<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-09T11:40:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிற்கு பேரிடி : ஹோர்முஸ் நீரிணையில் ஆளில்லா நீர்மூழ்கி உளவு கப்பலை கைப்பற்றியது ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-spy-submarine-seized-by-iran-in-hormuz-strait-1788952589"></link>
            <id>https://ibctamil.com/article/us-spy-submarine-seized-by-iran-in-hormuz-strait-1788952589</id>
            <summary type="text">அமெரிக்க இராணுவத்தின் மிகவும் நவீனமான திறன்மிக்க ஆளில்லா நீர்மூழ்கி உளவு கப்பலை ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் கைப்பற்றியுள்ளது.

இந்த நீர்மூழ்கி கப்பலான...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க இராணுவத்தின் மிகவும் நவீனமான திறன்மிக்க ஆளில்லா நீர்மூழ்கி உளவு கப்பலை ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் கைப்பற்றியுள்ளது.
</p><p>
இந்த நீர்மூழ்கி கப்பலானது மேல் தளத்திற்கு திரும்பாமல் 10 நாட்கள் வரை செயல்படக்கூடியது என்றும் 6,000 மீட்டர் ஆழம் வரையில் மூழ்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அன்டுரிலின் என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.</p><h2>‘டைவ் எல்டி’ என்ற ஆளில்லா நீர்மூழ்கி கப்பல்</h2><p>இதுகுறித்து இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான செபா நியூஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘டைவ் எல்டி’ என்ற ஆளில்லா நீர்மூழ்கி கப்பலை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Footage released by Iranian media shows what the IRGC claims is an American Dive-LD unmanned submarine captured today. Iran says the vessel is now in its possession. <a href="https://t.co/POWlEHHnd5">pic.twitter.com/POWlEHHnd5</a></p>&mdash; Open Source Intel (@Osint613) <a href="https://x.com/Osint613/status/2097390208249389519?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
மேலும் ஹோஸ் நீரிணைக்கு மேல் பறந்த MQ-9 ரீப்பர் ட்ரோன் ஒன்றை தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவித்துள்ளது.</p><p></p><p>


</p><h2>அமெரிக்க இராணுவம் பதில் அறிக்கை</h2><p>ஈரான் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து, அமெரிக்க இராணுவம் ஒரு பதில் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், பிராந்திய கடல் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டிருந்த போது, ஒரு நாளுக்கு முன்பு அமெரிக்க ஆளில்லா விமானங்களில் ஒன்று செயல் இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9f40069-8885-484f-98fd-37caf4db3d9c/26-6aa144d2b9bd2.webp' /></p><p>

மேலும் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் குறித்து கூறுகையில், தரவுகளை சேகரிக்கவோ அல்லது இரகசிய சோனார் மற்றும் ராடர் கருவிகள், அந்த ட்ரோனில் இடம்பெறவில்லை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T11:36:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா மீது பதிலடி கொடுக்கும் வகையிலான கனடாவின் வரிகள்: எந்தெந்த பொருட்கள் பாதிக்கப்படும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/products-to-affect-in-canada-to-us-counter-tariff-1788940867"></link>
            <id>https://news.lankasri.com/article/products-to-affect-in-canada-to-us-counter-tariff-1788940867</id>
            <summary type="text">List of products from the United States subject to counter tariffs: அமெரிக்கா மீதான கனடாவின் பதிலடி வரியால் பாதிக்கப்படவிருக்கும் பொருட்கள் குறித்த வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>List of products from the United States subject to counter tariffs: அமெரிக்கா மீதான கனடாவின் பதிலடி வரியால் பாதிக்கப்படவிருக்கும் பொருட்கள் குறித்த விவரம்.
</p><p>
கனடா அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தகப்போர் மும்முரமாகிவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bba6c30-caed-4872-9b29-c3fba2581d5a/26-6aa112449e40f.webp' /></p><p>

27.6 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான கனேடியப் பொருட்கள் மீது 50 சதவிகித சுங்க வரியை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.&nbsp;</p><p>
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதே 27.6 பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்கள் மீது 15 முதல் 50 சதவிகித சுங்க வரி விதிக்க கனடா முடிவு செய்துள்ளது.
</p><p>
விடயம் என்னவென்றால், இந்த வரிவிதிப்பால் கனேடிய மக்களும்தான் பாதிக்கப்பட உள்ளார்கள். ஏனென்றால், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அந்தப் பொருட்களை கனேடியர்கள்தான் வாங்கப்போகிறார்கள்!
</p><h3>
எந்தெந்த பொருட்கள் பாதிக்கப்படும்?
</h3><p>
கனடாவின் பதிலடி வரி விதிப்பால் அதிக அளவில் பாதிக்கப்படப்போவது உணவு மற்றும் பானங்கள்தான். உணவு தயாரிக்கத் தேவையான பொருட்கள், பால் பொருட்கள், ஆகியவை அதிகம் பாதிக்கப்பட உள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac3ee1c8-b3c0-4797-8f58-5bc9b6f325ff/26-6aa112454fe53.webp' /></p><p>
அடுத்தபடியாக, வீட்டு உபயோகப் பொருட்களும், விவசாயத்துக்குத் தேவையான பொருட்களும் விலை உயர இருக்கின்றன.
</p><p>
விவசாயத்துக்குத் தேவையான பொருட்கள் விலை உயர உள்ளதால், அதுவும் உணவுப்பொருட்கள் விலையை பாதிக்கக்கூடும்.&nbsp;</p><p></p><p>
மேலும், கடல் உணவுகள், மரச்சாமான்கள், அழகு சாதனப்பொருட்கள், ஆண்களுக்கான உடைகள், பாதுகாப்பு உடைகள் போன்றவையும் விலை அதிகரிக்கலாம்.</p><p>

இதுபோக, கிரேன்கள், ஜாக் மற்றும் ஃபோர்க்லிஃப்ட், ரயில் பெட்டிகள், இயந்திரங்களில் பொருத்தப்படும் பம்புகள், மின்விசிறிகள் ஆகியவையும் விலை உயரலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86c87021-067e-4a18-b2dc-5a9d1facdf67/26-6aa1124601b2d.webp' /></p><p>

இவற்றை எல்லா பொதுமக்களும் வாங்குவதில்லை என்பது உண்மைதான். ஆனால், அவற்றை வாங்கும் நிறுவனங்கள் அவற்றிற்கான செலவை நுகர்வோர் மீதுதான் திணிக்கும். ஆக, அதிலும் மக்கள்தான் பாதிக்கப்பட உள்ளார்கள்.
</p><p>
மேலும், அமெரிக்க ஸ்டீல், காப்பர் தயாரிப்புகளும் விலை அதிகமாக உள்ளன.
</p><p>
ட்ரம்ப் ஜனாதிபதியானதைத் தொடர்ந்து, அமெரிக்கா கனடா மீது வரிகள் விதிக்கத் துவங்கியதிலிருந்தே கனேடிய மக்கள் பலர் கனேடிய தயாரிப்புகளையே வாங்கத் துவங்கியுள்ளார்கள்.
</p><p>
விடயம் என்னவென்றால், அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான இந்த வரிப்போரால், அவைகளும் விலை உயர உள்ளன.
</p><p>
ஆனாலும், தாங்கள் கனேடியப் பொருட்களையே வாங்கப்போகிறோம் என உறுதியாகக் கூறுகிறார்களாம் 60 சதவிகித கனேடியர்கள்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T11:35:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் விஹாரைகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/there-cant-be-two-laws-for-south-and-north-1788952617"></link>
            <id>https://tamilwin.com/article/there-cant-be-two-laws-for-south-and-north-1788952617</id>
            <summary type="text">முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தில் காணப்படும் விஹாரைகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க தெரிவித்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தில் காணப்படும் விஹாரைகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>குறித்த விஹாரைகளுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>
எமது மக்கள் முல்லைத்தீவு விகாரைக்கு செல்ல ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5b62ddd-bb33-44e9-b46a-a88096c402e2/26-6aa14420610e1.webp' /></p><p>
இதை செய்ய முடியாது எனவும் வடக்கிற்கு ஒரு நீதியும் தெற்கிற்கு ஒரு நீதியும் இருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p> நாமல் ராஜபக்சவை கைது செய்யும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய தரப்புக்கள் மகிழ்ச்சி அடையும் என தெரிவித்துள்ளார்.
</p><p>எனினும் தங்களால் அவ்வாறு மகிழ்ச்சி அடைய முடியாது என தெரிவித்துள்ளார்.</p><p>
ராணுவத்தைச் சேர்ந்த படை வீரர்கள் காதலிக்காது, திருமணம் செய்து கொள்ளாது 17 18 வயதிலேயே ராணுவத்தில் இணைந்து உயிர்த்தியாக்கம் செய்து இந்த நாட்டை பாதுகாத்தனர் என தெரிவித்துள்ளார்.
</p><p>சில ராணுவ படை வீரர்கள் முதல் முறை விடுமுறையை கூட பெற்றுக் கொண்டு வீடு திரும்ப முடியாது உயிரிழந்திருக்கிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>வடகிழ் சிங்கள மக்கள் செல்வதனால் வடக்கு மக்களே பயனடைகின்றார்கள் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
</p><p>ஒரே நாட்டில் இரண்டு விதமான சட்டங்கள் இருக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
ஒவ்வொரு புலம்பெயர் அமைப்புகளுக்கு தேவையான வகையில் இந்த நாட்டை ஆட்சி செய்ய இடம் அளிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>படைவீரர்கள் உயிர் தியாகம் செய்து இந்த நாட்டை பாதுகாத்தனர் எனவும் எனவே அவ்வாறான ஓர் பின்னணியில் நாட்டை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் சாமர சம்பத் தசாநாயக்க தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T11:33:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்கவில் பல கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் இலங்கை பெண்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2-female-arrested-at-katunayake-with-50-million-1788951308"></link>
            <id>https://ibctamil.com/article/2-female-arrested-at-katunayake-with-50-million-1788951308</id>
            <summary type="text">சட்டவிரோத&amp;nbsp;‘குஷ்’ போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்தி வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு செல்ல முயன்ற இரு இலங்கை வர்த்தகப் பெண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோத&nbsp;‘குஷ்’ போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்தி வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு செல்ல முயன்ற இரு இலங்கை வர்த்தகப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைபெருளின் மொத்த பெறுமதி 5 கோடியே 37 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் என கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><p>குறித்த பெண்கள் கட்டுநாயக்க விமான நிலைய காவல் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் இன்று (09.09.2026) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>பல கோடி பெறுமதியான போதைப்பொருள்</h2><p> </p><p>இவர்கள் இருவரும் கொழும்பு, தெமட்டகொட மற்றும் தொட்டலங்க பகுதிகளைச் சேர்ந்த 33 மற்றும் 35 வயதுடையவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58f08803-136e-48a0-b1b6-e0afdd4e4cc3/26-6aa143a926671.webp' /></p><p>
சந்தேகநபர்கள் இன்று காலை 10.55 மணியளவில் தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL-403 விமானம் மூலம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
</p><p>
அவர்கள் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளை சோதனையிட்டபோது, காற்று உட்புகாத வகையில் தயாரிக்கப்பட்ட ஐந்து பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ 372 கிராம் ‘குஷ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p>

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய காவல் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T11:33:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய திரைப்படங்களில் அந்தந்த மாநிலங்களில் அதிக வசூல் செய்த படங்கள் லிஸ்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/highest-grossing-indian-films-in-respective-states-1788948737"></link>
            <id>https://cineulagam.com/article/highest-grossing-indian-films-in-respective-states-1788948737</id>
            <summary type="text">இந்திய சினிமாஇந்திய சினிமாவில் பல்வேறு மொழிகளில் இருந்து படங்கள் தயாராகி வெளியாகின்றன. 

இதில் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழி ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>இந்திய சினிமா</h2><p>இந்திய சினிமாவில் பல்வேறு மொழிகளில் இருந்து படங்கள் தயாராகி வெளியாகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e25fd9af-021e-44ae-8ccf-c12c7e705f30/26-6aa13105f33e4.webp' /></p><p> </p><p>

இதில் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களை இந்தியா முழுவதும் மக்கள் கண்டுகளிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37977ddd-da38-4b80-99a3-b0c22df6763b/26-6aa1310537fbd.webp' /></p><p> 

இதை தாண்டி மராத்தி, பஞ்சாபி மொழி படங்களும் தற்போது வேகவேகமாக வளர்ந்து வருகின்றன.</p><h2>லிஸ்ட்&nbsp;</h2><p>அந்த வகையில் இந்திய திரைத்துறைகளில் அந்ததந்த மொழிகளில் அதிகம் <a href="https://x.com/queenrajeeee/status/2097286519262163448" target="_blank">வசூல் </a>செய்த படங்களின் லிஸ்ட் வெளிவந்துள்ளது, இதோ அந்த படங்களின் லிஸ்ட்.</p><p></p><p>
</p><ul><li>
ஹிந்தி - தங்கல் - ரூ. 2024 கோடி
</li><li>
தமிழ் - 2.0 - ரூ. 700+ கோடி
</li><li>
மலையாளம் - லோகா சாப்டர் ஒன் - ரூ. 300 கோடி (சமீபத்தில் வெளியான பெத்லகேம் குடும்ப யூனிட் இந்த வசூலை விரைவில் முறியடித்துவிடும்).
</li><li>
தெலுங்கு - பாகுபலி 2 - ரூ. 1810 கோடி
</li><li>
கன்னடம் - கே.ஜி.எப் 2 - ரூ. 1250 கோடி
</li><li>
மராத்தி - ராஜா சிவாஜி - ரூ. 130 கோடி (சமீபத்தில் வெளியான ஹனுமன் ஜோசி படம் விரைவில் இதை முறியடித்துவிடும்)</li><li>
பஞ்சாபி - ஜாட் &amp; ஜுலியட் - ரூ. 107 கோடி</li></ul>]]></content>
            <updated>2026-09-09T11:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியை பறிகொடுத்து கதறும் பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-losing-thali-chain-nallur-chariot-festival-1788935884"></link>
            <id>https://jvpnews.com/article/woman-losing-thali-chain-nallur-chariot-festival-1788935884</id>
            <summary type="text">&amp;nbsp;&amp;nbsp;நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியை பறிகொடுத்து கதறும் பெண்!

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் தேர்த் திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;<a href="https://jvpnews.com/article/nallur-kandan-blesses-devotees-from-chariot-1788928177" target="_blank">&nbsp;நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவி</a>ல் தாலிக்கொடியை பறிகொடுத்து கதறும் பெண்!

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் (9) தாலிக்கொடியைப் பறிகொடுத்து பெண் ஒருவர் கதரி அழுத காணொளி சமூக ஊடகங்க்களில் வெளியாகியுள்ளது.</p><p> 

 
இன்று காலை நல்லூரான் தேர்த் திருவிழாவை காண வந்த பெண் தாலிக்கொடியை பறிகொடுத்து விட்டு தாயொருவர் நிலத்தில் இருந்து அழுதவாறு நின்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4c78acd-8686-4669-97e9-c56a4860aea8/26-6aa10168d6818.webp' /></p><p></p><h2>திருடர்கள் குறித்து பொலிஸார்&nbsp; &nbsp;எச்சரிக்கை</h2><p> 

 அந்த பெண் மட்டுமல்லாது விலையுயர்ந்த அணிகலன்களை பறிகொடுத்து விட்டு தவித்த வண்ணம் உள்ளார்கள். சிலர் காவல்துறையினரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்லதாகவும் கூறப்படுகின்றது.</p><p></p><p>

அதேவேளை நல்லூர் கந்தன் ஆலய திருவிழா திருடர்கள் குறித்து பொலிஸார் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1390156846568193%2F&show_text=false&width=380&t=0" width="380" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p>]]></content>
            <updated>2026-09-09T11:26:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜ்நாத் சிங் பயணத்தின் பின்னணியில் கொழும்பை வந்த ஐ.என்.எஸ் போர்க்கப்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ins-udaygiri-arrives-colombo-amid-indian-defence-1788945106"></link>
            <id>https://ibctamil.com/article/ins-udaygiri-arrives-colombo-amid-indian-defence-1788945106</id>
            <summary type="text">இந்திய கடற்படையால் உள்நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட பல்நோக்கு ஸ்டெல்த் போர்க்கப்பலான INS உதயகிரி, மூன்று நாள் செயல்பாட்டு இடைநிறுத்தப் பயணத்திற்காக நேற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய கடற்படையால் உள்நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட பல்நோக்கு ஸ்டெல்த் போர்க்கப்பலான INS உதயகிரி, மூன்று நாள் செயல்பாட்டு இடைநிறுத்தப் பயணத்திற்காக நேற்று (08) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
</p><p>
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் இடம்பெறும் நிலையில், இந்தப் போர்க்கப்பலின் வருகையும் இடம்பெற்றுள்ளது.</p><p>

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தகவலின்படி, இந்திய கடற்படையின் நடமாடும் பயிற்சிக் குழுவினரால் தொழில்நுட்பப் பயிற்சிகள் மற்றும் அனுபவப் பகிர்வுகளை வழங்குவதன் மூலம், இலங்கை கடற்படையுடனான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.</p><p></p><h2>விமானந்தாங்கிக் கப்பலுடன்</h2><p>

மேலும், இலங்கை கடற்படை மற்றும் விமானப்படைக்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுக்கான உதிரிப் பாகங்களையும் INS உதயகிரி கொண்டு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc0216ab-ad29-481c-a1d1-9e5e749a2843/26-6aa1295972b83.webp' /></p><p>
</p><p>
கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் விகாஸ் சூட், மேற்கு கடற்படைப் பிராந்தியத் தளபதி ரியர் அட்மிரல் G.H.S.E. டி சில்வாவை உத்தியோகபூர்வமாக சந்திக்கவுள்ளார்.
</p><p>
இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயத்தின் ஒரு பகுதியாக, இலங்கை முக்கியஸ்தர்களுக்கான வரவேற்பு நிகழ்வொன்றும் INS உதயகிரி கப்பலில் நடத்தப்படவுள்ளது.
</p><p>
இதேவேளை, இந்திய மற்றும் இலங்கை கடற்படை வீரர்களுக்கு இடையில் தொழில்சார் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதுடன், “க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் கொழும்பில் நடைபெறும் கடற்கரை சுத்தப்படுத்தும் பணியிலும் கப்பல் குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.</p><p>

INS உதயகிரி கடந்த 2025 நவம்பர் மாதம் INS விக்ராந்த் விமானந்தாங்கிக் கப்பலுடன் இணைந்து கொழும்புக்கு விஜயம் செய்திருந்ததுடன், SLN IFR-2025 நிகழ்விலும் பங்கேற்றிருந்தது.</p><p>

மேலும், டித்வா சூறாவளியின் போது மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளிலும் இந்தப் போர்க்கப்பல் பங்கேற்று, உடனடி நிவாரணப் பொருட்களை வழங்கியிருந்தது.
</p><p>
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தகவலின்படி, இந்திய கடற்படைக் கப்பல்களின் இலங்கை விஜயங்கள் “பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம்” (MAHASAGAR) என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையையும், “அயல்நாடுகளுக்கு முதலிடம்” (Neighbourhood First) என்ற கொள்கையையும் உறுதிப்படுத்துகின்றன.</p><p>

இதன் மூலம் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நட்புறவும், பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பும் மேலும் வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T11:25:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை! வீரவன்ச உள்ளிட்ட ஆறு பேருக்கு சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/next-steps-the-contempt-of-court-case-vimal-team-1788951798"></link>
            <id>https://ibctamil.com/article/next-steps-the-contempt-of-court-case-vimal-team-1788951798</id>
            <summary type="text">முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் கைதை மையப்படுத்தி அதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட&amp;nbsp; போராட்டங்களின்போது...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் கைதை மையப்படுத்தி அதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட&nbsp; போராட்டங்களின்போது வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>விமல் வீர­வன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டது.&nbsp;</p><p>இந்த விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு முறைப்பாட்டில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><h2>மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணை</h2><p>
</p><p>
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த குறித்த முறைப்பாடு, நேற்று (08) மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர்பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f49509fe-cffe-4a9f-9c5f-03e3693af83d/26-6aa140a7666d9.webp' /></p><p>

இதன்போது, தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டது.
</p><p>
இந்த முறைப்பாட்டில் விமல் வீர­வன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர, சுகீஸ்வர பண்டார, அசங்க நவரத்ன மற்றும் மகிந்த பதிரண ஆகிய ஆறு பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T11:19:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் மறைமாவட்ட ஆயரை சந்தித்த தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kandiah-bhaskaran-met-bishop-mannar-diocese-1788952586"></link>
            <id>https://tamilwin.com/article/kandiah-bhaskaran-met-bishop-mannar-diocese-1788952586</id>
            <summary type="text">மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு அன்ரனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகையை, தமிழ் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.&amp;nbsp;குறித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு அன்ரனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகையை, தமிழ் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.&nbsp;</p><p>குறித்த சந்திப்பானது, இன்று (09.09.2026) இடம்பெற்றது.&nbsp;</p><p>இதன்போது, தற்போதைய அரசியல் சூழ்நிலை, தமிழர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.&nbsp;</p><p>மேலும்,&nbsp;மன்னார் மறைமாவட்ட ஆயருக்கு கந்தையா பாஸ்கரனால் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6da18f94-760c-48f8-a33f-74e5470873bc/26-6aa140ff94fae.webp' /></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T11:18:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இத்தாலி விமான நிலையத்தில் பயணியின் சூட்கேசில் காய்ந்த முதலைத் தலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/crocodile-head-found-in-suitcase-at-italy-airport-1788952683"></link>
            <id>https://canadamirror.com/article/crocodile-head-found-in-suitcase-at-italy-airport-1788952683</id>
            <summary type="text">இத்தாலியின் புகழ்பெற்ற விமான நிலையம் ஒன்றில் பயணி ஒருவரின் சூட்கேசை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அதற்குள் காய்ந்த நிலையில் ஒரு ராட்சத முதலைத் தலை மறைத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இத்தாலியின் புகழ்பெற்ற விமான நிலையம் ஒன்றில் பயணி ஒருவரின் சூட்கேசை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அதற்குள் காய்ந்த நிலையில் ஒரு ராட்சத முதலைத் தலை மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இந்த நிலையில் அமெரிக்காவின் மியாமி நகரிலிருந்து இஸ்தான்புல் வழியாக இத்தாலி வந்திறங்கிய இத்தாலிய பயணி ஒருவரின் உடைமைகளும் சோதனை செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64a5cae2-d4fd-41f0-94c7-242f614107bb/26-6aa1406d72b80.webp' /></p><p>
</p><p>

துணிகளுக்கு இடையே பதுக்கல்
அப்போது, ராட்சத முதலையின் காய்ந்த தலை ஒன்று சாதாரண பரிசு காகிதத்தால் சுற்றப்பட்டு, சூட்கேசுக்குள் இருந்த துணிகளுக்கு நடுவே ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.</p><p> மேலும், விமான நிலைய பாதுகாப்பு வளையங்கள் மற்றும் ஸ்கேனர்களில் இருந்து தப்பிப்பதற்காக இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டது பொலிசாருக்கு தெரியவந்தது.

</p><p>அமெரிக்காவின் புளோரிடா போன்ற பகுதிகளில் உள்ள நினைவுப் பரிசு கடைகளில் இது போன்ற காய்ந்த முதலைத் தலைகள் பொதுவாக விற்கப்படுகின்றன. </p><p>பல சுற்றுலா பயணிகள் சர்வதேச சட்டங்கள் மற்றும் கடுமையான விதிமுறைகள் தெரியாமல், இவற்றைத் தங்களது சொந்த நாடுகளுக்கு நினைவுப் பரிசாக வாங்கி சென்று பெரும் சட்ட சிக்கல்களில் மாட்டிக்கொள்கின்றனர்</p><p> இதனால், உரிய சர்வதேச உரிமம் அல்லது சான்றிதழ்கள் இன்றி இவற்றின் பாகங்களைக் கொண்டு செல்வது கடுமையான குற்றமாகும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T11:18:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் டிக்டொக்கை தடை செய்யகோரும் அர்ச்சுனா MP]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mp-archuna-calls-for-a-ban-on-tiktok-in-sri-lanka-1788952588"></link>
            <id>https://jvpnews.com/article/mp-archuna-calls-for-a-ban-on-tiktok-in-sri-lanka-1788952588</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையில் சமூக ஊடகங்களில் டிக்டொக் முற்றாக தடைச்செய்யப்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வலியுறுத்தியுள்ளார். 

அத்துட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையில் சமூக ஊடகங்களில் டிக்டொக் முற்றாக தடைச்செய்யப்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வலியுறுத்தியுள்ளார். </p><p>

அத்துடன் , 16 வயது வரை மட்டுமன்றி 20 வயது வரைக்கு சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படவேண்டும் எனவும் அர்ச்சுனா MP வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e698543-a0f5-471d-a519-eab291976e26/26-6aa1400d7a59e.webp' /></p><p></p><p>

நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அர்ச்சுனா MP மேற்படி கோரிக்கையை முன்வைத்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T11:13:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு பெண் வர்த்தகர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-women-arrested-with-narcotics-worth-5-crore-1788950298"></link>
            <id>https://tamilwin.com/article/two-women-arrested-with-narcotics-worth-5-crore-1788950298</id>
            <summary type="text">இலங்கை பெண் வர்த்தகர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பெண் வர்த்தகர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். </p><p>விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குறித்த சந்தேகநபர்களை இன்று (09) காலை கைது செய்துள்ளனர்.</p><p>சுமார் 5 கோடியே 37 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்த முற்பட்டபோதே கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p> 

கைதானவர்கள் கொழும்பு, தெமட்டகொட மற்றும் தொட்டலங்க ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 33 மற்றும் 35 வயதுடைய இரண்டு பெண்கள் என தெரியவந்துள்ளது. </p><p>

இவர்கள் தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து இன்று முற்பகல் 10.55 மணிக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் UL-403 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97a02279-d176-4897-ac9d-aaa0d00c05d7/26-6aa13e77c0920.webp' /></p><p> 

சந்தேகநபர்கள் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளில், 5 பொதிகளில் பொதியிடப்பட்டிருந்த 5 கிலோ 372 கிராம் எடையுள்ள 'குஷ்' போதைப்பொருளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். </p><p>

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதுடன், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T11:09:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சபையில் தனது கைது குறித்து பேச மறுத்த நாமல்.. வெளியான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-joined-parliament-after-arrest-1788950728"></link>
            <id>https://tamilwin.com/article/namal-joined-parliament-after-arrest-1788950728</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நேற்றைய தினம், நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, அவரின் கைது தொடர்பில் கருத்து எதுவும் தெரிவித்திருக்கவில்லை.&amp;nb...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நேற்றைய தினம், நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, அவரின் கைது தொடர்பில் கருத்து எதுவும் தெரிவித்திருக்கவில்லை.&nbsp;</p><p>இந்நிலையில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு விடயம் குறித்து பேசுவது நீதிமன்ற அவமதிப்பாக மாறும் என்பதால், நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரையின் போது தனது அண்மைய கைது குறித்து பேசுவதைத் தவா்த்துக் கொண்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சானக மதுகொட தெரிவித்தார்.&nbsp;</p><h2>நாடாளுமன்ற நடைமுறை</h2><p>இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மதுகொட, நாடாளுமன்றத்தை குண்டுவைத்து தகர்க்கவும், வளாகத்திற்கு தீ வைக்கவும் முயன்ற வரலாற்றைக் கொண்ட சில அரசாங்க உறுப்பினர்களைப் போல் அல்லாமல், நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளை நன்கு அறிந்தவர் என குறிப்பிட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa60ecf8-dda5-43a4-b07f-b7addc54b7bd/26-6aa13de7f2b69.webp' /></p><p>

நாமல் ராஜபக்ச தனது கைது குறித்தும் நீதித்துறையின் நடத்தை குறித்தும் பேசுவார் என எதிர்பார்த்ததாக தெரிவித்த நீதித்துறை பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவுக்கு பதிலளிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்தார்.</p><p>

இவ்விடயம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது இது குறித்து கருத்துத் தெரிவிக்காமல் தவிர்த்ததன் மூலம் நாமல் ராஜபக்ச நாடாளுமன்ற நடைமுறைக்கு அமைவாகவே செயற்பட்டுள்ளதாக மதுகொட மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/6Kzmt4sOp9A" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-09T11:08:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் கர்வத்தோடுதான் பேசுறேன்..அடித்து ஆடும் இசைஞானியின் டாக்....]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/ilaiyaraaja-s-bold-speech-at-dorothy-1788951037"></link>
            <id>https://viduppu.com/article/ilaiyaraaja-s-bold-speech-at-dorothy-1788951037</id>
            <summary type="text">கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் டோரதி. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் டோரதி. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களும், இசையும் அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில் டோரதி படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5f5c88b-e7d3-49da-aff6-882fad156acd/26-6aa13a000ded2.webp' /></p><p> நிகழ்ச்சியின் கதாநாயகன் இளையராஜா பேசியது தற்போது இணையத்தில் பகிரப்பட்டு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். </p><h2>இசைஞானி</h2><p>அதில், எல்லோரும் இசையில் பயிற்சி பெற்றவர்கள், எனக்கு எவன் பயிற்சி கொடுத்தான். நான் பொட்டல் காட்டில் இருந்து, கல்லும் முள்ளும் குத்த அங்கிருந்து வந்தேன். இன்னும் எனக்கு இசை என்றால் என்னவென்று தெரியாது, அது சத்தியம். அதனால்தான் இன்னும் இசையமைத்துக் கொண்டிருக்கிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cdc85c8-3643-48be-8879-1ae348497939/26-6aa13a00b3227.webp' /></p><p> </p><p>அதன்மூலம் தான் நான் இசையை தேடிக் கொண்டிருக்கிறேன். என் இசைதான் மற்றவர்களுக்கு அறிவை கொடுக்கிறது. என் இசையை மற்ற இசையமைப்பாளர்கள் ரெஃபரன்ஸுக்காக வைத்திருக்கிறார்கள். என் இசை மாதிரி வேறு யாருடைய இசையும் இல்லை. இந்த உலகத்தில் எல்லாம் விரல் நுனியில் இருக்கிறது. </p><p>இந்த இசை மாதிரி இருக்கிறதா? கர்வத்தோடு சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம், நான் கர்வத்தோடுதான் சொல்கிறேன், ஏனென்றால் இது மாதிரி இன்னொன்று இல்லைதானே, அதனால் தான் அப்படி சொல்கிறேன்.</p>]]></content>
            <updated>2026-09-09T11:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குட்டை உடையில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு நடிகை ரேஷ்மா எடுத்த போட்டோ ஷுட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-reshma-muralidharan-latest-photoshoot-1788946647"></link>
            <id>https://cineulagam.com/article/actress-reshma-muralidharan-latest-photoshoot-1788946647</id>
            <summary type="text">நடிகை ரேஷ்மாஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா என்ற சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா முரளிதரன்.அதன்பின் அபி டெய்லர், க...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகை ரேஷ்மா</h2><p>ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா என்ற சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா முரளிதரன்.</p><p>அதன்பின் அபி டெய்லர், கிழக்கு வாசல், செல்லமே செல்லமே என தொடர்ந்து அடுத்தடுத்து சீரியல்கள் கமிட்டாகி பிஸியாக நடித்து வந்தார்.</p><p>கடைசியாக ரேஷ்மா நடித்த செல்லமே செல்லமே சீரியலும் முடிவுக்கு வந்துவிட்டது. இந்த நிலையில் தனது தலைமுடியை கட் செய்து நடிகை ரேஷ்மா விதவிதமான போட்டோ ஷுட்கள் நடத்தி வருகிறார்.</p><p>லேட்டஸ்ட்டாக அவர் வெளியிட்ட போட்டோஸ் இதோ,</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T11:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் காருடன் மோதிய மோட்டார் சைக்கிள் ; பறிபோன உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/motorcycle-crashes-into-car-in-kilinochchi-1788951347"></link>
            <id>https://jvpnews.com/article/motorcycle-crashes-into-car-in-kilinochchi-1788951347</id>
            <summary type="text">கிளிநொச்சி ஏ-9 வீதியின் விழாவோடை பகுதியில் இன்று (09.09.2026) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.



விழாவோடை பகுதியில் மோட்டார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி ஏ-9 வீதியின் விழாவோடை பகுதியில் இன்று (09.09.2026) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>


விழாவோடை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கார் ஒன்றும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc6ffb3d-ea4e-494e-9be3-87a2fef88934/26-6aa13b355c841.webp' /></p><h2>சரணடைந்த கார் சாரதி</h2><p>
</p><p>


இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.</p><p> 



விபத்தையடுத்து, கார் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற நிலையில், பின்னர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>


உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
</p><p>


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T10:59:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு - தும்பங்கேணி பகுதியில் யானையொன்று ஊருக்குள் புகுந்து அட்டகாசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/elephant-attack-in-sri-lanka-1788951051"></link>
            <id>https://tamilwin.com/article/elephant-attack-in-sri-lanka-1788951051</id>
            <summary type="text">மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பகுதியில் ஊருக்குள் புகுந்த யானை பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பகுதியில் ஊருக்குள் புகுந்த யானை பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
குறித்த சம்பவம் இன்று (09.09.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளது. </p><p>

இதன்போது யானை வீடொன்றின் பாதுகாப்பு மதில் சுவரை உடைத்துக் கொண்டு வீட்டினுள் அத்துமீறி நுழைந்துள்ளது.</p><h2>அலறியடித்துக் கொண்டு ஓடிய பெண்கள்</h2><p>
</p><p>
அக்காலப்பகுதியில் வீட்டில் ஆண்கள் எவரும் இல்லாத நிலையில், உள்ளே தனிமையில் இருந்த பெண்கள் யானையைக் கண்டு பீதியடைந்து, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அலறியடித்தவாறு தப்பியோடியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec85fe87-e566-44bc-9228-4954f544d792/26-6aa13b6640148.webp' /></p><p> </p><p>

பெண்களைத் துரத்திவிட்டு வீட்டினுள் புகுந்த காட்டுயானை, அங்கு பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட்டிருந்த 10இற்கும் மேற்பட்ட நெல் மூடைகளை கிழித்து துவசம் செய்துள்ளது.</p><h2>யானைகளின் அச்சுறுத்தல்</h2><p>
</p><p>
போரதீவுப்பற்று பகுதியில் அண்மைக்காலமாகவே காட்டுயானைகளின் அச்சுறுத்தல் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டும் கிராம மக்கள், இதனால் தங்களின் இயல்பு வாழ்க்கையும் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக
வேதனை தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a08a04b-447b-403a-8cab-943756738545/26-6aa13b67310c5.webp' /></p><p>
</p><p>
எனவே, சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சேதங்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நஷ்டஈட்டினை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58a9affe-ba07-4e5e-b35a-61cb29651a3f/26-6aa13b68043c6.webp' /></p><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce7e2aaf-d2b9-450f-b464-c7884e3bcff5/26-6aa13b68cb0b2.webp' />&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T10:57:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டுவின் முன்னாள் எம்.பி ஒருவரும் விசாரணை வளையத்துக்குள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tissa-kuttiarachchi-summoned-investigation-1788950095"></link>
            <id>https://ibctamil.com/article/tissa-kuttiarachchi-summoned-investigation-1788950095</id>
            <summary type="text">சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக திஸ்ஸ குட்டியாராச்சி, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவின் முன் முன்னிலையாகுமாறு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக திஸ்ஸ குட்டியாராச்சி, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவின் முன் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>அவர் சட்டவிரோதமாக ஒரு நிதி நிறுவனத்தை நடத்தி, பொதுமக்களிடமிருந்து வைப்புத்தொகைகளைப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.</p><h2>விசாரணைக்கு முன்னிலையாகவில்லை</h2><p>நேற்று (08) காவல்துறை நிதிக்குற்றங்கள் புலனாய்வுப் பிரிவின் முன்பும் அவரை முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர் அங்கும் முன்னிலையாகவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d60e9c0-0b35-4047-a992-838e10148b58/26-6aa13b0df162e.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T10:55:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்க வர்த்தமானி: தடையுத்தரவை நீடித்த நீதிமன்று]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gazette-on-the-removal-vavuniya-mayor-from-office-1788950752"></link>
            <id>https://ibctamil.com/article/gazette-on-the-removal-vavuniya-mayor-from-office-1788950752</id>
            <summary type="text">வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்கால
தடைக்கட்டளையினை இம்மாதம் 23 ஆம் திகதிவரை நீடித்து வவுனியா மேல்நீதிமன்றம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்கால
தடைக்கட்டளையினை இம்மாதம் 23 ஆம் திகதிவரை நீடித்து வவுனியா மேல்நீதிமன்றம்
இன்று உத்தரவிட்டது.
</p><p>
எதிர்மனுதாரர் தரப்பு சட்டத்தரணியால்(அரசதரப்பு) எழுத்துமூல சமர்ப்பணங்களை
வழங்க அவகாசம் கோரிமையால் இந்த இரண்டு வாரம் காலஅவகாசம் மன்றால்
வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட
எழுத்தாணை விண்ணப்பம் வவுனியா மேல்நீதிமன்றில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p></p><h2>முதல்வர் மீதான இடைக்காலத் தடை</h2><p>
</p><p>குறித்த விண்ணப்பத்தில் மாநகர முதல்வர் மீதான இடைக்காலத் தடையை நீடிப்பதா
அல்லது அதனை விலக்குவதா என்பது தொடர்பாக கடந்த தவணையில் நீண்ட விவாதம்
இடம்பெற்றிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4696bfab-21c5-456b-aafb-cf051f260d24/26-6aa138e24ebac.webp' /></p><p>
</p><p>
அந்த வகையில் இருதரப்பு விவாதங்களையும் எழுத்துமூல சமர்ப்பணமாக வழங்குமாறும்
அதனை கடந்த 28 ஆம் திகதி அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ தாக்கல் செய்ய
வேண்டும் என்றும் கடந்த தவணை வழங்கப்பட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
</p><p>
அதன்படி மனுதாரர் சார்பில் எழுத்துமூல சமர்ப்பணங்கள் மன்றுக்கு
சமர்ப்பிக்கப்பட்டது.

எனினும் எதிர்மனுதாரர் தரப்பு சட்டத்தரணியால் எழுத்துமூல சமர்ப்பணங்களை வழங்க
அவகாசம் கோரிமையால் இந்த இரண்டு வாரம் காலஅவகாசம் மன்றால் இன்றையதினம்
வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன் முதல்வரை பதவி நீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்காலத்
தடைக்கட்டளை இம் மாதம் 23ஆம் திகதி வரை மன்றால் நீடிக்கப்பட்டிருக்கிறது.

மனுதாரர் சார்பில் சட்டத்தரணி இ.தயாபரன் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T10:46:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய கடற்படைக் கப்பல் கொழும்புக்கு விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/visit-of-indian-naval-ship-ins-udaygiri-to-colombo-1788948000"></link>
            <id>https://tamilwin.com/article/visit-of-indian-naval-ship-ins-udaygiri-to-colombo-1788948000</id>
            <summary type="text">இந்தியக் கடற்படையின் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட பல்நோக்கு ஸ்டெல்த்
போர்க்கப்பலான &#039;INS Udaygiri&#039;, மூன்று நாள் விஜயத்தை மேற்கொள்வதற்காக நேற்று(08.09...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியக் கடற்படையின் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட பல்நோக்கு ஸ்டெல்த்
போர்க்கப்பலான 'INS Udaygiri', மூன்று நாள் விஜயத்தை மேற்கொள்வதற்காக நேற்று(08.09.2026) கொழும்பை வந்தடைந்தது.
</p><p>இக்கப்பலின் விஜயம், இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு மேற்கொள்ளும் முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்துடன்
ஒருங்கிணைந்துள்ளது.</p><h2>விஜயத்தின் நோக்கம்</h2><p>இலங்கை கடற்படையுடன் தொழில்நுட்பப் பயிற்சிகள் மற்றும்
Mobile Training Team மூலம் அனுபவப் பகிர்வுகளை மேற்கொள்வதன் ஊடாக இருதரப்பு
ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும். </p><p>மேலும், இலங்கை கடற்படை மற்றும்
இலங்கை விமானப்படைக்குத் தேவையான அத்தியாவசிய இயந்திரங்கள்/உபகரணங்களுக்கான
உதிரிப் பாகங்களையும் இக்கப்பல் கொண்டு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/feed754c-7169-4ff3-9107-b3c1cdd833ce/26-6aa136dc2d81f.webp' /></p><p>கப்பலின் கட்டளை அதிகாரியான கேப்டன் விகாஸ் சூட், இலங்கை கடற்படையின் மேற்கு
கடற்படைப் பிராந்தியத் தளபதி ரியர் அட்மிரல் G.H.S.E. டி சில்வாவை
உத்தியோகபூர்வமாகச் சந்திக்க உள்ளார். </p><p>இந்தியாவின் பாதுகாப்புத்துறை
அமைச்சரின் விஜயத்தின் ஒரு பகுதியாக, இலங்கைப் பிரமுகர்களை வரவேற்கும் வகையில்
கப்பலில் வரவேற்பு நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. </p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T10:42:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் ATM இயந்திரங்கள் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விசேட அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/atm-machines-for-persons-with-disabilities-1788949702"></link>
            <id>https://tamilwin.com/article/atm-machines-for-persons-with-disabilities-1788949702</id>
            <summary type="text">இலங்கையில் ATM இயந்திரங்கள் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் முக்கிய அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளதாக&amp;nbsp;பிரதி அமைச்சர் யு.டி.என். ஜெயவீர அறிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் ATM இயந்திரங்கள் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் முக்கிய அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளதாக&nbsp;பிரதி அமைச்சர் யு.டி.என். ஜெயவீர அறிவித்துள்ளார்.</p><p>அந்த வகையில், பார்வைக் குறைபாடுள்ள மற்றும் மாற்றுத்திறனாளி வாடிக்கையாளர்களின் வசதிக்காக நாட்டின் அனைத்து ATM இயந்திரங்களிலும் குரல் வழிகாட்டல் மற்றும் பிரெய்லி விசைப்பலகைகளைப் பொருத்துமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>மற்றவர்களின் உதவியின்றி சேவைகளை சுயமாக முன்னெடுத்தல்</h2><p>இது தொடர்பில் பிரதி அமைச்சர் யு.டி.என். ஜெயவீர நாடாளுமன்றத்தில் வைத்து கருத்து வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2fec3c1-034e-448f-ab95-f750ddcf7760/26-6aa137e1f248a.webp' /></p><p>அத்துடன், இந்த நவீன வசதிகள் மூலம் மாற்றுத்திறனாளி நபர்கள் மற்றவர்களின் உதவியின்றி தங்களது வங்கிச் சேவைகளைத் தாங்களே சுயமாகவும் எளிதாகவும் மேற்கொள்வதற்கு இதன்மூலம் வாய்ப்பு ஏற்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T10:42:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/one-person-has-died-in-an-accident-kilinochchi-1788948926"></link>
            <id>https://ibctamil.com/article/one-person-has-died-in-an-accident-kilinochchi-1788948926</id>
            <summary type="text">கிளிநொச்சி ஏ9 வீதியின் விழாவோடை பகுதியில் இன்று (09.09.2026) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றும் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி ஏ9 வீதியின் விழாவோடை பகுதியில் இன்று (09.09.2026) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>

மோட்டார் சைக்கிள் ஒன்றும் மகிழுந்து ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p>

விபத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற மகிழுந்தின் சாரதி, கிளிநொச்சி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.</p><p></p><h2>பொது வைத்தியசாலை</h2><p>
</p><p>
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/444dbbc8-84d8-413d-afcd-23c52e637488/26-6aa136ee6be49.webp' /></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T10:41:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-order-against-gotabaya-s-private-secretary-1788950421"></link>
            <id>https://jvpnews.com/article/court-order-against-gotabaya-s-private-secretary-1788950421</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளரும், புதிய மக்கள் முன்னணியின் தலைவருமான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளரும், புதிய மக்கள் முன்னணியின் தலைவருமான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் இன்று (09) உத்தரவிட்டுள்ளார்.</p><p>



சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்கான விசேட காரணங்கள் எதுவும் முன்வைக்கப்படாததை கருத்திற்கொண்டு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bdc6aa3-13f4-48ac-818e-cb970d9cb04b/26-6aa1379673b32.webp' /></p><p>
</p><p>


இதேவேளை, சம்பவம் தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T10:40:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் 5 சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் செயலிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/5-tsunami-warning-towers-mullaitivu-non-functional-1788948764"></link>
            <id>https://tamilwin.com/article/5-tsunami-warning-towers-mullaitivu-non-functional-1788948764</id>
            <summary type="text">முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரைப் பகுதிகளில் சுனாமி அபாயம் ஏற்படும்
சந்தர்ப்பங்களில் மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுப்பதற்காக
அமைக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரைப் பகுதிகளில் சுனாமி அபாயம் ஏற்படும்
சந்தர்ப்பங்களில் மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுப்பதற்காக
அமைக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை கோபுரங்களில் பெரும்பாலானவை தற்போது
செயலிழந்த நிலையில் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>முல்லைத்தீவு மாவட்டம் 71 கிலோமீட்டர் கடற்கரை பிரதேசமாக காணப்படுகின்றது. கடற்கரையை அன்றி பல கடற்றொழில் குடும்பங்கள் பல விவசாய குடும்பங்கள் வாழ்ந்து வரும்
பகுதிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகின்றன.</p><h2>மாற்று நடவடிக்கை</h2><p>மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 6 சுனாமி எச்சரிக்கை கோபுரங்களில் 5 கோபுரங்கள்
செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில்,

அவசரகாலங்களில் மக்களை விரைவாக எச்சரிப்பதற்கான மாற்று நடவடிக்கைகள் மற்றும்
கோபுரங்களை மீளச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அவசியம் என மக்கள்
சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfa05c8c-55bb-4082-80a5-892b18ec9961/26-6aa1337dc8548.webp' /></p><p>
</p><p>இது தொடர்பாக மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட அனர்த்து முகாமை
பிரிவு அறிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T10:32:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்தார் 2 மற்றும் மண்டாடி திரைப்படங்களின் முன்பதிவு வசூல் விவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sardar-2-mandaadi-pre-booking-box-office-1788945749"></link>
            <id>https://cineulagam.com/article/sardar-2-mandaadi-pre-booking-box-office-1788945749</id>
            <summary type="text">இந்த வாரம் தமிழ் சினிமாவிலிருந்து வெளிவரவிருக்கும் சர்தார் 2 மற்றும் மண்டாடி ஆகிய இரண்டு திரைப்படங்களின் டிக்கெட் முன்பதிவு வசூல் குறித்த தகவல் வெளியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த வாரம் தமிழ் சினிமாவிலிருந்து வெளிவரவிருக்கும் சர்தார் 2 மற்றும் மண்டாடி ஆகிய இரண்டு திரைப்படங்களின் டிக்கெட் முன்பதிவு வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><p>
</p><h2>
இந்த வாரம் தமிழ் சினிமா
</h2><p>
ஒவ்வொரு வாரமும் புதிய படைப்புகள் தமிழ் சினிமாவிலிருந்து வெளியாகி வருகின்றன. கடந்த வாரம் வெளிவந்த இம்மார்ட்டல் திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இந்த வாரம் கார்த்தியின் சர்தார் 2 மற்றும் சூரியின் மண்டாடி என பெரிதும் எதிர்பார்க்கப்படும் இரண்டு பிரம்மாண்ட திரைப்படங்கள் தமிழில் வெளியாகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69dc2341-1fe7-4438-ac8e-f4849288b9cb/26-6aa125590262e.webp' /></p><p>
</p><h2>
முன்பதிவு வசூல்</h2><p>

நாளை செப்டம்பர் 10-ஆம் தேதி இந்த இரண்டு திரைப்படங்களும் வெளிவரவிருக்கும் நிலையில், டிக்கெட் முன்பதிவு அமோகமாக நடைபெற்று வருகிறது. இதில் இந்த இரு படங்களும் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளன என்பதை பற்றிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/221af3e0-26b0-4382-9fd7-2adef8055bb2/26-6aa12559ada06.webp' /></p><p>
</p><h3>சர்தார் 2
</h3><p>
கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான 'சர்தார்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது 'சர்தார் 2' உருவாகியுள்ளது. இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும், மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இதையெல்லாம் தாண்டி ரசிகர்களால் நடிப்பு அரக்கன், வில்லாதி வில்லன் என அழைக்கப்படும் நடிகர் எஸ்.ஜே. சூர்யா இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5097b409-4389-4584-8c15-fd7547b901ee/26-6aa125ad17d7e.webp' /></p><p>பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாகியிருக்கும் <a href="https://www.dailythanthi.com/cinema/cinemanews/sardar-2-is-not-just-an-action-movie-a-key-detail-shared-by-karthi" target="_blank">சர்தார் 2</a> திரைப்படம் நாளை வெளிவரவிருக்கும் நிலையில், இதுவரையிலான டிக்கெட் முன்பதிவில் ரூ. 1.5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.</p><p></p><p>
</p><h3>
மண்டாடி
</h3><p>
தமிழ் சினிமாவில் இருந்து தவிர்க்க முடியாத ஆக்ஷன் ஹீரோவாக உருவாகிவிட்டார் சூரி. இவர் நடிப்பில் அடுத்ததாக மற்றும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மண்டாடி. இப்படத்தை அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுஹாஸ் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் மஹிமா நம்பியார், சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad1c413d-36a8-4f37-90f9-7cd0d4553294/26-6aa125ade82ae.webp' /></p><p>இந்த நிலையில், மண்டாடி திரைப்படம் இதுவரை நடந்த டிக்கெட் முன்பதிவில் ரூ. 1.8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/TRsmgwUINcU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-09T10:30:00+00:00</updated>
        </entry>
    </feed>
