<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-15T10:47:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய வாகனங்களை வாங்க காத்திருப்போருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-prices-to-increase-in-sri-lanka-1786787833"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-prices-to-increase-in-sri-lanka-1786787833</id>
            <summary type="text">இலங்கையில் வாகனங்களின் விலைகள் கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறக்குமதி வரிகள் மீதான 50 வீத கூடுதல் வரியை டிசெம்பர் 31 வரை நீடிக்கும் அரசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் வாகனங்களின் விலைகள் கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> </p><p>இறக்குமதி வரிகள் மீதான 50 வீத கூடுதல் வரியை டிசெம்பர் 31 வரை நீடிக்கும் அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, இந்த நீடிப்பு காட்சியக விலைகளை கணிசமாக உயர்த்தும் என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>அதன்படி, ஒரு சுசுகி வேகன் ஆர் சுமார் 500,000 ரூபா, ஒரு டொயோட்டா ரைஸ் 1 மில்லியன் ரூபா, ஒரு ஹோண்டா வெசல் 1.5 - 2 மில்லியன் ரூபா, ஒரு டொயோட்டா பிராடோ 3 மில்லியன் ரூபா, ஒரு லேண்ட் குரூசர் 5 மில்லியன் ரூபா மற்றும் ஒரு டபுள் கேப் 2 - 2.5 மில்லியன் ரூபா வரை விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p></p><h2>விலை அதிகரிப்பு..&nbsp;</h2><p>அதேநேரம், தற்போது காட்சியகங்களில் உள்ள வாகனங்கள், மே 15இற்கு முன்னர் தொடங்கப்பட்ட கடன் கடிதங்களின் (LCs) கீழ் இறக்குமதி செய்யப்பட்டவை என்றும், அவற்றுக்கு கூடுதல் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/349a5195-c2ea-4a28-9b06-e3269c347098/26-6a8041b8cdde7.webp' /></p><p>
இருப்பினும், மே 15இற்குப் பிறகு திறக்கப்பட்ட கடன் கடிதங்களின் (LCs) கீழ் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு அதிக வரி விதிக்கப்படும், இது விலை உயர்வுக்கு வழிவகுக்கலாம் என கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><p>

"கூடுதல் கட்டணம் நீட்டிக்கப்படாது என்று நாங்கள் எதிர்பார்த்தோம், ஆனால் பல்வேறு காரணங்களால் அது தொடரப்பட்டுள்ளது. </p><p>இதன் விளைவாக, வாகன விலைகளில் மேலும் உயர்வுகளை நாம் எதிர்பார்க்கலாம்" என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கூறியுள்ளார்.&nbsp;</p><p>மேலும் அவர், "இதுவரை அனுமதிக்கப்பட்ட வாகனங்களில் 90 வீத கூடுதல் கட்டணத்திற்கு உட்படாத கடன் கடிதங்களின் கீழ் இருந்தன.&nbsp;</p><p>ஆனால் இப்போது புதிய வரியின் கீழ் வரும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கும் பணி தொடங்கியுள்ளது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T10:46:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[25-க்கு மேல் வெற்றிடங்கள்..! பரீட்சைக்கான தீர்வை நம்பி காத்திருக்கும் விண்ணப்பதாரர்களின் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/examination-for-social-service-officer-grade-iii-1786790374"></link>
            <id>https://tamilwin.com/article/examination-for-social-service-officer-grade-iii-1786790374</id>
            <summary type="text">கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு மூலமாக சமூக சேவை உத்தியோகத்தர் தரம் iii க்கான திறந்த போட்டிப் பரீட்சை விண்ணப்பம் கோரப்பட்டு தற்போது மூன்று வருடங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு மூலமாக சமூக சேவை உத்தியோகத்தர் தரம் iii க்கான திறந்த போட்டிப் பரீட்சை விண்ணப்பம் கோரப்பட்டு தற்போது மூன்று வருடங்கள்
கடந்துள்ள நிலையில் போட்டி பரீட்சை நடத்தப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p>

அத்துடன், விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதே பரீட்சைக்கான கட்டணங்களும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
விண்ணப்பதாரர்களுக்கான பதில்</h2><p>மாறாக, இந்த விடயம் தொடர்பில் இதுவரையில் பரீட்சாதிகளுக்கு எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96dfef27-c9d0-4694-8bad-546a40dc1367/26-6a80434804db6.webp' /></p><p>


இது தொடர்பில் மாகாண பொதுச் சேவை
ஆணைக்குழுவுக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக இது தொடர்பில் விளக்கம்
கோரப்பட்டுள்ள நிலையில், இதற்கான பதிலாக "நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட
2020.02.25 ஆம் திகதிய 01/2020 ஆம் இலக்க முகாமைத்துவ சேவைகள் சுற்றரிக்கை
மற்றும் 2022.04.26 ஆம் திகதிய 03/2022 ஆம் இலக்க தேசிய வரவு செலவு திட்ட
சுற்று நிரூபத்துக்கு அமைவாக நியமனங்கள் அனைத்தும் நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>

25-க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்</h2><p>
கிழக்கில் உள்ள பிரதேச செயலகங்களில் திருகோணமலை ,மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய
மாவட்டங்களில் சமூக சேவை உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் நிலவி வருவதுடன்,
இதனை இழுத்தடிப்பு செய்து வருகின்றனர். </p><p>

தற்போது வரை கிழக்கு மாகாணத்தில்
மொத்தமாக 25க்கு மேற்பட்ட வெற்றிடங்கள் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் துறைசார் உயர் அதிகாரிகள் கவனம்
செலுத்தி இந்த போட்டிப் பரீட்சையை விரைவில் நடத்துமாறு விண்ணப்பதாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T10:45:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அறுவை சிகிச்சைகளுக்காக 25,000க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/25-000-people-waiting-for-surgeries-in-sri-lanka-1786790615"></link>
            <id>https://jvpnews.com/article/25-000-people-waiting-for-surgeries-in-sri-lanka-1786790615</id>
            <summary type="text">இலங்கையின் அரச மருத்துவமனைகளில் 2 இருதய அறுவை சிகிச்சைகள், முக்கிய அறுவை சிகிச்சைகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவப் பரிசோதனைகளுக்காக 5,000க்கும் மேற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் அரச மருத்துவமனைகளில் 2 இருதய அறுவை சிகிச்சைகள், முக்கிய அறுவை சிகிச்சைகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவப் பரிசோதனைகளுக்காக 5,000க்கும் மேற்பட்ட நோயாளிகள்&nbsp; காத்திருப்புப் பட்டியலில் உள்ளதாகத் தகவல்&nbsp; வெளியாகியுள்ளது.</p><p>அரச சுகாதாரத் துறையில் அதிகரித்து வரும் காத்திருப்புப் பட்டியல் நெரிசலைக் குறைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர், நிபுணத்துவ மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.</p><p>கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.</p><p>அவர்களில் , சில இருதய அறுவை சிகிச்சைகளுக்கான காத்திருப்பு காலம் 2029ஆம் ஆண்டு வரை நீடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அரச மருத்துவமனைகளில் நிலவும் காத்திருப்புப் பட்டியலைக் குறைப்பதற்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும், அந்தத் திட்டம் எதிர்பார்த்த அளவில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>நீண்டகாலமாக சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நோயாளிகளில், தனியார் மருத்துவமனைகளில் அதிக செலவில் சிகிச்சை பெற முடியாத குறைந்த வருமானம் கொண்டவர்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இதற்குத் தீர்வாக, ஜனாதிபதி நிதியத்தின் ஒதுக்கீடுகளை அதிகரித்து, அரச மருத்துவமனைகளில் காத்திருக்கும் நோயாளிகள் குறிப்பிட்ட கட்டண அடிப்படையில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்தலாம் என அவர் யோசனை முன்வைத்துள்ளார்.</p><p>அதேவேளை, அரச மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மேலதிக சேவைக்கான உரிய கொடுப்பனவுகளை வழங்கி, தினசரி மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>நீண்டகாலத் தீர்வாக, சிறப்பு மருத்துவப் பயிற்சி பெற்ற மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், மருத்துவமனை வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்குத் தேவையான உபகரணங்களின் போதுமான இருப்பை உறுதி செய்தல் அவசியம் என்றும் நிபுணத்துவ மருத்துவர் சமல் சஞ்சீவ வலியுறுத்தியுள்ளார்</p>]]></content>
            <updated>2026-08-15T10:43:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டில் ஆறு பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shooting-in-the-us-6-people-killed-1786788994"></link>
            <id>https://ibctamil.com/article/shooting-in-the-us-6-people-killed-1786788994</id>
            <summary type="text">அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். </p><p>உயிரிழந்தவர்களில் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபரும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
அப்பகுதியில் அமைந்துள்ள இரண்டு வீடுகளை இலக்காகக் கொண்டு இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு</h2><p> சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ae200fc-1160-4ccc-9314-05d20ea6d695/26-6a8040d070ea5.webp' /></p><p>

துப்பாக்கிச்சூட்டை நடத்திய பின்னர் சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தகவல் கிடைத்ததையடுத்து, அவரைக் கைது செய்வதற்காக மிச்சிகன் பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
</p><p>
இந்நிலையில், பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கைகளுக்கு மத்தியில், சந்தேகநபரின் சடலம் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதனால், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த ஆறு பேரில் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாகக் கூறப்படும் நபரும் உள்ளடங்கியுள்ளார்.</p><p>
துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>மேலும் இந்த சம்பவம் தொடர்பில்&nbsp;மிச்சிகன் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T10:40:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருட வந்த இடத்தில் கடுப்பான திருடன்; என்னதான் நடந்தது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-thief-gets-annoyed-at-the-scene-of-the-crime-1786776525"></link>
            <id>https://jvpnews.com/article/a-thief-gets-annoyed-at-the-scene-of-the-crime-1786776525</id>
            <summary type="text">நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள பிரபல தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றை உடைத்து திருட முயன்றதாக சந்தேகிக்கப்படும் அடையாளம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள பிரபல தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றை உடைத்து திருட முயன்றதாக சந்தேகிக்கப்படும் அடையாளம் தெரியாத நபரின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.</p><p>கடந்த வெள்ளிக்கிழமை (14) இரவு சுமார் 10.45 மணியளவில் குறித்த விற்பனை நிலையத்திற்கு வந்த சந்தேகநபர், கதவில் பொருத்தப்பட்டிருந்த பூட்டை பலவந்தமாக திறந்து உள்ளே நுழைய நீண்ட நேரமாக முயற்சித்துள்ளார்.</p><p>எனினும், பூட்டை திறக்க முடியாத நிலையில், தனது முயற்சியைக் கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>சந்தேகநபர் பூட்டைத் திறக்க போராடிய காட்சிகள் விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கண்காணிப்பு கெமெராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளன.</p><p>சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>கண்காணிப்பு கெமெரா பதிவுகளின் உதவியுடன் சந்தேகநபரை விரைவில் அடையாளம் காண முடியும் என&nbsp; தெரிவித்துள்ள பொலிஸார் , பொதுமக்களின் உதவியையும் கோரியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-15T10:36:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பிரதேசத்தில் அதிர்ச்சி; இளம் தாய் கூட்டு வன்புனர்வு ; மகன் செய்த கொடும் செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mother-gang-raped-in-vavuniya-committed-by-son-1786784583"></link>
            <id>https://jvpnews.com/article/mother-gang-raped-in-vavuniya-committed-by-son-1786784583</id>
            <summary type="text">வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண் ஒருவரை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில்ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண் ஒருவரை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில்ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார்&nbsp; (14) தெரிவித்தனர். இது தொடர்பாக பொலிசார் மேலும் தெரிவித்ததாவது,</p><h2>&nbsp;முதல் கணவரின் மகனே திட்டமிட்டு&nbsp;கொடும் செயல்</h2><p>கடந்த 8 ஆம் திகதி வவுனியா, மடுகந்தை, மயிலங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை உடைத்து உட் சென்ற சிலர் அங்கிருந்த வாகனச் சாரதி மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு, வீட்டு உரிமையாளரான 51 வயது பெண் அணிந்திருந்த நகைகளை&nbsp; கொள்ளையிட்டு&nbsp; கூட்டு துஸ்பிரயோகம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.</p><p>அத்துடன் வீட்டில் மறைத்து வைத்திருந்த 80 இலட்சம் பெறுமதியான இரத்தினக் கல், 56 இலட்சம் பெறுமதியான 15 பவுணுக்கு அதிகமான தங்க நகைகள், 5 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம், 15 வாகனப் புத்தகங்கள் மற்றும் திறப்புகள், 35 காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் என பலவற்றை திருடிச் சென்றுள்ளனர்.</p><p>பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தின் குற்த்தடுப்பு பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து விரைந்து செயல்பட்ட பொலிசார் ஆபத்தான நிலையில் இருந்த, பாதிக்கப்பட்ட இருவரையும் மீட்டு வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.&nbsp;</p><p>வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கு அமைய வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.யே.எஸ்.ரத்னமலலா அவர்களின் வழிகாட்டலில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவின் பதில் பொறுப்பதிகாரி ஆர். பந்துல தலைமையில் பொலிஸ் சார்ஜன்டுகளான சந்தன (16446), கேரத் (14692), பியங்கர ( 47358), பொலிஸ் கொன்ஸ்தாபிள்களான நவகீதன் ( 8098), சுப்புன் (28752), சம்பத் ( 11388) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.</p><p>பாதிக்கப்பட இப்பெண்ணின் தொழில்சாலையில் பணியாளர்களாக வேலை செய்த 35 வயதான உக்குவெல மாத்தறை பகுதியை சேர்த்த நபர் ஒருவரையும், 29 வயதான களேமிதுனுவெல, சிவலாங்குளம் பகுதியை சேர்ந்த மற்றொரு இளைஞரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.</p><p>பெண்ணிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் , சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பாதிக்கப்பட்ட பெண்ணின் முதல் கணவரின் மகனே திட்டமிட்டு இச் சம்பவத்துக்கு மூலகாரணமாக செயல்பட்டு இக் கொள்ளைச் சம்பவத்தை நடத்தியதாக கூறப்படுகின்றது.</p><p>மகனே&nbsp; தனது காரில் களேமிதுனுவெல சிவலாங்குளம் பகுதியில் இருந்து சந்தேக நபர்களை ஏற்றி வந்து வீட்டு அருகில் வீதியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது.</p><p>மேலும் சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் திருடப்பட்ட இரத்தினக்கற்கள், தங்க நகைகள், வாகனப் புத்தகங்கள், திறப்புகள், 35 காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் என்பவற்றை மீட்டது.</p><p>அத்துடன், இச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மேலதிக விசாரணைணகளின் பின் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்</p>]]></content>
            <updated>2026-08-15T10:35:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சனிக்கிழமைகளில் கடமைகளிலிருந்து விலக கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/grama-niladharis-abstain-from-duties-on-saturdays-1786787762"></link>
            <id>https://ibctamil.com/article/grama-niladharis-abstain-from-duties-on-saturdays-1786787762</id>
            <summary type="text">இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் இன்று (15) முதல் சனிக்கிழமைகளில் கடமைகளிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கிராம உத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் இன்று (15) முதல் சனிக்கிழமைகளில் கடமைகளிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>கிராம உத்தியோகத்தர்களால் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் தவறியதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்தநிலையில் மீள அறிவிக்கும் வரை சனிக்கிழமைகளில் கடமைகளிலிருந்து விலகுவதற்கு கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானித்துள்ளதாக அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் நெவில் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மேலதிக கொடுப்பனவு</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், "இன்று முதல் சனிக்கிழமை அலுவலக நாட்களிலிருந்து விலகுமாறு ஒரு சங்கமாக நாங்கள் தீர்மானித்து ஏனைய சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a713b0cb-eb8c-4897-9d8b-65673cfa024d/26-6a803fc691bd4.webp' /></p><p> </p><p>அதற்கமைய, எவ்வித மேலதிக கொடுப்பனவும் இன்றி எங்களது விடுமுறையை தியாகம் செய்து மேற்கொள்ளும் அந்த அலுவலக நாளை நாங்கள் தவிர்க்கிறோம்.</p><p> மேலும், அன்றைய தினம் நாங்கள் களப் பணிகளை மேற்கொள்ள மாட்டோம். அதன்படி, சனிக்கிழமை அலுவலக நாளை புறக்கணிக்கிறோம். அதற்கமைய, கிராம உத்தியோகத்தர்கள் இனிமேல் மறு அறிவித்தல் வரை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டுமே பிரிவு அலுவலகங்களில் தங்கியிருப்பார்கள்." என தெரிவித்தார்.</p><p></p><h2>இரு நாள் தொழிற்சங்க நடவடிக்கை</h2><p>
</p><p>இதேவேளை பயணக் கொடுப்பனவை அதிகரித்தல், பட்டப்படிப்பை குறைந்தபட்ச தகுதியாக மாற்றுதல், கம்மன்பில குழுவினால் பரிந்துரைக்கப்பட்டு அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவுகளை வழங்குதல், சனிக்கிழமை மற்றும் அரச விடுமுறை நாட்களில் செய்யப்படும் சேவைக்காக ஒரு நாள் சம்பளத்தை வழங்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் கடந்த 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் மருத்துவ விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a64e6eb9-06d7-4048-981b-481271924654/26-6a803fc5b17e9.webp' /></p><p>

 

எனினும், குறித்த இரு நாள் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமை மற்றும் கோரிக்கைகளுக்கு நேர்மறையான தீர்வை வழங்கத் தவறியமை காரணமாக இவ்வாறு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T10:33:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் முன்பதிவிலேயே உச்சம் தொட்ட விஸ்வநாத் &amp; சன்ஸ், ரெக்கார்ட் வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vishwanath-and-sons-second-and-third-day-booking-1786786431"></link>
            <id>https://cineulagam.com/article/vishwanath-and-sons-second-and-third-day-booking-1786786431</id>
            <summary type="text">விஸ்வநாத் &amp;amp; சன்ஸ்

சூர்யா, மமிதா, ராதிகா நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக நேற்று வெளியான படம் விஸ்வநாத் &amp;am...</summary>
            <content type="html"><![CDATA[<h2>விஸ்வநாத் &amp; சன்ஸ்
</h2><p>
சூர்யா, மமிதா, ராதிகா நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக நேற்று வெளியான படம் விஸ்வநாத் &amp; <a href="https://www.youtube.com/watch?v=wDTHWFw1mw0" target="_blank">சன்ஸ்</a>. இப்படம் குடும்ப ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/957d4909-6c9b-4a65-9606-996b5f171335/26-6a80328231b16.webp' /></p><h2>

முதல் நாள் வசூல்</h2><p>

இந்நிலையில், முதல் நாள் வசூல் உலகம் முழுவதும் ரூ 34 கோடிகள் வரை இருக்க, இன்றும் நாளையும் முன்பதிவிலேயே உச்சம் தொட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3f87ba9-0b9d-4f5c-9be7-281a60bd3b67/26-6a80328399102.webp' /></p><p></p><h2>முன்பதிவு வசூல் விவரம்
</h2><p>
ஆம், விஸ்வநாத் அண்ட் சன்ஸ் இன்றும் நாளையும் மட்டுமே ரூ 40 கோடிகள் வரை முன்பதிவு ஆகியுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கண்டிப்பாக 3 நாட்களில் ரூ 120 கோடிகள் வரை வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0536d89-0c5a-4915-b3c8-f2010eafaebc/26-6a803282e027f.webp' /></p>]]></content>
            <updated>2026-08-15T10:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[1997 வவுனிக்குளம் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவுதினம் இன்று!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vavunikulam-massacre-1997-1786784174"></link>
            <id>https://ibctamil.com/article/vavunikulam-massacre-1997-1786784174</id>
            <summary type="text">
வடக்குக் கிழக்கில் காடுகளால் அதிகம் சூழப்பட்டுள்ள மாவட்டமான முல்லைத்தீவின் தென்மேற்குப் பகுதியை அண்டிய மாந்தை கிழக்குப் பிரதேசசெயலர் பிரிவினுள் வவுன...</summary>
            <content type="html"><![CDATA[<p>
வடக்குக் கிழக்கில் காடுகளால் அதிகம் சூழப்பட்டுள்ள மாவட்டமான முல்லைத்தீவின் தென்மேற்குப் பகுதியை அண்டிய மாந்தை கிழக்குப் பிரதேசசெயலர் பிரிவினுள் வவுனிக்குளம் அமைந்துள்ளது.&nbsp;</p><p>

இக்கிராமத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பாரிய குளங்களில் ஒன்றான வவுனிக்குளம் அமைந்துள்ளது.</p><p>

1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினர் வவுனியாவின் ஓமந்தைப் பகுதியூடாக ‘ஜெயசிக்குறு’ இராணுவ நடவடிக்கை ஒன்றினை கண்டி வீதியினை பிரதான நகர்வு மையமாகக்கொண்டு மேற்கொண்டு வந்தனர்.&nbsp;</p><p>

இந்த நடவடிக்கையின் போது இராணுவத்தினர் ஏவிய எறிகணைகளும், துப்பாக்கிச் சன்னங்களும், விமானக்குண்டுகளும் பொதுமக்களைத் தாக்கின.&nbsp;</p><p>
இராணுவ நடவடிக்கையினாற் பயந்த மக்கள் கோயில்களிலும், தேவாலயங்களிலும், பாடசாலைகளிலும் தஞ்சம் புகுந்தனர். இவ்வாறு தஞ்சம் புகுந்த மக்களில் வவுனிக்குள மக்களும் உள்ளடங்குவர்.</p><p>

15.08.1997 அன்று ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கைக்குப் பயந்து வவுனிக்குள மக்கள் தமது பகுதியில் அமைந்துள்ள கிறித்தவ தேவாலயம் ஒன்றினுள் தஞ்சம் புகுந்தனர். இவர்களில் குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்களென பலதரப்பட்டவர்களும் காணப்பட்டனர்.</p><p>
இதைவிட ஏனைய இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்த பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களும் இவ்வாலயத்தினுள்ளேயே தஞ்சம் புகுந்தனர். இவர்கள் அனைவருமே கர்த்தரே எம்மைக் காப்பாற்றுங்களென மனதாலும், வார்த்தைகளாலும் மன்றாடிய வண்ணமே இருந்தனர்.</p><p>

15.08.1997 அன்று காலை 9மணியளவில் விமானப்படையின் இரண்டு; ‘கிபீர்’ குண்டுவீச்சு விமானங்கள் பொதுமக்கள் இருந்த தேவாலயத்தின் மீது குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டன.&nbsp;</p><p>
இந்தக் குண்டுத் தாக்குதல்களினால் பதினொரு பொதுமக்கள் அவ்விடத்திலேயே உடல் சிதறிப் பலியாகினர்.பதினாறிற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தேவாலயமும் பலத்த சேதத்திற்குள்ளானது.&nbsp;</p><p>

படுகாயமடைந்த மக்களை உயிர் பிழைத்த மக்கள் மூன்று மைல்களுக்கு அப்பாலுள்ள மல்லாவி வைத்தியசாலைக்கு வாகனத்திலும், மோட்டார் சைக்கிள்களிலும் கொண்டு சென்றனர். கொண்டு செல்லப்பட்டவர்களில் ஒருவர் 18.08.1997 அன்று வைத்தியசாலையில் இறந்தார்.</p><p>
அன்றைய தினம் மீண்டும் மு.ப 11.00 மணியளவில் அப்பகுதியில் அதே விமானங்கள் நடத்திய குண்டுத்தாக்குதலில் எட்டுப் பொதுமக்கள் படுகாயமடைந்தனர். இவர்களும் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் 20.08.1997 அன்று வைத்தியசாலையில் இறந்தார்.&nbsp;</p><p>
இவ்வாறாக வவுனிககுள கிறித்தவ தேவாலயம் மீதான விமானக்குண்டு தாக்குதலில் எல்லாமாகப் பதினொரு பொதுமக்கள் உயிரிழந்ததுடன், இருபதிற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தார்கள். </p><p>அன்றைய கொடூரமான நாட்களையும் அன்று கொன்றொழிக்கப்பட்ட அப்பாவித்தமிழ் மக்களையும் கனதியான வலிகளோடு நினைவேந்துகிறது ஐபிசி தமிழ்</p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-15T10:27:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் மது பயன்பாட்டை விடவும் அதனாலேற்படும் சுகாதார செலவுகள் மிக அதிகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/alcohol-related-health-and-economic-costs-exceed-1786789129"></link>
            <id>https://ibctamil.com/article/alcohol-related-health-and-economic-costs-exceed-1786789129</id>
            <summary type="text">இலங்கையில் மது பயன்பாட்டுடன் தொடர்புடைய சுகாதார மற்றும் பொருளாதாரச் செலவுகள் 2025 ஆம் ஆண்டில் ரூ. 335 பில்லியனாக இருந்தது. இது, அதே ஆண்டில் மது வரிகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் மது பயன்பாட்டுடன் தொடர்புடைய சுகாதார மற்றும் பொருளாதாரச் செலவுகள் 2025 ஆம் ஆண்டில் ரூ. 335 பில்லியனாக இருந்தது. இது, அதே ஆண்டில் மது வரிகள் மூலம் வருவாயாக வசூலிக்கப்பட்ட ரூ. 254 பில்லியனை விட கணிசமாக அதிகரிப்பு என தெரியவந்துள்ளது.
</p><p>

மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) வழங்கிய தரவுகளின்படி, மேற்கண்ட விடயம் தெரியவந்துள்ளது.</p><h2>மது பயன்பாட்டுடன் தொடர்புடைய செலவுகள்</h2><p>2025 ஆம் ஆண்டில் மது வரி மூலம் ஈட்டப்பட்ட வருவாயை விட, மது பயன்பாட்டுடன் தொடர்புடைய செலவுகள் ஏறக்குறைய ரூ. 81 பில்லியன் அதிகமாக இருந்தன என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ff108d2-9b18-469b-a136-fe6f4199c7fc/26-6a803d0aa16fd.webp' /></p><p>
</p><p>
தரவுகளின்படி, ரூ. 335 பில்லியன் சுகாதார மற்றும் பொருளாதாரச் செலவுகள் என்பது அதே ஆண்டில் மது பயன்பாட்டினால் ஏற்பட்ட தாக்கத்தைக் குறிக்கிறது, அதேசமயம் ரூ. 254 பில்லியன் என்பது அந்தக் காலகட்டத்தில் மது வரிகள் மூலம் ஈட்டப்பட்ட வருவாயைக் குறிக்கிறது.</p><p></p><h2>ஆய்வில் வெளியான தகவல்</h2><p>

இந்தத் தரவுகள் இலங்கை மத்திய வங்கி, இலங்கை கலால் வரித் திணைக்களம், சுகாதார அமைச்சு மற்றும் மூவெண்டி இன்டர்நஷனல், யுஎன்டிபி மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றின் பங்களிப்புடன் நடத்தப்பட்ட 'இலங்கையில் மது கட்டுப்பாட்டின் சுகாதார மற்றும் பொருளாதாரத் தாக்கங்கள்' என்ற தலைப்பிலான ஆய்வு ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd7eb8d3-8769-427b-b881-e3f4c650d1c5/26-6a803d0b5424a.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T10:27:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டிலிருந்து வந்த உத்தரவில் சேகரிக்கப்பட்ட சிறை அதிகாரிகளின் தகவல்கள்! கசிந்த இரகசிய குரல் பதிவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/person-arrested-for-collecing-data-on-prison-1786753884"></link>
            <id>https://tamilwin.com/article/person-arrested-for-collecing-data-on-prison-1786753884</id>
            <summary type="text">சிறைச்சாலை அதிகாரிகளை பற்றிய தகவல்களை இரகசியமாக சேகரித்து வந்ததாக கூறப்படும் நபர் ஒருவரை சஹஸ்புர பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அண்மையில் புதிய மெகசின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலை அதிகாரிகளை பற்றிய தகவல்களை இரகசியமாக சேகரித்து வந்ததாக கூறப்படும் நபர் ஒருவரை சஹஸ்புர பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p>அண்மையில் புதிய மெகசின் சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலின் போது உயிரிழந்த முகமட் அஸ்மான் ஷெரிப்டீன் என்பவரின் நெருங்கிய சகா ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>மீட்கப்பட்டுள்ள குரல் பதிவுகள்&nbsp;</h2><p>கடந்த ஆண்டு தெஹிவளை, வட்டரப்பல வீதியில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலைச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் அஸ்மானின் மோட்டார் சைக்கிள் சாரதியாகவும் இவர் செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c47077a-0508-487f-bdfe-df7a48e41dfb/26-6a7fb35e2c12c.webp' /></p><p> </p><p>
அத்துடன், புதிய மெகசின் சிறைச்சாலை மோதலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னரே இவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>கைது செய்யப்பட்ட நபரின் கைப்பேசியைப் பொலிஸார் பரிசோதித்தபோது, வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் "கொஸ் மல்லி" என்ற பாதாள உலகக் குழுத் தலைவருடன் அவர் பேசிய பல குரல் பதிவுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>அந்த உரையாடல்களில், சிறைச்சாலை அதிகாரிகளைப் பற்றிச் சேகரிக்கப்பட்ட விபரங்களும், அவர்களுக்குத் தீங்கு விளைவிப்பதற்கான ஆயத்தங்கள் குறித்த தகவல்களும் அடங்கியுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>இச்சம்பவம் குறித்து சஹஸ்புர பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-15T10:26:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல் அதிகரிப்புக்கு அமைச்சர் உடனடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minister-takes-immediate-action-to-pirates-1786787979"></link>
            <id>https://tamilwin.com/article/minister-takes-immediate-action-to-pirates-1786787979</id>
            <summary type="text">&amp;nbsp;கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல் அதிகரிப்பு உள்ளிட்ட கடற்றொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு விரைவில் நடைமுறைத் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல் அதிகரிப்பு உள்ளிட்ட கடற்றொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு விரைவில் நடைமுறைத் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
</p><p>
அம்பாறை மாவட்ட மீன்வள ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>


இதன்போது, ​​மாவட்டத்தின் கடற்றொழிலை மேம்படுத்துவது, கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது மற்றும் அவர்களின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பில் விரிவான விவாதங்கள் இடம்பெற்றுள்ளன.</p><p>

 அதில், பங்கேற்ற மீன்வள சங்கங்களின் பிரதிநிதிகள், தாங்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் தொழில்ரீதியான பிரச்சனைகள் மற்றும் சவால்கள் குறித்து அமைச்சரிடம் விரிவாக விளக்கமளித்துள்ளனர்.</p><h2>

கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல்</h2><p>

 ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கடற்கொள்ளையர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், அத்தகைய நடவடிக்கைகளை முற்றிலுமாக ஒழிக்கவும் அமைச்சகம் ஒரு உடனடி மற்றும் நிரந்தரத் திட்டத்தை வகுக்க வேண்டும் என்று மீன்வள சங்கங்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/309d966c-713f-458f-883a-4ed539f7ed60/26-6a803cd2093e4.webp' /></p><p> </p><p>

ஒலுவில் துறைமுகத்தை ஒரு முழுமையான மீன்வளத் துறைமுகமாக வகைப்படுத்தவும், துறைமுகத்தில் தேங்கியுள்ள மணலை அகற்றி மீன்பிடி நடவடிக்கைகளுக்கு ஏற்றவாறு துறைமுகத்தை மேம்படுத்தவும் அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. </p><p>

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் துறைகளுடன் கலந்தாலோசித்து எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்கு நடைமுறைக்கு உகந்த மற்றும் உடனடித் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதியளித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T10:18:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சோவியத் தியாகிகளின் சாதனைகளை மறக்கமாட்டோம்: வடகொரிய ஜனாதிபதி கிம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kim-jong-un-tribute-soviet-soldiers-in-north-korea-1786789099"></link>
            <id>https://news.lankasri.com/article/kim-jong-un-tribute-soviet-soldiers-in-north-korea-1786789099</id>
            <summary type="text">வடகொரியா, ரஷ்யா இடையிலான சிறந்த வரலாறு தீராத உந்து சக்தியாக உள்ளது என கிம் தெரிவித்தார். 

வடகொரியாவின் பியோங்யாங்கில் உள்ள விடுதலை நினைவுச் சின்னத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடகொரியா, ரஷ்யா இடையிலான சிறந்த வரலாறு தீராத உந்து சக்தியாக உள்ளது என கிம் தெரிவித்தார்.</p><p> 

வடகொரியாவின் பியோங்யாங்கில் உள்ள விடுதலை நினைவுச் சின்னத்தை கிம் பார்வையிட்டதாக கொரிய ஊடகம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><h2>நிறைவு விழா&nbsp;</h2><p>

1910 முதல் 1945-ஆம் ஆண்டு வரையிலான ஜப்பானியக் காலனித்துவ ஆட்சியில் இருந்து கொரியா விடுதலையடைந்ததன் 81-வது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80b4d019-f55d-42d0-96f3-5af97ebdc39f/26-6a803cf02b447.webp' />&nbsp;</p><p></p><p>

அப்போது சோவியத் இராணுவத்தின் தியாகிகளின் சாதனைகளை நாங்கள் மறக்கமாட்டோம் என்ற வாசகம் கொண்ட மலர்வளையம் மூலம் ஜனாதிபதி கிம்-ஜோங் உன் (Kim-Jong Un) அஞ்சலி செலுத்தினார்.
</p><p>
மேலும், பியோங்யாங்கில் உள்ள விடுதலை நினைவுச் சின்னத்தை அவர் பார்வையிட்டதாக வடகொரியாவின் 'கொரிய மத்திய செய்தி நிறுவனம் (KCNA) தெரிவித்தது.&nbsp;</p><h2>இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு</h2><p>

கிம் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு ஒன்றில், "வடகொரியா மற்றும் ரஷ்யா இடையிலான சிறந்த வரலாறு, மரபுகள் மற்றும் இரத்த உறவு ஆகியவை, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பு உறவுகளுக்கு ஒரு அடிப்படைத் தூணாகவும், தீராத உந்து சக்தியாகவும் தற்போது திகழ்கின்றன" என்று குறிப்பிட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cd45dd8-a3a8-4bc3-9c45-855a64965396/26-6a803cef74552.webp' /></p><p>

இதற்கிடையில், இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் தீவிரமாக ஒத்துழைத்து வருவதாகவும், பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்து ரஷ்ய ஜனாதிபதி புடின் (Putin) சனிக்கிழமையன்று வாழ்த்து செய்தி அனுப்பியதாக KCNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23909f24-9a06-4fc3-a3da-93492bafb0bc/26-6a803ceebb3c5.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T10:15:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹர்திக் பாண்டியாவின் முன்னாள் மனைவி நடாஷாவின் கிளாமர் கிளிக்ஸ்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/hardik-ex-wife-natasa-stankovic-recent-photoshoot-1786782400"></link>
            <id>https://viduppu.com/article/hardik-ex-wife-natasa-stankovic-recent-photoshoot-1786782400</id>
            <summary type="text">2014ல் பிக்பாஸ் இந்தி சீசன் 8ல் போட்டியாளராக கலந்து கொண்டு 28 நாட்களில் எவிக்ட்டாகி வெளியேறினார். அதன்பின் நச் பலியே 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 3வத...</summary>
            <content type="html"><![CDATA[<p>2014ல் பிக்பாஸ் இந்தி சீசன் 8ல் போட்டியாளராக கலந்து கொண்டு 28 நாட்களில் எவிக்ட்டாகி வெளியேறினார். அதன்பின் நச் பலியே 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 3வது ரன்னர் அப் இடத்தினை பிடித்தார். அதன்பின் ஹார்திக் பாண்டியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e1faf5a-fb4b-4a2c-8040-d2072fef8872/26-6a8022c87a472.webp' />]</p><p>
</p><p>
திருமணமாகி 4 ஆண்டுகள் வாழ்ந்த இருவரும் கடந்த 2024 ஜூலை மாதம் கருத்து வேறுபாட்டால் பிரிந்து விவாகரத்து பெற்றனர். இருவருக்கும் ஒரு மகன் இருக்கும் நிலையில் விவாகரத்து செய்தது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
</p><p>
அதன்பின் நடாஷா தன்னுடைய ஆண் நண்பருடன் காதலில் இருப்பதாகவும் இருவரும் பல இடங்களுக்கு சென்று வருவதாகவும் கூறப்படுகிறது. </p><p>தற்போது, இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடாஷா, கிளாமர் லுக்கில் எடுத்த ஆரஞ்ச் நிற போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-15T10:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்தில் தடம்புரண்ட ரயில்: இரண்டு நாட்களில் இரண்டாவது சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/passenger-train-derailed-service-in-essex-1786788474"></link>
            <id>https://news.lankasri.com/article/passenger-train-derailed-service-in-essex-1786788474</id>
            <summary type="text">இங்கிலாந்தின் எசெக்ஸில் மீண்டும் ஒரு ரயில் தடம்புரண்டுள்ளது.


இங்கிலாந்தின் கிழக்கு சசெக்ஸிலுள்ள லூயிஸ் என்னுமிடத்தில் நேற்று முன் தினம் ஒரு பயணிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்தின் எசெக்ஸில் மீண்டும் ஒரு ரயில் தடம்புரண்டுள்ளது.
</p><p>

இங்கிலாந்தின் கிழக்கு சசெக்ஸிலுள்ள லூயிஸ் என்னுமிடத்தில் நேற்று முன் தினம் ஒரு பயணிகள் ரயில் தடம்புரண்டது.
</p><p>
இந்நிலையில், நேற்று மீண்டும் ஒரு பயணிகள் ரயில் தடம்புரண்டுள்ளது.
</p><h3>
இங்கிலாந்தில் தடம்புரண்ட இரண்டாவது ரயில்</h3><p>

Rayleigh என்னுமிடத்திலிருந்து Wickford ரயில் நிலையம் நோக்கிப் புறப்பட்ட பயணிகள் ரயில் ஒன்று, நேற்று மதியம் உள்ளூர் நேரப்படி 2:12 மணியளவில் Wickford அருகே தடம்புரண்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79f6203c-9b43-4bf6-8d81-bceb21a063ff/26-6a803a7bee34f.webp' /></p><p></p><p>ரயிலில் 45 பேர் பயணித்த நிலையில், யாருக்கும் பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை என அப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினரான மார்க் ஃப்ராங்கோயிஸ் தெரிவித்துள்ளார்.</p><p>

இந்நிலையில், நேற்றைய திகதியிட்ட பயண்ச்சீட்டுகளை இன்றும் பயன்படுத்திக்கொள்ளலாம் என ரயில்வே நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>
இப்படி இரண்டு நாட்களில் இரண்டு ரயில்கள் தடம்புரண்டுள்ள விடயம் சற்றே அச்சத்தை உருவாக்கியுள்ள நிலையில், பிரித்தானிய போக்குவரத்துத் துறை, உலகின் பாதுகாப்பான ரயில் சேவைகளில் பிரித்தானிய ரயில் சேவையும் ஒன்று என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="http://british-family-defrauded-motorway-tolls-in-france-1786785544" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T10:08:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தை உரிமை கொண்டாடிய வாடகை தாய்: பெற்றோர் தொடுத்த வழக்கு: தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/america-california-surrogacy-legal-battle-1786788174"></link>
            <id>https://news.lankasri.com/article/america-california-surrogacy-legal-battle-1786788174</id>
            <summary type="text">அமெரிக்காவில் பிறந்த குழந்தையை வாடகை தாய் உரிமை கொண்டாடிய நிலையில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.வாடகை தாய் மூலம் குழந்தைஅமெரிக்காவின் கல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் பிறந்த குழந்தையை வாடகை தாய் உரிமை கொண்டாடிய நிலையில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.</p><h2>வாடகை தாய் மூலம் குழந்தை</h2><p>அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தை சேர்ந்த தம்பதி ஓமர் அகமது மற்றும் நெளஷீன் கில்கர் ஆகியோர் செவிலியரான மெக்கென்னா வெஸ்ட் என்ற வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளனர்.</p><p>மேலும் இது தொடர்பாக அவர்களுக்கு இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தில் கருவில் குழந்தைக்கு ஏதேனும் உடல் நல குறைபாடுகள் இருந்தால் கருவை கலைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு இருந்தது.</p><p>இதையடுத்து சிசுவின் 20 வது வாரத்தில் எடுக்கப்பட்ட மருத்துவ சிகிச்சையில் குழந்தைக்கு இதய நோய் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba4bb367-1d86-4c3a-b296-20e5efa26b2c/26-6a8039500d73a.webp' /></p><p> மேலும் குழந்தை பிறந்த உடனே சில அறுவை சிகிச்சைகள் செய்யப்பட வேண்டியது இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் வாடகை தாயிடம் கருவை கலைக்குமாறு கூறியதாகவும், ஆனால் குழந்தையை நானே வைத்துக் கொள்கிறேன் என்று வாடகை தாய் கூறியதாகவும் கூறப்படுகிறது.</p><p></p><p> இறுதியில் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த அந்த வாடகை தாய்&nbsp; மெக்கென்னா வெஸ்ட், அந்த குழந்தையுடன் டெக்சாஸ் மாகாணத்திற்கு தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.</p><h2> நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெற்றோர்</h2><p>
இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் நீதிமன்றத்தில் வாடகை தாய் மீது வழக்கு தொடர்ந்தனர்.</p><p>மேலும் குழந்தையை தாங்கள் கலைக்க சொல்லவில்லை என்றும், வாடகை தாய் எங்களை ஏமாற்றி விட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.</p><p> வழக்கினை விசாரித்த நீதிமன்றம் இறுதியில் குழந்தையை அதன் உண்மையான தாயிடம் ஒப்படைக்குமாறும், குழந்தைக்கு தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளையும் வழங்குமாறு உத்தரவிட்டு தீர்ப்பு அளித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T10:03:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராவணனுக்கு செக் வைக்க அறிவுக்கரசி, ஷாக்கில் கதிர், நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ethirneechal-thodargiradhu-promo-15-aug-2026-1786786507"></link>
            <id>https://cineulagam.com/article/ethirneechal-thodargiradhu-promo-15-aug-2026-1786786507</id>
            <summary type="text">எதிர்நீச்சல் தொடர்கிறதுகுணசேகரன் என்ற ஆணாதிக்க எண்ணம் கொண்டவரை அடக்கி அவர் செய்த தவறுகளுக்கு தண்டனை வாங்கிக்கொடுத்து அவரது வீட்டுப் பெண்களுக்கு சுதந்த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>எதிர்நீச்சல் தொடர்கிறது</h2><p>குணசேகரன் என்ற ஆணாதிக்க எண்ணம் கொண்டவரை அடக்கி அவர் செய்த தவறுகளுக்கு தண்டனை வாங்கிக்கொடுத்து அவரது வீட்டுப் பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் வகையில் கதை அமையும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள்.</p><p>ஆனால் இரண்டாம் பாகம் தொடங்கியதில் இருந்து பெண்களுக்கு நியாயம் கிடைக்குமா என்று பார்த்தால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. மாறாக கதையை அப்படியே மாற்றி மீண்டும் பழைய படி பெண்கள் அடிமையாகும்படியே கதையை கொண்டு செல்கிறார் இயக்குனர்.</p><p>ராவணன் என்ற வில்லன் குணசேகரன் மட்டுமில்லாமல் அவரது குடும்பத்தையே அழிக்க வேண்டும் என காய் நகர்த்தி வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03fe9031-2d3a-400e-8e2a-a620fd0e05d7/26-6a803675cfe6f.webp' /></p><h2>புரொமோ</h2><p>இன்றைய எபிசோட் புரொமோவில், கதிரின் தொழில் திறப்பு விழாவிற்காக அனைவரும் கூறியுள்ளனர். அவ்வப்போது அங்கு சின்ன சின்ன பிரச்சனைகள் வருகிறது, ஆனால் பெரிதாக ஒன்றும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43f916fb-f52b-4f69-8b91-2e1f69a14f7f/26-6a803676d1d7c.webp' /></p><p>திடீரென அறிவுக்கரசி என்ட்ரி கொடுக்க குடும்பமே ஷாக் ஆகிறார்கள். அப்போது வில்லத்தனம் செய்யும் ராவணனுக்கே செக் வைத்து திறப்பு விழாவில் கலந்துகொள்கிறார்.</p><p>குணசேகரன் அறிவுக்கரசியும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம் என கூறியது நந்தினிக்கு கடும் ஷாக்கை கொடுத்துள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/5-P-UvhGtVo" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-15T10:00:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் அமெரிக்காவின் பிரதேசமாக மாறப்போகும் ஹோர்முஸ் நீரிணை : ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-says-strait-of-hormuz-a-us-territory-1786786645"></link>
            <id>https://ibctamil.com/article/trump-says-strait-of-hormuz-a-us-territory-1786786645</id>
            <summary type="text">ஈரானுடன் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையை தனது நாட்டின் &quot;பிரதேசமாக&quot; அறிவிக்கும் திட்டங்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடன் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையை தனது நாட்டின் "பிரதேசமாக" அறிவிக்கும் திட்டங்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
</p><p>
வெள்ளிக்கிழமை(14) நியூயோர்க்கில் பேசிய ட்ரம்ப், எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் உரங்களின் உலகளாவிய விநியோகத்திற்கு இன்றியமையாத இந்த முக்கிய நீர்வழியை அமெரிக்கா விரைவில் உரிமை கோரும் என்று ஆதரவாளர்களிடம் கூறினார்.</p><h2>ட்ரம்பின் அறிவிப்பு</h2><p>"மிக மோசமாகத் தோற்கடிக்கப்பட்டு வரும் ஈரானை நாம் தோற்கடித்த பிறகு, மிக விரைவில் நான் ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிரதேசமாக அறிவிப்பேன்," என்று ட்ரம்ப் சிரித்துக்கொண்டே கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/496c4017-6fce-495e-9375-7ee1b5f42a70/26-6a803797ea577.webp' /></p><p>

பெப்ரவரி 28 முதல், தொடர்ச்சியான ஆக்கிரமிப்புத் தாக்குதல்களை நடத்திய பின்னர், அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுடன் போரில் ஈடுபட்டுள்ளன.

ஆனால், முன்னர் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீதத்திற்கான முக்கிய விநியோக மையமாக செயல்பட்ட அந்த நீர்வழிப்பாதை வழியான போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஈரான் பதிலளித்தது.</p><p></p><h2>போர்நிறுத்த பேச்சில் முக்கிய இடம்பிடித்த ஹோர்முஸ் நீரிணை</h2><p>

போருக்கு முன்பு அந்த நீர்வழிப்பாதையில் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை, ஆனால் இப்போது அந்த நீர்வழிப்பாதையின் மீதான கட்டுப்பாடு, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் ஒரு முக்கிய முட்டுக்கட்டையாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d28e11f-216c-414b-af18-88210a8d40f7/26-6a8037989bd7a.webp' /></p><p>
</p><p>
சமீபத்திய மாதங்களில் மீண்டும் சண்டை மூண்ட இடமாகவும் அது இருந்து வருகிறது. ஜூன் மாதம், போரில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்காக அமெரிக்காவும் ஈரானும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) கையெழுத்திட்டன, ஆனால் அந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளில் ஒன்று, "வர்த்தகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கு ஈரான் தனது சிறந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்" என்பதாகும்.
</p><p>
பின்னர் இரு தரப்பினரும் அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மீறப்பட்டதாகக் கூறினர், மேலும் மாத இறுதியில் சண்டை மீண்டும் தொடங்கியது.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T09:55:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடகத் தடை - சுதந்திரத்தை மீறுவதாக பிரான்ஸ் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/france-court-blocks-social-media-ban-for-teens-1786787170"></link>
            <id>https://news.lankasri.com/article/france-court-blocks-social-media-ban-for-teens-1786787170</id>
            <summary type="text">France court blocks social media ban for teens: சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரான்ஸ் உச்ச நீதிம...</summary>
            <content type="html"><![CDATA[<p>France court blocks social media ban for teens: சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.
</p><p>
பிரான்ஸ் உச்ச நீதிமன்றம் (Top Court) 15 வயதிற்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் சட்டத்தை ரத்து செய்துள்ளது.
</p><p>
இந்தச் சட்டம், குழந்தைகள் Facebook, TikTok, Snapchat, YouTube போன்ற தளங்களில் கணக்குகளைத் திறக்க முடியாது எனவும், ஏற்கனவே திறந்துள்ள கணக்குகள் நான்கு மாதங்களில் மூடப்பட வேண்டும் எனவும் கூறியது.
</p><p>
மேலும், வயது சரிபார்ப்பை கட்டாயமாக்கும் விதிமுறையும் இதில் இருந்தது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f583b10-9b88-4778-9677-8b71a58a2806/26-6a8037802cf4d.webp' /></p><h2>உச்சநீதிமன்ற தீர்ப்பு</h2><p>ஆனால், உச்ச நீதிமன்றம் இந்தத் தடை கருத்துச் சுதந்திரத்தையும் தனியுரிமையையும் மீறுவதாகக் கூறி சட்டத்தை செல்லாது என அறிவித்துள்ளது.
</p><p>
“சட்டம் தேவையான சட்டப் பாதுகாப்புகளை வழங்கவில்லை. இது சுதந்திரத்தை அளவுக்கு மீறி கட்டுப்படுத்துகிறது” என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
</p><p></p><p>இந்தச் சட்டம் ஜூலை மாதத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அவுஸ்திரேலியாவில் இதேபோன்ற தடை அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பிரான்ஸ் ஐரோப்பாவில் முதன்முதலாக இப்படியான சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால், நீதிமன்றத்தின் தீர்ப்பால் அது தடைபட்டுள்ளது.</p><h2>
இம்மானுவேல் மேக்ரான்&nbsp;உத்தரவு</h2><p>ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், இளைஞர்கள் சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவதை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். அவர், புதிய சட்ட வரைவு உருவாக்கி 2027 வசந்த காலத்திற்குள் அமுல்படுத்த வேண்டும் என்று பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னுவிடம் உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
சமூக ஊடக நிறுவனங்கள், முழுமையான தடையை (blanket ban) எதிர்க்கின்றன. தங்களிடம் ஏற்கனவே பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளன என்று தெரிவித்துள்ளன. ஆனால், அரசு விதிக்கும் சட்டங்களுக்கு இணங்குவோம் என்றும் கூறியுள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-15T09:52:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்மா இறந்த செய்தி கேட்டும் 5 ஷாட்களை முடித்து கொடுத்த ராதிகா! நெகிழ்ச்சியில் படக்குழு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/vas-team-open-radhikaas-dedication-towards-cinema-1786785078"></link>
            <id>https://manithan.com/article/vas-team-open-radhikaas-dedication-towards-cinema-1786785078</id>
            <summary type="text">radhikaas dedication towards cinema : சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் &amp;amp; சன்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படக்குழு...</summary>
            <content type="html"><![CDATA[<p>radhikaas dedication towards cinema : சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் அளித்துள்ள புரமோஷனல் பேட்டியில் நடிகை ராதிகாவின் நெகிழ்ச்சியான அர்ப்பணிப்பு குறித்து பகிர்ந்துள்ள விடயம் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.&nbsp;</p><h2>ராதிகாவின் நெகிழ்ச்சி செயல்&nbsp; &nbsp;&nbsp;</h2><p>படத்தின் முக்கியமான காமெடி காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தபோது, ராதிகாவின் தாயார் உயிரிழந்த செய்தி அவருக்கு கிடைத்துள்ளது. அப்போது காட்சியில் இன்னும் ஐந்து ஷாட்கள் மட்டுமே எடுக்க வேண்டியிருந்ததால், அதனை முடித்துவிட்டு செல்லலாமா என ராதிகா இயக்குநர் வெங்கியிடம் கேட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21c4152c-3c34-4810-8f4f-7e63d0865ff9/26-6a8032e0a5f27.webp' /></p><p></p><p>இதுகுறித்து இயக்குநர் வெங்கி கூறுகையில், தாயார் இறந்த செய்தி கிடைத்த நிலையிலும், காட்சியை முடித்துவிட்டு செல்ல ராதிகா விரும்பியதாகவும், அந்த நேரத்தில் என்ன சொல்வதென்றே தெரியாமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>நடிகை மமிதா பைஜூவும் ராதிகாவின் மனநிலையை நினைத்து மிகவும் வேதனைப்பட்டதாகக் கூறியுள்ளார். தன் தாயைப் பற்றி ராதிகா படப்பிடிப்பின்போது பலமுறை பகிர்ந்துகொண்டதாகவும், அந்தச் செய்தி கிடைத்த பிறகும் அவர் முழு ஈடுபாட்டுடன் காமெடி காட்சியில் நடித்தது தன்னை நெகிழச் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db2115b3-4408-4d93-b395-586475c58bd5/26-6a8032e156b73.webp' /></p><p>
நடிகர் சூர்யா, தாயாருக்கும் தான் சார்ந்துள்ள கலைக்கும் ராதிகா அளிக்கும் சமமான மரியாதையே இப்படிப்பட்ட அர்ப்பணிப்புக்குக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதுகுறித்து ராதிகா கூறுகையில், அந்தக் காட்சியின் 85 சதவீத படப்பிடிப்பு முடிந்திருந்ததாகவும், மீதமிருந்த ஐந்து ஷாட்களை முடிக்காமல் சென்றால் மீண்டும் இரண்டு மாதங்கள் கழித்தே அதனை படமாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d269eaf-bd0a-4c24-97e1-9b437b33fcaa/26-6a8032e231ae8.webp' /></p><p></p><p> </p><p>மேலும், அதே உணர்வை மீண்டும் கொண்டு வந்து நடிப்பது சாத்தியமற்றதாக இருந்திருக்கும் என்றும் கூறியுள்ளார்.

குறிப்பாக, தன் தாயார் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தபோதும், “நீ கிளம்பி ஷூட்டிங் போ” என்று தன்னை அனுப்பி வைத்ததாக ராதிகா தெரிவித்துள்ளார். </p><p>தாயை இழந்த துயரத்திலும், அவர் கூறிய வார்த்தைகளுக்கு மதிப்பளித்து படப்பிடிப்பை நிறைவு செய்த ராதிகாவின் அர்ப்பணிப்பு தற்போது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன் இந்த காணொளி இணையத்தில் வைரலாகி பாராட்டுக்களையும் குவித்து வருகின்றது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T09:43:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டத்தரணிகள் சங்கத்தின் கோரிக்கைக்கு பதிலளித்த ஜனாதிபதி செயலகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/presidential-secretariat-responds-to-basl-request-1786784586"></link>
            <id>https://ibctamil.com/article/presidential-secretariat-responds-to-basl-request-1786784586</id>
            <summary type="text">கடந்த 12ஆம் திகதி ஜனாதிபதியுடன் நடைபெற்ற கூட்டத்தின் முழுமையான காணொளி பதிவுகளை வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்த கோரிக்கைக்குப் ஜனாதிபதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 12ஆம் திகதி ஜனாதிபதியுடன் நடைபெற்ற கூட்டத்தின் முழுமையான காணொளி பதிவுகளை வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்த கோரிக்கைக்குப் ஜனாதிபதி செயலகம் பதிலளித்துள்ளது.</p><p>ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் பிரசன்ன பெரேராவின் கையொப்பத்துடன் பதில் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p>அந்தக் கடிதத்தில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரால் செய்யப்பட்ட உத்தியோகபூர்வ உரைகளின் தொகுக்கப்படாத காணொளி பதிவுகள் ஓகஸ்ட் 12ஆம் திகதியன்றே அச்சங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>எடுக்கப்படவுள்ள நடவடிக்கை</h2><p>

கூட்டத்தில் கலந்துகொண்ட ஏனைய தரப்பினரின் கருத்துரைகள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் அடங்கிய பதிவுகள், உரிய உத்தியோகபூர்வ நடைமுறைகளுக்கு அமைவாக எதிர்காலத்தில் கூடிய விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4af1da0-3fd8-47cc-9a20-d4bde34ee5ba/26-6a803251d817d.webp' /></p><p> </p><p>

மேலும், குறித்த காணொளி காட்சிகளை முறைப்படியும் சரியான முறையிலும் வழங்குவதற்கு ஜனாதிபதி செயலகத்தின் முழுமையான ஒத்துழைப்பு எப்போதும் கிடைக்கும் என்றும் அக்கடிதத்தில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p>இதேவேளை&nbsp;ஓகஸ்ட் 12ஆம் திகதி ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் தொகுக்கப்படாத முழுமையான காணொளி பதிவை வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி ஊடகப் பிரிவிடம் முன்னர் கோரிக்கை விடுத்திருந்தது.</p><p></p><h2>ஜனாதிபதி செயலகத்திடம் கோரிக்கை</h2><p> </p><p>குறித்த கலந்துரையாடலின் காணொளி பதிவின் ஒரு பகுதி மட்டுமே தற்போது தமக்குக் கிடைத்துள்ளதாகவும் சில பகுதிகளில் ஒலி தெளிவில்லாமல் இருப்பதாகவும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23baaa0f-c9c0-4fdf-85a9-9a7d7a539ee1/26-6a8032528cfab.webp' /></p><p>அதன்படி, கலந்துரையாடல் முழுவதும் இடம்பெற்ற அனைத்து உரையாடல்கள், அவதானிப்புகள் மற்றும் பதில்கள் உட்படச் சட்டத்தரணிகள் சங்கப் பிரதிநிதிகளின் இறுதி கருத்துகளும் அடங்கிய முழுமையான, தொகுக்கப்படாத காணொளி பதிவை வழங்குமாறு அச்சங்கம் கோரிய நிலையில் இந்த பதில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T09:41:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் திடீரென விபத்துக்குள்ளான கப்பல்.. மீட்கப்பட்ட 11 பேர் மருத்துவமனையில்! ஒருவர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/navy-vessel-accident-in-sri-lanka-1786780450"></link>
            <id>https://tamilwin.com/article/navy-vessel-accident-in-sri-lanka-1786780450</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;கொழும்பின் புறநகர் பகுதியான அங்குலானையை அண்மித்த கடற்பகுதியில் விபத்துக்குள்ளான&amp;nbsp;கடற்படை கப்பலில் இருந்து 11 பேர் மீட்கப்பட்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<h2><b>புதிய இணைப்பு&nbsp;</b></h2><p>கொழும்பின் புறநகர் பகுதியான அங்குலானையை அண்மித்த கடற்பகுதியில் விபத்துக்குள்ளான&nbsp;கடற்படை கப்பலில் இருந்து 11 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>ஒருவரை காணவில்லை எனவும் அவரை தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><h2><b>முதலாம் இணைப்பு&nbsp;</b></h2><p>கொழும்பின் புறநகர் பகுதியான அங்குலானையை அண்மித்த கடற்பகுதியில் கடற்படைக்கு சொந்தமான டோரா கப்பல் விபத்துக்குள்ளாகியுள்ளது. </p><p>குறித்த கப்பலில் உள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். </p><p>குறித்த கப்பலில் உள்ளவர்களை மீட்பதற்காக இலங்கை விமானப்படையின் உதவியும் வழங்கப்பட்டுள்ளது. </p><h3><b> டோரா கப்பல் விபத்து</b></h3><p>கடற்படையினர் விடுத்த கோரிக்கைக்கமைய இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9819d73f-de27-4990-bed9-b880d246717c/26-6a801c8b90507.webp' /></p><p>அதற்கமைய, விபத்துக்குள்ளான கப்பலைக் கண்காணிப்பதற்காக விமானப்படைக்குச் சொந்தமான Mi-17 மற்றும் பெல் 412 ஆகிய உலங்கு வானூர்திகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்</p>]]></content>
            <updated>2026-08-15T09:31:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸ்: 23 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/jananayagan-movie-23-days-box-office-1786777258"></link>
            <id>https://cineulagam.com/article/jananayagan-movie-23-days-box-office-1786777258</id>
            <summary type="text">ஜனநாயகன் திரைப்படம் 23 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? இதோ பாருங்க.
ஜனநாயகன்

பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு தளபதி வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனநாயகன் திரைப்படம் 23 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? இதோ பாருங்க.</p><p></p><h2>
ஜனநாயகன்
</h2><p>
பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு தளபதி <a href="https://www.youtube.com/watch?v=8CIsfQ9MKF0&amp;t=289s" target="_blank">விஜய் </a>நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்க, கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக மமிதா பைஜூ நடித்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a06f6b03-c228-4bb5-89eb-d9d5ac0e62bb/26-6a800eadc8635.webp' /></p><p>மேலும், பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், நிழல்கள் ரவி, கௌதம் மேனன், சுனில், ப்ரியாமணி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac013786-3998-4c41-8de4-0ac0c7d8e4cb/26-6a800eae7e0d4.webp' /></p><h2>பாக்ஸ் ஆபிஸ்</h2><p>

2026-ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான ஜனநாயகன், பல தடைகளை தாண்டி கடந்த மாதம் வெளியானது. விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடினார்கள். ஆனால், கலவையான விமர்சனங்களும் எழுந்தன. அதேபோல், தெலுங்கானா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளில் வசூல் ரீதியாகவும் சரிவை சந்தித்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a915c636-7781-40a0-9510-483aa951f497/26-6a800eaf32221.webp' /></p><p>இந்நிலையில், 23 நாட்களை கடந்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் இதுவரை உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 23 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 321 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-15T09:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை கடற்படையின் டோரா படகு கவிழ்ந்து விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-navy-s-dvora-boat-capsizes-in-accident-1786786024"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-navy-s-dvora-boat-capsizes-in-accident-1786786024</id>
            <summary type="text">மொறட்டுவை, அங்குலானை பகுதியை அண்மித்த கடற்பரப்பில், கடற்படைக்கு சொந்தமான டோரா ரக படகொன்று விபத்துக்குள்ளானதாக, கடற்படை பேச்சாளார் தெரிவித்துள்ளார்.இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொறட்டுவை, அங்குலானை பகுதியை அண்மித்த கடற்பரப்பில், கடற்படைக்கு சொந்தமான டோரா ரக படகொன்று விபத்துக்குள்ளானதாக, கடற்படை பேச்சாளார் தெரிவித்துள்ளார்.</p><p>இந்த விபத்தில் சிக்குண்டவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் 11 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக, காவல்துறை ஊடகப் பிரிவுத் தெரிவித்துள்ளது.</p><p>அவர்களில் 8 பேர் சிகிச்சைக்காக களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அத்துடன், குறித்த படகை கண்காணிப்பதற்காக வான் படைக்குச் சொந்தமான எம்.ஐ. 17 ரக உலங்கு வானூர்தி மற்றும் (B) பெல் 412 உலக்கு வானூர்தி ஒன்றும் குறித்த கடற்பரப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-15T09:27:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறன்று பாதுகாப்பை பலப்படுத்தாத இரு கட்டளை அதிகாரிகள்! குற்றப்புலனாய்வு திணைக்களம் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-in-sri-lanka-deshabandu-tennakoon-1786785364"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-in-sri-lanka-deshabandu-tennakoon-1786785364</id>
            <summary type="text">&amp;nbsp;2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய 2 முக்கிய குற்றவாளிகள் மீது இன்னும் எந்தவொரு ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.&amp;nbsp;ஜனாதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய 2 முக்கிய குற்றவாளிகள் மீது இன்னும் எந்தவொரு ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.&nbsp;ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் குற்றப்புலனாய்வுத் துறையிடம் (CID) உள்ளன.</p><p>பரிந்துரைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு மூன்றாவது முறையாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து நடவடிக்கை எடுக்குமாறு CID க்கு நேரடி அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளன.</p><h2>புறக்கணிக்கப்பட்ட எச்சரிக்கை</h2><p> </p><p>இருப்பினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நீதிபதி ஜனக் டி சில்வா தலைமையில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் பதிநாயக்க ஆகியோர் இத்தாக்குதலைத் திட்டமிட்டதாகக் கண்டுபிடிக்கவில்லை என்றது. </p><p>ஆனால், அதைவிடவும் பாரதூரமான ஒரு விடயத்தை கண்டுபிடித்துள்ளது. 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி அதிகாலைக்கு முன்னர் கொழும்பின் பாதுகாப்பு கட்டமைப்பின் முக்கிய புள்ளியான கட்டளையிடும் பதவிகளை வகித்த இவர்கள் இருவரும், தாக்குதலை தடுத்திருக்கக்கூடிய கட்டமைப்பு சார்ந்த புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும் செயல்பாடற்று இருந்துள்ளனர்.
</p><h2>
</h2><p></p><p>அக்காலத்தில் கொழும்பு - வடக்கு பகுதிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த தென்னகோனின் நடத்தை குறித்து ஆணைக்குழு அறிக்கையில், கட்டளைச் சங்கிலி எவ்வாறு செயலிழந்தது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. </p><p>சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க என்பவரால் விரிவான புலனாய்வுத் தகவல்கள் வழங்கப்பட்டு தெளிவான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டிருந்தன. </p><p>உடல் பரிசோதனைகள், வாகனச் சோதனைகள், வாகன நிறுத்துமிடக் கட்டுப்பாடுகள் மற்றும் தேவாலயங்களைச் சுற்றி சாதாரண உடையில் பொலிஸாரைப் பாதுகாப்பில் ஈடுபடுத்துதல் ஆகியவை அந்த உத்தரவுகளில் அடங்கும்.</p><h2>உத்தரவுகளை செயல்படுத்திய அதிகாரி</h2><p>
</p><p>இவற்றில் எதுவுமே களமட்டத்தை வந்தடையவில்லை. தென்னகோன் தனது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இந்த உத்தரவுகளை அனுப்பவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p>பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் அவரது மேசை கோப்பிலேயே பார்வையிடாமல் இருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் உயர் அதிகாரிகள் நாடு முழுவதையும் விழிப்புடன் வைத்திருந்த நேரத்தில், தென்னகோனின் உத்தியோகபூர்வ தொலைபேசி துண்டிக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/957c0f5d-2e71-46ab-a31c-33f4169fe033/26-6a802e574fd75.webp' /></p><p> </p><p>அவர் தனது குடும்பத்தினருடன் கிழக்குக் கடற்கரை ஓய்வு விடுதி ஒன்றில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது. ஒரு நேரடி தேசிய பாதுகாப்பு நெருக்கடியின் போது ஒரு கட்டளை அதிகாரி தொடர்பில் இல்லாமல் இருப்பது, விசாரணையாளர்கள் சுட்டிக்காட்டியபடி, முன்னெப்போதும் இல்லாத ஒரு நிலைமையாகும்.
</p><p>மேலும் அப்போதைய கொழும்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த பதிநாயக்கவிற்கு எதிரான குற்றச்சாட்டும் பாரதூரமானதே.தாக்குதலுக்கு முன்னர் சில மணிநேரங்களில் ஏப்ரல் 20 ஆம் திகதி இரவு அவருக்கும் தெளிவான எச்சரிக்கைகள் கிடைத்திருந்தும் அவரும் அலட்சியப் போக்கிலே இருந்துள்ளார்.</p><p> அப்போது கொழும்பு - தெற்கு பகுதிக்கு பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த விக்கிரமசிங்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவின் பாதுகாப்புத் திட்டத்தை அப்படியே செயல்படுத்தியிருந்தார்.</p><p>அதிகாரிகளைப் பணியில் அமர்த்துதல், தெஹிவளை உட்பட தனது அதிகாரப் எல்லைக்குட்பட்ட பகுதி முழுவதும் இலக்கு வைக்கப்பட்ட சோதனைகளை நடத்துதல் மூலம் அவரது பிரிவில் அச்சுறுத்தல்கள் கட்டுப்படுத்தப்பட்டன.&nbsp; &nbsp;</p><h2>ஆணைக்குழுவின் பரிந்துரைகள்</h2><p> </p><p>தாக்குதலினால் ஏற்பட்ட அசம்பாவிதங்களைத் தடுத்திருக்க முடியும் என்பதற்கு ஆணைக்குழுவிற்கு கிடைத்த தெளிவான சான்று இதுவாகும்.</p><p>
தேசபந்து தென்னகோன் - புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் செயல்படத் தவறியமை, பாதுகாப்பு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தத் தவறியமை, அல்லது அதிகாரிகளைப் பணியில் அமர்த்தத் தவறியமை - முறையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும், குற்றவியல் அலட்சியம் குறித்து வழக்குத் தொடுப்பதற்கான விசாரணையை நடத்துவதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. லலித் பதிநாயக்கவுக்கும் குறித்த பரிந்துரைகளையே விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0da39d5e-3ce2-4ea4-89d1-22cc92f69dc4/26-6a802e569f93b.webp' /></p><p> சட்டமா அதிபர் திணைக்களத்தில் உள்ள ஆதாரங்களின்படி, இரு அதிகாரிகளுக்கும் எதிராக விசாரணைகளை தொடங்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தின் இரண்டு வெவ்வேறு நிர்வாகங்களின் கீழ் முறையான அறிவுறுத்தல்கள் CIDக்கு இரண்டு முறை அனுப்பப்பட்டுள்ளன.</p><p>இரண்டு முறையும் கோப்பு முன்னோக்கி நகரவில்லை.
முன்னாள் CID பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க - தென்னகோன் மற்றும் பதிநாயக்க ஆகிய இருவருக்கும் நெருக்கமானவர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p>அவரது மேற்பார்வை காலத்தில் விசாரணைகளை தாமதப்படுத்துவதில் அவரது பங்கும் இருந்தது CID ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T09:22:42+00:00</updated>
        </entry>
    </feed>
