<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-02T22:32:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேஷியா பயணிகள் கப்பலில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு: 41 பேரை காணவில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indonesian-ferry-fire-5-dead-41-missing-1785695057"></link>
            <id>https://news.lankasri.com/article/indonesian-ferry-fire-5-dead-41-missing-1785695057</id>
            <summary type="text">இந்தோனேஷியாவில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பயணிகள் கப்பலில் தீ விபத்து
இந்தோனேசியாவின் மதுரா தீவு அருகே சென்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேஷியாவில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><h2> பயணிகள் கப்பலில் தீ விபத்து</h2><p>
இந்தோனேசியாவின் மதுரா தீவு அருகே சென்று கொண்டிருந்த பயணிகள் கப்பலில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p> இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை 5 பேர் வரை பலியாகியுள்ளனர். </p><p>கிட்டத்தட்ட 41 பேரின் நிலைமை இதுவரை என்னவென்று தெரியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7cf46eb-22df-4d0c-9d33-c1fd80ee72e2/26-6a6f8b536e669.webp' /></p><p> காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.</p><p>முடியரா செந்தோசா 2(Mutiara Sentosa 2) என்ற பெயர் கொண்ட இந்த கப்பலில், விபத்தின் போது பயணிகள், பணியாளர்கள் என கிட்டத்தட்ட 271 பேர் பயணம் செய்துள்ளனர்.</p><p> விபத்தில் சிக்கியுள்ள இந்த கப்பல், கிழக்கு ஜாவா மாகாணத்தின் சுராபாயாவில் இருந்து தெற்கு சுலாவசியில் உள்ள மகாசக்கர் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p></p><h2> மீட்பு பணிகள் தீவிரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab27dc03-4ec2-46f4-87af-ed33df4b3e8e/26-6a6f8b5423106.webp' /></p><p>கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர கால மீட்பு படையினர் மற்றும் அருகிலிருந்த கப்பல்கள் என அனைவரும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்குள் 225 பேரை உயிருடன் மீட்டுள்ளனர்.</p><p> மேலும் உயிரிழந்த 5 பேரின் உடலையும் கப்பலில் இருந்து மீட்டெடுத்துள்ளனர். காணாமல் போயுள்ள 41 பேரை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.</p><p>அதே சமயம் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான உண்மையை கண்டறிய விசாரணையானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p> &nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-02T22:31:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் தற்கொலை தாக்குதல்! 14 பேர் படுகொலை - பலர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/attack-in-pakistan-14-killed-1785708250"></link>
            <id>https://ibctamil.com/article/attack-in-pakistan-14-killed-1785708250</id>
            <summary type="text">பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு வெளியே நடந்த தற்கொலைத் தாக்குதலில் சுமார் 14 பேர் கொல்லப்பட்டுள்ளாகவும், பலர் காயமடைந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு வெளியே நடந்த தற்கொலைத் தாக்குதலில் சுமார் 14 பேர் கொல்லப்பட்டுள்ளாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
வன்முறை அதிகரிப்பிற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கூட்டத்தை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
காவல் நிலையத்தின் நுழைவாயிலுக்கு அருகே காவல்துறையினர் அவரைச் சோதிக்க முயன்றபோது, ​​ சந்தேகநபர் தனது வெடிபொருட்களை வெடிக்கச் செய்ததாக கூறப்படுகிறது.</p><p></p><h2>பலர் கவலைக்கிடம்</h2><p>

இந்த நிலையில், அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்து சோதனைகளை முடக்கி விட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6da70517-d882-41ea-8ac2-d6f77c7b7a51/26-6a6fc22e5857b.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த 22 பேர் அருகிலுள்ள வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளதையடுத்து, அவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கபடுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T22:18:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியை கொன்று வீடியோ எடுத்து மாமனார்-மாமியாருக்கு அனுப்பிய கணவர் ; இறுதியில் நடந்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/husband-kills-wife-sends-video-to-in-laws-1785700305"></link>
            <id>https://jvpnews.com/article/husband-kills-wife-sends-video-to-in-laws-1785700305</id>
            <summary type="text">கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கேசகோடு கிராமத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மனைவியை கொன்று கணவர் தற்கொலை செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கேசகோடு கிராமத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மனைவியை கொன்று கணவர் தற்கொலை செய்து வீடியோ எடுத்து மாமனார்-மாமியாருக்கு அனுப்பிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
</p><p style="text-align: justify; ">
கடந்த சில நாட்களாக மனைவியின் நடத்தையில் மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், அவர்கள் 2 பேருக்கும் இடையே கடந்த சில நாட்களாகவே வாக்குவாதம் ஏற்பட்டு, குடும்பத்தகராறு ஆனது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c515c25-6949-43e9-ab3c-2730f4911b02/26-6a6f9fd3126b5.webp' /></p><h3 style="text-align: justify; ">&nbsp;தீவிர விசாரணை</h3><p>
</p><p style="text-align: justify; ">


இந்நிலையில், சம்பவத்தன்று மனைவியுடன் காரில் புறப்பட்ட கணவர், வழியிலேயே மனைவியுடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">பின்னர், அவரை காரில் வைத்து கொலை செய்தார். கொலை செய்வதை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர்,&nbsp; கேசகோடு கிராமத்துக்கு சென்ற ரகு, தனது மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களுக்கு செல்போனில் வீடியோ அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு மனைவியை கொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
மேலும் கொலை வீடியோவையும் அவர்களுக்கு அனுப்பினார். தானும் தற்கொலை செய்து கொள்வதாக கூறிவிட்டு இணைப்பை தொடர்பை துண்டித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இதனால், அதிர்ச்சி அடைந்த அவர்கள் ரகுவை தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர். ஆனால், அவர் அழைப்பை எடுத்து பேசவில்லை.
</p><p style="text-align: justify; ">

இதையடுத்து, கேசகோடு கிராமத்தின் எல்லையில் சாலையோ ரத்தில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பொலிஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

 இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
</p><p style="text-align: justify; ">
இதற்கிடையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வீடியோ அழைப்பில் பேசியது தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.</p><p style="text-align: justify; "> இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-02T22:12:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் கடல் நடுவே தீப்பிடித்த பயணிகள் படகு ; 5 பேர் உயிரிழப்பு ; 41 பேர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/passenger-boat-fire-kills-five-in-indonesia-1785708719"></link>
            <id>https://canadamirror.com/article/passenger-boat-fire-kills-five-in-indonesia-1785708719</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் மதுரா தீவுக்கு அப்பால் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் படகு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 41 பேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் மதுரா தீவுக்கு அப்பால் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் படகு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 41 பேர் காணாமல் போயுள்ளனர் என அந்த நாட்டின் தேடுதல் மற்றும் மீட்பு பணியகம் தெரிவித்துள்ளது.
</p><p>
271 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் பயணித்த இந்த படகில் இருந்து, இன்று பிற்பகல் வரை 225 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
கிழக்கு ஜாவா மாகாணத்தின் சுரபயாவில் இருந்து தெற்கு சுலவேசியில் உள்ள மகசார் நகரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோதே, இன்று காலையில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.</p><p>

எனினும், படகில் தீ பரவியமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை.
</p><p>
காணாமல் போனவர்களை மீட்கும் தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-02T22:12:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதி விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளுக்கு சிக்கல் ; சட்ட நடவடிக்கை நிச்சயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/trouble-for-drivers-breaking-traffic-rules-1785707913"></link>
            <id>https://jvpnews.com/article/trouble-for-drivers-breaking-traffic-rules-1785707913</id>
            <summary type="text">மோட்டார் வாகன விபத்துக்களைத் தடுப்பதற்கும் சாரதிகளால் மேற்கொள்ளப்படும் விதிமீறல்களைக் கண்டறிவதற்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மோட்டார் வாகன விபத்துக்களைத் தடுப்பதற்கும் சாரதிகளால் மேற்கொள்ளப்படும் விதிமீறல்களைக் கண்டறிவதற்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன கேமரா அமைப்பைப் பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று வீதிப்போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுக்காப்பு பிரிவுப் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

இது குறித்து ஞாயிற்றுக்கிழமை (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef0050c4-6ae8-46d5-b843-e63560cdb1c4/26-6a6fbd8b2f8f6.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;புதிய கண்காணிப்பு நடைமுறை</h2><p style="text-align: justify; "> அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த புதிய கண்காணிப்பு நடைமுறையின் கீழ் வாகனங்களைச் செலுத்தும் போது தொலைபேசியில் பேசுவது அல்லது குறுஞ்செய்தி அனுப்புவது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடும் சாரதிகள் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கேமராக்கள் மூலம் துல்லியமாக அடையாளம் காணப்பட்டு படம் பிடிக்கப்படுவார்கள்.</p><p style="text-align: justify; ">

வழக்கமான கேமராக்களைப் போலன்றி, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் வீதி விதிமீறல்கள் உடனடியாகப் படம்பிடிக்கப்பட்டு சான்றுகளுடன் சேமிக்கப்படுவதால், தவறிழைக்கும் சாரதிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது.</p><p style="text-align: justify; ">

இத்திட்டம் முதற்கட்டமாக கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த 9 பிரதான சந்திப்புகள் மற்றும் வீதிகளில் ஆரம்பிக்கப்படவுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இதன் மூலம் கொழும்பு நகரில் இடம்பெறும் அதிகளவிலான போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் விபத்துக்களை வெகுவாகக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p style="text-align: justify; ">


இதேவேளை வீதி விபத்துக்களைக் கட்டுபடுத்தும் நோக்கில், வாகனங்களின் வேகத்தை கண்டறிவதற்காக புதிதாக 50 வேகமானி கருவிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதற்கு முன்னர் போக்குவரத்துப் பொலிஸாரால் 45 வேகமானி கருவிகள் மட்டுமே பயன்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 50 கருவிகள் சேர்க்கப்படுகின்றன. </p><p style="text-align: justify; ">45 இத்தகைய கருவிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள இந்த கருவிகளில் ஒன்றின் விலை சுமார் 33 இலட்சம் ரூபாவாகும் என்றார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-02T21:58:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் இரகசிய தகவலால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு ; பிடிபட்ட இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-arrested-after-ampara-house-raid-1785706506"></link>
            <id>https://jvpnews.com/article/youth-arrested-after-ampara-house-raid-1785706506</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவாட்டுக்கல் 03 பகுதியில் உள்ள வீடு ஒன்றினை சுற்றிவளைத்து சோதனை செய்த போது 10 கிராம் 970 மில்லி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவாட்டுக்கல் 03 பகுதியில் உள்ள வீடு ஒன்றினை சுற்றிவளைத்து சோதனை செய்த போது 10 கிராம் 970 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 32 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (02) சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
சம்மாந்துறை பொலிஸாருக்கு இளைஞர்களை குறிவைத்து போதைப் பொருள் விற்பனை இடம்பெறுகிறதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த ஒரு தொகை போதைப் பொருள் பிளாஸ்டிக் குழாயினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் பொலிசாரினால் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d9cf291-343b-4912-a985-f92203f59ea9/26-6a6fb80be8579.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப் பொருள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 10 கிராம் 970 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள், மோட்டார் சைக்கிள், கைப்பேசி (மொபைல் போன்), இலத்திரனியல் தராசு என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

மேலும், இந்த கைது நடவடிக்கையானது,அம்பாறை மாவட்ட பிரதிப்பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வேதமுல்லவின் மேற்பார்வையில்,&nbsp; பொலிஸ் குழுவினரால் குறித்த கைது முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
</p><p style="text-align: justify; ">

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-02T21:35:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் பொய்யை அம்பலப்படுத்திய ஈரான்! எந்தவொரு தாக்குதலுக்கும் தயார் என அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-denies-trump-s-statement-ask-not-to-attack-1785704876"></link>
            <id>https://ibctamil.com/article/iran-denies-trump-s-statement-ask-not-to-attack-1785704876</id>
            <summary type="text">புதிய தாக்குதல்களைத் தவிர்க்குமாறு அமெரிக்காவை ஈரான் கேட்டுக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ள கூற்றை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய தாக்குதல்களைத் தவிர்க்குமாறு அமெரிக்காவை ஈரான் கேட்டுக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ள கூற்றை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
</p><p>
ஈரான் மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்கா தயாராக உள்ளதாகவும், புதிய தாக்குதல்களைத் தவிர்க்குமாறு ஈரானும் பிற மத்திய கிழக்கு நாடுகளும் தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
</p><p>
ஈரானுடன் எட்டப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.</p><p></p><h2>அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி</h2><p> </p><p>

அத்தோடு, ஹோர்முஸ் நீரிணையை உடனடியாகவும் முழுமையாகவும் திறந்து, அணுசக்தி தொடர்பான அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடகப் பதிவிலும் அவர் தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/749ec736-e183-4885-94c5-e8a546f0e92c/26-6a6fb4bede358.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், ட்ரம்ப்பின் இந்தக் கூற்றை மறுத்துள்ள ஈரான், அமெரிக்கா தனது தாக்குதல்களைத் தொடரும் வரை ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டே இருக்கும் என்றும் ட்ரம்ப் கூறியது மற்றொரு பொய்யே தவிர வேறொன்றுமில்லை என தெரிவித்துள்ளது.</p><h2>எந்தவொரு தாக்குதலுக்கும் தயார்</h2><p>
</p><p>
அதன்படி, ஈரானிய ஆயுதப் படைகள் உயர் எச்சரிக்கை நிலையில் உள்ளதாகவும் எந்தவொரு தாக்குதல் சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98229757-d6d5-4569-afb8-b38c19e924fa/26-6a6fb4bfd1650.webp' /></p><p>

போர் தொடங்கியதிலிருந்து ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ள நிலையில், தற்போதைய சூழலில் வணிகக் கப்பல்கள் இதன் வழியே கடந்து செல்வதற்கு ஈரானிடம் அனுமதி பெற்று, போக்குவரத்துக் கட்டணத்தையும் செலுத்த வேண்டிய நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T21:26:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவானில் நேருக்கு நேர் மோதிய ஹெலிகாப்டர்கள் ; தீவிரமாகும் மீட்பு பணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/helicopters-collide-mid-air-head-on-1785690660"></link>
            <id>https://canadamirror.com/article/helicopters-collide-mid-air-head-on-1785690660</id>
            <summary type="text">ஐரோப்பிய நாடுகளில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. அதன்படி, இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ், கிரீஸ் உள்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் காட்டுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பிய நாடுகளில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. அதன்படி, இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ், கிரீஸ் உள்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் காட்டுத்தீ பரவி வருகிறது. </p><p>காட்டுத்தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர், ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfcbd55e-359d-41b6-8452-3620910b54cf/26-6a6f7a261302d.webp' /></p><p>
இந்நிலையில், கீரிஸ் நாட்டின் மேற்கு ஏதேன்சில் பசத் பகுதியில் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p> அதில், இன்று காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் நடுவானில் பறந்துகொண்டிருந்த 2 ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதின. இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டர்கள் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கின.</p><p>
இரு ஹெலிகாப்டர்களிம் மொத்தம் 4 பேர் பயணித்த நிலையில் அவர்களின் நிலை என்ன என்று தகவல் வெளியாகவில்லை. </p><p>ஹெலிகாப்டர்கள் வனப்பகுதியில் விழுந்ததால் மீட்புப்பணியில் பொலிசார், ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-02T21:07:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிரேக்கத்தில் இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-die-in-helicopter-collision-greek-pm-says-1785690934"></link>
            <id>https://canadamirror.com/article/two-die-in-helicopter-collision-greek-pm-says-1785690934</id>
            <summary type="text">&amp;nbsp;கிரேக்கத்தின் தலைநகர் ஏதென்ஸுக்கு மேற்கே உள்ள &#039;சாத்தா&#039; பகுதியில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றோடொன்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கிரேக்கத்தின் தலைநகர் ஏதென்ஸுக்கு மேற்கே உள்ள 'சாத்தா' பகுதியில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p>
அத்திகா பிராந்தியத்திற்குட்பட்ட சாத்தா பகுதியில் காட்டுத் தீ விஸ்வரூபமெடுத்து பரவி வந்த நிலையில், அதைத் கட்டுப்படுத்தும் பணியில் பல தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
</p><p>தீயணைப்பு நடவடிக்கைகளின் போது, எதிர்பாராதவிதமாக இரண்டு ஹெலிகாப்டர்கள் வானில் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d771522a-affc-4df2-8b2a-42911fd94a04/26-6a6f7b3845a2b.webp' /></p><p>
</p><p>இந்த கொடூர விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்பதை கிரேக்க பிரதமர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
</p><p>விபத்து குறித்துத் தகவலறிந்ததும் தீயணைப்புப் படையினரும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
</p><p>விபத்துக்கான காரணம் குறித்தும், பலியானவர்களின் விவரங்கள் குறித்தும் முதற்கட்ட விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. </p><p>இது தொடர்பான மேலதிக விவரங்களை அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T21:00:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை சம்பவம்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rights-commission-probes-mahara-prison-incident-1785704167"></link>
            <id>https://jvpnews.com/article/rights-commission-probes-mahara-prison-incident-1785704167</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணையையொன்றை ஆரம்பித்துள்ளது. 

மூன்று பேர் கொண்ட விசாரணைக் கு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணையையொன்றை ஆரம்பித்துள்ளது.</p><p style="text-align: justify;"> 

மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவொன்று நேற்று (02) முற்பகல் மஹர சிறைச்சாலைக்குச் சென்று அது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05d0156e-c8f4-4e66-943a-99c526ab7fee/26-6a6faf4d69a81.webp' /></p><h2 style="text-align: justify; ">சந்தேகம்</h2><p> </p><p style="text-align: justify;">

இதேவேளை, சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் பிரதிநிதிகளும் மஹர சிறைச்சாலைக்கு விஜயம் செய்து அங்கிருந்த நிலைமை குறித்து ஆராய்ந்துள்ளனர்.</p><p style="text-align: justify;"> 

குறித்த சம்பவம் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதா? என்பது தொடர்பில் சந்தேகம் எழுவதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுபாஷண சுபவிக்ரம தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify;"> 

"கோடிக்கணக்கான ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது அங்கு வசிப்பதற்கு உகந்த சூழ்நிலை இல்லை. ஏனெனில் அனைத்தும் முற்றாக அழித்து நாசமாக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">இது கைதிகளின் தேவையின் பேரில் நடந்ததா அல்லது வேறு யாரினதும் தேவையின் பேரில் நடந்ததா என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அறையொன்றில் இருக்கும் சிலரால் மாத்திரம் இதனைச் செய்திருக்க முடியாது.</p><p style="text-align: justify;">இது வேறு யாரோ ஒருவரின் திட்டமிடலுக்கு அமைவாகவே நடந்துள்ளது என நாம் பலமாக நம்புகிறோம். அந்தளவிற்குப் பாரிய விநாசம் ஏற்பட்டுள்ளது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-02T20:57:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடக்கப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணை! ஈரானின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-s-understanding-with-oman-1785702440"></link>
            <id>https://ibctamil.com/article/iran-s-understanding-with-oman-1785702440</id>
            <summary type="text">புதிய கப்பல் வழித்தடம் தொடர்பாக ஓமானுடன் ஈரான் எட்டியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம், ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்பதைக் குறிக்காது என்று ஈர...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய கப்பல் வழித்தடம் தொடர்பாக ஓமானுடன் ஈரான் எட்டியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம், ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்பதைக் குறிக்காது என்று ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி அறிவித்துள்ளார்.</p><p>

நீரிணையை நிர்வகிப்பதற்கான பரஸ்பர வழிமுறை குறித்து ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><p>

இந்நிலையில், ஓமானுடனான புதிய வழித்தடம் தொடர்பான புரிந்துணர்வு, ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படுவதற்கோ அல்லது தொடர்ந்து மூடப்பட்டிருப்பதற்கோ தொடர்பற்றது என்று பாகாயி குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>அமெரிக்க கடற்படை முற்றுகை</h2><p>
</p><p>
இந்த ஒப்பந்தத்தை ஒரு தேவையான நிபந்தனை மட்டுமே என விவரித்துள்ள அவர், குறித்த விவகாரத்திற்கு இது ஒரு தீர்வாக மாறாது என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbe8f119-4db0-49c4-aed4-2965d741ecf4/26-6a6faae158ebd.webp' /></p><p>
</p><p>
மேலும், அமெரிக்கா தனது வாக்குறுதிகளை மீறியதும், ஈரான் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகையுமே நீரிணை மூடப்பட்டதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள அவர், அதனை மீண்டும் திறப்பது என்பது முற்றிலும் வேறுபட்ட ஒரு விடயம் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T20:43:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இளைஞனின் உயிரை பறித்த கார் ; ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/car-crash-claims-young-man-s-life-in-jaffna-1785701947"></link>
            <id>https://jvpnews.com/article/car-crash-claims-young-man-s-life-in-jaffna-1785701947</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலாலி – யாழ்ப்பாணம் வீதியில், யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று எதிர்திசையிலிருந்து வ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலாலி – யாழ்ப்பாணம் வீதியில், யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று எதிர்திசையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில்&nbsp;28 வயதுடைய இளைஞன்&nbsp; உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p style="text-align: justify; ">காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2803e96f-9402-4e56-96be-7d3d8c5c1aea/26-6a6fa63d5148e.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">

இவ்வாறு உயிரிழந்த நபர் 28 வயதுடைய கொக்குவில் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.</p><p style="text-align: justify; ">

குறித்த கார் சாரதியும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">மேலும் இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-02T20:30:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[வில்ட்ஷயரில் அரங்கேறிய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி: குற்றவாளிக்கு உதவிய இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-wiltshire-fatal-shooting-2-get-arrested-1785701665"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-wiltshire-fatal-shooting-2-get-arrested-1785701665</id>
            <summary type="text">பிரித்தானியாவின் வில்ட்ஷயர் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டிராவலர் தளத்தில் துப்பாக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் வில்ட்ஷயர் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>டிராவலர் தளத்தில் துப்பாக்கிச்சூடு</h2><p>
ஞாயிற்றுக்கிழமை காலை பிரித்தானியாவின் வில்ட்ஷயர் (Wiltshire) பகுதியில் உள்ள டிராவலர் தளத்தில்(Traveller site)&nbsp; அரங்கேறிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 30 வயதுடைய நபர் கொல்லப்பட்டுள்ளார்.</p><p> துப்பாக்கிச்சூடு தாக்குதல் தொடர்பாக தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு தேவையான மருத்துவ உதவிகளை செய்தனர்.</p><p> இருப்பினும் துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட பலத்த காயத்தால் பாதிக்கப்பட்ட நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2329b364-c1c0-4b97-9835-cbb7506ef0d7/26-6a6fa52309099.webp' /></p><p></p><h2> இருவர் கைது</h2><p>இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களான 70வது வயதுடைய நபர் மற்றும் 40 வயதுடைய பெண் ஒருவர் என இரண்டு பேர் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>கைது செய்யப்பட்டவர்கள் மீது, துப்பாக்கி வைத்திருந்தல், குற்றவாளிக்கு உதவுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.</p><p>மேலும் தற்போது அவர்களிடம் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக துப்பறிவாளர்கள் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p> வில்ட்ஷயரின் டிராவலர் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை சந்தேகத்திற்குரிய நடமாட்டம் இருந்ததை யாரும் கண்டிருந்தால் அல்லது துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்து இருந்தால் உடனடியாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு காவல் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T20:14:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலையில் யாருமறியா சதி - முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்தவை நியமித்தது அநுரவா..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahara-prison-issue-anura-govt-igp-poojith-1785699885"></link>
            <id>https://tamilwin.com/article/mahara-prison-issue-anura-govt-igp-poojith-1785699885</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே பூஜித் ஜயசுந்தர பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார் என&amp;nbsp;விமல் வீரவன்சவினால் குற்றச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே பூஜித் ஜயசுந்தர பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார் என&nbsp;விமல் வீரவன்சவினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் வழக்குகளில் ஒரு முக்கிய திருப்பமாக முன்னாள்&nbsp;பொலிஸ் மா பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பண்டார ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.&nbsp;</p><p>இவ்விடயம் நாட்டில் முக்கிய பேசுபொருளாக மாறியது. இதற்கிடையில்,&nbsp; மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தால் நாட்டில் திடீர் பரபரப்பு நிலை ஏற்பட்டது.&nbsp;</p><p>இச்சம்பவத்திற்கு உண்மையில் யார் தான் காரணம்? நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையை தொடர்ந்து திட்டமிட்டு இந்த கலவரம் முன்னெடுக்கப்பட்டதா என்றெல்லாம் பல கேள்விகள் எழுப்பப்படுகின்றது.&nbsp;</p><p>இவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/fl_bfyKmsss" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T20:04:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதி கட்டத்தை எட்டிய ஈரான் - ஓமன் பேச்சுவார்த்தை: மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அப்பாஸ் அராக்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-oman-negotiation-goes-well-mins-says-1785700394"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-oman-negotiation-goes-well-mins-says-1785700394</id>
            <summary type="text">ஈரான் - ஓமன் நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். ஈரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் - ஓமன் நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.</p><h2> ஈரான் - ஓமன் பேச்சுவார்த்தை</h2><p>
ஹார்முஸ் விவகாரம், அமெரிக்கா - இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் மற்றும் பிராந்திய பதற்றம் தொடர்பான ஈரான் - ஓமன் நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை நெருங்கி இருப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.</p><p>இருநாடுகளும் இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவது குறித்து அமைச்சர் அப்பாஸ் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aaca6974-ec5e-431a-80c7-b7d0b2655005/26-6a6fa02c03684.webp' /></p><h2> இருதரப்பு நலன்களுக்கு மட்டுமே முன்னுரிமை</h2><p>
மேலும் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்ட விவகாரங்கள் குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் இஸ்மாயில் பகேபி, இந்த பேச்சுவார்த்தை இருதரப்பு நலன் தொடர்புடையதாக மட்டுமே இருந்தது. இதில் வெளித்தரப்புகள் குறித்து எந்தவொரு பேச்சுக்கும் இடமில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p> ஓமன் உடனான பரஸ்பர உடன்பாடு மற்றும் ஈரானுக்கு நல்லது ஏற்படும் ஒரு பாதையை தேடி இந்த பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சகத்தின் பேச்சாளர் இஸ்மாயில் பகேபி IRIB நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.</p><p> இதில், ஹார்முஸ் விவகாரம் மற்றும் அதன் போக்குவரத்து உரிமைகள் குறித்து விவாதிக்கப்பட்டதா? என்பது குறித்து எந்தவொரு தெளிவான பதிலும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T19:53:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய அணுமின் நிலையத்தை அதிர வைத்த உக்ரைன் ட்ரோன் தாக்குதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ukrain-attack-near-russian-nuclear-power-plant-1785697487"></link>
            <id>https://ibctamil.com/article/ukrain-attack-near-russian-nuclear-power-plant-1785697487</id>
            <summary type="text">
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள சபோரிஷியா அணுமின் நிலையத்தில், ஆறு அணு உலை அலகுகளை இணைக்கும் பாதை மீது உக்ரேனிய ட்ரோன்கள் தாக்கியுள்ளதாக ரஷ்யாவின் அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள சபோரிஷியா அணுமின் நிலையத்தில், ஆறு அணு உலை அலகுகளை இணைக்கும் பாதை மீது உக்ரேனிய ட்ரோன்கள் தாக்கியுள்ளதாக ரஷ்யாவின் அரசு அணுசக்தி நிறுவனமான ரோசாடமின் தலைவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஆலையின் ஆறு மின் அலகுகளுக்கு இடையில் பணியாளர்கள் நடமாடுவதற்குப் பயன்படுத்தப்படும் கூடத்தின் மீது இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
</p><p>
"நல்லவேளையாக, எந்த வெடிப்பும் ஏற்படவில்லை. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள தென்கிழக்கு உக்ரைனில் அமைந்துள்ள அந்த ஆலையின், பிரிவு 3-இன் அணு உலை அறையிலிருந்து சில மீட்டர்கள் தொலைவிலேயே இந்தத் தாக்குதல் நிகழ்ந்தது," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>தாக்குதல் முயற்சி</h2><p>
</p><p>
அத்தோடு, கடந்த வாரம் உக்ரேனியப் படைகள், அந்த ஆலையின் பயன்படுத்தப்பட்ட உலர் அணு எரிபொருள் சேமிப்புக் கிடங்கைத் தாக்க முயன்றதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db136e43-bd6f-42af-a1cc-74f9f99fa026/26-6a6f9ac360bd1.webp' /></p><p><i>Image Credit: Reuters</i></p><p>
</p><p>
ஜூன் மாதம் ரஷ்ய குழுவினரால் பழுதுபார்க்கப்பட்டதாகக் கூறப்பட்ட இரண்டாவது மின்பாதை மீண்டும் இணைக்கப்படாததால், தற்போது அந்த ஆலை 330-கிலோவோல்ட் கொண்ட ஒற்றை மின் செலுத்து பாதை வழியாக மின்சாரத்தைப் பெற்று வருவதாக கூறப்படுகிறது.
</p><p>
இந்நிலையில், பெரும்பாலான ஆலை ஊழியர்கள் வசிக்கும் அருகிலுள்ள எனர்ஹோதர் நகரம், சமீப நாட்களாக தொடர்ச்சியான ட்ரோன் மற்றும் பீரங்கித் தாக்குதல்களைச் சந்தித்து வருவதாகவும், இதனால் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T19:32:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட மாகாணத்தில் கட்டாக்காலி நாய்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/action-taken-on-stray-dogs-in-northern-province-1785698720"></link>
            <id>https://jvpnews.com/article/action-taken-on-stray-dogs-in-northern-province-1785698720</id>
            <summary type="text">வட மாகாணத்தில் வீதியோரங்களில் பெருகிவரும் கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வட மாகாணத்தில் வீதியோரங்களில் பெருகிவரும் கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட கருத்தடைச் செயற்றிட்டத்தில் இந்த ஆண்டு 7,606 நாய்களுக்குக் கருத்தடை சிகிச்சை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify;">

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழான கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களமும், உள்ளூராட்சி அமைச்சின் கீழான உள்ளூராட்சித் திணைக்களமும் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9d7d98d-9ea8-4484-93e6-896e5c16d0fc/26-6a6f99a218f61.webp' /></p><h2 style="text-align: justify;">கருத்தடை</h2><p>
</p><p style="text-align: justify;">
இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக இந்த ஆண்டு 15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், மாவட்ட ரீதியாகப் பின்வரும் எண்ணிக்கையான நாய்களுக்குக் கருத்தடை செய்யப்படவுள்ளது</p><p style="text-align: justify;"> 

யாழ். மாநகர சபை - 120 நாய்கள் ஏனைய யாழ். மாவட்ட உள்ளூராட்சி சபைகள் - 5,216 நாய்கள், கிளிநொச்சி மாவட்டம் (கரைச்சி தவிர்ந்த) - 350 நாய்கள்,&nbsp; முல்லைத்தீவு மாவட்டம் - 750 நாய்கள்,

வவுனியா மாவட்டம் (மாநகர சபை உள்ளடங்கலாக) - 1,170 நாய்களுக்குக் கருத்தடை செய்யப்படவுள்ளது</p><p style="text-align: justify; ">இச்செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக, வவுனியா மாவட்டத்தில் இதுவரை 72 நாய்களுக்கான கருத்தடை சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக நிறைவுறுத்தப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;">அதனைத் தொடர்ந்து, ஏனைய மாவட்டங்களிலும் இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;">
இதற்கமைவாக, நாளைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண மாநகர சபையிலும், நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்றுப் பிரதேச சபையிலும், எதிர்வரும் 23ஆம் திகதி வவுனியா மாநகர சபையிலும் இத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;"> 

அமைச்சரவை மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள புதிய 'விலங்கு நலச் சட்டத்தின்' ஏற்பாடுகளுக்கு அமைவாக, விலங்குகளின் உரிமைகள் மற்றும் நலன்களுக்கு அதியுயர் முன்னுரிமை வழங்கப்படுகின்றது.</p><p style="text-align: justify;">

விலங்குகளின் நலனைக் காப்பதன் ஊடாக ஆரோக்கியமானதொரு சமூகத்தை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்துக்கு, அனைத்துப் பொதுமக்களும் உரிய தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T19:25:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதி கட்டத்தில் தீர்மானம்.. ஈரான் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-oman-negotiations-final-stages-says-araghchi-1785697069"></link>
            <id>https://tamilwin.com/article/iran-oman-negotiations-final-stages-says-araghchi-1785697069</id>
            <summary type="text">ஈரான் - ஓமன் இடையேயான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் உள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அப்ராக்சி அறிவித்துள்ளார்.தொடர் பேச்சுவார்த்தை ஈரானுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் - ஓமன் இடையேயான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் உள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அப்ராக்சி அறிவித்துள்ளார்.</p><h2>தொடர் பேச்சுவார்த்தை</h2><p> </p><p>ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் "முடிவடையப் போகும் பாதையில் உள்ளதாக" ஈரானிய அமைச்சரவையில் தாக்கல் செய்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a2380eb-c2dc-428f-8882-5ba313bacacd/26-6a6f98d006003.webp' /></p><p>ஹோர்முஸ் நீரிணையின் எதிர்கால மேலாண்மை மற்றும் போக்குவரத்து வழிமுறைகள் குறித்து ஈரானும் ஓமானும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
</p><p>
இது தொடர்பில் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அப்பாஸ் அப்ராக்சி, இந்த பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T19:22:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 கோடி ரூபா சொத்துகள் சேதம்! மஹர சிறையில் கைதிகள் செய்துள்ள அட்டூழியம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahara-jail-damage-worth-over-rs-15-crore-1785690902"></link>
            <id>https://ibctamil.com/article/mahara-jail-damage-worth-over-rs-15-crore-1785690902</id>
            <summary type="text">மஹர சிறையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் சிறைக்கு ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு ரூ. 15 கோடிக்கும் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் சிறைக்கு ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு ரூ. 15 கோடிக்கும் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

சிறைக்கைதிகள் சிறையில் உள்ள பல சொத்துக்களைச் சேதப்படுத்தியுள்ளதாக சிறைதச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
பல கட்டிடங்களின் ஓடுகள் உடைக்கப்பட்டு, கூரைகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகவும், சிறை மறுவாழ்வுத் திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும் தையல் இயந்திரங்கள் உட்பட பல உபகரணங்களைச் கைதிகள் அழித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>கற்களை வீசி தாக்குதல்&nbsp;</h2><p>
</p><p>
சம்பவம் இடம்பெற்ற நள்ளிரவு வேளையில், சிறைக்கைதிகள் சிறை வளாகத்திற்கு வெளியே கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், சுற்றியுள்ள பல வீடுகளும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bd66349-93cc-4be9-8fb0-38294d981121/26-6a6f8157aebe8.webp' /></p><p>
</p><p>
இவ்வாறானதொரு பின்னணியில், சாத்தான், அசார், பெட்டா மற்றும் மற்றொரு கைதியால் இந்த கலவரம் திட்டமிடப்பட்டது என்று காவல்துறை நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><h2>மாற்றப்பட்ட கைதிகள்</h2><p>
</p><p>
இந்நிலையில், இன்று பிற்பகல், கலவரத்தின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட கைதிகளைச் சிறைச்சாலை திணைக்களம் அடையாளம் கண்டு, அவர்களில் 104 பேரை பூஸ்ஸ உட்பட 7 பிற சிறைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b662a4d-22a0-4fb0-977b-d1e6dd3de6bb/26-6a6f81586530d.webp' /></p><p>
</p><p>
4,100-க்கும் மேற்பட்ட கைதிகளைக் கொண்ட மஹர சிறையில், நேற்று மாலை சுமார் 4 மணியளவில் கலவரம் வெடித்ததையடுத்து, 13 மணி நேரத்திற்கும் மேலான போராட்டத்திற்குப் பிறகு, இன்று காலை சுமார் 6 மணியளவில் பாதுகாப்புப் படையினர் நிலைமையை முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T19:22:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொஸ்கோவில் பிரபல உணவகத்தில் வெடிவிபத்து ; மூவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/explosion-rocks-popular-restaurant-in-moscow-1785697731"></link>
            <id>https://canadamirror.com/article/explosion-rocks-popular-restaurant-in-moscow-1785697731</id>
            <summary type="text">ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வெடிபொருள் வெடித்ததில் மூவர் உயிரிழந்ததுடன், 21 பேர் காயமடைந்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வெடிபொருள் வெடித்ததில் மூவர் உயிரிழந்ததுடன், 21 பேர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>


நகரின் மையப்பகுதிக்கு அருகிலுள்ள குட்ரின்ஸ்காயா சதுக்கத்தில் அமைந்துள்ள இத்தாலிய உணவகத்தில், அந்நாட்டு நேரப்படி நேற்று (01) இரவு சுமார் 8.00 மணியளவில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/465465d6-af8c-4abc-a96a-326d062ad950/26-6a6f95c554eaa.webp' /></p><p>
</p><p>


தேசிய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு (NAK) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வெடிபொருளை ஏந்திய பெண் ஒருவர் உணவகத்திற்குள் நுழைய முயன்றபோது, அவரை பாதுகாப்பு ஊழியர் ஒருவர் தடுத்து நிறுத்தியுள்ளார்.
</p><p>


அந்த தருணத்திலேயே வெடிபொருள் வெடித்ததில், அந்தப் பெண், பாதுகாப்பு ஊழியர் மற்றும் உணவகத்திற்கு வந்திருந்த வாடிக்கையாளர் ஒருவர் என மூவர் உயிரிழந்துள்ளனர்.</p><p>

சம்பவம் இடம்பெற்ற வேளையில், உணவகத்தில் தனியார் நிகழ்வு ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



எனினும், இந்தத் தாக்குதலின் இலக்கு யார் என்பது குறித்தோ அல்லது அந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தவர்களின் விபரங்கள் குறித்தோ அதிகாரிகள் இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-02T19:08:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ; அவதானம் மக்களே]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-cases-rise-across-sri-lanka-1785696733"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-cases-rise-across-sri-lanka-1785696733</id>
            <summary type="text">நடப்பாண்டின் ஆரம்பம் முதல் இதுவரை நாட்டில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 86,000 ஆக உயர்ந்துள்ளதாகவும் 62 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நடப்பாண்டின் ஆரம்பம் முதல் இதுவரை நாட்டில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 86,000 ஆக உயர்ந்துள்ளதாகவும் 62 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">



அந்தப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, இந்த ஆண்டில் இதுவரை அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் கடந்த ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 29,980 ஆகும்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/884cb28d-cb50-4839-bd34-96feaa0c5248/26-6a6f91de9415f.webp' /></p><h2 style="text-align: justify; ">அதிஅபாய வலயங்கள்</h2><p style="text-align: justify; ">



மேலும், ஓகஸ்ட் மாதத்தின் முதல் இரண்டு நாட்களில் மட்டும் 646 புதிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


மாவட்ட வாரியாகப் பார்க்கையில், அதிகளவிலான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அங்கு 18,249 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">அதனைத் தொடர்ந்து கொழும்பு மாவட்டத்தில் 17,048 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர.</p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


டெங்கு பரவல் தொடரும் நிலையில், நாடு முழுவதும் 137 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் தொடர்ந்து அதிஅபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-02T19:00:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூத்த பத்திரிகையாளர் சபேஸ்வரனின் மறைவு ஈழத் தமிழர் ஊடகத் துறைக்குப் பேரழிப்பு - சிறீதரன் எம்.பி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/senior-journalist-sabeswaran-passes-away-1785696701"></link>
            <id>https://ibctamil.com/article/senior-journalist-sabeswaran-passes-away-1785696701</id>
            <summary type="text">இலங்கைத் தீவில் ஈழத்தமிழினம் சந்தித்த போரின் கோர முகத்தையும், இன ஒடுக்குமுறையின் நிதர்சனங்களையும் உலகறியச் செய்த ஊடகப் போராளி, மூத்த பத்திரிகையாளர் ஆற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைத் தீவில் ஈழத்தமிழினம் சந்தித்த போரின் கோர முகத்தையும், இன ஒடுக்குமுறையின் நிதர்சனங்களையும் உலகறியச் செய்த ஊடகப் போராளி, மூத்த பத்திரிகையாளர் ஆறுமுகராசா சபேஸ்வரன் (சபேசன்) மறைவு ஈழத் தமிழர் ஊடகத் துறைக்குப் பேரழிப்பாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

​</p><p>சிறீலங்கா அரசினால் தமிழர்களுக்கு எதிராகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட போரின் பேரழிவுகளையும் மனித உரிமை மீறல்களையும், உயிராபத்தான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் வெளி உலகிற்குத் துணிவுடன் கொண்டுவந்தவர். ஈழத்தமிழர்களின் உரிமை சார்ந்த அரசியல் தளத்தில் உறுதியோடு நின்று, தமது பேனாவை ஆயுதமாக ஏந்தி களத்தில் நிற்கும் ஒரு செய்தியாளராகப் போராடியவர் அமரர் சபேசன்.</p><p></p><h2>காத்திரமான ஆளுமை</h2><p>​ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட கொடூரச் சூழலிலும், அஞ்சாது களத்தில் நின்று பணியாற்றியதோடு, யாழ். ஊடக அமையத்தின் தலைவராக இருந்து தமிழ் ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்காகவும் உரிமைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/005ef93f-35b1-45ea-9c5b-c9e43afec490/26-6a6f930255677.webp' /></p><p> தனது மும்மொழி ஆற்றலால் சர்வதேச ஊடகங்களுக்கும் ஈழத் தமிழர்களின் அவலக் குரலைத் துல்லியமாகக் கடத்தியவர். </p><p>

போர்க்காலத்திலும் அதன் பின்னரான நெருக்கடிகளிலும் தமிழ் மக்களின் குரலாகவும், ஊடகத்துறைக்கே முதுகெலும்பாகவும் திகழ்ந்த ஒரு காத்திரமான ஆளுமையை இன்று நாம் இழந்து நிற்கின்றோம். </p><p>அவரது அர்ப்பணிப்பும் தியாகமும் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுப் பதிவுகளில் என்றும் நிலைத்திருக்கும்.

ஊடகப் போராளி சபேசனுக்கு எனது புகழஞ்சலிகளைத் தெரிவிப்பதோடு, அவரின் பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆறுதலையும் பகிர்ந்துகொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T18:57:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவானில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட ஹெலிகொப்டர்கள்.. வெளிநாடொன்றில் பயங்கர விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-die-helicopter-collision-greek-pm-says-1785695725"></link>
            <id>https://tamilwin.com/article/two-die-helicopter-collision-greek-pm-says-1785695725</id>
            <summary type="text">கிரீஸில் வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தீயணைப்பு ஹெலிகொப்டர்கள் வான்வெளியில் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிரீஸில் வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தீயணைப்பு ஹெலிகொப்டர்கள் வான்வெளியில் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. </p><p>இதில் ஒரு ஹெலிகொப்டர் தரையில் விழுந்து நொறுங்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். </p><p>கடுமையான வெப்ப அலை மற்றும் போதிய மழையின்மை காரணமாக இந்த கோடைகாலத்தில் ஐரோப்பாவின் பல பகுதிகள் காட்டுத் தீயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதுடன், காலநிலை மாற்றமே இந்த நிலையை தீவிரப்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p></p><h2>பயங்கர காட்டுத்தீ&nbsp;</h2><p> ஏதென்ஸுக்கு மேற்கே உள்ள சதா (Psatha) பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்துக்கு பிறகு, நான்கு பணியாளர்கள் மீட்கப்பட்டதாக கிரீஸ் தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e72a67a-4335-4e73-9f76-39319fb28bd4/26-6a6f920e37afc.webp' /></p><p>
</p><p>
விபத்துக்குள்ளான ஒரு ஹெலிகொப்டரில் இருந்த கிரீஸ் மற்றும் டேனிஷ் நாட்டவர் ஆகிய இரு பணியாளர்களும் உயிரிழந்த அதேவேளை, இரண்டாவது ஹெலிகொப்டரில் இருந்த பிரித்தானிய மற்றும் கிரீஸ் நாட்டவர் ஆகிய இரு பணியாளர்களும் உயிருடன் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">🔴 Two Bell 214ST firefighting helicopters collided mid-air while battling a major forest fire in the Psatha area, west of Athens, Greece, triggering a search and rescue operation.<br><br>✈️ Aircraft involved: One helicopter was Bell 214ST N511EV (serial 28105, built in 1982), while… <a href="https://t.co/Jwd3qpLAfj">pic.twitter.com/Jwd3qpLAfj</a></p>&mdash; FL360aero (@fl360aero) <a href="https://x.com/fl360aero/status/2083953298173030577?ref_src=twsrc%5Etfw">August 2, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> ஹெலிகொப்டரின் சுழலிறகுகள் (rotors) மோதியதைத் தொடர்ந்து, ஒரு ஹெலிகொப்டர் வெடித்துச் சிதறி தீப்பிடித்தவாறு தரையில் விழுந்த காட்சி தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியாகியுள்ளதுடன், மோதலுக்கான காரணம் குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தீயணைப்புப் படை குறிப்பிட்டுள்ளது. </p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T18:53:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை பதற்றம் ; மோதல்களின் பின்னணி குறித்து நீதி அமைச்சர் சந்தேகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/justice-minister-questions-clash-background-1785695483"></link>
            <id>https://jvpnews.com/article/justice-minister-questions-clash-background-1785695483</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையானது, நீர்கொழும்பு சம்பவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாநாயக்கார தெரிவித்துள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையானது, நீர்கொழும்பு சம்பவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாநாயக்கார தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "> 

நீர்கொழும்பில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும், மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்கும் சிறைச்சாலை நிர்வாகத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dedd99ba-1f46-4450-a33a-499935d27f36/26-6a6f8cfcd36d4.webp' /></p><h2 style="text-align: justify; margin-left: 25px;">பதற்ற நிலைமைகள்&nbsp;</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இன்று (02) பிற்பகல் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், மஹர சிறைச்சாலையின் தற்போதைய நிலைமை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். </p><p style="text-align: justify; ">

இதேவேளை, சிறைச்சாலைகளுக்குள் இவ்வாறான பதற்ற நிலைமைகளை ஏற்படுத்துவதற்கு வெளியில் உள்ள குழுவொன்று திட்டமிட்ட வகையில் வழிநடத்துகிறதா? என்ற சந்தேகம் தனக்கு இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். </p><p style="text-align: justify; ">

இதற்கு முன்னர் எவ்வித காரணமும் இன்றி இவ்வாறான சம்பவங்கள் எழவில்லை என்றும், எனவே இது குறித்து கண்டறிவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

சிறைச்சாலைகளுக்குள் மோதல்கள் ஏற்படுவதற்கு அங்கு காணப்படும் நெரிசலும் ஒரு காரணமாகும் எனக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே இந்த நிலைமை காணப்பட்டதாகக் கூறினார்.</p><p style="text-align: justify; "> 

இருப்பினும், தற்போது அந்த நிலைமையைத் தவிர்ப்பதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். 

இதன்போது அமைச்சர் முக்கியமாக சுட்டிக்காட்டிய மற்றொரு விடயம், கைதிகள் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதாகும். </p><p style="text-align: justify; ">அதற்கமைய, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-02T18:31:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை கலவரத்தை திட்டமிட்ட கைதிகள்.. அரசாங்கத்திற்கு ஏற்பட்ட பாரிய நட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/clashes-mahara-prison-150-million-damage-1785689826"></link>
            <id>https://tamilwin.com/article/clashes-mahara-prison-150-million-damage-1785689826</id>
            <summary type="text">நேற்று (1) மஹர சிறையில் நடந்த மோதலால் சிறைக்கு ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு ரூபா 15 கோடிக்கும் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவத்திற்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேற்று (1) மஹர சிறையில் நடந்த மோதலால் சிறைக்கு ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு ரூபா 15 கோடிக்கும் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இச்சம்பவத்திற்கான காரணங்களைக் கண்டறிய தொடங்கப்பட்டுள்ள விசாரணைகளின் போது இத்தகவல் மதிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>

சிறைக்கைதிகள், சிறையில் உள்ள பல பொருட்களைச் சேதப்படுத்தியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>மஹர சிறைக்குள் பல கட்டிடங்களின் ஓடுகள் உடைக்கப்பட்டு, கூரைகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகவும், சிறை மறுவாழ்வுத் திட்டங்களில் தையலுக்குப் பயன்படுத்தப்படும் பல உபகரணங்களைச் சிறைக்கைதிகள் அழித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>திட்டமிட்ட கைதிகள்..&nbsp;</h2><p>
</p><p>நேற்று நள்ளிரவு வரை சிறை வளாகத்திற்கு வெளியே இருந்து சிறைக்கைதிகள் கற்களை வீசி வந்தனர். கல் தாக்குதல்களால் சிறையைச் சுற்றியுள்ள பல வீடுகளும் சேதமடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b41fe369-720f-4db0-bb66-702f346d4536/26-6a6f88aed1d72.webp' /></p><p>
சாத்தான், அசார், பெட்டா மற்றும் மற்றொரு கைதியால் இந்தக் கலவரம் திட்டமிடப்பட்டது என்று பொலிஸார் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
கலவரத்தின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட கைதிகளை இன்று பிற்பகல் அடையாளம் கண்டு, அவர்களில் 104 பேரை பூசா உட்பட 7 பிற சிறைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
4,100க்கும் மேற்பட்ட கைதிகளைக் கொண்ட மஹர சிறையில், நேற்று மாலை சுமார் 4 மணியளவில் கலவரம் வெடித்தது.</p><p> 13 மணி நேரத்திற்கும் மேலான போராட்டத்திற்குப் பிறகு, இன்று காலை சுமார் 6 மணியளவில் பாதுகாப்புப் படையினர் நிலைமையை முழுமையாகக் கட்டுப்படுத்தினர்.

இருப்பினும், இந்தக் கலவரத்தில் ஒரு கைதி உயிரிழந்தார் மற்றும் 9 கைதிகள் காயமடைந்தனர்.</p><p></p><h2>உயிரிழந்த கைதி..&nbsp;</h2><p> உயிரிழந்தவர், வத்தளை, ஹெண்டலாவைச் சேர்ந்த 33 வயது நபர் ஆவார். அவர் ஒரு மோட்டார் சைக்கிளைத் திருடியமை மற்றும் 20 கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் காவலில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14262489-7ba2-402c-83db-0a303508f4e6/26-6a6f88afc3814.webp' /></p><p>

சிறையில் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகளால், இப்போதெல்லாம் போதைப்பொருள் தட்டுப்பாடு நிலவுவதே இந்தக் கலவரத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
</p><p>
நேற்று காலை, நான்கு கைதிகள் ஒரு கூரையின் மீது ஏறி சிறை நிர்வாகத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ​​ஒரு மூத்த சிறை அதிகாரி அங்கு சென்று இது குறித்து கைதிகளிடம் விசாரித்துள்ளார்.&nbsp;</p><p>

இருப்பினும், அங்கிருந்த கைதிகள் சிறை அதிகாரிகள் மீது கற்களை வீசியுள்ளனர். இதனை தொடர்ந்து, ​​அதிகாரிகள் அந்த இடத்தை விட்டுச் சென்றுள்ளனர்.</p><p>சிறை மருத்துவமனையில் இருந்த மருந்துகள், சமையலறையில் இருந்த கூர்மையான ஆயுதங்கள், மற்றும் துப்பாக்கிக் கிடங்கில் இருந்த ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை அந்த இடங்களிலிருந்து பாதுகாப்பாக அகற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.</p><p></p><h2>&nbsp;துப்பாக்கிச் சூடு&nbsp;</h2><p>
இதற்கிடையில், சுமார் 1,500 பிற கைதிகள், சிறையின் ஒரு பக்கத்தில் கட்டப்பட்டு வரும் சுவரை உடைத்துக்கொண்டு தப்பிக்க முயன்றதாகவும் அந்த முயற்சியை முறியடிப்பதற்காக சிறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5824defc-f9d0-41c5-9c4c-3009632289d7/26-6a6f88b082b81.webp' /></p><p>
இருப்பினும், அப்போது, ​​மற்றொரு குழுவினர் ஒரு சிறைக் கட்டிடத்திற்குத் தீ வைத்துள்ளனர். இதுகுறித்த அறிக்கைகள் மீதான முதற்கட்ட விசாரணையில், அவர்களில் ஒரு குழுவினர் பின்னர் போதைப்பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கட்டிடத்திற்குள் புகுந்து, சிறைக் கைதிகளின் வசம் இருந்த போதைப்பொருட்களைப் பயன்படுத்தியமை தெரியவந்தது.
</p><p>
இத்தகைய சூழலில், மற்றொரு கைதிகள் குழு, அந்தக் குழுவினர் அடைக்கப்பட்டிருந்த வார்டுகளுக்குச் சென்று, பூட்டுகளை உடைத்து, அந்த அறைகளிலிருந்து வெளியேற வழிவகுத்துள்ளனர்.
</p><p>
அவர்களில் ஒரு குழுவினர் அறைகளிலிருந்து வெளியே வந்துகொண்டிருந்தபோது, ​​மற்றொரு கைதிகள் குழுவினர் அவ்வாறு செய்ய மறுத்து, தாங்கள் தங்கியிருந்த அறைகளிலேயே இருந்துள்ள நிலையில், ​​கலவரத்தை ஏற்படுத்தி வந்த கைதிகள் வந்து அவர்களைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-02T18:16:28+00:00</updated>
        </entry>
    </feed>
