<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-21T12:12:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்னியா வெந்நீர் ஊற்று விவகாரம்! உரிய தீர்வு அவசியம் - குமார் ஜெயக்குமாரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kanyya-hot-spring-issue-1784634368"></link>
            <id>https://tamilwin.com/article/kanyya-hot-spring-issue-1784634368</id>
            <summary type="text">கன்னியா வெந்நீர் ஊற்று விவகாரம் தொடர்பில் பொதுமக்களின் கவலைக்கு உரிய தீர்வு
அவசியம் என இலங்கைத் தமிழரசு கட்சியின் ஆயுள் கால உறுப்பினர் குமார்
ஜெயக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கன்னியா வெந்நீர் ஊற்று விவகாரம் தொடர்பில் பொதுமக்களின் கவலைக்கு உரிய தீர்வு
அவசியம் என இலங்கைத் தமிழரசு கட்சியின் ஆயுள் கால உறுப்பினர் குமார்
ஜெயக்குமாரன் தெரிவித்துள்ளார்.</p><p> இன்று (21) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்&nbsp; அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><p>திருகோணமலை மாவட்டத்தில் வரலாற்று, மத மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம்
வாய்ந்த கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில், புத்த விகாரைக்கான அடிக்கல்
நாட்டும் நிகழ்வு நாளை நடைபெறவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பொதுமக்கள்
மத்தியில் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><h2>முக்கிய மரபுரிமைச் சின்னம்</h2><p>இது தொடர்பில் இலங்கைத் தமிழரசு கட்சியின் ஆயுள் கால உறுப்பினரான குமார் ஜெயக்குமாரனின் அறிக்கையில் மேலும், கன்னியா என்பது ஒரு மதத் தலம் மட்டுமல்ல; அது திருகோணமலையின் வரலாறு,
பாரம்பரியம் மற்றும் தமிழ் மக்களின் அடையாளத்துடன் பின்னிப் பிணைந்துள்ள ஒரு
முக்கிய மரபுரிமைச் சின்னமாகும்.</p><p>இதுபோன்ற வரலாற்று மற்றும் மத உணர்வுகள்
சம்பந்தப்பட்ட இடங்களில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானமும் அனைத்து
தரப்பினருடனும் கலந்தாலோசித்து, சட்ட நடைமுறைகளுக்கு இணங்கவும், தொல்லியல்
மற்றும் வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.</p><p></p><p>இந்த விவகாரம் தொடர்பில் பல்வேறு சமூக அமைப்புகளும் பொதுமக்களும்
முன்வைக்கும் கவலைகளை அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உரிய முறையில்
கவனத்தில் கொள்ள வேண்டும். அனைத்து இனங்களும் மதங்களும் பரஸ்பர மரியாதையுடனும்
நல்லிணக்கத்துடனும் வாழும் சூழலைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும்.</p><h2>நடவடிக்கை எடுக்க வேண்டும்</h2><p>
மேலும், கன்னியா வெந்நீர் ஊற்று தொடர்பான வரலாற்று மற்றும் தொல்லியல் உண்மைகள்
குறித்து வெளிப்படையான விளக்கத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்க வேண்டும்
என்றும், எந்தவொரு அபிவிருத்தி அல்லது கட்டுமான நடவடிக்கைகளும் சட்ட
நடைமுறைகள், நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் அனைத்து சமூகங்களின் மத, பண்பாட்டு
உணர்வுகளை மதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்
வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c21d1bd0-db2a-49aa-9b60-680474d1a08e/26-6a5f6136e645d.webp' /></p><p>

அதேவேளை, தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக உள்ள அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற
உறுப்பினர்கள் இந்த விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி,
மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்
எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

</p><p>இது யாழ்ப்பாணத்தில் கட்டி முடிக்கப்பட்ட கோயிலைப் போன்றது அல்ல. இப்போது
அவர்கள் அதைக் கட்டப் போகிறார்கள். எனவே, அரசியல் பிரமுகர்கள் யாரும் ஏன்
இதைப் பற்றிப் பேசவில்லை என்றும் மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T12:11:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோமாகம தீ விபத்தில்5 பேர் பலி..! விசாரணையை தீவிரப்படுத்திய பிரதி அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/5-killed-in-homagama-fire-accident-1784633367"></link>
            <id>https://tamilwin.com/article/5-killed-in-homagama-fire-accident-1784633367</id>
            <summary type="text">ஹோமாகம - கட்டுவன தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தி, உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோமாகம - கட்டுவன தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தி, உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொழிலாளர் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க, தொழிலாளர் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். </p><p>

இந்த சம்பவம் இன்று(21.07.2026) இடம்பெற்ற நிலையில், இதுவரையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
</p><p>

அத்துடன், பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>விபத்து தொடர்பில் தீவிர விசாரணை</h2><p> </p><p>

உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த பிரதி அமைச்சர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்றும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a301b8c1-d123-4f5f-b225-98a54b2a0f62/26-6a5f61a1b8a20.webp' /></p><p> </p><p>

இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளில் சில அறிவுரைகளை பிரதி அமைச்சர் வழங்கியுள்ளதாக தெரவிக்க்கப்பட்டுள்ளது. </p><p>

இதன்படி, தீ விபத்துக்கு வழிவகுத்த உடனடிக் காரணிகள், தொழிற்பேட்டையில் தீ பாதுகாப்பு மற்றும் தொழில் பாதுகாப்புத் தரநிலைகள் பேணப்பட்டதா என்பது,&nbsp; ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் அவசரகால வெளியேறும் நடைமுறைகளுக்கான தேவையான வசதிகள் இருந்தனவா என்பது,&nbsp; தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டம் மற்றும் அது தொடர்பான தொழில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பதையும், ஏதேனும் அலட்சியமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும் விசாரிக்குமாறு, தொழிலாளர் ஆணையாளர் நாயகம் நதீக வத்தலியத்தவுக்கு பிரதியமைச்சர&nbsp;் அறிவுறுத்தியுள்ளார்.&nbsp;</p><p>மேலும், அபாயகரமான மற்றும் இடர் நிறைந்த பணியிடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிலைமைகள் தொடர்பில் நாடு தழுவிய அளவில் ஒரு சிறப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர்&nbsp; குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T12:10:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்தில் ஏற முயன்ற சிறுமி பரிதாபமாக பலி - தாய் மற்றும் சகோதரனுடன் சென்றபோது துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/school-kid-dies-in-an-accident-1784631711"></link>
            <id>https://tamilwin.com/article/school-kid-dies-in-an-accident-1784631711</id>
            <summary type="text">மாத்தறை, திக்வெல்ல - கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் பேருந்திலிருந்து கீழே விழுந்து பின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை, திக்வெல்ல - கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் பேருந்திலிருந்து கீழே விழுந்து பின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p>இன்று தனது தாயார் மற்றும் இளைய சகோதரனுடன் பேருந்து நிலையத்திற்கு வந்து, பாடசாலைக்கு செல்வதற்காக பேருந்தில் ஏற முயன்ற பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு உயரிழந்துள்ளார். </p><p>இவ்வாறு உயிரிழந்தவர், கொடஉட பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட சனுதி சேனாரா என்ற 6 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2><b>சிறுமி பரிதாபமாக பலி</b></h2><p> திக்வெல்ல வடக்கு மகா வித்தியாலயத்தில் முதலாம் தரத்தில் கல்வி கற்கும் அவர், காலையில் பாடசாலை செல்வதற்காக தனது தாயார் மற்றும் இளைய சகோதரனுடன் வீட்டிலிருந்து பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். </p><p>மாத்தறையில் இருந்து மித்தெனிய நோக்கிச் சென்ற தனியார் பேருந்துக்கு கை காட்டி, அவர்கள் அதன் முன்கதவு வழியாக அதில் ஏற முயன்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f86ced4-4502-4787-a724-2fcf6bc84a76/26-6a5f59f410d9f.webp' />&nbsp;&nbsp;</p><p>முதலில் தாயாரும் சகோதரனும் பேருந்தில் ஏறியதை அடுத்து, இரண்டாவதாக சிறுமி பேருந்தில் ஏற முற்பட்டவுடன் பேருந்து முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது. </p><p>இதன் போது அவர் பேருந்திலிருந்து கீழே விழுந்து அதே பேருந்தின் பின் சக்கரத்திற்குள் சிக்கியதாகவும் ஆரம்ப கட்டப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>இந்த விபத்தில் சிறுமியின் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T12:06:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் துறைமுகத்தில் கொடூர தாக்குதல் ; 4 இந்தியர்கள் உட்பட 10 மாலுமிகள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/brutal-attack-at-ukrainian-port-10-4-indian-killed-1784635533"></link>
            <id>https://canadamirror.com/article/brutal-attack-at-ukrainian-port-10-4-indian-killed-1784635533</id>
            <summary type="text">தெற்கு உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 4 இந்தியர்கள் உட்பட 10 மாலுமிகள் உயிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 4 இந்தியர்கள் உட்பட 10 மாலுமிகள் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா-பிசௌவின் கொடியுடன் பயணித்த ‘எம்.வி. கோல்டன் லியோ’ என்ற சரக்குக் கப்பல், ஒடேசா துறைமுகத்தில் இருந்து சோளம் ஏற்றிக்கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை புறப்பட்டுள்ளது.
</p><p>
அப்போது, கப்பலை இலக்காகக் கொண்டு ரஷ்யா மூன்று ‘க்ரூஸ்’ ஏவுகணைகளை வீசியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8aff64e7-e711-4f93-9325-4e6d979cbdb2/26-6a5f608ea659d.webp' /></p><p>தாக்குதலையடுத்து கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட மீட்புப் பணிகளின் போது, கப்பலில் பணியாற்றிய 17 மாலுமிகளில் 8 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p>
எனினும், 9 மாலுமிகள் மற்றும் உக்ரைனைச் சேர்ந்த கடல்வழி வழிகாட்டி ஒருவர் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 4 பேர் இந்தியர்கள் என இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. </p><p>மேலும், காயமடைந்த மற்றொரு இந்தியர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், வணிகக் கப்பல்களை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் தாக்குதல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.</p><p>

“சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பாவி மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுடன், சர்வதேச கடல் போக்குவரத்து சுதந்திரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது” என இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, கருங்கடல் மற்றும் அசோவ் கடல் பகுதிகளில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான தாக்குதல்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன.
</p><p>
ரஷ்யாவின் எண்ணெய் கப்பல்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை உக்ரைன் இலக்காகக் கொண்டு தாக்கி வரும் நிலையில், உக்ரைனின் தானிய ஏற்றுமதி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய கப்பல்களை ரஷியா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
எனினும், ‘எம்.வி. கோல்டன் லியோ’ கப்பல் மீதான தாக்குதல் தொடர்பாக ரஷ்யா இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் வெளியிடவில்லை.</p>]]></content>
            <updated>2026-07-21T12:05:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு கப் மீல் மேக்கர் போதும்.., சுவையான கோலா உருண்டை செய்யலாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kola-urundai-recipe-in-tamil-1784635288"></link>
            <id>https://news.lankasri.com/article/kola-urundai-recipe-in-tamil-1784635288</id>
            <summary type="text">மீல் மேக்கரில் புரதச்சத்து மிக அதிக அளவில் நிறைந்துள்ளது. 

மேலும் இதில் கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மீல் மேக்கரில் புரதச்சத்து மிக அதிக அளவில் நிறைந்துள்ளது.</p><p> 

மேலும் இதில் கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும், நார்ச்சத்துக்களும் காணப்படுகின்றன.
</p><p>
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த மீல் மேக்கர் கோலா உருண்டை மிகவும் பிடிக்கும்.
</p><p>
அந்தவகையில், நாவூறும் சுவையில் மீல் மேக்கர் கோலா உருண்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.&nbsp;</p><p></p><h2>தேவையான பொருட்கள்
</h2><ul><li>
மீல் மேக்கர்- 1 கப் </li><li>
சோம்பு- 1 ஸ்பூன்
</li><li>பச்சைமிளகாய்- 2
</li><li>வெங்காயம்- 1</li><li>
புதினா- 1 கைப்பிடி</li><li>கொத்தமல்லி- சிறிதளவு</li><li>
பொட்டுக்கடலை- 2 ஸ்பூன்
</li><li>மிளகாய் தூள்- 1 ஸ்பூன்</li><li>
கரம் மசாலா- ½ ஸ்பூன்
</li><li>உப்பு- தேவையான அளவு</li><li>இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்</li><li>அரிசி மாவு- 1 ஸ்பூன்
</li><li>கறிவேப்பிலை- 1 கொத்து</li></ul><h2>செய்முறை</h2><p>

முதலில் மீல் மேக்கரை வெந்நீர் ஊற்றி 15 நிமிடம் மூடி போட்டு வைக்கவும்.
</p><p>
பின் ஒரு மிக்ஸி ஜாரில் சோம்பு, பச்சைமிளகாய், வெங்காயம், புதினா, கொத்தமல்லி, பொட்டுக்கடலை, மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு, இஞ்சி பூண்டு, அரிசி மாவு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/949496f0-9d6e-4a2c-bbcd-69ec609ec9ce/26-6a5f5f9a9556c.webp' /></p><p>

அடுத்து இதில் ஊறவைத்த சோயாக்களை பிழிந்து சேர்த்து நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து சிறிய சிறிய உருண்டையாக பிடித்துக்கொள்ளவும்.
</p><p>
இறுதியாக வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருண்டைகளை பொறித்து எடுத்தால் சுவையான மீல் மேக்கர் கோலா உருண்டை தயார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T12:01:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷார்ட்டான ஆடையணிந்து ரசிகர்களை ஈர்க்கும் நடிகை ஐஸ்வர்யா மேனன்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/iswarya-menon-recent-photos-post-viral-1784632988"></link>
            <id>https://viduppu.com/article/iswarya-menon-recent-photos-post-viral-1784632988</id>
            <summary type="text">ஐஸ்வர்யா மேனன்நடிகை ஐஸவர்யா மேனன் கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் சினிமாவில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்நது வருகிறார். சிவாவின் தமிழ் படம் 2...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஐஸ்வர்யா மேனன்</h2><p>நடிகை ஐஸவர்யா மேனன் கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் சினிமாவில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்நது வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90f84f6a-0138-43ba-ac8c-110b81a739f7/26-6a5f56a1c4dab.webp' /></p><p> </p><p>சிவாவின் தமிழ் படம் 2 உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.

அவரது கவர்ச்சியான இன்ஸ்டா போட்டோகளுக்கு என்றே பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. </p><p>தற்போது எங்கே இருக்கிறேன் என்ற கேள்வியுடன் ஷார்ட்டான ஆடையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா மேனன்.</p>]]></content>
            <updated>2026-07-21T12:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளைக்குடா நாடுகளை குறி வைத்து தாக்கும் ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-targets-gulf-countries-1784634979"></link>
            <id>https://tamilwin.com/article/iran-targets-gulf-countries-1784634979</id>
            <summary type="text">பஹ்ரைன் - ஜோர்டான் மற்றும் குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் இன்று(21.07.2026) தாக்கதல்களை ஆரம்பித்துள்ளது. 


தெற்கு ஈரானைக் குறிவைத்து அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பஹ்ரைன் - ஜோர்டான் மற்றும் குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் இன்று(21.07.2026) தாக்கதல்களை ஆரம்பித்துள்ளது. </p><p>


தெற்கு ஈரானைக் குறிவைத்து அமெரிக்கா நடத்திய தொடர் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.</p><p></p><h2> 

வளைகுடா நாடுகள் மீது தாக்குதல்</h2><p>
மேலும், தாக்கப்பட்ட கப்பல்களில் இரண்டு, ஹோர்முஸ் நீரிணையில் தீப்பிடித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e28d8ef-7d2a-4fdc-814a-af5ad0a371f1/26-6a5f5f05cb8c6.webp' /></p><p>

இதற்கிடையில், ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியா மீது கடற்படை முற்றுகையை விதித்ததால், வளைகுடாப் பகுதியில் ஒரு புதிய போர்முனை உருவாகும் அபாயம் நிலவி வருகின்றது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T11:59:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிலை திறப்பு ஏற்பாட்டுக்கு எதிராக வழக்கு ; நீதிமன்று கொடுத்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/case-against-statue-unveiling-arrangement-court-1784635023"></link>
            <id>https://jvpnews.com/article/case-against-statue-unveiling-arrangement-court-1784635023</id>
            <summary type="text">வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாரால் பருத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>குறித்த வழக்கு நேற்று (20) திங்கட்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உறுப்பினர் க. சதீஸ் மன்றில் முன்னிலையாகியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e01c6f75-b263-4473-b80c-392eeb6884d4/26-6a5f5e906b88d.webp' /></p><p>

இதன்போது, அவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்ததுடன், வழக்கின் அடுத்த விசாரணையை எதிர்வரும் 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
</p><p>
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் தங்கதுரை மற்றும் அதன் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் 43ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் 25ஆம் திகதி வல்வெட்டித்துறையில் அவர்களின் உருவச்சிலை திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
</p><p>
இந்த நிலையில், குறித்த நிகழ்வு தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
</p><p>
இதேவேளை, 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை வன்முறைச் சம்பவங்களின் போது, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தங்கதுரை, குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழ் அரசியல் கைதிகள், ஜூலை 25 மற்றும் 28ஆம் திகதிகளில் சிறைச்சாலையில் இருந்த ஏனைய கைதிகளால் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T11:57:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்னும் மூன்று வாரங்களுக்கு நீடிக்கும் அபாய நிலை.. அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-infection-risk-continues-for-three-weeks-1784631780"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-infection-risk-continues-for-three-weeks-1784631780</id>
            <summary type="text">அடுத்த மூன்று வாரங்களுக்கு டெங்கு அபாய நிலை நீடிக்கும் என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த மூன்று வாரங்களுக்கு டெங்கு அபாய நிலை நீடிக்கும் என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பின்போதே&nbsp; அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><h2>டெங்கு அபாயம்&nbsp;</h2><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>டெங்கு தொற்று பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும், எதிர்வரும் ஆகஸ்ட் மாத நடுப்பகுதி வரையிலான அபாய நிலை தொடரும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/217d3f73-2ad9-4ecc-be42-28151d50f452/26-6a5f5d6f3429f.webp' /></p><p>கடந்த சில வாரங்களை விட தற்போது பதிவாகி வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிலைமை ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது.&nbsp;</p><p>எனினும்,&nbsp; டெங்கு அபாயம் உள்ள பகுதிகள் மற்றும் வளாகங்களைச் சுத்தம் செய்யும் பணிகளைத் தொடர வேண்டும்.&nbsp; அரச நிறுவனங்களுக்கு இது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p>டெங்கு என்பது ஒரே நாளில்&nbsp; தீர்க்கக்கூடிய ஒன்று அல்ல.&nbsp; எனவே தொடர்ச்சியான அவதானம் தேவை. டெங்கு நோய்த் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T11:53:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் முதல் கனரக ரோபோவை அறிமுகப்படுத்திய சீனா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/world-s-first-heavy-duty-robot-in-china-1784633859"></link>
            <id>https://ibctamil.com/article/world-s-first-heavy-duty-robot-in-china-1784633859</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டு உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் (WAIC) உலகின் முதல் கனரக ரோபோ குதிரையை சீனா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது உலகின் முதல் செயற்கை நு...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டு உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் (WAIC) உலகின் முதல் கனரக ரோபோ குதிரையை சீனா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>

இது உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் மற்றும் ஸ்மார்ட் சவாரி செய்யும் நான்கு கால் வாகனம் என்றும் கூறப்படுகிறது. </p><p>இந்த நவீன ரோபோ குதிரை சுமார் 30 கிலோ எடையும், அரை மீட்டர் உயரமும் கொண்டது.</p><p></p><p> </p><h2>உலகின் முதல் கனரக ரோபோ</h2><p>&nbsp;மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் செல்லும் குறித்த ரோபோ குதிரை,&nbsp; 75 கிலோ வரை சுமக்கும் திறன் கொண்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bb5f2bd-ed00-4cb0-bdf5-8efdc5ca2aba/26-6a5f5c452af6e.webp' /></p><p>

ஒருமுறை மின்னேற்றினால் 20 கி.மீ. வரை பயணிக்க முடியுயும் என்றும் இதனால் 25 டிகிரி சரிவுகளிலும் ஏறக்கூடியது எனவும் இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>

மேலும், பல்வேறு நிலப்பரப்புகளில் இயங்கி, தடைகளைத் தவிர்த்து, உடல் வடிவத்தை மாற்றி, குரல்வழி தொடர்பும் கொள்ளும் திறனையும் இது கொண்டுள்ளது.&nbsp;</p><p>

முற்றிலும் நான்கு கால் உயிரியக்கவியல் கட்டமைப்பைக் கொண்டுள்ள இந்த ரோபோ, செங்குத்தான சரிவுகள், சரளை மற்றும் சேறு உள்ளிட்ட சிக்கலான நிலப்பரப்புகளிலும் பயணிக்ககூடியவை என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Who needs a horse when you can ride a robot? Kepler Robotics&#39; Mechanical Qilin, a 300 kg heavy-duty quadruped, stole the show as a visitor took it for a spin at the WAIC 2026. Capable of hauling nearly one ton and running for eight hours straight, this rideable beast handles… <a href="https://t.co/Bg0Su5Z89s">pic.twitter.com/Bg0Su5Z89s</a></p>&mdash; Smart Industry in China (@SmartindustryCN) <a href="https://x.com/SmartindustryCN/status/2079184800087191887?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T11:51:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல்வர் விஜய்க்கு வீடியோவை அனுப்பவா? காவலரை மிரட்டிய வடமாநில ஓட்டுநர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/driver-to-police-says-will-send-video-to-cm-vijay-1784634567"></link>
            <id>https://news.lankasri.com/article/driver-to-police-says-will-send-video-to-cm-vijay-1784634567</id>
            <summary type="text">முதல்வர் விஜய்க்கு வீடியோவை அனுப்பவா என காவலரை வடமாநில லொறி ஓட்டுநர் மிரட்டிய வீடியோ இணையத்த்தில் வைரலாகி வருகிறது.

லஞ்சத்திற்கு எதிராக முதல்வர் வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதல்வர் விஜய்க்கு வீடியோவை அனுப்பவா என காவலரை வடமாநில லொறி ஓட்டுநர் மிரட்டிய வீடியோ இணையத்த்தில் வைரலாகி வருகிறது.
</p><h3>
லஞ்சத்திற்கு எதிராக முதல்வர் விஜய்</h3><p>

தமிழக முதல்வராக உள்ள விஜய், லஞ்சம் ஊழலற்ற வெளிப்படையான ஆட்சியை வழங்குவேன் என உறுதியளித்துள்ளார்.&nbsp;</p><p>

சமீபத்தில் கரூரில் பேசிய முதல்வர் விஜய், "யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது என்று சொல்லுங்கள். உங்களுடன் நான் இருக்கிறன்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ed888d5-0d46-4a98-b6f7-6c6533505793/26-6a5f5cc90b180.webp' /></p><p> 

இதை மீறி யாராவது கட்டாயப்படுத்தினால், இது எங்க மகன், எங்க பிள்ளை, எங்க அண்ணன், எங்க தம்பி, எங்க விஜய், எங்கள் விஜியோட ஆட்சி என்று உறுதியாக சொல்லுங்கள்" என பேசினார். </p><p>

அரசு அலுவலகங்களில் யாராவது லஞ்சம் கேட்டால் உடனடியாக 94981 80936 என்ற எண்ணிற்கு வாட்ஸ்-அப் மெசேஜ் மூலம் புகார் அளிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. </p><p>

மேலும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு dvac@nic.in என்ற இ-மெயில் முகவரிக்கு அல்லது 044-22321090, 22321085, 22310989, 22342142 ஆகிய எண்களுக்கும் புகார் தெரிவிக்கலாம்.</p><h3> 

காவலரை மிரட்டிய வடமாநில ஓட்டுநர்
</h3><p>
இந்நிலையில், வடமாநிலத்தை சேர்ந்த லொறி ஓட்டுநர் ஒருவர் தமிழ்நாட்டில் உள்ள காவலரிடம் தளபதிக்கு விஜய் கிட்ட சொல்லட்டுமா என மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/298ed564-924b-4f68-909a-88237ad487c5/26-6a5f5cc9c76ab.webp' /></p><p>

அந்த வீடியோவில் அபராதம் விதிக்கும் மெஷின் உடன் உள்ள காவலர் பில் எங்கே? நான் சோதனையிட வேண்டும் என கேட்கிறார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">North Indian truck driver used just name of <a href="https://x.com/TVKVijayHQ?ref_src=twsrc%5Etfw">@TVKVijayHQ</a> to stop this Police from taking bribe 🙏🙏<br><br>Driver : Take a photo, Vijay Thalapathy ji.<br><br>Driver : Look, our container is empty, there isn&#39;t even a seal on it...<br><br>Police Officer : Hey, let me check it first. Where is the… <a href="https://t.co/UabFQjR7Hn">pic.twitter.com/UabFQjR7Hn</a></p>&mdash; Iʀsʜᴀᴅ (@irshad5005) <a href="https://x.com/irshad5005/status/2079414563347583161?ref_src=twsrc%5Etfw">July 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

அதனை வீடியோ எடுக்கும் வட மாநில லொறி ஓட்டுநர், "என் லாரியின் கண்டெய்னர் காலியாக இருக்கிறது. அதில் சீல் கூட இல்லை. ஆனால் இந்த காவலர் அபராதம் விதிக்கும் வகையில் பணம் கேட்கிறார். 

தளபதி விஜய் நம்பர் என்னிடம் இருக்கிறது. நான் இதை அவருக்கு அனுப்பி புகாரளிக்கிறேன்" என கூறுகிறார்.</p><p> 

இந்த வீடியோவை தவெகவினர் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T11:49:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[புற்றுநோயால் குரலை இழந்த பட்டிமன்ற பேச்சாளர் ராஜஸ்ரீ ஜெய்சன்! வைரலாகும் உருக்கமான வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/pattimandram-speaker-rajashree-5-years-of-cance-1784633157"></link>
            <id>https://manithan.com/article/pattimandram-speaker-rajashree-5-years-of-cance-1784633157</id>
            <summary type="text">எப்போதும் தன்னம்பிக்கையையும், வாழ்க்கை நம்பிக்கையையும் விதைக்கும் வீடியோக்களால் அறியப்படும் பட்டிமன்ற பேச்சாளர் ராஜஸ்ரீ ஜெய்சன், இந்த முறை கண்கலங்கிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எப்போதும் தன்னம்பிக்கையையும், வாழ்க்கை நம்பிக்கையையும் விதைக்கும் வீடியோக்களால் அறியப்படும் பட்டிமன்ற பேச்சாளர் ராஜஸ்ரீ ஜெய்சன், இந்த முறை கண்கலங்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டு ஆயிரக்கணக்கானோரின் மனதை உருக வைத்துள்ளார்.</p><p>

கடந்த ஐந்து ஆண்டுகளாக நான்காம் நிலை புற்றுநோயுடன் போராடி வந்ததை வெளியில் காட்டாமல், சிரித்த முகத்துடன் பிறருக்கு உற்சாகம் அளித்து வந்த அவர், தற்போது குரலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29bd047e-46e1-4228-bf14-e5ba91f51aeb/26-6a5f5bebece36.webp' /></p><p></p><h2>வைரலாகும் காணொளி&nbsp;</h2><p> "நான் வாயைத் திறந்தால் குரலுக்கு பதிலாக காற்றுதான் வருகிறது. குழந்தைகள் 'எப்போது பழைய மாதிரி பேசுவீர்கள்?' என்று கேட்கும்போது மிகவும் வலிக்கிறது" என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p>
இதுவரை தனது வலியை மறைத்து வாழ்ந்ததாக கூறிய ராஜஸ்ரீ, இனி அதை மனதில் வைத்திருக்க முடியாததால் இந்த வீடியோவை வெளியிட்டதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3d1dcd6-c987-4ce6-a43d-6e619dcbf3f8/26-6a5f5bec9ff87.webp' /></p><p></p><p> இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், நடிகைகள் அனிதா சம்பத், ரேகா உள்ளிட்ட பலரும், ஏராளமான ரசிகர்களும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து, விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருவதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DazD1zvoqab/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DazD1zvoqab/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DazD1zvoqab/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Rajashree Jaison (@rajashree_jaison)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T11:46:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவின் உயரிய இலக்கிய விருதை வென்ற உணவு டெலிவரி ஊழியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/food-delivery-worker-wins-china-s-highest-literary-1784634258"></link>
            <id>https://canadamirror.com/article/food-delivery-worker-wins-china-s-highest-literary-1784634258</id>
            <summary type="text">சீனாவைச் சேர்ந்த உணவு டெலிவரி ஊழியரும் கவிஞருமான வாங் ஜிபிங், தனது கவிதைத் தொகுப்புக்காக சீனாவின் மதிப்புமிக்க லு சூன் இலக்கியப் பரிசை வென்று சாதனை பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவைச் சேர்ந்த உணவு டெலிவரி ஊழியரும் கவிஞருமான வாங் ஜிபிங், தனது கவிதைத் தொகுப்புக்காக சீனாவின் மதிப்புமிக்க லு சூன் இலக்கியப் பரிசை வென்று சாதனை படைத்துள்ளார்.
</p><p>
நவீன சீன இலக்கியத்தின் தந்தை எனப் போற்றப்படும் லு சூனின் பெயரில் வழங்கப்படும் இந்த விருது, சீனாவின் மிக உயர்ந்த இலக்கிய அங்கீகாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
</p><p>
வாங் ஜிபிங் எழுதிய ‘லோ பிளைட்’ (Low Flight) என்ற கவிதைத் தொகுப்பு, சீனாவில் பணிபுரியும் தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கை, போராட்டங்கள், விரக்திகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை மையமாகக் கொண்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c2bf974-c755-442e-b6c4-42e2e5fb4d21/26-6a5f5b944427b.webp' /></p><p>இந்த நூலை உருவாக்குவதற்காக அவர் சுமார் 200 சக டெலிவரி ஊழியர்களுடன் உரையாடி, அவர்களின் அனுபவங்களை கவிதைகளாக பதிவு செய்துள்ளார்.
</p><p>
பகல் நேரங்களில் உணவு டெலிவரி பணியில் ஈடுபடும் வாங் ஜிபிங், கடந்த 8 ஆண்டுகளில் தனது ஸ்கூட்டரில் சுமார் 1.5 இலட்சம் கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணித்துள்ளார். </p><p>அதே காலப்பகுதியில், ஓய்வு நேரங்களை பயன்படுத்தி 6,000-க்கும் மேற்பட்ட கவிதைகளையும் எழுதியுள்ளார்.

ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்த வாங் ஜிபிங், குடும்பத்தின் பொருளாதார நெருக்கடி காரணமாக இளம் வயதிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்தியுள்ளார்.</p><p>

பின்னர் கட்டுமானத் தொழில், குப்பை சேகரிப்பு, தெருவோர வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு வேலைகளைச் செய்த அவர், இறுதியில் உணவு டெலிவரி ஊழியராக பணியாற்றத் தொடங்கினார்.
</p><p>
சாதாரண தொழிலாளர்களின் வாழ்க்கை அனுபவங்களை இலக்கியமாக மாற்றியுள்ள அவரது படைப்பு, சீனாவில் தொழிலாளர் வர்க்கத்தின் குரலுக்கு கிடைத்துள்ள முக்கிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.</p><p>

வாழ்க்கையின் கடினமான பாதைகளைக் கடந்து, தனது உழைப்பாலும் எழுத்தாற்றலாலும் உயர்ந்த வாங் ஜிபிங்கின் வெற்றி, கனவுகளுக்கு எல்லைகள் இல்லை என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-21T11:44:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வல்வெட்டித்துறையில் குட்டிமணி - தங்கத்துரைக்கு சிலை: நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ள காவல்துறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/statue-of-kuttimani-thangathurai-in-valvettithurai-1784634229"></link>
            <id>https://ibctamil.com/article/statue-of-kuttimani-thangathurai-in-valvettithurai-1784634229</id>
            <summary type="text">வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக வல்வெட்டித்துறை காவல்துறையால் பருத்தித்துறை நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக வல்வெட்டித்துறை காவல்துறையால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.</p><p> 

குறித்த வழக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஏற்பாட்டு குழுவை சேர்ந்த வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உறுப்பினர் க. சதீஸ் மன்றில் முன்னிலையான நிலையில் , அவரை பிணையில் செல்ல மன்று அனுமதித்துள்ளது.
</p><p>
மேலும் இந்த வழக்கினை எதிர்வரும் 22ஆம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>வல்வெட்டித்துறை காவல்துறை</h2><p>

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் தங்கத்துரை மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் 43ஆவது நினைவு தினமான எதிர்வரும் 25ம் திகதி அவர்களின் சிலை வல்வெட்டித்துறையில் திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c8b26ae-eb99-4609-9172-8b5454129731/26-6a5f5b76d5884.webp' /></p><p> </p><p>

இந்நிலையிலேயே வல்வெட்டித்துறை காவல்துறையினரால் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. </p><p>

கறுப்பு ஜூலை வன்முறை சம்பவங்களின் உச்ச கட்டமாக வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்துரை, குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழ் அரசியல் கைதிகள் , ஜூலை 25மற்றும் 28ஆம் திகதிகளில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய கைதிகளால் மோசமாக படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T11:44:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீர் செல்வந்தர்கள் குறித்த அறிவிப்பை மீளப்பெறுங்கள் : காவல்துறைக்கு ஐ.தே.க அறிவுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/unp-urges-police-withdraw-statement-1784632450"></link>
            <id>https://ibctamil.com/article/unp-urges-police-withdraw-statement-1784632450</id>
            <summary type="text">சட்டபூர்வமான வருமான ஆதாரம் ஏதுமின்றி, திடீரென கணிசமான சொத்துக்களைப் பெற்றவர்கள் அல்லது ஆடம்பரமான வாழ்க்கை வாழ்பவர்கள்” குறித்துப் பொதுமக்கள் தெரிவிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டபூர்வமான வருமான ஆதாரம் ஏதுமின்றி, திடீரென கணிசமான சொத்துக்களைப் பெற்றவர்கள் அல்லது ஆடம்பரமான வாழ்க்கை வாழ்பவர்கள்” குறித்துப் பொதுமக்கள் தெரிவிக்குமாறு வலியுறுத்தி இலங்கை காவல்துறை வெளியிட்ட ஜூலை 9ஆம் திகதி அறிக்கையைத் திரும்பப் பெறுமாறு ஐக்கிய தேசியக் கட்சி இன்று(21) அழைப்பு விடுத்துள்ளது.</p><p>சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதுமே காவல்துறையின்பணி என வரையறுக்கும் ஐக்கிய ராச்சியத்தின் சுதந்திர விசாரணை அறிக்கையை மேற்கோள் காட்டி, இந்த உத்தரவு காவல்துறை சேவையின் அடிப்படைக் கடமையை மீறுவதாக ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.</p><h2>இலங்கையில் செல்வ வரி இல்லை</h2><p>“சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதும், சட்டத்தை மீறுபவர்களை நீதியின் முன் நிறுத்துவதும், மகாராணியின் அமைதியைக் காப்பதுமே காவல்துறை சேவையின் நோக்கமாகும்,” என்று அக்கட்சி குறிப்பிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/022cad4a-65f8-4222-b18f-eaa7c41f66a1/26-6a5f588163d39.webp' /></p><p>
</p><p>
இலங்கையில் செல்வ வரி இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய ஐக்கிய தேசியக் கட்சி, பல கிராமப்புறக் குடும்பங்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உட்பட சட்டபூர்வமான வழிகளில் சொத்துக்களைப் பெற்றுள்ளன என்றும் குறிப்பிட்டது.</p><p></p><h2>வரி நடைமுறைகள் குறித்த குறைந்த விழிப்புணர்வு</h2><p>
</p><p>
மற்றவர்கள், வரி நடைமுறைகள் குறித்த குறைந்த விழிப்புணர்வு காரணமாகத் தங்கள் வருமானத்தை அறிவிக்கத் தவறியிருக்கலாம். தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாமல், காவல்துறையின் இந்த உத்தரவு "தொந்தரவு மற்றும் அச்சுறுத்தலுக்கான ஒரு கருவியாக" மாறக்கூடும் என்று அக்கட்சி எச்சரித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36308a4e-27cf-4e63-90ec-0cbf381c3d33/26-6a5f5a1368ad8.webp' /></p><p>

பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்களை வெளியிடுவதற்கு முன்பு, இதுபோன்ற விடயங்கள் காவல்துறை போதைப்பொருள் பிரிவு, உள்நாட்டு வருவாய்த் துறை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியது.</p><p>

கிராமப்புற சமூகங்கள் மீது தேவையற்ற அழுத்தத்தைத் தவிர்ப்பதற்காக, காவல்துறை அந்த அறிக்கையைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, அதற்குப் பதிலாக மேலும் குறிப்பிட்ட ஒரு உத்தரவை வெளியிட வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T11:38:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வியட்நாம் பேருந்தில் பயங்கர தீ விபத்து ; 7 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/massive-fire-in-vietnam-bus-7-dead-1784633842"></link>
            <id>https://canadamirror.com/article/massive-fire-in-vietnam-bus-7-dead-1784633842</id>
            <summary type="text">வியட்நாமின் லம் டாங் மாகாணத்தில் இருந்து ஹோ சி மின் நகரை நோக்கி பயணித்த ஆம்னி பேருந்து ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்ததுடன், மேலு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வியட்நாமின் லம் டாங் மாகாணத்தில் இருந்து ஹோ சி மின் நகரை நோக்கி பயணித்த ஆம்னி பேருந்து ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
</p><p>
நேற்று இரவு பயணத்தைத் தொடங்கிய குறித்த பஸ்சில் மொத்தம் 24 பேர் பயணித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இன்று அதிகாலை டாங் நாய் நகரில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது, பேருந்தில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fefb44a-2f1f-4092-ac23-13dac807ede9/26-6a5f59f43b3ea.webp' /></p><p>

தீ வேகமாக பரவியதால், பயணிகள் உயிர் தப்புவதற்காக அவசரமாக வெளியேற முயன்றனர். </p><p>இருப்பினும், தீயின் கொடூரத்தில் சிக்கிய 7 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

மேலும், 5 பேர் படுகாயமடைந்த நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினர் அவர்களை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.</p><p>

தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததையடுத்து, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>பேருந்து தீப்பற்றியதற்கான காரணம் குறித்து வியட்நாம் அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-21T11:37:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு சிக்கலாக மாறிய புதிய குடியேற்ற விதி..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-visa-rule-f-1-j-1-students-return-by-sept-15-1784631856"></link>
            <id>https://tamilwin.com/article/us-visa-rule-f-1-j-1-students-return-by-sept-15-1784631856</id>
            <summary type="text">அமெரிக்காவில் கல்வி பயிலும் இந்தியர்கள் உள்ளிட்ட சர்வதேச மாணவர்கள்,தற்போது விடுமுறைக்காக தங்கள் சொந்த நாடுகளில் இருந்தால், செப்டம்பர் 15-க்கு முன்பாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் கல்வி பயிலும் இந்தியர்கள் உள்ளிட்ட சர்வதேச மாணவர்கள்,தற்போது விடுமுறைக்காக தங்கள் சொந்த நாடுகளில் இருந்தால், செப்டம்பர் 15-க்கு முன்பாக அமெரிக்காவிற்கு திரும்ப வேண்டும் என்று பல்கலைக்கழகங்கள் அறிவுறுத்தியுள்ளன.
</p><p>
புதிய குடியேற்ற விதிமுறை நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், தற்போது நடைமுறையில் உள்ள சலுகைகளை இழக்காமல் இருக்க இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மாணவர் விசா</h2><p>



இதுவரை F-1 மாணவர் விசா மற்றும் J-1 பரிமாற்ற விசா வைத்திருப்பவர்கள், தங்கள் கல்வி தொடரும் வரை "Duration of Status (D/S)" என்ற முறையின் கீழ் அமெரிக்காவில் தங்க அனுமதி பெற்றிருந்தனர்.
</p><p>
ஆனால், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை (DHS) அறிவித்துள்ள புதிய "Final Rule" படி, செப்டம்பர் 15 முதல் மாணவர்கள் அதிகபட்சம் 4 ஆண்டுகள் மட்டுமே அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்படுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/654020ed-bf51-4c5c-a271-4d0752a0271a/26-6a5f5864c346b.webp' /></p><p> </p><p>அதற்கு மேல் தங்க வேண்டுமெனில், USCIS-இன் (Form I-539) மூலம் அனுமதி பெறுவது கட்டாயமாகும்.

மேலும், படிப்பு முடிந்த பிறகு நாட்டை விட்டு வெளியேற வழங்கப்பட்டிருந்த 60 நாட்கள் அவகாசம், இனி 30 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
</p><p>


இந்த புதிய விதிமுறை நடைமுறைக்கு வரும் நிலையில், கொலம்பியா பல்கலைக்கழகம் தனது மாணவர்களுக்கு அனுப்பிய அறிவிப்பில்,

புதிய விதிமுறை 60 நாட்களில் நடைமுறைக்கு வருகிறது.</p><p></p><h2>&nbsp;புதிய குடியேற்ற விதி</h2><p> </p><p>எனவே, வகுப்புகள் தொடங்கும் செப்டம்பர் 8-க்கு முன்பாகவே அனைத்து மாணவர்களும் நியூயார்க்கு திரும்ப வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.</p><p>

DHS விளக்கத்தின் படி, செப்டம்பர் 15-ஆம் திகதி அமெரிக்காவில் D/S முறையின் கீழ் ஏற்கனவே இருக்கும் மாணவர்கள், தங்கள் Form I-20-ல் குறிப்பிடப்பட்டுள்ள படிப்பு முடியும் நாள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட OPT/STEM OPT பயிற்சி காலம் முடியும் வரை தங்கலாம்.

ஆனால், இந்த சலுகைக்கும் ஒரு வரம்பு உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5abfc22-5dcc-4b6b-bb02-a4946acd58ba/26-6a5f5865ae8a2.webp' /></p><p> புதிய விதியின் கீழ் அதிகபட்சம் 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி வழங்கப்படும். மேலும், எந்த சூழ்நிலையிலும் 2030 நவம்பர் 14-க்கு பிறகு இந்த சலுகை நீடிக்காது.



இந்த புதிய விதிமுறை இந்திய மாணவர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

குறிப்பாக முனைவர் பட்டம் (PhD), மருத்துவப் பயிற்சி மற்றும் நீண்டகால ஆராய்ச்சி படிப்புகளில் ஈடுபட்டிருப்பவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p>Foundation for India and Indian Diaspora Studies (FIIDS) அமைப்பின் கொள்கை மற்றும் திட்டப் பிரிவு தலைவர் கந்தேராவ் கந்த் கூறுகையில்,

"நான்கு ஆண்டுகள் என்ற வரம்பு, தற்போதைய உயர்கல்வி அமைப்பின் நடைமுறைக்கு பொருந்தாது.</p><p></p><h2>அமெரிக்க அரசு </h2><p>இளங்கலை பட்டப்படிப்பை முடிக்க சராசரியாக 52 மாதங்களும், முனைவர் பட்டத்திற்கு சுமார் 5.7 ஆண்டுகளும் தேவைப்படுகிறது.

 இதனால் மாணவர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டிய நிலை உருவாகலாம். </p><p>ஆராய்ச்சி திட்டங்களும், அமெரிக்காவின் கண்டுபிடிப்பு வளர்ச்சியும் பாதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/583de604-b071-4d1b-bd94-472615f1c0bd/26-6a5f58665ea14.webp' /></p><p>
</p><p>
அதேபோல், ஆராய்ச்சி ஆய்வகங்கள் திறமையான மாணவர்களை இழக்கும் அபாயம் இருப்பதுடன், பட்டமளிப்பு தாமதம், ஆசிரியர் நியமனங்களில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளும் உருவாகலாம் என FIIDS எச்சரித்துள்ளது.</p><p>

புதிய விதிமுறையை உடனடியாக நடைமுறைபடுத்தாமல், மாணவர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சி பாதிக்கப்படாத வகையில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்பு அமெரிக்க அரசை வலியுறுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-21T11:36:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓய்வை அறிவித்த இலங்கையின் அதிவேக வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/yupun-abeykoon-announces-retirement-1784633722"></link>
            <id>https://tamilwin.com/article/yupun-abeykoon-announces-retirement-1784633722</id>
            <summary type="text">&amp;nbsp;100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் 10 செக்கன் இலக்கை முதன்முறையாகக் கடந்த தெற்காசியாவின் அதிவேக வீரரான இலங்கையின் யுபுன் அபேகூன், சர்வதேச தடகளப் போட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் 10 செக்கன் இலக்கை முதன்முறையாகக் கடந்த தெற்காசியாவின் அதிவேக வீரரான இலங்கையின் யுபுன் அபேகூன், சர்வதேச தடகளப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். </p><p>செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உருக்கமான அறிக்கையொன்றில், 31 வயதான அவர், தாய்நாட்டிற்குச் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றிவிட்ட மனநிறைவுடன் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
</p><p>தாய் நாட்டுக்குத் தான் எதையும் நிலுவையில் வைக்கவில்லை என்றாலும், தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் என்றென்றும் கடமைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
தெற்காசியாவில் 10 செக்கன்களுக்குள் 100 மீற்றரைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை எட்டியது எனது தனிப்பட்ட வெற்றி மட்டுமல்ல; அது முழு தேசத்திற்குமான வரலாற்றுத் தருணம் என அவர் தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.</p><p> 
தமது விளையாட்டுப் பயணத்தில் உறுதுணையாக இருந்த பெற்றோர், படித்த பாடசாலைகள், இலங்கை இராணுவத்தின் மின்சார மற்றும் இயந்திரப் பொறியியல் படைப்பிரிவு, இலங்கை தடகள சங்கம் மற்றும் கிளாடியோ லிச்சியார்டெல்லோ தலைமையிலான இத்தாலிய பயிற்றுவிப்பாளர் குழு ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.</p><p> 
அத்துடன், தனது சர்வதேசப் பயணத்தின் போது தொடர்ச்சியாக ஆதரவளித்த கோடிக்கணக்கான இலங்கை மக்களுக்கும் தனது நன்றிகளை உரித்தாக்கினார். </p><p>
2022 ஆண்டு சுவிட்சர்லாந்தின் லா சோ-டி-ஃபோன்ஸில் (La Chaux-de-Fonds) நடைபெற்ற போட்டியில் 100 மீற்றர் தூரத்தை 9.96 செக்கன்களில் கடந்து, 10 செக்கன் எல்லைக்குக் கீழ் ஓடிய ஒரே தெற்காசிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.</p><p> 
2022ம் ஆண்டில் பர்மிங்ஹாமில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டில் 100 மீற்றர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று, பல தசாப்தகால இலங்கையின் பதக்க வறட்சியைப் போக்கினார். </p><p>
2020ம் ஆணடி்ல் 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் 100 மீற்றர் பிரிவில் தகுதிபெற்றுப் போட்டியிட்ட முதல் தெற்காசிய ஆண் ஓட்டப்பந்தய வீரரானார். </p><p>
இன்னமும் போட்டிகளில் பங்கேற்கும் திறன் தமக்கு இருக்கும் நிலையிலும், இலங்கை தடகள கட்டமைப்பில் நிலவும் சவால்கள் மற்றும் பின்னடைவுகள் காரணமாகவே இந்த கடினமான முடிவை எடுக்க நேரிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> 
மேலும், இலங்கை விளையாட்டுத் துறையின் தற்போதைய நிலைமை மற்றும் தனது அனுபவங்கள் குறித்த விரிவான தகவல்களை எதிர்காலத்தில் வெளியிடவுள்ளதாகவும் யுபுன் அபேகூன் தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T11:35:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் டெங்கு நோய் தீவிரம் : நான்கு வயது சிறுமி உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/4-year-old-girl-dies-of-dengue-fever-in-sri-lanka-1784631893"></link>
            <id>https://ibctamil.com/article/4-year-old-girl-dies-of-dengue-fever-in-sri-lanka-1784631893</id>
            <summary type="text">டெங்கு காய்ச்சல் காரணமாக காலி தேசிய வைத்தியசாலையின் சிறுவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த&amp;nbsp;நான்கு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>டெங்கு காய்ச்சல் காரணமாக காலி தேசிய வைத்தியசாலையின் சிறுவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த&nbsp;நான்கு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.</p><p> திக்வெல்ல - நில்வெல்ல, அதுலஸ்ஸவத்த பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி&nbsp;நேற்று (20) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

கடும் காய்ச்சல் காரணமாக முதலில் திக்வெல்ல பிரதேச வைத்தியசாலையில் இந்தச் சிறுமிஅனுமதிக்கப்பட்டிருந்தார்.</p><p></p><h2>காலி தேசிய வைத்தியசாலை</h2><p>இந்தநிலையில் நோய் நிலைமை தீவிரமடைந்தமையினால் மாத்தறை பொது வைத்தியசாலைக்கும், பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அன்றைய தினமே காலி தேசிய வைத்தியசாலையின் சிறுவர் அதி தீவிர சிகிச்சை பிரிவிற்கும் மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90f06ded-797d-4be5-8ba9-691f47b8c3e9/26-6a5f5567704ac.webp' /></p><p>காலி தேசிய வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற திடீர் மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனையின் போது, டெங்கு இரத்தக்கசிவுக் காய்ச்சலினால் காரணமாகவே இம்மரணம் சம்பவித்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>இதேவேளை&nbsp;டெங்கு நோய் காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 3 மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் மொத்த டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்வடைந்துள்ளது. </p><p>இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 77,000 ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T11:28:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தேங்கும் சொகுசு வாகனங்கள் ; வாகனத்தை கைவிட்ட இறக்குமதியாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/luxury-vehicles-pile-up-at-hambantota-port-1784633176"></link>
            <id>https://jvpnews.com/article/luxury-vehicles-pile-up-at-hambantota-port-1784633176</id>
            <summary type="text">அதிகபடியான தாமதக் கட்டணங்களை செலுத்த முடியாத காரணத்தால், இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1,000 சொகுசு வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கைவிடப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிகபடியான தாமதக் கட்டணங்களை செலுத்த முடியாத காரணத்தால், இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1,000 சொகுசு வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கைவிடப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p> இலங்கைகலாச்சார நிகழ்வுகள்



ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் தற்போது சுமார் 40,000 இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>


மீள் ஏற்றுமதி நடவடிக்கைகளில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக, குறிப்பாக துபாய் உள்ளிட்ட பகுதிகளுக்கான கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், பல வாகனங்கள் நீண்டகாலமாக துறைமுகங்களில் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/085174de-155a-457a-ba95-c5b39f785b17/26-6a5f5759ccb9d.webp' /></p><p>



மீள் ஏற்றுமதிக்காக கொண்டுவரப்பட்ட வாகனங்களும் இதே தாமதக் கட்டண சிக்கலுக்கு முகங்கொடுத்து வருவதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>


இந்நிலையில், சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான சொகுசு வாகனம் ஒன்றை விடுவிக்க முயன்ற இறக்குமதியாளர் ஒருவர், அதற்காக சுமார் 5 கோடி ரூபாய் தடுத்துவைப்பு கட்டணமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>


குறித்த வாகனம் சுமார் ஆறு ஆண்டுகளாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.



இதன் காரணமாக, வாகனத்தின் மொத்த செலவு சுமார் 7 கோடி ரூபாயாக அதிகரித்ததுடன், அதன் ஆரம்ப பெறுமதியை விட மூன்று மடங்குக்கும் அதிகமான தொகையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



இதையடுத்து, குறித்த இறக்குமதியாளர் வாகனத்தை மீட்கும் முயற்சியை கைவிட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.</p><p>



இதேபோன்ற காரணங்களால் பல இறக்குமதியாளர்கள் தங்களது வாகனங்களை துறைமுகங்களில் இருந்து மீட்காமல் கைவிட்டு வருவதால், நூற்றுக்கணக்கான சொகுசு வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளதாகவும், தாமதக் கட்டணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T11:26:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ஜென்டினாவின் வன்முறை நட்சத்திரங்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/argentina-violent-stars-face-1784633008"></link>
            <id>https://news.lankasri.com/article/argentina-violent-stars-face-1784633008</id>
            <summary type="text">ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக் கிண்ணம் இறுதிப் போட்டியின் முடிவில் ஸ்பெயினுக்கு எதிராக அர்ஜென்டினா நடந்து கொண்ட அவமானகரமான விதம், FIFA மேற்கொண்டு வரும...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக் கிண்ணம் இறுதிப் போட்டியின் முடிவில் ஸ்பெயினுக்கு எதிராக அர்ஜென்டினா நடந்து கொண்ட அவமானகரமான விதம், FIFA மேற்கொண்டு வரும் ஒழுங்கு நடவடிக்கை விசாரணையில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.</p><h2>கண்டிக்கத்தக்க சம்பவங்கள்</h2><p>
</p><p>கூடுதல் நேர ஆட்ட முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ஸ்பெயின் அணி உலக சேம்பியனானது உறுதியான உடனேயே, அர்ஜென்டினாவின் பல வீரர்கள் ஸ்பெயின் வீரர்களுடன் கசப்பான மோதல்களில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18648baf-e0b5-48e7-9058-ad849f8fc2cb/26-6a5f5956a8f10.webp' /></p><p> </p><p>ஸ்பெயின் அணியின் கேப்டன் ரோட்ரி தனது சக வீரர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபடச் சென்றபோது நஹுவேல் மோலினாவால் தாக்கப்பட்டார்; அதைத் தொடர்ந்து, அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் ராபர்டோ அயலா டேனி ஓல்மோவை தாக்கினார். </p><p>வேறொரு இடத்தில், அர்ஜென்டினா நடுக்கள வீரர் லியாண்ட்ரோ பரேடெஸ், எரிக் கார்சியாவின் கழுத்தைப் பிடித்துத் தாக்கியதுடன், பின்னர் தனது சக வீரரான தியாகோ அல்மடாவின் உதவியுடன், ஸ்பெயின் மாற்று வீரரான காவியை தரையில் தள்ளிவிட்டார். </p><p>பந்தை அதிக நேரம் தன்வசம் வைத்திருப்பதிலும், வாய்ப்புகளை உருவாக்குவதிலும் ஸ்பெயின் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய நிலையில், அர்ஜென்டினா கடுமையான தடுப்பாட்டங்கள், நேரத்தை வீணடித்தல் மற்றும் முறையற்ற தந்திரங்கள் மூலம் அவர்களைத் தடுக்க முயன்றது.</p><p></p><p> </p><p>அதன் பின்னரே, ஆட்டத்திற்குப் பிந்தைய கண்டிக்கத்தக்க சம்பவங்கள் நிகழ்ந்தன. இறுதிப் போட்டிக்குப் பிறகு, உலக கால்பந்தாட்ட நிர்வாக அமைப்பான ஃபிஃபா, அர்ஜென்டினாவின் போட்டிக்குப் பிந்தைய வன்முறை நடத்தை குறித்து உடனடியாக ஒரு விசாரணையைத் தொடங்கியது. </p><p>மேலும், காணொளிக் காட்சிகள், நடுவர் அறிக்கைகள் மற்றும் போட்டிப் பிரதிநிதிகளால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ய ஒரு ஒழுங்கு மற்றும் நெறிமுறை சட்டத்தரணியையும் நியமித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48c5ffb2-ff5b-49fb-9ce9-81daf7786b23/26-6a5f5957703df.webp' /></p><p> </p><p>ஃபிஃபாவின் (FIFA) ஒழுங்குமுறை விதிகளின்படி, வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்படும் வீரர்களுக்குக் குறைந்தது மூன்று போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட வேண்டும்.</p><h2>தடைகள் விதிக்கப்பட்டு</h2><p> </p><p>எதிராளி மீது குத்துதல், உதைத்தல், முழங்கையால் தாக்குதல், தலையால் முட்டுதல் அல்லது பிற தாக்குதல்கள் உள்ளிட்ட ஆக்ரோஷமான செயல்களுக்கும் அதே தண்டனை பொருந்தும். </p><p>ஆனால், மோலினா, பரேடெஸ், அல்மாடா மற்றும் அயலா ஆகியோர் இந்த விதிகளை மீறியதாகத் தோன்றினாலும், ஃபிஃபா இதுவரை எந்தத் தடையும் அறிவிக்கவில்லை; இது அந்த அர்ஜென்டினா வீரர்களுக்கு இன்னும் கடுமையான தண்டனைகள் கிடைக்கக்கூடும் என்பதையே உணர்த்துகிறது.</p><p> ஒழுங்கு நடவடிக்கைக் விதிகளின் 69-வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, உலகக் கிண்ணம் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், வீரர்களுக்கு விதிக்கப்படக்கூடிய எந்தவொரு தண்டனையும் அர்ஜென்டினாவின் அடுத்த அதிகாரப்பூர்வ போட்டிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7cfa05c-7700-49e3-85d2-e6e2c986c4ea/26-6a5f595824ce9.webp' /></p><p> </p><p>இந்தத் தடைகள் கிளப் சார்ந்த இடைநீக்கங்களுக்கு வழிவகுக்க வாய்ப்பு மிகக் குறைவு என்றாலும், கடந்த காலங்களில் மிகத் தீவிரமான நிகழ்வுகளில், கால்பந்து தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் வீரர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையிலான தற்காலிகத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.</p><p> இத்தாலிக்கு எதிரான உலகக் கிண்ணம் ஆட்டத்தின்போது ஜியோர்ஜியோ கியெல்லினியைக் கடித்ததற்காக, 2014-இல் லூயிஸ் சுவாரஸ் கால்பந்து விளையாட்டிலிருந்து நான்கு மாத காலத் தடைக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T11:21:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசில் ராஜபக்சவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/arrest-warrant-issued-against-basil-rajapaksa-1784632725"></link>
            <id>https://jvpnews.com/article/arrest-warrant-issued-against-basil-rajapaksa-1784632725</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாத்தறை பிரவுன்ஸ் ஹில் பகுதியில் உள்ள சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p></p><p>

மாத்தறை பிரவுன்ஸ் ஹில் பகுதியில் உள்ள சுமார் ஒன்றரை ஏக்கர் காணி கொள்வனவு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, காவல்துறை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b48b0ae1-17de-464e-aa14-8631ec1f1826/26-6a5f55967cad5.webp' /></p><p>

இந்த வழக்கில் பசில் ராஜபக்ச தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலையாகாததைக் கருத்தில் கொண்டு இந்த பிடியாணை உத்தரவு பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன், அவரது வெளிநாட்டு பயணத்திற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
</p><p>
இதேவேளை, குறித்த வழக்கின் அடுத்த விசாரணை ஓகஸ்ட் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T11:18:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச வைத்தியசாலையில் பறிப்போன தாயின் உயிர் - ஊழியரை தாக்கி சடலத்தை கொண்டு செல்ல முயன்ற மகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hospital-management-and-staff-protest-in-kinniya-1784632580"></link>
            <id>https://tamilwin.com/article/hospital-management-and-staff-protest-in-kinniya-1784632580</id>
            <summary type="text">கிண்ணியா தள வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட
தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பை
உறுதிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிண்ணியா தள வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட
தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பை
உறுதிப்படுத்தக் கோரியும் போராட்டம் ஒன்று வைத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த போராட்டமானது, இன்று(21.07.202) காலை 11 மணியளவில் கிண்ணியா தள வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2> 


வைத்தியசாலையில் நடந்த மோசமான சம்பவம்</h2><p>
சிகிச்சைக்காகத் தனது தாயாரை அழைத்து வந்த நபர் ஒருவரிடம், அவரைப் பரிசோதித்த
வைத்தியர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.</p><p> 

அதனைத் தொடர்ந்து, உயிரிழந்த தாயாரின் உடலை உடனடியாக அங்கிருந்து எடுத்துச் செல்ல
அந்நபர் முற்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d277aa6f-3d78-449a-806c-c6372857fd53/26-6a5f55949b20c.webp' /></p><p>
</p><p>
இதன்போது, அங்கிருந்த வைத்தியசாலை ஊழியர் ஒருவர், வைத்தியசாலையின் நடைமுறைகள்
மற்றும் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே உடலைக் கொண்டு செல்ல முடியும் எனத்
தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்நபர், ஊழியருடன் வாக்குவாதத்தில்
ஈடுபட்டு அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>

இந்த சம்பவத்தைக் கண்டித்து, இன்று நண்பகல் 1 மணியளவில் கிண்ணியா தள
வைத்தியசாலை வைத்தியர்கள், ஊழியர்கள் மற்றும் ஏனைய சுகாதாரத்துறை ஊழியர்கள்
இணைந்து கண்டன ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8ce0c4c-1c49-4deb-b6f8-fb9b78c004fb/26-6a5f5595a1158.webp' /></p><p> </p><p> 

திருகோணமலை - கண்டி பிரதான வீதியில், வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற
இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.</p><h2> 



வைத்தியசாலை ஊழியர்கள் மீதான நடவடிக்கை</h2><p>
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில், 

வைத்தியசாலையில் கடுமையான ஆள் பற்றாக்குறை நிலவும் சூழலிலும் பல்வேறு
தியாகங்களுக்கு மத்தியிலேயே பொதுமக்கள் நலன் கருதி நாங்கள் சேவையாற்றி
வருகிறோம். ஆனால், இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுவது
ஊழியர்கள் மத்தியில் அச்சத்தையும், சேவையில் ஈடுபடுவதில் தயக்கத்தையும்
ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0565aab1-8a81-4074-9d2d-fa723197d1b7/26-6a5f55967c8a7.webp' /></p><p>
</p><p>
எனவே, எமக்கான பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும். முக்கியமாக,
வைத்தியசாலை வளாகத்தினுள் பொலிஸ் பாதுகாப்புச் சாவடி ஒன்றினை அமைத்துத் தர
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
</p><p>
போராட்டக்காரர்கள் "நிறுத்து நிறுத்து... ஊழியர்கள் மீதான தாக்குதலை
நிறுத்து!", "வேண்டும் வேண்டும்... வைத்திய ஊழியர்களுக்குப் பாதுகாப்பு
வேண்டும்!" போன்ற கோஷங்களை எழுப்பியதுடன், தமது கோரிக்கைகள் அடங்கிய சுலோக
அட்டை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். </p><p>

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாகக் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8d54fc7-db54-4935-bae8-2785a3d184fb/26-6a5f559760414.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2de14725-5335-4d64-9e83-c9b3b23992c8/26-6a5f5598333fc.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T11:18:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் தீவிரப்படுத்தப்பட்ட தாக்குதல் : 100 அமெரிக்கப்படையினர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/100-us-service-members-injured-in-iran-strikes-1784627893"></link>
            <id>https://ibctamil.com/article/100-us-service-members-injured-in-iran-strikes-1784627893</id>
            <summary type="text">இந்த மாதம் மத்திய கிழக்கு முழுவதும் உள்ளஅமெரிக்க இராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் நடத்திய தொடர் தாக்குதல்களில் சுமார் 100 அமெரிக்கப் படை வீரர்கள் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த மாதம் மத்திய கிழக்கு முழுவதும் உள்ளஅமெரிக்க இராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் நடத்திய தொடர் தாக்குதல்களில் சுமார் 100 அமெரிக்கப் படை வீரர்கள் காயமடைந்ததாக அமெரிக்க அதிகாரிகள் சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்தனர்.
</p><p>
அவர்களில் பெரும்பாலானோர் பின்னர் மீண்டும் பணிக்குத் திரும்பிவிட்டதாக அதிகாரிகள் கூறியதாகத் தெரியவருகிறது.

பென்டகனின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல், சிபிஎஸ் நியூஸிடம் அளித்த அறிக்கையில் இந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்தினார்.</p><h2>காயமடைந்தவர்கள் மீண்டும் பணிக்கு</h2><p>&nbsp; அதில், "ஜூலை 7, 2026 முதல் கிட்டத்தட்ட 100 பேர் ஏதேனும் ஒரு வகையில் காயமடைந்ததாகக் கருதப்படுகிறார்கள்," என்றும், அவர்களில் 96% பேர் பின்னர் பணிக்கு திரும்பிவிட்டனர் என்றும் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0691c400-9e1f-46d5-a146-f1efe30652e6/26-6a5f4603b164d.webp' /></p><p>

"அவர்கள் மீண்டும் போரில் ஈடுபட உறுதியாக உள்ளனர். ஏற்பட்ட காயங்களில் பெரும்பாலானவை லேசான மூளையதிர்ச்சிகளே," என்று அவர் குறிப்பிட்டார்.</p><p></p><p>
</p><p>
</p><h2>பதிலடி தாக்குதலை நடத்தும் ஈரான்</h2><p>அமெரிக்கா ஈரானுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வரும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b89f601-50c1-443a-be00-5ddbc8894e08/26-6a5f460463952.webp' /></p><p> இந்தத் தாக்குதல்கள் பெரும்பாலும் தெற்கு ஈரானைக் குறிவைத்து நடத்தப்பட்டன. அமெரிக்க இராணுவத்தால் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் பல பிராந்திய நாடுகளில் உள்ள அமெரிக்க வசதிகள் மற்றும் தளங்களைக் குறிவைத்து, தெஹ்ரான் பதிலடித் தாக்குதல்களை நடத்திவருகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T11:11:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கயானா படகு விபத்துக்குள்ளானதில் 27 பேர் பலி, 83 பேர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/27-dead-83-missing-in-guyana-ferry-accident-1784622951"></link>
            <id>https://canadamirror.com/article/27-dead-83-missing-in-guyana-ferry-accident-1784622951</id>
            <summary type="text">தென் அமெரிக்க நாடான கயானாவின் வட அத்திலாந்திக் கடற்கரைக்கு அப்பால் இடம்பெற்ற பயணிகள் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் அமெரிக்க நாடான கயானாவின் வட அத்திலாந்திக் கடற்கரைக்கு அப்பால் இடம்பெற்ற பயணிகள் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
</p><p>கடந்த சனிக்கிழமை (18) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில், மீட்புப் பணியாளர்கள் இதுவரை 69 பேரை உயிருடன் மீட்டுள்ள நிலையில், மேலும் 83 பேர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஆரம்பத்தில் குறித்த படகில் 133 பேர் பயணித்ததாக பதிவுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. எனினும், மீட்கப்பட்டவர்களில் பலரின் பெயர்கள் உத்தியோகபூர்வ பயணிகள் பட்டியலில் இடம்பெறாததால், படகில் 179 பேர் வரை பயணித்திருக்கலாம் என கயானா பிரதமர் மார்க் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e31e2509-a985-4b19-8233-a0aca0028196/26-6a5f2f69080db.webp' /></p><p>விபத்துக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், படகின் ஓட்டுநர் மற்றும் ஊழியர் ஒருவர் கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை வைத்திய பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஜுவான் எட்ஜில் தெரிவித்துள்ளார்.
</p><p>
பணிநேரத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியமை மற்றும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், படகோட்டி மற்றும் ஊழியர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>கயானா தலைநகர் ஜோர்ஜ்டவுனில் இருந்து போர்ட் கைடூமா பகுதிக்குச் சென்றுகொண்டிருந்த படகு, சனிக்கிழமை இரவு 11.01 மணியளவில் ஆபத்து சமிக்ஞையை அனுப்புவதற்கு முன்பே கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
விபத்தில் உயிர் தப்பிய பயணி எலினா மூன்சாமி, மிகப்பெரிய அலை ஒன்று மோதிய சில விநாடிகளிலேயே படகுக்குள் நீர் புகுந்து அது கவிழ்ந்ததாக தெரிவித்துள்ளார்.

"மிதந்து வந்த மரப்பெட்டி ஒன்றைப் பிடித்துக்கொண்டு உயிர் பிழைத்தேன்.</p><p>ஆனால், எனது 2 வயது குழந்தையின் கையை பிடித்திருந்தபோதும், அலையின் வேகத்தில் எனது கை நழுவி குழந்தை நீரில் மூழ்கியது" என அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b6b2ae4-5462-443a-94da-3fa3c7573fa9/26-6a5f2f69ad7b1.webp' /></p><p>மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக அருகிலுள்ள பிரெஞ்சு கயானாவில் இருந்து பிரெஞ்சு இராணுவம் 12 அனுபவமிக்க உயிர்காப்புப் பணியாளர்கள், இரண்டு வைத்தியர்கள் மற்றும் ஒரு மெக்கானிக் ஆகியோரை அனுப்பியுள்ளது.
</p><p>
மேலும், அப்பகுதியைச் சேர்ந்த சிறிய தனியார் மீன்பிடிப் படகுகள் கடலில் மிதந்து கொண்டிருந்த 17-க்கும் மேற்பட்டவர்களை மீட்டுள்ளன.
</p><p>
மீட்கப்பட்ட 69 பேரில் 15 சிறுவர்களும் அடங்குகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் சிறிய காயங்களுடன் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள பிரதமர் மார்க் பிலிப்ஸ்,

"காணாமல் போனவர்களை தேடிக் கண்டுபிடிப்பதே எங்களின் முழு கவனமாக உள்ளது. இன்னும் நம்பிக்கை உள்ளது. </p><p>இந்த துயரச் சம்பவத்திற்கு அதிகாரிகளின் அலட்சியம், விதிமீறல் அல்லது குற்றவியல் தவறுகள் காரணமாக இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்" என எச்சரித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-21T11:10:38+00:00</updated>
        </entry>
    </feed>
