<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-17T06:37:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[அய்யனார் துணை சந்த்ராவின் ரீசெண்ட் கிளாமர் போட்டோஷூட்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/ayyanarthunai-serial-chandra-role-swathi-nair-pics-1784269822"></link>
            <id>https://viduppu.com/article/ayyanarthunai-serial-chandra-role-swathi-nair-pics-1784269822</id>
            <summary type="text">அய்யனார் துணை ரசிகர்கள் பேவரட் சீரியல். இந்த சீரியலை பல இளைஞர்களும் விரும்பி பார்ப்பார்கள். இதற்கு முக்கிய காரணம் அதில் நடிக்கும் ஹீரோயின்களுக்கும் செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அய்யனார் துணை ரசிகர்கள் பேவரட் சீரியல். இந்த சீரியலை பல இளைஞர்களும் விரும்பி பார்ப்பார்கள். இதற்கு முக்கிய காரணம் அதில் நடிக்கும் ஹீரோயின்களுக்கும் செம ரசிகர்கள் உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8464a3d6-c128-4c4c-817d-14f94786df0d/26-6a59cc0795378.webp' /></p><h2>ஸ்வாதி</h2><p>
</p><p>
இந்நிலையில் இந்த சீரியலில் ஸ்வாதி, சந்த்ரா ரோலில் நடித்து வருகிறார். இவர் சீரியலில் மிகவும் குடும்ப பெண்ணாக வருவார்.

ஆனால், நிஜத்தில் அவர் இன்ஸ்டாவில் செம க்ளாமர் புகைப்படங்களை வெளியிட அதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.</p><p> தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-17T06:31:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நகை எல்லாம் அணிந்து சூப்பர் லுக்கில் நடிகை அமைரா தஸ்தூர் போட்டோ ஷுட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-amyra-dastur-latest-photoshoot-1784269776"></link>
            <id>https://cineulagam.com/article/actress-amyra-dastur-latest-photoshoot-1784269776</id>
            <summary type="text">அமைரா தஸ்தூர்தனுஷுடன் அனேகன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நாயகியாக அறிமகமானவர் தான் நடிகை அமைரா தஸ்தூர். முதல் படத்திற்கு பிறகு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அமைரா தஸ்தூர்</h2><p>தனுஷுடன் அனேகன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நாயகியாக அறிமகமானவர் தான் நடிகை அமைரா தஸ்தூர். </p><p>முதல் படத்திற்கு பிறகு சரியாக தமிழ் படங்கள் கிடைக்காமல் போக தெலுங்கில் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வந்தார்.
தெலுங்கு படங்களை தொடர்ந்து ஹிந்தி மற்றும் பஞ்சாபி மொழி படங்களிலும் நடிக்க தொடங்கினார்.</p><p>லேட்டஸ்ட்டாக நடிகை அமைரா நகை எல்லாம் அணிந்து கிராண்டான உடையில் எடுத்த போட்டோ ஷுட்டிற்கு ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவிந்து வருகிறது.</p><p>இதோ பாருங்கள்,</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T06:30:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[Jaffna கிங்ஸ் அணி உரிமையாளர் ஒருவர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/team-owner-lpl-franchise-jaffna-kings-arrested-1784269031"></link>
            <id>https://ibctamil.com/article/team-owner-lpl-franchise-jaffna-kings-arrested-1784269031</id>
            <summary type="text">லங்கா பிரீமியர் லீக் (LPL) அணியான ஜப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளதுஇன்று நடைபெறவுள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>லங்கா பிரீமியர் லீக் (LPL) அணியான ஜப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது</p><p>இன்று நடைபெறவுள்ள 2026 லங்கா பிரீமியர் லீக்கின் அதிகாரப்பூர்வ தொடக்க விழாவிற்கு முன்னதாக இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p>ஜப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், விளையாட்டுத் துறை தொடர்பான ஊழல் குற்றச்சாட்டு குறித்த தொடர் விசாரணையின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7455140c-eef4-421e-92d5-989fc5affcf1/26-6a59cd22343b9.webp' /></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-17T06:30:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானில் குழந்தைகளின் எண்ணிக்கையை விட செல்லப்பிராணிகளின் எண்ணிக்கை அதிகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/japan-pets-exceeds-the-number-of-children-1784269853"></link>
            <id>https://canadamirror.com/article/japan-pets-exceeds-the-number-of-children-1784269853</id>
            <summary type="text">&amp;nbsp; ஜப்பானில் 1 - 15 வயது வரை உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையை விட செல்லப்பிராணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

 குழந்தைங்களின் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜப்பானில் 1 - 15 வயது வரை உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையை விட செல்லப்பிராணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
</p><p>
 குழந்தைங்களின் எண்ணிக்கை 13.29 மில்லியனாக இருக்கும் நிலையில் செல்லப்பிராணிகளின் எண்ணிக்கை 15.67 மில்லியனை தாண்டியிருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2761fa19-ece2-42d3-8b91-9e08f654488b/26-6a59cc1eb8665.webp' /></p><h2>&nbsp;திருமணம் செய்யும் ஆர்வம் இல்லை</h2><p>
</p><p>
ஜப்பான் மக்கள் ஒழுக்கம், சுத்தம், கடின உழைப்பு மற்றும் நீண்ட ஆயுளுக்கு பெயர் போனவர்கள். ஜப்பான் மக்கள் பாரம்பரியம் மற்றும் நவீன தொழில்நுட்பம் இரண்டையும் தங்கள் கலாச்சாரத்தில் கலந்து வாழ்ந்து வருபவர்கள்.</p><p> 

அதேநேரம், கடந்த பல வருடங்களாகவே ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. ஒருபகக்ம், முதியோர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வருகிறது.

 திருமணம் செய்து கொள்ளுங்கள்.</p><p> நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் என ஜப்பான் அரசு தொடர்ந்து கூறியும் இளைஞர்கள் தயங்குகிறார்கள்.</p><p>

குறைந்த ஊதியம், அதிகமான வாடகை, குழந்தைகளுக்கான பராமரிப்பு செலவு போன்ற காரணங்களால் ஜப்பான் நாட்டு இளைஞர்களிடம் திருமணம் செய்யும் ஆர்வம் குறைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. </p><p>

எனவே, ஜப்பானியர்கள் மன ஆறுதலை போக்குவதற்காகவும், துணைக்காகவும் பலரும் நாய் மற்றும் பூனை போன்ற செல்லப்பிராணிகளை வளர்த்து வருகிறார்கள்.</p>]]></content>
            <updated>2026-07-17T06:29:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இடமாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sdig-waruna-jayasundara-transferred-1784268998"></link>
            <id>https://tamilwin.com/article/sdig-waruna-jayasundara-transferred-1784268998</id>
            <summary type="text">கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர உடன் நடைமுறைக்கு வரும் வகையில் சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பணியகத்திற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர உடன் நடைமுறைக்கு வரும் வகையில் சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பணியகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். </p><p>

இதற்கமைய, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர இனிவரும் காலங்களில் சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பணியகத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றவுள்ளார்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/729dc046-38d9-4b90-bc7a-e8425110fcd2/26-6a59cb21d4fae.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T06:27:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய ரயில்களில் AB பெட்டி என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-railway-ab-coach-meaning-in-tamil-1784269559"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-railway-ab-coach-meaning-in-tamil-1784269559</id>
            <summary type="text">பயணிகளின் பயண தேவையை தீர்த்து வைப்பதில் இந்திய ரயில்வே துறை பெரிய பங்கு வகிக்கிறது.

பாதுகாப்பான பயணம், குறைந்த கட்டணம் என்பதால் சாமானிய மக்கள் கூட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயணிகளின் பயண தேவையை தீர்த்து வைப்பதில் இந்திய ரயில்வே துறை பெரிய பங்கு வகிக்கிறது.
</p><p>
பாதுகாப்பான பயணம், குறைந்த கட்டணம் என்பதால் சாமானிய மக்கள் கூட ரயில் பயணத்தை தான் விரும்புகிறார்கள்.
</p><p>
இந்திய ரயில்வே தினமும் சுமார் 2.5 கோடி மக்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்கிறது.</p><p> 

அதன்படி, இந்திய ரயில்வே, நாட்டின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் முக்கியமான போக்குவரத்து சேவையாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/895f1561-aa7f-4c31-8128-0ec63eaaf2c6/26-6a59cafa848a5.webp' /></p><p> 

பயணிகளின் வசதிக்காக ஸ்லீப்பர், ஜெனரல், 3AC, 2AC, 1AC, செகண்ட் சிட்டிங் என பல்வேறு வகையான பெட்டிகள் இயக்கப்படுகின்றன. </p><p>

அந்தவகையில், ரயில் பெட்டிகளில் AB பெட்டி என்பதன் அர்த்தம் குறித்து பார்க்கலாம்.</p><p>

பொதுவாக ஸ்லீப்பர் பெட்டிகள் S என்றும், 3AC பெட்டிகள் B என்றும், 2AC பெட்டிகள் A என்றும் குறிப்பிடப்படுகின்றன.</p><p> 

<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6cd05a7-10e7-4f29-95ca-35d770e3157f/26-6a59caf926536.webp' />
</p><p>
AB என்பது ஒரே பெட்டியில் 2AC மற்றும் 3AC ஆகிய இரு வகுப்புகளுக்கான இருக்கைகள் இருக்கும்.</p><p>AB பெட்டியில் சில இருக்கைகள் 2AC வகுப்பிலும், சில இருக்கைகள் 3AC வகுப்பிலும் அமைந்திருக்கும்.</p><p></p><p>

இந்தப் பெட்டிகளில் ஒரே இருக்கை எண் 2AC மற்றும் 3AC ஆகிய இரு பிரிவுகளிலும் இருக்கலாம். 

உதாரணமாக, இருக்கை எண் 3, 2AC பகுதியிலும் 3AC பகுதியிலும் இருக்க வாய்ப்புள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04d3a5fd-8ae9-4876-a11d-8993634031d3/26-6a59caf9d1cb0.webp' /></p><p>3AC டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு நடுப் படுக்கை இருக்கும், 2ACயில் நடுப் படுக்கை இருக்காது. அங்கு கீழ் மற்றும் மேல் படுக்கைகள் மட்டுமே இருக்கும்.</p><p>3AC பெட்டிகளில் ஒவ்வொரு படுக்கைக்கு முன்னால் திரைகள் இருக்காது. ஆனால் 2AC பெட்டிகளில் ஒவ்வொரு படுக்கைக்கு தனித்தனி திரைகள் பொருத்தப்பட்டிருக்கும்.
</p><p>
மேலும், சந்தேகம் இருப்பின் உங்கள் இருக்கை குறித்த துல்லியமான தகவல்களைப் பெற TTEயை தொடர்பு கொள்ளலாம்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T06:27:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய்–த்ரிஷா பெயரை சொல்லாமல் கலாய்த்த மலையாள நடிகர் - படு வைரலாகும் வீடியோ!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/dhyan-sreenivasans-vijay-trisha-joke-goes-viral-1784268237"></link>
            <id>https://manithan.com/article/dhyan-sreenivasans-vijay-trisha-joke-goes-viral-1784268237</id>
            <summary type="text">நான் முதல்வராக பதவியேற்கும் போது நவ்யா நாயர் முன்வரிசையில் இருக்கணும் என விஜய்–த்ரிஷா பெயரை சொல்லாமல், மலையாள நடிகர் தியான் ஸ்ரீநிவாசன், தனது வரவிருக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நான் முதல்வராக பதவியேற்கும் போது நவ்யா நாயர் முன்வரிசையில் இருக்கணும் என விஜய்–த்ரிஷா பெயரை சொல்லாமல், மலையாள நடிகர் தியான் ஸ்ரீநிவாசன், தனது வரவிருக்கும் 'விசிட்டர்' (Visitor) திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நகைச்சுவையாக பேசிய விடயம் தற்போது&nbsp; சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p><p>இந்நிநிகழ்ச்சியில், தமிழக முதல்வர் விஜய்யின் அரசியல் பயணத்தை நகைச்சுவையாக குறிப்பிட்ட தியான், தமிழக&nbsp; முதல்வர் விஜய் மற்றும் த்ரிஷாவின் பெயரை நேரடியாக குறிப்பிடாதல் கலாய்க்கும் வகையில் நகைச்சுவையாக பேசினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8cca93e-76a0-4f7a-a10f-e4b06aae91f2/26-6a59c9b96a63b.webp' /></p><p></p><h2>வைரலாகும் காணொளி</h2><p>மேலும்,&nbsp; தனது நண்பரும்&nbsp; சக நடிகருமான அஜு வர்கீஸ், முதலில்&nbsp; நடிகர் சங்கத் தலைவராக வேண்டும் என்று தனக்கு அறிவுரை கூறியதாகவும், பின்னர் அந்தச் சங்கத்தில் நிலவும் சர்ச்சைகளால் அந்தப் பொறுப்பையும், முதலமைச்சர் பதவியையும் தவிர்த்து ஆளுநர் பதவியே தனக்குப் பொருத்தம் என அஜு நகைச்சுவையாகக் கூறியதாகவும் தெரிவித்தார்.</p><p>
பேச்சின் இறுதியில், "நான் கேரள முதலமைச்சராகப் பதவியேற்கும்போது, 'விசிட்டர்' பட நடிகை நவ்யா நாயர் புடவை அணிந்து, கண்களில் கண்ணீருடன் முன் வரிசையில் அமர்ந்திருக்க வேண்டும் என்பதே என் ஆசை" என்று தியான் நகைச்சுவையாகக் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c571ba4a-9845-462e-b346-b53de29da924/26-6a59c9ba1d86a.webp' /></p><p>அதனை தொடர்ந்து&nbsp; மேடைக்கு வந்த நடிகை நவ்யா நாயர், "நீ முதல்வராகும் நாளில், பச்சை நிறக் கரையுடன் கூடிய வெள்ளைப் புடவை மற்றும் வைர நெக்லஸ் அணிந்து, முன் வரிசையில் அமர்ந்து கண்ணீருடன் உன்னை வாழ்த்துவேன். எனக்காக ஒரு இருக்கையை மட்டும் ஒதுக்கிவை" என்று பதிலளித்தார். </p><p>அவரது பதிலும் அரங்கில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.

தொடர்ந்து பேசிய அஜு வர்கீஸ், "இனி என்னால் தமிழ்நாட்டிற்கு வர முடியாது போலிருக்கிறது. விஜய் சார், என் நண்பன் கொஞ்சம் பைத்தியமாகிவிட்டான். தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள்" என்று நகைச்சுவையாகக் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d3fd382-6d1e-48ae-9679-d0cd7492102f/26-6a59ca1f44517.webp' /></p><p></p><p>குறித்த காணொளி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன், புதிய சர்ச்சையை கிளப்பி வருகின்றது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="und" dir="ltr">ഞാൻ CM ആയി സത്യപ്രതിജ്ഞ ചെയ്യുന്ന ദിവസം. .സാരീ ഉടുത്തു ആ ഫ്രണ്ട് റോയിൽ നവ്യ ഉണ്ടാവുമെന്ന് ഞാൻ കരുതുന്നു. .!!<br><br>- Dhyan Sreenivasan<br><br>That Vijay–Trisha joke from Dhyan Sreenivasan was unexpected..🚶😂 <a href="https://t.co/ICrqa590Gf">pic.twitter.com/ICrqa590Gf</a></p>&mdash; Anantha_vishnu (@Ananthuavj) <a href="https://x.com/Ananthuavj/status/2077305658668675324?ref_src=twsrc%5Etfw">July 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T06:25:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருளுக்கான கியூஆர் முறை தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fuel-qr-system-not-removed-1784268139"></link>
            <id>https://ibctamil.com/article/fuel-qr-system-not-removed-1784268139</id>
            <summary type="text">




எரிபொருள் விநியோகத்திற்கான கியூஆர் (QR) முறையை உடனடியாக நீக்கும் திட்டம் எதுவும் இல்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>




எரிபொருள் விநியோகத்திற்கான கியூஆர் (QR) முறையை உடனடியாக நீக்கும் திட்டம் எதுவும் இல்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.</p><p>

</p><p>குறித்த விடயத்தை&nbsp;கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமரகே அறிவித்துள்ளார்.</p><p>அதன்போது, உலகளாவிய எரிபொருள் சந்தையில் நிலவும் ஸ்திரத்தன்மையின்மையின் காரணமாக இந்த திட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>மீண்டும் விலை&nbsp;உயர்வு </h2><p>மேலும், கியூஆர் முறையின் பயன்பாடு எரிபொருள் மற்றும் டொலர் கையிருப்பு இரண்டையும் கட்டுப்படுத்தும் என்று சுட்டிக்காட்டிய நெத்திகுமரகே, போர்ச் சூழல் மீண்டும் மோசமடைந்தால் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறையைத் தடுக்கவும், மக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கவும் கியூஆர் முறையைத் தொடர்ந்து பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9eeb8a8-70a8-4bd1-a91d-aa091b670d80/26-6a59ca866b805.webp' /></p><p>
இந்த நிலையில், போர்ச் சூழல் மீண்டும் உருவானதால் நாட்டின் எரிபொருள் விநியோக வலையமைப்பு பாதிக்கப்படவில்லை என்றும், எரிபொருள் விலையில் மீண்டும் உயர்வு ஏற்படுமா என்பதை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-17T06:24:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் ஒருத்தர் கூட மிஞ்ச மாட்டார்; மிரட்டும் டிரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/not-a-single-person-will-be-left-in-iran-trump-1784269360"></link>
            <id>https://canadamirror.com/article/not-a-single-person-will-be-left-in-iran-trump-1784269360</id>
            <summary type="text">ஈரானில் ஒருத்தர் கூட மிஞ்ச மாட்டார்; மிரட்டும் டிரம்ப் 

ஈரானில் ஒருத்தர் கூட மிஞ்ச மாட்டார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளமை பரபரப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானில் ஒருத்தர் கூட மிஞ்ச மாட்டார்; மிரட்டும் டிரம்ப் 

ஈரானில் ஒருத்தர் கூட மிஞ்ச மாட்டார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நான்கு மாதங்களுக்கு மேல் போர் நீடித்து வருகிறது. இடையில் இரண்டு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a032f0f-a159-4424-92f9-267cdf3aedbc/26-6a59ca3267869.webp' /></p><h2>&nbsp;நாட்டில் ஒருவரும் இருக்க மாட்டார்கள்&nbsp;</h2><p> </p><p>

ஆனாலும் ஹார்மூஸ் நீரினை வழியாக வரும் சில கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால், ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதலை துவங்கியிருக்கிறது..

எனவே மீண்டும் அங்கே போர் பதட்டம் ஏற்பட்டிருக்கிறது. </p><p>அமெரிக்க தாக்கியதில் ஈரானின் 30 பேர் இறந்துவிட்டனர். மேலும் 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
</p><p>
இந்நிலையில் செய்தியாளிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனாட்ல் டிரம்ப் ‘ஈரான் மீண்டும் எங்களுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வர வேண்டும்.</p><p> அப்படி இல்லை என்றால் அடுத்த வாரம் ஈரானில் உள்ள அணு உலைகள் மற்றும் பாலங்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்துவோம்.. அந்த நாட்டில் ஒருவரும் இருக்க மாட்டார்கள் என்று எச்சரித்தார். 

மேலும் ‘நாளை இரவு ஈரானை கடுமையாக தாக்கப் போகிறோம்’ எனவும் அவர் கூறியிருக்கிறார்</p>]]></content>
            <updated>2026-07-17T06:21:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: இரகசிய குழுவில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன! திடுக்கிடும் பல தகவல்கள் கசிவு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-igp-c-d-wickramaratne-easter-attack-1784268227"></link>
            <id>https://tamilwin.com/article/former-igp-c-d-wickramaratne-easter-attack-1784268227</id>
            <summary type="text">&amp;nbsp;உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடந்த பின்னர் அதன் சாட்சியங்கள் மற்றும் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டவர்களை காப்பாற்றுவதற்காக சுரேஷ் சலே தலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடந்த பின்னர் அதன் சாட்சியங்கள் மற்றும் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டவர்களை காப்பாற்றுவதற்காக சுரேஷ் சலே தலைமையில் செயற்பட்ட பிரதான குழுவில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவும் இருந்துள்ளதாக லண்டனில் இருந்து இயங்கும் இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பு புலனாய்வு தகவல்களை மேற்கோள்காட்டி அதிர்ச்சி தகவல்களை வெயிட்டுள்ளது. அதன் முழு விபரங்கள்...</p><p>
அன்றைய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் அமைச்சுக் கட்டடத்தின் மேல் மாடியில் ஒவ்வொரு திங்கட்கிழமையும், காலை ஒன்பது மணிக்கு குறித்த குழு கூடியுள்ளது. </p><p>அந்தக் குழுவில் சரத் வீரசேகர, ஜெனரல் ஜகத் அல்விஸ், டபிள்யூ. திலகரத்ன, சி.டி. விக்ரமரத்ன அன்று பொலிஸ் மா அதிபர் (IGP) ஆகியோரே முக்கிய பங்கு வகித்துள்ளனர். இலங்கையின் பொலிஸ் மா அதிபர் அன்று குற்றவாளிகளைப் பிடிக்கும் இடத்தில் இருக்கவில்லை. </p><h2>


</h2><p></p><h2>சாட்சியங்களை அழித்த விதம்</h2><p>சீருடையை அணிந்து கொண்டு சரத் வீரசேகர போன்றவர்களுடன் இணைந்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பெருமளவிலான சாட்சியங்களை அழித்துள்ளார்.</p><p>அதில் முக்கியமானது உயிருள்ள சாட்சியாக இருந்த 'சாரா ஜஸ்மின்' இறந்துவிட்டார் என்று காட்டுவதற்காக, மூன்றாவது டி.என்.ஏ (DNA) பரிசோதனையைச் செய்வதற்கு முன்பு முதலாவது, இரண்டாவது என்று சிலவற்றை செய்துள்ளார்கள். </p><p>
இந்தக் கும்பல் நடத்தும் கூட்டத்திற்கு வேறு யாருமே செல்ல முடியாது. அன்றைய தினம் அந்தக் கட்டடத்திற்கு சுரேஷ் சலே வந்தவுடன், அனைத்துக் கதவுகளும் முழுமையாக மூடப்படும். இராணுவம் நிறுத்தப்படும். </p><p>இந்தக் கலந்துரையாடல் முடியும் வரை கமாண்டோக்கள் (Commandos) கொண்டு வந்து நிறுத்தப்படுவார்கள். அந்தக் கலந்துரையாடலில்தான் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. </p><p>சாரா ஜஸ்மின் இறந்துவிட்டார் என்பதை காட்ட வேண்டும் என்பதுதான் சுரேஷ் சலேயின் தீர்மானமாக இருந்தது. 
எந்த வழியில் இவர்கள் சூழ்ச்சி செய்தாலும், </p><p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இதுவரையில் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்துச் சாட்சியங்களும், வாக்குமூலங்களும் இன்னும் மிக வலுவான, உறுதியான சான்றுகளாக இருக்கின்றன. இதனால் தான் சலேயின் மனைவி இப்போது காணாமல் போயுள்ளார்.</p><h2>
 ஜகத் அல்விசின் வெள்ளை வான் கடத்தல்</h2><p>மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். வெள்ளை வான் கடத்தல்களைச் செய்தவர் தான் இவர். ஜகத் அல்விஸ்தான் நேரடி உத்தரவுகளைப் பிறப்பித்தார். </p><p>ஜகத் அல்விஸ்தான் கோட்டாபயவின் தேவைக்கேற்ப போத்தல ஜயந்த போன்றவர்களின் கை-கால்களை உடைக்க உத்தரவிட்டார். கோட்டாபயவின் மிக நெருங்கிய நண்பன், அத்தனை விசுவாசி.
</p><p>உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் எந்தெந்தச் சாட்சியங்களை அழிப்பது? எந்தச் சாட்சியங்களை நாம் புதிதாகக் கொண்டு வருவது என்று ஒவ்வொறு திங்கட்கிழமையும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8e331bf-ad28-4213-b6c8-3c315a717561/26-6a59c5c54a462.webp' /></p><p>இப்படித்தான் நௌபர் மௌலவி போன்றவர்களை முழுமையாக கோர்த்து விட்டு, 33 ஆயிரம் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்கள். அதற்குப் பொருத்தமாக சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்தும் அவர்களுக்கு தேவையான ஆட்களை கண்டு பிடித்தார்கள். </p><p> சுரேஷ் சலே போன்றவர்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் சென்று விரிவுரைகள்நடத்தினார்கள். விரிவுரைகள் நடத்திய ஆட்களை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு வரவழைத்து, அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். </p><p>இதை ஒரு மிக கட்சிதமான நாடகமாக உருவாக்கினார்கள். 
 குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சுரேஷ் சலே, சி.டி. விக்ரமரத்ன, ஜகத் அல்விஸ், டபிள்யூ. திலகரத்ன ஆகியோர் பொதுப் பாதுகாப்பு அமைச்சில் திங்கட்கிழமை காலையில் நடத்திய அந்த இரகசியக் கலந்துரையாடல்கள் என்ன என்பது பற்றி விசாரிக்க வேண்டும்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T06:14:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தன்னைதானே சுட்டு உயிரை மாய்த பொலிஸ் அதிகாரி ; விசாரணைகளுக்காக இரு பொலிஸ் குழுக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-officer-dies-after-self-inflicted-gunshot-1784268755"></link>
            <id>https://jvpnews.com/article/police-officer-dies-after-self-inflicted-gunshot-1784268755</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இன்று (17) வெள்ளிக்கிழமை அதிகாலை சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, அது குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; "><a href="https://jvpnews.com/article/former-igp-c-d-wickramaratne-passes-away-1784256487" target="_blank">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன</a> இன்று (17) வெள்ளிக்கிழமை அதிகாலை சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, அது குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify;">

மாலபே, தலகேன பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் துப்பாக்கியால் தன்னைதானே சுட்டு உயிரை மாய்துக்கொண்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3a0c067-a778-46bb-9613-544af04c3f6d/26-6a59c7d4da982.webp' /></p><h2 style="text-align: justify; ">மரண பரிசோதனை&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify;">
சம்பவத்தை அடுத்து அவர் உடனடியாக முல்லேரியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify;">
முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மரணம் தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வூட்லர், இது தொடர்பான மரண பரிசோதனை மற்றும் நீதவான் விசாரணைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சம்பவம் குறித்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">

அத்துடன், நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் குழுக்கள் இந்த மரணம் குறித்த பின்னணி மற்றும் சூழ்நிலைகள் தொடர்பாக முழுமையான விசாரணைகளை முன்னெடுக்கும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-17T06:14:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலகக் குழுவினருடன் தொடர்பு : விஜயதாச ராஜபக்சவின் மகன் உள்ளிட்ட மூவர் நீதிமன்றுக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rakitha-rajapakshe-and-other-produce-before-court-1784265455"></link>
            <id>https://ibctamil.com/article/rakitha-rajapakshe-and-other-produce-before-court-1784265455</id>
            <summary type="text">இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் உள்ளிட்ட மூவரும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் உள்ளிட்ட மூவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.</p><p>விஜயதாச ராஜபக்சவின் புதல்வரான சட்டத்தரணி ரகித ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் ஹொரணை தொகுதி அமைப்பாளராகச் செயற்பட்ட சரித் அபேசிங்க மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான அருண வருணஹெந்திகே ஆகிய மூவருமே சற்று நேரத்திற்கு முன்னர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான 'ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்ரமரத்னவின் மனைவியிடமிருந்து குறித்த சந்தேகநபர்கள் 1,200 இலட்சம் ரூபாவை இலஞ்சம் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டாவை பாதுகாப்பதாகவும், அவரை சாதாரண விளக்கமறியலில் வைப்பதாகவும் குறிப்பிட்டு இவர்கள் ஹரக் கட்டாவின் மனைவியிடம் இலஞ்சம் பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ffd162d-580f-4da6-bc1d-f66fc38bacdc/26-6a59c6d041184.webp' /></p><p>இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக வெளியான குரல் பதிவுகள் கசிந்தமையை அடுத்து சந்தேகநபர்கள் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கடந்த மாதம் 25ஆம் திகதி கைது செய்யப்பட்டு ஜூலை மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.</p><p>இதனைத் தொடர்ந்து சந்தேகநபர்களை ஜூலை மாதம் 3ஆம் திகதி கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இன்று (17) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.</p><p>இந்த நிலையில் குறித்த சந்தேகநபர்கள் மூவரும் இன்று இரண்டாவது முறையாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T06:13:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அதிரடியாக கைதான முக்கிய நபர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lpl-jaffna-kings-team-owner-arrested-1784268607"></link>
            <id>https://jvpnews.com/article/lpl-jaffna-kings-team-owner-arrested-1784268607</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கை பிரீமியர் லீக் (LPL) தொடரில் பங்கேற்கும் யாழ்ப்பாண கிங்ஸ் அணியின் உரிமையாளர் போட்டி நிர்ணயம் தொடர்பான குற்றச்சாட்டில் விசேட புலனாய்வுப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கை பிரீமியர் லீக் (LPL) தொடரில் பங்கேற்கும் யாழ்ப்பாண கிங்ஸ் அணியின் உரிமையாளர் போட்டி நிர்ணயம் தொடர்பான குற்றச்சாட்டில் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.</p><p>



2026 இலங்கை பிரீமியர் லீக் தொடரின் உத்தியோகபூர்வ தொடக்க விழா நடைபெறவிருந்த நிலையில், இன்று இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50ea170b-7a4a-40fd-bd8e-82fe07a3c737/26-6a59c7406d22d.webp' /></p><p>.



விளையாட்டு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-17T06:08:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணித் தகராறால் இளம் குடும்பஸ்தர் கொலை! மனைவியின் சகோதரனால் பறிபோன உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-family-man-murdered-wife-s-brother-kills-him-1784267766"></link>
            <id>https://tamilwin.com/article/young-family-man-murdered-wife-s-brother-kills-him-1784267766</id>
            <summary type="text">அனுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் ஏற்பட்ட காணித் தகராறு காரணமாக, இளம்
குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் ஏற்பட்ட காணித் தகராறு காரணமாக, இளம்
குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் நேற்று(16.07.2026) இடம்பெற்றுள்ளது.
</p><p>
இராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய, ஒரு பிள்ளையின் தந்தையே இந்தச்
சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய</h2><p>

உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட காணித் தகராறே இந்த மோதலுக்கும், அதனைத் தொடர்ந்து
இடம்பெற்ற படுகொலைக்கும் காரணம் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில்
தெரியவந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7915b19d-fe52-4055-81c7-5df34f825751/26-6a59c6c0e3de0.webp' /></p><p>
இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான 35 வயதுடைய நபர் ஒருவர்
கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>இவர் உயிரிழந்தவரின் மனைவியின் மூத்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>
மூன்று பிள்ளைகளின் தந்தையான மேற்படி சந்தேகநபர், மோதலின் போது கூரிய
ஆயுதத்தால் தாக்கியதில் அவரின் மைத்துனர் உயிரிழந்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T06:08:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்ரான் எம்.பி முன்வைத்த கோரிக்கைகள் - விரைவில் நடைமுறைப்படுத்துவதாக அதிகாரிகள் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/demands-made-by-imran-mp-1784267937"></link>
            <id>https://tamilwin.com/article/demands-made-by-imran-mp-1784267937</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்டத்தின் எல்லைக்குட்பட்ட கடலரிப்பு விவகாரம், இராணுவத்தின்
வசமுள்ள தனியார் காணிகளை விடுவித்தல் மற்றும் விவசாயிகளின் வரிப் பிரச்சினை
உள...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்டத்தின் எல்லைக்குட்பட்ட கடலரிப்பு விவகாரம், இராணுவத்தின்
வசமுள்ள தனியார் காணிகளை விடுவித்தல் மற்றும் விவசாயிகளின் வரிப் பிரச்சினை
உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் அவசர நடவடிக்கைகளை
மேற்கொள்ளுமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஃருப்
கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

நேற்று(16.07.2026) வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா
தலைமையில் இடம்பெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்திலேயே
நாடாளுமன்ற உறுப்பினரால் இப்பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><h2>
முன்வைக்கப்பட்ட பிரேரணைகள்</h2><p>
இதன்போது, சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைகளின் விபரங்கள் வருமாறு, </p><p>


1. கிண்ணியா - உப்பாறு கரையோர கடலரிப்பை தடுக்க அவசர நடவடிக்கை
"கிண்ணியா பாலத்திலிருந்து உப்பாறு வரையான கரையோரப் பகுதி மிக வேகமாக
கடலரிப்பிற்கு உள்ளாகி வருகின்றது.</p><p> 

தற்போது இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள
வீதியானது 3-வது வீதியாகும். இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட இரண்டு வீதிகள்
ஏற்கனவே கடலரிப்பினால் முற்றாகச் சேதமடைந்து கடலுக்குள் மூழ்கிவிட்டன.</p><p> </p><p>

எனவே,
தற்போதைய வீதியும் சேதமடைவதற்கு முன்னர், கிண்ணியா பாலத்திலிருந்து உப்பாறு
பாலம் வரையான பகுதியில் கடலரிப்பைத் தடுப்பதற்கான நிரந்தரத் தடுப்புச் சுவரினை
அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d086fdf6-2233-4bbd-b8a9-837f956aef35/26-6a59c586b62be.webp' /></p><p>
2. சூரங்கல் இராணுவ முகாம் அமைந்துள்ள தனியார் காணிகளை விடுவிக்கக் கோரிக்கை
"கிண்ணியா சூரங்கல் பிரதான வீதியில் இரண்டு தனிநபர்களுக்கும்,
பள்ளிவாயலொன்றுக்கும் சொந்தமான 4 ஏக்கர் காணியில் இராணுவ முகாம்
அமைக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த காணிகளுக்கு முன்னர் வாடகை செலுத்தப்பட்ட போதிலும், கடந்த 2014 ஆம் ஆண்டு
குறித்த காணியை இராணுவத் தேவைக்காகச் சுவீகரிப்பதாக வர்த்தமானி அறிவித்தல்
வெளியிடப்பட்டதன் பின்னர் வாடகை செலுத்துவதும் நிறுத்தப்பட்டுள்ளது.</p><p> 

எனவே,
அந்த வர்த்தமானியினை இரத்துச் செய்து, காணியை அதன் உண்மையான உரிமையாளர்களிடம்
ஒப்படைக்க வேண்டும் அல்லது அதற்குப் பதிலாகப் பொருத்தமான மாற்றுக்காணிகளை
வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்."</p><p>

3. முத்துநகர் கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு மறுவாழ்வு
"நீண்டகாலமாக முத்துநகர் கிராமத்தில் குடியிருந்து, பின்னர் அங்கிருந்து
வெளியேற்றப்பட்ட பல குடும்பங்கள் தற்பொழுது தங்குமிட வசதியின்றிப்
பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p> 

அங்கிருந்து வெளியேற்றப்பட்ட அந்தக் குடும்பங்கள்
மீண்டும் சுமுகமாக வாழ்வதற்கு ஏதுவாக, அவர்களுக்குக் குடியிருப்பதற்காக மாற்று
இடங்களில் காணிகளை வழங்குவதற்கு மாவட்டச் செயலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a3bed78-d03d-4ffc-8040-e9b579b6c7c5/26-6a59c5876cdee.webp' /></p><p>4. ஜெயந்திபுர விவசாயிகளுக்கு வரி செலுத்த கால அவகாசம் வழங்குக!
"கந்தளாய் பிரதேச செயலக பிரிவின் ஜெயந்திபுர கிராம சேவகர் பிரிவில், காணி
சீர்திருத்த ஆணைக்குழுவினால் விவசாய நோக்கத்திற்காக 58 பேருக்குக் காணிகள்
வழங்கப்பட்டிருந்தன.</p><p> 

எனினும், கடந்த சில வருடங்களாக அவர்கள் வரி செலுத்தவில்லை
எனக் கூறி, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கான வட்டி மற்றும் வரிப்பணத்தை இம்மாத
இறுதிக்குள் செலுத்துமாறு கந்தளாய் உதவி காணி ஆணையாளரினால் கடிதம் மூலம்
உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் இந்தத் திடீர் உத்தரவு
விவசாயிகளைப் பாரிய நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.</p><p>எனவே, இந்த ஏழை விவசாயிகள் குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்துவதற்கான கால
எல்லையை நீடித்துக் கொடுப்பதோடு, நிலுவைகளைச் சலுகை மற்றும் சகாய அடிப்படையில்
தவணை முறையில் செலுத்துவதற்கும் ஆவணம் செய்ய வேண்டும்."
</p><p>
இந்த கலந்துரையாடலில் அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் கலந்துக் கொண்டுள்ளதுடன், 
நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஃருபினால் முன்வைக்கப்பட்ட இப்பிரேரணைகள்
தொடர்பில் ஆராய்ந்து தகுந்த தீர்வுகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T06:02:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடேசனுக்கு இப்படியொரு பிரச்சனை, வருந்தும் நிலா... அய்யனார் துணை எபிசோட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ayyanar-thunai-serial-july-17-episode-1784266260"></link>
            <id>https://cineulagam.com/article/ayyanar-thunai-serial-july-17-episode-1784266260</id>
            <summary type="text">அய்யனார் துணைஆசை ஆசையாக டிவி வாங்கலாம் என இருந்த குடும்பத்தினருக்கு கடன் காரர்கள் வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்தது மிகவும் மன வருத்தத்தை கொடுத்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அய்யனார் துணை</h2><p>ஆசை ஆசையாக டிவி வாங்கலாம் என இருந்த குடும்பத்தினருக்கு கடன் காரர்கள் வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்தது மிகவும் மன வருத்தத்தை கொடுத்துள்ளது. </p><p>ஆனால் இதையெல்லாம் பொறுட்படுத்தாமல் ஜாலியாக வழக்கம் போல் பாட்டுபாடி வந்த நடேசன் மீது பாண்டி தனது கோபத்தை காட்டினார். </p><p>அப்போது சேரன், முதன்முறையாக தனது அப்பாவை கேள்வி மேல் கேள்வி கோபமாக கேட்டுவிட்டார். எங்களுக்காக என்ன செய்தீர்கள், வீணா போன அந்த வண்டி வாங்க நாங்கள் EMI கட்டனுமா, இந்த வீட்டிற்காக நீங்கள் என்ன செய்தீர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f76a1a8-1b01-4cc5-963e-62b6c1eddc35/26-6a59c3574fee8.webp' /></p><p> </p><p>இந்த வீட்டிற்கு வந்த பாவத்திற்காக அந்த பெண் சிறுக சிறுக பணம் சேர்த்து டிவி வாங்கலாம் என்றது. ஆனால் அந்த சந்தோஷம் 5 நிமிடம் கூட இல்லை உங்களால் அது எல்லாம் அப்படியே போச்சு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d928794-7890-4d73-b1dc-cf825100cace/26-6a59c3567dd5d.webp' /></p><p> </p><p>எப்போது பாரு உங்கள் வீடு என்பீர்கள், நாங்கள் வெளியே போகிறோம் நீஙகள் நிம்மதியாக இருங்கள் என கோபமாக பேசுகிறார்.
சேரன்-பல்லவன் சந்தாவை பார்க்க இராமேஸ்வரம் செல்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7610cd88-0f85-4abb-8c37-ee2c31639288/26-6a59c3581a054.webp' /></p><p>
</p><p>வீட்டில் தனியாக இருந்த நிலாவிடம் நடேசன் போய் சமாதானமாக பேசுகிறார். நான் இப்படி நடக்கும் என நினைக்கவில்லை, நான் தரேன் என்று தான் கூறினேன் அதற்குள் இப்படி நடந்துவிட்டது. குடியால் தான் இப்படி ஆனது விட்டுவிடுகிறேன் என்கிறார், ஆனால் நிலா நம்பவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bac98c37-5f5d-47b5-8d68-f193bb51bdf5/26-6a59c3c8c81b3.webp' /></p><p> </p><p>நடேசன், குடியை உடனே நிறுத்த முடியாது, எத்தனை வருட பழக்கம் உடனே நிறுத்தினால் உடம்பிற்கு ஏதாவது ஆகிவிடும் என்கிறார்.
அவரின் பேச்சை கேட்ட நிலா, சோழனிடம் ஒரு வேளை அவருக்கு குடிப்பழக்கம் நிறுத்த முடியாமல் கஷ்டப்படுகிறாரோ என கேட்கிறார். </p><p>சோழன் அவரைப்பற்றி கவலைப்படுவதை நிறத்திவிட்டு உனக்கு இருக்கும் வேலைகளை பார் என கூறிவிட்டு செல்கிறார்.</p>]]></content>
            <updated>2026-07-17T06:00:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய உயர் பொலிஸ் அதிகாரியின் மரணம் - பின்னணி குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reason-behind-police-officers-death-1784266119"></link>
            <id>https://tamilwin.com/article/reason-behind-police-officers-death-1784266119</id>
            <summary type="text">இலங்கை அரசியல் பரபரப்புக்கு மத்தியில் ராஜபக்ச குடும்பத்தினருடன் மிகவும் நெருக்கமான முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன&amp;nbsp; உயிரிழந்துள்ளமை பல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசியல் பரபரப்புக்கு மத்தியில் ராஜபக்ச குடும்பத்தினருடன் மிகவும் நெருக்கமான முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன&nbsp; உயிரிழந்துள்ளமை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. </p><p>

மாலபே, தலஹேன பிரதேசத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து அவர் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
விக்ரமரத்ன தனது மெய்க்காப்பாளரின் துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>&nbsp;&nbsp;</p><p><b style="color: inherit; font-size: 1.75rem;">துப்பாக்கிச்சூடு&nbsp;</b></p><p>

இன்று காலை 7.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
</p><p>உயிரிழந்த சி.டி. விக்ரமரத்னவின் உடல் முல்லேரியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6dc66dbd-dfd6-4873-894c-fef15dcad288/26-6a59bfaaef62c.webp' />&nbsp;&nbsp;</p><p>

தனது புதல்வர் ஒருவரின் வழக்கு விவகாரம் தொடர்பான கவலை மற்றும் மன அழுத்தத்தின் காரணமாகவே சி.டி. விக்ரமரத்ன இவ்வாறு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>

எனினும் நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் சி.டி. விக்ரமரத்னவுக்கும் தொடர்புகள் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது. </p><p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய ஆதாரங்களை அழிப்பதற்காக, கோட்டாபாய தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாக சுட்டிக்காட்டப்படுகிறது.</p><p> </p><h3><b>

கோட்டபாய தலைமையிலான அரசாங்கம்</b></h3><p>அதற்கமைய முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கிய அதிகாரிகள் குழு ஒன்று திங்கள்கிழமை தோறும் காலை 9 மணிக்கு ரகசியக் கூட்டங்களை நடத்தியதாக இலங்கையின் பொலிஸ் முன்னாள் பொறுப்பதிகாரியான அஜித தர்மபால குற்றம் சாட்டியிருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51c7c4a5-80b1-4c34-8e3b-6a8e78446be2/26-6a59c2d832da2.webp' /></p><p>

இந்த கூட்டங்களில் சுரேஷ் சலே, சரத் வீரசேகர, ஜெகத் அல்விஸ், டபிள்யூ. திலகரத்ன மற்றும் சி.டி. விக்ரமரத்ன ஆகியோர் கலந்துகொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளை நெருங்கியுள்ளதாகவும் அவர்கள் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாகவும் சமகால அரசாங்கம் தெரிவித்துள்ளது. </p><p>

இவ்வாறான பின்னணியில் விக்ரமரத்ன இன்று காலை உயிரை மாய்த்துள்ளார். அண்மைக்காலமாக ராஜபக்சர்களுடன் நெருக்கிய தொடர்பில் இருந்த நிலையில் பல்வேறு குற்றம் சாட்டப்பட்டவர்கள் இவ்வாறான முறையில் உயிரிழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp;&nbsp;</p><p> </p>]]></content>
            <updated>2026-07-17T05:51:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த தகவல்களை வழங்க வேண்டாம் ; அஸ்வெசும பயனாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/welfare-board-warns-aswesuma-beneficiaries-1784267405"></link>
            <id>https://jvpnews.com/article/welfare-board-warns-aswesuma-beneficiaries-1784267405</id>
            <summary type="text">&#039;அஸ்வெசும&#039; நலன்புரித் திட்டப் பயனாளர்களின் பணத்தைச் சூறையாடும் நோக்கில், நாடளாவிய ரீதியில் திட்டமிட்ட நிதி மோசடி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக நலன்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">'அஸ்வெசும' நலன்புரித் திட்டப் பயனாளர்களின் பணத்தைச் சூறையாடும் நோக்கில், நாடளாவிய ரீதியில் திட்டமிட்ட நிதி மோசடி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக நலன்புரி நன்மைகள் சபை விசேட அறிவிப்பு ஒன்றின் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p style="text-align: justify; ">

இது தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58ad63c2-2f33-4450-9988-1f6a9edee92e/26-6a59c28f6ce94.webp' /></p><h2 style="text-align: justify; ">தொலைபேசி அழைப்புகள்&nbsp;</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள அஸ்வெசும பயனாளர்களைப் பல்வேறு தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்புகொள்ளும் மோசடியாளர்கள், தங்களை நலன்புரி நன்மைகள் சபையின் தலைமை அலுவலக அதிகாரிகள் என அறிமுகப்படுத்துகின்றனர்.</p><p style="text-align: justify; ">

பயனாளர்களின் விபரங்களைப் புதுப்பிப்பதாகக் கூறியோ அல்லது வேறு ஏதேனும் போலியான காரணங்களைக் குறிப்பிட்டோ, பயனாளர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகைப் பணத்தை இந்த மோசடியாளர்கள் கோரி வருகின்றனர்.
</p><p style="text-align: justify; ">
இந்தத் தொலைபேசி அழைப்புகளுக்கும் நலன்புரி நன்மைகள் சபைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இத்தகைய நடவடிக்கைகள் சபையின் அனுமதியோ அல்லது அறிவோ இன்றி முன்னெடுக்கப்படும் முற்றிலும் சட்டவிரோதமான மோசடிச் செயல்களாகும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

மோசடிகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சபை பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இவ்வாறான போலி அழைப்புகள் வந்தால், உடனடியாக அது குறித்துப் பயனாளிக்கு மிக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்ய வேண்டும்.
</p><p style="text-align: justify; ">
இத்தகைய அழைப்புகளைப் பெற்ற பயனாளர்கள், அந்தந்தப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் உத்தியோகபூர்வமாகப் புகார் அளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அஸ்வெசும திட்டத்துடன் தொடர்புடைய கள அதிகாரிகளும் கிராம மட்டங்களில் இது குறித்து தீவிரக் கண்காணிப்புடன் இருக்குமாறு சபை அறிவுறுத்தியுள்ளது.
</p><p style="text-align: justify; ">
அஸ்வெசும பயனாளர்கள் தங்களது தனிப்பட்ட விபரங்களையோ, வங்கி விபரங்களையோ அல்லது பணத்தையோ அறியாத நபர்களுக்குத் தொலைபேசி வழியே வழங்குவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-17T05:50:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனது 14 மகன்களுக்கு ஒரே நேரத்தில், ஒரே மேடையில் திருமணம்; இணையத்தில் வைரல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/14-sons-one-grand-wedding-madhya-pradesh-viral-1784266897"></link>
            <id>https://jvpnews.com/article/14-sons-one-grand-wedding-madhya-pradesh-viral-1784266897</id>
            <summary type="text">&amp;nbsp; தனது 14 மகன்களுக்கும் ஒரே நேரத்தில், ஒரே மேடையில், விவசாயி ஒருவர் திருமணம் செய்து வைத்தமை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. 

ஆண்டுதோறும் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தனது 14 மகன்களுக்கும் ஒரே நேரத்தில், ஒரே மேடையில், விவசாயி ஒருவர் திருமணம் செய்து வைத்தமை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. </p><p>

ஆண்டுதோறும் விண்ணைத் தொடும் திருமணச் செலவுகள் மற்றும் பணவீக்கத்திற்கு அஞ்சி, தனது குடும்பத்தைக் கடனில் இருந்து காப்பாற்ற அவர் எடுத்த இந்த முடிவு, சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dae6dfb5-6bb1-4e76-9921-985238536644/26-6a59c09273ad9.webp' /></p><h2>ஆடம்பர மோகத்தில் சிக்கித் தவிக்கும் இன்றைய தலைமுறைக்கு...</h2><p>

 இந்த திருமணத்தில் வழக்கமான சொகுசு கார்களுக்குப் பதிலாக, அலங்கரிக்கப்பட்ட டிராக்டர்-டிராலிகளில் 14 மணமகன்களும், மற்றொரு டிராக்டரில் 14 மணப்பெண்களும் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
</p><p>
இந்தத் தனித்துவமான ஊர்வலக் காணொளி இணையவாசிகளைத் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

 14 தனித்தனி திருமணங்களை நடத்தினால் மண்டபம், உணவு, போக்குவரத்து எனப் பல மில்லியன் ரூபாய் செலவாகியிருக்கும்.</p><p></p><p>
</p><p>
ஆனால், அனைத்தையும் ஒரே மேடையில் முடித்ததால் பல கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது என்கிறது அந்தக் குடும்பம். நிர்வாக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் இது ஒரு புத்திசாலித்தனமான முடிவாகப் பார்க்கப்பட்டாலும், இணையத்தில் ஒரு பெரும் விவாதமே வெடித்துள்ளது.
</p><p>
ஆடம்பர மோகத்தில் சிக்கித் தவிக்கும் இன்றைய தலைமுறைக்கு, சிக்கனம் மற்றும் நடைமுறைத் தீர்வுகளே மிக முக்கியம் என்ற செய்தியை இந்தத் திருமணம் உரக்கச் சொல்லியிருக்கிறது .</p><p>ஆடம்பரத்தை விட அன்பும், கடன் இல்லாத நிம்மதியான வாழ்வுமே முக்கியம் என்ற அந்த விவசாயியின் நோக்கம் உண்மையிலேயே பாராட்டத்தக்கது.</p><p></p><p>
</p><p>
லட்சக்கணக்கில், ஏன் கோடிக்கணக்கில் செலவு செய்து கடனாளியாக மாறும் இந்தத் திருமணக் கலாச்சாரத்திற்கு மத்தியில், மத்திய பிரதேச மாநிலம் சத்னாவைச் சேர்ந்த ஒரு விவசாயி செய்த இந்த செயல் இந்தியா முழுவதையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது</p>]]></content>
            <updated>2026-07-17T05:47:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறை மா அதிபரின் மர்ம மரணம் - ஆரம்பகட்ட விசாரணையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/investigation-death-of-former-igp-cd-wickramaratne-1784266275"></link>
            <id>https://ibctamil.com/article/investigation-death-of-former-igp-cd-wickramaratne-1784266275</id>
            <summary type="text">சடலமாகக் மீட்க்கப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி விக்ரமரத்னவின் மரணம் குறித்து விசாரிக்க இரண்டு காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுஇன்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>சடலமாகக் மீட்க்கப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி விக்ரமரத்னவின் மரணம் குறித்து விசாரிக்க இரண்டு காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது</p><p>இன்று அதிகாலையில் மலாபே - தலஹேனாவில் உள்ள தனது இல்லத்தில் மீட்க்கப்பட்ட சி.டி. விக்ரமரத்ன, துப்பாக்கியைப் பயன்படுத்தி தவறான முடிவெடுத்து உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>குறித்த விடத்தை காவல்துறை ஊடகப் பேச்சாளராக உதவி காவல்துறை அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.</p><h2>பிரேதப் பரிசோதனை</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், சம்பவத்தில் முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி விக்ரமரத்ன முல்லேரியாவா மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக அறிவித்தனர்.</p><p>மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனை மற்றும் நீதித்துறை விசாரணைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், அதேவேளையில் இச்சம்பவம் குறித்து வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>

மரணம் தொடர்பான சூழ்நிலைகள் குறித்து நியமிக்கப்பட்ட காவல்துறை குழுக்கள் முழுமையான விசாரணை நடத்தவுள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்</p>]]></content>
            <updated>2026-07-17T05:46:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கம், வெள்ளி விலையில் அதிரடி வீழ்ச்சி... இன்றைய புதிய விலை இதோ!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/july-17th-2026-gold-and-silver-price-in-chennai-1784265551"></link>
            <id>https://ibctamilnadu.com/article/july-17th-2026-gold-and-silver-price-in-chennai-1784265551</id>
            <summary type="text">சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் முதலீட்டாளர்களின் வர்த்தக போக்கு போன்ற காரணிகள் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தொடர்ந்து தாக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் முதலீட்டாளர்களின் வர்த்தக போக்கு போன்ற காரணிகள் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.&nbsp;</p><p>ஜூலை மாதம் தொடங்கியதிலிருந்து தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வருகின்றன. மாதத்தின் ஆரம்பத்தில் அதிரடியாக சரிந்த தங்கம் விலை, அதன்பிறகு சில நாட்கள் நிலையான போக்கில் இருந்தாலும், இடைக்கிடையே விலை மாற்றங்கள் பதிவாகி வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7393f050-565f-4bd5-a314-6f82e69f189f/26-6a59c1b2ddf6b.webp' /></p><p>குறிப்பாக கடந்த வாரத்தில் ஒரே நாளில் காலை மற்றும் மாலை என இரண்டு முறை விலை மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அதன் பின்னர் தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.</p><p>

நேற்றைய (ஜூலை 16) நிலவரப்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.13,150க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று (ஜூலை 17) தங்கம் விலை மீண்டும் கணிசமாக குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a972e262-5e54-4d8c-afc1-4f776b298e72/26-6a59c1b390002.webp' /></p><h2>இன்றைய நிலவரம்&nbsp;</h2><p> </p><p>இதனால் நகை வாங்கத் திட்டமிட்டு இருந்த பொதுமக்கள் மற்றும் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலயில்,இன்றைய விலை நிலவரப்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.13,100க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,04,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>
</p><p>
அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.50 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ரூ.10,920க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.87,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92263593-8403-4fc7-8b5f-31dfa1772403/26-6a59c1b43f674.webp' /></p><p>

தங்கம் மட்டுமல்லாமல் வெள்ளி விலையிலும் இன்று சரிவு ஏற்பட்டுள்ளது.ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.235க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,35,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T05:46:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் தீவிபத்தில் இந்திய தம்பதியர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indian-couple-dies-in-canada-fire-incident-1784267095"></link>
            <id>https://canadamirror.com/article/indian-couple-dies-in-canada-fire-incident-1784267095</id>
            <summary type="text">கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் வாழ்ந்துவந்த இந்திய தம்பதி, தீவிபத்தில் பலியான விடயம் துயரத்தை உருவாக்கியுள்ளது.

கனடாவின் எட்மண்டன் நகரில் வாழ்ந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் வாழ்ந்துவந்த இந்திய தம்பதி, தீவிபத்தில் பலியான விடயம் துயரத்தை உருவாக்கியுள்ளது.
</p><p>
கனடாவின் எட்மண்டன் நகரில் வாழ்ந்துவரும் லாலி தூர் என்னும் இளைஞர், திங்கட்கிழமை இரவு, தன் குடும்பத்துடன் உணவருந்திக்கொண்டிருந்திருக்கிறார்.</p><p>

அப்போது, தொலைக்காட்சி செய்திகளில், வீட்டில் பற்றிய தீயிலிருந்து தப்ப முதியவர் ஒருவர் மூன்றாவது மாடியிலிருந்து குதித்ததைக் குறித்த செய்தி ஒன்று ஒளிபரப்பாகிக்கொண்டிருந்திருக்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2842df34-d391-459b-a2a1-b9b313286216/26-6a59c1597d880.webp' /></p><p>
அந்த வீடு தனது தாத்தா, பாட்டியின் வீடு என்பதை அறிந்த தூர், உடனடியாக அங்கு விரைந்துள்ளார்.
</p><p>
தாத்தா வீட்டுக்குச் சென்ற தூர், அங்கு தீயணைப்பு வீரர்கள் தன் தாத்தாவுக்கு உயிர் காக்கும் சிகிச்சையளித்து அவரைக் காப்பாற்ற போராடிக்கொண்டிருப்பதைக் கண்டுள்ளார்.
</p><p>
அத்துடன், தன் தாத்தாவின் வீடு கொழுந்துவிட்டு எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார் தூர்.
</p><p>
தூரின் தாத்தாவான மேஜர் சிங் பந்தலும் (85) பாட்டியான சுரிந்தர்ஜித் கவுர் பந்தலும் (82), 30 ஆண்டுகளாக எட்மண்டனில் வாழ்ந்துவந்துள்ளார்கள்.</p><p>

திங்கட்கிழமை இரவு 9.15 மணியளவில் அவர்கள் வாழ்ந்துவந்த வீட்டின் மீது வாகனம் ஒன்று மோதியுள்ளது.
</p><p>
வாகனம் மோதியதில், அங்கிருந்த எரிவாயுக் குழாய் வெடித்து அந்தக் கட்டிடம் தீப்பற்றியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2132b684-ee5b-4eb5-9e6b-0f13af915179/26-6a59c158ccb23.webp' /></p><p>
வீடு தீப்பிடித்ததை அறிந்த மேஜர் சிங், மூன்றாவது மாடிலிருந்து குதித்துள்ளார். ஆனால், அவர் உயிர் பிழைக்கவில்லை. அதேபோல, வீட்டுக்குள்ளிருந்த அவரது மனைவியான சுரிந்தர்ஜித் கவுர், மறுநாள் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.</p><p>

மேஜர் சிங், சுரிந்தர்ஜித் கவுர் தம்பதியருக்கு ஏற்பட்ட துயர முடிவு அவர்களுடைய குடும்பத்தினரை கடும் அதிர்ச்சிக்கும் சோகத்துக்கும் உள்ளாக்கியுள்ளது.</p><p>

இந்நிலையில், அவர்கள் வீட்டின் மீது காரை மோதிய 62 வயது நபரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
அத்துடன், அந்த கட்டிடத்தில் வாழ்ந்துவந்த ஆறு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
</p><p>
இந்த துயர சம்பவம் தொடர்பில் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T05:45:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவிரவாக இரவாக அமெரிக்கா தாக்குதல் - பற்றி எரியும் பாலங்கள்: ஈரான் கடும் பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-strikes-on-civilian-infrastructure-in-iran-1784265272"></link>
            <id>https://ibctamil.com/article/us-strikes-on-civilian-infrastructure-in-iran-1784265272</id>
            <summary type="text">அமெரிக்கா தொடர்ந்து ஆறாவது இரவாக ஈரான் மீது பெரும் தாக்குதல்களை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.நேற்றிரவு அமெரிக்கா நடத்திய தாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா தொடர்ந்து ஆறாவது இரவாக ஈரான் மீது பெரும் தாக்குதல்களை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>நேற்றிரவு அமெரிக்கா நடத்திய தாக்குதல்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும், விமான நிலையம் மற்றும் முக்கியப் பாலம் உள்ளிட்ட பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டதாகவும் ஈரானிய அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.</p><p>ஈரானின் ஹர்முஸ்கன் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான பண்டர் இ ஹமீர் பாலத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர்.</p><p></p><h2>கடுமையான பதிலடி&nbsp;</h2><p>அமெரிக்காவின் இந்தத் தாக்குதலுக்குக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/726506bb-0977-4009-bdc1-9b7557a88c6a/26-6a59c140c7dad.webp' /></p><p>இதேவேளை வடக்கு ஈராக்கின் குர்திஷ் பிராந்தியத்தில் உள்ள சுலைமானியா நகரில் நான்கு பயங்கர வெடிச்சத்தங்கள் கேட்டதாக ருடாவ் என்ற குர்திஷ் செய்தித் தளம் தெரிவித்துள்ளது.</p><p>இந்நிலையில், சிரியாவில் உள்ள அல்-தான்ஃப் இராணுவத் தளத்தில் அமைந்திருந்த அமெரிக்க சிறப்பு நடவடிக்கைக் கட்டளை மையம் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) கூறியதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>ஈரான் ஷாஹரில் ஈரானிய வீரர்கள் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் விதமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐ.ஆர்.ஜி.சி. மேலும் கூறியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T05:44:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepachelvan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடிப்பிறப்பு ஈழத் தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை…]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/aadi-pirappu-is-cultural-festival-of-eelam-tamils-1784262663"></link>
            <id>https://ibctamil.com/article/aadi-pirappu-is-cultural-festival-of-eelam-tamils-1784262663</id>
            <summary type="text">பண்பாட்டை மறந்த இனம் பூமியில் நிலைப்பதில்லை என்பார்கள். தனி மனிதன் வாழ்வியல் நெறிகளை அறியவும் தன்னை சமூகத்தில் இணைத்துக் கொள்ளவும் பண்பாடு வழி வகுக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பண்பாட்டை மறந்த இனம் பூமியில் நிலைப்பதில்லை என்பார்கள். தனி மனிதன் வாழ்வியல் நெறிகளை அறியவும் தன்னை சமூகத்தில் இணைத்துக் கொள்ளவும் பண்பாடு வழி வகுக்கிறது.</p><p> உலகம் மிக நவீனத்துமடைந்து வருகின்ற காலத்தில் தொடர்பாடல் பன்முக வளர்ச்சியைப் பெற்று வருகின்ற காலத்தில் பண்பாடுதான் தனி மனிதனை சமூகமயமாக்கும் சாதனமாகவும் விளங்குகிறது.</p><p>ஈழத் தமிழர்களின் பண்பாடு சைவத்தோடும் தமிழோடும் இயற்கைநெறியோடும் கலந்தது. அத்தகைய பண்டிகைகளில் ஒன்றாக விளங்கும் ஆடிப்பிறப்பு இன்றாகும்.&nbsp;</p><p></p><p>ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!</p><p>பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,</p><p>வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.</p><p>வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பhளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28211995-34ba-4c2b-8fbb-ce1095c26b4a/26-6a59b4cc553dc.webp' /></p><p>பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக வாயூறிடுமே</p><p>குங்குமப் பொட்டிட்டு பூமாஇலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் பாடிப்பும் படைப்போமே</p><p>வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே&nbsp; </p><p>வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே&nbsp;&nbsp;</p><p>ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!</p><p>எனத் துவங்கும் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்களின் பாடல் தமிழ் ஈழச் சமூகத்தில் இரண்டக் கலந்த வாழ்வியல் பாடலாகும்.</p><p></p><h2>ஈழத்தில் ஆடிப்பிறப்பு</h2><p>ஆடிப்பிறப்பு நாளில் ஆடிக்கூழும், கொழுக்கட்டையும்தான் சிறப்பு உணவுகள். இந்த உணவுகள்தான் ஆடிப்பிறப்பு பண்டிகை கொண்டாட்டத்தின் அடையாளங்கள். இந்த உணவுகள் ஈழத் தமிழ் மக்களின் பண்பாட்டு உணவுகள். </p><p>இம்முறையும் ஆடிப்பிறப்பை ஒட்டி ஈழத்தில் பல வீடுகளில் கூழ்காய்ச்சி, கொழுக்கட்டை அவித்து கொண்டாடினாலும் இதையெல்லாம் கொண்டாட முடியாத நிலையிலும் பல வீடுகள் வெளித்துக் கிடக்கும் காட்சிகளை கடந்த பதினைந்து ஆண்டுகளாக பார்த்து வருகின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d64bf326-58c5-42f4-bc9f-d77869cc86c4/26-6a59b79004d77.webp' /></p><p>
சூரியன் வடதிசை நோக்கிச் செல்லும் தை தொடக்கம் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயண காலம் எனப்படும். இது தேவர்களுக்கு ஒரு நாளின் பகல் பொழுதாகும். </p><p>பின்னர், சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் காலம் ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாத காலம் தட்சணாயண காலம். இது தேவர்களுக்கு இராப்பொழுதாகும். </p><p>தட்சணாயணத்தின் ஆரம்ப தினம் ஆடிமாத முதலாம் நாள் ஆகும். இக்காலம் கோடைகால வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாகப் பெருகும் இயல்புடையது. வானியல், அறிவியல் பின்புலத்தை கொண்ட இந்தப் பண்டிகை இயற்கைசார்ந்த வழிபாடாகவும் பரிமாணம் பெறுகிறது.</p><p></p><h2>தமிழ்நாட்டில் ஆடிப்பிறப்பு
</h2><p>
தமிழகத்தில், இந் நாளில் விருந்தாக உண்டு மகிழ்தல், விசேட வழிபாடு செய்தலும் உற்றார், உறவினர்களுக்கு இவ் உணவு வகைகளை வழங்கி நல்லுறவைப் பேணலும் வழக்கமாக கடைப்பிடிக்கப்படுகிறது. </p><p>ஆடி மாதத்தில் ஆற்றுநீர் வளமுள்ள தென்னாட்டு மக்கள் காவிரி போன்ற ஆற்றங்கரைகளில் சித்திரான்னம் உண்டு படகோட்டம் போன்ற கேளிக்கைகளில் பங்குபற்றும் இந்த நாளை 'ஆடிப்பெருக்கு' என்றும் அழைத்து பண்டிகையாகக் கொண்டாடுவர்கள். தற்காலத்திலும் தமிழ்நாட்டுத் தலைநகர் சென்னையில் ஆடிப்பெருக்கு கொண்டாடும் வழக்கம் இருந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9698adbf-aa14-42bb-8bba-4c11ace3cff3/26-6a59bfa2dbb69.webp' /></p><p>
“ஆடி விதை தேடி விதை
ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்
ஆடி ஆவணி ஆன புரட்டாதி
காடி தோய்த்த கனபனங் காயத்தைத்
தேடித் தேடித் தினமும் புசிப்பவர்
ஓடி யோடி யுலகெலாம் பீச்சுவர்”
இப்படி தமிழக பழைய பாடல்களில் எழுதப்பட்டுள்ளமை தமிழகத்தில் ஆடிப்பிறப்பிற்குள்ள முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றது.</p><p> ஆடிப்பிறப்பிற்கு நாளை விடுதலை... என்ற பாடல்தான் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் ஆடிப்பிறப்பு நாளில் நினைவுக்கு வரும். இந்தப் பாடலை ஈழப் புலவர்களில் ஒருவரான நவாலியூர் சோமசுந்தரப் புலவர் பாடியுள்ளார். </p><p>ஆடிப்பிறப்புக்கு ஒரு காலத்தில் விடுமுறைகள் விடுக்கப்பட்டுள்ளன. அந்தளவு முக்கியமான நாளாக ஆடிப்பிறப்பு அமைந்துள்ளது. அதாவது தை முதல் நாளையும் ஆடி முதல் நாளையும் ஈழத்தவர்கள் கொண்டாடுகின்றனர். </p><p>ஒரு ஆண்டின் தொடக்கத்தையும் அரை ஆண்டின் தொடக்கத்தையும் கொண்டாடுகின்றனர். இங்கு முதல் அரையாண்டு தேவர்களுக்குரியது என்றும் இறுதி அரையாண்டு பிதிர்களுக்கு உரியது என்றும் ஒரு ஐதீகம் இருக்கிறது.
</p><p>
கற்கடகம் என்பது ஆடி மாத்தின் பழைய தமிழ் பெயராகும். ஆடி முதல் நாளை தமிழர்கள் வரவேற்கும் விழாவே ஆடிப்பிறப்பு. இப் பண்டிகையின் போது தேங்காய் சுடுதல் என்ற உணவுப் பழக்கமும் தமிழர்களிடம் காலம் காலமாக நிலவிவந்துள்ளது.</p><h2>ஆடிப்பிறப்புக் கொண்டாட்டங்கள்</h2><p>தேங்காய் நாரை முற்றிலும் உரித்துவிட்டு நன்றாக உருட்டியபின், தேங்காயின் 3முகங்களில் ஒன்றில் மட்டும் துளையிட்டு தேங்காய் நீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து வைத்து கொள்ளவும். </p><p>சிப்பருப்புடன், பொட்டுக்கடலை, எள்ளு, வெல்லம், சிறிதளவு உப்பிட்டு அரைத்தெடுத்து. தேங்காயின் ஒரு துவாரத்தின் வழியாக அடைத்து சிறிது தேங்காய் நீரை ஊற்றியபின் இதுவாரத்தை மஞ்சளிட்டு அடைத்து வாதனங் குச்சியை துவாரத்தில் சொருகி தேங்காயை தீயில் சுட்டபின் கடவுளுக்கு படைத்தபின் உடைத்து குடும்பத்துடன் சாப்பிடும் வழக்கம் தமிழ்நாட்டில் காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5011789-1ae7-4ba1-bca0-8abaa8f9d889/26-6a59b79159831.webp' /></p><p>
</p><p>
ஆடிப்பிறப்பன்று, வானவேடிக்கைகள், வோர்னில் விழகாக்கள், களியாட்ட நிகழ்வுகள், பட்டம் விடுதல் முதலிய நிகழ்வுகளில் ஈழத்தவர்கள் ஈடுபட்டதாக மூதாதையர்களின் நினைவுக்குறிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு சொல்லப்படுகிறது. </p><p>சிறுவர்களும் முதியவர்களும் இணைந்து கூடிக் கொண்டாடி மகிழும் ஒரு நிகழ்வாக ஆடிப்பிறப்பு காணப்படுகிறது. அத்தடன் ஈழக் கவிஞர் நாவாலியூர் சோமசுந்தரப் புலவரின் ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை என்ற பாடல் ஆடிப்பிறப்பின் கொண்டாட்டம், களியாட்டம், பண்பாட்டு முக்கியத்துவம், கலாசார செழிப்பு என்று பல்வேறு முக்கிய அம்சங்களை வெளிப்படுத்துகிறது.</p><h2>விடுதலையற்ற ஆடிப்பிறப்பு</h2><p>இப்போது ஆடிப்பிறப்புக்கு விடுமுறை இல்லை. ஆடிப்பிறப்பு என்று மாத்திரம் வெறுமனே எமது நாட்காட்டிகள் நினைவுபடுத்துகின்றன. இப்போது விடுமுறையற்ற ஆடிப்பிறப்பு மாத்திரம் வருவதில்லை. விடுதலையற்ற ஆடிப்பிறப்புத்தான் வருகிறது. </p><p>விடுதலை பெறாத இனத்தின் எல்லாப் பண்டிகைகளும் கொண்டாடும் தன்மையை இழக்கின்றன. அத்துடன் கூடியிருந்தவர்களை இழந்து, கூடியிருந்தவர்களுக்காக காத்திருக்கும் துயரச் சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ள ஈழத்தில் இந்த ஆடிப்பிறப்பு வேதனையை தோற்றுவிக்கும் நாளாகவும் ஆகிவிட்டதையும் நாம் இங்கு கவனம் கொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0237c39a-11a8-4c66-8da4-dfb3e33eadaf/26-6a59b790a94a3.webp' /></p><p>
</p><p>
ஆடிப்பிறப்புக்கு விடுமுறை வழங்கப்பட்ட செயற்பாடு ஏன் வழக்கொழிந்தது? இது ஆராயப்பட வேண்டியது. மீண்டும் ஆடிப்பிறப்பு விடுமுறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். கடந்த காலத்தில் ஆடிப்பிறப்பின் போது கொண்டாட்ட நிகழ்வுகளை பாடசாலைகளிலும், பொதுவிடங்களிலும் வடமாகாண பண்பாட்டு திணைக்களம் ஏற்பாடு செய்த்தும் இங்கு குறிப்பிடத்தக்கது. </p><p>எனினும் ஆடிப்பிறப்பு போன்ற பண்பாட்டு முக்கியத்துவம் மிக்க தினங்களை அரச விடுமுறை தினங்களாக்க வேண்டும் என்பதை நாம் வலியுறுத்த வேண்டும். வடகிழக்கில் இந்த நடைமுறையைக் கொண்டுவருவதன் மூலம் காயப்பட்ட ஈழ மக்கள், தமது பாரம்பரிய பண்பாட்டு தினங்களை கொண்டாடி உளத்தை வலுப்படுத்தவும் ஆற்றவும் முடியும்.
</p><p>
பண்டிகை நாட்களில் மனதில் பெரும் மகிழச்சியோடு, உறவுகள் கூடியிருப்பதுதான் மகிழச்சியையும் கொண்டாட்டதையும் புது தொடக்கத்தையும் தருகிறது. பண்பாட்டு அழிப்புக்களுக்கும் கலாசார நெருக்கடிகளுக்குள்ளும் தள்ளப்பட்டுள்ள ஈழத் தமிழ் இனம் ஆடிப்பிறப்பு போன்ற பாரம்பரிய பண்டிகை தினங்களை கொண்டாடி தமது கலாசார, பண்பாட்டு தடத்தை வலுப்படுத்த வேண்டும். </p><p>இனவழிப்புப் பொறிகள் நிறைந்த மண்ணில் இத்தகைய பண்பாட்டு பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் இன்றைய தலைமுறையை வலுப்படுத்துபவை.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b><i>WHATSAPP CHANNEL</i></b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p>
</p><p>

</p><p>
</p><p>

</p><p>
</p><p>

</p><p>
</p>]]></content>
            <updated>2026-07-17T05:44:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடுமையான வீழ்ச்சிப் பாதையில் தேயிலை தொழில்துறை - நெருக்கடியில் சிக்கிய தொழிலாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tea-industry-down-fall-1784264528"></link>
            <id>https://tamilwin.com/article/tea-industry-down-fall-1784264528</id>
            <summary type="text">இலங்கையில் தேயிலைத் தொழில் துறை பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தேயிலைக் கொழுந்துத் தட்டுப்பாடு மற்றும் கடுமையான தொழிலாளர் பற்றா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தேயிலைத் தொழில் துறை பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>தேயிலைக் கொழுந்துத் தட்டுப்பாடு மற்றும் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் உள்ள சுமார் 250 தேயிலை தொழில் துறைச்சாலைகள் தற்போது மூடப்பட்டுள்ளதாக தேசிய தேயிலை பயிர்ச்செய்கையாளர்கள் சங்கத்தின் தலைவரும், சிரேஷ்ட தேயிலை ஆலோசகருமான சமன் கீகனகே தெரிவித்துள்ளார்.</p><h2>200 மில்லியன் கிலோ கிராம் தேயிலை ஏற்றுமதி</h2><p> 
இதனால் இந்த ஆண்டுக்கான தேயிலை ஏற்றுமதி இலக்கை அடைவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61504c61-8487-4493-9648-d22dd7c52548/26-6a59b75293d99.webp' /></p><p>
இலங்கை ஆண்டுதோறும் சுமார் 220 மில்லியன் கிலோ கிராம் பதப்படுத்தப்பட்ட தேயிலையை சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்கிறது.</p><p>
இதன் மூலம் வருடத்திற்கு 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்களும், மாதத்திற்கு 110 முதல் 120 மில்லியன் அமெரிக்க டொலர்களும் வருமானமாகப் பெறப்படுகிறது.
தற்போது தொழிற்சாலைகள் மூடப்படுவதால் இந்த வருமானம் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.</p><p>
நாள் ஒன்றுக்கு 30,000 கிலோ தேயிலைக் கொழுந்துகளை அரைத்து உற்பத்தி செய்யும் பல பெரிய தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன.</p><p>
சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
</p><p>இந்தச் சூழ்நிலையைப் சாதகமாக்கிக் கொள்ளும் சில பெரிய அளவிலான தொழிற்சாலை உரிமையாளர்கள், இலங்கை தேயிலைச் சபையின் விலை நிர்ணயங்களை மதிக்காமல், மிகக் குறைந்த விலைக்கு கொழுந்துகளைக் கொள்வனவு செய்து சிறு உற்பத்தியாளர்களைச் சுரண்டுவதாக சமன் கீகனகே கவலை வெளியிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-17T05:42:08+00:00</updated>
        </entry>
    </feed>
