<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-19T13:29:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை விட்டு தப்பிச் செல்லும் அரசியல்வாதிகள் : புலனாய்வுத்துறைக்கு பறந்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/intelligence-bigwigs-fleeing-abroad-by-illness-1789823308"></link>
            <id>https://ibctamil.com/article/intelligence-bigwigs-fleeing-abroad-by-illness-1789823308</id>
            <summary type="text">&amp;nbsp; இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலஞ்ச ஆணையம் அல்லது பிற அமைப்புகள் விசாரணைகளைத் தொடங்கிய பின்னர், உடல்நலக்குறைவு என்று பொய் சொல்லி வெளிநாடு ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலஞ்ச ஆணையம் அல்லது பிற அமைப்புகள் விசாரணைகளைத் தொடங்கிய பின்னர், உடல்நலக்குறைவு என்று பொய் சொல்லி வெளிநாடு செல்ல முயற்சிக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் குறித்த தகவல்களை விசாரிக்குமாறு புலனாய்வு அமைப்புகளுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
</p><p>
அதன்படி, பல புலனாய்வு அமைப்புகள் இப்போதெல்லாம் அத்தகைய நபர்களைக் கூர்ந்து கண்காணித்து வருகின்றன.</p><h2>மருத்துவ அறிக்கைகள் உண்மையானவையா&nbsp;என&nbsp;விசாரணை</h2><p>&nbsp;இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட சில அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சமர்ப்பித்த மருத்துவ அறிக்கைகள் உண்மையானவையா என்பதை உறுதிப்படுத்த விசாரணைகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c30f1fbf-d138-4323-8d2b-fa8879987d62/26-6aae8e2c7ea5d.webp' /></p><p>
</p><p>
சில விசாரணைகள் தொடங்கப்பட்ட பின்னர் வெளிநாடுகளிலிருந்து திரும்பாத பல அரசியல்வாதிகளையும் உளவு அமைப்புகள் விசாரித்து வருவதாக பாதுகாப்பு வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.</p><p></p><h2>தூதரக மட்டத்திலும் பேச்சு</h2><p>
</p><p>
அவர்களைத் தாயகம் திரும்ப அழைத்து வருவது குறித்து தூதரக மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bff7838e-f05f-4cf9-b5b7-8dc2e7cb1114/26-6aae8e2d326bc.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், பல்வேறு பொதுமன்னிப்புகளின் கீழ் விடுவிக்கப்பட்ட சில நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களது விடுதலை சட்டபூர்வமானதா என்பதை உறுதி செய்வதே இந்த விசாரணையின் நோக்கம் என நீதித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T13:29:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானில் பொலிஸ் வளாகம் மீது தற்கொலைப்படை தாக்குதல்: உயிரிழப்பு 31 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/pakistan-police-attack-death-toll-rises-to-31-1789824155"></link>
            <id>https://canadamirror.com/article/pakistan-police-attack-death-toll-rises-to-31-1789824155</id>
            <summary type="text">வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பொலிஸ் வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பொலிஸ் வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>


நேற்று வெள்ளிக்கிழமை (18) பொலிஸ் அதிகாரிகளும் அவர்களின் குடும்பத்தினரும் பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த போது, வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட காரை இந்தத் தாக்குதலாளி பொலிஸ் வளாகத்தின் மீது மோதியதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/384b4078-989b-4a1b-b45c-2a9f1647c510/26-6aae8c9ccd27a.webp' /></p>]]></content>
            <updated>2026-09-19T13:23:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை ரேஷ்மா பசுபுலடி மாடர்ன் லுக் புகைப்படங்கள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/reshma-pasupuleti-recent-photoshoot-1789823263"></link>
            <id>https://viduppu.com/article/reshma-pasupuleti-recent-photoshoot-1789823263</id>
            <summary type="text">வாணி ராணி, வம்சம், மரகத வீணை, என் இனிய தோழியே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலடி. அமெரிக்க செய்தியாளராக திகழ்ந்து இந...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாணி ராணி, வம்சம், மரகத வீணை, என் இனிய தோழியே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலடி. அமெரிக்க செய்தியாளராக திகழ்ந்து இந்தியா பக்கம் வந்து சின்னத்திரை வெள்ளித்திரை என நடித்து வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66f782d0-e513-4022-b84d-0ba4bb9ac91f/26-6aae892998804.webp' /></p><p>
</p><p>
கடந்த ஆண்டு பாக்கியலட்சுமி சீரியல் முடிந்தப்பின் தற்போது, கார்த்திகை தீபம், மகளே என் மருமகளே என்ற சீரியல்களில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் ரேஷ்மா.</p><p>

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா, அடக்கவுடக்காமன சேலையணிந்தும், மாடர்ன் ஆடையணிந்தும் புகைப்படங்கள், ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருவார். தற்போது மாடர்ன் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-19T13:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி சிறையில் உள்ள அனோஜனை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-demanding-release-of-sivarasa-anojan-1789820969"></link>
            <id>https://tamilwin.com/article/protest-demanding-release-of-sivarasa-anojan-1789820969</id>
            <summary type="text">சவுதி அரேபியாவில் சிறையில் உள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி, இந்து அமைப்புகளின் கூட்டமைப்பினால் கவனயீர்ப்புப் போராட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவில் சிறையில் உள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி, இந்து அமைப்புகளின் கூட்டமைப்பினால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று(19) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், சிவராசா அனோஜனின் புகைப்படம் மற்றும் தூக்குக் கயிற்றின் உருவம் உள்ளிட்ட குறியீடுகள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும், அவரை விடுதலை செய்யுமாறு கோரும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.</p><h2>கவனயீர்ப்புப் போராட்டம்</h2><p>
</p><p>
இதன்போது ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த போராட்டத்தின் பேச்சாளர் ஒருவர், இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாகவே சிவராசா அனோஜன் தற்போதைய சட்ட சிக்கலில் சிக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00f80c4a-2790-4f72-b662-200b1bfe5717/26-6aae89ed4b01c.webp' /></p><p>
</p><p>
எனவே, இந்த விடயத்தை மனிதாபிமான அடிப்படையில் கருத்திற்கொண்டு, சிவராசா அனோஜனை விடுதலை செய்து அவர் தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்து நிம்மதியாக வாழ்வதற்கு சவுதி அரேபிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
</p><p>
மேலும், அனோஜனின் குடும்பத்தின் நிலைமையையும் கருத்திற்கொண்டு, அவரது விடுதலைக்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T13:11:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியவை உலுக்கிய கொடூரம் ; பாலினம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்ட சிறுமியின் உடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/horror-inflicted-on-delhi-girl-1789823236"></link>
            <id>https://jvpnews.com/article/horror-inflicted-on-delhi-girl-1789823236</id>
            <summary type="text">இந்திய தலைநகர் டெல்லியில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடல் பாகத்தை...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இந்திய தலைநகர் டெல்லியில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடல் பாகத்தை நாய்கள் கடித்துத் தின்ற அவலமும் நிகழ்ந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p style="text-align: justify; ">டில்லியின் ஸ்வரூப் நகரில், திறந்தவெளி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட உடல், ஆணா, பெண்ணா என அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்திருந்ததால், முதலில், உடல் ஆணுடையது என காவல்துறையினர் தவறுதலாக கருதியது தெரிய வந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/029680a7-2cf7-427b-a89b-c91b5bb33a24/26-6aae8905dfddd.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் மூன்று சிறார்கள் உள்பட நால்வர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.



</p><p style="text-align: justify; ">முதற்கட்ட விசாரணையில்தான், கண்டெடுக்கப்பட்ட உடல், சிறுமியுடையது என்றும், அவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலையுண்டதும் தெரிய வந்துள்ளது.</p><p style="text-align: justify; ">
முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்டிருப்பதாகவும், பல இடங்களில் எலும்புகள் வெளியே தெரிவதாகவும், வலது கை காணாமல் போயிருப்பதாகவும் காவல்துறை கூறுகிறது.
</p><p style="text-align: justify; ">
முதலில், உடலைக் கண்டதும், அது பெண்ணுடையது என்று அடையாளம் காண முடியவில்லை. அந்த அளவுக்கு சிதைக்கப்பட்டிருந்தது. </p><p style="text-align: justify; ">மண்டை ஓடு, விலா எலும்பு வெளியே தெரிந்தது, நாங்கள் பார்த்தபோது, அது ஒரு நடுத்தர ஆணின் உடல் என்று நினைத்தோம் என்கிறார்கள்.</p><p style="text-align: justify; ">
ஆனால் உடல் கூராய்வுக்குப் பிறகே, அது பெண் என்றும், பாலியல் வன்கொடுமை செய்து கொன்றிருக்கிறார்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">பிறகுதான், கையில் ஓரிடத்தில் மூன்று நட்சத்திரங்களை பச்சைக் குத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. </p><p style="text-align: justify; ">பிறகு, காணாமல் போன பெண்கள் குறித்து புகார் அளித்த குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியபோது, அதில் ஒருவர் வைத்திருந்த பெண்ணின் புகைப்படத்தில் அதே மூன்று நட்சத்திரம் பச்சைக் குத்தப்பட்டிருந்த பெண்தான் காணாமல் போனவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, குத்திக் கொலை செய்து வயலில் வீசியிருக்கிறார்கள். இந்தக் கொலையில் மூன்று சிறார்கள் உள்பட நான்கு பேருக்குத் தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது. </p><p style="text-align: justify; ">சம்பவ இடத்துக்கு அருகில் உள்ள பகுதிகளில் இருக்கும் சிசிடிவி கேமராக்கள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டு டெம்ரோ வாகனத்தில் குற்றவாளிகள் வந்தது கண்டுபிடிக்கப்பட்டு ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்டு அவர் அளித்த தகவலின் அடிப்படையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T13:07:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பாலஸ்தீனக் குழு பங்கேற்க விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்க வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/palestinian-delegation-at-the-un-meeting-1789821450"></link>
            <id>https://tamilwin.com/article/palestinian-delegation-at-the-un-meeting-1789821450</id>
            <summary type="text">ஐ.நா தலைமையக ஒப்பந்தங்கள் மற்றும் அதை நடத்தும் நாடு என்ற ரீதியில் தனக்குள்ள
கடமைகளைக் கருத்திற் கொண்டு அமெரிக்கா தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐ.நா தலைமையக ஒப்பந்தங்கள் மற்றும் அதை நடத்தும் நாடு என்ற ரீதியில் தனக்குள்ள
கடமைகளைக் கருத்திற் கொண்டு அமெரிக்கா தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என
ஐரோப்பிய ஒன்றியத்தின் இராஜதந்திர சேவையின் பேச்சாளர் அன்வர் எல் அனூனி
தெரிவித்துள்ளார்.
</p><p>
இதனிடையே, பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் எதிர்வரும் பொதுச் சபைக்
கூட்டத்தொடரில் பதிவுசெய்யப்பட்ட காணொளி செய்தி மூலமாக உரையாற்றுவதற்கு ஐ.நா
பொதுச் சபை அண்மையில் வாக்களித்து அனுமதியளித்திருந்தது.
</p><p>
இந்த நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஐ.நாவின் பணிகளில் பாலஸ்தீனம்
முழுமையாகப் பங்கேற்பதைப் பாதிக்கும் என ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோனியோ
குட்டேரஸும் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.</p><h2>விசா தடை</h2><p>
</p><p>
பாலஸ்தீன அதிகாரசபையும் பாலஸ்தீன விடுதலை அமைப்பும் (PLO) அமைதி முயற்சிகளை
சீர்குலைப்பதாகக் குற்றம்சாட்டியே அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த விசா தடையை
நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b0dc360-7d0b-4efa-ad9d-95e309e8bda3/26-6aae87e810759.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், பாலஸ்தீன அரசுக்கான சர்வதேச அங்கீகாரத்தை வலியுறுத்தவும்
இரு-நாட்டுத் தீர்வை மீண்டும் முன்னெடுக்கவும் இம்முறை காணொளி வாயிலாக
ஜனாதிபதி அப்பாஸ் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T13:02:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா மீதான பொருளாதாரத் தடை மசோதா: சட்டமாக்கிய ட்ரம்ப்..வெளியான செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-signs-sanctions-bill-against-russia-1789822896"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-signs-sanctions-bill-against-russia-1789822896</id>
            <summary type="text">Trump signs sanctions bill against russia: ரஷ்யாவின் மீது விரிவான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் மசோதாவில் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார். 

அமெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump signs sanctions bill against russia: ரஷ்யாவின் மீது விரிவான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் மசோதாவில் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.</p><p> 

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யாவின் மீது விரிவான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் மசோதாவில் கையெழுத்திட்டதாக தெரிவித்துள்ளது.&nbsp;</p><h2>பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்த</h2><p>
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு விவகாரத்தில், பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்த ட்ரம்பின் அமெரிக்கா முடிவு செய்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef1c1158-1fbb-440a-a37a-c4da8f93c33d/26-6aae888c9abd7.webp' />&nbsp;</p><p></p><p>
அத்துடன் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு மீதான சார்பை குறைத்துக் கொள்ளவில்லை என்றால், முன்னெப்போதும் இல்லாத பொருளாதாரத் தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் ட்ரம்பின் நிர்வாகம், இந்தியா மற்றும் சீனாவிற்கு நேரடியான மிரட்டலை விடுத்தது.
</p><p>
அதனைத் தொடர்ந்து இந்தியா, சீனா மற்றும் பிற நாடுகள் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை சார்ந்திருப்பதைக் குறைக்கும் வகையில், அந்நாடுகள் மீது 100 சதவீதம் இறக்குமதி வரிகளை விதிக்கவும் மற்றும் ஈரான் மீதான தடைகளை நீட்டிக்கவும் அதிகாரம் அளிக்கும் சட்ட மசோதாவை ட்ரம்ப் அரசு கொண்டு வந்தது. </p><h2>

ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைகள் </h2><p>இந்த நிலையில், குறித்த மசோதாவில் வெள்ளிக்கிழமை அன்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டு, அதனை சட்டமாக்கினார் என்று வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.</p><p>
கடந்த ஜூலை மாதம், "ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைகள் விதிக்கும் 2026ஆம் ஆண்டின் சட்டம்" என்று அழைக்கப்படும் இந்த மசோதா புதன்கிழமையன்று பிரதிநிதிகள் சபையிலும், கடந்த மாதம் செனட் சபையிலும் நிறைவேற்றப்பட்டது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T13:01:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தியாக தீபம் தீபம் திலீபனின் நினைவிடத்தில் ஒலிபெருக்கி பாவனை : காவல்துறையின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/loudspeaker-at-dileepan-s-memorial-issue-1789820456"></link>
            <id>https://ibctamil.com/article/loudspeaker-at-dileepan-s-memorial-issue-1789820456</id>
            <summary type="text">&amp;nbsp; தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் ஒலிபெருக்கி பாவனைக்கு அனுமதி வழங்க தான்
புலனாய்வாளர்களின் அறிக்கையை பெற்று , அதன் அடிப்படையிலையே வழங்குவேன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் ஒலிபெருக்கி பாவனைக்கு அனுமதி வழங்க தான்
புலனாய்வாளர்களின் அறிக்கையை பெற்று , அதன் அடிப்படையிலையே வழங்குவேன் என
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு யாழ்ப்பாண தலைமையக
காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்
</p><p>
நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் அனுமதியின்றி ஒலிபெருக்கி
சாதனங்களை பயன்படுத்தினார்கள் என குற்றம் சாட்டி சாதனங்களை காவல்துறையினர்
நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.</p><h2>ஏற்பாட்டாளர்களை அலைக்கழித்த காவல்துறையினர்</h2><p>&nbsp;அதனை அடுத்து ஏற்பாட்டாளர்கள் ஒலிபெருக்கி சாதனத்திற்காக காவல் நிலையம்
சென்றிருந்த வேளை , பொறுப்பதிகாரி இல்லை என திருப்பியனுப்பியுள்ளனர்.
அந்நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை மீண்டும் காவல் நிலையம் சென்ற போதும் திருப்பி
அனுப்பியுள்ளனர்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c45c756-c75a-453c-89c6-26261a86cde8/26-6aae870938d14.webp' /></p><h2>புலனாய்வாளர்களின் அறிக்கையை பெற்ற பின்னரே அனுமதி</h2><p>

காவல்துறையினர் ஏற்பாட்டாளர்களை அலைக்கழித்ததை அடுத்து, அது தொடர்பில்
ஏற்பாட்டாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு
தகவல் வழங்கியதை அடுத்து , நாடாளுமன்ற உறுப்பினர் வடமாகாண மூத்த காவல்துறை
அத்தியட்சகரை தொடர்பு கொண்டு அது தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17a9d1bb-0cd6-4c65-9139-02a7895cc6a7/26-6aae8709e4275.webp' /></p><p>
</p><p>
அதனை அடுத்து , யாழ்ப்பாண தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி , நாடாளுமன்ற
உறுப்பினரை தொடர்பு கொண்டு , ஒலிபெருக்கி சாதனம் பெறுவதற்கான அனுமதிக்காக
காவல் நிலையத்தில் விண்ணப்பிக்க கூறியதுடன் , புலனாய்வாளர்களின் அறிக்கையை
பெற்ற பின்னரே அனுமதி வழங்குவதா ? இல்லையா என முடிவெடுக்கப்படும் என
தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T12:58:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[H-1B விசாவுக்கான கட்டணம் ; ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-extends-h-1b-visa-fee-for-one-year-1789803117"></link>
            <id>https://canadamirror.com/article/trump-extends-h-1b-visa-fee-for-one-year-1789803117</id>
            <summary type="text">H-1B குடியேறாதோர் விசா திட்டத்தின் கீழ் அமெரிக்காவுக்கு வரும் குறிப்பிட்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கான 1 இலட்சம் அமெரிக்க டொலர் கட்டணத்தை மேலும் 12 மாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>H-1B குடியேறாதோர் விசா திட்டத்தின் கீழ் அமெரிக்காவுக்கு வரும் குறிப்பிட்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கான 1 இலட்சம் அமெரிக்க டொலர் கட்டணத்தை மேலும் 12 மாதங்களுக்கு நீடிக்கும் உத்தரவை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். </p><p>



புதிய உத்தரவு 2026 செப்டம்பர் 21 முதல் அமுலுக்கு வந்து, 2027 செப்டம்பர் 21 வரை நீடிக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/203fff20-97ed-4d9a-8b9e-91c8f26e0c75/26-6aae3a6f5456c.webp' /></p><p>



2025ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் கட்டண விதி, அமெரிக்காவுக்கு வெளியே இருக்கும் H-1B பணியாளர்களை உள்ளடக்கிய குறிப்பிட்ட புதிய மனுக்களுக்கு பொருந்துகின்றது. </p><p>



தேசிய நலன் கருதி விதிவிலக்குகளை வழங்கும் அதிகாரமும் உள்நாட்டு பாதுகாப்புத் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
</p><p>


H-1B திட்டத்தில் முறைகேடுகளைத் தடுப்பதும், அமெரிக்க தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாப்பதும் கட்டணத்தை நீட்டிப்பதற்கான காரணங்களாக ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. </p><p>



அதேவேளை, புதிய நிர்வாக உத்தரவின் கீழ் H-1B விண்ணப்பங்களை பரிசீலிக்கும்போது, தொடர்புடைய அமெரிக்க ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதா அல்லது எதிர்காலத்தில் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதா என்பதையும் அதிகாரிகள் கருத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>



வெள்ளை மாளிகையின் தகவலின்படி, 2025ஆம் ஆண்டு கட்டண விதி அமுலுக்கு வந்ததிலிருந்து 700க்கும் மேற்பட்ட H-1B மனுக்களுக்கு 1 இலட்சம் டொலர் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p>



H-1B விசா திட்டம் தொழில்நுட்பம் உள்ளிட்ட சிறப்புத் திறன் தேவைப்படும் துறைகளில் வெளிநாட்டு பணியாளர்களை தற்காலிகமாக அமெரிக்காவில் பணியாற்ற அனுமதிக்கும் திட்டமாகும்.</p><p> 



இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு இந்தத் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-19T12:54:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூர்யா-ஜோதிகா திருமணம் செய்த பிரம்மாண்ட கோட்டையின் செலவு எத்தனை லட்சம் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/suriya-jyothika-wedding-venue-cost-details-1789812436"></link>
            <id>https://cineulagam.com/article/suriya-jyothika-wedding-venue-cost-details-1789812436</id>
            <summary type="text">சூர்யா-ஜோதிகாசூர்யா-ஜோதிகா, தென்னிந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ஹிட்டான நட்சத்திர ஜோடி. எல்லா பிரபலங்களும் தான் திருமணம் செய்கிறார்கள், ஆனால் இவர்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சூர்யா-ஜோதிகா</h2><p>சூர்யா-ஜோதிகா, தென்னிந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ஹிட்டான நட்சத்திர ஜோடி. </p><p>எல்லா பிரபலங்களும் தான் திருமணம் செய்கிறார்கள், ஆனால் இவர்கள் இருவரும் திருமணம் செய்தபோது எல்லையில்லா மகிழ்ச்சியில் இருந்தார்கள் ரசிகர்கள் என்று தான் கூற வேண்டும். இப்போதும் ஒரு காதல் கல்யாண ஜோடி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக உள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1d9fe14-d9bd-4c73-80da-6cd3d96115a8/26-6aae61b9837e4.webp' /></p><p>
</p><p>அண்மையில் சூர்யா-ஜோதிகா தங்களது 20வது வருட திருமண நாளை வெளிநாட்டில் கிறிஸ்துவ முறைப்படி மீண்டும் திருமணம் செய்து கொண்டாடினார்கள்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dd9e28b-6845-44c5-8938-13a993ccf7b5/26-6aae61b8b5f85.webp' /></p><h2>விலை என்ன</h2><p>
சூர்யா-ஜோதிகாவின் திருமணம் ஸ்காட்லாந்தில் அமைந்துள்ள பிளேர்குஹான் கேஸ்டில் ( Blairquhan Castle) என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையில் பிரம்மாண்டமாக நடந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc10d528-22be-4372-aaf6-9623e2a239c9/26-6aae61b7e963c.webp' /></p><p>
</p><p>சுமார் 200 ஏக்கர் பரப்பளவிலான எஸ்டேட்டுக்குள் இந்த பிரம்மாண்ட கோட்டை அமைந்துள்ளது. </p><p>இந்த கோட்டையில் விருந்தினர்கள் அடிப்படையில் பேக்கேஜ் வழங்கப்படுகிறதாம். 60 விருந்தினர்கள் என்றால் இந்திய மதிப்பில் ரூ. 27.4 லட்சமும், 80 பேர் என்றால் ரூ.31.2 லட்சமும் செலவாகும் என கூறப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-19T12:50:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[அசைவ உணவுக்கு இணையான சத்துக்களை வழங்கும் சைவ உணவுகள் என்னென்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/veg-foods-that-have-same-nutrients-as-non-veg-food-1789820053"></link>
            <id>https://manithan.com/article/veg-foods-that-have-same-nutrients-as-non-veg-food-1789820053</id>
            <summary type="text">புரட்டாசி மாதம் தொடங்கியுள்ள நிலையில் பலரும் அசைவ உணவுகளைத் தவிர்த்து சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுகின்றனர். 

இதுபோன்ற நேரங்களில் உடலுக்குத் தேவையான...</summary>
            <content type="html"><![CDATA[<p>புரட்டாசி மாதம் தொடங்கியுள்ள நிலையில் பலரும் அசைவ உணவுகளைத் தவிர்த்து சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுகின்றனர்.</p><p> 

இதுபோன்ற நேரங்களில் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும் வகையில் உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியம்.
</p><p>
அசைவ உணவுகளில் கிடைக்கும் சத்துக்களுக்கு இணையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பல்வேறு சைவ உணவுகளும் உள்ளன.</p><p> 

இவற்றைத் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுகளைத் தவிர்க்க உதவலாம். </p><p>

அந்தவகையில், அசைவ உணவுக்கு இணையான சத்துக்களை வழங்கும் சைவ உணவுகளை குறித்து பார்க்கலாம்.&nbsp;</p><h2>1. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்</h2><p>

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளை மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை. குறிப்பாக, மீன் வகைகளில் இந்த சத்து அதிகமாக உள்ளது.</p><p>

சைவ உணவுகளில் வால்நட்ஸ், சியா விதைகள் மற்றும் ஆளி விதைகள் ஆகியவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5de5b7b-9bac-4c94-ab04-4e2c76a29958/26-6aae7c97bd90f.webp' /></p><p> </p><h2>

2. லீன் புரோட்டீன்</h2><p>

கொழுப்பு குறைந்த புரோட்டீன் சிக்கன் போன்ற அசைவ உணவுகளில் கிடைக்கிறது. அதேபோல், சைவ உணவுகளிலும் புரோட்டீன் நிறைந்த உணவுகள் உள்ளன.
</p><p>
பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீர் மற்றும் சோயாவில் இருந்து தயாரிக்கப்படும் டோஃபு ஆகியவை புரோட்டீன் சத்துக்கான சைவ உணவு உணவுகளாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8093d83-a3d8-4bf3-a6c7-497e5a0528d8/26-6aae7c9872715.webp' /></p><p>
</p><h2>
3. கொலாஜன்</h2><p>

கடல் உணவுகளில் அதிகம் உள்ள கொலாஜன் உடலில் உள்ள தோல், எலும்புகள் மற்றும் மூட்டுகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான புரதமாகும். </p><p> 

சைவ உணவுகளில் சிட்ரஸ் பழங்கள், பெர்ரி பழங்கள், நட்ஸ் மற்றும் விதைகள் ஆகியவை கொலாஜன் உற்பத்திக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/617392d8-5e33-465c-84da-92bbddaa75bb/26-6aae7c9926cea.webp' /></p><p>
</p><h2>
4. கொழுப்புள்ள புரோட்டீன்
</h2><p>
மட்டன் உள்ளிட்ட இறைச்சி உணவுகளில் புரோட்டீன் மற்றும் கொழுப்பு காணப்படுகின்றன.</p><p> 

இதற்கு மாற்றாக மீல் மேக்கரை சேர்த்துக்கொள்ளலாம். இதில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0913f92f-2368-4d08-a7f1-d23dad635853/26-6aae7c99cffba.webp' /></p><p> </p><h2>

5. இரும்புச்சத்து
</h2><p>
உடலின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது இரும்புச்சத்து அசைவ உணவுகளில் மட்டன், முட்டை மற்றும் சிக்கன் போன்றவற்றில் இரும்புச்சத்து காணப்படுகிறது.</p><p> 

சைவ உணவுகளில் கீரைகள், பச்சைக் காய்கறிகள், விதைகள், நட்ஸ், பருப்பு வகைகள் மற்றும் உலர் பழங்கள் ஆகியவற்றில் இரும்புச்சத்து உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf14954e-e90b-4b79-9da9-fa365cdc578d/26-6aae7c9a8b626.webp' /></p>]]></content>
            <updated>2026-09-19T12:49:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி இளவரசரின் இராஜகீய மன்னிப்பு.. அனோஜனை காப்பாற்ற இருக்கும் வழி சாத்தியமாகுமா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sivarasa-anojan-death-sentence-saudi-arabia-law-1789813237"></link>
            <id>https://tamilwin.com/article/sivarasa-anojan-death-sentence-saudi-arabia-law-1789813237</id>
            <summary type="text">சவூதி அரேபியா, இஸ்லாமியச் சட்டமுறையான ஷரியாவின் (Sharia) அடிப்படையிலேயே தனது நீதித்துறையைச் செயல்படுத்துவதாக இணையத்தள தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன்படி,...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியா, இஸ்லாமியச் சட்டமுறையான ஷரியாவின் (Sharia) அடிப்படையிலேயே தனது நீதித்துறையைச் செயல்படுத்துவதாக இணையத்தள தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>அதன்படி, அங்கு மரண தண்டனையானது பிரதானமாக மூன்று சட்டப் பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. </p><p>முதலாவதாக, 'கிசாஸ்' (Qisas) எனும் பழிக்குப்பழி சட்டத்தில், நீதியின் கீழ் திட்டமிடப்பட்ட கொலைக் குற்றங்களுக்கு தண்டனை விதிக்கப்படுகிறது; இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இழப்பீட்டுத் தொகையை (Diyya) பெற்றுக்கொண்டு குற்றவாளியை மன்னிக்க முடியும்.</p><h2>சவூதி அரேபிய சட்டம்..&nbsp;&nbsp;</h2><p>இரண்டாவதாக, 'ஹதுத்' (Hudud) பிரிவின் கீழ் மத நூல்களில் வரையறுக்கப்பட்ட தேசத்துரோகம், மதம் மாறுதல் போன்ற குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c9bd40d-4e35-4a1e-8532-230de916b83a/26-6aae837a9912a.webp' /></p><p> </p><p>மூன்றாவதாக, 'தஸீர்' (Tazir) எனும் நீதிபதிகளின் அதிகாரத்திற்குட்பட்ட பிரிவின் கீழ் போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாதம் மற்றும் மத நிந்தனை போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அங்கு பிரதானமாக வாள் மூலம் தலை துண்டித்தல் முறையிலேயே தண்டனை நிறைவேற்றப்படுகிறது.</p><p>இந்நிலையில், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரான சிவராசா அனோஜன், சவூதி அரேபியாவில் கட்டுமானத் துறையில் பணியாற்றி வந்தார்.</p><p> சமூக வலைத்தளத்தில் அவர் இட்ட பின்னனூட்டலில், இஸ்லாமிய மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலான கருத்து ஒன்றை வெளியிட்ட, நிலையில் இவ்விவகாரம் பேசுபொருளானதுடன் கடும் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானது.&nbsp;</p><p>அவர் உடனடியாக அக்கருத்தை நீக்கி பகிரங்கமாக மன்னிப்பு கோரிய போதிலும், அது தொடர்பாக சவூதி அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.</p><p></p><h2>இளவரசரின் சிறப்பு அதிகாரம்&nbsp;</h2><p> இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வழக்கின் ஆரம்ப விசாரணையில் அல்-அஹ்சா (Al-Ahsa) நீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/315a44a3-5f1f-465d-8b29-d84a1045825d/26-6aae837c2559f.webp' /></p><p> எனினும், மேல்முறையீட்டின் போது இந்தத் தண்டனை மரண தண்டனையாக உயர்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p>சவூதி சட்டப்படி, மத நிந்தனை தொடர்பான குற்றங்களில் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மன்னிப்பு வழங்க முடியாது என்றாலும், சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு இருக்கும் சிறப்பு அதிகாரமான 'இராஜகீய மன்னிப்பு' (Royal Clemency) மூலமாகவோ அல்லது உயர் நீதிமன்ற மேன்முறையீட்டின் மூலமாகவோ தண்டனையைக் குறைக்க முடியும்.</p><p><i>(இராஜகீய மன்னிப்பு (Royal Pardon / Presidential Pardon) என்பது ஒரு நாட்டின் தலைவர் (அரசர் அல்லது ஜனாதிபதி) தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, குற்றவாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட தண்டனையைக் குறைப்பது அல்லது முழுமையாக இரத்து செய்வது ஆகும்.)</i></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f1067c0-f57d-451f-b5bc-1832cfecdc1f/26-6aae837b6ac5a.webp' /></p><p> </p><p>தற்போது இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் அரசியல் தலைவர்கள் உடனடியாக தலையிட்டு இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். </p><p>அனோஜனின் குடும்பத்தினரும் தங்களது மகனை மீட்டுத் தருமாறு கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இலங்கை அரசு சவூதி அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக அறிவித்துள்ளது.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T12:49:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் காவல்துறையினர் மறித்த வேளை கீழே விழுந்து இளைஞன் திடீர் மரணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/youth-stopped-by-police-in-jaffna-dies-suddenly-1789817166"></link>
            <id>https://ibctamil.com/article/youth-stopped-by-police-in-jaffna-dies-suddenly-1789817166</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரை காவல்துறையினர் மறித்த வேளை அவர் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் - காரைந...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரை காவல்துறையினர் மறித்த வேளை அவர் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.</p><p>யாழ்ப்பாணம் - காரைநகர் வீதியில், மானிப்பாய் தேவாலயத்திற்கு முன்பாக இன்றையதினம் (19) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>இதன்போது சபாபதிப்பிள்ளை வீதி, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த தபேந்திரன் தினுசன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p></p><h2>யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை</h2><p>சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் - காரைநகர் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரை மானிப்பாய் போக்குவரத்து காவல்துறையினர் மறித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5eb43f3d-98bf-464d-abbf-554f847e9bd8/26-6aae7504eb432.webp' /></p><p>இதன் போது குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திய பின்னர் தானாகவே
கீழே சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> பின்னர் குறித்த இடத்திலேயே அந்த இளைஞர் அசைவற்று காணப்பட்ட நிலையில் அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த நிலையில் குறித்த இளைஞரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T12:45:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிபரின் உயிரைப் பறித்த விபத்து ; பேருந்து சாரதி அம்பலமான விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/accident-claims-principal-s-life-1789821696"></link>
            <id>https://jvpnews.com/article/accident-claims-principal-s-life-1789821696</id>
            <summary type="text">தம்புள்ளை தேசிய பாடசாலையின் அதிபர் பயணித்த சிற்றூந்துடன் மோதிய பேருந்தின் சாரதி, விபத்து இடம்பெற்ற வேளையில் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை தெரியவந்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தம்புள்ளை தேசிய பாடசாலையின் அதிபர் பயணித்த சிற்றூந்துடன் மோதிய பேருந்தின் சாரதி, விபத்து இடம்பெற்ற வேளையில் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
மேலும், குறித்த பேருந்துக்கு முறையான சேவை அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை என்பதும் பொலிஸாரால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9465b370-aecf-43e0-b07c-b474208074b8/26-6aae8301cfbfe.webp' /></p><h2 style="text-align: justify; ">விளக்கமறியல்</h2><p style="text-align: justify; ">&nbsp; தம்புள்ளை - ஹபரணை பிரதான வீதியின் தம்புள்ளை, பெல்வெஹெர பகுதியில் நேற்று (18) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
</p><p style="text-align: justify; ">
விபத்தில் காரை ஓட்டிச் சென்ற தம்புள்ளை தேசிய பாடசாலையின் அதிபராக கடமையாற்றிய, இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜானக விஜேசிங்க (38) என்பவரே உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
அத்துடன், இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">
விபத்து தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பேருந்து சாரதியை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-19T12:41:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாந்தோட்டத்திற்குள் சிக்கிய ஆடம்பர மாளிகை - விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் - அடுத்தடுத்து பல வீடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiran-basik-s-more-property-found-1789786698"></link>
            <id>https://tamilwin.com/article/shiran-basik-s-more-property-found-1789786698</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக், தனது சட்டவிரோத வர்த்தகத்தின் மூலம் ஈட்டிய பணத்தில் கொள்வனவு செய்த 250 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக், தனது சட்டவிரோத வர்த்தகத்தின் மூலம் ஈட்டிய பணத்தில் கொள்வனவு செய்த 250 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள மற்றுமொரு மாந்தோப்பு மற்றும் ஆடம்பர வீடு ஒன்றை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்துள்ளது. </p><p>

இந்த சொத்துக்கள் பிரபலமான தனியார் கல்வி ஆசிரியர் மற்றும் மற்றொரு நபரின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
 இந்த சொத்துக்கள் தம்புள்ளை நகருக்கு அருகில் மாந்தோட்டம் அடங்கிய மூன்று காணிப்பகுதிகளில் உள்ளது.</p><h2><b> 

பினாமி பெயரில் கொள்வனவு </b></h2><p>இவற்றில் ஒரு காணிப்பகுதியில் ஆடம்பர வீடு ஒன்றும் அமைந்துள்ளது. இந்த சொத்துக்களுக்காக 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை ஷிரான் பாசிக் செலவிட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0871032-92f8-4b6c-8c0f-4f64fcdd5803/26-6aae017a78504.webp' /></p><p>பினாமி பெயரில் கொள்வனவு செய்யப்பட்ட தோட்டம் மற்றும் காணிகளை விசாரணை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டுள்ளனர்.</p><p> 

அத்துடன், அந்த காணிகளை பராமரித்து வரும் நபரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

மேலும், போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு ஷிரான் பாசிக் கொள்வனவு செய்த 150 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள மற்றொரு ஆடம்பர வீட்டையும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு மாவரமண்டிய பகுதியில் கண்டுபிடித்துள்ளனர். </p><p>

இந்த ஆடம்பர வீடு தனியார் கல்வி ஆசிரியரின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. 

தற்போது அந்த வீட்டில் ஆசிரியரின் தாயார் வசித்து வருவதாகத் தெரியவந்துள்ளது.</p><p> </p><h3><b>போதைப்பொருள் கடத்தல்காரர் </b></h3><p>ஷிரான் பாசிக்கும் அந்தத் தனியார் கல்வி ஆசிரியருக்கும் இடையே மிக நெருங்கிய தொடர்பு இருந்ததைக் கண்டறிந்துள்ள பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு, இது தொடர்பான வேறு பல சொத்துக்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78a1401d-930e-4f55-a585-93ab83425fd8/26-6aae017b2dadd.webp' /></p><p>அந்த ஆசிரியர் தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், அவர் இலங்கை திரும்பியவுடன் விசாரணைக்காக உடனடியாக அழைக்கப்படுவார் எனவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>

டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர் இலங்கை திரும்பிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக், தற்போது பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T12:40:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 பில்லியன் டொலரை எட்டும் Anthropic 2026 வருமானம் - விரைவில் IPO திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/anthropic-revenue-hits-100-bn-dollar-ipo-nears-1789820980"></link>
            <id>https://news.lankasri.com/article/anthropic-revenue-hits-100-bn-dollar-ipo-nears-1789820980</id>
            <summary type="text">Anthropic revenue hits 100 Bn dollar: Anthropic நிறுவனத்தின் வருமானம் 100 பில்லியன் டொலரை எட்டவுள்ளது.

100 பில்லியன் டொலர்AI துறையில் வேகமாக வளர்ந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Anthropic revenue hits 100 Bn dollar: Anthropic நிறுவனத்தின் வருமானம் 100 பில்லியன் டொலரை எட்டவுள்ளது.</p><h2>

100 பில்லியன் டொலர்</h2><p>AI துறையில் வேகமாக வளர்ந்து வரும் Anthropic நிறுவனம், 2026-இல் 100 பில்லியன் டொலர் அளவுக்கு ஆண்டு வருமானத்தை எட்டும் நிலையில் உள்ளது.</p><p>

New York Times மற்றும் Bloomberg வெளியிட்ட தகவலின்படி, Anthropic-ன் Claude AI மென்பொருளுக்கான வணிகத் தேவைகள் மிகவும் அதிகரித்துள்ளதால், வருமானம் கடந்த ஆண்டு 9 பில்லியனிலிருந்து, 2026 ஜூலை மாதத்தில் 65 பில்லியனாக உயர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2086d9ad-2cac-4aa0-8507-f06518e678d9/26-6aae80368fb44.webp' /></p><p>
</p><h2>
IPO திட்டம்</h2><p>இந்த வளர்ச்சி, Anthropic-க்கு IPO (Initial Public Offering) நடத்தும் திட்டத்தை வலுப்படுத்தியுள்ளது. நிறுவனம் ஜூன் மாதம் SEC-க்கு (Securities and Exchange Commission) ரகசியமாக IPO ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. </p><p>Reuters மற்றும் Wall Street Journal தகவலின்படி, IPO நவம்பர் மாதம் நடைபெற வாய்ப்புள்ளது.

Anthropic-ன் வாடிக்கையாளர்களில் Fortune 10 நிறுவனங்களில் 8 நிறுவனங்கள் அடங்குகின்றன. </p><p></p><p>Claude AI மென்பொருள், கோடிங், அலுவலக பணிகள் மற்றும் தொழில்நுட்ப செயல்பாடுகளை எளிமைப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், AI பாதுகாப்பு குறித்த பொதுமக்களின் கவலைகள் அதிகரித்து வருகின்றன. </p><p>Anthropic CEO Dario Amodei, “அடுத்த தலைமுறை AI மாதிரிகளை உருவாக்கும் வேகத்தை குறைக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.</p><p>

Anthropic-ன் IPO, AI துறையில் மிகப்பெரிய பங்குச் சந்தை அறிமுகமாக இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். நிறுவனம் தற்போது 965 பில்லியன் டொலர் மதிப்பீட்டில் உள்ளது.
</p><p>
இந்த IPO வெற்றிகரமாக நடந்தால், Anthropic நிறுவனம் OpenAI மற்றும் Google போன்ற போட்டியாளர்களை விட வலுவான நிலையைப் பெறும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T12:27:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர்ந்து பிரித்தானிய அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக உள்ள சட்டவிரோத புலம்பெயர்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/7-migrants-found-hiding-in-back-of-lorry-in-uk-1789820198"></link>
            <id>https://news.lankasri.com/article/7-migrants-found-hiding-in-back-of-lorry-in-uk-1789820198</id>
            <summary type="text">Seven migrants are found hiding in back of a lorry in England: இங்கிலாந்தில், லொறி ஒன்றின் பின்னால் புலம்பெயர்வோர் ஏழு பேர் மறைந்திருந்தது கண்டுபிடிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Seven migrants are found hiding in back of a lorry in England: இங்கிலாந்தில், லொறி ஒன்றின் பின்னால் புலம்பெயர்வோர் ஏழு பேர் மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p>


பிரித்தானியா சட்டவிரோத புலம்பெயர்தலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்துவருவது அனைவரும் அறிந்ததே.&nbsp;</p><p>
படகுகள் மூலம் புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் நிலையில், அந்த படகுகளை இயக்குவோருக்கு சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் புதிதாக சட்டம் கூட இயற்றியாயிற்று.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60bd6a5b-7da4-42a8-b254-04bf264d6339/26-6aae7d28126ce.webp' /></p><p>

ஆனாலும், சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துதல் பிரித்தானிய அரசுக்கு பெரும் சவாலாகவே உள்ளது.
</p><h3>
பெரும் சவாலாக உள்ள சட்டவிரோத புலம்பெயர்தல்</h3><p>

<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65a9b104-632a-4630-8b38-377ce3c5c510/26-6aae7d27533af.webp' /></p><p>காரணம் என்னவென்றால், முதலில் லொறிகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் சட்டவிரோத புலம்பெயர்வோர்.&nbsp;</p><p>

ஆனால், கெடுபிடிகள் அதிகரிக்கவே, சிறு படகுகள் மூலம் புலம்பெயர்வோரை பிரித்தானியாவுக்குள் அனுப்பத் துவங்கினார்கள் ஆட்கடத்தல்காரர்கள்.
</p><p>
இப்போது, படகுகள் மூலம் ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைவோரைத் தடுக்க பிரான்ஸ், பெல்ஜியம் முதலான நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்துகொண்டுள்ளது பிரித்தானிய அரசு.&nbsp;</p><p>

விடயம் என்னவென்றால், படகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைய கெடுபிடிகள் அதிகரிக்கவே, மீண்டும் லொறிகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்றுவருகிறார்கள் சட்டவிரோத புலம்பெயர்வோர்.

அவ்வகையில், நேற்று முன்தினம், இங்கிலாந்திலுள்ள Hertfordshireஇலுள்ள சாலை ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த லொறி ஒன்றை மடக்கிச் சோதனையிட்டுள்ளனர் பொலிசார்.&nbsp;</p><p></p><p>
அப்போது, அந்த லொறிக்குள் புலம்பெயர்வோர் 7 பேர் மறைந்திருந்தது தெரியவந்துள்ளது.</p><p>

சட்டவிரோத புலம்பெயர்தலுக்கு உதவியாக இருந்ததாக, அந்த லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T12:26:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேற்கு யேமனில் ஹூதி அமைப்பினருக்கு ஆதரவாக பேரணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/rally-in-support-of-the-houthi-movement-1789820370"></link>
            <id>https://canadamirror.com/article/rally-in-support-of-the-houthi-movement-1789820370</id>
            <summary type="text">&amp;nbsp;மேற்கு யேமனில் சண்டை தீவிரமடைந்து வரும் நிலையில், ஹூதி அமைப்பினருக்கு ஆதரவாகவும், சவுதி அரேபியாவுக்கு எதிராகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் யேமன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மேற்கு யேமனில் சண்டை தீவிரமடைந்து வரும் நிலையில், ஹூதி அமைப்பினருக்கு ஆதரவாகவும், சவுதி அரேபியாவுக்கு எதிராகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் யேமன் தலைநகர் சணாவின் (Sanaa) வீதிகளில் திரண்டு பேரணி நடத்தினர்.
</p><p>
இந்த டையலை யேமனின் தென்மேற்கு பகுதியிலுள்ள தைஸ் மாகாணத்தின் அல்-வாசியா (Al-Waziiyah) மாவட்டத்தில் நடந்த கடுமையான மோதல்கள் மற்றும் வான்வழித் தாக்குதல்களில் 30 ஹூதி போராளிகள் கொல்லப்பட்டதாக யேமன் அரசுப்படைகள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06e16c4e-dd8c-478c-9d71-18256d73ee25/26-6aae7dd39f166.webp' /></p><p>

இந்தச் சண்டையில் 60க்கும் மேற்பட்ட ஹூதி அமைப்பினர் காயமடைந்துள்ளனர்.</p><p>

இதற்கிடையில் யேமன் அரசுப்படையினர் மற்றும் வான்படை, அல்-வாசியா மாவட்டத்தில் உள்ள ஹூதிகளின் வாகனங்கள், ஆயுதங்கள் மற்றும் கூட்டங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக யேமன் ஆயுதப் படைகளின் ஊடக மையம் செய்தி வெளியிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-19T12:19:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கரூரில் ஜனநாயகன் சூட்டிங்..ஆதாரம் CBI கையில்!! சவுக்கு சங்கர் சொன்ன ரகசியம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/jananayagan-shooting-took-place-in-karur-savukku-1789819851"></link>
            <id>https://viduppu.com/article/jananayagan-shooting-took-place-in-karur-savukku-1789819851</id>
            <summary type="text">கரூரில் ஜனநாயகன் சூட்தவெக சார்பில் சட்டமன்ற தேர்தலுக்கு முன் கரூரில் பரப்புரை நடந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கரூரில் ஜனநாயகன் சூட்</h2><p>தவெக சார்பில் சட்டமன்ற தேர்தலுக்கு முன் கரூரில் பரப்புரை நடந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஆட்சி மாறியும் விசாரணை நடைபெற்று வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce25ac4e-2cfd-4a42-aed0-c69e7ae133f6/26-6aae7bcd9791b.webp' /></p><p> </p><p>கரூர் கூட்ட நெரிசல் குறித்து விமர்சகர் சவுக்கு சங்கர் பேசியுள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. </p><p>கரூர் சம்பவம் நடந்தபோது ஜனநாயகன் படத்திற்காக ஷூட்டிங் நடந்தது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. படத்தின் இயக்குநர் எச் வினோத், அதை மறுத்திருந்தார். </p><p>இந்நிலையில், யூடியூப்பரான சவுக்கு சங்கர், அங்கு ஷூட்டிங் நடந்தது உண்மைதான். சினிமா கேமராவில் ஷூட் செய்யப்பட்ட காட்சிகளை சிபிஐ கைப்பற்றி வைத்துள்ளனர், ஆனால் படத்தில் பயன்படுத்தப்படவில்லை என்று கூறியிருக்கிறார்.</p>]]></content>
            <updated>2026-09-19T12:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்று துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருளுடன் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-suspects-arrested-three-firearms-and-heroin-1789819313"></link>
            <id>https://ibctamil.com/article/two-suspects-arrested-three-firearms-and-heroin-1789819313</id>
            <summary type="text">கொஹுவலா, விஜயபா மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்திய பின்னர்,காவல்துறை சிறப்பு அதிரடிப்படையினர் ஒரு குற்றக் கும்பலைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொஹுவலா, விஜயபா மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்திய பின்னர்,காவல்துறை சிறப்பு அதிரடிப்படையினர் ஒரு குற்றக் கும்பலைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களை மூன்று துப்பாக்கிகளுடன் கைது செய்துள்ளனர்.
</p><p>
சந்தேக நபர்களைக் கைது செய்தபோது, ​​அவர்களிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது</p><p>விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அதிகாரிகள் குழு ஒன்று சோதனை நடத்தி இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்தது.</p><p>

</p><h2>&nbsp;துப்பாக்கிகளுடன்,தோட்டாக்கள்&nbsp;
மற்றும் முச்சக்கரவண்டி பறிமுதல்</h2><p>சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மூன்று துப்பாக்கிகளுடன், எட்டு தோட்டாக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு முச்சக்கர வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b426d22-f0f1-497b-8132-befbf470a4d3/26-6aae7c22e887c.webp' /></p><p>
</p><p>
சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளில், இப்போதைப்பொருட்கள் திட்டமிட்ட குற்றவாளியும் பெருமளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான 'களுபோவில அவிஷ்க' என்பவரின் உள்நாட்டு போதைப்பொருள் வலையமைப்பைக் கையாளுபவர்கள் எனத் தெரியவந்துள்ளது.</p><p>

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரும், அவருக்குப் போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த அதே பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரும் ஆவர்.</p><p></p><p>

 

</p><h2>காவல்துறை போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைப்பு</h2><p>சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ce7ff4b-f57e-4a10-a480-bed5e1604cd5/26-6aae7c239d0b7.webp' /></p><p>
</p><p>
 

கடந்த 14ஆம் திகதி கொஹுவல காவல்துறை பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 02 கிலோ ஐஸ் போதைப்பொருள் மற்றும் 504 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் இவர்களது நெருங்கிய கூட்டாளிகள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T12:12:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[திலீபனின் நினைவிடத்தில் பொலிஸாரால் அகற்றப்பட்ட ஒலிபெருக்கி.. கஜேந்திரகுமார் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/thiyaga-theebam-thileepan-police-gajendrakumar-1789818783"></link>
            <id>https://tamilwin.com/article/thiyaga-theebam-thileepan-police-gajendrakumar-1789818783</id>
            <summary type="text">தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அனுமதியின்றி ஒலிபெருக்கி பயன்படுத்தப்பட்டது எனக் குற்றஞ்சாட்டி, அங்கிருந்த ஒலிபெருக்கிச் சாதனங்களை யாழ்ப்பாணம் பொல...</summary>
            <content type="html"><![CDATA[<p>தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அனுமதியின்றி ஒலிபெருக்கி பயன்படுத்தப்பட்டது எனக் குற்றஞ்சாட்டி, அங்கிருந்த ஒலிபெருக்கிச் சாதனங்களை யாழ்ப்பாணம் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியிட்டுள்ள முகப்புத்தக பதிவில், "இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகரை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவருடன் பேசினேன்.
</p><p>தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்விற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பயன்படுத்தப்பட்ட ஒலியமைப்பை, பொலிஸாரின் அனுமதி பெறப்படவில்லை என்ற காரணத்தினால் பொலிஸார் அகற்றியுள்ளதாக அவரிடம் தெரிவித்தேன்.</p><h2>புலனாய்வுத் தகவல் அறிக்கை</h2><p>
</p><p>நிகழ்வை ஏற்பாடு செய்த குழுவின் உறுப்பினர்கள், ஒலிபெருக்கி அமைப்பைப் பயன்படுத்துவதற்கான அனுமதியைக் கோரி எழுத்துமூலமான கோரிக்கையுடன் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் சென்றபோது, தலைமையக ஆய்வாளர் அங்கு இல்லை என்றும், விண்ணப்பத்தை இன்று சமர்ப்பிக்குமாறும் கூறி, அந்தக் கோரிக்கையை ஏற்க பொலிஸார் மறுத்துள்ளனர்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fpermalink.php%3Fstory_fbid%3Dpfbid0JEtmSaHCtjXKFnVPEHEDpvWn5bCdfZJCc6kQiZ4anASNXEpVjUjGwxJm3FvcM3YUl%26id%3D61567246753629&show_text=true&width=500" width="500" height="584" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p>
இன்று மீண்டும் ஏற்பாட்டாளர்கள் எழுத்துமூலமான கோரிக்கையுடன் பொலிஸாரிடம் சென்றபோதும், அதனை ஏற்க பொலிஸார் மறுத்துள்ளனர்.</p><p>
இதையடுத்து பொலிஸ் அத்தியட்சகர், தலைமையக ஆய்வாளருடன் தாம் பேசுவதாகவும், ஏற்பாட்டாளர்களை மீண்டும் அனுமதி கோருமாறு அறிவுறுத்துவதாகவும் என்னிடம் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3372be04-1775-4e36-90a1-48b0d1c87d8a/26-6aae7b2f02581.webp' /></p><p>
சில நிமிடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் தலைமையக ஆய்வாளர், என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஒலிபெருக்கி அமைப்பைப் பயன்படுத்துவதற்கான அனுமதியைக் கோரி ஏற்பாட்டாளர்களை விண்ணப்பிக்குமாறு அவர்களிடம் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
</p><p>எனினும், புலனாய்வுத் தகவல் அறிக்கை (Intelligence Report) பெறப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T12:08:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[96 ஓட்டங்கள் இலக்கு: 20வது ஓவரில் எட்டிய ஹொங்கொங் சீனா..திணறடித்த ஜப்பான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hongkong-china-beat-japan-by-4-wickets-1789819506"></link>
            <id>https://news.lankasri.com/article/hongkong-china-beat-japan-by-4-wickets-1789819506</id>
            <summary type="text">HongKong China beat Japan by 4 Wickets: ஜப்பான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹொங்கொங் சீனா வெற்றி பெற்றது.

ஜப்பான...</summary>
            <content type="html"><![CDATA[<p>HongKong China beat Japan by 4 Wickets: ஜப்பான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹொங்கொங் சீனா வெற்றி பெற்றது.
</p><p>
ஜப்பான் அணி நிர்ணயித்த 96 ஓட்டங்கள் இலக்கினை, ஹொங்கொங் சீனா 20வது ஓவரில் எட்டி வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>ஜப்பான் 95 ஓட்டங்கள் &nbsp;&nbsp;</h2><p>
ஹொங்கொங் சீனா மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி கான்டோவில் நடந்தது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8344673-d249-4f9f-a05e-6080a670b4c3/26-6aae7b4a891dd.webp' />&nbsp;</p><p></p><p>

முதலில் ஆடிய ஜப்பான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 95 ஓட்டங்கள் எடுத்தது. பெஞ்சமின் இட்டோ டேவிஸ் 35 ஓட்டங்கள் எடுத்தார்.
</p><p>
எஹ்சான் கான் 3 விக்கெட்டுகளும், யாசிம் முர்தஸா 2 விக்கெட்டுகளும், அனஸ் கான் மற்றும் ராணா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
</p><p>
பின்னர் ஆடிய ஹொங்கொங் சீனா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

ஷாஹித் வாசிப் மற்றும் ஹசன் கான் இருவரும் வெற்றிக்காக போராடினர். </p><p>ஹசன் கான் 25 ஓட்டங்களில் வெளியேற, ஹொங்கொங் சீனா 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 99 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
</p><p>
மிரட்டலாக பந்துவீசிய பெஞ்சமின் இட்டோ டேவிஸ் 3 விக்கெட்டுகளும், சார்லி ஹரா 2 விக்கெட்டுகளும், மகோடோ ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T12:06:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் மயானத்தை துப்பரவு செய்ய சென்ற ஊரவர்களுக்கு காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shock-awaits-villagers-cleaning-vavuniya-cemetery-1789819519"></link>
            <id>https://jvpnews.com/article/shock-awaits-villagers-cleaning-vavuniya-cemetery-1789819519</id>
            <summary type="text">வவுனியா, கந்தபுரம் பகுதியில் உள்ள சுடலையில் கிராம மக்கள் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, ரி-56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 06 மக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வவுனியா, கந்தபுரம் பகுதியில் உள்ள சுடலையில் கிராம மக்கள் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, ரி-56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 06 மகசின்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; ">

கந்தபுரம் மயானப் பகுதியில் அப்பகுதி கிராம மக்கள் இணைந்து துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7e9dbff-0e81-4f4b-91f6-1edfeb96fc93/26-6aae7a811503f.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இது குறித்து உடனடியாக வவுனியா பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
</p><p style="text-align: justify; ">
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வவுனியா பொலிஸார், அங்கு கண்டெடுக்கப்பட்ட 06, ரி-56 ரக துப்பாக்கிக்க மகசின்களையும் பாதுகாப்பாக மீட்டுச் சென்றனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
குறித்த மகசின்கள் யாரால், எப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டன என்பது குறித்தும், அப்பகுதியில் வேறு ஏதேனும் பொருட்கள் உள்ளனவா என்பது குறித்தும் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-19T12:05:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[காசாவில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்: கல்வி அமைச்சு அவசர கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gaza-school-ministry-of-education-s-urgent-appeal-1789818917"></link>
            <id>https://tamilwin.com/article/gaza-school-ministry-of-education-s-urgent-appeal-1789818917</id>
            <summary type="text">காசாவில் புதிய கல்வி ஆண்டிற்காகப் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில், அங்குள்ள கல்வி நிறுவனங்களையும் கல்விச் சமூகத்தையும்
பாதுகாப்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>காசாவில் புதிய கல்வி ஆண்டிற்காகப் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தநிலையில், அங்குள்ள கல்வி நிறுவனங்களையும் கல்விச் சமூகத்தையும்
பாதுகாப்பதற்கு சர்வதேச சமூகம் உடனடியாகத் தலையிட வேண்டும் எனக் காசா கல்வி
அமைச்சு அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
காசா மீதான போரை உடனடியாக நிறுத்துவதற்கும், பாடசாலைகள் மற்றும் ஆசிரியர்களின்
பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு இந்த கோரிக்கையின் மூலம்
வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>புதிய கல்வி ஆண்டு</h2><p>
புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் இன்று (19.9) ஆரம்பமாகியுள்ள
நிலையில், சுமார் ஐந்து இலட்சம் மாணவர்கள் மீண்டும் கல்வியைத் தொடர
ஆரம்பித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e221c4da-eceb-484d-adc9-9a44f0045306/26-6aae7a6f694c8.webp' /></p><p>
</p><p>
இவர்களில் பெரும்பான்மையான மாணவர்கள் தற்காலிக கற்றல் மையங்கள் மற்றும்
மீதமுள்ள பாடசாலைக் கட்டிடங்களிலேயே தங்களது கல்வியைத் தொடர்கின்றமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T12:05:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர்வோர் பயணிக்கும் பிரம்மாண்ட படகை இயக்கிய நபருக்கு சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-jails-teen-asylum-for-steering-migrant-boat-1789819228"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-jails-teen-asylum-for-steering-migrant-boat-1789819228</id>
            <summary type="text">UK jails teen asylum seeker for steering overcrowded Channel migrant boat: பிரம்மாண்ட புலம்பெயர்வோர் படகொன்றை இயக்கிய நபருக்கு பிரித்தானியாவில் சிறைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK jails teen asylum seeker for steering overcrowded Channel migrant boat: பிரம்மாண்ட புலம்பெயர்வோர் படகொன்றை இயக்கிய நபருக்கு பிரித்தானியாவில் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
</p><p>

பிரித்தானியா சட்டவிரோத புலம்பெயர்தலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்துவருவது அனைவரும் அறிந்ததே.</p><p>

இந்நிலையில், பிரம்மாண்ட புலம்பெயர்வோர் படகொன்றை இயக்கிய இளைஞர் ஒருவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
</p><h3>
பிரம்மாண்ட படகை இயக்கிய நபருக்கு சிறை
</h3><p>
பிரான்சிலிருந்து புலம்பெயர்வோர் ஆங்கிலக்கால்வாய் வழியாக சிறு ரப்பர் படகுகளில் பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சிகள் நாடாளுமன்றம் வரை ஒலித்துவரும் நிலையில், ‘சிறுபடகுகள்’ என்னும் பதம் ஊடகங்களில் முக்கிய இடம்பெற்றுவந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9008bf55-4ac4-4dd0-bf73-204e21205137/26-6aae795ddf0d0.webp' /></p><p>

அரசியல்வாதிகள், சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரால் பெரும் தொல்லை என்னும் ரீதியில் முழங்கிக்கொண்டிருக்க, அதை கேலிக்கூத்தாக்குவதுபோல, சிறு படகுகள் இல்லை, பெரிய படகுகள் மூலம் புலம்பெயர்வோரை அனுப்பத் துவங்கினார்கள் ஆட்கடத்தல்காரர்கள்.
</p><p>
ஆக, இந்த பிரம்மாண்ட படகுகளால் அரசுக்கு புதிய தலைவலி துவங்கிய நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த ஆண்டு, அதாவது, 2026ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், புதிய சட்டம் ஒன்றை இயற்றியது பிரித்தானியா.&nbsp;</p><p></p><p>
அதன்படி, படகுகள் மூலம் புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் நிலையில், அந்த படகுகளை இயக்குவோருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
</p><p>
இந்நிலையில், சமீபத்தில் 165 புலம்பெயர்ந்தோரை பிரித்தானியாவுக்கு கொண்டுவர முயன்ற பிரம்மாண்ட படகொன்றை மடக்கிப் பிடித்தனர் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள்.
</p><p>
அந்த படகை இயக்கிய சூடான் நாட்டைச் சேர்ந்த Chan Mathok Atak (19) என்னும் இளைஞருக்கு நேற்று கேன்டர்பரி க்ரௌன் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5a386db-11da-446d-9511-bffa768ed182/26-6aae795eb3d35.webp' /></p><p>
Chanக்கு இரண்டு ஆண்டுகள் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தண்டனைக்காலம் முடிவடைந்ததும், அவர் தன் சொந்த நாட்டுக்கு நாடுகடத்தப்படவும் வாய்ப்புள்ளதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
</p><p>
Chan இயக்கிய படகில் 31 சிறுவர்கள் உட்பட 165 புலம்பெயர்ந்தோருடன் பயணித்த நிலையில், அந்த படகில் பாதுகாப்பு உடைகளோ, உபகரணங்களோ, முதலுதவி சிகிச்சைக்கான மருந்துகளோ இல்லை.
</p><p>
அத்துடன், ஒரே ஒரு சிறிய இயந்திரத்தின் உதவியுடன், 165 புலம்பெயர்ந்தோருடன் நகர முடியாமல், மெல்ல நகர்ந்துகொண்டிருந்தது அந்தப் படகு.
</p><p>
ஆக, அத்தனை உயிர்களை ஆபத்தான வகையில் ஆங்கிலக்கால்வாயில் பயணிக்கவைத்ததற்காக, அந்த படகை இயக்கியதாக கருதப்படும் Chan கைது செய்யப்பட்டு அவருக்கு சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T12:00:39+00:00</updated>
        </entry>
    </feed>
