<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-08T06:41:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் பொருளாதாரத்தின் பலம் : விஜித ஹேரத் பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/contribution-overseas-sri-lankans-economy-1788845672"></link>
            <id>https://tamilwin.com/article/contribution-overseas-sri-lankans-economy-1788845672</id>
            <summary type="text">பொருளாதார ரீதியில் பாதகமான நிலையைச் சந்தித்திருந்த இலங்கையை மீண்டும்
சொந்தக் காலில் நிற்க வைக்கும் நோக்கில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு
வருகின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொருளாதார ரீதியில் பாதகமான நிலையைச் சந்தித்திருந்த இலங்கையை மீண்டும்
சொந்தக் காலில் நிற்க வைக்கும் நோக்கில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு
வருகின்றன என்றும், நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதில் வெளிநாட்டு
வாழ் இலங்கையர்களின் பங்களிப்பே மிக முதன்மையானது என்றும் வெளிவிவகார,
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்
தெரிவித்தார்.
</p><p>
கொழும்பில் நேற்று(07.09.2026) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><h2>பெருமளவு நிதியை அனுப்பி வைக்கும்</h2><p>மேலும் தெரிவிக்கையில்,&nbsp;"கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு மீண்டும் எழுச்சி பெறத் தொடங்கியுள்ளது.
</p><p>குறிப்பாக, வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையின் மூலம் கடந்த ஆண்டில் மட்டும்
இலங்கைக்கு 8.2 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாகக் கிடைத்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d3c4545-de99-44ac-a64c-a43f3777626f/26-6a9fa60ea3a18.webp' /></p><p>
சுற்றுலாத் துறையைப் போன்றே, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளவர்கள்
அனுப்பும் அந்நியச் செலாவணியே நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தி
முன்னோக்கி கொண்டு செல்ல பெரிதும் உதவுகின்றது.</p><p>

எனவே, நாட்டுக்குப் பெருமளவு நிதியை அனுப்பி வைக்கும் வெளிநாட்டுத்
தொழிலாளர்களின் வேலைப் பாதுகாப்பு, நலன்புரி மற்றும் அவர்களின் தேவைகளைக்
கண்டறிந்து பூர்த்தி செய்ய வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பாகும்.
</p><p>
அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறித்துப் பொதுமக்களிடையே
பொதுவாக நிலவி வரும் எதிர்மறையான கருத்துக்களை மாற்றியமைக்க வேண்டும் எனவும்,
அந்த அமைப்பின் மீதான நம்பகத்தன்மையை மேம்படுத்தும் பொறுப்பு அதிகாரிகளுக்கு
உள்ளது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T06:37:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[31 லங்கா சதொச விற்பனை நிலையங்கள் மூடல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/31-lanka-sathosa-outlets-closed-1788849562"></link>
            <id>https://jvpnews.com/article/31-lanka-sathosa-outlets-closed-1788849562</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நிதி நெருக்கடி கரணமாக 2024 ஜனவரி முதல் 2025 ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் சுமார் 31 ‘லங்கா சதொச’ (Lanka Sathosa) விற்பன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நிதி நெருக்கடி கரணமாக 2024 ஜனவரி முதல் 2025 ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் சுமார் 31 ‘லங்கா சதொச’ (Lanka Sathosa) விற்பனை நிலையங்கள் மூடப்பட்டதாகத் வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர். எம். ஜெயவர்தன குறிப்பிட்டார். </p><p>

நாடாளுமன்ற உறுப்பினர் சனக மதுகொட எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், அவர் இன்று (08) நாடாளுமன்றத்தில் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6718938b-ce3a-4057-a44e-f2248ce1b098/26-6a9fad9c181b0.webp' /></p><p>

இந்த ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி நிலவரப்படி, நாடு முழுவதும் 424 ‘லங்கா சதொச’ விற்பனை நிலையங்கள் இயங்கி வந்ததாகவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.</p><p>

தற்போதைய அரசாங்கம் பதவியேற்றபோது, ​​’லங்கா சதொச’ நிறுவனம் 24 பில்லியன் ரூபா நஷ்டத்தை எதிர்கொண்டிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><p>

அக்காலகட்டத்தில், அந்நிறுவனம் 11 பில்லியன் ரூபா கடனையும், 5 பில்லியன் ரூபா வங்கி மேலதிக பற்று வசதியையும் கொண்டிருந்ததாகவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T06:36:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி! தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/today-sept-8th-gold-and-silver-price-in-chennai-1788846441"></link>
            <id>https://manithan.com/article/today-sept-8th-gold-and-silver-price-in-chennai-1788846441</id>
            <summary type="text">தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தினந்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று (செப்டம்பர் 8) தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தினந்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று (செப்டம்பர் 8) தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
</p><p>
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, மாத இறுதியில் சரிவை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்திலும் தங்கத்தின் விலையில் தொடர்ச்சியாக ஏற்ற இறக்கங்கள் பதிவாகி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76649ff3-8508-4bf0-b903-e957a9f71f56/26-6a9fa4ca2c610.webp' /></p><p></p><p>
</p><p>
அந்த வகையில், நேற்று (செப்டம்பர் 7) தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.60 குறைந்து ரூ.14,130 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,13,040 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.</p><h2>இன்றைய நிவலரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd52b365-3b44-4972-8d5b-004974dad5f2/26-6a9fa6f2c46e4.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை மீண்டும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.140 அதிகரித்து ரூ.14,270 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,120 உயர்ந்து ரூ.1,14,160 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.இதன்படி, ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.1,120 என்ற அளவில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e4c23f1-e170-4699-952c-30e0a9564947/26-6a9fa6f3ba53c.webp' /></p><p></p><p>மறுபுறம், வெள்ளியின் விலையில் இன்று எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255 என்ற விலையிலும், ஒரு கிலோ வெள்ளிப் பார் ரூ.2,55,000 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T06:36:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[66 கிலோ தங்கம், 335 கிலோ வெள்ளியில் தயாராகும் பிரம்மாண்ட விநாயகர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lord-vinayagar-made-of-66-kg-of-gold-335-kg-silver-1788846986"></link>
            <id>https://jvpnews.com/article/lord-vinayagar-made-of-66-kg-of-gold-335-kg-silver-1788846986</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வரும் 14 ஆம் திகதி ஆவணி விநாயகர் சதுர்த்தி வரவுள்ள நிலையில் இந்தியாவில் விநாயகர் சிலைகள் பிரமாண்டமாக தாயாரிக்கும் புகைப்படங்கள் வெளியாகிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வரும் 14 ஆம் திகதி ஆவணி விநாயகர் சதுர்த்தி வரவுள்ள நிலையில் இந்தியாவில் விநாயகர் சிலைகள் பிரமாண்டமாக தாயாரிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. </p><p>

இன்னிலையில் மும்பையின் பணக்கார விநாயகர் மண்டலமாக கிங்கிஸ் சர்க்கிள் ஜி.எஸ்.பி சேவா மண்டல் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eda7366f-e821-4687-8631-f8217f670c38/26-6a9fa38c37c48.webp' /></p><h2>&nbsp;விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 14,&nbsp; முதல்&nbsp; &nbsp;18&nbsp; வரை</h2><p> </p><p>

இந்த ஆண்டு தனது 72வது விநாயகர் சதுர்த்தியை செப்டம்பர் 14, 2026 முதல் செப்டம்பர் 18, 2026 வரை என மொத்தம் 5 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாட தயாராகி வருகிறது.</p><p>

 இந்த நிலையில் தான், மிகவும் விலை உயர்ந்த விநாயகர் சிலையை தயார் செய்து அசத்தியுள்ளது.
</p><p>
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று பிரதிஷ்டை செய்யப்பட உள்ள விநாயகர் சிலைக்கு பொதுமக்கள் காணிக்கையாக அளித்த சுமார் 66 கிலோ தங்கம் மற்றும் 335 கிலோ வெள்ளி ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட உள்ளது.
</p><p>
 இத்தகைய மிகவும் விலை உயர்ந்த விநாயகர் சிலைக்கு அந்த மண்டல் சுமார் ரூ.703 கோடியே 27 லட்சத்தில் காப்பீடு செய்துள்ளது.

கடந்த ஆண்டு ரூ.474 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அது கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. </p><p>

விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்களுக்கு சேர்த்து இந்த காப்பீடு செய்யப்பட்டுள்ளது.</p><p> அதுமட்டுமன்றி, இந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கும் சேர்த்து காப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T06:33:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் பொதுக்கழிவறையை பயன்படுத்திய இந்திய இளம்பெண் பகிர்ந்துள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/influencer-on-cost-of-using-public-toilet-in-swiss-1788848974"></link>
            <id>https://news.lankasri.com/article/influencer-on-cost-of-using-public-toilet-in-swiss-1788848974</id>
            <summary type="text">Influencer reveals the surprising cost of using a public toilet in Switzerland: சுவிட்சர்லாந்தில் பொதுக்கழிவறையை பயன்படுத்திய இளம்பெண்ணொருவர், கழிவறைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Influencer reveals the surprising cost of using a public toilet in Switzerland: சுவிட்சர்லாந்தில் பொதுக்கழிவறையை பயன்படுத்திய இளம்பெண்ணொருவர், கழிவறைக்கான கட்டணம் தன்னை வியப்படைய வைத்ததாகத் தெரிவிக்கிறார்.</p><p>


உலகம் சுற்றுவதற்காக வேலையையும் விட்டு, சொத்துக்களையும் விற்ற இந்திய இளம்பெண், சோனி சலோனி.
</p><h3>
கழிவறையை பயன்படுத்துவதற்கான கட்டணம்</h3><p>

சமீபத்தில் சோனி சுவிட்சர்லாந்துக்குச் சென்றுள்ளார். இயற்கை உபாதையைத் தீர்த்துக்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டதால், கட்டணக் கழிப்பிடம் ஒன்றிற்குச் சென்றுள்ளார் சோனி.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1980f5a6-3baf-4bdf-8efe-5f18ceb2befe/26-6a9fab501ad15.webp' /></p><p>

பார்த்தால், அங்கு கழிவறையை ஒரு முறை பயன்படுத்த 1.50 சுவிஸ் ஃப்ராங்குகள் என எழுதப்பட்டிருந்திருக்கிறது.
</p><p>
பொதுவாகவே வெளிநாடு செல்லும் பலரும் அங்கு ஏற்படும் செலவுகளை தங்கள் நாட்டுப் பணமாக மாற்றி யோசிப்பதுண்டு என்பதால், 1.50 சுவிஸ் ஃப்ராங்குகள் என்பது இந்திய மதிப்பில் எவ்வளவு என கணக்குப் பார்த்துள்ளார் சோனி.</p><p>

ஆக, கழிவறையை பயன்படுத்த ஒரு நாளைக்கு 1,000 ரூபாய் வரை செலவிடவேண்டியுள்ளதே என வியக்கிறார் சோனி.&nbsp;</p><p></p><p>
அவர் தனது அனுபவத்தை சமூக ஊடகம் ஒன்றில் பகிர்ந்துகொள்ள, தங்களுக்கும் இதே அனுபவம் ஏற்பட்டதாக சிலர் தெரிவித்துள்ளார்கள்.
</p><p>
வேறு சிலர், சுவிட்சர்லாந்தில் இலவச கழிப்பறைகளும் உண்டு என்று கூற, அப்படி இலவச கழிப்பறையை பயன்படுத்திவிட்டு, பிறகு நோய் வந்து எக்கச்சக்கமாக செலவு செய்வதைவிட, நல்ல, சுத்தமான ஒரு கழிவறைக்கு இவ்வளவு பணம் கொடுப்பது எவ்வளவோ மேல் என்கிறார் ஒருவர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T06:32:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்டத்தில் குதிக்கும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/university-lecturers-to-protest-tomorrow-1788848570"></link>
            <id>https://ibctamil.com/article/university-lecturers-to-protest-tomorrow-1788848570</id>
            <summary type="text">2025 உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை அரச பல்கலைக்கழகங்களில் சேர்த்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக என்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025 உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை அரச பல்கலைக்கழகங்களில் சேர்த்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக என்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழக ஆசிரியர்கள் நாளை (09) வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சங்கம் அறிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>குறித்த விடயத்தை சங்கத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>கடுமையான நெருக்கடிகள்</h2><p>அரச பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் கடுமையான நெருக்கடிகள் தொடர்பில் தமது சங்கம் கடந்த வாரம் முழுவதும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/613e5961-22c0-4051-88ce-7c37746cddc1/26-6a9faba1e4a08.webp' /></p><p> 

அரசுப் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களின் பற்றாக்குறை மற்றும் தகுதியான விரிவுரையாளர்கள் இல்லாமை என்பன கடுமையான பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகக் கூறிய அவர், தற்போது 2025 உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை அரச பல்கலைக்கழகங்களில் சேர்த்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். </p><p>

ஜனாதிபதி புதிதாக 50 அரச பல்கலைக்கழகங்களை உருவாக்குவதாகக் கூறிய போதிலும், புதியவற்றை உருவாக்குவதற்கு முன்னர் தற்போதுள்ள 17 பல்கலைக்கழகங்களின் தரத்தைப் பேணிப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டினார்.</p><p> 

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்குத் தமது சம்மேளனம் எதிர்பார்ப்பதுடன், இதற்கு நிலையான தீர்வு அவசியமானது என்றும் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T06:31:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரேவதியின் உறவே வேண்டாம்.. அதிரடி முடிவு எடுத்த சாமுண்டீஸ்வரி- கார்த்திகை தீபம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/zee-tamizh-karthigai-deepam-serial-episode-1788846992"></link>
            <id>https://cineulagam.com/article/zee-tamizh-karthigai-deepam-serial-episode-1788846992</id>
            <summary type="text">கார்த்திகை தீபம்&amp;nbsp;திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோட் அப்ட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கார்த்திகை தீபம்&nbsp;</h2><p><b>திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட்.</b>
</p><p>
நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி அனுப்பிய சட்ட நோட்டீஸை பார்த்து கார்த்திக் அதிர்ச்சியடைந்த நிலையில், இன்று என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

நோட்டீஸை கையில் எடுத்துக்கொண்டு நேராக சாமுண்டீஸ்வரி வீட்டுக்கு வரும் கார்த்திக், "இது என்ன?" என்று கேள்வி கேட்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03665eab-8f2f-4bcb-94c5-02933309c219/26-6a9fa39192cdd.webp' /></p><p> </p><p>அப்போது சந்திரகலா அந்த நோட்டீஸை வாங்கி வீட்டில் இருந்த அனைவரின் முன்னிலையிலும் வாசித்துக் காட்டுகிறார்.

அதில், சாமுண்டீஸ்வரி தனக்கும் ரேவதிக்கும் இனி எந்த உறவும் இல்லை என்று சட்டப்படி நடவடிக்கை எடுத்திருப்பது தெரியவருகிறது. </p><p>இதைக் கேட்டு வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள்.

ஆனால், இந்த விஷயம் எப்படியும் ரேவதிக்கு தெரியக்கூடாது என்று கார்த்திக் முடிவு செய்கிறார். இருந்தாலும் அவர் நினைத்தது போல நடக்கவில்லை. </p><p>எதிர்பாராதவிதமாக ரோகிணி, ரேவதியிடம் உண்மையை சொல்லிவிடுகிறார்.

இதனால் மனவேதனையில் ஆழும் ரேவதி, சாமுண்டீஸ்வரியை நேரில் சந்தித்து, "நாளைக்கு வந்து தேவையான இடத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்துவிடுகிறேன்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9eb42e75-a8f4-411b-8bad-176259ae8c0d/26-6a9fa39249f3e.webp' /></p><p>
</p><p>
அதே நேரத்தில், இவ்வளவு பெரிய விஷயத்தை கார்த்திக் தன்னிடம் மறைத்துவிட்டாரே என்ற வருத்தமும் ரேவதியின் மனதில் ஆழமாக பதிகிறது.
</p><p>
சாமுண்டீஸ்வரியின் இந்த முடிவு ரேவதியின் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது? கார்த்திக் மற்றும் ரேவதி இடையே உருவாகும் இந்த விரிசல் அடுத்து என்ன திருப்பத்தை கொடுக்கப் போகிறது? என்பதை தெரிந்துகொள்ள இன்றைய கார்த்திகை தீபம் எபிசோடை தவறாமல் பாருங்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T06:30:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹொங்கொங் சீனா அணியை பந்தாடிய பாகிஸ்தான் மகளிர் படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/women-pakistan-beat-hong-kong-china-by-72-runs-1788848614"></link>
            <id>https://news.lankasri.com/article/women-pakistan-beat-hong-kong-china-by-72-runs-1788848614</id>
            <summary type="text">மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

துபாயில் நடந்த மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில், பாகிஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><p>

துபாயில் நடந்த மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில், பாகிஸ்தான் அணி 72 ஹொங்கொங் சீனாவை வீழ்த்தியது.&nbsp;</p><h2>ஷாவால் ஸுல்ஃபிகர் 47</h2><p>
பாகிஸ்தான் மற்றும் ஹொங்கொங் சீனா அணிகளுக்கு இடையிலான மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டி துபாயில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37f88047-ecd2-4e2a-946c-77bd97ee587c/26-6a9fa9e97199f.webp' /></p><p></p><p>

முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ஓட்டங்கள் எடுத்தது. ஷாவால் ஸுல்ஃபிகர் 47 (35) ஓட்டங்களும், ஆயிஷா ஜாஃபர் 26 (19) ஓட்டங்களும் எடுத்தனர். </p><p>

ஜோய்லின் கவுர் 4 விக்கெட்டுகளும், இக்ரா சாகர் மற்றும் கேரி சான் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். </p><h2>சுருண்ட ஹொங்கொங் சீனா 
</h2><p>
பின்னர் ஆடிய ஹொங்கொங் சீனா அணி 19 ஓவர்களில் 71 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கேரி சான் (Kary Chan) 30 ஓட்டங்கள் எடுத்தார்.
</p><p>
மிரட்டலாக பந்துவீசிய நஷ்ரா சந்து (Nashra Sandhu) 6 விக்கெட்டுகளும், ஃபாத்திமா சனா, சாதியா இக்பால், உம்-இ-ஹனி மற்றும் ஆயிஷா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aef9add8-3ac5-497e-8fd7-dd6d44ed9d41/26-6a9fa9e8be70b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T06:21:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருமளவு போதைப்பொருட்களுடன் தாய்லாந்து பிரஜைகள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/thai-nationals-arrested-with-narcotics-airport-1788848563"></link>
            <id>https://jvpnews.com/article/thai-nationals-arrested-with-narcotics-airport-1788848563</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெருமளவு போதைப்பொருட்களுடன் தாய்லாந்து பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெருமளவு போதைப்பொருட்களுடன் தாய்லாந்து பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>

சந்தேக நபர்களிடம் சுமார் ரூ.5 கோடியே 13 இலட்சத்து 70 ஆயிரம் பெறுமதியான ‘குஷ்’ மற்றும் ‘ஹஷீஷ்’ போதைப்பொருட்களுடன் இரு தாய்லாந்து பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31b13c24-b646-4fbf-974d-b1b0cd61e20a/26-6a9fa9b57020c.webp' /></p><h2>இலங்கை வந்த 23 மற்றும் 39 வயதுடைய&nbsp;தாய்லாந்து பிரஜைகள்</h2><p>
</p><p>


தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து இன்று (08) விமானம் மூலம் இலங்கை வந்த 23 மற்றும் 39 வயதுடைய இருவரும், விமான நிலைய வருகை முனையத்தின் ‘கிரீன் சேனல்’ ஊடாக போதைப்பொருட்களை வெளியே கொண்டு செல்ல முயன்றபோது சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>



அவர்களது இரண்டு பயணப் பொதிகளை சோதனையிட்டபோது, 16 விட்டமின் கொள்கலன்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ 496 கிராம் குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதுடன்,&nbsp; கறுப்பு திராட்சைத் துகள்கள் போன்று தோற்றமளிக்கும் வகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 641 கிராம் ஹஷீஷ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p>


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-08T06:20:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான்கு மாதம்... ஹார்முஸ் நீரிணையில் ரகசிய இரவு நேர நடவடிக்கையில் அமெரிக்கக் கடற்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hormuz-us-navy-night-mission-1788847024"></link>
            <id>https://news.lankasri.com/article/hormuz-us-navy-night-mission-1788847024</id>
            <summary type="text">US Navy launched top secret four-month mission: அமெரிக்கக் கடற்படை மிக ரகசியமான நான்கு மாத கால நடவடிக்கையில் ஈடுபட்டது.
ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>US Navy launched top secret four-month mission: அமெரிக்கக் கடற்படை மிக ரகசியமான நான்கு மாத கால நடவடிக்கையில் ஈடுபட்டது.
</p><p>ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக, அமெரிக்கக் கடற்படை நான்கு மாத கால ஆபத்தான மற்றும் அதீத ரகசியத் திட்டம் ஒன்றை மேற்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>அகற்றப்பட்டுவிட்டன</h2><p>
</p><p>கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதிலிருந்து, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் மிக முக்கியமான நீர்வழியில் ஈரானியப் படைகள் கண்ணிவெடிகளைப் பதித்துள்ளதாக நம்பப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3daf388-ea5a-48a6-a7c9-bf294a818203/26-6a9fa3b243b21.webp' /></p><p> </p><p>சர்வதேச கடல்சார் அமைப்பின் கூற்றுப்படி, ஜூன் மாத நிலவரப்படி, முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் சுமார் 80 கண்ணிவெடிகள் பதிக்கப்பட்டிருந்தன. </p><p>ஆனால் கடந்த வாரம், ஹார்முஸ் நீரிணையை அமெரிக்கப் பகுதி என்று அறிவித்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சர்வதேச நீர்ப்பரப்பில் இருந்த அனைத்து கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டுவிட்டன அல்லது வெடிக்கச் செய்யப்பட்டுவிட்டன என்று அறிவித்தார்.</p><p></p><p> </p><p>இந்த நிலையில், கண்ணிவெடிகளை அகற்றும் முயற்சியில், கடற்படை சீல் வீரர்கள் நான்கு மாதங்களாக இருளின் மறைவில் பணியாற்றினர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. </p><p>அவர்கள் இரவில் சிறு குழுக்களாகப் பணிபுரிந்து, நீர்மூழ்கிக் கப்பல்களின் உதவியுடன் நீரிணையின் அடிப்பகுதியில் இருந்த கண்ணிவெடிகளைக் கண்டறிந்துள்ளனர். </p><p> வெடிபொருட்களைக் கொண்டு கண்ணிவெடிகளை அழிக்க, பிரித்தானியாவின் சீஃபாக்ஸ் (SeaFox) அல்லது புதிய அமெரிக்க AN/ASQ-235 ஆங்கர்ஃபிஷ் (Anchorfish) போன்ற ரோபோ நீர்மூழ்கிக் கப்பல்களையும் அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்றே கூறப்படுகிறது.</p><p> நீருக்கடியில் வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் பணிகளையே அவர்கள் மேற்கொண்டுள்ளனர் என நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>கண்ணிவெடிகள்</h2><p> அதிர்ஷ்டவசமாக, கண்ணிவெடி அகற்றும் பணியில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இதனிடையே, அமெரிக்கா கப்பல்களை வழிநடத்தி வந்த, ஓமன் கடற்கரைக்கு அருகிலுள்ள நீரிணையின் தென்பகுதி உண்மையாகவே கண்ணிவெடிகள் அற்றது என்று கப்பல் உரிமையாளர்களும் பாதுகாப்பு ஆலோசகர்களும் தற்போது நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4dafb7e-a70d-4deb-a849-960bea5a00c8/26-6a9fa3b2ec9d9.webp' /></p><p> </p><p>ஆனால், போர் தொடங்கியதிலிருந்து ஒரு சில வணிகக் கப்பல்கள் மட்டுமே அந்த நீர்வழிப்பாதை வழியாகப் பயணித்துள்ளதால், 104 மைல் நீளமுள்ள அந்த நீர்வழிப்பாதை முழுவதும் தெளிவாக உள்ளதா என்பதில் அவர்கள் தங்கள் சந்தேகங்களை வெளிப்படுத்தினர்.
</p><p>மேலும், கண்ணிவெடிகளின் அச்சுறுத்தல் கூட காப்பீட்டு நிறுவனங்களை, போருக்கு முந்தைய கட்டணங்களை விட 10 மடங்கு வரை உயர்த்தும்படி கட்டாயப்படுத்தியுள்ளது. </p><p>ஒரு சாதாரண சூப்பர்டேங்கர் கப்பலைப் பொறுத்தவரை, ஈரானின் அனுமதியின்றி அந்த நீர்வழியைக் கடப்பதற்கு சுமார் 10 மில்லியன் டொலர் காப்பீட்டுச் செலவுகள் ஏற்படக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19fb2ae4-c50a-4328-b12f-8f937c34870f/26-6a9fa3b3a062d.webp' /></p><p> </p><p>ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகள் இல்லை என்ற அமெரிக்காவின் கூற்றுகளை ஈரான் அதிகாரிகளும் நிராகரித்துள்ளனர். மேலும், இந்தக் கண்ணிவெடிகளின் இருப்பிடம் ஈரானைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்றும் வெளிவிவகார அமைச்சர் காசெம் கரிபாபாடி ஆகஸ்ட் மாத இறுதியில் கூறியுள்ளார். </p><p>மேலும், இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்டதைப் போன்ற ஆயிரக்கணக்கான மஹாம் கண்ணிவெடிகள் ஈரானிடம் இருப்பதாக இராணுவ ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். </p><p>அமெரிக்கப் படைகள் சரக்குக் கப்பல்களை இயக்கி வரும் ஓமானுக்கு அருகிலுள்ள பகுதிகளில், ஈரான் மேலும் கண்ணிவெடிகளைப் புதைத்துள்ளதாக ஈரான் இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்தார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T06:15:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[19 வயது மகனுக்கு அம்மா!! கையில் தம்முடன் நடிகை பியூமி ஹன்சமாலி புகைப்படங்கள்.]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/piumi-hansamali-recent-photos-in-bath-smoke-1788847985"></link>
            <id>https://viduppu.com/article/piumi-hansamali-recent-photos-in-bath-smoke-1788847985</id>
            <summary type="text">இலங்கையை சேர்ந்த சிங்கள நடிகையும் மாடலுமான பியூமி ஹன்சமாலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரானா காலத்தில் தமிழ், மலையாள படங்களில் நடித்து வருவதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையை சேர்ந்த சிங்கள நடிகையும் மாடலுமான பியூமி ஹன்சமாலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரானா காலத்தில் தமிழ், மலையாள படங்களில் நடித்து வருவதாக கூறி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வருவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0b05fe6-05fc-436a-a5b3-070f8bcd6751/26-6a9fa779a93be.webp' /></p><p>19 வயது மகனுக்கு அம்மாவான நிலையிலும் கிளாமர் காட்டுவதையும் நிறுத்தாமல், மகனுடன் சேர்ந்து ரீல்ஸ், போட்டோஸ் என போட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.</p><p> தற்போது மினி ஸ்கெர்ட் அணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-08T06:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எயார்பஸ் ஒப்பந்த விவகாரம்: சமல் ராஜபக்சவிடம் ஒரு மணி நேர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/former-speaker-chamal-rajapaksa-arrives-at-ciaboc-1788842086"></link>
            <id>https://ibctamil.com/article/former-speaker-chamal-rajapaksa-arrives-at-ciaboc-1788842086</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்ச, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவில் (C...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்ச, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவில் (CIABOC) இருந்து சற்றுமுன்னர் வெளியேறியுள்ளார்.</p><p>அந்த ஆணைக்குழுவில் சுமார் ஒரு மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறினார்.
</p><p>
சர்ச்சைக்குரிய எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணை குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, அவர் இன்று (08) காலை சுமார் 10.00 மணியளவில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வளாகத்திற்கு வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><h2>முதலாம் இணைப்பு</h2><h5><u>ராஜபக்சாக்களுக்கு தொடரும் நெருக்கடி : சமல் ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை</u></h5><p>முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்ச சற்று நேரத்திற்கு முன்பு&nbsp;இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p>நடைபெற்று வரும் விசாரணை ஒன்றுக்காக வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் இன்று (08) காலை அந்த ஆணைக்குழுவிற்கு வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>எயார்பஸ் கொள்முதல் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக அவர்&nbsp;இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><h2>&nbsp;எயார்பஸ் விமானக் கொள்வனவு</h2><p>இதேவேளை எயார்பஸ் விமானக் கொள்வனவின் போது இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, நாமல் ராஜபக்ச கடந்த வெள்ளிக்கிழமை (04) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/200a5598-b108-4736-984d-363c144ac9a9/26-6a9f99772df1f.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T06:13:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gold-prices-surged-sharply-again-today-1788844279"></link>
            <id>https://ibctamil.com/article/gold-prices-surged-sharply-again-today-1788844279</id>
            <summary type="text">இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (08.09.20...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
</p><p>
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (08.09.2026) 1,000 ரூபாயால் அதிகரித்துள்ளது.</p><p>குறித்த விடயத்தினை அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

</p><p></p><h2>தங்க விலை</h2><p>
</p><p>
நேற்று (07) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 376,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று அதன் விலை 377,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38374ffb-31ad-4da4-aa73-5f16b570cc03/26-6a9fa7666a88d.webp' /></p><p>அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 377,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
</p><p>
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 347,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
</p><p>
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,375 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T06:13:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் சிறப்பு விவாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kalmunai-north-sub-divisional-secretariat-case-1788847203"></link>
            <id>https://ibctamil.com/article/kalmunai-north-sub-divisional-secretariat-case-1788847203</id>
            <summary type="text">கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் பதவி நிலை மற்றும் அதிகாரங்கள் தொடர்பான
எழுத்தாணை மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு
எடுத்துக்கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் பதவி நிலை மற்றும் அதிகாரங்கள் தொடர்பான
எழுத்தாணை மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அங்கு கடமையாற்றுபவர் ஒரு உப பிரதேச செயலாளர் மட்டுமே தவிர, அவர் பிரதேச செயலாளர் அல்ல என்ற முக்கிய திருப்பம் திறந்த
நீதிமன்றத்தில் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
நீதியரசர்களான மாயாதுன்ன கோரேயா மற்றும் எம்.சி.எல்.பி. கோபல்லவா ஆகியோர்
முன்னிலையில் நேற்று (07) இக்கூட்டு மனுக்கள் விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டன.</p><p>கல்முனையன்ஸ் போரம் அமைப்பின் சார்பில் முபாரிஸ் எம். ஹனீபாவினால் தாக்கல்
செய்யப்பட்ட எழுத்தாணை மனுவுடன் (WRT/645/23), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
தவராசா கலையரசனின் மனு (WRT/67/23) மற்றும் ஏ.எம். நஸீரின் மனு ((WRT/300/18)
ஆகிய மூன்றும் இணைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.</p><p></p><h2>கலையரசனின் மனு</h2><p>
</p><p>
கலையரசனின் மனுவில் இடையீட்டு மனுதாரர்களாக முன்னாள் இராஜாங்க அமைச்சர்
சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் கல்முனை மாநகர சபையின் முன்னாள்
உறுப்பினர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/baf59367-9db4-42cc-bbe9-240798831ebc/26-6a9fa6c2d8443.webp' /></p><p>

மனுதாரர் முபாரிஸ் எம். ஹனீபா சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி விரான் கோரியா முன்னிலையாகிய நிலையில்,
கலையரசனின் மனுவை ஆதரித்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் சுமார் ஒரு
மணி நேரத்திற்கும் மேலாகத் தனது சட்ட வாதங்களை முன்வைத்தார்.
</p><p>கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் ஐந்தாவது பிரதிவாதி பிரதேச செயலாளர் அல்ல. மாறாக அவர் ஒரு உப பிரதேச செயலாளர் (ADS) மட்டுமே.</p><p>
எனவே, பிரதேச செயலாளருக்குரிய முழுமையான அதிகாரங்களையோ அல்லது பதவிக்
குறியீடுகளையோ அவர் பயன்படுத்த முடியாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என
மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.</p><p></p><h2>சட்டமா அதிபர் திணைக்களம்</h2><p>விசாரணையின் போது, 5ஆவது பிரதிவாதி சார்பில் முன்னிலையான சட்டத்தரணியிடம்
நிலைப்பாட்டைக் கேட்டறிந்தபோது, அவர் ஒரு உப பிரதேச செயலாளர் மட்டுமே
என்பதைத் திறந்த நீதிமன்றத்தில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21a53763-a180-4832-92da-4952d6365c60/26-6a9fa6c38df4a.webp' /></p><p> </p><p>இதனைத்
தொடர்ந்து குறுக்கிட்ட அரசுத் தரப்புச் சட்டத்தரணியும், இதுவே அரசின்
நிலைப்பாடும் ஆகும் என உறுதிப்படுத்தினார்.
</p><p>
அரச அதிகாரியாக இருந்தபோதிலும், சட்டமா அதிபர் திணைக்களம் அவருக்காக
முன்னிலையாகுவதில் இருந்து விலகியிருந்த நிலையில், அவர் தனக்காகத் தனிப்பட்ட (Private)
சட்டத்தரணி ஒருவரையே நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
வழக்கின் இறுதி விவாதங்களுக்காக எதிர்வரும் 07.10.2026 மற்றும் 02.11.2026
ஆகிய தினங்களை நீதிமன்றம் ஒதுக்கியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T06:10:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டமன்றத்திலிருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dmk-mla-s-forcibly-evicted-from-the-tn-assembly-1788847672"></link>
            <id>https://news.lankasri.com/article/dmk-mla-s-forcibly-evicted-from-the-tn-assembly-1788847672</id>
            <summary type="text">சட்டமன்றத்தில்&amp;nbsp; அமளியில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ.க்களை அவை காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.சட்டமன்றத்திலிருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டமன்றத்தில்&nbsp; அமளியில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ.க்களை அவை காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.</p><h3>சட்டமன்றத்திலிருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம் </h3><p>

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று காவல்துறை மானியக்கோரிக்கையில் பதிலுரை வழங்கிய முதல்வர் விஜய், வீராணம் திட்டத்திற்கு கருணாநிதியின் மருமகன் மாறன் லஞ்சம் வாங்கியதாக சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் உள்ளதாக பேசினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fa9344c-0e23-44b5-ab85-54e665594427/26-6a9fa63a3ef6b.webp' /></p><p>

முதல்வர் விஜய்யின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டுமென இன்று திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். </p><p>

முதல்வரின் பேச்சை அவைகுறிப்பிலிருந்து நீக்க முடியாது என சபாநாயர் தெரிவித்தார். இதனையடுத்து, சபாநாயகரை சுற்றி நின்று கொண்டும், அவரது இருக்கைக்கு முன்பும் அமர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.</p><p></p><p>
இதனைத்தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ.க்களை அவையிலிருந்து வெளியேற்றுமாறு அவைக்காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d7f0de7-1a7f-44c4-b70e-75514c1d51bf/26-6a9fa6a051c07.webp' /></p><p> 

சபாநாயகரின் உத்தரவையடுத்து திமுக எம்.எல்.ஏ.க்களை அவை காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/zwhHa14VsPQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T06:09:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் அரச சீருடையுடன் மது அருந்திய வனப்பரிபாலன சபை அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/forest-department-handed-liquor-anti-corruption-1788846267"></link>
            <id>https://ibctamil.com/article/forest-department-handed-liquor-anti-corruption-1788846267</id>
            <summary type="text">அரச திணைக்களங்களுக்கு விடுமுறை தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை&amp;nbsp; வன பரிபாலன சபைக்குச் சொந்தமான டபிள் கேப் வாகனத்தை இரு அரச உத்தியோகத்தர்கள் தனிப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச திணைக்களங்களுக்கு விடுமுறை தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை&nbsp; வன பரிபாலன சபைக்குச் சொந்தமான டபிள் கேப் வாகனத்தை இரு அரச உத்தியோகத்தர்கள் தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தியதுடன், மதுபோதையில் வாகனத்தை செலுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>

குறித்த இருவரும் திணைக்கள சீருடையில், அரச வாகனத்தில் மாவட்ட புதிய செயலகத்துக்குச் செல்லும் வழியில் பாலமீன்மடு பகுதியில் அமைந்துள்ள தென்னந்தோட்டத்தில் வைத்து மதுபானம் அருந்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

பின்னர் அவர்கள் மதுபோதையில் அரச வாகனத்தை செலுத்திச் சென்றதாகவும், இது வீதியில் பயணிக்கும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய செயல் எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மட்டக்களப்பு ஊழல் மோசடி</h2><p>
</p><p>
எனவே, அரச வாகனத்தை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தியதுடன், அதனை மதுபானம் அருந்துவதற்கும் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குறித்த இரு அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68f2e318-4bdb-4d38-b4df-4f3686633dd3/26-6a9fa56047297.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T06:04:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளைகள் சேர்கைக்கு இரண்டரை இலட்சம் லஞ்சம் பெற்ற பிரபல பாடசாலை அதிபர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/school-principal-accepts-a-bribe-2-5-lakh-rupees-1788842008"></link>
            <id>https://jvpnews.com/article/school-principal-accepts-a-bribe-2-5-lakh-rupees-1788842008</id>
            <summary type="text">&amp;nbsp; காலிப் பகுதி பிரபல பாடசாலை அதிபர் இரண்டு பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்ப்பதற்காக இலஞ்சமாக இரண்டரை இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்ட ஒருவர் கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; காலிப் பகுதி பிரபல பாடசாலை அதிபர் இரண்டு பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்ப்பதற்காக இலஞ்சமாக இரண்டரை இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

சந்தேகநபரான அதிபர், குறித்த பிள்ளைகளைச் சேர்ப்பதற்காக ஒரு பிள்ளைக்கு மூன்று லட்சம் ரூபாய் வீதம் இருவருக்கும் ஆறு லட்சம் ரூபாய் கோரிய பின்னர் அத்தொகை மூன்று லட்சம் ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/342abc73-56b2-402e-9095-18f829a24598/26-6a9f9019cb1c5.webp' /></p><h2>ஆறு லட்சம் ரூபாய்&nbsp;லஞ்சம் </h2><p> 

அதில் ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டு 2026ஆம் ஆண்டின் முதலாம் ஆண்டிற்கு ஒரு பிள்ளையைச் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

மற்றைய பிள்ளையை 8ஆம் வகுப்பில் சேர்ப்பதற்காக எஞ்சிய ஒன்றரை லட்சம் ரூபாயில் 50,000 ரூபாயைப் பெற்றுக்கொண்டு அப்பிள்ளையையும் பாடசாலையில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p> 

 பிள்ளைகளை பாடசாலையில் சேர்ப்பதற்குத் தேவையான பணிகளைச் செய்து கொடுத்தமைக்காக மேலும் இரண்டரை இலட்சம் ரூபாய் பணம் கோரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p> 

அப்பணத்தைக் கொடுக்காவிட்டால் இரண்டு பிள்ளைகளையும் பாடசாலையை விட்டு நீக்கிவிடுவதாகக் கூறி, இரண்டரை இலட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற முயன்றபோதே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.</p><p> 

 கைதான அதிபர் காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படு வருகின்றது.</p><p style="margin-left: 25px;"></p>]]></content>
            <updated>2026-09-08T06:03:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[11 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/hi-movie-11-days-box-office-1788844054"></link>
            <id>https://cineulagam.com/article/hi-movie-11-days-box-office-1788844054</id>
            <summary type="text">தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான கவின் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான &#039;ஹாய்&#039; திரைப்படத்தின் 11 நாட்களில் உலகளவில் செய்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான கவின் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான 'ஹாய்' திரைப்படத்தின் 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><h2> 

'ஹாய்'
</h2><p>
ரொமான்டிக் - காமெடி என்பது சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜானர்களில் ஒன்றாகும். அப்படிப்பட்ட ஒரு கதைக்களத்தில் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ஹாய் திரைப்படம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0665e77e-8709-4ed1-b09f-6a8df43e7e9f/26-6a9f9819b6e40.webp' /></p><p>அறிமுக இயக்குநரான விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவான இப்படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் மற்றும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் கவின் மற்றும் நயன்தாரா முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடைய ஜோடியை திரையில் பார்ப்பதே மிகவும் புதியதாக இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b4edeff-55f9-4e1a-8145-8b085ec1f1a6/26-6a9f981a71822.webp' /></p><h3>

பாக்ஸ் ஆபிஸ்</h3><p>

'<a href="https://www.thehindu.com/entertainment/movies/hi-movie-review-kavin-nayanthara-vishnu-edavan-bhagyaraj-radikaa-sarathkumar-prabhu/article71399779.ece" target="_blank">ஹாய்</a>' திரைப்படம் எவ்வளவு வசூல் செய்து வருகிறது என்பதை, வெளிவந்த நாளிலிருந்தே பார்த்து வருகிறோம். அந்த வகையில், 11 நாட்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை 'ஹாய்' திரைப்படம் செய்திருக்கும் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/305d1bd1-d708-4606-81c9-2170e3b5f457/26-6a9f981b3483b.webp' /></p><p></p><p> 

அதன்படி, 11 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 17 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை வரும் நாட்களில் பொறுத்திருந்து பார்க்கலாம்.</p>]]></content>
            <updated>2026-09-08T06:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஷிரான் பாசிக்! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiran-basik-to-colombo-high-court-1788846472"></link>
            <id>https://tamilwin.com/article/shiran-basik-to-colombo-high-court-1788846472</id>
            <summary type="text">பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக் உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்குமான வழக்கை மீண்டும் ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி அழைக்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக் உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்குமான வழக்கை மீண்டும் ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>போதைப்பொருள் வழக்கு தொடர்பாக இன்று (08) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நயோமி விக்கிரமசேகர முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை&nbsp;</h2><p>இதன்போது, பொலிஸ் மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரதிவாதியான ஷிரான் பாசிக் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef507465-5f86-4c0b-be91-f1f33fec7004/26-6a9fa4c375bf8.webp' /></p><p>பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான, ஷிரான் பாசிக் துபாயில் கைது செய்யப்பட்டு சமீபத்தில் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டார்.</p><p>தெஹிவளை, களுபோவில பகுதியைச் சேர்ந்த 48 வயதான இவர், சர்வதேச பொலிஸாரால் (Interpol) சிவப்பு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்ட குற்றவாளியாவார்.&nbsp;&nbsp;</p><p>வெளிநாட்டு போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படும் சந்தேகநபர், அதன் மூலம் ஈட்டிய கறுப்புப் பணத்தை இலங்கையின் கடற்கரையோரங்களில் உள்ள ஏழை மக்களின் காணிகளைப் பயன்படுத்தி பாரிய ஹோட்டல்களை நிர்மாணிப்பதன் மூலம் சலவை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T05:58:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளைகுடாவில் அமெரிக்க சொத்துகள் மீது தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attack-on-us-assets-in-the-gulf-iran-warns-1788845575"></link>
            <id>https://tamilwin.com/article/attack-on-us-assets-in-the-gulf-iran-warns-1788845575</id>
            <summary type="text">தனது சொத்துகள் மீது அமெரிக்கா நடத்தும் எந்தவொரு புதிய தாக்குதலுக்கும்
உடனடியாக பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் நேற்று எச்சரிக்கை
விடுத்துள்ளது.

இந...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது சொத்துகள் மீது அமெரிக்கா நடத்தும் எந்தவொரு புதிய தாக்குதலுக்கும்
உடனடியாக பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் நேற்று எச்சரிக்கை
விடுத்துள்ளது.
</p><p>
இந்தநிலையில், அமெரிக்க எண்ணெய் மற்றும் எரிவாயு நலன்கள் உட்பட வளைகுடா பகுதி
முழுவதும் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகள் அனைத்தும் தாக்குதலுக்கு
உள்ளாகக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.</p><h2>அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பரம் தாக்குதல்</h2><p>
</p><p>
அத்துடன், கடந்த வார இறுதியில் கப்பல்கள் மீது அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பரம்
நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, உலக சந்தையில் எண்ணெய் விலைகள் ஆறு வார கால
உச்சத்தை நெருங்கியுள்ளன.
</p><p>
இந்நிலவரம் குறித்து பேசிய ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர்
காலிபாஃப், "எங்கள் சொத்துகளை நீங்கள் தாக்கினால், நீங்களும் திரும்பத்
தாக்கப்படுவீர்கள்" என நேரடியாக எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f51b57d9-cd49-4870-88e5-89e52aa44aef/26-6a9fa15a96a71.webp' /></p><p>
</p><p>
இதேவேளை அமெரிக்காவின் புதிய தாக்குதல்களுக்கு ஈரான் கடுமையான பதிலடி
கொடுக்கும் எனவும் எச்சரித்துள்ளது.

மேலும் கப்பல்கள் மீதான தாக்குதல்களால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்
விலைகள் கடந்த ஆறு வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன.</p><h2>ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்கும் கப்பல்களின் எண்ணிக்கை</h2><p>

இதனால் தரவுகளின்படி, மே மாதத்திற்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணை வழியாகப்
பயணிக்கும் கப்பல்களின் எண்ணிக்கை தற்பொழுது மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.</p><p>

கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் இப்போரை முடிவுக்குக்
கொண்டுவரவோ, வளைகுடாப் பகுதியில் இயல்பான எரிசக்திப் போக்குவரத்தை
மீட்டெடுக்கவோ முறையான இராஜதந்திர முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை.</p><p>

இந்நிலையில் கடந்த வார இறுதியில் இரு தரப்பினரும் மீண்டும் மோதலில்
ஈடுபட்டிருப்பது, அப்பகுதியில் பதற்றத்தையும் பேராபத்தையும் மேலும்
அதிகரித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T05:47:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவெக பிரமுகரை வெட்டி கொன்றது ஏன்? கைதான மாணவன் பரபரப்பு வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/tvk-kannan-killed-chennai-cctv-1788845955"></link>
            <id>https://ibctamilnadu.com/article/tvk-kannan-killed-chennai-cctv-1788845955</id>
            <summary type="text">சென்னையில் கொலை செய்யப்பட்ட தவெக பிரமுகர் கண்ணனை கொன்றது ஏன் என குற்றவாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.சென்னை பெசன்ட்நகர் வண்ணான்துறை பகுதியை சேர்ந்தவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னையில் கொலை செய்யப்பட்ட தவெக பிரமுகர் கண்ணனை கொன்றது ஏன் என குற்றவாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><p>சென்னை பெசன்ட்நகர் வண்ணான்துறை பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(வயது 45), தவெக பிரமுகராக இருக்கிறார்.
</p><p>
ஐடி நிறுவனங்களுக்கு கார் வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்த கண்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 5 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.
</p><p>
இதுகுறித்து விசாரணையை தொடங்கிய போலிசார் அடையாறு பகுதியை சேர்ந்த பரணி(வயது 20) மற்றும் அவருடைய நண்பர்கள் 4 பேரை கைது செய்தனர்.
</p><p>
விசாரணையில், முன்பகையை கண்ணனின் கொலைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e4ab680-835c-4144-9f44-78a3556d93d0/26-6a9fa01231e5c.webp' /><br></p><p>
</p><p>
கடந்த 2009ம் ஆண்டு பரணியின் பெரியப்பாவை கண்ணன் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்துள்ளனர், தொடர்ந்து 2016ம் ஆண்டு பரணியின் தந்தை கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p>

தன்னுடைய தந்தை மற்றும் பெரியப்பாவின் மரணத்திற்கு காரணமாக கண்ணனை நேரம் பார்த்து பழிவாங்க காத்திருந்ததாக பரணி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக தங்களது வீட்டுக்கு வந்த கண்ணன் தனக்கு பெண் குழந்தைகள் இருப்பதாகவும் பகையை மறந்து சமாதானமாக போலாம் என கூறியுள்ளார்.
</p><p>
அதிமுகவில் இருந்து தவெக-வில் இணைந்த கண்ணன், அப்பகுதியில் முக்கிய புள்ளியாக வலம்வந்ததால் ஆத்திரமடைந்த பரணி, மீண்டும் ஆபத்து வரலாம் என்ற எண்ணத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததாக கூறியுள்ளார்.<br></p>]]></content>
            <updated>2026-09-08T05:41:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த 90 நாட்கள் அதிர்ஷ்ட மழை! கேதுவால் பலன் பெறும் டாப் 3 ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/ketu-in-leo-next-90-days-who-get-huge-luck-1788842956"></link>
            <id>https://manithan.com/article/ketu-in-leo-next-90-days-who-get-huge-luck-1788842956</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்களில் நிழல் கிரகமாகக் கருதப்படும் கேது, முக்தி, ஆன்மீகம், உள்ளுணர்வு ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறார். மற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்களில் நிழல் கிரகமாகக் கருதப்படும் கேது, முக்தி, ஆன்மீகம், உள்ளுணர்வு ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறார். </p><p>மற்ற கிரகங்களைப் போல் கேதுவிற்கு சொந்த ராசி இல்லை. மேலும், எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கும் கேது, சனி பகவானுக்கு அடுத்தபடியாக ஒரு ராசியில் நீண்ட காலம், அதாவது சுமார் 18 மாதங்கள் வரை இருப்பார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/328ee746-a644-48b6-bff2-ed3285c71c89/26-6a9f9b347665e.webp' /></p><p></p><p>தற்போது கேது சிம்ம ராசியில், மகம் நட்சத்திரத்தில் உள்ளார். ஜோதிட ரீதியாக, கேதுவின் இந்த நிலை சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருந்து, திடீர் நிதி ஆதாயம், தடைபட்ட வேலைகளில் வெற்றி, நல்ல அதிர்ஷ்டம் போன்ற பலன்களைத் கொடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p>அந்தவகையில், சிம்ம ராசியில் கேது டிசம்பர் மாதம் வரை இருந்து, பின்னர் கடக ராசிக்குள் நுழைவார். எனவே, அடுத்த 90 நாட்கள் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான காலமாக அமையப் போகிறது.அப்படி கேதுவால் பல்வேறு வழிகளிலும் சாதக நன்மைகளை பெறபோகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d99256ee-3357-46ba-bb9a-85798fd72339/26-6a9f9b352daa0.webp' /></p><p>
கேதுவின் நிலையால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அடுத்த 3 மாதங்கள் சிறப்பாக இருக்கும். புதிய தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.</p><p> வேலை தொடர்பான பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைப்பதுடன், பணியிடத்தில் உங்கள் செயல்திறனும் பாராட்டப்படும். </p><p>நீண்ட கால உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு லாபம் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
</p><h2>
சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3ab7d39-6bf2-4329-a098-bd644c8e3453/26-6a9f9b35d5de5.webp' /></p><h2>
</h2><p>கேதுவின் தாக்கத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு அடுத்த 3 மாதங்கள் அதிர்ஷ்டமானதாக இருக்கும். புதிய நட்புகள் உருவாகி, அவை எதிர்காலத்தில் நன்மை தரும்.</p><p> குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை தொடர்பான பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.</p><p> புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகளும் கிடைக்கும். அவற்றை சரியாகப் பயன்படுத்தினால் நல்ல முன்னேற்றத்தை அடையலாம். சிலருக்கு புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
</p><h2>
மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb38f691-0fc4-4fb9-b330-8f6a195fc373/26-6a9f9b368eb4a.webp' /></p><p></p><p>கேதுவின் நிலையால் மகர ராசிக்காரர்களுக்கு அடுத்த 3 மாதங்கள் சிறப்பாக அமையும். வாழ்க்கையில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.</p><p>நிதி நிலை மேம்படும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட காலத்திற்குப் பிறகு நண்பர்கள் அல்லது உறவினர்களை சந்திப்பது குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். </p><p>மொத்தத்தில், அடுத்த 3 மாதங்கள் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருப்பதை உணர்வீர்கள். குறிப்பாக புதிய தொழில் முயற்சிகள் எதிர்பாரத அளவுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <u><b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></b></u></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T05:41:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீனாட்சியுடன் ரொமான்ஸ்.. கடுப்பான ஆதி, அப்பத்தா எடுக்க போகும் முடிவு என்ன? - வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/vaagai-sooda-vaa-today-episode-sep-08-2026-1788845725"></link>
            <id>https://viduppu.com/article/vaagai-sooda-vaa-today-episode-sep-08-2026-1788845725</id>
            <summary type="text">தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வாகை சூடவா. இந்த சீரியலில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வாகை சூடவா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஆதி மற்றும் ரம்யா அப்பத்தாவை சந்தித்து பேசிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.</p><p>அதாவது, அப்பத்தா அவங்கள இந்த வீட்டுக்கு வந்தா நான் ஏத்துக்க ரெடி என வெறும் வாய் வார்த்தையாக சொல்லி விட்டு வரும்போது பாத்துக்கலாம் என மனதுக்குள் கணக்கு போடுகிறார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bb424f2-c74f-4a59-b8f0-882621e1f4de/26-6a9f9ea0620d6.webp' /></p><p>இதையடுத்து ஆதியும் ரம்யாவும் சுமதி வீட்டுக்கு கிளம்பி வருகின்றனர். எப்படியாவது இருவரையும் பேசி அப்பத்தா வீட்டுக்கு அனுப்ப திட்டமிடுகின்றனர். </p><p>
இங்கே ஜீவா கையில் அடிபட்டு இருப்பதால் சட்டை போட முடியாமல் தவிர்ந்து கொண்டிருக்கு சுமதி ரொம்ப கஷ்டப்படுறாரு கொஞ்சம் உதவி பண்ணு என்று சொல்ல மீனாட்சி ஜீவாவுக்கு உதவி செய்ய முடிவு எடுக்கிறாள். </p><p>
அதற்கு முன்பாக கதவு மற்றும் ஜன்னல்களை சாத்திவிட்டு வர ஜீவா எதுக்காக எல்லாத்தையும் க்ளோஸ் பண்ற என்று கேட்க காத்து உள்ளே வரும் முடி பறக்கும்.. அதனால ரொமான்ஸ் சீன் உருவாகும் இதெல்லாம் தேவையா என்று சொல்கிறாள்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1516a144-7d37-4d60-a4dd-cb6faeffe1f7/26-6a9f9ea11e2f5.webp' /></p><p>பிறகு ஜீவாவுக்கு சட்டை போட்டு விட்டு மீனாட்சி திரும்பும்போது கால் தடுக்கி கீழே விழப்போக ஜீவா தாங்கி பிடிக்கிறான். அப்போது கதவை திறக்க காற்று உள்ளே வர முடி பறக்க மீனாட்சி சொன்னது போலவே ஒரு ரொமான்ஸ் கிரியேட் ஆகிறது. </p><p>
இந்த சமயத்தில் ஆதி வீட்டுக்குள் நுழைய இருவரும் நெருக்கமாக இருப்பதை பார்த்து மேலும் கடுப்பாகிறான். உடனடியாக ஏதாவது செய்து இருவரையும் பிரிக்க திட்டம் போடுகிறான்.</p><p>இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வாகை சூடவா சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T05:35:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு சமூக ஊடகங்கள் மூலம் கொலை அச்சுறுத்தல்! அநுர தரப்பு மீது சுமத்தப்படும் குற்றம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-receives-death-threat-1788845698"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-receives-death-threat-1788845698</id>
            <summary type="text">ஜனநாயக அரசியல் கட்டமைப்பில் அரச நிறுவனங்களை அரசியல் பழிவாங்கல்களுக்காகப்
பயன்படுத்தும் &#039;Institutional Weaponization&#039; என்ற தவறான அரசியல் உத்தியை
தற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனநாயக அரசியல் கட்டமைப்பில் அரச நிறுவனங்களை அரசியல் பழிவாங்கல்களுக்காகப்
பயன்படுத்தும் 'Institutional Weaponization' என்ற தவறான அரசியல் உத்தியை
தற்போதைய அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு தீவிரமாகப் பயன்படுத்தி
வருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
சஞ்சீவ எதிரிமான்ன குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>மேலும், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதகாவும் சஞ்சீவ எதிரிமான்ன சுட்டிக்காட்டினார்.&nbsp;</p><p>
</p><p>
கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தொடர்பான சமீபத்திய விவகாரங்கள் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள்
குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.</p><h2>வாக்குறுதிகளை மீறிய ஜனாதிபதி&nbsp; அநுர&nbsp;</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>

"அரசியல் எதிராளிகளை முடக்குவதற்கும் அவர்களின் குரலை அடக்குவதற்கும் அரச
அதிகாரமும் விசாரணை நிறுவனங்களும் தவறான முறையில் பயன்படுத்தப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/956075ef-272d-44be-a445-559136069ed5/26-6a9f9e84a82b6.webp' /></p><p>
</p><p>ஜனாதிபதி பயணம் செய்யும்போது பாதைகள் மூடப்படுவதில்லை என்ற அரசின்
வாக்குறுதிகள் தற்போது பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p>
பேருவளை மற்றும் புலத்சிங்கள பகுதிகளுக்கு ஜனாதிபதி விஜயம் செய்தபோது வீதிகள்
மட்டுமன்றி, பேருவளை மீன்பிடித் துறைமுகத்தில் படகுகள் நுழைவது கூட தடை
செய்யப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
தேர்தல் காலத்தில் மீனவர்களுக்காக உறுதியளிக்கப்பட்ட புதிய செயலி குறித்த
வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.</p><h2>நாமலுக்கு கொலை அச்சுறுத்தல்&nbsp;</h2><p>

மேலும், சமூக ஊடகங்களில் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக விடுக்கப்படும் கொலை
அச்சுறுத்தல்கள் மற்றும் போலிப் பிரசாரங்கள் குறித்து பலமுறை முறைப்பாடு
செய்யப்பட்டுள்ள போதிலும், விசாரணை நிறுவனங்கள் எவ்வித நடவடிக்கையும்
எடுக்கவில்லை.</p><p>

அரசு தனக்குச் சாதகமான ஒருசில தரப்பினருக்கு மட்டுமே சட்டத்தை
நடைமுறைப்படுத்தி, ஏனையோரைப் புறக்கணிக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ca1b95e-908a-4e98-a120-2b5fa2e31286/26-6a9f9e8580df6.webp' /></p><p>

இவ்வாறான அரசியல் பழிவாங்கல்கள் மற்றும் கைதுகளுக்குப் பயந்து எமது கட்சியின்
அரசியல் பயணத்தை எக்காலத்திலும் நிறுத்தப் போவதில்லை.
</p><p>
கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கையாக அனுராதபுரம் நகர சபை விளையாட்டு
மைதானத்தில் பிரமாண்ட மக்கள் பேரணி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும்
பூர்த்தியாகியுள்ளன.
</p><p>
ஜனநாயக ரீதியான அரசியல் களத்தை ஒடுக்குவதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளைப்
பொதுமக்கள் தீவிரமாகக் கேள்விக்குட்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T05:35:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-arrested-in-katunayake-airport-1788844457"></link>
            <id>https://tamilwin.com/article/two-arrested-in-katunayake-airport-1788844457</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 50 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருள் தொகையை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>50 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருள் தொகையை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயன்றவர்ளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2><b> இருவர் கைது</b></h2><p>பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த விசேட தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24fabd96-fbb9-4050-81e2-8a076ad3c02b/26-6a9f9e4587a08.webp' /></p><p>சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-08T05:34:08+00:00</updated>
        </entry>
    </feed>
