<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-26T09:40:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே'.. சென்சேஷனல் வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/spider-man-brand-new-day-movie-pre-booking-1785054934"></link>
            <id>https://cineulagam.com/article/spider-man-brand-new-day-movie-pre-booking-1785054934</id>
            <summary type="text">&#039;பிராண்ட் நியூ டே&#039;உலக புகழ்பெற்ற ஸ்பைடர் மேன் திரைப்படத்தின் அடுத்த பாகமான &#039;பிராண்ட் நியூ டே&#039; என்கிற தலைப்பில் வரும் 30-ஆம் தேதி வெளியாகிறது. மார்வெல்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>'பிராண்ட் நியூ டே'</h2><p>உலக புகழ்பெற்ற ஸ்பைடர் மேன் திரைப்படத்தின் அடுத்த பாகமான 'பிராண்ட் நியூ டே' என்கிற தலைப்பில் வரும் 30-ஆம் தேதி வெளியாகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/865a1e1a-7f8c-4ac3-8b4d-a8f48e843edd/26-6a65c6d945b27.webp' /></p><p>மார்வெல் யூனிவெர்ஸில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் டெஸ்டின் டானியல் கிரேட்டன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் மார்வெல் தயாரிப்பில் வெளியான சாங்சி திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a85c4e38-3a03-436d-a5d9-a6c3d3422298/26-6a65c6d9eb78b.webp' /></p><p></p><p>இப்படத்தில் டாம் ஹாலண்ட், சென்டயா, சாடி சிங்க், மார்க் ரஃபல் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதி டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.</p><h2>டிக்கெட்&nbsp;முன்பதிவு </h2><p> </p><p>இப்படி மாபெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள இப்படம், டிக்கெட் முன்பதிவிலேயே வசூல் வேட்டையை தொடங்கிவிட்டது.

இந்தியாவில் இதுவரை நடைபெற்றுள்ள முன்பதிவில் 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படம் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதுவே இப்படத்திற்கு இந்திய பாக்ஸ் ஆபிஸில் கிடைத்துள்ள சென்சேஷனல் முன்பதிவு வசூலாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3dee742-8a89-4811-b0c4-6b7c50f81fab/26-6a65c6da9e691.webp' /></p><p>

இதன் மூலம், முதல் நாளிலேயே இந்தியாவில் மட்டுமே மாபெரும் வசூல் சாதனையை 'பிராண்ட் நியூ டே' படைக்கும் என்றும், இதற்கு முந்தைய திரைப்படமான ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம் திரைப்படத்தின் வசூல் சாதனையும் முறியடிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T09:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[சனி வக்ர பெயர்ச்சி.., ஏழரையில் சிக்கப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-problem-due-to-sani-vakra-peyarchi-1785058466"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-problem-due-to-sani-vakra-peyarchi-1785058466</id>
            <summary type="text">நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.

இவர் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
</p><p>
இவர் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
</p><p>
இந்நிலையில், சனி பகவான் 2026ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் திகதி அன்று மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்குவார்.
</p><p>
அந்தவகையில், சனி வக்ர பெயர்ச்சி குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு ஏழரை சனி நடக்கும் என்று சொல்லப்படுகிறது.&nbsp;</p><p></p><h2>மேஷம்</h2><ul><li> 

தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும்.</li><li> 
மனநிலையும் மோசமாக பாதிக்கப்படும். </li><li>
முடிவை எடுக்க முடியாமல் குழப்பமடையக்கூடும். </li><li>
அவசரப்பட்டு எதையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். </li><li>
வேலைகளில் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். </li><li>
நிதி முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.</li><li> 
புதிய முதலீடுகளையும் தவிர்க்க வேண்டும்.</li><li> 
ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9ab6260-8292-461b-8042-6e1378409809/26-6a65d4a4da7a6.webp' /></p><p>
</p><h2>
கும்பம் </h2><ul><li>

நிதி நிலைமை சற்று ஏற்றஇறக்கத்துடன் இருக்கும். </li><li>
நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
</li><li>பண பரிவர்த்தனைகளை செய்யும்போது எச்சரிக்கை தேவை.
</li><li>கடன் கொடுப்பதை, வாங்குவதை தவிர்க்க வேண்டும். </li><li>
எதையும் சரியாகவும் ஒழுக்கமாகவும் செய்ய வேண்டும்.</li><li> 
ஆரோக்கிய விஷயத்தை புறக்கணிப்பதை தவிர்க்க வேண்டும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6939e0e-b29e-4569-8ceb-61d200bae24a/26-6a65d4a58ff61.webp' /></p><p>
</p><h2>
மீனம் </h2><ul><li>

பொறுப்புக்களும், மன அழுத்தமும் அதிகரிக்கும்.</li><li> 
வேலைகளை முடிக்க கடினமாக இருக்கலாம்.
</li><li>பழைய பிரச்சனைகள் மீண்டும் தலைத்தூக்கும். </li><li>
பணிகளை பாதியாக செய்வதைத் தவிர்க்க வேண்டும். </li><li>
எந்த வேலையையும் முழுமையாக செய்து முடிக்க வேண்டும்.</li><li> 
பேச்சையும், கோபத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். </li><li>
வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.&nbsp;&nbsp;</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06528e19-a991-40d4-92a0-5dc96e7f82b5/26-6a65d4a67910e.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T09:37:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரு பெண்களை மோதித்தள்ளிவிட்டு தப்பிச் சென்ற OIC அதிரடி கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/oic-arrested-hitting-2-women-with-car-and-fleeing-1785056055"></link>
            <id>https://ibctamil.com/article/oic-arrested-hitting-2-women-with-car-and-fleeing-1785056055</id>
            <summary type="text">இரண்டு வெவ்வேறு இடங்களில் இரு பெண்களை விபத்துக்குள்ளாக்கி, காரில் தப்பிச் செல்ல முயன்ற பிரதான காவல்துறை பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹோமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரண்டு வெவ்வேறு இடங்களில் இரு பெண்களை விபத்துக்குள்ளாக்கி, காரில் தப்பிச் செல்ல முயன்ற பிரதான காவல்துறை பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>ஹோமாகம சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியான (OIC) பிரதான காவல்துறை பரிசோதகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக மீகொட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 

ஹைலெவல் வீதி, மீகொட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலும் மற்றும் வட்டரக்க 20 ஆம் கட்டை பகுதியிலும் நேற்று (25) இரவு 11:30 மணிக்கும் 11:57 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த இரண்டு விபத்துகளும் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>&nbsp;</p><h2>நீதிமன்றில் முன்னிலை</h2><p>இந்தநிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மதுபோதைச் சோதனையில், சந்தேகநபர் மதுபோதையில் காரைச் செலுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06b34062-f36a-4289-a915-ba72c2bef94e/26-6a65d217e10b2.webp' /></p><p>
</p><p>
 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T09:29:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆந்திரா பாணியில் காரசாரமான பச்சை மிளகாய் சிக்கன்... இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/andhra-style-spicy-chilly-chicken-recipe-1785054944"></link>
            <id>https://manithan.com/article/andhra-style-spicy-chilly-chicken-recipe-1785054944</id>
            <summary type="text">பொதுவாகவே சிக்கன் எந்த விதமான முறையில் சமைத்தாலும், அதன் தனித்துவமான சுவை காரணமாக அசைவ உணவு பிரியர்களின் மனதில் எப்போதும் தனி இடத்தைப் பெற்றுள்ளது. வற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாகவே சிக்கன் எந்த விதமான முறையில் சமைத்தாலும், அதன் தனித்துவமான சுவை காரணமாக அசைவ உணவு பிரியர்களின் மனதில் எப்போதும் தனி இடத்தைப் பெற்றுள்ளது. </p><p>வறுவல், குழம்பு, கிரேவி என பல்வேறு வகைகளில் சமைக்கப்படும் சிக்கன், ஒவ்வொரு முறையிலும் ஒரு புதிய சுவை அனுபவத்தை தரக்கூடியது. அதனால் தான் பெரும்பாலானோரின் விருப்பமான உணவுப் பட்டியலில் சிக்கன் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bc9d077-5f8e-4468-90d3-d3dd7ec3bd74/26-6a65c9d76f0c3.webp' /></p><p>

குறிப்பாக சிக்கனை காரசாரமான மசாலாக்களுடன் சமைக்கும்போது அதன் சுவையும் மணமும் மேலும் அதிகரித்து, உணவை இன்னும் சுவையாக மாற்றுகிறது. காரம் மற்றும் மசாலா கலந்த உணவுகளுக்கு புகழ்பெற்ற இடம் என்றால் அது ஆந்திரா தான்.</p><p>அந்தவகையில்,&nbsp; ஆந்திரா ஸ்டைல் க்ரீன் சில்லி சிக்கனை வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் எப்படி செய்வதென் இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8059cd45-07a9-4e9f-976d-091e95f488f2/26-6a65c9d82282e.webp' /></p><p></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">தேவையானப் பொருட்கள்</span></h2><p>சிக்கன் - அரை கிலோ </p><p>பச்சை மிளகாய் - 20 (அரைத்தது) </p><p>நெய் - 2 தே.கரண்டி&nbsp;</p><p> எண்ணெய் - 1 தே.கரண்டி </p><p>இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2&nbsp;</p><p>மஞ்சள் தூள் - அரை தே.கரண்டி </p><p> தண்ணீர் - அரை கப்&nbsp;</p><p> சோயா சாஸ் - அரை தே.கரண்டி </p><p> வினிகர் - 1 தே.கரண்டி </p><p> சோள மாவு - 1 தே.கரண்டி</p><p> உப்பு - தேவையான அளவு</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1352eb4d-a4a7-4d50-831c-04bd2274dd10/26-6a65c9d8cace7.webp' /></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">செய்முறை</span></h2><p>முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானதும்,&nbsp; பச்சை மிளகாய் விழுது சேர்த்து சுமார் 3 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.&nbsp;</p><p>அதனையடுத்து நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் சிக்கனைச் சேர்த்து அடிக்கடி கிளறிவிட்டு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.&nbsp;</p><p>பின்னர் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு இரண்டு நிமிடங்கள் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e430ee8-bd4e-4e64-8f35-0350aad91f67/26-6a65c9d979e5f.webp' /></p><p></p><p>அதன் பின்பு தேவையான அளவு&nbsp; தண்ணீர் சேர்த்து, பாத்திரத்தை மூடி வைத்து 10 நிமிடங்கள் வரையில் நன்றான வேகவிட வேண்டும்.&nbsp;</p><p>பின்னர் சோயா சாஸ், வினிகர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.</p><p> </p><p>அதனையடுத்து சோளமாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கி அதை சிக்கனில் ஊற்றிக்கொள்ள வேண்டும்.&nbsp;</p><p>மிதமான தீயில் வைத்து தண்ணீர் வற்றி கெட்டியாகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.</p><p>பின்னர் நன்றாக வேக வைத்து சிக்கனை இறக்கினால் அவ்வளவு தான் ஆந்திரா பாணியில் சில்லி சிக்கன் தயார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T09:28:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கால்வாய்க்குள் கழுத்தறுக்கப்பட்டு கிடந்த சடலம் ; தந்தையும் மகனும் அரங்கேற்றிய செயல் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/body-found-with-throat-cut-in-canal-1785058119"></link>
            <id>https://jvpnews.com/article/body-found-with-throat-cut-in-canal-1785058119</id>
            <summary type="text">நாடு முழுவதும் பல பகுதிகளில் ஆயுதங்களைக் காட்டி மக்களைப் பயமுறுத்தி கொள்ளையடித்து வந்த சந்தேகநபர் ஒருவரை, நீண்ட விசாரணைகளின் பின்னர் ஹோமகம பொலிஸார் அண...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாடு முழுவதும் பல பகுதிகளில் ஆயுதங்களைக் காட்டி மக்களைப் பயமுறுத்தி கொள்ளையடித்து வந்த சந்தேகநபர் ஒருவரை, நீண்ட விசாரணைகளின் பின்னர் ஹோமகம பொலிஸார் அண்மையில் கைது செய்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


சந்தேகநபர் பனாகொட இராணுவ முகாமின் விளையாட்டுப் பிரிவுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரியாகப் பணியாற்றியவர் என்றும், அண்மையில் ஹோமகம, கலகாஹேன பகுதியில் வாடகை மோட்டார் சைக்கிள் சாரதியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவத்துடனும் இவருக்குத் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea653a98-ca35-49ec-9344-0f224a3fd931/26-6a65d3493c8b6.webp' /></p><h2 style="text-align: justify; ">விசாரணை</h2><p style="text-align: justify; ">

 

ஹோமகம, கலகாஹேன பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்து ஜூலை 16 ஆம் திகதி அதிகாலையில் வாடகை மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமான கொல்லப்பட்ட சடலம் கண்டெடுக்கப்பட்டது.
</p><p style="text-align: justify; "> 

கொலையாளிகள் உயிரிழந்தவரின் மோட்டார் சைக்கிள், தங்கச் சங்கிலி, கைப்பேசி மற்றும் பணப்பையை கொள்ளையடித்துத் தப்பிச் சென்றிருந்தனர்.
</p><p style="text-align: justify; ">
 

அந்த CCTV காட்சிகளை பரிசோதித்தபோது, கொலையுண்ட 'PickMe' மோட்டார் சைக்கிள் சாரதி மற்றொரு நபரை ஏற்றிக்கொண்டு சம்பவம் நடந்த இடத்திற்கு வருவது தெரியவந்தது.

 

அதன்படி நடத்திய விசாரணையில், அந்த நபரே மோட்டார் சைக்கிள் சாரதியுடன் அங்கு வந்து இக்கொலைக்கு உடந்தையாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> பின்னர், இந்த இரண்டு சந்தேகநபர்களும் தந்தையும் மகனும் என்பது உறுதி செய்யப்பட்டது.

 

இக்கொலை நடந்த மறுநாளில், சந்தேகநபர்கள் இந்த மோட்டார் சைக்கிளிலேயே மொரகஹஹேன பகுதிக்குச் சென்று, பெண் ஒருவரை கூர்மையான ஆயுதத்தைக் காட்டிப் பயமுறுத்தி அவரது தங்கச் சங்கிலியைக் கொள்ளையடித்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

மேலும், அவர்கள் மீண்டும் ஹோமகம பகுதியிலேயே இதுபோன்ற மற்றொரு கொள்ளைச் சம்பவத்திற்கும் இந்த மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதை விசாரணை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

இந்த சந்தேகநபர்களில் ஒருவர் ஹோமகம, பிட்டிபன பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் செயற்பட்ட விசாரணை அதிகாரிகள், அங்கு சென்று சந்தேகநபரைக் கைது செய்தனர்.

 

சந்தேகநபரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நேரடி கைக்குண்டு ஒன்றும் 500 மில்லிகிராம் ஹெரோயினும் விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 

சந்தேகநபரின் வீட்டில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் குற்றங்களைச் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட பல்சர் ரக மோட்டார் சைக்கிள் ஒன்றும், இரத்தக்கறை படிந்த தலைக்கவசம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; ">

 

சந்தேகநபர் பனாகொட இராணுவ முகாமின் விளையாட்டுப் பிரிவுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரியாகப் பணியாற்றியவர் என்றும், குற்றங்களைச் செய்வதற்காக ஆயுதங்களுடன் தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது, தனது இராணுவ அடையாள அட்டையைக் காட்டி பொலிஸ் சோதனைச் சாவடிகளில் எந்தவித தடையுமின்றி பயணித்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p style="text-align: justify; ">
 
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (25) ஹோமகம பதில் நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகநபரை 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க ஹோமகம பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

இக்குற்றங்களுக்குக் காரணமான முதன்மைச் சந்தேகநபரான தந்தையைத் தேடி, ஹோமகம தலைமையக பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரி சமன் கமகே அவர்களின் மேற்பார்வையில் பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-07-26T09:28:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேகதாது அணை விவகாரம்: திமுக மீது அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/adhav-arjuna-says-mekedatu-issue-dmk-is-the-reason-1785056628"></link>
            <id>https://ibctamilnadu.com/article/adhav-arjuna-says-mekedatu-issue-dmk-is-the-reason-1785056628</id>
            <summary type="text">மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அரசியல் குற்றச்சாட்டுகள் மீண்டும் எழுந்துள்ளன. கடந்த திமுக ஆட்சியின் சட்ட நடவடிக்கைகளில் ஏற்பட்ட குளறுபடிகளே தற்போதைய சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அரசியல் குற்றச்சாட்டுகள் மீண்டும் எழுந்துள்ளன. கடந்த திமுக ஆட்சியின் சட்ட நடவடிக்கைகளில் ஏற்பட்ட குளறுபடிகளே தற்போதைய சிக்கலுக்கு காரணம் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குற்றம்சாட்டியுள்ளார்.
</p><p>
காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b04c94b7-129f-4299-96d0-6f994fe5cfc4/26-6a65d30712044.webp' /></p><h2>ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு</h2><p> </p><p>தமிழகத்தின் சட்டப்பூர்வமான நீர் உரிமைகளை பாதுகாக்க முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.</p><p>

மேலும், கடந்த திமுக ஆட்சியில் மேகதாது அணைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் போதுமான அளவில் வாதங்கள் முன்வைக்கப்படவில்லை என்றும், அதன் காரணமாக அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.</p><p> இருப்பினும், கடந்த கால குறைகளை முன்வைத்து தமிழகத்தின் நீர் உரிமை தொடர்பான போராட்டத்தை திசை திருப்ப விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/885acce3-1af3-41ce-8501-6a284eda9b59/26-6a65d307b5398.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், மேகதாது அணை விவகாரத்தை சுமுகமான அணுகுமுறையுடன் கையாள வேண்டும் என கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.</p><p> மேகதாது அணை திட்டத்தால் தமிழகத்திற்கே அதிக பலன் கிடைக்கும் என்றும் அவர் கூறினார். துங்கபத்ரா நீர் விவகாரத்தில் தீர்வு காணப்பட்டதைப் போல, மேகதாது பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் சிவக்குமார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T09:27:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு! மூவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-pudukudiyirupu-youth-killed-three-injured-1785048078"></link>
            <id>https://tamilwin.com/article/accident-pudukudiyirupu-youth-killed-three-injured-1785048078</id>
            <summary type="text">முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.&amp;nbsp;இந்த சம்பவம் நேற்றைய தினம...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p>இந்த சம்பவம் நேற்றைய தினம்(25.07.2026) இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>மோட்டார் சைக்கிள் விபத்து</h2><p>அதிவேகமாக பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>விபத்தில் காயமடைந்த நால்வரும் உடனடியாக புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7ad9adb-1d04-4e11-b31f-ccb9b63b46bb/26-6a65b08768f99.webp' /></p><p>எனினும், அவர்களில் பிரவீன் எனும் இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
</p><p>மற்ற மூவர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>
இந்த விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T09:26:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் வர்த்தகக் கப்பல் மீது உக்ரைன் நடத்திய தாக்குதல்: வெடிவிபத்தில் மாலுமி பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-accuses-ukraine-of-deadly-attack-on-caspian-1785039455"></link>
            <id>https://ibctamil.com/article/iran-accuses-ukraine-of-deadly-attack-on-caspian-1785039455</id>
            <summary type="text">காஸ்பியன் கடலில் ஈரானுடன் தொடர்புடைய வர்த்தகக் கப்பல் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் கடுமையாக கண்டித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>காஸ்பியன் கடலில் ஈரானுடன் தொடர்புடைய வர்த்தகக் கப்பல் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் கடுமையாக கண்டித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>இந்த தாக்குதலில் ஏற்பட்ட வெடி விபத்தில் மாலுமி ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>மேலும் தாக்குதலுக்கு உள்ளான கப்பல் மீது நடத்தப்பட்ட நடவடிக்கையை "ஆக்கிரமிப்புச் செயல்" என்றும், "பகைமையான மற்றும் குற்றவியல் தாக்குதல்" என்றும் ஈரான் கூறி உள்ளது.</p><p></p><h2>வெடிவிபத்தில் மாலுமி உயிரிழப்பு</h2><p>இதற்கு எதிர்ப்பை தெரிவிக்க, தெஹ்ரானில் உள்ள உக்ரைன் தூதரகத்தின் பொறுப்பாளரை ஈரான் வெளியுறவு அமைச்சகம் அழைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcb4e808-b718-43ce-9877-dbfb9fff8190/26-6a65a8926d1b4.webp' /></p><p>உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, ரஷ்யா பயன்படுத்தி வரும் ஈரான் வடிவமைத்த ஆளில்லா விமானத் தாக்குதல்களை கீவ் தொடர்ந்து எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
 

மத்திய கிழக்கில் தாக்குதல்களை நடத்துவதற்கு ஈரானுக்கு ஏதுவாக, ரஷ்யா தனது செயற்கைக்கோள் கண்காணிப்புத் தரவுகளை அந்நாட்டிற்கு வழங்கி வருவதை கீவ் கவனித்திருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>
 

காஸ்பியன் கடலில் ரஷ்ய போர்க்கப்பல் ஒன்றையும், ஈரானுடன் தொடர்புடைய இராணுவ சரக்குகளை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்பட்ட கப்பல்களையும் உக்ரைன் படைகள் தாக்கியதாக ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.&nbsp;</p><p>மேலும் அவருடைய X தளத்தில்&nbsp; வெளியிடப்பட்ட கருத்துக்களில், உக்ரைன் ஜனாதிபதி, ஜூலை மாதத் தொடக்கத்தில் இருந்து "வளைகுடா நாடுகள் மற்றும் அங்குள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ரஷ்யாவின் தீவிர செயற்கைக்கோள் கண்காணிப்பை" கீவ் பதிவு செய்து வந்ததாகவும், "இந்தக் காட்சிகள் பின்னர் ஈரானில் வெளிவருகின்றன" என்றும் கூறினார்.
</p><p>
 

"அதே நேரத்தில், இந்த இடங்கள் குறித்த ரஷ்யாவின் செயற்கைக்கோள் படங்களுக்கும் ஈரானியத் தாக்குதல்களுக்கும் இடையே ஒரு தெளிவான தொடர்பு உள்ளது. தாக்குதல்களுக்கு முன்னரும், அவற்றுக்கான தயாரிப்பாகவும், பின்னரும், ஏற்படுத்தப்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காகவும் இந்தத் தொடர்பு காணப்படுகிறது," என்று ஜெலென்ஸ்கி கருத்து வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T09:25:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட மாகாண யூடோ போட்டியில் முல்லைத்தீவு மகளிர் அணி சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mullaitivu-women-win-northern-judo-title-1785046437"></link>
            <id>https://tamilwin.com/article/mullaitivu-women-win-northern-judo-title-1785046437</id>
            <summary type="text">வட மாகாண யூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட வீராங்கனைகள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.இந்தப் போட்டியானது முல்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட மாகாண யூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட வீராங்கனைகள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.</p><p>இந்தப் போட்டியானது முல்லைத்தீவு மாவட்ட உள்ளக அரங்கில் வட மாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளன.</p><p></p><h2>வெற்றி பெற்ற பெண்கள் அணி</h2><p>போட்டியின் முடிவில், முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணி பதக்க எண்ணிக்கையின் அடிப்படையில் முதலிடத்தைப் பெற்று வட மாகாண சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளனர்.</p><p>இதனைத் தொடர்ந்து, ஆண்கள் அணி இரண்டாம் இடத்தை கைப்பற்றி சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளனர்.&nbsp;</p><p>
ஆண்கள் பிரிவில் வவுனியா மாவட்டம் முதலிடத்தையும், முல்லைத்தீவு மாவட்டம்
இரண்டாம் இடத்தையும், மன்னார் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d20b7457-f702-452b-8b79-275022e791fb/26-6a65a979ec89a.webp' /></p><p>முல்லைத்தீவு மாவட்ட அணியில் புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு, வள்ளிபுனம்,
கைவேலி, கள்ளப்பாடு, ஒட்டுசுட்டான், தண்ணீரூற்று, முள்ளியவளை, மாங்குளம்,
பாலிநகர், கொல்லவிளான்குளம், அம்பாள்புரம் மற்றும் வினாயகபுரம் உள்ளிட்ட
பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வீராங்கனைகள் இணைந்து மாவட்டத்தை
பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர்.
</p><p>
இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் இந்த வெற்றிக்கு விளையாட்டு
ஆர்வலர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது பாராட்டுகளையும்
வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T09:24:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் - ரஷ்யா இடையே எல்லையில் வெடித்த மோதல்: 15 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-russia-cross-border-strike-15-killed-1785057538"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-russia-cross-border-strike-15-killed-1785057538</id>
            <summary type="text">உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்ற எல்லையோர மோதலில் 15 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைன் - ரஷ்யா இடையே வெடித்த மோதல்உக்ரைன் ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் எல்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்ற எல்லையோர மோதலில் 15 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> உக்ரைன் - ரஷ்யா இடையே வெடித்த மோதல்</h2><p>உக்ரைன் ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் எல்லையோரப் பகுதிகளில் நடந்த தொடர் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 15 பேர் வரை கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>4 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் மோதல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போதைய இந்த மோதல் நிலைமையை தீவிரப்படுத்தியுள்ளது.</p><p> ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்கு கீழ் உள்ள ஜபோரிஜியா பகுதியில் உள்ள முகாமில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 12 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக மாஸ்கோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85e438bb-2839-4436-bc61-76ced1044a57/26-6a65d103e9792.webp' /></p><p> மேலும் இந்த தாக்குதலில் 19 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இந்த தாக்குதல் தொடர்பாக உக்ரைனிய தரப்பு எந்தவொரு தகவலையும் இதுவரை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><h2> ஷாப்பிங் மால் மீது தாக்குதல்</h2><p>அதே சமயம் தென்கிழக்கு உக்ரைனிய பகுதியான ஜபோரிஜியாவில் நடந்த ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் ஹாப்பிங் மால் ஒன்றில் தீப்பிடித்தது.</p><p>தீயானது ஷாப்பிங் மாலின் 500 சதுர மீட்டர் பரப்பளவு வரை பரவியதில் பலர் காயமடைந்து இருப்பதாக பிராந்திய தலைவர் இவான் ஃபெடரோவ் தகவல் தெரிவித்துள்ளார்.</p><p> சனிக்கிழமை உக்ரைனின் சுமி பிராந்தியத்தில் நடந்த ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் 3 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><p> அத்துடன் உக்ரைனியன் ட்ரோன் சேமிப்பு மற்றும் ஏவுதளத்தை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T09:19:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[அப்பா விஜய்யை ஒதுக்கிட்டு ஜனநாயகன் இயக்குநரை சந்தித்த ஜேசன் சஞ்சய்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/why-didn-t-vijay-wish-jason-sanjay-birthday-1785055515"></link>
            <id>https://viduppu.com/article/why-didn-t-vijay-wish-jason-sanjay-birthday-1785055515</id>
            <summary type="text">ஜேசன் சஞ்சய்முதலமைச்சர் பதவி ஏற்றதற்கு முன் தன்னுடைய கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்து அதன் ரிலீஸுக்காக காத்திருந்தார் விஜய். தற்போது படம...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜேசன் சஞ்சய்</h2><p>முதலமைச்சர் பதவி ஏற்றதற்கு முன் தன்னுடைய கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்து அதன் ரிலீஸுக்காக காத்திருந்தார் விஜய். </p><p>தற்போது படமும் ரிலீஸாகி பலரையும் எமோஷனலாக்கி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி விமர்சனங்களும் எழுந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5644c094-3f4a-4ddc-9bbf-0ca6d93cdab4/26-6a65c91dae092.webp' /></p><p>மகன் ஜேசன் சஞ்சய்யை விஜய் கண்டுக்கொள்வதில்லை என்ற விமர்சனங்களும் எழுந்து வரும் நிலையில், இயக்குநர் அவதாரம் எடுத்து ஜேசன், ஜனநாயகன் பட இயக்குநர் எச் வினோத்தை சந்தித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலானது.</p><p> சிம்கா பட இயக்குநரும் முதலமைச்சர் விஜய்யின் மகனுமான ஜேசன் சஞ்சய், எச் வினோத்தை பார்த்து வாழ்த்தும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தந்தை விஜய்யை அவர் சந்தித்தாரா என்ற கேள்வியும் தற்போது எழுந்து வருகிறது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ta" dir="ltr">ஹெச் வினோத்தை சந்தித்த ஜேசன் சஞ்சய் 😍🥰❤️ <a href="https://t.co/eOvgWvWsgv">pic.twitter.com/eOvgWvWsgv</a></p>&mdash; Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) <a href="https://x.com/Anshithaprincey/status/2081001620691890494?ref_src=twsrc%5Etfw">July 25, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-07-26T09:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெல்லன்வில துப்பாக்கிச் சூடு சம்பவம்! தப்பியோட முயன்ற இரு சந்தேகநபர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bellanwila-shooting-2-suspects-arrested-1785050187"></link>
            <id>https://ibctamil.com/article/bellanwila-shooting-2-suspects-arrested-1785050187</id>
            <summary type="text">பொரலஸ்கமுவ, பெல்லன்வில பகுதியில் நபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொரலஸ்கமுவ, பெல்லன்வில பகுதியில் நபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

குறித்த சந்தேகநபர்கள், தப்பிச் செல்ல முயன்ற வேளையில் சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்டவர்கள் 28 மற்றும் 37 வயதுடைய பக்மீன (Bakamuna) பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பொரலஸ்கமுவ காவல் பிரிவுக்குட்பட்ட பெல்லன்வில பகுதியில் நேற்று (25-07-2026) இரவு துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
</p><p>
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9143cdcc-cec0-4eae-88e2-5f8a5858f1f9/26-6a65cdb3ced85.webp' /></p><p>இச்சம்பவத்தைத் தொடர்ந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்ட நாவகமுவ காவல் நிலைய உத்தியோகத்தர்கள் குழு, இரவே ரனல பகுதியில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்ற இரு சந்தேகநபர்களையும் மடக்கிப் பிடித்துக் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. </p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 6.6 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் குற்றச்செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p>

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவகமுவ காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T09:14:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்கவில் 64 சட்டவிரோத புறாக்களுடன் இருவர் கைது: விதிக்கப்பட்ட அபராதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2-srilankan-arreste-indian-airport-with-64-pigeons-1785052293"></link>
            <id>https://ibctamil.com/article/2-srilankan-arreste-indian-airport-with-64-pigeons-1785052293</id>
            <summary type="text">சட்டவிரோத புறாக்களை&amp;nbsp; நாட்டிற்குள் கடத்த முயன்றதற்காக, இரண்டு இலங்கை நாட்டினர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யபட்டுள்ளனர்.&amp;nbsp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோத புறாக்களை&nbsp; நாட்டிற்குள் கடத்த முயன்றதற்காக, இரண்டு இலங்கை நாட்டினர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யபட்டுள்ளனர்.&nbsp;</p><p>குறித்த நபர்கள் நேற்று இரவு (25.07.2026) கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>​கைது செய்யப்பட்டவர்கள் வென்னப்புவாவைச் சேர்ந்த 38 மற்றும் 42 வயதுடைய இரவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><h2>அரியவகை புறாக்களுடன் 2 இலங்கையர் கைது</h2><p>
 

</p><p>சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட புறாக்கள் சட்டவிரோதமானது என்றும் அவை ரூ. 3,431,400 மதிப்புள்ள 64 அரிய வகை புறாக்கள் என்றும் இலங்கை சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2da506f-6f88-4d94-ab4a-2fc0ea8d4ddd/26-6a65ca8dc5281.webp' /></p><p>அறிவிக்க எதுவும் இல்லாத பயணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 'பசுமை வழித்தடம்' வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்றபோதே சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>இவர்கள் துபாய் வழியாக இலங்கைக்குப் பயணம் செய்வதற்கு முன்பு இத்தாலியில் பறவைகளை வாங்கியதாகக் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் நாட்டின் விலங்கு தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி புறாக்கள் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>
 

விசாரணையைத் தொடர்ந்து, ஒரு பயணிக்கு ரூ. 4 லட்சம்,000-ம், மற்றொருவருக்கு ரூ. 1 லட்சம்,000-ம் அபராதமாக&nbsp;மொத்தம் ரூ. 5 லட்சம் விதிக்கப்பட்டதுடன் மீட்கப்பட்ட புறாக்கள் இத்தாலிக்கு திருப்பி அனுப்ப&nbsp;சுங்கத்துறை நடவெடிக்கை எடுத்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T09:08:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை ரோட்டரி கழகத்தின் 48வது தலைவராக அருள்வரதராஜா பதவியேற்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/48th-president-rotary-club-trincomalee-takes-oath-1785055339"></link>
            <id>https://tamilwin.com/article/48th-president-rotary-club-trincomalee-takes-oath-1785055339</id>
            <summary type="text">திருகோணமலை ரோட்டரி கழகத்தின் 48வது தலைவராக க.அருள்வரதராஜா உத்தியோகபூர்வமாக பதவியேற்றுள்ளார்.

இதற்கான நிகழ்வு நேற்றைய தினம் (25.07.2026) திருக்கோணமல...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை ரோட்டரி கழகத்தின் 48வது தலைவராக க.அருள்வரதராஜா உத்தியோகபூர்வமாக பதவியேற்றுள்ளார்.
</p><p>
இதற்கான நிகழ்வு நேற்றைய தினம் (25.07.2026) திருக்கோணமலையிலுள்ள டைக் வீதியில் அமைந்துள்ள ரோட்டரி இல்லத்தில் இடம்பெற்றிருந்தது.</p><h2>கலந்து கொண்டவர்கள்</h2><p></p><p> 

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் க.குணநாதன் பிரதம அதிதியாகவும், பேராசிரியர் வி.கனகசிங்கம் கௌரவ அதிதியாகவும், லங்கா ஐஓசி நிறுவனத்தின் சிரேஷ்ட உப தலைவர் நவீன் குமார் விசேட அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.</p><p> 

மேலும், திருக்கோணமலை, கொழும்பு மற்றும் மன்னார் ரோட்டரி கழகங்களைச் சேர்ந்த ரோட்டேரியன்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், ரோட்டராக்டர்கள், இன்டராக்டர்கள், ரோட்டேரியன் துணைவியர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் கழகத்தின் நண்பர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு ரோட்டரியின் நட்புறவையும் சேவை மனப்பான்மையையும் வெளிப்படுத்தினர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T09:05:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியா செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/good-news-for-sri-lankans-travelling-to-india-1785056500"></link>
            <id>https://jvpnews.com/article/good-news-for-sri-lankans-travelling-to-india-1785056500</id>
            <summary type="text">இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புனித பௌத்த யாத்திரை உட்பட ஆன்மீகக் குழுக்களாகப் பயணிக்கும் யாத்திரிகர்களுக்கான இலவச விசா வழங்கும் முறைமை மீண்டும் நடைம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புனித பௌத்த யாத்திரை உட்பட ஆன்மீகக் குழுக்களாகப் பயணிக்கும் யாத்திரிகர்களுக்கான இலவச விசா வழங்கும் முறைமை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளதாகக் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. </p><p>
இலங்கையர்கள் அனைவருக்கும் உரிய நேரத்திலும் இலகுவான முறையிலும் விசாக்களை வழங்குவதை எமது நிலையான கொள்கையாகக் கொண்டுள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம், யாத்திரிகர்களுக்கான விசா நடைமுறைகள் தொடர்பில் தெளிவுபடுத்தி ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb3c9325-4398-4412-b75e-b85f591cf032/26-6a65ccf67bd52.webp' /></p><h2>இலவசமாக விசாக்கள்&nbsp;</h2><p> </p><p> 

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
</p><p>
இந்தியாவிலுள்ள புனித பௌத்த யாத்திரைத் தலங்கள் உள்ளிட்ட இடங்களுக்குப் பயணிக்கும் இலங்கை யாத்திரிகர்களுக்குப் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான குழுக்களாகப் பயணிக்கும் பட்சத்தில் இலவசமாக விசாக்கள் வழங்கப்பட்டு வந்தன. </p><p>சேவை வழங்குனரில் ஏற்பட்ட இடைக்கால மாற்றத்தினால் தற்காலிகமாகத் தடைப்பட்டிருந்த இச்செயற்பாடு, புதிய மூன்றாம் தரப்புச் சேவை வழங்குநர் கடந்த ஜூலை 7 ஆம் திகதி முதல் கடமைகளைப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p></p><p> 


முன்னர் காணப்பட்ட நடைமுறையைப் போலவே, இலவச விசா வசதியைப் பெற விரும்பும் 10 அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட யாத்திரிக் குழுக்களின் விண்ணப்பங்கள், இலங்கை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் முறைப்படி உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். </p><p> 

இந்திய அரசாங்கத்தின் புதிய வழிகாட்டுதல்களின்படி, 12 வயது முதல் 70 வயது வரையிலான விண்ணப்பதாரர்கள் அனைவரும் தமது உயிரியல் அடையாளங்களை சமர்ப்பிப்பது கட்டாயமாகும். </p><p>குழுவாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பில் அமைந்துள்ள இந்திய கொன்சியூலர் சேவை விண்ணப்ப மையங்களுக்கு நேரில் சென்று உயிரியல் அடையாளங்களைப் பதிவு செய்ய வேண்டும்.</p><p></p><p> </p><p>இது பயணிகள் இந்தியாவில் இறங்கும்போது குடிவரவு நடைமுறைகளை எளிதாகவும் சிரமமின்றியும் கடந்துசெல்ல உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p> 

ஐ.சி.ஏ.சி. மையங்களுக்கு வருகை தரும் முதியவர்கள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகள் காத்திருக்கும் நேரத்தைச் சாத்தியமான அளவில் குறைப்பதற்காக விசேட நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. </p><p>மேற்கண்ட நடைமுறைகளின் கீழ் விண்ணப்பிக்கும் இலங்கை யாத்திரிகர்களுக்கு இந்திய அரசு எவ்வித விசா கட்டணத்தையும் அறவிடுவதில்லை. இருப்பினும், ஐ.சி.ஏ.சி. சேவைக்கான கட்டணமாக விண்ணப்பதாரி ஒருவர் இலங்கை 1,855 ரூபா மாத்திரம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T09:01:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரசிகர்களை கவரும் மகாநதி சீரியல் லட்சுமி ப்ரியாவின் க்யூட் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-lakshmi-priya-saree-photoshoot-1785048481"></link>
            <id>https://cineulagam.com/article/actress-lakshmi-priya-saree-photoshoot-1785048481</id>
            <summary type="text">விஜய் டிவியில் ஒளிபரப்பான மகாநதி சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை லட்சுமி ப்ரியா. மகாநதி சீரியல் முடிவடைந்தாலும், இவரை மீண்டும் எப்போது சின்னத...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஜய் டிவியில் ஒளிபரப்பான மகாநதி சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை லட்சுமி ப்ரியா. மகாநதி சீரியல் முடிவடைந்தாலும், இவரை மீண்டும் எப்போது சின்னத்திரையில் பார்ப்போம் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். </p><p>சீரியலில் இவரை பார்க்க முடியவில்லை என்றாலும், சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களின் இணைப்பில் இருந்து வருகிறார் நடிகை லட்சுமி ப்ரியா. </p><p>அந்த வகையில், தற்போது சமீபத்தில் எடுத்துக்கொண்ட தனது அழகிய க்யூட் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். லட்சுமி ப்ரியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடைய கவனத்தை ஈர்த்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-26T09:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீன ராசியில் சனி வக்ர பெயர்ச்சி : இந்த 3 ராசியிரை பிரச்சினைகள் வாட்டியெடுக்கப்போகுது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/saturns-july-2026-transit-who-get-extreme-bad-luck-1785045679"></link>
            <id>https://manithan.com/article/saturns-july-2026-transit-who-get-extreme-bad-luck-1785045679</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில் சனிபகவான் மிகவும் வலிமைமிக்கதும், முக்கியத்துவம் வாய்ந்ததுமான கிரகமாகக் கருதப்படுகிறார். சனியின் ஒவ்வொரு சஞ்சாரமும் மனிதர்களின் வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில் சனிபகவான் மிகவும் வலிமைமிக்கதும், முக்கியத்துவம் வாய்ந்ததுமான கிரகமாகக் கருதப்படுகிறார். </p><p>சனியின் ஒவ்வொரு சஞ்சாரமும் மனிதர்களின் வாழ்க்கையில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தும் என ஜோதிட நம்பிக்கைகள் கூறுகின்றன. குறிப்பாக, சனிபகவான் வக்ர சஞ்சாரம் மேற்கொள்ளும் காலம், சுயபரிசோதனை மற்றும் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் முக்கியமான காலகட்டமாக பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1db9f082-377b-47a9-a142-8aeed836f473/26-6a65a9dd5bd58.webp' /></p><p></p><p>அந்த வகையில், 2026 ஜூலை 29 அன்று சனிபகவான் மீன ராசியில் வக்ர சஞ்சாரம் அடைகிறார். இந்த காலகட்டம் கடந்த கால செயல்கள், நிறைவேற்றப்படாத பொறுப்புகள், கடமைகள், உடல்நல பழக்கங்கள் மற்றும் குடும்ப உறவுகள் குறித்து சிந்தித்து சரியான முடிவுகளை எடுக்க வேண்டிய காலகட்டமாகவே அமையும்.</p><p>&nbsp;சனி வக்ர பெயர்ச்சியானது அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக பாதக மாற்றங்களை ஏற்படுத்தினாலும், தனிப்பட்ட வாழ்க்கை, தொழில், நிதிநிலை என அனைத்திலும் பாரியளவில் சவால்களை சந்திக்கப்போகும் ராசியிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>கும்பம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54ff5641-8642-49c7-a7d4-ae6379d286f6/26-6a65a9de0d82f.webp' /></p><p> கும்ப ராசிக்காரர்கள் ஏழரைச் சனியின் கடைசி கட்டத்தில் உள்ளனர். இந்த காலத்தில் பண விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து, பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது. </p><p>குடும்பத்தில் பழைய பிரச்சினைகள் மீண்டும் எழலாம் என்பதால் யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுப்படாமல் இருப்பது நல்லது. பொறுமையுடன் அணுகினால் தீர்வு காணலாம். </p><p>தொழில் மற்றும் வியாபாரத்தில் சில தடைகள் வரக்கூடும் என்பதால் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும்.புதிய முதலீடுகளில் கூடுதல் கவனட் தேவை. இந்த காலகட்டத்தில் புதிய முயற்ச்சிகளை தவிர்ப்பதே சிறப்பு.&nbsp;</p><h2>

மீனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77f75754-81d3-4f87-b4ea-d969bf16dea2/26-6a65a9decfea6.webp' /></p><p> மீன ராசிக்காரர்கள் ஏழரைச் சனியின் இரண்டாவது கட்டத்தில் உள்ளனர். இந்த காலம் மன அழுத்தம், தன்னம்பிக்கை குறைவு மற்றும் உடல்நல கவனம் தேவைப்படும் காலமாக இருக்கலாம்.</p><p> கடந்த கால தவறுகளை சரிசெய்வது நல்லது. திருமண உறவுகள் மற்றும் குடும்ப உறவுகளில் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் இருக்க, தெளிவான பேச்சும் பொறுமையும் அவசியம்.</p><p>தொழில் விடயத்தில் பாரிய சிக்கல்களையும் நிதி இழப்புகளையும் சந்திக்க நேரிடலாம். பணத்தை கையாளும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.&nbsp;</p><h2>

மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adc3fe90-6233-478e-a653-7cde2260bfe4/26-6a65a9df99a39.webp' /></p><p></p><p>மேஷ ராசிக்காரர்கள் ஏழரைச் சனியின் முதல் கட்டத்தில் உள்ளனர். இந்த காலத்தில் அதிக செலவுகள், மன அழுத்தம் மற்றும் தனிமை உணர்வு ஏற்படலாம்.அவசர முடிவுகள் மற்றும் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும்.</p><p>வேலைப் பளு அதிகரிக்கலாம் என்பதால் மன அமைதியை காக்க வேண்டும். நம்பிக்கையானவர்களுடன் மட்டுமே தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது நல்லது.</p><p>இந்த காலகட்டத்தில், புதிய சொத்துக்கள் வாங்குவது அல்லது புதிய முதலீடுகளை மேற்கொள்வது என்பவற்றை தவிர்த்துக்கொள்வது சிறப்பு.&nbsp;</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T08:49:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி தொடரும் போராட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-to-release-jaffna-lands-held-by-the-army-1785053064"></link>
            <id>https://ibctamil.com/article/protest-to-release-jaffna-lands-held-by-the-army-1785053064</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வலி. வடக்கு பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். 36 வருடங்களாக காணிகளை இழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வலி. வடக்கு பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். </p><p>36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் பலாலி சந்தியில் இன்றைய
தினம் (26) ஆறாவது வாரமாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
</p><p>
தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள், வர்த்தக நிலையங்களை
அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தாம் நீண்ட காலமாக
நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் காணிகளை
விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><h2>பலாலி காவல்துறையினர்</h2><p>இதேவேளை கடந்த வாரங்களில் போராட்டக்காரர்கள் பயன்படுத்திய பலாலி பொது
நோக்கு மண்டபத்தில் காணப்பட்ட வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான குடிநீர்
தாங்கி மற்றும் தற்காலிக மலசல கூடம் என்பவற்றை பலாலி காவல்துறையினர் அவ்விடத்தில்
இருந்து எடுத்து சென்று காவல் நிலையத்தில் வைத்திருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9900ba8c-e878-41f4-b9d0-0d272d617706/26-6a65c79245637.webp' /></p><p>இதனால் இன்றைய தினம்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குடிநீர் மற்றும் மலசல கூடங்கள் இன்றி பல்வேறு
இன்னல்களையும் அனுபவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

அத்துடன் தற்காலிக கொட்டகை அமைக்கவும், தரப்பாள் கட்ட இரண்டு தடிகளை நாட்ட
கூட காவல்துறையினர் அனுமதிக்காததால், கைகளினால் தரப்பாளை பிடித்தவாறு வெயிலுக்கு மத்தியில் முதியவர்கள் உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
இன்றைய போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன்,
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T08:45:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அழகு குறித்த கேள்விக்கு தெறி பதில் கொடுத்த நடிகை ராஷ்மிகா! குவியும் பாராட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/rashmika-mandanna-talk-about-real-beauty-1785050295"></link>
            <id>https://manithan.com/article/rashmika-mandanna-talk-about-real-beauty-1785050295</id>
            <summary type="text">தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்திய பேட்டியொன்றில் அழகு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்த பதில், ரசி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்திய பேட்டியொன்றில் அழகு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்த பதில், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுள்ளதுடன் பாராட்டுக்களையும் குவித்து வருகின்றது.&nbsp;</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">நடிகை ராஷ்மிகா</span></h2><p>

ரசிகர்களால் நேஷனல் கர்ஷ் என கொண்டாடப்படுபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. 'கிரிக் பார்ட்டி' எனும் கன்னட திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகிய இவர், அதனை தொடர்ந்து தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து பிரபல்யம் ஆனார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6baf6ecd-ff7b-4c99-8c5e-46b84fa5240f/26-6a65ba2b8c3c1.webp' /></p><p></p><p>
</p><p>
தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.</p><p>திரையில் ஜோடியாக வலம் வந்த விஜய் தேவர்கொண்டா- ராஷ்மிகா மந்தனா இருவரும் பல வருடங்களாக வெளியுலகிற்கு தெரியாமல் டேட்டிங் செய்து வந்தார்கள் என்பது அனைவரும் அறிந்த விடயம் தான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2316af0-115f-44b9-9111-d440af99a85b/26-6a65ba2c380be.webp' /></p><p>நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்தபோது காதலிக்க ஆரம்பித்தார்கள்.</p><p>அவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தார்கள்.

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமணம் சமீபத்தில் உதய்பூரில் உள்ள பிரம்மாண்ட மாளிகையில் நடைப்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/251695a3-86e0-4b40-8688-448963f38688/26-6a65ba2cdac64.webp' /></p><p></p><p>திருமணத்தின் பின்னரும் ராஷ்மிகா சினிமாவில் பிஸியாக நடித்து வருகின்றார். இந்நிலையில் சமீபத்திய பேட்டியொன்றி அழகு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு&nbsp; அவர் கருத்துத் தெரிவிக்கையில்,</p><p> "உள்ளம் அழகானால் உடலும் அழகாகும். நாம் விதவிதமான ஆடைகளையோ அல்லது அழகு சாதனப் பொருட்களையோ பயன்படுத்தினாலும், நமது ஆழ்மனது தூய்மையாக இருந்தால் மட்டுமே நாம் உண்மையாக அழகாகத் தெரிவோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adfea807-782e-43a4-ac43-9468f8f994a5/26-6a65ba2d86f99.webp' /></p><p>
எனவே, முடிந்தவரை மற்றவர்களுக்கு நல்லது செய்து வாழ்வோம். அதுவே நமது காலத்திற்குப் பிறகும் நம்மைப் பற்றிப் பேச வைக்கும்."என நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.குறித்த கருத்து தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T08:27:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரகசியமாக நடந்த போதைப்பொருள் வர்த்தகம்: தமிழர் பகுதியில் இளைஞர் கைது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-arrested-in-ampara-1785054217"></link>
            <id>https://tamilwin.com/article/youth-arrested-in-ampara-1785054217</id>
            <summary type="text">அம்பாறை - உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில்
நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்த போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை - உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில்
நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்த போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

இந்த கைது நடவடிக்கை நேற்று(25.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட திடீர்ச் சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p> </p><h2>


சகாக்களையும் கைது செய்ய நடவடிக்கை</h2><p>
அந்த பகுதியின் ஏற்கனவே பிரதான போதைப்பொருள் வர்த்தகராக இருந்த நபர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, குறித்த நபர் ரகசியமான முறையில் போதைப்பொருள் விநியோகத்தை முன்னெடுத்து வந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6db88ead-dd61-4206-8300-b0db7f607536/26-6a65c4d9e68b0.webp' /></p><p>
</p><p>
இதன்போது, 2050 மில்லிகிராம் ஹெரோயின்
போதைப்பொருள் ஒரு தொகை ரொக்கப் பணம் மற்றும் கைத்தொலைபேசி என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
</p><p>
அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபருடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்த மேலும் மூவரைக் கைது செய்வதற்கான விரிவான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><p>&nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T08:27:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகளவில் முதல் நாள் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.. டாப் 10 லிஸ்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/top-10-highest-opening-day-collection-worldwide-1785045954"></link>
            <id>https://cineulagam.com/article/top-10-highest-opening-day-collection-worldwide-1785045954</id>
            <summary type="text">முதல் நாள் வசூல்ஒவ்வொரு திரைப்படத்திற்கும் வசூல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதுதான் பாக்ஸ் ஆபிஸில் படத்தின் வெற்றியை நிர்ணயிக்கிறது. 

இதி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>முதல் நாள் வசூல்</h2><p>ஒவ்வொரு திரைப்படத்திற்கும் வசூல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதுதான் பாக்ஸ் ஆபிஸில் படத்தின் வெற்றியை நிர்ணயிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48d4b74a-41f2-450a-a868-668c81964d2c/26-6a65a3c4ebb1f.webp' /></p><p> 

இதில், முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதும் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.</p><p>

சமீபத்தில் வெளிவந்து உலகளவில் வசூல் வேட்டையாடி வருகிறது ஜனநாயகன். உலகளவில் 3 நாட்களில் ரூ. 165 கோடிக்கும் மேல் வசூலித்துள்ள இப்படம், முதல் நாள் மட்டுமே ரூ. 84 கோடி வசூல் செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76186e3a-a071-44c5-9b01-cae28fd474e2/26-6a65a3c5a3f39.webp' /></p><p></p><h2>டாப் 10 லிஸ்ட்</h2><p>
</p><p>
இந்த நிலையில், தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில், முதல் நாள் உலகளவில் அதிக வசூல் செய்த திரைப்படங்கள் என்னென்ன? அதில் எந்த திரைப்படம் முதலிடத்தில் உள்ளது என்பது குறித்து லிஸ்ட்டை பார்க்கலாம்.</p><p>

கூலி - ரூ. 152 கோடி
</p><p>லியோ - ரூ. 146 கோடி</p><p>
கோட் - ரூ. 100.5 கோடி
</p><p>2.0 - ரூ. 95 கோடி
</p><p><a href="https://www.youtube.com/watch?v=VstTob9ocaM" target="_blank">ஜெயிலர் </a>- ரூ. 94 கோடி
</p><p>கபாலி - ரூ. 90 கோடி</p><p>
பீஸ்ட் - ரூ. 85 கோடி
</p><p>ஜனநாயகன் - ரூ. 86 கோடி
</p><p>வேட்டையன் - ரூ. 70 கோடி
</p><p>சர்கார் - ரூ. 65 கோடி</p>]]></content>
            <updated>2026-07-26T08:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை விமான நிலையத்தை பரபரப்பாக்கிய கனேடியர் ; சோதனையில் காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadian-arriving-in-sri-lanka-arrested-1785041463"></link>
            <id>https://canadamirror.com/article/canadian-arriving-in-sri-lanka-arrested-1785041463</id>
            <summary type="text">கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சுமார் 20 கிலோகிராம் &#039;ஹசீஸ்&#039; போதைப்பொருளை இலங்கைக்குள் கடத்த முயன்ற கனடா நாட்டவர் ஒருவர் கைது...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சுமார் 20 கிலோகிராம் 'ஹசீஸ்' போதைப்பொருளை இலங்கைக்குள் கடத்த முயன்ற கனடா நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
 

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி 200 மில்லியன் ரூபாய்க்கும் (ரூ. 20 கோடி) அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3e57b9d-ab9f-43bd-8b5a-24abf45c730a/26-6a659238a321c.webp' /></p><p>
</p><p>
 

விமான நிலைய சுங்க அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே சந்தேகநபர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T08:19:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்திக் பாண்டியாவை வாங்க துடிக்கும் CSK: பிரெவிஸ், துபே-க்கு ஓகே சொன்ன சென்னை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mi-plan-to-trade-hardik-pandya-over-ipl-2027-1785053757"></link>
            <id>https://news.lankasri.com/article/mi-plan-to-trade-hardik-pandya-over-ipl-2027-1785053757</id>
            <summary type="text">ஹர்திக் பாண்டியாவின் அணி மாற்றத்திற்காக மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே தீவிரமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஹ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹர்திக் பாண்டியாவின் அணி மாற்றத்திற்காக மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே தீவிரமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.</p><h2> ஹார்திக் பாண்டியாவை வாங்க ஆர்வம் காட்டும் CSK</h2><p>இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பேஸ்டமேனான ஹார்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியானதை தொடர்ந்து அவரை அணியில் இணைத்து கொள்ள பல அணிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c83ac9c4-45f1-4551-80ec-bd6f61cca698/26-6a65c23e58557.webp' /></p><p> மும்பை அணியிடம் இருந்து ஹார்திக் பாண்டியாவை எப்படியாவது தங்கள் அணியில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிரமாக முயன்று வருகிறது.</p><p> மேலும் இதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது.</p><h2>மும்பை அணியின் எதிர்பார்ப்பு</h2><p>ஹார்திக் பாண்டியாவை விடுவிக்க சென்னை அணியில் இருந்து ஷிபம் துபே மற்றும் ஆயுஷ் மாத்ரேவை மும்பை அணி எதிர்பார்க்கிறது.</p><p> ஆனால் சென்னை அணியின் நீண்ட கால முதலீடாகவும் மற்றும் தங்கள் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் கருதப்படும் ஆயுஷ் மாத்ரேவை மும்பை அணிக்கு வழங்க சென்னை அணி திட்டவட்டமாக மறுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b6f9f7f-9aa2-4b7f-bd20-bef825f40753/26-6a65c23f0be70.webp' /></p><h2>சென்னை அணியின் விருப்பம்</h2><p>ஆனால் ஹார்திக் பாண்டியாவிற்கு மாற்றாக ஷிபம் துபே, தென்னாப்பிரிக்க அதிரடி பேட்ஸ்மேனான டெவால்ட் பிரெவிஸ் ஆகியோரை வழங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.</p><p> மேலும் ரூ.10 கோடி வரை பணம் பரிமாறிக் கொள்ளவும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb0a9b1a-57d1-4c02-8cde-5698e875bd9c/26-6a65c23fb5e33.webp' /></p><p> மும்பை அணி மற்றும் சென்னை அணி இடையே ஹார்திக் பாண்டியாவை மாற்றிக் கொள்ளும் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இதனை மற்ற பிற அணிகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-26T08:16:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலப்பனையில் காட்டுத் தீ ; 10 ஏக்கருக்கும் அதிகமான பகுதி தீக்கிரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wildfire-in-walapane-burns-over-10-acres-1785053782"></link>
            <id>https://jvpnews.com/article/wildfire-in-walapane-burns-over-10-acres-1785053782</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டம், வலப்பனை ஹரஸ்பெத்த, கல்தெகபத்தன வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ள நிலையில், தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நுவரெலியா மாவட்டம், வலப்பனை ஹரஸ்பெத்த, கல்தெகபத்தன வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ள நிலையில், தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p style="text-align: justify; ">


இன்று (26) ஏற்பட்டுள்ள இந்த காட்டுத் தீ காரணமாக இதுவரை 10 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3258e8e-b813-4028-b613-21f2e7a22cd4/26-6a65c2576f655.webp' /></p><h2 style="text-align: justify; ">தீ பரவல்&nbsp;</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


அப்பகுதியில் நிலவும் அதிக உஷ்ணமான காலநிலை காரணமாக தீ வேகமாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">


தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் வனத்துறையினர், அதிரடிப்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் பொதுமக்கள், கிராம மக்கள் ஆகியோர் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இந்நிலையில், தீயை கட்டுப்படுத்துவதற்கு அப்பகுதி கிராம மக்கள் மற்றும் பொதுமக்களின் உதவியை வனத்துறையினர் கோரியுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


பல தரப்பினரும் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும், தீ பரவல் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-26T08:16:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[17 வயது பாவாடையும் குளிக்கும் காட்சி!! முடியாதுன்னு சொல்லியும் இயக்குநர் செய்த செயல்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/revathi-interesting-about-manvasanai-movie-secret-1785053397"></link>
            <id>https://viduppu.com/article/revathi-interesting-about-manvasanai-movie-secret-1785053397</id>
            <summary type="text">நடிகை ரேவதிதமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நாயகியாக திகழ்ந்து தற்போது இயக்குநராகவும் குணச்சித்திர நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார் நடிக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகை ரேவதி</h2><p>தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நாயகியாக திகழ்ந்து தற்போது இயக்குநராகவும் குணச்சித்திர நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார் நடிகை ரேவதி. பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகையாக மண் வாசனை படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார் ரேவதி. சமீபத்தில் நடந்த பேட்டியொன்றில் கலந்து கொண்டு மண்வாசனை படத்தின் நினைவுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c68731a-da89-49d7-8add-636d8aaeca14/26-6a65c0d7cce8f.webp' /></p><p> </p><p>அதில், மண்வாசனை படத்தில் பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பாடலில் நான் பாவாடை கட்டிக்கொண்டு தண்ணீரில் குளிப்பது போன்ற காட்சி இருந்தது. அந்தக் காட்சியை பற்றி என்னிடம் கூறியதுமே எனக்கு பயம் வந்தது. உடனே என் அம்மாவிடம் சென்று முடியாது என்று கூறினேன். அப்போது எனக்கு வெறும் 17 வயதுதான். </p><p>அதுவரை பொது இடங்களில் பாவாடை கட்டி, முதுகைக்காட்டி குளித்த பழக்கமே இல்லை. அதனால் முடியாது என்று சொன்னேன். உடனே அம்மா பாரதிராஜாவிடம் சென்று, எங்களை மன்னித்துவிடுங்கள் சார். இதற்கு மேல் என் மகளால் நடிக்க முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a41ebbaa-cfd0-46d1-81f9-e10b10c43497/26-6a65c0d8aef6f.webp' /></p><p> </p><p>இதுவரை படப்பிடிப்பிற்கு எவ்வளவு பணம் செல்வானதோ, அந்த பணத்தை நாங்களே திருப்பித் தருகிறோம் என்று சொன்னார்கள். அதன்பின் பாரதிராஜா சார், அம்மாவை சமாதானப்படுத்தி, என்னையும் சமாதானப்படுத்தி, எனக்கு கூச்சமும் பயமும் போக வேண்டும் என்பதற்காக, படப்பிடிப்பில் இருந்த மேலும் பல பெண்களை அதேபோல் பாவாடை கட்ட வைத்து என்னுடன் சேர்ந்து நிற்க வைத்தார்.</p><p> ஆனால் படத்தில் அந்த பாட்டில் நான் மட்டும் தான் வருவேன். இயக்குநர் பாரதிராஜாவின் இந்த சமயோசிதமான செயலால் தான் அந்த ஐகானிக் பாடல் காட்சி உருவானது என்று ரேவதி தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-26T08:15:00+00:00</updated>
        </entry>
    </feed>
