<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-13T08:51:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவறான உறவால் பறிபோன இளம் பெண்ணின் உயிர்! மோசடியில் வலையில் சிக்கிய வவுனியா நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/woman-s-life-lost-due-to-extramarital-affair-crime-1783927211"></link>
            <id>https://ibctamil.com/article/woman-s-life-lost-due-to-extramarital-affair-crime-1783927211</id>
            <summary type="text">களுத்துறை - பாணந்துறை வடக்கு காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரு வாடகை வீட்டில், அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம் குறித்த விச...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை - பாணந்துறை வடக்கு காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரு வாடகை வீட்டில், அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம் குறித்த விசாரணைகளில் பல அதிர்ச்சிகர விடயங்கள் வெளியாகியுள்ளது.
</p><p>
நதுனி சஹஸ்ரீ குரே என்ற இளம் பெண்னே இவ்வாறு அடையாளம் காணப்பட்டதாக காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
</p><p>
குறித்த பெண் 27 வயதுடைய ஆணுடன் திருமணத்திற்குப் புறம்பான உறவில் அந்த வீட்டில் வசித்து வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p></p><h2>​​பணம் தொடர்பாக&nbsp;வாக்குவாதம் </h2><p>
பாணந்துறை பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சமையலறை உதவியாளராகப் பணிபுரிந்த குறித்த நபர், சம்பவத்திற்குப் பிறகு அப்பகுதியிலிருந்து தப்பி ஓடிய நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f0f0981-2d15-488f-bd80-57c6d1702c8a/26-6a5493ae93726.webp' /></p><p>


சம்பவம் நடந்த அன்று இரவு, தனது பணியிடத்திலிருந்து சுமார் நான்கரை கிலோமீட்டர் தூரம் நடந்து வந்ததாக சந்தேக நபர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

இரவு சுமார் 11.15 மணியளவில் அவர் அறைக்கு வந்து, நதுனி தயாரித்த தேநீரைக் குடித்த பிறகு ஒரு நாற்காலியில் ஓய்வெடுத்துள்ளார்.</p><p>

அப்போது, ​​பணம் தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மாதத்தின் நடுப்பகுதி என்பதால் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியபோது, ​​நதுனி தன்னைக் கடுமையாக அவமானப்படுத்தியதாக சந்தேக நபர் கூறியுள்ளார்.
</p><p>
தனது தாய் மற்றும் சகோதரியை அவமதித்து பேசியதால் தனக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டதாக சந்தேக நபர் ஒப்புக்கொண்டுள்ளார்.


பின்னர், அவர் ஒரு கத்தியை எடுத்து அவளது மார்பில் குத்தி, கழுத்தை அறுத்ததாக வாக்குமூலத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
</p><p></p><h2>உயிரை மாய்க்க முயற்சி</h2><p>
தனது உயிரை மாய்த்துக்கொள்ள அறையில் இருந்த ஆவியாக்கி திரவத்தைக் குடித்ததாகவும், பின்னர் வீட்டிலிருந்து தப்பி சென்றதாகவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து மொரட்டுவ தொடருந்து நிலையத்திற்கு நடந்து சென்ற சந்தேக நபர், கொழும்பிலிருந்து களுத்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த தொடருந்தில் மீது குதித்து உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e21cb32a-e16f-480e-b5be-31f54fd6d1e4/26-6a5493af80665.webp' /></p><p>
</p><p>
 இதில் அவரது வலது கால் மற்றும் விலா எலும்புகளில் முறிவுகள் உட்பட பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.

அவரைச் சுற்றியிருந்தவர்கள் பாணந்துறை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். </p><p>பின்னர், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அவர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

 இரண்டு நாட்களாக சந்தேக நபரைத் தேடி வந்த காவல்துறை, தேசிய மருத்துவமனையிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரைக் கைது செய்தனர்.</p><p>

கொலை செய்யப்பட்ட நதுனியும் அவரது தாயாரும் சில காலமாக இளைஞர்களை ஏமாற்றி வந்த ஒரு மோசடிக் கும்பலில் ஈடுபட்டு வந்தமை காவல்துறை விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>பாணந்துரை வடக்கு காவல்துறை</h2><p> 

இந்தச் சம்பவம் குறித்து அறிந்த வவுனியாவில் வசிக்கும் ஒருவர், பாணந்துரை வடக்கு காவல்துறை பொறுப்பதிகாரியை தொடர்புகொண்டு, தாயும் மகளும் சேர்ந்து தன்னிடம் இருந்து 1.5 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாகக் கூறியுள்ளார்.</p><p></p><p> 

தாயும் மகளும் சேர்ந்து தனது வங்கிக் கணக்கிலிருந்து 8 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அந்த இளைஞன் கூறியுள்ளார்.</p><p>

மேலும், அவர் அவளுக்கு மாதந்தோறும் கொடுத்து வந்த 35,000 ரூபாய் உட்பட, மொத்தமாக கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாயை இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இவ்வாறு இளைஞர்களைப் பொறிவைத்து பணம் பறிக்கும் இந்தத் தந்திரம், நதுனியும் அவள் தாயும் சேர்ந்து திட்டமிட்டுச் செயல்படுத்திய ஒன்று என்று காவல்துறை கூறியுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T08:48:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கோப்பை அரையிறுதி! மெஸ்ஸியின் அர்ஜென்டினாவுக்கு சவால் விடுக்கும் இங்கிலாந்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/england-to-challenge-messi-s-argentina-1783932086"></link>
            <id>https://ibctamil.com/article/england-to-challenge-messi-s-argentina-1783932086</id>
            <summary type="text">1966ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக உலகக் கோப்பை கால்பந்து பட்டத்தை கைப்பற்றும் கனவுடன் களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணி, நடப்பு உலக சாம்பியனான அர்ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>1966ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக உலகக் கோப்பை கால்பந்து பட்டத்தை கைப்பற்றும் கனவுடன் களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணி, நடப்பு உலக சாம்பியனான அர்ஜென்டினாவை எதிர்த்து அரையிறுதியில் மோத தயாராகியுள்ளது.
</p><p>
நோர்வேயை வீழ்த்தி அரையிறுதிக்கு பயிற்சியாளர் தோமஸ் டுசெல் தலைமையிலான இங்கிலாந்து அணி, காலிறுதியில் நோர்வேயை கூடுதல் நேரத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
</p><p>
போட்டியின் போது இரண்டு முறை பின்தங்கிய நிலையிலும் மீண்டு வந்து வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் போராட்ட மனப்பான்மையை டுசெல் பாராட்டியுள்ளார்.</p><p></p><p>
</p><h2>
கேன் - பெலிங்காம் அசத்தல்
</h2><p>
இந்தத் தொடரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு தலைவர் ஹாரி கேன் மற்றும் ஜூட் பெலிங்காம் ஆகியோர் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf6114cb-920a-4a95-b564-c06a07bf5027/26-6a54a61ab01b1.webp' /></p><p> </p><p>இருவரும் தலா 6 கோல்களைப் பதிவு செய்துள்ள நிலையில், கடந்த இரண்டு போட்டிகளில் மட்டும் பெலிங்காம் 4 கோல்களை அடித்துள்ளார்.</p><p>எனினும் நோர்வே அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, அணியின் ஆட்டம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும், வெற்றியில் அதிர்ஷ்டத்தின் பங்கும் இருந்ததாகவும் தோமஸ் டுசெல் தெரிவித்திருந்தார்.</p><p></p><h2>அர்ப்பணிப்புடன் விளையாடிய&nbsp;வீரர்கள் </h2><p>
</p><p>
இதற்கு அதிருப்தி தெரிவித்த ஜூட் பெலிங்காம், வீரர்கள் களத்தில் முழு அர்ப்பணிப்புடன் விளையாடியதாகவும், அதனை பயிற்சியாளர் உரிய முறையில் மதிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61e5cc62-73cd-4191-b58b-7b2798ca61cb/26-6a54a61b65cc2.webp' /></p><p>அதேவேளை, அணியின் குறைபாடுகளை சுட்டிக்காட்டுவது தனது பொறுப்பு என டுசெல் விளக்கமளித்துள்ளார்.</p><p>இந்நிலையில் இங்கிலாந்து அணியில் டெக்லன் ரைஸ் உள்ளிட்ட சில வீரர்கள் உடல்நலக் குறைவு மற்றும் தசைப்பிடிப்பு பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இருப்பினும் அரையிறுதியில் முழு திறனையும் வெளிப்படுத்த அணி தயாராக இருப்பதாக வீரர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>அர்ஜென்டினா அணி</h2><p>
</p><p>மறுபுறம், பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி தலைமையிலான அர்ஜென்டினா அணி, சுவிட்சர்லாந்தை கூடுதல் நேரத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5feec1d3-38bc-4aa6-91a1-b1e7d67ec3a4/26-6a54a619d9b39.webp' /></p><p>

67ஆவது நிமிடத்தில் சமநிலை ஏற்பட்ட போதிலும், கூடுதல் நேரத்தில் ஜூலியன் அல்வாரெஸ் மற்றும் லவுடாரோ மார்டினஸ் அடித்த கோல்கள் அர்ஜென்டினாவின் வெற்றியை உறுதி செய்தன.
</p><p>போட்டிக்குப் பிறகு பேசிய பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி, அழுத்தமான சூழ்நிலைகளை சமாளிப்பது தங்கள் அணியின் இயல்பாக மாறிவிட்டதாக தெரிவித்தார்.
</p><p>
கடினமான போட்டிகளில் பெற்ற அனுபவமே தற்போது அணிக்கு பலமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>இந்த வெற்றியின் மூலம், அர்ஜென்டினா அணி பங்கேற்ற கடந்த ஆறு முக்கிய சர்வதேச தொடர்களிலும் தொடர்ந்து அரையிறுதிக்கு முன்னேறிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.
</p><p>
இப்போது உலகக் கால்பந்து இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பது, ஹாரி கேன் தலைமையிலான இங்கிலாந்தா அல்லது லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினாவா இறுதிப்போட்டிக்கான பாதையை தக்கவைக்கும் என்பதையே.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T08:47:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அறிகுறிகளை உணர்ந்தால் உடனடியாக வைத்தியரை நாடவும்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sexually-transmitted-diseases-warning-people-1783929909"></link>
            <id>https://tamilwin.com/article/sexually-transmitted-diseases-warning-people-1783929909</id>
            <summary type="text">நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள் (STDs) பதிவாகியுள்ளதாக இலங்கை தேசிய பாலியல் நோய்த்தொற்று மற்றும் எய்ட்ஸ் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள் (STDs) பதிவாகியுள்ளதாக இலங்கை தேசிய பாலியல் நோய்த்தொற்று மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் (NSACP) தெரிவித்துள்ளது.</p><p>இந்த நோயாளிகள் கடந்த ஆண்டு முதல் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பதிவாகியுள்ள எய்ட்ஸ் நோயாளிகள்&nbsp;</h2><p>இந்த தரவு அறிக்கைகளின்படி, (2920) நோயாளிகள் ஹெர்பெஸ் நோயாலும், (2284) நோயாளிகள் பிறப்புறுப்பு மருக்களாலும், (1289) நோயாளிகள் சிபிலிஸ் நோயாலும்,&nbsp; (692) நோயாளிகள் கொனோரியா நோயாலும், மற்றும் (2847) நோயாளிகள் பிற பாலியல் நோய்த்தொற்றுகளாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9efcffc9-fe93-4c51-9085-6521bcdde863/26-6a54a5f6f33aa.webp' /></p><p>
மேலும், கடந்த ஆண்டு முதல் (874) எய்ட்ஸ் நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
</p><p>
புண்கள், கொப்புளங்கள், பிறப்புறுப்புகளில் வலி, கட்டிகள் மற்றும் மூன்று நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டியது அவசியம்.</p><h2>மருத்துவ பரிசோதனை</h2><p>
</p><p>இதேவேளை, தொடர்ந்து பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடும் நபர்கள் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு முறையான சிகிச்சையைப் பெறுவதன் மூலம் இந்த நிலையை தடுக்க முடியும் என்று இலங்கை தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத்திட்டம் கூறுகின்றது.
</p><p>
இந்த பரிசோதனைகளை செய்து கொள்வதற்கு தேவையான தகவல்களை KNOW4SURE.LK என்ற இணையதளத்தை பார்வையிடுவதன் மூலம் பெறலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T08:46:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் வியாபார நடவடிக்கைகளுக்காக 34 கடைகள் திறந்து வைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/business-activity-in-kilinochchi-1783932283"></link>
            <id>https://tamilwin.com/article/business-activity-in-kilinochchi-1783932283</id>
            <summary type="text">கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட
பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள 34 கடைகள் மொத்த வியாபாரிகளின் வியாபார
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட
பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள 34 கடைகள் மொத்த வியாபாரிகளின் வியாபார
நடவடிக்கைக்கு கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க வினால்
கையளிக்கப்பட்டுள்ளன.</p><p>இந்த நிகழ்வு இன்று(13.07.2026) இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>
</p><p>
கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில் சுமார் 150 மில்லியன் ரூபா செலவில் 40
கடைத் தொகுதிகளை கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b07821ba-5294-47c6-a5ab-39558fdb7a59/26-6a54a5bb9e2dc.webp' /></p><p> </p><p>

இவ்வாறு நிர்மாணிக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையம்
கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. </p><p>குறித்த செயல்பாடுகள் முன்னெடுக்கப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0df940fa-039c-492a-950d-791425150335/26-6a54a5bca59c4.webp' /></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T08:46:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dollar-rate-in-sri-lanka-banks-today-usd-to-lkr-1783930416"></link>
            <id>https://ibctamil.com/article/dollar-rate-in-sri-lanka-banks-today-usd-to-lkr-1783930416</id>
            <summary type="text">இன்றைய நாளுக்கான (13.07.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய நாளுக்கான (13.07.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.
</p><p>
அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 					331.04 ஆகவும் விற்பனைப் பெறுமதி 340.48 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>

ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	441.780 ஆகவும் விற்பனைப் பெறுமதி 456.70 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p></p><h2>நாணயமாற்று விகிதம்</h2><p>யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 375.70 ஆகவும் விற்பனைப் பெறுமதி 389.44 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232.44 ஆகவும் விற்பனைப் பெறுமதி 241.50 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31f793c0-94bd-4c3a-ac2d-d5647cc1c585/26-6a54a4787478c.webp' /></p><p>அவுஸ்திரேலிய&nbsp;(Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	227.08 ஆகவும் விற்பனைப் பெறுமதி 238.47ஆகவும் பதிவாகியுள்ளது.&nbsp; &nbsp;</p><p>சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	254.10 ஆகவும் விற்பனைப் பெறுமதி 264.88 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T08:44:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/37th-anniversary-of-the-death-of-appapillai-1783931575"></link>
            <id>https://tamilwin.com/article/37th-anniversary-of-the-death-of-appapillai-1783931575</id>
            <summary type="text">தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 37ஆவது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 37ஆவது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த நிகழ்வுகள் இன்று(13.07.2026) யாழ். பண்ணாகத்தில் உள்ள வலி. மேற்கு
பிரதேசசபைக்கு முன்பாகவுள்ள அவரின் உருவச் சிலை முன்னாள் இடம்பெற்றுள்ளது.</p><p>இதன்போது, தமிழர்களின் மூத்த அரசியல் தலைவரும் நாடாளுமன்றத்தின் முதலாவது தமிழ்
எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் 
அ.அமிர்தலிங்கத்தின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a427b99-7dd3-4f00-a69a-f29b358e88ee/26-6a54a32dae13b.webp' /></p><p> </p><p>


அத்துடன், அவரின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, சுடரேற்றி அஞ்சலி
செலுத்தப்பட்டுள்ளது. </p><p> 

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் தர்மலிங்கம்
சித்தார்த்தன் மற்றும் பண்ணாகம் கிராம மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.&nbsp; &nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b64ae8b-8f2e-48c1-bb76-f4bb448d4e5a/26-6a54a32ed83ac.webp' /></p><p></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T08:34:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலிடம் ரணில் பேசிய இரகசியம் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-gota-ranil-meeting-discussion-1783910685"></link>
            <id>https://tamilwin.com/article/namal-gota-ranil-meeting-discussion-1783910685</id>
            <summary type="text">சமகால அரசியலில் வலுவான எதிர்க்கட்சி ஒன்றை ஏற்படுத்தி, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ராஜபக்ச தரப்பினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமகால அரசியலில் வலுவான எதிர்க்கட்சி ஒன்றை ஏற்படுத்தி, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ராஜபக்ச தரப்பினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. </p><p>

இதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரணில், நாமலின் சந்திப்பு தொடர்பான காணொளி வெளியாகி இருந்தது. </p><p>

பொது நிகழ்வு ஒன்றின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், நாமல் ராஜபக்சவும் மிகவும் நெருக்கமாக கலந்துரையாடல் காணொளி பேசுபொருளாகியது.</p><p></p><p> </p><h2><b>

திருமண நிகழ்வு</b></h2><p>முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் புதல்வரின் திருமண நிகழ்வு கடந்த புதன்கிழமை இரவு சினமன் லைப் ஹோட்டலில் இடம்பெற்றது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f68f346-fdaa-487b-924b-f11d90a962f4/26-6a54825ce9296.webp' /></p><p>இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர்.
</p><p>
இதன்போது நாமல் ராஜபக்சவுடன் ரணில் விக்ரமசிங்கவும் கோட்டாபய ராஜபக்சவும் உரையாடும் விதத்தை பலரும் அவதானித்தனர்.</p><h2>கிராம வேலைத்திட்டம்</h2><p> 

ரணிலுடன் பேசப்பட்ட விடயம் தொடர்பில் அங்கிருந்தவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். 

அதற்கு நாமல் பதிலளிக்கையில், தற்போதைய அரசியல் செயற்பாடு குறித்து ரணில் கேள்வி எழுப்பியிருந்தார். </p><p>கிராமத்திற்கு கிராமம் வேலைத்திட்டத்துடன் நாடு முழுவதும் சென்று கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். </p><p>

தனிப்பட்ட விடயங்களை குறித்து உரையாடியதுடன், விரைவில் நேரடியாக இணைந்து பணியாற்றுவோம் என ரணில் குறிப்பிட்டதாகவும் நாமல் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/DElKkkz9dlg" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p> </p>]]></content>
            <updated>2026-07-13T08:31:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[புற்றுநோயிலிருந்து குணமடைந்த பிரித்தானிய பிரபலம் அவுஸ்திரேலியாவில் காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/actor-sam-neill-passed-away-at-78-1783930647"></link>
            <id>https://news.lankasri.com/article/actor-sam-neill-passed-away-at-78-1783930647</id>
            <summary type="text">ஜுராசிக் பார்க் படப்புகழ் நடிகர் சாம் நீல் அவுஸ்திரேலியாவில் காலமானார்.&amp;nbsp;சாம் நீல்
1975ஆம் ஆண்டில் வெளியான Landfall என்ற நியூஸிலாந்து திரைப்படத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜுராசிக் பார்க் படப்புகழ் நடிகர் சாம் நீல் அவுஸ்திரேலியாவில் காலமானார்.&nbsp;</p><h2>சாம் நீல்</h2><p>
1975ஆம் ஆண்டில் வெளியான Landfall என்ற நியூஸிலாந்து திரைப்படத்தில் அறிமுகமானவர் சாம் நீல் (Sam Neill).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0424e278-ead5-4b5f-bc36-2fd05fe1bd6e/26-6a54a04751875.webp' />&nbsp;</p><p></p><p>

வடக்கு அயர்லாந்தின் Omagh-யில் பிறந்த நடிகர் சாம் நீல் (Sam Neil), நியூஸிலாந்திற்கு குடிபெயர்ந்த பின் நடிகராகவும், தொழிலதிபதிராகவும் உருவெடுத்தார். </p><p>

1993யில் வெளியான ஜுராசிக் பார்க் திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்ற சாம் நீல் கலைப்படங்கள் முதல் ஹாலிவுட்டின் பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.&nbsp;</p><h2> 78வது வயதில்&nbsp;</h2><p>

சாம் நீல் சமீபத்தில் இரத்தப் புற்றுநோய்க்கான சிகிச்சைக்குப் பிறகு அதிலிருந்து குணமடைந்திருந்தார். </p><p> 

இந்த நிலையில் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தனது 78வது வயதில் சாம் நீல் காலமானார். அவரது இறப்பை குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். </p><p>

அவரது மரணம் திடீரெனவும், எதிர்பாராத விதமாகவும் நிகழ்ந்ததாகவும் சாம் நீலின் குடும்பத்தினர் விவரித்தனர்.
</p><p>
மேலும், அவரது இழப்பிற்காக துக்கம் அனுசரிக்கும் வேளையில், தங்களுக்கு தனிப்பட்ட சுதந்திரம் வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c65bc51-3059-4d9b-b416-929e31b55ec7/26-6a54a04807211.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T08:21:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பாவில் கடும் வெப்ப அலை- 10,000 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/europe-heatwave-10000-deaths-reported-1783929253"></link>
            <id>https://news.lankasri.com/article/europe-heatwave-10000-deaths-reported-1783929253</id>
            <summary type="text">ஐரோப்பாவில் கடந்த ஜூன் மாத இறுதியில் ஏற்பட்ட கடும் வெப்ப அலை காரணமாக 10,000-க்கும் மேற்பட்ட கூடுதல் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

EuroMOMO என்ற அமைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பாவில் கடந்த ஜூன் மாத இறுதியில் ஏற்பட்ட கடும் வெப்ப அலை காரணமாக 10,000-க்கும் மேற்பட்ட கூடுதல் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.</p><p>

EuroMOMO என்ற அமைப்பு வெளியிட்ட தரவுகளின்படி, இதில் பெரும்பாலானோர் (9,000-க்கும் மேற்பட்டோர்) 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஆவர்.</p><p></p><p>இந்த வெப்ப அலை பிரான்ஸ், ஸ்பெயின், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
வெப்பம் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டன, மின்சாரம் பாதிக்கப்பட்டது, மேலும் பல இடங்களில் பல இடங்களில் வெப்ப சாதனைகள் முறியடிக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3ad900e-f983-4de5-9555-005006479b4e/26-6a5499a771f95.webp' /></p><p>டென்மார்க் நாட்டின் Statens Serum Institut மருத்துவ நிபுணர் லாஸ்ஸே வெஸ்டர்கார்ட், “இந்த அளவுக்கு அதிகமான உயிரிழப்பு இந்த காலகட்டத்தில் அரிதானது. இதற்கு காரணம் கடும் வெப்பமே” என்று தெரிவித்துள்ளார்.
</p><p>
அறிவியலாளர்கள், மனிதனால் ஏற்படுத்தப்பட்ட காலநிலை மாற்றம் இல்லாமல் இவ்வாறான வெப்ப அலை நிகழ்வது “மிகவும் சாத்தியமற்றது” என கூறியுள்ளனர்.</p><p> உலக வெப்பமயமாதல் காரணமாக வெப்ப அலைகள் அடிக்கடி, மேலும் தீவிரமாக நிகழ்கின்றன.

பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் மிக அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக பெல்ஜியத்தில், 2000-ஆம் ஆண்டிலிருந்து பதிவாகியுள்ள வெப்ப அலைகளில் இதுவே மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.</p><p>
</p><p></p><p>இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் மட்டும் 2,700 பேர் வெப்பத்தால் உயிரிழந்ததாக தனி ஆய்வு தெரிவிக்கிறது. இதில் 42 சதவீத உயிரிழப்புகள் உலக வெப்பமயமாதலால் அதிகரித்த வெப்பத்தால் ஏற்பட்டவை என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
</p><p>
இந்த தரவுகள், காலநிலை மாற்றம் மனித வாழ்வில் ஏற்படுத்தும் ஆபத்துகளை வெளிச்சமிட்டு காட்டுகின்றன.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T08:20:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ. 537 கோடி சொத்து இருந்தும் வாடகை வீடு!! எஸ் ஜானகியின் தெரியாத மறுப்பக்கம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/s-janaki-despite-owning-assets-worth-rs-537-crore-1783930749"></link>
            <id>https://viduppu.com/article/s-janaki-despite-owning-assets-worth-rs-537-crore-1783930749</id>
            <summary type="text">எஸ் ஜானகிதமிழ் சினிமாவின் ஜாம்பவான்களில்ன் மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியை சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் பாரதிராஜா, பாக்யராஜின் மர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>எஸ் ஜானகி</h2><p>தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களில்ன் மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியை சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் பாரதிராஜா, பாக்யராஜின் மரணம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்திய சில வாரத்திலேயே <b>பாடகி எஸ் ஜானகி</b> ஜூலை 11 ஆம் தேதி மரணமடைந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தன்னுடைய இனிமையான பாடலால் இந்திய திரையுலகை மகிழ்வித்த ஜானகியின் உடல் அவரின் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80dff9bd-1a78-4d8e-985e-55e7088c7265/26-6a549f7fcc9fc.webp' /></p><p> </p><p>ஆயிரக்கணக்கான பாடல்களை பாடிய ஜானகி, அக்காலத்திலேயே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கினார் இருந்தாலும் வயது மற்றும் தனிப்பட்ட காரணங்களால் கடந்த 10 ஆண்டுகளாக பாடல் துறையில் இருந்து விலகினார்.</p><h2>ரூ. 537 கோடி சொத்து</h2><p> பிரபல ஊடக கட்டுரைகளின் பாடி ஜானகியின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ. 537 கோடியாம். ஜானகியின் சொத்துக்கள் பெரும்பாலும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சினிமா மூலம் சம்பாதித்த பெரும் பகுதியை, ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளார். சென்னையின் முக்கிய பகுதிகளில் வாங்கப்பட்ட நிலங்கள் மற்றும் கட்டிடங்களின் மதிப்பு தற்போது நூற்றுக்கணக்கான கோடிகளை எட்டியுள்ளது. இருந்தாலும் ரூ. 537 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருந்தும் ஜானகி, தன்னுடைய கடைசி காலத்தை வாடகை வீட்டில் கழித்தார். அதற்கு காரணம் என்ன என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f51939fc-3150-4d3a-b121-81f87435679e/26-6a549f807aecb.webp' /></p><p> </p><h2>வாடகை வீடு</h2><p>1938ல் குண்டூர் மாவட்டம் பள்ளபட்லா என்ற ஊரில் பிறந்த ஜானகி, 1959ல் ராம்பிரசாத்தை மணந்து சென்னையில் செட்டிலானார். அதன்பின் கணவர் மரணத்தில் இருந்து மீண்டு வந்தவர் மகன் முரளி கிருஷ்ணாவின் மரணம் அவரை துயரத்தில் ஆழ்த்தியது. மகனை பறிக்கொடுத்ததால் மைசூருவில் வாழ்ந்து வந்தவர் உடல்நலக் குறைவால், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்தார். </p><p>மைசூரில் இறுதி நாட்களை கழித்தவர் தன்னுடைய சொந்த ஊரைவிட்டு சென்னை குடியேறினார். எஸ் ஜானகிக்கு மைசூரில் உறவினர்கள் யாருமில்லை என்பதால் ஒரு ரசிகரின் வாடகை வீட்டில் தங்கினார். மைசூரிலும் தன்னுடைய தீவிர ரசிகை பவ்யா என்பவரின் வீட்டில் தங்கியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da686018-86ca-41f2-af87-15aeea45eec9/26-6a549f81277f9.webp' /></p><p> </p><p>2019ல் ஓய்வுக்கால வாழ்க்கையை வாழ்வதற்காக இரண்டரை ஏக்கர் பரப்புடைய ஒரு பண்ணை வீட்டை வாங்கினார். இருந்தாலும் தன் இறுதி நாட்களில் ஜானகி ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். ஆன்மீகத்தில் கவனம் செலுத்திய ஜானகி நஞ்சன்கூட்டிலுள்ள நஞ்சுண்டேஸ்வரர், சாமுண்டேஸ்வரி, யோகா நரசிம்மசுவாமி கோவில்கள் உட்பட பல்வேறு இடங்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வந்தவர் வயது மூப்பு காரணமான பிரச்சனையால் அவதிப்பட்டு வந்து இயற்கை எய்தினார்.</p>]]></content>
            <updated>2026-07-13T08:19:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறையில் உத்தியோகத்தர்களை கொடூரமாக கொன்ற கைதிகள்; வெளிசத்துக்கு வரும் அதிர்ச்சித் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-prisoners-brutally-killed-officers-cid-1783930791"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-prisoners-brutally-killed-officers-cid-1783930791</id>
            <summary type="text">&amp;nbsp; நீர்கொழும்பு சிறையில் , சிறைச்சாலை உத்தியோகத்தர்களை கொடூரமாக சித்திரவதை செய்து கொன்ற கைதிகளை அடையாளம் காணும் விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நீர்கொழும்பு சிறையில் , சிறைச்சாலை உத்தியோகத்தர்களை கொடூரமாக சித்திரவதை செய்து கொன்ற கைதிகளை அடையாளம் காணும் விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
</p><p>
6ஆம் திகதி நடந்த மோதலின் போது 8 சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 19 கைதிகளும் கொல்லப்பட்டதால், கொலைக்கு காரணமானவர்களை அடையாளம் காணும் விசாரணைகளையும் குற்றப் புலனாய்வுத் துறை நடத்தி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a425289-4eec-4761-af92-7a89af6420e3/26-6a549fa8bed0b.webp' /></p><h2>குற்றப் புலனாய்வுத் துறை விசாரணை&nbsp;</h2><p>

கைதிகளில், 14 பேர் துப்பாக்கிக் காயங்களால் உயிரிழந்துள்ளனர். இந்தியர் ஒருவர் உட்பட நான்கு பேரின் உடல்கள் அவர்களது உறவினர்களால் அடையாளம் காணப்படும் வரை பிரேதப் பரிசோதனைகள் நடத்தப்படவில்லை. </p><p>

இந் நிலையில் தடயவியல் மருத்துவ நிபுணர் குழு ஒரு உடல் தொடர்பாக தெளிவற்ற தீர்ப்பை வழங்கியுள்ளது.

துப்பாக்கிக் காயங்களால் உயிரிழந்த கைதிகளின் உடல்களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மாதிரிகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆய்வாளருக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும், தோட்டாக்களைச் சுடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை அடையாளம் காணும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.</p><p></p><p> 

துப்பாக்கிக் குண்டுகளைச் சுடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதமோ அல்லது சுட்ட நபர்களோ இதுவரை தெளிவாக அடையாளம் காணப்படாததால், நீர்கொழும்பு சிறையில் உள்ள அனைத்து துப்பாக்கிகளும் குற்றப் புலனாய்வுத் துறையின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன. </p><p>

இறந்த கைதிகளின் உடல்களில் கண்டெடுக்கப்பட்ட தோட்டாக்களை ஆய்வாளரிடம் சமர்ப்பித்த பிறகு, அவற்றிலிருந்து சுடப்பட்ட துப்பாக்கிகளை அடையாளம் காண குற்றப் புலனாய்வுத் துறை நடவடிக்கை எடுக்க உள்ளது.

சிறைச்சாலை மோதலுக்குப் பிறகு சிறை வளாகத்தில் பல காலி 9மிமீ தோட்டா கோதுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்தத் தோட்டாக்கள் கைத்துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படுகின்றன.
</p><p>
கடந்த 6ஆம் திகதி நடந்த மோதலின் போது, ​​சிறையின் பிரதான வாயிலுக்கு முன்னால் உள்ள மரக் கதவு ஜன்னலிலிருந்து ஒரு சிறை உத்தியோகத்தர் T-56 ரக துப்பாக்கியால் சுட்டதைத் தவிர வேறு எந்த உத்தியோகத்தரும் சுடவில்லை என்றும், சிறைக்குச் சொந்தமான எந்தத் துப்பாக்கியும் சுடுவதற்குப் பயன்படுத்தப்படவில்லை என்றும் சிறைத் தரப்பு கூறுவதாக ஒரு மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
</p><p>
 சுடப்பட்ட நபர்களும் துப்பாக்கிகளும் அடையாளம் காணப்படவில்லை என்று காவல்துறை கூறுகிறது. 5ஆம் திகதி சிறையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு இரண்டு கைதிகள் கொல்லப்பட்டபோது, ​​சிறையின் ஆயுதக் கிடங்கில் இருந்த அனைத்து துப்பாக்கிகளும் பாதுகாப்பாக அகற்றப்பட்டதாகவும் சிறைத் தரப்பு கூறுகிறது. 

 இந் நிலையில் , 9 மி.மீ வெற்றுக் கோதுகள் சிறைக்குள் எப்படி நுழைந்தன என்பதை ஆய்வாளரின் விசாரணை உறுதிப்படுத்தும் என காவல்துறை நம்புகிறது. </p><p>

வாயிலுக்கு முன்னால் நின்றிருந்த உத்தியோகத்தரைத் தவிர வேறு எந்த சிறை உத்தியோகத்தரும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தகவல் வராததால், கைதிகளைச் சுட்டவர்களை விசாரணைகள் மூலம் அடையாளம் காண காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

நீர்கொழும்பு சிறையில் கைதிகள் நடத்திய தாக்குதலில் “சிறை அவசரகால மீட்புக் குழுவின்” எட்டு உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டனர். </p><p>மேலும் பலர் காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த உத்தியோகத்தர்கள் வெலிக்கடையிலிருந்து நீர்கொழும்புக்கு வந்திருந்தனர். கைதிகள் இந்த உத்தியோகத்தர்களைக் குறிவைத்ததாகத் தெரிகிறது என காவல்துறை கூறுகிறது. </p><p>குற்றப் புலனாய்வுத் துறையும் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியுள்ளது.

இந்தக் கொலைகளில் ஈடுபட்ட கைதிகளின் எண்ணிக்கை இன்னும் தெளிவாக அடையாளம் காணப்படவில்லை என்றும், பல்வேறு பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஆதாரங்களுடன் அந்த நபர்களை அடையாளம் காண விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
</p><p>
மோதலுக்குப் பிறகு சிறையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​கூர்மையான ஆயுதங்களுடன் ஏராளமான தடிகளையும், கம்புகளையும் காவல்துறை கண்டெடுத்துள்ளது. 

அத்துடன் கத்திகள், கோடாரிகள், கத்தரிக்கோல்கள் மற்றும் கத்திகள் ஆகியவை அவற்றில் இருந்ததாக காவல்துறை தெரிவித்தது.</p>]]></content>
            <updated>2026-07-13T08:18:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை வன்முறை: கைதிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் குறித்து அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-incident-news-updates-tamil-1783929539"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-incident-news-updates-tamil-1783929539</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறையில் இரண்டு கைதிக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறை மோதலின் போது, கழிப்பறைகளில் பொருத்தப்பட்டிருந்த கழிவறைத் தொட்டிகளின் உடைந்த பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறையில் இரண்டு கைதிக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறை மோதலின் போது, கழிப்பறைகளில் பொருத்தப்பட்டிருந்த கழிவறைத் தொட்டிகளின் உடைந்த பாகங்கள் மற்றும் சமையலறையில் இருந்த தேங்காய்கள் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

தாக்குதலில் ஈடுபட்ட கைதிகள், தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொண்டதுடன், மோதலைக் கட்டுப்படுத்த முயன்ற சிறை அதிகாரிகளையும் தாக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>கொடூரமான தாக்குதல்</h2><p>
</p><p>
மேலும், சிறை சமையலறையில் இருந்த கத்திகள், மருத்துவப் பிரிவில் இருந்த கத்தரிக்கோல்கள் மற்றும் உடற்பயிற்சி மையத்தில் இருந்த பல்வேறு இரும்புக் கருவிகளும் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஏழாவது நாளில் கைதிகளின் நிலைமையைப் பார்வையிடச் சென்ற சிறை அதிகாரிகள் மீது இந்த ஆயுதங்களைக் கொண்டு கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் விசாரணைகள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55fb43be-bb4b-48c3-b83c-64a8c5bcb853/26-6a549f34d2d50.webp' /></p><p>

தாக்குதல் நடத்திய கைதிகள், சிறை அதிகாரிகளின் தலைகளை குறிவைத்து தாக்கியதாகவும், அவர்களைக் கொல்வதே முதன்மை நோக்கமாக இருந்ததாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
சம்பவத்திற்குப் பிறகு, குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் இரகசியக் பொலிஸ் பிரிவினர் சிறைக்குள் சிறப்பு சோதனைகளை மேற்கொண்டனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இந்தச் சோதனைகளில், தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடிகள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், தேங்காய்கள், கத்திகள், கத்தரிக்கோல்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f00f1374-e89f-4b14-9613-91409815691e/26-6a549f3580dc2.webp' /></p><p>
</p><p>
இவை அனைத்தும் நீதிமன்றத்தில் சான்றுப் பொருட்களாக சமர்ப்பிக்கப்படுவதற்காக பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் சிறைக்குள் வெடித்த இந்த தொடர் வன்முறைச் சம்பவங்களில், ஒரு சிறை அதிகாரி மற்றும் எட்டு பொலிஸார் உட்பட மொத்தம் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.&nbsp;</p><p>
இந்த மோதல்களில், சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உள்ளிட்ட 100ற்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளமையும்&nbsp;இது தொடர்பில் விசாரணை இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T08:18:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை மறுநாள் அஸ்தமனமாகும் குரு.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-guru-asthamanam-1783928355"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-guru-asthamanam-1783928355</id>
            <summary type="text">நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.

இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான்.
</p><p>
இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.
</p><p>
இந்நிலையில், குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசியில் நுழைந்து பயணித்து வருகிறார்.
</p><p>
மேலும், ஜூலை 15ஆம் திகதியான நாளை மறுநாள் குரு பகவான் அஸ்தமனமாகவுள்ளார்.
</p><p>
அந்தவகையில், குரு பகவானின் இந்த அஸ்தமனத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.</p><p></p><h2>துலாம்</h2><ul><li>மெதுவாக முன்னேற்றத்தைக் காண்பார்கள். </li><li>கடின உழைப்பு பணியிடத்தில் பாராட்டப்படும். </li><li>வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். </li><li>சொந்தமாக தொழிலை தொடங்க இக்காலம் சிறப்பாக இருக்கும். </li><li>பணிபுரிபவர்களுக்கும் இக்காலம் பொற்காலமாக இருக்கும். </li><li>முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் திறக்கும். </li><li>பண வரவு அதிகரிக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91afe56c-e9e9-46de-a2b8-6e8d506626a7/26-6a549625a2ef4.webp' /></p><p>
</p><h2>
விருச்சிகம்</h2><ul><li>ஒரு பெரிய முடிவை எடுப்பார்கள். </li><li>வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். </li><li>மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க வாய்ப்பு கிடைக்கும். </li><li>அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். </li><li>வெளிநாட்டில் வேலை செய்யும் வாய்ப்பு தேடி வரும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34037729-ab8b-40e5-9329-28b6164b0fe2/26-6a5496265459c.webp' /></p><p>
</p><h2>
மீனம் </h2><ul><li>

வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். </li><li>பணியிடத்தில் செயல்திறன் சிறப்பாக இருக்கும். </li><li>புதுமண தம்பதிகள் நல்ல செய்திகளைப் பெறக்கூடும்.</li><li> சரியான முடிவுகளை எடுக்க முடியும்.</li><li> மாணவர்கள் படிப்பில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். </li><li>பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். </li><li>புதிய வருமான வழிகள் உருவாகும்.&nbsp;&nbsp;</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9136e83e-e7f7-4aa5-b216-c8b02564f7d8/26-6a54962706909.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் 
ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. 
(லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T08:15:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோடிக்கணக்கில் சொத்து இருந்தும் ஜானகி வாடகை வீட்டில் வசிக்க என்ன காரணம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/why-janaki-ended-up-living-in-a-rented-house-1783924133"></link>
            <id>https://manithan.com/article/why-janaki-ended-up-living-in-a-rented-house-1783924133</id>
            <summary type="text">பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகியின் மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

அவரது இறுதிச்சடங்குகள் முடிந்த நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகியின் மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. </p><p>

அவரது இறுதிச்சடங்குகள் முடிந்த நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.</p><h2>ஜானகியின் சொத்துமதிப்பு&nbsp; &nbsp;</h2><p>

60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய எஸ். ஜானகி, தனது காலத்தில் முன்னணி பாடகியாக இருந்தார்.&nbsp;&nbsp;</p><p>ஊடகத் தகவல்களின்படி, எஸ். ஜானகியின் சொத்து மதிப்பு சுமார் ரூ.537 கோடி என கூறப்படுகிறது. இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3533e175-b0fe-403e-92d6-1e02090658e0/26-6a54869ba6324.webp' /></p><p>அவர் சினிமாவில் சம்பாதித்த பணத்தின் பெரும்பகுதியை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. </p><p>

சென்னையின் முக்கியப் பகுதிகளில் வாங்கப்பட்ட நிலங்கள் தற்போது நூற்றுக்கணக்கான கோடிகளை எட்டியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p>ஆனால், இவ்வளவு சொத்துகள் இருந்தும் அவர் தனது இறுதி நாட்களில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">என்ன காரணம்?&nbsp;</span></h2><p>
1938ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்த எஸ். ஜானகி, திருமணத்திற்குப் பிறகு சென்னையில் குடியேறினார்.</p><p> </p><p>கணவர் மற்றும் மகன் மரணத்திற்கு பிறகு மைசூரில் வசித்த ஜானகி, உடல்நலக் குறைவு காரணமாக பொது நிகழ்ச்சிகளைத் தவிர்த்தார்.&nbsp;&nbsp;</p><p>மைசூரில் ஒரு ரசிகரின் வாடகை வீட்டில் தங்கி வாழ்ந்தார். போகடி பகுதியில் உள்ள வீட்டில் ரசிகர் பவ்யா அவரை கவனித்து வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51bfbaf2-16b9-4fdf-9ebe-9122cf400716/26-6a54869c71a1d.webp' />&nbsp;&nbsp;</p><p>

இதனைதொடர்ந்து 2019ஆம் ஆண்டு ஒரு பண்ணை வீட்டை வாங்கியிருந்தாலும், இறுதி வரை வாடகை வீட்டில்தான் வசித்தார்.</p><p>

கடைசி இரண்டு ஆண்டுகளில் ஆன்மிகத்தில் அதிக கவனம் செலுத்திய எஸ். ஜானகி, மைசூரில் உள்ள பல கோவில்களுக்கு சென்று வழிபட்டு வந்தார்.</p><p>இந்நிலையில், அவர் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் உயிழந்தது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-13T08:15:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராகும் தமிழ்நாட்டு வீரர்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ashwin-dravid-in-race-to-england-test-team-coach-1783929613"></link>
            <id>https://news.lankasri.com/article/ashwin-dravid-in-race-to-england-test-team-coach-1783929613</id>
            <summary type="text">இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளருக்கு ராகுல் டிராவிட், தமிழ்நாட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர் பரிசீலனையில் உள்ளது.

இங்கிலாந்து டெஸ்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளருக்கு ராகுல் டிராவிட், தமிழ்நாட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர் பரிசீலனையில் உள்ளது.</p><h3>

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளர்</h3><p> 

2022 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருபவர் நியூசிலாந்து முன்னாள் வீரர் பிரண்டன் மெக்கல்லம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7629c18-ec92-44da-a805-d49ebb4a42c2/26-6a549b0e9bf25.webp' /></p><p> 

சமீபத்தில் அவுஸ்திரேலியா உடனான ஆஷஸ் தொடர், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் என அடுத்தது இங்கிலாந்து டெஸ்ட் அணி மோசமாக செயல்பட்டு வந்த நிலையில், டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மெக்கல்லம் விலகியுள்ளார். </p><p>

அதேவேளையில் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான தலைமைப் பயிற்சியாளராக மெக்கல்லம் தொடர்கிறார்.&nbsp;</p><p></p><p>

அடுத்த டெஸ்ட் பயிற்சியாளருக்கான தேடலில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், இந்த போட்டியில் இந்திய ஜாம்பவான்களின் பெயர்கள் அடிபடுகின்றன.</p><h3> 

அஸ்வின், டிராவிட்டிற்கு வாய்ப்பு</h3><p> 

முன்னாள் இந்திய வீரரான, தமிழ்நாட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர் பரிசீலனையில் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da0b9568-cec3-4e52-bb88-20fb5586be18/26-6a549b0f564e7.webp' /></p><p>

இவருக்கு பயிற்சியாளராக அனுபவம் இல்லாவிட்டாலும், சர்வதேச போட்டியில் உள்ள சிறந்த அனுபவம் காரணமாக பரிசீலனை பட்டியலில் உள்ளார். </p><p>

இதே போல், மற்றொரு முன்னாள் இந்திய வீரரான ராகுல் டிராவிட்டின் பெயரும் பரிசீலனையில் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b052a50-ad01-4303-820a-a6c653a3bb0e/26-6a549b10070ee.webp' /></p><p>

டிராவிட் பயிற்சியாளராக இருந்த போது, இந்திய அணி 2024 T20 உலககிண்ணத்தை வென்றது.&nbsp;</p><p>மேலும், இங்கிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளரான ஆண்டி பிளவர் பெயரும் பட்டியலில் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c3fd8b7-8064-4b73-b158-b47d29aca4d7/26-6a549b10a9ad7.webp' /></p><p>

இவர் தற்போது RCB அணியின் பயிற்சியாளராக உள்ள நிலையில், தொடர்ந்து 2 முறை அந்த அணி ஐபிஎல் கிண்ணத்தை வென்றுள்ளது. </p><p>

மேலும், இங்கிலாந்து முன்னாள் அணித்தலைவர் ஆண்ட்ரூ பிளின்டாஃப், பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெசன், முன்னாள் அவுஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ஆகியோரும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T08:03:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அய்யனார் துணை சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்... யாரு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ayyanar-thunai-serial-july-13-episode-1783929564"></link>
            <id>https://cineulagam.com/article/ayyanar-thunai-serial-july-13-episode-1783929564</id>
            <summary type="text">அய்யனார் துணைபெண் இல்லாமல் ஆண்கள் மட்டுமே வாழும் ஒரு குடும்பத்தின் கதையாக விஜய் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தான் அய்யனார் துணை. அவர்களின் வீட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அய்யனார் துணை</h2><p>பெண் இல்லாமல் ஆண்கள் மட்டுமே வாழும் ஒரு குடும்பத்தின் கதையாக விஜய் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தான் அய்யனார் துணை. </p><p>அவர்களின் வீட்டிற்கு சோழனை திருமணம் செய்துகொண்டு மருமகளாக வந்தவர் நிலா என்பவரால் அந்த வீட்டின் நிலைமை அழகாக மாறுகிறது. இப்போது கடைசியாக கதைக்களத்தில் நிலா-சோழன் திருமணம் நடந்து, ஹனிமூன் முடிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73dc4213-5e48-4f0e-8fc8-970d68f135e8/26-6a549c89d6124.webp' /></p><p> </p><p>மொத்தமாக குடும்பமாக கொடைக்கானல் செல்ல நடேசன் மட்டும் வீட்டில் தங்கினார். அவர் யாரும் வீட்டில் இல்லாததால் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து மது அருந்தியுள்ளார். வீட்டையே ஒரு மாதிரி மது பாட்டில்கள் என கண்டதை போட்டு மோசமாக வைத்துள்ளார். </p><p>வீட்டிற்குள் வந்த நிலா வீட்டின் நிலைமைய கண்டு ஷாக் ஆகி வெளியே செல்கிறார். பின் சேரன், சோழன், பாண்டி ஆத்திரம் அடைந்து நடேசனை அடிக்க பாய்கிறார்கள்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e88c5d5d-f674-4555-8225-c84ab5b9cc0a/26-6a549c8adcf48.webp' /></p><h2>புதிய என்ட்ரி
</h2><p>வீட்டில் நடேசனுடன் மகன்கள் சண்டை போடுகிறார்கள், பின் அவரை வெளியே அனுப்பிவிட்டு வீட்டை சுத்தம் செய்கிறார்கள். வீட்டின் நிலைமையை கண்ட நிலா வீட்டின் பின்புறம் வந்து சோகமாக நிற்கிறார். </p><p>அடுத்து பாண்டி வானதி கடைக்கு வருகிறார், அங்கு இருவரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது கடைக்கு புதியதாக ஒருவர் என்ட்ரி கொடுக்க வானதி கடையில் வேலை செய்பவரிடம் கஸ்டமர் வந்துள்ளார் என கூறுகிறார்.</p><p> செல்வம் யார் என்று பார்த்ததும் வாங்க டாக்டர் என கூற வானதி ஷாக் ஆகிறார். அப்படி டாக்டர் கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார் தெரியுமா, இதோ பாருங்கள்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5d2d754-35fc-420b-a102-3d754df11617/26-6a549d4422d00.webp' /></p>]]></content>
            <updated>2026-07-13T08:00:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு அச்சுறுத்தல் : முன்பள்ளி சிறுவர்கள் குறித்து வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-cases-preschool-children-protect-clothing-1783927800"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-cases-preschool-children-protect-clothing-1783927800</id>
            <summary type="text">தற்போது நிலவி வரும் டெங்கு அச்சுறுத்தலுக்கு மத்தியில், முன்பள்ளிகளுக்கு அனுப்பும் குழந்தைகளின் கைகளையும் கால்களையும் மறைக்கும் பொருத்தமான ஆடைகளை அவர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது நிலவி வரும் டெங்கு அச்சுறுத்தலுக்கு மத்தியில், முன்பள்ளிகளுக்கு அனுப்பும் குழந்தைகளின் கைகளையும் கால்களையும் மறைக்கும் பொருத்தமான ஆடைகளை அவர்கள் அணிவதை உறுதி செய்யுமாறு சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் பெற்றோர்களை வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
 

தேசிய குழந்தைப்பருவ வாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
</p><p></p><h2>எதிர்வரும் இரண்டு வாரங்கள்</h2><p>
 

டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முன்பள்ளி குழந்தைகள் தங்கள் கைகளையும் கால்களையும் மறைக்கும் பொருத்தமான ஆடைகளை அணிந்து முன்பள்ளிகளுக்கு வரலாம் என கல்வி அமைச்சகம் சமீபத்தில் எடுத்த முடிவைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96179f11-55a6-426c-9c89-cc87c2a26a7c/26-6a5497668727e.webp' /></p><p>நுளம்புக் கடியால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதன் மூலம், மாணவர்களிடையே டெங்கு பரவுவதைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.</p><p>முன்பள்ளி குழந்தைகளுக்கும் அவர்களின் பாதுகாப்புக்காகவும் பயன்படுத்தக்கூடிய நுளம்பு விரட்டிகளைப் பயன்படுத்துங்கள். நுளம்பு கடியியில் இருந்து பாதுகாத்துக் கொள்ளக்கூடிய அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு தான் நான் அனைத்து பெற்றோரிடமும் கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டார். </p><p>இந்த நெருக்கடி பாடசாலைகளுக்குள்ளும் காணப்படுகிறது. எதிர்வரும் இரண்டு வாரங்களும் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T07:59:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இயந்திர துப்பாக்கியின் கட்டுப்பாட்டை இழந்த ரஷ்ய வீரர்! உயிர் தப்பிய சக அதிகரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/russian-soldier-loses-control-of-machine-gun-1783923101"></link>
            <id>https://ibctamil.com/article/russian-soldier-loses-control-of-machine-gun-1783923101</id>
            <summary type="text">ரஷ்ய இராணுவத்தின் பயிற்சி நடவடிக்கையொன்றின் போது, சக்திவாய்ந்த சுழல் இயந்திரத் துப்பாக்கியின் கட்டுப்பாட்டை சிப்பாய் ஒருவர் இழந்ததாகக் கூறப்படும் காணொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்ய இராணுவத்தின் பயிற்சி நடவடிக்கையொன்றின் போது, சக்திவாய்ந்த சுழல் இயந்திரத் துப்பாக்கியின் கட்டுப்பாட்டை சிப்பாய் ஒருவர் இழந்ததாகக் கூறப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
</p><p>
அந்தக் காணொளியில், துப்பாக்கி கட்டுப்பாடின்றி சுழலத் தொடங்கியதுடன், தோட்டாக்கள் கணிக்க முடியாத வகையில் பல திசைகளிலும் பாய்வது காணொளியில் பதிவாகியுள்ளது.</p><p>இதனால் அருகில் இருந்த வீரர்கள் உடனடியாக பதுங்கி தப்பும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.</p><p></p><h2>இணையத்தில் வெளியாகியுள்ள தகவல்</h2><p>இந்த விடயம் குறித்து பிரித்தானிய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்,&nbsp;&nbsp;இணையத்தில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, அந்தப் பயிற்சியில் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் யாக் பி-12.7 (YakB-12.7) என்ற நான்கு குழல் சுழல் இயந்திரத் துப்பாக்கி எனக் கூறப்படுகிறது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">𝐕𝐢𝐫𝐚𝐥 𝐅𝐨𝐨𝐭𝐚𝐠𝐞: A Russian military training exercise reportedly went awry after troops mounted a YakB-12.7 helicopter machine gun on a fixed stand, with the weapon appearing to spin out of control during the drill.<a href="https://x.com/hashtag/Russia?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Russia</a><a href="https://x.com/hashtag/RussianArmy?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#RussianArmy</a><a href="https://x.com/hashtag/MilitaryTraining?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#MilitaryTraining</a><a href="https://x.com/hashtag/YakB127?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#YakB127</a> <a href="https://t.co/rwwpVsx9K0">pic.twitter.com/rwwpVsx9K0</a></p>&mdash; Daily Kishtwar Times (@kishtwartimes1) <a href="https://x.com/kishtwartimes1/status/2076331898272731239?ref_src=twsrc%5Etfw">July 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> </p><p>இந்த ஆயுதம் முதலில் மில் மி-24 (Mi-24 Hind) தாக்குதல் ஹெலிகாப்டரில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>பொருத்தப்பட்ட இயந்திரத் துப்பாக்கியின் பின்னால் நின்றிருந்த சிப்பாய் சுடத் தொடங்கிய சில நொடிகளிலேயே, ஆயுதத்தின் பின்னுதைப்பு காரணமாக பொருத்தும் அமைப்பு செயலிழந்ததுள்ளது.</p><p> இதனைத் தொடர்ந்து துப்பாக்கி தனது தாங்கியைச் சுற்றி வேகமாகச் சுழல, அதை கட்டுப்படுத்த முயன்ற சிப்பாயும் அதனுடன் இழுக்கப்படுகிறார்.</p><p></p><h2>தூக்கி வீசப்பட்ட சிப்பாய்</h2><p>
</p><p>
சில நொடிகளில், அந்த சிப்பாய் அருகிலிருந்த தடுப்பின் மீது பலமாக வீசப்படுவதும், துப்பாக்கி தொடர்ந்து சுழன்றபடியே தோட்டாக்களைப் பாய்ச்சுவது போன்ற காட்சிகளும் பதிவாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22985b4b-87d3-4566-91cb-f61c98886d50/26-6a5484a2b8830.webp' /></p><p> </p><p>இதனால் அருகிலிருந்த மற்ற வீரர்கள் குனிந்து தப்பியோடும் நிலை ஏற்பட்டுள்ளது. பின்னர் மற்றொரு படைவீரர் விரைந்து சென்று சுழன்றுகொண்டிருந்த ஆயுதத்தின் இயக்கத்தை நிறுத்துகிறார்.</p><p>அதன்பின் துப்பாக்கிக் குழலைத் தொட முயன்ற அவர், அது அதிக வெப்பமடைந்திருந்ததை உணர்ந்து உடனடியாக கையைப் பின்வாங்கும் காட்சியும் காணொளியில் பதிவாகியுள்ளது.” என தெரிவித்துள்ளது.</p><p>அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக ரஷ்ய அதிகாரிகள் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் வெளியிடவில்லை.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T07:57:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருளுடன் அதிபர், மாணவன் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/principal-and-student-arrested-with-drugs-1783928093"></link>
            <id>https://jvpnews.com/article/principal-and-student-arrested-with-drugs-1783928093</id>
            <summary type="text">&amp;nbsp; கம்பஹா - திவுலப்பிட்டிய பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன், ஓய்வுபெற்ற அதிபர் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



திவுலப்பிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கம்பஹா - திவுலப்பிட்டிய பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன், ஓய்வுபெற்ற அதிபர் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



திவுலப்பிட்டிய பகுதியில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த போதே, மேற்படி நபர் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கியுள்ளார். </p><p>அவரிடமிருந்து 175 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.



கைது செய்யப்பட்டவர் கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய ஓய்வுபெற்ற அதிபர் ஆவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81f54689-64cc-46e3-914e-78642da6e1e3/26-6a54951eae891.webp' /></p><p></p><h2>&nbsp;வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்த மாணவன்</h2><p> 

 இதேவேளை கம்பஹா - கந்தானை பிரதேசத்தில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>
கந்தானை பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்த&nbsp; &nbsp;மாணவன் பொலிஸாரால் சுற்றிவளைத்துக் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது. அவரிடமிருந்து 25 கிராம் ஹெரோயின் போதைப்பொருளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.</p><p></p><p>
</p><p>


கைது செய்யப்பட்டவர் மொனராகலை, மதுள்ளை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபராவார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T07:56:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோர்தான், குவைத், பஹ்ரைனில் ...அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் ; அச்சத்தில் உலக நாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-attacks-us-bases-in-jordan-kuwait-and-bahrain-1783917613"></link>
            <id>https://canadamirror.com/article/iran-attacks-us-bases-in-jordan-kuwait-and-bahrain-1783917613</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளமை சர்வதேசத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்க இராணுவத்தால் பயன்படுத்தப்படும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளமை சர்வதேசத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

அமெரிக்க இராணுவத்தால் பயன்படுத்தப்படும் ஜோர்தான் தளத்தில் உள்ள எரிபொருள் சேமிப்புத் தாங்கிகள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் மீது தமது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/deaa3417-2b82-4d32-a9dc-5a5e5e13c3d4/26-6a546c361f685.webp' /></p><p> 

ஜோர்தானின் இளவரசர் ஹசன் விமானப் படையணித் தளத்தை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்கியுள்ளதாக ஈரான் குறிப்பிட்டுள்ளது. 

ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதில் வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. </p><p>

அதேநேரம் பஹ்ரைனில் அபாய எச்சரிக்கை ஒலிகள் ஒலிக்கப்பட்டதாகவும் ரொயிட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. 

பழிவாங்கும் நடவடிக்கையின் இரண்டாம் கட்டமாக பஹ்ரைனின் ஷேக் ஈசாவில் உள்ள அமெரிக்கத் தளத்தைத் தாக்கியுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. </p><p>

எவ்வாறாயினும் இது அமெரிக்காவின் கடற்படைத் தலைமையகம் இல்லையென்ற போதிலும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கும் விமானங்களுக்கும் குறித்த தளம் வசதிகளை வழங்கி வருகின்றது.</p><p> 

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவ இலக்கைத் தாக்கியுள்ளதாக ஈரான் கூறுகின்ற நிலையிலும், வளைகுடா நாடான அங்கு அவசரகால எச்சரிக்கை ஒலிகள் ஒலிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவளை குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-13T07:54:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பங்களாதேஷில் சீரற்ற காலநிலையினால் 51 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/heavy-rains-and-flash-floods-in-bangladesh-1783929051"></link>
            <id>https://canadamirror.com/article/heavy-rains-and-flash-floods-in-bangladesh-1783929051</id>
            <summary type="text">பங்களாதேஷில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பங்களாதேஷில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>
தலைநகர் டாக்கா உட்பட நாட்டின் பெரும்பகுதியைத் தாக்கிய திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளனர்.</p><p>
இதுவரை பதிவாகியுள்ள மரணங்களில் பாதியற்கும் மேற்பட்டவை, பெருமளவிலான ரோஹிங்கியா அகதிகள் வாழும் காக்ஸ் பஜார் மாவட்டத்திலேயே நிகழ்ந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63386ec0-1f1c-4131-ba36-8222da8a4674/26-6a5498e227ebe.webp' /></p><p>
</p><p>கடந்த வாரம் இந்த மாவட்டத்தில் வெள்ள நீர் பாடசாலைக்குள் புகுந்ததில் பல மாணவர்களும் ஒரு ஆசிரியரும் உயிரிழந்தனர்.</p><p>
பங்களாதேஷ் பல நதிகளைக் கொண்ட ஒரு தாழ்நில நாடாகும். இங்கு வருடாந்த பருவமழைக்காலத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கமானது என்றாலும், காலநிலை மாற்றம் காரணமாக மழைப்பொழிவு வழக்கத்தை விட அதிக தீவிரமாகவும், அடிக்கடி நிகழக்கூடியதாகவும் மாறியுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
</p><p>ஒரு வாரத்திற்கு முன்பே ஆரம்பித்த இந்த கனமழை கடந்த சில நாட்களாக தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாய எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர். </p><p>
அத்துடன் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் உள்ள குடும்பங்களை வெளியேற்றியுள்ளதுடன், மாணவர்களின் பரீட்சைகளையும் ஒத்திவைத்துள்ளனர். தற்போது ஆயிரக்கணக்கான மக்கள் அரசாங்கத்தின் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.</p><p>
அதிகாரிகளின் கூற்றுப்படி, ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த மழையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>பதிவாகியுள்ள 51 மரணங்களில் 28 மரணங்கள் காக்ஸ் பஜார் பகுதியிலேயே நிகழ்ந்துள்ளன. இந்த மாவட்டத்தில் உலகின் மிகப்பெரிய அகதிகள் குடியேற்றப் பகுதியாகக் கருதப்படும் 10 இலட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகள் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T07:53:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சி; 13 உலகத் தலைவர்களுக்கு ஈரான் பகிரங்க மரண எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/death-warning-iran-newspaper-trump-world-leaders-1783929283"></link>
            <id>https://canadamirror.com/article/death-warning-iran-newspaper-trump-world-leaders-1783929283</id>
            <summary type="text">&amp;nbsp; மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள சூழலில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாட்டுத் தலைவர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள சூழலில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாட்டுத் தலைவர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஈரான் அரசுக்குச் சொந்தமான முக்கிய நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

 கடந்த பிப்ரவரி மாதத்தில் அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் மரணத்திற்குப் பழிவாங்கக் கோரி ஈரானில் தீவிரப் பிரச்சாரங்கள் நடந்து வரும் வேளையில் இந்த மிரட்டல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d397bf5-8c44-4429-805a-832068d62ad5/26-6a5499c535800.webp' /></p><h2>&nbsp;13 உலகத் தலைவர்களின் புகைப்படங்கள்</h2><p>

ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து வெளியாகும் அதிகாரப்பூர்வ ‘ஹம்ஷஹ்ரி’ (Hamshahri) நாளிதழ், தனது இணையப் பக்கத்திலும் அச்சுப் பதிப்பிலும் ஒரு அதிரடி தகவல் வரைபடத்தை (Infographic) வெளியிட்டுள்ளது.
</p><p>
 அதில், “பழிவாங்கல் மிக விரைவில் வருகிறது; இது எங்களது தேசத்தின் விருப்பம், இது நிச்சயம் நிறைவேற்றப்படும்” என்ற மிக ஆக்ரோஷமான வாசகம் இடம்பெற்றுள்ளது. மேலும், இந்த மரணப் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முக்கிய ஐரோப்பிய நாட்டுத் தலைவர்கள் உள்ளிட்ட 13 உலகத் தலைவர்களின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளது உலக நாடுகளை உலுக்கியுள்ளது.</p><p>

ஈரானின் புதிய உச்சத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனி, தனது தந்தையின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளுக்குப் பிறகு வெளியிட்ட முதல் அதிகாரப்பூர்வ செய்தியில், “இந்தக் குற்றவாளிகள் யாரும் தங்களது படுக்கையில் நிம்மதியாக உயிரை விட முடியாது அவர்கள் தங்களது இறுதி நாட்களைக் கல்லறையில்தான் கழிக்க நேரிடும்” என ஆளுமையாகக் குறிப்பிட்டிருந்தார். </p><p>அவரது இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து, ஈரான் முழுவதும் உள்ள மசூதிகளில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகள் அனைத்தும் “இரத்தப் பழிவாங்கலின் வெள்ளிக்கிழமைகளாக” மாற்றப்பட்டு, அமெரிக்காவிற்கு எதிரான ஜிகாத் (Jihad) முழக்கங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>

 இந்த அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவம் ஈரானின் 140-க்கும் மேற்பட்ட ராணுவ இலக்குகள் மீது புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்திக் குண்டுமழை பொழிந்துள்ளது. </p><p>

“ஈரான் எங்களது தலைவர்களைக் குறிவைக்க முயன்றால் அவர்கள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள்” என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளதால், வளைகுடாப் பகுதியில் எந்நேரமும் முழு அளவிலான உலகப்போர் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுகின்றது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T07:53:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கியுடன் சிக்கிய இளைஞன்! அம்பலமான பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-young-man-was-arrested-with-a-gun-1783928140"></link>
            <id>https://ibctamil.com/article/a-young-man-was-arrested-with-a-gun-1783928140</id>
            <summary type="text">


மாஹாரகம தொடருந்துப் பாதைப் பகுதியில் துப்பாக்கியுடன் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>


மாஹாரகம தொடருந்துப் பாதைப் பகுதியில் துப்பாக்கியுடன் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்டவர், போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவரின் மகன் என மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சந்தேக நபரின் வீட்டில் சோதனை நடத்திய போது மேற்படி துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b7e3a92-6213-4e34-9a97-ed0f8c404d75/26-6a5497849b46b.webp' />&nbsp;</p><p>

இதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் முற்படுத்தபட உள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T07:45:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் கடன் அட்டை பயன்படுத்துவோர் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/credit-card-debt-has-increased-1783924172"></link>
            <id>https://tamilwin.com/article/credit-card-debt-has-increased-1783924172</id>
            <summary type="text">இலங்கையின் நிலுவையில் உள்ள கடன் அட்டைகளின் கடன் தொகை ரூ. 10313 மில்லியனால் அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டின் (2026) தொடக்கத்திலிருந்து கடந்த ஏப்ரல் மாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் நிலுவையில் உள்ள கடன் அட்டைகளின் கடன் தொகை ரூ. 10313 மில்லியனால் அதிகரித்துள்ளது.
</p><p>
இந்த ஆண்டின் (2026) தொடக்கத்திலிருந்து கடந்த ஏப்ரல் மாத இறுதி வரையிலான நான்கு மாதங்களில் இந்த தொகை அதிகரித்துள்ளது.</p><p></p><h2>மத்திய வங்கியின் தகவல்</h2><p>

அதன்படி, இந்த ஆண்டின் (2026) தொடக்கத்தில் ரூ. 189706 மில்லியனாக இருந்த நிலுவையின் கடன் பொறுப்பு தற்போது அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cf85072-6a8e-45b2-8556-fa3158ea5722/26-6a5494efd8f82.webp' /></p><p>
</p><p>
கடந்த ஏப்ரல் மாத இறுதியில் ரூ. 200019 மில்லியனால் அதிகரித்துள்ளது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T07:42:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடத்தல்காரர்களை கைது செய்ய சென்ற அதிரடிப்படை வீரர் சடலமாக மீட்பு! பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-of-stf-soldier-swept-away-in-river-recovered-1783927128"></link>
            <id>https://tamilwin.com/article/body-of-stf-soldier-swept-away-in-river-recovered-1783927128</id>
            <summary type="text">சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த கடத்தல்காரர்கள் குழுவொன்றை கைது செய்வதற்காக சென்ற விசேட அதிரடிப்படையின் (STF) சார்ஜன்ட் ஒருவர் நீரில...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த கடத்தல்காரர்கள் குழுவொன்றை கைது செய்வதற்காக சென்ற விசேட அதிரடிப்படையின் (STF) சார்ஜன்ட் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.</p><p>சேருநுவர திட்டன்தெட்டி மணல் துறைப் பகுதியில் இன்று (13) பகல், அவரது சடலம் மீட்கப்பட்டதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>தீவிர தேடுதல்&nbsp;</h2><p>
</p><p>இன்று (13) அதிகாலை, கிண்ணியா முடுக்குத்தெட்டி மணல் துறையூடாக மகாவலி ஆற்றைக் கடந்து, சட்டவிரோத மணல் கடத்தல் குழுவை சுற்றிவளைத்து கைது செய்வதற்காக சூரியபுர STF முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36cdb135-918c-43f3-af5e-a2f9a41d6bc0/26-6a5496615bdde.webp' /></p><p>
</p><p>
இதன்போது, மகாவலி ஆற்றைக் கடக்க முயன்ற வேளையில் ஏற்பட்ட பலத்த நீரோட்டம் காரணமாக, பொலிஸ் சார்ஜன்ட் சாந்த கிஹான் ரணசிங்க (39) ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.

உயிரிழந்த சார்ஜன்ட், பத்தரமுல்ல ஜயவத்தனகம பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவத்தைத் தொடர்ந்து கடற்படையினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இன்று காலை முதல் தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.</p><p></p><h2>சடலம் மீட்பு</h2><p>
</p><p>
அதனை தொடர்ந்து இன்று பகல் சேருநுவர திட்டன்தெட்டி மணல் துறைக்கு அருகிலுள்ள ஆற்றுப் பகுதியில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91a1f04d-5f7f-417c-8963-c5c2686c541e/26-6a5496620fc96.webp' /></p><p>

இந்தச் சம்பவம் தொடர்பில் சேருநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>

கடமையில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த விசேட அதிரடிப்படை வீரரின் மறைவு, பாதுகாப்புப் படையினரிடையிலும் அப்பகுதி மக்களிடையிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T07:40:21+00:00</updated>
        </entry>
    </feed>
