<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-29T12:59:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பெருவெள்ளத்தில் மாயமான பிரித்தானியர்கள்: சில தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/families-of-33-missing-britons-rush-to-nepal-1788005513"></link>
            <id>https://news.lankasri.com/article/families-of-33-missing-britons-rush-to-nepal-1788005513</id>
            <summary type="text">Families of 33 missing Britons rush to Nepal: நேபாள பெருவெள்ளத்தில் மாயமான பிரித்தானியர்களைத் தேடி அவர்களுடைய குடும்பத்தினர் பலர் நேபாளத்துக்குப் புறப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Families of 33 missing Britons rush to Nepal: நேபாள பெருவெள்ளத்தில் மாயமான பிரித்தானியர்களைத் தேடி அவர்களுடைய குடும்பத்தினர் பலர் நேபாளத்துக்குப் புறப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b57ce4c-24d5-4bd3-aa6d-8410329f92a1/26-6a92cc8ab331b.webp' /></p><p>புனித யாத்திரைக்காகவும், சுற்றுலாவுக்காகவும் ஏராளமான மக்கள் நேபாளத்துக்குச் சென்றிருந்த நிலையில், நேபாள திபெத் எல்லையில் ஏற்பட்ட பெருவெள்ளம், அவர்களில் பலருடைய நிலைமையை தலைகீழாக மாற்றிப்போட்டுவிட்டது.</p><h3>

மாயமான பிரித்தானியர்கள்
</h3><p>
நேபாள பெருவெள்ளத்தில் சுமார் 600 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், 1,500 பேருக்கும் மேலானவர்களைக் காணவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e96a24ca-c713-405a-ab50-16fcf08be9a1/26-6a92cc8b66a77.webp' /></p><p>அவர்களில் 33 பிரித்தானியக் குடிமக்களும் அடங்குவர். விடயம் என்னவென்றால், தங்கள் உறவினர்கள் நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கிய விடயம் அவர்களை விட்டு தொலைவில் இருக்கும் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அதே நேரத்தில், அவர்களில் மாயமானவர்கள் நிலை என்ன என்னும் விடயம் கூடுதல் கவலையை உருவாக்கியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/170897e9-959a-4557-88fd-39a0641897fe/26-6a92cc8c1a79d.webp' /></p><p>விடயம் என்னவென்றால், காணாமல் போனவர்களில் யாரும் கண்டுபிடிக்கப்பட்டதாக இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை.&nbsp;</p><p></p><p>
என்றாலும், சசெக்ஸில் நேபாள உணவு நிறுவனம் ஒன்றை நடத்திவரும் ப்ரமோத் (Pramod Poudel) என்பவர், தன் தந்தையாகிய புருசோத்தம் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக டெய்லி மெயில் ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/544073bd-d555-4e74-bbd4-f46043a25c96/26-6a92cc8cc2843.webp' /></p><p>அதே நேரத்தில், எசெக்ஸில் செவிலியராக பணியாற்றும் ராஜேந்திரா (Rajendra Pudasaini) என்பவரோ, தனது குடும்பத்தில் பலர் காணாமல் போய்விட்டதாகவும், தனது ஞானக்குழந்தையின் உடல் மட்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c030c5c0-33bd-471c-b257-99e3bf3f37b2/26-6a92cc8d77c3c.webp' /></p><p>பிரச்சினை என்னவென்றால், மின்சாரமும் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதால் தங்கள் உறவினர்களுக்கு என்ன ஆனது என்பது தெரியாமல் திகைத்துப்போயிருக்கிறார்கள் பலரும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa95d2ab-e552-48b9-b3ef-66106f89c7bd/26-6a92cc8e2b2b0.webp' /></p><p>இதற்கிடையில், தங்கள் உறவினர்களின் நிலை அறிவதற்காக மாயமான பிரித்தானியர்களின் உறவினர்கள் நேபாளத்துக்கே புறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T12:55:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் Kyiv மீது ரஷ்யா சரமாரி ட்ரோன் தாக்குதல்; பலர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russia-launches-barrage-of-drone-attacks-on-kyiv-1788008271"></link>
            <id>https://canadamirror.com/article/russia-launches-barrage-of-drone-attacks-on-kyiv-1788008271</id>
            <summary type="text">&amp;nbsp; உக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) நகருக்கு அருகிலுள்ள ஒரு சேமிப்புக் கிடங்கில் ரஷ்ய ட்ரோன் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; உக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) நகருக்கு அருகிலுள்ள ஒரு சேமிப்புக் கிடங்கில் ரஷ்ய ட்ரோன் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
</p><p>


துரதிர்ஷ்டவசமாக, தற்போது வரை 27 பேர் உயிரிழந்துள்ளதாகக் தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கீவ் பிராந்திய இராணுவ நிர்வாகத்தின் தலைவர் தைமூர் தகாச்சென்கோ (Tymur Tkachenko) தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ecdacf6-6496-4b82-a5d7-33f5d5da2761/26-6a92d751804b5.webp' /></p><p>
</p><p>


உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.</p><p>



ரஷ்ய ட்ரோன்கள் ஒரு சேமிப்புக் கிடங்கைத் தாக்கியதால் ஏற்பட்ட வெடிப்பு, அப்பகுதி முழுவதும் பரவலான சேதத்தை ஏற்படுத்தியதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.</p><p>



இதேவேளை, ட்ரோன் தயாரிக்கும் உபகரணங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஆயுதக் கிடங்கைத் தமது படைகள் தாக்கியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-29T12:55:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[போரினால் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் தலைவர்கள் ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-leaders-approve-iran-economy-1788007144"></link>
            <id>https://tamilwin.com/article/iran-leaders-approve-iran-economy-1788007144</id>
            <summary type="text">அமெரிக்காவுடனான ஆறு மாத காலப் போரினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு
ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகளை ஈரானியத் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதுடன்,
பொருளாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடனான ஆறு மாத காலப் போரினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு
ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகளை ஈரானியத் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதுடன்,
பொருளாதார நெருக்கடிகளைச் சமாளித்து இராஜதந்திரம் மற்றும் பாதுகாப்பைப்
பலப்படுத்தப் போவதாக உறுதியளித்துள்ளனர்.
</p><p>
அமெரிக்காவின் தடைகள் மற்றும் கடற்படை முற்றுகை காரணமாக நாட்டின் ஏற்றுமதி
மற்றும் இறக்குமதிகள் சுமார் 35 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஈரானிய
ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.</p><h2>அமெரிக்காவின் அழுத்தங்கள்</h2><p>
</p><p>
எனினும், அமெரிக்காவின் அழுத்தங்களுக்குப் பணியப் போவதில்லை என்றும், ஹோர்முஸ்
நீரிணையின் கட்டுப்பாட்டைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளப் போவதாகவும் ஈரான்
அரசாங்கம் அறிவித்துள்ளது.
</p><p>
அதிகரித்து வரும் பணவீக்கம், வேலையின்மை மற்றும் பொருட்கள்-சேவைகளுக்கான விலை
உயர்வைச் சீரமைப்பதில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என ஈரானின்
உச்ச தலைவர் அயதுல்லா முஜ்தபா காமேனி வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4393b401-1c59-4899-a303-3780af071d42/26-6a92d59dde8c0.webp' /></p><p>

அந்நாட்டில் கடந்த மாதத்தில் நுகர்வோர் பணவீக்கம் 66 சதவீதமாகப்
பதிவாகியுள்ளதுடன், அன்றாட வாழ்க்கைச் செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ளதாகத்
தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>இராஜதந்திரம் மற்றும் தற்காப்பு&nbsp;</h2><p>
</p><p>
இதேவேளை, நாட்டின் எல்லைகளையும் நலன்களையும் பாதுகாக்க இராஜதந்திரம் மற்றும்
தற்காப்பு ஆகிய இரண்டு வழிகளையும் அரசாங்கம் சம அளவில் முன்னெடுக்கும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், கத்தார் நாட்டின் பிரதமருடன் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியின் கப்பல்
போக்குவரத்தை மீண்டும் வழமைக்குக் கொண்டு வருவது தொடர்பில் ஈரானியத் தலைவர்கள்
பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T12:51:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டிலேயே ரெஸ்டாரன்ட் சுவையில் பட்டர் சிக்கன் – கொத்தமல்லி சாதம்! பண்ணலாமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/restaurant-style-butter-chicken-and-coriander-rice-1788006436"></link>
            <id>https://manithan.com/article/restaurant-style-butter-chicken-and-coriander-rice-1788006436</id>
            <summary type="text">வீட்டில் வழக்கமாக செய்யும் சிக்கன் குழம்பிலிருந்து சற்று வித்தியாசமாகவும், ரெஸ்டாரன்ட்டில் பரிமாறப்படும் உணவின் சுவையையும் மணத்தையும் வீட்டிலேயே அனுபவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வீட்டில் வழக்கமாக செய்யும் சிக்கன் குழம்பிலிருந்து சற்று வித்தியாசமாகவும், ரெஸ்டாரன்ட்டில் பரிமாறப்படும் உணவின் சுவையையும் மணத்தையும் வீட்டிலேயே அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த&nbsp; பட்டர் சிக்கள் மற்றும் கொத்தமல்லி சாதம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.&nbsp;</p><h2>பட்டர் சிக்கன் – கொத்தமல்லி சாதம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3153170a-6a7e-47c0-852b-2b15201a904c/26-6a92d54253cd0.webp' /></p><p></p><p>க்ரீமி தன்மை கொண்ட பட்டர் சிக்கனும், புதிதாக அரைத்த கொத்தமல்லியின் நறுமணம் நிறைந்த சாதமும் இணையும் இந்த காம்பினேஷன், சாதாரண மதிய உணவையே ஒரு சிறப்பு விருந்தாக மாற்றிவிடும்.
</p><p>
மென்மையாக வேகவைக்கப்பட்ட சிக்கன் துண்டுகள், தக்காளியின் புளிப்பும், மசாலாக்களின் மணமும், பட்டரின் ருசியும், க்ரீமியின் மென்மையான சுவையும் ஒன்றாக கலந்து உருவாகும் இந்த கிரேவியுடன்&nbsp; கொத்தமல்லி சாதத்தை சாப்பிட்டால் மீண்டும் மீண்டு செய்து தர சொல்லி கேட்க தோன்றும்.</p><p>அந்தளவுக்கு அதன் சுவையும் மணமும் பக்காவாக இருக்கும். வீட்டில் கிடைக்கும் எளிய பொருட்களைக் கொண்டே இந்த உணவைத் தயாரிக்க முடியும் என்பதுதான் இதன் சிறப்பு. எளிய முறையில் இந்த ரெசிபியை எவ்வாறு செய்யலாம் என இந்த காணொளி மூலம் காணலாம்.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gPNl4ljQ85E" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T12:49:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடன் வர்த்தகப்போர்; கனடாவை எச்சரிக்கும் வல்லுனர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trade-war-with-the-us-experts-warn-canada-1787990920"></link>
            <id>https://canadamirror.com/article/trade-war-with-the-us-experts-warn-canada-1787990920</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா மீது ஆரம்பித்துள்ள வர்த்தகப் போர் இரண்டு நாடுகளின் வணிகங்களையும் பாதிக்கும் எனவும், இதில் , கனேடியப் பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா மீது ஆரம்பித்துள்ள வர்த்தகப் போர் இரண்டு நாடுகளின் வணிகங்களையும் பாதிக்கும் எனவும், இதில் , கனேடியப் பொருளாதாரம் கடுமையான மந்தநிலையைச் சந்திக்கும் அபாயம் உள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p>

 அமெரிக்கா - கனடா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா, கனடாவின் 20 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்கள் மீது 50 சதவீத வரியை விதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cca8eaa8-5272-4bb9-b034-e571ca00f6f7/26-6a929389e49a5.webp' /></p><h2>&nbsp;20 பில்லியன் டொலர் மதிப்பிலான பழிவாங்கல் வரி</h2><p>
</p><p>
ஜனவரி 1 முதல் அனைத்து சிற்றுந்து தயாரிப்புகள் மீதும் 50 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார் .</p><p>அதேநேரம், அமெரிக்காவின் நடவடிக்கைக்குப் பதிலடியாக, கனேடியப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), 700-க்கும் மேற்பட்ட அமெரிக்கப் பொருட்கள் மீது 15, 25 மற்றும் 50 சதவீத அடிப்படையில் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான பழிவாங்கல் வரிகளை அறிவித்துள்ள நிலையில் இந்த வரிகள் எதிர்வரும் செப்டம்பர் 8 முதல் அமுலுக்கு வரவுள்ளன.</p><p>

இதற்கிடையில், அமெரிக்காவைக் காட்டிலும் கனடாவின் பொருளாதாரம் பத்தில் ஒரு பங்கு மட்டுமே உள்ளதாலும், தனது ஏற்றுமதியில் 70 சதவீதத்தை அமெரிக்காவிற்கே அனுப்புவதாலும் கனடா இந்த வர்த்தகப் போரால் அதிகம் பாதிக்கப்படக்கூடும்.
</p><p>
அதன்படி ஒன்ராறியோ, கியூபெக், பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் நியூ பிரன்சுவிக் மாகாணங்களைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவர்.</p><p>

இந்த வர்த்தகப் போரால் கனடாவில் 100,000-க்கும் மேற்பட்ட வேலைகள் இழக்கப்படலாம் என சர்வதேச வர்த்தக ஆலோசகர்கள் அஞ்சுகின்றனர்.</p><p>

இதேவேளை, கனடாவிற்கு எதிரான தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக, ஒன்ராறியோ ஏரியை (Lake Ontario) இனி அமெரிக்க அரசு "அமெரிக்கா ஏரி" (Lake America) என்று அழைக்கும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
</p><p>
இதற்குப் பிரதமர் மார்க் கார்னி மற்றும் மனிட்டோபா மாகாணத்தின் முதல்வர் வாப் கினே (Wab Kinew) ஆகியோர் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-29T12:47:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆரம்பக்கட்ட தாமதே ஈஸ்டர் தாக்குதலுக்கு மூலகாரணம்!வெளியிடப்படாத பல சர்ச்சைகள் அம்பலம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-attorney-general-department-1788007238"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-attorney-general-department-1788007238</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதலை தடுப்பது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் விட்ட தவறை யாரும் இதுவரை பேசவில்லை என்றே தோன்றுகிறது.பூஜித் மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதலை தடுப்பது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் விட்ட தவறை யாரும் இதுவரை பேசவில்லை என்றே தோன்றுகிறது.</p><p>பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு கடமை தவறியமை மற்றும் அலட்சியப் போக்கு காரணமாக மரண தண்டனை விதிக்கப்படுமானால் சட்டமா அதிபர் திணைக்களத்தின்அலட்சிய போக்குக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? இவற்றை நாம் கேள்விக்குட்படுத்தக் கூடாதா? என சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதல் தொடர்பில் மயிர்க் கூச்செறியும் தகவல் ஒன்றை அவர் வெளியி்ட்டுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்ட தகவல்கள்..
</p><h2>
</h2><p></p><h2>சட்டமா அதிபரிடம் கோரப்பட்ட ஆலோசனை</h2><p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் சட்டமா அதிபரின் ஆலோசனைக் கோரி அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் சரியான மேற்பார்வையும் ஆர்வமும் காட்டவில்லை என்பதை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையிலான விசாரணை ஆணைக்குழு ஆராய்ந்தது அறிக்கை வெளியிட்டுள்ளது.
</p><p>அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு:
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு 2017 ஜூன் 07 திகதியிட்ட கடிதம் மூலம் C18/2017 எனும் கோப்பைச் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. </p><p>அதில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு சட்டமா அதிபரிடம் கேட்டுக் கொண்ட ஆலோசனையானது: "தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் இணையத்தளம் மற்றும் சமூக ஊடகக் கணக்குகளைத் தடை செய்ய முடியுமா மற்றும் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்து விசாரணை நடத்த முடியுமா?" என்பதாகும்.
</p><p>அப்போது அந்தப் துறைக்கு பொறுப்பான மேற்பார்வை அதிகாரியாக இருந்த சிரேஷ்ட அரச சட்டத்தரணி அசாத் நவாமிக்கு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பல கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65b2fb36-e143-4932-a9d4-840ccc352878/26-6a92d348e1528.webp' /></p><p>ஆனால் 15 ஜூன் 2017 ஆகும் போதே இந்தக் கோப்பு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற நிலையில் அசாத் நவாமி அதை அராய்ந்து பார்க்குமாறு அரச சட்டத்தரணி மலிக் அஸீசுக்கு குறிப்பொன்றை இட்டு பாரப்படுத்தியுள்ளார்.
</p><p>மீண்டும் (TID) 2018 ஜூன் 14 ஆம் திகதியிட்ட குறுந்தகடு (CD) மற்றும் மற்றொரு ஆவணத் தொகுப்பை அனுப்பும் வரை இந்தக் கோப்பு குறித்து எந்தவொரு கவனமும் செலுத்தப்பட்டதாக குறிப்பில்லை. </p><p>அப்படியானால், 15 ஜூன் 2017 அன்று கிடைத்த கோப்பு, 14 ஜூன் 2018 வரை எந்தவொரு கவனமும் செலுத்தப்படாமல் இருந்துள்ளது என்பது விசாரணை ஆணைக்குழுவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. </p><p>
மேலும் அரச சட்டத்தரணி மலிக் அஸீஸ் (TID)யால் அனுப்பப்பட்ட கோப்புக்கு முதலாவது குறிப்பு 12 மார்ச் 2019 அன்றே இடப்பட்டுள்ளது. </p><h2>தாமதத்திற்கான காரணங்கள்</h2><p>அதற்குள் கோப்பு சட்டமா அதிபர் திணைக்களத்திற்குக் கிடைத்து ஒன்றரை வருடங்களுக்கும் அதிகமான காலம் கடந்துவிட்டது. 
இந்த அத்தியாயத்தைப் படிக்க முடியாதவர்களுக்காகவே நான் இதனைக் கூறுகிறேன்: </p><p>இந்தக் கோப்பைக் கையாள்வதில் அரச சட்டத்தரணி அஸீஸ் தரப்பில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக விசாரணை ஆணைக்குழுவின் முன் உள்ள சாட்சியங்களிலிருந்து தெரியவருகிறது.</p><p><span style="color: inherit;">அரச சட்டத்தரணி அஸீஸின் சாட்சியம் மற்றும் ஆணைக்குழுவின் முன் உள்ள சாட்சியங்களைக் கருத்திற்கொண்டு,அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்துப் பரிசீலிக்குமாறு அரச சேவை ஆணைக்குழுவிற்குப் (Public Service Commission) பரிந்துரைக்கப்பட்டுள்து.</span></p><p>அதேபோல், C18/2017 கோப்பை அஸீஸிடம் ஒப்படைத்த பிறகு அக்கோப்பு தனக்குக் கிடைக்கவில்லை என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அசாத் நவாமி கூறுகிறார். </p><p>ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இக்கோப்பு பற்றி அவர் அறிந்துள்ளாராம். 
சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள இந்த ஆரம்பக்கட்ட தாமதத்தை நாம் ஈஸ்டர் விசாரணையில் எங்குமே காணவில்லை.
</p><p>தாக்குதல் நடப்பதற்கு முன்னரே நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஏனெனில், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு தாக்குதல் நடப்பதற்கு முன்னரே அந்த நபர்களைக் கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்தவே ஆலோசனை கேட்டிருந்தது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T12:46:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகை உலுக்கிய பேரழிவு; உடல்களை அடக்கம் செய்யவுள்ளதாக நேபாள அரசு அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nepa-announces-plans-to-bury-the-bodies-flood-1788007730"></link>
            <id>https://canadamirror.com/article/nepa-announces-plans-to-bury-the-bodies-flood-1788007730</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நேபாள வெள்ளத்தில் பலியாகி இதுவரை அடையாளம் கண்டறியபடாத நபர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக நேபாள அரசு அறிவித்துள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நேபாள வெள்ளத்தில் பலியாகி இதுவரை அடையாளம் கண்டறியபடாத நபர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக நேபாள அரசு அறிவித்துள்ளது.
</p><p>


திபெத் எல்லையில் அமைந்துள்ள நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோஷி ஆற்றில், கடந்த 26 ஆம் திகதி திடீரென பெரு வெள்ளம் ஏற்பட்டதில் 600 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததுடன் 2000 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2a68e27-d0bf-4e15-92e3-5392bcdef3a8/26-6a92d5340c906.webp' /></p><h2>600 க்கும் மேற்பட்ட உயிரிழப்பு</h2><p>
</p><p>


காணாமல் போயுள்ள ஆயிரக்கணக்கானோரைத் தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
</p><p>


இந்த நிலையில், நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் இன்று (29) காலை 10 மணி நிலவரப்படி 626 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அதிகப்படியாக சித்வான் பகுதியில் மட்டும் 233 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>



இதையடுத்து, மீட்கப்படும் உடல்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு சித்வான் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் போதிய இடவசதியும் கட்டமைப்பு வசதியும் இல்லை எனக் கூறப்படுகிறது.</p><p> மேலும், மீட்கப்பட்டு வரும் உடல்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், உடல்கள் சிதைவடைவதைத் தடுப்பது மிகுந்த சிரமம் என்றும் தெரிவித்துள்ளனர்.
</p><p>


இதனால், சுகாதார பாதிப்புகள் ஏற்பட்டு புதிய தொற்றுகள் உருவாகக் கூடும் என்பதால் அடையாளம் காணப்படாத உடல்களை தேவ்காட் பகுதியில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் அடக்கம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-29T12:46:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சென்னையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி முன்பதிவுக்கு அரசு வெளியிட உள்ள செயலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cumta-to-launch-app-for-autos-and-taxis-in-chennai-1788007299"></link>
            <id>https://news.lankasri.com/article/cumta-to-launch-app-for-autos-and-taxis-in-chennai-1788007299</id>
            <summary type="text">CUMTA to launch app for autos and taxis in chennai: சென்னையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி முன்பதிவு செய்ய அரசு தரப்பில் செயலி வெளியிடப்பட உள்ளது.

ஆட்டோ ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>CUMTA to launch app for autos and taxis in chennai: சென்னையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி முன்பதிவு செய்ய அரசு தரப்பில் செயலி வெளியிடப்பட உள்ளது.</p><h3>

ஆட்டோ டாக்ஸிக்கு அரசு செயலி </h3><p>

சென்னையில் ஆட்டோ, டாக்சி போன்றவற்றை முன்பதிவு செய்து பயணிக்க Rapido, uber போன்ற தனியார் நிறுவனங்களின் செயலிகள் உள்ளன.</p><p>

அதில் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் நிறுவனங்கள் அதிக கமிஷன் தொகை வசூலிப்பதாகவும், தங்களுக்கு போதிய வருமானம் இல்லை எனவும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e23eb160-d6e7-473d-a592-ed297c2b10c6/26-6a92d3866f6a5.webp' /></p><p>
இதே போல் பயணிகளும் சில ஓட்டுனர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் தெரிவித்து வந்தனர்.&nbsp;</p><p></p><p> 

இந்நிலையில் சட்டமன்றத்தில் பேசிய வீட்டு வசதித் துறை அமைச்சர் ராஜ்குமார், சென்னையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், பயணிகளுக்கு நியாயமான பயணக்கட்டணத்தை உறுதி செய்யவும் டிஜிட்டல் மீட்டர் உள்ளடக்கிய புதிய செயலி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f6ca121-c984-4b4f-a545-882d2d798a76/26-6a92d38511cc8.webp' /></p><p> 

இந்த செயலி சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து அதிகார அமைப்பால் (CUMTA) உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படும். </p><p>

இதில், பயணிகள் ஆட்டோவை முன்பதிவு செய்யவும், ஓட்டுநர்கள் முன்பதிவுகளை ஏற்கவும் வழிவகுக்கும்.
</p><p>
இதில் பயணத்தின் போது டிஜிட்டல் மீட்டர் இயக்கப்பட்டு, அதில் தூரம், நேரம் அதற்கான கட்டணம் காண்பிக்கப்படும். </p><p>

இதில், ஓட்டுநர்களுக்கு நேரடியாக ரொக்கமாகவோ/UPI மூலமாகவோ அல்லது செயலியில் உள்ள UPI தளங்கள் மூலமாகவோ பணம் செலுத்தலாம். </p><p>

மேலும், செயலி மூலமாகவோ அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமாகவோ பயணிகள் புகார்களை பதிவு செய்யலாம்.</p><p>

எரிபொருள் விலைக்கு ஏற்ப, அரசால் அவ்வப்போது கட்டணங்களை புதுப்பிக்க முடியும். </p><h3>

கட்டணங்களை உயர்த்த கோரிக்கை </h3><p>

போக்குவரத்துறை மானிய கோரிக்கையில் ஆட்டோ கட்டண உயர்வை அரசு அறிவிக்க வேண்டுமென ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.</p><p> 

இது தொடர்பாக தவெக ஆட்சி அமைந்த பிறகு அரசு மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கங்கள் இடையே 3 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d869bd64-baa6-49d2-bd7a-6c4db98ecc2a/26-6a92d385bc8e9.webp' /></p><p>

இதில், முதல் 1.5 கிலோமீட்டருக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.60ம், அதற்கடுத்த ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.30ம் கோரியுள்ளனர். </p><p>

மேலும், நிமிடத்திற்கு ரூ.1 காத்திருப்புக் கட்டணமும், சாதாரண கட்டணத்தைப்போல் ஒன்றரை மடங்கு இரவு நேரக் கட்டணமும் விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T12:42:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல மில்லியன் ரூபாய் ஊழல்..! ரணிலின் உறவினர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-s-nephew-accused-over-liquor-licence-deal-1787987635"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-s-nephew-accused-over-liquor-licence-deal-1787987635</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உறவினர் ஒருவருக்கு வழங்கப்பட்ட மதுபான உற்பத்தி உரிமம் தொடர்பில்&amp;nbsp; குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உறவினர் ஒருவருக்கு வழங்கப்பட்ட மதுபான உற்பத்தி உரிமம் தொடர்பில்&nbsp; குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
குறித்த நபர் அந்த உரிமத்தை தனது நண்பர்கள் இருவருக்கு விற்பனை செய்து பல மில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டியதாக சிவில் புலனாய்வு முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சய மகாவத்த குற்றம் சாட்டியுள்ளார்.</p><h2>ரணிலின் சகோதரரின் மகன்</h2><p>
</p><p>
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சஞ்சய மகாவத்த இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். </p><p>

நாட்டில் மதுபான உற்பத்தி உரிமங்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலேயே உள்ளதாகவும், தற்போது 13 உரிமங்கள் மட்டுமே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d07e1fc4-a333-4086-bbf3-a473d80cdf49/26-6a928b18192b7.webp' /></p><p> 

இவ்வாறான பெறுமதிமிக்க உரிமத்தைப் பெறுவதற்கு பொதுவாக பெருமளவு நிதி முதலீடு தேவைப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
முன்னாள் ஜனாதிபதியின் உறவினருக்கு இவ்வாறான உரிமம் வழங்கப்பட்டமை, இதன் பின்னணியில் பாரிய ஊழல் இடம்பெற்றிருக்கலாம் என்பதற்கான அறிகுறியாகும் எனவும் மகாவத்த தெரிவித்தார்.</p><p>இந்த விவகாரம் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) எதிர்வரும் வாரத்தில் முறையான முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><h2>நெருங்கிய தொடர்பு</h2><p>
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் எதிர்க்கட்சி உறுப்பினர் நிரஞ்சன் குமாரவும் கலந்துகொண்டார்.</p><p> 

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கும் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கும் இடையிலான நெருங்கிய தொடர்புகளை அவர் விமர்சித்ததுடன், அதனை உறுதிப்படுத்தும் வகையில் புகைப்பட ஆதாரங்களையும் முன்வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a66e42a-7f9c-4ac1-bd74-3782e1efea05/26-6a928b18eb92e.webp' /></p><p>
</p><p>
மேலும், மாஃபியா உறுப்பினர்களிடமிருந்து இலஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்படும் மூன்று சட்டத்தரணிகள் தொடர்பிலும் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.</p><p> 

அவர்கள் மீது இதுவரை சட்டத்தரணிகள் சங்கம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் நிரஞ்சன் குமார கேள்வி எழுப்பினார்.
</p><p>
இந்த ஊழல் மற்றும் திறமையின்மை குறித்த குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு வெளிப்படுத்துவதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.</p><p></p><p><br><br><b><i>you may like this..<br></i></b></p><p><b><i><br><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/0DVCSpZFM30" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-08-29T12:42:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பட்டப்பகலில் நடந்த பரபரப்பு - மர்ம கும்பலால் கடத்தப்பட்ட பெண் - பொலிஸார் துப்பாக்கி சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-open-fire-on-van-with-abducted-young-woman-1788006346"></link>
            <id>https://tamilwin.com/article/police-open-fire-on-van-with-abducted-young-woman-1788006346</id>
            <summary type="text">கொழும்பில் வைத்து இன்று(29) இளம் பெண் ஒருவர் நபர்களால் கடத்தப்பட்ட நிலையில், பொலிஸாரினால் அதிரடியாக மீட்கப்பட்டுள்ளார். 

நாரஹேன்பிட்டி, நாவல வீதியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் வைத்து இன்று(29) இளம் பெண் ஒருவர் நபர்களால் கடத்தப்பட்ட நிலையில், பொலிஸாரினால் அதிரடியாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p> 

நாரஹேன்பிட்டி, நாவல வீதியிலுள்ள பொலிஸ் வீதித் தடையை மீறி செல்ல முற்பட்ட வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
</p><p>
இந்நிலையில் சம்பவ இடத்தில் வாகனத்தையும் பெண்ணையும் கைவிட்டு கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.</p><h2><b>இளம் பெண் கடத்தல்</b></h2><p> 

கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் வாகனத்தை அவ்விடத்திலேயே விட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20475d14-ca28-4f88-a6d8-f3b49559b8c4/26-6a92d25280264.webp' /></p><p>பொலிஸாருக்கு இன்று பிற்பகல் கிடைத்த தகவலுக்கு அமைய, நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையக் குழுவினர் குறித்த வாகனத்தை வீதித் தடையில் நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.</p><p>

எனினும், வாகனம் நிறுத்தப்படாமல் தொடர்ந்து சென்றமையால், பொலிஸார் அதன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
</p><p>
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், 26 வயதான குறித்த பெண் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் வைத்து கடத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
</p><p>
தப்பிச் சென்ற நபர்களை கைது செய்யும் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p> 
</p>]]></content>
            <updated>2026-08-29T12:41:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு அருகில் 20 ஈரானிய கப்பல்கள் ; தாக்குதல் நடத்தப்படும் அபாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/20-iranian-ship-near-sri-lanka-water-1787992534"></link>
            <id>https://jvpnews.com/article/20-iranian-ship-near-sri-lanka-water-1787992534</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையின் பிரத்யேகப் பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாகக் கூறப்படும் கப்பல்கள் குறித்து அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாக வெளியுற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையின் பிரத்யேகப் பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாகக் கூறப்படும் கப்பல்கள் குறித்து அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாக வெளியுறவு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.</p><p>

இருப்பினும், குறித்த கப்பல்கள் இலங்கைக்குச் சொந்தமான நிலப்பரப்பிற்கு வெளியே இருப்பதால், அவை தொடர்பாக இலங்கைக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்றும், அக்கப்பல்களுக்கு எந்தவொரு வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4610db40-882b-4585-aa1a-05ff04d444cc/26-6a9299d81fc6d.webp' /></p><h2>தாக்குதல் நடத்தப்படும் அபாயம்</h2><p> 

 ஈரான் துறைமுகங்களை நோக்கி பயணிக்க முடியாமல் சுமார் 20 ஈரானிய எரிபொருள் கடற்போக்குவரத்து கப்பல்கள் தற்போது இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாக 'TankerTrackers' இணையதளம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>

அமெரிக்கா விதித்துள்ள கடற்படைத் தடை காரணமாகவே குறித்த கப்பல்களால் ஈரானிய துறைமுகங்களை நோக்கி பயணிக்க முடியாமல் போயுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.</p><p></p><p> </p><p>

இப்பின்னணியில், ஈரான் கொடியுடனான சுமார் 13 எரிபொருள் கடற்போக்குவரத்து கப்பல்களும், தடைகளைத் தவிர்க்கும் நிழற்படை ('Shadow Fleet') கப்பல்கள் சிலவும் பாதுகாப்புத் தேடி இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்திற்கு அருகில் தற்போது நங்கூரமிட்டுள்ளதாக 'TankerTrackers' இணையதளம் கூறுகிறது.</p><p></p><p> 

எனினும், அந்த இணையதளம் சுட்டிக்காட்டுவது யாதெனில், குறித்த கப்பல்களில் தற்போது எரிபொருள் எதுவும் இல்லை என்பதாகும். </p><p>

அதேவேளை கடந்த மார்ச் மாதம் இலங்கை கரைக்கு 19 கடல் மைல் தொலைவில் இருந்த 'ஐரிஷ் டேனா' (Iris Dena) கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தி மூழ்கடித்த பின்னணியில், தற்போது இலங்கையை ஒட்டி நங்கூரமிட்டுள்ள கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் உள்ளதாக&nbsp; &nbsp;தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> 

இருப்பினும், சர்வதேச சட்டத்தின் கீழ் நடுநிலை நாட்டின் கடற்கரையில் இருந்து 12 கடல் மைல்கள் வரை பரந்துள்ள அந்நாட்டின் பிராந்திய கடல் எல்லைக்குள் தங்கியிருக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவிற்கு அனுமதி இல்லை என்றும் 'TankerTrackers' இணையதளம் குறிப்பிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-29T12:36:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காரில் கடத்தப்பட்ட யுவதி ; பொலிஸார் துப்பாக்கிச் சூடு; கொழும்பில் பரபரப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-woman-abducted-in-car-police-open-fire-1788007060"></link>
            <id>https://jvpnews.com/article/young-woman-abducted-in-car-police-open-fire-1788007060</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; யுவதி ஒருவரைக் கடத்திச் சென்ற கார் ஒன்றின் மீது நாரஹேன்பிட்டி பொலிஸ் வீதித் தடையருகில் வைத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள சம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; யுவதி ஒருவரைக் கடத்திச் சென்ற கார் ஒன்றின் மீது நாரஹேன்பிட்டி பொலிஸ் வீதித் தடையருகில் வைத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இன்று (29) பகல் பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் குழுவொன்று குறித்த வீதித் தடையருகில் காரை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4df705b5-6706-4077-82ed-fec065e9fa62/26-6a92d295e8810.webp' /></p><h2>26 வயதான குறித்த யுவதி</h2><p> </p><p>

எனினும், கார் நிற்காமல் சென்றதையடுத்து, பொலிஸ் உத்தியோகத்தர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி காரை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p> 

அந்தச் சந்தர்ப்பத்தில் காரைச் செலுத்திய நபர், கடத்தப்பட்ட யுவதியையும் காரையும் அங்கேயே விட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். 

26 வயதான குறித்த யுவதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் வைத்துக் கடத்தப்பட்டுள்ளமை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p> 

தப்பிச் சென்ற சந்தேகநபரைத் தேடிப் கறுவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-29T12:35:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இறைச்சியாக்க தயார் நிலையில் இருந்த மாடுகள் மற்றும் மாட்டிறைச்சி என்பன மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cows-and-beef-are-the-salvation-1788006248"></link>
            <id>https://tamilwin.com/article/cows-and-beef-are-the-salvation-1788006248</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கொல்களம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு, பசுமாடுகள் உட்பட நான்கு மாடுகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன், 58 கிலோகிராம் மாட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கொல்களம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு, பசுமாடுகள் உட்பட நான்கு மாடுகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன், 58 கிலோகிராம் மாட்டிறைச்சியும் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p>இதேவேளை சட்டவிரோத கொல்களத்தினை நடத்தி வந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரையும் பொலிஸார்
கைது செய்துள்ளனர்.</p><p>குறித்த சம்பவம் இன்றைய தினம் (29.08.2026) பதிவாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ccba3b2-c9ff-469f-80a8-6078d3c6525b/26-6a92d15934b56.webp' /></p><h2>பொலிஸாரால் முற்றுகை</h2><p>பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இடம் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.</p><p>மூன்று பசுமாடுகள் உள்ளிட்ட நான்கு மாடுகள் இறைச்சியாக்க தயாராக
கட்டப்பட்டிருந்த நிலையிலும், ஏற்கனவே இறைச்சியாக்கப்பட்ட மாட்டின் 58 கிலோகிராம் இறைச்சியையும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3448de56-f8d7-4c5c-8c5b-95c2f7f730ce/26-6a92d15a2c9aa.webp' /></p><p>கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T12:32:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் பூங்கா ஒன்றில் பெண்ணின் சடலம்: பாதுகாப்பு வளையம் அமைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/woman-body-found-in-park-near-stadium-liverpool-1788005969"></link>
            <id>https://news.lankasri.com/article/woman-body-found-in-park-near-stadium-liverpool-1788005969</id>
            <summary type="text">Woman body found near premier league stadium:&amp;nbsp;பிரித்தானியாவில் கால்பந்து மைதானத்திற்கு அருகில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

பிரித்தானியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Woman body found near premier league stadium:&nbsp;பிரித்தானியாவில் கால்பந்து மைதானத்திற்கு அருகில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
</p><p>
பிரித்தானியாவின் பிரீமியர் லீக் மைதானத்திற்கு அருகிலுள்ள பூங்கா ஒன்றில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. </p><h2>பாதுகாப்பு வளையம்</h2><p>

லிவர்பூலின் பிரீமியர் லீக் கால்பந்து மைதானத்திற்கு அருகில் உள்ள ஸ்டான்லி பூங்காவிற்கு, நேற்றைய தினம் மதியம் காவல்துறையினர் விரைந்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdaee1d6-6fe8-4295-aac5-b267d4977f21/26-6a92cf4e4ec20.webp' />&nbsp;</p><p></p><p>

குறித்த பூங்காவில் பெண்ணொருவரின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்தனர். 

அதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. </p><p>

மெர்சிசைட் காவல்துறையினர், பெண்ணின் மரணம் தற்போது விளக்கப்படாத ஒன்றாக கருதப்படுவதாக கூறியுள்ளனர். </p><p>

மேலும், பெண்ணை அடையாளம் காணவும், அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கவும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. </p><p>

அத்துடன் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய உள்துறை அமைச்சகத்தின் பிரேத பரிசோதனை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p> 

 </p>]]></content>
            <updated>2026-08-29T12:20:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[110 புலம்பெயர்வோருடன் பிரித்தானியா நோக்கி புறப்பட்ட படகு: ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/migrant-died-72-rescued-from-boat-try-to-reach-uk-1788005821"></link>
            <id>https://news.lankasri.com/article/migrant-died-72-rescued-from-boat-try-to-reach-uk-1788005821</id>
            <summary type="text">One migrant dies and 72 rescued from small boat trying to reach UK: பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும்போது புலம்பெயர்வோர் படகொன்று விபத்துக்குள்ளானதில...</summary>
            <content type="html"><![CDATA[<p>One migrant dies and 72 rescued from small boat trying to reach UK: பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும்போது புலம்பெயர்வோர் படகொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார்.
</p><p>

பிரான்சிலிருந்து பிரித்தானியா நோக்கிப் புறப்பட்ட புலம்பெயர்வோர் படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><h3>
110 புலம்பெயர்வோருடன்...
</h3><p>
வியாழக்கிழமை நள்ளிரவு, 110 புலம்பெயர்வோருடன் ரப்பர் படகொன்று பிரான்சிலிருந்து பிரித்தானியா நோக்கிப் புறப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e7373d0-51c0-45d8-9496-b81ba14cc196/26-6a92cdbf0622f.webp' /></p><p>
அப்போது, படகில் ஏதோ பிரச்சினை என்பதை அறிந்த பிரான்ஸ் கடலோரக் காவல் படையினர் அந்தப் படகை நெருங்கியுள்ளார்கள்.
</p><p>
அந்தப் படகிலிருந்த ஒருவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை தேவை என்பது தெரியவரவே, அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்காக ஹெலிகொப்டர் ஒன்று வரவழைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>

ஆனால், ஹெலிகொப்டர் வருவதற்குள் அவர் உயிரிழந்துள்ளார்.</p><p>

படகிலிருந்த மேலும் மூன்று பேர் காயமடைந்திருந்த நிலையில், அவர்களில் ஒருவருக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டதாக கடலோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அத்துடன், உதவி கோரிய 72 புலம்பெயர்வோரை ஏற்றிக்கொண்டு கரை திரும்பியதாகவும் கடலோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T12:18:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெயிலர் 2 பாடலுக்கு கர்ப்பமாக இருப்பது தெரியாமல் ஆடினேன்!! நடிகை பூர்ணா ஓபன் டாக்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/jailer-2-song-without-knowing-i-was-pregnant-1788004840"></link>
            <id>https://viduppu.com/article/jailer-2-song-without-knowing-i-was-pregnant-1788004840</id>
            <summary type="text">நடிகை பூர்ணாதமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக திகழ்ந்து திருமணமாகி குழந்தைப் பெற்றப்பின் சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தவர் தான் ந...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகை பூர்ணா</h2><p>தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக திகழ்ந்து திருமணமாகி குழந்தைப் பெற்றப்பின் சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தவர் தான் நடிகை பூர்ணா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4caebf8d-9790-4a06-96e5-1cb3ef4c97d3/26-6a92c9eac142e.webp' /></p><p> தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் பூர்ணா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் ஆலோ அலப்பலோ என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். </p><p>சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், ஆலோ அலப்பலோ பாடலின் போது நடந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார். </p><h2>கர்ப்பமாக இருப்பது</h2><p>அதில், எனக்கு 5 மாதங்களுக்கு முன் தான் 2வது குழந்தை பிறந்தது. ஜெயிலர் 2வின் ஆலோ அலப்பலோ பாடலுக்காக நான் 6 நாட்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அகண்டா படத்தின் ஷூட்டிங்கிற்கு சென்றேன். அப்போது தான் நான் கர்ப்பமாக இருக்கும் விஷயம் எனக்கு தெரிந்தது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aebdc3af-3db8-4948-8441-b892a07bbbcc/26-6a92c9eb7517a.webp' /></p><p>அது மிகவும் கடினமாக நடனத்தை ஆடிவிட்டு, என் அம்மா நீ கர்ப்பமாக இருக்க வாய்ப்பே இல்லை என்று சொன்னார். மீண்டும் ஒருமுறை செக் செய்து பாரு என்று கூறினார். 2வது முறை செக் செய்தபோதும் கர்ப்பமாக இருப்பது உறுதியானது.</p><p> என்னுடைய இரண்டாவது குழந்தையை பார்க்கும் ஒவ்வொரு முறையும், அந்த பாடலுக்கு நடனமாடியது தான் நினைவுக்கு வரும். இப்போது அந்த பாடலை அனைவரும் பார்த்து பாராட்டும் போது மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அந்த பாடலுக்கு கிடைக்கும் அனைத்து பாராட்டுகளும் என் குழந்தையையே சேரும் என்று கூறியிருக்கிறார்.</p>]]></content>
            <updated>2026-08-29T12:00:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அல்ல போலேலோ நடனம் ஆடும்போது நான் கர்ப்பமாக இருந்தேன், ரஜினி சொன்ன விஷயம்... பூர்ணா ஓபன் டாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-poorna-talks-about-aloo-alappara-song-1788003558"></link>
            <id>https://cineulagam.com/article/actress-poorna-talks-about-aloo-alappara-song-1788003558</id>
            <summary type="text">ரஜினிகாந்த்சூப்பர் ஸ்டார் ரஜினி அடுத்தடுத்து பிஸியாக படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கடைசியாக 2025ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படம...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரஜினிகாந்த்</h2><p>சூப்பர் ஸ்டார் ரஜினி அடுத்தடுத்து பிஸியாக படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.</p><p> கடைசியாக 2025ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படம் வெளியாகி இருந்தது, அப்படத்தை தொடர்ந்து ரஜினி ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். </p><p>வரும் அக்டோபர் 15ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் அனிருத் இசையில் தயாராகி இருக்கும் முதல் சிங்கிள் அல்ல போலேலோ பாடல் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f23205e-06a2-4ee9-9b62-a365841e13ab/26-6a92c90b5a95a.webp' /></p><h2>பூர்ணா பேட்டி</h2><p>
அந்த பாடலில் நடிகை பூர்ணா ஸ்பெஷல் நடனம் ஆடியுள்ளார். பாடல் குறித்து அவர் பேசுகையில், 6 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது, எனக்கு 5 மாதங்களுக்கு முன்பு தான் 2வது குழந்தை பிறந்தது. </p><p>ஆலோ அலப்பலோ பாடலுக்கு நடனம் ஆடிவிட்டு அகண்டா படப்பிடிப்பிற்கு சென்ற பிறகுதான் நான் கர்ப்பமாக இருக்கும் விஷயம் எனக்கு தெரிந்தது. கடினமாக நடனம் ஆடிவிட்டு, என் அம்மா நீ கர்ப்பமாக இருக்க வாய்ப்பே இல்லை என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a316743-d599-4cd7-b202-9e6d380e8501/26-6a92c90a71bbe.webp' /></p><p> </p><p>எனவே மீண்டும் செக் செய்தபோது நான் கர்ப்பமாக இருப்பது உறுதியானது. எனது 2வது குழந்தை பார்க்கும் ஒவ்வொரு முறையும் அந்த பாடலுக்கு நடனமாடியது தான் நினைவுக்கு வருகிறது என கூறியுள்ளார். </p><p>அதேபோல் படப்பிடிப்பில் தன் கண்களை பார்த்துவிட்டு உங்களுடைய கண் மிகவும் பவர்ஃபுல்லான கண் என ரஜினி பாராட்டியதையும் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-29T12:00:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகர் ரியோவின் ராம் அண்ட் லீலா படத்தின் இறுதி வசூல் இதுதான்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actor-rio-raj-ram-and-leela-movie-bo-1787987105"></link>
            <id>https://cineulagam.com/article/actor-rio-raj-ram-and-leela-movie-bo-1787987105</id>
            <summary type="text">நடிகர் ரியோரியோ தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர். இவர் நடிப்பில் ஜோ, ஆண்பாவம் பொல்லாதது ஆகிய படங்கள் மெகா ஹிட் ஆனது. இதை தொடர்ந்து நல்ல எதி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகர் ரியோ</h2><p>ரியோ தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர். இவர் நடிப்பில் ஜோ, ஆண்பாவம் பொல்லாதது ஆகிய படங்கள் மெகா ஹிட் ஆனது. </p><p>இதை தொடர்ந்து நல்ல எதிர்பார்ப்பில் வெளிவந்த படம் ராம் அண்ட் லீலா. இப்படம் ரசிகர்களிடம் ட்ரைலர் மூலம் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியது. </p><p>ஆனால், படம் கலவையான விமர்சனங்களைப் பெற, வீக்கெண்ட் தொடர்ந்து பெரிய வசூல் எதுவுமில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c87c388-4b60-474b-a9d7-b7bd1129153d/26-6a9284a29b42f.webp' /></p><h2>பாக்ஸ் ஆபிஸ்</h2><p>தற்போது தமிழகம் முழுவதும் இந்த படம் ரிலிஸான 90% தியேட்டரில் இருந்து எடுக்கப்பட்ட நிலையில், இறுதி வசூலாக இந்த படம் உலகம் முழுவதும் ரூ 4 கோடிகள் வரை வசூல் வந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>கண்டிப்பாக இதிலிருந்து மீண்டு ரியோ வெற்றி பாதைக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/iDXAMgj-Pso" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-29T11:58:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்பட தொடங்கியுள்ள எல் நினோ தாக்கத்திற்கான அறிகுறிகள்! தீவிர மாற்றங்கள் ஏற்படுமென எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1787998758"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1787998758</id>
            <summary type="text">பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்து வருவதன் காரணமாக, உலகளவில் பல்வேறு வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றதாக முன்னாள் சிரேஷ்ட பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்து வருவதன் காரணமாக, உலகளவில் பல்வேறு வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றதாக முன்னாள் சிரேஷ்ட புவியியல் துறை பேராசிரியர் கலாநிதி எஸ்.அண்டனி நோர்பர்ட் தெரிவித்துள்ளார். </p><p>

ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். </p><p>

மேலும் தெரிவிக்கையில், பசிபிக் பெருங்கடலின் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக, ஜப்பான், சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கடும் மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் சூறாவளி போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்படுகின்றன.
</p><p>
சர்வதேச மற்றும் உள்நாட்டு வானிலை நிபுணர்களின் கருத்துகளின் படி, கடந்த ஜூன் மாதம் முதல் எல் நினோ தாக்கத்திற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.</p><h2>எல் நினோ தாக்கம் தீவிரம்</h2><p>
</p><p>
கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கமான அளவைவிட அதிகரித்து வருவது, எல் நினோ தாக்கம் தீவிரமடைவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கிறது. 

மே முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளிலும் தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை ஓரளவு கிடைக்கக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ffe4107-c9e4-4fbe-b870-91c076f75f79/26-6a92c6969607b.webp' /></p><p>

செப்டெம்பர் மாதத்துடன் அதன் தாக்கம் குறையக்கூடும். புவி வெப்பமயமாதல் மற்றும் வளிமண்டல வெப்பநிலை அதிகரிப்பு ஆகியவை எல் நினோ போன்ற காலநிலை நிகழ்வுகளின் தீவிரத்துக்கு பங்களிக்கக்கூடும்.
</p><p>
குறிப்பாக, படிம எரிபொருட்களின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் பசுமைக்குடில் வாயுக்களின் அதிகரித்த உமிழ்வு ஆகியவை வளிமண்டல வெப்பநிலை உயர்வுக்கு முக்கிய காரணிகளாக உள்ளன.</p><h2>வளிமண்டலத்தில் கலக்கும் தூசி</h2><p> </p><p>

அதேவேளை, உலகின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் யுத்த நடவடிக்கைகளால் கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட வாயுக்களும் தூசுத் துகள்களும் அதிகளவில் வளிமண்டலத்தில் கலக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a8d6729-0ca1-4558-a861-9ab9a29a35ad/26-6a92c69780393.webp' /></p><p>
</p><p>
எண்ணெய்க் களஞ்சியங்கள் மற்றும் கப்பல்கள் சேதமடைதல், சுத்திகரிப்பு நிலையங்களில் ஏற்படும் தீ மற்றும் வெடிப்புகள் உள்ளிட்ட சம்பவங்களால் அதிகளவில் புகை மற்றும் மாசுப்பொருட்கள் வளிமண்டலத்தில் கலப்பதும் சுற்றுச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.</p><p> 

இத்தகைய காரணிகளால் ஏற்படும் வளிமண்டல மாசுபாடு மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு ஆகியவை உலகளாவிய காலநிலை மாற்றங்களை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T11:56:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய் பிரதமர் ஆவாரா... விஜயகாந் பிரேமலதா கமெண்ட்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cm-vijay-become-pm-vijayakanth-premalatha-comment-1788001387"></link>
            <id>https://jvpnews.com/article/cm-vijay-become-pm-vijayakanth-premalatha-comment-1788001387</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் , மக்களிடம் உள்ள செல்வாக்கு காரணமாக எதிர்காலத்தில் இந்திய பிரமராக வாய்ப்பு உள்ளதாக பரவலாக பேசப்படுகின்றது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் , மக்களிடம் உள்ள செல்வாக்கு காரணமாக எதிர்காலத்தில் இந்திய பிரமராக வாய்ப்பு உள்ளதாக பரவலாக பேசப்படுகின்றது.</p><p> 

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e48d8e72-f7e8-46a4-873c-290a79c3aef2/26-6a92bc6cba1e6.webp' /></p><h2>யாருக்கு என்ன எழுதி இருக்கிறதோ அது நடக்கும்</h2><p> ‘ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு, நம்பிக்கை இருக்கிறது, அடுத்த கட்டம் செல்வதற்கான உரிமை இருக்கிறது,&nbsp; அதுபற்றி எந்த ஒரு கருத்தும் நான் சொல்ல விரும்பவில்லை&nbsp; ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் எல்லா உரிமையும் உண்டு.. யாருக்கு என்ன தலையில் எழுதி இருக்கிறதோ அது நடக்கும் என்பதே என் கருத்து’ எனக் கூறியிருக்கிறார்.</p><p></p><p>

நடிகராக இருந்த விஜய் இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியிருக்கிறார். </p><p> அவரின் தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று விசிக, கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக், காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தற்போது தமிழகத்தில் ஆட்சி அமைத்திருக்கிறது.</p><p></p><p>
</p><p>
 
தமிழகத்தில் மட்டுமல்லாமல் விஜய்க்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் வட மாநிலங்களிலும் மவுசு அதிகரித்து வருகிறது. அடிப்படையில் அவர் ஒரு நடிகர் என்பதால் ஒரு கவர்ச்சிகரமான ஒரு முதலமைச்சராகவே அவர் பார்க்கப்படுகிறார். </p><p>இதன் காரணமாக 2029 நடக்கும் பாராளுமன்ற தேர்தலில் முதலமைச்சர்&nbsp; &nbsp;விஜய் முதல் பிரதமர் ஆவார் என பரவலாக பேசப்படுகின்றது.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-29T11:55:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[43 வயதிலும் நினைவில் நிற்கும் முதல் காதல்... அனுஷ்கா பகிர்ந்த சுவாரஸ்ய நினைவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/actress-anushka-shetty-share-her-1st-love-story-1788002852"></link>
            <id>https://manithan.com/article/actress-anushka-shetty-share-her-1st-love-story-1788002852</id>
            <summary type="text">நடிகை அனுஷ்கா ஷெட்டி தனது பள்ளிப் பருவத்தில் நடந்த சுவாரஸ்யமான காதல் சம்பவம் ஒன்றை சமீபத்திய நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.அவரது இந்தப் பேச்சு தற்போது ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை அனுஷ்கா ஷெட்டி தனது பள்ளிப் பருவத்தில் நடந்த சுவாரஸ்யமான காதல் சம்பவம் ஒன்றை சமீபத்திய நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.அவரது இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.</p><h2>நடிகை அனுஷ்கா</h2><p>
</p><p>
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அனுஷ்கா ஷெட்டி. தனது அழகாலும், நடிப்புத் திறமையாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர், குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/469b560e-7671-4098-a56a-f58e80ea290e/26-6a92c804f1dd6.webp' /></p><p> </p><p>குறிப்பாக, கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு நடிப்பதில் அனுஷ்கா காட்டிய அர்ப்பணிப்பு அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.</p><p>

ரஜினிகாந்த், விஜய், சூர்யா என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடனும், நாகார்ஜுனா, பிரபாஸ், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.</p><p>பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும், தனக்கான தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியவர் அனுஷ்கா.

திரையுலகில் அறிமுகம்
2005-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘சூப்பர்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் அனுஷ்கா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6412355a-13c6-4e7c-98fc-7a512a7937fc/26-6a92c805a67b7.webp' /></p><p>அதன் பின்னர் மாதவன் நடிப்பில் வெளியான ‘ரெண்டு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
</p><p>
தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்த அனுஷ்காவுக்கு, ‘அருந்ததி’ திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.</p><p> அந்தப் படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், அனுஷ்காவை ஒரு திறமையான நடிகையாகவும் நிலைநிறுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f76fa7a1-7b49-4c24-a58c-3a5bf55caffa/26-6a92c8065a8fb.webp' /></p><p>
</p><p>
அதன்பிறகு ‘வேட்டைக்காரன்’, ‘சிங்கம்’, ‘லிங்கா’ உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். </p><p>தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி நட்சத்திரமாக வலம் வந்தார்.</p><p>அனுஷ்காவின் திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க மற்றொரு படம் ‘இஞ்சி இடுப்பழகி’. இந்தப் படத்திற்காக அவர் தனது உடல் எடையை கணிசமாக அதிகரித்து கதாபாத்திரத்தில் நடித்தார்.
</p><p>
ஒரு கதாபாத்திரத்திற்காக தனது தோற்றத்தையே மாற்றிக்கொள்ள அனுஷ்கா எடுத்துக்கொண்ட அந்த முயற்சி அப்போது திரையுலகில் பெரிதும் பேசப்பட்டது.</p><p> படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும், கதாபாத்திரத்திற்காக அவர் செய்த மெனக்கெடல் மற்றும் அர்ப்பணிப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பாராட்டைப் பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98ca7e4c-141a-4dea-8cc8-ff1c9e2b4220/26-6a92c8070bfca.webp' /></p><p></p><p>
</p><h2>
பிரபாஸ் உடனான திருமண வதந்தி
</h2><p>இதனிடையே, தற்போது 43 வயதாகும் அனுஷ்கா ஷெட்டி இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவரது திருமணம் குறித்து அவ்வப்போது பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
</p><p>
குறிப்பாக, நடிகர் பிரபாஸும் அனுஷ்காவும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக பல ஆண்டுகளாகவே வதந்திகள் பரவி வந்த நிலையில், பின்னர் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே என்ற செய்திகளும் வெளியானது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e78291cd-bb81-4a1d-a114-20a598890783/26-6a92c807b20d5.webp' /></p><p></p><p>இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை அனுஷ்கா, தான் 6-ம் வகுப்பு படிக்கும்போது தனக்கு நேர்ந்த முதல் காதல் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.</p><p>அனுஷ்கா குறிப்பிடுகையில, “நான் 6-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு பையன் என்னிடம் வந்து ‘ஐ லவ் யூ’ என்று காதலை சொன்னார். அந்த வயதில் அதற்கு என்ன அர்த்தம் என்று கூட எனக்கு தெரியாது. </p><p>ஆனால், அந்த பையன் அதை சொன்னது நான் ஓகே சொல்லிவிட்டேன். அது என் வாழ்க்கையில் அழகான நினைவுகள்” என்று கூறியிருந்தார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T11:53:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மணற்காடு சவுக்கங்காட்டில் தொடரும் தீ : உலங்குவானூர்தி மூலம் கட்டுப்படுத்த நடவடிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/helicopter-operation-to-control-fire-in-forest-1788002140"></link>
            <id>https://ibctamil.com/article/helicopter-operation-to-control-fire-in-forest-1788002140</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - மருதங்கேணி, மணற்காட்டுப் பகுதியில் உள்ள சவுக்குக்காட்டில்
நேற்று ஏற்பட்ட தீ விபத்து தொடர்ந்து எரிந்து வருகின்ற நிலையில், பெருமளவிலான
ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - மருதங்கேணி, மணற்காட்டுப் பகுதியில் உள்ள சவுக்குக்காட்டில்
நேற்று ஏற்பட்ட தீ விபத்து தொடர்ந்து எரிந்து வருகின்ற நிலையில், பெருமளவிலான
சவுக்கு மரங்கள் தீக்கிரையாகியுள்ளதுடன், தீ மேலும் பரவக்கூடிய அபாயமும்
காணப்படுகின்றது.</p><p>

தீயணைப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நேற்றைய தினத்திலிருந்து
முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தீயை விரைவாகக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p>இந்தநிலையில், மாவட்ட அனர்த்த
முகாமைத்துவ உதவிப் பணிப்பாளரின் ஒருங்கிணைப்பின் ஊடாக உலங்குவானூர்தி மூலம்
தீயைக் கட்டுப்படுத்துவற்கு, யாழ்ப்பாண மாவட்ட
அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><p></p><h2>தேவையான நடவடிக்கைகள்</h2><p>
</p><p>
தற்போது உலங்குவானூர்தி மூலம் தீயணைக்கும் நடவடிக்கை தொடர்ந்து
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
</p><p>
தீ ஏற்பட்டுள்ள பகுதியின் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதுடன், தீ
மேலும் பரவுவதைத் தடுப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை
உறுதிப்படுத்துவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f95216d1-154c-46c6-bdbf-d21580fbf63d/26-6a92c26d715a3.webp' /></p><p>
</p><p>
மேலும், இவ்விடயம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் கடற்றொழில்,
நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்
குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரினதும், யாழ்ப்பாண
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மருதங்கேணி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின்
தலைவருமான ஜெயானந்தமூர்த்தி ரஜீவனதும் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p>

சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட்டு, தீயை
முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T11:27:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் தலைநகர் அருகே ரஷ்யா அதிரடி தாக்குதல்: கிடங்கில் பயங்கர வெடிப்பு - 27 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/russian-drone-strike-kills-27-near-kyiv-1788000372"></link>
            <id>https://ibctamil.com/article/russian-drone-strike-kills-27-near-kyiv-1788000372</id>
            <summary type="text">உக்ரைன் தலைநகர் கெய்வ் அருகே உள்ள கிடங்கு ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலால் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.இவ்விபத்தில் 27 பேர் உயிரிழந...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் தலைநகர் கெய்வ் அருகே உள்ள கிடங்கு ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலால் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>இவ்விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் பல மக்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>
கெய்வ் பிராந்திய இராணுவ நிர்வாகத்தின் தலைவர் தைமுர் தகாச்சென்கோ (Tymur Tkachenko) இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.</p><p></p><h2>இராணுவ ஆயுதங்கள்</h2><p>குறித்த அறிக்கையில், இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் எனவும் அறிக்கையில் அவரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78f9a375-fb33-47cf-a3bc-019bcd2a83be/26-6a92c1fb7be23.webp' /></p><p>இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் வெடிமருந்துகளைச் சேமித்து வைக்கக் கூடாது என்ற விதிமுறைகள் உள்ளன எனக் குறிப்பிட்டு இச்சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வ குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>ட்ரோன் தயாரிப்பு உபகரணங்கள் மற்றும் இராணுவ ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கையே தங்களது படைகள் துல்லியமாகத் தாக்கி அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>இவ்வாறு புச்சா மாவட்டத்தில் உள்ள மைலா (Myla) கிராமத்தில் அமைந்திருந்த கிடங்கு மீது ரஷ்ய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதில் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் வெடித்துச் சிதறி அப்பகுதி முழுவதும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-29T11:27:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனை குறிவைத்து ரஷ்யா நடத்திய தாக்குதல்: 27 பேர் உயிரிழப்பு, 50 கட்டிடங்கள் சேதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-attacks-bucha-district-27-dead-1788002672"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-attacks-bucha-district-27-dead-1788002672</id>
            <summary type="text">உக்ரைனின் புச்சாவில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 27 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்
சனிக்கிழமை உக்ரைனிய தலைநகர் கீவ் அருகே உள...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் புச்சாவில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 27 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்
</h2><p>சனிக்கிழமை உக்ரைனிய தலைநகர் கீவ் அருகே உள்ள புச்சா மாவட்டத்தில் ரஷ்ய படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 27 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> அத்துடன் ரஷ்யா நடத்திய இந்த தாக்குதலில் குறைந்தது 50 கட்டிடங்கள் சேதமடைந்து இருப்பதாக மண்டல ராணுவ நிர்வாகத்தின் தலைவர் தைமூர் த்காச்சென்கோ தகவல் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef2a99aa-738a-4455-9594-234c775c9c07/26-6a92c1a5cca1f.webp' /></p><p></p><p> ரஷ்யாவின் இந்த திடீர் தாக்குதலால் அருகிருந்த வீடுகள் மற்றும் உணவகங்களில் தீ விபத்து ஏற்பட்டது.</p><p> Myla கிராமத்தில் உள்ள கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T11:25:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்த 9 வீரர்கள்: பாகிஸ்தானுக்கு மரண அடி கொடுத்த இங்கிலாந்து அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/england-lead-by-261-runs-in-lord-s-test-1788002658"></link>
            <id>https://news.lankasri.com/article/england-lead-by-261-runs-in-lord-s-test-1788002658</id>
            <summary type="text">
England lead by 261 runs in lord&#039;s test: பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 261 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

லார்ட்&#039;ஸில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
England lead by 261 runs in lord's test: பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 261 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.
</p><p>
லார்ட்'ஸில் நடந்து வரும் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், இங்கிலாந்து அணி 81 ஓட்டங்கள் எடுத்துள்ள நிலையில் மழை குறுக்கிட்டுள்ளது.&nbsp;</p><h2>இங்கிலாந்து&nbsp;290 ஓட்டங்கள் </h2><p>

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்'ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cdad858-21c2-48ea-b86a-cb7b6a95c3dc/26-6a92c225b48b8.webp' /></p><p></p><p>
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. 

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணியில், ஷான் மசூத் 1 ரன்னில் ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
</p><p>
அடுத்து வந்த ஷாஃபிக் (5), பாபர் அஸாம் (8) ஆகியோரை டங் வெளியேற்ற, சவுத் ஷகீல் 16 ஓட்டங்களில் ஓலி ராபின்ஸன் பந்துவீச்சில் lbw ஆனார். </p><p>

அதன் பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி 110 ஓட்டங்களுக்கு சுருண்டது.&nbsp;</p><h2>மழை குறுக்கிட</h2><p>

அதிகபட்சமாக அஸான் அவைஸ் (Azan Awais) 7 பவுண்டரிகளுடன் 46 ஓட்டங்கள் எடுத்தார். ஓலி ராபின்ஸன் 4 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும், ஜோஷ் டங் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
</p><p>
இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 81 ஓட்டங்கள் எடுக்க மழை குறுக்கிட ஆட்டம் தடைப்பட்டுள்ளது.
</p><p>
கே 30 ஓட்டங்களுடனும், ஹாரி ப்ரூக் 7 ஓட்டங்களுடனும் களத்தில் நிற்க இங்கிலாந்து 261 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b87fb1ba-d39f-4d76-8fe2-40b53a4bdbb4/26-6a92c22672ce2.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-29T11:24:51+00:00</updated>
        </entry>
    </feed>
