<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-22T19:45:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் கோர சம்பசம்... இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட ஏழு பேர் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/middlesbrough-horror-crash-7-killed-1787427759"></link>
            <id>https://news.lankasri.com/article/middlesbrough-horror-crash-7-killed-1787427759</id>
            <summary type="text">Two officers among 7 dead after police chase: காவல்துறையின் துரத்தல் மற்றும் எதிர் திசையில் வாகனம் மோதிய விபத்தில் 2 அதிகாரிகள் உட்பட 7 பேர் மரணமடைந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Two officers among 7 dead after police chase: காவல்துறையின் துரத்தல் மற்றும் எதிர் திசையில் வாகனம் மோதிய விபத்தில் 2 அதிகாரிகள் உட்பட 7 பேர் மரணமடைந்தனர்.
</p><p>மிட்ல்ஸ்பரோ (Middlesbrough) அருகே A66 சாலையில், துரத்தல் நடவடிக்கையைத் தொடர்ந்து காவல் துறை வாகனமும் வோக்ஸ்வேகன் பாசாட் காரும் மோதிக்கொண்ட விபத்தில் ஏழு பேர் மரணமடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78eb3d9e-82e2-441a-b232-040d43700958/26-6a89fbb163eeb.webp' /></p><p>
</p><p>மிட்ல்ஸ்பரோவிற்கு அருகிலுள்ள சவுத் பேங்க் பகுதியில், ஒரு காவல்துறை வாகனத்திற்கும், தவறான திசையில் வந்த வோக்ஸ்வேகன் வாகனத்திற்கும் இடையே விபத்து ஏற்பட்டதாக கிளீவ்லேண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது. </p><p>தகவல் அறிந்து அதிகாலை 3.40 மணிக்கு மிட்ல்ஸ்பரோ அருகே உள்ள சவுத் பேங்கிற்கு அவசர சேவைப் பிரிவினர் விரைந்தனர், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இரண்டு வாகனங்களிலும் இருந்த அனைவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டனர்.</p><p></p><p> </p><p>இன்று காலை நிகழ்ந்த விபத்தில் மரணமடைந்த இரண்டு காவலர்கள், 37 வயதான மேத்யூ பிளேட்ஸ் மற்றும் 38 வயதான டாம் க்ளஃப் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிளீவ்லேண்ட் காவல் துறைத் தலைவர் விக்டோரியா ஃபுல்லர் இன்று மதியம் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/662642f1-a3c9-46f8-88eb-5147d492226d/26-6a89fbb216af4.webp' /></p><p> </p><p>காவல்துறை வாகனம் சரியான திசையில் சென்று கொண்டிருந்ததாகவும், அதில் பணியில் இருந்த இரண்டு அதிகாரிகள் இருந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. </p><p>மேலும், காவல்துறை நடத்தைக்கான சுதந்திர அலுவலகத்தால் அந்த விபத்து குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றை அதிகாரிகள் கண்டறிந்து துரத்தத் தொடங்கியதாகவும், பின்னர் அந்த வாகனம் A66 சாலைக்குச் சென்று காவல் துறை வாகனம் ஒன்றின் மீது மோதியதாகவும் நம்பப்படுவதாக IOPC தெரிவித்துள்ளது. </p><p>நார்மன்பி சாலைக்கும் சர்ச் லேனுக்கும் இடைப்பட்ட பகுதியில் A66 சாலை சிறிது காலத்திற்கு மூடப்பட்டிருக்கும் என்று கிளீவ்லேண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cab0251-30ee-413a-b636-099b38b9bdcb/26-6a89fbb2bd6fa.webp' /></p><p> </p><p>பயங்கரமான விபத்து ஒன்றில் இரண்டு காவலர்கள் மற்றும் ஐந்து பொதுமக்கள் மரணமடைந்த செய்தியைக் கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்ததாக பிரதமர் ஆன்டி பர்னாம் தெரிவித்துள்ளார். </p><p>இதனிடையே, A66 சாலையில் ஏழு பேர் மரணமடைந்த விபத்து மிகவும் துயரமானது என்று உள்விவகாரச் செயலாளர் ஷபானா மஹ்மூத் கூறியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-22T19:40:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அதி உயர் மின் கம்பத்தில் மோதிய கார் ; தூக்க கலக்கதால் விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/car-crashes-into-high-voltage-power-pole-in-jaffna-1787426762"></link>
            <id>https://jvpnews.com/article/car-crashes-into-high-voltage-power-pole-in-jaffna-1787426762</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை பிரதான வீதியில் வேகமாகச் சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாள்ளத்துற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று நேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை பிரதான வீதியில் வேகமாகச் சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாள்ளத்துற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று நேற்று (22) மதியம் இடம்பெற்றுள்ளது.
</p><p>


அராலிச் சந்தியை அண்மித்த பகுதியில் இருந்து யாழ் நோக்கி சென்ற குறித்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91700c56-993e-408b-a1ef-c012d90d72a8/26-6a89f8f9dc5d1.webp' /></p><h2>பெரும் சேதம்</h2><p>
</p><p>


விபத்துக்குள்ளான குறித்த கார் யாழ் வேலணைப் பகுதியை நோக்கி புதிதாக கட்டமைக்கப்பட்டுவரும் அதி உயர் மின் கம்பத்தில் மோதி பலத்த சேதங்களுக்குள்ளான நிலையில் பாரம் தூக்கியின் உதவியுடன் வெளியே எடுக்கப்பட்டிருந்தது.</p><p></p><p>



எனினும் குறித்த விபத்தின் போது எவருக்கும் பாரதூரமான விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரியவருவதுடன் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே&nbsp; விபத்துக்கு காரணம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T19:31:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் மக்கள் வழங்கிய தேர்தல் ஆணையை பறிக்கவே ‘பிரஜா சக்தி’ திணிக்கப்படுகிறதா.! செ. நிலாந்தன் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nilanthan-questions-prajashakthi-1787424822"></link>
            <id>https://ibctamil.com/article/nilanthan-questions-prajashakthi-1787424822</id>
            <summary type="text">

கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் அதிகாரங்களை புறக்கணித்து, மக்களால் தேர்தல் மூலம் தெரிவு செய்ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>

கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் அதிகாரங்களை புறக்கணித்து, மக்களால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படாத “பிரஜா சக்தி” குழுக்களின் அனுமதி மற்றும் பரிந்துரைகளை பெற வேண்டும் என்பதை கட்டாயப்படுத்துவதன் மூலம் அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலை உள்ளூராட்சி சபைகள் மீது திணிக்க அரசாங்கம் முயற்சிக்கின்றதா? என ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ.நிலாந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் மக்களால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரங்களை முற்றாக புறக்கணித்து, புதிதாக ‘பிரஜா சக்தி’ என்ற அதிகார மையத்தை உருவாக்கி அதன் அனுமதியை பெற்றால்தான் குறித்த அபிவிருத்தி திட்டத்தை மேற்கொள்ள முடியும் என எங்களுக்கு எழுத்து மூல அறிவுறுத்தல் விடுப்பது எந்த வகையான ஜனநாயகம்? இதற்கான சட்டபூர்வ அதிகாரம் என்ன என்பதை அரசாங்கம் வெளிப்படையாக மக்களுக்கு கூற வேண்டும்.</p><p>

கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள Local Authority Small Bridges Sustainable Improvement Project 2026–2029 தொடர்பான கடிதத்தில், 2027ஆம் ஆண்டுக்கான திட்ட முன்மொழிவுகளை சம்பந்தப்பட்ட பிரஜா சக்தி குழு மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் சம்மதத்துடன் சமர்ப்பிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>அதிகாரங்களை பறிக்க அரசாங்கம் சதி?</h2><p>
இதன் மூலம், மக்கள் வாக்களித்து தெரிவு செய்த பிரதேச சபை உறுப்பினர்களின் கருத்துக்கள் தீர்மானங்களை புறக்கணித்து அதற்கு மேலாக தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படாத ஒரு குழுவின் சம்மதம் தேவை என்ற நிலை உருவாக்கப்படுகிறது.</p><p>
 அப்படியானால் மக்கள் எதற்காக பிரதேச சபை உறுப்பினர்களைத் தெரிவு செய்தார்கள்?</p><p>தமிழ் மக்கள் கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்தின் அரசியல் நிலைப்பாட்டை புறக்கணித்து, தங்களது வாக்குகளின் மூலம் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தங்களுக்கு தேவையான மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab142107-b767-4504-af3c-997bffdc5438/26-6a89f7cb67a7b.webp' /></p><p>

 அந்த தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தினாலா, ‘பிரஜா சக்தி’ என்ற அமைப்பை எம் மீது திணித்து, மக்கள் தேர்தல் மூலம் எங்களுக்கு வழங்கிய அதிகாரங்களை பறித்தெடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறதா? என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது.</p><p>
பிரஜா சக்தியை மக்கள் சக்தியாக மாற்றி அதனை அபிவிருத்தி திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து துறைசார் விடயங்களிலும் ஆலோசனைகள்,பரிந்துரைகள் வழங்குவதோ அல்லது தவறுகளை சுட்டிக் காட்டுவதையோ நாங்கள் எதிர்க்கவில்லை கிராம மட்ட அமைப்புகளின் பங்களிப்பு அபிவிருத்தி திட்டங்களின் போது கட்டாயமானது தான். 
ஏற்கனவே பிரதேச சபையின் அதிகாரத்தின் கீழ் சனசமூக நிலைய கிராம மட்ட அமைப்புக்கள் உள்ளன, அதேபோல் பிரதேச செயலகத்தின் அதிகாரத்தின் கீழ் கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் அபிவிருத்தி சங்கம் உள்ளிட்ட ஏராளமான கிராம மட்ட மக்கள் அமைப்புக்கள் உள்ளன இவற்றை எல்லாம் புறக்கணித்து அரசாங்கம் தற்போது பிரஜா சக்தியை முதன்மைப் படுத்த காரணம் என்ன?</p><p>

அதுவும் மக்களால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு மாற்றாகவும், அவர்களுக்கு மேலான அதிகார மையமாகவும் அரசாங்கம் பிரஜா சக்தியை உருவாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>

பிரஜா சக்தியின் நிர்வாகத் தெரிவு முதல் அதில் உள்வாங்கப்படும் உறுப்பினர்கள் வரை அவர்கள் மக்களால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்கள் அல்ல.</p><p>

 அவர்களின் அரசியல் மற்றும் சமூகப் பின்னணி தொடர்பிலும் வெளிப்படைத்தன்மை இல்லை அவர்களின் தெரிவுகள் அனைத்தும் முழுக்க முழுக்க ஆளும் அரசியல் கட்சியின் பக்கச்சார்பான தெரிவுகளாக உள்ளது.</p><p>குறிப்பாக, அரசாங்கத்தை ஆதரிப்பவர்கள், கட்சி உறுப்பினர்கள் அல்லது தேர்தலில் மக்களிடம் வாக்கு கேட்டு தோல்வியடைந்தவர்கள் இவ்வமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.</p><p>
 மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல் சக்திகளை அரசாங்கத் திட்டங்களில் அதிகாரப்பூர்வ பங்கு வகிக்கும் வகையில் வேறு ஒரு பெயரில் மீண்டும் அதிகார மையமாக்கும் முயற்சியாகவே நாம் இதை பார்க்கின்றோம்.</p><p>
“மக்கள் நிராகரித்தவர்களை பிரஜா சக்தி மூலம் மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வருவதா அரசாங்கத்தின் நோக்கம்?”/

ஒரு தேர்தலில் மக்கள் ஒருவரை நிராகரித்தால், அந்த நிராகரிப்பை மதிப்பதே ஜனநாயகம்.</p><p>

 ஆனால் தேர்தலில் மக்கள் வழங்காத அதிகாரத்தை வேறு ஒரு குழுவின் ஊடாக வழங்கி, பின்னர் அந்தக் குழுவின் பரிந்துரைகளை மக்கள் பிரதிநிதிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தை உருவாக்குவது மக்களின் தேர்தல் தீர்ப்பை அரசாங்கம் புறக்கணிப்பதாக உள்ளது.</p><p>

இன்று அரசாங்கத்தின் பல்வேறு வேலைத்திட்டங்களில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி உறுப்பினர்கள் இணைக்கப்படுவதில்லை,
 அவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படுவதில்லை, கூட்டங்களுக்கு அழைக்கப்படுவதில்லை, ஆனால், அரச அதிகாரிகள் மற்றும் மத்திய அரச திணைக்களங்களை மட்டும் கொண்டு கிராம மட்ட அபிவிருத்தி தொடர்பான முடிவுகள் எடுக்கப்படுகின்றன.</p><p>

ஒரு கிராமத்தின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்றால், அந்தக் கிராம மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை புறக்கணித்துவிட்டு அந்தக் கிராமத்தின் வளர்ச்சியை யார் தீர்மானிக்கிறார்கள்?</p><p>

அரச அதிகாரிகள் தங்களது நிர்வாக மற்றும் தொழில்நுட்ப கடமைகளை செய்ய வேண்டும், மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் சேர்ந்து எடுக்கப்படும் முடிவுகளை நடைமுறைப்படுத்தலாம் அதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், அரச அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகளுக்கு மாற்றாக இருக்க முடியாது.</p><p>
செங்கலடி களுவன்கேணி சம்பவம் தொடர்பிலும் கேள்வி!

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத் தீர்மானத்தின் ஊடாக களுவன்கேணி கிராமத்தில் உள்ள ஐஸ் தொழிற்சாலைக்காக ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிதி தொடர்பில், அரச அதிகாரிகளுக்கோ, மக்கள் பிரதிநிதிகளுக்கோ அல்லது மாவட்ட அபிவிருத்திக் குழுவிற்கோ தெரியாமல், பின்னர் “பிரஜா சக்தியின் தீர்மானம்” என்ற அடிப்படையில் அந்த நிதி வீதி அபிவிருத்தித் திட்டத்திற்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படும் விடயம் பிரஜா சக்தி அமைப்பின் அதிகாரம் குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது.</p><p>

இது உண்மையாக இருந்தால், ஒரு மாவட்ட அபிவிருத்திக் குழு தீர்மானித்த நிதி ஒதுக்கீட்டை மாற்றும் அதிகாரத்தை பிரஜா சக்திக்கு யார் வழங்கியது?</p><p>
அரச அதிகாரிகளுக்குத் தெரியாமல், மக்கள் பிரதிநிதிகளுக்குத் தெரியாமல், மாவட்ட அபிவிருத்திக் குழுவுக்குத் தெரியாமல் ஒரு குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் அபிவிருத்தி நிதியை மாற்ற முடியுமா?</p><p>
இவ்வாறு நடந்திருந்தால், மட்டக்களப்பு மாவட்டத்தில் இனிமேல் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் பிரஜா சக்திதான் தீர்மானிக்கப் போகிறதா என்ற கேள்வி எழுகிறது?
அப்படியானால் மக்கள் தேர்தலில் தெரிவு செய்த உள்ளூராட்சி சபைகளும், மக்கள் பிரதிநிதிகளும், மாவட்ட அபிவிருத்திக் குழுக்களும் எதற்காக?</p><p>

இந்தக் கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் கூற வேண்டும்.

நாங்கள் பிரஜா சக்திக்கு எதிரானவர்கள் அல்ல. பிரஜா சக்தியை உண்மையான மக்கள் சக்தியாக மாற்றி, அனைத்து சமூகங்களின் கருத்துக்களையும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் உள்வாங்கி சமமாக அனைவரும் இணைந்து பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் மூலம் செயற்பட்டால் அதனை நாம் வரவேற்போம்.</p><p>

ஆனால், மக்களால் புறக்கணிக்கப்பட்ட அரசியல் சக்திகளை ஒன்றிணைத்து, அவர்களை ஒரு புதிய அமைப்பின் ஊடாக அதிகார மையமாக உருவாக்கி, தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரத்தை பறிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>
“மக்களின் வாக்கு இருக்கும்போது, மக்களால் தெரிவு செய்யப்படாதவர்களின் அனுமதி எதற்கு?” என்பதே எங்களது அடிப்படைக் கேள்வி.</p><p>
எனவே, பிரஜா சக்தி அமைப்பிடம் அனுமதி பெற்றால் தான் குறித்த அபிவிருத்தி திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என்ற அதிகார திணிப்பு குறித்தும், அதன் சட்டபூர்வ அதிகாரம் குறித்தும், உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்துக்கு உட்பட்டு எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு பிரஜா சக்தியின் அனுமதி பெறப்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் இவை அனைத்தையும் ஜனாதிபதி உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தி உள்ளூராட்சி சபைகளின் ஜனநாயக சட்டவாக்க ஆட்சி முறையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>
தமிழ் மக்கள் தேர்தல் மூலம் வழங்கிய ஜனநாயக ஆணையை எந்தவொரு நிர்வாக நடைமுறையின் ஊடாகவும் பறிக்க அனுமதிக்க முடியாது.</p><p>

இந்த விடயங்களை ஜனாதிபதியின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்று, உள்ளூராட்சி சபைகளின் சட்டபூர்வ அதிகாரங்களையும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்கக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக மகஜர் ஒன்றை சமர்ப்பிக்கவும் தீர்மானித்துள்ளேன் என ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-22T19:28:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் கடலில் மூழ்கிய குடும்பம்: சிறுமியும் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/family-drowns-at-sea-in-the-uk-young-girl-dies-1787425231"></link>
            <id>https://tamilwin.com/article/family-drowns-at-sea-in-the-uk-young-girl-dies-1787425231</id>
            <summary type="text">பிரித்தானியாவில் அண்மையில் கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர்
உயிரிழந்த சம்பவத்தில், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் அண்மையில் கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர்
உயிரிழந்த சம்பவத்தில், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந்த 6 வயது சிறுமியும் சிகிச்சைப் பலனின்றி
உயிரிழந்துள்ளார்.
</p><p>
லண்டனைச் சேர்ந்த பாலஸ்தீன வம்சாவளி குடும்பத்தினர், இங்கிலாந்தில் நிலவும்
கடுமையான வெப்ப அலை காரணமாக ஷோரேஹாம் கடற்கரைக்குச் சென்றிருந்த போதே இந்த
விபத்து நிகழ்ந்துள்ளது.
</p><p>
இந்தச் சம்பவத்தில் சிறுமியின் தந்தையான ஹஸன் அல்-கவாஸ் (55), தாய் ஸீனா அலய்ன்
(37) மற்றும் 14 வயது சகோதரி சாரா ஆகியோர் செவ்வாய்க்கிழமை சம்பவ இடத்திலேயே
நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.</p><h2>உயிரிழப்பு</h2><p>

ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில்
அனுமதிக்கப்பட்டிருந்த 6 வயதான சாஜா அல்-கவாஸ் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக
பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0252d706-292c-4e81-9a3c-d29935c0ef43/26-6a89f4b66c443.webp' /></p><p>
</p><p>
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் போதிலும், இது
எவ்வித வெளிநபர்களின் தலையீடும் இன்றி இடம்பெற்ற விபத்து என
முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>மேலும், ஐரோப்பா முழுவதிலும் நிலவும் கடுமையான வெப்ப அலை காரணமாக
நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T19:18:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[முற்றாக முடக்கப்படும் ஷிரான் பாசிக்கின் வலையமைப்பு! சொத்துக்களை நிர்வகித்த ஆசிரியர் தப்பியோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shiran-basik-s-drug-and-business-network-revealed-1787421278"></link>
            <id>https://ibctamil.com/article/shiran-basik-s-drug-and-business-network-revealed-1787421278</id>
            <summary type="text">



கொழும்பு மத்திய குற்றப் பிரிவின் காவலில் உள்ள முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக்கிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, அவரது போதைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>



கொழும்பு மத்திய குற்றப் பிரிவின் காவலில் உள்ள முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக்கிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, அவரது போதைப்பொருள் மற்றும் வணிக வலையமைப்புகள் பற்றிய பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>

இந்தத் தகவல்களின் அடிப்படையில், இந்த சட்டவிரோத கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்ட உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 4 சந்தேகநபர்களை வரும் நாட்களில் கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.</p><p>

பாசிக்கின் சட்டவிரோத சொத்துக்கள் ஒரு பிரபல மேலதிகவகுப்பு ஆசிரியரால் கட்டுப்படுத்தப்பட்டு வந்துள்ளதுடன், தற்போது அப்பகுதியை விட்டுத் தப்பியோடியுள்ள இந்தச் சந்தேகநபரைக் கைது செய்ய இன்டர்போல் உதவியுடன் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>தப்பியோடியுள்ள முக்கிய புள்ளிகள் </h2><p>
அத்துடன், இந்த வலையமைப்பின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரும் பாசிக்கின் நெருங்கிய தோழியுமான பெண் ஒருவர் தற்போது துபாயில் உள்ளார். அவரைக் கைது செய்ய கொழும்பு மத்திய குற்றப்பிரிவு துபாய் காவல்துறை சிறப்பு அறிவித்தல் அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97c9ad99-81e7-492d-a58b-22364f38f4ee/26-6a89e5b371269.webp' /></p><p>
</p><p>
மேலும், ஷிரான் பாசிக் பயன்படுத்திய கைபேசிகளின் மின்னணுத் தரவுகளை ஆய்வு செய்தபோது, அவருடன் நேரடி தொடர்பில் இருந்த சக்திவாய்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>

இந்நிலையில், சொத்துக்களைக் கட்டுப்படுத்திய குழு உட்பட இந்த வலையமைப்பின் முக்கிய புள்ளிகள் தப்பியோடியுள்ள போதிலும், பெறப்பட்ட மின்னணுத் தரவுகளின் அடிப்படையில் அனைத்து உறுப்பினர்களையும் விரைவில் கைது செய்ய முடியும் என காவல்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-22T19:11:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்தில் பொலிஸாரின் காருடன் மோதிய வாகனம் ; 07பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/vehicle-crashes-into-police-car-in-england-1787424843"></link>
            <id>https://canadamirror.com/article/vehicle-crashes-into-police-car-in-england-1787424843</id>
            <summary type="text">இங்கிலாந்தில் பொலிஸ் கார் மற்றும் வாகனம் மோதி கொண்டதில் 7 பேர் பலியாகி உள்ளனர்.
இங்கிலாந்தின் மிடில்ஸ்புரோ பகுதியருகே வோல்க்ஸ்வேகன் வாகனம் ஒன்றில் தவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்தில் பொலிஸ் கார் மற்றும் வாகனம் மோதி கொண்டதில் 7 பேர் பலியாகி உள்ளனர்.
</p><p>இங்கிலாந்தின் மிடில்ஸ்புரோ பகுதியருகே வோல்க்ஸ்வேகன் வாகனம் ஒன்றில் தவறான பாதையில் சிலர் பயணம் செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f722774d-800c-49a3-974f-ec06c828fad2/26-6a89f04ca2a0c.webp' /></p><p> </p><p>&nbsp;இதனால், அவர்களை பொலிசார் காரில் துரத்தி உள்ளனர். </p><p>இதனை கண்டதும் அந்த வாகனம் விரைவாக சென்றது.


இதன் போது பொலிசாரின் கார், வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. </p><p>&nbsp; சம்பவத்திற்கு ரெட்கார் தொகுதி எம்.பி.யான அன்னா டர்லே இரங்கல் தெரிவித்து உள்ளார். </p><p>இதுபற்றி விசாரணை நடந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-22T18:54:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[அசுர வேகத்தில் கோடீஷ்வரர்களாக மாறும் அநுர அரசாங்கத்தின் அமைச்சர்கள்! வெளியாகும் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ministers-who-became-millionaires-1787421887"></link>
            <id>https://tamilwin.com/article/ministers-who-became-millionaires-1787421887</id>
            <summary type="text">ஆறு மாதத்திற்கு ஒரு முறை அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாகத் தெரிவித்த அநுர அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் தற்போது அப்படி எந்த வாக்குறுதியும் வழங்கவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆறு மாதத்திற்கு ஒரு முறை அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாகத் தெரிவித்த அநுர அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் தற்போது அப்படி எந்த வாக்குறுதியும் வழங்கவில்லை என தப்பியோடப் பார்க்கின்றனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், அரசாங்கத்தைச் சேர்ந்த பல அமைச்சர்கள் இன்று அசுர வேகத்தில் கோடீஷ்வரர்களாக மாறி வருகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். </p><p>

மொட்டுக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>ஏமாற்றமடைந்த அரச ஊழியர்கள்</h2><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

மக்களுக்கு அழகான வாழ்க்கையைத் தரப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இன்று அவர்களின் வாழ்க்கையைச் சீரழித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c623f26-bae3-4258-beac-cbe4681af9ff/26-6a89e5c150213.webp' /></p><p> </p><p> 

விவசாயிகளின் நெல்லுக்கு, நியாயமான உத்தரவாத விலையை வழங்கி அவர்களைக் கௌரவிப்பதாகக் கூறியவர்கள், இன்று அவர்களின் சுயமரியாதையை அடியோடு அழித்துள்ளனர்.</p><p> </p><p>


அரச ஊழியர்களுக்கும் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றியுள்ளனர். ஆறு மாதத்திற்கு ஒரு முறை சம்பளத்தை அதிகரிப்பதாகக் கூறியவர்கள் இன்று அதனை மறுக்கின்றனர். </p><p> 


 ஜனாதிபதி அளித்த பொய் வாக்குறுதிகளை நம்பியே மக்கள் வாக்களித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ad27dd2-345b-4cbb-b233-890873552754/26-6a89e5c204887.webp' /></p><p> ஆனால் இன்று மக்கள் ஏமாற்றப்பட்டுள்ள அதேவேளையில், அரசாங்கத்தின் அமைச்சர்களும் உறுப்பினர்களும் மட்டுமே அசுர வேகத்தில் கோடீஸ்வரர்களாக உருவெடுத்துள்ளனர்.</p><p>

நாடாளுமன்றச் சலுகைகளை அனுபவிக்கமாட்டோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று நாடாளுமன்ற உணவுக்காக மட்டும் 80 சதவீதத்துக்கும் அதிகமான கூடுதல் செலவை மேற்கொண்டு வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T18:49:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் 1,749 பேரின் உயிரை பறித்த விபத்துக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/accidents-in-sri-lanka-claimed-1-749-lives-1787422924"></link>
            <id>https://jvpnews.com/article/accidents-in-sri-lanka-claimed-1-749-lives-1787422924</id>
            <summary type="text">நடப்பாண்டின் ஜனவரி முதலாம் திகதி முதல் வியாழக்கிழமை (20) வரை இலங்கையில் இடம்பெற்ற 1,654 மரண விபத்துகளில் சிக்கி 1,749 பேர் உயிரிழந்துள்ளதாகப் போக்குவர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நடப்பாண்டின் ஜனவரி முதலாம் திகதி முதல் வியாழக்கிழமை (20) வரை இலங்கையில் இடம்பெற்ற 1,654 மரண விபத்துகளில் சிக்கி 1,749 பேர் உயிரிழந்துள்ளதாகப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் டப்ளியூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify;">
இது குறித்து வெள்ளிக்கிழமை (21) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e445ddba-2005-499f-a0e9-d5a1494daead/26-6a89e8ce52745.webp' /></p><h2 style="text-align: justify; ">விபத்துகள்</h2><p>
</p><p style="text-align: justify; ">
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p style="text-align: justify; ">

இந்த விபத்துகள் காரணமாகக் கடுமையான காயங்களுக்குள்ளாகி 4,556 பேரும், சிறிய விபத்துகள் காரணமாக 7,295 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, 3,232 சொத்துச் சேதங்களும் பதிவாகியுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;">

மேலும், இந்த விபத்துகளில் உயிரிழந்தவர்களில் 617 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும், 576 பாதசாரிகளும், 139 வாகன ஓட்டுநர்களும், 173 பயணிகளும், 122 மோட்டார் சைக்கிள் பின் இருக்கை பயணிகளும் மற்றும் 119 மிதிவண்டி ஓட்டுநர்களும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-22T18:45:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடு அனுப்புவதாக பல மில்லியன் ரூபாய் மோசடி செய்த பெண்! அம்பலமான அதிச்சிகர பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/woman-arrested-for-defrauding-millions-1787423030"></link>
            <id>https://ibctamil.com/article/woman-arrested-for-defrauding-millions-1787423030</id>
            <summary type="text">தன்னை ஒரு விமானி என்று பொய் கூறி, வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக பல மில்லியன் ரூபாய் மோசடி செய்த 44 வயதுடைய பெண் ஒருவர் கொழும்பு மோசடி புலனாய்வுப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தன்னை ஒரு விமானி என்று பொய் கூறி, வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக பல மில்லியன் ரூபாய் மோசடி செய்த 44 வயதுடைய பெண் ஒருவர் கொழும்பு மோசடி புலனாய்வுப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
அதன்படி, சந்தேகநபரான பெண், புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>ஏமாற்றப்பட்ட பேருந்து உரிமையாளர்</h2><p> </p><p>

அனுராதபுரம் நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த இவர், ரத்மலான விமான நிலையத்தில் விமானியாகப் பணிபுரிவதாகக் கூறி பேருந்து உரிமையாளர் ஒருவரை ஏமாற்றியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00c6ad18-5418-4150-8d9e-72b383446804/26-6a89eb15126c0.webp' /></p><p>

பிலியந்தலையைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட பேருந்து உரிமையாளர் தனது பேருந்தை விற்று 6 மில்லியன் ரூபாய் வழங்கியது உட்பட, பல தடவைகளில் மொத்தம் 13.5 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை இந்தப் பெண்ணிடம் கொடுத்து ஏமாற்றம் அடைந்துள்ளார்.
</p><p>
பணத்தைப் பெற்றுக்கொள்ள போலி விமானப்படை சீருடையில் வந்த அப்பெண், பின்னர் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றதாக பாதிக்கப்பட்ட பேருந்து உரிமையாளர் கடந்த மே மாதம் காவல்துறையில் முறைப்பாடு அளித்ததை தொடர்ந்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.</p><h2>15 காவல்நிலையங்களில் முறைப்பாடுகள்</h2><p>
</p><p>
அதன்படி, குருநாகல் பகுதியில் வைத்து அந்தப் பெண்ணும் அவரது கணவர் எனக் கூறிக்கொண்ட நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db5e8ca3-3921-49b8-ab5d-362011872275/26-6a89eb1460791.webp' /></p><p>

இதற்கு முன்னரும் மாத்தறைப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் வெளிநாட்டு வேலை தருவதாகக் கூறி இவர் 2.2 மில்லியன் ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>
இதேவேளை, கொல்லுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டி உள்ளிட்ட 15 காவல் நிலையங்களில் இந்தச் சந்தேகநபருக்கு எதிராகப் பண மோசடி முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் மேலும் கண்டறியப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-22T18:32:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; ஜன்னல் வழி துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிகள்..! எழுப்பப்பட்டுள்ள கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-27-death-1787411716"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-27-death-1787411716</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் போது சிறைச்சாலை வாயிலின் சிறிய ஜன்னல் வழியே கைதிகளை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிகளுக்கு எதிராக இதுவரை நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் போது சிறைச்சாலை வாயிலின் சிறிய ஜன்னல் வழியே கைதிகளை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிகளுக்கு எதிராக இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு குற்றம்சாட்டியுள்ளது. </p><p>

அத்துடன் குறித்த அதிகாரிகளுக்கு எதிராக இதுவரை எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் என சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவரான சேனக பெரேரா கேள்வி எழுப்பியுள்ளார். </p><p>

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. </p><p>

இந்த நிலையில் நேற்றைய தினம் (21) குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>உண்மையான சிக்கல்</h2><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், நீர்கொழும்பு சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பான வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அங்கு உயிரிழந்த கைதிகளைக் கொலை செய்தது யார் என்பது தொடர்பான உண்மையான சிக்கல் எழுந்துள்ளது. 

ஏனெனில், உயிரிழந்த கைதிகளில் பெரும்பாலானோர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காரணமாகவே மரணமடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df3da57d-bfe9-4a8b-9842-22bb8320c7ea/26-6a89c94486c90.webp' /></p><p> எனவே, இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது யார்? அல்லது கைதிகளே தங்களைத் தாங்களே சுட்டுக்கொண்டார்களா? அப்படியில்லை எனில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் ஏன் இதுவரை கைது செய்யப்படவில்லை? போன்ற கேள்விகளை நாங்கள் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தோம்.</p><h2>சட்ட நடவடிக்கை</h2><p> </p><p>

அத்துடன், சிறைச்சாலை வாயிலின் சிறிய ஜன்னல் வழியே கைதிகளை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த அதிகாரிகளுக்கு எதிராக இதுவரை எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்? அவர்கள் நாட்டின் குற்றவியல் சட்டத்துக்கு உட்பட்டவர்கள் இல்லையா? என்பதையும் நாங்கள் நீதிமன்றத்தில் முன்வைத்தோம். </p><p>

தற்போது இடம்பெற்றுவரும் இந்த விசாரணைகளில் எந்தவொரு நடுநிலைமையையும் எங்களால் காண முடியவில்லை. கைதிகளை படுகொலை செய்த நபர்களுக்கு எதிராகவும் சட்டம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே நீதிமன்றில் நமது பிரதான கோரிக்கையாக இருந்தது என்றார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T18:18:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலத்தடி ஏவுகணை உற்பத்தி தளத்தை பார்வையிட்டார் ஈரான் தளபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-general-visits-missile-production-site-1787417792"></link>
            <id>https://ibctamil.com/article/iran-general-visits-missile-production-site-1787417792</id>
            <summary type="text">ஈரானிய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அலி அப்தொல்லாஹி,இன்று(22) சனிக்கிழமை நாடு பாதுகாப்புத் தொழில் தினத்தைக் கொண்டாடிய வேளையில், ஏவுகணைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அலி அப்தொல்லாஹி,இன்று(22) சனிக்கிழமை நாடு பாதுகாப்புத் தொழில் தினத்தைக் கொண்டாடிய வேளையில், ஏவுகணைகள் மற்றும் பாதுகாப்பு ஆயுதங்களைத் தயாரிக்கும் ஒரு நிலத்தடி தளத்தைப் பார்வையிட்டார் என அரை அரசு செய்தி நிறுவனமான தஸ்னிம் செய்தி வெளியிட்டது.</p><p>ஈரானின் பாதுகாப்புத் தொழில் தினத்துடன் ஒத்துப்போகும் வகையில், ஓகஸ்ட் 22 அன்று மேஜர் ஜெனரல் அப்தொல்லாஹி அந்த நிலத்தடி உற்பத்தி ஆலையைச் சுற்றிப் பார்த்தார்.</p><h2>பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்தி</h2><p> </p><p>மேலும், உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களையும் அவர் ஆய்வு செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cec0778b-e084-4cb4-889a-e22ccb34f320/26-6a89e56b2ee3b.webp' /></p><p>

இந்த ஆய்வின்போது, ​​ஈரானின் தற்காலிக பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் மஜித் இப்னு அல்-ரெஸா, ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியுடன் சென்றிருந்தார்ம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T18:07:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை ; சாரதிகளின் கவனத்திற்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-to-make-the-procedure-mandatory-1787421783"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-to-make-the-procedure-mandatory-1787421783</id>
            <summary type="text">எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களின் சாரதிகளும் பயணிகளும் பாதுகாப்புக் ஆசனப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களின் சாரதிகளும் பயணிகளும் பாதுகாப்புக் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">நேற்று (21) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b476c3b7-15e4-47c5-9331-123f2da412ca/26-6a89e45909866.webp' /></p><h2 style="text-align: justify; ">ரயில் பருவச்சீட்டு</h2><p style="text-align: justify; ">தனியார் துறை ஊழியர்களுக்காகவும் இணைய வழி ஊடாகத் ரயில் பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொடுக்கும் வசதியை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்</p><p style="text-align: justify; "> 

இதற்கமைய, ஒக்டோபர் மாதம் அளவில் எந்தவிதச் சிக்கல்களுமின்றி தனியார் துறை ஊழியர்களுக்கும் இந்த இணைய வழி ரயில் பருவச்சீட்டு வசதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

அரசாங்கத் துறை ஊழியர்களுக்காக இணையம் ஊடாகத் ரயில் பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. </p><p style="text-align: justify; ">

இதேவேளை, நாடு முழுவதும் உள்ள சாரதிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் நோக்கில் புதிய சட்ட விதிகளும் ஒழுங்குவிதிகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-22T18:04:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொங்கோவில் தீவிரமடையும் எபோலா: 16,000க்கும் அதிகமான தடுப்பூசிகள் அனுப்பி வைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ebola-intensifies-in-congo-over-16-000-vaccines-1787418798"></link>
            <id>https://tamilwin.com/article/ebola-intensifies-in-congo-over-16-000-vaccines-1787418798</id>
            <summary type="text">கொங்கோவில் மிக மோசமான எபோலா வைரஸ் பரவல் பதிவாகி வரும்
நிலையில், அந்நாட்டிற்கு 16,250 &#039;எர்வெபோ&#039; தடுப்பூசிகள் முதற்கட்டமாக அனுப்பி
வைக்கப்பட்டுள்ளன.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொங்கோவில் மிக மோசமான எபோலா வைரஸ் பரவல் பதிவாகி வரும்
நிலையில், அந்நாட்டிற்கு 16,250 'எர்வெபோ' தடுப்பூசிகள் முதற்கட்டமாக அனுப்பி
வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
உலக சுகாதார நிறுவனம் மற்றும் அதன் கூட்டாளி அமைப்புகள் இணைந்து
அறிவித்த 70,000 தடுப்பூசி அளவுகளில் இந்த முதற்கட்டத் தொகுதி வெள்ளிக்கிழமை
இரவு நாட்டின் தலைநகரான கின்சாசாவைச் சென்றடைந்துள்ளது.
</p><p>
எஞ்சிய தடுப்பூசிகள் வரும் வாரங்களில் நாட்டின் பிற பகுதிகளுக்கு
அனுப்பப்படவுள்ளன.</p><h2>தடுப்பூசிகள்</h2><p>
</p><p>
தற்போது பரவி வரும் 'புண்டிபுக்கியோ' வகை எபோலா வைரஸுக்கு அதிகாரப்பூர்வமாக
அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது சிகிச்சைகளோ இதுவரை கண்டறியப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e57c3939-24e9-4386-b3cd-abb36630ae15/26-6a89d8b043dc5.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், எர்வெபோ தடுப்பூசி ஓரளவிற்கு பாதுகாப்பை வழங்கக்கூடும் என
விலங்கு சோதனைகளின் ஆரம்பகட்ட தரவுகள் காட்டுவதாக உலக சுகாதார நிறுவனம்
தெரிவிப்பதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
</p><p>
கடந்த மே மாத நடுப்பகுதியில் இருந்து பரவி வரும் இந்த நோய்த்தொற்றினால் இதுவரை
5,300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 2,500 க்கும் மேற்பட்டோர்
உயிரிழந்துள்ளனர். இந்நோய்ப்பரவல் "அதிவேகமாக" தீவிரமடைந்து வருவதாக ஐக்கிய
நாடுகள் சபை எச்சரித்துள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T17:55:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோவால் புயலின் மையமாக மாறிய ஒரு தீவு மாகாணம்: இரண்டு வாரங்களில் இரண்டு புயல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/storm-moke-hawaii-el-nino-1787421447"></link>
            <id>https://news.lankasri.com/article/storm-moke-hawaii-el-nino-1787421447</id>
            <summary type="text">El Niño has taken down Hawaii’s hurricane force field: எல் நினோ காரணமாக அமெரிக்காவின் தீவு மாகாணமான ஹவாய் தற்போது புயல்களால் சூழ்ந்துள்ளது.
தொடர்ந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>El Niño has taken down Hawaii’s hurricane force field: எல் நினோ காரணமாக அமெரிக்காவின் தீவு மாகாணமான ஹவாய் தற்போது புயல்களால் சூழ்ந்துள்ளது.
</p><p>தொடர்ந்து இரண்டாவது வாரமாக, தீவிரமடைந்து வரும் வெப்பமண்டலப் புயல் ஒன்றின் நேரடி அச்சுறுத்தலுக்கு ஹவாய் இலக்காகியுள்ளது.</p><h2>எல் நினோவே காரணமாக</h2><p>
</p><p>கிழக்கு நேரப்படி அதிகாலை 5 மணி நிலவரப்படி, 'மோக்' (Moke) வெப்பமண்டலப் புயலானது ஹவாயின் ஹிலோ (Hilo) நகருக்குத் தென்கிழக்கே 545 மைல் தொலைவில் மையம் கொண்டிருந்தது; அப்போது அதன் அதிகபட்ச நிலையான காற்றின் வேகம் மணிக்கு 45 மைலாக இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4453a62c-78c2-47ff-a1b3-fe6ddfdfe2a2/26-6a89e3099a220.webp' /></p><p> </p><p>புயல் மணிக்கு 8 மைல் வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருந்தது. இது ஒரு வெப்பமண்டலப் புயலாகவே நீடிக்கும் என்றும், இதன் மையம் ஹவாய் தீவுகளின் பெரிய தீவுப் பகுதிக்கு (Big Island) வெகு தெற்கே கரையை கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது; </p><p>இருப்பினும், முந்தைய புயலிலிருந்து மீண்டு வரத் தொடங்கியுள்ள அப்பகுதிக்குக் கனமழையையும் பலத்த காற்றையும் கொண்டுவரும் அளவுக்கு இது நெருங்கி வரக்கூடும். </p><p>கடந்த வாரம், பிக் ஐலண்டின் தெற்கே மையம் கொண்டிருந்த லாலா சூறாவளி தீவிரமடைந்தது.
அந்தப் புயல் பலத்த மழையைக்கு காரணமானது, தீவின் காற்று வீசும் திசையில் சில இடங்களில் 3 அடிக்கும் அதிகமான மழை பொழிந்தது.</p><p></p><p> </p><p>இதனால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஆகியவை சிறிய கிராமங்களுடனான தொடர்பைத் துண்டித்ததுடன், வீடுகளை அழித்து, முக்கிய உள்கட்டமைப்புகளையும் சேதப்படுத்தின. </p><p>இந்தப் பேரழிவுக்குப் பெருமளவில் எல் நினோவே காரணமாக அமைந்துள்ளது. இயல்பான ஆண்டுகளில், ஹவாய் தீவுகள் வெப்பமண்டலப் புயல் மற்றும் சூறாவளியால் ஏற்படும் சேதங்களை மிகச் சிறப்பாகத் தவிர்ப்பதால், அத்தீவுகளைச் சுற்றி ஒரு சூறாவளி எதிர்ப்புப் பாதுகாப்பு வளையம் இருப்பது போன்றே உணர முடியும். </p><p>ஆனால், குளிர்ந்த கடல் நீரின் வடிவில் அமைந்திருந்த அந்தப் பாதுகாப்பு அரண் தற்போது இல்லாமலாகிவிட்டது. மேலும் குறிப்பாக, எல் நினோவானது ஹவாய்க்குக் கிழக்கிலும் தென்கிழக்கிலும் உள்ள கடல் வெப்பநிலையை அதிகரிக்க உதவுகிறது; இந்தப் பகுதிகளில்தான் இந்தப் புயல்கள் உருவாகி, பின்னர் அந்தத் தீவு மாகாணத்தை நெருங்குகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2593dde-58ce-420f-ba33-c1748bcda395/26-6a89e30a702bf.webp' /></p><p> </p><p>எல் நினோ இல்லாத ஆண்டுகளில், பசிபிக் பெருங்கடல் சூறாவளிகள் ஹவாய் தீவுகளை நோக்கி மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகரும்போது, ​​அவை தீவுகளை நெருங்க நெருங்கக் குளிர்ந்த கடல் நீரையையும், அதேவேளையில் பாதகமான மேல்மட்டக் காற்றுகளின் தீவிரத்தையும் எதிர்கொள்கின்றன.</p><p>
இக்காரணிகள் புயல்களை வலுவிழக்கச் செய்கின்றன; ஏனெனில், இத்தகைய புயல்கள் வெப்பமான கடல்நீரிலிருந்து ஆற்றலைப் பெறுகின்றன, மேலும் அவற்றைச் சுற்றியுள்ள மேல்மட்டக் காற்று ஒப்பீட்டளவில் பலவீனமாக இருக்கும்போது அவை தீவிரமடைகின்றன. </p><p>உருவாகி வரும் 'சூப்பர் எல் நினோ' இவ்விரு காரணிகளையும், குறிப்பாகப் பெருங்கடல் வெப்பநிலையை மாற்றியமைத்து வருகிறது.
லாலா சூறாவளி பிக் ஐலேண்டில் கரையைக் கடக்கும் நிலைக்கு மிக அருகில் வந்தது, ஆனால் அதன் மையம் தீவின் தெற்கு முனைக்கு அப்பால் கடற்பரப்பிலேயே நிலை கொண்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/280465ab-46f9-429d-8d9c-7702831a8887/26-6a89e30b2d572.webp' /></p><p> </p><p>இதன்மூலம், 1992-ல் கவாய் தீவை தென்மேற்கிலிருந்து பேரழிவுகரமான நான்காம் வகை சூறாவளி இனிகி தாக்கியதிலிருந்து, ஹவாய் மாகாணத்தில் சூறாவளி கரையைக் கடக்காத சாதனைப் பதிவு தொடர்கிறது. </p><p>இருப்பினும், குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்துவதற்கு புயல்கள் ஹவாய் தீவுகளில் கரையைக் கடக்க வேண்டிய அவசியமில்லை என்பதை லாலா புயல் நிரூபித்துள்ளது. </p><p>எல் நினோ, கிழக்கு மற்றும் மத்திய வெப்பமண்டல பசிபிக் பகுதிகளில் உருவாகும் புயல்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்கச் செய்கிறது. இதன் விளைவாக, அவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புயல்கள் ஹவாய்க்கு அருகில் பயணிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-22T17:54:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா உடனான போரில் வென்றது நாங்களே ; ஈரான் ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-president-we-won-the-war-against-america-1787420492"></link>
            <id>https://canadamirror.com/article/iran-president-we-won-the-war-against-america-1787420492</id>
            <summary type="text">அமெரிக்காவுடனான போரில் ஈரான் வெற்றி பெற்றதை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் தெரிவித்துள்ளார்.



இந்தப் போர் முடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடனான போரில் ஈரான் வெற்றி பெற்றதை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் தெரிவித்துள்ளார்.
</p><p>


இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்றும், உலக நாடுகள் ஈரானின் வெற்றியை அங்கீகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/293c0d81-780a-4043-88c9-d4db52f3ad95/26-6a89dfc04f9ea.webp' /></p><p>
</p><p>


இந்நிலையில், ஈரானின் அணுசக்தித் திட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருதல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையைத் திறத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு ஈரானை அடிபணிய வைக்கும் நோக்கில் பொருளாதார அழுத்தங்களை அதிகரிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார்.</p><p>



இதனிடையே, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ள நிலையில், மாற்று வழிகள் ஊடாக எரிபொருள் போக்குவரத்தை மேற்கொள்வது குறித்து பிரான்ஸ் மற்றும் சவூதி அரேபியா ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-22T17:43:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை காவல்துறையிடமிருந்து சான்றிதழ் பெறக் காத்திருப்போருக்கு முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-clearance-data-system-back-to-normal-1787419829"></link>
            <id>https://ibctamil.com/article/police-clearance-data-system-back-to-normal-1787419829</id>
            <summary type="text">

இலங்கை காவல்துறையின் சான்றிதழ் தரவுத் தொகுதி (Police Clearance data system) மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>

இலங்கை காவல்துறையின் சான்றிதழ் தரவுத் தொகுதி (Police Clearance data system) மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
இதனையடுத்து, காவல்துறை சான்றிதழ் அறிக்கைகளுக்கான விண்ணப்பங்களை வழக்கமான நிகழ்நிலை முறைமையின் மூலம் மீண்டும் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>நிகழ்நிலை முறைமை</h2><p>

குறித்த தரவுத் தொகுதியில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, விண்ணப்பதாரர்கள் தற்காலிகமாக clear.application@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f27c8360-4d77-421f-ae23-457032c07f1a/26-6a89de876e952.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதால், தற்காலிக மின்னஞ்சல் முறையைப் பயன்படுத்திய அனைத்து விண்ணப்பதாரர்களும் நிகழ்நிலை முறைமை மூலம் மீண்டும் விண்ணப்பித்து, தேவையான கட்டணங்களைச் செலுத்துமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-22T17:40:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேவை விளக்கமறியலில் வையுங்கள்! மனைவி ஜனாதிபதிக்கு கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-suresh-sallay-arrested-cid-anura-1787417944"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-suresh-sallay-arrested-cid-anura-1787417944</id>
            <summary type="text">குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ள சுரேஷ் சலேயின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், அவரது மனைவி எஸ்.பி. மனோரி சலே, ஜனாதிபதியிடம் அந...</summary>
            <content type="html"><![CDATA[<p>குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ள சுரேஷ் சலேயின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், அவரது மனைவி எஸ்.பி. மனோரி சலே, ஜனாதிபதியிடம் அநுரகுமார திசாநாயக்கவிடம் அவசர எழுத்துப்பூர்வ கோரிக்கையை முன்வைத்துள்ளார்.&nbsp;</p><p>அத்தோடு, தனது கணவரை&nbsp;குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பாமல் சிறைச்சாலைக்கு அனுப்புமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>விசாரணை என்ற பெயரில் சிஐடியினர்&nbsp;சுரேஷ் சலேவை கொடுமைப்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் அவருக்கு உயிர் ஆபத்து ஏற்படலாம் எனவும்&nbsp;மனோரி சலே சுட்டிக்காட்டினார்.</p><p>எனவே சுரேஷ் சலேவின் உடல்நிலைநிலையைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி இந்த விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும்&nbsp;மனோரி குறிப்பிட்டுள்ளார்.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை&nbsp; நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Na6vJ8cRq8s" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T17:38:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் கணவனுக்கு அரங்கேறிய பயங்கரம் ; விடிய விடிய காத்திருந்து மனைவி செய்த செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/family-man-muder-in-india-1787418371"></link>
            <id>https://jvpnews.com/article/family-man-muder-in-india-1787418371</id>
            <summary type="text">இந்தியாவின், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே குடும்பத் தகராறில் கணவனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மனைவி, கணவரின் சடலத்துடன் விடிய விடிய வீ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இந்தியாவின், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே குடும்பத் தகராறில் கணவனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மனைவி, கணவரின் சடலத்துடன் விடிய விடிய வீட்டில் காத்திருந்து பின்னர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; ">புதூர் பகுதியைச் சேர்ந்த 40 வயதான விவசாயி மதுப் பழக்கத்துக்கு அடிமையாக இருந்ததாகவும், இதனால் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/028f6e34-24fe-42f7-884a-2007988cb6b9/26-6a89d8ad81610.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;மது போதை</h2><p>
</p><p style="text-align: justify;">
இந்நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவு குறித்த நபர் மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p style="text-align: justify;">இதனால் ஆத்திரமடைந்த மனைவி , வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கணவரை கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p style="text-align: justify;">

இதில் படுகாயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது அவர்களது மூன்று குழந்தைகளும் நித்திரையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify;"></p><p>
</p><p style="text-align: justify;">
கணவர் உயிரிழந்த பின்னரும் மனைவி வீட்டிலேயே இருந்து, அவரது சடலத்தின் அருகில் விடிய விடிய காத்திருந்துள்ளார். பின்னர் அதிகாலையில் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
</p><p style="text-align: justify;">
பொலிஸாரிடம், கணவர் தினமும் மது அருந்திவிட்டு தகராறு செய்து வந்ததாகவும், இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்த நிலையில், அவரது தொல்லையை தாங்க முடியாமல் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும்&nbsp; தெரிவித்ததாக கூறப்படுகிறது.</p><p style="text-align: justify;"></p><p>
</p><p style="text-align: justify;">
இதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று குமாரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். </p><p style="text-align: justify;">மேலும், வழக்குப்பதிவு செய்து மனைவியை கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-08-22T17:13:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அனுரவிடம், நாமல் விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-urges-president-to-act-on-allegations-1787417333"></link>
            <id>https://tamilwin.com/article/namal-urges-president-to-act-on-allegations-1787417333</id>
            <summary type="text">ஜனாதிபதி செயலாளர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி செயலாளர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>குளியாப்பிட்டியவில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றிய நாமல் ராஜபக்ச இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
</p><p>குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலம் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான தனது நிலைப்பாட்டை நிரூபிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4348e130-3168-4155-ae0f-80c898ab46ab/26-6a89d2f7707ae.webp' /></p><p>
</p><p>திருடர்களைப் பிடிப்பது மற்றும் நேர்மையை உறுதி செய்வது குறித்து ஜனாதிபதி தொடர்ந்து பேசுகிறார். அந்த உறுதிப்பாட்டை நிரூபிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் இதுவாகும் என தெரிவித்துள்ளார்.</p><p>
ஜனாதிபதி செயலாளர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்பதை நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என அவர் கூறியுள்ளார்.
</p><p>தேர்தல் பிரசாரத்தின்போது விவசாயிகள், பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களுக்கு அரசாங்கம் வழங்கியிருந்த பல்வேறு வாக்குறுதிகள் எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்தும் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p>நெல் கொள்வனவு விலை குறைவாக இருப்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரிசியின் விலை அதிகரித்துள்ளதால் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
அத்துடன், பொதுமக்கள் எதிர்கொள்ளும் வரிச்சுமை, மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளின் அதிகரிப்பு குறித்தும் அவர் கவலை வெளியிட்டார். </p><p>தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பது, குறிப்பாக இளம் தொழில் முனைவோருக்கு, மேலும் சிரமமாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>
அரச நிறுவனங்களைச் சார்ந்ததாகக் கூறப்படும் பாதுகாப்பு மற்றும் இணையவழி சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p>இச்சம்பவங்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை நடத்தி, பொறுப்புக்கூற வேண்டியவர்களை அடையாளம் காண வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>விவசாயிகள், பட்டதாரிகள், இளைஞர்கள் மற்றும் வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அரசியல் முரண்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
“அரசாங்கம் மோதல்களை ஒதுக்கி வைத்து மக்களுக்காக பணியாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் எதிர்பார்ப்பது தங்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகளையே தவிர, மேலும் அரசியல் முரண்பாடுகளை அல்ல” என நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
</p><p>கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்கள் தொடர்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்களுக்கு எதிர்க்கட்சியே பொறுப்பு என்ற குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்துள்ளார்.
</p><p>துறைமுகத்தின் செயற்பாடுகளில் தலையிடும் அதிகாரம் எதிர்க்கட்சிக்கு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>அனைத்து முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் வெளிப்படையான விசாரணைகளை நடத்தி, விசாரணைகளின் முடிவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் நாமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T16:50:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிற்கு 400 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்கும் டிக்டொக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tiktok-to-pay-400-million-in-compensation-us-1787400059"></link>
            <id>https://canadamirror.com/article/tiktok-to-pay-400-million-in-compensation-us-1787400059</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவில் குழந்தைகளின் இணையதள தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியதாக தொடரப்பட்ட வழக்கை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், டிக்டொக் நிறுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவில் குழந்தைகளின் இணையதள தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியதாக தொடரப்பட்ட வழக்கை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், டிக்டொக் நிறுவனம் அமெரிக்க நீதித்துறையுடன் 400 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்கும் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
</p><p>


13 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் அனுமதியின்றி அவர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரித்ததாகவும், பெற்றோர் கோரிய போதிலும் குழந்தைகளின் கணக்குகளை நீக்கத் தவறியதாகவும் டிக்டொக் மற்றும் அதன் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் மீது அமெரிக்க அரசு குற்றஞ்சாட்டியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53262bb2-b37b-411c-8c7e-d50136264ce8/26-6a898f7d38486.webp' /></p><h2>சமரச ஒப்பந்தம்&nbsp; - பெற்றோருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி</h2><p>



இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவர டிக்டொக் நிறுவனம் உடனடியாக 300 மில்லியன் டொலரை செலுத்தவுள்ளதுடன், மியூசிக்கலி நிறுவனத்துக்கு எதிரான முந்தைய உத்தரவு இரத்து செய்யப்பட்ட பின்னர் மேலும் 100 மில்லியன் டொலரை செலுத்தவுள்ளதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.</p><p>



இந்த சமரச ஒப்பந்தம் அமெரிக்க குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என அமெரிக்க இணை அட்டர்னி ஜெனரல் ஸ்டான்லி இ. உட்வார்ட் ஜூனியர் தெரிவித்துள்ளார்.
</p><p>


இதேவேளை, நீண்டகால சட்டப் போராட்டத்தை தவிர்ப்பதற்கும் அமெரிக்க பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



இந்த ஒப்பந்தத்தின் மூலம் டிக்டாக் நிறுவனம் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளாமலேயே வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-22T16:49:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதையல் தோண்ட முயன்ற மூவருக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-people-s-fate-after-attempting-to-treasure-1787416996"></link>
            <id>https://jvpnews.com/article/three-people-s-fate-after-attempting-to-treasure-1787416996</id>
            <summary type="text">புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வுப் பணியில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்களைப் புலத்சிங்கள பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை (21) கைது செய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வுப் பணியில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்களைப் புலத்சிங்கள பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை (21) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; ">

புலத்சிங்கள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போதலேகம பகுதியில் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் வளைப்பின் போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4df1a3a9-796a-4b07-bd68-9850015ebe23/26-6a89d274e310e.webp' /></p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்டவர்கள் புலத்சிங்கள மற்றும் தொடங்கொட பகுதிகளைச் சேர்ந்த 37, 52 மற்றும் 67 வயதுடையவர்களாவர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

மேலும், இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் புலத்சிங்கள பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-22T16:47:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 14 வயது சிறுமியை கடத்தி சென்ற 27 வயது இளைஞன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/youth-arrested-for-kidnapping-girl-in-jaffna-1787416336"></link>
            <id>https://ibctamil.com/article/youth-arrested-for-kidnapping-girl-in-jaffna-1787416336</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்ப்பாணம் , கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது
சிறுமியை கடத்தி சென்று, பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கிய
குற்றச்சாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழ்ப்பாணம் , கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது
சிறுமியை கடத்தி சென்று, பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கிய
குற்றச்சாட்டில் 27 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கோப்பாய் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை
காணவில்லை என பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.</p><h2>இளைஞனை கைது செய்த காவல்துறை</h2><p>முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் அச்சுவேலி பகுதியை
சேர்ந்த 27 வயதான இளைஞனே சிறுமியை கடத்தி சென்று , தனது பாதுகாப்பில்
வைத்துள்ளார் என்பதனை அறிந்த காவல்துறையினர் , இளைஞனை கைது செய்ததுடன் ,
சிறுமியையும் மீட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8b2b2eb-7917-4865-89f0-2d50940e0ae8/26-6a89d1b3d514f.webp' /></p><p>

கைது செய்யப்பட்ட இளைஞனை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை
முன்னெடுத்துள்ள காவல்துறையினர் , சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில்
அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்&nbsp; &nbsp; &nbsp; </p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T16:44:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர்ந்து மீட்கப்படும் சடலங்கள்... காஸாவில் இறந்தவர்களை அடக்கம் செய்ய இடம் இல்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/gaza-no-places-bury-the-dead-1787416801"></link>
            <id>https://news.lankasri.com/article/gaza-no-places-bury-the-dead-1787416801</id>
            <summary type="text">Gaza is running out of places to bury the dead: காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு இலக்கானவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய இடமில்லை.
காஸாவில் தொடர்ந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Gaza is running out of places to bury the dead: காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு இலக்கானவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய இடமில்லை.</p><p>
காஸாவில் தொடர்ந்து சடலங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கல்லறைகளில் சடலங்களை அடக்கம் செய்ய இடம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e3a6a2b-41c7-4be3-9a85-419ee55bc673/26-6a89d0e43f4a1.webp' /></p><p>
</p><p>இடப்பற்றாக்குறை மற்றும் போரினால் ஏற்பட்ட கடினமான சூழல் காரணமாக, அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஒரு கல்லும், அதனுடன் இணைக்கப்பட்ட இறந்தவரின் பெயர் எழுதப்பட்ட காகிதத் துண்டுமே அடையாளமாக உள்ளன. </p><p>மேலும், இங்கு ஒரு கல்லறைக்கான தற்போதைய விலை சுமார் 500 ஷெக்கல்கள் அல்லது 167 டொலர்கள் என ஈடாக்கப்படுகிறது. இத்தொகையைச் செலுத்த பல குடும்பத்தினருக்கும் இயலாததால், அவர்கள் மாற்று வழியொன்றைக் கண்டறிய வேண்டியுள்ளது. </p><p>காஸாவில் தற்போது சேவைகள் அனைத்தும் முழுமையாக முடங்கியுள்ளதாலும், இஸ்ரேலியத் தாக்குதல்களால் நிலவும் ஆபத்துகளாலும், போரின்போது கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் காணாமல் போனவர்கள் என்றே கணக்கிடப்பட்டுள்ளனர். </p><p>அவர்களில் பலர் தோட்டங்கள், கூடாரங்கள் அல்லது இடம்பெயர்ந்தோருக்கான முகாம்கள், பாடசாலைகள் அல்லது மருத்துவமனைகளின் வளாகங்களில் அடக்கம் செய்யப்பட்டனர்.
</p><p>அக்டோபர் 2025-இல் அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, காஸாவில் இஸ்ரேலிய வன்முறைச் செயல்கள் ஓரளவுக்குக் குறைந்த நிலையில், குடும்பங்கள் இடிந்துபோன வீடுகளின் இடிபாடுகளிலிருந்தோ அல்லது தற்காலிக அடக்கஸ்தலங்களிலிருந்தோ தங்கள் மரணமடைந்த உறவினர்களின் உடல்களை மீட்கத் தொடங்கினர்.</p><p></p><p> </p><p>போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதிலிருந்து குறைந்தது 1,200 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; அவர்கள் ஒவ்வொருவருக்கும் அடக்கம் செய்வதற்கான இடம் தேவைப்படுகிறது.
</p><p>காஸாவில் உள்ள மருத்துவமனை வளாகங்களில் இருந்த ஏழு கூட்டு அடக்கஸ்தலங்களிலிருந்து 529 பாலஸ்தீனியர்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p>அக்டோபர் 2023-இல் காஸா மீதான போர் தொடங்கியதிலிருந்து 73,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், இஸ்ரேல் அடக்கத்தலங்களை அழித்திருப்பதும் கல்லறைகளின் பற்றாக்குறைக்குக் காரணமாக அமைந்துள்ளது. </p><p>காஸாவின் அறக்கட்டளை மற்றும் மத விவகார அமைச்சகத்தின் தகவலின்படி, போர் தொடங்கியதிலிருந்து 40-க்கும் மேற்பட்ட கல்லறைகள் அழிக்கப்பட்டுள்ளன. </p><p>மட்டுமின்றி, இஸ்ரேலியப் படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள கல்லறைகளுக்குச் செல்வதற்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன; இது குடும்பங்களுக்குக் கிடைக்கக்கூடிய அடக்கத்தலங்களின் எண்ணிக்கையை மேலும் குறைத்துள்ளது.
</p><p>இஸ்ரேலிய குண்டுவீச்சு மற்றும் கட்டாய இடப்பெயர்வு உத்தரவுகளால் லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டுள்ள நிலையில், முன்பு அடக்கஸ்தலங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதிகள் இடம்பெயர்ந்தவர்களுக்கான தங்குமிடங்களாக மாற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/399cafe0-7a93-4de9-ae0d-d3cbeff1943f/26-6a89d0e4e4a6a.webp' /></p><p> </p><p>கல்லறைக் கட்டுமானத்திற்கான பொருட்களின் தட்டுப்பாட்டினால், தற்போது அடக்கம் செய்வதற்கான செலவு 700 ($235) முதல் 1,000 ($335) ஷெக்கல்கள் வரை அதிகரித்துள்ளதாக காஸா பகுதி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
</p><p>முறையான கல்லறை அமைப்பதற்கான நிதி கிடைக்கும் வரை, இடிந்துபோன கட்டிடங்களின் கட்டுமானப் பொருட்கள், களிமண் அல்லது நெளி தகடுகள் ஆகியவை தற்காலிகக் கல்லறை அடையாளங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. </p><p>அறநிலையங்கள் அமைச்சகத்தின் ஊடக அதிகாரி இக்ராமி அல்-மடல்லால் தெரிவிக்கையில், போர் தொடங்கியபோதே காஸாவில் உள்ள 60 கல்லறைத் தோட்டங்களில் பலவும் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டியிருந்ததாகக் கூறினார்.
</p><p>கான் யூனிஸ் பகுதி கல்லறைத் தோட்டம் ஒன்றில், போரின் தொடக்கத்தில் சுமார் 60 கல்லறைகள் மட்டுமே இருந்தன. தற்போது அங்கு 6,000 கல்லறைகள் அமைந்துள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-22T16:37:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஹ்ரானுடன் தொடர்பு - ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு! ஒப்படைக்கப்பட்டுள்ள ஆதாரங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hizbullah-faces-police-complaint-batticaloa-1787402432"></link>
            <id>https://tamilwin.com/article/hizbullah-faces-police-complaint-batticaloa-1787402432</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று (22) முறைப்பாடு செய்துள்ளதாக ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஓட்டமாவடி காளி கோவில் இடிக்கப்பட்டமை, நீதவான் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டமை, தற்கொலை குண்டுதாரியான சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் விடயம் மற்றும் ஆயிரக்கணக்கான ஏக்கர் அரச காணிகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>ஹிஸ்புல்லாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்</h2><p>

முறைப்பாட்டைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜநாதன் பிரபாகரன், கடந்த 1990ஆம் ஆண்டு முதல் ஹிஸ்புல்லா கிழக்கு மாகாணத்தில் மேற்கொண்டதாகக் கூறப்படும் நடவடிக்கைகள் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gvv9aBSNaXs" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
</p><p>
மேலும், ஹிஸ்புல்லாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் எழுத்துமூல ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>மட்டக்களப்பு நீதவான் ஒருவரை இடமாற்றம் செய்து தனக்கு சாதகமான நீதவானை நியமிக்க நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலும் விசாரணை நடத்துமாறு முறைப்பாட்டில் கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17dd0a21-2d58-4314-a3fd-3a188b5defb6/26-6a899bc8b33d9.webp' />&nbsp; &nbsp;</p><p>
அத்துடன், ஓட்டமாவடியில் இருந்த காளி கோவிலை இடித்து, அந்த இடத்தில் மீன் சந்தை மற்றும் பள்ளிவாசல் அமைக்கப்பட்டதாக ஹிஸ்புல்லா தெரிவித்ததாகக் கூறப்படும் விடயம் தொடர்பிலும் விசாரணை நடத்துமாறு கோரியுள்ளதாக இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார்.</p><h2>&nbsp;விசாரணை</h2><p>
</p><p>
தற்கொலை குண்டுதாரியான சஹ்ரானுடன் ஹிஸ்புல்லா தொடர்பில் இருந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என முறைப்பாட்டில் கோரியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
</p><p>
மேலும், தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் அரச காணிகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p><p>

இந்த முறைப்பாடு தொடர்பில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்ததாகவும் இராஜநாதன் பிரபாகரன் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b331cf78-1700-40f4-802d-f78ecd2cbb8e/26-6a899bc996931.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, இந்த நடவடிக்கை முஸ்லிம் மக்களுக்கு எதிரானது அல்ல எனவும், குறிப்பிட்ட ஒரு தனிநபருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான சட்ட நடவடிக்கைக்கான கோரிக்கையே எனவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் தனிநபர்களின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T16:30:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சிறுமியை கடத்தி சென்ற இளைஞன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-arrested-in-jaffna-for-abducting-girl-1787414912"></link>
            <id>https://tamilwin.com/article/man-arrested-in-jaffna-for-abducting-girl-1787414912</id>
            <summary type="text">யாழ்ப்பாணம்- கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடத்தி சென்று, பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய
குற்றச்சாட்டில்&amp;nbsp; இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம்- கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடத்தி சென்று, பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய
குற்றச்சாட்டில்&nbsp; இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை
காணவில்லை என பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.</p><h2>விசாரணை</h2><p>

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அச்சுவேலி பகுதியை
சேர்ந்த 27 வயதான இளைஞனே சிறுமியை கடத்தி சென்று , தனது பாதுகாப்பில்
வைத்துள்ளார் என்பதனை அறிந்த பொலிஸார் , இளைஞனை கைது செய்ததுடன் ,
சிறுமியையும் மீட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29362eda-d1e7-4737-81ac-801d41142181/26-6a89ce07426b6.webp' /></p><p>

கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை
முன்னெடுத்துள்ள பொலிஸார் , சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில்
அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T16:28:01+00:00</updated>
        </entry>
    </feed>
