<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-11T07:34:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகாநதி சீரியல் நடிகை லட்சுமி ப்ரியாவா இது! எப்படி இருக்கிறார் பாருங்க.. அழகிய புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/mahandhi-serial-lakshmi-priya-latest-photoshoot-1783742564"></link>
            <id>https://cineulagam.com/article/mahandhi-serial-lakshmi-priya-latest-photoshoot-1783742564</id>
            <summary type="text">விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் டூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று மகாநதி. இந்த சீரியலில் காவேரி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை க...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் டூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று மகாநதி. இந்த சீரியலில் காவேரி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை லட்சுமி ப்ரியா.</p><p> மகாநதி சீரியல் முடிவடைந்திருந்தாலும், மீண்டும் லட்சுமி ப்ரியாவை சின்னத்திரையில் எப்போது பார்ப்போம் என அவருடைய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். </p><p>இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் தன்னுடைய சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை லட்சுமி பிரியா பதிவு செய்துள்ளார். அழகிய சேலையில் நடிகை லட்சுமி ப்ரியா எடுத்துக்கொண்ட போட்டோஷூட் இதோ:</p>]]></content>
            <updated>2026-07-11T07:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இருந்து சென்ற வாகனம் பாலத்துடன் மோதுண்டு விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vehicle-fish-jaffna-meets-with-an-accident-1783754600"></link>
            <id>https://jvpnews.com/article/vehicle-fish-jaffna-meets-with-an-accident-1783754600</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று அதிகாலை இருந்து புது குடியிருப்பு நோக்கி மீன்களை ஏற்றி பயணித்த பயணித்த மகேந்திரா கப் ரக வாகனம்&amp;nbsp;விபத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று அதிகாலை இருந்து புது குடியிருப்பு நோக்கி மீன்களை ஏற்றி பயணித்த பயணித்த மகேந்திரா கப் ரக வாகனம்&nbsp;விபத்துக்குள்ளானது.</p><p>பரந்தன் விதி ஊடாக முல்லைதீவு சென்று கொண்டிருந்தபோது வெளிகண்டல் பகுதியில்&nbsp; வாகனம் விபத்துக்குள்ளானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c45b37d-104e-495c-b5ea-c5db83200428/26-6a51ef69d6807.webp' /></p><p>

வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பாலத்துடன் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் வாகன ஓட்டுனரின் உதவியாளர் சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>விபத்து&nbsp;சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்</p>]]></content>
            <updated>2026-07-11T07:21:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்கலை அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/university-cut-off-marks-to-be-released-next-month-1783748259"></link>
            <id>https://ibctamil.com/article/university-cut-off-marks-to-be-released-next-month-1783748259</id>
            <summary type="text">க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையிலான பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையிலான பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.</p><p>குறித்த விடயத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் வசந்த லியனகே தெரிவித்துள்ளார்.</p><p>

இந்த ஆண்டு பல்கலைக்கழக நுழைவிற்காக மொத்தம் 92,043 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக&nbsp; வசந்த லியனகே தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பல்கலைக்கழக அனுமதி</h2><p>
</p><p>
இந்த விண்ணப்பதாரர்களில் இருந்து, மொத்தம் 42,937 மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெறவுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd94585b-222a-49e8-84db-33b938b5709e/26-6a51ec9345f4f.webp' /></p><p>

அத்துடன், பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் பல புதிய பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்தவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.
</p><p>
அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் புதிய கல்வி நடவடிக்கைகள் வரும் செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக பேராசிரியர் வசந்த லியனகே மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T07:16:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடமைப்பு அதிகார சபை மீதான பாதாள உலகக்கும்பல் அச்சுறுத்தல்! கோப் குழு விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/underworld-threat-against-housing-authority-reveal-1783753409"></link>
            <id>https://tamilwin.com/article/underworld-threat-against-housing-authority-reveal-1783753409</id>
            <summary type="text">அரசியல் அழுத்தம், பாதாள உலக அச்சுறுத்தல்கள் மற்றும் சில ஊழல் அதிகாரிகளின் தன்னிச்சையான நடவடிக்கைகள் காரணமாக, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியல் அழுத்தம், பாதாள உலக அச்சுறுத்தல்கள் மற்றும் சில ஊழல் அதிகாரிகளின் தன்னிச்சையான நடவடிக்கைகள் காரணமாக, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை கடந்த காலத்தில் பெரும் தொகையை இழந்துள்ளதாக பொது நிறுவனங்கள் மீதான நாடாளுமன்ற குழு (கோப்) கண்டறிந்துள்ளது.</p><p>

கொழும்பின் மாளிகவத்தை பகுதியில் அமைந்துள்ள கடைகளின் குத்தகை ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படாதது மற்றும் வாகன நிறுத்துமிடங்களிலிருந்து வரி வசூலிப்பது குறித்து தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் கோப் குழுவின் முன் வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டபோது இந்தத் தகவல் வெளிப்பட்டது.</p><p></p><h2>கோப் குழு விசாரணை</h2><p>
</p><p>
அதன்போது, கோப் குழுவின் தலைவர் மருத்துவர் நிஷாந்த சமரவீர பல விடயங்களை கண்டறிந்துள்ளார்.
</p><p>
மாளிகவத்தை பகுதியில் அமைந்துள்ள 113 கடைகள், டிசம்பர் 31 ஆம் திகதி நிலவரப்படி 12 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வாடகை மீதியைச் செலுத்தவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57d43d25-1fdd-4ae5-92b1-08a2fc046212/26-6a51edad69992.webp' /></p><p>
</p><p>
மேலும், 2 கடைகள் 100 ரூபாவுக்கும் குறைவான வாடகைக்கும், மற்ற 37 கடைகள் 100 முதல் 1,000 ரூபா வரையிலான வாடகைக்கும் விடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
</p><p>
மேலும் 38 கடைகள் 1,000 முதல் 5,000 ரூபா வரையிலான வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், 52 கடைகளின் குத்தகை ஒப்பந்தக் காலம் முடிந்து 1 முதல் 35 ஆண்டுகள் வரை நீண்ட காலம் ஆகிவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>இது ஒரு பெரும் குற்றம்</h2><p>

இதற்குப் பதிலளித்த தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உதவிப் பொது முகாமையாளர் அஜித் நந்தன குமார, குறித்த கடைகளின் வாடகைதாரர்கள் 1980-களில் ஒப்பந்தங்கள் செய்துகொண்டதாகத் தெரிவித்தார்.
</p><p>
இருப்பினும், சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களை உடனடியாகத் திருத்திப் புதுப்பிக்குமாறு தற்போது அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

'வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை வருடத்தின் 365 நாட்களும் நிலத்தை தானமாக வழங்கி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21d069fa-be4d-4122-8d6d-4d7dc8698865/26-6a51edae1ff3f.webp' /></p><p> </p><p>இது ஒரு பெரும் குற்றம்...' என்று கோப் குழு விசாரணையில் கலந்துகொண்ட தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
குத்தகை ஒப்பந்தங்களைப் புதுப்பிக்கத் தவறியதற்கான காரணங்களை விளக்கிய தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் அனுராத கிரலவெல்ல, இதற்கான முழுப் பழியையும் அதிகாரிகள் மீது சுமத்த முடியாது என்று குறிப்பிட்டார்.</p><p></p><h2>பாதாள உலகக்கும்பல் அச்சுறுத்தல்</h2><p>

இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். </p><p>அரசியல் அழுத்தங்கள், பாதாள உலகக் கும்பல்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் சில ஊழல் அதிகாரிகளின் நடவடிக்கைகள் ஆகியவையே அவை என அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15be06c5-4109-415c-b61c-36771a4daad6/26-6a51edaec0baf.webp' /></p><p>

இவ்வாறு மோசடியாகச் செயல்பட்ட சில ஊழல் அதிகாரிகளின் சேவைகளைத் தடை செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாக அனுராத கிரலவெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-11T07:16:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகாவலி கங்கையில் மூழ்கி 11 வயது சிறுவன் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/11-year-old-boy-drowns-in-the-mahaweli-river-1783751910"></link>
            <id>https://ibctamil.com/article/11-year-old-boy-drowns-in-the-mahaweli-river-1783751910</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்டத்தில் மகாவலி கங்கை ஆற்றில் மூழ்கி 11 வயதுடைய ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளார்.&amp;nbsp;குறித்த சம்பவம் மூதூர் காவல்துறைக்கு உட்பட்ட கங்குவே...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்டத்தில் மகாவலி கங்கை ஆற்றில் மூழ்கி 11 வயதுடைய ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p>குறித்த சம்பவம் மூதூர் காவல்துறைக்கு உட்பட்ட கங்குவேலி பகுதியில் இன்று சனிக்கிழமை(11) நடந்துள்ளது.</p><p>இதன்போது, சம்பவ இடத்திலேயே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.&nbsp;</p><p></p><h2>பிரேத பரிசோதனை</h2><p>உயிரிழந்த சிறுவன் இன்று காலை தனது குடும்பத்தினருடன் ஆற்றங்கரைப் பகுதிக்கு
சமையல் தேவைக்காகச் சென்றுள்ளார்.

இதன்போது, ஆற்றில் குளிப்பதற்காக சிறுவன் இறங்கிய நிலையில், எதிர்பாராதவிதமாக
நீரில் மூழ்கி நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2e90203-dab5-48f0-9109-01b041a1deb3/26-6a51eada557e9.webp' /></p><p>
</p><p>
சிறுவன் நீரில் மூழ்குவதைக் கண்டு குடும்பத்தினரும்
அங்கிருந்தவர்களும் உடனடியாக அவரை மீட்கப் போராடியுள்ளனர்.ஆனால் சிறுவனை
உயிருடன் மீட்க முடியாமல் போயுள்ளது.
</p><p>இந்த நிலையில், நீண்ட தேடுதலின் பின்னர் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக
மூதூர் தள வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.&nbsp;</p><p> இச்சம்பவம் குறித்து
மூதூர் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T07:15:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ; கனடா கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/threat-lives-of-tamil-political-prisoners-canada-1783754101"></link>
            <id>https://jvpnews.com/article/threat-lives-of-tamil-political-prisoners-canada-1783754101</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு, இலங்கை அரசாங்கத்திடம்,&amp;nbsp; &amp;nbsp; கனடா டொரொண்டோ நீதி மற்றும் சமத்துவத்திற்கான கனடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு, இலங்கை அரசாங்கத்திடம்,&nbsp; &nbsp; கனடா டொரொண்டோ நீதி மற்றும் சமத்துவத்திற்கான கனடியர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
அந்த அமைப்பின் பிரதிநிதியான ரோய் சமதானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

இலங்கையில் ஏற்பட்டுள்ள சிறைச்சாலை நெருக்கடி காரணமாக, மெகசின், போகம்பரை மற்றும் கொழும்பு விளக்கமறியல் உள்ளிட்ட சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/715b4823-faab-4fd3-b96d-af0d8c7b5a24/26-6a51ed769b957.webp' /></p><h2>தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவியுங்கள்</h2><p>
</p><p>
நாட்டின் சிறைச்சாலைகள் சுமார் 10,000 கைதிகளை மட்டுமே தங்க வைக்கும் வசதியைக் கொண்டிருந்தாலும், தற்போது சுமார் 40,000 பேர் சிறை வைக்கப்பட்டுள்ளதால் கடுமையான நெரிசல் நிலவுகிறது.</p><p></p><p>


1983ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை மற்றும் 2000ஆம் ஆண்டு பிந்துனுவௌ படுகொலை போன்ற சம்பவங்கள் உட்பட சிறைச்சாலைகளில் வன்முறையான சூழல் உருவாகும் போதெல்லாம் தமிழ் அரசியல் கைதிகள் அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர்.</p><p></p><p>

இதனையடுத்து, தமிழ் அரசியல் கைதிகளுக்காக தனித்துவமான பாதுகாப்பு வலயங்களை அமைத்தல், கைதிகளின் குடும்பங்களுக்கு அவர்களின் பாதுகாப்பு நிலை குறித்த தகவல்களை உடனுக்குடன் வழங்குதல், ஐக்கிய நாடுகளின் சித்திரவதைத் தடுப்புக்குழு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய அமைப்புகளுக்கு தடையற்ற கண்காணிப்பு அனுமதி வழங்குதல் ஆகியன அவசியமாகும்.</p><p></p><p>
</p><p>
மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்துவ வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.</p><p>

 குறித்த அறிக்கை கனடா வெளியுறவு அமைச்சு உள்ளிட்ட முக்கிய சர்வதேச அமைப்புகளுக்கும் உத்தியோகபூர்வமாக அனுப்பப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-11T07:13:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் குற்றத்தடுப்பு நடவடிக்கை! கடும் ஆவேசத்தில் நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-accuses-govt-of-diverting-people-s-attention-1783752534"></link>
            <id>https://ibctamil.com/article/namal-accuses-govt-of-diverting-people-s-attention-1783752534</id>
            <summary type="text">

அதிகரித்து வரும் பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியது ஆகியவற்றிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>

அதிகரித்து வரும் பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியது ஆகியவற்றிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக, அரசாங்கம் இளைஞர்களைக் கைது செய்வதையும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளையும் பயன்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>

அண்மையில் கோட்டையில் இடம்பெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
</p><p>
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கத்தின் கொள்கைகள் தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கும், வேலை இழப்புகளுக்கும், வாழ்க்கைச் செலவு உயர்வதற்கும், முதலீட்டாளர் நம்பிக்கை குறைவதற்கும் வழிவகுத்துள்ளதாகக் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு&nbsp;</h2><p>
</p><p>
அத்தோடு, சட்ட நடைமுறையாக்க நடவடிக்கைகள் மூலம் இளைய தலைமுறையினரை அரசாங்கம் குறிவைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4285bda-e68a-4466-b8d4-a70dbd36864a/26-6a51ec3600245.webp' /></p><p>
</p><p>
தேர்தலுக்கு முன்பு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட பட்டதாரிகள், அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு வேலை தேடியபோது, ​​அதற்கு மாறாக காவல்துறை நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளதாக நாமல் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், அதிகரித்து வரும் வரிகள், அதிக கடன் வாங்கும் செலவுகள் மற்றும் அதிகரித்த உற்பத்திச் செலவுகள் ஆகியவற்றால் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தவிப்பதாகவும், இதனால் பல வணிகங்கள் மூடப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>சிறைச்சாலை சம்பவம்</h2><p>

இதேவேளை, இலங்கையின் பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம்பிக்கையை இழந்து வருவதாகவும், போதுமான அரசாங்க ஆதரவின்றி சுற்றுலாத் துறை கூடுதல் அழுத்தத்தை எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eabfbd4e-3e7e-454f-8d6a-4ab38262131c/26-6a51ec36aa8dd.webp' /></p><p>
</p><p>
அத்துடன், சமீபத்திய சிறைச்சாலை சம்பவம் குறித்துக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ச, நீதி அமைச்சர் முகநூல் மூலமாக மட்டுமே இச்சம்பவம் பற்றி அறிந்து கொண்டதாகவும், பல மணி நேரம் அதுபற்றி அறியாமல் இருந்ததாகவும் கூறி, அரசாங்கத்தின் பதிலை விமர்சித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T07:09:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் டெங்கு மரணங்கள் உயர்வு ; அச்சத்தை ஏற்படுத்தும் நோயாளர் எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-deaths-rise-across-the-country-1783753685"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-deaths-rise-across-the-country-1783753685</id>
            <summary type="text">இலங்கையில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">இலங்கையில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;">
இதற்கமைய, இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 67,174 ஆக உயர்வடைந்துள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7386b70-a12a-423e-96cc-3f1411dc2ce3/26-6a51ebd7c439d.webp' /></p><h2 style="text-align: justify;">வைத்தியசாலைகளில் நெருக்கடி</h2><p style="text-align: justify;">

ஜூலை மாதத்தின் கடந்த 9 நாட்களில் மாத்திரம் 10,685 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.</p><p style="text-align: justify;"> நேற்று வெள்ளிக்கிழமை (10) ஒரே நாளில் மாத்திரம் சுமார் 1,110 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify;"></p><p>
</p><p style="text-align: justify; ">
தற்போது நிலவும் இந்த மோசமான சூழ்நிலை காரணமாக, நாட்டின் பல பிரதான வைத்தியசாலைகள் தங்களது அதிகப்படியான கொள்ளளவை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதனால் வைத்தியசாலைகளில் கடுமையான நெருக்கடியும் நெரிசலும் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T07:09:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[41 வயதிலும் செம ஹொட் லுக்கில் அசத்தும் நடிகை நயன்தாரா! குவியும் லைக்குகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/nayanthara-new-glamor-look-photos-viral-1783751929"></link>
            <id>https://manithan.com/article/nayanthara-new-glamor-look-photos-viral-1783751929</id>
            <summary type="text">நடிகை நயன்தாரா படு கிளாமரான லுக்கில் அசத்தல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருவதுடன் அசுர வேகத்தில் லைக்குகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை நயன்தாரா படு கிளாமரான லுக்கில் அசத்தல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருவதுடன் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">நயன்தாரா</span></h2><p>லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக தொடர்ந்து தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db3acbda-4646-4229-93d0-b05a7fbb3a8f/26-6a51ea146d5e2.webp' /></p><p></p><p> </p><p>இருபது ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் துறையில் கதாநாயகியாக வெற்றிகரமாக பயணித்து வரும் அவர், இன்றும் இளம் நடிகைகளுக்கு இணையாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.</p><p>
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் தனது திறமையை நிரூபித்த நயன்தாரா, தற்போது பாலிவுட்டிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73aa6c3b-10e2-4209-a3c1-bda7ded93df4/26-6a51ea151d407.webp' /></p><p> </p><p>இயக்குநர் அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடித்த 'ஜவான்' திரைப்படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் அறிமுகமான அவர், தனது முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். </p><p>உலகளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்த அந்த திரைப்படம், நயன்தாராவின் பாலிவுட் பயணத்திற்கும் வலுவான தொடக்கமாக அமைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb333e96-d241-4744-b7ab-ee6e4ae00bef/26-6a51ea15c0d57.webp' /></p><p>

தனது நீண்டகால காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட நயன்தாரா, தற்போது மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையையும் வெற்றிகரமான திரைப்பயணத்தையும் சமநிலையுடன் முன்னெடுத்து வருகிறார். </p><p>வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகிய இந்த தம்பதியினர், அடிக்கடி குடும்ப புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a5fc377-b5a2-4256-b33c-ab65febe74b8/26-6a51ea16725db.webp' /></p><p></p><p>
</p><p>
திரைப்படங்களில் பிஸியாக இருந்தாலும், தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கே எப்போதும் முதலிடம் அளித்து வருகிறார் நயன்தாரா.</p><p>இந்நிலையில், 41 வயதிலும் தனது இளமைத் தோற்றத்தையும் அழகையும் தக்கவைத்துள்ள நயன்தாரா, சமீபத்தில் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Dao-aw-j8fY/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Dao-aw-j8fY/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Dao-aw-j8fY/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by N A Y A N T H A R A (@nayanthara)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T07:04:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு நோயாளிகள் எண்ணிக்கையில் திடீர் உயர்வு - பொதுமக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-deaths-rise-to-47-1783752729"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-deaths-rise-to-47-1783752729</id>
            <summary type="text">நாட்டில் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான விவரங்களை இன்று(11.07.2026) தேசிய டெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இது தொடர்பான விவரங்களை இன்று(11.07.2026) தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிக்கையின் மூலம் வெளியிட்டுள்ளது.</p><p> 

இதன்படி, இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 67,174 ஆக உயர்ந்துள்ளது.</p><p></p><p> </p><h2>ஆயிரத்தைத் தாண்டும் நோயாளிகள்</h2><p>
அத்துடன், ஜூலை மாதத்தின் முதல் 9 நாட்களில் மட்டும் 10,685 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ca15e10-0d24-4cd5-a542-581d53e2a397/26-6a51ea4d3339b.webp' /></p><p> 

நேற்றைய தினம்(10) சுமார் 1,110 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் இயக்குநர் டாக்டர் கபில கண்ணங்கரா தெரிவித்துள்ளார். </p><p>

பல முக்கிய மருத்துவமனைகளின் கொள்ளளவு அதன் உச்ச வரம்பை எட்டியுள்ளதால், மருத்துவமனைகளில் கடுமையான அழுத்தமும் நெரிசலும் நிலவுவதாகவும் மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-07-11T07:03:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[246 பயணிகளுடன் கொழும்பில் 3 மணித்தியாலம் வட்டமிட்ட வெளிநாட்டு விமானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/istanbul-flight-hit-bird-emergency-landing-colombo-1783751993"></link>
            <id>https://jvpnews.com/article/istanbul-flight-hit-bird-emergency-landing-colombo-1783751993</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து 246 பயணிகளுடன் புறப்பட்ட போது பறவையுடன் மோதி, இலங்கையின் மேற்கு வான்பரப்பில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து 246 பயணிகளுடன் புறப்பட்ட போது பறவையுடன் மோதி, இலங்கையின் மேற்கு வான்பரப்பில் நீண்டநேரம் வட்டமிட்டுக்கொண்டிருந்த <a href="https://jvpnews.com/article/bird-strike-hits-flight-departing-airport-1783744363" target="_blank">துருக்கி நாட்டு பயணிகள் விமானம்</a> இன்று சனிக்கிழமை (11) காலை 10:24 மணியளவில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.</p><p>பறவை மோதியதால் அவசர நிலைக்குள்ளான துருக்கி விமானம் 3 மணித்தியாலங்களின் பின் கட்டுநாயக்கவில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a673dde0-1ea6-423a-9c4e-3f67db871415/26-6a51e53a8b3b9.webp' /></p><h2>&nbsp;246 பயணிகளுடன் புறப்பட்ட விமானம்</h2><p>
</p><p>
துருக்கி விமான சேவைக்குச் சொந்தமான 'TK-731' என்ற 'A330' ரக பரந்த உடற்பகுதியைக் கொண்ட இந்த விமானம், இன்று காலை 7:07 மணியளவில் 246 பயணிகளுடன் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட போதே இந்த விபத்துக்கு முகங்கொடுத்திருந்தது.</p><p></p><p>பறவை மோதியதால் ஏற்பட்ட அவசர நிலையைத் தொடர்ந்து, விமானத்தின் எடையைக் குறைத்துப் பாதுகாப்பாகத் தரையிறக்கும் நோக்கில், நீர்கொழும்பு கலப்பு கடல் வான்பரப்பில் மிகக் குறைந்த உயரத்தில் வட்டமிட்டவாறு விமானம் தனது எரிபொருளைப் பயன்படுத்தி வந்தது.</p><p></p><p>
மேலும், விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்கு முன்னதாக, கட்டுநாயக்க விமான நிலையத்தின் அவசரக்கால மீட்புப் பிரிவினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் முழுமையாகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததோடு, எவ்வித ஆபத்துகளுமின்றி விமானம் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T06:55:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் நடந்த மோசமான செயல்! பலரின் அந்தரங்கங்களை இரகசியமாக காணொளியாக பதிவு செய்த தம்பதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/spa-raid-and-couple-arrested-1783737929"></link>
            <id>https://tamilwin.com/article/spa-raid-and-couple-arrested-1783737929</id>
            <summary type="text">பண்டாரவளை, எல்லதோட்ட பிரதேசத்தில் இயங்கி வந்த ஸ்பா நிலையம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. 

ஸ்பா நிலையத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பண்டாரவளை, எல்லதோட்ட பிரதேசத்தில் இயங்கி வந்த ஸ்பா நிலையம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. </p><p>

ஸ்பா நிலையத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் பாலியல் செயல்பாடுகளை இரகசியமாக வீடியோ எடுத்து இணையம் ஊடாக விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட தம்பதியினர் உட்பட ஒரு குழுவினரைக் கைது செய்துள்ளனர். </p><p>

வெலிமடை பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரும், மினுவாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவருமே இந்த மோசடியின் பிரதான சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p> </p><h2><b>

பாலியல் செயல்பாடு</b></h2><p>ஸ்பா நிலைய அறைகளுக்குள் மிகவும் நுணுக்கமாகப் பொருத்தப்பட்ட கமராக்களின் உதவியுடன் வாடிக்கையாளர்களின் பாலியல் செயல்பாடுகளை இந்த தம்பதி வீடியோ எடுத்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a719c6d3-0318-4489-8afa-5efca19b7d0b/26-6a51e6df5e429.webp' /></p><p>அந்தத் காட்சிகளைத் தமது கைபேசிகளில் சேமித்து வைத்து, வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பணத்திற்காக விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>

வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் பெண்ணைப் பொறுத்து, 4,000 முதல் 8,000 ரூபாய் வரை கட்டணம் அறவிடப்படுகின்றது. </p><p>இந்த நடவடிக்கையும் வீடியோ மோசடியும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இந்த சுற்றிவளைப்பின் போது, சந்தேக நபரான தம்பதியினருடன் இருந்த ஜா-எல, மினுவாங்கொடை, மாத்தளை மற்றும் வெலிமடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 18 முதல் 40 வயதுக்குட்பட்ட நான்கு பெண்கள் மற்றும் மற்றொரு நபர் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><h3><b>

மருத்துவப் பரிசோதனை</b></h3><p>கைது செய்யப்பட்டவர்கள் பாலியல் நோய் தொடர்பான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைபேசிகள் மேலதிக விசாரணைக்காக கணினி குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df999b9e-4ca6-46fe-bf2d-cd5072565c99/26-6a51e81a8a279.webp' /></p><p>பண்டாரவளை விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த குணதிலக தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். </p><p>

இதற்காக, பொலிஸார் அந்த ஸ்பா நிலையத்தில் சேவை பெறுபவர் போன்று வேடமிட்ட ஒரு உளவாளியின் உதவியைப் பெற்றுள்ளார். </p>]]></content>
            <updated>2026-07-11T06:52:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானை குறிவைத்து ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் தயார் ; எச்சரிக்கும் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-warns-iran-as-missiles-stand-ready-1783752460"></link>
            <id>https://canadamirror.com/article/trump-warns-iran-as-missiles-stand-ready-1783752460</id>
            <summary type="text">ஈரானை குறிவைத்து ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் - அமெரிக்கா, இஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">ஈரானை குறிவைத்து ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
</p><p style="text-align: justify;">
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த ஜூன் 17 ஆம் தேதி ஸ்விட்சர்லாந்தில் இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65b20cdc-3584-4188-950b-474431825485/26-6a51e7d90b29b.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;திடீர் தாக்குதல்</h2><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
இதைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை அருகே மூன்று வணிகக் கப்பல்களின் மீது ஈரானிய படைகள் திடீர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டிய அமெரிக்கா செவ்வாய்க்கிழமை 80-க்கும் அதிகமான ஈரானின் கட்டமைப்புகள் மீது தாக்குதல்களை நடத்தியது.
</p><p style="text-align: justify;">
ஆகையால், கையெழுத்திடப்பட்ட அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வருவதாகவும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்களைத் தொடர்வதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.</p><p style="text-align: justify;">

இதையடுத்து ஈரானும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீது தாக்கியதால் இரு நாடுகளும் மீண்டும் போரைத் தொடர்ந்துள்ளன. </p><p style="text-align: justify;">இதுகுறித்து டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:


ஈரானை குறிவைத்து ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் தயார்நிலையில் உள்ளன. மேலும் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் ஏவப்பட உள்ளன. </p><p style="text-align: justify;">அமெரிக்காவின் தற்போதைய அதிபரான என்னை படுகொலை செய்ய அல்லது படுகொலை செய்ய முயற்சிக்க ஈரான் அரசாங்கம் அதற்கான உத்தரவுகள் ஏற்கெனவே, பிறப்பித்துள்ளன. </p><p style="text-align: justify;">போர் இன்னும் ஓர் ஆண்டு தொடர்ந்தாலும் ஈரானை முற்றிலுமாக அழிக்க அமெரிக்க ராணுவம் தயாராகவும் ஆற்றலுடனும் உள்ளது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று டொனால்ட் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.</p><p style="text-align: justify;">ஈரானை குறிவைத்து ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-11T06:51:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - கனடாவை இணைக்கும் புதிய சர்வதேச பாலம்: திறக்கப்படுவது எப்போது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/new-gordie-howe-bridge-set-for-opening-1783752546"></link>
            <id>https://news.lankasri.com/article/new-gordie-howe-bridge-set-for-opening-1783752546</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் கனடாவை இணைக்கும் கார்டி ஹோவ் சர்வதேச பாலம் ஜூலை மாதம் திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரம்மாண்ட பாலம் திறப்புஅமெரிக்காவின...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் கனடாவை இணைக்கும் கார்டி ஹோவ் சர்வதேச பாலம் ஜூலை மாதம் திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2> பிரம்மாண்ட பாலம் திறப்பு</h2><p>அமெரிக்காவின் டெட்ராய்ட்(மிச்சிகன்) நகரையும், கனடாவின் வின்ட்சர் (ஒன்ராறியோ) நகரையும் இணைக்கும் பிரம்மாண்ட சர்வதேச பாலமான “கார்டி ஹோவ்” (Gordie Howe) திட்டமிட்டப்படி ஜூலை 27ம் திகதி திறக்கப்பட உள்ளது.</p><p>இந்த திட்டத்தில் எந்தவொரு தடையும் ஏற்படாமல் நிறைவேறுவதை உறுதி செய்த புதிய ஒப்பந்தத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரவேற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd851aac-f2a2-4b58-b38c-2dd4d53656a9/26-6a51e763f2038.webp' /></p><p></p><h2> கனடா அரசுக்கு டிரம்ப் கருத்து</h2><p>
சர்வதேச பாலமான “கார்டி ஹோவ்” தொடர்பான முந்தைய ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் இருந்ததாகவும், தற்போது திருத்தப்பட்ட புதிய ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ள கூடியதாகவும் நியாயமானதாகவும் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e9373d5-c52d-4f57-b692-33b012080f89/26-6a51e764a282c.webp' /></p><p> மேலும், சர்வதேச பாலமான கார்டி ஹோவ்-விற்கு ஒத்துழைப்பு வழங்கிய கனடா அரசுக்கு நன்றி எனவும், பாலத் திட்டத்தை முன்னெடுத்து சென்று வெற்றிகரமாக முடித்ததற்காக வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.</p><p> அத்துடன் இந்த சிறப்பான முன்னேற்றத்தின் மூலம் இரண்டு நாடுகளும் தொடர்ந்து பல ஆண்டுகள் வெற்றியை பெறட்டும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T06:49:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓயோவில் கடத்தப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீட்பு- ஜனாதிபதி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nigeria-rescues-abducted-schoolchildren-teachers-1783752593"></link>
            <id>https://news.lankasri.com/article/nigeria-rescues-abducted-schoolchildren-teachers-1783752593</id>
            <summary type="text">நைஜீரியாவின் தென்மேற்கு ஒயோ மாநிலத்தில் கடந்த மே மாதம் ஆயுத கும்பலால் கடத்தப்பட்ட 39 மாணவர்களும் 6 ஆசிரியர்களும் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நைஜீரியாவின் தென்மேற்கு ஒயோ மாநிலத்தில் கடந்த மே மாதம் ஆயுத கும்பலால் கடத்தப்பட்ட 39 மாணவர்களும் 6 ஆசிரியர்களும் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.</p><p>

இந்த சம்பவம் மே 15 அன்று ஒயோ மாநிலத்தின் ஓரிரே மாவட்டத்தில் பல பள்ளிகளை குறிவைத்து நடந்தது.</p><p>அரசாங்கத்தின் தகவலின்படி, கடத்தலில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேசமயம், கடத்தப்பட்ட ஆசிரியர்களில் ஒருவர் சிறையில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72e59f41-a7fb-4a29-9e7e-7a0ee55e99e9/26-6a51e792d02e5.webp' /></p><p>
நைஜீரிய ஜனாதிபதி போலா டினுபு தனது அறிக்கையில், “இந்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நீதி கிடைக்கும். கொல்லப்பட்ட ஆசிரியரின் குடும்பத்திற்கும் அரசு நியாயம் செய்து தரும்” என்று உறுதியளித்தார்.</p><p>கடந்த சில ஆண்டுகளில் நைஜீரியாவில் ஆயுத கும்பல்களின் பெருமளவு கடத்தல்கள் முக்கிய பாதுகாப்பு சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக பள்ளிகள் அடிக்கடி குறிவைக்கப்படுகின்றன. ஆனால் தென்மேற்கு பகுதியில் இத்தகைய தாக்குதல்கள் குறைவாகவே நடந்துள்ளன.</p><p>

இந்த மீட்பு நடவடிக்கை, நைஜீரியாவில் கல்வி நிறுவனங்களின் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T06:48:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர்ந்தோர் விடயத்தில் கடுமையாக நடக்கவேண்டாம்: பிரித்தானியாவின் அடுத்த பிரதமருக்கு கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/letter-to-andy-burnaham-for-soft-on-migrants-1783752482"></link>
            <id>https://news.lankasri.com/article/letter-to-andy-burnaham-for-soft-on-migrants-1783752482</id>
            <summary type="text">பிரித்தானியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் முன்பே ஆன்டி பர்னாமுக்கு அழுத்தம் கொடுக்கத் துவங்கிவிட்டார்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

பிரித்தானிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் முன்பே ஆன்டி பர்னாமுக்கு அழுத்தம் கொடுக்கத் துவங்கிவிட்டார்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.</p><h3>

பிரித்தானியாவின் அடுத்த பிரதமருக்கு கடிதம்</h3><p>

ஆன்டி பர்னாம், பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/789106b4-c5af-4f8a-9883-392ceb96c4e2/26-6a51e7239f339.webp' /></p><p>
ஆனால், அவர் பிரதமராவதற்கு முன்பே ஆன்டி பர்னாமுக்கு அழுத்தம் கொடுக்கத் துவங்கிவிட்டார்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
</p><p>
ஆம், லேபர் கட்சியைச் சேர்ந்த சுமார் 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆன்டி பர்னாமுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
அந்தக் கடிதத்தில், புலம்பெயர்ந்தோர் விடயத்தில் கடுமையாக நடக்கவேண்டாம் என அவர்கள் ஆன்டி பர்னாமை வலியுறுத்தியுள்ளார்கள்.
</p><p>
அதாவது, ஏற்கனவே பிரித்தானியாவில் பல ஆண்டுகள் வாழ்ந்து, நிரந்தரமாக குடியமர காத்திருக்கும் புலம்பெயர்ந்தோருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான விதி ஒன்றை அறிமுகம் செய்தார் பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a38a8a4-3187-4215-8e3d-1353ff984e7c/26-6a51e7244b96a.webp' /></p><p>
ஆம், ஐந்து ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தால், அதன் பின் காலவரையறையின்றி வாழ தகுதி பெறலாம் என இருந்த விதியை மாற்றி, இனி 10 ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தால் மட்டுமே அது சாத்தியம் என ஷபானா புது விதி ஒன்றை அறிவிக்க, நிரந்தரமாக குடியமர காத்திருக்கும் புலம்பெயர்ந்தோர் ஏராளமானோர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்கள்.
</p><p>
எனவே, இது சரியல்ல, ஏற்கனவே பல ஆண்டுகள் பிரித்தானியாவில் விதிகளைப் பின்பற்றி சட்டப்படி வாழ்ந்துவரும் புலம்பெயர்ந்தோரை குறிவைக்கவேண்டாம். புதிய விதிகளைக் கொண்டுவந்து அவர்களை கடினமான சூழலுக்கு உள்ளாக்கவேண்டாம் என ஆன்டி பர்னாமுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.</p><p>
ஆக, பதவிக்கு வரும் முன்பே, ஆன்டி பர்னாமுக்கு சிக்கல் துவங்கிவிட்டது, அதுவும், அவரது கட்சிக்குள்ளிருந்தே!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T06:48:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சேலையில் அசத்தலான போட்டோஷூட் நடத்திய சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி ப்ரியா.. வீடியோ இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/siragadikka-aasai-gomathi-priya-latest-photoshoot-1783749962"></link>
            <id>https://viduppu.com/article/siragadikka-aasai-gomathi-priya-latest-photoshoot-1783749962</id>
            <summary type="text">சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது மனோஜின் இரண்டாம் திருமணம் எபிசோட்கள் விறுவிறுப்பாக போய்க்கொண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது மனோஜின் இரண்டாம் திருமணம் எபிசோட்கள் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a9698eb-b54d-41ec-9779-40250df0d88b/26-6a51dd4cc8f56.webp' /></p><p>தனது குடும்பத்திற்கு தெரியாமல் கனகாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் மனோஜ். 

அதுவும் ரோகிணியிடம் இருந்து இன்னும் விவாகரத்து கிடைக்காத நிலையில், மனோஜ் இப்படி செய்திருப்பது மிகப்பெரிய பின்விளைவை அவரது குடும்பத்திற்கு தரப்போகிறது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.</p><p> 

சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார் நடிகை கோமதி ப்ரியா. சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுவார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9eecbcf7-4c08-44e3-8b55-26db0b302e2d/26-6a51dd4d7b48b.webp' /></p><p>அந்த வகையில் தற்போது சேலையில் எடுத்துக்கொண்ட அசத்தலான போட்டோஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ நீங்களே பாருங்க:</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DanObiryAIM/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DanObiryAIM/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DanObiryAIM/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Gomathi Priya (@priyabalakumaran_gp)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-07-11T06:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் சினிமா நடிகர்களின் முதல் ரூ. 50 கோடி வசூல் செய்த திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/tamil-cinema-actors-first-50-crore-movies-list-1783741201"></link>
            <id>https://cineulagam.com/article/tamil-cinema-actors-first-50-crore-movies-list-1783741201</id>
            <summary type="text">வசூல்&amp;nbsp;ஒவ்வொரு புதிய திரைப்படத்தின் வசூல் விவரங்களை தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். தயாரிப்பு நிறுவனங்களும் ரசிகர்கள் எதிர்ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>வசூல்&nbsp;</h2><p>ஒவ்வொரு புதிய திரைப்படத்தின் வசூல் விவரங்களை தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். தயாரிப்பு நிறுவனங்களும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் வசூல் விவரங்கள் குறித்து அறிவிப்பை வெளியிடுவதை தற்போது வழக்கமாக்கிவிட்டனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b4361f4-f06f-4768-b1ce-984bfe358ca3/26-6a51bb1648693.webp' /></p><p></p><p>அதுவும் முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை, சமூக வலைத்தளங்களில் அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள் வசூல் பற்றி பேசி சண்டையே போடுவார்கள். அப்படி வசூல் என்பது படத்தின் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.</p><h2>முதல் ரூ. 50 கோடி வசூல்</h2><p> </p><p>

இந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸில் ரூ. 50 கோடி, ரூ. 100 <a href="https://www.youtube.com/watch?v=1LKorLUYf30" target="_blank">கோடி</a>, ரூ. 500 கோடி என்பது மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e83739ee-08e6-4614-845f-6cb5b9150cbb/26-6a51bb1592a04.webp' /></p><p>அப்படி தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களின் திரை வாழ்க்கையில் ரூ. 50 கோடி வசூல் செய்த முதல் திரைப்படம் என்ன என்பதை பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம். </p><ul><li>

ரஜினிகாந்த் - படையப்பா: ரூ. 60 கோடி</li><li>
கமல் ஹாசன் - இந்தியன்: ரூ. 50 கோடி</li><li> 
விஜய் - வேலாயுதம்: ரூ. 60+ கோடி
</li><li>அஜித் - மங்காத்தா: ரூ. 86 கோடி
</li><li>சூர்யா - அயன்: ரூ. 60+ கோடி
</li><li>விக்ரம் - அந்நியன்: ரூ. 60+ கோடி
</li><li>தனுஷ் - வேலையில்லா பட்டதாரி: ரூ. 50+ கோடி</li><li>சிம்பு, விஜய் சேதுபதி - செக்க சிவந்த வானம்: ரூ. 90+ கோடி
</li><li>சிவகார்த்திகேயன் - ரஜினி முருகன்: ரூ. 60 கோடி</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bd2d9d9-c2f2-4ec1-a452-8945ee13c20f/26-6a51bb14da045.webp' /></p>]]></content>
            <updated>2026-07-11T06:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றின் விமான நிலையத்தில் சிக்கிய இலங்கை குடும்பம்! அம்பலமான பெரும் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-family-arrested-in-thailand-airport-1783750515"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-family-arrested-in-thailand-airport-1783750515</id>
            <summary type="text">

பெங்கொக்கில் உள்ள டான் முவாங் சர்வதேச விமான நிலையத்தில், மலேசிய பயண ஆவணங்களைப் பயன்படுத்தி ஒரு இலங்கை குடும்பத்தை கஜகஸ்தானுக்குக் கடத்த முயன்ற சர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

பெங்கொக்கில் உள்ள டான் முவாங் சர்வதேச விமான நிலையத்தில், மலேசிய பயண ஆவணங்களைப் பயன்படுத்தி ஒரு இலங்கை குடும்பத்தை கஜகஸ்தானுக்குக் கடத்த முயன்ற சர்வதேச கடத்தல் கும்பலின் திட்டத்தை தாய்லாந்து குடிவரவு அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.
</p><p>
அந்நாட்டு ஊடகமொன்றின் தகவலின்படி, இந்த இலங்கை குடும்பம் முதலில் தங்கள் சொந்த கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி தாய்லாந்திற்குள் நுழைந்து, பின்னர் தரை வழியாக மலேசியாவிற்குப் பயணம் செய்துள்ளது.
</p><p>
அதன் பிறகு, அவர்கள் மலேசிய கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி மீண்டும் தாய்லாந்திற்குள் நுழைந்து கஜகஸ்தானுக்கு விமானம் மூலம் செல்ல முயன்றுள்ளனர். அப்போது அவர்களுடன் சென்ற ஒரு மலேசியப் பெண், அங்கிருந்த இரண்டு குழந்தைகளுக்கும் தானே உயிரியல் தாய் என்று பொய்யாகக் கூறியுள்ளார்.</p><p></p><h2>சர்வதேச கடத்தல் கும்பல்</h2><p>

இருப்பினும், விமான நிறுவன அதிகாரிகள் அவர்களின் பயண ஆவணங்களில் இருந்த முரண்பாடுகளைக் கண்டறிந்து அவர்களை விமானத்தில் ஏற அனுமதிக்காததால், அக்குழுவினர் தங்களின் பயண வழியை மியான்மருக்கு மாற்றியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5aa4ee46-f12c-439b-b47f-4411068af6df/26-6a51e3fd7ea49.webp' /></p><p><i>Image Credit:&nbsp;Bangkok Post</i></p><p> </p><p>

இந்த விவகாரம் குறித்து குடிவரவுத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு பின்னர் ஒரு நாளில், அக்குழுவினர் மியான்மரிலிருந்து டான் முவாங் சர்வதேச விமான நிலையம் வழியாக கஜகஸ்தானுக்குச் செல்ல முயன்றபோது, குடிவரவு அதிகாரிகள் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.</p><p>

பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இலங்கைப் பெண்ணும் அவரது மூத்த பிள்ளையும் மற்றவர்களுக்குச் சொந்தமான மலேசிய கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதும், இளைய பிள்ளை சட்டப்பூர்வமாக வழங்கப்பட்ட மலேசிய கடவுச்சீட்டைப் பயன்படுத்திப் பயணம் செய்ததும் தெரியவந்துள்ளது.
</p><p>
மலேசியாவில் செயல்பட்டு வரும் இந்த குறிப்பிட்ட சர்வதேச கடத்தல் கும்பல் குறித்து பிரித்தானியா, கனடா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் ஏற்கனவே பிராந்திய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாக கூறப்படுகிறது.</p><h2>மலேசிய கடவுச்சீட்டு</h2><p>
இந்த கும்பல் வெளிநாட்டு குழந்தைகளை மலேசியாவிற்குள் கடத்தி வந்து, போலி பிறப்புச் சான்றிதழ்களைப் பெற்று, அதன் மூலம் அதிகாரப்பூர்வ மலேசிய கடவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/322a8b57-8dda-420b-8eb3-1acd3770f073/26-6a51e3fca61c9.webp' /></p><p><i>Image Credit:&nbsp;The Straits Times</i></p><p> 

இதன்படி, இந்த கடவுச்சீட்டுகள் மூலம் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு விசா இன்றி நுழைய முடியும் என்பதை அவர்கள் சாதகமாகப் பயன்படுத்தியுள்ளனர்.</p><p>

தற்போது, பயண ஆவணங்களைத் தவறாகப் பயன்படுத்தியது மற்றும் குற்றச் சதி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இரண்டு வயது வந்த பெண்களையும் தாய்லாந்து அதிகாரிகள் கைது செய்துள்ளனர். </p><p>

இதேவேளை, நல அதிகாரிகளின் ஆய்வுக்குப் பிறகு, அந்த இரு சிறு பிள்ளைகளும் மனிதக் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p> 

இந்த நிலையில், குறித்த பிள்ளைகள் இருவரும் தற்போது பாதுகாப்பான பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், இலங்கைத் தூதரகம் மூலம் அவர்களைப் பாதுகாப்பாகத் தாயகம் திருப்புவதற்கான நடவடிக்கைகளைத் தாய்லாந்து அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக தெரியவருகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T06:38:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம்! சந்தேகநபராக மீண்டும் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-minister-duminda-named-as-suspect-again-1783751633"></link>
            <id>https://tamilwin.com/article/former-minister-duminda-named-as-suspect-again-1783751633</id>
            <summary type="text">ஹெவ்லொக் டவுண் குடியிருப்புத் தொகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹெவ்லொக் டவுண் குடியிருப்புத் தொகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, மீண்டும் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.
</p><p>
கடந்த 2025ஆம் வருடம் ஹெவ்லொக் டவுணில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இருந்து தங்கமுலாம் பூசப்பட்ட டி56 ரக துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது.</p><p>

அது தொடர்பான விசாரணைகளின் முடிவில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவும் சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலின் பின்னர் பிணை வழங்கப்பட்டிருந்தார்.</p><p> அத்துடன் வழக்கின் நான்காவது சந்தேகநபராகவும் பெயரிடப்பட்டிருந்தார்.

எனினும் போதிய சாட்சியங்கள் இல்லாததால் வழக்கில் இருந்து அவரை விடுவிக்க கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை 29ஆம் திகதி நடவடிக்கை எடுத்திருந்தது.</p><p></p><h2>சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள துமிந்த</h2><p>

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தற்போது மீண்டும் ஒரு சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார். </p><p>கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (10) பதில் நீதவான் ரவி மத்துகம முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கைகள் ஏற்கனவே சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும், இந்த வழக்கில் நான்காவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டிருந்த துமிந்த திசாநாயக்க, போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.</p><p> இருப்பினும், சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களின் பேரில் இந்த வழக்கில் இரண்டாவது சந்தேகநபரிடமிருந்து பெறப்பட்ட கூடுதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், நான்காவது சந்தேக நபரும் இந்தச் சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ளார் என்பதற்கு தற்போது போதுமான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று புலனாய்வு அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8b51096-d531-455f-a9c4-b73bf1a5426b/26-6a51e3d3f1a46.webp' /></p><h2>விரிவான விசாரணை</h2><p>
</p><p>
முன்னதாக வெளிப்படுத்தப்பட்ட சாட்சியங்கள், குறித்த தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியை அப்புறப்படுத்துவதில் நான்காவது சந்தேகநபர் ஈடுபட்டிருந்தார் என்பதைக் குறிப்பிட்டிருந்த போதிலும், பின்னர் நடத்தப்பட்ட விரிவான விசாரணைகளின் போது, ​​இரண்டாவது சந்தேக நபர் அதனைத் தன் வசம் வைத்திருக்க உதவியது தெரியவந்துள்ளது. </p><p>அதன்படி, பயங்கரவாத விசாரணைப் பிரிவால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மேலதிக அறிக்கையைப் பரிசீலித்த பின்னர், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை இந்த வழக்கில் மீண்டும் ஒரு சந்தேக நபராக பெயரிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களம் தனது விசாரணைகளை தற்போது முடித்துவிட்டதாகவும், இது தொடர்பாக எதிர்காலத்தில் உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.
</p><p>
துமிந்த திசாநாயக்கவுக்காக முன்னிலையான வழக்கறிஞர், போதிய சாட்சியங்கள் இல்லாததால் கடந்த ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி தனது கட்சிக்காரரை விடுவிக்க நீதவான் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்திருந்ததாகக் கூறினார். எனவே, விசாரணைப் பிரிவுகள் எடுத்த இந்த புதிய முடிவை உயர் நீதிமன்றத்தில் எதிர்த்து மேல்முறையீடு செய்ய உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><p>

அனைத்து வாதங்களையும் பரிசீலித்த பதில் நீதவான் ரவி மத்துகம, துமிந்த திசாநாயக்கவை தலா ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் பேரில் விடுவிக்க உத்தரவிட்டார். சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களின்படி நடத்தப்பட்டு வரும் விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கைகளைப் பரிசீலிப்பதற்காக, இந்த வழக்கு டிசம்பர் 11 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T06:34:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[29 பேரை பலியெடுத்த நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - 5 இலட்சம் இழப்பீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-leaves-29-dead-1783751262"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-leaves-29-dead-1783751262</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தில் உயிரிழந்த சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபா வீதம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தில் உயிரிழந்த சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபா வீதம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மூலமாக முதற்கட்ட நிவாரணமாக குறித்த இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>

நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தில் உயிரிழந்த சிறை உத்தியோகத்தர்களின் வாரிசுகள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு குறித்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>
பதவி உயர்வுடன் இழப்பீடு தொகை</h2><p>
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் எட்டுப்பேர் உயிரிழந்துள்ளனர்.

அவர்களின் மறைவுக்குப் பின் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான பதவி உயர்வின் அடிப்படையிலான ஓய்வூதியங்களை அவர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் வழங்குவதற்கும் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f96578d5-7237-41d7-a4c1-4fa8c8cae6ac/26-6a51e3cbe5c32.webp' /></p><p>
</p><p>
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஜெயிலர் எஸ்.எச். சந்திரவன்ச, எஸ்.டி. அபேவர்தன, பி.என். தரங்க, ஏ.டி. தரங்க, டி.டபிள்யூ. புஷ்பகுமார, ஆர்.ஆர். சஞ்சீவ, டி.ஆர். திலகசிறி மற்றும் எம்.ஜி. உபாலி ஆகிய சிறைக்காவலர்களும் நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்துள்ளனர். </p><p> 

பணியில் இருந்தபோது கொல்லப்பட்ட மேற்குறித்த ஏழு சிறைக்காவலர்களும் மரணத்தின் பின்னர் சிறைச்சாலை சார்ஜென்ட் தரத்துக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
சிறைச்சாலை ஜெயிலர் எஸ்.எச். சந்திரவன்ச, இரண்டாம் வகுப்புப் பதவியிலிருந்து முதலாம் தர ஜெயிலர் நிலைக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த பதவி உயர்வுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இறந்த திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T06:33:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் முற்றுகையிடப்பட்ட வாவி ; அதிகாலையில் அதிரடி காட்டிய அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/officials-launch-early-morning-crackdown-1783738108"></link>
            <id>https://jvpnews.com/article/officials-launch-early-morning-crackdown-1783738108</id>
            <summary type="text">கொக்கட்டிச்சோலையில் இருந்து ஆரையம்பதி பிரதேசத்துக்கு காஞ்சிரம்குடா வாவி ஊடாக மீன்பிடி தோணியில் கசிப்பு கடத்தி சென்று ஒருவரை 150 லீற்றர் கசிப்புடன் வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">கொக்கட்டிச்சோலையில் இருந்து ஆரையம்பதி பிரதேசத்துக்கு காஞ்சிரம்குடா வாவி ஊடாக மீன்பிடி தோணியில் கசிப்பு கடத்தி சென்று ஒருவரை 150 லீற்றர் கசிப்புடன் வெள்ளிக்கிழமை (10) அதிகாலையில் கஞ்சரம்குடாவில் வைத்து 60 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify;">

விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி&nbsp; தலைமையில் விசேட புலனாய்வு பிரிவினர் இணைந்து சம்பவ தினமான வெள்ளிக்கிழமை (10) அதிகாலை 4 மணிக்கு குறித்த வாவியை முற்றுகையிட்டு சோதனையில் ஈடுபட்டனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7e12a17-3c20-4624-abce-10c240351f76/26-6a51aefe7853e.webp' /></p><p style="text-align: justify;">

இதன்போது தோணியில் கலன்களில் எடுத்துச் செல்ல முற்பட்ட 150 லீற்றர் கசிப்புடன் 60 வயதுடைய ஆரையம்பதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய மீன்பிடி தோணி ஒன்றையும் மீட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify;">
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.</p>]]></content>
            <updated>2026-07-11T06:31:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[தினமும் ஒரு கப் வெண்டைக்காய் நீர்.., கிடைக்கும் நன்மைகள் என்னென்ன ?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/health-benefits-of-drinking-lady-s-finger-water-1783751301"></link>
            <id>https://news.lankasri.com/article/health-benefits-of-drinking-lady-s-finger-water-1783751301</id>
            <summary type="text">வெண்டைக்காய் குறைந்த கலோரியும், அதிக நார்ச்சத்தும் கொண்ட ஒரு சிறந்த காய்கறி ஆகும். 

இது செரிமானத்தை மேம்படுத்துதல், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெண்டைக்காய் குறைந்த கலோரியும், அதிக நார்ச்சத்தும் கொண்ட ஒரு சிறந்த காய்கறி ஆகும். </p><p>

இது செரிமானத்தை மேம்படுத்துதல், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல், இதய ஆரோக்கியத்தை பாதுகாத்தல், மற்றும் எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் கே போன்ற பல முக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
</p><p>
அதன்படி, இரவு முழுவதும் வெண்டைக்காயை தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்து வருவதால் பல நன்மைகள் கிடைக்கும்.</p><p>

<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c8000ca-a469-4df0-aced-86a9f16a1745/26-6a51e28778549.webp' />
</p><p>
அந்தவகையில், ஒரு மாதத்திற்கு தினமும் ஒரு கப் வெண்டைக்காய் நீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.</p><p></p><h2>கிடைக்கும் நன்மைகள் </h2><p><b>உடல் சோர்வு நீங்கும்-</b> எலுமிச்சை சேர்த்த வெண்டைக்காய் நீரை தொடர்ந்து ஒரு மாதம் குடித்தால் உடல் சோர்வு குறைந்து, சுறுசுறுப்பு அதிகரிக்க உதவலாம்.
</p><p><b>
சிறுநீரகங்களுக்கு நல்லது- </b>வெண்டைக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சிறுநீரக செல்களை பாதுகாக்க உதவக்கூடும். இருப்பினும், இதற்கான மனிதர்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இன்னும் குறைவாகவே உள்ளன.
</p><p><b>
இதய ஆரோக்கியம்- </b>வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்து மற்றும் கோழைப் பொருள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4db154d1-ed8d-4570-9340-a3bd76d1ed35/26-6a51e2882cf48.webp' /></p><p>
</p><p><b>
இரத்த சர்க்கரை&nbsp;கட்டுப்பாடு- </b>வெண்டைக்காய் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், இன்சுலின் எதிர்ப்புத்தன்மையை குறைக்கவும் உதவக்கூடும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
</p><p><b>
கல்லீரல் சுத்தம்-</b> வெண்டைக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கல்லீரலை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாத்து, அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்.</p><p><b>

நோய் எதிர்ப்பு சக்தி- </b>வைட்டமின் A, C, K, ஃபோலேட் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் இருப்பதால், நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவக்கூடும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T06:29:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவசர அழைப்பு இலக்கம் தற்காலிகமாக செயலிழப்பு - பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-fire-brigade-emergency-hotline-call-117-1783750651"></link>
            <id>https://ibctamil.com/article/new-fire-brigade-emergency-hotline-call-117-1783750651</id>
            <summary type="text">நாட்டு மக்களுக்கு தீயணைப்பு சேவைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.தீயணைப்பு சேவைகள் திணைக்களத்தின் அவசர அழைப்பு இலக்கம் தற்காலிகமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டு மக்களுக்கு தீயணைப்பு சேவைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.</p><p>தீயணைப்பு சேவைகள் திணைக்களத்தின் அவசர அழைப்பு இலக்கம் தற்காலிகமாக செயலிழந்துள்ளதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது. </p><p>

எனவே, தீ விபத்துகளைப் புகாரளிப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற அவசர இலக்கத்திற்கு அழைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b3e28b3-a438-4eec-a15c-9166bfff8fe5/26-6a51e28aea394.webp' /></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T06:28:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[246 பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானி - சற்றுமுன் கட்டுநாயக்கவில் விமானம் தரையிறக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bird-attacked-on-sri-lankan-flight-1783742929"></link>
            <id>https://tamilwin.com/article/bird-attacked-on-sri-lankan-flight-1783742929</id>
            <summary type="text">புதிய இணைப்புகட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இஸ்தான்புல்லுக்குப் புறப்பட்ட விமானம் ஒன்று, பறவை மோதியதில் 246 பயணிகளுடன் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இஸ்தான்புல்லுக்குப் புறப்பட்ட விமானம் ஒன்று, பறவை மோதியதில் 246 பயணிகளுடன் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.</p><p>துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK-731 இந்த விபத்தைச் சந்தித்ததுடன், பறவை மோதியதன் காரணமாகத் தனது பயணத்தைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3>

246 பயணிகளுடன் தரையிறக்கம்</h3><p>தரையிறங்குவதற்கு ஏற்ற அளவிற்கு எரிபொருள் இருப்பு குறையும் வரை, அந்த விமானம் நீர்கொழும்பு - காயல் அருகே உள்ள கடல் பகுதியில் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் குறைந்த வேகத்தில் பயணித்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81f99886-e99c-4da1-a01d-bd426c7c1092/26-6a51dec3552a4.webp' /></p><p> 

தரையிறங்குவதற்கு ஏற்ற நிலையை அடைந்த பின்னர், அது காலை 10.21 மணிக்குத் தரையிறக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த விமானத்தில் 246 பயணிகள் மற்றும் 10 பணியாளர்கள் இருந்ததாகவும், ஏர்பஸ் A-330 ரக விமானம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இயக்குநர் உள்ளிட்ட ஒரு குழுவும் இந்த விமானத்தில் பயணித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>


விமானம் இன்று காலை 7.07 மணிக்கு கட்டுநாயக்கவிலிருந்து இஸ்தான்புல்லுக்கான 6 மணி நேரப் பயணத்திற்காகப் புறப்பட்டுள்ளதுடன், அதுவரை விமானத்தில் 80,000 லீற்றர் எரிபொருள் நிரப்பப்பட்டிருந்தது.</p><h4>

எரிபொருள் குறையும் வரை பறந்த விமானம்</h4><p>
விமானம் புறப்பட்ட உடனேயே பறவை மோதியது, இதுகுறித்து விமானி கட்டுநாயக்க விமான நிலையத்திற்குத் தகவல் தெரிவித்திருந்தார்.
</p><p>
விமானத்தில் எரிபொருள் இருப்புடன் மீண்டும் தரையிறங்குவது சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் சமீபத்திய விதிகளுக்கு எதிரானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00298c61-25a5-4976-8074-f52ebaf40ec0/26-6a51defb38dc8.webp' /></p><p>
</p><p>
இதன் விளைவாக, தரையிறங்குவதற்கு ஏற்ற நிலைக்கு எரிபொருள் அளவு குறையும் வரை, விமானம் நீர்கொழும்பு கடற்காயலுக்கு மேலே 7,000 அடி உயரத்தில் மணிக்கு 253 நாட்ஸ் வேகத்தில் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் பறக்க வேண்டியிருந்தது.
</p><p>
தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்களை வரவழைத்து, அவசரகாலத் தரையிறக்கத்திற்காக விமான நிலையமும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் இதன்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>கட்டுநாயக்காவில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட விமானத்தில் பறவை மோதிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. </p><p>

இன்று காலை கட்டுநாயக்காவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட A330 ரக பயணிகள் விமானத்திலேயே இவ்வாறு பறவை ஒன்று மோதியுள்ளது. </p><p>

இதன் காரணமாக, அந்த விமானம் தற்போது சிலாபம் வான்பரப்பில் மிகவும் தாழ்வாகப் பறந்து வட்டமடித்துள்ளது. </p><h2><b>மீண்டும் தரையிறக்கம் </b></h2><p> அத்துடன் எரிபொருளை குறைத்து, பாதுகாப்பாக விமானம் தரையிறங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/112a1042-c6e1-4a5d-8c84-dac19164099f/26-6a51c400d694e.webp' /></p><p> </p>]]></content>
            <updated>2026-07-11T06:28:14+00:00</updated>
        </entry>
    </feed>
