிபுணர்கள் மற்றும் பிரமுகர்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/234c8c3c-26a5-4a1a-a220-3e24ec839320/26-6a9590332cbe0.webp' /></p><p> 

இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு “மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி” என்ற கௌரவப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T16:06:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இடம்பெற்ற விபத்தில் பெண் உட்பட இருவர் பரிதாப பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-dead-following-collision-in-annapolis-valley-1788191213"></link>
            <id>https://canadamirror.com/article/two-dead-following-collision-in-annapolis-valley-1788191213</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் உள்ள ஆபர்ன் பகுதியில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சனிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் உள்ள ஆபர்ன் பகுதியில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
</p><p>சனிக்கிழமை காலை 11 மணியளவில் நெடுஞ்சாலை 101 இல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கிழக்கில் சென்ற செவ்ரோலெட் இம்பாலா காரும், மேற்கில் வந்த ஃபோர்டு எஸ்கேப் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.</p><p>
ஃபோர்டு எஸ்கேப் காரை ஓட்டி வந்த புரோஸ்பெக்ட் பகுதியைச் சேர்ந்த 63 வயது பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c64932ac-69ab-4e45-b933-e16bcfbc7c14/26-6a95a1ef44a8a.webp' /></p><p>
</p><p>செவ்ரோலெட் இம்பாலா காரை ஓட்டி வந்த கேம்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த 34 வயது ஆண் உயிரிழந்தார்.</p><p>
இரு கார்களிலும் ஓட்டுநர்கள் மட்டுமே பயணித்துள்ளனர்; வேறு பயணிகள் யாரும் இருக்கவில்லை.</p><p>
விபத்து குறித்த விசாரணைகளுக்காக நெடுஞ்சாலை 101 பல மணி நேரம் மூடப்பட்டது.</p><p> பொலிஸார் இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
</p><p>இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது விபத்து தொடர்பான டேஷ்கேம் வீடியோ காட்சிகளை வைத்துள்ள பொதுமக்கள், கிங்ஸ் டிஸ்ட்ரிக்ட் RCMP-ஐ 902-679-5555 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T16:03:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முச்சக்கர வண்டி கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-wheeler-fare-revision-information-1788191089"></link>
            <id>https://jvpnews.com/article/three-wheeler-fare-revision-information-1788191089</id>
            <summary type="text">ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாயால் குறைக்கப்பட்ட போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படாது என தேசிய ஒருங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாயால் குறைக்கப்பட்ட போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படாது என தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழில்முனைவோர் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட கட்டணத் திருத்தம் அறிமுகப்படுத்தப்படும் வரை சாரதிகள் தற்போதைய கட்டணங்களையே அறவிடுவார்கள் என்று அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb849c0d-cbc4-4c03-ba3c-3591996db85c/26-6a95a17309afb.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதன்படி, முதலாவது கிலோமீற்றருக்கு 110 ரூபாயும், அதன் பின்னர் ஒவ்வொரு கூடுதல் கிலோமீற்றருக்கு 90 ரூபாயும் என்ற தற்போதைய உத்தியோகபூர்வ கட்டண முறைமை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-31T15:44:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரோகினிக்கு நடக்கும் வளைகாப்பு.. வருத்தத்தில் இருந்த ரேவதிக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி! - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/karthigai-deepam-today-episode-1788170083"></link>
            <id>https://viduppu.com/article/karthigai-deepam-today-episode-1788170083</id>
            <summary type="text">தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை **இரவு 9 மணிக்கு** ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். கடந்த எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை **இரவு 9 மணிக்கு** ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். கடந்த எபிசோடில் ரோகினியின் வளைகாப்பு விழாவுக்கு வந்த ரேவதியை சாமுண்டீஸ்வரி அவமானப்படுத்தி அனுப்பிய நிலையில், இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.</p><p>வீட்டிற்கு திரும்பிய ரேவதி, "அம்மா இப்படி செய்வார்கள் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை" என வருத்தப்படுகிறாள். அப்போது பரமேஸ்வரி பாட்டியும் கார்த்திக்கும் அவளுக்கு ஆறுதல் கூறுகின்றனர். மேலும், வீடியோ கால் மூலம் வளைகாப்பு நிகழ்ச்சியை பார்க்க ஏற்பாடு செய்வதாக கார்த்திக் கூறினாலும், அதற்கு ரேவதி மறுப்பு தெரிவிக்கிறாள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d03ccc47-1ea3-4ace-80a2-31dc11e52200/26-6a954f661327a.webp' /></p><p>இதையடுத்து கார்த்திக், மயில்வாகனத்திற்கு போன் செய்து ஒரு திட்டத்தை கூறுகிறான். வளைகாப்பு விழா முடிந்ததும் போட்டோ எடுக்க வேண்டும் என்ற காரணத்தைக் கூறி ரோகினியை ஸ்டூடியோவுக்கு அழைத்து வருமாறு சொல்கிறான். சாமுண்டீஸ்வரி, வீட்டிலேயே புகைப்படம் எடுக்கலாம் என கூறினாலும், மயில்வாகனம் ஸ்டூடியோவுக்கு சென்று எடுத்து வரலாம் என்று கூறி ரோகினியை அழைத்துக்கொண்டு கிளம்புகிறார்.
</p><p>மறுபக்கம், கார்த்திக் தனது புதிய வீட்டில் ரோகினிக்காக வளைகாப்பு நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்திருக்கிறான். அந்த இடத்திற்கு ரோகினியும் மயில்வாகனமும் வருகிறார்கள். அதன்பிறகு, வருத்தத்துடன் இருக்கும் ரேவதியை கார்த்திக் கீழே அழைத்து வர, அங்கு ரோகினியை பார்த்ததும் ரேவதி மகிழ்ச்சியில் திளைக்கிறாள்.
</p><p>இதையடுத்து ரோகினிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது. ஆனால், ரோகினி மற்றும் மயில்வாகனம் அங்கு வந்திருக்கும் தகவல் யாரோ ஒருவரின் மூலம் சாமுண்டீஸ்வரிக்கு தெரிய வருகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16ec2cc8-89c1-49b3-9644-6361781d620e/26-6a954f66c112e.webp' /></p><p>இதனால் ஆத்திரமடைந்த சாமுண்டீஸ்வரி நேராக அந்த இடத்திற்கு வந்து சண்டையிடத் தொடங்குகிறாள். கார்த்திக் இந்த ஏற்பாட்டை தான்தான் செய்ததாக கூற முயற்சிக்கும்போது, ரோகினி அவரை தடுத்து நிறுத்தி, "நாங்களே விருப்பப்பட்டுத்தான் இங்கே வந்தோம்" என்று கூறி சாமுண்டீஸ்வரியை சமாதானப்படுத்தி அனுப்புகிறாள்.
</p><p>இந்நிலையில், இந்த சம்பவங்களுக்குப் பிறகு அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது என்பதை தெரிந்துகொள்ள கார்த்திகை தீபம் சீரியலை Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.
&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T15:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷித மற்றும் டெய்சி பாட்டியின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/yoshitha-and-daisy-aachi-s-case-adjourned-again-1788188365"></link>
            <id>https://tamilwin.com/article/yoshitha-and-daisy-aachi-s-case-adjourned-again-1788188365</id>
            <summary type="text">பணமோசடி தடுப்புச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுகளின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி பொரஸ்ட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பணமோசடி தடுப்புச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுகளின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இன்று (31) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதன்போது கருத்து தெரிவித்த அரச சட்டத்தரணி, இந்த வழக்கு தொடர்பான ஒரு விடயம் குறித்து பிரதிவாதி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளதாக தெரிவித்தார்.</p><h2>விசாரணை</h2><p> </p><p>குறித்த மேன்முறையீடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதால், அந்த திகதிக்குப் பின்னர் வரும் ஒரு திகதியில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b48e3ff3-ecb2-4b71-828a-a1c907ff4232/26-6a959b305e6b6.webp' /></p><p>
</p><p>
முன்வைக்கப்பட்ட வாதங்களை பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதி, செப்டம்பர் 28 ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், பிரதிவாதிகள் சட்டவிரோதமாக சம்பாதித்த சுமார் 57 மில்லியன் ரூபாவை மூன்று வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்ததன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T15:24:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் பிரதேசமொன்றில் கடும் வறட்சி : 778 குளங்கள் முற்றாக வற்றின]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/severe-drought-in-rajarata-778-tanks-dry-up-1788187422"></link>
            <id>https://ibctamil.com/article/severe-drought-in-rajarata-778-tanks-dry-up-1788187422</id>
            <summary type="text">ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் ஒக்டோபர் வரை ராஜரட்ட பிராந்தியத்தில் வறட்சி ஏற்படுவது இயல்பானது என்றாலும், இந்த முறை நிலவும் கடுமையான வறண்ட வானிலை காரணமாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் ஒக்டோபர் வரை ராஜரட்ட பிராந்தியத்தில் வறட்சி ஏற்படுவது இயல்பானது என்றாலும், இந்த முறை நிலவும் கடுமையான வறண்ட வானிலை காரணமாக அப்பகுதியில் உள்ள நீர் ஆதாரங்கள் வேகமாக வறண்டு வருவதாக அனுராதபுர மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய தெரிவித்துள்ளார்.</p><p>

இன்று (31) ஊடகங்களிடம் பேசிய அவர், கடந்த ஆண்டுகளை விட கடுமையாகி வரும் இந்த வறட்சி, ரஜரட்ட மக்களின் வாழ்க்கையையும், சுற்றுச்சூழலையும், வனவிலங்குகளையும் கடுமையாக பாதித்துள்ளது என்றார்.</p><h2>788 நீர்த்தேக்கங்கள் முற்றிலுமாக வறண்டுவிட்டன</h2><p>மாவட்டத்தில் உள்ள 2,410 சிறு நீர்ப்பாசன அமைப்புகளில், 788 நீர்த்தேக்கங்கள் கிட்டத்தட்ட முற்றிலுமாக வறண்டுவிட்டன, அதே நேரத்தில் மற்ற 612 குளங்களில் நீர்மட்டம் 5% க்கும் அதிகமாக குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/331271bd-f0d0-4a2c-b771-0cfa9b88912d/26-6a9597f426e95.webp' /></p><p>

இதற்கிடையில், மொத்த நீர் விநியோகத்தில் 75% க்கும் அதிகமானவை வெறும் 7 பெரிய குளங்களையே சார்ந்துள்ளது என்றும் அவர் கூறினார்.</p><p></p><p>

</p><h2>குடிநீருக்கும் பெரும் திண்டாட்டம்&nbsp;</h2><p>நீர் ஆதாரங்கள் கடுமையாகக் குறைந்துவிட்டதால், குடிநீர் கிடைப்பது கடினமாகியுள்ளதுடன், விவசாய நடவடிக்கைகளுக்கும் வனவிலங்குகளின் நீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் கடுமையான தடைகள் ஏற்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/601567cc-b580-43c9-b041-94ac8ea53dc7/26-6a9597f4cf6cb.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T15:04:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் போதனா வைத்தியசாலையில் தப்பியோடிய கைதி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/prisoner-escaped-jaffna-teaching-hospital-arrest-1788183049"></link>
            <id>https://jvpnews.com/article/prisoner-escaped-jaffna-teaching-hospital-arrest-1788183049</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிய நிலையில், இளவா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிய நிலையில், இளவாலை பகுதியில் வைத்து இன்று (31) மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>


2021ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றத்திற்காக குறித்த நபருக்கு 24 வருட சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்டவருக்கு 5 இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bd42ab4-7f8e-4fff-b4c4-ec9c2d78c736/26-6a95820b2e1da.webp' /></p><h2>காவலர்களின் பாதுகாப்புடன்&nbsp; வைத்தியசாலையில் அனுமதி</h2><p>
</p><p>


இந்நிலையில், மறுநாள் திடீர் சுகவீனம் ஏற்பட்டதாகக் கூறி சிறைக்காவலர்களின் பாதுகாப்புடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட கைதி, ஞாயிற்றுக்கிழமை மதியம் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.</p><p></p><p>
</p><p>


இதனையடுத்து சிறைக்காவலர்கள் மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் விசேட குழுவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், இளவாலை பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் மறைந்திருந்த நிலையில் கைதி கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>


சிறைக்காவலர்களின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்றமை தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராக மேலதிக வழக்குத் தாக்கல் செய்து நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-31T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[முத்தரப்பு டி20: நமீபியாவின் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஜிம்பாப்வே வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ryan-burl-smash-57-runs-helps-zim-195-vs-namibia-1788186985"></link>
            <id>https://news.lankasri.com/article/ryan-burl-smash-57-runs-helps-zim-195-vs-namibia-1788186985</id>
            <summary type="text">Zimbabwe 195 vs namibia in tri-series t20: நமீபிய அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 போட்டியில், ரியான் பர்ல் 32 பந்துகளில் 57 ஓட்டங்கள் விளாசினார்.

Wi...</summary>
            <content type="html"><![CDATA[<p>Zimbabwe 195 vs namibia in tri-series t20: நமீபிய அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 போட்டியில், ரியான் பர்ல் 32 பந்துகளில் 57 ஓட்டங்கள் விளாசினார்.
</p><p>
Windhoek-யில் நடந்து வரும் நமீபிய அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 போட்டியில், ரியான் பர்ல் அரைசதம் விளாச ஜிம்பாப்வே 195 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><h2>கர்ரன்,&nbsp;பென்னெட் </h2><p>
முத்தரப்பு டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் நமீபியா, ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0c1bee6-c3f0-4943-b208-dee6718f5b1d/26-6a95916c96f23.webp' /></p><p></p><p>

முதலில் துடுப்பாடிய ஜிம்பாப்வே அணியில் பென் கர்ரன் 38 (22) ஓட்டங்களும், பிரையன் பென்னெட் 32 (21) ஓட்டங்களும் விளாசினர். </p><p>

பின்னர் வந்த மயேர்ஸ் (2), ரஸா (0), மதேவேரே (2) ஆகியோர் சொதப்பினர். அப்போது கைகோர்த்த ரியான் பர்ல், பிராட் எவன்ஸ் நமீபியா பந்துவீச்சை சிதறடித்தனர்.&nbsp;</p><h2>பர்ல்&nbsp;சரவெடி </h2><p> 

இந்தக் கூட்டணியின் மிரட்டலான ஆட்டத்தின் மூலம் சரிவில் இருந்து மீண்ட ஜிம்பாப்வே, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ஓட்டங்கள் குவித்தது.</p><p>

ரியான் பர்ல் 32 பந்துகளில் 57 ஓட்டங்களும் (1 சிக்ஸர், 7 பவுண்டரிகள்), பிராட் எவன்ஸ் 25 பந்துகளில் 37 ஓட்டங்களும் (2 சிக்ஸர், 2 பவுண்டரிகள்) விளாசினர்.

எராஸ்மஸ் 3 விக்கெட்டுகளும், பெர்னார்ட், ஜேஜே ஸ்மித் மற்றும் மேக்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5d98a80-ebad-417c-a2f3-724738c10127/26-6a959202001f0.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T14:36:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடகங்களில் பிரபலமான இளம் பெண் ; மரத்தில் கட்டி வைத்து தீ வைத்த கொடூரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/punjab-social-media-influencer-manjit-kaur-assault-1788181311"></link>
            <id>https://jvpnews.com/article/punjab-social-media-influencer-manjit-kaur-assault-1788181311</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியா சண்டிகரில் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்த 28 வயது இளம் பெண் மஞ்சீத் கவுரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியா சண்டிகரில் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்த 28 வயது இளம் பெண் மஞ்சீத் கவுரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, </p><p>
 
கடந்த ஜூன் மாதம் அவர் கடத்தப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், சுமார் இரண்டு மாதங்கள் மருத்துவமனையில் உயிருக்கு போராடிய அவர் ஆகஸ்ட் 26-ம் தேதி சண்டிகரில் உள்ள PGIMER மருத்துவமனையில் உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b61f601e-dc63-4173-b524-2b1c33cc967d/26-6a957b40ea12f.webp' /></p><h2>&nbsp;இரண்டு மாதங்கள் உயிருக்கு போராடிய&nbsp;&nbsp;இளம் பெண்</h2><p>
</p><p> 
மஞ்சீத்தின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவில், அவரது தோழி, “அவர் விரைவில் நடந்ததை அவருடைய வார்த்தைகளிலேயே உங்களிடம் சொல்வார்” என்று கூறியிருந்தார். ஆனால் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.
</p><p> 
அவரது தாயார் அளித்த புகாரின்படி, ஜூலை 3-ம் தேதி சண்டிகரின் செக்டர் 34 பகுதியில் இருவரை சந்திக்க சென்ற மஞ்சீத்தை, ஷுபி மற்றும் பிண்டா ஆகியோர் காரில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.</p><p></p><p> </p><p>பின்னர் பஞ்சாபின் ரூப்நகர் மாவட்டம் மொரிந்தாவுக்கு அழைத்து சென்று தாக்கி, மரத்தில் கட்டி தீ வைத்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> அங்கு வந்த நண்பர் ஒருவர் போர்வையை பயன்படுத்தி தீயை அணைத்ததாக கூறப்படுகிறது.

பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற மஞ்சீத், ஆகஸ்ட் 5-ம் தேதி சிறிது நேரம் சுயநினைவு பெற்று குடும்பத்தினரிடம் சம்பவத்தை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><p> </p><p>பின்னர் உடல்நிலை மோசமடைந்து அவர் உயிரிழந்தார்.
 
இந்த வழக்கில் கடத்தல், கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.</p><p> CCTV காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் சிக்கி அவுஸ்திரேலியாவில் வசித்த யாழ்ப்பாண குடும்பம் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-family-in-austra-disappears-in-nepal-floods-1788184460"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-family-in-austra-disappears-in-nepal-floods-1788184460</id>
            <summary type="text">நேபாள–திபெத் எல்லைப் பகுதியில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளத்துக்குப் பின்னர்,ஆயிரக்கணக்கானோர் காணாமற்போயுள்ளனர்.


 அந்த வகையில் சிட்னியில் வச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாள–திபெத் எல்லைப் பகுதியில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளத்துக்குப் பின்னர்,ஆயிரக்கணக்கானோர் காணாமற்போயுள்ளனர்.
</p><p>

 அந்த வகையில் சிட்னியில் வசிக்கும் இலங்கைத் தமிழரான சந்திரசேகரன் முரளிதரன் (47), அவரது மனைவி ஷைலஜா முரளிதரன் (42) மற்றும் அவர்களது மகன்கள் அஷ்வின் (14), ஆருஷ் (11) ஆகிய நால்வரும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>நம்பிக்கையுடன் காத்திருக்கும் உறவுகள்</h2><p>அவுஸ்திரேலிய ஊடகங்கள் இந்தக் குடும்பம் காணாமல் போனதை உறுதிப்படுத்தியுள்ளன. 



எனினும், குடும்பத்தினர் உயிரிழந்ததாக இதுவரை அதிகாரபூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/961fbdbe-6a40-4a49-9f71-fce8285d5ebb/26-6a9589733447e.webp' /></p><p> </p><p>அவர்கள் காணாமல் போயுள்ள நிலையில், உறவினர்கள் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் தகவலுக்காக காத்திருக்கின்றனர்.</p><p>


இதேவேளை நோபாள வெள்ள பேரழிவில் சிக்கி அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 39 பேர் காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T14:28:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜீ தமிழில் முடிவுக்கு வரும் முக்கிய சீரியல்! கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/zee-tamil-veera-serial-ending-soon-1788185451"></link>
            <id>https://cineulagam.com/article/zee-tamil-veera-serial-ending-soon-1788185451</id>
            <summary type="text">டிவி சேனல்களுக்கு நடுவே தொடர்ந்து போட்டி இருந்து வருவது எல்லாருக்கும் தெரிந்தது தான். டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணிக்கு வருவதற்காக தொடர்ந்து சேனல்கள் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>டிவி சேனல்களுக்கு நடுவே தொடர்ந்து போட்டி இருந்து வருவது எல்லாருக்கும் தெரிந்தது தான். டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணிக்கு வருவதற்காக தொடர்ந்து சேனல்கள் அனைத்தும் போட்டி போட்டுக் கொண்டு புதுப்புது நிகழ்ச்சிகளாக அறிமுகப்படுத்தி வருகின்றன.</p><p>மேலும் பழைய சீரியல்களை முடித்துவிட்டு புது சீரியல்களை அறிமுகம் செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0d48ade-e084-4b93-8fb8-bdc41ae863d6/26-6a958b6cb44b1.webp' /></p><p>
</p><h2>வீரா
</h2><p>
அந்த வரிசையில் தற்போது ஜீ தமிழில் ஒரு முக்கிய சீரியல் முடிக்கப்பட இருக்கிறது.
</p><p>
வீரா சீரியல்தான் விரைவில் முடிவுக்கு வரப் போகிறதாம். இந்த தகவல் ரசிகர்களை கடும் அதிர்ச்சி ஆக்கி இருக்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/023da4f9-ce5b-400e-8390-3e6318e96eff/26-6a958b6d902b6.webp' /></p>]]></content>
            <updated>2026-08-31T14:10:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாஸ்கரன் கந்தையா பங்கேற்பில் கோலாகலமாக நிறைவடைந்த கால்பந்தாட்ட போட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/football-matchparticipation-of-bhaskaran-kandiah-1788184718"></link>
            <id>https://tamilwin.com/article/football-matchparticipation-of-bhaskaran-kandiah-1788184718</id>
            <summary type="text">1999ஆம் ஆண்டு மடுக்கோவிலில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூறும் வகையில், “ 1999ஆம் ஆண்டு மடு உறவுகள் கால்பந்தாட்ட போட்டி”&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>1999ஆம் ஆண்டு மடுக்கோவிலில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூறும் வகையில், “ 1999ஆம் ஆண்டு மடு உறவுகள் கால்பந்தாட்ட போட்டி”&nbsp; கோலாகலமாக இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>இந்த போட்டிகள்&nbsp; நேற்று(31.08.2026) தட்சனாமருதமடு ஐக்கிய விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இளம் தலைமுறையினரிடையே விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், கடந்த கால வடுக்களை நினைவுகூறும் வகையிலும், இந்த கால்பந்தாட்டத் தொடர் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
</p><h2>
மன்னாரில் இடம்பெற்ற கால்பந்தாட்டம்</h2><p>
இதற்கமைய, இந்த வருடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போட்டியில் பல்வேறு அணிகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6956d17e-195d-4732-b6fd-16500dceddf3/26-6a958947eb51b.webp' /></p><p>
</p><p>
இந்த போட்டியின் பிரதான விருந்தினர்களாக ஐ.பி.சி தமிழ் ஊடக நிறுவனத்தின் தலைவர் பாஸ்கரன் கந்தையா கலந்துக்கொண்ட நிலையில், கௌரவ விருந்தினர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தியிருந்தனர்.</p><p>

இந்த கால்பந்தாட்டப் போட்டி நேற்று(31.08.2026) பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
</p><p>
போட்டியில் வெற்றிப்பெற்ற அணிக்கு கேடையங்களும் சிறப்பு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92917c66-9f5d-43f8-89c2-c357ba52a960/26-6a958948e3788.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14a09e55-353e-4b07-9c29-45a1a855d5d7/26-6a958949c21fe.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T14:05:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளம் பெண் ஓட்டிய காரினால் 9 மாத குழந்தை பரிதாப மரணம்: விசாரணையில் தெரிய வந்த விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/women-arrested-in-usa-child-death-of-car-hitting-1788178781"></link>
            <id>https://news.lankasri.com/article/women-arrested-in-usa-child-death-of-car-hitting-1788178781</id>
            <summary type="text">Two women arrested in new jersey for child death of car hitting: அமெரிக்காவில் பெண்ணொருவர் காரினால் மோதியதில் ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற...</summary>
            <content type="html"><![CDATA[<p>Two women arrested in new jersey for child death of car hitting: அமெரிக்காவில் பெண்ணொருவர் காரினால் மோதியதில் ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.</p><p>


அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் பார்க்கிங் பகுதியில் பெண்ணொருவர், கார் மூலம் மோதியதில் ஆண் குழந்தை உயிரிழந்தது.</p><p>


</p><h2>நியூ ஜெர்சி</h2><p>நியூ ஜெர்சியின் ஜாக்சன் டவுன்ஷிப்பில் உள்ள 'NPGS' என்ற Kosher மாளிகைக்கடை உள்ளது. 

இதன் வாகன நிறுத்துமிடத்தில் ஒரு பெண் தனது 9 மாத ஆண் குழந்தையையும், 5 வயது மகளையும் தள்ளுவண்டியில் வைத்து அழைத்துச் சென்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e359451-0f3a-43f4-a405-ef2d11abffc8/26-6a95716166910.webp' />&nbsp;</p><p></p><p>
அப்போது கார் ஒன்று அவர்கள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் குறித்த ஆண் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. </p><p>

மேலும் குழந்தையும் தாயும், அவரது ஐந்து வயது மகளும் காயமடைந்தனர். இதனையடுத்து மரியா கோபோன்-குஸ்மான் (20) என்ற பெண்ணும், லசாரோ ஃப்ளோரஸ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். </p><h2>

குற்றச்சாட்டுகள் </h2><p>மரியாவிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. </p><p>

பின்னர் ஓட்டுநர் உரிமம் இல்லாமலேயே வாகனத்தை இயக்கியது, மனித உயிரிழப்பிற்கு காரணமான செயல் மற்றும் வாகனத்தைக் கொண்டு தாக்குதல் நடத்தியது ஆகிய குற்றச்சாட்டுகள் ஃப்ளோரஸ் மீதும் சுமத்தப்பட்டுள்ளன. </p><p>

 தற்போது அவர்கள் ஓஷன் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் மற்றும் சிறைக்காவல் தொடர்பான விசாரணைக்காகக் காத்திருக்கின்றனர். 

இதற்கிடையில், இந்த விபத்து குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06579ce1-9c0b-41ef-a283-b3113246b448/26-6a9571609f0d3.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T14:05:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிர்கிஸ்தான் வந்தடைந்த புடின்: தலைவர்கள் ஜி ஜின்பிங், நரேந்திர மோடியுடன் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/vladimir-putin-arrives-in-kyrgyzstan-sco-summit-1788184598"></link>
            <id>https://news.lankasri.com/article/vladimir-putin-arrives-in-kyrgyzstan-sco-summit-1788184598</id>
            <summary type="text">Vladimir Putin arrives in kyrgyzstan for sco summit: ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் SCO உச்சிமாநாட்டிற்காக கிர்கிஸ்தான் வந்தடைந்தார். 

SCO உச்சி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Vladimir Putin arrives in kyrgyzstan for sco summit: ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் SCO உச்சிமாநாட்டிற்காக கிர்கிஸ்தான் வந்தடைந்தார். </p><p>

SCO உச்சி மாநாடு மற்றும் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை ஆகியவற்றில் கலந்துகொள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கிர்கிஸ்தான் வந்தடைந்தார்.&nbsp;</p><h2>கிர்கிஸ்தான்&nbsp;வருகை </h2><p> 

ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் SCO எனும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார். 

இதற்காக அவர் கிர்கிஸ்தான் நாட்டிற்கு திங்களன்று வந்தடைந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f4c3ed2-edda-4489-a061-02c4ecf00e91/26-6a9589ac45ad8.webp' />&nbsp;</p><p></p><p>உச்சி மாநாடு மட்டுமின்றி சீனா, இந்தியா மற்றும் பிற நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்பிலும் புடின் கலந்துகொள்கிறார்.
</p><p>
தலைவர்களிடையே நீண்ட காலமாக தாமதமாகி வரும் Power of Siberia 2 இயற்கை எரிவாயு குழாய் திட்டம் குறித்த விவாதம் நடைபெற உள்ளது.
</p><p>
முதலில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்திக்கும் புடின், அதனைத் தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச உள்ளார். </p><p>

SCO உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பிப்ரவரி 2026-யில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய போர் தொடங்கியதில் இருந்து, முதன்முறையாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானை ரஷ்ய ஜனாதிபதி புடின் சந்திக்கவுள்ளார். </p><p>

அத்துடன் கருங்கடல் பாதுகாப்பு மற்றும் உக்ரைன் போர் குறித்தும் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனுடன் புடின் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T14:00:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்களின் திருமண வயதை உயர்த்த வேண்டும் - சட்டமன்றத்தில் தவெக எம்எல்ஏ கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/mla-request-to-increase-women-marriage-age-to-21-1788184734"></link>
            <id>https://ibctamilnadu.com/article/mla-request-to-increase-women-marriage-age-to-21-1788184734</id>
            <summary type="text">tvk mla request to increase women marriage age to 21: பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என தவெக எம்எல்ஏ சத்யா கோரிக்கை.விடுத்துள்ளார்.  
...</summary>
            <content type="html"><![CDATA[<p>tvk mla request to increase women marriage age to 21: பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என தவெக எம்எல்ஏ சத்யா கோரிக்கை.விடுத்துள்ளார். </p><h3> 

பெண்களின் திருமண வயதை உயர்த்த கோரிக்கை</h3><p> 

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாற்றுத் திறனாளிகள், மதுவிலக்கு, சமூகநலன் வேளாண்மைத்துறை மானிய கோரிக்கை இன்று நடைபெற்றது. </p><p>

இதில் பேசிய தவெகவை சேர்ந்த கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சத்யா, இன்று இளமை திருமணம் என்பது பரவலாக காணப்படுகிறது. மன பக்குவமின்மை, குடும்ப வறுமை, சொந்தம் விட்டு போகக்கூடாது, சொத்துகள் வெளியே சென்று விடக்கூடாது போன்ற காரணங்களால் இந்த இளமைத் திருமணம் ஆங்காங்கே பரவலாக நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b59a94f7-c624-4b03-a797-c44ce2c514f3/26-6a95889fa783c.webp' /></p><p>

18 வயது உடையவர்களில் கிட்டத்தட்ட 25% பேர்கள் இந்த இளமைத் திருமணத்தை மேற்கொள்கின்றனர்.

இந்த இளமைத் திருமணங்களில் பெண்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். உடலாலும், மனதாலும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். </p><p>

கணவன் மனைவிகளுக்கு இடையே பல்வேறு விதமான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீதிமன்றம் வரை வந்து பிரிந்து வாழும் நிலை இன்று அதிகம் ஏற்படுகின்றது.
</p><p>
இன்னும் கொடியது ஆங்காங்கே குழந்தை திருமணம் நடைபெறுகிறது. அது இன்னும் பல்வேறு பிரச்சனைகளை பெண் குழந்தைகளுக்கு ஏற்படுத்துகிறது.</p><p> 

16 வயதில் திருமணம், 17 வயதில் குழந்தை, 18 வயதில் ஒரு வயது குழந்தை, அந்த 18 வயது குழந்தை ஒரு வயது குழந்தையோடு விளையாடுகிறது.</p><p>

ஒரு வயது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் உடல் உபாதைகளால் அழுகிறது என்று கூடத் தெரியாத அளவுக்கு பல்வேறு பிரச்சனைகள் உள்ளது.</p><p>

ஆகவே, இது போன்ற பிரச்சனைகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பெண்ணின் திருமண வயது 18 என்கிற இந்த சட்டத்தை 20 அல்லது 21 வயதிற்கு கண்டிப்பாக உயர்த்தி தர வேண்டும்" என கூறியுள்ளார்.&nbsp;</p><p>இந்தியாவில் தற்போது பெண்களின் திருமண வயது 18 ஆகவும், ஆண்களின் திருமண வயது 21 ஆகவும் உள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T14:00:15+00:00</updated>
        </entry>
    </feed>
