<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-17T12:46:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[லார்ட்ஸில் ஓய்வை அறிவிக்க உள்ள ரோஹித் சர்மா? போட்டியை காண வந்துள்ள பெற்றோர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rohit-sharma-to-retire-in-lords-parent-came-london-1784292071"></link>
            <id>https://news.lankasri.com/article/rohit-sharma-to-retire-in-lords-parent-came-london-1784292071</id>
            <summary type="text">லார்ட்ஸில் நடைபெற உள்ள போட்டியில் ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்க உள்ளதாகவும், அந்த போட்டியை காண அவரது பெற்றோர்கள் லண்டன் வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>லார்ட்ஸில் நடைபெற உள்ள போட்டியில் ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்க உள்ளதாகவும், அந்த போட்டியை காண அவரது பெற்றோர்கள் லண்டன் வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. </p><h3>

ஓய்வை அறிவிக்க உள்ள ரோஹித் சர்மா?</h3><p>

இந்தியா மற்றும் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 டி20 மற்றும் 3 ODI போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. </p><p>

ஜூலை 19 ஆம் திகதி நடைபெற லார்ட்ஸில் நடைபெற உள்ள 3வது ODI போட்டியில் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd3e1cda-0155-4c5b-898d-4bf485e2f923/26-6a5a22e90abe9.webp' /></p><p>
இங்கிலாந்திற்கான எதிரான முதல் 2 ODI போட்டிகளில் 11 மற்றும் 26 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தார். 

கடைசியாக விளையாடிய 8 ஒருநாள் போட்டிகளில், ஒரு அரைசதம் உட்பட 241 ஓட்டங்களை மட்டுமே எடுத்துள்ளார். </p><p>

ஒருபக்கம் இவ்வாறு ஓட்டங்களை குவிக்க திணறி வரும் நிலையில், 2027 உலக கிண்ணத்திற்கான இந்திய அணியில் ரோஹித் சர்மாவிற்கு பிசிசிஐ வாய்ப்பளிக்க போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p></p><p>

இதன் காரணமாக அதிருப்தியில் உள்ள ரோஹித் சர்மா லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியுடன் ஓய்வை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.</p><h3> 

 லண்டன் வந்துள்ள பெற்றோர்கள்</h3><p> 

ரோஹித் சர்மாவின் இறுதிப்போட்டியை காண அவரது பெற்றோர்களான குருநாத் ஷர்மா மற்றும் பூர்ணிமா ஷர்மா ஆகியோர் லண்டனுக்கு வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/095aaf68-6560-4728-b6e0-9a1d123d49df/26-6a5a22e9b27cf.webp' /></p><p>இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி, " உண்மை என்னவென்றால், ரோஹித் சர்மாவும் தேர்வுக்குழுவினரும் பேசினார்கள். இப்போதுதான் அங்கிருந்து வருகிறேன். ஓய்வு பெறுவாரா என்பது உண்மையா, வதந்தியா என்று தெரியாது.மேலும் அவருக்கு 40 வயதை நெருங்குகிறது" என தெரிவித்துள்ளார். </p><p>

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் பார்திவ் படேல், "ரோஹித் சர்மா லார்ட்ஸ் போட்டியுடன் ஓய்வு பெறுவது உண்மையாக இருந்தால் அதனை சதத்துடன் அவர் விடைபெற வேண்டும்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2 ஐசிசி கிண்ணத்தை வென்றுள்ளது. </p><p> 

2023 ODI உலக கிண்ணத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவிய நிலையில், 2027 உலக கிண்ணத்தை வென்று கொடுத்து விட்டு ஓய்வை அறிவிக்க விரும்பினார். </p><p>

2024 T20 உலக கிண்ணத்தை வென்றதும் சர்வதேச T20 போட்டிகளில் ஓய்வை அறிவித்த ரோஹித் சர்மா, கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்தார்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T12:41:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருந்தொகை பணம் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் வர்த்தகர் கைது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drug-dealer-arrested-with-ice-and-cannabis-1784288423"></link>
            <id>https://tamilwin.com/article/drug-dealer-arrested-with-ice-and-cannabis-1784288423</id>
            <summary type="text">அம்பாறை - இகினியாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரகஹகெலே பகுதியில்
நீண்டகாலமாக இளைஞர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு
வந்த சந்தேக ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை - இகினியாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரகஹகெலே பகுதியில்
நீண்டகாலமாக இளைஞர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு
வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>இந்த கைது நடவடிக்கை நேற்று(16.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
அம்பாறை மாவட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த கைது
நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>பொலிஸ் விசாரணை</h2><p>
</p><p>
</p><p>அவர்
விற்பனைக்காக ஐஸ் போதைப்பொருளைச் சிறிய பொட்டலங்களாகத் தயாரித்துக்
கொண்டிருந்த வேளையில், பொலிஸாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>இதன்போது, 4,400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் , கஞ்சா&nbsp; 30 கிராம், 21,000 ரூபா பணம் மற்றும் அளவிடும் தராசு போன்ற பொருட்கள் பொலிஸாரால்
கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2e6eb74-5bce-4f5b-990a-fd3204be2d61/26-6a5a1a8eb2ac1.webp' /></p><p>

சந்தேக நபர் இளைஞர்களைப் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாக்கி, இந்த
வியாபாரத்தை மேற்கொண்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து
தெரியவந்துள்ளது. </p><p>இதனையடுத்து சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக
இகினியாகல பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T12:38:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[17 வருடங்களாக தொடரும் போராட்டம் - காணிகளை விடுவிக்க மக்கள் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-s-protest-in-the-northern-region-1784290233"></link>
            <id>https://tamilwin.com/article/people-s-protest-in-the-northern-region-1784290233</id>
            <summary type="text">வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க
கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் &quot;கொமோண்டோ &quot; பங்களா முன்பாக அமைதி ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க
கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக அமைதி போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
</p><p>இந்த போராட்டமானது இன்று(17.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>அமைதிப் போராட்டம்</h2><p>பலாலி - மயிலிட்டியைச் சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத
காலப்பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர்,
அந்தப் பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.
</p><p>
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அந்தப் பகுதிகளில் இருந்து
பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத காரணத்தினால், அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது..</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66993b38-a972-48e7-952c-85df460fb186/26-6a5a1e2990c40.webp' /></p><p>இந்த நிலையில் தமது 650 ஏக்கர் வரையிலான காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக
காணி உரிமையாளர்கள் போராடி வருகின்றனர்.</p><p>இதன் அடிப்படையில் காணிகளை விடுவிக்குமாறு கோரி ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் போராட்டங்களை
முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில், இன்றைய தினம் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T12:34:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஜய்யின் ஜனநாயகன் குறித்த வந்த சூப்பர் அப்டேட்... என்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/new-update-about-vijay-jananayagan-movie-1784291242"></link>
            <id>https://cineulagam.com/article/new-update-about-vijay-jananayagan-movie-1784291242</id>
            <summary type="text">ஜனநாயகன்2026 ஜனவரி மாதமே ரசிகர்கள் கொண்டாடியிருக்க வேண்டிய படம் ஜனநாயகன். ரிலிஸிற்கு எல்லாம் தயாரான நிலையில் தணிக்கை சான்றிதழ் பெற தாமதமானதால் ரிலீஸ் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜனநாயகன்</h2><p>2026 ஜனவரி மாதமே ரசிகர்கள் கொண்டாடியிருக்க வேண்டிய படம் ஜனநாயகன். ரிலிஸிற்கு எல்லாம் தயாரான நிலையில் தணிக்கை சான்றிதழ் பெற தாமதமானதால் ரிலீஸ் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.</p><p>அந்த பட வேலைகளுக்கு இடையில் தளபதி விஜய் அரசியலில் களமிறங்கி அதற்காக கடினமாக உழைக்க இப்போது ஆட்சியை பிடித்து சிறந்த ஆட்சி நடத்தி வருகிறார். ஆட்சி அமைத்ததில் இருந்து தமிழகத்தில் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba2d4a25-a1d1-49cf-b916-9f7f2a904123/26-6a5a21298512f.webp' /></p><p>விஜய்யை முதலமைச்சராக மக்கள் கொண்டாடி வரும் நிலையில் அவரது சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்ட செய்தி சில தினங்களுக்கு முன் வந்தது, வேறென்ன ஜனநாயகன் பட ரிலீஸ் செய்தி தான்.</p><h2>அப்டேட்</h2><p>படம் வரும் ஜுலை 23ம் தேதி மாஸாக வெளியாக உள்ளது. இந்தியாவை தாண்டி 30 நாடுகளில் மொத்தமாக 7000 முதல் 8000 திரைகளில் படம் ரிலிஸ் ஆக இருக்கிறதாம்.</p><p>அதோடு படத்தில் நிறைய விஷயங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், ரசிகர்களுக்கு அது கொண்டாட்டமாக அமையும் என்றும் ஜனநாயகன் பட தயாரிப்பாளர் கூறியுள்ளார். தற்போது படம் குறித்து என்ன தகவல் என்றால், அடியே என் பூந்தேனே என்ற பாடல் இன்று வெளியாக உள்ளதாம்.</p>]]></content>
            <updated>2026-07-17T12:34:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நவகமுவ துப்பாக்கிச் சூடு : விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள காவல்துறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/navagamuwa-shooting-26-year-man-dies-1784287988"></link>
            <id>https://ibctamil.com/article/navagamuwa-shooting-26-year-man-dies-1784287988</id>
            <summary type="text">கொழும்பு நவகமுவவில் துப்பாக்கி&amp;nbsp; சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்த விசாரணைகளை காவல்துறை தீவிரப்படு்ததியுள்ளது.&amp;nbsp;நவகமுவ காவல்துற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு நவகமுவவில் துப்பாக்கி&nbsp; சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்த விசாரணைகளை காவல்துறை தீவிரப்படு்ததியுள்ளது.&nbsp;</p><p>நவகமுவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட கொரதொட, வந்துரம்முல்ல சமனல உயன பகுதியில் நேற்று (16.07.2026) நடைபெற்றுள்ளது.</p><p>குறித்த இளைஞன் கடுவெல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவராவார் என காவல்துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><h2>இளைஞன் பலி</h2><p>சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8a37bc2-f2ce-4093-a9d8-5e707bfda0a7/26-6a5a1f5d3f937.webp' /></p><p>போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய தகராறே இந்த சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என காவலதுறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் பிரதேசவாசிகளால் நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T12:33:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண் தோழிகளுக்காக விஜய் ரயிலில் போட்ட சண்டை!! நடிகர் சொன்ன ரகசியம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/sanjeev-venkat-says-vijay-fought-on-train-issues-1784289906"></link>
            <id>https://viduppu.com/article/sanjeev-venkat-says-vijay-fought-on-train-issues-1784289906</id>
            <summary type="text">நடிகரும் முதலமைச்சர் விஜய்யின் நண்பருமான சஞ்சீவ் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், சுற்றுலா சென்றபோது விஜய் செய்த செயல் பற்றி பகிர்ந்துள்ளார். ரயிலில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகரும் முதலமைச்சர் விஜய்யின் நண்பருமான சஞ்சீவ் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், சுற்றுலா சென்றபோது விஜய் செய்த செயல் பற்றி பகிர்ந்துள்ளார். </p><h2>ரயிலில் போட்ட சண்டை</h2><p>அதில், நாங்க எல்லோரும் கல்லூரியில் இருந்து சுற்றுலா சென்றபோது நான் ஒரு பெண்ணை காதலித்தேன். நானும் அந்த பொண்ணும் வேறுவேறு கோட்சில் அமர்ந்து இருந்தோம். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19d5f0d4-4595-4faa-be09-52698b78b6b3/26-6a5a1a753182e.webp' /></p><p>ரயில் புறப்பட்டதும் சரி, அந்த பெண்ணுடன் போய் உட்காரலாம் என்று சென்றால் என் நண்பர்கள் எல்லோரும் அவருடன் உட்கார்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். எனக்கு அதைப் பார்த்ததும் இதயமே நொறுங்கிவிட்டது. </p><p>ஜாலியாக சென்றுக்கொண்டிருந்த நிலையில் ரயிலானது மகாராஷ்ட்ராவில் ஜல்னா ரயில் நிலையத்திற்கு சென்றபோது, ஏதோ டமால் டுமீல் என்று ஒரே சத்தம். என்ன நடக்கிறது என்று புரியவில்லை. என் தோழன் ஒருவர் அங்கிருந்து ஓடி வந்து, முந்தைய ஸ்டேஷனில் ரயில் நிற்கும்போது யாரோ இருவருக்கு சண்டை என்றான். </p><p>சண்டை போட்ட நபர் நாங்கள் இருந்த கோட்சிலிருந்து இறங்கியதை கண்ட மற்றொரு நபர், தனக்கு தெரிந்தவர்களுக்கு போன் செய்து, விஷயத்தை சொல்லி எங்கள் பெட்டி என்ணையும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f4f1ebf-1f17-4475-b40e-11fbbdc6c7ec/26-6a5a1a74813ce.webp' /></p><p> கிட்டத்தட்ட 60, 70 பேர் உருட்டுக் கட்டையுடன் வந்தார்கள். நாங்கள் படித்த விஸ்காம் துறையில் இருபாலர் என்பதால் எங்களுடன் அந்த சுற்றுலாவிற்கு பெண்களும் வந்தனர். அப்போது எங்களுக்கு 17, 18 வயது. வந்தவர்கள் எங்களை அடிக்கிறார்கள், மேல் பெர்த்திலிருந்து விஜய் இரு இருக்கையின் மேல் கையை வைத்து எங்களை அடிக்க வந்த ஒருவரை படத்தில் வருவது போல் ஓங்கி ஒரு மிதி விட்டார். </p><p>அவ்வளவு தான் அந்த நபர் கீழே விழுந்து திரும்ப வருவதற்குள் நாங்கள் அங்கிருந்து வேறு இடத்திற்கு சென்றோம். அதன்பின் போலிசார் அடுத்த ரயில் நிலையத்திற்கு வந்துவிட்டார்கள். அது வாழ்வா சாவா சூழலாக இருந்தது. எங்களை காப்பாற்றிக் கொள்ள விஜய் சண்டை செய்தார், நான் எனக்கு தெரிந்தளவிற்கு அனைவரையும் தள்லிவிட்டேன் என்று கூறியிருக்கிறார் சஞ்சீவ்.</p>]]></content>
            <updated>2026-07-17T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[10,000 mAh பேட்டரி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் OnePlus மற்றும் Oppo? வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/source-says-oneplus-and-oppo-bring-10000-mah-phone-1784291165"></link>
            <id>https://news.lankasri.com/article/source-says-oneplus-and-oppo-bring-10000-mah-phone-1784291165</id>
            <summary type="text">10,000 mAh பேட்டரி ஸ்மார்ட்போனை OnePlus மற்றும் Oppo நிறுவனங்கள் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிய வந்துள்ளது.&amp;nbsp;Oppo, OnePlus 

இந்தியாவில் சமீபத்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>10,000 mAh பேட்டரி ஸ்மார்ட்போனை OnePlus மற்றும் Oppo நிறுவனங்கள் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிய வந்துள்ளது.&nbsp;</p><h2>Oppo, OnePlus </h2><p>

இந்தியாவில் சமீபத்திய பெரிய பேட்டரி கொண்ட Oppo A6 Pro 5G ஸ்மார்ட்போனை Oppo நிறுவனம் அறிமுகப்படுத்தியது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d76e3f27-5f3c-4673-b6bd-a5a459aee59f/26-6a5a2065407ff.webp' />&nbsp;</p><p></p><p>கடந்த ஏப்ரல் மாதம் OnePlus நிறுவனமும் பெரிய பேட்டரி கொண்ட OnePlus Nord 6 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது.</p><p> 

அந்நிறுவனத்தின் இந்த மொடல் ஸ்மார்ட்போன்தான் OnePlus-யின் மிகப்பெரிய பேட்டரி (9000 mAh) கொண்டதாக இருந்தது.</p><p> 

இந்த நிலையில், Oppo மற்றும் OnePlus நிறுவனங்கள் 10,000 mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><h2>ஆரம்பக்கட்ட ஆய்வு
</h2><p>
 
சீன சமூக ஊடகத் தளமான Weibo-வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும், OnePlus போன் தற்போது ஆரம்பக்கட்ட ஆய்வு நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. </p><p>


ஆனால் 10,000 mAh பேட்டரி ஸ்மார்ட்போன் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் OnePlus நிறுவனம் வெளியிடவில்லை.
</p><p>

அதே சமயம், அடுத்த ஆண்டு அறிமுகமாகவுள்ள Oppo நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் SM8845 என்ற மொடல் எண்ணைக் கொண்டிருப்பதாக தெரிகிறது. இது 10,000 mAh-க்கும் அதிகமான திறன் கொண்ட பேட்டரியுடன் வரக்கூடும் என்று கூறப்படுகிறது.
</p><p>
முன்னதாக, Oppo நிறுவனத்தின் Oppo A6 Pro 5G ஸ்மார்ட்போன், இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 7000 mAh பேட்டரி மற்றும் 80W வேகமான சார்ஜிங் வசதியுடன் அறிமுகம் ஆனது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82c82c02-7002-47ac-9984-bc11834681dd/26-6a5a206488d56.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-17T12:29:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் ஆழியவளையில் 14.5 கிலோ கஞ்சா மீட்பு: காவல்துறை விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/14-5-kg-of-hemp-seized-in-aazhiyavalai-jaffna-1784284008"></link>
            <id>https://ibctamil.com/article/14-5-kg-of-hemp-seized-in-aazhiyavalai-jaffna-1784284008</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஆழியவளைப் பகுதியில்&amp;nbsp;14.5 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஆழியவளைப் பகுதியில்&nbsp;14.5 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>பாழடைந்த கட்டிடம் ஒன்றிலிருந்து சிறப்பு அதிரடிப்படையினரால் குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டு&nbsp;மருதங்கேணி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p>இந்த சம்பவம்&nbsp;நேற்று (16.07.2026) இரவு இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55a04cd5-3183-4d3b-942c-c6e4d5ddc246/26-6a5a1598e6295.webp' /></p><h2>14.5 கிலோ கஞ்சா மீட்பு</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

ஆழியவழைப் பகுதியில் பாழடைந்த கட்டிடம் ஒன்றில் பொதிகள் காணப்பட்டதை தொடர்ந்து
மக்களால் யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடி படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><p>
</p><p>இதனடிப்படையில் அங்கு சென்றிருந்த யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படையினர் கஞ்சா
பொதிகளை கைப்பற்றி மருதங்கேணி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
</p><p>மீட்கப்பட்ட கஞ்சா பழுதடைந்த நிலையில் காணப்படுவதாக தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பான விசாரணகளை மருதங்கேணி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T12:27:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல வழக்குகளில் பிரதிவாதியாக பெயரிடப்பட்ட சி.டி. விக்ரமரத்ன : வெளிவரும் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/c-d-wickramaratne-named-as-defendant-several-cases-1784285448"></link>
            <id>https://tamilwin.com/article/c-d-wickramaratne-named-as-defendant-several-cases-1784285448</id>
            <summary type="text">மர்மமான முறையில் இன்று(17) காலை உயிரிழந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன தீபால் விக்ரமரத்ன பல நீதிமன்ற நடவடிக்கைகளில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மர்மமான முறையில் இன்று(17) காலை உயிரிழந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன தீபால் விக்ரமரத்ன பல நீதிமன்ற நடவடிக்கைகளில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

 தனது உத்தியோகப்பூர்வ தகுதியில் எடுக்கப்பட்ட முடிவுகள் காரணமாகவோ அல்லது பொலிஸ் மா அதிபரின் உத்தியோகபூர்வ அதிகாரத்தின் காரணமாகவோ பல்வேறு சட்ட நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
எனினும் தனது பதவிக்காலத்தில் அவர் எந்தவொரு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளும் இன்றிப் பணியாற்றியதாகக் குறிப்பிடப்படுகின்றது. </p><p></p><h2>சர்ச்சைக்குரிய பதவி உயர்வுகள்</h2><p>தேசபந்து தென்னக்கோன் போன்ற பிற்கால பொலிஸ் மா அதிபர்கள் மீது சுமத்தப்பட்டதைப் போன்ற பெரிய தனிப்பட்ட இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் விக்ரமரத்ன மீது பதிவாகவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97f08915-7ab3-4e0b-ac95-fd08c8498840/26-6a5a0e859b212.webp' /></p><p>2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக அப்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்பு விசாரிக்கப்பட்ட வழக்கில், சி.டி. விக்ரமரத்ன ஒரு சாட்சியாக அழைக்கப்பட்டார். </p><p>மேலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் விருப்பத்துக்கு இணங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) பணிப்பாளர் முன்னாள் ஷானி அபேசேகர, அவரது இடைநீக்கத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உட்பட பல அடிப்படை உரிமை மனுக்களில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டிருந்தார்.
</p><p>
பொலிஸ் மா அதிபர் என்ற முறையில், பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றங்கள் மற்றும் பல்வேறு நிர்வாக முடிவுகள் தொடர்பான விசாரணைகளுக்காக அவர் பலமுறை நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டியிருந்தது. </p><p>2020ஆம் ஆண்டில் பல சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு (SSPs) சர்ச்சைக்குரிய வகையில் முன்திகதியிட்டு வழங்கப்பட்ட பதவி உயர்வுகள் காரணமாக, பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) சி. டி. விக்ரமரத்ன மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. </p><p>தவறான நியாயப்படுத்தல்களையும், பிற அதிகாரிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பையும் கருத்தில் கொண்டு, அந்தப் பதவி உயர்வு ஆணைகளை இடைநிறுத்தம் செய்ய உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுத்தது.</p><p> இது ஆளும் தரப்பினரைத் திருப்திப்படுத்தி அவர்களின் நம்பிக்கையைப் பெற தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி சி.டி.விக்கிரமரத்ன மேற்கொண்ட மோசடி மற்றும் தவறான முன்னுதாரணங்களில் ஒன்றாகும்.</p><p></p><h2>ஊழல், மோசடி முறைகேடுகள்</h2><p>2022 மே 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகை அருகே போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் போது, வன்முறைக் ​​கும்பலின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பொலிஸ் நடவடிக்கை மற்றும் ஆணைகள் தொடர்பாக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்கிரமரத்ன, விசேட அதிரடிப்படை (STF)கட்டளைத் தளபதி, பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) வருண ஜயசுந்தர ஆகியோரிடம் குற்றவியல் புலனாய்வுத் துறை (CID) 2025-ஆம் ஆண்டில் விசாரணை நடத்தியது.</p><p> இருப்பினும், அந்த விரிவான விசாரணைகளுக்குப் பிறகு அரசியல் அழுத்தம் காரணமாக சி.டி. விக்ரமரத்ன மீது பகிரங்கமாக எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b774524-5da8-41ef-9b80-743eecb1848c/26-6a5a0e86726b6.webp' /></p><p>
ஆனாலும் பொலிஸ் மா அதிபர் என்ற வகையில் அவரது அலுவலகத்தில் இருந்து கண்ணுக்கெட்டும் தூரத்தில் அமைந்திருந்த காலிமுகத்திடலில் அப்பாவிப் போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறைக் கும்பலின் வெறியாட்டம் பல மணிநேரம் நீடித்திருந்த நிலையிலும் அதனைக் கட்டுப்படுத்த தனது அதிகாரத்தை அவர் பயன்படுத்தவில்லை. </p><p>அதற்குப் பதிலாக வன்முறைக் கும்பலுக்கு மறைமுகமாக ஒத்தாசை வழங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
</p><p>
விக்ரமரத்னவின் பதவிக்காலத்தில் ஓய்வு பெறும் வயதைத் தாண்டி அவர் பலமுறை பதவி நீட்டிப்பு பெற்றதும், அவரது மூன்றாவது பதவி நீட்டிப்பு அரசியலமைப்புச் சபையால் நிராகரிக்கப்பட்டதும் அரசியல் மற்றும் சட்டரீதியான விவாதங்களைத் தூண்டியுள்ளன. </p><p>அவர் சர்ச்சைகளுக்கு மத்தியில் பதவியில் பணியாற்றியுள்ளார் என்பதும் இதில் அடங்கும். ஊழல், மோசடி முறைகேடுகளுக்காக அவர் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்படவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை என்றபோதும், அதிகார துஷ்பிரயோக சம்பவங்கள் பலவற்றில் அவர் தொடர்புபட்டிருந்தார்.</p><h2>சாரா ஜெஸ்மின் இறந்து விட்டதாக</h2><p>இவருடைய பதவிக்காலத்தில் தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பல்வேறு தடயங்கள் மறைக்கப்பட்டுள்ளது. </p><p>தெற்கு அதிவேகப் பாதையில் வெடிகுண்டுகளை ஏற்றிச் சென்ற சஹ்ரான் ஹாசிமின் கும்பலை பொலிஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்ய முயன்றபோது அப்போதைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலையிட்டு அவர்களை விடுதலை செய்வித்திருந்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdfa877c-ac52-4628-9831-09d218409103/26-6a5a0e8730b2f.webp' /></p><p>அது தொடர்பில் பின்னர் வந்த பொலிஸ் மா அதிபர் என்ற வகையில் சி.டி. விக்ரமரத்ன எந்தவொரு விசாரணைக்கும் உத்தரவிடவில்லை.
</p><p>
அதற்குப் பதிலான தன்னுடைய பதவிக்காலத்தில் தேசபந்து தென்னகோனுக்கு முக்கிய பொறுப்புகள் பலவற்றை வழங்கியிருந்தார்.
</p><p>
அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான புலஸ்தினி மகேந்திரன் (சாரா ஜெஸ்மின்) என்பவர் சாய்ந்தமருது குண்டுவெடிப்பின் பின்னர் பாதுகாப்புத் தரப்பினரால் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டதாக பல்வேறு சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், சாரா ஜெஸ்மின் உயிரிழந்து விட்டதாக காட்டுவதற்கு கோட்டாபய அரசாங்கம் முன்னெடுத்த சகல நடவடிக்கைகளுக்கும் சி.டி.விக்ரமரத்ன முழு ஒத்துழைப்பும் வழங்கியிருந்தார்.</p><p>

அம்பாறை புத்தங்கல பொதுமயானத்தில் புதைக்கப்பட்டுள்ள சாய்ந்தமருதில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட முதல் இரண்டு மரபணு (DNA) பரிசோதனைகளிலும் சாரா ஜெஸ்மின் உடைய மரபணுவுடன் ஒத்துப் போகும் எந்தவொரு சான்றும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை. </p><p>எனினும் சாரா ஜெஸ்மின் இறந்து விட்டதாக காட்டும் நோக்கில் கடந்த 2022 ஏப்ரல் 27ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சர்ச்சைக்குரிய மூன்றாவது மரபணு பரிசோதனைக்கான உத்தரவுகளை சி.டி. விக்ரமரத்னவே பிறப்பித்திருந்தார். </p><p>குறித்த மரபணு பரிசோதனையில் ஆச்சரியப்படும் வகையில் சாரா ஜெஸ்மினின் மரபணு மாதிரியுடன் ஒத்துப்போகும் எலும்புத் துண்டொன்று கண்டெடுக்கப்பட்டிருந்தாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T12:25:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரபரப்பை ஏற்படுத்திய பொலிஸ் மா அதிபரின் மரணம் - பொலிஸ் தரப்பில் இருந்து வெளியான அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-igp-c-d-wickramaratne-death-police-1784279297"></link>
            <id>https://tamilwin.com/article/former-igp-c-d-wickramaratne-death-police-1784279297</id>
            <summary type="text">மாலபே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலஹேன, பராக்கிரம வீதத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று(17) அதிகாலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்த முன்னாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாலபே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலஹேன, பராக்கிரம வீதத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று(17) அதிகாலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் (ஐஜிபி) சி.டி. விக்ரமரத்னவின் மரணத்தை இலங்கை பொலிஸ் இன்று ஒரு உத்தியோகப்பூர்வ அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>கொழும்பு கிழக்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விக்ரமரத்ன, அங்கு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதாக பொலிஸாரர் தெரிவித்துள்ளனர். </p><p></p><h2>35வது பொலிஸ் மா அதிபராக</h2><p>இச்சம்பவம் தொடர்பாக மாலபே பொலிஸ் நிலையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

பிரேதப் பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27b04fa6-d62e-443c-a37c-7e0cf07ed399/26-6a59f40201907.webp' /></p><p> மேலும், மேற்கு மாகாண தெற்குப் பிரிவு குற்றப்பிரிவு, மாலபே பொலிஸாருடன் இணைந்து இதுகுறித்த மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறது.
</p><p>
விக்ரமரத்ன, 2020 நவம்பர் 27 முதல் 2023 நவம்பர் 23 வரை இலங்கையின் 35வது பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T12:18:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் கொவிட்-19 ; 12 பேருக்கு தொற்று உறுதி; நான்கு பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/covid-19-again-12-cases-confirmed-4-death-india-1784279835"></link>
            <id>https://jvpnews.com/article/covid-19-again-12-cases-confirmed-4-death-india-1784279835</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 12 பேருக்கு க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 12 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
கொவிட்-19 தொற்றினால் , சிகிச்சை பலனின்றி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0f616e2-caac-437d-9214-50d7ebfc7dee/26-6a59f31d4ccbb.webp' /></p><p></p><h2>&nbsp;உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறுகள்</h2><p>
உயிரிழந்த நான்கு பேரும் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் பிற நீண்டகால உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

ஜூன் 26 ஆம் திகதி முதல் ஜூலை 15 ஆம் திகதி வரை ஆந்திராவில் 67 கொவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.இதில் 12 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.</p><p></p><p>

தற்போது பாதிக்கப்பட்டவர்களில் மூவர் வீட்டுத் தனிமையிலும், இருவர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும் மூவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

 எனவே பொது இடங்களில் பொதுமக்கள் சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T12:15:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடமையில் ஈடுபட்டிருந்த பெண் பொலிசிடம் சில்மிசம்; கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/constable-suspended-sitting-women-constable-lap-1784290466"></link>
            <id>https://jvpnews.com/article/constable-suspended-sitting-women-constable-lap-1784290466</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; இசை நிகழ்ச்சி ஒன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் மடியில் அமர்ந்த பொலிஸ் கான்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; இசை நிகழ்ச்சி ஒன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின்<a href="https://jvpnews.com/article/on-duty-female-police-officer-sexual-harassment-1784198893?itm_source=parsely-api" target="_blank"> பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் மடியில் அமர்ந்த</a> பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய பொலிஸார் இன்று (17) நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p> 

கடந்த (15) ஆம் திகதி தம்புள்ளை 'கம்உதாவ' மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள், பின்னர் கடமையைப் பதிவு செய்வதற்காக மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4178078a-e6ef-41f5-b7af-bc18193907d1/26-6a5a1ca39adda.webp' /></p><h2>உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு&nbsp;</h2><p> 

இதன்போது, அங்குள்ள நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்த இந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிளைக் கண்டு, அவரது மடியில் அமர அந்த பொலிஸ் கான்ஸ்டபிள் முயன்றுள்ளார்.</p><p> 

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஊடாகப் பிரதேசத்திற்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.</p><p></p><p> </p><p>

 சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் அந்த நேரத்தில் மதுபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளது. </p><p>

இதற்கமைய, பெண் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு துன்புறுத்தல் செய்ய முயன்றமை மற்றும் கடமை நேரத்தில் மதுபோதையில் இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டுதலில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளின் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T12:12:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுற்றுலா சென்ற 20 மாணவர்கள் விபத்தில் உயிரிழப்பு - உகண்டா அரசு விதித்துள்ள முக்கிய தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/20-students-killed-in-ugandan-school-bus-accident-1784289677"></link>
            <id>https://tamilwin.com/article/20-students-killed-in-ugandan-school-bus-accident-1784289677</id>
            <summary type="text">கல்விச் சுற்றுலா சென்ற மாணவர் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கிழக்கு உகண்டாவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 20 மாணவர்கள் மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்விச் சுற்றுலா சென்ற மாணவர் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கிழக்கு உகண்டாவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p>

இந்த விபத்தில் 20 மாணவர்கள் மற்றும் ஒரு முதியவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><h2>

20 மாணவர்கள் உயிரிழப்பு</h2><p>

கப்சோர்வா மாவட்டத்தில் இடம்பெற்ற இந்த விபத்தில் பாடசாலை ஊழியர்களும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2be14ec-ad15-400b-acc2-8f174677c383/26-6a5a1bd606916.webp' /></p><p> 

பேருந்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு தான் விபத்திற்கு காரணம் என்றும் செக்வாடிட் மலைக்கு அருகிலுள்ள சாலையின் ஒரு பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p>

இந்த நிலையில், இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் முடியும் வரை பாடசாலை கல்விச் சுற்றுலாக்கள் ரத்து செய்யப்படும் என அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T12:11:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்களின் ஆரோக்கியத்தை காக்கும் கும்மாயம் : இவ்வளவு நன்மைகள் இருக்கா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/amazing-health-benefits-of-kummayam-1784276681"></link>
            <id>https://manithan.com/article/amazing-health-benefits-of-kummayam-1784276681</id>
            <summary type="text">நமது முன்னோர்களின் உணவு முறைகளும், அவர்களின் ஒழுக்கமான வாழ்க்கை முறையும், இயற்கையோடு இணைந்த பழக்கவழக்கங்களும் அவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்தத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நமது முன்னோர்களின் உணவு முறைகளும், அவர்களின் ஒழுக்கமான வாழ்க்கை முறையும், இயற்கையோடு இணைந்த பழக்கவழக்கங்களும் அவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கான முக்கிய காரணம் என்றால் மிகையாகாது.</p><p>அவர்கள் உணவுகளை வெறும் சுவைக்காக மட்டுமல்லாமல், உடலின் தேவைகளைப் புரிந்து கொண்டு, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலும் தேர்ந்தெடுத்து பயன்படுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4817d5b7-110e-46db-811b-5dad7d93d1c2/26-6a59ed7249120.webp' /></p><p>
</p><p>
அந்த வகையில், பெண்களின் உடல் நலனை மேம்படுத்தும் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக கும்மாயம் பிரபல்யமாக காணப்படுகின்றது.</p><p>குறிப்பாக பெண் பிள்ளைகளின் எலும்பு வளர்ச்சியை வலுப்படுத்தவும், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் உடல் சோர்வு மற்றும் வலியை குறைக்க உதவும் வகையிலும், இந்த சத்துமிக்கஇனிப்பு உணவு பழங்காலத்தில் அதிகமாக தயாரிக்கப்பட்டு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b947a471-4586-4a21-90ce-3a7af3367db7/26-6a59ed72ec973.webp' /></p><p>

மேலும், பெண் பிள்ளைகள் பருவமடையும் காலத்திலும் அவர்களின் உடல் வளர்ச்சிக்கும், சத்துத் தேவைகளுக்கும் உதவும் வகையில் கும்மாயம் செய்து கொடுக்கும் வழக்கம் நமது முன்னோர்களிடையே காணப்பட்டது. </p><p>இதில் உடலுக்கு தேவையான புரோட்டீன், இரும்புச்சத்து போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், வளரும் பருவத்தில் உள்ள பெண்களுக்கு இது ஒரு சிறந்த பாரம்பரிய உணவாக விளங்குகிறது.

கும்மாயம் என்ற சொல்லுக்கு "குழையச் சமைத்த பருப்பு" என்று பொருள்.</p><p> </p><p>இது உளுந்து, பாசிப்பருப்பு மாவு, நெய், பனங்கருப்பட்டி போன்ற இயற்கையான பொருட்களை சேர்த்து மெதுவாக வேகவைத்து தயாரிக்கப்படும் சுவையான மற்றும் சத்தான இனிப்பு பலகாரமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b01d30b1-7c56-4241-bf21-24cb3872003e/26-6a59ed739d8d6.webp' /></p><p> இதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் உடலுக்கு வலிமையையும், தேவையான சக்தியையும் வழங்கக்கூடியவை. இந்த கும்மாயத்தை இன்றைய தலைமுறையினரும் அறிந்து பயன்படுத்துவது பயனுள்ளதாக இருக்கும்.</p><p>பெண் பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் இந்த சத்துமிக்க கும்மாயத்தை வீட்டிலேயே எளிமையான முறையில் எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99b73b1a-fb17-4902-882a-43bdf7f68ee7/26-6a59ed744cdc9.webp' /></p><h2>தேவையான பொருட்கள்
</h2><p><b>
வறுத்து பொடி செய்வதற்கு</b></p><p>உளுத்தம் பருப்பு – 1/2 கப்
</p><p>பாசிப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்</p><p>
பச்சரிசி – 2 டேபிள் ஸ்பூன்</p><p>
ஏலக்காய் – 3
</p><p><b>
கும்மாயம் செய்வதற்கு</b></p><p> பொடித்த வெல்லம் – 1 கப்
</p><p>தண்ணீர் – 2 1/2 கப்
</p><p>அரைத்த மாவு – 1 கப்
</p><p>நெய் – 1/2 கப்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4ea017d-3528-4f67-b347-c86457c9b95a/26-6a59ed74f2dcf.webp' /></p><p></p><p>
</p><h2>செய்முறை
</h2><p>
முதலில் ஒரு பாத்திரத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்கு வறுத்துக் கொள்ளவும். பின்னர் அதை ஒரு தட்டில் எடுத்து ஆற வைக்கவும்.
</p><p>
அதே பாத்திரத்தில் பாசிப்பருப்பை சேர்த்து, நல்ல வாசனை வரும் வரை வறுத்து அதையும் தனியாக எடுத்து ஆற வைக்கவும்.

பிறகு அதே வாணலியில் பச்சரிசியை சேர்த்து நன்கு பொரியும் வரை வறுக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae92c3f6-a695-4672-bcf8-7b2ae20bc0e9/26-6a59ed75a6561.webp' /></p><p>அதில் ஏலக்காயையும் சேர்த்து சிறிது நேரம் வறுத்து இறக்கி ஆற வைக்கவும்.

ஆறியதும், வறுத்த பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து மென்மையான பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.</p><p>பின்னர் அந்த மாவை சலித்து வைத்துக் கொள்ளவும்.

சலித்த மாவில் இருந்து 1 கப் மாவை எடுத்து ஒரு வாணலியில் சேர்க்கவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து வெல்லம் முழுவதும் கரையும் வரை சூடாக்கவும். </p><p>வெல்லம் கரைந்ததும் இறக்கி சிறிது ஆற விடவும். பின்னர் அதை வடிகட்டி மாவுடன் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை அடுப்பில் வைத்து, தொடர்ந்து கிளறிக் கொண்டே வேகவைக்கவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d08afeb3-8627-4248-a17f-86ab3477d25a/26-6a59ed76581eb.webp' /></p><p></p><p> மாவு கெட்டியாக ஆரம்பித்ததும், நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து தொடர்ந்து கிளறவும்.

கலவை நன்கு திரண்டு அல்வா பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கினால் அவ்வளவு தான்&nbsp; &nbsp;பாரம்பரிய முறையில் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த கும்மாயம் தயார்.&nbsp; குறிப்பாக மாதவிடால் காலத்தில் பெண்கள் இதனை சாப்பிடுவதால் வலி குறைந்து ஆரோக்கியம் மேம்படும்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b> &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T12:07:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[Post office: மொத்தம் ரூ.50 லட்சம் கிடைக்கும்.., எத்தனை வருடங்கள் முதலீடு செய்ய வேண்டும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sukanya-samriddhi-yojana-scheme-details-in-tamil-1784289823"></link>
            <id>https://news.lankasri.com/article/sukanya-samriddhi-yojana-scheme-details-in-tamil-1784289823</id>
            <summary type="text">பொதுவாக, பாதுகாப்பான முதலீட்டை விரும்புபவர்களின் முதல் தேர்வாக தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் உள்ளன.

அதன்படி, பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக, பாதுகாப்பான முதலீட்டை விரும்புபவர்களின் முதல் தேர்வாக தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் உள்ளன.</p><p>

அதன்படி, பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் சேமிப்புத் திட்டம் செல்வமகள் சேமிப்புத் திட்டம் ஆகும். </p><p>

இது சுகன்யா சம்ரித்தி யோஜனா என்றும் அழைக்கப்படுகிறது. இந்தத் திட்டம் 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.</p><p> 

பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்காக பணத்தை சேமிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.&nbsp;</p><p>இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9042b7b1-9b39-4864-947f-f5434a7f99f9/26-6a5a1a213b186.webp' />&nbsp;&nbsp;</p><p>
தொடர்ந்து ரூ.1.5 லட்சம் முதலீடு செய்தால், 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.71 லட்சத்திற்கும் அதிகமான தொகையைப் பெற முடியும்.</p><p>

செல்வமகள் சேமிப்புத் திட்டத்திற்கு தற்போது ஆண்டுக்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதத்தை மத்திய அரசு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கிறது. </p><p>

இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1,05,000 வீதம் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், சுமார் ரூ.50 லட்சம் கிடைக்கும்.&nbsp;</p><p>8.2% வட்டி தொடர்ந்து கிடைத்தால், 21 ஆண்டுகளின் முடிவில் சுமார் ரூ.50.27 லட்சம் கிடைக்கும்.</p><p>

இந்தக் கணக்கீட்டின்படி, ஆண்டுக்கு முதலீடு ரூ.1,05,000 எனில் 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.15.75 லட்சம் ஆகும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c174f9ea-4d10-47a5-8d4b-1bf24dcce7f4/26-6a5a1a21e25f2.webp' /></p><p>எனவே மொத்த வட்டி சுமார் ரூ.34.52 லட்சம் கிடைக்கும். அதேபோல் 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.50.27 லட்சம் கிடைக்கும்.&nbsp;</p><p>இந்தத் திட்டத்தில் 15 ஆண்டுகள் வரை பணம் செலுத்த வேண்டும். அதன்பிறகு 6 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டியதில்லை. </p><p>

கணக்கு தொடங்கிய 21 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தத் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம்.&nbsp;</p><p>இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250 செலுத்த வேண்டும். அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். </p><p>

80C பிரிவின் கீழ் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீட்டுக்கு வரி விலக்கு பெறலாம். மேலும், கிடைக்கும் வட்டி மற்றும் முதிர்வுத் தொகைக்கும் வரி விதிக்கப்படாது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T12:05:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்னா கிங்ஸ் உரிமையாளர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-kings-owner-arrested-1784289328"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-kings-owner-arrested-1784289328</id>
            <summary type="text">இலங்கை பிரீமியர் லீக்கில் ஆட்ட நிர்ணயம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் ஜப்னா கிங்ஸ் கழகத்தின் உரிமையாளர் ஒருவரும், மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பிரீமியர் லீக்கில் ஆட்ட நிர்ணயம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் ஜப்னா கிங்ஸ் கழகத்தின் உரிமையாளர் ஒருவரும், மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான சிறப்பு புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்ட இருவரும் இந்தியப்பிரஜைகள் என்று கூறப்படுகிறது.
</p><p></p><h2>இன்று தொடங்கவிருக்கும் நிலையில்</h2><p>
ஜப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவரான மன்ஜோத் கல்ரா மற்றும் யுவராஜ் குஷ்வஹா ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47590311-eff7-4b7b-8173-c2ccf6e3873f/26-6a5a1a2ae515f.webp' /></p><p>
2026 இலங்கை பிரீமியர் லீக் போட்டிகள் இன்று தொடங்கவிருக்கும் நிலையில் இந்தக் கைது சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.</p><p>

இலங்கை பிரீமியர் லீக் - 2026 போட்டியின் முதல் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு கொழும்பில் உள்ள SSC மைதானத்தில் ஜப்னா கிங்ஸ் மற்றும் காலி கேலண்ட்ஸ் அணிகளுக்கிடையே நடைபெறவுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T12:04:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆளுங்கட்சியின் முக்கிய புள்ளிகள் இருவரை கைது செய்ய உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/warrants-issued-for-eranga-and-jagath-manuwarna-1784288556"></link>
            <id>https://ibctamil.com/article/warrants-issued-for-eranga-and-jagath-manuwarna-1784288556</id>
            <summary type="text">
சட்டவிரோதப் போராட்டம் தொடர்பான வழக்கில் பிணையில் இருந்தபோது நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறிய நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>
சட்டவிரோதப் போராட்டம் தொடர்பான வழக்கில் பிணையில் இருந்தபோது நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறிய நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட மேலும் நால்வரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>

கொழும்பு மேலதிக நீதிபதி கிங்ஸ்லி ஹெட்டியாராச்சி இன்று (17) இந்த பிடியாணையை பிறப்பித்துள்ளார்.
</p><p>
நீதிமன்ற உத்தரவை மீறி, 2022 ஆம் ஆண்டு அரகலய போராட்டங்கள் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர்கள், வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என கூறப்படுகிறது.</p><p></p><h2>பிடியாணைகள்&nbsp;</h2><p>
</p><p>
இதனையடுத்து, எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண, ரொஷன் அலி டானிஸ் அலி, அமல் சலிந்த என்ற ஆர்மி அமில, உதயங்க குமார, மற்றும் கொஸ்வத்தகே மகாநாம தேரர் ஆகியோருக்கு எதிராக இவ்வாறு பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2421249-7574-4621-b5a9-b15cff690b09/26-6a5a18469246e.webp' /></p><p>

அத்துடன், மேலதிக நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-17T11:56:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் கட்சிகளின் கூட்டணிக்கு மணிவண்ணன் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/muslim-parties-not-back-tamil-struggle-manivannan-1784277029"></link>
            <id>https://tamilwin.com/article/muslim-parties-not-back-tamil-struggle-manivannan-1784277029</id>
            <summary type="text">முஸ்லிம் கட்சிகளும் தமிழ் தேசிய கட்சிகளும் தற்பொழுது கூட்டாக இணைந்துள்ளனர். இதில் குறிப்பாக முஸ்லிம் கட்சிகள், தமிழ் மக்களுடைய போராட்டத்திற்கு ஆதரவாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>முஸ்லிம் கட்சிகளும் தமிழ் தேசிய கட்சிகளும் தற்பொழுது கூட்டாக இணைந்துள்ளனர். இதில் குறிப்பாக முஸ்லிம் கட்சிகள், தமிழ் மக்களுடைய போராட்டத்திற்கு ஆதரவாக
இருக்கவில்லை என்பது வரலாற்று ரீதியான ஒரு கசப்பான உண்மை என தமிழ் மக்கள் கூட்டணியினுடைய உப
செயலாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். </p><p>

நேற்று(16.07.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>தமிழ் மக்களுடைய உரிமைக் குரல்</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
எதிர்வரும் காலங்களில் மலையக கட்சிகளும், முஸ்லிம் கட்சிகளும், தமிழ்
மக்களுடைய உரிமை கோரிக்கைகளை ஏற்று அங்கீகரித்து தமிழ் மக்களுடைய உரிமைப்
போராட்டத்திற்கு வலுவான சக்திகளாக இருப்பார்கள் என்றால் அதுவொரு வரவேற்கத்தக்க முற்போக்கான விடயமாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dd6936a-a944-47a2-b45f-05755af3ee8c/26-6a5a175bab6a1.webp' /></p><p>
</p><p>

ஆனால் இவர்களுடைய நோக்கம் தேர்தலை கணக்கிட்டு 
உருவாக்கப்பட்ட கூட்டாக இருக்கும் என்றால் அது ஒரு தேவையில்லாத கூட்டாக தான்
எதிர்காலத்தில் அமையும்.&nbsp;</p><p>இந்த கூட்டணி நாடாளுமன்றத்திலே தமிழ் மக்களுடைய உரிமைக் குரலாக 
காணப்படும் என்றால் அது வரவேற்கத்தக்கதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.</p><h2>தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமை&nbsp;</h2><p> </p><p>வடக்கு - கிழக்கில் தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமை என்பது விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.</p><p>இந்த விடயம் தொடர்பில் மணிவண்ணனிடம் வினவிய போது,&nbsp;</p><p>இந்தக் கூட்டு அவசியமற்ற கூட்டு என்று நான் திட்டவட்டமாக சொல்ல மாட்டேன்.
ஏனெனில் சிறுபான்மையினர் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்பது கட்டாய தேவை.</p><p>

இதனை விமர்சித்து, இந்த கூட்டு அரசியல்
நோக்கத்திற்குத் தேவையில்லை என்று நான் விமர்சிக்க தயாராக இல்லை. என்னைப் பொறுத்தவரையில் இவ்வாறான கூட்டுக்கள் சிறுபான்மையின மக்கள் இந்த
நாட்டில் பலமடைவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்கும். ஆனால் இந்த கட்சிகளுடைய
கடந்த காலம் எங்களுக்கு நம்பிக்கையீனத்தை தருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d495bb5-211e-45a4-9d60-6a92363f3da7/26-6a59ec0fb7187.webp' /></p><p> </p><p>மலையக கட்சிகளாக
இருக்கலாம், முஸ்லிம் கட்சிகளாக இருக்கலாம், எப்பொழுதுமே ஆளும் பக்கத்தோடு
தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு அமைச்சுப் பதவிகளுக்காக தங்களை நளினப்படுத்திக் கொண்டு செயற்பட்ட கட்சிகள் ஆகும்.</p><p>

ஆகவே மலைய கட்சிகளாக இருந்தாலும் முஸ்லிம் கட்சிகளாக இருந்தாலும் கடந்த கால
செயற்பாடுகளுக்கும் ஈழத் தமிழ் மக்களுடைய அரசியல் போக்குக்கும் ஒத்துப் போகாத
தன்மை அல்லது முரண்பாடான தன்மை கடந்த காலங்களிலிருந்து இருந்தது.
</p><p>
தேசிய மக்கள் சக்தியினுடைய ஆட்சியை
தென்னிலங்கையில் தாக்கு பிடிக்க முடியாத காரணத்தினால் இவ்வாறான கூட்டு உருவாக்கப்படுகின்றது என்றால் அது ஒரு தேவையில்லாத கூட்டாகத்தான்
இருக்கும். </p><p>

எண்ணிக்கையில்
சிறுபான்மையினராக இருக்கக்கூடிய மக்களுடைய அரசியல் பலத்தை கூட்டுவதற்கான ஒரு
அடிப்படை மனச்சாட்சியுடன் கூடிய ஒரு கூட்டாக இருந்தால் நன்மையளிக்கும் என்றார்.</p><p></p><h2>தவிசாளர் பதவி நீக்கம்&nbsp;</h2><p>
</p><p>
உள்ளூர் ஆட்சி மன்றங்களின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோர் பதவி நீக்கப்பட்ட
விடயங்கள் தொடர்பில் சட்டத்தரணி என்ற வகையிலும் அரசியல்வாதி என்ற வகையிலும்
அதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என ஊடகவியலாளர் வினவிய போது,
</p><p>“குறிப்பாக கிஷோரினுடைய விவகாரத்திலே எல்லை தாண்டி தனது அதிகாரத்தை
துஸ்பிரயோகம் செய்திருக்கிறாரோ என்று சிந்திக்க தோன்றுகின்றது.</p><p> ஏனெனில் ஆளுநர் உடைய கருத்தை விமர்சிப்பதற்கு
உள்ளூர் ஆட்சி மன்ற உறுப்பினருக்கு உரிமை இல்லை என்றால் வேறு எவருக்கு
விமர்சிக்க முடியும் என்பது என்னுடைய கருத்தாக இருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f66e36f-a945-4b12-b0ad-778e15ec34bb/26-6a59ec108a3c2.webp' /></p><p>
</p><p>
ஆகவே
ஆளுநருடைய தலையீடு என்பது சர்வாதிகாரியாக சித்தரிக்கின்ற போக்காகத்தான் பார்க்க முடிகிறது. இதற்கான
கடிவாளங்கள் இடப்பட வேண்டும். </p><p>

ஆனால் ஒரு விடயத்தில் நான்
தெளிவாக இருக்கிறேன். ஆளுநருடைய அதிகாரம் என்பது உள்ளூர் ஆட்சி மன்றங்களினுடைய&nbsp; ஆங்கிலத்தில் மிஸ் மேனேஜ்மென்ட் என்று சொல்லக்கூடிய
பிறள் முகாமைத்துவத்தை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரமாகவே இருக்கிறது.
</p><p>
அந்த வகையில் பிரயோகிக்கப்பட வேண்டுமே ஒழிய உள்ளூராட்சி மன்றங்களின் உடைய
சுயாதீனத்தில் அல்லது உள்ளூராட்சி மன்றத்தினுடைய உறுப்பினர் ஒருவருடைய
கருத்துச் சுதந்திரத்தில் தலையீடு செய்கின்ற அளவிற்கு ஆளுநருக்கு அதிகாரம்
இல்லை என்பது என்னுடைய கருத்தாக உள்ளது“ என பதிலளித்துள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T11:54:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஞ்சீவ் பிறந்தநாளை ஆல்யா மானசா உடன் எங்கே கொண்டாடி உள்ளார் பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/alya-manasa-celebrate-sanjeev-birthday-in-srilanka-1784289123"></link>
            <id>https://cineulagam.com/article/alya-manasa-celebrate-sanjeev-birthday-in-srilanka-1784289123</id>
            <summary type="text">சன் டிவியின் கயல் சீரியலில் ஹீரோவாக நடித்து வருபவர் சஞ்சீவ். அவரது மனைவி ஆல்யா மானசாவும் முன்னணி சீரியல் ஹீரோயின் தான்.சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சன் டிவியின் கயல் சீரியலில் ஹீரோவாக நடித்து வருபவர் சஞ்சீவ். அவரது மனைவி ஆல்யா மானசாவும் முன்னணி சீரியல் ஹீரோயின் தான்.</p><p>சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். மேலும் குழந்தைகள் உடன் எடுக்கும் வீடியோவையும் அவர்கள் வெளியிட்டால் லைக்குகள் குவிகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11319930-b678-4443-ad22-445369a37d07/26-6a5a1764d55ab.webp' /></p><p>
</p><h2>பிறந்தநாள் கொண்டாட்டம்
</h2><p>சஞ்சீவின் பிறந்தநாளை தற்போது குடும்பத்துடன் இலங்கையில் அவர்கள் கொண்டாடி இருக்கின்றனர்.
</p><p>உயரமான கட்டிடத்தின் மேல் இருந்து அவர்கள் கொண்டாடிய போட்டோவை தற்போது வெளியிட்டு உள்ளனர்.
</p><p>கமெண்டில் ரசிகர்கள் சஞ்சீவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Da5Dv86Mfk_/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Da5Dv86Mfk_/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Da5Dv86Mfk_/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by alya_manasa (@alya_manasa)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-07-17T11:53:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்துக்கு காத்திருந்த இளம்பெண்ணுக்கு பட்டப்பகலில் நிகழ்ந்த பயங்கரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-murders-girl-in-bus-stand-for-reject-love-1784288610"></link>
            <id>https://news.lankasri.com/article/man-murders-girl-in-bus-stand-for-reject-love-1784288610</id>
            <summary type="text">கர்நாடகா மாநிலத்தில், பேருந்துக்கு காத்திருந்த இளம்பெண்ணை மர்ம நபர் ஒருவர் பட்டாக்கத்தியால் சரமாரியாகத் தாக்கினார்.

பட்டப்பகலில் நிகழ்ந்த அந்த கொடூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கர்நாடகா மாநிலத்தில், பேருந்துக்கு காத்திருந்த இளம்பெண்ணை மர்ம நபர் ஒருவர் பட்டாக்கத்தியால் சரமாரியாகத் தாக்கினார்.</p><p>

பட்டப்பகலில் நிகழ்ந்த அந்த கொடூரத் தாக்குதலில் அந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்!</p><h3>

பட்டப்பகலில் நிகழ்ந்த பயங்கரம்
</h3><p>
நேற்று மாலை, கர்நாடகா மாநிலத்திலுள்ள Bantwal நகரில் லாவண்யா (21) என்னும் இளம்பெண் பேருந்து நிலையம் ஒன்றிற்குச் சென்று, பேருந்துக்காக காத்திருந்திருக்கிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/757c46a7-eaa9-49b1-ad48-130c3629e8cd/26-6a5a156388032.webp' /></p><p>

அப்போது, அங்கு ஏற்கனவே வந்து காத்திருந்த ஒரு இளைஞர், தன் பையிலிருந்த பட்டாக்கத்தியை உருவியவண்ணம் லாவண்யாவை நோக்கி ஓடியுள்ளார்.</p><p>

தன்னை நோக்கி கத்தியுடன் ஒருவர் ஓடிவருவதைக் கண்ட லாவண்யா, தப்பியோட முயன்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1d536aa-ae39-4dce-928f-0f9bf20f2892/26-6a5a156438212.webp' /></p><p>
ஆனால், அந்த இளைஞர் லாவண்யாவை துரத்தி துரத்தி வெட்டியுள்ளார். லாவண்யா கீழே விழ, அந்த இளைஞர் கத்தியை வீசிவிட்டு அங்கு தயாராக நின்ற காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளார்.&nbsp;</p><p></p><h3>
ஒருதலைக் காதல்?
</h3><p>
இந்நிலையில், அந்த இளைஞர் பெயர் சேத்தன் என்றும், அவர் லாவண்யாவின் தூரத்து உறவினர் என்றும் கூறப்படுகிறது.
</p><p>
அவர் ஒருதலைபட்சமாக லாவண்யாவைக் காதலித்துவந்ததாகவும், அவரை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
பட்டப்பகலில் மக்கள்முன்னிலையில் நடந்த இந்த பயங்கர சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், தப்பியோடிய சேத்தனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T11:50:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிரிழந்த காவல்துறைமா அதிபருக்கும் சலேவின் சாட்சியத்திற்கும் ஒரு நீண்ட தொடர்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/wickramaratne-and-saleh-have-a-long-relationship-1784285042"></link>
            <id>https://ibctamil.com/article/wickramaratne-and-saleh-have-a-long-relationship-1784285042</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று (17) உயிரிழந்த&amp;nbsp; முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி....</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று (17) உயிரிழந்த&nbsp; முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன வழங்கிய வாக்குமூலங்கள் மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளன.</p><p> குறிப்பாக, முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது தற்போது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுடன், விக்ரமரத்ன வழங்கிய சாட்சியங்கள் முக்கிய ஆதாரங்களாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளமை சட்ட மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
சட்ட வல்லுநர்களின் கூற்றுப்படி, சி.டி. விக்ரமரத்ன இந்த வழக்கில் ஒருபோதும் சந்தேகநபராகக் கருதப்படவில்லை. </p><p></p><h2>விசாரணைக்கு முக்கிய சாட்சி</h2><p>மாறாக, விசாரணைக்கு முக்கிய சாட்சியாளராக பல்வேறு சந்தர்ப்பங்களில் வாக்குமூலம் வழங்கியவர். அவர் வழங்கிய தகவல்களே தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசாரணைகளில் முக்கிய ஆதாரங்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb5f88b3-8eaf-4216-9da6-b47bd98e3039/26-6a5a0f4546328.webp' /></p><p>
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர், பதில் காவல்துறைமா அதிபராகவும் பின்னர் நிரந்தர காவல்துறைமா அதிபராகவும் பதவி வகித்த விக்ரமரத்ன, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார்.</p><p>தாக்குதலுக்கு முன்னர் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளிடமிருந்து கிடைத்த எச்சரிக்கைத் தகவல்கள் காவல்துறையின் உயர் அதிகாரிகளிடையே முறையாகப் பகிரப்படாதமை, பாதுகாப்பு ஒருங்கிணைப்பில் ஏற்பட்ட தோல்விகள் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைப்பின் செயலிழப்பு குறித்து அவர் விரிவாக விளக்கமளித்திருந்தார்.
</p><p>
அதேவேளை, அவரது பதவிக்காலத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மூத்த விசாரணை அதிகாரியான ஷானி அபேசேகர உள்ளிட்ட அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதால் ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் மந்தமடைந்ததாக எழுந்த விமர்சனங்களும் அவரது நிர்வாக நடவடிக்கைகள் மீது சுமத்தப்பட்டிருந்தன.
</p><p>
2026 ஆம் ஆண்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கைகளின்படி, சி.டி. விக்ரமரத்ன மற்றும் முன்னாள் CID பணிப்பாளர் நிஷாந்த டி சொய்சா ஆகியோர் வழங்கிய விசேட வாக்குமூலங்களில், அப்போதைய SIS தலைவர் சுரேஷ் சலே தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டங்கள் ஊடாக ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளின் திசையை மாற்ற முயன்றதாகவும், விசாரணை அதிகாரிகள் மீது தாக்கம் செலுத்த முயற்சித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>மேலும், காவல்துறை விசாரணைகளுக்கும் புலனாய்வு நடவடிக்கைகளுக்கும் இடையில் வெளிப்படைத்தன்மையும் ஒருங்கிணைப்பும் இல்லாத நிலை காணப்பட்டதாகவும், சில முக்கிய புலனாய்வு தகவல்கள் காவல்துறைமா அதிபருக்குக் கூட முழுமையாகக் கிடைக்காத வகையில் பாதுகாப்பு அமைப்புகளின் உயர்மட்டங்களில் கையாளப்பட்டதாகவும் அந்த வாக்குமூலங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p></p><h2>சோனிக் சோனிக் - குறியீட்டு பெயர்</h2><p>

இந்த பின்னணியிலேயே, "சோனிக் சோனிக்" போன்ற குறியீட்டு பெயர்களால் அடையாளப்படுத்தப்பட்ட புலனாய்வு உறுப்பினர்கள் மற்றும் சில சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணைகளை திசைதிருப்ப புலனாய்வு அமைப்புகள் முயன்றதாக எதிர்க்கட்சியினரும் கத்தோலிக்க திருச்சபையும் நீண்டகாலமாக குற்றஞ்சாட்டி வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0700704c-3387-49c1-b69e-8d122a0f1225/26-6a5a0f4609c3b.webp' /></p><p>

இந்த விவகாரம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது 2023 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் Channel 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தின் பின்னரேயாகும். </p><p>அந்த ஆவணப்படத்தில் அசாத் மௌலானா, ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கும் சுரேஷ் சலேவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பு நடைபெற்றதாக குற்றஞ்சாட்டியிருந்தார். </p><p>எனினும், அந்த குற்றச்சாட்டுகளை சுரேஷ் சலே முழுமையாக மறுத்ததுடன், அவதூறு தொடர்பில் சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தார்.
</p><p>
இதற்கிடையில், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட புதிய விசாரணைகளின் அடிப்படையில், 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் சுரேஷ் சலே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.</p><p>

அதனைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, விசாரணைகளில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சுரேஷ் சலே இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் சதித்திட்டம் தீட்டி, தாக்குதலை நடத்துவதற்காக அவர்களை வழிநடத்தியதாகவும், தாக்குதலுக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் சில முஸ்லிம் நபர்களைச் சந்தித்து கத்தோலிக்க தேவாலயங்களின் இருப்பிடங்கள் மற்றும் வழிபாட்டு விவரங்கள் தொடர்பான தகவல்களைப் பெற்று, இலக்குகளைத் தேர்வு செய்வதில் நேரடியாக ஈடுபட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
</p><p></p><h2>பல்வேறு ஆதாரங்கள்</h2><p>எனினும், சுரேஷ் சலே தரப்பின் சட்டத்தரணிகள், இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுத்து, இது அரசியல் பழிவாங்கலின் விளைவு என்றும், தாக்குதல் நடைபெற்ற காலத்தில் அவர் வெளிநாட்டில் இருந்ததாகவும் வாதிட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fc6fd3d-597b-4062-89b6-18a718d2bbbe/26-6a5a0f46b29c0.webp' /></p><p>
</p><p>
சுரேஷ் சலேவின் கைது மற்றும் தடுப்புக்காவலுக்கு எதிராக பல்வேறு மனுக்கள் மற்றும் எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரும் கத்தோலிக்க திருச்சபையும் தற்போதைய விசாரணைகளுக்கு முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.</p><p>

இதற்கிடையில், முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உயிரிழந்திருந்தாலும், அவர் உயிருடன் இருந்தபோது வழங்கிய வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை ஆவணங்களின் ஒரு பகுதியாக தொடர்ந்தும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
அதேவேளை, சட்டமா அதிபர் திணைக்களமும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் நீதிமன்றத்தில் பல்வேறு ஆதாரங்கள், வாக்குமூலங்கள் மற்றும் முன்னேற்ற அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தாலும், இவை அனைத்தும் இன்னும் விசாரணை நிலையில் உள்ள குற்றச்சாட்டுகளாகும்.</p><p> எனவே, நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கும் வரை சுரேஷ் சலே உள்ளிட்ட எவரையும் சட்டரீதியாக குற்றவாளி எனக் கருத முடியாது என்பதையும் சட்ட வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-17T11:48:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரங்க குணசேகர மற்றும் ஜகத் மனுவர்ண ஆகியோருக்கு பிடியாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/arrest-warrant-eranga-gunasekara-jagath-manuwarna-1784287193"></link>
            <id>https://tamilwin.com/article/arrest-warrant-eranga-gunasekara-jagath-manuwarna-1784287193</id>
            <summary type="text">நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை மேலதிக நீதிபதி கிங்ஸ்லி ஹெட்டியாராச்சி&nbsp;உத்தரவிட்டுள்ளார்</p><p>குறித்த உத்தரவானது இன்று (17.07.2026) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p></p><h2>நீதிமன்றத்தில் முன்னிலையாகாது</h2><p>
நீதிமன்ற உத்தரவுகளை மீறி, சட்டவிரோதக் கூட்டத்தின் உறுப்பினர்களாகப் போராட்டம் நடத்தியதற்காக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கு தொடர்பாகப் பிணையில் உள்ள அவர்கள், நீதிமன்றத்தில் முன்னிலையாகாததே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff8a680d-f31b-47be-b313-0861a015a975/26-6a5a1445e6a57.webp' /></p><p> </p><p>

இதன்படி, நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண, ரொஷான் அலி டானிஸ் அலி, அமல் சாலிந்த அல்லது அமி அமில, உதயங்க குமார மற்றும் கொஸ்வத்தகே மஹாநாம தேரர் ஆகியோருக்கே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T11:41:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாவூறும் சுவையில் பிரட் வடை .., எப்படி செய்வது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bread-vada-recipe-in-tamil-1784287937"></link>
            <id>https://news.lankasri.com/article/bread-vada-recipe-in-tamil-1784287937</id>
            <summary type="text">வடை என்றால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

அந்தவகையில், பிரட் வைத்து உடனடியாக மொறுமொறு வடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடை என்றால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
</p><p>
அந்தவகையில், பிரட் வைத்து உடனடியாக மொறுமொறு வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.</p><p></p><p>
</p><h2>
தேவையான பொருட்கள்
</h2><ul><li>பிரட்- 4
</li><li>அரிசி மாவு- ¼ கப்</li><li>
ரவை- 3 ஸ்பூன்
</li><li>தயிர்- 1 கப்
</li><li>கேரட்- ½ கப்</li><li>
பெரிய வெங்காயம்- 1
</li><li>பச்சை மிளகாய்- 2
</li><li>துருவிய இஞ்சி- ¼ ஸ்பூன்
</li><li>கறிவேப்பிலை - 1 கொத்து</li><li>கொத்தமல்லி- சிறிதளவு</li><li>
மிளகு- 1 ஸ்பூன்</li><li>
சீரகம்- ½ ஸ்பூன்</li><li>
உப்பு- தேவையான அளவு
</li><li>எண்ணெய்- தேவையான அளவு
</li></ul><h2>செய்முறை
</h2><p>முதலில் ஒரு பாத்திரத்தில் பிரட் துண்டுகளை போட்டு கைகளால் நன்றாக பிசைந்து கொள்ளவும்.
</p><p>
பின் அதில் அரிசி மாவு, ரவை, தயிர், துருவிய கேரட், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf876d76-18ca-46a5-93c7-57e92258e015/26-6a5a12c3227c8.webp' /></p><p>இதற்கடுத்து மிளகு, சீரகம் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கைகளால் நன்கு பிணைந்துகொள்ளவும்.
</p><p>
பின்னர் அடுப்பில் ஒரு வாணல் வைத்து எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து சூடாக்கவும்.</p><p>

இறுதியாக கலந்த மாவை வடை போல் தட்டி எண்ணெய்யில் பொன்னிறமாக பொறித்து எடுத்தால் சுவையான வடை தயார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். 
</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T11:32:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கம்பஹா பகுதியில் 2 கைக்குண்டுகளுடன் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் மீட்பு - ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-hand-grenades-recovered-in-gampaha-area-1784287657"></link>
            <id>https://tamilwin.com/article/2-hand-grenades-recovered-in-gampaha-area-1784287657</id>
            <summary type="text">கம்பஹா அருகே, யக்கல பிரதேசத்தில் 2 கையெறி குண்டுகள் மற்றும் துப்பாக்கித் தோட்டாக்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

வெளிநாட்டில் தயாரிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா அருகே, யக்கல பிரதேசத்தில் 2 கையெறி குண்டுகள் மற்றும் துப்பாக்கித் தோட்டாக்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு கையெறி குண்டுகள் மற்றும் பல்வேறு வகையான துப்பாக்கித் தோட்டாக்கள் தொகையொன்றும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p>
நேற்று இரவு(16.07.2026) யக்கல பொலிஸ் பிரிவில் கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p><h2>

பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் மீட்பு</h2><p>

இதன்போது, ​​02 வெளிநாட்டுத் தயாரிப்பு கையெறி குண்டுகள், 32 கைத்துப்பாக்கி தோட்டாக்கள், எம்-16 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் ஒரு தோட்டாக்கூடு, 11 தோட்டாக்கள் மற்றும் 06 சுழல் துப்பாக்கி தோட்டாக்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5927f1aa-c866-4019-901c-53904de4acd1/26-6a5a120adbdd6.webp' /></p><p> 


அத்துடன், சட்டவிரோதமான முறையில் சுங்க வரியின்றி நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட 34,000 சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பில் ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T11:31:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வள்ளி சீரியல் நடிகை மோனிகாவா இது!! இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/valli-serial-fame-actress-monica-recent-photos-1784288572"></link>
            <id>https://viduppu.com/article/valli-serial-fame-actress-monica-recent-photos-1784288572</id>
            <summary type="text">நடிகை மோனிகாவிஜய் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி போன்ற சேனல்களில் ஒளிப்பரப்பாகிய வள்ளி, ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மோனி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகை மோனிகா</h2><p>விஜய் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி போன்ற சேனல்களில் ஒளிப்பரப்பாகிய வள்ளி, ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மோனிகா. </p><p>மானாட மயிலாட, சூப்பர் மா, மிஸ் சின்னத்திரை போன்ற ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்ட மோனிகா திருமணத்திற்கு பின் குடும்ப வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். நடிப்பில் இருந்து சற்று விலகியுள்ள மோனிகாவிற்கு ஒரு மகனும் இருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1438918f-a3f8-4e4f-a4b9-fc48966f8e7f/26-6a5a15409f7f3.webp' /></p><p> </p><p>சூப்பர் மாம் நிகழ்ச்சியில் மகனுடன் கலந்து கொண்டு கலக்கினார். தெய்வம் தந்த வீடு சீரியலில் நடித்தபோது, என் கணவர் ஆதரவு இல்லாமல் நான் மீண்டும் நடிக்க வந்திருக்க முடியாது, குழந்தையை கவனிக்க வேண்டிய சூழலில் தெய்வம் தந்த வீடு சீரியலில் நடிக்க என்னை மோட்டிவ் செய்தார் என் கணவர் என்று கூறினார். </p><p>தற்போது சமீபத்தில், யூடியூப் சேனலில் சமூக கருத்துக்களை பேசிவரும் மோனிகா எடுத்த புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.</p>]]></content>
            <updated>2026-07-17T11:30:00+00:00</updated>
        </entry>
    </feed>
