<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-15T23:40:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான நிலையங்கள் மற்றும் ஓடுபாதைகளுக்கு அருகில் பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறு அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/notice-to-avoid-landing-near-airports-and-runways-1784158506"></link>
            <id>https://jvpnews.com/article/notice-to-avoid-landing-near-airports-and-runways-1784158506</id>
            <summary type="text">வானூர்திகளின் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய நிலை காணப்படுவதால், வானூர்தி நிலையங்கள் மற்றும் ஓடுபாதைகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வானூர்திகளின் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய நிலை காணப்படுவதால், வானூர்தி நிலையங்கள் மற்றும் ஓடுபாதைகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை வான்படை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.</p><p>
</p><p></p><p>வான்படை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பட்டங்களின் நூல் அல்லது பட்டங்கள் வானூர்திகளின் பறப்பு மற்றும் தரையிறக்க நடவடிக்கைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதால், இத்தகைய செயல்கள் விமானப் பாதுகாப்பை கடுமையாக பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2a24a21-1f9b-4aed-a6d3-c4f14db67001/26-6a58192c6e953.webp' /></p><p>குறிப்பாக, வானூர்திகள் புறப்படும் மற்றும் தரையிறங்கும் நேரங்களில், ஓடுபாதைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டம் விடுவது எதிர்பாராத விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதால், பொதுமக்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், விமானப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், வானூர்தி நிலையங்களுக்கு அண்மைய பகுதிகளில் பட்டம் விடுவதை முற்றிலும் தவிர்த்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் இலங்கை வான்படை கேட்டுக்கொண்டுள்ளது.
</p><p>
விமானப் பாதுகாப்பு என்பது அனைவரின் பொறுப்பாகும் என்பதால், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட்டு பாதுகாப்பான வான்பயண சூழலை பேணுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் வான்படை வலியுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T23:35:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஶ்ரீலங்கா கிரிக்கெட் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அதிரடி முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cricket-decision-regarding-sri-lankan-cricket-1784158052"></link>
            <id>https://jvpnews.com/article/cricket-decision-regarding-sri-lankan-cricket-1784158052</id>
            <summary type="text">ஶ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) தொடர்பான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாகக் குழுவின் தீர்மானம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எடின்பரோவில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஶ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) தொடர்பான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாகக் குழுவின் தீர்மானம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p>
</p><p></p><p>எடின்பரோவில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஆண்டு கூட்டங்களின் முடிவில், ஶ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பான தற்போதைய நிலை குறித்து ஆராயப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0584c05f-2405-4386-a0a8-0dc4f0872524/26-6a581765aadd5.webp' /></p><p>

இதன்போது, ஶ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பைத் தயாரிப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை சர்வதேச கிரிக்கெட் பேரவை அங்கீகரித்துள்ளது.
</p><p>
இந்த முன்னேற்றங்கள் திருப்திகரமாக இருந்தாலும், ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிர்வாக சிக்கல்கள் முற்றாகத் தீர்க்கப்படும் வரை மற்றும் தேர்தல்கள் நடைபெறும் வரை, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டங்களில் ஶ்ரீலங்கா கிரிக்கெட் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான தடை தொடரும் என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

குறிப்பாக, தேர்தல்களை "முடிந்தவரை விரைவில்" நடத்த வேண்டும் என்பதை சர்வதேச கிரிக்கெட் பேரவை வலியுறுத்தியுள்ளது.
</p><p>
நிர்வாகக் குளறுபடிகள் நீங்கி, முறைப்படி தேர்தல்கள் நடத்தப்படும் வரை இந்தத் தடை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T23:27:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ‘அரோகரா’ கோஷத்துடன் கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் கொடியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/flag-hoisting-at-the-kataragama-kandan-temple-1784157365"></link>
            <id>https://jvpnews.com/article/flag-hoisting-at-the-kataragama-kandan-temple-1784157365</id>
            <summary type="text">இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீக பூமியாகவும், மத நல்லிணக்கத்தின் திருத்தலமாகவும் விளங்கும் கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா,...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீக பூமியாகவும், மத நல்லிணக்கத்தின் திருத்தலமாகவும் விளங்கும் கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா, இன்று (15) மாலை 6.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.</p><p>
</p><p></p><p>கொடிக்கு விசேட பூஜைகள் நடத்தப்பட்டு, ஆலய வளாகத்திலுள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற பால்குடிபாவா பள்ளிவாசலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.
</p><p>
இதனைத் தொடர்ந்து, நான்கு முக்கிய சமயத் தலைவர்களின் ஆசியுரைகளுடன், பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ‘அரோகரா’ பக்தி கோஷ முழக்கங்களுக்கு மத்தியில் புனிதக் கொடி ஏற்றிவைக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db1f2019-35b1-43c2-b131-63274a2f3847/26-6a5814b746845.webp' /></p><p>இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால், நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்திருந்த பெரும் திரளான பக்தர்கள் இந்த நிகழ்வில் பக்திப் பரவசத்துடன் கலந்துகொண்டனர்.
</p><p>
நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், புனித பாதயாத்திரையை மேற்கொண்ட பக்தர்களில் முதலாவது குழுவினர் இன்று அதிகாலை கதிர்காமத்தை வந்தடைந்தனர்.
</p><p>
கடந்த 10 ஆம் திகதி முதல் உகந்தை மற்றும் குமண தேசிய பூங்கா ஊடாக கதிர்காமம் வரையான காட்டுப்பாதை பக்தர்களின் வழிபாட்டுக்காகத் திறக்கப்பட்டிருந்தது.</p><p>

ஆடிவேல் விழாவின் முதலாவது வரலாற்றுச் சிறப்புமிக்க திருவீதி உலா இன்று இரவு நடைபெறவுள்ளது.</p><p>

தொடர்ந்து 15 நாட்கள் பக்திபூர்வமாக நடைபெறவுள்ள இந்த திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான தீர்த்தோற்சவம், எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை புனித மாணிக்க கங்கையில் நடைபெற்று, இந்த ஆண்டுக்கான ஆடிவேல் விழா நிறைவுபெறவுள்ளது.</p><p>IBCE1</p><p>936BMZTF</p><p>QWLKUS</p>]]></content>
            <updated>2026-07-15T23:16:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் மாவட்டத்தின் விசேட மாவட்ட விவசாய குழு கூட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/district-agriculture-committee-mannar-meeting-1784157039"></link>
            <id>https://tamilwin.com/article/district-agriculture-committee-mannar-meeting-1784157039</id>
            <summary type="text">மன்னார் மாவட்டத்தின் விசேட மாவட்ட விவசாய குழு கூட்டம் மன்னார் அரசாங்க
அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நேற்று (15) மாலை 4 மணியளவில்
மன்னார் மாவட்டச் செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்டத்தின் விசேட மாவட்ட விவசாய குழு கூட்டம் மன்னார் அரசாங்க
அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நேற்று (15) மாலை 4 மணியளவில்
மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.</p><p>

எல்நினோ (EL Nino) காலநிலை தாக்கம் விவசாயத் துறையில் ஒரு பாதிப்பை
ஏற்படுத்தக் கூடும் என்ற அடிப்படையில், அதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள்
மேற்கொண்டு, விவசாயிகளுக்கு போதிய அறிவுறுத்தல்களும் விழிப்புணர்வையும்
வழங்கி, அதன் ஊடாக இந்த கால நிலைக்கு சவாலை ஏற்றுக்கொண்டு, அதற்கு ஏற்ற
பயிர்ச்செய்கை திட்டமிடலை மேற்கொள்வதற்கான கூட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது.</p><p></p><h2>முக்கிய நடவடிக்கைகள்..&nbsp;</h2><p>
</p><p>
இந்த கால நிலைத் தாக்கமானது 2026,2027ஆம் ஆண்டு வரை தொடரும் என்று எதிர்வு
கூறப்பட்டிருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3834f3b-a92d-40af-a95c-a592b12b48aa/26-6a581439a8855.webp' /></p><p> அதன் அடிப்படையில் இதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள்
தேசிய மட்டத்திலும், ஏனைய பிரதேசங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று
வருகிறது.
</p><p>
வட மாகாணத்தில் விசேட கூட்டத்தை ஏற்பாடு செய்து எவ்வாறு காலநிலை
தாக்கத்தை எதிர்கொள்வது தொடர்பாக ஒரு விசேட கலந்துரையாடல்
விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடை மற்றும் அதனோடு இணைந்த நிறுவனங்கள் அழைக்கப்பட்டு
ஏற்கனவே ஒரு கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.</p><p>

அதனடிப்படையில் மாவட்ட ரீதியாக ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு சூழ்நிலை,
அதற்குரிய நிலப் பயன்பாடு, அந்த நிலச் சூழ் நிலைக்கு ஏற்ற வகையில் மாவட்ட
விவசாயத் திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், ஒவ்வொரு
மாவட்டத்துக்கும் விசேட மாவட்ட விவசாய குழு கூட்டத்தை ஏற்பாடு செய்து, அதன்
ஊடாக அந்த விவசாயத் திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில்,
மன்னார் மாவட்டத்தின் முதலாவது கூட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T23:14:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகிலேயே மிக மோசமானதாக மாறிய ரொறன்ரோவின் காற்றின் தரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/toronto-air-quality-worst-1784148360"></link>
            <id>https://news.lankasri.com/article/toronto-air-quality-worst-1784148360</id>
            <summary type="text">வடக்கு ஒன்ராறியோவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிரமாக எரிந்துவரும் காட்டுத்தீயிலிருந்து வரும் புகையானது, ரொறன்ரோவின் காற்றின் தரத்தை தற்போது உலக...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு ஒன்ராறியோவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிரமாக எரிந்துவரும் காட்டுத்தீயிலிருந்து வரும் புகையானது, ரொறன்ரோவின் காற்றின் தரத்தை தற்போது உலகின் மிக மோசமான நிலைக்கு உயர்த்தியுள்ளது.</p><h2>மிக மோசமான</h2><p>
</p><p>அத்துடன், வடகிழக்கு அமெரிக்கா முழுவதும் உள்ள நகரங்களில் மஞ்சள் நிறப் புகை சூழ்ந்த காற்றையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/425e0157-8d7a-49de-81d9-55b0613c1b9f/26-6a57f314c8692.webp' /></p><p> </p><p>உலகளாவிய காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் சுவிஸ் தொழில்நுட்ப நிறுவனமான IQAir-இன் அறிக்கையின்படி, கனடாவின் மிகப்பெரிய நகரத்தின் வானம் நோயுற்றது போன்ற மஞ்சள் நிறமாக மாறி, உலகின் மிக மோசமான வானம் என மதிப்பிடப்பட்டதைத் தொடர்ந்து, கனடா சுற்றுச்சூழல் அமைப்பு புதன்கிழமை சுகாதார எச்சரிக்கைகளை விடுத்தது. </p><p>ரொறன்ரோ நகரின் மையப்பகுதியில் வெப்பநிலை 37.3 டிகிரி செல்சியஸை எட்டி கடந்த மூன்று தசாப்த கால சாதனையை முறியடித்த நிலையில், இந்நகரம் கடுமையான வெப்ப அலையையும் எதிர்கொண்டு வருகிறது; அதேவேளையில், அதன் முக்கிய சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதைகளில் வெப்பநிலை 55 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது.</p><p></p><p> </p><p>வடமேற்கு ஒன்ராறியோ முழுவதும் பரவி எரியும் காட்டுத்தீ காரணமாக, பல 'ஃபர்ஸ்ட் நேஷன்ஸ்' (First Nations) சமூகங்களைச் சேர்ந்த மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.</p><h2>காற்றின் தரம்</h2><p> </p><p>இதனிடையே, மாகாணத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள காலின்ஸ் ஏரியைக் கடந்து தப்பிச் செல்வதற்கு முன்னதாக, தங்களுக்குச் சில நிமிடங்கள் மட்டுமே எச்சரிக்கை கிடைத்ததாக நமைகூசிசாககன் ஃபர்ஸ்ட் நேஷன் (Namaygoosisagagun First Nation) பகுதி மக்கள் தெரிவித்தனர். </p><p>காலின்ஸ் நகரம் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகிவிட்டது. இது ஒரு துயரச் சம்பவம். அனைவரும் பாதுகாப்பாக வெளியேறியதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்று அப்பகுதியின் மாகாணப் பிரதிநிதியான லிஸ் வோஜோயிஸ் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2c1dfb3-beb9-4ee7-8ad8-3ab7bdd740bd/26-6a57f31592e04.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், அமெரிக்காவின் மிச்சிகன், மினசோட்டா மற்றும் விஸ்கான்சின் மாகாணங்களின் பெரும்பாலான பகுதிகளில் புகை காரணமாகக் காற்றின் தரம் குறித்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், வாரத்தின் பிற்பகுதியில் நியூயார்க், வாஷிங்டன் மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள பிற நகரங்களின் மீது அடர்த்தியான புகை நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் CNN செய்தி வெளியிட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-15T23:09:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல் நாளிலேயே 140 மில்லியன் டொலரைத் தாண்டிய இங்கிலாந்திற்கான இந்தியாவின் ஏற்றுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-exports-uk-140-million-1784157055"></link>
            <id>https://news.lankasri.com/article/india-exports-uk-140-million-1784157055</id>
            <summary type="text">இந்தியா-இங்கிலாந்து விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (CETA) நடைமுறைக்கு வந்த முதல் நாளிலேயே, இந்தியா இங்கிலாந்துக்கு 140 மில்லியன் டொலருக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா-இங்கிலாந்து விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (CETA) நடைமுறைக்கு வந்த முதல் நாளிலேயே, இந்தியா இங்கிலாந்துக்கு 140 மில்லியன் டொலருக்கும் அதிகமான மதிப்புள்ள சரக்குகளை ஏற்றுமதி செய்துள்ளது.</p><h2>வாழ்க்கையை மாற்றியமைக்கும்</h2><p>
</p><p>இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டை வலுப்படுத்தவும், தொழில் வல்லுநர்களின் பரிமாற்றத்தை எளிதாக்கவும் ஜூலை 2025-இல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், 2030-ஆம் ஆண்டிற்குள் 100 பில்லியன் டொலர் அளவிலான இருதரப்பு வர்த்தகத்தை எட்ட இந்தியாவும் இங்கிலாந்தும் இலக்கு நிர்ணயித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79998d65-7237-48ad-ba94-ccfa2b0749a9/26-6a5818338f90d.webp' /></p><p> </p><p>வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளின் அடிப்படையில், 2025-26 நிதியாண்டில் இருதரப்புப் பொருட்கள் வர்த்தகம் 25.12 பில்லியன் டொலராக இருந்தது; இதில், இங்கிலாந்துக்கு இந்தியா மேற்கொண்ட ஏற்றுமதி, இறக்குமதியை விட 1.76 பில்லியன் டொலர் அதிகமாக இருந்தது. </p><p>புது டெல்லியில் நடைபெற்ற விழாவில், தொழில் துறைப் பிரதிநிதிகள் மற்றும் பிரித்தானிய உயர் ஆணையர் லிண்டி கேமரூன் ஆகியோர் முன்னிலையில் பேசிய வர்த்தகச் செயலாளர் ராஜேஷ் அகர்வால், வர்த்தகம் மற்றும் பொருளாதார வாய்ப்புகள் அதிகரிப்பதன் மூலம் இந்த ஒப்பந்தம் இரு நாட்டு மக்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைத்துள்ளது என்பதை ஓராண்டுக்குப் பிறகு மதிப்பீடு செய்வதே அடுத்த மைல்கல்லாக அமையும் என்று கூறினார். </p><p>இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்திய ஏற்றுமதியாளர்கள் இங்கிலாந்துக்குச் செய்யும் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பில் 99.5 சதவீதத்திற்கு வரி விலக்கு பெறுவார்கள். இது 98.8 சதவீத சுங்க வரி வகைகளை உள்ளடக்கியிருப்பதால், அதிக தொழிலாளர் தேவைப்படும் மற்றும் உற்பத்தித் துறைகள் எனப் பரந்த அளவிலான துறைகளில் வரிகள் திறம்பட நீக்கப்படுகின்றன.</p><p></p><p> </p><p>இதற்குப் பதிலாக, இந்தியா இங்கிலாந்தின் ஏற்றுமதி மதிப்பில் 89.4 சதவீதத்தை உள்ளடக்கிய முன்னுரிமைச் சந்தை அணுகலை வழங்கியுள்ளதுடன், முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களுக்கான சுங்க வரிக் குறைப்புகளையும் படிப்படியாக அமுல்படுத்தி வருகிறது. </p><p>இதற்கிடையில், வர்த்தக ஒப்பந்தம் சீராகச் செயல்படுவதை உறுதி செய்வதற்காக, மூலச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், சுங்க வசதிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் அகர்வால் தெரிவித்தார். </p><p>இருதரப்பு உறவுகளின் வலிமையை எடுத்துரைத்த கேமரூன், 2025-ஆம் ஆண்டில் இந்தியா, பிரித்தானியாவின் பதினொன்றாவது பெரிய வர்த்தகப் பங்காளியாக விளங்கும் என்றும், ஆண்டுதோறும் இருதரப்பு வர்த்தகம் சுமார் 48 பில்லியன் பவுண்டுகளை எட்டும் என்றும் குறிப்பிட்டார். </p><p>இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீட்டு உறவு 7 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை ஆதரிக்கிறது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.</p><h2>5 பில்லியன் பவுண்டுகள்</h2><p> </p><p>இதன் நீண்டகாலப் பொருளாதாரத் தாக்கத்தைக் குறிப்பிட்ட கேமரூன், இந்த ஒப்பந்தம் நீண்டகால அடிப்படையில் இருதரப்பு வர்த்தகத்தை ஆண்டுக்கு 25 பில்லியன் பவுண்டுகளுக்கும் மேலாக உயர்த்தும் என்றும், இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆண்டுக்குச் சுமார் 5 பில்லியன் பவுண்டுகளைச் சேர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார். </p><p>இந்தியத் தொழில்துறைக்கு, CETA ஒப்பந்தம் புதிய வாய்ப்புகளின் சகாப்தத்தைத் திறக்கிறது. இங்கிலாந்துக்குச் செல்லும் இந்தியாவின் 99 சதவீத ஏற்றுமதிகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதால்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fc96fc5-df77-40b5-82e1-450e78de0db9/26-6a5818349daa1.webp' /></p><p> </p><p>ஜவுளி மற்றும் ஆடை, தோல் மற்றும் காலணி, இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள், கடல்சார் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற அதிக தொழிலாளர் தேவைப்படும் துறைகளின் போட்டித்தன்மை கணிசமாக அதிகரிக்கும். </p><p>மேலும், பொறியியல் பொருட்கள், வாகன உதிரிபாகங்கள், இரசாயனங்கள் மற்றும் பிற மதிப்புக்கூட்டு உற்பத்தித் துறைகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-15T23:09:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்தின் அரையிறுதிப் போட்டிக்கு இஸ்மாயில் எல்பாத் நடுவராக நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ismail-elfat-appointed-referee-england-s-semi-fina-1784155910"></link>
            <id>https://jvpnews.com/article/ismail-elfat-appointed-referee-england-s-semi-fina-1784155910</id>
            <summary type="text">உலகக் கிண்ணத் தொடரில் அர்ஜென்டினா அணிக்கு சாதகமாக நடுவர்கள் செயல்படுகின்றனர் என்ற விவாதங்கள் மீண்டும் எழுந்துள்ள நிலையில், லியோனல் மெஸ்ஸிக்கு நெருக்கம...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக் கிண்ணத் தொடரில் அர்ஜென்டினா அணிக்கு சாதகமாக நடுவர்கள் செயல்படுகின்றனர் என்ற விவாதங்கள் மீண்டும் எழுந்துள்ள நிலையில், லியோனல் மெஸ்ஸிக்கு நெருக்கமான நடுவராகப் பேசப்படும் அமெரிக்காவின் இஸ்மாயில் எல்பாத் (Ismail Elfath), இங்கிலாந்து அணி விளையாடவுள்ள முக்கியமான அரையிறுதிப் போட்டிக்கான பிரதான நடுவராக சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிஃபா (FIFA) நியமித்துள்ளது.</p><p>
</p><p></p><p>புதன்கிழமை நடைபெறவுள்ள இந்த முக்கிய அரையிறுதிப் போட்டிக்கு எல்பாத் நடுவராகப் பணியாற்றுவார் என பிஃபா உறுதிப்படுத்தியுள்ளது. அவரது சர்வதேச நடுவர் வாழ்க்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7ca54ea-c1be-4b11-a197-44a7360c4b1c/26-6a580f0771aa2.webp' /></p><p>கடந்த 2022ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில், அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை வென்றபோது, அந்த இறுதிப் போட்டிக்கான நடுவர் குழுவிலும் இஸ்மாயில் எல்பாத் இடம்பெற்றிருந்தார்.
</p><p>
மேலும், லியோனல் மெஸ்ஸி அமெரிக்க கால்பந்து லீக்கில் இணைந்த பின்னர், அவர் விளையாடிய நான்கு போட்டிகளுக்கு எல்பாத் நடுவராக இருந்துள்ளார். அந்த நான்கு போட்டிகளிலும் மெஸ்ஸியின் அணி வெற்றி பெற்றுள்ளமை கால்பந்து ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>
எனினும், எல்பாத் அல்லது பிஃபா தரப்பில் அவர் எந்த அணிக்கும் சாதகமாகச் செயல்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் அல்லது அதிகாரப்பூர்வ கருத்துகள் எதுவும் வெளியாகவில்லை. </p><p>எனவே, சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகைய கருத்துகள் தற்போது விவாதங்களாக மட்டுமே இருந்து வருகின்றன.

இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் அரையிறுதிப் போட்டியில் எல்பாத் நடுவராக நியமிக்கப்பட்டிருப்பது கால்பந்து ரசிகர்கள் மற்றும் விளையாட்டு விமர்சகர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T22:51:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[கயல் சீரியலில் புதிதாக என்ட்ரி கொடுக்கும் நடிகர்,. யார் பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/kayal-serial-new-entry-actor-1784155781"></link>
            <id>https://cineulagam.com/article/kayal-serial-new-entry-actor-1784155781</id>
            <summary type="text">கயல் சீரியலில் புதிதாக என்ட்ரி கொடுக்கும் நடிகர்,. யார் பாருங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கயல் சீரியலில் புதிதாக என்ட்ரி கொடுக்கும் நடிகர்,. யார் பாருங்க</p>]]></content>
            <updated>2026-07-15T22:49:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலை புலிகளின் கால பிக்குகள் குறித்து பலருக்கும் தெரியாத உண்மைகள் - அம்பிட்டிய தேரர் பற்றிய ஆதாரமும் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-tamils-final-war-monks-real-faces-1784147164"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-tamils-final-war-monks-real-faces-1784147164</id>
            <summary type="text">விடுதலை புலிகளின் தலைவரோடு ஒரு புகைப்படம் கூட எடுத்ததில்லை என இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் வெளியிட்ட கருத்து தமிழர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விடுதலை புலிகளின் தலைவரோடு ஒரு புகைப்படம் கூட எடுத்ததில்லை என இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் வெளியிட்ட கருத்து தமிழர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.&nbsp;</p><p>அவர் அண்மையில், "விடுதலை புலிகளின் தலைவரோடு யாராவது ஒரு பௌத்த துறவி புகைப்படம் எடுத்ததை பார்த்ததுண்டா?
</p><p>
இல்லை, ஏனெனில் அவர் ஒரு பயங்கரவாதி, ஒழுக்கத்தோடு இருக்கும் நாங்கள் அவரொடு எல்லாம் சேரக்கூடாது” என கூறியிருந்தார்.&nbsp;</p><p>

இந்நிலையில், இவர் வெளியிட்ட இந்த கருத்து தொடர்பில் ஈழத்தமிழர்கள் மத்தியில், கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. அண்மையில் சில தேரர்களின் அநாகரீகமான நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p>அதேநேரம்,&nbsp;மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரும் தமிழர்கள் தொடர்பில் மிக கடுமையான வார்த்தை பிரயோகங்களை முன்வைத்தவர் தான்.&nbsp;</p><p>தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்து வரும் இவர் தொடர்பிலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>இவை உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/qGn__FhhhGc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T22:43:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு குறித்து அரச தரப்பு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-to-support-missing-persons-probes-minister-1784154383"></link>
            <id>https://ibctamil.com/article/govt-to-support-missing-persons-probes-minister-1784154383</id>
            <summary type="text">செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் காணாமல்போனோர் தொடர்பான உண்மைத்தன்மையைக் கண்டறிவதற்கு அரச தரப்பிலிருந்து முழுமைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் காணாமல்போனோர் தொடர்பான உண்மைத்தன்மையைக் கண்டறிவதற்கு அரச தரப்பிலிருந்து முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
</p><p>
அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவது தற்போதைய அரசின் முக்கிய நோக்கம் என்று தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அனைத்து மக்களுக்கும் பொதுவான ஜனாதிபதி என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
</p><p></p><h2>காணி விடுவிப்பு</h2><p>வரலாற்றில் முதன்முறையாக இந்த அரசுக்கு வடக்கு மக்களிடமிருந்து பலத்த ஆதரவு கிடைத்துள்ளது எனவும், காணி விடுவிப்பு உள்ளிட்ட பல வழிகளிலும் நல்லிணக்கத்தை எட்டுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/743126d1-8391-486d-b3cb-2d4dd1072e8c/26-6a580cc67378e.webp' /></p><p>வடக்கு மற்றும் தெற்கு என இரு தரப்பிலும் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாது பெற்றோர் இன்றும் கண்ணீர் வடிக்கும் நிலை நீடிக்கின்றது என்று குறிப்பிட்ட நீதி அமைச்சர், அந்த வேதனையைத் தீர்க்க அரசு முன்னுரிமை அளிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “நாங்கள் ஆட்சிக்கு வரும்போது காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தில் போதிய ஆளணி வளம் இருக்கவில்லை.

நாம் உடனடியாகப் புதிய ஆட்சேர்ப்புகளைச் செய்து 60 பேரை அதில் இணைத்துள்ளோம்.</p><p>
</p><p></p><h2>ஆயிரம் முறைப்பாடுகள் </h2><p>இதற்கென வரவு - செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகளும் செய்யப்பட்டுள்ளன.</p><p>

தற்போது தலா மூன்று பேர் கொண்ட 15 விசாரணைப் புலனாய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு, விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0eb0e41a-6056-4a32-a2b4-c76e11b3763d/26-6a580cc776444.webp' /></p><p>

இதன் மூலம் நிலுவையிலுள்ள 11 ஆயிரம் முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை அடுத்த இரண்டு வருடங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கின்றோம்.</p><p>

உண்மையை வெளிக்கொணரவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கவும் அரசு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது, அதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T22:42:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடிய நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து: இருவர் பலி, மூவர் காயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/crash-closes-eb-express-lanes-of-hwy-401-1784132157"></link>
            <id>https://canadamirror.com/article/crash-closes-eb-express-lanes-of-hwy-401-1784132157</id>
            <summary type="text">கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், மிசிசாகா பகுதியில் உள்ள நெடுஞ்சாலை 401 இல் இடம்பெற்ற கொடூர வாகன விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக ஒன்டாரியோ மாகாண க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், மிசிசாகா பகுதியில் உள்ள நெடுஞ்சாலை 401 இல் இடம்பெற்ற கொடூர வாகன விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக ஒன்டாரியோ மாகாண காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>இன்று காலை 9 மணிக்குப் பிறகு, டிக்ஸி வீதிக்கு அருகிலுள்ள கிழக்கு நோக்கிய விரைவுப் பாதைகளில்இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><p>
பின்னாலிருந்து வந்த வாகனம் ஒன்று மோதியதில், முன்னால் சென்ற வாகனத்தில் பயணித்த கேம்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த 80 வயது முதியவர் மற்றும் 53 வயது பெண் ஆகிய இருவருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86eec105-cfc3-42f1-96e8-7d55ba3ba2b3/26-6a57b23f45462.webp' /></p><p>
</p><p>மேலும், இந்த விபத்தில் காயமடைந்த மற்ற மூவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.</p><p>
விபத்தைத் தொடர்ந்து மிசிசாகா பகுதியில் உள்ள விரைவுப் பாதைகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டுள்ளன. </p><p>இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மிசிசாகா வீதிக்கும் டிக்ஸி வீதிக்கும் இடைப்பட்ட விரைவுப் பாதைகளுக்குள் எந்தவொரு வாகனமும் அனுமதிக்கப்படவில்லை.
</p><p>ஒரேயொரு கலெக்டர் பாதை மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளதால், வாகனங்கள் மிக மிக மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.</p><p>
மாலை 3 மணி வரை இந்த விரைவுப் பாதைகள் மூடப்பட்டிருக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>இந்த விபத்து நடந்த பகுதியைத் தவிர்த்து, மாற்றுப் பாதைகளாக டெர்ரி வீதி, எக்லிண்டன் அவென்யூ அல்லது நெடுஞ்சாலை 407 ஆகியவற்றைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T22:37:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் அத்துமீறல் ; மோப்ப நாயுடன் பொலிஸார் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-sleeping-at-home-molested-police-inves-dog-1784142377"></link>
            <id>https://jvpnews.com/article/woman-sleeping-at-home-molested-police-inves-dog-1784142377</id>
            <summary type="text">களுத்துறை மில்லனிய, ரத்தேகொட பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர், வீட்டின் உரிமையாளரான பெண்ணிடம் அநாகரிகமாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை மில்லனிய, ரத்தேகொட பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர், வீட்டின் உரிமையாளரான பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்டுவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் மில்லனிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p></p><p>

பொலிஸார் தெரிவிப்பதன்படி, குறித்த பெண் வழக்கம்போல் தனது கணவருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்துள்ளார். மனைவி ஒரு அறையிலும், கணவர் எதிர்புற அறையிலும் உறங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
</p><p>
இந்த நிலையில், சந்தேகநபர் வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து, பெண் உறங்கிக் கொண்டிருந்த அறைக்குச் சென்று அவரது உடலைத் தொட்டு எழுப்பியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d7b6aaf-f199-4db4-ba28-a3bb8cf78b70/26-6a57da2b0d340.webp' /></p><p>திடீரென ஏதோ அசாதாரணம் நிகழ்வதை உணர்ந்த பெண் விழித்தெழுந்து சந்தேகநபரை கண்டு உரக்கக் கூச்சலிட்டுள்ளார். </p><p>இதையடுத்து, சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் செல்லும் முன், பெண் அணிந்திருந்த சேலையை இழுத்து எறிந்துவிட்டு தப்பியோடியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மில்லனிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தடயங்களைப் பின்தொடர்வதற்காக "ஷாகி" என்ற மோப்ப நாயும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>

சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T22:36:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரித்திகா சிங் வேற லெவல் ஹாட் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ritika-singh-sizzling-glamour-photos-1784151563"></link>
            <id>https://cineulagam.com/article/ritika-singh-sizzling-glamour-photos-1784151563</id>
            <summary type="text">இறுதிச்சுற்று பட புகழ் நடிகை ரித்திகா சிங் சமீப காலமாக தாராள கவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட்டு எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.

அவரா இப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இறுதிச்சுற்று பட புகழ் நடிகை ரித்திகா சிங் சமீப காலமாக தாராள கவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட்டு எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.
</p><p>
அவரா இப்படி என பலரும் கேட்கும் அளவுக்கு அவர் கவர்ச்சி காட்டி வருகிறார்.
</p><p>
தற்போது அவர் ஹாட் உடையில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ பாரு</p>]]></content>
            <updated>2026-07-15T21:39:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்தின் கனவுகளை நொறுக்கிய மார்டினெஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அர்ஜென்டினா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/argentina-double-breaks-england-1784151541"></link>
            <id>https://news.lankasri.com/article/argentina-double-breaks-england-1784151541</id>
            <summary type="text">புதன்கிழமை இரவு நடந்த உலகக் கிண்ணம் ஆட்டத்தில், ஆட்டத்தின் கடைசி கட்டத்தில், 7 நிமிடத்தில் அர்ஜென்டினா அடித்த இரண்டு கோல்களால் 2-1 என்ற கோல் கணக்கில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதன்கிழமை இரவு நடந்த உலகக் கிண்ணம் ஆட்டத்தில், ஆட்டத்தின் கடைசி கட்டத்தில், 7 நிமிடத்தில் அர்ஜென்டினா அடித்த இரண்டு கோல்களால் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, ஞாயிற்றுக்கிழமை ஸ்பெயினுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இடம்பிடித்தது.</p><h2>லியோனல் மெஸ்ஸி</h2><p>
</p><p>ஆட்டத்தின் 85-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் பெனால்டி பகுதி விளிம்பிலிருந்து என்சோ மார்டினெஸ் ஒரு அற்புதமான ஷாட் மூலம் கோல் அடித்து சமன் செய்ததைத் தொடர்ந்து, கூடுதல் நேரத்தில் மாற்று வீரரான லௌதாரோ மார்டினெஸ் மிக அருகில் இருந்து தலையால் முட்டி வெற்றி கோலை அடித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2f997fa-32e4-40cd-8fd8-ebb51838e55f/26-6a58015985190.webp' /></p><p> </p><p>இந்த இரண்டு கோல்களுக்கும் லியோனல் மெஸ்ஸி சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்.
1966-க்குப் பிறகு முதல்முறையாகவும், சொந்த மண்ணுக்கு வெளியே முதல்முறையாகவும் ஆண்கள் உலகக் கிண்ணம் இறுதிப் போட்டிக்கு முன்னேறி வரலாறு படைக்க இங்கிலாந்து அணிக்கு இன்னும் சில நிமிடங்களே தேவைப்பட்டிருந்தன; </p><p>ஆனால், 55-வது நிமிடத்தில் அந்தோனி கார்டன் முன்னிலையைப் பெற்றுத்தந்த பிறகு அவர்கள் தற்காப்பு ஆட்டத்தில் ஈடுபட்டதே தோல்விக்குக் காரணமாக அமைந்தது.</p><p></p><p> </p><p>அந்தப் புள்ளியிலிருந்து இங்கிலாந்து தற்காப்பில் ஈடுபடுவதில் திருப்தி அடைந்தது போல் தோன்றியது, ஆனால் அவர்கள் அதிர்ஷ்டத்தின் துணையுடன்தான் விளையாடி வந்தனர். </p><p>ஜோர்டான் பிக்க்போர்டு மிக அருகில் இருந்து தொடர்ச்சியாக அற்புதமான தடுப்புகளைச் செய்தார், அர்ஜென்டினா இரண்டு முறை கோல் கம்பத்தில் பந்தை அடித்தது; பின்னர், போட்டியின் இறுதியில் ஒரு பிரமிக்க வைக்கும் மீள்வருகையை நிகழ்த்தி, இத்தொடரில் தங்களின் மூன்றாவது மீள்வருகையை நிகழ்த்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa091d5f-8d09-4211-9ff0-114eef6218b3/26-6a58015a8da72.webp' /></p><h2>பாதகமான விளைவு</h2><p> </p><p>ஞாயிற்றுக்கிழமை நியூயார்க்கில் ஐரோப்பிய சாம்பியன்களுக்கு எதிராகத் தங்கள் பட்டத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் வாய்ப்பை அர்ஜென்டினா பெறும்; இது மெஸ்ஸியின் கடைசி உலகக் கிண்ணம் ஆட்டமாக அமையவுள்ள ஒரு விறுவிறுப்பான போட்டியாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79f283ae-1435-49cd-b0d2-b687aabdc092/26-6a58015b3e48f.webp' /></p><p> </p><p>ஒரு சீரற்ற உலகக் கிண்ணம் தொடரை இங்கிலாந்து அணி வருத்தத்துடன் திரும்பிப் பார்க்கும்; குறிப்பாக, வரலாற்றுச் சாதனை படைப்பதற்கான வாய்ப்பு கிடைத்தபோது, ​​ஆக்ரோஷமாகவோ அல்லது நம்பிக்கையுடனோ தொடர்ந்து விளையாடுவதற்கான மன உறுதியோ அல்லது ஆற்றலோ அவர்களிடம் இல்லாதது அதற்குக் காரணமாக அமைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6fe1547-95ed-4253-8a63-dd5680c612f0/26-6a58015be3970.webp' /></p><p> </p><p>முந்தைய ஆட்டங்களில் தாமஸ் டுஷெலின் வீரர் மாற்றங்களும் உத்திசார் மாற்றங்களும் வெற்றிகரமாக அமைந்தன; ஆனால், இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் மேற்கொண்ட மாற்றங்கள் பாதகமான விளைவையே ஏற்படுத்தின.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-15T21:37:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் பிரதான பாதாள உலகக் குழுத் தலைவர் உட்பட மூவர் அதிரடிப்படையினரால் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3-arrested-in-trinco-swords-and-ice-1784148632"></link>
            <id>https://tamilwin.com/article/3-arrested-in-trinco-swords-and-ice-1784148632</id>
            <summary type="text">திருகோணமலை- உப்புவெளி பகுதியில் ஆபத்தான வாள்கள் மற்றும் &#039;ஐஸ்&#039;
போதைப்பொருளுடன் பிரதான பாதாள உலகக் குழுத் தலைவரான &#039;கெம்பா&#039; உட்பட மூன்று
சந்தேக நபர்களை...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை- உப்புவெளி பகுதியில் ஆபத்தான வாள்கள் மற்றும் 'ஐஸ்'
போதைப்பொருளுடன் பிரதான பாதாள உலகக் குழுத் தலைவரான 'கெம்பா' உட்பட மூன்று
சந்தேக நபர்களை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.</p><p>

உப்புவெளி மின்சார நிலைய வீதியில் நேற்றுமுன்தினம்(14.7.2026)மேற்கொள்ளப்பட்ட விசேட
சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து ஆபத்தான ஆயுதங்களும் கணிசமான அளவு
போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>இதன்போது, முக்கிய சந்தேக நபரிடமிருந்து 16 கிராம் 'ஐஸ்'
போதைப்பொருள் மற்றும் 2 கூர்மையான வாள்களும்
இரண்டாவது சந்தேக நபரிடமிருந்து 8 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளும்,
மூன்றாவது சந்தேக நபரிடமிருந்து 7 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளும்
கைப்பற்றப்பட்டன.</p><p>
கைது செய்யப்பட்ட குழுவினர் திருகோணமலை பகுதியில் பல்வேறு சட்டவிரோத
செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e70dd99-df46-45d2-84dd-228c3a4e07b4/26-6a57f29abf23a.webp' /></p><p>
</p><p>
இந்தக் குழுவினருக்கு எதிராக ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அத்துடன், பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறித்தமை மற்றும்
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பல வழக்குகள் திருகோணமலை நீதவான்
நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட
வாள்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உப்புவெளி
பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T21:22:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிஐடி வளையத்தில் சலே...! மாயமான குடும்பத்தின் குரல் - அரங்கேறும் மர்மங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/suresh-salle-s-family-silent-after-arrest-1784149626"></link>
            <id>https://ibctamil.com/article/suresh-salle-s-family-silent-after-arrest-1784149626</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டுகளின் கீழ் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு சிஐடி விசாரணைகள் தொடர்ச்சியாக தீவிரமடைந்துள்ளன.

இந்தநிலையில், ஆரம்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டுகளின் கீழ் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு சிஐடி விசாரணைகள் தொடர்ச்சியாக தீவிரமடைந்துள்ளன.</p><p>

இந்தநிலையில், ஆரம்பத்தில் அதிகாரிகள் மீது பகிரங்கக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஊடகங்களில் குரல் எழுப்பிய அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியாத அளவிற்கு முற்றிலும் மௌனமாகியுள்ளனர். </p><p>

இந்தத் திடீர் அமைதியானது, வழக்கின் போக்கை பாதிக்காமல் இருப்பதற்காக சட்டத்தரணிகளின் ஆலோசனையின் பேரில் எடுக்கப்பட்ட தற்காப்பு தந்திரோபாய நகர்வா என்ற கேள்வி எழுந்துள்ளது. </p><p>

மறுபுறம், விசாரணைகளின் தீவிரத்தைக் குறைக்க அதிகார மட்டங்களுடன் எட்டப்பட்ட மறைமுக உடன்பாடுகளின் விளைவா அல்லது அவர்களின் குரலை ஒடுக்க விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களா என்ற பலத்த சந்தேகங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
</p><p>
இது குறித்து இப்பதிவில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/vjdt-johuV8?start=99" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T21:07:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[தளபதி வந்தா தள்ளிபோய் தானே ஆகணும்: ஜி.வி.பிரகாஷ் எடுத்த முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/gv-prakash-immortal-postponed-noclash-jana-nayagan-1784149587"></link>
            <id>https://cineulagam.com/article/gv-prakash-immortal-postponed-noclash-jana-nayagan-1784149587</id>
            <summary type="text">தளபதி விஜய்யின் ஜனநாயகன் படம் வரும் ஜூலை 23ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விஜய்யின் கடைசி படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தளபதி விஜய்யின் ஜனநாயகன் படம் வரும் ஜூலை 23ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விஜய்யின் கடைசி படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.</p><p>படம் ஏற்கனவே லீக் ஆகி இருந்தாலும், ரசிகர்கள் படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d149565f-d96d-4a6a-9419-4f08fa5b1a3e/26-6a57f654ed2c5.webp' /></p><h2>தள்ளிப்போய் தானே ஆகணும்</h2><p>இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் கயாடு லோஹர் நடித்து இருக்கும் Immortal படம் முதலில் ஜூலை 23ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதே நாளில் விஜய் படம் வருவதால் இந்த படம் தள்ளிவைக்கப்டுவதாக அறிவித்துள்ளனர்.
</p><p>"தளபதி வந்தா தள்ளி போய் தானே ஆகணும். அதுவும் இது One Last time. ஜனநாயகன் டீமுக்கு வாழ்த்துக்கள். Immortal படம் செப்டம்பர் 4ம் தேதி ரிலீஸ் ஆகும்."
</p><p>இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் பதிவிட்டுள்ளார்.&nbsp;</p><p>&nbsp;<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Thalapathy vandha thalli poyi dhaaney aaganum ❤️❤️ adhuvum one<br>Last time ❤️ …. Best of luck team JN …<a href="https://x.com/hashtag/immortal?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#immortal</a> will release in theatres on September 4th with ur support and love … <a href="https://x.com/AKfilmfactory?ref_src=twsrc%5Etfw">@AKfilmfactory</a> <a href="https://x.com/DirMari_Chinna?ref_src=twsrc%5Etfw">@DirMari_Chinna</a> <a href="https://x.com/thinkmusicindia?ref_src=twsrc%5Etfw">@thinkmusicindia</a> <a href="https://t.co/E8UC01vNwX">pic.twitter.com/E8UC01vNwX</a></p>&mdash; G.V.Prakash Kumar (@gvprakash) <a href="https://x.com/gvprakash/status/2077344921137365348?ref_src=twsrc%5Etfw">July 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-07-15T21:06:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த ஜனாதிபதி யார்! இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய புதிய கூட்டணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/next-president-new-sri-lankan-politics-npp-anura-1784137351"></link>
            <id>https://tamilwin.com/article/next-president-new-sri-lankan-politics-npp-anura-1784137351</id>
            <summary type="text">இலங்கையின் அரசியல் நடவடிக்கை நாளுக்கு நாள் மாறிக்கொண்டு செல்வதுடன் பல புதிய அணிகளும், கூட்டணிகளும் உருவாகி வருகின்றன.இந்தநிலையிலே, அடுத்த ஜனாதிபதித்தே...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் அரசியல் நடவடிக்கை நாளுக்கு நாள் மாறிக்கொண்டு செல்வதுடன் பல புதிய அணிகளும், கூட்டணிகளும் உருவாகி வருகின்றன.</p><p>இந்தநிலையிலே, அடுத்த ஜனாதிபதித்தேர்தல் 2029 இல் நடைபெறவுள்ளது.இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளுக்காக தயார்படுத்தலை முன்னெடுத்து வருகின்றன.</p><p>பல்வேறு தரப்புக்கள் தங்களது ஆதரவாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.உதாரணமாக நாமல் ராஜபக்ச மற்றும் திலித் ஜயவீர போன்றோர் மக்கள் சந்திப்பை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>எதிர்வரும்&nbsp;ஜனாதிபதித்தேர்தலிலே பொது வேட்பாளர்களாக ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ, நாமல் ராஜபக்ச, சம்பிக்க ரணவக்க, தயாசிறி ஜயசேகர போன்றோர் போட்டியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><p>அடுத்த ஜனாதிபதித்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை திர்மானிப்பதில் தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக கட்சிகளின் ஆதரவு முக்கிய பங்காற்றும் எனக் கூறப்படுகின்றது.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/b746TCSqv10" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T20:56:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[குவைத்திற்குள் பாய்ந்த ஈரானிய ஏவுகணைகள்: 21 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kuwait-intercepts-21-iranian-drones-missiles-1784147363"></link>
            <id>https://ibctamil.com/article/kuwait-intercepts-21-iranian-drones-missiles-1784147363</id>
            <summary type="text">குவைத்தின் முக்கிய இடங்களை இலக்கு வைத்து ஈரானிலிருந்து 21 ஆளில்லா ட்ரோன்கள் ஏவப்பட்டுள்ளன. 

நான்கு குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 21 ஆளில்லா ட்ரோன்களை தங...</summary>
            <content type="html"><![CDATA[<p>குவைத்தின் முக்கிய இடங்களை இலக்கு வைத்து ஈரானிலிருந்து 21 ஆளில்லா ட்ரோன்கள் ஏவப்பட்டுள்ளன. </p><p>

நான்கு குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 21 ஆளில்லா ட்ரோன்களை தங்களது ஆயுதப் படைகள் இடைமறித்து அழித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குவைத் பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>வான்வழித் தாக்குதல்கள்</h2><p>இத்தாக்குதல்கள் தொடர்பாக மேலும் தெரிவித்த அவர் "ஈரானின் இந்த வான்வழித் தாக்குதல்கள் குவைத்தின் முக்கிய மற்றும் அதிமுக்கிய உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4ed1a5a-d85b-4857-88e0-30db23febf7e/26-6a57f0a2eee60.webp' /></p><p>

இதனால் சில பொதுச் சொத்துகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ள போதிலும் உயிர்ச்சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை" என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அதேவேளை, பிராந்தியத்தில் உள்ள பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாம் தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் முன்னதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T20:43:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மியன்மார் உள்நாட்டுப் போர்: அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பும் சம்மதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/myanmar-civil-war-both-sides-agree-to-peace-talks-1784147186"></link>
            <id>https://tamilwin.com/article/myanmar-civil-war-both-sides-agree-to-peace-talks-1784147186</id>
            <summary type="text">மியன்மாரில் தொடர்ந்து நீடித்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக்
கொண்டு வர, அங்குள்ள இராணுவத் தரப்பும் கிளர்ச்சியாளர் குழுக்களும்
பேச்சுவார்த்தை ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மியன்மாரில் தொடர்ந்து நீடித்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக்
கொண்டு வர, அங்குள்ள இராணுவத் தரப்பும் கிளர்ச்சியாளர் குழுக்களும்
பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தாய்லாந்து வெளியுறவுத்
துறை அமைச்சர் சிஹாசக் புவாங்கேட்கியோ தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த மோதலுக்கு இராணுவ ரீதியாக எந்தத் தீர்வும் காண முடியாது என்பதை இரு
தரப்பினருமே ஒப்புக்கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மியன்மாரில் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த இராணுவப் புரட்சிக்குப் பிறகு, அங்கு
ஏற்பட்டுள்ள வன்முறைகளில் சுமார் 1 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள்
உயிரிழந்துள்ளனர், இலட்சக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து
இடம்பெயர்ந்துள்ளனர்.</p><p></p><h2>பேச்சுவார்த்தை</h2><p>

இந்த நிலையில், தேக்கமடைந்துள்ள அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும்
தொடங்குவதற்குத் தேவையான உதவிகளையும், அதற்கான இடத்தையும் வழங்கத் தயாராக
இருப்பதாகத் தாய்லாந்து அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2c92d53-a5ea-4a26-a6bb-acb1e31f28fb/26-6a57ecf4dbebf.webp' /></p><p>
</p><p>
இது மியன்மாரில் அமைதியை நிலைநாட்டுவதற்காக ஆசியான் கூட்டமைப்பு
எடுத்து வரும் முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகக்
கருதப்படுகிறது.
</p><p>
ஆசியான் அமைப்பின் சிறப்புத் தூதரான பிலிப்பைன்ஸ் வெளியுறவு அமைச்சர் மரியா
தெரசா லாசரோ மற்றும் தாய்லாந்து அதிகாரிகள், மியன்மார் இராணுவ ஆதரவு பெற்ற
தேசிய ஒற்றுமை மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவுடன்&nbsp; பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T20:37:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிற்கு தொடர் பதிலடி வழங்கப்படும்...! ஈரான் பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-rejects-talks-vows-retaliation-to-us-1784135779"></link>
            <id>https://ibctamil.com/article/iran-rejects-talks-vows-retaliation-to-us-1784135779</id>
            <summary type="text">அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு ஈரான் தொடர்ந்து உறுதியான முறையில் பதிலடி கொடுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு ஈரான் தொடர்ந்து உறுதியான முறையில் பதிலடி கொடுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்தோடு பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் எதுவும் இல்லை எனவும் ஈரான் தெரிவித்துள்ளது.
</p><p>
ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் எஸ்மாயில் பகாய் (Esmaeil Baghaei) இதனை தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>நாட்டின் பாதுகாப்பு</h2><p>சர்வதேச ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தற்போது எங்களிடம் பேச்சுவார்த்தைக்கான எந்த திட்டமும் இல்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d278991e-ee41-4e8c-9f7b-c7fa8b83bb3b/26-6a57ce9b0b501.webp' /></p><p>நாட்டின் பாதுகாப்பில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.
</p><p>
அமெரிக்கா தனது கடமைகளை மீறினால் ஈரான் எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் கட்டுப்படாது.
</p><p>
இது ஒரு கொள்கை, இதனை நாங்கள் தொடர்ந்து பின்பற்றுவோம் ஆரம்பத்திலிருந்தே போர்நிறுத்தத்தை அமெரிக்கா உதாசீனப்படுத்தி வருவதாக ஈரான் நம்புகின்றது” என தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T20:34:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரியப் பெயர்ச்சியால் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/which-zodiac-signs-get-wealth-and-success-2026-1784143692"></link>
            <id>https://ibctamil.com/article/which-zodiac-signs-get-wealth-and-success-2026-1784143692</id>
            <summary type="text">ஜூலை மாதத்தில் பல முக்கிய கிரக மாற்றங்கள் நிகழவுள்ளன.இதில் குறிப்பாக கிரகங்களின் ராஜாவான சூரியன் ஜூலை 16 அன்று கடக ராசிக்குள் நுழைகிறார்.

தன்னம்பிக...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>ஜூலை மாதத்தில் பல முக்கிய கிரக மாற்றங்கள் நிகழவுள்ளன.</p><p>இதில் குறிப்பாக கிரகங்களின் ராஜாவான சூரியன் ஜூலை 16 அன்று கடக ராசிக்குள் நுழைகிறார்.
</p><p>
தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவத்தின் அதிபதியான சூரியன், உணர்வுகளின் ராசியான கடகத்தில் நுழைவது ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. </p><p>இந்த சூரியப் பெயர்ச்சி அனைத்து ராசிகளையும் பாதித்தாலும் சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு கூடுதல் நன்மைகளையும், அதிர்ஷ்டத்தையும் தரவுள்ளது. அவர்கள் யார் என்று இந்த பதிவில் காண்போம்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>மேஷம்</td><td><ol><li>மேஷ ராசிக்காரர்கள் சூரியனின் இந்த ராசி மாற்றத்தால் மகத்தான நன்மைகளை அடையலாம். </li><li>இந்த காலகட்டத்தில் அவர்கள் எதிர்பார்த்ததை விட சிறந்த வருமானத்தை ஈட்ட முடியும்.</li><li> வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் சிறப்பான வாய்ப்புகளைப் பெறலாம்.</li><li> மற்ற துறைகளில் வேலை செய்பவர்களும் நல்ல சம்பளத்துடன் வேலை பெறலாம்.</li><li> அதேபோல, சுயமாக சம்பாதிக்கும் பல வழிகள் அவர்களுக்கு முன்னால்வரும்.
</li><li>
சொந்த தொழில் தொடங்க வேண்டமென்ற நீண்ட நாள் ஆசை நிறைவேறும் அதன் மூலம் பல்வேறு நிதி நன்மைகளை அடைய முடியும். புதிய வேலை தேடுபவவர்களுக்கு இப்பொது நல்ல வாய்ப்பு கிடைக்கும். </li><li>அவர்கள் வளர்ச்சியைக் கண்டு மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு அவர்களின் சூழல் மாறும்.</li></ol></td></tr><tr><td>கடகம் </td><td><ol><li>கடக ராசிக்குள் சூரியன் நுழைவது அவர்களுக்கு நேர்மறையான பலன்களை அளிக்கப்போகிறது.</li><li> சூரியனின் ஆற்றல் அவர்களின் நம்பிக்கையையும் முடிவெடுக்கும் திறனையும் அதிகரிக்கும் இது லாபகரமான வாய்ப்புகளைப் பெற அவர்களுக்கு உதவுகிறது.</li><li>பதவி உயர்வு, புதிய வேலை வாய்ப்பு அல்லது லாபகரமான வணிக ஒப்பந்தம் என எதுவாக இருந்தாலும் இந்த போக்குவரத்து மேஷ ராசிக்காரர்களுக்கு ஆதாயங்களை உறுதியளிக்கிறது. </li><li>நீண்ட கால முதலீடுகளைத் திட்டமிடவும் நேர்மறையான கண்ணோட்டத்தை பராமரிக்கவும் இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்வது வாழ்க்கையில் முன்னேற உதவும்.

&nbsp;&nbsp;</li></ol></td></tr><tr><td>சிம்மம்</td><td><ol><li>சிம்ம ராசியின் அதிபதியாக சூரியன் இருப்பதால் இந்த காலகட்டத்தில் அவர்கள் அதிகபட்ச நன்மைகளை அடையப்போகிறார்கள். </li><li>இந்த நேரத்தில் அவர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள் மேலும் இதனால் சிறந்த பலன்களை எதிர்பார்க்கலாம். </li><li>இந்த காலகட்டத்தில் அவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யலாம். </li><li>உங்கள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகள் இப்போது முடிக்கப்படலாம் மற்றும் உங்கள் பணியிடத்தில் புதிய பொறுப்புகளைப் பெறலாம்.</li><li>உங்கள் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் மேலும் உங்கள் வாழ்க்கையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும்.</li><li>இந்த காலம் சிம்ம ராசிக்காரர்களின் வியாபாரத்திற்கு சாதகமாக இருக்கும் மேலும் உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவுகள் வலுவடையும் இதனால் வாழ்க்கையில் நிம்மதி நிறைந்திருக்கும்.

&nbsp;&nbsp;</li></ol></td></tr></tbody></table><br><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-15T20:32:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[குவைத்தை நோக்கி அடுத்தடுத்து ஏவப்பட்ட 21 ட்ரோன்கள்.. இலக்கு வைக்கப்பட்ட அதிமுக்கிய தளங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kuwait-intercepted-4-missiles-21-drones-from-iran-1784147022"></link>
            <id>https://tamilwin.com/article/kuwait-intercepted-4-missiles-21-drones-from-iran-1784147022</id>
            <summary type="text">குவைத்தின் முக்கிய இடங்களை இலக்கு வைத்து ஈரானிலிருந்து&amp;nbsp;21 ஆளில்லா ட்ரோன்கள் ஏவப்பட்டுள்ளன.&amp;nbsp;4 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 21 ஆளில்லா ட்ரோன்களை த...</summary>
            <content type="html"><![CDATA[<p>குவைத்தின் முக்கிய இடங்களை இலக்கு வைத்து ஈரானிலிருந்து&nbsp;21 ஆளில்லா ட்ரோன்கள் ஏவப்பட்டுள்ளன.&nbsp;</p><p>4 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 21 ஆளில்லா ட்ரோன்களை தங்களது ஆயுதப் படைகள் இடைமறித்து அழித்துள்ளதாக குவைத் பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தற்போது அறிவித்துள்ளார்.</p><p></p><h2>அதிமுக்கிய உள்கட்டமைப்புகள்..&nbsp;&nbsp;</h2><p>
இத்தாக்குதல்கள் தொடர்பாக அவர் மேலும், "ஈரானின் இந்த வான்வழித் தாக்குதல்கள் குவைத்தின் முக்கிய மற்றும் அதிமுக்கிய உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/194187b9-4156-4d92-8e3b-55987342736f/26-6a57ec50946fe.webp' /></p><p> இதனால் சில பொதுச் சொத்துகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், உயிர்ச்சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>அதேவேளை, பிராந்தியத்தில் உள்ள பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாம் தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் முன்னதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T20:23:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மனித உரிமைகள் அமைப்பின் அதிர்ச்சி அறிக்கை: அதிகரித்த மரணதண்டனைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-increases-executions-of-political-prisoners-1784140000"></link>
            <id>https://ibctamil.com/article/iran-increases-executions-of-political-prisoners-1784140000</id>
            <summary type="text">
ஈரானிய அரசாங்கம் அரசியல் கைதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றுவதை கணிசமாக அதிகரித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவி வரும் மோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
ஈரானிய அரசாங்கம் அரசியல் கைதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றுவதை கணிசமாக அதிகரித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>
மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல் மற்றும் பதற்றமான சூழ்நிலையைப் பயன்படுத்தி இவ்வாறு இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>

நோர்வேயின் ஒஸ்லோவைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஈரான் மனித உரிமைகள் என்ற தன்னார்வ அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.
</p><p></p><h2>போராட்டக்காரர்கள்&nbsp;</h2><p>ஈரானுக்கு உள்ளேயும் வெளியேயும் உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்த அமைப்பின் தரவுகளின்படி, ஈரான் அரசு இந்த ஆண்டில் மட்டும் இதுவரை குறைந்தது 47 அரசியல் கைதிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a0e4e52-b087-46e3-8538-58141f7a7ae7/26-6a57d9817d763.webp' /></p><p>

கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை 16 ஆக மட்டுமே இருந்த நிலையில் தற்போது இது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>கடந்த ஆண்டின் இறுதியில் ஈரான் முழுவதும் வெடித்த பரவலான போராட்டங்களின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், போராட்டக்காரர்கள் மீது வன்முறையான அடக்குமுறைகளைக் கையாள வேண்டாம் என ஈரானியத் தலைமைக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
</p><p></p><h2>அரசியல் மாற்றங்கள்</h2><p>அத்துடன் போராட்டக்காரர்களின் மீட்புக்கு அமெரிக்கா உறுதுணையாக நிற்கும் என்றும் அவர் உறுதியளித்திருந்தார்.&nbsp; &nbsp;</p><p>எனினும், அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் போக்கு நீடித்ததாலும் அதன் விளைவாக உலகளாவிய பொருளாதார பாதிப்புகள் மோசமடைந்ததாலும், வெள்ளை மாளிகையின் கடுமையான தொனி காலப்போக்கில் மென்மையடைந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cf1bd4d-c9ff-4f9a-9566-00f3b91d201d/26-6a57d98280fa6.webp' /></p><p>இதன் காரணமாக, ஈரான் அதிருப்தியாளர்களுக்கான அமெரிக்காவின் ஆதரவு குறையத் தொடங்கியது. </p><p>

இத்தகைய உலகளாவிய புவிசார் அரசியல் மாற்றங்களுக்கு மத்தியிலேயே ஈரானில் மரணதண்டனைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T20:19:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொங்கோவில் தீவிரமடையும் எபோலா: ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ebola-intensifies-in-congo-infections-surpass-2000-1784142692"></link>
            <id>https://tamilwin.com/article/ebola-intensifies-in-congo-infections-surpass-2000-1784142692</id>
            <summary type="text">மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ்
பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு பதிவான ஒட்டுமொத்த எபோலா
பாதிப்புகளின் எண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ்
பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு பதிவான ஒட்டுமொத்த எபோலா
பாதிப்புகளின் எண்ணிக்கை 2,011 ஆக உயர்ந்துள்ளது.
</p><p>
அதே நேரத்தில், தங்களுக்குரிய ஊதியம் வழங்கப்படாததை எதிர்த்து அந்த நாட்டின்
சுகாதாரப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு
தடுப்புப் பணிகள் பெரும் தேக்கத்தைச் சந்தித்துள்ளன.
</p><p>
கொங்கோவின் இத்துரி (Ituri) மாகாணத்தில் பரவி வரும் எபோலா தொற்றால் இதுவரை
2,011 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 754 ஆக அதிகரித்துள்ளது.</p><p></p><h2>உயிரிழப்புகள்</h2><p>
</p><p>
எனினும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்த எண்ணிக்கையை விட உண்மையான
உயிரிழப்புகள் 2 முதல் 4 மடங்கு வரை அதிகமாக இருக்கலாம் என்று உலக சுகாதார
அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.
</p><p>
வரலாற்றிலேயே மிக வேகமாகப் பரவி வரும் மூன்றாவது பெரிய எபோலா அலை இதுவென
எல்லைகளற்ற மருத்துவர்கள் (MSF) அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11282cfd-b43e-4ccc-802f-a00759697265/26-6a57db66270ca.webp' /></p><p>
</p><p>
இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், தங்களுக்குச் சேர வேண்டிய ஊதியம் பல மாதங்களாக
வழங்கப்படவில்லை எனக் கூறி இத்துரி மாகாணத்தின் புனியா (Bunia) மற்றும்
ரவாம்பரா (Rwampara) பொது மருத்துவமனை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.</p><p>

தொற்று பரவத் தொடங்கியது முதல் மிகக் கடினமான சூழ்நிலைகளிலும், போதிய
பாதுகாப்பு உபகரணங்கள் இன்றியும் உழைத்த தங்களுக்கு எவ்வித ஊதியமும்
வழங்கப்படவில்லை எனப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T20:15:30+00:00</updated>
        </entry>
    </feed>
