<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-22T20:23:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் பாலங்கள் மற்றும் மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் - டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-threatens-target-iran-bridges-power-plants-1784751304"></link>
            <id>https://tamilwin.com/article/trump-threatens-target-iran-bridges-power-plants-1784751304</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் பாலங்கள் மற்றும் மின் நிலையங்கள் மீது அமெரிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் பாலங்கள் மற்றும் மின் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி அழிக்கும் என டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். </p><p>தலைநகர் தெஹ்ரானுக்கு அருகில் உள்ள முக்கிய இடங்களும் இலக்க வைக்கப்படும் எனத் தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.</p><p></p><h2>ட்ரோன் தாக்குதல்கள்&nbsp;</h2><p>
</p><p>
ஈரானின் அணு உலைகள் மீதான அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe5da706-6312-42b9-8a67-0d7ddfa1c8e1/26-6a6126918a476.webp' /></p><p> </p><p>இந்நிலையில், குவைத், பஹ்ரைன் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் ஈரானின் ட்ரோன் தாக்குதல்களை இடைமறித்து அழித்துள்ளன.</p><p>

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான இந்த மோதல் தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பரப்பரப்பாக உயர்ந்து பீப்பாய் ஒன்று 94 டொலரை எட்டியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T20:22:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[எப்ஸ்டீன் ஆவணங்களில் 2000 முறை குறிப்பிடப்பட்ட மோடலிங் முகவர்: சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/epstein-associate-jean-luc-brunel-found-dead-1784748215"></link>
            <id>https://ibctamil.com/article/epstein-associate-jean-luc-brunel-found-dead-1784748215</id>
            <summary type="text">பாலியல் குற்றவாளி எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்புடைய மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளார்.

மோடலிங் முகவரான டேனியல் சியாட் (69) என்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாலியல் குற்றவாளி எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்புடைய மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
மோடலிங் முகவரான டேனியல் சியாட் (69) என்பவரே இவ்வாறு உயிரிழநத்துள்ளார்.</p><p>

பரிஸ் நகருக்கு வெளியே உள்ள அவரது இல்லத்தில் அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><h2>பிரேதப் பரிசோதனை</h2><p>இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிரிழப்பிற்கான சரியான காரணத்தைக் கண்டறிய பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக நன்டேர் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86093452-eaa2-463f-ae0c-020ea55963f2/26-6a61259ad0b57.webp' /></p><p>அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் டேனியல் சியாட்டின் பெயர் சுமார் 2,000 முறை இடம்பெற்றுள்ளது.</p><p>
பிரெஞ்சு ஊடகங்களின்படி, சியாட் மீது குறைந்தது ஐந்து பெண்கள் பாலியல் துர்நடத்தை மற்றும் மனிதக் கடத்தல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தனர். 

இருப்பினும், தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் சியாட் மறுத்திருந்தார்.</p><p>
</p><p></p><h2>தவறான முடிவு</h2><p>இது குறித்து சியாட்டின் வழக்கறிஞர் மெய்னா அரப்-டிக்ரைன் தெரிவிக்கையில், டேனியல் சியாட் தனது நிரபராதித்தனத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும் அவர் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

அத்தோடு அவர் மீது இதுவரை எந்தவொரு முறையான நீதிமன்ற வழக்குகளும் தொடரப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd454171-2726-4af9-998e-40232aa92159/26-6a61259b7f750.webp' /></p><p>பிரான்சில் எப்ஸ்டீனுடன் தொடர்புடை நபர்களில் உயிரிழக்கும் இரண்டாவது நபர் சியாட் ஆவார்.</p><p>

இதற்கு முன்னர் 2020 இல் கைதுசெய்யப்பட்ட மோடலிங் முகவர் ஜீன்-லூக் புருனல் என்பவர் 2022 ஆம் ஆண்டு தனது சிறை அறையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-22T20:19:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[லிபர்ட்டி பிளாசாவில் 300க்கும் அதிகமான கைப்பேசிகள் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/over-300-phones-seized-at-liberty-plaza-1784750564"></link>
            <id>https://jvpnews.com/article/over-300-phones-seized-at-liberty-plaza-1784750564</id>
            <summary type="text">கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள பிரபல &#039;லிபர்ட்டி பிளாசா&#039; வணிக வளாகத்தில் உள்ள கடை ஒன்றில் வலான ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடிச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள பிரபல 'லிபர்ட்டி பிளாசா' வணிக வளாகத்தில் உள்ள கடை ஒன்றில் வலான ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட 300க்கும் மேற்பட்ட அதிநவீன கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify; ">
 

பறிமுதல் செய்யப்பட்ட இந்த கைப்பேசிகளில் ஐபோன்கள் (iPhones) உட்பட பல முன்னணி நாமங்களின் நவீன ரக கைப்பேசிகள் அடங்குவதுடன், அவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 50 மில்லியன் ரூபா (5 கோடி ரூபா) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52f46d42-0089-479a-bf1e-0a94a6dd05b3/26-6a6121e5a3bbf.webp' /></p><p>
</p><p style="text-align: justify; ">
 

இந்த சட்டவிரோத விற்பனை தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-22T20:15:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷிதவிற்கு தொடரும் வழக்கு.. மகிந்தவின் சகா 3 இலட்சம் டொலருடன் தலைமறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-colleague-absconds-300-000-case-yoshitha-1784748476"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-colleague-absconds-300-000-case-yoshitha-1784748476</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர்கள் மீது மீண்டுமொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக&amp;nbsp; தெரிவிக்கப்படுகின்றது.&amp;nbsp;வெளிநாட்டு தொழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர்கள் மீது மீண்டுமொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக&nbsp; தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறையை பயன்படுத்தி மோசடியான முறையில் வாகன இறக்குமதி செய்தததாக குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது.&nbsp;</p><p>இந்த அனுமதிப்பத்திர முறையைத் தவறாகப் பயன்படுத்தி, ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த யோஷித ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச ஆகியோரும் இரண்டு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p>அதேநேரம், அவர்களின் தந்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய சகா தொடர்பிலும் பாரிய நிதிக் குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இது உட்பட நாட்டில் இடம்பெற்ற முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/niK56A5Pubw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T19:55:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவிரவாக நடத்தப்பட்ட சோதனை ; நால்வர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/overnight-search-operation-conducted-1784748545"></link>
            <id>https://jvpnews.com/article/overnight-search-operation-conducted-1784748545</id>
            <summary type="text">அநுராதபுரம் கலன்பிந்துனுவெவ மொறகொட பகுதியில் புதையல் தோண்டிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நான்கு பேரை மொறகொட பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அநுராதபுரம் கலன்பிந்துனுவெவ மொறகொட பகுதியில் புதையல் தோண்டிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நான்கு பேரை மொறகொட பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மொறகொட பொலிஸ் பிரிவின் லபுனோருவ பகுதியிலுள்ள தொல்பொருள் பெறுமதிமிக்க இடமொன்றில் 21 ஆம் திகதி 22ஆம் திகதி புதன்கிழமை இரவு நடத்திய சுற்றிவளைப்பின் போது புதயல்தோண்டிக்கொண்டிருந்த சந்தேக நபர்கள் நான்கு பேரை கைது செய்துள்ளதுடன் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய உபகரணங்கள் சிலவற்றையும் மொறகொட பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44a53c2b-cb87-4b0a-8e8f-bc83b82a0718/26-6a611a03164f8.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கைதுசெய்யப்பட்டவர்கள் 37,43,52,54 வயதுடைய கலன்பிந்துனுவெவ, படிகாரமடுவ மற்றும் மொறகொட பகுதியை வசிப்பிடமாக கொண்டவர்கள் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. </p><p style="text-align: justify; ">சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொறகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் அநுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-22T19:45:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்புக்கு ஈரான் கொடுத்த பதிலடி! மத்திய கிழக்கின் உள்கட்டமைப்புகளை நெருங்கும் பேராபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-warns-us-on-infrastructure-strikes-1784736826"></link>
            <id>https://ibctamil.com/article/iran-warns-us-on-infrastructure-strikes-1784736826</id>
            <summary type="text">ஈரானின் பாலங்கள் அல்லது மின் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் பட்சத்தில் மத்திய கிழக்கில் உள்ள சிவில் உள்கட்டமைப்புகள் குறிப்பாகப் பாலங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் பாலங்கள் அல்லது மின் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் பட்சத்தில் மத்திய கிழக்கில் உள்ள சிவில் உள்கட்டமைப்புகள் குறிப்பாகப் பாலங்கள் மற்றும் ஆற்றல் மையங்கள் மீது கடுமையான பதிலடித் தாக்குதல்கள் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
</p><p>
ஈரானின் பாலங்கள் அல்லது மின் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் பட்சத்தில் இவ்வாறு தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>

ஹோர்முஸ் நீரிணையில் கடற்போக்குவரத்து மீது இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) தாக்குதல் நடத்தும் ஒவ்வொரு முறையும், ஈரானின் பாலங்கள் மற்றும் மின் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.</p><p>
</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்து இருந்தார் .</p><p>

ட்ரம்பின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஈரானின் அர அதிகாரப்பூர்வ தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி அறிக்யொன்றை வெளியிட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1c5992f-cc74-42a0-83dd-ad31cd911d4d/26-6a60f6d7e7a3d.webp' /></p><p>குறித்த அறிக்கையில் “ஹோர்முஸ் நீரிணையின் மீதான இறையாண்மையைச் செலுத்துவதில் ஈரான் இரும்பு போன்ற உறுதியைக் கொண்டுள்ளது. </p><p>

அந்த நீரிணை மீண்டும் ஈரானுக்கு அச்சுறுத்தலாக மாறுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் ஈரானின் இந்த எச்சரிக்கை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள ஆற்றல் வளங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளின் பாதுகாப்பிற்கு மேலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-22T19:34:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஈரான் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை! வெடிக்கும் மோதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-warns-of-all-out-middle-east-war-1784744103"></link>
            <id>https://ibctamil.com/article/iran-warns-of-all-out-middle-east-war-1784744103</id>
            <summary type="text">பிராந்தியத்திலுள்ள அனைத்து நாடுகளும் மத்திய கிழக்கு மோதலுக்குள் இழுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர்ப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிராந்தியத்திலுள்ள அனைத்து நாடுகளும் மத்திய கிழக்கு மோதலுக்குள் இழுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.</p><p>அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதுமாகப் போரிலிருந்து விடுவிக்கப்படாவிட்டால் இவ்வாறான நிலை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. </p><p>

ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகரும் தலைமைப் பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.</p><p></p><h2>ஈரானின் பாதுகாப்பு&nbsp;</h2><p> 

இது குறித்துத் தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் அவர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5eef98c7-1341-4e24-b0e6-5bc01c741291/26-6a61166e33310.webp' /></p><p>

குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஈரானால் எண்ணெய் விற்க முடியாத பிராந்தியத்தில் வேறு எந்த நாட்டினாலும் எண்ணெய் விற்க முடியாது. </p><p>

ஈரானின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாவிட்டால் எந்தவொரு உட்கட்டமைப்பும் பாதுகாப்பாக இருக்காது.</p><p> </p><p></p><h2>அமெரிக்கப் படைகள்</h2><p>ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு என்பது அமெரிக்கப் படைகள் அங்கு இல்லாத சூழலில்தான் சாத்தியமாகும்.</p><p>
</p><p>ஹோர்முஸ் நீரிணை போருக்கு முந்தைய பழைய நிலைக்கு இனி ஒருபோதும் திரும்பப் போவதில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/905be880-0b26-48fb-b185-f42b16af4963/26-6a61166d68476.webp' /></p><p>
வாஷிங்டனுடனான பேச்சுவார்த்தைகளில் இந்த உத்திசார் கடல்வழிப் பாதையே ஈரானின் மிகப்பெரிய பலமாகவும் தடுப்பாயுதமாகவும் மாறியுள்ளதாக அவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
</p><p>
இப்போராட்டம் தொடங்குவதற்கு முன்னர், உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) விநியோகத்தில் சுமார் 20 சதவீதம் இந்த ஹோர்முஸ் நீரிணை வழியே கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-22T19:33:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் கல்வி- இந்த ஆண்டு அதிகளவில் விண்ணப்பித்த சர்வதேச மாணவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indians-rank-2nd-in-uk-student-visa-applications-1784748769"></link>
            <id>https://news.lankasri.com/article/indians-rank-2nd-in-uk-student-visa-applications-1784748769</id>
            <summary type="text">பிரித்தானிய (United Kingdom) பல்கலைக்கழகங்களில் படிக்க உலகம் முழுவதும் இருந்து மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பித்து வருகின்றனர்.

சமீபத்திய தகவலின்படி,...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானிய (United Kingdom) பல்கலைக்கழகங்களில் படிக்க உலகம் முழுவதும் இருந்து மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பித்து வருகின்றனர்.
</p><p>
சமீபத்திய தகவலின்படி, 1.48 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் பிரித்தானியாவில் படிப்பதற்காக விண்ணப்பித்துள்ளனர்.
</p><h2>
இந்திய மாணவர்கள்</h2><p>இதில் பெரும்பான்மையாக சீனாவிற்கு அடுத்த இடத்தில் இந்திய மாணவர்கள் உள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf82f190-9e4f-458f-ad82-f0c8fea780d7/26-6a611ae359765.webp' /></p><p>சீன மாணவர்கள் அதிக அளவில் விண்ணப்பித்தாலும், இந்திய மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளங்கலை (Undergraduate) படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன.
</p><h2>
இந்திய மாணவர்கள் பிரித்தானியாவில் படிப்பதற்கான முக்கிய காரணங்கள்:</h2><ul><li>

உயர்தர கல்வி மற்றும் உலகளாவிய அங்கீகாரம்</li><li>

வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் முன்னேற்றம்
</li><li>
பிரித்தானிய அரசின் கல்வி உதவிகள் மற்றும் விசா சலுகைகள்
</li></ul><p>
இந்திய மாணவர்கள் பிரித்தானியாவில் படிப்பதன் மூலம் உலகளாவிய போட்டியில் முன்னேறி வருகின்றனர். இது இந்தியாவின் கல்வி தரத்தை உயர்த்தும் ஒரு நல்ல முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T19:31:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கார் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; இளைஞனின் உயிரை பறித்த மதுபோதை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/car-and-motorcycle-collide-in-road-accident-1784747547"></link>
            <id>https://jvpnews.com/article/car-and-motorcycle-collide-in-road-accident-1784747547</id>
            <summary type="text">பொலன்னறுவை - மஹியங்கனை பிரதான வீதியின் திம்புலாகல, நாமல்பொக்குண பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் பலத்த காயம...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பொலன்னறுவை - மஹியங்கனை பிரதான வீதியின் திம்புலாகல, நாமல்பொக்குண பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். </p><p style="text-align: justify; ">

இன்று (22) பிற்பகல் 1.00 மணியளவில் காரொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணித்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd24052f-e5a1-42ce-8404-26adf7e1502a/26-6a61161d576fe.webp' /></p><h2 style="text-align: justify;">மேலதிக விசாரணை</h2><p> </p><p style="text-align: justify;">

அத்துடன், விபத்தில் பலத்த காயமடைந்த மற்றொரு நபர் பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மனம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p style="text-align: justify;">

உயிரிழந்தவர் திம்புலாகல, மகாஉல்பத பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த நபர் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">

மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் அலட்சியமான மற்றும் மதுபோதையில் வாகனத்தை செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் என மனம்பிட்டிய பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p style="text-align: justify;"> 

விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மனம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-22T19:12:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் தீவிரமடையும் காட்டுத் தீ ; மக்கள் வெளியேற்ற உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/wildfires-intensify-across-the-united-states-1784746231"></link>
            <id>https://canadamirror.com/article/wildfires-intensify-across-the-united-states-1784746231</id>
            <summary type="text">அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள அலமேடா கவுண்டி பகுதிக்குட்பட்ட பிளசண்டன் மற்றும் சுனோல் நகர எல்லைப் பகுதிகளில் நேற்று பிற்பகலில் &quot;லிட்டில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள அலமேடா கவுண்டி பகுதிக்குட்பட்ட பிளசண்டன் மற்றும் சுனோல் நகர எல்லைப் பகுதிகளில் நேற்று பிற்பகலில் "லிட்டில் ஃபயர்" எனப் பெயரிடப்பட்ட காட்டுத் தீ திடீரெனப் பற்றி எரியத் தொடங்கியது.</p><p style="text-align: justify; "> கடும் வெப்பம், உலர்ந்த புற்பகுதிகள் மற்றும் வீசி வரும் பலத்த காற்றின் காரணமாக தீ மிக வேகமாகப் பரவி, குறுகிய நேரத்திலேயே 950 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பைச் சாம்பலாக்கியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcb8d9b3-e211-46c4-bb7f-3780cebfb583/26-6a6110f93f074.webp' /></p><p>
</p><p style="text-align: justify; ">

லிட்டில் வேலி சாலை மற்றும் ஹப்பார்ட் லேன் சந்திப்பு பகுதி ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 950 ஏக்கர் எரிந்துள்ள நிலையில், 10% மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">இந்நிலையில், தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார். 

ரூபி ஹில் சொகுசு குடியிருப்பு பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள சுனோல் பகுதி மக்களுக்கு உடனடி வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">சுமார் 4,900-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 தீயணைப்புத் துறையினர் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நிலப்பரப்பில் புல்டோசர்கள் மற்றும் எஞ்சின்கள் மூலமும், வான்வழியாக சிறப்பு ஏர்-டேங்கர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலமும் தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. </p><p style="text-align: justify; ">அடர்ந்த புதர் மற்றும் மலைப்பகுதிகள் காரணமாக தீயணைப்பு வாகனங்கள் உள்ளே செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-22T18:50:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் வரலாறு காணாத காட்டுத் தீ பரவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/more-than-180-wildfires-burning-in-ontarios-north-1784742428"></link>
            <id>https://canadamirror.com/article/more-than-180-wildfires-burning-in-ontarios-north-1784742428</id>
            <summary type="text">கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் வடபகுதியில் காட்டுத்தீ பரவல் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.
ஒன்டாரியோ இயற்கை வளங்கள் அமைச்சு இது தொடர்பில் அறிக்கை வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் வடபகுதியில் காட்டுத்தீ பரவல் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.
ஒன்டாரியோ இயற்கை வளங்கள் அமைச்சு இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி 180-க்கும் மேற்பட்ட காட்டுத்தீகள் செயலில் உள்ளன.</p><p> கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 புதிய காட்டுத்தீகள் பதிவாகியுள்ளன.
ஆரம்பகட்ட மதிப்பீடுகளின்படி, இந்த ஆண்டு காட்டுத்தீயால் 7,250 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. </p><p>இது ஒன்டாரியோவில் இதற்கு முன் எந்த ஆண்டிலும் பதிவாகாத அளவுக்கு அதிகமான பாதிப்பாகக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f94bf7e2-9822-405c-a306-6cb0383a6df3/26-6a61021e190b5.webp' /></p><p>
</p><p>அதிகப்படியான தீப்பரவல்கள் கடந்த 10 நாட்களுக்குள் ஏற்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காட்டுத்தீ காரணமாக இதுவரை 1,800-க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p>
வெளியேற்றப்பட்ட 13 சமூகங்களில் 12 சமூகங்கள் பழங்குடியின சமூகங்கள் வாழும் பகுதிகளாகும். இந்த சமூகங்கள் தீவிர பாதிப்பை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>பழங்குடியினத் தலைவர்கள் ஒன்டாரியோ அரசின் காட்டுத்தீ மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து பொது விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
</p><p>அவர்கள், அவசர வெளியேற்ற நடவடிக்கைகளுக்குத் தேவையான உதவிகளை அரசு சரியான நேரத்தில் வழங்கவில்லை என்றும், பாதிக்கப்பட்ட சமூகங்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் குற்றம்சாட்டினர்.</p><p>
இதற்கு பதிலளித்த ஒன்டாரியோ முதலமைச்சர் டக் ஃபோர்டு (Doug Ford), காட்டுத்தீயை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் தனது அரசு முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T18:30:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட 9 இந்திய மீனவர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/9-indian-fishermen-arrested-off-mannar-1784744947"></link>
            <id>https://jvpnews.com/article/9-indian-fishermen-arrested-off-mannar-1784744947</id>
            <summary type="text">இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தலைமன்னாருக்கு வடக்கே இலங்கை க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தலைமன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். </p><p>

குறித்த சுற்றிவளைப்பின் போது, இரணைதீவிற்கு தெற்கே உள்ள இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 50 க்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடிப் படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபடுவதை கடற்படையினர் அவதானித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15a31f59-0005-469c-8bbb-6cd91a7937c7/26-6a610bf5430c4.webp' /></p><h2>மேலதிக சட்ட நடவடிக்கை</h2><p> </p><p>

அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் போது ஒரு இந்திய மீன்பிடிப் படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், அதில் இருந்த 9 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.</p><p></p><p> </p><p>

மேலும், கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களும் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்பிடி திணைக்களத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T18:29:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்லைதாண்டிய மீன்பிடி : 09 இந்திய கடற்றொழிலாளர்கள் படகுடன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/navy-seizes-indian-fishing-trawler-nine-fishermen-1784744908"></link>
            <id>https://ibctamil.com/article/navy-seizes-indian-fishing-trawler-nine-fishermen-1784744908</id>
            <summary type="text">இன்று மாலை (22 ஜூலை 2026) தலைமன்னாருக்கு வடக்கே உள்ள இலங்கை கடற்பரப்பில் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை (IMBL) தாண்டி சட்டவிரோத மீன்பிடித்தலில் ஈடுபட்டிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று மாலை (22 ஜூலை 2026) தலைமன்னாருக்கு வடக்கே உள்ள இலங்கை கடற்பரப்பில் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை (IMBL) தாண்டி சட்டவிரோத மீன்பிடித்தலில் ஈடுபட்டிருந்த இந்திய மீன்பிடி இழுவைப் படகு ஒன்றை சிறிலங்கா கடற்படை பறிமுதல் செய்ததுடன், ஒன்பது இந்திய கடற்றொழிலாளர்களையும் (9) கைது செய்தது.</p><p>50-க்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடி இழுவைப் படகுகள் இணைதீவுக்கு தெற்கே உள்ள இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடித்தலில் ஈடுபட்டிருந்தன.</p><h2>இந்திய மீன்பிடி இழுவைப் படகு பறிமுதல்</h2><p>

இந்த நடவடிக்கையின் போது, ​​ஒரு இந்திய மீன்பிடி இழுவைப் படகு பறிமுதல் செய்யப்பட்டது, மேலும் அதில் இருந்த ஒன்பது இந்திய கடற்றொழிலாளர்கள் காவலில் வைக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7008d40-5a81-40a4-a7a0-d81d6345c765/26-6a610bcea01f7.webp' /></p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களும், பறிமுதல் செய்யப்பட்ட இழுவைப் படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில்&nbsp;நீரியல் வள திணைக்கள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T18:28:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதி இளஞ்செழியனின் 1998 - முடிவுகளால் 2026இல் மீண்டும் அதிரும் செம்மணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-mass-graves-judge-ilancheliyan-tamils-1784743346"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-mass-graves-judge-ilancheliyan-tamils-1784743346</id>
            <summary type="text">செம்மணி - சித்துபாத்தி பகுதியில் நீதிமன்ற அனுமதியுடன் தீவிர அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளில் இதுவரை நூற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி - சித்துபாத்தி பகுதியில் நீதிமன்ற அனுமதியுடன் தீவிர அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளில் இதுவரை நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. </p><p>இந்நிலையில்,&nbsp;&nbsp;ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் உள்ளிட்ட பல உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர்,&nbsp;செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இடம்பெற்று வரும் ஆய்வு நடவடிக்கைகளை பார்வையிட சென்றிருந்தனர்.&nbsp;</p><p>அதேநேரம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதிகளையும் நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுவையும் பெற்றுக்கொண்டனர்.</p><p>ஈழத்தமிழ் மக்கள், தாங்கள் நீண்டகாலமாக சுமந்து வரும் இந்த அவலத்திற்கு சர்வதேச நீதி கோரி நிற்கின்றனர். இவ்வாறிருக்கையில் இந்த உயர்மட்ட அதிகாரிகளின் வருகை நீதிக்கு வழிவகுக்குமா என்ற கேள்வியை இங்கு எழுப்புகின்றது.&nbsp;</p><p>இது உள்ளிட்ட பல முக்கிய தகவல்களை ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/JyFA36TF8eY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T18:25:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சனி வக்கிர பெயர்ச்சி: ஜூலை 27 முதல் ரிஷப ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்ட பலன்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sani-vakra-peyarchi-rishabam-rasi-palangal-1784734483"></link>
            <id>https://manithan.com/article/sani-vakra-peyarchi-rishabam-rasi-palangal-1784734483</id>
            <summary type="text">நவ கிரங்களில் சனி பெயர்ச்சிக்கு ஜோதிடத்தில் மிகுந்த முக்கியத்துவம் உண்டு. காரணம் சனி ஒருவருடைய பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப பாரபட்சம் இன்றி பலன் கொடுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவ கிரங்களில் சனி பெயர்ச்சிக்கு ஜோதிடத்தில் மிகுந்த முக்கியத்துவம் உண்டு. காரணம் சனி ஒருவருடைய பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப பாரபட்சம் இன்றி பலன் கொடுக்கும் நீதியின் தேவன்.&nbsp;</p><p>தற்போது மீன ராசியில் சஞ்சரித்து வரும் சனி பகவான், வரும் ஜூலை 27 முதல் வக்கிர பெயர்ச்சி அடைகிறார். இந்த நிலை டிசம்பர் 11 வரை நீடிக்கும். இந்த காலத்தில் குறிப்பாக&nbsp; ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் மற்றும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fe48940-9280-4bb0-ba8e-7a61430136af/26-6a60e7c912e5c.webp' /></p><h2>ரிஷப ராசிக்கான சிறப்பு பலன்கள்</h2><p>
ஒன்பது கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரும் கிரகம் சனி. சனி ஒரு பாவக் கிரகமாகக் கருதப்படுகிறார். குறிப்பிட்ட காலங்களில் சனி பின்னோக்கி நகர்வது போலத் தோன்றும். இதுவே சனி வக்கிர பெயர்ச்சி எனப்படுகிறது. இந்த காலத்தில் சனியின் கடுமையான தாக்கம் ஓரளவு குறையும். அதனால் நல்ல பலன்கள் அதிகமாகவும், சிரமங்கள் குறைவாகவும் இருக்கும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது.</p><p>ரிஷப ராசியினருக்கு சில பிரச்சனைகள் வந்தாலும், அவற்றின் மூலம் நல்ல பலன்களும் கிடைக்கும். உங்களுக்கு பாக்கியாதிபதியாக இருக்கும் சனி பகவான் பல நன்மைகளை வழங்குவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1d6a1ef-f659-4fb4-a75b-12b73f158c63/26-6a60e7c9b874c.webp' /></p><p> </p><p>தற்போது லாப ஸ்தானத்தில் இருக்கும் சனி வக்கிரமாக இருப்பதால் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். குருவின் பார்வையும் இருப்பதால் வாழ்க்கையில் பல ஏற்றங்கள் கிடைக்கும்.
</p><p>
குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். உறவுகள் மேம்படும். துணைவர், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து பரிசுகள் அல்லது மகிழ்ச்சியான அனுபவங்கள் கிடைக்கும்.</p><p>

காதல், திருமணம் மற்றும் கல்வி
காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் சிறிய கருத்து வேறுபாடுகள் வரலாம். ஆனால் பிரிந்திருக்கும் தம்பதிகள் மீண்டும் ஒன்று சேரும் வாய்ப்பும் உருவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89062fab-6989-4661-ba99-b4f07d887c4a/26-6a60e7ca68bde.webp' /></p><p></p><p>

மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு நல்ல கல்லூரி அல்லது விரும்பிய படிப்பில் சேரும் வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்கள் நுழைவுத் தேர்வில் வெற்றி பெறலாம். </p><p>படிப்பை முடித்தவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.

இளையவர்கள் காதல் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.</p><p> அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு தேர்ச்சியும், அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.</p><p>லாப ஸ்தானத்தில் சனி இருப்பதால் வாழ்க்கைத் தரம் மேம்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். உங்கள் வசதிக்கேற்ற நிலம் அல்லது சொத்து வாங்கும் வாய்ப்பு உருவாகும். மொத்தத்தில் சனி வக்ர பெயர்ச்சி ரிஷப ராசியினருக்கு பொற்காலமாக அமைய போகின்றது.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T18:25:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கியூபெக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/man-wanted-for-quebec-murder-is-arrested-1784741797"></link>
            <id>https://canadamirror.com/article/man-wanted-for-quebec-murder-is-arrested-1784741797</id>
            <summary type="text">&amp;nbsp;பிரிட்டிஷ் கொலம்பியாவில் கைது 
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர், பல்வேறு காவல்துறை அமைப்புகளின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பிரிட்டிஷ் கொலம்பியாவில் கைது 
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர், பல்வேறு காவல்துறை அமைப்புகளின் கூட்டு நடவடிக்கையின் மூலம் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் பர்னபி நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>2022 மே 11 அன்று மொன்றியல் நகரில் செபாஸ்டியன் ஜிரூ (என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கடந்த ஜனவரி மாதம் மூவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
</p><p>அதில் இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், லீ வான் ஸ்மாத் ஜெர்மைன் என்பவர் மட்டும் தலைமறைவாக இருந்து வந்தார்.
விசாரணையின் போது, குற்றச்சாட்டுக்குட்பட்ட நபருக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் தொடர்புகள் இருப்பது மொன்றியல் காவல்துறையினரால் கண்டறியப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23e03d87-628a-4309-a0d7-0351d05bb3d7/26-6a60ffa75ae65.webp' /></p><p>
 இதையடுத்து, பொலிஸாரினால் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், புதன்கிழமை பர்னபி நகரிலுள்ள ஒரு வீட்டில் சோதனை உத்தரவு அமல்படுத்தப்பட்டபோது, தேடப்பட்டு வந்த நபர் அங்கு கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
</p><p>கைது செய்யப்பட்ட நபர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கியூபெக் மாகாணத்திற்கு அழைத்துச் செல்லப்படும் வரை ஆறு நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><p>அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொள்ள விரைவில் கியூபெக்கிற்கு அழைத்துச் செல்லப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T18:00:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[துபாயில் போதைப்பொருள் கும்பல்.. இலங்கையில் பணச் சலவை - அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள பேரதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drug-gang-dubai-money-laundering-sri-lanka-cid-1784741999"></link>
            <id>https://tamilwin.com/article/drug-gang-dubai-money-laundering-sri-lanka-cid-1784741999</id>
            <summary type="text">நாட்டில் தொடர்ந்து ஊழல் மற்றும்&amp;nbsp;பணச் சலவை குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவால் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றது.&amp;nbsp;இந்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தொடர்ந்து ஊழல் மற்றும்&nbsp;பணச் சலவை குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவால் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றது.&nbsp;</p><p>இந்நிலையில்,&nbsp;ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகவும் நிதி அமைச்சராகவும் பதவி வகித்த காலப்பகுதியும் இவற்றில் அடங்குவதால், இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p>இதற்கிடையில், 2023 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலருக்குக் கிட்டிய பணம் சட்டவிரோதமாக நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியிருந்தனர்.</p><p>பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி சுமார் 715 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக அனுப்பப்பட்டதாக அரசாங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p>மிகப்பெரிய நிதி மோசடி தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவு விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்றத்தின் பொதுநிதி தொடர்பான குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>இவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LONAVRmADOc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T17:58:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் குடும்ப பெண்ணின் வாழ்வை பறித்த சம்பவம் ; ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-woman-loses-life-in-tragic-incident-1784741714"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-woman-loses-life-in-tragic-incident-1784741714</id>
            <summary type="text">சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் - சுதுமலை வீதியில் நேற்று பகல் வேளையில், சுதுமலை நோக்கிப் பயணித்த கார் ஒன்று, அதே திசையில் சென்ற மிதிவண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் - சுதுமலை வீதியில் நேற்று பகல் வேளையில், சுதுமலை நோக்கிப் பயணித்த கார் ஒன்று, அதே திசையில் சென்ற மிதிவண்டி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p>குறித்த விபத்தில் படுகாயமடைந்த பெண்&nbsp; சுன்னாகம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e51b129d-866a-4cfe-9315-59f7115bc5b8/26-6a60ff53b1133.webp' /></p><h2>மேலதிக விசாரணை</h2><p>குறித்த விபத்தில் உயிரிழந்தவர் சுதுமலை, தாவடி பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>
</p><p>
சம்பவத்துடன் தொடர்புடைய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T17:50:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவையான ரவா அல்வா இப்படி செய்து பாருங்க.... இனி அடிக்கடி செய்வீங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/how-to-prepare-tasty-rava-halwa-for-evening-snack-1784740281"></link>
            <id>https://manithan.com/article/how-to-prepare-tasty-rava-halwa-for-evening-snack-1784740281</id>
            <summary type="text">சுவையான ரவா அல்வா நெய் சேர்த்து எப்படி செய்வது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.அல்வாரவையை கொண்டு மாலை நேர சிற்றுண்டிக்கு சுவையான அல்வா எவ்வாறு செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவையான ரவா அல்வா நெய் சேர்த்து எப்படி செய்வது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.</p><h2>அல்வா</h2><p>ரவையை கொண்டு மாலை நேர சிற்றுண்டிக்கு சுவையான அல்வா எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்த கொள்வோம்.</p><p>பொதுவாக வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களது ஏதாவது திண்பண்டம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகள் என்றால் மாலை நேரத்தில் அவர்களுக்கு பிடித்தமான சிற்றுண்டி இருக்க வேண்டும்.
</p><p>
இங்கு அரை கப் ரவையை கொண்டு பிரமாதமான அல்வா எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/147fdfc5-9964-41cf-b2ec-c4e3929a6523/26-6a60fd82dc285.webp' /></p><h2>தேவையான பொருள்கள்</h2><p>ரவை-1கப்</p><p>பால்-2 கப்</p><p>முந்திரி-தேவையான அளவு</p><p>உலர் திராட்சை-தேவையான அளவு</p><p>நெய்-தேவையான அளவு</p><p>வெல்லம்- 2 முதல் 3கப்&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/145a73d8-4f1b-4e03-8c8d-ac0622798a3a/26-6a60fe885c9f9.webp' /></p><h2>செய்முறை</h2><p>முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு நெய் சேர்த்து அதில் முந்திரி, உலர் திராட்சை சேர்த்து நன்கு வதக்கவும்.</p><p>இதை ஒரு தட்டில் மாற்றி வைக்க வேண்டும். பின் அதே கடாயில் நாம் எடுத்த வெல்லம் சேர்த்து நன்கு வதக்கவும், பின் அதில் ஏலக்காயை பொடிசாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5dd9542-5919-4b36-9e02-9908283f3968/26-6a60fe89472fb.webp' /></p><p>பின் இத்துடன் தண்ணீர் சேர்க்கவும். ரவையின் அளவு பொறுத்து தண்ணீர் சேர்க்கவும். இவை கொதிக்கும் நேரத்தில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்த ரவை மற்றும் பால் சேர்த்து நன்கு கிளறி விடவும்.</p><p>பின் இதை நாம் அடுப்பில் கொதிக்க வைத்த தண்ணீருடன் சேர்த்து கிளறி விடவும். இவை சரியான பதத்திற்கு வந்தவுடன் நாம் வதக்கி வைத்த முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து கிளறி விட்டு இறக்கினால் சுவையான ரவை அல்வா ரெடி.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp;&nbsp;<br></i></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T17:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி அரேபியாவுடன் அமெரிக்கா அணு ஒப்பந்தம் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-saudi-nuclear-deal-for-civilian-power-1784741193"></link>
            <id>https://news.lankasri.com/article/us-saudi-nuclear-deal-for-civilian-power-1784741193</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா இடையே புதிய அணு ஒப்பந்தம் அறிவிக்கப்பட உள்ளது.இந்த ஒப்பந்தத்தின் மூலம் சவுதி அரேபியாவுக்கு முதன்முறையாக குடிமக்கள் பயன...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா இடையே புதிய அணு ஒப்பந்தம் அறிவிக்கப்பட உள்ளது.</p><p>இந்த ஒப்பந்தத்தின் மூலம் சவுதி அரேபியாவுக்கு முதன்முறையாக குடிமக்கள் பயன்பாட்டிற்கான அணு ஆற்றல் திட்டங்களை உருவாக்க அனுமதி கிடைக்கிறது.
</p><p>
அமெரிக்க நிறுவனங்கள் சவுதி நிலப்பரப்பில் அணு மின் நிலையங்களை இயக்கும் வகையில் ஒப்பந்தம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் 30 ஆண்டுகள் நீடிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/126a0e6e-d0ed-456f-9e90-366815c7abba/26-6a60fd4ae6f05.webp' /></p><p>சவுதி அரேபியாவுக்கு தானாகவே யுரேனியத்தை செறிவூட்டும் (enrich) அதிகாரமும் வழங்கப்படலாம் என அறிக்கைகள் கூறுகின்றன.
</p><p>
இது, 2009-ல் அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்திலிருந்து மாறுபட்டதாகும். அப்போது அமீரகத்திற்கு தானாக எரிபொருள் தயாரிக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
</p><p>
இந்நிலையில், இஸ்ரேல் உள்ளிட்ட சில நாடுகள் இந்த ஒப்பந்தம் சவுதி அரேபியாவுக்கு எதிர்காலத்தில் அணு ஆயுதம் உருவாக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்று கவலை தெரிவித்துள்ளன. </p><p>எனினும், அமெரிக்கா இந்த ஒப்பந்தம் முழுக்க குடிமக்கள் பயன்பாட்டிற்காக மட்டுமே என வலியுறுத்துகிறது.</p><p></p><p>2008-ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா-சவுதி இடையே அணு ஆற்றல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. பல தடைகள் இருந்தபோதிலும், தற்போது இரு நாடுகளும் வணிக ரீதியான ஒப்பந்தத்தில் இணைந்துள்ளன. </p><p>அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தம், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஆற்றல் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T17:24:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அக்காவின் கணவருடன் தகாத உறவு ; வருங்கால கணவருக்கு இளம்பெண் நிகழ்த்திய கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-woman-s-shocking-act-against-fianc-1784741020"></link>
            <id>https://jvpnews.com/article/young-woman-s-shocking-act-against-fianc-1784741020</id>
            <summary type="text">&amp;nbsp;அக்கா கணவர் மீது ஏற்பட்ட மோகத்தால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வருங்கால கணவரை கொன்ற இளம்பெண் கைது செய்யப்பட்டார்.


ஜார்க்கண்ட் மாநிலம்&amp;n...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;அக்கா கணவர் மீது ஏற்பட்ட மோகத்தால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வருங்கால கணவரை கொன்ற இளம்பெண் கைது செய்யப்பட்டார்.</p><p style="text-align: justify; ">


ஜார்க்கண்ட் மாநிலம்&nbsp; ஜமுவா சோக் பகுதியைச்சேர்ந்த இளம் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d753382e-0913-4c4e-9787-4db3e94f863c/26-6a60fc9e65790.webp' /></p><h2 style="text-align: justify;">கொடூரமாக&nbsp;கொலை </h2><p>
</p><p style="text-align: justify;">
இந்நிலையில்,இளம் பெண்ணுக்கும் அவரது சகோதரியின் கணவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
</p><p style="text-align: justify;">

எனவே தனக்கு திருமணம் நடந்து விட்டால் தனது அக்கா கணவருடன் இருக்க முடியாது என நினைத்து கள்ளக்காதலர்கள் இருவரும் சேர்ந்து எதிர்கால கணவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.
</p><p style="text-align: justify;">
அதன்படி இளம் பெண் தனது வருங்கால கணவர் பீகார் எல்லையோரத்தில் உள்ள பேலா வனப்பகுதிக்கு தனியாக வரும்படி அழைத்துள்ளார்.

இதை நம்பிய இளைஞன் குறிப்பிட்ட வனப்பகுதிக்கு சென்றுள்ளார்.</p><p style="text-align: justify;"></p><p> </p><p style="text-align: justify;">அங்கு ஏற்கனவே இவருக்காக காத்திருந்த அவர்கள் இருவரும் இணைந்து, குறித்த இளைஞனை கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளனர். 

பின்னர்,இருவரும் நீரஜின் உடலை வனப்பகுதியில் விட்டுச்சென்றுள்ளனர். </p><p style="text-align: justify;">

இதற்கிடையே காணாமல் போனதை அறிந்து அவரதுகுடும்பத்தினர் பொலிஸில் புகார் அளித்துள்ளனர்.
</p><p style="text-align: justify;">
விசாரணைகளின் பின்னர் பொலிஸார் கள்ளக்காதலர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-22T17:24:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் மோசமான குற்றச்சாட்டில் கைதான இலங்கையர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sickkids-doctor-arrested-on-child-sexual-abuse-1784740555"></link>
            <id>https://canadamirror.com/article/sickkids-doctor-arrested-on-child-sexual-abuse-1784740555</id>
            <summary type="text">கனடாவில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இலங்கையர் ஓருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் முன்னணி குழந்தைகள் மருத்துவமனையான சிக்கிட்ஸ் மருத்துவமனயைில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இலங்கையர் ஓருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
கனடாவின் முன்னணி குழந்தைகள் மருத்துவமனையான சிக்கிட்ஸ் மருத்துவமனயைில் பணியாற்றி வந்த மருத்துவர் ஒருவர், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பான ஆபாசப் பொருட்களை வைத்திருந்ததுடன், அவற்றை அணுகியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் டொராண்டோ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
டொராண்டோ காவல்துறையின் இணைய சிறுவர் துஸ்பிரயோக தடுப்புப் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68318c47-913c-4551-8988-43cb36a5fa29/26-6a60facd1e013.webp' /></p><p>
கடந்த ஜனவரி மாதம் மின்னணு சாதனம் ஒன்றின் மூலம் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து விசாரணை தொடங்கப்பட்டது.
</p><p>அதனைத் தொடர்ந்து, கடந்த பெப்ரவரி மாதம் சிக் கிட்ஸ் மருத்துவமனை மற்றும் சந்தேகநபரின் தனியார் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டு, பணியிட கணினி உட்பட பல மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>
இந்த வழக்கில், டொராண்டோவைச் சேர்ந்த 44 வயதான டிலான் திஸநாயக்க என்பவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.</p><p>
சிறுவர் பாலியல் துஷ்பிரயோக மற்றும் சுரண்டல் தொடர்பான ஆபாசப் பொருட்களை வைத்திருந்தது, அவற்றை அணுகி பயன்படுத்தியது, ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
</p><p>இக்குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. கைது செய்யப்பட்ட மருத்துவர் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
</p><p>எனினும், மருத்துவராக அவர் மேற்கொண்ட பணிகளுக்கும் இந்த குற்றச்சாட்டுகளுக்கும் தொடர்புடைய எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை" என டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>விசாரணை தொடங்கிய தகவல் கிடைத்த உடனேயே, குற்றச்சாட்டுக்கு உள்ளான மருத்துவர் பணியிலிருந்து உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T17:18:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தினமும் பால் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கீங்களா? அதிர்ச்சி உண்மை இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/daily-drink-milk-habit-health-problem-1784737616"></link>
            <id>https://manithan.com/article/daily-drink-milk-habit-health-problem-1784737616</id>
            <summary type="text">தினமும் பால் குடிப்பது நாம் ஆரோக்கியமான நினைத்துக் கொண்டாலும், அளவுக்கு அதிகமாக குடிப்பதால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.பால்பொதுவா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தினமும் பால் குடிப்பது நாம் ஆரோக்கியமான நினைத்துக் கொண்டாலும், அளவுக்கு அதிகமாக குடிப்பதால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.</p><h2>பால்</h2><p>பொதுவாகவே பால் அருந்துவது குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரின் ஆரோக்கியத்திற்கும் அதிக நன்மையினை அளிக்கின்றது.</p><p>கால்சியம் சத்துக்கள் நிறைந்த பால் மனித எலும்பு ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கின்றது. பாலில் உள்ள புரதச்சத்து தசை வளர்ச்சிக்கு உதவியாக இருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3d1a0a6-3f40-49ee-bbd8-b823129e541e/26-6a60ef52364e7.webp' /></p><p>சத்தாண உணவில் ஒன்றாக இருக்கும் பால் அனைத்து வயதினருக்கு ஏற்றதாக இருந்து வந்தாலும், இதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் சில பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.</p><p></p><p>அவ்வாறு மாட்டுப்பால் அதிகமாக எடுத்துக் கொண்டால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை இங்கு காணொளியில் தெரிந்து கொள்வோம்.</p><p><iframe width="357" height="634" src="https://www.youtube.com/embed/apWrcv4Gu8Y" title="அளவுக்கு அதிகமாக பால் குடித்தால் ஆரோக்கியமா? ஆபத்தா? ஓர் அதிர்ச்சி உண்மை! | shorts" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T17:05:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீன நாட்டவரிடம் பணம் கொள்ளை : 24 மணிநேர விசாரணை வளையத்துள் முன்னாள் அமைச்சரின் மகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/former-ministers-son-under-24-hour-investigation-1784738732"></link>
            <id>https://ibctamil.com/article/former-ministers-son-under-24-hour-investigation-1784738732</id>
            <summary type="text">சீன நாட்டவர் ஒருவரிடமிருந்து ரூ. 20 மில்லியன் கொள்ளையடித்தது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுதா ஜனதித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீன நாட்டவர் ஒருவரிடமிருந்து ரூ. 20 மில்லியன் கொள்ளையடித்தது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுதா ஜனதித் பண்டாரபாயவை, 24 மணி நேரம் காவலில் வைத்து விசாரிக்க மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு கோட்டை நீதவான் பாசன் அமரசேன இன்று (22) அனுமதி வழங்கினார்.
</p><p>
இச்சம்பவம் தொடர்பாக நேற்று (21) கொள்ளுபிட்டிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.</p><h2>மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் விசாரணை</h2><p>காவல்துறை மா அதிபரின் அறிவுறுத்தல்களின் பேரில், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கொள்ளுபிட்டிய காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f9ab297-546c-42a4-b453-e5f91acd779e/26-6a60f7c1d4853.webp' /></p><p>
</p><p>
கொள்ளையைத் திட்டமிட்ட பிரதான சந்தேக நபர் அனுதா பண்டார என்பது இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் நீதிமன்றத்தில் தெரிவித்தது</p><p></p><h2>24 மணி நேர காவல் உத்தரவு</h2><p>&nbsp;கொள்ளை நடந்த நேரத்தில் சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் இருந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c52c0512-f888-4a22-992f-a683e8020763/26-6a60f7c282243.webp' /></p><p>

அதன்படி, சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைக்காக சந்தேக நபரை காவலில் வைக்க வேண்டும் என புலனாய்வு அதிகாரிகள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிபதி, இந்த 24 மணி நேர காவல் உத்தரவை வழங்கினார்.&nbsp; </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T17:04:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[&quot;கேள்வி கேட்டால் லத்தியால் பதில் சொல்லாதீங்க&quot; - மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/pradeep-ranganathan-angery-post-abot-neet-issue-1784737004"></link>
            <id>https://manithan.com/article/pradeep-ranganathan-angery-post-abot-neet-issue-1784737004</id>
            <summary type="text">நீட் தேர்வுக்கு எதிராக மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வரும் சூழலில், மாணவர்கள் மீது நடத்தப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீட் தேர்வுக்கு எதிராக மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வரும் சூழலில், மாணவர்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தடியடி மற்றும் தாக்குதல் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. </p><p>இந்த விவகாரத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனங்களையும் கருத்துகளையும் சமூக வலைதளங்கள் வாயிலாக பதிவு செய்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea542df8-e432-4b33-9247-33bdb76a676c/26-6a60ef5f8d02e.webp' /></p><p>

மாணவர்களுக்கு ஆதரவாக ஏற்கனவே பல பிரபலங்கள் குரல் கொடுத்துள்ள நிலையில், தற்போது நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதனும் இந்த விவகாரம் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p></p><h2>பிரதீப் ரங்கநாதன் ஆவேசம்</h2><p>
</p><p>
தனது சமூக வலைதளப் பதிவில், "கேள்வி கேட்டால் லத்தியால் பதில் சொல்லாதீங்க" என்று ஆவேசமாகக் குறிப்பிட்ட அவர், மாணவர்கள் மீது வன்முறையைப் பயன்படுத்துவதை மறைமுகமாகக் கண்டித்துள்ளார்.</p><p>பிரதீப் ரங்கநாதனின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அவரது கருத்துக்கு ஆதரவாகவ இணையவாசிகள் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருவதால், அந்த பதிவு தற்போது வைரலாகியுள்ளது.</p><p></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Don’t answer questions with lathis.<a href="https://x.com/hashtag/Neet?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Neet</a></p>&mdash; Pradeep Ranganathan (@pradeeponelife) <a href="https://x.com/pradeeponelife/status/2079899979804807383?ref_src=twsrc%5Etfw">July 22, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T17:00:00+00:00</updated>
        </entry>
    </feed>
