<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-20T19:37:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதியில் தமிழருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை: இந்திய பிரதமர் மோடிக்கு இலங்கை எம்.பி கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tamil-man-sentenced-to-death-in-saudi-1789932834"></link>
            <id>https://news.lankasri.com/article/tamil-man-sentenced-to-death-in-saudi-1789932834</id>
            <summary type="text">Tamil man Sentenced to Death in Saudi Sri Lanka MP Urges Indian PM Modi to Rescue: சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழரை இந்திய பிரதமர் மோடி மீட்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Tamil man Sentenced to Death in Saudi Sri Lanka MP Urges Indian PM Modi to Rescue: சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழரை இந்திய பிரதமர் மோடி மீட்க வேண்டும் என்று இலங்கை எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.</p><h2> சமூக வலைதளத்தில் கருத்தை பதிவிட்ட இலங்கை தமிழ் இளைஞர்</h2><p>இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த இந்துக்கள் கதிர்காமம் முருகன் கோயிலுக்கு புனித பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர். </p><p>&nbsp;அப்போது அவர்களுடன் சுப்பிரமணியம் என்ற பெயர் கொண்ட நாயும் சென்றுள்ளது. அந்த நாயை முஸ்லிம் இளைஞர் ஒருவர் மிதிப்பது போன்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p> பலரும் அந்த வீடியோவின் கமெண்டில் தங்களது கண்டன கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f5f4ae4-f7d0-42d1-9d23-9f132941fb23/26-6ab03523e8667.webp' /></p><p> சவுதி அரேபியாவில் பணியாற்றி வரும் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞரான அனோஜன் சிவராசாவும் அந்த வீடியோவின் கமெண்டில் நபிகள் நாயகம் குறித்து அவதூறான விமர்சனத்தை பகிர்ந்துள்ளார்.</p><p></p><p> இதையடுத்து சவுதி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அனோஜனுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறையும், ரூ.7.55 கோடி அபராதமும் விதித்தது.</p><p> இதனை எதிர்த்து அனோஜன் மேல்முறையீடு செய்த நிலையில், அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><h2> இந்திய பிரதமர் மோடி தலையிட வேண்டும்</h2><p>இந்நிலையில் சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழரை இந்திய பிரதமர் மோடி மீட்க வேண்டும் என்று இலங்கையின் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் எம்.பி. யுமான&nbsp; எம்.பி மனோ கணேசன் கோரிக்கை வைத்துள்ளார்.</p><p>[Q51ZQE
]</p><p> இது தொடர்பாக சமூக வலைதளத்தில் நேற்று அவர் வெளியிட்ட பதிவில், இந்திய பிரதமர் மோடியும், சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் சல்மானும் மிக நெருங்கிய நட்பு கொண்டவர்கள்.</p><p> எனவே இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனிப்பட்ட முறையில் இந்திய பிரதமர் மோடியுடன் இலங்கை தமிழ் இளைஞரான அனோஜன் தொடர்பில் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.</p><p> மேலும் இளைஞர் அனோஜன் சிவராசாவை மீட்க வேண்டும் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.<br></p>]]></content>
            <updated>2026-09-20T19:34:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் பூர்வீக காணிகளில் இருந்து மக்களை வெளியேற்ற முயற்சி - வனஜீவராசிகள் திணைக்களம் மீது புதிய குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-allegation-against-the-department-of-wildlife-1789931232"></link>
            <id>https://tamilwin.com/article/new-allegation-against-the-department-of-wildlife-1789931232</id>
            <summary type="text">கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோவில் வயல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில், பிரிட்டிஷ் காலத்தில் இருந்து பரம்பர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோவில் வயல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில், பிரிட்டிஷ் காலத்தில் இருந்து பரம்பரையாக வாழ்ந்து வரும் மக்களை அவர்களுடைய காணிகளில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் வனஜீவராசிகள் திணைக்களம் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
</p><p>
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பிரிட்டிஷ் காலத்தில் இருந்து மக்கள் வாழ்ந்து வருவதுடன், அவர்களின் வாழ்வாதாரங்களுக்காக விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
</p><h2>
காணி உரிமத்துடன் போராடும் மக்கள்</h2><p>
அதற்கான காணி ஆவணங்களையும் அப்பகுதி மக்கள் தம்வசம் வைத்துள்ளனர்.

இந்த நிலையில், அப்பகுதி மக்கள் 1991ஆம் ஆண்டில் ஆனையிறவில் முன்னெடுக்கப்பட்ட ஆகாயக் கடல் வழி இராணுவ நடவடிக்கை காரணமாக முற்றுமுழுதாக இடம்பெயர்ந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/249b1ff4-f092-4e00-9ff6-7033ead813d1/26-6ab02f349d270.webp' /></p><p>
</p><p>
சுமார் 35 வருடங்களுக்குப் பின்னர், மீண்டும் அப்பகுதிகளில் மக்கள் குடியேறியுள்ளனர்.

தற்போது வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த காணிகளை ஆக்கிரமிக்கும் நோக்கில் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
மக்களை அச்சுறுத்தும் திணைக்கள அதிகாரிகள்</h2><p>
தலைமுறை தலைமுறையாக பூர்வீகமாக வாழ்ந்த இந்த நிலங்களில் இருந்து இவர்களை வெளியேற்றும் நோக்கில் குறித்த அதிகாரிகள் தொடர்ச்சியான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69d334eb-d1ff-4016-af02-d5975a33f2a6/26-6ab02f359757e.webp' /></p><p>
</p><p>
நேற்றுமுன்தினம் (19) குறித்த பகுதிக்கு சிவில் உடையில் சென்ற வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், அந்தக் காணிகளில் இருந்து மக்களை உடனடியாக வெளியேறுமாறும் அச்சுறுத்தியுள்ளனர்.</p><p>

அவர்கள் குறித்த மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாகவும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T19:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[செங்கடல் பிராந்திய போரில் இத்தாலி! மறுக்கும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/italy-in-the-red-sea-region-conflict-1789932090"></link>
            <id>https://ibctamil.com/article/italy-in-the-red-sea-region-conflict-1789932090</id>
            <summary type="text">செங்கடல் பிராந்தியத்தில் இத்தாலி எந்தவொரு போரிலும் ஈடுபடவில்லை என அந்நாட்டு
வெளிவிவகார அமைச்சர் அந்தோனியோ தாஜானி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அந...</summary>
            <content type="html"><![CDATA[<p>செங்கடல் பிராந்தியத்தில் இத்தாலி எந்தவொரு போரிலும் ஈடுபடவில்லை என அந்நாட்டு
வெளிவிவகார அமைச்சர் அந்தோனியோ தாஜானி தெரிவித்துள்ளார்.</p><p>

இருப்பினும், அந்த முக்கிய கடல் வழியில் வர்த்தகக் கப்பல்களைப் பாதுகாக்கும்
ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்படை நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துமாறு அவர்
கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
அண்மையில் இடம்பெற்ற தாக்குதலில் இத்தாலியப் போர் விமானம் ஒன்று சேதமடைந்ததாக
வெளியான செய்திகள் மற்றும் இத்தாலியுடன் தாங்கள் போரில் ஈடுபடவில்லை என்ற ஹவுதி
அமைப்பினரின் அறிக்கைகள் குறித்து இத்தாலிய நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய
நேர்காணலிலேயே அவர் இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p></p><h2>கடற்படை நடவடிக்கை</h2><p>
</p><p>
சவூதி அரேபியாவிலுள்ள தாயிஃப் (Taif) விமானப் படைத்தளத்தின் மீது ஹவுதி
அமைப்பினர் நடத்திய தாக்குதலில், தரையிறக்கப்பட்டிருந்த இத்தாலியின் F-2000
(Eurofighter) ரகப் போர் விமானம் ஒன்று சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்படும்
நிலையிலேயே வெளிவிவகார அமைச்சரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5db79708-f102-452c-b0dc-225ad57856f9/26-6ab0323bca97c.webp' /></p><p>

செங்கடல் மற்றும் பாப் அல்-மந்தேப் நீரிணை ஊடாகப் பயணிக்கும் வர்த்தகக்
கப்பல்களை ஹவுதி தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காகவே ஐரோப்பிய ஒன்றியத்தின்
'அஸ்பைட்ஸ்' பாதுகாப்புக் கடற்படை நடவடிக்கை உருவாக்கப்பட்டது.
</p><p>
இந்நீரிணைப் பகுதியில் நிலைமை மோசமடைந்து வரும் பின்னணியில், இத்தாலி
தொடர்ந்தும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் எனக் குறிப்பிட்ட அமைச்சர்,
இத்திட்டத்தைப் புதுப்பித்து வலுப்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

இத்தாலியின் ஒட்டுமொத்த கடல்சார் வர்த்தகப் போக்குவரத்தில் 40 சதவீதமானவையும்,
ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் 60 சதவீதமானவையும்
செங்கடல் வழியாகவே கடந்து செல்வதால், இந்தப் பிராந்தியத்தில் தமது நாட்டிற்கு
பலமான மூலோபாய நலன் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T19:21:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் உருவாகிறது புதிய ‘AI Force’ ; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ai-force-organization-opposition-in-the-ai-sector-1789931626"></link>
            <id>https://canadamirror.com/article/ai-force-organization-opposition-in-the-ai-sector-1789931626</id>
            <summary type="text">செயற்கை நுண்ணறிவு (AI) துறையைப் பாதுகாக்கும் நோக்கில் ‘AI FORCE’ என்ற புதிய அமைப்பை உருவாக்க உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>செயற்கை நுண்ணறிவு (AI) துறையைப் பாதுகாக்கும் நோக்கில் ‘AI FORCE’ என்ற புதிய அமைப்பை உருவாக்க உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த அமைப்பை வழிநடத்துவதற்காக ‘AI CZAR’ எனப்படும் சிறப்புப் பொறுப்பாளர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30d6318c-6bbc-4231-8352-b04f43e3830b/26-6ab0306c5dd5c.webp' /></p><p>

எதிர்காலத்தில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 25 சதவீதம் வரை AI துறை பங்களிக்கக்கூடும் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும், அமெரிக்காவின் AI வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி தடுக்கும் நோக்கில் எதிர்த்தரப்பினர் சதி செய்து வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அவர், அவ்வாறான முயற்சிகளை தாம் முறியடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
</p><p>
அமெரிக்காவின் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் AI துறைக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், இந்த புதிய அமைப்பு தொடர்பான மேலதிக விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-20T19:13:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரை மணி நேரம் அநுர மனோவுடன் கதைத்தது என்ன..! அனோஜனின் தற்போதைய நிலைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussed-with-anura-mano-for-half-an-hour-1789923176"></link>
            <id>https://tamilwin.com/article/discussed-with-anura-mano-for-half-an-hour-1789923176</id>
            <summary type="text">அனோஜனின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் தொலைபேசியில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டதாக ஐக்கிய மக்கள் சக்தி கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனோஜனின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் தொலைபேசியில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.</p><p>

லங்காசிறி ஊடகம் வழங்கும் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
அநுர குமார திஸாநாயக்கவுடன் வழக்கமாக அரை மணி நேரம் உரையாடுவது வழக்கம். அனோஜனின் நிலைப்பாட்டையும் எடுத்துரைத்துள்ளேன்.
</p><p>
விரைவில் சவூதி அரேபிய அரசாங்கத்துடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு, அவரது தண்டனையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் ஜனாதிபதிக்கு வலியுறுத்தினேன்.</p><p>

ஊழல்வாதிகளை அநுர அரசாங்கம் தேடித் தேடி கைது செய்வது பாராட்டுக்குரியது. என்றாலும், அநுர அரசாங்கத்திலும் ஊழல்வாதிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் தகுந்த தண்டனை வழங்கினால் நன்றாக இருக்கும் என்றார்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/BhMshQ0voX8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T19:12:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இதுவரை இல்லாத மிகப்பெரிய தாக்குதல்! ரஷ்யா மீது ஒரே இரவில் ஏவப்பட்ட 1000 ட்ரோன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/1000-drones-launched-at-russia-overnight-1789928215"></link>
            <id>https://ibctamil.com/article/1000-drones-launched-at-russia-overnight-1789928215</id>
            <summary type="text">ரஷ்யாவில் நாடாளுமன்றத் தேர்தலின் மூன்றாவது மற்றும் இறுதி நாள் நிறைவடைந்து கொண்டிருந்த நிலையில், ஒரே இரவில் ரஷ்யா மீது 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவில் நாடாளுமன்றத் தேர்தலின் மூன்றாவது மற்றும் இறுதி நாள் நிறைவடைந்து கொண்டிருந்த நிலையில், ஒரே இரவில் ரஷ்யா மீது 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை உக்ரைன் ஏவியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அவற்றில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் தலைநகர் மொஸ்கோவை நோக்கி ஏவப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மொஸ்கோமீது நடத்தப்பட்ட இந்த ட்ரோன் தாக்குதலை இதுவரை இடம்பெற்றுள்ள மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் என மொஸ்கோ மேயர் வர்ணித்துள்ளார்.</p><p></p><h2>மொஸ்கோவைச் சுற்றியுள்ள பிராந்தியங்கள்</h2><p>
</p><p>
இந்த தாக்குதலில் மொஸ்கோஎண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட சில இடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், குடியிருப்பு கட்டடம் ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16cda424-ce0f-4c15-b1aa-2e256a007dd1/26-6ab0250b8d100.webp' /></p><p> </p><p>மொஸ்கோ நகருக்கு எரிபொருள் உள்ளிட்டவற்றை வழங்கும் முக்கிய நிலையங்களில் ஒன்றாக இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் காணப்படுகிறது.</p><p>மொஸ்கோவைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இது குறித்து உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், இந்த தாக்குதலில் பல்வேறு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>Pelican ஏவுகணைகள்</h2><p>
</p><p>
உக்ரைனில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட Flamingo மற்றும் Pelican ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/665c894c-9ddc-4a18-961c-8c1081d0211d/26-6ab0250c4a599.webp' /></p><p> </p><p>ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் தளவாட வசதிகளை இலக்காகக் கொண்டு இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.</p><p>

ரஷ்யாவின் பொருளாதாரத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் எனக் குறிப்பிட்ட அவர், இந்த வசதிகள் மூலம் கிடைக்கும் வருவாய் ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T19:06:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆபத்தான கழிவுகளை கொட்டாதே! கீரிமலையில் கொட்டும் மழையிலும் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-in-keerimalai-despite-pouring-rain-1789931062"></link>
            <id>https://ibctamil.com/article/protest-in-keerimalai-despite-pouring-rain-1789931062</id>
            <summary type="text">கீரிமலை பகுதியில் வலி.தெற்கு பிரதேச சபையினரால் கட்டுப்பாடின்றி கொட்டப்பட்ட
கழிவுகளை மீள அள்ள வேண்டும் என கொட்டும் மழைக்குள் போராட்டம்
முன்னெடுக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கீரிமலை பகுதியில் வலி.தெற்கு பிரதேச சபையினரால் கட்டுப்பாடின்றி கொட்டப்பட்ட
கழிவுகளை மீள அள்ள வேண்டும் என கொட்டும் மழைக்குள் போராட்டம்
முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>
கீரிமலையில் குப்பை கொட்டப்பட்ட இடத்திற்கு அருகாமையில் இன்றைய தினம்
ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
வலி. வடக்கின் ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் வலி. தெற்கு பிரதேச
சபையின் இலத்திரனியல் கழிவுகள் , பிளாஸ்ரிக் கழிவுகள் , மருத்துவ கழிவுகள்
உள்ளிட்ட சுமார் 300 டிப்பர் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.</p><p></p><h2>2 மாதங்களுக்கு மேலாக&nbsp;மக்கள் குரல்</h2><p>
</p><p>
அவற்றினை மீள அள்ள வேண்டும் என கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அப்பகுதி மக்கள்
தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faf8bc43-01eb-463c-a78e-34bd3d038c98/26-6ab02e37d0149.webp' /></p><p>
</p><p>
இதேவேளை தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கொட்டப்பட்ட
கழிவுகள் மாத இறுதிக்குள் மீள அள்ளப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டு , அது
தொடர்பில் ஒருங்கிணைப்பு குழு தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ச.
சிறிபவானந்தராசா , வலி. வடக்கு தவிசாளர் சோ. சுகிர்தனுக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p>

அத்துடன் உள்ளூராட்சி ஆணையாளர் ச.சுதர்சனும் கழிவுகளை மீள அள்ள வேண்டும் என
பணித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e314e13-91fc-4d08-a1b4-462702aa917e/26-6ab02e389ae12.webp' /></p><p>
</p><p>
இவ்வாறான நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தெல்லிப்பழை புற்றுநோய்
வைத்தியசாலையின் மருந்தேற்றும் ஊசிகள், இரத்தம் தேய்ந்த பஞ்சுகள் உள்ளிட்ட
ஆபத்தான மருத்துவ கழிவுகள் அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ளன.

இந்நிலையே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T19:04:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளவரசி டயானா நினைவு தினம் நெருங்கும் நிலையில் மன்னர் சார்லஸ் தொடர்பில் வெளியான சர்ச்சை பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/controversial-post-regarding-king-charles-1789930243"></link>
            <id>https://tamilwin.com/article/controversial-post-regarding-king-charles-1789930243</id>
            <summary type="text">இளவரசி டயானாவின் 30ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னர், மன்னர் மூன்றாம் சார்லஸ் தொடர்பில் சர்ச்சைக்குரிய செய்தியொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இளவரசி டயானாவின் 30ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னர், மன்னர் மூன்றாம் சார்லஸ் தொடர்பில் சர்ச்சைக்குரிய செய்தியொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
</p><p>
இந்த தகவலை, இளவரசி டயானாவின் தம்பியான சார்லஸ் ஸ்பென்சர் எழுதிய "ஸ்வான் சாங்: டயானா, மை சிஸ்டர்" என்ற புதிய புத்தகத்தில் உள்ள பல குறிப்புகளை அடிப்படையாக கொண்டு கண்டறியப்பட்டுள்ளதாக நேற்றுமுன்தினம்(19.09.2026) இங்கிலாந்து நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.</p><p>

இதற்கமைய, இந்தப் புத்தகம் நாளைய தினம்(22.09.2026) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>


27 வயதில் வாரிசாக்கப்பட்ட ஸ்பென்சர்</h2><p>


ஏப்ரல் 1992ஆம் ஆண்டு நார்தாம்ப்டனில் உள்ள ஒரு தேவாலயத்தில், ஸ்பென்சர் மற்றும் இளவரசி டயானாவின் தந்தையின் இறுதிச் சடங்கின் போது, இந்த உணர்வற்ற சம்பவம் பதிவாகியுள்ளது.</p><p> 

அப்போது, 27 வயதான ஸ்பென்சர், தனது தந்தையின் உடல் தேவாலயத்திற்குள் கொண்டு செல்லப்பட்டபோது அழுது கொண்டிருந்தார். அந்த சமயத்தில், இளவரசர் சார்லஸ், "நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி" என்று கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42008fce-a2c8-4509-863c-345534e2421b/26-6ab02b8ebb9d6.webp' /></p><p> </p><p>

ஸ்பென்சர் மீண்டும் அவரிடம் கேட்டபோது,“ ​​இவ்வளவு இளம் வயதில் பிரபு என்ற பட்டமும், அதனுடன் வரும் 13,000 ஏக்கர் (52.61 சதுர கிலோமீட்டர்) நிலமும் சொத்துக்களும் வழங்கப்பட்டது ஒரு பெரும் பாக்கியம்” என்று சார்லஸ் மீண்டும் வலியுறுத்தினார்.</p><p> 

இதன்போது, இளவரசர் சார்லஸ் ஒரு பிடிவாதமான குழந்தையைப் போன்று, தன்னுடைய கால்களைத் தரையில் தட்டி நடந்து சென்றதாகவும் ஸ்பென்சர் கூறுகிறார்.</p><h2>

 73 வயதில் அரியணை ஏறிய மன்னர் சார்லஸ்</h2><p>
அந்த காலத்தில், தனக்கு 43 வயதாகியும், தனக்குக் கீழ் 50 பேர் பணிபுரிந்தும் வந்தபோதிலும், தனது பெற்றோர் தன்னை ஒரு குழந்தையைப் போலவே நடத்துவதாக இளவரசர் சார்லஸ் முரண்பட்டதாகவும் கூறியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b7ba603-c8b3-4ac9-aead-0467991f907c/26-6ab02b8f71974.webp' /></p><p>
</p><p>
 இரண்டாம் எலிசபெத் மகாராணி 96 வயது வரை ஆட்சி செய்தார், மேலும் மன்னர் சார்லஸ் 2022 செப்டம்பரில் தனது 73 வயதில் பிரிட்டிஷ் அரியணை ஏறினார், இதன் மூலம் அரியணை ஏறிய மிக வயதான பிரிட்டிஷ் அரச குடும்ப உறுப்பினர் என்றும் அடையாளப்படுத்தபட்டார்.
</p><p>
1997ஆம் ஆண்டு, இளவரசி டயானாவின் மரணத்திற்கு பின்னர், நடந்த மற்றொரு சர்ச்சைக்குரிய சம்பவமும் முன்னர் வெளியிடப்பட்ட பகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T19:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத மீன்பிடித்தல்: கனடா நபருக்கு 4,500 டொலர் அபராதம்; மீன்பிடிக்கத் தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ont-man-fined-4500-suspended-from-fishing-1789922994"></link>
            <id>https://canadamirror.com/article/ont-man-fined-4500-suspended-from-fishing-1789922994</id>
            <summary type="text">சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக கனடாவின் தண்டர்பே நகரைச் சேர்ந்த பால் ஹர்டில் என்பவருக்கு 4,500 கனடிய டொலர் அபராதம் விதிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக கனடாவின் தண்டர்பே நகரைச் சேர்ந்த பால் ஹர்டில் என்பவருக்கு 4,500 கனடிய டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒன்ராறியோ மாகாணத்தில் மீன்பிடிக்க 5 ஆண்டுகளுக்குத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>
அணைக்கு கீழ்நோக்கிய 23 மீட்டருக்குள் சட்டவிரோதமாக மீன்பிடித்தது, தூண்டில் பயன்படுத்தாமல் வலை மூலம் 'ரெயின்போ டிரவுட்' மீன்களைப் பிடித்தது மற்றும் இயற்கை வள பாதுகாப்பு அதிகாரியிடம் தவறான வாக்குமூலம் அளித்தது ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் இவர் குற்றவாளியாகக் காணப்பட்டார்.
</p><p>இயற்கை வள அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d9902cb-526f-45aa-a26b-0ce742e145f0/26-6ab00eb3ee30f.webp' /></p><p>
</p><p> மே 1, 2025 அன்று சூனியா நகராட்சியில் உள்ள இஷ்கிபிபிள் க்ரீக் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடிக்கப்படுவதாகப் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர்.
</p><p>ஹைவே 11/17 இல் பால் ஹர்டிலின் வாகனத்தை மறித்துச் சோதனையிட்ட அதிகாரிகள், அவர் அணைக்கு கீழ்நோக்கிய 23 மீட்டர் எல்லைக்குள் 'டிப் நெட்' வலையைப் பயன்படுத்தி மீன்களைப் பிடித்ததை உறுதி செய்தனர். 
மேலும், விசாரணையின் போது அவர் அதிகாரிகளுக்குப் பொய் தகவல்களைக் கூறி திசைதிருப்ப முயன்றதும் தெரியவந்தது.
</p><p>தண்டர்பே ஒன்ராறியோ நீதிமன்றத்தில், சமாதான நீதிபதி J. A. பெர்னார்ட் காரோன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
</p><p>இலையுதிர் காலத்தில் சால்மன் மீன்களின் இடப்பெயர்வு காலம் தொடங்கவுள்ள நிலையில், இந்தச் சம்பவம் அனைத்து மீனவர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பாதுகாப்பு அதிகாரி ரொன் ஆர்னல்ட் தெரிவித்துள்ளார்.
</p><p>இயற்கை வளங்கள் தொடர்பான சட்டவிரோதச் செயல்கள் குறித்து தகவல் தெரிவிக்க அமைச்சகத்தின் இலவச உதவி எண்ணான 1-877-847-7667 அல்லது 'க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' அமைப்பைத் தொடர்புகொள்ளலாம்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T18:58:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனை மீட்க அரசு முழு அளவில் செயற்படும் - பிமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/government-will-act-fully-to-rescue-anojan-bimal-1789922689"></link>
            <id>https://jvpnews.com/article/government-will-act-fully-to-rescue-anojan-bimal-1789922689</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனை மீட்டெடுப்பதற்கு அரசாங்கம் அதிகபட்ச தலையீட்டை செலுத்தியுள்ளதாக போக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனை மீட்டெடுப்பதற்கு அரசாங்கம் அதிகபட்ச தலையீட்டை செலுத்தியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p></p><p> 

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி பதிலளிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் இந்த விடயம் தொடர்பில் அதிகபட்ச தலையீட்டை மேற்கொண்டு வருகிறோம் எனக் குறிப்பிட்டார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afe86027-14f1-42e1-b133-3f011e98238d/26-6ab00d82e7527.webp' /></p><p>வெளிவிவகார அமைச்சரும் வெளிவிவகார அமைச்சும் இதில் தலையிட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. 

அதேபோன்று ஜனாதிபதி செயலகமும் இதில் தலையீடுகளை மேற்கொண்டு வருகிறது. </p><p>

நாங்கள் இதன் ஆரம்பக் கட்டத்திலேயே இருக்கிறோம், இதில் எவ்வித தாமதமும் ஏற்படவில்லை. </p><p>

எனினும், இவ்வாறான விடயங்களைக் கையாளும் போது குறிப்பிட்ட இராஜதந்திர நடைமுறைகளின்படியே செய்ய வேண்டும். </p><p>

ஏனெனில் அந்தந்த நாடுகளுக்கென சட்டதிட்டங்கள் காணப்படுகின்றன. </p><p>

இருப்பினும், அவரை மீட்டெடுப்பதற்கு நாங்கள் அதிகபட்சமாக தலையிட்டு நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T18:57:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனச்சோர்வை குறைக்க புதிய ‘Brain Stimulation Headset’ ; அமெரிக்காவில் புதிய சாதனம் அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/can-wearing-it-on-head-reduce-symptoms-depression-1789930591"></link>
            <id>https://canadamirror.com/article/can-wearing-it-on-head-reduce-symptoms-depression-1789930591</id>
            <summary type="text">மனச்சோர்வு அறிகுறிகளைக் குறைப்பதற்கான புதிய ‘Brain Stimulation Headset’ சாதனம் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்வீடனைச் சேர்ந்த ‘Flow Ne...</summary>
            <content type="html"><![CDATA[<p>மனச்சோர்வு அறிகுறிகளைக் குறைப்பதற்கான புதிய ‘Brain Stimulation Headset’ சாதனம் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
ஸ்வீடனைச் சேர்ந்த ‘Flow Neuroscience’ நிறுவனம் உருவாக்கியுள்ள இந்தச் சாதனம், நெற்றியில் அணிந்து சுமார் 30 நிமிடங்கள் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32a10cc9-22c0-428d-84dd-1147009c2dbf/26-6ab02c609a163.webp' /></p><p>இந்தச் சாதனத்தின் மூலம் 10 வாரங்களுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சைக்கான கட்டணம் 2,200 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

174 பேரை உள்ளடக்கிய ஆய்வில், இந்தச் சாதனத்தைப் பயன்படுத்தி 10 வார சிகிச்சையை மேற்கொண்டவர்களில் 45 சதவீதம் பேருக்கு மனச்சோர்வு அறிகுறிகளில் குறைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) அங்கீகாரம் பெற்றுள்ள இந்தச் சாதனத்தை, மருத்துவரின் பரிந்துரையுடன் மட்டுமே பயன்படுத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-20T18:56:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மறைந்த பிரித்தானிய இளவரசி டயானாவின் பழிவாங்கும் ஆடை: ஏலம் விட ஏற்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/princess-diana-s-revenge-dress-set-to-go-auction-1789929820"></link>
            <id>https://news.lankasri.com/article/princess-diana-s-revenge-dress-set-to-go-auction-1789929820</id>
            <summary type="text">Princess Diana’s Revenge Dress Set to go Auction: &amp;nbsp;பிரித்தானிய இளவரசி டயானாவின் பழிவாங்கும் ஆடை மீண்டும் ஏலத்துக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Princess Diana’s Revenge Dress Set to go Auction: &nbsp;பிரித்தானிய இளவரசி டயானாவின் பழிவாங்கும் ஆடை மீண்டும் ஏலத்துக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2> மீண்டும் ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் ஆடை</h2><p>மறைந்த பிரித்தானிய இளவரசி டயானாவின் புகழ்பெற்ற “பழிவாங்கும் ஆடை”(Revence Dress) சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.</p><p> லண்டனில் உள்ள சோதேபிஸ்(Sotheby’s) என்ற ஏல நிறுவனத்தினால் நடத்தப்படும் கண்காட்சியில் இந்த பழிவாங்கும் ஆடை வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0add9f7c-8abc-4acd-a833-95e67b591d11/26-6ab0295e36f3e.webp' /></p><p>லண்டனில் நேற்று தொடங்கப்பட்ட இந்த கண்காட்சி செப்டம்பர் 24ம் திகதி வரை நடைபெற உள்ளது.</p><p></p><p>லண்டனை தொடர்ந்து ஹாங்காங், ஜெனிவா போன்ற நகரங்களின் கண்காட்சிகளில் வைக்கப்பட்டு இறுதியாக 2026ம் டிசம்பர் 9ம் திகதி நியூயார்க் நகரில் நடைபெறும் ஏலத்தில் இளவரசி டயானாவின் ஆடை ஏலம் விடப்படவுள்ளது.</p><p> இப்போதைய பிரித்தானிய மன்னர் மற்றும் அப்போதைய இளவரசரான சார்லஸ் உடனான திருமணம் முறிவை சந்தித்த போது, இளவரசி டயானா சோகத்தில் மூழ்கி விடாமல், இந்த உலகத்திற்கு தன்னுடைய அழகையும், தைரியத்தை வெளிப்படுத்தும் விதமாக அணிந்த ஆடைகளை ஊடகங்கள் பழிவாங்கும் ஆடை என வர்ணித்தது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e1a6f65-0a40-4ab2-ad75-851c947bea89/26-6ab0295ee1307.webp' /></p>]]></content>
            <updated>2026-09-20T18:43:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் ; கப்பல் போக்குவரத்துக்கு புதிய சிக்கலா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tension-strait-of-hormuz-new-challenge-in-shipping-1789929550"></link>
            <id>https://canadamirror.com/article/tension-strait-of-hormuz-new-challenge-in-shipping-1789929550</id>
            <summary type="text">மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் மற்றும் ஓமானுக்கு இடையே அமைந்துள்ள ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் மற்றும் ஓமானுக்கு இடையே அமைந்துள்ள ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்து தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.</p><p>

உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கடல் வழித்தடமாக ஹோர்முஸ் நீரிணை காணப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab608002-9ee8-4c0a-b27a-55f7af10c46f/26-6ab0284fed3d8.webp' /></p><p>இந்த நிலையில், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக, குறித்த கடல் வழித்தடத்தில் சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என்ற கவலை உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையில் ஏற்படும் எந்தவொரு குறிப்பிடத்தக்க இடையூறும் சர்வதேச எரிசக்தி விநியோகம் மற்றும் எண்ணெய் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அப்பகுதியில் நிலவும் நிலைமை சர்வதேச அளவில் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-20T18:39:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொட்டாஞ்சேனையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்! மூவர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kotahena-murder-three-arrested-with-drugs-1789897522"></link>
            <id>https://tamilwin.com/article/kotahena-murder-three-arrested-with-drugs-1789897522</id>
            <summary type="text">கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் &#039;ஐஸ்&#039; போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கடந்த செப்டம்பர் 14 ஆம் திக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் 'ஐஸ்' போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

 

கடந்த செப்டம்பர் 14 ஆம் திகதி கொட்டாஞ்சேனை பகுதியில் நபரொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>பொலிஸாருக்கு கிடைத்த தகவல்&nbsp;</h2><p>பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கிரேன்ட்பாஸ், கொலன்னாவை மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதே மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/297e803a-1910-4394-9a0a-3c5af0b52e15/26-6aafbcfa51686.webp' /></p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 28 கிராம் 600 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.</p><p>
 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்குளி, கொழும்பு 14 மற்றும் கொலன்னாவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 19, 25 மற்றும் 39 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளதுடன்,&nbsp; குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p>சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T18:31:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல சர்ச்சைகளுக்கு மத்தியில் ஞானசார தேரரின் புதிய நூல் வெளியீடு - நிகழ்வில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/launch-of-gnanasara-thero-s-new-book-1789928647"></link>
            <id>https://tamilwin.com/article/launch-of-gnanasara-thero-s-new-book-1789928647</id>
            <summary type="text">பல்தரப்பட்ட சர்ச்சைகளுக்கு மத்தியில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் எழுதிய நூல் ஒன்று கொழும்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்தரப்பட்ட சர்ச்சைகளுக்கு மத்தியில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் எழுதிய நூல் ஒன்று கொழும்பில் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>

இந்த நிகழ்வு நேற்று(20.09.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p> 

கடந்த 2010ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக இஸ்லாம் மதத்தின் மீது கடுமையான நிந்தனைகளை முன்வைத்து வரும் ஞானசார தேரருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு தொடக்கம் உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்கள் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தன.
</p><p>
இஸ்லாம் மதத்திற்கோ வேறு மதங்களுக்கோ எந்தவித நிந்தனையும் செய்யக்கூடாது என்பது குறித்த உத்தரவுகளின் சாராம்சமாகும்.

அவ்வாறான நிலையிலும், கடந்த காலங்களில் தொடர்ச்சியாக அவர் இஸ்லாமியர் மற்றும் கத்தோலிக்கர்களை பிரதானமாக இலக்கு வைத்து கடுமையான மத நிந்தனைகளை மேற்கொண்டிருந்தார்.</p><h2>

உயர் நீதிமன்றத்தின் உத்தரவு</h2><p>
இதற்கிடையே கடந்த 2019ஆம் ஆண்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டு சிறைத்தண்டனை, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தலையீட்டின் கீழ் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு மூலம் எட்டே மாதங்களில் நிறைவுற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01cb7001-849f-48e4-8d55-4203c8086338/26-6ab0252d6c26c.webp' /></p><p>

அதற்கு எதிராக சந்தியா எக்னெலிகொட தொடுத்திருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கின் காரணமாக ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை ரத்துச் செய்துள்ள உச்சநீதிமன்றம், அவரது தண்டனையின் எஞ்சிய காலத்துக்கு சிறைவாசம் அனுபவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
</p><p>
குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு வாரம் கடந்து விட்ட நிலையிலும் ஞானசார தேர்ர் இன்றும் வெளியில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கும் வேளையில், நேற்று(20) நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
</p><p>
குறித்த நூல் வெளியீட்டு நிகழ்வில் முன்னாள் அமைச்சர்களான சரத் வீரசேகர, சன்ன ஜயசுமண மற்றும் ஏராளமான தேரர்கள் கலந்து கொண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cc91bf5-f567-438b-bbf3-87e821f7f7aa/26-6ab0252e4f598.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34a9d380-4033-4882-a276-54cc4e88a684/26-6ab0252f26f9d.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T18:31:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மற்றும் சவூதி இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/discussions-between-sri-lanka-and-saudi-arabia-1789928976"></link>
            <id>https://jvpnews.com/article/discussions-between-sri-lanka-and-saudi-arabia-1789928976</id>
            <summary type="text">தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை பரிமாறிக்கொள்ளுதல் மற்றும் பரஸ்பர சட்ட உதவி தொடர்பான இருதரப்பு உடன்படிக்கைகளை இறுதி செய்வதை விரைவுபடுத்துவது குறித்து இலங...</summary>
            <content type="html"><![CDATA[<p>தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை பரிமாறிக்கொள்ளுதல் மற்றும் பரஸ்பர சட்ட உதவி தொடர்பான இருதரப்பு உடன்படிக்கைகளை இறுதி செய்வதை விரைவுபடுத்துவது குறித்து இலங்கையும் சவூதி அரேபியாவும் கலந்துரையாடியுள்ளன.</p><p>
</p><p></p><p>அதன்படி, சவூதி அரேபியாவுக்கான ஸ்ரீலங்கை தூதுவர் ஒ.எல். அமீர் அஜ்வாத் (O.L. Ameer Ajwad), ரியாத் நகரில் அமைந்துள்ள நீதி அமைச்சில், சவுதி அரேபியாவின் சட்ட மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மிஷால் பின் அலி அல்-பலவியை (Mishaal bin Ali Al-Balawi) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4d5beea-1392-4fbd-b6b0-6efdc7f57f36/26-6ab026123dbc3.webp' /></p><p>இரு நாடுகளுக்கும் இடையிலான நீதி மற்றும் சட்டத்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும், குறிப்பாக இரண்டு உத்தேச உடன்படிக்கைகளையும் துரிதமாக இறுதி செய்வது குறித்தும் இந்த சந்திப்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாகச் சவுதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.</p><p>

சட்ட விவகாரங்களில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான தங்களது அர்ப்பணிப்பை இரு தரப்பினரும் மீள உறுதிப்படுத்தியதுடன், இருதரப்பு நலன்சார்ந்த பிற விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.
</p><p>
ரியாத் நகரில் உள்ள இலங்கை தூதரகத்தின் இரண்டாம் செயலாளரும் தூதரகத் தலைவருமான தமித்ரி சமங்கிக்க (Damithri Samangika) மற்றும் தூதரக அதிகாரி சஜீத் (Sajeeth) ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T18:30:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் ஜனாதிபதியை சந்திப்பதற்கு தயார் நிலையில் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-ready-to-meet-iranian-president-1789926242"></link>
            <id>https://ibctamil.com/article/trump-ready-to-meet-iranian-president-1789926242</id>
            <summary type="text">ஈரான் தொடர்பாக அமெரிக்கா முக்கியமான முடிவுகளை எடுக்க உள்ளதாக அமெரிக்க ஜகாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் ஜனாதிபதி&amp;nbsp;மசூத் பெசெஷ்கியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் தொடர்பாக அமெரிக்கா முக்கியமான முடிவுகளை எடுக்க உள்ளதாக அமெரிக்க ஜகாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். </p><p>ஈரான் ஜனாதிபதி&nbsp;மசூத் பெசெஷ்கியானை சந்திப்பதற்கும் தான் தயாராக இருப்பதாகவும்&nbsp;ட்ரம்ப் கூறியுள்ளார்.</p><p>அமெரிக்கா - ஈரான் மோதல் நிலை குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே ட்ரம்ப் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p></p><h2>ஈரானின் நடவடிக்கை&nbsp;</h2><p>இதன்போது, ஈரானின் நடவடிக்கை அமைதியாக இருக்க வேண்டும் என்றும்,&nbsp;தான் முடிவு எடுக்கும் நிலையில் இருக்கின்றேன் எனவும், அவற்றால் மிகப் பெரிய விடயங்கள் நடைபெற உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f685114a-d59e-4a43-8c4d-e4ea08f67a6f/26-6ab01b63ce1d6.webp' /></p><p>ஈரான் தொடர்பாக அமெரிக்காவின் முன் உள்ள விருப்பங்களில், ஈரானை முழுமையாக அழிப்பது, பொருளாதார ரீதியாக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து அந்நாட்டை வீழ்ச்சியடையச் செய்வது அல்லது புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவது ஆகியவை இருப்பதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.</p><p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணை முக்கிய விவகாரமாக மாறியுள்ளது.
</p><p>
மத்திய கிழக்கு போரின் பின்னணியில் ஹோர்முஸ் நீரிணையின் போக்குவரத்தைத் தடுக்க ஈரான் முயற்சித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், அந்த நீரிணையை மீண்டும் திறப்பதற்கான தனது நிபந்தனைகளை மத்தியஸ்தர்கள் மூலம் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக ஈரானின் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்துநர் முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T18:27:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனி வீட்டுக்கே வரும்சுகாதார சேவைகள் ; ஜனாதிபதி அறிவித்த புதிய சுகாதாரத் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/healthcare-services-coming-you-doorstep-new-scheme-1789927154"></link>
            <id>https://jvpnews.com/article/healthcare-services-coming-you-doorstep-new-scheme-1789927154</id>
            <summary type="text">பொதுமக்களுக்கு மிகவும் நெருக்கமான சிறந்த மற்றும் இலவச சுகாதாரச் சேவையை உருவாக்குவதாகவும், இதன்கீழ் தாதியொருவர் வீட்டுக்கே சென்று சுகாதார சேவைகளை வழங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுமக்களுக்கு மிகவும் நெருக்கமான சிறந்த மற்றும் இலவச சுகாதாரச் சேவையை உருவாக்குவதாகவும், இதன்கீழ் தாதியொருவர் வீட்டுக்கே சென்று சுகாதார சேவைகளை வழங்கும் புதிய முறையொன்றை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>மாத்தறை, அக்குரஸ்ஸவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.</p><p>

சுகாதாரத் துறையின் ஊடாகப் பொருளாதாரப் பலன்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதற்காக பல பிரதான மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ec1e54e-cdec-4fcc-8390-bfe0613d78d4/26-6ab01ef49092d.webp' /></p><p>அதற்கமைய, பொதுமக்கள் அனைவருக்கும் இலவச சுகாதாரச் சேவை மேலும் நெருக்கமாக்கப்படுவதுடன், உலகளவில் உள்ள அதிநவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் முறைகளைக் கண்டறிந்து அவற்றுக்கான நிதி எதிர்வரும் ஆண்டில் ஒதுக்கப்படவுள்ளது.
</p><p>
இதன் ஒரு கட்டமாக, அடுத்த ஆண்டுக்குள் 16 இடங்களில் 'கெத் லெப்' (Cath Lab) வசதிகள் ஆரம்பிக்கப்படும்.
</p><p>
மேலும், இதய நோய் சத்திர சிகிச்சைகளுக்காக காணப்பட்ட 1 முதல் 2 வருட காலக் காத்திருப்புப் பட்டியல், குறுகிய காலத்திற்குள் 15 நாட்களாகக் குறைக்கப்படவுள்ளதாகவும், இதன் மூலம் சுகாதாரத்துறையின் ஊடாகப் பொருளாதாரப் பலன்கள் நேரடியாக மக்களைச் சென்றடையும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T18:03:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 இலட்சம் ரூபாய் வரை விற்பனையான போலிச் சான்றிதழ்..! 200 பேருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fake-certificate-printing-press-operating-gampaha-1789924317"></link>
            <id>https://tamilwin.com/article/fake-certificate-printing-press-operating-gampaha-1789924317</id>
            <summary type="text">கம்பஹா - இம்புல்கொட, ராஜசிங்க பகுதியில் வாடகை வீட்டில் இயங்கி வந்த போலி பட்டச் சான்றிதழ்கள், ஆவணங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ முத்திரைகளைத் தயாரிக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா - இம்புல்கொட, ராஜசிங்க பகுதியில் வாடகை வீட்டில் இயங்கி வந்த போலி பட்டச் சான்றிதழ்கள், ஆவணங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ முத்திரைகளைத் தயாரிக்கும் ஒரு பெரிய அச்சகம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த நடவடிக்கையின் போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><h2>
27 வயது நபர் கைது</h2><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

கம்பஹா பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>

இதன்போது அம்பாந்தோட்டை - தங்கல்லை பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><h2>

அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் முத்திரைகள்&nbsp;</h2><p>

இந்த கும்பல், மாதம் ரூ. 35,000க்கு வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்துள்ளது. 

சுற்றிவளைப்பின் போது, 2 மடிக்கணினிகள், 2 ஸ்மார்ட்போன்கள், ஒரு வண்ண அச்சுப்பொறி, 35 போலிச் சான்றிதழ்கள், நிறுவனத் தலைவர்களின் 51 அதிகாரப்பூர்வ முத்திரைகள் மற்றும் 3 புடைப்பு முத்திரைகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5e8975f-d803-4244-a797-783672988e4e/26-6ab01463abfe8.webp' /></p><p> 

பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் தலைவர்களின் அதிகாரப்பூர்வ முத்திரைகள் மற்றும் கடிதத் தலைப்புகள் இந்த இடத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன.
</p><p>
இவற்றில் உள்நாட்டு வருவாய்த் திணைக்களம், இலங்கைத் தேர்வுகள் திணைக்களம், ஒரு தனியார் வங்கி மற்றும் பேராதெனிய, ஸ்ரீ ஜெயவர்தனபுர, களனி, மொரட்டுவ, ருஹுனு, ராஜரட்ட, வயம்ப, ஊவ வெல்லஸ்ஸ உள்ளிட்ட பல அரசாங்க மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் உத்தியோகபூர்வ முத்திரைகளும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
</p><h2>
4 இலட்சம் வரை விலைப்போன போலிச் சான்றிதழ்</h2><p>

இந்த மோசடி சுமார் ஒரு வருடமாக இடம்பெற்று வந்த நிலையில், சந்தேக நபர் சாதாரண சான்றிதழ்களை ரூ. 25,000 முதல் 50,000 வரையிலான விலையில் விற்பனை செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a97874a4-c17e-462c-879b-ea1397c37acc/26-6ab0146480218.webp' /></p><p> </p><p>

இருப்பினும், ஜப்பான் போன்ற வெளிநாடுகளுக்குத் தேவையான கள்ளச் சான்றிதழ்கள் ரூ.400,000 விலைக்குத் தயாரிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.</p><p>

இவ்வாறு தயாரிக்கப்பட்ட கள்ள ஆவணங்களைப் பயன்படுத்தி சுமார் 200பேர் வெளிநாடு சென்றுள்ளதாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார். யக்கல பொலிஸார், இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>அத்துடன், விசாரணைகள் நிறைவில், சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NaZHCffaXtk" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T18:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் பிரதான ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு ; வெள்ள அபாய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/water-levels-in-several-reservoirs-continue-rise-1789926488"></link>
            <id>https://jvpnews.com/article/water-levels-in-several-reservoirs-continue-rise-1789926488</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாகப் பிரதான ஆறுகள் சிலவற்றின் நீர்மட்டம் கணிசமான அளவு உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாகப் பிரதான ஆறுகள் சிலவற்றின் நீர்மட்டம் கணிசமான அளவு உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> 

இதற்கமைய, களனி கங்கையின் க்ளென்கோர்ஸ் (Glencourse) பகுதியிலும், நில்வளா ஆற்றின் பாணடுகம பகுதியிலும் தற்போது சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4223806-11bf-466b-b637-066303438cc1/26-6ab01c598c87a.webp' /></p><p>மேல்நில நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக, பின்வரும் பகுதிகளிலுள்ள ஆறுகளின் நீர்மட்டம் எச்சரிக்கை மட்டத்தில் காணப்படுகின்றது:</p><p>

களனி கங்கை: ஹங்வெல்ல, நோர்வுட் கெசல்கமு ஓயா மற்றும் குருகொட ஓயா </p><p>

களு கங்கை: மகுரு கங்கை, மில்லகந்த (குடா கங்கை) மற்றும் இரத்தினபுரி </p><p>

கிங் கங்கை: தவலம மற்றும் பத்தேகம </p><p>

மகாவலி கங்கை: பேராதனை 

கடந்த 12 மணித்தியாலங்களில் (இரவு 9:00 மணி வரையான காலப்பகுதியில்) நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்துள்ளதுடன், அதிகபட்ச மழைவீழ்ச்சியாகக் கித்துல்கல பகுதியில் 89.6 மி.மீ பதிவாகியுள்ளது.</p><p> 

இதுதவிர நாவலப்பிட்டி (81.9 மி.மீ), கிரிவுல்ல (78.4 மி.மீ) மற்றும் தெரணியகல (76.7 மி.மீ) ஆகிய பகுதிகளிலும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T17:49:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் தாக்குதலில் கொல்லப்பட்ட ரஷ்ய தேர்தல் அதிகாரி: பேருந்து மீது குறிவைத்து தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-election-officer-killed-in-ukraine-attack-1789925970"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-election-officer-killed-in-ukraine-attack-1789925970</id>
            <summary type="text">Russia Election Officer Killed in Ukraine Attack: உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்ய தேர்தல் அதிகாரி கொல்லப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russia Election Officer Killed in Ukraine Attack: உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்ய தேர்தல் அதிகாரி கொல்லப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> உக்ரைன் தாக்குதலில் கொல்லப்பட்ட ரஷ்ய தேர்தல் அதிகாரி</h2><p> கெர்சன் மாகாணத்தில் நடைபெற்ற ரஷ்ய தேர்தல் பணியின் போது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் தேர்தல் அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p> இந்த தகவலை ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் எல்லா பாம்ஃபிலோவா உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p>மேலும், கெர்சன் பகுதியில் பொதுமக்கள் பயணித்த பேருந்தை குறிவைத்து உக்ரைன் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் வரை கொல்லப்பட்டதாகவும், அதில் ஒருவர் Nizhneserogozsky மாவட்டத்தில் வாக்குப்பதிவு மையம் எண் 220 தேர்தல் ஆணைய உறுப்பினர் ஓல்கா பெட்ரோவ்னா டெம்யானென்கோ எனவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfb278de-52ba-4610-9809-b8a46fd8fe51/26-6ab01a53d60ce.webp' /></p><p></p><p>ரஷ்யாவின் தேர்தல் செயல்முறைகளை சீர் குலைக்கும் விதமாக தொலைதூர கிழக்கு பகுதிகளில் உக்ரைன் நாச வேலைகளில் ஈடுபட்டு வருவதாக ரஷ்யாவின் டிஜிட்டல் மேம்பாட்டு அமைச்சகம் முன்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p> உக்ரைனின் இந்த பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவானது தொடர்ந்து நடைபெற்றது.</p><p> மாஸ்கோவில் நடைபெற்ற வாக்குப்பதிவில் காலை 10 மணி நிலவரப்படி கிட்டத்தட்ட 3.2 மில்லியன் மக்கள் வாக்களித்துள்ளனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T17:39:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கம்பஹாவில் போலிச் சான்றிதழ் தயாரிப்பு நிலையம் முற்றுகை ; 27 வயது இளைஞர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fake-certificate-production-center-raided-gampaha-1789925537"></link>
            <id>https://jvpnews.com/article/fake-certificate-production-center-raided-gampaha-1789925537</id>
            <summary type="text">கம்பஹா, இம்புல்கொட, ராஜசிங்க மாவத்தையிலுள்ள வாடகை வீடொன்றில் பெருமளவில் போலிப் பட்டச் சான்றிதழ்கள், உத்தியோகபூர்வ ஆவணங்கள் மற்றும் நிறுவனங்களின் முத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா, இம்புல்கொட, ராஜசிங்க மாவத்தையிலுள்ள வாடகை வீடொன்றில் பெருமளவில் போலிப் பட்டச் சான்றிதழ்கள், உத்தியோகபூர்வ ஆவணங்கள் மற்றும் நிறுவனங்களின் முத்திரைகளை அச்சிட்டு வந்த நிலையமொன்றை முற்றுகையிட்ட பொலிஸார், நபரொருவரைக் கைது செய்துள்ளனர்.</p><p> </p><p></p><p>கம்பஹா பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலுக்கமைய, புலனாய்வாளர்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட நுட்பமான விசாரணையைத் தொடர்ந்து, யக்கல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அறிவிக்கப்பட்டு இந்த முற்றுகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><p> 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தங்காலையைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞராவார். 

மாதமொன்றிற்கு 35,000 ரூபாய் வாடகைக்குப் பெறப்பட்ட வீடொன்றிலேயே இவர் இந்த மோசடியை முன்னெடுத்து வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de9e21bd-f1e6-45c7-b96a-191da811735b/26-6ab018a343584.webp' /></p><p> 

இந்த முற்றுகையின் போது 2 மடிக்கணினிகள், 2 ஸ்மார்ட் கைபேசிகள், 1 வர்ண அச்சு இயந்திரம் , 35 போலிச் சான்றிதழ்கள், நிறுவனத் தலைவர்களின் 51 உத்தியோகபூர்வ முத்திரைகள் மற்றும் 3 எம்போஸ் (Emboss) முத்திரைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. </p><p>

பல்கலைக்கழகங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் தலைவர்களின் உத்தியோகபூர்வ முத்திரைகளும் கடிதத் தலைப்புகளும் (Letterheads) இந்த இடத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. </p><p>

அவற்றுள் உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை பரீட்சைத் திணைக்களம், தனியார் வங்கியொன்று மற்றும் பேராதனை, ஸ்ரீ ஜயவர்தனபுர, களனி, மொரட்டுவை, ருஹுண, ரஜரட்ட, வயம்ப, ஊவா வெல்லஸ்ஸ உள்ளிட்ட பல அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் உத்தியோகபூர்வ முத்திரைகளும் அடங்குகின்றன.</p><p> 

சுமார் ஒரு வருட காலமாக இந்தச் சட்டவிரோதத் தொழில் இடம்பெற்று வந்துள்ளதோடு, சாதாரண சான்றிதழ்களைச் சந்தேகநபர் 25,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரையிலான தொகைக்கு விற்பனை செய்துள்ளார்.</p><p> 

எனினும், ஜப்பான் போன்ற வெளிநாடுகளுக்குத் தேவையான போலிச் சான்றிதழ்களை 4 இலட்சம் ரூபாய் வரை பெற்றுக்கொண்டு தயாரித்துக் கொடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

இவ்வாறு தயாரிக்கப்பட்ட போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இதுவரை சுமார் 200 பேர் வரை வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகச் சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><p> 

யக்கல பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T17:32:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீரிமலையில் அத்துமீறி கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் - உடனடி நடவடிக்கை கோரி மக்கள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-keerimalai-1789922276"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-keerimalai-1789922276</id>
            <summary type="text">கீரிமலை பகுதியில் வலி.தெற்கு பிரதேச சபையினரால் கட்டுப்பாடின்றி கொட்டப்பட்ட
கழிவுகளை மீள அள்ள வேண்டும் என கொட்டும் மழையிலும் அப்பகுதி மக்களால் போராட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கீரிமலை பகுதியில் வலி.தெற்கு பிரதேச சபையினரால் கட்டுப்பாடின்றி கொட்டப்பட்ட
கழிவுகளை மீள அள்ள வேண்டும் என கொட்டும் மழையிலும் அப்பகுதி மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த போராட்டமானது, இன்று(20.09.2026) கீரிமலையில் குப்பை கொட்டப்பட்ட இடத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.</p><p> 

 வலி. வடக்கின் ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் வலி. தெற்கு பிரதேச
சபையின் இலத்திரனியல் கழிவுகள், பிளாஸ்ரிக் கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள்
உள்ளிட்ட சுமார் 300 டிப்பர் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.</p><p>

அவற்றினை மீள அள்ள வேண்டும் என கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அப்பகுதி மக்கள்
தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றனர்.
</p><h2>
மருத்துவ கழிவுகள்</h2><p>
இதேவேளை, தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கொட்டப்பட்ட
கழிவுகள் மாத இறுதிக்குள் மீள அள்ளப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டு, அது
தொடர்பில் ஒருங்கிணைப்பு குழு தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ச.
சிறிபவானந்தராசா, வலி. வடக்கு தவிசாளர் சோ. சுகிர்தனுக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8e0fd4a-83b5-43c6-ba2d-fb84b3a14173/26-6ab00c52009f5.webp' /></p><p>
</p><p>
அத்துடன், உள்ளூராட்சி ஆணையாளர் ச. சுதர்சனும் கழிவுகளை மீள அள்ள வேண்டும் என
பணித்துள்ளார்.</p><p>

இவ்வாறான நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தெல்லிப்பழை புற்றுநோய்
வைத்தியசாலையின் மருந்தேற்றும் ஊசிகள், இரத்தம் தேய்ந்த பஞ்சுகள் உள்ளிட்ட
ஆபத்தான மருத்துவ கழிவுகள் அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ளன.
</p><p>
இதுபோன்ற கழிவுகள் அப்பகுதி மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில், குப்கைகளை அகற்றும் நடவடிக்கைளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a21d4807-c140-42d9-9cb2-c7c369b2561a/26-6ab00c5302a9e.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d8ab59b-a6e1-4b2b-b7f5-8a45001edd6e/26-6ab00c53d65f0.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8eacd8e0-93fd-4bea-a2cc-4eb94178f534/26-6ab00c54b6c8d.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T17:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனின் விடுதலைக்காக கையெழுத்து சேகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/collecting-signatures-for-anojan-s-release-1789925149"></link>
            <id>https://jvpnews.com/article/collecting-signatures-for-anojan-s-release-1789925149</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை நாட்டிற்கு மீண்டும் அழைத்துவர இராஜதந்திர நடவடிக்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை நாட்டிற்கு மீண்டும் அழைத்துவர இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, நற்பிட்டிமுனை பகுதியில் இன்று (20) விசேட கையெழுத்து சேகரிப்பும் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டன.</p><p> </p><p></p><p>சமூக ஊடகப் பதிவொன்றைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அனோஜனுக்கு ஆரம்பத்தில் 5 வருட சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்த நிலையில், மேன்முறையீட்டின் அடிப்படையில் இத் தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30b23313-e26a-4dde-bd67-352442dc6047/26-6ab0171ea2970.webp' /></p><p>எனினும், இது தொடர்பான எழுத்துமூலமான உத்தியோகபூர்வ தீர்ப்பு இதுவரை இலங்கை வெளிவிவகார அமைச்சுக்குக் கிடைக்கப்பெறவில்லை. </p><p>

இப் பின்னணியில், அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கம் அவசர உயர்மட்ட இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனக் கோரி இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

“ஒரு உயிரைக் காப்போம் - மனிதாபிமானத்துடன் கரம் கொடுப்போம்” என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இக் கவனயீர்ப்புக்கு இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து நற்பிட்டிமுனை மக்கள் உட்படப் பெருந்திரளான பொதுமக்கள் ஆதரவு வழங்கினர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T17:25:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருக்கெடுத்து ஓடும் மகாவலி ஆறு வெள்ளத்தில் மூழ்கின நாவலபிட்டியவில் பல கிரமங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/several-areas-in-nawalapitiya-inundated-1789923931"></link>
            <id>https://ibctamil.com/article/several-areas-in-nawalapitiya-inundated-1789923931</id>
            <summary type="text">இன்று அதிகாலை (20) முதல் நாவலபிட்டியாவின் பஸ்பாகே கொரள பிரதேச செயலகப் பகுதியில் மகாவலி ஆறு பெருக்கெடுத்து ஓடியதால், தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள பல வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று அதிகாலை (20) முதல் நாவலபிட்டியாவின் பஸ்பாகே கொரள பிரதேச செயலகப் பகுதியில் மகாவலி ஆறு பெருக்கெடுத்து ஓடியதால், தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. </p><p>இதன் காரணமாக சுமார் 100 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக பஸ்பாகே கொரள பிரதேச செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><h2>பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன</h2><p>நாவலபிட்டியாவில் உள்ள கித்துல்கொட்டை, லபுவெல்கொட்டுவ, ஜெயசுந்தராவ்திய உள்ளிட்ட பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6edc5df-720c-4d8e-81c5-b900199ce4cb/26-6ab016f157837.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T17:25:16+00:00</updated>
        </entry>
    </feed>
