<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-04T06:07:41+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சைகளில் சிக்கிய முன்னாள் மேயரின் திடீர் மரணத்தின் சந்தேகம்! பிரேத பரிசோதனை தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eraj-fernando-body-samples-further-examination-1788488312"></link>
            <id>https://tamilwin.com/article/eraj-fernando-body-samples-further-examination-1788488312</id>
            <summary type="text">ஹம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையை தொடர்ந்து திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொழு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையை தொடர்ந்து திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
கொழும்பின் நீதித்துறை வைத்திய அதிகாரியால் நேற்று (3) பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த பரிசோதனையின் போது, ​​மேலதிக விசாரணைகள் மற்றும் சோதனைகளுக்காக எராஜ் பெர்னாண்டோவின் உடலிலிருந்து மாதிரிகளை அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்புமாறு நீதித்துறை வைத்திய அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.</p><h2>முன்னாள் மேயரின் திடீர் மரணம்</h2><p>
</p><p>
திம்பிரிகஸ்யாயவில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தின் எட்டாவது மாடியில் உள்ள ஒரு குடியிருப்பில், முன்னாள் மேயரின் உடல் நேற்று முன் தினம் (2) காலை கண்டுபிடிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbe9b078-4470-4c09-ab70-435bbbd43934/26-6a9a5fc533350.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து இதுவரை முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் விசாரணையின் படி, குடியிருப்பில் உள்ள அறைகளில் ஒன்றின் அருகே கதவில் கட்டப்பட்டிருந்த பட்டியினால் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.
</p><p>
முன்னாள் மேயருடன் மற்றொரு நபரும் அந்த குடியிருப்பில் தங்கியிருந்ததாக பொலிஸ் மேலும் கூறியுள்ளது.
</p><p>
இருப்பினும், அந்த நபர் முந்தைய நாள் ஹம்பாந்தோட்டை பகுதிக்கு பயணம் செய்திருந்த நிலையில், நேற்று காலை அந்த நபர் தொலைபேசி மூலம் பெர்னாண்டோவை தொடர்பு கொள்ள முயன்றதாகவும், ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதன் விளைவாக, அந்த நபர், குடியிருப்பில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பெண்ணைத் தொடர்புகொண்டு, குடியிருப்பை சரிபார்க்குமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகின்றது.</p><p>
இதன்போதே முன்னாள் மேயரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp;</p><h2>பல சர்ச்சைக்குரிய வழக்குகள்</h2><p>இந்த பின்னணியில் எராஜ் பெர்னாண்டோ மீது பல சர்ச்சைக்குரிய வழக்குகள் மற்றும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp; &nbsp;</p><p>2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக வீதி நாடகம் நடத்திய குழுவைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b27aae27-235a-447a-8f85-706199dd6237/26-6a9a5fc480a31.webp' /></p><p>
</p><p>இவ்வாறான நிலையில் 2014 ஆம் ஆண்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பார்வையிட சென்ற போது துப்பாக்கியை கையில் ஏந்தியவாறு துரத்திச்சென்றமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன் காரணமாக இவர் துப்பாக்கி மேயர் என்று பரவலாக அறியப்பட்டார்</p><p>

இந்த வழக்கில் 2019-ஆம் ஆண்டு அவருக்கு ஐந்து ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
</p><p>இதனையடுத்து பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு தனியார் காணிக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
இவ்வாறான பல குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், இவரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T06:06:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான நாமலின் சுவாரஸ்யமான பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-rajapaksa-to-appear-before-ciaboc-today-1788488124"></link>
            <id>https://ibctamil.com/article/namal-rajapaksa-to-appear-before-ciaboc-today-1788488124</id>
            <summary type="text">புதிய இணைப்புநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார்.ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார்.</p><p>ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணையம் அவரை அழைத்திருந்தது. </p><p>

அறிக்கைகளின்படி, இன்று காலை இலஞ்ச ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><h5><u><b>குவிந்துள்ள&nbsp;ஆதரவாளர்கள்</b></u></h5><p> 

அதன்படி, அவர் சற்று நேரத்திற்கு முன்பு ஆணையத்தில் அவர் முன்னிலையாகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87d9c7ad-a232-47d6-96e8-76952cf3aedf/26-6a9a5d94a2616.webp' /></p><p>
</p><p>
இதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு ஆதரவான அரசியல்வாதிகள், பொதுமக்கள், கட்சியின் உறுப்பினர்கள் என பலர் தற்போது ஆணைக்குழுவின் முன்னிலையில் சிலர்&nbsp; கூடியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.&nbsp;</p><p>இதன்போது எமது ஐ.பி.சி ஊடகவியலாளர் நாமலிடம், '' வழமையை போல உங்களுக்கான ஆதரவாளர்கள் ஏன் வரவில்லை" என கேள்வி எழுப்பினார்.
</p><p>
இதற்கு பதில் வழங்கிய அவர், '' அனுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தின் காரணமாக, ஆதரவாளர்களை வரவேண்டாம் என கூறினேன்" என தெரிவித்தார் </p><p></p><p> </p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81058ac8-614b-4ebb-945a-fc706377a876/26-6a9a37db30a00.webp' /></p><p>இன்று (04) முற்பகல் அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>குறித்த விடயத்தை நமல் ராஜபக்சவின் சட்டத்தரணி முதித ஆர். லோகுமுதலி தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஆணைக்குழுவில் முன்னிலை</h2><p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன கொள்வனவின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைவாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p> 

இதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்றையதினம் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/D5OWjCrS7rI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T06:05:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியா நகரம் வடக்கிற்கான வட்டார சபை தெரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/selection-urban-council-for-vavuniya-town-north-1788501687"></link>
            <id>https://tamilwin.com/article/selection-urban-council-for-vavuniya-town-north-1788501687</id>
            <summary type="text">வவுனியா நகரம் வடக்கிற்கான வட்டார சபை தெரிவு இன்று இடம்பெற்றது.

வவுனியா, பூந்தோட்டம் பொது நோக்கு மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

கல்வி, உயர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா நகரம் வடக்கிற்கான வட்டார சபை தெரிவு இன்று இடம்பெற்றது.
</p><p>
வவுனியா, பூந்தோட்டம் பொது நோக்கு மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
</p><p>
கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தலைமையில் நடைபெற்ற
இக்கூட்டத்தில், வட்டார சபையின் தலைவராக கோணேஸ்வரலிங்கம் தெரிவு
செய்யப்பட்டார்.</p><p>

செயலாளராக கிறிஸ்ரலாவும் உறுப்பினர்களாக கிருபாநிதி, றயிந்தன், சுகுமார்,
நற்குணசீலி, ரஜனி, சுப்பிரமணியம், ஶ்ரீரஞ்சன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து அமைச்சருடனான பொதுமக்கள் சந்திப்பும் இடம்பெற்றது. </p><p>இந்
நிகழ்வில் வவுனியா மாநகரசபை உறுப்பினர்களான க.கிருஸ்ணதாஸ், சு.விஜயகுமார்,
மற்றும் தேசியமக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும்
கலந்து கொண்டிருந்தனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T06:01:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல சாதனைகளை முறியடித்த ஸ்மிருதி மந்தனா - அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/smriti-mandhana-multiple-records-india-won-vs-hk-1788501167"></link>
            <id>https://news.lankasri.com/article/smriti-mandhana-multiple-records-india-won-vs-hk-1788501167</id>
            <summary type="text">india won hongkong qualifed for asia cup semifinal: ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய மகளிர் அணி, மகளிர் ஆசிய கிண்ண தொடரில் அரையிறுதிக்கு தகு...</summary>
            <content type="html"><![CDATA[<p>india won hongkong qualifed for asia cup semifinal: ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய மகளிர் அணி, மகளிர் ஆசிய கிண்ண தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. </p><h3>

அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா </h3><p>

2026 மகளிர் ஆசிய கிண்ண தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில், இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் மோதியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2818caa1-d783-4425-944a-9787606699bc/26-6a9a5cb2cefd4.webp' /></p><p>

நாணய சுழற்சியில் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.&nbsp;</p><p>

முதலில் துடுப்பாட்டம் ஆடிய இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 193 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9017d97b-728a-432b-a8a8-bfdd26a74754/26-6a9a5cb21fc7f.webp' /></p><p>

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி, 124 ஓட்டங்கள் குவித்தார்.
</p><p>
194 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்தோனேசியா, 16.2 ஓவர்களில் வெறும் 56 ஓட்டங்கள் மட்டுமே குவித்து ஆல் அவுட் ஆனது.&nbsp;&nbsp;</p><p></p><p>

இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 3 ஓவர்கள் வீசி, 9 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, 3 விக்கெட்களை கைப்பற்றினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5b427f4-553c-444c-aca6-9488b8402adc/26-6a9a5cb38196e.webp' /></p><p> 

137 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. </p><h3> 

ஸ்மிருதி மந்தனா சாதனைகள்</h3><p> 

இந்த போட்டியில் சதம் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த ஸ்மிருதி மந்தனா, பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6c41ada-e765-4f16-88ce-ead94ee6d714/26-6a9a5cb0b90fd.webp' /></p><p>

124 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் மகளிர் டி20 ஆசிய கிண்ணத்தில் ஒரு வீராங்கனை பதிவு செய்த அதிகபட்ச தனிநபர்&nbsp;ஓட்டங்கள்&nbsp; இதுவாகும்.</p><p>

முன்னதாக இலங்கை வீராங்கனை சாமரி அதபத்து 119 ஓட்டங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
</p><p>
இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் தனது 18வது சதத்தை பதிவு செய்த ஸ்மிருதி மந்தனா, கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91af7f5c-96ab-44cf-b170-1fe45e157828/26-6a9a5cb16d78a.webp' /></p><p>

முன்னதாக, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவி மெக் லெனிங்கின் 17 சதங்களுடன் முதலிடத்தில் இருந்தார். </p><p>

மேலும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4 வெவ்வேறு ஆண்டுகளில் தலா 500 ஓட்டங்களுக்கு மேல் குவித்த உலகின் முதல் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
</p><p>
இந்த ஆண்டில் 579 ஓட்டங்களும், 2018 ஆம் ஆண்டில் 622ஓட்டங்களும், 2022 ஆம் ஆண்டில் 594 ஓட்டங்களும் மற்றும் 2024 ஆம் ஆண்டில் 763 ஓட்டங்களும் குவித்துள்ளார். </p><p>

இந்த போட்டியில் 124 ஓட்டங்கள் குவித்ததன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 10,880 ஓட்டங்களைக் கடந்து, சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் குவித்துள்ள வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார். </p><p>

முன்னதாக இந்திய வீராங்கனை மிதாலி ராஜை 10868 ஓட்டங்களுடன் முதலிடத்தில் இருந்தார். </p><p>

மேலும், 2 டி20 சர்வதேச சதங்களை அடித்த ஒரே இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். </p><p>

நாளை(செப்டம்பர் 5 ஆம் திகதி) துபாயில், நடைபெற உள்ள போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T05:58:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 வயது மாணவி கடத்தல் - இளைஞனை தேடும் பொலிஸார் - தாய் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/student-kidnapped-mother-arrested-1788492882"></link>
            <id>https://tamilwin.com/article/student-kidnapped-mother-arrested-1788492882</id>
            <summary type="text">எல்ல, கினலன்வத்தையை சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவி ஒருவரை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல்ல, கினலன்வத்தையை சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவி ஒருவரை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். </p><p>இந்த சம்பவம் தொடர்பில் 18 வயது இளைஞனை பொலிஸார் தேடி வருகின்றனர்.
</p><p>
சந்தேகநபரின் தாயார் குற்றத்திற்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். </p><h2><b> மாணவி கடத்தல்</b></h2><p>இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் பண்டாரவளை, பூனாகல பகுதியை சேர்ந்த 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாகும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bc7fa56-c627-4f14-805c-789c967bd48e/26-6a9a5d54c3e38.webp' /></p><p>கடத்தப்பட்டவர் எல்லப் பிரதேசப் பாடசாலை ஒன்றில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 15 வயது மாணவியாவார். </p><p>பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவப் பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p> கடந்த ஜூலை 18 ஆம் திகதி குறித்த மாணவி பண்டாரவளையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு வீடு திரும்பியுள்ளார். </p><p>தந்தை வீட்டின் அருகிலுள்ள கடைக்கு சென்றிருந்த போது சந்தேகநபரான இளைஞன் அவரைக் கடத்திச் சென்றுள்ளார். </p><p>சந்தேகநபர் எல்.ஜி. பிரிவைச் சேர்ந்த 18 வயதுடைய கூலித் தொழிலாளியாவார். அவர் மாணவியை மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொழும்புப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். </p><p>கொழும்பிலுள்ள விடுதி ஒன்றில் சட்டபூர்வமான பொறுப்பாளர் அனுமதியின்றி சில வாரங்கள் மாணவியை தடுத்து வைத்துள்ளார். </p><h3><b>தாய் கைது</b></h3><p>இந்நிலையில் மகள் காணாமல் போனமை குறித்து தந்தை எல்லப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/406ca794-f71a-48c4-b44b-d25e90eeb83d/26-6a9a5d557749d.webp' /></p><p>விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேகநபரின் வீட்டிலிருந்த மாணவியைக் மீட்டுள்ளனர்.&nbsp;</p><p>அதற்காக உதவி புரிந்த சந்தேகநபரின் தாயாரையும் பொலிஸார் கைது செய்தனர். </p><p>சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகநபரான இளைஞன் பிரதேசத்திலிருந்து தப்பியோடி தலைமறைவாகியுள்ளார். </p><p>அவரை கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. </p><p>கைது செய்யப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாயார் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். </p>]]></content>
            <updated>2026-09-04T05:56:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டில் ஆசிரியை கொலை; மகனுக்கு பொலிஸார் வலைவீச்சு; சம்பவத்தால் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/teacher-killed-at-home-gandara-matara-1788501492"></link>
            <id>https://jvpnews.com/article/teacher-killed-at-home-gandara-matara-1788501492</id>
            <summary type="text">&amp;nbsp; மாத்தறை கந்தாரா, கேக்கனதுரா, தல்பாவில சாலையில் உள்ள ஒரு வீட்டில் 85 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியை கொலை செய்யப்பட்டது தொடர்பாக, அவரது மூத்த மகனைக் கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மாத்தறை கந்தாரா, கேக்கனதுரா, தல்பாவில சாலையில் உள்ள ஒரு வீட்டில் 85 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியை கொலை செய்யப்பட்டது தொடர்பாக, அவரது மூத்த மகனைக் கைது செய்வதற்கான விசாரணையை கந்தாரா போலீசார் தொடங்கியுள்ளனர். </p><p>

சம்பவத்தில் உயிரிழந்தவர், நான்கு பிள்ளைகளின் தாயான, விதானா அரச்சிங்கே ரெசிரினா ஸ்ரீமதி என்ற ஓய்வுபெற்ற ஆசிரியை ஆவார்.

கொலை நடந்த நேரத்தில், அந்த ஓய்வுபெற்ற ஆசிரியை, தபால் ஊழியரான தனது இளைய மகனுடன் வசித்து வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6826b37c-8f76-41ee-b8eb-db459f914668/26-6a9a5df56f244.webp' /></p><h2>&nbsp;சிசிடிவி காட்சியால் சிக்கிய மகன்</h2><p> </p><p>இந் நிலையில் கடந்த&nbsp; &nbsp;2ஆம் தேதி காலையில், இளைய மகன் காலி பகுதிக்கு வேலைக்குச் சென்றிருந்தார். 

அப்போது, ​​அவரது மனைவியும் பிள்ளைகளும் மனைவியின் வீட்டிற்குச் சென்றிருந்தனர். மாலையில் அவர் வீடு திரும்பியபோது, ​​தனது படுக்கையறையில் தாயார்&nbsp; இரத்தக் குளியலில் கிடப்பதைக் கண்டார். </p><p>&nbsp;அதிச்சியடைந்த&nbsp; மகன்&nbsp; உடனடியாக 1919 என்ற எண்ணிற்கு ஆம்புலன்ஸை அழைத்தார், ஆனால் அவர் இறந்துவிட்டதை உறுதிசெய்த பிறகு, 119 என்ற அவசர எண்ணின் மூலம் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுத்தார்.</p><p></p><p>
</p><p>
போலீசார் வீட்டருகே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ​​இறந்த பெண்ணின் மூத்த மகன் வீட்டிற்குத் திரும்பி வந்து இடைவிடாமல் ஓடிக்கொண்டிருந்தது தெரியவந்தது. </p><p>

அவரை ஓடுவதைக் கண்ட ஒரு குடியிருப்புவாசி, அதுபற்றிக் கேட்டபோது எந்தப் பதிலும் அளிக்காமல் தப்பி ஓடியதாகவும், பின்னர் அந்தச் சந்தேக நபர் தனது கைபேசியை அணைத்துவிட்டு அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
</p><p>
மாத்தறை பதில் நீதிபதி பாலித ஹெட்டியாராச்சி 3ஆம் தேதி சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டதோடு, பிரேதப் பரிசோதனைக்காக உடலை மாத்தறை பொது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு உத்தரவிட்டார். </p><p>

மாத்தறை பிரதேச உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் சந்தன விஜேசேகரவின் அறிவுறுத்தல்களின் பேரிலும், கந்தறை பொலிஸ் பொறுப்பாசிரியர் பிரதம ஆய்வாளர் சமிந்த ஜயலத்தின் மேற்பார்வையிலும், குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாசிரியர் சலிந்த அமரசிங்க உள்ளிட்ட பொலிஸ் குழுவினர், தலைமறைவான சந்தேக நபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-04T05:55:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை அரசாங்கத்திற்கு ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தியுள்ள விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/un-human-rights-office-about-srilanka-1788499853"></link>
            <id>https://tamilwin.com/article/un-human-rights-office-about-srilanka-1788499853</id>
            <summary type="text">இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தவும்,
நல்லிணக்கத்தை முன்னெடுக்கவும் அரசாங்கம் தனது நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்த
வேண...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தவும்,
நல்லிணக்கத்தை முன்னெடுக்கவும் அரசாங்கம் தனது நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்த
வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில்
வலியுறுத்தப்பட்டுள்ளது.

​</p><p>அக்டோபர் 2025 முதல் ஜூலை 2026 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய இந்த
அறிக்கையில், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், அரசியல் படுகொலைகள் மற்றும் 2019
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் அடைந்த முன்னேற்றங்கள்
குறிப்பிடப்பட்டுள்ளன.</p><h2>தன்னிச்சையான கைது, நீண்டகால தடுப்புக்காவல்கள்</h2><p>
</p><p>
இருப்பினும், அடக்குமுறையான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) பயன்பாடு
தொடர்ந்து நீடிப்பதாகவும், தன்னிச்சையான கைதுகளும் நீண்டகால
தடுப்புக்காவல்களும் தொடர்வதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebdaffdb-4463-4646-a8d3-78bef6439cdb/26-6a9a5b3ea9c01.webp' /></p><p>
இந்தநிலையில்,​ இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தரவுகளின்படி, 2025இல்
602 சித்திரவதை சம்பவங்களும், 18 காவல் மரணங்களும் பதிவாகியுள்ளதுட ன், 2026
ஏப்ரல் வரை மேலும் 138 சித்திரவதைகளும், 3 மரணங்களும் நடந்துள்ளன.

​</p><p>மேலும் ஜூலை மாதம் நீரகொழும்பு சிறையில் ஏற்பட்ட வன்முறையில் 32 பேர்
உயிரிழந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, அவசர சிறை சீர்திருத்தங்களின்
அவசியத்தை அறிக்கை வலியுறுத்துகிறது.</p><h2>கண்காணிப்புகளும் அச்சுறுத்தல்களும்</h2><p>
</p><p>
இதேவேளை ​சிவில் சமூகப் பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஜெனீவா ஐ.நா
கூட்டங்களில் பங்கேற்போர் மீதான இராணுவ மற்றும் புலனாய்வுத் துறையினரின்
கண்காணிப்புகளும் அச்சுறுத்தல்களும் தொடர்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/359cc228-2c1a-4c8d-b729-98102736212d/26-6a9a5b3f5ceec.webp' /></p><p>

அத்துடன் ​ பேராசிரியர் சுப்பிரமணியன் ரவீந்திரநாத் படுகொலை வழக்கில்
'பிள்ளையான்' மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை வரவேற்றாலும், 17
உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்ட முத்தூர் வழக்கு போன்ற முக்கிய குற்றங்கள் பல
ஆண்டுகளாகத் தேக்கமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
​</p><p>இதேவேளை, நீடித்து வரும் நிறைவேற்று அதிகார துஷ்பிரயோகம் மற்றும்
தண்டனையின்மையை மாற்றுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு இன்னும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க், பயங்கரவாதத்
தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறும், மனித உரிமை
மீறல்களில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளை உயர் பதவிகளிலிருந்து விலக்கி
வைக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T05:46:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-minister-johnston-fernando-arrives-at-ciaboc-1788496959"></link>
            <id>https://ibctamil.com/article/ex-minister-johnston-fernando-arrives-at-ciaboc-1788496959</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.&amp;nbsp;முன்னெடுக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக ஆணைக்குழுவில் முன்னிலையான போதே கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>&nbsp;ஊழல் குற்றச்சாட்டு</h2><p>பொல்கொல்லயில் அமைந்துள்ள மகிந்த ராஜபக்ச அரங்கத்திற்கு கதிரைகளைக் கொன்வனவு செய்யும் போது உரிய கொள்முதல் நடைமுறைகளை&nbsp; மீறி செயற்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு&nbsp;7,973,114 ரூபாய் நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75f4e87d-cdf7-432b-80a4-09d270683907/26-6a9a5c900b4cc.webp' />&nbsp;&nbsp;</p><p>இந்த நிலையில் ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில்&nbsp;ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளதாக&nbsp; இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ&nbsp; இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இன்று (04) காலை வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அந்த ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக முன்னர் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T05:41:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிஜிட்டல் காப்புறுதி அட்டையை ஏற்க மறுக்கும் பொலிஸாருக்கு கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/stern-warning-police-refus-digital-insurance-cards-1788495192"></link>
            <id>https://jvpnews.com/article/stern-warning-police-refus-digital-insurance-cards-1788495192</id>
            <summary type="text">டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களை மீறி, சாரதிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவது கடுமையான கடமை மீறலாகும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>நேற்று (03) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், பாதுக்கை மற்றும் கம்பஹா ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த சில பொலிசார் டிஜிட்டல் காப்பீட்டு அட்டைகளை ஏற்றுக்கொள்ள மறுத்து பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c80200c9-8f89-4bdf-8f7f-6f696418a16f/26-6a9a455959db2.webp' /></p><p>இதன்படி, R.T.M. 93 சட்டத்தின் மூலம் 2026.05.05 ஆம் திகதியிட்ட மேலதிக செய்தி மூலம் காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள, நாட்டின் முன்னணி 14 காப்புறுதி நிறுவனங்களால் வழங்கப்படும் டிஜிட்டல் காப்பீட்டு அட்டைகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபரினால் நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.</p><p>

2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மின்னணு பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளுக்கு முழுமையான சட்ட அங்கீகாரம் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
ஒரு சாரதியிடம் டிஜிட்டல் காப்புறுதி அட்டை இல்லாத சந்தர்ப்பத்தில் கூட, பின்வரும் இலவச சேவைகள் மூலம் காப்புறுதி பாதுகாப்பு செல்லுபடியாகும் நிலையில் உள்ளதா என்பதை பொலிஸார் உறுதிசெய்து கொள்ள முடியும்.</p><p>

*1338# ஐ அழைப்பதன் மூலம் காப்பீட்டு இலக்கம் அல்லது வாகன இலக்கத்தை உள்ளீடு செய்து உடனடியாக தகவல்களைப் பெறுதல்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T05:36:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/johnston-fernando-bribery-or-corruption-commission-1788497114"></link>
            <id>https://tamilwin.com/article/johnston-fernando-bribery-or-corruption-commission-1788497114</id>
            <summary type="text">புதிய இணைப்பு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

வா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு </h2><p>முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.</p><p>இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையினை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>சற்றுமுன்னர் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். </p><p>

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் இன்று (4) ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T05:33:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[41 வயதில் குறையாத அழகு!! நடிகை அர்ச்சனா மாரியப்பனின் போட்டோஸ்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/archana-mariyappan-blue-saree-phootshoot-1788501528"></link>
            <id>https://viduppu.com/article/archana-mariyappan-blue-saree-phootshoot-1788501528</id>
            <summary type="text">நாடோடிகள், வெள்ளைக்கார துரை, முத்தின கத்திரிக்காய் போன்ற படங்களில் நடித்தவர் தான் அர்ச்சனா மாரியப்பன். சின்னத்திரையில் சேலை அணிந்து பக்கா ஹோம்லி லுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடோடிகள், வெள்ளைக்கார துரை, முத்தின கத்திரிக்காய் போன்ற படங்களில் நடித்தவர் தான் அர்ச்சனா மாரியப்பன். சின்னத்திரையில் சேலை அணிந்து பக்கா ஹோம்லி லுக்குகளில் நடித்த அர்ச்சனா அவர் இன்ஸ்டாவில் வெளியிடும் புகைப்படங்களில் வேறு மாதிரி இருப்பார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b12d94b9-cd65-4566-9177-f7be6318d55a/26-6a9a5e1e4fa7a.webp' /></p><p>
தனது இன்ஸ்டாவில் சமீக காலமாக மிகவும் கவர்ச்சியான போட்டோ ஷுட்கள் நடத்தி ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்து வருகிறார்.
</p><p>
தற்போது 41 வயதாகும் அர்ச்சனா, நீலநிற டிரான்ஸ்பரன்ட் சேலையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-04T05:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்பது நாட்களுக்குப் பிறகு... நேபாள நீர்மின் சுரங்கத்திலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/workers-pulled-alive-from-tunnel-1788499731"></link>
            <id>https://news.lankasri.com/article/workers-pulled-alive-from-tunnel-1788499731</id>
            <summary type="text">Two workers pulled alive from hydropower tunnel: நீர்மின் சுரங்கத்தியிலிருந்து இரண்டு தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட மிக ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Two workers pulled alive from hydropower tunnel: நீர்மின் சுரங்கத்தியிலிருந்து இரண்டு தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
</p><p>நேபாளத்தில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்ட இருவர், ஒன்பது நாட்களுக்குப் பிறகு நீர்மின் நிலையச் சுரங்கத்திலிருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcec984e-1ef2-486d-8465-e697de4837ec/26-6a9a5715590ca.webp' /></p><p>
</p><p>கடந்த வாரம் நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றில் அமைந்துள்ள 'திரிசூலி 3A' நீர்மின் திட்டத்தின் சுரங்கத்தில், தொடர்ந்து நடைபெற்று வந்த மீட்பு நடவடிக்கையின்போது தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். </p><p>மீட்கப்பட்ட முதல் நபர் சேறு பூசிய நிலையில், மீட்பாளர் ஒருவரின் தோளில் சுமந்து செல்லப்படும் காட்சிகளை உள்ளூர் செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.</p><p> சஞ்சய் ஷா என்பவர் முதலில் மீட்கப்பட்டு, திரிசூலியில் உள்ள நேபாள ராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து, கபீர் மஹர்ஜன் என்று அடையாளம் காணப்பட்ட மற்றொரு நபரும் சுரங்கத்திலிருந்து மீட்கப்பட்டார். </p><p>சுரங்கத்திற்குள் 170 மீற்றர் ஆழத்திலிருந்து அவர்கள் மீட்கப்பட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் ராஜா ராம் பாஸ்நெட் உறுதிப்படுத்தினார்.</p><p></p><p> </p><p>சஞ்சய் ஷா அப்பர் திரிசூலி 3Aல் போர்மேனாகவும், கபீர் மஹர்ஜன் மேற்பார்வையாளராகவும் செயல்பட்டு வந்துள்ளனர். கடந்த வாரம் ஏற்பட்ட பேரிடரில் சிக்கி, ​​போட்டே கோஷி மற்றும் திரிசூலி ஆறுகளின் கரையிலிருந்த பெரும்பாலான நீர்மின் திட்டங்கள் அழிந்துபோயின. </p><p>மீட்புப் பணிகள் நீர்மின் நிலையச் சுரங்கங்களை மையமாகக் கொண்டு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன; அங்குள்ள காற்று இடைவெளிகள் காரணமாகத் தொழிலாளர்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக உயிர் பிழைத்திருக்கக்கூடும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். </p><p>இதுவரை 270-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அப்பர் திரிசூலி 3A (Upper Trishuli 3A) நிலையத்தில், அடர்த்தியான சேறு காரணமாக மீட்புப் பணியாளர்கள் சுரங்கங்களைக் கண்டறிய ஏறக்குறைய ஆறு நாட்கள் தேவைப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb76c8f0-73a6-4a20-9992-39149ffd76a2/26-6a9a57160d21f.webp' /></p><p> </p><p>சுரங்கப்பாதையின் நுழைவாயிலில் உள்ள சேறு மற்றும் பெரிய பாறைகளை அகற்றுவதற்காக, ராணுவத்தினரும் சிறப்புப் பணிக் குழுக்களும் இரவு பகலாகப் பணியாற்றி வருகின்றனர். </p><p>வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஒரு முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, உள்ளே பலருடைய குரல்கள் கேட்டது உறுதிப்படுத்தப்பட்டது. திரிசூலி ஆற்றங்கரையில் நடைபெறும் நீர்மின் திட்டத்தில் குறைந்தது 557 தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர், அவர்களில் சுமார் 115 பேர் பிரதான சுரங்கத்தில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. </p><p>மொத்தத்தில், இமயமலையின் உயரமான பகுதிகளில் உள்ள 12 நீர்மின் திட்டங்களில் இருந்து சுமார் 900 தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். அவர்களில் ஏறத்தாழ 500 பேர் சுரங்கங்களில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T05:27:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ; வவுனியா மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sexual-crimes-young-girls-rigorous-imprisonment-1788499585"></link>
            <id>https://jvpnews.com/article/sexual-crimes-young-girls-rigorous-imprisonment-1788499585</id>
            <summary type="text">16 வயதுக்கு குறைவான சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்புணர்வு மற்றும் பாரிய பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட மூன்று நபர்களுக்கு வவுனியா மேல் நீதிமன்றம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>16 வயதுக்கு குறைவான சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்புணர்வு மற்றும் பாரிய பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட மூன்று நபர்களுக்கு வவுனியா மேல் நீதிமன்றம் ஒரே நாளில் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.</p><p>
</p><p></p><p>வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர் இந்தத் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
</p><p>
முதல் வழக்கில், 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் செலலிஹிணிகம பகுதியில் தனது வீட்டில் வைத்து 14 வயது சிறுமியின் நண்பியை பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b69e45a-06a5-477d-94eb-1ff9872f2488/26-6a9a5682d7f62.webp' /></p><p>இதற்கு மேலதிகமாக 50,000 ரூபாய் குற்றப்பணமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபாய் நஷ்டஈடும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, 2020ஆம் ஆண்டு நந்திமித்த கிராமத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளில் மற்றுமொரு நபர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த மூன்று குற்றச்சாட்டுகளும் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 15 ஆண்டுகள் வீதம் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>அத்துடன், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 50,000 ரூபாய் குற்றப்பணமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபாய் நஷ்டஈடும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>

மூன்றாவது வழக்கில், கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் 2022ஆம் ஆண்டு இரண்டு சந்தர்ப்பங்களில் 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், 50,000 ரூபாய் குற்றப்பணமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபாய் நஷ்டஈடும் வழங்குமாறு வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இத்தகைய குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவது குற்றங்களைத் தடுப்பதற்கும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T05:26:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காட்டுக்குள் காதலனுடன் மாயமான பதிமன்வயது சிறுமி; இரு நாட்களாக தேடுதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/girl-goes-boyfriend-predicament-in-the-deep-forest-1788499708"></link>
            <id>https://jvpnews.com/article/girl-goes-boyfriend-predicament-in-the-deep-forest-1788499708</id>
            <summary type="text">&amp;nbsp; சோமாவதியா புனிதத் தலத்திற்குத் தனது காதலனுடன் சென்று திரும்பும் வழியில் காணாமல் போன 17 வயதுடைய சிறுமி ஒருவர், வனவிலங்குகள் நிறைந்த அடர்ந்த தம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சோமாவதியா புனிதத் தலத்திற்குத் தனது காதலனுடன் சென்று திரும்பும் வழியில் காணாமல் போன 17 வயதுடைய சிறுமி ஒருவர், வனவிலங்குகள் நிறைந்த அடர்ந்த தம்பலா (Thambala) காட்டுப் பகுதியில் ஒரு இரவைக் கழித்த நிலையில், புலத்திசிகம காவல்துறையினரின் தேடுதல் நடவடிக்கையின் மூலம் சுமார் இரண்டு நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டார். </p><p>

 மீட்கப்பட்ட சிறுமி, வெலிகண்டா , மொனரதென்ன ,பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் கூறியுள்ளனர். 

அந்த ஜோடியினர் கடந்த மாதம் 2-ஆம் தேதி காலை சுமார் 11:00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சோமாவதியா புனிதத் தலத்திற்குச் சென்றிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/387ea55c-ef89-4e2a-bf5d-4c9b7f9631c9/26-6a9a56fe23842.webp' /></p><p> </p><p>அ

ங்கிருந்து திரும்பும்போது, ​​சுங்கவிலா-சோமாவதியா (Sungavila-Somawathiya) சாலையில் உள்ள 29-வது மைல்கல் (post) அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு காட்டுப் பகுதிக்குள் சென்றனர்.</p><p> சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளைக் கண்ட ஒருவர் சந்தேகம் அடைந்து புலத்திசிபுர (Pulathisipura) காவல்துறையினருக்குத் தகவல் அளித்தார். </p><p>

அதனடிப்படையில், பகல்நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்கினர்.
</p><p>

வயிற்று வலி காரணமாகவே காட்டுக்குள் சென்றதாக அந்த இளைஞர் கூறினாலும், காவல்துறையினர் வந்ததை உணர்ந்த அந்தச் சிறுமி பயந்துபோய், பிடிபடுவதைத் தவிர்க்க வேறு வழியின் வழியாகக் காட்டுக்குள் இன்னும் ஆழமாகச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.</p><p>

 பயந்த நிலையில் பதிலளித்த அந்த இளைஞர் உடனடியாகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
</p><p>
புலத்திசிபுர, வெலிகண்டா, ஹிங்குரக்கொட (Hingurakgoda) மற்றும் மீகஸ்வெவ (Meegaswewa) ஆகிய காவல் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து, காணாமல் போன அந்தச் சிறுமிக்காக சுமார் இரண்டு நாட்களாகப் பெரிய அளவிலான தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். </p><p>

 மீட்கப்பட்ட அந்தச் சிறுமி, காட்டு யானைகள், சிறுத்தைகள் மற்றும் கரடிகள் நடமாட்டம் மிகுந்த தம்பலா காட்டுப் பகுதியின் நடுவே ஒரு மரத்தடியில் தான் இரவு முழுவதும் இருந்ததாக காவல்துறையினரிடம் கூறினார்.
</p><p>
இரண்டு நாள் நடவடிக்கைக்குப் பிறகு, நேற்று (3-ஆம் தேதி) மாலை சுமார் 4:00 மணியளவில் காட்டுப் பகுதியின் நடுவே அந்தச் சிறுமியை காவல்துறைக் குழுக்களால் கண்டுபிடிக்க முடிந்தது; இச்சம்பவத்துடன் தொடர்புடைய அந்த இளைஞர் மற்றும் சிறுமி ஆகிய இருவரும் தற்போது காவல்துறையின் பாதுகாப்பில் உள்ளனர்</p>]]></content>
            <updated>2026-09-04T05:25:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் கொழும்பை உலுக்கிய துப்பாகிச்சூடு! பெண் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/morning-shooting-rocks-colombo-woman-injured-1788498345"></link>
            <id>https://canadamirror.com/article/morning-shooting-rocks-colombo-woman-injured-1788498345</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியின் ஆறாவது வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஒன்றில் இன்று (04) அதிகாலை துப்பாக்கிச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியின் ஆறாவது வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஒன்றில் இன்று (04) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
</p><p>
இந்த துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/203f4483-99f1-497f-89f0-23a29c3940af/26-6a9a51aac6cbf.webp' /></p><p>
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேல் தளத்தில் இருந்த நபர் ஒருவர், கட்டிடத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்த இரு பெண்கள் மீது துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.
</p><p>
இச் சம்பவம் அதிகாலை சுமார் 3:00 மணியளவில் இடம்பெற்றது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண்களில் ஒருவர் சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T05:11:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று நள்ளிரவு முதல் உலை எண்ணெய் மற்றும் நெப்தா விலை குறைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/price-furnace-oil-naphtha-reduced-midnight-today-1788498547"></link>
            <id>https://jvpnews.com/article/price-furnace-oil-naphtha-reduced-midnight-today-1788498547</id>
            <summary type="text">இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உலை எண்ணெய் (Furnace Oil) மற்றும் நெப்தா (Naphtha) ஆகியவற்றின் விலைகளைக் குறைக்க இலங்கை பெற்றோலியக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உலை எண்ணெய் (Furnace Oil) மற்றும் நெப்தா (Naphtha) ஆகியவற்றின் விலைகளைக் குறைக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.</p><p></p><p>

இதன்படி, இதுவரை 248 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட உலை எண்ணெய் ஒரு லீற்றரின் விலை 38 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 210 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5fac342-e503-4bba-8491-2a677787f815/26-6a9a5274992e0.webp' /></p><p>அத்துடன், 210 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட நெப்தா ஒரு லீற்றரின் விலை 35 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 175 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்தப் புதிய விலை இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T05:11:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் அதிரடியாக கைது செய்யப்பட்ட பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/woman-arrested-in-mattakkuliya-colombo-1788498122"></link>
            <id>https://ibctamil.com/article/woman-arrested-in-mattakkuliya-colombo-1788498122</id>
            <summary type="text">மட்டக்குளி பகுதியில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு - மட்டக்குளி காவல்துறை பிரிவிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்குளி பகுதியில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>கொழும்பு - மட்டக்குளி காவல்துறை பிரிவிற்குட்பட்ட சமித்புர பகுதியில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது</p><p>
</p><p>


35 வயதுடைய குறித்த பெண் சமிட்புர பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p> </p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>அவரிடம் இருந்து 1,000 போதை மாத்திரைகளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.



இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளின் பெறுமதி சுமார் ரூ.2 இலட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a1c9d1a-6725-4594-8317-c8c79079439e/26-6a9a52c0399b5.webp' /></p><p>கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் ஐந்தாம் இலக்கப் பிரிவின் அதிகாரிகள் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>



இதன்போது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த போதைமாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>



சந்தேகநபரான பெண் இன்று (4) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T05:10:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் மொத்த எரிபொருள் இறக்குமதி செலவீனம்...! வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-country-s-total-fuel-import-expenditure-1788495067"></link>
            <id>https://ibctamil.com/article/the-country-s-total-fuel-import-expenditure-1788495067</id>
            <summary type="text">நாட்டின் மொத்த எரிபொருள் இறக்குமதி செலவீனம் 59.9 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நடப்பு 2026 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் மொத்த எரிபொருள் இறக்குமதி செலவீனம் 59.9 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>நடப்பு 2026 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.&nbsp;</p><p>இலங்கை மத்திய வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><p></p><h2>எரிபொருள் இறக்குமதி</h2><p>இதனடிப்படையில் 2025 ஆம் ஆண்டின் ஜனவரி - ஜூலை காலத்தில் 2,265.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த எரிபொருள் இறக்குமதி செலவு, 2026 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் 3,621.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fac9839b-9558-422d-9d44-8b66c187aa38/26-6a9a4e90674ff.webp' /></p><p>கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவு அதிகரித்தமையே இந்த உயர்வுக்கு முதன்மை காரணியாக அமைந்துள்ளது.</p><p>


2026 ஜூன் மாதத்தில் 465 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவான மாதாந்த எரிபொருள் இறக்குமதி செலவு, ஜூலை மாதத்தில் 453 மில்லியன் அமெரிக்க டொலர்களாக சற்றே குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T05:01:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய்யின் அதிரடி அறிவிப்பு… அஜித் வெளியிட்ட நன்றி அறிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/ajith-kumar-thanks-to-cm-vijay-post-goes-viral-1788496292"></link>
            <id>https://manithan.com/article/ajith-kumar-thanks-to-cm-vijay-post-goes-viral-1788496292</id>
            <summary type="text">தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக பல ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்கள் அஜித் மற்றும் விஜய். இருவரும் ஒரே காலகட்டத்தில் உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக பல ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்கள் அஜித் மற்றும் விஜய். </p><p>இருவரும் ஒரே காலகட்டத்தில் உச்ச நட்சத்திரங்களாக உயர்ந்ததுடன், அவர்களுக்கென தனித்தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியவர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfa5c525-4950-4010-8871-e0e8a28c6aa9/26-6a9a508b2007a.webp' /></p><p></p><p> </p><p>இவர்களது படங்கள் வெளியாகும் போதெல்லாம் தமிழ் சினிமா மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகமே திருவிழா கோலம் பூண்ட காலங்களும் உண்டு.ஆனால், காலம் மாற… இருவரது பயணமும் தற்போது வெவ்வேறு திசைகளில் சென்று கொண்டிருக்கிறது.</p><h2>
அரசியலில் விஜய் ரேஸ் களத்தில் அஜித்...</h2><p>நடிகர் விஜய் சினிமாவிலிருந்து அரசியல் களத்திற்கு தனது பயணத்தைத் தொடங்கி, தமிழக அரசியலில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளார்.</p><p> மறுபுறம், அஜித் தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும், கார் பந்தயம் மீதான தனது ஆர்வத்தை தற்போது தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07fe8b86-ec03-40e2-904a-4513a31f0ed3/26-6a9a5089b9619.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக சர்வதேச அளவிலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டிகளில் அஜித்தின் பங்கேற்பும், அவரது ரேசிங் அணியின் செயல்பாடுகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
</p><p>
இந்நிலையில், தமிழகத்தில் மிகப்பெரிய மோட்டார் சிட்டி ஒன்றை உருவாக்குவது தொடர்பாக முதல்வர் விஜய் நேற்று&nbsp; சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டார்.&nbsp;</p><h2>
முதல்வர் விஜய்க்கு அஜித் நன்றி!
</h2><p>இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நடிகர் அஜித் முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c97fbd7-db41-4cbf-9888-c10aeb1c5357/26-6a9a508a6d1d6.webp' /></p><p></p><p>மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அஜித்துக்கு, தமிழகத்தில் சர்வதேச தரத்திலான மோட்டார் சிட்டி உருவாகும் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
</p><p>
திரையில் பல ஆண்டுகளாக ரசிகர்களால் போட்டியாளர்களாக பார்க்கப்பட்ட அஜித் மற்றும் விஜய், இன்று சினிமாவைத் தாண்டி தங்களது தனித்தனி பாதையில் பயணித்து வருகின்றனர். </p><p>இப்படிப்பட்ட சூழலில், ஒரு முக்கியமான திட்டத்திற்காக அஜித், விஜய்க்கு வெளிப்படையாக நன்றி தெரிவித்திருப்பது&nbsp; ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Thanks giving message from Ajith Kumar to Tamil Nadu Chief Minister Hon. C.Joseph Vijay. 🇮🇳 <a href="https://x.com/CMOTamilnadu?ref_src=twsrc%5Etfw">@CMOTamilnadu</a> <a href="https://x.com/Akracingoffl?ref_src=twsrc%5Etfw">@Akracingoffl</a> <a href="https://x.com/SureshChandraa?ref_src=twsrc%5Etfw">@SureshChandraa</a> <a href="https://x.com/hashtag/AjithKumar?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AjithKumar</a> <a href="https://x.com/hashtag/JosephVijay?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#JosephVijay</a> <a href="https://x.com/hashtag/TamilNadu?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TamilNadu</a> <a href="https://x.com/hashtag/TamilNaduCM?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TamilNaduCM</a> <a href="https://x.com/hashtag/AKRacing?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AKRacing</a> <a href="https://x.com/hashtag/AjithKumarRacing?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AjithKumarRacing</a> <a href="https://t.co/yWTn3F8RtN">pic.twitter.com/yWTn3F8RtN</a></p>&mdash; Suresh Chandra (@SureshChandraa) <a href="https://x.com/SureshChandraa/status/2095541477401354707?ref_src=twsrc%5Etfw">September 3, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T05:01:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டை விட்டு வெளியே போ.. அயலிக்கு அதிர்ச்சி கொடுத்த இந்திராணி - அயலி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/zee-tamizh-ayali-serial-latest-episode-1788497989"></link>
            <id>https://cineulagam.com/article/zee-tamizh-ayali-serial-latest-episode-1788497989</id>
            <summary type="text">அயலி சீரியல்தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அயலி. இந்த சீர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அயலி சீரியல்</h2><p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அயலி.</p><p> இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இந்திராணி செழியன் வீட்டை விட்டு துரத்திய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. </p><p>

அதாவது, இங்கே வர்மா அர்ச்சனாவை தேடி வர அழகு காப்பாற்றி விட்டு பர்தா அணிந்து கொண்டு ரூமில் இருந்து வெளியே வருகிறாள். பர்மாவின் அடியாளுக்கு பர்தா அணிந்திருப்பதை பார்க்கில் சந்தேகம் வந்து பின்தொடர்கிறான். மேலும் வர்மாவுக்கும் தகவல் கொடுக்க வர்மா அந்த பெண்ணை கடத்தி அழைத்து வந்து முகத்தை திறந்து பார்க்க அது அயலி இல்லை என தெரிய வருகிறது. </p><p>

இதையடுத்து வருமா அடியாளை போட்டு அடித்து இதை கூட தெரிய நோட் பண்ண மாட்டியா என கோபப்படுகிறார். பிறகு அயலி வீட்டுக்கு வர பாவை சாப்பிடாமல் இருக்க என்ன ஆச்சு என்று விசாரிக்கும் போது நடந்த விஷயங்கள் தெரிய வருகிறது. 

அடுத்து அயலி செழியன் அண்ணா அப்படி பண்ணி இருக்க மாட்டார் என சப்போர்ட் செய்து பேச இந்திராணி அவர் தப்பு பண்ணி இருக்காரு.. </p><p>அவருக்கு சப்போர்ட் பண்றதா இருந்தா அவரோட அப்படியே போயிட்டு இந்த வீட்டை விட்டு போய் அவரோடவே இருந்துக்க சொல்ல அயலி அதிர்ச்சி அடைகிறாள். </p><p>

பிறகு அயலி சிவாவிடம் நாம இதுக்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டோம்? அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கணும் என சண்டையிட சிவா அடுத்து என்ன செய்யலாம் என்று கேட்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அயலி சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T05:00:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்சம், ஊழல் ஆணைக்கழுவில் ஆஜர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/johnston-appears-bribery-and-corruption-commission-1788497954"></link>
            <id>https://jvpnews.com/article/johnston-appears-bribery-and-corruption-commission-1788497954</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் இன்று (04) முற்பகல் ஆஜராகியுள்ளார்.
வாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் இன்று (04) முற்பகல் ஆஜராகியுள்ளார்.</p><p>
</p><p></p><p>வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1b645cc-c83e-4dad-9180-51be7ca9596a/26-6a9a50246b7e2.webp' /></p><p>இதன்படி, அவர் சற்றுமுன்னர் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
</p><p>
அவரிடம் எந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் பெறப்படவுள்ளது என்பது தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
</p><p>
இந்நிலையில், ஆணைக்குழுவில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T04:59:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து பிரித்தானியாவைக் காப்பாற்றினேன்... ட்ரம்ப் மீண்டும் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-claims-he-saved-the-uk-1788497647"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-claims-he-saved-the-uk-1788497647</id>
            <summary type="text">Donald Trump claims he saved the UK from a nuclear attack: அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து பிரித்தானியாவைத் தாம் காப்பாற்றியதாக டொனால்ட் ட்ரம்ப்.ஈரான் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Donald Trump claims he saved the UK from a nuclear attack: அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து பிரித்தானியாவைத் தாம் காப்பாற்றியதாக டொனால்ட் ட்ரம்ப்.</p><p>ஈரான் மீது போர் தொடுத்ததன் மூலம் பிரித்தானியாவை அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து காப்பாற்றியதாக டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.</p><h2>ஒரு மோசமான நபர்</h2><p>
</p><p>இந்தப் போரில் அமெரிக்காவுக்கு ஆதரவாக களமிறங்க மறுத்ததற்காக பிரித்தானியா மீதான தனது விமர்சனத்தையும் அவர் மீண்டும் முன்வைத்துள்ளார்.</p><p>
பிரித்தானியா ஒரு திருப்புமுனையை எட்டி வருவதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், புலம்பெயர் மக்களால் லண்டனில் மக்கள் பயணப்பட முடியாத பகுதிகள் உருவாகியுள்ளதாகக் கூறி, அந்நகரத்தின் மீது மீண்டும் ஒரு தாக்குதலைத் தொடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea7c964b-5a1e-4538-a199-3e614c607be0/26-6a9a4ef158cc5.webp' /></p><p> </p><p>வியாழக்கிழமையன்று தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது, ​​லண்டன் மேயர் சாதிக் கானை ஒரு மோசமான நபர்&nbsp;என வம்பிழுத்த ஜனாதிபதி ட்ரம்ப், அவருடனான தனது நீண்டகாலப் பகையை மீண்டும் கிளறினார். </p><p>ஆனால் ட்ரம்பால் எங்கள் வெற்றியைப் புரிந்துகொள்ளவே முடியாது என்று மேயர் சாதிக் கானின் ஆதரவாளர்கள் தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>ஈரானுடனானப் போரை
நியாயப்படுத்திய ஜனாதிபதி ட்ரம்ப், பிரித்தானியாவையும் ஈரானின் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றி வருகிறேன் என்றார்.</p><p> ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், அவர்கள் அமெரிக்கா மீது பயன்படுத்துவதை விட ஐரோப்பா மீதே பயன்படுத்த வாய்ப்பு என்றும் ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.
</p><p>மத்திய கிழக்கில் ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் உச்சகட்டத்தில் உள்ள நிலையில், ட்ரம்ப் பிரித்தானியாவைக் காப்பாற்றவும் வேண்டியே போரை முன்னெடுத்து வந்ததாகத் தெரிவித்தார்.
</p><p>அணு ஆயுதத்தை உருவாக்குவதைத் தடுக்கும் நோக்கில் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு, ஹார்முஸ் நீரிணை எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தொடர்ந்து செயல்பாட்டில் இருந்தது. </p><p>ஆனால், இஸ்ரேல் அழுத்தத்தால் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதன் பின்னர், அந்த நீரிணையில் கப்பல் போக்குவரத்து முடங்கியது. தற்போது அந்த நீரிணையை மீட்பதற்காக ட்ரம்ப் போராடி வருகிறார்.</p><h2>போர் முடிந்துவிட்டதாக</h2><p> </p><p>வளைகுடாப் பாதையில் இஸ்ரேலும் அமெரிக்காவும் உருவாக்கியுள்ள இந்த இடையூறு, பிரித்தானியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளின் பொருளாதாரங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பெட்ரோல் விலையிலும் கடும் உயர்வை உருவாக்கியுள்ளது. </p><p>இதனிடையே, GB News ஊடகம் நடத்திய நேர்காணளில், மறந்துவிடாதீர்கள், உங்கள் எண்ணெயில் பெரும் பகுதியை நீங்கள் ஹார்முஸ் நீரிணை வழியாகவே பெறுகிறீர்கள்; ஆனால் அமெரிக்காவுக்கு உதவ நீங்கள் மறுத்து விட்டீர்கள் என்று ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe41ad5a-461a-4cc8-b098-72b48687828b/26-6a9a4ef20d525.webp' /></p><p> </p><p>ஈரான் உடனானப் போர் முடிந்துவிட்டதாக அறிவிப்பதா என்பது குறித்து, அமெரிக்க ஜனாதிபதி தனது மூத்த உதவியாளர்களுடன் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் கசிந்துள்ள நிலையிலேயே, பிரித்தானியா தமக்கு உதவ முன்வரவில்லை என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.</p><p> ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிப்பது, இறுதியில் அந்த அரசாங்கம் தனது அணுசக்தித் திட்டத்தைக் கைவிடவோ அல்லது வீழ்ச்சியடையவோ கட்டாயப்படுத்தும் என்று தான் நம்புவதாக ட்ரம்ப் தனது உதவியாளர்களிடம் கூறியுள்ளார் என்றே தெரிய வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T04:52:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய மின் அமைப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு கடுமையாகப் பாதிப்பு! நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/national-electricity-system-movement-warns-1788496802"></link>
            <id>https://tamilwin.com/article/national-electricity-system-movement-warns-1788496802</id>
            <summary type="text">தேசிய மின்சார அமைப்பு இயக்கம், பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. 

அதன்படி உயர் அழுத்த மின் பாதைகள் மற்றும் துணை மின் நிலையங்களுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மின்சார அமைப்பு இயக்கம், பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. </p><p>

அதன்படி உயர் அழுத்த மின் பாதைகள் மற்றும் துணை மின் நிலையங்களுக்கு அருகில் பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறு கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. </p><p>

இது தொடர்பான அறிவிப்பில் மேலும்,

பட்டங்கள் மற்றும் நூல்கள் உயர் அழுத்த மின் கம்பிகளில் சிக்கியதன் காரணமாக பல மின் பாதைகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளன.</p><h2>கடுமையான பாதிப்பு</h2><p> </p><p>

அத்துடன், இது தேசிய மின் அமைப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பைக் கடுமையாகப் பாதிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddbbf00e-cda1-427e-8981-75fd7fdf3dcd/26-6a9a4dff357aa.webp' /></p><p>
</p><p>
இதேவேளை அவசரகால நடவடிக்கையாக சில மின் விநியோகப் பாதைகள் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட வேண்டிய சூழ்நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

எனவே, தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வதற்குப் பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்குமாறு தேசிய மின்சார அமைப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T04:51:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து ஐக்கிய நாடுகள் கடும் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/un-expresses-deep-concern-srilanka-human-situation-1788497249"></link>
            <id>https://jvpnews.com/article/un-expresses-deep-concern-srilanka-human-situation-1788497249</id>
            <summary type="text">மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தல், நல்லிணக்கம் மற்றும் தீர்வு நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் தொடந்து முன்னெடுத்துச் செல்ல வேண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தல், நல்லிணக்கம் மற்றும் தீர்வு நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் தொடந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை ஒன்றில் கோரப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>ஜெனீவாவில் நேற்று (3) வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை,ஒக்டோபர் 2025 முதல் ஜூலை 2026 வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கியது. </p><p>

இந்தக் காலகட்டத்தில் டிட்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு போன்ற சவால்களுக்கு இலங்கை முகங்கொடுத்தது.
</p><p>
எனினும், ஊழலை எதிர்த்துப் போராடுதல், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் போன்ற விடயங்கள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதை ஐக்கிய நாடுகளின் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/188c7f88-8faf-4a97-a59a-ed701f0521f0/26-6a9a4d62dadf0.webp' /></p><p>இருப்பினும்,சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்தங்கள் குறித்த வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட போதிலும், அரசாங்கம் தொடர்ந்தும் அடக்குமுறை நிறைந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி வருவதாக அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனால் தன்னிச்சையான கைதுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் இன்றி பலர் நீண்டகாலம் காவலில் வைக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. </p><p>

சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் செய்தியாளர்கள் மீது அரசாங்கத்தின் கண்காணிப்புத் தொடர்வதாகவும், நிலங்கள் மற்றும் மதத் தலங்கள் தொடர்பான பதற்றங்கள் நீடிப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுளளது.
</p><p>
"பதவி அதிகார துஷ்பிரயோகம், அடக்குமுறைச் சட்டங்கள், காவலில் நிகழும் வன்முறைகள் மற்றும் தண்டனைவிலக்கு மரபு ஆகியவற்றைக் கைவிட இந்த அரசாங்கத்துக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது" என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் குறிப்பிட்டுள்ளார். </p><p>

போர்க்கால மீறல்கள் மற்றும் ஊழல் வழக்குகள் தொடர்பான நடவடிக்கைகளில் சில முன்னேற்றங்கள் காணப்பட்டாலும்,தண்டனைவிலக்கு கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
</p><p>
 இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு 2025 ஆம் ஆண்டில் 602 சித்திரவதை மற்றும் வன்கொடுமை வழக்குகளையும், ஏப்ரல் 2026 வரை 138 வழக்குகளையும் ஆவணப்படுத்தியுள்ளது. </p><p>

மேலும் கடந்த ஆண்டு காவலில் மரணித்த 18 மரணங்களும் இந்த ஆண்டு ஏப்ரல் வரை 03 மரணங்களும் பதிவாகியுள்ளன. 

வெலிக்கடை சிறைச்சாலையில் சிறிய குற்றத்திற்காகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த 40 வயது கைதி கடுமையான தாக்கப்பட்டு மே 3 ஆம் திகதி உயிரிழந்த சம்பவமும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
ஜூலை மாதத்தில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் குறைந்தபட்சம் 32 பேர் உயிரிழந்தனர். 

இது கடும் நெரிசல் உள்ளிட்ட முறையான சிறைச்சாலைச் சீர்திருத்தங்களின் அவசியத்தை வலியுறுத்துகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/820fb64e-edbd-4124-921e-9167844df1de/26-6a9a4d638f39c.webp' /></p><p>சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது இராணுவ மற்றும் துப்பறியும் பிரிவினரால் தொடர்ச்சியான கண்காணிப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் நிலவுகின்றன. </p><p>

குறிப்பாக ஜெனீவா பயணம் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை நிகழ்வுகளில் பங்கேற்பது குறித்து அவர்கள் மீண்டும் மீண்டும் விசாரிக்கப்படுகிறார்கள் என்று ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்தநிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்படும் வரை அதன் பயன்பாட்டின் மீது உடனடியாக இடைக்காலத் தடை விதிக்கப்பட வேண்டும்.</p><p>

நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

மனித உரிமை மீறல்களில் நம்பகத்தன்மையுடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள், அரசாங்க, பாதுகாப்புத் துறை அல்லது தூதரகப் பணிகளில் உயர் பதவிகள் வகிப்பதிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும்.</p><p>

பாதிக்கப்பட்டவர்களின் நினைவு கூரும் முயற்சிகளுக்கு அரசாங்கம் ஆதரவளிக்க வேண்டும் மற்றும் இராணுவத்தின் பிடியில் உள்ள நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம், இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T04:47:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடவுச்சீட்டை பெற வரிசையில் காத்திருந்த முக்கியஸ்தர்! அதிகாரிகள் தொடர்பில் வெளியிட்ட பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-ambassador-mahinda-queues-passport-1788495909"></link>
            <id>https://tamilwin.com/article/former-ambassador-mahinda-queues-passport-1788495909</id>
            <summary type="text">இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளை அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத்தூதர் மஹிந்த சமரசிங்க பாராட்டியுள்ளார்.

சமூக வலைத்தள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளை அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத்தூதர் மஹிந்த சமரசிங்க பாராட்டியுள்ளார்.</p><p>

சமூக வலைத்தளத்தில் பதிவொன்றினையிட்டு அவர் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அவரது பதிவில்,</p><h2>பாராட்டு</h2><p>
அண்மையில் இலங்கை கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு புதிய கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக சென்றிருந்தேன். அங்கு பணியாற்றிய அனைத்து அதிகாரிகளும் மிகவும் உதவிகரமாகவும் திறமையாகவும் செயற்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/815bf8be-2cd3-4845-9426-1de037153dc3/26-6a9a4c41a065f.webp' />&nbsp;</p><p> </p><p>

எனவே அனைவருக்கும் தனது நன்றியை சமூக ஊடகப்பதிவின் மூலம் வெளிப்படுத்துவதாக பதிவிட்டுள்ளார்.&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T04:43:28+00:00</updated>
        </entry>
    </feed>
