<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-05T03:58:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/deputy-minister-of-tourism-discussion-governor-1785900972"></link>
            <id>https://tamilwin.com/article/deputy-minister-of-tourism-discussion-governor-1785900972</id>
            <summary type="text">வடக்கு மாகாணத்தின் ஒருங்கிணைந்த சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பில் வடக்கு
மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் ருவன்
குணசேகர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாணத்தின் ஒருங்கிணைந்த சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பில் வடக்கு
மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் ருவன்
குணசேகரவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.</p><p>குறித்த கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று (04.08.2026) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.</p><p></p><h2>சுற்றுலா மேம்பாட்டுத்திட்டம்&nbsp;</h2><p>
இக்கூட்டத்தின்போது கிளிநொச்சி மாவட்டத்தின் கௌதாரிமுனை சுற்றுலா மேம்பாட்டுத்
திட்டம் குறித்து ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/387e3681-9fc3-4f03-a954-4ba513abb302/26-6a72b443330a2.webp' /></p><p> அத்துடன், அப்பகுதியில்
அடிப்படையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக சுற்றுலாத்துறை அமைச்சின்
ஊடான ஒத்துழைப்புகளையும் உதவிகளையும் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும், வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையில் முதலீடு செய்வதற்குப் பல
முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முன்வருகின்றபோதிலும், வனவளத் திணைக்களம்,
வனவிலங்குகள் திணைக்களம் மற்றும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம்
உள்ளிட்டவர்களிடமிருந்து அனுமதிகளைப் பெறுவதில் நிலவும் தாமதங்கள் குறித்து
ஆளுநர் எடுத்துரைத்துள்ளார்.
</p><p>
ஆளுநர் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் அவதானிப்புகள் குறித்து கவனம்
செலுத்திய சுற்றுலாத்துறை பிரதியமைச்சர், மாகாணத்தில் சுற்றுலாத்துறையை
ஊக்குவிப்பது தொடர்பிலும், மாவட்ட ரீதியிலான ஒருங்கிணைந்த சுற்றுலா
அபிவிருத்தித் திட்டங்களை எவ்வாறு துரிதமாகச் செயற்படுத்துவது என்பது
குறித்தும் ஆளுநருடன் விரிவாக ஆராய்ந்துள்ளார்.</p><p>

இந்த கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.றஜீவன், ஆளுநரின்
செயலாளர், வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் தலைவர், ஆளுநரின்
பிரத்தியேகச் செயலாளர் மற்றும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின்
இணைப்பாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.</p><p>&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T03:55:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கை சிறைச்சாலையில் தீவிர பாதுகாப்பு - ஏற்படும் ஆபத்துகளை தவிர்க்க நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tight-security-for-south-prisons-1785893586"></link>
            <id>https://tamilwin.com/article/tight-security-for-south-prisons-1785893586</id>
            <summary type="text">நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலைகளில் ஏற்பட்ட பதற்றங்களை அடுத்து, பூஸ்ஸ உள்ளிட்ட சிறைச்சாலைகளின் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலைகளில் ஏற்பட்ட பதற்றங்களை அடுத்து, பூஸ்ஸ உள்ளிட்ட சிறைச்சாலைகளின் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>

காலி, பூஸ்ஸ, மாத்தறை, அங்குனுகொலபெலஸ்ஸ மற்றும் வீரவில சிறைச்சாலைகளின் தற்போதைய நிலைமை மற்றும் கைதிகளின் பாதுகாப்பை பலப்படுத்தப்படவுள்ளது. </p><p>

இது தொடர்பில், தென் மாகாண ஆளுநர் சுசிறிபால மானவடுவின் தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.</p><p>
</p><h2><b>
அவசர பாதுகாப்புக் குழு</b></h2><p>நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலைகளில் அண்மையில் பதிவான அமைதியின்மை நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, தென்னிலங்கையில் அவ்வாறான எந்தவொரு சம்பவமும் இடம்பெறாமல் தவிர்த்துக் கொள்வதே இந்த அவசர பாதுகாப்புக் குழுக் கூட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b4604bb-afe3-4db4-a0e2-6d8548e9ea9a/26-6a72b333efab8.webp' /></p><p>மக்களின் பாதுகாப்பு, உயிர், உடைமைகள் மற்றும் அமைதியான சூழ்நிலையை தொடர்ந்தும் பேணிச் செல்வது தொடர்பில் எவ்வித தளர்வான கொள்கையும் கடைப்பிடிக்கப்பட மாட்டாது என ஆளுநர் தெரிவித்துள்ளார்.</p><p>

நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, அனைத்துப் பாதுகாப்பு பிரிவுகளும் இணைந்து எத்தகைய அவசர நிலையையும் உடனடியாக எதிர்கொள்ளக்கூடிய பொறிமுறையொன்றை தயார் நிலையில் வைத்திருக்கவும் இதன்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p>]]></content>
            <updated>2026-08-05T03:51:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பாரம்பரிய உணவுகளுடன் ஆரோக்கிய வாழ்வுக்கான போசாக்கு கண்காட்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nutrition-exhibition-for-healthy-living-in-jaffna-1785901390"></link>
            <id>https://ibctamil.com/article/nutrition-exhibition-for-healthy-living-in-jaffna-1785901390</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை&amp;nbsp;பிரதேச வைத்தியசாலையில்&amp;nbsp;ஆரோக்கிய வாழ்வுக்கான போசாக்கு கண்காட்சி ஒன்று&amp;nbsp;இடம்பெறவுள்ளது.இன்று (05) காலை10மணி மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை&nbsp;பிரதேச வைத்தியசாலையில்&nbsp;ஆரோக்கிய வாழ்வுக்கான போசாக்கு கண்காட்சி ஒன்று&nbsp;இடம்பெறவுள்ளது.</p><p>இன்று (05) காலை10மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சி நிகழ்விற்கு அனைவரையும் வருகை தருமாறு சங்கானை - சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>வேல்ட் விசன் அனுசரணையுடன் சங்கானை சுகாதார அதிகாரி பணிமனை நடாத்தும் “Enough போசாக்கு“ கண்காட்சியில் தன்னிறைவான சுயசார்பு பொருளாதாரத்துடன் பாரம்பரிய உணவுகளுடன் ஆரோக்கிய வாழ்வுக்கான போசாக்கு உணவுகள் காட்சிப்படுத்தப்படும்.</p><h2>சுகாதார அமைச்சு</h2><p>இதன்போது எமது சுகவாழ்விற்கு ஆரோக்கியமான சிறுதானிய, பனைசார், கடல்சார், மரக்கறி இலைவகைசார், பாற்பொருட்கள்சார் உணவுகளை தயாரிப்பது எவ்வண்ணம் என விளக்கும் செயன்முறை சமையற்கலை கூடங்கள், சுகவாழ்வுத்தோட்டம், சுகாதார மேம்பாட்டு முன்பள்ளி, பாடசாலை சிற்றுண்டிச்சாலை விபரணத்துடன் கூடிய போசாக்கு கண்காட்சியைப் பார்வையிட முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39a603ff-48f5-492f-a830-85a0f258c8bd/26-6a72b3ce52530.webp' /></p><p>சுகாதார அமைச்சின் தேசிய போசாக்கு மாதம் பரப்புரைக்கு அமைவாக பாடசாலை சிற்றுண்டிச்சாலைக் கொள்கையின் கீழ் ஆரோக்கியமான சிற்றுண்டிகளை ஊக்குவிப்போம் எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சி நிகழ்சில் வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T03:49:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் நோய் பரவல் - இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fever-warning-to-the-srilanka-people-1785900112"></link>
            <id>https://tamilwin.com/article/fever-warning-to-the-srilanka-people-1785900112</id>
            <summary type="text">&amp;nbsp;நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கினால் வயிற்றுப்போக்கு மற்றும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கினால் வயிற்றுப்போக்கு மற்றும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.</p><p>

மத்திய, சபரகமுவ, மேற்கு மற்றும் தெற்கு ஆகிய நான்கு மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>இலவச மருந்துகளை வழங்க நடவடிக்கை&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
அசுத்தமான நீரில் விளையாடுவதால் குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு, டெங்கு காய்ச்சல், தொற்று மஞ்சள் காமாலை மற்றும் தொழுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமில் முத்துகுட எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f620382-d10f-478b-b069-4a593a6609c3/26-6a72aea40cc0d.webp' /></p><p> </p><p>

அசுத்தமான நீரிலிருந்து டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதால், தடுப்பு சிகிச்சையை நாட வேண்டும் என பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>

இதனை கருத்திற்கொண்டு அருகிலுள்ள பொது சுகாதார பரிசோதகர் அல்லது சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்திலிருந்து இலவச மருந்துகளை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p>
 இதற்கிடையில், வயிற்றுப்போக்கு, தொற்று மஞ்சள் காமாலை, தொழுநோய், டெங்கு உள்ளிட்ட நோய்களின் அறிகுறிகளை உணர்ந்தால், அருகிலுள்ள அரசாங்க மருத்துவமனை அல்லது அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரிடம் சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T03:31:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்ட் பீஸ்ட் சீசன் 3.. இரண்டாவது வாரத்திற்கான ப்ரோமோ வெளியானது..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/heartbeat-season-3-week-2-promo-1-1785900637"></link>
            <id>https://cineulagam.com/article/heartbeat-season-3-week-2-promo-1-1785900637</id>
            <summary type="text">ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் ஹார்ட் பீஸ்ட் வெப் சீரிஸ் 3-வது சீசனின் இரண்டாம் வாரத்திற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

ஹார்ட் பீஸ்ட்

ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் ஹார்ட் பீஸ்ட் வெப் சீரிஸ் 3-வது சீசனின் இரண்டாம் வாரத்திற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.</p><p></p><h2>

ஹார்ட் பீஸ்ட்</h2><p>

ரசிகர்களின் மனம் கவர்ந்த வெப் சீரிஸின் <a href="https://www.youtube.com/watch?v=00b4g8ZsLWM" target="_blank">ஹார்ட் பீட்</a> உள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து 2025-ஆம் ஆண்டு ஹார்ட் பீட் சீசன் 2 தொடங்கியது. முதல் சீசனை விட இரண்டாம் சீசனுக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7b84055-53d3-4cc2-98b4-cda238dd829d/26-6a72ae601465f.webp' /></p><p>இரண்டாவது சீசன் மிகவும் எமோஷனலான முறையில் முடிந்த நிலையில், மூன்றாவது சீசனுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால், சில காரணங்களால் ஹார்ட் பீட் சீசன் 3 ரிலீஸ் தள்ளிப்போனது. ஒரு வழியாக கடந்த வாரம் ஜூலை 30-ஆம் தேதி வெளியானது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08ed75e0-35fb-4efe-9204-fdc91ade6864/26-6a72ae60bd398.webp' /></p><h2>சீசன் 3 </h2><p>

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த ஹார்ட் பீட் சீசன் 3-க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரீனா, விஜய், ரதி மற்றும் அர்ஜுன் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை முதல் வாரத்தில் வெளியான நான்கு எபிசோட்களில் காட்டியிருந்தார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a910082-f747-44a6-84b2-3b8604119eaa/26-6a72ae61721a5.webp' /></p><p> 

இந்நிலையில், தற்போது இரண்டாம் வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில், ரீனா தனது தந்தைக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். அவருக்கு ஜோடியாக தற்போது நடிகை காயத்திரி ஹார்ட் பீட் சீசன் 3-ல் என்ட்ரி கொடுத்துள்ளார். அந்த ப்ரோமோவை நீங்களே பாருங்க:</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/00b4g8ZsLWM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-05T03:30:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று இலங்கை வரும் இந்திய வெளிவிவகாரச் செயலர் : தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-foreign-secretary-to-arrive-sri-lanka-today-1785899006"></link>
            <id>https://tamilwin.com/article/indian-foreign-secretary-to-arrive-sri-lanka-today-1785899006</id>
            <summary type="text">இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகாரச் செயலாளர்
விக்ரம் மிஸ்ரி இன்று(05.08.2026)&amp;nbsp; இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

கொழும...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகாரச் செயலாளர்
விக்ரம் மிஸ்ரி இன்று(05.08.2026)&nbsp; இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
</p><p>
கொழும்பில் அரசுடன் உயர்மட்டப் பேச்சுகளை முன்னெடுப்பதுடன், இலங்கையில்
நீடித்து நிலைக்கக்கூடிய இனச்சிக்கலுக்கான தீர்வுகள், பிராந்தியப் பாதுகாப்பு,
உத்திசார் இணைப்புத் திட்டங்கள் மற்றும் இருதரப்புப் பொருளாதார உறவுகள்
குறித்துக் கலந்துரையாடுவதே அவரின் இந்தப் பயணத்தின் முதன்மை நோக்கமாகவுள்ளது.
</p><p></p><h2>விஜயத்தின் மிக முக்கியமான அம்சமாக</h2><p>
தனது விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய
மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்தித்து விரிவான
பேச்சுகளை நடத்தவுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/288d2666-9b3a-44fc-84ad-fc4a463ee813/26-6a72ac164dd6a.webp' /></p><p>
இந்தியாவின் 'அண்டைய நாடுகளுக்கு முதலுரிமை' கொள்கையின் அடிப்படையில்,
இலங்கையுடனான இராஜதந்திர மற்றும் பொருளாதாரப் பிணைப்பை மேலும் வலுப்படுத்த
புதுடில்லி தீவிர கவனம் செலுத்தி வருகின்றது.</p><p>இந்த விஜயத்தின் மிக முக்கியமான அம்சமாக, வடக்கு - கிழக்கு மற்றும்
மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகளுடனான விக்ரம்
மிஸ்ரியின் தனித்தனிச் சந்திப்புகள் அமைகின்றன.
</p><p>
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதுடன், காணி மற்றும்
பொலிஸ் அதிகாரங்களுடன் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த இந்தியத் தரப்பு
கொழும்பு அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் எனத் தமிழ் தலைமைகள் வலியுறுத்தவுள்ளன.</p><h2>வழக்கமான இராஜதந்திரச் சந்திப்பாக</h2><p>முன்னர் கைவிடப்பட்ட சம்பூர் திட்டம், தற்போது இலங்கை மின்சார சபை மற்றும்
இந்திய நிறுவனத்துடன் இணைந்து 120 மெகாவாட் சூரிய மின்சக்தித் திட்டமாக
மாற்றப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b831d17-2a40-4c7b-b5bf-010a07ba0932/26-6a72ac1704668.webp' /></p><p>மின் உற்பத்தி இணைப்பு, எரிபொருள் குழாய் இணைப்பு மற்றும் கடல்வழி
போக்குவரத்து போன்ற உத்திசார் இணைப்புத் திட்டங்களின் தாமதங்கள் குறித்து
இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.</p><p>இந்தியாவின் 450 மில்லியன் டொலர் உதவித் திட்டத்தில் (350 மில்லியன் டொலர்
கடன் உதவி மற்றும் 100 மில்லியன் டொலர் மானியம்), இலங்கை அரசு அதனை முறையாகப்
பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகின்றது.</p><p>மேலும், 22 டீசல்
எஞ்சின்களை மானியமாக வழங்க இந்தியா முன்வந்த போதிலும், அதற்குரிய கோரிக்கைப்
பத்திரங்களை இலங்கை இன்னும் சமர்ப்பிக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.</p><p> இலவச
வர்த்தக ஒப்பந்தத்தில் நிலவும் தடைகள் குறித்தும் இந்தியா கவலை கொண்டுள்ளது.
</p><p>
விக்ரம் மிஸ்ரியின் இந்த விஜயமானது வழக்கமான இராஜதந்திரச் சந்திப்பாக
மட்டுமில்லாமல், பிராந்திய மட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான
நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கும், தேங்கிக் கிடக்கும் திட்டங்களை
விரைவுபடுத்துவதற்கும் ஒரு முக்கிய பரீட்சார்த்தக் களமாக அமையும் என
எதிர்பார்க்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T03:21:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வேண்டும்... உக்ரைனிடம் கோரிய ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-planned-strikes-on-ukraine-1785889255"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-planned-strikes-on-ukraine-1785889255</id>
            <summary type="text">உக்ரைன் மீது மூன்று தாக்குதல்களை நடத்த திட்டமிட்ட ஈரான், ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு கோரியுள்ளது.
உக்ரைனைத் தாக்கும் திட்டத்தில் இருந்த ஈரான், கடைசி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் மீது மூன்று தாக்குதல்களை நடத்த திட்டமிட்ட ஈரான், ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு கோரியுள்ளது.
</p><p>உக்ரைனைத் தாக்கும் திட்டத்தில் இருந்த ஈரான், கடைசி நேரத்தில் விடுக்கப்பட்ட ஒரு மன்னிப்பு, தாக்குதலை நிறுத்தும்படி அவர்களைக் கட்டாயப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>மன்னிப்பு</h2><p>
</p><p>காஸ்பியன் கடலில் ராணுவத் தளவாடங்களை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் கப்பல் ஒன்றின் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, மூன்று இடங்கள் மீது தாக்குதல் நடத்த ஈரான் ஆயுதப் படைகள் தயாராகி வந்ததாக மொஹ்சென் ரெசாய் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98854827-71e4-4ccf-9eb2-1eace9ee3920/26-6a7281e99919d.webp' /></p><p> </p><p>உக்ரைனில் மூன்று இடங்களைத் தாக்கத் திட்டமிட்டிருந்தோம், ஆனால் உக்ரைன் மன்னிப்பு கோரியதைத் தொடர்ந்து அந்தத் தாக்குதலை ரத்து செய்தோம் என்று ரெசாய் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இது உண்மையாக இருந்தால், அண்மைக்காலத்தில் இவ்விரு நாடுகளும் ஒன்றுடன் ஒன்று போரிடும் நிலைக்கு எவ்வளவு ஆபத்தான வகையில் நெருங்கி வந்துள்ளன என்பதை இது காட்டுகிறது.</p><p> மேலும், இந்த மோதல்கள் இன்னும் நேரடியாக ஒன்றிணைந்தால், அதன் விளைவு பேரழிவை ஏற்படுத்துவதாக அமையலாம்; இது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கக்கூடும் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.</p><p></p><p> </p><p>இதனிடையே, ஈரானால் நிர்ணயிக்கப்பட்ட வழித்தடத்திற்கு வெளியே, ஹார்முஸ் நீரிணை வழியாக எந்தவொரு கடல்வழிப் போக்குவரத்தையும் ஈரான் அனுமதிக்காது என்றும் ரெசாய் எச்சரித்தார்.</p><h2>ஈரானுக்கு இழப்பீடு</h2><p> </p><p>அத்துடன், சட்டவிரோதப் பாதையைப் பயன்படுத்த முயற்சிக்கும் எந்தவொரு எதிரிக் கப்பலும் குறிவைக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார். </p><p>ஜூலை 25 அன்று நடைபெற்ற, முன்னெப்போதும் இல்லாத அந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அவரது கருத்துகள் வெளியாகின; அத்தாக்குதலில் ஒரு ஊழியர் கொல்லப்பட்டதுடன், அந்த ஈரானியக் கப்பலும் அழிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/654c0b46-fb62-483c-a008-0c8fb11c310c/26-6a7281ea4e907.webp' /></p><p> </p><p>தாக்குதலால் ஏற்பட்ட சேதத்திற்கு உக்ரைன் ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி உக்ரைனிய வெளிவிவகார அமைச்சரான ஆண்ட்ரி சிபிஹாவிடம் கூறினார். </p><p>ஆனால், உக்ரைனின் நடவடிக்கைகள் ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து தங்களது நாட்டைப் பாதுகாப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டவை என்றும், அவை ஒருபோதும் பொதுமக்களின் கப்பல்களையோ அல்லது மக்களையோ குறிவைக்கும் நோக்கம் கொண்டவை அல்ல என்றும் சிபிஹா பதிலளித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T03:19:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் சேவையில் பாரியளவில் ஆளணி வளப் பற்றாக்குறை: அரசாங்கத்தின் தீர்மானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/service-extension-for-police-officers-1785895053"></link>
            <id>https://tamilwin.com/article/service-extension-for-police-officers-1785895053</id>
            <summary type="text">&amp;nbsp;நாட்டில் பொலிஸ் சேவையில் பாரியளவில் ஆளணி வளப் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் இதற்கு தீர்வு காணும் வகையில் ஓய்வு வயதெல்லையை அடைந்த அதிகாரிகளுக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நாட்டில் பொலிஸ் சேவையில் பாரியளவில் ஆளணி வளப் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் இதற்கு தீர்வு காணும் வகையில் ஓய்வு வயதெல்லையை அடைந்த அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
60 வயதை பூர்த்தி செய்த குறைந்த தர பொலிஸ் அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
</p><p>பொலிஸ் கான்ஸ்டபிள் பதவி நிலை முதல் பிரதான பொலிஸ் பரிசோதகர் பதவி வரை கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகள் இச்சேவை நீடிப்புக்காக விண்ணப்பிக்க முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1b8d99a-79d1-4053-9a80-d3efa09e8c1d/26-6a729893293a6.webp' /></p><p>
</p><p>இதற்கமைய நல்ல உடல் தகுதியுடனும், நன்நடத்தையுடனும், களங்கமற்ற சேவையாற்றி 60 வயதை பூர்த்தி செய்த அதிகாரிகள் இந்த சேவை நீடிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ள அதேவேளை, மிக விரைவில் இந்த சேவை நீடிப்புகள் வழங்கப்படவுள்ளன.
பொலிஸ் திணைக்களத்தில் பெருமளவிலான வெற்றிடங்கள் நிலவுவதாகவும், ஒரே தடவையில் அந்த வெற்றிடங்களை நிரப்ப ஆட்களை ஆட்சேர்ப்பு செய்வது கடினம் என்பதாலும், அதற்கு தற்காலிக தீர்வாகவே இந்த சேவை நீடிப்பு வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
</p><p>பொலிஸ் திணைக்களத்தில் 84,000 அதிகாரிகள் கடமையாற்ற வேண்டிய போதிலும், தற்போது 50,000க்கும் குறைவான அதிகாரிகளே கடமையாற்றி வருவதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T03:17:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ்மா அதிபர் குறித்த சாகரவின் சர்ச்சையான கருத்து: அமைச்சர் ஆனந்த விஜேபால பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sagara-controversial-comment-igp-minister-order-1785898126"></link>
            <id>https://tamilwin.com/article/sagara-controversial-comment-igp-minister-order-1785898126</id>
            <summary type="text">பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய
கரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய
கருத்துக்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு
அமைச்சர் ஆனந்த விஜேபால உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய சாகர காரியவசம்,
நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபரிடம் அரசுக்கும் நாட்டுக்கும் சேவையாற்றுமாறு
கோரியதுடன், அவர் வீதியில் பொதுமக்களிடம் அடிவாங்கும் பொலிஸ்மா அதிபராக
வரலாற்றில் இணைவதைத் தான் காண விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.</p><p>
சாகர காரியவசத்தின் இந்த கருத்து குறித்து ஊடகங்களிடம் கருத்துததெரிவித்த
அமைச்சர் ஆனந்த விஜேபால,</p><p>&nbsp;</p><h2>விசாரணை அறிக்கைகளுக்கு ஏற்ப சட்ட நடவடிக்கைகள்&nbsp;</h2><p> அரசு இவ்வாறான பொறுப்பற்ற கருத்துக்களை இலகுவாக
எடுத்துக்கொள்ளாது. அரசியல் அதிகாரத்துக்காக கடந்த காலங்களில்
மக்களைப் பலி கொடுத்த ஓர் அரசியல் இயக்கத்தின் மனநிலையே இத்தகைய கூற்றுகளில்
பிரதிபலிக்கின்றது என்றும் அவர் விமர்சித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8bf8dc2-125e-4872-b22c-9fef8ab248a8/26-6a72aaab0e1e7.webp' /></p><p>
தற்போதைய பொலிஸ்மா அதிபர் தனது கடமைகளை மிகவும் திறம்பட ஆற்றி வருகின்றமையைச்
சுட்டிக்காட்டிய அமைச்சர், ஊழல், இலஞ்சம் மற்றும் அரச சொத்துக்கள்
துஷ்பிரயோகம் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தீவிர விசாரணைகள்
காரணமாக அச்சமடைந்துள்ள நபர்களே இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்
என்றும் சந்தேகம் வெளியிட்டார்.</p><p>

விசாரணை அறிக்கைகளுக்கு ஏற்ப உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்
அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் எச்சரித்தார்.</p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T03:14:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் கோவில் வீதியில் போக்குவரத்து தடை - மக்களுக்கான அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/temple-road-jaffna-closed-due-nallur-temple-arch-1785897456"></link>
            <id>https://ibctamil.com/article/temple-road-jaffna-closed-due-nallur-temple-arch-1785897456</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலய வடக்கு வாசல் வளைவானது காண்பிய விரிப்பு காணவிருப்பதன் காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள <a href="https://ibctamil.com/article/north-entrance-arch-of-nallur-temple-inauguration-1785729985" target="_blank">நல்லூர் கந்தசுவாமி </a>ஆலய வடக்கு வாசல் வளைவானது காண்பிய விரிப்பு காணவிருப்பதன் காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.</p><p>அந்தவகையில் இன்றைய தினம் (05.08.2026) புதன்கிழமை காலை 8 மணி முதல் நாளை வியாழக்கிழமை நண்பகல் 12 மணி வரை குறித்த பகுதியின் ஊடான போக்குவரத்து தடை செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த விடயத்தை யாழ் மாநகர சபையின் முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>நல்லூரான் வடக்கு வாசல் வளைவு</h2><p>நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருமையை மேலும் மெருகூட்டும் வகையில், ஆலயத்தின் வடக்கு திசையில் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுள்ள அலங்காரத் தோரண வாசலான 'நல்லூரான் வடக்கு வாசல் வளைவு, நாளைய தினம் வியாழக்கிழமை தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00 மணிக்கு காண்பிய விரிப்புக் காணவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0961a81-ff77-469d-ab96-f9d35fc7029a/26-6a72a5dfc1a2b.webp' /></p><p>இதனை முன்னிட்டு, அன்று காலை 10.30 மணிக்கு சட்டநாதர் சிவன் கோவிலிருந்து சமய
அனுஷ்டானங்களுடன், நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்தை ஏற்றிய இரட்டை திருக்கை காளை மாட்டு வண்டில் மங்கள வாத்தியங்கள் முழங்க வளைவை நோக்கிப் புறப்படும்.
</p><p>அதனைத் தொடர்ந்து, தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00 மணிக்கு, நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்துடன் வரும் காளை மாட்டு வண்டில் முதன்முறையாக புதிய வளைவின் ஊடாகச் செல்லும். அந்த மங்கள நிகழ்வின் மூலம் 'நல்லூரான் வடக்கு வாசல் வளைவு' காண்பிய விரிப்புக் காணும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T03:10:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[14 நாட்களில் ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ள வசூல்.. புதிய சாதனை படைத்த விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/jananayagan-movie-14-days-worldwide-box-office-1785898886"></link>
            <id>https://cineulagam.com/article/jananayagan-movie-14-days-worldwide-box-office-1785898886</id>
            <summary type="text">ஜனநாயகன் திரைப்படத்தின் 14 நாட்கள் வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜனநாயகன்

தமிழ் சினிமாவில் 33 ஆண்டுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனநாயகன் திரைப்படத்தின் 14 நாட்கள் வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதை இந்த பதிவில் பார்க்கலாம்.
</p><h2>
ஜனநாயகன்
</h2><p>
தமிழ் சினிமாவில் 33 ஆண்டுகளாக பயணித்து, அதில் 25 ஆண்டுகளுக்கும் மேல் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் தளபதி விஜய். இவர் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகிவிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/734d2ed6-b915-40df-b082-d3061069d098/26-6a72a7890d95b.webp' /></p><p>இவர் நடிப்பில் கடைசியாக உருவான ஜனநாயகன் திரைப்படம் தேர்தலுக்கு முன்பே வெளிவரவிருந்தது. ஆனால், தொடர்ந்து பல பிரச்சனைகளையும் தடைகளையும் சந்தித்து தேர்தலுக்கு பின், முதலமைச்சர் விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' என்கிற டைட்டில் கார்டுடன் வெளியானது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c365581d-30dd-4343-9008-3ab87f311592/26-6a72a789c5e84.webp' /></p><p>இப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்க, பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த ஜூலை 23-ஆம் தேதி வெளியான இப்படத்தை ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.</p><p></p><h2>
பாக்ஸ் ஆபிஸ்
</h2><p>
<a href="https://www.youtube.com/watch?v=6H7VlBCIG3Y" target="_blank">விஜய் </a>நடிப்பில் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால், அப்படம் முதல் நாள் செய்யும் வசூல் குறித்து திரையுலகில் பேசப்படும். அதேபோல் 3-வது நாள் எவ்வளவு வசூல் செய்தது? முதல் 7 நாட்களில் எவ்வளவு வசூல் வந்துள்ளது என்பதை பற்றி திரையுலகினரை தாண்டி ரசிகர்களே சமூக வலைத்தளங்களில் பேசி வருகிறார்கள்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b97c30b-fde7-48c6-8877-39cc019815fa/26-6a72a78ab21af.webp' /></p><p>இந்நிலையில், 14 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் ரூ. 300 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் பிகில், லியோ, கோட் திரைப்படங்களை தொடர்ந்து ரூ. 300 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் 4-வது திரைப்படமாக ஜனநாயகன் இணைந்துள்ளது.
</p>]]></content>
            <updated>2026-08-05T03:01:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற காலநிலை காரணமாக 8 பேர் உயிரிழப்பு! ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/8-people-died-inclement-weather-9-districts-1785897242"></link>
            <id>https://tamilwin.com/article/8-people-died-inclement-weather-9-districts-1785897242</id>
            <summary type="text">இலங்கையில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 8
பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 ஆயிரத்து 14 குடும்பங்களை சேர்ந்த 11 ஆயிரத்து
8...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 8
பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 ஆயிரத்து 14 குடும்பங்களை சேர்ந்த 11 ஆயிரத்து
832 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
அறிவித்துள்ளது.
</p><p>
9 மாவட்டங்களில் உள்ள 56 பிரதேச செயலகப் பிரிவுகள் இதனால் கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>&nbsp;</p><h2>ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்பு</h2><p>

நாடு முழுவதும் அனர்த்தங்களினால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கான
மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வீடு முழுமையாகவும், 290 வீடுகள்
பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec127e72-cedd-4bbb-8237-baef7522ff10/26-6a72a34e5485e.webp' />&nbsp;</p><p>நுவரெலியா, கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்கள் பெருமளவில்
பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>நுவரெலியா மாவட்டத்தில் 1,091 குடும்பங்களைச்
சேர்ந்த 3 ஆயிரத்து 951 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள 20
நிவாரண முகாம்களில் 523 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 195 பேரும்,
உறவினர் வீடுகளில் 224 பேரும் தங்கியுள்ளனர்.</p><p>
மழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் பிரதான வீதிகளில் ஏற்பட்ட தடங்கல்கள்,
மரங்கள் முறிந்து விழுந்த சம்பவங்கள் மற்றும் மண்மேடுகள் சரிந்தமை போன்ற
காரணங்களால் தடைப்பட்டிருந்த முக்கிய போக்குவரத்துப் பாதைகள் சீரமைக்கப்பட்டு
மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.</p><p> குறிப்பாக, கடுகண்ணாவ பகுதியில்
மூடப்பட்டிருந்த கொழும்பு - கண்டி வீதி மீண்டும் திறக்கப்பட்டு, போக்குவரத்து
முழுமையாக வழமைக்குத் திரும்பியுள்ளது.
</p><p>
எனினும், நுவரெலியா - பதுளை, நுவரெலியா - ஹட்டன் மற்றும் நுவரெலியா - கண்டி
(டொப்பாஸ் முதல் லபுக்கலை வரை) பிரதான வீதிகளில் அடர்ந்த மூடுபனி நிலவுவதால்,
சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார்
கேட்டுக்கொண்டுள்ளனர்.
</p><p>
களனி மற்றும் களு கங்கை ஆற்றுப் படுகைகளுக்காக விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய
எச்சரிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம்
அறிவித்துள்ளது.</p><h2>மண்சரிவு அபாயம்</h2><p>இந்த ஆறுகளின் நீர்மட்டம் சீரான நிலையை எட்டியுள்ளமையால் இந்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> எவ்வாறாயினும், நீரியல் மற்றும் இடர்
முகாமைத்துவப் பிரிவு தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு
வருகின்றது என்று நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரிய பண்டார
தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fed55a3-4bc3-41ba-a47f-af0832ff32cf/26-6a72a34da260f.webp' />&nbsp; &nbsp;</p><p>
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும்
மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை
பெய்யக்கூடும். சப்ரகமுவ, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில
இடங்களில் 75 மி.மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி
எதிர்பார்க்கப்படுகின்றது. </p><p>மேலும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள்
குறித்து பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
நாட்டின் மலைப்பாங்கான பிராந்தியங்களில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம்
நிலவுகின்றது. </p><p>அதற்கமைய, கண்டி (கங்கா இஹல கோரளை, உடுதும்பர, பச்பாகே கோரளை),
கேகாலை (எட்டியாந்தோட்டை), நுவரெலியா (அம்பகமுவ, நோர்வூட்) ஆகிய பிரதேச
செயலகப் பிரிவுகளுக்கு மூன்றாம் நிலைச் சிவப்பு எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதி மக்களை உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு
வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T02:43:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்மலானையில் வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hand-bomb-attack-in-ratmalana-house-1785896396"></link>
            <id>https://tamilwin.com/article/hand-bomb-attack-in-ratmalana-house-1785896396</id>
            <summary type="text">இரத்மலானை ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்று மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீட்டின் மீத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்மலானை ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்று மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>குறித்த வீட்டின் மீது இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்டதுடன், அவற்றில் ஒன்று வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> எனினும் இந்த வெடிப்பினால் எவருக்கும் எந்தவிதமான காயங்களும் அல்லது சேதங்களும் ஏற்படவில்லை எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p> </p><h2><b>பொலிஸார் மேலதிக விசாரணை</b></h2><p>சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/008c5d70-97b4-4d1a-9b3b-dcedcbdd8426/26-6a72a22643b7e.webp' /></p>]]></content>
            <updated>2026-08-05T02:38:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/schools-closed-some-schools-today-in-sri-lanka-1785895929"></link>
            <id>https://ibctamil.com/article/schools-closed-some-schools-today-in-sri-lanka-1785895929</id>
            <summary type="text">ஹட்டன் கல்வி வலயத்தின் அனைத்துப் பாடசாலைகளையும் இன்று (05) மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மத்திய மாகாணக் கல்விப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் கல்வி வலயத்தின் அனைத்துப் <a href="https://ibctamil.com/article/special-meeting-scholarship-exam-al-examination-1785887464" target="_blank">பாடசாலை</a>களையும் இன்று (05) மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>நிலவும் சீரற்ற <a href="https://ibctamil.com/article/11832-people-affected-bad-weather-in-the-country-1785891507" target="_blank">வானிலை </a>காரணமாக மத்திய மாகாணக் கல்விப் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>இதேவேளை,&nbsp;கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் அனைத்து அரச பாடசாலைகளும் இன்று (05) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.</p><p></p><h2>விசேட ஆலோசனை</h2><p>

 

நிலவிய பலத்த மழை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்தங்களைக் கருத்தில் கொண்டு, குறித்த மாவட்டங்களின் அனைத்துப் பாடசாலைகளையும் மூடுவதற்கு மத்திய மாகாணக் கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது. &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a7fc109-3167-4a25-8978-d0a8e2cdae14/26-6a729bfb183d2.webp' /></p><p>இந்நிலையில், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, எதிர்வரும் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சை தொடர்பாக விசேட ஆலோசனைக் கூட்டம் இன்று (05) நடைபெறவுள்ளது.</p><p>
இக்கூட்டத்தில் வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T02:38:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[EPF சட்டத்தில் புதிய மாற்றங்கள் - எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/changes-in-the-employees-provident-fund-1785895897"></link>
            <id>https://tamilwin.com/article/changes-in-the-employees-provident-fund-1785895897</id>
            <summary type="text">ஊழியர் சேமலாப நிதி (EPF) சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தனியார் மற்றும் பகுதியளவு அரச துறைகளில் பணிபுரியும் ஓய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழியர் சேமலாப நிதி (EPF) சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.</p><p>
தனியார் மற்றும் பகுதியளவு அரச துறைகளில் பணிபுரியும் ஓய்வூதிய உரிமையற்ற ஊழியர்களுக்கான சமூகப்பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>சட்ட வரைஞருக்கு ஆலோசனை</h2><p>
1958ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிச் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ள நிலையில் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/316e685a-cfa1-4f8a-a5ce-c8502bb5aa6d/26-6a729f20998e7.webp' /></p><p>
இலங்கை மத்திய வங்கி இதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதுடன், தொழில் திணைக்களம் ஆரம்ப வரைவை தயாரித்துள்ளது.</p><p>
இதற்கமைய, ஊழியர் சேமலாப நிதிச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்க சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குமாறு தொழில் அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T02:25:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சம்பவ இடத்தில் போன உயிர்: பயங்கர போதைப்பொருள் பயன்படுத்திய சாரதி: அதிரடி கைதுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/horrific-accident-in-vavuniya-bus-owner-arrested-1785894262"></link>
            <id>https://ibctamil.com/article/horrific-accident-in-vavuniya-bus-owner-arrested-1785894262</id>
            <summary type="text">வவுனியாவில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பில், பேருந்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கொண்டிருந்த மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பில், பேருந்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கொண்டிருந்த மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திய ஒருவருக்குப் பேருந்தைச் செலுத்த அனுமதி அளித்த குற்றச்சாட்டின் கீழ்&nbsp; பேருந்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>இந்த கைது நடவடிக்கை நேற்று (04) புளியங்குளம் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>விசாரணை&nbsp;</h2><p>
 

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த ஜூலை 31 ஆம் திகதி புளியங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியதில், அதில் பயணித்த முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e10629f-de04-4405-8305-74d63dc81098/26-6a7299c11db38.webp' /></p><p>

 

இவ்விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் சாரதியைக் கைது செய்தனர்.</p><p>

 

கைது செய்யப்பட்ட சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவர் 'ஐஸ்' எனும் வீரியமிக்க போதைப்பொருளைப் பயன்படுத்தியிருந்தமை மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டது.
</p><p>
 

தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளில், குறித்த நபரின் சாரதி அனுமதிப்பத்திரமும் ஏற்கனவே காலாவதியாகியிருந்த அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.</p><p></p><h2>உரிமையாளர் கைது</h2><p>

 

இதனையடுத்து, காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கொண்டிருந்த மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திய ஒருவருக்குப் பேருந்தைச் செலுத்த அனுமதி அளித்த குற்றச்சாட்டின் கீழ், அப்பேருந்தின் உரிமையாளரைப் காவல்துறையினர் கைது செய்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aed13414-dedc-4d73-bd26-ef0db989090e/26-6a7299c066e42.webp' /></p><p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புளியங்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T02:16:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேர்வின் விடயத்தில் சிக்கிய பிரபல நடிகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/famous-actress-in-struggle-sri-lanka-1785842640"></link>
            <id>https://tamilwin.com/article/famous-actress-in-struggle-sri-lanka-1785842640</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வாவுக்கு எதிரான சட்டவிரோதமான சொத்துக்கள் தொடர்பான வழக்கில் தனது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திக...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வாவுக்கு எதிரான சட்டவிரோதமான சொத்துக்கள் தொடர்பான வழக்கில் தனது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை நடிகை ரிது ஆகர்ஷா முற்றாக மறுத்துள்ளார். </p><p>

தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் ஊடாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவையாகும். அவை திசைதிருப்பக்கூடியவையாகும். அவ்வாறான தகவல்கள் எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><h2><b>
வழக்கு தாக்கல்</b></h2><p>600 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களை குறுகிய காலத்திற்குள் குவித்துள்ளதாகக் மெமர்வின் சில்வாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b79afb64-0366-45db-bf49-da4a63be9415/26-6a729b5b80f9f.webp' /></p><p>வழக்கின் நீதிமன்ற அறிக்கைகளில், ரிது ஆகர்ஷா என்ற பெயரில் DFCC வங்கி கணக்கு ஒன்றிற்கு பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக சில ஊடகச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
</p><p>நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் DFCC வங்கியில் கணக்கு ஒன்றைப் பராமரிக்கவில்லை. குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள கணக்கிலக்கம் எனக்குச் சொந்தமானது அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
</p><h3><b>
சட்டவிரோத சொத்து</b></h3><p>அதை உறுதிப்படுத்தும் வகையில் DFCC வங்கியினால் வெளியிடப்பட்ட கடிதம் ஒன்றையும் அவர் தனது அறிக்கையுடன் இணைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9feb382a-c28d-4ce3-b070-a455ad1bb32c/26-6a729b5c33a31.webp' /></p><p>மேலும், குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள 2010 முதல் 2012ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தான் பாடசாலை மாணவியாக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

இந்தச் குற்றச்சாட்டுகளுக்கும் தனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என நடிகை ரிது ஆகர்ஷா வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-05T02:09:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் தடை! பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/scholarship-tuition-classes-banned-from-midnight-1785894513"></link>
            <id>https://tamilwin.com/article/scholarship-tuition-classes-banned-from-midnight-1785894513</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயா்படுத்துதல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் இன்று (05) நள்ளிரவு 12 மணி முதல் தடைசெய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயா்படுத்துதல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் இன்று (05) நள்ளிரவு 12 மணி முதல் தடைசெய்யப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து பயிற்சி வகுப்புகள், பாட விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் இன்று (05) நள்ளிரவுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.</p><p>
புலமைப்பரிசில் பரீட்சை முடியும் வரை இந்தத் தடை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>தடை செய்யப்பட்டுள்ள விடயங்கள்</h2><p>இந்த காலகட்டத்தில், புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான கேள்விகளை கொண்ட வினாத்தாள்களை அச்சிடுவது, விநியோகிப்பது அல்லது விளம்பரப்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22a368c5-40a2-47bc-aa52-1c1d744e0149/26-6a729ac58d4f6.webp' /></p><p>பதாகைகள், துண்டுப்பிரசுரங்கள், அத்துடன் மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் விளம்பரங்களை செய்வது அல்லது அத்தகைய பொருட்களை வைத்திருப்பதும் கடுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.
</p><p>
2026 ஆம் ஆண்டு 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதும் உள்ள 2,723 பரீட்சை மையங்களில் ஆகஸ்ட் 09 அன்று நடைபெற உள்ளது.</p><p>

இதற்கிடையில், மோசமான வானிலை நிலவுவதை கருத்தில் கொண்டு, 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை தொடர்பான&nbsp; சிறப்பு கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது.
</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T02:07:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படத்தில் நடிக்க சூர்யா மற்றும் மமிதா பைஜூ வாங்கிய சம்பளம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/suriya-mamitha-baiju-salary-vishwanath-and-sons-1785838957"></link>
            <id>https://cineulagam.com/article/suriya-mamitha-baiju-salary-vishwanath-and-sons-1785838957</id>
            <summary type="text">வருகிற 14-ஆம் தேதி வெளியாகவிருக்கும் விஸ்வநாத் &amp;amp; சன்ஸ் திரைப்படத்தில் நடிப்பதற்காக சூர்யா மற்றும் மமிதா பைஜூ வாங்கிய சம்பளம் எவ்வளவு என்று தெரியும...</summary>
            <content type="html"><![CDATA[<p>வருகிற 14-ஆம் தேதி வெளியாகவிருக்கும் விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படத்தில் நடிப்பதற்காக சூர்யா மற்றும் மமிதா பைஜூ வாங்கிய சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா? வாங்க இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p>
</p><p></p><h2>விஸ்வநாத் &amp; சன்ஸ்
</h2><p>
லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விஸ்வநாத் &amp; சன்ஸ். இப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க, மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து ரவீனா டாண்டன், ராதிகா சரத்குமார் நடித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a289c19-9cd5-44b5-9466-7c32e9cfd788/26-6a71bd7085311.webp' /></p><p>ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

இப்படத்திலிருந்து இதுவரை வெளிவந்த பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக 'பட்டாம்பூச்சி' எனும் பாடல் உலகளவில் டிரெண்ட் ஆனது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61aa000c-9b4a-4f97-8a36-564200f045f6/26-6a71bd6fcdc96.webp' /></p><p>மேலும், சமீபத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் 'தி ஒன்' என்கிற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தை திரையரங்கில் கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.</p><h2>

சம்பளம்
</h2><p>
ஒவ்வொரு முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது, அந்த படத்தில் பணியாற்றிய பிரபலங்களின் சம்பளம் குறித்த விவரம் வெளிவரும். அந்த வகையில், இப்படத்தில் நடித்த சூர்யா மற்றும் மமிதா பைஜூவின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cca63d5d-9d43-4905-ad67-413ebb14ab53/26-6a71bd714034a.webp' /></p><p>

இந்நிலையில், விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படத்தில் நடிக்க நடிகர் <a href="https://www.youtube.com/watch?v=oOnYddVcTfI" target="_blank">சூர்யா</a>விற்கு ரூ. 60 கோடி முதல் ரூ. 70 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார். மேலும், கதாநாயகி மமிதா பைஜூ ரூ. 2 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் கூறப்படுகிறது. 

ஆனால், இந்த சம்பள விவரம் அதிகாரப்பூர்வமானது அல்ல, இணையத்தில் உலாவரும் தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oOnYddVcTfI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-05T01:59:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோசித ராஜபக்சவுக்கு தொடரும் ஏமாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-reject-yositha-s-request-1785894372"></link>
            <id>https://tamilwin.com/article/court-reject-yositha-s-request-1785894372</id>
            <summary type="text">வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச விடுத்த கோரிக்கை தொடர்பில் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க முடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச விடுத்த கோரிக்கை தொடர்பில் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம நேற்று அறிவித்துள்ளார். </p><p>அது தொடர்பான உத்தரவை உயர் நீதிமன்றத்திடம் பெற்றுக்கொள்ளுமாறும் நீதவான் அறிவுறுத்தினார். </p><p>மேலும் அறிவித்தல் கிடைத்ததும் கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு யோசித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகிய இருவருக்கும் நீதவான் உத்தரவிட்டார்.</p><p> </p><h2><b>வெளிநாடு செல்ல அனுமதி மறுப்பு</b></h2><p>இந்த நிலையில் சந்தேக நபரான யோசித ராஜபக்ச சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, யோசித ராஜபக்ச, வர்த்தக உச்சி மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக வெளிநாடு செல்ல வேண்டியுள்ளதால், தற்போது விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு கோரிக்கை விடுத்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fb08448-1e94-42b6-aa4e-892dd2216a4d/26-6a7297ab2f324.webp' /></p><p>இதன்போது நீதவான், சந்தேக நபருக்கு எதிராக லஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. </p><p>இதனால் இந்த கோரிக்கைக்கான உத்தரவை வழங்க முடியாது என்றும், அது தொடர்பான உத்தரவை மேல் நீதிமன்றத்திடம் பெற்றுக்கொள்ளுமாறும் குறிப்பிட்டார். </p><p>நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்துள்ளதாகவும் நீதவான் தெரிவித்தார்.
</p>]]></content>
            <updated>2026-08-05T01:53:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கஞ்சிபானி இம்ரானை தேடி மலேசியாவில் களமிறங்கிய இன்டர்போல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/interpol-joins-forces-to-arrest-kanjipani-imran-1785892935"></link>
            <id>https://ibctamil.com/article/interpol-joins-forces-to-arrest-kanjipani-imran-1785892935</id>
            <summary type="text">பாதாள உலகக் குழு தலைவரும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் முக்கிய நபருமான கஞ்சிபானி இம்ரானை எவ்வாறாயினும் கைது செய்வதற்காக மலேசிய காவல்துறை,...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலகக் குழு தலைவரும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் முக்கிய நபருமான கஞ்சிபானி இம்ரானை எவ்வாறாயினும் கைது செய்வதற்காக மலேசிய காவல்துறை, இன்டர்போல் மற்றும் இலங்கையின் உதவி காவல்துறை அத்தியட்சகர் ரோஹான் ஒலுகல தலைமையிலான விசேட குழுவினர் இணைந்து பாரிய நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
கஞ்சிபானி இம்ரான் சர்வதேச குற்றக்கும்பல் தலைவராக மலேசிய காவல்துறையால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர் மறைந்திருப்பதாக சந்தேகிக்கப்படும் பல இடங்களில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
மேலும், கஞ்சிபானி இம்ரான் மலேசியாவிலிருந்து தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில், அந்நாட்டின் அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் கடல் வழிகள் உள்ளிட்ட நாட்டை விட்டு வெளியேறும் அனைத்து பாதைகளும் மலேசிய காவல்துறை மற்றும் இன்டர்போல் அதிகாரிகளின் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.</p><p></p><h2>ஆனந்த விஜேபால முழுமையான ஒத்துழைப்பு</h2><p>

கஞ்சிபானி இம்ரானுக்கு மலேசியாவில் உள்ள தொடர்புகள் மற்றும் அவருடன் தொடர்புடைய குழு உறுப்பினர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d91eb835-a8b6-4cf7-95a7-da8d7e1d8a53/26-6a7291f3cbbd3.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், மலேசிய காவல்துறைகாவலில் உள்ள கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உதவியாளர் எனக் கூறப்படும் ரத்மலானை சைமா உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களிடம் மலேசிய காவல்துறையும் உதவி காவல்துறை அத்தியட்சகர் ரோஹன் ஒலுகலவும் நீண்ட நேர விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
இந்த விசாரணைகளின் மூலம் கஞ்சிபானி இம்ரான் தொடர்பிலும் அவரது சர்வதேச தொடர்புகள் குறித்தும் முக்கியமான பல தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதன்படி குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் முழுமையான ஆதரவு உதவி காவல்துறை அத்தியட்சகர் ரோஹன் ஒலுகல உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
</p><p>
அதேபோல், பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோரின் முழுமையான ஒத்துழைப்பும் இந்த நடவடிக்கைக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>இந்த நடவடிக்கையின் முன்னேற்றங்களை தொடர்ந்து கண்காணித்து, தேவையான ஆலோசனைகளை வழங்கி, கஞ்சிபானி இம்ரானை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T01:29:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலமைப்பரிசில் பரீட்சை - உயர்தர பரீட்சை தொடர்பாக விசேட கூட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/special-meeting-scholarship-exam-al-examination-1785887464"></link>
            <id>https://ibctamil.com/article/special-meeting-scholarship-exam-al-examination-1785887464</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, எதிர்வரும் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சை தொடர்பாக விச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, எதிர்வரும் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சை தொடர்பாக விசேட ஆலோசனைக் கூட்டம் இன்று (05) நடைபெறவுள்ளது.
</p><p>
இக்கூட்டத்தில் வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மழையுடனான காலநிலை</h2><p>
</p><p>
தற்போது நிலவும் மழையுடனான காலநிலையை முன்னிட்டு, பரீட்சைகளை நடத்துவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன நேற்றைய ஊடக சந்திப்பில் சுட்டிக்காட்டி இருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78b00860-cc4b-478d-88b7-0cea4175253f/26-6a727aeaddd0d.webp' /></p><p>இதன்படி இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவுகளின் அடிப்படையில், பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறுமா அல்லது மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T01:22:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதன் பெயர்ச்சி ; சில ராசிகளுக்கு காத்திருக்கும் ராஜயோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mercury-transit-brings-rajayoga-for-these-signs-1785892107"></link>
            <id>https://jvpnews.com/article/mercury-transit-brings-rajayoga-for-these-signs-1785892107</id>
            <summary type="text">தற்போது புதன் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த புதன் ஆகஸ்ட் 05 ஆம் திகதி கடக ராசிக்குள் நுழையவுள்ளார். புதன் சந்திரனின் ராசிக்கு செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது புதன் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த புதன் ஆகஸ்ட் 05 ஆம் திகதி கடக ராசிக்குள் நுழையவுள்ளார். புதன் சந்திரனின் ராசிக்கு செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். </p><p>


முக்கியமாக கடக ராசியில் புதன் நுழையும் போது அந்த ராசியில் உள்ள சூரியனுடன் சேர்ந்து புதாதித்ய ராஜயோகமும் உருவாவதால், 3 ராசிக்காரர்கள் நேர்மறையான பலன்களைப் பெறவுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd8b3771-aa34-47c9-89e5-f8d64fc29063/26-6a728d0c84be6.webp' /></p><h2>அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்&nbsp;</h2><p> </p><p><b>


ரிஷபம் : </b>ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திடீர் பண வரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது.</p><p></p><p> </p><p><b>

கடகம்:</b> கடக ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் தொழில் மற்றும் வியாபாரத்தில் முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். பணியிடத்தில் செயல்திறன் அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நிதி நிலைமை மேம்படும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வேலைகள் ஒவ்வொன்றும் திட்டமிட்டபடி நடக்கும்.</p><p></p><p><b>

சிம்மம்: </b>சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்புள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T01:18:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பௌத்த அறநெறி பாடசாலை விழாவில் சர்ச்சை ; அரை ஆடையுடன் பெண் உருவம் கொண்ட நினைவுப் பரிசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/controversy-erupts-at-buddhist-school-event-1785891290"></link>
            <id>https://jvpnews.com/article/controversy-erupts-at-buddhist-school-event-1785891290</id>
            <summary type="text">அனுராதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய அறநெறி பாடசாலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசில், அரை ஆடையுடன் நடனமாடும் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அனுராதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய அறநெறி பாடசாலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசில், அரை ஆடையுடன் நடனமாடும் பெண் உருவம் இடம்பெற்றிருந்ததாகக் கூறி சில பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify;">
கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) அனுராதபுரத்தில் பாடசாலையொன்றில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பல முக்கிய பிரமுகர்கள் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4a05cc9-c0c2-4f13-a034-d0e3ce6e6c44/26-6a7289dc506b6.webp' /></p><h2 style="text-align: justify; ">நினைவுப் பரிசு</h2><p>
</p><p style="text-align: justify;">
அனுராதபுரம் மாவட்ட சாசனரக்ஷக பலமண்டலப் பகுதிகளிலுள்ள தர்மப் பாடசாலை மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றிருந்த நிலையில், வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
</p><p style="text-align: justify; ">
இந்த விவகாரம் தொடர்பாக அனுராதபுரம் மாவட்ட சாசனரக்ஷக பலமண்டலத்தின் பிரதம செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

அதன்படி, இசைக் கருவி வாசிக்கும் பெண் உருவம் இடம்பெற்ற அந்த நினைவுப் பரிசு, நாடகம் மற்றும் இசைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டதாகவும், அது அந்தப் போட்டிகளின் கருப்பொருளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
மேலும், அந்த நினைவுப் பரிசின் உண்மையான நோக்கத்தை பெற்றோர் சரியான முறையில் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-05T01:18:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தர பரீட்சை தொடர்பில் இன்று எடுக்கப்படவுள்ள முக்கிய தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/key-decision-today-on-a-level-exams-1785888827"></link>
            <id>https://jvpnews.com/article/key-decision-today-on-a-level-exams-1785888827</id>
            <summary type="text">கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை நடத்துவது தொடர்பில் இன்று புதன்கிழமை (5) இடம் பெறும் உயர் மட்ட கலந்துரையாடலின் பின்னர் தீர்மானிக்க பண்பாடும் என கல...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை நடத்துவது தொடர்பில் இன்று புதன்கிழமை (5) இடம் பெறும் உயர் மட்ட கலந்துரையாடலின் பின்னர் தீர்மானிக்க பண்பாடும் என கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.</p><p>நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (4) இடம்பெற்ற இந்த வருடத்துக்கான அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான எழுபத்தோராயிரத்து எழுநூறு மில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dead0a36-187c-44cb-85fb-4f9ed0447300/26-6a72803ccdae1.webp' /></p><h2>விசேட கலந்துரையாடல்</h2><p>
</p><p>
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையை நடத்துவது தொடர்பில் உயர்மட்ட விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெறவுள்ளது.
</p><p>

இந்த உயர்மட்ட கலந்துரையாடலில் வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
நிலவும் மோசமான காலநிலை காரணமாக பரீட்சை நடத்துவதில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு, குறிப்பாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உயர்தரப் பரீட்சையை திட்டமிட்டபடி நடத்துவதா அல்லது மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்வதா என்பது தொடர்பில் அதன் போது இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T01:18:07+00:00</updated>
        </entry>
    </feed>
