<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-21T21:53:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிந்திய பிரபல ரெப் பாடகர் கைது ; தமிழக முதல்வர் விஜய் செய்த செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/south-indian-singer-arrested-vijay-s-response-1784652163"></link>
            <id>https://jvpnews.com/article/south-indian-singer-arrested-vijay-s-response-1784652163</id>
            <summary type="text">&amp;nbsp;தலைமைச் செயலகத்தில் நீட் தேர்விற்கு எதிராக கோஷம் எழுப்பிய பாடகர் அறிவு கைது செய்யப்பட்டார்.

சென்னை தலைமைச் செயலகத்திற்குள் 4 பேருடன் வந்து நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தலைமைச் செயலகத்தில் நீட் தேர்விற்கு எதிராக கோஷம் எழுப்பிய பாடகர் அறிவு கைது செய்யப்பட்டார்.
</p><p>
சென்னை தலைமைச் செயலகத்திற்குள் 4 பேருடன் வந்து நீட் தேர்வை ரத்து செய்யுமாறு கோஷமிட்ட பாடகர் அறிவை வலுக்கட்டாயமாக கைது செய்து காவல்துறையினர் அழைத்து சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45489ec1-a3ed-40ba-b2ec-a69e84f6a7a8/26-6a5fa2928c6a0.webp' /></p><h2>கடும் கண்டனம்</h2><p>

பாடகர் அறிவு கைது செய்யப்பட்ட விபரம் அறிந்த சில நிமிடங்களிலேயே, தமிழக முதல்வர் விஜய் பாடகர் அறிவை உடனடியாகத் தலைமைச் செயலகத்திற்கு அழைத்து வருமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.</p><p>
தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் இருவருக்கும் இடையே&nbsp; சந்திப்பு நடைபெற்றது.</p><p></p><p> </p><p>நீட் தேர்வுக்கு எதிராகத் டெல்லி மற்றும் தமிழகத்தில் நடக்கும் மாணவர்களின் போராட்ட நிலவரங்கள் குறித்தும், மாநிலத்தின் கல்வி உரிமை சார்ந்த கோரிக்கைகள் குறித்தும் முதல்வரிடம் அறிவு விரிவாக எடுத்துரைத்தார் என்ற செய்தியும் தெரிவந்துள்ளது.</p><p>ரெப் பாடகர் "அறிவு" கைது செய்யப்பட்டமைக்கு, திமுக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T21:46:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புடவையில் வெட்கத்துடன் சீரியல் நடிகை பரீனா வெளியிட்ட அழகிய போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/serial-actress-farina-azad-saree-attire-photoshoot-1784649055"></link>
            <id>https://cineulagam.com/article/serial-actress-farina-azad-saree-attire-photoshoot-1784649055</id>
            <summary type="text">நடிகை பரீனாவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியல் பலரின் சினிமா பயணத்திற்கு முக்கிய சீரியலாக அமைந்தது.அப்படி இந்த சீரியல் மூலம் கொடூ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகை பரீனா</h2><p>விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியல் பலரின் சினிமா பயணத்திற்கு முக்கிய சீரியலாக அமைந்தது.</p><p>அப்படி இந்த சீரியல் மூலம் கொடூமையான வில்லியாக மக்களால் அடையாளம் காணப்பட்டவர் தான் பரீனா. இப்போது சீரியல்கள் பக்கம் வருவது இல்லை, ஆனால் நிறைய போட்டோ ஷுட்கள், தொகுப்பாளினி என பிஸியாக வேலை செய்து வருகிறார்.</p><p>அண்மையில் இவர் சிவப்பு வெள்ளை நிற புடவையில் வெட்கத்துடன் சில போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை தற்போது நாம் காண்போம்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T21:40:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா வழியே அமெரிக்காவிற்குள் ஆட்கடத்தல்! குற்றத்தை ஒப்புக்கொண்ட மெக்சிகோ கும்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3-mexicans-admit-to-us-smuggling-conspiracy-1784662294"></link>
            <id>https://ibctamil.com/article/3-mexicans-admit-to-us-smuggling-conspiracy-1784662294</id>
            <summary type="text">கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குள் நூற்றுக்கணக்கான மக்களைச் சட்டவிரோதமாகக் கடத்திய மெக்சிகோவைச் சேர்ந்த மூவர், நீதிமன்றத்தில் தங்களது குற்றத்தை ஒப்புக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குள் நூற்றுக்கணக்கான மக்களைச் சட்டவிரோதமாகக் கடத்திய மெக்சிகோவைச் சேர்ந்த மூவர், நீதிமன்றத்தில் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
</p><p>
குற்றம் நிரூபிக்கப்பட்ட இந்த மூவருக்கும் வரும் நவம்பர் மாதத்தில் 5 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
</p><p>
இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு இணை குற்றவாளி கடந்த மே மாதமே குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், அவருக்குச் செப்டம்பரில் தண்டனை அறிவிக்கப்படவுள்ளது.</p><p>
</p><p></p><h2>தீவிர நடவடிக்கை</h2><p>வடக்கு நியூயார்க் மாநிலத்தின் உள்நாட்டுப் பாதுகாப்பு விசாரணை அமைப்பும் (HSI) அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படையும் இணைந்து இந்த விரிவான விசாரணையை நடத்தின.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2ce4dac-4070-4093-b785-d93df95f9752/26-6a5fe5ff35ef1.webp' /></p><p>கனடா எல்லை வழியே நடைபெறும் சட்டவிரோத ஊடுருவல்கள் மற்றும் கடத்தல்களைத் தடுக்க அமெரிக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T21:40:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 நாடுகள் ஏற்றுக்கொண்ட இந்தியாவின் டிஜிட்டல் UPI கட்டண முறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/upi-growth-12-nations-adopt-india-s-payment-system-1784669432"></link>
            <id>https://news.lankasri.com/article/upi-growth-12-nations-adopt-india-s-payment-system-1784669432</id>
            <summary type="text">இந்தியாவின் Unified Payments Interface (UPI) கடந்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது.

2016-இல் தேசிய கட்டணக் கழகம் (NPCI) அறிமுகப்படுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் Unified Payments Interface (UPI) கடந்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது.</p><p>

2016-இல் தேசிய கட்டணக் கழகம் (NPCI) அறிமுகப்படுத்திய இந்த முறை, இன்று இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் முதுகெலும்பாக உள்ளது.
</p><p>
2021-22 நிதியாண்டில் 4,595 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்ற நிலையில், 2025-26-இல் இது 24,161 கோடி பரிவர்த்தனைகளாக உயர்ந்துள்ளது. பரிவர்த்தனை மதிப்பு ரூ. 314.23 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29409986-56d2-41fa-82e2-4f04b3b48e2f/26-6a5fe4f9e9618.webp' /></p><p>நிதி அமைச்சகத்தின் மாநில அமைச்சர் பங்கஜ் சௌதரி தெரிவித்ததாவது, தற்போது 55.49 கோடி பயனர்கள் UPI-யில் இணைந்துள்ளனர். பாதுகாப்பை மேம்படுத்த NPCI பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதில் CUISF 2025 என்ற தகவல் பாதுகாப்பு கட்டமைப்பு, மொபைல் பயன்பாடுகளுக்கான மேம்பட்ட பாதுகாப்பு விதிமுறைகள் ஆகியவை அடங்கும்.</p><p>

மேலும், NPCI International Payments Ltd. (NIPL) மூலம் UPI உலகளாவிய அளவில் விரிவடைந்துள்ளது. இதன் மூலம் இந்திய சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் எளிதாக பரிவர்த்தனை செய்ய முடிகிறது.
</p><p></p><p>தற்போது இந்தியாவின் UPI முறையை பூட்டான், சிங்கப்பூர், UAE, பிரான்ஸ், மொரீஷியஸ், இலங்கை, நேபாளம், கத்தார், கிரீஸ், கம்போடியா உள்ளிட்ட 12 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T21:30:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்களை பயன்படுத்தத் தடை விதிக்க தயாராகிறது பிரான்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/france-to-ban-social-media-for-children-under-15-1784669414"></link>
            <id>https://canadamirror.com/article/france-to-ban-social-media-for-children-under-15-1784669414</id>
            <summary type="text">15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதிக்கும் சட்டமூலத்தை பிரான்ஸ் பாராளுமன்றம் இறுதி வாக்கெடுப்பில் நிறைவேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதிக்கும் சட்டமூலத்தை பிரான்ஸ் பாராளுமன்றம் இறுதி வாக்கெடுப்பில் நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், ஐரோப்பிய ஒன்றியத்தில் 15 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடைசெய்யும் முதல் நாடாக பிரான்ஸ் மாறும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2765c755-630e-496d-9e95-334440133239/26-6a5fe4ed8d358.webp' /></p><p>

பாராளுமன்றத்தின் மேலவை மற்றும் கீழவை உறுப்பினர்கள் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சட்டமூலத்தின் இறுதி வடிவத்திற்கு ஒருமனதாக இணக்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து, இறுதி வாக்கெடுப்புக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.
</p><p>
சட்டத்தின்படி, 2026 செப்டம்பர் 1 முதல் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் டிக்டொக், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப் செட் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் புதிய கணக்குகளைத் தொடங்க முடியாது.
</p><p>
மேலும், 2027 ஜனவரி முதல், ஏற்கனவே 15 வயதிற்குட்பட்டோரால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக ஊடகக் கணக்குகளையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மூட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

அதேவேளை, புதிய கல்வியாண்டு தொடங்கும் செப்டம்பர் மாதம் முதல், பிரான்ஸின் உயர்நிலைப் பாடசாலைகளில் மாணவர்கள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்படவுள்ளது</p><p>
இருப்பினும், விக்கிப்பீடியா, கல்வி இணையத்தளங்கள் மற்றும் திறந்த மூல மென்பொருள் தளங்கள் இந்தத் தடையிலிருந்து விலக்கு பெறும்.</p>]]></content>
            <updated>2026-07-21T21:30:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளைஞனின் உயிரை பறித்த விபத்து ; பேருந்து சாரதி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bus-driver-arrested-after-fatal-crash-1784668206"></link>
            <id>https://jvpnews.com/article/bus-driver-arrested-after-fatal-crash-1784668206</id>
            <summary type="text">ஆனமடுவ - புத்தளம் வீதியில் தோனிகல பகுதியில் நேற்றுமுன் தினம் (20) காலை புத்தளத்தில் இருந்து ஆனமடுவ நோக்கிப் பயணித்த பேருந்தும், எதிர்த்திசையில் வந்த ம...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஆனமடுவ - புத்தளம் வீதியில் தோனிகல பகுதியில் நேற்றுமுன் தினம் (20) காலை புத்தளத்தில் இருந்து ஆனமடுவ நோக்கிப் பயணித்த பேருந்தும், எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p style="text-align: justify; ">

இந்த விபத்தில் உரியாவ பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fa3df52-1449-4036-8a00-c6ad5bcf2307/26-6a5fe03033945.webp' /></p><p style="text-align: justify; "> 

இச்சம்பவம் தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">இச்சம்பவம் தொடர்பில்&nbsp; பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-21T21:30:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்! போராட்டத்திற்கு அவசர அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/urgent-call-for-protest-semmani-mass-grave-1784668014"></link>
            <id>https://tamilwin.com/article/urgent-call-for-protest-semmani-mass-grave-1784668014</id>
            <summary type="text">செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இன்றையதினம்(22.7.2026) போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இன்றையதினம்(22.7.2026) போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. </p><p>வடக்கு
கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் விடுத்துள்ள
செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, போர் நிறைவுற்று பல வருடங்களாகியும் நீதி தரப்படாதிருக்கின்ற வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்கள் விடயத்திற்கும், தற்போது 454 மனித எலும்புக்கூடுகள்
அகலப்பட்டுள்ள செம்மணி மனிதப்புதைகுழி விடயத்திற்கும் உடனடியாக சர்வதேச நீதி
விசாரணை வேண்டும். </p><p>தமிழ் இன அழிப்பின் சான்றாதாரமாக இருக்கின்ற இவ்விடயங்களை
மூடிமறைத்து நீர்த்துப்போகச்செய்யும் இலங்கை அரசின் நடவடிக்கைகள்
அதிருப்தியளிக்கின்றன.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">கவனயீர்ப்பு போராட்டம்</span></p><p> </p><p>நீதி கோரி தொடர்ச்சியாகப் போராடிவரும் ஏமாற்றும் அரசின்
கபட நாடகங்களுக்கு சர்வதேச சமூகம் ஏமார்ந்து போகக்கூடாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25a6c4ec-de3a-44f3-a307-413bc6def9a5/26-6a5fe0948af8e.webp' /></p><p> </p><p>அந்த வகையில் இன்றையதினம் காலை செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியைப் பார்வையிட
வருகைதரவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்பு பிரதிநிதிகள் குழுவின் கவனத்தை
ஈர்க்கும் முகமாக செம்மணி வளைவு பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை
முன்னெடுக்கவுள்ளோம். </p><p>காலை 8.00 மணியளவில் ஆரம்பமாகும் இப்போரட்டத்தில் தமிழ்
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக
பிரதிநிதிகள், அரசரார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என
அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அவசர அழைப்பு விடுக்கின்றோம் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T21:11:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் முன்னணி தொழிலதிபர் எப்படி வீழ்ந்தார்! லலித் கொத்தலாவலவின் அதிர்ச்சி கதை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-mahinda-lalith-kotelawala-1784666942"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-mahinda-lalith-kotelawala-1784666942</id>
            <summary type="text">இலங்கையின் முண்ணனி தொழிலதிபரான&amp;nbsp;லலித் கொத்தலாவவல மகிந்த ராஜபக்சவினால் ஏமாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.மகிந்த ராஜபக்ச ஓமாகமவில் கட்டப்பட்ட விளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் முண்ணனி தொழிலதிபரான&nbsp;லலித் கொத்தலாவவல மகிந்த ராஜபக்சவினால் ஏமாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.</p><p>மகிந்த ராஜபக்ச ஓமாகமவில் கட்டப்பட்ட விளையாட்டு மைதானத்தை பார்வையிடுவதற்காக தன்னை உலங்குவானூர்தி யில் அழைத்து சென்றதாகவும் மைதானம், ஓட்டப்பந்தய தடம் அமைப்பதற்குமான 10 கோடி ரூபா பணத்தை தாம் அவர்களுக்கு கொடுத்ததாகவும் குறிப்பிட்டார்.</p><p>இந்தநிலையிலே,&nbsp;லலித் கொத்தலாவவல செய்த உதவிக்காக அவரது பெயரை மைதானத்திற்கு சூட்டப்படும் என மகிந்த கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>பின்னர் மைதானம் திறக்கப்படும்போது தனது பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை எனவும்&nbsp; லலித் கொத்தலாவவல குறிப்பிடார்.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியுஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/O94aalPiYWc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T21:01:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் கடைக்குள் சோதனை ; போதைப்பொருளுடன் சிக்கிய சந்தேகநபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/inspection-carried-out-at-local-shop-1784667021"></link>
            <id>https://jvpnews.com/article/inspection-carried-out-at-local-shop-1784667021</id>
            <summary type="text">இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து கல்முனைப் பகுதியில் மேற்கொண்ட விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் வசம் வைக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து கல்முனைப் பகுதியில் மேற்கொண்ட விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் வசம் வைக்கப்பட்டிருந்த 'மூக்குத்தூள்' எனப்படும் போதைப்பொருள் தொகுதியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify;">
தென்கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் தீகாயு நிறுவனமும், கல்முனை பொலிஸாரும் இணைந்து இப்பகுதியில் மேற்கொண்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் உள்ள சந்தேகத்திற்கிடமான கடையொன்றும் வீடொன்றும் சோதனையிடப்பட்டன.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5f5581a-bdf6-49bb-88d2-9f1ccb0bd228/26-6a5fdb8f46f16.webp' /></p><p style="text-align: justify;"> இதன்போது, சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த முப்பது (30) கிலோகிராமிற்கும் அதிகமான 'மூக்குத்தூள்' போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுச் சட்டத்தின் பிடியில் ஒப்படைக்கப்பட்டார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

மேலும், இந்த கூட்டு நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify;"> மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகச் சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகுதியும் கல்முனைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-21T21:00:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவின் புதிய AI அமைச்சராக இந்திய வம்சாவளி எம்.பி. நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bihar-born-kanishka-narayan-named-uk-ai-minister-1784667628"></link>
            <id>https://news.lankasri.com/article/bihar-born-kanishka-narayan-named-uk-ai-minister-1784667628</id>
            <summary type="text">பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆன்டி பர்னாம் தனது அமைச்சரவையை அறிவித்துள்ளார். இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லேபர் கட்சி எம்.பி. கனிஷ்கா நாராயண் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆன்டி பர்னாம் தனது அமைச்சரவையை அறிவித்துள்ளார். இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லேபர் கட்சி எம்.பி. கனிஷ்கா நாராயண் செயற்கை நுண்ணறிவு (AI) அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
கனிஷ்க நாராயண், 1989 நவம்பரில் பீஹாரின் முய்ஸாபர்பூர் நகரில் பிறந்தவர். 12 வயதில் குடும்பத்துடன் வேல்ஸ் மாநிலத்தின் கார்டிஃபுக்கு குடிபெயர்ந்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4ee4be1-b2c3-49bd-98d0-d0e53682b18d/26-6a5fddee49076.webp' /></p><p>அங்கு கல்வி பயின்று, பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் PPE (Philosophy, Politics, Economics) படித்தார். மேலும், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் MBA முடித்துள்ளார்.
</p><p>
2024 பொதுத் தேர்தலில், அவர் வேல் ஆஃப் கிளாமார்கன் தொகுதியில் வெற்றி பெற்று, வேல்ஸ் மாநிலத்தில் முதல் இன சிறுபான்மை எம்.பி. ஆனார்.
</p><p>
2025-இல் AI மற்றும் ஓன்லைன் பாதுகாப்பு தொடர்பான அமைச்சராக நியமிக்கப்பட்டு, இப்போது அமைச்சரவை நிலை AI அமைச்சராக உயர்த்தப்பட்டுள்ளார்.</p><p></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The Prime Minister, <a href="https://x.com/andyburnham?ref_src=twsrc%5Etfw">@andyburnham</a>, today asked me to attend Cabinet as Minister for AI, a sign of his deep commitment to AI&#39;s importance.<br><br>AI is likely the most significant technology in human history. Its impact will dwarf other things.<br><br>The best case for it is compelling beyond…</p>&mdash; Kanishka Narayan MP (@KanishkaNarayan) <a href="https://x.com/KanishkaNarayan/status/2079349690881970365?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>அரசியலுக்கு முன்பு, அவர் UK Cabinet Office-இல் சிவில் சர்வீசில் பணியாற்றியதுடன், தனியார் துறையிலும் நிதி ஆலோசகராக இருந்துள்ளார். </p><p>சமூக சேவைகளிலும் ஆர்வம் கொண்ட அவர், Attain Wales என்ற அமைப்பை நிறுவி, கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக பணியாற்றியுள்ளார்.</p><p>

பிரித்தானியாவின் AI கொள்கை தற்போது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், Google DeepMind, ElevenLabs, Wayve போன்ற முன்னணி AI நிறுவனங்கள் அங்கு செயல்படுகின்றன. </p><p></p><p>இந்நிலையில், கனிஷ்கா நாராயண் தலைமையிலான புதிய AI அமைச்சகம், பிரித்தானியாவின் தொழில்நுட்ப எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய பங்கு வகிக்க உள்ளது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T20:58:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[Jananayagan எடுக்கும் போது CM ஆவாருனு சத்தியமா நெனைக்கல - Kumar Natarajan Interview]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/kumar-natarajan-breaking-interview-1784639311"></link>
            <id>https://cineulagam.com/article/kumar-natarajan-breaking-interview-1784639311</id>
            <summary type="text">குமார் நடராஜன்வரும் ஜுலை 23ம் தேதி தமிழகம் கொண்டாட்டத்தில் இருக்கப்போகிறது, காரணம் தளபதி விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் ரிலீஸ் ஆகப்போகிறது.
விஜய் மு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>குமார் நடராஜன்</h2><p>வரும் ஜுலை 23ம் தேதி தமிழகம் கொண்டாட்டத்தில் இருக்கப்போகிறது, காரணம் தளபதி விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் ரிலீஸ் ஆகப்போகிறது.
</p><p>விஜய் முதலமைச்சர் ஆவதற்கு முன்பு ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய படம், இப்போது முதலமைச்சர் விஜய்யின் படம் என்று வெளியாகிறது. நாளை மறுநாள் படம் வெளியாகவுள்ள நிலையில் படம் குறித்து பிரபலங்கள் நிறைய விஷயங்கள் பகிர்ந்து வருகிறார்கள். </p><p>அப்படி நடிகர் குமார் நட்ராஜன் விஜய் பற்றியும், அவரது ஜனநாயகன் படம் குறித்தும் பேசிய வீடியோவை காண்போம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/I7JQDp0BjeU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-21T20:40:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[17 வயது சிறுவன் மீது கத்திக்குத்து —இளம் பெண் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/17-year-old-critically-injured-in-stabbing-1784651080"></link>
            <id>https://canadamirror.com/article/17-year-old-critically-injured-in-stabbing-1784651080</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் மிசிசாகா நகரில் பேருந்து ஒன்றுக்குள்ளேயே 17 வயது சிறுவனைக் கத்தியால் குத்திக் கொடூரமாகத் தாக்க முயன்ற குற்றத்திற்காக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் மிசிசாகா நகரில் பேருந்து ஒன்றுக்குள்ளேயே 17 வயது சிறுவனைக் கத்தியால் குத்திக் கொடூரமாகத் தாக்க முயன்ற குற்றத்திற்காக 18 வயது இளம் பெண்ணைக் காவல் துறையினர் கைது செய்து, அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர். </p><p>
செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 1:50 மணியளவில் ஹூரோன்டாரியோ தெரு மற்றும் வாட்லைன் டிரைவ் அருகே இயங்கிக் கொண்டிருந்த 'மிவே' பேருந்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. </p><p>
செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பீல் பிராந்திய காவல் துறை அதிகாரிகள் இதுகுறித்த விவரங்களை வெளியிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2df964a1-8ffe-4d4d-9b9e-217faa9f1e29/26-6a5f9d4a270d1.webp' /></p><p>தாக்குதலுக்கு உள்ளான 17 வயது சிறுவனும், கத்தியால் குத்திய 18 வயது இளம் பெண்ணும் முன்பே ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
பேருந்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், அந்தப் பெண் சிறுவனைக் கத்தியால் குத்தியுள்ளார். </p><p>
ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அச்சிறுவன் டொராண்டோவில் உள்ள அதி தீவிர சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டார்.</p><p>
 தொடக்கத்தில் அவரது நிலை சீராக இருந்தபோதிலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே நிலைமை மிகவும் கவலைக்கிடமாக மாறியதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 
சம்பவ இடத்திலேயே 18 வயது பெண்ணைக் காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது பின்வரும் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>இது இருவருக்குள் தனிப்பட்ட முறையில் நடந்த சம்பவம் என்றும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு வேறு எந்தப் அச்சுறுத்தலும் இல்லை என்றும் புலனாய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். </p><p>
பாதிக்கப்பட்ட சிறுவனுக்கும் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கும் இடையிலான உறவின் தன்மை என்ன என்பது குறித்தும், அவர்கள் இருவரும் ஒன்றாகப் பேருந்தில் ஏறினார்களா என்பது குறித்தும் இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T20:38:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் இடம்பெற்ற சிறப்பு யோகாசனப் பயிற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-yoga-practic-reecha-integrated-farm-1784665552"></link>
            <id>https://tamilwin.com/article/special-yoga-practic-reecha-integrated-farm-1784665552</id>
            <summary type="text">றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் ஊழியர்களின் உடலையும் மனதையும் வலுப்படுத்தும் சிறப்பு யோகாசனப் பயிற்சி நிகழ்வு நடைபெற்றது.பாஸ்கரன் கந்தையாவின் ஏற்பாட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் ஊழியர்களின் உடலையும் மனதையும் வலுப்படுத்தும் சிறப்பு யோகாசனப் பயிற்சி நிகழ்வு நடைபெற்றது.</p><p>பாஸ்கரன் கந்தையாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், 75க்கும் மேற்பட்டவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.</p><p></p><h2>யோகா பயிற்சிகள்..&nbsp;</h2><p> ஆரம்பத்தில் சில ஆசனங்கள் கடினமாக இருந்தபோதிலும், பயிற்சியின் முடிவில் உடல் நெகிழ்வுத்தன்மையையும் மன அமைதியையும் அடைந்ததாக ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36a80513-6353-4a34-99a3-dd447371147f/26-6a5fd7b853c48.webp' /></p><p>இதனை தொடர்ந்து, ஊழியர்களின் நலன் கருதி, பண்ணையில் தொடர்ச்சியாக யோகா பயிற்சிகளை நடத்த நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
</p><p>அதேநேரம், ஊழியர்களின் ஆர்வத்தைக் கண்டு யோகா பயிற்றுவிப்பாளர் கலைஞர் குமாரு யோகேஸ்வரன் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.</p><p>"சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்; ஆரோக்கியமே நமது மிகப்பெரிய செல்வம்."

நமது அன்றாட பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட அனைவரும் யோகாவைத் தொடர்ந்து செய்து ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறோம் என இதன்போது&nbsp; சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T20:37:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு வருவோருக்கான அவசர அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/urgent-notice-for-visitors-to-children-s-hospital-1784665461"></link>
            <id>https://jvpnews.com/article/urgent-notice-for-visitors-to-children-s-hospital-1784665461</id>
            <summary type="text">தற்போது நிலவும் டெங்கு பரவல் நிலைமை காரணமாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக வருகை தரும் சிறுவர் நோயாளர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது நிலவும் டெங்கு பரவல் நிலைமை காரணமாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக வருகை தரும் சிறுவர் நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் பிரதீப் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்தக் கடுமையான நெரிசலுக்கு மத்தியிலும் சிறுவர்களுக்கு விரைவான மற்றும் திறமையான மருத்துவ சிகிச்சையை உறுதிப்படுத்துவதற்குப் பெற்றோர்களினதும் பாதுகாவலர்களினதும் ஒத்துழைப்பு அவசியமாகியுள்ளதாக ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2df74ef7-f79b-4079-a96b-8a01827f3b9f/26-6a5fd576c23f3.webp' /></p><h2>பூரண ஒத்துழைப்பு&nbsp;</h2><p>
</p><p>
அதற்கமைய, சிகிச்சைகள் அல்லது கிளினிக் விஜயங்களுக்காக (Clinic Visits) சிறுவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பின்வரும் 5 ஆவணங்களையும் கட்டாயமாக எடுத்து வருமாறு பணிப்பாளர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>தனிப்பட்ட சுகாதார இலக்கம் அல்லது பார்ஃகோட் அட்டை</p><p>சிறுவர் சுகாதார வளர்ச்சிப் பதிவுப் புத்தகம் / நிறை பதிவுப் புத்தகம்&nbsp;</p><p>மருந்து அல்லது உணவு ஒவ்வாமை பற்றிய விபரங்கள்&nbsp;</p><p>கிளினிக் புத்தகங்கள்&nbsp;</p><p>வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்ட அட்டைகள் அல்லது நோயறிதல் அட்டைகள்&nbsp;</p><p>

பொதுமக்கள் இது தொடர்பில் தமது பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதோடு, மேலதிக விபரங்கள் ஏதேனும் தேவைப்படின் லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் பணிப்பாளர் அலுவலகத்தின் 011 2693711 ( நீடிப்பு 307) என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T20:25:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[64 அணிகள் பங்கேற்கும் உலகக் கிண்ணம்: கால்பந்தாட்ட விரிவாக்கம் குறித்து FIFA பரிசீலனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fifa-considering-expansion-football-world-cup-1784664085"></link>
            <id>https://tamilwin.com/article/fifa-considering-expansion-football-world-cup-1784664085</id>
            <summary type="text">48 அணிகள் பங்கேற்ற முதலாவது உலகக் கிண்ணக் கால்பந்து தொடர் நிறைவடைந்த
நிலையில், வருங்காலத்தில் உலகக் கிண்ணத் தொடரை 64 அணிகளாக விரிவாக்கம் செய்வது
குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>48 அணிகள் பங்கேற்ற முதலாவது உலகக் கிண்ணக் கால்பந்து தொடர் நிறைவடைந்த
நிலையில், வருங்காலத்தில் உலகக் கிண்ணத் தொடரை 64 அணிகளாக விரிவாக்கம் செய்வது
குறித்து பரிசீலிக்கப்படலாம் என FIFA தலைவர் ஜியானி இன்ஃபாண்டினோ
தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், அது சர்வதேச கால்பந்தாட்டத்தின் நிதி
மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை முற்றிலுமாக மாற்றியமைக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கிண்ணத்தில் 64 அணிகள் பங்கேற்கும் போது, முன்னணி நாடுகள் தகுதி பெறுவது
எளிதாகும். </p><p>இதனால் தகுதிச் சுற்றுப் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமையின் வணிக
மதிப்பு குறையக்கூடும்.

இதன் காரணமாக பிராந்திய கால்பந்து கூட்டமைப்புகள் நிதித்தேவைகளுக்காக FIFA
அமைப்பை அதிகளவில் சார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவாகும்.

இது FIFA அமைப்பின் நிதி ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் மேலும் அதிகரிக்கும்.</p><p></p><h2>போட்டிகளின் எண்ணிக்கை</h2><p>

இருப்பினும், ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பான UEFA மற்றும் ஆசிய கால்பந்து
கூட்டமைப்பு ஆகியவை இந்த விரிவாக்க யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

64 அணிகள் பங்கேற்றால் மொத்த போட்டிகளின் எண்ணிக்கை 128 ஆக உயரும்.

இது கடந்த காலங்களை விட இருமடங்காகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cba0fba-bbb9-4a0c-a9c1-3234b4c8bd47/26-6a5fd4217d4ec.webp' /></p><p> இதனால் போட்டிகளை நடத்த கூடுதல்
மைதானங்கள், ஹோட்டல்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் தேவைப்படும்.

2030 உலகக் கிண்ணத்தை ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகள்
இணைந்தும், 2034 உலகக் கிண்ணத்தை சவுதி அரேபியாவும் நடத்தவுள்ள நிலையில்,
இவ்வளவு பெரிய தொடரை நடத்துவது பெரும் சவாலாக அமையும்.
</p><p>
போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் வீரர்களின் பணிச்சுமை அதிகரித்து
காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், தொடர் நீண்ட நாட்கள் நடைபெறுவதால் பங்கேற்கும் நாடுகளின் கால்பந்து
சம்மேளனங்களுக்கு தங்குமிடம் மற்றும் பராமரிப்புச் செலவுகள் கணிசமாக உயரும்.
</p><p>
சிறிய நாடுகளுக்கு உலக மேடையில் வாய்ப்பு கிடைத்தாலும், போட்டியின் தரம்
மற்றும் முக்கியத்துவம் குறையக்கூடும் என்ற கவலையும் விளையாட்டு
வல்லுநர்களிடையே எழுந்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T20:18:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெக்சிகோவின் போதைப்பொருள் கடத்தல்காரருக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mexican-drug-trafficker-sentenced-life-us-court-1784663947"></link>
            <id>https://tamilwin.com/article/mexican-drug-trafficker-sentenced-life-us-court-1784663947</id>
            <summary type="text">மெக்சிகோவின் மிகவும் கொடூரமான மற்றும் பயங்கரமான போதைப்பொருள் கடத்தல்
கும்பலான &#039;சினாலோவா கார்டெல்&#039; அமைப்பின் தலைவரான இஸ்மவேல் &#039;எல் மாயோ&#039;
ஜம்பாடாவுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>மெக்சிகோவின் மிகவும் கொடூரமான மற்றும் பயங்கரமான போதைப்பொருள் கடத்தல்
கும்பலான 'சினாலோவா கார்டெல்' அமைப்பின் தலைவரான இஸ்மவேல் 'எல் மாயோ'
ஜம்பாடாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத்
தீர்ப்பளித்துள்ளது.</p><h2>நீதிமன்ற&nbsp;விசாரணை</h2><p>
</p><p>
சுமார் 40 ஆண்டுகளாகப் போதைப்பொருள் பேரரசை நடத்தி வந்த எல் மாயோ, தனது
கடத்தல் நடவடிக்கைகளுக்காகப் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் காரணமாக
இருந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00dadb8f-4d5d-444a-9d51-60102dc803ec/26-6a5fcf8d8942d.webp' /></p><p>

கடந்த ஆண்டு அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, பல மில்லியன்
கிலோகிராம் கொக்கையின் போதைப்பொருளை அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாகக்
கடத்தியதை எல் மாயோ ஒப்புக்கொண்டார்.
</p><p>
இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் இந்த இறுதியான ஆயுள்
தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p>

உலக அளவில் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை நடத்தி வந்த முக்கிய புள்ளிகளில்
ஒருவரான எல் மாயோவுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த ஆயுள் தண்டனை, சர்வதேச
போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் அமெரிக்க நீதித்துறைக்குக்
கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T19:59:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் பால் பண்ணையாளர்களுக்கு உலக வங்கியின் புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/world-bank-unveils-dairy-farmer-1784663871"></link>
            <id>https://jvpnews.com/article/world-bank-unveils-dairy-farmer-1784663871</id>
            <summary type="text">டித்வா&#039; அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட நாட்டின் கால்நடை வளர்ப்புத் துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கும், பால் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை இயல்பு நி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">டித்வா' அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட நாட்டின் கால்நடை வளர்ப்புத் துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கும், பால் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கும் விசேட அவசர நிவாரணத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

பாதிக்கப்பட்ட விலங்குகளுக்காக அரசாங்கத்தினால் ஏற்கனவே வழங்கப்படும் நஷ்டஈட்டுத் தொகைக்கு மேலதிகமாக இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக விவசாய, கால்நடை, நில மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f75d31b8-625f-4abf-9b38-0f5ecc3effae/26-6a5fcf4154dd1.webp' /></p><h2 style="text-align: justify; ">பால் உற்பத்தி</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

இந்த அவசர மீட்புத் திட்டம் உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் செயல்படுத்தப்படுவதாகவும், திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து ஆரம்பக் கட்டப் பணிகளும் வெற்றி கரமாக நிறைவடைந்துள்ளதாகவும், அதனை கள அளவில் விரைவாகச் செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

விலங்கு தீவனம் வழங்குதல், தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துதல், விலங்கு நலன் மற்றும் சுகாதாரம், உள்கட்டமைப்பை மீண்டும் மேம்படுத்துதல், உணவு அமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் மரபணு மேம்பாட்டின் மூலம் உயர்தர பால் பசுக்களை உருவாக்குதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

இத்திட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட கால்நடை பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் ஸ்திரப்படுத்துவதும், உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதும், நாட்டின் ஒட்டுமொத்த உணவுப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதும் அரசாங்கத்தின் முதன்மை எதிர்பார்ப்பாகும்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-21T19:57:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவிற்கு சிலை வேண்டும் - 2029இல் சிறையில் நாமல் ஜனாதிபதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-namal-rajapaksa-family-2029-election-1784662229"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-namal-rajapaksa-family-2029-election-1784662229</id>
            <summary type="text">இலங்கையில் தற்போது அரசியல் களம் சூடுபிடித்து வருகின்றது.&amp;nbsp;தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தற்போது அரசியல் களம் சூடுபிடித்து வருகின்றது.&nbsp;</p><p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் பிரதான எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன.&nbsp;</p><p>இதற்கிடையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், பல முக்கிய அதிகாரிகளின் மர்ம மரணங்களும் நிகழ்ந்து வருகின்றன.&nbsp;</p><p>இது தொடர்பில் குறிப்பாக ராஜபக்ச குடும்பத்தினர் மீது சில தரப்புக்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p>இந்நிலையில், பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாட்டிற்கு ஜனாதிபதி ஆவாரோ இல்லையோ, சிறைச்சாலைக்கு ஜனாதிபதி ஆவார் என விமர்சித்துள்ளார்.&nbsp;</p><p>இவை உட்பட நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது இன்றைய நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/T-2cqHMz4ss" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T19:51:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமந்தாவின் எங்கள் தங்கம் படம் மொத்தமாக செய்துள்ள வசூல்... Final Collection]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/samantha-engal-thangam-movie-final-collection-1784621791"></link>
            <id>https://cineulagam.com/article/samantha-engal-thangam-movie-final-collection-1784621791</id>
            <summary type="text">எங்கள் தங்கம்மா இன்டி பங்காரம், தெலுங்கில் நடிகை சமந்தா நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம். தமிழில் எங்கள் தங்கம் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெள...</summary>
            <content type="html"><![CDATA[<h2>எங்கள் தங்கம்</h2><p>மா இன்டி பங்காரம், தெலுங்கில் நடிகை சமந்தா நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம்.</p><p> தமிழில் எங்கள் தங்கம் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது. </p><p>காதல் திருமணம் செய்து கொள்ளும் ஸ்வர்ணா (சமந்தா) தனது கணவர் குடும்பத்தின் நன்மதிப்பைப் பெற முயற்சிக்கும் போது அவரைத் தேடிவரும் ஒரு மர்மக் கும்பலிடம் இருந்து தன் குடும்பத்தைக் காப்பாற்றும் துணிச்சலான ஆக்ஷன் கதையாக இப்படம் அமைந்துள்ளது. </p><p>தமிழை தாண்டி தெலுங்கு சினிமா இப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b34f37c9-c709-42b5-a107-bbee7511303e/26-6a5f2ae0b3c68.webp' /></p><h2>பாக்ஸ் ஆபிஸ்</h2><p>
நந்தினி ரெட்டி இயக்கத்தில் கடந்த ஜுன் 19ம் தேதி வெளியான இப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கி பாக்ஸ் ஆபிஸில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ளது. </p><p>தற்போது எங்கள் தங்கம் படத்தின் Final Collection விவரம் வெளியாகியுள்ளது. இப்படம் மொத்தமாக ரூ. 102 கோடி வரை வசூலித்துள்ளதாம், படம் பிளாக் பஸ்டராக கொண்டாடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/204abbba-8492-424a-88cb-993484217042/26-6a5f2ae1663b5.webp' /></p>]]></content>
            <updated>2026-07-21T19:40:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[56 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை ; அதிகரிக்கும் டெங்கு அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-death-toll-rises-to-56-1784662176"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-death-toll-rises-to-56-1784662176</id>
            <summary type="text">கடந்த 24 மணி நேரத்துக்கு டெங்கு நோய்த் தாக்கம் காரணமாக மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளதோடு, நடப்பாண்டில் இதுவரை டெங்கு நோயால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 24 மணி நேரத்துக்கு டெங்கு நோய்த் தாக்கம் காரணமாக மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளதோடு, நடப்பாண்டில் இதுவரை டெங்கு நோயால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.
</p><p>
தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள புதிய புள்ளிவிபரங்களின்படி, இந்த ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் 77,028 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/332d19a6-d917-4704-99ab-b3fd4d005708/26-6a5fc8a224676.webp' /></p><h2>ஆபத்து நிறைந்த வலயங்கள்</h2><p>
நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, நாடு முழுவதும் உள்ள 162 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் அதிக ஆபத்து நிறைந்த வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
</p><p>
மாதாந்த நிலவரங்களின்படி, கடந்த மே மாதத்தில் 8,590 நோயாளர்களும், ஜூன் மாதத்தில் 21,537 நோயாளர்களும் பதிவாகியுள்ள நிலையில், ஜூலை மாதத்தின் கடந்த 20 நாட்களில் மட்டும் 21,650 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.</p><p>

தற்போது நோயாளர் உயிரிழப்பு விகிதம் 0.07% ஆகக் காணப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
மாகாண ரீதியான புள்ளிவிபரங்களின் அடிப்படையில் அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்தே பதிவாகியுள்ளனர்.
இது மொத்த நோயாளிகளில் 52.67% ஆகும். </p><p>அந்த மாகாணத்தில் இந்த வருடத்தில் 40,573 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேலும், தென் மாகாணத்தில் 11,867 நோயாளர்களும் (15.41%), மத்திய மாகாணத்தில் 6,492 நோயாளர்களும் (8.43%) பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T19:29:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகில் அதிகளவில் பட்டினியை எதிர்கொள்ளும் கண்டம்: ஆசியாவை விஞ்சிய ஆப்பிரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/africa-tops-hunger-list-surpasses-asia-un-1784662087"></link>
            <id>https://news.lankasri.com/article/africa-tops-hunger-list-surpasses-asia-un-1784662087</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகள் சபையின் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்த வருடாந்திர அறிக்கையில், உலகளவில் பட்டினி குறையும் நிலையில் இருந்தாலும், அந்த முன்னே...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் சபையின் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்த வருடாந்திர அறிக்கையில், உலகளவில் பட்டினி குறையும் நிலையில் இருந்தாலும், அந்த முன்னேற்றம் சமமாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
2026 ஜூலை 21 அன்று வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், ஆப்பிரிக்கா கண்டம், ஆசியாவை விட அதிகமான மக்கள் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இதன் மூலம், முதன்முறையாக உலகில் அதிகளவில் பட்டினியை எதிர்கொள்ளும் கண்டமாக ஆப்பிரிக்கா மாறியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ef1fb7d-305e-4bd5-8bfe-0f2126d4eabc/26-6a5fc8c67d0aa.webp' /></p><p>ஆப்பிரிக்காவில் பல கோடி மக்கள் போதுமான உணவின்றி வாழ்ந்து வருவதாகவும், குறிப்பாக சஹாரா தெற்குப் பகுதிகள் மற்றும் ஜிம்பாப்வே போன்ற நாடுகளில் உணவு உதவிக்கு மக்கள் அதிகமாக சார்ந்துள்ளனர்.
</p><p>
ஐ.நா. அறிக்கையில், உலகளவில் பட்டினி குறைப்பதில் முன்னேற்றம் இருந்தாலும், அது சமமாக இல்லை. சில பகுதிகளில் உணவு பாதுகாப்பு மேம்பட்டாலும், ஆப்பிரிக்காவில் நிலைமை மோசமடைந்துள்ளது.</p><p>

இதனால், ஆப்பிரிக்கா கண்டத்தில் உணவு பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் சர்வதேச உதவி, அரசியல் நிலைத்தன்மை, வேளாண் வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றம் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T19:28:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க - கனடா வர்த்தக மோதல்...! ட்ரம்ப்புடன் அவரச கலந்துரையாடலில் கார்னி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-imposes-50-tariff-on-canadian-goods-1784658118"></link>
            <id>https://ibctamil.com/article/trump-imposes-50-tariff-on-canadian-goods-1784658118</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் தொலைபேசியில் உரையாடியதாக கனடப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வாகனங்கள், பால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் தொலைபேசியில் உரையாடியதாக கனடப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தெரிவித்துள்ளார்.
</p><p>
அமெரிக்க வாகனங்கள், பால் பொருட்கள் மற்றும் மதுபானங்களுக்கு கனடாவில் சமமற்ற உரிமை வழங்கப்படுவதாகக் கூறி, கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பரந்த அளவிலான பொருட்கள் மீது 50 சதவீத வரியை ட்ரம்ப் விதித்துள்ளார்.</p><p>

ஒயின் மற்றும் ஹாக்கி மட்டைகள் போன்ற அன்றாட நுகர்பொருட்கள் மற்றும் சிமெண்ட் போன்ற தொழில்துறை பொருட்கள் இந்த புதிய வரி விதிப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.</p><p> </p><p></p><h2>ஏற்றுமதிப் பொருட்கள்</h2><p>இருப்பினும், எரிபொருள், பொட்டாஷ், முக்கிய கனிமங்கள் மற்றும் மீன் வளங்கள் போன்ற சில பிரதான ஏற்றுமதிப் பொருட்களுக்கு இந்த வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7e2978d-dcf8-44eb-8c96-c31932aa82a7/26-6a5fc4402cbbd.webp' /></p><p>

இந்தத் திடீர் வரி அச்சுறுத்தலைத் தொடர்ந்து, ட்ரம்புடன் தொலைபேசியில் உரையாடியதாக மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்தநிலையில் வட அமெரிக்க அண்டை நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.</p><p>
</p><p></p><h2>வர்த்தக அச்சுறுத்தல்</h2><p>எனினும், அமெரிக்காவின் இந்த புதிய வர்த்தக அச்சுறுத்தலுக்கு கனடா எவ்வாறு பதிலளிக்கும் என்பது குறித்து அனைத்து வழிகளும் பரிசீலனையில் உள்ளதாக மார்க் கார்னி எச்சரித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9758234f-723f-4e37-b849-1abc47540f92/26-6a5fc44110c66.webp' /></p><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், உள்நாட்டுப் பொருட்களை வாங்குவதன் மூலமும், பிற நாடுகளுடன் புதிய வர்த்தக வழிகளை அமைத்துக் கொள்வதன் மூலமும் கனடா மக்கள் உறுதியுடன் ஒன்றிணைந்து நின்றுள்ளனர். </p><p>

நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதால் நமது நாடு மேலும் பலமடைந்துள்ளது, தொடர்ந்து ஒற்றுமையாகவும் இருப்போம்” என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T19:25:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைது செய்யப்பட்ட நான்கு பாடசாலை மாணவர்கள்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/four-students-released-on-police-bail-1784659420"></link>
            <id>https://tamilwin.com/article/four-students-released-on-police-bail-1784659420</id>
            <summary type="text">வல்வெட்டுத்துறை பொலிஸாரால் பாடசாலைக்கு ஒழுங்காக செல்வதில்லை என்ற
குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வல்வெட்டுத்துறை பொலிஸாரால் பாடசாலைக்கு ஒழுங்காக செல்வதில்லை என்ற
குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>நேற்றையதினம்(21) காலை கைது செய்யப்பட்ட குறித்த நான்கு மாணவர்களும் இரவாகியும் நீதிமன்றத்தில்
முற்படுத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டு இருந்தனர்.</p><p> இந்த நிலையில் பல்வேறு
அழுத்தங்கள் பெற்றோர் மற்றும் உறவுகளால் முன்வைக்கப்பட்டு இருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>பிணை</h2><p> சிறுவர் என்ற காரணத்தினால் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும்,
எனினும் நாளை காலை 7:00 மணிக்கு பொலிஸ் நிலையம் வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை நாளைய தினம் எடுக்கப்பட
உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ec3efa7-f205-4a46-bf5b-5331caca0c9b/26-6a5fbf954fc03.webp' /></p><p>இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்த
நிலையில் தற்போது பொலிஸ் பிணையில் மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T19:25:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாலத்தீவு கடலில் டூபீஸில் குளிக்கும் நடிகை மாளவிகா!! புகைப்படங்கள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/malavika-name-actress-shwetakonnurmenon-maldives-1784639302"></link>
            <id>https://viduppu.com/article/malavika-name-actress-shwetakonnurmenon-maldives-1784639302</id>
            <summary type="text">மாளவிகாதமிழில் உன்னைத்தேடி, ஆனந்த பூங்காற்றே, ரோஜோவனம், வெற்றிக் கொடிக்கட்டு, லவ்லீ, பேரழகன், வசூல் ராஜா எம்பிபிஎஸ், அய்யா, சந்திரமுகி, உள்ளிட்ட படங்க...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மாளவிகா</h2><p>தமிழில் உன்னைத்தேடி, ஆனந்த பூங்காற்றே, ரோஜோவனம், வெற்றிக் கொடிக்கட்டு, லவ்லீ, பேரழகன், வசூல் ராஜா எம்பிபிஎஸ், அய்யா, சந்திரமுகி, உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார் நடிகை மாளவிகா(Shweta Konnur Menon).</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b84fb2db-7f96-436c-94c8-44734e622795/26-6a5f6f487b9ec.webp' /></p><p>
</p><p>
படத்தை தாண்டி அவர் சித்திர பேசுதடி படத்தில் வாலமீனுக்கும் என்ற பாடல் இப்போது வரை மிகப்பெரிய வரவேற்பு தான்.

இதனைடுத்து ஒருசில படங்களில் தமிழில் நடித்த மாளவிகா 2007ல் சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து 2 குழந்தைக்கு தாயாகினார்.</p><p>

தற்போது 46 வயதாகும் மாளவிகா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருபவர் தற்போது மாளத்தீவு கடலில் டூபீஸ் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DbDeYspDMVL/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DbDeYspDMVL/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DbDeYspDMVL/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Actress Malavika (@shwetakonnurmenon)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-07-21T19:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலிய அரசியல்வாதி நேர்காணலில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/australian-politician-dog-video-1784658624"></link>
            <id>https://tamilwin.com/article/australian-politician-dog-video-1784658624</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவின் ஒன் நேஷன் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணைப்
பிரதமருமான பார்னபி ஜாய்ஸ், தொலைக்காட்சி நேரலை விவாதத்தில் பங்கேற்றுப்
பேசிக் கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவின் ஒன் நேஷன் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணைப்
பிரதமருமான பார்னபி ஜாய்ஸ், தொலைக்காட்சி நேரலை விவாதத்தில் பங்கேற்றுப்
பேசிக் கொண்டிருந்தபோது, திடீரெனத் தனது செல்லப் பிராணியான நாயை நோக்கிச்
சத்தமிட்டு அதட்டிய சம்பவம் உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.&nbsp;</p><p>

செய்தியாளர் தீவிரமான அரசியல் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்த வேளையில்,
கெமராவிற்கு அப்பால் குரைத்துக் கொண்டிருந்த நாயைப் பார்த்து, கீழே உட்கார் (Sit down) எனத் திடீரென உரத்த குரலில் கத்தினார்.</p><p></p><h2>&nbsp;சர்வதேச அரசியல்&nbsp;</h2><p>
</p><p>
காரசாரமான விவாதமும் நாயின் குறுக்கீடும் ஒன் நேஷன் கட்சியின் தலைவரான பாலின் ஹேன்சன், பிரித்தானியாவின் தீவிர
வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சனைச் சந்தித்தது தொடர்பாகவும், சர்வதேச அரசியல்
சூழல்கள் குறித்தும் செய்தியாளர் கடினமான கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தார்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Barnaby Joyce yelling at his dog off camera… <a href="https://x.com/hashtag/abc730?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#abc730</a> <a href="https://t.co/T63fMidAym">pic.twitter.com/T63fMidAym</a></p>&mdash; Andrew Hawkins (@AndrewNJHawkins) <a href="https://x.com/AndrewNJHawkins/status/2079144626062250001?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
அந்த நேரத்தில் நாயின் குறுக்கீட்டால் கவனச்சிதறல் அடைந்த பார்னபி ஜாய்ஸ்,
செய்தியாளரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு பேட்டியைத் தொடர முயன்றார்.
</p><p>
இருப்பினும், தொடர்ந்து இடையூறு ஏற்பட்டதால் "தயவுசெய்து மரியாதையாகப்
பேசுங்கள், இல்லையென்றால் இந்த நேர்காணல் பாதியிலேயே நின்றுவிடும்" என்று
கோபத்துடன் செய்தியாளரை எச்சரித்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவலாகப்
பேசப்பட்டு வருகிறது.
</p><p>
நேரலையில் நடந்த இந்த எதிர்பாராத சம்பவம், தீவிரமான அரசியல் விவாதத்தின் இடையே
பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

அவுஸ்திரேலிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நேர்காணலின்
காணொளி, தற்போது சமூக வலைத்தள பயனாளர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T19:11:55+00:00</updated>
        </entry>
    </feed>
