<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-17T07:34:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு ஆளுநர் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/east-governor-meets-united-nation-representative-1784268275"></link>
            <id>https://tamilwin.com/article/east-governor-meets-united-nation-representative-1784268275</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம்
(UNDP) பிரதிநிதிகள் குழுவிற்கும், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த
லால் ரத்னசே...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம்
(UNDP) பிரதிநிதிகள் குழுவிற்கும், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த
லால் ரத்னசேகரவுக்கும் இடையே, திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர்
செயலகத்தில் ஒரு சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.<br></p><p>இந்தக கலந்துரையாடலானது&nbsp;நேற்று முன்தினம்(15.07.2026) இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>மருத்துவக் கழிவுகளின் முகாமைத்துவம்</h2><p>

இந்தக் கலந்துரையாடலின் போது ​​இலங்கையின் சுகாதாரத் துறையில் மருத்துவக்
கழிவுகளின் முகாமைத்துவத்தை சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான முறையில்
வலுப்படுத்துவதற்கான திட்டத்தை உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி (GEF) மற்றும்
UNDP ஆகியவை இணைந்து செயல்படுத்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65ebd8e2-e7f9-4433-ac3b-e1dec3748cae/26-6a59ca011479d.webp' /></p><p>

குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் மருத்துவக் கழிவுகளைப் பாதுகாப்பாகச்
சேகரித்தல், கொண்டு செல்லுதல், சுத்திகரித்தல் மற்றும் அகற்றல் ஆகியவற்றுக்கான
நவீன முறைகளை அறிமுகப்படுத்துதல், எண்ணிம மேலாண்மை அமைப்புகளைப்
பயன்படுத்துதல், நிறுவனத் திறன் மேம்பாடு மற்றும் மாகாண அளவில் ஒரு
மையப்படுத்தப்பட்ட மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு மையத்தை நிறுவுதல் ஆகியவை
குறித்துக் கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.
</p><p>
இந்தத் திட்டத்தின் மூலம், பொது சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யவும்,
சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும், சர்வதேசத் தரங்களுக்கு இணங்க கிழக்கு
மாகாணத்தில் உள்ள சுகாதார நிறுவனங்களில் மருத்துவக் கழிவு மேலாண்மையை
வலுப்படுத்தவும் தேவையான ஆதரவை வழங்குவதில் UNDP பிரதிநிதிகள் குழு தனது
உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T07:31:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இவருக்கு வயது ஏறவே ஏறாதா? 40 வயதிலும் சுடிதாரில் ரசிகர்களை கிறங்கடிக்கும் தொகுப்பாளினி டிடி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/ddneelakandan-new-look-photos-goes-viral-1784272267"></link>
            <id>https://manithan.com/article/ddneelakandan-new-look-photos-goes-viral-1784272267</id>
            <summary type="text">பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி (டிடி), 40 வயதைக் கடந்த நிலையிலும் தனது அழகாலும் உற்சாகத்தாலும் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார். தற்போது அவர் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி (டிடி), 40 வயதைக் கடந்த நிலையிலும் தனது அழகாலும் உற்சாகத்தாலும் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார். </p><p>தற்போது அவர் அழகிய சுடிதாரில் எடுத்துக் கொண்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a945e6b-7bf5-4294-bac1-9e8d8b82db80/26-6a59da123d6ee.webp' /></p><p></p><h2>
தொகுப்பாளினி டிடி</h2><p>

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் மறக்க முடியாத தொகுப்பாளினிகளில் முக்கியமானவர் திவ்யதர்ஷினி. பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, மக்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.</p><p>ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையினரும் அவரை அன்புடன் “டிடி” என்று அழைத்து வருவது வழக்கம். பின்னர் அந்த பெயரே அவரது அடையாளமாகவே மாறியது என்று சொன்னால் மிகையாகாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d47f2eb-bb87-43c7-937a-a12e17d5ded9/26-6a59da133092a.webp' /></p><p>
சின்னத்திரையில் உச்சத்தைத் தொட்ட டிடி, விசில், பவர் பாண்டி, சர்வம் தாளமயம், காபி வித் காதல் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.</p><p>மேலும் சில படங்களுக்கு பின்னணி குரலும் வழங்கியுள்ளார்.

தனது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தபோதிலும், தனிமையிலும் மகிழ்ச்சியாகவும் தன்னம்பிக்கையுடனும் வாழ முடியும் என்பதை தனது வாழ்க்கையின் மூலம் நிரூபித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/279247b9-b024-4fad-910b-e149d1e09604/26-6a59da13d4386.webp' /></p><p>எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், தனது கலகலப்பான பேச்சு மற்றும் நேர்த்தியான கேள்விகளின் மூலம் பிரபலங்களிடமிருந்து சுவாரஸ்யமான பதில்களை பெற்றுக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தும் திறமை கொண்டவர் டிடி.</p><p>எனினும், உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக சமீபகாலமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவரை அதிகமாக காண முடியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40e551e7-00ba-4d6b-9633-06eb8adb321e/26-6a59da14844f6.webp' /></p><p></p><p>இந்நிலையில், டிடி&nbsp; &nbsp;அழகிய சுடிதாரில் செம கியூட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை அள்ளி வருகின்றது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Da4lPdmEgPn/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Da4lPdmEgPn/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Da4lPdmEgPn/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Dhibba💃Dance all The Way (@ddneelakandan)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW&nbsp;</a></u></b> &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T07:30:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிட்டன் வானை மூடும் சகாரா புழுதி; புதிய ஆய்வில் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/saharan-dust-blanket-uk-skies-warns-air-polusion-1784273535"></link>
            <id>https://canadamirror.com/article/saharan-dust-blanket-uk-skies-warns-air-polusion-1784273535</id>
            <summary type="text">&amp;nbsp; ஆப்பிரிக்காவின் சகாரா பாலைவனத்தில் இருந்து கிளம்பும் பிரம்மாண்ட புழுதிப் புயல் (Saharan Dust Plume) வழக்கத்திற்கு மாறான அளவில் ஐரோப்பா மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஆப்பிரிக்காவின் சகாரா பாலைவனத்தில் இருந்து கிளம்பும் பிரம்மாண்ட புழுதிப் புயல் (Saharan Dust Plume) வழக்கத்திற்கு மாறான அளவில் ஐரோப்பா மற்றும் பிரிட்டன் நோக்கிப் நகர்ந்து வருவதாகப் புதிய அறிவியல் ஆய்வுகள் எச்சரித்துள்ளன.</p><p> 

இதனால் பிரிட்டனின் வான்பகுதி முற்றிலும் மங்கலான ஆரஞ்சு நிறமாக மாறுவதுடன், அங்கு ‘இரத்த மழை’ (Blood Rain) எனப்படும் செம்பழுப்பு நிற மழை பொழிவதற்கான அபாயம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16f3a270-3495-48b5-958a-20c58f50bde4/26-6a59da80d9acd.webp' /></p><h2>காற்றில் கண்ணுக்குத் தெரியாத ‘PM10’ நுண்துகள்களின் அளவு&nbsp;</h2><p> </p><p>

புவி வெப்பமயமாதல் காரணமாகச் சகாராவின் வறண்ட பரப்பளவு அதிகரித்து வருவதே இந்த அசாதாரண சூழலுக்குக் காரணம் என வானிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
ஸ்வீடனின் லண்ட் பல்கலைக்கழகம் (Lund University) மற்றும் இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து மேற்கொண்ட ஆய்வின்படி, </p><p>கடந்த பத்தாண்டுகளில் ஐரோப்பிய வான்வெளியில் பரவும் பாலைவனப் புழுதியின் அளவு 10% முதல் 25% வரை கணிசமாக அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. </p><p>

வளிமண்டலத்தில் மிதக்கும் இந்த நுண் துகள்கள், மழையோடு சேர்ந்து கீழே இறங்கும்போது கார்கள், ஜன்னல்கள் மற்றும் கட்டிடங்களின் மீது செம்பழுப்பு நிறத்திலான களிமண் போன்ற படிவுகளை ஏற்படுத்துகின்றன.
</p><p>
 அறிவியல் பூர்வமாக இது வெறும் தூசு கலந்த மழைதான் என்றாலும், இதன் அச்சுறுத்தும் தோற்றம் காரணமாகவே இது ‘இரத்த மழை’ என்று அழைக்கப்படுகிறது.</p><p>

பருவநிலை மாற்றத்தின் தீவிரம் இப்படியே தொடர்ந்தால், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் வான்வெளியில் பரவும் சகாரா புழுதியின் அளவு மேலும் 40% முதல் 60% வரை அதிகரிக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p> 

இந்த அதீத புழுதியால் பிரிட்டனின் காற்றுத் தரம் (Air Quality) மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு, காற்றில் கண்ணுக்குத் தெரியாத ‘PM10’ நுண்துகள்களின் அளவு அபாயக் கட்டத்தைத் தாண்டும். </p><p>

இது ஆஸ்துமா போன்ற சுவாசப் பாதிப்புகள் மற்றும் இதய நோய்களைக் கொண்ட முதியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் கடுமையான உடல்நலக் குறைபாடுகளை ஏற்படுத்தும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
</p><p>
மேலும், வான்வெளியில் அடர்த்தியாகப் படரும் இந்த புழுதிப் படலம் சூரிய ஒளியைத் தடுத்து, சூரிய ஆற்றல் (Solar Energy) கட்டமைப்புகளின் மின் உற்பத்தியைக் கணிசமாகக் குறைப்பதுடன், விமானப் போக்குவரத்துக்கான தொலைநோக்குத் திறனையும் (Visibility) பாதிக்கும். </p><p>

எனவே, ஐரோப்பிய நாடுகள் இந்த சுற்றுச்சூழல் அச்சுறுத்தலைக் வெறும் இயற்கை நிகழ்வாகக் கடந்து போகாமல், கூட்டு நடவடிக்கை மூலம் முன்னெச்சரிக்கை எச்சரிக்கை அமைப்புகளை (Early Warning Systems) வலுப்படுத்த வேண்டும் என இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-17T07:30:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிண்ணியா ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kinniya-base-hospital-under-the-central-government-1784271856"></link>
            <id>https://tamilwin.com/article/kinniya-base-hospital-under-the-central-government-1784271856</id>
            <summary type="text">திருகோணமலையில் அதிக சனத்தொகையைக் கொண்ட கிண்ணியா பிரதேச மக்கள்
நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக,
கிண்ணியா தள வைத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலையில் அதிக சனத்தொகையைக் கொண்ட கிண்ணியா பிரதேச மக்கள்
நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக,
கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்குரிய பூர்வாங்க
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு
வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
</p><p>
நேற்று (16.07.2026) மாலை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பின் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p></p><h2>மக்களின் நியாயமான கோரிக்கை</h2><p>தொடர்ந்து கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர்,&nbsp;"திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேசம் அதிக சனத்தொகையைக் கொண்ட ஒரு
பகுதியாகும்.</p><p> கிண்ணியா பிரதேச மக்களுக்கு மாத்திரமன்றி, அதனைச் சுற்றியுள்ள பல
கிராமப்புற மக்களுக்கும் கிண்ணியா தள வைத்தியசாலையே பிரதான சுகாதாரச் சேவைகளை
வழங்கி வருகின்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04deae5b-6f5d-4f59-be1d-5aa6f904f992/26-6a59d8710c527.webp' /></p><p>
சுனாமி அனர்த்தத்தின் பின்னர், இட நெருக்கடியானதொரு சூழலில் இத்தாலிய மக்களின்
நன்கொடையின் மூலம் இந்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டு தற்போது இயங்கி
வருகின்றது. </p><p>இந்தநிலையில், இந்த வைத்தியசாலையின் தரத்தினை உயர்த்துமாறு
பிரதேச மக்களால் பல வருடங்களாகக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
மக்களின் இந்த நியாயமான கோரிக்கைகளைச் சரியான முறையில் ஆராய்ந்து, இந்த
வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர முடியுமா என்பது குறித்துப்
பரிசீலிப்பதற்கான முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>நிபுணர் குழுவின் அறிக்கை</h2><p>வைத்தியசாலையின் நிலைமைகளை ஆராய்வதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்
குறித்து மேலும் விளக்கிய அவர்,

"மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக
ஆராய்வதற்கு விசேட உப குழு (நிபுணர் குழு) ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/329c943c-9b45-410b-bebb-303eb02da8df/26-6a59d871df5fa.webp' /></p><p>எந்தவொரு
தீர்மானத்தையும் நாம் அரசியல் இலாபங்களுக்காக எடுக்க விரும்பவில்லை. அதனாலேயே
இந்த நிபுணர் குழுவை நியமித்துள்ளோம்.
</p><p>
இந்தக் குழுவின் அறிக்கை சாதகமாக அமையும் பட்சத்தில், சுகாதார அமைச்சுடன்
விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டு அடுத்தகட்ட முன்னெடுப்புகளைச் செய்வோம்.</p><p>
ஏற்கனவே கந்தளாய் ஆதார வைத்தியசாலை மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
எனவே, கிண்ணியா வைத்தியசாலைக்கும் இதனைச் செய்யக்கூடிய சாதகமான நிலைமை
ஏற்பட்டுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்.
</p><p>
நிபுணர் குழுவின் அறிக்கையின் பிரகாரம் எமது அடுத்தகட்ட நகர்வுகள் அமையும்"
என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-07-17T07:25:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொக்காங்க!! ஓபனாக பேசிய சீரியல் நடிகை லதா ராவ்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/actress-latha-rao-opens-up-adjustment-in-film-1784273084"></link>
            <id>https://viduppu.com/article/actress-latha-rao-opens-up-adjustment-in-film-1784273084</id>
            <summary type="text">லதா ராவ்தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழி சீரியல் தொடர்களில் நடித்து ரசிகர்கள் மனதில் பிரபலமானவர் தான் நடிகை லதா ராவ்.

இவர் மெட்டி ஒல...</summary>
            <content type="html"><![CDATA[<h2>லதா ராவ்</h2><p>தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழி சீரியல் தொடர்களில் நடித்து ரசிகர்கள் மனதில் பிரபலமானவர் தான் நடிகை லதா ராவ்.

இவர் மெட்டி ஒலி, செல்வி, திருமதி செல்வம் போன்ற பல மெகா சீரியல்களிலும் நடித்திருக்கிறார். மேலும் ஜெயம் ரவி நடித்த தில்லாலங்கடி படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b721826f-8477-4bb4-853b-246a0d0fbf38/26-6a59d8be336da.webp' /></p><p> </p><p>லதா ராவ், ராஜ்கமல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லாரா, ராகா என்று மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் பேட்டி ஒன்றில் பேசிய லதா ராவ் சினிமாவில் நடிக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசியுள்ளார். </p><p>அதில், எனக்கு எது தவறு சரி என்பதை 15 வயதில் என் அம்மா சொல்லிக்கொடுத்தார்கள். ஆனால் என்னோட 2 வயது குழந்தைக்கு குட் டச், பேட் டச் சொல்லிக் கொடுக்கும் ஒருநிலை உருவாகிவிட்டது. குழந்தைகளை வளர்க்கும் கடமை தாய்க்கு மிகப்பெரிய பொறுப்பாக மாறியுள்ளது.</p><h2>அட்ஜெஸ்ட்மெண்ட்</h2><p>சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் இல்லாமல் இல்லை. ஒவ்வொருத்தர் இருப்பதை பொருத்துத்தான் அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற பிரச்சனையுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26039604-9384-4305-b3b1-88616c01de2c/26-6a59d8bed7b44.webp' /></p><p> </p><p>தயாரிப்பாளரும் இயக்குநரும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கேட்டால் அதை தவிர்க்கலாம். என்னிடம் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய முடியுமா என கேட்டார்கள். என்னால் முடியாது என்று கூறிவிட்டேன். அதனால் சில பட வாய்ப்புகளையும், முக்கியமான கேரக்டர்களில் நடிக்கும் வாய்ப்பையும் இழந்துள்ளேன் என்று சில வருடங்களுக்கு முன் நடிகை லதா ராவ் பேட்டியொன்றில் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-17T07:24:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிலரின் பொறுப்பற்ற நடத்தை வருத்தமளிக்கிறது : கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/we-create-development-fisheries-minister-1784267220"></link>
            <id>https://tamilwin.com/article/we-create-development-fisheries-minister-1784267220</id>
            <summary type="text">மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், மாவட்டத்தின் எதிர்கால
அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவும் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட
அபிவிருத்திக் கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், மாவட்டத்தின் எதிர்கால
அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவும் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட
அபிவிருத்திக் குழுக் கூட்டம், சிலரின் பொறுப்பற்ற மற்றும் நாகரிகமற்ற
நடத்தையால் இடைநிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது என்பது வருத்தமளிக்கிறது என
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.</p><p>

அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>அபிவிருத்திக் குழுக் கூட்டம் இடைநிறுத்தம்</h2><p>
</p><p>குறித்த பதிவில் அவர் மேலும்,&nbsp;</p><p>

மக்களின் வாழ்வாதாரம், உட்கட்டமைப்பு, விவசாயம், கடற்றொழில், கல்வி, சுகாதாரம்
உள்ளிட்ட அத்தியாவசிய அபிவிருத்தி விடயங்கள் விவாதிக்கப்படும் உயர்மட்ட
நிர்வாக மேடைகள், தனிப்பட்ட அரசியல் நாடகங்களுக்கான அரங்குகளாக மாற்றப்படக்
கூடாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5828bc52-5697-4e74-832b-dd4392984b7b/26-6a59c3ca23f9a.webp' /></p><p>
</p><p>
கூட்டங்களில் கலந்துகொள்வது என்பது வெறுமனே சத்தமிடுவதோ, குழப்பம் விளைவிப்பதோ
அல்ல, ஜனநாயக மரபுகளையும், நிர்வாக நடைமுறைகளையும், அதிகாரிகளின் கௌரவத்தையும்
மதித்து செயல்பட வேண்டிய பொறுப்புணர்வாகும்.</p><p>
</p><p>
அதற்கான அரசியல் நாகரிகத்தையும், நிர்வாக பண்பாட்டையும் சிலர் இன்னும்
கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
தொடர்ச்சியாக அதிகாரிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து,
அபிவிருத்திப் பணிகளை திசைதிருப்பும் முயற்சிகள் எந்த வகையிலும்
ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.</p><p></p><h2>அபிவிருத்தியை உருவாக்குவோம்</h2><p>
</p><p>
அரசியல் இலாபத்திற்காக மக்களின் எதிர்காலத்தோடு விளையாட அனுமதிக்க
முடியாது.இன்று நடைபெற்ற சம்பவம், இத்தகைய பொறுப்பற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக
உரிய நடவடிக்கை அவசியம் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>
சிலர் குழப்பத்தை உருவாக்கலாம், ஆனால் நாம் அபிவிருத்தியை உருவாக்குவோம்.
சிலர் அரசியல் நாடகத்தை அரங்கேற்றலாம், ஆனால் நாம் மக்களின் வாழ்க்கையை
மாற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5176f5bd-582c-489c-b372-22338415899d/26-6a59c3caeef3c.webp' /></p><p>
</p><p>
கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி, முன்னேற்றம் மற்றும் இருப்பு தொடர்பில்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் நாங்களும் கூடுதல் கவனம் செலுத்துவோம்.</p><p>
கிளிநொச்சியை ஒருபோதும் கைவிடமாட்டோம்.

மீண்டும் விரைவில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெறும். மக்களின்
எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் உறுதியான தீர்மானங்களும், முன்னேற்றப் பாதையும்
அங்கே உருவாகும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T07:24:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அதிரடியாக கைதான முக்கிய நபர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lpl-jaffna-kings-team-owner-arrested-1784268607"></link>
            <id>https://jvpnews.com/article/lpl-jaffna-kings-team-owner-arrested-1784268607</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கை பிரீமியர் லீக் (LPL) தொடரில் பங்கேற்கும் யாழ்ப்பாண கிங்ஸ் அணியின் உரிமையாளர் போட்டி நிர்ணயம் தொடர்பான குற்றச்சாட்டில் விசேட புலனாய்வுப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கை பிரீமியர் லீக் (LPL) தொடரில் பங்கேற்கும் யாழ்ப்பாண கிங்ஸ் அணியின் உரிமையாளர் போட்டி நிர்ணயம் தொடர்பான குற்றச்சாட்டில் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.</p><p>



2026 இலங்கை பிரீமியர் லீக் தொடரின் உத்தியோகபூர்வ தொடக்க விழா நடைபெறவிருந்த நிலையில், இன்று இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50ea170b-7a4a-40fd-bd8e-82fe07a3c737/26-6a59c7406d22d.webp' /></p><p></p><h2>விளையாட்டு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள்</h2><p>சூதாட்ட மோசடி குற்றச்சாட்டு ஒன்று தொடர்பாக, விளையாட்டுத் துறையுடன் தொடர்புடைய குற்றங்களைத் தடுக்கும் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 

இன்று நடைபெறும் 2026 லங்கா பிரீமியர் லீக் தொடரின் உத்தியோகபூர்வ ஆரம்பத்திற்கு முன்னதாக இந்த விவகாரத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p></p><p> </p><p>

விளையாட்டுத் துறையுடன் தொடர்புடைய குற்றங்களைத் தடுக்கும் சட்டத்தின் கீழ், விளையாட்டு ஊழலுக்கு எதிராக உலகின் மிகக் கடுமையான சட்டங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை விளங்குகின்றது.</p><p> 

இச்சட்டம் போட்டி மோசடி , ஸ்பாட்-பிக்ஸிங் மற்றும் விளையாட்டுகளில் மேற்கொள்ளப்படும் ஏனைய முறைகேடுகளைக் குற்றச்செயல்களாக வரையறுப்பதுடன், குற்றம் நிரூபிக்கப்பட்டால் தவறிழைப்பவர்களுக்கு கணிசமான அபராதங்களும் சிறைத்தண்டனைகளும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.</p><p>&nbsp;</p><p>விளையாட்டு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T07:24:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் கியூஆர் முறைமை தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fuel-qr-system-1784272752"></link>
            <id>https://tamilwin.com/article/fuel-qr-system-1784272752</id>
            <summary type="text">எரிபொருள் விநியோகத்திற்கான கியூஆர் (QR) முறையை உடனடியாக நீக்கும் திட்டம் எதுவும் இல்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

உலகளாவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>எரிபொருள் விநியோகத்திற்கான கியூஆர் (QR) முறையை உடனடியாக நீக்கும் திட்டம் எதுவும் இல்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
</p><p>
உலகளாவிய எரிபொருள் சந்தையில் நிலவும் ஸ்திரத்தன்மையின்மையின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிர்வாக இயக்குநர் மயூர நெத்திகுமரகே தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><h2>
கியூஆர் முறைமை</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

கியூஆர் முறையின் பயன்பாடு எரிபொருள் மற்றும் டொலர் கையிருப்பு இரண்டையும் கட்டுப்படுத்தும் நிலையில், போர்ச் சூழல் மீண்டும் மோசமடைந்தால் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறையைத் தடுக்கவும் உதவியாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1c194c4-762d-41f0-9941-4bf79eb3b678/26-6a59d7c0a2e6b.webp' /></p><p> </p><p>

 மக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கவும் கியூஆர் முறைமை தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளதுடன், அதற்கான நடவடிக்கையையும் எடுத்துள்ளது. </p><p>

மேலும், போர்ச் சூழல் மீண்டும் உருவானதால் நாட்டின் எரிபொருள் விநியோக வலையமைப்பு பாதிக்கப்படவில்லை என்றும், எரிபொருள் விலையில் மீண்டும் உயர்வு ஏற்படுமா என்பதை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T07:21:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோருவோர் எண்ணிக்கையில் வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/asylum-seekers-applications-fell-in-swiss-1784272709"></link>
            <id>https://news.lankasri.com/article/asylum-seekers-applications-fell-in-swiss-1784272709</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தில், 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் புகலிடம் கோரியவர்கள் எண்ணிக்கை 16 சதவிகிதம் குறைந்துள்ளது.

புகலிடம் கோருவோர் எண்ணிக்கையில் வீழ்ச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தில், 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் புகலிடம் கோரியவர்கள் எண்ணிக்கை 16 சதவிகிதம் குறைந்துள்ளது.</p><h3>

புகலிடம் கோருவோர் எண்ணிக்கையில் வீழ்ச்சி
</h3><p>
2026ஆம் ஆண்டின் முதல் பாதியில், 9,734 பேர் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளார்கள். இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது 16 சதவிகிதம் குறைவு ஆகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6463b592-f553-46bf-be1b-26f85c90d027/26-6a59d7472394e.webp' /></p><p>
அதேபோல, 2026ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் மட்டும், 1,777 பேர் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளார்கள். இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது 20 சதவிகிதம் குறைவு ஆகும்.&nbsp;</p><p></p><p>
இந்த தகவலை, புலம்பெயர்தலுக்கான சுவிஸ் மாகாணச் செயலகம் வெளியிட்டுள்ளது.
</p><p>
ஜூன் மாதத்தில் புகலிடம் கோரியுள்ளவர்களில் ஆப்கன் நாட்டவர்கள் 456 பேர், எரித்ரியா நாட்டவர்கள் 222 பேர், அல்ஜீரியா நாட்டவர்கள் 175 பேர், துருக்கி நாட்டவர்கள் 140 பேர் மற்றும் சோமாலியா நாட்டவர்கள் 139 பேர் ஆவர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T07:19:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதை மாத்திரைகளுடன் 23 வயது யுவதி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/women-arrest-with-drugs-in-gampaha-1784266107"></link>
            <id>https://tamilwin.com/article/women-arrest-with-drugs-in-gampaha-1784266107</id>
            <summary type="text">கம்பஹா மாவட்டம், அத்தனகல்ல பிரதேசத்தில் பெருமளவிலான போதை மாத்திரைகளுடன் 23
வயதுடைய யுவதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா மாவட்டம், அத்தனகல்ல பிரதேசத்தில் பெருமளவிலான போதை மாத்திரைகளுடன் 23
வயதுடைய யுவதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>இந்த கைது நடவடிக்கையானது நேற்று(16.07.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2>கைது செய்யப்பட்ட யுவதி</h2><p>
அத்தனகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த இந்த யுவதி, தனியார் நிறுவனம் ஒன்றில்
பணியாற்றி வருபவர் எனப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>
</p><p>
இவரிடமிருந்து சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த பெருமளவு போதை மாத்திரைகள்
கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63ce3c11-7498-4dec-861a-758224c0e34f/26-6a59bed3360da.webp' /></p><p>கைது செய்யப்பட்ட யுவதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இவருடைய
தந்தை ஹெரோயின் போதைப்பொருளுடன் அண்மையில் கைது செய்யப்பட்டு, தற்போது
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்ட யுவதியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள
பொலிஸார், இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T07:16:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீர் சோதனையில் பிடிபட்ட சாரதிகள் ; சேவையிலிருக்கும் போது போதைப்பொருள் பாவனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drivers-caught-during-sudden-police-inspection-1784272477"></link>
            <id>https://jvpnews.com/article/drivers-caught-during-sudden-police-inspection-1784272477</id>
            <summary type="text">கொட்டாவை, மகும்புர பல்லின போக்குவரத்து மத்திய நிலையத்தில் வியாழக்கிழமை (16) முன்னெடுக்கப்பட்ட திடீர் போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கையின் போது, பொதுப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொட்டாவை, மகும்புர பல்லின போக்குவரத்து மத்திய நிலையத்தில் வியாழக்கிழமை (16) முன்னெடுக்கப்பட்ட திடீர் போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கையின் போது, பொதுப் போக்குவரத்து பஸ் சாரதிகள் நால்வர் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சின் வீதிப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><p style="text-align: justify; margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95924a77-c8e9-46f9-ba9f-2abc8265ebb5/26-6a59d65e7fd57.webp' /></p><h2 style="text-align: justify; margin-left: 25px;">பரிசோதனை</h2><p> </p><p style="text-align: justify; "> 

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர், வைத்தியர்&nbsp; தலைமையிலான குழுவினர், குறித்த நிறுவனத்தின் நடமாடும் ஆய்வக பஸ் வண்டியினுள் வைத்து இப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.</p><p style="text-align: justify; "> 

பொதுப் போக்குவரத்தில் ஒழுக்கமான மற்றும் போதைப்பொருள் அற்ற பணியாளர்களை உருவாக்குவதற்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 


நேற்று காலை நடத்தப்பட்ட இப்பரிசோதனையின் போது, சுமார் 150 பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.</p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

கடுமையான சட்ட நடவடிக்கை சாரதிகளின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும், வீதி விபத்துக்களைக் குறைக்கவும் இவ்வாறான விசேட செயற்திட்டங்கள் அத்தியாவசியமானவை என போக்குவரத்து அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அத்துடன், போதைப்பொருள் பயன்படுத்தியதாக அடையாளம் காணப்பட்ட சாரதிகளுக்கு எதிராக நிறுவன ரீதியான ஒழுக்காற்று விதிகளின் கீழ் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்றும், பொது சட்டத்தின் கீழ் நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சு எச்சரித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

 போக்குவரத்து அமைச்சு, இலங்கை பொலிஸார் மற்றும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் ஆகியன இணைந்து முன்னெடுக்கும் இத்திட்டம், பாதுகாப்பான மற்றும் நம்பகமான பொதுப் போக்குவரத்து சேவையை நாடளாவிய ரீதியில் உறுதி செய்வதற்காக மேலும் விரிவுபடுத்தப்படவுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-17T07:16:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தூக்கமில்லாமல் தவிக்கும் நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடம் - என்ன காரணம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chennai-tops-in-sleep-loss-due-to-night-time-heat-1784272133"></link>
            <id>https://news.lankasri.com/article/chennai-tops-in-sleep-loss-due-to-night-time-heat-1784272133</id>
            <summary type="text">தூக்கமில்லாமல் தவிக்கும் நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. 


இரவு நேர வெப்பத்தால் தூக்க இழப்பு
உலகளவில் காலநிலை மாற்றம் அதிகரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தூக்கமில்லாமல் தவிக்கும் நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. </p><h3>


இரவு நேர வெப்பத்தால் தூக்க இழப்பு</h3><p>
உலகளவில் காலநிலை மாற்றம் அதிகரித்து வரும் நிலையில், அதனால் ஏற்பட உள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.</p><p> 

இந்நிலையில், புவி வெப்பமாதல் காரணமாக இரவு நேர வெப்பத்தால் ஏற்படும் தூக்க இழப்புகள் குறித்து கிளைமேட் சென்ட்ரல் என்ற அமைப்பு உலகளவில் ஆய்வு நடத்தியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99283111-3a62-4dff-b092-958e676ce218/26-6a59d50786c4d.webp' /></p><p>

இந்த ஆய்வு குறித்த அறிக்கையை 'காலநிலை மாற்றம் மக்களுக்குச் செலவை ஏற்படுத்துகிறது (2020-2025)' என்று வெளியிட்டுள்ளது.</p><p> 

உலகளவில், 2020 மற்றும் 2025 ஆண்டுக்கு இடையில், இரவு நேர வெப்பம் காரணமாக ஒரு சராசரி நபர் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 56 மணிநேர தூக்கத்தை இழந்துள்ளார். </p><p>

அந்த வருடாந்திர தூக்க இழப்பில், மதிப்பிடப்பட்ட 6 மணிநேரம், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பமயமாதலின் காரணமாக ஏற்படுகிறது.&nbsp;</p><p></p><p>

இதில் உலகளவில் மத்திய கிழக்கு நாடுகளான சவூதி அரேபியா, ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் உள்ள நகரங்களில் வசிக்கும் மக்கள், அதிக தூக்க இழப்பை எதிர்கொள்கின்றனர். </p><p>

அதிகரித்த இரவு நேர வெப்பநிலையால் ஆண்டுதோறும் 55 முதல் 87 மணிநேர உறக்கத்தை இழந்ததாகவும், இதில் 12 முதல் 16 மணிநேர உறக்க இழப்பு காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><h3>தூக்க இழப்பில் சென்னை முதலிடம்</h3><p>

இந்தியாவில், உள்ள பெருநகரங்களில் சென்னை அதிக தூக்க இழப்பை எதிர்கொள்ளும் நகரமாக உள்ளது. 

சென்னையில் வசிப்பவர்கள் ஆண்டுக்குச் சராசரியாக 93 மணிநேரத் தூக்கத்தை இழக்கின்றனர். இதில் 5 மணிநேர இழப்பிற்குக் காலநிலை மாற்றமே நேரடிக் காரணமாகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5735cee7-eaa1-4f35-a471-5e45700b604c/26-6a59d5083a35e.webp' /></p><p>
மும்பை 84 மணிநேரமும், கொல்கத்தா 80 மணிநேரமும், ஹைதராபாத் 75 மணிநேரமும், பெங்களூரு 67மணிநேரமும்,டெல்லி 66 மணிநேரமும் தூக்க இழப்பைச் சந்தித்ததாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. </p><p>

தமிழ்நாட்டில் ஒரு நபருக்கு ஆண்டுக்குக் கூடுதலாக 7.9 மணிநேர உறக்க இழப்பு ஏற்பட்டது. இதுவே இந்தியாவில் மிக அதிகமானதாகும்.</p><p> 

கர்நாடகா 7.8 மணிநேர உறக்க இழப்புடனும், ராஜஸ்தான் 7.0 மணிநேர உறக்க இழப்புடனும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன. </p><h3> 

ஏன் தூக்க இழப்பு?
</h3><p>
வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அதிலிருந்து வெளிவரும் வெப்ப காற்று, நச்சுப் புகை, இரவு நேர வெப்பத்தை அதிகரிக்கிறது.</p><p> 

இதே போல், அதிவேக நகரமயமாக்களால் மரங்கள் அழிக்கப்பட்டு, காங்கிரீட் கட்டடங்களும், தார் சாலைகளும் அதிகரித்து வருகின்றன.</p><p> 

இவை பகல் நேர வெப்பத்தை அப்படியே உறிஞ்சி வைத்துக்கொண்டு, இரவில் மெல்ல வெளியேற்றுகின்றன. இதனால் இரவு நேரக் குளிர்ச்சி என்பதே இல்லாமல் போகிறது.&nbsp;</p><p>

சூரியன் மறைந்த பின்னர் இரவில் நிலவும், மிதமான குளிர்ச்சியான சூழலில் நம் உடலின் வெப்பநிலை குறைந்து, ஆழ்ந்த தூக்கம் வரும்.

ஆனால், இரவில் நிலவும் அதிக வெப்பநிலை, தூக்கதிற்கு இடையூறு ஏற்படுத்தி, பகலில் ஏற்படும் வெப்ப அழுத்தத்திலிருந்து மனித உடல்கள் குளிர்ச்சியடைவதையும் மீள்வதையும் தடுக்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31309a30-fa6c-4048-9526-2f32e83bbd0b/26-6a59d506d6375.webp' /></p><p>போதுமான தூக்கமின்மையானது செயல்திறன் குறைபாடு, கடுமையான மன அழுத்தம், சோர்வு, கோபம் மாரடைப்பு, பக்கவாதம், ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஆகியவற்றுக்கு காரணமாகிறது.
</p><p>
குறைவான மற்றும் தரமற்ற உறக்கமும் ஆயுட்காலத்தைக் குறைத்து, விபத்துகள் மற்றும் காயங்களின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T07:09:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுவயது போட்டோவில் இருக்கும் இந்த சீரியல் நடிகை யார் என்று தெரிகிறதா?... ஹிட் சீரியல் நடிகை தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sun-vijay-tv-serial-actress-childhood-photo-1784270570"></link>
            <id>https://cineulagam.com/article/sun-vijay-tv-serial-actress-childhood-photo-1784270570</id>
            <summary type="text">சீரியல்தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு விஷயம் மிகவும் வைரலானது. அது என்னவென்றால் பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் தான், கொரோனா காலகட்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சீரியல்</h2><p>தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு விஷயம் மிகவும் வைரலானது. </p><p>அது என்னவென்றால் பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் தான், கொரோனா காலகட்டத்தில் வெள்ளித்திரை பிரபலங்களின் புகைப்படங்கள் நிறைய சமூக வலைதளங்களில் வெளியாகிய வண்ணம் இருந்தது. அதன்பின் சின்னத்திரை பிரபலங்கள் போட்டோக்களும் வைரலாகி வந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/028cccb7-c7f1-468c-9a62-24a95db3bb28/26-6a59d4024b569.webp' /></p><p>
</p><p>சமீபத்தில் சினிஉலகம் பக்கத்தில் நிறைய சீரியல்களில் வில்லியாக நடித்த நடிகை வந்தனாவின் சிறுவயது போட்டோக்கள் பார்த்தோம்.
இப்போது இன்னொரு சின்னத்திரை நடிகையின் போட்டோ வெளியாகியுள்ளது.
</p><p></p><h2>யார் அவர்</h2><p>
இந்த நடிகை சன் மற்றும் விஜய் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார். ஒரு சீரியலில் மொத்தமாக வில்லி, இன்னொரு சீரியலில் சூழ்நிலையால் வில்லியாக மாறப்பட்டவராக நடிக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58ab10f3-bf05-43a8-a787-eb0a28126b55/26-6a59d4017727c.webp' /></p><p> தற்போது இந்த நடிகை நடிக்கும் ஒரு சீரியலும் முடிவுக்கு வரப்போகிறது, எந்த தொடர் என்றால் சன் டிவியில் ஒளிபரப்பாகும் வினோதினி தான். </p><p>இந்த தொடர் சொன்னதுமே சிறுவயது போட்டோவில் இருப்பவர் யார் என்று தெரிந்திருக்குமே, ஆமாம் சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் நடிகை சல்மா தான் இது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d75082fc-a71f-4cac-a915-ca6b153b42be/26-6a59d534cc4d5.webp' /></p>]]></content>
            <updated>2026-07-17T07:04:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும கொடுப்பனவு பெறுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/scam-aswesuma-allowance-for-low-income-families-1784269213"></link>
            <id>https://ibctamil.com/article/scam-aswesuma-allowance-for-low-income-families-1784269213</id>
            <summary type="text">அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெறும் பயனாளர்களின் பணத்தை திருடும் நோக்கில், நாடளாவிய ரீதியில் திட்டமிட்ட நிதி மோசடி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக நலன...</summary>
            <content type="html"><![CDATA[<p>அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெறும் பயனாளர்களின் பணத்தை திருடும் நோக்கில், நாடளாவிய ரீதியில் திட்டமிட்ட நிதி மோசடி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக நலன்புரி நன்மைகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
குறித்த மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபை விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><p>அந்த அறிவிப்பில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள அஸ்வெசும பயனாளர்களைப் பல்வேறு தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்புகொள்ளும் மோசடியாளர்கள், தங்களை நலன்புரி நன்மைகள் சபையின் தலைமை அலுவலக அதிகாரிகள் என அறிமுகப்படுத்துகின்றனர்.</p><p></p><h2>நலன்புரி நன்மைகள் சபை</h2><p>
</p><p>
பயனாளர்களின் விபரங்களைப் புதுப்பிப்பதாகக் கூறியோ அல்லது வேறு ஏதேனும் போலியான காரணங்களைக் குறிப்பிட்டோ, பயனாளர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகைப் பணத்தை இந்த மோசடியாளர்கள் கோரி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4623f5b3-49c5-45a6-bb5d-2a39d9407157/26-6a59d2a0b2c29.webp' /></p><p>

இந்தத் தொலைபேசி அழைப்புகளுக்கும் நலன்புரி நன்மைகள் சபைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இத்தகைய நடவடிக்கைகள் சபையின் அனுமதியோ அல்லது அறிவோ இன்றி முன்னெடுக்கப்படும் முற்றிலும் சட்டவிரோதமான மோசடிச் செயல்களாகும்.
</p><p>

மோசடிகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சபை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
</p><p>அதன்படி, இவ்வாறான போலி அழைப்புகள் வந்தால், உடனடியாக அது குறித்துப் பயனாளிக்கு மிக அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்ய வேண்டும்.</p><p></p><h2>குற்றப் புலனாய்வுத் திணைக்களம்</h2><p>
</p><p>
இத்தகைய அழைப்புகளைப் பெற்ற பயனாளர்கள், அந்தந்த காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு அளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bd37958-3383-4ad9-92ec-ee893528bdc5/26-6a59d29fc178f.webp' /></p><p>

அஸ்வெசும திட்டத்துடன் தொடர்புடைய கள அதிகாரிகளும் கிராம மட்டங்களில் இது குறித்து தீவிரக் கண்காணிப்புடன் இருக்க வேண்டும்.</p><p>
அஸ்வெசும பயனாளர்கள் தங்களது தனிப்பட்ட விபரங்களையோ, வங்கி விபரங்களையோ அல்லது பணத்தையோ அறியாத நபர்களுக்குத் தொலைபேசி வழியே வழங்குவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T07:01:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொடூர தாக்குதலால் சபரிவர்மன் மூச்சுத்திணறி மரணம் - அறிக்கையில் அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/custodial-death-sabarivarman-postmortem-report-1784265612"></link>
            <id>https://news.lankasri.com/article/custodial-death-sabarivarman-postmortem-report-1784265612</id>
            <summary type="text">விசாரணைக்கைதி சபரிவர்மனின் உடற்கூறாய்வு அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளது.

சபரிவர்மன் மரணம்

கன்னியாகுமரி மாவட்டதில் குட்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>விசாரணைக்கைதி சபரிவர்மனின் உடற்கூறாய்வு அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளது.
</p><h3>
சபரிவர்மன் மரணம்
</h3><p>
கன்னியாகுமரி மாவட்டதில் குட்கா விற்பனை செய்ததாகக் கூறி, கடந்த ஜூலை 9 ஆம் தேதி 35 வயதான சபரிவர்மன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a035ca84-68c0-40ca-95bd-6f1b214d4d62/26-6a59bb8e46faa.webp' /></p><p> 

கடந்த 13 ஆம் தேதி அவருக்கு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி அவரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். </p><p>

அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், அவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி அவரது உடலை பெற குடும்பத்தினர், மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.&nbsp;&nbsp;</p><p></p><p>முதல் தகவல் அறிக்கை ஜூன் 9 ஆம் தேதி உதவி ஆய்வாளர் பிரைட் பிளஸிங், தலைமை காவலர்கள் ஞானபிலிப்பு, சுயம்புலிங்கம் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சபரிவர்மனின் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில் கடையில் சோதனை செய்ய அனுமதி கேட்டார்களாம்.</p><p> 

கடையின் உரிமையாளரான சபரிவர்மன் தானாக முன்வந்து ஒப்புக்கொண்டதுடன், குட்கா பாக்கெட்டுகளை அவரே எடுத்து ஆஜர்படுத்தினாராம். தலா 15 கிராம் எடைகொண்ட புகையிலை 11 பாக்கெட்டுகள் என 192 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றியுள்ளனர்&nbsp;</p><p>
இதன் பின்னர், சபரிவர்மனை தாக்கியதாக சிறை வார்டன்கள் 3 பேர் மற்றும் 8 சிறைக் கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcdb1f92-04ba-4a00-ba46-92d085e906f9/26-6a59bb8d94302.webp' /></p><p>

சபரி வர்மன் குடும்பத்திற்கு அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை மற்றும் தற்காலிக அரசுப் பணி ஆணையை வழங்க அமைச்சர்கள் ராஜேஷ்குமார் மற்றும் ஸ்ரீநாத் முன் வந்தனர். </p><p>

இதனை நிராகரித்த குடும்பத்தினர், சபரி வர்மனின் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட வீடியோவை மறு ஆய்வு செய்த பிறகே அவரது உடலை பெறுவோம் என்று தெரிவித்தனர்.
</p><h3>
உடற்கூறாய்வு அறிக்கை</h3><p>
சபரிவர்மனின் உடற்கூறாய்வு அறிக்கையில், அவரின் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்ததாகவும், கொடூரமான தாக்குதலால் அவர் மூச்சுத்திணறி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

அந்த அறிக்கையில், "சபரி வர்மனின் மூக்கிலிருந்து ரத்தம் கலந்த திரவம் வெளியேறியது. தலையின் மேற்பகுதி, கழுத்தின் பின்புற நடுப்பகுதியில் ஆழமான ரத்தக்கட்டுகள், சிராய்ப்பு காயங்கள் இருந்தது 

மூளை, அதன் ரத்த நாளங்களில் வீக்கம் இருந்தது. </p><p>இது பொதுவாக மூச்சு திணறல் அல்லது கடும் போராட்டத்தின் போது ஏற்படும் அறிகுறி.

சபரிவர்மனின் உடல் உறுப்பு மாதிரிகள், திசுக்கள் பகுப்பாய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளது. 

அவரது வலது கை மணிக்கட்டில் எலும்பு முறிவு உள்ளது. கை, காலில் தழும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T07:00:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனா கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டமை தவறு..! ரஜீவன் எம்.பி காட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rajeev-s-criticism-of-archuna-mp-1784271324"></link>
            <id>https://tamilwin.com/article/rajeev-s-criticism-of-archuna-mp-1784271324</id>
            <summary type="text">இராமநாதன் அர்ச்சுனா ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எனவே மக்கள் சில கேள்விகளை
அந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஊடாக கேட்பார்கள். எனவே அவர் அந்த கேள்விகளை
மக்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இராமநாதன் அர்ச்சுனா ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எனவே மக்கள் சில கேள்விகளை
அந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஊடாக கேட்பார்கள். எனவே அவர் அந்த கேள்விகளை
மக்கள் சார்பாக கேட்க வேண்டிய தேவை இருக்கின்றது. </p><p>

அவ்வாறான கேள்விகளை
கேட்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் அதனை தடுப்பது ஜனநாயகம் அல்ல. அந்த
இடத்திலிருந்து அர்ச்சுனாவை வெளியேறச் சொல்வதற்கு அமைச்சருக்கோ அல்லது வேறு
எவருக்குமோ அதிகாரம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன்
ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
</p><p>
நேற்றையதினம்(16.07.2026) கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்
ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் அவரை தொடர்புகொண்டு வினவியபோது கருத்து
தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><h2>

கிளிநொச்சி கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>




அவர் கேட்கும் கேள்விகளுக்கு அதிகாரிகளும் சரியான வகையில் பதில் கூற வேண்டும்.
அவ்வாறு அதிகாரிகள் பதில் கூறும் பொழுது அதற்கு அந்த மக்கள் பிரதிநிதியும்
கட்டுப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa8fed96-eb2f-4bc9-bf14-54b8f28bff69/26-6a59d2e662b63.webp' /></p><p> </p><p>ஒரு வாரத்தில் விசாரணை செய்கிறோம், அல்லது ஒரு விசாரணை
குழு அமைக்கிறோம் என்று அதிகாரிகள் கூறும்போது அவர் அதனை ஏற்றுக்கொள்ள
வேண்டும்.
</p><p>
அதேவேளை கூட்டத்தை தலைமை தாங்கும் தலைவரும் அந்த கூட்டத்தை
கட்டுப்படுத்தக்கூடிய வகையில் இருக்க வேண்டும். அவ்வாறு
கட்டுப்படுத்தாவிட்டால் அங்கு தலைமைத்துவம் இல்லாமல் போய்விடும்.</p><h2>

தொடர்ந்து குழப்பும் வாய்ப்பு</h2><p>


நேற்றைய கூட்டத்திற்குள் கமக்கார அமைப்பினர் என்று கூறிக்கொண்டு சிலர் உள்ளே
வந்துள்ளனர். அவர்கள் சிறீதரன் எம்.பியின் ஆட்களாக சுட்டிக்காட்டப்பட்டனர். </p><p>அவர் கடந்த காலங்களில்
இடையிடையே கூட்டத்தை விட்டுவிட்டு எழும்பி சென்று விடுவார், அதன்போது அவரது
ஆட்களும் எழும்பி சென்று விடுவார்கள். அது பிழை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50725044-e82d-43ac-acde-4df194b907f4/26-6a59d2e7194c4.webp' /></p><p>

வடக்க மாகாணத்தின் முக்கியஸ்தர்கள் அனைவரும் தமது நேரத்தினை ஒதுக்கி நேற்றைய
கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். அதற்காக எரிபொருள் செலவு என பல செலவுகள்
உள்ளன.</p><p> 

இந்நிலையில் கூட்டம் நிறுத்தப்பட்டது தவறு. சிறீதரனோ அர்ச்சுனாவோ
வெளியே போனாலும் கூட்டம் முழுமையாக நடத்தப்பட்டு இருக்க வேண்டும். </p><p>இவ்வாறு
தொடர்ச்சியாக கூட்டத்தை நிறுத்தி பழக்கினால் அது கூட்டத்தை குழப்பலாம்
என்ற சிந்தனை வந்துவிடும். அதற்கு இடமளிக்க கூடாது.

ஒரு விடயத்தை கூட்டத்தில் பேசும்போது அதனை அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்
தலைவரோ அல்லது மாவட்ட செயலாளரோ அல்லது பிரதேச செயலர் ஊடாகவோ நிகழ்ச்சி
நிரலுக்குள் கொண்டு வந்து அதனை பேச வேண்டும்.</p><h2> 


இடைநிறுத்தப்படும் கூட்டங்கள்</h2><p>
ஒரு அதிகாரி தவறு செய்தால் அதனை
அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விசாரணை செய்ய முடியாது. அதற்காக
முறைப்பாடு பதிவு செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களம் உள்ளது, பொலிசார்
உள்ளார்கள், வேறு வேறு இடங்கள் உள்ளன. </p><p>


அந்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும்
விசாரணைகளின் அடிப்படையிலேயே அவர் குற்றவாளியா இல்லையா என்று கூற முடியும், அதனை
விட்டு ஒரு பொது வெளியில் குற்றவாளி என்று யாரையும் குற்றம் சாட்ட முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ed11d5c-2ef1-4d62-9846-75b33c70bb46/26-6a59d2e7bc65a.webp' /></p><p>
</p><p>
அரசாங்க அதிகாரிகளை விரக்திக்கு உள்ளாக்க கூடாது. அபிவிருத்தி ஒருங்கிணைப்பு
குழு தலைவர் இருக்கும்போது அவரை மீறி அர்ச்சுனா பேசியிருக்கக் கூடாது. அவரது
கருத்துக்கு அர்ச்சுனா கட்டுப்பட வேண்டும்.</p><p>

 அதனை கட்டுப்படுத்த ஒரு பொறிமுறை
வேண்டும். அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் தொடர்ச்சியாக
அர்ச்சுனா குழப்புவதை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று நாங்கள் கூடி பேசி ஒரு
முடிவு எடுக்க வேண்டும் என்றார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T07:00:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடிப்பிறப்பு நாளிலும் யாழில் மக்கள் போராட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/protest-by-people-in-jaffna-valikamam-north-1784271671"></link>
            <id>https://jvpnews.com/article/protest-by-people-in-jaffna-valikamam-north-1784271671</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் &quot;கொமோண்டோ &quot; பங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 13ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
</p><p>வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f731ecc-b6f7-48b3-b974-50a8728dfb78/26-6a59d3392f065.webp' /></p><p>யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும் , அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில் , அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.</p><p></p><p>

இந்நிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்குமாறு பிரதி வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில் , இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 13ஆவது வாரமாக போராட்டத்தை முன்னடுத்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T06:59:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் கொடூரமாக கழுத்தறுக்கப்பட்ட கொலை செய்யப்பட்ட நபர் - பொலிஸார் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-found-dead-in-homagama-canal-1784267988"></link>
            <id>https://tamilwin.com/article/man-found-dead-in-homagama-canal-1784267988</id>
            <summary type="text">
கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகம - கலகஹேன பகுதியில் உள்ள கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட நபர் தொடர்பில் பல தகவல்கள் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகம - கலகஹேன பகுதியில் உள்ள கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட நபர் தொடர்பில் பல தகவல்கள் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>இந்த சம்பவம் நேற்றுமுன்தினம்(15.07.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>சடலமாக கிடந்த குறித்த நபர் கழுத்தறுக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
</p><p>
கொலை செய்யப்பட்டவர் ஹோமாகம, பிட்டிபன பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><h2><b>கொலை செய்யப்பட்ட நபர்&nbsp;</b></h2><p> 

ஆடைத் தொழிற்சாலையில் முழுநேரப் பணியாளராகவும், பகுதிநேரமாக மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பணியில் ஈடுபட்டு வந்தவராகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3b8e2fe-a444-4415-8619-9298cdbb0d75/26-6a59d2d2bd657.webp' /></p><p>குறித்த நபர் கடந்த 15ஆம் திகதி இரவு 7.00 மணியளவில் பயணியை ஏற்றிச் செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்&nbsp;</p><p>
சடலம் கண்டெடுக்கப்பட்ட கால்வாய்க்கு அருகில் உள்ள காணியிலேயே இந்தக் கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். </p><p>

பாதிக்கப்பட்டவரின் மோட்டார் சைக்கிள், தங்கச் சங்கிலி, கைபேசி மற்றும் பணப்பை ஆகியவற்றைத் திருடிய பின்னரே கொலையாளிகள் தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்கேம் வெளியிட்டுள்ளனர்.</p><h3><b>

பிரேத பரிசோதனை</b></h3><p>சம்பவம் நடந்த இடத்தில், உயிரிழந்தவருக்கு சொந்தமானதாகக் கருதப்படும் ஒரு ஜோடி காலணிகள் மற்றும் 20 ரூபாய் நாணயத்தாள் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a90feda3-af30-406d-a28c-915d5f3fbed7/26-6a59d2d374a66.webp' /></p><p>ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், கழுத்தறுக்கப்பட்டதால் ஏற்பட்ட பலத்த காயங்களே இந்த மரணத்திற்குக் காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
</p><p>
கொலையாளிகள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் குற்றவாளிகளை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-17T06:59:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீயிலிருந்து தப்ப மூன்றாவது மாடியிலிருந்து குதித்த இந்தியர்: பேரன் கண்ட திடுக் காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/grandson-sees-grandfa-fell-from-3rd-floor-fire-1784266852"></link>
            <id>https://news.lankasri.com/article/grandson-sees-grandfa-fell-from-3rd-floor-fire-1784266852</id>
            <summary type="text">கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் வாழ்ந்துவந்த இந்திய தம்பதி, தீவிபத்தில் பலியான விடயம் துயரத்தை உருவாக்கியுள்ளது.

பேரன் கண்ட திடுக் காட்சி

கனடாவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் வாழ்ந்துவந்த இந்திய தம்பதி, தீவிபத்தில் பலியான விடயம் துயரத்தை உருவாக்கியுள்ளது.
</p><h3>
பேரன் கண்ட திடுக் காட்சி</h3><p>

கனடாவின் எட்மண்டன் நகரில் வாழ்ந்துவரும் லாலி தூர் என்னும் இளைஞர், திங்கட்கிழமை இரவு, தன் குடும்பத்துடன் உணவருந்திக்கொண்டிருந்திருக்கிறார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4c5a594-8a44-4fe2-82fd-41409509389d/26-6a59c0657e976.webp' /></p><p>

அப்போது, தொலைக்காட்சி செய்திகளில், வீடொன்றில் பற்றிய தீயிலிருந்து தப்ப முதியவர் ஒருவர் மூன்றாவது மாடியிலிருந்து குதித்ததைக் குறித்த செய்தி ஒன்று ஒளிபரப்பாகிக்கொண்டிருந்திருக்கிறது.
</p><p>
அந்த வீடு தனது தாத்தா, பாட்டியின் வீடு என்பதை அறிந்த தூர், உடனடியாக அங்கு விரைந்துள்ளார்.
</p><p>
தாத்தா வீட்டுக்குச் சென்ற தூர், தன் தாத்தாவின் வீடு கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருப்பதையும், தீயணைப்பு வீரர்கள் தன் தாத்தாவுக்கு உயிர் காக்கும் சிகிச்சையளித்து அவரைக் காப்பாற்ற போராடிக்கொண்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.&nbsp;</p><p></p><p>
தூரின் தாத்தாவான மேஜர் சிங் பந்தலும் (85) பாட்டியான சுரிந்தர்ஜித் கவுர் பந்தலும் (82), 30 ஆண்டுகளாக எட்மண்டனில் வாழ்ந்துவந்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35ce24a8-5cc6-4b6b-93e3-dc4e6ca68cf9/26-6a59c0662e698.webp' /></p><p>

திங்கட்கிழமை இரவு 9.15 மணியளவில், அவர்கள் வாழ்ந்துவந்த வீட்டின் மீது வாகனம் ஒன்று மோதியுள்ளது.
</p><p>
வாகனம் மோதியதில், அங்கிருந்த எரிவாயுக் குழாய் வெடித்து அந்தக் கட்டிடம் தீப்பற்றியுள்ளது.
</p><p>
வீடு தீப்பிடித்ததை அறிந்த மேஜர் சிங், மூன்றாவது மாடிலிருந்து குதித்துள்ளார். ஆனால், அவர் உயிர் தப்பவில்லை. அதேபோல, வீட்டுக்குள்ளிருந்த அவரது மனைவியான சுரிந்தர்ஜித் கவுர், மறுநாள் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.</p><p>

மேஜர் சிங், சுரிந்தர்ஜித் கவுர் தம்பதியருக்கு ஏற்பட்ட துயர முடிவு அவர்களுடைய குடும்பத்தினரை கடும் அதிர்ச்சிக்கும் சோகத்துக்கும் உள்ளாக்கியுள்ளது.</p><p>

இந்நிலையில், அவர்கள் வீட்டின் மீது காரை மோதிய 62 வயது நபரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
அத்துடன், அந்த கட்டிடத்தில் வாழ்ந்துவந்த ஆறு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.</p><p>

இந்த துயர சம்பவம் தொடர்பில் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T06:58:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் - இளைஞர் ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-man-died-motorcycle-accident-1784270343"></link>
            <id>https://tamilwin.com/article/young-man-died-motorcycle-accident-1784270343</id>
            <summary type="text">கொழும்பு, கோமாகமை பிரதேசத்தில் நேற்று(16) இடம்பெற்ற
விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்துள்ளார்.

கெஸ்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, கோமாகமை பிரதேசத்தில் நேற்று(16) இடம்பெற்ற
விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்துள்ளார்.
</p><p>
கெஸ்பவை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்த விபத்தில்
உயிரிழந்துள்ளார்.
</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது,
எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீதான கட்டுப்பாட்டை இழந்துள்ளார். </p><p>இதன்
விளைவாக, மோட்டார் சைக்கிள் வீதியோரத்தில் இருந்த மதில் ஒன்றின் மீது பலமாக
மோதியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fd80118-62bb-4549-a20f-54dd05c19b22/26-6a59d19f08508.webp' /></p><p>இந்த விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மேற்படி இளைஞர், சம்பவ இடத்திலேயே
உயிரிழந்துள்ளார்.
</p><p>
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T06:54:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசைக் கவிழ்க்க சஜித் எடுக்கும் முயற்சி தோல்வி! மக்களின் ஆணை இருக்கும் வரை பதவியில் நீடிப்போம் - ருவான் ரணசிங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-s-attempt-to-overthrow-the-government-fails-1784270354"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-s-attempt-to-overthrow-the-government-fails-1784270354</id>
            <summary type="text">பாதாள உலகக் குழுக்களையும் திட்டமிட்ட குற்றச் செயல்களையும் ஒழிக்கும்
நடவடிக்கைகளை அரசு தீவிரமாக முன்னெடுத்து வரும் நிலையில், அதற்கு ஆதரவு
வழங்காது எத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலகக் குழுக்களையும் திட்டமிட்ட குற்றச் செயல்களையும் ஒழிக்கும்
நடவடிக்கைகளை அரசு தீவிரமாக முன்னெடுத்து வரும் நிலையில், அதற்கு ஆதரவு
வழங்காது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மக்கள் மத்தியில் தவறான
கருத்துகளைப் பரப்பி கேலி அரசியலில் ஈடுபட்டு வருகின்றார் என்று
சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்தார்.</p><p>

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
</p><p>
"கடந்த காலங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் தற்செயலானவை
அல்ல. அவை திட்டமிட்ட முறையில் பாதாள உலகக் குழுக்களால் முன்னெடுக்கப்பட்டவை.
தற்போது வீதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்துவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>சிறைக்குள் இருந்து சதித்திட்டம்</h2><p>
</p><p>சட்ட நடவடிக்கை எடுக்கும்போது பாதாள உலகக் குழுவினர் சிறைக்குள் இருந்து
சதித்திட்டங்களைத் தீட்டுகின்றனர். சிறைக்குள் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி,
புலனாய்வு அதிகாரிகளைக் கொலை செய்வதன் மூலம் அரசின் நடவடிக்கைகளைத்
தடுத்துவிடலாம் என அவர்கள் கனவு காண்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது.
</p><p>
நாட்டின் பாதுகாப்புச் சூழல் குறித்த தீவிரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கும்
இவ்வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பற்ற முறையில் செயற்படுகின்றார்.
</p><p>
எதிர்க்கட்சித் தலைவர் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில விவசாயிகளை
வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதிலும், ஊடகங்களில் பேசுவதற்கு
வாய்ப்புத் தேடுவதிலும் மட்டுமே கவனம் செலுத்துகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dc36d58-47a9-4493-834a-1a83cf30cccb/26-6a59d187d5d4b.webp' /></p><p> </p><p>அரசு பதவி விலக
வேண்டும் என அவர் கூச்சலிடுவது, தங்களின் போதைப்பொருள் வலை அமைப்புகள் மற்றும்
பாதாள உலகக் குழுக்களுடனான தொடர்புகள், இலஞ்சம், கொலைகள் தொடர்பான உண்மைகள்
வெளிவரும்போது தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்வதற்கான முயற்சியாகும்.
</p><p>தங்களின் திருட்டை மறைக்கவே அவர் இவ்வாறு செயற்படுகின்றார்.

நாட்டு வரலாற்றிலேயே மிக அதிகமான மக்கள் ஆணையை நாம் பெற்றுள்ளோம். </p><p>பொதுமக்கள்
எப்போது நாங்கள் செய்தது போதும் என்று சொல்கின்றார்களோ, அன்றுதான் நாங்கள்
பதவியிலிருந்து விலகுவோம். அதைவிடுத்து, எதிர்க்கட்சியினரின்
தூண்டுதல்களுக்காக அரசு வீட்டுக்குப் போகத் தயாரில்லை&nbsp; என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T06:54:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கால்வாய்க்குள் கொல்லப்பட்டு கிடந்த குடும்பஸ்தர் ; விசாரணைகளில் வெளியான பரபரப்பு தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/family-man-found-dead-after-being-killed-in-canal-1784271122"></link>
            <id>https://jvpnews.com/article/family-man-found-dead-after-being-killed-in-canal-1784271122</id>
            <summary type="text">ஹோமாகம, கலகாஹேன பகுதியிலுள்ள கால்வாயொன்றில் இருந்து நேற்று (16) அதிகாலை மீட்கப்பட்ட நபர் ஒருவரின் சடலம் மீதான பிரேத பரிசோதனையில் கழுத்தறுத்துக் கொலை ச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஹோமாகம, கலகாஹேன பகுதியிலுள்ள கால்வாயொன்றில் இருந்து நேற்று (16) அதிகாலை மீட்கப்பட்ட நபர் ஒருவரின் சடலம் மீதான பிரேத பரிசோதனையில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.</p><p style="text-align: justify; ">


இவ்வாறு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டவர் ஹோமாகம, பிட்டிபன பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஆவார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb2d40ea-ef95-4dab-a976-98f130e15d78/26-6a59d113a2849.webp' /></p><h2 style="text-align: justify; ">பிரேத பரிசோதனை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இவர் ஆடைத் தொழிற்சாலையொன்றில் நிரந்தர ஊழியராகப் பணிபுரிந்து கொண்டே, பகுதி நேரமாக ஆன்லைன் ஆப் மூலமான வாடகை மோட்டார் சைக்கிள் ஓட்டுநராகவும் கடமையாற்றி வந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த 15ஆம் திகதி இரவு 7.00 மணியளவில் வாடகை சவாரி ஒன்றிற்காக நபர் ஒருவரைத் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்வதற்காக இவர் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
குறித்த கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ள ஏலக் காணியொன்றினுள் வைத்தே இந்தத் துரதிர்ஷ்டவசமான கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">கொலையாளிகள் அந்த நபரைத் தடுத்து நிறுத்திக் கொடூரமாகக் கொலை செய்ததுடன், அவரிடமிருந்த மோட்டார் சைக்கிள், தங்க மாலை, கைத்தொலைபேசி மற்றும் பணப்பை ஆகியவற்றைத் திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.

</p><p style="text-align: justify; ">குற்றம் நடந்ததாகக் கருதப்படும் காணியை சோதனையிட்ட பொலிஸார், அங்கிருந்து உயிரிழந்த நபர் அணிந்திருந்ததாகக் கருதப்படும் ஒரு ஜோடி காலணிகளையும், ஒரு 20 ரூபா பணத்தாளையும் கண்டெடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

நீதவான் விசாரணைகளைத் தொடர்ந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், கழுத்துப் பகுதி அறுக்கப்பட்டமையினாலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளது என திடீர் மரண விசாரணை அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளில் ஹோமாகம பொலிஸார் ஈடுபட்டுவருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-17T06:53:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆபத்தான ஆயுதங்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது! விசாரணைகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrested-with-hand-grenades-live-ammunition-1784270348"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrested-with-hand-grenades-live-ammunition-1784270348</id>
            <summary type="text">கம்பஹா- யக்கல பகுதியில் 02 வெடிக்காத கையெறி குண்டுகள் மற்றும் பல்வேறு வகையான வெடிக்காத தோட்டாக்கள் அடங்கிய கையிருப்புடன் ஒரு சந்தேக நபர் ஒருவர் கைது ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா- யக்கல பகுதியில் 02 வெடிக்காத கையெறி குண்டுகள் மற்றும் பல்வேறு வகையான வெடிக்காத தோட்டாக்கள் அடங்கிய கையிருப்புடன் ஒரு சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள் நேற்று இரவு (16) யக்கல காவல்துறை பிரிவில் நடத்திய சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.</p><p>

அதன்படி, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 02 வெடிக்காத கையெறி குண்டுகள், 32 கைத்துப்பாக்கி தோட்டாக்கள், எம்-16 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் ஒரு தோட்டா மகசின், அதுபோன்ற 11 தோட்டாக்கள், 06 சுழல் துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 34,000 சிகரெட்டுகள் ஆகியவையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ராகம பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4764ffa4-89da-4472-92a0-1e8e6507684b/26-6a59d0f63da2c.webp' /></p><p>
</p><p>
இதன்படி, சம்பவம் குறித்து கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-17T06:51:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெல்தெனியவில் மருத்துவர் கொலை; சந்தேகநபர்கள் விளக்கமறியல் நீடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/doctor-s-murder-in-teldeniya-remand-of-suspects-1784271022"></link>
            <id>https://jvpnews.com/article/doctor-s-murder-in-teldeniya-remand-of-suspects-1784271022</id>
            <summary type="text">&amp;nbsp; நுவரெலியாவில் பெண் உடலியல் சிகிச்சை நிபுணர்&amp;nbsp; கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதான சந்தேகநபர் உள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நுவரெலியாவில்<a href="https://jvpnews.com/article/women-doctor-murder-in-teldeniya-court-order-1783587718" target="_blank"> பெண் உடலியல் சிகிச்சை நிபுணர்&nbsp; கொலை </a>செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களை எதிர்வரும் ஜூலை 30ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் நேற்று (16) சிறைச்சாலை அதிகாரிகளினால் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abb42455-caa3-48f5-8351-fc111f7bd6c2/26-6a59d0afae8cd.webp' /></p><p>

நுவரெலியா நீதவான் புஷ்பிகா ஜயதாச முன்னிலையில் இந்த வழக்கு பரிசீலிக்கப்பட்டதன் பின்னரே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>&nbsp;விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் குறித்த கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், அவரது மனைவி, சந்தேகநபருக்கு உதவிகளை வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் குண்டசாலை பிரதேச சபையின் சாரதியும், மெனிக்ஹின்ன பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகரும் அடங்குகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-17T06:48:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவனை கோவிலுக்கு அழைத்துச் சென்ற மனைவி: காதலனை வர சொல்லி தீர்த்துக் கட்டிய கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/wife-and-lover-plot-husband-death-in-chittoor-1784270828"></link>
            <id>https://news.lankasri.com/article/wife-and-lover-plot-husband-death-in-chittoor-1784270828</id>
            <summary type="text">ஆந்திர மாநிலம் சித்தூரில் கோவிலுக்கு அழைத்துச் சென்று கணவனை காதலனுடன் சேர்ந்து மனைவி தீர்த்துக் கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவனை கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆந்திர மாநிலம் சித்தூரில் கோவிலுக்கு அழைத்துச் சென்று கணவனை காதலனுடன் சேர்ந்து மனைவி தீர்த்துக் கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> கணவனை காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி</h2><p>தமிழ்நாடு, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியைச் சேர்ந்த 23 வயது ரமேஷ் என்பவருக்கும், 19 வயது ஹாசினி என்ற பெண்ணுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.</p><p> இதற்கிடையில் ஹாசினிக்கு அவரது நண்பரான யுகந்தருடன்(20) தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் சேர்ந்து ரமேஷை கொல்லவும் திட்டமிட்டு வந்துள்ளனர்.</p><p> இந்நிலையில், அம்மாவாசை நாளான செவ்வாய்க்கிழமை அன்று கணவன் ரமேஷை மல்லப்பா கொண்டையில் உள்ள ஶ்ரீ மல்லேஸ்வர சுவாமி கோவிலுக்கு அழைத்துச் செல்லுமாறு மனைவி ஹாசினி வற்புறுத்தியுள்ளார்.</p><p></p><p> ரமேஷும் அதற்கு சம்மதம் தெரிவித்து கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிய வழியில் மனைவி ஹாசினி தன்னுடைய கையில் இருந்த கைப்பையை கீழே போட்டுள்ளார்.</p><p> அதை எடுப்பதற்காக ரமேஷ் பைக்கை நிறுத்திய போது புதருக்குள் மறைந்திருந்த காதலன் யுகந்தர் ரமேஷை சுற்றி வளைத்து காட்டுப் பகுதிக்குள் வைத்து கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1993b568-929d-4d00-8ea5-fb3928441fe6/26-6a59cfed932a0.webp' /></p><h2>கைது நடவடிக்கை</h2><p>
ரமேஷ், ஹாசினி மற்றும் அவர்களது குழந்தை யாரும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது தாயார் பொலிஸாரிடம் தகவல் கொடுத்துள்ளார்.</p><p> இதனை தொடர்ந்து விசாரணையை தொடங்கிய பொலிஸார், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் ஹாசினியும் ரமேஷும் கோவிலுக்கு வந்ததும், பின்னர் ஹாசினி அதே இருசக்கர வாகனத்தில் ஹாசினி வேறு இரண்டு ஆண்களுடன் செல்வதும் பதிவாகியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/937657f8-3009-45f5-80f1-dc71e300f9fa/26-6a59cfee46ee9.webp' /></p><p> மேலும், ஹாசினியின் செல்போன் அழைப்புகள் மற்றும் இருப்பிட தரவுகளை ஆய்வு செய்து கொலை நடந்த இடத்தையும் ரமேஷின் உடலையும் கண்டுபிடித்தனர்.</p><p> தற்போது கொலை குற்றச்சாட்டில் சிக்கியுள்ள 4 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>அதே சமயம் ஹாசினிக்கு திருமணம் நடைபெற்ற போது அவர் ஒன்பதாம் வகுப்பு மட்டுமே படித்துக் கொண்டிருந்ததாகவும், அவர் மைனராக இருந்த போது திருமணம் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், குழந்தை திருமணத் தடுப்புச் சட்டத்தின் கீழும் விசாரணை நடைபெற்று வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-17T06:47:24+00:00</updated>
        </entry>
    </feed>
