<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-14T11:18:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : 200 பேரிடம் வாக்குமூலம் பதிவு - அமைச்சர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-200-people-given-statements-1784026309"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-200-people-given-statements-1784026309</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை கைதிகள், சிறை அதிகாரிகள், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் (STF) உள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை கைதிகள், சிறை அதிகாரிகள், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் (STF) உள்ளிட்ட சுமார் 200 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய(14.07.2026) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><h2>கொடூரமான தாக்குதல்களின் பின்னணி</h2><p>இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை செய்ய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையில் முப்படை அதிகாரிகள் அடங்கிய விசேட விசாரணைக்குழுவும், 7 தனித்துவமான விசேட விசாரணைக்குழுக்களும் நியமிக்கப்பட்டு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1a92bd4-6c5e-474a-b90c-64b597358c52/26-6a561af0423d2.webp' /></p><p>
வன்முறையில் ஈடுபட்டவர்களால் சிசிடிவி கேமராக்கள் சேதப்படுத்தப்பட்ட போதிலும், அவற்றின் DVR இயந்திரங்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தொழில்நுட்பப் பிரிவில் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், பயன்படுத்தப்பட்ட அனைத்து ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன.</p><p>

சிறைசாலை அதிகாரிகள் மற்றும் குறிப்பிட்ட கைதிகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் மற்றும் உள்ளக ரீதியாக ஒத்துழைப்பு வழங்கியவர்களை கண்டறிந்து மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T11:18:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நயாகரா நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிர் பிழைத்த நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/survived-a-fall-over-horseshoe-falls-at-niagara-1784026220"></link>
            <id>https://canadamirror.com/article/survived-a-fall-over-horseshoe-falls-at-niagara-1784026220</id>
            <summary type="text">&amp;nbsp; கனடா மற்றும் அமெரிக்க எல்லைக்கு நடுவே அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான நயாகரா நீர்வீழ்ச்சியின் ஹார்ஸ்ஷூ நீர்வீழ்ச்சியில் விழுந்த நப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கனடா மற்றும் அமெரிக்க எல்லைக்கு நடுவே அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான நயாகரா நீர்வீழ்ச்சியின் ஹார்ஸ்ஷூ நீர்வீழ்ச்சியில் விழுந்த நபர் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p>

கடந்த ஜூன் 28 ஆம் திகதி இந்த விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

நபர் ஒருவர் நயாகராவின் மேல் ஆற்றுப் பகுதியில் நீந்திக் கொண்டிருந்த நிலையில், ஆற்றில் நிலவிய அதிவேக நீரோட்டம் காரணமாக, அந்த நபர் கட்டுப்படுத்த முடியாமல் இழுத்துச் செல்லப்பட்டு, நீர்வீழ்ச்சியின் விளிம்பிலிருந்து கீழ்நோக்கி விழுந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a78ec946-33a2-4460-98d5-d088a6b09440/26-6a56146e1e60f.webp' /></p><h2>பலத்த காயங்களுடன்&nbsp;&nbsp;மீட்டு&nbsp; மருத்துவமனையில் அனுமதி</h2><p>
</p><p>
அவர் சுமார் 52 மீற்றர் (சுமார் 170 அடி) உயரத்திலிருந்து நீர்வீழ்ச்சியின் அடியில் இருக்கும் பாறைகள் நிறைந்த பகுதிக்குள் விழுந்துள்ளார். </p><p>

உடனடியாக விரைந்து வந்த அவசர மீட்புக் குழுவினர், அவரை ஆற்றுப் பகுதியிலிருந்து மீட்டு பலத்த காயங்களுடன் உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்துள்ளனர்.
</p><p>
நயாகரா நீர்வீழ்ச்சியின் கடுமையான நீரோட்டம் மற்றும் அடியில் இருக்கும் இராட்சதப் பாறைகளின் தாக்கம் காரணமாக, இத்தகைய உயர்மட்ட ஆபத்தான பகுதியில் விழுந்து ஒருவர் உயிர் பிழைப்பது என்பது மிகவும் அரிதான விஷயம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

பாதுகாப்பு வேலி மற்றும் தடைசெய்யப்பட்ட எல்லைகளைத் தாண்டி சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான பகுதிகளுக்குள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், தங்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எச்சரிக்கை வழிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-14T11:12:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கிச் சூடு நடத்திய நீர்கொழும்பு சிறை அதிகாரிக்கு இடமாற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-prison-officer-fire-death-threats-abroad-1784027540"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-prison-officer-fire-death-threats-abroad-1784027540</id>
            <summary type="text">&amp;nbsp; நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட பயங்கர மோதலின் போது, கைதிகள் தப்பி ஓடுவதைத் தடுப்பதற்காகத் துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட பயங்கர மோதலின் போது, கைதிகள் தப்பி ஓடுவதைத் தடுப்பதற்காகத் துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரிக்குத் தொடர் மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதன் காரணமாக அவரது பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அவர் அவசரமாகப் பாதுகாப்பானதொரு சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/135c9dc2-ba9b-4bbb-93ab-fac5e3385700/26-6a56199566e04.webp' /></p><p>
</p><p>
 மோதல் சம்பவத்தின் போது இந்த அதிகாரி தனது உயிரையும் பொருட்படுத்தாது, கைதிகளின் அராஜகத் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த சக அதிகாரிகளை மீட்டெடுத்ததோடு சிறைச்சாலைத் திணைக்களத்தின் நற்பெயரையும் காப்பாற்றியிருந்தார்.</p><h2>கைதிகளின் அராஜகத் தாக்குதல்</h2><p>

 இச்சம்பவத்தைத் தொடர்ந்து அவருக்குப் பாதாள உலகக் குழுவினரால் கடுமையான கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்த மரண அச்சுறுத்தல்களில் பெரும்பாலானவை துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p>
</p><p>
தொடர்ச்சியாக விடுக்கப்படும் இந்த அச்சுறுத்தல்கள் காரணமாக அந்த அதிகாரியின் உயிருக்குக் கடும் ஆபத்து நிலவுவதை உணர்ந்த சிறைச்சாலைத் திணைக்கள உயர் அதிகாரிகள், அவரது உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மிக உயர்ந்த பாதுகாப்புப் பிரிவைக் கொண்ட வேறொரு சிறைச்சாலைக்கு அவரைச் சேவை இடமாற்றம் செய்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>
இந் நிலையில் கடமை உணர்வுடன் செயற்பட்ட இந்த துணிச்சலான அதிகாரிக்கு தற்காலிக இடமாற்றம் வழங்குவதுடன் மட்டும் நின்றுவிடாமல், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அரசாங்கம் முறையான மற்றும் நிரந்தரமான விசேட பாதுகாப்பை வழங்க வேண்டும் என ஏனைய சிறைச்சாலை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்</p>]]></content>
            <updated>2026-07-14T11:10:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசை கவிழ்க்க திட்டம் - எதிர்க்கட்சியினருக்கு அமைச்சர் சவால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-plan-to-overthrow-the-anura-government-1784026517"></link>
            <id>https://tamilwin.com/article/a-plan-to-overthrow-the-anura-government-1784026517</id>
            <summary type="text">எத்தனை கூட்டணிகளை அமைத்தாலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை
அசைக்க முடியாது என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
தெரிவித்துள்ளார்.

யா...</summary>
            <content type="html"><![CDATA[<p>எத்தனை கூட்டணிகளை அமைத்தாலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை
அசைக்க முடியாது என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
தெரிவித்துள்ளார்.
</p><p>
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட
கட்டட திறப்பு விழாவிற்கு வருகை தந்த அமைச்சரிடம், தமிழ் முஸ்லீம் கட்சிகளின்
புதிய கூட்டு தொடர்பில் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>எதிர்க்கட்சிகளின் கூட்டணி</h2><p>
</p><p>


மேலும் கருத்து தெரிவிக்கையில்,
</p><p>
தமிழ், முஸ்லிம் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள கூட்டணி என்பது, அது வெறும்
கூட்டு சாம்பாராக மாறும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இடமில்லை என்பது
மக்களுக்கு தெரிந்த விடயம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gSlAKwRzAgY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>இந்தக் கூட்டணி இந்த நாட்டில் இலஞ்சத்தை ஒழிப்பதற்காக, மோசடிகளை ஒழிப்பதற்காக திருடர்களைப் பிடிப்பதற்காக, இதுபோன்ற நல்ல வேலைகளைச் செய்வதற்கான கூட்டணியா? அல்லது
திருடர்களைப் பாதுகாப்பதற்கும், வஞ்சகர்களைப் பாதுகாப்பதற்கும், ஊழல்
மோசடிகளை செய்பவர்களை பாதுகாப்பதற்கான கூட்டணியா என்பது எல்லோருக்கும்
நன்றாகத் தெரியும்.</p><h2>அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடு</h2><p>இந்தக் கூட்டணியில் இருக்கின்றவர்களைப் பார்க்கின்ற பொழுது கடந்த காலங்கள்
நீதிமன்றத்தால் குற்றவாளிகளாகக் காணப்பட்டு இன்றைக்குப் பிணையில் இருக்கின்ற
நபர்கள் தான் அதிகமாக இருக்கின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1534933-54a0-46f5-9cba-90e34b1c7a54/26-6a5618966ee29.webp' /></p><p>

அவ்வாறு பிணையில் இருக்கிறவர்களுக்கு நாளைக்கு கம்பி எண்ணுவதைத் தவிர்க்க முடியாததாகிவிடும், அதனால், சிறைக்குச் செல்வதற்கு முதல்எதையாவது செய்து இந்த அரசாங்கத்தை வீழ்த்தலாமா, அல்லது அரசாங்கத்தை மாற்றலாமா என்கிற முயற்சியில் ஈடுபடுகின்ற ஒரு போக்காகவே இதனைக் காணக்கூடியதாக இருக்கின்றது.</p><p>
எந்த வகையிலும் இவ்வாறான கூட்டணி அல்ல, இதனுடைய அப்பனால் அமைக்கப்படுகின்ற
கூட்டணியாலும், தேசிய மக்கள் சக்தியை அசைக்க முடியாது.

ஏனென்றால், இன்றும் அவர்கள் கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் மக்களோடு கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கின்றோம். மக்களுடைய
செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5006117-89c7-46b6-afe2-29d8d5851fc5/26-6a561895bf862.webp' />&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T11:08:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏ9 வீதியில் இன்று பிற்பகல் கோர விபத்து ஒருவரின் உயிர் பறிபோனது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fatal-accident-one-person-loses-his-life-1784026156"></link>
            <id>https://ibctamil.com/article/fatal-accident-one-person-loses-his-life-1784026156</id>
            <summary type="text">&amp;nbsp;மதவாச்சியா வஹமாலு கொல்லேவ பகுதியில், ஏ9 வீதியில் இன்று பிற்பகல் (14) நடந்த வீதிவிபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மதவாச்சியா வஹமாலு கொல்லேவ பகுதியில், ஏ9 வீதியில் இன்று பிற்பகல் (14) நடந்த வீதிவிபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
</p><p>
உயிரிழந்தவர், மதவாச்சியாவில் உள்ள வஹமாலு கொல்லேவ பள்ளியைச் சேர்ந்த 32 வயது நபர் ஆவார்.
</p><p>
</p><h2>பாரவூர்தி -மோட்டார் சைக்கிள் மோதி விபத்து</h2><p>ஹட்டனில் உள்ள கொட்டகல பகுதியிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற ஒருபாரவூர்தி, மதவாச்சியிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற ஒரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியபோது இந்த விபத்து ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3b3f7d4-5513-4c3d-a239-94906648b160/26-6a56176e65cf7.webp' /></p><p>ஒரு நீதிமன்ற வழக்குக்காக மதவாச்சியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசைப் பாதைக்குச் சென்றபோது இந்த விபத்து சம்பவித்துள்ளது.
</p><p>
பாரவூர்தியின் ஓட்டுநரை காவல்துறை கைது செய்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து மதவாச்சி காவல்துறைபோக்குவரத்துப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T11:03:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[லெனின் திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/lenin-movie-worldwide-box-office-1784024474"></link>
            <id>https://cineulagam.com/article/lenin-movie-worldwide-box-office-1784024474</id>
            <summary type="text">லெனின்தெலுங்கு திரையுலகில் இருந்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் லெனின். இப்படத்தை இயக்குநர் முரளி கிஷோர் இயக்க, அகில் ஹீரோவாக நடித்துள்ளார். இளம் செ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>லெனின்</h2><p>தெலுங்கு திரையுலகில் இருந்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் லெனின். இப்படத்தை இயக்குநர் முரளி கிஷோர் இயக்க, அகில் ஹீரோவாக நடித்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa4d0f4f-75e2-471b-be3a-6de5e4aaf540/26-6a560d9da4a22.webp' /></p><p>இளம் சென்சேஷனல் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ஈஸ்வரி ராவ், ராம்கி, சிவாஜி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p><p></p><h2>வசூல் விவரம்&nbsp;</h2><p> </p><p>

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் <a href="https://www.youtube.com/watch?v=7DutuuflJkE" target="_blank">லெனின் </a>திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், 4 நாட்களில் லெனின் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4488579d-8c3d-4add-8bf0-5b0f7970ae26/26-6a560d9e58f34.webp' /></p><p>அதன்படி, 4 நாட்களில் இப்படம் ரூ. 46 கோடி வசூலித்துள்ளது. விரைவில் ரூ. 100 கோடியை எட்டுமா என்பதை வரும் நாட்களில் பொறுத்திருந்து பார்ப்போம்.</p>]]></content>
            <updated>2026-07-14T11:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எயார்பஸ் சர்ச்சை : இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/srilankan-airlines-airbus-aircraft-deal-ciaboc-1784025154"></link>
            <id>https://ibctamil.com/article/srilankan-airlines-airbus-aircraft-deal-ciaboc-1784025154</id>
            <summary type="text">சிறிலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில்&amp;nbsp;இலஞ்ச ஊழல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில்&nbsp;இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.</p><p>அதன்படி, குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு அந்த ஆணைக்குழுவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டுள்ளது.</p><p>

கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p></p><h2>&nbsp;இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு</h2><p>

வழக்கு விசாரணையின் ஆரம்பத்தில், இந்தச் சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்த அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/630e6fd3-bf5b-4f6e-85e2-8b7ee64a531b/26-6a56132ff35f7.webp' /></p><p> </p><p>

அத்துடன், இந்த விசாரணைகளின் மேலதிக முன்னேற்றங்களை அறிக்கை செய்வதற்காக மற்றுமொரு திகதியை வழங்குமாறு ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்திடம் கோரினர். </p><p>

இதன்போது, வர்த்தகரான நிமால் பெரேரா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி உதார முஹந்திரம்கே, நீதிமன்றத்தில் விடயங்களை சமர்ப்பிக்க அனுமதி கோரினார்.</p><p></p><h2>கபில சந்திரசேன உயிரிழப்பு&nbsp;</h2><p> </p><p>

இருப்பினும், குறித்த நபர் இதுவரையில் இந்த வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்படாததால், அவர் சார்பில் விடயங்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என பிரதம நீதவான் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb4341e2-0566-4a5d-9944-2d056a3d8765/26-6a56132f331ad.webp' /></p><p> </p><p>

இந்த வழக்கின் முதலாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டிருந்த சிறிலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.</p><p> 

வழக்கின் இரண்டாவது சந்தேகபரான அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் மூன்றாவது சந்தேகபரான ஷமிந்திர ராஜபக்ச ஆகியோரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் இதற்கு முன்னர் பிடியாணை பிறப்பித்திருந்தது.</p><p> 

முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்ட பிரதான நீதவான், இந்த வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T10:52:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு அஞ்சுகிறாராம் ஜனாதிபதி அனுர : ஜோன்ஸ்டனின் புதுக்கதை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/anura-kumara-our-namal-is-very-afraid-johnston-1784025236"></link>
            <id>https://ibctamil.com/article/anura-kumara-our-namal-is-very-afraid-johnston-1784025236</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர்,நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு மிகவும் அஞ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர்,நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு மிகவும் அஞ்சுகிறார் என்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
</p><p>
 அனுர குமார திசாநாயக்க தற்போது அந்த அச்சத்தை மறைக்க முடியாத வகையில் நடந்துகொள்கிறார் என்று அவர் குறிப்பிட்டார்.</p><h2>நாமலுக்கு பெருகும் ஆதரவு</h2><p>"அந்த அச்சத்தை வைத்துக்கொள்ளுங்கள், கனவான்களே..." என்று கூறிய ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, தற்போது நாமல் ராஜபக்சவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு நகரக் கடைகளிலும் கிராமப் பேருந்துகளிலும் ஒருமித்த கண்டனத்தை சாமானிய மக்கள் கோரி வருவதாகத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2d19690-227d-4ad1-b726-17bcd8e861c7/26-6a56133e6e40c.webp' /></p><p> </p><p>இன்றைய சமூகத்தில் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவாக உருவாகி வரும் இந்த மாபெரும் மக்கள் போக்கைக் கண்டு எதிர்க்கட்சி அரசியல் குழுக்கள் மிகவும் கவலை கொண்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T10:45:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிராமப்புற நீர்ப்பாசன மேம்பாட்டு திட்டம் தொடர்பான கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussion-on-implementing-the-national-program-1784024649"></link>
            <id>https://tamilwin.com/article/discussion-on-implementing-the-national-program-1784024649</id>
            <summary type="text">கிளிநொச்சி மாவட்டத்தில் சிறிய நீர்ப்பாசன குளங்களைப் புனரமைப்புச் செய்யும் வாரி மஹிம - கிராமப்புற நீர்ப்பாசன மேம்பாட்டு திட்டம் தேசிய வேலைத்திட்டத்தை ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாவட்டத்தில் சிறிய நீர்ப்பாசன குளங்களைப் புனரமைப்புச் செய்யும் வாரி மஹிம - கிராமப்புற நீர்ப்பாசன மேம்பாட்டு திட்டம் தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
</p><p>
குறித்த கலந்துரையாடல் இன்று (14-07-2026) பிற்பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2>முன்னெடுக்கப்படவுள்ள திட்டம்</h2><p> </p><p>

வாரி மஹிம - கிராமப்புற நீர்ப்பாசன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பத்துக் குளங்களை அபிவிருத்தி செய்யும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.</p><p>

இதில் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் உத்தியோகத்தர்கள் பங்கேற்றிருந்தனர்.
</p><p>
அத்துடன் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன், நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T10:43:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் கடலில் மூழ்கிய குழந்தைகள்: காப்பாற்ற முயன்று உயிரிழந்த தந்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/father-die-in-rescue-attempt-in-seaton-carew-1784025751"></link>
            <id>https://news.lankasri.com/article/father-die-in-rescue-attempt-in-seaton-carew-1784025751</id>
            <summary type="text">பிரித்தானிய கடற்கரையில் குழந்தைகளை காப்பாற்ற முயன்ற தந்தை மற்றும் அந்நிய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலில் மூழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானிய கடற்கரையில் குழந்தைகளை காப்பாற்ற முயன்ற தந்தை மற்றும் அந்நிய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> கடலில் மூழ்கிய குழந்தைகள்</h2><p>
ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவின் சீட்டன் கேரு(Seaton Carew) கடற்கரையில் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென உருவான பெரிய அலையில் சிக்கி ஆபத்தான நிலைக்கு இழுத்து செல்லப்பட்டனர்.</p><p> பிற்பகல் 3.45 மணி அளவில் நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து, கடற்கரையில் இருந்த குழந்தைகளின் தந்தை மற்றும் அந்நிய நபர்கள் 3 பேர் உடனடியாக கடலுக்குள் இறங்கி குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.</p><p> இறுதியில் கடலில் சிக்கிய இரண்டு குழந்தைகளும் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டனர்.</p><p></p><p> அவருக்கு பெரிய காயங்கள் எதுவும் ஏற்படாத நிலையிலும், முன்னெச்சரிக்கையாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b01fd79-1a46-4504-aeaf-bc497b19fabd/26-6a561298b446b.webp' /></p><h2> தந்தை உயிரிழப்பு</h2><p>
இந்த சம்பவத்தில் குழந்தைகளை காப்பாற்ற முயன்ற தந்தை வெய்ன் டெய்லர் மற்றும் பெயர் தெரியாத மற்றொரு நபர் நீரில் மூழ்கி துரதிஷ்டவசமாக உயிரிழந்தனர்.</p><p> சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த RNLI மீட்பு குழுவினர் இருவரையும் மீட்ட நிலையிலும், அவர்களை காப்பாற்ற முடியவில்லை என அறிவித்துள்ளனர்.</p><p> குழந்தைகளை காப்பாற்ற முயன்று உயிரிழந்த இரண்டாவது நபர், கடற்கரைக்கு தன்னுடைய செல்லப்பிராணியுடன் நடைபயிற்சிக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-14T10:42:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோஜ்தபா கொமெய்னி உயிர் பிழைப்பதற்கு 90 சதவிகிதம் வாய்ப்பில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/90-percent-mojtaba-khomeini-will-not-survive-1784016137"></link>
            <id>https://canadamirror.com/article/90-percent-mojtaba-khomeini-will-not-survive-1784016137</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரானின் ஆன்மீக தலைவர் மோஜ்தபா கொமெய்னி உயிர் பிழைப்பதற்கு 90 சதவிகிதம் வாய்ப்பில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளமை பர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரானின் ஆன்மீக தலைவர் மோஜ்தபா கொமெய்னி உயிர் பிழைப்பதற்கு 90 சதவிகிதம் வாய்ப்பில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>


அமெரிக்கா - ஈரான் இடையே உச்சகட்டப் போர்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில், “ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களுக்கு அமெரிக்கா இனி பாதுகாப்பு அளிக்கும். ஆனால், அச்செலவினங்களுக்கு ஈடாக அவ்வழியாகக் கொண்டு செல்லப்படும் சரக்குகளுக்கு 20 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும்” என்று ட்ரம்ப் நேற்று அறிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00b633ed-6f65-4509-af10-6e12bb218a71/26-6a55ed10b40ea.webp' /></p><h2>&nbsp;இறுதிச் சடங்கு நிகழ்வில் கூட கலந்துகொள்ளவில்லை&nbsp;</h2><p>


இது தொடர்பாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்தின் நேர்காணலில் பேசிய ட்ரம்ப் தெரிவித்ததாவது:



“ஈரானின் கடற்படை, விமானப்படை என அனைத்தும் அழிந்துவிட்டன. அவர்களின் வான்வழித் தடுப்பு அமைப்புகள் செயலிழந்துவிட்டன. </p><p>அவர்களின் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர். கொமெய்னி இறந்துவிட்டார். மோஜ்தபா கொமெய்னி உயிர் பிழைக்க 90 சதவிகிதம் வாய்ப்பில்லை” எனத் தெரிவித்தார்.
</p><p>


ஈரானின் ஆன்மீக தலைவர் அயதுல்லா அலி கொமெய்னி, அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட பிறகு, அவரது மகன் மோஜ்தபா கொமெய்னி, புதிய ஆன்மீக தலைவராக அறிவிக்கப்பட்டார்.</p><p>



இந்நிலையில், அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல் ஒன்றில் மோஜ்தபா கொமெய்னியும் பலத்த காயமடைந்ததாகவும், தற்போது சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.



இதன்காரணமாக, ஈரான் மற்றும் இராக்கில் கடந்த வாரம் நடைபெற்ற அயதுல்லா அலி கொமெய்னியின் இறுதிச் சடங்கு நிகழ்வில் கூட அவர் கலந்துகொள்ளவில்லை.
</p><p>


இந்த சூழலில், மோஜ்தபா கொமெய்னி 90 சதவிகிதம் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என ட்ரம்ப் கூறியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-14T10:33:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முகநூல் நேரலையில் தன்னுயிரை மாய்த்த நபர்; சம்பவத்தால் ஷாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-takes-his-own-life-during-facebook-live-1784017930"></link>
            <id>https://jvpnews.com/article/man-takes-his-own-life-during-facebook-live-1784017930</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;காலி கரந்தெனிய, தல்காவத்தை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர், தனது முகநூல் நேரலையில் தன்னுயிரை மாய்த்துக் செய்துகொண்ட சம்பவம் தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;காலி கரந்தெனிய, தல்காவத்தை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர், தனது முகநூல் நேரலையில் தன்னுயிரை மாய்த்துக் செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் கரந்தெனியப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>
உயிரிழந்தவர் தினேஷ் விஜேவர்தன என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் அண்மையில் பல ஆண்டுகள் தென் கொரியாவில் பணிபுரிந்துவிட்டு இலங்கை திரும்பியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20c56f90-ab75-454a-88fd-b76ad321a274/26-6a55f40c09595.webp' /></p><h2>நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த போது தற்கொலை</h2><p>
</p><p>
பொலிஸாரின் தகவல்படி, இச்சம்பவம் ஜூலை 12 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது. அந்த நபர் முகநூல் நேரலையில் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த போதே, தற்கொலை செய்துகொண்டுள்ளார்.</p><p></p><p>

அவசர கால அழைப்பு இலக்கமான ‘119’ இற்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்தே தாங்கள் விசாரணைகளை ஆரம்பித்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> 

சடலம் பிரேதப் பரிசோதனைக்காக எல்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T10:32:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[6 தலைமுறைகள் - 83 பேர்... ஒற்றுமையாக வாழும் அதிசயக் கூட்டுக் குடும்பம்! எங்கு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/andhra-pradesh-6-generations-83-members-family-1784022436"></link>
            <id>https://manithan.com/article/andhra-pradesh-6-generations-83-members-family-1784022436</id>
            <summary type="text">நவீன காலத்தில் கூட்டுக் குடும்பங்கள் குறைந்து, தனிக்குடித்தன வாழ்க்கை அதிகரித்து வரும் சூழலில், ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 6 தலைமுறைகளாக 83 பேர் ஒரே ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவீன காலத்தில் கூட்டுக் குடும்பங்கள் குறைந்து, தனிக்குடித்தன வாழ்க்கை அதிகரித்து வரும் சூழலில், ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 6 தலைமுறைகளாக 83 பேர் ஒரே கூட்டுக் குடும்பமாக ஒற்றுமையுடனும் அன்புடனும் வாழ்ந்து வரும் சம்பவம் பலரையும் ஆச்சரியத்திலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.</p><p>
</p><p>
ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டம், குர்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகப்பா குடும்பம்தான் இந்த அபூர்வமான ஒற்றுமைக் குடும்பமாகத் திகழ்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac13d4be-5be6-4750-95ea-dda475c83768/26-6a5609221c625.webp' /></p><p></p><h2>வியக்க வைத்த கூட்டுக் குடும்பம்</h2><p>குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அனைவரும் வசதிக்காக ஒன்றுக்கொன்று அடுத்ததாக அமைந்துள்ள நான்கு வீடுகளில் வசிக்கின்றனர். ஆனால், வாழ்வியல் முறையிலும் குடும்ப நிர்வாகத்திலும் அவர்கள் ஒரே குடும்பமாகவே செயல்பட்டு வருகின்றனர்.</p><p>
இந்தக் குடும்பத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், 83 பேருக்குமான உணவும் ஒரே சமையலறையில்தான் தினமும் தயாரிக்கப்படுகிறது. குடும்பத்தின் மருமகள்கள் அனைவரும் முழு ஒற்றுமையுடன் சமையல் உள்ளிட்ட வீட்டுப் பொறுப்புகளைப் பகிர்ந்து செய்து வருகின்றனர்.</p><p> வயது, திறமை மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளதால், குடும்ப நிர்வாகம் எந்தச் சிக்கலும் இன்றி சீராக நடைபெறுகிறது.

குடும்பத்தின் மூத்தோர் அனைவரும் ஆலோசனைகளின் மூலம் குடும்பத்தை ஒற்றுமையுடன் வழிநடத்துகின்றனர். </p><p>இளைஞர்கள் விவசாயம் மற்றும் குடும்பத் தொழில்களை முழுப் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் கவனித்து வருகின்றனர். இதனால் தலைமுறைகள் மாறினாலும் குடும்பத்தின் ஒற்றுமை மற்றும் பாரம்பரியம் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba2837a5-38da-4e50-938e-26927718233f/26-6a560922c58b5.webp' /></p><p></p><p>

இந்த மாபெரும் கூட்டுக் குடும்பத்திற்குச் சொந்தமாக 120 ஏக்கர் விவசாய நிலமும், 4 பேருந்துகளும் உள்ளன. இவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் யாருக்கும் தனித்தனியாகப் பிரிக்கப்படாமல், முழுமையாக ஒரே பொதுக் கணக்கில் சேர்க்கப்பட்டு குடும்பத்தின் தேவைகளுக்காக வெளிப்படையான முறையில் பயன்படுத்தப்படுகிறது.</p><p>

இன்றைய வேகமான வாழ்க்கை முறையிலும், தனிமனிதச் சிந்தனைகள் மேலோங்கும் காலத்திலும், அன்பு, விட்டுக்கொடுத்தல், பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் மூலம் ஒரு பெரிய குடும்பத்தை வெற்றிகரமாக வழிநடத்த முடியும் என்பதை இந்தக் குடும்பம் நிரூபித்துக் காட்டியுள்ளது.</p><p> இவர்களின் அசைக்க முடியாத குடும்ப ஒற்றுமை சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, ஆயிரக்கணக்கானோரின் பாராட்டுகளையும் நெகிழ்ச்சியான வாழ்த்துகளையும் பெற்று வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b> &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T10:30:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விளக்கமறியல் நீடிப்பு; யாழில் சிறை உத்தியோகத்தர் மீது கைதி தாக்குதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/prisoner-attacks-prison-officer-in-jaffna-1784025101"></link>
            <id>https://jvpnews.com/article/prisoner-attacks-prison-officer-in-jaffna-1784025101</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் விளக்கமறியல் கைதியொருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் விளக்கமறியல் கைதியொருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
</p><p>
தாக்குதலுக்கு உள்ளான சிறைச்சாலை உத்தியோகஸ்தர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/007f8ef3-ec93-4a19-89e2-ef5a3e7fe8d2/26-6a56100f4e605.webp' /></p><p></p><p>
</p><p>
போதைப்பொருள் வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதியொருவர் நேற்றைய தினம் (13) நீதிமன்ற வழக்கு விசாரணை நடைபெற்ற போது , குறித்த நபரின் விளக்கமறியலை நீதிமன்று நீடித்து உத்தரவிட்டது.</p><p></p><p>
</p><p>
இதனை அடுத்து விளக்கமறியல் கைதியை மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து சென்ற போது, குறித்த நபர் சிறைச்சாலை உத்தியோகஸ்தர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.</p><p>

தாக்குதலில் காயமடைந்த சிறைச்சாலை உத்தியோகஸ்தர் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T10:30:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புடவையை கிளாமராக அணிந்து பாக்யஸ்ரீ போர்ஸே எடுத்த போட்டோ ஷுட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/bhagyashri-borse-glamorous-saree-photoshoot-1784023795"></link>
            <id>https://cineulagam.com/article/bhagyashri-borse-glamorous-saree-photoshoot-1784023795</id>
            <summary type="text">பாக்யஸ்ரீ போர்ஸேபாக்யஸ்ரீ போர்ஸே, ரசிகர்கள் அதிகம் கவனிக்கும் நடிகைகளில் ஒருவர். இவர் நடித்த காந்தா படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது, ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பாக்யஸ்ரீ போர்ஸே</h2><p>பாக்யஸ்ரீ போர்ஸே, ரசிகர்கள் அதிகம் கவனிக்கும் நடிகைகளில் ஒருவர். </p><p>இவர் நடித்த காந்தா படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது, ஓப்பனிங் பெரிய அளவில் இருந்தது. </p><p>கிளாமர்-ஹோம்லி என இரண்டிலும் கலக்கி வரும் பாக்யஸ்ரீ தனது இன்ஸ்டாவில் சுமார் 25 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார்.
அண்மையில் இவர் செம கிளாமராக புடவை அணிந்து அழகிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார் பாக்யஸ்ரீ.</p><p> இதோ அந்த போட்டோஸ்,</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T10:30:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீலநிற சேலையில் கிளாமர் கிளிக்ஸ்!! சேயோன் பட நடிகை பாக்யஸ்ரீயின் புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/seyon-actress-bhagyashri-borse-recent-click-1784024077"></link>
            <id>https://viduppu.com/article/seyon-actress-bhagyashri-borse-recent-click-1784024077</id>
            <summary type="text">இந்தியில் ஒருசில படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து பிரபலமாகி நடிகர் ரவி தேஜா நடித்த மிஸ்டர் பச்சன் படத்தின் மூலம் கதாநாயகியாக தெலுங்கு மொழியில் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியில் ஒருசில படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து பிரபலமாகி நடிகர் ரவி தேஜா நடித்த மிஸ்டர் பச்சன் படத்தின் மூலம் கதாநாயகியாக தெலுங்கு மொழியில் அறிமுகமாகினார் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸே. இப்படத்தில் தன்னுடைய முதல் SIIMA விருதினை பெற்றார் பாக்யஸ்ரீ. </p><p>இப்படத்தினை தொடர்ந்து , கிங்டம், காந்தா, ஆந்திரா கிங் தாலுகா என்ற படங்களிலும் நடித்து பிரபலாமானர் பாக்யஸ்ரீ போர்ஸே.
</p><p>
தென்னிந்திய சினிமாவில் 26 வயதில் சென்ஷேஷ்னல் நடிகையாக உலாவரும் நடிகை பாக்யஸ்ரீ, தெலுங்கில் லெனின் என்ற படத்தில் நடித்து ஜூலை 10 ஆம் தேதி வெளியாகி பலரது கவனத்தையும் பெற்றார், சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
</p><p>
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பாக்யஸ்ரீ, நீலநிற சேலையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-14T10:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைக் கலவரத்தின் பின்னணியில் உள்ள சதித்திட்டங்கள் : விசாரணைகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/conspiracies-behind-the-negombo-prison-conflict-1784021647"></link>
            <id>https://ibctamil.com/article/conspiracies-behind-the-negombo-prison-conflict-1784021647</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோதல் குறித்து&amp;nbsp;சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்ஸக விஜேமுனி கருத்து வெளியிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோதல் குறித்து&nbsp;சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்ஸக விஜேமுனி கருத்து வெளியிட்டுள்ளார்.</p><p>அதன்படி, குறித்த மோதலின் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டங்கள் அடங்கிய செயற்பாடுகள் காணப்பட்டதா என்பது குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.</p><p>

கண்டியில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>சிறைச்சாலைகளில் அதிக நெரிசல்&nbsp;</h2><p>தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,&nbsp; நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டம் இருந்ததா? என்பது குறித்து தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த விசாரணைகளின் முன்னேற்றத்தின் அடிப்படையிலேயே எம்மால் உறுதியாகக் கூற முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7104383-0891-45fe-84b0-1ac05f32cf67/26-6a560d29529c2.webp' /></p><p> சிறைச்சாலைகளில் உள்ள அதிக நெரிசல் நீண்டகாலமாக நிலவி வரும் ஒரு பிரச்சினையாகும். சிறைச்சாலைக்குள் பல பிரச்சினைகள் உருவாகின்றன.</p><p> வழக்குகள் தேவையற்ற முறையில் தாமதமடைதல், அறிக்கைகள் கிடைக்காமை, போதைப்பொருள் கைதுகள் அதிகரிப்பு ஆகியன சிறைச்சாலை நெரிசல் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளன.</p><p></p><h2>தற்காலிக நடவடிக்கை&nbsp;</h2><p>காலி மஹமோதர பழைய வைத்தியசாலை, கண்டி போகம்பரை சிறைச்சாலை ஆகிய இரண்டையும் நாங்கள் சிறைச்சாலைகளாக தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பவை அல்ல. எமக்கு வேறு திட்டங்கள் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f67bf3e2-df55-47fe-a714-fa95efcfb06a/26-6a560cf6844a0.webp' /></p><p> </p><p>ஆனால் இந்த நேரத்தில் உடனடி நடவடிக்கையாக சில மாதங்களுக்கு மட்டுமே அந்தப் படியை எடுத்தோம். சில மாதங்களுக்கு மட்டுமே அந்த இடங்களில் சிறைச்சாலைகள் நடத்தப்படும். தீர்வுகள் கிடைக்கும் போது அந்த இரண்டு சிறைச்சாலைகளும் நீக்கப்படும்" என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T10:22:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் பிரசன்னவின் வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prasannas-foreign-travel-ban-temporarily-lifted-1784023612"></link>
            <id>https://ibctamil.com/article/prasannas-foreign-travel-ban-temporarily-lifted-1784023612</id>
            <summary type="text">&amp;nbsp;ஊழல் குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மீது விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஊழல் குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மீது விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (14) முடிவு செய்தது.</p><p>

முன்னாள் அமைச்சர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா விடுத்த கோரிக்கையைப் பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><h2>சட்டத்தரணி விடுத்த கோரிக்கையும் நீதிமன்றின் அனுமதியும்</h2><p>&nbsp;சந்தேக நபர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாடு செல்ல வேண்டியிருப்பதால் அவர் மீதான வெளிநாட்டுப் பயணத் தடையை இன்றிலிருந்து ஓகஸ்ட் 02 வரை தற்காலிகமாக நீக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75ad96f0-4b29-4a5f-a262-ac70b8af28d5/26-6a560d1dd0ee8.webp' /></p><p>
</p><p>

இதனையடுத்து அவர் மீதான பயணத்தடையை நீதிமன்றம் தற்காலிகமாக நீக்கியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T10:19:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹீரோவாக களமிறங்கும் முதலமைச்சர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்; வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cm-vijay-son-jason-sanjay-set-to-debut-as-a-hero-1784024297"></link>
            <id>https://jvpnews.com/article/cm-vijay-son-jason-sanjay-set-to-debut-as-a-hero-1784024297</id>
            <summary type="text">தமிழகத்தின் முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்&amp;nbsp;&amp;nbsp;ஹீரோவாக நடிக்க உள்ளதாக&amp;nbsp; இந்திய&amp;nbsp; ஊடகங்கள் தெரிவித்துள்ளன.&amp;nbsp;&amp;nbsp; விஜய் நடித...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகத்தின் முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்&nbsp;&nbsp;ஹீரோவாக நடிக்க உள்ளதாக&nbsp; இந்திய&nbsp; ஊடகங்கள் தெரிவித்துள்ளன.&nbsp;&nbsp;</p><p> விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு வந்து நடனமாடியிருப்பார் ஜேசன் சஞ்சய் . அப்ப பெரிய நடிகராக இருந்ததால் எப்படியும் பின்னாளில் ஜேசன் சஞ்சய் நடிகராக வருவார் என எல்லோரும் எதிர்பார்த்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/792348d2-96a7-4d48-93b7-56cf1f26ba70/26-6a560ceb2fc4f.webp' /></p><p>
</p><p>
ஆனால், அவரோ இயக்குனராக களமிறங்கி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தினார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷனை வைத்து சிக்மா என்கிற படத்தை இயக்கினார் ஜேசன் சஞ்சய்.</p><p></p><p> </p><p>

அவருக்கு நடிப்பில் ஆரமில்லை என சொல்லப்பட்டாலும் சிக்மா படத்தின் புரமோஷன் பாடலில் பர்பாமன்ஸும் செய்திருந்தார் ஜேசன்.

ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா திரைப்படம் வருகிற ஆகஸ்டு மாதம் இறுதியில் வெளியாகும் எனத்தெரிகிறது.</p><p> 

இந்நிலையில்தான், எல்லோரும் எதிர்பார்த்தபடி ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியிருக்கிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T10:16:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[2030இற்குள் சுற்றுலாப் பயணிகளுக்கான செலவினத்தை அதிகரிக்க முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/higher-tourist-spending-by-2030-1784020086"></link>
            <id>https://tamilwin.com/article/higher-tourist-spending-by-2030-1784020086</id>
            <summary type="text">பொருளாதாரத்திற்கு சுற்றுலாத் துறையின் பங்களிப்பை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 2030ஆம் ஆண்டிற்குள் சராசரி சுற்றுலாப் பயணிகளின் செலவினத்தை கண...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொருளாதாரத்திற்கு சுற்றுலாத் துறையின் பங்களிப்பை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 2030ஆம் ஆண்டிற்குள் சராசரி சுற்றுலாப் பயணிகளின் செலவினத்தை கணிசமாக அதிகரிப்பதை இலங்கை நோக்கமாகக் கொண்டுள்ளது என சுற்றுலா பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>
 

களுத்துறை மாவட்ட செயலகத்தில் மாவட்டத்தின் சுற்றுலாத் தொழிலை வலுப்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதி அமைச்சர் ரணசிங்க, நாட்டில் தங்கியிருக்கும் போது பார்வையாளர்கள் செலவிடும் தொகையை அதிகரிப்பதற்கான திட்டங்களை அரசாங்கம் வகுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>சுற்றுலாப் பயணிகளின் செலவினங்கள்&nbsp;</h2><p>

 

2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் 171 அமெரிக்க டொலராகப் பதிவான நிலையில், தற்போது ஒரு சராசரி சுற்றுலாப் பயணி சுமார் 148 அமெரிக்க டொலரைச் செலவிடுகிறார் என்று அவர் கூறியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d0e3dfc-7953-4ad2-870d-9691a3bdb26a/26-6a560c2c6f5be.webp' /></p><p>கொவிட்-19 பெருந்தொற்றைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் நடத்தை மற்றும் செலவின முறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து, அரசாங்கம் பதவியேற்ற பின்னர் ஓர் ஆய்வை நடத்தியதாக பிரதி அமைச்சர் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>
 

சுற்றுலாப் பயணிகளின் செலவினங்களை அதிகரிப்பதற்கு, ஒட்டுமொத்த வருகையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதே முக்கியமானது என்றும், அந்த இலக்கை அடைவதற்குத் திட்டமிட்ட மற்றும் முறையான அணுகுமுறை தேவைப்படும் என்றும் கூறியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T10:16:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் விற்பனை செய்த இளைஞருக்கு மன்னார் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mannar-high-court-man-wattala-to-life-imprisonment-1784019209"></link>
            <id>https://tamilwin.com/article/mannar-high-court-man-wattala-to-life-imprisonment-1784019209</id>
            <summary type="text">5 கிராமுக்கும் அதிகமாக ஐஸ் போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ், கைது செய்யப்பட்டிருந்த நபர் ஒருவருக்கு மன்னால் மேல...</summary>
            <content type="html"><![CDATA[<p>5 கிராமுக்கும் அதிகமாக ஐஸ் போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ், கைது செய்யப்பட்டிருந்த நபர் ஒருவருக்கு மன்னால் மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.&nbsp;</p><p>இந்த வழக்கு கடந்த (01.07.2026) திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்த வழக்கின் அனைத்து பரிமாணங்களையும், சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகளையும் மிக ஆழமாக ஆராய்ந்த மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி, குற்றச்சாட்டுகள் அனைத்தும் நியாயமான முறையில் நிரூபிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்திருந்தார்.</p><p></p><h2>ஆயுள் தண்டனை</h2><p>
</p><p>
கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் திகதி, 5 கிராமுக்கும் அதிகமான
'ஐஸ்' போதைப் பொருளைத் தன் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழும், அதனை
விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழும் கைது செய்யப்பட்ட நபர் வத்தளை பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efb73e11-64b4-4493-8636-2e2257d15c02/26-6a55ff2ae9bdf.webp' /></p><p>
</p><p>
குறித்த வழக்கின் விசாரணைகள் மன்னார் நீதிமன்றில் இடம் பெற்று வந்த நிலையில்,
குற்றவாளிக்கு எதிரான சாட்சியங்களையும் சான்றுகளையும் அரச சட்ட வாதிகளான தேவ
விதுரன் மற்றும் ஆறுமுகம் தனுஷன் ஆகியோர் நெறிப்படுத்தி நீதிமன்றத்தின் முன்
சமர்ப்பித்திருந்தனர்.
</p><p>இதேவேளை,&nbsp; அரசு தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும், குற்றவாளியின்
மீதான குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதாக அமைந்திருந்தன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T10:12:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[NPP நகர சபை உறுப்பினர் பதவி ராஜினாமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/badulla-npp-city-council-member-resigns-1784023426"></link>
            <id>https://jvpnews.com/article/badulla-npp-city-council-member-resigns-1784023426</id>
            <summary type="text">பதுளை மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் (NPP) நகர சபை உறுப்பினர் மஹிந்த குணசேகர தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 

தனிப்பட்ட காரணம் நிமித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதுளை மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் (NPP) நகர சபை உறுப்பினர் மஹிந்த குணசேகர தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
</p><p>
 

தனிப்பட்ட காரணம் நிமித்தமே அவர் இவ்வாறு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92aa7a2c-1459-40e1-8331-2d7024742bd8/26-6a5609840a919.webp' /></p><p>

 

இதன் மூலம் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக, பதுளை மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் புதிய நகர சபை உறுப்பினராக ஜயசேன ரத்நாயக்க நேற்று (13) ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-14T10:02:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய வசூல் சாதனை படைத்த ‘மைக்கேல்’.. பாக்ஸ் ஆபிஸில் இப்படம் தான் நம்பர் 1]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/michael-crossed-1-billion-at-the-global-box-office-1784021927"></link>
            <id>https://cineulagam.com/article/michael-crossed-1-billion-at-the-global-box-office-1784021927</id>
            <summary type="text">மைக்கேல்&amp;nbsp;நடனத்தின் கடவுளாக ரசிகர்களால் பார்க்கப்படும் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தை இயக்குநர் Antoine Fuqu...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மைக்கேல்&nbsp;</h2><p>நடனத்தின் கடவுளாக ரசிகர்களால் பார்க்கப்படும் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தை இயக்குநர் Antoine Fuqua இயக்கியிருந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1f03f95-4074-4cf9-b922-3faecc1161fb/26-6a5603aa5f624.webp' /></p><p></p><p>ஹீரோவாக ஜாஃபர் ஜாக்சன் நடிக்க ஜான் லோகன் இப்படத்திற்கு திரைக்கதை வடிவமைத்திருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் சாதனையை படைத்துள்ளது.</p><h2>வசூல் சாதனை</h2><p>
</p><p>
ஆம், மைக்கேல் திரைப்படம் உலகளவில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் வசூலித்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 9,533 கோடி <a href="https://www.youtube.com/watch?v=1LKorLUYf30" target="_blank">வசூல் </a>செய்து சாதனை படைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95e29116-1311-4d9a-8c87-57d4689ff4e4/26-6a5603ab13876.webp' /></p><p>

இதன்மூலம் ஓப்பன்ஹெய்மர், போஹிமியன் ராபிசோடி படங்களின் சாதனைகளை முறியடித்து, அதிக வசூல் செய்த பயோபிக் திரைப்படமாக மைக்கேல் உருவெடுத்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T10:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை ஆணையாளருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த மாநகர சபை ஊழியர் சிறையிலடைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/death-threat-to-kalmunai-commissioner-1784022973"></link>
            <id>https://ibctamil.com/article/death-threat-to-kalmunai-commissioner-1784022973</id>
            <summary type="text">கல்முனை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபைகளின் ஆணையாளர் என்.எம்.
நெளபீஸுக்குக் கடமை நேரத்தில் உயிர் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில்
கைது செய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபைகளின் ஆணையாளர் என்.எம்.
நெளபீஸுக்குக் கடமை நேரத்தில் உயிர் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில்
கைது செய்யப்பட்ட கல்முனை மாநகர சபை ஊழியரை 02 சரீரப் பிணைகளில்
விடுவிப்பதற்கு கல்முனை நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம்.சாஜித்
உத்தரவிட்டுள்ளார்.</p><p>

குறித்த சந்தேகநபரை 02 சரீரப் பிணைகளில் செல்ல நீதிமன்றம்
உத்தரவிட்டிருந்த போதிலும், நீதிமன்ற வேலை நேரத்திற்குள் உரிய முறையில் பிணை
எடுக்கத் தவறியமையினாலேயே அவர் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.</p><p>

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கல்முனை மாநகர சபைக்குள் வைத்து, அதன்
ஆணையாளர் என்.எம். நெளபீஸை அதே சபையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கடமை
நேரத்தில் அச்சுறுத்தியுள்ளார்.</p><p></p><h2>நீதிமன்றில் முன்னிலை&nbsp;</h2><p> </p><p>இச்சம்பவம் தொடர்பாக ஆணையாளரினால் கல்முனை
தலைமையக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து காவல்துறையால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, சந்தேகநபரான ஊழியர்
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c656a68-8058-4002-a30a-e79c1a1cc2b4/26-6a5607beeb451.webp' /></p><p>
இந்த வழக்கானது கடந்த திங்கட்கிழமை (13) கல்முனை நீதிமன்ற நீதிவான்
கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p> இதன்போது
நீதிமன்றில் முன்னிலையான இருதரப்புச் சமர்ப்பணங்களையும் நீதிவான் விரிவாக
ஆராய்ந்தார்.

அதனைத் தொடர்ந்து, சந்தேகநபரை 02 சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்கு நீதிவான்
உத்தரவிட்டார். </p><p>எனினும், நீதிமன்ற நேரம் முடிவடையும் வரை சந்தேகநபர் சார்பில்
பிணை எடுப்பதற்கு எவரும் முன்வராத காரணத்தினால், அவர் சிறைச்சாலைக்குக் கொண்டு
செல்லப்பட்டார்.</p><p>

மேலும், இந்த வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி
வரை ஒத்திவைப்பதாகவும் கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T09:56:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெட்ஷீட், தலையணை உறையை எப்போது துவைக்கிறீங்க? எச்சரிக்கை பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/how-often-should-bedsheets-and-pillowcases-washed-1784019207"></link>
            <id>https://manithan.com/article/how-often-should-bedsheets-and-pillowcases-washed-1784019207</id>
            <summary type="text">படுக்கை விரிப்பு, தலையணை உறையினை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை துவைக்க வேண்டும்? அதனால் நன்மைகள் என்ன? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.பொதுவாக ஒரு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>படுக்கை விரிப்பு, தலையணை உறையினை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை துவைக்க வேண்டும்? அதனால் நன்மைகள் என்ன? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.</p><p>பொதுவாக ஒரு மனிதர் தனது வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதியை படுக்கைக்கு தான் செலவிடுகின்றனர். அவ்வாறு நாம் அதிகமாக பயன்படுத்தும் படுக்கை சுத்தமாக இருந்தால் தான் நல்ல தூக்கத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் பெற முடியும்.</p><p>தூங்கி எழும்பிய பின்பு படுக்கையை சரியான ஒழுங்கு செய்து வைத்துவிட்டு செல்கின்றோம். ஆனால் அதனை எப்பொழுது துவைக்கின்றோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83489b1f-f825-489f-ad9d-b349cc0737c5/26-6a5607b3b19e9.webp' /></p><p>அதிகமான நாட்கள் துவைக்காமல் பயன்படுத்தினால், உடல் எண்ணெய், வியர்வை, இறந்த சரும செல்கள், தூசிப் பூச்சிகள், பாக்டீரியா, பூஞ்சை என துணிகளில் படிந்து கொண்டே செல்லும்.</p><p>இதனால் தோல் அரிப்பு, ஒவ்வாமை, முகப்பரு, மூச்சுத்திணறல், துர்நாற்றம், சரியாமல் தூங்கமுடியாத பிரச்சனைகள் ஏற்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75795d82-0828-44b1-abec-c50591877d44/26-6a5607b45f2c6.webp' /></p><p></p><h2>எத்தனை நாட்களுக்குள் துவைக்க வேண்டும்?</h2><p>படுக்கை விரிப்பினை வாரத்திற்கு ஒருமுறை கட்டாயம் துவைக்க வேண்டும். அதிலும் அதிகமாக வியர்ப்பவர்கள், ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள், குழந்தைகள் இவர்கள் எனில் 3 நாட்களுக்கு ஒருமுறை கட்டாயம் துவைக்கவும்.</p><p>அதுவே தலையணை உறையினை 3 நாட்களுக்கு ஒருமுறை மாற்றவும். அவ்வாறு இல்லையெனில் அதிகபட்சம் வாரத்திற்கு ஒருமுறையாவது துவைத்து சுத்தம் செய்யவும்.</p><p>துவைக்கும் போது வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைத்து துவைப்பது சிறந்தது. ஏனெனில் அதில் படிந்திருக்கும் பாக்டீரியா, கிருமிகள் அழியுமாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22025902-f38f-4332-a513-0ff26c9b4e8f/26-6a5607b50d0f2.webp' /></p><p>அதிகமாக வியர்ப்பவர்கள், ஒவ்வாமை பிரச்சனை, சளி, காய்ச்சல், ஆஸ்துமா போன்ற பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி துவைப்பது அவசியம்.</p><p>இவ்வாறு அடிக்கடி துவைத்து பயன்படுத்தும் போது தரமான தூக்கத்தையும், உடல்நலத்தில் மிகப்பெரிய மாற்றத்தினையும் பெறுவீர்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T09:56:11+00:00</updated>
        </entry>
    </feed>
